Displaying 3971 - 3972 of 3972
பொன்னிவளநாட்டின் வீரச்சரித்திரம்
Description
மானுடவியலாளார் பேராசிரியர் பிரெண்டா பெக் குறிப்பிடத்தக்க வகையில் பிரபலமான வாய்மொழி வரலாற்றை 50 வருடங்களாக ஆராய்ந்தவர். இப்பொழுது இந்த வரலாற்றை அவர் உலக வாசகர்களுக்கு உயிர் இயக்கமாகவும் ( animation ) அச்சு நூலாகவும் வண்ணப் படக்கதை நூலாகவும் வெளியிடுகிறார். இந்தியாவின் தமிழ்நாட்டு பாணர்கள் பாடிய அண்ணன்மார் கதை பல நூற்றாண்டுகளாக பொன்னிவள காவியம் என அறியப்பட்டு வருகிறது. பெரிய விவசாயக் குடும்பம் ஒன்று மூன்று தலைமுறைகளாக வாழ்நிலம் அமைப்பதற்கு பட்ட பாட்டையும் எதிர்கொண்ட பசி, துன்பம், போட்டிகள், மாயமந்திரங்கள் மற்றும் அரக்கர்களின் அக்கிரமங்கள் ஆகியவற்றையும் கூறுவதுதான் இந்தக் காவியம்.
தமிழ் ஓலைச் சுவடிகள்
Description
ஸ்காபரோ நூலக எண்ணிம தமிழ் ஓலைச் சுவடிகள் சேகரம், தற்போது 30 சுவடிகளை (2599 பக்கங்கள்) கொண்டுள்ளது. இவற்றின் மூலங்களை, ரொறன்ரோவினைச் சேர்ந்த முனைவர். பால சிவகடாட்சம் குடும்பம், பேரா. ரவி தம்பி மற்றும் ஜெயா குடும்பம், மருத்துவர். கிருபாகரன் குடும்பம் ஆகியோர் வழங்கி உதவினர். இலங்கையில் இருந்து கனடா கொண்டு வரப்பட்ட இந்தச் சுவடிகள் 1700களில் இருந்து 1900 காலப்பகுதியைச் சேர்தவை என முனைவர். பால சிவகடாட்சம் அவர்கள் மதிப்பிட்டுள்ளார். மேலும், முதற்கட்ட மீதரவுகளை உருவாக்கவும் அவர் உதவினார். பெரும்பான்மையான சுவடிகள் தமிழ் மருத்துவச் சுவடிகள் ஆகும். இலக்கியம், சோதிடம், மந்திரம், சமயம் உட்பட்ட விடயங்களை அடகிய சுவடிகளும் உண்டு.