16 தமிழ் ஆராய்ச்சி முன்னுரை தமிழைப்பற்றிய ஆராய்ச்சி நூல்கள் மிகச்சிலவே வெளிவந் துள்ளன. அவைகளுட் பெரும்பாலான வடமொழியையே தமது தாய் மொழியென அபிமானிக்கின்றவர்களால் எழுதப்பட்டவை. ஆகவே அவைகளுள் நாம் தமிழைப்பற்றிய உண்மை வரலாறுகளைக் காணுதல் அரிதாகின்றது. இக்கருத்தினையே இந்திய மக்களின் வரலாற்றை ஆராய்ந்த அயல்நாட்டு அறிஞர்கள் மேலும் மேலும் வெளியிட்டுள்ளார்கள். தமிழ் ஆராய்ச்சி என்பது; பல்கலைக் கழகத்திலோ, வேறு ஆராய்ச்சிக் கழகத்திலோ, பதவி ஏற்று வேலைபுரியும் பட்டதாரிகள் சிலரால் மாத்திரம் செய்யத்தக்கது; ஏனையர் அதனைச் செய்யும் ஆற்றல் சாலாதவர்கள் என்பன போன்ற கருத்துக்களும் நிலவுகின்றன. இனித் தமிழ் ஆராய்ச்சியில் அறிஞர் பலர், நுழையாமைக்குப் பிற காரணமு முண்டு. இத்துறையில் வருந்தி உழைப்பவர்களுக்குப் போதிய ஊதியம் கிடைப்பதில்லை. தமிழ் வளர்ச்சிக்காகவே இருக்கின்றனவெனச் சொல்லிக் கொள்ளும் நிலையங்களும் அவர்களுக்கு உதவியளித்து ஊக்கம் காட்டுவதில்லை. தமிழ் அறிவுசான்ற திரு. கா. சுப்பிரமணிய பிள்ளை, M.A.M.L. அவர் களுக்கே சில புத்தக வெளியீட்டாளர்கள் ஒரு பக்கத்துக்கு ஒரு ரூபாய் வீதம் ஊதியம் அளித்து நூல்களின் பதிப்புரிமையைப் பெற்றார்களானால், சாதாரண ஆராய்ச்சியாளரின் நிலைமை என்ன என்பதைச் சற்றே சிந்தித்துப் பாருங்கள். இன்று தமிழ் ஆராய்ச்சி என்பது ஓரளவில் அரசிய லோடு தொடர்பு படுகின்றது. தமிழர் தம்மையும் தமது மொழியையும் பற்றிய எல்லா உண்மை வரலாறுகளையும் பற்றி அறிந்து கொள்ள வேண்டி யிருக்கின்றது. ஆகவே பொது மக்கள் உண்மையை அறியக் கூடிய முறை யில் இந்நூல் வெளிவருகின்றது. சென்னை 21.3.1947 ந.சி. கந்தையா தமிழ் ஆராய்ச்சி தோற்றுவாய் தமிழைப்பற்றியும், தமிழரைப்பற்றியும் தவறான கருத்துக்கள் தமிழ் நாட்டிற் பரவியுள்ளன. இதற்குக் காரணம், தமிழ் சமக்கிருதத்தின் வழிமொழி என்றும், தமிழரின் நாகரிகம், வட நாட்டினின்றும் தென் னாட்டிற்கு வந்த பிராமண வகுப்பினராற் கட்டி எழுப்பப்பட்டது என்றும் பலர் எழுதி வந்தமையேயாகும். ஆராய்ச்சியில் இக் கருத்துக்கள் முற்றும் தவறுடையன. இன்று இக் கருத்துக்களை எடுத்து ஆளுவோர், உண்மை அறியமாட்டாது பழம் போக்கினர் என ஒதுக்கப்படுவர். தமிழரையும் தமிழையும் பற்றிய வரலாற்றுச் சான்றுகள் பல கிடைத்துள்ள இக்காலத் தில் ஆரியத்தால் தமிழ் வளம் அடைந்தது; ஆரியப் பிராமணரால் தமிழர் நாகரிகம் அடைந்தார்கள் என நாட்ட ஒருவர் முன் வருவாரேல், அவர் பூமி உருண்டை வடிவினதன்று; தட்டை வடிவினதே என நாட்டுவதற்கு முன் வந்தவராவர். திராவிட மொழிகளின் ஆராய்ச்சி, திருவள்ளுவர் ஆராய்ச்சி எனத் தமிழர் பெருமைகளை நாட்டுவனபோன்ற கட்டுரைகளையோ சிறு நூல்களையோ எழுதும் சிற் சிலர், தமிழின் ஆக்கத்துக்கும் தமிழரின் உயர்வுக்கும் வடமொழியும் வடமொழியாளருமே காரணம் எனக் குறிப்பாகவோ, வெளிப்படையாகவோ தோன்றும்படி எழுதி வருகின்றனர். அந் நூல்களைப் பயிலும் நம்மவர் பலர் உண்மையறியாது பெரிதும் தடுமாறுகின்றனர். உண்மையில் தமிழுக்கும் தமிழருக்கும் ஆக்கம் அளித்தவர்கள் ஆரியரேயாயின், அவ்வாறு கூறுவதில் இழுக்கு யாதும் இல்லை. ஆராய்ச்சியில் ஆரியருக்கு நாகரிகத்தையும், அவர் மொழிக்கு எழுத்தையும், அவர்கள் பயில்வதற்குப் பல நூல்களையும் செய்து அளித்தவர்கள் தமிழர்களாயிருப்பதை வரலாற்றாசிரியர்கள் தெளிவாக ஆராய்ந்து கூறியிருக்க, அவைகளைப் பயின்று உண்மை தெளியாது எழுதி வரும் சிற சிலர் கருத்துக்களின் ஒவ்வாமையைத் தெளிவுறுத்த வேண்டி, இச்சிறு நூல் வெளிவருவது அவசியமாகின்றது. திராவிடம் இந்திய நாட்டில் வழங்கும் மொழிகளுள் மிக மிகப் பழமை யுடையது தமிழ். வடக்கே இமயமலையும், தெற்கே கன்னியாகுமரியும், கிழக்கும் மேற்கும் கடலுமாகிய எல்லைகளுக் குட்பட்ட நாடுகளுள் ஒரு கால் தமிழ்மொழி ஒன்றே வழங்கிற்று1. ஆரியர் வருகைக்குப்பின் வடக்கே வழங்கிய தமிழ், பல வடமொழிச் சொற்களையும் அதன் சிதைவுகளையும் ஏற்றுப் பல மொழிகளாக மாறுதலடைந்தது. அம்மொழிகள் ஆரியத்துக்கு இனமுடையன என்று கருதப்படுகின்றன. ஆனால் உண்மை அதற்கு நேர்மாறானது. 1தெற்கே வழங்கிய தமிழ் உறழ்ந்தும் பிறழ்ந்தும் கன்னடம், தெலுங்கு, துளு, மலையாளம் என்னும் மொழிகளாக மாறியுள்ளன. இம்மொழி இலக்கணங்களில் ஆரியச்சொற்களை அம்மொழிகளில் சேர்த்து வழங்குவதற்குத் தனிப்பட்ட விதிகள் உண்டு. இதனால் அம்மொழிகளின், தொடக்கத்தில் ஆரியச் சொற்கள் இருக்கவில்லை யென்னும். பிற்காலத்தில் அவை சேர்க்கப்பட்டன என்றும் நன்கு விளங்குகின்றன. தெலுங்கு, கன்னடம், துளு, மலையாளம், தமிழ் என்னும் மொழிகள் அடங்கிய கூட்டத்துக்கு மொழி நூலார் திராவிடம் எனப் பெயரிட்டுள்ளார்கள். திராவிடம் என்னும் பெயர், முன் பூமி சாத்திரம் சம்பந்தமாகத் தென்னாட்டுக் கடற்கரை நாடுகளைக் குறிக்க வழங்கிற்று என்றும், திரை இடம் எனப்பட்டதே திராவிடம் எனத் திரிந்ததென்றும் செர்மன் ஆசிரியர் ஒருவர் ஆராய்ந்து காட்டியுள்ளார். வடஇந்திய மொழிகள், அமைப்பில் திராவிடமாயிருப்பதற்குக் காரணம் இந்திய நாட்டை அடைந்த ஆரியரின் தொகை அங்கு வாழ்ந்து கொண்டிருந்த மக்களைவிடச் சிறு தொகையாகும். 2ஆகவே அவர்கள் வழங்கிய மொழி அங்கு வாழ்ந்து கொண்டிருந்த மக்களின் மொழி அமைப்பில் மாற்றம் உண்டாக்க முடியவில்லை. ஆனால் ஆரியச் சொற்கள் பல கலந்து அம்மொழியைத் திரிபடையச்செய்தன. பல திராவிடச்சொற் களும் ஆரிய மொழியில் சென்று ஏறின. டாக்டர் கிற்றல் என்பார் (Dr. Kittel) தமது கன்னட அகராதியின் முன்னுரையில் வடமொழி, திராவிட மொழிகளிலிருந்து இரவல் பெற்றதெனத் கருதப்படும் 420 சொற்களை எடுத்துக் காட்டியுள்ளார். வடநாட்டில் வழங்குவனவும் ஆரியத்துக் கினமுடையவை என்று கருதப்படுவனவுமாகிய மொழிகள், அமைப்பில் திராவிட மொழிகளை ஒத்தன என, பி.தி. ஸ்ரீனிவாச ஐயங்கார் அவர்களும் தமது இந்தியாவின் கற்காலம், தமிழர் வரலாறு என்னும் நூல்களில் விளக்கியுள்ளார். வடமொழி இலக்கணம் ஒரோரிடத்துத் தமிழ் இலக்கணத்தை ஒத்திருத்தலின் காரணம் ஆரியர் இந்திய நாட்டை அடைந்தபோது அவர்களின் மொழி மிகத் திருந்தமற்றதாகவிருந்தது. மிகப் பழைய பாடல்களில் காணப்படும் ஆரியச் சொற்கள் சமக்கிருதத்தினும் பார்க்கக் கிரேக்க மொழிப்போக்காகக் காணப்படுகின்றன என்று மாக்° மூலர் கூறியிருக்கிறார். ஆரியர் அநாகரிகராக வரும்போது நகரங்களில் வாழ்ந்து கொண்டிருந்த திராவிட மக்கள், அவர்களுக்கு எழுத்துக்களை உதவியும், அவர் மொழியைத் திருத்தியமைத்தும் துணைபுரிந்தார்கள். ஆகவே வடமொழிச் சொற்கள் பல தமிழ் உச்சரிப்பை அடைந்ததோடு அதன் இலக்கணங்கள் சிலவும் தமிழ் இலக்கணத்தை ஒத்தனவாயின. 1இவ்வுண்மையை அறிய மாட்டாத ஆராய்ச்சியாளர், தமிழர் ஆரியரிடத்திலிருந்து சில இலக்கண விதிகளை இரவல் பெற்றார்கள் எனக் கூறுவாராயினர். (ஒரு மொழியிலுள்ள சொற்கள் மாறலாம்; அதன் இலக்கணத்தைத் தனிப்பட்ட சிலர் மாற்ற முடியாதென மொழி ஆராய்ச்சி வல்லார்2 கூறுவர்). தமிழில் வழங்கும் சொற்கள் வடமொழியிற் காணப்பட்டால் அவை வடமொழிக்குரியனவா? ஒரு கூட்டத்தினர் வடமொழி கடவுள் மொழி என்றும், அது பிறமொழியிலிருந்து சொற்களை இரவல்பெற மாட்டாதென்றும் நம்பிக்கையுடையவர்களாயிருக்கின்றனர். ஆகவே அக் கூட்டத்தினர் தமிழிற் காணப்படும் செற்கள் வடமொழியிற் காணப்பட்டனவாயின் அவை வடசொற்கள் என்றே கூறி வருகின்றனர். வடமொழி பல, முண்டா மொழிச் சொற்களையும், திராவிடமொழிச் செற்களையும் இரவல் பெற்றிருக்கின்றதென்பதை ஆராய்ச்சியளர் குறிப்பிட்டுள் ளார்கள். பிறி°லு°கி என்பர் முண்டா மொழிச் சொற்கள் பல வடமொழியிற் புகுந்திருப்பதைக் காட்டியுள்ளார். கன்னட அகராதியைத் தொகுத்த “டாக்டர்” கிற்றல் (Dr.Kittel) வடமொழி திராவிட மொழிகளிலிருந்து இரவல் பெற்றதெனக் கருதப்படும் 420 சொற்களை எடுத்துக் காட்டி யுள்ளார். கால்ட்வெல் பாதிரியார் வடமொழியிற் சென்றுள்ள பல தமிழ்ச் சொற்களைக் குறிப்பிட்டுள்ளார். தமிழிலும், ஆரியத்திலும் காணப்படும் சொற்கள் இந்து-செர்மன் மொழிகளில் காணப்படுகின்றனவோ என்று பார்த்தல் வேண்டும். அவை அம்மொழிகளில் காணப்படுவனவாயின் அவை ஆரிய மொழிக்குரியனவே. இந்து-செர்மன் மொழிகளுக்கும் இந்து ஆரிய மொழிக்கும் பொது வல்லாத பிற சொற்கள் இந்திய மொழிகளி லிருந்து ஆரியத்திற் சென்றேறியுள்ளனவாகும்.இன்று நாம் ஆரியச் சொற்கள் எனக் கருதுவன பல தமிழ்ச் சொற்கள் என அறியவருகின்றன.1 ஆரியர் மத்திய வெப்பநிலையுடைய நாடுகளிலிருந்து இந்திய நாட்டை அடைந்தார்கள். அவர்களுடைய நாட்டிற் காணப்படாத மரஞ்செடி களும், விலங்கு பறவைகளும் பிற பொருள்களும் இந்திய நாட்டிலுள்ளன. ஆகவே அவர்கள் அப்பொருள்களைக் குறிக்க இந்திய மக்கள் பயன் படுத்திய பெயர்களையே ஆண்டிருத்தல் வேண்டும். இந்தியர் நாகரிகம் என்பது திராவிடர் நாகரிகமே இன்று இந்திய நாகரிகமென்று சிறப்பாகக் கூறப்படுவதற்குரிய பகுதிகள் திராவிடருடையனவே; இவற்றை வரலாற்றாசிரியர்கள் நன்கு ஆராய்ந்து நாட்டியுள்ளார்கள்2 1“கிறித்து பிறப்பதற்கு முன்னும் ஆரியர் வருகைக்கு முன்னும் திராவிட நாகரிகம், பொருளாதார, இலக்கிய, திருமண முறைகளில் நன்கு வளர்ச்சியுற்றிருந்தனவெனக் கொள்வதில் யாதும் மயக்கம் இல்லை.” டாக்டர். ஏ.கே. ஆனந்தக் குமாரசாமி 2ஆரிய நாகரிகம் பெரிதும் திராவிட நாகரிகச் சார்பு பெற்ற தென்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை!! - பேராசிரியர் ராப்சன் 3இந்திய நாகரிகத்தில் ஆரியரல்லாத மக்களுடைய நாகரிகத்தின் அடிப்படை பெரிதும் உள்ளதென்பதைச் சில்வன் லெவி, பிறி°லு°கி (Sylvann Levi and Jean Prsyluski) என்போர் தெள்ளிதில் விளக்கி எழுதியுள் ளார்கள். அவர்கள் எழுதியுள்ளதன் ஆங்கில மொழி பெயர்ப்பைக் காக்சி (P.Cagci) என்பவர் தாமெழுதிய ஆரியருக்கு முற்பட்ட மக்கள் என்னும் நூலில் வெளியிட்டுள்ளார். இந்திய வரலாற்றில், ஆரியரல்லாத மக்களின் நாகரிக அடிப்படை உள்ளதென்பதை எல்லா ஆசிரியர்களும் ஏற்றுக் கொள்கின்றனர். டாக்டர். எ°.கே. சட்டேசி 4ஆர்.டி.பனேர்ஜியும் காட்டியவாறு அரப்பா மொகஞ்சதரோ நாகரிகம் ஆரியருக்கு முற்பட்டதும், ஆரியரல்லாத மக்களுடையதும் ஆகும். பலுச்சி°தானத்தில் பிராகூய் மக்கள் காணப்படுதலைக் கொண்டு அந்நாகரிகத்தைக் கட்டி எழுப்பியவர்கள் பழைய திராவிடர்களாவர் எனத் துணியப்படுகிறது- மேற்படி 5“திராவிட நாகரிகத்தை நாம் ஒரு போதும் குறைவாகக் கருதுதல் கூடாது. திராவிட நாகரிகத்தின் அடிப்படையினால் ஆரிய நாகரிகம் செழிப்பும் ஆழமும் எய்திற்று. திராவிடர் பல கலைகளில் திறமை அடைந்திருந்தார்கள். அவர்கள் பாடவும் கட்டடங்கள் அமைக்கவும் வல்லவர்களாயிருந்தனர்” - தாகூர். சமக்கிருதம் தமிழின் வேறுபாடு சமக்கிருதம் என்பதற்கு நன்றாகச் செய்யப்பட்டது என்பது பொருள். சமக்கிருதத்துக்கு வட தமிழ் என்பது இன்னொரு பெயர். வடக்கே அதிக பிராகிருதச் சொற்களை ஏற்று வழங்கிய தமிழே நன்றாகச் செய்யப்பட்டுச் சமக்கிருதம் என்னும் பெயர் பெற்றதென்பது அறிஞர் கருத்து. சட்டம்பி சாமி என்னும் சிறந்த ஆராய்ச்சி அறிஞர், சமக்கிருதத் துக்கு அடிப்படை தமிழே எனக் கூறியுள்ளார்6. “காலஞ்சென்ற சட்டம்பி சாமிகளின் கையெழுத்துப் பிரதி ஒன்றை யான் பார்த்துள்ளேன். சட்டம்பி சாமி அவர்கள், கல்வியாளர்கள் வியக்கக்கூடிய பரந்த அறிவும் ஆராய்ச்சியும் உடையராய் விளங்கினார். சமக்கிருதம் என்பதற்கு நன்றாகச் செய்யப்பட்டது என்பது பொருள். எதிலிருந்து அது நன்றாகச் செய்யப்பட்டது என அவர் கேட்கின்றார். அவர் பல வகைகளால் சமக்கிருதத்துக்கு அடிப்படை தமிழ் என ஆராய்ந்து காட்டியுள்ளார். தெளிவாகக் கூறுமிடத்து அதன் அடிப்படை பழந்தமிழ்” -இராம வர்மா ஆராய்ச்சிக் கக வெளியீடு தமிழ் ஆராய்ச்சி, வடமொழி ஆராய்ச்சியாக மாறியமை மேல்நாட்டு மக்கள் வந்து மொழிகளைப்பற்றி ஆராய்ந்து உண்மை காணுவதன் முன்பு சமக்கிருதத்திலிருந்தே எல்லா மொழிகளும் உண்டாயின; அம்மொழியில் உள்ள நூல்களில் எல்லாக் கலைகளும் உள்ளன என்னும் மூடக்கொள்கை மக்களிடையே பரவியிருந்தது. தமிழ்நாட்டில் ஒரு கூட்டத்தினர் சமக்கிருதம் தமது தாய் மொழியெனக் கருதி வந்தார்கள்; வருகின்றார்கள். அவர்கள், ஆராய்ச்சி செல்கின்ற வழியில் செல்ல மாட்டார்கள்; ஆராய்ச்சி எவ்வாறிந்தாலும் சமக்கிருதத்திலிருந்து திராவிட மொழிகள் தோன்றின; ஆரிய மக்கள் திராவிடரைச் சீர்திருத்தினர் என்னும் பழம் பிடியைச் சிறிதும் கைவிடமாட்டார்கள். இவ்வகை மனப்பான்மை யுடையவர்களே பெரும்பாலும் தமிழரையும் தமிழையும் பற்றி ஆராய்ந்து நூல்கள் வெளியிட்டுள்ளார்கள். இக் காரணங்களினால் தமிழ் ஆராய்ச்சி செய்வோர் உண்மை காணமாட்டாதவர்களாகின்றனர். தமிழையே தாய்மொழியாகக் கொண்டுள்ள சிலரும், தமிழ், வடமொழியினால் ஏற்றமடைந்தது என எழுதி வருகின்றனர். அன்னவர் அறியமைக்கு யாம் இரங்க வேண்டியதன்றி அவர்களைக் குறை கூறுவதாற் பயனில்லை. தமிழ் ஆராய்ச்சி செய்வது எப்படி? தமிழ் ஆராய்ச்சி செய்வதன் முன் தமிழ், ஆரியம் என்னும் மொழி களுள் எம்மொழி முற்பட்டது? ஆரியர் இந்திய நாட்டை அடைவதன் முன், ஆரியர் தமிழர் என்னும் இரு மக்களின் நாகரிக நிலை எவ்வகை யினது? அநாகரிக மடைந்திருந்த மக்களிடமிருந்து நாகரிக மக்கள் சிலவற்றை இரவல் பெறுவார்களா? பெருந்தொகையான மக்களிடையே சிறு கூட்டத்தினர் கலக்க நேர்ந்தால் எம்மக்களின் கொள்கைகள் கருத் துக்கள் மேலோங்கும் என்பவை போன்றவைகளை ஆராய்ந்து தெளிதல் வேண்டும். அப்பொழுதே ஆராய்ச்சிக்கண் திறக்கும். மயில், கழகம் என்பவை வடசொற்களா? அண்மையில் ஆராய்ச்சியாளர் ஒருவர் 1மயில், கழகம் முதலிய சொற்கள் வடமொழி நூல்களிற் காணப்படுகின்றன என்றும், அவை வடமொழிக்கே உரியன என்றும் கூறியுள்ளார். அவ்வறிஞர் தமிழ் ஆராய்ச்சித் துறையில் நீண்டகாலம் இருந்தவராயினும், வடமொழியில் பல திராவிடர் சொற்கள் சென்று ஏறியுள்ளன என்பதைச் சிறிதும் அறியாது போனமை மிகவும் வருந்தத்தக்க தொன்றாகும். இது ஆழ்ந்து ஆராயவேண்டிய தொன்று அன்றாயினும், இது காரணமாகத் தமிழ் மாணவர் உள்ளத்தில் தோன்றும் மயக்கத்தைப் போக்கவேண்டியே இதனை ஈண்டு ஆராய வேண்டியதாயிற்று. ஆரியமக்கள் மத்திய ஆசியாவினின்றும் வந்தவர்கள் ஆவர். அவர் நாடுகளில் மயில் இல்லை. மயில் இந்திய நாட்டுக்கு உரிய பறவை. ஆரிய மக்கள் தாம் முன்னறியாதிருந்த மரஞ்செடிகள் விலங்குகள் பறவைகளை யும் பிறவற்றையும் உணர்த்த இந்திய மொழிச் சொற்களையே பெரிதும் பயன்படுத்தினர் எனப் பிறி°லு°கி போன்ற ஆராய்ச்சி அறிஞர் நன்கு ஆராய்ந்து கூறியுள்ளார்கள். இந்தியநாட்டுப் பறவைக்கு இந்தியமொழி களில் பெயர் இருந்தது. வடமொழியிற்சென்று வழங்கிய சொற்கள் என டாக்டர் கிற்றெல் என்பவரால் காட்டப்பட்ட பல சொற்களுள் மயூரம் ஒன்றாகும்.* மயில் என்னும் சொல்லே வடமொழியில் மயூரமாகத் திரிந்து வழங்கி யிருக்கலாம். வேதபாடல்களில் மயில் இருக்குமானால் அது எப்படி வடமொழிக்குரியதாகும். வேத மொழியே உச்சரிப்பு முறையில் திராவிடச் சாயல் பெற்றிருந்ததென ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். வேதகால முனிவர்கள் பலர் திராவிடர் என்று “மு°லிம் களுக்கு முற்பட்ட இந்தியா” என்னும் நூலாசிரியராகிய இரங்காச்சாரியர் போன்ற அறிஞர் கூறியுள் ளார்கள். மயிலே இல்லாத ஒரு நாட்டிலிருந்து வந்த மக்கள், மயிலைக் குறிக்க ஒரு பெயரைக் கண்டுபிடித்தார்கள் என்றும், அப்பெயரைத் தமிழ் மக்கள் அவர்களிடமிருந்து இரவல் பெற்று அப் பறவைக்குப் பெயராக வழங்கினார்கள் என்றும் கூறுதல் ஆராய்ச்சிக் குறையேயாகும். இச்சிறிய நியாயத்தைப் பேராசிரியர் ஒருவர் அறிந்து கொள்ளாதது வருந்தத்தக்கதே யாகும். மயில் என்னும் சொல் மற்றைய ஆரிய மொழிகளில் காணப்படு கின்றதா? இந்திய... ஆரிய மொழியில் மாத்திரம் அது காணப்படுமாயின், அம்மொழிக்கு அது எவ்வாறு கிடைத்தது என்பதுபோன்ற ஆராய்ச்சி செய்வதன்றோ ஆராயும் முறையாகும். கழகம் என்னும் சொல்லும் வடமொழிக்குரியதென மேற்படி ஆசிரியர் கூறுவாராயினர். தமிழில் களம் என்னும் சொல் இருக்கும்போது, கழகம் என்னும் சொல் களம் என்பதிலிருந்து வந்ததென்று ஏன் கூறுதல் கூடாது. சொற்கள் உச்சரிப்பு முறையில் சிறிது வேறுபட்டு வெவ்வேறு கருத்துக்களை விளக்குவது எல்லா மொழிகளுக்கும் பொதுவான இயல்பன்றோ. “வே” வேதமாக மாட்டாது “வித்” வேதமாகும் என ஒரு சாரார் கூறுகின்றனர். இதனை ஒத்ததே கழகம் வடமொழி எனக் கூறுதலுமாகும், பழைய ஆரிய மொழிகளில் கழகம் என்னும் சொல் உண்டா? காலின்° என்னும் அறிஞர், ஆரியச் சொற்கள் என்று பொதுமக்களும் பண்டிதரும் கருதும் சொற்கள் பலவற்றை ஆராய்ந்து அவை திராவிடச் சொற்கள் எனக் காட்டியுள்ளார். மொகஞ்சதரோ மக்கள் திராவிடரல்லரா? அவ்வாராய்ச்சியாளர் மொகஞ்சதரோ மக்கள் திராவிடர் என்ப தற்குச் சான்றுகள் இல்லையென்றும், ஹெர°பாதிரியார், மொகஞ்சரோ முத்திரைகளிற் பொறிக்கப்பட்ட எழுத்துக்களை வாசித்து, அவ்வாசிப்பின் மூலம் அங்கு வாழ்ந்தவர்கள் திராவிடர் எனக்கூறுதல் கொள்ளத்தக்கதன்று என்றும் கூறுகின்றார். எழுத்துக்களின் வாசிப்பினால் மாத்திரமன்று; பிற ஆராய்ச்சிகளாலும் மொகஞ்சதரோ மக்கள் திராவிடரேயென உறுதிப்படு கின்றது. ஜி.ஆர்.ஹண்டர், ஆர்.டி.பனேர்ஜி, பந்தார்க்கர், ராதா குமுதா முக்கர்ஜி, போன்ற சிறந்த ஆராய்ச்சி அறிஞர் வடநாடு, முழுமையும் திராவிடமொழி வழங்கிற்றென்றும், சிந்துவெளி மக்களின் நாகரிகம், திராவிட நாகரிகம் என்றும் நன்கு ஆராய்ந்து கூறியுள்ளார்கள். அன்னோர் அவ்வாறு துணிவதற்குக் காட்டியுள்ள காரணங்களை ஆராய்ந்து மறுக்காதும், தமது கூற்றுக்குச் சான்றுகள் காட்டாதும் வாளா அந் நாகரிகம் எவருடையதென விளக்கமாகவில்லை என ஒருவர் கூறுவாரா னால், அக்கூற்று அவரின் ஆராய்ச்சிக் குறை பாட்டைத் தெள்ளிதிற் புலப் படுத்துவதாகும். மொகஞ்சதரோ அரப்பா முத்திரைகளில் காணப்பட்ட எழுத்துக்களை ஒத்தவை வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட தென்னிந்திய சமாதிகளிற் காணப்பட்ட மட்பாண்டங்களில் பொறிக்கப்பட்டிருந்தன. அவ்வகை எழுத்துக்கள் இலங்கையில் கேகாலை என்னும் இடத்திலுள்ள மலையிலும் பொறிக்கப்பட்டுள்ளன. மெசபதேமியாவிற் காணப்பட்ட முத்திரைகளிலும் அவ்வகை எழுத்துக்கள் காணப்படுகின்றன. மொகஞ்ச தரோவை அடுத்த பலுச்சி°தானத்தில் திராவிடமொழித் தொடர்புடைய பிராகூய்மொழி வழங்குகின்றது. சுமேரியரும், திராவிடரும் ஒரே இன மக்கள் என டாக்டர் ஹால் கூறியுள்ளார். பிராமி எழுத்துக்கள் மொகஞ் சதரோ எழுத்துக்களிலிருந்து தோன்றியவை என்று பேராசிரியர் லாங்டன் ஆராய்ந்து கூறியுள்ளார். 1ஹெர° பாதிரியார் ஒலி முறையாக வாசித்த மொகஞ்சதரோ எழுத்துக்களின் உச்சரிப்புக்கள் தமிழ்ச் சொற்களாகக் காணப்படுகின்றன. இவை போன்ற பல காரணங்களால் மொகஞ்சதரோ நாகரிகம் தமிழருடையது என்று நன்கு தெளிவாகின்றது. இவர் மொகஞ் சதரோ நாகரிகம் தொடர்பாக யாதும் அறியாதிருப்பது இவர் குறையே யாகும். இராதா குமுத முக்கர்ஜி என்னும் பேராசிரியர் கூறுவது வருமாறு:- சிந்து வெளி நாகரிகம் இவ்வாறு திராவிட மொழிகளைப் பேசிய மக்களோடு தொடர்பு பெற்றிருந்ததெனத் தோன்றும். திராவிடமக்கள் மத்தியதரைச் சாதி என்னும் குழுவைச் சேர்ந்தவர்களாவார். இந் நாகரிகம் வேதகாலத்துக்கு முற்பட்ட இந்தியநாகரிகமாகும். பிற்கால இந்திய நாகரிகத்தில் இதன் சில பகுதிகள் காணப்படுகின்றன. 1767ஆம் ஆண்டு வரையில் எம்.ஈ.தாம° (ஆ.நு. கூhடிஅயள) என்பார், ஆரியர் சொந்தமாகத் தமது எழுத்துக்களை உண்டாக்கிக் கொள்ளவில்லை என்றும், ஆனால் அவர்கள் அதனை இந்திய மக்களிடமிருந்து அறிந்து கொண்டார்கள் என்றும் கூறுவாராயினர். இக்கருத்து நீண்டகாலம் ஆராய்ச்சியாளரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பிராமி எழுத்துக்கள், செமித்திய எழுத்துக் களினின்று தோன்றின என்றும், அவை பினீசிய மக்களால் கி.மு. 1000 வரையில் இந்திய நாட்டிற் பரப்பப்பட்டதென்றும் கருதப்பட்டன. இக்கருத்தே நீண்டகாலம் உண்மையெனக் கருதப்பட்டு வந்தது. தாம° கூறியதற்கு அறுபது ஆண்டுகளின் பின், பேராசிரியர் லாங்டன் (Professor Langdon) என்பார், பிராமி எழுத்துக்கள் சிந்துவெளி எழுத்துக்களின் வளர்ச்சியெனக் காட்டியுள்ளார். இந்து நாகரிகம் - இராதா குமுத முகர்ஜி1. திராவிடர் மத்தியதரை நாடுகளிலிருந்து வந்தவர்களா? திராவிட மக்கள் மத்தியதரை நாடுகளிலிருந்து வந்தவர்கள் என்று நீண்டகாலம் ஆராய்ச்சியாளரால் கருதப்படலாயிற்று. சிந்துவெளிப் புதைபொருள் ஆராய்ச்சிக்குப் பின் ஹெர° பாதிரியார், ஜி.ஆர்.ஹண்டர், பேராசிரியர், பிறாங்போட், சர்.ஜான்.மார்சல், சில்டி, டாக்டர், ஹால் போன்ற சிறந்த ஆராய்ச்சி அறிஞர்கள், இந்திய நாட்டினின்றும் சென்று மேற்கு ஆசியாவிற் குடியேறியவர்களே மத்தியதரை மக்கள் ஆவர் எனத் தெளிவுறக் கூறியுள்ளார்கள். சென்னைப் பல்கலைக் கழகத்தில் சரித்திர ஆராய்ச்சிப் புலமை நடத்தும் திரு. இராமச்சந்திர தீட்சிதர் அவர்களும் இக்கருத்தையே வெளியிட்டுள்ளார்கள். இவ்வாறு அறிஞர் துணிதற்கு ஏதுவாயுள்ள காரணங்களை அராய்ந்து பாராதும், அவர்கள் கூற்றுக்களை மறுக்காதும் ஆராய்ச்சியாளர் ஒருவர், இந்தியமக்கள் மத்தியதரை நாடுகளிலிருந்து வந்தவர்களாவர் என வாவா கூறுவரேல் அவர் கூற்று எட்டுணையும் வலி பெறாததாகும். திராவிட மொழிகளின் ஆராய்ச்சி யென்னும் நூல் எழுதியவர், சிந்துவெளி மக்கள் மத்தியதரை நாடுகளி லிருந்து வந்து குடியேறியவர்கள் என்றும், அவர்களின் நாகரிகம் மத்திய தரை நாகரிகம் என்றும் கூறியவை சிறிதும் வலிபெறாமை காண்க. மத்தியதரை மக்கள் இந்தியரே அரப்பா மொகஞ்சதரோ எழுத்துக்களையும் நாகரிகத்தையும் நன்கு ஆராய்ந்த டாக்டர் ஜி.ஆர்.ஹண்டர் கூறுவது வருமாறு: 1“ஆரியர் வருகைக்கு முன் திராவிடர் சிந்து வெளிகளில் வாழ்ந்த வர்கள் என்பதற்கு ஏற்ற காரணங்கள் புலப்படுகின்றன. பலுச்சி°தானத்தில் பிராகூயர் வழங்கும் மொழி, திராவிடத்துக்கு இனமாயிருப்பதால் இவ்வுண்மை வலியுறுகின்றது. 2இது வேறு சான்றுகளிலும் பார்க்கச் சிறப்புடையது. ஹைதராபாத்து, சென்னை முதலிய இடங்களில் கிளறிக் கண்டு பிடிக்கப்பட்ட சமாதிகளிற் காணப்பட்ட பொருள்களில் மொகஞ்ச தரோ, அரப்பா முதலிய இடங்களிற் காணப்பட்டவைகளை ஒத்த எழுத்துக்கள் காணப்பட்டன. இவ்விடங்கள் திராவிடமொழிகளுக்குரிய நாடுகளாகும். திராவிடர் சிந்துவில் கி.மு. 1100-க்கு முன் வாழ்ந்தார்கள். அவர்களிடமிருந்தே சிந்து நாகரிகம் அவர்கள் கைக்கு மாறிற்று. “ஆரியர் மத்திய ஆசியாவிலே காட்டு வாழ்க்கையினராயிருந்த காலத்தில் இந்திய நாட்டில் வாழ்ந்த திராவிடர் செமித்தியரை ஒத்த நாகரிகமுடையவர்களா யிருந்தனர். சாலமன், ஹரம் எனும் அரசர் இம் மக்களோடு தொடர்பு வைத்திருந்ததோடு திராவிடச் சொற்களையும் தமது மொழிகளில் வழங்கினர். *சாலமன் காலம் கி.மு.1,000 வரையில். அக் காலத்தில் இன்று வழங்கும் தமிழ்ச்சொற்கள் சில எபிரேய மொழியில் வழங்கினவாயின், சங்ககாலத் தமிழ் அக்காலத்தமிழைவிட அதிக மாறுதல் அடைந்திருந்த தெனக் கூற முடியாது. சாலமன் காலத்து வழங்கிய தமிழ்ச்சொற்கள் இன்றையத் தமிழிலும் காணப்படுகின்றன. இதனால் மொகஞ்சதரோ காலத் தமிழுக்கும் சங்ககாலத் தமிழுக்குமுள்ள வேறுபாடு, இன்றையத் தமிழுக் கும் சங்ககாலத் தமிழுக்கு முள்ள வேறுபாட்டை ஒத்ததாகலாம் எனக் கருதுதல் பிழையாகாது. இவ்வுண்மையைச் சிறிதும் கருத்திற் கொள்ளாது “திராவிட மொழிகளைப்பற்றிய ஆராய்ச்சி எழுதியவர் சங்ககாலத் தமிழ் இன்றைய தமிழிலும் பார்க்க வேறானது. ஹெர° பாதிரியார் சிந்துவெளி எழுத்துக்களுக்குத் தமிழ்ச்சொற்களைப் பெய்து வாசிப்பது தகாது; இம்முறை மொழியாராய்ச்சி முறையான வழிக்கு மாறுபட்டது எனக் குறிப்பிடுவாராயினர். ஹெர° பாதிரியார் கூற்றுக்கள் எளிதில் தள்ளிவிடத் தக்கனவல்ல. அவர் தமிழ் அறியாதவர். அவர் மொகஞ்சதரோ எழுத்துக் களை ஒலிமுறையாக வாசித்தபோது அவ்வொலிகள் குறிப்பிடும் சொற்கள், திராவிட மொழிகளில் இருப்பதை அவர் பிறர் வாயிலாகவே அறிந்தார். அவர் 1945இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பல விரிவுரைகள் நிகழ்த்தினார். அப்பொழுது அவர் மொகஞ்சதரோ எழுத்துக்களின் வாசிப்புக்கள். சிலவற்iப் பல பட்டதாரிகள், பேராசிரியர்கள் முன்னிலை யில் கூறினார். அவர் கூற்றுக்களை நேரிலோ எழுத்துமூலமோ எவரும் மறுக்கவில்லை. மௌனம் உடன்பாட்டின் அடையாளமேயாகும். மேற் படி திராவிடமொழிகளின் ஆராய்ச்சி எழுதியவரும், ஹெர° பாதிரி யாரின் விரிவுரைகளைக் கேட்டு மகிழ்ந்தவர்களுள் ஒருவராவர். இன்றும் பம்பாயில் பழஞ்சரித்திர ஆராய்ச்சி நடத்திவரும் ஹெர° பாதிரியாரை இது தொடர்பாக வினாவி அவர் உண்மை அறியலாமன்றோ? திருக்குறள், வடமொழி நூல்களின் மொழி பெயர்ப்பா? திருக்குறளின் பல பகுதிகள் சாணக்கியர் செய்த அர்த்த சாத்திரத்திலிருந்து எடுக்கப்பட்டதெனச் சிலர் கூறி வருகின்றனர். சாணக்கியர் காஞ்சிபுரத்தினின்றும் வடநாடு சென்று மயூர சந்திரகுப்தனின் மந்திரியாயிருந்த தமிழர். 1இவர் வடமொழியில் அர்த்த சாத்திரம் முதலிய பல நூல்கள் செய்து புகழ்பெற்று விளங்கினார். அச்சுவித்தை கண்டுபிடிக் கப்பட்டு ஆயிரக்கணக்கான படிகள் வெளிவரும் இக் காலத்திலேயேபல நூல்கள் நமக்குக் கிடைக்க வில்லை. சாணக்கியர் செய்துள்ள அர்த்த சாத்திர நூல் தென்னாட்டுத் திருவள்ளுவருக்குக் கிடைத்தது என நம்பமுடியாது. தென்னாட்டில் வழங்கிய சில அரிய கருத்துக்களையே சாணக்கியர் வடமொழியிற் செய்து புகழ் அடைந்தார். திருவள்ளுவரும் தென்னாட்டில் வழங்கிய அதே கருத்தினை முறைப்படுத்தி நூல் செய்தார். இருவரும் தமிழராதலாலும், இருவருக்கும் நூல் செய்வதற்கு ஆதாரம் ஒன்று ஆதலாலும், அர்த்த சாத்திரமும் திருக்குறளும் பல இடங்களில் ஒரே வகையாகக் காணப்படுதல் வியப்பு அன்றென்று. ஆரியருக்கு நூல்களைச் செய்து உதவிய தமிழர்களுள் சாணக்கியர்1 ஒருவராவர். திருக்குறளின் காலம் திருக்குறளின் காலத்தின் கீழ் எல்லை கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்பதற்கு உரிய ஆதாரம் உள்ளது. சிலப்பதிகாரம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் செய்யப்பட்டது. சிலப்பதிகாரத்தில் திருக்குறளைப்பற்றிக் கூறப்பட்டுள்ளது. இதனால் திருக்குறள் சிலப்பதிகாரத்துக்கு முற்பட்ட தென்று துணியப்படுகின்றது.2 மொழிநடை, சொல்லாட்சி முதலிய சிலவற்றை மாத்திரம் கொண்டு சிலர் திருக்குறள், சிலப்பதிகாரம் முதலிய நூல்கள், காலத்தாற் பிற்பட்டன எனக் கூறுகின்றனர். அவர் கூற்றுக்கள் வலி பெறுமாறில்லை. காலம் குறிப்பதற்குரிய பல சான்றுகளோடு சொல்லாட்சி முதலியனவும் ஒரு சான்றாகுமேயன்றி, அவைகளைக்கொண்டு மாத்திரம் நூல்களின் காலத்தைத் துணிந்துவிடுதல் கூடாது. இன்று ஆனந்த விகடனில் எழுதப் படும் நடைக்கும் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தாரின் மாத இதழில் எழுதப்படும் நடைக்கும் எத்துணை வேறுபாடு உளது. இவ்வேறுபாட்டைக் கொண்டு ஆனந்த விகடனும், தமிழ்ப்பொழிலும் வெவ்வேறு நூற்றாண்டுகளில் உள்ளன எனக் கூறலாமா? சிலப்பதிகாரத்தின் பிற்பகுதி பிறரெவராலோ எழுதிச் சேர்க்கப் பட்டதென்னும் ஆதாரமற்ற கொள்கை ஒன்றும் சில ஆராய்ச்சியாளரால் கிளப்பப்படுகின்றது. சிலப்பதிகாரத்தின் பிற்பகுதி பிறரால் செய்யப்பட்ட தென்பதற்கு ஆதாரமில்லை. அதில் கூறப்பட்டன சில உண்மையல்லாதன போல் தோன்றுகின்றன வெனில், அவை அக் காலத்தை அடுத்திருந்த மெக°தீன° போன்ற வரலாற் றாசிரியர்களும், புராணகாரர்களும் கூறிய வைகளைவிட நம்பத் தக்கனவாயிருக்கின்றனவென்பதை நோக்கி உண்மை தெளிதல் வேண்டும். சிலப்பதிகார காலம் சிலப்பதிகாரத்தில், “ஆடித்திங்கட் பேரிருட் பக்கத் தழல்சேர் குட்டத் தட்டமி ஞான்று வெள்ளி வாரத் தொள்ளெரி யுண்ண வுரைசான் மதுரையோ ட்ரசுகே டுறுமெனு முறையு முண்டே” எனவரும் சோதிடக் குறிப்பின் காலம் கி.மு.202 என டாக்டர் கிருஷ்ணசாமி ஐயங்காரும், கி.பி.171 என1 மு.ழு. சேஷ ஐயரும் முறையே கூறியுள்ளார்கள். சேஷ ஐயரவர்கள் தமது முடிவைக் கூறுமுன், டாக்டர் கிருஷ்ணசாமி ஐயங்கார் அவர்கள் கூறியுள்ளதையும் ஆராய்ந்து பார்த்துள்ளார். 11-ம் பரிபாடலிற் காணப்படும் சோதிடக் குறிப்பின் காலம் கி.பி.196-ஜூன்µ 28² (28th June 196 A.C.) என மு.ழு.சங்கர் என்பார் குறிப்பிட்டுள்ளார். வரலாற்றாசிரியர்கள் எல்லோரும் சங்ககாலத்தின் கீழ் எல்லை கி.பி, மூன்றாம் நூற்றாண்டு என்னும் முடிவுக்கு வந்துள்ளார்கள். சிலப்பதி காரமும் மணிமேகலையும் சங்ககால நூல்களாகக் கருதப்படுகின்றன. சிலப்பதிகாரஞ் செய்தவர் சேரன் செங்குட்டுவனின் தம்பியாகிய இளங்கோவடிகள். சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு ஆலயம் எடுத்து விழாக் கொண்டாடிய காலத்தில் பல நாட்டு அரசர்கள் அங்குச் சென்றிருந்தார்கள். அவர்களுள் இலங்கைக் கயவாகும் ஒருவன். இலங்கைக் கயவாகு கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவன். இலங்கைக் கயவாகுவின் காலம் அறியப்படுதலினால், சேரன் செங்குட்டு வனின் காலமும், அவன் காலத்துக்கு முன்னும் பின்னும் இருந்த சில அரசர்களின் காலங்களும் அறியப்படுகின்றன. ஆகவே சிலப்பதிகாரம், தமிழ் இலக்கியங்கள், அரசர்கள், புலவர்கள் சிலரின் காலங்களை வரையறுப்பதற்கு எல்லைக் கல்போன்று இருக்கின்றது. சிலப்பதிகாரத்தில் திருக்குறள் எடுத்து ஆளப்பட்டுள்ளது. ஆகவே திருக்குறள் சிலப்பதிகாரத் துக்கு முற்பட்ட நூல் எனத் துணியப்பட்டுள்ளது. கரிகாலன் காவிரியின் ஆணையைக் கட்டியதைப்பற்றிப் பட்டினப்பாலை கூறுகின்றது. முன்பு சோழ அரசன், காவிரி அணை கட்டுவதற்குச் சிறையாகப் பிடித்துச்சென்ற இலங்கை மக்களைக் கயவாகு மீட்டுக்கொண்டு வந்ததோடு, பத்தினியின் சிலம்பையும் கொண்டுவந்தான் என்று சிங்கள நூலாகிய இராசாவளி கூறுகின்றது. கயவாகு பத்தினி விழாவுக்குச் சேர நாடு சென்றிருந்தான் எனச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. இலங்கை நூதன பொருட்காட்சிச் சாலையில் கி.பி.ஆறாம் நூற்றாண்டளவில் செதுக்கப்பட்டதென்று கருதப்படும் கண்ணகிச் சிலை ஒன்று காணப்படுகின்றது. கண்ணகி வழிபாடு இலங்கை யில் மிகப்பழமையே வேரூன்றியுள்ளதென பேராசிரியர் ஆனந்தக் குமாரசாமி அவர்கள் விளக்கியுள்ளார். இலங்கை வரலாற்றுக் குறிப்புக்கள் என்னும் நூலில் இதனை சர்.பி.அருணாசலம் அவர்களும் ஆராய்ந்து கூறியுள்ளார். சிங்களவர் விழாக்களில் பத்தினிச் சிலம்பு ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்பட்டது. சிங்கள மக்கள் புத்த ஆலயங்களில் வைத்து வழிபட்ட பத்தினிச் சிலம்புகள் பலவற்றை இன்றும் கொழும்பு நூதன பொருட்காட்சிச் சாலையில் காணலாம். சிலப்பதிகாரத்தைப் பற்றித் தமிழ்ப்புலவர்களும் பிறரும் நன்கு அறிய வந்தது அது அச்சிடப்பட்ட பின்பேயாகும். இற்றைக்கு நானூறு ஆண்டுகளின் முன் இலங்கையில் சமராசன் என்னும் புலவர் ஒருவர் கடலோட்டுக்காதை என்னும் நூல் செய்தார். அந்நூல் இதுவரையில் அச்சேறவிவ்லை அப்புலவர் தாம் சொல்லும் கடலோட்டுக்காதை சிலப்பதிகாரத்தை ஆதாரமாகக் கொண்டு செய்யப்பட்டதெனக் கூறுகின்றார். ஆனால் அதில் சொல்வன சிலப்பதி காரத்தில் காணப்படவில்லை. இதனால் இற்றைக்கு நானூறு அல்லது ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னும் தமிழ்ப்புலவர்கள் பெரும்பாலோர் சிலப்பதிகாரத்தைப் பற்றி பெயரளவில் அறிந்திருந்தார்கள். எனத் தெரிகின்றது. சிங்களத்தில் இராசாவளி செய்தவர்கள் சிலப்பதிகாரத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். சிலப்பதிகாரத்தைப்பற்றியே அறியாதார், கயவாகு பத்தினிச் சிலம்பைக் கொண்டு வந்தானென்றும், கயவாகுவுக்கு முன் சிறையாகப் படிக்கப்பட்ட சிங்களவர் காவிரி அணை கட்டப் பயன்படுத்தப்பட்டார்கள் என்றும் கூறியுள்ளவை, கயவாகு பத்தினிக் கடவுளின் விழாவுக்கு வந்திருந்தானென்றும், அவன் இலங்கை யில் பத்தினிக்குக் கோயில் அமைந்தானென்றும் கூறும் வரலாற்றை ஒத்துள்ளன. ஆகவே இவ் வொற்றுமைகளை ஆதாரமற்றன என்று தள்ளி விடுதல் முடியாது. S.K. சேஷ ஐயரவர்கள் சங்ககாலச் சேரநாடு என்னும் நூலில் சிலப்பதிகார காலத்தைப் பற்றி ஆராய்ந்து கூறியிருப்பது வருமாறு: பழங்காலப் புலவர்கள் தாம் நினைத்தபடி சோதிடக் குறிப்புக் களைக் கூறினார்கள் என நாம் கருதுதல் தவறு. மதுரையைத் தீ உண்டதாகச் சிலப்பதிகாரம் கூறும்காலம். கி.பி.171-ம் ஆண்டு அடிµ வெள்ளிவாரம் இருபத்தாறாவது நாளாகும். அக் காலத்தில் செங்குட்டுவன் வாழ்ந்தான். செங்குட்டுவன் காலத்தில் கடல் வாணிகம் உச்ச நிலை அடைந்திருந்தது. இது பிளினி என்பவர் (கி.பி.161-மரணம்) முசிறியைப் பற்றிக் கூறியுள்ள குறிப்புக்களால் நன்குவிளங்குகின்றது. செங்குட்டுவன் கடலோட்டிய வேல் செங்குட்டுவன் எனப்பட்டான். இந்தியச் சரித்திரத்தில் காலங்களைக் குறிப்பிடுவதற்குச் சிலப்பதிகாரம் எல்லைக் கல்லாக விருக்கின்றது. செங்குட்டுவன் வடநாட்டு அரசர் மீது படை எடுத்தான் எனச் சொல்லப் படுகின்றது. அவன் கங்கைக் கரையில் போர் செய்தபோது நூற்றுவர்கன்னர் அவனுக்கு உதவியளித்தனர். அவனை எதிர்த்தவர்களுள், விசயர், பால குமாரர், உருத்திரர் முதலிய பெயர்கள் கூறப்பட்டுள்ளன. அவர்களை வென்றபின் செங்குட்டுவன் அங்கிருந்து பத்தினிச் சிலை செய்வதற்கு ஒரு கல்லை எடுத்துவந்தான். கல்நாட்டியபோது பல நாட்டு அரசர் வந்திருந் தார்கள். அவர்களுள் இலங்கைக் கயவாகு அரசன் ஒருவனாவன். செங் குட்டுவனல்லாத அரசர் காலத்தில் வடநாட்டின் மீது படை எடுக்க இயலாதவாறு தென்னிந்திய அரசர் பலம் குன்றியிருந்தனர். வடஇந்திய வரலாற்றை நோக்கும்போது, இரண்டுமூன்று முறை மாத்திரம் தென் னிந்தியர் வடக்கு நோக்கிப் படை எடுக்கத் தக்கதாயிந்தது. கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் சந்திரகுப்தன் பிம்பிசாரன் அசோகன் முதலியோர் காலத்தில் தென்னாட்டார் வடக்கே படை எடுத்திருக்கமுடியாது. புஷ்ய மித்திரன் காலத்திலும் இது நிகழ்ந்திருக்கமுடியாது. புஷ்ய மித்திரன் கி.மு.234-க்கும் கி.மு.184-க்கு மிடையில் ஆட்சி புரிந்தான். சுங்க அரசரின் பிற்கால ஆட்சி குழப்பமடைந்திருந்தது சாதவாகனர் அல்லது சர்தகரீகயர் அதிகாரம் எய்தமுயன்று கொண்டிருந்தார்கள். கி.பி. முதலாம் நூற்றாண்டின் இறுதியில் அவர்கள் கண்ணுவரின் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். நாசிக் பட்டையத்தில் ஸ்ரீசாதகர்ணியின் பெயர் காணப்படுகின்றது. புஷ்யமித்திர னின் மரணத்துக்குப்பின் சுங்கரும் கண்ணுவரும் குழப்பம் அடைந்திருந்த காலத்தில் ஒரு படை எடுப்புக்கு இடம் இருந்தது. இது கி.மு.148-க்கும் கி.மு. முதல் நூற்றாண்டுக்கும் இடையில். கௌதமி புத்திர ஸ்ரீசாதகர்ணிக்குப்பின் (கி.பி.109-135) புலமாய் என்பவன் 35 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தான். அவன், முதலாம் உருத்திரதாமனோடு மோதிக் கொண்டான். உருத்திரதாமன் கௌதமி புத்திர ஸ்ரீசாதகர்ணி சாகரதரிடமிருந்து வென்ற நாடுகளைப் பிடுங்கிக்கொண்டான். ஆனால் கௌதமி புத்திரன் யாஞ்ஞஸ்ரீ (கி.