தமிழக வரலாற்று வரிசை -12 தமிழகச் சமூகப் பாண்பாட்டு வரலாறு (இரண்டாம் பாகம்) ஆசிரியர் பேரா. முனைவர் கோ. தங்கவேலு மேனாள் வரலாற்றுத் திணைக்களத் தலைவர் மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் அமிழ்தம் பதிப்பகம் சென்னை - 600 017 நூற் குறிப்பு நூற்பெயர் : தமிழக வரலாற்று வரிசை - 12 தமிழகச் சமூகப் பண்பாட்டு வரலாறு - (இரண்டாம் பாகம்) ஆசிரியர் : பேரா.முனைவர். கோ. தங்கவேலு பதிப்பாளர் : இ. வளர்மதி முதற்பதிப்பு : 2008 தாள் : 18.6 கி. வெள்ளைமேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 12 புள்ளி பக்கம் : 16+ 424 = 440 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 410 /- படிகள் : 500 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : செல்வி வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்ஸ் இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம் “பெரியார் குடில்” பி-11, குல்மோகர் குடியிருப்பு, தியாகராயர் நகர், சென்னை - 600 017 தொ.பேசி: 24339030 அறிமுகவுரை உலக முதன்மொழி தமிழ்! உலக முதல் மாந்தன் தமிழன். உலகம் தோன்றிய போதே உடன் தோன்றி இன்றளவும் கன்னியாகவே இருப்பது தமிழ்நிலம். அத்தமிழ் நிலத்தைத் தாயகமாகக் கொண்டவனே தமிழன். அந்த தமிழனே தொல்மாந்தன். அவனுடைய தொல்பழங்காலந் தொட்டு இற்றளவுமுள்ள வரலாற்றுச் சுவடுகளைச் சுட்டிக் காட்டுவதே இத் ``தாய்நிலவரலாறு''ஆகும். தமிழக வரலாற்றில் தலைசிறந்து நிற்பது கழக காலமாகும். வரலாற்று இலக்கணப்படி தன்னக, அயலக, தொல்பொருள், நாணயச் சான்றுகளைக் குறைவின்றிக் கொண்டமையால் கழகக் காலத்தைப் ``பொற்காலம்'' என்கிறோம். கடைக்கழகக் காலம் கி.மு. 300 முதல் கி.பி. 300 வரையிலானது அடுத்து வரும் களப்பிரர் காலம் கி.பி. 300 முதல் கி.பி. 600 வரையிலானது. இதனை ``இருண்ட காலம்'' என்று கூறுவது குருட்டுத் தனமான வரலாற்று மரபாகிவிட்டது. எப்பொழுதெல்லாம் ஆரியப் பண்புகளும், சமற்கிருத மொழியும் மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை உண்டாக்குகிறதோ அக் காலத்தைப் ``பொற்காலம்'' என்றும் ஆரிய மொழிக்கும் பண்பாட்டிற்கும் தாழ்வு ஏற்படுகிற அக்காலத்தை ``இருண்டகாலம்'' என்றும் கூறுவதைத்தான் குருட்டுத்தனமான வரலாற்று மரபு என்கிறோம். இவ்வாறு தான் ஆரியப் பண்பாட்டையும், மொழியையும் மங்கச் செய்து, கழகக் காலப் பண்பாட்டையும், மொழியையும் மலரச் செய்த காலமே களப்பிரர் காலத்தில்தான். இக்காலம் தான் சமணத்துக்கும், சாக்கியத்துக்கும் ஆரியத்திற்கும் சாவுமணி அடித்த காலமாகும். தமிழ் இலக்கியங்களுக்கு இலக்கண நூல்களையார்த்த காலமே களப்பிரர் காலம் தான். எனவே, இதனை இருண்ட காலம் என்கின்றனர். களப்பிரரை யடுத்து தாய்நிலமாகிய தமிழகத்தைத் தோராயமாக கி.பி. 6ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 9ஆம் நூற்றாண்டு வரை ஆண்ட பல்லவர் காலத்தில் ஆரியம் தலை தூக்கியது. பல்லவர்கள், அயலகத்திலிருந்து ஆரிய பூசாரிகளைத் தமிழகத்திற்கு இறக்குமதி செய்து, தாய்நிலத்தை ``தேவதானம்'', ``பிரம்மதேயம்'', மகாதேவமங்கலம்'', முதலியனவாக கூறு போட்டு, தமிழ் வழிபாடுகளை ஒழித்தனர். பூவைப் படைத்து பூசை செய்த தமிழன் அர்ச்சனைக்கு ஆட்பட்டான்! கி.பி.9ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 12ஆம் நூற்றாண்டு வரையாண்ட முற்காலப் பாண்டியரும், சோழரும் தமிழர் உடலோடும் ஆரியப் பண்போடும்தான் ஆண்டனர். கலையும், பண்பாடும், வழிபாடும் மாறுபட்டன. ஆனால், கோயிற் கலைகளும், இறைநெறி (பக்தி) இலக்கியங்களும் தமிழின் கருவூலக் கணக்கில் சேர்ந்துவிட்டன. பிற்காலப் பாண்டியருக்குப்பின், தெலுங்கரின் விசய நகர ஆட்சியும், நாயக்கர், பாளையக்காரர் ஆட்சிகளும் தமிழகத்தை அலைக்கழித்து ஆங்கில ஆட்சிக்கு அடிகோலின. ஆங்கில ஆட்சி கி.பி. 1750லிருந்து கி.பி. 1947வரை தமிழகத்தில் நிலவியது. அது, புதுக்கால ஆட்சியாக விரிந்தது. ஆங்கில ஆட்சியை விடுதலை வேட்கைக் கொண்டு அகற்றிய பின், தமிழகத்தில் அரசியல் கட்சி சார்ந்த பாராளுமன்ற முறையிலான மக்களாட்சி ஏற்பட்டது. மீண்டும் தமிழ்ப்பண்பாடுகளை மலரச் செய்ய கழக ஆட்சிகள் முயலுகின்றன. பொதுவாக, இந்திய வரலாற்றில் ஒவ்வொரு ஆறு நூற்றாண்டின் முடிவிலும் பண்பாட்டு மறுமலர்ச்சி ஏற்படுவதை உணருகிறோம். அத்தகைய மறுமலர்ச்சியைத் தமிழக வரலாற்றிலும் காண்கிறோம். ஆனால், கழகக்காலத்தை அடுத்து வரும் அத்தியாயங்கள் ஒவ்வொரு மூன்று நூற்றாண்டுக்கொரு முறை புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. எத்தகைய மாறுபட்டச் சூழலிலும், தமிழ்ப்பண்பாடு, அடியோடு மாறியதும், மறைக்கப் பட்டதுமில்லை! இதற்கு ஒரே கரணியம் செம்மொழியான தமிழேயாகும். அம்மொழியைச் செம்மைப்படுத்த முதல், இடை, கடைக்கழகங்கள் தோராயமாக பத்து ஆயிரம் ஆண்டுகள் உழைத்தன. இன்றளவும் தோண்டத்தோண்டச் சுரக்கும் மணற்கேணிபோல் சிறந்து விளங்கும் நாற்பது கழகக் காலநூல்களும், எண்ணிலடங்கா இறைநெறி இலக்கியங்களுக்கு தமிழ்மொழியின் கருவூலமாக உள்ளன. பேரூழிக்காலங்களிலும் தமிழ்மண் சாய்ந்ததில்லை! ஆரியம் தன்மய மாக்கியும் தமிழ்ப்பண்பு மாறியத்தில்லை! நான்கு வருணபாகுபாடு இங்கு இல்லை. வேற்றுமொழிகளாலும், மேலைநாட்டுப் பண்பாடுகளாலும் தமிழ் மொழியையும், பண்பாடுகளையுமாற்றி அமைக்க முடியவில்லை. காற்றசைவால் அசையும் நாணல்போல் வளையும், ஆனால் நிமிர்ந்து விடும்! சில பொழுது மாறுபட்டதைப் போல் தோற்றமெடுக்கும். ஆனால் ஒடிந்து உருமாறியதில்லை என்பதுதான் வரலாற்று உண்மை. ``ஓடும், உட்காரும், தாவும், தாண்டிக்குதிக்கும் ஆனால் ஒரேஅடியாக அடிச்சுவடு அற்றுப் போகாது. இதுவே வரலாற்று இலக்கணம்'' என்பார் உலக நாகரிக வரலாற்று நூலை யார்த்த ஏ.சே. தாயின்பி. இதற்கு முற்றிலும் எடுத்துக்காட்டாகத் திகழ்வதே தமிழக வரலாறு ஆகும். விடுதலைக்குப்பின்னும் இதே தனித் தன்மையோடு தான் தமிழக வரலாறு தொடருகிறது. தலைசாய்ந்து போனதைப் போல உணருவோம். ஆனால், கொடை சாய்ந்து விடவில்லை என்பதுதான் உண்மை! ``மூலத்தின் கூறுபாடு பலவாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் மீண்டும் மூலமாகவே தோன்றும் என்பது மாந்தவியல் அறிவியலார் கண்டமுடிவு ஆகும். ஆனால், தமிழ்க்குருதியோடு காலந்தோறும் அறுபடாது திகழ்ந்த தமிழ் அறிஞர்களால் தமிழ்ப்பண்பும் தாய்நில வரலாறும் கட்டிக் காக்கப் பெற்றன. அவற்றின் வீரிய மறுமலர்ச்சிக்கு உந்து சக்திகளாகத் தோன்றியவர்களே தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவுமாவர். எனவே, தொல் பழங்காலந் தொட்டு, இன்றளவும் அறுபடாமல் தொடர்வது தாய்நில வரலாறே. இந்திய வரலாற்றில் இடையிடையே ஏற்பட்ட அந்நியர் ஆட்சிகளுக்கு மறுதலை இல்லாமல் தமிழகத்திலும் வேற்று நிலத்தார், வேற்றுமொழியார் ஆட்சிகளேற்பட்டாலும் அவை அசைவுகளாகவே நின்றனவே ஒழிய முற்றுப் புள்ளியாகவில்லை. இதுவே, தாய்நில வரலாற்றின் சீரிய தனித் தன்மையாகும். இத்தகைய மாண்புறு வரலாற்றுச் சுவடுகளைச் சுட்டிக் காட்டிச் செல்வதே இச்சிறுநூல். இந்நூல் உருவாக உதவிய அனைவருக்கும், குறிப்பாக இதனை அச்சேற்றி அழகுற அமைத்து, `தமிழ்மண்' பதிப்பக உரிமையாளர், தமிழ்க்காவலர் கோ. இளவழகனார் அவர்களின் துணைவியார் அமிழ்தம் பதிப்பகம் வழி வெளியிடுகிறார். அவர்களுக்கு நன்றிக் கடப்பாடுடையேன். - கோ. தங்கவேலு பதிப்புரை ‘வரலாறு என்பது உணர்ச்சிகளின் தொகுப்பு அல்ல. உண்மை நிகழ்வுகளின் தொகுப்பு.’ ‘வரலாறு என்பது ஓர் இனத்தின் வாழ்வுக்கும் தாழ்வுக்கும் சான்று கூறும் நினைவுச் சின்னம்’. ‘வரலாறு என்பது மாந்த இனத்தின் அறிவுக்கருவூலம்’. ‘தமிழினத்தின் வரலாறு நெடியது; நீண்டது; பழம்பெருமை மிக்கது; ஆய்வுலகிற்கு அரிய பாடங்களைத் தருவது.’ வரலாறு என்பது கடந்த காலத்தின் நிகழ்வுகளையும், வாழும் காலத்தின் நிகழ்வுகளையும், எதிர்காலத்தின் நிகழ்வுகளையும் உயிர்ப் பாகக் காட்டுவது. ‘வரலாறு என்பது என்ன? முற்காலத்தில் என்ன நடந் திருக்கலாம் என்பதைப் பற்றி பிந்தைய தலைமுறையைச் சார்ந்த மாந்தனொருவன் தன் மனத்தில் உருவாக்கிக் கொள்வதே வரலாறாகும் என்பர் காரி பெக்மன் (ழுயசல க்ஷயஉhஅயn: துஹடீளு - 2005) . இவ்வரலாற்றை எழுதுபவர் அறிவுநிலை, மனநிலை, சமுதாயப் பார்வை,பட்டறிவு, கண்ணோட்டம், பிறசான்றுகளை முன்வைத்து எழுதுவர். அஃது அறிவியல், கலை, சமயம் ஆகியவற்றின் ஊற்றாகத் திகழ்வது. ஓர் இனத்தின் வாழ்வும் தாழ்வும் அந்த இனம் நடந்து வந்த காலடிச்சுவடுகளைப் பொறுத்தே அமையும். ஒரு நாட்டின் வரலாற்றிற்கு அந் நாட்டில் எழுந்த இலக்கியங்கள், கண்டறியப்பட்டுள்ள கல்வெட்டுக்கள், புதைபொருள்கள், செப்பேடுகள், நாணயங்கள், பழங்காலக் கட்டடச் சிதைவுகள், சிற்பச் சின்னங்கள், சமயங்கள் தான் சான்று பகர்வன. அத்தனையும் பெருமளவு உள்ள மண் தமிழ்மண்ணே ஆகும். மொழி, இன, நாட்டு வரலாறு என்பது ஒரு குடும்பத்திற்கு எழுதப்படும் ஆவணம் போன்றது. இவ்வரலாறு உண்மை வரலாறாக அமைய வேண்டும் என்பார் மொழிநூல் மூதறிஞர் பாவாணர். இந்தியப் பெருநிலத்தின் வரலாறு வடக்கிலிருந்து எழுதப்படக் கூடாது. அந்த வரலாறு இந்தியாவின் தென்முனையி லிருந்து எழுதப்படவேண்டும். அதுவே உண்மை வரலாறாக அமையும் என்பது மனோண்மணீயம் சுந்தரனார் கூறியது; வின்சென்ட் சுமித் ஏற்றது. தமிழினத்தின் பழமையைப் பல்லாயிரம் ஆண்டுகள் பின்னோக்கிப் பார்த்து, தொல்காப்பியம் உட்பட்ட சங்கநூல்கள் அனைத்தையும் முழுமையாகச் செவ்வனே பயன்படுத்தி ஆங்கிலத்தில் முதன்முதலில் 1929இல் தமிழர் வரலாறு எழுதியவர் பி.டி.சீனிவாசய்யங்கார் ஆவார். அந்நூலில் தமிழரே தென்னாட்டில், ஏன் இந்தியாவில், தொன்று தொட்டு வாழ்ந்து வரும் மண்ணின் மைந்தர்கள் என்பதைத் தம் ஆழ்ந்த ஆய்புல அறிவால் நிறுவினார். தமிழ்நாட்டில் இன்று வரலாறு, மொழியியல் போன்ற துறைகளில் வல்லுநராகத் திகழும் அறிஞர் பி. இராமநாதன் அவர்கள் அந்நூலினை தமிழாக்கம் செய்துள்ளார். அதனைத் தமிழர் வரலாறு (கி.பி.600 வரை) எனும் நூலாகத் தமிழ்மண் பதிப்பகம் 2008இல் வெளியிட்டுள்ளது. இவ்வரலாற்று வரிசைக்கும் திரு. இராமநாதன் அவர்கள் அறிமுகவுரைகள் வழங்கி அணிசேர்த்துள்ளார். பாண்டியர் வரலாறு, பிற்காலச் சோழர்சரித்திரம், பல்லவர் வரலாறு, களப்பிரர் காலத் தமிழகம் (வரலாற்றாசிரியர் நால்வர் நூல்களின் தொகுப்பு), கொங்கு நாட்டு வரலாறு, துளு நாட்டு வரலாறு, தமிழக வரலாறு, தாய்நில வரலாறு, தமிழகச் சமூகப் பண்பாட்டு வரலாறு, எனும் நூல்களைத் தமிழக வரலாற்றுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் தமிழக வரலாற்று வரிசை எனும் தலைப்பில் வெளியிடுகிறோம். இவற்றுள் பெரும்பாலானவை இன்றும் வரலாற்று மாணவர்களும், வரலாற்று ஆய்வாளர் களும் படிக்க வேண்டிய கருவிநூல்களாகவும், என்றும் பயன்தரும் (உடயளளiஉ) நூல்களாகவும் கருதப்படவேண்டியவை. பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழக வரலாற்றுத் துறைகள் ஆகியவற்றின் மாணவர்களும், கல்லூரி/பல்கலைக்கழக ஆய்வுத்துறைகளும் இந்நூல்களை வாங்கிப் பயன் கொள்வாராக. தமிழக வரலாற்றுக்கு அணிகலனாக விளங்கும் இவ்வரலாற்றுக் கருவூலங்களைப் பழமைக்கும் புதுமைக்கும் பெருமை சேர்க்கும் வகையில் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார், ஒளவைதுரைசாமிப்பிள்ளை, மா.இராசமாணிக்கனார், இர,பன்னீர்செல்வம், மயிலை னி.வேங்கடசாமி, மு.அருணாசலம், புலவர் குழந்தை, நடன.காசிநாதன், பேரா.முனைவர். கோ. தங்கவேலு போன்ற பெருமக்கள் எழுதியுள்ளனர். இவ்வருந்தமிழ் பெருமக்களை நன்றி உணர்வோடு நினைவு கூர்கிறோம். தலைமுறை தலைமுறையாகச் சொல்லப்பட்டும் கேட்கப் பட்டும் வந்த அரிய செய்திகளை தம் அறிவின் ஆழத்தால் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு நடுநிலை நின்று உண்மை வரலாறாக எழுதியுள்ள இந் நூல்கள்ஆய்வுலகிற்கும், தமிழ் உலகிற்கும் பெரிதும் பயன்படத் தக்க அரிய வரலாற்றுப் பெட்டகமாகும். பண்டைத் தமிழ்க்குலம் நடந்து வந்த பாதையை அறிந்து கொள்ளவும், இனி நடக்கவேண்டிய பாதை இது என அறுதியிட்டுக் கொள்ளவும், தள்ள வேண்டியவை இவை, கொள்ளவேண்டியவை இவை எனத் திட்டமிட்டுத் தம் எதிர்கால வாழ்வுக்கு வளமானவற்றை ஆக்கிக் கொள்ளவும், தமிழ் இனத்தைத் தாங்கி நிற்கும் மண்ணின் பெருமையை உணரவும், தொலைநோக்குப் பார்வையுடன் இவ்வரலாற்று வரிசையைத் தமிழர் முன் தந்துள்ளோம். வாங்கிப் பயன்கொள்ளுங்கள். தொண்டு செய்வாய்! தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் துடித்தெ ழுந்தே! செயல்செய்வாய் தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் சீறி வந்தே. ஊழியஞ்செய் தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் உணர்ச்சி கொண்டே. பணிசெய்வாய்! தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் பழநாட் டானே. இதுதான்நீ செயத்தக்க எப்பணிக்கும் முதற்பணியாம் எழுக நன்றே. எனும் பாவேந்தர் வரிகளை நெஞ்சில் நிறுத்துங்கள். மொழியாலும், இனத்தாலும் அடிமைப்பட்ட வரலாறு தமிழரின் வரலாறு. இவ்வரலாற்றை மீட்டெடுக்க உழைத்த பெருமக்களை வணங்குவோம். அவ்வகையில் உழைத்து நம் கண்முன்னே வாழ்ந்து மறைந்த பெருமக்களுள் தலை சிறந்தோர் தந்தை பெரியாரும்,மொழி ஞாயிறு பாவாணரும் ஆவர். இப்பெருமக்கள் அனைவரையும் நன்றியுணர்வுடன் இந்த நேரத்தில் வணங்குவோம். அவர்கள் வழி பயணம் தொடருவோம். தமிழ் இனமே! என் தமிழ் இளையோரே! நம் முன்னோரின் வாழ்வையும் தாழ்வையும் ஆழ நினையுங்கள். இனத்தின் மீளாத்துயரை மீட்டெடுக்க முனையுங்கள். - பதிப்பாளர். உள்ளடக்கம் அறிமுகவுரை பதிப்புரை நரல் 9. இரண்டாம் பாண்டியப் பேரரசுக்காலம் 10. விசயநகர ஆட்சிமுறையும் பண்பாடும் 11. நாயக்கர்களின் ஆட்சிமுறையும் பண்பாடும் 12. ஆங்கிலேயர்களின் ஆதிக்க வளர்ச்சி 13. தமிழ்நாட்டுப் பாளையப்பட்டு முறையும் விடுதலைப் போர்களும் 14. இந்திய மறுமலர்ச்சி இயக்கங்களும் தமிழ்நாட்டு மறுமலர்ச்சி இயக்கங்களும் 15. விடுதலைப் போரில் தமிழகம் – காந்தி ஆண்டுமானம் 16. தமிழகத்தில் மக்களாட்சியின் தொடக்கம் 17. விடுதலைக்குப்பின் தமிழகம் 18. விடுதலைக்குப்பின் தமிழகம் II 19. விடுதலைக்குப்பின் தமிழகம் III பிற்சேர்க்கைகள் தமிழகச் சமூகப் பண்பாட்டு வரலாறு (இரண்டாம் பாகம்) இரண்டாம் பாண்டியப் பேரரசுக் காலம் (கி.பி. 1190 - 1310) (அ) பேரரசர்கள் 1. முதலாம் சடையவர்மன் (கி.பி. 1190 - 1217) 2. முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி. 1216 - 1239). 3. இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி. 1238 - 1271) 4. முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி.1261 - 1271) 5. சடையவர்மன் வீரபாண்டியன் (கி.பி. 1253 - 1274) 6. முதலாம் மாறவர்மன் குலசேகரபாண்டியன் - (கி.பி. 1268 - 1311) (ஆ) பாண்டியரின் வீழ்ச்சி (இ) மதுரையில் சுல்தான்கள் ஆட்சி (கி.பி. 1335 - 1378) (ஈ) மாபார் சுல்தானியத்திற்குச் சாவுமணி (உ) பாண்டியர் ஆட்சிமுறை (ஊ) சமுதாய வாழ்க்கை = மார்க்கோபோலோவின் குறிப்புகள் (எ) சமயமும் இலக்கியமும் - (ஏ) கலைகள் 9. இரண்டாம் பாண்டியப் பேரரசுக்காலம் (கி.பி.1190-1310) (அ) பேரரசர்கள் இரண்டாம் பாண்டியப் பேரரசின் வரலாற்றை வரைவதற்குக் கல்வெட்டுச் சான்றுகள் அதிகமுள்ளன. பாண்டியர்களின் கல் வெட்டுகளைத் தவிர சம்காலச் சோழர், காடவராயர், சம்புவராயர், தெலுங்குச் சோழர்கள் அகத்தியர் ஆகியோரின் கல்வெட்டுகளும் துணைச்சான்றுகளாகப் பயன்படுகின்றன. செப்பேட்டுச் சான்று களும் உள்ளன. ஆனால் அவற்றில் பாண்டிய மன்னர்களின் கொடி வழி முறைகளும், கால் வரைமுறைப்படி அரசர் பட்டியலும் அறிய முடியவில்லை. ஆயினும் வரலாற்று அறிஞர்களின் ஆய்வுரைகளின் படி பாண்டியர் வரலாற்றைக் கட்டமைப்பாக்கிக் காட்டலாம். மூன்றாம் குலோத்துங்கனுக்குப் பிறகு (கி.பி. 1178 - 1218) சோழர் மரபில் வலிமை மிக்க அரசர்கள் தோன்றவில்லை . குறுநில மன்னர்கள் தன்னிச்சையாக ஆள முற்பட்டனர். இதனால் சோழப் பேரரசு நிலைகுலையத் தொடங்கியது. இச்சூழலைப் பயன்படுத் திக்கொண்டு பாண்டியர் தங்களின் இரண்டாம் பேரரசை நிலை நாட்டினர். 1. முதலாம் சடையவர்மன் குலசேகரன் (கி.பி 1I90 - 1217) இரண்டாம் இராசேந்திரனுக்குப் பிறகு மூன்றாம் குலோத் துங்கன் சோழப் பேரரசன் ஆனான். இவன் மாறவர்மன் விக்கி ரமபாண்டியன் (கி.பி. 1180 - 1190) என்பானை நீக்கிவிட்டு முதலாம் சடையவர்மன் குலசேகரன் என்பவனைப் பாண்டிய மன்னனாக் கினான். கி.பி. 1190-ல் அரியணை ஏறிய இவன் மூன்றாம் குலோத் துங்கனோடு வேற்றுமை பூண்டான். இதனால் குலோத்துங்கன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தான். பாண்டியனைத் தோற்கடித்து மதுரை அரண்மனையை இடித்து அழித்துவிட்டுச் 'சோழபாண்டியன்' என்னும் விருதுப் பெயருடன் மதுரையில் முடிசூட்டிக் கொண்டான். ஆனால், சில ஆண்டுகளுக்குப்பிறகு குலோத்துங்கன் பாண்டிய நாட்டை முதலாம் சடையவர்மன் குலசேகரனுக்கே அளித்துவிட்டான். குலேசேகரன் சோழருக்கு அடங்கியே ஆண்டான். இவனு டைய அரசியாரின் பெயர் தரணி முழுவதும் உடையாள் என்ப தாகும். இவன் அழகர்மலை சுனைக்கருகில் ஒரு நந்தவனம் வைத் தான் என்று அழகர்கோயில் கல்வெட்டுக் கூறுகிறது. குலசேகரன் 'இராச கம்பீர சதுர்வேதிமங்கலம்' என்னும் ஊரை ஏற்படுத்தி அதனைப் பிரமதேயமாக பிராமணர்களுக்குக் கொடுத்தான். இரண்டாம் பாண்டியப் பேரரசுக்காலம் 2. முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி. 1216-1239) குலசேகரனுக்குப் பின் அரசுக் கட்டிலேறிய இவன் முன்றாம் குலோத்துங்கன் கி.பி. 1212 -ல் இறந்ததும், அவன் மகன் மூன்றாம் இராசராசன் (கி.பி. 1216-1256) பட்டமேற்றபின் நிலவிய சூழலைச் சாதகமாக்கிக் கொண்டு சோழநாட்டின் மீது படையெடுத்து கி.பி. 1219-ல் இராசராசனைத் தோற்கடித்தான், உறையூர், தஞ்சாவூர் ஆகிய நகரங்களைக் கைப்பற்றி அங்கிருந்த மாளிகைகளையும் மண்டபங்களையும் இடித்தான். தீயிட்டு அழித்தான். சோழ அரண் மனைகளில் ஒன்றான பழையாறையில் வீராபிடேகம் செய்து கொண்டான். பின்னர் சிதம்பரம் சென்று ஆடலரசனை வணங்கினான். பாண்டியநாடு திரும்பும்போது தனது பொன்னமராவதி அரண்மனையில் சோழ அரசனுக்கே சோழநாட்டைக் கொடுத்தான். சோழன் பாண்டியருக்குக் (திறை) கப்பம் கட்டி வரலானான். இதனால் மாறவர்மன் சுந்தர பாண்டியனுக்குச் சோணாடு கொண் டருளிய சுந்தரபாண்டியதேவர்' என்றும் சோணாடு வழங்கியருளிய சுந்தரபாண்டிய தேவர்' என்றும் கல்வெட்டுகளில் புகழப்படுகிறான். பேரரசர்கள் சோழருக்குத் துணையாகப் படையெடுத்து வந்ததால் தான் பாண்டியன் சோழநாட்டைத் திரும்பித் தந்தான் என்றும் கல்வெட்டுச் சான்றுகளால் அறிகிறோம். மாறவர்மன் சுந்தரபாண்டியன் மீண்டும் கி.பி. 1231-ல் சோழ நாட்டின் மீது படையெடுத்தான். மூன்றாம் இராசராசன் ஒப்பந்தப்படி பாண்டியனுக்குத் திறை செலுத்த மறுத்ததே இப்படையெடுப்புக்குக் காரணமாகும். பாண்டியன் சோழ நாட்டைக் கைப்பற்றி இராச ராசனைத் துரத்தினான். இராசராசன் மனைவி மக்களுடன் குந்தளநாடு நோக்கி ஓடும்போது, சோழரின் சிற்றரசனும் சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவனுமான கோப்பெருஞ்சிங்கன் சோழனை வழிமறித்துச் சேந்தமங்கலம் கோட்டைச் சிறையிலடைத் தான். இதைக் கேள்வியுற்ற போசள நாட்டு அரசனான வீரநரசிம்மன் தன்படைத் தலைவர்களை அனுப்பி, சோழனைச் சிறை மீட்டான். இந்தச் சம்பவத்தை இந்திய கருணாமிருதம்' என்ற சமற்கிருத நூலும், கோப்பெருஞ்சிங்கனுடைய வயலூர் கல்வெட்டும் விவரிக் கின்றன. இராசராசனைத் தெள்ளாற்றில் கோப்பெருஞ்சிங்கன் சிறைப் பிடித்ததாக வயலூர்க் கல்வெட்டுக் கூறுகிறது. சிறைமீட்டதோடு நில்லாமல் போசள மன்னன் வீரநரசிம்மன் பாண்டியனை மகேந்திர மங்கலத்தில் தோற்கடித்தான் என்று போசளர் கல்வெட்டுகள் கூறுகின்றன. ஆயினும், பாண்டியரின் ஆதிக்கம் முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் காலத்தில் வடக்கே நெல்லூர் வரை பரவியது. சிறிது காலம் அபாய் அறிகுறியாகத் தென்பட்ட போசளர் அச்சுறுத்தலும் காலப்போக்கில் மறைந்தது. 3. இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி.1238-1251) இவன் காலத்தில் சோழநாட்டை ஆண்டவன் மூன்றாம் இராசேந்திரன் (கி.பி. 124 - 1279) ஆவான். மாறவர்மன் சுந்தர பாண்டியனுக்கு மாமன்னன் வீரசோமேசுவரன் போசளநாட்டு மன்னனாக இருந்தான். கொங்கு நாட்டை ஆண்ட விக்கிரமச் சோழன் இவனுக்கு மைத்துனன் ஆவான். இந்நிலையில் மூன்றாம் இராசராசன் பாண்டியனைத் தோற்கடித்துத் தனக்குத் திறைச்செலுத்தும்படிச் செய்தான். பாண்டியனுக்கு உதவியாகப் போசள மன்னன் வீரசோமேசுவரன் வந்தான். சோழனைத் தோற்கடித்துப் பாண்டியனை மீண்டும் நிலை நிறுத்தினான். இதனால் வீரசோமேசுவரனுக்குப் 'பாண்டியர் குலசம்ரட்சகன்' என்ற விருது பெயர் ஏற்பட்டது. இவ்வாறு, போசளர்கள் தமிழக அரசியலில் தலையிட்டுத் தங்கள் செல்வாக்கை நிலைநாட்டிக் கொண்டனர். இதற்குமுன் சோழர்கள் வென்று பாண்டியர் தோற்றபோது போசளர் சோழருக்கு உதவியாக வந்து காப்பாற்றிச் 'சோழர் குலரட்சகர்' என்ற பெயர் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது - 4. முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1261-1271) இரண்டாம் பாண்டியப் பேரரசர்களில் தலையாய சிறப்பு மிக்கவன் இவனேயாவான். பாண்டியநாட்டில் போசளர் செல்வாக்கு பெறுவது பாண்டிய நாட்டுக்கு ஆபத்தானது என்பதை உணர்ந்த இவன் கண்ணனூரில் இருந்து ஆண்டு வந்த போசள மன்னன் சோமேசுவரனைக் (கி.பி. 1262-ல்) கொன்றான், சேந்தமங்கலத்தில் இருந்து ஆண்ட காடவ மன்னன் கோப்பெருஞ்சிங்கனை அடி பணியவைத்தான். சேரமன்னன் வீரரவி உதயமார்த்தாண்டவர் மனை வென்றான். இவ்வாறு போசளர், காடவர், சேரர் ஆகி யோரைப் பாண்டியருக்கு அடிபணியச்செய்து சோழ மன்னனிட மிருந்து ஆண்டுதோறும் திறை பெற்றான். இவன் காலத்தில் சோழ நாட்டை ஆண்டவன் மூன்றாம் இராசேந்திர சோழன் (கி.பி. 1246 1279) ஆவான். இவனே சோழப் பேரரசர்களில் கடைசி அரசன் என்பது குறிப்பிடத்தக்கதாம். இத்தகைய வெற்றிகளைப் பெற்ற முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் தில்லைக்கூத்தரை வணங்கி, திருவரங்கத்தில் துலாபாரம் செய்து, பிராமணருக்குத் தானம் வழங்கி 'ஆத்தும் 'திருப்தி அடைந்தான். திருவரங்கம், சிதம்பரம் கோயில் கூரைகளுக்குப் பொன்தகடும் பதித்தான். காஞ்சியை ஆண்ட தெலுங்குச் சோழ அரசன் விசய கண்ட கோபாலனைக் கொன்று, நெல்லூர் வரை சென்று அரசன் இரண்டாம் பாண்டியப் பேரரசுக்காலம் தளபதியைத் தோற்கடித்து நெல்லூரில் வீராபிடேகம் செய்து கொண்டான். கண்டகோபாலன் தம்பியர் தன்னடிபணியவே காஞ் சியை அவர்களிடம் திருப்பி அளித்தான். அவர்கள் பாண்டியனுக்குத் திறை கட்டி வந்தனர். இவ்வாறு பல திசைகளிலும் ஆதிக்கம் பெற்றதால் 'சகல பூரணச்சக்கரவர்த்தி ''எம்மண்டலமும் கொண்டருளிய தேவர்' 'எல் லாம் தலையான பெருமாள்' போன்ற சிறப்புப் பட்டங்களைப் பெற்றான். இத்தகைய வெற்றிகளால் கிடைத்தக் கொண்டிப் பொருளைத் திருவரங்கம் கோயில், சிதம்பரம் கோயில்களுக்குப் பொன்கரைவேய்ந்ததோடு 'துலாபாரம் நடத்திப் பிராமணர்களுக்குத் தானம் வழங்கியதை மேலே கண்டோம் . இதனால், இவனுக்குப் 'பொன்வேய்ந்த பெருமாள்' என்று சிறப்புப் பெயர் ஏற்பட்டது. திருவரங்கப்பெருமானுடைய திருமேனியைப் பொன்னால் செய்து அளித்தான். கருவறை உட்புறச் சுவர்களையும், மூன்று விமானங் களையும் பொன்கரை வேய்ந்தான். கோயிலுக்கு நவரத்தின அணிகலன் களையும், பொற்கிரீடம், பொற்கலசங்கள், பொற்குடை முத்தாரம், மரகதமாலை முதலியவற்றையும் தானமாக வழங்கினான். இதைப் போலவே பல தானங்களைச் செய்ததால் சிதம்பரம் மேலைக் கோபுரம் 'சுந்தரபாண்டியன் கோபுரம்' என்றழைக்கப்படுகிறது. இவ்வாறு திக்குவிஜயம் செய்து பல வெற்றிகளைப் பெற்ற சடைய வர்மன் சுந்தர பாண்டியன் ஈழ நாட்டின் மீது படையெடுத்து அதன் வட பகுதியைக் கைப்பற்றினான். எஞ்சிநின்ற கொங்கு நாட்டையும், அதை அடுத்துள்ள மகத நாட்டையும் கைப்பற்றினான். 'மகத நாடு' என்பது சேலத்திற்கும் ஆற்காடு மாவட்டங்களுக்கும் இடையே யுள்ள பகுதிக்குப் பெயராயிருந்தது. வானகோவரையர் அல்லது வாணாதிராயர் என்னும் சிற்றரசர்களிடம் அப்பகுதி இருந்தது. - 5. சடையவர்மன் வீரபாண்டியன் கி.பி. 1253 - 1274) இவன் சுந்தரபாண்டியனுக்குத் துணையாக அவனோடு சேர்ந்து ஆண்டதாக அறிகிறோம். இவன் ஈழ நாட்டில் பெற்ற வெற்றியைப் பற்றியும் சான்றுகள் உள்ளன. 6. முதலாம் மாறவர்மன் குலசேகரன் (கி.பி. 1268 - 1311) இவனும் சுந்தரபாண்டியனோடு சேர்ந்து மூன்று ஆண்டுகள் ஆண்டதாகச் சான்றுகள் உள்ளன. இந்த இரண்டு அரசர்களுக்கும் சுந்தரபாண்டியனுக்குமிடையே இருந்த ஆட்சித் தன்மைகள் விளங்கவில்லை. உள்நாட்டுக் குழப்பங்களும், போர்களுமே பாண்டியரின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாகும், வாரிசுரிமைப்போர் மாறவர்மன் குலசேகரப் பாண்டியனுக்குச் சடையவர்மன் சுந்தர பாண்டியன், சடையவர்மன் வீரபாண்டியன் ஆகிய இரண்டு மகன்கள் இருந்தனர், சுந்தர பாண்டியன் அகவையில் பெரியவன், பட்டத்து ராணியின் மகன், வீரபாண்டியன் அகவையில் இளைய வன் வைப்பாட்டியின் மகன். ஆனால் குலசேகரப் பாண்டியன் பட்டத்திற்குரிய மூத்த மகனான சுந்தரபாண்டியனைத் தள்ளிவிட்டு, வைப்பாட்டியின் மகனான வயதில் இளைய வீரபாண்டியனுக்கு மூடிசூட்டினான். மரபுப்படி, பட்டத்து ராணியின் பிள்ளைக்குத்தான் அரசுரிமைச் சேரும். பிள்ளைகள் எத்தனைப்பேர் இருந்தாலும், முத்தவனுக்கே அரசுரிமையுண்டு என்றும் மரபுகளையும் மீறி, தன் வைப்பாட்டியின் மகனும், அகவையில் குறைந்தவனும் ஆன வீரபாண்டியனுக்கு முடிசூட்டியதைச் சுந்தரபாண்டியன் எதிர்த்தான். சினங்கொண்டு தன் தந்தை குலசேகரனை கி.பி. 1310 - ல் கொன்றே விட்டான். இவ்விரு புதல்வர்களும் இளவரசர்களாய் இருந்துகொண்டு பாண்டிய நாட்டின் இருவேறு பகுதிகளை ஆண்டார்கள். சுந்தர பாண்டியன் போர்க்கோலம் பூண்டான். தனக்கு ஆதரவு தேட முற்பட்டான், மாலிக்காபூர் படையெடுப்பு இந்நிலையில் தில்லி சுல்தானான அல்லாவுதீன் கில்ஜியின் படைத் தலை வனான மாலிக்காபூர் தென்னிந்தியாவை நோக்கிப் படையெடுத்தான். சுந்தரபாண்டியன் மாலிக்காபூரை அணுகி, தான் பட்ட மேற்க உதவுமாறு வேண்டினான். மாலிக்காபூருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பும், வரவேற்புமாயிற்று. மாலிக்காபூரின் அட்டகாசம், அட்டூழியம், கொள்ளைகள் சுந்தரபாண்டியனுக்காகப் போரிடப் புறப்பட்ட மாலிக்காபூர் உறையூர் சென்று வீரபாண்டியனைத் தோற்கடித்துத் துரத்தினான். வீரபாண்டியன் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் ஓடினான். மாலிக்காபூர் அவனை விடாது பின் தொடர்ந்தான். இத்தகையர்களுடன் போர் நிகழும்போது மாலிக்கா பூருக்குச் சாதகமாகச் சூழ்நிலைகள் ஏற்பட்டன. வீரபாண்டிய னுடைய படையில் ஏற்கனவே இருந்த 20,000 இசுலாமியர் உடனே மாலிக்காபூர் பக்கம் சாய்ந்து வீரபாண்டியனையே தாக்க முற்பட்ட னர். தன்னை இரண்டகம் செய்துவிட்ட இசுலாமியரைக் கண்டு மனம் புழுங்கிய வீரபாண்டியன் கண்ணனூர் ஓடினான் அவனை விடாது பின்தொடர்ந்து மாலிக்காபூர் வழிநெடுக இருந்த தமிழர்களைக் கொன்று குவித்தான். பொன்னையும், பொருளையும் வாரிக்கொண் டான். வீரபாண்டியன் தனது கருவூலத்தை 120 யானைகள் மீது ஏற்றிக் கொண்டு கண்ணனூர் ஓடும் போது, மாலிக்காபூர் அந்த 120 இரண்டாம் பாண்டியப் பேரரசுக்காலம் யானைகளை அபகரித்து அவற்றிலிருந்த பொன்னையும் பொதுளை யும் அள்ளிக் கொண்டான். வீரபாண்டியன் வழியில் சிதம்பரத்தை அடைந்து இளைப்பாற நினைத்தான். ஆனால், சிதம்பரம் சென்ற மாலிக்காபூரைக் கண்டதும் அங்கிருந்து ஓடிவிட்டான். தில்லை நடராசன் கோயிலையும், அதன் பொன்வேய்ந்த அம்பலத்தையும் கண்ட மாலிக்காபூர் அதிர்ஷ்ட்ட தேவதையின் மடியிலே தான் இருப்பதாகக் களி கூர்ந்தான். பொன் தகடுகளைப் பெயர்த்தெடுத்துக் கொண்டான். நடராசனையும், அம்பலத்தையும் இடித்து நிரவினான். சிதம்பரத்தையே அழித்தான். வீடுகளைத் தீக்கிரையாக்கினான். தமிழர்களைக் கொன்று குவித்தான். தான் கொள்ளையடித்த பொன்னையும், பொருளையும் சிதம்பரத்தி விருந்த பாண்டியர் யானைகள் 250-ல் ஏற்றிக்கொண்டு திருவரங் கம் வந்தான், கி.பி.1311-ல் திருவரங்கப் பெருமாள் கோயிலையும் இடித்தான். அதன் மீது வேய்ந்திருந்த பொன் தகடுகளையும், கோயில் பண்டாரத்தையும் வாரிக் கொண்டான். கண்ணில்பட்ட தமிழர்களின் தலைகளை யெல்லாம் வெட்டினான். திருவரங்கத்தில் இருந்து மதுரை நோக்கிப் புறப்பட்ட மாலிக்கா பூரின் வெறிச் செயலையறிந்த சுந்தரபாண்டியன் தலை தப்பினால் போதுமென்று அகப்பட்டதை யெல்லாம் சுருட்டிக் கொண்டு எங்கோ ஓடிவிட்டான். மதுரையை அடைந்த மாலிக்காபூர் அங்கிருந்த அரண் மனையில் ஒன்றுமில்லாததைக் கண்டான், முன்றே யானைகள் மட்டும் தொழுவத்தில் கட்டப்பட்டிருந்தன. ஏமாற்றம் அடைந்த மாலிக்காபூர் சினங்கொண்டு மீனாட்சியம்மன் கோயிலுக்குத் தீயிட் டான். மதுரைத் தமிழர்களைக் கண்டதுண்டமாக வெட்டிக் குவித்தான். மதுரையில் இருந்து நேரே இராமேசுவரம் சென்றடைந்த மாலிக்காபூர் அங்கிருந்த மக்களைப் படுகொலை செய்தான். கோயிலைக் கொள்ளையடித்து பொன்னையும் பொருளையும் கைப்பற்றிக் கொண்டு திரும்பும் முன் தனது வெற்றித்தூணை இராமேசுவரத்தில் நாட்டினான். அங்கு ஒரு பள்ளிவாசலையும் கட்டினான். இதற்கிடையில் சுந்தரபாண்டியனின் சிற்றப்பா விக்கிரம் பாண்டியன் என்பவன் பெரும்படைத்திரட்டி மாலிக்காபூரை எதிர்க்க முற்பட்டான். கொல்லை அழிந்த பிறகு குடிசைப் போட்டால் என்ன பயன்? மாலிக்காபூர் தில்லி திரும்புதல் இவ்வாறு பாண்டிய நாட்டையே சுடுகாடு ஆக்கிய மாலிக் காபூர் 612 யானைகளையும், 20,000 குதிரைகளையும், 96, 000 மணங்கு பொன்னையும், பொருளை யும், அளவிட முடியாத முத்துக் களையும், கொள்ளைப்பொருளாக எடுத்துக்கொண்டு தில்லி திரும்பினான்; பல ஆயிரம் ஆண், பெண், குழந்தைகளைக் கொலை செய்தான். சிதம்பரம், திருவரங்கம் கோயில்களைத் தீக்கிரையாக் கினான்; அக்கோயில்களில் இருந்து பண்டாரங்களைக் கொள்ளை யடித்தான், பொன் தகடுகளைப் பெயர்த்து எடுத்துச் சென்றான், மாலிக்காபூர் படையெடுப்பின் விளைவுகள் மாலிக்காபூர் நாட்டைக் கைப்பற்றும் நோக்கத்துடன் படை யெடுக்கவில்லை அரண்மனைகளிலும், கோயில்களிலுமுள்ள செல்வத்தைக் கொள்ளையடிக்க வேண்டுமென்பதே அவன் நோக்க மாகும். அந்த நோக்கம் எதிர்ப்பின்றி முழுக்க, முழுக்க நிறைவேறி விட்டது. அவன் எதிர்பார்த்ததற்கு அதிகமாகவே கொள்ளைப் பொருள்கள் எதிர்ப்பின்றிக் கிடைத்தன. க. அ. நீலகண்ட சாத்திரியார் கூற்றுப்படி மாலிக்காபூரின் அட்டூழியங்களும், கொள்ளைகளும், இரண்டாம் பாண்டியப் பேரரசின் வலுவின்மையையே காட்டுகிறது. அடிப்படையில் பார்க்கும்போது தமிழர்களாகிய பாண்டிய மன்னர்கள் இல்லறத்தில் ஒழுக்க சீலராக இல்லாமல் கண்டபடி பிள்ளைகளைப் பெற்றதும், காமமோகத்தில் மரபையும், பண்பாட் டையும் மறந்ததே ஆகும். வீரபாண்டியனுடைய படையில் இருந்த இசுலாமிய படைவீரர்கள் மாலிக்காபூர் என்ற மற்றொரு இசுலாமி யனைக் கண்டதும் செஞ்சோற்றுக் கடனையும் மறந்து அவனிடம் சேர்ந்துவிட்டனர். ஆனால் ஒரு தகப்பனுக்கு பிறந்த இரு உடன் பிறப்புகள் குடிமக்களின் உயிருக்கு எமனாக மாறித் தமிழனே தமிழனை அழிக்கும் நிலைக்கு வந்துவிட்டனர். கடைசியில் இரு வரையும் ஏய்த்துவிட்டுத் தில்லிக்குத் திரும்பினான் மாலிக்காபூர். இதுவே வரலாற்றுப் படிப்பினை ஆகும். சேரர் படையெடுப்பு மாலிக்காபூர் நீங்கியவுடன் சுந்தரபாண்டியனும், வீரபாண்டி யனும் மதுரையை மாறி மாறி ஆண்டனர். ஆனால் மாலிக்காபூரின் படையெடுப்பு பாண்டியர் ஆட்சியில் ஒரு ஓட்டையை ஏற்படுத்தி விட்டது. இச்சூழலைச் சாதகமாக்கிக் கொண்டு, அண்டை நாட்டவ னான சேர மன்னன் இரவிவர்மன் குலசேகரன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தான். இதுவே, மாலிக்காபூர் படையெடுப்பின் பின்விளைவு ஆகும். இரவிவர்மன் பாண்டிய நாட்டின் பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டு, தொண்டை மண்டலப் பகுதி மீதும் படை யெடுத்தான். காஞ்சி வேகவதி நதிக்கரையில் முடிக்கொண்டான் என்று வரதராசப் பெருமாள் கோயில் கல்வெட்டு கூறுகிறது. பாண்டி யனை நசுக்கினான் எனச் சித்திரிக்கும் கருத்துடைய மீன் மீது அங்குசம் பாய்ச்சுவது போன்ற சின்னமும், அதில் குலசேகரனின் பெயரும் பொறித்த கல்வெட்டு பூவிருந்தவல்லிப் பெருமாள் இரண்டாம் பாண்டியப் பேரரசுக்காலம் கோயிலில் உள்ளது. சுந்தரபாண்டியனும், வீரபாண்டியனும் இவனால் வெல்லப் பட்டதையே இது காட்டுகிறது. காகதியர் படையெடுப்பு காகதிய மன்னன் பிரதாபருத்திரன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தான். தன் தானைத் தலைவன் முப்பிடி தண்ட நாயகன் தலைமையில் காகதியப் படைகளைப் பாண்டிய மன்னர்கள் மீது ஏவினான். வீரபாண்டியன், சுந்தரபாண்டியன், விக்கிரமபாண்டியன், குலசேகர பாண்டியன், பராக்கிரம பாண்டியன் ஆகிய ஐவரும் எதிர்த்து நின்றனர். ஆயினும் காகதியப் படைகளே வெற்றி பெற்றன. காஞ்சியைக் காகதியர்கள் கைப்பற்றினார்கள். சேர அரசன் இரவிவர்மன் காஞ்சியில் இருந்து வெளியேறினான். காகதியர் தங்கள் பிரதிநிதியான மானவீரனிடம் காஞ்சியை ஒப்படைத்தனர். எனவே, பாண்டியர் காஞ்சிப் பகுதியை இழக்கலாயினர். உள் நாட்டுப் பூசல்களும் குறுநில மன்னர்கள் எழுச்சியும் இந்நிலையில் வீரபாண்டினுக்கு எதிராக அவனுடைய மக்களான சமுத்திர பாண்டியனும், பராக்கிரம பாண்டியனும் கலகம் செய்தனர். இதுவே அரியணையைக் கைப்பற்றும் போர். இது ஆட்சியை ஆட்டங் காணச் செய்தது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக் கொண்டு குறுநில மன்னர்கள் திறை செலுத்துவதை நிறுத்தி விட்டுத் தனித்தாள முற்பட்டனர். இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் சம்புவராயர், வாணாதிராயர் ஆகியோராவர். சம்புவராயர்கள் முதலில் சோழர்களின் மூன்றாம் இராசராசன் (கி.பி. 1216-1257] காலம் வரை அதிகாரிகளாகவும், படைத்தலைவர் களாகவும், நாடு காவலர்களாகவும், பின்னர் சிற்றரசர்களாகவும் பணியாற்றினர். இவர்கள் வடஆற்காடு, தென் ஆற்காடு, செங்கை ஆகிய பகுதிகளில் ஆதிக்கம் பெற்றிருந்தனர். சோழர்களின் ஆட்சி வீழ்ச்சியுற்றபோது சேந்தமங்கலத்திலிருந்த காடவராயன் கோப் பெருஞ்சிங்கன் தனித்தாள முற்பட்டான். இவனைப் போலவே சோழர் வீழ்ச்சியடைந்தபோது சம்புவ ராயர்களும் தனித்தாள முற்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் 'படவேடு' என்னும் காட்டரண்மிக்க கோட்டை நகரைத் தலைநகர் ராகக் கொண்டு தனித்து ஆளத் தொடங்கியவன் இராசகம்பீர சம்புவ ராயன் (கி.பி. 1256 - 1268) என்பவன் ஆவான். முதலில் சோழரின் கீழ் சிற்றரசனாக 123 முதல் 1257வரை இருந்த இவன், பின்னர் தனி அரசனான். ஆனால், தெலுங்குச் சோழனான விசயகண்ட கோபா லன் இவனைக் கொன்று தன் அரசுடன் படவேட்டை இணைத்துக் கொண்டான். கி.பி. 1267 - ஆம் ஆண்டிற்குப் பின் சம்புவராயர்கள் விசய கண்ட கோபாலனுக்கு உட்பட்டனர். பாண்டியர் நிலை குலையும்போது ஏகாம்பரநாதன் குலசேகரசம்புவராயன், ஆலன் ன்னும் காட்டி தொடங்கியது. முதலில் நீர் மகன் வென்றுமண்கொண்ட சம்புவராயன் ஆகியோர் தெலுங்குச் சோழரையும், பாண்டியரையும் முறியடித்து இரண்டாம் தன்னுரி மைச் சம்புவராயர் ஆட்சியை ஏற்படுத்தினார்கள். சம்புவராயர்களைப் போலவே வாணாதிராயரும் பாண்டி யரின் கீழ் இருந்த குறுநில மன்னர்களில் இருந்து தனித்தாள் - முற்பட்டனர். இ) மதுரையில் சுல்தான்கள் ஆட்சி (கி.பி. 1335 - 1378) தில்லி சுல்தானான கியாசுதீன் துக்ளக், தன் மகன் உலுகான் என்பனை அனுப்பி கி.பி. 1327-ல் மதுரையைக் கைப்பற்றினான். இந்த உலுகான்தான் பின்னாளில் தில்லி சுல்தான்களின் விந்தை மனிதனான முகமது பின் துக்ளக் ஆவான். மதுரை சுல்தானியத்தின் ஒரு மாநிலமாயிற்று. இதனைத் தில்லி சுல்தானின் ஆளுநராக ஆள 'சலால்உதீன்சுசன்சா' என்பவன் அனுப்பப்பட்டான். கி.பி. 1335-ல் தில்லியில் ஏற்பட்ட குழப்ப நிலையைப் பயன்படுத்திக் கொண்டு சலால்உதீன்சுசன்சா தானே மதுரையைத் தனித்தாள முற்பட்டான். ஆகவே, மதுரையே ஒரு 'சுல்தானியம்' ஆயிற்று. இசுலாமிய வரலாற்று ஆசிரியர்கள் இவனை 'முதல் மாபார் சுல்தான்" என்கின்றனர். மதுரையை அவர்கள் 'மாபார்' என்றழைத்தனர், இவனில் இருந்து தொடங்கி சுமார் 40 ஆண்டுகள் முசுலீம்கள் மதுரையை ஆண்டனர். மாபார் சுல்தான்கள் 1. சலால்கதின் சுசன்சா (கி.பி. 1335 - 1340) முதல் மதுரை சுல்தான் ஆன இவன் ஐந்து ஆண்டுகள் ஆண்டான். தன்னுடைய பெயராலேயே நாணயங்களை வெளி யிட்டான். தன்னை நபிகள் நாயகத்தின் நேரடி உறவினன் என்று கூறிக் கொண்டான். இவனுடைய மகளைப் பெயர் பெற்ற இசுலாமிய வரலாற்று ஆசிரியனான இபின்பாதுதாதிருமணம் செய்து கொண்டான். சலால்உதீன் சுசன்சாவை அவனுடைய அமீர்களில் ஒருவனான அலாவுதீன் உதாசி என்பவன் கொன்று விட்டுத் தானே சுல்தானாகி விட்டான். உதாசி திருவண்ணாமலையில் இருந்து ஆண்ட வல்லாளனை எதிர்த்துப் போரிட்ட போது போரில் கொல்லப் பட்டான். அவனுக்குப்பின் அவனுடைய மருமகன் கியாசுதீன் பிரோசா மதுரை சுல்தான் ஆனான். ஆனால் அவன் சுல்தானான 40 ஆம் நாளில் அவனைக் கியாசுதீன் தங்கனி என்பவன் கொன்று விட்டுத் தானே சுல்தானானான். 2. கியாசுதீன் தங்க ணி (கி.பி. 1340 - 42) கொலைகாரனான இவனுடைய ஆட்சி மூன்று ஆண்டுகள் நிலைத்திருந்தது. திருவண்ணாமலையில் இருந்து ஆண்ட 80 இரண்டாம் பாண்டியப் பேரரசுக்காலம் அகவை நிரம்பிய மூன்றாம் வீரவல்லாளன் முன்னறிவு அற்றவன். படவேட்டை ஆண்ட சம்புவராயரைத் தூண்டிப் பாண்டியரின் வடக்குப் பகுதியைக் கைப்பற்றி ஆளும்படிக் கூறினான். தானே பலமுறை முயன்று மதுரை சுல்தான்களைத் துரத்த முற்பட்டபின் முன்யோசனை இல்லாமல் கண்ணனூருக்கு அருகில் கொப்பம் என்னுமிடத்திலிருந்த முகமதியர் கோட்டையை முற்றுகையிட்டான். கியாசுதீன் தங்கனி வல்லாளனைத் தோற்கடித்து அவனைச் சிறைப் பிடித்தான், யானை, குதிரை, செல்வங்களைக் கொள்ளை யடித்தான். வல்லாளனைக் கொன்று அவன் தோலை உரித்து அதில் வைக்கோலைத் திணித்து மதுரை நகர் மதில் மேல் தொங்கவிட்டான். மேலும் பல ஆயிரம் இந்துக்களைச் சிறைபிடித்து அவர்களின் தலைகளை வெட்டி மாலையாகக் கோர்த்து ஆலங்களில் மாட்டி னான்; தோலை உரித்து வைக்கோல் திணித்து மரங்களில் தொங்க விட்டான்; தாய்மார்களின் மார்பகங்களை அறுத்தான்; பச்சிளங் குழந்தைகளையும் கண்டதுண்டமாக வெட்டினான். முதல் சுல்தானான சலால்உதீன் சுசன்சாவின் மற்றொரு மகளை கியாசுதீன் தங்கனி மணந்திருந்தான். அவனுடைய சகலனான வரலாற்றாசிரி யன் இபின்பாதுதா இவனுடைய கொலைச் செயல்களைக் குறித்து வைத்ததோடு, இவற்றைக் காணச் சகியாமல் மதுரையை விட்டே வெளியேறி விட்டதாக எழுதியுள்ளான். கியாசுதீன் தங்கனிக்குப் பிறகு அவன் மருமகன் நசீருதீன் (கி.பி. 1342-44) மதுரையின் சுல்தான் ஆனான். இவனுக்குப் பின் சுதில்சா (கி.பி. 1344-59), முபாரக்சா (கி.பி. 1359-68) கடைசியாக சிக்கந்தர்சா (கி.பி. 1368 - 78) ஆகியோர் ஆண்ட னர். இந்த சுல்தான்கள் மதுரைப் பகுதியை மட்டுமே ஆண்டனர். அப்போது, பாண்டியன் மாறவர்மன் குலசேகரன் (கி.பி. 1314 - 1346), மாறவர்மன் வீரபாண்டியன் (கி.பி. 1334 - 1380), மாற வர்மன் பராக்கிரம பாண்டியன் (கி.பி. 1325 - 1352) ஆகியோர் பாண்டிய நாட்டின் பல பகுதிகளிலும் ஆண்டார்கள். இவர்கள் முகமதியரை மதுரையில் இருந்து விரட்ட வேண்டும் என்றனர். ஆனால் இவர்கள் அனைவரும் ஒன்று சேரவில்லை. இதைப் போலவே சோழ நாட்டவரும், தொண்டை நாட்டவரும், போசளரும் விரும்பினர். இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இருந்தால் சுல்தான்களைத் தொடக்கத்திலேயே துரத்தி இருக்கலாம். மேலும் இவர்களிடம் படை வலிமை இல்லை. இந்த நிலையில் இந்துப் பண்பாட்டைக் காப்பதற்கென்றே தோன்றிய விசயநகர மன்னரின் கவனம் மதுரைப் பக்கம் திரும்பியது. (ஈ) மாபார் சுல்தானியத்திற்குச் சாவுமணி விசய நகர மன்ன ன் முதலாம் புக்கன் (கி.பி. 1344-77) மகன் குமாரகம்பண்ணன் ஒரு பெரும்படையுடன் முல்பகாலில் இருந்து புறப்பட்டு காட்பாடி வழியாகப் படவேடு வந்தான். சம்புவ ராயர்களை முதலில் வென்று தன் ஆதிக்கத்தை ஏற்கச் செய்தான். அவர் களையும், போசளர்களையும் சேர்த்துக்கொண்டு மதுரை மீது படை யெடுத்து மதுரையைக் கைப்பற்றினான். இசுலாமியர் ஆட்சிக்குச் சாவுமணி அடிக்கப்பட்டது. கம்பண்ணன் வெற்றியை அவன் மனைவி தான் எழுதிய 'மதுராவிசயம்' என்ற சமற்கிருத பாவியத்தில் தனக்கு ஒரு தேவதைக் கனவில் தோன்றி வீரவாளைக் கொடுத்து, துலுக்கரை அழித்தொழித்து மதுரையை விட்டுத் துரத்தும் படிக் கூறியதாகவும், அந்தவாளினால்தான் கம்பண்ணன் சம்புவராயரையும், துலுக் கரையும் வென்று கடைசியாக கி.பி. 1378-ல் சுல்தானியர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்ததாகவும் கூறுகிறாள். விசயநகர குமார கம்பண்ணனும், அவனுக்குப்பின் இரண்டாம் அரிகரனும் திருக்காளத்தி, திருப்பருபதம், சிதம்பரம், அகோபிலம், திருப்பதி, திருவரங்கம் ஆகிய இடங்களிலிருந்த சைவ, வைணவக் கோயில்களைச் செப்பனிட்டு, திருப்பூசைகள் நடக்க மானியங்களும் வழங்கினர். இந்து மதமும், பண்பாடும் புத்துயிர் பெற்றன. சோழ, பாண்டிய, கொங்கு, தொண்டை மண்டலப் பகுதிகள் பின்னர் விசயநகரப் பேரரசின் பகுதிகளாயின. (உ) பாண்டியர் ஆட்சிமுறை பிற்காலப் பாண்டியர் ஆட்சிமுறை முற்காலப் பாண்டியர் ஆட்சிமுறை, சோழர் ஆட்சிமுறை ஆகியவற்றைத் தழுவியே இருந்தது. எனவேதான் இரண்டாம் பாண்டியப் பேரரசுக் கால ஆட்சிமுறையை இடைக் காலத் தமிழகத்தில் நிலவிய ஆட்சிமுறை" எனக் கூறுதல் நன்று. ஆட்சிப்பிரிவுகள் நாடு மண்டலம், வளநாடு, ஊர் எனப் பிரிக்கப்பட்டிருந்தது. கல்வெட்டுச் சான்றுகளின்படி மதுரோதய வளநாடு, சீவல்லப வளநாடு, பராந்தக வளநாடு, சுமிதரண வளநாடு முதலிய நாட்டுப் பிரிவுகளிருந்தன. இவ்வாறு பல நாடுகள் இருந்தனவென்று தி. வை சதாசிவப் பண்டாரத்தார் கூறுகிறார். 'முட்டம்', 'கூற்றம்', 'நாடு' எனவும் இவை முடிகின்றன." அரசர் ஆட்சி நாடு பலவாகப் பிரிக்கப்பட்டு அதிகாரிகளால் ஆளப்பட்டா லும், நாடு முழுமைக்கும் அரசனே தலைவன் ஆவான். ஆட்சி, படை, இரண்டாம் பாண்டியப் பேரரசுக்காலம் நீதி ஆகியவற்றிற்கு அரசனே நடுநாயகமாவான். துறைகளுக் கேற்றவாறு அதிகாரிகளை அமர்த்தி ஆணைகளைப் பிறப்பித்து அவற்றின்படி ஆளச் செய்தான், மண்டலத் தலைவர்களாகத் தம் மக்களுக்கு இளவரசர் பட்டம் சூட்டி அவர்களை ஆளச் செய்தான். மன்னரின் முடிசூட்டு விழா, இளவரசுப் பட்டம் சூட்டும் விழா, பிறந்த நாள் விழா ஆகியவை நாட்டின் தேசிய விழாக்களாகும். இவ்விழாக் காலங்களில் குற்றவாளிகளை மன்னித்தல், வரி நீக்குதல், முதலியன மன்னரின் பரிசுகளாக மக்களுக்குக் கிடைத்தன. அமைச்சரவை அதிகாரிகள் ஆட்சியில் துணை புரிய அரசருக்கு அமைச்சரவை இருந்தது. அமைச்சர்கள் மகாமந்திரர் எனப்பட்டனர். படைத் தலைவரைச் சேனாபதி என்றும், படைகள் அனைத்துக்கும் தலைவராயிருப்ப வரை மகாசாமந்தன் என்றும் அழைப்பர். காளிங்கராயன், மழவ ராயன், பல்லவராயன், முனையாதிராயன் முதலிய உயர் அதிகாரி களும் அரசருக்குத் துணையாகயிருந்தனர். அரண்மனைப் பணிகளைக் கவனித்தவர்கள் அகப்பரிவார முதலி, திருவாசல் முதலி என்றழைக்கப் பட்டனர். அந்தப்புரத்துப் பணிப்பெண்திருவுடையாள் என்று அழைக்கப் பட்டாள். அரசர் காட்சிக்கு எளியவர், கொலுவீற்றிருக்கும் போதும், உலா செல்லும் போதும், வேட்டையாடும் போதும் கூட மக்களின் குறைகேட்டு ஆணைகளை இடுவான், அவை உடனுக்குடன் செயல்படுத்தப்படும். வருவாய்த் துறை வருவாய்த்துறை அதிகாரிகளுக்குப் புரவுவரித்திணைக்களத்து முகவெட்டி' எனப்பெயர். இவர்களின் தலைமை அதிகாரிக்குத் திணைக்கள நாயகம்' எனப் பெயர், நிலங்கள் அளக்கப்பட்டு, தரம் பிரிக்கப்பட்ட பின்பே வரி நிர்ணயம் செய்யப்படும். இவ்வாறு அளந்து வரி நிர்ணயம் செய்வோரை 'நாடு வகை செய்வோர்' என்பர். வரித்தண்டல் செய்த அதிகாரி முதலி எனப்பட்டார். நிலவரியே நாட்டின் பெரும் வருவாயாக இருந்தது. நிலத்தின் தரம், விளைச்சல், அகியவற்றைக் கொண்டு ஒரு மா நிலத்திற்கு இத்தனைமரக்கால் வரியெனவிதிக்கப்பட்டது. வரியைப் பண்டமாக வும் தரலாம். பொதுவாக வரி ஆறிலொரு பங்கு ஆகும். இயற்கை அழிவுகள், பஞ்சம், விளைச்சல் இல்லாத காலங்களில் வரி, தள்ளுபடி செய்யப்படுவதுண்டு. நிலவரியைத் தவிர கடமை, விநியோகம், பஞ்சுபீலி, சந்திர விக்கிர உரப்பேறு, வாசல் பேறு, இளஞ்சினைப்பேறு, உழுதுக்குடி, பாடிகாவல், தட்டாரப் பாட்டம், இடைவரி, பொன்வரி, தறிக்கிறை, செக்கிறை முதலிய பல்வேறு வரிகளும் பாண்டியர் காலத்தில் தண்டல் செய்யப்பட்டன. நில உரிமை குடிமக்களுக்கிருந்தது. நிலத்தை விற்பதையும், வாங்குவதையும் எழுத்து மூலம் எழுதிப் பதிவு செய்வர். அந்தப் பதிவு ஆவணம் 'விலையோலை' (பத்திரம்) எனப்படும். ஊர்ச் சபையார் இதற்குச் சான்றளித்து, நீரோட்டிக் கொடுப்பர். விலை யோலைகளை எழுதுவதற்கென்றே தனி அதிகாரிகள் இருந்தனர், அவர்களுக்குக் காரணத்தார் என்று பெயர். அரசனுக்குச் சொந்தமான நிலங்களிருந்தன, அவற்றிற்கு அரச மானியம் என்று பெயர். அரசன் தனக்குத் தேவைப்படும் நிலத்தைக் குடிகளிடமிருந்து விலை கொடுத்துத்தான் வாங்குவான். வரி செலுத்த முடியாதவர்கள் நிலத்தை விற்று வரி செலுத்தினர். ஒரு ஊரார் வரி செலுத்த முடியாமல் போனபோது, அந்த ஊரை ஆட்சி செய்யும் நாட்டார் சபையே அவ்வூருக்காக வரி செலுத்தியதுண்டு. ஒருவர் வரி செலுத்தத் தவறினால், அவருடைய பிணையாள் அவ்வரியைச் செலுத்தவேண்டும். கெடுபிடி வரித் தண்டல் செய்யப் படை அதிகாரிகள் அனுப்பப்பட்டனர். அவர்க ளுக்குப் படைக்காணவர்' என்று பெயர். தனிப்பட்ட வருக்கு வரித் தண்டம் செய்யும் உரிமையும் வழங்கப்பட்டது. பாடி காவல் செய்வோர் தங்கள் பணிக்காக சில வரிகளைத் தண்டல் செய்து கொள்ளும் உரிமை வழங்கப்பட்டது. இதனைப் பராக்கிரம் பாண்டியனுடைய செப்பேட்டில் காண முடிகிறது. " வரியின்றி சிலருக்கு அரசன் நிலங்களை மானியமாக விடுவான். அதற்கு 'இறையிலி நிலங்கள்' என்று பெயர். சிவன் கோயில் மானியம் இறையிழி மானியம் என்றும், திருமால் கோயில் மானியம் திருவிடையாட்டம் எனவும், சமண, புத்த மடங்களுக்கு விடும் மானியம் பள்ளிச் சந்தம் எனவும், பிராமணருக்கு விடும் மானியம் பிரம் தேயம் எனவும், வேதம் வல்ல பிராமணருக்கு விடும் மானியம் பட்ட விருத்தி எனவும், மடங்களுக்கு விடும் மானியம் மடப்புரம் எனவும் புலவர்களுக்கு விடும் மானியம் முற்றூட்டு எனவும், சோதிடர்களுக்கு விடும் மானியம் கணி முற்றுரட்டு எனவும், அழைக்கப்பட்டன. படைத்துறை பாண்டியரிடம் யானை, குதிரை, தேர், காலாட்படை ஆகிய நான்குவித மரபுப் படைகளிருந்தன. இவை கோயில், வருவாய்த் துறை முதலிய இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இவற்றில் சிறப்புடையது குதிரைப் படைதான். கொற்கை, தொண்டி முதலிய துறைமுகங்களில் அயல் நாட்டில் இருந்து குதிரைகள் வந்து இறங்கிய வண்ணம் இருந்தன என்று மார்க்கோபோலோ, வாசப் ஆகிய அயல் நாட்டு ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இவற்றைத் தவிர அவசர இரண்டாம் பாண்டியப் பேரரசுக்காலம் காலத்தில் பயன்படும் முனையெதிர் மோகர், தென்னவன் உதவிகள் எனப்படும் படைப் பிரிவுகளும் இருந்தன, படைகள் பெரும்படை, முன்பேர்படை, வலங்கைமாசேனை, இடங்கைமாசேனை முதலி யனவாகப் பிரிக்கப்பட்டிருந்தன, படை வீரர்களுக்கும், படைத் தலைவர்களுக்கும் நிலங்கள் மானியமாக வழங்கப்பட்டன. படைகளுக்கு, ஒழுக்கமும் கட்டுப் பாடும் ஏற்பட சிறந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டன. குறிப்பாக, பாசறையில் இத்தகைய கட்டுத் திட்டங்களைக் கண்காணிக்கவே 'ஆராய்ச்சி நாயகம்' எனும் அதிகாரி இருந்தார். படைவீரர்களும், படைத்தலைவர் களும் கோயில்களுக்குப் பாதுகாப்பு அளித்தனர். நீதித்துறை நீதிவழங்குவதில் பாண்டியர்கள் பெயர் போனவர்களாவர். பிற்காலப் பாண்டியரின் நீதிமுறையைப் பற்றி விரிவான சான்றுகள் கிடைக்கவில்லை. ஆயினும் நீதி வழங்குவதற்கென்றே 'தருமா சனம்' என்று தனியாக ஒரு துறை இருந்ததையும், அதற்கு அரசனே தலைவன் என்பதையும் அறிகிறோம். ஊரார் குற்றங்களை உசாவி தங்களால் தீர்ப்புக் கூற முடியாவிட்டால் தர்மாசனத்திற்கு மேல்முறை யீடாக அனுப்பி வைப்பார்கள். கொலைகாரனுடைய சொத்துக்கள் பறிக்கப்பட்டன. அவனு டைய குடும்பத்தார் அடிமையாக்கப்பட்டனர். பொருளியல் (சிவில்) குற்றங்களில் இழப்பீடுகள் வழங்கப்பட்டன, பாவமன்னிப்புத் தீர்ப்புகளில் குற்றவாளி கோயில்களுக்கு விளக்கெரிக்கவும், மற்ற பணிகளைச் செய்யவுமான தண்டனைகள் அளிக்கப்பட்டன, குற்றத்தை மெய்ப்பிக்கக் காய்ச்சின இரும்புத் துண்டைத் தொட்டு எடுத்தல், நீரில் மூழ்கச் செய்தல், ஆகிய கடுஞ்சோதனைகள் கையாளப்பட்டன. நீதி சாதிக்கேற்றவாறு வழங்கப்பட்டது. பிராமணர்கள் கொலைக்குற்றம் செய்தாலும் அவர்களைத் தூக்கி விடுவதும், அவர்களுடைய சொத்துக்களைப் பறிப்பதும் கிடையாது. *பாவமன்னிப்புத் தீர்ப்பே' வழங்கப்படும். அதாவது கோயிலுக்கு விளக்கெரிப்பது போன்ற தண்டனைகளாகும். மிகக் கடுமையாகத் தண்டிக்கப்பட்டவர்கள் பறையர்களேயாவர். ஊராட்சிமுறை ' களர் அவைகள் 'மன்று' எனப்பட்டன. இதில் உறுப்பினர் ஆவதற்கும், சபை நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கும் கடுமை யான நிபந்தனைகளிருந்தன. சோழர் காலத்திலிருந்த தகுதிகள் உறுப்பினராவதற்கும் மற்றவற்றிற்கும் இருந்தன. பொதுவாக ஊரின் சட்டம், ஒழுங்கு, அமைதி, அறப்பணிகள், கோயில்களின் திருப்பணிகள், மக்கள் நலம், புற ஒழுக்கம் முதலிய வற்றை ஊர் மன்றங்களே கவனித்தன. பிரமதேய மன்றங்கள் தங்களுக்கென நீதி, நிருவாகம், ஆட்சிப் பொறுப்புகளைத் தாங்களே வகுத்துக்கொண்டன. ஊர் மன்றங்களின் கட்டுத் திட்டங்களுக்கு இவை உட்படவில்லை. பிரமதேய மன்றங்களைத் தவிர்த்த மற்ற ஊர் மன்றங்கள் இணைந்து ஒன்றியமாகச் செயல்பட்டன. தனியூர் மன்றங்களும் நாடு எனும் பிரிவின் 'நாட்டார்' பிரிவும், தனித்தே செயல்பட்டன. அற நூல்களின் அடிப்படையில் தான் இவை யாவும் நீதி வழங்கின, நாணயங்கள் " பாண்டியர் கால நாணயங்கள் வெள்ளி, செம்பு, ஈயம் ஆகிய உலோகங்களால் ஆனவை. இவற்றில் கயல் (மீன்) உருவமும், மலை உச்சியில் கொடி பறப்பது போன்ற உருவமும் பொறிக்கப்பட் டிருந்தன. பழங்காசு, பணம், திராமம், காணம் முதலியன புழக்கத்தி லிருந்த காசு வகைகள் ஆகும். ஒரு காசு என்பது ஒரு கழஞ்சுப் பொன்னின் மதிப்புடையதாகும். பத்து செம்பொன் காசுகள் ஒரு காசு ஆகும். பழங்காசு என்பது திராமம் மதிப்புள்ளது. அளவைகள் நீட்டல் அளவுகள், முகத்தல், எடுத்தல் அளவுகளும் நாடு முழுவதும் ஒரே சீராக வழங்கப்பட்டன. ஒரு கழஞ்சு என்பது பத்துத் காணம் என்றும், நூறு பலம் ஒரு துலாம் என்றும் எடுத்தல் அளவை யில் கணக்கிடப்பட்டது. முகத்தலில் செவிடு, ஆழாக்கு, உழக்கு, உரி, நாழி, குறுணி, கலம் ஆகிய விகித அளவுகள் கையாளப்பட்டன, (ஊ) சமுதாய வாழ்க்கை சமூக அமைப்பு பிற்காலப் பாண்டியர் சமூகம் அன்றைய நிலைக்கேற்பச் சாதிய அடிப்படையில்தான் அமைந்திருந்தது. கி.பி. 12, 13 ஆம் நூற்றாண்டு களில் தமிழகத்தில் வருணப் பாகுபாடுகள் நன்கு வேரூன்றி நிலைத்து விட்டன. அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற நான்கு வருணப் பாகுபாடுகளோடு பல்வேறு சாதிப் பாகுபாடுகளும் சமூகத் தில் நிலை பெற்றிருந்தன. சாதிகள் கட்டுப்பாடுகளுடன் சாதி மோதல் களும், சண்டைகளும் ஏற்பட்டன. சாதி வாரியான தொழில்களைத் தான் செய்யவேண்டுமென்ற நியதி நிலவியது. இதன் அடிப்படை யில்தான் வலங்கை, இடங்கைப் பாகுபாடுகள் தோன்றின. அந்தணர், வணிகர், வேளாளர், மறவர், புலையர், கள்ளர், பள்ளி, கைக்கோளர், காவியர், தச்சன், தட்டான், கொல்லன், இடையன். குயவன், உவச்சன், மருத்துவன், நாவிதன், சோதிடன், சான்றோன், பறையன், பள்ளன், சண்டாளன் முதலிய பல சாதிகள் இருந்தன. சைவம், வைணவம், சமணம், சாக்கியம் முதலிய சமயங்கள் இருந்தன. சமயமே மக்களை ஒரளவு ஒன்றுபடுத்தியது எனலாம். சாதிச் சண்டைகள் இருந்தன. ஆனால் கடுமையாக இல்லை. இரண்டாம் பாண்டியப் பேரரசுக்காலம் அந்தணர் இவர்கள் பிராமணர், பார்ப்பனர், வேதியர் என்றெல்லாம் அழைக்கப்பட்டனர். கடுங்கோன் தொடங்கிய முற்காலப் பாண்டியர் ஆட்சியில் இருந்து பாண்டியர்கள் பிராமணர்களுக்கு அளித்த முதலிடத்தை அறியலாம். சதுர்வேதி மங்கலம், அக்கிரகாரம் ஆகிய தனிக் குடியிருப்புகளில் வாழ்ந்தனர். முதலாம் மாறவர்மன் காலத்தில் பல அக்கிரகாரங்கள் புதிதாக ஏற்படுத்தப்பட்டன. ஆய்க்குடியில் 128 பிராமணர்களைக் குடியேறச் செய்து, அதற்கு 'அவனி வேந்த சதுர்வேதிமங்கலம்' எனப் பெயரிட்டான். முதலாம் சுந்தரபாண்டி யன் காலத்தில் சில கிராமங்கள் இணைக்கப்பட்டுச் 'சுந்தரபாண்டிய சதுர்வேதிமங்கலம்' எனப் பெயரிடப்பட்டு 121 வேதம் ஓதும் பிராமணர்களுக்கு 200 வேலி நிலங்கள் சொந்தமாக்கப்பட்டது. விக்கிரம பாண்டியன் காலத்தில் 'விக்கிரம பாண்டிய சதுர்வேதி மங்கலம்' எனும் சதுர்வேதிமங்கலமொன்றை ஏற்படுத்தப்பட்டு 64 வேதப் பிராமணர்களுக்கு தானமாக அளிக்கப்பட்டது. இதைப் போன்ற சதுர்வேதிமங்கலங்கள் பல ஏற்படுத்தப்பட்டன. கல்வெட்டுகளும், செப்பேடுகளும் பிராமணர்கள் சமுதாய நிலையில் பெற்றிருந்த உயர்வான நிலையைக் குறிப்பிடுகின்றன. 'தளவாய்புரச் செப்பேடுகள்' பிராமணர்கள் வாய்மையுள்ளவர்கள், சந்தியாவந்தனம் செய்பவர்கள், முத்தீ வளர்ப்பவர்கள், சதுர்வேதம் காப்பவர்கள், ஐந்து வேள்விகளைச் செய்பவர்கள், அறு தொழில் களில் மேன்மையுள்ளவர்கள் என்றெல்லாம் பிராமணர்களின் வாழ்க்கை நெறியைக் குறிப்பிடுகின்றன. மேலும், பிராமணர்களை ஆதரிப்பது அரசின் கடமை என்றும், அவ்வாறு செய்தால் அரசின் சமயச் செல்வாக்கு உயரும் என்றும் கூறுகிறது. இதனால் சமயத் துறையில் கடவுளுக்கு அடுத்தபடியான இடத்தைப் பிராமணர்கள் பெற்றனர். அரசியல் துறையிலும் அமைச்சர்களாகவும் படைத் தலைவர்களாகவும் செயல்பட்டனர். வணிகர் இவர்களை 'வைசியர்' என்றும் 'நகரத்தார்' என்றும், செட்டியார் என்றும் அழைப்பர். இவர்கள் வாணிகம் செய்து பொருளீட்டுபவர். ஆதலால், செல்வந்தர்களாகவே இருந்தனர். நகரங்களில் இவர்கள் நானாதேசியப் பெருந்தெரு, ஐந்நூற்றுவர் பெருந்தெரு போன்ற வாசகர் வாழும் தனித்தெருக்களில் வசித் தனர். செல்வம் படைத்த இவர்கள் ஊர்களையே விலைக்கு வாங்கித் தங்கள் இனத்தவரைக் குடியமர்த்தியதுமுண்டு. கோயில் திருப் பணிகள், சமூகப் பணிகள் செய்வதில் இவர்கள் சிறந்து விளங்கினர். பாண்டிய மன்னர்கள் தங்கள் நாட்டில் செல்வம் படைத்த நாட்டுக் கோட்டைச் செட்டியார்களைச் சோழநாட்டில் இருந்து குடிபெயரச் தமிழக சமூகப்பண்பாட்டு வரலாறு செய்தனர். நகரத்தார் எனப்படும் வணிகப் பிரிவினர் தனியே குலக் கொடியும் வைத்திருந்தனர். தங்களைப் பூமிதேவியாகிய பரமேசு வரியின் மக்கள் என்று கூறிக்கொண்டனர். வாணியச் செட்டியார்கள் தங்களைச் சங்கரப் பாடியார் என்ற வணிகப் பிரிவினர் என்றனர். வேனாளர் பிராமணருக்கு அடுத்த இடத்தைச் சமூக உயர்வில் பெற்றிருந்த இவர்கள் வேளாண்மை செய்பவர்கள். இவர்களில் பெரும்பாலோர் உழுவித்து உண்போர் ஆவர். எனவே "நிலக்கிழார்' வகுப்பைச் சேர்ந்தவர்கள் எனலாம். எனவேதான் இவர்கள் தங்களைப் 'பூமிபுத்திரர்கள்' என்றும் 'நாட்டுமக்கள்' என்றும் அழைத்துக் கொள்வர். பிராமணர்களைப் போலவே இவர்களும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்களாகவும் அதிகாரிகளாகவும், அமைச்சர் களாகவும் பணியாற்றினர். இவர்கள் கூட்டாக இணைந்து சித்திரமேழி பெரிய நாட்டார்' எனப்பட்டனர். மேழிச் செல்வம் (ஏர் உழவர்) பெற்றவர்கள் என்பது பொருள். நிலமற்ற வேளாளர், நிலக்கிழார்களாயுள்ள வெள்ளாள ரிடமே குடிமைகளாய் வேலை செய்வர். "பாட ஆயர் ஆடு, மாடுகளை வளர்ப்பவர்கள் ஆயர் எனப்பட்டனர். இவர்களை இடையர்,கோன் என்றும் அழைப்பர். இவர்கள் சேர்ந்து வாழும் பகுதி இடைச்சேரி அல்லது ஆயர்பாடி எனப்பட்டது, கோயில்களுக்கு நேர்த்திக் கடனாக விடப்படும் ஆடு மாடுகளைப் பாதுகாத்து நந்தா விளக்கெரிக்க நெய் அளிப்பர். இதனால் இவர் களை மந்தைகளை மேய்ப்பவர்கள் அல்லது மன்றாடிகள் என்றும் அழைப்பர். பொதுவாக இம்மக்கள் பால்பொருள்களைக் கொண்டே வணிகம் செய்து வாழ்வார்கள். கிருட்டிணன் இவர்கள் குலத்தில் தோன்றினான் என்பதற்காகவே, இவர்களை உயர்வாக மதித்தனர். கம்மாளர்கள் ஐந்து உட்பிரிவுகளைக் கொண்ட கைவினைஞர்களாகிய இவர்கள், வலங்கைப் பிரிவைச் சேர்ந்தவர்கள். பொற்கொல்லர் அல்லது தட்டார் என்ற உட்பிரிவினர்கள் பாண்டிய நாட்டில் பெரி தும் மதிக்கப்பட்டனர். வலங்கை, இடங்கை வகுப்பினர் கி.பி. 11ஆம் நூற்றாண்டில் இருந்து தமிழகத்தில் தலைதூக்கி ஆடிய வலங்கை - இடங்கை சாதிப்பிரிவுகள் பாண்டியநாட்டிலும் தோன்றியது. கல்வெட்டுச் சான்றுகளின்படி நோக்கும்போது பல தொழில்களைச் செய்பவர்களும், பல சாதியினருமாக இவ்வாறு வலங்கை, இடங்கைப் பிரிவினர்களாகப் பிரிந்துள்ளனர். பதினெட்டு * 19 வகைத் தொழில்களைச் செய்த இரதாகரர் எனப்படுபவர் இவ் வகையில் வலம், இடம் எனப் பிரிந்து செயல்பட்டுள்ளனர். எனவே இந்த வலங்கை, இடங்கைப் பிரிவுகள் தொழில் வழியாகவோ, சாதி வழியாகவோ பிரிந்தவை எனக் கூற முடியாது. இவை ஒவ்வொரு பிரிவிலும் 98 சாதிப் பிரிவுகளிருந்தன என்றும், ஒவ்வொரு வகுப் பாருக்கும் அடையாளமாக சின்னங்களும், வாத்தியங்களும் இருந்தன வென்றும் டி. வி. மகாலிங்கம் கூறுகிறார். இத்தகைய வலங்கை, இடங்கைப் பிரிவுகளின் தோற்றம், வளர்ச்சி பற்றிய முடிந்த முடிவுகள் எதுவுமில்லை, ஆனால் சீவல்ல பாண்டியனது கல்வெட்டில் வலங்கை, இடங்கை வகுப்பார் பின்பற்ற வேண்டிய சில விதிமுறைகள் பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளது. இதைப்போலவே ஒவ்வோரு சாதிப்பிரிவும் தங்களின் உரிமைக்காகவும், பெருமைக்காகவும் போராடிப் பெற்ற சலுகைகள் பற்றியும் கல்வெட்டுகள் கூறுகின்றன, இத்தகைய போராட்டங்கள் நாயக்கர்கள் காலத்திலும் இருந்ததாக கி. பி. 16ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கூறுகிறது. பாஞ்சாலர் என்பவர்கள் தட்டார், கன்னார், சிற்பர், தச்சர், கொல்லர் என்ற ஐந்து தொழில்களில் ஈடுபட்டவர்களாவர். ஒரு சமயம் கல்லிடைக்குறிச்சியில் பாஞ்சா லருக்குள் சண்டை மூண்டு, மதுரை நாயக்க மன்னனான வீரப்ப நாயக்கனிடம் தீர்ப்புக்குச் சென்றனர். பாஞ்சாலர்கள் எப்பொழுதும் உரிமைகளுக்காகப் போராடுவர். இதனால் தங்களுக்குள்ளும், பிற வகுப்பாரிடையேயும் சண்டைகள் நிகழ்த்துவர். பாஞ்சாலர்கள் விவசாயக் குடிகளோடும், மீனவர்கள் ளோடும் சண்டைகள் நிகழ்த்தி உள்ளனர். இவற்றை வலங்கை - இடங்கைச் சச்சரவுகளாய்க் கொண்டனர். மார்க்கோபோலோவின் குறிப்புகள் கி.பி. 13 ஆம் நூற்றாண்டின் தமிழகத்தைப் பற்றி அறிய கிடைத்துள்ள தலைசிறந்த அயல் நாட்டார் குறிப்பு மார்க்கோ போலோ விட்டுச் சென்ற குறிப்பே ஆகும். இவன் பாண்டிய நாட் டைப் பற்றிக் கூறியுள்ளவை, தான் நேரில் கண்ட உண்மைகளே ஆகும். கி.பி. 1254-ல் இத்தாலி நாட்டிலுள்ள வெனிசு நகரத்தில் உயர்குடியில் பிறந்த வணிகன்தான் மார்க்கோபோலோ . அவனு டைய தந்தையின் பெயர் இந்கொலோபோலோ என்பதாகும். மார்க்கோபோலோ தனது 17ஆம் அகவையில் சீனா சென்று சீனப் பேரரசன் குப்லாய்கான் என்பவரிடம் 17 ஆண்டுகள் பணியாற்றி அவர் அளித்த பெரும் செல்வத்துடன் வெனிசு நகரம் திரும்பினான். போகும்போதும் வரும்போதும் பல நாடுகளைக் கண்டுள்ளான். அவற்றின் அரசியல், சமுதாய முறைகளையும் நேரில் கண்டு பல தமிழக முகப் பண்பாட்டு வரலாறு குறிப்புகளை எழுதியுள்ளான். பாண்டிய நாட்டில் நிலவிய சில சமுதாயப் பண்பாட்டு மரபுகளைப் பற்றியும் குறிப்பிட்டு உள்ளான். இவன் சீனப் பேரரசரிடம் தூதுவனாக இருக்கும் போது (கி.பி. 1271 1288) மதுரைக்கு வந்தான். அப்பொழுது மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன், முதலாம் மாறவர்மன் குலசேகரப் பாண்டியன் (கி.பி. 1272-1311) ஆவான், பாண்டிய நாட்டை ஐந்து பாண்டியர் கள் தனித்தனியாக ஆண்டனர் என்று இவன் கூறுகிறான். அவர் களில் குலசேகரப் பாண்டியனே மூத்தவன் என்றும் கூறுகிறான். அவன் தன் நாட்டில் சிறந்த செங்கோலனாக இருந்தான் என்றும், வணிகர்களுக்குப் பேருதவி புரிந்தான் என்றும் மார்க்கோபோலோ குறிப்பிடுகிறான். அரசன் ஆதிக்குடிகள் அரைநிர்வாணமாகவே இருப்பர். மானத்தைக் காக்க வேண்டிய உறுப்புகளை மட்டும் துணியால் மறைத்துக் கொள்வர். அரசனும் ஏறத்தாழ அவர்களைப் போலவே, ஆனால் சற்று அதிகமாக ஆடைகளை அணிந்திருப்பான் கால் முதல் தலைவரை பொன், முத்து, மணிகளால் ஆன அணிகலன்களை அணிந்திருப்பான்.கழுத்தில் 108 மணிகளைக் கோர்த்த மணி மாலை யை அணிந்திருப்பான். அன்றாடம் பகவானை 108 முறை செபிப் பான், அந்த மாலையிலுள்ள மணிகளை உருட்டியே 108 முறை களைக் கணக்கிடுவான். ஒவ்வொரு முறையும் செபம் முடியும் போது 'பவுதர்' (பகவானே) என்று முடிப்பான். காலில் கழலும், தோள்பட்டையில் பொன்னாலும்வைரத்தலும் செய்யப்பட்ட மூன்று வளையங்களையும் அணிந்திருப்பான். கழலும் விரல் மோதிரங் களும் விலைமதிக்கமுடியாதவை ஆகும். இவ்வாறு அணிகலன்களை யும், அரசச் சின்னங்களையும் பகட்டாக அணிவது அரசருடைய அன்றாட வழக்கமாகும். மெய்க் காப்பாளர்கள் எப்பொழுதும் அரசனைச் சூழ்ந்து நிற்கும் மெய்க் காப்பாளர் கள் குதிரைகள் மீது வருவார்கள். அரசன் இறந்தவுடன் அவனைத் தீயிட்டுக் கொளுத்தும்போது தாங்களும் தீயில் பாய்ந்து மாண்டு விடுவர். அவனுடன் மறுவுலகம் சென்றும், மீண்டும் அவ் வரசன் மண்ணுலகம் வரும்போது தாங்களும் அவனுடன் மீண்டும் வருவோம் என்ற நம்பிக்கையில்தான் இதனைச் செய்வர். குதிரை வாணிகம் பாண்டிய அரசர்கள் குதிரைகளை வெளிநாடுகளில் இருந்து விலைக்கு வாங்கினார்கள். ஆண்டுக்கு ஐயாயிரம் குதிரைகள் வாங்கப்பட்டது. ஒவ்வொன்றின் விலை ஐநாறு சாகி (750 ருபாய்) இரண்டாம் பாண்டியப் பேரரசாக்காலம் ! பொன்நாணயமாகும். ஆனால் அவற்றைச் சரியாகப் பராமரிக்காத தாலும் மருந்து கொடுக்காததாலும் ஐயாயிரம் குதிரைகளில் முன்னூறு குதிரைகளே எஞ்சியிருக்கின்றன. மற்றவை மாண்டு போகின்றன. இதனால் குதிரைவாணிகம் செய்யும் குதிரைச் செட்டிகள் கொள்ளை லாபம் அடிக்கின்றனர். முத்துக் குளித்தல் மதுரைக்கும் சிலோனுக்கும் 60-மைல் தூரமே உள்ளது. இந்த இடைவெளியில் வளைகுடா போல் இடமுள்ளது. அது சுமார் 72 அடி ஆழமுள்ளதான கடற்பகுதி ஆகும், வணிகர்கள், கப்பல்களை யும் படகுகளையும் கூலிக்கு அமர்த்திக்கொண்டு முத்துக் குளிக்கும் நிபுணர்களையும் கூலிக்கு அமர்த்திக்கொண்டு இப்பகுதிக்கு வந்து, கடலில் அவர்களை மூழ்கச் செய்வர். அவர்கள் பாரம் சுமக்கும் வலைப்பின்னல் பைகளையும், பொருள்களையும், மேலே இழுக்கும் கயிறுகளையும் எடுத்துக் கொண்டு 72 அடி ஆழமுள்ள கடலுக்குள் மூழ்கி முத்துச் சிப்பிகளை எடுத்து, வலைப்பின்னல் பைகளில் திணித்துக்கொண்டு மேலே வருவர். முத்துக் குளிப்பது மே மாதம் நடக்கும். பின்னர் வேறு இடம் போய் விடுவர். முத்துக் குளிக்க அரசாங்கத்திடமிருந்து உரிமம் பெற வேண்டும். அரசுக்கு 1/10 பங்கு அதில் கொடுத்து விட வேண்டும். அரசன் தனக்கு வேண்டிய முத்துக்களை விலை கொடுத்து வாங்குவான். முத்துக் குளிக்கச் செல்லுபவர்களைப் பெரிய மீன்கள் கடித்துக் கொன்று விடாமலிருக்க மந்திரவாதிகள் (பிராமணர்கள்) மந்திரம் செபிப்பர். பாண்டிய நாட்டு முத்துக்கள் உலகப்புகழ் பெற்றவை ஆகும், மரண தண்டனை கொலைக்குற்றத்திற்காக மரணதண்டனை விதிக்கப்படும். அவ்வாறு மரண தண்டனை பெற்றவனை அவனுடைய உறவி னர்கள் ஒரு தனி இருக்கையில் அமர்த்தி ஊர்வலமாக அவனைக் கொலை செய்யும் இடத்திற்குத் தூக்கிச் செல்வர், ஊர்வலத்தில் தெய்வத்திற்குத் தன்னைத் தானே பலி கொடுத்துக்கொள்ளப் போகிறான் என்று உரக்கக் கூச்சலிட்டுக் கொண்டே செல்வர். அவன் கொலை செய்யப்பட வேண்டிய இடம் வந்தவுடன் கூர்மை மிக்க 12 கத்திகளை அவனிடம் கொடுப்பார்கள். அவனும் என் தெய்வத்திற்கு என்னைப் பலி கொடுக்கிறேன்' என்று உரத்த குரலில் கத்திவிட்டு, தொடைகள், கைகள் மற்றும் உடலின் பல பாகங்களில் ஒவ்வொரு கத்தியாக எடுத்துக் குத்திக்கொண்டு கடைசியில் இதயத்தில் கத்தியைப் பாய்ச்சி இறப்பான். ஒவ்வொரு முறை குத்திக்கொள்ளும்போதும், 'என் தெய்வத்திற்கு என்னை அர்ப்பணிக்கிறேன்' என்று உரக்கக் கத்துவான். அவன் இரத்த வெள்ளத்தில் இறந்தவுடன் தீ மூட்டிக் கொளுத்திவிடுவர். அவனுக்கு மனைவி இருந்தால் அவளும் அத்தீயில் விழுந்து சாம்பலாவாள். அவளைப் பத்தினித் தெய்வமாக வணங்குவர். உடன் கட்டை ஏறாத மனைவியைப் பழித்து இழிவாக நடத்துவர் என்று மார்க்கோபோலோ கூறுகிறான், அன்றாட வாழ்க்கை "மாபார் (மதுரை) நாட்டில் வாழும் மக்கள் உருவ வழிபாடு செய்கிறார்கள்; மாட்டைத் தெய்வமாக வணங்குகிறார்கள். மாட்டு இறைச்சியை எவரும் புசிப்பதில்லை. ஆனால் இறந்த மாட்டு இறைச்சியை உண்ணும் 'கோவி' என்னும் சாதியர் உள்ளனர். இந் நாட்டு மக்கள் தங்கள் வீடு முழுவதும் பசுமாட்டுச் சாணத்தைக் கொண்டே மெழுகுவார்கள். தரைமீது பாய், சமுக்காளம் ஆகிய வற்றை விரித்துப் போட்டு அதன் மீது உட்காருவார்கள். 'பூமித்தாய்' மீது வெறும் உடம்போடு உட்காரக் கூடாது. 'பூமியிலிருந்தே இந்த உடல் வந்தது. பூமிக்கே திரும்புகிறது என்பார்கள்' என்று மார்க்கோ போலோ கூறுகிறான். ' - - ஆடு, பறவைகளைப் பிறர் கொன்று கொடுத்தால் இறைச் சியை உண்பார்கள். மதுவருந்த மாட்டார்கள். உணவை வலது கையால் அள்ளி உண்பார்கள். நீர்க்குவளையில் உதடு படாதவாறு தூக்கி ஊற்றி நீர் அருந்துவர்; காலை, மாலை இரு வேளைகளிலும் குளிப்பார்கள்; பரத்தையருடன் கூடிவாழ்வர்; இதனை ஒழுக்க மின்மை என்று கூறமாட்டார்கள். சோதிடம் பார்த்தல், சகுனம் பார்த்தல், இராகு காலம், எம் கண்டம் பார்த்தல் ஆகிய பழக்கங்களும் உண்டு மணிபார்த்து நேரத்தை அறிவதற்கு நிழலின் சாயலைக் கொண்டே அறிவர்; குழந்தை பிறந்தவுடன் 'சாதகம்' கணித்தல், ஆண், பெண் உறுப் புகளைக் கொண்டு அவர்களின் குணங்களை அறியும் 'சாமுத்திரிகா கலையை அறிதல் ஆகிய பழக்கங்களும் பாண்டிய நாட்டு மக்க ளிடம் இருந்தன என்கிறார் மார்க்கோபோலோ. காட்டு எருமை யினைக் கொண்டு செய்த சவரியை எடுத்துச் சென்றால் எந்த ஆபத்தும் நெருங்காது என்று நம்பினர். மயிலையில் மறைந்த மாமுனிவர் மார்க்கோபோலோ மைலாப்பூரில் மறைந்த முனிவர் தாமசு என்பவர் வரலாற்றையும் கூறுகிறார். மயிலை என்னும் சிறு நகரில் தாமச முனிவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது என்றும், அங்கு அவர் உயிர் நீத்த சம்பவத்தையும் மார்க்கோபோலோ கூறுகிறார். தாமசு முனிவர் பிரார்த்தனை செய்யத் தனிமையில் அமர்ந்த போது அவரை மயில்கள் சூழ்ந்து நின்றன. அவ்வழியே வந்த கோனி" வகுப்பைச் சேர்ந்த உருவ வழிபாடு செய்யும் ஒருவன் மயிலைக்குறி வைத்து அம்பு எய்தினான். அது தவத்திலிருந்த முனி இரண்டாம் பாண்டியப் பேரரசுக்கானம் வரின் விலாவில் தைத்து அவர் உயிர் நீத்தார். அவரை அவ் விடத்திலேயே அடக்கம் செய்துவிட்டனர். அந்தப் புனித இடத்தை அனைவரும் 'அனானியர் திருவிடம் " என வணங்கினர். 'அனானி' என்றால் மானிடரல்லாதவர் என்பது பொருள். அதாவது தாமசை 'மனிதரல்லாத தேவகணம்' என்றனர். இன்று இந்து புனித தாம்சுக் கோயிலாக உள்ளது. அவர் கொல்லப்பட்ட இடத்தில் இருந்து செம்மண்ணை எடுத்து நீரில் கரைத்து உடலில் பூசிக் கொண்டாலும் நோயினின்று குணமடையலாம் என்றும் நம்புகிறார்கள். இக் கோயிலுக்குள் கோனி இனத்தவரை விடுவதில்லை என்றும் மார்க்கோபோலோ கூறுகிறார். பெண்கள் நிலை சோழர் காலச் சமுதாயத்தில் பெண்கள் மதிப்புடன் போற் றப்பட்டனர். இல்லத்தரசியாகப் பெண்கள் இருந்தனர். ஏழை எளிய பெண்கள் பாய்முடைதல், நெசவு போன்ற தொழில்களையும், விவசாயப் பணிகளையும் செய்தனர். ஆண்களுக்கு உதவியாக அவர்கள் செய்யும் தொழில்களில் பங்கேற்றனர். இசை, நடனம் ஆகியவற்றில் சிறந்திருந்தனர். திருமணம் செல்வந்தர்களும், மேல் சாதிக் காரர்களும் ஆடம்பரத்துடனும், சடங்கு களுடனும் திருமணம் செய்தனர். மணமகள் அழைப்பும், ஆடை அணிகலன்களும் ஆடம்பரமாய் நடந்தன. 'பாளை, கமுகு முதலியவற்றால் மணப்பந்தல் ஒப்பனை செய்யப்பட்டது. மண மக்களைக் கைப்பிடித்துத் தீவலம் வருவதும், அம்மி மிதித்தலும், ஊர்வலம் போதலும், ஆகிய திருமணச் சடங்குகளைப் பற்றி ஆண்டாள் பாசுரங்களில் காணலாம். மணமகள் வீட்டாரே, திருமணம் செய்வார்கள். பெற்றோரின் விருப்பப்படியே திரு மணங்கள் நடக்கும். காதல் திருமணங்களும் நடந்தன. பெண்கள் நல்ல கணவன்மாரை அடைவதற்கு, காமன் நோன்பு நோற்றனர். பெண்கள் கல்வியிலும், ஞானத்திலும் சிறந்து நின்றனர். மங்கை யர்க்கரசியின் சைவத்தொண்டும், ஆண்டாளின் திருப்பாவையும், நாச்சியார் திருமொழிப் பாடல்களும் பெண்களிடையே கல்வி பரவலாகக் காணப்பட்டதைக் காட்டுகின்றன. திருமணத்தின்போது பெண்களுக்குப் பெண்வழிச் செல்வம் (ஸ்ரீதனம்) கொடுப்பார்கள். ஆனால், பெண்களுக்குச் சொத்துரிமை இருந்ததா என்பதை அறிய முடியவில்லை. பெண்கள் உடன்கட்டை ஏறும் வழக்கமும் இருந்தது. கைம்பெண்கள் நடைப்பிணமாயிருந்தனர். விசய நகர ஆட்சிக் காலத்திலும் உடன்கட்டை ஏறும் வழக் கமிருந்தது. பார்போசா, நுனிஸ், பிரிடரிக், பரடாஸ் போன்ற இக் கால அயலகப் பயணிகள் இதற்குப் பல சான்றுகளைக் கூறுகின்றனர். தேவரடியார்கள் கோயில்களில் உருவ வழிபாடுகள் நடந்தன என்றும், வளமான உணவுகளைப் படைத்து மக்கள் வழிபட்டனர் என்றும், அந்த உணவு வகைகளைக் கோயிலிலுள்ள படிமங்கள் உண்டு மகிழ்ந்து பக்தர்களுக்கு அருள் புரிந்தன என்றும் கூறப்படுகின்றது. பாண்டியர் காலத்தில் பூசை வேளைகளில் அந்த உணவு வகை களைப் பரப்பி, அழகிய பெண்கள் ஆடிப்பாடிக் கொண்டே இருப்பர். அவ்வாறு அவர்கள் ஆடிப்பாடிக் கொண்டே அபி நயங்கள் காட்டி நிற்பர். வெகுநேரம் ஆடிப்பாடி அபிநயங்கள் காட்டியபின் ஒவ்வொருவராக உண்பர், பின்னர் கொண்டாட்டத் துடனும் குதூகலத்துடனும் ஒவ்வொருவரும் வீட்டிற்குப் போய் விடுவார்கள், சாமிகள் தங்களுக்குள் சச்சரவிட்டுக் கொண்டு இருந்தால் இப்படி படைத்து ஆடிப்பாடி மகிழ்வதால் அவை மகிழ்ச்சி அடைந்து சச்சரவைப் போக்கிக் கொள்ளுமாம், இதுதான் இந்தப் படையலின் நோக்கமாகும் என மார்க்கோபோலோ கூறுகிறான். இது அன்றாடம் நடக்கும் படையல்பூசை. இதுபோன்ற பூசைகளின்போதும், சாமி வீதிவலம் வரும்போதும், நடன இசை யோடு நடத்தவும் ஆறுகால பூசைகளுக்கும் விழாக்களுக்குமாக நடனம்,ஆடவும் இசைவல்ல இளம் மங்கையர்கள் கோயில்களில்" தேவனுக்கு அடியார்களாக அமர்த்தப்பட்டனர். இவர்கள் பருவ மடைவதற்கு முன்பே சாமிக்குத் தாலிகட்டி சாமியின் மனைவியாக (அடிமையாக விடப்பட்டவர்கள். கச்சு கட்டுதல் அல்லது பொட்டுக் கட்டுதல் என்பதைத் தான் தாம் தாலிக் கட்டுதல் என்கிறோம். அவர்கள் ஆண்டவனையே பதியாக ஏற்றுக்கொள்ளுவதால் பதியிலார் என்றும், அன்றாடம் ஆண்டவனையே திருமணம் செய்து கொள்ளுவதால் 'நித்திய கல்யாணி' எனவும் அழைக்கப்பட்டனர். அவர்களுக்காக, அரசு இறையிலியாக மானியம் கொடுக்கும். இவர்களைச் சமுதாயம் உயர்வாக மதித்தது. தேவரடியார்கள் இல்லாமல் கோயில்களின் பூசைகளோ, விழாக்களோ நடந்தால் அது களையாக இருக்காது. இவர்களால்தான் பாட்டும், பரதமும் வளர்ந்தன என்பர். இவர்களும் கோயில்களுக்குப் பல தானங்களை யும், நிவந்தங்களையும் வழங்கியுள்ளனர். 'இந்த நாட்டிலிருக்கும் மடங்களுக்கும், கோயில்களுக்கும் இளம் பெண்களைப் பொட்டுக் கட்டிவிடும் வழக்கம் இருக்கிறது. பெற்றோர்கள் தங்களுக்கு விருப்பமான தெய்வத்திற்குத் தங்கள் பெண்களை ஒப்படைத்து விடுகிறார்கள்' என்று மார்க்கோபோலோ கூறுகிறான், கோயில்களில் தேவார, திவ்வியப் பிரபந்தப் பாடல்களையும், தேவரடியார்கள் இசையுடன் பாடி, அதற்கேற்றபடி நடனமும் ஆடி னார்கள். பாண்டிய மன்னர்கள் ஏழிசை விற்பன்னர்களாயிருந்தனர். 25 கோயில்களில் வாசிக்கப்பட்ட இசைக் கருவிகளின் பட்டியலை . அக்காலக் கல்வெட்டுகளில் காணலாம். இசையைப் போலவே கூத்துக் கலையும் நாடகக் கலையும் வளர்ச்சியடைந்ததை மேலே பார்த்தோம். கல்விக் கூடங்கள் சோழர் காலத்திலும், பாண்டியர் காலத்திலும் வேதப் பாட சாலைகள் இருந்தன. ஆனால் தமிழ்மொழிக் கல்விக் கூடங்கள் இல்லை. சாதிக்கேற்ற கல்வி அல்லது குலக் கல்வியையே மக்கள் கற்றதால் பொதுப் பள்ளிக்கூடங்கள் இல்லை யென்பது சரியான வாதமில்லை. எவருக்கும் குடிமக்களைச் சமமாக எண்ணும் எண்ணம் ஏற்படாததே இதற்குக் காரணம். நான்கு வேதம், பன்னிரண்டு உபவேதங்கள், சாத்திரங்கள், பதினெட்டுப் புராணங் கள், இரண்டு இதிகாசங்கள், அறுபத்து நான்கு கலைகள், பதிநான்கு அறிவுத் துறைகள் ஆகியவற்றைத் தெரிந்தவர்கள் இருந்தார்கள் என்று கூறும் கூற்றும் ஏற்புடையதன்று. 'கடிகை' என்பது சமற்கிருதக் கல்லூரி, இதில் படித்தவர், கற்பித்தவர் அனைவருமே ஒரு குறிப்பிட்ட குடிமக்களே ஆவர். இவை 'வித்யா தானம்' எனப்பட்டன. பல்லவர் காலத்தில் காஞ்சி, பாகூர் முதலிய ஊர்களிலும் சோழர் காலத்தில் திருபுவனம், எண்ணாயிரம், திருமுக்கூடல் முதலிய இடங்களிலும் சமற்கிருதக் கடிகைகள்தான் இருந்தன. இவற்றில் கல்வி கற்ற மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உணவு, உடை, மருத்துவ ஏந்துகள் அரசாங்கத் தால் இலவசமாக அளிக்கப்பட்டன. நல்லாசிரியர்களுக்குப் 'பட்ட விருத்தி' என்ற விருதும், 'சாலபோகம்' என்ற ஆசிரியர் மானியமும் அளிக்கப்பட்டன. பாண்டியர் காலத்தில் கன்னியாகுமரியில் 'சீவல்லபப் பெருஞ் சாலையும்' ஆய்நாட்டில் 'பார்த்திப் சேகரபுரச்சாலையும், திருவனந்த புரத்தில் 'காந்தளூர்ச்சாலையும்' பெயர் பெற்ற சமற்கிருதக் கல்லூரி களையும் பார்க்கிறோம். இக் கல்லூரிகளில் மறையவர் ஆயிரத் தெண்மர் தங்கிக் கல்வி கற்றனர். சாத்திரங்களை நன்கு கற்றறிந்தவர்கள் 'சாத்திரர்' அல்லது 'சட்டர்'எனப்பட்டனர். இவர்கள் சாத்திரங்களில் மட்டுமே யல்லாது. மீமாம்சை, வியாகரணம், புரோகிதம் ஆகியவற்றையும் கற்றுத் தேறினர். காந்தளூர்ச் சாலையில் படித்தவர்கள் இத்தகைய பாடங்களி லும் புலமைப் பெற்றனர். பார்த்திபசேகரபுரம் என்ற கல்லூரியில் 95 சட்டர்களுக்கு இலவச உணவு அளிக்கப்பட்டதோடு, ஆசிரியர் களுக்குச் சாலபோகமும் அளிக்கப்பட்டது. இங்கு வேத சாத்திரங் களில் உயர் படிப்பும், ஆட்சி நிருவாகம், படைப் பயிற்சி ஆகியவை யும் அளிக்கப்பட்டன. இவற்றில் அமைச்சர்களும், தண்டதாயகர்க ளும், இளவரசர்களும் பயிற்சி பெற்றனர். இக் கல்லூரிகள் ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகியவற்றிற்கு, முதலிடம் கொடுத்தன. சட்டர்களைப் பழித்துக் கூறக்கூடாது; சண்டை சச்சரவு செய்யக் கூடாது: படைக்க லத்தால் தாக்கிக் கொள்ளக்கூடாது : பெண்களை வேலைக்கு அமர்த்திக்கொள்ளக் கூடாது; உழுபவர்களை நீக்கக் கூடாது போன்ற சட்ட திட்டங்களும் இருந்தன. படைக்கலம் ஏந்திச் சாலைக்குச் செல்வோருக்குத் தண்டம் விதிக்கப்பட்டது. மேற்கூறியவற்றைப் பார்த்திபசேகரபுரம் கல் வெட்டுக் கூறுகிறது. சமயக் கல்வியும் மடங்களும் பாண்டியர் காலத்தில் கோயில்களைப் போலவே, சைவ, வைணவ மடங்களும் பெருகின. இவை சமயக் கல்வியைப் பரப்பிய தோடு சமய இலக்கியங்களைப் பாதுகாத்தும் வந்தன. சமணர் மடங்கள் சமணப் பள்ளிகள் எனப்பட்டன, மடங்களுக்குத் 'திருமட விளாகம்' எனும் மானியமும், சமணப் பள்ளிகளுக்குப் 'பள்ளிச் சந்தம்' எனும் மானியமும் வழங்கப்பட்டன. மடங்களில் அடியா ருக்கு உணவளித்தல், பஞ்சம், பட்டினிக் காலங்களில் மக்களுக்கு உணவளித்தல் ஆகியவை நடைபெறுவதால் இவை சமுதாயப் பாதுகாப்பு இல்லங்களாகவும் விளங்கின. சில மடங்களிலும், கோயில்களிலும், தலைசிறந்த நூலகங்க ளிருந்தன. இதனைச் 'சரசுவதிப் பண்டாரம்' என்பர். கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் சிதம்பரத்தில் ஒரு பெரிய சரஸ்வதி பண்டாரத்தைச் சாமித் தேவர் என்ற அறிஞர் தோற்றுவித்தார். இதில் பல்லவதரையன் என்ற அதிகாரி நூலக நிருவாகத்தைக் கவனித்தார். அங்கு ஏராளமான ஓலைச் சுவடிகள் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றைப் படியெடுப்பதற்கும், பிழை திருத்துவதற்கும் 20 அறிஞர்கள் பணி யாற்றினர். இதைப் போன்று மற்றொரு சரசுவதிப் பண்டாரம் சேரமாதேவி கோயிலிலும் இருந்தது. எ) சமயமும் இலக்கியமும் 1. சமயம் சைவ சமய வளர்ச்சி பக்தி இயக்கமும், அதில் மன்னர்களும், மக்களும் கொண்ட ஈடுபாடும் ஆற்றிய தொண்டுகளும் சைவ, வைணவ சமயங்களின் வளர்ச்சிக்கு அடிப்படை ஆகும், தொடக்க காலப் பாண்டியர் ஆண்ட போது தமிழகமெங்கும் சமணமே மேலோங்கி நின்றது. ஆனால் சிவனடியார்கள் நாடு முழுவதும் சுற்றி ஆங்காங்கேயுள்ள சிவத் தலங்களில் பாடல்களைப் பாடி அதிசயங்களைச் செய்து பாடல் பெற்ற தலங்களை ஏராளமாக ஏற்படுத்தியதால், சைவசமயம் மறுமலர்ச்சி அடைந்தது. சைவக்குரவர் மூவரில் சிறந்த திருஞான சம்பந்தர் தொண்டை நாட்டில் இருந்து, தீவிர சைவராக மாறி பாண்டிய நாட்டிற்கு வந்து அவர் ஆற்றிய சைவ சமயத்தொண்டு சைவம் மறுமலர்ச்சி அடைய ஒரு மைல் கல்லாக நின்றது. மதுரையை ஆண்ட ஆதிகேசரி என்ற நின்றசீர் நெடுமாறன் சமணத்தை விட்டுச் சைவனாகி சைவத்தின் வளர்ச்சிக்கு முடுக்கமான பணிகள் செய்தான். அவனுடைய மனைவியாரும் அமைச்சரும் அவனோடு இணைந்து சைவசமய வளர்ச்சிக்குப் பெரும் பங்கு ஆற்றி னார்கள். திருஞான சம்பந்தருக்கும், சமணர் களுக்கும் பாண்டியன் அரிகேசரி முன்னிலையில் அனல் வாதம், புனல் வாதம் எனும் சமய வாதங்கள் நடந்தன. அவற்றில் சம்பந்தரே வெற்றிபெற்றார். இதனால் மன்னனும் மக்களும் தீவிர சைவர்களாயினர். பாண்டிய நாட்டுச் சைவ சமய வரலாற்றில் ஒரு புதிய உத்வேகம் தோன்றியது. ஞானசம்பந்தரின் அதிசயச் செயல்களும், சமணர்கள் 800 பேர் கழுவில் ஏற்றப்பட்டனர் என்பதும் உயர்வு நவிற்சிகளாகும் என்பது சில வரலாற்று ஆசிரியர்களின் கருத்து ஆகும். சைவசமயம் மிக வேகமான வளர்ச்சி அடைவதில் அப்பரும், சுந்தரரும் மாணிக்கவாசகரும் சம்பந்தரைப் போலவே முழுப்பங்கு ஏற்றனர். சுந்தரருக்கு ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு வாழ்ந்த மாணிக்கவாசகர் வரகுண பாண்டியனின் அமைச்சராயிருந்து சிவனடியாராய் மாறியவர் ஆவார். இவர் சிங்களத்தில் இருந்து வந்த பெளத்தர்களோடு வாதிட்டு அவர்களைத் தோல்வியுறச் செய்தார். இதனால் தமிழகத்தில் பௌத்தத்தின் செல்வாக்கு குறைந்துவிட்டது. இவர் பாடிய திருவாசகம், திருச்சிற்றம்பலக்கோவை ஆகியவை சைவசமயத்திற்கு எழுச்சியூட்டின. மாணிக்கவாசகர் தனது பாடல் களில் வரகுண பாண்டியனுடைய சைவப் பற்றையும், சிவனார் மதுரையில் செய்த திருவிளையாடல்களையும் பாடியுள்ளார். பாண்டிய நாட்டில் பாடல் பெற்ற தலங்கள் சிவபக்தர்களுக்குப் போற்றற்குரிய தலங்களாக மாறின. திருஆலவாய், திருப்பத்தூர், திருப்புவனம், இராமேசுவரம், ஆகிய தலங்கள் பற்றி அப்பர் பாடி யுள்ளார். திருஆலவாய், திருஆப்பனூர், திருப்பரங்குன்றம், திருவேட கம், திருக்கொடுங்குன்றம் ஆகியவற்றைப் பற்றிச் ஞானசம்பந்தர் பாடியுள்ளார். நாயன்மார் பாடிய பாடல்கள் தேவாரத் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன. நாள்தோறும் கோயில்களில் இறைவன் முன் நின்று வணங்கும் துதிப்பாடல்களாக மாறின. நாயன்மார்கள் தெய் வீகத்தன்மை வாய்ந்தவர்கள் என்பதை உணர்ந்த மக்களும், மன் னனும் அவர்களுக்கும் கோவில்களில் செப்புத்திருமேனிகளும் உருவச் சிலைகளும் சமைத்து வழிபட்டனர். தேவாரம், திருவாசகம் முதலியவற்றைக் கோயில்களில் பாடி ஆராதனை செய்வதற்காக வழிபாட்டு நிவந்தங்கள் வழங்கப்பட்டன. தமிழக சமூகப்பண்பாட்டு வரலாறு - பாண்டிய மன்னர்கள் சைவக் கோயில்களுக்குச் சிறந்த சிவப்பணிகள் ஆற்றி உள்ளனர். நிவந்தங்கள் வழங்கி விழாக்கள் நடத்தினர். திருச்செந்தூர்க் கோயில் வழிபாட்டு நிவந்தமாக வரகுண பாண்டியன் 14,000 பொற்பாட்டுக்கு 200 பொற்காசுகள் அளித்தான் எனக் கல்வெட்டுச் சான்று கூறுகிறது. இதைப் போலவே அம்பா சமூத்திரம் கோயில் வழிபாட்டிற்கு 29) பொற்காசுகள் அளித்தான். முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன், தில்லையம்பலத்திற்குப் பொன்வேய்ந்தான்; மதுரைக் கோயில் கீழைக் கோபுரத்தையும் அமைத்தான். குலசேகரப் பாண்டியன் (கி.