நாட்டுடைமையாக்கப்பட்ட மற்றும் பொது உரிம தமிழ் நூல்கள்
நாட்டுடைமையாக்கபட்ட தமிழ் நூல்கள் சேகரமானது இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த, தமிழ் இலக்கியம், நாட்டாரியல், இலக்கணம், வரலாறு, அரசியல், பண்பாடு, சமயம், கலை, அறிவியல், தொழில்நுட்பம் போன்ற பன்முக பொருட்துறைகளை உள்ளடக்கிய முதன்மைத் தமிழ்ப் படைப்புகளைக் கொண்டுள்ளது. இது 650 உப நூற்றொகுதிகளையும் 1,100 படைப்புகளையும் (210,000 பக்கங்கள்) உள்ளடக்கியது. மேலும், இச்சேகரம் அகராதிகள், சொற்களஞ்சியங்கள், கலைக்களஞ்சியங்கள், வாழ்க்கை வரலாறுகள் போன்றவற்றையும் கொண்டுள்ளது. தமிழ் முன்னோடி எழுத்தாளர்களான கவிஞர் பாரதிதாசன், அரசியல் எழுத்தாளர் வே. சாமிநாத சர்மா, இசை ஆய்வாளர் ஆபிரகாம் பண்டிதர், தொழில்நுட்ப எழுத்தாளர் அ. இராகவன் ஆகியோரின் முதன்மை ஆக்கங்களை இச்சேகரம் கொண்டுள்ளது. தமிழ்நாடு அரசு பெரும்பான்மையான இப்படைப்புக்களை பொது உரிமத்தில் வெளியிட்டுள்ளது. இந்நூல்களின் பல்வேறு பதிப்புகளை தமிழ்மண் பதிப்பகத்தினர் கடந்த 30 வருடங்களாகத் தொகுத்தும் பதிப்பித்தும் வருகின்றனர்.