பி.173-202) புலமாய் இழந்த சில நாடுகளை மீட்டுக்கொண்டான், சாதவாகனர் அக்காலத்தில் தென்னாட்டுப் படையெடுப்பை எதிர்க்கக் கூடாதவாறு பலவீனமடைந்திருந்தார்கள். யாஞ்ஞ ஸ்ரீயின் காலத்துக்குப்பின் இருட் காலம் எனப்படுகின்றது. பின்பு மூன்றாம் நூற்றாண்டை அடைகின்றோம். நான்காம் ஐந்தாம் நூற்றாண்டுகளாகிய குப்தர்கள் காலத்தைப்பற்றி நன்றாகத் தெரிகின்றது. ஐந்தாம் நூற்றாண்டு வாகடரின் காலமாகும். ஆறாம் நூற்றாண்டில் அதிகாரம் படைத்த பல்லவ சாளுக்கிய காலத்துக்கு வருகின் றோம். சாளுக்கியர் கி.பி.753இல் இராஷ்டிர குப்தரால் வீழ்த்தப்பட்டார்கள். நாலாம் நுற்றாண்டு முதல் அடுத்த நானூறு ஆண்டு வரையில் வடநாட்டின் மீது படை எடுப்பதற்கு ஏற்ற காலமாக இருக்கவில்லை. மதுரை கி.பி.171இல் தீப்பட்டதாயினும், அப்போது செங்குட்டுவன் ஆட்சிபுரிந்துகொண்டிருந்தானாயினும், கண்ணகி வானுலகடைந்தபின், நூற்றுவர்கன்னர் உதவி கொடுப்பதாக உறுதி கூறியபின் செங்குட்டுவன் வடநாட்டின்மீது படை எடுத்தானாகவேண்டும், நூற்றுவர்கன்னர் என்போர் சாதகர்ணிகளே. செங்குட்டுவன் தனது நாட்டைவிட்டு 32 திங்கள் வெளியே சென்றிருந்தான். அப்பொழுது அவன் கங்கைக் கரையிலிருந்தான். அவன் கங்கைக்கரையிலிருந்த காலம் கி.பி.175-ன் முற்பகுதி எனக் கூறலாம். தமது முன்னோனான புலுமாய் இழந்த நாடுகளைச் சாதகர்ணிகள் பெறுவதற்குச் சாதகர்ணிகள் செங்குட்டுவனின் உதவியை வேண்டியிருக்கலாம். இதனால் செங்குட்டுவன் யாஞ்ஞஸ்ரீயின் காலத்தவன் எனத் தெரிகின்றது. இதனால் நாம் செங்குட்டுவனின் வடநாட்டுப் படையெடுப்பைப்பற்றி நன்கு அறியக்கூடியதாயிருக்கின்றது. சாதகர்ணிகள் தமது நோக்கம் நிறைவேறியபோது செங்குட்டுவனின் விருப்பையும் நிறை வேற்றினார்கள். பல ஆரிய அரசர் செங்குட்டுவனை எதிர்த்தார்கள் என்றும், அவர்களில் ஒருவன் பால்குமாரனின் மகன் விசயன் எனவும் படுகின்றான். பாலகுமாரன் என்பவன் தாலிமி கூறும் பாலியோ குரூ°. (Baleokouros,) சில வரலாற்றாசிரியர்கள் பாலியோகுரூ° சாதவாகன அரசருள் ஒருவனென்று கூறியிருக்கின்றனர். இவனுடைய மகனே செங் குட்டுவனைக் கங்கைக்கரையில் எதிர்த்தவனாகலாம். செங்குட்டுவனால் தோற்கடிக்கப்பட்ட இன்னொருவன் உருத்திரன். இவன் உருத்திரசன்மன் அல்லது உருத்திரசேனனாகலாம். இவனிடத்தி லிருந்தே செங்குட்டுவன் சாதவாகனர் இழ்ந்த நாட்டைக் கைப்பற்றினான். கங்கைப் போர் என்பது யாஞ்ஞஸ்ரீயாலும் அவன் துணைவர்களாலும் வடநாட்டு அரசருக்கு எதிராக நடந்த போராகும். கண்ணகிக்குக் கல்நாட்டியபோது வந்திருந்த அரசருள் இலங்கைக் கயவாகு ஒருவன் எனச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. மகாவமிசத்தின்படி கயவாகுவின் ஆட்சிக் காலம் கி.பி.173-முதல் 191வரை. இராசாவளி என்னும் சிங்கள நூல், கயவாகு பத்தினிக் கடவுளின் சிலம்பை எடுத்துச் சென்றான் எனக் கூறுகின்றது. கயவாகு பத்தினிக் கடவுளுக்குக் கோயில் எடுத்தான் என்னும் வரலாற்றோடு இது ஒத்திருக்கின்றது. பத்தினிக்கடவுள் வழிபாடு இலங்கையில் பழங்கால முதல் உள்ளது என்று ஆனந்தக் குமாரசாமி அவர்கள் விளக்கியுள்ளார் - (J.R.A.S.1909 p22). மதுரை கி.பி.171-ல் தீப்பட்டது என்னும் கொள்கை பலவகையால் உறுதிப்படுகின்றது. இதனால் செங்குட்டுவனின் காலம் இரண்டாம் நூற்றாண்டு எனக் கூறுவது பொருத்தமாயிருக்கின்றது. செங்குட்டுவனும் கயவாகுவும் ஒரேகாலத்தவர்கள் என்னும் கொள்கை எளிதில் தள்ளிவிடக்கூடியதன்று. சிலப்பதிகாரம் மகாவமிசம் முதலிய நூல்கள் வரலாற்றுத் தொடர்பானவை.  நீதி நெறி விளக்கம் மூலமும் உரையும் ஆங்கில மொழி பெயர்ப்பும் முன்னுரை பிற்கால நூல்களுள் நீதிநெறி விளக்கம் சொல் நடை பொருட் செறிவு முதலியவைகளால் சிறப்பமைந்தது. அக் காலத்தில் மதுரையை ஆண்ட திருமலை நாயகன் (1623-1659) என்னும் அரசனின் வேண்டு கோளுக்கு இசைந்து குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் என்னும் நூலைத் திருக்குறளின் சாரமாகச் செய்தாரென்பது பரம்பரை வரலாறு. மேலை நாடுகளினின்றும் கிறித்துவ மதத்தைப் பரப்பும் பொருட்டு இந்திய நாடு போந்தார் தமது கொள்கைகளைப் பரப்பும் பொருட்டு மக்கள் பேசும் மொழிகளைப் பயிலும் கட்டாயம் உண்டாயிருந்தது. தமிழைப் பயிலத் தொடங்கிய மேல் நாட்டவர் தமிழில் உள்ள திருக்குறள் என்னும் ஒப்புயர் வில்லாத நூலைக் கண்டு வியப்படைந்து அதனைக் கற்று அதனைத் தத்தம் மொழிகளில் மொழி பெயர்த்துக்கொண்டனர். திருக்குறளை ஒப்ப மேல்நாட்டவரின் கவனத்தை ஈர்த்த இன்னொரு நூல் நீதிநெறி விளக்கம். இந் நூலை ஸ்டோக்ஸ் (H. Stokes, I.C.S) 1830இல் அச்சேற்றி வெளியிட் டுள்ளார். வேறு பலர் இதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்கள். இப் பதிப்பு புதிய தெள்ளிய உரையோடும் ஆங்கில மொழிபெயர்ப்போடும் கூடியது. குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் என்னும் அரிய நீதி நூலை அருளிச் செய்த குமரகுருபர சுவாமிகள் 1675ஆம் ஆண்டு (சிறீ வைகுந்தத்திற் பிறந்தார். பிறந்து ஐந்து ஆண்டளவும் இவர் ஊமை யாயிருந்தார். பின்பு இவர் பேசும் வன்மை அடைந்தார். இவர் தென்னிந்தியாவிற் பல இடங்களுக்குத் தல யாத்திரை செய்த பின் 1658இல் காசிக்குச் சென்றார். அங்கு இவர் முகமதிய அரசனால் நன்கு மதிக்கப்பட்டு அவனால் அளிக்கப்பட்ட நிலத்தில் மடம் ஒன்றைக் கட்டினார். 1988இல் இவர் காலமானார். இவருடைய பாடல்கள் சொற்சுவை பொருட்சுவை நிரம்பியவை. இவர் செய்த நூல்கள் 1. கந்தர் கலிவெண்பா, 2. மீனாட்சி பிள்ளைத் தமிழ், 3. மீனாட்சி குறம், 4. மீனாட்சி இரட்டை மணிமாலை, 5. பண்டார மும்மணிக் கோவை, 6. முத்துக்குமார சுவாமி பிள்ளைத் தமிழ், 7. சிதம்பர மும்மணிக் கோவை, 8. நீதிநெறி விளக்கம், 9. மதுரைக் கலம்பகம், 10. காசிக் கலம்பகம், 11. சிதம்பரச் செய்யுட் கோவை என்பனவாம். சென்னை 1.4.1949 ந.சி. கந்தையா நீதி நெறி விளக்கம் மூலமும் உரையும் ஆங்கில மொழிபெயர்ப்பும் கடவுள் வாழ்த்து நீரிற் குமிழி இளமை நிறைசெல்வம் நீரிற் சுருட்டு நெடுந்திரைகள் - நீரில் எழுத்தாகும் யாக்கை நமரங்காள் என்னே வழுத்தாத தெம்பிரான் மன்று. 1 1. Youth is a bubble on the water: riches in full abundance are the long waves that roll on the water; the body is a writing on the water. Why, O my friends, worship we not the Court of our God? (பதவுரை) இளமை நீரில் குமிழி - இளமைப் பருவம் நீரில் குமிழி போன்று நிலை இல்லாதது; நிறை செல்வம் நீரில் சுருட்டு நெடும் திரைகள் - நிறைந்த செல்வம் (கடல்) நீரிலே சுருண்டு வருகின்ற நீண்ட அலைகள் போன்று தோன்றி மறைவது; யாக்கை நீரில் எழுத்தாகும் - உடம்பு தண்ணீரில் எழுதிய எழுத்துப் போல் விரைவில் மறைந்து போவது; (ஆதலின்) நமரங்காள் - நம்மவரே! எம்பிரான் மன்று வழுத்தாதது என் - எமது கடவுளின் சபையைத் துதியாதது ஏனோ? (கருத்துரை) உடம்பு நிலையற்றது. ஆதலால் அது நிலைத் திருக்கும் போதே கடவுளை வழிபடல் வேண்டும். கல்வியே உறுதியான துணை அறம்பொரு ளின்பமும் வீடும் பயக்கும் புறங்கடை நல்லிசையும் நாட்டும் - உறுங்கவலொன் றுற்றுழியுங் கைகொடுக்குங் கல்வியி னூங்கில்லை சிற்றுயிர்க் குற்ற துணை. 2 2. It will bestow virtue, riches, pleasure and Heaven. It will establish a good report in the world, and when any great affliction may betide, it will afford a hand; short-lived mortals have no surer stay than learning. (ப-உ) (கல்வி) அறம்பொருள் இன்பமும் வீடும் பயக்கும் - (கல்வி) அறத்தையும் பொருளையும் இன்பத்தையும் வீடு பேற்றையும் கொடுக்கும்; புறம் கடை நல் இசையும் நாட்டும் - உலகில் நல்ல புகழையும் நிலை நிறுத்தும்; உறும் கவல் ஒன்று உற்றுழியும் கை கொடுக்கும் - பெரிய துன்பம் ஒன்று நேர்ந்தவிடத்தும் துணை செய்யும்; (ஆதலின்) சிறு உயிர்க்கு உற்ற துணை கல்வியின் ஊங்கு இல்லை - ஆகவே சிறிய வாழ்நாளுடைய மக்களுக்கு உறுதியாகிய துணை கல்வியிலும் மேலாக வேறொன்றில்லை. புறங்கடை - புறத்தே. (க-உ) கல்வி மக்களுக்கு எல்லாப் பயனும் கொடுத்து உதவத்தக்கது. ஆதலால் அதனைக் கற்றல் வேண்டும். கல்வி கற்பது துன்பமாயினும் அது பின் இன்பந்தரும் தொடங்குங்கால் துன்பமாய் இன்பம் பயக்கும் மடங்கொன் றறிவகற்றுங் கல்வி - நெடுங்காமம் முற்பயக்குஞ் சின்னீர வின்பத்தின் முற்றிழாய் பிற்பயக்கும் பீழை பெரிது. 3 3. O thou adoned with perfect jewels! Learning at first painful, will afterwards afford pleasure. It will destroy ignorance and extend knowledge. But the pain, which succeeds to the short-lived pleasure of immoderate lust,is great. (ப-உ) முற்று இழாய் - முற்றாக முடிந்த வேலைப்பாடுகளுடைய நகைகளை அணிந்தவனே; மடம் கொன்று அறிவு அகற்றும் கல்வி - அறியாமையைக் கெடுத்து அறிவை விசாலப்படுத்தும் கல்வி; தொடங்குங் கால் துன்பமாய் இன்பம் பயக்கும் - கற்கத் தொடங்கும் போது துன்பம் தருவதாகிப் பின்பு மகிழ்ச்சியைக் கொடுக்கும்; நெடும் காமம் - மிகுந்த காமம்; முற்பயக்கும் சின்நீர இன்பத்தில் பிற்பயக்கும் பிழை பெரிது - முதலில் கொடுக்கும் சிறிது நேர இன்பத்திலும் பார்க்கப் பின்பு கொடுக்கும் துன்பம் பெரிதாகும். (க-உ) கல்வி தொடக்கத்தில் துன்பமாகத் தோன்றிப்பின் இன்பந் தரும்; காமம் முதலில் இன்பமாகத் தோன்றிப்பின் துன்பந்தரும். சபையை அலங்கரிக்கும் கல்வி கல்வியே கற்புடைப் பெண்டிரப் பெண்டிர்க்குச் செல்வப் புதல்வனே தீங்கவியாச் - சொல்வளம் மல்லல் வெறுக்கையா மாணவை மண்ணுறுத்துஞ் செல்வமு முண்டு சிலர்க்கு. 4 4. Blest with learning as a chaste spouse, with sweet poctry as the darling son of that spouse, and with fluency of language as a store of riches, there are some whose wealth adorns the illustrious assembly of the learned. (ப-உ) சிலர்க்கு கல்வியே கற்புடைப் பெண்டிர் (ஆ) - கல்வி கற்கும் சிலர்க்குக் கல்வியே கற்புடைய மனைவியாகவும்; அப்பெண்டிர்க்குத் தீம் கவியே செல்வப் புதல்வன் ஆ - அம் மனைவிக்கு இனிய பாடலே செல்வப் புதல்வனாகவும்; சொல்வளம் மல்லல் வெறுக்கை ஆ - சொல்லும் திறமையே நிறைந்த செல்வமாகவும்; மாண் அவை மண்ணுறுத்தும் செல்வமும் உண்டு - பெரிய அறிவுடையோர் சபையை அலங்கரிக்கின்ற செல்வமும் உண்டு. (க-உ) சிலருக்கு மாத்திரம் நுலியற்றுமாற்றலோடு சிறந்த பேசுமாற்றலும் உண்டு. கல்விக்குச் சிறப்பு சொல்வன்மை எத்துணைய வாயினுங் கல்வி இடமறிந் துய்த்துணர் வில்லெனின் இல்லாகும் - உய்த்துணர்ந்தும் சொல்வன்மை யின்றெனின் என்னாகும் அஃதுண்டேல் பொன்மலர் நாற்ற முடைத்து. 5 5. Learning, however extensive, will be useless, unless there be discretion to display it in the proper place; and even then, without the power of language, of what avail is it? With that, it is a flower of gold that possesses fragrance. (ப-உ) கல்வி எத்துணைய ஆயினும் - (ஒருவனுக்குக்) கல்வி எவ்வளவு இருந்த போதும்; இடம் அறிந்து உய்த்து உணர்வு இல் எனில் இல்லாகும் - நூலின் இடத்தை அறிந்து ஆராய்ந்து அறியும் அறிவு இல்லையாயின் அது பயன் படாதாகும்; உய்த்துணர்ந்தும் - அவ்வாறு ஆராய்ந்து அறிந்தும்; சொல்வன்மை இன்று எனின் என்னாகும் - பேசும் ஆற்றல் இல்லையாயின் என்ன பயனுண்டாகும்? அஃது உண்டேல் பொன் மலர் நாற்றம் உடைத்து - பேச்சுவன்மை இருந்தால் பொன் மலர் மணம் பெற்றது போன்றதாகும். (க-உ) இடமறிந்து பொருளறிதலும் பேச்சு வன்மையும் வேண்டும். அவை அஞ்சுவார் கல்வி சிறந்ததன்று அவையஞ்சி மெய்விதிர்ப்பார் கல்வியும் கல்லார் அவையஞ்சா ஆகுலச் சொல்லும் - நவையஞ்சி ஈத்துண்ணார் செல்வமும் நல்கூர்ந்தா ரின்னலமும் பூத்தலிற் பூவாமை நன்று. 6 6. The learning of those whose frame trembles with diffidence before the assembly - the frivolous loquacity of the ignorant who feel no awe in the assembly - the wealth of those who do not conscientiously bestow alms before they eat - and the merit of a poor man, are things, the absence of which is better than their existance. (ப-உ) அவை அஞ்சி மெய் விதிர்ப்பார் கல்வியும் - சபைக்குப் பயந்து உடம்பு நடுங்குகின்றவரின் கல்வியும்; கல்லார் - படியாதவரின்; அவை அஞ்சா ஆகுலச் சொல்லும் - சபைக்குப் பயப்படாத ஆரவாரச் சொல்லும்; நவை அஞ்சி ஈத்து உண்ணார் செல்வமும் - குற்றத்துக்கு அஞ்சி (வறிய வர்க்குக்) கொடுத்துண்ணாதவரின் செல்வமும்; நல்கூர்ந்தார் இன் நலமும் - வறியவரின் இனிய குணங்களும்; பூத்தலில் பூவாமை நன்று - தோன்றுதலில் தோன்றாமை நல்லது. (க-உ) சபைக்கு அஞ்சும் கல்வியறிவால் பயனில்லை. ஊனுடம்பிலும் புகழுடம்பே மேலானது கலைமகள் வாழ்க்கை முகத்த தெனினும் மலரவன் வண்டமிழோர்க் கொவ்வான் - மலரவன்செய் வெற்றுடம்பு மாய்வனபோல் மாயா புகழ்கொண்டு மற்றிவர் செய்யும் உடம்பு. 7 7. Though Saraswati dwell in the face of both, Brahma may not vie with the illustrious Tamil bards; for the bodies, which these form by their praises, will not perish like the empty bodies of Brahma’s creation. (ப-உ) கலைமகள் வாழ்க்கை முகத்தது எனினும் - நாமகளின் வாழ்க்கை (பிரமனது) முகத்திலும் (கற்றவர்) முகத்திலும்ஆனாலும்; மலரவன் வண் தமிழோர்க்கு ஒவ்வான் - பிரமா புகழுடைய தமிழ்ப் புலவருக்கு ஒப்பாக மாட்டான்; (ஏனென்றால்) மலரவன் செய் வெற்று உடம்பு மாய்வன போல் - பிரமா செய்கின்ற வெறிய (புகழில்லாத) உடம்பு அழிவதைப் போல; இவர் புகழ்கொண்டு செய்யும் மற்று உடம்பு மாயா - இப்புலவர் புகழைக் கொண்டு செய்கின்ற வேறு வகையான உடம்பு அழிய மாட்டாது. (க-உ) கல்வியாலுண்டாகும் புகழ் என்றும் அழியாது. சபையில் உதவாக் கல்வி நெடும்பகல்தாம் கற்ற அவையத் துதவா துடைந்துளா ருட்குவருங் கல்வி - கடும்பகல் ஏதிலான் பாற்கண்ட இல்லினும் பொல்லாதே தீதென்று நீப்பரி தால். 8 8. The shrinking learning of men broken by long study, which is not available in public, is worse than a wife seen in broad day-light in a neighbour’s, company, for it is an evil that cannot be put away. (ப-உ) நெடும் பகல் தாம் கற்ற - நீண்டகாலம் தாம் படித்தவைகளை; அவையத்து உதவாது - சபையில் எடுத்துரைக்க முடியாமல்; உடைந்து உளார் - மனம் வருந்தி இருக்கின்றவர்களது; உட்குவரும் கல்வி - அச்சத்தைக் காட்டும் கல்வி; கடும் பகல்-நடுப்பகலில்; ஏதிலான்பால் கண்ட இல்லினும் பொல்லாது - அயலவனிடத்தில் கண்ட ஒருவனுடைய மனைவியிலும் பார்க்கத் தீயதாகும்; (ஏனெனில்) தீது என்று நீப்பு அரிது ஆல் - (இது) தீயதென்று விலக்கி விடுதற்கு முடியாதிருப்பதால். (க-உ) சபையிடத்து உதவாத கல்வியாற் பயனில்லை. படித்தவற்றை மறந்து புதியவற்றைக் கற்றல் வருந்தித்தாங் கற்றன வோம்பாது மற்றும் பரிந்துசில கற்பான் தொடங்கல் - கருந்தனம் கைத்தலத்த உய்த்துச் சொரிந்திட் டரிப்பரித்தாங் கெய்த்துப் பொருள்செய் திடல். 9 9. The attempt of those who, without preserving that learning which they have acquired with difficulty, try to make fresh acquirements, is like throwing away gold from their hands and toiling to make a fortune by sifting dust in search of treasure. (ப-உ) வருந்தி தாம் கற்றன ஓம்பாது - முயன்று தாம் படித்தவைகளை (நினைவில் வைத்துப்) பாதுகாவாமல்; மற்றும் சில பரிந்து கற்பான் தொடங்கல் - வேறு சிலவற்றை வருந்திக் கற்கத் தொடங்குதல்; கை தலத்த கருந்தனம் உய்த்து சொரிந்திட்டு - (ஒருவன்) கையிடத்துள்ள பொன்னை (நிலத்தில்) வீசி எறிந்துவிட்டு; ஆங்கு - அவ்விடத்திலே; அரிப்பு அரித்து எய்த்துப் பொருள் செய்திடல் - அரிப்பரித்து வருந்திப் பொருளைச் சேர்ப்பது போலாகும். (க-உ) படித்தவற்றை மறந்து புதியவற்றைக் கற்கத் தொடங்குதல் அறியாமை. வறியார் கல்வி விளக்கமடையாது எனைத்துணைய வேனும் இலம்பட்டார் கல்வி தினைத்துணையுஞ் சீர்பா டிலவாம் - மனைத்தக்காள் மாண்பில ளாயின் மணமகன் நல்லறம் பூண்ட புலப்படா போல். 10 10. However great may be the learning of poor men, it will never be appreciated so much as a grain to tinay even as, if the mistress of the house possess not the qualifications which become a wife, the virtues, with which her husband is endued, will not become conspicuous. (ப-உ) மனைத்தக்காள் மாண்பு இலள் ஆயின் - மனைவி சிறப்பில்லாதவளாயின்; மணமகன் பூண்ட நல் அறம் புலப்படா. கணவன் கொண்ட இல்லறம் விளக்கமடைய மாட்டாது; போல் - அது போல; இலம் பட்டார் கல்வி எனைத்துணைய வேனும் - வறியவருடைய கல்வி எவ்வளவு பெரிதாயிருந்தபோதும்; தினை துணையும் சீர்பாடு இலவாம் - தினையளவும் சிறப்பு அடைதல் இல்லையாகும். (க-உ) வறியவர் கல்வி பிரகாசிப்பதில்லை. வறியவர் நல்லவராயினும் மதிப்படையார் இன்சொல்லன் தாழ்நடைய னுயினுமொன் றில்லானேல் வன்சொல்லி னல்லது வாய்திறவா - என்சொலினும் கைத்துடையான் காற்கீழ் ஒதுங்குங் கடன்ஞாலம் பித்துடைய வல்ல பிற. 11 11. Though he may be courteous in speech, and humble in his behaviour, they will not open their lips to a poor man except in harsh words. Whatever a rich man may say they will crouch beneath his feet. Surely this world surrounded by the sea is full of madness. (ப-உ) இன் சொல்லன் - (ஒருவன்) இனியசொற் பேசுகின்றவனும்; தாழ்நடையன் ஆயினும் - அடக்கமான ஒழுக்கமுடையவனுமாயினும்; ஒன் றில்லானேல் - அவன் சிறிது பொருளாவது இல்லாமல் இருப்பானானால்; வன்சொல்லின் அல்லது - (உலகத்தவர் அவனிடத்து) கடிய சொற்களைப் பேசுதலல்லது; வாய் திறவா - (இனிய சொற்களைப்) பேசமாட்டார்; கைத்து உடையான் என் சொலினும் - கையிற் பொருளுடையவன் எதைச் சொன்னாலும்; கால் கீழ் ஒதுங்கும் - அவனுடைய காலின் கீழ் அடங்குவர்; கடல் ஞாலம் பித்துடையது - கடல்சூழ்ந்த இவ்வுலகிலுள்ளவர்கள் பைத்தியம் கொண்டவராவர்; பிற அல்ல - வேறொன்றும் உடையவரல்லர். (க-உ) வறியவர் நல்லவராயினும் மதிப்பெய்தார்; செல்வர் தீயவராயினும் மதிப்படைவர். செல்வரைப் பலர் சூழ்ந்து குறையிரப்பர் இவறன்மை கண்டும் உடையாரை யாரும் குறையிரந்தும் குற்றேவல் செய்ப - பெரிதுந்தாம் முற்பகல் நோலாதார் நோற்றாரைப் பின்செல்லல் கற்பன்றே கல்லாமை யன்று. 12 12. Although they see their covetousness, all urge their wants on the rich, and perform their mean behests. The submission of those who were not eminently devout in a former birth to those who were, is doubtless not from ignorance, but the decree of destiny. (ப-உ) இவறன்மை கண்டும் - ஈயாத தன்மையை அறிந்திருந்தும்; யாரும் உடையாரை குறை இரந்தும் குற்றேவல் செய்ப - எல்லாரும் பொருளுடையவரிடம் (சென்று) தமது குறையை நீக்கும்படி கேட்டு (அவர்) பணிவிடைகளையும் செய்வர்; முன் பகல் தாம் பெரிதும் நோலாதார் - முற்பிறப்பில் தாம் பெரிதும் தவம் செய்யாதவர்; நோற்றாரை பின் செல்லல் கற்பு அன்றே - தவம் செய்தவரைப் பின் சென்று வேண்டுதல் அறிவாகும்; கல்லாமை அன்று - (அஃது) அறியாமை அன்று; ஏ - தேற்றம். (க-உ) பொருள் கொடாத உலோபியராயிருந்த போதிலும் செல்வரைப் பலர் சூழ்ந்து குறைகளைச் சொல்லி பணிவிடை செய்வர். கற்றார்க்குக் கல்வியே அழகு கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால் மற்றோரணிகலம் வேண்டாவாம் - முற்ற முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா யாரே அழகுக் கழகு செய்வார் 13 13. The learned need no other ornament than the excellence of learning. Nothing is wanting to adornan ornament set perfectly with every precious stone. Who would beautify beauty itself? (ப-உ) முற்ற முழுமணி பூணுக்கு பூண்வேண்டா - (வேலைப்பாடு) முடிவுறும்படி முழு மாணிக்கங்கள் பதித்த ஆபரணத்துக்கு அழகு செய்வதற்கு வேறு ஆபரணம் வேண்டியதில்லை; (அதுபோல) கற்றோர்க்கு கல்வி நலனே கலன் அல்லால் - படித்தவர்களுக்குப் படிப்பின் அழகே அழகாவதல்லது; மற்று ஓர் அணிகலம் வேண்டாவாம் - (அவருக்கு) வேறு ஆபரணம் வேண்டியதில்லை; யாரே அழகுக்கு அழகு செய்வார் - ஏனெனில் எவர் தாம் அழகுக்கு அழகு செய்வர்? (செய்யார் என்றவாறு) (க-உ) கற்றவருக்குச் சிறந்த அழகாவது கல்வியே; பிறர் மதிப்பெய்துவதற்குக் கல்வியில்லாதவரைப் போல அவர் தம்மை அலங்கரித்துக் கொள்ள வேண்டியதில்லை. எல்லாமறிந்தவர் உலகில் இல்லை முற்று முணர்ந்தவ ரில்லை முழுவதூஉங் கற்றன மென்று களியற்க - சிற்றுளியாற் கல்லுந் தகருந் தகரா கனங்குழாய் கொல்லுலைக் கூடத்தினால். 14 14. There are none who understand every thing. Exult not in the idea that your learning is universal. The rock will give way to the small chisel of the mason; it will not, O thou adorned with massive ornaments, yield to the blacksmith’s hammer. (ப-உ) முற்றும் உணர்ந்தவர் இல்லை - எல்லாம் அறிந்தவர் (இவ்வுலகத்தில்) இல்லை; முதுவதூஉம் கற்றனம் என்று களியற்க - (ஆகவே) எல்லாவற்றையும் படித்தறிந்து விட்டோமென்று செருக்குக் கொள்ள வேண்டாம்; கனம் குழாய் - பாரமான காதணியை அணிந்தவளே; சிறு உளியால் கல்லும் தகரும் - சிறிய உளியினால் பாறைகளும் உடையும்; கொல் உலைக் கூடத்தினால் தகரா - (ஆனால்) கொல்லனது உலையிடத் துள்ள சம்மட்டியினால் அப்பாறை உடையாது. (க-உ) உலகில் எல்லாம் அறிந்தவர் இல்லை; பெரிய கல்வி ஆளர் அறியாத கருத்துக்கள் சில பொதுமக்களிடத்தும் காணப்படும்; ஆகவே கல்விச் செருக்குக் கூடாது. கற்றாரை நோக்கிச் செருக் கொழிக தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை அம்மா பெரிதென் றகமகிழ்க - தம்மினும் கற்றாரை நோக்கிக் கருத்தழிக கற்றதெல்லாம் எற்றே இவர்க்கு நாம் என்று. 15 15. Contemplate those who are poorer than yourselves, and rejoice in the greatness of your possessions. Contemplate those who are more learned than yourselves, and destroy self-conceit, exclaiming what is all our learning to these! (ப-உ) தம்மின் மெலியாரை நோக்கி - தம்மைக் காட்டிலும் வறியவர்களைப் பார்த்து; தமது உடைமை அம்மா பெரிது என்று அகம் மகிழ்க - அம்மா! தம்மிடத்திலுள்ளது பெரியது என்று மனம் மகிழ்தல் வேண்டும்; தம்மினும் கற்றாரை நோக்கி - தம்மிலும் பார்க்கப் படித்தவரைப் பார்த்து; நாம் கற்றது எல்லாம் இவர்க்கு எற்றே என்று கருத்து அழிக - நாம் படித்ததெல்லாம் இவர் படிப்புக்கு எவ்வளவென்று (செருக்கான) எண்ணத்தை விட்டு விடுதல் வேண்டும். (க-உ) தம்மிலும் வறியவரைக் காணும் போது தமது செல்வம் பெரிது என்று மகிழ வேண்டும்; தம்மிலும் கற்றாரைக் காணும் போது தமது கல்வி அற்பம் என்று செருக்கு ஒழிய வேண்டும். செல்வத்துக் கழகு பணிவு கல்வி யுடைமை பொருளுடைமை யென்றிரண்டு செல்வமுஞ் செல்வ மெனப்படும் - இல்லார் குறையிரந்து தம்முன்னர் நிற்பபோற் றாமுந் தலைவணங்கித் தாழப் பெறின். 16 16. The wealth, which consists in the possession of learning, and the possession of riches. may be termed wealth indeed, if its possessors bow the head with humility, as the destitute who stand begging before them. (ப-உ) இல்லார்-வறியவர்; குறை இரந்து தம் முன்னர் நிற்பபோல் - தமது குறையை வேண்டித் தமக்கு முன்னால் நிற்பது போல; தாமும் தலை வணங்கித் தாழப் பெறின் - தாங்களும் தலையால் வணங்கித் தாழ்ந்து நிற்பார்களாயின்; கல்வி உடைமை பொருள் உடைமை என்று இரண்டு செல்வமும் - கல்விச் செல்வம் பொருட்செல்வம் என்னும் இரண்டு செல்வங்களும்; செல்வம் எனப்படும் - சிறந்த செல்வங்கள் என்று (அறிவுடையோரால்) சொல்லப்படும். (க-உ) கல்விச் செல்வத்துக்கும் பொருட் செல்வத்துக்கும் சிறப்புத் தருவது பணிவே. அறிவில்லாதாருக்கு அறிஞர் தாழ்ந்து நடப்பர் ஆக்கம் பெரியார் சிறியா ரிடைப்பட்ட மீச்செலவு காணின் நனிதாழ்ப - தூக்கின் மெலியது மேன்மே லெழச்செல்லச் செல்ல வலிதன்றே தாழுந் துலை. 17 17. If men of real dignity perceive presumption in the conduct of their inferiors, they will behave with more humility. In weighing, while the lighter rises higher and higher, does not the heavier sink down the scale? (ப-உ) தூக்கின் - நிறுத்துப் பார்க்கும்போது; துலை மெலியது மேன்மேல் எழ செல்லச் செல்ல - தராசில் பாரங் குறைந்த பொருளுள்ள தட்டு மேலும் மேலும் உயரச் செல்லச் செல்ல; வலிது அன்றே தாழும் - பாரமான பொருளுள்ளதன்றோ தாழும்; (அது போல) ஆக்கம் பெரியார் - அறிவாலும் செல்வத்தாலும் பெரியவர்; சிறியோர் இடைபட்ட மீ செலவு காணின் நனிதாழ்ப - (அவ்விரண்டுமில்லாத) சிறியவரிடத்து வரம்புகடந்த நடத்தை கண்டால் அவர்களுக்கு மிகவும் தாழ்ந்து நடப்பர். (க-உ) அறிவில்லாதவர் வரம்பு கடந்து நடப்பின் அறிவுடையார் பணிவர். தற்புகழ்ச்சி தீது விலக்கிய ஓம்பி விதித்தனவே செய்யும் நலத்தகையார் நல்வினையுந் தீதே - புலப் பகையை வென்றனம் நல்லொழுக்கில் நின்றேம் பிறவென்று தம்பாடு தம்மிற் கொளின். 18 18. Even the good works of moral men, who shun what is to be avoided, and practise what has been enjoined, become evil, if, proudly boasting that they have conquered the enmity of the senses, and stood stead fastly in a virtuous course, they themselves dwell on their own merits. (ப-உ) புலம் பகையை பிற வென்றனம் - ஐம்புலன்களாகிய பகையையும் பிறவற்றையும் வென்றுவிட்டோம்; நல் ஒழுக்கில் நின்றேம் என்று - நல்ல ஒழுக்க நெறியில் நிற்கின்றோமென்று; தம் பாடு தம்மில் கொளின் - தம்முடைய பெருமையைத் தாமே நினைத்துக் கொள்வா ராயின்; விலக்கிய ஓம்பி - விலக்கப்பட்டவற்றைச் செய்யாமல் காத்து; விதித்தனவே செய்யும் நலத்தகையார் நல்வினையும் தீதே - (செய்யத்தக்கன வென்று) விதிக்கப் பட்டவைகளைச் செய்யும் நல்ல தன்மையுடையவர்கள் செய்யும் நல்ல செயல்களும் தீயனவாகும். (க-உ) உயர்ந்த ஒழுக்க நெறியில் நிற்பவர்களும் தம்மைப் புகழ்தல் தீயதாகும். தன்னைப் புகழாமையே நன்று தன்னை வியப்பிப்பான் தற்புகழ்தல் தீச்சுடர் நன்னீர் சொரிந்து வளர்த்தற்றால் - தன்னை வியவாமை யன்றே வியப்பாவ தின்பம் நயவாமை யன்றே நலம். 19 19. To praise oneself in order to attract admiration, is like feeding the flame with pure water - Is not the absence of self-admiration that which is to be admired? Is not happiness freedom from the desire of pleasure? (ப-உ) தன்னை வியப்பிப்பான் தன் புகழ்தல் - (ஒருவன்) தன்னைப் பிறர் மதிக்க வேண்டுமென்று கருதித் தன்னைப் புகழ்தல்; நல் நீர் சொரிந்து தீ சுடர் வளர்த்தற்றால் - நல்ல நீரை ஊற்றி நெருப்புச் சுடரை வளர்த்தது போலாகும்; தன்னை வியவாமை அன்றே வியப்பு ஆவது - தன்னைப் புகழாது இருப்பதன்றோ நல்ல மதிப்பாவது; இன்பம் நயவாமை அன்றே நலம் - இன்பத்தை விரும்பாமல் இருப்பதல்லவோ இன்பமாவது. (க-உ) தன்னைப் புகழ்ந்து புகழ்பெற நினைத்தல் நீர் ஊற்றித் தீ வளர்த்தது போலாகும். பிறர் மதிப்புவேண்டுவான் செய்யத் தக்கவை பிறரால் பெருஞ்சுட்டு வேண்டுவான் யாண்டும் மறவாமே நோற்பதொன் றுண்டு - பிறர்பிறர் சீரெல்லாந் தூற்றிச் சிறுமை புறங்காத்து யார்யார்க்கும் தாழ்ச்சி சொலல் 20 20. For him who desires much notice from others, there is one act of penance which he must never forget to practise; continually to dwell upon all the merits, and conceal the defects, of others and to address all with humility. (ப-உ) பிறரால் பெரும் சுட்டு வேண்டுவான் - பிறரால் மதிக்கப்படும் பெரிய மதிப்பை வேண்டுகின்றவன்; யாண்டும் மறவாமே நோற்பது ஒன்று உண்டு-எப்பொழுதும் மறவாமல் செய்வது ஒன்று உள்ளது; (அது) பிறர் பிறர் சீர் எல்லாம் தூற்றி - மற்றவரது சிறப்புக்களை யெல்லாம் சொல்லிப் பரப்பி; சிறுமை புறம் காத்து - சிறப்பல்லாதவற்றைப் பரவாமல் அடக்கி; யார் யார்க்கும் தாழ்ச்சி சொலல் - எல்லாரிடத்தும் வணக்கமான மொழிகளைப் பேசுதல். (க-உ) பிறர் மதிப்பை விரும்புகின்றவன் மற்றவர் நன்மைகளைச் சொல்லித் தீமைகளைச் சொல்லாதிருக்க வேண்டும். எல்லாரிடத்தும் வணக்கமான மொழிகளைப் பேச வேண்டும். கற்றபடி நில்லாதவரின் சொற்சாதுரியம் கற்றுப் பிறர்க்குரைத்துத் தாம்நில்லார் வாய்ப்படூஉம் வெற்றுரைக் குண்டோர் வலியுடைமை - சொற்றநீர் நில்லாத தென்னென்று நாணுறைப்ப நேர்த்தொருவன் சொல்லாமே சூழ்ந்து சொலல் 21 21. The empty speech of those, who do not themselves persist in what they have learned, and taught to others has weight only in one respect; in the indirect reproof of those who do not put them to shame by asking directly, why is it that you, who have taught others, do not practise yourself what you teach. (ப-உ) கற்று பிறர்க்கு உரைத்து தாம் நில்லார் வாய்படூஉம் - (நூல்களை) படித்து அக் கருத்துக்களைப் பிறர்க்குச் சொல்லித் தாம் அவ்வாறு நடவாதவருடைய வாயிலிருந்து பிறக்கும்; வெறு உரைக்கு ஓர் வலி உடைமை உண்டு - பயனில்லாத சொல்லுக்கு ஒரு வலிமை உள்ளது; (அது) சொற்ற நீர்நில்லாதது என் என்று - (நாங்கள்) நடக்க வேண்டுமென்று சொல்லுகின்ற நீர் அப்படி நடவாதது ஏன் என்று; நாண் உறைப்ப நேர்த்து ஒருவன் சொல்லாமே சூழ்ந்து சொலல் - நாணம் மிக உண்டாகும்படி ஒருவன் நேரே சொல்லாதபடி ஆராய்ந்து சொல்வதாகும். (க-உ) கற்றபடி தான் நடக்காதவர் பிறர்க்குப் போதிப்பது பேதைமை. பொருள்பெற்றுக் கல்வி கற்பித்தலாகாது பிறர்க்குப் பயன்படத் தாங்கற்ற விற்பார் தமக்குப் பயன்வே றுடையார் - திறப்படூஉந் தீவினை யஞ்சா விறல்கொண்டு தென்புலத்தார் கோவினை வேலை கொளல். 22 22. Those, who sell to others the advantages of the mysteries which they have learned, reserve an advantage of another description to themselves; the receiving the labours of the king of the dead, with the hardihood that defies the terrors of an evil life. (ப-உ) பிறர்க்குப் பயன்பட தாம் கற்ற விற்பார் - பிறருக்குப் பயனாகும்படி தாம் கற்றவற்றைப் பொருளுக்குக் கொடுப்பவர்; தமக்கு பயன்வேறு உடையர் - தமக்கு வேறொரு பயனை உடையவராவர்; (அது) திறம் படூஉம் தீவினை அஞ்சா விறல் கொண்டு தென்புலத்தார் கோவினை - பலவகைப்பட்ட தீய செயல்களையும் செய்ய அஞ்சாத வீரம் கொண்ட தென்புலத்தார் என்னும் பிதிர்களின் அரசனை; வேலை கொளல் - (தங்களை நரகத்திலிட்டு வருத்துதலாகிய) வேலையைச் செய்யப் பண்ணுதல். (க-உ) பொருள் பெற்றுக் கொண்டு கல்வியைச் சொல்லிக் கொடுத்தவர் நரகில் வருந்துவர். கற்றவர் சபையில் கல்லாதார் எழுதல் கற்பன ஊழற்றார் கல்விக் கழகத்தாங்(கு) ஒற்கமின் றூத்தைவாய் அங்காத்தல் - மற்றுத்தம் வல்லுரு அஞ்சன்மின் என்பவே மாபறவை புல்லுரு அஞ்சுவ போல். 23 23. The ceaseless chattering, in the learned assembly, of the coarse lips of those who were not destined to learning, tells us not to fear their otherwise powerful appearance, as the beasts and birds fear a figure of straw. (ப-உ) கற்பன ஊழ் அற்றார் - கற்கவேண்டியவற்றைக் கற்கும் நல்ல ஊழ் இல்லாதவர்; கல்வி கழகத்து - கற்றவர் இருக்கும் சபையில்; ஒற்கம் இன்று ஊத்தைவாய் அங்காத்தல் - அடக்கம் இல்லாமல் ஊத்தை வாயைத் திறந்து பேசுதல்; மாபறவை புல்உரு அஞ்சுவ போல் வல்உரு அஞ்சன் மின் என்பவே - விலங்குகளும் பறவைகளும் புல்லாற்செய்து வைக்கப்பட்ட உருவத்துக்கு அஞ்சுவது போலத் தம்முடைய வலிமையான உருவத்துக்கு அஞ்ச வேண்டாம் என்று சொல்வது போலாகும். (க-உ) கற்றவர் சபையில் கல்லாதவர் எழுந்தால் அவரைக் கற்றவர் பொருட்படுத்தார். தற்பெருமையாளரிடம் கல்வி சேராது போக்கறு கல்வி புலமிக்கார் பாலன்றி மீக்கொள் நகையினார் வாய்ச்சேரா - தாக்கணங்கும் ஆணவாம் பெண்மை யுடைத்தெனினும் பெண்ணலம் பேடுகொளப் படுவ தில். 24 24. Inexhaustible learning is attainable only by those who excel in observation; not by those who smile in vain self-conceit. Though a woman posses charms which Lachmi might envy, they cannot be enjoyed by an Hermaphrodite. (ப-உ) தாக்கு அணங்கும் ஆண் அவாம் பெண்மை உடைத்து எனினும் - (பெண்) தாக்கி வருத்துகின்றதும் ஆண்களால் விரும்பப்படுவது மாகிய பெண்மைத் தன்மை உடையதாயினும்; பெண் நலம் பேடு கொளப் படுவதில் - பெண்ணினுடைய இன்பம் ஆண் தன்மை இல்லாதவனால் கொள்ளப்படுவதில்லை; (அதுபோல) போக்கு அறு கல்வி - குற்றமற்ற கல்வி; புலம் மிக்கார்பால் அன்றி - அறிவு மிக்கவரிடத்திலல்லாமல்; மீக் கொள் நகையினார் வாய் சேரா - தற்பெருமையால் நகையாடுகின்ற வரிடத்திற் சேரமாட்டா. (க-உ) கல்வி தற்பெருமை கொண்டிருப்பவரை அடையாது. மூடர்க்கு அறிவு கொளுத்த முடியாது கற்றன கல்லார் செவிமாட்டிக் கையுறூஉங் குற்றந் தமதே பிறிதன்று - முற்றுணர்ந்துந் தாமவர் தன்மை யுணராதார் தம்முணரா ஏதிலரை நோவ தெவன். 25 25. If learned men incur disrespect, while forcing instruction into the ears of the ignorant, the fault is their own. If, with all their knowledge, they do not know their neighbours’ qualities, why should they be hurt at these ignorant neighbours for not knowing their merits. (ப-உ) கற்றன - தாம் கற்றவற்றை; கல்லார் செவிமாட்டி - மூடரின் செவியில் நுழைக்க முயல்வதால்; கையுறூஉம் குற்றம் தமதே - அடையும் குற்றம் அவருடையதே; பிறிது அன்று - வேறொருவருடையதன்று; முற்றும் உணர்ந்தும் அவர் தன்மை உணராதார் - எல்லாம் அறிந்தும் அம்மூடரின் தன்மையை அறியாதவர்; தம் உணரா ஏதிலரை நோவது எவன் - தமது குற்றத்தை உணராது அம்மூடரை நொந்து கொள்வது ஏன்? (க-உ) மூடருக்குக் கல்வி புகட்டப்புகுந்து அவர்களால் அவமானப்பட்ட கற்றவர்கள் எல்லாம் அறிந்திருந்தும் அம்மூடரின் தன்மையை அறியாதவராவர். அவர்கள் தமது குற்றத்துக்கு வருந்தாது அம்மூடரை நொந்துகொள்வது ஏன்? கீழோர் மேலோர் இயல்பு வேத்தவை காவார் மிகன்மக்கள் வேறுசிலர் காத்தது கொண்டாங் குவப்பெய்தார் - மாத்தகைய அந்தப் புரத்தது பூஞை புறங்கடைய கந்துகொல் பூட்கைக் களிறு. 