Displaying 291 - 295 of 295
பொன்னிவளநாட்டின் வீரச்சரித்திரம்
Description
மானுடவியலாளார் பேராசிரியர் பிரெண்டா பெக் குறிப்பிடத்தக்க வகையில் பிரபலமான வாய்மொழி வரலாற்றை 50 வருடங்களாக ஆராய்ந்தவர். இப்பொழுது இந்த வரலாற்றை அவர் உலக வாசகர்களுக்கு உயிர் இயக்கமாகவும் ( animation ) அச்சு நூலாகவும் வண்ணப் படக்கதை நூலாகவும் வெளியிடுகிறார். இந்தியாவின் தமிழ்நாட்டு பாணர்கள் பாடிய அண்ணன்மார் கதை பல நூற்றாண்டுகளாக பொன்னிவள காவியம் என அறியப்பட்டு வருகிறது. பெரிய விவசாயக் குடும்பம் ஒன்று மூன்று தலைமுறைகளாக வாழ்நிலம் அமைப்பதற்கு பட்ட பாட்டையும் எதிர்கொண்ட பசி, துன்பம், போட்டிகள், மாயமந்திரங்கள் மற்றும் அரக்கர்களின் அக்கிரமங்கள் ஆகியவற்றையும் கூறுவதுதான் இந்தக் காவியம்.