பி. 1168-1175) மதுரைக் கோயில் , 'இடைநாழிகை மண்டபத்தைக் கட்டினான். மேலைக் கோபுரத்தைப் பராக்கிரம பாண்டியன் (கி.பி. 1315-1345) கட்டினான். இவ்வாறு பாண்டிய மன்னர், கோயில்களை விரிவடையச் செய்தனர். இதைப்போலவே திருநெல்வேலி, இராமேசுவரம், கன்னியாகுமரி ஆகிய இடங்களிலிருந்த கோயில்களையும் விரிவடையச் செய்தார் கள். இவை யாவும் சைவசமய வளர்ச்சியின் நடுநாயகங்களாயின. சைவ மடங்கள் பாண்டியர் காலத்தில் மடங்கள் அதிகரித்தன. குறிப்பாக, சைவ மடங்கள் சமயக் கல்வியின் கருவூலங்களாக மாறின. சைவ இலக்கி யங்களில் வல்ல அறிஞர்கள் மடங்களில் தங்கி சைவ இலக்கியங் களைப் பாதுகாப்பதிலும், பரப்புவதிலும் அக்கறை செலுத்தினர். மாணவர்களுக்கு உணவு கொடுத்து, மடங்களை இருப்பிடங்க ளாக்கிச் சைவ இலக்கியங்களையும், வைணவ இலக்கியங்களை யும், வேதங்களையும், உபநிடதங்களையும், இதிகாசங்களையும் அவை தோன்றிய சமற்கிருதம், தமிழ் ஆகிய மொழிகளில் பயிற்று விக்கப்பட்டன. எனவே மடங்கள் சமயக்கல்வி கூடங்களாகவும், ஒழுக்கம் கற்பிக்கும் பண்பாட்டு மையங்களாவும் செயல்பட்டன. 'சைவ மடங்கள்' என்று பொதுவாகக் கூறப் பட்டாலும் அதில் பாசுபதர், காபாலிகர் ஆகியோரின் மடங்கள் தனித்தனியே செயல் பட்டன. ஒவ்வொன்றின் வழிபாட்டு முறைகளும் ஒன்றுக்கொன்று வேறுபட்டன. இதனால் இவற்றின் போக்கை மக்கள் வெறுத்தனர். ஆயினும் மன்னர்கள், இம்மடங்களுக்கு மானியங்களும், பிற உதவிகளும் செய்தனர். பாண்டியன் பூதவிக்கிரமகேசரி கொடும் பாளுர் பாசுபதர் மடத்திற்கு பதினோரு ஊர்களைத் தானமாக அளித்ததைக் குறிப்பிடலாம். திருச்சுழி, குற்றாலம் ஆகிய இடங்களில் பாசுபத மடங்கள் இருந்தன. இதைப் போலவே மதுரை மடம், பிட்சா மடம், திருவாரூர் மடம், திருவாரூர் தட்சிண கோளகிமடம், காசிமடம் போன்ற பல மடங்கள் இருந்தன. இரண்டாம் பாண்டியப் பேரரசுக்காலம் சைவசித்தாந்தம் கி.பி. 12, 13 ஆம் நூற்றாண்டுகளில் "சைவசித்தாந்தம்' எனும் ஒரு புதிய கோட்பாடு சைவத்தில் தோன்றியது. இத்தகைய கோட் பாட்டிற்கு திருமூலரின் திருமந்திரம் அடித்தளமாக அமைந்தது. நம்பி ஆண்டார் நம்பியும், மெய்கண்ட தேவரும்கூட இக் கோட்பாட்டிற்கு வித்திட்டதாகக் கூறுகின்றனர். இக்கோட்பாடு ஆகமங்களை அடிப்படையாகக் கொண்டு உருவானதென்று தனது 'சிவஞானம்' என்ற நூலில் மெய்கண்ட தேவர் கூறியுள்ளார். கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் சைவசித்தாந்த மடங்கள் தோன்றலாயின. திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் 'திருஞானம்' என்ற சைவசித்தாந்த நூலை ஓதுவதற்காகப் பதினோரு தபஸ்விகள் அமர்த்தப்பட்டனர் என்று இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் கல்வெட்டு கூறுகிறது. இத்தகைய சைவசித்தாந்த மடங்கள் மேலே கூறப்பட்ட திருவாரூர், பிட்சாமடம், மதுரைமடம், அழகிய நாயக சந்தான மடம், விவுகண்ட தேவ சந்தான மடம் ஆகியவற்றில் அமைந்திருந்தன. பாண்டிய நாட்டில் சில கோயில்கள் இவர்களின் செல்வாக்கில் செயல்பட்டன. திருப்பத்தூர், மதுரை ஆகிய இடங்களிலும், ஆந்திரம், கருநாடகம் போன்ற வெளிமாநிலங்களிலும் கோளகிமடத்தின் கிளைகள் இருந்தன. வடநாட்டின் பல பகுதிகளில் இருந்தும் சைவத் துறவிகள் தமிழகத்தில் தங்கி மடங்களில் வசித்தனர். இத்தகைய பன்முக வளர்ச்சிகளால் சைவ மடங்களுக்குள்ளேயே சண்டை - களும், சச்சரவுகளும் தோன்றின. வைணவ சமய வளர்ச்சி சைவத்திற்கு நாயன்மார்களைப் போல வைணவத்திற்கு ஆழ்வார்கள் தோன்றி அதனை மக்களிடையே வளர்ச்சி அடையச் செய்தனர். இத் திருப்பணிக்கு மன்னர்களின் ஆதரவும் துணை செய்தது. ஆழ்வார்களின் பாசுரங்களைத் தொகுத்து 'நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம்' எனும் 4000தெய்வீகப் பாடல் தொகுப்பாகியது. முதலாம் வரகுணன் பேரூரில் திருமால் கோயிலைக் கட்டினான். திருவரங்கம் அரங்கநாதர் கோயிலுக்குப் பொன்னும் பொருளும் கொடுத்தான் சேரனை வென்றான். திருமண்டபம் கட்டினான். அழகர் கோயிலில் பொன்வேய்ந்த பெருமாள் மண்டபம் கட்டினான். சுந்தரபாண்டிய னின் கோயில் திருப்பணிகளை விளக்கும் 'கோயிலொழுகு " என்னும் நூலும் வெளியிடப்பட்டது. சுந்தர பாண்டியன் திருவைகுந் தம் பெருமாள் கோயிலில் "சுந்தரபாண்டியன் கோபுரம் கட்டினான். திருப்பதியில் ஏழுமலையான் கோயிலுக்குப் பொன்னாலான கலசம் வைத்தான். என்னும் இந்த கோயிலில் கோயிலுக்குப் இவர்களைப் போலவே சடையவர்மன் குலசேகரன், விக்கிரம் பாண்டியன், முதலாம் மாறவர்மன் முதலியோரும் வைணவத் தலங்களில் திருவிழாக்களும், நிவந்தமும் செய்தனர். ஆண்டாள் நாச்சியார், நம்மாழ்வார், திருக்கோட்டியூர் நம்பி, திருவாய்மொழிப் பிள்ளை , மணவாள மாமுனி, வானமாமலை ஜீயர் ஆகியோர் தோன்றியதும் பாண்டிய நாடே ஆகும். வைணவம்டங்கள் வைணவ மடங்களின் தலைவர்களுக்கு ஜீயர் என்று பெயர். வைணவ மடங்களில் சிறப்புடையவை அகோபில மடம், வானமா மலை மடம் ஆகியனவாகும். திருநெல்வேலியில் உள்ள வானமா மலை மடத்தை ஏற்படுத்தியவர் மணவாளமாமுனியின் சீடருள் ஒருவரான வானமாமலை ஜீயராவார். அகோபில மடத்தின் தலைமை இடம் ஆந்திராவிலுள்ள அகோபிலமாகும். இவ்விரு மடங்களின் கிளைகள் பாண்டிய நாட்டில் பல்வேறு இடங்களில் உள்ளன. கோயில் ஜீயர்கள் அல்லது திரிதண்டி துறவிகள் இராமனூ சரின் சித்தாந்தப்படி கோயில் பூசைகளை நடத்துவார்கள். வைணவ மடங்கள் ஆழ்வார்களின் பாடல்களையும், இராமானுசர் போன்ற ஆச்சாரியரின் சித்தாந்தங்களையும் மக்களிடையே பரப்பி வந்தன. திரிதண்டி துறவிகள், ஆழ்வார்கள் ஆகியோருக்கு மடங்களில் உணவளிக்கப்பட்டது. அழகர் கோயிலில் திருநாடுடையார் மடம், குலசேகரமடம் ஆகியவை இருந்தன. இவற்றில் வைணவத் துறவிகளுக்குத் திருவமுது படைக்கப்பட்டது. சமணம் பாண்டியர் நாட்டில் பக்தி இயக்கம் வலுப்பெற்றுச் சைவமும், வைணவமும் சிறப்படையும் முன் சமணமே தலை சிறந்து நின்றது. பாண்டிய நாட்டின் பல்வேறு மலைகளில் சமணத் துறவிகளுக்கான கல்படுக்கைகள் இருந்தன. மதுரை நகரைச் சுற்றியுள்ள ஆனைமலை, அழகர் மலை, சமணர் மலை, நாகமலை, திருப்பரங்குன்றம், கொங்கர் புளியங்குளம், கரடிப்பட்டி, முத்துப்பட்டி ஆகிய இடங்களில் சமணர் குகைகளும், அக் குகைகளில் கல்படுக்கைகளும் உள்ளன. மதுரை மாவட்டம் திருவாதவூர், கீழவளைவு, கருங்காலக் குடி, மாங்குளம், முத்துப்பட்டி ஆகிய இடங்களிலும் திருநெல்வேலி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் சமணக் குகைகளும், சிற்பங்களும் உள்ளன. இவற்றிலுள்ள கல்வெட்டுகள் சமணத்தின் செழுமை யைக் காட்டி நிற்கின்றன. சமணமடங்களிலிருந்த சமண முனிவர்கள் எளால்தான் பல அரிய தமிழ் இலக்கணங்கள் எழுதப்பட்டன. வேறுபல சமண இலக்கியங்களும் தமிழுக்குப் பேறு சேர்த்தன. இரண்டாம் பாண்டியப் பேரரசகாயம் " சமணத்தின் வீழ்ச்சி ஞானசம்பந்தர் போன்ற நாயன்மார்கள் பாண்டிய நாட்டிற்கு வருவதற்கு முன் சமணம் கோலோச்சி நின்றது என்றும் அவருக்குப் பின் சமணம் வீழ்ச்சியடையத் தொடங்கியது என்றும் பெரிய புராணத்தால் அறிகிறோம். ஞானசம்பந்தருடன் புனல் வாதம், அனல் வாதம் செய்து தோற்ற 8000 சமணர்கள் கழுவில் ஏற்றப்பட்டனர் என்றும், அவர்களுடைய மடங்கள் (பாழி அழிக்கப்பட்டன என்றும் பெரிய புராணம் கூறுகிறது. ஆயினும், இன்றும் இத்தகைய சமணக் குகைகளும், கல் படுக்கைகளும், அவற்றைச் சமைத்தவர், உடன் தங்கி இருந்தவர் முதலியோர் பெயர்களும் வட்டெழுத்தில் பொறிக்கப் பட்டுள்ளதைப் பார்க்கும்போது சமணம் பாண்டிய நாட்டில் அழிந்தது எனக் கூறுவதைவிட, உத்வேகம் குறைந்து காணப்பட்டது எனலாம். இவற்றில் சிற்பங்களும் உள்ளன. பெளத்தம் சமணத்தைப் போன்று பௌத்தம் தமிழகத்தில் குறிப்பாகப் பாண்டிய நாட்டில் செல்வாக்குப் பெறவில்லை. காஞ்சி, காவிரிப் பூம்பட்டினம், நாகப்பட்டினம், பூதமங்கலம், வஞ்சி முதலிய இடங்களில் பௌத்தம் செல்வாக்குப் பெற்றிருந்தது. பாண்டிய நாட்டில் அழகர் கோயில், ஆனைமலை, கீழவளைவு போன்ற குகைகளைப் பெளத்தர் குகைகளாக மயிலை சீனி. வேங்கடசாமி தவறாகக் குறிப்பிடுகிறார். அசோகன் காலத்துப் பிராமி எழுத்துகள் இந்தக் குகைகளில் பொறிக்கப்பட்டுள்ளதால் இவை பெளத்தர் குகைகள் என்பது அவருடைய கருத்தாகும். பிராமி பௌத்தர் களுக்கு மட்டும் சொந்தமானதல்ல. அக்காலத்தில் எல்லோராலும் எழுதப்பட்ட எழுத்து பிராமி எழுத்தே ஆகும். ஆனால் பௌத்தம் சங்க காலம் முதலே பாண்டிய நாட்டி விருந்தது என்பதற்கு மணிமேகலையும், அதன் ஆசிரியர் சீத்தலைச் சாத்தனாருமே சான்றாகும். கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தருமபாலர் காஞ்சிப் பௌத்தப் பள்ளியில் இருந்து நாலந்தாப் பல்கலைக்கழகத்திற்குப் பேராசிரியராகப் போனவர், கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வச்சிரபோதி பாண்டிய மண்டலத்தைச் சேர்ந்தவர். பிற்காலப் பாண்டியர் காலத்தாரான தர்மகீர்த்தி ஒரு சிறந்த பௌத்த ஆசிரியர். இவரும் பாண்டிய நாட்டவரே. இத்தகைய சான்றுகளால் காஞ்சி நகரம்தான் தமிழகத்திலேயே பெளத்தத் தலமாகத் திகழ்ந்துள்ளது என்பது தெளிவாகிறது. ஆனால் காஞ்சியைப் போல ஒரு சிறந்த பௌத்தத் தலம் பாண்டிய நாட்டில் இல்லை. ஓரிரண்டு பௌத்தச் சிலைகள்தான் பாண்டிய நாட்டில் கிடைத்துள்ளன. எடுத்துக்காட்டாக இராமநாதபுரம் மாவட்டம் மணி கண்டியில் கிடைத்த பௌத்த சிலை கி.பி. 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். இலங்கை மன்னன் ஒருவன் கி.பி. 126இல் சோழ நாட்டில் இருந்து புத்தபிச்சுகளை இலங்கைக்கு அழைத்துப் பெளத்தத்தை வளர்ச்சியடையச் செய்தான் என்று இலங்கை வரலாறு கூறுவதால் பௌத்தம் கி.பி. 14ஆம் நூற்றாண்டு வரைத் தமிழகத்தில் இருந்தது புலனாகிறது. 2. இலக்கியம் வைணவ இலக்கியங்கள் பாண்டியர் காலத்தில் தமிழிலும் சமற்கிருதத்திலும் பல இலக்கியங்கள் 'தமிழ்வளர்த்த பாண்டியர்களின் ' பெருமையை விவரிக்கின்றன. சமய இலக்கியங்களில் பெரும்பாலானவை பாண்டி யர் காலத்தில் தோன்றின. நம்மாழ்வாரின் 'திருவாய்மொழி', பெரியாழ் வாரின் திருமொழி ஆகிய வைணவ சமய இலக்கியங்கள் இக் காலப் படைப்புகளே ஆகும். மிகவும் பிற்காலப் பாண்டியர்களான அதிவீரராமபாண்டியன், வரதுங்க ராமபாண்டியன் ஆகியோர் இக் காலத்தவரே. இவர்கள் காலத்தில் வெளியான கூர்ம புராணம், காசிக்காண்டம், இலிங்கபுராணம், வெற்றிவேற்கை, பதிற்றுப்பத்து, அந்தாதி, கலித்துறையந்தாதி, வெண்பா அந்தாதி ஆகிய நூல்கள் குறிப்பிடத் தக்கனவாகும். வேதாந்த தேசிகரின் திருவாய்மொழிக்குத் 'திராவிடோபநிடாத்சாரம்" என்று பெயர். பாண்டியன் பராந்தக நெடுஞ்சடையனின் அமைச்சராக இருந்த மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாரின் சீடர். இவர் நம்மாழ்வாரைப் பற்றி ஏழு பாசுரங்களைப் பாடியுள்ளார். பெரியாழ்வாரின் மகள் ஆண்டாள் நாச்சியார் பாடிய நாச்சியார் திருமொழியில் திருமாலின் பெருமை பாடப்படுகிறது. மணவாள மாமுனிவர் எழுதிய 'உபதேசரத்ன மாலை', 'திருவாய்மொழி நூற்றந்தாதி ஆகியவையும் சிறந்த வைணவ இலக்கியங்களாகும். சைவ சமய இலக்கியங்கள் பன்னிரு திருமுறைகளில் சில, பாண்டியர் காலத்தில் தொகுக் கப்பட்டன. சைவ சித்தாந்த நூல்களும் தோன்றின. திருமூலரின் திருமந்திரத்தை விளக்கியவரும், 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவரு மான மெய்கண்டதேவர் சிவஞானபோதம்' என்னும் சைவ சித்தாந்த நூலை எழுதினார். இவ்வாறு சைவ மடங்களில் வாழ்ந்த அடியார்களும், வைணவ மடத்திலிருந்த அடியார்களும் சைவ, வைணவ இலக்கியங்களை எழுதித் தமிழ் இலக்கிய உலகிற்குப் புகழ் சேர்த்துள்ளனர், ... ஏ) கலைகள்: கட்டடக் கலை முற்காலப் பாண்டியரின் கோயில்களைப் பற்றிப் பார்த்தோம். அவற்றில் மலையடிக்குறிச்சிக் குகைக் கோயில், ஆனைமலை நரசிம்மர் கோயில், திருப்பரங்குன்றம் குகைக்கோயில், திருச்சி மலையடிவாரக்குகைக் கோயில் ஆகிய கோயில்களையும், மிகச் சிறந்த கட்டுமானக் கோயில்களை சிக்கனமாக. ஆனால் யும் பற்றிக் கூறினோம். இவற்றில் பல்லவர் காலத்திலும், சோழர் காலத்திலும் வழக்கில் இருந்த மாடக் கோயில் பாண்டிய நாட்டில் இல்லை என்பதைக் கூறினோம். இவற்றில் வெளிக்கோபுரங்களோ, மண்டபங்களோ இல்லை, ஆனால், பிற்காலப் பாண் டியர் கோயில்களில் கோபுரங் களும், மண்டபங்களுமே முகாமை இடத்தைப் பெறுகின்றன. இசுலாமியரின் ஆட்சி இடையில் ஏற்பட்டதால் பிற்காலப் பாண்டியர் கட்டடக் கலையில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. சோழர் கட்டடக் கலையைத் தழுவியே பாண்டியர் கட்டடக் கலை வளர்ச்சிப் பெற்றது. ஆயினும் பாண்டியர் காலத்தில் கட்டடக் கலைக்கெனப் பல தனித்தன்மைகள் ஏற்பட்டன. பாண்டியர் கோயில்கள் கி.பி. 1100 - 1350) தன்மைகள் 1. சோழர்களின் கோயில்களைப் போல், பாண்டியர் கோயில் கள் கம்பீரத்திற்கும், எடுப்பானத் தோற்றத்திற்கும் பெயர் பெற்றவையல்ல. சோழர் காலத்தில் கருவறைக்கு மேலே விமானம் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது. ஆனால் பாண்டியர் காலம் கோபுரக் காலம் (சகாப்தம்) என்னும் சிறப்பைப் பெற்றது. இதற்குக் காரணம் கருவறைக்கு நேரே நுழைவாயில்களிலும் கோபுரங்கள் எழுந்தன. எனவேதான் சோழர்காலத்தைக் கோயில் சகாப்தம் என்றும், பாண்டியர் காலத்தைக் கோபுரசகாப்தம்' என்றும் அழைப் பர். பாண்டியர் காலத்தில் தோன்றிய இந்த கோபுரசகாப்தம் விசய நகர, காலத்தில் கோபுரம் மேலும் உயர்ந்து 'இராயர் கோபுரம்', எனப் புகழ் பெற்றது. நாயக்கர் காலத்திலும் கோபுரசகாப்தம் தொடர்ந்தது. 2. சோழர்கள் விமானத்தை அழகுபடுத்தும் பாணியை, கரு வறையைச் சுற்றிலும், சிற்பங்களை எழுப்பி அழகுபடுத்தும் பாணி பிரிக்கப்பட்டதாகயும் அதிகமிருந்தது. ஆனால், பாண்டியர் காலத்தில் கரு வறையை அடைவதற்கு முன் உள்ள திருச் சுற்றுப்பாதை கண்கவர் வண்ணங்களால் அழகுபடுத்தப்பட்டன. 3. கோபுரத் தன்மைகள் பாண்டியர் கோபுரங் களை இருவகையாகப் பிரித்துக் கூறலாம். 1. நாற்கர வடிவில் நெட்டையாக நெடிது வளர்ந்து செல்லும் கோபுரம் 2. நாற்கர வடிவில் குட்டையாக கீழே சரிந்ததைப் போல் உயர்ந்து வளர்ந்து செல்லும் கோபுரம். பெரும்பாலும் அடி மட்டத்தின் சரிபாதியாக அடுத்த தளமும் இக்கோபுர நடராசர் கோயில் கோபுரம் - மும் மேல் நோக்கி வளர்ந்து சிதம்பரம் செல்லும் அடியில் இருந்து 25 பாகை குறைந்து கொண்டே போய் முடியும். நெட்டைத்தளங்களும், குட்டைத் தளங்களும் பல்வேறு பிரிவுகளையும், வளைவு நெளிவு களையும் பெற்றிருந்தாலும், அவை கடைசிவரை நேர்நேராக வளர்ந்து சென்று முடியும். நெட்டைத்தளங்களில் மலர், இதழ், கொடி வடிவங்களும், குட்டைத் தளங்களில் தேவர் உருவங்களும் காணப்படுவது பாண்டியர் கோபுரத்தின் பொதுத் தன்மை ஆகும். கோபுரத்தில் காணப்பெறும் தேவஉருவங்கள் மூலவருக் கேற்ப அமைந்திருக்கும். கோபுரம் நீண்ட சதுர வடிவில் காணப்படும், வாயில் வெளிகள் ஒவ்வொரு தளத்தின் இருபுறங்களிலும் காணப்பெறும். கோபுரம் முடியும்போது அதன் மேற்பகுதி உருள்தொட்டி வடிவில் இருக்கும். அந்த உருள் தொட்டிவடிவின் முதுகில்தான் கலசங்கள் அமைக்கப் படும். இதன் இருபுறமும் அணி செய்த (ஜோடித்து) பிரபைபோல் காணப்படும். தாண்கள் ' பாண்டியர் கால கட்டிடங்களிலுள்ள தூண்களில் பலகைக்குக் கீழுள்ள பாகம் மலர் வடிவத்தில் இருக்கும். போதிகையைப் பொறுத் தும் இருக்கும். அதனை அடுத்த தூண் தலைப்பு நீண்டு தொங்கும் பலகை பரந்து பெரிதாகக் காணப்படும். இரண்டாம் பாண்டியப் பேரரசுக்காலம் கோபுர வாயில்கள் தொடக்க காலத்தில் பாண்டியர் கோபுரவாயில்கள் கரு வறைக்கு மிக அருகில் கட்டப்பட்டன. இதனால் கருவறைக்கும், வாயிலுக்கும் இடையிலுள்ள இடைநாழிகை (அர்த்த மண்டபம்) சிறியதாக இருந்தது. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு திருச்சிக்கு அருகில் உள்ள சம்புகேசுவரர் கோயில், சிதம்பரம் கோயிலின் தெற்குப்புறத்திலுள்ள சுந்தரபாண்டியன் கோபுரம் ஆகியவற்றைக் கூறலாம். திருவண்ணாமலைக் கோயிலின் உட் பிரகாரத்தில் உள்ள கீழைக் கோபுரம், கும்பகோணம் கோயில் கோபுரமும் தொடக்க காலக் கோபுரங்கள் ஆகும். இவற்றில் உள்ள சாலைகள், மாடங்கள், முலைகள் ஆகியவை சிறப்பாகவும், கலை நயத்தோடும் அமைக்கப் பெற்றுள்ளன. பிற்காலப் பாண்டியர் ஆட்சி முடிவில் கட்டப்பட்ட பாண்டியர் கோபுரங்கள் பிரமிடுகள் போல் மடிந்திருக்கும். இவற்றின் தூண் தலைப்புகள், வளைவடைப்புகள், வளைவுக் கோப்புகள், உத்திரங்கள் முதலியன பல்லவரின் மாமல்லபுரத்துக் குடைவரை களின் பாணியிலிருக்கும். சுருங்கச் சொன்னால் பல்லவர் பாணியை யும், சோழரின் அழகு முதிர்ச்சியையும் கொண்டதே பாண்டியரின் பிற்காலக் கோபுரங்களாகும். இவை விசயநகரப் பாணிக்கு வழி காட்டிகளாய் உள்ளன. கோயிலின் நடுப்பகுதி உருளை பூட்டப் பெற்றதைப் போல் காட்சி அளிக்கின்றது. இத்தகைய தன்மைகளை உடைய பாண்டியரின் பிற்காலப் பாணிக்குச் சிறந்த எடுத்துக்காட்டு தாராசுரம் - ஐராவதேச்சுரன் கோயில் ஆகும். பாண்டியர்கள் பெருங்கோயில்களுக்குள் அம்மனுக்கு என்று தனிக் கோயில்களைக் கட்டும் வழக்கத்தைத் தொடங்கினார்கள், புதிய மண்டபங்களையும், துணைக்கோயில்களையும் கட்ட முற்பட்டார்கள். சோழர்காலக் கோயில்களுக்குப் புதிய மண்டபங் களையும், புதிய கோபுரங்களையும் கட்டினார்கள். கோபுரத்தில் கட்டடத்தைவிட ஒப்பனைகள் அழகாக அமைக்கப்பட்டன. சிற்பக்கலை பாண்டியர் காலத்தில் ஏற்பட்ட ஒரு புதிய சிற்பக்கலை 'நவக்கிரகம்' ஆகும். ஒன்பது கோள்களை ஒரே கல்லில் வட்ட வடிவமாகச் சமைக்கும் சிற்பக்கலை பாண்டியர் காலத்தது ஆகும். விசித்திரமான சிற்பங்களைத் தூண்களில் செதுக்குவதும், குறிப்பாக நடனச் சிற்பங்களும் இவர்கள் காலத்தில் பெரிதும் வளர்ச்சி அடைந்தன. பிற்காலத்தில் இத்தகைய சிற்பங்கள் கோபுர வாயில் களிலும், கோபுரங்களிலும் இடம் பெற்றன. இதைப் போலவே பாண்டியர் காலத்தில் புதுவகை ஓவியங்களும், இசை நடனக் கலை களும் வளர்ச்சி அடைந்தன. அ) சான்றுகள் 1. இலக்கியங்கள் 2. அயல் நாட்டார் குறிப்புகள் 3. கல்வெட்டுகள் ஆ) வரலாற்றுச் சுருக்கம் 1. சங்க ம் மரபு (கி.பி. 1376 - 1488) 2. சாளுவ மரபு (கி.பி. 1486 - 1505) 3. துளுவ மரபு (கி.பி. 1505 - 1567) 4. ஆரவீடு மரபு (கி.பி. 1567 - 1665) இ) வாரிசுரிமைப் போர் ஈ) ஆட்சிமுறை 1, நடுவண் ஆட்சி 2. மாநில ஆட்சி 3. ஊராட்சி 4. பாராட்சிமுறை ஏன் மறைந்தது? உ) பொருளாதார நிலை ஊ) சமயமும் இலக்கியமும் எ) கலைகள் 1. கட்டடக் கலை 2. ஓவியக் கலை 3. சிற்பக் கலை படம் 1 10. விசயநகர ஆட்சிமுறையும் பண்பாடும் விசயநகர ஆட்சி ஓர் இந்துப் பேரரசு என்றும், தில்லியைத் . தலைநகராகக் கொண்டு இந்தியாவை ஆளத் தொடங்கிய தில்லி - சுல்தானியம் இந்துச் சமயப் பண்பாடுகளை மாய்ப்பதைத் தடுத்து நிறுத்தி இந்துப் பண்பாட்டை நிலைநாட்டவே விசயநகரப் பேரரசு ஏற்பட்டது என்றும் கூறுவர். குறிப்பாகத், தில்லி சுல்தானியம் வலிமை குன்றியபோது அலாவுதீன் பாமான்சா (ஆசன்கங்கு பாமினி) என்பவன் கி.பி. 1347-ல் தௌலதாபாத்தில் பாமினி அரசை ஏற்படுத்தினான். அரிகரர், புக்கர் என்ற சகோதரர்கள் தென்னகத்தில் துங்கபத்திரை ஆற்றங்கரையில் கி.பி. 1336-ல் விசய நகரப்பேரரசை ஏற்படுத்தினார்கள். கி.பி. 1565-ல் இப் பேரரசு தலைக்கோட்டைப் போரில் வீழ்ந்தது. இந்த நீண்ட நெடுங்காலம் (சுமார் 230 விசயநகர அரசு (152) கால் - பிரியதரம் பெலுகொண்ட அரபிக் கடல் வங்கக் கடல் இந்தியப் பெருங்கடல் படம் 2 : ஆண்டுகள்) நிலைத்திருந்த இந்த விசயநகர ஆட்சியின் வரலாற்றைப் பற்றித் தெரிந்துகொள்ள நமக்குச் சமற்கிருத, தமிழ் இலக்கியங்களும், கல்வெட்டுகள் மற்றும் அயல் நாட்டார் குறிப்புகளும் சான்றுகளாகக் கிடைக்கின்றன, விசயநகர ஆட்சிமுறையும் பண்பாடும் 1. இலக்கியங்கள் மதுராவிசயம் சமற்கிருதத்தில் எழுதப்பட்ட இந்நூலை எழுதியவர் குமார கம்பணனுடைய பட்டத்தரசியான கங்காதேவி என்பவராவார். மதுரையை ஆண்ட மாபார் சுல்தான்களாகிய துலுக்கரை அழித் தொழித்து, இந்து தருமத்தைக் காக்குமாறு ஒரு தேவதை கங்காதேவி யின் கனவில் தோன்றி வாளொன்றை நல்கியதாகவும், அந்த வாளைக் கொண்டு குமாரகம்பணன் மதுரையை ஆண்ட சுல்தான் களை அழித்து மதுரையை மீட்டான் என்பதும் இந்நூலில் கூறப்பட் டுள்ள கருத்தாகும். கங்க தசப்பிரதாப் விலாசம் இந்நூலை எழுதியவர் கங்காதரன் என்பவராவார். இந்நூல் விசயநகர மன்னன் இரண்டாம் தேவராயனுக்கும், பாமினி சுல்தான் களான அகமது, இரண்டாம் அலாவுதீன் என்பவருக்கும் இடையே நடந்த போர்களைப்பற்றி விவரிக்கிறது. வீரபத்திரர் எழுதிய ஜாய்மினி பாரதம், நந்தி மல்லையா, காந்தா சிங்கையா ஆகியோர் எழுதிய வராக புராணம் ஆகிய இரண்டு தெலுங்கு இலக்கியங்களும் விசயநகரை ஆண்ட சாளுவ, துளுவ மரபுகளைப் பற்றிய வரலாறுகளை அறிய உதவுகின்றன. தாரிக்பெரிஸ்டா என்ற நூலை முகமது காசிம்ஃபெரிஸ்டா என்பவர் எழுதினார். புரனிமாசிர் என்ற நூலை தாபா-தாபா என்பவர் எழுதினார். இவ்விரு நூல்களும் விசயநகர அரசர்களுக்கும், பாமினி சுல்தான்களுக்கும் இடையிலான நடைமுறைகளைத் தெரிந்து கொள்ள மிகவும் உதவியான வரலாற்று நூல்களாகும். இவை இரண்டு நூல்களுமே பாமினி சுல்தான்களைப் புகழ்ந்தும், விசயநகர மன்னர்களைக் குறைத்தும் பேசுகின்றன. இவை இரண்டிலும் விசய நகர மன்னர்களின் பெயர்களும், காலமும் சரியாகக் குறிப்பிடப் படவில்லை . 2. அயல் நாட்டார் குறிப்புகள் இபின்-பாதுதாவின் குறிப்புகள் மொராக்கோ நாட்டுக்காரனான இவன் முகம்மது பின் துக்ளக் காலத்தில் தில்லிக்கு வந்தான். மதுரையை ஆண்ட சுல்தான் கியாசுதீன் தங்கனி(கி.பி. 1340-42) காலத்தில் மதுரைக்கும் வந்தான். மூன்றாம் வல்லாள மகாராசாவின் தோல்வியும், ஆயிரக்கணக்கான இந்துக்களின் படுகொலைகளையும், அவர்களின் தோலை உரித்து வைக்கோல் துருத்தி மரக்கிளைகளிலும், மதில்கள் மீதும் தொங்க விட்ட கொடுமைகளையும் இபின் பாதுதா, தான் நேரில் கண்டவாறு விவரிக்கிறான். இவனைப் போலவே வெனிசுநாட்டுப் பயணி திக்கோலோ காண்டியும், பாரசீகத்தில் இருந்து கள்ளிக்கோட்டை அரசன் ஜாமோரின் சபைக்கு வந்த அப்துல் ரஸாக் என்பவனும் விசய நகர ஆட்சியைப் பற்றியும், அந்நகரத்தைப் பற்றியும் விவரித்துள்ளனர், ருசியாவில் இருந்து வந்த பயணி அத்தனாசியஸ்-நிகிடின் என்ப வரும், இத்தாலியில் இருந்து வந்த பயணி வர்தேனா என்பவரும் விட்டுச் சென்றுள்ள குறிப்புகள் அறியச் சான்றுகளாய் உள்ளன. இவை எல்லாவற்றிற்கும் மேலாகப் போர்த்துகல் நாட்டில் இருந்து வந்த மூன்று வாணிகர்களின் குறிப்புகள் முதல்தரச் சான்று களாய் உள்ளன. இவர்களில் தோமினிக் பாயசு என்பவர் கிருட்டிண தேவராயரைப் பற்றிய விவரங்களைத் தந்துள்ளார். நூனிசு என்பவர் விசய நகரப் பேரரசு சங்கம், சாளுவ, துளுவ வமிசங்களால் ஆண்ட வரலாற்றைக் கோர்வையாகக் கூறுகிறார். விசயநகரத்தின் தலைநகர் ரான அம்பியில் இருந்த ஆயிரங்கால் மண்டபம், எண்ணிலடங்கா கோயில்கள், கோபுரங்கள், முதலியவற்றைப் பற்றியும் கூறியுள்ளார். 3. கல்வெட்டுகள் தமிழ் நாட்டில் விசய நகர ஆட்சி நடந்த கி.பி. 133 முதல் 1646 வரையிலான காலகட்டத்தில் பல நூறு கல்வெட்டுகள் அவர்களைப் பற்றி அறிய உதவுகின்றன. சம்புவராயர் காலத்தில் மட்டும் குமார கம்பணின் கல்வெட்டுகள் ஏராளமாக உள்ளன. அவற்றில் 105 கல் வெட்டுகளில் சம்புவராயர்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படு தின்றன. இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள 206 சம்புவராயர் கல் வெட்டுகளில் பாதியளவு விசயநகரைப் பற்றியே அறிய உதவு கின்றன. இவற்றைத் தவிர விசயநகரப் பேராட்சி பரவியிருந்த பிற பகுதிகளிலும் கல்வெட்டுகள் ஏராளமாய்க் காணப்படுகின்றன. அவை தெலுங்கு, சமற்கிருத மொழிகளிலும் உள்ளன. ஆ) வரலாற்றுச் சுருக்கம் 1. சங்க ம மரபு கி.பி. 1336 - 1486) கி.பி. 1336 - ல் அரிகரர், புக்கர் என்ற இரு உடன்பிறப் பாளர்கள் துங்கபத்திரை ஆற்றங்கரையில் அம்பியைக் கோநகராகக் கொண்டு விசயநகர ஆட்சியை ஏற்படுத்தினார்கள். இந்துப் பண் பாட்டை நிலை நாட்ட இசுலாமியரை வெற்றி கொள்ள வேண்டும் மென்ற பொருளில்தான் இதற்கு வெற்றி நகர ஆட்சி' என்று பெயர் சூட்டினர். முதல் இருமன்னர்களான அரிகரர் கி.பி. 1336 -ல் இருந்து 1357 வரையிலும், புக்கர் சீ.பி. 1357-ல் இருந்து 1377 வரையிலும் ஆண்டனர். இவர்களுடைய ஆட்சிக் காலத்தில் விசயநகரப் பேரரசு தெற்கே கன்னியாகுமாரி வரை பரவி இருந்தது. இவர்களுக்குப்பின் அரசு கட்டிலேறிய இரண்டாம் அரிகரர் (கி.பி. 1377-1404) காலத்தில் தென்னகம் முழுவதும் விசயநகர ஆட்சி விசயநகர ஆட்சிமுறையும் பண்பாடும் யின் கீழ் வந்தது. இவன் தன் பேராட்சிப் பரப்பை 1. துளுநாடு 2. மலை நாடு 3. உதயகிரிநாடு 4, பெனுகொண்டநாடு 5. இராசகம்பீர நாடு 6. மழவராய நாடு ஆகிய பெரும் பிரிவுகளாகப் பிரித்து ஆண்டான். இரண்டாம் அரிகரருக்குப்பின் இவன் மகன் இரண்டாம் புக்கர் (கி.பி. 1404-1406) இரண்டு ஆண்டுகளே ஆண்டான். இவனுக்குப் பின் இவனுடைய இரண்டு தம்பிகளான முதலாம் விருபாட்சன், முதலாம் தேவராயர் ஆகியோர் ஆண்டனர், இவர்களுக்குப்பின் விசயன் (கி.பி. 1422-1424) இரண்டு ஆண்டுகள் ஆண்டான், இவனுக்குப்பின் இரண்டாம் தேவராயன் (கி.பி. 1424-1447) இரண்டாம் தேவராயனின் மகன் மல்லிகார்ச்சுனன் (கி.பி. 1447 1465) இவன் தம்பி இரண்டாம் விருபாட்சன் (கி.பி. 1465-1485) ஆகியோர் ஆண்டனர். இவர்கள் அனைவரும் சங்கம் மரபைச் சேர்ந்தவர்கள், விசயநகரை ஆண்ட சங்கம், சாளுவ, துளுவ, ஆரவீடு எனும் நான்கு மரபுகளில் இவர்கள் முதல் மரபைச் சேர்ந்தவர்கள். இந்த மரபினர் கி.பி. 1336 -ல் இருந்து 1485 வரை ஆண்ட னர். இவர்கள் காலத்தில் சந்திரகிரியில் இவர்களுக்கு அடங்கி ஆண்டு வந்த குறுநில மன்னன் சாளுவ நரசிம்மன் விசய நகர ஆட்சியைக் கைப்பற்றிக் கி.பி. 1485 முதல் 1493 வரை ஆண்டான், இவனால் ஏற்படுத்தப்பட்டதே சாளுவ மரபு ஆகும். 2. சாளுவ மரபு (கி.பி. 1486 - 1505) சாளுவ மரபின் முதல் அரசனாகச் சாளுவ நரசிம்மனே 'ஆண்டான். இவனுக்குப்பின் இவனுடைய மக்கள் ஒருவர் பின் ஒருவராகவே ஆண்டனர். சாளுவ நரசிம்மன் தன் ஆட்சியை அமைப்பதற்கு உறுதுணையாக இருந்த நரச நாயக்கன் அவன் காலத்திலும் அவனுடைய பிள்ளைகளின் ஆட்சிக்காலத்திலும் எல்லா அதிகாரங்களையும் தானே கைப்பற்றித் தானே மன்னரைப் போல் செயல்பட்டான். காலப்போக்கில் இவனுடைய மகன் வீர நரசிம்மன் என்பவன் சாளுவ மரபை ஒழித்துவிட்டுத் தானே அரசு கட்டிலேறினான். 3. துளுவ மரபு (கி.பி. 1505 - 1587) - சாளுவ நரசிம்மன் கி.பி. 150 - முதல் 1509 வரை ஆண்டான். இவனால் ஏற்படுத்தப்பட்ட மரபுதான் துளுவ மரபு ஆகும். எனவே சாளுவ மரபினர் கி.பி. 1486 முதல் 150 வரைதான் ஆண்ட னர், துளுவ மரபை ஏற்படுத்திய சாளுவ நரசிம்மன் கி.பி. 1506 முதல் 1509 வரைதான் ஆண்டான். அவனுக்குப்பின், அவனுடைய ஓன்றுவிட்ட தம்பியான கிருட்டிண தேவராயன் (கி.பி. 1509-1530) மன்ன னானான். இவனே விசய நகரப் பேரரசை ஆண்ட பேரரசர்களில் புகழ்வாய்ந்த மன்னன் ஆவான். இவனுக்குப்பின் இவனுடைய ஒன்றுவிட்ட தம்பியான அச்சுதராயன் (கி.பி. 1530- 42) மன்ன னானான். அவனுக்குப்பின் சதாசிவராயன் (கி.பி. 1542-1576) ஆண் டான். இவன் காலத்தில்தான் தலைக்கோட்டைப் போர் கி.பி. 1565 இல் நடந்தது. இப்போரின் முடிவில் விசயநகரப் பேரரசு வீழ்ந்தது. தலைக்கோட்டைப் போருக்குப்பின் விசய நகர வரலாறு 4. ஆரவீடு மரபு (கி.பி. 1567 - 1665) தலைக் கோட்டைப் போருக்குப் பின்னும், விசயநகர ஆட்சி குற்றுயிராய் வாழ்ந்தது. அழிவில் இருந்து சில பொருள்களை மீட்டுக் கொண்டு திருமலைராயன் என்பவன் பெனுகொண்டாவிற்கு ஓடி வந்து விசயநகர ஆட்சியை நிறுவினான். அரசன் சதாசிவராயனை சிறையிட்டுத் தானே அரசாண்டான் (கி.பி. 1750-71), தனது மூத்த மகன் சீரங்கன் என்பவனைத் தெலுங்கு நாட்டிற்கும், மூன்றாவது மகன் வேங்கடாத்திரி என்பவனைத் தமிழ்நாட்டிற்கும் படிநிகராளி யாக்கி ஆளச் செய்தான். ஆனால், திருமலைராயன் கி.பி. 1572-ல் இறந்தவுடன் இவனுடைய மூத்தமகனான சீரங்கன் விசயநகரப் பேரரசனாகத்தானே முடிசூட்டிக் கொண்டான். இவன் கி.பி. 1572-ல் இருந்து 1585 வரைப் பேரரசன் என்ற பெயரோடு ஆண்டான். கி.பி. 1576-ல் சிறையிலிருந்த துளுவமரபின் கடைசி அரசனான சதாசிவ ராயன் மாண்டான். சீரங்கனும் கி.பி., 1555-ல் மக்கட்பேறு இல்லாமல் மாண்டான். சீரங்கனுக்குப்பின் அவனுடைய தம்பி இரண்டாம் வேங் கடன் (கி.பி. 1585 - 1614) விசயநகரப் பேரரசனானான். இ) அரசுரிமைப் போர் இரண்டாம் வேங்கடன் கி.பி. 1514-ல் இறந்தான். இவன் இறப்புக்குப்பின் அரசுரிமைப் போர் நடந்தது. முடிவில் சீரங்கனின் இரண்டாம் மகன் இராமதேவன் (கி.பி. 1814 - 1630) அரசனானான். அவனுக்குப் பின் முதலாம் சீரங்கனின் பெயரன் பெரிய வேங்கடன் (கி.பி. 1630 - 1647) ஆண்டான். இவன்தான் பெனுகொண்டாவி விருந்த தலைநகரை வேலூருக்கு மாற்றினான். அரசன் இந்நகரில் குடி கொண்டதால் இது இராய வேலூர் எனப்பட்டது. பெரிய வேங் கடனுக்குப் பிறகு அவனுடைய தம்பி மகன் மூன்றாம் சீரங்கன் (கி.பி. 1642 - 1672) ஆண்டான், விரிஞ்சிபுரம் போர் (கி.பி. 1646) இவன் காலத்தில் பீசப்பூர் சுல்தான் வேலூரைத் தாக்க முயன்றான். கி.பி.1646-ல் விரிஞ்சிபுரத்தில் பீசப்பூர் படை களுக்கும் சீரங்கன் படைகளுக்கும் கடும்போர் நடந்தது. கடைசியில் கி.பி. 1646 -ல் வேலூர் பீசப்பூர் சுல்தான்கள் வசம் வீழ்ந்தது. மூன்றாம் சீரங்கன் வேலூரை விட்டு ஓடினான். கி.பி. 1645 முதல் 1672 வரை அலைந்து திரிந்து மாண்டான். ஆக கி. பி. 1546-ல் பீசப்பூர் சுல்தான் விசயநகர ஆட்சிமுறையும் பண்பாடும் வேலூரைக் கைப்பற்றியதோடு விசயநகரப் பேராட்சி 1546 - ல் விரிஞ்சிபுரம் போரில் முடிவடைந்தது. கி.பி. 1545 -ல் விரிஞ்சிபுரத்தில் வெற்றிகண்டு வேலூரைக் கைப்பற்றிய பீசப்பூர் சுல்தான்கள் கி.பி. 1549-ல் செஞ்சி, தஞ்சை ஆகியவற்றையும் கைப்பற்றினர். இந்து சமயத்தையும், இந்துக் களின் பண்பாடுகளையும் இசுலாமியரிடமே இழந்தனர். கடைசியாக மைசூரை ஆண்ட திப்பு சுல்தான் கி.பி. 1786-ல் விசய நகராட்சி யின், அடிச்சுவட்டையே அழித்துவிட்டான். ஆயினும், இந்துப் பண் பாட்டை ஒரு நூற்றாண்டுக்கு மேலாகக் கட்டிக் காத்த பெருமையும், அதன் பின்விளைவாய்த் தமிழ்நாட்டில் ஏற்பட்ட இந்து மறுமலர்ச்சி யும் விசயநகர ஆட்சிக்கே உரியது. இவ்வாறு துங்கபத்திரை ஆற்றங்கரையில் தோன்றிய விசய் நகர ஆட்சி, தமிழகத்தில் ஒரு நூற்றாண்டுக்கு மேலாகத் தழைத் திருந்தது. எனவே, அவ்வாட்சிக் காலத்தில் தமிழகத்தில் நடந்த நடுவண் ஆட்சி, மாநில ஆட்சி, ஊர் ஆட்சிமுறைகளைப் பற்றி விரித்துரைப்போம். ஈ) ஆட்சிமுறை 1) நடுவண் ஆட்சி நடுவண் ஆட்சி அல்லது மைய ஆட்சியில் அரசர், அமைச்சர் அவை, தலைமைச் செயலகம் ஆகிய உறுப்புகளும் வருவாய்த் துறை, படைத்துறை, சட்டத்துறை, நீதித்துறை, காவல் துறை முதலிய துறைகளும் அடங்கும். அரசன் - செங்கோன்மை இடைக்கால் கோலாண்மைக் கொள்கைப்படி அரசன் இறை யாண்மை பெற்றிருந்தான். கட்டுக்கடங்காத அதிகாரங்களைப் பெற் றிருந்தான். இதனடிப்படையில்தான் விசயநகர மன்னரும் திருமாவின் தோற்றரவாக தெய்விகக் கோட்பாட்டைக் கொண்டிருந்த னர். ஆயினும், தன்னிச்சைபோல் அவர்கள் செயல் பட்டதில்லை. எனவே, அரசாட்சியில் கொடுங்கோன்மை ஏற்பட்டதில்லை. அவனுக்கென்று அரசியல் சட்டங்கள் இல்லை. ஆனா லும், அவன் வேத விதிகள், தரும சாத்திரங்கள், நீதி நூல்கள், அரச தந்திரங்கள் ஆகியவற்றில் நல்ல பயிற்சி பெற்றிருந்தான். இவற்றில் வலியுறுத் தும் வேதவிற்பன்னர்களும், நீதிமான்களும் அவனுக்கு வழிகாட்டி களாய் நின்றனர். * மேலும் சமுதாயப் பழக்க வழக்கங்களிலும், சமய ஒழுக்கத் திலும் அரசன் தலையிடமாட்டான். அரசுரிமை மூத்த மகனே அரசுக்கு வரவேண்டும் எனும் பிறங்கடை உரிமைப்படி ஓர் அரசனுக்கு எத்தனை மனைவியர் இருந்தாலும், அவர்களுக்கு எத்தனைப் பிள்ளைகள் இந்தாலும், அவர்களுள் அகவையில் மூத்த மகனே பட்டத்திற்கு வரவேண்டும் என்ற நியதி கடைபிடிக்கப்பட்டது. அரசன் தன் ஆட்சிக் காலத்திலேயே பட்டத் திற்குரிய மகனுக்கு இளவரசுப் பட்டங்கட்டித் தனது ஆட்சியில் பங்கேற்று நல்ல பயிற்சி பெறும்படிச் செய்வான். இதனால் அரசன் இறந்தபின் வாரிசுரிமைப் போர் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது, அரசன் திடீரென இறந்து விட்டால் இந்த வாரிசுரிமையை நிர்ண யிப்பவர்கள் அவனுடைய புரோகிதரும், மந்திரி பிரதானிகளும், தலைமை அதிகாரிகளுமே ஆவர். முடிசூட்டு விழா என்பது நாட்டின் மிகப் பெரிய விழா. இதில் சிற்றரசர்களும், சமுதாயத் தலைவர்களும், அமைச்சர்களும், பேரதிகாரிகளும், அயலகத் தூதுவர்களும், துறைத்தலைவர்களும், அயல்நாட்டு அரசர்களும் கலந்துகொள்வர். வேதசாத்திர விதிகளின் படி, புரோகிதர்கள் மந்திரம் ஓத முடிசூட்டு விழா நடைபெறும். இதில் அரசன் குடிமக்களைக் காக்கும் கடமைகளையும், கடைபிடிக்க வேண்டிய பொறைகளையும் பற்றி உறுதிமொழி எடுத்துக் கொள்வான். தரும் சாத்திர விதிகளைக் கடை பிடிக்கவும், அரசனுக்குச் சில சடங்குகளின் வாயிலாக உணர்த்தப்படும். அரசவை அரசன் கொடுங்கோலனாக மாறிவிடாமல் அவனைத் தருமசாத்திர விதிகளின்படி நடத்திச் செல்லவும், அறிவுரை கூறவும் ஓர் அமைச்சரவை இருந்தது. இதில் தானைத் தலைவர்களும், புரோகிதரும், இளவரசரும் பிறரும் இடம் பெற்றிருந்தனர். அரசன் எழிலார்ந்த சிம்மாசனத்தில் அமர்ந்து புடைசூழ வீற்றிருப்பான். இந்து தருமப்படி கொலு வீற்றிருப்பது, அவனை வலங்கை,இடங்கை மா சேனைகள் சூழ்ந்து நிற்பது, தூதுவர்களைச் சந்திப்பது, பொது மக்கள் குறைகேட்பது ஆகியவை அன்றாட அரசவை நிகழ்வுகள் ஆகும். பெண்கள் இருப்பர். அரசன் களியாட்டங்களில் ஈடுபட்டுக் களிப்பான். கோயில் திருப்பணிகளைச் செய்வான். நீதிமான்களை யும், வேதவல்லுநர்களையும் போற்றுவான். அவர்களுக்குப் பரிசுகள் வழங்கி மகிழ்விப்பான். பேரரசர் அவை அமைச்சர் அவையோடு, பேரரசர் அவை என்பதும் இருந்தது. இதில் பிரதானி நெருங்கிய உறவினர்கள் ஆகியோர் இருப்பர். இந்த அவை இன்றைய மேலவைபோல் செயல்பட்டதெனக் கூறலாம். இங்கிலாந்து நாட்டிலுள்ள பிரிவுகவுன்சில் போலிருந்ததெனவும் கூறுவர். இதில் அமைச்சர்கள், நாயக்கர்கள், இளவரசர்கள், தளவாய்கள், வணிகர்கள், அயல் நாட்டுத் தூதுவர்களும் கலந்து கொண்டனர். நாயக்கர்களும், சிற்றரசர்களும் இதில் கலந்து கொண்ட விசயநகர அதட்சிமுரையும் பண்பாடும் தால் அவர்கள் பேரரசுக்குக் கீழ்படிந்து நடந்தனர். இது தேவைப் படும்போது கூட்டப்படும் பேரவை ஆகும். அமைச்சரவை (மந்திரி பரிசத் ) அமைச்சரவை தொடர்ந்து செயல்படும் நிரந்தர அவை ஆகும். இதிலிருந்த அமைச்சரின் எண்ணிக்கை எத்தனை என்பது திட்டமாகத் தெரியவில்லை. இரண்டாம் தேவராயன் அமைச்ச ரவையில் இருபது அமைச்சர்கள் இருந்ததாகத் தெரிகிறது. இதனை நுனிசும் குறிப்பிடுகின்றான். பொதுவாக எட்டு அல்லது பத்து அமைச்சர்கள் இருந்ததாகக் கருதுகின்றனர். மராத்திய மன்னன் சிவாஜியின் அமைச்சரவையில் எண்மர் இருந்ததால் அஷ்டப் பிர தான் என்று அந்த அமைச்சரவை அழைக்கப்பட்டது. மந்திரி பரிசத் அல்லது அமைச்சரவை பேரதிகாரத்துடன் திகழ்ந்தது. அமைச்சரவையால்தான் அரசனே அமைதியாக கொலு வீற்றிருந்தான். அமைச்சர்களின் கல்வி, குலம் முதலிய உயர்வு களைக் கொண்டே அரசன் தேர்ந்தெடுப்பான். சில அமைச்சர்கள் பல அரசர்களுக்குத் தொடர்ந்து அமைச்சர்களாகவும், சிலர் உறவி னர்களாகவும் இருந்துள்ளனர். தரும சாத்திரங்கள் அறிந்தவனா கவும், தியாகச் செம்மலாகவும் இருப்பவனே அமைச்சனாகத் தகுதியுடையவன். அவனுடைய அகவை 50-க்கும், 70-க்கும் இடைப்பட்டு இருக்க வேண்டும். அமைச்சர்கள் கூறும் அறிவுரை களைச் சில சமயம் அரசன் மீறுவதுமுண்டு. ஒற்றர்கள் அமைச்சர் களின் நடவடிக்கைகளை ஒற்றுப் பார்ப்பது வழக்கம். அமைச்சர் களை அரசன் தண்டித்ததும் உண்டு. அமைச்சரவைக்கு அரசன் சில போது தலைமை தாங்குவான். நீதி, படை மற்றும் பிற துறைகளில் அரசன் நேரடியாகத் தலையிடுவதுண்டு. அமைச்சரவைக்குத் தலைவராகச் சபாநாயகர் இருப்பார். அவர் சபையில் நடக்கும் வாதம், பிரதிவாதங்களைக் கேட்டு நடுநாயகமான, தீர்ப்பு வழங்குவார். கல்வெட்டுச் சான்றுகளின்படி நோக்கும்போது மகாபிரதானி, பிரதானி, உபபிரதானி, சிரபிரதானி, சர்பசிர பிரதானி ஆகியவர்களாக அமைச்சர்கள் அறியப்பட்டனர். தண்ட நாயகம் என்பதும் அமைச்சர் பதவியே ஆகும் என்பர். இவரே தானைத் தலைவராகவும் இருப்பார். தலைமை அமைச்சரான சாளுமதிம்மர் என்பவரைத் தந்திர நாயகர் என்றே கல்வெட்டுகள் குறிப்பிடு கின்றன. பிரதானிகள் காரியகர்த்தர் இராஜ் ஜீபார துரந்தர் (ஆட்சிக் காப்பாளர்) என்றே கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. தானைத் தலைவரைச் சேனாபதி, சர்வசேனாபதி, அல்லது சர்வசேனாதிகாரி என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இதனால் சிலர் தண்ட நாயகர் என்பவர் தானைத் தலைவரினின்று வேறானவர் என்று கூறுகின்றனர். சில நேரங்களில் தண்ட நாயக்கர் மாநில ஆளுநர்களை அமர்த்துபவராகவும் செயல்பட்டுள்ளார். இதனால் தண்டநாயகர் என்பவர் நாடு முழுமைக்கும் பொறுப்பாளராக இருந்திருப்பது தெரிகிறது. நீதிபதியாகவும் இவர் செயல் பட்டுள்ளார். பிரதானி என்பவர் பொதுவாக எல்லாத் துறைகளுக்கும் தலைவராயிருப்பவர். இவர் படை, நீதி, மற்றும் பல துறைகளையும் கண் காணிப்பார். பிரதானி, அமைச்சர் ஆகியோருக்குச் சம்பளம் வழங்குவதில்லை. நிலங்கள் மானியமாக வழங்கப்பட்டன. இவர்கள் வேண்டிய நேரத்தில் படைகளைத் திரட்டி மன்னருக்கு அனுப்புவர். வரித்தண்டல் செய்வதையும் அவர்களே செய்வார்கள். இதனால்தான் இவர்கள் மொகலாயர் காலத்து மன்சப்தாரி முறையைப் போன்று செயல்பட்டனரெனச் சில ஆசிரியர்கள் கூறு கின்றனர். பிரதானிகள் படை, பொதுத்துறைகள், அரண்மனைச் செல் வுகள் முதலியவற்றையும் கண்காணித்து வந்தனரென்பர். பிரதா னிக்குத் துணையாக உபபிரதானிகளும், உபாய பிரதானிகளும் இருந்தனர், மையச் செயலகம் ஏறத்தாழ தென்னகம் முழுவதிலும் பரவியிருந்த விசயநரகப் பேரரசின் விவகாரங்களையும், அலுவல்களையும், அரசரும், அமைச்சர்களும், பிரதானிகளும் மட்டும் நேரடியாகக் கவனிக்க முடி யாது. தனித்தனித் துறைகளும், துறை அதிகாரிகளும் அவர்களை ஒட்டு மொத்தமாகக் கவனிக்க ஒரு மையச் செயலகம் அரண் மனைக்கு அண்மையிலேயே நாற்பது தூண்களைக் கொண்ட ஒரு பெரிய மண்டபத்தில் அமைந்து இருந்தது என்றும் அறிகிறோம். எழுத்தர், எழுத்தர் பணியம் என்னும் பொருள்படும் ஒரு பிரிவு இருந்தது. இதனைக் கண்காணித்தவர் இராயசம் எனப்பட்டார். அரசன் வாய்மொழியாகக் கூறும் ஆணைகளைப் பதிவு செய்வதும், பின்னர் அவற்றில் அரசனது முத்திரையிடுவதும் இராயசம் என்பவ ருடைய பணியாகும். சோழர்காலத்தில் இத்தகைய பணிசெய்த வரைத் திருமந்திர ஓலை அல்லது ஓலை நாயகம் என்றழைத்தனர். பொதுவாகவே அரசனது ஆணைகளைச் செயலாளர்கள் பதிவு செய்வார்கள், எடுத்துக்காட்டாக, விழுப்புரம் மாவட்டம் திருக்கோவ லூர் திருவிதக் கலை நாயனார் கோயிலிலுள்ள ஒரு கல்வெட்டில் இம் மடி நரசநாயக்கர் வாய்மொழியாகச் சொன்ன ஆணையை வீரநர சய்ய பல்லவராயன், இம்மடி நரசய்யதேவன் ஆகிய செயலாளர்கள் கல்வெட்டில் பதிவு செய்தனர் என்று பொறிக்கப்பட்டுள்ளது. காணிக்கம் என்பது செயலகத்திலிருந்த மற்றொரு பிரிவாகும். கணக்குப் பார்ப்பவர்கள் ஒவ்வொரு பிரிவிலும் இருப்பர். அவர்களின் தலைமைப் பிரிவாக உள்ளதுதான் கானாக்கம் என்ப விசயநகர ஆட்சிமுறையும் பண்பாடும் தாகும். அரசனின் அரண்மனைப் பணிகளையும், கணக்கு வழக்கு களையும் கவனிக்கத் தனியே பணியாளர்கள் இருந்தனர். அரண் மனைத் தட்டார வேலைகளைச் செய்தவர் சுவர்ண நாயகர் எனப்பட்டார். அரண்மனை வேலைகளைக் கவனிப்பவர் மனேய பிரதானி எனப்பட்டார். இவருக்குக் கீழ் அரண்மனையில் பணியாற் றும் பல்வேறு பணியாளர்கள் இருப்பார்கள். அவர்களில் வெற் றிலைப் பாக்குத் தட்டுகளைச் சுமக்கும் அடைப்பக்காரர், காலத்தைக் குறிப்பிடும் பஞ்சாங்கத்தவர் (நிமித்தர்), பட்டயம் எழுதுவோர், பாடல் புனையும் பாணர், முதலியோர் குறிப்பிடத்தக்கவராவர், உவளகம், அரண்மனை, கொலு மண்டபம், முதலிய கட்டடங்களில் சோடனைக் காட்சிகளை (திரைச்சீலைகளைக் கவனிப்பதற்கென்றே முகமாவாடை என்ற அதிகாரி இருந்த '. அரசனுடைய முத்திரையைப் பாதுகாப்பாக வைத்திருந்தவர் முத்திரைக் கருத்தர் எனப்பட்டார். அரசனது ஆணையை நேரடியாக ஏற்று உடனடியாகச் செயல்படுத்தும் அதிகாரிகள் அஜனதாரகர் - என்றும், அஜனபரிபாலகர் என்றும் அழைக்கப்பட்டனர். அரண் மனையைக் கண்காணிப்பவர் இருப்பர். இவர்களுக்கு மேல் அதிகாரியாக இருப்பவரை வாசல் அல்லது வாசல் காரியம் என்று அழைப்பர். அரசனைக் காணச் செல்வோர் இவருடைய அனுமதி பெற்றே அரண்மனைக்குள் செல்ல வேண்டும். போர் முனைக்குச் செல்லும் போர்ப்படைகளின் ஒரு பிரிவுக்கும் சிலர் தலைமை தாங்கிச் செல்வர். பண்டை நாளில் இவரைத் துவாரபாலர் அல்லது துவாரிகா என்று அழைத்தனர். துறைகள் விசயநகரப் பேரரசின் கீழ் பலதுறைகள் இருந்தன. அவற்றுள் வேளாண்மைத் துறையே முதன்மையானதாகும். நிலம் ஆண்டுக்கு இரண்டு, மூன்று விளைச்சலைக் கொடுத்தது. நீர்ப் பாசன ஏந்துக்காக பல ஏரிகள் வெட்டப்பட்டன. கிருட்டிண தேவராயர் காலத்தில் நாகலாபுரம் ஏரி வெட்டப்பட்டதைத் தான் நேரில் கண்டதாக பாயஸ் தன் நாட்குறிப்பில் எழுதிவைத்துள்ளான். இந்த ஏரியின் கட்டட வேலையை மேற்பார்வை செய்தவன் ஒரு போர்த்துக்கீசியன் என்றும் நூனிசு தன் நாட்குறிப்பில் எழுதி வைத்துள்ளான், கி.பி. 1369-ல் பாசுகர கபாதுரை என்ற இளவரசன் கடப்பை மாவட்டத் தில் ஒரு ஏரியை வெட்டி, புதுமுறையில் அதற்கு மதகுகளை அமைத்தான். இவ்வாறு, அரசரே முன் நின்று பல ஏரிகளை வெட்டி வேளாண்மைக்கு நீர்ப்பாசன ஏந்துகளைச் செய்துள்ளார். நிலவரி நிலம் நஞ்சை, புஞ்சையென இரு பிரிவுகளாக்கப்பட்டு, அவற்றின் தரத்திற்கேற்ப நஞ்சை வரி, புஞ்சை வரி எனத் தண்டல் செய்யப்பட்டது. பிரமதேயங்கள், தேவதானங்கள் ஆகிய நிலங்கள் இறையிலி நிலங்களாகும். தளர்வாய் அக்ரகாரம் என்பது படைமானிய மாக விடப்பட்ட நிலமாகும். மழை பெய்து ஓடையில் நீர் வரும்போது அந்த நீரைப் பாய்ச்சிப் பயிர் செய்தால் அதற்குக் கசிறு தீர்வை எனப்படும் தற்காலிக வரித்தண்டல் செய்யப்படும், மடுவில் இருந்து நீர்ப்பாய்ச்சப்படும் நிலம் பதுக்கை நிலம் என்றும், அதற்காகத் தண்டல் செய்யும் வரிக்கு பதுக்கைவரி என்றும் பெயர். ஏரிவாய், தாங்கல்வாய், புழுதிவாரியென நிலத்திற்கேற்றவாறு வரிகள் தண்டல் செய்யப்பட்டன. வரி செலுத்தும் ஊர் சுகரக்கிராமம் எனப் பட்டது. வீட்டு வரிக்கு மனைவரி அல்லது வாசல் பணம் என்று பெயர், நிருவாகச் செலவுக்காகத்தண்டல் செய்யப்பட்ட பணம் கர்ணிக சோடி, தலையாரிக் காணம், நாட்டுக் கணக்கு வரி, ராயவர்த்தனை, அவசரவர்த்தனை, அதிகாரவர்த்தனை முதலிய பெயர்களால் அறியப் பட்டன. அரசு ஆணைகளைக் கொண்டு வருபவருக்குச் செலுத்தும் கட்டணம் நிருபச் சம்பளம் எனப்பட்டது. வயல்களுக்கு நீர்ப்பாய்ச்சும் போது கண்காணிக்கும் அதிகாரியின் காவல் செலவுக்குச் செலுத்தப் படும் பணம் ஆள் நீர்ப்பாட்டம் எனப்பட்டது. ஊர்க்காவலுக்காகச் செலுத்தும் கட்டணம் பாடிகாவல் என்று அழைக்கப்பட்டது. இதே முறைகளைத்தான் நாயக்கர் காலத்திலும் கையாண்டார்கள். விசய நகர ஆட்சியில் கோயில்களுக்கென்று தனியே கட்டணங்கள் செலுத் தப்பட்டன. அவை காணிக்கை, மகமை , கட்டளை, பிரசாதக் காணிக் கை முதலியனவாக அழைக்கப்பட்டன. இவற்றில் சில் சத்திரங் களுக்காகச் செலுத்தப்பட்ட காணிக்கைகளும் அடங்கும். வரி விதிக்கும் முறை இந்துதரும சாத்திர விதிப்படி ஆறிலொரு பங்கு வரி தண்டப் பட்டது. வரித்தண்டல் ஆண்டாக விசயதசமி ஆண்டாக விசயதசமி தொடக்க நாளாகக் கணக்கிடப்பட்டது. ஊரில் வரித்தண்டல் செய்யும் மேலதிகாரிக்குத் தாணிகர் என்று பெயர். மாவட்ட வரித் தண்டல் கழகத்திற்கு நாட்டவனார் என்றும் நலிவரி வருவாய்த் துறைக்கு அத்வனம் என்றும் பெயர். வருவாய்த்துறைக்கென தனி அமைச்சர் இருப்பார். வரிகளைத் தண்டல் செய்யவும், கூட்டவும், குறைக்க வும், தள்ளுபடி செய்யவும் அரசே ஆணைகளைப் பிறப்பிக்கும் இவற்றைப் பதிவேடுகளில் பதிவு செய்து வைப்பர். அவை நான்கு படிகளாக வைத்தும் பாதுகாக்கப்படும். அவற்றைப் பொதுமக்கள், பார்வையிடக் கேட்டால் மூல ஆணைகளைக் காட்டுவர். வரியைப் பணமாகவும் செலுத்தலாம். நாணய்முறை நாணயங்கள் தங்கம், வெள்ளி, செம்பு ஆகிய உலோகங் களால் அச்சிடப்பட்டன. இரும்பு வாசிகள். பூனைக்கண் எனப்படும் விசயநகர ஆட்சிமுறையும் பண்பாடும் மணிக்கற்கள் ஆகியவை நாணய மாற்றாகப் பயன்படுத்தப்பட்டன. வராகன், பரிதாபு, கால் வராகன், பணம் எனப்படும் வெள்ளிக் காசும், பணம், ஜிதால் காசு செப்பு காசுகளும் புழக்கத்திலிருந்தன. இரண்டாம் அரிகரர் காலத்தில் வரிகளைப் பண்ட மாகச் செலுத்தாமல் பணமாகவே செலுத்த வேண்டு மென்ற அரசாணை பிறப்பிக்கப் பட்டதால் அதிகப் படியான நாணயங்களை அச்சிடப்பட்டன. முத்திரைச் சின்னங்கள் நாணயங்களில் நந்தி, கலைமகள், பிரமன், உமை மகேசுவரன், இலக்குமி நாராயணன், யானை, வெங்கடேசர், விருபாட்சர், கருடன் ஆகிய சின்னங்கள் முத்திரைகளாக இடப்பட்டன. முதலாம் அரிகரர், புக்கர் காலத்தில் மட்டும் நாணயங்களில் அனுமான் இலங்கையைத் தாண்டும் சின்னம் பொறிக்கப்பட்டது. ஆரவீடு மரபில் வந்த திருமலைராயன் பெறு கொண்டாவைத் தலைநகராகக் கொண்டு ஆண்டபோது இராமர், சங்கு, சக்கரம், கரடி, யானை, எருது ஆகிய உருவங்கள் நாணயங்களில் பொறிக்கப் பட்டன. நாணயங்களை அச்சிட அச்சகச் சாலைகள் இருந்தன. தொழில் துறைகள் வேளாண்மையே முகாமைத் தொழிலாக இருந்தாலும், இதனைச் சார்ந்த துணைத் தொழில்கள்களாகச் சர்க்கரைக் காய்ச்சுதல், கள் இறக்குதல், பனை வெல்லம் காய்ச்சுதல், எண்ணெய் எடுத்தல், அவுரியில் இருந்து சாயம் எடுத்தல், பஞ்சு எடுத்தல், நூல் நூற்றல், நெசவு முதலியனவும், தென்னங்கயிறு திரித்தல், எண்ணெய் எடுத்தல் முதலிய தொழில்களும் நடை பெற்றன. இவற்றைக் கண்காணிக்கவும் வரி விதிக்கவும் தனித்தனி அதிகாரிகள் இருந்தனர். விசயநகர ஆட்சியில் பெயர் பெற்று விளங்கியது சுரங்கத் தொழிலாகும். கர்நால், அனந்தபூர் மாவட்டங்களில் வைரச்சுரங்கங் கள் இந்தன. வைரம், மணிக்கற்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பாகச் சேர்த்துவைக்கவும், பாதுகாக்கவும், காப்பாளர்களும், காப்பறைகளும் இருந்தன. மைசூரில் இரும்பு மூலம் ஏராளமாய்க் கிடைத்தது. செம்பு, கந்தக மூலங்களும் அதிகம் கிடைத்தன, போர்க்கருவிகள், தொழிற் கருவிகள், வீட்டுச் சாமான்கள் செய்யும் தொழிலாளர்களும், தொழிற்சாலைகளும் இருந்தன. யானைத் தந்தங்களைப் பிடியாகப் பொருத்திச் செய்யப்படும் வாள்கள் உற்பத்தி செய்யப்பட்டன. வண்டிகள், பல்லக்குகள் முதலியன செய்யும் மரத் தொழிற்கூடங்களும் இருந்தன. தச்சர்கள், கொல்லர்கள், நெசவுத் தொழிலாளர்கள், வஸ்திரக் காரர், (தையற்காரர்) பட்டு நூல்காரர், செளராஷ்டிரர் முதலிய தொழி லாளர்கள் ஊர்ப்புறங்களிலும், நகரங்களிலும் வீடுகள், மாடி வீடுகள், அரண்மனைகள் முதலியன கட்டப் பயன்பட்டனர். கடலோரப் பட்டினங்களில் உப்புக் காய்ச்சுதல், முத்தெடுத்தல், சங்கறுத்தல் முதலிய தொழில்கள் நடைபெற்றன. இத் தொழில்களை கண்காணிக் கவும், வரி விதிக்கவும், தனித்தனி அதிகாரிகள் இருந்தனர். நீதித்துறை வேத, தரும சாத்திரங்களையே நீதித்துறைச் சட்டங்களாகக் கொண்டனர். சாதிகளுக்கிடையே ஏற்படும் சண்டைகளுக்குத் தீர்வுகாணுதல் நீதித்துறையின் முக்கியப் பணியானது. நாட்டுத் துரோகம், சமூகத் துரோகம் ஆகிய துரோகக் குற்றச்சாட்டு மிகப் பெரிய குற்றங்களாகக் கருதி உசாவப் பெற்றன. இக்குற்றத்தைச் செய்வோர் நாடு கடத்தப்பட்டனர். சைவர், வைணவர், இடங்கை, வலங்கை சாதிகளுக்கிடையே ஏற்படும் சச்சரவுகளுக்குத் தரும் சாத்திரங்களின் அடிப்படையில் தான் தீர்வு காணப்பட்டது. ஒரு நிலத்தை அடைவு (அடமானம்) வைத்துக் கடன் பெற்றவன் பன்னிரெண்டு ஆண்டுகள் மீட்காமல் விட்டுவிட்டால் நிலத்தின் மீது வாங்கிய கடனைத் திருப்பிப் பெறாமலே நிலச் சொந்தக்காரனுக்கே அதனைக் கொடுத்துவிட வேண்டுமென்பது இக்காலப் பொருளியல் சட்டமாகும். நிலச் சொந்தக்காரனைக் காணியாளன் என்றும், அடைவு[அடமானம்) வைப்பதைப் போக்கியம் என்றும், எழுதப்பட்ட அடமானப் பத்திரத்தைப் போக்கியப் பத்திரம் என்றும் அடமானம் போட்டுக் காப்புகாலம் என்றும் ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளன. ஓரளவு இன்றும் இந்த முறை தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது. வழக்குகளை விவகாரக் கண்டம் என்றும் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளைத் தின நாயகர் என்றும் தண்ட நாயகர் என்றும் அழைத்தனர். பிரதானியே தலைமை நீதிபதியாக இருப்பார். இவருக்குக் கீழ் பல நீதிபதிகள் இருப்பர். பொதுவாக நீதிபதிகள் யாவரும் வேத, தரும சாத்திரங்களில் வல்ல பிராமணரே இருப்பர். எனவே, சாதி, சாத்திர அடிப்படையில்தான் நீதி மன்றங்களில் தீர்ப்புகள் வழங்கப்படும் இவை மனித உணர்வுக்கும், மனித நேயத்திற்கும் பகையானவை என்று நானிசு கூறுகிறார். ஊர்களில் தர்மாசனம் எனப்படும் வழக்கு மன்றங்கள் இந்தன. இவற்றில் கர்ணம், மணியக்கார், தலையாரி ஆகிய அரசு ஊழியர் களும், தச்சன், கருமான், கம்மாளன், குயவன் முதலிய ஒன்பது வகை மரபு வழித் தொழிலாளர்களுமாகச் சேர்ந்து பன்னிருவரும் இருப்பர். இத்தகைய வழக்குமன்றத்தை ஆயக்கார் வழக்கு மன்றம் என்றழைப்பர். கை, கால் முதலிய உறுப்புகளைக் குறைக்கும் தண்டனைகளும், சிறைச்சாலைத் தண்டனையும் இருந்தது. செஞ்சிக் கோட்டையிலுள்ள சிறைச்சாலையைப் பார்க்கும் போது சிறைத் தண்டனையின் தன்மையை உணரலாம். விசயநகர ஆட்சிமுறையும் பண்பாடும் காவல் துறை விசய நகராட்சிக் காவல்துறை, குற்றங்கள் நடவாதவாறு பார்த்துக் கொண்டது. அரசு காவல், தலைநகர் காவல், ஊர்க்காவல் என மூன்று வகையான காவல்கள் இந்தன. அரசே ஏற்படுத்திய காவல்காரர்கள் அரியலூர், உடையார்பாளையம், துறையூர் முதலிய தமிழ்நாட்டுப் பகுதிகளில் இருந்ததைக் கல்வெட்டுச் சான்றுகளால் அறிகிறோம். இக் காவல்காரர்களே விசயநகர வீழ்ச்சிக்குப்பின் பாளையக்காரர்களாய் மாறிவிட்டனர். தலைநகரங்களில் தனிக்காவல் படைகள் இருந்தன. ஊர்களில் தலையாரிகளே ஊர்க் காவல்காரர் களாகச் செயல்பட்டனர். இந்த ஊர்க்காவல் படைக்குப் பாடிக்காவல் என்று பெயர். இவர்களுக்கு மானியம் வழங்கப்பட்டது. இதைத் தவிரவிளைச்சல் அறுவடை ஆகும் போது மேரை வழங்கப்பட்டது. கடை வீதிகள் சந்தைகள், தட்டாரக் கடைகள் முதலியவற்றில் வரும் தண்டலில் ஒரு பகுதியும் பாடிக்காவலுக்காக வழங்கப்பட்டது. படைத்துறை மிகப் பெரிய ஆட்சிப்பரப்பைப் பெற்றிருந்த விசயநகர மன்னர் களிடத்தில் படைபலமும் அதிகம் இருந்தது. தலைக்கோட்டைப் போரில் மட்டும் தொண்ணூராயிரம் காலாட்படையும், எழுபதினாயிரம் குதிரைப் படையும், பல நூறு யானைகளும் பங்கேற்றதாகக் கூறப்படுகின்றது. இவற்றைத் தவிர நாயக்கர்களிடம் இருந்தும், குறுநில மன்னர்களிடம் இருந்தும் போர்க் காலத்தில் படைகள் பெறப்பட்டன, இருபதினாயிரம் ஈட்டிவீரர்கள் அரசரைச் சூழ்ந்து நின்றன ரென நூரானிசு கூறுகிறான், இவர்களைத் தவிர மூவாயிரம் யானை வீரர்களும், பதினோ ராயிரம் குதிரை வீரர்களும் இரண்டாயிரம் குதிரைப் பயிற்சியாளரும் (குதிரைக்காரர்), படைகளுக்கு உணவுஉடை முதலியனவற்றின் தயாரிப்பாளர்களும், போர்க்கருவிகளைச் செய்யும் இரண்டாயிரம் கொல்லர்களும், பல ஆயிரம் தச்சர்களும், துணிவெளுப்போர், கட்டடத் தொழிலாளர் முதலியோரும் விசயநகரப் படையில் இருந்தனர், அரசர் ஏற்படுத்திய நிலைப்படையும், நாயக்கர்கள், குறுநில மன்னர்களின் படைமானியப் படைகளும் அரசரின் கண்காணிப்பில் இருந்தன. படைவீரர்கள் தகுதி அடிப்படைகளின் மேல் தேர்ந் தெடுக்கப்படுவர். படையில் பல்வேறுபட்ட பதவிகளும் இருந்தன. பலதிறப்பட்ட விருதுகளும் பரிசுகளும் படை வீரர்களுக்கு வழங்கப் படும். கோட்டைகள் ஒவ்வொரு மாநிலத்திலும் கோட்டைகள் (துர்கா) இருந்தன. அவை அகழிநீரால் சூழப்பட்டிருந்தன. நீரால் சூழப்பட்ட கோட் டைக்கு ஜலதுர்கா என்றும் மலை மீதுள்ள கோட்டைக்கு கிரிதுர்கா என்றும் பெயர். அடர்ந்த காடுகளால் சூழப்பட்ட கோட்டைக்கு வன துர்கா என்றும் நிலத்தால் சூழப்பட்ட கோட்டைக்குத் தலதுர்கா என்றும் பெயர். இவ்வாறு கோட்டைகள் நான்கு வகையாக இருந்தன. படைகள் தங்கிய இடம் படைப்பற்று என்றும் படைவீடு என்றும் வழங்கப்பட்டது. கோட்டைகளைப் பராமரிக்க மக்களிடம் வரி வாங்கப்பட்டது. அதற்குக் கோட்டைப் பணம் என்று பெயர். கோட்டைகளுக்குள் கோயில்களும் பிராமணர் குடியிருப்புகளும் இருந்தன. படைத்துறை கந்தச்சாரம் எனப்பட்டது. (கந்தன் போர்க் கடவுள்). படைத்தலைவரைச் சேனாபதி, சர்வ சைன்யாதிகாரி, தளவாய் என்ற பெயர்களால் அழைத்தனர். அரண்மனை வாயிலைக் காக்கத் தனிப்படை இருந்தது. இதன் தலைவருக்குத் தனி மதிப்பும் மரியாதையும் இருந்தன. படைகள் செல்வதற்கெனத் தனியாகப் பெரிய பாட்டைகள் இருந்தன. இவற்றைத் தண்டமார்க்கா, தண்டின் தாரி, தண்டுதோவா என்றெல்லாம் அழைத்தனர். படைவீரர்களுக்குச் சம்பளமும், தலைவர்களுக்கு மானியமும் வழங்கப்பட்டன. அயலக உறவு விசயநகரப் பேரரசு பர்மா, சீனா மற்றும் கீழ்த்திசை நாடு களோடும், ஈழம், பாரசீகம், அரேபியா, துருக்கி, போர்த்துக்கல் முதலிய நாடுகளோடும் நட்புறவு கொண்டிருந்தது. போர்த்துக்கீசியர் விசய நகரம் உயரும் பொழுதெல்லாம் உயர்ந்தும், தாழ்வடையும் பொழு தெல்லாம் தாழ்ந்தும், கடைசியாகத் தலைக்கோட்டை போரினால் சாய்ந்தே விட்டனர் என்று கூறுவதில் இருந்து விசயநகருக்கும் போர்த்துக்கல்லுக்கும் இடையிலிருந்த நட்புறவை நன்கறியலாம் 2. மாநில ஆட்சி ஆட்சிப்பரப்பு விசய நகரப் பேரரசு சாரத்தீவில் இருந்து தகுல்பர்க்கா வரை யிலும், வங்காளத் தீவில் இருந்து மலபார் வரையிலும், மிகப் பரந்த நிலப்பரப்பில் பரவியிருந்தது. இது சோழப் பேரரசின் பரப்புக்கு ஒப்பாக இருந்தது. நாட்டுப்பிரிவுகள் பேரரசு பெரிய மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவை இராச்சியுங்கள் அல்லது மண்டிலங்கள் எனப்பட்டன. 1. பெனு கொண்டா 2. உதயகிரி 3. சந்திரகிரி 4, படைவீடு 5. திருவடி தி. முனு வாயி 7. சாந்தலிங்க ஆயிரம் 8. ஆரகம் 9. துளுநாடு என ஒன்பது மண்டிலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. இவை சில சமயம் கூடியும், குறைந்தும் நின்றன. இவற்றில் உதயகிரி, பெனுகொண்டா, சந்திரகிரி மண்டிலங்கள் இருந்தன. இவற்றுக்கும் தெற்கில் படைவீடு மண்டிலம் இருந்தது. இதில் இன்றைய வேலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மாவட்டப் பகுதிகள் இருந்தன. முளுவாயி மண்டிலம் முல்பகாலைத் தலைநகராகக் கொண்டிருந்தது. இதில் கோலார், சேலம், வேலூர், சித்தூர் மாவட்டங்களின் சில பகுதிகள் இருந்தன. சாந்தலிக ஆயிரம் என்ற மண்டிலத்தில் சிமோகா, தென்கன்னடம் ஆகியவற்றின் சில பகுதிகள் இருந்தன. இதன் தலைநகர் சந்திரகுத்தி அல்லது குத்தி ஆகும். மங்களூரைத் தலைநகராகக் கொண்டது துளுநாடு ஆகும். சம்புவராயரிடம் இருந்து கைப்பற்றியபின் படைவீடு மண்டிலம் மகா இராச்சியம் எனப்பட்டது. இதைப் போன்ற பெரிய மண்டிலங்கள் சந்திரகிரியும், ஆரகமும் ஆகும். விசயநகர ஆட்சியில் தமிழகத்தில் சோழர் காலத்தில் இருந்த மண்டிலங்கள் பெயர் மாற்றம் பெறாமல் அப்படியே நின்றன. அவை செயங்கொண்ட சோழ மண்டிலம், நிகரிலிசோழ மண்டலம், தொண்டை மண்டிலம், மகதை மண்டிலம், சோழ மண்டி லம் முதலியனவாக அறியப்பட்டன. இராச்சியம், மண்டி லம் என்ற பெயர்களில் சிறிது வேறுபாடு உண்டு என்றும் இராச்சியம் சற்றுப் பரப்பில் பெரியது என்றும் கூறுவர். இராச்சியத்தை ஆள ஆளுநர்கள் அமர்த்தப்பட்டனர். மண்டிலத்தை ஆள விசயநகர மன்னர்கள் ஆளுநரை அமர்த்தவில்லை. மண்டிலத்தின் கீழ் கோட்டங்கள் (கூற்றங்கள்) பல் இருந்தன ஒவ்வொரு கோட்டமும் பல நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. நாடு பற்று எனவும் அழைக்கப்பெற்றது. ஒவ்வொரு நாடும் ஐம்பது ஊர்களைக் கொண்டிருந்தது. இதனை ஐம்பதின் மேல் கிராமம் என்பர். இதனை ஓர் ஒன்றியம் என்றும் அழைக்கலாம். ஒன்றியத் தின் கீழ் அகரம், மங்கலம் என்னும் ஊர்கள் உண்டு. பிதாடகை என்பது ஆட்சியின் கடைசிப் பாகமாகும். சில ஊர்கள் தனித்து நின்றன. அவை தனியூர் எனப்பட்டன. அத்தகைய ஆட்சிப் பிரிவு களே கன்னட, தெலுங்கு நாடுகளிலும் இருந்தன. மாநில ஆட்சிமுறை மாநில ஆளுநர்களைத் தலைமை அமைச்சரைக் கலந்தபின் அரசனே அமர்த்துவான். பெரும்பாலும் ஆளுநர்கள் அரச குடும்பத்துப் பிள்ளைகளாகவே இருப்பார்கள். இவர்களை உடை யார் என்று தமிழ்நாட்டிலும் ஓடியா என்று தெலுங்கு நாட்டிலும் அழைப்பர். ஆளுநர் பதவி தலைமுறையாக வருவதுண்டு. ஆளுநர் களை மாநிலம் விட்டு மாநிலத்திற்கு மாற்றுவதுண்டு. ஆளுநருக்கென்றுத் தனி அலுவலகமும், செயல்கமும் உண்டு. மாநில ஆளுநர்கள் தாங்களே காசுகளை அச்சிட்டுக் கொள் ளலாம், தங்களுக்கு உட்பட்ட வழக்குகளையும் தாங்களே தீர்த்துக் கொள்ளலாம். ஆளுநர்கள் கட்டுக்கடங்காமல் போகும்பொழுது நடுவண் ஆட்சி தலையிடும். ஆளுநர் குறிப்பிட்ட வருவாயை நடு வண் ஆட்சிக்குச் செலுத்த வேண்டும். ஆளுநர்கள் குறு நில மன் னர்களைப் போல் கொலுவிருத்தல், பல்லக்கில் ஊர்ந்து செல்லுதல் முதலிய உரிமைகளைப் பெற்றிருந்தனர். அமைச்சர்களைத் தேர்ந் தெடுக்கும் போது ஆளுநர்களைக் கலந்தாலோசித்த பின்புதான் தேர்ந்தெடுப்பர். சில ஆளுநர்களே அமைச்சர்களாகவும் இருப்பர். 3. ஊராட்சி விசயநகர ஆட்சி மன்னர் ஆட்சி ஆயினும் அதில் மக்களாட்சி யும் செயல்பட்டது. இதையே ஊராட்சி என்கிறோம். பிராமணர்களுக் குத் தானமாக வழங்கப்பட்ட ஊர்கள் பிரமதேயங்கள் எனப்படும். இவற்றில் பிராமணர்கள் மட்டுமே இருப்பார்கள். நான்கு வேதம் தெரிந்த பிராமணர்கள் வசித்ததால் இவை சதுர்வேதி மங்கலம் என்றழைக்கப்பட்டன. இவை பிராமணர்கள் மட்டுமே அடங்கிய சபையால் ஆளப்பட்டன. அச்சபைகளுக்குச் சதுர்வேதிமங்கலச் சபை என்று பெயர். இச்சபைகள் கட்டுப்பாடற்ற அதிகாரங்களைப் பெற்றிருந்தன. சதுர்வேதிமங்கலத்திலுள்ள நிலங்களை வாங்கவும், விற்கவும் இச்சபைக்கு உரிமையுண்டு. விசயநகர காலத்தில் தமிழ்நாட்டில் மட்டும் 700 கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டன. அவற்றில் 45 கல்வெட்டுகள் மகா சபைகளைப் பற்றியும், ஊர், நாடு சபைகளைப் பற்றியும் பேசுகின்றன. அதாவது விசயநகர ஆட்சிக் காலத்தில் ஊராட்சி முறைக்கு இருந்த முக்கியத்து வம் பற்றி இக்கல்வெட்டுகளால் அறியமுடிகிறது. இந்த 45 கல்வெட்டுகளில் 15 கல்வெட்டுகள் மகா சபைகள் பற்றியும், 14 கல்வெட்டுகள் உணர்" அல்லது கவர்ச்சபைகள் பற்றியும், 15 கல்வெட்டுகள் நாடு அல்லது நாட்டுச் சபைகள் பற்றியும் பேசு கின்றன. கி.பி. 133 - ல் குமார கம்பணன் படை வீட்டைக் கைப்பற்றிய பின் வேலூரர், விழுப்புரம், செங்கை மாவட்டப் பகுதி கள் விசய நகர ஆட்சிக்கு உட்பட்டன. அதுவரை சம்புவராயர் ஆட்சிக்கு உட்பட்டு இருந்த இப் பகுதிகளில் மொத்தம் 90 கல் வெட்டுகள் இருந்தன. அவற்றில் 5 கல்வெட்டுகள்தான் உணராட்சி முறைகளை அறிய உதவுகின்றன. விசயநகர ஆட்சி தொண்டை மண்டலத்தில் ஏற்பட்ட பிறகு காவேரிப்பாக்கம், உக்கல், உத்திர மேருர், நெற்குணம் முதலிய இடங்களில் பிராமணர் மட்டும் பங்கு பெற்ற மகாசபைகள் இருந்ததாகக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. சில ஊர்களில் மகா சபைகள் மகாசனசபை என்றும் அழைக் கப்பட்டன. விசயநகர காலத்தில் இத்தகைய மகாசன சபை ஒவ் வொரு பிராமணர் ஊரிலும் (அக்ரகாரம்) இருந்தது. பல ஊர்கள் ஒரு மைய ஊருடன் இணைக்கப்பட்டிருக்கும் . இந்த மைய ஊர்தான் சதுர்வேதி மங்கலம் எனப்படும். இது நடுவண் ஆட்சியின்கீழ் இருக்கும். இவ்வூரிலுள்ளவர்கள் அனைவரும் நான்கு வேதங்கள் அறிந்த பிராமணர்களே ஆவர். இவர்கள் சடங்குகள், ஓமம் வளர்க்கும் முறைகளை நன்கு அறிந்தவர்களாயிருப்பர் என்று கே. பி. சுப்பிரமணிய அய்யர் கூறுகிறார். விசய நகர ஆட்சிக் காலத்தில் இத்தகைய சதுர்வேதிமங்கலச் சபையில் பலர் உறுப்பினர்களாயிருந்தனர். எடுத்துக்காட்டாகத் திரு புவனமகாதேவிச் சதுர்வேதிமங்கல மகாசபையில் நான்காயிரம் உறுப்பினர் இருந்ததாகத் திருவாண்டார் கோயில் கல்வெட்டு கூறுகிறது. இவர்கள் ஊர், நாடு, குடி முதலியவற்றின் படி நிகராளிகள் ஆவர் என்றும் இக்கல்வெட்டு கூறுகிறது. இந்தச் சபை கோயில் மண்டபத்திலும், திறந்த வெளிகளிலும் கூடும். மலர்வனம் எனப் படும் நந்தவனத்திலும் இந்த சபை கூடும். பை நடவடிக்கைகளை அந்த இடத்திலிருந்த பொறுப்பு வாய்ந்த தலைவர்கள் நடத்துவார்கள் என்று கூறப்படுகிறது. மகாசபைக்கு நிலம் போன்ற சொத்துக்களை வாங்கவும், விற்கவும் உரிமை உண்டு என்பதைக் கல்வெட்டுச் சான்றுகளால் அறிகிறோம். சபையின் எல்லைக்கு உட்பட்ட நிலங்களை விற்கவும், தானம் செய்யவும் சபைக்கு அதிகாரமுண்டு என டி. வி. மகாலிங்கம் கூறுவதில் இருந்து மகாசபையின் அதிகார வரம்பை நன்கறியலாம். ஒரு நிலச் சொந்தக்காரர் தன் நிலத்தை விற்பதானால் அந்தந்த பரிதிலுள்ளவருக்கே விற்க வேண்டும் என்றும், வெளியூரில் இருப்பவருக்கு விற்கக்கூடாது என்றும், தன் மகளைத் திருமணம் செய்யும் அயலூரானுக்குக் கூட அதைச் சீதனமாகவும் கொடுக்கக் கூடாது என்றும் மாங்காடு கல்வெட்டு கூறுவதில் இருந்து சபையாரின் அதிகார வரம்பை அறியலாம். நிலத்தை அடைவு (அடமானம்) வைப்பதானாலும் வெளியூர்க்காரனுக்கு அடமானம் வைக்கக் கூடாது. எனவே, பொருளாதாரத்தில் கிராமம் தன்னிறைவு பெற வேண்டுமென்பதும் அதனை வெளியில் இருந்து எவரும் சுரண்டக் கூடாது என்பதும் மகாசபையின் கோட்பாடென்பதை அறியலாம். மகாசபை, ஊரில் இருந்து நடுவண் ஆட்சிக்குச் சேர வேண்டிய வரிகளைத் தாமே தண்டல் செய்து நேரடியாக அனுப்பிவிடும். நடுவண் ஆட்சி தண்டல் செய்ய வேண்டிய வரி விவரங்களையும், புதுவரிகளையும், வரித் தள்ளுபடிகளையும் சபைக்குத் தெரிவிக் கும். அந்த விவரங்களைச் சபை தனது பேரேட் டில் பதிந்து வைத்துக் கொள்ளும். இதனைப் புதுக்கோட்டை, திருமாக்கோட்டைக் கல்வெட்டுகளில் இருந்து காண்கிறோம். இவ்வாறு புது வரிகளைப் போடவும், பழைய வரிகளைத் தள்ளுபடி செய்யவும் சபைக்கே கூட அதிகாரம் இருந்தது. அரசாங்கமும் புதிய வரிகளைப் போடும் முன்பும், வரிகளைத் தள்ளுபடி செய்யும் முன்பும் இத்தகைய ஊராட்சி சபைகளைக் கலந்தாலோசித்த பின்பே செய்யும். மகாசபைகளுக்கு நீதிவிசாரனை நடத்தும் அதிகாரமும், தண்ட னை வழங்கும் அதிகாரமும் இருந்தன. குற்றவாளிகளின் நிலங் களைப் பறிமுதல் செய்யும் அதிகாரமும் மகாசபைக்கு இருந்தது. கோயில்களை நிர்வகிக்கும் அதிகாரமும் மகாசபைகளுக்குண்டு என்பதை மூவாலூர், நாங்குனேரி கோயில் கல்வெட்டுகளால் அறியலாம். சிலருடைய சேவைகளைப் பாராட்டி விருது வழங்கும் உரிமையும் மகாசபைகளுக்கு இருந்தது. சிறந்த இலக்கிய படைப்பு களைப் பாராட்டியும், இலக்கியக் கர்த்தாக்களுக்குப் பட்டம் வழங்கிப் போற்றும் உரிமையையும் சபை பெற்றிருந்தது. கடைசியாக மகாசபை பொது மக்களின் அறக்கட்டளைகளைக் காக்கும் காப்பாளராகவும் செயல்பட்டது. ஊர் அல்லது ஊர்ச்சபை பிராமணர் குடியிருப்புகளைச் சதுர்வேதிமங்கலம் என்றும் அக்ரகாரம் என்றும் கூறிய நாம் பிராமணரல்லாதாரின் குடியிருப்பு களை ஊர் என்கிறோம். இவர்களும் வளர்ச்சபை அமைத்து ஊராட்சி செய்தனர். இதில் பிராமணரல்லாதாரே உறுப்பினராயிருப்பர். பெயர்பெற்ற ஊர்ச்சபைகள் விரிஞ்சிபுரம், சதுரங்கப்பட்டணம் ஆகிய ஊர்களில் இருந்ததாக இராசநாராயண சம்புவராயன் காலத்துக் கல்வெட்டுகள் கூறுகின்றன. சங்கம் மரபினர் ஆண்டபோது தளவானூர், சம்புராயநல்லூர், வயலூர், திருவாண்டார் கோயில் முதலிய இடங்களில் ஊர்ச் சபைகள் இருந்தன. புதுக்கோட்டைப் பகுதியில் கீரனூர், கீழக்குறிச்சி, கார்குடி , ஒல்லியூர் மங்கலம் முதலிய இடங்களிலும் ஊர்ச் சபைகள் இருந்தன. கி.பி. 1406-ல் கீரனூர் சபை தட்டார், மன்றாடியார் பலருக்குப் பல விருதுகளை வழங்கிப் பெருமைப்படுத்தியது. இதைப் போலவே, ஊருக்குத் தொண்டாற்றியவருக்கு விருது கொடுத்துச் சபை பெருமைப்படுத்தியது. கருங்குளம் மார்ச் சபையார், கிரகண நாட்களில் விசய நாராயண சதுர்வேதி மங்கலத்திலுள்ள கோயில் சிவதருமத்தைப் பற்றிய வேதங்களைப் படிப்பதற்காகத் திருவேங்கிட நாராயணபட்டர் என்ற பிராமணருக்கு நிலமானியத்தை இறையிலியாகக் கொடுத்தனர் என்று கல்வெட்டு கூறுகிறது , வரிகட்டத் தவறியவர்களின் நிலத்தைப் பறித்துக் கோயில் நிலமாக்கும் அதிகாரத்தை அர்ச்சபை பெற்றிருந்தது. விசயநகர ஆட்சிக் காலத்தில் நரசநாயகரும், கிருஷ்ணதேவராயரும் ஆண்ட போது ஊர்ச் சபைகளைப் பற்றிய எந்தச் செய்தியும் அவர்களுடைய கல்வெட்டுகளில் காணப்படவில்லை . இதனால் கி.பி. 16ஆம் நூற்றாண்டில் இருந்து, விசயநகர ஆட்சியின் கீழ் ஊராட்சிமுறை குறைந்து கொண்டே வந்துவிட்டதெனக் கூறலாம். விசயநகர ஆட்சிமுறையும் பண்பாடும் நாடுசபை அல்லது நாட்டவர் சபை விசய நகர ஆட்சிக் காலத்தில் இராச்சியம், வளநாடு, நாடு எனும் பிரிவுகள் இருந்ததைப் பார்த்தோம். நாடு எனும் பிரிவில் நடந்த உள்ளாட்சி முறையைத்தான் நாடு அல்லது நாடு - சபை அல்லது நாட்டவர் சபை என்பர். இந்த நாடு சபைகளைப் பற்றிய குறிப்புகள் பொன்பட்டி, திருவாய்ப்பாடி, திருக்கோயிலூர், திருப்புல்லணை ஆகிய இடங்களில் இருந்ததாகக் குமாரகம்பணன் கல்வெட்டுகள் கூறுகின்றன. கி.பி.1372-ல் குமார கம்பணன் பொன் பட்டியிலுள்ள திருமால் கோயிலுக்கு விலையுயர்ந்த ஆபரணத்தைத் தானமாகக் கொடுப்பதற்கு நாட்டவர்சபையின் அனுமதி கேட்டபின் கொடுத்தான், இதைப் போலவே, ஆதனூர் நாட்டவர் கி.பி. 1416 - ல் ஆட்கொண்டதேவன் என்பவருக்கு 20 பணத்திற்கு நிலத்தை விற்றனர். இவ்வாறு பொதுச் சொத்துக்களை விற்கவும், வாங்கவும், அடமானம் வைக்கவும் நாட்டார் சபைக்கும் அதிகாரம் இருந்தது. குறிப்பாகக் கோயில் நிருவாகத்தில் நாட்டார்சபை மிகவும் கவனம் செலுத்தியது. பிராமணர் குற்றம் செய்தாலும் அவர்களைத் தண்டிக் கும் அதிகாரம் நாட்டார் சபைக்கு இருந்தது. அரசு மானியங்களைக் கட்டிக்காக்கும் பொறுப்பும் இந்த நாட்டார் சபைக்கு உண்டு. அவர் கள் கூறியபடிதான் அரச ஆவணங்கள் பதிவு ஆகும். விசய நகர ஆட்சியில் ஊராட்சி முறை ஏன் மறைந்தது ? இத்தகைய சிறப்பு வாய்ந்த ஊராட்சி விசயநகர ஆட்சியின் கடைசிக் காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கியது, இதற்கு என்ன காரணம்? விசயநகர ஆட்சி மன்னராட்சி ஆகும். ஒரு பகுதி நிலமானிய, படைமானிய முறை சார்ந்த ஆட்சியாகவும் இருந்தது. நாயக்கர்கள், சிற்றரசர்கள் தங்களுக்கு விடப்பட்ட பகுதிகளைத் தனித்து ஆண்டனர். அவர்களே வரித்தண்டல் செய்து நேரடியாக அரசுக்குப் பணம் கட்டவேண்டும். போர்க் காலங்களில் அரசருக்குப் படைகளையும், பொருள்களையும் உதவவேண்டும். எனவே, தங்கள் அதிகாரத்திற்குட்பட்ட ஊர்களில் ஊராட்சி முறையை அவர்கள் அனுமதிக்கவில்லை. பிராமணர்களுக்கு விடப்பட்ட சதுர்வேதிமங்கலங்களில் நாயக்க மங்கலம் போன்ற தனி ஆட்சிமுறை ஏற்பட்டுவிட்டது. வடநாட்டில் இருந்து தென்னகத்தின் மீது படையெடுத்த இசு லாமியர் கோயில்களைக் கொள்ளையடித்தனர். சதுர்வேதிமங்கலங் களைச் சூறையாடினர். இதனாலும் ஊராட்சி அழியத் தொடங்கியது. மதுரை சுல்தானியம் ஊராட்சி முறையை அடியோடு வெறுத் தது. சுல்தானியர் ஆண்ட போது ஊராட்சி செயலற்றுப் போயிற்று. ஆயக்கார் முறை விசய நகரப் பேரரசு கொண்டு வந்த ஆயக்கார் முறையால் ஊராட்சி முறை அழிந்து பட்டது. இந்த ஆயக்கார் முறைப்படி ஒவ்வொரு கிராமமும் தனித்தனியே அரசால் நேரடியாக ஆளப் பட்டது. கிராம் அதிகாரிகளான மணியக்கார், கணக்குகளைப் பதிவு செய்யும் கணக்கர், ஊர்க்காவல் செய்யும் தலையாரி ஆகிய முக்கிய அதிகாரிகளையும், ஒரு துணை நீதிபதியையும், பதிவாளரையும், மற்றும் ஊருக்கு வேண்டிய காரியங்களைச் செய்யும் அதிகாரி களையும் அரசே நேரடியாக அமர்த்தியது. எனவே, ஊர் விவகாரங் களை இந்த அலுவலர்களே செய்து கொண்டனர். நிலங்களை விற்க வும், வாங்கவும், வழக்குகளை விசாரிக்கவும் தண்ட னைக் கொடுக்க வும், சட்டம் ஒழுங்கு, காவல்முறைகளைச் செய்யவும் இந்த அலுவலர்களுக்கே அதிகாரம் வழங்கப்பட்டதால் சபையார் எவரும் தேவையில்லாமல் போய்விட்டது. இந்த ஆயக்கார் முறையில் கர்ணம் (கணக்கன்) பதிவாள ராகவும், தலையாரியும் தோட்டியும் ஊர்க் காவலர்களாகவும் இருப்பர். பருவங்களைக் கணித்துச் சொல்லும் நிமித்தகன், வேளாண்மைக் கருவிகள், செய்து தரும் தச்சன், கொல்லன், குயவன், துணி வெளுக்கும் வண்ணான், மழிக்கும் அம்பட்டன், தோல் வேலை செய்யும் சக்கிலியன், வயல்களுக்கு நீர்ப்பாய்ச்சும் முறையைக் கண் காணிக்கும் நீர்கந்தி ஆகியோர் இருப்பர். இவர்களுடைய பணிகள் பரம்பரையானவை. இத்தகைய ஆயக்கார் முறைப் பறிகால் நாயக்கர் காலத்திலும் தமிழ் நாட்டிலிருந்தது. இதில் மிகவும் முக்கியம் வாய்ந்தவராகக் கருதப்பட்டவர் மணியக்காரர் ஆவார். அவரை அம்பலக்காரர் என்றனர். ' தொழிற் சங்கங்கள் முக்கியத்துவம் பெறத் தொடங்கின. அதனால் தொழில் இணையங்களும் உருவாயின. இவை தனித் தனியே சலுகைகளைப் பெறலாயின. எனவே, ஊராட்சியும், ஊருக்கு நன்மை செய்யும் பணியும் மறைந்துவிட்டது. உ) பொருளாதார நிலைமை அரசு வருவாய் இனங்கள் அரசின் வருவாயில் பெரும்பங்கு நிலவரியே ஆகும். நில அளவைகள், நீர்ப்பாசன ஏந்துகள், வரிமுறைகள் யாவும் சோழர், பாண்டியர் காலத்தில் இருந்ததைப் போலவே இருப்பினும், பெயர் களும், முறைகளும் சமற்கிருதம், தெலுங்கு ஆகிய மொழிகளில் இருந்தன. நஞ்சைக்கு வாங்கும் வரியில் பாதியாகப் புஞ்சைவரி வாங்கப்பட்டது. ஒரு வேலி நஞ்சை நிலத்தில் விளையும் நெல்லில் 50 கலம்நெல் வரியாக விதிக்கப்பட்டது. அதற்கு மேலும் கால் பணமும் வரித்தண்டல் செய்யப்பட்டது. வாழை, தேங்காய் போன்ற தோட்டக்கால் பயிர் வகைக்கு ஏற்றவாறு வரித்தண்டல் செய்யப் பட்டது. அரசுக்குச் சொந்தமான பண்டாரவனம் எனும் நிலத்தைக் குத்தகைக்குப் பேசி அதிகப் பணம் கொடுப்போருக்குக் குத்தகைக்கு விடப்பட்டது. இவ்வாறு, நஞ்சை நிலம், புஞ்சை நிலம், குத்தகை நிலம் ஆகியவற்றில் இருந்து வரும் வரிகள் அரசின் வருவாய் இனத் தின் பெரும்பகுதியாக இருந்தது. நெல், கோதுமை, பார்லி, வரகு, தினை முதலியன உண வாகக் கொள்ளப்பட்டன. கோதுமை மிகச் சிறிய அளவில்தான் பயிரிடப் பட்டது. இதனைப் பெரும்பாலும் முஸ்லிம் வாணிகர்களான முர் மட்டுமே உண்டனர். நெல்லே விளைச்சலில் பெரிய அளவாக இருந்தது என்று பார்போசா என்ற அயல் நாட்டுப் பயணி கூறுகிறார். உளுந்து, கடலை, பீன்ஸ் ஆகியவையும் உணவோடு சேர்த்து உண்ணப்பட்டது. மிளகு, ஏலக்காய், இஞ்சி முதலியன சுவைக்காக உணவோடு சேர்க்கப்பட்டன. காய், கீரை, பழவகைகள் ஆகியவை யும் மிகுதியாகப் பயிரிடப்பட்டன. கொப்பரைத் தேங்காய் ஏடன் துறைமுகம் வழியாக மேலைநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. நறுமணப்பொருள்களும் பயிரிடப்பட்டன. இத்தகைய விளைபொருள்களில் இருந்தும் அரசுக்கு வரிப் பணம் கிடைத்தது. ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று போகம் விளையும் நஞ்சை நிலத்தை நீர்நிலம் என்றும், புஞ்சை நிலத்தை கொல்லைநிலம் என்றும் அழைத்தனர். நஞ்சையில் கார், பாசனம், கடைப்பு எனப்படும் மூன்றுபோக விளைச்சல்களும் உண்டு. விளைநிலங்களைக் காவல்காக்க நாயகவாடிகள் எனப்படும் காவலர்களைக் காவலுக்கு அமர்த்துவர். அவர்களுக்கும் இனாம்தாரி எனப்படும் மானியம் வழங்கப்படும். இதைத் தமிழில் காக்கும் நாயக விளாகம் என்றழைக்கலாம். வாரமுறை நிலங்களில் கொத்தடிமைகளைப்போல் வேலை செய்தவர் களைக் குடி அல்லது புறக்குடி என்றழைத்தனர். அன்றாடம் வேளாண்மைத் தொழிலுக்குக் கூலியாக அமர்த்தப்பட்டவர்களைக் கவினைக்குடி என்பர். குடிகளுக்கு விடப்பட்ட மானியம் குடிக்காணி எனப்பட்டது. இவர்களைத் தவிர வாரத்திற்குப் பயிரிடு வோரும் இருந்தனர். விளைச்சலில் பாதியை மேல்வாரமாக நிலச் சொந்தக்காரர் எடுத்துக்கொள்வார். இதற்குக் குடிவாரம் என்று பெயர். தேவதான நிலங்களைச் சபையார் வேறொருவருக்குக் கொடுக்கும்போது அதில் வேலை செய்யும் கொத்தடிமைகளையும் சேர்த்துக் கொடுத்து விடுவர். இதற்குக் குடிநீங்கா தேவதானம் அல்லது குடிநீங்கா இறையிலி என்று பெயர். சாதாரணமாக நிலத்தை மற்றொருவருக்கு விற்கும்போதும் அந்த நிலத்தில் வேலை செய்யும் வேளாண் அடிமைகளையும் சேர்ந்தே விற்று விடுவர். * குத்தகை முறை வாரமுறையையடுத்து, குத்தகை முறையும் இக்காலத்தில் இருந்தது. ஆண்டுக்கு இவ்வளவு தொகை என்று பேசிக்கொண்டு பயிரிடும் முறைக்குக் குத்தகை என்று பெயர். இதனைப் பணமாக வும், தானியமாகவும் கொடுக்கலாம். இந்த முறையைத் தமிழில் உழவுக்காணி ஆட்சி என்று அழைப்பர். குத்தகைக்குப் பயிரிடுவோர் நிலத்தைக் கண்காணிக்கவும், காவல் புரியவும், அந்நிலத்தின் ஒரு மூலையில் குடியிருக்கும் உரிமையும் அவருக்கு உண்டு. இதற்குக் குடியிருப்புக் காணி ஆட்சி என்று பெயர். குத்தகைத் தொகையையும் ஆண்டுதோறும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம். பண்ணையாள் முறை நில உடமையாளர்கள் ஆண்டுக்கு இவ்வளவு கூலி என்றும் பேசிக் கொண்டு ஆட்களை வைத்துப் பயிரிடும் முறைக்கே பண்ணையாள் முறை என்று பெயர். இந்தக் கூலியைப் பணமாக வும், பண்டமாகவும் கொடுப்பர். இந்தப் பண்ணையாட்கள் கட்டாயமாகப் பண்ணையாரிடம் ஆண்டு முழுவதும் வேலை செய்ய வேண்டும். வேறு இடம் மாறக்கூடாது. இத்தகைய வலுக்கட்டாயப் பண்ணையாட்களைக் கல்வெட்டுகள் கடமை ஊழியர்கள் என்று குறிப்பிடுகின்றன. கடமை ஊழியர்களின் வாழ்க்கை முறை மிகவும் இரங்கத் தக்கது. இவர்களுக்குக் கொடுக்கப்படும் கூலி இவர்களின் அரை வயிற்றுக் கஞ்சிக்கும் போதாது, ஒரு நாளைக்குப் பதினெட்டு மணி நேரம் வயலில் வேலை செய்வார்கள். வயல் வேலைகளைத் தவிர பண்ணையார் இடும் மற்ற வேலைகளையும் செய்வார்கள், இவ்வாறு, விசயநகரர் காலத்தில் ஆண்டான் அடிமைமுறை வழக்கத்தி லிருந்தது. வேளாண்மையில் வேளாண் அடிமைகள், கொத்தடிமைகள், பண்ணையாட்கள் முதலிய அடிமைகளும், பெரு நிலச்சுவான்தார்கள், பண்ணையார், மிராசுதார், ஜமின்தார் முதலிய முதலாளிகளும் இருந்தனர். அடுத்துவந்த ஆங்கிலேயர், தம் ஆட்சிக் காலத்தில் உள்ளவர், இல்லாதவர் என இரு கூறுகளாய்ப் பிரித்தனர். இதில் நில உடமைக் காரர்களை முதலாளிகள் என்றும், வேளாண் அடிமை களைத் தொழிலாளிகள் என்றும் பிரித்தனர். மானிய வகைகள் சோழர் காலத்திலிருந்ததைப் போலவே பிரமதேயங்கள், தேவதானங்கள் அல்லது தேவதாய , மடப்புறம், முதலிவற்றிற்கு (இறையிலி ) வரியில்லை . இவற்றைத் தவிர சில உயர்ந்த மனிதர் களுக்கு அரசு பரிசாகக் கொடுக்கும் நிலங்களுக்கும் வரி கிடையாது, விசயநகர ஆட்சிமுறையும் பண்பாடும் கட்டுத் திட்டங்களும் கிடையாது. இதனை இனாம்தாரி அல்லது சர்வ மானியம் என்பார்கள். பிரமதேய நிலத்தைப் பிராமணாருக்கும் கொடுத்ததால் அதனை அதியாயன் விருத்தி அல்லது பட்டவிருத்தி என்று அழைப்பர். மடங்களுக்கு அளிக்கப்படும் மானியம் மடப் புறம் ஆகும். இதுவே சைவ மடங்களுக்கு அளிக்கப்பட்டால் சைவ சேத்திரம் எனப்படும். சர்வமானியம் இனாம் நிலத்தைச் சர்வமானியம் என்பார் அல்லவா? அதில் இரண்டு வகைகள் இருந்தன. அவை 1. ஏகபோகம் 2. காணபோகம், அல்லது அக்ரகாரம் என்பனவாகும். போரில் உயிர் நீத்த வீரனுக்காக விடப்படும் மானியம் ரத்தக்கொடகே எனப்படும். இதைத்தான் சோழர் காலத்தில் உதிரப்பட்டி என்றனர். இதைப் போலவே போரில் தியாகம் செய்தவருக்குக் கொடுக்கும் மற்றொரு மானியம் நேத்திர கொடகே எனப்பட்டது. வீர, தீரச் செயல்களில் உயிர்நீத்ததவரின் உறவினர்களுக்குக் கொடுத்த மானியம் தைரிய கொடகே எனப் பட்டது. ஊர்க்காவலருக்குக் கொடுத்த மானியம் காவல்காணி எனப் பட்டது. காக்கும் நாயகாவல்காணி என்றும் இதனை அழைப்பர். குடிநீர் அளிக்கப்படுவதற்காக வழங்கப்பட்ட மானியம் நீர் கூலி சர்வ மானியம் எனப்பட்டது. பனடக்காக விடப்பட்ட மானியம் தளவாய் அக்ரகாரம் எனப்பட்டது. வரி விதிப்பில் வேறுபாடுகள் நஞ்சை, புஞ்சை நீர்ப்பாசன நிலம், பயிர்விளைச்சல், விளையும் பொருள்கள், முதலியவற்றின் அடிப்படையில்தான் வரி நிர்ண யிக்கப்படும். மடுவில் இருந்து நீர்ப்பாய்ச்சல் செய்யும் நிலம் பதுக்கை எனப்படும். அதற்காகத் தண்டல் செய்யும் வரி பதுக்கை வரி எனப் படும். புஞ்சை நிலத்தை ஏரிவாய் தாங்கல் வாய், புழுதி வாய் எனப் பிரித்து அதற்குத் தக்கவாறு வரிவிதிப்பர். வரித் தண்டப்படும் மாரைக் காரக்கிரகம் என்பர். நஞ்சை நிலத்தில் விளையும் பொருள்களான நெல், வாழை, கரும்பு, வெற்றிலை செங்கழுநீர் குவளை முதலிய வற்றிற்குத் தனித்தனியாக வரி போட்டனர். நிர்வாகத்திற்காகச் செலுத்தப்படும் வரிகள் நிர்வாகச் செலவுக்காகக் கர்ணிகசோடி தலையாரிக்காணம், நாட்டுக்கணக்குவரி, இராயச வர்த்தனை, அவசரவர்த்தனை, ஆகிய வரிகள் செலுத்தப்பட்டன. அரச கட்டளையைக் கொண்டு வரும் சேவகனுக்கு நிருபச் சம்பளம் கொடுத்தனர். வயல்களுக்கு முறைப் படி நீர்ப்பாய்ச்சுவதைக் கண்காணிப்பவருக்குச் செலுத்தும் கட்ட ணம் ஆள் நீர்ப்பாட்டம் எனவும் விளைச்சல் நிலத்தைக் காவல் காப்பவருக்குச் செலுத்தும் கட்டணம் பாடிகாவல் என்றும் அழைக் கப்பட்டன. இந்த வரிமுறைகளை அப்படியே நாயக்கர் காலத்திலும் பின்பற்றினார்கள். கோயில், சத்திரம் ஆகியவற்றைப் பராமரிக்கச் செலுத்தப்பட்ட பணம் காணிக்கை, கட்டளை, பிரசாத காணிக்கை, விபூதி காணிக்கை, பிடாரி வரி, அடிப்பச்சை, கார்த்திகைக் காணிக்கை முதலியனவாக இருந்தன. வீட்டுக் குடியிருப்புக்காகச் செலுத்தப் பட்ட வரி மனைவரி அல்லது வாசல் பணம் எனப்படும். இக்காலக் கோயில்கள் மக்களின் வைப்பகங்கள் அல்லது வங்கிகளாகவே செயல்பட்டன. கோயில் பண்டாரத்தில் இருந்து மக்கள் பணத்தைக் கடனாகப் பெறலாம். கடனைத் திருப்பிச் செலுத்தும்போது, வட்டியும் சேர்த்துச் செலுத்த வேண்டும். ஆனால் அதனை வட்டி என்று கூறாமல் காணிக்கை என்றே அழைப்பர். வட்டிக்குப் பிச்சை என்றும் மற்றோர் பெயருண்டு. கோயில் களுக்குப் பிரார்த்தனை செய்து கொண்டு மக்கள் போடும் உண்டியல் பணத்தையே கடனாகக் கொடுப்பர். அதற்குப் பெறும் வட்டியைத் தான் பலிச்சை என்பர். இன்று இதனை அறக்கட்டளை என்கின்றனர். சிலர் நிலத்தையே காணிக்கையாகவும் கொடுப்பர். இதனைக் கோயில் மானியம் என்பர். ஏரி உடைந்தால் சீர்செய்வதற்கு இத்தகைய கோயில் மானியத்தையும் விற்பதுண்டு. வரித்தண்டல் முறை விசய நகர மன்னர்கள் இந்து சமயப்பற்றாளர்கள். இதனால் தேவதானம், பிரமதேயம், மடப்புறம் முதலிய நிலங்களுக்காக வரித்தண்டல் செய்யமாட்டார்கள். வரித்தண்டல் விசயதசமி நாளில் தொடங்குவார்கள். அந்நாள் பொருளாதார ஆண்டுக்கணக்கின் தொடக்க நாளாகும். நிலவரி வருவாய்த்துறை அத்வனம் எனப் பட்டது. ஊரில் வரித்தண்டல் செய்யும் மேலதிகாரி ஸ்தானிகர் (நிலை அதிகாரி) எனப்பட்டார். வரித்தண்டல் தொடர்பான விவரங்களைப் பெரிய வரிப் பொத்தகத்தில் பதிந்தும் வைப்பார். பொது மக்கள் பார்வையிட விரும்பினால் அவற்றில் மூல ஆவணங்களை அவரிடம் இருந்து பெற்றும் பார்க்கலாம். தொழில்கள் வேளாண்மையோடு தொடர்புடைய சர்க்கரைக் காய்ச்சுதல், கள் இறக்குதல், பனைவெல்லம் தயாரித்தல், எண்ணெய் எடுத்தல், அவுரிச்சாயம் எடுத்தல், பருத்தி பயிரிடுதல், கல் எடுத்தல், கயிறு திரித்தல் முதலிய தொழில்கள் நடந்தன. அரசுக்குச் செக்கு ஆடும் வாணியரிடம் இருந்து செக்குடைமை என்ற வரியும், தறி நெய்வோ ரிடம் இருந்து தறிவரி, அல்லது தறிக்கடமை என்ற வரியும், கள் இறக்குவோரிடம் இருந்து ஈழப்பூச்சி என்ற வரியும் வருவாயாகக் கிடைத்தன. உலோகத் தொழில்கள் விசயநகர காலத்தில் சுரங்கத் தொழில் உலகப்புகழ் பெற்று விளங்கியது. கர்நூல், அனந்தப்பூர் ஆகிய மாவட்டங்களில் குறிப்பாக வச்சிரக்கருவூரில் வயிரச் சுரங்கங்கள் இருந்தன. மணிக்கற்கள் அதிகம் கிடைத்தன. விலையுயர்ந்த மணிக்கற்களையும், தங்கக் கட்டிகளையும் பாதுகாக்க காப்பாளர்துறை என்றே ஒரு துறை இருந்தது. இவற்றைத் தவிர இரும்பு, செம்பு, கந்தக மூலம் ஆகிய உலோக மூலப் பொருள்களைச் சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுத்தனர். தந்தம், மரம் ஆகியவற்றால் செய்யப்படும் போர்வாள், கைப்பிடிகள், வண்டிகள், பல்லக்குகள் முதலியன செய்யும் தொழில்கள் சிறந்து விளங்கின. உலகப்புகழ் பெற்ற தங்கச்சுரங்கம் கோலாரிலிருந்தது. படையிலிருந்த குதிரைகள், யானைகளுக்குக் கூட தங்க அணிகள் அணிவிக்கப்பட்டன. தொழில் நுட்பத்தில் தேறிய தட்டார்களும், அவர்களின் தொழில் கூடங்களும் இருந்தன. இரும்பைக் கொண்டு வாள், வேல், அம்பு, ஈட்டி, கோடரி, வெடிகுண்டுகள் முதலிய போர் ஆயுதங்களைச் செய்தனர். அன்றாடம் பயன்படும், வேளாண் கருவிகளும், வீட்டுக் கருவி களும் இரும்பால் செய்யப்பட்டன. செம்பும், வெண்கலமும் கூட இவ்வாறு பயன்பட்டன. செம்பு, பித்தளை, வெள்ளி ஆகியவை நாணயங்கள் செய்யவும், வீட்டு ஏனங்கள் செய்யவும் பயன்பட்டன. எனவே விசயநகர காலத்தில் கனிம வளத்தால் அரசுக்கு நல்ல வருவாய் கிடைத்தது. கைத்தொழில்கள் மரச்சாமான்கள், விரிப்புகள் முதலியன செய்யும் கைத் தொழில்கள் அதிகம் இருந்தன. மரத்தால் கப்பல்கள், ஓடங்கள் ஆகியவையும் கட்டப்பட்டன. தோலால் காலணிகளைச் செய்தனர். மக்கள் தோல் காலணிகளை அணிந்திருந்ததைக் கண்டதாக நிக்கலோ - காண்டி, பார்போஸா, பயாஸ் முதலிய அயலகப் பயணிகள் குறிப் பிடுகிறார்கள். இக்கால மக்கள் அணிந்திருந்த காலணிகளின் முனை கூர்மையாகவும், கடினமாகவும் இருந்தன. இத்தகைய காலணி களைப் பண்டைய உரோமானியரும் அணிய வில்லையென்ற இந்த அயல்நாட்டுப் பயணிகள் கூறுகின்றனர். காலணி இல்லாமல் நடப் பவர் பெரும்பாலராக உள்ளதாகவும் இவர்கள் குறிப்பிடுகின்றனர். ஏழைவீட்டுச் சாமான்கள் குறிப்பாகச் சமைக்கும், உண்ணும் கலங்கள் மண்ணால் ஆனவையே என்பதும், ஆனால் செல்வந்தர் வீடுகளிலும், அரண்மனையிலும் வழவழப்பான, மின்னக்கூடிய மண்பாண்டங்கள் காணப்பட்டதாகச் சிலர் கூறுகின்றனர். குயவர் களும் குசக்காணம் எனப்படும் வரியைச் செலுத்தியே தொழில் செய்தனர். கோவையில் நயமிக்கப் பருத்தி ஆடை நெய்யப்பட்டது. அதற்கு அயல் நாடுகளில் நல்ல கிராக்கி இருந்தது. ஐந்தடி அகலமும், பதின்மூன்றடி நீளமும் 5'13') உள்ள பட்டுத்துணி நூறு தங்கக் காசுகளுக்கு விலையேற்றலாம். நயமாகப் பதப்படுத்திய தோலும், பட்டுத்துணிகளும் பழவேற்காடு துறையில் இருந்து அயல்நாடு களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இத் தொழிலில் கைக்கோளர், பறையர் சாலியர் ஆகிய சாதியார் அதிகம் ஈடுபட்டிருந்தனர். பாணர் எனும் சாதியாரை தையல்காரர் என்றழைத்தனர். கடலோரங்களில் உப்புக் காய்ச்சுதல், மீன் பிடித்தல் ஆகிய தொழில்கள் நடந்தன. கடல் வாணிகம் இறக்குமதியான பொருள்கள் கோலாரில் கிடைத்த பொன் தேவையான அளவு இல்லா ததால், ஆப்பிரிக்கா, இலங்கை, ஏடன் துறை முதலியவற்றில் இருந்து பொன் இறக்குமதி செய்யப்பட்டது. வெள்ளி, கீழ்த்திசை நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. ஈயம், தகரம், செம்பு ஆகிய உலோகங்களும் சிறிதளவே இறக்குமதி செய்யப்பட்டன. யானைகளைப் பெரு, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து அரசர்கள் இறக்குமதி செய்தனர். பயிற்சி பெற்ற ஒரு யானை ஆயிரம் பணம் கொடுத்து வாங்கப்பட்டது. யானை வாணிபத்தைப் பற்றி அப்துல் ரசாக் மிக விவரமாக எழுதியுள்ளார். ஈழநாட்டு யானைகள் உயர்ரக மானவை; நன்கு பயிற்சி பெற்றவை என்பதற்காகவே விசயநகர மன்னர்கள் அதிக விலைகொடுத்து அதிக எண்ணிக்கையிலான யானைகளை வாங்கினார்கள். விசயநகரப் படையில் குதிரைப் படைப்பிரிவு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது. ஏராளமான அரபு நாட்டுக் குதிரைகள் வாங்கப்பட்டன. குதிரை வாணிபத்தில் ஈடுபட்டிருந்த குதிரைச் செட்டி அரபு நாட்டு வாணிபருக்கும், அரசுக்கும் இடைத்தரகர்களாயிருந்து கொள்ளை லாபம் பெற்றனர். அராபிய குதிரைவாணிபரிடம் இருந்து. போர்த்துக்கீசிய வாணிகர்கள் வாங்கிக் கொள்ளை லாபத்திற்கு விற்றனர், பேரரசர்களும், சிற்றரசர்களும், கண்ணை மூடிக் கொண்டு குதிரைகளை வாங்கினர். அராபியக் குதிரை வாணிகர்கள் அவற்றிற்கு வேண்டிய உணவு முறைகளையும், பராமரிப்பு முறைளையும், வரும் நோய்களையும், அவற்றிற்குச் செய்ய வேண்டிய சிகிச்சை முறைகளையும் சொல்லுவதில்லை. மேலும் குதிரைக்குக் குளம் பாணி(லாடம் கட்டுபவரையும் இங்கு வராமல் பார்த்துக் கொண்டனர். இதனால் ஏராளமான குதிரைகள் இறந்துபட்டன. இதனால் ஆண்டு தோறும் குதிரை வாங்கும் வாணிபம் வளமாக நடந்தது. மிளகு, இலவங்கம், சோம்பு, கசகசா முதலிய உணவுடன் கலந்து உண்ணும் நறுமணப் பொருள்கள் மலாக்கா, சுமத்திரா, ஜாவா, விசயநகர ஆட்சிமுறையும் பண்பாடும் போர்னியோ முதலிய இடங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட் டன. பின்னர் இவை மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன, தர்ப்பூசணிப்பழம் ஜாவாவில் இருந்தும், பன்னீர், அத்தர், கஸ்தூரி முதலியன ஜெட்டா, ஆவா ஆகிய இடங்களில் இருந்தும், கற்பூரம் போர்னியோவில் இருந்தும், இறக்குமதியாயின. குறிப்பிட்ட சில வகை ஆடைகள் ஜெட்டா, ஏடன், சீனா முதலிய இடங்களில் இருந்து கோழிக்கோடு, துறைமுகம் வழியாக இறக்குமதி செய்யப் பட்டன, சீனப்பட்டும், மெக்காவெல்வெட்டும் சிறப்பாகப் போற்றப் பட்ட இறக்குமதிப் பொருள்களாகும். அரசக் குடும்பத்தினரும், செல்வந்தர்களும் விரும்பிய விலையுயர்ந்த மணிக்கற்கள், முத்துக் கள் முதலியன பெரு, சிலோன், ஆர்மூஸ் ஆகிய இடங்களில் இருந்து இறக்குமதி ஆயின. ஏற்றுமதியான பொருள்கள் தென்னக வாணிகப் பொருள்கள் பெரும்பாலும், சீனா, பார சீகம், அரேபியா முதலிய நாடுகளுக்கே ஏற்றுமதியாயின. இதற்குக் காரணம் இக்காலத்தில் இசுலாமிய வாணிகர்கள் தென்னக வாணிகத் தில் ஏகபோக உரிமை பெற்றிருந்ததே ஆகும். கிழக்கிந்தியத் தீவுகளி லும், ஈழத்திலும், பர்மாவிலும் இவர்கள் கொடி கட்டிப் பறந்தனர், இவ்வாறு மேலைநாடுகளிலும், கீழ்த்திசை நாடுகளிலும் வாணிபத் தில் செல்வாக்குப் பெற்றிருந்த தென்னாட்டில் ஒரே பொருள் ஏற்று மதிப்பட்டியலிலும், இறக்குமதிப் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது. அரிசி மலபாரில் இருந்து மேற்கேயுள்ள ஏடன், ஆர்முஸ் முதலிய துறைமுகங்களுக்கும், கிழக்கே சிலோனுக்கும் ஏற்றுமதி ஆனது. ஆனால், இதே அரிசி தென்னகத்திற்கும் இறக்குமதி ஆனது. சர்க்கரை மற்றும் சிறுவகை தானியங்கள், கொப்பரை ஆகியவையும் ஏற்றுமதி ஆயின. துணிகளுக்குச் சாயம் போட உதவும் அவுரிச் செடி அல்லது நீலச்செடி, தோல் பதனிட உதவும் நெல்லிக்காய், ஆவாரம் பட்டை முதலியனவும் சந்தனம், தேக்கு ஆகியவையும் மேலைக் கடல் துறைமுகங்கள் வழியாக ஏற்றுமதியாயின. உணவுடன் சேர்த்துண்ணும் நறுமணப் பொருள்கள், கருப்பு மிளகு, நாட்டு மருந்துகள் முதலியன கொச்சி, கோழிக்கோடு, துறைமுகங்களில் இருந்து ஏற்றுமதியாயின. அதே சமயம் கிராம்பு, இலவங்கப் பட்டை , இஞ்சி முதலியன கிழக்கிந்தியத் தீவுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு மேலைநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. மேலைக்கடற்கரைப் பகுதிகளில் இஞ்சி பயிரிடப் பட்டது. இதனை உலர்த்தி, சுக்காக்கியும், மாவாக அரைத்தும், பாரசீகம், ஏடன் முதலிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தனர். ஏற்று மதியான இலவங்கப் பட்டையின் பெரும்பகுதி சிலோனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகும். மங்கிய சிவப்பு நிற மணிக்கற்கள், இரவில் ஜொலிக்கும் பூனைக்கண் எனப்படும் மணிக்கற்கள், வைரக்கற்கள், நீலக்கற்கள் முதலிய விலையுயர்ந்த மணிக்கற்கள் அங்கோலா, ஆனோவர் முதலிய துறைமுகங்களுக்கு ஏற்றுமதி யாயின. பழவேற்காடு, மயிலாப்பூர் ஆகிய துறைமுகங்களில் இருந்து வண்ண ஆடைகள் மலாக்கா, பெரு, சுமத்திரா ஆகிய நாடு களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. எண்ணெய் வகைகள், வெல்லம், சருக்கரை, நெய், வெற்றிலை, பாக்கு, கடுக்காய், பழ வகைகள், இரும்பு, ஈயம், செம்பு ஆகியவற்றாலான பொருள்கள் ஆகியவையும் ஏற்றுமதியாயின், இத்தகைய பொருள்களை உள்ளுர்ச் சந்தைகள் நடக்கும் குறிப்பிட்ட நாட்களில் வாங்கி, சேர்த்து வைத்தும் ஏற்றுமதி செய்யப்பட்டன. வாணிகர்கள் இக்கால் வாணிகர்களில் இசுலாமிய வாணிகர்கள் முதன்மை இடத்தைப் பெறுகின்றனர். கோழிக்கோட்டில் இவர்களின் வணிகக் குடியிருப்புகள் இருந்தன. அத்துடன், தென்னாட்டின் தலைநகரங் களில் இவர்கள் காணப்பட்டனர். இவர்கள் சொந்தமாகக் கப்பல் துறை வைத்துக்கொண்டு வாணிபம் செய்தனர். கி.பி. 16ஆம் நூற்றாண்டில் மேலைக் கடற்கரையில் போர்த்துக்கீசிய வாணிகர்கள் செல்வாக்குப் பெறும் வரை இசுலாமிய வணிகரின் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது. இவ்விருவர்க்கும் இடையே ஏற்பட்ட வணிகப் போட்டியில் போர்த்துக்கீசியரே முடிவில் வெற்றிப் பெற்றனர். ஏலக்காய், இஞ்சி, மிளகு, சின்கோனா மற்றும் உணவு டன் சேர்த்துண்ணும் நறுமணப் பொருள்களை வாணிபம் செய்வதில் போர்த்துக்கீசியர்கள் உள்நாட்டு மன்னர்களிடம் ஏகபோக உரிமை பெற்றுவிட்டனர். இதுவே இசுலாமிய வாணிகரின் வீழ்ச்சிக்கு அடிப்படைக் காரணமாகும். ஆயினும், இசுலாமிய வாணிகர்கள் சீனா, மலாக்கா, வங்காளம் முதலிய நாடுகளுடன் தங்கள் வாணிக உறவைப் பெருக்கிக் கொண்டு வீழ்ச்சியடையாமல் சமாளித்தனர். ஆனால் போத்துக்கீசியர் கோவா, டையூ ஆகிய இடங்களில் உள்ளூர் அரசுக் காப்புடன் உறுதி பெற்று, நிலைத்து விட்டனர். போர்த்துக்கீசியரைத் தொடர்ந்து டச்சுக்காரர்கள் வாணிபத்தில் ஆதிக்கம் பெற முயன்றனர். போர்த்துக்கீசியருக்கும் டச்சுக்காரருக் கும் இடையே கடுமையான வணிகப்போட்டி ஏற்பட்டது. இவர் களையடுத்து, ஃபிரெஞ்சுக்காரரும், ஆங்கிலேயரும் தென்ன கத்தைச் சந்தையாக்கினர். இக்காலத்தில் மேலை நாட்டு வாணிகர்கள் உணவுடன் சேர்த்துண்ணும் நறுமணப் பொருள்களுக்கே தங்கள் வணிகப் பொருள்களில் அதிகக் கவனம் செலுத்தினர். அவற்றிற்கு மேலை நாடுகளில் அதிகக் கிராக்கி ஏற்பட்டது. எத்தகைய விலை கொடுத்தும் வாங்கினார்கள். இதனால் உள்நாட்டு வணிகர்களான செட்டிகள் அவை அதிகம் உற்பத்தி ஆகும், கிழக்கிந்தியத் தீவுகளில் அவற்றை அதிகமாகக் கொள்முதல் செய்தனர். காப்பியும் தேயிலையும் அதிக மக்களால் நுகர்வோர் பொருள்களாக மாறும்போது பல செட்டி மார்கள் இந்த வணிகப் பொருள்கள்களை அதிகம் கொள்முதல் செய்து வாணிபம் செய்தனர். ஆயினும் மேலை நாட்டு வணிகர்க ளான போர்த்துக்கீசியர், டச்சுக்காரர்கள், ஃபிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் ஆகியோரின் கடலாதிக்கத்திற்கு முன் இந்த செட்டி களின் ஆதிக்கம் தோற்றது. கடைசியில் அவர்களின் முகவர்களாக மாறிவிட்டனர். பாரசீக நாட்டுத் : ாதராக அப்துல் ரசாக் விசயநகரத் தலைநக ருக்குச் சென்று பார்த்த ட்டு அங்கு நடந்த வாணிகத்தின் பெருமை யைக் கீழ்க்கண்டவ" பயந்துரைக்கிறார் 'உலகத்தில் கண்களால் கண்டிராத, காது எல் கேட்டிராத அதிசயங்களை உடையது விசயநகரமாகும். கோட்டைக் கொத்தளங்களுக்குள் இந் நகரம் அமைந்துள்ளது. கோட்டைகளில் அங்காடி வீதிகளும், அங்காடி களும் அருகருகே அமைந்துள்ளன. ஒவ்வொரு அங்காடி விதியும் எடுப்பான முகப்புகளையுடைய வாயில்கள் உடையனவாகவும், களரிகளை உடையனவாகவும் உள்ளன. இவற்றிற்கெல்லாம் மேலாக அரசனது அரண்மனையுள்ளது. அங்காடி வீதிகள் மிகவும் நீளமாகவும், அகலமாகவும் உள்ளன. அவற்றின் திறந்தவெளியில் நகை வணிகக்குழுவினர் தனித்தனியாக, தங்களின் வணிகப் பொருள்களைக் குவியல் குவியலாகக் கொட்டி விற்பனைச் செய் கின்றனர், நகை வணிகக் குழுக்களும், கை வினைத் தொழில் வணிகக் குழுக்களும் இவற்றில் பங்கேற்றுள்ளனர். அவர்கள் தனித் தனியாக, ஆனால் பக்கத்தில், வாணிபம் செய்கின்றனர். விலை யுயர்ந்த கொம்புக்கல் (மாணிக்கம்), மரகதக் கல் (பச்சைக்கல்) ஆகிய பலவகைக் கற்களைத் திறந்த வெளியில் கொட்டி விற்கின்றனர். அப்துல் ரசாக் கூறும் இக்கூற்று சமகாலக் கல்வெட்டுச் சான்றுகளால் நிருபணமாகிறது. விசயநகரத்தில் மட்டும் இத்தகைய வளமான வாணிகம் நடந்ததென்றல்லாமல் நாடு முழுதிலும் இருந்த சிறிய, பெரிய நகரங்களிலும் இத்தகைய வாணிபம் நடந்ததை அறிகிறோம், கி.பி. 1382 ஆம் ஆண்டு கல்வெட்டு ஒன்று கருநாடக மாநிலம் பேளூரில் கிடைத்துள்ளது. அதில் இது போன்ற விலை யுயர்ந்த மணிகளையும், அணிகளையும் விற்கும் 27 நகரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றில் தமிழகத்திலுள்ள காஞ்சி, படை வீடு, சதுரங்கப் பட்டினம் ஆகியவையும் குறிப்பிடப்பட்டுள்ளன. இத்தகைய வணிக இடங்கள் நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் நெடும் பாதைகளில் உள்ளன என்பதும் குறிப்பிடத் தக்கனவாம், பெரிய கோயில்களும், புனிதப்பயண இடங்களுமான காஞ்சி, திருப்பதி, படைவீடு, சந்திரகிரி முதலியவற்றுடனும் இப் பாதைகள் இணைத்துள்ளன. தென்னகத்தில் இக் காலத்திலிருந்த சிறு பெரிய வணிக மையங்கள் நெடும்பாதைகளால் இணைக்கப்பட் டிருந்தனவென்று வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் கூடும் வாரச் சந்தைகளும், நிரந்தரக் கடை வீதிகளும் இருந்தனவென்றும். அவை, தெலுங்கு தமிழ் ஆகிய மொழிகளில் பெயர்ப் பலகைகளைத் தாங்கி நின்றன என்றும் அறிகிறோம். அவை அங்காடி நாளங்காடி, அங்காரங்கள் என்றும் எழுதப்பட்டிருந்தன. குறிப்பிட்ட பொருளை விற்க, குறிப் பிட்ட அங்காடி இருந்தது. காசிக்கடை என்பது பொன் தங்க நகைகள் விற்கும் கடை ஆகும். நெல்லுமண்டி அல்லது அரிசி மண்டி தனியாக இருந்தது. ரோஜாப்பூக்களை விற்பதற்கென்றே இரு மருங்கிலும் உயரமான மேடைகளின் மீது பூக்களை வைத்து விற்றனர், என்று அப்துல் ரசாக் கூறுவதில் இருந்து பூக்கடை இருந்ததை அறியலாம். போளூரை அடுத்த தேவிகாபுரம், திருப்பதி ஆகிய இடங்களில் பெயர்பெற்ற நகைக் கடைகள் இருந்ததாகக் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. திண்டிவனத்தில் பஞ்சு, நூல் ஆகியவை விற்கும் வணிக வளாகம் இருந்தது. விரிஞ்சிபுரத்திலும் இருந்ததாகவும் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. பருத்தி நூலால் நெய்யப்பட்ட புடவை, பெரு முடிச் சீலை, ஆகிய ஆடைகளும், பட்டுவராகம் எனப்படும் பட்டுச் சேலைகளும் இவ்விடங்களில் விற்பனை ஆயின. இவ்வாறு, விசய நகர காலத்தில் வாணிக வளம் செழிப்புற் நிருந்ததைக் காண்கிறோம். இவற்றால் அரசுக்கு அந்நியச் செலா வணியும் அதிகம் கிடைத்தது. நாணயமுறை விசயநகர ஆட்சிக் காலத்தில் தங்கம், வெள்ளி, செம்பு ஆகிய உலோகங்களால் நாணயங்கள் அச்சிடப்பட்டன. இரும்பு ஊசிகளும், மணிக்கற்களும் நாணய மாற்றுக்களாகப் பயன்பட்டன. பொற் காசுகளை வராகன், பரிதாபு, கால்வராகன் முதலிய நாணயங்களாக அச்சிட்டனர். வெள்ளிக் காசுகள் தார் என்றும், செம்புக் காசுகள் பணம், ஜித்தால், காசு எனவும் அழைக்கப்பட்டன. ஜாதி. உறாக கத்யாணம், அல்லது பகோடா என்னும் நாணயங்களும் புழக்கத்திலிருந்தன. நாணயங்களில் அனுமான், இலக்குமி, நாராயணன், யானை, வெங்கடேசர், விருப்பாட்சர், கருடன் முதலிய உருவச் சின்னங்கள் பொறிக்கப்பட்டன. திருமலைராயரின் நாணயங்களில் இராமர், சங்கு, சக்கரம், வராகன், யானை, எருது ஆகிய உருவங்கள் பொறிக்கப் பட்டிருந்தன. ஆகிய வகளில் ஒனங்கள் விசயநகர ஆட்சிமுறையும் பண்பாடும் எடைகளும், அளவைகளும் நில அளவுகள் 75 அடி - ஒரு குழி 100குழி - ஒரு காணி 5 காணி - ஒரு வேலி தஞ்சைப் பகுதியில் நில அளவை 144 சதுர அடி - ஒரு குழி 100 குழி - ஒரு மா 20 மா ஒரு வேலி ஒரு வேலி 6, 6 ஏக்கர் ஒரு குழி - 0. 0033 ஏக்கர் ஒருமா - 33 ஏக்கர் முகத்தல் அளவை 2 ஆழாக்கு -- 1 உழக்கு 2 உழக்கு 1 உரி 2 உரி - 1 நாழி அல்லது படி 8 நாழி 1 குறுணி அல்லது மரக்கால் 2 குறுணி - 1 பதக்கு 2 பதக்கு - 1 தூணி 3 தூணி - 1 கடம் எடுத்தல் அளவை 3 தோலா - 1 பலம் 4 பலம் - 1சேர் 3 சேர் - 1 வீசை 5 விசை - 1 மணங்கு வாழ்க்கைத்தரம் பெரும்பாலான மக்கள் ஊர்ப்புறங்களில் கூரைவீடுகளில் வாழ்ந்தனர். குடியிருப்புகள் சாதிக்கேற்றவாறு தனித்தனியே இருந்தன. பெரும் நிலக்கிழார்கள் பெரிய வீடுகளில் வாழ்ந்தனர். இந்தப் பகுதியே ஊரின் முகாமைப் பகுதியாகக் கருதப்பட்டது. வேளாண் கூவிகள், வணிகர்கள் முதலியோரும் தனித்தனியே வாழ்ந்தனர். ஆனால் ஊரின் பகுதியிலேயே வாழ்ந்தனர். செல்வந்தர்கள் வீடுகள் சுட்டச் செங்கற்களால் கட்டப்பட்டுச் சுதை பூசப்பட்டன. மற்ற வீடுகள் மண்சுவர் எழுப்பி, கூரைவேய்ந்த குடிசை வீடுகளாய் இருந்தன, தரை சாணத்தால் மெழுகப்பட்டது. ஒரு சிலர் சுண்ணாம்பால் தரையை மெழுகினர், தீண்டப்படாதார் வசித்த சேரிகள் பள்ளமான பகுதியில் சேறும், சகதியும் நிறைந்த, தெருக்கள் அமைக்கப்படாத குடிசை வீடுகளாயிருந்தன. ஆனால், இது ஒரே தொகுதியாக அல்லது அலகு ஆகக் காணப்பட்டது. ஆனால் ஊரில் இடையர்தெரு, வாணியர் தெரு, செட்டியார்தெரு, கம்மாளர்தெரு, வண்ணார் தெரு, அம்பட்டர்தெரு எனச் சாதிகளின் பெயரால் தெருக்கள் பல இருந்தன. சேரி ஊருக்கு வெளியே இருந்தது. நகரங்களில் செல்வர்கள் மாட மாளிகைகளில் வசித்தனர். அரண்மனைகளில் அரசரும், அரச குடும்பத்தாரும் வசித்தனர். இத்தகைய கோயில்கள் சமூகக் கூடங்களாகவும் திகழ்ந்தன. கோயில்களுக்குச் சமமாகப் பிராமணர்கள் குடியிருப்புகளும் உயர்வாகக் கருதப்பட்டன. தீண்டாதாரைப் போலவே, பிராமணர் களும் மக்களோடு கலவாமல் தனித்தே வாழ்ந்தனர். எவரும் அவர்களின் குடியிருப்புகளிலுள்ள தீண்டாதாரை இவர்கள் ஒதுக்கி வைத்தனர். பிராமணர்கள் மற்றவர்களை ஒதுக்கி வைத்தனர். கோயில்களிலுள்ள உருவச் சிலைகளைக் காணும்போது இக்கால மக்களின் ஆடை, அணிகலன்களை ஊகித்து ஓர்ந்து உணரலாம். பருத்தி, பட்டாடைகள் மக்கள் அணிந்தனர். பொன், மணிகள் பதிந்த அணிகலன்களை அணிந்தனர். கோவை, புலிக் காடு, கோவா ஆகியவை நெசவுத்தொழில் நடந்த இடங்களாக இருந்தன. நெசவுத் தொழில் செய்யும் கைக்கோளர்களும், வண்ணம் போடும் சாலியர்களும் கூடத் தனித்தனித் தெருக்களில்தான் வசித்தார்கள். துணிகள் வஸ்திரக்காரர் எனப்படும் தையற்காரர்களால் தைத்து ஆடைகளாக அணியப்பட்டன, தைக்கப்பட்ட துணிகள் வஸ்திரம் எனப்பட்டது. பின்னல் வேலையில் சிறந்து நின்ற செளராஷ்டிரர் களும், பட்டுநூல் நூற்பதில் வல்ல பட்டுநூல்காரர்களும் மதுரை முதலிய நகரங்களில் குடியமர்த்தப்பட்டனர். தமிழ்நாட்டுக் கை வினைஞர்கள் தெலுங்கு, கன்னட நாடுகளிலும், தெலுங்கர், கன்னடி யர் தமிழ்நாட்டிலும் குடியமர்த்தப்பட்டனர். இதனால் மூன்று மொழிகள் பேசுவோரிடையே பண்பாட்டுப் பரிமாற்றங்கள் ஏற்பட்டன. ஆயினும் சாதிகளும், தீண்டாமையும் மொழிகளுக்கு அப்பாற்பட்டு அப்படியே நிலைத்து நின்றன. சமுதாய மக்களில் நில உடமைக்காரர்கள் உயர்ந்த நிலையில் இருந்தனர். ஊர்ப்புறங்களில் அவர்களே முடிசூடா மன்னர்களாக விளங்கினர். நாட்டில் நிலம் முழுவதும் அரசனுக்கே சொந்தமாகும். அதுவும் தானமாக அளிக்கப்பட்ட நிலங்கள், பொதுமக்களுக்குச் சொந்தமான நிலங்கள் மட்டுமே அரசனுக்குச் சொந்தமாகும். பொது மக்கள் நிலமென்பதுதான் குறிப்பிட்ட சில நில உடமைக்காரரிடம் இருந்தது. பிரமதேயம், தேவதானம், மடப்புறம், திருநாமத்துக்காணி, திருவிடையாட்டம் போன்றவை குறிப்பிட்ட நிலங்களாகவும், ஊர் முழுவதுமாகவும் இருந்தன. இவற்றைத் தமதாக்கிக் கொண்டவர் களின் சமுதாய நிலைக்கும், பிறருக்கும் வேறுபாடு காணப்பட்டன. நில உடமைக்காரருக்கே சமூகத்தில் உயர்ந்த இடம் இருந்த தால் நில உரிமைகளும் பல வகையாக இருந்தன. அவை நிதி, இக்சேபம், சலம், பாசனம், பக்சனி, ஆகாமி, நித்தம், சாதியம் ஆகிய எட்டு வகைப்பட்டன. இத்தகைய உரிமைகளுக்கேற்ப உரிமை யாளர்களுக்குச் சமூக அந்தஸ்து உண்டு. ஊர்களில் பணியாற்றும் தச்சர், கன்னார், நாவிதர், குயவர், மருத்துவர், பொற்கொல்லர், நாவலர் ஆகியோருக்கு மானியங்கள் வழங்கப்படும். இந்த மானியம் பெறும் ஊழியருக் கென்றும் சமூகத்தில் ஒரு அந்தஸ்து இருந்தது. மேற்கூறப்பட்ட எத்தகைய உரிமையுமில்லாத ஏழைக் கூலி கள் ஏராளமாய் இருந்தனர். இவர்கள் பெரும்பாலோர் தீண்டப் படாதவர்களாவர். இதனால் இவர்கள் கைத்தொழில் செய்வதிலும், கைவினைஞர்களாகும் வாய்ப்பிலும், வணிகத்திலும் இடம் பெற முடியவில்லை. உலகில் வேறெங்கணும் பார்த்திராத, கேட்டி ராத விலையுயர்ந்த மாணிக்கம், மரகதம், முத்துக்கள் தெருக்களில் குவியல் குவியலாகக் கொட்டிக் கிடக்கும் விசயநகர நாட்டில் தீண் டாதார் நிலை சமூக அந்தஸ்தில் இடம் பெறாமல், மனிதர்களாகவே 'மதிக்கப்படாமலிருந்தது என்று தீண்டாமை பற்றி ஆய்ந்த டாக்டர் கி.ரி. அனுமந்தன் அவர்கள் கூறுவதை எண்ணிப்பார்க்கலாம். பஞ்சங்கள் தமிழகம் 400 ஆண்டுகள் விசயநகரப்பிடியிலிருந்தது. அதற்குப் பின்னும் நாயக்கர்கள் ஆட்சியின் கீழ் இருந்தது. மதுரை நாயக்கர்கள், தஞ்சை நாயக்கர்கள், செஞ்சி, வேலூர் நாயக்கர்கள் ஆகியோர் தோராயமாக 100 ஆண்டுகள் விசயநகர் ஆட்சிமுறையைப் பின்பற்றியே ஆண்டனர். இந்த நீண்ட கால கட்டத்தில் தமிழ்நாட்டில் பல பஞ்சங்கள் ஏற்பட்டன. அவை விசயநகர மன்னர்களின் போர்களாலும், பருவமழைப் பொய்த்ததாலும் இயற்கை இடர்ப்பாடுகளாலும் ஏற்பட்டன, கல்வெட்டுச் சான்றுகளின்படி நோக்கும்பொழுது, குற்றலாக் கல்வெட்டு கி.பி. 1381-ல் ஏற்பட்ட ஒரு கொடிய பஞ்சத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறது. தஞ்சைப் பகுதியில் மட்டும் கி.பி. 1402, 1412 ஆகிய இரண்டு ஆண்டுகளில் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக விலைவாசி உயர்வும், பட்டினிச் சாவுகளும் ஏற்பட்ட பஞ்சத்தில் கொடுமைகள் பற்றியும், அரசாங்கம் மேற்கொண்ட பஞ்ச நிவாரணங்கள் பற்றியும் அறிகிறோம். நிலவரி நீக்கப்பட்டது, பல பராமரிப்பு இல்லங்கள் ஏற்படுத்தி மக்களுக்குக் கஞ்சி ஊற்றப் பட்டது. ஊ) சமயமும், இலக்கியமும் 1) சமயம் இந்துச் சமயத்தையும், வைதீக இந்துப் பண்பாட்டையும் காப்பதற்கென்றே விசயநகரப் பேரரசு நிறுவப்பட்டது. விசயநகர மன்னர்கள் இந்துச் சமயத்தைப் பேணிக்காத்தனர். இந்து தருமத்தின் படியே இவர்கள் ஆட்சி நடத்தினார்கள். இதனால் சாதிகளும், சடங்குகளும், சம்பிரதாயப்படிக் கட்டிக் காக்கப்பட்டன. ஆகவே தான், விசய நகரப் பேரரசு இந்துப் பேரரசு என்றும், இது வடநாட்டில் நடந்த குப்தப் பேரரசைப் போல் சமய இலக்கியங்களின் வளர்ச்சிக் கும் பாடுபட்டது என்றும் கூறுவர். விசயநகரப் பேரரசின் போது சோழர், பாண்டியர் பல்லவர் காலங்களிலிருந்த பக்தி இயக்கத்தின் முதிர்ச்சிநிலை காணப்பட்டது என்றும் கூறுவர். சுருங்கக்கூறின் விசய நகரப் பேரரசால் இசுலாமியம் பரவுவது தடுத்து நிறுத்தப்பட்டது, இந்துச் சமய வளர்ச்சி ஏற்பட்டது. இதனால் சமய இலக்கியங்கள் தோன்றின, விசயநகர மன்னர் முதலாம் புக்கரின் மகன் குமார கம்பணன் தென்னாட்டின் மீது படையெடுத்து வந்து, இசுலாமியரை மதுரையை விட்டு அகற்றி, இசுலாமியர்களால் அழிக்கப்பட்ட கோயில்களைப் புதுப்பித்து, அவற்றில் தொடர்ந்து பூசைகளை நடக்கச் செய்தான். மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருவரங்கம் கோயில் ஆகியவற்றைச் சீர்செய்து பூசைகள் நடத்த ஏற்பாடு செய்தான். புதிதாகச் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்குப் பதிலாக இருக்கின்றவற்றைச் சீர்செய்து இசுலாமியரால் ஏற்பட்ட அழிவைத் தடுத்து, வைதீக இந்து மதத்தைக் காப்பாற்றுவதே அந்த நேரத்தின் தேவை யென்பதை உணர்ந்து தான் விசயநகர மன்னர்கள் இந்துக் கோயில்களைச் செப்பனிட்டு இந்து மத்திற்குப் புத்துயிர் அளித்தனர் என்று கே, எம், பணிக்கர் கூறுவதை நோக்கலாம். காலப்போக்கில் இவர்கள் புதிதாகவும், பல கோயில்களைக் கட்டினர். மக்களும் தாமே முன் வந்து பல கோயில்களைக் கட்டினர். கோயில்களைப் போலவே பல மடங்களும் கட்டப்பட்டன. இவை சமயப் பணிகளுக்குப் பெரிதும் உதவின. இவ்வாறு, வைதீக இந்துச் சமயம் புத்துயிர் பெற்றபின் விசயநகர மன்னர்களும் நாயக்கர்களும், பிற சமயத்தாருக்கும் வாய்ப்பளித்தனர். இதனால் இசுலாமும், கிறித்துவமும் தமிழகத்தில் வேரூன்றத் தலைப்பட்டன. ஆக இக்காலத்தில் இவற்றுடன் தமிழ் கத்தில் இந்துச் சமயத்தில் சிவனியம் (சைவம்), மாலியம் (வைண வம்) ஆகிய பிரிவுகளும், அவற்றின் உட்பிரிவுகளும் வளர்ந்தன. சிவனியம் சிவனை வழிபடும் சைவப் பிரிவினர் சிவனுடைய பல்வேறு உருவங்களை வழிபட்டனர். இலிங்கம் கங்காதர மூர்த்தி, தட்சிணா 73 மூர்த்தி, உமாமகேசுவரர் முதலிய உருவங்களில் சிவனை வழி பட்டனர். சிவனியத்தில் தாய்க்கடவுளரான காளி, துர்க்கை , மகிசாசுரமர்த்தினி முதலிய அகோர வடிவிலான உருவங்களையும் வழிபட்டனர். சிவன் கோயில்களிலேயே அம் மனுக்கென்று கோயில்கள் கட்டப்பட்டதோடு, தனியாகவும் கட்டப்பட்டன. சிவன் கோயில்களில் நாயன்மாருக்குச் சிலைகள் வைக்கப்பட்டன. அவை சிறு சன்னதிகளாகவே வணங்கப்பட்டன. . - சைவசமயம் இக்காலத்தில் மூன்று பிரிவுகளாக வளர்ச்சி யடைந்தன. அவற்றைப் பின்பற்றியவர்கள் வீரசைவர்கள், பாசுபதர்கள், காளாமுகர்கள் என்றழைக்கப்பட்டனர். இவர்களைப் பொதுவாக ஜெங்கமர்கள் என்றழைப்பர். இவர்கள் இலிங்கத்தைக் கழுத்தில் கட்டிக் கொண்டதால் இலிங்கத்தார் என்றும் அழைக்கப் பட்டனர். வேதத்தை இவர்கள் ஒப்புக்கொள்ளாமல் வேதத்தில் கூறப்படும் சமயச் சடங்குகளையும், மறுபிறவிக் கோட்பாட்டையும் மறுத்தனர். சிவனைப் பசுபதி என்ற வடிவில் வழிபட்டனர். எனவே இவர்களைப் பாசுபதர் என்றும் அழைப்பர். காலப்போக்கில் பாசுபதர் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்தனர். வைதீக பாசுபதர், வைதீகரல்லாத பாசுபதர் என்ற இரு பிரிவுகள் உண்டாயின. தமிழகத்தில் வைதீக பாசுபதர் பிரிவினரே அதிகம் இருந்தனர். புதுக்கோட்டைக்கு அருகில் அவர்களுக்கென்று மடமும் இருந்தது. காளாமுகப் பிரிவினர் சிவனை உருத்திரன் வடிவில் வழிபட்ட னர். வேதங்களில் கூறப்பட்ட சடங்குகளையும், சாக்கியங்களையும் இவர்கள் கடைபிடித்தனர். இப் பிரிவினர் திருவானைக்கா, திருவொற்றியூர் ஆகிய இடங்களில் சிறப்புற்றிருந்தனர். விசயநகர மரபுகளில் முதல் மரபான சங்கம் மரபைச் சேர்ந்த மன்னர்கள் காளமுகப் பிரிவைப் போற்றினர். விசயநகர மன்னர்கள் கட்டிய கோயில்கள் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமே பயன்படாது சமூக மையங்களாகவும், கலைக்கூடங்களாகவும் திகழ்ந்தன. வானளாவிய கோபுரங்கள், விசாலமான மண்டபங்கள், கவின்மிகு கல்தூண்கள் இவை மக்களை மிகவும் கவர்ந்தன. கலியாண மண்டபங்கள் சமூகக் கூடங்களாகவே மாறின. இத்தகையனவாகத் திகழ்ந்த இக்காலக் கோயில்களான திருவண்ணாமலை - அண்ணாமலையார் கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேசர் கோயில் முதலியவற்றைக் கூறலாம். காஞ்சி, திருச்சி, தஞ்சை, திருவில்லிப்புத்தூர் ஆகிய இடங்களில் உள்ள கோயில் களும் இவ்வாறு திகழ்ந்தன. மாலியம் மேற்கண்ட சிவனியத்தையும் போலவே மாலியப் பிரிவும் சிறப்பாக வளர்ச்சியடைந்தது. விசயநகர மன்னர்கள் வைணவத் தைப் போற்றி வளர்த்தனர். திருமாலின் பத்து அவதாரங்களின் உருவங்களும் வழிபடப்பட்டன. அத்துடன் திருமாலின் தேவியரான திருமகள் (ஸ்ரீதேவி) ஆகிய அன்னை உருவங்களையும் வழிபட்ட னர். இவர்களுக்கென்று தனிக் கோயில்களும் கட்டப் பட்டன. சிவன் கோவிலில் கண்டதைப் போலவே திருமால் கோயில்களிலும் ஆழ்வார்கள், ஆச்சாரியார்களின் சிலைகள் வைக்கப்பட்டு வணங்கப் பட்டன. காலப்போக்கில் திருமால் வழிபாட்டில் வடகலை, தென்கலை என்ற இரண்டு பிரிவுகள் தேன்றின. வடகலையினர் வேதங்களை மூலங்களாகக் கொண்டனர். தென்கலையினர் தமிழ் நூல்களை ஆதாரமாகக் கொண்டனர். வடகலையினருக்குச் சமற்கிருதமும், தென்கலையினருக்குத் தமிழும் வழிபாட்டுக்குப் பயன்பட்டன. ஆழ்வார்கள் தமிழ்ப் பாசுரங்களையே தென்கலையினர்) ஒதித் துதித்தனர், திருநாமம் அணிவதிலும் இவர்கள் வேறுபட்டனர். வடகலை நாமம், தென்கலை நாமம் என இருவித நாமங்கள் அமைந்தன. வடகலையினர் ஆண்டவனிடம் தம்மை முழுமையாக ஒப்புக் கொடுக்காமல் (சரணாகதி அடையாமல்) தம் முயற்சியால் முக்தியடையலாம் என்றனர். ஆனால் தென்கலையினர் ஆண்டவ னிடம் முழுமையாக ஒப்படைத்துவிட்டால் மோட்சம் தானே வரும் என்று நம்பினர். ஆண்டவனைக் குரங்குக்குட்டி தாயைப் பற்றிக் கொள்வது போல் பற்றிக் கொண்டால் தாய்க்குரங்கு தன் முயற்சியால் கிளைக்குக் கிளைத் தாண்டுவதைப் போல் ஆண்டவனருளால் முக்தி கிடைக்கும் என்பதே வடகலையினரின் தத்துவமாகும். ஆனால், பூனை தன் குட்டியைக் கவ்விக் கொண்டு போவதைப் போல் ஆண்டவன் தன் படைப்புகளைக் கொண்டு போய்க் கரைசேர்க் கட்டும் என்பது தென்கலைக் கோட்பாடு. வடகலையைத் தோற்று வித்தவர் வேதாந்த தேசிகர் என்பவராவர், தென்கலையைத் தோற்று வித்தவர் மணவாளமாமுனி என்பவராவார். வேதாந்த தேசிகர் கி.பி.1269 - இல் காஞ்சிபுரத்திற்கு அண்மையிலுள்ள தும்பில் என்ற சிற்றூரில் பிறந்தவர். காஞ்சியிலிருந்த ஆத்ரேய இராமானுஜரிடம் வேதங்கள், தத்துவங்கள், இதிகாசம் புராணங்கள் ஆகியவற்றைச் சமற்கிருதத்திலும் கற்றுத் தேறினார். காஞ்சியில் தன் குருவுக்குப் பின் மடாதிபதி ஆனார். பின் கடலூருக்கு அண்மையிலுள்ள தேவசுந்த புரம் சென்று விசிட்டாத்வைதத் தத்துவத்தைப் பற்றித் தமிழ், சமற்கிருதம் ஆகிய மொழிகளில் பல நூல்களை எழுதினார். இந்த நேரத்தில்தான் மாலிக்காபூர் திருவரங்கம் கோயிலைக் கொள்ளை யடித்தான். இவர் வைணவரின் வேண்டுகோளுக்கு இணங்கத் திருவரங்கம் கோயிலுக்குச் சென்று தங்கினார். அக் கோயிலில்தான் தமிழில் 25 வைணவ இலக்கியங்களையும், சமற்கிருதத்தில் 95 இலக்கியங்களையும் யாத்தார். இவற்றில் வட கலை வைணவக் கோட்பாடுகள் காணப்பெறுகின்றன. பிள்ளை லோகாச்சாரியார், அழகிய மணவாள நயினார் ஆகிய இருவரும் திருவரங்கத்தில் தொடங்கிய தென்கலைத் தத்துவங்களைப் போதிப்பதற்குத் திருமலை ஆழ்வார் மண்டபம் ஒன்றைக் கட்டினார். வடகலை - தென்கலை வேறுபாடுகள் இராமனுஜர் இருக்கிறவரையில் வைணவர்கள் தமிழ் சமற் கிருதம் ஆகிய இரு மொழிகளிலும் பூசனைகள் செய்தனர். ஆனால் இராமானுஜரின் மறைவுக்குப்பின் வரதாச்சாரியார் என்பவர் (கி.பி. 1200 - 1275) சமற்கிருத வேதங்களும், உபநிடத்துக்களும், தமிழிலே யுள்ள பிரபந்தங்களை விடச் சிறந்தவை என்றும், ஆராதனைகள் சமற்கிருதத்தில் மட்டுமே செய்ய வேண்டும் என்றும் கூறினார். இவருடைய கூற்றை நம்பிள்ளை என்பவர் மறுத்தார். தமிழிலே யுள்ள நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் என்பதும் வேத, உபநிடத்து களின் சாரமே என்றார். ஆனால் இதனை வரதாச்சாரியர் ஏற்க மறுத்தார். அவர் சமற்கிருதத்தில்தான் ஆராதனை செய்ய வேண்டும் என்றார். நம்பிள்ளை தமிழில்தான் ஆராதனை செய்ய வேண்டும் மென்றார். இதனால் இருவருக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டது. கடைசியில் வரதாச்சாரியர் திருவரங்கத்தை விட்டு வெளியேறி காஞ்சிபுரம் சேர்ந்தார். காஞ்சியையே தனது இருப்பிடமாக்கிக் கொண்டு வடகலைக் கோட்பாட்டைப் பரப்பலானார். நம்பிள்ளை திருவரங்கத்தில் இருந்து கொண்டு தென்கலைக் கோட்பாட்டைப் பரப்பலானார். எனவே, வடகலைக்குக் காஞ்சிபுரமும் தென் கலைக்குத் திருவரங்கமும் தலைமைப் பீடங்களாயின். சமற்கிருதம் வடகலைக்கும் தமிழ் தென்கலைக்கும் ஆராதனை மொழிகள் ஆயின. வேதங்களும் உபநிடத்துக்களும் வடகலை வழிபாட்டிற்கும், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் தென்கலை வழிபாட்டிற்கும் பின்பற்றப்பட்டன, வடகலையினர் சாதிப் பிரிவுகளைக் கடைபிடிக்க வேண்டாம் என்றும், பிராமணர்களே நான்கு வருணத்தினருக்கும் உயர்வானவர் என்றும் கூறினர். தென்கலையினர் சாதிப் பாகுபாடுகளையே மறுத்தனர். கடவுளுக்கு முன் பிராமணரல்லாதாரும் பெண்களும் நாராயணன் நாமத்தை உச்சரித்து துதிக்கத் தகுதி உடையவர்களே என்று தென்கலையினர் கூறினர். வடகலையினர் வழிபாட்டின்போது மணியடித்துக் கொண்டே வழிபடுவர். வடகலையினர் க் வடிவ நாமமும், தென்கலையினர் ற் வடிவ நாமமும் நெற்றியில் போட்டுக் கொள்வர். இதனால்தான் தீண்டப்படாதவர்களும் தென்கலையில் சேர்ந்து திருக்குலத்தார் ஆயினர். ஆதனர். காமத்தை கூறினர். சமயத் தத்துவம் சைவ சமயத் தத்துவம் விசயநகர ஆட்சிக் காலத்தில் சிறப்புற்று நின்றது. ஆதிசங்கரரின் அத்வைதக் கொள்கை போற்றப்பட்டது, இதனைப் பின்பற்றியவர்களை சுமார்த்தர் என்றனர். இக் காலத்தில் சைவதத்துவத்தைப் பரப்பியவர்களில் சிறந்தவர் மெய்கண்ட தேவர் ஆவார். மெய்கண்ட தேவர் தென்னாற்காட்டிலுள்ள பெண்ணா டத்தைச் சேர்ந்த அச்சுதகளப்பாளர் என்பவரின் மகனாவார். பரஞ்சோதி என்பவரின் மாணவராசி சைவ சித்தாந்தங்களைப் பயின்று மெய்மை கண்டார். எனவே இவருக்கு மெய்கண்டார் என்ற பெயர் ஏற்பட்டது. சிவஞான போதம் என்ற அரிய நூலை இயற்றினார். இந்நூல் 12 செய்யுட்களையும், 81 விரிவுரைகளையும் கொண்டுள்ளது. இவர் மூன்றாம் இராசராசன் காலத்தவர் என்றும் கி.பி. 1232 -ல் வாழ்ந்திருக்கலாம் என்றும், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கல்வெட்டால் அறிகிறோம். மெய்கண்டாருக்கு அருள் நந்தி சிவாச்சாரியார், மனவாசகம் முதலிய சீடர்களும், பல ஆயிரம் தொண்டர்களும் இருந்தனர். மனவாசகம் என்பவர் உண்மை விளக்கம் என்ற நூலை எழுதினார். வினாவிடைகள் வடிவில் உள்ள வெண்பாவால் ஆன இந்நூலில் 26 வகைத் தத்துவங்கள் விளக்கப்படுகின்றன. உமாபதி சிவாச்சாரியார் என்பவர் சிதம்பரம் கோயிலில் இருந்த தீட்சிதர். இவர் சைவ சித்தாந்தத்தைப் பற்றி எட்டு நூல்களை எழுதி உள்ளார். இக்கால் சைவ சமயத் தத்துவங்கள் ஆகமங்களை அடிப் படையாகக் கொண்டவை, பதி, பசு, பாசம் (கடவுள், பொருள், ஆன்மா) ஆகிய மூன்று தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டு சடங்குகளைவிடப் பக்தியே முதன்மையானது என்று எழுதின, கடவுளை அடைய அகங்காரம், கர்மம், மாயை ஆகியவற்றை ஒழிக்க வேண்டும் என்றன. பதினெட்டுச் சித்தர்களில் பெரும்பாலோர் விசய நகர் ஆட்சியின் போது வாழ்ந்தவர்கள், சிவவாக்கியர், சாங்கியம் சடங்குகளின்றி மனதால் நினைத்து வணங்குவது பக்தி என்றார். இக்காலச் சமய தத்துவ ஞானிகள் வேதம், சடங்குகள், சாதியக் கட்டுப்பாடுகளைத் தூண்டி கடவுள் - மனிதன் ஆகியவற்றிற்கு இடையே நேரடி உறவையே போதித்தனர். இலிங்காயத்துக்கள் என்பவர்கள் வீரசைவம் என்ற பிரிவைப் பின்பற்றினார். இவர்கள் சிவனை இலிங்க வடிவில் வழிபட்டனர். வேதங்களில் இவர்களுக்கு நம்பிக்கை இல்லை. மறு பிறவியிலும் நம்பிக்கை இல்லை. பிராமணர்களை அர்ச்சகராக ஏற்றுக்கொள்வ தில்லை. திருமணங்கள் தேவலோகத்தில் நிச்சயிக்கப்படுகின்றன விசயநகர ஆட்சிமுறையும் பண்பாடும் என்பதை ஒப்பவில்லை. ஆனாலும் குழந்தை மணத்தை வெறுத் தனர்; விதவை மணத்தையும் போற்றினர். எனவே இக்காலத்தில் வேதம், பிராமணர்களுக்கு இருந்த புனிதத் தன்மையும் வைதிக முறையும் மங்கத் தொடங்கின. இதற்கும் மேலாக கிறித்துவமும், இசுலாமும், இந்துக்களால் ஒதுக்கப் பட்டவரை மிகவும் கவர்ந்தன. சமணம் விசய நகரத்தில் சிவனியமும், மாலியமும் சிறந்து விளங்கிய போதிலும் பண்டைய சமணச் சமயமும் இருந்தது. சமணர்கள் சிறுபான்மையினராக இருந்தனர். விசயநகர மன்னர்களும் சமணத் திற்கு ஆதரவு அளித்தனர். சமணப் பள்ளிகளுக்குப் பள்ளிச்சந்தம் விட்டனர். திருப்பரங்குன்றம், சாளுக்கை விசயமங்கலம் முதலிய களர்களில் சமணப்பள்ளிகள் அமைந்திருந்தன. விசயமங்கலத்தில் உள்ள சமணப் பள்ளிக்குத் தேவராயரின் மகன் நிலம் கொடையளித் தான். முனிவர் என்னும் சமண ஆசிரியர் வாழ்ந்திருந்தார். கிருட்டிண தேவராயர் காலத்தில் திருப்பருத்திக் குன்றம் சமணப் பள்ளிக்கும் பல நன்கொடைகள் வழங்கப்பட்டன. இதே காலத்தில் கரந்தை, மற்றும் நாகர்கோயில் சமணப் பள்ளிகளுக்கும் நன்கொடைகள் வழங்கப் பட்டன. சாக்கியம் சமணத்தைப் போலவே சாக்கியமும் பௌத்தம்) பண்டைய சமயமே ஆகும். இதனைப் பின்பற்றியோரும் விசயநகர காலத்தில் வாழ்ந்தனர். அக்கால பௌத்த சமயம் நாகப்பட்டினம், காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் சிறப்புற்றிருந்தன. நாகப்பட்டினத்திலுள்ள புத்தர் கோயில் பண்டைய சீனப் பேரரசரால் கட்டப்பட்டதாகும். பெரு நாட்டில் இருந்தும் இங்குள்ள புத்த மடாலயத்திற்கு மக்கள் வந்து போனதாக 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்யாணி கல்வெட்டு கூறுகின்றது. கும்பகோணம், திருவலஞ்சுழி, திருவாலந்துறை ஆகிய இடங்களிலும் பௌத்த விகாரைகள் இருந்தன. இசுலாம் விசய நகரப் பேரரசின் தோற்றத்திற்கு முன்பே இசுலாம் தென் னாட்டில் இருந்தது. மதுரை சுல்தானியம் நிலவி இருந்தபோது இசுலாம் தமிழகத்தில் வலுக்கட்டாயமாகப் பரவியது. ஆனால் விசய நகர அரசில் மதுரை ஒரு அங்கமான பிறகு, அதன் வேகம் கட்டுப் படுத்தப்பட்டது. ஆயினும் மசூதிகளுக்கு மன்னர்கள் தானம் வழங்கினர்; அவர்களின் குடியேற்றங்களையும் அனுமதித்தனர். இதனால் கீழைக் கடற்கரையில் கிராமங்களும் தானமாக வழங்கப் பட்டன, கி.பி. 18 ஆம் நூற்றாண்டில் இசுலாமியர் தமிழகத்தில் ஆதிக்கம் பெற்றனர். இதனால் கட்டாய மத மாற்றம் ஏற்பட்டது. பல இந்துக் கோயில்கள் இடிக்கப்பட்டு மசூதிகள் கட்டப்பட்டன. ஐரோப்பியர் வருகையால் சம நிலை ஏற்பட்டது. கிறித்துவம் தென்னிந்தியாவில் கி.பி. 13 ஆம் நூற்றாண்டிலேயே கிறித்து சபை ஊழியர்களால் கிறித்துவம் கால்கொண்டது. போர்த்துக்கீசிய வணிகர்கள் முதன் முதலில் கிறித்துவத்தைப் பரப்பினர். கி.பி.1498 இல் வாஸ்கோடகாமா கள்ளிக்கோட்டையில் இறங்கி, ஜாமரின் மன்னரிடம் அனுமதி பெற்று வணிகத்தைத் தொடங்கியவுடன் கிறித்துவம் மேலைக் கடலோரம் முழுவதும் பரவத் தொடங்கி விட்டது. கி.பி. 1533-ல் கீழைக் கடற்கரையில் வாழ்ந்த பரதவர் களின் குப்பங்களில் கிறித்துவம் நுழைந்தது. பெரோவ ஐதே சுமரல் என்ற போர்த்துக்கீசிய அதிகாரி காலத் தில் 20,000 பரதவர்கள் கிறித்துவராக்கப்பட்டனர். கி.பி. 1605-ல் இராபர்ட்- டி - நோபிலி என்பவர் மக்களுடன் பழகி, இந்து சந்ததியர் போலவே வாழ்ந்து மதுரைப் பகுதியில் மக்களை மதம் மாறச் செய்தார். வாணிக மையங்களை அமைத்துக் கொண்ட ஐரோப்பியர்கள் அவ்விடங்களில் மாதா கோயில்களையும் கட்டிக் கொண்டனர். விசய நகர மன்னர்களிடமும், நாயக்க மன்னர்களிடமும் அனுமதி பெற்று இத்தகைய கோயில்களைக் கட்டிக் கொண்டனர். பள்ளிக் கூடங் களையும் அமைத்துக் கல்வி போதித்தனர். சமூக சேவைகள் பல செய்தனர். இவற்றின் பின்னணியில் கிறித்துவத்தையும் பரப்பினர். ஆ) இலக்கியம் விசய நகர மன்னர்கள் தெலுங்கு மொழியினராயினும் தமிழ், சமற்கிருத மொழி அறிஞர்களை ஆதரித்தனர். இதனால் இம் மூன்று மொழிகளிலும் பல இலக்கியங்கள் தோன்றின. தமிழ் இலக்கியங்கள் தமிழ் மொழியில் இக்காலத்தில் பலதிறப்பட்ட இலக்கியங்கள் தோன்றின. பிரபந்தங்கள், உலாக்கள், புராணங்கள், ஸ்தல புராணங் கள், அந்தாதி, கோவை ஆகிய புதுவகை இலக்கியங்கள் இக்காலத் தில் தோன்றின. சமய நூல்கள், வரலாற்று நூல்கள் முதலியனவும் இக்காலத்தில் தோன்றின. சிவ புராணக் கதைகளை இலக்கியங்க ளாகவும் படைத்தனர். அயல்நாட்டார் எழுதிய நூல்களும் தோன்றின. இக் காலத்தில் தனித்தமிழ் நூல்களை விட சமற்கிருதச் சொற்கள் கலந்த மணிப்பிரவாள நடை நூல்கள் தோன்றின. இத்தகைய நடைமீது புதிய காதல் ஏற்பட்டது. நூல்கள் இக்காலத்தில் தோன்றிய முகாமை நூல்களை மட்டுமே காண்போம். இதிகாசங்களில் வில்லிபுத்தூரார் பாரதம் இக்காலத்தில் விசயநகர ஆட்சிமுறையும் பண்பாடும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதாகும். இதில் 4, 350 பாடல்கள் உள்ளன. நைடதம் என்ற நூல் வாழ்க்கையை விவரிக்கும் நூல் ஆகும். இதன் ஆசிரியர் அதிவீரராம பாண்டியனாவார். காளமேகப் புலவரின் தனிப்பாடல்கள் மற்றொரு வகைப் படைப்பாகும். குறவஞ்சி குறிப்பிடத்தக்கதாகும். தூது வகை நூல்களில் விறலி விடு தூது சிறப்பானது. இதன் ஆசிரியர் சுப்ரதீபக் கவிராயர் ஆவார். கூளப்ப நாயக்கர் காதல் ஒரு சுவையான நூலாகும். திருமலை நாயக்கரின் சேனைத் தலைவராகியோர்களைப் பற்றிய வரலாற்றைக் கூறும் இராமப்பய்யன் அம்மானை அம்மானைக்குச் சிறந்த எடுத்துக் காட்டு நூலாகும். புராணங்கள் சமணமுனிவர் வாமனரால் இயற்றப்பட்ட மேருமந்திர புராணம் மேரு, மகேந்திரர் ஆகிய கந்தர்வர்களின் கதையை விளக்கு கிறது. ஸ்ரீபுராணம் என்ற நூல் மண்டல புருடர் என்பவர் எழுதினார். வடமொழியிலிருந்த ஆதிபுராணம் என்ற நூலை இவர் தமிழில் இவ்வாறு எழுதினார். திருஞானசம்பந்தர், அருணகிரி புராணம், ஒங்கு கோயில் புராணம், கமலாலயபுராணம் ஆகிய புராணங்களை எழுதினார். திருமலை நாகர் சிதம்பரபுராணம் என்ற நூலையும், செவ்வைக் கூடுவார் பாகவத புராணம் என்ற நூலையும், வீரகவி ராயர், அரிச்சந்திர புராணம் என்ற நூலையும், கமலஞான பிரகாசப் பண்டிதர் திருமழபாடி புராணம் என்ற நூலையும், அதிவீரராம் பண்டியர் இலிங்க புரணம் என்ற நூலையும் கூர்ம புராணம் என்ற நூலையும் பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் என்ற நூலையும், கச்சியப்ப சிவாச்சாரியார் கந்தபுராணம் என்ற நூலையும் இக் காலத்தில் எழுதினர். திருவிளையாடல் புராணம் என்ற மற்றொரு நூலை புலியூர் நம்பி எழுதினார். பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணமும், புலியூர்நம்பி எழுதிய திருவிளையாடல் புராணமும் சிவபெருமான் மதுரையில் நிகழ்த்திய 64 லீலைகளைப்பற்றிய தாகும். கந்தபுராணம் முருகனின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுகிறது. இதில் 10,000 செய்யுள்கள் உள்ளன. தல புராணம் ஒவ்வொரு கோயிலுக்கும் வரலாறு உள்ளது. அந்த வரலாறு பற்றிக் கூறுவதே தல் வரலாறு ஆகும். இத்தகைய வரலாற்றால் கோயில் வந்த வரலாறு மட்டுமேயல்லாது அக் கோயிலுள்ள பகுதியைப் பற்றிய வரலாறும் நமக்குக் கிடைக்கிறது. ஞானப்பிரகாசர் எழுதிய திருவொற்றியூர் புராணம், ஞானக் கூத்தர் எழுதிய விருத்தாசலப் புராணம் முதலியவற்றை எடுத்துக் காட்டாகக் கூறலாம், , சிற்றிலக்கியங்கள் விசய நகர மன்னர் காலத்தில் உலா, அந்தாதி முதலிய இலக்கி யங்கள் எழுந்தன. இவற்றையே சிற்றிலக்கியங்கள் என்கிறோம். இரட்டைப் புலவர்கள் பாடிய ஏகாம்பர நாதர் உலா, உலாவுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். முது சூரியர், இளஞ்சூரியர் என்பது அந்த இரட்டைப் புலவர்களின் பெயர்களாகும். திருவானைக்கா உலா என்பது திருவானைக் கோயில் உலாவாகும். இதனைப் பாடியவர் காளமேகப் புலவராவார். மதுரை சொக்கநாதர் உலாவைப் பாடியவர் திருமலை நாதர் ஆவார். திருக்காளத்தி நாதர் உலா என்பதனைப் பாடியவர் சேரைகவிராசப்பிள்ளை என்பவராவார். ஒரு பாடலின் முடிவில் வரும் சொல்லை அடுத்த அடியின் முதலாகக் கொண்டு பாடுவது அந்தாதி ஆகும். விசயநகர மன்னர் காலத்தில் இத்தகைய அந்தாதிகள் பல உருவாயின. எடுத்துக் காட்டாக மணவாள மாமுனிவர் இயற்றிய இராமானுஜ நூற்றந்தாதி, வரதுங்க ராமர் இயற்றிய திருக்கருவைப் பதிற்றுப்பத்து அந்தாதி ஆகிய வற்றைக் கூறலாம். பிற இலக்கியங்களில் குறிப்பிடத்தக்கவை கோவை, கலம் பகம், பிள்ளைத்தமிழ் ஆகியவை ஆகும். ஞானப்பிரகாசர் இயற்றிய, கச்சிக் கலம்பகம், அண்ணாமலைக் கோவை, குமரகுருபரசாமிகள் இயற்றிய மதுரைக் கலம்பகம், மீனாட்சிப்பிள்ளைத் தமிழ் ஆகிய இலக்கியங்களை எடுத்துக்காட்டாகக் கூறலாம். பக்திப் பாடல்கள் விசயநகர மன்னர் காலத்தில் பாமரரும் போற்றும் பல பக்தி இலக்கியங்களும் தோன்றின. அருணகிரிநாதரின் திருப்புகழ் இதற்கொரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இதில் மொத்தம் 1360 தீந்தமிழ்ப் பாடல்கள் உள்ளன. ஆனால், இவை மணிப்பிரவாளச் சொற்களால் ஆனவை. முருகப்பெருமானின் புகழைப் பாடுவதால் இது திருப்புகழ் எனப் பெற்றது. தத்துவ நூல்கள் சிவப்பிரகாசப் பெருந்திரட்டு என்ற தத்துவ நூல், 2824 பாடல்களைக் கொண்டது. சைவ சித்தாந்தத் தத்துவத்தை விளக்கும் இந்நூலை இயற்றியவர் ஸ்வரூப் நாத தேசிகர் ஆவார். குறுந்திரட்டு என்பது மற்றொரு தத்துவநூல். இதனை யாத்தவர் தத்துவராயர் என்பவராவார். இந்நூல் அத்வைத தத்துவத்தை விளக்குகிறது. தத்துவம், சமயம் பற்றிய மற்றொரு நூல், ரகசிய திரியசாரம் என்ப தாகும். இதன் ஆசிரியர் வேதாந்த தேசிகர் என்பவராவார். தாண்டவ ராய சாமிகள் எழுதிய கைவல்ய நவநீதம் அத்வைத சித்தாந்தத்தை விளக்குகிறது. கமலை ஞானப்பிரகாசப் பண்டிதரின் சிவானந்த போதம் சைவத் தத்துவங்களை விளக்கும் சிறந்த நூலாகும். அனுட்டான அகவல், சிவ பூசை அகவல் ஆகிய தத்துவ நூல்களை யும் அம்பலவாண தேசிகர் என்பார் இயற்றியுள்ளார். இக்காலத்தில் மேலும் பல தத்துவ நூல்களும் எழுந்தன. இலக்கண நூல்கள் திருவாரூர் வைத்தியநாத தேசிகரின் இலக்கண விளக்கம், பிள்ளைப்பெருமாள் கவிராயரின் மாறன் அலங்காரம், குமர குருபரரரின் சிதம்பரம் செய்யுட்கோவை ஆகியவை இக் காலத்தி லெழுந்த யாப்பிலக்கண நூல்களாகும். பரஞ்சோதி முனிவர் சிதம்பரப் பாட்டியல், யாப்பிலக்கணம் என்ற நூலையும் பார்த்தார். மண்டல புருடர், சூடாமணி நிகண்டு என்ற நூலையும், சிவப்பிரகாசர் தருக்க நூலையும் எழுதினார். இவற்றை இவை இக்கால இலக்கணத்தை அறிய உதவும் பிற நூல்களாகக் கொள்ளலாம். உரைநூல்கள் ஏற்கனவே உள்ள நூல்களுக்கு உரை எழுதும் பணி இக்காலத்தில் அதிகம் காணப்பட்டது. ஐஞ்சிறுகாப்பியங்களில் ஒன்றான நீலகேசிக்குச் சமண முனிவரான வாமனாசாரியார் சமய திவாகம் என்ற உரை எழுதினார். சங்கற்ப நிராகரணம், சிவஞான சித்தியார் பரபக்கம் ஆகிய நூல்களுக்கு குரு ஞானசம்பந்தர் உரை எழுதினார். எல்லப்ப நாவலர் என்பவர் செளந்தர்யலஹரி' என்ற நூலுக்கு உரை எழுதினார். மொழிபெயர்ப்பு நூல்கள் சமற்கிருத நூலான பாகவதத்தை அருளானந்ததாசர் தமிழில் மொழிபெயத்தார். செளந்தர்ய லஹரியைத் தமிழில் கவிராசப் பண்டிதர் என்பார் மொழி பெயர்த்தார். கொக்கோகம் என்ற நூலைத் தமிழில் எழுதியவர் வரகுணராம பாண்டியர் என்பவராவர், இவ்வாறு இக்காலத்தில் சமற்கிருதத்தில் இருந்து பல நூல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டன. சமற்கிருதம் விசய நகர மன்னர்களாலும், நாயக்க மன்னர்களாலும் பெரிதும் ஆதரிக்கப்பட்ட மொழி ஆகும். இதனால் பல சமற்கிருதப் புலவர்கள் பெருமைபடுத்தப்பட்டனர். தஞ்சை நாயக்கரான இரகுநாத நாயக்கர் இராமபத்ராம்பா என்ற புலவரைத் தன் அரசவைக் கவிஞராக்கிப் பெருமைப்படுத்தினார். வேலூர் சின்னபொம்மு நாயக்கர் அப்பய்ய தீட்சிதர் என்ற சமற்கிருத விற்பன்னரைத் தன் அவைக்களப் புலவராக்கிப் பெருமைப்படுத்தி னார். திருமலை நாயக்கர், நீலகண்ட தீட்சிதர் என்பவரை தனது அமைச்சராக அமர்த்திக் கொண்டார். சேவப்ப நாயக்கர் அவையிலும் நீலகண்ட தீட்சிதர் இருந்தார். செஞ்சி நாயக்கரான சூரப்ப நாயக்கர், கோவிந்த தீட்சிதர் என்பவரை ஆதரித்தார். இவ்வாறு மதுரை நாயக்கர்களேயன்றி வேலூர், செஞ்சி, தஞ்சை நாயக்க மன்னர்களின் அவைகளை அலங்கரித்தவர்கள் சமற்கிருதமொழிப் புலவர்களே என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். இதனால் இக்காலத்தில் சமற்கிருத நூல்கள் பல வெளிவந்தன. சிறப்பு வாய்ந்த சமற்கிருத நூல்கள் "குமார கம்பணனின் மனைவி கங்காதேவி எழுதிய மதுரா விசயம் என்ற சமற்கிருதப் பாவியம் ஒரு சிறந்த வரலாற்று நூலாகும். தமிழகத்தை விசயநகரப் படைகள் வென்று, சம்புவராயர் மற்றும் சில குறுநில மன்னர்களை முதலில் வென்று, பின்னர் மதுரை மீது படையெடுத்து மதுரைச் சுல்தான்களைத் துரத்தியதை இந்நூல் கூறுகிறது. வேதாந்த தேசிகரின் நூல்கள் யாதவாப்யுதம் என்ற நூலை எழுதியவர் வேதாந்த தேசிகர் ஆவார். இந்நூல் மகாகாவிய வகையைச் சேர்ந்ததாகும். கண்ணனின் வாழ்க்கை வரலாற்றை 21 காண்டங்களில் இந்நூல் விளக்குகிறது. பாதுகாகஸ்ர என்ற நரலையும் இவர் எழுதியுள்ளார். இதில் ஆயிரம் பாடல்கள் உள்ளன. இராமரின் பாதுகையின் சிறப்பை இந்நூல் விளக்குகிறது. சங்கல்ப சூர்யோதயா என்ற நாடகம் 10 அங்கங்களைக் கொண்டது. இது விசிஷ்டாத்வைதத்தின் உட்பொருளை விளக்கும் நாடகமாகும். இந்நாடகத்தில் நன்மை, தீமை ஆகிய குணங்களைப் பாத்திரங்களாகச் சித்திரித்து வேதாந்த தேசிகர் எழுதியுள்ளார், மேலும், தேசிகர் ஹம்ஸ் சந்தேஸம் என்ற நூலை மேகதூதம் என்ற காளிதாசரின் கவிதையைப் போல் இயற்கைச் சூழல்களின் சுழற்சி களைப் பின்னணியாக வைத்து எழுதியுள்ளார். கபாஷிதநீவி என்ற நீதிநூல், அஷ்டபுஜ தோத்திரம், ஹயக்கீரிவ தோத்திரம் அர்ச்சன தோத்திரம் முதலிய பக்தி நூல்களும் இவரால் எழுதப்பட்டன. சமற்கிருதம், தமிழ் இரு மொழி வல்லுநரான இவர் மொத்தம் 90 நூல்களை எழுதியுள்ளார். அப்பய்ய தீட்சதரின் நால்கள் இவரைப் பற்றி மேலே பார்த்தோம். இவர் சுமார் 104 நூல்களை எழுதியுள்ளார். இவை தத்துவம், சைவ, வைணவ சமயங்கள், சமற் கிருத மொழி இலக்கணம், வரலாறு முதலியன பற்றியதாகும். குவலயாநத்தம் என்ற நூல் அணி இலக்கணத்தையும் விருத்த வார்த்திக் என்ற நூல் ஒரு சொல்லின் பல பொருள் களையும் கூறும் இலக்கண நூல்களாகும். சித்திர மீகாம்ஸம், லஷ்னாவலி ஆகிய இலக்கிய ஒப்பாய்வு நூல்களையும் எழுதியுள்ளார். அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம் ஆகிய கோட்பாடுகளையும் ஆய்ந்து ஒற்றுமை காணும் பொருட்டு ஆனந்த லஹரி என்ற தத்துவ நூலை எழுதியுள்ளார். இதைப் போலவே சிவனையும், திருமாலையும். அரியும் சிவனும் ஒன்று என்ற கோட்பாட்டின் ஒன்றிணைக்கும் விசயநகர ஆட்சிமுறையும் பண்பாடும் சிவதத்துவ விவேகம் என்ற சமயநூலை எழுதியுள்ளார். வேதாந்த தேசிகருடைய நூலான யாதாவாப் யுதத்திற்கு விளக்கவுரையும் எழுதியுள்ளார். சங்கரருடைய ஸ்ரீபாஷ்யத்திற்கு உரை கண்டுள்ளார். மற்றும் பல சமற்கிருத நூல்கள் தஞ்சை நாயக்க மன்னரான இரகுநாத நாயக்கர் சங்கீத சுதா, பாரதசுதா ஆகிய இசை நூல்களை சமற்கிருதத்தில் எழுதினார், இவற்றில் புதிய முறை தாளம், இராகம் ஆகியவை பற்றி விளக்கப் பட்டுள்ளன. இம்மன்னர் நன்சரிதம், வால்மீகீசரிதை பாரிஜாதா பஹரணம், கஜேந்திர மோட்சம் முதலிய சமய நூல்களையும் எழுதி யுள்ளார். அச்சுதராயப்புதயம், இரகுநாதப்புதயம் ஆகிய நூல்கள் முறையே அச்சுதராய நாயக்கர், இரகுநாத நாயக்கர் ஆகியோரது வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல்களாகும், மேலும் பற்பல சமற்கிருத நூல்களும் இக்காலத்தில் எழுதப்பட்டன. தெலுங்கு இலக்கியங்கள் இதுவரை, தமிழ், சமற்கிருத இலக்கியங்களைக் கண்டோம். தெலுங்கர் களாகிய விசயநகர, நாயக்க மன்னர்கள் காலத்தில் எழுந்த தெலுங்கு மொழி இலக்கியங்களைப் பற்றிக் காண்போம். யட்சகானம் என்பது இக்காலத் தெலுங்கு, கன்னட மொழிகளில் தோன்றிய ஒரு வித புதுவகை இலக்கிய மரபாகும். இவ் விலக்கிய வகையில் செய்யுளும் உரை நடையும் விரவி வரும், பெரும்பாலும் நாடகங்கள் இம்மரபில் எழுதப்பட்டன. இந்த நாடகமேடை இலக்கிய மரபு தஞ்சை நாயக்கரின் அரசவையில் பிரபலமடைந்தது. யட்ச கானம், குறவஞ்சி ஆகியவற்றில் பாட்டும், உரைநடையும், கூத்தும் கலந்து நாடக மேடையில் ஒலிக்கும். இரகுநாத நாயக்கர் பாரிஜாதாபஹரணம் என்ற தெலுங்கு நாடகத்தை எழுதினார். மேலும் இவர் வால்மீகி சரிதம், இராமாயண யட்சகானம், ருக்மணி பரிண யட்சகானம், ஆகிய நூல்களையும் தெலுங்கில் எழுதினார். சாரங்கதாரா சரிதம். விசய விலாசம் ஆகிய நூல்களைச் செம்மசூரி வேங்கட கவி என்பவர் எழுதினார். அறிஞர் இக்காலத்தில் வாழ்ந்த சில அறிஞர்களைக் காட்டுவோம். திருக்கோயிலூரை அடுத்த சனியூரில் பிறந்த வில்லிபுத்தூர் ஆழ்வார் என்ற வைணவ பிராமணர் பாரதத்தைத் தமிழில் எழுதினார். இவரை ஆதரித்தவர் கொங்கர் குலபதியாம் வரபதி ஆட்கொண்டான் ஆவார். சைவரான அருணகிரி நாதருக்கும் வைணவரான வில்லிபுத்தூராருக் கும் சொற்போர் நடந்தது. இவர்கள் இரண்டாம் தேவராயர் (கி.பி. ' 1422 - 47) காலத்தவராவர். கவி காளமேகம் நகைச்சுவையோடு இரட்டுற மொழிதலில் தலை சிறந்தவர். சாளுல் - திருமலைராயன் (கி.பி. 1447 - 57 சபையை அலங்கரித்தவர். இவர் காலத்தில் வாழ்ந்த புலவர் திருவம் பலமுடையார் என்பவராவார். இவர் ஓங்கு கோயில் புராணம் என்ற நூலை எழுதியுள்ளார். கிருட்டிண தேவராயர் காலத்தில் வாழ்ந்த புராண திருமலை நாதர், ஞானப்பிரகாசர் முதலிய தமிழ் அறிஞர்கள் குறிப்பிடத்தக்க வராவர். நல்லூர் வீரகவி என்பவர், 1225 பாடல்களைக் கொண்ட அரிச்சந்திர புராணம் எழுதியுள்ளார். தமிழில் பாகவதத்தை எழுதியவர் அருளாளதாசர் என்பவ ராவார். இவர் மேலும் பல நூல்களையும் தமிழில் எழுதியுள்ளார். விசயநகர மன்னர்களான அச்சுதராயர், சதாசிவராயர் ஆகியோர் காலத்தில் வாழ்ந்த மறைஞான சம்பந்தர் சிவனியத் தத்துவங்களான பதி, பசு, பாசம் முதலியன பற்றி எழுதியுள்ளார். ஏ) கலைகள் 1) கட்டடக்கலை விசயநகர காலக் கட்டடக் கலைத்தன்மைகள் சோழர், பாண்டியர் கட்டடக் கலையின் தன்மைகளை உள்ளடக்கி ஒப்பனை யில் மேலும் மெருகூட்டப்பட்டது. ஒப்பனை உறுப்புகள் அதிகரிக் கப்பட்டன. ஒவ்வொரு வகை உறுப்பிலும் அழகு மிளிர்ந்தது. மண்டபம் மண்டபங்கள் காலம் என்று இக்காலம் புகழப்பட்டது, பாண்டியர் காலத்தில் தொடங்கப்பட்ட மண்டபங்கள் விசயநகர காலத்தில் கலியாண மண்டபம், ஆயிரங்கால் மண்டபம் முதலியன வாக வளர்ச்சி பெற்றன. இவை உயரமான மேடைகளின் மேல் அமைக்கப்பட்டன. தூண்கள் தூண்கள் பருமனாகவும், கோயிலின் முகாமைக் காட்சிப் பொருளாகவும் அமைக்கப்பட்டன. போதிகை மலர்ப் போதிகை யானது. மலர்முனை தூணின் பாதிவரைத் தவழ்ந்து நின்றது. தூண்களில் குதிரை வீரர்கள், யாளிகள் போன்ற சிற்ப உருவங்கள் இணைக்கப்பட்டன. திருமண மண்டபத் தூண்கள் மிக உயரமான மேடைகளின் மேல் நிறுத்தப்பட்டன. அம்மன் கோயில் விசயநகர மன்னர் காலத்துக் கோயில்களில் பொதுவாக அம்மனுக்கென்று கோயில் வடமேற்கு மூலையில் அமைக்கப் பட்டது. அம்மன் மூலவராயுள்ள இறைவனின் மனைவியாக இருப்பார். இந்த வழக்கம் சோழர்காலத்திலேயே நடைமுறைக்கு வந்துவிட்டது. ஆயினும், விசயநகரக் கோயில்களில் இது சிறப்பாக அமைக்கப்பட்டது. கருவறையைச் சுற்றிலும், குடும்பக்கடவுள் (பரிவாரக் கடவுளர்), அவதாரங்கள் ஆகியவற்றிற்கும் கோயில்கள் அமைக்கப்பட்டன. ஆயிரங்கால் மண்டபத்தூண் தூண் வகையில் இது குறிப்பிடத்தக்க அமைப்புகளை உடையதாக உள்ளது. மண்டபத்தில் சரியாக ஆயிரம் தூண்கள் இருக்காது. இதன் தூண்கள் பலதிறப்பட்ட சிக்கலான முறையில் செதுக்கப்பட்டிருக்கும். இதன் நடுப்பகுதியில் சுற்றிலும் பல்வேறு சிற்ப உருவங்கள் அமைந்திருக்கும். தாவிக் குதிக்கும் குதிரை அல்லது சீறி நிற்கும் குதிரையின் உடலையும் கொடிய கற்பனை விலங்குகளின் உடல்களையும் இணைத்தும், தனித்தும் அமைக்கப் பட்ட உருவங்கள், இத்தூணில் காணப்படும். தூணும், அதனோடு இணைந்த இத்தகைய உருவங்களும் ஒரே கல்லினால் செதுக்கப் பட்டிருக்கும். சில தூண்களைச் சுற்றிலும் விலங்குகளுக்குப் பதிலாகச் சிறு சிறு கம்பங்களும் அமைக்கப்பட்டிருக்கும். இச்சிறு கம்பங்களும் ஒரே கல்லினால் ஆனவை ஆகும். ஆனால் ஒவ்வொன்றையும் தட்டினால் வெவ்வேறு ஓசை வரும். இந்த ஓசைகள் கருநாடக இசையிலுள்ள ஏழு சுரங்களாக ஒலிக்கும். தூணின் மேற்பகுதியி லுள்ள போதிகைதான் இந்தத் தூணின் சிறப்பான சோடனையுள்ள பகுதி ஆகும். இதன் மேல் குவிந்து தொங்கும் பாகம் மிகவும் சிறப் பானது. பின்னர் அது தனித்துத் தொங்குகின்ற தாமரை மொட்டின் வடிவத்தில் அமைந்துள்ளது. பரப்பு அதிகம் இத்தகைய மண்டபங்களையுடைய கோயில்கள் தென் நாடு முழுவதும் உள்ளன. இக்காலக் கோயில்கள் பரப்பளவில் பெரியதாய் உள்ளன. ஏற்கனவே கட்டப்பட்ட கோயில்களுக்குத் துணையாகப் பல பாகங்களை அமைத்துக் கோயிலின் பரப்பை இக் காலத்தில் அதிகப்படுத்தி உள்ளனர். கோயில் வளாகமும் பெரிய தாயிருக்கும். இதில் அம்மன் கோயிலும் பரிவாரக் கடவுளின் கோயில் களும் அமைந்திருக்கும், கலியாண மண்டபமும், ஆயிரங்கால் மண்டபமும் அமைந்திருக்கும். குளமும் அமைந்திருக்கும். கோபுரம் பாண்டியரைப் பின்பற்றி விசயநகர மன்னர்களும், விண் ணுயர்ந்த கோபுரங்களை முகாமை வாயில்களில் எழுப்பினார்கள். இக்கோபுரங்கள் சிற்ப, படிமக் கலைகளையும் கொண்டுள்ளன, ஒரே கோயிலில் ஒன்றுக்கு மேற்பட்ட வாயிற் கோபுரங்களுண்டு. விசய நகர காலத்தைக் கட்டடக் கலைஞர்கள் 'கோபுரம் காலம்' என்றும் கோபுரங்களை இராயர் கோபுரங்கள் (அரசர் கோபுரங்கள்) என்றும் வருணிப்பர். பிரகாரங்கள் ஒரு பெரிய கோயிலுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பிரகாரம் அல்லது சுற்றுப்பாதைகள் அல்லது வலம் வரும் பாதைகளும் இருக்கும், ஒன்றுக்குள் ஒன்றாக உடாள் இவற்றை உட்பிரகாரங்கள் வெளிப்பிரகாரங்கள் என்றும் பிரித்துக் கூறுவர். இவற்றின் ஊடேதான் துணைக் கோயில்களும் அமைந்திருக்கும். இனி, விசய நகர காலத்து முக்கிய கோயில்கள் சிலவற்றைப் பற்றிக் தனித்தனியே அறிவோம். கோயில்கள் என்றாலே சமயம் சார்ந்த கட்டடங்கள் என்பது புலப்படும். விசயநகரக் கோயில்கள் குறிப்பாக அரசருக்கும், அரச குடும்பத்தினரின் வழிபாட்டிற் கெனவே கட்டப்பட்டவை ஆகும். இதனால்தான் பெரும் நகரங் களில் அவை அமைந்திருக்கின்றன. விட்டலேசுவர் கோயில் - அம்பி தலைநகர் அம்பியில் கி.பி. 1531-ல் கிருட்டிண தேவராயர் காலத்தில் தொடங்கப்பட்டு அச்சுதராயர் காலத்தில் முடிக்கப் பெற்ற சோடனையிலும், ஒப்பனையிலும் சிறந்த மிகப்பெரிய கோயில் விட்டலர் கோயிலாகும். இது 500 அடி நீளமும், 310 அடி அகலமும் உள்ளது. மூன்று திசையிலும் மதிவின்மேல் கோபுர வாயில்கள் உள்ளன. இதனுள் மூலக் கருவறையைத் தவிர வேறு ஐந்து கட்ட டங்கள் உள்ளன. திருச்சுற்று மாளிகையிலும், கட்டடங்களும், அழகிய தூண்களும் அமைந்துள்ளன. நடுவில் 230 அடி பக்கமுள்ள சதுரமான கட்டடம் உள்ளது. அதில்தான் முலவரானவிட்டலவரின் கருவறை உள்ளது. பெருமண்ட பம், இடைநாழிகை, கருவறை ஆகிய மூன்றும் ஒன்றாக இணைந் துள்ளன. இதனையடுத்து 2 அடி பக்கமுள்ள கலியாண மண்டபம் உள்ளது. மகாமண்டபத்தின் வாயிலை நோக்கி ஒரு கல்தேர் நிற்கிறது. அடியில் இருந்து முதல் மாடி முடியும் வரை ஒரே கல்லால் ஆன இத் தேர் சக்கரங்களின்மேல் நிற்கிறது. இங்குக் காணப்படும் ஆயிரங்கால் மண்டபம் விசய தகரப் பாணிக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். அரைத்தூண் (கும்ப பஞ்சரம்) மலர்ப் போதிகையுடைய தூண் ஆகியனவ விசயநகரப் பாணரிக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாய் உள்ளன. ஆசார இராமசாமி கோயில் விட்டலர் கோயிலுக்கு அடுத்துக் குறிப்பிடத்தக்க சிறப்புமிக்க கோயில் இதுவாகும். இதனை இரண்டாம் விருப்பாட்சர் காலத்தில் கட்டினார்கள். இதனுள் அம்மனுக்கென்றுத் தனிக்கோயிலும் உள்ளது. கல்யாண மண்டபமும், வேறு சில கோயில்களும் உள் ளன. இவை யாவும் 24 அடி உயரமுள்ள மதிலுக்குள் கட்டப்பெற் றுள்ளன. விமானத்தில் முதல்மாடி கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. விசயநகர ஆட்சிமுறையும் பண்பாடும் அதற்கு மேல் உள்ள பகுதி விட்டலர் கோயில் போன்ற செங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. ஆந்திரப்பகுதியில் தாத்பத்திரியில் இராமலிங்கேசுவரர் கோயில், வெங்கடரமணர் கோயில் ஆகியவற்றையும் விசயநகரக் கட்டடப் பாணிக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம். லேபாக்சியில் ஒரே வரிசையில் மூன்று கோயில்களும், அவற்றிற்குப் பொதுவாக ஒரே மண்டபமும் காணப்படுகின்றன. இங்குதான் விசயநகர ஓவியங்கள் காணப்படுகின்றன. தமிழகத்தில் வைணவத்திற்கு ஒரு புது மெருகு ஏற்பட்டது. விசயநகர ஆட்சிக் காலத்தில்தான். இதிகாசங்கள் மக்களின் அன்றாட வாழ்க்கைப் பண்பாடுகளாயின. பழைய கோயில்களிலும், கல்யாண மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், கோபுரம், பிரகாரம் முதலியன கட்டப்பட்டுக் கோயிலின் பரப்பு பெரிதாக்கப்பட்டது. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகக் காஞ்சி, சிதம்பரம், வேலூர், திருவரங்கம், கும்பகோணம், விரிஞ்சிபுரம் முதலிய ஊர்களிலுள்ள கோயில்களைக் கூறலாம். சமணக்கோயில் விசயநகர மன்னர் காலத்தில் சமணக்கோயில்களும் கட்டப் பெற்றன. அவற்றுள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. காஞ்சி திருப்பருத் திக்குன்றத்திலுள்ள இரு சமணக் கோயில்களாகும். இவற்றில் ஒன்று வர்த்தமானர் கோயில் ஆகும், தீர்த்தங்கரர் சிற்பங்கள் வண்ண ஓவியங்கள் ஆகியவை இக்கோயிலை அலங்கரிக்கின்றன. வட்ட மான கருவறையை உடைய இக்கோயிலில் பல கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. சமயச் சார்பற்ற கட்டடங்கள் இது வரை விசயநகர மன்னர் காலத்தில் கட்டப்பெற்ற சமயக் கட்ட டங்கள் அல்லது கோயில்களைக் கண்டோம். இவர்கள் காலத்தில் அரண்மனைகள், கோட்டைகள் ஆகியவையும் புது மாதிரி யான கட்டடப் பாணியில் கட்டப்பட்டன. இவற்றையே சமயச் சார்பற்றக் கட்டடங்கள் என்கிறோம். விசயநகரக் கோட்டை இன்று முழுவதும் அழிந்து காணப்பெறும் விசயநகரக் கோட்டை அம்பியில் உள்ளது. கி.பி. 1565-ல் ஏற்பட்ட தலைக் கோட்டைப் போரில் அழிக்கப்பட்ட இக்கோட்டையின் அடித் தளங்கள் மட்டும் எஞ்சி நிற்கின்றன. அடிமேடை, பொதுமக்கள் காட்சி மண்டபம் ஆகியவை அழிந்த நிலையில் காணப்படுகின்றன, இந்த அரியணை மேடை (வாகை மேடைகி.பி.1513 -ல் கிருட்டிண தேவராயர் ஒரிசாவை வெற்றி கொண்டதின் நினைவாகக் கட்டப் பெற்றது. எனவேதான் இதனை வாகைமேடை என்பர். அரியணை மேடையும், காட்சி மேடையும் பல மாடிகளைக் கொண்டிருந்தன வென்பதைச் சான்றுகளால் அறிகிறோம். இவற்றின் தனங்கள் பிரமிடு வடிவிலான கூரைகளைக் கொண்டிருந்தன. இவற்றில் தூண்கள் அடியில் சதுரமாகவும், நடுவில் உருளை வடிவிலும் செதுக்கப்பட்டுச் சோடனைகளுடன் காணப்படுகின்றன. அரியணை மேடை 122 அடி பக்கமுள்ள சதுரவடிவிலானது: மூன்று தளங்களை யுடையது. இந்தக் கட்டடங்களை மொகலாயரின் திவானியம் என்னும் பொது மக்கள் காட்சி மண்டபத்திற்கு ஒப்பிடலாம். அயல் நாட்டார் குறிப்புகளின்படி அரண்மனைக்குள் உவளகம், வரவேற்பு அறை, படுக்கையறை, நீராடுமிடம், விருந்தினர் மாளிகை, சமையல் கூடம் முதலிய பகுதிகளும் இருந்தன. நந்தவனமும், மதிற்சுவர்களும், ஆழமான அகழிகளும் வாயில்களும் இருந்தன. அரண்மனையைப் போன்ற பெரிய மாளிகைகளில் உயர் அதிகாரிகளும், செல்வந்தர்களும் வாழ்ந்தனர். விசயநகரத் கட்டடக் கலையின் தன்மை விசயநகர மன்னர் காலக் கட்டடக் கலை இந்து - இசுலாமியப் பாணிகளின் பரிமாற்றத்தைக் காட்டுகிறது. இசுலாமியரின் மசூதிகள் இந்துக் கட்டடக் கலையின் பாணியில் கட்டப்பட்டன. இசுலாமி யரின் கட்டடக் கலையின் கூறுபாடான அரை வட்ட அமைப்பு இந்துக் கட்டடக்கலையில் புகுத்தப்பட்டது. இந்துப் பாணியில் மசூதிகளும், நினைவாலயங்களும் அமைக்கப்பட்டன. தாமரை மண்டபம் இந்து இசுலாமிய பாணியில் உருவாக்கப்பட்டது. சந்திரகிரி அரண்மனை இத்தகைய இந்து - இசுலாமியக் கட்டடப் பாணிக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகவுள்ளது. 2) ஓவியக்கலை சுவரை வைத்துத்தான் சித்திரம் எழுத வேண்டும் என்பது பழமொழி, விசயநகர காலத்திலெழுந்த அரண்மனை, கோட்டைக் கொத்தளங்கள் அழிந்துவிட்டன. ஆயினும், சமயக் கட்டடங்களான கோயில்களில் பெரும்பாலானவை அழியாமல் உள்ளன, அசோகன் 84, 000 முளிகளைத் தோற்றுவித்ததைப் போலவே, விசயநகர மன்னர்கள் இராயர் கோபுரங்க ளேயன்றி மண்டபங்களையும் தோற்றுவித்தனர். இவர்கள் தோற்றுவித்த மண்டபங்கள்தான் ஓவியக் கலையின் தளமாயின. லேபாக்சியிலுள்ள வீரபத்திரசாமி கோயில் மண்டபம். அம்பியில் உள்ள விட்டல் சாமி கோயில் மண்டபம், காஞ்சியிலுள்ள வரதராசர் கோயில் மண்டபம், வேலூரிலுள்ள சலகண்டேசுவரர் கோயில் மண்டபம், திருவரங்கத்திலுள்ள அரங்கநாதர் கோயில் மண்டபம் முதலிய விசயநகர கால் மண்டபங்களுள் சிறப்பானவை சித்திரிக்கின்றன. இவற்றில் விசயநகர ஆட்சியை அமைக்க முல காரணமாயிருந்த வித்தியாரணியர் என்பவரைப் பல்லக்கில் அமர்த்தி ஊர்வலமாக எடுத்துச் செல்லும் காட்சி சிறப்பாக உள்ளது. ஊர்வலத் தில் குதிரைகள், யானைகள், முரசுகள் மற்றும் விதவிதமான ஆடைகள் அணிந்து செல்லும் மாந்தர் ஆகியோரின் காட்சிகள் காணப்படுகின்றன. அர்ச்சுனன் வில் வளைத்தல் இக்கோயிலிலுள்ள மற்றொரு ஒவியக்காட்சி அர்ச்சுனன் வில்லை வளைக்கும் காட்சி ஆகும். கீழே உள்ள நீரைப் பார்த்தவாறு அதில் மேலே பறக்கும் ஓர் உருவத்தைக் கண்டு அம்பு எய்தி அருச்சுனன் வெற்றிகண்டபின் துரோபதையை மணக்கும் காட்சி அழகாகத் தீட்டப்பெற்றுள்ளது. இராமர் - சீதை திருமணக்காட்சி இராமருக்கும், சீதைக்கும் நடக்கும் திருமணக் காட்சியில் சனக மகாராசனும் அரண்மனைப் பெண்களும் காட்சியளிக்கின்றனர். இவ்விரு ஓவியங்களும் வண்ண ஓவியங்களாகத் தீட்டப் பெற் றுள்ளன. அனந்தப்பூர் - லேபாக்சிக்கோயில் சிற்பங்கள் அனந்தப்பூர் மாவட்டம் வேபாக்சி என்னுமிடத்தில் பாப் நாசேசுவரர் கோயில் உள்ளது. இதனைக் கட்டியவர்கள் விசய நகர ஆட்சிக்கு உட்பட்ட குறுநில மன்னர்களான விருப்பண்ண நாயக்கன், வீரண்ண நாயக்கன் ஆகியோர் ஆவார். இவர்கள் இரு விசயநகர ஆட்சிமுறையும் பண்பாடும் வரும் உடன்பிறந்தவர்கள். இவர்களைப் பற்றிய இரு கல்வெட் டுகள் இக்கோயிலில் உள்ளன. சிவன், விஷ்ணு, வீரபத்திரன் ஆகிய மூவரின் கருவறைகளைக் கொண்ட இக்கோயிலின் பொதுமண்டபத் தில் வீரபத்திரர் உருவமும், இரு மருங்கிலும் இந்த இரு சகோதரர்களின் உருவங்களும் ஓவியங்களாகத் தீட்டப்பெற்றுள்ளன. உட்புறமுள்ள கோபுரமண்டபத்தில் பல ஓவியங்கள் தீட்டப்பெற்றுள்ளன- நடனமாடு வோர், இசைக் கருவிகளை இசைப்போர், இசைபாடும் தேவர்கள் ஆகிய காட்சிகளும் சிவனாரின் முன் பிரமன் மத்தளம் வாசிப்பதும், அரம்பை நடனமாடுவதும், தேவன் இசையைக் கண்காணிப்பது மான காட்சிகளும் அழகாகத் தீட்டப்பட்டுள்ளன. தும்புரு வீணை மீட்டுவதும், நந்தி உடுக்கை அடிப்பதும் இனிதாக உள்ளன. மேலும், நடன மண்டபத்தில் இராமாயணம், மகாபாரதம், புராணங்கள் முதலியவற்றில் இருந்து சில காட்சிகளும் சிறப்பாக அமைந்துள்ளன. இராமரின் முடிசூட்டு விழா, அருச்சுனன் வில் வளைத்தல் ஆகியவையும், பார்வதி திருமணம், தட்சிணாமூர்த்தி ஆகிய காட்சிகளும் உள்ளன, கண்ணன் குழந்தை வடிவில் ஆவிலை மேல் படுத்துக்கொண்டு இரு கைகளையும் மடக்கி வலது காலைப் பிடித்துப் பெருவிரலைத் தன் வாயில் வைத்துச் சப்பும் காட்சி இனிமையாக உள்ளது. - மனுநீதிச் சோழன் பசுக்கன்றைத் தன் தேர்க்காலில் இடறிக் கொன்ற ஒரே மகனைத் தன் தேர்க்காலில் கொன்று பசுவுக்கு நீதி வழங்கிய காட்சி மிக உருக்கமானதாயுள்ளது. இதே போன்ற காட்சி திருவாரூர்க் கோயிலிலும் உள்ளது. லேபாக்சிக் கோயிலிலுள்ள மற்றுமொரு காட்சி சிவபெருமான் சந்தசேனன் என்னும் பக்தனுக்கு மழுப்படையை (கோடரி) அளிக்கும் காட்சி. இது சிறப்பானதாகும், அடுத்து சிவனாரின் பிச்சாடனமூர்த்தி காட்சி ஆகும். அரியரன் உருவம், கலியாண சுந்தரர் உருவம், திரிபுரம் எரித்த காட்சி, கங்காதர மூர்த்தி, நந்திவாகனர் காட்சி முதலிய சிவனாரின் பல்வேறு உருவங்கள் ஓவியக் காட்சிகளாய் உள்ளன. இக்கோயிலிலுள்ள ஓவியக் காட்சிகளை 1912-13-ல் ஏ. எம். லாங்கர்ச்ட் என்பவர் கண்டுபிடித்தாகக் கூறுவர். இதைப் போலவே சோமபாளையம் திருமால் கோயிலில் இராமாயணக் காட்சிகள் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. ஆன கொத்தி, மூது பத்திரி முதலிய இடங்களிலும் விசயநகரகால ஓவியங்கள் காணப்படுகின்றன. காஞ்சி வரதராசப் பெருமாள் கோயில் ஓவியங்கள் இக்கோயிலில் உள்ள ஓவியங்கள் முழுவதும் விசயநகர மன்னர் காலத்தில் தீட்டப்பட்டன. ஆனால், இன்று சிறிதளவே எஞ்சி நிற்கின்றன. ஆண்டாள் ஊஞ்சல் மண்டபத்தில் பெண்களின் ஆடைகளைத் கவர்ந்து நிற்கும் கிருட்டிணனுடைய லீலைகள், காளியமர்த்தனன் காட்சி, இராதா ருக்குமணியுடன் உள்ள காட்சி, வித்தியாதரர்கள் பல்லக்கில் செல்லும் காட்சி, இரதி மன்மதன் காட்சி, பெண்களின் அணிவரிசைகள், யானைகளின் அணிவரிசைகள், கருடாழ்வார்கள், தேவர்கள் காட்சிகள் முதலிய அணிவரிசைகள் உள்ளன. இங்குப் பயன்படுத்தப்பட்டுள்ள வண்ணங்களில் பச்சை மஞ்சள், சிவப்பு, கருப்பு, ஆகியவை தவிர மற்ற வண்ணங்கள் மறைந்து விட்டிருக்கின்றன. வலம் வரும் பாதைச் சுவரில் வரதராசப்பெருமாள், கருட வாகனத்திலமர்ந்து பூசைப்பொருட்களுடன் காட்சியளிக்கிறார். அரசன் குதிரை மீது அமர்ந்து அருள் வேண்டித் தொழும் காட்சியும், மற்றவர் கீழே நின்று தொழும் காட்சியும் உள்ளன. இவற்றை யடுத்து, திருமால், திருமகள், பூமாதேவி, நீலாதேவி ஆகியோருடன் காட்சியளிக்கிறார். இந்த ஓவியக் காட்சி கி.பி. 17ஆம் நூற்றாண்டில் தீட்டப்பட்டிருக்க வேண்டுமென இ. சிவராமமூர்த்தி கருதுகிறார். செங்கை மாவட்டம் உத்திரமேரூர் சுந்தரவரதப்பெருமாள் கோயிலில் காணப்பெறும் கல்கி அவதார ஓவியம் விசய நகர காலத் தது என்றும் அது கிருட்டிண தேவராயரால் தீட்டப் பெற்றது என்றும் கூறுவர். தன்மைகள் விசயநகரர் காலத்து ஓவியங்கள் செடி, கொடிகள், விலங்கி னங்கள் மாந்தர்கள், இதிகாச, புராணப் பாத்திரங்கள் ஆகிய எதுவாயி னும், ஒவ்வொன்றின் இயல்புத்தன்மை மாறாதவாறு தீட்டப் பட்டுள்ளன. ஒரு மனித உருவத்தைக் கண்டவுடன் இவன் அரசன், இவன் சேவகன் முதலியனவாகப் பிரித்து உணரவும், இவன் இராமர், சிவன், திருமால் என்று உணரவும் அவற்றின் வேறுபாடுகளை உடற்கூறுகளாலும், ஆடை, அணிகலன்களாலும், காட்டி நிற்குமாறு உள்ளன. உணர்ச்சிகளின் வெளிப்பாடுகள் விளங்குமாறு தீட்டுவ தும், ஏற்றவாறு அசைவுகளை அமைத்தலும் இந்த ஓவியங்களில் காணப்பெறும் முகாமைத் தன்மைகள் ஆகும். நீண்ட முக்கு மான்கள், பல்வேறு வகையாக வாரி முடியப்பட்ட கூந்தல்கள், கொண்டைகள். மார்புக் கச்சைகள், வண்ண ஆடைகள், உறுப்புக் கேற்ற அணிகலன்கள் ஆகியவை அக்காலப் பெண்களின் உடலழகு, அணி, ஆடை முதலிய வற்றை அறிய உதவுகின்றன. விசய நகர அரண்மனை யிலும், அந்தப்புரத்திலும், ஓவியங் கள் உள்ளன. அவற்றில் போர்த்துக்கீசியரின் உருவங் களும் தீட்டப்பட்டுள்ளதை அவற்றின் உடை, பாவனைகளால் அறியவும், தலைப்பாகைக ளால் குறுநில மன்னர்கள், உயர் அதிகாரிகள், செல்வர்கள் முதலியோரை வேறுபடுத்திக் காணவும் முடிகிறது. இக்கால ஓவியங்களிலும், சிற்பங்களிலும் தலையில் அணி யும் தொப்பியில் இசுலாமியப் பண்பு கலந்துள்ளதைக் காண லாம். மரக்காவைக் கவிழ்த்து வைத்தாற் போன்ற தொப்பிகள் இசுலாமிய தொப்பிகளைப் பிரதி பலிக்கின்றன. ஆடைகளும் இசுலாமிய ஆண்கள் அணியும் பைஜாமாவைப் போலவும், சுருள் பாவாடை போலவும் இருக்கும். சேலை கட்டி ரவிக்கை போடும் பழக்கத்திற்குப் பதிலாக சுருள் பாவாடை கட்டி முழுக்கை (கமிசு) சட்டை போடும் பழக்க மான இசுலாமிய ஆடைப் பாணி யும் கலந்துள்ளது. கழுத்தில் ஒளிப்படம் 3 - திருவரங்கம் போடும் காசிமாலை மூன்றாம் அரங்கநாதர் கோயில் மண்டபத்தூண் பிறை வடிவிலான வில்லை ! சிற்பங்கள் (குதிரைக்காரி) களைக் கோர்த்துக் கட்டப்பட் டுள்ளது. தலைமயிரில் மூன்றாம்பிறை வில்லை அணிவதும், பெண்கள் முக்காடிட்டுக் காணப்படுவதும், இசுலாமியப் பண்பாட்டின் பண்பாட்டுப் பரிவர்த்தனை யே ஆகும். 3. சிற்பக் கலை தன்மைகள் கட்டடக்கலையும், சிற்பக்கலையும் பாண்டியர் காலத்தில் இருந்து புதுவகையாக வளரத்தொடங்கின. சிற்பங்கள் திருச்சுற்று மாளிகைகள், தூண்கள், கோபுரங்கள் முதலிய எல்லா இடங்களிலும் ஒருங்கிணைந்த அழகுடன் வளரத் தொடங்கின. தூண் தலைப்பு களிலும், கிரேக்கத்தூண் தலைப்புகளிலுள்ளதைப் போன்ற தோரிக் எனப்படும் உருவமைப்பு (சிற்பம்) வளரத் தொடங்கியது. அதாவது தூண் தலைப்பில் மலர் வடிவிலான உருவமும் சுருள் வடிவிலான முனையும் ஏற்பட்டன. பாண்டியர் தூணில் காணப்படும் பலகை மிகப்பெரிய அளவினதாக இருந்தது. இதுவே, விசயநகரர் காலத்தில் சிறப்பாக வளர்ந்தது. தென்னகக் கட்டடக் கலையின் வளர்ச்சியைப் போதிகையால் தெளிவாகக் காணலாமென ஜோவன் துப்ராய்ல் கூறுவதை நோக்கினால் புரியும். விசயநகரர் காலத்தில் பல்வேறு வகையான தூண்களையே சிற்பங்களாகக் கூறலாம். மிகப் பெரிய தூண்களின் நடுவில் காணப் படும் குதிரைவீரன் சிற்பங்கள், யாளி உருவங்கள், யானை வீரன் சிற்பங்கள் அவற்றின் தலைப்பில் காணப்பெறும் பூ முனைகள் முதலியன மிகச் சிறந்த சிற்பங்களாகும். கோபுரம் தாங்கிகள் பல்லவர் காலத்தில் கோபுர முனைகளில் சித்திரக்குள்ளர்கள் உருவங்கள் இருந்தன. விசயநகரர் காலத்தில் கோபுரங்களைத் தாங்கி நிற்பவர்களைப் போல் படைக்கப்பட்டனர். மண்டபக் கூரைகளைத் தாங்கி நிற்பது போலவும் அமைக்கப்பட்டனர். போதிகைகளில் பூ முனைகளைப் பிடித்துக்கொண்டு இடக்கையாலும், தலையாலும் கூரைகளைத் தாங்கிக்கொண்டு நிற்பது போல அமைக்கப்பட்டனர். இத்தகைய பாதங்களைச் சுமப்பவர்கள் அடிமைகள். ஆகவே, அடிமைமுறை தென்னகத்திலிருந்தது என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு ஆகும் என்பர். வீரப் பண்பு ஐரோப்பாவில் இசுலாத்தை எதிர்த்துச் சிலுவைப்போர் நடந்தன. இவற்றின் விளைவாக ஐரோப்பியரின் பண்பும், வீரமும் செழித்தன, இதைப் போலத்தான் விசயநகர இந்து மன்னர்கள் இசுலாத்தை எதிர்த்து இந்துப் பண்பாட்டை நிலை நாட்டினர். அதற்காக வீரத்தையும், விவேகத்தையும், தியாகத்தையும், உணர்த்தவே அவர்களின் கட்டடக்கலையில் போர்வீரர்கள், குதிரை வீரர்கள், யானை, யாளி, அரிமா போன்ற உருவங்களைச் சிற்பமாக வடித்தனர் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுவர். விசய நகரச் சிற்பக்கலையின் இறுதி அத்தியாயம் மதுரைக் கலையாக (பாண்டியக்கலை) மாறியது என்பர். சிற்பக்கலை நாயக்கர் காலத்தில் விசய நகரச் சிற்பக்கலையைப் பின்பற்றியே வளர்ந்ததை அறிந்தால் இது நன்கு விளங்கும். தூண்களிலுள்ள மிகப்பெரிய யாளிகளின் வயிற்றின் கீழ் வினோதமான விலங்குகளின் சிற்பங்கள் உள்ளமையும், தூண்களில் மிகப்பெரிய அளவில் புரவலர்களின் உருவங்கள் அமைந்திருப்பதையும், தேவ தேவதைகளின் உரு வங்கள் மிகப்பெரிய அளவில் பொன்னால் ஆனவை போல் கல்லில் நயமாகக் காணப்படுவதையும், விசயநகரச் சிற்பக்கலையின் சிறப்புத் தன்மைகளாகக் கூறலாம். உருவச்சிலைகள் சோழர்காலத்தில் தொடங்கிய வெண்கலச் சிலைகள் விசய நகரக் காலத்திலும் சிறப்புற்று நின்றன. தெய்வத் திருவுருவங் களேயன்றி மற்ற உருவங்களும், கல்லிலும், உலோகத் திலும் வடிக்கப்பட்டன. புகழ்பெற்ற கிருட்டிணதேவராயர் சிலையும், அவருடைய இரு மனைவியரான அங்கவை, சங்கவை ஆகியோரின் உலோக உருவச் சிலைகளும் இன்றும் திருப்பதி கோயிலில் உள்ளதைக் காணலாம். இதைப் போலவே, திருப்பதி கோயிலில் விசயநகர ஆட்சிமுறையும் பண்பாடும் பல்வேறு புரவலர்களின் உலோகச் சிலைகள் உள்ளன. சிதம்பரம் வடக்குக் கோபுரத்தைக் கிருட்டிணதேவராயர் கட்டினார். அவ ருடைய உருவச்சிலை இக் கோபுரவாயிலின் கீழுள்ள மாடக்குழியில் உள்ளது. இதுவும், திருப்பதியிலுள்ள வெண்கலச் சிலையும் ஒரே மாதிரியாக உள்ளன. விசய நகரச் சிற்பங்களில் சிறப்பு வாய்ந்தவை பாதி மனித உருவமும், பாதி விலங்கின் உருவமுள்ள சிற்பங்களே ஆகும் என் றும், ஆகவே, விசய நகர மன்னர்கள் விலங்காண்டிப் பண்பாட் டையே விரும்பினார்கள் என்றும் வின்சென்ட் சிமித் கூறுகிறார். நரசிம்ம மூர்த்திச் சிலையும், அனுமான் சிலையும் இம் மன்னர்களின் விருப்ப மான சிலைகள் என்றும் அவர் எடுத்துக்காட்டாகக் கூறுகிறார். தாத்பத்திரி கோயிலிலுள்ள யாளியின் மீது யக்ஷினி உருவமும், வேறுபல நுண்ணிய வேறுபாடுகளும் சிற்பச்சிறப்புக்கு எடுத்துக் காட்டுகளாகும். விரிஞ்சிபுரம் வழித்துணை நாதர் கோயிலிலுள்ள 5 அடி உயரமுள்ள யாளியின் பல் துணை உறுப்புகள் அழகு வாய்ந்தவை ஆகும். பல்வேறு ஒப்பனைகளைக் கொண்ட விசய நகரத் தூண்களைப் போல் சமகால ஈழ நாட்டிலும், பிற பாகங் களிலும் காணமுடியாது என்று வின்சென்ட் சிமித் வியந்துரைக்கிறார். உடையார் பாளையம் அரண்மனையில் இந்து, இசுலாமியப் பண்பாடுகளின் ஒருமைப்பாடு விளங்குமாறு உருவங்கள் அமைந்த துள்ளன. எனவே, அல்லாவும், இராமனும் ஒன்றே என்ற காந்திஜியின் கோட்பாட்டை கி. பி. 17ஆம் நூற்றாண்டிலேயே உடையார் பாளையத்தில் அமைத்துக் காட்டிவிட்டனர் என்பர். குதிரைக் கூடம் போர்க்களங்களில் பயன்படும் குதிரை, காடு மேடுகளில் விரைந்து செல்லவும் அயல் நாடுகளுக்குப் படையெடுத்துச் செல்ல வும் மிகவும் பயன்பட்டது. உயர்ரகக் குதிரைகள் அரபு நாடுகளில் இருந்து வாங்கப்பட்டன. இவற்றின் பயன்பாடுகளில் வீரத்தின் சின்ன மாகவும், குதிரைகளின் உருவங்களையும் அவற்றின் உயரம், பருமனளவிலேயே விசயநகர மன்னர்கள் சிற்பமாக வடித்தனர். இச்சிற்பங்களைக் கோயில் திருமண மண்டபங்களிலும், பிற கட்டடங்களின் தூண்களிலும் செதுக்கி உள்ளனர். இவற்றால் மன நிறைவு பெறாத விசய நகர மன்னர்கள் குதிரைகள் யாவற்றையும் ஓரிடத்தில் கட்டி, அவற்றின் சீற்றத்தையும், ஏற்றத்தையும் எடுத்துக் கூறுவதைப்போல் குதிரைக் கூடம் ஒன்றைத் திருவரங்கம் சேசகிரி மண்டபத்தில் ஏற்படுத்தியுள்ளனர். இம் மண்டபத்திலுள்ள தூண்களில் சினத்துடன் சீறும் குதிரைகளின் மீது போர் வீரர்கள் அமர்ந்து போரிடும் காட்சியில் குதிரைகளின் வளமும், எழிலும் எடுப்பாக உள்ளன. ஒவ்வொரு குதிரையும் ஏறக்குறைய ஒன்பது அடி உயரம் சீறியவாறு எழுந்து நிற்கின்றது. இவையாவும் கல்லால் ஆன சிலைகள்தான். ஆனால் அவற்றின் தோற்றமும், நயமும் எஃகினால் ஆனவை போல் காட்சியளிக்கின்றனவென்று வியக்கும் பெர்சி பிரவுன் இக்கூடத்தைக் குதிரைக் கூடம் என்று அழைக்கிறார். இத்தகைய மனதை மயக்கும் புதுமை வாய்ந்த நிலைகள் மற்ற சிற்பங்களைக் காட்டிலும் பண்புநயம் மிக்கவை என்றும் பெர்சி பிரவுன் கூறுகிறார். வேலூர் சலகண்ட ஈசுவரர் கோயில் கலியாணமண்டபத்தில் உள்ள தூண்களில் வரிசையாக நிற்கும் வீரர்களும், சீறி நிற்கும் குதிரைகளும் அழகானவை. குதிரைகள் பறக்கும் வேகத்தில் சீறி நிற்கின்றன. தனது பின்னங்கால்களை ஊன்றி முன்னங்கால்களை ஆளுயரத்திற்குத் தூக்கி நிற்பது பறப்பதைப் போலவே உள்ளது. அதன் வயிற்றுப் பகுதியில் சீறிப்பாயும் சிறுத்தைப் புலியும், அதன் வயிற்றுக்குள் தன் குறுவாளைச் செருகிக் கொல்ல முயலும் வீரனும், புலியின் வயிற்றுக்குக் கீழே மற்றொரு வீரனும், குனிந்து கவ்வும் புவியின் முதுகில் இருந்து. குதிரைக்குளம்பு வரையுள்ள இடை வெளியில் நடன தேவதையின் உருவமும் உள்ளது. குதிரையின் முதுகில் வாளேந்திய வீரன் அதனை அடக்கிப் பறக்க விடுவதைப் போல் கம்பீரத் தோற்றத்துடன் அமர்ந்துள்ளான். குதிரையின் மேல் அழகிய தொங்கும் சிற்றரங்கம் உள்ளது. அதற்கும் மேலும் சித்திரக் குள்ளன் மலர்ப்போதிகையின் பூ முனையை வலக் கையில் பிடித்துக் கொண்டு, போதிகையின் அடிப்பாதத்தைத் தன் இடக் கையையும், தலையையும் வைத்துத் தாங்கி நிற்கிறான். இதில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது குதிரைக் கடிவாளமாகும். இரும்பால் செய்யப்பட்டதைப்போல் காணப்படும் இக்கடிவாளத் தின் வளையங்கள் தனியே ஆட்டிப் பார்த்தாலும் ஆடுகின்றன. வாள்முனையும், சாட்டைமுனையும் பிறவும் நுண்ணிய வேலைப் பாடுடன் காணப்படுகின்றன. ஒரே கல்லில் இத்தனை நுண்ணிய வேலைப்பாடுகளுடன் இந்தச் சிற்ப அணி ஒய்சாளருக்குச் சவால் விடுகிறது. விசயநகர மன்னர்களின் காலச் சிற்பங்களில் மற்றொரு சிறப்புத் தன்மை நடுத்தூணைச் சுற்றிலும் அமைந்துள்ள வரிப் பள்ளங்கள், சோடனை உறுப்புகள், சிறு கம்பங்கள் ஆகியவை ஆகும். ஒவ்வொரு சிறுகம்பமும் இசையின் எழுவகை ஓசைகளைத் தருகின்றன. இஃது வேலூர் சலகண்ட ஈசவரர் கோயிலில் காணத் தக்கக் காட்சி ஆகும். நாயக்கர் காலச் சிற்பங்களை விசயநகரக் காலச் சிற்பங் களாகவே கூறுகிறோம். இந்த வகையில் தஞ்சை, செஞ்சி, சிருங்கேரி முதலிய இடங்களிலுள்ள நாயக்கர் காலச் சிற்பங்களை விசய நகர காலச் சிற்பங்களேயெனக் கூறுகின்றனர். மதுரை மீனாட்சி யம்மன் கோயில், இராமேசுவரம் இராமசாமி கோயில், திருநெல்வேலி விசயநகர ஆட்சிமுறையும் பாப்பாட்டும் நெல்லையப்பர் கோயில், கிருட்டிணாபுரம் பெருமாள் கோயில், பேரூர் சிவன் கோயில் முதலியவற்றிலுள்ள நாயக்கர் காலச் சிற்பங் களை விசயநகர காலப்பாணிச் சிற்பங்களே என்கிறோம், மதுரை ஆயிரங்கால் மண்டபத்திலுள்ள அரிச்சந்திரன், கண்ணப்பர், குறவன், குறத்தி, இரதி தேவி முதலிய சிற்பங்கள் சிறப்பானவை. ஆயிரங்கால் மண்டபத்திலுள்ள தாயும் சேயும் உள்ள இரட்டைச் சிற்பம் சந்திரமதியும், குழந்தை லோகிதாசனும் ஆவர் என்று சுகூறுகின்றனர். இச்சிலை பூரி ஜகந்நாதர் கோயிலிலுள்ள தாயும் சேயும் இணைந்து காணப்படும் சிற்பத்தைப் போல் சிறப்பாக இல்லை என்கிறார் வி. ஏ. சுமித்து. குறவன், குறத்திச் சிற்பம் இயற்கையாக அமைந்து உள்ளது என்றும் அவர் கூறுகிறார். குறத்தியைக் குறவன் கடுமையாகப் பார்க்கிறான். குறத்தி தனது நான்கு குழந்தைகளுடன் நிற்கிறாள். ஒரு குழந்தையை மார்போடு அணைத்துத் துணியால் கட்டியுள்ளாள். மற்றோரு குழந்தை அவள் கையைப் பற்றிக் கொண்டு கீழே நிற்கிறது. ஒரு குழந்தை அவள் முதுகிலும் ஒரு குழந்தை கையிலும் உள்ளன. இது போன்ற குறவன், குறத்தியர் சிற்பங்கள் கிருட்டிணாபுரம் பெருமாள் கோயிலிலும், பிற இடங்களி லும் காணப்படுகின்றன. சிற்பங்கள், கல், உலோகம் ஆகியவற்றாலும், களிமண், சுதை, மெழுகு ஆகியவற்றால் அச்சு செய்து பின்னர் உலோகத்தால் செய்தும் படைக்கப்பட்டன. தெய்வச் சிலைகளும், மனிதச் சிலை களும் இவ்வாறு செய்யப்பட்டன. 1. மதுரை நாயக்கர்கள் (கி.