26 26. The noble wait not in attendance at the royal court: and there are some others, who have no enjoyment in waiting there. The cat frequents the splendid zenana, while the hollow handed elephants, which can tear up the pillars to which they are bound, remain without the gate. (ப-உ) மிகல் மக்கள் வேத்து அவை காவார் - உயர்ந்தவர்கள் அரசனுடைய சபையில் (பரிவாரங்களாகக்) காத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்; வேறு சிலர் காத்தது கொண்டு ஆங்கு உவப்பு எய்தார் - இவர்களல்லாத வேறு சிலர் (அவ்வரச சபையைக்) காத்துக் கொண்டு நின்றும் மகிழ்ச்சியடைய மாட்டார்; மா தகைய அந்தப்புரத்தது பூஞை - பெருமையுடைய பெண்கள் தங்கும் அறையிடத்துப் பூனை இருக்கும்; கந்து கொல் பூட்கை களிறு புறங்கடையது - கட்டுத் தறியை முறிக்கும் வலியுடைய யானை தலைவாயிலில் நிற்கும். வேந்து - வேத்து என நின்றது. (க-உ) அரசரது பரிவாரங்களாக இருந்தும் சிலர் பெருமை அடையார். அவ்வாறில்லாத அறிஞர் வெளியே நிற்பினும் பெருமை அடைவர். இவர்க்கு இவர் தெய்வமெனல் குலமகட்குத் தெய்வம் கொழுநனே மன்ற புதல்வர்க்குத் தந்தையுந் தாயும் - அறவோர்க் கடிகளே தெய்வம் அனைவோர்க்குந் தெய்வம் இலைமுகப் பைம்பூண் இறை. 27 27. To well-born women, their husband is a god; to children, their father and mother; to the virtuous, their spiritual preceptor is a god; and a god to all, is the kind, adorned with leaf-like ornaments of pale gold. (ப-உ) குலம் மகட்கு கொழுநனே தெய்வம் - நல்ல குடியிற் பிறந்த (ஒழுக்கமுடைய) பெண்களுக்குக் கணவனே தெய்வம்; புதல்வர்க்கு தந்தையும் தாயும் (தெய்வம்) - மக்களுக்குத் தந்தையும் தாயும் தெய்வம்; அறவோர்க்கு அடிகளே (தெய்வம்) - (நல்லவழியில் செல்லும்) மாணாக் கருக்கு ஆசிரியரே தெய்வம்; எல்லார்க்கும் இலைமுகம் பைம்பூண் இறை தெய்வம் - எல்லோருக்கும் இலைமுகம் போன்ற பசுமையான பொன் ஆபரணங்கள் அணிந்த அரசன் தெய்வமாவான்; மன்ற - உறுதியாக. (க-உ) குலமகட்குக் கணவனும், புதல்வர்க்குத் தந்தையும் தாயும், மாணாக்கருக்கு ஆசிரியரும், குடிகள் எல்லோருக்கும் அரசனும் தெய்வமாவர். குடிகளைக் காவாத ஆட்சி பயனற்றது கண்ணிற் சொலிச்செவியின் நோக்கும் இறைமாட்சி புண்ணியத்தின் பாலதே யாயினுந் - தண்ணளியான் மன்பதை யோம்பாதார்க் கென்னும் வயப்படைமற் றென்பயக்கும் ஆணல் லவர்க்கு. 28 28. Though men possess the royal privilege of speaking with the eye, and seeing with the ear, as the fruit of former virtues; of what avail is it, unless they protect the earth with their clemency? What advantage will mighty weapons afford to those, who are wanting in manly courage? (ப-உ) கண்ணின் சொலி செவியில் நோக்கும் இறைமாட்சி - கண் பார்வையால் கருத்தை அறிவித்துக் காதினால் கேட்பதால் கண்ணாற் கண்டது போல் அறியும் அரசனுடைய பெருமை; புண்ணியத்தின் பாலதே ஆயினும் - முற்செய்த புண்ணியத்தால் உண்டாவதானாலும்; தண் அளியால் மன்பதை ஓம்பாதார்க்கு - குளிர்ந்த கருணையால் குடிகளைப் பாதுகாவாத அரசருக்கு; என்னும் - (அவருடைய சிறப்பு) என்ன பயனுடையது? ஆண் அல்லவர்க்கு வயப்படை என் பயக்கும் - ஆண் தன்மையில்லாதவர்க்கு வெற்றி தரத்தக்க ஆயுதம் என்ன பயனைத் தரும்? (க-உ) குடிகளை நல்ல முறையில் காப்பாற்றாவிட்டால் அரச அதிகாரம் பயனற்றது. குடிகளை வருத்தி வரி கொள்ளலாகாது குடிகொன் றிறைகொள்ளுங் கோமகற்குக் கற்றா மடிகொன்று பால்கொளலும் மாண்பே - குடியோம்பிக் கொள்ளுமா கொள்வோர்க்குக் காண்டுமே மாநிதியம் வெள்ளத்தின் மேலும் பல. 29 29. To a prince, who destroys his subjects to obtain his revenue, to cut open the udder of a new milched cow, to obtain her milk, would be comparatively creditable; but to those who protect their subjects before receiving their own dues, we have seen wealth overflowing like a flood. (ப-உ) குடி கொன்று இறை கொள்ளும் கோமகற்கு - குடிகளை வருத்தி வரிவாங்கும் அரசனுக்கு; கன்று ஆ மடிகொன்று பால் கொளலும் மாண்பே - கன்றுடைய பசுவின் மடியை அறுத்துப் பால் எடுப்பதும் நல்ல செயலாகும்; குடி ஓம்பி கொள்ளுமா கொள்வோர்க்கு - குடிகளைப் பாதுகாத்து வாங்கும் முறைமையில் (வரியை) வாங்கும் அரசருக்கு; மாநிதியம் வெள்ளத்தின் மேலும் பல காண்டும் -பெரிய செல்வம் வெள்ளத்திற்கும் அதிகமாகப் பெருகுவதைக் காண்கின்றோம். (க-உ) குடிகளை வருத்தாது வரிகொள்ளும் அரசனின் செல்வம் வளரும். கொடுங்கோல் அரசன் இயல்பு இன்று கொளற்பால நாளைக் கொளப்பொறான் நின்று குறையிரப்ப நேர்படான் - சென்றொருவன் ஆவன கூறின் எயிறலைப்பான் ஆறலைக்கும் வேடலன் வேந்தும் அலன். 30 30. He, who will not wait till to-morrow, to receive, that which becomes due to-day; who will not attend, when one stands to beg redress; and who will gnash his teeth with impatience when one may approach to offer wise advice; is neither a Vedan who robs on the highway, nor a king. (ப-உ) இன்று கொளற்பால நாளை கொளப் பொறான் - இன்று வாங்கவேண்டிய பொருளை நாளைக்கு வாங்கப் பொறுத்திருக்க மாட்டான்; நின்று குறை இரப்ப நேர்படான் - (குடிகள்) முன்னே நின்று தமது குறைகளைச் சொல்ல அகப்படமாட்டான்; ஒருவன் சென்று ஆவன கூற எயிறு அலைப்பான் - ஒருவன் சென்று தனக்கு ஆகவேண்டியவற்றைச் சொன்னால் பல்லைக் கடித்துக் கோபிப்பான்; ஆறு அலைக்கும் வேடு அலன் வேந்தும் அலன் - (அவன்) வழிப்பறி செய்யும் வேடனுமல்லன் அரசனும் அல்லன். (க-உ) குடிகளை வருத்திப் பொருள் கொள்ளும் அரசன் வழிபறிக்கும் வேடனிலும் கொடியவன். அரச செல்வத்தில் மயக்கம் முடிப்ப முடித்துப்பின் பூசுவ பூசி உடுப்ப உடுத்துண்ப உண்ணா - இடித்திடித்துக் கட்டுரை கூறிற் செவிகொளா கண்விழியா நெட்டுயிர்ப்போ டுற்ற பிணம். 31 31. A king, who after crowning his head with chaplets, rubbing his body with unguents, clothing himself in rich robes, and feasting on rich viands, will not lend his ear, nor open his eyes, though addressed with reiterated earnestness, is but a corpse endued with breath. (ப-உ) முடிப்ப முடித்து - முடியிற் சூடத்தக்க (பூமாலைகளைச்) சூடிக்கொண்டு; பின் பூசுவ பூசி - பின்பு உடலிற் பூசவேண்டிய (புனுகு சந்தனம் முதலியவற்றைப்) பூசிக் கொண்டு; உடுப்ப உடுத்து - உடுக்க வேண்டிய (உடைகளை) உடுத்துக் கொண்டு; உண்ப உண்ணா - உண்ணத்தக்க (நல்ல உணவுகளை) உண்டு கொண்டு, இடித்து இடித்து கட்டுரை கூறின் - பலமுறை நெருக்கி உறுதி மொழிகளைச் சொன்னாலும்; செவி கேளா - காதினாற் கேளாமலும்; கண் விழியா - கண்களாற் பாராமலும் (இருக்கின்ற அரசர்); நெட்டுயிர்ப்போடு உற்ற பிணம் - மூச்சு விடுகின்ற பிணங்களாவர். முடித்துப் பூசி உடுத்து உண்டு கேளாது பாராது இருக்கும் அரசர் மூச்சுவிடும் பிணத்துக்குச் சமம். (க-உ) அரச செல்வத்தில் மயங்கிக் குடிகளின் குறைகளைக் கேளாத அரசன் பிணத்துக்குச் சமம். அரசன் செய்யவேண்டியவை ஓற்றிற் றெரியா சிறைப்புறத் தோர்துமெனப் பொற்றோள் துணையாத் தெரிதந்தும் - குற்றம் அறிவரிதென் றஞ்சுவதே செங்கோன்மை சென்று குறையிடினுங் கேளாமை யன்று. 32 32. The duty of him who holds a sceptre. is to fear on account of the difficulty of detecting wrong; even though, assured that it cannot be ascertained by spies, he has in person made private inquiry, his own arm adorned with gold being his only protection; not to refuse to listen, though men come and complain of it. (ப-உ) ஒற்றில் தெரியா - ஒற்றரால் அறிய முடியாதவைகளை; சிறைப்புறத்து ஓர்தும் என - ஒதுக்கிடங்களில் நின்று அறிவோமென்று; பொன் தோள் துணையா தெரிதந்தும் - பொன்வளை அணிந்த (தனது) தோளே தனக்குத் துணையாக அங்கு நின்று அறிந்தும்; குற்றம் அறிவு அரிது என்று அஞ்சுவதே செங்கோன்மை - குற்றம் யாது என்று அறிய முடியவில்லையே என்று அரசன் பயப்படுவதே நீதி ஆட்சியாகும்; சென்று குறையிடினும் கேளாமை அன்று - சென்று குறைகளை முறையிட்டாலும் கேளாமல் இருப்பதன்று. (க-உ) அரசனுடைய சிறப்பியல்பு குடிகளின் குறைகளை அறிந்து அவைகளைத் தீர்த்தலாகும். பொய் நீக்கி மெய் கொள்ள வேண்டும் ஏதிலார் யாதும் புகல இறைமகன் கோதொரீஇக் கொள்கை முதுக்குறைவு - நேர்நின்று காக்கை வெளிதென்பார் என்சொல்லார் தாய்க்கொலை சால்புடைத் தென்பாரு முண்டு. 33 33. While others assert every thing, the wisdom of the Prince is to receive their assertions, rejecting what is false. What will not men say, who standing opposite to a crow, will call it white? There are some, who will even say, that the murder of a mother is noble. (ப-உ) ஏதிலார் யாதும் புகல - பிறர் தமக்குத் தோன்றியவாறு எல்லாம் சொல்ல; இறைமகன் கோதுஒரீஇ கொள்கை - அரசன் அவர்கள் கூறிய வற்றின் குற்றமானவை நீக்கி நல்லவற்றைக் கொள்ளுதல்; முதுக்குறைவு - அறிவுடைமையாகும்; நேர் நின்று காக்கை வெளிதென்பார் என் சொலார் - காகத்துக்கு முன்னால் நின்று அது வெண்ணிறமுடைய தென்று சொல்லு கின்றவர்கள் எதைச் சொல்ல மாட்டார்கள்; தாய்க்கொலை சால்பு உடைத்து என்பாரும் உண்டு - தாயைக் கொலை செய்தல் நீதி என்று கூறு கின்றவர்களும் இவ்வுலகத்தில் உண்டு. (க-உ) பிறர் கூறுகின்றவற்றிற் பொய்ந் நீக்கி உண்மை கொள்ளுதல் அரசர்க்கு அறிவுடைமை. மூடர் கேடறியார் கண்கூடாப் பட்டது கேடெனினுங் கீழ்மக்கட்(கு) உண்டோ வுணர்ச்சிமற் றில்லாகும் - மண்டெரி தான்வாய் மடுப்பினும் மாசுணம் கண்டுயில்வ பேரா பெருமூச் செறிந்து 34 34. Though ruin be before their eyes, will fools perceive it? No, they will not: though thick flames envelope their body, the sleeping rock serpents will not arouse from their loud-breathing slumbers. (ப-உ) கேடு கண்கூடு ஆ பட்டது எனினும் - (தமக்கு) வருங்கேடு கண்ணுக்குத் தெரிபவாயினும்; கீழ்மக்கட்கு உண்டோ உணர்ச்சி - மூடருக்கு அதனின்று தப்பிப்பிழைக்கும் உணர்ச்சி உள்ளதோ? இல்லாகும் - இல்லை யாகும்; மண்டு எரிதான் வாய் மடுப்பினும் - மிக்க நெருப்புத் தன்னைச் சூழ்ந் தாலும்; மாசுணம் பெருமூச்செறிந்து கண் துயில்வ - பாம்பு பெருமூச்சு விட்டு நித்திரை கொள்ளும்; பேரா - அவ்விடத்தைவிட்டு நீங்காது. (க-உ) ஆபத்து அண்மையில் இருப்பதை அறிந்தாலும் கீழ்மக்கள் அதனை உணரார். கேட்டுக்கு அறிகுறி நட்புப் பிரித்தல் பகைநட்டல் ஒற்றிகழ்தல் பக்கத்தார் யாரையும் ஐயுறுதல் தக்கார் நெடுமொழி கோறல் குணம்பிறி தாதல் கெடுவது காட்டுங் குறி. 35 35. The estrangement of friends, the receiving of enemies into friendship; to scoff at a spy, and to suspect all associates; to despise the continued advice of the wise; and become changed in disposition, are signs of approaching ruin. (ப-உ) நட்புப் பிரித்தல் - நண்பர்களைப் பிரிந்து போகும்படி செய்தலும்; பகை நட்டல் - பகைவரை நண்பராக்கிக் கொள்ளுதலும்; ஒற்று இகழ்தல் - ஒற்றரை அவமதித்தலும்; பக்கத்தார் யாரையும் ஐயுறுதல் - கூட இருப்பார்கள் தக்கார் நெடுமொ கோறல் - அறிவுடையவரின் எல்லாரை யும் சந்தேகித்தலும்; அறிவுரைகளை அழித்தலும்; குணம் பிறிது ஆதல் - நல்லகுணத்திலிருந்து மாறுபடுதல்; கெடுவது காட்டும் குறி - (ஆகிய இவைகள்) வரப்போகும் கேட்டைக் காட்டும் அடையாளங்களாகும். (க-உ) நட்புப் பிரித்தல் முதலியன கேடு வருவதற் கறிகுறிகளாகும். செல்வச் செருக்கால் பெரியாரைப் பிழைத்தல் பணியப் படுவார் புறங்கடைய ராகத் தணிவில் களிப்பினால் தாழ்வார்க் - கணிய(து) இளையாள் முயக்கெனினுஞ் சேய்த்தன்றே மூத்தாள் தொலையாத 1போகங் கொளல். 36 36. The men, who are sunk in immoderate delights, while those who ought to be honoured are waiting at the gate, though now they embrace the goddess of prosperity, are not far from the enjoyment of the charms of the close bosom of her elder sister, adversity. (ப-உ) பணியப்படுவார் புறங்கடையர் ஆக - தாம் வணங்கி எதிர்கொள்ளத்தக்கவர் தலைவாயிலில் நிற்க; தணிவு இல் களிப்பினால் தாழ்வார்க்கு - அடங்காத செல்வச் செருக்கினால் (அவரை எதிர் கொள்ள) காலம் நீட்டிப்பவருக்கு; இளையாள் முயக்கு அணியது எனினும் - இலக்குமியின் சேர்க்கை அவர்க்குக் கிட்ட இருந்த போதும்; மூத்தாள் தொலையாத போகம் கொளல் சேய்த்து அன்று - மூதேவியின் நீங்காத சேர்க்கையைப் பெறுதல் தொலைவில் இல்லை. (க-உ) செல்வச் செருக்கினால் பெரியாரை மதியாவிட்டால் மூதேவி குடி கொள்வள். நற்குணமுடையோர் பண்பு கண்ணோக் கரும்பா நகைமுகமே நாண்மலரா இன்மொழியின் வாய்மையே தீங்காயா - வண்மை பலமா நலங்கனிந்த பண்புடையா ரன்றே சலியாத கற்ப தரு. 37 37. The nobly generous whose glance is a bud; their smiling countenance, a fresh blown blossom; the truth of their courteous speech, the sweet young fruit; and munificence, the ripe fruit; are not these the real inexhaustible calpa tree? (ப-உ) கண் நோக்கு அரும்பு ஆ - கண்ணால் பார்க்கும் பார்வை அரும்பாகவும்; நகை முகமே நாள் மலர் ஆ - மலர்ந்த முகமே புதுப் பூவாகவும்; இன்மொழியின் வாய்மையே தீம் காய் ஆ - இனிய சொல்லின் உண்மையே இனிப்பான காயாகவும்; வண்மை பலம் ஆ - கொடையே பழம் ஆகவும்; நலம் கனிந்த பண்புடையார் அன்றே சலியாத கற்பக தரு - நன்மைகள் பழுத்த நற்குணமுடையவர் அல்லவோ இளைத்தல் இல்லாத கற்பக மரமாவர். (க-உ) நிறைந்த குணமுடையவர் சொல்லாலும் செயல்களாலும் இனியராயிருப்பர். யானையுணவின் ஒருசிறிது கோடி எறும்பிற்கு உணவு வாங்குங் கவளத் தொருசிறிது வாய்தப்பின் தூங்குங் களிறோ துயருறா - ஆங்கதுகொண்(டு) ஊரும் எறும்பிங் கொருகோடி யுய்யுமால் ஆருங் கிளையோ டயின்று. 38 38. The drowsy elephant will not grudge the few grains which may fall from the ball of rice that it is receiving: the creeping ants will pick them up, and ten million living creatures will subsist, feasting with their crowded progeny. (ப-உ) வாங்கும் கவளத்து ஒரு சிறிது வாய் தப்பின் - தான் வாங்கி உண்கின்ற ஒருவாய் உணவின் ஒரு சிறு பகுதி வாய்க்குள் போகாது தவறி விழுந்துவிட்டால்; தூங்கும் களிறு ஓ துயர் உறாது - அசைந்து கொண்டு நிற்கும் யானையோ துன்பம் அடையமாட்டாது; ஆங்கு அது கொண்டு - அவ்விடத்தில் விழுந்த அதனைக் கொண்டு; இங்கு ஊரும் எறும்பு ஒரு கோடி ஆரும் கிளையோடு அயின்று உய்யும் - இவ்வுலகில் ஊருகின்ற எறும்புகளில் ஒரு கோடி தங்கள் நிறைந்த சுற்றத்தோடு உணவை உண்டு உயிர் வாழும். (க-உ) யானைக்குக் கொடுக்கும் கவள உணவின் ஒரு சிறிது கோடி எறும்புக்கு உணவாகும். அரசனுடைய நன் மதிப்பு மாகஞ் சிறுகக் குவித்து நிதிக்குவை ஈகையின் ஏக்கழுத்தம் மிக்குடைய - மாகொல் பகைமுகத்த வெள்வேலான் பார்வையிற் றீட்டும் நகைமுகத்த நன்கு மதிப்பு. 39 39. The smiling approbation, which is expressed in the glance of the prince, whose bright javelin threatens the death of wild beasts; is a prouder thing, than the gift of a heap of treasure, large enough to diminish the sky. (ப-உ) பகை முகத்த மா கொல் வெள் வேலான் - பகைவரது போர்க்களத்தே குதிரையைக் கொல்கின்ற வெள்ளிய வேலையுடைய அரசன்; நகை முகத்த பார்வையில் தீட்டும் நன்கு மதிப்பு - மலர்ந்த முகத்திலுள்ள கண்களால் தோற்றுவிக்கும் நன்மதிப்புகள்; மாகம் சிறுக குவித்த நிதிக்குவை ஈகையின் - மேகமும் சிறிது (என்னும்படி) குவித்த பொருள் குவியலைக் கொடுத்தலினும் பார்க்க; ஏக்கழுத்தம் மிக்குடைய- பெருமிதம் பெரியதாகும். (க-உ) அரசன் நன்மதிப்பைப் பெறுதல் பொன் குவியலைப் பெறுதலிலும் பெருமை தருவது. அடைக்கலம் காத்தல் களைகணாத் தம்மடைந்தார்க் குற்றுழியும் மற்றோர் விளைவுன்னி வெற்றுடம்பு தாங்கார் - தளர்நடைய(து) ஊனுடம் பென்று புகழுடம் போம்புதற்கே தானுடம் பட்டார்க டாம். 40 40. Those will not spare their worthless bodies, in the hope of any future profit, should anything happen even to such as are under their protection; who, sensible how frail is the body of flesh, have determined to preserve the body of glory. (ப-உ) ஊன் உடம்பு தளர் நடையது என்று - இறைச்சியாலான இவ்வுடம்பு நிலைதளரும் இயல்புடையது என்று கருதி; புகழ் உடம்பு ஓம்புதற்கு உடம்பட்டார்கள் தாம் - புகழ் உடம்பை வளர்ப்பதற்குத் தீர்மானித்தவர்கள்; தம் களைகண் ஆ அடைந்தார்க்கு-தமது ஆதரவைநாடி வந்து சேர்ந்தவர்க்கு; உற்று உழியும் - (ஒரு சிறிய துன்பம்) வந்தவிடத்தும்; மற்று ஓர் விளைவு உன்னி வெற்றி உடம்பு தாங்கார் - (புகழல்லாத) வேறொன்றனை விரும்பித் தமது ஊனுடம்பை வைத்திருக்கமாட்டார். (க-உ) உலகில் தம்புகழை நாட்ட விரும்புவோர் தமது உடலைக் கொடுத்தும் தம்மை அடைக்கலமாக வந்தடைந்தவரைக் காப்பர். மதிப்பை இழத்தலாகாது தம்முடை யாற்றலும் மானமுந் தோற்றுத்தம் இன்னுயிர் ஓம்பினும் ஓம்புக - பின்னர்ச் சிறுவரை யாயினும் மன்ற தமக்காங்(கு) இறுவரை யில்லை யெனின். 41 41. If any would save their sweet lives, by sacrificing courage and honour; let them to do so, provided even then they can be secure from death, for ever so short a time. (ப-உ) பின்னர் சிறுவரை ஆயினும் மன்ற தமக்கு இறுவரை இல்லை எனின் - இனிமேல் சிறிது கால அளவாயினும் தமக்குத் திண்ணமாகச் சாவு இல்லையானால்; தம்முடை ஆற்றலும் மானமும் தோற்று - தமது வலிமையையும் மதிப்பையும் இழந்து; தம் இன்னுயிர் ஓம்பினும் ஓம்புக - தமது இனிய உயிரைக் காப்பாற்றினும் காப்பாற்றுக. ‘ஆங்கு’ இடைச்சொல். (க-உ) இனிமேல் மரணமில்லையென்று கண்டால் தனது மானத்தையும் மதிப்பையும் ஒருவன் இழந்தாயினும் தன் உயிரைக் காப்பாற்றலாம். சாவுக்கு அஞ்சாதவர் கலனழிந்த கற்புடைப் பெண்டிரும் ஐந்து புலனொடுங்கப் பொய்யொழிந் தாரும் - கொலைஞாட்பின் மொய்ம்புடை வீரரும் அஞ்சார் முரண்மறலி தும்பை முடிசூ டினும். 42 42. Virtuous matrons, who have laid aside their ornaments in widowhood; those, who, having done away with falsehood, have brought the five senses to agree: and warriors, who, in the slaughterous field of battle, retain their courage; fear not, though grim Yaman assume the chaplet of Drona flowers. (ப-உ) கலன் அழிந்த கற்புடை பெண்டிரும் - கணவன் இறத்தலால் நகைகளைக் களைந்த கற்புடைய பெண்களும்; ஐந்து புலன் ஒடுங்க பொய் ஒழிந்தாரும் - (மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும்) ஐந்து புலன்களும் குன்றும்படி பொய்யை விட்டவரும்; கொலை ஞாட்பின் மொய்ம்பு உடை வீரரும் - போர்க்களத்திலுள்ள வலிய வீரரும்; முரண் மறலி தும்பை சூடினும் அஞ்சார் - வலிய இயமன் தனது முடியிலே தும்பை மாலை சூடினாலும் (எதிர்த்தாலும்) அஞ்சமாட்டார். (க-உ) கணவனை இழந்த கற்புடை மகளிரும், துறவிகளும், வீரரும் உயிரைவிட அஞ்சார். மெய்யறிவுடையோர் சாக அஞ்சார் புழுநெளிந்து புண்ணழுகி யோசனை நாறும் கழிமுடை நாற்றத்த வேனும் - விழலர் விளிவுன்னி வெய்துயிர்ப்பர் மெய்ப்பயன் கொண்டார் சுளியார் சுமைபோடு தற்கு 43 43. Fools will sigh deeply at the thought of death, though their bodies be corrupted with sores full of crawling worms, the rank odour of which may be perceived at the distance of five miles; but those, who have derived the true advantage of the body, will not shudder to lay down the burden. (ப-உ) புண் அழுகி புழு நெளிந்து யோசனை நாறும் கழிமுடை நாற்றத்த ஏனும் - (தமது உடல்) புண்ணானது அழுகிப் புழு நெளிந்து ஒரு யோசனை தூரம் மிகுதியாக வீசுகின்ற தீய நாற்றம் உடையதாயிருந்த போதிலும்; விழலர் - அறிவில்லாதவர்; விளிவு உன்னி வெய்து உயிர்ப்பர் - இறத்தலை அஞ்சி பெருமூச்சு விடுவர்; மெய் பயன் கொண்டார் - உடம் பினாலாகிய பயனை அடைந்த அறிவுடையோர்; சுமை போடுதற்கு சுளியார் - உடம்பாகிய சுமையை விடுதற்கு நடுங்கமாட்டார். (க-உ) உடம்பின் பயனாகிய மெய்யறிவைப் பெற்றோர் சாகப் பயப்படார். அரசன் எவ்வழி குடிகளு மவ்வழி இகழி னிகழ்ந்தாங் கிறைமகன் ஒன்று புகழினும் ஒக்கப் புகழ்ப - இகன்மன்னன் சீர்வழிப் பட்டதே மன்பதைமற் றென்செயும் நீர்வழிப் பட்ட புணை. 44 44. If the prince speak contemptuously, they will speak so likewise; and if he praise, they will praise in equal terms, thus the world are led according to the taste of the warrior king. What else does the boat, that is borne along the current of the water? (ப-உ) இறைமகன் ஒன்று இகழின் - அரசன் ஒன்றை இகழ்ந்தால்; (ஒக்க) இகழ்ந்து - (குடிகளும்) தாமும்கூட அதை இகழ்ந்து; புகழினும் ஒக்க புகழ்ப - (அரசன்) புகழ்ந்தால் தாமும் கூடப் புகழ்வர்; புணை நீர் வழிப்பட்ட - தெப்பம் நீர் செல்லும் வழி செல்லும்; மன்பதை இகல் மன்னன் சீர் வழிப்பட்டதே - (அதுபோல) மக்கட் கூட்டமும் வலிய அரசனின் சிறந்த வழியிலேயே செல்லும்; மற்று என் செயும் - (அவ்வாறு செய்வதைத் தவிர) வேறு என்ன செய்ய முடியும்? (க-உ) அரசன் ஆணைப்படியே குடிகளும் நடக்க நேரிடும். நல் அமைச்சர் இயல்பு செவிசுடச் சென்றாங் கிடித்தறிவு மூட்டி வெகுளினும் வாய்வெரீஇப் பேரா - கவிழ்மதத்த கைம்மா வயத்ததோ பாகுமற் றெத்திறத்தும் அம்மாண் பினவே அமைச்சு. 45 45. The keeper approaches the elephants when liquid flows from its temples in the season of frantic violence; and, as he perfects its discipline by repeated blows until its ear burns with pain, however enraged it be, flinches not in fear, but keeps the charge: such is every respect is the duty of the King’s minister. (ப-உ) பாகு - (யானையைச் செலுத்தும்) பாகன்; எத்திறத்தும் கவிழ் மதத்த கைமா வயத்ததோ - எவ்வளவும் மதம் சொரியும் யானையை அடக்காது அதற்கு அடங்குவானோ? அடங்கான்; (அது போல்) அமைச்சு - மந்திரி; (எத்திறத்தும்) அம்மாண் பினவே - எவ்வகையிலும் அத் தன்மையரே ஆவர்; சென்று - (அரசன் நெறி தவறியவிடத்து அவனிடம்) போய்; செவி சுட இடித்து அறிவு மூட்டி - (அவனது) செவிகள் வருந்தும் படி இடித்துரைத்து அறிவு உண்டாகச் செய்து; வெகுளினும் வாய் வெரீஇ பேரா - கோபித்தாலும் (அவனுக்குப்) பயந்து நீங்கார். ‘ஆங்கு’ அசை. (க-உ) அரசன் கோபித்தாலும் அவனை விட்டு நீங்காது அமைச்சர் அவனுக்கு நல்லறிவு புகட்டுவர். அரசனிடம் சமயமறிந்து பேசவேண்டும் கைவரும் வேந்தன் நமக்கென்று காதலித்த செவ்வி தெரியா துரையற்க - ஒவ்வொருகால் எண்மைய னேனும் அரியன் பெரிதம்மா கண்ணிலன் உள்வெயர்ப்பினான். 46 46. Utter not all you desire, without observing the proper season, in the belief that the king is under your influence; though occasionally he may be easy to manage; yet how difficult is he when destitute of mercy, and burning with inward rage? (ப-உ) வேந்தன் நமக்கு கைவரும் என்று - அரசன் நமக்கு இணங்கி வருவான் என்று நினைத்து; செவ்வி தெரியாது காதலித்த உரையற்க - சமயம் தெரியாமல் (தாம்) விரும்பியதைச் சொல்லாதிருத்தல் வேண்டும்; ஒவ்வொருகால் எண்மையன் ஏனும் - சிற்சில சமயங்களில் (கேட்ட வற்றைப் பெறுதற்கு) எளியன்போல் தோன்றினாலும்; பெரிது அரியன் கண் இலன் உள் வெயர்ப்பினான் - அவன் (ஒன்றைக் கொடுத்தற்கும் காண்டற்கும்) மிக அரியன் இரக்கமில்லாதவன் உள்கோப முள்ளவன். (க-உ) அரசனிடம் சமயமறிந்து பேசி விரும்பியவற்றைக் கேட்டுப் பெறுதல் வேண்டும். அரசர் இயல்பு பழமை கடைப்பிடியார் கேண்மையும் பாரார் கிழமை பிறிதொன்றுங் கொள்ளார் - வெகுளின்மன் காதன்மை யுண்டோ இறைமாண்டார்க் கேதிலரும் ஆர்வலரும் இல்லை அவர்க்கு. 47 47. They remember not old acquaintance; they regard not intimacy, they acknowledge not the ties of blood, or other connexion; what affection have princes in their rage? They know neither foes nor friends. (ப-உ) வெகுளின் மன் - (அரசர்) மிகக் கோபித்தால்; பழமை கடைப்பிடியார் - பழைய பழக்கத்தைப் பற்றி நினையார்; கேண்மையும் பாரார் - நண்பர் என்பதையும் நோக்கார்; பிறிது - இவையல்லாமல்: கிழமை ஒன்றும் கொள்ளார் - இவர் நமக்கு உரியவர் என்பதைச் சிறிதும் நினையார்; இறை மாண்டார்க்கு காதன்மை உண்டோ - அரசியலில் ஆழ்ந்தவர்க்கு அன்பு என ஒன்று உண்டோ; அவர்க்கு ஏதிலரும் ஆர்வலரும் இலர் - அவர்களுக்கு அயலாரெனவும் சுற்றத்தாரெனவும் கிடையாது. (க-உ) அரசர் கோபித்தால் அயலவர் சுற்றத்தவரென்றும் பாரார். அரசர் தலைவாயில் காத்தல் மன்னர் புறங்கடை காத்து வறிதேயாம் எந்நலங் காண்டுமென் றெள்ளற்க - பன்னெடுநாள் காத்தவை யெல்லாங் கடைமுடைபோய்க் கைகொடுத்து வேத்தவையின் மிக்குச் செயும். 48 48. Say not contemptuously, “What good have we seen in our fruitless attendance at the king’s gate?” The many long days that you have waited, will at last, in turn afford a hand, to raise you to dignity in the Royal Court. (ப-உ) யாம் மன்னர் புறங்கடை வறிதே காத்தும் - நாம் அரசருடைய தலைவாயிலை வீணே காத்து வந்தோம்; எ நலம் காண்டும் என்று எள்ளற்க - எவ்வகையான பலனையும் பெற்றிலேம் என்று இகழ்ந்து (கவலைப் படா)திருத்தல் வேண்டும்; பல்நெடுநாள் காத்தவை எல்லாம் - மிக நீண்ட காலம் காத்தவை எல்லாம்; கடைமுறை போய் கை கொடுத்து - முடிவிற் சென்று உதவியாகி; வேந்து அவையின் மிக்கு செயும் - அரச சபையில் உயர்வைக் கொடுக்கும். (க-உ) அரச ஊழியத்தால் முடிவில் உயர்வு உண்டாகும். நல்ல கருமத்தை முயன்று செய்யவேண்டும் உறுதி பயப்ப கடைபோகா வேனும் இறுவரை காறும் முயல்ப - இறும்உயிர்க்கு ஆயுள் மருந்தொழுக்கல் தீதன்றால் அல்லனபோல் ஆவனவும் உண்டு சில. 49 49. Although you may not be certain of the event, persevere to the last in a good undertaking. It is not wrong to drop the medicine of life into the lips of dying men; for there are some things, which are possible, though they are like things that are not. (ப-உ) உறுதி பயப்ப கடைபோகா ஏனும் - நல்ல காரியங்கள் முற்றுப் பெறுதல் நிச்சயமல்ல வாயினும்; இறுவரை காறும் முயல்ப - (அறிவுடை யோர்) அவை முடிவு அடையும் வரையும் முயற்சி செய்வர்; இறும் உயிர்க்கு ஆயுள் மருந்து ஒழுக்கல் தீது அன்று - சாகும் தருணத்திலுள்ள உயிருக்கு உயிரை நீடிக்கத் தக்க மருந்தை வாயில் விடுதல் தீதல்ல; அல்லனபோல் ஆவனவும் சில உண்டு - தீமையாகவும் சில முடிவது உண்டு. (க-உ) முடியாதெனத் தோன்றினாலும் நல்ல கருமத்தைக் கடைசிவரையும் முயன்று பார்க்க வேண்டும். ஊழை நம்பியிராது முயலவேண்டும் முயலாது வைத்து முயற்றின்மை யாலே உயலாகா ஊழ்த்திறத்த வென்னார் - மயலாயும் ஊற்றமில் தூவிளக்கம் ஊழுண்மை காண்டுமென் தேற்றார் எறிகால் முகத்து 50 50. The wise will not say, “Though exertion be laid aside, the decrees of fate cannot, on that account, fail”. However ignorant, none will set up a clear light, without any protection in a strong wind, in order to see the reality of destiny. (ப-உ) முயலாது வைத்து - தாம் முயற்சி செய்யாமல் இருந்து; ஊழ் திறத்த - எல்லாம் ஊழ்வினையால் உண்டாகும் என்று; முயற்று இன்மை யால் உயல் ஆகா என்றார் - முயற்சி செய்யாமல் இருப்பதால் அவை தவறிப்போக மாட்டா என்று (அறிவுடையோர்) நினைத்துக் கொண்டிரார்; ஊற்றம் இல் தூ விளக்கம் - அசைவில்லாது எரியக்கூடிய நல்ல விளக்கை; ஊழ் உண்மை காண்டும் என்று - ஊழ்வினைஇருக்கும் தன்மையைக் காண்போமென்று; எறிகால் முகத்து மயலாயும் ஏற்றார் - வீசுகின்ற காற்றுக்கு எதிரே அறிவு கெட்டும் (எவரும்) கொளுத்தமாட்டார். (க-உ) எல்லாம் ஊழால் வரும் என்று நம்பியிராது முயற்சி செய்ய வேண்டும். ஊழை முயற்சியால் வெல்லலாம் உலையா முயற்சி களைகணா வூழின் வலிசிந்தும் வன்மையு முண்டே - உலகறியப் பான்முளை தின்று மறலி உயிர்குடித்த கான்முளையே சாலுங் கரி. 51 51. There is a power, which, with the aid of unyielding exertion, will destroy the strength of destiny. Of this, as is known to all the world, the child, who devoured the germ of fate, and drank the life of Yaman, is an evidence. (ப-உ) உலையா முயற்சி களைகண் ஆக - அசைவில்லாத முயற்சியே துணையாக; ஊழின் வலி சிந்தும் வன்மையும் உண்டே (தீய) ஊழின் வலியைக் கெடுக்கும் வன்மையும் உள்ளதாகும்; பால் முளை தின்று மறலி உயிர் குடித்த கான்முளையே சாலும்கரி - ஊழ்வினையின் முளையைத் தின்று இயமனின் உயிரை உண்ட குழந்தையே (மார்க்கண்டேயரே) போதுமான எடுத்துக் காட்டாம். (க-உ) முயற்சியால் ஊழையும் வெல்லலாம். ஆய்வன ஆய்ந்து செய்க கால மறிந்தாங் கிடமறிந்து செய்வினையின் மூல மறிந்து விளைவறிந்து - மேலுந்தாம் சூழ்வன சூழ்ந்து துணைமை வலிதெரிந்து ஆள்வினை யாளப் படும். 52 52. With a knowledge of the proper time and place, and of the root and fruit of the undertaking; after due deliberation; and with a knowledge of the strength of existing resources; an enterprize may be accomplished. (ப-உ) காலம் அறிந்து - (ஒரு கருமத்தைச் செய்தற்கேற்ற) காலத்தை அறிந்து; ஆங்கு இடம் அறிந்து - அப்பொழுதே (செய்தற்கேற்ற) இடத்தை யும் அறிந்து; செய்வினையின் மூலம் அறிந்து - செய்யுந் தொழிலின் பலத்தையும் (ஆழத்தை) அறிந்து; விளைவு அறிந்து - பெறும் பேற்றையும் அறிந்து; மேலும்தாம் சூழ்வன சூழ்ந்து - மேலும் தாம் ஆராய வேண்டி யவைகளை ஆராய்ந்து; துணைமை வலி தெரிந்து - தமக்குத் துணை நிற்பவரின் வலிமையையும் அறிந்து; ஆள்வினை ஆளப்படும் - பின்னர் தமது முயற்சியைச் செய்தல் வேண்டும். (க-உ) காலம் இடம் முதலியவைகளை ஆராய்ந்து கருமத்தைத் தொடங்கவேண்டும். கருமமே கண்ணாயினார் மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார் எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி அருமையும் பாரரர் அவமதிப்புங் கொள்ளார் கருமமே கண்ணா யினார். 53 53. They regard not bodily pain; they consider not hunger; they indulge not their eyes in sleep; they esteem not the injury of any; they look not to the rarity of a seasonable opportunity; they care not for contempt; whose eye is fixed on their undertaking. (ப-உ) கருமமே கண்ணாயினார் - (தமது) காரியத்தை முடிப்பதிலே கருத்தாயிருப்பவர்; மெய் வருத்தம் பாரார் - உடல் வருத்தத்தைப் பொருட்படுத்தார்; பசி நோக்கார் - பசியைக் கவனிக்க மாட்டார்; கண் துஞ்சார் - கண் உறங்கமாட்டார்; எவர் எவர் தீமையும் மேற்கொள்ளார் - யார் யார் என்ன தீமையைச் செய்தாலும் பொருட்பாடுத்த மாட்டார்; செவ்வி அருமையும் பாரார் - காலத்தின் அருமையையும் பார்க்க மாட்டார்; அவமதிப்பும் கொள்ளார் - பிறரின் அவமதிப்பையும் கருதமாட்டார். (க-உ) காரியத்தை முடிக்கும் கருத்துடையவர் எதையும் பொருட்படுத்தார். பகை சிறிதாயினும் கேடு விளையும் சிறிய பகையெனினும் ஓம்புதல் தேற்றார் பெரிதும் பிழைபா டுடையர் - நிறைகயத் தாழ்நீர் மடுவிற் றவளை குதிப்பினும் யானை நிழல்காண் பரிது. 54 54. Those, who perceive not, that they ought to beware of even the weakest foe, are greatly in error; if a frog only leap into the deep water of the low pool, it is impossible to see the shadow of an elephant. (ப-உ) பகை சிறிய எனினும் - (தமக்குள்ள) பகைகள் சிறியனவா யினும்; ஓம்புதல் தேற்றார் பிழைபாடுடையர் - (தம்மைப்) பாதுகாத்துக் கொள்ள அறியாதவர் பிழைபாடுடையவராவர்; நீர்நிறை ஆழ் கயத்து மடுவில் - நீர் நிறைந்த ஆழ்ந்த நீர்நிலையாகிய குளத்தில்; தவளை குதிப் பினும் யானை நிழல் காண்பு அரிது - தவளை குதித்தாலும் (நீர் கலங்கிப் போவதால்) யானையின் (பெரிய) நிழல்தானும் தெரியாது மறைந்துபோகும். (க-உ) பகை சிறிதாயினும் கேடு உண்டாகும். உட்பகை அஞ்சப்படும் புறப்பகை கோடியின் மிக்குறினும் அஞ்சார் அகப்பகை ஒன்றஞ்சிக் காப்ப - அனைத்துலகும் சொல்லொன்றின் யாப்பார் பரிந்தோம்பிக் காப்பவே பல்காலுங் காமப் பகை. 55 55. Those, who fear not the attack of more than ten million avowed enemies, should beware of a single secret foe; the Sages, who bind the whole world by a single word, will guard, with unremitting caution, against the enemy, lust. (ப-உ) புறப்பகை கோடியின் மிக்கு உறினும் அஞ்சார் - வெளிப்பகை கோடிக்கு மேலாக இருப்பினும் பயப்படாதவர்; அகப்பகை ஒன்று அஞ்சிக் காப்பர் - உட்பகை ஒன்றிருந்தாலும் (அதற்குப்) பயந்து காவல் செய்வர்; உலகு அனைத்தும் சொல் ஒன்றில் யாப்பார் - உலகம் முழுவதையும் ஒரு சொல்லால் கட்டவல்ல முனிவர்; பல்காலும் காமப்பகை புரிந்து ஓம்பிக் காப்ப - பலமுறையும் காமமாகிய உட்பகையை மிகவும் தடுத்துக் காவல் செய்வர். (க-உ) புறப் பகைவரினும் அகப்பகைவர் ஆஞ்சுதற்குரியர். வஞ்சகர் நட்பை விடவேண்டும் புறநட் டகம்வேர்ப்பார் நச்சுப் பகைமை வெளியிட்டு வேறாதல் வேண்டும் - கழிபெரும் கண்ணோட்டம் செய்யேல் கருவியிட் டாற்றுவார் புண்வைத்து மூடார் பொதிந்து. 56 56. After discovering the venomous enmity of those, who burn with inward hate, while they are externally friendly; instantly separate from them; treat them not with too much delicacy; they, who use the knife to cure a sore, will not close it over unhealed. (ப-உ) புறம் நட்டு அகம் வேர்பார் நச்சு பகைமை வெளி இட்டு வேறாதல் வேண்டும் - வெளியே நட்புக்கொண்டு உள்ளே கோபித்திருப்ப வருடைய நஞ்சுபோன்ற பகையை வெளியாக்கி அவரைப் பிரிதல் வேண்டும்; கழிபெரும் கண்ணோட்டம் செய்யேல் - (அவர்களிடத்தில்) மிகுந்த இரக்கங்கொள்ளுதலாகாது; புண் கருவி இட்டு ஆற்றுவார் - புண்ணைக் கத்தியால் அறுத்து ஆற்றுவார்; பொதிந்து மூடார் - அதனை மறைத்து மூடார். (க-உ) வெளியே நட்புக் காட்டி உள்ளே பகை உடையவருக்கு முகம் பார்த்தலாகாது (தாட்சணியங் காட்டலாகாது). வஞ்சக நட்பு நட்பிடைக் குய்யம்வைத் தெய்யா வினைசூழ்ந்து வட்கார் திறத்தராய் நின்றார்க்குத் - திட்பமாம் நாளுலந்த தன்றே நடுவன் நடுவின்மை வாளா கிடப்பன் மறந்து 57 57. For those, who, meeting friendship with treachery, secretly devise evil, and array themselves on the side of enemies; surely the appointed day of power has expired; and Yaman must be lying carelessly forgetful of their iniquity. (ப-உ) நட்பு இடை குய்யம் வைத்து - நண்பரிடத்து வஞ்சகம் வைத்து; எய்யா வினை சூழ்ந்து - (அவர்) அறியாதபடி தீங்கு செய்யச் சமயம் பார்த்து; வட்கார் திறத்தராய் நின்றார்க்கு - பகைவர் பக்கத்தவராய் நிற்பவருக்கு; திட்பம் ஆம் நாள் உலந்தது - நிச்சயமாய் (அவர்களின்) வலிய வாழ்நாள் முடிந்தது; நடுவன் நடுவுஇன்மை மறந்து வாளா கிடப்பன் - இயமன் (அவர்களின்) தீச்செயல்களை மறந்து சும்மாவா இருப்பான்? இரான் (இயமன் தண்டிப்பான் என்றவாறு). (க-உ) நண்பர் போலிருந்து வஞ்சகம் செய்பவர் மறுமையில் நரக தண்டனை ஆடைவர். மனம் குற்றாமனால் எல்லாம் குற்றமாகத் தோன்றும் மனத்த கறுப்பெனின் நல்ல செயினும் அனைத்தெவையுந் தீயவே யாகும் - எனைத்துணையும் தீயவே செய்யினும் நல்லவாக் காண்பவே மாசின் மனத்தி னவர். 