Displaying 3961 - 3970 of 3972
சா. ஜே. வே. செல்வநாயகம் சேகரம்
Description
இலங்கைத் தமிழ்ச் சமூகத்தின் முக்கியமானதொரு அரசியல் தலைவராக செல்வநாயகம் விளங்கியமையையும் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாளாந்த நடவடிக்கைகளையும் இச்சேகரம் பிரதிபலிக்கிறது. இச்சேகரம் இலங்கையில் 1950 இலிருந்து 1970 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற முக்கியமான அரசியல் நிகழ்வுகளை ஆவணப்படுத்துவதோடு இலங்கைத் தமிழர்கள் எதிர்கொண்ட போராட்டங்களுக்கு சாட்சியமாகவும் விளங்குகிறது. இச்சேகரம் செல்வநாயகம் அவர்களின் குடும்பம், பின்புலம் தொடர்பான ஆவணங்களையும் அவரது துணைவியார் எமிலி கிரேஸ் செல்வநாயகம் சேகரித்த நினைவஞ்சலி ஆவணங்களையும் கொண்டுள்ளது. மூன்று பிரதான வரிசைகளாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள இச்சேகரம் 1933-1937, 1939-1940, 1944-1988 ஆகிய காலப்பகுதிகளுக்கான ஆவணங்களை உள்ளடக்கியுள்ளது. இவற்றுள் பெருமளவிலான ஆவணங்கள் 1960, 1970 காலப்பகுதியைச் சேர்ந்தவை ஆகும். தனிப்பட்ட ஆவணங்கள் கடிதத் தொடர்பு, தனிப்பட்ட பொருட்கள், நிதி மற்றும் தேயிலைத் தோட்டத்துடன் தொடர்புடைய ஆவணங்கள், ஏனைய ஆவணங்களை உள்ளடக்கியுள்ளன. தொழில்சார் ஆவணங்கள் அலுவலகக் கோப்புகள், கட்சி ஆவணங்கள், கடிதத் தொடர்பு, ஏனைய ஆவணங்களை உள்ளடக்கியுள்ளன. நினைவஞ்சலி ஆவணங்கள் சுவரொட்டிகள், செய்தித்தாள் துணுக்குகள், நினைவஞ்சலிக் குறிப்பேடு ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளன. எண்ணிமப்படுத்தப்பட்டுள்ள ஆவணங்கள் வரிசை 2: தொழில்சார் ஆவணங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டவையாகும்.
 நாட்டுடைமையாக்கப்பட்ட மற்றும் பொது உரிம தமிழ் நூல்கள்
Description
நாட்டுடைமையாக்கபட்ட தமிழ் நூல்கள் சேகரமானது இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த, தமிழ் இலக்கியம், நாட்டாரியல், இலக்கணம், வரலாறு, அரசியல், பண்பாடு, சமயம், கலை, அறிவியல், தொழில்நுட்பம் போன்ற பன்முக பொருட்துறைகளை உள்ளடக்கிய முதன்மைத் தமிழ்ப் படைப்புகளைக் கொண்டுள்ளது. இது 650 உப நூற்றொகுதிகளையும் 1,100 படைப்புகளையும் (210,000 பக்கங்கள்) உள்ளடக்கியது. மேலும், இச்சேகரம் அகராதிகள், சொற்களஞ்சியங்கள், கலைக்களஞ்சியங்கள், வாழ்க்கை வரலாறுகள் போன்றவற்றையும் கொண்டுள்ளது. தமிழ் முன்னோடி எழுத்தாளர்களான கவிஞர் பாரதிதாசன், அரசியல் எழுத்தாளர் வே. சாமிநாத சர்மா, இசை ஆய்வாளர் ஆபிரகாம் பண்டிதர், தொழில்நுட்ப எழுத்தாளர் அ. இராகவன் ஆகியோரின் முதன்மை ஆக்கங்களை இச்சேகரம் கொண்டுள்ளது. தமிழ்நாடு அரசு பெரும்பான்மையான இப்படைப்புக்களை பொது உரிமத்தில் வெளியிட்டுள்ளது. இந்நூல்களின் பல்வேறு பதிப்புகளை தமிழ்மண் பதிப்பகத்தினர் கடந்த 30 வருடங்களாகத் தொகுத்தும் பதிப்பித்தும் வருகின்றனர்.