பி. 1529-1739) அ) மதுரை நாயக்க மன்னர்கள் ஆ) நாயக்கர் ஆட்சிமுறை இ) வரிமுறைகள் ஈ) சமுதாய வாழ்க்கை உ கலைகள் 1. கட்டடக்கலை 2. ஓவியக்கலை 3. சிற்பக்கலை 2. வேலூர் நாயக்கர்கள் 3, இக்கேரி நாயக்கர்கள் 4. மைசூர் மன்னர்கள் 5. தஞ்சை நாயக்கர்கள் 6, செஞ்சி நாயக்கர்கள் 7. தமிழகத்தில் மராத்தியர் ஆட்சி 8. இராமநாதபுரம் சேதுபதிகள் 9. சிவகங்கை இராசாக்கள் 11. நாயக்கர்களின் ஆட்சிமுறையும் பண்பாடும் 1. மதுரை நாயக்கர்கள் (கி.பி. 1529-1739) கி.பி. 1565-ல் நடந்த தலைக்கோட்டைப் போரில் விசய நகரப் பேராட்சி வீழ்ந்துவிட்டது. பேரரசன் இராமராயன் போரில் கொல்லப்பட்டான். அவனுடைய தம்பியான முதலாம் திருமலை ராயன் பெனுகொண்டாவில் தலைநகரை அமைத்துக் கொண்டு ஆண்டான் (கி.பி. 1570 - 72). ஆனால் அவன் பாளையக் காரர்கள், கொள்ளைக் கூட்டத்தார், கிளர்ச்சிக்காரர்கள் ஆகிய மும்முனைப் போராட்டக்காரர்களோடு போராட வேண்டியிருந்தது. இச்சூழலைப் பயன்படுத்திக் கொண்டு மதுரை நாயக்கர்கள் தனித் தாள முற்பட்டனர். இவர்களைப் போலவே தஞ்சை நாயக்கர்கள், செஞ்சி நாயக்கர்கள் ஆகியோரும் தனித்தாள முற்பட்டனர். ஆயின், மதுரையில் விசய நகரப் பேரரசு வீழ்வதற்கு முன்பே தாயக்கர் ஆட்சி அமைந்திருந்தது என்பது விளங்குகின்றதல்லவா? மதுரை நாயக்கர் வரலாறு விசுவநாத நாயக்கர் காலத்திலிருந்தே தொடங்கிவிட்டது. மதுரையைப் புக்கரின் மகன் குமாரக் கம்பணன் என்பான் கைப்பற்றி, மதுரைச் சுல்தானியத்தை ஒழித்தான். கம்பணன் கி.பி. 1374-ல் இறந்தான். இவனுக்குப் பின் ஆட்சிக்கு வந்த இரண்டாம் தேவராயன் (கி.பி. 1426 - 1446) காலத்தில் இலக்கண்ண ன் என்பவனை மதுரை மண்டலத்திற்கும் மாதண்ணன் என்பவனைத் தஞ்சைக்கும் மகாமண்டலேசுவரர்களாக நியமித்தான். கிருட்டிண தேவராயர் காலத்தில் (கி.பி. 150 - 1527) நரச நாயக்கன் என்பான் சோழ நாட்டிற்கும், நாகம நாயக்கன் என்பவன் பாண்டிய நாட்டிற்கும் மகாமண்டலேசுவரர்களாக அமர்த்தப்பட்டனர். ஆனால், நாகமநாயக்கன் தனக்கு முரண்பட்டு நடந்ததால் அவனை நீக்கிவிட்டு அவனுடைய மகன் விசுவநாத நாயக்கன் என்பவனை கிருட்டிண தேவராயர் கி.பி. 1520-ல் மதுரை நாயக்கனாக நியமித்தார். கிருட்டிண தேவராயருக்குப் பின் வந்த அச்சுதராயர் காலத்திலும் விசுவநாத நாயக்கரே மதுரை நாயக்கராகத் தொடர்ந்தார். அச்சுதராயரின் மைத்துனியின் கணவன் செவ்வப்ப நாயக்கன் கான்பவனை அச்சுதராயர் தஞ்சை நாயக்கராக்கினார். ஆகவே, மதுரை நாயக்கர் வரலாறு என்பது விசுவநாத நாயக்கருக்கு முன்பே தொடங்கிவிட்டது என்பது தெளிவாகிறது. ஆயினும், விசுவநாத நாயக்கரில் இருந்து மீனாட்சியின் காலம் வரை (கி.பி. 1529-1736) மதுரையில் நாயக்கர் ஆட்சி தொடர்ந்து இருந்தது. " படம் 3 அ) மதுரை நாயக்க மன்னர்கள் 1. விசுவநாத நாயக்கர் (கி.பி. 1529 - 1564) கி.பி. 1529-ல் மதுரை மண்டலேசுவரரான விசுவநாத நாயக்கர் மதுரை, சோழநாடு ஆகியவற்றைத் தானே நிருவகித்தார். தனக்கு உறுதுனையாக அரியநாத முதலியார் என்பவரை வைத்துக் கொண்டார். திருச்சித் தெப்பக்குளம், தாயுமானவர் கோயில் ஆகியவற்றைச் செப்பனிட்டார். திருவரங்கம் கோயிலைச் சுற்றிலும் தெருக்களை அமைத்தார். திருநெல்வேலி பகுதியில் நடந்த உள் நாட்டுக் கிளர்ச்சியைத் தளபதி அரியநாத முதவியை அனுப்பி அடக்கினார். காவிரிக்கரையின் இருமருங்கிலும் இருந்த நாடுகளை அழித்து, அவற்றில் பதுங்கிக் களவு செய்யும் கள்ளர்களை அடக் கினார். ஊர்க்காவல் படைகளை அமைத்து வழிப்பறிக் கொள்ளை நாயக்கர்களின் ஆட்சிமுறையும் பண்பாடும் களை ஒழித்தார். தாம்பிரபரணி ஆற்றங்கரைகளில் பதுங்கியிருந்து கொண்டு தொல்லை தந்த கள்ளர்களை ஒடுக்கக் கரைகளில் இருந்த நாடுகளை அழித்தார். திருநெல்வேலியிலுள்ள நெல்லையப்பர் கோயிலைப் பழுது பார்த்து, அந்தகரை அழுகுபடுத்தினார். கம்பம் - கூடலூர் பகுதிகளில் நடந்த கலகத்தை அடக்கினார். இதனால் மதுரை மண்டலத்தில் மக்கள் அமைதியான வாழ்க்கை நடத்தினர். பாளையப்பட்டு முறையை வளர்த்தல் பாளையப்பட்டு முறை என்பது ஆங்கில நாட்டிலிருந்த படை மானிய முறை போன்றது. விசுவநாத நாயக்கன் தனக்குக் கீழ்ப் படிந்து இருந்த மதுரை, திருச்சி, முகவை, திருநெல்வேலி, சேலம், கோவை மாவட்டப் பகுதிகளிலும், திருவிதாங்கூரின் ஒரு பகுதி யிலும் இருந்த பகுதிகளை எல்லாம் ஒன்றிணைத்து 72 பாளையங் களாகப் பிரித்தார். ஒவ்வொரு பகுதிக்கும் பாளையம் என்று பெயரிட் டார். ஒவ்வொரு பாளையத்திற்கும் ஒவ்வொரு தலைவரை ஏற்படுத்தி அவருக்குப் பாளையக்காரர் என்று பெயரிட்டார். அப்பாளையக்காரர் தன் பாளையத்தில் இருந்து தண்டல் செய்யும் வரிப்பணத்தில் மூன்றிலொரு பங்கை மதுரை நாயக்கருக்கு அளித்து விட்டு. மீதியுள்ள மூன்றில் இரண்டு பாகத்தைத் தன் படைக்கும், தனக்கும் செலவு செய்து கொள்ள வேண்டும். போர்க்காலங்களில் மதுரை நாயக்கருக்குப் படைகளை அனுப்ப வேண்டும். தன் எல்லைக்கு உட்பட்ட வழக்குகளைத் தானே தீர்த்துக் கொள்ளும் நீதி வழங்கும் அதிகாரமும் அவனுக்கு அளிக்கப்பட்டது. இவ்வாறு, வரித்தண்டல், படை அமைத்து நிருவாகம் செய்தல், நீதி விசாரணை ஆகிய அதிகாரங்களைப் பெற்ற பாளையக்காரர்கள் தங்கள் எல்லைகளுக்கு உட்பட்ட குட்டி நிலப்பரப்புக்குத் தாங்களே குட்டி இராசாக்கள் ஆயினர். இத்தகைய பாளையப்பட்டு முறையால் நாட்டில் சட்டமும், ஒழுங்கும் சரியானபடி செயல்பட்டன. உள்நாட்டுக் கலகங்கள், வழிப்பறிகள் ஒடுக்கப்பட்டன. விசுவநாத நாயக்கரால் ஏற்படுத்தப் பட்ட இந்தப் பாளையப்பட்டு முறை கி.பி. 14 ஆம் நூற்றாண்டில் காகதீய நாட்டை ஆண்ட பிரதாப ருத்திரனால் அந்நாட்டில் கொண்டு வரப்பட்டதைப் பின்பற்றி ஏற்படுத்தப்பட்டதாகும். பழைய பாண்டிய நாட்டிலிருந்த சிற்றரசர்களின் மரபினரும், விசயநகர ஆட்சியின் லிருந்த சிற்றரசர்களின் மரபினரும், கன்னடம், தெலுங்கு நாட்டுத் தலைவர்களும், கள்ளர்களும் அடிக்கடி உள் நாட்டுக் கலகங்களை விளைவித்து வந்ததற்குப் பாளையப்பட்டு முறை முற்றுப்புள்ளி வைத்தது. காரணம் அவர்களில் பெரும்பாலோர் பாளையக்காரர் ஆகிவிட்டனர். இந்தப் பாளையப்பட்டு முறை கி.பி. 1535-ல் இருந்து செயல்படத் தொடங்கியது. இதனால் ஏற்பட்ட ஆட்சிமுறைச் சீர்திருத்தங்களாலும், சட்டம் ஒழுங்குகளாலும் தமிழகத்தில் கன்னடரும், தெலுங்கரும் இணைந்து வாழ்ந்தனர். பண்பாட்டுப் பரிமாற்றமும் ஏற்பட்டது. இவ்வாறு விசுவநாத நாயக்கர் மதுரை மண்டலத்தில் ஒரு கட்டுக்கோப்பான ஆட்சிமுறையை ஏற்படுத்திக் கோயில் திருப்பணிகளைச் செய்து, தமிழ், தெலுங்கு, கன்னட இலக்கியங்களையும் வளர்த்தார். இன்னும் இவனுடைய உருவச் சிலை மதுரை சோமசுந்தரர் கோயிலிலுள்ள ஆயிரம் கால் மண்டபத் தூணொன்றில் குதிரை மீது அமர்ந்திருப்பதைப்போல் காட்சி அளிக் கிறது. முப்பத்தைந்து ஆண்டுகள் கட்டுக்கோப்பான ஆட்சியை நடத்திய இவர் கி.பி. 1564 -ல் தனது 9 ஆவது அகவையில் காலமானார். 2. முதலாம் கிருட்டிணப்ப நாயக்கர் (கி.பி. 1546 - 1574) விசுவநாத நாயக்கனுக்குப் பின் அவர் மகன் முதலாம் கிருட்டிணப்ப நாயக்கர் மதுரை மகாமண்டலேசுவரர் ஆனார். இவரை எதிர்த்துப் பாளையக்காரர்கள் செய்த கலகத்தை எளிதில் அடக் கினார். தும்பிச்சை நாயக்கனூர் பாளையக்காரன் தனக்கு எதிராகப் படையெடுத்துப் பரம்பக்குடிக் கோட்டையைக் கைப்பற்றியதைக் கண்டு, தனது தளபதிகளை அனுப்பி அவனைத் தோற்கடித்தார். தும்பச்சி நாயக்கனுக்குத் துணையாக வந்த இலங்கை அரசனையும், சிங்களப்படை வீரர்கள் 40,000 பேரையும் வென்றான். அத்தோடு தனது 52 பாளையக்காரர்களின் படை வீரர்களையும் இலங்கைக்கு அனுப்பி சிங்களப்படைகளை இலங்கையிலுள்ள புட்டளம் என்ற இடத்தில் தோற்கடித்தான். மீண்டும் இலங்கை அரசன் தனது . சிங்களப்படையோடு, போர்த்துக்கீசியப் படைகளையும் சேர்த்து 70,000 படை வீரர்களோடு கிருட்டிணப்ப நாயக்கருடன் போரிடத் தொடங்கினான். ஆனால், அந்த 70,000 படை வீரர்களும் மதுரை வீரர்களால் கொன்று குவிக்கப்பட்டனர். தோல்வியுற்ற இலங்கை மன்னன் கிருட்டிணப்ப நாயக்கருடைய மைத்துனன் விசயகோபால் நாயக்கனனப் படிநிகராளியாக ஏற்றுக் கொண்டான். இவ்வாறு, கிருட்டிணப்ப நாயக்கர் இலங்கைப் பெரும்படை யையே வெல்லுமளவுக்குத் தன் பாளையக்காரரின் படைகளைப் பெற்றிருந்தார். கி.பி. 1565-ல் நடந்த தலைக் கோட்டைப் போரின் போது திருமலைராயன் பிடியில் இருந்து செஞ்சி, தஞ்சை ஆகிய நாயக்கர்கள் விலகி, தனித்தாள முற்பட்டனர். ஆனால் கிருட்டிணப்ப நாயக்கர் மட்டும் உண்மையாகப் பேரரசுக்கு அடங்கிக் கப்பம் கட்டி வந்தார். தனது படைகளைத் தளவாய் அரியநாத முதலியார் தலைமையில் தலைக்கோட்டைப் போருக்கும் அனுப்பினார். தளபதி அரியநாத முதலியார் காஞ்சிக்கு அருகிலுள்ள மப்பேடு என்னுமிடத்தில் வாழ்ந்தவர். பின்னர் மதுரை சோழவந்தானில் குடியேறினார். இவருடைய உறவினர்கள் திருநெல்வேலி மாவட்டத் தில் குடியேறி முதலியார் குடும்பங்களாக பிராமணரால் முதலியார்கள் என்றழைக்கப்பட்டனர். அரியநாதருக்குப் வழங்கப்பட்ட தானைத் தலைவர் அல்லது முதலி என்ற பட்டம் அவர் சாதியாருக்கே முதலியார் என்றாகி, தொண்டை மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தொண்டை மண்டல முதலியார்கள் என்றாகிவிட்டது. கிருட்டிணப்ப நாயக்கர் பாளையங்கோட்டை அருகில் கிருட்டிணாபுரம் என்ற ஊரை ஏற்படுத்தி அங்குத் திருவேங்கட நாதர் கோயில் ஒன்றையும் கட்டினார், கோயிலின் சில பகுதிகளையும் இவர் கட்டிப் பல நிவந்தங்களையும் வழங்கினார். 3. வீரப்ப நாயக்கர் (கி.பி. 1572-1595) இவர் முதலாம் கிருட்டிணப்ப நாயக்கரின் மூத்த மகனாவார். இவருடைய தம்பி விசுவநாத நாயக்கர் இவருக்கு வலக் கை போல் செயல்பட்டார். பாணர் அல்லது மாவலி வாணாதிராயர் என்பவர்கள் இவருடைய காலத்தில் உரிமை கோரி கிளர்ச்சி செய்தனர். மானா மதுரை, காளையார் கோயில் ஆகிய இடங்களிலிருந்த கோட்டை களையும் பல சிற்றூர்களையும் கைப்பற்றிக் கலகத்தில் ஈடுபட்டனர். கிருட்டிணப்ப நாயக்கர் காலத்தில் ஏற்பட்ட இக் கலகத்தை அடக்கியதோடு மாவலி வாணாதிராயன் பாளையமும் கைப்பற்றப் பட்டது. இதனால் வீரப்ப நாயக்கர் மதுரை, இராமநாதபுரம் முதலிய இடங்களில் பாதுகாப்புப் படைகளை அமர்த்தினார். சிதம்பரம் கோயிலுக்குப் புறமதில் சுவர்களும் கட்டினார். கோயிலைச் சுற்றிலும் பிராமணர் குடியிருப்புகளை அமைத்துத் தந்தார். கி.பி. 1592-ல் ஏற்பட்ட மதுரை கிறித்து சமயப் பணிக் கழகத்தை ஆதரித்தார். அவர்கள் சமயத்தைப் பரப்பவும் அனுமதி வழங்கினார். இக்கழகத்தின் தலைவரான பெர்னாண்டஸ் பாதிரியாருக் குப் பல சலுகைகளைக் கொடுத்தார். கடைசிவரை விசயநகரப் பேரரசுக்கு அடங்கி ஆண்ட இவர் கி.பி. 1595-ல் காலமானார். 4. இரண்டாம் கிருட்டிணப்ப நாயக்கர் (கி.பி. 1595 - 1601) அடுத்து மதுரை மண்டலேசுவர் ஆன இவர் வாரிசு இல்லாமல் இறந்தார். மூன்று தலைமுறையாக வழி காட்டியாய் இருந்த அரியநாத முதலியார் (கி.பி. 1615 - 1600) அவர்களும் இறந்து விட்டார். பின், இவருடைய தம்பியான முத்துக் கிருட்டிணப்ப நாயக்கர் மதுரை நாயக்கரானார். 5. முத்துக்கிருட்டிணப்ப நாயக்கர் (கி.பி. 1605 - 1609) இவர் காலத்தில் இராமேசுவரம் புனிதப் பயணம் செல்லு வோரை வழிப்பறி செய்து வந்த கள்ளர்கள் அடக்கப் பட்டுவிட்டனர். முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்பதைப் போல் போகலூர் என்னும் சிற்றூரை ஆண்ட சடையதேவன் என்பவனை மறவ நாட்டு மன்னராக்கினார். இவன் வழிப்பறி செய்தும் கலகம் விளைவித்தும் வந்த கள்ளர்களை அடக்கினான். வரியேய்த்து முத்துவாணிபம் செய்து வந்த போர்த்துக்கீசியரின் வாணிபத்தையும் ஒடுக்கினான். இந்தச் சடையதேவன் வழி வந்தவர்களே இராமநாதபுரம் சேதுபதிகள் ஆவர். இக்காலத்தில் இத்தாலி நாட்டுப் பாதிரியார் இராபர்ட் - தி - நொபிளி என்பார் தன் சமயத்தைப் பரப்ப இசைவளிக்கப்பட்டார், இப் பாதிரியார் இந்துப் பிராமணனைப் போலவே பூனூல் போட்டுக் கொண்டு, நெற்றியில் திலகமிட்டு, சைவ உணவை உண்டு வாழ்ந்தார். தமிழ், தெலுங்கு, சமற்கிருதம் ஆகிய மொழிகளில் வல்லுனரான இவர் தமிழுக்கு ஆற்றிய பணிகள் போற்றக் கூடியவை ஆகும். முதன்முதலில் தரங்கம்பாடியில் அச்சு இயந்தி ரத்தை அமைத்து அரிய தமிழ் நூல்களை அச்சிட்டார். 6. முதலாம் முத்துவீரப்ப நாயக்கர் (கி.பி. 1609 - 1623) கி.பி. 1609-ல் முத்துக் கிருட்டிணப்ப நாயக்கர் இறந்ததும் இவர் மதுரை நாயக்கரானார். இவர் காலத்தில் விசயநகரப் பேரரசில் குழப்பம் ஏற்பட்டது. அதனைப் பயன் கொண்டுதான் தனித்து ஆள முற்பட்டார். கி.பி. 1516-ல் இவரைப் பேரரசுப் படை திருச்சிக்கு அருகிலுள்ள தோப்பூரில் தோற்கடித்தது. அதே ஆண்டில் இவர் தன் தலைநகரை மதுரையில் இருந்து திருச்சிக்கு மாற்றிக் கொண்டார். அதில் இருந்து விசயநகரப் பேரரசுக்கு அடங்கி ஆண்டு கி.பி. 1623-ல் இறந்தார். 7. திருமலை நாயக்கர் கி.பி. 1623 - 1659) திருமலை நாயக்கர் முத்துக்கிருட்டிணனுடைய இரண்டாவது மகனாவார். முத்து வீரப்பன் தலைநகரைத் திருச்சிக்கு மாற்றியதை அறிவோம். ஆனால், திருமலை நாயக்கர் கி.பி. 1634-ல் மீண்டும் மதுரைக்கே தலைநகரை மாற்றினார். மீனாட்சி சொக்க நாதர் கோயில் திருப்பணிகளைச் செய்தார். இரண்டு பெரிய காவல் கோட்டை களைக் கட்டினார். பாதுகாப்புக்கென 30,000 படை வீரர்களைத் திரட்டினார். திருமலை நாயக்கர் காலத்தில் மதுரை, திருநெல்வேலி, திருவிதாங்கூரின் ஒரு பகுதி. இராமநாதபுரம், சிவகங்கை , புதுக் கோட்டை, திருச்சி, சேலம், கோவை ஆகியவை மதுரை ஆட்சிக்கு உட்பட்டிருந்தன. போர்கள் திருமலைநாயக்கர் தமது ஆட்சிக் காலத்தில் மைசூர், திருவிதாங்கூர், இராமநாதபுரம் விசயநகரம் ஆகிய போர்களில் ஈடுபட் டார், விசயநகரப் பேரரசன் சீரங்கன் தனது ஆட்சியை இழந்தான், மைசூர் மன்னன் கந்தீரவனிடம் அடைக்கலம் புகுந்தான். இச் சமயத்தில் திருலை நாயக்கருக்கும் கந்தீரவனுக்கும் இடையே பகைமை ஏற்பட்டது. மூக்கறுப்புப் போர் - மைசூர் மன்னன் கந்தீரவன் தன் படைவீரர்களை மதுரைக்கு அனுப்பிவழியில் கண்டவருடைய மூக்கையும், மேல் உதட்டையும் அறுக்கும்படிச் செய்தான், முட்டை முட்டையாக மக்களின் முக்குகள் அறுக்கப்பட்டு மைசூர்க்கு அனுப்பப்பட்டன. திருமலை நாயக்கரும் மைசூர் சீமைக்குத் தன் படைவீரர்களை அனுப்பிப் பொது மக்கள் மூக்கை அறுக்கச் செய்தார். இத்தகைய முக்கறுப்புப் போர் மைசூருக்கும், மதுரைக்கும் இடையே தொடர்ந்தது. இது இழிவான, விலங்காண்டித்தனமான போர் என்று இராபர்ட் - தி - நொபிளி என்ற கத்தோலிக்கப் பாதிரியாரும் மற்றும் கிறித்துவ சமயப்பரப்பு ஊழியர்களும் பழித்து எழுதினர். கி.பி. 1530 - ல் மைசூர்ப் படைகள் மதுரைக்குரிய இரண்டு. கோட்டைகளைக் கைப்பற்றின. திண்டுக்கல் முற்றுகையிடப் பட்டது. ஆனால், திருமலை நாயக்கரின் படைத் தலைவன் இராமப் பய்யர் மைசூர் படைகளைத் தோற்கடித்து, மைசூர் எல்லைக் குள்ளும் துரத்திச் சென்றான். இந்த மைசூர்ப் போரில் பாளையக் காரர்களின் படைகளும் பங்கேற்றன. கி.பி. 1535-ல் தனக்குக் கீழ்ப்படிந்து கப்பம் கட்டி ஆண்ட திருவிதாங்கூர் மன்னன் உன்னிக் கேரளவர்மன் என்பவன் கப்பம் கட்ட மறுக்கவே திருமலை நாயக்கர் திருவிதாங்கூர் மீது படை: யெடுத்து வெற்றி கண்டார். அடுத்து, திருமலை நாயக்கர் இராமநாதபுரம் சேதுபதி சடையத் தேவன் தனக்கு அடங்காமல் போனதால் இராமநாதபுரத்தின் மீது படையெடுத்தார். சடையத்தேவன் சிறையில் அடைக்கப்பட்டான். பின்னர் இவனையே இராமநாதபுரம் சேதுபதி ஆக்கினார். அடுத்து, விசயநகரப் பேரரசுடன் போர் தொடுத்த திருமலை நாயக்கர் ஆண்டுதோறும் விசயநகருக்குக் கட்ட வேண்டிய 40 இலக்கம் ரூபாயைக் கட்ட மறுத்தார். கோல்கொண்டாச் சுல்தானை அனுப்பி விசயநகர மன்னன் மூன்றாம் சீரங்கனைத் தோற்கடிக்கச் செய்தார். கோல்கொண்டாச் சுல்தான் வேலூர் மீது படையெடுத்து கி.பி. 1647-ல் இதனைக் கைப்பற்றினான், நாடிழந்த சீரங்கன் அலைந்து திரிந்து கடைசியில் கி.பி. 1672-ல் பெத்தளூரில் மாண்டான், இவனோடு விசய நகர ஆட்சி முடிவுற்றது. கி.பி. 1336 -ல் அம்பியில் தொடங்கப்பட்ட விசயநகர ஆட்சி, கி.பி. 1672-ல் வேலூரில் முடிவுற்றது. திருமலை நாயக்கர் மீனாட்சிக் கோயிலின் பல பகுதிகளைக் கட்டி, கோயில் நிருவாகத்தைத் திருத்தி அமைத்தார். சித்திரைவிழா, ஆறுகால பூசை முதலியன சிறப்பாக நடந்தன. சிவபெருமானின் திருவிளையாடல்களை நாடகமாக்கி நடிக்கப் பயன்படுத்தும் அணிவதற்கான பல ஆபரணங்களைச் செய்தார். வண்டி யூர்த் தெப்பக்குளம், ஐராவதேசுவரர் கோயில், வசந்த மண்டபம், இராயர்கோபுரம் முதலியவற்றைக் கட்டினார். இவற்றிற்கெல்லாம் மேலாக இவர் கட்டிய திருமலை நாயக்கர் மகால் இன்னும் போற்றப்படும் கலை நுட்பம் நிறைந்த கட்டடமாக விளங்குகின்றது. 8. சொக்கநாத நாயக்கர் (கி.பி. 1659-32) திருமலை நாயக்கருக்குப்பின் அவர்மகன் இரண்டாம் முத்து வீரப்ப நாயக்கர் பட்டத்துக்கு வந்தார். ஆனால், அவர் நான்கு திங்களில் இறந்தார். இவருக்குப்பின் பட்டத்துக்கு வந்த முத்து வீரப்பனும் இறந்தார். கடைசியில் கி.பி. 1658 - ல் இரண்டாம் முத்துவீரப்பனின் மகனும், திருமலை நாயக்கரின் பேரனுமான சொக்கநாத நாயக்கர் பட்டத்துக்கு வந்தார். இந்தக் குழப்பமான சூழலைப் பயன்படுத்திக் கொண்டு வீசப்பூர் சுல்தான் தஞ்சை, திருச்சி ஆகியவற்றைத் தாக்கினான். இதனால் பஞ்சமும் கொள்ளையும் அதிகரித்தன. சொக்கநாத நாயக்கர் மிகவும் இளைஞராயிருந்ததால் தளபதி அரியநாத முதலியாரும் பிறரும் சூழ்ச்சிகள் செய்து நாட்டில் பஞ்சத்தை அதிகரிக்கச் செய்தனர். சொக்கநாத நாயக்கர் தன் தலைநகரைத் திருச்சிக்கு மாற்றிக் கொண்டார். தஞ்சையை ஆண்ட விசயராகவநாயக்கரின் மகளை சொக்கநாத நாயக்கர் மணக்கவிரும்பினார். பெண் கொடுக்க மறுத் ததால் தஞ்சை அரண்மனைப் பெண்கள் அனைவரும் வெடி வைத்துத் தாங்களே தற்கொலை செய்து கொண்டனர். இச் சூழலில் பீசப்பூர் சுல்தானிடம் படைத் தலைவனாக இருந்த வெங்காசி என்பவன் தஞ்சையைக் கைப்பற்றித் தானே ஆளமுற்பட்டான். இதனால் தஞ்சை மராத்தியர் வசமாயிற்று. சிவாசியின் தந்தையான சாசி பீஜப்பூர் சுல்தானிடம் படைத்தலைவராயிருந்தார். இவருக்கு இரண்டு மனைவிகள், முதல் மனைவியின் பெயர் சோபாய், இவளுக்குப் பிறந்தவன்தான் சிவாசி, இரண்டாம் மனைவியான துக்காபாய் என்பவருக்குப் பிறந்தவன் பெயர் வெங்காசி, இவன் தந்தையைப் போலவே பீசப்பூர் சுல்தானிடம் படைத் தலைவனாக இருந்தான். தஞ்சையைக் கைப் பற்றியவுடன் தஞ்சையைத் தனித்து ஆண்டு கொண்டிருந்தான். சிவாசி மராத்திய மன்னனாக ஆண்டு கொண்டிருந்தான். தனது 200 மைல் சுற்றளவேயுள்ள ஆட்சியைப் பரப்புவதற்கு அவன் பீசப்பூர் சுல்தானுடன் உறவுகொள்ள எண்ணினான், கி.பி. 1677 - ல் 5000 குதிரைப் படையுடன் செஞ்சியைக் கைப்பற்றப் படை யெடுத்தான். பீசப்பூர் சுல்தானின் படிநிகராளியாக ஆண்ட தாசீர் முகமதுகான் என்பவன் சிவாசியிடம் 50,000 ரூபாய் வருவாயுள்ள ஒரு சாகீரையும், பெரும் தொகையையும் பெற்றுக் கொண்டு செஞ்சியை சிவாசியிடம் ஒப்படைத்து விட்டு விலகினான். இதனால் கி.பி. 1677 ஆம் ஆண்டு மே மாதம் ஒன்பதாம் தேதி செஞ்சிக் கோட்டை மராத்தியர் வசமாயிற்று. சிவாசி செஞ்சிக் கோட்டையை இடித்து விட்டு புதிய கோட்டையைக் கட்டினான். இன்று அங்குள்ள கோட்டைக் கொத்தளங்கள் யாவும் சிவாசி கட்டியவையே ஆகும், வேலூர்க் கோட்டையைக் கைப்பற்றுதல் அன்றைய தமிழகத்தில் மிகவும் வலிமை மிக்க கோட்டை களில் வேலூரர்க் கோட்டையும் ஒன்று. சுல்தானின் படைத் தலைவர்கள் வாலிகண்டபுரம் வேலூர் ஆகியவற்றை ஆண்டு வந்தனர். செஞ்சியை கி.பி. 1677 ஆம் ஆண்டு மே மாதம் ஒன்ப தாம் நாளில் கைப்பற்றியவுடன் சிவாசி மே, 23 ஆம் தேதி வேலூர்க் கோட்டையை முற்றுகையிட்டான். சுற்றியுள்ள குன்றுகளின் மீது பீரங்கிகளைப் பொருத்தி கோட்டையைத் தாக்கினான். ஆனால், அக்கோட்டையைப் பதினான்கு மாதங்கள் வரை சிவாசியால் கைப்பற்ற முடியவில்லை . கடைசியாக கி.பி. 1878 ஆம் ஆண்டு . சூலை மாதம் 22ஆம் நாளில்தான் வேலூர்க் கோட்டை சிவாசியிடம் வீழ்ந்த து. வாலிகண்டபுரம் ஷேர்கான் செஞ்சியில் நாசீர் முகமதுவும், வாலிகண்டபுரத்தில் ஷேர் கானும் பீசப்பூர் சுல்தானுடைய மேலாட்சியை ஏற்று ஆண்டு வந்தனர், செஞ்சி சிவாஜியின் வசமாயிற்று. வாலிகண்டபுரத்தின் மீது படையெடுத்துச் சென்ற சிவாஜி ஷேர்கானை கி.பி. 1678-ல் சூன் 28 ஆம் நாள் கடலூருக்கு அருகில் உள்ள திருவாடியில் தோற் கடித்தான். இப்போரில் சிவாஜிக்கு 500 குதிரைகளும் 20 ஓட்டகங் களும், 2 யானைகளும் கொண்டிப் பொருள்களாகக் கிடைத்தன. இவ்வாறு, பீசப்பூர் சுல்தானுக்குச் சொந்தமாகத் தமிழ் நாட்டிலிருந்த பகுதிகளை மராத்தியர் கைப்பற்றினர். தஞ்சையை ஏற்கனவே சிவாசியின் தம்பிவெங்காசி கைப்பற்றி ஆண்டு வந்தான். இவ்வாறு, துங்கபத்திரைக் கரையில் இருந்து காவிரிக் கரை வரை முதல் முறையாகத் தமிழ் நாட்டில் மராத்தியர் ஆட்சி பரவியது. ஆங்காங்கேயுள்ள கோட்டைகளில் 20,000 மராத்தியப் படை வீரர்கள் காவல் புரிந்தனர். இவர்களுக்கு வரித்தண்டல் செய்யும் உரிமையும் வழங்கப்பட்டது. செஞ்சிக்குத் தன் படி நிகராளியாக சாம்பாசியை அமர்த்திவிட்டு சிவாசி தனது மராத்தியத் தலைநகருக் குத் திரும்பினான். மதுரை நாயக்கரான சொக்கநாத நாயக்கர் பல் தொல் லைகளுக்குப் பின் கி.பி. 1683-ல் மாண்டார். சிவாஜியும், தஞ்சை மன்னன் வெங்காசியும் உடன்படிக்கை செய்து கொண்டு மராத்தி யரை எதிர்ப்போரை எதிர்ப்பதாய் உடன்பட்டனர். 8. இராணி மங்கம்மாள் (கி.பி. 1689-1706) சொக்கநாத நாயக்கருக்குப்பின் அவன் மகன் மூன்றாம் முத்து வீரப்பன் (கி.பி. 1682-89) பட்டத்திற்கு வந்தான். அவன் பட்டத் திற்கு வரும்போது மதுரை மண்டலத்தின் ஒரு பகுதியே அவன் ஆட்சியில் இருந்தது. மைசூர் மன்னன், தஞ்சை மன்னன், செஞ்சி சம்பாசி, மறவர் நாட்டுக் கிழவன் சேதுபதி ஆகியோர் மதுரையின் பிற பகுதிகளைக் கைப்பற்றியிருந்தனர். இவர்கள் மதுரையையும் கைப்பற்றப் போட்டியிட்டனர். முத்துவீரப்பன் இவர்களின் சூழ்ச்சிகளில் இருந்து தப்பினான். திடீரென 1689 -ல் அம்மை நோய் கண்டு இறந்தான். சொக்கநாத நாயக்கருக்குப் பல மனைவியர் இருந்தனர். அவர்களில் மங்கம்மாளும் ஒருத்தி, மூன்றாம் முத்து வீரப்பன் மங்கம்மாளின் மகன். இவன் இறந்த போது அவனுடைய மனைவியர் பலரும் உடன்கட்டை ஏறினர். ஆனால் ஒருத்தி மட்டும் கருவுற்றிருந்ததால் குழந்தை பிறந்தவுடன் அவள் பன்னீர் குடித்து ஜன்னிக்கண்டு மாண்டாள். பிறந்த ஆண் குழந்தையின் சார்பில் மங்கம்மாள் ஆட்சி செய்தார். ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் தில்விப் பேரரசனாக இருந்த ஒளரங்கசீப்புக்குத் தனது வணக்கத்தைக் கூறி அரசியல் தந்திரத்தோடு நடந்து கொண்டாள். அடுத்து, தில்லிப் பேரரசினுடைய சேனாதி பதியான சுல்பிகர் அலிகானுக்கு விலையுயர்ந்த அன்பளிப்புகளைக் கொடுத்து, தஞ்சை மன்னன் அபகரித்து இருந்த மதுரைப் பகுதிகளை மீட்டுக் கொண்டாள். இதைப் போலவே மராத்தியருக்கு அடிக்கடி கையூட்டுக் கொடுத்து அவர்களின் தொல்லைகளில் இருந்து தப்பித்துக் கொள்வாள், திறை செலுத்த மறுத்த கேரள மன்னன் இரவிவர்மன் மேல் படையெடுத்து வெற்றிபெற்றாள். அவனிடம் இருந்து பொன்னும், பொருளும், பெரிய பீரங்கிகளும் கொண்டிப் பொருள்களாகப் பெற்றாள். மைசூர் மன்னன் சிக்கதேவராயன் காவிரிக்குக் குறுக்கே அணை கட்டித் தமிழகத்திற்குத் தண்ணீர் விட மறுத்தான். மன்ன னைத் தாக்க முயன்றனர். ஆனால் திடீரெனப் பெய்த பெருமழை யால் மைசூர் மன்னன் கட்டிய அணை தானே தகர்ந்துபோனது. இவ்வாறு மங்கம்மாள் தனது அரசியல் தந்திரத்தால் மதுரை யின் எதிரிகளை அடக்கி மதுரை ஆட்சியை வலுவடையச் செய் தாள், இந்து, இஸ்லாம், கிறித்துவம் முதலிய வேறுபாடு இன்றி எல்லாச் சமயங்களுக்கும் ஆதரவு அளித்தாள், சௌராட்டிரப் பார்ப்பனருக்குப் பூணூல் அணியும் உரிமையை வழங்கினாள். அழிந்து கொண்டிருந்த மதுரை நாயக்கர் ஆட்சியைக் கட்டிக் காத்து வலுவுடையதாகச் செய்த மங்கம்மாள் தனது 55-வது அகவையில் கி.பி. 17] - ல் காலமானார். 10. விசயரங்க சொக்கநாத நாயக்கர் (கி.பி. 1706 - 1731) அவள் பேரன் விசயரங்க சொக்கநாத நாயக்கர் மதுரையைத் தானே ஆள முற்பட்டார். அப்பொழுது அவருக்கு அகவை பதினேழு தான். அவர் தன் கையில் ஒப்படைத்ததைக் காப்பாற்றச் சபதம் பூண்டார். ஆனால், கண்மூடித்தனமாகக் கோயில்களுக்கும், மடங்களுக்கும், பிராமணர்களுக்குமாகப் பொருளைச் செலவிட்டார். அவருடைய தலைமை அமைச்சர் தளவாய் கஸ்தூரிரங்கையாவும், பிரதானி வெங்கடகிருட்டிணய்யாவும் மக்களைக் கொடுமைப் படுத்திப் பணம் பறித்தனர். தன் பாட்டியைப் போல் நுண்ணறிவும், அரச தந்திரமும் தெரியாத இவர் மக்களின் பஞ்சம், பட்டினிகளைப் போக்கும் வழிகளை நாடவில்லை. கோயில்களுக்குப் புனிதப் பயணம் செய்வதையே தன் வாழ்க்கைமுறையாகப் பின்பற்றினார், இவருடைய அமைச்சர்களான நரசப்பையனும், வெங்கடராகவாச்சாரி யும் அரசாங்க வருவாய் அனைத்தையும் கொள்ளையடித்தனர். நாயக்கரை உயர்குடியினர் என்றும், உயர்வானவரென்றும் கூறி கோயில்கள் பக்கமே அவருடைய மனதைத் திருப்பிவிட்டனர். பஞ்சத்தாலும், அமைச்சர்களின் கொடுங்கோன்மையாலும் அல்ல லுற்ற மக்கள் விசயரங்க சொக்கநாதரை வெறுத்தனர். மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டு அவரும் கி.பி. 1732-ல் கால மானார். 11. மீனாட்சி (கி.பி. 1732-36) விசயரங்க சொக்கநாத நாயக்கருக்கு வாரிசு இல்லை. எனவே, அவருடைய மறைவுக்குப்பின் அவர் மனைவி மீனாட்சி ஆட்சிப் பொறுப்பேற்றாள். திருமலை நாயக்கர் வழிவந்த விசயகுமாரன் என்பவனை வாரிசாக எடுத்துக் கொண்டாள். இவள் மங்கம்மாளைப் போல் ஆற்றலும் தந்திரமும் இல்லாதவள். இவளுடைய காலத்தில் உள்நாட்டுக் கலகங்கள் தோன்றின. நவாப்பு படையெடுப்பும் நாயக்கர் ஆட்சியின் முடிவும் ஆற்காட்டு நவாப்பு தோல் துல்லிக்கான் மதுரை நாட்டின் மீது படையெடுக்கும்படி தன் மகன் சப்தர் அலிகான் என்பவனையும், மருமகன் சந்தாசகிபு என்பவனையும் அனுப்பினான். இச்சமயத்தில் மீனாட்சியைத் தடுக்க விசயகுமாரன் தந்தை பங்காரு திருமலை என்பவன் பேராசையால் தூண்டப்பட்டு தானே மதுரையை ஆள வேண்டுமென்ற எண்ணத்தால் சப்தர் அலிகானைக் கமுக்கமாய்ச் சந்தித்து திருச்சியைப் பிடித்துத் தன்னிடம் கொடுத்தால் 30 இலட்சம் ரூபாய் தருவதாக உடன்படிக்கை செய்து கொண்டான். இதனை அறிந்து கொண்ட மீனாட்சி சந்தாசாகிபுடன் கமுக்கமாக உடன் படிக்கை செய்து கொண்டாள். அதன்படி சந்தாசாகிபு தனக்கு உதவினால் ஒரு கோடி ரூபாய் தருவதாகக் கூறினாள். சூழ்ச்சியில் வல்லவனான சந்தாசாகிபு மீனாட்சியைச் சிறையிலடைத்துவிட்டு மதுரை நாட்டைக் கைப்பற்றிக் கொண்டான். இதனால், மதுரை நாயக்கர் ஆட்சி முடிவுற்றது. சந்தாசாகிபு திருச்சியில் இருந்து ஆண்டான். தனது தம்பியரை மதுரையிலும் திண்டுக்கல்லிலும் இருந்து ஆளச் செய்தான். தஞ்சையை ஆண்ட மராத்தியரை அடிமைப்படுத்தித் தனக்குக் கீழ்ப்படிந்து ஆளச் செய் தான். கி.பி. 174] -ல் மராத்தியர் ஆற்காட்டின் மீது படையெடுத்து தோசுத்து அலியைக் கொன்று பெரும் பொருளை வாரிச் சென்றனர். திருச்சியைத் தாக்கி சந்தாசாகிபையும், சகோதரர்களையும் கைது செய்து சதாராவுக்குப் பிடித்துச் சென்றனர். கி.பி. 1742-ல் சப்தர் அலிகான் கொல்லப்பட்டான். அன்வாருதின் கருநாடக நவாபாக அமர்த்தப்பட்டான். அவன் மராத்தியரை மதுரையில் இருந்து விரட்டி விட்டுக் கருநாடகம் முழுவதையும் தன் ஆட்சிக்குட்படுத்தினான். கடைசியாக மதுரை நாயக்கர் மரபே மறைந்தது. இவ்வாறு மதுரை நாடு நாயக்கரிடம் இருந்து மராத்தியர் கைக்கும் கடைசியாக இசுலாமியர்கைக்கும் மாறியது. எந்த இசுலாமியர் ஆட்சியை ஒழித்து (மாபார் சுல்தான்) இந்து - ஆட்சியை ஏற்படுத்த வேண்டுமெனத் தொடங்கப்பட்டதோ அதே இசுலாமியர் ஆட்சியைக் கடைசியில் அரசு கட்டிலேறச் செய்து மதுரை நாயக்கர் மரபு மறைந்தது. ஆ) நாயக்கர் ஆட்சிமுறை மதுரைப் பெருநாட்டை நாயக்கர்கள் கி.பி. 1529 முதல் 1736 வரை ஏறத்தாழ 20 ஆண்டுகள் ஆண்டனர். நாயக்கர் ஆட்சி விசுவ நாத நாயக்கரில் தொடங்கி மீனாட்சி ஆட்சியோடு 11 நாயக்கர்கள் ஆண்டு முடிவடைந்தபின் இவ்வாட்சி அறுபட்டது. மதுரைப் பெரு நாட்டில் இன்றைய சேலம், கோவை, திருச்சி, மதுரை, முகவை (இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளும், திருவிதாங் கூரின் ஒரு பகுதியும் அடங்கி இருந்தன. மங்கம்மாள் (கி.பி. 1689 - 1706) காலத்தில் முகவை, திருநெல்வேலி ஆகிய பகுதிகளைச் சேதுபதி ஆண்டார். தலைநகரம் மதுரை நாயக்கராட்சியின் தலைநகரம் கி.பி. 1529 முதல் 1615 வரையில் மதுரையாகவும் கி.பி. 1616 வரை திருச்சியாவும், கி.பி.1634 நாயக்கர்களின் ஆட்சிமுறையும் பண்பாடும் முதல் 1564 வரை மதுரையாகவும், கி.பி. 1665 முதல் 1736 வரை திருச்சியாகவும் மாறி மாறி இருந்தது. மதுரையில் தொடங்கி கடைசி யில் திருச்சியில் முடிந்தது. ஆகவே, மதுரையும், திருச்சியும் நாயக்கர் காலத்தில் சிறப்புற்ற நகரங்களாகவும், அரண்மனை, கோட்டைக் கொத்தளங்களோடும் திகழ்ந்தன. ஆயினும், நாயக்கர் காலத்தில் திண்டுக் கல், தாராபுரம், கோவை, தன நாயக்கன் கோட்டை, சத்தியமங்கலம், ஈரோடு, காங்கேயம், விசயமங்கலம், கருவூர், நாமக்கல், சேந்தமங் கலம், பெரியசேலம், சோமனூர், சங்கரகிரி, சாமப்பள்ளி, ஆத்தூர், அனந்தகிரி, பரமத்தி, மோகனூர், அரவக்குறிச்சி ஆகிய இடங்களி லும் நாயக்கர்கள் கட்டிய கோட்டைகள் இன்றும் உள்ளன. 1. நடுவண் ஆட்சி நாயக்கர்கள் விசயநகரைச் சேர்ந்த வடுகராயினும்; தமிழ் நாட்டை ஆண்டதால் ஓரளவு தமிழ் மரபு ஆட்சியைத் தழுவியே ஆண்டன ரெனலாம். இவர்கள் புகுத்திய பாளையப்பட்டு முறை ஆட்சிசூழலுக்கேற்றவாறு தமிழகத்தில் செவ்வனே செயல்பட்டது. கட்டுத்திட்ட மான கட்டுக்கோப்பு ஆட்சியைத் தந்தது. நாட்டின் அதிகாரம் முழுவதும் நடுவண் ஆட்சியில் குவிந்து கிடக்காமல் பாளையக்காரர்களிடமும் பகிர்ந்து அளிக்கப்பட்டது. பாளையக் காரர்கள் தங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வரித்தண்டல் செய்தல், நாட்டுக் காவல் காத்தல், நீதி வழங்குதல் முதலிய அதிகாரங்களைப் பெற்றிருந்தனர். திருமலைநாயக்கருக்குப் பின் வந்தவர்கள் முழு உரிமையோடு தனித்தே ஆண்டனர். பிறங்கடை உரிமைப்படி மூத்தமகனே பட்டத்திற்கு வந்தான். வாரிசு இல்லாதபோது சுவிகாரம் எடுத்துக் கொள்ளும் உரிமையும், உரிம்ை அரசர் ஆட்சியாளராக இருக்கும்போது பகர ஆட்சியாளராக இருக்கும் உரிமையையும் பெற்றிருந்தனர். பெண்கள் அரசிகளாய் ஆண்ட வரலாறும் நாயக்கர் காலத்தில் மங்கம்மாள், மீனாட்சி ஆட்சிகளைப் பார்த்து அறிகிறோம். அமைச்சர் குழு அரசருக்கு அறிவுரை வழங்கவே அமைச்சர் குழு இருந்தது. ஆனால், அரசர் அக்குழுவுக்குக் கட்டுப்பட்டவரல்லர். ஆட்சிப் பொறுப்பையும் படைப்பொறுப்பையும் ஏற்றிருந்த அமைச்சர்கள் தளவாய் எனப்பட்டனர். தளவாய் உள்நாட்டில் அமைதியையும், வெளிநாட்டில் நல்லுறவையும் ஏற்படுத்துவார். வழக்கமாக முதல் அமைச்சர் ஒருவரும் படைத்தலைவர் மற்றொருவரும் இருப்பது வழக்கம். ஆனால், மதுரை நாயக்கர் ஆட்சியில் இரு பணிகளுக்கும் இருவரும் ஒருவராகவே இருந்தது புதுமையானதாகும். நடுவண் ஆட்சியில் மற்றொரு குறிப்பிட்டத்தக்க பதவி பிரதானி என்பதாகும். இப்பதவியை இன்றைய நிதி அமைச்சர் பதவிக்கு ஒப்பிடலாம் நாட்டின் வரவு செலவுக் கணக்குகளைக் கவனிப்பது இவருடைய பொறுப்பு ஆகும். ஆக தளவாய், பிரதானி, இராயசம் ஆகிய மூன்று அமைச் சர்களே நடுவண் ஆட்சியில் முதன்மையானவராவர். அரசுக் கணக்குகளைக் கவனித்தோரை அரசுக் கணக்கர் என்றும், அயல் நாட்டு உறவுகளைக் கவனித்தோரைத் தானாதிபதி என்றும் அழைப்பர். அரசருடைய ஆணைகளை ஓலைகளில் எழுதி அனுப் பும் ஒரு பதவி இருந்ததாகவும், அவருக்குத் திருமந்திர ஓலை நாயகம் என்ற பெயரும் இருந்தது என்று டி. வி. மகாலிங்கம் கூறுகிறார். ஓர் அமைச்சரை நியமனம் செய்து கொள்ளவும், நீக்கவும் அரசருக்கு உரிமையுண்டு. பொது நிருவாகத்தைக் கவனித்தவர் 'இராயசம்' எனப்பட்டார். 2. மாநில ஆட்சி நடுவண் ஆட்சிக்கும் பாளையப் பட்டுகளுக்கும் இடையில் சில பேரதிகாரிகள் இருந்தனர். இவர்களை ஆளுநர்கள் எனவும் அழைத்தனர். மதுரைநாடு சில மாநிலங்களாகவும் பிரிக்கப்பட்டிருந் தது. அதனைச் சீமைகள் என்றனர். திருநெல்வேலி, திருச்சி, சத்திய மங்கலம் முதலிய சீமைகள் இருந்தன. ஒவ்வொரு சீமையிலும் அதிகாரிகளின் அதிகாரவரம்புகள் வேறுபட்டன. அதிகாரிகளில் சிறப்பாகக் கொள்ளப்பட்டவர் திருநெல்வேலிச் சீமை அதிகாரி யாவார். ஆனால், அதிகாரிகள் யாவரும் தளவாய்க்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். எனவேதான் தளவாயைத் தலைமை ஆளுநர் என்று குறிப்பிடுவர். மதுரை நாட்டில் திருமலை நாயக்கரால் ஏற்படுத்தப்பட்ட 72 பாளையங்களில் பெரியபாளையங்கள் ஆளுநரின் கீழும், சிறிய பாளையங்கள் பெரிய பாளையங்களுக்குக் கீழும் இருக்கும். இதனால் பெரிய பாளையக்காரர்கள் சிற்றரசர்களைப் போலிருப்பர். அவர்களுக்குக் கீழ் பல சிறிய பாளையங்கள் அடங்கி இருக்கும். எடுத்துக்காட்டாக கன்னிவாடி பாளையக்காரர் திண்டுக்கல் பகுதி யிலிருந்த 14 பாளையங்களுக்குத் தலைவராக இருந்தார். பாளையப்பட்டுக்காரர்கள் தங்களுக்கு உட்பட்ட எல்லை களில் வரித்தண்டல் செய்து, அதில் மூன்றில் ஒரு பங்கை நடுவண் ஆட்சிக்குக் கொடுத்துவிட்டு, ஒரு பங்கைத் தங்கள் சொந்தச் செலவுக்கும், மற்றொருபங்கைப் படைச்செலவுக்கும் செலவழித் துக் கொள்ள வேண்டும். அரசருக்குத் தேவைப்படும் போது, தங்கள் பாளையத்திற்கேற்றாற்போல் படைகளை அனுப்புவர். இதைப் போலவே, பாளையக்காரர்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட பாதுகாப்பைப் பார்த்துக்கொள்வர்; வழக்குகளை உசாவித் தீர்ப்புக் கூறுவர்; அரசருக்கு வேண்டிய உதவிகளையும் செய்வர்; தங்கள் பகுதியில் குறிப்பாகச் சட்டத்தையும், ஒழுங்கையும் ஏற்படுத்தி அமைதியைக் காப்பது இவர்களின் கடமை ஆகும். ஒவ்வொரு வரும் பாளையக்காரரின் ஆணைகளுக்கு உட்பட்டே நடப்பர். பல தரப்பட்ட தொழிலாளர்களும், தொழிலாளர்கழகங்களும் பாளையத்திவிருந்தன. இவை யாவும் முடிசூடா மன்னரான பாளையக்கராருக்குக் கீழ்ப்படிந்தே நடக்கும். 3. தாராட்சி பாளையக்காரர் பகுதிகளிலும் மரபுவழி வந்த ஊராட்சி முறை நடைமுறையிலிருந்தது. ஆனால், விசயநகர ஆட்சிக் காலத்தில் ஆயக்கார் முறை என்று தமிழகத்திற்கு புதுமையான முறை ஒன்று கொண்டுவரப்பட்டது. அதில் காணம், மணியக்காரர், தலையாரி முதலிய பன்னிருவர் அரசால் அமர்த்தப்பட்டுப் பணியாற்றினர். ஆயினும், இம்முறை தமிழகத்தில் இருந்தது என்றும் கர்ணம், மணியக்காரர், தலையாரி ஆகியோர் பரம்பரையாகச் செயல்பட்டனர் என்றும் சிலர் கூறுவர். ஆனால், விசயநகர மன்னர்களால் அறிமுகப் படுத்தப்பட்ட ஆயக்கார் முறையில் ஊர்ச் சபைக்கு வேலையே இல்லாமல் போய்விட்டது. மறவர்களின் ஊர்களில் வரித்தண்டல் செய்தவரை அம்பலக் காரர் என்றனர். இவர் மணியக்காரருக்கு ஒப்பாவார். ஆயக்கார் முறையில் கர்ணம், மணியக்காரர், தலையாரி ஆகியோரோடு நீதி வழங்குவர், தட்டார், கருமார், தச்சர், குயவர், வண்ணார், நாவிதர், செருப்புத் தைப்போர் ஆகிய ஒன்பதின்மருமாகப் பன்னிரெண்டு பேருக்கும் தனித்தனிப் பணிக்கு மானியம் எனப்படும் ஒரு சிறு நிலப்பகுதி கொடுக்கப்படும். அதற்கும் கசறுவரி அல்லது சோடி வசூலிப்பார்கள். இவர்கள் வரிப்பணத் தண்டல் செய்து கணக்குப் பார்த்து மாநில அதிகாரிகளுக்கு அனுப்புவார்கள். அதனை மறு படியும் கணக்குப் பார்த்துப்பின் மாநில அதிகாரிகள் நடுவண் கரு வூலத்தில் சேர்ப்பர். இவ்வாறு இருமுறை கணக்குப் பார்ப்பதால் வரிப் பணத்தை 'இருசால்' என்றனர். (அ) நீதி வழங்குதல் நாட்டின் பொது நீதிபதியாக அரசரே இருப்பர். வழக்குகளை உசாவித் தீர்ப்புக்கூறும் நீதிமன்றங்கள் இருந்தன. இவற்றில் பல நடுவர்கள் இருந்தனர். இத்துறையைப் பிரதானி கண்காணித்தார். பிரதானியே நடுவராகவும் செயல்பட்டார். தலைநகர்களிலும், சிற்றூர் களிலும் நீதிமன்றங்கள் பல இருந்தன. சிற்றூர்களில் பொது மக்களால் அமர்த்தப் பெற்ற இரு நடுவர்கள் இருப்பார்கள். நீதி மன்றங்கள் பல இருப்பினும், மக்கள் அதிகாரிகளிடமும், அரசரிடமும் தங்கள் வழக்குகளை நேரில் கூறித் தீர்ப்புப் பெறுவதுண்டு. சாத்திரங்களில் வல்ல பிராமணர்களை நடுவராக அமர்த்திச் சில வழக்குகளில் தீர்ப்புக் கூறுவதுமுண்டு. குறிப்பாகக் கோயில் பற்றிய வழக்குகளை மன்னரே உசாவித் தீர்ப்பு கூறுவார். எடுத்துக்காட்டாகச் சௌராட் டிரப் பிராமணர்கள் பூணூல் அணியும் தகுதி உடையவரர் என்பது பற்றிய வழக்கையும். இசுலாமியர், கிறித்துவர் பற்றிய வழக்கு களையும் இராணி மங்கம்மாளே உசாவித் தீர்ப்புக் கூறினார். பொதுவாக, ஒரு வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தால் பழக்க வழக்கங்கள், ஆவணங்கள், சாட்சிகள் ஆகியவற்றின் அடிப்படை யில்தான் தீர்ப்பு வழங்குவார்கள். சில சமயங்களில் இம் மூன்றையும் வைத்துத் தீர்ப்புக்கூற முடியாவிட்டால் தெய்வ நம்பிக்கையின் பேரில் சோதனைகளைச் செய்து தீர்ப்புக் கூறுவார்கள். பாளையங் களில் பாளையக் காரர்களே உசாவித் தீர்ப்புக் கூறுவதால் காலத் தாழ்த்தமின்றியும், செலவு இன்றியும் வழக்குகள் உடனுக்குடன் எளிதில் முடிந்துவிடும். (ஆ) தண்டனைகள் இக்காலத் தண்டனைகள் சில கொடுமையானவையாகக் காணப்பட்டன. திருட்டுக்குத் திருடனுடைய கை, கால்களை வெட்டுதல், கொலைக்கு யானைக்காலில் வைத்து இடறச் செய்தல் : சுண்ணாம்புக் காளவாயில் வைத்துச் சுடுதல், பலதிறப்பட்ட சித்திர வதைகளைச் செய்தல் போன்ற தண்டனைகள் இருந்ததாகப் பாதிரி மார்களின் கடிதங்களில் இருந்து தெரிகிறது. கடலோரப் பகுதிகள் இக்காலத்தில் கடலோரப் பகுதிகளில் குடியேறிய போர்த்துக் கீசிய வணிகர்கள் கடற்படை வைத்திருந்தனர். தங்களின் குடியிருப்பு கள், தளவாடங்கள், கொட்டில்கள் ஆகியவற்றையும், அவை தொடர்பான வழக்குகளையும் அவர்களே கண்காணித்துக் கொண்டார்கள், கடற்படை இல்லாத நாயக்க மன்னர்கள் அவர்களே இவற்றைக் கவனித்துக்கொள்ளுமாறு விட்டுவிட்டனர். இதனால் போர்த்துக்கீசியர்கள் கடலோரத்திலிருந்த பரதவர்களைத் துன்புறுத்தி மதமாற்றம் செய்தனர். இவர்களுக்குப்பின் வந்த தச்சு வணிகர்களும் இதே முறையைப் பின்பற்றினர். ஆனால் இவ்விருவருக்கும் இடையே போட்டிகளும், சச்சரவுகளும் ஏற்பட்டன. இதற்குக் காரணம் அவர்களுக்கு அவர்களின் மன்னர்கள் கொடுத்த உரிமைகள்தான்.. இ வரிமுறைகள் மதுரை நாயக்கர் ஆட்சி, விசய நகராட்சியில் முளைத்ததாகும். இதனை நாயக்கர் ஆட்சியின் வரித்தண்டல் முறையால் நன்கறிய லாம். ஆயினும், வரித்தண்டல் முறையில் தமிழக மரபுகள் பெரிதும் கடைப்பிடிக்கப்பட்டதைக் காண்கிறோம். நிலவரி தரத்திற்கும், நீர்ப்பாசனத்திற்கும், விளைச்சலுக்கும் ஏற்றவாறு நிர்ணயிக்கப்பட்டது. இதனை உழவருக்கு ஏற்றவரி என்பார்கள். ஒரு இரட்டை மாடு, கலப்பை வைத்துக் கொண்டு ஒட்டும் தரமே 'ஏர்தரம்' எனப்படும். பஞ்ச காலத்திலும், பயிரில்லாத காலத் திலும், நிலவரி தண்டல் செய்வதில்லை. வீட்டுமனை, தோப்புத் துரவு, ஆடு, மாடு, முதலியவற்றிற்கும் வரி உண்டு. உப்புக் ஓவல் வரியம்மாடி, வரிவாக இதனைச் சொத்துவரி என்பர். வாணிகம் செய்வோர் வணிகவரியும், கடை வைத்து விற்பனை செய்வோர் விலைக் காணம் எனும் வரியும், சந்தைகளுக்குக் கைவிலைப்பணம் என்ற வரியும் செலுத்தினர். கருமான், தச்சன், கம்மாளன், குயவன், வண்ணான், வாணிகன், முதலியோரிடம் இருந்து தொழில் வரியும் தண்டல் செய்தனர். நியாயத்தார், மன்றாடி, வரிவாங்குவோர் ஆகியோரிடம் இருந்து அலுவல் வரியும் தண்டல் செய்யப்பட்டது. பரத்தையர், உப்புக் காய்ச்சுவோர், கள் இறக்குவோர் முதலியோரும் வரி செலுத்தினர். தறிக்கடமை, செக்குக்கடமை, அரிசிக்காணம், பொன்வரி, புல்வரி (மேய்ச்சல் வரி), பட்டாடை நூல் ஆயம், மரக்கலவரி, கொதிக்கல வரி (உலைவரி), முதலிய வரிகள் தொழில்வரிகளாகத் தண்டல் செய்யப்பட்டன. படைச்செலவுக்கென தண்டப்பட்ட வரிக்குப் படைக்கொடை என்று பெயர். கோட்டைப் பணம், பட்டணக்காணிக்கை, வில்வரி, சூலவரி ஆகிய வரிகள் போர்க் களப் படைகளுக்காகத் தண்டல் செய்யப்பட்டன. வில், வாள், சூலம் வைத்திருப்போரும் வரி செலுத்தினர். இதனை உரிமக் (லைசன்ஸ்) கட்டணம் எனலாம். வலங்கை , இடங்கைப் பிரிவுகளிடம் இருந்தும், சாதி வாரி யாகவும் கோயில் பராமரிப்புகளுக்கும், அறக்கட்டளைக்களுக் குமாகத் தண்டல் செய்யப்பட்ட வரி, சமுதாயம் குழுவரி எனப்படும், இதனைச் சமுதாய நலவரி எனலாம், ஏரி, குளங்களில் செலுத்தியவரி வத்தைவரி என்றும், வயல்களுக்கு நீர்ப் பாய்ச்சுவதற்குச் செலுத்திய வரி நீர்ப்பாட்டம் என்றும், ஊர்க் காவலுக்குச் செலுத்தப்பட்ட வரி பாடிக்காவல் வரி, அரசு கட்டளைப்படி செயல்படும் அலுவலர் களுக்குப் பொதுமக்கள் செலுத்தும் வரிகள் கருணிகசோடி, தலை யாரிக்கும், நாட்டுக் கணக்கு, இராயவர்த்தனை, அரசரவர்த்தனை, அதிகாரவர்த்தனை, நிருபச் சம்பளம் முதலியவாகவும் அறியப் பட்டன. கலப்பை ஒன்றுக்கு இவ்வளவு வரி என்று உழவர் செலுத் திய வரிக்கு ஏர் வரி எனப்பட்டது. கோயில்களுக்கு கடமை, மகமை, காணிக்கை, கட்டணம், வரி, இறை, கட்டாயம் முதலியன செலுத்தப்பட்டன. காடு, நீதிமன்றங்களில் போடப்படும் தண்டங்கள், கடற் கரைப்பகுதிகள் முதலியவற்றில் இருந்தும் அரசுக்கு வருவாய் கிடைத்தது, பாளையப்பட்டுக்காரர்கள் தங்களின் வரித்தண்டலில் இருந்து மூன்றிலொரு பங்கை அரசுக்குத் கொடுத்தனர். முத் தெடுப்போர், சங்கு அறுப்போர் ஆகியோரும் வரி செலுத்தினர். இந்த வருவாய்களைத் தச்சுக்காரர்கள் பெற்றனர். ஊர்களில் வரித்தண்டல் செய்பவர் மணியக்காரர் ஆவர். மறவர் ஊர்களில் வரித்தண்டல் செய்தவர் அம்பலக்காரர் தமிழக சமூகப்பண்பாட்டு வரலாறு எனப்பட்டார். இவருக்குத் துணையாகக் கர்ணமும், தலையாரியும் இருந்தனர். பொதுவாக வரித்தண்டல் ஆண்டுதோறும் நவராத்திரியில் {அக்டோபர்) தொடங்கும். வரிகளைப் பணமாகவும், பண்டமாகவும் கொடுக்கலாம். இதனை முறையே பொன் முதல் என்றும், நெல் முதல் என்றும் அழைப்பர். பிற்காலச் சோழர் காலத்தில் இவற்றைக் காசு ஆயம். நெல் ஆயம் என்று அழைத்தனர். திருவண்ணாமலை தேவிகாபுரம் சிவன்கோயில் கல்வெட்டொன்றில் நன்செய் வரியைப் பொன்னாயமாகவும், நெல்லாயமாகவும் மக்கள் செலுத்தினார்கள் என்று பொறிக்கப்பட்டுள்ளது. மக்களின் நிகர வருவாயில் ஏறத்தாழ பாதி வருவாயை மக்கள் வரியாகச் செலுத்தினார்கள் என்று பாதிரிமார்களின் குறிப்புகளில் இருந்து அறிகிறோம். பொதுவாக ஆறிலொரு பங்கு வரியே வாங்கப்பட்டதைத் தமிழ் மரபில் காண்கிறோம். ஆனால், நாயக்கர்கள் பாதிக்குப் பாதி வரிவாங்கி உள்ளனர். இவ்வாறு வரிகளால் கிடைத்த வருவாயை அரசாங்கம் படைகளுக்கும் கோயில்களுக்கும் நீர்ப்பாசன வசதிகளுக்கும் கோட்டைக் கொத்தளங்கள் கட்டுவதற்கும் அரண்மனைச் செலவு களுக்கும் செலவிட்டது. ஈ) சமுதாய வாழ்க்கை விசயநகர நாயக்கர் காலச் சமூதாயம் இடைக்காலச் சமுதாயம் என்று அழைக்கப்பட்டது. இதில் இந்துக்கள், இசுலாமியர், கிறித்து வர், கன்னடர், தெலுங்கர் முதலியோரும், ஐரோப்பிய நாட்டவரும் அடங்குவர். எனவேதான் இந்தச் சமுதாயத்தைக் கலப்படச் சமுதாயம் என்றனர். இந்தியச் சமுதாயம் குறிப்பாகத் தமிழ்ச் சமுதாயம், பெருங்கற்காலம் முதல் நவீன காலம் வரையில் உலகின் பல்வேறு இனத்தவரும், மொழியினரும், சமயத்தவரும் வந்து சென்றிருந் தாலும் ஆடாமல், அசையாமல் சாதி என்னும் கடைக்காவின் மேல் நின்றுவிட்டது. இதன் அலங்கோலத்தை விசயநகர நாயக்கர் காலத்தில் தெளிவாக அறியலாம். இக்காலத்தில் சமுதாயம் சாதிகளாய்ப் பிரிந்து இருந்தது. சாதிகள் சலுகைப் போராட்டங்களில் முடுக்கமாய் ஈடுபட்டிருந்தன. இதற்கு ஒரே காரணம் ஆட்சிகள் மாறினாலும், காலச்சுவடுகள் மறைந்தாலும் பிராமணர்களின் உயர்வு அழியவில்லை. அவர்களை ஒரு எடுத்துக் காட்டாகக் கொண்டு கோபுரச் சிகரத்தின் உச்சியாகக் கொண்டு சமுதாயம் படிக்கட்டுகளாய் அமைந்துவிட்டது. இக் காலத் தில் இதன் பல்முனை வளர்ச்சிக்கான ஏந்துகள் ஏற்பட்டுவிட்டன. ஏறத்தாழ 20 ஆண்டுகள் நாயக்கர் ஆட்சி தமிழகத்தில் நிலவி, இருந்தது. இக்கால கட்டத்தில் தமிழர்கள் போர்கள், பஞ்சம், பட்டினிகள் முதலியவற்றை அதிகமாகவும், பசுமை, அமைதி ஆகிய வற்றைக் குறைவாகவும் பாளையக்காரர் ஆட்சியில் குறுகிய மனப் பான்மையுடன் செயல்பட்ட சாதிக்கேற்ற நீதியையும் சந்தித்தனர். விசயநகர மன்னர்கள் இந்துக்கள், பழமைவிரும்பிகள், புரட்சி மனப் பான்மை அற்றவர்கள், இதையேதான் நாயக்கர்களும் பின்பற்றினர். எனவே சமுதாய நலம், அல்லது சமுதாய மாற்றம் இக்காலத்தில் ஏற்படவில்லை . இசுலாமியரும், மராத்தியரும் ஒரு புறம் கொடுமைப் படுத்தத் தளவாய்களும், பிரதானிகளும் உடன் பிறந்தே கொல்லும் நோய்போல் மக்களை வாட்டி வதைக்கக் கோயில்களுக்கும், பிராமணர் களுக்கும் செலவழிப்பதே வானுலகம் செல்லும் உபாயமெனக் கருதிய நாயக்கர்கள் மக்கள் நலனுக்காக எதையும் செய்யவில்லை . அவர்களுக்குச் சாதகமாகக் சாதியப் பிரிவினைகள் அமைந்துவிட்டன. சாதிப் பிரிவுகள் பிராமணர் சமுதாயத்தில் மிக உயர்ந்த சாதி பிராமணச் சாதி, இதில் ஆந்திரப் பகுதிகளில் வந்து குடியேறிய தெலுங்குப் பிராமணர்கள், கன்னட நாட்டில் இருந்து வந்து குடியேறிய கன்னடப் பிராமணர்கள் முதலிய மொழிவழிப் பிராமணர்களும், சைவ, வைணவ பிராமணர்களும் மேல்பிரிவினர்களாக இருந்தனர். நாயக்கர் ஆட்சியில் பெரும் பதவிகளான தளவாய், பிரதானி, இராயசம் முதலிய பதவிகளில் பிராமணர்களே இருந்தனர். அதுவும் தெலுங்கு நாட்டில் இருந்து வந்த பிராமணர்களே இப்பதவிகளில் இருந்தனர். இவர்கள் நாயக்க மன்னர்களுக்குள்ளேயே சாதிப் பிரிவுகளைக் கற்பித்து வேறுபடுத் தினர். சௌராட்டிராவில் இருந்து வந்த பிராமணர்களுக்குப் பூணூல் அணியக்கூடாது என்ற சட்டத்தை ஏற்படுத்தினார்கள். இதனை எதிர்த்துப் போராடிய சௌராட்டிரப் பிராமணர்கள் மங்கம்மாள் காலத்தில் பூணூல் அணியும் உரிமை பெற்றனர். வேளாளர் பிராமணருக்கு அடுத்த நிலையில் இருந்த இவர்களில் பெரும் பாலோர் நிலச் சொந்தக்காரர் ஆவர். இவர்களின் சமுதாய அமைப் புக்குச் 'சித்திரமேழிப் பெரியநாடு' என்று பெயர். கலப்பையில் உள்ள கைப்பிடிதான் மேழி எனப்படும். வேளாண்மைப் பொருள் களைக் கொண்டு இவர்களில் ஒரு பகுதியினர் வாணிபம் செய்தனர். சிலர் விவசாயக் கூலிகளாக இருந்தனர். பழக்கவழக்கங்களில் சைவபிராமணர்களைப் போலவே வேளாளர்கள் இருப்பர், மன்றாடியர் இவர்களை கோபலர், இடையர்கள், என்றும் அழைப்பர். தெலுங்கு நாட்டில் இருந்து வந்தவர்கள் யாதவாள் என்றும் கொல்லிடையர் என்றும் அழைக்கப்பட்டனர். பசுக்களை வளர்த்தும் பால்பொருள்களை விற்றும் வாழ்க்கை நடத்தினர். மன்றாடிகள் ஆடு மேய்ப்பவர் என்றழைக்கப்பட்டனர். கோயில்களுக்குத் தூண்டா விளக்கு எரிப்பதற்காக விடப்படும் ஆடுகளை மேய்த்து, நெய் விளக்கேற்ற உதவியதால் இவர்கள் மன்றாடியர் எனப்பட்டனர். நெசவாளர்கள் ஆடை இல்லாமல் வாழ முடியாது. இதனை ஆக்கித் தருபவர்கள் நெசவாளர்கள். எனவே, இவர்களுக்குச் சமுதாயத்தில் மதிப்பு உண்டு. இவர்களைக் கைக்கோளர் என்றும் அழைப்பர். இவர்களிலும் தமிழ்நாட்டுக் கைக்கோளர், தெலுங்கு நாட்டுக் கைக் கோளர்கள் (தேவாங்கர்) என்று இருந்தனர். இவர்களுக்குத் தனியே கைக்கோளர் தெருக்கள் இருந்தன பல்லக்கில் சவாரி செய்யவும், சங்கு ஊதிச் செல்லவும், கைக்கோளர்கள் சலுகைகள் பெற்றனர். 'பறையரில் சிலர் நெசவுத்தொழில் செய்தனர். அவர்களுடைய தறியைப் பறைத்தறி என்றனர். அய்யன் திருவள்ளுவப்பறையணும் நெசவுத் தொழில் செய்தார் என்பதை அறிவோம். தென்பாண்டி நாட்டிலிருந்த பரதவர்களில் சிலர் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந் ததை அறிகிறோம், துணிகளுக்கு வண்ணம் தோய்த்தும். ஆடை களை விற்றும் கைக்கோளர்கள் வாழ்ந்தனர். நெசவுத் தொழிலைச் செய்ய இத்தகைய பல்வேறு இனத்தவரும், பாலாடையன்ன மேலாடை செய்தவரும், வண்ணம் தோய்த்தவருமாகப் பல்வேறு உட்பிரிகள் கைக்கோளரில் ஏற்பட்டன. இதனை ஏசுசபைப் பாதிரிமார்களின் குறிப்புகளால் நன்கு அறியலாம். மதுரை நாயக்கர் காலத்தில் தண்டல் செய்யப்பட்ட வரிகளை எண்ணிப் பார்த்தால் அந்த வரிகளே சாதிகளின் பெயரால் அமைந்து இருப்பதை காணலாம். காலப்போக்கில் ஒருசில சாதிகள் கூட்டாக இணைந்து உரிமைகளைப் பெறப் போராடின. இதற்கு அஞ்சு வண்ணத்தார். கம்மாளர் முதலியோரின் தொழிலாளர் இணையங் களைக் கூறலாம். தங்கள் சாதியின் மேன்மையைக் காத்துக் கொள்ளவும் இத்தகைய இணையங்கள் ஏற்பட்டன. இதற்குச் சித்திரமேழி நாட்டார் அணியைக் கூறலாம். கி.பி.11 ஆம், 12ஆம் நூற்றாண்டுகளில் தென்னகச் சமுதாயத்தையே ஆட்டிப் படைத்த வலங்கை, இடங்கைப் பிரிவுகள் இருபெரும் கூட்டணிகளின் இணையங்களாகும். இது மதுரை நாயக்கர் காலத்திலும் இருந்தது. இப் பிரிவுகளின் பெயரால் அரசு சமுதாயக் குழு வரி என்னும் புதியவரியைத் தண்டல் செய்தது. சாதிக்கேற்ற வரியோடு, சாதிக் குழுக்கேற்ற வரியும் வந்தது. வரி செலுத்துவதால் சாதிகளை அரசு அங்கீகாரம் செய்துவிட்டது என்பது பொருள். சாதிய உரிமைகளை, மரபுகளைக் காப்பதும் அரசின் கடமையாயிற்று. வலங்கை - இடங்கைப்பிரிவுகளில் வகைக்கு 98 சாதிகள் இருந் தன. இவை எந்த அடிப்படையில் பிரிக்கப்பட்டன என்று தெரியவில்லை . ஆனால், டி.டபிள்யு. எல்லிஸ் என்பார் உழுகுடிகள் அனை வரும் வலங்கையர் என்றும், வாணிகர்கள், கைவினைஞர் என்றும் மற்றும் பலர் இடங்கையர் என்றும் கூறுகிறார். இதனை ஏற்க முடிய வில்லை. சோழர்காலத்தில் இடங்கைமாசேனை, வலங்கை மாசேனை என்ற படைப்பிரிவுகள் இருந்தனவென்றும், அதன் வழி இந்த வலங்கை - இடங்கைப் பிரிவுகள் ஏற்பட்டிருக்கலாமென டாக்டர் கே. ஆர். அனுமத்தன் கூறுகிறார். இந்த இரண்டு பிரிவினருக்குள்ளே ஏற்பட்ட சண்டை, சச்சரவு களைப்பற்றி அறிய பல கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. ஆயி னும், இந்த இரண்டு பிரிவினரும் ஒன்றிணைந்து கி.பி. 1429-ல் ஒரு பெரிய கிளர்ச்சியில் ஈடுபட்டனர். பிராமணர், வெள்ளாளர் முதலியோர் வேளாண் தொழிலாளர்ளைக் கொடுமைப்படுத்துவதை எதிர்த்துதான் இக் கிளர்ச்சி நடந்தது. தெலுங்கரும், கன்னடரும் தமிழ்நாட்டில் ஏராளமாகத் தாராள் மாகக் குடியேறினார்கள். அவர்களுடைய நாட்டிலே இருந்த சாதிகளை இங்கேயும் இறக்குமதி செய்துவிட்டனர். இதனால் ஒரே சாதியில் மொழிவழிச் சாதிப்பிரிவுகளும் தோன்றின, எடுத்துக்காட் டாகத் தமிழ் - சக்கிலியர், தெலுங்குமாதி என்ற இரு பிரிவுகள் ஒரே சாதியில் ஏற்பட்டன. மறவர்கள் தென்பாண்டி நாட்டை 'மறவர் நாடு' என்றே அழைப்பர். இவர் களிலும் கள்ளர், மறவர், அகமுடையர் முதலிய பிரிவுகள் இருந்தன. இவர்களில் சிலர் தங்கனளச் சத்திரியர் என்றழைத்துக்கொண்டனர். தமிழகத்தில் என்றுமே, பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற நான்கு வர்ணப்பாகுபாடு இருந்தது கிடையாது. சாதிகளாகத் தானிருந்தது. இவர்களில் பலர் பாளையக்காரர்களாயிருந்தனர். பாளையப்பட்டு முறை அழிவுற்றபின் வழிப்பறிக் கள்ளர்களாய் மாறிய சிலர் ஆங்கிலேயர் காலத்தில் குற்றப் பிரிவினர் என்றழைக் கப்பட்டனர். அயல்நாட்டார் குடியிருப்புகள் போர்த்துக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், ஃபிரஞ்சுக்காரர்கள், ஆகியோர் கீழைக் கடற்கரைப் பகுதிகளில் குடியேறித் தங்கள் குடி யிருப்புக்களை அமைத்துக் கொண்டனர். இவர்களைப் போலவே அரபுக்களும் துருக்கிய முசுலீம்களும் குடியிருப்புக்களை அமைத்துக் கொண்டனர். இவர்கள் மாதாக் கோயில்களைக் கட்டிக் கொள்ளவும், கிறித்துவத்தைப் பரப்புவதற்கும் அனுமதி பெற்றனர். ஏற்கனவே, பரவிவிட்ட இசுலாம் மதத்தினருக்கும், அவர்கள் மசூதிகளைக் கட்டித் தொழுகை நடத்தவும் நாயக்கர்கள் அனுமதித்தனர், இவ்வாறு, தன்னக. அயலக சாதி, சமயங்கள் வேரூன்றிவிட்ட தமிழகத்தில் சமுதாய நிலை எப்படி இருந்திருக்கும் என்பதை எண்ணிப்பார்ப்போம். சமுதாய வாழ்க்கை ஆண்கள் பல மனைவியரை மணக்கும் வழக்கமுடையவ ராயிருந்தனர். அரசர்கள், உயர் அலுவலர்கள், செல்வந்தர்கள் ஆகியோரிடம் இவ்வழக்கம் அதிகம் காணப்பட்டது. கணவன் இறந்தவுடன் மனைவியர் அனைவரும் உடன்கட்டையேறினர். எடுத்துக்காட்டாக இராமநாதபுரம் கிழவன் சேதுபதி இறந்தபோது அவனுடைய 47 மனைவியரும் உடன்கட்டை ஏறினர். மூன்றாம் முத்து வீரப்ப நாயக்கர் இறந்தபோது அவருடைய மனைவி கருவுற் றிருந்ததால் உடன் கட்டை ஏறாமல் இருந்து குழந்தை பிறந்தவுடன் பன்னீர் குடித்து சன்னி கண்டு இறந்தாள். இதுவும் தற்கொலைதான். பெண்கள் நாயக்கர் காலத்தில் பெண்கள் ஆண்களைப்போல் கல்வி கற்க வில்லை ஆனால், இசை நடனம் முதலிய கலைகளில் வல்லவரா யிருந்தனர். கோயிலுக்குப் பொட்டுக்கட்டி விடும் தேவ தாசிமுறை' வழக்கத்திலிருந்தது. இவர்களைத் தவிர பரத்தியர் என்ற தனி வகுப்பே இருந்தது. இவர்கள் அரசுக்குத் தொழில்வரி கட்டினர். " உறவினர் இறந்துவிட்டால் பெண்கள் தலைமையிரை விரித்துப் போட்டுக் கொண்டு மார்பில் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைத்து அழுவார்கள். கல்வி இக்கால மன்னர்கள் தெலுங்கர்கள். இவர்களுக்குத் தமிழை வளர்க்க வேண்டுமென்ற உணர்வே கிடையாது. திண்ணைப் பள்ளிக்கூடங்களில் மணலைப் பரப்பி அதில் சமுதாயம் நன்கு மதித்த வசதி படைத்த சில சாதியார் மட்டுமே கல்விக் கற்றனர். ஊராரே சொந்த செலவில் எளிய கணக்கு, எழுதப்படிக்கக் கற்கும் திண்ணைப்பள்ளிக் கூடங்களை ஏற்படுத்தி இருந்தனர். இவற்றில் தாழ்த்தப்பட்டக் குழந் தைகளைத் தீண்டாமை காரணமாக அனுமதிக்க மாட்டார்கள். கல்வி யில் சமயக்கல்வியே பெரும்பங்கு வகித்தது. கோயில்களிலும், மடங் களிலும் நிகழ்ந்த கல்விக் கூடங்கள் சமயக் கல்விக் கூடங்களேயாம், பிராமணர்களுக்கென்றே அவை செயல்பட்டன. திரு வண்ணாமலை மாவட்டம் ஆரணிக்கு அண்மையிலுள்ள அடையபுலம் என்ற ஊரில் அவ்வூரில் பிறந்த அப்பைய்ய தீட்சதர் தலைசிறந்த சமற்கிருதப்புலவரும், வேதவிற்பனரும் ஆவார். அவர் வேலுாரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட விசயநகர மன்னர்க ளான சின்ன பொம்மு, சின்ன திம்மு, வெங்கடாபதி காலத்தில் பிரா மணர் கற்றுத் தேறுவதற்கென்றே அவ்வூரில் ஒரு வேத பாட சாலையை நிறுவினார். இச்சாலையில் 500 பிராமண மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கான எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார். இதைப் போலவே காஞ்சிபுரம் அருளான பெருமாள் கோயி வில் வேதபாராயணத்திற்காகவே ஒரு வேத பாடசாலை அமைக்கப் பட்டது. வேத பாடசாலைகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஊதியமாக நிலங்கள் மானியமாக வழங்கப்பட்டது. கி.பி. 1535 - ஆம் ஆண்டு வேலூாருக்கு அருகிலுள்ள விரிஞ்சிபுரத்தில் வேதங் களைக் கற்பிப்பதற்கு என்றே ஒரு வேதபாடசாலை அமைக்கப் பட்டது. அதன் விருத்திக்காக நிலமானியம் அளிக்கப்பட்டது.) இவ்வாறு, வேதாந்த கல்விக்குச் சிறப்பிடம் தரப்பட்டதை டி. நொபிளியும் தனது குறிப்பில் எழுதிவைத்துள்ளார். மதுரையில் மட்டும் 10,000 மாணவர்கள் பயின்றனர் என்றும், இவர்களுக்கு மதுரை நாயக்க மன்னர்கள் உணவு, உடை, உறைவிடம் முதலிய வற்றை அளித்து உதவினர் என்றும், இவர்கள் சமயப் பாடல் களைப் பாடுவதற்கும் நல்ல பயிற்சி அளிக்கப்பட்டது என்றும் குறிப்பிடுகின்றார். 1423 - ல் நாயக்கர் காலத்தில் வடமொழி வேதம், திராவிட மொழி வேதம், மற்றும் வேதாந்த விளக்கங்களைக் கற்பதற்கும் நிலம் தானமாக அளிக்கப்பட்டது. தமிழிலே கற்றாலும் அவை வேத இலக்கியங்களாகவே இருந்தன. அறிவியலில் சோதிடம், வானஇயல், மருந்துவம் ஆகியவைப் பற்றியும் சிறிது கற்பிக்கப்பட்டன. இவையும் பரம்பரைக் கல்வி யாகவே கற்பிக்கப்பட்டன. இதனால் குறிப்பிட்ட சமூகத்தோரே அறிவியல் கல்வியைக் கற்க முடிந்தது. கணிதமும், வாணிபமும் தொடர்பான கல்வியை வாணிக வகுப்பாரே கற்க முடிந்தது. நீதி, நிருவாகம், போர்முறைகள் போன்ற கல்வியை அரச குடும்பத்தினரே கற்க வாய்ப்பளிக்கப்பட்டது. எனவே, நாயக்கர் காலத்தில் சமயக் கல்வியாயினும், அறிவியல் கல்வியாயினும் பொதுக்கல்வியாக அல்லது பொது மக்கள் கல்வியாக அமையவில்லை. பொதுவாக மதுரை நாயக்கர்கள் தமிழையும், தமிழரையும் அடியோடு புறக்கணித்தனர். சமற்கிருதம், தெலுங்கு ஆகிய வற்றிற்கே முதலிடம் அளித்தனர். ஆயினும் கிறித்துவ சமயப் பரப்பு ஊழியர்கள் சாதி, சமய வேறுபாடின்றி அடிப்படைக் கல்வியை அனைத்து மாணவர்களுக்கும் கற்பித்தனர். இராபட்-டி - நொபிளியின் முயற்சியால் அச்சு இயந்திரம் அமைக்கப்பட்டுப் பல அரிய நூல்கள் அச்சிடப்பட்டுத் தமிழர்களின் நூலறிவு வளக்கப்பட்டது. சோசப்பு பெசுசி என்னும் இத்தாலி நாட்டுப் பாதிரியார் தன் பெயரை வீரமாமுனிவர் என்று மாற்றிக்கொண்டு, அவர் தமிழ்மொழிக்குக் குறிப்பாகத் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்திற்குச் செய்த தொண்டு தமிழ் உள்ளளவும் நன்றியோடு நினைக்கக் கூடியவையாம். எடுத்துக் காட்டாக எ,ஒ, எனும் குறில் எழுத்துக்களுக்கு ஏ, ஒ ஆகிய நெடில் எழுத்துகளைக் கண்டு பிடித்தவரே அவர்தான். இதைப் போலவே கெ, கே, கொ கோ முதலிய உயிர்மெய் எழுத்துகளின் வரிவடிவங் கனளயும் கண்டவர் அவரே. சதுரகராதி, தமிழ்-இலத்தீன் அகரமுதலி, தமிழ் - போர்த்துக் கீசிய அகரமுதலி, தமிழ் - ஃபிரெஞ்சு அகரமுதலி முதலிய அரிய நூல்களை இவர் எழுதினார். தான் இறந்தவுடன் . இங்கே அடைக்கலம் செய்து, சமாதியின் மேல் 'தமிழ்மாணவன்' என்று எழுதச் சொன்னார். இசுலாமிய சமயத்தைச் சேர்ந்த உமறுப்புலவர் என்பவர் நபிகள் நாயகத்தின் வரலாற்றைத் தமிழில் எழுதினார். இதற்குச் சீறாப்புராணம் என்று பெயர். எனவே, தமிழ் அரசின் ஆதரவு இல்லாமலே வளர்ந்தது. சமயம் நாயக்கர் காலத்தில் சைவம், வைணவம் ஆகிய இந்துச் சமயங்களும், இசுலாம், கிறித்துவம் ஆகிய வெளிநாட்டுச் சமயங் களும் மக்களால் பின்பற்றப்பட்டன. மதுரையில் சக்தி வழிபாடு திரு மலை நாயக்கர் காலத்தில் இருந்து பிரபலமடைந்தது. மதுரை மீனாட்சி வழிபாடும் வலுவடைந்தது. வைணவத்தில் வட கலை, தென்கலை பிரிவுகளும், வழிப்பாட்டு முறைகளும் இருந்தன. இக்காலத்தில் மதுரை வீரன் வழிபாடும் பெரும்பாலான மக்களால் பின்பற்றப் பட்டது. மதுரையிலும், திருச்சியிலும் இசுலாமியர் அதிகம் இருந்தனர். வீரப்ப நாயக்கர் (கி.பி. 1572-1585) காலத்தில்தான் முதன் முதலாகக் கிறித்துவம் மதுரையில் கால்கொண்டது. பெர்ணாண்டசு பாதிரியார் மதுரையில் மாதாக் கோயிலைக் கட்டி, 'குருமார்குழு' ஒன்றையும் ஏற்படுத்தினார். மேல் சாதிக்காரர்களைக் கிறித்துவராக்கும் முயற்சி யில் இவர் தோற்றார். ஆயினும், பரதவர் முதலியோரிடையே கிறித்து வம் வெகுவாகப் பரவியது. இராபர்ட்-டி - நொபிளியும் கிறித்துவத்தைப் பரப்புவதில் சிறிது வெற்றி கண்டார். இவர் காலத்தில் திருச்சியில் பொதுமக்கள் சமயப் பரப்பூழியர்களை அடித்துத் துன்புறுத்தினர். இவ்வாறு கலகம் ஏற்படும்போது திருமலை நாயக்கரும், சொக்கநாத நாயக்கரும் தலையிட்டுச் சமாதானம் செய்துள்ளனர். மறவர் நாட்டில் ஒரு சிற்றரசர் கிறித்துவம் தழுவியதற்காக மற்றவர்கள், பாதிரிமார்களைத் துன்புறுத்தினார்கள். அவ்வரசரைக் கிறித்துவராக்கிய பாதிரியார் சான் - தி - பிரிட்டோ என்பவரைக் கொன்று விட்டனர். இத்தனை எதிர்ப்புகளையும் தாண்டி கிறித்துவம் மறவர் நாட்டிலும் வளர்ந்தது, கள்ளர், மறவர்கள் நாயக்கர் களாகவும், சிற்றரசர்களாகவும் இருந்தும் அவர்களுக்கு ஒரு கல்விக் கூடத்தையும் அமைக்கவில்லை. ஆனால், பாதிரிமார்கள் கள்ளர்களுக்கென்றே பள்ளிகளை அமைத்தனர். உ) கலைகள் 1 கட்டடக்கலை - நாயக்கர் காலக் கட்டடக்கலையில் பாண்டியர், விசயநகர மன்னர்களின் கட்டடக் கலைச் சாயலே அதிகம் இருக்கும். மது ரையை நடுநாயகமாகக் கொண்டு வளர்ந்த கட்டடக் கலையின் மாண்பு பாண்டியர் காலத்தில்தான் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து விசயநகரப்பாணி சிறப்புற்றது. ஆயினும், மதுரையைக் கோநகராகக் கொண்டிருந்த நாயக்கர் காலத்தில்தான் மதுரையில் கட்டடக் கலைப் பாண்டியரைத் தொடர்ந்தே வளர்ந்தது எனலாம். எனவேதான், நாயக்கர் காலக் கட்டடக்கலையைப் பாண்டியர் கட்டடக்கலையின் மறுமலர்ச்சிக் கட்டடங்கள் என்கின்றனர். பாண்டியர்களைப் போலவே நாயக்கர்களும் பழைய கோயில் களைப் புதுப்பித்தும், அவற்றைச் சுற்றிலும் துணைக் கோயில்களை எடுப்பித்தும் கோபுரங்களையும், கலியாண மண்டபங்களையும் அமைத்தனர். மதில்கள் கோயில் மதில்களுக்குப் பக்கத்திலேயே புற மதில்களை வெளிப்புறத்தில் பெரிய அளவில் நாயக்கர்கள் கட்டினார்கள், இதனால் கோயில்களில் அக மதில், புறமதில் என்ன இருமதில்கள் ஏற்பட்டன. இரண்டு மதில்களுக்கும் இடையிலுள்ள நான்கு முலைகளும் ஒரே மாதிரி, ஒரே அகலமுடையனவாயிருக்கும். ஒவ்வொரு மதிலின் நடுவிலும் கோபுரவாயில் இருக்கும். முலைக்கு அண்மையில் மற்றொரு கோபுரமும் இருக்கும். ஒவ்வொரு திருச்சுற்றிலும் நான்கு கோபுரவாயில்கள் இருக்கும். திருச்சுற்றுக்களில் நூற்றுக்கால் மண்டபம், ஆயிரம் கால் மண்டபம், திருக்குளம் ஆகியவை அமைந்திருக்கும். எடுத்துக்காட்டாக: 1. திருவரங்கத்துக் கோயில் நீண்ட சதுரவடிவிலான ஏழு திருச்சுற்றுக்கள் உள்ளன. திருச் சுற்றுகள் முடியும் இடங்களிலெல்லாம் தூண்களும், தூண்களில் ஆளுயரத்திற்கும் அதிகமாகச் சிலைகளும் உள்ளன. அச் சிலைகள் தெய்வப்படிமைகளாகவும், புரவலர்கள் படிமைகளாகவும் உள்ளன. 2. மதுரைக் கோயில் இதில் சொக்கநாதர் கோயில், மீனாட்சிக் கோயில் ஆகிய இரண்டு கோயில்கள் உள்ளன. இவை இரண்டும் 850 அடி நீளமும், 723 அடி அகலமும் உள்ள ஒரு நீள் சதுரமுற்றத்தின் மேல் கட்டப் பட்டுள்ளன. இந்த முற்றத்தின் நான்கு பக்கத்தையும் ஒரு மதில் சூழ்ந்து கொண்டுள்ளது. நான்கு பக்கத்திலுமுள்ள மதில்களின் நடுவில் வாயில்கள் உள்ளன. இதில் இருந்து 200 அடி நீளமும், 100 அடி அகலமும் உள்ள ஒரு பெரிய அகன்ற பாதை செல்லுகிறது. அதன் இரு மருங்கி லும் அழகிய தூண்கள் நிறுத்தப் பட்டுள்ளன. இப் பாதையைக் கடந்த தும் மற்றொரு சிறிய கோபுரவாயில் உள் ளது. இது இரண்டாம் திருச்சுற்றுப் பாதை யின் கிழக்கு வாயிலா கும் இது 310 அடி அகலமும் கொண் ஒளிப்படம் 4 - மதுரை மீனாட்சிக் கோயில் டது. இந்த நீள் சதுரப்' நுழைவாயில் பாதையிலும் பக்கத் திற்கு ஒன்றாக நான்கு கோபுரங்கள் உள்ளன. இந்த இரண்டாம் திருச்சுற்றுப்பாதையின் பெரும் பகுதியை மேற்கூரை மூடிக் கொண்டுள்ளது. வடக்குப் பக்கத்தில் மட்டும் திறந்தவெளி உள்ளது. இரண்டாம் திருச்சுற்றுப்பாதையைக் கடந்து சென்றால் 250) அடி நீளமும் 150 அடி அகலமும் உள்ள மற்றொரு முற்றத்தை அடையலாம். இது முன்னதைவிடச் சிறியது. இதற்குக் கிழக்குப் பக்கத்தில் மட்டும் வாயில் உள்ளது. வாயிலுக்கு வெளியில் பல ஒப்பனைத் தூண்கள் உள்ளன. இத்தூண்களையுடைய மண்டபமே இக்கோயிலின் முக்கிய வேலைப்பாடுடையதாய் உள்ளது, கடைத்திருச்சுற்றுப் பாதைக்கு நடுவில்தான் மூலக்கோயில் உள்ளது. மூலக்கோயிலின் கருவறையின் மேல் அழகிய விமானம் உள்ளது. எதிரில் இடைநாழிகையும், மண்டபமும் உள்ளன. இவை தட்டையான கூரையால் மூடப்பட்டுள்ளன. இவ்வாறு, ஒன்றுக்குள் ஒன்றாகத் திருச்சுற்றுப் பாதைகள் உள்ள கூடங்கள், அவற்றில் நடைவழிப்பாதைகள், இவற்றில் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ள தூண்கள். இவை எத்திசையில் இருந்து நோக்கினாலும் வரிசை வரிசையாகக் காணப்படும் சீர்மை, இதைப்போலவே எத் திசையில் இருந்து பார்த்தாலும் ஒரே வரிசையில் காணப்படும் கோபுரங்கள், இவை யாவும் நாயக்கர் காலக் கட்டடக்கலையின் சிறப்புகளாகும்., இராமேசுவரம் கோயில் திராவிடக் கோயில்களில் மிகப்பெரிய திருச்சுற்றுப் பாதையை உடையது இக்கோயில்தான். இதன்திருச்சுற்றுப் பாதை 17 அடி முதல் 21 அடிவரை அகலமும், 25 அடி உயரமும் உள்ளது. திருச்சுற்றுப் பாதையின் மொத்த நீளம் முழுவதும் கூரையால் மூடப்பட்டுள்ளது. இக்கோயில் இரண்டு கருவறைகளையுடையது. இதன் கோபு ரம் 11 தளங்களையுடைய 150 அடி உயரமுள்ளதாகும். மூலவர் இவிங்க மூர்த்தியாவார். இதனையடுத்து அம்மன் கோயில் உள்ளது. சிறுகோயில்களும் உள்ளன. இவற்றிலொன்று அனுமான் கோயில். தூண்களில் ஆயிரத்திற்கும் மேலாகப் புரவலர்களின் உருவச் சிலைகள் உள்ளன. கடல் நடுவில் உள்ள சிறுதீவில் கடலுக்கு அப்பால் இருந்து கொண்டுவரப்பட்ட பெரிய கற்றூண்களைக் கொண்டு அமைக்கப்பட்ட இக்கோயில் நாயக்கர் காலப் பக்தி உணர்வையும் கலை ஆர்வத்தையும் காட்டுகிறது. 4. தில்லை நடராசர் கோயில் இக்கோயில் பல்வேறு நூற்றாண்டுகளில் பலரால் கட்டப்பட்ட தாகும். இதனுள் உள்ள ஒவ்வொரு பகுதியும். ஒவ்வொரு தொல்கதைகளைக் கூறுகிறது. கி.பி. 10 ஆம் நூற்றாண்டிற்கு முன் பாகவே இக்கோயில் கட்டப்பட்டது. இதன் கீழைக் கோபுரம் 13ஆம் நூற்றாண்டிலும், உமையாள் கோபுரம் 14ஆம் நூற்றாண்டிலும், வடக்கு கோபுரம் 16 ஆம் நூற்றாண்டிலும், ஆயிரம்கால் மண்டபம் 17ஆம் நூற்றாண்டிலும் கட்டப் பெற்றவை என்பது கல்வெட்டுச் சான்றுகளாகும். ஆதி திராவிடக் கட்டடக் கலையின் வளர்ச்சியை 10- ல் இருந்து 17ஆம் நூற்றாண்டு வரை இக்கோயிலிலேயே காணலாம். இதன் மதில் 1040 அடி நீளமும், 730 அடி அகலமும் உடையது. இக்கோயில் 30 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. இதன் கிழக்குக் கோபுரத்தைச் சுந்தர பாண்டியன் கி.பி. 1250 -ல் கட்டினார். வடக்குக் கோபுரம் கிருட்டிணதேவராயர் கி.பி.1520- ல்கட்டியனான். இக்கோயிலுள் தாராசுரம் சோடனையில் அமைந்த மண்டபமும், சக்கரங்களை உடைய, குதிரைகளால் இழுக்கப்படும் தேர் அமைப்பும், அழகிய தூண்களும், பொன்னம்பலம் எனப்படும், ஆயிரம்கால் மண்டபமும், சிவகங்கை யெனப்படும் குளமும் ஆகும். இதனுள் கோவிந்தராசப் பெருமாள் சன்னதியும் உள்ளது. 5. திருவாரூர் - தியாகேசன்கோயில் இக்கோயில் சோழர் காலத்திலேயே கட்டப்பட்டதெனக் கல்வெட்டுகள் கூறுகின்றன. இதில் தியாகேசன், வாண்மீகேசன் ஆகியோருக்குத் தனித்தனி கருவறை உள்ளது. இவை இரண்டுமே அடி நீளமும் 156 அடி அகலமும் உள்ள முற்றத்தில் அமைந் துள்ளன. மூலக்கோயிலில் இரண்டு பெரிய கோபுரங்கள் உள்ளன. கீழைக் கோபுரம் கி.பி. 18ஆம் நூற்றாண்டில் கட்டப்பெற்றுள்ளது இதில் ஐந்து தளங்கள் உள்ளன. மிக அழகிய வேலைப்பாடுகளைக் கொண்ட இக் கோபுரம் திராவிடக் கட்டடக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். 6. திருவண்ணாமலை - அருணாசலேசுவரர் கோயில் ஓரளவு திருவாரூர் கோயில் அமைப்பை ஒத்தததுதான் திருவண்ணாமலை - அருணாசலர் கோயில் ஆகும். இதன் தீழைக் கோபுரம் கி.பி. 1300 -ல் கட்டப்பட்டுள்ளது. இக் கோயிலிலும் சிவனுக்கென்றும், உண்ணாமலை அம்மனுக்கென்றும் இரண்டு கருவறைகள் உள்ளன. திருவாரூர் கோயிலைப் போலவே இக் கோயிலும் அமைந்துள்ளது. 7. தஞ்சைப் பெருவுடையார் வளாகத்திலுள்ள சுப்பிரமணியர் கோயில் தஞ்சைப் பெருஉடையார் வளாகத்திலுள்ள சுப்பிரமணியர் கோயில் கி.பி. 18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. திராவிடக் கட்டடக் கலையின் கடைசிக் கூறுபாடு இக் கோயில் கட்டடமாகும். இக்கோயில் 120 அடி நீளமும், 35 அடி அகலமும் உள்ளது. இக் கோயில் விமானம் பெருவுடையார் கோயில் கட்டடப்பானியுடன் இதனை ஒப்பிட்டு 7 நூற்றாண்டுகளில் திராவிடக் கட்டடக்கலை வளர்ச்சியுற்றப் பாணியைக் காணலாம், பெருவுடையார் கோயிலை யும், சுப்பிரமணியர் கோயிலையும் ஒப்பிட்டுக் காணும்போது கட்டடப் பாணியில் பெரும் மாற்றம் காணப்படவில்லை, ஆனால் ஒப்பனை, சோடனை, எடுப்பு, தோற்றம், முலைகள் இணைப்பு, சாலைகளின் அமைப்பு, அணிவரிசைகள், தூண் பகுதிகள் ஆகிய வற்றில் கூடுதலான சோடனை உறுப்புகள் சேர்ந்துள்ளதைக் காணலாம். ஆனால் அழகும், கருத்தும் நோக்கமும் திராவிடக் கலையில் அன்று முதல் இன்றுவரை ஒரே மாதிரியாய் உள்ளன. முடிவுரை கோபுரங்கள் வளர்ச்சியைப் பாண்டியர் காலத்தில் இருந்து பார்த்தால் முன்னேற்றம் காணப்படுகிறது. விசயநகர ஆட்சிக் காலத்தில் இராயர் கோபுரங்கள் என்று மாறின. திருவண்ணாமலை - அண்ணாமலையார் கோபுரம், மதுரை மீனாட்சிக் கோபுரம், இராமேசுவரம் - இராமசாமி கோபுரம், ஆகியவற்றை விசயநகரப் பாணியினாலான இராயர் கோபுரங்கள்' என்றே அழைப்பர். ஆயிரங்கால் மண்டங்கள் சோழர்காலத்தில் தொடங்கப் பெற்று, விசயநகர, நாயக்கர் ஆட்சி காலங்களில் சிறப்பாக வளர்ந்தன. நாயக்கர் மாளிகை (மகால்) சிறந்த கட்டடமாகக் காணப்பட்டது. மண்டபத்தூண் களில் குதிரை வீரர்களின் உருவங் களைச் சிற்பமாக வடிக்கும் வழக்கம் நாயக்கர் காலத்தில் மிக வும் சிறப்படைந்தது. இத்த கைய தூண்களை நிறுத்திக் கட்டப்பட்ட திருச்சுற்றுப் பாதைகள் நாயக்கர் காலக் கட்டடங்களில்தான் காணப் படுகின்றன. மதுரை மீனாட்சிக் கோயில், புது மண்டபம் ஆகிய திருச்சுற்றுப் பாதைகளை இதற்கு எடுத்துக்காட்டாகவும் அவற்றோடு மதுரை திருமலைநாயக்கர் மகாலை யும் கூறலாம். இதிலுள்ள வளைவு கள் இசுலாமியப் பாணியினாலா ஒளிப்படம் - வீர அய்யனார் சிற்பம் ஓவியக்கலை திருப்பரங்குன்றம் - சமணர் ஓவியங்கள் நாயக்கர் கால ஓவியங்களில் சிறப்பானவை திருப்பரங் குன்றத்திலுள்ள சமணர் ஆலய ஓவியங்களாகும். இதிலுள்ள இசைமண்டபத்தில் வர்த்தமானரின் பிறப்பை விளக்கும் ஒவியம் மட்டும் விசயநகர மன்னர் காலத்தது. பிற ஓவியங்கள் நாயக்கர் காலத்தைச் சேர்ந்தவை ஆகும். கி.பி. 16ஆம், 17 ஆம் நூற்றாண் டைச் சேர்ந்த சமண ஓவியங்கள்தான் இங்குள்ளன. சமணத் தீர்த்தங் கரர்களான ரிஷபதேவர், நேமிநாதர், கிருட்டிணர், வர்த்தமானர், ஆகியோர் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை இங்குள்ள ஓவியங்கள் விளக்குகின்றன. இந்த ஓவியங்கள் ஒவ்வொன்றின் கீழும் தமிழில் விளக்கம் தரப்பட்டுள்ளது. இங்குள்ள பெண் ஓவியங்களில் பெண்கள் நெற்றிச்சுட்டு, சடைபில்லை முதலியவை அணிந்து பல்வேறு கோணங்களில் நிற்கும் காட்சியும், அவர்கள் குச்சர நாட்டுப் பெண்களைப் போல் ஒப்பனை செய்து கொண்டுள்ள காட்சியும் காணப்படுகின்றன. இவை நாயக்கர் காலப் பெண்களை நினைவுபடுத்துகின்றன. 2. திருமலைச்சமணர் ஓவியம் திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த திருமலை யிலுள்ள திகம்பர சமண மடத்தில் சமண ஓவியங்கள் உள்ளன. பூர்ணகும்பம், மலர்கள் ஆகியவையும், தேவமாதர்களின் நடனக் காட்சியும் உள்ளன. இதைப் போலவே புதுக்கோட்டைக்கருகிலுள்ள நார்த்தாமலையில் விசயாலயச் சோழீச்சுவரம் என்னும் கோயிலின் சுவரிலும், விதானத்திலும் சமண ஓவியங்கள் காணப்படுகின்றன. 3. தஞ்சை ஓவியங்கள் தஞ்சை நாயக்கர்களில் சிறந்தவனான இரகுநாத நாயக்கன் (கி.பி. 1633 - 1673) காலத்தில் ஓவியங்கள் தீட்டப்பட்டதாக இரகு நாதாப்புதாயம் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் சிறீராம் சதனம் என்ற அரண்மனையைக் கட்டி அதில் இராமரின் முடி சூட்டுவிசயக்காட்சிகளை ஓவியமாகத் தீட்டினார் என்றும் விசய பவனம் என்ற மற்றொரு அரண்மனையைக் கட்டி, அதில் சோழர், பாண்டியர், சிங்களவர், செஞ்சிநாயக்கர்கள், ஆகியோர் மீது தான் கொண்ட வெற்றிகளை ஓவியங்களாகத் தீட்டினார் என்றும் கூறப்பட்டுள்ளன. இவருடைய காலத்தில் கும்பகோணம் இராமசாமி கோயில் ஓவியங்களும் தீட்டப்பட்டன. 4. தஞ்சைப் பெருவுடையார் கோயில் ஓவியங்கள் தஞ்சை நாயக்கர் கால ஓவியங்களில் தலையானவை பெரு வுடையார் கோயில் ஓவியங்களாகும். நீண்ட அணி வரிசையில் இந்த ஓவியங்கள் காணப்படுகின்றன. இந்திரன் தன் யானை வாகனத்தின் மீதும், அக்கினி தன் ஆடு வாகனத்தின் மீதும், எமன் தன் எருமை வாகனத்தின் மீதும், வருணன் தன் மீன் வாகனத்தின் மீதும், மாருதி தன் மான் வாகனத்தின் மீதும், அமர்ந்து உள்ளனர். திருப்பாற்கட லைக் கடையும் காட்சியும், கடைந்தபின் அதில் இருந்து காமதேனு, கற்பகமரம், ஐராவதம், தேவபரி, அரம்பை , ஊர்வசி ஆகியோர் தோன்றும் காட்சியும் சிறப்பாக உள்ளன. இலட்சுமி ஒரு மூலையில் கையில் தாமரை மலருடன் காட்சியளிக்கிறாள். அவளைத் தேவர்கள் வணங்கி நிற்க அவள் ஆசீர்வதிக்கிறாள். இதில் தேவர்களும், அசுரர்களும் மந்தரகிரியை மத்தாகக் கொண்டு திருப்பாற் கடலைக் கடைக்கின்றனர். மலைக்கு ஆமையும், கடலுக்கு மீனும் குறிக்கப் பட்டுள்ளன. அடுத்துள்ள ஓவியம் திருமால் தன் கண்ணையே தோண்டி சிவனுக்குப் படைக்கும் ஓவியமாகும். இங்குத் திருமால் தாமரை மலர்களைக் கொய்யும் காட்சியும் சிறப்பாக அமைந்துள் னது. வடபுறச்சுவரில் துர்வாசர்தாம் சிவலிங்கத்தை நீரில் குளிப்பாட்டு தல், மாலை தொடுத்து இந்திரனுக்குச் சூட்டுதல், துர்க்கை கம்பா சூரனுடனும், நிசம்பா சூரணுடனும் போரிடும் காட்சியும் உள்ளன, நாயக்கர் கால ஓவியங்களுக்குக் கீழே அவற்றிற்குரிய விளக்கமும் தெலுங்கில் எழுதப்பட்டுள்ளன. இந்த ஓவிய அணியிலுள்ள ஓவியங்கள் ஒன்றேபோல் காணப்படுவது ஒரு குறைபாடு ஆகும். 5. திருவாரூர் - தியாகேசன் கோயில் ஓவியங்கள் இக்கோயிலில் முசுகுந்தன் கதை ஓவியமாகத் தீட்டப்பட்டுள் ளது. கதையின்படி ஒரு குரங்கு வில்வ மரத்திலேறி இலைகளைப் நாயக்கர்களின் ஆட்சிமுறையும் பண்பாடும் பறித்துக் கீழேயுள்ள இலிங்கத்தின்மேல் போட, அவற்றை அர்ச்சனை யாக ஏற்று சிவபெருமான் அந்தக் குரங்குக்கு அடுத்தப் பிறவியில் நாடாளும் மன்னனாகும்படி வரம் கொடுக்கிறார். அதன் படி அடுத்தப் பிறவியில் முசுகுந்த மன்னனாகப் பிறக்கிறான். முகம் மட்டும் குரங்கு முகமாக உள்ளது. முசுகுந்தன் இந்திரனுக்கு நண்பன். முசுகுந்தனை இந்திர லோகத்தில் இந்திரன் வரவேற்கிறான். இந்த விதமான காட்சிகள் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன, தேவேந்திரன் தியாகேசுவர ருடைய உருவங்களை ஏழு இடங்களில் முசுகுந்தன் நிர்மாணிக்கி றான். இதுவும் ஓவியக்காட்சியாகத் தீட்டப்பட்டுள்ளது. 6. சிதம்பரம் - சிவகாம சுந்தரி கோயில் ஓவியம் சிதம்பரம் சிவகாம சுந்தரியின் கருவறைக்கு எதிரில் உள்ள மண்டபத்தில் சிவன் பிச்சாடனமூர்த்தியாகவும் திருமால் மோகினி யாகவும் மாறி, தாருகாவனம் சென்று ரிஷிபத்தினிகளையும், ரிஷிகளையும் சோதிக்கும் காட்சி அழகிய ஒவியமாகத் தீட்டப் பட்டுள்ளது. இதில் சிவன் ஆடையின்றிக் கண்டவரை மயக்கும் மேனியுடன் இருப்பதும், திருமால் மோகினியாகத் தோன்றும் காட்சியும் மிகச் சிறப்பாக உள்ளது. இக்காட்சியை அடுத்து சிவனை அழிக்கக் கடுந்தவம் புரியும் காட்சியும் வேள்வித்தீயில் இருந்து மான், பாம்பு, புவி முதலியன தோன்றிச் சிவனை அழிக்க முயன்று சிவனால் அழிக்கப்படுவதும் காட்சிகளாகத் தீட்டப்பட்டுள்ளன. மண்டபத்தின் மற்றொரு முனையில் கணேசர், முனிவர்கள், முருகன், வள்ளி, தெய்வயானை முதலியோர் தோன்றுகின்றனர். அடுத்து, கைலாயத்தில் சிவனும், பார்வதியும், நந்தியும் உரையாடிநிற்கும் காட்சியும், அடுத்துள்ள காட்சி நடராசப் பெருமான், தேவகணங்களுடன் இசைக்கருவிகள் முழங்க நிற்கும் காட்சியும் சிறப்பாகத் தீட்டப்பட்டுள்ளன. சிவ புராணக் காட்சிகளும், அண்டவெளிக் கடவுள்களும், பூசாரிகளும், புடை சூழ நடராசரும் சிவகாமியும் தோன்றும் காட்சியும் நாயக்கர் கால ஓவியங்களில் சிறந்ததாகக் கொள்ளப்படுகின்றன. 7. திருவலஞ்சுழி திருவிளையாடற் புராணக்காட்சிகள் கி.பி. 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருவிளையாடற் புராணக்கதைகள் திருவலஞ்சுழி கபாலீசுவரன் கோயிலில் ஓவியங்க ளாக உள்ளன. இவற்றில் சிவனை வாசுகி என்னும் பல் தலைகளையுடைய பாம்பு சுற்றி வளைத்துக்கொள்ளச் சிவன் விசுவரூபம் எடுத்துக் கூத்தாடுகிறார்; கங்கை சிதறி ஓடுகிறது: சிவகாமி, பிரம்மா, தேவர்கள் வியந்து நிற்கின்றனர். திருமால் மிருதங்கமும், தேவர்கள் பஞ்சமுக வாத்தியமும் வாசிக்கின்றனர். அடுத்து, சிவன் பிச்சாடனராகத் தோன்றும் காட்சியும், சிவனும், பார்வதியும் காளைமீது அமர்ந்து திருமாலுக்கு அருளும் காட்சியும் ஒவியங்களாகவுள்ளன, சுப்பிரமணியன் பிரணவ மந்திரத்தைப் பிரமனுக்கும், சிவ னுக்கும் ஞான உபதேசமும் அருளும் காட்சியும் சிறப்பாக உள்ளன. இந்திரன் முனிபத்தினி மீது காமம் கொண்டதால் உடல் முழுவதும் யோனிக் கண்களைப் பெற்ற காட்சியும் உள்ளது. 3. சிற்பக்கலை நாயக்கர்கள் மதுரை, தஞ்சை, செஞ்சி, வேலூர் முதலிய இடங்களில் சிறப்புமிக்க கோயில்களைக் கட்டினர். இவர்களின் கட்டடக்கலையைப் போலவே சிற்பக்கலையும் விசயநகரப் பாணியைப் பின்பற்றி வளர்ந்தது. இச்சிற்பங்கள் கட்டடங்களில் மட்டும் அமையாது தூண்களிலும், இறவாரங்களிலும், முலை களிலும் கூரைகளிலும் அமைந்தன. தேவர்களின் உருவங்களோடு புராண இதிகாசக் கதைகளை விளக்கும் சிற்பங்களும், பொதுமக்கள் சிற்பங்களும் சிறப்புற அமைக்கப்பெற்றன. மதுரைப் புது மண்டபத் தூண்களிலுள்ள சிற்பங்களில் நடனச் சிற்பங்கள் சிறப்பானவை, ஆயிரங்கால் மண்டபத் தூண்களில் கண்ணப்பர், அரிச்சந்திரன், இறந்த தன் மகனைக் கைகளில் ஏந்தி நிற்கும் சந்திரமதி, குறவன், குறத்தி, இரதிதேவி ஆகிய சிற்பங்கள் சிறப்புறச் செதுக்கப் பட்டுள்ளன. மீனாட்சியம்மன் கோயிலிலுள்ள பிட்சாடனர், மோகினி, நடம்புரியும் காளி, ஊர்த்துவ தாண்டவ சிவன் முதலிய சிற்பங்கள் சிறப்பானவை ஆகும். திருச்செந்தூருக்கு அருகிலுள்ள கிருட்டிணாபுரம் வெங்கடாசலபதிக் கோயில் சிற்பங்களும் சிறப்பான வையே. இக்கோயிலின் ஒவ்வொரு தூணிலுமுள்ள சிற்பங்களும் தொடர்ச் சிற்பங்களும் கருத்தை விளக்குகின்றன. இக்கோயில் கிருட்டிணப்ப நாயக்கனால் கட்டப்பெற்றது. ஒரு குறத்தியின் கதையை விளக்கும் தொடர்ச் சிற்பங்கள் இவற்றுள் சிறப்பனவை. உட்புறமண்டபத் தூணிலுள்ள அன்னப் பறவை மீதமர்ந்த இரதியின் கதையை விளக்கும் தொடர் சிற்பங்கள் இவற்றுள் சிறப்பானவை. உட்புற மண்டபத் தரணிலுள்ள அன்னப் பறவை மீதமர்ந்த இரதியின் உருவமும், அவருக்குக் கீழே நடமாடும் தோழியின் உருவமும் தலையாய சிறப்புடையவை, திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் சிற்பங்கள் சுதையாலும், மரத்தாலும் ஆனவை. திருக்குறுங்குடி கோபுரத்திலுள்ள சிற்பங்கள் திருமாலின் பத்துத் தோற்றரவுகளைக் காட்டுகின்றன. கட்டடச் சிற்பக் கலைகளைப் போலவே ஓவியம், இசை, நடனம் முதலிய கலைகளும் நாயக்கர் காலத்தில் சிறப்புற்றன. நாயக்கர்களின் ஆட்சிமுறையும் பண்பாடும் 2. வேலூர் நாயக்கர்கள் வேலூர் முதலில் விசயநகரப் பேரரசின் கீழ் இருந்தது. செஞ்சி அதன் மேல் ஆதிக்கம் செலுத்தி வந்தது. வேலூரை ஆண்ட வீரப்ப நாயக்கனும், சின்னபொம்மு நாயக்கனும் விசயநகர அவையில் சிறப்புப் பெற்றிருந்தனர். சின்ன பொம்மு நாயக்கன் வேலூரை ஆண்ட (கி.