58 58. Where there is a stain on the heart, even good deeds will be all received as evil; but those of spotless minds, though men do them altogether evil, will still look upon it as good. (ப-உ) மனத்த கறுப்பு எனின் - (ஒருவனுக்கு) மனத்தில் குற்றம் இருந்தால்; நல்ல செயினும் - (அவனுக்கு) நல்லவற்றைப் பிறர் செய்தாலும்; அனைத்து எவையும் தீயவே ஆகும் - அவை எல்லாம் தீயனவே யாகும்; மாசு இல் மனத்தினவர் - குற்றமில்லாத மனத்தினையுடையவர்க்கு; எனை துணையும் தீயவே செய்யினும் நல்லவா காண்பவே - எவ்வளவு தீயவற்றைச் செய்தாலும் அவர் அவற்றை நற்செய்கைகளாகவே கொள்வர். (க-உ) பிறர் நல்ல காரியங்களைத் தனக்குச் செய்தாலும் கெட்ட மனமுடையவன் அவற்றைத் தீமையாக கருதுவன். நல்லவர் கடுஞ்சொல்லும் இனியதாகும் இனியவ ரென்சொலினும் இன்சொல்லே இன்னார் கனியும் மொழியுங் கடுவே - அனல்கொளுந்தும் வெங்காரம் வெய்தெனினும் நோய்தீர்க்கும்மெய்பொடிப்பச் சிங்கி குளிர்ந்துங் கொலும். 59 59. Whatever those of kind disposition may say, will still be sweet; but even the honied words of the unkind will be gall. The kindling borax, though it burn, will assuage pain. Arsenic, though it causes the body to shiver with cold, will kill. (ப-உ) இனியவர் என் சொலினும் இன் சொல்லே - நல்லவர் (கடிய) சொற்களைச் சொன்னாலும் இனிய சொல்லேயாகும்; இன்னார் கனியும் மொழியும் கடுவே - கெட்டவருடைய இனிய மொழியும் நஞ்சாகும்; அனல் கொளுந்தும் வெங்காரம் வெய்து எனினும் நோய் தீர்க்கும் - நெருப்புப் போல (எரிச்சலைக் கொடுக்கும்) வெங்காரம் எரிவுகொடுப்பதாயிருந்த போதும் நோயை ஆற்றும்; சிங்கி மெய் பொடிப்ப குளிர்ந்தும் கொலும் - நஞ்சு மயிர் சிலிர்க்கும்படி குளிர்ச்சியைக் கொடுத்துக் கொன்றுவிடும். (க-உ) நல்லவர் வெறுக்கத்தக்க சொற்களைச் சொன்னாலும் அவை இனியனவாகும். மனம் அழுக்கு அற்றிருத்தலே நல்ல ஒழுக்கம் பொய்குறளை வன்சொல் பயனிலவென் றிந்நான்கும் எய்தாமை சொல்லின் வழுக்காத்து - மெய்யிற் புலமைந்துங் காத்து மனமா சகற்றும் நலமன்றே நல்லா றெனல் 60 60. That virtue, which, by excluding these four, falsehood, slander, rude words, and unprofitable conversation; avoids offence in speech; and, by guarding the five organs of sense, keeps clear of the pollution of the heart; may indeed by termed the right way. (ப-உ) பொய் குறளை வன்சொல் பயனில என்ற இந் நான்கும் எய்தாமை - பொய் புறங்கூறல் கடுஞ்சொல் பயனில்லாச் சொல் என்னும் இந்த நாலும் உண்டாகாமல்; சொல்லின் வழுகாத்து - சொற்களின் குற்றங்களை நீக்கி; மெய்யில் புலம் ஐந்தும் காத்து - உடம்பில் ஐம்புலன் களையும் அடக்கி; மனம் மாசு அகற்றும் நலம் அன்றே நல் ஆறு எனல் - மனத்தில் குற்றத்தைப் போக்கும் நற்செயலன்றோ நல்லவழி என்று சொல்லப்படுவது. (க-உ) மனம் அழுக்கற்று ஐம்புலன்களையும் அடக்கியிருத்தலே நல்லவழி. புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது நல்லா றொழுக்கின் றலைதின்றார் நல்கூர்ந்தும் அல்லன செய்தற் கொருப்படார் - பல்பொறிய செங்கட் புலியே றறப்பசித்துத் தின்னாவாம் பைங்கட் புனத்தபைங் கூழ். 61 61. Those, who have persisted in the course of the path of virtue, though in poverty, will not consent to do evil: the spotted red-eyed tiger, though ravenous with hunger, will not feed on the growing crop in the green meadow. (ப-உ) நல் ஆறு ஒழுக்கின் தலை நின்றார் - நல்ல ஒழுக்க வழியில் சிறந்து ஒழுகுபவர்; நல்கூர்ந்தும் அல்லன செய்வதற்கு ஒருப்படார் - வறுமை யடைந்தவிடத்தும் தீயவற்றைச் செய்ய நினைக்க மாட்டார்; பல் பொறிய செங்கண் புலி ஏறு - பலவரிகளையும் சிவந்த கண்களையுமுடைய ஆண் புலி; அற பசித்தும் - மிகப் பசித்ததாயினும்; பைங்கண் புனத்த பைங் கூழ் தின்னாவாம் - பசிய கொல்லையிலுள்ள பசிய பயிரைத் தின்னாது. (க-உ) வறுமை வந்தாலும் நல்லவர் தகாத செயல்களைச் செய்ய நினையார். ஒழுக்கத்தைப் பொருளுக்கு விற்றலாகாது குலம்விற்றுக் கொள்ளும் வெறுக்கையும் வாய்மை நலம்விற்றுக் கொள்ளுந் திருவும் - தவம்விற்றாங் கூனோம்பும் வாழ்வும் உரிமைவிற் றுண்பதூஉம் தானோம்பிக் காத்திதல் தலை. 62 62. The riches gotten by selling the privileges of descent; the prosperity acquired by selling the benefit of truth; the ease that pampers the body at the expenses of religious duties; and the subsistence derived from selling the ties of friendship and kindred; to beware of all these is chief excellence. (ப-உ) குலம் விற்று கொள்ளும் வெறுக்கையும் - ஒருவன் தனது குலத்தை விற்றுப் பெறும் செல்வமும்; வாய்மை நலம் விற்று கொள்ளும் திருவும் - மெய்யினால் வரும் நன்மையை விற்றுப் பெறும் செல்வமும்; தவம் விற்று ஊன் ஓம்பும் வாழ்வும்; விரதத்தைக் கைவிட்டுத் தனது உடலை வளர்க்கும் வாழ்க்கையும் - உரிமை விற்று உண்பதும் - நண்பர் உறவினர் முதலிய உரிமைகளைக் கைவிட்டு உண்டு வாழ்தலும்; தான் ஓம்பிக் காத்தல் தலை-தான் மிகவும் காத்தல் சிறந்த அறமாகும். (க-உ) குலம் மெய் தவம் முதலியவற்றையும் உறவினரையும் பொருளுக்காகக் கைவிடுதலாகாது. தீயவழியில் வந்த பொருள் நில்லாது இடைதெரிந் தச்சுறுத்து வஞ்சித் தெளியார் உடைமைகொண் டேமாப்பார் செல்வம் - மடநல்லார் பொம்மன் முலைபோற் பருத்திடினும் மற்றவர் நுண்ணிடைபோற் றேய்ந்து விடும். 63 63. The wealth of those, who exult in having gotten the possessions of the poor, by watching an opportunity to terrify and deceive them; though it increase like the swelling bosom of beautiful women, will quickly diminish like their slender waist. (ப-உ) இடைதெரிந்து - சமயம் பார்த்து; அச்சுறுத்து - பயமுறுத்தல்; வஞ்சித்து - கபடஞ்செய்து; எளியார் உடைமை கொண்டு ஏமாப்பார் செல்வம் - எளியவர்களுடைய பொருளைக் கவர்ந்து செருக்கடை பவருடைய செல்வம்; மடம் நல்லார் பொம்மன் முலைபோல் பருத்திடினும் - அழகிய பெண்களின் பெரிய தனங்கள் போல் (ஒருபோது) பெரிதா யிருந்தபோதிலும்; அவர் நுண்ணிடை போல் தேய்ந்துவிடும் - (அச் செல்வம்) அப்பெண்களின் மெல்லிய இடை போலக் குறைந்துபோம். (க-உ) ஏழைகளை வஞ்சித்துப் பெற்ற பொருள் விரைவில் அழிந்து போம். உள்ளத்தில் திருப்தி யடையாமை பெற்ற சிறுகப் பெறாத பெரிதுள்ளும் சிற்றுயிர்க் காக்கம் அரிதம்மா - முற்றும் வரவர வாய்மடுத்து வல்விராய் மாய எரிதழன் மாயா திரா. 64 64. How impossible is it for mortals to prosper, who, making little of what they have gotten, think much of what they have not; the wild fire, which devours everything as it comes, cannot but die away, as the fuel is consumed. (ப-உ) பெற்ற சிறுக - தமக்குக் கிடைத்தவை (பொருள்) சிறிதாகத் தோன்ற; பெறாத பெரிது உள்ளும் சிற்றுயிர்க்கு - கிடையாதவற்றைப் பெரிது விரும்பும் சிறிய வாழ்நாளுடைய உயிர்களுக்கு; ஆக்கம் அரிது - மேலும் செல்வத்தால் வளர்ச்சியடைதல் அரிதாகும்; எரி தழல் வரவர வாய் மடுத்து - எரிகின்ற நெருப்புக் கிடைக்கக் கிடைக்க வாயிடத்தே கொண்டு; வல் விராய் முற்றும் மாய மாயாது இரா - வலிய விறகுகள் முற்றும் அழிய எரிகின்ற தழல் அழியாதிருக்கமாட்டாது. (க-உ) கிடைத்ததோடு திருப்தி அடையாது பேராசை கொள்வோர் பெற்ற பொருளால் அனுபவிக்கும் பயனையும் இழப்பர். பிறர் பொருளை விரும்பாதவருக்குப் பொருள் சேரும் தத்தம் நிலைக்குங் குடிமைக்குந் தப்பாமே ஒத்த கடப்பாட்டில் தாளூன்றி - எய்த்தும் அறங்கடையிற் செல்லார் பிறன்பொருளும் வெஃகார் புறங்கடைய தாகும் பொருள். 65 65. To such as do not fail of what is due to their respective station and lineage; exert themselves in their proper calling; and though in difficulties, neither transgress the bounds of virtue, nor cover their neighbour’s wealth; riches will flow to their very gates. (ப-உ) தத்தம் நிலைக்கும் குடிமைக்கும் தப்பாமே - தத்தமக்குரிய தகுதிக்கும் குடிப் பிறப்புக்கும் தவறாது; ஒத்த கடப்பாட்டில் தாளூன்றி - ஏற்ற முறையில் முயன்று; எய்த்தும் அறம் கடையில் செல்லார் - மறந்தும் பாவவழியில் செல்லாமல்; பிறன் பொருளும் வெஃகார் - பிறருடைய பொருளையும் ஆசைப்படாதவருடைய; புறங்கடையது ஆகும் பொருள் - தலைவாயிலிடத்தே பொருள் தானே வந்து சேரும். (க-உ) பிறர் பொருளுக்கு ஆசைப்படாது நல்லவழியில் முயல்பவருக்குப் பொருள் எளிதிற் கிடைக்கும். உயர்ந்தவர் செல்வம் பலர்க்கும் பயன்படும் பொதுமகளே போலும் தலையாயார் செல்வம் குலமகளே ஏனையோர் செல்வம் - கலனழிந்த கைம்மையார் பெண்மை நலம்போற் கடையாயார் செல்வம் பயன்படுவ தில். 66 66. The wealth of the eminently generous, is like a prostitute; the wealth of the middling class is like a chaste married woman; but the wealth of misers, like the charms of unadorned widows, produces no benefit. (ப-உ) தலையாயார் செல்வம் பொதுமகளே போலும் - தலைமையானவருடைய செல்வம் பொதுமகளிர் போல எல்லோருக்கும் பயன்படுவதாகும்; ஏனையோர் செல்வம் குலமகளே - இடையானோர் செல்வம் குலமகளைப்போலத் தன்னை யுடையவனுக்கே பயன்படுவ தாகும்; கடையாயார் செல்வம் கலனழிந்த கைம்மையார் பெண்மை நலம் போல் பயன்படுவது இல் - கீழ்மக்களின் செல்வம் ஆபரணங்களைக் களைந்த கைம்பெண்ணைப் போல யார்க்கும் பயன்படாது. (க-உ) நல்லவரிடத்துள்ள பொருள் எல்லாருக்கும் பயன்படும்; கீழ் மக்களிடத்துள்ள பொருள் யார்க்கும் பயன்படாது. கொடாதவன் செல்வத்திலும் வறுமையே நல்லது வள்ளன்மை யில்லாதான் செல்வத்தின் மற்றையோன் நல்குரவே போலும் நனிநல்ல - கொன்னே அருளிலன் அன்பிலன் கண்ணறையன் என்று பலரால் இகழப் படான். 67 67. Even the poverty of the liberal is far better than a miser’s wealth; for the former is not gratuitously subject to the opporbrious reproaches of the world, as ungracious, selfish, and pitiless. (ப-உ) வள்ளன்மை இல்லாதான் செல்வத்தின் - கொடுக்கும் குணமில்லாதவனுடைய செல்வத்தைக் காட்டிலும்; மற்றையோன் நல்குரவே நனிநல்ல - ஈயும் குணமுடையவனின் வறுமையே மிகவும் நல்லது; (ஏனென்றால்); அருளிலன் அன்பிலன் கண்ணறையன் என்று பலரால் கொன்னே இகழப்படான் - இரக்கிமில்லாதவன் அன்பில்லாதவன், முகம் பாராதவன் என்று பலரால் வீணே இகழப்படமாட்டான். (க-உ) கொடுக்கும் குணமில்லாத செல்வரை உலகத்தவர் இழித்துக் கூறுவர். கொடுக்க இயலாவிடினும் இன்சொல் வேண்டும் ஈகை யரிதெனினும் இன்சொலினும் நல்கூர்தல் ஓஓ கொடிது கொடிதம்மா - நாகொன்று தீவினைக் கம்மியனால் வாய்ப்பூட் டிடப்படின்மற் றாவா விவரென்செய் வார். 68 68. It may be impossible to give; but how cruel is it to be at the same time poor of kind words; yet what else can they do; if, as by a smith, their tongues be pierced through, and their mouths locked up by the evil deeds of a former life? (ப-உ) ஈகை அரிது எனினும்; கொடுத்தல் முடியாதாயினும்; இன்சொலினும் நல்கூர்தல் ஓஓ கொடிது கொடிது அம்மா - இனிய சொல் கூறுவதிலும் வறுமை அடைதல் ஐயோ மிகக் கொடியதாகும்; தீவினைக் கம்மியனால் நா கொன்று வாய்ப்பூட்டு இடப்படின் இவர் ஆ ஆ என் செய்வார் - தீவினை என்னும் கம்மாளனால் நாவைக் குத்தி வாய்ப்பூட்டுப் போடப்பட்டிருப்பதால் அவர்கள் வேறு என்ன செய்வார்கள். (க-உ) கொடுக்காவிடினும் இன்சொல் சொல்லவேண்டும். சொல் வன்மையைப் பயன்படுத்த வேண்டும் சொல்வன்மை யுண்டெனிற் கொன்னே விடுத்தொழிதல் நல்வினை கோறலின் வேறல்ல - வல்லைத்தம் ஆக்கங் கெடுவ துளதெனினும் அஞ்சுபவோ வாக்கின் பயன்கொள் பவர். 69 69. Where a man’s words possess influence without cause to neglect to avail himself of it, is nothing else than to destroy the effect of good works; even when their wealth is threatened with immediate ruin, should those fear, who possess the advantages of eloquence? (ப-உ) சொல்வன்மை உண்டு எனின் - ஒருவனுக்குத் தனது சொல்லுக்கு வலிமை உண்டானால்; கொன்னே விடுத்து ஒழிதல் நல்வினை கோறலின் வேறல்ல - (அதனைப் பயன்படுத்தாது) வீணே விட்டிருத்தல் நல்ல காரியங்களை அழித்தலின் வேறு ஆகமாட்டாது; வாக்கின் பயன்கொள்வார் வல்லை தம் ஆக்கம் கெடுவது உளது எனினும் அஞ்சுபவோ - சொல்லின் வலிமையால் பயனடைய வல்லவர் விரைவில் தமது பொருளெல்லாம் கெட்டுப் போவதாயிருந்தாலும் அதற்குப் பயந்து தமது சொல்வன்மையைப் பயன்படுத்தாது விடுவரோ? (க-உ) சொல்வன்மையுடையவர் அதனைப் பயன்படுத்தி அதனாலாம் பயனை அடைதல் வேண்டும். பெரியோர் அறனல்லா வழியில் பொருளீட்டார் சிறுமுயற்சி செய்தாங் குறுபயன் கொள்ளப் பெறுமெனிற் றாழ்வரோ தாழார் - அறனல்ல எண்மைய வாயினுங் கைவிட் டரிதெனினும் ஓண்மையிற் றீர்ந்தொழுக லார். 70 70. When they can procure a great advantage by a little exertion, shall they shrink from it; who abandon what is contrary to virtue though it be easy, to pursue decidedly the path of duty, however difficult? (ப-உ) அறன் அல்ல ஒண்மையின் தீர்ந்து ஒழுகலார் - தரும மல்லா வழியில் விலகிச்சென்று ஒழுகாதவர்; சிறு முயற்சி செய்து ஆங்கு உறுபயன் கொள்ளப் பெறும் எனின் - சிறிய முயற்சியைச் செய்து பெரிய பயனை அடையக்கூடுமானால்; எண்மைய வாயினும் கைவிட்டு அரிது எனினும் தாழ்வரோ - செய்தற்கு எளிமையுடைய வாயினும் அறத்தைவிட்டுக் கடுமை யானவற்றைச் செய்யத் துணிவரோ? தாழார் - துணியார். (க-உ) சிறிய முயற்சியால் பெரிய பொருள் வருமாயினும் அறநெறியில் ஒழுகுவோர் அவற்றைச் செய்யத் துணியார். செய்ய முடியாததை செய்ய முடியுமெனக் கூறும் புன்மை செய்யக்கடவ அல்லனவுஞ் செய்துமன் னென்பார் நயத்தகு நாகரிக மென்னாம் - செயிர்த்துரைப்பின் நெஞ்சுநோம் என்று தலைதுமிப்பான் றண்ணளிபோல் எஞ்சா தெடுத்துரைக்கற் பாற்று. 71 71. Of what avail is the flattering politeness of men, who forwardly profess that they will do things, which are not in their power to do? It may be fitly compared to the tender feelings of a man, who lest harsh words should grieve the heart of another, would cut off his head. (ப-உ) செய கடவ அல்லனவும் செய்துமன் என்பார் - செய்யதற் கருமையுடை காரியங்களை மிகுதியும் செய்து முடிப்போம் என்று சொல்லி நிற்பவர்களது; நயத்தகு நாகரிகம் என்னாம் - விரும்பத்தக்க முகமன் பேச்சு என்ன பயனைச் செய்யும்; (இச்செயல் எதுபோலெனில்) செயிர்த்து உரைப்பின் நெஞ்சு நேரம் என்று - கோபித்துச் சொன்னால் மனம் வருந்துமென்று; தலை துமிப்பான் தண் அளிபோல் எஞ்சாது எடுத்து உரைக்கற்பாற்று - தலையை வெட்டுபவனது கருணை போன்றதென்று விரித்துக் கூறத்தக்கதாகும். (க-உ) தான் செய்ய முடியாத கருமத்தைச் செய்ய முடியுமென்று சொல்பவரின் செயல் பயனற்றது. வலியற்றவர் பயனற்றன செய்யினும் ஆரவாரிப்பர் அல்லன செய்யினும் ஆகுலங் கூழாக்கொண் டொல்காதார் வாய்விட் டுலம்புப - வல்லார் பிறர்பிறர் செய்பபோற் செய்தக்க செய்தாங் கறிமடம் பூண்டுநிற்பா ரார். 72 72. Many, to reap a harvest of empty sound, scruple not to boast aloud, though they have done nothing; on the contrary, where are the men, who, when they have done a good action, assume feigned ignorance, as if others had done it? (ப-உ) ஒல்லாதார் - வலியற்றவர்; அல்லன செய்யினும் ஆகுலம் கூழ் ஆ கொண்டு வாய் விட்டு உலம்பும் - பயனல்லாதவற்றைச் செய்தாலும் ஆரவாரத்தையே பயனாகக்கொண்டு வாய்விட்டு ஆரவாரஞ் செய்வர்; வல்லார் பிறர் - வலிய பிறர்; பிறர் செய்பபோல் செய்தக்க செய்து - பிறரால் செய்யப்படுவன போன்ற செய்யத்தக்க செயல்களைச் செய்து; ஆங்கு அறிமடம் பூண்டு நிற்பார் - அவ்விடத்தில் அறியாமையுடையவர்போல் அடக்கமாக இருப்பர். (க-உ) அரியவற்றைச் செய்ய மாட்டாதவர் அடக்கமின்றி ஆராவாரஞ் செய்திருப்பர். பிறர் பழியை எடுத்துத் தூற்றுவான் திறம் பகையின்று பல்லார் பழியெடுத் தோதி நகையொன்றே நன்பயனாக் கொள்வான் - பயமின்று மெய்விதிர்ப்புக் காண்பான் கொடிறுடைத்துக் கொல்வான்போல் கைவிதிர்த் தஞ்சப் படும். 73 73. A man who, without malice, takes up, and dwells upon the scandal of others, for the solitary advantage of exciting laughter, will be feared and trembled at, like a man, who, without any benefit to himself, would kill his neighbour by a blow on the cheek, that the might see the body quiver in death. (ப-உ) பகை இன்று பல்லார் பழி எடுத்து ஓதி - ஒரு பகையும் இல்லாதிருக்கவும் பலருக்குள்ள வசைகளை எடுத்துத் தூற்றி; நகை ஒன்றே நல் பயனாக் கொள்வான் - நகையாடுதலையே நல்ல பயன் என்று கொள்பவன்; பயமின்று மெய்விதிர்ப்புக் காண்பான் கொடிறு உடைத்துக் கொல்வான்போல் அஞ்சப்படும் - யாதும் பயனில்லாமல் உடம்பில் உண்டாகும் நடுக்கத்தைக் காணுதற் பொருட்டு பிறருடைய கன்னத்தை உடைப்பவனைப்போல அஞ்சத் தக்கவனாவான். (க-உ) பகையில்லாதிருக்கவும் பிறர் பழிகளே எடுத்துத் தூற்றி நகையாடுகின்றவனை அஞ்சுதல் வேண்டும். தெய்வம் நின்று ஒறுக்கும் தெய்வ முளதென்பார் தீய செயப்புகின் தெய்வமே கண்ணின்று நின்றொறுக்கும் - தெய்வம் இலதென்பார்க் கில்லைத்தம் இன்புதல்வர்க் கன்றே பலகாலும் சொல்வார் பயன். 74 74. If those, who confess the existence of God, enter on an evil action, God will stay and rebuke them without mercy; not those, who say, “there is no God”. Is it not to their own dear children, that men patiently repeat instruction? (ப-உ) தெய்வம் உளது என்பார் தீய செய புகின் - தெய்வம் உண்டு என்கின்றவர் தீய செயல்களைச் செய்யத் தொடங்கினால்; தெய்வமே கண் நின்று ஒறுக்கும்-அத்தெய்வமே கண்ணுக்கு முன்னால் நின்று தண்டிக்கும்; தெய்வம் இலது என்பார்க்கு இல்லை - தெய்வம் இல்லை என்று சொல்லு பவர்க்கு அவ்வாறு தெய்வம் தண்டிப்பதில்லை; இன் புதல்வர்க்கு அன்றே பலகாலும் பயன் சொல்வார் - தமது இனிய புதல்வர்களுக் கல்லவோ (பெற்றோர்) பயன்தரக்கூடிய புத்தமதிகளைச் சொல்லுவர். (க-உ) கடவுள் உண்டென்பவர் தீயவழியில் சென்றால் கடவுள் தண்டித்து அவரை நல்ல வழியில் செலுத்துவர். நல்வழியில் வராதபொருள் தீமை விளைக்கும் தீய செயற்செய்வா ராக்கம் பெருகினும் தீயன தீயனவே வேறல்ல - தீயன நல்லன ஆகாவாம் நாவின் புறநக்கிக் கொல்லுங் கவயமாப் போல். 75 75. Though the prosperity of those who do evil, increase; still evil is but evil; evil will never be good. Like the wild cow, which licks the body with her tongue, so as to create pleasing sensation, while at the same time she thereby causes death. (ப-உ) தீய செயல் செய்வார் ஆக்கம் பெருகினும் - கெட்ட காரியங் களைச் செய்பவரின் செல்வம் வளர்வதானாலும்; தீயன - தீய வழியில் வந்த அச்செல்வங்கள்; நா இன்புற நக்கி கொல்லும் கவயமாபோல் - நாவினால் இன்பம் தருமாறு நக்கிப் பின் கொல்கின்ற காட்டுப் பசுவைப் போல; தீயனவே வேறல்ல - தீயவையல்லாமல் வேறல்ல; தீயன நல்லன ஆகா - தீயவை நல்லவை ஆகமாட்டா. (க-உ) தீய செயலால் வந்தபொருள் தீமையையே விளைக்கும். பழி நாணுவார் உயர்ந்தவராவர் நன்மக்கள் செந்நாத் தழும்பிருக்க நாள்வாயும் செந்நெறிச் செல்வாரிற் கீழல்லர் - முன்னைத்தம் ஊழ்வலி யுன்னிப் பழிநாணி யுள்ளுடைவார் தீய செயினுஞ் சில. 76 76. Not inferior to those who walk every day in the right way, so as to gain the approbation of good men; are the men who though they may do some things wrong, are broken in spirit at the thought of the force of destiny, and with the shame of reproach. (ப-உ) தம் முன்னை ஊழ்வலி உன்னி - தாம் முற்பிறப்பிற் செய்த தமது ஊழின் வலியால் (தீவினை செய்ய நேர்ந்ததை) நினைத்து; பழி நாணி உள்ளுடைவார் - (வரும்) பழிச் சொல்லுக்கு அஞ்சி மனம் வருந்துவோர்; சில தீய செயினும் - தீயவை சிலவற்றைச் செய்தாலும்; (அவர்கள்) நன்மக்கள் செம் நா தழும்பு இருக்க நாள்வாயும் செந்நெறி செய்வாரின் - நல்லோர் (பல முறையும் அவர் நன்மையை எடுத்துச் சொல்லுதலால்) நாத்தழும் பேறும்படி தினமும் நல்லொழுக்கத்தில் செல்பவரிலும் பார்க்க; கீழல்லர் - தாழ்ந்தவராகமாட்டார். (க-உ) தாம் செய்த குற்றத்துக்காக வருந்தும் இயல்பினர் நன்னெறியில் ஒழுகும் உயர்ந்தவருக்குத் தாழ்ந்தவராகமாட்டார். பிறன் மனை நயத்தல் பிறன்வரை நின்றாள் கடைத்தலைச் சேறல் அறனன்றே ஆயினு மாக - சிறுவரையும் தன்னலத்த தாயினுங் கொள்க நலமன்றே மெய்ந்நடுங்க வுண்ணடுங்கு நோய். 77 77. To visit the gate of a neighbour’s wife is certainly not virtue. But suppose it to be so. Then if it yield even a brief enjoyment, be it allowed; but surely the torture, that shakes the body and the mind with agitation, is not enjoyment. (ப-உ) பிறன் வரை நின்றாள் கடைத்தலை சேறல் - பிறனுடைய எல்லைக்குள் நிற்பவளாகிய ஒருவன் மனைவியின் தலைவாயி லிடத்துச் செல்லுதல்; அறன் அன்று - நல்ல ஒழுக்கமன்று; ஆயினும் ஆகுக - அப்படி நல்லது அல்லாவிடினும் ஆகுக; சிறு வரையும் நலத்தது ஆயின் கொள்க - சிறிதளவாயினும் இன்பம் தருவதாயின் அதனைக் கைக்கொள்க; நலம் அன்றே - ஆனால் அது இன்பந் தருவதன்று; மெய் நடுங்க மனம் நடுங்கும் நோய் - உடல் நடுங்க மனமும் நடுங்கத் துன்பந் தருவதாகும். (க-உ) பிறன் மனையாளை விரும்புதல் துன்பந் தருவதாகும். இன்பம் துய்த்தல் கருமஞ் சிதையாமே கல்வி கெடாமே தருமமுந் தாழ்வு படாமே - பெரிதுந்தம் இன்னலமுங் குன்றாமே யேரிளங் கொம்பன்னார் நன்னலந் துய்த்தல் நலம். 78 78. Without interruption to business; without ruining learning without preventing charity; and without greatly diminishing our household goods; the enjoyment of the charms of those who resemble a beautiful young branch, may be considered good. (ப-உ) கருமம் சிதையாமே - தாம் செய்யும் காரியம் கெடாமலும்; கல்வி கெடாமே - படிப்புக் கெடாமலும்; தருமமும் தாழ்வு படாமே - தருமமும் குறைவு வராமல்; பெரிதும் தம் இல்நலமும் குன்றாமே - பெரிதும் தமது வீட்டு நன்மைகளும் கெடாமல்; ஏர் இள கொம்பு அன்னார் நல் நலம் துய்த்தல் தலை - அழகிய இளம் கொம்பினை யொத்த தம்மனைவியரின் நல்ல இன்பத்தை அனுபவித்தல் நல்லது. (க-உ) தனது கடமைகளுக்குப் பங்கம் வராமல் மனைவியோடு சேர்ந்து இன்பம் நுகர்தல் வேண்டும். காமத்தின் செயல் கொலையஞ்சாhர் பொய்ந்நாணார் மானமும் ஓம்பார் களவொன்றோ ஏனையவுஞ் செய்வார் - பழியோடு பாவமிஃ தென்னார் பிறிதுற் றென்செய்யார் காமங் கதுவப்பட் டார். 79 79. They fear not murder; they are not ashamed of falsehood; they preserve not reputation; they rob not in one way only, but in all; they think not of any act that it is sin attended with infamy; what else will they not do, who have fallen into the power of lust? (ப-உ) காமம் கதுவப்பட்டார் - காமத்தால் கவரப்பட்டவர்; கொலை அஞ்சார் - கொலை செய்வதற்குப் பயப்படார்; பொய் நாணார் - பொய் சொல்ல வெட்கப்படார்; மானமும் ஓம்பார் - தமது மரியாதையையும் பாதுகாக்கமாட்டார்; களவு ஒன்றோ - களவுசெய்தல் ஒன்று மாத்திரமோ; ஏனையவும் செய்வார் - மேலும் பாவங்களையும் செய்வார்; இஃது பழியொடு பாவம் என்னார் - எந்தத் தீய செயலையும் பழியும் பாவமுமுடையது என்று நினையார்; பிறிது என் செய்யார் - வேறுயாது செய்யமாட்டார் (எல்லாப் பாவங்களும் செய்வர்) (க-உ) காமத்தின் வசப்பட்டார் எல்லாப் பாவங்களையும் செய்ய அஞ்சமாட்டார். இனிப்பை விரும்பாது கைப்பை விரும்பு மியல்பு திருவினு நல்லாள் மனைக்கிழத்தி யேனும் பிறர்மனைக்கே பீடழிந்து நிற்பர் - நறுவிய வாயின வேனும் உமிழ்ந்து கடுத்தின்னும் தீய விலங்கின் சில. 80 80. There are some, who though their own wife he more beautiful than Lachmi; nevertheless degrade themselves by hankering after their neighbour’s; like an evil beast, which though it has sweet food in its mouth, will reject it to feed on bitter. (ப-உ) மனைக்கிழத்தி திருவினும் நல்லாள் எனினும் - மனைவி திருமகளிலும் அழகுடையவளாயிருந்தாலும்; நறுவிய வாயின ஏனும் உமிழ்ந்து - இனிய பொருள் வாயிலிருந்தனவாயினும் அவற்றைக் கக்கிவிட்டு; கடு தின்னும் தீய விலங்கின் சிலர் - கைப்புள்ள பொருளைத் தின்னும் கெட்ட விலங்குபோன்ற சிலர்; பிறர் மனைக்கே பீடு அழிந்து நிற்பர் - பிறருடைய மனையாளின் சேர்க்கைக்கே தமது பெருமை கெட்டு நிற்பர். (க-உ) தீயவர் தமது மனைவியர் அழகுடையவராயிருப்பினும் பிற பெண்களையே விரும்புவர். மக்கட்பேறே சிறந்த பேறு கற்புடுத் தன்பு முடித்துநாண் மெய்பூசி நற்குண நற்செய்கை பூண்டாட்கு - மக்கட்பே றென்பதோ ராக்கமும் உண்டாயின் இல்லன்றே கொண்டாற்குச் செய்தவம் வேறு. 81 81. If a wife clothed with chastity, crowned with affection, anointed with modesty, and adorned with the jewels of a good heart and life, possess only the wealth of child-bearing; what more can her husband have to seek by the performance of penance? (ப-உ) கற்பு உடுத்து - கற்பாகிய ஆடையை உடுத்து; அன்பு முடித்து - அன்பாகிய பூவைச் சூடி; மெய் நாண் பூசி - உடம்பில் நறுமணமாகிய சாந்தைப் பூசி; நற்குணம் நற்செய்கை பூண்டாட்கு - நற்குணம் நற்செய்கைகளை ஆபரணமாக அணிந்தவளுக்கு; மக்கள் பேறு என்பதோர் செல்வம் உண்டாயின் - பிள்ளைகளைப் பெற்றிருத்தல் என்னும் செல்வம் உண்டானால்; கொண்டாற்கு செய் தவம் வேறு இல் - கணவனுக்கு வேறு செய்ய வேண்டிய தவம் ஒன்றுமில்லை. (க-உ) நற்குண நற்செய்கையுள்ள மனைவிக்குப் பிள்ளைப் பேறு இருத்தல் சிறப்பு. மாதர் மனம் ஏந்தெழில் மிக்கான் இளையான் இசைவல்லான் காந்தையர் கண்கவர் நோக்கத்தான் - வாய்ந்த நயனுடை இன்சொல்லான் கேளெனினு மாதர்க் கயலான்மேல் ஆகும் மனம். 82 82. Though their husband be of surpassing beauty, youthful, powerful in song, of an aspect to ravish the eyes of maidens, and uniting truth with courtesy in his pleasing address; the heart of women will still be fixed on others. (ப-உ) கேள் ஏந்து எழில் மிக்கான் - கணவன் சிறந்த அழகில் உயர்ந்தவன்; இளையான் - இளமைப்பருவமுடையவன்; இசைவல்லான் - இராகம் பாடுவதில் வல்லவன்; காந்தையர் கண்கவர் நோக்கத்தான் - பெண்களின் கண்களைக் கவரும் தோற்றத்தவன்; வாய்ந்த நயன் உடை இன் சொல்லான் எனினும் - பொருத்தமான மெல்லிய இனிய சொல்லைப் பேசுகின்றவன் ஆனாலும்; மாதர்க்கு மனம் அயலார் மேல் ஆகும் - பெண்களுக்கு மனம் அயலவர்மேல் செல்லும். (க-உ) கணவன் அழகு நற்குணம் முதலியவற்றால் சிறப்புடையவனா யிருப்பினும் கற்பில்லாத மகளிரின் மனம் அயல் ஆடவர் மேற் செல்லும். கற்பில் மகளிர் கற்பில் மகளின் நலம்விற் றுணவுகொள்ளும் பொற்றொடி நல்லார் நனிநல்லர் - மற்றுத்தங் கேள்வர்க்கும் ஏதிலர்க்கும் தங்கட்கும் தங்கிளைஞர் யாவர்க்கும் கேடுசூ ழார். 83 83. Far better than a wife without chasity, are the fair, with golden bracelets, who subsist by selling their favours; for they do not involve in misery their husband, their neighbour, themselves and all their connexions. (ப-உ) நலம் விற்று உணவு கொள்ளும் பொன்தொடி நல்லார் - தமது இன்பத்தைப் பிறருக்கு விற்று உணவு கொள்கின்ற பொன்வளை அணிந்த பெண்கள்; கற்பில் மகளிரின் நனி நல்லர் - கற்பில்லாத பெண்களிலும் பார்க்க மிக நல்லவராவர்; தம் கேள்வர்க்கும் - (முன்கூறப்பட்ட விலைமாதர்) தமது காதலருக்கும்; ஏதிலர்க்கும் - அயலவர்க்கும்; தங்கட்கும் - தங்களுக்கும்; தம் இளைஞர் யாவர்க்கும் கேடு சூழார் - தமது உறவினர் எவருக்கும் கேடுசெய்ய நினையார். (க-உ) கற்பில்லா மகளிரினும் பொது மகளிர் நல்லர். கற்பில் மகளிர் பிறப்பு முறையும் குடிமையும் பான்மையும் நோக்கார் நிறையும் நெடுநாணும் பேணார் - பிறிதுமொரு பெற்றிமை பேதைமைக் குண்டே பெரும்பாவம் கற்பின் மகளிர் பிறப்பு. 84 84. Regardless of their duty, of their birth and of propriety; insensible to shame, and respectability; what good quality is there compatible with the folly of frail women? The birth of such is the retribution for grievous sin. (ப-உ) முறையும் - தமக்கும் மற்றவர்களுக்குமுள்ள உறவு முறைகளையும்; குடிமையும் - பிறர் குடியின் தன்மையையும்; பான்மையும் நோக்கார் - தமக்கும் பிறர்க்குமுள்ள தகுதியையும் பாரார்; நிறையும் நாணும் பேணார் - மன உறுதிப்பாட்டையும் நாணத்தையும் பாதுகாக்கமாட்டார்; பேதைமைக்கு பிறிதும் ஒரு பெற்றிமை உண்டே - அறியாமை கொண்ட பெண்களுக்கு இவையல்லாமல் வேறு குணங்களுமுண்டோ? கற்பு இல் மகளிர் பிறப்பு பெரும் பாவம் - கற்பில்லாத பெண்களின் பிறப்புப் பெரிய பாவமாகும். (க-உ) கற்பில்லாத பெண்களிடத்தில் நல்ல குணங்கள் எவையும் காணப்படமாட்டா. துறவிகள் பெண்களைப் பாரார் பெண்மை வியவார் பெயரும் எடுத்தோதார் கண்ணொடு நெஞ்சுறைப்ப நோக்குறார் - பண்ணொடு பாடல் செவிமடார் பண்பல்ல பாராட்டார் வீடில் புலப்பகை யினார். 85 85. They, who admire not female beauty; who dwell not in conversation on their names; who excite not the eye and heart with licentious gazes; who indulge not the ear in music and song, and commend not what is contrary to decency, are the men who wage successful war with the unrestrained general organs. (ப-உ) வீடு இல் புலம் பகையினார் - அடக்கமுடியாத ஐம்புலன் களுக்குப் பகைவராயுள்ள (ஐம்புலன்களை அடக்கிய) துறவிகள்; பெண்மை வியவார் - பெண்களின் நல்ல தன்மைகளைப் புகழார்; பெயரும் எடுத்து ஓதார் - பெண்கள் என்ற பெயரைத் தானும் எடுத்துச் சொல்லார்; நெஞ்சு உறைப்ப கண்ணொடு நோக்கு உறார் - நெஞ்சில் அவர்களின் எண்ணம் படியும் படி கண்ணாலும் பாரார்; பண்ணொடு பாடல் செவி மடார் - இசையோடு பாடப்படும் பாடல்களையும் (செவிகொடுத்துக்) கேளார்; பண்பு அல்ல பாராட்டார் - நல்ல தன்மைகளல்லாத பிறவற்றை யும் பாராட்டமாட்டார். (க-உ) துறவிகள் பெண்களைப் பார்க்க மாட்டார்; மற்றும் புலன்களைக் குழப்பும் செயல்களில் ஈடுபடமாட்டார். துறவிகள் உண்டி சுருக்குவர் துயிற்சுவையும் தூநல்லார் தோட்சுவையு மெல்லாம் அயிற்சுவையி னாகுவவென் றெண்ணி - அயிற்சுவையும் பித்துண்ணாக் கொள்பபோற் கொள்ப பிறர்சிலர்போல் மொத்துணா மொய்ம்பி னவர். 86 86. They, who, deeming indulgence in the sweets of sleep and the enjoyment of the charms of women of unsullied beauty, to be encouraged by indulgence in the sweets of feasting, take their food abstemiously as an idiot, are possessed of a strength which none may prevail against. (ப-உ) பிறர் சிலர் போல் மொத்துணா மொய்ப்பினவர் - (துறவிக ளல்லரான) சிலரைப் போல (ஐம்புலன்களால்) அடிபடாத வலியையுடைய துறவிகள்; துயில் சுவையும் - நித்திரை இன்பமும், தூநல்லார் தோள் சுவையும் எல்லாம் - அழகிய பெண்களின் தோள்களைச் சேரும் சுகமும் ஆகிய எல்லாம்; அயில் சுவையில் ஆகுவ என்று எண்ணி - உணவுச் சுகத்தினால் உண்டாகின்றவை என்று நினைத்து; அயில் சுவையும் பித்து உணாகொள்ப போல் கொள்ப - உணவுச் சுகத்தையும் பைத்தியக்காரன் உணவு கொள்வது போல் கொள்வர். (க-உ) உணவு மிகுதலால் மற்ற இன்பங்களில் விருப்பமுண்டாகு மென்று நினைந்து துறவியர் அற்ப உணவு கொள்வர். துறவிகள் உடம்பைக் கவனியார் அன்போ டருளுடைய ரேனும் உயிர்நிலைமற் றென்பியக்கங் கண்டும் புறந்தரார் - புன்புலாற் பொய்க்குடில் ஓம்புவரோ போதத்தால் தாம்வேய்ந்த புக்கில் குடிபுகுது வார். 87 87. Holy men, though of tender and benevolent disposition, do not turn back, though their bones show through the skin; should they who possess a heavenly mansion, which they have built for themselves by wisdom, seek to preserve a false tabernacle of rankly decaying flesh? (ப-உ) போதத்தால் தாம் வேய்ந்த புக்கில் குடிபுகுதுவார் - மெய்அறிவினால் தாம் அமைத்த வீட்டு உலகில் செல்லும் துறவிகள்; புன் புலால் பொய் குடில் ஓம்புவரோ - இழிந்த ஊன் மூடிய குடிசையைப் பாதுகாப்பரோ; அன்போடு அருள் உடையர் ஏனும் - அவர்கள் அன்பும் இரக்கமும் உடையவர்களானாலும்; உயிர் நிலை என்பு இயக்கங் கண்டும் புறந்தரார் - உயிர்க்கு இருப்பிடமான உடம்பு (மெலிந்து) எலும்பு அசையக் கண்டாலும்; புறந்தரார் - அதற்கு இளைக்கமாட்டார். (க-உ) வீட்டு இன்பத்தை வேண்டுபவர் உடம்பைப் பேணுவதிற் கவலை கொள்ளார். மற்றின்பம் வேண்டுவார் சிற்றின்பம் விரும்பார் சிற்றின்பஞ் சின்னீர தாயினும் அஃதுற்றார் மற்றின்பம் யாவையுங் கைவிடுப - முற்றுந்தாம் பேரின்ப மாக்கட லாடுவார் வீழ்பவோ பாரின்பப் பாழ்ங்கும்பி யில் 88 88. Small as is sensual pleasure, its votaries renounce all other enjoyments; shall they who bathe in the great sea of heavenly delight, sink in the mire of earthly indulgence? (ப-உ) சிற்றின்பம் சில் நீரது ஆயினும் - சிற்றின்பம் சிறு பொழுதைய இன்பமாயினும்; அஃது உற்றார் - அவ்வின்பத்தைப் பெற்றவர்; மற்றின்பம் யாவையும் கைவிடுப - மற்ற எல்லா இன்பங்களையும் விட்டு விடுவர்; முற்றும் பேரின்பமா கடல் ஆடுவார் தாம் - முற்றாக (எப்போதும்) பேரின்ப மாகிய பெரிய கடலில் மூழ்குகின்றவர்; பார் இன்ப பாழ் கும்பியில் வீழ்பவோ - உலக இன்பமாகிய கொடிய நரகில் விழுவரோ. (க-உ) பேரின்பத்தில் மூழ்குகின்றவர் உலக இன்பங்களை விரும்பார். பெண் சேர்க்கை தவிர்த்தல் எவ்வினைய ரேனும் இணைவிழைச்சொன் றில்லெனின் தெவ்வுந் திசைநோக்கிக் கைதொழூஉம் - அவ்வினை காத்த லிலரேல் எனைத்துணைய ராயினும் தூர்த்தருந் தூர்ப்பார் அவர். 89 89. Whatever be the conduct of those, who profess to have renounced the world, if they be only chaste, even their enemies will raise to them their hands in adoration. If however distinguished in other respects, they guard not this virute, even the profligate will not pass them ever uncensured. (ப-உ) எவ்வினையரேனும் - (துறவிகள்) வேறு எவ்வகையான செயலைச் செய்பவராயிருந்தாலும்; இணை விழைச்சு ஒன்று இல் எனில் - பெண் சேர்க்கை என்னும் ஒன்று இல்லாதவராயின்; தெவ்வும் திசை நோக்கி கை தொழும் - (அவர்) பகைவரும் அவரிருக்கும் திசையைப் பார்த்துக் கை யெடுத்து வணங்குவர்; அவ்வினை காத்தல் இலரேல் - (பெண் சேர்க்கை இல்லாமை என்னும்) அந்தச் செயலைக் காத்துக் கொள்ளல் இல்லாதவ ரானால்; எனைத்துணையர் ஆயினும் - அவர்கள் வேறு எவ்வளவு சிறந்த வர்களாயிருந்த போதிலும்; தூர்த்தரும் அவர் தூர்ப்பார் - கெட்டவர்களும் அவர் மீது பழி கூறுவர். (க-உ) பெண் சேர்க்கையை விரும்பாதிருத்தலே துறவிகளுக்குச் சிறப்பு. நற்செயல்களில் காலத்தைக் கழித்தல் வேண்டும் பரபரப்பி னோடே பலபல செய்தாங் கிரவுபகல் பாழுக் கிறைப்ப - ஒருவாற்றான் நல்லாற்றின் ஊங்கிற் பதறிக் குலைகுலைப எவ்வாற்றான் உய்வார் இவர். 90 90. There are some, who doing various things with bustling haste, will spend day and night in watering the wilderness; but if by any means, one turn them into the good way, they will be immediately startled with alarm. How shall such prosper? (ப-உ) பலபல பரபரப்பினோடு செய்து இரவு பகல் பாழுக்கு இறைப்ப - (பலர்) பலவற்றை இரவுபகலாக விரைந்து செய்து காலத்தை வீணே கழிப்பர்; ஒரு ஆற்றான் - ஒரு வகையால்; நல்ஆற்றில் ஊக்கின் மெய்பதறி குலை குலைப - நல்ல வழியில் செலுத்தினால் உடல் நடுங்கிப் பதறுவர்; இவர் எவ்வாற்றான் உய்வார் - இவர்கள் எவ்வழியில் தழைப்பார்கள். (க-உ) காலத்தை வீண் செயல்களிற் கழிக்காது நற்செயலில் போக்க வேண்டும். இளமையில் தவம் செய்க இளையம் முதுதவம் ஆற்றுதும் நோற்றென் றுளைவின்று கண்பாடும் ஊழே - விளிவின்று வாழ்நாள் வரம்புடைமை காண்பரேல் காண்பாரும் தாழாமே நோற்பார் தவம். 91 91. To sleep away our days in careless indolence, saying, “We are young, and may perform the duties of devotion in old age,” might be right, if we could see the limit of our lives; but those, who could do so, whould not relax in the performance of religious duties. (ப-உ) விளிவு இன்று வாழ்நாள் வரம்புடைமை காண்பரேல் - (இளமையில்) மரணம் இல்லாதிருப்பதாகிய எல்லையை அறிந்திருப்பா ராயின்; இளையம் - நாம் (இப்போது) இளமைப் பருவத்தினோம்; முது தவம் நோற்று ஆற்றுதும் என்று - முதுமைப் பருவத்தில் வருந்தித் தவத்தைச் செய்வோம் என்று நினைத்து; உளைவு இன்று கண்பாடும் ஊழே - வருத்தமில்லாது கண்ணுறங்கியிருப்பதும் முறைமையாகும்; காண்பாரும் - (தமது வாழ்நாளின்) எல்லையை அறியக் கூடியவரும்; தாழாமே தவம் நோற்பார் - காலம் போக்காமல் தவத்தைச் செய்வர். (க-உ) மரணம் எப்போது வருமென்று யாருமறியாராதலின் விரைந்து தவஞ் செய்தல் வேண்டும். தீய ஊழால் நல்லனவும் தீயவாம் நல்லவை செய்யத் தொடங்கினும் நோனாமே அல்லன அல்லவற்றின் கொண்டுய்க்கும் - எல்லி வியனெறிச் செல்வாரை ஆறலைத் துண்பார் செலவு பிழைத்துய்ப்ப போல். 92 92. Though a man may begin to do good, his evil destiny, without suffering it, will turn it into evil: as those who live by plundering on the highway, lead astray the traveller in the dark night. (ப-உ) நல்லன செய்யத் தொடங்கினும் ? நல்ல செயல்களைச் செய்யத் தொடங்கினாலும்; அல்லன - தீய வினைப்பயன்; நோனாமே அல்லவற்றில் கொண்டு உய்க்கும் - அதில் தரிக்க விடாது அதனையும் தீய செயலாக்கி விடும்; எல்லி ஆறு அலைத்து உண்பார் - இரவிலே வழிப்பறி செய்து உண்பவர்; வியன் நெறி செல்வாரை - பெரிய வழியிடத்தே செல்வோரை; செலவு பிழைத்து உய்ப்ப போல் - வழி தப்பச் செய்வது போலாகும். தீய ஊழ் உள்ளவர் நல்ல காரியங்களைச் செய்யத் தொடங்கினாலும் அவை தீய காரியங்களாக முடியும். பொய் வேடத்தாற் பயனில்லை நெஞ்சு புறம்பாத் துறந்தார் தவப்போர்வை கஞ்சுக மன்று பிறிதொன்றே - கஞ்சுகம் எப்புலமுங் காவாமே மெய்ப்புலங் காக்குமற்(று) இப்புலமுங் காவா திது. 93 93. The cloak of devotion worn by those who have renounced the world externally, is some what different from a garment; for a garment though it guards not the other organs of senses, yet guards the body-the other guards not even this. (ப-உ) நெஞ்சு புறம்பு ஆ துறந்தார் தவப் போர்வை - நெஞ்சில் துறவாது வேடத்தில் துறந்தவரது தவ வேடம்; கஞ்சுகம் அன்று பிறிது ஒன்றே - அது சட்டை போன்றதன்று வேறொன்றாகும்; கஞ்சுகம் எப் புலமும் காவாமே மெய் புலம் காக்கும் - சட்டை எல்லாப் புலன்களையும் காவாவிட்டாலும் உடம்பாகிய புலனைக் காக்கும்; இது இப்புலமும் காவாது - இத்தவவேடம் இந்தப்புலனையும் காக்கமாட்டாது. (க-உ) மனதில் துறவாதவனின் தவவேடம் பயனற்றது. வஞ்சித்து ஒழுகுதல் வஞ்சித் தொழுகும் மதியிலிகாள்! யாவரையும் வஞ்சித்தோம் என்று மகிழன்மின் - வஞ்சித்த எங்கும் உளனொருவன் காணுங்கொல் என்றஞ்சி அங்கங் குலைவ தறிவு. 94 94. Ye fools, who live in the practice of deceit, exult not in the thought that you have succeeded in deceiving all. That is true wisdom, which will tremble at the awful thought, that there is one everywhere present, who will behold all deceit. (ப-உ) வஞ்சித்து ஒழுகும் மதியிலிகாள் - (பிறரைக்) கபடஞ் செய்து வாழும் அறிவில்லாதவர்களே; யாவரையும் வஞ்சித்தோம் என்று மகிழன்மின் - எல்லாரையும் வஞ்சித்தோம் என்று சொல்லி மகிழாதீர்கள்; வஞ்சித்த - நீவிர் வஞ்சனை செய்ததை; எங்கும் உளன் ஒருவன் காணும் என்று அஞ்சி அங்கம் குலைவது அறிவு - எங்கும் நிறைந்தவனாகிய இறைவன் காண்பான் எனப்பயந்து உடல் நடுங்குவது அறிவு ஆகும். (க-உ) எங்கும் நிறைந்த கடவுள் எல்லாச் செயல்களையும் அறிவாராதலின் பிறரை வஞ்சித்தோமென்று மகிழவேண்டாம். மறைத்துச் செய்யினும் பழி வெளிப்படும் மறைவழிப் பட்ட பழிமொழி தெய்வம் பறையறைந்தாங் கோடிப் பரக்கும் - கழிமுடைப் புன்புலால் நாற்றம் புறம்பொதிந்து மூடினுஞ் சென்றுதைக்கும் சேயார் முகத்து. 95 95. The infamy of evil done in secret, will spread abroad as though God had proclaimed it to the beat of drum. Though the rank stench of putrid flesh be concealed and covered up, it will escape to penetrate the senses of far distant persons. (ப-உ) மறை வழிப்பட்ட பழிமொழி - மறைவிற் செய்யப்பட்ட பழிச் செயலைப் பற்றிய (பழி) மொழி; தெய்வம் பறை அறைந்து ஆங்கு ஓடிப் பரக்கும் - தெய்வம் பறை அடித்துப் பரப்பியது போல அப்பொழுதே விரைந்து பரவும்; புல் புலால் கழிமுடை நாற்றம் - இழிந்த இறைச்சியின் மிகக் கெட்ட நாற்றம்; புறம் பொதிந்து மூடினும் சேயார் முகத்து சென்று தைக்கும் - மேலே பொதிந்து மூடி வைத்தாலும் தூரத்திலுள்ளவர் முகத்தில் சென்று தாக்கும். (க-உ) மறைவிற் செய்யப்படும் பழிச் செயல்கள் விரைவில் வெளிவந்துவிடும். வலியாற் கெட்டால் உய்யார் மெலியாற் விழினும் ஒருவாற்றான் உய்ப வலியார்மற் றொன்றானும் உய்யார் - நிலைதப்பி நொய்ய சழக்கென வீழாவாம் வீழினும் உய்யுமால் உய்யா பிற. 96 96. The weak, though they fall, will by some means survive; but the powerful survive not by any means; light things do not fall from their place with a loud crash; but if they should fall, they would be saved; not so the others. (ப-உ) மெலியார் வீழினும் ஒரு ஆற்றான் உய்ப - சிறியவர் நிலைதப்பி விழுந்தாலும் ஒருவாறு பிழைப்பர்; வலியார் மற்று ஒன்றேனும் உய்யார் - (வலியவர் நிலைதப்பி விழுந்தால்) வேறு எந்த வகையிலும் பிழைக்க மாட்டார்; நொய்ய நிலைதப்பி சழக்கென்று வீழாவாம் - பாரமில்லாத பொருள் நிலை தவறி விரைவில் விழமாட்டா; வீழினும் உய்யும் - விழுந்தாலும் பிழைக்கும்; பிற உய்யா -(பாரமான) பிறபொருள்கள் பிழைக்கமாட்டா. சிறுமையும் பெருமையும் செல்வம் அதிகாரம் போன்றவைகளைக் குறிக்கும். (க.உ)சிறியோர் நிலை தப்பிக் கீழ்நிலை அடையினும் பிழைப்பர்: மேலோர் நிலை தவறிக் கீழ் நிலை அடைந்தால் உய்யமாட்டார். பெரியர் சிறியர் செய்கைகள் இசையாத போலினும் மேலையோர் செய்கை வசையாகா மற்றையோர்க் கல்லால் - பசு வேட்டுத் தீயோம்பி வான்வழக்கங் காண்பாரை யொப்பவே ஊனோம்பி ஊன்றின் பவர். 97 97. The conduct of the exalted is not to be reprehended like that of others, although it may not appear praiseworthy. For, are those, who after sacrificing a cow, and cherishing the sacred fire, behold the ways of heaven, to be likened to those who eat flesh to pamper their bodies? (ப-உ) மேலையோர் செய்கை இசையாத போலினும் - பெரியோரின் செய்கைகள் பொருத்தமில்லாதவை போலக் காணப்பட்டாலும்; மற்றையோர்க்கு அல்லால் வசையாகா -(அவர் போலல்லாத) சிறியோர்க்கு அல்லாது வசையாகமாட்டாது; பசு வேட்டு தீ ஓம்பி வான் வழக்கம் காண்பாரை ஒப்பவே - பசுவைப் பலி கொடுத்து தீயை வளர்த்து வானுலக இயல்புகள் காண்பவரை ஒப்பவராவர்; ஊன் ஓம்பி ஊன் தின்பவர் - உடம்பைப் பாதுகாக்கும் பொருட்டு இறைச்சியைத் தின்பவர். வான் வழக்கங் காண்பார் என்பதற்கு - மழை பெய்யச் செய்வார் என்றும் பொருள் கூறலாம். இவ்வாசிரியர் உயிர்களைக் கொன்று வேள்வி செய்தல் குற்றத்தின்பாற்படாதென நம்பியிருந்தார். இக் கருத்து எல்லாருக்கும் உடன்பாடன்று. (க-உ) பெரியார் செயல்களும் சிறியார் செயல்களும் சில சமயங்களில் ஒத்தனபோற் காணப்படினும் அவைகளின் நோக்கங்கள் வெவ்வேறன. பெரியார் தன்மை எவரெவ ரெத்திறத்தர் அத்திறத்த ராய்நின் றவரவர்க் காவன கூறி - எவரெவர்க்கும் உப்பாலாய் நிற்பமற் றெம்முடையார் தம்முடையான் எப்பாலும் நிற்ப தென. 98 98. Our spiritual preceptors, who adapt themselves to the disposition of each, whatever it be, and give to everyone suitable counsel, will stand beyond all others, as their Lord is everywhere present. (ப-உ) எம் உடையார் - எம்மை ஆளுகின்ற பெரியவர்; தம் உடையான் எப்பாலும் நிற்பது என - தம்மை ஆளுகின்ற கடவுள் எல்லார் தன்மைகளுக்குமேற்ப இருப்பதுபோல; எவர் எவர் எத்திறத்தர் அத்திறத்தர் ஆய் நின்று அவர் அவர்க்கு ஆவன கூறி-யார் யார் எத்தன்மையராயிருந்த போதிலும் அவ்வத்தன்மைக்கேற்ப நின்று ஆகவேண்டியவற்றைக் கூறி; உப்பாலாய் நிற்ப - எல்லார்க்கும் மேலாக நிற்பர். (க-உ) பெரியோர் மற்றவர்கள் தன்மைக்கேற்ப அவரவர்க்காவன கூறித்தாம் மேலாக நிற்பர். மெய்யுணர்ந்தார் செயல் மெய்யுணர்ந்தார் பொய்ம்மேற்புலம் போக்கார் மெய்யுணர்ச்சி கைவருதல் கண்ணாப் புலங்காப்பார் - மெய்யுணர்ந்தார் காப்பே நிலையாப் பழி நாணல் நீள்கதவாச் சேர்ப்பர் நிறைத்தாழ் செறித்து. 99 99. They who know the truth, indulge not their senses in the pursuit of lies, and have in view the acquisition of true knowledge; will join to the door post of caution, the long door of the shame of sin, and will secure it with the bolt of steadfastness. (ப-உ) மெய் உணர்ந்தார் - உண்மைப்பொருள்களை உணர்ந்தவர்; பொய் மேல் புலம் போக்கார் - பொய்யான பொருள்கள் மீது புலன்களைச் செலுத்தார்; மெய் உணர்ச்சி கைவருதல் கண்ணாபுலம் காப்பார் - மெய் அறிவு உண்டாதல் கருத்தாகப் புலன்களை அடக்குவார்; மெய்யுணர்ந்தார் காப்பே நிலைஆ - மெய்யுணர்ந் தவர்களது (புலன்களைக் காக்கும்) காப்பே நிலையாகவும்; பழி நாணல் ஏ நீள் கதவா - பழிக்கு நாணும் குணத்தை நீண்ட கதவாகவும்; நிறை தாழ் செறித்துசேர்ப்பர் - நிறைந்த குணமாகிய தாழ்ப்பாளை இறுகப்போடுவர். (க-உ) உண்மைப் பொருள்களை அறிந்தவர் புலன்களை ஒடுக்குவர். துறவிகளின் இன்பம் கற்றுத் துறைபோய காதலற்குக் கற்பினாள் பெற்றுக் கொடுத்த தலைமகன் போல் - முற்றத் துறந்தார்க்கு மெய்யுணர்விற் றோன்றுவதே இன்பம் இறந்தவெல்லாம் துன்பமலா தில். 100 100. As the first born son presented by a virtuous wife, to a husband, who has attained the shore of the sea of knowledge, is the bliss which appears in the contemplation of truth to those who have entirely renounced the world: compared to which all, that is past is but pain. (ப-உ) கற்று துறைபோய காதலற்கு - கற்கவேண்டியவற்றைக் கற்று முடித்த கணவனுக்கு; கற்பினாள் பெற்று கொடுத்த தலைமகன் போல் - கற்புள்ள மனைவி பெற்றுக் கொடுத்த முதல்மகனைப் போல்; முற்ற துறந்தார்க்கு மெய்யுணர்வில் தோன்றுவதே இன்பம் - முற்றாகத் துறவடைந்தவர்க்கு உண்மை அறிவினால் தோன்றுவதே இன்பமாகும்; இறந்த எல்லாம் துன்பம் அலாது இல் - அஃது அல்லாத மற்றவை எல்லாம் துன்பம் அல்லாமல் வேறு இல்லை. (க-உ) துறவிகளுக்கு மெய்யுணர்வே இன்பம் அளிக்கும். வீட்டுவகை அடைப்பவர் கற்றாங் கறிந்தடங்கித் தீதொரீஇ நன்றாற்றிப் பெற்றது கொண்டு மனந்திருந்திப் - பற்றுவதே பற்றுவதே பற்றிப் பணியறநின் றொன்றுணர்ந்து நிற்பாரே நீணெறிச் சென்றார். 101 101. They, who have studied and attained knowledge; have exercised self-control; have rejected evil and embraced good; have contented their desires with what they have obtained; and thus by laying hold on their object, have superseded the necessity of works; and employ their thoughts in the contemplation of the one object only, walk in the endless path of happiness. (ப-உ) கற்று ஆங்கு அறிந்து - நூல்களைக் கற்று அவைகளின் உண்மைப் பொருளை அறிந்து; அடங்கி - அடக்கமாயிருந்து; தீது ஓரீஇ - தீமையை நீக்கி; நன்று ஆற்றி - நல்ல காரியங்களைச் செய்து; பெற்றது கொண்டு மனம் திருத்தி - கிடைத்தவற்றைக் கொண்டு மனம் நிறை வடைந்து; பற்றுவதே பற்றுவதே பற்றி - தாம் அடையவேண்டிய நெறி களைக் கைக்கொண்டு; பணி அறம் நின்று - விதிக்கப்பட்ட அற வழிகளில் நின்று; ஒன்று உணர்ந்து - கடவுளை அறிந்து; நிற்பாரே நீள் நெறிச் சென்றார் - நிற்கின்றவரே வீட்டு நெறியில் நிற்கின்றவராவர். (க-உ) நூல்களைக் கற்று அதன்படி ஒழுகிக் கடவுளை அறிந்தவர் வீட்டு உலகை அடைபவராவர். ஐயந் திரிபின் றளந்துத் தியிற்றெளிந்து மெய்யுணர்ச்சிக் கண்விழிப்பத் தூங்குவோர் - தம்முளே காண்பதே காட்சி கனவு நனவாகப் பூண்பதே தீர்ந்த பொருள். 102 102. The vision of those, who having measured without doubt and error, and ascertained all things by reason, sleep to external things that the eye of true knowledge may be awake, which looks within themselves, and substitutes spiritual, for material subjects, is the final and perfect attainment. (ப-உ) ஐயம் திரிபு இன்று அளந்து - சந்தேகமும் மாறுபாடும் இல்லாமல் ஞாயத்தினால் அளந்து; உத்தியில் தெளிந்து - மனதில் தெளிந்து; மெய் உணர்ச்சி கண் விழிப்ப தூங்குவோர் - மெய்யறிவாகிய கண் விழித் திருக்க வெளிக்கருமங்களில் தூக்கம் கொண்டிருப்பவர்; தம் உள்ளே காண் பதே காட்சி - தமது மனதில் காண்பதே காட்சியாகும்; கனவு நனவாக பூண்பதே தீர்ந்த பொருள் - (ஞானமாகிய நித்திரையில் காணும்) கனவை விழிப்பு நிலையிலும் கண்டு நிற்றலே முடிந்த முடிவான பொருளாகும்.  அருஞ்சொல் அகராதி பா.எண் அ - சுட்டு 45 அகப்பகை - உட்பகை 55 அகம் - மனம் 15, 65 அகற்றும் - அகலமாக்கும், போக்கும் 3, 60 அங்கம் - அவயவம் 94 அங்காத்தல் - வாய்திறத்தல் 23 அஞ்சல் - பயப்படல் 5, 22, 23, 42, 55, 69, 73, 79, 94 அச்சுறுத்து-பயமுறுத்து 63 அடங்கி -ஒதுங்கி 101 அடிகள் - ஆசிரியன் 27 அணிகலம் - ஆபரணம் 13 அணியது - கிட்ட இருந்தது 36 அந்தப்புரம் - அரசன் தேவி இருக்கும் தனியறை 26 அம்மா-அசை, ஆச்சரியத்தை உணர்த்தும் ஓர் இடைச்சொல் 15, 46, 64, 68 அமைச்சு - மந்திரி, மந்திரித் தன்மை 45 அயலான் - அயலே உள்ளவன் 82 அயில் - உணவு 86 அயின்று -உண்டு 38, 86 அரிது - அருமையுடைத்து, கூடாது, இல்லை 8, 32, 54, 68, 70 அரியன்-அருமையுடையவன் 46 அரிப்பரித்தல் - அரித்துப் பார்த்தல் 9 அருமை - இலகுவில் பெறமுடி யாதது 53 அரும்பு - மொட்டு 37 அருள் - கருணை, இரக்கம் 67, 87 அலன் - அப்படி அல்லாதவன் 30 அல்ல - அல்லன 11, 69, 70, 75 அல்லவர்க்கு - அல்லாதவர்களுக்கு 28 அல்லன - தீயன, நன்மையல்லா தவை 49, 79, 92 அல்லால் - அல்லாமல் 97 அலைத்தல் - வருத்துதல் 30 அவமதிப்பு - அவமானம் 53 அவாம் - விரும்பும் 24 அவை - சபை 4, 6, 8, 26, 48 அழகு - வடிவு, உரு 13 அழி - கெடு 15, 42, 66, 80 அழுகி - கெட்டு 43 அள - அளத்தல், வரையறுத்தல் 102 அளி - அன்பு, இரக்கம் 28,71 அற - மிகுதியை உணர்த்தும் உரிச்சொல் 61 அறங்கடை - பாவம் 65 அறம் - தருமம், நல்லொழுக்கம், இல்லறம் 2,10 அறு-இன்மை, அற்றுப்போகுதல் 23, 24 அறன் - அறம் 70, 77 அறவோர் - நல்லொழுக்கமுடை யோர் 27 அறி - உணர் 5, 51, 52, 101 அறிமடம் - அறிந்தும் அறியான், போலிருத்தல் 72 அறிவு - அறிவு விளக்கம் 3, 32, 45, 94 அறைந்து - அடித்து 95 அனல் - நெருப்பு 59 அனைத்து - முழுவதும் 55, 58 அனைவோர் - எல்லோரும் 27 அன்பு - ஆதரவு 67, 81, 87 அன்றால் - அன்று, ஆல் அசை 49 அன்றி - அல்லால் 24 அன்று - அல்ல 12, 25, 32, 93 அன்றே - அப்பொழுதே, அல்லவோ 17, 19, 36, 37, 57, 60, 74, 77 அன்னார் - ஒத்தவர் 78 அஃது - அதனை 5,88 ஆ - ஆகவென்பதின் விகாரம், பாதை 29 ஆ - பசு இரக்கக்குறிப்பு 29,68 ஆகா - ஆகமாட்டா 75,97 ஆகும் - ஆம் 34, 58, 65, 82 ஆகுலம் - ஆரவாரம் 6, 72 ஆகுவ - உண்டாவன 86 ஆக்கம் - செல்வம் 17, 64, 69, 75 ஆங்கு - அவ்விடம்,போல்,ஓர் இடைச்சொல் 9, 23, 38, 41, 44, 52, 62, 70, 72, 90, 101 ஆடி - மூழ்கி 88 ஆண் - ஆண்மை 24,28 ஆதல் - ஆகுதல் 35 ஆம் - ஆகும், அசை 10, 28, 61, 71 ஆயுள் - வாழ்நாள் 49 ஆரும் - நிறைந்த 38 ஆர் - யார் 72 ஆர்வலர் - அன்பர் 47 ஆவன - ஆகுவன 30, 49, 98 ஆள் - செய் 52 ஆள்வினை - முயற்சி 52 ஆறலைத்தல் - வழிபறித்தல் 30,92 ஆறு - வழி 30, 60, 90, 92, 96 ஆற்றல் - வலி 41 ஆற்று - செய், ஆறப்பண்ணு 56, 91, 101 இகல் - வன்மை 44 இகழ் - பழி 35, 44, 67 இங்கு - இவ்விடம் 97 இசையாத - பொருந்தாத இடித்து - நெருங்கிக் கூறி 31, 45 இடை - இடம், நடு, சமயம் 17, 57, 63 இணைவிழைச்சு - புணர்ச்சி 89 இயக்கம் - அசைவு 87 இரந்து - கேட்டு 12, 16 இரவு - இராத்திரி 90 இரா - அஃறிணை ஒருமை எதிர் மறை 64 இல் - மனைவி வீடு 8, 87 இலம்பாடு - வறுமை 10 இலள் - இல்லாதவள் 10 இவறன்மை - ஈயாததன்மை 12 இழை - ஆபரணம் 3 இளையாள் - இலக்குமி 36 இறுதல் - முடிதல், முறிதல் 49, 100 இறுவரை - முடிவு காலம் 41, 49 இறை - அரசன், திறைப் பொருள் 27, 29 இறைப்ப - கழிப்பர் 90 இறைமகன் - அரசன் 33, 44 இறைமாட்சி - அரசப்பண்பு 28 இறை மாண்டார் - அரசப் பண்புடையார் 47 இன் - இனிமையின் விகாரம் 6,37,41,74 இன்பு - இன்பம் 75 இன்று - இல்லை 5, 73, 74, 91, 102 இன்னார் - பகைவர் 59 ஈகை - கொடை 39 ஈத்து - கொடுத்து 6 உடைந்து - வருந்தி 8 உடைத்து - பெற்றது 5 உட்கு - அச்சம் 8 உண்ணா - உண்டு 31 உத்தி - மனம் 102 உமிழ்ந்து - கக்கி 80 உய்த்து - செலுத்தி 5,9 உயிர்ப்பர் - மூச்சுவிடுவர் 43 உயிர்நிலை - உடம்பு 87 உயிர்ப்பு - மூச்சு 31 உரிமை - அன்பு, சொந்தம் 62 உரை - சொல் 21 உலகு - பூமி, பூமிலுள்ளார் 51, 55 உலந்தது - முடிந்தது 57 உலம்பல் - முழங்கல் 72 உலைதல் - அசைதல் 51 உலை - கொல்லனுலை 14 உவப்பு - மகிழ்ச்சி 26 உளி - தச்சுளி 14 உளைவு - வருத்தம் 91 உள்ளும் - நினைக்கும் 64 உறா - அடையா 38 உறுதல் - பொருந்துதல் 4,25 உறு - மிக 70 உறுத்து - அலங்கரித்து 4, 63 உறைப்ப - படியும்படி 21, 85 உன்னுதல் - விரும்பல் 40 ஊக்கல் - செலுத்தல் 90 ஊங்கு - மிகுதி 2 ஊத்தை - அழுக்கு 23 ஊழ் - விதி 23, 50 ஊற்றம் - ஆதாரம் 50 ஊன்றல் - நடல் 65 ஊன் - இறைச்சி 40 எஞ்சல் - சுருங்கல், குன்றல் 71 எண்மையன் - எளியன் 46 எத்துணை - எவ்வளவு 5 எப்பாலும் - எவ்விடத்தும் 98 எய்தல் - அடைதல் 26 எய்த்து - வருந்தி 9 எய்தாமை - உண்டாகாமை 60 எய்யாமை - அறியாமை 57 எயிறு - பல் 30 எயிறலைத்தல் - பற்கடித்தல் 30 எல்லி - இரவு 92 எவன் - என் 25 எழில் - அழகு 82 எள்ளல் - இகழல் 48 எறிகால் - வீசும்காற்று 50 எற்று - எவ்வளவு 15 என - போல 98 எனைத்துணைய - எவ்வளவு 10 ஏக்கழுத்தம் - பெருமிதம் 39 ஏதிலான் - அயலான் 8 ஏந்து - சிறந்த 82 ஏமாப்பு - இறுமாப்பு, செருக்கு 63 ஏர் - அழகு 78 ஒண்மை - அறிவு, 70 ஒடுங்கு - குன்று 42 ஒருப்படல் - சம்மதித்தல் 61 ஒரீஇ - நீங்கி 33 ஒல்கல் - அடங்கல் 72 ஒழிதல் - தவிர்தல், விடல் 42 ஒழுகுதல் - நடத்தல் 70 ஒழுக்கல் - விடுதல் 49 ஒறுத்தல் - தண்டித்தல் 74 ஒற்று - ஒற்றன், மறைந்து அறிபவன் 32 ஒற்கம் - அடக்கம் 23 ஓதல் - சொல்லுதல் 72 ஓர்தல் - அறிதல் 32 ஓம்புதல் - பாதுகாத்தல் 9 கஞ்சுகம் - சட்டை 93 கடப்பாடு - கடமை 65 கடவ - தகுவ,காரியம் 71 கடு - நஞ்சு, கைப்பு 59, 80 கடும்பகல் - நடுப்பகல் 8 கடை - இடம், வாயில், இறுதி 2, 26 கடைத்தலை - தலைவாயில் 77 கடைப்பிடி - மறவாதிரு, நினை 47 கட்டுரை - உறுதிமொழி 31 கண்கூடு - காட்சி அளவை 34 கண்ணறையன் - கண்ணோட்டமில்லாதவன் 67 கண்ணோட்டம் - இரக்கம் 56 கண்பாடு - நித்திரை, கண்ணுறக்கம் 91 கதுவுதல் - கவருதல் 79 கந்து - யானைகட்டும் தறி 26 கம்மியன் - கம்மாளன் 68 கயம் - ஆழம் 54 கரி - சான்று, எடுத்துக்காட்டு 51 கருந்தனம் - பொன் 9 கருத்து - மனம், எண்ணம் 15 கருமம் - தொழில், காரியம் 53 கருவி - ஆயுதம், கத்தி 56 கலன் - ஆபரணம் 13 கலைமகள் - சரசுவதி, நாமகள் 7 கவர்தல் - பறித்தல் 82 கவல் - கவலை, துன்பம் 2 கவளம் - வாயளவு உணவு 38 கவயமா - காட்டுப் பசு 75 கழகம் - படிப்பிக்குமிடம், சபை 23 கழி - மிகுதி 43 களி - மகிழ், செருக்கு 14 களிறு - யானை 26 களைகண் - ஆதரவு 40 கறுப்பு - கோபம், குற்றம் 58 கற்பதரு - கற்பக மரம் 37 கற்பு - படிப்பு, பெண்கள் கற்பு 4,12 கற்றா - கன்றுடைய பசு. றகரம் வலித்தல் விகாரம் 29 கனம் - பாரம் 14 கனிந்த - பழுத்த 37 காதலித்த - விரும்பிய 46 காதன்மை - அன்புடைமை 47 காந்தையர் - மகளிர், பெண்கள் 82 கால் - காலம், காற்று 3, 50 காறும் - வரையும் 49 கான்முளை - பிள்ளை, குழந்தை 51 கிழத்தி - மனைவி 80 கிழமை - உரிமை, உரியவள் 47 கிளை - சுற்றம் 38 கீழ்மக்கள் - மூடர் 34 குடில் - சிற்றில், குடிசை 87 குடிமை - குலப்பிறப்பு 65 குமிழி - கொப்புளம் 1 கும்பி - நரகம் 88 குய்யம் - பொய், வஞ்சகம் 57 குலமகள் - கற்புடையவள் 27 குலைகுலைதல் - மிகவுஞ்சிரித்தல், பதறுதல் 90 குலைவது - நடுங்குவது 94 குவை - திருட்சி, குவியல் 39 குழை - காதணி 14 குறளை - புறங்கூறல் 60 குறி - அடையாளம் 35 குன்றல் - கெடுதல், குறைதல் 78 கூடம் - சம்மட்டி 14 கூழ் - பயன், உணவு 72 கேண்மை - நட்பு 47 கேள் - காதலன், சுற்றம், 82, 83 கை, சிறுமை 25 கைத்து - செல்வம் 11 கைம்மா - யானை 45 கைமையர் - கணவனை இழந்த மகளிர் 66 கைவரல் - இணங்கிவரல் 46 கொடிறு - கன்னம் 73 கொல்லுலை - கொல்லனுலை 14 கொழுநன் - நாயகன் 27 கொண்டான் - கணவன் 81 கொன் - பயனில்லாமை 67 கோ - அரசன் 22 கோது - குற்றம், சக்கை 33 கோமான் - அரசன் 29 கோறல் - கொல்லுதல், அழித்தல் 35 சலித்தல் - இளைத்தல் 37 சழக்கு - ஓசைக்குறிப்பு, நிலை தவறல் 96 சால்பு - நிறைவு, நீதி 33 சிங்கி - ஓர் நஞ்சு 59 சிந்தும் - கெடுக்கும் 51 சிதை - கெடு 78 சிறைப்புறம் - ஒதுக்கிடம் 32 சின்னீர - சிறுபொழுது அற்பத்தன்மையுடைய 88 சீர் - சிறப்பு 13 சுடர் - விளக்கு 23 சுழித்தல் - வெறுத்தல் 40 செங்கோன்மை - அரசநீதி 32 செயிர்த்தல் - கோபித்தல் 71 செவ்வி - சமயம் 46 செறித்தல் - இறுக்கல் 99 சேயார் - தூரத்தார் 95 சேயத்து - தூரத்தது 36 சேறல் - செல்லல் 77 சொற்ற - சொல்லிய 21 ஞாட்பு - போர் 42 ஞாலம் - பூமி, உலகத்திலுள்ள 11 தகர்தல் - உடைதல் 14 தகை - அழகு 26 தகையார் - தகுதியுடையார், பெண்கள் 18 தணிவு - குறைவு, அடங்கல் 36 தபுதல் - கெடுதல் 96 தப்பி - தவறி 38 தமிழோர் - தமிழறிந்தோர் 7 தரு - மரம் 37 தலம் - இடம் 9 தவம் - நோன்பு, விரதம் 62 தழல் - தீ, நெருப்பு 64 தழும்பு - வடு 76 தளர்தல் - மெலிதல் 40 தாக்கணங்கு - தாக்கி வருத்தும் தெய்வப் பெண் 24 தாழ் - தாழ்ப்பாள் 99 தாள் - முயற்சி 65 திரிபு - வேறாதல், மாறுபாடு 102 திறம் - கூறுபாடு, பங்கு, குணம், பலம், பலவகை 22 தீங்காய் - இனிப்பாகிய காய் 37 தீட்டல் - எழுதல், தோற்றுவித்தல் 39 துஞ்சல் - உறங்கல் 53 தொடங்கல் - துவங்கல் 3, 92 துணை - அளவு 5 துமி - வெட்டு 71 தும்பை - ஓர் பூ 43 துய்த்தல் - அனுபவித்தல் 78 துலை - தராசு 17 துறைபோதல் - முடிவறிதல் 77 தூ - மாசின்மை 50 தூக்கல் - நிறுத்தல் 17 தூர்த்தர் - கெட்ட நடத்தையுடையவர் 89 தூற்றி - பலரறியக் கூறி 20 தெரிதந்தும் - அறிந்தும் 32 தெவ் - பகை 89 தெளிதல் - துணிதல் 102 தென்புலத்தார் - பிதிர்கள் 22 தேய்தல் - கெடுதல், குறைதல் 63 தேற்றார் - தெளியார், அறியார் 54 தொடி - வளை 83 நச்சு - நஞ்சு, விடம் 56 நடுவன் - இயமன் 57 நமரங்காள் - நம்மவரே 1 நயத்தகு - விரும்பத்தகுந்த 71 நயன் - மகிழ்ச்சி, மெல்லிய 82 நல்குரவு - வறுமை 67 நல்கூர்தல் - வறுமைப்படல் 61 நல்லாறு - நல்லொழுக்கம் 61 நவை - குற்றம் 6 நறுவிய - இனிய 80 நனவு - தெளிவு, விழிப்பு 102 நனி - மிகுதியுணர்த்தும் உரிச்சொல் 17 நாகரிகம் - முகமன், பேச்சு 71 நாண்மலர் - புதுப்பூ 37 நாள்வாயும் - நாடோறும் 7 நாறும் - வீசும் 43 நிதி - பொருள் 39 நிதியம் - நிதி, செல்வம் 29 நீப்பு - நீக்கல் 8 நெறி - வழி ஒழுக்கம் 76 நொய்ய - அற்பமாகிய 96 நோலாதார் - தவஞ் செய்யாதார் 12 நோனாமை - பொறுக்காமை, தரிக்காமை 92 படை - ஆயும், சேனை 28 பணி - தொழில் விதிக்கப்பட்ட 101 பணிதல் - வணங்கல் 36 பதறுதல் - நடுங்குதல் 90 பயத்தல் - கொடுத்தல் 15 பயம் - பயன் 73 பரபரப்பு - விரைவு 90 பரிதல் - விரும்பல் 9 பலம் - பழம் 37 பற்றல் - பிடித்தல் 101 பாகு - யானைப்பாகன் 45 பாடு - பெருமை 18 பாராட்டு - கொண்டாடு 85 பாரின்பம் - உலக இன்பம் 88 பால் - பக்கம், இடம் 8, 24 பாழ் - வீண் 88, 90 பாற்று - தக்கது 71 பித்து - பைத்தியம் 11 பிரான் - கடவுள் 1 பீடு - பெருமை 80 பீழை - துன்பம் 3 புகல - சொல்ல 33 புக்கில் - வீடு 87 புணை - தெப்பம் 44 புண்ணியம் - நல்வினை 28 புலம் - இடம் 22 புலால் - ஊன் 87 புலியேறு - ஆண்புலி 61 புறங்கடை - தலைவாயில், உலகில் 2 புறந்தரார் - தளரார் 87 புறம்பு - வெளி, வேறு 93 புனம் - காடு 61 புன்மை - இழிவு 87 பூஞை - பூனை 26 பூசி - தடவி 31 பூண் - ஆபரணம் 18 பூத்தல் - உண்டாதல் 6 பூவாமை - உண்டாகாமை 6 பூழ்க்கை - யானை 26 பெண்ணலம் - பெண்ணின் அழகு 24 பெருமூச்சு - நெட்டுயிர்ப்பு 34 பெற்றிமை - தன்மை, குணம் 84 பேடு - அலி 24 பேண் - ஓம்பு, பாதுகா 84 பேதைமை - அறியாமை 84 பேறு - பயன், பெறல் 81 பைங்கண் - பசுமையாகிய இடம் 61 பைஞ்கூழ் - பயிர் 61 பைம்பூண் - பசுமை ஆபரணம் 27 பொடித்தல் - சிலிர்த்தல் 59 பொதிதல் - மூடுதல் 56 பொதுமகள் - விலைமகள் 66 பொம்மல் - பொலிவு 63 பொறி - மெய் வாய் கண்மூக்குச் செவி, வரிகள் 61 பொற்றொடி - பொன்வளை 83 போகம் - இன்பநுகர்ச்சி, சேர்க்கை 36 போக்கு - குற்றம் 24 போதம் - ஞானம், மெய்யறிவு 87 போர்வை - சட்டை, வேடம் 93 மடம் - அறியாமை 3 மடநல்லார் - அழகிய பெண்கள் 63 மடி-பசுவின் முலைமேற்றிரள் 29 மடு - ஆற்றினுட் பள்ளம், குளம் 54 மடுத்தல் - கொள்ளல், சூழல், உண்டல் 34, 64 மண்டெரி - மிக்கதீ 34 மண்ணுறுத்தல் - அலங்கரித்தல் 4 மதம் - மதநீர், செருக்கு 45 மயல், மயக்கம் 50 மலரவன் - பிரமன் 7 மல்லல் - வளம், நிறைந்த 4 மறலி - இயமன் 42 மன் - அசை, மிகுதி, இடைச்சொல் 71 மனை - வீடு 10 மனைக்கிழத்தி - வீட்டுக்குரியவள் 80 மனைத்தக்காள் - வீட்டுக்குத் தகுதியானவள், மனைவி 9 மன்ற - தேற்றம், திண்ணமாக 41 மன்று - அம்பலம், சபை 1 மன்பதை - மக்கட்கூட்டம் 28 மா - விலங்கு 23 மாகம் - ஆகாயம், மேகம் 39 மாசு - களங்கம் 58 மாசுணம் - பெரும்பாம்பு 34 மாட்சி - பெருமை 28 மாண்டார் - மாட்சியுடையார், ஆழ்ந்தவர் 47 மாத்தகைய - பெருமையுடைய பெண்கள் 26 மாய் - கெடு 7 மானம் - பெருமை, தன்னிலையிற்றாழாமை 41 மிகன் மக்கள் - மேலோர், உயர்ந்தவர் 26 மீக்கொள் - மேற்கொள்கின்ற, தற்பெருமை 24 மீச்செலவு - வரம்புகடந்து நடத்தல் 17 முகத்த - முகத்தின் கண், போர்க் களம் 39 முடித்து - சூடி 81 முடைநாற்றம் - தீய நாற்றம் 43 முதுக்குறைவு - பேரறிவு 33 முயக்கு - தழுவல் 36 முயற்றின்மை - முயற்சியின்மை 50 முரண் - பகை, வலிய 42 முறை - ஒழுக்கம் 48 முறையிடுதல் - முறைப்படுதல் 32 முற்றிழாய் - தொழில் முற்றிய ஆபரணமுடையாள் 3 மூத்தாள் - மூதேவி 36 மூலம் - வேர், ஆழம், பலம் 52 மேற்கொள்ளார் - ஏற்றுக் கொள்ளார் 53 மேலையார் - மேலோர் பெரியோர் 97 மொய்ம்பு - வலிமை 42 யாக்கை - உடம்பு 1 யாப்பார் - கட்டவல்லவர் 55 வசை - குற்றம் 97 வட்கார் - பகைவர் 57 வண்மை - வளமை, கொடை 37 வயம் - வீரம், வெற்றி 28 வயத்ததோ - இடத்ததோ, வசத்ததோ 45 வரம்பு - எல்லை 91 வல்லை - விரைவு 69 வழுக்காது - வழுவாமல் 60 வழுத்து - துதி 1 வளம் - செழுமை, திறமை 4 வள்ளன்மை - கொடுக்குங் குணம் 67 வறிது - பயனின்மை, வீண் 48 வாக்கு - சொல் 69 வாய்ந்த - பொருந்திய 82 வாய்மை - மெய்மை 62 வாளா - சும்மா 57 விதிர்ப்பு - நடுக்கம் 6 வியம் - பெருமை 92 விழலர் - அறிவிலார் 43 விளிவு - சாவு 43 விறல் - வீரம், வெற்றி 22 வெங்காரம் - ஓர் மருந்து 59 வெய்து - சூடுடையது 43 வெரீஇ - அஞ்சி 45 வெறுக்கை - செல்வம் 4 வெற்று - வெறுமையின் விகாரம் 7 வெளிது - வெண்மையுடையது 33 வெள்ளம் - பிரளயம், ஓர் எண் 26 வெஃகல் - விரும்பல் 65 வேட்டு - வேள்வி செய்து 97 வேண்டல் - விரும்பல் 13 வேத்தவை - அரசசபை தகரம் வலித்தல் விகாரம் 26 வேந்து - அரசன் 30 வேய்ந்த - கட்டிய 37 வேர்ப்பார் - கோபிப்பார் 56 வேர்ப்பு - கோபம் 56  தமிழ் விளக்கம் கேள்வி - மறுமொழி தமிழ் விளக்கம் வினா: தமிழ் எவ்வளவு பழமையுடையது? விடை: காலம் குறிப்பிட முடியாத பழமையுடையது. வினா: தமிழ் தோன்றிய இடம் எது? விடை: தென்னிந்தியாவிலும் அதன் தெற்கே கிடந்த கடலுள் மறைந்து போன நாட்டிலும். வினா: “சதுமறை ஆரியம் வருமுன் சகமுழு நினதாயின். முதுமொழி நீயனாதியென மொழிகுவதும் வியப்பாமே” என்னும் மனோன் மணியப் பாடல் உண்மையாகுமா? விடை: உலகின் பழைய மொழிகள் எல்லாவற்றுக்கும் தொடர்பு காணப் படுகின்றது. அம்மொழிகள் ஒரு அடிமரத்தினின்றும் பிரிந்த கிளைகள் போல்வன. பழைய மொழிகளுக்கெல்லாம் அடிப் படையில் தமிழ் இருப்பதை ஆராய்ச்சியாளர் காட்டியுள்ளார்கள். அக் கருத்துகளைத் தெள்ளிதில் அறிந்த பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் “சது மறை ஆரியம் வருமுன் சகமுழுது நினது” என அழகாகக் கூறி யுள்ளார். வினா: பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் மனோன்மணியத்தில் கூறிய கருத்தை வலியுறுத்தும் சான்றுகள் உள்ளனவா? விடை: சிந்துவெளியில் கண்டுபிடிக்கப்பட்ட அரப்பா மொகஞ்சதரோ என்னும் பழைய நகரங்களில் ஒருவகைச் சுண்ணாம்புக் கல்லில் வெட்டப்பட்ட முத்திரைகள் பல கிடைத்தன. அவைகளில் அந் நகரங்களில் 5500 ஆண்டுகளின் முன் வழங்கிய மொழியின் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதே வகை எழுத்துக்கள் பசிபிக் கடலில் தென்னமெரிக் காவுக்கு அண்மையிலுள்ள ஈஸ்டர் தீவுகளில் காணப்பட்டன. சின்ன ஆசியா, சுமேரியா, பாபிலோன், எல்லம், கிரேத்தா, எகிப்து, பினீசியா, அராபியா முதலிய நாடு களில் வழங்கிய எழுத்துக்களுக்கும் சிந்துவெளி எழுத்துக்களுக் கும் ஒற்றுமை காணப்படுகின்றது. சுமேரிய, எகிப்திய, அக்கேடிய மொழிகளில் பல தமிழ்ச் சொற்களும் மூலங்களும் காணப்படு கின்றன. பேராசிரியர் லாங்டன், மேற்கூறிய சின்ன ஆசிய, மேற்கு ஆசிய, சிந்துவெளி, எகிப்திய, கிரேத்தா எழுத்துக்கள் ஒரே அடிப் படையினின்று தோன்றின என்றும், பேராசிரியர் - பிராங்போர்ட், சிந்து வெளி நாகரிகம் சுமேரிய, எகிப்திய நாகரிங்களுக்கு முற்பட்டது என்றும் கூறியுள்ளார்கள். மொகஞ்சதரோவிற் காணப்பட்ட எழுத்துக்களை ஒத்தவை, திருநெல் வேலி ஹைதரபாத்துச் சமாதிகளிற் கிடைத்த மட்பாண்டங்களிலும், இலங்கையில் கேகாலை என்னும் இடத்திலும் காணப்பட்டன. சிந்துவெளி நாகரிகம் ஆரியர் வருகைக்கு முற்பட்டதென்றும், ஆரியர் வருகைக்கு முன் அங்கு திராவிடர் வாழ்த்திருந்தார்கள் என்றும் ஆராய்ச்சி வல்ல பந்தர்க்கர், எஸ்.