பி. 1549- 1582) காலத்தில் பல அரிய செயல்களைச் செய்தான். இவன் ஒரு பன்னூற் புலவன் அத்துடன் கற்றறிந் தோரைப் போற்றும் புரவலனும் ஆவான். இவன் சபையிலிருந்த அப்பய்ய தீட்சதர் என்பவரை ஏற்றிப் போற்றினான். அவருக்குக் கனகாபிடேகம் செய்தான். அவர் அப் பொன்னைக் கொண்டு தாம் பிறந்த ஊரான அடையபுலத்தில் சமற்கிருதப் பள்ளியை அமைத்துச் சாத்திரங்களையும், வேதங்களையும் கற்பித்தார். சின்ன நாயக் கன்தான் வேலூர்க் கோட்டையைக் கட்டி, பாதுகாப்பான நீர் அரணை' (அகழி) ஏற்படுத்தினான். கோட்டைக்குள் சலகண்ட ஈசுவரர் கோயிலையும் கட்டினான். சின்ன பொம்மு நாயக்கனுக்குப் பிறகு அவனுடைய மகன் இலிங்கம் நாயக்கன் வேலூர் நாயக்க மன்னனானான், இவன் பேரரசுக்கு அடங்கி ஆண்டான். சிறந்த சிவபக்தன் என்பதனை விலாப்பக்கத்திலுள்ள கி.பி. 1601 ஆம் ஆண்டில் செதுக்கப்பட்ட இவனுடைய கல்வெட்டுக் கூறுகிறது. இவன் காலத்தில் செஞ்சி நாயக்கரின் மேலாண்மையில் இருந்து வேலூரை விடுவிக்கப் புரட்சி செய்தான். செஞ்சி அரசன் விசயநகரப்படையுடன் வேலூரை முற்றுகையிட்டான். ஆனால் அக்காலக் கோட்டைகளில் வலிமை மிக்க வேலூர்க் கோட்டையைச் செஞ்சிப்படைகளும், விசயநகரப் படைகளும் வென்று அடிமைப்படுத்த முடியவில்லை. ஓராண்டு காலம் கி.பி. 1803-ல் இருந்து 1604 வரை முற்றுகை நீடித்தது. கி.பி. 1804-ல் வேலூர் கைப்பற்றப்பட்டது. பின்னர் விசயநகரப் பேரரசுடன் சேர்த்துக் கொள்ளப்பட்டது. வேலூர்ப் போரில் பெரும்பங்கு ஏற்று வெற்றியை ஈட்டி யவன் தானைத் தளபதி (தண்டநாயகன்) சென்னப்ப நாயக்கன் என்பவன் ஆவான். அவனுக்கு மானியமாக வழங்கப்பட்ட இடத்தைத் தான் அவன் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பனிக்கு விலைக்கு விற்றான். அதுவே அவன் பெயரால் வழங்கப்பட்ட சென்னப்பட்டினம் ஆகும், கடைசியாக வேலூரை ஆண்ட நாயக்க மன்னர் ஆட்சி கி.பி. 1806-ல் மறைந்தது. அது விசயநகர மன்னர் களின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது. எனவே "இராயவேலூர்' என அழைக்கப்பட்டது. விசயநகரப் பேரரசை ஆண்ட இரண்டாம் வேங்கடன் மறைவுக்குப்பின் இரண்டாம் சீரங்கன் பேரரசனானான். அச்சமய்த் தில் வேலூரை ஆண்ட சிற்றரசன் சக்கராயன் ஆவான். இவன் காலத்தில் பேரரசில் வாரிசுரிமைப்போர் ஏற்பட்டது. இரண்டாம் சீரங்கன், அவனுடைய குடும்பத்தார் யாவரும் கொல்லப்பட்டனர். யாரோ ஒருவனை இரண்டாம் வேங்கடனின் மகன் எனக் கூறி அவனுக்குப் பட்டமளிக்க வேண்டுமென ஒரு சாரார் புரட்சி செய்தனர். அந்தப் புரட்சிக் கும்பலுக்கு வேலூர் சக்கராயன் தலைமை தாங்கினான். அதனால் எதிர்க் கட்சியினருக்கும் இவனுக்கும் இடையே பூண்ட போர் திருச்சிக்கருகில் உள்ள தோப்பூரில் கி.பி. 1616-ல் நடந்தது. அப்போரில் சக்கராயன் கொல்லப்பட்டான். சக்கராயனுக்குத் துணையாக நின்ற செஞ்சி நாயக்கன் கிருட்டிணப்ப நாயக்கனும், மதுரை முத்துவீரப்ப நாயக்கனும் திருச்சிக் கோட்டைக்குள் ஓடி ஒளிந்து கொண்டனர். இப்புரட்சிக்குப்பின் சக்கராயனை எதிர்த்த கட்சியினர் இறந்த இரண்டாம் சீரங்கனுடைய மகன் சீராமதேவன் என்பவனைப் பேரரசனாக்கினார்கள். அவனும் கி.பி. 1630-ல் இறந்தான். அவனுக்குப்பின் பெத்தவேங்கடன் பேரரசனானான், பேரரசனான வுடன் இவன் மூன்றாம் வேங்கடன் என்று அறியப்பட்டான். தன் தலைநகரைப் பெனுகொண்டாவில் இருந்து வேலூருக்கு மாற்றிக் கொண்டான். எனவே, வேலூர் நாயக்கர்களின் தலைநகரமான வேலூர் விசயநகரப் பேரரசுக்கே தலைநகரமாயிற்று: வேலூருக்கு வந்த பிறகு மூன்றாம் வேங்கடன் வலிமையுடையவனாக மாறி விட்டான். தென்னகநாயக்கர்கள் அனைவரும் அவனுக்குத் துணை நின்றனர். இதனால் கி.பி. 1641 -ல் பீசப்பூர் சுல்தான் வேலூர் மீது படையெடுத்தபோது சுல்தான் படைகள் நாயக்கர்கள் உதவியால் தோற்கடிக்கப்பட்டன. மூன்றாம் வேங்கடனுக்குப்பின் மூன்றாம் சீரங்கன் விசய நகரப்பேரரசன் ஆனான். இவனை மதுரை திருமலை நாயக்கன் (கி.பி. 1525 - 1650) எதிர்த்தான். இச்சமயத்தில் வீசப்பூர் சுல்தான் வேலூர் மீது படையெடுத்தான். கி.பி. 1641 -ல் படையெடுத்த போது நாயக்கர்கள் உதவியதைப்போல் இப்போது மூன்றாம் சீரங்கனுக்கு எவரும் உதவ முன்வரவில்லை . ஆனால், வேலூர் குடி மக்கள் பொன்னையும், பொருளையும் கொடுத்து உதவினார்கள். சீரங்கன் திருப்பதி கோயில் பணத்தையும் எடுத்துப் போருக்குச் செல்விட் டான். ஆயினும், சீரங்கன் படைகள் கி.பி. 1646-ல் நடந்த போரில் (4,41646) பீசப்பூர் படைகளால் தோற்கடிக்கப்பட்டன. பிசப்பூர் சுல்தான் வேலூரைக் கைப்பற்றிக் கோட்டையில் கொடி கட்டினான். தோற்றுவிட்ட சீரங்கன் எஞ்சியதைச் சுருட்டிக் கொண்டு தஞ்சா வூருக்கு ஓடினான். வேலூரைக் கைப்பற்றிய பீசப்பூர் சுல்தான் தன் ஆட்களை அமர்த்தி வேலூரை ஆளச் செய்தான். பின்னர், கி.பி. 1649-ல் செஞ்சி, தஞ்சை ஆகியவையும் பீசப்பூர் சுல்தானிடம் வீழ்ந்தன. இதனால் கி.பி. 1652-க்குள் கருநாடகம் முழுவதும் பீசப்பூர் சுல்தான் ஆட்சிக்கு உட்பட்டது. வேலூர் மராத்தியர் வசமாதல் கி.பி. 1677 -ல் சிவாசி கருநாடகத்தின் மீது படையெடுத்து வேலூர்க் கோட்டையை முற்றுகையிட்டான். பெரும் முயற்சிக்குப் பின் வேலூர் சிவாசி வசமாயிற்று. அப்பொழுது வேலூரை ஆண்டு கொண்டிருந்த பீசப்பூர் சுல்தானின் பேரரயன் அபிசீனிய நாட்டைச் சேர்ந்ததளபதி அப்துல்லாகான் என்பவன் ஆவான். இக்கோட்டையை இவன் 13 நாட்கள் வரைக் கடுமையான முற்றுகையில் இருந்து காத்தான். ஆனால், கடைசியில் மராத்தியர் படையிடம் தோற்றுக் கோட்டைவிட்டான். கி.பி. 1878 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 22ஆம் நாள் வேலூர்க் கோட்டையில் மராத்தியர் கொடி பறக்கத் தொடங்கியது. இவ்வாறு வேலூர் ஒரு வரலாற்றுத் திருப்புமுனையாகப் பல ஆட்சியாளர் களின் கைக்கு மாறி கி.பி. 17ஆம் நூற்றாண்டில் மராத்தியர் கைக்கு வந்தது. 3. இக்கேரி நாயக்கர்கள் மைசூர் மாநிலத்தில் சிமோகா மாவட்டத்திலுள்ள இக்கேரி என்னுமிடத்தைத் தலைமை இடமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பகுதி விசயநகரப் பேரரசின் கீழ் இருந்தது. இதற்குப் பேரரசால் அமர்த் தப்பட்ட முதல் நாயக்க அரசன் சதாசிவநாயக்கன் (கி.பி. 1518-1580) என்பவனாவன். இவன் மங்களூர் வரையிலுள்ள பகுதியைத் தன் ஆட்சியுடன் இணைத்துக் கொண்டான். இவனுக்குப்பின் சிக்ககங்கண்ணா (கி.பி. 1560 - 1570) என்ப வன் இக்கேரி நாயக்கனானான். இவன் காலத்தில்தான் தலைநகரம் மைசூருக்கு அருகிலுள்ள இக்கோரிக்கு மாற்றப்பட்டது. இவனுக்குப்பின் முதலாம் வேங்கடப்பன் (கி.பி. 1582 - 1629) இக்கேரி நாயக்கனானான். பேரரசன் வேங்கடன் இறந்த பின் நடந்த வாரிசுரிமைப் போரில் ஜக்கராயன் - அச்சம்மன் ஆகியோர் கட்சி எவருடனும், இவன் சேர்ந்து கொள்ளவில்லை. ஆனால் இச்சூழலை வாய்ப்பாக வைத்துக் கொண்டு தன் ஆட்சிப்பரப்பை அதிகப்படுத்திக் கொண்டான், போர்த்துக்கீசியருடன் நட்புறவு கொண்டான். பீஜப் பூருக்கு உட்பட்டிருந்த சில பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டான். இவனுக்குப்பின் இவன் பேரன் வீரபத்திரன் (கி.பி.1630 1645) இக்கேரியின் நாயக்கனானான். இவன் தலைநகரை இக்கேரி யில் இருந்து பெத்தனுாருக்கு மாற்றிக்கொண்டான். இவனுக்குப்பின் இவன் மகன் சிவப்பா (கி.பி. 1645 -16]] இக்கேரி நாயக்கனானான். இவனுக்குப்பின் நாயக்கரானவர்கள் சிறப்பானவர்களாகக் காணப்படவில்லை . கடைசியாக இக்கேரி நாயக்கர் அரசு ஐதர் அலியால் கி.பி. 1663-ல் கைப்பற்றப்பட்டது. 4. மைசூர் மன்னர்கள் முதலில் மைசூர் விசயநகரப் பேரரசின் ஒரு பகுதியாகத் திகழ்ந்தது. யாதவ குலத்தைச் சேர்ந்த இராச உடையார் (கி.பி. 1578-1617) காலத்தில் கி.பி. 1610-ல் மைசூர் விசய நகரப் பிடியில் இருந்து விடுபட்டது. இராசுடையார் முதல் சுதந்திர மன்னராக மைசூரை ஆண்டார். கி.பி. 1610-ல் சீரங்கப் பட்டணத்தைக் கைப் பற்றித் தன் ஆட்சியுடன் இணைத்துக்கொண்டார். இவரையடுத்து சாம்ராச உடையார் (கி.பி. 1617-1637) மைசூர் மன்னரானார், இவருக்குப்பின் முதலாம் கந்தர்வ நரசராசா (கி.பி, 1638-1659 மன்னரானார். இவருடைய காலத்தில்தான் மதுரை நாயக்கன் திருமலைநாயக்கருடன் மைசூர்ப் போர் நடந்தது. இது ஒரு மூக்கறுப்புப்போர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். கடைசியாக கி.பி. 1761-ல் ஐதர் அலி மைசூரைக் கைப்பற்றிக்கொண்டான். 5. தஞ்சை நாயக்கர்கள் இரண்டாம் அரிகரர் காலத்திலேயே விசயநகரப் பேரரசு தென்னகப் பகுதிகளைப் பல மண்டலங்களாகப் பிரித்ததையும், அவற்றை ஆள மண்டலேசுவரர்களை அமர்த்தியதையும் கண்டோம். அவற்றில் வேலூர், செஞ்சி, மதுரை, தஞ்சை ஆகியவையும் அடங்கும். அச்சுதராயன் (கி.பி. 1530 - 1542) அச்சுதராயன் காலத்தில் மதுரை ஆட்சியிலிருந்த சோழ மண்டலம் தனியாகப் பிரிக்கப்பட்டுத் தஞ்சாவூரில் நாயக்கர் ஆட்சி தொடங்கியது. அச்சுதராயன் மனைவி வதாம்பிகாவின் தங்கை மூர்த்தி மங்கா என்பவளைத் தன்னிடம் அடப்பம் சுமக்கும் சிலம்ப நாயக்கனுடைய மகன் செல்லப்பன் என்பவனுக்கு அச்சுதராயர் மணம் செய்து கொடுத்தார். அவன் தன் நன்றியறிதலைக்காட்டத்தன் பெயரை அச்சுத நாயக்கன் என்று மாற்றிக் கொண்டான். 1 சிலம்ப நாயக்கனை கி.பி. 1532-ல் தஞ்சைக்கு நாயக்கன் ஆக்கினான், ஆகவே தஞ்சை நாயக்கர் ஆட்சி சிலம்ப நாயக்கனில் இருந்து கி.பி. 1532-ல் தொடங்கியது. சிலம்ப நாயக்கன் ஏற்கனவே மதுரைக்கு நாயக்கனாக இருந்த போதும் தஞ்சை அவனுடைய ஆதிக்கத்தில்தானிருந்தது. இவன் காலத்தில் திருச்சியை மதுரை ஆட்சிக்கு மாற்றிவிட்டு இதற்கு ஈடாக வல்லம்' என்ற பகுதி தஞ்சாவூர் ஆட்சியில் சேர்க்கப்பட்டது. தஞ்சை யிலுள்ள சிவகங்கைக் குளம் சீரமைக்கப்பட்டது. தஞ்சை மாவட்டத் திலுள்ள 'மூவாலூர்' என்னுமிடத்தில் உள்ள சத்திரத்திற்குப் பத்து வேலி நிலம் தானமாகக் கொடுக்கப்பட்டது. சிலம்ப நாயக்கன் தஞ்சை யை கி.பி. 1532-ல் இருந்து 1560-வரை ஆண்டான். 2. அச்சுத நாயக்கன் (கி.பி. 1560-1600) சிலம்ப நாயக்கனுக்குப்பின் அவன் மகன் அச்சுத நாயக்கன் தஞ்சை நாயக்கனானான். இவன் பேரரசன் அச்சுதராயனின் மைத்துனியின் கணவன் என்பதை மேலே கூறினோம். இவனு டைய காலத்தில்தான் கி.பி. 1565இல் தலைக்கோட்டைப் போர் ஏற்பட்டு விசயநகரப் பேரரசு சிதைவுண்டது. இதற்குப்பின் பல மண்டலேசுவரர்கள் தனித்தாள். முற்பட்டாலுரம் தஞ்சை அச்சுத் நாயக்கன் மட்டும் பேரரசோடு உண்மையாக நடந்து கொண்டான். இதனால் அச்சுத நாயக்கன் பேரரசின் நம்பிக்கைக்குப் பாத்திர மானான். பேரரசோடு எல்லாவிதத்திலும் ஒத்துழைத்து அதற்கு ஆதரவாக இருந்தான். இவனுக்கு மதிநுட்பம் மிக்க கோவிந்த தீட்சதர் என்ற அமைச்சர் இருந்தார். அச்சுத நாயக்கன் சிறந்த இறைப்பற்றாளான். கிருட்டிண தேவராயர் காலத்தில் கட்டத் தொடங்கப்பட்ட திருவண்ணாமலை பெரிய கோபுரத்தை முடித்து வைத்தப் பெருமை இவனையே சாரும். புதியதாகக் கோயில்களைக் கட்டுவதைவிடப் பல் பழைய கோயில் களைப் புதுப்பித்தும், அவற்றிக்குக் கூடுதலாகப் பல பாகங்களைக் கட்டுவதும் இவனுடைய சிறந்த பணி ஆகும். பிராமணர்களுக்குப் பல புதிய அக்கரகாரங்களைக் கட்டிக் கொடுத்தான். கும்பகோணத்தி லுள்ள மங்கம்மாள் குளத்தைச் செப்பனிட்டான். இப்பணியை இவனுடைய அமைச்சர் கோவிந்த தீட்சதரே முன்னின்று செய்தார். முசுலீம் தர்காக்களுக்கும் நிவந்தங்கள் வழங்கினான். நாகப் பட்டினத்தில் போர்த்துக்கீசியர் குடியேறத் துணை புரிந்தான். அவனுடைய அரசவையில் விசயேந்திரதீட்சிதர், சுப்பைய தீட்சிதர் என்று இரண்டு வைணவப் பெரியார்கள் இருந்தனர். இவர்கள் வைணவத்திலுள்ள துவிதம், அத்துவிதம் ஆகிய தத்துவக் கோட் பாடுகளுக்காகப் பெரிய வாதங்களை நிகழ்த்துவார்கள். கோவிந்த தீட்சிதர் மிகச் சிறந்த புலவர். பல நூல்களை யாத்தவர், இசை நூல் ஒன்றையும் எழுதியுள்ளார். அச்சுத நாயக்கன் கி.பி. 1600 - ல் இறந்தான். இவனுடைய 370 மனைவிமாரும் அவனுடன் உடன் கட்டை ஏறினார்கள். 3. இரகுநாத நாயக்கன் (கி.பி. 1600=1633) அச்சுத நாயக்கன் இறந்தவுடன் அவனுடைய பிள்ளை களுக்குள்ளேயே வாரிசுரிமைப் போராட்டம் நடந்தது. இரகுநாத நாயக்கன் தன் அண்ணனைக் கொன்றுவிட்டு அரச கட்டிலே றினான். ஆனால் இவன் சீரழிந்து கிடந்த விசயநகரப் பேரரசுக்கு உண்மை நண்பனாகச் செயல்பட்டான். நாயக்கர்களிலேயே இவன் மட்டுமே பேரரசுக்கு நம்பிக்கை யுள்ளவனாக நடந்தான். கி.பி. 1565-ல் தலைக் கோட்டைப் போரில் பேரரசு வீழ்ச்சியடைந்ததும், பல கட்சிகளாகப் பிரிந்து உள்நாட்டுப் போரில் பலரும் ஈடுபட்டனர். வேலூர் சக்கராயன் ஒரு கட்சிக்கும் எச்சம் நாயக்கன் மற்றொரு கட்சிக்கும் தலைமை தாங்கி உள்நாட்டுப் போரை நடத்தினார்கள். இந்த உள்நாட்டுப் போர்களில் கி.பி.1617-ல் நடந்த தோப்பூர் சண்டை முக்கியமானதாகும். இதில் சக்கராயன் அரச குடும்பத்தையே படுகொலை செய்துவிட்டான். சக்கராயனுக்கு மதுரை நாயக்கனும், செஞ்சி நாயக்கனும் இக்கொடிய செயலுக்குத் துணை நின்றனர். ஆனால் இரகுநாத நாயக்கன் எச்சம் நாயக்கனுடன் சேர்ந்து அரச குடும்பத்திற்கு விசுவாசமுள்ளவனாயிருந்தான். மூன்றாண்டுகள் (கி.பி. 1614-1617) தொடர்ந்து நடந்த இந்த உள்நாட்டுப் போர் திருச்சியிலுள்ள தோப்பூர் போர்க் களத்துடன் முடிவுபெற்றதெனலாம். இந்த உள்நாட்டுப் போரினால் தஞ்சையில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. பஞ்சத்தின் கொடுமையால் ஆயிரக்கணக் கான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைக் கடற்கரைக்குக் கொண்டு வந்து ஒரு குழந்தையை ஐந்து பணத்திற்கு விற்றார்கள். இந்தக் குழந்தைகளை வாங்கியவர்கள் இந்தியாவின் பிற பகுதி களுக்குக் கொண்டுபோய் அதிக விலைக்கு விற்றனர். இரகுநாத நாயக்கன் மதுரை நாயக்கன் முத்து வீரப்பன் (கி.பி. 1609-1623) என்பவனோடு உறவு பூண்டு அவனுடைய மகளைத் திருமணம் செய்து கொண்டான். இதுவரை பகையுணர்வோடு இருந்த இரு நாயக்கர்களும் இத்திருமணத்தால் நட்புறவு கொண்ட னர். கி.பி. 1618-ல் முத்து வீரப்ப நாயக்கன் பேரரசு வாரிசுரிமைப் போரில் வேலூர் சக்கராயனையும், செஞ்சி நாயக்கனையும் சேர்த்துக் கொண்டு எச்சமன் கட்சிக்கு எதிராகப் போரிட்டான். அப்பொழுது இரகுநாத நாயக்கன் பேரரசுக்கு விசுவாசமாக இருந்தான். கி.பி. 1616-ல் திருச்சித் தோப்பூரில் நடந்த கடைசிப்போரில் வேலூர் சக்கராயன் கொல்லப்பட்டான். முத்துவீரப்பன் தோற்றோடிப் பேரரசுக்கு எதிராகப் போரிடும் திட்டத்தைக் கைவிட்டான். அதே ஆண்டில்தான் அவன் மதுரையில் இருந்து திருச்சிக்குத் தன் தலை நகரை மாற்றிக்கொண்டான். அடுத்த ஆண்டில்தான், தன் மகளைத் தஞ்சை இரகுநாதநாயக்கனுக்குத் திருமணம் செய்து கொடுத்தான். இதனை ஒரு அரசியல் திருமண உறவு என்றே கூறவேண்டும். இரகுநாத நாயக்கன் காலத்தில் தஞ்சைக் கடற்கரைப் பகுதியில் ஐரோப்பியர் குடியேறித் தங்கள் குடியிருப்புகளை வலுப்படுத்திக் கொண்டார்கள். போர்த்துக்கீசியர்கள் ஏற்கனவே நாகப்பட்டினம், சென்னை - மயிலாப்பூர் ஆகிய இடங்களில் குடியமர்ந்து உறுதிப் பட்டிருந்தனர். கி.பி. 1824-ல் ஆங்கிலேயர்களும் தங்கள் பண்டக 137 சாலையை யும் ஏற்படுத்த முயன்றனர். அதே நேரத்தில் தச்சுக்காரர்கள் தஞ்சைக் கடற்கரையில் குடியமர்ந்தவண்ணம் இருந்தனர். ஆக, இரகுநாத நாயக்கர் காலத்தில் போர்த்துக்கீசியர், தச்சுக்காரர்கள் ஆகியோர் தஞ்சைப் பகுதியில் குடியேறிவிட்டனர். சுருங்கச் சொன்னால் இரகுநாத நாயக்கன்பேரரசுக்குக் கடைசிவரை உண்மை ஊழியனாக இருந்தான், தோப்பூர் வெற்றிக்கே காரணமாகத் திகழ்ந்தான். கற்றோரையும், இசைவாணர்களையும், இலக்கியவாதி கனளயும் போற்றிக் காத்தான். 4. விசயராகவ நாயக்கன் (சி.பி. 1633-1673) இரகுநாத நாயக்கன் தனது முப்பத்து மூன்று ஆண்டுக்கால் ஆட்சிக்குப்பின் கி.பி. 1633 - ல் காலமானான். அவனுடைய மகன் விசயராகவ நாயக்கன் தனது 40வது அகவையில் பட்டத்திற்கு வந்தான். இவன் தனது இரண்டு மூத்த சகோதரர்களின் கண்களைப் பிடுங்கி, அவர்களைச் சிறையிலடைத்துக் கொன்றான் என்று புரோயின்சா(Prerna) என்பவர் கூறுகிறார். இராசசூடாமணி தீட்சதர் என்பவர் எழுதிய 'ஆனந்த மார்க்க நாடகம்' என்ற நூலில் விசய ராகவ நாயக்கனுக்கு அச்சுதன், இராமபத்திரன் என்ற இரு உடன் பிறந்தார் இருந்ததாகவும், அவர்களையும் மற்ற தனது உறவினர் களையும் ஓர் அறையில் வைத்து அடைத்துத் தீயிட்டுக் கொளுத்தி விட்டு ஆட்சிக்கு வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. தன்னுடைய சொந்த மகனான மன்னாருதாசன் என்பவனையே தங்கச் சங்கிலி யால் பிணைத்துக் கட்டிக் கொன்றான். இவனுடைய சமகாலத்து அரசனான ஒளரங்கசீப்பின் கொடூரச் செயலோடு இவனுடைய செயலையும் ஒப்பிடலாமென டாக்டர், என். சுப்பிரமணியம் குறிப் பிடுகிறார். இவன் இவ்வாறு கொலைகளைச் செய்வதற்குக் காரணம் என்ன? தனக்கு எவருமே போட்டியாக இருக்கக்கூடாது என்ற எண்ணமே ஆகும். இக்கருத்தை 'தஞ்சை நாயக்கர்கள்' (அண்ணாமலை பல்கலைக்கழகம் 1942) என்ற நூலை எழுதிய வி. விருத்தகிரீசன் மறுக்கிறார். மேற்படி நாடகம் போன்ற இலக்கியங்களின் கருத்துக் களை வரலாறாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பது அவருடைய கருத்தாகும். விசயநகரப் பேரரசின் கடைசி மன்னனான மூன்றாம் சீரங்கள் அரச கட்டிலேறியவுடன் கட்டுக்கடங்காத, நாயக்கர்களைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தீர்மானித்தான். இதற்காக பெரும்படையுடன் தென்னகத்தின் மீது படையெடுத்தான் அது வரைப் பேரரசுடன் நட்புறவுடனே இருந்த தஞ்சை விசயராகவ நாயக்கன் தனது பரம் வைரியாகிய மதுரை நாயக்கனுடனும் சேர்ந்து பேரரசை எதிர்த்தான். மதுரை நாயக்கன்கோல்கொண்டா சுல்தானை தமிழக சுமூகப் பண்பாட்டு வரலாறு சீரங்கன் மீது படையெடுக்கும்படி வேண்டினான். சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் கோல்கொண்டால்தான் விசய நகரத்தின் மீது படை யெடுத்தான். ஒரு புறம் மூன்று நாயக்கரும் படையெடுக்க, மறுபுறம் கோல்கொண்டா சுல்தான் படையெடுக்க இருதலைக்கொள்ளி எறும்பு போல் சீரங்கன் மாட்டிக்கொண்டான். வேறுவழியின்றித் தஞ்சை, செஞ்சி, மதுரை நாயக்கர்களைத் தனக்கு உதவி செய்யும் படிக் கேட்டுக் கொண்டான். தஞ்சைஉடனடியாகக் கோல்கொண்டா வை எதிர்க்க முன் வந்தது. ஆனால், சீரங்கன் பின்வாங்கிவிட்டான், கோல்கொண்டாவின் கோபத்திற்கு உள்ளாகிய தஞ்சை மீது கோல் கொண்டாசுல்தான் படையெடுத்தான். விசயராகவ நாயக்கன் கோல் கொண்டா சுல்தானோடு உடன்படிக்கைச் செய்து கொண்டு படை யெடுப்பைத் தவிர்த்தான். திருமலை நாயக்கன் கி.பி. 1659-ல் இறந்தான். இவனுக்குப் பின் மதுரை நாயக்கனானவன் அவனுடைய மகன் இரண்டாம் முத்துவீரப்ப நாயக்கன் ஆவான். கி.பி. 1659-ல் நாயக்கனான இவன் நான்கு திங்களுக்குள் காலமானான். இவனுக்குப்பின் இரண்டாம் வீரப்பன் மகன் சொக்கநாத நாயக்கன் (கி.பி. 1659-1682) நாயக்கனானான். பீஜப்பூர் சுல்தான் தஞ்சை மீது படையெடுத்தான். இதனால் பஞ்சமும் கள்வர்களால் கொள்ளைகளும் நடந்தன. மதுரைச் சொக்கநாத நாயக்கன் தஞ்சை நாயக்கனுடைய மகளைத் திருமணம் செய்ய விரும்பினான். தஞ்சை நாயக்கனான விசயராகவ நாயக்கன் பெண் கொடுக்க மறுத்தான். எனவே, சொக்கநாத நாயக் கன் தஞ்சை மீது போர் தொடுத்தான். போர்க்களத்தில் விசயராகவ நாயக்கன் மாண்டான். அவன் இறப்பை அறிந்த அரண்மனைப் பெண்களும் மற்ற உறவினரும் அரண்மனைக்குள் வெடிவைத்துக் கொண்டு இறந்துவிட்டனர். தன் சிற்றன்னையின் மகனும் தன் தம்பியுமான அழகிரி நாயக்கனைத் தஞ்சைக்குத் தனது நிகராளி யாக்கி, ஆளச் செய்தான். மதிப்பீடு விசயராகவ நாயக்கன் தன் முன்னோர்களைப் போலவே இந்துச் சமயத்தைப் போற்றியவன்தான். ஆனாலும், புதிதாக வந்த கிறித்துவத்தின் மீது வெறுப்பு அடைய வில்லை. கிறித்துவப் பாதிரி யார் முதலில் தஞ்சைப் பகுதியிலிருந்த மெய்கண்டான் என்ற கள்ளர் தலைவனைக் கிறித்துவனாக்கிக் கொஞ்சம் கொஞ்மாகப் பலரைக் கிறித்துவராக்கி விட்டனர். விசயராகவ நாயக்கன்காலத்தில் தஞ்சையில் வளம் கொழிக்க வில்லை. பஞ்சமும் பட்டினியுமே மேலோங்கி நின்றன. ஒரு வேளை உணவுக்காகத்தான் பெற்ற பிள்ளையைத் தாயே விற்றுத் தீர்த்தாள். கி.பி. 1680 -ல் தஞ்சையில் ஏற்பட்ட பஞ்சம் தென்தமிழ்நாடு முழுவதும் பரவியிருந்தது. விசயராகவ நாயக்கனுக்குப் பின் தஞ்சையை அழகிரி நாயக்கன் ஆளத் தொடங்கினான். தஞ்சையில் தனது அண்ணன் சொக்கநாத நாயக்கனுடன் ஆளமுற்பட்டான். ஆனால் தானே தனித்தாள ஆசை கொண்டு தன் அண்ணன் சொக்கநாத நாயக்கனுக்கு எதிராகச் செயல்படத் தொடங்கினான். இவனுடைய நம்பிக்கைத் துரோகத்தை அறிந்த அவனுடைய செயலாளனாக இருந்த வெங்கண்ணா அவனை ஒழித்துவிட்டுத் தானே தஞ்சைக்குத் தலைவனாக விரும்பி னான். இதற்கு ஒரு உபாயத்தைக்கொண்டான். போரில் மாண்ட விசயராகவ நாயக்கனுடைய மகன் செங்கமலதாசன் என்பவன் நாகப்பட்டினத்தில் தச்சுக்காரர் பாதுகாப்பில் இருந்தான். அச்சிறுவனை அழைத்துக் கொண்டு வீசப்பூர் சுல்தான் அதில்சா என்பவனிடம் காட்டி இவன்தான் தஞ்சைக்குரிய வாரிசு என்றும் இவனையே தஞ்சை அரசுக் கட்டிலில் ஏற்ற வேண்டும் என்றும் வேண்டினான். அதில்சா தனது சேனைத் தலைவன் வெங்காஜியை அனுப்பித் தஞ்சை மீது படையெடுக்கச் செய்தான். தஞ்சை மராத்தியர் வசமாதல் கி.பி. 1676) தளபதி வெங்காசி அதில்சா அனுப்பிய படைக்குத் தலைமை தாங்கித் தஞ்சை மீது படையெடுத்தான். அங்குச் சொக்கநாத நாயக்க னின் படிநிகராளியாக ஆண்ட அழகிரியை வெங்காசி கி.பி.1676-ல் தோற்கடித்தான். தன் அண்ணனுக்கு இரண்டகம் செய்து தஞ்சை யைத் தானே அபகரித்து ஆள முற்பட்ட அழகிரி தஞ்சையை விட்டு ஓடினான். வெற்றி பெற்ற வெங்காசி, செங்கமலதாசனைத் தஞ்சை அரியணையில் அமர்த்தினான். கும்பகோணம், மன்னார்குடி, பாபநாசம் ஆகிய இடங்களைக் கைப்பற்றி அங்கெல்லாம் தானே வரித்தண்டல் செய்தான். சிறுவ னாகிய செங்கமலதாசனுடைய ஆட்சிக்கு எதிர்ப்பாக மக்களைத் தூண்டிவிட்டான். கடைசியில் செங்கமல தாசனைத் துரத்தி விட்டுத் தானே தஞ்சைக்கு மன்னனானான். வெங்காசி, மாவீரன் சிவாசியின் தம்பியாவான். எனவே தஞ்சை மராத்தியர் கைக்கு வந்துவிட்டது. பின்னர், தஞ்சை நாயக்கர் ஆட்சி செங்கமலதாசனோடு முடிந்துவிட்டது. வெங்கண்ணாவின் சூழ்ச்சி நாடகம் வெங்காசியைத் தஞ்சைக்கு மன்னனாக்கியது. கி.பி. 1532-ல் சிலம்ப நாயக்கனால் தொடங்கப்பட்ட தஞ்சை ஆட்சி செங்கமலதாசனோடு முடிந்தது, 6. செஞ்சி நாயக்கர்கள் " அடிப்படைச் சான்றுகள் 1. கர்னல் மெக்கன்சி கையேடு கி.பி. 1782-ல் கிழக்கிந்தியக் கம்பனியில் பொறியாளராகச் சேர்ந்த கர்னல் மெக்கன்சி கி.பி. 1821-ல் தான் இருக்கும் வரை தென்னகத்தின் பல பாகங்களைச் சுற்றி அரபு, பாரசீகம், சமற் கிருதம், ஜாவா, பர்மா, தமிழ், தெலுங்கு, மலையாளம் முதலிய மொழிகளிலுள்ள பல்வேறு ஆவணங்களைச் சேகரித்தார். அவை புராண, இதிகாச கதைச் சம்பவங்களையும் மரபுவழிச் செய்தி களையும், செவிவழிச் செய்திகளையும், நாட்டுப்புறப் பாடல் களையும், கதைகளையும் கூறுவனவாகும். அவற்றை மொழி வல்லு னர்களைக் கொண்டு ஆய்ந்து பொருள் வாரியாகவும், கால வாரியாக வும் பிரித்துப் பட்டியலிட்டார். அந்த அரிய கருவூலம் 'கீழ்த்திசைக் கையேட்டு நூலகத்தில்' சேர்த்துப் பாதுகாக்கப்பட்டது. அவற்றின் வரலாற்றுச் செய்திகளைச் சென்னைப் பல்கலைக்கழக 'இந்திய வராலாற்றுத் துறை' அவ்வப்போது வெளியிட்டு வந்தது. மெக்கன்சியின் ஆவணங்கள் பல வரலாற்றுச் சான்றுகளாய்ப் பயன்படுகின்றன. அவற்றிலொன்றுதான் 'கருநாடக இராசாக்களின் சுவிகார சரித்திரம்' என்பதாகும். இது செஞ்சி நாயக்கர் வரலற்றை அறிந்துகொள்ள அடிப்படைச் சான்றுகளில் ஒன்றாகப் பயன் படுகிறது. 2. ஏசு சபை ஊழியர்களின் குறிப்புகள் ஐரோப்பாவில் இருந்து இந்தியாவுக்குக் கிறித்துவ சமயத்தைப் பரப்புவதற்காக வந்த பாதிரிமார்கள் தங்கள் தாய் நாட்டுக்குத் தங்க ளின் பணிகளைப் பற்றிக் காலவாரியாக அறிக்கைகளை அனுப்பு வார்கள். அவற்றில் இங்குள்ள அரசியல் சமூக சம்பவங்களும் தகவல் களும் குறிப்பிடப்பட்டுள்ளன. செஞ்சியையும், அத னை ஆண்ட நாயக்கர்கள் பற்றியுமான, பல தகவல்கள் அவற்றில் இருந்து கிடைக் கின்றன. எனவே இவையும் நமக்குச் செஞ்சி நாயக்கர்களைப் பற்றி அறிய சான்றுகளாகப் பயன்படுகின்றன, 3. அயல்நாட்டுப் பயணிகளின் குறிப்புகள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து நாட்டைச் சுற்றிப் பார்க்க வந்த சில பயணிகளின் குறிப்புகளில் செஞ்சிநாயக்கர்களைப் பற்றிய தகவல்களும் கிடைப்பதால் அவையும் நமக்கு அயலகச் சான்று களாகப் பயன்படுகின்றன. இத்தகைய பயணிகளில் பிழின்டா பாதிரியார் குறிப்பிடத்தக்கவராவார். கிருட்டிணப்ப நாயக்கன் காலத்தில் கி.பி. 1597-ல் இப்பாதிரியார் செஞ்சிக்கு வந்தார். இவன் பற்றிய பல் குறிப்புகள் இவருடைய பயணக் குறிப்புகள் பல்வேறு மொழிகளில் கிடைக்கின்றன. அவற்றின் மொழி பெயர்ப்புகள் நமக்குச் சரியான கருப்பொருளைத் தரவில்லை. 4. சமற்கிருத நாடகம் - நாராயண விலாசம் இதனை எழுதியவர் விருப்பாட்சர், இதில் செஞ்சியின் தொடக்க கால வரலாறு பெறப்படுகிறது. கிருட்டிண தேவராயரின் கடைசிக் நாயக்கர்களின் ஆட்சிமுறையும் பண்பாடும் காலத்தில் செஞ்சிவிசயநகர மேலாண்மையை ஏற்க மறுத்துவிட்டது. இதனை அடக்கக் கிருட்டிண தேவராயர் வையப்ப நாயக்கன் என்ப வனைத் தலைமைத் தளபதியாக்கி அவனுடன் மூன்று தளபதிகளை யும் செஞ்சிக்கு அனுப்பினார். ஒரு இலக்கம் படைகளுடன் வந்த இந்தத் தளபதிகள் செஞ்சியையும் அதனைச் சார்ந்த பகுதிகளையும் அடக்கி விசயநகர மேலாண்மையை ஏற்கச் செய்தனர். வையப்ப நாயக்கன் சித்தூர், வேலூர், செஞ்சி முதலிய நாயக்கர்கள் கட்ட வேண்டிய கப்பத்தொகைகளையும் விதித்து அவற்றை ஏற்கச் செய்தான். செஞ்சியை அடக்கி மேலாண்மையை ஏற்கச் செய்தபின் இப் படைகள்செஞ்சியில் இருந்து சோழமண்டலக் கரைக்குச் சென்று சோழ மண்டலத்தையும் தென் திசையிலுள்ள பாண்டிய மண்டலத்தையும் வென்று பின்னர் சேரப் பகுதிகளுக்கும் சென்றன. இதனால் விசய நகரப் படைகளுக்கு மூன்று கோடி ரூபாய் திறையாகக் கிடைத்தது. இந்தத் திக் விசயத்திற்குப் பின் கிருட்டிண தேவராயர் தென்ன கத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்து ஒரு பகுதியைத் துபாசி - கிருட்டி ணப்ப நாயக்கன் என்பவனிடம் கொடுத்து, செஞ்சியைத் தலைமை யிடமாகக் கொண்டு ஆளும்படிச் செய்தார். விசயநகரதாயக்கன் என்பவனைத் தஞ்சையைத் தலைமையிடமாகக் கொண்டு ஆளும் படிச் செய்தார், வெங்கப்பநாயக்கன் என்பவனை மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு ஆளும்படிச் செய்தார். இதனால் செஞ்சி, தஞ்சை, மதுரை நாயக்கர் ஆட்சிகள் ஒரே சமயத்தில் ஏற்பட்டன. இவன் காலத்தில் பியர்பிண்டு - ஜர்ரிக் என்ற மற்றொரு ஃபிரெஞ்சு நாட்டுப் பாதிரியாரும் செஞ்சிக்கு வந்துள்ளார். இவருடைய பயணக்குறிப்புகளும் பல்வேறு மொழிகளில் கிடைக்கின்றன. இத்தகைய வரலாற்றுச் சம்பவங்களை விளக்குவதுதான் விருப்பாட்சரின் நாரயணவிலாசம் என்னும் சமற்கிருத நாடகமாகும். 5. கல்வெட்டுகள் செஞ்சி நாயக்கர்களைப் பற்றி அறிவதற்குக் கல்வெட்டுச் சான்றுகளும் உள்ளன. 1. ஆலம்பூண்டி கல்வெட்டு செஞ்சிக்குக் கிழக்கே ஆறாவது கல்லில் ஆலம்பூண்டி, உள்ளது. அங்குள்ள கல்வெட்டு செஞ்சி விசயநகர ஆட்சியின் மேலாண்மை யை ஏற்றது என்பதைக் கூறுகிறது. விசயநகர மன்னன் விருப்பாட்சி என்பவன் கி.பி. 1382-ல் ஆலம்பூண்டி கிராமத்தை அவ்வூர் பிராமணருக்குப் பிரமதேயமாக வழங்கியதை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. ஆலம்பூண்டி கல்வெட்டில் குறிப்பிடும் செய்திகள் நாராயண விலாசம்' எனும் சமற்கிருத நாடகத்தில் வரும் செய்திகளோடு ஒத்துள்ளன. 3. சிங்கவரம் ஆதிவராகன் கோயில் கல்வெட்டு இக்கல்வெட்டில் செஞ்சியை எவ்வாறு விசயநகர மன்னர்கள் தங்களாட்சியின் கீழ்க் கொண்டு வந்தார்களென்ற விவரம் கூறப் பட்டுள்ளது. 6. செஞ்சி நாயக்க மன்னர்கள் இரண்டாம் அரிகரர் (கி.பி. 1377=1404) காலத்தில் விசயநகரப் பேரரசு இக்கேரி, சீரங்கப்பட்டினம், வேலூர், செஞ்சி, தஞ்சை, மதுரை முதலிய மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டது. இவற்றை ஆளுவதற்கு ஆளுநர்கள் அமர்த்தப்பட்டனர். கிருட்டிண தேவராய ரின் (கி.பி. 1509 - 1530 )கடைசிக் காலத்தில் இந்த மண்டலங்கள் பேராட்சிப் பிடியில் இருந்து விடுபட்டுத் தனித்தாள நினைத்தன. செஞ்சி மண்டலாதிபதியாக இருந்த வையப்ப நாயக்கன் தனித்தாள் முற்பட்டுச் செஞ்சி நாயக்கராட்சியை கி.பி. 1526-ல் தொடங்கினாள், செஞ்சிக் கோட்டையைச் சுற்றிலும் வலுவான அரணை அமைத் தான். பல கட்டடங்களையும் கட்டினான். வையப்ப நாயக்கனுக்குப் பிறகு, முதலாம் கிருட்டிணப்ப நாயக்கன் செஞ்சி நாயக்கனானான். செஞ்சிக் கோட்டையையும் கொத்தளங்களையும் கட்ட முற்பட்டான். கல்யாண மண்டபத்தை யும், மூன்று மலைகளைச் சுற்றிலும் பாதுகாப்பு அரணாகப் பெரிய மதிற்சுவரையும், எழுப்பினான். சீமூட்டம், திருக்கோயிலூர் ஆகிய இடங்களில் கோயில் கட்டி அவற்றில் கிருட்டிண தேவராயரின் உருவச் சிலைகளையும் படைத்தான், செஞ்சியைச் சுற்றிலும், சிறு நகரங்களையும் பேட்டைகளையும் உருவாக்கினான், இவனுக்குப்பின் வந்த சூரப்ப நாயக்கன் காலத்தில் செஞ்சி நாயக்கர் அவையில் இரத்தினதேசிக சீனிவாச தீட்சதர் வாழ்ந்தார். இவர் சமற்கிருத மொழியில் புலமை படைத்தவர். இவரால் அறுபது கவிதைகள், பதினெட்டு நாடக நூல்கள் சமற்கிருதத்தில் எழுதப் பட்டன. சூரப்ப நாயக்கனுக்குப் பிறகு இரண்டாம் கிருட்டிணப்ப நாயக் கன் (கி.பி. 1580 - 1620) செஞ்சி நாயக்கனானான். இவன் காலத்தில் பேரரசில் வாரிசுரிமைப்போர் நடந்தது. அதில் இவன் வேலூர் சக்க ராயனை ஆதரித்தான். இவன் சிறந்த வைணவ பக்தன், சிதம்பரம் நடராசப் பெருமான் கோயில் வளாகத்திலுள்ள கோவிந்தராசப் பெரு மாள் கோயிலைப் பழுது பார்த்து, பல தானங்களை வழங்கினான். இவன் இக்கோயிலைப் புதுப்பித்த போது தில்லை தீட்சதர்கள் இவன் சன்னதிக்குள் நுழையக் கூடாது என்றும். கீழ்ச் சாதிக்காரனான இவன் கோயிலுக்குள் நுழைந்தால் தில்லையம்பலம் தீட்டுப் பட்டுப் போகும் என்றும் கூறிப் போராட்டம் நடத்தினர். மேலும் அம்பலத்துள் பெருமாள் கோயில் இருக்கக் கூடாது என்றும். பெருமாளை 7ஆம் ஆண்டு தூக்கிக் கடலிலே வீச வேண்டும் என்றும் போராடினார்கள் பல தீட்சதர்கள் நடராசர் கோயில் கோபுரத்தின் உச்சியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டனர். இவற்றையெல்லாம் பொருட்படுத்தாத இரண்டாம் கிருட்டிணப்ப நாயக்கன் பெருமாள் கோயில் பழுதுபார்க்கும் பணியைத் தொடர்ந்து முடித்தான். தடுத்த வர்களைப் பீரங்கியால் சுட்டுப் பொசுக்கினான். அடுத்து, வெள்ளாறு கடலில் கலக்குமிடத்தில் போர்ட்டோ நோவோவுக்கு அருகில் கிருட்டிணப் பட்டனம்' என்ற நகரைத் தன் பெயரால் அமைத்தான். அதனருகில் மாதா கோயில் ஒன்றைக் கட்டிக் கொள்ளவும் பாதிரியாருக்கு அனுமதி வழங்கினான். கி.பி. 1609-ல் தச்சுக்காரர்களுக்குப் பண்டகசாலையொன்றைக் கட்டிக் கொள்ள அனுமதியளித்தான். வேலூர் நாயக்கன் ஜக்கராயன் இவனுக்குக் கீழ்படிந்து நடந்தான். கி.பி. 1618 - ல் தச்சுக்காரருக்கு வழங்கிய பண்டகசாலை கட்டும் அனுமதி பேரரச உத்திரவுப்படி விலக்கிக் கொள்ளப்பட்டது. - இரண்டாம் கிருட்டிணனுக்குப் பிறகு செஞ்சியின் வரலாற்றைத்" தெளிவாக அறிய முடியவில்லை , கி.பி. 1649 -ல் பீசப்பூர் சுல்தான் செஞ்சியைக் கைப்பற்றித் தன் ஆட்சியை ஏற்படுத்தினான். இவ் வாண்டிற்குப்பிறகு பீசப்பூர் படிநிகராளிகள் செஞ்சியைத் தொடர்ந்து ஆண்டார்கள். கி.பி. 1677 - ல் சிவாசி செஞ்சியின் மீது படை யெடுத்தான். அப்பொழுது செஞ்சியை ஆண்ட பீசப்பூர் சுல்தானின் படிநிகராளியான நாசர் முகமதுகான் என்பவன் சிவாசியிடம் 50 ஆயிரம் ரூபாய் வருவாயுள்ள ஒரு சாகிரையும், பெரும் தொகையை யும் கமுக்கமாய்ப் பெற்றுக்கொண்டு செஞ்சியைச் சிவாசியிடம் ஒப்படைத்துவிட்டு ஓடிவிட்டான். எனவே செஞ்சி கி.பி. 1577ஆம் ஆண்டு முதல் மராத்தியர் ஆட்சியின் கீழ் வந்தது. இவ்வாறு கி.பி. 1649 -ல் நாயக்கரிடம் இருந்து சுல்தானிடமும் கி.பி. 1677-ல் சுல்தானிடம் இருந்து மராத்தியரிடமும் கைமாறி விட்ட செஞ்சி பின்னர் நவாபுகளிடமும், கடைசியாக ஆங்கிலேயரிட மும் கைமாறியது. 7. தமிழகத்தில் மராத்தியர் ஆட்சி முன்னுரை 'முகலாயப் பேரரசின் வரலாறு மராத்தியரின் எழுச்சியில் முற்றுப் பெற்றது' என்பது வரலாற்று வாசகம். இந்த மராத்தியரின் எழுச்சிக்கு நாயகனாய் விளங்கியவன் சத்திரபதி சிவாசியாவான். மராத்தியரின் பூர்வீக வரலாறு மிகவும் எளிமையானது. கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் நாசிக், பூனா, சதாரா, சோலாப்பூர், கொங்கணம் ஆகிய பகுதிகளில் ஏழை மக்களாய் வாழ்ந்த மராத்தியர் தாழ்த்தப்பட்ட மக்களேயாவர். சில மராத்தியர் தக்காணத்தில் ஆண்ட சுல்தான்களின் படைகளில் சேர்ந்து பணி யாற்றினர். அவர்களில் சிலர் படைத் தளபதிகளாகவும் இருந்தனர். படைத் தளபதிகளுக்கு வழங்கப்பட்ட மானியங்களைப் பெற்றதால் இவர்கள் நிலமானியப் பிரபுக்களாய் விளங்கினர். இத்தகையோரை சாகீர்தார்கள் என்பர். இக்காலத்தில் தோன்றிய இறைநெறி இயக்கம்' பெரும்பாலும் மராத்திய மண்டலத்திலேயே சிறப்புற்று நின்றது. இறைநெறி இயக்கம் சிறந்து விளங்கிய மெய் அறிஞர்களில் துக்காராம், இராமதாஸ், மாம்மர், ஏகநாதர் முதலியோர் தாழ்த்தப் பட்டோருக்காகப் பாடுபட்டனர். ஐரோப்பாவில் தோன்றிய மறுமலர்ச்சி இயக்கத்தின் தொட்டி லாக இத்தாலி திகழ்ந்ததைப்போல் இந்தியாவில் கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் தோன்றிய மறுமலர்ச்சிக்கு மராத்தியமே தொட்டிலாகத் திகழ்ந்த து. மராத்தியக் குடியில் பிறந்த உசாசி என்பவர் அகமது நகர மன்னர் உசாவிடமும், பின்னர் பீசப்பூர் சுல்தானிடமும் மொகலாயப் பேரரசர் உசமாசகானிடமும் மான்சப்தாரராகப் பணியாற்றினார். அவருக்கு இரண்டு மனைவி, இசாபாயின் வயிற்றில் கி.பி. 1630-ல் சிவாசி பிறந்தார். இவருடைய இரண்டாம் மனைவிக்கு வெங்காசி என்ற ஆண் குழந்தை பிறந்தது உசாசி பீசப்பூர் சுல்தானுடைய படையில் மான்சப்தாரராக இருந்தபோது கருநாடகப் போர்களில் பணியாற்றினார். இவ்வாறு அகமது நகர் முதலிய இடங்களில் பணியாற்றியதால் இவருக்கு நிலமானியம் ஏராளமாய்க் கிடைத்தது. எனவே, ஒரு சாகிர்தார் ஆனார். தன் பிள்ளைகளையும் சுல்தான் களின் படைகளில் பணியாற்றச் செய்தார். சிவாசியின் கீழைக் கருநாடகப் படையெடுப்பு சிவாசியும் தன் தந்தையைப் போலவே படிப்படியாக உயர்ந்து பூனா, சதாரா ஆகிய பகுதிகளுக்குத் தலைவரானார். கி.பி. 1664-ல் தன் தந்தை இறந்ததும் தானே அரசனானார். மேலும் பல பகுதிகளை வென்று கி.பி. 1674-ல் 'சத்திரபதி சிவாசி என்று பட்டம் சூட்டிக் கொண்டார். மேலும் பல பகுதிகளை வென்று தன் ஆதிக்கத்தில் கொண்டுவரும் நோக்கத்துடன் கி.பி. 1677-78 ஆம் ஆண்டுகளில் கீழைக் கருநாடகப் பகுதிகளின் மீது படையெடுத்தார். அப்பொழுது ஆண்ட நாசிர் முகமதுவும், வாலிகண்ட புரத்தை ஆண்ட செர்கான் லோடியும் பீசப்பூர் சுல்தானுக்கு உட்பட்டு ஆண்டு வந்தனர். . சிவாசியின் தம்பி வெங்காசி கி.பி. 174-ல் தஞ்சையைக் கைப்பற்றி ஆண்டு வந்தார். திருச்சியில் சொக்கநாத நாயக்கன் ஆண்டு வந்தான். இந்நிலையில் வெங்காசியைத் தமிழகத்தில் இருந்து விரட்டி மராத்தியர் ஆட்சிக்கு முடிவு கட்டச் சொக்கநாத நாயக்கன் பாண்டிச் சேரி ஆளுநரிடம் உதவி கேட்டான். பீசப்பூர் முகலாயர் தாக்குதலால் நலிவுற்றது. இத்தகைய சூழ்நிலைகளைப் பயன்படுத்திக் கொண்டு சோழமண்டலக் கரைப்பகுதியான கீழைக் கருநாடகப் பகுதியைக் கைப்பற்றத் தீர்மானித்தார். புதுச்சேரி ஆளுநரிடம் நடுநிலைமை தாங்கும்படிக் கேட்டுக் கொண்டும் கோல்கொண்டாவுடன் நட்புறவுச் செய்து கொண்டும், மொகாலய ஆளுநருக்குக் கையூட்டுக் கொடுத்துவிட்டும் கி.பி. 1677 -ல் வாலிகண்டபுரத்தை ஆண்ட செர்கானை வென்றார். பின்னர் புவனகிரி, வடகொள்ளிடப் பகுதிகளையும் கைப்பற்றினார். இவ் வாறு வென்ற பகுதிகளைத் தன் சிற்றன்னையின் மற்றொரு மகனான சாந்தாசியை ஆளும்படிச் செய்தார். இவன் செஞ்சியைத் தலை நகராகக்கொண்டு ஆண்டான். இவ்வாறு கீழைக் கருநாடகப் பகுதி யின் மீது சிவாசி கொண்ட வெற்றி சென்றான் கண்டான், வென் நான், என்ற பொன்னெழுத்தைப்போல் நின்றது. இதனால் உலக மாவீரர்களான சூலியசு சீசர், அன்னிபால் ஆகியோர் பட்டியலில் சேர்ந்துவிட்டார், என்று சிவாசியைப் புகழ்ந்து உரைப்பர். இவ்வாறு, வெகு விரைவிலேயே சிவாசி செஞ்சி, வேலூர், ஆகிய கோட்டை நகரங்களையும், தென்னாற்காட்டுப் பகுதிகளை யும் வென்றார். தன் படிநிகாரளிகளை செஞ்சிக் கோட்டையிலும், வேலூர்க் கோட்டையிலும் அமர்த்தி இப்பகுதிகளை ஆளச் செய்தார். அ) தஞ்சையில் மராத்தியர் ஆட்சி விசயநகரப் பேரரசின் அச்சுதராயன் (கி.பி. 1530-1542) தஞ்சையை மதுரையில் இருந்து தனியே பிரித்து அதற்கு மைத்துனி யின் கணவன் செல்லப்பன் என்பவனை நாயக்க னாக்கினான். செல்லப்பனுக்குப்பின் கொடி வழியாகத் தஞ்சை ஆளப் பட்டது. கடைசியாக இதனை ஆண்ட இரகுநாத நாயக்கன் கி.பி. 1640-ல் தனது 80 வது அகவையில் உயிர் நீத்தான். இவனுக்குப் பின் இவன் மகன் விசயராகவ நாயக்கன் தஞ்சை நாயக்கனானான். இவனுக்கும் மதுரை நாயக்கன் சொக்கநாதனுக்கும் இடையே போர் ஏற்பட்டது. கி.பி. 1673-ல் விசயராகவ நாயக்கன் சொக்கநாதனால் போரில் கொல்லப்பட்டான். இதனையடுத்து எழுந்த அரசுரிமைப் போரில் தலையிடப் பிசப்பூர் சுல்தான் தன் படைத்தலைவன் வெங்காசியை அனுப்பினான். பீசப்பூர் சுல்தான் இறப்புக்குப்பின் வெங்காசியே தஞ்சையைக் கைப்பற்றித் தஞ்சை மன்னன் ஆனான். தஞ்சை மராத்திய மன்னர்கள் 1. வெங்காசி (கி.பி. 1685) வெங்காசியைப் பற்றிக் கூறும்போது வரலாற்று ஆசிரியர்கள் வெங்காசி தன் தந்தையைப் போலவும், அண்ணன் சிவாசியைப் போலவும் எத்தகைய குணநலனும் பெற்றிருக்க வில்லை. அவன் தன் இச்சைகளுக்கு அடிமையானவன். போகூழ் வசமாகி அவனு டைய ஆட்சியில் தஞ்சையில் கி.பி. 1677, 1680 ஆகிய ஆண்டுகளில் வெள்ளத்தால் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அந்நிலையிலும், மக்களிடம் வரி கேட்டுத் துன்புறுத்தினான். 'பணம் பற்றாக்குறை ஏற்பட்டதால் கோயில் பண்டாரத்தையும் அபகரித்துக் கொண்டான்' என்று கூறுவர். பாண்டிச்சேரியுடன் (ஃபிரெஞ்சக் காரருடன்) உறவு கொண் டான், மைசூருக்கும் மதுரைக்கும் இடையே ஏற்பட்ட போரின் போது மைசூர் பக்கம் சேர்ந்து கொண்டான், கோயில் பணத்தைக் யைாண்டதால் பிராமணர்கள் பகைவர்களாயினர். இத்தகைய உளைச்சலுக்கிடையில் இவன் கி.பி. 1884-ல் மறைந்தான். 2. இரண்டாம் சாசி (1535-1713) வெங்காசி மறைவுக்குபின் அவன் மகன் இரண்டாம் சாசி தஞ்சை மன்னனானான். இவன் காலத்தில் மதுரை நாட்டில் மங்கம் மாள் (கி.பி. 1689 - 1709) திருச்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தாள். மைசூர் மன்னரும், இராமநாதபுரம் சேதுபதியும், மராத்திய மன்னரும் மதுரையின் பகுதிகளைக் கைப்பற்றத் தொடங் கினர். இதனால், மங்கம்மாளுக்கு இம் மூவரும் பகைவர் ஆயினர். இந்நிலையில் மொகலாயர்கள் தென்னகத்தின்மீது படை யெடுத்து மதுரை, தஞ்சைப்பகுதிகளை ஆண்ட முறையே மங்கம் மாள், சாசி ஆகியோரிடம் கப்பம் பெற்றனர். எனவே தஞ்சை கி.பி. 1694-ல் இருந்து மொகலாயப் பேரரசுக்குக் கப்பம் கட்டத் தொடங் கியது. மதுரையையும் அவர்களிடமே திருப்பித் தரவும் ஒப்புக் கொண்டான். சமூக நலன்கள் இந்நிலையிலும், சாசி தனது தஞ்சை அரண்மனையை அழகிய சித்திர மாளிகையாக்கினான். தஞ்சையில் பல சத்திரங்களையும், சாவடிகளையும் கட்டினான், மருத்துவமனைகளைக் கட்டி மக்களின் நோய்களுக்கு மருந்திட்டான், இதற்காக ஐதராபாத்திலும், அரேபி யாவிலும் இருந்து மருத்துவர்களை வரவழைத்து சித்த யுனானி மருத்துவ முறைகளில் மருத்துவம் செய்தான். நீதி நிருவாகத்தைச் சீரமைத்து சிவில் கிரிமினல் வழக்குகளுக்கெனத் தனித்தனி நீதி மன்றங்களை ஏற்படுத்தினான். மராத்திய, சமற்கிருத, தமிழ் மொழி ஆகியவைகளின் வளர்ச்சிக்கும் பாடுபட்டான். கிறித்துவத்திற்கும் பகைவன்: சாசி கிறித்துவ சமயத்தை வெறுத்தான். கிறித்துவப் பாதிரிமார் களைத் துன்புறுத்தினான். கிறித்துவர்கள் மீது சமயவரி போட்டான், பாதிரிமார்களைச் சிறையிலடைத்தான் என்றெல்லாம் மனுச்சியின் கடிதங்களால் அறிகிறோம். கருநாடக நவாபு இதில் தலையிட்ட பின்னரே கிறித்துவர்கள் துன்பத்தில் இருந்து தப்பினர். 3. முதலாம் சரபோசி (கி.பி. 1712-1728) இரண்டாம் சாசி வாரிசு இல்லாமல் கி.பி. 1712-ல் இறந்தான், எனவே, சாசியின் தம்பியான சரபோசி தஞ்சை மன்னனானான், இவனுடைய சகோதரன் துக்கோசி இவனுக்குத் துணை அரசன் ஆனான். சரபோசி சிவகங்கை அரசு தோன்றுவதற்கு வித்திட்டான். இராமநாதபுரத்தை ஆண்ட கிழவன் சேதுபதி விசயரகுநாதனுக்குப் பின் அதனை ஐந்தாகப் பிரியச் செய்தான். இவன் பாம்பன் ஆற்றுப் பகுதியைத் தன் தஞ்சை ஆட்சியுடன் இணைத்துக் கொண்டான். சரபோசி புலவர்களைப் போற்றினாலும் வாரிசு இல்லாமல் இறந்தான். இதனால் இவன் தம்பிதுக்கோசி தஞ்சை மன்னனானான். 4. துக்கோசி (கி.பி. 1728-1736) முதலாம் சரபோசி கி.பி. 1728-ல் இறந்ததும் அவன் தம்பி துக்கோசி தஞ்சை அரசனானான். இவன் சிற்றின்பப் பிரியன். இவனுக்குப் பல பெண்களின் வழியாகப் பிறந்த பல் பிள்ளைகள் தஞ்சை அரசியலை அலங்கரித்தனர். இந்நிலையில் கருநாடக நவாபு கி.பி. 1732-ல் வரவேண்டியதாயிற்று-துக்கோசி இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளை வெற்றிகொள்ள முயன்று தோற்றான். இதனால் சேதுபதித் தொண்டைமானும் மதுரை நாயக்கனும், கருநாடக நவாப்பும் இணைந்து தஞ்சை மீது படையெடுத்தனர். தஞ்சைப் படைகள் தோற்றன. துக்கோசி கி.பி. 1736-ல் இறந்தான், வாரிசுரிமைப் போர்: துக்கோசி இறந்ததும் தஞ்சையில் வாரிசுரிமைப் போர் ஏற்பட்டது. இதனால் கி.பி. 1736-ல் இருந்து 1739-வரைதஞ்சையில் குழப்பம் நீடித்தது. குழப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஃபிரஞ்சுக்காரரும், சந்தாசாகிபும், செல்வாக்குத் தேட முற்பட்டனர். 5.செளசி துக்கோசியின் இறப்புக்குப் பின் பலாசாகிபு கி.பி. 1736-ல் தஞ்சை மன்னனானான். ஆனால் பட்டத்திற்கு வந்த சில நாள்களில் இவன் இறந்தான். இவனுக்குப்பின் இவனுடைய மனைவி கானா பாய் இரண்டு ஆண்டுகள் ஆண்டாள். அவளைத் தள்ளிவிட்டு 1638 - ல் செளசி என்பவன் அரசனானான். ஆனால் தஞ்சை அரியணை தனக்கே சொந்தமெனக் கூறி அவனைத் தள்ளிவிட்டு சித்தோசி என்பவன் அரசனான். செளசி பாண்டிச்சேரிக்கு ஓடி, ஃபிரஞ்சு ஆளுநர் ருபாசி (கி.பி. 1735-1741 )யிடம் உதவி கேட்டான், தன்னைத் தஞ்சைக்கு அரசனாக்கினால் காரைக்கால், கிர்காங்கரைக் கோட்டை, மற்றும் இவற்றைச் சுற்றியுள்ள ஊர்களை யும், ஃபிரெஞ்சுக்காரருக்குக் கொடுப்பதாக வாக்களித்தான். ஆனால் ஃபிரெஞ்சுப்படையின் உதவி இல்லாமலேயே தஞ்சையைக் கைப் பற்றிய சித்தோசியைத் தள்ளிவிட்டு செளசி அரியணை ஏறினான். தன் முயற்சியாலேயே தஞ்சை அரியணையைக் கைப்பற்றிக் கொண்டதால் ஃபிரெஞ்சுக்காரருக்குக் கொடுத்த வாக்குறுதிப்படி காரைக்காலையும் கிர்காங்கர் கோட்டைப் பகுதிகளையும் கொடுக்க மறுத்துவிட்டான். . இதனால் ஃபிரெஞ்சுக்காரர்கள் தஞ்சை மீது போர் தொடுத்த னர். அவர்களுக்குத் துணையாகச் சந்தாசாயிபு படையளித்து உதவினான். இப்போரில் செளசி தோற்கடிக்கப்பட்டான். தான் வாக்களித்தபடி . காரைக்காலையும், - கிர்காங்கர் கோட்டைப் பகுதிகளையும் கொடுத்து விட்டு பிரெஞ்சுக்காரரிடம் இருந்து 50,000 பபோடர்களைப் பெற்றுக் கொண்டான். இதன் இந்திய மதிப்பு 1,50,000 ரூபாய்களாகும். இதனால் காரைக்கால்ஃபிரெஞ்சுக்காரரின் குடியேற்றமானது. சந்தாசாகிபு ஃபிரெஞ்சுக்காரரின் நெருங்கிய 'நண்பன் ஆனான். ஆற்காட்டை ஆண்ட தோசுது - முகமதலியின் மகன் சப்தரவி கி.பி.1739-ல் தஞ்சை மீது படையெடுத்துச் செளசியைச் சிறைப் பிடித்தான். தஞ்சையைத் துக்காசியின் கடைசி மகன் பிரதாப்சிங் என்பவனை ஆளச் செய்தான், 6. பிரதாப் சிங் (கி.பி. 1639 - 1763) மொகலாயர்கள் மராத்தியரை ஆட்டிப்படைப்பதையும், ஆங்கிலேயரும், ஃபிரெஞ்சுக்காரரும் கருநாடகத்தில் ஆதிக்கம் பெற சூதாட்டம் ஆடுவதையும் அறிந்த பிரதாப் சிங் நாவாபுக்குப் பணிய மறுத்தான். இதனால் கருநாடக நவாபு தஞ்சையைக் கைக்கொண்டு பிரதாப் சிங்குக்கு ஓய்வு ஊதியம் கொடுத்துவிட்டான். இத்தகைய கொடுமைகளை மொகலாயர்கள் மராத்தியருக்குச் செய்வதைக் கண்ணுற்ற சதாராவிலிருந்த மராத்திய மன்னன் கி.பி. 1740 -ல் தஞ்சையை விடுவிக்க 50,000 மராத்தியப் படைகளை இரகஜி பான்ஸ்லே என்பவன் தலைமையில் ஆற்காட்டை நோக்கி அனுப்பினான். இப்படையை எதிர்த்த நவாபு தோசது அலி கொல்லப் பட்டான். நவாபின் ஆளுநராகத் திருச்சியிலிருந்த சந்தாசாய்புவை மராத்தியப் படைகள் சிறைப் பிடித்துக் கொண்டு தாராவுக்கு கொண்டு சென்றன. தஞ்சையை ஆளும்படி பிரதாப்சிங்கை மீண்டும் அமர்த்தி வீட்டு மராத்தியப் படைகள் சதாரா திரும்பின. பிரதாப்சிங் தஞ்சை மன்னன் ஆனதும் செளசி அவனைத் தள்ளிவிட்டுத் தானே தஞ்சைக்கு மன்னனாக விரும்பினான். ஆங்கி லேயரின் உதவியை நாடினான். தனக்கு உதவினால் ஆங்கிலேயருக் நாயக்கர்களின் ஆட்சிமுறையும் பண்பாடும் குத் தேவகோட்டையைக் கொடுப்பதாக உறுதி யளித்தான். இதனை யுணர்ந்த பிரதாப்சிங் தேவகோட்டையை ஆங்கிலேயருக்குக் கொடுத்து அவர்களுடன் சமாதானம் செய்து கொண்டான். தங்களின் வணிக வளர்ச்சிக்குப் பெரிதும் உதவிய தேவ கோட்டை கிடைத்த தும் ஆங்கிலேயர்கள் அமைதியாகிவிட்டனர். சதாராவில் விடுவிக்கப்பட்ட சந்தாசாயபு கருநாடகம் திரும்பிய வுடன் மீண்டும் தஞ்சை மீது படையெடுத்தான். தனக்குத் துணை யாகப் ஃபிரெஞ்சுக்காரை நிற்கச் செய்தான். இதனையறிந்த பிரதாப் சிங் ஆங்கிலேயர், தச்சுக்காரர் ஆகியோர் உதவியை நாடினான், ஆயினும் சந்தாசாயபுக்கு இழப்பீடாகப் பெரும் பொருளையும் 150 வளர்களையும் எழுபது இலட்சம் ரூபாயையும் கொடுக்க ஒப்புக் கொண்டான். இந்தப் பணத்தைத் தஞ்சை அரசனிடம் இருந்து தண்டல் செய்வதற்குத்தான் முதல், இரண்டாம் கருநாடகப் போர் களின்போது ஃபிரெஞ்சுக்காரர்கள் தஞ்சையில் தங்கிக் காலத்தை வீணாக்கினார் கள் என்பது குறிப்பிடத்தக்கதாம், மூன்றாவது முறையாகவும் சந்தாசாயபு தஞ்சையின் மீது படையெடுத்துத் திருவாரூர், மன்னார்குடி, குடந்தை ஆகிய இடங்களைப் பற்றிக்கொண்டான். ஆனால் பிரதாப்சிங் ஆங்கில தச்சு துணையுடன் கி.பி. 1752-ல் சந்தாசாரபை வீழ்த்தினான். இத்தகைய கூட்டணிகளில் நல்ல அனுபவம் பெற்றுவிட்டதால் முதல், இரண்டாவது கருநாடகப்போர்களின் போது ஆங்கிலேயர் ஃபிரெஞ்சுக்காரர்களின் தாக்குலினின்று தப்பிவிட்டான். அன்வாருதினுக்குப்பின் முகமதலி ஆர்காட்டுக்கு நவாபு ஆனான். இவனும் தஞ்சையைப் பணம் காய்கும் மரமாகக் கருதினான். தஞ்சை தன் தந்தை காலத்தில் இருந்து (கி.பி. 1748) நவாபுக்குச் சேரவேண்டிய பாக்கித் தொகை 36,50,000/= ரூபாய் தரவேண்டுமென்றான். பிரதாப்சிங் ஆங்கிலேயரின் தலையீட்டை வேண்டினான். சென்னை வணிக மன்றம் தலையிட்டு இதனைத் தீர்த்து வைத்தது. ஆயினும் கி.பி. 1763-ல் பிரதாப்சிங் காவிரியின் குறுக்கே ஓர் அணை கட்டத்தொடங்கியதை முகமதலி அக்கரையி லுள்ள தனது நிலத்தில் அணைகட்டக்கூடாதெனத் தடுத்துவிட்டான். அணையைக் கட்டி முடிக்காமலேயே பிரதாப்சிங் கி.பி. 1763-ல் இறந்துவிட்டான், 7. துல்சாசி (கி.பி. 1763-1787) பிரதாப்சிங்கிற்குப்பிறகு துல்சாசி தஞ்சை மன்னனானான். . அவன் காலத்தில்தான் முதலாம் மைசூர்ப் போர் (கி.பி. 1767-1779) நடந்தது. ஐதர் அலி செங்கம் கணவாய் வழியாகத் தமிழகத்திற்குள் புகுந்து ஊர்களையும், வயல்களையும் தீக்கிரையாக்கித் தமிழர்களைக் கொன்று குவித்தான். தஞ்சையும், திருச்சியும் அவன் கொலைக்களங்களாயின. துல்சாசி தன்னிடம் திறை வாங்கும் ஆற்காட்டு நாவாபிடம் தஞ்சையைக் காப்பாற்றி ஐதர்அலியைத் தடுத்து நிறுத்துமாறு கோரினான். ஆனால் ஆற்காட்டு நவாபு அவனுடைய கோரிக்கையைச் சட்டை செய்யவில்லை, வேறு வழியறியாத துல்சாசி ஐதர் அலியைச் சந்தித்து 4 லட்சம் ரூபாய் கையூட்டாகக் கொடுத்து, தஞ்சையைக் காப்பாற்றிக் கொண்டான், ஆங்கில வணிகக் குழுவின ரும், ஆற்காட்டு நவாபும் துல்சாசி மீது வீண்பழி போட்டனர். அவன் மராத்தியரிடமும் ஐதர்அலியுடனும் கமுக்கமாய் உறவு கொண்டதாகக் கூறித் தங்களுக்கும் பணம் கொடுக்க வேண்டுமென்றனர். இதற்கிடையில் துல்சாசி புதுக்கோடை, இராமநாதபுரம், சிவகங்கை, ஆகிய நாடுகளை ஆண்ட மறவர்கள் மீது போர் தொடுத் தான். தஞ்சையும் இந்த நாடுகளும் தனக்கு உட்பட்டவை என்றும், இதனால் தன்னுடைய அனுமதியின்றி இவை தங்களுக்குள் சண்டை யோ சமாதானமோ, செய்துகொள்ளக் கூடாது என்றும் ஆற்காட்டு நவாபு முகமதவிக்கு எச்சரிக்கை செய்தான். தஞ்சை மன்னன் மறவர் நாட்டின் மீது படையெடுத்ததற்காக கி.பி. 1771-ல் ஆங்கிலப் படையுடன் முகமதலியின் படைகளும் தஞ்சை மீது படையெடுத் தன. துல்சாசி தஞ்சையைப் போர் அழிவின்றிக் காப்பாற்ற எண்ணி எட்டு லட்சம் ரூபாய் கொடுப்பதாகவும், தேவனூர், ஆரணி மாவட்டங் களை நவாபுக்கு அளிப்பதாகவும் ஒப்புக் கொண்டான். ஆயினும், நவாபு முகமதலி கி.பி. 1773- ல் தஞ்சையை ஆங்கிலேயர் உதவியுடன் கைப்பற்றிக் கொண்டு துல்சாசியைச் சிறையிலடைத்தான். ஒரு பக்கம் ஆங்கில வணிகக் குழுவும், மறு பக்கம் நவாபும் தஞ்சையைக் கசக்கிப்பிழிந்து பணம் பறித்தனர். இந் நிலையில் சென்னை ஆளுநர் அலெக்சாந்தர் விஞ்சு (கி.பி. 1770 1773) பதவி நீக்கம் செய்யப்பட்டு, அவருக்குப் பதில் கொட்பிரபு, ஆளுநராக்கப்பட்டார். (பிகாட் கி.பி. 1787 - 1776) அவர் மீண்டும் துல்சாசியைத் தஞ்சைக்கு 1776-ல் அரசராக்கினார். அதில் இருந்து தஞ்சை ஆங்கிலேயரின் பாதுகாப்பில் இருந்து வந்தது. கி.பி. 1787 -ல் துல்சாசி இறந்தான். அவனுக்கு வாரிசு கிடையாது. எனவே, அவன் சுவிகாரம் எடுத்துக்கொண்ட சரபோஜி தஞ்சை மன்னனானான். அவனுக்குப் பாதுகாவலனாகத் தம்பி அமர்சிங் அமர்த்தப்பட்டான். ஆனால் சரபோசி சுவிகாரத்தைச் சென்னை ஆளுநர் மேஜர் ஜெனரல் ஆர்ச் பால்டு கேம்பல் (கி.பி. 1785-1787) ஏற்க மறுத்தான். எனவே அமர்சிங்கைத் தஞ்சை மன்னனாக அமர்த்தினான். 8. அமர்சிங் (கி.பி. 1787 - 1799) அமர்சிங் தஞ்சை மன்னனாக ஆங்கிலேயர்களால் அமர்த்தப் பட்டார் என்பதில் இருந்து தஞ்சைக்கு மன்னரை அமர்த்தும் உரிமை ஆங்கிலேயர் கைக்கு வந்துவிட்டது நிருபணமாகிறது. இதனால் அமர்சிங் ஆங்கிலேயரின் கைப்பாவை ஆனான். ஆங்கிலேயர்களே வரிவிதிக்கும் அதிகாரத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டனர். வரித் தண்டலுக்காக கம்பனி அதிகாரிகளையே அமர்த்தினர், வரிச்சுமை தாங்கமாட்டாமல் மக்கள் ஊரைவிட்டே வெளியேற ஆயத்தமாயினர். இதனையுணர்ந்த கம்பனி நிருவாகம் கி.பி. 1793 - ல் வரியைக் குறைத்தது. எனவே, அமர்சிங் அரியணையை அலங்கரிக்கும் பொம்மையாக இருந்தான் என்பதை அறியலாம். இந்நிலையில் துல்சாசியின் சுவிகாரப் புத்திரரான சரபோசி, சுவார்ட்ஸ் பாதிரியார் என்பவரின் பாதுகாப்பில் இருந்து வந்தான், சரபோசியின் நிலைமையை விளக்கிப் பாதிரியார் அன்றைய தலை மை ஆளுநராக இருந்த காரன்வாலிஸ் பிரபு (கி.பி. 1786-1793) அவர்களுக்கு சரபோசிக்குப் பதவி அளிக்குமாறு சிபாரிசு செய்தார். அதன் பிறகு இயக்குநர் சபையின் உத்தரவுப்படி அமர்சிங் பதவி நீக்கம் செய்யப்பட்டான், சரபோசி தஞ்சை மன்னனாக அமர்த்தப் பட்டான். ஆகவே, சரபோசி மீண்டும் தஞ்சை மன்னனானான், 5. இரண்டாம் சரபோசி கி.பி. 1798-1833) ஏற்கனவே சரபோசி என்பவன் தஞ்சையைக் கி.பி. 1712 முதல் 1728- வரை ஆண்டுள்ளதால் இவனை இரண்டாம் சரபோசி என்பர். கி.பி. 1799-ல் வெல்லெஸ்லி பிரபுவுடன் ஓர் உடன் படிக்கை செய்து கொண்ட சரபோசி, அதன்படித் தஞ்சைக் கோட்டையையும், சில ஊர்களையும் தவிர, பிறவற்றை ஆங்கிலேயரிடம் ஒப்படைத் தான். அமர்சிங்கிற்கு ஓய்வுகால ஊதியமாக ஆண்டுக்கு ஒரு லட்சம் ருபாய் கொடுக்கப்பட்டது. இரண்டாம் சரபோசிக்கு ஆண்டுக்கு நான்கு லட்சம் ரூபாய் ஓய்வு ஊதியமாக வழங்கப்பட்டது, சரபோசி யும், அவன் மகன் சிவாசியும் 'மன்னர்' என்ற பட்டத்தை மட்டும் வைத்துக் கொண்டனர். கி.பி. 1883-ல் சரபோசி மறைந்து அவன் மகன் சிவாசி தஞ்சை மன்னன் என்ற பட்டத்தோடு ஒய்வு ஊதியம் பெற்று கி. பி. 1833 - முதல் 1855- வரை வாழ்ந்து 1855-ல் வாரிசு இல்லாமல் இறந்தான். இதனால் கி.பி. 1856-ல் தஞ்சை ஆங்கிலேயர் ஆட்சியுடன் இணைந்தது. சரபோசியின் சாதனைகள்: சரபோசி சுவார்ட்ஸ் பாதிரியாரின் கண்காணிப்பில் வளர்ந்ததால் மத நல்லிணக்கமும், மனிதநேயமும், கல்வித் தாகமும், கொண்டிருந் தான். ஆங்கிலேயரிடம் ஓய்வு ஊதியம் பெற்றிருந்தது அவனுடைய அறிவுப்பசிக்கு வேண்டிய உணவைத் தேட உதவிகரமாய் இருந்த்து. ஆங்கில இலக்கியங்களைக் கற்றுப் பல அரிய நூல்களைச் சேகரித் தான், பல அரிய பழைய ஆவணங்களையும், வேதாந்தம், காவியம், இலக்கியம், இசை, நடனம், கட்டடக்கலை, வானவியல், மருத்துவம் முதலிய பல திறப்பட்ட நூல்களைச் சேகரித்தான். இவை தமிழ், தெலுங்கு, மராத்தி, சமற்கிருதம் முதலிய மொழிகளில் இருந்தன. பெரும்பாலான நூல்கள் சமற்கிருத மொழியில் இருந்தன. மருத்துவ ஆய்வில் அவன் அதிக ஆர்வம் காட்டினான். இவ்வாறு இவன் சேகரித்த, 2,200-க்கும் மேற்பட்ட சுவடிகள் சரசுவதி மகால் நூலகத் தில் சேர்த்து வைக்கப்பட்டன. இது இந்து, இஸ்லாம், கிறித்துவம் முதலிய சமயத்தவரின் வாசகசாலையாயிற்று. ஆங்கிலம், ஃபிரெஞ்சு, செருமன், கிரேக்கம், இலத்தீன் ஆகிய அயல்நாட்டு மொழி நூல்களும் இதில் அதிகம் இருந்தன. எனவே தஞ்சை சரசுவதி மகால் சரபோசி சம்பாதித்து வைத்த இணையில்லாத அறிவுக் களஞ்சியமாகும். வான இயலுக்காகப் பல கருவிகளையும், உடல் கூறு இயலுக்காகப் பல பொருள்களையும் கூட இதில் சேர்த்து வைத்தான். அத்தோடு கி.பி. 1805-ல் தஞ்சையில் ஒரு அச்சுக் கூடத்தை நிறுவி தேவநாகரி எழுத்துகளில் அச்சிடும் பணியைத் தொடங்கினான். பல பழைய சுவடிகளையும் அச்சிட்டான். பல கோயில்களைப் புதுப்பித்தும், பூசைகள் செய்யவும் வழி வகுத்தான். ஒரத்தநாட்டில் அன்னச் சத்திரம் ஒன்றையும் கட்டினான். மராத்திய ஆட்சியின் முடிவு (1856) சரபோசியின் ஒரே மகனான சிவாசி (கி.பி. 1833-1855) தன் தந்தையைப் போலவே ஓய்வு ஊதியம் பெற்றான். இவனும் ஈபர் பாதிரியார் என்பவரின் காப்பில் வளர்ந்தான். இவனுக்குப்பின் மராத்தியர் ஆட்சியை டல்ஹௌசி பிரபு தனது காலாவதிக் கொள்கைப் படி சிவாசிக்குப்பின் வாரிசு இல்லாததால் கி.பி. 1856-ல் ஆங்கில ஆட்சியுடன் இணைத்துவிட்டான், மராத்தியர் ஆட்சி தமிழகத்தில் சத்திரபதி சிவாசியால் தொடங்கப்பட்டுக் கடைசியாக ஆண்ட சிவாசி யால் முடிக்கப்பட்டது. தஞ்சை மராத்தியர் ஆட்சியின் தன்மை: தஞ்சையைக் கி.பி. 1676 முதல் 1856 வரை மராத்தியர் ஆண்டனர். ஆனால் அவர்களுடைய ஆட்சியில் தஞ்சைத் தமிழர் கள் வேதனைகளைத்தான் அதிகமாக அனுபவித்தனர். மன்னர்கள் அடிமைகளாயிருந்தனர். தங்களைச் சூழ்ந்து நின்ற பிராமண அதிகாரிகளிடம் பொறுப்பை அறுத்துக் கொண்டு வாழ்ந்தனர். அதிகாரிகளின் தற்போக்கும், ஆங்கிலேயர்களின் பணத்தாசையும் மக்களை வாட்டி வதைத்தன என்று சுவார்ட்ஸ் பாதிரியார் குறிப்பிடு கிறார். மக்களின் வரிப்பணத்தைக் கப்பமாகவும், கையூட்டாகவும் கொடுத்தே கோழைகள் போல் வாழ்ந்தனர். கடைசி அரசர்கள் ஆங்கிலக் கம்பனியாரின் ஓய்வு தளதியத்தைப் பெற்று முகவரியே இல்லாமல் முடங்கிக் கிடந்தனர் என்பதும் அப்பாதிரியாரின் கூற்றாகும். நாயக்கர்களின் ஆட்சிமுறையும் பண்பாடும் ஆ) மராத்தியர் காலச் சமூகப் பொருளாதார நிலைகள் 1. சமூக நிலை மராத்தியர் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு கி.பி. 167 முதல் 1856 வரை மொத்தம் 180 ஆண்டுகள் ஆண்டனர். இக்கால கட்டத்தில் மராத்தாவில் இருந்து எல்லா வகுப்பாரையும் தமிழகத் திற்குக் கொண்டு வந்து குடியமர்த்தினர். இதனால் ஏற்கனவே சாதி களால் பிரிவுண்ட தமிழகத்தில் மராத்தியச் சாதிகளும், குடி கொண்டு விட்டன. இதனால் சாதிகள் மொழி வழியும் இரட்டிப்பு ஆயின. எடுத்துக்காட்டாக: தமிழ் பிராமணன் மராத்தி பிராமணன், தமிழ் வண்ணான் மராத்தியவண்ணான், இப்படியாக மொழிவழிச் சாதி களும், அதன் உட்பிரிவுகளும் பெருகின மராத்தியச் சமூகப் பண்பாடு கள் தமிழ்ப் பண்பாடுகளுடன் கலந்து ஒரு புதுவிதமான பண்பாட்டை உண்டாக்கின. இச்சமூகப் பண்பாடுகள் சமய பழக்க வழக்கச் சடங்குகள் சம்பிரதாயங்களுடன் கலந்து மேலும் பல் வேறுபாடு களை உண்டாக்கின. இந்த நிலையில் சமூக வேறுபாடுகள் அதிகரித் தனவே ஒழியக் குறைந்து ஒருமைப்பாட்டினை உண்டாக்கவில்லை, ஆதலால் சாதிப்பிரிவுகளும், சமூகக் கட்டுப்பாடுகளும் மேலும் வலுப்பெற்றன. இவை போதாது என்று புதிதாகக் கிறித்துவம் வேருன்றி, புதிய வேகம் பெற்று வளர்ந்ததால் சமய வழியாக ஒரு குறிப்பிட்ட சமுதாயப் பிரிவு உண்டாகியது. பிராமணர்கள் . இக்காலச் சமூகப்பிரிவுகள் ஏறத்தாழ பாண்டிய, விசயநகர காலங் களில் இருந்ததைப் போலவே இருந்தன. பிராமணர், வெள்ளாளர், கைக்கோளர், வணிகர் போன்ற சாதிகள் இருந்தன. பிராமணர்களில் தமிழ், மராத்தி, தெலுங்கு பேசுவோர் இருந்தனர். இதில் தெலுங்கு பிராமணர்கள் நாயக்கர் காலத்திலும், மராத்தி பிராமணர்கள் மராத்தியர் காலத்திலும் தமிழகத்தில் குடியமர்த்தப் பட்டவர்களாவர். பிரமணர் எந்த மொழியைப் பேசினாலும், எங்கிருந்து வந்தேறியவர் களாயினும் தமிழ்ச் சமுதாயத்தில் அவர் களுக்கென்று ஒரு தனியான உயர்வு இருந்து கொண்டே இருந்தது. சித்த பாவணர் என்னும் பிரிவைச் சேர்ந்த மராத்திய பிராமணர்கள் மராத்திய ஆட்சியில் உயர் பதவிகளை வகித்தனர். அவர்களில் பலர் அமைச்சர்களாகவும் இருந்தனர். தளபதிகளாயிருந்தவர்கள் மானியங்களைப் பெற்ற, நிலப் பிரபுக்களாகவும் விளங்கினர். ஆசிரியர்களாகவும், பூசாரிகளாகவும், அரசவைக் குருக்களாக வும் பிராமணர்கள் இருந்தனர். வெள்ளாளர் சமூகத்தில் பிராமணருக்கு அடுத்த உயர்ந்த இடத்தில் இருந்தவர்கள் வெள்ளாளர்கள். வெள்ளத்தை ஆளுபவர் இவள் எாளரென்பதால் இவர்கள் வேளாண்மைத் தொழில் செய்பவர் என்பது தெளிவாகிறது. இவர்களில் பலர் பெரு நிலக்கிழார்களாக வும், பலர் வேளாண்மை செய்யும் குடியானவர்களாகவும் இருந்த னர். இவர்களை முறையே உழுவித்து உண்போர், உழுதுண்டு வாழ்வோர் எனலாம். காலப்போக்கில் வெள்ளாள காரளர், வாழை யினகுடி, வெற்றிலைப் பேட்டையர் எனும் மூன்று பிரிவினராயி னர். சோழ நாட்டு வெள்ளாளர்கள் சோழிய வெள்ளாளர் எனப்பட்ட னர். இவர்கள் மராத்தியர் காலத்தில் சில உரிமைகளைக் கேட்டுப் பெற்றனர். அவற்றில் பல்லக்கில் செல்லவும், சங்கு ஊதிக் கொள்ள வும், சாமரம் வீசிக்கொள்ளவும், இசைக் கருவிகளை இசைத்துக் கொள்ளவுமான உரிமைகள் குறிப்பிடத்தக்கனவாகும். வெள்ளாள் ரில் 'குடியானவர்' என்ற பிரிவினரும் உண்டு. இவர்கள் நிலத்தை உழுது பயிரிட்டனர். பிற சாதியினர் மேற்கூறிய பிராமணர், வெள்ளாளர்களோடு வேறு பல் சாதியினரும் இக்காலச் சமுதாயத்திலிருந்தனர். அவர்களில் முக்கிய மாகக் குறிப்பிடத்தக்கவர்கள் வாணிபம் செய்யும் வைசியர், துணி நெய்யும் கைக்கோளர், சேனியர், வண்ணம் போடும் சாலியர், மரவேலை செய்யும் தச்சர்கள், இரும்பு வேலை செய்யும் கம்மியர், பொன் வேலை செய்யும் தட்டார், துணி வெளுக்கும் வண்ணார், முடிதிருத்தும் நாவிதர், கல்வில் சிற்பங்களை வடித்தும், கோயில் களைக் கட்டியும் பணியாற்றும் ஆசாரி அல்லது ஸ்தபதி முதலிய தொழில்வழிச் சாதிகள் இருந்தன. பட்டுநூல் நெசவிலும், அதனால் அலங்காரம் செய்யும் கலையிலும் தேர்ந்த மராத்தியரைப் பட்டு நூல்காரர் என்றனர். தஞ்சையில் இவர்கள் பெருமளவில் குடி யமர்த்தப்பட்டனர், பட்டுநூல் நெசவு செய்யும் மராத்தியரைச் சேனியர் அல்லது சாடர் என்றும் அழைத்தனர். இக்காலத்தில் மரபுவழிக் குடிகளாக வன்னியர், அகமுடையார், ஆகியோர் ஒரு காலத்தில் போர் மறவர்களாக இருந்து இன்று உழவர் களாக உள்ளனர். மண்பாண்டம் செய்யும் குயவனைக் குலாலன் என்றும், இடையர்களை யாதவர் என்றும் அழைத்தனர். இவர்களுக் கெல்லாம் கீழாகத் தீண்டப்படாத வகுப்பார் இருந்தனர். இக்காலக் கல்வெட்டுகளில் 18 சாதிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இசுலாமியர் மராத்தியர் காலத்தில் இசுலாமியர் கணிசமான அளவுக்கு இருந்தனர், அவர்களும் பல உட்பிரிவுகளைக் கொண்டிருந்தனர், அவர்களில் ராவுத்தர், மரக்காயர், லப்பை ஆகிய மூன்று பிரிவினர் முக்கியமானவர்கள் ஆவர். பொதுவாக இவர்கள் யாவரும் வாணிபம் செய்யும் வணிகர்களேயாவர். இவர்களில் ராவுத்தர் குதிரை 155 வாணிகம் செய்தனர். கடல்வாணிபம் செய்தவர்கள் மரக்காயர் எனப்பட்டனர். உள்ளூரில் வாணிபம் செய்தோர் லப்பைகள் எனப்பட்டனர். ஐரோப்பியர் பிரிட்டன், செருமனி, ஃபிரெஞ்சு, போர்த்துக்கல், டென்மார்க்கு முதலிய நாடுகளிலிருந்து வந்தவர்களைப் பொதுவாக ஐரோப்பியர் என்கிறோம். முதலில் இவர்கள் யாவருமே கீழை நாடுகளுடன் வாணிபம் செய்வதற்கே வந்தனர். காலப்போக்கில் சமயத்தைப் பரப்பும் பாதிரிமார்களாய்ப் பலர் வந்தனர். இந்தியரைக் குறிப்பாகத் தமிழகத்தைத் தன் சமயத்திற்குள் ஈர்க்க இவர்கள் தமிழர்களைப் போல் வேட்டியும், சட்டையும் அணிந்து நெற்றியில் திலகமிட்டும், குடுமி வைத்தும் சைவ உணவுகளை உண்டனர். இதனால் 'உரோ மானிய பிராமணர்கள்' என்று நம்மவர் அழைத்தனர். பிராமணர் களைப்போல் உயர்ந்தவர்கள் என்பது இதன் பொரு ளாகும். பரங்கிப் பேட்டை, தேவனாம்பட்டினம், நாகப்பட்டினம், தரங்கம்பாடி ஆகிய இடங்களில் குடியேறிய இவர்கள் தஞ்சை நகரிலும் குடியமர்ந்தனர். இரண்டாம் சரபோசி ஒரு பாதிரியாரின் பாதுகாப்பில் இருந்து, கிறித்துவச் சமயத்தில் நன்கு ஊறித் திளைத்தவர். ஆகையால் கிறித்து வருக்கு மிகப்பல சலுகைகளை இவர் செய்தார். ஆட்சிப் பணியி லமர்ந்து கிறித்துவருக்குக் கிறித்துவப் பண்டிகைகள், ஞாயிறு, திரு விழாக்கள் ஆகியவற்றிற்காக விடுமுறைகளும், சலுகைகளும் செய்து தந்தார். இசுலாமும், கிறித்துவமும் அயல் நாடுகளில் இருந்து வந்த சமயங்களாயினும், தமிழர்களிடையே சமயப் பொறை நிலவிய காரணத்தால் வேறுபாடின்றி வாழ்ந்தனர். அக்கால ஆண்கள் வசதிக்கேற்பப் பல மனைவியரை மணக்கும் வழக்கமுடையவர்கள். அரசர்களே இதற்கு எடுத்துக் காட்டுகளா யிருந்தனர். உடன்கட்டை ஏறும் வழக்கமும், குழந்தை மணமும் இருந்தன. பரத்தையர் கூட்டமும் இருந்தது. கல்வி முறை மராத்தியர் காலத்தில் இந்திய மரபுவழிக் கல்விமுறை ஐரோப் பியக் கல்விமுறை என இருவகைக் கல்விமுறைகள் இருந்தன. பெரும்பாலான தொடக்கக் கல்விச்சாலைகளைப் பாடசாலைகள் என்றே அழைத்தனர். அவை தனியாரால் நடத்தப்பட்டன. சத்திரங் கள், கோயில்கள், மடங்கள் ஆகியவற்றில் பாடசாலைகள் நடந்தன. எழுதுவதற்குத் தாள் பேப்பர்) எழுதுபலகை அல்லது சிலேட்டுகள் இல்லாததால் தரையில் மணலைப்பரப்பி விரலால் எழுதக் கற்றுக் கொடுத்தனர். பனை ஓலையில் எழுத்தாணியால் எழுதினர். இரண் டாம் சரபோசி மன்னன்சுவார்ட்சு பாதிரியாரின் பாதுகாப்பில் வளர்ந்த வன். அவரிடமே ஆங்கிலக் கல்வியைக் கற்றான். கிறித்துவ சமயப் பரப்பூழியர்கள் மேலைநாட்டு முறையில் பள்ளிகளை ஏற்படுத்திக் கல்வி கற்பித்தனர். பெரும்பாலும் இவை கிறித்துவருக்காக ஏற்பட்ட வை ஆகும். தஞ்சை, குண்ணந்திக்குடி ஆகிய இடங்களில் இத்தகைய மேலை நாட்டுமுறைக் கல்விக் கூடங்கள் இருந்தன. இரண்டாம் சரபோசி இந்திய முறைப் பாடசாலைகளையும், ஐரோப்பிய முறைக் கல்விக்கூடங்களையும் ஏற்படுத்தினான். இந்திய முறைப் பாடசாலைகளில் எண்ணும் எழுத்தும் கற்பிக்கப்பட்டன. முக்கியமாகச் சமயக் கல்வி கற்பிக்கப்பட்டது. பாரசீகம், ஆங்கிலம், அரபு, தெலுங்கு, சமற்கிருதம், ஆகிய பிற மொழிகளும் கற்பிக்கப் பட்டன, 'நவவித்யா கலாநிதிசாலை' என்னும் தனிக்கல்வி நிலைய மும் இரண்டாம் சரபோசியால் ஏற்படுத்தப்பட்டது. இதில் மருத்துவம், கலைகள், தத்துவம், வானவியல், இசை, சிற்பக்கலை முதலியன கற்பிக்கப்பட்டன. இவை பல மொழிகளிலும் பயிற்றுவிக்கப்பட்டன, சரபோசி மருத்துவக் கல்வியில் ஆர்வம் காட்டியதோடு தன் அரண்மனையிலேயே ஒரு மருத்துவமனையையும் ஏற்படுத்தியும் மருந்துகளை உற்பத்தி செய்தும் வழங்கினான். இக்காலத்தில் பிராம் ணரும், மற்றும் அரசிளங்குமாரர்களுமே கல்வி கற்க வாய்ப்பளிக்கப் பட்டார்கள் என்றும் ஐரோப்பியப் பாதிரிமார்கள் கூறுகின்றனர். மராத்தி ஆட்சிமொழியாக இருந்தது. அரசு ஆணைகள் மராத்தி மொழியிலேயே வெளியிடப்பட்டன. மோடி எனும் வரிவடிவத்தில் தான் ஆணைகளும் எழுதப்பட்டன. வாணிகரும் சுகூட இம்முறையில் தான் தங்கள் கணக்கு வழக்குகளை எழுதினார்கள். தமிழ், பாரசீகம், உருது, ஆங்கிலம் ஆகிய சொற்கள் அதிகம் கலந்து எழுதப்பட்டன. சமற்கிருதம் தமிழோடு கலந்ததால் அதனை 'மணிப்பிரவாள நடை" என்று முன்பு கூறினர். ஆனால் மராத்தியர் ஆட்சி காலத்தில் மேற் கண்ட மொழிச் சொற்கள் தமிழோடு கலந்தன. இதனை வணிகர்கள் பெரும்பாலும் பயன்படுத்தினர். எனவே, மராத்தியர் காலத்தில் தமிழுக்குச் சீரழிவு ஏற்பட்டதெனலாம். தமிழ் இசையும் கெட்டுப் புதிய இசைப்பாணி தோன்றியது. தஞ்சை அரண்மனையில் 46 புலவர்கள் இருந்தனர். அவர்கள் மராத்தி, சமற்கிருதம், உருது மொழிப் புலவர்களாவர். பெயர் பெற்ற தெலுங்குப் புலவர்களான இராமபத்திர தீட்சதர், பாசுகர தீட்சதர், அலூரி குப்பண்ணா , முதலியோர்களைப் பதஞ்சலிக்கும், காளிதாசருக் கும் ஒப்பிட்டுப் போற்றினர். தமிழையும், தமிழ்ப்புலவர்களையும் மராத்திய மன்னர்கள் போற்றிக் காக்கவில்லை, அவர்களை மடங் களும், கோயில்களுமே பேணிக்காத்தன. கபீர்தாசின் இறைநெறியை மராத்திய மன்னர்கள் பரப்பினர், ஆனால் தமிழ்ப் புலவர்கள் தல் புராணங்களைப் பாடி இறை நெறியை வளர்த்தனர். திருவாரூர் வைத்தியநாததேசிகர், வேதாரணியம் தாயுமானவர், சுவாமிநாத தேசிகர், சீர்காழி அருணாச்சலக் கவிராயர் இக்காலத்தில் அரசின் ஆதரவு இல்லாமலேயே தமிழ்த் தொண்டு புரிந்தவர்கள். பல மொழி களில் பல நாடக நூல்கள் எழுதப்பட்டன. 2. பொருளாதார நிலை நில உடமை இக்கால நில உரிமை மூன்று வகைப்படும். அவை ஏகபோகம், பலபோகம், சமுதாயம் என்பனவாகும். ஒருவருக்கே சொந்தமான நிலம் ஏகபோகமாகும். இத்தகைய நிலம் பெரும்பாலும் அரசியல் அலுவலர்களுக்கு அளிக்கப்பட்டதாகும். பிரமாணருக்கு அளிக்கப் பட்ட நிலமும் ஏகபோக நிலமாகும். ஏனெனில் பிராமணர் மட்டுமே அதில் ஏகபோகமாக உரிமைக் கொண்டாட முடியும். இவ்வாறு, குறிப்பிட்டவருக்கே சொந்தமான ஏகபோக நிலம் தவிர மற்ற நிலங் களைப் பலவாறு பிரித்துப் பலருக்கும் உரிமையாக்கினால் அது 'பல போகம்' எனப்படும். இவ்விருவகை உரிமைகள் தவிர்த்து, கிராம் நிலங்களைப் பொதுவாக அனைவரும் பயன்படுத்தினால் அந்த உரிமைகள் 'சமுதாயம்' எனப்படும். அத்தகைய நிலங்களையுடைய ஊர்கள் 'சமுதாய கிராமங்கள்' எனப்படும். மேற்கண்ட மானியமாக விடப்படும் நில உரிமை முகாசா என்றும், வணிகக் குடியிருப்புகள் பேட்டைகள்' என்றும் பிராமணக் குடியிருப்புகள் 'அக்கிரகாரங்கள்' என்றும் அழைக்கப்பட்டன. மூவகை உரிமை நிலங்களைத் தவிர அலுவலர்களுக்கு இருந்தன வென்றும் அவற்றில் ஏகபோகப்பிரிவில் 1,807 கிராமங்களும், சமுதாயப்பிரிவில் 1,774 கிராமங்களும் இருந்தன என்றும் புல்லர்டன் என்பார் கூறுகிறார். ஒவ்வொரு கிராமத்திலும் கர்ணம், நீர்கண்டி (நீர்ப் பாசனத்தை ஒழுங்குபடுத்துபவன்) வெட்டியான், தலையாரி ஆகி யோர் இருப்பர். இவர்களைத் தவிர கிராமக் காவல்கரார்களும் இருந்தனர். இவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டது. எனவே, கிராமங்கள் தன்னிறைவு பெற்றிருந்தன. பயிர்வகைகள் நீர்வளமிக்க தஞ்சையில் மூன்று போகமும் பயிரிடப்பட்டன. தஞ்சையில் கார், சம்பா போன்ற நெல்வகைகளும், வாழை, கரும்பு, வெற்றிலை போன்றவையும், பயிரிடப்பட்டன. புஞ்சையில் கம்பு, கேழ்வரகு, துவரை, கொள்ளு முதலிய பயறுவகைகளும் பயிரிடப் பட்டன், நிலக்கடலை, கொப்பரை போன்ற எண்ணெய் வித்துக் களும் பயிரிடப்பட்டன. ஆக மொத்தத்தில் தஞ்சை நாட்டுக்கு 23, 92,034 ஏக்கர் விளைநிலம் இருந்தது. நீர்ப்பாசன ஏந்துகள் வளமான தஞ்சைத் தரணி காவேரி ஆற்று நீரையே நம்பி இருக்கிறது. இதைத் தவிர குளம், கிணறுகளை வெட்டியும் நீர்ப் பாசன ஏந்து செய்யப்பட்டது. ஆற்றில் இருந்து கால்வாய்களும் வெட்டப்பட்டன. நிலங்களை விளை நிலங்களாக்கப்பல் பண்பாட்டு முறைகளை மன்னர்கள் கை ஆண்டனர். ஆயினும் மராத்தியர் ஆட்சிக் காலத்தில் அன்னியப் படையெடுப்புகள் அதிகம் நிகழ்ந்த தால் ஒரே சீரான விளைச்சல் இல்லாமற் போனது. பெரும் வெள்ளத் தாலும், கடல் அரிப்பு ஏற்பட்டதாலும் பஞ்சம் ஏற்பட்டது. அத்த கைய கொடிய பஞ்சங்கள் கி.பி. 1730,1781 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்டன. ஐதர் அலியின் படையெடுப்பின்போது அவன் ஈவு இரக்கமின்றி மக்களைக் கொன்று குவித்ததோடு அல்லாமல் விளை நிலங்களையும் தீக்கிரையாக்கி அழித்தான். கிராமங்கள் தஞ்சை மராத்தியர் ஆட்சியில் மொத்தம் 5783 கிராமங்கள் இருந்தன. தொழில்கள் பயிர்த் தொழில்தான் முகாமைத் தொழிலாகும். இதைத் தவிர போர்க்கருவிகளைச் செய்யும் கருமார் தொழிலும், தச்சர் தொழிலும், தட்டாரத் தொழிலும் இருந்தன. துப்பாக்கி, வாள், வேல், ஈட்டிகள் முதலியனவும் கருமாரப் பட்டரைகளில் செய்யப்பட்டன. நெசவுத் தொழிலில் பட்டு உற்பத்தி செய்வதில் திறம் படைத்த செளராஷ்டிரர் களும், காலிகோ போன்ற துணிகளை உற்பத்தி செய்யும் நெசவாளர் களும் இருந்தனர். தஞ்சையில் நாணயங்கள் அச்சிடும் சாலை இருந்தது. வரவு செலவுகள் ரூபாய் கணக்கில்தான் கணக்கிட்டனர். ருபாய் வெள்ளியால் ஆனது மோகரா என்பது பொன் அளவாகும். இதன் விலை 15 ரூபாய் ஆகும். பொன் நாணயத்தை யஹொன்னு என்றனர். வாணிபம் செய்தவற்கென்றே 'செட்டிகள்' என்ற வகுப்பினர் இருந்தனர். எண்ணெய் வாணிகம் செய்தோர் 'வாணியர்' எனப் பட்டனர். வெள்ளாளரில் சிலரும் வாணிபம் செய்தனர். வெற்றிலை வியாபாரம் செய்தவரைக் கொடிக்கால் வெள்ளாளர்' என்றனர், பலசரக்கு கடைகள் ஏராளமாய் இருந்தன. இவற்றில் உணவுப் பொருட்களும், முத்து நவமணிகளும் கூட விற்பனையாயின. பல ஊர்களுக்கும் பொதுவாக வணிகச் சந்தைகள் அல்லது பொது அங்காடிகள் இருந்தன. அரசாங்கமே இச்சந்தைகளை ஏற் படுத்துவதுண்டு. இச்சந்தைகளைப் பேட்டை என்றும் அழைப்பர், இவற்றில் வெற்றிலை, அரிசி, முதலியன விற்கப்படும். சாராயம் விற்பதற்கென்று சாராயப்பேட்டைகள் இருந்தன. கலைகள் 1. கட்டடக்கலை மராத்தியர் ஆட்சியில் தென்னகத்தில் மட்டும் 240 வலுவான கோட்டைகள் இந்தன. ஒவ்வொரு கோட்டையிலும் 500 மராத்திய வீரர்களும், அதிகாரிகளும் நிறுத்தப்பட்டிருந்தனர். இவற்றில் பலதிறப் படைக்கருவிகளும், உருண்டு விழும் பாறாங்கற்களும், நவீனரக வேட்டகங்களும் இருந்தன, செஞ்சிக் கோட்டையை மாற்றியமைத்து மராத்தியர் கட்டினர். தஞ்சைக் கோட்டையும் அப்படிப்பட்டது தான். தஞ்சையை அடுத்த வல்லத்தின் குன்றின் மீது கட்டப்பட்டுள்ள கோட்டை தேவானம்பட்டினத்தில் கட்டப்பட்ட கோட்டை ஆகிய வற்றைச் சுற்றிப் பெரிய மதில் சுவர்களும், அகழியும் உள்ளன. கோட்டை வளாகத்திற்குள் மாடமாளிகைகளும், நீராடும் மண்ட பங்களும் அமைக்கப்பட்டன. தஞ்சை மாளிகை மராத்தியரால் புதுப்பிக்கப்பட்டுப் பல மாறுதல்களுடன் கட்டப்பட்டன. இதன் நடுவில் நீளமான உயர்ந்த முற்றமும், இதனைச் சுற்றி தாழ்வாரங் களும், வாரையைத் தாங்கும் அகன்ற பெரிய தூண்களும் அமைக் கப்பட்டன. தூண் தலைப்புகளில் கீழ் அலங்கார வளைவுகளும், அழகிய வேலைப்பாடுகளைக் கொண்ட அந்தப்புரமும் அமைத்து அதனை 'மங்கல விலாசம்' என்றழைத்தனர். மனோரா இஃது சாளுவ நாயக்கன்பட்டினத்துக் கடற்கரையில் கி.பி. 1814ஆம் ஆண்டில் சரபோசி மன்னனால் கட்டப்பட்ட அழகிய கோட்டை மாளிகை ஆகும். இதன் அடிப்பரப்பு எண்கோண வடிவி லானது. இதனைச் சுற்றிலும் அகன்ற பெருஞ்சுவர் மதிலும், அகழியும் அமைந்துள்ளன. அகழியில் இருந்து கோட்டைக்குள் செல்லப் பலகை வாயில் அமைக்கப்பட்டுள்ளது. பல மாடிகளைக் கொண்ட இக்கட்டடத்தில் ஒவ்வொரு மாடியிலும் வசிப்பதற்கான பல்வேறு வசதிகளும் உள்ளன. இதுவரை நாம் கண்ட கோட்டைகளைத் தவிர சமயச் சார்பற்ற வேறுசில கட்டடங்களையும் காண்போம். சத்திரங்கள் பெரும்பாலும் சாலை ஓரங்களில் பயணிகளின் வசதிக்காகச் சத்திரங்கள் கட்டப்பட்டன. புனிதத் தலங்களிலும் பக்தர்களின் வசதிக்காகச் சத்திரங்கள் கட்டப்பட்டன. மராத்தியர் ஆட்சிக்காலத்தில் இத்தகைய சத்திரங்கள் மணல்மேல் குடி, நீடாமங்கலம், தாராசுரம், அம்பாசமுத்திரம், இராசாம்டம், முதலிய இடங்களில் கட்டப்பட்டன. இரண்டாம் சரபோசி மன்னனின் மனைவி முத்தம்பாளின் நினைவாக ஒரத்தநாட்டில் கட்டப்பட்ட சத்திரம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இந்தச் சத்திரங்கள் யாவும் ஏறக்குறைய ஒரே மாதிரி வடிவமைப்பில் கட்டப்பட்டவை ஆகும். நடுவில் முற்றமும், நான்கு பக்கமும் நீண்ட சதுரவடிவிலான அறைகளுடனும் கட்டப்பட்டு உள்ளன. மிகப் பெரிய சுவர்களையும், கருங்கல் தூண்களையுமுடைய இந்த சத்திரங் களைச் சுண்ணாம்புக்காரை கொண்டே கட்டி உள்ளனர். இச்சத்திரங் களைத் தவிர இக் காலத்தில் கட்டப்பட்ட நாகப்பட்டினம் கலங்கரை விளக்கு, கோடிக்கரை விளக்குத்தூண் ஆகியவையும் குறிப்பிடத் தக்கனவாகும். 2. சிற்பக்கலை மராத்தியர் காலச் சிற்பக்கலைக்குத் திருவிடை மருதூரில் உள்ள பாவை விளக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும், நின்ற நிலையி லுள்ள ஒரு அழகிய பானவகைகளில் ஒரு பெரிய அகல் விளக்கை ஏந்தியுள்ளாள்.எனவே இது பாவவிளக்கு எனப் பட்டது. மராத்திய மன்னர்கள் தஞ்சைக் கோயிலுக்கு அளித்த வாகனங்களும் கலைப் படைப்புகளாய் உள்ளன. தஞ்சையிலுள்ள சரபோசி மன்னனின் பளிங்குச் சிலை சரசுவதி மகால் நூலகத்தை அலங்கரித்து நிற்கிறது. வாளுடன் இராச கம்பீரத்துடன் நிற்கும் இச்சிலை பளிங்குக்கல்லால் செய்யப்பட்டிருப்பது இக்காலக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டா கும், சரபோசியின் வழிகாட்டியான சுவார்ட்சு பாதிரியாரின் உருவச் சிலையும் இங்குள்ளது. 3. ஓவியக்கலை தஞ்சைப் பெருவுடையார்கோயில் வளாகத்தினுள் இருக்கும் சுப்பிரமணியர் கோயில் சுவர்களில் பல மராத்திய மன்னர்களின் ஓவியங்கள் உள்ளன. இங்கு நடனமங்கையரின் ஓவியங்களும் காணப்படுகின்றன. இதைப் போலவே தஞ்சை மாளிகையின் உட்புறத்திலும் மராத்திய மன்னர்களின் ஓவியங்கள் உள்ளன. துணி களில் இதிகாச, புராணச் சம்பவங்களை வண்ண ஓவியங்களாகத் தீட்டி மரச் சட்டங்கள் போட்டுவைக்கும் கலையும் இவர்கள் காலத் தில் வளர்ந்தது. 4. நுண்கலை , மராத்தியர் காலத்தில் இசை, நடனம், நாடகம் முதலிய கலைகளும் புதிய பாணியில் வளர்ந்தன. கருநாடக இசையே தெலுங்கு மூலத்தில் இருந்து தோன்றி மராத்திய மன்னர்களால்தான் வளர்க்கப்பட்டது என்பாரும் உளர். ஆனால், கருநாடக இசை தமிழ் இசையே என்று முடிந்த முடிவாகக் கூறிவிட்டனர், நாம் ஏற்கனவே கூறியதைப்போல் மராத்திய மன்னர்கள் அவையில் சமற்கிருத பண்டிதர்களும், தெலுங்கு இசைவாணர்களும் கொடிகட்டிப் பறந்தனர். மேலும் அவர்கள் காலத்தில்தான் சங்கீத மூர்த்திகள் தெலுங்குக் கீர்த்தனைகளைப் பாடிப் புகழ் பெற்றனர், தமிழ் இசைப் புலவர் ஒருவரும் மராத்தியரால் போற்றிக் காக்கப் படவில்லை! எனவேதான் கருநாடக இசையே தமிழ் இசை இல்லை என்கின்றனர். சங்கீதவித்துவான் கிரிராச கவிஞர், மார்கதரசி, வீரபத்திர அய்யர், இராமசாமி தீட்சதர், பைடாலு குருமூர்த்தி சாத்திரி, பச்சு நிரியம் ஆதிய்யா, கானம் கிருட்டிண அய்யர், கோபாலய்யா முதலியோர் இக்காலத்திலிருந்த இசைப் புலவர்கள் ஆவர். சங்கீதத்திற்கு 'மும்மூர்த்திகள்' என்பதைப் போலவே, நடனக் கலைக்கும் 'தஞ்சை நால்வர்' பெயர் பெற்றவராவர். அவர்கள் பொன்னையா, சின்னையா, சிவானந்தம், வடிவேலு ஆகிய நால்வர் ஆவர். இவர்கள் பரதநாட்டியம், மற்றும் பலதேசிய நடனங்களையும் தேவதாசிகளுக்குக் கற்பித்து வந்தனர். இக்காலத்தில் இத்தகைய அரசவைக்குத் தனியே நடனமங்கையர் (நர்த்தினி) இருப்பர். அவர்களுக்கு நட்டுவாங்கக்காரர்களும் இருப்பர். இக்காலத்தில் 'யக்கடிகானம்' எனப்படும் இசையும், கூத்தும் கலந்த நாடகங்கள் மக்களிடையே வரவேற்புப் பெற்றன. இக்கால வட்டார நாடகங்களைத் 'தேசி' என்றனர். பெரும்பாலானவை புராண, இதிகாச கலைகளைக் கருப்பொருளாய்க் கொண்டு நடிக்கப் பட்டன. 8. இராமநாதபுரம் சேதுபதிகள் மதுரைக்குக் கிழக்கு, தஞ்சைக்குத் தெற்கு, திருநெல்வேலிக்கு வடக்கு ஆகிய எல்லைகள், கிழக்கே கடலை எல்லையாக உடைய நிலப்பரப்பு ஆகியவை உட்பட்ட பகுதிகளை 'மறவர் நாடு' என்கிறோம். இதனை ஆண்டவர்கள் சேதுபதிகள் எனப்பட்டனர். இவர்கள், தங்களைக் 'கள்ளர்' அல்லது 'மறவர்' இனத்தவர் என்றனர். 'தேவர்' என்றும் தங்களை அழைத்துக் கொண்டனர். இவர்கள் போர் மறவர்கள் ஆணைக்கு எளிதில் கீழ்ப்படியாதவர். சங்க காலத்தில் இத்தகைய மக்கள் பாலை நிலத்தில் வாழ்ந்தனர். அவர்களை 'ஆறலைக் கள்வர்' என்பர். இவர்கள் கி.பி. 17ஆம் நூற்றாண்டில் இருந்து வரலாற்றிலிடம் பெறத் தொடங்கினார். போர்த்துக்கீசியர்கள் இராமேசுவரத்தைச் சுற்றிலுள்ள கீழைக்கரைப் பகுதிகளில் குடியேறி வாணிகம் செய்யத் தொடங்கும்போது வரித்தண்டல் செய்வதில் சிரமம் ஏற்பட்டது. மேலும் இந்த வணிகர்களுக்கும், அயல்நாட்டுப் பயணிகளுக்கும் இப்பகுதிகளில் பாதுகாப்பு இல்லாமல் போய் விட்டது. ஏனெனில் இப்பகுதிகளில் உள்ள நாடுகளிலும் தோப்புகளிலும் ஒளிந்திருந்து கள்வர் கள் இவர்களைத் தாக்கி வழிப்பறி செய்தனர். முத்து கிருட்டிணப்ப நாயக்கன் (கி.பி. 1601-1609) மதுரையை ஆண்டபோது இராமநாதபுரம் மறவர்களை அடக்கி, இராமேசுவரம் செல்லும் புனிதப்பயணிகளை வழிமறித்துக் கொள்ளை, கொலை செய்து வந்ததை அடக்கினான். இப்பகுதிக்கு மேலும் பாதுகாப்பு தேடுவதற்காகச் சடையப்ப தேவன் என்பவ னையே சிற்றரசனாக்கிக் கள்வர்களை அடக்கவும், மக்களைத் துன்புறுத்தி மதமாற்றம் செய்யும் போர்த்துக்கீசியப் பாதிரிமார் களைத் தடுக்கவும் ஆணையிட்டான். வரி கொடாமல் வாணிபம் செய்த போர்த்துக்கீசிய வாணிபர்களையும் ஒழிக்கச் செய்தான். இச்சமயத்தில் போர்த்துக்கீசியப் பாதிரிகள் உயர்வகுப்பு இந்துகளை மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். முதலில் வந்த பர்னாண்டஸ் பாதிரியார் கி.பி. 1592-ல் தமது பணியைத் தொடங்கிப் பதினான்கு ஆண்டுகள் சமயப் பணியாற்றினார். இவர் தொடங்கிய 'மதுரை மிசன்' வெற்றி பெறவில்லை. இவரை அடுத்து வந்த இராபட்-டி - நொபிளி பாதிரியார் வந்தபின் மதுரை மிசன் மதுரை, தஞ்சை, செஞ்சி ஆகிய ஊர்களிலும் பரவியது. மராட்டியர்களின் எதிர்ப்புகளுக்கு இடையிலும் கிறித்துவம் வெகுவாகப் பரவியது. இராணி மங்கம்மாள் (கி.பி. 1689-1706) காலத்தில் கிறித்துவத் திற்கு அங்கீகாரம் வழங்கியதால் தடையின்றிக் கிறித்துவம் இராமநாத புரம் சீமையில் பரவியது. 1. சடையப்பதேவர் உதயன் சேதுபதி சி.பி. 1605 - 1622) முத்துக்கிருட்டிணப்ப நாயக்கனால் சிற்றரசனாக்கப்பட்ட சடையப்ப தேவர் (சடையத்தேவர்) இராமநாதபுரம் நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டினான். வரித் தண்டலை ஒழுங்குபடுத்தினான். வன்னியர்களை அடக்கினான், பாளையக் காரர்களை ஒன்றுபடுத்தி அவர்களின் தலைவனாக்கப்பட்டான், இவனுடைய திறமையைக் கண்ட மதுரை நாயக்கன் இவனை மெச்சி இவனுக்குச் 'சேதுபதி' என்ற பட்டமும் வழங்கினான். சடையத் தேவன் இராமநாதபுரம், முதல் சேதுபதியானான். இராமேசுவரம் இராமநாதசாமி கோயிலுக்குப் பல தானங்களை வழங்கினான். இராமநாதபுரத்திற்கு மேற்கிலுள்ள புகலூர் என்ற இடத்தைத் தன் தலைமைப் பீடமாகக் கொண்டு ஆண்டான். தன் பெயரிலேயே நாணயங்களையும் அச்சிட்டு வெளியிட்டான். 