கே. சட்டர்ஜி போன்றார் கூறியுள்ளனர். இவை போன்ற பல காரணங்களால் “சதுமறை ஆரியம் வருமுன் சகமுழுதும்” தமிழ் என்னும் கருத்து வலியுறுகின்றது. வினா: மொகஞ்சதரோ அரப்பா எழுத்துக்கள் தமிழ் என்று எப்படித் துணியலாம்? விடை: அரப்பா மொகஞ்சதரோ எழுத்துக்களை ஹெரஸ் என்னும் ஸ்பானியர் ஒருவர் ஒலிமுறையாக வாசித்தார். அவ்வாசிப்பில் காணப்படும் சொற்கள் பல இன்றும் தமிழிலும் அதன் கிளை மொழிகளிலும் வழங்கும் சொற்களாகக் காணப்படுகின்றன. கிளிமென்ட், ஸ்கோனர் என்னும் செர்மானியர், மத்திய ஐரோப்பா வில் ஆரிய மொழி பரவுவதன் முன் தமிழ் வழங்கிற்று என்றும், அங்குள்ள பழைய இடப் பெயர்கள் ஆற்றுப்பெயர்கள் தமிழா யிருக்கின்றன வென்றும் காட்டியுள்ளார். சுமேரிய மொழியில் தமிழ்ச் சொற்கள் பல இருப்பதையும் அவர் குறிப்பிட் டுள்ளார். சுமேரியர் சிந்துவெளியிலும் தென்னிந்தியாவிலுமிருந்து தைகிரஸ் யூபிராதஸ் ஆற்றோரங்களிற் சென்று குடியேறியவர்களாவர். இதனால் பழைய நாகரிக உலகில் வழங்கிய மொழிகள் தமிழ் அடிப்படை யைப் பெற்றிருந்தன என்னும் உண்மை தெளிவடை கின்றது. வினா: தமிழர்களோடு உறவுடையராய்ப் பிறநாடுகளில் வாழ்ந்த மக்கள் எவ்வெவர்? விடை: எல்லம் மக்கள், சாலதியர், அக்கேடியர், இலைசியர், கிரேத்தியர், பினீசியர், பிரித்தானியர், பழைய அமெரிக்கர், ஸ்பெயின் நாட்டுப் பழங்குடிகளாகிய பாஸ்க்குகள், எற்றூஸ்கானியர் என்னும் இத்தாலி நாட்டுப் பழங்குடிகள் என்போர். வினா: எல்லம் என்னும் நாடு எங்குள்ளது? எல்லம் மக்கள் எங்கு நின்றும் வந்து எல்லம் நாட்டை அடைந்தார்கள். விடை: தைகிரஸ் யூபிராதஸ் முகத்துவாரத்துக்கு மேலே மேற்கில் எல்லம் உள்ளது. இதன் தலைநகர் சூசா. இவர்கள் இன்று இலங்கை அல்லது ஈழம் என வழங்கும் பழைய எல்லம் நாட்டினின்றும் சென்றார்கள். இவர்கள் தாம் சென்று குடியேறிய நாட்டுக்கு எல்லம் என்று பெயரிட்டனர். எல்லம் மக்கள் புதிதாக அந் நாட்டுக்குச் சென்று குடியேறிவர்களாவர். இந்திய நாட்டினின்றும் சென்ற திராவிட மக்களே தமது அடையாளத்தை அங்கு விட்டுச் சென்றனர் என டாக்டர் ஹால் கூறியுள்ளார். வினா: ஆப்பிரிக்காவிலே நீல நதிக்கரைகளிற் குடியேறி எகிப்தியர் என நாகரிகம் படைத்து விளங்கிய மக்கள் யார்? விடை: எகிப்தியர்தாம் பண்டு நாட்டினின்றும் நீல நதிக்கரையை அடைந் தார்கள் என நம்பி வந்தார்கள். பண்டு நாடு என்பது மலையாளக் கரை எனத் துணியப்படுகின்றது. பண்டு நாட்டினின்றும் எகிப்தியர் வாங்கிச் சென்ற பண்டங்கள் அவர்கள் நூல்களில் காணப்படுகின்றன. அவை தென்னிந்தியாவிலேயே கிடைப்பது. இதனால் பண்டு தென் னிந்தியாவென ஹிரன், டாக்டர் ஹால் போன்ற வரலாற்றிஞர் பலரால் துணியப்பட்டுள்ளது. வினா: சுமேரியர் எங்கிருந்து சென்று தைகிரஸ் யூபிராதஸ் ஆற்றோரங் களை அடைந்தார்கள்? விடை: சுமேரியர் தென்னிந்தியாவிலும், சிந்துவெளிகளின்றும் கடல் வழி யாகவும் தரை வழியாகவும் சென்றார்கள். சுமேரிய மொழி திராவிட மொழிகளைப் போல ஒட்டுச் சொற்களையுடையது. சுமேரியாவின் தலைநகராகிய, இலகாசிலும், ஊர் முதலிய யிடங் களிலும், சிந்து வெளியிற் கிடைத்தவை போன்ற முத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவைகளுட் பல சிந்துவெளி முத்திரை களை ஒத்துள்ளன. அங்கு காணப்பட்ட கல்லிற் செதுக்கப்பட்ட மக்கள் வடிவங்கள், திராவிட மக்களின் தோற்றத்தை ஒத்தன. டாக்டர் ஹால் என்பார் சிறிதும் ஐயமின்றிப் பழைய சுமேரியர் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்களாகவர் எனப் புகன்றுள்ளார். இந்தியாவில் ஆரிய ஆட்சி என்னும் நூல் எழுதிய ஹாவேல் என்பாரும் சுமேரியர் தென்னிந்தியாவினின்றும் சென்ற திராவிடர்கள் எனக் கூறியுள்ளார். வினா: சாலதியர் என்போர் யார்? விடை: இவர்கள் சோழ தேசத்தினின்றும் சென்று தைகிரஸ் யூபிராதஸ் ஆறுகளின் மேற்கு ஓரத்தில் குடியேறியவர்களாவர். இவர்கள் தாம் சென்று குடியேறிய நாட்டுக்குச் சோழதேசம் எனப் பெயரிட்ட னர். சோழ தேசம் என்பதே சாலதியர் எனத் திரிந்து வழங்கிற்று. இவ்வாறு இருக்கு வேத இந்தியா என்னும் நூலில் அபினஸ் சந்திரதாஸ் என்னும் ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார். வினா: பாலஸ்தீனரும் அராபியரும் திராவிடரா? விடை: ஊர்ப்பட்டினத்தினின்றும் சென்ற ஆபிரகாமின் சந்ததி யினரே அராபியரும் எபிரேயரும் எனப்படுகின்றனர். ஊர்ப்பட்டினத்தில் வாழ்ந்தோர் சாலதியராவர். கிறித்துவ வேதத்தின் பழைய ஏற் பாட்டைப் படிக்கும்போது எபிரேய மக்களின் பழக்கவழக்கங்கள் இன்றையத் திராவிட மக்களிடையே காணப்படுவன போன்றவை எனத் தெள்ளிதில் புலப்படுகின்றது. ஆராய்ச்சிவல்ல ஆர்.எஸ். வைத் தியநாத ஜயர், அவர்கள் பாலஸ்தீனர் தென்னிந்தியாவினின்றும் சென்று குடியேறிய திராவிடரென நன்கு விளக்கியுள்ளார்.1 வினா: கிரேத்தா மக்கள் தமிழர் என்பதற்கு ஆதாரமுண்டா? விடை: கிரேத்தா வென்பது கிரீஸ் நாட்டுக்குத் தெற்கேயுள்ள தீவு. இங்கு வாழ்ந்த மக்கள் தமிலி என அழைக்கப்பட்டார்கள் என எரதோ தஸ் (Heradotus, கி.மு. 480) என்னும் ஆசிரியர் கூறியுள்ளார். அவர் களின் பழைய நாகரிகம் அரப்பா மொகஞ்சதரோ நாகரிகத்தை ஒத்தது. வினா: இலைசிய மக்கள் தமிழர் என்பதற்கு ஆதாரமுண்டா? விடை: இலைசியா சின்ன ஆசியாவில் உள்ளது. இவர்களும் தமிழர் என அழைக்கப்பட்டார்கள் என்பது அந்நாட்டுக் கல்வெட்டுக்களால் அறியக்கிடக்கின்றது. வினா:பினீசியர் தமிழர் என்பதற்குச் சான்று உண்டா? விடை: வேதகாலத்தில் பாணீஸ் என்னும் ஒரு குழுவினர் வட நாட்டில் காணப்பட்டார்கள். பாணீஸ் எனப்பட்டோர் தென்னாட்டி னின்று சென்ற வணிகர் என்றும், வணிகர் என்பதே பாணீஸ் எனத் தமிழ் அறியாத வடநாட்டு மக்களால் உச்சரிக்கப்பட்டதென்றும் ஆராய்ச்சியாளர் முடிவு செய்துள்ளார்கள். இவர்கள் முற்காலத் தில் பரதர் எனவும் பட்டார்கள். இவர்கள் மத்தியத்தரைக் கடலோரத்தில் பாலஸ்தீனத்துக்கு வடக்கே குறியேறினார்கள். அவர்கள் தமது நாட்டைப் பனைநாடு என வழங்கினர். பனை நாடு பினீசீயா எனத் திரிந்தது. பினீசியரின் எழுத்துக்கள் பிராமி எழுத்துக்களை ஒத்தவை. பிராமி எழுத்து மொகஞ்சதரோ எழுத்தின் திரிபு. பாணீஸ் என்போர் பாணர் எனச் சிலர் கருதினார்கள். அது ஏற்றதன்று. வினா: பாஸ்க்கு என்னும் ஸ்பெயின் நாட்டு மக்கள் எவ்வாறு தமிழராவர்? விடை: பாஸ்க்கு மொழி திராவிட மொழியோடு மிக ஒற்றுமை யுடையது. பாஸ்க்கு மக்கள் தோற்றத்திலும், பழக்க வழக்கங்களிலும் திராவிட மக்களை ஒத்தவர்களாவர். இவ்வாறு மொழி நூலாரும் குல நூலாரும் துணிந்துள்ளார்கள். வினா: எற்றூஸ்கானியர் என்னும் இத்தாலிய மக்கள் எவ்வாறு திராவிட இனத்தைச் சேர்ந்தவர்களாவர்? விடை : இவர்கள் நாகரிகத்தாலும், வழிபாட்டாலும், மொழி யாலும் தமிழரை ஒத்தவர்களாவர். வினா: பழைய அமெரிக்கர் எவ்வாறு தமிழராவர்? விடை: 1பழைய மாயா நாகரிகம் தென்னிந்திய நாகரிகத்தை ஒத்தது. பழைய அமெரிக்க மொழி தமிழ் போன்று ஒட்டுச் சொற்களுடையது. அவர்கள் உறவின் முறையாரை அழைக்கும் முறை முதலிய வைகளால் அவர்கள் ஒருகாலத்தில் தமிழரினின்றும் பிரிந்து சென்றவர்கள் என ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். வினா: இன்று இந்திய நாட்டில் பலமொழிகள் வழங்குகின்றன. முற்காலத்தில் இம்மொழிகள் எல்லாம் இருந்தனவா? விடை: 3000 அல்லது 3500 ஆண்டுகளுக்கு முன் இமயமலை முதல் கன்னியா குமரி வரையும் தமிழ் என்னும் ஒரு மொழியே வழங்கிற்று. வினா: எப்பொழுது புதிய மொழிகள் எழுந்தன? விடை: ஆரியர் என்னும் புதிய மக்கள் இந்திய நாட்டிற்கு வந்தபோதும், கிரேக்கர், சித்தியர், மங்கோலியர் முதலிய மக்கள் இந்தியாவிற் குடியேறிய போதும், புதிதாக வந்த ஆரியர் தமிழல்லாத மொழியை பேசினார்கள். அவர்கள் தமிழரோடு அளவளாவ நேர்ந்த போது தமிழ்ச் சொற்களைக் கொச்சையாக உச்சரித்தார்கள் (பறங்கியர் வெள்ளையர் தமிழ் பேசுவதுபோல), அவர்களோடு அளவளாவ நேர்ந்த தமிழரும் ஆரிய மொழிச் சொற்களைக் கொச்சையாக வழங்கினர். இவ்வாறு இரு மொழிகளும் கலந்து வடக்கே பல மொழிகள் தோன்றின. வினா: சமக்கிருதமே தமிழுக்கு முற்பட்ட மொழி என்றும், சமக்கிருத்தி னின்றே தமிழ் பிறந்ததென்றும் வடமொழிப் புலவர்கள் கூறுகின் றார்கள். இது உண்மையாகுமா? விடை : வரலாறும், மொழி ஆராய்ச்சியும் தலையெடுக்காத ஒரு காலத்தில் இந்நம்பிக்கையே இருந்துவந்தது. இது முற்கால மக்கள் பூமி வண்டிச்சக்கரம் போன்ற வட்டமாய்த் தட்டையாயுள்ளதென் றும், அதனை யானைகளோ பாம்போ எப்பொழுதும் சுமக் கின்றன வென்றும் நம்பியது போன்ற மூட நம்பிக்கை. இன்று பூமி சாத்திர அறிவு தலையெடுத்தபோது முற்கால மக்களின் நம்பிக்கை நகைக்கத் தக்கதாகின்றது. இதனை ஒத்ததே வடமொழியிலிருந்து தமிழ் பிறந்ததெனக் கூறுவதுமாகும். வினா: தமிழ் ஆரியத்திடம் எழுத்துக்களை இரவல் பெற்றது என்கி றார்கள். அது உண்மையா? விடை: ஆரியர் இந்திய நாட்டுக்கு வருவதன் முன் தமிழர் எழுத்தெழுதும் முறையை நன்கு அறிந்திருந்தார்கள் என்பது அரப்பா, மொகஞ்ச தரோப் புதைபொருள் ஆராய்ச்சிகளால் நன்கு உறுதிப்படு கின்றது. ஆரியர் நெடுங்காலம் எழுத்தெழுதும் முறையை அறியா திருந்தார்கள். ஆகவே அவர்களின் பழைய பாடல்கள் நெட்டுருச் செய்து காப்பாற்றப்பட்டன. அதனால் அப் பாடல்கள் கேட்கப் படுவது, நினைக்கப்படுவது என்னும் பொருளில் சுருதி, ஸ்மிருதி என்னும் பெயர்களைப் பெற்றன. அவர்கள் தமிழர்களோடு அளவளாவிய போது தமிழ் அறிஞர் அவர்களுக்கு எழுத்தெழுதும் முறையைக் கற்றுக் கொடுத்தார்கள். அப்போது அவர்களின் எழுதாக் கிளவிகள், எழுத்துக் கிளவிகளாயின. வினா: தமிழுக்கு இலக்கணத்தைச் செய்து உதவினவர்கள் ஆரியர்களே எனச் சிலர் கூறுகின்றனர். அது உண்மையாகுமா? விடை: ஆரியர் இந்திய நாட்டுக்கு வரும்பொழுது தமிழ் மிகத் திருத்தம் அடைந்திருந்தது, எழுத்தெழுத அரியாதிருந்த ஆரியர், தமிழுக்கு இலக்கணம் செய்து கொடுத்தார்கள் என்பதை பிறவிக் குருடன் பார்வை யுடைய ஒருவனுக்கு வழிகாட்டினான் என்பது போலாகும். ஆரியரின் வேதபாடல்களில் தமிழ்ச் சொற்கள் பல உள்ளன. அப் பாடல்களைச் செய்தவர்கள் பலர் தமிழர் எனக் கருதுப்படுகின் றனர். 1ஆரியருக்கு நூல் செய்து அவர் மொழியை வளப்படுத்திய அபஸ்தம்பர், சாணக்கியர், சங்கராச்சாரியர் போன்றவர்கள் தமிழரே யாவர். ஒருகாலத்தில் மக்கள் சூரியன் பூமியைச் சுற்றி வருகின்ற தென்றும், பூமி ஓரிடத்தில் நிற்கின்ற தென்றும் நம்பி வந்தார்கள். இவ்வகை நம்பிக்கையே தமிழுக்கு ஆரியர் இலக்கணம் செய்தார் என்னும் கதையுமாகும். வினா: சமக்கிருதம் என்பதன் பொருள் யாது? விடை: சமக்கிருதம் என்பதற்கு நன்றாகச் செய்யப்பட்டது என்பது பொருள். தமிழில் வழங்கும் சேரி மொழியைப் போலவே அது முன்பு இருந்தது. பின்பு திருத்தஞ்செய்யப்பட்டுச் சமக்கிருதம் என்னும் பெயரைப் பெற்றது. வினா: சமக்கிருதம் மக்களால் பேசப்பட்டதா? விடை: சமக்கிருதம் ஒருபோதும் பேசப்படவில்லை. அது இலக்கிய மொழியாகவே இருந்து வந்தது. வினா: அது எப்படி இலக்கிய மொழி ஆயிற்று? விடை: இந்திய நாட்டை அடைந்த ஆரியர் ஒரு கூட்டத்தினரல்லர். பல கூட்டத்தினர், அவர்கள் பேசிய மொழியில் வேறுபாடுகள் இருந் தன. அக்கூட்டத்தினரின் ஒரு பகுதியினர் வழங்கிய மொழியில் செய்யப்பட்ட அவர்களின் பழைய பாடல்கள் சமய சம்பந்தம் பெற்றிருந்தன. ஆகவே சமயத்தின் பொருட்டு இவை ஒரு கூட்டத் தினரால் மனப்பாடஞ் செய்து காப்பாற்றப்பட்டு வந்தன. காலத் தில் அம்மொழி ஒரு கூட்டத்தாரின் சாதிமொழி ஆயிற்று. பிற் காலங்களில் அம்மொழி தெய்வ மொழி என்னும் நம்பிக்கையும் எழுந்தது. அம்மொழியில் வித்துவான்கள் நூல் இயற்ற லானார்கள். ஆனால் மக்கள் அம்மொழியைப் பேசவில்லை. வித்துவக் கூட்டங் களுக்கிடையும் ஒரு சாதியாரிடையுமே அம்மொழி வழங்குவ தாயிற்று. வினா: வடமொழி தென்னாட்டுக்கு எவ்வாறு வந்தது, விடை: புத்த சைன மதத்தவர்களாலும் வடநாட்டுப் பிராமணராலும் கொண்டுவரப்பட்டது. வினா: தென்னாட்டில் அது எவ்வாறு சமய மொழியாயிற்று? விடை: ஐரோப்பிய நாட்டுக் கிறித்துவப் பாதிரிமார் இந்திய நாட்டில் தமது மதத்தைப் பரப்பியது போல், முற்காலத்தில் வட நாட்டினின்றும் வந்த ஆரியப் பிராமணர் அரசரைத் தம் மதத்துக்கு திருப்பினர். அதனால் அவர்கள் அரச வட்டங்களில் செல்வாக்கடைந்து அரருக்கு ஆசிரியர்கள் அமைச்சர்களாகவும் இருந்தனர். இவ்வாறு அதிகாரம் அடைந்த பிராமணர், கோயில்களை மேற்பார்ப்பவர் களாகிய பார்ப்பனரிடையே திருமணக் கலப்புடையராயினர். அப் பொழுது பார்ப்பனரும் பிராமண மதத்தைத் தழுவினர். அவர்கள் தமது பார்ப்பனத் தொழிலை விட விரும்பவில்லை. தம்மை ஆரியர் எனக் கூறினார்கள்; சமக்கிருதமே தமது தாய் மொழி என்றார்கள்; அரசரின் உதவியைப் பெற்றுச் சமக்கிருதத்தைச் சமய மொழியாக்கினார்கள். இதனைப் பொதுமக்கள் எதிர்த்து வந்தார்கள். அரச ஆணைக்கு எதிராக இம்முயற்சி பயனடைய வில்லை முற்கால அரசர் பிராமணரிடத்தில் அளவு கடந்த மூடபக்தி வைத்திருந்தார்கள். பழைய கல்வெட்டுக்களில் அவர் களுக்கு வழங்கப்பட்ட தானங்கள், நிலங்கள், கிராமங்களைப் (பிரமதாயங்கள்) பற்றி நாம் காணலாம் அவர்களுக்கு தானங் கொடுக்கப்பட்ட நிலங்களுக்கு வரி நீக்கப்பட்டிருந்தது. அவர்கள் போர்களுக்குச் செல்வதில்லை. அவர்களின் அதிகாரம் அரச அதிகாரத்தையும் மிஞ்சியிருந்தது. இவ்வகை மூடக்கொள்கை மலிந்த காலத்தில் பிராமணர் முதன்மை பெறுவதும், வடமொழி சமய மொழியாவதும் வியப்பன்று. பல்லவ அரசர் காலத்தும் பிற்காலச் சோழ அரசர் காலத்தும் வடமொழி சமயமொழியாக மாறியிருக்கலாம். வினா: தமிழ் வடமொழியின் உதவியின்றி இயங்கமாட்டாதென ஒருசிலர் கூறுகின்றனர். அது உண்மையா? விடை: ஆரியர் இந்திய நாட்டை அடைவதற்கு முன் தமிழ் பிறமொழிக் கலப்பின்றியே வழங்கிற்று. புத்தர், சைனர், பிராமண மதத்தினர் வருமுன், தென்னிந்தியாவில் கலப்பற்ற தமிழே வழங்கிற்று. பிற் காலத்தில் சில பிறமொழிச் சொற்கள் தமிழில் வந்தேறின. அவை களை நீக்கிவிட்டுத் தமிழை வழங்குதல் கடிதன்று. தமிழ் இலக்கி யங்களைப் பின் நோக்கி ஆராய்ந்து செல்லின் செல்லுந்தோறும் வடசொற்கள் அருகுதலைக் காணலாம். வினா: வடமொழி கடவுள் மொழியாதலின் அது தமிழிலிருந்து ஒரு போதும் சொற்களை இரவல் வாங்கமாட்டாது என்று சிலர் கூறு கின் றனர். அது உண்மையாகுமா? விடை: வடமொழியில் பல தமிழ்ச் சொற்கள் இருப்பதை மொழி ஆராய்ச்சியாளர் நன்கு எடுத்துக் காட்டியுள்ளார்கள். வடமொழி யில் தமிழ் சொற்கள் இல்லை எனக் கூறுதல் பிறவிக்குருடன் சந்திர சூரியர் இல்லை எனக் கூறியது போலாகும். வினா: வடமொழியிற் காணப்படும் சொற்கள் தமிழில் காணப்பட்டால் அவை வடசொற்களா? விடை: வடமொழியில் பல தமிழ் சொற்கள் உள்ளன எனக் கூறினோம். வடமொழி பழைய செர்மன் மொழிக்கு இனமானது. இந்து ஐரோப்பிய மொழிகளுக்குப் பொதுவல்லாதனவும், இந்திய ஆரிய மொழியில் மாத்திரம் காணப்படுவனவுமாகிய புதிய சொற்கள் அம் மொழிக்கு இந்திய மொழிகளினின்றும் கிடைத்தனவே. இவ்வகைச் சொற்கள் மிகப் பல ஆரியத்தில் உண்டு. ஆகவே அவை இந்திய மொழிகளாகும். ஆரியத்துக்கு முன் தமிழ் உண்மையால் பழைய தமிழ்ச் சொற்கள் பல ஆரியத்தில் ஏறியிருக்கின்றன. அவைகளுட் பல இன்று தமிழில் வழக்கு வீழ்ந்த பழந்தமிழ்ச் சொற்கள். வினா: “கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்-உன்னுதரத்துதித்தெழுந்தே ஒன்று பல ஆயிடினும்” எனப் பேராசி ரியர் சுந்தரம்பிள்ளை அவர்கள் கூறியது மொழி ஆராய்ச்சிக்கு ஒத்ததோர் முடிபன்று என்கிறார் திரு. S. வையாபுரிப்பிள்ளை,1 B.A., B.L.,இது உண்மையா? விடை: கன்னடம், தெலுங்கு, துளு மலையாளம் முதலிய மொழிகள், தமிழ் மொழியின் கிளைகள் என்பதே ஆராய்ச்சியாளரின் முடிவு. இதனைத் திராவிட ஆராய்ச்சிகள் என்னும் நூலில் திரு அனவரத விநாயகம்பிள்ளை M.A., அவர்கள் ஆராய்ந்து விளக்கியுள்ளார். அம்மொழிகள் தமிழ் தமக்குத் தாயல்லவெனக் கூறுவது வளர்ந்த பிள்ளைகள் தமது பெற்றோரைப் புறக்கணிப்பது போன்றதென லர்சரஸ் என்பார் கூறியுள்ளார். தலைச் சுழற்சியுள்ளவர்களுக்கு உலகம் சுழல்வது போலத் தோன்றுவது இயல்பு. ஆகவே இயற்கைக்கு மாறாகக் கூறும் மேற்கண்டார் கூற்று வலிதன்று. வினா: வடசொற்களைத் தமிழில் சேர்க்காவிட்டால் தமிழ் வளர்ச்சி குன்றிவிடும் எனச் சிலர் கூறுகின்றனர். அது உண்மையா? விடை: இற்றைக்கு ஐம்பது ஆண்டுகளின் முன் எழுதப்பட்ட தமிழ் நடையினும் பார்க்க, இன்று எழுதப்படும் தமிழ் நடையில் வட சொற்கள் மிகக் குறைவு. அதனால் தமிழ் அழகுறுகின்றது. தமி ழோடு சமக்கிருதச் சொற்களைக் கலந்து வழங்குவது அழகிய உடலில் அம்மைத் தழும்பு ஏறியது போலிருக்குமென, சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்கள் கூறியுள்ளார். வினா: நெடுநாளாகத் தமிழில் வடசொற்கள் இருந்து வந்தமையின் நாம் வடமொழியைப் பயின்று அதற்கு நன்றி பாராட்டிக்கொண்டிருக்க வேண்டும் என ஒருசாரார் கூறுகின்றனர். அது ஏற்றதுதானா? விடை: வெவ்வேறு மொழிகளைப் பேசும் மக்கள் அளவளாவிக் கூட்டுறவு உண்டாகும்போது ஒருவர் மொழியில் மற்றவர் மொழிச் சொற்கள் சில கலத்தல் இயல்பு. இவ்வாறு எகிப்திய, சுமேரிய, அக்கேடிய, எபிரேய, கிரேக்க, உரோமன் மொழிகளில் தமிழ்ச் சொற்கள் சென்று ஏறியுள்ளன. ஆங்கில மொழியில் பற்பல மொழிச் சொற்கள் சென்று ஏறியுள்ளன. அதனால் ஆங்கில மக்கள் அம்மொழிகளை யெல்லாம் கற்று, அம்மொழிகளுக்கெல் லாம் நன்றி கூறிக்கொண் டிருக்கிறார்களா? தமிழ் சில சமக்கிருதச் சொற்களைக் கையாண்டமையால் தமிழர் அதனைக் கற்று அதற்கு நன்றி பாராட்டவேண்டுமென்பது நகைப்புக்கிடமான கூற்றேயாகும். நம் முன்னோர் ஆரிய மக்களுக்குச் செய்தளித்தன வும், ஆரியரால் செய்யப்பட்டனவும் ஆகிய நூல்களைப் பயில விரும்பினால் தமிழர் அவைகளைத் தமிழில் திருப்பிக் கொள்ள லாம். இவ்வகை முறை பழைய பாபி லோனில் கையாளப்பட்டது. பழைய சுமேரிய மொழியில் புலவர்கள் இலக்கியங்களையும் பாடல்களையும் செய்து வந்தார்கள். பிற்காலத்தில் இதற்கு மாறாகப் புரட்சி உண்டாகி, பழைய நூல்கள் மக்கள் வழங்கும் மொழி யில் மொழிபெயர்க்கப்பட்டன. நூல்களும் அம்மொழியில் செய்யப்பட்டன. வினா: பீழை, கழகம், மயில், சிகழிகை, பழம் முதலிய சொற்கள் முறையே பீடா, க்ல, மயூரம், சீர்ஷக, பல என்னும் வடசொற்களிலிருந்து வந்தன என, ஒருவர் வாதம் புரிகின்றார். அவர் கூற்று உண்மைதானா? விடை: மயூர(ம்), பல(ம்) முதலியவை திராவிடச் சொற்கள் என்று கிற்றல் என்பார் காட்டியுள்ளார். இதனை மொழி ஆராய்ச்சி வல்ல எஸ்.கே. சட்டர்ஜி, பந்தேர்க்கார் முதலியோர் மேற்கோளாக ஆண்டுள்ளார்கள். மயில், பழம், பீழை, கழகம், சிகழிகை, முதலிய சொற்களிலிருந்தே மயூர, பல, பீடா, க்ல, சீர்ஷக முதலிய சொற்கள் தோன்றின. 1இந்து ஆரியமல்லாத மற்றைய ஆரியமொழிகளில் அச்சொற்களோ, அவைகளின் மூலங்களோ காணப்படாமையே இதற்குச் சான்று. ‘க்ல’ என்பதிலிருந்து கழகம் தோன்றிய தென்பதி லும் பார்க்கக் களம் என்பதிலிருந்து கழகந் தோன்றிய தென்பது மிக ஏற்றதாகின்றது. களன் என்னும் சொல் கழகம் என்னும் பொருளில் இலக்கண நூல்களில் வந்துள்ளது. “கேட்போர் களனே கால்வகை எனாஅ” என வரும் தொல்காப்பியச் செய்யுளி யல் சூத்திர அடியாலும் இதனை அறியலாம். கலை என்னும் சொல் தமிழாதலையும், அதிலிருந்து களம், காளை முதலிய பல சொற்கள் தோன்றியிருத் தலையும், காலின்ஸ் என்பார் திராவிட ஆராய்ச்சி என்னும் நூலில் காட்டியுள்ளார். காமாலைக் கண்ணனுக்குக் கண்டதெல்லாம் மஞ்சளாகத் தோன்றுவதுபோல, ஆரியக் காமாலை கொண்டு வருந்தும் ஆராய்ச்சியாளருக்குத் தமிழ்ச் சொற்கள் வட மொழிச் சொற்களாகக் காணப்படுதல் இயல்பே யாகும். அன்னோர் கூற்று அவைக்கேறாக் கூற்றுக்களே யாகும். மக்லீன் என்னும் ஆசிரியர் பழந்தமிழிற் காணப்படும் ஆரிய மெனக் கருதப்படும் சொற்கள் சந்தேகத்துக்குரியனவென் றும், அவை இருமொழிகளுக்கும் பொதுவாயுள்ளனவாகலாம் எனவும் கூறியுள்ளார். வினா: ஆரியம் வருமுன் வடநாட்டில் தமிழ் வழங்கியதென் பதற்குரிய சான்று உண்டா? விடை: ஐரோப்பிய ஆரிய மொழிகள் போலல்லாது, இந்திய ஆரியம் ஒலிமுறையான மாறுதலடைந்திருத்தல், வேதமொழியில் தமிழ்ச் சொற்கள் காணப்படுதல் போன்றவை. ஆரியம் இந்திய நாட்டுக்கு வரும்போது அங்கு தமிழ் வழங்கியதென்பதை வலியுறுத்துவன. ஆராய்ச்சி வல்ல பந்தேர்க்கார், எஸ். சட்டர்ஜி முதலியோர் ஆரியர் வருகைக்கு முன் வடக்கே திராவிட மொழி வழங்கியதென்பதில் சந்தேகமில்லை எனக் கூறியுள்ளார்.2 வினா: இன்று வடநாட்டில் வழங்கும் மொழிகள் ஆரிய இனத்தைச் சேர்ந்தனவா? விடை: ஆரியர் வரும்போது வடக்கே தமிழ் வழங்கிற்று, பின்பு இரு மக்களும் அளவளாவிக் கலந்தார்கள்! அப்பொழுது தமிழோடு, பல இரு மொழிச் சிதைவுகளும் கலந்து புது மொழிகள் எழுந்தன. வட நாட்டு மொழிகள், சொற்போக்கில் ஆரியம்போல் தோன்றி னாலும், இலக்கண அமைப்பில் திராவிடமாயுள்ளன என ஆராய்ச்சி வல்ல பி.தி. சீனிவாச ஐயங்காரவர்கள் ‘தற்கால இந்தியா’ என்னும் தமது நூலிற் காட்டியுள்ளார். வினா: கன்னடம், தெலுங்கு, துளு, மலையாளம் முதலிய மொழிகள் எவ்வாறு தோன்றின? விடை: தமிழ் உறழ்ந்தும் பிறழ்ந்தும் வழங்கப்பட்டதாலும் பல ஆரியச் சொற்களைக் கையாண்டமையாலும் உண்டாயின. இன்று அம் மொழிகளிலிருந்து ஆரியச் சொற்களை நீக்கிவிட்டால், மீந்திருப் பன வழக்கொழிந்தனவும், இன்று வழங்குவனவுமாகிய தமிழ்ச் சொற்களாகும். அம்மொழி இலக்கணங்கள், வடசொற்களை, அம் மொழிகளில் சேர்த்துக் கொள்வதற்குத் தனி விதிகள் கூறுகின்ற மையின், அவை ஆரியத்தை அன்னிய மொழியாகக் கொண்டன என்பதும் தெளிவாகும். வினா: திராவிடம் என்பதிலிருந்து தமிழ் பிறந்ததெனச் சிலர் கூறுகின் றனர். இது உண்மையாகுமா? விடை: திரை இடம் என்பது கடற்கரையை அடுத்த தென்னாட்டைக் குறிக்கப் பூமி சாத்திர சம்பந்தமாக முற்காலத்தில் வழங்கப்பட்ட தென்றும், அது பிற்காலத்தில் உச்சரிப்போரின் சோர்வினால்! திராவிடம் எனப்பட்டதென்றும், பூமி சாத்திரம் சம்பந்தமாக வழங்கிய இப்பெயர், தென்னாட்டு மக்களையும் அவர் மொழியை யும் குறிக்க வழங்குவதாயிற்று என்றும், கிளிமென்ட் ஸ்கோனர் என்னும் செர்மன் ஆசிரியர் நன்கு ஆராய்ந்து காட்டியுள்ளார். திராவிடம் என்பது திரையிடம் என்னும் தமிழ்ப் பெயரின் சிதைவே. வட மொழிக் கட்சியினர் திராவிடம் என்பது வட மொழிச் சொல் எனக் கொண்டு அதனின்றே தமிழ் உண்டாயிற் றென வீண்வாதம் புரிவர். திராவிட மென்பது தமிழின் கிளை மொழிகளாகிய கன்னடம், தெலுங்கு, துளு, மலையாளம் முதலிய மொழிகளைக் குறிக்க கால்ட்வெல் என்னும் கிறித்துவப் பாதிரியாரால் மொழி தொடர் பாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. வினா: சேர சோழ பாண்டிய நாடுகள் எவ்வெல்லைகளுக்குட்பட்டு இருந்தன? விடை: வடக்கே திருவேங்கடமும் (திருப்பதி மலை) தெற்கே கன்னியா குமரியும், கிழக்கும் மேற்கும் கடலுமாகிய எல்லைகளுக்கு உட்பட்டு. வினா: இது எப்படி அறியப்படும்? விடை: தொல்காப்பியத்தில் “செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்” எனக் கூறப்பட்ட `தென்பாண்டி, குட்டங், குடம், கற்கா, வேண், பூழி, பன்றி, அருவா, அருவாவடதலை, சீதம், புனனாடு, மலைநாடு முதலிய நாடுகள் திருவேங்கடத்துக்கும் குமரி முனைக்கும் அகத்தே உள்ளமை யானும் மூவேந்தரின் நாடுகள் தமிழ் வழங்கும் இடங்கள் எனத் தொல்காப்பியம் கூறுகின்றமையானும். வினா: திருவேங்கடத்துக்கு மேலே என்ன மொழி வழங்கிற்று? விடை: தெலுங்கு வினா: ஒரிசாவில் முன் தமிழ் வழங்கிற்றென்று ஆராய்ச்சியாளர் கூறு கின்றார்கள். அவ்வாறாயின் தமிழ் திரிந்து தெலுங்கானது எப்பொழுது? விடை: புத்தர் காலத்துக்குப் பின் ஒரிசாவில் வழங்கிய தமிழ் மாறுபடத் தொடங்கியிருக்கலாம். தெலுங்கில் இலக்கியங்கள் கி.பி. ஒன்பது பத்தாவது நுற்றாண்டுகளிலேயே தோன்றவாரம்பித்தன. இலங்கைத் தீவிலும் பழங்காலத்தில் தமிழ் வழங்கிற்று. அங்கு பாலிமொழி சமய மொழியான போது, பழைய தமிழ் திரிந்து சிங்களமாயிற்று. சிங்களத்திலும் பழைய இலக்கியங்கள் 10ஆம் நூற்றாண்டு வரையில் தோன்றின. இதனால் முன்பின் கி.மு. 6ஆம் நூற்றாண்டு முதல் வங்காளத்தில் தமிழ் தெலுங்காக மாறத் தொடங்கிற்று எனக் கூறலாம்! வினா: முற்காலத்தில் தமிழ் எவ்வாறு வளர்க்கப்பட்டது? விடை: அரசர் பெருமக்கள் ஆதரவாலும், பாண்டிய அரசர் கூட்டிய தமிழ் கழகங்களாலும். முற்காலத்தில் பாண்டியரின் ஆதரவில் மூன்று சங்கங்கள் நடந்தன. அவை முதல், இடை கடைச் சங்கங்கள் எனப்படும். வினா: முதற்சங்கம் எங்கே நடந்தது? விடை: குமரிமுனைக்குத் தெற்கே பல நாடுள் இருந்தன. அங்கு மதுரை என்னும் நகரம் இருந்தது. அங்கு முதல் சங்கம் நடைபெற்றது. இந் நகரையும் அதனைச் சார்ந்த நாடுகளையும் கடல் கொண்டது. வினா: இரண்டாவது சங்கம் எங்கே நடந்தது? விடை: கபாடபுரம் என்னும் நகரில். இது தாம்பிரபரணி முகத்துவாரத்தி லிருந்தது. இதனையும் ஒரு காலத்தில் கடல் கொண்டது. வினா: மூன்றாவது சங்கம் எங்கே இருந்தது? விடை: இது திருப்பரங்குன்றத்துக்கு நேர் கிழக்கே இருந்த மதுரையில். இன்றைய மதுரை முன் மதுரையிருந்த இடத்திலில்லை. வினா: தமிழ்ச் சங்கத்தைப் பற்றிய வரலாறு எங்கே காணப்படு கின்றது? விடை: இறையனாரகப் பொருளுரையிலும், அதற்குப் பிற்பட்ட நூல் களிலும். சங்கம் இருந்ததென்பதற்குச் சான்றுகள் சங்க நூல்களி லும் ஆங்காங்கு காணப்படுகின்றன. கூடல் என்பது சங்கம் இருந்தமை காரணமாகத் தோன்றிய பெயர். வினா: கன்னியாகுமரிக்குத் தெற்கே நிலம் இருந்ததென்பதற்குச் சான்றுகள் உண்டா? விடை: சிலப்பதிகாரத்திலும் அதற்கு அடியார்க்குநல்லார் எழுதிய உரையிலும் பேராசிரியர் நச்சினார்க்கினியர், இளம்பூரணர் முதலாயினோர் எழுதிய உரைகளிலும் காணப்படுகின்றன. குமரியாற்றுக்கும் பஃறுளியாற்றுக்குமிடையே 49 தமிழ் நாடுகள் இருந்தன என அடியார்க்கு நல்லார் உரையில் காணப்படுகின்றது. கடல் கொண்ட வற்றுள் பஃறுளி ஆறு, குமரி ஆறு, குமரிமலை முதலியன சில. பஃறுளியாற்றைச் சங்க நூல்கள் குறிப்பிடுகின்றன. வினா: இதற்கு வேறு சான்றுகள் உண்டா? விடை: புராணக் கதைகளும், இலங்கைப் புத்த நூல்களும் சான்றளிக் கின்றன. நில நூலார் இந்து மாக்கடலிலுள்ள தீவுகள் முன் இருந்த பெரிய நிலப்பரப்பில் காணப்பட்ட மலைகளின் சிகரங்கள் என்கின்றனர். இலங்கை, மேரு மலையின் ஒரு சிகரம் என்றும், மேரு உலகுக்கு மத்தியில் (நடுக்கோட்டில்) உள்ளதென்றும் புராணங்கள் கூறுகின்றன. மாலைத் தீவுக் கூட்டங்களும் இலங்கைத் தீவும் முன்பு தரையால் இணைக்கப்பட்டிருந்தன வென்று நில நூலார் கூறுகின்றனர். பாஸ்கராச்சாரியர் என்னும் பழைய வான நூலாசிரியர் நடுக்கோடு, இலங்கைக் கூடாகச் செல்கின்றதெனக் கூறியுள்ளார். வினா: முதல் தமிழ்ச் சங்கத்துக்குத் தலைவராயிருந்தவர் அகத்திய ரென்றும், அவர் ஆரிய முனிவர் என்றும் கூறுகின்றனர். அது உண்மையா? விடை: தமிழ்ச் சங்க மென்பது ஆரியர் இந்திய நாட்டுக்கு வருவதன் முற்பட்ட நிகழ்ச்சி. அகத்தியரின் தந்தை மித்திராவருணன் எனப் படுதலின் அகத்தியர் ஆரியரல்லரென்றும், வேதகால இருடிகளிற் பலர் திராவிடர்கள் என்றும் ஆராய்ச்சியாளர் நாட்டியுள்ளார்கள். ஆரியர் கி.மு. 1000 வரையில் தென்னாட்டுக்கு வரத்தொடங்கினர். அகத்தியர் இராமாயண காலத்தில் கோதாவரிக் கரையில் இருந்தவராகக் காணப்படுகின்றனர். புராணங்களில் அகத்தியர் மேருவை அடக்கினார் எனக் காட்டப்படும் கதைக்கு, அகத்தியர் தமிழ்நாடு வந்தார் என்று பொருள் விரித்தல் ஆகாது. புராணக் கதைகள் பொய்யும் புளுகும் மலிந்த நூல்கள். வேறு சான்றுகள் இருப்பின் புராணக் கூற்றுகள் ஆராயப்படும். செங்கோன் தரைச் செலவில் மூத்தூர் அகத்தியன் என்னும் ஒரு புலவரின் பெயர் காணப்படுகின்றது. மணி மேகலையில் அகத்தியரின் வரலாறு பழங்கதையாக மாறிவிட்டது. அவர் தமிழோடு சம்பந்தப்பட்டவ ராக யாண்டும் காணப்படவில்லை. சிதிய மக்களிடையே, அகத் திரிசிகள் எனப்பட்ட ஒரு கூட்டத்தினர் வாழ்ந்தார்கள் என எரதோதசு (Heradotus) என்னும் ஆசிரியர் கூறியுள்ளார். அகத்தியர் என்னும் பெயருடன் பலர் இருந்தார்கள். பெதுருங் கேரியன் அட்டவணைகளில் (கி.பி. 100?) தென்னிந்தியாவில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்ட அகஸ்தஸ் கோயிலென்பது அகத்தியர் கோயிலென ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். இவை போன்ற பல காரணங்களால் அகத்தியரைப் பற்றிய வரலாறு நன்கு அறிய முடியாமல் மயக்கமளிப்பதாயிருக்கின்றது. சிவபத்தராகிய ஒரு அகத்தியர் விளங்கினார் என்பது அகத்தீச்சுரம் முதலிய பழைய கோயிற் பெயர்களால் விளங்குகின்றது. அகத்தியரை ஆரியர் எனக்கொண்ட புராண காலத்தினர், அகத்தியரைத் தமிழோடு சம்பந்தப்படுத்தினார்கள் எனத் தெரிகின்றது. இக்காலம் அகத்தியர் பெயரால் வழங்கும் வாகடங்களைப் போல, அவர் பெயரால் சில இலக்கணங்களும் தோன்றியிருக்கலாம். வினா: கி.மு. 1000 வரையில் தமிழ்மொழி வேறு மொழியாக இருந் திருக்குமா? விடை: இன்றைய ஆங்கில மொழியை ஆராந்து பின்னோக்கிச் செல்லச் செல்ல அது ஆங்கிலமாகத் தோன்றமாட்டாது. ஆனால் தமிழின் நிலை அதுவன்று. அது பழமை தொட்டுத் தன் பழையவடிவோடு நிலவுகின்றது. பாலஸ்தீன அரசனாகிய சாலமன் காலத்தில் எபிரேய மொழியில் சென்று வழங்கிய தமிழ்ச்சொற்களும், கி.மு. 500 வரையில் கிரேக்க மொழியிற் சென்று வழங்கிய சொற்களும், மத்திய ஐரோப்பாவில் ஆரியர் பரவுவதன் முன் வழங்கியன வென்று கிளி மென்ட் ஸ்கோனரால் எடுத்துக் காட்டப்பட்ட சொற்களும், ஹெரஸ் பாதிரியார் மொகஞ்சதரோ முத்திரைகளை ஒலி முறையாக வாசித்த வாசிப்பிற் காணப்படும் பல சொற்களும், இன்றும் தமிழில் வழங்கும் சொற்களாகக் காணப்படுகின்றன. சங்க காலத் தமிழுக்கும் இன்றைய தமிழுக்கும் என்ன வேறுபா டுண்டோ அவ்வகை வேறுபாடே சங்ககாலத் தமிழுக்கும் அக்காலத் தமிழுக்கும் இருந்திருக்கலாம். வினா: தொல்காப்பியர் ஆரியர் என சிலர் கூறுகின்றனர். அது உண்மையா? விடை: தொல்காப்பியர் ஆரியர் என்று சொல்வதற்குரிய ஆதாரம் ஒன்றேனும் இல்லை. தொல்காப்பியர் தனது நூலில் ஆரியநாட்டு வழக்குகள் சிலவற்றைத் தமிழ் வழக்குகளோடு ஒப்பிட்டுக் காட்டியுள்ளார். டாக்டர் போப், வீரமாமுனிவர் முதலியோர், தம் மினத்தவர் தமிழ் பயில்வதற்கு ஏற்ற முறையில் தமிழ் இலக்கணஞ் செய்தார்கள். அவர்கள், தமிழில் இலக்கணம் இல்லாமையால், தமிழ் இலக்கணஞ் செய்யவில்லை. ஆந்திர நாட்டினரே தொடக் கத்தில் வடமொழியைப் பயில்வதில் ஆர்வங் கொண்டிருந்தனர். இது அபஸ்தம்பர், போதாயனர் முதலிய ஆந்திர நாட்டினர் வட மொழியைக் கற்று, அம்மொழியில் நூல்கள் எழுதினமையால் நன்கு புலப்படும். அவ்வகை ஒருவரே தொல்காப்பியர் எனத் தெரி கின்றது. இவர் வடமொழிப் பயிற்சியுடையார், தென் மொழியைக் கற்பதற்கு ஏற்ற முறையில் நூல் செய்தாராகலாம். தமிழில் திசைச் சொல் எனக் கொள்ளப்படும் செப்பு என்னும் சொல்லைத் தொல் காப்பியர் பலவிடங்களில் ஆண்டுள்ளமையும் இதற்கு சான்றாகும். இந்திரனுடைய தலைநகராகிய அமராவதி, கிருஷ்ணாநதி முகத் துவாரத்திலுள்ளது. இவ்விந்திரன் சம்பந்தப்பட்ட நூல், தொல் காப்பியத்தில் சொல்லப்படும் ஐந்திரமாகலாம். தொல்காப்பியத் தில் ஆரியச் சார்பு இருப்பின், அதனால் தமிழுக்கு நேரக்கிடக்கும் இழுக்கு யாதுமில்லை என்க. வினா: தொல்காப்பியத்தில் வரும் அந்தணர் ஆரியப் பிராமணரையும், மறை, ஆரிய வேதங்களையும் குறிக்கின்றனவெனச் சிலர் கூறுவர், அது உண்மையா? விடை: வீரமாமுனிவர் கத்தோலிக்க குருமாரை வேதியர் எனவும், தமது மதநூலை வேதம் எனவும் கூறியுள்ளார். சொல்லொற்றுமை பற்றி கத்தோலிக்க குருமார் ஆரியப் பிராமணரும், அவர் வேதம் ஆரிய வேதமுமாய் விடுமா? சொற்களுக்கு இடமறிந்து பொருள் கொள்ள வேண்டும். தொல்காப்பியர் ஆரிய வேதத்தைக் குறிக்க மறை என்னும் சொல்லையும், பிராமணரைக் குறிக்க அந்தணர் என்னும் சொல்லையும் ஓரோரிடத்து ஆண்டுள்ளார். அதனால் அவர் நூலில் வரும் அந்தணர், மறை என்னும் சொற்கள் எல்லாம் ஆரியப் பிராமணரையும், ஆரிய வேதங்களையும் குறிக்கின்றன வென்பது அறியாமையாகும். வினா: பார்ப்பார் ஆரியரா? தமிழரா? விடை: தமிழ்நாட்டில் காணப்படும் யூரேசியர் என்னும் வகுப்பினர், தமிழரா? ஐரோப்பியரா? என்னும் கேள்வி கேட்டலை ஒத்தது இக் கேள்வி. யூரேசியர் எனப்படுவோர் எல்லோரும் ஐரோப்பிய தந்தை யருக்கு இந்தியத் தாய்மாரிடம் பிறந்தவர்களல்லர். இவர்களைப் பற்றி தேஸ்ரன் என்பார் தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். ஒரு ஐரோப்பியன் இந்தியப் பெண் ஒருத்தியோடு தொடர்பு வைத்திருந்தால், அப்பெண்ணின் குடும்பத்தவர்கள் ஐரோப்பிய உடை அணிந்து கொண்டு தம்மை யூரேசியர் எனச் சொல்லிக்கொண்டனர் என அவர் குறிப்பிட்டுள் ளார். அதனை ஒப்பவே ஆரியப் பிராமணர் தொடர்பு பார்ப்பன ரிடையே உண்டானபோது, அவர்கள் எல்லோரும் தம்மை ஆரியர் எனச் சொல்லி ஆரிய வேடம்பூண்டதோடு அவர்கள் சமயத்தை யும் தழுவலாயினர். யூரேசியரை எப்படி இந்தியர் அல்லது ஐரோப் பியர் என்று கூற முயடியவில்லையோ, அப்படியே பார்ப்பனரை யும் நாம் ஆரியர் அல்லது தமிழர் எனக் கூற முடியவில்லை. அவர்கள் நரம்புகளில் ஓடிக் கொண்டிருக்கும் இரத்தத்தில் நூற்றுக்கு எண்பது தமிழ் ரத்தம் எனவே கூறலாம். வினா: பார்ப்பனர் என்போர் யார்? விடை: இவர்கள் கோயில்களை மேல்பார்த்த தமிழ் மக்களே? இவர்கள் காலத்தில் பெருகித் தனிக்கூட்டத்தினராயினர். பிற்காலத்தில் பிராமணர் பிரமாவின் முகத்தில் பிறந்தவர்கள் என்னும் கட்டுக் கதை எழுந்தது. அக்கதையைக் கொண்டு தாம் பிரமாவின் முகத்தில் பிறந்தவர்க ளெனப் பார்ப்பனர் பலர் நம்பி வருகின்றனர். தம் குல முதல்வர்கள் வடநாட்டு முனிவர்கள் எனவும் கொள்கின் றனர். இவை நகைப்புக் கிடமானவை. வினா: அந்தணர் எனப்பட்டோர் யார்? விடை: இவர்கள் துறவொழுக்கங்கொண்டு உயிர்களிடத்து அன்புடைய ராய் விளங்கிய துறவிகள். பிற்காலத்தில் பார்ப்பார், பிராமணர், அந்தணர் என்னும் பெயர்கள், கோயிற் பூசை செய்யும் பூசாரிக் குலத்தினரைக் குறிக்க வழங்கலாயின. வினா: தமிழ் கெட்டுவிட்டதென்கிறார்கள்; தமிழ் எப்படிக் கெட்டது? விடை: வடநாட்டினின்றும் பிராமணர் தென்னாடு போந்தார்கள் எனக் கூறினோம். இவர்கள் சிறிது சிறிதாக அரசினர் தயவைப் பெற்று அவர்களைத் தம் மதத்துக்கு இழுத்தனர். அரசினர் உதவியால் சமக்கிருதம் தென்னாட்டில் சமய மொழியாயிற்று. பார்ப்பனரும் பிராமணரும் தமது தாய்மொழி சமக்கிருதம் எனக் கொண்டனர். அவர்கள் தமிழை அன்னிய மொழியெனக் கொண்டனர். ஆகவே, அவர்களுக்கு வடமொழியிடத்துள்ள பற்றுப் போலத் தமிழில் இருக்கவில்லை. அவர்கள் தமிழோடு வட மொழிச் சொற்களைக் கலந்து வழங்குவதிற் சிறிதும் பின் நிற்கவில்லை. இவர்கள் வாழ்க்கைப் பொதுமக்களும் சிறிது சிறிதாகக் கையாண்டனர். இதனால் தமிழ் மிகக் கேடடைந்தது. ஒரு காலத்தில் சரிக்குச் சரி வடமொழி கலந்த நடை, மணிப்பிரவாளம் என்னும் பெயருடன் தமிழ் நாட்டில் வழங்கிற்று. தமிழ் அறிஞரின் விடாப்பிடியான எதிர்ப்பினாலும், உழைப்பினாலும், நாள் வீதம் பிறமொழிச் சொற்கள் தமிழினின்றும் களையப்பட்டுத் தமிழ் இன்றைய நிலையில் காணப்படுகின்றது. இன்று ஐம்பது ஆண்டுகளின் முன் எழுதப்பட்ட தமிழ் நடையையும் இன்றைய தமிழ்நாட்டையும் நோக்கினால் இது விளங்கும். வினா: தமிழை எப்படித் திருத்தலாம்? விடை: தமிழில் பிறமொழிச் சொற்களைக் கண்டபடி நுழைக்கா மலும், நுழைக்கும் இன்றியமையாமை நேர்ந்தால், அவைகளைத் தமிழ் உச்சரிப்பு முறையாக மாற்றி வழங்கவும் வேண்டும். வினா: இந்தி தென்னாட்டில் கட்டாயக் கல்வியானால் அது எப்படிப் தமிழைக் கெடுக்கும்? விடை: சமக்கிருதம் எப்படித் தமிழைக் கெடுத்தது; அது போலக் கெடுக்கும். வினா: இந்திப் ‘பிரச்சாரத்தை’த் தமிழ் நாட்டில் நடத்துபவர் யார்? விடை: தம்மை ஆரியர் எனச் சொல்லிக்கொள்ளும் வகுப்பினர். வினா: அவர்கள் ஏன் அப்படிச் செய்கிறார்கள்? விடை: அது, தமது தாய்மொழி எனக் கொள்ளும் ஆரியத்துக்கு உறவான மொழி எனக் கருதுவதால். வினா: ஆரியம் தமிழ் என்னும் போராட்டம் முற்காலத்தும் இருந்ததா? விடை: ஆரியர் இந்திய நாட்டுக்கு வந்தது முதல் உண்டு. தாசுக்கள்-ஆரியர் போர்கள் என ஆரிய வேதங்களிற் கூறப்படுவன, ஆரியருக்கும் தமிழருக்கும் இடையே நேர்ந்த போர்களே. வினா: சமய குரவர் காலத்தில் இப்போராட்டங்கள் இருந்தனவா? விடை: “ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்” “ஆரியந் தமிழோ டிசையானவன்” எனத் தேவாரத்தில் வருவனவற்றால் இதை நன்கு அறியலாகும். நெடுகிலும் பூசல் விளைவித்துக்கொண்டிருந்த இக் கட்சியினரைச் சந்துபடுத்தவே அவ்வாறு கூறப்பட்டது. வைண வத்தில் வடகலை தென்கலை என்றிருப்பதும் முற்காலப் பூசலின் எதிர் ஒலிகளே. வினா: சமய குரவர்களுக்குப் பிற்காலத்தும் இப்பூசல்கள் இருந்தனவா? விடை: திருவிளையாடற் புராணத்தில் பரஞ்சோதி முனிவரும் காஞ்சி புராணத்தில் சிவஞான முனிவரும் கூறியுள்ளவைகளால் அக்காலத் தில் இப்பூசல்கள் மிக்கிருந்தன என்று விளங்குகின்றது. வினா: பேராசிரியர் சுந்தரம்பிள்ளை காலத்தில் இப்போர்கள் இருந்தனவா? விடை: “ஆரியம்போல் உலக வழக்கழிந் தொழிந்து சிதையாவுன் - சீறிளமைத் திறம் வியந்து செயன் மறந்து போற்றுதுமே” என்றும், “சதுமறை ஆரியம் வருமுன் சகமுழுவதும் நினது” எனவும் அவர் கூறியவை கொண்டு அக்காலத்தில் ஆரிய-தமிழ்ப் பூசல்கள் எவ்வளவு மும்முரமடைந்திருந்தன வென்று நாம் உய்த்துணரலாம். சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்கள் தொல்காப்பியம், கலித் தொகை முதலிய நூல்கள் பதிப்பிக்கின்ற காலத்திலேயே பல ஆரியக் கட்சியினர் பத்திரிகைகளில் தோன்றி அவரைப் பலவாறு எதிர்த்தனர் என்பது அவர் பதிப்பித்த கலித்தொகைப் பதிப்புரை யால் நனி விளங்கும். புலவர் புராணம் செய்த முருகதாசரையே பல ஆரியக் கட்சியினர் எதிர்த்தார்கள் என அவர் தமது `தமிழலங் காரம்’ என்னும் நூலில் கூறிப்பிட்டுள்ளார். இன்றும் இப் போராட்டம் இல்லாமலில்லை. கலைச்சொல், அகராதியை ஒட்டி நடந்த மாநாடுகளில் பூசல்களே இதற்கு எடுத்துக்காட்டுக்களாகும். வினா: இன்று வடமொழிக் கட்சியினர் எதற்காகப் போராடுகிறார்கள்? விடை: முற்காலத்தைப் போலவே மொழியைப் பற்றிய கருத்து இன்றும் பொருளாதார அரசியல் சம்பந்தம் பெற்றுள்ளது. முற்காலத்தில் வடமொழி படிப்பதற்கு மானியங்கள் விடப்பட்டன. ஆலயங் களிலே வேதமோதுகிறவர்களுக்கு உணவும் தக்கணையும் கிடைத்தன. பிற வாய்ப்புக்களுமிருந்தன. அரசன் மூடபக்தியினால் கிராமங்களையே பிரமாணருக்குத் தானஞ் செய்தான். அதனால் அவன் தனது பாவத்தைக் கழுவிவிடலாமென எண்ணினான். இவையெல்லாம் ஆரியம் தெய்வ மொழியென்றும் அதனைப் பயின்றவர் பூதேவர் என்றும் எழுந்த மூட நம்பிக்கைகளை அடிப் படையாகக் கொண்டன. ஒரு கூட்டத்தார் உடல் உழைப்பின்றிச் சுகவாழ்வு பெறுவதற்கு வடமொழி காரணமாயிருந்தது. இன்றும் ஓரளவு இருக்கின்றது; பூதேவராகிய கூட்டத்தினர் உயர்ந்தவர்கள் என்னும் பொய்க் கருத்தினால் அவர்கள்அரசியலிலும், வலிமை யடைந்துள்ளார்கள். வடமொழி விழுந்து, தமிழ் ஓங்கிவிட்டால் பூதேவர் பூமியில் விழுந்துவிடுவார்கள். இதுவரையும் பொது மக்க ளிடையே இருந்துவரும் செல்வாக்கும் மதிப்பும் பறந்துவிடும். தாமும் எல்லாரையும் போலவே உடல் வருந்தி உழைக்க நேரும் என்னும் அச்சங்கள் உள்ளிருந்து உந்துவதால் அவர்கள் தமிழை எதிர்க்கிறார்கள். தமிழ் எதிர்ப்பென்பது ஒரு கூட்டத்தாரின் வாழ்க்கைப் போராட்டமேயாகும். வினா: தென்னிந்தியாவில் பல ஆலயப் பெயர்கள் வடமொழிப் பெயர்களாகவே காணப்படுகின்றன. அவ்வாறிருப்பதற்குக் காரண மென்ன? விடை: வெள்ளையர் நாட்டுக்குத் தலைவராய் வந்தபோது தாம் விரும்பிய வாறு இடங்களுக்கும், வீதிகளுக்கும் மேல் நாட்டுப் பெயர்களை இட்டார்கள். பொது மக்கள் விரும்பாவிடினும் அதனை அவர் களால் தவிர்க்க முடியவில்லை. பிராமணரும், பிராமண மதத்தைத் தழுவிய பார்ப்பனரும் கோயில்களுக்கு அதிகாரிகளானபோதும், ஆரியம், கடவுள் மொழி என்னும் மூடக்கொள்கை பரவிய போதும், பழைய தமிழ்ப் பெயர்கள் ஆரியமாக்கப்பட்டுவிட்டன. வினா: ஆலாசிய மான்மியம் முதலிய புராணங்களில் தமிழ் அரசர் பெயர்கள் வடமொழிப் பெயர்களாகக் காணப்படுகின்றன, ஏன்? விடை: புராணம் எழுதியவர்கள் தமிழ் பெயர்களை வடமொழிப்படுத்தி எழுதினார்கள். வினா: தமிழை வளர்ப்பதற்குச் சிறந்த வழி எது? விடை: முதலில் ஆலயங்களிலிருந்து ஆரியத்தை ஒழிக்க வேண்டும்; தமிழைச் சமய மொழியாக்க வேண்டும், தமிழ்க் கலைச்சொல், தமிழ் அகராதி, தமிழ்க் கலை அகராதி போன்றவை செய்யும் குழுவில் ஆரியரல்லாத தமிழரே இருக்க வேண்டும். கலைச் சொல் ஆக்கத்தில் வடசொற்கள் இருக்கலாமென வாதாடிய கட்சியின ரும் இருந்தார்கள் என்பது உலகுக்கு ஞாபகமிருக்கலாம். வினா: இசைக்கு மொழி முக்கியமில்லை. தமிழருக்கு இந்தி, தெலுங்குப் பாட்டுக்கள்தான் ஏற்றன என ஒரு கட்சியினர் கூறுகின்றனர். அது எப்படி? விடை: இது தமிழனுக்குச் சமயமொழி ஆரியம்; தமிழ் மனித மொழி எனக் கூறப்படுவதை ஒத்த மூடத்தனம். பாடல்களுக்காகவே இசைகள் தோன்றின. இசையில் சுவைக்க வேண்டியவை மூன்று பொருள்கள். அவை, சொற்சுவை, பொருட்சுவை, இசைச்சுவை, தமிழன் விளங்க மாட்டாத பாட்டில் இம்மூன்று சுவைகளும் காணப்பட மாட்டார். வினா: கோயில்களின் உள்ளே நின்று ஆரியம் பாடுகிறார்கள்; வெளியே நின்று பண்டாரம் தேவராம் பாடுகிறார். ஏன் அப்படி? விடை: ஆரியம் “தேவ பாஷை” தமிழ் “மனித பாஷை” என்னும் கொள் கையிலிருந்து வருவதால் இது தமிழனுக்கு நாணத்தக்க செயல். வினா: திருக்குறள் எப்பொழுது செய்யப்பட்டது? விடை: உக்கிரப் பெருவழுதி காலத்தில் திருக்குறள் செய்யப்பட்டதென் றும் கன்னபரம்பரை வரலாறுள்ளது. உக்கிரப் பெருவழுதி கடைச் சங்கத்துக் கடைசி அரசனாவான். இவன் காலம் கி.