2. கூத்தன் சேதுபதி கி.பி. 1663 -1635) இவன் அமைதியை விரும்பும் சேதுபதியாக 14 ஆண்டுகள் ஆண்டான், மதுரை நாயக்கனுக்கு அடங்கி ஆண்டான். இவனுடைய காலத்தில் மதுரை நாயக்கனாக இருந்தவன் திருமலைநாயக்கன் (கி.பி. 1623-1659) ஆவான். 3. இரண்டாம் சடையப்ப தேவன் (அல்லது) தளவாய் சேதுபதி (கி.பி. I636-1545) இவனைக் கூத்தனுடைய தம்பி என்றும், மகன் என்றும் இருவேறு கருத்துகளைக் கூறுவர். இவனைப்பற்றி அறிய இராமய் நாயக்கர்களின் ஆட்சிமுறையும் பண்பாடும் யர் அம்மானை' என்ற நூல் சான்றாக உள்ளது. இவன் காலத்தில் மதுரை நாயக்கனாக இருந்தவன் திருமலை நாயக்கன் ஆவான், சி.பி. 1635-ல் கூத்தன் சேதுபதி காலமானான் சேதுபதியான சடையத் தேவன் திருமலை நாயக்கனோடு வேறுபட்டான். இந்நிலையில் திருமலைநாயக்கன் அவனைத் தண்டிக்க நினைத்தான். அந்த நேரத்தில் கூத்தன் சேதுபதியின் வைப்பாட்டியின் மகன் 'தம்பி' எனபவன் சேதுபதிப் பட்டம் தனக்கே உரியது என்றும் எனவே இரண்டாம் சடையத் தேவனை நீக்கிவிட்டு தன்னையே சேதுபதி ஆக்க வேண்டும் என்றும் கேட்டான். உடனே திருமலை நாயக்கன் தனது தளபதி இராமய்யர் என்பவரையும், அறங்கண்ண நாயக்கன் - என்ப வரையும், படையோடு புகார் சென்று சடையப்பத் தேவனைச் சிறைப்படுத்தி வருமாறு கட்டளையிட்டான், இவர்க ளோடு பல சிற்றரசர்களும் வீரர்களும், செட்டியார்களும், பரத்தை யரும், பரங்கியரும் உடன் சென்றனர். அப்பொழுது சடையப்பத் தேவன் இராமேசுவரத்திலிருந்தான், இராமேசுவரத்திற்குப் பாலம் அமைத்துச் சென்று சடையத் தேவனைச் சிறைப்பிடித்து மதுரைக் குக் கொண்டு வந்தனர். சடையப்ப தேவன் மதுரைச் சிறையில் அடைக்கப்பட்டான். அவன் தம்பி சேதுபதி ஆனான். தென்பாண்டி நாட்டில் பெரிய கலகம் தோன்றியது. கலகத்தை அடக்க முடியாத தம்பி மதுரைக்கு ஓடி வந்துவிட்டான். உடனே சிறையிலிருந்த சடையப்ப தேவனைத் திருமலைநாயக்கன் விடு வித்து, அவனைத் தளபதியாக்கிக் கலகத்தை அடக்கும்படி ஆணை : யிட்டான். கலகம் அடங்கி இராமநாதபுரத்தில் அமைதி ஏற்பட்டது. இந்த விவரங்களை இராமய்யர் அம்மானையும், பாதிரிமார்கள் குறிப்புகளும் கூறுகின்றன. 4. இரகுபதி சேதுபதி (திருமலை சேதுபதி) கி.பி. 1645-1670 ) சேதுபதிகளில் மிகவும் சிறந்தவனாகக் காணப்பட்ட இவன் திருமலை நாயக்கனுக்குக் கீழ்ப் படிந்து உண்மை ஊழியனாக ஆண்டான். இவன் தஞ்சை, நாயக்கரோடு போரிட்டு மன்னார் கோயில், தேவகோட்டை, அறந்தாங்கி, திருவாருர் முதலிய இடங்களைப் பெற்றான், மதுரை நாயக்கன் திருமலை நாயக்கனும் தனக்கு மைசூர்ப் போரில் துணை புரிந்ததற்காகத் திருபுவனம், பள்ளிமடம் முதலிய இடங்களை இவனுக்குக் கொடுத்தான், குதுப்கான் என்ற முஸ்லீம் மதுரையைத் தாக்கியபோது இரகுநாத சேதுபதி அவனைத் துரத்தி அடித்தான். இதற்காக இவனும் நவராத்திரி விழாவை மதுரையில் கொண்டாடுவதைப் போலவே புகலூரிலும் கொண்டாடும் உரிமை பெற்றான். மூக்கறுப்புப்போர் (கி.பி. 1656-1659) விசயநகரப் பேரரசன் மூன்றாம் சீரங்கன் நாடிழந்து அலைந்த போது மைசூர் மன்னன் காந்தருவ நரசராசன் (கி.பி. 1638 - 1659) அவனுக்கு வேலூரை மீட்டளித்தான். இந்த முயற்சியில் மதுரை நாயக்கன் மற்றவர்களை ஒன்றிணைத்துச் சுல்தான்களை எதிர்த்தனர். இதனால் மைசூர் மன்னன் திருமலை நாயக்கரிடம் உட்பகை கொண்டான். திருமலை நாயக்கன் முதுமை எய்தி நோய்வாய்ப்பட்டிருக்கும்போது மைசூர் மன்னன் மதுரை மீது படையெடுத்தான், மைசூர்ப் படைகள் மதுரைக்கு வரும் வழியில் பெண்கள், குழந்தைகள், முதியோர் என்ற வேறுபாடின்றி வழியில் கண்டவர்களை எல்லாம் மூக்கறுக்கும் போரில் ஈடுபட்டன. மரணப்படுக்கையில் இருந்த திருமலைக்கு எவருமே துணைக்கு வரவில்லை. திருமலை தன் மூத்த மனைவியை அழைத்து இராமநாத புரம் இரகுநாத சேதுபதிக்கு ஓலை அனுப்பும்படிக் கூறினான். ஓலையைக் கண்ட இரகுநாத சேதுபதி வலிமை மிக்க மறவர் படைகளைத் திரட்டிக் கொண்டு வந்து தமிழரின் மூக்கறுத்த கன்னடப் படையினரின் மூக்குகளை அறுத்தான். மைசூர்ப் படைகள் கி.பி. 1656 -ல் சத்தியமங்கலத்தைக் கைப்பற்றி மதுரையைக் கைப்பற்ற வீறுநடைபோட்டு வந்தன. இரகுநாத சேதுபதியின் 20,000 வீர மறவர்கள் மதுரையைச் சுற்றி அரண்போல் நின்றனர். திருமலை நாயக்கர் திரட்டிய 25,000 படைகளும் மறவர் படைகளுடன் சேர்ந்துகொண்டன. மைசூர்ப் படைகள் திண்டுக்கல் வந்து அங்குத் தங்கி மேலும் 10,000 படைகளை மைசூரில் இருந்து எதிர்பார்த்து நின்றனர். மதுரைப் படையினர் கடுமையாகப் போரிட்டனர். கன்னடியர் முக்குகள் அறுக்கப்பட்டன. மூட்டை மூட்டையாகக் கட்டப்பட்டு மதுரைக் கோட்டைக்கு அனுப்பப்பட்டன. மைசூர்ப் படைகள் தலைதெறிக்கப் பின்னடைந்தன. ஆயினும், தன் குடிமக்களின் முக்குகள் அறுக்கப்பட்டதை அறிந்த திருமலை நாயக்கன் ஆற்றொணாத் துயரம் கொண்டான். தன் தம்பி குமாரமுத்து நாயக்கன் என்பவனை மைசூருக்கு அனுப்பி ஆசை தீர பழிவாங்க வேண்டுமென்றான் குமராமத்து நாயக்கன் திண்டுக்கல் முதலிய 18 பாளையக்காரர்களைச் சேர்த்துக் கொண்டு மைசூருக்குள் புகுந்து அரச குடும்பத்தினர் உள்பட பலருடைய மூக்குகளையும் அறுத்தான். இரகுநாத சேதுபதியையும் அவனுடைய வீரத்தையும், நன்றியுணர்வையும் பாராட்டி திருமலை சேதுபதி' என்ற விருதுப் பெயரும் 'அரசுசொல்காத்தான்' என்ற பெயரும் அளித்துத் திருமலை பாராட்டினான். இதற்குப்பின் திருமலையும் காலமானான். திருமலை நாயக்கருக்குப் பிறகு பட்டத்திற்கு வந்த சொக்க நாத நாயக்கன் (கி.பி. 1659-1682) காலத்தில் தலைநகர் மதுரையில் இருந்து திருச்சிக்கு மாற்றப்பட்டது. தலைநகரை 'வனமியான்' என்ற பீசப்பூர் முஸ்லீம் தளபதி முற்றுகையிட்டபோது, சொக்கநாதன் இராமநாதபுரம் சேதுபதி இரகுநாதனைத் துணைக்கு அழைத்தான். ஆனால் இரகுநாத சேதுபதி துணைக்கு வர மறுத்துவிட்டான். கோபம் கொண்ட சொக்கநாதன் சேதுபதி நாட்டின் மீது படையெடுத்தான். திருப்பத்தூர், மானாமதுரை, காளையார்கோவில் ஆகிய இடங்களைக் கைப் பற்றினான். மேலும் இடங்களைக் கைப்பற்றவும் இரகுநாத சேதுபதி யைத் தோற்கடிக்கவும் தம் தளபதிகளுக்கு ஆணை பிறப்பித்துவிட்டுச் சொக்கநாதன் திருச்சிக்குத் திரும்பினான். அதுவரை காடுகளில் பதுங்கி இருந்த மறவர் படைகள் தீடீரென வெளியில் வந்து சொக்கநாதநாயக்கன் படைகளைத் தாக்கிச் சிதறடித்தன. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இரகுநாத சேதுபதி கி.பி.1860-ல் இருந்து மதுரை நாயக்கரின் மேலாதிக்கத்தில் இருந்து விடுபட்டுத் தனி மன்னன் ஆனான். இரகுநாத சேதுபதி மிகச் சிறந்த புரவலன். இலக்கியவாதிகளை ஆதரித்தவன். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளைத் தன் ஆட்சி மொழியாகக் கொண்டவன். அழகிய சிற்றம்பலக் கவிராயர், அமிர்த கவிராயர் முதலிய தமிழ்ப்புலவர்களை ஆதரித்தவன் பழைய கோயில் களைப் பழுது பார்த்துப் பூசைகளைச் செய்தவன் 'ஹிரண்ய கர்ப்பம்' எனும் வெள்ளி செய்து பிராமணர்களுக்குத் தானம் செய்தவன். இதனால் இவனை 'ஹிரண்யகர்ப்பயாகி" என்றழைத்தனர். இராமேசு வரம், இராமநாத சுவாமி கோயில் இரண்டாம் பிரகாரத்தைக் கட்டிய வன், தாயுமானவ சுவாமிகள் இவன் காலத்தில் இராமநாத புரத்தில் வாழ்ந்தவர். 5. இரகுநாத சேதுபதி (கிழவன் சேதுபதி) கி.பி. 1571-1710 திருமலை சேதுபதி கி. பி. 1870-ல் காலமானார். அவர் உயிராயிருக்கும் போதே மதுரையின் மேலாதிக்கத்திற்கு அடங் காமல் தனிமன்னனாக ஆண்டார். அவருடைய இறப்புக்குப் பின் கி.பி. 1670-ல் அவருடைய மகன்களான சூரியதேவர், ஆதன்ன தேவர் என்ற இருவரும் தலா ஆறு திங்களே ஆண்டு மடிந்தனர். இவர்களை அடுத்து ரகுநாத சேதுபதி என்கிற 'கிழவன் சேதுபதி' ஆட்சிக்கு வந்தான், 'கிழவன்' என்ற சொல் 'பட்டத்திற்குரியவன்' என்று பொருள்படும். இவன் 1671 முதல் 1710 வரை 39 ஆண்டுகள் ஆண்டுள்ளான். ஆகவே, சேதுபதிகளில் இவன் ஒரு தலை சிறந்த இடத்தைப் பெறுகிறான். தான் சேதுபதியானவுடன் குடும்பத்திலிருந்த இருவரைக் கொலை செய்து விட்டான். ஆனால், மதுரை சொக்கநாத நாயக்கரிடம் மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தான். சொக்கநாத நாயக்கருக் காக ருசுதம்கான் என்பவனைக் கொன்றான். இதற்காக 'பரராசகேசரி' என்ற பட்டம் கொடுத்துக் கிழவன் சேதுபதியைப் பெருமைப் படுத்தினான், 'புதுக்கோட்டை' என்னும் பகுதி இராமநாதபுரத்திற்கு வடக்கில் உள்ளது. இதனை ஏற்படுத்தியவனே கிழவன் இரகுநாத சேதுபதி தான் என்பார்கள். இதனை ஒரு முக்கியப் படைத் தளமாக்கி அதற்கு இரகுநாதராசா தொண்டைமான் என்பவனையும் அவனுடைய தம்பியையும் அனுப்பும்படிச் செய்தான். பின்னர் அவனுடைய தங்கை கதளி என்பவளை சேதுபதி மணந்தான். 'இரகுநாதராசா தொண்டைமான் பாளையக்காரன் நிலைக்கு உயர்த்தப்பட்டான் அந்த பாளையம்ப் 'பல்லவராயர் பாளையம் " என்றழைக்கப்பட்டது. இதுவே காலப்போக்கில் புதுக்கோட்டை மாநிலம் ஆனது! என்பது புதுக்கோட்டை தோற்றம் பற்றிய கதை ஆகும். ஆனால் இக்கதையை மறுத்து ராதாகிருட்டின அய்யர் என்பவன் தொண்டை மண்டலத்தில் இருந்து குடிபெயர்ந்து புதுக்கோட்டையில் குடியேறினான். அவனே பல்லவராயன் மரபைத் தோற்றவித்தவன் என்றும் சேதுபதியும் அந்த மரபிலிருந்து வந்தவன் ஆவான் என்றும் கூறப்படுகிறது. கிழவன் சேதுபதியின் காலத்தில் புதுக்கோட்டை ஒரு வலிமை பொருந்திய நாடாக இருந்தது. சேதுபதியும் கிறித்துவமும் கிழவன் சேதுபதி காலத்தில் மதுரை நாயக்கர்களின் ஆட்சிப் பரப்பில் கிறித்துவம் வெகுவாகப் பரவத் தொடங்கியது. இராமநாத புரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கிறித்துவர்களாக மாறினார்கள். கிறித்துவர்கள் இந்து மதத்தையும், இந்துக் கடவுளர்களையும் இழித்துக் கூறினார்கள். இதனால் இந்து மதமும் பண்பாடுகளும் கிறித்துவர்களால் அழிக்கப்பட்டு விடுமெனத் தீர்மானித்தார்கள், கிறித்துவப்பாதிரி சான் பிரிட்டோ தன் சமயப் பணிகளைத் தீவிரமாகச் செய்துவந்தார். பல ஆயிரம் இந்துக்கள் இவரால் கிறித்து வர்களாக மாறினர். குறிப்பாக மறவர்கள் கிறித்துவர்களாக மாறினர். கிழவன் சேதுபதியின் தம்பி மகளை மணந்திருந்த தடிய தேவன் என்பவனும் இப்பாதிரியாரால் கிறித்துவம் தழுவினான். இவன் கிறித்துவனானதும் தன் மனைவியும் கிறித்துவாக வேண்டு மென் றான். அவள் சம்மதிக்காததால் அவளைத் தள்ளிவிட்டான். அவள் கிழவன் சேதுபதியிடம் முறையிட்டாள். கிறித்துவம் தமிழ்ச் சமு தாயத்தில் ஏற்படுத்தும் மாற்றங்களைக் கண்ட சேதுபதி கிறித்துவ ஆலயங்களை இடித்துத் தள்ளினான். பாதிரியார் பிரிட்டோவைக் கொலை செய்தான். கிறித்துவப் பாதிரியார் பலரையும் துன்புறுத்தி னான். கிறித்துவர்கள் அனைவருமே அவனால் துன்பத்திற்குள்ளா யினர். ஆனால் கிறித்துவர்கள் மக்கள் மனம் திருப்பச் செய்தவர்; பிரிட்டோவின் செத்த உடல் பல அதிசயங்களைச் செய்வதாகப் பொய்பிரசாரம் செய்தனர். மக்கள் நம்பிவிட்டார்கள். இதனால் கிறித் துவப் பாதிரியார்களும் மாதாக் கோயில்களும் காப்பாற்றப்பட்டன. நாயக்கர்களின் ஆட்சிமுறையும் பண்பாடும் மதுரை நாயக்கரும் சேதுபதியும் சேதுபதி மதுரை நாயக்கர்களுக்குத் திறை செலுத்துவதை மறுத்தான். இராணி மங்கம்மாள் (கி.பி. 1689 - 1706) கி.பி.1700-ல் தஞ்சாவூரின் மேல் போர் தொடுக்கும்போது சேதுபதி தஞ்சையை ஆண்டான். மராத்திய மன்னன் இரண்டாம் சாசி (கி.பி. 1685-1712) ஆவான். தனக்கு உதவாமல் தஞ்சை மன்னனோடு சேர்ந்துகொண்டு தன்னை எதிர்த்தமைக்காக மங்கம்மாள் கி.பி. 1702இல் இராமநாத புரத்தின்மீது படையெடுத்தனள். கிழவன் சேதுபதி அவளைத் தோற் கடித்தான். போரில் அவனுடைய அமைச்சர் தளவாய் நரசுப்பையன் மாண்டான். இதனால் கிழவன் சேதுபதி மேலும் வலுவடைந்தான். இராமநாதபுரத்தில் பல கோட்டைகளைக் கட்டினான். அவற்றில் பாதுகாப்புப் படைகளை நிறுத்தினான். இப்போரில் தஞ்சை மன்னன் இரண்டாம் சாசியும் இராணியோடு சேர்ந்து போரிட்டான். அவனும் தோற்றான். இதற்குப் பின் சேதுபதி அறந்தாங்கிக் கோட்டையையும் கைப்பற்றினான். மங்கம்மாள் மேலாட்சியில் இருந்து தனி அரசனா னான். எனவே, இராமநாதபுரம் இனித் தனி நாடாக இயங்கத் தொடங்கியது. இந்துச் சமயத்திற்கு ஆற்றிய பணிகள் சேதுபதி கிறித்துவத்தின் எதிராகச் செயல்பட்டார் என்பதைப் பார்த்தோம். இது கிறித்துவர்களின் அத்து மீறிய செயல்களால் அவன் காட்டிய எதிர்ப்புணர்ச்சியே ஆகும். ஆயினும், அவன் ஒரு சமயப் பொறையாளனே ஆவான். திருவாடனை கோயிலுக்கு நிலம் தானமாக வழங்கினான். பல மடங்களுக்கும் தானங்கள் செய்து நன்கு வளரச் செய்தான். காளையார் கோயிலுக்கு அண்மையிலுள்ள ஒரு கோயிலுக்கு மூன்று மனர்களைத் தானமாக வழங்கினான். கிறித்துவர்களுக்கும், இசுலாமியருக்கும் பல நன்மைகளைச் செய்தான். பொது மக்களின் நன்மைக்காக ஒரு அணையைக் கட்டி அதற்கு 'முகவை ஊரணி' என்று பெயரிட்டான். வைகைக்குக் குறுக்கே ஓர் அணையைக் கட்டினான். தச்சுக்காரர்களைக் கீழைக் கடற்கரையில் குடியமருவதற்கும், மீன் பிடித்துக் கொள்வதற்கும் அனுமதி வழங்கினான். புகலூரில் இருந்து இராமநாதபுரத்திற்குத் தலைநகரை மாற்றினான். கி.பி. 1709-ல் மறவர் நாட்டில் ஒரு கொடிய பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் துயருற்றனர். பலர் தஞ்சை, மதுரை முதலிய இடங்களுக்குக் குடிப் பெயர்ந்து சென்று அடுத்த ஆண்டு (கி. பி. 1710) கிழவன் சேதுபதியும் தனது 50-வது அகவையில் 39 ஆண்டுகள் ஆட்சிக்குப்பின் உயிர் நீத்தான், அவனுடன் 47 மனைவிமார்களும் உடன்கட்டை ஏறினர். 6. திருவுடையதேவர் என்கிற விசயரகுநாத சேதுபதி (கி.பி. 1710-1720) கிழவன் சேதுபதிக்குப் பின் இராமநாதபுரம் ஆட்சிப் பொறுப் பில் அமர்ந்த இவன்காலத்திலும் கொடிய பஞ்சம் தலைவிரித்து ஆடியது. தாய் தன் குழந்தையைக் கொன்று தின்றாள். கணவன் தம் மனைவியை ஒரு பிடி அரிசிக்கு விற்றான்' என்றெல்லாம் பாதிரி மார்கள் குறிப்பிட்டுள்ளனர். விசய ரகுநாத சேதுபதி பஞ்ச நிவாரணத் திற்காகத் தஞ்சைக்கு அருகில் 'இரகுநாத சமுத்திரம்' என்ற ஏரியை வெட்டினான். நாட்டைப் பாதுகாப்பு மையங்களாகப் பிரித்துக் காவல், சிவில் நிருவாகம் ஆகியவற்றை மேம்படுத்தினான். பாளையப்பட்டு முறையைத் திருத்தி அமைத்துப் பாளையக்காரர் களைக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தான். கமுதியில்ஃபிரெஞ்சுக் காரர் உதவியுடன் ஒரு கோட்டையைக் கட்டினான். தச்சுக்காரர் உதவியுடன் பீரங்கிப் படைப் பிரிவு ஒன்றைத் தன்படை அமைப் பில் ஏற்படுத்தினான். இவன் காலத்தில் மறவர் நாடு திருவாரூரில் இருந்து திருநெல் வேளிவரை பரவியது. வடபுறத்தில் இருந்து அடிக்கடி படை எடுத்துக் கொள்ளையடிக்கும் கள்ளர்களை அழித்துக் கொள்ளை பயத்தைப் போக்கினான். இவனுடைய காலத்தில்தான் 'சிவகங்கை சமீன்" ஏற்பட்டது. இவனுடைய மகளொருத்தியைச் சசிவர்ண தேவர் என்பவர் திருமணம் செய்து கொண்டதால் சிவகங்கையும், இராமநாதபுரமும் ஒன்றுபட்டன. கி.பி. 1720-ல் கொள்ளை நோயின் காரணமாய் உயிர்நீத்தான். இவன் இராமேசுவரம் இராமநாதசாமி கோயிலின் பல பகுதி களைக் கட்டினான். கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காகத் தங்குமிடங்களையும். பிற ஏந்துகளையும் செய்தான்; பாதிரிமார் களுக்கும், கிறித்துவருக்கும் பலதுன்பங்களைச் செய்தான். கொள்ளை நோயால் இவன் இறந்தபோது பாதிரிமார்கள் ஆண்டவன் கோபத் தால் கொல்லப்பட்டதாகக் கூறினர். இவன் 30 பெண்களைத் திரு மணம் செய்தான். ஆனாலும் ஒரு வாரிசுமில்லாமல் இறந்தான். 7. சுந்தரேசுவர தேவன் (என்கிற) தாண்டதேவன் - பவானி சங்கர் ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட போட்டி யால் புதுக்கோட்டையும் சிவகங்கையும் இராமநாதபுரத்தில் இருந்து பிரிந்து தனித்து நின்றன. இவர்களுக்குப் பின் (கி.பி. 1720-1729) விசயரகுநாத சேதுபதி (கி.பி. 1728-1735) சேதுபதி ஆனான். இவனுடைய காலத்தில் இராமநாதபுரத்தின் மேல் தஞ்சை மராத்திய மன்னன்துக்கோசி இரண்டு முறை படையெடுத்தான். சேதுபதி கி.பி. 1735 - ல் இறந்தவுடன் அவனுடைய மகன் சிவகுமாரமுத்து விசயரகுநாத சேதுபதி (கி.பி. 1735-1746) இராமநாதபுரம் சேதுபதி ஆனான். இவனுடைய காலத்தில் இராமநாதபுரம் போரின்றி அமைதி யாக இருந்தது. இவன் மதுரை நாயக்கர் ஆட்சி முடியும் தருவாயில் இராமநாதபுரம் சேதுபதியாக இருந்தவன் ஆவான். செல்வதேவன் (கி.பி. 1748- 1761) ஆற்காட்டில் சந்தாசாயபுக்கும் முகமதலிக்கும் இடையே ஏற்பட்ட போரில் ஃபிரெஞ்சுக்காரர் பக்கம் சேதுபதி நின்றான், இப் போரில் ஃபிரெஞ்சுக்காரர் தோற்று, ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர். கி.பி. 1755-ல் தஞ்சையும், புதுக்கோட்டையும் இணைந்து இராம் நாதபுரத்தைத் தாக்க முற்பட்டபோது இருந்தான், கி.பி. 1761-ல் இவன் மரணம் அடைந்தான். இவன் காலத்தில் இராமேசுவரம் பால் சுப்பிரமணியர் கோயில் கட்டப்பட்டது. 11. முத்துராமலிங்க சேதுபதி (கி.பி. 1761-1801) செல்வதேவனுக்குப்பின் சேதுபதியான இவன் செல்வ தேவனுடைய சகோதரியின் மகன் ஆவான். இவன் இரண்டுமாதக் குழந்தை, எனவே இவனுடைய தாயார் முத்துத்திருவாயி நாச்சியார் முத்துரகுநாதன் இவனுக்குக் காப்பு இராணியாக ஆண்டாள். ஆனால் முத்துவிசயரகுநாதன் என்பவன் அரியணையை அபகரித்துக் கொண்டான். ஆற்காட்டு நவாபு முகமதலி மதுரை, தஞ்சை ஆகிய வற்றைப் புதுப்பித்துக் கொண்டு கருநாடகம் முழுமைக்கும் தானே தலைவன் என்றும், எனவே தென்னகத்திலுள்ள அனைவரும் தனக்கே கப்பம் கட்ட வேண்டும் என்றும் கூறினான். இதனால், இராமநாதபுரம், புதுக்கோட்டை சிவகங்கை ஆகிய நாடுகளும் தனக்குக் கப்பம் கட்டவேண்டுமெனப் பணித்தான், கி.பி. 1772-ல் ஆற்காட்டு நவாபு முகம்மதலி ஆங்கிலேயர் உதவியுடன் இராமநாதபுரத்தின் மீது படையெடுத்தான். இதில் புதுக்கோட்டைத் தொண்டை மானும் அவனுடன் சேர்ந்து கொண்ட பின்; கர்னல் ஜோசப் சுமித் என்கிற ஆங்கில தளபதி இராமநாத புரத்தை வெற்றிகண்டு முத்துத் திருவாயி நாச்சியாரையும், குழந்தை அரசனையும் சிறையில் தள்ளினான். அரச குடும்பத்தினருக்கென்றே அமைக்கப்பட்ட திருச்சி சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர். எனவே இராமநாதபுரம் கி.பி. 1772-ல் இருந்து ஆற்காட்டு நவாபுவின் கீழ் வந்தது. இவ்வாறு எட்டு ஆண்டுகள் நவாபின் நேரடி ஆட்சியின் கீழிருந்த மறவர் நாட்டை மீட்க முயற்சிகள் நடந்தன, ஐதர் அலியின் உதவியுடன் மீட்க முயன்றனர். கி.பி. 1781- ல் ஆற்காட்டு நவாபு இராமநாதபுரம் அரசன் முத்துராமலிங்க சேதுபதியைத் திருச்சி சிறையில் இருந்து மீட்டு மீண்டும், இராமநாதபுரம் சேதுபதியாக்க உறுதியளித்தான். அதற்காக ஆண்டொன்றுக்கு 1,75,000 ரூபாய் தனக்குக் கப்பம் கட்ட வேண்டும் என்றும் சிவகங்கை இளவரசி வெள்ளச்சியை திருமணம் செய்து வைக்க வேண்டும் எனக் கூறினான். இந்நிலையில் சேதுபதிக்குச் சிவ கங்கை அரசன் மறுத்துவிட்டான். இதனால், இலங்கை, இராமநாத புரம் ஆகிய மறவர் நாடுகள் தங்களுக்குள் சச்சரவிட்டுக் கொண்டன. இதனைக் கண்ட ஆங்கிலேயர்கள் இராமநாதபுரமும், சிவகங்கையும் தங்களுக்குள் சச்சரவிட்டுக் கொள்ளக் கூடாதெனக் கூறினார்கள். இதற்கிடையில் ஆற்காட்டு நவாபு கோட்டையிலுள்ள ஆங்கில அரசாங்கத்திற்குச் சில பகுதிகளைக் கொடுக்கச் சம்மதித்தான். கி.பி. 1792-ல் இராமநாதபுரப் பகுதிகள் ஆங்கிலேயருக்குக் கொடுக்கப் பட்டன. மங்களேசுவரி நாச்சியார் என்பவர்தாம் சேதுபதியின் சகோதரி என்றும் எனவே, இராமநாதபுரம் தனக்கே உரியது என்றும் ஆங்கிலேயரிடம் விண்ண ப்பித்தாள். கி.பி. 1795 -ல் ஆங்கில தளபதி ஸ்டீபன்கன் இராமநாதபுரத்தைக் கைப்பற்றினான். சேதுபதி மக்களைத் துன்புறுத்தியதாகவும் அண்டை நாடுகளுடன் சதாசண்டை யிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுச் சென்னைக்குக் கொண்டு வந்தான். அவன் அங்கு கி.பி. 1801 -ல் இயற்கையாக மரண மடைந்தான். முத்துராமலிங்க சேதுபதியின் இறப்பிற்குப்பின் இராமநாத புரம் ஒரு 'அரசு' என்ற நிலையில் இருந்து, ஆங்கில ஆட்சியின் கீழ் ஒரு சமீன் நிலைக்கு கி.பி. 1803 மங்களேசுவரி நாச்சியாருக்குக் கொடுத்து அவளை இராமநாதபுரம் சமீன்தாராக்கினார்கள். இவ்வாறு இரண்டுமாத குழந்தையாக இராமநாதபுரத்திற்குச் சேதுபதியான முத்துராமலிங்க சேதுபதி கி.பி. 1761-ல் இருந்து 1801 - வரை 40 ஆண்டுகள் பெயருக்குச் சேதுபதியாகயிருந்தான். வாழ்நாள் முழு வதும் துன்பங்களிலே உழன்றான்; கடைசியில் துன்பத்திலேயே இறந்தான். 12. சமீன்தார் - மங்களேசுவரி நாச்சியார் (கி.பி. 1803-1813) -முத்துராமலிங்க சேதுபதி கி.பி. 1801-ல் இறந்தபின் சேதுபதி நாடு ஆங்கிலேயரின் கீழ்ச் சென்றது. கி.பி. 1803-ல் அந்நாட்டின் வாரிசு என விண்ணப்பித்த மங்களேசுவரி நாச்சியார் இராமநாத புரத்திற்கு 'சமீன்தார்' ஆனார். அவருடைய மேலாளராக தியாகராசப் பிள்ளை என்பவர் அமர்த்தப்பட்டார். இராமநாதபுரம் சமீனில் இருந்து ஆண்டுக்கு 3,24,401 ரூபாய் கம்பெனிக்கு கிஸ்தியாகக் கொடுக்க வேண்டும்; தன்னிச்சையாகச் சண்டையோ, சமாதானமோ செய்து கொள்ளக் கூடாது; ஆனாலும், கோயில்களுக்கு நன்கொடை வழங்குதல் சத்திரங்கள் கட்டுதல் போன்ற காரியங்களை சமீன் செய்யலாம். இராமநாதபுரம் சென்னை ஆளுநரின் நேரடிப் பார்வை யின் கீழ் வந்தது. அப்பொழுது சென்னை ஆளுநராக இருந்தவன் இராபர்ட்கிளைவின் மகன் எட்வர்டு கிளைவ் ஆவான். மங்களேசுவரி நாச்சியாரின் கணவர் இராமசாமித் தேவர் கி.பி. 1803 - ல் இறந்துவிட்டார். எனவே, இவள் அண்ணாசாமி தேவன் என்பவனைச் சுவிகாரம் எடுத்துக் கொண்டாள். இந்தச் சுவிகாரத்தையும் ஆங்கில ஆட்சியின் ஒப்புதலுக்குப் பின்பே எடுத்தாள். ஆயினும், இந்தச் சமீன்தாரிணி அம்மாள் கி.பி. 1812 -ல் இறந்து விட்டாள். இவளுக்குப்பின் சுவிகாரப் புத்திரனான அண்ணாசாமி தேவன் இராமநாதபுரத்தின் சமீன்தார் ஆனான். இவன் சிறுவனாயிருந்ததால் மேலாளர் தியாகராசப்பிள்ளையே சமீன் பொறுப்புகளைக் கவனித்து வந்தார். அண்ணாசாமி தேவன் கி.பி. 1830 இறந்துவிட் டான், இடைக்காலப் பொறுப்பைச் சென்னை அரசாங்கம் நீதிமன்றத் திடம் விட்டது. பின்னர் 1846 -ல் பர்வதவர்த்தினி நாச்சியார் பொறுப் பில் விடப்பட்டது. பின்னர் முத்துராமலிங்கத் தேவரும் பொறுப் பேற்றார். 13. பாசுகர சேதுபதி கி.பி. 1389-1903) பாசுகர சேதுபதி சமீன்தார் ஆனதும் இராமநாதபுரம் சமீன் நிருவாகம் நிலைப்பட்டதெனலாம். இவன் ஆங்கிலவழிக் கல்வி கற்றவன். சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் நடந்த உலக சமயமாநாட்டிற்குச் செல்லக் கராணமாய் அமைந்தவன். பாசுகர சேதுபதி கி. பி. 1903-ல் காலமானவுடன் முத்துராம் லிங்க சேதுபதி (கி.பி. 1910-1929) என்ற 13 வயது நிரம்பிய சிறுவன் சமீன்தார் ஆனான். இவன் ஒரு அரசியல்வாதியாகிவிட்டான். 'சென்னை நிலவுடமையாளர் சங்கம்' என்பதைத் தொடங்கி நிலைவுடமை யாளர்களை அரசு குறுநில மன்னர்களைப் போல் நடத்த - வேண்டுமென்றான். பின்னர் தொடங்கப்பட்ட பிராமணரல்லாதார் இயக்கத்தில் சேர்ந்தான். இதில் பொப்பிலிராசா, தியாகராசச் செட்டியார் போன்ற தெலுங்கரே ஆதிக்கம் செலுத்துவதை வெறுத்தான், பாண்டித்துரைத்தேவர் தொடங்கிய நான்காம் தமிழ்ச் சங்கத்தில் தீவிரப்பங் கேற்ற முத்துராமலிங்க சேதுபதி 1929-ல் காலமானார். 14. சண்முகராசேசுவரராமநாத சேதுபதி (1929-1967) அவருக்குப் பின் இவர் 1929-ல் இராமநாதபுரம் சமீன்தார் ஆனான். ஆங்கிலக் கல்வி கற்று வழக்கறிஞரான இவர் 1949-ல் இந்திய காங்கிரசில் சேர்ந்தார். 1940 - ல் தான் 'இந்திய சமீன்தாரி" ஒழிப்புச் சட்டம்' கொண்டுவரப்பட்டது. 1952-1957-ல் இராஜாஜி அமைச்சரவையிலும், காமராசர் அமைச்சரவையிலும் பொதுப் பணித்துறை அமைச்சராக இருந்தார். இவ்வாறு கி.பி. 17ஆம் நூற்றாண்டில் இராமநாதபுரத்தில் மறவர் ஆட்சி அமைக்கப்பட்டுக் காலப்போக்கில் குடியரசு முறை யைக் கொண்டுவந்தபோது இராமேசுவர சேதுபதி ராசா சென்னை மண்டல அமைச்சரானார். 9. சிவகங்கை இராசாக்கள் 1. உதயத்தேவர் (என்கிற) விசயரகுநாத சேதுபதி இராம் நாதபுரம் சேதுபதியாக இருந்தபோது சிவகங்கை தனியாகப் பிரிந்தது. விசயரகுநாத சேதுபதியின் வைப்பாட்டி அகிலாண்டடேசுவரியின் மகளைச் சசிவர்ண தேவர் என்பவர் மணந்தார். இவர் தன் மனைவி முலம் அடைந்த பெருஞ்செல்வத்தை வைத்து 3,000 படைவீரர் களைத் திரட்டிச் சிவகங்கைப் பகுதியைக் கைப்பற்றிப் பிரான்மலை, திருப்பத்தூர், சோழபுரம், திருபுவனம் ஆகிய இடங்களிலிருந்த கோட்டைகளையும் கைப்பற்றினார். முத்துவடுகநாத பெரிய தேவர் 2. சசிவர்ணத் தேவர் 1750-ல் மரண மடைந்தார். அவருக்குப் பின் முத்துவடுகநாத பெரிய தேவர் சிவகங்கை இராசா ஆனார். இவர் 30 ஆண்டுகள் ஆண்டார். ஆற்காட்டை ஆண்ட முகமதலி வாலாசா தமிழ்நாட்டில் இருந்த இராசாக்களைத் தன்னடிமைப் படுத்த விரும் பினான். சிவகங்கைச் சீமை மீது படையெடுத்தான். இதில் முத்துவடுக நாதர் கொல்லப்பட்டார். இவர் இறந்ததும் ஆண்வாரிசு இல்லாததால் வேலுநாச்சியார் என்ற மனைவிக்குப் பிறந்த வெள்ளச்சி நாச்சியார் பட்டத்திற்கு வந்தாள். வெள்ளச்சியும் கி.பி. 1783 - ல் காலமானார். அப்பொழுது சிவகங்கைச் சீமையின் அரசு மருது பெரிய உதயதேவர் மகனுக்குத் தன் மகளை மணமுடித்தான். எனவே, தன் மருமகனுக்குச் சிவ கங்கை ஆட்சி வருமென எதிர்பார்த்தான். இக்காலத்தில் ஆற்காட்டு நவாபாக இருந்தவன் வாலாசா முகம்மதலியும் அவனுக்குப்பின் உமாத்-உல்- உமாரா என்பவனும் ஆவர். அவர்களுக்குக் கப்பம் கட்டுவதை மறவர்கள் வெறுத்தனர். கி.பி. 1780- க்கும் பிறகு ஆற்காட்டு நவாபுகள் ஆங்கிலக் கம்பனியா ருக்குக் கப்பத்தைத் தண்டல் செய்து கொள்ளும் உரிமையை வழங்கிவிட்டனர். இதனால் கம்பனியார் தண்டும் உரிமை பெற்ற ஆங்கிலேயர்களை வெறுத்தனர். சில பாளையக்காரர்களும், மருது சகோதரர் களும் ஆங்கிலேயருக்குக் கப்பம் கட்டுவதை முழு மூச்சோடு எதிர்த்தனர். ஆனால், உடனடியாக ஆங்கிலேயர்களால் இவர்களை எதிர்க்க முடியவில்லை, மைசூர்ப் போரில் திப்பு சுல்தானுடன் போரிட்டுக் கொண்டிருந்தனர். திப்பு சீரங்கப்பட்டினம் போர்க்களத்தில் 1799-ல் கொல்லப்பட்டான். அதன் பிறகு இவர்களின் நேரடி எதிரிகள் மருது சகோதரர்களே யாவர். அப்பொழுது புனித சார்சு கோட்டையில் அமர்ந்திருந்த சென்னை ஆளுநர் எட்வர்ட்டுமுளைல் பிரபு ஆவார். பாஞ்சாலங் குறிச்சியின் விடுதலை மறவர்களைச் சேர்த்துக்கொண்டு மருது சகோ தரர்கள் ஆங்கிலேயர்களை எதிர்க்கத் தயாராகிவிட்டனர்; விடுதலைப் போர் தொடங்கியது. பாளையக்காரரின் கோட்டைகளாகத் திகழ்ந்த பிரான்மலை, காளையார் கோயில் ஆகிய இடங்கள் ஆங்கிலேயரிடம் விழுந்தன 1801). மருது சகோதரர்களைச் சிறை பிடித்துத் தூக்கில் போட்டனர். சிவகங்கைச் சீமையையும்' சமீன்தாரி' நிலைக்கு மாற்றி அதனை ஆண்ட இராசாவையும் ஒரு சமீன்தாராக மாற்றினர். கெளரி வல்லப உதயதேவர் என்பவரைச் சிவகங்கைச் சீமையின் அரசுக் கட்டிலில் 1801-ல் அமரச் செய்து 'சமீன்தார்' என்றழைத்தனர். இனி அவரோ அவருடைய குடும்பத் தாரோ 'இராசகுடும்பம்' அல்லது 'இராசாபரம்பரை' என்று கூறக் கூடாது என்றும் சாதாரண "நிலச்சுவான்தார்' என்றே கூற வேண்டுமெனக் கூறிவிட்டனர். இவ்வாறு, மற்றவர்களின் இராமநாதபுரம் தனி ஆட்சியும் சிவகங்கைத் தனி ஆட்சியும் சாதாரண 'நிலச்சுவான்தார்' சாகிர்தார் ஆட்சிகளாக மாறின. ஆயினும், ஆங்கிலேயரை விரட்ட வேண்டு மென்ற விடுதலைப்போர் தமிழகத்தில் நீறு பூத்த நெருப்பாகவே இருந்தது. கால அட்டவணை இராமநாதபுரம் சேதுபதிகள் 1. சடையதேவர் உதயன்சேதுபதி - கி.பி., 1605-1622 2. கூத்தன் சேதுபதி கி.பி. 1622-1636 3. இரண்டாம் சடையதேவர் (தளவாய் சேதுபதி) கி.பி. 1635 -1645 4. இரகுநாத சேதுபதி (திருமலை சேதுபதி) கி.பி. 145-167) 5. இரகுநாத சேதுபதி (கிழவன் சேதுபதி) கி.பி. 1671-1710) 6, திரு உடைய தேவர் (விசய ரகுநாத சேதுபதி) கி.பி. 1710-1720) 7. பவானி சங்கர் கி.பி. 1720-1729 8. கட்டைய தேவன் கி.பி. 1729-1735 9. சிவகுமார் முத்து விசயரகுநாத சேதுபதி கி.பி. 1735-1746 10. செல்வதேவர் (விசயரகுநாத சேதுபதி) கி.பி. 1748-1751 11. முத்து ராமலிங்க சேதுபதி கி.பி. 1761-1801 12. மங்களேசுவரி நாச்சியார் கி.பி. 1803-1812 13. பாசுகர சேதுபதி கி.பி. 1889 - 1903 14. சண்முகராசேசுவர ராமநாத சேதுபதி கி.பி. 1929-1967 அ. கருநாடகத்தில் நவாபுகளின் ஆட்சி - கருநாடகப்போர்கள் 1. முதல் கருநாடகப்போர் (கி.பி. 1746- 1748) 2. இரண்டாம் கருநாடகப்போர் (கி.பி. 1749 - 1754) 3. ஆங்கில ஆட்சியுடன் ஆற்காடு இணைப்பு கி.பி. 1801 - ஆ.. ஆங்கிலேயர் எழுச்சியும் ஃபிரெஞ்சுக்காரர் வீழ்ச்சியும் 1. மூன்றாம் கருநாடகப்போர் (கி.பி. 1758 - 1763) 2. ஃபிரெஞ்சு ஆதிக்கத்திற்குச் சாவுமணி (1763) இ. ஆங்கிலேயரும், ஐதர் அலியும், திப்பு சுல்தானும் 1. முதலாம் மைசூர்ப் போர் (கி. பி 1767 - 1779) 2. இரண்டாம் மைசூர்ப் போர் (கி. பி 1780 - 1784) 3. மூன்றாம் மைசூர்ப் போர் (கி. பி 1790 - 1792) 4. நான்காம் மைசூர்ப் போர் (கி.பி 1799) 5. மைசூரை ஆங்கில ஆட்சியுடன் இணைத்தல் (கி.பி1799) அ) கருநாடகத்தில் நவாபுகளின் ஆட்சி கருநாடகப்போர்கள் விசயநகர ஆட்சியின் கடைசி மன்னரான மூன்றாம் சீரங்கன் (கி.பி. 1642 - 1690) நாயக்க மன்னர்களையெல்லாம் தன்னடிக்கீழ் கொண்டுவரக் கருதி தென்னகத்தின் மீது படையெடுத்து மதுரை யைக் கைப்பற்றுச் சென்றான். ஆனால், மதுரை நாயக்கனான திரு மலை நாயக்கன் (கி.பி. 1623 - 1659) கோல்கொண்டாச் சுல்தானை வேலூர் நாயக்கன் மீது படையெடுக்க வேண்டினான். சுல்தானின் படைகள் வேலூரைக் கைப்பற்றின, வேலூரை மீட்க முடியாமல் மூன்றாம் சீரங்கன் நாடிழந்து ஓடி கி. பி. 1672-ல் போத்தனூரில் மாண்டான். இவனோடு - விசயநகரப் பேரரசு முடிவுக்கு வந்தது. வேலூரைக் கைப்பற்றிய கோல்கொண்டா சுல்தான் அதனைப் பீசப்பூர் சுல்தானிடம் விட்டுச்சென்றான். இவ்வாறு, கோல்கொண்டா பிசப்பூர் சுல்தான்களின் ஆட்சிகளும் தமிழகத்தில் கால் கொண்டன, முதல் கருநாடகப்போர் (கி.பி 1746 - 1748) முன்னுரை ஆங்கிலேயரும் ஃபிரெஞ்சுக்காரரும் கருநாடகத்தில் நிலை பெறுதல் கி.பி. 1664-ல் ஃபிரெஞ்சுக் கிழக்கிந்தியக் குழு வணிகக் குழுவாகத் தொடங்கப்பட்டது. இது கி.பி. 1868-ல் சூரத்திலும், 1669-ல் மசூலிப்பட்டினத்திலும் வணிகத்தலங்களை ஏற்படுத்திக் கொண்டது. பீசப்பூர் சுல்தானிடம் சிற்றரசனாயிருந்த செர்க்கான் லோடி என்பவன் திருச்சிக்கு அருகிலுள்ள வாலிகண்டபுரம் என்னு மிடத்தில் இருந்து ஆண்டு வந்தான். அவனிடம் இருந்து பிரான்சுவா மார்ட்டின் என்ற ஃபிரெஞ்சு வணிகக் குழுவின் முகவர் பாண்டிச் சேரியைத் தானமாகப் பெற்றுப் பாண்டிச்சேரியைத் தனதாக்கினான். விழிப் படைந்த மார்ட்டின் பெரும்படை ஒன்றையும் நிறுவிக் கொண்டான், எனினும் கி.பி. 1893-ல் பாண்டிச்சேரியைத் தச்சுக் காரர்கள் கைப் பற்றிக் கொண்டனர். இதனை மீட்ட மார்டின் வலுவான கோட்டைக் கொத்தளங்களைக் கட்டிக்கொண்டான். வலிமையும், பாதுகாப்பும் பெற்ற பாண்டிச்சேரியில் 40,000 மக்கள் குடியமர்ந்தனர். ஃபிரெஞ்சுக்காரரைப் போலவே ஆங்கிலேயர்களும் கி.பி. 1600-ல் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் குழுவை ஏற்படுத்தினர். முதலில் சூரத்து, மசூலிப்பட்டினம் ஆகிய இடங்களில் வணிகத் தலங்களை ஏற்படுத்திய இவர்கள் கி.பி. 1639-ல் இன்றுத் தலைமைச் செயலகம் உள்ள இடத்தைச் சென்னப்ப நாயக்கனிடம் இருந்து விலைக்கு வாங்கித் தங்களின் பண்டகசாலையை ஏற்படுத்தினார்கள். கி.பி. 1647-ல் கோல்கொண்டா சுல்தானுடைய தானைத் தலைவன் மீர்சும்மிலா என்பவன் சென்னையைக் கைப்பற்றினான். இத்தகைய ஆபத்தை எதிர்பார்த்த ஆங்கிலேயர்கள் தங்களின் பண்டகசாலை யைச் சுற்றிலும் கோட்டைக் கொத்தளங்களைக் கட்டினர். இதுவே இன்றுள்ள புனித சார்ச்சு கோட்டை ஆகும். இக்கோட்டைக்குள் நிருவாகத்தைக் கவனிக்க ஒரு ஆளுநரும் அமர்த்தப்பட்டார். சார்ச்சு பாக்சு கிராப்ட் என்பது அவர் பெயராகும். கோட்டையைப் பாதுகாப் புள்ளதாக மாற்றிய ஆங்கிலேயர்கள் வலுவான படையையும் ஏற்படுத்தினர். கோட்டையைச் சுற்றிலும் புதிய குடியிருப்புகள் தோன்றின. இதனால் கி.பி. 1670-ல் சென்னை நகர மக்கள் தொகை 40,000 ஆகப் பெருகியது. சென்னையை நிருவகிக்க கி. பி. 1688 - ல் ஒரு அவை ஏற்பட்டது. அதன் தலைவரைத் 'தந்தை' என்றனர். இச் சபையில் 12 பேர் உறுப்பினர் (ஆல்டர் மென்) இருந்தனர். இச்சபை சென்னை நகரசபையானது. கி.பி. 1690 - ல் கடலூருக்கு அருகில் புனித டேவிட் கோட்டையைக் கட்டிப் பாதுகாப்பு செய்து கொண்ட னர். இக்கோட்டைகளில் வலுவான படைகள் நிறுத்தப்பட்டன, இவ்வாறு ஃபிரெஞ்சுக்காரர்கள் பாண்டிச்சேரியையும், ஆங்கி லேயர்கள் சென்னையையும் தலைமை இடங்களாகக் கொண்டு கோட்டைக் கொத்தளங்கள் படைதளவாடங்களுடன் நிலை பெற்று விட்டனர். மேலும் இந்திய அரசர்கள் எவரிடமும் இல்லாத கப்பற் படை இவர்களிடம் இருந்தது. இதனால்தான் கருநாடகத்தில் ஏற்பட்ட சிற்றரசர்களுக்கான குழப்பங்களுக்கும் போர்களுக்கும் இந்த இரண்டு ஐரோப்பிய வணிகர்களையும் உள்நாட்டு மன்னர்கள் துணைக்கு அழைத்தனர். கலங்கிய குட்டையில் மீன் பிடிக்கும் இவர்கள் வலிய வந்த செங்கோலைப் பிடித்துத் துலாக்கோலைக் கைவிட்டனர். முதல் கருநாடகப் போருக்கான காரணங்கள் தென்னகத்திலிருந்த 30 இடங்களுக்கும் ஐதராபாத்தில் ஒரு பேராளனை (சுபேதார்) அமர்த்தித் தில்லிப் பேரரசு ஆண்டு வந்தது. ஒளரங்கசீப்புக்குப் பின் கடைசிக் காலத்தில் முகலாயப் பேரரசு ஆட்டங் கண்டது. இச்சூழலைப் பயன்படுத்திக் கொண்டு ஐதராபாது சுபேதார் தனித்தாள முற்பட்டான். தன்னைத்தானே ஐதராபாது 'நைசாம்' என்று அறிவித்துக்கொண்டான். இவனுக்குக் கீழிருந்தவர் களும் தாங்களும் தனித்தாளச் சமயம் பார்த்து இருந்தனர். ஐதராபாத்து நைசாம் மராத்தியரிடம் போரிட்டு வலிமைபெற்றான். ஆற்காட்டு தவாபு எனத் தனித்தாள முற்பட்டான். போரின் போக்கு மராத்தியர் கி.பி. 1741-ல் ஆற்காட்டைத் தாக்கி அதனை ஆண்ட நவாபு தோசுது அலியைக் கொன்றனர். இவன் ஆற்காட்டின் நான்காவது நவாபு ஆவான். இவன் கி.பி. 1732 முதல் 1740 வரை ஆங்கிலேயர்கான் கவர்ச்சி தமிழகம் 18 - 19 நூற்றாண்டுகள் ! ஜார்ஜ் கோட்எட செங்கயாட்டு வந்தவாசி } கடபரர் - பார்ட்டோ " நோவா - திருச்சிராப்பள்ளி , பயாபாரி சாரி நாசிப்பட்டி 1 குமரிமுனை படம் 4 ஆற்காட்டின் நவாபாக இருந்தான். முகமது சையத் சதாத் உல்லா கான் (கி.பி. 1710 -1732) ஆகிய மூவரும் ஆற்காட்டு நவாபுகளா யிருந்தனர். தோசுத் அலியைக் கொன்ற பின் மராத்தியர் அவனுடைய மருமகனான சந்தாசாயபுவைச் சிறைப்படுத்திச் சதாராவுக்குக் கொண்டு சென்றனர். கொல்லப்பட்ட தோசுது அவியின் மகனான சப்தர் அலி ஒரு கோடி ரூபாயை மராத்தியருக்குக் கொடுத்து ஆற்காட்டை மீட்டான். ஆனால், அவனும் தன் உறவினர்களால் கொல்லப் பட்டான். அவனுடைய இளைய மகனை கி.பி. 1742-ல் ஆற்காட்டு நவாபு ஆக்கினார். இதனைக் கண்ட ஐதரபாத்து நைசாம் இச்சிறுவனை நீக்கிவிட்டுத் தனக்குக் கீழ்ப்பட்டு நடக்கும் அன்வாரு தின் என்பவனன கி.பி. 1643-ல் ஆற்காட்டு நவாபு ஆக்கினான், செல்வாக்குப் பெற்றிருந்த தோசுது அலியின் உறவினர்கள் அன்வாருதினை ஆற்காட்டு நவாபு ஆக்கியதை எதிர்க்கத் தொடங் கினர். ஆற்காட்டில் கலகம் ஏற்பட்டது. இரண்டாம் கருநாடகப் போர் (கி.பி. 1749 - 1754) இச்சூழலில் கி.பி. 1741-ல் ஆற்காட்டைத் தாக்கி அதனை ஆண்ட தோசுது அவியைக் கொன்று, அவனுடைய மருமகனான சந்தாசாயபைக் கைது செய்து கொண்டு மராத்தியர் சதாராவுக்குச் சிறைப்பிடித்துச் சென்றதை கண்டோம். அந்தச் சந்தாசாயபை மராத்தியர் கி.பி.1748-ல் விடுவித்துவிட்டனர். அதே ஆண்டில் ஐதராபாத்து நைசாம் உல்முல் முல்கு மரணமடைந்தான். அவனுக்குப் பின் அவன் மகன் நாசர்சங் ஐதராபாத் நைசாம் ஆனான். அவனே தக்காணம் முழுவதுமுள்ள நவாபுகளுக்கும் தலைவன் என்பதை அறிவோம். ஆனால், அவனுடைய பதவிக்கு ஆபத்து ஏற்பட்டது. அவனை எதிர்த்து அவனுடைய அண்ணன் மகன் சாபர்சங் தனக்கே ஐதராபாத்து நைசாம் பதவி சொந்தமெனக் கொண்டாடினான். முசாபர்சங் தந்தைக்குப் பின் தன் மகன் என்ற முறையில் நைசாம் பதவிக்குச் சொந்தம் கொண்டாடுவது சரியே எனத்தில் முகலாயப் பேரரசும் ஒப்புக் கொண்டது. * ஆற்காட்டு நவாபு பதவிக்கும் போட்டி ஏற்பட்டது. சதாராவி விருந்து கி.பி. 1748-ல் விடுதலையான சந்தாசாயபு காலஞ்சென்ற நவாபு தோசுத் அலியின் மருமகன் என்ற முறையில், தனக்கே ஆற்காட்டு நவாபு பதவி சொந்தமென்றான். இதனால் அன்வாருதின் கட்சியும், சந்தா சாயபு கட்சியும் ஆற்காட்டு நவாபு பதவிக்கு மோதிக் கொண்டன. இத்தகைய குழப்பங்கள் ஆற்காட்டிலும், ஐதராபாத்திலும் விளைந்ததைக் கண்ட ஃபிரெஞ்சுக்காரரும், ஆங்கிலேயரும் கலங்கிய குட்டையில் மீன் பிடிக்கத் தயாராயினர். ஐரோப்பாவில் நடந்து கொண்டிருந்த ஆசுதிரிய வாரிசுரிமைப் போரில் (கி.பி. 1542 -1548) ஃபிரெஞ்சுக்காரரும், ஆங்கிலேயரும் எதிரெதிர் கட்சிகளில் நின்று போரிட்டு வந்தனர். இதனால், இவர்களுக்குள் பகைமை ஏற்பட்டது. டூப்ளே கி.பி. 1746 இல் சென்னையைத் தாக்கிச் சூறை ஆடினான். அன்வாருதின் ஆங்கிலேயருடன் சேர்ந்து டூப்ளேவைத் தாக்கினான். பிரெஞ்சுப் படைகள் ஆங்கிலேயருக்குச் சொந்தமான டேவிட் கோட்டையை முற்றுகையிட்டன. இதற்குப் பதிலடி கொடுக்க ஆங்கி லேயப் படைகள் பாண்டிச்சேரியை முற்றுகையிட்டன. இதற்கிடை யில் ஆசுதிரிய வாரிசுரிமைப் போர் முடிவுக்கு வந்து, வார்சா உடன்படிக்கை ஏற்பட்டது. அதன்படி, ஆங்கிலேயரும் ஃபிரெஞ்சுக் காரரும் அவரவர் பிடித்த இடங்களை அவரவருக்கே திருப்பித் தரும் படி ஒப்பந்தமாயிற்று. இப்போரினால், தென்னகத்திலிருந்த டூப்ளே வுக்கு ஒரு நல்ல பாடம் புகட்டப்பட்டது. இனி பிடித்த இடங்களை ஆங்கிலேயர்களின் ஆதிக்க வளர்ச்சி 179 விடக்கூடாது என்பதே அந்த பாடமாகும். கடல் படை வலிமை யுடைய இவர்கள் ஆற்காட்டில் எப்படியும் கொடியேற்ற வேண்டும் எனத் தனித்தனியே முயன்றனர். இதனால் ஆற்காட்டுக் குழப்பத்தில் காலடி வைத்தனர். போரின் போக்கு டூப்ளே சந்தாசாய்புக்கும், முசாபர்சங்கிற்கும் முறையே ஆற் காட்டு நவாபு பதவியையும், ஐதராபாத்து தைசாம் பதவியையும் கொடுப்பதாய் உறுதியளித்தான். இதனால்ஃபிரெஞ்சுப் படை, சந்தா சாயபுவின் படை ஆகிய மூன்று படைகளும் ஒரு கூட்டணியாகச் சேர்ந் தன. ஆற்காட்டு நவாபு அன்வாருதினை கி.பி. 1649 - ல் ஆம்பூரில் கொன்றன. அன்வாருதினுடைய மகன் முகமதலி போர்க்களத்தில் இருந்து தப்பி ஓடித் திருச்சிக் கோட்டைக்குள் சரண் அடைந்தான். அவனைப் பின் தொடர்ந்து துரத்திக்கொண்டே திருச்சிக்கு ஓடிய சந்தாசாயபின் கூட்டணிப் படைகள் திருச்சிக் கோட்டையை முற்றுகையிட்டனர். திருச்சி முற்றுகையை உடனே தொடங்காமல் வழியில் தஞ்சாவூர் சென்று சந்தாசாயபுவின் படைகள் தஞ்சை மன்னரிடம் இருந்து பழைய பாக்கியைத் தண்டல் செய்ய முயன்று காலங்கழித்தனர். பழைய பாக்கி என்பது தஞ்சை மன்னன் பிரதாப் சிங் (கி.பி. 1639-1763)காலத்தில் ஃபிரெஞ்சுக்காரருக்கும் சந்தா சாயபுக்கும் கொடுப்பதாக ஒப்புக்கொண்ட பணம் ஆகும். இந்தக் கால அவகாசத்தில் முகம்மதலி ஆங்கிலேயர், மைசூர் மன்னர் ஆகியோரின் உதவிகளைப் பெற்றான். முசாபர்சங்கிற்குப் போட்டி யாக நிற்கும் ஐதராபாது நைசாம் நாசர்சங் முகம்மதலியுடன் சேர்ந்து கொண்டான். எனவே, 1. சந்தாசாயபு 2. முசாபர்சங் 3. டூப்ளே ஆகிய மூவரும் ஓரணியிலும், 1. முகம்மதலி2. நாசர்சங் 3. இராபர்ட்கிளைவு ஆகிய மூவரும் எதிர் அணியிலும் வரிந்து கட்டி நின்றனர், டூப்ளே வுக்கு இராபர்ட்கிளைவும், நாசர்சங்கிற்கு முசாபர் சங்கும், முகமதலிக்கு சந்தாசாயபும் நேரெதிரிகளாவர். கி.பி. 1750 -ல் நடந்த போரில் ஐதராபாது நாசர்சங் டூப்ளே வால் கொல்லப்பட்டான். உடனே தனது கட்சிக்காரனான முசாபர் சங்கை ஐதராபாது நைசாமாக்கித் தலைகனத்து நின்ற டூப்ளேவுக்கு எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்பட்டன. திருச்சியை முற்றுகையிட்ட ஆற்காட்டில் இருந்து சந்தாசாயபுவின் படைகள் திருச்சிக்கு வந்து விட்டன. வேலைக்காரர்களும், காவலாளிகளுமே ஆற்காட்டிலிருந் தனர். காவலற்றுக் கிடந்த ஆற்காட்டை ஆங்கிலப் படையினர் பட்டப் பகலில் உச்சி வேளையில் பிடித்துக் கொண்டனர். இதற்குள் ஆங்கி லேயப் படைகளுக்குத் துணையாக மைசூர் மன்னரின் படைகளும், தஞ்சை மன்னரின் படைகளும் வந்து சேர்ந்துவிட்டன. தமிழக சமுகப் பண்பாட்டு வரலாறு கல்கத்தாவில் இருந்து இராபர்ட் கிளைவுக்குத் துணையாக மேலும் ஆங்கிலப் படைகள் வந்து சேர்ந்தன. எனவே, முகமதலி யின் கட்சிக்குப் பலம் கூடியது. தலைநகர் ஆற்காடு பறிபோனதைக் கேள்விப்பட்டதும், திருச்சிக்கோட்டையை முற்றுகையிட்டுக் கொண்டிருந்த சந்தா சாயபின் கூட்டணிப் படைகள் முற்றுகையைக் கைவிட்டுத் தலை தெறிக்க ஆற்காடு நோக்கி ஓடி வந்தன. முற்றுகைக்கு உட்பட்டிருந்த முகமதலி கோட்டைக்குள் இருந்து வெளியேறி அப்படைகளைப் பின்புறம் இருந்து துரத்திக் கொண்டே ஆற்காடு நோக்கி வந்தான், மைசூர், தஞ்சாவூர், ஆங்கிலேயரின் படைகள் முன்சென்று சந்தாசாய பின் படைகளை வழிமறித்துத் தாக்கின, திருச்சிக்கும் ஆற்காட்டுக் கும் இடையில் ஆரணி, காவேரிப்பாக்கம், ஆற்காடு முதலிய இடங் களில் மோதல்கள் ஏற்பட்டன. போரில் கி.பி. 1752-ல் சந்தாசாய்பு கொல்லப்பட்டான். முகமதலியின் படைகள் வெற்றி பெற்றன. போரின் முடிவுகள் டூப்ளே மன்னிக்க முடியாத அரசியல் மடத்தனத்தைச் செய்துவிட்டான். டூப்ளேயின் தளபதி, கவுன் - டி - லாலி நேரே திருச்சிக்குச் சென்று முகம்மதலியை எதிர்க்காமல் தஞ்சைக்குப் போய் தஞ்சை மன்னனிடம் பழைய பாக்கியைக் கேட்டுக் காலம் தாழ்த்தியது போர்க்கால அவசரத்தை அறியாத மடத்தனமாகும். ஒரு சமயத்தில் ஒரு காரியத்தைச் செய்யாமல் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்து விட்டதாகக் கூறி ஐதராபாதில் நாசர் சங்கைக் கொன்று முசாபர் சங்கை நைசா மாக்கியதும், முற்றுகை முடியும் முன்பே சந்தாசாயபை ஆற்காட்டு நவாபு யெனப் பிரகடனப்படுத்தி யதும் அடைகாக்கும் போதே குஞ்சுகளை எண்ணிப் பார்த்து மகிழ்ந்த அவசரக் கதை ஆகும். இது அரசியல் விவேகம் இல்லை . தாய்நாட்டின் அனுமதியின்றி வாணிபம் செய்ய வந்த இடத்தில் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டுப் போரில் பெரும் பொருளையும், படை களையும் இழந்தது அத்து மீறிய செயல்களாகும். இதனால் டூப்ளே வை ஃபிரெஞ்சு நாட்டுக்குத் திருப்பி அழைத்துக் கொண்டனர், டூப்ளேவுக்குப் பதில் கோதேயு ஆளுநராக வந்தான். அமைதி ஏற்பட்டது. ஆங்கிலேயரின் கட்சிக்காரனான முகம்மதலி ஆற்காட்டு நவாபு ஆனான். அவன் தனது வாலாசா பரம்பரை ஆட்சியைத் தொடங்கி னான். இதனால்தான் இவனையும், இவனையடுத்து ஆண்ட ஆற்காட்டு நவாபுகளையும் 'வாலாசா நவாபுகள்' என்பர். - முகமதவிவாலாசா (கி.பி. 1749 - 1795) ஆற்காட்டு நாவபு முகமதலிக்கு ஆங்கிலேயர் போட்ட பிச்சை ஆகும். ஆங்கிலேயர்கள் ஆற்காட்டைப் பணம் காய்க்கும் மரமாகக் ஆங்கிபோபர்கான் ஆதிக்க வளர்ச்சி கொண்டனர். மக்களைக் கசக்கிப் பிழிந்து பணம் பறித்தனர். முகம்மதலி ஆங்கிலேயரின் கைப்பாவை ஆனான். ஆங்கிலேயரிடம் ஆற்காட்டை ஒப்படைத்துவிட்டு, சென்னைச் சேப்பாக்கத்தில் கி.பி. 1768-ல் ஆங்கிலேயர்கள் கட்டித்தந்த அழகிய அரண்மனையில் மதுவோடும், மங்கையரோடும், இன்ப புரியில் திளைத்தான். சேப்பாக்கம் அரண்மனை ஆங்கிலேயர்கள் கடற்கரையையொட்டிச் சேப்பாக்கத்தில் 117 ஏக்கரில் ஓர் அழகிய அரண்மனையைக் கட்டினார்கள். அதன் வாயில் வளைவுகள், மினார்கள், அறைகள், தரை ஆகியவை வண்ணக்கற் களாலும், கண்ணாடிகளாலும் அலங்கரிக்கப்பட்டன. அரண்மனை யின் தென்பகுதி கலசமகால் என்றும், அதனையடுத்த உட்பகுதி டமாயூன் மகால் என்றும் அழைக்கப்பட்டன. உமாயூன் மகாவில் திவானி கானா என்றழைக்கப்படும் கொலுமண்டபம் அமைக்கப் பட்டது. அரண்மனையின் வடக்குப்பக்கத்தில் நீராடும் துறை அமைக்கப்பட்டது. இன்று நவாபின் நீதிமன்றம், மாநிலக் கல்லூரி முதல்வரின் கல்லூரி வீடாகவும், நீராடும் துறை சென்னைப் பல்கலைக் கழகமாகவும் உள்ளன.) இந்த அரண்மனையில் உலக இன்பங்களைத் துய்த்துக் கொண்டிருந்த முகமதலி வாலாசா தன் இன்ப நுகர்ச்சிக்காக ஆங்கி லேய வணிகரிடம் 3 விழுக்காட்டிற்கும் கடன் வாங்கிப் பணத்தைத் தண்ணீர்போல் செலவிட்டான். ஆங்கிலேயர்களும் கட்டுத்திட்டமின்றி நவாபு கேட்கும் போதெல்லாம் பணத்தைக் கடனாகக் கொடுத்தனர், சென்னை ஆளுநராக இருந்ததாமசு ராம்போல்டு (கி.பி. 1778-1780) கணக்கில்லாமல் கடன் கொடுக்க அனுமதித்தான். இதனால், நிரு வாகச் சீர்கேடுகளும், ஊழல்களும் அதிகரித்தன. இதனை உணர்ந்த தலைமை ஆளுநர் வாரன் எசுடிங்சு (கி.பி. 1774 -1785) அவனைப் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, ஒயிட்கில் என்பவனை சென்னை ஆளுநராக்கினார். இவனும் இவனையடுத்து வந்த ஆளுநர்களும் இதே தவறைச் செய்ததால் நீக்கப்பட்டனர். கடைசியில் மகார்தானே (கி.பி. 1781-1785) சென்னை ஆளுநரான போது முகமதலியுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இதன்படி ஆற்காட்டை ஆளும் எல்லாப் பொறுப்புகளையும் முகமதலி வாலாசா ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தான். ஆயினும், அவனுடைய இன்ப நுகர்ச்சிகளை அவனால் கட்டுப்படுத்த முடிய வில்லை, ஆற்காடு நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் அடகு வைத்துக் கடன் பத்திரங்கள் எழுதிக் கொடுத்து விட்டுப் பணம் வாங்கி மதுவுக்கும் மங்கைக்கும் செலவிட்டுச் சிற்றின்பத்தில் மிதந் தான். இவனுக்குச் சொந்தமான கருநாடகப் பகுதிகளையும் அடகு வைத்துப் பணம் வாங்கினான்., ஆங்கிலேயருக்குச் செலுத்த வேண்டிய படை பாதுகாப்புத் தொகையை முகமதலி செலுத்தவே இல்லை. இதனால் ஒப்பார்ட் கருநாடகப் பகுதிகளைக் கடனுக்காக ஆங்கில ஆட்சியுடன் சேர்த்துக் கொண்டான். கி.பி. 1792-ல் ஆங்கிலேயருக்கும் முகமதவிக்கும் இடையே ஓர் உடன்படிக்கை ஏற்பட்டது. அதன்படி ஆற்காட்டில் இரட்டை ஆட்சி ஏற்பட்டது. ஆங்கிலேயரும் நவாபும் ஆற்காட்டின் இரண்டு எசமானராயினர். இதனால் மேலும் சீர்கேடுகள் பெருகின. ஆற்காட்டு மக்கள் துன்பக் கடலில் மூழ்கினர். இந்நிலையில் முகமதலி கி.பி. 1795 -ல் காலமானான். முகமதலிக்குப் பின் அவன் மகன் உம்தத் உல் - உமரா என்பவன் ஆற்காட்டின் இரண்டாம் வாலாசா' என்ற பட்டத்துடன் நவாபு ஆனான். இவன் கி.பி. 1795 -ல் இருந்து 1801 வரை ஆற்காட்டு நவாபாக இருந்தான், இவன் காலத்தில் ஆங்கிலேயருக்கும், மைசூர் திப்புசுல்தானுக் கும் இடையில் போராட்டம் வலுத்தது. இரண்டாம் வாலாசா திப்பு சுல்தானிடம் ஆங்கிலேயருக்கு எதிராக இரகசியமாக ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டான். இந்த இரகசிய ஒப்பந்தம் ஆங்கிலேயரிடம் " சீரங்கப்பட்டினத்தில் சிக்கியது. இதற்காகத் தலைமை ஆளுநர் வெல்லெஸ்லி (கி.பி. 1798 - 1805) இவன் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்கினார். ஆனால் நவாபு இரண்டாம் வாலாசா கி.பி. 1801இல் திடீரெனக் காலமானான். " 3. ஆற்காடு ஆங்கில ஆட்சியுடன் இணைப்பு (கி.பி. 1801) "இவனுக்குப்பின் இவனுடைய இரண்டு பிள்ளைகளும் நவாபு பதவிக்குப் போட்டியிட்டனர். வெல்லெஸ்லி தனக்குப் பணிந்து போகும் முத்தமகன் அசீம்-உத்-தௌலா (கி.பி. 1801 - 1819) என்பவனை ஆற்காட்டு நவாபு ஆக்கினான். இவன் 'நவாபு மூன்றாம் வாலாசா' என்ற பட்டத்துடன் ஆற்காட்டை ஆளத் தொடங்கினான். அவன் பதவியேற்ற அதே 1801ஆம் ஆண்டில் அவனுடன் வெல்லெஸ்லி ஓர் உடன்படிக்கை செய்து கொண்டு ஆற்காட்டை ஆங்கில ஆட்சியுடன் இணைத்துக் கொண்டான். ஒப்பந்தப்படி ஆற்காட்டின் மொத்த வருமானத்தில் ஐந்தி லொரு பங்கை நவாபு தனது ஆண்டு ஓய்வு களதியமாகப் பெற்றான். இந்து ரூபாய் 12 இலட்சம் எனக் கணக்கிடப்பட்டது. நவாபின் கடன், 30 கோடி ரூபாய் 1804-ல் கொடுத்துத் தீர்க்கப்பட்டது. ஆற்காடு ஆங்கில ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்ட பின் ஆங்கிலேயரின் ஆட்சிப் பரப்பு நெல்லூர் முதல் கன்னியாகுமரி வரை தமிழகத்தில் ஏற்பட்டது. மூன்றாம் வாலாசாவுக்குப் பிறகு அசம்ச (கி.பி. 1819 - 1825), அசிம்சா பகதூர் (கி.பி. 1867 - 1874) ஆகியோர் ஆங்கிலேயர் கொடுத்த ஆண்டுக்கு 12 இலட்சம் ரூபாய் உதவித் தொகையைப் பெற்றனர். இவர்களில் அசம்சாபகதூர் ஆற்காட்டு இளவரசர்' என்று பட்டம் பெற்றார். இவரைத் தொடர்ந்து இன்று வரையுள்ள வாலாசா பரம்பரையினர் இளவரசர் என்ற பட்டத்துடன் உதவித் தொகை பெற்று வருகின்றனர். முகமதலிக்குக் கட்டிக் கொடுத்த சேப்பாக்கம் அரண்மனையை ஆங்கில அரசே எடுத்துக் கொண்டு அதில் தமது அலுவலகங்களை வைத்துக் கொண்டது. அதற்குப் பதிலாக திருவல்லிக்கேணியிலுள்ள சாம்பசார் பகுதியில் 'அமீர் மஹால்' என்ற சிறுமாளிகை அவர்களுக்குக் கட்டிக் கொடுக்கப் பட்டது. இன்றும் வாலாசா 'இளவரசர்' குடும்பத்தார் இச் சிறு மாளிகை யில்தான் அரச மானியம் பெற்று வாழ்கின்றனர். கால அட்டவணை ஆற்காட்டு நவாபுகள் 1. கல்பிகர் அலிகான் - கி.பி. 1590 - 1703 2. தாவூத்கான் - கி.பி. 1703 - 1710 3. முகமதுசையத்தகாத் உல்லா - கான் - கி.பி. 1710 - 1732 4. தோசுத்து அலிகான் - கி.பி. 1732 - 1740 5. சப்தர் அலிகான் - கி.பி. 1740 - 1742 6. சதாத் உல்லாகான்சச முகமதுளசது - கி.பி. 1742 - 1744 7. அன்வா ரூதின் முகமது - கி.பி. 1744 - 1749 8. வாலாசா - முகமதவி - கி.பி. 1749 - 1795 5. உம்தத்-உல்-உமாரா - கி.பி. 1795 - 1801 10. அசீம் உத்-தௌலா - கி.பி. 1801 - 1819 11. அசம்சா - கி.பி. 1819 - 1825 12. அசிம்சா பகதூர் - கி.பி. 1867 - 1874 (ஆற்காட்டு இளவரசர்) ஆ. ஆங்கிலேயர் எழுச்சியும் ஃபிரெஞ்சுக்காரர் வீழ்ச்சியும் 1. மூன்றாம் கருநாடகப் போர் கி.பி. 1758 - 1763) இரண்டாம் கருநாடகப் போரின் முடிவில் (கி.பி. 1749 - 1754) ஆங்கிலேயர் ஆட்சி தமிழகத்தில் நெல்லூரில் இருந்து கன்னியாகுமரி வரைப் பரவியதைக் கண்டோம். ஃபிரெஞ்சுக்காரர்கள் படுதோல்வி யடைந்ததால் டூப்ளே தாய்நாட்டிற்குத் திருப்பி அழைக்கப்பட்டதை யும் அறிந்தோம். ஆகவே ஃபிரெஞ்சுக்காரர்கள் வீழ்ச்சியை நோக்கி வேகமாகப் போய்க் கொண்டிருந்தனர். மூன்றாம் கருநாடகப் போர் (கி.பி. 1758 - 1763) தொடங்கியதற் கான காரணகாரியங்கள் தமிழகத்திற்கு வெளியில் நடந்த சம்பவங் களுக்காக இருப்பினும் போர் நிகழ்ச்சிகள் தமிழக மண்ணிலேதான் நடந்தன. ஆங்கிலேயே ஆட்சி இந்தியாவில் கால்கோல் கொண்ட தற்கு கி.பி. 1757-ல் நடந்த பிளாசிப்போர் தான் காரணமாகும். இப் போரில் வெற்றி கண்ட இராபர்ட் கிளைவு வங்காளத்திலுள்ள சந்திர நாகூர் என்னும் ஃபிரெஞ்சுக் காரருக்குச் சொந்தமான இடத்தைக் கைப்பற்றினான். அப்பொழுது ஃபிரெஞ்சு ஆளுநராக இருந்தவன் தாமசு ஆர்தர் கவுண்ட்-டி-லாவி ஆவான். சந்திர நாகூரை இராபர்ட் கிளைவு பிடித்ததும் இவனும் ஆங்கிலேயருக்குச் சொந்தமான செயிண்ட் டேவிட் கோட்டையைப் பிடித்துக்கொண்டான். டேவிட் கோட்டை விழுந்தவுடன் சென்னையைத் தாக்கிப் பிடிக்கத் திட்ட மிட்டான். இதற்காகத் தாய் நாட்டின் உதவியையும் வேண்டினான். அவனுடைய திட்டப்படி சென்னை மீது படையெடுக்க ஃபிரெஞ்சுக் கடற்படைத் தளபதி தியாசு அவனோடு ஒத்துழைக்கவில்லை. வேறு வழியறியாத கவுண்ட்-டி - வாவி தஞ்சை மீது படை யெடுத்துத் தஞ்சை மன்னன் ஃபிரெஞ்சுக்காரருக்குக் கொடுக்க வேண்டிய 50 இலட்சம் ரூபாயைப் பெற்ப் படைதிரட்ட முனைந் தான். தஞ்சை மீது படையெடுத்துக் காலத்தை வீணாக்கினான். வழியில் ஃபிரெஞ்சுப் படையினர் நாகூரைச் சூறையாடினர். திருவாரூர் மீது படையெடுத்துத் தியாகேசன் கோயிலைக் கொள்ளை யடித்தனர். கோயிலில் பொருள் ஏதும் கிடைக்காததால் கோயில் , குருக்களைக் கொலை செய்தனர். பின்னர் தஞ்சைக்குச் சென்று வெகு நாட்கள் முற்றுகையிட்டனர். கையில் பொருள் இல்லாததால் தஞ்சை முற்றுகையைக் கைவிட்டனர். இதற்கிடையில் லாவியின் திட்டப்படிக் கீழ்ப்படிய மறுத்த கடற்படைத் தலைவன் தன்னிச்சைபோல் சென்னை மீது படை யெடுத்தான். அவனை ஆங்கிலக் கடற்படைத் தலைவன் போகாக் தோற்கடித்துத் துரத்தினான். தோற்றுவிட்ட தியாசு ஃபிரெஞ்சுத் தீவுக்கு ஓடிவிட்டான். தாமசு ஆர்தர் கவுண்ட் - டி - லாரிவடசர்க்கார் ஜில்லாக்களுக்குக் காவலனா யிருந்த தளபதி புஸ்ஸியைச் சென்னைக்கு அழைத்தான். லாலி ஆங்கிலேயருக்குச் சொந்தமான திருச்சி, செங்கல்பட்டு முதலான புறக்காவல் நிலையங்களைக் கைப்பற்றினான். பின்னர் சென்னை யை முற்றுகை இட்டான். முற்றுகை பலன் அளிக்கவில்லை, ஆங்கிலப் படைகள்ஃபிரஞ்சுப் படைகளை மசூலிப்பட்டினம், இராமேசுவரம் முதலிய இடங்களில் தோற்கடித்தன. இதற்கிடையில் ஐதராபாது நவாபு ஆங்கிலேயர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு ஃபிரெஞ்சுக்காரருக்குக் கொடுத்திருந்த வடசர்க்கார் மாவட்டங்களை ஆங்கிலேயருக்குக் கொடுத்து ஆங்கிலேயரின் பாதுகாப்பைப் பெற்றான். வட சர்க்கார் மாவட்டங் களைக் காவல் இன்றி விட்டுவிட்டுச் சென்னை வந்து விட்டதால்தான் நைசாம் இந்த மாற்றம் செய்தான். இதனால் ஃபிரெஞ்சுக்காரரின் செல்வாக்குத் தக்காணத்தில் குன்றிப்போனது. சென்னை முற்றுகையில் தோல்வி கண்ட ஃபிரெஞ்சுப் படை தொடர்ந்து தோல்வியையே தழுவியது வந்தவாசியில் நடந்த கடும் போரில் புச்சுசி சிறைபிடிக்கப்பட்டான். ஃபிரெஞ்சுக்காரர்களின் பற்றிடங்களை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர். அவர்களுக்கு எஞ்சி நின்றவை மாகி, செஞ்சி, காரைக்கால், பாண்டிச்சேரி மட்டுமே. எனவே, வந்தவாசிப் போருடன் ஃபிரெஞ்சுக்காரர்களின் வீழ்ச்சி உறுதியாகிவிட்டது. - கி.பி. 1761-ல் பாண்டிச்சேரியை ஆங்கிலேயர்கள் முற்றுகை யிட்டனர். அரும்பாடுபட்டு அழகிய நகரமாக அமைத்திருந்த பாண்டிச் சேரியை ஆங்கிலேயர்கள் தாக்கித் தரைமட்டமாக்கிவிட்டனர். செஞ்சியைக் கைப்பற்றி அதன் கோட்டைக் கொத்தளங்களையும் இடித்துத் தள்ளினர். மாகியையும் இடித்துத் தரைமட்டமாக்கினர். லாவியைச் சிறைப்படுத்தி இங்கிலாந்துக்கு அழைத்துச் சென்றனர். இரண்டு ஆண்டுகள் அவன் அங்குச் சிறையில் இருந்தான். பிரான்சு பெரும் பொருள் கொடுத்து அவனை மீட்டு அவன் மீது குற்றஞ் சாட்டிச் தேசத் துரோகத்திற்காக அவனுடைய தலையை வெட்டியது. மூன்றாம் கருநாடகப்போரின் முடிவுகள் இப்போர் ஃபிரெஞ்சு ஆதிக்கத்திற்கு இந்தியாவில் சாவுமணி அடித்தது. ஃபிரெஞ்சு ஆளுமை அடியோடு மறைந்தது. ஆங்கில ஆதிக்கம் எழுச்சி பெற்றது. ஃபிரெஞ்சு ஆட்சிக்கு முதுகெலும்பாய் இருந்த வட சர்க்கார் பகுதியும், செஞ்சியும், மாகியும், தலைநகராய் இருந்த பாண்டிச்சேரியும் இழக்கப்பட்டதால் ஃபிரெஞ்சு ஆட்சி உயிரற்ற உடல் ஆயிற்று. ஃபிரெஞ்சுக்காரர் மறைவும், மராத்தியர் மறைவும், மைசூரில் சுல்தானாட்சியின் வீழ்ச்சியும் ஆங்கிலேயர் ஆட்சி தமிழகத்தில் சுதந்திரமாக வளர்ச்சியடைய நல்ல சூழ்நிலை களை உருவாக்கின. ஃபிரெஞ்சுக்காரருக்குத் தாய்நாட்டின் உதவி கிடைக்காமை யும், தலைவர்களுக்குள் ஒற்றுமை இல்லாமையும், பற்றிடங்களில் இருந்து போதிய வருவாய் கிடைக்காமையும், இவர்களின் தோல் விக்குக் காரணங்களாயின. இதற்கு மாறாக ஆங்கிலேயருக்குத் தாய் நாட்டின் உதவியும், தலைவர்களுக்குள் ஒற்றுமையும், பற்றிடங் களில் இருந்து வருவாயும் கிடைத்தன. குறிப்பாக அவர்கள் பம்பாய், சென்னை, கல்கத்தா ஆகிய இந்தியாவின் உயிர் நாடியான இடங் களை வைத்திருந்தனர். தமிழக சமூகப்பண்பாட்டுவரனாறு 'மாவீரன் அலெக்சாந்தராயினும், நெப்போலியனாயினும், பாண்டிச்சேரியைத் தாங்குதளமாகக் கொண்டு பம்பாயில் இருந்து கல்கத்தா வரையிலான இந்தியக் கண்டத்தை வெற்றியுடன் ஆண்டி ருக்க முடியாது,' என்ற ஆன்றவிந்த வரலாற்று ஆசிரியன் சுமித்தின் கருத்தை நோக்கும் போது ஃபிரெஞ்சுக்காரர்கள் தங்களின் தங்கு தளத்தைப் பாண்டிச்சேரியில் அமைத்துக் கொண்டு, வருவாய்க்கும், போக்குவரத்துக்கும் அல்லல்பட்டதை அறியலாம். இ ஆங்கிலேயரும், ஐதர் அலியும், திப்புசுல்தானும் 1. முதலாம் மைசூர்ப் போர் கி.பி. 1767 - 1779) மூன்றாம் கருநாடகப் போரின் முடிவுகளைக் கண்டோம். இப் போரினால், ஃபிரெஞ்சுக்காரர் ஆட்சி மறைந்தது; ஆங்கிலேயர் ஆட்சி எழுந்தது. ஆங்கிலேயர்கள், ஃபிரெஞ்சுக்காரரும், மராத்தியரும் மறைந்ததால் வளர்ச்சியடைந்தனர். ஆனால், தமிழ்நாட்டுக்கு அப்பால் மைசூரில் இருந்து எழுந்த எதிர்ப்புகள் அவர்களுக்கு அச்சம் தருவனவாய் இருந்தன. ஐதர் அலி 'மைசூர்ப் புலி' என ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்ட ஐதர் அலி 1712-ல் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்து மைசூர் மன்னரிடம் ஒரு சிப்பாயாகப் பணியில் சேர்ந்தான். படிப்படியாக உயர்ந்து 1767-ல் மைசூருக்கே தலைவனானான், வாணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர் இந்தியாவில் ஆளும் வர்க்கமாக மாறியதை எண்ணி ஆவேசம் கொண்டான். அவர்களை இந்திய மண்ணில் இருந்து அடியோடு விரட்ட வேண்டுமென்ற விடுதலை உணர்ச்சி கொண்டான். மூன்றாம் கருநாடகப் போருக்குப் பின் ஆங்கிலே யர்கள் ஐதராபாது நைசாமின் அவையில் ஆளுமை பெற்றதையறிந்த ஐதர், வடசர்க்கார் மாவட்டங்களான கடப்பா, கர்நூல், பெல்லாரி, அனந்தப்பூர் ஆகியவற்றில் வரித்தண்டல் செய்து கொள்ளும் உரிமை பெற்றதையும், அவற்றைக் கொடை ஜில்லாக் களாகப் பெற்றதையும் எண்ணி ஆங்கிலேயரின் நாடு விழுங்கும் நயவஞ்ச கத்தை உணர்ந்தான். எனவே, ஐதராபாது நைசாமுடனும், மராத்திய ருடனும் இணைந்து ஆங்கிலேயரைஒழித்துக் கட்டத் திட்டமிட்டான். ஆங்கிலேயர்கள் மைசூர் மீது போர் தொடுத்தனர். ஐதராபாது நைசாமுடன் இணைந்து ஆங்கிலப் படைகளைத் திருவண்ணாமலை, செங்கம் கணவாய் ஆகிய போர்களில் எதிர்த்துப் போரிட்டான். ஆனால், இவ்விடங்களில் தோல்வியுற்றான். ஆம்பூரில் ஐதர் படை களை ஆங்கிலப் படைகள் படுதோல்வியடையச் செய்தன. இத் தோல்விகளுக்குப் பின்னும் ஐதர் மனந்தளராமல் ஆங்கிலப் படை களை மங்களூர், சேலம், பாரா மகால், ஈரோடு முதலிய இடங்களில் வெற்றி கண்டான். ஆனால், எதிர்பாராத விதமாய் மராத்தியரும், நைசாமும் கட்சி மாறிவிட்டனர். ஆங்கிலேயருடன் சேர்ந்து கொண்டு அவர்களே மைசூர் மீது போர் தொடுத்தனர். அப்பொழுதும் மனம் தளராத ஐதர் தம் படைப் பிரிவில் ஒன்றையனுப்பி-மராத்தியரைத் தாக்கச் செய்து விட்டுத் தாமே மற்றொரு பிரிவுக்குத் தலைமை தாங்கிச் சென்னை யைத் தாக்க முற்பட்டான். இதனைக் கண்டஞ்சிய ஆங்கிலேயர்கள் ஐதரோடு சமாதானம் செய்து கொண்டனர். கி.பி. 1799-ல் சென்னை உடன்படிக்கை" செய்து கொள்ளப்பட்டது. சென்னை உடன் படிக்கை இந்த உடன்படிக்கையின்படி அவரவர் பிடித்த இடங்களை அவரவருக்கே திருப்பித் தர வேண்டும் என்றும், போர்க் கைதிகளைப் பரிமாற்றம் செய்துகொள்ளவேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. மூன்றாவது நபர் இவ்விருவரில் யாரைத் தாக்கினாலும் ஒருவருக் கொருவர் உதவி செய்ய வேண்டும் என்றும் ஒப்புக் கொள்ளப் பட்டது. 2. இரண்டாம் மைசூர்ப் போர் கி.பி. 1780 - 1784) மராத்தியர் மைசூரைத் தாக்கினர். சென்னை உடன்படிக் கையின் படி ஆங்கிலேயர் தேருக்குத் துணைவரவில்லை. மாறாக ஐதருக்கு எதிராகப் பல செயல்களில் ஈடுபட்டனர். ஐதர் மராத்திய ரோடும், ஐதராபாது நைசாமோடும் ஓர் ஒப்பந்தம் செய்து கொண் டான். ஃபிரெஞ்சுக்காரரைத் துணைக்கு வைத்து கொண்டு பெரும் படையுடன் 1780-ல் செங்கம் கணவாய் வழியாகத் தமிழகத்திற்குள் புகுந்தான். ஆங்கிலப் படைத் தலைவன் கர்னல் பெய்வியைத் தோற்கடித்தான். இதற்குள் வாரன் ஹேஸ்டிங்ஸால் அனுப்பப்பட்ட ஆங்கிலப்படை கல்கத்தாவில் இருந்து தமிழகம் வந்தது. அப்படைக் குச் சர் - அயர் கூட் தலைமை தாங்கி வந்தான். அப்படை ஐதர் அலி யைச் செங்கல்பட்டு வந்தவாசி ஆகிய இடங்களில் தோற்கடித்தது. கடைசியாக கி.பி. 1781 -ல் ஐதர் பரங்கிப்பேட்டையில் படுதோல்வி அடைந்தான். அங்கிருந்து பின்வாங்கிச் சென்று வேலுாரை முற்றுகை யிட்டான். அயர்கூட் வேலூர் முற்றுகையைத் தளர்த்தி ஐதரைச் சோளிங்கரில் தோற்கடித்தான், பின்னர் ஆரணியில் நடந்த போர் வெற்றி தோல்வியின்றி முடிந்தது. கி.பி. 1783-ல் மாவீரர்களான ஐதர்அலியும், சர்-அயர் கூட்டும் காலமானார்கள். ஐதர் அலி புற்றுநோயால் காலமானான். அயர்கூட் நோய்வாய்ப்பட்டுச் சென்னையில் காலமானான். ஆனால், ஐதர் அலியின் மகன் திப்புசுல்தான் தொடர்ந்து ஆங்கிலேயருடன் போரை நடத்தினான். சென்னை ஆளுநரான மக்கார் தானே திப்பு வுடன் மங்களூரில் உடன்படிக்கை செய்து கொண்டு இரண்டாம் மைசூர்ப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தான். கி.பி. 1884-ல் ஏற்பட்ட மங்களூர் உடன்படிக்கையின் படி அவரவர் பிடித்த இடங்களை அவரவருக்கே திருப்பித் தர வேண்டும் என முடிவாயிற்று. 3. முன்றாம் மைசூர்ப் போர் கி.பி. 1790 - 1790) ஐதருக்குப்பின் அவன் மகன் திப்பு மைசூரின் சுல்தான் (அர சன்) ஆனான். அவன் ஆங்கிலேயரை இந்திய மண்ணில் இருந்து விரட்ட வேண்டும் என்ற சுதந்திரதாகம் கொண்டவன்.ஃபிரெஞ்சுக் காரரிடம் ஆங்கிலேயருக்கு எதிரான உதவிகளைக் கோரினான். கி.பி. 1789-ல் திருவாங்கூரைத் திப்பு சுல்தான் தாக்கினான். இஃது ஆங்கிலப் பாதுகாப்பிலிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். அடுத்ததாக ஐதராபாது நைசாமுடனும் மராத்தியருடனும் உடன் படிக்கைச் செய்து கொண்டு அவர்களைத் தன் அணியில் சேர்த்தான். ஆனால் பின்னர் இவ்விருவரும் காரன்வாலிசுடன் சேர்ந்து கொண்ட னர். கி.பி.1790-ல் கேரளாவிலுள்ள கிராங்கனூரைக் கைப்பற்றினான். கி.பி.1791-ல் திருவண்ணாமலையைக் கைப்பற்றினான். சென்னை ஆளுநர் செயலற்றுக் கிடந்தான். ஆனால் தலைமை ஆளுநர் காரன் வாலிஸ் கல்கத்தாவில் இருந்து ஒரு பெரும் படைக்குத்தாமே தலைமை தாங்கிச் சென்னை, வேலூரர் வழியாகச் சென்று பெங்களூரைக் கைப் பற்றினான். திப்புவை அரிகோராவில் தோற்கடித்து, அவனுடைய தலைநகரான சீரங்கப் பட்டினம் நோக்கி முன்னேறினான். இதற் கிடையில் திப்பு கோவையைப் பிடித்தான், சீரங்கப்பட்டினத்தை அடைந்த காரன் வாலிஸின் படைகள் அதனை அழித்தது - தலை நகரிலேயே ஆங்கிலப் படைகள் வெற்றி பெற்ற பின் வேறுவழி யின்றித் திப்பு சுல்தானுடன் கி.பி. 1782-ல் சீரங்கப்பட்டினத்தில் உடன்படிக்கை செய்து கொண்டான், இந்தச் சீரங்கப்பட்டினம் உடன்படிக்கையின்படித்திப்பு தன் ஆட்சிப்பரப்பில் பாதியை ஆங்கிலேயருக்கும், மராத்தியருக்கும், ஐதராபாது நவாபுக்கும் இழந்தான். போரின் இழப்பீடாக 30 இலட்சம் உருபாயைக் கொடுத்தான். இப்பணம் முழுவதும் கொடுத்துத் தீரும் வரைத் தன் இரு மகன்களையும் ஆங்கிலேயரிடம் பிணையாக வைத்தான். இவர்களே பின்னர் 1794-ல் மீட்கப்பட்டனர்.) 4. நான்காம் மைசூர்ப் போர் (கி.பி. 1799) முன்றாம் மைசூர்ப்போரின் முடிவில் தனது ஆட்சியில் பாதியை இழந்த திப்புசுல்தான் தனக்கு நேர்ந்த அவமானத்தையும், இழப்பை யும் நினைத்துப் பொருமினான். இனி இந்தியாவிலுள்ள மராத்தி யரையோ, நைசாமையோ, நம்பிப் பயனில்லை என்றும் அவர்கள் தொடைநடுங்கிகள் என்றும், நம்பிக்கைத் துரோகிகள் என்றும் முடிவு செய்தான். ஆங்கிலேயருக்குப் பரம எதிரியானஃபிரெஞ்சு நாட்டுடன் நட்பு கொள்ளத் தீர்மானித்தான், ஃபிரெஞ்சுப் புரட்சியைப் போற்றி னான். நெப்போலியனுடன் நட்புறவு கொண்டான். தனக்குப் படைகளை அனுப்பும்படி வேண்டினான். அதற்கிணங்க கி.பி. 1798-ல் ஃபிரெஞ்சுப் படைகள் மங்களூர் வந்து இறங்கின, இதனைக் கண்ட வெல்லெஸ்லி நைசாமுடன் உடன்படிக்கை செய்து கொண்டு கி.பி. 1799-ல் மைசூரை மேற்கில் இருந்தும், கிழக்கில் இருந்தும் தாக்கி னான். ஆங்கிலப் படைகள் திப்புவை மாலவல்லி, குடகு ஆகிய இடங் களில் தோற்கடித்தன. திப்புவும் தளர்ச்சியடையாமல் போரிட்டுக் கடைசியில் கி.பி. 1799-ல் சீரங்கப்பட்டினத்தில் ஆங்கிலேயரின் குண்டுக்கு இரையானான். சீரங்கப்பட்டினம் ஆங்கிலேயரால் சூறையாடப்பட்டது. கட்டடங்கள் இடிக்கப்பட்டன. 5. மைசூரை ஆங்கில ஆட்சியுடன் இணைத்தல் (1799) இப்போரினால் கடைசிப் பகைவனான திப்புவும் ஒழிந்தான், ஆங்கிலேயர்கள் மைசூரைத் தங்கள் ஆட்சியில் சேர்த்துக் கொண்ட னர். அத்துடன் தென் கன்னடம், வயநாடு, கோவை ஆகியவை ஆங்கி லேயரால் நைசாமுக்குக் கிடைத்தன. ரால்யதராபாதுவைச் சுற்றியிருந்த பகுதிகள் நைசாமுக்குக் கிடைத்தன. ஆங்கிலேயரின் துணைப்படைத் திட்டத்தின்படி நைசாம் கடப்பா, கர்நூல், பெல்லாரி, அனந்தப்பூர் ஆகிய மாவட்டங்களை ஆங்கிலேயருக்குக் கொடுத்தான். எஞ்சி நின்ற மைசூரின் நடுப்பகுதி பழைய மைசூர் பரம் பரையைச் சேர்ந்த அரசர் மூன்றாம் கிருட்டிண ராச உடை "பாருக்குக் கொடுக்கப்பட்டது. அவரும் ஆங்கிலத் துணைப்படையை ஏற்று, ஆங்கிலப் பாதுகாப்பிற்குள்ளானார். திப்புவின் குடும்பத்தினரும் ஆங்கிலேயரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டனர். அவனுடைய இரு மகன்களும் வேலூர்க் கோட்டையில் பாதுகாப்பில் வைக்கப் பட்டனர். இவ்வாறு மைசூரும் ஆங்கில ஆட்சியின் கீழ் வந்தது. ஆங்கிலேயரின் ஆதிக்கம் தமிழகத்தில் தலைதூக்கி நின்றது. 13 தமிழ்நாட்டுப் பாளையப்பட்டு முறையும் விடுதலைப் போர்களும் அ) பாளையப்பட்டு ஆட்சிமுறை 1, ஊர்ச்சபை 2. வரித்தண்டல் 3. போர் முறை 4. நன்மைகள் 5. தீமைகள் ஆ) விடுதலைப்போர்கள் 1. பூழித்தேவன் (புலித்தேவன்) 2. வீரப்பாண்டிய கட்டபொம்மன் (கி.பி. 1790 - 1799 3. பாளையக்காரர் கூட்டணி 4. பாஞ்சாலங்குறிச்சியின் வீழ்ச்சி 5. விடுதலைப் புரட்சி 6. பாளையக்காரர் முறை ஒழிப்பு தமிழ்நாட்டுப் பாளையப்பட்டு முறையும் விடுதலைப் போர்களும் தமிழ்நாட்டுப் பாளையப்பட்டு முறையும் விடுதலைப் போர்களும் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கன் காலத்தில் தமிழ் நாட்டில் எழுபத்திரண்டு பாளையப்பட்டுகள் ஏற்படுத்தப்பட்டு அலை ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாளையக்காரரின் கீழ் விடப்பட்டதை யறிந்தோம். தமிழக வரலாற்றை ஊன்றி நோக்கும் போது தமிழகம், விசயநகரப் பேராட்சியின் கீழும், நாயக்க மன்னர்களின் கீழுந்தான் இடைக்கால வரலாற்றில் ஒன்றுபட்ட, ஒழுங்கான, அமைதியான ஆட்சிமுறையைக் கண்டதை அறிகிறோம். பின் வந்த மராத்தியர் ஆட்சியிலும், பாளையக்காரர் ஆட்சியிலும் தமிழகத்தில் அமைதிக்கு மாறாக உள்நாட்டுக் குழப்பங்களும், கலகங்களும், போர்களுமே நிலவி யதைக் காண்கிறோம். மொகலாயப் பேரரசன் ஒளரங்கசீபால் அமர்த் தப்பட்ட தக்காணப் பேராளரின் கீழ் தென்னகத்திருந்த ஏறத்தாழ முப்பது நவாபுகளின் ஆட்சியாலும் தென்னகத்தில் அமைதியோ, ஒற்றுமையோ ஏற்படவில்லை. குறிப்பாக, ஐதராபாது நைசாமின் கீழிருந்த ஆற்காட்டு நவாபும், அவனுக்குக் கீழிருந்த படைத்தலைவர் களும், மராத்தியரோடும், பின்னர் ஐரோப்பியரோடும், உறவு கொண் டும், பகைமை கொண்டும் கருநாடகப் போர்கள் போன்ற பெரும் போர்களிலும், பாளையக்காரர்களுக்கும், தமிழக மன்னர்களுக்கும் எதிராக நடத்தப்பட்ட போர்களிலும் ஈடுபட்டுத் தமிழகத்தை ஒரு கரடிக்காடாக மாற்றினார்கள். ஆகவே, கி.பி.17, 18 ஆம் நூற்றாண்டு களின் தமிழக வரலாற்றை நாம் பார்க்கின்றபோது மராத்தியர், சுல்தான் கள், நைசாம்கள், நவாபுகள், ஃபிரெஞ்சியர், ஆங்கிலர்கள் முதலிய அயலவரும், உடள்நாட்டு மறவர்களும், கேடர்களும் தடியெடுத்த வன் தண்டல்காரன் என்ற முறையில் மக்களை வதக்கி, கசக்கி, வரித் தண்டல் செய்ததோடு, கொலையும், கொள்ளையும், களவும் செய்த னர் என்பதை எண்ணி வாடுகிறோம். சுருங்கக் கூறின் கி.பி. 1311 -ல் பாண்டிய நாட்டின் கோநகரான மதுரையைக் கைப்பற்றித் தமிழ் மண்ணில் முதன் முதலாக இசுலாமியர் ஆட்சியை ஏற்படுத்தியமை தமிழகப் பண்பிலும், தமிழ்நாட்டு வரலாற்றிலும் ஒரு புல்லுருவி முளைத்தது போலாயிற்று. கி.பி. 1323-ல் தில்லியை ஆண்ட துக்ளக் மரபில் முதலரசன் கியாசுதீன் துக்ளக் தன் மகன் உஷாகான் (முகமது பின் துக்ளக் என்பவனைத் தென்னகத்துக்கு ஏவிச் சோழ, பாண்டிய நாடுகளைக் கைப்பற்றினான். மீண்டும் 1335 - ல் தென்னகத்தில் ஏற்பட்ட சுல்தானியர் ஆட்சிக்கு மதுரை தலைநகரா யிற்று. இங்கிருந்து கொண்டு சுல்தானியத்தின் படி நிகராளிகளாக ஆள முற்பட்ட இசுலாமியர் சுல்தானியம் வீழ்ச்சியடைந்தபின் மதுரைச் சுல்தான்கள் (மாபார் சுல்தான்கள்) என்னும் பட்டத்துடன் ஆண்டார்கள். விசயநகரப் பேரரசன் கிருட்டிணதேவாராயனின் தம்பி யான கம்பண்ணன் மதுரை மீது படையெடுத்து மதுரைச் சுல்தானி தமிழக சமூகப்பண்பாட்டு வரலாறு யத்திற்கு முற்றுப் புள்ளியிட்டான். பின்னர் ஏற்பட்ட நாயக்கர் ஆட்சி யின் கீழ்ப் பாளையக்காரர்கள் வளரத் தொடங்கினர். கி.பி. 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் இவ்வாறு வளர்ச்சி பெற்றப் பாளையக்காரர்கள் அடிக்கடி ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள், கலவரங்கள், போர்கள் முதலியவற்றையும், நாயக்கர் ஆட்சியின் வலுவின்மையையும் சார்பாகப் பயன்படுத்திக் கொண்டு ஆங்காங்கே தனிக்காட்டு அரசர்களாக நிலைபெற்று விட்டனர். திருமலை நாயக்கன் காலத்தில் மதுரை நாட்டில் மட்டும் எழுபத்திரண்டு பாளையப்பட்டு கள் ஏற்பட்டதாக அறிந்தோம். ஆனால், காலப்போக்கில் இவை எண்ணிக்கையில் குறைந்து கொண்டே சென்றன, ஒரு பெரிய பாளையக் காரரின் கீழ்ப் பல சிறிய பாளையக்காரர்களும் இருந்தனர். இந்நூற்றாண்டுகளில் இத்தகையப் பாளையக்காரர்கள் முகாமையாகத் திருநெல்வேலி, மதுரை, இராமநாதபுரம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், கோயம் புத்தூர் ஆகிய இடங்களில் அதிகமாகக் காணப் பட்டார்கள். இவர்களில் மிகப்பெரிய பாளையக்காரர், இராமநாதபுரம், சிவகங்கை பாளையக்காரராவர். மணியாச்சி, ஏழாயிரப்பண்ணை ஆகியவற்றை ஆண்டவர்கள் மிகச் சிறியவர்களாவர். பாளையக் காரர்களுக்கு உட்பட்ட ஆட்சிப் பரப்பையும், வருவாயையும் அடிப்படையாகக் கொண்டு அவர்களின் வளமும் இருந்தது. பாளையக்காரர்கள் யாவரும் ஒரே குடியினர் அல்லது ஒரே மொழியினர் என்று கூறுவதற்கில்லை, எடுத்துக்காட்டாகத் திருநெல் வேலி, இராநாதபுரம் ஆகிய இடங்களிலிருந்த பாளையக்காரர்கள் மறவர் குடியினர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் இருந்தவர்கள் கள்ளர் குடியினர், கீழைத் திருநெல்வேலி, திண்டுக் கல், கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தவர்கள் நாயக்க தொடி யர்) இனத்தவர். இவர்கள் தமிழ் அல்லது தெலுங்கு அல்லது இருமொழிகளிலும் பேசுபவர்களாக இருந்தனர். கி.பி. 1752 - ல் தமிழகத்தில் ஏறத்தாழ அறுபது பாளையக்காரர்கள் இருந்தார்கள் என்றும், 18 ஆம் நூற்றாண்டின் கடைசியில் நாற்பத்தாறு பாளையக் காரார்கள் இருந்தார்கள் என்றும் அறிகிறோம். அரசர் களால் நேரடியாக ஆளப்பட்ட ஆட்சியை இக் காலத்தில் சர்க்கார் ஆட்சி என்றழைத்தனர். அத்தகைய சர்க்கார் ஆட்சியின் கீழும் சில பாளையப் பட்டுகள் இருந்தன. திருநெல்வேலி, மதுரை, இராமநாதபுரம் ஆகிய வட்டங்களில் இத்தகைய சர்க்கார் பாளையப்பட்டுகள் பல இருந்தன. தமிழகத்தில் மட்டுமேயல்லாது இராயல சீமா, ஆந்திரக் கடற்கரைப் பகுதிகள் ஆகிய இடங்களிலும் பாளையக்காரர்கள் இருந்தார்கள் இவர்களே முறையே மேலைப் பாளையக்காரர்கள், வடபாளையக் காரர்கள் என்று அறியப்பட்டனர். அ) பாளையப்பட்டு ஆட்சிமுறை கி.பி. 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகமெங்கிலும் பாளையக்காரர்களின் ஆட்சியே இருந்ததெனலாம் படை, காவற் தமிழ்நாட்டுப் பாளையப்பட்டு முறையும் விடுதலைப் போர்களும் படை, வருவாய்த்துறை, நயன்மை முதலியவற்றை இவர்களே கண்காணித்தார்கள். இவர்களின் உள்நாட்டு ஆட்சியில் பேரரசு தலையிடுவதில்லை. எனவே, இவர்கள் தனியரசர்கள் போலவே செயல்பட்டனர். ஒவ்வொரு பாளையக்காரரும் தனக்குள்ள நிலத்தின் ஒரு பகுதியைத் தானே வைத்துக்கொண்டு எஞ்சிய நிலத்தைத் தனக்கு கீழ்ப்பட்டவர்களைப் பயிரிடும்படி விடுவர். அவ்வாறு பயிரிடும் வேலைக்காரன் பண்ணையாள் அல்லது சிரோகன் எனப்படுவான். இவன் பயிரிடுவோனாகவும், போர்க்காலத்தில் போரிடும் படை வீரனாகவும், இரட்டைப் பணியாற்றுவான். ஆகவே, பாளையக் காரர்கள் தனியே பட்டாளம் (படை வீரர் குழு) என்று ஒன்றை வைத் திருக்கவில்லை . இராமநாதபுரம் சேதுபதியிடம் மட்டும் 10,000-ல் இருந்து 40,000 வரையிலான சிரோகர் இருந்தனரென அறிகிறோம். சிரோகர் பெரும்பாலும் பாளையக்காரருக்கு உறவினராகவோ இனத்தவராகவோ இருப்பர். இதனால் இவர்களுக்கு ஊரில் மதிப்பும், புகழும் இருக்கும். பொதுமக்களை ஆட்டிப்படைக்கும் தனியதி காரங்களையும் இவர்கள் பெற்றிருந்தனர். இவர்களுக்குக் கீழ் பணியாற்றியவர்கள் பள்ளர்கள் எனப்பட்டனர், பள்ளர்களே உண்மையான வேளாளர் குடியினர். அஃதாவது நிலத்தில் இருந்து உழுது பயிரிடும் உழவர் இவர்களே யாவர். இவர்கள் மேல்வாரம் எடுத்துக் கொள்வர். அஃதாவது விளைச்சலில் பாதி பயிரிடுவதற்குக் கூலியாக இவர்களுக்கு அளிக்கப்படும். பாளையக்காரர்கள் தங்களுக்கென ஒதுக்கிக் கொண்ட நிலங் களையும் இத்தகைய பள்ளர்களைக்கொண்டே பயிரிடுவர். அவற்றில் வரும் வருவாயில் வாரம் போக மீதி நேரடியாகப் பாளையக்காரர். களுக்குப் போகும். ஆனால் சிரோகர்கள் நிலங்களில் வரும் வருவாய் சிரோகர்களுக்கே சேரும். அவர்கள் குறிப்பிட்ட தொகையையும், படை களையும் குறிப்பிடும் காலத்தில் பாளையக்காரருக்குக் கொடுத்து வர வேண்டும், பள்ளர்கள் அடிமைகளைப் போல் தங்கள் பண்ணையா ரிடம் கட்டுண்டு கிடந்தனர். இவர்களை ஆடு, மாடுகளைப் போல் ஒருவருக்கொருவர் மாற்றிக்கொள்ளவும், அல்லது தாங்கள் பட்ட கடனுக்கீடாகக் கொடுக்கவும் சிரோகர்களும், பாளையக்காரர்களும் உரிமை பெற்றிருந்தனர். தம் நிலத்தில் வேலை முடிந்தவுடன் அண்டை நிலத்தில் பள்ளர்கள் வேலை செய்து கூலியீட்டினாலும் அதனைத் தம் மேலாளரிடமே (எசமானரிடமே) கொடுத்துவிட்டு அவர் கொடுக்கும் வழக்கமான கூலியைப் பெற்றுக் கொள்ளவேண் டும். மேலாளரே பார்த்து வேலைக்குத் தகுதியற்றவன் எனப் பள்ள னைத் தள்ளிவிட்டால் அல்லது அவனுக்கு ஒரு தொகையைக் கொடுத்தால் மட்டிலுமே பள்ளனுக்கு விடுதலையேற்படும். ஆகவே, இம்முறை இடைக் கால உருசியாவில் உழவர்கள் தாங்களையே பண்ணையாரிடம் விற்றுக் கொண்ட அடிமைகளைப்போல் பயிரிட்ட தைப் போன்ற தெனலாம். ஆனால் நீக்ரோவர் அடிமை முறையினும் இது மாறுபட்டது. பெரும்பாலான பாளையப்பட்டுகள் மலைகளி லும், காடுகளிலும் அமைந்திருந்ததால் இப்பள்ளங்கள் அக்காடு மலை களைத் திருத்தி விளைநிலங்களாக்கினர். பல ஏரிகளும், நீர்த் தேக்கங் களும், கால்வாய்களும் இவர்களால் வெட்டப்பட்டன. பார்ப்பனர் களுக்குத் தனியாக அக்கிரகாரங்களும் அமைத்துக் கொடுக்கப்பட்டன பாளையக்காரர்கள் பொதுவாகத் தங்களுக்கு உட்பட்ட நிலங் களில் வரும் வருவாயில் மூன்றிலொரு பகுதியை அரசருக்குக் கொடுத்துவிடுவர். மூன்றிலொரு பகுதியைப் படைச் செலவுக்கும், மீதியுள்ள மூன்றிலொரு பகுதியைச் சொந்தச் செலவுக்கும் பயன் படுத்துவர், பாளையப்பட்டிலிருந்த முகாமை அமைச்சர் பிரதானி அல்லது தலமை எனப்பட்டார். இவர் அரசர் சார்பில் பாளையப்பட்டு ஆட்சிமுறையைக் கவனிப்பார். பாளையக்காரன்பாளையப்பட்டின் தலைவனாகவும், தானைத் தலைவனாகவும் இருப்பான். அவனுக்கு கீழிருக்கும் சிரோகர் பயிரிடுவோராகவும் படை வீரர்களாகவும் இருப் பர். ஒவ்வொரு பாளையத்தின் சார்பிலும், பாளையக்காரரின் படி நிகராளியாக அரசரின் (நடுவண் ஆட்சியில்) அவையில் ஸ்தானாதிபதி என்னும் அமைச்சர் இருப்பார். இவர் மூலமாகவே பாளையக்காரர் அரசருடன் தொடர்பு கொள்வர். ஆங்கிலேயர்கள் பாளையப்பட்டு களைக் கைப்பற்றியபின் இந்த ஸ்தானாதிபதி பதவி ஒழிக்கப்பட்டு நவாபுகள் நியமிக்கப்பட்டனர். 1. அர்ச்சபை ஒவ்வோர் ஊரிலும் இருவகையான சபைகள் இருந்தன. அவை பயிரிடுவோர் சபை, சாதியடிப்படையிலான சபை ஆகியவை யாம். ஊர்த்தலைவன் மக்கதம் அல்லது படேல் எனப்பட்டான். இவன் பாளையக்காரர் சார்பில் ஊராட்சி முறையையும், வரித்தண்ட லையும் கவனிப்பான். ஊரிலுள்ள நிலங்களின் அளவு, தரம் ஆகிய வற்றையும் மற்ற விவரங்களையும் எழுதி வைப்பவன் கர்ணம் (கணக்கன்) எனப்பட்டான். இவர் களுக்குக் கீழ் காவல்காரர் (தலை யாரி), தோட்டி ஆகியோர் இருப்பர். இவர்கள் யாவருக்கும் ஊதியம் வழங்கப்பட்ட முறை தாருக்குத் தக்கபடியிருந்தது. மானியமும், தவசமும் இவர்களுக்கு வழங்கப்பட்டன, ஊர்ச்சபையில் படேலும், கர்ணமும் உறுப்பினராகி, வழக்குகளை உசாவித் தீர்ப்பளிக்கும் போது தண்டம் போடுவதும் கசையடி கொடுப்பதும் உண்டு. நெய்யைக் காய்ச்சிக் கையில் ஊற்றிக் குற்றவாளிகளைக் கண்டு பிடிக்கும் தெய்வீக முறையும் இருந்தது. இச்சபையில் தங்களுக்குத் தக்க நன்மை கிடைக்கல்லை என்று தெரிந்தால் நேரடியாகப் பாளையப்பட்டுக்காரரிடமே முறையிடலாம், கை, கால், முதலிய உறுப்புகளைக் குறைத்தல், கொலைத் தண்டனையளித்தல் ஆகிய தமிழ்நாட்டுப் பாளையப்பட்டு முறையும் விடுதலைப் போர்களும் 185 வற்றைத் தவிர பிற சிறு தண்டனைகளையே பாளையக்காரர் வழங்கினர். இத்தகைய பெரிய தண்டனைகளை அரசரின் நயன்மை மன்றமே வழங்கும் தகுதியைப் படைத்திருந்தது. கொலை செய்த வனிடம் பெருந்தொகை பெற்றுக் கொண்டு மன்னித்துவிட்ட வழக்குகளும் இக்காலத்தில் காணப்பட்டன. வருவாய் நிலவரியும் பிற வரிகளும், காவற் பணமும் பாளையக்காரருக்கு வந்தன. அஃதாவது நிலத்தின் வருவாயில் பாதி பொதுச் செலவு) பாளையக்காரருக்குக் கொடுக்கப்பட்டது. இதிலும் பல தில்லுமுல்லு கள் நடந்தன. அதிகாரிகளுக்குக் கையூட்டுக் கொடுத்துவிட்டு வரு வாயைக் குறைத்துக் காட்டுவது வழக்கமாயிருந்தது. கரிசல் மண், செம்மண் (செவ்வல்), பொட்டல், வேம்புல் என மண் வளத்திற் கேற்ப நன்செய் நிலத்தின் தரம் பிரிக்கப்பட்டிருந்தது. பயிரிடுவோர் பாளையக்காரருக்கு வாரமும், ஊராருக்குச் சில வரிகளும் கட்ட வேண்டும். சர்க்கார் நிலத்தைப் பயிரிடுவோர் இவர்களை விட அதிக மான வரிச்சுமைகளையும், கொடுமைகளையும் துய்த்தனர். இவர் கள் சர்க்கார், நவாபு, அதிகாரிகள், ஊரார் ஆகிய பலருக்கிடையிலும் சிக்கித் தவித்தனர். பொதுவாக இக் காலத்தில் பாளையக்காரர் கீழும், நவாபுகளின் கீழும் வேளாளர் எண்ணிலாக் கொடுமைகளைத் துய்த்தனர். குறிப்பாக ஆங்கிலம் தமிழகத்தைக் கைப்பற்றிய பின் அவர்கள் நினைத்தபடிக் கேட்ட பெருந் தொகைகளையும், பரிசில் களையும், பாளையக்காரர்களும், நவாபுகளும் பயிரிடுவோரைக் கசக்கிப் பிழிந்தே கொடுத்தனர். 2. வரித்தண்டல் வரியாகத் தண்டல் செய்யப்படும் பணம் பல தவணைகளாக (கிஸ்தி அரசுக்கு அனுப்பப்படும். குறிப்பிட்ட வட்டத் தலைநகர் களில் குறிப்பிட்ட நாளில் அதிகாரிகள் செல்வர். அவர்களிடம் கர்ணமும், படேலும் ஊரில் தண்டல் செய்த பணத்தைக் கட்டி விடு வர், வரிநிலுவை அல்லது தண்டல் நிலுவையைத் தண்டுவதற்குத் தனிப்பட்ட ஏவலாள்களையும் அமர்த்துவர். அத்தகையோருக்குத் தண்டலில் ஒரு பகுதி தர்காகக் கொடுக்கப்படும், குடிபடி வாரம் காடு மேடுகளைப் பயிரிடும் நிலங்களாக மாற்றுவதற்கு ஊக்கமளிக்கப்பட்டது. இவற்றைக் குறிப்பிட்டவருக்கு ஒதுக்கீடு செய்து கடனாக அல்லது இலவசமாகப் பணம் கொடுத்துப் பயிரிட ஊக்குவிக்கப்படும். பொதுவான விளைநிலமாக அவை மாறியபின் தொடர்ந்து பயிரிடப்படும் போது குறிப்பிடும் ஒரு தொகை கட்டண மாகத் தண்டப்படும், தொடர்ந்து இக் கட்டணம் வழக்கம் போல் தண்டப்படும் அந்நிலம் பயிரிடுவோருக்கு வழி வழிச் சொத்தாக ஒதுக்கப்படும். பிறங்கடையில்லாமற் போனால் பாளையக்காரரே அதனைத் திருப்பியெடுத்துக் கொள்வார். இத்தகைய முறை குடிபடி வாரம் எனப்பட்டது. - காவல் முறை ஒவ்வொரு பாளையக்காரரும் தமக்கு உட்பட்ட பாளையப் பட்டிலுள்ள உயிர்களையும், உடைமைகளையும் காப்பதைத் தம் கடமையாக் கொண்டனர். இதற்கெனக் காவற்காரர்களை யமர்த்தி னர். இவர்கள் தவசங்களையும், பிறவுடைமைகளையும் காத்தனர். வயல்கள், தவசக்களங்கள், நெடு வழிப்பாதைகள், சந்தைகள், வணிகத் தெருக்கள் முதலிய விடங்களிலும் கோயில், குளங்களிலும் நின்று காவல் காத்தனர். குறிப்பிட்ட எல்லையில் திருட்டுப் போனால் அவ்வெல்லையைக் காக்கும் காவற்காரன் அப்பொருளை மீட்டுத் தரவேண்டும். இன்றேல் பொருளையிழந்தவருக்கு அவன் இழப்பீடு அளிக்க வேண்டும். இக் காவற்காரருக்குத் தவசம், அல்லது பணம் உடைமையாளரால் ஊதியமாக வழங்கப்படும். காவல், அரசக் காவல், நாடு காவல், தேசக் காவல், தலக் காவல் என நால்வகைப்படும், தலக் காவலர்தாம் ஊரைக் காவல் புரிவர். மாவட்டக் காவலர் நாட்டுக் காவலரெனவும் மாநில அளவிலான பகுதிக் காவலர் தேசக் காவலரெனவும் அழைக்கப்பட்டனர். தலக் காவற்காரர்கள் அரசால் அமர்த்தப்படுவர். ஆயினும், ஊராரே சம்பளமளிப்பர். இவர்கள் திரைக் காக்கவும், பாளையக்காரர்கள் பாளையத்தைக் காக்கவும், இரட்டைக் காவல்கள் இக்காலத்திலிருந் தன. மொகலாயர் படையெடுப்பின்போது திறமான படை வீரர்கள் தேவைப்பட்டனர். இவ்வூர்க்காவல் முறை இப்படையெடுப்பாளருக் குத் துரும்பெனப்பட்டது. எனவே, பாளையக்காரர்களையே படை யேந்திய காவற்காரர்களை அமர்த்தும்படிக் கேட்டு அதற்கென தேசக்காவற் பட்டணம் ஒன்றையும் ஊரார் கொடுத்தனர். இதனால், பாளையக்காரரின் மதிப்பும் உயர்ந்தது. பாளையக்காரரால் அமர்த்தப் படும் காவற்காரர்கள் திருடர்களின் பாதச்சுவடுகளைப் பின்பற்றிக் கண்டுபிடிப்பர். திருடன் தரைத் தாண்டிப் போயிருந் தால் அடுத்த வளர்க் காவலர் தொடர்ந்து துப்பறிந்து திருடனைக் கண்டுபிடிக்க வேண்டும். இன்றேல் அவ்வூராரும் காவற்காரரும் திருட்டுப் போன பொருளின் மதிப்பீட்டை இழந்தவருக்குக் கொடுக்க வேண்டும். இதன் வழிக்காவற் பொறுப்பு ஊரார் மேலும் சுமத்தப்பட்டது. 3. போர் முறை பாளையக்காரர்கள், நவாபுகள், ஆங்சிலர்கள் ஆகியோர் குதிரை. பெருவேட்டெஃகம் (பீரங்கி) முதலிய பெரும்படை களுடன் வந்து தாக்கும்போது எதிர்நின்று தாக்க மாட்டார்கள். தமிழ்நாட்டுப் பாளையப்பட்டு முறையும் விடுதலைப்போர்களும் காடுகளிலும், மலைகளிலும், மரக்கிளைகளிலும் மறைந்து திருந்து தாக்கும் முறைகளையே பின்பற்றினர். வேல், வாள், வில், அம்பு, சுக்குமாந்தடி, ஈட்டி, கம்பு, கட்டாரி, கைக்குண்டு முதலிய கருவிகளால், பலதிறப்பட்ட சிக்கலான வலக்கார முறைகளைப் பயன்படுத்திப் போரிடுவர். குறிப்பாகக் கள்ளர்கள் வளைதடி என்னும் ஒருவகைக் கருவியைப் பயன்படுத்தினர். இது மூன்றாம் பிறை நிலவைப் போல் வளைந்து காணப்படும். இக் கருவி வயிரமான மரக் கட்டையால் அல்லது கனமான இரும்பால் செய்யப் பட்டிருக்கும். இதனைச் சுழற்றியெறிந்தால் எறிந்தவர் கைக்கே மீண்டும் வரும். எதிரியின் தலையைக் கொய்ய இது மிகவும் பயன் பட்டது. தரையடியில் பதுங்கிப் பாயும் முறையால் வேட்டெஃக (பீரங்கிப் படைகளையும், குதிரைப் படையையும் எளிதில் திக்கு முக்காடச் செய்வர். நாம் மேலே கூறியவாறு ஊரையும், குறிப்பிட்ட நிலங்களையும் மானியமாகப் பெற்ற ஊழியர்கள் போர்க்காலத்தில் இருபது அல்லது முப்பது பேர்களடங்கிய குழுக்களாய் அணிவகுத்துப் படைகளையேந்திப் பாளையக்காரரின் கீழ் நிற்பர். ஒவ்வோர் அணிக்கும் தலைமை தாங்கி நடத்திச் செல்லும் அதிகாரி சர்தார் எனப்பட்டான். தேவைப்பட்டால் கூலிப்படையும் திரட்டப்பட்டது. இத்தகைய போர் முறைகளை ஆய்ந்து நோக்கும் போது ஒவ்வோர் ஊரிலும் தனிப்பட்டவரும் விருப்பம் போல் பெருங் கருவிகளைப் பெற்றிருந்தனர் என்பது தெளிவாகிறது. இதனால் தான் சாதி அல்லது குழுச் சண்டைகளேற்படும்போது இக் கருவிகளைப் பயன்படுத்தி உயிர்களைக் குடித்ததையறிகிறோம். இன்று இவை குழுச் கோஷ்டி) சண்டைகள் என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன, பாளையக்காரர் கோட்டை கட்டக்கூடாது. ஆனால், நடுவண் ஆட்சி நலிந்த போது இவர்கள் மண்ணால் பல கோட்டைகளைக் கட்டினர். இவற்றைப் பெருவேட்டெக்கத்தாலும் தகர்க்க முடிய வில்லை . 4. நன்மைகள் பாளையக்காரர் முறையால் பல நன்மைகள் ஏற்பட்டன வெனலாம். பார்க்காவல், நாட்டுக்காவல் சீர்ப்படுத்தப்பட்டன. காடுமேடுகள் திருத்தப்பட்டு விளை நிலமாக்கப்பட்டன. இதனால் விளைச்சல் மிகுதிப்பட்டது. ஊரும், ஊர்களும் தனித்தும் இணைத்தும் ஒன்றுபட்டன. தலைவன் ஆணைக்கு உட்படும் பாங்கு வழக்கத்தில் வந்தது. பாளையக்காரர்கள் பொது நிலத்திற்கென நீர்ப் பாசன ஏந்து களைச் செய்தனர். இதனால், பல ஏரிகள், கால்வாய்கள், நீர்த்தேக்கங் -கள் அமைக்கப்பட்டன. காடுகள் அழிக்கப்பட்டும், பாதைகள் போடப் பட்டுக் காவற்காரர்கள் நிறுத்தப்பட்டதால் கொலை, களவுகள் குறைந்தன, காவல் முறையின் சிறப்புத்தன்மையால் காவற்காரரும். ஊராரும் பொறுப்பேற்றுத் திருட்டுக் குற்றத்தைக் குறைத்தனர். அரசருக்கு நினைத்த மட்டில் பொருளும், படையும் உழைப்பின்றிக் கிடைத்தன. 5. தீமைகள் சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்தன, பாளையப் பட்டுக்காரர்களே சேதுபதி, கள்ளர், மறவர், நாயக்கர் முதலிய சாதிகளாய்ப் பிரிந்து நின்றனர். ஒவ்வொரு ஊரிலும் பயிரிடுவோர் சபையும், சாதிச் சபையும் இருந்தன. குறிப்பாகப் பள்ளர், பறையர் ஆகியோர் சொல்லொணாச் சாதிக் கொடுமைகளுக்கு ஆளாக்கப் பட்டனர். அவர்கள் இன்ன உணவுகளைத்தான் உண்ண வேண்டும். இன்ன உடைகளைத்தான் உடுக்க வேண்டும் என்றும், முழங்காலுக் குக் கீழ் உடை அழிந்து வரக்கூடாது என்றும், பொன்னணிகள் அணியக்கூடாது என்றும், வெண்கலம் செம்பாலான பாத்திரங்களைப் பயன்படுத்தக்கூடாது என்றும், மட்பாண்டங்களையே பயன்படுத்த வேண்டும் என்றும் இக் குலப்பெண்கள் சட்டை போடக்கூடாது என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பயிரிடும் பள்ளர்கள் அடிமைகளாகவே இருந்தனர். இவர்கள் தங்கள் எசமானனைக் கேட்டுத்தான் தங்களுக்கே உரிய உயிரையும் விட்டனர். பாளையக்காரரில் தொடங்கிப் பயிரிடும் பள்ளர் வரை சமு தாயம் படிக்கட்டுகளைப் போல் காணப்பட்டது. பாளையக்காரர் குதிரை, யானை, ஒட்டகம், பல்லக்கு ஆகியவற்றில் பரிவாரங்கள் சூழ்ந்து நிற்கவும், பல்வியங்கள் முழங்கவும், கேளிக்கைகளும், கூத்துகளும், வேடிக்கைகளும், வரவேற்புகளும், நடத்துவர் அவர் களுடைய உடை அணி முதலியன ஒரு மகாராசாவை நினைவுபடுத் தும். அவருக்குக் கீழுள்ள மானியக்காரரும், பிறரும் இவருக்குச் சற்றேறக்குறையக் காணப்படுவர். கோயில்களுக்கும், பார்ப்பனருக்கும் சமுதாயத்தில் முதலிடம் அளிக்கப்பட்டது. தனிப்பட்ட தெருக்களும், ஊர்களும் பார்ப்பனருக் கு ஒதுக்கப்பட்டன. தூது செல்லுதல், ஒற்றுப் பார்த்தல், அமைச்சரா யிருத்தல் முதலிய பணிகளிலும் இவர்கள் இருந்தனர். பொதுவாகக் கோயில்களில் பூசைகளை நடத்துவதற்கே இவர்களுக்குப் பொன்னும் பொருளும் வழங்கப்பட்டன. மறப்பண்புக்குப் பாளையக்காரர் முறை வழிவகுத்தாலும் இதன் வழி சமுதாயக்கேடுகளே எஞ்சின. மக்கள் வரிச்சுமையால் அல்லற்பட்டனர். பாளையக்காரர், நவாபுகள், ஆங்கிலர், தரகர்கள் ஆகியோருக்கிடையில் சிக்கிய உழவரின் நிலைமை என்ணுதற்கும், கொடியதாயிருந்தது. நவாபுகளும், ஆங்கிலரும், படையெடுக்கும் போதெல்லாம் முல்லைமாறிகளாக மாறி, பாளையக்காரர்கள் பலர் தமிழர்களையே கொல்லும் இரண்டகிகளாயினர். பூழித்தேவனும் கட்டபொம்மனும் வெற்றி பெறாததற்கு வீரமும், திறமையும் இருந் தும் தமிழினத்தின் இரண்டகமே (துரோகமே) கரணியமாயிற்று. கொடிலாம் முல்லும் இரக தமிழ்நாட்டுப் பாளையப்பட்டு முறையும் விடுதலைப் போர்களும் விடுதலைப் போர்கள் 1. பூழித்தேவன் (புலித்தேவன்) 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் வெள்ளையனை எதிர்த் தெழுந்த விடுதலைப் போர்களில் பங்கேற்ற முதல் வீரன் நெற்கட்டுச் செவ்வலில் இருந்து ஆண்ட பூழித்தேவன் ஆவான். இசுலாமியரை யும், ஆங்கிலேயரையும் தமிழக மண்ணில் இருந்து அடியோடு விரட்ட எண்ணியவனான மறவன். இவன் காலத்தில் திருநெல்வேலிச் சீமையில் பல பாளையப்பட்டுகள் இருந்தன. ஆயினும் அவை ஒற்றுமையின்றிச் சிதறிக் கிடந்தன. பூழித்தேவன் முயன்றதால் மேற்குத் திசையிலிருந்தவர்கள் ஒருவாறு அதன் கீழ் ஒன்றுபட்டனர். ஆனால் கிழக்குத் திசையிலிருந்தவர்கள் பாஞ்சாலங் குறிச்சிப் பாளையக்காரர் பொல்லாப் பாண்டியன் கட்டபொம்ம நாயக்கன் தலைமையில் ஒன்று கூடினர். இவன் கி.பி. 1736 முதல் 1760 வரை இதனை ஆண்டான். இவன் கீழ்தான் எட்டையபுரமும் இருந்தது. திருவிதாங்கூர் தனியே பிரிந்திருந்தது. கட்டபொம்மன் விடுதலை வேட்கையற்றவன். அடிமை வாழ்வையே விரும்பு பவன், இடைக் காலத்தில் மதுரையை இசுலாமியர் (ஆலம்கான்) கைப்பற்றினர். அதனை மியானா, முடேமியா, நபிகான் ஆகியோர் ஆட்சிப்பொறுப்பேற்று ஆண்டனர். 1755-ல் சென்னை படைஞன் ஈரான் (கர்னல் நீரான்) மதுரை மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றிக் கொண்டான். இக் காலத்தில் ஆற்காட்டை ஆண்ட முகம்மதலி ஆங்கிலேயரின் வைப்பாள். அவன் அண்ணன் மாபூஸ்கான் ஆங்கிலேய ரின் அடிவருடி, திருவிதாங்கூரை ஆண்ட மார்த்தாண்ட சேகரன் பலன் ஒன்றை மட்டுமே கருதிய மதியினன், இந்நிலையின் தென் மண்டலத்துப் பாளையங்களின் நிலைமைகளையும் மக்களின் நிலைமைகளையும் நாமே ஊகித்தறியலாம். , படைஞன் ஈரான் படையெடுப்பு (கி.பி. 1755) மதுரையைக் கைப்பற்றிய ஈரான் அதனைக் கான்சாகிபு என்பவனிடம் ஒப்படைத்து விட்டுத் திருநெல்வேலிச்சீமை மீது படையெடுத்தான். கட்டபொம்முவும் அவன் கூட்டாளிகளும் அடிபணிந்தனர். திறை செலுத்தி முடியும் வரை தம் ஆள்களைப் பினனணயாக வைத்துச் சிறிது திறை செலுத்தித் தப்பினான் கட்ட பொம்மு, பல பாளையங்களும், கோட்டைகளும் ஈரான் வசமாயின. வெற்றிப் பெருமிதத்தோடு, பூழித்தேவன் வாழும் நெற்கட்டுச் செவ்வலை ஈரான் முற்றுகையிட்டான். முற்றுகை நீண்டது, வெற்றி யில்லை, வெட்கித் திரும்பினான். பூழித்தேவன் பாளையக்காரர்களை ஒன்றிணைக்க முற்படல் பூழித்தேவன் வெள்ளையனை வெளியேற்றப் பாளையக் காரர்களை ஒன்றிணைத்தான். அடிவருடி கட்டபொம்மன் தவிரப் பிறர் இவன் கீழ் ஒன்றுபட்டனர் மாபூஸ்கான் கீழிருந்த திருவில்லிப் புத்தூரைக் கைப்பற்றினான். மேலும் பாளையக்காரர்கள் பலர் இவன் பக்கம் சேர்ந்தனர். இதனால் இவனிடம் 20 ஆயிரம் குதிரைப் படையும், 25 ஆயிரம் காலாட் படையும் உருவாயின. ஆனால், கட்ட பொம்மனும் பிறரும் மாபூசுகான் பக்கம் சேர்ந்து 1756-ல் பூழித் தேவனைத் தோற்கடித்தனர். இதனால் பாளையக்காரர் வலிமையற்று நின்றனர். இந்நிலையில் கான்சாகிபு தென்மண்டலப் பாளையங் களை வருத்தித் திறை தண்டினான். ஆங்கிலர் பேரம் சென்னை ஆங்கிலக் குழுவார் திருநெல்வேலியை அழகப்ப முதலி என்பவனுக்குக் குத்தகைக்கு விட்டு அவனிடம் இருந்து பல இலக்கம் உருபாயைப் பெற்றுக் கொண்டனர், கொள்ளையடிக்க நினைத்த மாபூஸ்கான் திருநெல்வேலி கைவிட்டு நழுவியதைக் கண்டு பூழித்தேவன் பக்கம் சேர்ந்து வெள்ளையரை எதிர்க்கலானான், பூழித்தேவன் திருநெல்வேலியைக் கைப்பற்றினான். மாபூசுகானுடன் போர் - மாபூசுகான் தன் வலையில் விழுந்ததும் பூழித்தேவன் ஆங்கிலரின் பேரச்சமாகத் திகழ்ந்த ஐதருடன் நட்புக் கொண்டான், ஆங்கிலரின் தலைநகரை இச்சமயம் ஃபிரெஞ்சியர் முற்றுகை யிட்டனர். கான்சாகிபின் துணையுடன் அவர்கள் விரட்டப் பட்டனர். பின்னர் கான்சாகிபு பாளையக்காரர்களை விலைக்கு வாங்கினான். திருவிதாங்கூரைப் பூழித்தேவனிடம் இருந்து பிரித்தான். கட்ட பொம்மனைச் சேர்ந்த பாளையக்காரர்களும் அவன் பக்கம் சேர்ந்தனர். ஆங்கிலர் பட்டாளமும் ஆங்கிலரின் கீழிருந்த மதுரை, பாளையங் கோட்டை தூத்துக்குடி முதலிய இடங்களிலிருந்த படைகளும், திருவிதாங்கூர்ப் படையும் மாபூஸ்கான் பக்கம் நின்றது. ஆயினும், பூழித்தேவனே வெற்றி பெற்றான். 1760-ல் பொல்லாப் பாண்டியன் கட்டபொம்மு நாயக்கன் இறந்தான். அவன் மகன் செகவீரபாண்டியக் கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சி ஆட்சிக்கு வந்தான். இவன் மானமுள்ளவன் ஆனால், வீரமில்லாதவன், இவனுக்குப் பின் வந்தவனே விடுதலை வீரன் வீரபாண்டியக் கட்டபொம்மன் ஆவான். 1760-ல் கான்சாகிபு கடைசியாகப் பூழித்தேவனின் நெற்கட்டுச் செவ்வல் கோட்டையை முற்றுகையிட்டான். வெற்றி பூழித்தேவனுக்கே சிட்டி யது. இதற்குப் பின்னும் இவன் எழுதிய மடல்களைக் கொண்டு பூழித்தேவனின் கோட்டைகளை கைப்பற்றியதாய் அறிகிறோம். ஆனால், மாவீரன் பூழித்தேவனின் முடிவு நமக்குத் தெரியவில்லை , பூழித்தேவனுக்குப் பின் பாளையப்பட்டுகளின் மீது வெள் ளையர் ஆளுமை அதிகரித்தது. தமிழகம் மெல்ல மெல்ல ஆங்கிலத் தனிப்பேராளுமைக்கு அடிமையாகிறது. கடைசியாகத் தமிழகத்தில் தமிழ்நாட்டுப் பாளையப்பட்டு முனறயும் விடுதலைப்போர்களும் வெள்ளை யரை எதிர்த்துப் போரிட்ட பல வீர மறவர்களில் வீர பாண்டியக் கட்டபொம்மனே தலைசிறந்தவன் ஆவான். அடுத்து அவனைப் பற்றி அறிவோம். 2. வீரபாண்டிய கட்டபொம்மன் கி.பி. 1790 - 1799) செகவீரக் கட்டபொம்மன் (கி.பி. 1780 - 1790) வீரபாண்டியக் கட்டபொம்மனின் தந்தை. இவன் காலத்தில் தமிழகம் ஆற்காட்டு நவாபின் கீழிருந்தது. பாளையக்காரர்கள் மாறுபட்டு நின்றபோது ஆற்காட்டு நவாபு, சாதிகான் என்ற தன் படைத் தலைவனைத் திருநெல்வேலிச் சீமைக்கு அனுப்பினான். சாதிகான் செகவீரக் கட்ட பொம்மனிடம் சென்று பாளையக்காரர்கள் திறை செலுத்தாதிருந்த மையைக் கூறினான். கட்டபொம்மன் திசைச் செலவு (திக்குவிசயம்) செய்து பாளையக்காரர்களையும், குறுநில மன்னர்களையும் சந்தித்துத் திறைத்தண்டல் செய்து சாதிகானுக்கு அளித்தான். இவன் திருச் செந்தூர் முருகன்பால் சிறந்த அன்பு கொண்டவன். இவன் மனைவி யின் பெயர் சண்முகக்கனி என்பது ஆறுமுகத்தம்மாள் என்றும் இவ்வம்மையார் அழைக்கப்பெற்றார். இவ்வம்மையார் 3-1-1760 - ல் பெற்ற வீரச் செய்தான் வீரபாண்டியக் கட்டபொம்மன் என்பான். வீரபாண்டியக் கட்டபொம்மனுக்குத் தளவாய் குமாரசாமி (மாமைத்துரை), துரைச்சிங்கம் (சுப்பையா) என்ற தம்பியர் இரு வரிருந்தனர். வீரபாண்டியக் கட்டபொம்மனின் மனைவி வீர சக்கம் மாள் என்பவளாவாள். கட்டபொம்மன் தனது முப்பதாம் அகவை யில் 1790 - ல் பாஞ்சாலங்குறிச்சியின் அரசனானான், தம்பியர் இருவரும் இளவரசர்களாகவும், சிவசுப்பிரமணிப் பிள்ளை என்பார் அமைச்சராகவும் அமர்ந்தனர். கட்டபொம்மனின் பாஞ்சாலங் குறிச்சிப் பாளையத்தில் ஓதி வளர்கள் இருந்தன. அவை ஆறு வணிகத் தலங்களாகப் பிரிவு) பிரிக்கப்பட்டு இருந்தன. அவை சவுணகிரி, பசவந்தனை, புதியம்புத்தூர், ஆதனூர், வேடநத்தம், பட்டணமருதூர் என்பனவாகும். இவ்வணிகத் தலங்களைக் காக்கத் தலக்காவல் திசைக் காவல் படைகளைக் கட்டபொம்மன் திறம்பட அமைத்துச் செயல்பட்டான். இதனால் வழிப்பறி, கொள்ளை, கொலை, களவு முதலிய குற்றங்கள் குறைந்தன. மதுரை நாயக்கர் காலத்தில் ஏற்படுத் தப்பட்ட எழுபத்திரண்டு பாளையப்பட்டுகளில் திருநெல்வேலிச் சீமையில் மட்டும் முப்பது பாளையங்கள் இருந்தன. அவையும் மற்ற பாளையங்களும் இவனிடம் தொடர்பு கொண்டு இவனுக்கிணங்கி நடந்தன. பாளையங்களில் ஏற்படும் உள்ளகக் குழப்பங் களையும், பிறங்கடையுரிமைப் போர்களையும் கட்டபொம்மன் தீர்த்து வைப் பான். மதுரையை ஆண்ட திருமலை நாயக்கன் தான் கட்டி வந்த அரண்மனைக்கு மாடன், முத்து என்னும் சக்கிலியர் இருவரைப் பிடித்து நரக் காவு கொடுக்க முற்பட்டபோது கட்டபொம்மன் தலையிட்டு அவர்களை மீட்டான். அந்த அளவு அவனுக்கு நாயக்க மன்னரும் மதிப்பளித்தனர். பட - இக்கால முறைப்படி இவனிடம் இருந்த வீரர்கள் வரிசைப் படுத்தப்பட்டிருந்தனர். இவனிடம் 5000 தாயக்க வீரர்களும், 5000 மறவர்களும், 3000 பிறவினத்தவரும், பட்டாணியர், கவுண்டர், கவரையர், வலையர் முதலிய இனத்தைச் சேர்ந்த வீரர்களும் இருந்த னர். வாள், வேல், வல்லயங்கள், கம்புகள் ஆகிய படைகள் வகைக்கு ஆறாயிரமும், வில், கவண், பெருவேட்டொகம், தடி, பரசுப்பிண்டிப் பாலம் முதலிய படைகளுமாக மொத்தம் இருபதாயிரத்திற்கும் மேலிருந்தன. குதிரைகளும், யானைகளும், ஒட்டகங்களும், காளை களும், செம்மறிக் கிடாய்களும், வேட்டை நாய்களும்கூட இவன் படையிலிருந்தன. எண்பது கோட்டைகள் இவனுடைய ஆளுமை யிலிருந்தன. வீரபாண்டிய கட்டபொம்மனும் ஆங்கிலேயரும் ஆங்கிலர் கி.பி.1792-ல் ஆற்காட்டு நவாபுக்கு உட்பட்டிருந்த திருச்சி, திருநெல்வேலிப் பகுதிகளில் வரித் தண்டல் செய்து கொள்ளும் உரிமையைப் பெற்றனர். வரித் தண்டலுக்கு ஏந்தாக இப்பகுதிகளிலிருந்த நிலங்கள் முழுவதும் அளக்கப்பட்ட தோடு, தரம் பிரிக்கப்பட்டு ஒதுக்கீடும் செய்யப்பட்டன. இந்த ஒதுக்கீட்டில் ஆங்கிலருக்கு அடங்கி நடப்பவர்கள் பெரிதும் நன்மை யடைந்தனர். இப்பணியை மேற்கொண்ட லெப்ட்டினென் கர்னல் மேச்சுவல் என்பான் பாஞ்சாலங்குறிச்சிக்கு உட்பட்டிருந்த ஆதனூர் வணிகத்து அருங் குளம், சப்பலாபுரம் ஆகிய இரண்டு ஊர்களை எட்டைய புரத்து எட்டையப்பனுக்குக் கொடுத்துவிட்டான். இந் நிகழ்ச்சியில் விருந்தே கட்டபொம்மனுக்கும் ஆங்கிலேயருக்கும் பகை மை முண்டது. மேலும் கட்டபொம்மன் பிற பாளையக்காரர்களைப் போல் ஆங்கிலர்களைக் கண்டு வணங்காமலும், வரிகொடாமலும் வந்தான். இது பகைமையை மேலும் வளர்த்தது. ஆங்கிலர்கள் மைசூர்ப் போர்களிலும், வங்காளப் போர்களிலும், கருநாடகத்தி லும், மராத்தியத்திலும் எழுந்த எதிர்ப்புகளைச் சமாளிப்பதிலும் பெருங்கவனம் செலுத்தியதால், பாளையக்காரர்கள் எத்தகைய எதிர்ப்புமின்றி வளர்ச்சியடைந்தனர். முன்றாம் மைசூர்ப் போருக்குப் பின் 1792-ல் சீரங்கப்பட்டணத்தில் ஏற்பட்ட உடன் படிக்கைக்குப் பின்னரே ஆங்கிலர்கள் தமிழகத்தின் மீது ஆளுமை பெற்றனர். 1795 - ல் இராமநாதபுரமும் வேறு சிலவிடங்களும் இவர்களின் கீழ் வந்தன. மணற்பாறையை ஆண்ட இலக்குமண நாயக்கருடைய பாளையமும் ஆங்கிலரால் கைப்பற்றப்பட்டது பழநிப் பாளையக் காரர், திண்டுக்கல், கோட்டையில் சிறைவைக்கப் பெற்றார். 1796 -ல் சங்கம்பட்டி, மடூர், ஏற்றிவடூர் முதலிய ஊர்களையும் ஆங்கிலர் கைப்பற்றினர். இவ்வாறு ஏதாவதொரு குற்றம் சாட்டப்பெற்றுப் பல் பாளையங்களை ஆங்கில வணிகக் குழுவார் கைப்பற்றினர். தமிழ்நாட்டுப்பாளையப்பட்டு முறையும் விடுதலைப் போர்களும் அவ்வணிகக் குழுவும் பாளையக்காரர்களை ஒடுக்கும் ஆணைகளை இட்டதோடு ஒடுக்கும் செயல்களைத் தொடர்ந்து மேற்கொண்டது. பாளையக்காரருக்கு முதுகெலும் பாயிருந்த மைசூர்ப் போரில் (ஐதரும், திப்புவும்) கடைசியாக நான்காம் மைசூர்ப் போரில் (1799) ஒடுக்கப்பட்டுவிட்டனர், மைசூர்ப் போரின்போது கீழைத் திருநெல் வேலிப் பாளையக் காரர்கள் ஆங்கிலருக்குத் துணை நின்றனர். ஆனால் மேலைத் திருநெல்வேலிப்பாளையக் காரர்கள் கட்டபொம்மன் தலைமையில் ஒன்றிணைந்து மைசூருக்கு நண்பர்களாயிருந் தனர். இதனால் கட்டபொம்மன் மட்டும் தமிழகத்தில் ஆங்கிலரின் ஒரே பகைவனாயிருந்தான். கட்டபொம்மன் பிற பாளையக்காரர்களைப் போல் திறை செலுத்தாமல் வாழ்வது தன் பிறப்புரிமை என்றான். வானம் பொழிகிறது வையகம் விளைகிறது, உனக்கு ஏன் திறை செலுத்துவது என்பதே அவனுடைய பிறப்புரிமை வினார். ஆனால் ஆங்கிலர்கள் கி.பி. 1792-ல் இருந்து 1798 வரை தங்களுக்குப் பாஞ்சாலங்குறிச்சிக் கட்டபொம்மன் 3. 310 பகோடா திறை செலுத்த வேண்டுமென்று பல நினைவூட்டல் அறிக்கைகளையும் தாக்கீது களையும், தூதுவர்களையும் அனுப்பிக் கேட்டனர். ஆலன் என்பான் பெயருக்காவது சிறு தொகையைக் கொடுக்குமாறு கேட்டும் கட்டபொம்மன் அதே விடையைக் கூறி அனுப்பினான். 1799-ல் நான்காம் மைசூர்ப் போர் நடந்து கொண்டிருந்தது. ஆங்கிலப் படைகள் அப்போருக்கு அனுப்பப்பட்டிருந்தன. அச்சமயத்தில் திருநெல்வேலியில் தண்டலராக (Collector) இருந்தவன் சாக்சன் என்பவன் ஆவான். 1798 ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்களில் வீரபாண்டியனைத் தன்னைத் திறைப் பணத்துடன் வந்து காணுமாறு சாக்சன் ஆணை பிறப்பித்தான். அதற்கிணங்க கட்டபொம்மன் திறைப் பணத்துடன் தன் பரிவாரம் சூழ சாக்சனைக் காணச் சென்றான். ஆனால், சாக்சன் அவனுக்கு நேர்முகக் காணல் (பேட்டி) கொடுக்க மறுத்துக் காலத் தாழ்த்தம் செய்த வண்ணம் குற்றாலம், சொக்கம்பட்டி ஆகிய இடங்களைப் பார்வையிட்டு இராமநாதபுரம் சேர்ந்தான். கட்டபொம்மனும் தம்பியர் ஊமைத்துரையும், துரைச் சிங்கமும், அமைச்சர் சிவசுப்பிரமணியப் பிள்ளையும், படையில் ஒரு பகுதியும் சாக்சனைப் பின்தொடர்ந்து 23 நாள்கள் நடந்து, 400 கல் தொலைவைக் கடந்து இரமநாதபுரத்தையடைந்தனர். கட்டபொம் மன் கடைசியாகச் சாக்சனைச் சந்திக்க நேரும் போதும் திடீரென அவனைச் சிறைப் பிடிக்கச் சாக்சன் முயன்றான். வீரபாண்டியன் விறிட்டெழுந்து தப்பினான். ஆனால், அமைச்சர் சிவசுப்பிரமணியப் பிள்ளை மட்டும் சிறைப்பட்டார். இச்செய்தியறிந்த சென்னை வணிகக் குழுவினர் கட்டபொம்மனை அழைத்து உசாவி அவனு டைய அமைச்சரை விடுதலை செய்து சாக்சனை வேலை நீக்கம் செய்தனர். பின்னர் எசு. உலூசிங்டன் திருநெல்வேலித் தண்டலராக அமர்த்தப்பட்டான். அவன் கட்டபொம்மனுடன் நட்பு பூண்டான். 3. பாளையக்காரர் கூட்டணி 1799-ல் நான்காம் மைசூர்ப் போர் மும்முரமாய் நடந்து கொண்டிருந்தது. கட்டபொம்மனின் நிலையைப் பிற பாளையக்காரர் கள் கவலையோடு நோக்கினர். ஆங்கிலப் படைகள் தென்பாண்டி நாட்டில் இருந்து மைசூர்ப் போரில் ஈடுபட்டிருக்கும் இந்நேரத்தில் பாளையக்காரர்களின் கூட்டணிப் படைகளைத் திரட்டித் தமிழகத்தில் இருந்து ஆங்கிலரை அடியோடு விரட்டத் திட்டமிட்டனர். இதில் மும்முரமாய்ப் பங்கேற்றவர்கள் சிவகங்கை மருதுபாண்டியரும், திண்டுக்கல் கோபால நாயக்கரும், ஆனைமலை யாதும் நாயக்கரும் ஆவர். 1787லேயே மருதுபாண்டியனால் பல பாளையங்களின் கூட்டணிப் படைகள் அமைக்கப்பட்டு விட்டன. நாகலாபுரம், மன்னார் கொட்டை, கோலார்பட்டி, செந்நெல்குடி ஆகியவை ஒன்று கூடி ஒரு கூட்டணி அமைத்திருந்தன. கட்டபொம்மன் இவ்வணிகர் களுக்குத் தலைமை தாங்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டான். கள்ளர் களும் இவன் கீழ் ஒன்று கூடினர். சென்னையில் ஆங்கில வாணிதக் குழுவாரின் நடவடிக்கைகளைக் கவனித்துச் செய்தி யனுப்பக் கட்டபொம்மனின் அமைச்சர் சிவசுப்பிரமணியரின் தம்பி பாண்டியப் பிள்ளை அனுப்பப்பட்டான். கட்டபொம்மன் இத்தகைய மறைமுகக் கூட்டணி செயல்படுவதற்குப் பாஞ்சாலக் குறிச்சியைவிட மேற்கு மலைத் தொடர்ச்சியினடியிலுள்ள சிவகிரியே சிறந்ததெனக் கொண்டு அதனையும் தன் கூட்டணியில் சேர்த்தான், இதற்குச் சிவகிரியின் பாளையக்காரனின் மகனுடன் கமுக்க ஒப்பந்தம் செய்து கொண்டான். சிவகிரி புரட்சிக்காரருக்குத் தலைமை இருக்கையாகப் போவதை எப்படியோ ஆங்கிலர் உணர்ந்து கொண்டனர். 1792 -ல் இருந்து சிவகிரி ஆங்கிலேயருக்கு உட்பட்டு இருந்தது. அதனை முதலில் கைப்பற்றி அங்குத் தங்களின் தலைமை யிடத்தை அமைக்க புரட்சிக்காரரின் கூட்டணிப்படைகள் புறப் பட்டன, 4. பாஞ்சாலங்குறிச்சியின் வீழ்ச்சி இதனையறிந்த தலைமையாளுநர் வெல்லெஸ்லி தஞ்சை, திருச்சி, மதுரை ஆகியவிடங்களிலிருந்த ஆங்கிலப் படைகளைத் திருநெல்வேலி நோக்கி அணிவகுத்துச் செல்லும்படி ஆணை யிட்டான். தளபதி பானர்மேன் தலைமையில் ஆங்கிலப் பட்டாளங் கள் 1799-ல் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை முற்றுகையிட்டன. 300 அடி அகலமும் 500 அடி நீளமுள்ள அக்கோட்டையை ஆங்கிலப் படைகள் முற்றுகையிட்டபின் இராமலிங்க முதலியார் என்பவன் தாது செல்வது போல் கட்டபொம்மனைக் கண்ட பின் பானர் மேனுக்குக் கோட்டையின் உள்ளமைப்பையும் மற்ற கமுக்கங் களையும் கூறிவிட்டான். எட்டப்பனும் திருவிதாங்கூரானும் ஆங்கிலக் குழுவாருடன் சேர்ந்து கொண்டனர். பாளையக்காரர் படைகளுக்கு விடுதலைப்போர்களும் வமைத்துரை தலைமை தாங்கினான். கடைசியில் கடுந்தாக்குதலுக்கு 1 ஈடு கொடுத்த கோட்டை சரிந்தது. பாளையங்கோட்டையில் இருந்து மேலும் ஆங்கிலப் படைகள் வந்தன, கோலார்ப்பட்டி, நாகலாபுரம் முதலிய இடங்களில் போர்கள் நடந்தன. சிவசுப்பிரமணியப் பிள்ளை சிறைப்பிடிக்கப்பட்டார். கட்டபொம்மன் கலாப்பூர்க் காட்டுக்குள் ஓடி மறைந்தான். ஆனால் அவனைப் புதுக்கோட்டை யரசன் விசய இரகுநாத தொண்டைமான் தன் ஆள்களைவிட்டுத் தேடிப்பிடித்துப் பானர் மேனிடம் ஒப்படைத்தான். கயத்தாற்றில் கட்டபொம்மனைத் தூக்கிலிடல் கட்டபொம்மனையும், பிற புரட்சி வீரர்களையும் சிறைசெய்து உசாவல் நடத்தினர். சிவசுப்பிரமணியப் பிள்ளையை நாகலாபுரத்தில் தூக்கிலிட்டனர். சிவகிரிமீது படையெடுத்தது. ஆங்கில ஆட்சிக்கு உட்பட்ட மக்களிடத்தில் கொள்ளையடித்தது, தீயிட்டது. கொலை செய்தது. ஆங்கிலருக்கெதிராகக் கூட்டணி யமைத்தது போன்ற கொடிய குற்றங்களுக்காக 17.10.1799-ல் கயத்தாறு என்னு மிடத்தில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டான். கட்டபொம்மன் தன்னைக் காட்டிக்கொடுத்தவரைக் கண்டு ஏளனமாய்ச் சிரித்துக் கொண்டே தூக்குக் கயிற்றை முத்தமிட்டான். வீரபாண்டியக் கட்டபொம்மனைப் பற்றி இருவகைக் கருத்துகள் நிலவுகின்றன. இவன் தலைசிறந்த வீரன். சாகும் போதும் புன்னகை பூத்த முகத்தோடு இறந்தான் என்பது யாவரும் ஒப்பும் கருத்து. ஆனால், அவன் ஓர் உண்மையான விடுதலை வீரன் அல்ல னென்பர். இருபத்து மூன்று நாள்கள் நானூறு கல் தொலைவு நடந்து திறைப்பணத்துடன் சாக்சனைப் பின் தொடர்ந்து சென்றான். குடிமக்களைக் கொள்ளையடித்துத் தீயிட்டுக் கொலை செய்தான் என்பன போன்றவற்றை ஆயும் போதும், ஆங்கிலேயர் அழைத்து உசாவிய போதும் அவர்களுக்கு அடங்கி நடப்பதாகவே கூறினா னென்பதை நோக்கும் போதும் இவன் ஒரு தன்மான வீரன்தானா என்பது ஐயத்திற்குரிய தென்பர். மேலும் இராமநாதபுரம் நிகழ்ச்சிக் குப் பின்னர் பாளையக்காரர்களை இணைத்து ஒரு கூட்டணியை அமைத்தவர்கள் மருதுபாண்டியரும், கோபால நாயக்கருமே யாவார். இவர்கள் நாடு விடுதலை அடைய வேண்டுமென்ற விடுதலை வேட் கையும், நாட்டுப் பற்றும் உடையவர்களென்பதை அறிகிறோம், இதற்குப் பின்னர்தான் கட்டபொம்மன் களம் புகுந்தான். ஆனால் அவனிடம் தன் வீரத்தைக் காட்ட வேண்டுமென்ற உணர்வு காணப் படுகிறதேயொழிய விடுதலை வேட்கையோ, நாட்டுப்பற்றோ காணப்படவில்லை. பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை தாக்கப்பட்ட போதுதான் இவன், தன் வீரத்தைக் காட்டினான். பின்னர் ஓடி ஒளிந்து கொண்டான். அதற்கு முன் தொடர்ந்து திறை செலுத்தி வந்தான். ஆகவே, இவன் ஒரு புரட்சிக்காரன் என்றுகூடக் கூறமுடியா தென்பர். இருப்பினும் பாஞ்சாலங்குறிச்சியில் விடுதலை யெழுச்சியும், வீரவுணர்வும், நாட்டுப்பற்றும் ஏற்பட வித்திட்டவன் வீர பாண்டியக் கட்ட பொம்மனேயெனலாம். இவன் இட்ட வித்து இவனுக்குப்பின் இவனுடைய தம்பிகளால் பயிராக்கப்பட்டு வெள்ளையனை வெளியேற்றும் ஒரு நீண்ட போர்க்களமாக மாறியதைக் காண்கி றோம். ஆகவே, இவன் ஒரு சிறந்த விடுதலை வீரனே. ஆங்கிலக்குழுவாரின் நடவடிக்கைகள் கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரையும், மற்ற உறவினர் களும், பாளையங்கோட்டைச் சிறையிலடைக்கப்பட்டனர், நாகலா புரம், ஏழாயிரம்பண்ணை , கோலார்ப்பட்டி, குளத்தூர், கடல்குடிப் பாளையக்காரர்களும் சிறையில் வதிந்தனர். கட்டபொம்மனை அழிப்பதில் ஆங்கிலருக்குத் துணைபுரிந்த எட்டயபுரம் எட்டப்ப னுக்கு அருங்குளம் என்ற ஊரும் பல்வேறு பொருள்களும் பரிசளிக் கப்பட்டன. மணியாச்சி, மயில்மந்தை முதலிய பாளையக்காரர்களும் பரிசு பெற்றனர். சென்னையாளுநர் எட்வர்டு கிளைவு என்பான் கட்ட பொம்மனைப் பிடித்துக் கொடுத்த புதுக்கோட்டையரசன் தொண் டைமானுக்கு ஒரு குதிரையையும், விலையுயர்ந்த பொன்னாடையும் பரிசாக அளித்தான், பிற பாளையக்காரர்கள் எச்சரிக்கப்பட்டனர், கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்திற்கு உட்பட் டிருந்த ஊர்கள் ஆங்கிலவாட்சியின் கீழ்க் கொண்டு வரப்பட்டன. இவ்வூர்களில் இருந்து வரிகளைப் பெற்றதோடு தேசக் காவற் படைகளையும் ஆங்கிலக்குழுவே இடித்துவிடவும், படைகளைக் கலைத்துவிடவும் ஆணையிடப்பட்டனர். தனிப்பட்ட முறையிலும் இவர்கள் படையேந்திச் செல்லக் கூடாதெனவும் கட்டாயப்படுத்தப் பட்டனர். படேல்கள் (மணியக்காரர்) ஊருக்குள் படைக்கருவிகள் உருவாக்குபவர் களையும், படைக்கருவிகள் வைத்திருப்போரையும் பற்றிய செய்திகளை அரசுக்குத் தெரிவிக்கக் கட்டளையிட்டனர். எல்லைகளிலும், புரட்சி தோன்றலாமென ஐயுற்ற இடங்களிலும் ஆங்கிலப்படைகள் நிறுத்தப்பட்டன. இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டதால் நாட்டில் அமைதியேற்பட்டது. பொதுமக்களின் உயிரும், உடைமைகளும் பாதுகாக்கப்பட்டன. பாளையக்காரர்கள் பல் பிடுங்கியப் பாம்பு போலாயினர். 5. விடுதலைப் புரட்சி கி.பி. 1800-1801) கி.பி. 1800-ல் தமிழகத்தில் வெள்ளையரை வெளியேற்றும் மாபெரும் விடுதலைப் புரட்சியொன்று தோன்றியது. கட்டபொம்ம னின் வீழ்ச்சிக்குப் பின் ஆங்கிலர்கள் மேற்கண்ட அடக்கு முறை களைக் கையாண்டு தமிழரைஒடுக்க முற்பட்டனர். பாளையங்கோட் டைச் சிறையில் கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரையும், அவ னுடைய உறவினர் பதினெழ்வரும் மற்றும் பலரும் வதைக்கப்பட்டு தமிழ்நாட்டுப் பாளையப்பட்டு முறையும் விடுதலைப்போர்களும் வந்தனர். இவர்களை மீட்கவும், வெள்ளையரை வெளியேற்றவும் ஒரு புரட்சிப்படை திரட்டப்பட்டது. சிவகங்கை மன்னன் மருது பாண்டியனும், திண்டுக்கல் அரசர் கோபால நாயக்கரும், மலபார் மன்னர் கேரளவர்ம கிருட்டிணாப்ப நாயக்கரும், மைசூர் தூந்தாசியும் கமுக்க மாய் இணைந்து ஒரு சதித்திட்டம் தீட்டினர். அதன்படி கி.பி. 1800 -ல் கோயம்புத்தூரில் திடிரென ஒரு புரட்சி கிளம்பியது. ஆனால், வெற்றி பெறவில்லை. இதே போன்ற கிளர்ச்சிகள் மதுரையிலும், இராமநாதபுரத்திலும் தோன்றித் தோற்றன. 1801ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஊமைத்துரையும் பிறரும் பாளையங்கோடைச் சிறையில் இருந்து தப்பினர். உமைத்துரையின் சூழ்ச்சியால் புரட்சி வீரர்கள் காவடி தூக்குபவர்களாக நடித்து மற்றவர்களையும் சிறை யில் இருந்து விடுவித்தனர். ஒன்றிணைந்த புரட்சி வீரர்கள் பாஞ்சாலங் குறிச்சியை மீட்டனர். சிவத்தையாவை அதனையாளும்படி அமர்த்தி னர். இதனையறிந்த மற்றப் பாளையக்காரர்களும் ஆங்கிலவாட்சி யைப் புறக்கணித்துத் தனித்தாள முற்பட்டனர். இச்சமயத்தில் மருது பாண்டியனால் அனுப்பப்பட்ட 30,000 வீரர்கள் திருநெல்வேலியை அடைந்தனர். பாஞ்சாலங்குறிச்சி திருவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, ஆறுமுகனேரி முதலிய இடங்கள் புரட்சிக்காரரிடம் வீழ்ந்தன. தூத்துக்குடி கைப்பற்றப்பட்டது. 1799-ல் வெள்ளையரின் வேட்டெஃகக் (பீரங்கி குண்டுகளுக் கிரையாகித் தரைமட்டமான பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை ஐந்தே நாள்களில் புரட்சி வீரர்களால் பொலிவுடன் எழுந்து நின்றது. தளபதி மெக்காலே என்பவன் தலைமையில் வந்த ஆங்கிலப்படைகள் இக் கோட்டையைச் சூழ்ந்து பெருவேட்டெஃக மழை பொழிந்தன. ஆனால், ஒரு திங்களுக்குப் பின்னர்தான் அதனை ஆங்கிலர் கைப்பற்றினர். பின்னர், இராமநாத புரம், மதுரை முதலிய பகுதிகளிலும் புரட்சி பரவியது. மருதுபாண்டி யரும், முத்துக் கருப்பத்தேவரும் தலைமையேற்றனர். தொண்டித் துறை முகத்தின் மூலம் ஈழத்தில் இருந்து கலங்களின் மூலம் வந்த படைக் கருவிகளும், உணவுப் பொருள்களும் புரட்சிக்காரருக்குச் சென்றன. மதுரையின் மேற்குப் பகுதிகள் இவர்களால் கைப்பற்றப் பட்டது. மருது பாண்டியன் மகன் செவத் தம்பி படைகளைத் திரட்டித் தஞ்சை மீது பாய்ந்தான். பட்டுக் கோட்டை அறந்தாங்கி, அடியார்குடி முதலியன அவன் வசமாயின. இவ்வாறு பரவிய புரட்சியை ஆங்கிலர்கள் அடக்கி ஒடுக்கினர். புரட்சிக்காரரின் தளபதி மருதுபாண்டியனும், அவனுடைய தம்பி வெள்ளை மருதுவும் தூக்கிலிடப்பட்டனர். இவர் களைப் போலவே மற்ற யாவரும் தூக்கிலிடப்பட்டனர். பலர் கைதிகளாய் 'அட்மைரல் நெல்சன்' என்ற கப்பலில் ஏற்றப்பட்டுத் தூத்துக்குடியில் இருந்து பினாங்குக்கு அனுப்பப்பட்டனர், கைகளில் பூட்டிய இரும்பு விலங்கு ளுடன் 78 நாள்கள் கப்பலில் படாத கொடுமைகளுக்குள்ளாக்கிக் கொண்டுசெல்லப்பட்ட விடுதலை வீரர்கள் வழியிலேயே இறந்தனர். பினாங்கில் கி.பி. 1802-ல் நடுக்காட்டில் விடப்பட்ட இந்த எழுபது பேரும் என்ன ஆயினரோ! 6. பாளையக்காரர் முறை ஒழிப்பு கி.பி. 1801 டிசம்பரில் சென்னை ஆளுநர் எட்வர்டு கிளைவு பாளையக்காரர் முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து ஆணை பிறப்பித் தான், பாளையக்காரர்கள் சமீன்தார்கள் சாகீர்தார்கள் என்ற முறை யில் அறியப்பட்டனர். இவர்களின் உயிரும் உடைமைகளும் காப்பாற்றப்பட்டன. இவர்கள் வரிகளைத் தண்டல் செய்து அரசுக்கு அனுப்ப அனுமதிக்கப்பட்டனர். இதனால் ஆங்கில அரசின் மீது பழியின்றிப் பழைய பாளையக்காரர்கள் ஜமீன்தார் என்ற புதிய பெயரில் காப்பாற்றப்பட்டதோடு நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரிமுறையும், சட்டதிட்டங்களும் ஏற்படுத்தப்பட்டன. இராமகிரி, இராமநாதபுரம் முதலிய இடங்களைப் பழைய சிற்றரசர் வழியினரையே ஆளும்படி ஆங்கிலக் குழுவார் அமர்த் தினர். பாஞ்சாலங்குறிச்சியும், வேறு சில பாளையங்களும் ஆங்கில ரின் நேர்முக ஆட்சியில் வந்தன. பாஞ்சாலங்குறிச்சி என்ற பெயர் ரையே எல்லா ஆவணங்களில் இருந்தும் நீக்கியதோடு அதன் கோட்டையில் இருந்த இடத்தையும் உழுது பயிரிடச் செய்தனர். வணிகக் குழுக் காவல் நிலையங்கள் பல நாடு முழுவதும் ஏற்படுத் தப்பட்டன. ஆங்கில நயன்மையர் (நீதிபதிகள் அமர்த்தப்பட்டனர். பாளையக்காராரின் கோட்டைகள் யாவும் இடித்து நிரவப்பட்டன, நெடும்பாதைகள் (படைப் பாதைகள் பல போடப்பட்டன. அஞ்சற் போக்குவரத்து ஏற்பட்டது. பாளையப்பட்டு முறை ஒழிந்து சமீன்தாரி முறை தமிழகத்தில் தோன்றியது. அ) கி.பி. 18 ஆம் நூற்றாண்டில் தோன்றிய சமய, பண் பாட்டு மறுமலர்ச்சி இயக்கங்கள் 1. பிரமசமாசம் 2. பிரார்த்தனை சமாசம் 3. ஆரிய சமாசம் 5. இராம கிருட்டிணர் மடங்கள் 6. இரவீந்திரநாத் தாகூர் ஆ) கி. பி. 19 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் தோன்றிய, மறு மலர்ச்சிக் கவிஞர்கள் 1. இராமலிங்க அடிகளார் 2. மாயூரம் வேதநாயகம் பிள்ளை 3. தாயுமான சுவாமிகள் 4. சுப்பிரமணிய பாரதியார். இ) இசுலாமியரின் மறுமலர்ச்சி ஈ) 1. சீக்கியர் 2. பார்சிகள் 3. இந்தியக் கிறித்தவர் 4. தந்தை பெரியாரின் சமுதாய இயக்கங்கள் 1. பிரம சமாசம் முன்னுரை கி.பி. 16ஆம் நூற்றாண்டிலும், அதற்கு முன்னும் இந்தியாவில் இறைநெறி இயக்கங்கள் பல தோன்றி, இந்தியரை, குறிப்பாக இந்துக்களைத் தங்களின் தாயக இறைநெறியைப் பின்பற்றச் செய்தன. இவற்றிற்கு மூலகாரணமாய் நின்றவை முகமதியர் ஆட்சிக் கூறுகளும், முகமதிய சமயத்தின் தலைவிரிக்கோலமும், மகமதிய மன்னர்களின் சமய வெறியுமேயாம், மகமதியாரின் ஆட்சிக்குப் பின் ஏற்பட்ட ஆங்கில ஆட்சியாலும் இந்தியரிடையே பல கேடுகள் காணப்பட்டன. இந்தியர் ஒன்றை விட்டு ஒன்றைப் பற்றி இந்தியப் பண்பாட்டில் ஒரு காலும் மேனாட்டு நாகரிகத்தில் மற்றொரு காலும் ஊன்றித் தத்தளித்தனர். அரசாங்கப் பணியாட்கள், கிறித்தவராக மாறிய இந்துக்கள் முதலியோர் தங்களை இந்தியர் என்றும், இந்து சமூகத்தில் தோன்றியவர் என்றுங்கூட சுகூறிக் கொள்ள மறுத்தனர். நாடு மட்டும் அடிமை இருளில் மூழ்கிக் கிடக்க வில்லை. நாட்டுப் பண் பாடும் அடிமை இருளில் அந்நிய நாகரிக மோகத்தில் மூழ்கி கிடந்தது. இவ்விருளைப் போக்கும் ஒளியாக இம்மண்ணில் தோன்றினார் எம்மான் காந்தி என்று காலஞ்சென்ற பண்டித சவகர்லால் நேரு கூறுவதில் இருந்து கி.பி. 19 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் நிலவிய சமயப் பண்பாட்டு நிலைமைகளை ஒருவாறு யூகித்தறியலாம். இத்தகைய இருண்ட காலத்தில்தான் பல மறுமலர்ச்சித் தந்தையர்கள் தோன்றி, இந்தியரை விழிப்படையச் செய்தனர். மேனாட்டு அறிஞர்களும், கிறித்துசபைத் தொண்டர்களும், பாதிரிமார்களும் ஆட்சியாளர்களும் இந்தியரின்மொழிகளையும், மறைகளையும், இலக்கியங்களையும், பண்பாட்டையும், வாயள வில் போற்றினரேயொழிய அவை தடையின்றி மலரத் தடையாய் நின்றனர். இவர்கள் தங்களின் மேனாட்டுக் கல்வி முறைகளையும், பண்பாட்டையும், சமயத்தையும் பரப்ப அரசாங்க உதவியுடன் அரும்பாடுபட்டனர். இதனால் இந்து சமூக அடித்தளத்தில் ஏழ்மை, இல்லாமை, தாழ்மை, தீண்டாமைக் கொடுமை, குற்றேவல் முறைமை முதலியவற்றில் சிக்கியப் பல கோடி மக்கள் இவற்றின் கொடூர குணங்கள் ஓரளவு குறைந்து காணப்படும் கிறித்துவ சமயத்திற்கு மாறி, அச்சமயப் பண்பாட்டில் திளைக்கலாயினர். இவ்வாறு இந்தியர் பல கூறுகளாகப் பிரிந்து காணப்பட்டதால் அவர் களிடையே ஒரு மாற்றத்தையும் மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தி, அவர்களை ஒன்றுதிரட்டி விடுதலைப் போரில் ஈடுபடச் செய்வது அக்காலத்தில் குதிரைக் கொம்பாக இருந்தது. இந்துக்களிடையே எண்ணத் தொலையாச் சாதிப் பிரிவுகளும், சமய நீதிகளும், மாறுபாடுகளும், மூட நம்பிக்கைகளும், பழக்க வழக்கங்களும் காணப்பட்டமையால் ஒரே குடும்பத்தில் கூட வேறுபட்ட உள்ளங்களையே காணமுடிந்தது. தீண்டாமை, உடன் கட்டையேறுதல், பெண் குழந்தையைக் கொல்லுதல், பெண்கள் முகத்திரை அணிதல், தேவதாசி முறை, ஆடவர் கடல் கடக்காமை, இன்னபிற முடப் பழக்கங்கள் இந்து சமுகத்தை மூடிக் கிடந்தன. ஒரு நாடு விடுதலையடைய வேண்டுமானால் முதலில் அந்நாடு ஒளி யுள்ளதாக விளங்க வேண்டும். அந்நாட்டு மக்களிடையேயுள்ள வேற்றுமைகள் நீங்கி மனவலிமை பெற்றால்தான் நாடு ஒளிபெற முடியும். இத்தகைய ஒளிக்குத் தடையாக இருந்த மேற்கண்ட முடப் பழக்கங்களைக் களைந்தெறியும் பணிகளைப் பல மேன்மக்கள் மேற்கொண்டனர். 1. இராசா ராம் மோகன் ராய் (1714 - 1833) அம் மேன்மக்களில் தலைசிறந்தவர் இராசாராம் மோகன்ராய் ஆவார். இவரை 19ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் தோன்றிய மறுமலர்ச்சி இயக்கத்தின் தந்தையெனலாம். மோகன்ராய் தாம் ஒரு வைதிகப் பிராமணர் குடும்பத்தில் பிறந்தவராயிருந்தும் தமது பதினைந்தாம் வயதிலேயெ உருவ வழிபாடு. மறை நூல்களின் கருத்துக்கு மாறானது என்று (வங்க மொழியில் எழுதி, எல்லோரு டைய கவனத்தையும் கவர்ந்தார். தங்கள் குல மரபுக்கு மாறாகச் செயற்படும் மகனை, பெற்றோர் குடும்பத்தை விட்டே விலக்கினர். வீட்டினின்று வெளியேற்றப்பட்ட மோகன்ராய் இந்தியாவெனும் தம் அகன்ற இல்லம் முழுவதும் இரவுபகலாய் அலைந்தார். இந்து சமூகத்தை ஆய்வுக்கூடமாக்கி மற்ற சமயங்களின் கோட்பாடுகளை அறிய, சமயம் தோன்றிய இடங்களைப் பற்றியும், அவை காணும் மொழிகளையும் மோகன்ராய் கற்றார். இவ்வாறு இவர் பாரசீகம், அராபி, ஆங்கிலம், பிரெஞ்சு, இலத்தீன், எபிரேயம், கிரேக்கம் முதலிய மொழிகளைக் கற்று, அந்தந்த மொழிகள் உள்ளடக்கியுள்ள சமயங்களையும் கண்டறிந்தார். இந்தப் பரந்த அறிவு, அவரை விரிந்த மனத்தைப் பெற வைத்தது. இவரது திறமைப்புலம், ஆங்கிலப் புலமையும் ஆங்கிலக் கிழக்கிந்திய வணிகக் குழுவில் பணியாற்றும் வாய்ப்பினை அளித்தன. 1805-ல் இருந்து 1814 வரை வணிகக் குழுவில் பணியாற்றிய இவர், தாம் மட்டும் வாழ்ந்து இருப்பதை விரும்பாமல், இந்தியரையும் வாழ்விக்கக் கருதி, அப் பணியில் இருந்து நீங்கி, இந்து சமூகத்தின் களைகளைக் களைந்து இந்திய விடுதலைக்கு வழிகோலத் தம்மைச் சமூகப்பணியில் அர்ப்பணித்துக் கொண்டார். 1814-ல் கல்கத்தாவில் 'ஆன்மீக சபை' என்பதைனை ஏற் படுத்தி அதில் தம் கோட்பாடுகளை விளக்கினார். இச்சபை ஒரு மறு மலர்ச்சி முகாமாகத் திகழ்ந்து, இந்து சமயத்திலிருக்கும் பலியிடுதல், உருவ வழிபாடு. ஆராவார வழிபாடு. அவதாரக் கொள்கை, இனத்திற்கேற்ற சமய முறை முதலியவற்றை நீக்கி, ஒப்பற்ற ஒரே கடவுளை வணங்கும் ஆன்மீக பலத்தை வலியுறுத்தியது. எனவே, இது எந்தக் குறிப்பிட்ட சமயத்தையும் தழுவாமல் ஒரு சாந்தி நிலையமாயிற்று. 1. பிரம்ம சமாசம் இராசாராம் மோகன்ராய் 1814-ல் கல்கத்தாவில் நிறுவிய ஆன்மீக சபை 1828-ல் பிரம சமாசமாக வளர்ந்தது தூய உள்ளமும், தூய வாழ்வும் உய்யும் வழி என்பதே பிரம சமாசத்தின் அடிப் படைத் தத்துவமாகும். பிரம்ம சமாசம் குறிப்பிட்ட ஒரு சமயத் தையோ, மறைநூலையோ, ஞானியையோ, அவதாரத்தையோ மூலப்பொருளாய்க் கொண்டு எழுந்ததன்று. பிரம சமாசம், பல கடவுள்கள், உருவ வழிபாடுகள், சாதிப்பிரிவுகள், வர்ணாசிரம முறைகள், கர்மவதி, மறுபிறப்பு முதலியவற்றை மறுக்கிறது, மோகன் ராய் ஏற்படுத்திய பிரம் சமாசத்தில் ஆன்மீக சாந்தியே முதலிடம் பெறுகிறது. சமாசக் கட்டடத்தினுள் உருவங்களும் சிலை களும் வைக்கக் கூடாதென மோகன்ராய் கூறினார். பிரமசமாசத்தின் இத்தகைய கோட்பாடுகள் பல உபநிடத்துக்களிலும், பிரம்ம சூத்திரங் களிலும் காணப்பட்டாலும் அவை கூறும் மற்ற கொள்கைகளைத் தாம் ஏற்பவனல்லன் என்று மோகன்ராய் கூறினார். இந்துக்கள் எனப்படும் ஒரு பெரிய குடும்பத்தில் சாதியால், சமய உட்பிரிவால் வேறுபட்டு நிற்கும்படிக் கூறும் மக்கள் கடவுளின் அவதாரமானா லும், கூறும் மறைகள் கடவுளின் திருவாக்காக இருந்தாலும் அவற்றை இவர் மறுத்து வெறுத்தார். ஆன்மீக பலம் பெறும் எவரும் இறை நெறியில் நிற்பவர் இந்நெறியில் உயர்வு தாழ்வு இல்லை. இதுவே நம்மை இணைத்து, இந்தியாவை விடுதலை யடையச் செய்யும் தாரக மந்திரமாகும் என்றார் மோகன்ராய். உடன்கட்டை ஏறுதல் கணவன் இறந்ததும் மனைவி கணவனுடன் தீப்பாய்ந்து மாளும் வழக்கம் இந்தியாவில் பன்னெடுங்காலந்தொட்டே இருந்து வந்தது. இவ்வாறு உடன்கட்டை ஏறும்படி இந்து சமயத்தின் எந்த மறையும், சமயவாதியும் கூறியதில்லை . ஆயினும், இப்பழக்கம் எப்படியோ இந்தியரிடையே நிலைத்து இருந்தது. இதனை இந்தி யாவை ஆண்ட ஆப்கானிய சுல்தான்களும், முகலாய மன்னர்களும், போர்த்துக்கீசிய ஆளுநர் அல்புகர்க்கும், மற்றவர்களும் தடுக்க முற்பட்டுத் தோற்றனர். இதில் வெற்றியைக் கண்டவர் ஆங்கிலத் தலைமை ஆளுநர் வில்லியம் பெண்டிங் (1878 - 1835) ஆவார். அவருக்கு உறுதுணையாக நின்று இதனை எதிர்த்து உடன்கட்டை 213 ஏறும் வழக்கத்தை ஒழிக்க கூடாதெனப் போராடிய இந்துக்களைக் சாடியவர் மோகன்ராய் ஆகியோர், மோகன்ராய் உடன்கட்டை ஏறுதலை எதிர்த்து 1818-ல் ஒரு தீவிர இயக்கத்தைத் தோற்றுவித்தார். இது சாத்திரங்களுக்கும், மறைகளுக்கும் மாறானதென்றும், மனைவி இறந்தால் கணவன் உடன்கட்டை ஏறாமலிருக்கும்போது மனைவி மட்டும் உடன்கட்டை ஏறுவது என்ன நியதி என்று கேட்டுத் தத்து வார்த்த ரீதியில் போராடினார். மனுநீதி, ஸ்மிருதிகள் ஆகிய வற்றில் உடன்கட்டை ஏறுதலை விருப்ப முறையாகக் காண்கிறோம். ஆனால் பால்மணம் மாறாத சின்னஞ் சிறுமிகளையும் கண்மூடித் தனமாய் மனைவிகளாக்கிக் கணவன் மாண்டதும் அவனுடன் தீயில் தூக்கிப் போட்டுக் கொல்லுவது மனுநீதிக்கும், ஸ்மிருதிகளுக்கும் மாறானது என்று மோகன்ராய் விளக்கினார். இவ்வாறு மோகன்ராய் சதிக்கு எதிராகத் தம் கருத்தை ஏற்பவர்களை ஒன்று திரட்டிக் கொண் டிருக்கும்போதே 1829 -ல் வில்லியம் பெண்டிங்க் பிரபுவால் சதித் திட்டம் சட்ட விரோத மாக்கப்பட்டது. எங்களது சமய, சமுக வழக்கங்களில் கைவைக்காதீர் எனக்கூறி எழுந்த எண்ணிலடங்கா இந்துக்கள் இச் சட்டத்தை எதிர்த்து இங்கிலாந்து பாராளுமன்றத்தில் முறையிட்டனர். அச்சமயத்தில் மோகன்ராய் தம் கட்சிக் காரர்களின் கையொப்பங்களுடன் அதே சபையில் சட்டத்தை ஆதரித்தும், அச் சட்டத்தைச் செயற்படுத்துமாறும் முறையிட்டார். சட்டம் நிறை வேற்றப்பட்டு உடன்கட்டை ஏறுபவர்களும் அதற்கு உடந்தையாய் இருப்பவர்களும் கொலைக்குற்றம் புரிந்தவர்களுக்கான தண்டனை யைப் பெறும்படிச் செய்தது. சீற்றமடைந்த சிலர் மோகன்ராயைக் கொல்லவும் பல முறை முயன்றனர். பெண் குழந்தைக் கொலை பெண் குழந்தைகளை அவை பிறந்தவுடன் கொன்றுவிடும் வழக்கம் இந்தியாவில், இராசபுத்திரர்களிடம் இருந்த, இவ்வழக்கத் திற்கு எவ்விதச் சாத்திரச் சான்றுகளும் துணை நிற்கவில்லை. இராச புத்திரர்கள் குறிப்பிட்ட தங்கள் குலப் பிரிவுக்குள்ளேயே உள்ள மற்றப்பிரிவுகட்குள் மணம் செய்விக்கும் அல்லது செய்துகொள்ளும் பழக்க மின்மையாலுமே தங்களது குலமரபு இரத்தத்தைத் தூய்மை யுடையதாய் வைத்துக் கொள்ளப் பெண்களைப் பிறந்தவுடன் கொன்றனர் என்று கர்னல்டோட் கூறுகிறார். மோகன்ராய் போன்ற வர்களின் சீர்திருத்தக் கிளர்ச்சிகளால் பெண் குழந்தைக் கொலை தடுப்புச் சட்டம் 1795 -ல் வங்காளத்தில் கொண்டுவரப்பட்டது: இதற்குப் பின்னும் மறைமுகமாகப் பெண் குழந்தைகளை நஞ்சிட்டுக் கொல்லுதல், பட்டினி போட்டுக் கொல்லுதல் முதலியன நடந்தன. மோகன்ராய் போன்றோரின் ஒத்துழைப்பால் அரசாங்கம் இதை அறவே ஒழித்துப் பெண் குழந்தைகளைக் காப்பாற்றியது. தமிழக சுமூகப் பண்பாட்டு வரலாறு பலதார மணம், விதவை மணம், சிறுவர்கள் மணம் ஓர் ஆண் பல பெண்களை மணத்தலும், சிறுமிகளுக்கு மண வினை செய்து வைத்தலும், விதவைகளுக்கு மறுமணம் செய்யாமை யும் தொன்றுதொட்டே இந்து சமூகத்தில் காணப்பட்ட குறைகளாம். இம் முறைகளையும் இராசாராம் மோகன்ராய் கடுமையாக எதிர்க்கலா னார். எந்தச் சாத்திரத்தையும், சம்பிரதாயத்தையும், மறையையும், மறை வல்லுநரையும் இப் பழக்கங்களுக்கு அடிப்படைச் சான்று களாகக் காட்டி இவை கையாளப்பட வேண்டியவை என்றனரோ அவற்றையே இவர் தம் மறுப்புச் சான்றுகளுக்குப் பயன்படுத்தி னார். மனுவின் சட்டங்களும், நாரதர், யஜ்ஞவல்க்கியர், விசுணு, வியாசர், பிரகசுபதி, காத்யாயனர் முதலியோரும் பலதார மணத்திற்கு ஆதரவு காட்டினர் என்று பலர் அவரிடம் வாதித்தனர். ஆனால், முதல் மனைவி பிள்ளைப் பேற்றிற்கோ இல்லறப் பண்புக்கோ தகுதியில்லையென்றால்தான் அவர்கள் வேறொரு மணம் செய்து கொள்ளலாமென்றனர் என்றார். மோகன்ராய், ஆண் பல பெண்களை மணக்கலாமென்றால், அது பெண்ணுக்கும் உரிய உரிமை என்று கொண்டால் சமுகம் தலைகீழாக அல்லவா காணப் படும்? ஆணுக்கொரு நீதியும், பெண்ணுக்கொரு நீதியும் கூறுவது மறையேயாயினும், மகேசனேயாயினும் மனித குலத்திற் காகாதவை என்றார் மோகன்ராய், ஒரு வயிற்றில் பிறக்கும் ஆணுக்கும் பெண் ணுக்கும் சொத்து சுகம் வாழ்வு முறை, பண்பாடு முதலிய யாவற் றிலும் சமஉரிமை உண்டு என்பதனை வலியுறுத்தி, இவற்றிற்குச் சான்றாகப் பல சாத்திரங்களை மேற்கோள் காட்டி 183 - ல் ஒரு நூலை வெளியிட்டார். மனைவி இறந்ததும் கணவன் மறுதாரம் கொள்வதை அனுமதிக்கும் சமுதாயமும், சாத்திரங்களும் கணவன் இறந்ததும் மனைவிக்கு மட்டும் ஏன் மறுமணத்தை அனுமதிக்கவில்லை, இதில் மனிதாபிமானம் இருக்கிறதா என்று கேட்டு, விதவைகளின் மறுமணத்திற்கு மோகன்ராய் வழிகோலினார். கணவனை உணர்ந்து, ஆய்ந்து மனப்பக்குவம் பெற்றபின்தான் பெண்களுக்கு மணம் செய்விக்க வேண்டுமெனக் கூறி, இளமை மணத்தையும் சாடினார். இத்தகைய இளமை மணமும், பலதார மணமுமே உடன்கட்டை யேற்றும் கொடிய பழக்கத்திற்கு இந்துக்களை இழுத்துச் சென்றன என்று மோகன்ராய் சுட்டிக் காட்டினார். மோகன்ராயின் நாட்டுப்பற்று உருவ வழிபாட்டையும், மறுபிறப்பையும், கர்ம விதியையும், சாதி வேற்றுமையும், அவதாரங்களையும் கொண்ட மறைகளையும், சமூகத்தையும் சாடிய மோகன்ராய்க்கு நாட்டுப் பற்றே கிடையாது என்றும். ஆங்கிலேயரின் சட்டங்களுக்கும், மொழிக்கும், பண்பாட்டிற் இந்திய மறுமலர்ச்சி இயக்கங்களும் தமிழ்நாட்டு மாமணர்ச்சி இயக்கங்களும் கும் அடிமைப்பட்டவர் என்றும் இவரைப் பலரும் குறை கூறினர். ஆனால் மோகன்ராய் பழுதுபடாத இந்தியப் பண்பாட்டிலும், நாட்டுப்பற்றிலும் அழுத்தமான பற்றுள்ளவர். சமூகச் சீர்திருத்தமே ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அடிப்படை ஆகும். இதனால்தான் அவர் சமூகத்தில் வேறுபாடுகளைக் கற்பிக்கும் சக்தியை எதிர்த்தார். ஆமெர்ச்டு பிரபு (1823 - 1828 )க்கு இந்தியாவின் பழம்பெரும் பண் பாடுகளையும், இந்தியரின் அறிவுத்திறனையும் எடுத்துக் கூறி யுள்ளார். ஆங்கில மொழியும் ஆங்கிலேயரும் இந்திய மொழிகளுக் கும், இந்தியருக்கும் முறையே பல விதத்தில் கடமைப்பட்டவர்கள் என்றும், இந்திய மொழிகளுக்கும் இந்தியருக்கும் வாய்ப்பும் வசதி களும் கொடுத்தால் ஆங்கிலத்தையும், ஆங்கிலேயரையும் விடச் சிறந்து காண்பர் என்றும் கூறினார். விஞ்ஞானத்தில் மேனாடு சிறந்து காணப்படுகிறதென்றாலும் அவ்விஞ்ஞானக் கல்வியை இந்தியருக்கு அளித்தல் தரிசு நிலத்தின் பயிர் போல் அதில் தலை சிறந்து நிற்பர் என்ற மோகன்ராய் இந்தியரையும் இந்தியாவையும் மேம்படுத்திக் கூறினார். இந்தியருக்குத் தன்னம்பிக்கையும் தன்மானமும், தாய்மொழிப் பற்றும் நாட்டுப்பற்றும் ஏற்பட வேண்டுமென எண்ணிய மோகன் ராய் சம்வத் கௌமுதி [Samvad Kaumuti) என்னும் வங்கமொழி இதழொன்றை ஆரம்பித்தார். இது இந்தியப் பழங்கால இதழ்களி லொன்றாம். 1823-ல் ஆங்கிலேயரால் கொண்டு வரப்பட்ட இதழ் ஒழுங்கு முறைகளை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் வாதாடினார். இவர் கேட்ட இதழ் உரிமைகளை 1835-ல் ஆங்கில அரசாங்கம் ஏற்றுக்கொண்டு பத்திரிகைகளின் மீதிருந்த தடைகளை நீக்கியது. மோகன்ராய் 1831 -ல் இருந்து 1833வரை பிரிசுடலில் (Bristal) தானிறக்கும் வரை இங்கிலாந்தில் தங்கி, இந்தியாவில் ஆங்கில ஆட்சி யைத் திருத்தி அமைக்கும்படிக் கூறினார். இதனைத் தம் சொற்பொழிவு கள் மூலமும் பிரசாரங்கள் மூலமும், புத்தகங்களிலும் வெளியிட்டார். இந்திய அரசியலில் சீர்திருத்தங்களைச் செய்வதற்காக இங்கிலாந்து நாட்டுப் பொதுமக்கள் மன்றம் ஒரு தேர்வு உட்குழுவை நியமித்தது. அக்குழுவிடம் மோகன்ராய் தமது விரிந்த சீர்திருத்தங் களை விவரித்து இந்திய அரசியல் முறை எந்தெந்தத் துறைகளில் எந்தெந்த வகையில் சீர்திருத்தப்பட வேண்டுமென்பதனைச் சுட்டிக் காட்டினார். இவருடைய அரசியல் அறிவைக் கண்ட ஆங்கிலே யர்கள் பேகன், பென்தாம், பிளாக்ஸ்டன், மான்ட் டெஸ்கிபு முதலியவர்களை விட மோகன்ராய் சிறந்தவர் என்றனர், எம்மதமும் சம்மதம் மோகன் ராய் எல்லா மதத்திலுமுள்ள மூடக்கருத்துக்களை வெறுத்தாரே ஒழிய மதங்களையோ, கடவுளையோ வெறுக்கவோ மறுக்கவோ இல்லை. இவர் எல்லா மதத்தையும் ஊன்றிக் கற்று உண்மையைத் தெளிந்தவர். 'ஏசுநாதரின் கட்டளைகள்' என்னும் நூலை 1820 - ல் இவர் வெளியிட்டார். இதில் இவர் ஏசுநாதரின் ஒழுக்கங்களையும், அன்புருவான வாழ்க்கையையும் எளிய, இனிய, யாவருக்கும் ஏற்ற கொள்கைகளையும் போற்றுகிறார். ஆனால் ஏசுநாதர் இறைவனின் மகனார் என்பதையும், இறைவனால் அனுப்பப்பட்ட அவதார புருடர் (அ) தூதன் என்பதனையும் மறுக்கிறார். புனிதத் தந்தை, புனித ஆவி, புனித குமாரன் ஆகிய மும்மைக் கொள்கையினையும், நியாயத் தீர்ப்பு நாளையும் மறுக்கிறார். முகமதிய மதத்திலுள்ள ஒரே கடவுள், கொள்கையைப் போற்றுகிறார். இந்து மதத்திலுள்ள உருவ வழிபாட்டு முறைகளை யும், கர்ம விதி, மறுபிறப்பு, உயர்வு, தாழ்வு ஆகியவற்றையும் வெறுக்கிறார் ஆனால், அதனிடமுள்ள ஆத்ம சாந்தியைப் போற்று கிறார். இதனால் கிறித்துவ சமயத்தின் ஒரு பகுதியினரான தனியொ ருமைக் கோட்பாட்டாளர்கள் ( Unnitarians) தம் சமயத்தவர் என்றும் முகமதியர் முஸ்லீம் என்றும் இந்துக்கள் ஒரு வேதாந்தி என்றும் மோகன்ராயைப் போற்றுகின்றனர். ஆயினும் மோகன்ராய் ஒரு தீர்க்கதரிசியோ, அவதார புருடரோ வேதாந்தியோ அல்லர். இந்து சமயத்தைச் சீர்திருத்திய செம்மல் என்றும், இந்திய மறுமலர்ச்சியின் தந்தை என்றும், இந்திய தேசியத்தின் முன்னோடி என்றும் இவரை ரவீந்திரநாத் தாகூர் போற்றுகிறார். இவர் உலகிலேயே நவீன முறையில் முதன் முதலாக சமய ஒப்புநோக்கு உணர்ச்சியினை உண்டாக்கப் பாடுபட்டவர் என்று மோனியர் வில்லியம் கூறுகிறார். உலக மனிதாபிமானத்தை ஆத்மீகம் அரசியல் ஆகியவற்றுடன் இணைத்து ஒரு பரந்த மனித மதத்தைக் கண்டவர் மோகன்ராய் என்று சீல் (Stal) என்பார் குறிப்பிடுகின்றார். இவ்வாறு மோகன்ராய் கி.பி. 17ஆம் நூற்றாண்டின் இந்திய வரலாற்றில் சமூகம், சமயம், அரசியல் ஆகிய துறைகளின் மறு மலர்ச்சித் தந்தையாக விளங்கினார். இந்தியர் படிப்படியாக வளர்ந்து ஆட்சியில் இடம்பெற்று அரசியலைக் கைப்பற்ற வேண்டுமென்பது இவர் நோக்கம். எனவேதான் இவரை இந்திய தேசத்தின் தந்தை என்று எல்லோரும் போற்றுகின்றனர். 2. பண்டித ஈசுவர சந்திரவித்தியாசாகர் மோகன்ராயின்சீர்திருத்தங்களில் ஒன்றான விதவை மணத்தைச் செயல்படுத்திச் சிறப்படையச் செய்தவர் வித்தியாசாகர் ஆவார். பாபு சியாம் சந்திரதாஸ் என்பவரின் மகள் திடீரென விதவை யானாள். அவர் இந்தியாவிலுள்ள மறைநூல் வல்லுநர்களுக் கெல்லாம் கீழ்க்கண்ட வினாக்களை அனுப்பினார். கணவனையே கண்டறியாத என் மகள் வயதுக்கு வருமுன்பே விதவையாகி விட்டாள். அவளை உடன் கட்டை ஏற்றலாமா அல்லது கைம்மை நோன்பு நோற்க வைக்கலாமா? எந்தச் சாத்திரத்தில் சூத்திர விதவை உடன்கட்டையேறவேண்டாமெனக் கூறப்பட்டுள்ளது? சாத்திரங்கள் பிராமணருக்கும், சத்திரியருக்கும் மட்டுமே இதனை வலியுறுத்துகின் றன. அவ்வாறாயின் சூத்திர விதவைக்கு இது பொருந்துமா? இவ் வினாக்களை ஆய்ந்த பண்டிதர்கள் விதவை மணத்திற்கு ஆதரவு அளிக்க முன்வந்தனர். இச்சமயத்தில் விதவை மணத்தை விரிவு படுத்த ஒரு தீவிர இயக்கத்தைத் தோற்றுவித்தவர் சுவர் சந்திர வித்தியா சாகர் ஆவார். இவருடைய நுண்ணறிவும், சாத்திர ஞானமும், நாவன் மையும் இக்கோட்பாட்டை யாவரும் ஏற்கும்படி செய்தன. பல இலட்சக் கணக்கானவர்கள் விதவை மணத்திற்கு ஆதரவு அளித் தனர். அவர்களின் கையொப்பங்களைப் பெற்று வித்தியாசாகர் அரசாங்கத்திற்கு அனுப்பி விதவை மணத்தைச் சட்டம் செல்லுபடி யாகுமாறு ஒரு சட்டமியற்றக் கூறினார். இதன் பலனாக 1856-ல் விதவை மணச்சட்டம் அமுலுக்கு வந்தது. விதவைகளின் மணம் சட்டப்படி செல்லுபடி யானதோடு மறுமணம் புரிந்து பெண்ணுக்கு எல்லா உரிமைகளும் வழங்கப்பட்டன. இச்சட்டம் வந்ததற்குப் பின்னர் பல விதவைகளுக்கு மறுவாழ்வு கிடைத்தது. பிரம்ம சமாசமும் ஆரிய சமாசமும் இதற்கு ஆதரவு காட்டின. கேசவ சந்திர சென் என்பவர் முயற்சியால் 1872-ல் இந்தியத் திருமணச் சட்டம் நிறைவேறியது. இச்சட்டம் இளமை மணம், பலதார மணம் ஆகிய வற்றைச் சட்ட விரோத மாக்கியது. விதவை மணத்திற்கும் கலப்பு மணத்திற்கும் ஆதரவும், உரிமைகளும் கொடுக்கப்பட்டன. 1872 -ல் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி வயது வந்தவர்களுக்கு அவர்களின் அனுமதி பெற்றே திருமணம் செய்ய வேண்டும் என்றா யிற்று. மணமகளுக்குப் பத்து வயது நிரம்பும் முன்னும் மணமகனுக் குப் பன்னிரெண்டு வயது நிரம்பும் முன்னும் திருமணமாதலை இச்சட்டம் தடுத்தது. 1901-ல் பரோடா அரசர் குழந்தை மணத் தடுப்புச் சட்டம் என்பதனைக் கொண்டுவந்து பன்னிரண்டு வயதிற்கு உட்பட்ட பெண்ணுக்கும், பதினாறு வயதிற்கு உட்பட்ட ஆணுக்கும் திருமணம் ஆவதைத் தடுத்தார். 1930-ல் இந்திய அரசாங்கம் புகழ் வாய்ந்த சாரதாச் சட்டத்தைக் கொண்டு வந்து பெண்ணுக்கும் ஆணுக்கும் திருமண வயது முறையே பதினான்கு, பதினெட்டு என நிர்ணயித்தது. இவ்வாறு வித்தியாசாகர் ஆரம்பித்த விதவை மறுமண இயக்கம் படிப்படியாக வலுப்பெற்று, பல சட்டங்களாக வளர்ந்தது. இந்தியாவெங்கணும் இருந்த பல அறிஞர்களும் இதற்கு ஆதரவு காட்டினர். பண்டித கார்வே என்பார் பூனாவில் விதவைக்கென ஓர் இல்லத்தையும் அமைத்தார் இதற்குப் பின் அகில இந்தியப் பெண்கள் மாநாடுகள் பல நடைபெற்றன. பெண்களின் உரிமை களைப் பாதுகாக்கப் பல சட்டங்கள் படிப்படியாக வந்தன. இவர் களுக்கெனத் தனி மருத்துவக் கல்லூரிகளும், மற்ற எல்லாத் துறை - களிலும் சமத்துவமும் ஏற்பட்டன. டஃப்ரின் சீமாட்டியார் நீதியின் முலம் பல பெண்கள் மருத்துவர்களாகவும், செவிலித்தாய்களாகவும் பயிற்சி பெற்றனர். பெண்கள் முன்னேற்றத்தை இந்திய தேசிய காங். சு கட்சி தமது பணியின் முக்கியக் கூறாகக் கொண்டது. மகாத்மா காந்தியடிகளும், பண்டித நேருவும் மகளிர் முன்னேற்றத் திற்கு அரும்பாடுபட்டனர். இவ்வாறு, மூடப்பழக்கத்தில் முடங்கிக் கிடந்த பெண்ணும் கிற்குச் சதியில் இருந்தும், கைம்மையில் இருந்தும், சக்களத்திக் கொடு மையில் இருந்தும், குழந்தைக் கொலையில் இருந்தும் விடுதலை பெறுமாறு செய்தவர்களில் இராஜாராம் மோகன்ராயையும், பண்டித் ஈசுவர் சந்திர வித்தியா சாகரையும் நாம் மறத்தல் இயலாது. 3. மகரிசி தேவேந்திர நாத் தாகூர் (18I7-1905) தேவேந்திரநாத் தாகூர். அறிஞர் துவாரக நாத் தாகூரின் அரிய மகனாவார். இவருக்குப் பதினெட்டு வயது நிரம்பிய பொழுது தம் வீட்டில் இறந்த தம் பாட்டியின் சவக்காட்சியை உள்ளுரச் சிந்தித்ததன் பலனாக உலக வாழ்வில் வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. இச்சமயத்தில் ஒரு வேத விற்பனரின் தொடர்பும் அவருக்குக் கிடைத்தது. அவருடைய தூண்டுதலால் தாகூர் வேதங்களை குறிப்பாக உபநிஷத்துக்களை ஊன்றிக் கற்கலானார். மோகன்ராயால் நிறுவப்பட்ட பிரம சமாசத்தில் பெரிதும் பங்கேற்றார். 'தத்துவ போதினிப் பத்திரிக்கை' என்னும் வெளியீட்டை வங்கமொழியில் நடத்தலானார். இதில் பிரம சமாசத்தின் கொள்கைகளைத் தொடர்ந்து எழுதி வந்தார். தத்துவ போதினிப் பாடசாலை ஒன்று ஏற்படுத்தி, அதில் பிரம் சமயத்தின் தத்துவங்களைப் பரப்பும் முறைகளில் பல தொண்டர்களுக்குப் பயிற்சியளித்தார். இங்கு நாள்தோறும் பிரம் பசனைகள் நடத்தப் பட்டன. இந்தப் பசனைகளில் மகா நிர்வாண, தந்திரத்தில் காணப்படும் தோத்திரப் பாடல்கள், கருத்துக்களைக் கொண்ட பாடல்கள் பாடப்பட்டன. இவ்வாறு தாகூரின் தலைமை யில் பிரம் சமரசம் வளர்ந்து பல ஆயிரக்கணக்கான மக்களின் மனதைக் கவர்ந்தது. தத்துவ போதினிப் பாடசாலையைச் சேர்ந்த நான்கு மாணவர் கள் காசி வேத பாடசாலைக்குச் சென்று மேற்படிப்பை முடித்துத் திரும்பினர். இவர்களின் விவாதங்களைக் கேட்டதும் வேதங்களும், உபழுத்துக்களும் ஆத்மீகப் பாதைக்கு வழிகாட்டிகள் அல்லவென்று தேவேந்திரநாத் தாகூர் அவற்றைத் தள்ளிவிட்டார். தமது ஆத்மீகச் சிந்தனைக்கேற்ப வேத பாடல்களையும், உப நிஷத்துக்களையும், கீதைகளையும் தொகுத்து 'பிரம தர்மம்' என்ற நூலாக வெளியிட்டார். இவ்வித் முற்போக்கான நிலையில் மேலும் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பிரமசமாசத்தில் சேர்ந்து இரவும் பகலும் பிரம் L' னைகளை நடத்தினர். 'தத்துவ போதினி சபை' என்ற நிலையமும் பிரம சமாசத்துடன் கலந்து விட்டது. 3. கேசவ சந்திரசென் தேவேந்திரநாத் தாகூரின் தலைமையில் சிறந்துவிளங்கிய பிரம் சமாசத்தில் சேர்ந்த பல இளைஞர்களில் தேசவ சந்திர சென் முக்கியமானவராவார். இவர் 1875-ல் சமாசத்தில் சேர்ந்ததும் தாகூர் இவரைத் தம் அரிய சீடராகக் கொண்டு விட்டார். சில காலத்திற்குள் குருவுக்கும் சீடருக்கும் பிளவு ஏற்பட்டதால் பிரம சமாசமும் இரண்டாகப் பிரிந்தது. பூணூல் அணிவது மனிதருக்குள் உயர்வு தாழ்வினைக் காட்டும் சின்னம் என்றும், இவற்றிற்கெல்லாம் மேலாகப் பாடுபடும் பிரமசமாச உறுப்பினர்கள் பூணூலை அணியக் கூடாது என்றும், பத்தொன்பதே வயது நிரம்பிய சீடர் கேசவ சந்திரசென் கூறினார், பகுத்தறிவாளரும், மகரிஷியும் வேதங்களில் குறை கண்டவருமான தேவேந்திரநாத் தாகூர் வயதான வைதீகப் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டுத் தம் கொள்கையை வலியுறுத்தித் தோற்றுவிட்டார். பிரம சமாசம் 1866 - ல் ஆதி பிரம் சமாசம் இந்திய பிரமசமாசம் என இரண்டாகப் பிரிந்தது. ஆதி பிரம்ம சமாசத்திற்குத் தேவேந்திரநாத் தாகூரும், இந்திய பிரம சமாசத்திற்கு கேசவ சந்திர சென்னும் தலைவர்களாயினர். தேவேந்திரநாத் தாம் பூணூலை அணியாவிட்டாலும், பூணூல் அணிவித்தல், உயநயனம் செய்வித்தல் முதலிய வேதச் சடங்கு களைத் தமது ஆதி பிரம்ம சமாசத்தினுள் கொண்டு வந்தார். இவர் தமது 88 ஆம் வயதில் இறக்கும்வரை தமது சீடரான கேசவ சந்திர சென்னுடன் அடிக்கடி சச்சரவிட்டுக்கொண்டே இருந்தார். அவர் இறப்புக்குப் பின் ஆதி பிரம சமாசத்தை அவருடைய உறவினர்கள் ஏற்று நடத்தி வந்தனர். இந்திய பிரம்ம சமாசத்தின் தலைவரானதும் கேசவ சந்திர சென் அதனை இந்திய மக்கள் எல்லோரும் போற்றும் வண்ணம் விரிவுபடுத் தினார். இந்து, கிறித்தவம், பௌத்தம், யூதம், இஸ்லாம், கன்பூசியம் முதலிய எல்லாச் சமயங்களிலும் உள்ள கருத்துக்களைத் தொகுத்து சுலோக சங்கரதர் என்னும் பாடல்களாக வெளியிட்டார். ஏசுகிறித்து, ஐரோப்பாவும் ஆசியாவும், பெரிய மகான்கள் முதலிய அவருடைய மெய்சிலிர்க்கும் சமயச் சொற்பொழிவுகள் சமரச நோக்குகளைக் கொண்டவையாம். ஏசுவின் தூய வாழ்வும், அன்பு வழிகளும் இவரைப் பெரிதும் கவர்ந்த போதிலும் ஏசுவைக் கடவுளின் அவதார மாகவும், கடவுளின் தூதராகவும் இவர் ஏற்றுக்கொள்ளவில்லை, 1878-ல் இந்திய பிரம சமாசத்திலும் பிளவு ஏற்பட்டது. கேசவ சந்திர சென் கிறித்துவின் போதனைகளில் திளைத்ததையும், தமது முன்னோர்களான சைதன்னியர் போன்றோரின் வைணவக் கொள்கைகளுக்கேற்ப பச்னை ஆரவாரங்களைச் சமாசத்தில் நிகழ்த்த ஆரம்பித்ததையும், பதினான்கு வயது நிறையாத. தம் மகளைப் பதினாறு வயது நிறையாத கூச்பீகார் மகாராசாவுக்குத் திருமணம் செய்ததையும் பலரும் எதிர்த்தனர். இதனால் இந்திய சமாசத்திலும் பிளவு ஏற்பட்டது. தம் தவறுகளைத் திருத்திக் கொண்டபின் கேசவசந்திரசென் தமது இந்திய பிரம சமாசத்திற்கு நவவிதான் என்று பெயர் மாற்றம் கொடுத்து, தமது செயல்களையும் மாற்றிக் கொண்டார். இதற்குப் பின்னர் இவருடைய சமய உணர்வு உலகப் பொதுச் சமய உணர்வாக மாறியது. கடவுள் என்னும் முடிவிடத் திற்கு இந்து, கிறித்தவம், இஸ்லாம் முதலிய எந்த வண்டியிலும் போகலாம் என்று கேசவ சந்திரசென் கூறி, உலகப் பொது உணர் வை ஒன்றிணைத்தார். ஏசு, நபி, புத்தர், சைதன்னியர் முதலிய நன் மக்கள் வாயிலாகத்தான் கடவுள் தம்மையடையும் வழியைக் கற்பித்தார் என்றும், வழிப் போக்கர்களாகிய நாம் இவர்களுக்குள் வேற்றுமையைக் கற்பித்தல் கூடாது என்றும் எடுத்துரைத்தனர். சுருங்கக்கூறின், கேசவ சந்திர சென்னின் சமயம் வைணவ உணர்ச்சியையும், கிறித்தவத்தின் உத்வேகத்தையும், வேதங்களின் மறை பலத்தையும் உட்கொண்டது. இவர் அக்பர், குரு நானக் முதலியோரைப் போல் சமய ஒற்றுமையையும், உடன்பிறந்தார் ஒற்றுமையையும் வளர்க்கப் பாடுபட்டார். இவரது அடிச்சுவடு பற்றியவரில் இராமகிருஷ்ண பரமஹம்சர் தலைசிறந்தவராவார். இவ்வாறு இராஜாராம் மோகன்ராயால் ஆரம்பிக்கப்பட்ட பிரம் சமாசம் பல கிளைகளாகப் பிரிந்து தளிர்விட்டுத் தழைத்தும் பண்டித சிச்சநாத் தத்துவபூஷண், நாகேந்திரநாத் சட்டர்சி, பண்டித சிவானந்த சாத்திரி முதலிய எண்ணிறந்த மேன் மக்களை நல்கியது. இதனால் குறுகிக் கிடந்த இந்து சமயம் மேல்நாட்டுக் கருத்துக்களில் கலந்தும். பிற சமயக் கருத்துக்களைத் தானேற்றும் விரிந்து பரந்தது. இன்று இந்தியாவின் பல்வேறு பாகங்களிலும் பிரம்ம சமாசத்தின் உறுப்பினர் கள் இருக்கின்றனர். 2. பிரார்த்தனை சமாசம் 1. மகாதேவ கோவிந்த ரானடே இந்திய பிரம சமாசத்தை நிறுவிய கேசவ சந்திர சென் 1854-ல் பம்பாயில் ஒரு கூட்டத்தில் நமது சமாசத்தின் கருத்துக்களை விளக்கினார். இவரது சமயச் சொற்பொழிவினைக் கேட்ட பலர் ஒரு புதிய சமாசத்தைப் பம்பாயில் ஆரம்பித்தனர். இச் சமாசத்தின் முதற் கூட்டம் 31.3.1867-ல் டாக்டர் ஆத்மராமன் என்பவரின் இல்லத்தில் கூடியது. சாதி முறையை நிராகரித்தல், விதவை மணத்தைச் செயற் படுத்துதல், பெண்கல்வி, குழந்தை மணத்தைத் தடுத்தல் முதலிய குறிக்கோள்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இச்சமாசம் பிரார்த்தனை சமாசம் எனப்பட்டது. இதில் பிரம சமாசத்தில் காணப்பட்ட குறைகள் தவிர்க்கப்பட்டன. பம்பாய் உயர்நீதி மன்றத்தில் நீதிபதி யாக இருந்த மகாதேவ் ரானடே என்பவர் பிரார்த்தனை சமாசத்தில் சேர்ந்தார். இவர் அக்காலத்தில் தலைசிறந்த கல்விமானாகவும், சமூக சீர்திருத்தவாதி யாகவும் வரலாறு பொருளாதாரம் முதலிய துறைகளில் சிறந்த அறிஞராகவும் இந்திய தேசிய இயக்கத்தின் தூணாகவும் இருந்தவர். ரானடே இச்சமாசத்தில் சேர்ந்ததும் சமூக சீர்திருத்தமும் கடவுள் நம்பிக்கையும், பழைய பாகவதக் கொள்கையும், மராத்திய முனிவர் களின் பிராரர்த்தனை முறைகளும் இதில் முதலிடம் பெற்றன. வேதங் களை மறுத்து, பலருடைய பகையைப் பெற்ற பிரம சமாசத்தை மனத்திற்கொண்டு ரானடே எதையும் சார்ந்து நிற்காமலும், எதையும் குறை கூறாமலும் பிரார்த்தனை சமாசத்தைத் தனித்து இயங்கும்படி செய்தார். பிரார்த்தனை சமாசம் ஐரோப்பாவில் தோன்றிய பிராட்டஸ் டண்டு, கால்வினிக் முதலிய எதிர்ப்பு இயக்கங்களைப் போன்ற தென்றாலும் மராத்திய மகான்களின் பாதையை பின்பற்றியே நடந்தது. மார்ட்டின் லூதர் போப்பின் பேரதிகாரத்தையும் பாவ மன்னிப்புக்குப் பாதிரிகள் கடவுளுக்கும் மக்களுக்கும் இடையில் தரகர்களாய் இருப் பதையும் எதிர்த்து, கடவுளை ஒவ்வொரு மனிதனும் நேரடியாக அவனவன் வழியில் வணங்கலாமென்றார். பிரார்த்தனை சமாசமும் வேதியர்களையும் வேத மொழியாகிய சமற்கிருதத்தையும் தவிர்த்து, அவரவர் விருப்பப்படியே அவரவர் மொழியில் ஆண்டவனன வணங்கலாம் என்றது. மார்ட்டின் லூதர் உருவ வழிபாட்டை மறுத்தார். ஆனால் பிராத்தனை சமாசத்தில் உருவ வழிபாடு நுழைக்கப்பட்டது. உருவ வழிபாடு இன்றியமை யாதது என்பதை 1893 - ல் லாகூரில் நடந்த சமுக மாநாட்டிலும் 1895-ல் தாம் ஆற்றிய இந்து பிராட்டஸ்டண்டிஸம் என்ற சொற் பொழிவிலும் ரானடே நன்கு விளக்கினார். கிறித்துவர்கள் தங்களின் மரபை யூதப் பண்புடன் இணைத்து இறும்பூதெய்துகின்றனர். நாமும் உலக நலனுக்காக வாழ்ந்த நம் முன்னோரின் பண்புகளுடன் கலந்து வாழ வேண்டும். அவர்களிடம் காணப்படாத தன்னலமும், சாதி வேற்றுமையும், சமயக் குமுறல் களும் இன்று நம்மைச் சூழ்ந்து கிடக்கின்றன. நாம் மீண்டும் நம் பண்டைக் காலத்தில் மலர்ந்த மறுமண மலராக மறுமலர்ச்சி எய்த வேண்டும் என்று ரானடே கூறினார். எனவே, இன்று நமக்குச் சீர்திருத்தம் தேவையில்லை. விதவை மறுமணம் செய்து கொள்ளு தலும் இளமை மணாத்தைத் தவிர்த்தலும் சாதி முறையற்றிருத்தலும் தம் பண்டைக் காலத்தில் இருந்த பண்புகளே, இவற்றை மீண்டும் இன்றைய சமுதாயத்தில் மலரச் செய்ய வேண்டும். இன்று நமக்குத் தேவைப்படுவது மறுமலர்ச்சியே தவிர, சீர்திருத்தமன்று என்று ரானடே கூறினார். இதற்காக வெறிச் செயலில் ஈடுபட்டு வெறுப் புணர்ச்சியோ, மராத்தியரும் சீக்கியரும் ஆரம்பித்த சமயப் போரை யோ தொடங்காமல், இந்தியாவைத் தாயகமாகவும், இந்திய மக்களை ஒரு தாய் மக்களாகவும் கொண்டு, அறத்தை அகத்திலே தேக்கினால் மறம் தானே பட்டு விழும் என்று ரானடே ஓரே சமயத்தில் இறை நெறியையும், நாட்டுப்பற்றையும் எடுத்துரைத்தார். பிரார்த்தனை சமாசத்தின் தெய்வம் இந்திய தேசமாகும். இந்திய மக்களின் பணியே அத்தெய்வத்தின் பணி ஆகும். இச் சமாசம் ஓர் அனாதை விடுதியையும், பண்டரிபுரத்தில் முடவர், குருடர், பித்தர், வயதானவர் முதலியோருக்கு ஒரு பாதுகாப்பு நிலையத்தையும், தாழ்த்தப்பட்டோருக்கு ஒரு சமூகப்பணி மன்றத் தையும் அமைத்து நடத்துகிறது. ரானடே தக்கணக் கல்விச் சங்கம் என்பதனையும் ஏற்படுத்தினார். இச் சமாசத்தில் சேர்ந்து மக்கள் பணியாற்றியவர்களில் இந்திய சமூகப்பணி மன்றத்தின் (Servants of Indian Society) தந்தையான கோபால கிருட்டிண கோகலேயும், சமூக சேவைக் கூட்டுக்குழுவை ஏற்படுத்திய என். எம். ஜோசியும் மற்றும் தலைசிறந்த பல தேசபக்தர்களும் குறிப்பிடத்தக்கவர்களாவர். 3. ஆரிய சமாசம் சாமி தயானந்தர் மேனாட்டில் தோன்றிய சமய சீர்திருத்தித்திற்குப் பின் கத்தோலிக்க மதத்தை பரிசுத்தப்படுத்தி அதனை மீண்டும் வலுப் படுத்த ஜெசூட்கள் சபை என்பதனைத் தோற்றுவித்த இக்னேஷியஸ் லயோலாவைப் போல் வேதங்களையும், சாத்திரங்களையும் மறுத்து ஆரிய சமயக் கொள்கைகளை ஒதுக்கித் தள்ளிய பிரம சமாசத்திற்கு மாறாக மீண்டும் ஆரிய சமயத்தை நிலைநாட்ட 1875-ல் ஆரிய சமாசத்தை சாமி தயானந்தர் ஏற்படுத்தினார். மறை வல்லுநரான இவர் கர்மவிதி, மறுபிறப்பு ஆகியவற்றை ஆரிய சமாசத்தின் அடிப் படைக் கொள்கைகளாகக் கொண்டார். இவற்றைப் பிரமசமாசம் மறுத்தது என்பது குறிப்பிடத்தக்கதாம், இவர் ஏற்படுத்திய ஆரிய சமாசத்தின் கொள்கைகளை சத்தியார்த்தப் பிரகாசம் என்னும் நூலில் ஐம்பத்தாறு அதிகாரங்களில் விவரித்தார். பிராமணங்கள், ஆறு வேதங்கள், ஆறு உபநிடதங்கள், நான்கு உப வேதங்கள், 1127 சமிதாக்கள் ஆகியவற்றின் கருத்துக்களும், கோட்பாடுகளும் ஆரிய சமாசத்தின் கருவூலங்களாம், புராணங்களையும் இதிகாசங்களையும் இவர் ஏற்க மறுத்து, கடவுளின் வாக்கான வேதங்களைத் தவிர, பிறவற்றை ஏற்க முடியாதென்றார். இந்திய மறுமலர்ச்சி இயக்கங்களும் தமிழ்நாட்டு மறுமலர்ச்சி இயக்கங்களும் 223 ஆரிய சமாசத்தின் தத்துவம் ஆண்டவன் எங்கும் நிறைந்தவன் அவனைச் சத்து, சித்து, ஆனந்த மயமானவன் என்கிறோம். அவனுக்கு முதலும் முடிவு மில்லை. ஆண்டவன், ஆத்மா, பிரகிருதி ஆகிய மூன்றும் ஒன்றுக் கொன்று தொடர்புடையன. ஆண்டவன் உலகைப் பிரகிருதியில் இருந்து படைக்கிறான். படைப்பினுள்ளிட்ட ஆத்துமா அழியாதது. ஆனால், படைக்கப்பட்ட பொருள், அதன் நற்செயல், தீச்செயலுக் கேற்ப வீட்டுலகு அல்லது நரக லோகத்தை எய்துகிறது. உலகிலும், அண்ட கோளங்களிலும், எல்லாப் படைப்பிலும், எங்கும் காணப் படும் அவனைப் பரப்பிரமம் என்கிறோம். ஆரிய சமாச அறவழிகள் மனம், வாக்கு, காயம் ஆகியவற்றில் தூய்மை வேண்டும். நேர் வழியில் செல்வத்தை ஈட்டி நேர்மையோடு வாழ்பவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும், நெறிதவறாத ஆட்சியாளர்களும், தூயவாழ்வு நடத்துபவர்களும் மண்ணிலே வாழும் விண்ணாக ளாவர். இவர்கள் இறைவனோடு ஐக்கியமாவார்கள் இவர்கள் வாழும் வழிகளே அறவழிகளாம். உய்யும் வழிகள் மேற்படி அறவழிகளின் படி வாழ்ந்து தூய்மையடைந்தவர்கள் துதித்தல், தியானித்தல், யோகத்தில் மூழ்குதல் ஆகிய நற்செய்கை களால் இறைவனை அடைவார்கள். இவற்றின் முடிவில் தன்னில் இறைவனையும், இறைவனில் தன்னையும் காணலாம் என்று தயானந்தர் கூறினார். வேள்வி, புனிதப்பயணம், கோயில் வழிபாடு, விழாவெடுத்தல் முதலியன தேவையற்றவை என்றாலும் மனப் பக்குவம் பெற இவையும் உய்யும் வழிகளாகத் துணை நிற்கின்றன என்பது தயானந்தரின் கருத்தாகும். ஒருவன் மறுபிறப்பு, கர்ம விதி, வர்ணாஸ்ரம தர்மம் ஆகியவற்றிலும் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றும் இவர் வலியுறுத்தினார். ஆரிய சமாசத்தின் பணிகள் இந்தியரை இந்தியப் பண்பாட்டிலும், இந்துச் சமயத்திலும், இந்திய நாட்டின் மீதும் பற்றுக் கொள்ளச் செய்தது ஆரிய சமாசா மாகும். எம் தாய் நாடே எம் மகேசுவரன் வீடு. இதனை வணங்கு தலே நாட்டினை வணங்குதலே அவனை வணங்குதலாம் என்று தயானந்தர் கூறியது பிற்காலத்தில் சுதேசி இயக்கத்தின் வித்தாயிற்று. வாய்மையே வெல்லும் என்பது தயானந்தரின் தாரக மந்திரம், அகிம்சா முறையில் போராடிச் சுதந்திரம் பெற இந்தியரை ஆயத்தப் படுத்தியது. தயானந்தரின் சீடர்கள் ஆன்ஸ்ராசு, குருகத் வித்தியார்த்தி, லாலா லசபதிராய் முதலியோர் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற னர். ஆரிய சமாசம் தில்லியை மையமாகக் கொண்டு இன்று நாடெங் கிலும் பல கல்வி நிலையங்களையும் அறநிலையங்களையும் நிறுவி மக்கள் பணிபுரிகின்றது. இதன் பணிகளையும் பண்புகளையும் போற்றும் அதே நேரத்தில் இதனை ஏற்படுத்திய தயானந்தரை 19 ஆம் நூற்றாண்டில் தோன்றிய இந்திய மறுமலர்ச்சியின் தந்தை யெனத் தாகூரும், கேசவ சந்திரசென்னும், அரவிந்தரும், கர்னல், ஆல்காட்டும், பிளாவட்ஸ்கி அம்மையாரும், அறிஞர் இராதாகிருட்டி ணரும் போற்றுகின்றனர். 4. பிரமஞான சபை இந்து சமயத்தின் கருவூலமாக ஆத்மீக சக்தியைப் பெருக்கி, யோகாசனப் பயிற்சியால் மனத்தைக்கடவுளுடன் தொடர்பு கொள்ளச் செய்யும் முறையை மேனாட்டினரும் வியந்து போற்றுகின்றனர். இம் முறையினை வளர்க்க, ஒரு தனிப் பயிற்சி இயக்கத்தை முதன் முதல் வெலினா பெட்ரோவ்னா பிளாவட்ஸ்கி அம்மையாரும், கர்னல் ஆல்காட் என்பவரும் 7.9.1875-ல் அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரத்தில் ஆரம்பித்தார்கள். இதுவே பிரமஞான சபை எனப்பட்டது. இவர்கள் இந்தியாவுக்கு வந்து பம்பாயில் 15.2.1879 -ல் தங்களது சபையின் கருவூலம் இந்தியாவின் சொத்து என்பதனை எடுத்துக்காட்டி, ஆத்மீக மார்க்கமே யாவற்றினும் சிறந்ததென் றும் கூறினர். பின்னர், இந்தியாவில் பல் சொற்பொழிவுகளை நிகழ்த்தி விட்டு இலங்கைக்குச் சென்றனர். இலங்கையில் புத்த சமயக் கோட் பாடுகளை விளக்கி, தங்களின் ஆத்மீக மார்க்கத்திற்கு அவை எப்படித் துணை நிற்கின்றன என்றும் எடுத்துக்காட்டினர். இவ்வாறு இவ்விருவரும் இந்தியாவிலும் இலங்கையிலும் பிரமஞான சபைகள் ஏற்படத் தூண்டுதலாய் நின்றனர். இந்தியாவில் பல்வேறு இடங்களில் தோன்றிய இச்சபைகள் ஒன்றாக இணைந்து, 1882-ல் சென்னையில் உள்ள அடையாற்றைத் தங்களின் தலைமை இடமாகக் கொண்டனர். அடையாற்றைத் தலைமை இடமாகத் கொண்ட இந்திய பிரமஞான சபை உலகின் பல்வேறு பகுதிகளிலும் முள்ள மக்களையும் கவர ஆரம்பித்தது. இதன் வளர்ச்சிக்கு உறுது ணையாக நின்றவர் இன்றும் இந்தியர் மனத்தில் நீங்காத இடத்தைப் பெற்றுள்ள டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையாராவார். இவர் பிளாவட்ஸ்கி அம்மையார் 1887-ல் எழுதிய இரகசிய கொள்கை என்னும் நூலைப் படித்தவுடன் அவ்வம்மையாருக்கு ஞானப் புதல்வியானார். பிரம்மஞான சபையின் வளர்ச்சிக்காகத் தம்மை அர்ப் பணித்துக் கொண்ட அன்னிபெசன்ட் 16-11-1898 -ல் இந்தியாவுக்கு வந்து 1933-ல் தமது 86வது வயதில் தாம் இறக்கும் வரை பிரம்மஞான சபை வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டு, இந்தியப் பெண்மணி என்னும் மனநிறைவோடு இறந்தார். இவ்வம்மையார் இந்தியருக்கு ஆற்றிய பணிகள் மதிப்பிடற்கரியன. அன்னிபெசன்டின் பணிகள் இந்தியர் தங்கள் நாட்டின் மீதும் கலை, பண்பாடுகளின் மீதும் பாசமும் பற்றும் பக்தியும் கொண்டு தேச விடுதலைக்குத் தியாகம் செய்ய முன்வரும்படி செய்த பெருமை அன்னிபெசன்ட் அம்மையாரைச் சாரும். இவர் இந்துக்களைப் போலவே புனித பயணங்கள் பலவற்றை மேற்கொண்டு, இமயமலையிலுள்ள அமர் நாத் போன்ற இடங்கட்கும் சென்று வந்தார். பல ஆண்டுகள் காசியில் தங்கி, மத்திய இந்துக் கல்லூரி(Central Hindu College)யை ஆரம்பித் தார். இது இந்துச் சமயப் பண்பாடுகள் மலரும் பூங்காவாயிற்று. . 1910-ல் ஆல்காட் இறந்ததும், அன்னிபெசன்ட் அடை யாற்றுக்கு வந்து, பிரமஞான சபையின் தலைவரானார். அச் சமயத் தில் நடந்த திரு கிருஷ்ணமூர்த்தி என்ற இளைஞரின் வழக்கு சம்பந்தமாகப் பெசன்ட் மனம் தளர்ந்து, பிரம்மஞான சபையினின்று விலகி, சமூக சேவையிலும், அரசியல் கிளர்ச்சிகளிலும் ஈடுபட்டு சாதி ஒழிப்பு, பெண் கல்வி, நாட்டு விடுதலை முதலியவற்றிற்கு ஓயாத சொற்பொழிவுகளை நிகழ்த்தியதோடு, நேரடியாக எல்லா விடுதலை இயக்கத்திலும் பங்கேற்றார். இவருடைய வீர உணர்ச்சிச் சொற் பொழிவுகளை இந்தியனே விழித்தெழு" என்று நூலாக வெளியிடப் பட்டது. ஜனவரி, 1914-ல் பொது வாழ்வு (TheoTITom Wal) என்னும் வார வெளியீட்டையும், பின்னர் புது இந்தியா (New India) என்னும் நாளிதழையும் ஆரம்பித்தார். பின் இதழ்களிலும் அச்சமின்றி, ஆங்கி லேயரைத் தாக்கி, பகுத்தறிவுவாதங்களையும், மனிதாபிமான அறங் களையும் எடுத்துக் கூறி, இந்தியருக்குத் தன்னாட்சி வேண்டுமென வலியுறுத்தினார். இவர் ஆரம்பித்த இந்தத் தன்னாட்சி இயக்கம் (Home Rule Movement) அதி தீவிரமாகச் சூடு பிடித்து வலுவடை வதைக் கண்ட ஆங்கிலேயர்கள் 1917-ல் அன்னி பெசன்டைச் சிறைக்குள் தள்ளினர். தங்களின் அறிவொளியை, குரல் ஒலியை இழந்த இந்தியர் அன்னி பெசன்டை விடுதலை செய்யும்படி கோரி நாடெங்கிலும் கிளர்ச்சி செய்தனர். அரசாங்கம் பொது மக்கள் கிளர்ச்சியைக் கண்டு அஞ்சி, அன்னிபெசன்டை விடுதலை செய்தது. சிறைவாயிலைத் தாண்டிய அன்னிபெசன்டை இந்திய தேசிய காங்கிரஸின் தலைவி யாக மக்கள் ஏற்றனர். ஆயினும், இவர் 1919-ல் மகாத்மா காந்தியடிகளால் ஆரம்பிக்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்க மறுத்து விலகினார், மகாத்மாவின் தலை மையை ஏற்ற காங்கிரசு புது மெருகும், புத்துணர்வும் பெற்றதால் பெசன்டின் புகழ் மங்கலாயிற்று. ஆயினும், அன்னி பெசன்ட் இல்லை என்றால் மகாத்மா காந்தியும் இருக்க முடியாது என்று திருமதி சரோஜினி நாயுடு கூறுகிறார். இந்தியா உள்ளளவும் இவ் வம்மையாரும் இருப்பார். இந்தியாவைத் தாயகமாகக் கொண்டு தம் வாழ்வு, தாழ்வு, இன்ப துன்பங்களை இந்தியருக்கே அர்ப்பணித்து, இந்தியாவில் மரித்த இவ்வம்மையார் இந்தியாவினுள் ஒன்றுகலந்து நிற்கிறார், என்று காந்தியடிகளே புகழ்ந்திருக்கிறார், இந்தியாரின் ஆன்மீக பலத்தை அகில உலகமே அறியும்படி செய்தவர் அன்னிபெசன்ட். அடையாற்றிலுள்ள பிரம்மஞான சபை, அரிய நூலகத்தையும், பலரின் கையெழுத்துப் படிகளையும், பல சமய மொழி பெயர்ப்புகளையும் கொண்டு அன்னிபெசன்டை நம்மோடு பேசவைக்கிறது. 5. இராமகிருட்டிணர் மடங்கள் 1. இராமகிருட்டிண பரம அம்சர் (1834-1886) 1834-ல் ஊக்ளி நதிக்கருகிலுள்ள கமர் புகூர் என்னும் சிற்றூரில் பிறந்த கதாதர சட்டர்சியே கல்கத்தாவில் எழுந்தருளிய காளிகோயில் பூசாரியாகி, ஞான வள்ளலாகத் திகழ்ந்து, இராம கிருட்டிண பரமகம்சரென உலகத்தாரால் அறியப்பட்டார். இவர் ஞானோதயம் பெற்றபின் ஆற்றிய ஆன்மீகச் சொற்பொழிவுகள் இவரை ஓர் அவதார புருடராகவும் கருத வைத்தது. இவர் உலக சமயங்கள் யாவும் நாடும் பொருள் ஒன்றே என்றும், சமயங்கள் ஆறுகளைப் போல் கடவுளாகிய கடலை அடைய உதவும் பாதைகள் என்றும் கூறினார். நம் தாகத்தைத் தீர்க்கும் தண்ணீரை நீர், நீலு, பானி, வாட்டர் முதலிய பல்வேறு வார்த்தைகளால் பல்வேறு மொழிகளில் கூறினாலும், அவை ஒரே பொருளைக் குறிப்பன போல், இறைவன் அரி, அல்லா, ஏசு, காளி, மாதா முதலிய பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறான் என்று இராமகிருட்டிணர் உலகப் பொது சமயத்திற்கும் உலக ஒற்றுமைக்கும் வழி வகுத்தார். ஒரே களிமண் ணால் பலவிதப் பாண்டங்கள் செய்யப்பட்டாலும் அவை குயவனின் கைவண்ணமே ஆதல் போல மக்கள் பலதரப்பட்டுக் காணப்பட்டா லும் இறைவனாகிய குயவனின் கைவண்ணங்களே என்று கூறி உலக சகோதரத்துவத்தை இராமகிருட்டிணர் எடுத்துக் காட்டினார். உயர்ந்த மாடி கட்டும் பொழுது நாம் சாரங்களை உப் யோகிக்கிறோம். கட்டடம் கட்டி முடிந்ததும் சாரங்களை எடுத்து விடுகிறோம். இது போலவே இறைவனை அடைய உருவ வழிபாடு களும், ஆலயங்களும் வேள்விகளும், விழாக்களும் தேவைப்படு கின்றன. நமக்கு வழிகாட்டி தேவையே என்று அலைய வேண்டாம் எல்லாம் நம் இந்து சமயத்திலிருக்கின்றன. எனவே, நம் சமயத் தையும், நம் தாயகத்தையும் நேசித்தாலே இறைவனை அடையும் சாரங்கள் என்று இவர் கூறியது இந்து சமயப் பண்பாட்டில் மறு மலர்ச்சி வேண்டுமென்பதற்கேயாம். உன் கண்ணுக்கும் அறிவுக்கும் எட்டாதவைகளே இல்லை என்று சொல்லிவிட முடியாது. பகலிலே வானத்திலிருக்கும் விண்மீண் இந்திய மறுமலர்ச்சி இயக்கங்களும் தமிழ்நாட்டு மாமலர்ச்சி இயக்கங்களும் கள் சாதாரணக் கண்களுக்குத் தெரிவதில்லை. ஆயினும், தொலை நோக்கிக் கண்ணாடியில் பார்க்கும்போது அவை தென்படுகின்றன. அது போலவே, அறிவு என்னும் தொலை நோக்கிக் கண்ணாடியில் நோக்கும் பொழுது எத்தகைய காட்சியையும் காணலாம் என்று இராம் கிருட்டிணர் பகுத்தறிவையும் தத்துவத்தையும் ஒருங்கே போதித்தார். பட்டினத்திற்கு வந்த இருவரில் ஒருவன் வந்தவுடன் இரவில் படுக்க ஒரு பத்திரமான அறையைப்பிடித்து அதில் தம் முட்டை முடிச்சுகளை வைத்துப் பூட்டிவிட்டு, பகலெல்லாம் பட்டினத்தைச் சுற்றிப்பார்த்துவிட்டு, இரவில் நிம்மதியாகத் தாங்கி, தன் கர்போய்ச் சேர்ந்தான். மற்றவனோ இரவுப்பொழுதை யோசியாமல் கொண்டதே கோலமாய்த் திரிந்துவிட்டு, இரவிலே பாதையில் படுத்தான். அவனும் டைய பொருள்கள் களவு போயின. கள்வர்களாலும் உதைக்கப் பட்டான். உலகமாகிய பட்டினம் போந்த மனித, நீயும் சாவாகிய இரவு சூழும் முன் வீட்டுலகாகிய தங்கும் அறையைத் தேடிக்கொள் என்று இராமகிருட்டிணர் கூறுகிறார். 