பி. 50 வரையில். வினா: திருக்குறள் கி.பி. ஆறு அல்லது ஏழாம் நூற்றாண்டு அளவில் செய்யப்பட்ட நூல் எனச் சிலர் கூறுகின்றனர். இது உண்மை யாகுமா?1 விடை: சிலப்பதிகாரம் சேரன் செங்குட்டுவனின் தம்பியாகிய இளங்கோ வடிகளாற் செய்யப்பட்டது. சேரன் செங்குட்டுவன் இலங்கைக் கய வாகு காலத்தில் இருந்தவன். இவன் காலம் கி.பி. இரண்டாம் நூற் றாண்டு. இவன் கண்ணகி வழிபாட்டை இலங்கைக்குக் கொண்டு சென்றானென்று இராசாவளி என்னும் சிங்கள நூல் கூறுகின்றது. இலங்கையின் பழமையே கண்ணகி வழிபாடு இருந்ததற்குப் பல சான்றுகள் உண்டு. சிங்களவர் பத்தினிக் கடவுளைப் “பத்தினி தேவோ” என்று அழைத்தார்கள். அவர்கள் வைத்து வழிபட்ட பத்தினிச் சிலம்புகள் பல, கொழும்பு நூதன பொருட் காட்சி சாலையில் வைக்கப்பட்டுள்ளன. சிங்கள மொழியில் பத்தினிக்கட வுளைப் பற்றிய நூல்கள் எழுதப்பட்டுள்ளன. சிலப்பதிகாரம், பத்தினிக்குத் கல் நடும்போது இலங்கைக் கயவாகு வந்திருந்தான் என்று கூறுகின்றது. சிலப்பதிகாரத்தில் திருக்குறளடிகள் எடுத்து ஆளப்பட்டன. இளங்கோவடிகள் திருக்குறள் ஆசிரியரைப் பொய்யில் புலவன் எனக் குறிப்பிடுகின்றார். இதனால் திருவள் ளுவர் சிலப்பதிகார காலத்துக்கு முந்தியவரெனத் தெரிகின்றது. ஆகவே திருக்குறள் உக்கிரப் பெருவழுதி காலத்தில் செய்யப்பட்ட தென்றும் வரலாறு கொள்ளத்தக்கதாகின்றது. வினா: பி.தி. சீனிவாச ஐயங்கார் திருக்குறள் ஆறாம் நூற்றாண்டில் செய்யப்பட்டதெனக் கூறியதற்குக் காரணம் யாது? விடை: திருக்குறளில் வடசொற்களும் ஆரியக் கருத்துக்களும் வந்துள்ள மையால், அது கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட நூல் அன்று என ஐயங்கார் கூறியுள்ளார். இவர் கருத்தினை ஆராய்ச்சி யாளர் எவரேனும் ஏற்றுக்கொள்ளவில்லை. திரு. வி.ஆர். இராமச் சந்திர தீட்சிதர், அவர்களே தமது “தமிழ் இலக்கிய வரலாற்று ஆராய்ச்சி”1 என்னும் நூலில், திருவள்ளுவர் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டவர் எனக் கூறியுள்ளார். பி.தி. சீனிவாச ஐயங்கார் பிழை பட்டவிடங்கள் பல உண்டு. ஆரியர் இந்திய மக்களே; அவர்கள் பிறநாட்டினின்றும் வந்தவர்க ளல்லர்; சமயக் கொள்கை பற்றி அவர்கள் ஆரியர் எனப்பட்டனர் என ஒரு புதுக் கருத்தையும் அவர் வெளியிட்டார். அக்கருத்தை வரலாற்றுவல்லார் எவரேனும் இதுவரையில் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனை ஒத்ததே அவர் திருக்குறளைப் பற்றிக் கொண்ட கருத்துமாகும். வினா: மொழியைக் கொண்டு நூலின் வயதை அறியலாமென்கிறார்கள்; அது எப்படி? விடை: அது உண்மையே. பல சான்றுகளுள் மொழிச் சான்றும் ஒன்று. இன்று ஆனந்தவிகடனில் எழுதப்படும் நடையையும் ஆசிரியர் மறைமலை அடிகள் எழுதும் நடையையும் ஒப்புநோக்கி, இரு எழுத்துக்களும் வெவ்வேறு நூற்றாண்டில் எழுதப்பட்டன எனக் கூறலாமா? இன்று பிராமணர் எழுதும் தமிழ் நடைக்கும், பிராமணரல்லாதார் எழுதும் நடைக்கும் அதிக வேறுபாட்டைக் காணலாம். இவ்வாறே முற்காலத்தும் இருந்தது. வினா: திருக்குறள் முப்பாலாகச் செய்யப்பட்டதன் காரணம் வடமொழி வழக்குப்பற்றி எனச் சிலர் கூறுகின்றனர். அது உண்மையாகுமா? விடை: முப்பாலாக நூல் செய்தலே தமிழர் மரபு என்பது, “அந்நிலை மருங்கின் அறமுதல் ஆகிய-மும்முதற் பொருட்கும் உரிய என்ப” (தொல். செய்யுள் 106) என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தால் நன்கு விளங்கும். திருக்குறள் வடமொழி மதம் பற்றிச் செய்யப்பட்ட தென்பது அரியாதார் கூற்றென்க. வடமொழி மதம் பற்றிச் செய் திருப்பின், வள்ளுவர் குறளை அறம், பொருள், இன்பம், வீடு என நாற்பாலாகச் செய்திருப்பார். வினா: பரிமேலழகர் திருக்குறள் வடமொழி, மதம்பற்றிச் செய்யப்பட் டிருக்கின்றதெனக் கூறியிருக்கின்றார். அது எப்படி? விடை: பரிமேலழகர் காலத்தில் வடமொழி நூல்களைப் பின்பற்றியே தமிழ் நூல்கள் எல்லாம் செய்யப்பட்டன என்னும் தவறான கருத்துப் பரவியிருந்தது. அவர் பார்ப்பனர் ஆதலின் இந்நம் பிக்கை இன்னும் அதிகமாக இருந்தது. ஆகவே பரிமேலழகர் அவ்வாறு தான் கூறமுடியும். அவர் கூறிய அக்கருத்தினை ஏற்றுக்கொள்வார் இன்று எவருமில்லை. வினா: திருவள்ளுவர் தனது நூலுக்கு ஆதாரங்களை மனு நூல், அர்த்த சாத்திரம், சாணக்கியம், காமந்தம், வாத்ஸ்யாயனம், பகவத்கீதை முதலிய நூல்களிலிருந்து எடுத்தார் எனச் சிலர் கூறுகின்றனர். அது உண்மையா? விடை: உண்மைகள் எல்லாருக்கும் பொது. மேல் நாட்டுப் புலவர்களின் கருத்துக்கள் பல கீழ்நாட்டுப் புலவர்களின் கருத்துக்களோடு ஒத்திருக்கின்றன. இதனால் இரு நாட்டுப் புலவர்களும் ஒருவர் பாடலை ஒருவர் பார்த்துப் பாடினார்கள் எனக் கூறமுடியுமா? பகவத் கீதை, சாணக்கியர் நூல்கள் தமிழ்நாட்டுக் கருத்தை விளக்க வடமொழியிற் செய்யப்பட்ட நூல்கள். இக்கருத்துக்கள் திருவள்ளுவருக்குத் தமிழ்நாட்டிலேயே கிடைத்தவை. மனு நூல், திருக்குறளோடு மாறுபட்டது. மனு நூல் ஊனுண்ணுதல், ஒரு குலத்துக்கு ஒரு நீதி விதித்தல் போன்ற கோணல்கள் உடையது. திருக்குறள் ஊனுண்ணுதலைக் கண்டிப்பது. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பது “வள்ளுவர் செய் திருக்குறளை வழுவற நன்குணர்ந் தோர். உள்ளுவரோ மனுவாதி ஒரு குலத்துக்கொரு நீதி” என, இவ் விரு நூல்களின் மாறுபாட்டை மனோன்மணிய ஆசிரியர் நன்கு எடுத்து விளக்கியுள்ளார். வினா: சிலப்பதிகாரம் கி.பி. 6ஆம் நூற்றாண்டிலும் மணிமேகலை கி.பி. ஏழாம் நூற்றாண்டிலும் செய்யப்பட்டன என்று பி.தி. சீனிவாச ஐயங்கார் “தமிழரின் வரலாறு” என்னும் நூலில் கூறியுள்ளார், அவர் கருத்து நேராயிருக்குமா? விடை: அவர் கூறுவதற்குத் தக்க காரணமே கிடையாது. மணிமேகலையில் வடமொழிப் பெயர்கள் காணப்படுவதால், அது பிந்திய நூல் எனக் கூறமுடியாது. ஐரோப்பியர் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் வந்த காலம் முதல் இந்தியாவிலும் இலங்கையிலும் மக்கட் பெயர்கள் இடப்பெயர்கள் பல மேல்நாட்டுப் பெயர்களாகவுள்ளன. மக்கள் சமயம் மாறும்போதே அவர்கள் சமய மொழியும் அம்மொழிப் பெயர்களும் அவர்களிடையே வழங்கத் தொடங்கிவிடும். புத்த மதம் அசோகன் காலம் முதல் தென்னாட்டிலும் இலங்கையிலும் பரவத் தொடங்கிற்று. பி.தி. சீனிவாச ஐயங்கார் ஆரிய மதம் (Aryan Cult) எனக் கொண்ட கருத்தே தவறுடைத்து, “நெருப்பு மதம்” (Fire Cult) நெருப்பில்லாத மதம் (Fireless Cult) என்பவை போன்ற கருத்துக்களை யாரும் ஏற்றுக்கொள்வதில்லை. சிலப்பதிகார காலம், மணிமேகலை காலங்களைக் கீழே இழுக்கப் பார்ப்பது தலைச் சுழற்சினாலேயேயன்றி நேர்மையான காரணங்களாலன்று என அறிக. அக்காலத்திலேயே சைவ புத்த மதங்கள் தென் னாட்டுக்கு வந்துவிட்டன. வினா: சிலப்பதிகாரத்தின் பிற்பகுதி பிற்காலத்தில் எழுதிச் சேர்க்கப்பட்ட தென ஒரு சிலர் கூறுகின்றனர்; அது உண்மையாகுமா? விடை: அது ஒருபோதும் உண்மையாகமாட்டாது. தமிழ் அரசர்கள் கங்கைக்கரை வரையில் சென்று போர் செய்யமாட்டார்கள் என்று அவர்கள் நினைப்பதே அவர்கள் அவ்வாறு கூறவதற்குக் காரண மாகும். செங்குட்டுவன் வடநாடு சென்று போர் புரிந்த வரலாறு, மிக ஏற்றதென்பதை K.G. சேஷ ஐயரவர்கள் நன்கு விளக்கியுள்ளார். அதனை எமது தமிழ் ஆராய்ச்சி என்னும் நூலில் சிலப்பதிகார காலம் என்னும் தலைப்பின் கீழ் காண்க. வினா: ஆரியர் எனப்பட்ட பிராமணர் ‘மெய்யர்’ எனக் கூறப்பட் டார்கள் என்றும், அதனால் தமிழர் பொய்யையே பெரிதும் பேசுபவர்களா யிருந்தார்கள் என்றும் சிலர் கூறுகின்றனர். 1அது உண்மையாகுமா? விடை: தமிழர் ஆரியரை மிலேச்சர் (Barbarians) என்றே அழைத்து வந் தார்கள். இதனை நாம் திவாகரம், பிங்கலந்தை, சூடாமணி நிகண்டு களிற் காணலாம். முற்காலத்தில் இந்தியக் கிறித்தவர்கள் தம்மை ஞானிகள் என்றும், மற்றவர்களை அஞ்ஞானிகள் என்றும் கூறி னார்கள். இவ்வாறே பிராமணர் தம்மை மெய்யர் என்றும், மற்றவர் களை பொய்யர் என்றும் இழித்து உரைத்து வந்தார்கள் என்பதற்கு இது ஏற்ற உதாரணமாகும். வினா: பாண்டியர் பாண்டுவினின்றும் தோன்றியவர்கள் எனச் சிலர் கூறுகின்றனர். பாண்டியர் பாண்டுவிலிருந்து வந்தார்களா? விடை: பாண்டுவுக்கு முன்னரே பாண்டியர் உளர். ஆகவே பாண்டுவிலி ருந்து பாண்டியர் தோன்றினார்கள் என்பது நகைப்புக்கிடமானது. சேர, சோழ, பாண்டிய இராச்சியங்களில் பாண்டிய இராச்சியம் பழமையுடையது. ஆகவே பழைய தமிழ்நாட்டு அரசர் பாண்டியர் எனப்பட்டனர். பாண்டியர் என்பதின் அடி, பண்டு. வினா: ஆரியச்சார்பில்லாத தமிழ் நூல்கள் இல்லை என “2ஒரு சாரார் கூறுகின்றனர்? அது உண்மையா? விடை: சங்க நூல்கள் ஆரியச்சார்புடையனவென்று கூற முடியாது. சங்க நூல்களில் காணப்படும் கருத்துக்கள் தமிழ்நாட்டுக் குரியனவே. அந்நூல்களில் காணப்படும் வடசொற்கள் நூற்றுக்கு ஒன்று அல்லது இரண்டு என்று பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அவர் களால் கணக்கிடப்பட்டுள்ளது. 3அவர் வடசொற்கள் என்று கருதியவை பல தமிழ்சொற்கள் எனத் தெரிகின்றன. வினா: தமிழரிடையே ஒழுக்கக்கேடு அதிகம் இருந்தமையினாலேயே, தமிழில் நீதி நூல்கள் பல எழுதப்பட்டன என்று சிலர் கூறு கின்றனர். 4அதில் உண்மை இருக்கிறதா? விடை: ஆரிய மொழியில் “ஸ்மிருதிகள்” எனப்படும் நீதி நூல்கள் காணப் படுவதினால், ஆரியர் நீதிகெட்டவர்களாயிருந்தார்கள் என்று பொருள்படுமா? ஆரியருக்குச் சாணக்கியர், போதாயனர், அபத் தம்பர் முதலிய திராவிடர் நீதி நூல் செய்து அளித்தமையால், திராவிடரே நீதியைப் பற்றி யறியாதிருந்த ஆரியருக்கு நீதியைக் கற்பித்தார்கள் என்று கூறினால் ஆரியர் ஏற்றுக்கொள்வார்களா? தமிழ் அறிஞர், தமிழ்நாட்டில் ஒழுக்கங்கள் எனக்கொள்ளப் பட்ட கருத்துக்களைத் திரட்டி மாணவர் இளமையிற் பயிலும் முறையில் நீதி நூல்களாகச் செய்தனர். தமிழில் நீதி நூல்கள் இருப்பதால் தமிழர் நீதியறியாதிருந்தார்கள் எனக் கூறுதல் மதியில் கூற்றேயாகும். வினா: சைவசித்தாந்தக் கருத்துக்கள் தமிழருடையனவல்ல என ஒருசாரார் வாதிக்கின்றனர்1 அதின் உண்மை எவ்வாறு? விடை: சைவ சித்தாந்தக் கருத்துக்கள் தமிழருடையனவென டாக்டர் போப் போன்ற மேல்நாட்டறிஞர் நன்கு ஆராய்ந்து நாட்டி யுள்ளார்கள். இருக்குவேத கால ஆரியர் மறுபிறப்பைப் பற்றி அறியார்கள் என்றும், சைவசித்தாந்த ஞானத்தைக் கூறும் உப நிடதங்கள் ஆரியருடையனவல்ல என்றும் விண்டர்நிட்ஸ் (Winternitz) போன்ற அறிஞர் நன்கு ஆராயந்து கூறியுள்ளார்கள். வினா: ஆரியர் வருகைக்குமுன் சோதிடம், இசை, வான ஆராய்ச்சி போன்றவை தமிழரால் நன்கு வளர்க்கப்பட்டன வென்று கனக சபைப் பிள்ளை அவர்கள், 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் என்னும் நூலிற் கூறியது தவறு என ஒருவர் கூறுகின்றார்1. அவர் கூறுவதில் உண்மை உண்டா? விடை: இது சந்திரசூரியரின் உண்மையைப் பிறவிக்குருடன் மறுத்தது போலாகும். அரப்பா மொகஞ்சதரோப் புதை பொருளாராய்ச் சிக்கு பின், ஆரியர் வருவதற்கு 2000 ஆண்டுகளின் முன்னரேயே தமிழர் வான ஆராய்ச்சி, இசை, மொழி, எழுத்துப்போன்றவை களை நன்கு அறிந்திருந்தமை வெளியாகின்றது. வினா: தமிழர் வரலாறு எழுதுவோர், தமிழரின் உயர்புக்கு மாறான கருத்துக்களை ஏன் எழுதி வருகின்றார்கள்? விடை: பிராமணரல்லாதார் எழுதும் தமிழர் வரலாறுகளில் இவ்வாறு தமிழரை இழிவுபடுத்தும் கருத்துக்கள் காணப்படுவதில்லை. பிராமணர் என்னும் வகுப்பினர் எழுதும் நூல்களிலேயே இவ் வகைக் கருத்துக்கள் காணப்படுகின்றன. அவர்கள் தாம் தமிழ ரல்லர் என்றும், தமது கூட்டத்தினரே தமிழரை நாகரிகப்படுத்தினா ரென்றும் நம்புகின் றார்கள். தமிழரால் அவர் உயர் வெய்தினர் என்று எவரேனும் கூறினால், அதனை அவர்கள் பொறுக்கமாட் டார்கள். சமயம், சாதி, மொழி என்னும் மூன்று கருத்துக்கள் வரும்போது அவர்களின் புத்தி அவர்களை அறியாமலே மாறு பட்டு விடுகின்றது. பழக்கிவளர்க்கப்படும் புலி இரத்தத்தைக் கண்டால் மூர்க்கங்கொண்டுவிடும். பின்பு அதனை அடக்க முடியாது. அதுபோலவே பிராமண சரித்திர ஆசிரியர்கள் இயல்புமாகும். ஆகவே உண்மையான வரலாறுகளைப் படிக்க வேண்டுமானால் நாம் மேல்நாட்டாசிரியர்கள் எழுதியவை களைப் பயிலவேண்டும். வினா: நடுவுநிலைமையோடு தமிழரைப் பற்றிய வரலாறு எழுதிய பிராமண வகுப்பினர் ஒருவரேனும் இல்லையா? விடை: எல்லாவற்றுக்கும் புறநடை உண்டு. தமிழ் மொழி வரலாறு எழுதிய சூரிய நாராயண சாத்திரியார் தனது பெயரையே பரிதிமாற் கலைஞன் என மாற்றிக்கொண்டார். அவர் நடுவு நிலைமையோடு அவர் காலத்தில் தமிழரைப் பற்றி அறியப்பட்டிருந்த கருத்துக் களை நன்கு எழுதியுள்ளார். திராவிட இந்தியா என்னும் நூலை ஆங்கிலத்தில் எழுதிய சேஷ ஐயங்காரவர்களும் நடுவு நிலை மையைப் பயன்படுத்தியுள்ளார். ஏனையவர்கள் நூல்களில் இவர்களை ஒத்த நேரான கருத்துக்களைப் பெரிதுங் காண்டலரிது. வினா: ஐயர் என்னும் சொல் ஆரியர் என்பதன் திரிபா? விடை: ஐயன் என்பது கடவுளுக்குப் பெயராகத் தமிழரால் வழங்கப்பட் டது. ஆகவே கடவுட் பூசை, செய்வோர் ஐயர் எனப்பட்டனர். தொல்காப்பியத்தில் “ஐயர் யாத்தனர் கரணம்” என்பதிலுள்ள ஐயர் கோயிற் பூசகராகிய பார்ப்பனரைக் குறிக்கும். வினா: இந்தி, பொது மொழியாயிருப்பதினும் பார்க்க ஆங்கிலம் பொது மொழியாதல் நன்று எனச்சிலர் கூறுகின்றனர். அது ஏன்? விடை: இந்தியில் அறிவு நூல்களும் சிறந்த இலக்கியங்களுமில்லை. ஆங்கில மொழியில் உலக இலக்கியங்களும் அறிவு நூல்களும் உள்ளன. ஆங்கில மொழியைக் கற்பதால் அம்மொழியிலுள்ள அறிவு நூல்களைப் பயின்று அறிவைப் பெருக்கலாம். இந்தியைக் கற்பதால் இவ்வாய்ப்பு உண்டாகமாட்டாது. ¯¯¯ 1 2 15 14 3 1. தென்னிந்தியாவில் ஆரியர் திராவிட மொழிக்குப் பதில் தமது மொழியை நாட்டமுடியாதிருந்தது மிகவும் வியக்கத் தக்கதே; ஆனால் வட இந்தியாவில் அவர்களின் முயற்சி முழுவதும் பலித்தது. ஆரியர் வருகைக்கு முன் வட இந்தியா முழுமையிலும் திராவிடமொழி வழங்கிற்று என்பதில் சிறிதும் ஐயப்பாடு வேண்டியதில்லை - இந்தியப் பழஞ் சரித்திர விரிவுரைகள் - பந்தார்க்கர் (Lectures on the ancient history of India - M.D. Bhandarkar M.A.) இருக்கு வேதமொழி திராவிடச் சொற்களை இரவல் பெற்றது ஏன்? அம்மொழியின் உச்சரிப்பு முறைகள் மாறுபட்டது ஏன்? என்னும் ஆராய்ச்சிகளும் வடக்கே திராவிடம் இருந்ததென்பதை விளக்கும் - பழைய இந்திய நாகரிகத்தின் சில தன்மைகள் டி.ஆர்.பந்தார்க்கர் - Short Studies in the Science of Comparative religions. P 247 J.G.R. Eorlong. “கன்னடமும் களி தெலுங்கும் கவின் மலையாள முந்துளுவும் உன் உதரத் துதித்தெழுந்தே ஒன்று பல வாயிடினும்” (மனோன்மணியம்) 1. இந்தி, வங்காளி, பஞ்சாபி, இரஜபுத்தானி முதலிய மொழிகள் ஆரியத்தைச் சேர்ந்தன வல்ல - Short Studies in the Science of Comparative religions. P 247 J.G.R. Eorlong. 2. பெரிய திராவிட வெள்ளத்துள் சிறிய ஆரியத்துளி கலப்பதனால் உடனே பெரியமாறுதல் உண்டாகிவிட மாட்டாது. அவர்கள், திராவிடரின் தலைவர்கள், வீரர்கள் கடவுளர்கள், வரலாறுகளைத் தம்முடையவைகளாகக் கொண்டிருந்தமை கொண்டு நாம் மயங்கிவிடுதல் கூடாது. மறு நாடுகளில் குடியேறுபவர்கள் அல்லது வெற்றியாளராக வந்தவர்கள் இவ்வாறே செய்திருக்கின்றார்கள். பாபிலோனியா, அக்கேடியா, அசீரியா முதலிய நாட்டின் வரலாறுகளை நோக்கி இதன் உண்மையைக் காணுங்கள் - மேற்படி 1. இருக்குவேதத்திலுள்ள பழைய பாடல்கள், சிதைந்த பொருள் விளங்காத சொற்களையும், சொற்றொடர்களையும் உடையனவாகக் காணப்படுகுகின்றன. சில சமயங்களில் அவை சமக்கிருதத்தினும் பார்க்கக் கிரேக்க மொழிக்கு அண்மையிலுள்ளனவாகக் காணப்படுகின்றன என்று மாக்°மூலர் கூறியிருக்கின்றார். இதனால் முதன்முதல் இந்திய நாட்டுக்கு வந்த ஆரியமொழி, ஆரம்பத்தில் விளங்கக்கூடிய முடிறயில் இணைத்து வழங்கப்படவில்லையெனத் தெரிகிறது. பல நூற்றாண்டுகளுக்குப்பின், நாகரிகம் அடைந்திருந்த திராவிட பண்டிதர்கள், அவர்கள் மொழியைத் தேவநாகரியில் எழுதியதோடு கல்வியறிவில்லாத புதிய அம் மக்களுக்குச் சமயம், பழங்கதை முதலியவைகளையும் படிப்பித்தனர் - ³ 2. ஒரு மொழி தனது போக்கை மாற்றாமல் பல சொற்களைத் தன்னகத்தே சேர்த்துக் கொள்ளுதல் கூடும்; ஆனால் அது தனது இலக்கணத்தை மாற்றிக் கொள்ள முடியது. அதன் சொல் வைப்பு முறைகளும் மாறுபடாது. இலக்கணம், மொழிக்குரியவர்கள் தம் எண்ணங்களை முறைப்படுத்தி வெளியிடப் பயன்படுத்திய ஒழுங்கு ஆகும். இதனை ஒரு தனிப்பட்டவர் அல்லது ஒரு சாதியார் மாற்றிவிட முடியாது. On the classification of languages Gustave Oppert-p.17 1. திராவிடர் அயல் நாடுகளோடு வாணிகஞ் செய்தார்கள். அவர்கள் தேக்கு, மயில், வாசனைப்பண்டங்கள், முத்து, ஆடை முதலியவைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பினார்கள். இவ்வகைத் தொழில்களோடு சம்பந்தப்பட்ட சொற்கள் திராவிடமாயிருத்தல் வேண்டும்; இரவல் பெற்றனவாயிருக்கமுடியாது. இவ்வாராய்ச்சி இன்னும் நன்றாகச் செய்யப்படவில்லை. ஆராய்ச்சியில் சமக்கிருதம் என்று கொள்ளப்படும் பல சொற்கள் திராவிடமாக மாறலாம். Life in ancient - India. p.15. P.T.S.Iyengar M.A. 2. வேதமொழி, அதன் சொல் வைப்பு முதலிய பிறவும் திராவிடமொழிச் சார்படைந்தன-மேற்படி. Vedic language bears marks on it of a pretty long growth since it parted from its allied forms. The vowel system of the vedic language is much simpler and its consonant system more developed than those of the parent Indo-germanic or of its European branches. A large portion of the vocabulary of vedic language is not found in the allied languages and must have been picked up in India; and even in matter of syntax and sentence structure it underwent special development in Indian soil... Munda does not seem to have affected the growth of the vedic language so much as the Dravidian-Ibid. PP 4, 6. 1. History of India and Indoneian art - p.6 2. Professor Rapson’s ancient India - p.29 3. Dr. Sumiti Kumar chatterji in வந சுயஅய அரசவாi ஞயவேரடர பயசர அநஅடிசயைட எடிடரஅந யீ.72 4. Indian Historical Quarterrly vol. 1-p. 178 5. Dravidian India p.117 6. I have seen a paper in manuscript on this subject by the late Chattampi swami, whose encyclopaedic knowledge was the wonder and despair of the erudite contemporaries. Samskritam means he says, that which is refined from what he asks? and he seeks to prove in a variety of ways that the basis of Sanskrit is Tamil or to be more accurate to Tamil. The Editor - Bulletin of the Sri Ramavarma research institute - No.3 - p.17. 1. Research in Dravidian Languages - S. Vaiyapuri Pillai. * The Cock and Peacock are birds native to South Eastern Asia and it could be reasonably expected that words for these would be borrowed in Indo-Aryan along with other words which are names for Indian flora and fauna - Non-Aryan Elements in Indo-Aryan. The Journal of Greater India Society Vol.3 - S.K.Chatterji. 1. Hindu Civilization - P.37. - Rada Kumud Mookerji 1. Hindu Civilization - Rada Kumud Mookerji. M.A., PhD., 1. The Riddle of Mohenjo-Daro G.R.Hunter New Review No.3 2. It is regarded as certain that Dravidian speakers were at one time spread over the whole of northern India, as wellfrom Baluchistan to Bengal. The origin and development of the Bengali-language - p 28. - S.K. Chatterji. 1 As in the History of Chandra Gupta tutor and prime minister - Chanakya the Damila - who is described in the Mahavamsa a Malabari. His name appears in the two inscriptions of the 4th Century B.C. in the Kancheri caves to which he retired in old age-Short Studies in the science of comparative religions. P.10. 2. சிலப்பதிகாரம் கி.பி.இரண்டாம் நூற்றாண்டுக்குப் பிந்திய நூலாக இருக்க முடியாது. அந் நூல் திருக்குறள் அடிகளை எடுத்துக்கூறியுள்ளது. ஒரு நூல் ஒரு நூலாசிரியரால் எடுத்து ஆளப்பட வேண்டுமாயின், அது அவர் நூல் செய்வதற்குச் சிலகாலத்தின் முன் தொட்டுப் புகழ்பெற்று விளங்கவேண்டும். ஆகவே திருக்குறள், சிலப்பதிகாரத்துக்கு மிக முற்பட்ட நூல் எனத் தடையின்றித் தோன்றும் - Studies in Tamil Literature and History - V.R. Ramachandra Dikshitar 4 13 12 5 6 11 10 7 8 9 32 17 18 31 30 19 20 29 28 21 22 27 26 23 24 25 48 33 34 47 46 35 36 45 44 37 38 1. புணர்முலை - இரண்டு தனங்களோடு எனப் பாடங்கொள்வாருமுண்டு. 43 42 39 40 41 64 49 50 63 62 51 52 61 60 53 54 59 58 55 56 57 80 65 66 79 78 67 68 77 76 69 70 75 74 71 72 73 96 81 82 95 94 83 84 93 92 1 From the Indus valley, one section of people who afterwards came to be designated as the Dravidians marched to wards the west both by sea as wel as by land, settled down in the province of Sumar in lower Babylonia under the name of the Sumerians and spread their Sumero-Dravidian civilization as far as the holy land of Palastine and Jerusalem and then to Europe and Africa-Quarterly Journal of the Mythic Society-January, 1929. 1. The dravidian people can be traced in a long unbroken line from Crete and Lycia to the Indus valley and the south of India at least culturally. It would not be strange at all to find that the calcolithic civilization of these people extended as far as the Easter Islands and perhaps to Peru and Mexico... From time to time claims are put forward by sensation mongers of American scholars to connect the ancient Mayan civilization with that of Inida-History of Orissa-p.p. 97, 108-R.D. Banerji. 1. Dravidian Pandits composed some upanishads and Brahmanas, and why not Vedas... Mr. Thomas a good numismalist, learned and cautions writer, here agrees with Sir Walter Elliot, a Dravidian scholar that the Vedas were not Co-ordinaled by any Aryan Rishi-Short studies of comparative religions p.p.251,253 1. திராவிட மொழிகளின் ஆராய்ச்சி - பக். 27 1. Ela is also found written in Sanskrit Eda. It is well known the Tamil peculiar sound ‘ழ’ changes into ட or ன or ச in Aryan tongues. உக ‘பழம்’ ‘fruit’ யீயடயஅ (sans); ‘பீழை’ ‘misery’ யீனைய (sans); ‘இழு’ ‘draw’ ereu-o (lat) etc, - Tamilian antiquary. Panavas and the Tamil Kings-Pandit D. Savariroyan (Second edition 1913) 2. It is regarded as certain that Dravidian speakers were at one time spread over the whole of northern India as well from Baluchistan to Bengal-Origin and development of Bengali-p. 28. S.K. Chaterji. 1. Thiruvalluvar cannot be assigned to any century earlier than the VI-History of the Tamils-p. 588-P.T.S. Aiyengar. 1. Studies in Tamil Literature and History. 1. The fact that Brahmins were called truth speakers proves tha lying was common among the Tamil speaking tribes-Tamil Studies-p. 194. 2. Tamil studies - P. 195. M.S. Iyengar, 3. Ibid - P. 174. 4. Ibid - P. 193. 1. Ibid - P. 192 85 86 91 90 87 88 89 108 அறிஞர் ந.சி. கந்தையா எழுதிய நூல்கள் நூல் பெயர் ஆண்டு 1. பத்துப்பாட்டு 1949 2. பதிற்றுப்பத்து 1937 3. கலித்தொகை 1941 4. பரிபாடல் 1938 5. அகநானூறு 1938 6. புறப்பொருள் விளக்கம் 1936 7. கலிங்கத்துப்பரணி 1938 8. விறலிவிடுதூது 1940 9. பெண்கள் உலகம் --- 10. பெண்கள் சமூகம் அன்றும் இன்றும் 1948 11. பெண்கள் புரட்சி 1946 12. பொது அறிவு 1957 13. பொது அறிவு வினா விடை 1961 14. உலக அறிவியல் நூல் --- 15. உங்களுக்குத் தெரியுமா? 1954 16. அறிவுக் கட்டுரைகள் 1950 17. நூலகங்கள் 1948 18. அறிவுரை மாலை 1950 19. அறிவுரைக் கோவை 1950 20. தமிழர் சமயம் எது? 1947 21. சைவ சமய வரலாறு 1958 22. சிவன் 1947 23. இந்து சமய வரலாறு 1954 24. தமிழர் பண்பாடு 1966 25. நமது தாய்மொழி 1948 26. நமது மொழி 1946 27 நமது நாடு 1945 28. திராவிட மொழிகளும் இந்தியும் 1948 29. தமிழ்ப் பழமையும் புதுமையும் 1946 30. முச்சங்கம் 1947 31. தமிழ்க் கடவுளுக்கு ஆரியப் பாடலா? 1947 32. ஆரியர் தமிழர் கலப்பு 1946 33. ஆரியத்தால் விளைந்த கேடு 1948 34. புரோகிதர் ஆட்சி 1949 35. இராமாயணம் நடந்த கதையா? 1947 36. ஆரியர் வேதங்கள் 1947 37. திராவிடம் என்றால் என்ன? 1948 38. திராவிட இந்தியா 1949 39. திராவிட நாகரிகம் 1947 40. மறைந்த நாகரிகம் 1948 41. ஆதி மனிதன் 1948 42. ஆதி உயிர்கள் 1949 43. மனிதன் எப்படித் தோன்றினான்? 1947 44. மரணத்தின் பின் 1950 45. பாம்பு வணக்கம் 1947 46. தமிழர் யார்? 1946 47. உலக நாகரிகத்தில் தமிழர் பங்கு 1948 48. சிந்துவெளித் தமிழர் 1947 49. தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் 1958 50. தமிழர் சரித்திரம் 1940 51. வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர் 1943 52. திருவள்ளுவர் 1948 53. திருக்குறள் 1949 54. தமிழகம் 1934 55. தமிழ் இந்தியா 1945 56. திருக்குறள் அகராதி 1961 57. தமிழ்ப் புலவர் அகராதி 1953 58. தமிழ் இலக்கிய அகராதி 1953 59. காலக் குறிப்பு அகராதி 1960 60. செந்தமிழ் அகராதி 1950 61. கலிவர் யாத்திரை 1959 62. இராபின்சன் குரூசோ 1949 63. அகத்தியர் 1948 64. தமிழ் ஆராய்ச்சி 1947 65. தமிழ் விளக்கம் --- 66. நீதிநெறி விளக்கம் 1949 97 98 107 106 99 100 105 104 101 102 103 xvi தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967) தமிழ்மொழியின் தொன்மையை அதன் தனித் தன்மையை உலக மொழிகளோடு ஒப்பிட்டு விரிவாக ஆய்வு செய்தவர் தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள். தமிழ் இனத்தின் மேன்மையை வரலாற்று நோக்கில் ஆய்வு செய்தவரும் அவரே. ‘தொண்டு செய்வாய்! தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே’ என்பார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். புரட்சிக் கவிஞரின் கனவை நினைவாக்கும் வகையில், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தமிழின் துறைதோறும் துறைதோறும் அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். தமது நூல்களின் வாயிலாக வீழ்ச்சியுற்ற தமிழினத்தை எழுச்சி பெறச் செய்தவர். ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப் பணியோ மலையினும் மாணப் பெரியது. ஆயினும் அவருடைய வாழ்க்கைப் பதிவுகளாக நமக்குக் கிடைப்பன தினையளவே யாகும். தமிழர்கள் அந்த மாமனிதரின் தமிழ்ப் பணியைக் கூர்ந்து அறிந்து தக்க வகையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யத் தவறி விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. இன்று அவருடைய வாழ்ககைக் குறிப்புகளாக நமக்குக் கிடைப்பன மிகச் சிலவாகும். அவை:- தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் ஈழ நாட்டில் கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டில் திரு நன்னியர் சின்னத்தம்பி என்பாரின் புதல்வராய்ப் பிறந்தார். தக்க ஆசிரியரிடம் பயின்று கல்வியில் தேர்ந்தார். பின்னர் கந்தரோடை என்னும் ஊரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். ஆசிரியர் பணியிலிருக்கும் போதே தக்க பெரும் புலவர்களைத் தேடிச் சென்று தமிழ் இலக்கிய இலக்கணங்கள் முறையாகப் பயின்று பெரும் புலவராய் விளங்கினார். ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்ற வல்லுநராய்த் திகழ்ந்தார். பின்னர் மலேசியா நாட்டிற்குச் சென்று சிறிதுகாலம் புகைவண்டி அலுவலகத்தில் பணியாற்றினார். ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் தமிழறிவு ஆழமும் அகலமும் கொண்டது. அவரது வாழ்க்கை முழுமையும் தமிழ் ஆய்வுப் பணியே பெரும் பணியாக அமைந்தது. அவர் பெற்ற ஆங்கில அறிவின் துணையால் தமிழ் மொழி, தமிழினம் தொடர்பான மேலை நாட்டு அறிஞர்களின் நூல்களை யெல்லாம் நுணுகிக் கற்றார் வியக்கத்தக்க கல்விக் கடலாய் விளங்கினார். அறுபதுக்கு மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதினார். தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தாம் எழுதிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்று வேட்கை கொண்டார். இலங்கையில் அதற்குப் போதிய வசதி இல்லை. ஆதலால் தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்தார். சென்னையில் “ஒற்றுமை நிலையம்” என்னும் பதிப்பகத்தின் உரிமையாளராய்த் திகழ்ந்தவர் வீரபாகு பிள்ளை என்பவர். அவர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். பின்னர் முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகியவற்றின் வாயிலாக ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் நூல்கள் வெளிவரலாயின. ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் அருமைத் துணைவியார் இரத்தினம்மா எனப்படுபவர். இவருக்குத் திருநாவுக்கரசு என்றொரு மகனும் மங்கையர்க்கரசி என்றொரு மகளாரும் உண்டு. துணைவியார் பல ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். தமிழ்மொழி, தமிழினம் ஆகியவற்றின் மேன்மைக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை தமது எழுபத்து நான்காம் வயதில் 1967இல் இலங்கையில் மறைந்தார். எனினும் தமிழ் வாழும் வரை அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும். தமிழறிஞர் கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணி மதிப்பு மிக்கது; காலத்தை வென்று நிலைத்துநிற்க வல்லது. தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ்ப்பண்பாடு, தமிழ்இனம் ஆகியவற்றின் வரலாற்றை எழுதியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. அவருடைய ஆய்வுப் பணியைச் சிறிது நோக்குவோம். அகராதிப் பணி தமிழ் மொழியில் முதன் முதலில் தோன்றிய அகராதி வீரமா முனிவர் எழுதிய சதுரகராதியே யாகும். பின்னர் பல்வேறு அகராதிகள் தோன்றின, வளர்ந்தன, வெளிவந்தன. அகராதி வளர்ச்சிப் பணியில் கந்தையா பிள்ளையவர்களுக்கும் பெரும் பங்குண்டு. அவர் படைத்த அகராதிகள் ஐந்து. 1. செந்தமிழ் அகராதி, 2. தமிழ் இலக்கிய அகராதி, 3. தமிழ்ப் புலவர் அகராதி, 4. திருக்குறள் அகராதி, 5. காலக் குறிப்பு அகராதி என்பன அவை. ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் செந்தமிழ் அகராதி முன்னுரை யில் “நாம் தமிழ்த் தாய் மொழிக்குச் செய்யும் பணிகளுள் ஒன்றாக இந் நூலைச் செய்து முடித்தோம்” என்கிறார். “நூலொன்றைச் செய்து தமிழுலகுக்கு உதவ வேண்டும் என்னும் ஆவலால் பலவகையில் முயன்று இந் நூலைச் செய்து முடித்தோம்” என்று கூறுகிறார். தமிழ் இலக்கிய அகராதியில் அகத்தியர் முதல் வைராக்கிய தீபம் ஈறாக ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. தமிழ்ப் புலவர் அகராதியில் பல நூற்றுக்கணக்கான தமிழ்ப்புலவர்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. அவர் தொகுத்த திருக்குறள் சொற் பொருள் அகராதி பயன்பாடு மிக்கது. காலக்குறிப்பு அகராதி புதுமை யானது. தமிழ் மொழியில் இது போன்ற அகராதி இதுவரை வெளிவந்த தில்லை “இந்நூல் ஓர் அறிவுக் களஞ்சியம்” என்கிறார் முனைவர். மா. இராச மாணிக்கனார். இலக்கியப் பணி புலவர்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த தமிழ் இலக்கியச் செல்வத்தை எளிய மக்களும் படித்துப் பயன் பெறுமாறு உரைநடையில் வழங்கிய வள்ளல் கந்தையா பிள்ளை அவர்கள். பத்துப்பாட்டு, அகநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலிங்கத்துப்பரணி, புறப்பொருள் விளக்கம், விறலிவிடுதூது போன்ற இலக்கியச் செல்வங்களை எல்லாம் இனிய எளிய நடையில் உரைநடையில் தந்தவர் கந்தையா பிள்ளை அவர்கள். திருக்குறளுக்கும், நீதிநெறி விளக்கத்திற்கும் அரிய உரை வரைந்தவர். தமிழ்மொழி - தமிழினம் தமிழ்மொழி - தமிழினம் தொடர்பாகப் பதினைந்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியவர் கந்தையா பிள்ளை. தமிழகம், தமிழ் இந்தியா, தமிழர் சரித்திரம், தமிழர்யார்?, வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர், நமதுமொழி, நமதுநாடு, தமிழ் ஆராய்ச்சி, தமிழ் விளக்கம், முச்சங்கம், அகத்தியர், சிந்துவெளி நாகரிகம், தமிழர் பண்பாடு, தமிழர்சமயம் எது? சிவன், சைவ சமய வரலாறு, தமிழ்ப் பழமையும் புதுமையும் போன்ற எண்ணற்ற அரிய ஆயவு நூல்களைப் படைத்தவர். ஆயிரக் கணக்கான நூற்கடலுள் மூழ்கி எடுத்த அரிய கொற்கை முத்துக்கள் அவரது நூல்கள். எத்தனை ஆண்டுகாலப் பேருழைப்பு! நினைத்தால் மலைப்புத் தோன்றும். தமிழின் - தமிழினத்தின் தொன்மையைத் தமிழர்தம் பண்பாட்டை - நாகரிகத்தை, தமிழர்தம் உயர் வாழ்வியலை உலகறியச் செய்த பேரறிஞர் கந்தையா பிள்ளை. திராவிட நாகரிகமும் - ஆரியத்தால் விளைந்த கேடும் தொன்மை மிக்க திராவிட நாகரிகத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் பல நூல்களை எழுதினார். அவை:- திராவிடர் நாகரிகம், திராவிடம் என்றால் என்ன? திராவிட இந்தியா, தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் போன்ற அரிய ஆய்வு நூல்களை எழுதினார். ஆரியர்களால் விளைந்த கேடுகள் குறித்தும், ஆரியர் தமிழர் கலப்பு, ஆரியத்தால் விளைந்த கேடு, புரோகிதர் ஆட்சி, இராமாயணம் நடந்த கதையா? என்பன போன்ற நூல்களை எழுதினார். பிற மாணவர் தம் அறிவை விரிவு செய்யும் வகையில் எட்டு நூல்களும், மகளிருக்குப் பல்லாண்டுக் காலமாக இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து மூன்று நூல்களையும் எழுதினார். மேலும் மொழிபெயர்ப்பு நூல்கள் சிலவும் மனித இனத்தோற்றம் குறித்த நூல்கள் சிலவும் எனப் பல நூல்களை எழுதியுள்ளார். புரட்சிக் கவிஞர் கூறியவாறு துறைதோறும், துறைதோறும் எண்ணற்ற நூல்களை எழுதித் தமிழுக்கு வளம் சேர்த்தவர். ந.சி. கந்தையா பிள்ளை. புட்சிக்கவிஞர் பாரதிதாசனார், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களைப் பற்றிப் பின்வருமாறு பாராட்டுகிறார். “ந.சி. கந்தையா எனும் நல்லவன், வல்லவன் தமிழ் தமிழின வரலாறனைத்தையும் தொல்பொருள் ஆய்வின் தொகை வகை, விரித்து நிலநூல், கடல்நூல் சான்றுகள் நிறைத்தும் தமிழ் நூற் சான்றுகள் முட்டறுத் தியம்பியும் இலக்கிய இலக்கணச் சான்றுகள் கொடுத்தும் பழக்க வழக்க ஒழுக்கம் காட்டியும் வையகம் வியக்க வரலாறு எழுதினான். பொய் அகன்று மெய்க் கை உயர்ந்தது.” வாழ்க! ந.சி. கந்தையா பிள்ளையின் பெரும் புகழ்! தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வரலாறே தமிழர் களால் மறக்கப்பட்டு விட்டது. தமிழ்ப் பகைவர்களால் மறைக்கப்பட்டு விட்டது. அங்ஙனமிருக்க அம் மாமனிதரின் ஆய்வு நூல்கள் மட்டும் எங்ஙனம் கிடைக்கும்? ஆழ்கடலிலிருந்து முத்துக்கள் எடுப்பது போல, தங்கச் சுரங்கத்திலிருந்து தங்கத்தை வெட்டி எடுப்பது போல, பெருமுயற்சி எடுத்து ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்களைத் தேடினேன். நூல்நிலையங்களைத் தேடித்தேடி என் கால்கள் அலைந்த வண்ணம் இருந்தன. அதன் விளைவாக ஐம்பது நூல்கள் கிடைத்தன. பெரும் புதையலைத் தேடி எடுத்தது போல் பெருமகிழ்வுற்றேன். அன்பன் கோ. தேவராசன் அகம் நுதலுதல் உலகில் வாழும் மாந்தர் அனைவர்க்கும் உள்ளார்ந்த எண்ண ஓட்டங்கள் அலை அலையாய் எழுந்து பல்வேறு வடிவங்களில் வெளிப் படுகின்றன. சங்கக் காலத்துத் தமிழ் மாந்தர் தமது எண்ணங்களை ஒழுங்கு படுத்தி ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்தி வாழ முற்பட்டதன் விளைவே நாகரிகத்தின் தொடக்கம் எனலாம். உலகில் தோன்றி வாழ்ந்து வரும் எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது இயல்பாக விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே உள்ளது. அந்த இன்பத்துககுத் தடையோ இடையீடோ நேரின் அதைப் போக்கிக் கொள்ள முயலும் முறையில் மனிதக் குலத்துக்குத் தனிப் பண்பு சிறப்பாக வெளிப்பட்டிருப்பதைச் சங்க இலக்கியத்தின் வழி நன்கு அறிய முடிகிறது. தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்று பெரும் பிரிவாக மனித வாழ்வின் இயல்பை வகுத்து இலக்கணம் செய்தாலும், அவன் உள்ளத்தில் எழும் உணர்வை வெளிப்படுத்த மொழியும் சொல்லும் அதன் பொருளும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்திருக்கின்ற பாங்கு புறத்திணைச் செய்யுளைக் காட்டிலும் அகத்திணைச் செய்யுள்களிலேயே மிகுந்திருப்பதைக் காண முடிகிறது. தொல்காப்பியர் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்றார். குறித்தனவே என்னும் தேற்றேகாரம் பொருள் குறியாத சொல் இல்லை என்பதையே உணர்த்துகிறது. இற்றை நாளில் நம்மில் சிலர் வஞ்சக எண்ணத்துடனும் பலர் மக்களின் சிந்தனை ஓட்டத்தைத் தூண்டி நல்வழிப் படுத்தவும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதைக் கேட்கிறோம். எருதுநோய் காக்கைக்குத் தெரியாது என்று கூறும் போதும் குதிரைக்குக் கொம்பு முளைத்தது போலத்தான் என்று கூறும் போதும் (முயற்கொம்பே) அச் சொல்லின் பொருளையும் அதனால் நுண்ணுணர் வுடையார் அறியும் வேறு பொருளையும் அச் சொல் உணர்த்துவதாக அறிய முடிகிறது. விடுகதைகள் சொல்லி அறிவைத் தூண்டிச் சிந்திக்க வைப்பதும் சிலேடையாகப் பேசி உட்பொருளை உணரத் தூண்டுவதும் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அறிவார்ந்த செயல்கள். இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்ப் பிரிவின் முடிவும் மனித னின் உள்ளுணர்வை வெளிப்படுத்த முயன்ற முயற்சியே. அகம் - புறம் என்ற பிரிவில் உள்ளத்து உணர்வைத்தான் நுகர்ந்தான் என்பதை எவ்வாறு வெளிப்படுத்துவது? எவ்வாறு அறிவது? அறமோ மறமோ - உயிர் உடல் வேறுபாடுகளால், மொழியால், இசையால், அழுகையால், சைகை என்னும் நாடகத்தால் அல்லவோ வெளிப்படுத்த முடியும். அகத்தில் எழும் காதல் உணர்வை ஒருவனும் ஒருத்தியும் நுகர்ந்த நுகர்ச்சியை இத்தகையது என்று பிறர்க்கு அறிவுறுத்த இயலாது. அகத்தால் மட்டுமே உள் முகமாக நாடி ஆராய்ந்து அறிந்து கொள்ளமுடியும் என்பது உண்மை என்றாலும். இவ்வுணர்வு மனிதக் குலத்திற்கு ஒத்திருப்பதால் சில பல குறிப்புகளை மட்டுமே வெளிப்படுத்தினால் போதும் மற்றவரும் அறிந்து இது இவ்வாறு இருக்கும் என்று உணர்ந்து மகிழவும் ஒருவர்க்கு ஒருவர் உதவி செய்யவும் ஏதுவாக இருக்கிறது. எட்டுத்தொகை நூல்களுள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய மூன்றும் நானூறு நானூறு பாடல்களாலான தொகை நூல்கள். சங்கக்காலச் சான்றோரின் அரிய முயற்சியால் இவ்வாறு தொகுக்கப் பட்டாலும் அகப் பொருள் திணைக் களங்கள் ஐந்தும் இவற்றுள் கலந்துள்ளன. ஆனால் குறுந்தொகை 4 முதல் 8 அடிகளும், நற்றிணை 9 முதல் 12 அடிகளும், அகநானூறு 13 முதல் 21 அடிகளும் கொண்ட அடிவரையறை களையுடையன. ஏனோ அகநானூறு நீண்ட ஆசிரியப் பாவான் அமைந்து நெடுந்தொகை எனப் பெயர் பெற்றாலும் களிற்றி யானை நிரை, மணிமிடைப் பவளம், நித்திலக் கோவை என முப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உயிர் எழுத்துகள் 12 மெய் எழுத்துகள் 18 என்பதால் எழுத்துகள் ஒவ்வொன்றற்கும் பத்துப் பத்தாகக் களிற்று யானை நிரை 12 x 10 = 120 பாடல்களாகவும் மணிமிடை பவளம் 18 x 10 = 180 பாடல்களாகவும் பிரித்தனரோ என்று எண்ணத் தோன்றுகிறது. மதங் கொண்ட யானை போன்ற ஐம்புலனையும் ஒழுங்கு படுத்தக் களிற்றுயானை நிரை என்று உயிர் பன்னிரண்டை 120 ஆகப் பகுத்தனரோ! மணிபோன்ற மெய்யான உடலை நிரல்பட மாலையாகத் தொடுக்கப்பட்டதாக எண்ணிப் பதினெட்டை 180 மணிமிடை பவளமாகத் தொகுத்தனரோ! உள்ளமாகிய கடலின் ஆழத்திலிருந்து சேகரித்த நித்திலத்தை முழுமை பெற்ற மாலையாகத் தரித்து மகிழவோ முழுவதும் நூறி எழுந்த வெற்றி யின்பத்தைக் குறிக்கவோ 100 நூறு பாடல்களை நித்திலக் கோவை எனத் தொகுத்தனர் என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த முப்பான் பிரிவிற்குக் காரணம் முழுமையாகத் தோன்றவில்லை. வகுபடாமல் ஒற்றைப் படையாய் எஞ்சி நிற்கும் எண்களையுடைய பாடல்கள் உரிப்பொருளால் பாலைத் திணைப் பாடல்களாகவும், இரண்டும் எட்டும் உரிப் பொருளால் புணர்ச்சியை உணர்த்தும் குறிஞ்சித் திணைப் பாடல்களாகவும், நான்கில் முடியும் எண்ணுள்ள பாடல்கள் நான்கு உறுதிப் பொருள்களை எண்ணி உரிப் பொருளால் ஆற்றி இருக்கும் முல்லைத் திணைப் பாடல்களாகவும், ஆறாவது எண்ணில் முடியும் பாடல்கள் தொடர்ந்து செல்லும் ஆறுபோல மனம் ஒருநிலைப் படாமல் மாறி மாறி உடல் கொள்ளவாய்ப்பாக அமைந்து நீர் வளம் மிக்க மருதத்திணைப் பாடலாகவும், முழுமை பெற்ற ஒன்றோடு சுழியைச் சேர்த்தது போன்ற பத்தாம் எண்ணுள்ள பாடல்கள் யான் என் தலைவனோடு சேர்ந்து என்று முழுமை பெறுவோனோ என்று இரங்கி ஏங்கும் உரிப் பொருளால் நெய்தல் திணைப் பாடலாகவும் பகுத்துத் தொகுத்திருக்கும் பாங்கு அகநானூற்றுப் பாடல்களில் மட்டுமே காணப்படும் சிறப்பாகும். முல்லை, மருதம், நெய்தல் ஆகிய முத் திணைப் பாடல்கள் ஒவ்வொன்றும் சமமாக நாற்பது பாடல்களைக் கொண்டு பொதுவாக அமைந்துள்ளது. புணர்ச்சி உரிப் பொருளை உணர்த்தும் குறிஞ்சிப் பாடல்கள் எண்பதாக அமைந்தன; பிரிவை உணர்த்தும் பாலைத்திணைப் பாடல்கள் இருநூறாக உள்ளது வாழ்வில் இன்பம் அடைய துன்பத்தில் மிகுதியும் உழல வேண்டியுள்ளது என்பதை உணர்த்தவோ என்று எண்ணத் தோன்றுகிறது. அகத்துறைப் பாடல்கள் நாடகப் பாங்கில் அமைந்துள்ளன. சொல்ல வந்த கருத்தை நிலை நாட்ட உவமை மூலமாக விளக்குவது மிகவும் எளிது. பெண்கள் நயமாகப் பேசிக் கருத்தை வலியுறுத்திச் செயல் படுத்துவதில் வல்லவர்கள். அகத்துறையில் தோழி அறத்தொடு நின்று பேசும் பேச்சுகள் தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையைக் காட்டுவன. தோழியின் பேச்சில் உள்ளுறைப் பொருளும் இறைச்சிப் பொருளும் வெளிப்படும் பாங்கு நினைந்து நினைந்து போற்றத்தக்கன. உள்ளுறை என்பது தெய்வம் நீங்கலாகக் கூறப்படும். அவ்வந் நிலத்துக் கருப் பொருள்களை நிலைக்களனாகக் கொண்டு உணரப்படும் குறிப்புப் பொருளாகும். கருப் பொருள் நிகழ்சசிகள் உவமம் போல அமைந்து அவற்றின் ஒத்து முடிவது போலப் பெறப்படும் ஒரு கருத்துப் பொருளாகும். இறைச்சி தானே பொருட் புறத்ததுவே என்பார் தொல்காப்பியர். இறைச்சியிற் பிறக்கும் பொருளுமாருளவே இறைச்சி தானே உரிப் புறத்ததுவே என்றும் பாடம். அகத்திணைக் கருப்பொருள்களின் மூலம் பெறப்படும் குறிப்புப் பொருள் இறைச்சி என்று கொள்ளலாம். அக் குறிப்புப் பொருளிலிருந்து வேறு ஒரு கருத்துப் பெறப்படுமாயின் அக் கருத்தே இறைச்சியில் பிறக்கும் பொருள் என்று கொள்ளலாம். அகநானூற்றில் முதல் கருப்பொருள்களுக்கே சிறப்பிடம் கொடுத்துப் பேசப்படுகிறது. மிக நுட்பமான உள்ளுறை உவமமும் இறைச்சிப் பொருளும் ஆங்காங்கு கண்டு உணர்ந்து மகிழுமாறு அமைந்துள்ளன. ஆசிரியர் சங்க இலக்கியச் செய்யுள்களில் பெரிதும் பயிற்சியுடையவர் என்பதை அவரது உரைநடையால் காணமுடிகிறது. செய்யுள் இலக்கணம் கடந்த உரைநடைப் பாட்டு என்று சொல்லுமளவுக்குத் தொடர்கள் அமைந் துள்ளன. நீண்ட எச்சச் சொற்களால் கருத்தைத் தெளிவுறுத்தும் பாங்கு இவ்வாசிரியர்க்கே கைவந்த கலையாக அமைந்து நம்மை எல்லாம் வியக்க வைக்கிறது. சங்கக் காலத்தில் வழக்கிலிருந்த சொற்களை நினைவுறுத்தும் பாங்கில் அரிய சொற்களைத் தமது உரைநடையில் கையாண்டு தமிழைப் பழம் பெருமை குன்றாமல் காத்திட இவரது உரைநடை சிறந்த எடுத்துக் காட்டாகும் என்பதை இந்த அகநானூற்று உரைநடையைப் பயில்வார் உணர்வர் என்பது உறுதி. அரிய நயம் மிக்க செந்தமிழ்த் தொடரையும் ஆசிரியர் தமது உரையில் தொடுத்துக் காட்டுகிறார். மெய்யின் நிழல் போலத் திரண்ட ஆயத்தோடு விளையாடி மகிழ்வேன் என்று 49 ஆம் பாடலில் குறிப்பிடு கிறார். மெய் - உண்மை அவரவர் நிழல் அவரவரை விட்டுப் பிரியாது அது போல தலைவியை விட்டுப் பிரியாத தோழியரோடு தலைவி விளையாடி யதை எண்ணி மகிழலாம். உப்புவிற்கும் பெண் ‘நெல்லுக்கு வெள்ளுப்பு’ என்று கூவிக் கை வீசி நடக்கிறாள். பண்ட மாற்று முறையை இது நமக்கு உணர்த்துகிறது. நீனிற வண்ணன் குனியா நின்ற ஆயர் பெண்களின் துகிலை எடுத்துக் கொண்டு குருந்தமரத் தேறினானாகப் பானிற வண்ணன் இடையர் குலப் பெண்களின் மானத்தைக் காக்கக் குருந்த மரக் கிளையைத் தாழ்த்தித் தழைகளால் மறைத்துக் காத்தான் என்று கூறும் வரலாற்றைப் பாலைத் திணைச் செய்யுள் 59 இல் கூறியிருப்பது எண்ணி மகிழத்தக்கது. பெண் யானை உண்பதற்கு ஆண் யானை யாமரத்தின் கிளையைத் வளைத்துத் தாழ்த்தித் தருவதைக் கண்டும், மதநீர் ஒழுகும் கன்னத்தில் மொய்க்கும் வண்டுகளை ஓட்டும் தழைகளின் செயலையும் ஒருங்கு இணைத்துப் பார்த்துத் தலைவனின் தண்ணளியை எண்ணி ஆறி இருக்கலாம் என்னும் தோழியின் கூற்றை மிக ஆழமாக ஆசிரியர் விளக்கிய பாங்கு போற்றுதற்கு உரியதாம். அன்பன் புலவர் த. ஆறுமுகன் நூலறிமுகவுரை திரு. ந.சி. கந்தையா பிள்ளை 1930-40களில் தமிழ், தமிழிலக்கியம், தமிழ்மொழி, தமிழர் வரலாறு, திராவிட வரலாறு, தமிழ்நாட்டுக் குடிகள் போன்ற பல விடயங்கள் பற்றி அக்காலத்துச் சாதாரண தமிழ் வாசகர் நிலையில் பெரிதும் வாசிக்கப்பட்ட நூல்களை எழுதினார். பண்டைய இலக்கியங்களான அகநானூறு, கலித்தொகை, பரிபாடல் போன்ற வற்றினை உரைநடையில் எழுதி மக்களிடையே சங்க இலக்கியம் பற்றிய உணர்வினை ஏற்படுத்தினார். திருக்குறளுக்கான ஒரு சொல்லடைவைத் திருக்குறள் அகராதி என்னும் பெயரில் வெளியிட்டவர். இவை யாவற்றுக்கும் மேலாக உலக வரலாற்று நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகக் காலவரிசைப்படுத்தித் தந்தார். செந்தமிழ் அகராதி என்றவோர் அகர முதலியையும் தொகுத்தார். இன்று பின்னோக்கிப் பார்க்கும் பொழுது 1940-50களில் இளைஞர் களாக இருந்த பல தமிழ் ஆர்வலர்கள் தமிழ் பற்றிய தங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதற்கான வாசிப்பு விடயங்களை அளித்தவர். இவருடைய பெரும்பாலான படைப்புக்கள் அக்காலத்திற் பிரசுரிக்கப் பட்ட ஒற்றுமை என்னும் இதழின் அலுவலகத்தாலேயே வெளியிடப் பெற்றன. இவர் வெளியிட்டனவற்றுள் பல ஒற்றுமை இதழில் வெளிவந் திருத்தல் வேண்டும். ஆனால், அதனை இப்பொழுது நிச்சயமாக என்னாற் சொல்ல முடியவில்லை. ஒற்றுமை அலுவலகம் இவற்றைப் பிரசுரித்தது என்பதை அறிவேன். ஏனெனில் இலங்கையில் தமிழாசிரியராக இருந்த எனது தகப்பனாரிடத்து இந்நூல்களிற் பெரும்பாலானவை இருந்தன. திரு ந.சி. கந்தையா பிள்ளையின் பெயர் தமிழகத்திலே தொடர்ந்து போற்றப்படுமளவுக்கு ஈழத்தில் நினைக்கப்படுவதில்லை என்ற உண்மையை மிகுந்த மனவருத்தத்துடன் பதிவு செய்யவேண்டியுள்ளது. அங்கு அவர் அத்துணைப் போற்றப்படாதிருப்பதற்குக் காரணம் ஏறத்தாழ அவர்களது எல்லா நூல்களுமே தமிழகத்திலேயே வெளியிடப் பெற்றன. இந் நூல்களின் பிரசுரப் பின்புலம் பற்றி எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. அவற்றின் பொருளியல் அம்சங்கள் பற்றிய தரவுகளும் இப்பொழுது தெரியாதுள்ளன. ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றிற்கூட இவரது பெயர் முக்கியப் படுத்தப் பெறாது போயுள்ளது. மிகுந்த சிரமத்தின் பின்னர் அவரைப் பற்றிக் கிடைத்துள்ள தகவல்கள் பின்வருமாறு: சுவாமி ஞானப் பிரகாசர், ந.சி. கந்தையா பிள்ளை போன்ற அறிஞர்களின் தமிழ்ப் பங்களிப்புக்கள் தமிழகத்தில் போற்றப்படுகின்றமை ஈழத்தவர்க்குப் பெருமை தருகின்றது. இவர் எழுதிய நூல்களின் பெயரை நோக்கும்பொழுது தமிழ் வாசகர்களுக்கு உலக நிலைப்பட்ட, தமிழ்நிலைப் பட்ட தரவுகளைத் தொகுத்துத் தருவதே இவரது பெருஞ்சிரத்தையாக இருந்தது என்பது புலனாகின்றது. இப்பதிப்பகத்தின் பணியினை ஊக்குவிக்க வேண்டியது தமிழ்சார்ந்த நிறுவனங்களினதும் தமிழ்ப் பெரியோர்களினதும் கடமையாகும். உண்மையில் இதனை ஒரு அறிவுப்பசிப் பிணித் தீர்வாகவே நான் காண்கிறேன். 2/7, றாம்ஸ்கேட், அன்புடன் 58, 37ஆவது ஒழுங்கை, கார்த்திகேசு சிவத்தம்பி வெள்ளவத்தை, தகைசார் ஓய்வுநிலை பேராசிரியர் கொழும்பு - 6 யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம். கருவிநூல் தந்த ந.சி. கந்தையா தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மூலவர்களில் யாழ்ப்பாணம் தந்த பேரறிஞர் ந.சி. கந்தையாவும் ஒருவர். உண்மையான அறிஞர்களைக் காலங்கடந்து அடையாளம் காண்பதும் அவர்தம் படைப்புக்களைத் தேடிப் பிடித்துப் புரப்பதும் தமிழினத்தின் பழக்கங்களில் ஒன்று. தமிழின், தமிழரின் தொல்பழங்கால வரலாறு தொடர்பாகத் தமிழில் நூல்கள் மிகக் குறைவு. ஓர் ஆயிரம் நூல்களாவது தமிழின் தமிழரின் தொல்பழங்கால வரலாறுபற்றி வெளிவரவேண்டும். விரிவாக எழுதப்பட வேண்டிய தமிழ், தமிழர் வரலாற்று வரைவு முயற்சிக்கு வழிகாட்டும் கருவி நூல்களை வரைந்திருப்பவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார். உலகம் முழுவதும் உற்றுக் கவனிக்க வேண்டிய வரலாற்றிற்கு உரியவர்கள் தமிழர்கள். அவர்களே உலக மொழிகளை ஈன்ற மூலமொழிக்குச் சொந்தக்காரர்கள். அவர்களே உலக நாகரிகங்களின் பிறப்பிற்குக் காரணமான உலக முதல் நாகரிகத்தைப் படைத்தவர்கள். இந்த உண்மைகளைத் தமிழர்களும் அறியவில்லை உலகமும் அறியவில்லை. தமிழர் சரித்திரம், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந் தமிழர், தமிழர் யார், உலக நாகரிகத்தில் தமிழர்பங்கு, சிந்துவெளித் தமிழர், தமிழ் இந்தியா, தமிழகம், மறைந்த நாகரிகங்கள் ஆகியன ந.சி. கந்தையாவின் குறிப்பிடத்தகுந்த நூல்களாகும். உலக முதல் நாகரிகம் என இன்று உலகம் நம்பிக்கொண்டிருக்கக் கூடிய நீல ஆற்றங்கரை நாகரிகம் (Nile Civilisation) தமிழ் நாகரிகத்தின் அதாவது சிந்துவெளி நாகரிகத்தின் வழிப்பட்ட நாகரிகமே என்பதை ஏராளமான சான்றுகளால் விளக்குபவை மேலைய நூல்கள். மொழிநிலையில் தமிழின் உலக முதன்மையைப் பாவாணர் நிலைநாட்டினார் என்றால் இன நிலையில் தமிழின உலக முதன்மையை ந.சி. கந்தையா நிலைநாட்டினார் என்று உரைக்கலாம். நீல ஆற்றங்கரை நாகரிக முடிவின்பின் நண்ணிலக் கடற் பகுதியில் உருவான பிறிதொரு வழிநாகரிகமே கிரேக்க நாகரிகம். கிரேக்க நாகரிகத் தின் உடைவில் தெறிப்பில் பிறகு மலர்ந்தவையே இன்றைய மேலை நாகரிகம். உலகின் எல்லா நாகரிகங்களையும் தாங்கிநிற்கும் தாய் நாகரிகமே தமிழ் நாகரிகம். தமிழ் நாகரிகத் தொன்மையைச் சங்க நூல்களுக்கு அப்பால் சிந்துவெளி அகழ்வாய்வும் உலக வரலாற்றாசிரியர்கள் உலக முதல் நாகரிகம் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்துக்களும் நமக்கு மேலும் விளக்கும் பகுதிகளாகத் திகழ்கின்றன. இங்கெல்லாம் சென்று நுண்மாண் நுழைபுல முயற்சியால் தமிழின வரலாறு எழுதியவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார். ந.சி. கந்தையா பெருமகனார் நூல்களைத் தமிழரின் தொல்பழங்கால வரலாற்றைக் கற்கும் முயற்சியில் நான் ஈடுபடத்தொடங்கியபோது தேடிக் கற்றேன். பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் சென்ற ஆண்டு இயற்கையெய்திய வரலாற்றுப் பேரறிஞர் கோ. நிலவழகனார் ந.சி. கந்தையா அவர்களைச் சென்னையில் அவர் வாழ்ந்த நாளில் சந்தித்தது பற்றியும் அவரின் பன்னூற்புலமை பற்றியும் எம்மிடம் மகிழ்ந்து கூறுவார். ந.சி. கந்தையா அவர்களின் நூல்கள் பலவற்றையும் அவர் வைத்திருந்தார். அருகிய பழைய நூல்களைப் பேணுவாரிடத்திலும் நூலகங்கள் சிலவற்றிலும் மட்டுமே ஒடுங்கிக்கிடந்த ந.சி. கந்தையா நூல்களை மீண்டும் அச்சில் வெளியிடுவார் இலரே என்று கவலையுற்றேன். அமிழ்தம் பதிப்பகம் இவரின் நூல்களை வெளியிடுகின்றது. உண்மைத் தமிழ் நெஞ்சங்கள் இந் நூல்களை உச்சிமோந்து வாரியணைத்துப் புகழ்ந்து கற்றுப் பயனடைவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு. பேரா. கு. அரசேந்திரன் பதிப்புரை வளம் சேர்க்கும் பணி “குமரிநாட்டின் தமிழினப் பெருமையை நிமிரச் செய்தான்,” “சிந்தையும் செயலும் செந்தமிழுக்கு சேர்த்த நூல் ஒன்றா இரண்டா” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் போற்றப்பட்ட தமிழீழ அறிஞர் ந.சி. கந்தையாவின் நூல்களை மீண்டும் மறுபதிப்புச் செய்து தமிழ் உலகிற்கு வளம் சேர்க்கும் பணியைச் செய்ய முன் வந்துள்ளோம். இப்பெருமகனார் எழுதிய நூல்கள் அறுபதுக்கு மேற்பட்டவை யாகும். இந்நூல்கள் சிறிதும் பெரிதுமாக உள்ளவை. இவற்றைப் பொருள் வாரியாகப் பிரித்து இருபதுக்கு மேற்பட்ட நூல் திரட்டுகளாகத் தமிழ் உலகிற்குக் களமாகவும், தளமாகவும் வளம் சேர்க்கும் வைரமணி மாலை யாகவும் கொடுத்துள்ளோம். மொழிக்கும் இனத்திற்கும் அரணாக அமையும் இவ்வறிஞரின் நூல்கள் எதிர்காலத் தமிழ் உலகிற்குப் பெரும் பயனைத் தரவல்லன. ந.சி. கந்தையா இவர் 1893இல் தமிழீழ மண்ணில் நவாலியூர் என்னும் ஊரில் பிறந்தவர். பிறந்த ஊரிலேயே பள்ளிப்படிப்பை முடித்து அவ்வூரிலேயே ஆசிரியப் பணியாற்றியவர். பின்னர் மலேசிய மண்ணில் சிலகாலம் தொடர்வண்டித் துறையில் பணியாற்றியுள்ளார். இவர் தமிழ் ஈழ மண்ணில் பிறந்திருந்தாலும் தமிழகத்தில் இருந்துதான் அவர் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்க்கும் நூல்கள் பல எழுதினார் என்று தெரிகிறது. தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்களில் ந.சி. கந்தையா குறிப்பிடத்தக்கவர். தன்னை முன்னிலைப் படுத்தாது மொழியையும் இனத்தையும் முன்னிலைப்படுத்திய பெருமைக்குரியவர். உலக மொழி களுள் தமிழ்மொழி தொன்மைமிக்கது. உலகமொழிகளுக்கு வேராகவும் சாறாகவும் அமைந்தது. தமிழர் சமயமும், கலையும் பண்பாடும், வரலாறும், தமிழன் கண்ட அறிவியலும் உலகுக்கு முன்னோடியாகத் திகழ்வன. இவற்றையெல்லாம் தம் நுண்ணறிவால் கண்டறிந்து பல நூல்களை யாத்தவர். தமிழியம் பற்றிய ஆய்வை ஆராய்ந்த அறிஞர்கள் பலருளர். இவர்கள் அனைவரும் கலை, இலக்கியம், சமயம், மொழி, வரலாறு, நாகரிகம், பண்பாடு போன்ற பல துறைகளில் பங்காற்றியுள்ளனர். ஆனால், ந.சி.க. இத் துறைகளில் மட்டுமன்றிப் பொது அறிவுத் துறையிலும் புகுந்து புத்தாக்கச் செய்திகளைத் தமிழ் உலகிற்குக் கொடுத்தவர். இவருடைய மொழிபெயர்ப்பு படிப்பாரை ஈர்க்கக் கூடியவை. படித்தலின் நோக்கம் பற்றியும் பல்வேறு பொருள் பற்றியும் கூறுபவை. தமிழ் அகராதித் துறையில் இவர் எழுதிய காலக்குறிப்பு அகராதி தமிழ் உலகிற்குப் புதுவரவாய் அமைந்தது. தமிழ் மொழிக்கு அரிய நூல்களைத் தந்தோர் மிகச் சிலரே. நிறைதமிழ் அறிஞர் மறைமலை அடிகளும், தமிழ் மலையாம் தேவநேயப் பாவாணரும் தமிழ் மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் சேர்க்கத்தக்க நூல்களைத் தமிழர்களுக்கு வைப்பாக எழுதிச் சென்றவர்கள். அவர் தம் வரிசையில் இவர் தம் நூல்களின் வரிசையும் அடங்கும். தமிழ் ஆய்வு வரலாற்றில் இவரின் பங்களிப்பு குறிக்கத்தக்கது. கழகக் காலச் செய்தி களைப் படித்துப் பொருள் புரிந்து கொள்வது பலருக்குக் கடினமாக இருந்தது. இவற்றை எளிதில் படித்துப் பொருள் புரியும் உரைநடைப் போக்கை முதன்முதலில் கையாண்டவர். இவரது மொழிநடை, கருத்துக்கு முதன்மை தருபவை. உரைநடை, எளிமையும் தெளிவும் உடையது. சிறுசிறு வாக்கிய அமைப்பில் தெளிந்த நீரோடை போன்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னகம் பெற்றிருந்த நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளைக் கண்ணுக்குக் காட்சியாகவும் படிப்பாரின் கருத்துக்கு விருந்தாகவும் அளித்தவர். நூல் திரட்டுகள் நுவலும் செய்திகள் 1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர் காலம் தொட்டு இவர் வாழ்ந்த காலம் வரை தமிழரின் வரலாற்றுச் சுவடுகளை நுட்பமாக ஆராய்ந் துள்ளார். அவர் மறைவிற்குப் பிறகு இன்று வரை அவருடைய ஆய்விற்கு மேலும் ஆக்கம் தரும் செய்திகள் அறிவுலகில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வலுவாய் அமைந்துள்ளன. தமிழும் சிவநெறியும் ஓங்கியிருந்தமை. - தாயாட்சிக் காலம் முதன்மை பெற்றிருந்தது. மொழியின் தோற்றம், சமற்கிருதம் எப்படித் தோன்றியது - ஆரியர் யார் - இந்தியாவிற்கு எப்படி வந்தனர் - தமிழரோடு எவ்வாறு கலப்புற்றனர் - ஆதிமக்களின் தோற்றமும், பிறப்பும் - இந்திய நாட்டின் ஆதிமக்கள், திராவிட மக்கள் - ஆதிமக்கள் பிறநாடுகளில் குடிபெயர்ந்தது - மொழிக்கும், சமயத்துக்கும் உள்ள உறவு - சமற்கிருதம் சமயமொழி ஆனதற்கான ஆய்வுகள் - வழிபாட்டின் தொடக்கம் - வழிபாடு எங்கெல்லாம் இருந்தது - பண்டைய மக்கள் எழுது வதற்குப் பயன்படுத்திய பொருள்கள் - மேலை நாடுகளிலும், சென்னை யிலும் இருந்த நூல் நிலையங்கள் - ஆரியமொழி இந்திய மண்ணில் வேரூன்றிய வரலாறு - தமிழுக்கு நேர்ந்த கேடுகள் - திருவள்ளுவர் குறித்த கதைகள் - வள்ளுவச் சமயம் - பண்டைய நாகரிக நாடுகள் - அந்நாடுகளில் பெண்களைப் பற்றிய நிலை - அகத்தியர் பற்றிய பழங்கதைகள் - திராவிட மொழிகள் பற்றிய குறிப்புகள் - உலகநாடுகளில் தமிழர் நாகரிகச் சுவடுகள் - திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் - திராவிடரின் பிறப்பிடம் - ஐவகை நிலங்கள், பாகுபாடுகள் - பழக்க வழக்கங்கள் - சிந்து வெளி நாகரிக மேன்மை - புத்தரின் பிறப்பு - அவரைப் பற்றிய கதைகள் - இராமகாதை பற்றிய செய்திகள் - தென்னவரின் குலங்கள், குடிகள், வடவரின் குலங்கள், .குடிகள் - தமிழின் பழமை, தமிழக எல்லை அமைப்பு - பண்டைக்கால கல்வி முறை, உரைநடை - வேதங்கள், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் - நீர்வழி, நிலவழி வணிகம் சிறந்தோங்கிய நிலை - மலைவழி, கடல்வழி, நிலவழி பொருள்கள் நிரம்பிய காலம் - சுற்றம் தழைக்க வாழ்ந்த நிலை - தமிழ வணிகர், வேற்று நாட்டு வணிகருடன் தொடர்பு கொண்டு மிக்கோங்கியிருந்த காலம் - வானநூல் கலையும், சிற்பக் கலையும், கட்டடக் கலையும் , இசைக்கலையும் மிக்கோங்கியிருந்த காலம் - ஆரியர் வருகைக்கு முற்பட்ட பிறமொழி கலப்பற்ற தூய தமிழ் பெருகி யிருந்த காலம் - உலக நாகரிகங்களுக்குத் தமிழர் நாகரிகம் நாற்றங்கால் - உலகப் பண்பாடுகளுக்குத் தமிழர் பண்பாடு தொட்டிலாக அமைந்தமை - அகராதிகள் - அறிவுத் தேடலுக்குரிய செய்திகள் - இவர்தம் நூல்களின் உயிர்க்கூறுகளாக அடங்கியுள்ளன. வாழும் மொழி தமிழ் தமிழ் இளைஞர்கள் தம் முன்னோரின் பெருமையை உணர, எதிர்கால வாழ்விற்கு ஏணிப்படிகளாய் அமைவன இந்நூல்கள். எகிப்திய மொழி, சுமேரிய மொழி, இலத்தீனும், பாலியும் கிரேக்கமும் அரபிக் மொழியும் வாழ்ந்து சிறந்த காலத்தில் தமிழ் மொழியும் வாழ்ந்து சிறந்தது. பழம்பெரும் மொழிகள் பல மாண்டும் சில காப்பக மொழிகளாகவும் அறிஞர்களின் பார்வை மொழியாகவும் இருந்து வரும் இக் காலத்தில் இன்றளவும் இளமை குன்றா வளம் நிறைந்த மொழியாக தமிழ் மொழி வாழ்கிறது என்று நாம் பெருமைகொள்ளலாம். ஆனால், இத்தமிழ் மொழியின் நிலை இன்று ஆட்சிமொழியாக அலுவல் மொழியாக, இசைமொழியாக, கல்வி மொழியாக, அறமன்ற மொழியாக , வழிபாட்டு மொழியாக, குடும்ப மொழியாக இல்லாத இரங்கத் தக்க நிலையாக உள்ளது. தாய்மொழியின் சிறப்பைப் புறந்தள்ளி வேற்றுமொழியைத் தூக்கிப் பிடிக்கும் அவல நிலை மிகுந்துள்ளது. முகத்தை இழந்த மாந்தன் உயிர்வாழ முடியாது. எப்படி உயிரற்றவனோ, அவ்வாறே மொழியை இழந்த இனம் இருந்த இடம் தெரியாமல் அழியும் என்பது உலக வரலாறு காட்டும் உண்மை. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் மொழியை அழித்தால்தான் இனத்தை அழிக்க முடியும். உலக மக்களெல்லாம் தம் கையெழுத்தைத் தம் தம் தாய்மொழியில் போடுவதைப் பெருமையாகக் கொள்வர். ஆனால் தமிழ் மண்ணின் நிலையோ? எங்கணும் காணாத அவலம் நிறைந்தது. மொழியையும் இனத்தையும் உயர்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் உன்னதத்தையும் தாழ்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் தாழ்வுற்று இருப்பதையும் தமிழர்கள் இனியேனும் அறிவார்களா? தமிழர்களின் கடன் இளம் தலைமுறைக்கும் மாணவர்களுக்கும் பயன்படத்தக்க இவ்வரிய நூல்களைத் தொகுத்து 23 திரட்டுகளாகக் கொடுத்துள்ளோம். தமிழ் மொழியின் காப்புக்கும், தமிழரின் எழுச்சிக்கும் வித்திடும் இந்நூல்கள். தமிழர் யார், எதிரிகள் யார் எனும் அரிய உண்மைகளைக் கண்டு காட்டும் நூல்கள். இவரின் பேருழைப்பால் எழுதப்பட்ட இந் நூல்கள் பழைய அடையாளங்களை மீட்டெடுக்கும் நூல்கள். தமிழர் களுக்குள்ள பலவீனத்தை உணர்வதற்கும் பலத்தை உயிர்ப்பிப்பதற்கும் உரிய நூல்களாகும். இந் நூல்களைத் தேடி எடுத்து இளந்தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இவற்றைக் காப்பதும் போற்றுவதும் தமிழர்கள் கடன். மாண்டுபோன இசுரேல் மொழியையும் பண்பாட்டையும் மீட் டெடுத்த இசுரேலியர்களின் வரலாறு நமக்குப் பாடமாக அமைந்துள்ளது. உலக மக்களுக்கு நாகரிகம் இன்னதெனக் காட்டியவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் உழவுத் தொழிலையும் கடல் வாழ்வையும் வளர்த்த வர்கள் தமிழர்கள். முதன்முதலில் வீடமைப்பும், தெருவமைப்பும் நகரமைப்பும் நாடமைப்பும் கண்டவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் மொழியும் கலையும் ஆட்சிப் பிரிவுகளும், சட்டங்களும் பிற கூறுகளும் வகுத்தவர்கள் தமிழர்கள். எழுச்சிக்கு வித்திட... உடம்பு நோகாமல் கை நகத்தின் கண்களில் அழுக்குபடாமல் தமிழகக் கோயில்களைச் சாளரமாகக் கொண்டு வாழும் கூட்டத்தால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் விளைந்த சீரழிவை இற்றைத் தலைமுறை அறிதல் வேண்டும். மறுமலர்ச்சிக்கும் உரிமைப் போருக்கும் உன்னத எழுச்சிக்கும் அந்தந்த நாடுகளில் இளைஞர்கள் முன்னெடுத்துச் சென்ற வரலாறு நம் கண்முன்னே காட்சியாகத் தெரிகிறது. அயர்லாந்து, செர்மனி, துருக்கி, சப்பானின் அன்றைய நிலையும், இன்றைய நிலையும் - தமிழ் இளைஞர்கள் படித்தால்தான் நம்நாட்டின் எழுச்சிக்கு வித்திட முடியும் என்பதை இந்நூல்களின் வாயிலாக உணர முடிகிறது. இந் நூல் திரட்டுகள் வெளிவருவதற்கு எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தவர் சென்னை வாழ் புலவரும், வடசென்னை தமிழ் வளர்ச்சிப் பேரவையின் செயலாளர், நிறுவனருமான புலவர் கோ. தேவராசன், மு.க.,க.இ., ஆவார். இவரின் பேருதவியால் முழுமையாக நூல்களைத் தேடி எடுத்துத் தமிழ் உலகிற்குக் கொடையாகக் கொடுத்துள்ளோம். அவருக்கு எம் நன்றி. இந்நூல்களைப் பொருள் வாரியாக பிரித்துத் திரட்டுகளாக ஆக்கியுள்ளோம். ஒவ்வொரு திரட்டிற்கும் தக்க தமிழ்ச் சான்றோரின் அறிமுக உரையோடு வெளியிடுகிறோம். இவர்களுக்கு என் நன்றி என்றும். இந் நூலாக்கப் பணிக்கு உதவிய கோ. அரங்கராசன், மேலட்டை ஆக்கத்திற்கு உதவிய பிரேம், கணினி இயக்குநர்கள் சரவணன், குப்புசாமி, கலையரசன், கட்டுநர் தனசேகரன், இந்நூல்கள் பிழையின்றி வெளிவர மெய்ப்புத் திருத்தி உதவிய புலவர் சீனிவாசன், புலவர் ஆறுமுகம், செல்வராசன் ஆகியோருக்கும் மற்றும் அச்சிட்டு உதவிய ‘ப்ராம்ட்’ அச்சகத்தார் மற்றும் ‘வெங்க டேசுவரா’ அச்சகத்தாருக்கும் எம் பதிப்பகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதிப்பகத்தார் தமிழ் ஆராய்ச்சி ஆசிரியர் ந.சி. கந்தையா தொகுப்பாளர் புலவர் கோ. தேவராசன். எம்.ஏ.,பி.எட்., பதிப்பாளர் இ. இனியன் அமிழ்தம் பதிப்பகம் 328/10 திவான்சாகிப் தோட்டம் இராயப்பேட்டை, சென்னை - 14. நூற்குறிப்பு நூற்பெயர் : தமிழ் ஆராய்ச்சி ஆசிரியர் : ந.சி. கந்தையா பதிப்பாளர் : இ. இனியன் முதல் பதிப்பு : 2003 தாள் : 16.0 கி. மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 20 + 108 = 128 படிகள் : 1000 விலை : உரு. 55 நூலாக்கம் : பாவாணர் கணினி 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : பிரேம் அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட் 20 அஜீஸ் முல்க் 5வது தெரு ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006 கட்டமைப்பு : இயல்பு வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம் 328/10 திவான்சாகிப் தோட்டம், டி.டி.கே. சாலை, இராயப்பேட்டை, சென்னை - 600 014. i ii xv xiv iii iv xiii xii v vi xi x vii viii ix xx உள்ளடக்கம் ந.சி. கந்தையாப் பிள்ளை வாழ்வும் தொண்டும். . . . iii அகம் நுதலுதல் . . . vii நூலறிமுகவுரை . . . xi கருவிநூல் தந்த ந.சி.க. . . . xiii பதிப்புரை . . . xv நூல் தமிழ் ஆராய்ச்சி . . . 1 நீதிநெறி விளக்கம் . . . 19 அருஞ்சொல் அகராதி . . . 72 தமிழ் விளக்கம் . . . 81 xvii xviii xix