2. சாமி விவேகானந்தர் (1863 - 1902) ஏசு கிறித்துவின் உபதேசங்களை அவருடைய சீடர் செயிண்ட் பால் உலகம் முழுவதும் பரப்பியது போல, இராம் கிருட்டிணரின் கொள்கைகளை உலகறியச் செய்து, இன்று உலகம் முழுவதிலும் காணப்படும் சுமார் நூற்றுப் பத்து இராமகிருட்டிண மடங்கள் ஏற்படக் காரணமாய் நின்றவர் விவேகானந்தராவார். விவேகானந்தர் 1863-ல் கல்கத்தாவில் பிறந்தார். இவருடைய இளமைப் பெயர் நரேந்திரநாத் தத்தா என்பது இவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த பொழுது உடற்பலமும், உள்ளப் பலமும் கொண்டு விளங்கினார். ஹெர்பெர்ட் ஸ்பென்ஸர், ஜான்ஸ்டுவர்ட்மில் முதலியோரின் தத்துவங் களும், ஷெல்வி, வேட்ஸ்வொர்த் முதலியோரின் இயற்கைக் கவி களும் இவரைக் கவர்ந்தன. இவருடைய அறிவுக் கூர்மையைக் கண்ட இவரது கல்லூரி முதல்வர் திரு. ஹாஸ்டி என்பார் தாம் உலகம் முழுவதும் சுற்றி வந்தும் நரேந்திரனைப் போன்ற தத்துவ மாணவ னைத் தத்துவக் கலைக்கே பெயர் போன செருமன் பல்கலைக் கழகங்களில் கூடக் காணவில்லை என வியந்தார். மேலும், தாம் கண்ட மனப்பக்குவம் பெற்ற பெரிய மேதை இராமகிருட்டிணரே என்றும் ஹாஸ்டி கூறினார். தம் கல்லூரி முதல்வ ரால் மதிக்கப்படும் இராமகிருட்டிணரைக் காணச் சென்ற நரேந்திரன் கண்டார் வென்றார். அன்று முதலே மெய்ஞ்ஞானம் வரப்பெற்று உலகம் போற்றும் விவேகானந்தரானார். 1893-ல் அமெரிக்காவிலுள்ள சிகாகோ நகரில் நடந்த 'பல சமயப் பாராளும் மன்றம்' என்னும் உலக சமயங்களின் மாநாட்டில் கலந்து கொண்டு விவேகானந்தர் இந்து சமயத்தின் சகோதரப்பான் " மையை விளக்கினார். தொடர்ந்து மேனாடுகளில் பயணம் செய்து பல கூட்டங்களில் விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவுகள் இந்தியாவையும், இந்துப் பண்பாட்டையும் தெற்றென விளக்கின. மத மாற்றம் செய்து இந்தியரைக் கிறித்துவர் ஆக்கி விடுவதால் இந்தியப் பண்பும், சமயமும் அழிந்துவிடும் என்று தாம் அச்ச மடையவில்லை என்றும் இந்தியருக்கு மதமாற்றம் தேவையில்லை. ஞானக் களஞ்சியம் அவர்களிடமுள்ளது போல் உலகில் வேறு எம்மதத்தினரிடமும் இல்லை என்றும் விவேகானந்தர் மேனாட்டுக் கூட்டங்களில் பேசினார். 1896 -ல் அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரில் 'வேதாந்த சங்கம்' என்ற வர்க்கமற்ற சமய மன்றத்தை விவேகானந்தர் நிறு வினர். மேனாடெங்கிலும் இந்த இளம் துறவியையும், இவருடைய குருவான இராமகிருட்டிணரையும் விரிவாகக் கேட்டறிய மக்கள் முன்வந்தனர். பல இளைஞர்கள் துறவிகளாகி இராமகிருட்டிணா மடங்களை நிறுவி மக்கள் தொண்டாற்ற ஆரம்பித்தனர். இவ்வாறு முதன்முதலில் அமெரிக்காவுக்குச் சென்று திரும்பிய விவேகானந்தர் ஐரோப்பா, கீழ்த்திசை நாடுகள், சீனா, சப்பான் முதலிய நாடுகளுக்கும் சென்று, இராமகிருட்டிணரின் உபதேசங் களைப் பரப்பி, ஆங்காங்கே மடங்களை நிறுவினார். இம்மடங்கள். இன்று உலகம் முழுவதும் நிறைந்து இனம், மொழி, நாடு, சமயம் முதலிய வேறுபாடின்றி, பூகம்பம், வெள்ளம், தீ, தொற்றுநோய் முதலியவற்றால் ஊறு நேரிடும் போதெல்லாம் கைகொடுத்து உதவுகின்றன. விவேகானந்தர் இந்தியாவையும், இந்தியரையும் எங்குச் சென் றாலும் தம் சிந்தனையிலே நிறுத்தி, இந்தியரை மூடப் பழக்கத்தில் இருந்தும் முடைநாற்றம் வீசும் சாதி சமய வேற்றுமைகளில் இருந்தும் விடுதலையடைந்து, தன்னாட்சி பெறும் நாளை எண்ணி ஏங்கினார். சீனப் பெண்கள் முதுகிலே குழந்தைகளைக் கட்டிக் கொண்டு வேர்வைசொட்ட ஆண்களுக்குச் சமமாக உழைக்கின்றனர். ஆனால், இந்தியப் பெண்களோ மூடப்பழக்கங்களையும், சாதி, சமய வேற் றுமைகளையும் தங்கள் மனத்திலே சுமந்து கொண்டு வாழ்கின்றனர் என்று சீனாவைக் காணும்போது விவேகானந்தர் எண்ணினார். சப்பானியரின் சுறுசுறுப்பைக் கண்ட இவர் சப்பானியருக்கு நடக்கத் தெரியவில்லை, ஒடியே வாழ்கிறார்கள்; பேசத் தெரியவில்லை, செய்தே மாய்கிறார்கள் என்றார். ஆனால், இந்தியரோ வாழ்நாளைச் சோம்பலிலும் வீண்பேச்சிலும் கழித்து இறக்கின்றனர். எனவே தான், கடுகு போன்ற சப்பான், பரங்கிக்காய் போன்ற ஐரோப்பிய நாடுகளையும் நடுங்க வைத்தது. இந்தியாவுக்குச் சப்பானின் சுறுசுறுப்பு இன்றைக்கு இன்றியமையாதது என்று சப்பானைக் காணும் போது இவர் எண்ணினார். இவருடைய எண்ணங்கள் இவர் அந்தாடுகளில் இருந்து எழுதிய கடிதங்களில் பிரதிபலிக்கின்றன. ஒவ் வோர் இந்தியனுக்கும் இரும்பு போன்ற உடலும், எஃகு போன்ற நரம்புகளும், எதையும் கண்டஞ்சாத இதயமும் தேவை என்றார். இந்தியனாகப் பிறந்ததில் இந்தியன் ஒவ்வொருவனும் பெருமிதம் கொள்ளவேண்டுமென்பது விவேகானந்தரின் வேண்டுதலாம். ஒரு சமயம் விவேகானந்தர் கன்னியாகுமரிக்குச் சென்று, நிலப்பரப்புக்கப் பாலுள்ள கடலினுள் உள்ள ஒரு சிறுபாறை மீது அமர்ந்து சிந்தனையிலாழ்ந்தார். இமயம் முதல் குமரிவரை பரந்துள்ள எம் பாரத நாடே உன்னில் தோன்றிய எண்ணிலடங்காத மகாத்மாக் களும், மாமனிதர்களும் உன்னுடைய கோடிக்கணக்கான மக்களின் பசிப்பிணியையும், அவர்களிடமுள்ள சாதி, சமயப் பூசல்களையும் போக்கவில்லையே! அவர்கள் என்ன பைத்தியக்காரர்களா? அல்லது அம் மகான்களை மக்களில் பசித்தவன், புசித்தவன், இளைத்தவன், வலுத்தவன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் இருக்கலாமா! இவற்றைப் போக்கிச் சமதர்மம் காணும் அறிவினை இம்மக்கள் பெறும் நாள் எந்நாளோ? என்று விவேகானந்தர் ஏங்கினார். இவர் அன்று அகக் கண்ணிலே கண்ட ஒன்றுபட்ட இந்தியாவிடுதலையடைந்த இந்தியா, ஒரே இந்தியா இன்று நம் கையிலே இருக்கிறது. இத் தீர்க்கதரிசனம் உதயமான அக் கன்னியாகுமரிக் கடல் பாறையை இன்று விவேகா னந்தரின் நினைவுச் சின்னமாகக் கொள்வதில் நாம் மகிழ்ச்சி யடைகிறோம். கடைசியாக, டிசம்பர், 1900-ல் இவர் அமெரிக்கா சென்று திரும்பினார். அதற்குப் பின் தீவிரமாக மக்கள் பணியாற்றி 4-7-1902 - ல் இவ்வுலக வாழ்வை நீத்தார். விவேகானந்தர் இந்தியாவைத் தம் உள்ளமாகவும், உலகைத் தம் உடலாகவும் கொண்டு, உலக அரங் கில் இந்தியரின் பண்பாடுகளை அரங்கேற்றி, மனித குலத்திற்குப் பணிபுரியும் மடங்களை அழைத்துச் சென்றார். கடவுள் பக்தி நாட்டுப் பணிக்கும் பயன்படும் பரந்த பாதையை வகுத்தவர் விவேகானந்தரே. 6. இரவீந்திரநாத் தாகூர் (1861-1941) இத்தாலியில் தோன்றிய மறுமலர்ச்சிக்கு லியனார்டோடா வின்சியின் பங்கினைப் போல் 19 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் தோன்றிய மறுமலர்ச்சிக்கு இரவீந்திரநாத் தாகூரின் பணிகள் பயன் பட்டன. தாகூர், பிரம சமாசத்தை மணம் கமழச் செய்த உலகப் புகழ்பெற்ற தேவேந்திரநாதத் தாகூரின் அருமை மைந்தராவார். இவர் உலக வரலாற்றிலேயே தலை சிறந்து விளங்கிய முதல் சமயக் கவிஞராவார், கவிஞர், நாடக ஆசிரியர், நடிகர் தத்துவமேதை, கல்வி யறிஞர், எழுத்தாளர், தீர்க்கதரிசி முதலியவற்றின் ஒட்டு மொத்தமே இரவீந்திரநாத் தாகூர், இவருடைய எழுத்துகள் புயலையும் கிளப்பும், பொங்கும் கடலையும் அடக்கும், வானத்தையும் ஆயும் வண்ண மலர்களையும் வியக்கும் சக்தி வாய்ந்தவை. இவற்றில் எண்ணிறந்த உவமைகள், பேசும் ஓவியங்கள், துள்ளியெழும் உணர்ச்சிகள், குன்றென நிற்கும் நிலைகுலையா மோனங்கள், சிரிப்புக் கொத்துக்கள், சோக உருவங்கள், தத்துவார்த்தக் காட்சிகள், தெருக்கோடி உரையாடல்கள் முதலிய யாவும் காணப் படும். இவை சமயம், அரசியல், பொருளாதாரம், கல்வி, சமூகம் முதலியவற்றை ஆய்ந்து சீர்த்திருத்தத்தைச் சுட்டிக் காட்டி நிற்கும். இவர் வங்காள மொழியிலும், பின்னர் ஆங்கிலத்திலும் எழுதிய எண் தணிறந்த நூல்கள் இன்று உலக மொழிகள் பலவற்றிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. 1913-ல் இவருடைய கீதாஞ்சலி என்னும் நூலுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது. 1915-ல் சர் பட்டம் பெற்றார். ஆனால் 1919-ல் நடந்த அமிர்தசரசு படுகொலை யை எதிர்த்த இவர் ஆங்கிலேயர் கொடுத்த இந்தச் சர் பட்டத்தை உதறித் தள்ளினார். தாகூர் இந்தியரின் ஆத்மிக பலத்திலும், சாக்ரடிசு முதலியோரின் பகுத்தறிவுக் கொள்கையிலும், மனிதாபிமானத்திலும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர். இந்திய வரலாறு என்பது ஆரியர், திராவிடர், கிறித்தவர், மகமதியர், இந்துக்கள் முதலிய எவருக்கும் தனிச் சொத்தன்று. இவர்கள் யாவரும் இந் நாட்டில் வாழ்ந்து, தங்க ளின் சமயம், பண்பாடு ஆகியவைகளை இம்மண்ணிலே நிலைபெற விட்டுச் சென்றவர்கள். எனவே, இவர்களில் ஒருவருக்கே இந்திய வரலாறு சொந்தமாதல் பொருந்தாத்து. இந்திய வரலாறு மனித இனத்தின் வரலாறு என்பதே பொருத்தமுடையது என்று தாகூர் கூறுவதில் இருந்து இவரது உலகக் குடிமக்கள் கொள்கை நமக்கு நன்கு விளங்குகிறது : தாகூர் தம்மை இயற்கையோடு இணைத்து, இயற்கையை இறைவனோடு இணைத்து, இறைவனை உலக உயிர்களோடு இணைத்து, உலகமும் ஆன்மாவும் இறைவனும் ஒன்றே என்று கண்டனர். பண்டைக் காலத்தில் நம் நாட்டு மறைகளும், சாத்திரங்களும் சமூக வளர்ச்சிக்குப் பயன்பட்டனவென்றும், இன்று இவை நம்மி டையே வேற்றுமைகளை வளர்க்க ஏற்கப் பயன்படுத்தப்படுகின் றனர் என்றும் கூறி வேதக் கருத்துக்களை மறுக்கிறார். இறைவன், கோயிலில் இருளடைந்த கருவறையில் இல்லை . அவன் சுகவாசி போல் அங்கு அமர்ந்திருக்கமாட்டான். உழவனின் வேர்வையிலே, கல்லுடைப்போனின் கடின உழைப்பிலே, சுரங்கத் தொழிலாளியின் சோர்வடையும் மூச்சிலே இறைவன் இருக்கிறான். தேவன் ஒரு தொழிலாளி எனவே, நாமும் ஒரு தொழில் புரியவேண்டும், அவன் உழைப்பில் தோன்றும் இன்பம் அதனை நாமும் பெற வேண்டும். இந்திய மறுமலர்ச்சி இயக்கங்களும் தமிழ்நாட்டு மறுமலர்ச்சி இயக்கங்களும் 231 அவன் போர் முரசு முழங்கும் மூரசன். அம்முரசொலியில் நாம் வீறு நடை போட வேண்டும், அவன் பிறர் கையை எதிர்பாராது வாழும் செம்மல் நாமும் அதுபோல் செம்மை வாழ்வு நடத்துதல் வேண்டும். தாகூரின் நாட்டுப்பற்று உலகே மாயம் என்று கூறும் கவியல்ல தாகூர், தாம் பிறந்த நாட்டையும், தம் தாயையும் வானுலகிற்கும் மேலாகக் கருதுகிறார். இவர் எழுதிய சித்ரா என்னும் கவிதைத் தொகுப்பில் 'வீட்டுலகே போய் வருக (Farewellto Heaven) என்ற கவிதையில் பின்வருமாறு தம் நாட்டுப்பற்றை விளக்குகிறார். வீட்டுலகே, உன்னிடமுள்ள சாவா மருந்தான தேவாமிர்தத்தை யான் வேண்டினேன். என் தாயகத்தில் அதனிலும் சிறந்த மருந்தை யான் காண்கின்றேன். இங்கே என் தாயின் அன்புக் கண்ணீரே எனக்கு மேலான தேவாமிர்தம். அக் கண்ணீரால் இப்பூவுலகே பசுமைக் கோலத்துடன் காணப்படுகிறது. அதிலோடும் அன்பு நீரோடையில் நானும் என் சகோதரரும் திளைத்துப் பிணைந்து மகிழ்ந்து குலாவுகிறோம். இதை விடவா உன் தேவாமிர்தம். அதை உன்னிடம் வைத்துக்கொள் போய் வா!' தாகூர் தாம் கற்பனையில் கண்ட கருத்துக்களைச் செயற் படுத்த விரும்பினார். இயற்கையோடு இயைந்த வாழ்வும், மனம் நாடும் கல்வியும் தர விஸ்வ பாரதி எனும் பள்ளியொன்றை பத்து மாணவர்களுடன் சாந்தி நிகேதனத்தில் தொடங்கினார். இதுவே பிறகு பெயர்பெற்ற பல்கலைக் கழகமாகிப் பல தேசியத் தலைவர்களை உருவாக்கியது. இன்று இந்தியாவெங்கிலும் நாளும் சிந்திக்கப்படும் கவியாக தாகூர் தமது பேர்பெற்ற ஜனகணமன் எனும் தேசியப் பாடலால் நிலைத்து நிற்கிறார். ஆ) கி.பி.19ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் தோன்றிய மறுமலர்ச்சிக் கவிஞர்கள் 1. இராமலிங்க அடிகளார் 19 ஆம் நூற்றாண்டில் தமிழகத்திலும் பல அரிய மறுமலர்ச்சிக் கவிஞர்கள் தோன்றினர். இவர்களில் சிறந்தவர் இராமலிங்க அடிகளார் ஆவார். இவர் 'அன்பே கடவுள்' என்னும் பேருண்மையை விளக்கிப் பாடிய பாடல்களின் தொகுப்பு "திருஅருட்பா' எனப்பட்டது, இவர் மனிதருள்ளும், விலங்குகளுள்ளும், செடி, கொடிகளுள்ளும் கூட ஆத்ம ஒளியைக் கண்டார். மறைகளால் கூறப்படும் வேள்வி முறைகளும் மற்ற சடங்குகளும் இல்லாமல் அன்பெனும் உள்ளத் தால் ஆண்டவனை அடையலாம். அவன் ஒளிமய மானவன் என்று இராமலிங்கனார் கூறினார். இவரது பாடல்களும், கடவுட் கொள்கை யும் வேறுபட்ட தமிழகத்தை ஒன்றுபடுத்தின. சாதி, சமய வேறுபா டின்றிச் சத்திய சன்மார்க்க சமரச நோக்கை மக்களிடையே அடிகளார் ஏற்படுத்தினார். 2. வேதநாயகம் பிள்ளை கவி மாயூரம் வேதநாயகம் பிள்ளையவர்களும் இந்நூற்றாண் டில் தோன்றிய கவிஞராவார். இவர் கத்தோலிக்கக் கிறித்தவராயினும் சாதி, சமய வேறுபாடுகளை நீக்கி, மக்கள் நீதிக்கு வாதாட வேண்டு மெனக் கூறினார். இவருடைய சர்வ சமய சமரசக் கீர்த்தனை, நீதி நூல் முதலிய நூல்கள் விரிந்த மனமடையச் செய்தன. 3. தாயுமானவர் சமரச சன்மார்க்கத்தை முதன் முதல் உலகிற்கு உணர்த்திய பெரியார் இந் நூற்றாண்டில் தமிழகத்தில் வாழ்ந்த தாயுமான சுவாமிகள் ஆவார். திருமறைக்காட்டில் பிறந்த இவர் வடமொழி, தமிழ்மொழி இரண்டிலும் புலமையெய்தி, மெய்ஞ்ஞானப்பற்றால் துறவு பூண்டு உலகுய்ய உபநிடதம் போன்ற மெய்யறிவுப் பாடல்களைப் பாடினார். தெஞ்சமே கோயில் தினைவே சுகந்தம் அன்பே மஞ்சனநீர்பூசை கொள்ள வாராய் பராபரமே' என்று தாயுமானவர் கூறும் பக்திமுறை யாவருக்கும் ஏற்றதாகும், எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அவ்வாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே இது அவருடைய வாழ்க்கையின் குறிக்கோளாகும். 4. பாரதியார் மேற்கூறிய மறுமலர்ச்சிக் கவிஞர்களையடுத்து, தமிழகத்தில் தோன்றிய தலைசிறந்த தேசிய கவிஞர் சுப்பிரமணிய பாரதியாராவர், எளிமை, இனிமை, வீரம், விவேகம், நீதி நேர்மை, மெய்யறிவு, தன் மானம் முதலியவற்றைப் பாரதியாரின் பாடல்களில் காணலாம். செந்தமிழ் நாட்டையும் செந்தமிழையும் வானுலகுக்கும் மேலாக மதித்த இக்கவிஞர் என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்? என்று பாடி, முப்பது கோடி முகமுடைய பாரத அன்னையின் மக்களைச் சிந்தனையால், செயலால் ஒன்று படச் செய்து நாட்டு விடுதலையில் ஈடுபடச் செய்த, தேசிய தெய்வீகக் கவிஞர் ஆவார். இது இசுலாமியரின் மறுமலர்ச்சி கி.பி. 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்திய மகமதி யர்களின் சமுதாய நிலை மிகவும் பின் தங்கியே காணப்பட்டது. அன்று சுமார் ஒன்பது கோடி மக்களாகவும், இந்திய மக்கள் தொகை யில் சுமார் நான்கிலொரு பங்கினராகவும் இருந்த மகமதியர்கள் கல்வியிலும், அரசியலிலும் மிகவும் தாழ்ந்திருந்தனர். வைதிக இஸ்லாம் சமயத்தில் பற்றுள்ள பெரும்பான்மையினரான மகமதிய அறிஞர்கள் தம் சமூகப் பெண்கள் முகத்திரையிலே மறைந்து கிடப் இந்திய மறுமலர்ச்சி இயக்கங்களும் தமிழ்நாட்டு மறுமலர்ச்சி இயக்கங்களும் பதையும், கல்வியறிவற்றுப் பிள்ளை பெறும் எந்திரங்களாகக் கிடப் பதையும், பலதார மணத்தில் கட்டுண்டு இருப்பதையும், விவாகரத் துக்குப் பலியாவதையும் போற்றிக் காத்தனர். பொதுவாக மகமதிய ரிடையே விழிப்புணர்ச்சியும், இந்துக்களுக்கு ஈடாகச் செல்லும் போட்டி மனப்பான்மையும் இந் நூற்றாண்டில் ஏற்படவில்லை, வைதீக இந்துக்களைப் போலவே இவர்களும் நவீனங்களைப் போற்றாமலும் அந்நியப் பண்பாட்டை ஏற்காமலும் ஆங்கிலக் கல்வியைக் கற்காமலும் புறக்கணித்தனர். இதனால் இச் சமூகத்தில் உயர்ந்த அதிகாரிகளையும் நீதிபதிகளையும் வழக்கறிஞர்களையும் பேராசிரியர்ளையும் அரசியல் அறிஞர்களையும் அன்று காண்பது அரிதாயிற்று. 1885-ல் தோன்றிய காங்கிரசு இந்துக்களின் கோட்டை யாகி மகமதியரை அந்நியராகவே கருதியது. மகமதியருக்கு மண்டையடி கொடுக்க இந்து மகாசபை தன் சுக்கு மாந்தடியை சதா சுழற்றிக் கொண்டே இருந்தது. இத்தனை இடுக்கண்களையும் தாண்டி இச்சமுகம் தலையெடுக்க வேண்டும் அதில் மீண்டும் ஒரு நபிகள் நாயகம் பிறக்க வேண்டியதவசியமாயிற்று. சர் சையது அகமது கான் (1817-1898) திசையற்றுத் தவித்த மகமதிய மரக்கலத்திற்குக் கலங்கரை விளக்கமாய் சர் சையது அகமது கான் 17. 4. 1817 - ல் இம் மண்ணிலே பிறந்தார். இவர் ஆங்கில வணிகக் குழுவில் ஸ்தர் அமீன் உத்தியோகத்தில் இருந்து பொருளீட்டி வாழ்ந்தார். 1857-ல் நடந்த சிப்பாய்க் கலகத்தை ஆய்ந்து *'சிப்பாய்க் கலகத்தின் காரணங்கள்" என்னும் நூலை வெளியிட்டுப் புகழ் பெற்றார். ''நிதி சீர்திருத்தம்(Tahil-ul-Akhlaq)" என்னும் மாத வெளி யீட்டை ஆரம்பித்து அதில் மகமதியரின் மூடப்பழக்க வழக்கங் களைச் சாடிவந்தார். இவருடைய எழுத்துகள் ஒரு புதிய உருது நடையையும் மகமதிய சமுதாயத்தில் ஒரு புதிய ஒளியையும் உண்டாக்கின. இவருடைய நிதிச் சீர்திருத்தம் மகமதிய சமூகத்தின் மறுமலர்ச்சிக்கும் தேசிய எழுச்சிக்கும் வழிகோலிற்று. 'கிழக்கு கிழக்குதான் மேற்கு மேற்குதான் இரண்டும் ஒரு போதும் ஒன்று சேரா' என்று பாடிய ரட்யார்டு கிப்ளிங் என்ற ஆங்கிலக் கவிஞரின் கூற்றை அஹமத் கான் பொய்ப்பிக்க உறுதி பூண்டார். இதற்குப் பெரிதும் உதவியது அவருடைய பேனாமுனையும், நாவன்மை யுமே ஆகும். இஸ்லாத்தை விளக்கும் கட்டுரைகள்' என்ற பெயர் பெற்ற நூலையும், கிறித்துவ மறை நூலான விவிலய வாக்கிற்குச் சிறப்புரையும் எழுதி மேனாட்டரின் கண்களை அகல விரியும்படி செய்தார். டாக்டர் ஹண்டரும், சர் வில்லியம் மூர் என்ற வரலாற்று ஆசிரியரும் மகமதியரையும், நபிகள் நாயகத்தையும் இழித்து எழுதியவை களை மறுத்து 'திரு நபியவர்களின் திவ்விய வாழ்க்கை ' என்னும் நூலை எழுதி இந்தியரையும் இந்திய முஸ்லிம்களையும் மேனாட்டார் மதிக்கும்படிச் செய்தார். இவர் காஜிபூரில் உதவி நீதிபதியாகப் பணியாற்றும் பொழுது 1863-ல் கல்வி, விஞ்ஞான ஆராய்ச்சிக்காக ஒரு சங்கத்தை நிறுவினார். இதில் இந்துக்களும், பங்கேற்றனர். மேனாட்டு நூல்களை உருது மொழியில் மொழிபெயர்க்கச் செய்தார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய இசுலாமியக் கொள்கைகளைப் பரப்பி மகமதி யர் அறிவுக்கண்ணைத் திறந்தார். இச்சங்கம் நாளடைவில் வளர்ந்து பல கிளைகளைப் பெற்றது. இவற்றின் தலைமையகம் அலிகாரில் நிறுவப்பட்டது. இச்சங்கம் இந்திய மொழிகளிலுள்ள சிறந்த நூல்களை உருதில் மொழி பெயர்த்தது. இச்சங்கம் நிறுவிய அதே 1863 ஆம் ஆண்டில் காஜிபூரில் ஓர் ஆங்கிலப் பள்ளியையும் நிறுவி, ஆங்கிலக் கல்வி எப்படி முஸ்லிம்களுக்கு அவசியமானது என்பதை எடுத்துக் காட்டினார். இதற்கு முன்னரே 1861-ல் முராதாபாதிலும் ஓர் ஆங்கிலப் பள்ளியை இவர் நிறுவி இருந்தார். 1860 -ல் தோற்றுவித்த பிரிட்டிஷ் இந்திய சங்கம் பிற்காலத்தில் 1885 - ல் இந்திய காங்கிரசு மகாசபை தோன்றுவதற்கு வழி வகுத்தது. 1869-ல் சர், சையது அகமது கான் தம் இங்கிலாந்துப் பயணத் தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பியதும், அந்நாட்டில் தாம் கண்ட ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகங்களைப் போல் இந்தியாவிலும் நிறுவலானார். அதுவே இன்று இசுலாமியக் கலைக் கும் பண்பாட்டுக்கும், உலக அறிவுக்கும் நடுநாயகமாய் விளங்கும் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம் ஆகும். காசி இந்துப் பல்கலைக் கழகமும் அலிகார் பல்கலைக் கழகமும் ஐக்கிய மாநிலத்தின் இருகண்கள் என்று திருமதி சரோஜினி நாயுடு புகழ்ந்தார். அலிகார் பல்கலைக் கழகம் இந்திய முஸ்லிம்களின் கலங்கரை விளக்காகவும், அவர்களின் மறுமலர்ச்சியின் முதல் மலராகவும் விளங்கினாலும், இந்துக்களையும் பிற சமயத்தவரையும் தடை யின்றி இது வரவேற் கிறது. இந்த அலிகாரை நடுநாயகமாகக் கொண்டு தான் "அலிகார் இயக்கம் தோன்றியது. பிறகு இது பெயர் பெற்ற முஸ்லிம் லீக் கட்சியாக 1906-ல் பிறந்தது. இவ்வாறு சர்சையது அகமதுகான் தமது ஒரே தலைமுறையில் இருள் சூழ்ந்திருந்த இந்திய இசுலாமிய சமுதாயத்தின் இருளைப் போக்கிச் சமூகப் புரட்சி செய்து, அரசியலில் பெரும் பங்கேற்கச் செய்தார். இவரால் நாடெங்கிலும் பள்ளிகளும், அனாதை இல்லங் களும், அரசியல் இயக்கப் பாசறைகளும் ஆரம்பிக்கப்பட்டன. தூங்கிவிட்ட சமுதாயம் தளிர்விட்டு விழித்தது. சர் சையது அகமதுகான் தோன்றவில்லையானால் இன்று பாகிஸ்தான் ஏற்பட்டிராது. முஸ்லிம்களிடையே ஒரு மறுமலர்ச்சியை 215 உண்டாக்கி ஒன்றுபட வைத்து, வலிமை பொருந்திய அரசியல் கட்சியையும், தலைவர்களையும் உண்டாக்கி இந்தியாவைத் துண்டு போடும் தைரியத்தை அவர்களுக்குக் கொடுத்து விட்டுச் சென்றவர் சர் சையது அகமதுகான் அவர்களே ஆவார். ஈ) சீக்கியர், பார்சிகள், இந்தியக் கிறித்துவர் - மறுமலர்ச்சி 1. சீக்கியர் ஒரு சமய இயக்கத்தினராக இருந்த சீக்கிய இனத்தார் கி.பி. - 19 ஆம் நூற்றாண்டில் தங்களைச் சிறுபான்மையினராக கருதும் மற்ற வர்களுக்கு எதிராக முன்னேற முற்பட்டனர். முஸ்லிம்களை எதிர்த் தே பழக்கப்பட்டவர்கள் சீக்கியர்கள், பின்னர் ஆங்கிலோ இந்திய ஆட்சியும் இரு பெரும் போர்கள் செய்து இந்தியாவோடு ஐக்கிய மாயினர். ஆயினும், கல்வியிலும் மற்றும் நவீனங்களிலும் இவர்கள் பின் தங்கியே நின்றனர். 'முக்கிய கால்சா திவான்' என்னும் மறு மலர்ச்சி இயக்கத்தைத் தோற்றுவித்துத் தம் மூடப்பழக்கங்களை விடுத்து, இளைஞர்களை முன்னேறும்படித் தூண்டினர். கால்சா கல்லூரியை அமிர்தசரஸில் நிறுவி, மேனாட்டுக் கல்வியையும், விஞ்ஞான அறிவையும் பெற்றனர். தங்களின் பொற்கோயிலையும், பொற்கோயில் திருச்சபையையும் உலக வாழ்வின் முற்போக்குக் காகப் பயன்படுத்தினர். இதற்கான அற நிலையக் காப்பு மன்றமும் ஏற் படுத்தப்பட்டது. சீக்கியரின் நாடு எங்கணும் பல்நோக்குப் பள்ளி களும் பலதரப்பட்ட கல்லூரிகளும் ஏற்பட்டு அவர்களிடையே மறு மலர்ச்சியை உண்டாக்கின. 2. பார்சிகள் சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த பார்சிகள் 1851-ல் ஒரு சமய சீர்திருத்தச் சங்கத்தை (Rahnumani Mazdayasan Sabha) ஏற்படுத்தினர், இச்சங்கம் பார்சிகளைக் கல்வி, கலை பண்பாடு ஆகியவற்றில் முன்னேறும்படி செய்தது. இவர்களின் சமூக முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டவர்களில் திரு. பி. எம். மலபாரி, திரு. கே. ஆர். காமா முதவி யோர் குறிப்பிடத்தக்கவர்கள், தங்களின் சமயமானஜொராஷ்ட்ரியன் சமயத்தையும் தங்களின் இனத்தையும் தூய்மைப்படுத்தி Zorostrian) ஒருங்கிணைக்க 1910-ல் ஒரு சமய மாநாடு கூட்டினர். 3. இந்தியக் கிறித்துவர் கிறித்தவ சமயத்திற்கு மாறிய இந்துக்களும், கலப்பினத்தவர் களான ஆங்கிலோ இந்தியரும் இந்நூற்றாண்டில் மிகவும் பிற்பட்டவர் களாகக் காணப்பட்டனர். மதம் மாறிய பெரும்பான்மையினர் இந்துச் சமயத்தில் தாழ்த்தப்பட்டவர்களாக இருந்தவர்கள், இவர்களின் மதமாற்றம் இவர்களுக்கு அகத் தூய்மையையும், புறத்தூய்மையை யும், அரசியல் உத்தியோகங்களையும் கொடுத்தது. 1813-ல் நிறைவேற்றப்பட்ட பட்டயச் சட்டம் இந்தியரின் சமய அறிவு, கல்வி விஞ்ஞான வளர்ச்சி முதலியவற்றிற்காக ஆண் டொன்றுக்கு ஒரு இலட்சம் உரூபாய் செலவிட நிதி ஒதுக்கியது. இதனைப் பெரிதும் பாதிரிமார்கள் நடத்தும் பள்ளிகளிலும், கல்லூரி களிலும், சமய நிலையங்களிலும் பயன்படுத்தினார்கள். இதனால் மதம் மாறிய இந்துக்கள் பெரிதும் பயனடைந்தனர். கிறித்துவ சமயத் திற்கும், அதன் பாதிரியாருக்கும் அவர்களால் நடத்தப்படும் நிலையங் களுக்கும் ஒரு புது மதிப்பும், உயர்வும் ஏற்பட்டன. பல உயர் சாதி இந்துக்களும் கிறித்தவர்களாகி அரசாங்கச் சலுகைகளை அனுபவிக்க லாயினர். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு தலைமை முதல்வர் (Bishop) நியமிக்கப்பட்டு, அம் மாநிலத்திலுள்ள சமய நிலையங்களைக் கண் காணிக்கலானார். இச்சமயத்தில் சமயத் தொண்டு புரிவதற்காகப் பல ஆயிரக் கணக்கான ஆண், பெண் கிறித்துவத் துறவியர் இந்தியாவுக்கு வந்து ஆங்காங்கே மடங்களையும், சமூகப் பணி மன்றங்களையும், தேவாலயங் களையும், பள்ளிகளையும் அமைத்தனர். இந் நூற்றாண்டில் பெரும் பணியாற்றிய பாதிரியார்களில் கரே(arty), டஃப், கிராண்ட், மார்ஸ்மேன், டாக்டர் மோர்மேன் முதலிய எண்ணிறந்தவர்களைக் கூறலாம். இந்த நூற்றாண்டில் கிறித்துவச்சமயத்தால் நேர்ந்த நன்மை களில் முக்கியமானது பன்னெடுங் காலமாய் ஒடுக்கப்பட்டிருந்த மக்கள் கல்வியறிவு பெற்றுத் தன்மானத்துடன் வாழ முற்பட்டதைக் கூறலாம். இதனைக் கண்டு வெட்கிய சாதி இந்துக்கள் தங்களின் சகோதரதாழ்த்தப்பட்ட இந்துக்களுக்குத் தாம் செய்துவந்த கொடுமை களை மாற்றிக் கொண்டு இந்து மதத்தைப் புனிதமாக்க முற்பட்டனர். இந்திய மொழிகளைக் கற்று மொழித் தொண்டாற்றிய எண்ணிறந்த பாதிரிமார்களில் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுதிய டாக்டர் கால்டுவெல் (1819-1891) அவர்களும், தமிழ் மாணவர் டாக்டர் ஜி. யு. போப் அவர்களும், 18 ஆம் நூற்றாண்டிலே (கி.பி. 1710) தமிழ் நாட்டிற்கு வந்து மொழித் தொண்டாற்றிய வீரமா முனிவர் அவர்களும், அரிய ஓலைச்சுவடிகளை அச்சேற்றி அழியாச் செல்வமாக்கிய தமிழ் லத்தீன் ஒப்பிலக்கண ஆய்வு நூலின் ஆசிரியர் வீகன் பால்கு துறவியும், ராபர்ட்-டி - நொபிலியும் நன்றியறிதலோடு நினைவு கூரத்தக்க பெருந்தகையர் ஆவர். 1906-ல் இந்திய ஒடுக்கப்பட்டோர் சங்கம் ஒன்று நிறுவப் பட்டு, இந்து சமயத்தைப் பின்பற்றும் ஒடுக்கப்பட்ட இனத்தவரின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டது. இதனை மேலும் தீவிரப்படுத்திச் சமூகப் பணியாற்றியவர் காலஞ்சென்ற டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் ஆவார். இந்திய மாமணர்ச்சி இயக்கங்களும் தமிழ்நாட்டு மறுமலர்ச்சி இயக்கங்களும் ஆ) 19, 20ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் தோன்றிய சமுதாய மறுமலர்ச்சி இயக்கங்கள் தந்தை பெரியாரும் சமுதாய இயக்கங்களும் முன்னுரை கி.பி. 19 ஆம் நூற்றாண்டில் தோன்றிய சமய, சமுதாயச் சீர்த் திருத்த இயக்கச் செயற்பாடுகளின் விளைவாக இந்திய சமூகத்தில் வியத்தகு மாற்றங்கள் ஏற்பட்டன. அத்தகைய சமய, சமூக மாற்றங் கள் 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டில் ஏற்பட்டதைச் சுருங்கக் காண்கிறோம். அன்றைய சென்னை மாகாணத்தில் தமிழக மும், ஆந்திரமும் கேரளத்தின் சில பகுதிகளும், கருநாடத்தில் சில பகுதி களும், சேர்ந்து பிரிட்டானிய மாநிலங்களில் மிகப் பெரிய மாநிலங் களில் ஒன்றாக இருந்தது. இதில் மொத்தம் 21 மாவட்டங்களும் சில சுதேச சமசுதானங்களும் இருந்தன. தமிழ்நாட்டில் எண்ணத் தொலையாச் சாதிகள் இருந்தன. இங்கிருந்த சமயப் பிரிவுகளோடு வெளி நாட்டில் இருந்து வந்த இசுலாமும் கிறித்துவமும் வேகமாகப் பரவித் தமிழ்ச் சமுதாயத்தைச் சமயத்தாலும் பிளவுபடுத்தின. எண்ணிலடங்காச் சாதிகளை ஒழிப்பதற்குத் 'தேசப்பிதா' காந்தியடிகள் நான்கு வருணங்களை நான்கை இரண்டாக்கி கடைசி யில் ஒன்றாக்கி விடலாம் என்றார். ஆனால், தமிழ்நாட்டில் தோன்றிய பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சாதிகளின் தோற்றத்திற்குச் சமயமே அடிப்படையானது என்றும், அந்தச் சமயத்தின் பாதுகாவல ரான பிராமணர்களை மேலே கூறிய எத் தகைய சமய, சமுதாயப் புரட்சிகளாலும் புரட்ட முடியாது என்றும் கூறி, அவர்களை ஒரு பிரிவாகவும் மற்றவரை மற்றொரு பிரிவாகவும் கொண்டு இரண்டு சாதிகளாக்கினால் சமுதாய மாற்றம் ஏற்படும் என்றார். இதையே அவர் 'பிராமணர்' என்றும் 'பிராமணர் அல்லாதார் என்றும் பிரித்து *சாதி இரண்டொழிய வேறில்லை' என்றார். இதனையே திராவிடர் என்றும் ஆரியர் என்றும் தேசிய, பண்பாட்டு அடிப்படையில் பிரித்துக் கூறினார். பெரியார், இதனைச் செயலில் நிலைப்படுத்தவே திராவிடக் கழகம் என்பதை ஏற்படுத்தினார். திராவிடர் என்போர் யாவர் என்ற வினாவிற்கு விடையாக மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அதிகாரியாக சென்னை மண்டிலத்தில் கி.பி. 1871-ல் கணக்கெடுத்த ஸ்வர்டு கீடுவர்க்கு என்பவர். சென்னை மாகாணத்தில் உள்ள பிராமணர், மராத்தியர், இசுலாமியர், தவிர்த்த மற்ற யாவருமே திராவிடரே என்றும், மனுவால் நிலை நாட்டப்பெற்ற வருணாசிரம தருமப் பாகுபாடுகளையும் சாதி முறைகளையும், இத்திராவிடர்கள் அறியாத வர்கள் என்றும், இவையாவும் பிரமாணர்க்குள்ளே இருந்தவை என்றும் பிற்காலத்தில் திராவிடர்களின் மேல் இவற்றைப் பிராமணர் கள் திணித்து விட்டார்கள் என்றும் கூறினார். ஆயின் நூற்றுக்கு மூவராயுள்ள பிராமணருக்குத் தொன் நூற்றேழு பேராயுள்ள சூத்திரர்கள் ஏன் அடிமைகளாய் உள்ளனர் என்று பெரியார் வினவினார். ஆரியர்கள் மார்தட்டிப் போரிட்டு அடிமைகளாக்கவில்லை . கடவுள், தலைவிதி, கருமம் மறுபிறப்பு முதலியவற்றால் திராவிடரை அடிமைப்படுத்தி விட்டனர் என்றார். இதற்காகப் பிராமணர்கள் சாங்கியம், சடங்குகள், ஜெப தபங்கள் முதலியவற்றைச் செய்து சமுதாயத்தின் உச்சந்தலையில் உட்கார்ந்து விட்டனரென்றார். பிராமணர்கள் பேச்சு, வழக்கு, நடை, உடை, பாவனைகளைப் பின்பற்றிப் பலரும் பிராமணர்களைப்போலவே உணவு, உடை, உரையாடல் முதலியவற்றை மாற்றிக் கொண்டனர். இதையே 'பிராமணர் மயமாதல்' அல்லது 'சமற்கிருத மயமாதல்' என்கிறோம். ஆள்பெயர், இடப்பெயர் முதலியனவும் சமற்கிருத மொழியில் எழுதப்பட்டன. ஒவ்வொரு சாதிக்கும் ஒரு பிறப்பியல் புராணக்கதை தோன்றியது. சந்திர குலம், சூரியகுலம், இராமர் - இலக்குமணர் குலம், பஞ்சபாண்டவர் குலம், சிவன்குலம், திருமால் குலம் என்றும் பல 'அவதாரபுருடர்களின் பெயராலும், சாதிகளும், குலங் கோத்திரங் களும் ஏற்பட்டன. ஒவ்வொரு குலத்திற்கும் குல வரலாறு தோன்றி யது. இதனால் ஒவ்வொரு சாதியும் புராணக்கதை நாயகர்களோடு தொடர்புபடுத்திக்கொண்டு உயர்வு தேடிக்கொண்டது. பிராமணர்களைப் போலவே, சமயச் சடங்குகளையும், சாங்கி யங்களையும், சம்பிரதாயங்களையும் பின்பற்றிய சைவ வேளாளர் கள், செட்டியார்கள், முதலியார்கள், வைதீக சாதிகள் ஆகியோர் பிறரைத் தொடவும் மறுத்தனர். இடையர்கள் யாதவர் என்றும். செம்படவர் பரத்துவாச குலத்தவர் என்றும், நாவிதர் மருத்துவர் என்றும், வண்ணார் இராசாக்கள் என்றும், கம்மாளர் விசுவ பிராம் ணர்கள் என்றும், வன்னியர் வன்னியகுலச் சத்திரியர், அக்கினி குலச்சத்திரியர் என்றும், சானார் சான்றோர் என்றும், இவ்வாறாகப் பல சாதிகளும், பலவாறு சாதி உயர்வை உயர்த்திக் கொண்டன.. மேலும் ஒவ்வொருவரும் தம் பெயரோடு சாதியைக் குறிக்கும் பட்டப் பெயர்களையும் ஒட்டிக் கொண்டனர். கம்மாளன் ஆச்சாரி என்றும், தட்டான் பத்தர் என்றும், ஆதிதிராவிடன் பிள்ளை என்றும் வைத்துக் கொண்டனர். பிராமணர்கள் பட்டர், பட்டாச்சாரி சாஸ்திரி, சர்மா முதலிய பட்டப் பெயர்களை ஒட்டிக் கொண்டனர். இத்தோடு வெள்ளைக்காரன் கொடுக்கும் சர், திவான் பகதூரர், இராவ் பகதூர் முதலியவற்றைப் பெயருக்கு முன்னால் ஒட்டிக் கொண்டனர். அன்றைய சமுதாயத்தில் சாதி உயர்வும், சாதித் திமிருமில்லாத தமிழனே இல்லை. இவர்களை ஒன்றுபடுத்தி ஓரணியில் நிறுத்தி 'திராவிடர்' என்ற ஒரு திரளாகச் செய்த பெருமை தந்தை ஈ.வே.இராம் சாமியையே சாரும். சூத்திரர்களிடம் முதலியார், செட்டியார், ரெட்டியார், உடை யார், மூப்பனார், தேவர், பிள்ளை முதலிய உட்பிரிவுகளும் ஏராளம். எடுத்துக்காட்டாக, உயர் சாதியெனக் கூறிக் கொள்ளும் பிராமணர் களிடமே 19முக்கிய உட்பிரிவுகளும் அவை ஒவ்வொன்றுக்குள்ளும் பல்வேறு பிரிவுகளும் இருந்தன. இதைப் போலவே வேளாளரிடம் 54 உட்பிரிவுகளும், உடையாருக்குள் 13 உட்பிரிவுகளும், கம்மாள் ருக்குள் 10 உட்பிரிவுகளும், கணக்கருக்குள் உட்பிரிவுகளும், கைக்கோளருக்குள் 11 உட்பிரிவுகளும், வன்னியருக்குள் 15 உட்பிரிவுகளும், ஆதிதிராவிடருக்குள் 7 உட்பிரிவுகளும் இருந்தன. மிக உயர்ந்த பிராமணன் முதல், மிகத் தாழ்ந்த ஆதிதிராவிடன் வரையிருந்த சாதிப் பிரிவுகளால் தமிழ்ச் சமுதாயம் நெல்லிக்காய் முட்டையெனச் சிதறிக் கிடந்தது. அன்றைய இந்தியாவில் இந்தியனு மில்லை! தமிழகத்தில் தமிழனுமில்லை! செட்டியார், உடையார், தேவர் பிள்ளை முதலிய சாதிகள் தான் இருந்தன. கடந்த கால வரலாற்றை நோக்கும் போது, தமிழகத்தை மராத் தியன், தெலுங்கன், கன்னடக்காரன், மலையாளி ஆகியோரும் இசு லாமியனும், போர்த்துக்கீசியனும், டச்சுக்காரனும், ஃபிரெஞ்சுக் காரனும், ஆங்கிலேயனும் ஆண்டதால் இவர்களின் இனமரபினர் தமிழகத்தில் குடியேறிச் சாதிகளையும் வணங்கும் கடவுள்களை யும், பண்பாடுகளையும்கூடப் பன்மடங்கு பெருக்கி வேற்றுமையில் மேலும் வேற்றுமை கண்டுவிட்டனர். வரலாற்றை நோக்கும் போது எவன் ஆட்சிக்கு வந்தாலும் பிராமணர் மட்டும், பிரம்ம தேயங்களை யும், தேவ தானங்களையும் பெற்று அரசனே ஆராதனை செய்யு மாறு நிலைகுலையாமல் இருந்துள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சியிலும் நூற்றுக்கு நூறு ஆங்கிலம் கற்றவராகி அரசியல் அதிகாரங்களில் அமர்ந்து விட்டனர். சாதிச் சண்டைகளிலே திளைத்துவிட்ட திராவிடர்கள் அந்தச் சாக்கடையில் இருந்து மீளாமல் பிராமணரைப் பற்றிச் சிந்திக்கவும் முடியவில்லை. இந் நிலையில்தான் தமிழகத்தில் சமூக நீதி கேட்டு ஒரு இயக்கம் தோன்றியது. 1. தந்தை பெரியாரும் தன்மான இயக்கமும் இருபதாம் நூற்றாண்டில் தமிழரின் தன்மான உணர்ச்சிகளைத் தட்டியெழுப்பி, விழிப்படையச் செய்தவர் தந்தை பெரியார் இராம சாமியாவார். இவர் கோவை மாவட்டம் ஈரோட்டில் வேங்கடப்ப நாயக்கருக்கும், சின்னத்தாயம்மையாருக்கும் 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 17 ஆம் நாள் இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவருக்கு மூத்தவர் கிருட்டிணசாமி 1877 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் நாள் பிறந்தவர். இராமசாமிக்குப் பொன்னுத்தாயம்மாள், கண்ணம்மாள் என்ற தங்கையர் இருவர் உண்டு. இளமைப் பருவத் தில் தன் தந்தையாரின் சிற்றன்னையிடம் வளர்ந்த இராமசாமி கட்டுப் பாடற்ற சிறுவனாகவே வளர்ந்து விட்டார். இதனால் இவருக்கு இளமை முதலே மனவுறுதியும், துணிவும், தனித்துச் செயல்படும் தன்மையும் இயற்கையாகவே வளர்ந்தன. தொடக்கப் பள்ளியில் சேர்க்கப்பட்ட இவருக்குப் படிப்பில் நாட்டமில்லை. ஆனால் துடுக் கான செயல்கள் எதிலும் தயக்கமின்றி ஈடுபட்டார். அக்காலத்தில் உயர் சாதிகளுக்குள்ளேயே உயர்வு தாழ்வுகள் இந்தன. இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமலும், இவற்றில் பெரியோர்களின் கட்டுதிட்டங்களுக்கு அடங்காமலும் எல்லோருடைய வீட்டிலும் உண்ணும் பழக்கமும், எவரையும் தன் அரிய நண்பராக்கிக் கொள்ளும் நல்ல உள்ளமும் இராமசாமியிடம் வளர்ந்தன. ஐந்தாம் வகுப்போடு அவர் படிப்பு முடிந்தது. தந்தையாருடன் சேர்ந்து வணிகம் செய்யத் தலைப்பட்ட இராமசாமி, எளிய தன் தந்தை உழைப்பால் உயர்ந்ததைப் போலவே தானும் தொழில் துறையில் விரைந்து முன்னேறினார்; பெரும் செல்வர் ஆனார். செல்வம் கொழிக்கும் தன் வீட்டில் பத்தர்களும், பண்டிதர் களும் சுட்டி கடவுள், தலைவிதி, தொல்கதைகள் முதலியவற்றைப் பற்றி விரிவான சொற்பொழிவுகளைச் செய்யக் கேட்ட இவர் அவர் களிடம் பகுத்தறிவின் அடிப்படையில் பல வினாக்களை எழுப்பு வார். தலைவிதி என்பது வெறும் புரட்டு, நமது நன்மை தீமைகளுக்கு நாமே கரணியம் தலைவிதியின் படி தான் எல்லாம் நடக்கும் என்பது அறிவில்லாத்தனம் என்று தனது பன்னிரண்டாம் அகவையிலேயே இவர் வாதித்தார். சாதிப் பிரிவினையை அடியோடு வெறுத்த பெரியார், கடவுள் தொல்கதைகள், மறைகள், சாத்திரங்கள், சாதிப் பாகுபாடுகள் பற்றிய சொற்பொழிவுகளைக் கேட்டும், நூல்களைப் படித்தும், அவற்றைப் பல்வேறு கோணங்களில் ஆய்ந்தும், இவை தன்னலம் கொண்ட மக்களால் புனையப்பட்டவை என்ற முடிவுக்கு வந்தார். மாந்தருக்குள் சாதி இல்லை. ஆடு, மாடு, நாய், பன்றி போன்ற விலங்குகளைப்போல் மாந்தரினம் தனித்துக் காணப்படாமல் ஒன்றாகக் காணப்படுகிறது. எந்தச் சாதி ஆணும், எந்தச் சாதிப் பெண்ணை மணந்தாலும் இன உற்பத்தியை ஆக்கலாம். ஆனால் விலங்குகளுக்குள் வேறுபட்ட இனங்களைச் சேர்த்தால் இன உற்பத்தியைப் பெருக்க முடியாது. இந்த இயற்கை விதியின்படி பார்த்தால் மாந்தருக்குள் சாதி இல்லை என்பது பெரியாரின் முடிவு: இராமசாமி தனது பத்தொன்பதாம் அகவையில் பதின்மூன்று அகவையே நிரம்பிய நாகம்மையைக் கடிமணம் புரிந்து கொண்டார். தன்னைப் போலவே பகுத்தறிவோடு விளங்கும்படியும், பொதுநலப் பணியில் ஈடுபடும்படியும் அவ் வம்மையாரை உருவாக்கினார். பழுத்த வைதிகரான இவருடைய அண்ணன் கிருட்டிணசாமியும் தம்பியின் பாதையைப் பின்பற்றினார். பல கோயில்களுக்கும், அற நிலையங்களுக்கும், காவலர்களாக இருந்த இவருடைய குடும்பத் தினர் இவருடைய பகுத்தறிவுப் பாதையில் சென்று மக்கள் பணியே மகேசன் பணியெனக் கொண்டனர். தன் மனைவி கோயிலுக்குப் போவதையும் தாலி அணிவதையும் தானே விடும்படி செய்தார். தாவி பெண்களின் அடிமைச் சின்னம் இல்லையாயின் ஆண்களும் தாலி அணிவதுதான் சரிசமம் என்பது அவருடைய கோட்பாடு. தன் இருபத்திரண்டாவது அகவையில் இவர் துறவு பூண்டு காசிக்குச் சென்றார். அங்குத் துறவிகள், மடத் தலைவர்கள் முதலியோரின் வெளித்தோற்றங் களையும், மறைமுக வாழ்க்கை முறைகளையும், நேரடியாகக் கண்டு தன் பாதைக்கு ஐயம், திரிபு, மயக்கம் இல்லாமல் செய்து கொண்டு மீண்டும் ஈரோடு திரும்பி முடுக்கமாய்ப் பொதுப்பணியில் ஈடுபட்டார். 1919 ஆம் ஆண்டு ஈரோட்டு நகரத் தந்தையானார். வேறுபல பொது மன்றங்களிலும் ஈடுபட்டு மக்களுக் காக உழைத்தார். பெரியாரும் பேராயக் கட்சியும் இவர் ஈரோட்டு நகர மன்றத் தலைவராக இருந்த போது சேலம் நகர மன்றத் தலைவராகப் பணியாற்றியவர் சக்கரவர்த்தி இராச கோபாலாச்சாரியார் ஆவார். இருவரும் பொதுநலப் பணியில் தனறித் திளைத்து நெருங்கிய நண்பர்களானார்கள். சி. இராசகோபாலாச்சாரி யார் தனது நண்பர் பா. வரதராசுலு நாயுடுவுடன் ஈரோட்டில் இராம் சாமியார் வீட்டில் அடிக்கடி வந்து தங்கி விருந்துண்டு மகிழ்வார், இக்காலத்தில் நாடெங்கிலும் விடுதலைக் கிளர்ச்சிகள் கொழுந்து விட்டெரிந்தன. தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனார் தனது 'நவசக்தி" என்னும் தாளிகையால் தனித் தமிழ் உணர்வையும், விடுதலை வேட்கையையும் வளர்த்தார். 1908ஆம் ஆண்டு முதலே பேராயக் கட்சியில் ஈடுபட்டு, தொடர்ந்து விடுதலை இயக்கப் பணி களைக் கவனித்து வந்த பெரியார் 1919 ஆம் ஆண்டு அக் கட்சியில் சேர்ந்தார். அப்போது அவருக்கு இராவ்பகதூர் பட்டம் தருவதாக ஆளும் வெள்ளையர் கூறியும் அதனை மறுத்து முடுக்கமாய் நாட்டு விடுதலைப் பணியில் ஈடு பட்டார். 1920-ல் காந்தியார் தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்தின் தமிழ்நாட்டுத் தூணாகப் பெரியார் மாறினார் தீண்டாமை யொழிப்பு, மதுவொழிப்பு ஆகியவை அவரைப் பெரிதும் கவர்ந்தன. தனது வாணிகம் பஞ்சாலை ஆகிய வற்றை முடினார். காங்கிரசுக் கட்சியின் முழுநேரப் பணியாளரானார். மதுவிலக்குக் கொள்கையை வலியுறுத்தும் பொருட்டுத் தனது நிலத்திலிருந்த தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார். கைநூல் (கதர்) உற்பத்தியைப் பெருக்கத் தன் தோள்மீது கைநூல் (கதர்) துணிகளைச் சுமந்து வளர், ஊராக நடந்து சென்று விற்றார். தன் மனைவி தங்கையரையும் இவற்றில் ஈடுபடுத்தினார். இவருடைய எண்பது அகவை நிரம்பிய அன்னையாரும் கதர் உடுத்தினரெனில் இவருடைய கதர் இயக்கத்தின் வெற்றியை நாமே ஊகிக்கலாம். மதுக் கடைகளின் முன் மறியல் செய்தார். பல முறை சிறைக்கும் சென்றார் கதரைக் காங்கிரசுக் கட்சியோடு இணைத்து அதை ஒரு சிறந்த நாடு சார்ந்த தொழிலாகவும், அதன் வழி ஒற்றுமையையும், சமத்துவத்தை யும் இந்தியர் பெறும்படியும் செய்த பெருமை தந்தை பெரியாரையே சாரும். 1924-ல் பெரியார் காங்கிரசுக் கட்சியின் தலைவரானார். பத்தர்களும், பண்டிதர்களும் குடிகொண்டிருந்த தன் வீட்டைத் தொண்டர்களும், தேசியவாதிகளும் குடிகொள்ளும்படி செய்தார். தேசிய இயக்கத்தின் அறச்சாலையாக அவர் வீடு மாறியது. அன்னை நாகம்மை அமுதூட்டும் அறத் தாயானார். - - - . அக்காலத்தில் அவர் வீட்டையறியாத காங்கிரசுக் கட்சித் தொண்டரில்லை. அதைப் போலவே அவர் பாதம் படாத ஊர் தமிழ் நாட்டில் இல்லை. அவருடைய முடுக்கமான சொற்பொழிவுகளும் நடைமுறைச் செயல்களும் பல ஆயிரம் தொண்டர்களைக் காங்கிரசுக் கட்சிக்கு இழுத்தன. அவர்களுள் காமராசரும் ஒருவர். நயன்மை மன்றங்களுடன் ஒத்துழைக்கக்கூடாது என்பது காந்தியாரின் ஒத்து ஏழையாமை இயக்கத்தின் ஒரு கூறுபாடு. பெரியார் தன் குடும்பத்திற் குச் சேர வேண்டிய ஐம்பதினாயிரம் உருபாயை நயன்மை மன்றம் செல்ல மறுத்ததால் இழந்தார். இவரைப் போலவே இவருடைய துணைவியார் நாகம்மையாரும், தங்கை கண்ணம்மாளும் கள்ளுக் கடை மறியல் முதல் பல போராட்டங்களில் ஈடுபடுவதற்கு வழி வகுத்தவர்கள் இவர்களே. பேராயக் கட்சிக்கும், அரசுக்கும் உடன்பாடு ஏற்பட்டு, மறியல் போராட்டங்களை நிறுத்த முடிவு செய்யப்பட்ட போது காந்தியார், 'மறியலை நிறுத்துவது என் கையில் இல்லை. அது ஈரோட்டிலுள்ள இரண்டு பெண்களிடம் இருக்கிறது. அவர்களைக் கேட்டாக வேண் டும்,' என்றாராம் ஆயின் பெரியாரின் பாசறையில் படைக்கப்பட்ட படையின் வலிமையை நாம் சற்று ஊன்றிப் பார்த்தல் வேண்டும். கள்ளுக்கடை மறியல் கருத்துரு தந்தவர். பெரியாரே, இதனை அவரே தன் வீட்டில் காந்தியார், இராசகோபாலாச்சாரியார் முதலியோ ருடன் பேசித் தீர்மானமாக்கித் தானே தொடங்கினார். சுயராச்சியக் கட்சி வீண் போராட்டங்களில் ஈடுபடுவதைவிட ஆட்சிமுறையில் பங்கேற்று நாட்டுக்கு நன்மை செய்யலாமென்ற கோட்பாடுடன் தொடங்கப் பெற்றதுதான் சுயராச்சியக் கட்சி ஆகும். இதனைத் தொடங்கியவர் சி.ஆர். தாசு ஆவார். இதனைப் பெரியாரும், காந்தி 43 யாரும், இராசகோபாலாச்சாரியாரும் ஆதரிக்கவில்லை. சென்னை மாநிலத்தில் முழுவலிமை பெற்ற ஆட்சிபீடத்திலமர்ந்த கட்சி நீதிக் கட்சி ஆகும். இது பார்ப்பனர் அல்லாதார் கட்சி இது 1920 முதல் 1935 வரை மாற்றப்பட்ட துறைகளின் பொறுப்புக்களை ஏற்று நடத்தி வந்தது. இக்கட்சி சமுதாயச் சீர்த்திருத்தங்களையும் மாநிலத் தன் னாட்சிக் கோட்பாட்டையும் கொண்டது. சுயராச்சியக் கட்சி பார்ப்பனர்களின் குகையாயிற்று. நீதிக் கட்சியை ஒழிக்க முடுக்கமாய்ப் பாடுபட்டது. இதன் உள்நோக்கத்தை அறிந்தே பெரியார் சுயராச்சியக் கட்சியை வெறுத்தார். வைக்கம் வீரர் இச் சமயத்தில் பெரியாரை உலகறியச் செய்யும் நிகழ்ச்சி யொன்று கேரளத்திலுள்ள வைக்கம் என்ற ஊரில் நடந்தது. அவ்வூரில் உள்ள தெருவில் தாழ்த்தப்பட்டோர் நடக்கக்கூடாது என்ற கட்டுப்பாடு வழிமுறையாக இருந்தது. அதனை உடைத்தெறிந்து தங்கள் உரிமையை நிலைநாட்டத் தாழ்த்தப்பட்ட மக்கள் உறுதி பூண்டு ஒரு மாபெரும் அமைதிப் போரிலிறங்கினர். காங்கிரசுக் கட்சி இவர்களுக்கு ஆதரவளித்தது. சியார்சு சேமாசபு என்பார் தலைமை தாங்கினார். தொடர்ந்து பலர் சிறை செய்யப்பட்டனர். ஈரோட்டில் இருந்து பெரியார் வைக்கம் சேர்ந்து தலைமையேற்று இப்போராட்டத் தை நடத்தினார். இதனால் சிறைத்தண்டனையும் பெற்றார். இவரைத் தொடர்ந்து இவருடைய மனைவியார் நாகம்மையும் இப்போருக்குத் தலைமை தாங்கினார் இவ்வாறு தொடர்ந்த வைக்கம் போராட்டம் வெற்றியில் முடிந்தது. சத்தியாக்கிரகம் அல்லது சாத்வீகப் போர் என்ற முதல் இயலைத் தொடங்கியவரும், அதில் வெற்றி பெற்றவரும் தந்தை பெரியாரே ஆவார். இதனால் இவர் 'வைக்கம் வீரர் தினப்போற்றப்பட்டார். தீண்டாமைக்காகப் போராடி இருமுறை சிறை சென்ற பெருமையும் இவரையே சேரும். பேராயக் கட்சியைத் துறத்தல் தந்தை பெரியார் கதர் இயக்கத்தை முடுக்கமாக்கி, அதைக் காங்கிரசுக் கட்சியுடன் இணைத்துச் செயல்பட்டதால் கதரைத் தங்களின் கொள்ளைக் கிடங்காக்கிப் பணம் திரட்டினார்கள், வைக்கம் போரால் தந்தையின் உள்ளத்தை நாடறிந்து கொண்டது. இந்நிலையில் காங்கிரசுக் கட்சிக்குள்ளேயே தீண்டாமை தலைவிரித் தாடியது. இதனைத் தந்தை பெரியார் முழுமூச்சுடன் எதிர்த்து மாந்தனை மாந்தனாக மதிக்காதவரை விடுதலையும் வேண்டாம், வெங்காயமும் வேண்டாமெனக் கூறினார். குருகுலப் போராட்டம் , பேராயக் கட்சியின் இளைஞர்கள் நாட்டுப்பற்றுடன் ஒன்று பட வேண்டுமெனும் நோக்குடன் சாதி, சமய வேறுபாடின்றி நாம் இந்தியர் என்னும் உணர்வு பெற இளைஞரின் பயிற்சிக் கூடமாகச் சேரன்மாதேவியில் தமிழ்நாட்டுக் குருகுலம் என்ற நிலையத்தை ஏற்படுத்தியது. அதற்குத் தமிழ்நாட்டுப் பேராயக் கட்சியும், பார்ப்பனர் அல்லாத பலரும் பண உதவி செய்தனர் தந்தை பெரியார், பா. வரதராசுலு நாயுடு, திரு. வி. கலியாண சுந்தரனார். கானாடுகாத்தான் வை. சு. சண்முகம் செட்டியார்) முதலியோர் பெரும் தொகையளித் தனர். அப்பொழுது தமிழ்நாட்டு காங்கிரசுக் கட்சியின் செயலாளராக இருந்தவர் தந்தை பெரியார். இவர் பேராயக் கட்சியில் இருந்து குரு குலத்திற்குப் பத்தாயிரம் ரூபா கொடுக்க முடிவு செய்து முதலில் ஐயாயிரம் கொடுத்தார். ஆனால் குருகுலத்தில் சாதி வேற்றுமை தலை தூக்கியது. அதன் தலைவராக இருந்த வ.வெ. சுப்பிரமணிய அய்யர் காங்கிரசுக் கட்சியின் ஒரு பழுத்த தேசியவாதி பார்ப்பனச் சிறுவர் களையும், பார்ப்பனரல்லாதவர்களையும் உணவு, உடை, உறை விடம், குடிநீர் முதலிய யாவற்றிலும் தனித்தனியே பிரித்து வைத்து சாதிப் பிரிவினையை வெளிப்படையாகக் குருகுலத்தில் வளர்த்தார். இதனையறிந்த காங்கிரசுக் கட்சியின் செயலாளரான பெரியார், சாதிப்பிரிவினையை வளர்க்கும் குருகுலத்திற்குக் காங்கிரசுக் கட்சி கொடுப்பதாய்க் கூறிய மீதி ஐயாயிரத்தைக் கொடுக்க மறுத்தார். ஆனால் துணைச் செயலாளராக இருந்த பார்ப்பனரிடம் இருந்து வ. வெ. சுப்பிரமணிய அய்யர் மீதி ஐயாயிரத்தையும் வாங்கிக் கொண்டார். இதனால் தமிழ்நாட்டுக் குருகுலம் ஒழிப்புப் போராட்டம் தொடங்கி யது. பெரியாருடன் டாக்டர் வரதராசுலு நாயுடு), திரு.வி. கலியாண சுந்தரனார், ஏசு.இராமநாதன், என்.தண்டபாணி (பிள்ளை ) ஆகியோரும் கலந்து கொண்டனர். டாக்டர் நாயுடுவே இதற்குத் தலைமைதாங்கினார். நாடெங்கிலும் பார்ப்பன சாதிவெறியைக் கண்டித்து போர் மூண்டது. காந்தியார் தலையிட்டுக் கூறியும் வ.வே. சுப்பிரமணிய அய்யர் குரு குலத்தில் பார்ப்பனப் பிள்ளைகளோடு மற்ற பிள்ளைகள் சேர்ந்து இருக்க முடியாதென்றும் பார்ப்பனன் பாமரனினும் மேலானவன் என்றும் கூறிவிட்டார். போராட்டம் வலுத்தது. அக்குருகுலம் வளர்த்த தமிழர்கள் மேலும் உதவி செய்ய மறுத்தனர். குருகுலம் தானே மூடப்பட்டு விட்டது. பேராயக் கட்சியில் சாதி வேற்றுமை மேற்கூறிய நிகழ்ச்சிக்குப் பின் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்ற இனவேற்றுமையும், சாதி உணர்ச்சியும் பேராயக் கட்சியில் வெளிப்படையாகக் காணப்பட்டது. காங்கிரசுக் கட்சியின் தலைவ ராக டாக்டர் வரதராசுலு நாயுடுவும், செயலாளராகத் தந்தை பெரியா ரும் இருந்தனர். திருச்சியில் கூடிய மாநாட்டில் சூத்திரர்கள் பார்ப்பன எதிர்ப்புணர்ச்சியுடன் நடக்கின்றனர் எனக்கூறி இம் மாநாட்டில் கண்டனத் தீர்மானம் கொண்டு வந்ததோடு பர்.டி. எசு. இராசன், சி. இராசகோபாலாச்சாரி என்.எசு. வரதாச்சாரி, கே, சந்தானம், பர். சாமி இந்திய மறுமலர்ச்சி இயக்கங்களும் தமிழ்நாட்டு மாமலர்ச்சி இயக்கங்களும் 245 நாத (சாசுதிரி) ஆகிய ஐந்து பார்ப்பனரும் கட்சியில் இருந்து விலகினர், இதனால் கட்சிக்கும் நாட்டு விடுதலைக்கும் சாதி வேறுபாட்டிற்கும் தொடர்பில்லை என்பதும், நாடு விடுதலையானலும் பார்ப்பனர் உயர்ந்தவராகவே, எசமானர்களாகவே இருப்பார்களென்பதும் மக்களுக்குத் தெளிவாகியது. பார்ப்பனர் பேசும் சாதியற்ற சமுதாய மெனும் பேச்சின் திரை கிழிந்தது, அடுத்து, நீதிக்கட்சி அமைச்சரவையின் தலைவர் பனகல் அரசர் அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் என்ற சட்டத்தைக் கொண்டு வந்தார். இதனை யெதிர்த்து நாடெங்கிலும் இருந்த பார்ப்பனர்கள் போர்க்கொடி உயர்த்தினர். பார்ப்பனரையே பெருவாரியாகக் கொண்ட வழக்குரைஞர் சங்கமும், போகத்தில் திளைத்த மடாதிபதி களும், கோயில் சொத்துக்களைக் கொள்ளையடித்த பூசாரிகளும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். பேராயக் கட்சியிலிருந்த பார்ப்பனரும் முடுக்கமாய் இதில் பங்கேற்றனர். ஆனால், பெரியார் மட்டும் இச் சட்டத்தை ஆதரித்தார். இவருக்கு உறுதுணையாக டாக்டர். நாயுடு வும், ஏசு, இராமநாதனும், திரு. வி. கலியாணசுந்தரனாரும் நின்றனர். இதனாலும் பார்ப்பனரின் தன்னலப் பாதுகாப்புணர்ச்சியும், சாதி வெறியும் தமிழர்களால் நன்றாக உணரப்பட்டு விட்டது, வகுப்புவாரிப் படிநிகரானியம் பார்ப்பனர், பேராயக் கட்சியின் பெயரால் தங்களின் நலனை யும் சாதி வேற்றுமைகளை வளர்ப்பதையறிந்த பெரியார் நூற்றுக்கு மூவராயுள்ள பார்ப்பனர் அரசப்பணிகள் அனைத்திலும் வீற்றிருப்ப தையும், மீதியுள்ள 97 பேர் படியாதவராய், பாமரராய், குற்றேவல் ராய், உடல் உழைப்பையே நம்பி வாழ்பவர்களாயிருப்பதையும் மாற்றியமைக்க விரும்பினார். பார்ப்பனரல்லாதாருக்கு மக்கள் தொகைக்கேற்ப அரசுப்பணி, கல்வி முதலியவற்றில் பங்கு அளிக்க வேண்டுமென்றார். இதற்காக அவர் காங்கிரசுக் கட்சியின் மாநில மாநாடுகளில் வகுப்பு வாரிப்படி நிகராளியத் தீர்மானங்களைக் கொண்டு வந்தார். ஆனால் காங்கிரசுக் கட்சிப் பார்ப்பனர்களால் இது மாநாடு தோறும் தோற்கடிக்கப்பட்டது. 1920 ஆம் ஆண்டில் இருந்து 1925ஆம் ஆண்டு வரை பெரியாரும் தொடர்ந்து இதனைக் கொண்டு வந்து தோற்றார். சோர்வு அடையும் வழக்கமற்று அவர் 1925 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடந்த தமிழ்நாடு காங்கிரசுக் கட்சியின் மாநில மாநாட்டில் இந்த தீர்மானங்களைக் கொண்டு வந்தார். மரீதாட்டுத் தலைவர் திரு. வி. கலியாண சுந்தரனாரும் இதனை மறுத்தார். இனி காங்கிரசுக் கட்சியில் இருந்து கொண்டு பார்ப்பனரல்லாத கோடான கோடி மக்களுக்குப் பாடுபட முடியாது என்றும், காங்கிரசுக் கட்சி பார்ப்பனரின் குகை என்றும் கூறி மாநாட்டினின்றும் வெளியேறி னார். இதனை முன்கூட்டியே அறிந்த காங்கிரசுக் கட்சி பார்ப்பனர்கள் சென்னை மாகாண சங்கம் தேசிய சங்கம் என்னும் இரண்டு சங்கங் களைத் தோற்றுவித்துப் பார்ப்பனரல்லாதாரைக் கொண்டே பார்ப் பனர் அல்லாதவரை எதிர்த்தனர். சுயராச்சியக் கட்சியும் இப்பணியில் முழுப் பங்கேற்றது. இம் மூன்று கட்சிகளும் பார்ப்பனர் பாசறைகளா யின. பார்ப்பனரல்லாதார் பகடைக் காய்களாய் இவற்றில் உருண்ட னர். இதனால் இது வரை ஆட்சிப் பொறுப்பிலிருந்த நயன்மைக் கட்சி 1926 ஆம் ஆண்டு தேர்தலில் தோற்கடிக்கப்பட்டது. சுயராச்சியக் கட்சி வெற்றி பெற்றது. டாக்டர். சுப்பராயன் தலைமையேற்று அமைச்சரவையைச் சுயராச்சியக் கட்சி பின் நின்று நடத்தியது. தன்மான இயக்கம் (சுயமரியாதை இயக்கம்) 1925-ல் காஞ்சிபுரம் மாநாட்டில் காங்கிரசுக் கட்சியைத் துறந்து வெளியேறிய பெரியார் தன்மான இயக்கத்தைத் (சுயமரியாதைக் கட்சி தோற்றுவித்தார். தம் கருத்துகளை வெளியிட 'குடியரசு" எனும் கிழமையேட்டையும் தொடங்கினார். நாடெங்கிலும் தன்மான இயக்கச் சொற்பொழிவுகளைத் தொடர்ந்து நடத்தினார். தமிழர்கள் வீறுகொண்டனர். 1926-ல் மதுரையில் பார்ப்பனரல்லாதார் மாநாடு கூட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாடெங்கிலும் பல மாநாடுகள் நடந்தன. பார்ப்பனரல்லாதார் பலரும் பெரியாரைப் பின்பற்றினர், காலப் போக்கில் காங்கிரசுக் கட்சி, இந்துச் சமயம், பார்ப்பனர் ஆகிய முன்றையும் ஒழித்தால் நாடு நலம் பெறும் என்னும் நிலைக்கு பெரியார் வந்தார். காந்தியார் இந்துச் சமயத்தையும் சாதிப்பிரிவினை யையும், மூட நம்பிக்கையும் ஆதரித்ததால் அவரிடம் நம்பிக்கை இழந்தார். 1929 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 17, 18 நாள்களில் செங்கழு நீர்ப்பட்டில் முதல் மாநிலத் தன்மான இயக்க மாநாடு நடந்தது. டபிள்யூ. பி.ஏ, சவுந்தரபாண்டியன் தலைமையேற்க, வயவர், பி.டி. இராசன், சுப்பராயன் முதலியோர் இதில் பங்கேற்றுக் கொண்டனர். தீண்டாமை, சாதிவேற்றுமை, சாதியைக் குறிக்கும் பட்டப்பெயர்கள், புரோகிதம் முதலியவற்றைத் துறக்கும்படி தீர்மானங்கள் நிறைவேறின சாமி கும்பிடத் தரகன் தேவையில்லை என்றும், பெண்களுக்குச் சம் உரிமை வேண்டும் என்றும் கூறப்பட்டன. தன்மான இயக்கம் தமிழகத்தில் சூறாவளியெனச் சுழன்று வளர்ந்தது. பர். சுப்பராயன், வயவர், சண்முகம், வயவர். பன்னீர் செல்வம், எம். கே. ரெட்டி, வயவர்.எ. இராமசாமி எசு. இராமச்சந்தி ரன், சி.டி. நாயகம், எசு. இராமநாதன், எசு. குருசாமி, சாமி சிதம்பரனார், அ. பொன்னம்பலனார், கே.வி. அழகர்சாமி, ஏ.எச. அருணாசலம், சொ. முருகப்பர்; எசு,வி, இலிங்கம், சி.எ+ அய்யாமுத்து, மாயவரம். சி. நடராசன், நாகைமணி, என்.பி. காளியப்பன், பி.சு. தண்டபாணி ச. ம. சி. பரமசிவம், கோவை ஏ.ஆர், சிவானந்தம் அருப்புக்கோட்டை கருப்பையா, சித்தக்காடு: இராமையா, திருமதி இராமாமிர்தம் 247 ஜே. எசு, கண்ணப்பர், பூவாளூர். செல்வ கணபதி முதலிய பல ஆயிரம் பேர் நாடெங்கிலும் சுற்றித் தன்மான இயக்கத்தைப் பரப்பினர். இதன் பயனாகப் பல கலப்புத் திருமணங்களும், விதவை மணங்களும் புரோகிதரில்லாமல் நடந்தன. சாதி வேறுபாடின்றி யாவரும் சேர்ந்துண்ணும் வழக்கமும், சாதிகளைக் குறிக்கும் பட்டங் களைத் துறத்தலும் நடைமுறைக்கு வந்தன. 1930-ல் நீதிக்கட்சி வெற்றி பெற்றதும், மூடப்பழக்கங்கள் மறையத் தொடங்கின. தொல் கதைகள், இதிகாசங்கள், ஆரியமறைகள், சாத்திரங்கள் முதலிய வற்றைப் பாமரரும் அறிந்தனர். அவற்றில் கூறப்பட்ட பகுத்தறிவுக்கு ஒவ்வாதவற்றை வெறுத்தனர். தமிழர் தன்மானம் பெற்றனர். அரசியல் கல்வி, பொருளியல் முதலியவற்றில் தலைவிதியை மறுத்து முன்னேறினர். ஆகவே, தமிழகத்தில் ஒருசமுதாய மறுமலர்ச்சி யைக் கண்டது இத் தன்மான இயக்கமே ஆகும். "சமநெறி (சமதர்ம) இயக்கம் பெரியாரின் தன்மானக் கோட்பாடுகள் நாடோறும் வளர்ந்தன. குடியரசுத் தாளிகையும், ரிவோல்ட் என்ற ஆங்கில ஏடும் இக்கோட் பாடுகளை மக்களிடையே பரப்பின. இந்நிலையில் பெரியார் 1929 ஆம் ஆண்டு மலேயா சென்று அங்கிருந்த தமிழர்களை ஒன்றுபடுத் தினார். தன்மான இயக்கத்தையும், பகுத்தறிவையும் அங்கெல்லாம் அறியச் செய்தார். சனவரி 1930-ல் இந்தியாவுக்குத் திரும்பிய போது காந்தியாரின் உப்புச் சத்தியாக்கிரகம் தொடங்க இருப்பதை அறிந்தார். காந்தியாரின் எத்தகைய போராட்டத்திலும் நமக்கு நம்பிக்கை இல்லை என்றார். ஏனெனில், முதலில் நம்மிடையேயுள்ள தீண் டாமை, சாதி, சமய, முதலாளிய, பார்ப்பானிய வல்லாண்மை ( ஆதிக் கங்கள்) ஒழிந்தால் வெள்ளையன் ஆட்சி தானே ஒழிந்து விடுமென் பது பெரியாரின் கருத்து. இதனை அறியாதார் அவரை நாட்டுக்கு இரண்டகம் செய்பவர் என்றும், நாட்டுப்பற்றே அற்றவர் என்றும் தூற்றினர். 1930 மே திங்கள் 10, 11 நாள்களில் ஈரோட்டில் தன்மான இயக் கத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடந்தது. இதனை இளைஞர் மாநாடு, பெண்கள் மாநாடு, மதுவிலக்க மாநாடு இசை மாநாடு முதலிய னவாகப் பிரித்து நடத்தினார். தனித்தனி தலைவர்கள் ஒவ்வொன்றுக் கும் தலைமை தாங்கினர். இது போன்ற மாநாட்டுப் பிரிவை முதலில் கண்டவரும் பெரியாரே இதில் இந்துக்களோடு இசுலாமியரும், கிறித்துவரும் கலந்து கொண்டனர். தீண்டப்படாதார்தாம் சமைத்துப் படைத்தனர். இத்தகைய சமவிருந்து முறையை முதலில் கண்ட வரும் பெரியாரே இம் மாநாட்டின் தலைவர் திரு. எம். ஆர் செயக்கர் -- ஆவார். 1930 - ல் நடந்த தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்றது. சுயராச்சியக் கட்சியின் சுவடு மறைந்தது. இதற்குப் பெரியாரின் தன்மான இயக்கத்தின் வளர்ச்சியே கரணியமாகும். ஆயினும், நீதிக் கட்சி பெரியாரின் கொள்கைகளை ஏற்க அஞ்சியது. 1931 ஆகஸ்டில் விருதுநகரில் தன்மான இயக்கத்தின் முன்றா வது மாநில மாநாடு நடந்தது. இதற்குத் தலைமையேற்றவர் வயவர் ஆர்.கே. சண்முகம் ஆவார். மூட நம்பிக்கைகளை ஒழிக்க வேண்டு மென்னும் கருத்தும், கதர்த்தொழில் இந்தியப் பொருளியலை வளர்க்காதென்னும் கருத்தும் இம் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டன. சமயம், மூட நம்பிக்கைகளுக்கு இருப்பிட மானது என்னும் கருத்தை இந்துக்களேயன்றி இசுலாமியரும், கிறித்தவரும் கூட எதிர்த்தனர். இயக்கத்திற்கு எதிரிகள் ஏராளமாயினர். ஆயினும் பகுத்தறிவைக் கூறும் பல அயல்நாட்டு நூல்களும், இந்துச் சமய இதிகாச, தொல் கதை, சாத்திரங்களிலுள்ள பகுத்தறிவுக்கு ஒவ்வாதவைகளும், சொற் பொழிவுகளாலும் வெளியீடுகளாலும் மக்களுக்கு விளக்கப்பட்டன, எதிர்ப்புக்கிடையே இயக்கம் வேகமாக வளர்ந்தது. வெளிநாட்டுப் பயணம் 1931 டிசம்பரில் தந்தை பெரியார் உலகச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார். எகிப்து. உருசியா, கிரீசு, துருக்கி, செர்மனி, ஃப்ரான்சு, சுபெயின், போர்த்துக்கல், இங்கிலாந்து, ஈழம் முதலிய நாடுகளைச் சுற்றிப் பார்த்தார். இந்நாடுகளில் பகுத்தறிவால் எப்படி முன்னேறியுள்ளன என்பதைக் கண்டு வியந்தார். 1932 நவம்பரில் நாடு திரும்பியதும் தமது இயக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்தினார். சமுதாயச் சீர்திருத்த இயக்கமாகவே செயல்பட்டதன்மான இயக்கம் இனி அரசியல் இயக்கமாகவும் செயல்பட வேண்டுமென்று தன்மான இயக்கத்திற்குள்ளேயே சமநெறி (சமதர்ம) இயக்கம் ஒன்றை உருவாக்கினார், பெரியார் உருசியாவைப் பின்பற்றுகிறாரென்றும், அரசியலில் ஈடுபடக் கூடாது என்றும், சிலர் தன்மான இயக்கத்தி விருந்தே வெளியேறினார்கள். இதனை 'ஈரோட்டுத் திட்டம்' என்றும் அழைத்தனர். ஆயினும் வழக்கப்படி பெரியாரின் பிடிவாதமே வென்றது, கட்சி வலுப்பட்டது. நெருக்கடி 1933 ஏப்ரலில் நாகம்மையார் இயற்கையெய்தினார். ஆனால், அன்றே பெரியார் திருச்சியில் தடை உத்தரவை மீறிப் பேசியதால் சிறை செய்யப்பட்டார். நவம்பர், 1933இல் கோவை மாவட்ட மாநாடு நடந்தது. இதில் அரசைத் தாக்கிப் பேசியதற்காக இவரும் இவர் தங்கை கண்ணம்மாளும் சிறைப்பட்டனர். கோவைச் சிறையில் இவர் மீண்டும் சி. இராசகோபாலச்சாரியைச் சந்தித்தார். காந்தியாரின் தூண்டுதலின் பேரில் ஆச்சாரியார் எவ்வளவோ முயன்றும் பெரியார் மீண்டும் பேராயக் கட்சியில் சேர மறுத்து விட்டார். அரசு அடக்குமுறைகளை தீவிரமாக்கியது. குடியரசு, புரட்சி, பகுத்தறிவு முதலிய தன்மான இயக்க ஏடுகள் பறிமுதல் செய்யப் பட்டன. புரட்சி வீரர் பகவத்சிங் எழுதிய 'நான் ஏன் நாத்திகன் ஆனேன்' என்ற நூலைத் தமிழில் ப. சீவானந்தம் மொழிபெயர்த்து வெளியிட்டார். அவர் சிறை செய்யப்பட்டதோடு நூலும் பறிமுதல் செய்யப்பட்டது. அரசு தன்மான இயக்கத்தை வேரோடு சாய்க்க முனைந்தது. நீதிக் கட்சியின் ஆதரவு 1934-ல் பெரியார் தமது பதினாறு கூறுபாடுகளைக் கொண்ட அரிய திட்டமொன்றை வெளியிட்டார், உழவர் நலம், சொத்துரிமை, வாணாள் காப்புநிதி, அனைவருக்கும் கட்டாயக் கல்வி, மதுவிலக்கு. தீண்டாமையொழிப்பு, மூடநம்பிக்கை யொழிப்பு, எல்லோருக்கும் சமமான அரசுப் பணி வாய்ப்பு , நிலவரியில் நேர்மை, உள்ளாட்சித் துறைகளுக்கு அதிக அதிகாரங்கள் முதலியன அத்திட்டத்தில் இடம் பெற்றிருந்தன. இத்தகைய திட்டங்களைக் காங்கிரசுக்கட்சியால் நிறை வேற்ற முடியாது என்றும், நீதிக்கட்சியால்தான் முடியும் என்றும் ஆகவே, நீதிக்கட்சியைத் தாம் நேரடியாக ஆதரிப்பதாகவும் கூறினார். அக்கட்சியும் இவருடைய திட்டங்களை ஏற்றது. இந்தி எதிர்ப்பு தந்தை பெரியார் பேராயக் கட்சியிலிருக்கும் போதே இந்தியை எதிர்த்தார். 1937-ல் நடந்த பொதுத் தேர்தலில் நாடு முழுவதிலும் பேராயக் கட்சியே வெற்றி பெற்றது. சென்னை மாநிலத்தில் அக்கட்சி சி. இராசகோபாலாச்சாரியின் தலைமையில் அமைச்சரவையை அமைத்தது. பெரியார் ஆதரித்ததால்தான் நீதிக்கட்சி தோற்றது என்று பலர் கட்சிமாறினர். பார்ப்பனரையும், பேராயக் கட்சியையும் மக்கள் புரிந்து கொள்ள இதுவே தக்க சமயம் என்றார் பெரியார். இதற்கேற் றாற்போல் ஆச்சாரியாரின் கட்டாய இந்தி நுழைப்பும், சாதி வேற்றுமை யை வளர்க்கும் திட்டங்களும் வெளியிடப்பட்டன. பெரியார் முழு மூச்சுடன் இந்தியை எதிர்த்துச் சிறைப்பட்டார். அவரைப் பின் தொடர்ந்த ஆயிரக்கணக்கானவர் சிறையிலடைக்கப்பட்டனர். நீதிக் கட்சித் தலைவர் 1938 - ல் நீதிக் கட்சி, தந்தை பெரியாரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தது. அப்பொழுது பெரியார் சிறையிலிருந்தார். 1939-ல் சிறை மீண்ட போது தன்மான இயக்கத்தாரும் தமிழ் நன்மக்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். நீதிக் கட்சியின் தலைவரான பெரியார் முடுக்கமாய்த் தம் பணியில் ஈடுபட்டார். தமிழ்நாடு தமிழருக்கே 1939-ல் நடந்த நீதிக் கட்சி மாநாட்டில் இலங்கை , மலேயா, பர்மா முதலிய நாடுகளில் வாழும் தமிழர்களைப் பற்றிப் பேசப் பட்டது. பின்னர்த் 'தமிழ்நாடு தமிழருக்கே' என்னும் தம் கோட் பாட்டை பெரியார் திட்டவட்டமாக வலியுறுத்தினார், பெரியார் நீதிக் கட்சியின் தலைவரானதும் அக்கட்சியின் அடிப்படைக் கொள்கை களை மாற்றினார். இந்தியாவுக்குக் குடியேற்ற நாட்டு நிலையைப் பெறுவதென்ற அதன் கொள்கையை மாற்றி முழுத் தன்னாட்சி பெறுவதே நோக்கம் என்னவாக்கினார். 1935ஆம் ஆண்டு அரசியல் சட்டப்படி உருவாக்கப்பட்ட கூட்டாட்சி முறையை வரவேற்றார். திராவிட நாட்டுப் பிரிவினைக் கொள்கை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகள் பேசப்படும் சென்னை மண்டிலத்தைத் 'திராவிட நாடு' என்றும், இதனைத் தனியே பிரித்து, தன்னாட்சியுரிமையடையச் செய்ய வேண்டுமென்றும் பெரியார் கோரினார். 1939-ல் ஸ்டாபோர்ட் கிரிப்சு அவர்களைச் சந்தித்துத் தமது திராவிடநாடு கொள்கையை விளக்கினார். 1940 - ல் திருவாரூரில் நடந்த நீதிக்கட்சி மாநாட்டில் திராவிட நாட்டை அடைந்தே தீரவேண்டும்', என்றார் தொடர்ந்து ஒவ்வொர் ஆண்டும் சூலை முதல் நாள் திராவிட நாட்டுப் பிரிவினை நாளாகக் கொண்டாடப் பெற்றது. திராவிட இனவுணர்ச்சி மேலிட்டது. இதனால் திராவிடக் கலை பண்பாடுகள் மறுமலர்ச்சி பெற்றன், சி. என். அண்ணாதுரை நீதிக் கட்சியின் போக்கில் மாற்றமடைந்ததை விரும்பாத அதன் செயலாளர் திருச்சி விசுவநாதன் கட்சியை விட்டு விலகினார், சி.என், அண்ணாதுரையின் அரிய முயற்சியாலும், புதிய திட்டங்களாலும், நாவன்மையாலும் நீதிக்கட்சி புதிய மெருகுடன் வளர்ந்தது. அண்ணா கொண்டுவந்த திட்டங்கள் சேலத்தில் நடந்த நீதிக் கட்சியின் மாநில மாநாட்டில் தீர்மானங்களாக்கப்பட்டன. அவற்றுள் வெள்ளை யன் அளித்த சர், இராவ்பகதூர், திவான் பகதூர், இராவ்சாகேப் முதலிய பட்டங்களைத் துறப்பதும், இனி அத்தகைய பட்டங்களைப் பெற மறுப்பதும் முகாமையான தீர்மானமாகும். இதனால், நயன்மைக் கட்சி பணக்காரர் என்றும், வெள்ளையனுக்கு வால்பிடிக்கும் கட்சி என்றும் எண்ணியவரின் எண்ணம் மாறியது. உள்ளாட்சித் துறை யில் எப் பதவிகளையும் தாங்கக்கூடாது என்றும், தங்கள் பெயருக்கு பின்னாலுள்ள சாதிப் பட்டங்களைத் துறக்க வேண்டும் என்றும் அண்ணா இம்மாநாட்டில் தீர்மானங்களைக் கொண்டு வந்தார். திரவிடர் கழகம் தோன்றுதல் 1944-ல் சேலம் மாநாட்டில் அறிஞர் அண்ணா கொண்டுவந்த தீர்மானங்களில் தலையாயதும் வரலாற்று முகாமை வாய்ந்ததும் இனி நீதிக்கட்சி அல்லது தென்னிந்திய நல உரிமைக் கழகம் என்பதைத் 'திராவிடர் கழகம்' என மாற்றியமைக்க வேண்டும் எனும் தீர்மானமே ஆகும். இதன் படி 1944 ஆம் ஆண்டில் நீதிக்கட்சியே திராவிடர் இந்திய மறுமலர்ச்சி இயக்கங்களும் தமிழ்நாட்டு மா பலாச்சி இயக்கங்களும் 251 கழகமாக மாறியது. திராவிடரின் இழி நிலையை உணர்த்தும் கரு வண்ணத்தின் நடுவில் அவர்களின் உணர்ச்சித் துடிப்பைக் காட்டும் சிவப்பு வட்டம் பொறித்த கொடி இக்கட்சிக்குப் படைக்கப்பட்டது நாடெங்கும் கிளைகள் தோன்றின. அண்ணா திராவிடரின் தளபதி யானார். திரவிடர் கழக முதல் மாநாடு திருச்சியில் இக் கழகத்தின் முதல் மாநாடு நடந்தது. முதல் நாள் தன்மான மாநாடும், இரண்டாம் நாள் திரவிடர் மாநாடும் நடந்தன. பெரியார் தலைமையில், அண்ணா அவர்கள் திரவிடநாட்டுப் பிரிவினை பற்றி விரிவாகப் பேசினார். இந்தியத் துணைக் கண்டத்தில் திராவிடம் இனம், மொழி, பண்பாடுகளால் தனித்து நிற்பதை அண்ணா எடுத்துக்காட்டித் திராவிடம் தனித்திருக்க வேண்டிய இயற்கைக் கூறுபாடுகளையும் விளக்கினார். கழக வளர்ச்சி திராவிடக் கழகத்தின் குரலாக விடுதலையும், குடியரசும், அண்ணா அவர்களை ஆசிரியராகக் கொண்ட திராவிடநாடும் என்.வி. நடராசனை ஆசிரியராகக் கொண்ட திராவிடனும், டி. எம். பார்த்த சாரதியை ஆசிரியராகக் கொண்ட தமிழ் உலகமும் வெளிவந்தன, அண்ணாவின் பேச்சுகள், திராவிடர் நிலை, நல்ல தீர்ப்பு+ நாடும் ஏடும் முதலிய நூல்களாக வெளிவந்தன. திராவிட எழுத்தாளர் கழகம் என்ற அமைப்பும் ஏற்பட்டது. இதில் எசு, குருசாமி தலைவராகவும், புலவர் பு. செல்வராசு செயலாளராகவும் பணியாற்றினர். இத்தகைய ஏடு களும் அண்ணாவின் பேச்சுகளும் மாணவர்களைப் பெரிதும் கவர்ந் தன. இதனால் 'திராவிடர் மாணவர் கழகம்' என்ற அமைப்பும் ஏற் பட்டது . க. அன்பழகன், இரா. நெடுஞ்செழியன், தவமணி இராசன், இளம்வழுதி, க.அ. மதியழகன், ஏ.பி, சனார்த்தனம் முதலியோர் இம் மாணவர் கழகத்தில் பங்கேற்றனர். பின்னர் மு.கருணாநிதி, தில்லை, வில்லாளன், அரங்கண்ணல் அப்பாவு, கோகுலகிருட்டிணன், பொன்னுவேலு முதலியோரும் இதில் ஈடுபட்டனர். திராவிடர் கழகத்தை வளர்ப்பதற்கென்றே 'கருஞ்சட்டைத் தொண்டர் படை' என்னும் அமைப்பு தோன்றியது. இத் தொண்டர் கள் முழுநேரப் பணியாளர்களாகவும், முடுக்கமாய் உழைப்பவர் களாகவும் இருந்ததால் கழகம் கடிது வளர்ந்தது. 1946-ல் மதுரையில் (கருஞ்சட்டை) தொண்டர் மாநாடு நடந்தது. இதற்குப்பின் இப்படைக்கு அரசு தடை விதித்தது. ஆயினும் தடையை மீறித் தடியடிபட்டுத் தொண்டர்கள் கழகத்தை வளர்த்தனர். மீண்டும் இந்தி எதிர்ப்பு 1946-ல் டி. எசு. அவிநாசிலிங்கம் கல்வியமைச்சராக இருந்த போது இந்தியை மீண்டும் அரசு கட்டாயப் பாடமாகப் புகுத்தியது. தளபதி அண்ணா , டி. எம். பார்த்தசாரதி, திருமதி அலமேலு அப்பா துரை முதலியோர் தலைமையில் பள்ளிகளின் முன் இந்தி மறியல் செய்யப்பட்டது. பொது மக்களும் ஆதரவளித்தனர். 1947 சூலை முதற்கிழமை நாடு முழுவதும் திராவிட நாட்டு பிரிவினைக் கிழமை கொண்டாடப்பட்டது. இந்திய விடுதலை நாள் 1947 ஆகஸ்டு 15-ல் இந்தியா பிரிட்டானியப் பேராளுமையி னின்று விடுதலை பெற்ற போது கழகத் தலைவர் பெரியார் இதனை துக்கநாளாகக் கொள்ள வேண்டுமென்றார். நாட்டுக்கு விடுதலையே யொழியத் தமிழருக்கு விடுதலை இல்லை. தமிழன் இனி பார்ப்பனிய ஆளுமைக்கு அடிமை எனக் கொண்ட பெரியார் இதனைத் துக்க நாளாகக் கொள்ள வேண்டுமென்றார். ஆனால் தளபதி அண்ணா ஒரு நாட்டின் விடுதலை நாளென்பது உலக வரலாற்றில் இடம் பெறும் நாள் என்றும், இந்தியாவும் பாகிஸ்தானும் பிறக்கும் நாள் என்றும் கூறி இதனைக் துக்க நாளாகக் கொள்ளாமல் நன்னாளாக, பொன்னாளாகப் போற்றி மகிழ வேண்டுமென்றார். பார்ப்பனியத் தை அகற்றுவது தமிழர் கையிலுள்ளது என்றும், அதற்காக விடுதலையே வேண்டாம் என்பது கூடாது என்றும் அவர் கூறினார். திரவிட முன்னேற்றக் கழகத் தோற்றம் 1949 மே, 14-ல் இந்தியாவின் தலைமை ஆளுநராயிருந்த கி. இராசகோபாலாச்சாரி திருவண்ணாமலைக் கோயிலில் பாதாள லிங்கத் திருவறையைத் திறந்துவைக்க வந்தபோது பெரியாரும், அவ ருடைய தொண்டர்களுள் ஒருவரான மணியம்மையும், அவரைக் கமுக்கமாய்ச் சந்தித்தனர். பின்னர், எழுபத்தோர் அகவை நிரம்பிய பெரியாருக்கும், இருபத்தாறு அகவை நிரம்பிய மணியம்மை யாருக்கும் பதிவுத் திருமணம் நடந்தது. இதனை எதிர்த்து அண்ணா உட்பட பலரும் கண்ணீ ர் சிந்தி வெளியேறி 17.9.1949-ல் 'திரவிட முன்னேற்றக் கழகம்' என்னும் புதிய அமைப்பைத் தொடங்கினர். இரண்டடி அகலமும் மூன்றடி நீளமும் கொண்ட கொடியின் மேற் பகுதி கறுப்பாகவும் கீழ்ப்பகுதி சிவப்பாகவும் நடுவில் உதயசூரியன் சின்னத்துடனும் இருக்கும் கொடியைச் சின்னமாகக் கொண்டனர். சமுதாயச் சீர்திருத்தம், பகுத்தறிவுப் பண்பாடுகள் முதலியவற்றையே இக் கட்சி அடிப்படையாகக் கொண்டது. பொதுக்குழு, கொள்கை விளக்கக் குழு அமைப்புக் குழு நிதிக்குழு என்பனவாகப் பிரிந்து அண்ணாவைப் பொதுச் செயலாளராகக் கொண்டு திராவிட முன்னேற்றக் கழகம் வளரத் தொடங்கியது. இக்கழகம் நடத்திய போராட்டத்தினால் அரசு 18.7.1950-ல் இந்தி, கட்டாயப் பாடம் அன்று என்று கூறியது. இதனால் மக்களின் செல்வாக்கைக் கழகம் பெற்றது. இந்திய மறுமலர்ச்சி பேக்கங்களும் தமிழ்நாட்டு மறுமலர்ச்சி இயக்கங்களும் 1950-ல் சென்னை உயர் நீதி மன்றத்தில் வகுப்பு வாரிப் படி நிகாரளியம் செல்லாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டதைக் கண்டித்து கழக ஏடுகளில் எழுதியும், நாடெங்கிலும் கழகத்தார் கண்டனக் கூட்டங்களை நடத்தியும் வந்தனர். இதனால் கழக ஏடான 'திராவிட நாடு' மூவாயிரம் ருபா ஈட்டுத்தொகை கட்ட வேண்டியதாயிற்று. இத் தொகையை மக்களே கட்டினர். இதற்குப் பின் கழகத்தை அடியோடு ஒடுக்க அரசு முனைந்தது. அண்ணாவின் 'ஆரியமாயை' என்ற நாலுக்குத் தடை விதித்தது. அண்ணாவுக்கும் அரசு ஆறு திங்கள் கடுங் காவல் தண்டனை வழங்கியது. அண்ணாவை விடுதலை செய்யக் கோரி நாடெங்கும் கிளர்ச்சிகள் ஏற்பட்டன. அண்ணா விடுதலையானார். இதனை அடுத்து அரசு, கழகத்தவர் பலர்மீது. வழக்குகள் தொடுத்துத் தண்டித்தது. கழகத்தவரும் தொடர்ந்து பல போராட்டங் களில் ஈடுபட்டனர். 1951 டிசம்பர் 13, 14, 15, 16 ஆகிய நாள்களில் சென்னையில் திராவிட முன்னேற்றக் கழக முதன் மாநில் ! மாநாடு நடந்தது. நம் நாடு என்னும் ஏடும் தொடங்கப்பட்டது. பின்னர் 'மாலைமணி" என்னும் ஏடும் கழகக் குரலை ஒலித்தது, திருத்தணிப்போராட்டம் தமிழரசுக் கழகத் தலைவர் மா.பொ. சிவஞானமும், தளபதி விநாயகமும் திருத்தணி தமிழருக்கே சேர வேண்டுமெனப் போராடி னர். இப்போராட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும் பங்கு கொண்டது. இதனால், பல இன்னல்களையும் அடைந்தது. கல்லக்குடிப் போராட்டம் திருச்சிக்கருகிலுள்ள 'டால்மியாபுரம்' என்னும் ஊரின் பெயரைக் 'கல்லக்குடி ' என மாற்றத் திராவிட முன்னேற்றக் கழகம் போராட்டம் நடத்தியது. இது தொடர்ந்து பல நாள்கள் நடந்தது. மு. கருணாநிதி, கவிஞர் கண்ணதாசன் முதலியோர் தலைமை தாங்கினர். தொடர் வண்டிப் பாதையில் படுத்து நடத்திய இப் போராட்டத்தில் பலரும் சிறைப்பட்டனர். காவலர் சுட்டதில் இருவர் மாண்டனர். நாடெங்கிலும் கண்டனங்கள் எழுந்தன. வெற்றி பெற்றது கழகம். ஆட்சிப் பீடத்தை நோக்கி 1952 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தங்கள் கருத்தை ஏற்போருக்கு வாக்களித்த கழகம் 1957-ல் தானே நேரடியாகத் தேர்தலில் நிற்க முடிவு செய்தது. இதற்கிடையில் நடந்த கே.வி.கே. சாமியின் படுகொலையும், சங்கரலிங்கனார் தமிழ்நாடு' எனப் பெயரிடும்படி 78 நாள் உண்ணாநோன்பிருந்து உயிர்விட்ட நிகழ்ச்சி யும் கழகத்திற்கு ஆக்கமாயின. 1957 தேர்தலில் தி.மு.க. 15 இடங் களைப் பெற்று அண்ணா தலைமையில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது. ஈ.வே.கி. சம்பத்தும், இரா.தருமலிங்கமும் நாடாளுமன்றம் சென்றனர். பிரிவினைக் கொள்கையைக் கைவிடல் 1962-ல் தி.மு.கழகத்தினர் நாடு முழுவதிலும் விலைவாசியை எதிர்த்துப் போராடிச் சிறைசென்றனர். போராட்டம் வெற்றி பெற்ற தோடு மக்களின் பேராதரவையும் பெற்றது. சிறைமீண்ட அண்ணா திராவிட நாட்டுப் பிரிவினையைக் கைவிட்டார். சீனப் போரை எதிர்த்து ஒன்றுபட்ட நாட்டுப் பற்றுடன் போரிட மக்களை அழைத்தார். - 1962-ல் நடந்த தேர்தலில் கழகத்தினர் 52 இடங்களைப் பெற்றனர். அண்ணா தோற்று நாடாளுமன்ற மேலவை உறுப்பின ராக அமர்த்தப்பெற்றார். மீண்டும் இந்தித் திணிப்பை எதிர்த்துக் கழகம் போராட்டம் தொடங்கியது. சட்ட எரிப்புப் போராட்டம் இதில் சிறப்பானது. பலரும் சிறைத்தண்டனை பெற்றனர். தீக்குளிப்பு இந்தியை எதிர்த்துக் கீழ்ப்பளூர் சின்னச்சாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம் அரங்கநாதன், ஐயம்பாளையம் வீரப்பன், சத்திய மங்கலம் முத்து, மாயவரம் சாரங்கபாணி ஆகியோர் தீக்குளித்தனர். பலர் போராடி சிறைப்பட்டனர். நாடே போர்க்களமாகியது. 1967 தேர்தல் இத்தகைய போராட்டங்களினால் மக்களின் மனத்தைக் கவர்ந்த கழகம் 1967ஆம் ஆண்டுத் தேர்தலில் 150 இடங்களைப் பெற்று அமைச்சரவை அமைத்தது. தங்கள் வெற்றியைத் தந்தை பெரியாருக்கு காணிக்கையாக்கினார் முதலமைச்சர் அண்ணா. ஆனால், 1968-ல் அண்ணா இறந்தார். மு. கருணாநிதி முதலமைச்சரானார். பெரியார் பாதை , 1949-ல் தம்மிடம் இருந்து பிரிந்து தி.மு.க ஏற்பட்ட பின்னும் பெரியார் தனித்து நின்று பல போராட்டங்களை நடத்தினார். 1950 -ல் தொடர்வண்டி நிலையங்களிலுள்ள பெயர்ப் பலகைகளில் எழுதப் பட்ட இந்தி எழுத்துகளை அழித்துத் தமது இந்தி எதிர்ப்பைத் தெரி வித்தார். 1954-ல் குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்துப் போரிட்டார். அவ்வாண்டில் பர்மாவில் நடந்த உலகப் புத்த மாநாட்டில் கலந்து கொண்டார். அம் மாநாட்டில் கலந்து கொண்ட தாழ்த்தப்பட்டோரின் தனிப்பெரும் தலைவரும் உலக மாமேதையுமான டாக்டர், பி.ஆர். அம்பேத்கார் அவர்களைக் கண்டு அளவளாவினார். 1955-ல் இந்தியை எதிர்த்து நாட்டுக் கொடியினைக் கொளுத்தும் போராட்டத் தில் ஈடுபட்டார். 1956-ல் இராமாயணக் கதை நாயகன் இராம் னுடைய படத்தை எரித்துத் திராவிடப் பண்பினைப் போற்றினார். 1957-ல் பார்ப்பன உண்டிச் சாலைகளின் முன் மறியல் நடத்திச் சாதி உருது இழிவினைப் போக்கினார். இந்திய அரசியல் சட்டத்தினை எரித்துத் தமது இந்தி எதிர்ப்பைக் காட்டினார். 1959-ல் வடநாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்து சமயத்திலுள்ள பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களை மக்களுக்கு விளக்கினார். பல மொழிகளி லும் உள்ள இராமாயணத்தை மக்களுக்கு விளக்கிக் கூறினார். தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் உரிமைகளைப் பற்றி நாடெங்கிலும் பறைசாற்றினார். 1960 -ல் தமிழ்நாடு தவிர்த்த இந்தியப் படத்தினை எரிப்பதாக அறிக்கை விட்டு அரசின் கவனத் தை ஈர்த்தார். 1962 ஆம் ஆண்டு பச்சைத் தமிழர் காமராசர் அவர் களைத் தேர்தலில் ஆதரித்து வெற்றி பெறச் செய்தார். 1957-ல் தி.மு.க. வெற்றி பெற்றதும் அண்ணாவும் பெரியாரும் ஒன்றிணைந் தனர். 1970-ல் பெரியார் 'பகுத்தறிவாளர் கழகம்' 'சிந்தனையாளர் கழகம்' ஆகியவைகளைத் தொடங்கிவைத்தார். 1971-ல் சேலம் மாநாட்டில் இந்து சமயக் கடவுள்களின் தோற்றரவுகளும், தொல் கதைகளும், மறைகளுமே சாதி வேறுபாடுகளை வளர்த்தன வென்ப தை நாடறியச் செய்தார். 1971-ல் நடந்த இடைத் தேர்தலில் தி.மு.க., 185 இடங்களைப் பெற்று மீண்டும் வெற்றி பெற்றது. பெரியார் பெருமகிழ்வடைந்து, தூய திராவிடரின் அமைச்சரவையை வாழ்த் தினார். மறைவு - இவ்வாறு ஒரு நூற்றாண்டு வரை சமுதாய நலம் நாடி பகுத் தறிவுப் பாதையில் நடைபோட்ட தந்தை பெரியார் 1973 டிசம்பர் மாதம் 24 ஆம் நாள் வேலூர் மருத்துவமனையில் உயிர் நீத்தார். இவர் பார்ப்பனியத்திற்குப் பகைவர், ஆனால் பார்ப்பனருக்கு நெருங்கிய நண்பர்: இந்து மதத்திற்கோர் எதிரி ஆனால் சாதியற்ற சமயத்தினை வளர்த்த தலைவர் விடாப்பிடி யானவர், ஆனால் எவரையும் கவரும் இனிய நண்பர். தந்தை பெரியார் தமிழினத்தின் சிற்பி; இந்திய வரலாற் றில் ஒரு நாயகர், உலக ஓர்மை (சிந்தனையாளர்களில் தனியிடம் பெற்றவர். மேற்கூறிய முகாமை செய்திகளையும், அவற்றால் கி.பி. இருபதாம் நூற்றாண்டில் தமிழகம் அடைந்த மாற்றங்களையும் மனத்திற்கொண்டு. அவற்றிற்கு முன்னும், பின்னும் தமிழகத்தில் நடந்த செயல்களைப் பற்றி இனிச் சுருங்கக் காண்போம். அஃதாவது கி.பி.-பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளில் தமிழக வரலாற்றை மேலெழுந்தவாரியாகப் பார்ப்போம்." 15 விடுதலைப்போரில் தமிழகம் - காந்தி ஆண்டுமானம் 1. வேலூர்க் கலகம் (கி.பி. 1806) 2. வேலுத்தம்பி கலகம் (கி.பி. 1809-1810) 3. இந்திய தேசியப் பேராயத்தின் தோற்றம் (1885) அ) முற்போக்காளர்கள் ஆ) சுதேசிக்கப்பல் கழகம் (1906) இ) வெளிநாடுகளில் இந்திய விடுதலை வீரர்கள் ஈ) தன்னாட்சி இயக்கம் 2) காந்தி ஆண்டு மானம் (1920-1947) 1. கள்ளுக்கடை மறியல் 2. தீண்டாமை ஒழிப்பு 3. கைராட்டை 4. சைமன் ஆணைக்குழு 5. உப்பு சத்தியாகிரகம் 6. வட்டமேசை மாநாடும் பூனா ஒப்பந்தமும் 7. ஆகச்டு புரட்சி (1942) 8. இடைக்கால் அரசும் விடுதலையும் விடுதலைப் போரில் தமிழகம் - காந்தி ஆண்டுமானம் 257 15. விடுதலைப் போரில் தமிழகம் - காந்தி ஆண்டுமானம் தமிழர்கள் இயற்கையாகவே வீரப் பண்பும், விடுதலை யுணர்வும் கொண்டவர்கள். அவர்களின் பழந்தமிழ் இலக்கியங்கள் யாவும் வீரப் பெட்டகங்களே. அவர்களின் வரலாற்றுப் போக்கில் அடிமை வாழ்வைத் தொடர்ந்து காணமுடியாது. அவர்கள் பொறா மைக்கு அடிமையான போதெல்லாம் தங்களுக்குள் காழ்ப்பு ணர்ச்சிப் பொங்கிய போதெல்லாம் மாற்றானுக்கு இடம் கொடுத்துத் தங்களின் வரலாற்றில் புல்லுருவி புகும்படி செய்து விட்டனர். அத்தகையப் புல்லுருவிகள்தாம் ஆரியரும் இசுலாமியரும் ஆவர். மராத்தியரும் பிறரும் பின்னர் வந்த ஐரோப்பியரும் ஆவர். ஒன்று திரண்டு முனைப்பாக எதிர்த்திருந்தால் முதன் முதலில் இசுலாமியர் ஆட்சி மதுரையிலேயே தோன்றியிராது: மராத்தியர் தமிழ் மண்ணில் காலடி வைத்திருக்கமாட்டார்கள் ஐரோப்பிய வணிகரும் தமிழகத்தில் வணிகராகவே இருந்து அகன்றிருப்பர். ஆனால், அன்றி நோக்கும்போது ஆரியப் புயலும், இசுலாமியச் சூறாவளியும், ஐரோப்பியப் பேய்க்காற்றும் இந்தியத் துணைக் கண்டத்தையே அசைத்து விட்ட போது தமிழகம் மட்டும் தனியே தப்பியிருக்க முடியாது என்பதும் வரலாற்று உண்மையாகிறது. எப்படியோ மாற்றானுக்கு அடிமையாகிவிட்ட நாட்டில் தமிழர் தன்னுணர்வு பெறும்போதெல்லாம் மாற்றானை மண்ணைவிட்டு அகற்றச் செய்த விடுதலைப் போர்களைத் தொடர்ந்து காண்கிறோம். குறிப்பாக 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் இத்தகையப் போர்கள் தமிழ் மண்ணில் முடுக்கமான, முனைப்புடன் நடந்த வரலாற்றைப் புலித்தேவன், வீரபாண்டியக் கட்டபொம்மன், ஊமைத்துரை, மருதுபாண்டியர்கள் ஆகியோரின் வரலாறுகளில் கண்டோம். இதே காலத்தில் மைசூர் வீரன் திப்புசுல்தானும் ஆங்கிலேயரை அடியோடு விரட்டப் போர்க் கொடி உயர்த்திப் பொங்கி எழுந்ததையும் பார்த்தோம். இவர்கள் யாவரும் மன்னர்களாய் நாட்டை ஆண்டவர்கள். எனவே, மாற்றானைச் சாய்த்தொழிக்க இவர்கள் மேற்கொண்ட போர்களை 'விடுதலைப் போர்கள்' என்று ஒப்புக்கொள்ளச் சிலர் மறுக்கின்றனர். 'போர்' மன்னரின் வாழ்வோடு கலந்த பண்பு. ஆகவே அது நாட்டு விடுதலைப் போராகாது என்பது இவர்தம் கருத்தாகும். அடுத்துப், படைவீரர்கள் ஆங்கிலேயரை எதிர்த்து எழுந்த நிகழ்ச்சியும் தமிழக வரலாற்றில் உண்டு . அதுதான் கி.பி. 1806-ல் வேலூரில் நடந்த படைவீரர்களின் கலகமாகும். இதைப் பற்றியும் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. ஆங்கிலப் படை வீரர்கள் பெற்றிருந்த தனிச்சலுகைகளையும், உயர்வையும் கண்டு மனம் பொறாத் தாழ்நிலையில் பணியாற்றிய இந்திய வீரர்கள் காழ்ப்புணர்ச்சி யால் செய்த கலகமே வேலூர்க் கலகம் என்பது ஒரு சாரார் கருத்து, ஆனால், ஆங்கிலேயனிடம் பணியாற்றும் வீரரும் விடுதலை வேட்கையுடன் எழுந்தனர் என்பது மறுசாரார் கருத்து ஆகும். இந் நிகழ்ச்சியைக் காண்போம். 1. வேலூர்க் கலகம் (கி.பி. 1806) சர். சார்சு பார்லோ (கி.பி. 1805-1807) ஆங்கிலவாட்சியின் தலைமையாளு நராக இருந்தபோது சென்னை ஆளுநராக இருந்தவன் வில்லியம் பெண்டிங்கு ஆவான். இவன் சென்னை ஆளுநராகக் கி.பி. 1803 முதல் 1807 வரையிலும் இருந்தான் (இவனே பிற்காலத் தில் தலைமையாளுநராகக் கி.பி. 1828 முதல் 1835 வரை இருந்தான்), ஆங்கிலத் தளபதி சர் சாண்கிரேதாக் என்பவன் சென்னையாளுநரிடம் ஒப்புதல் பெற்றுக் கொண்டு ஒரு சில படைச் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தான். அதன்படி இந்துப் படைஞர்களும் (சிப்பாய் களும்) படைச் (இராணுவச்) சீருடையிலிருக்கும் போது 'திலகம்" "நாமம்', 'திருநீறு 'முதலிய சமயச் சின்னங்களை நெற்றியில் இடம் கூடாது என்றும், ஒரே வகையாகத் தலைமயிரை வெட்டிக்கொள்ள வேண்டுமென்றும், மீசையை மிடுக்காக முறுக்கிவிட வேண்டும் என்றும் காதில் கடுக்கண் போடக்கூடாது என்றும் ஆணையிடப் பட்டனர். ஒரே வகையான படைச் சீரணியுடைகளையும், தொப்பி யையும் அணியவும் ஆணையிடப்பட்டனர். இத்தகைய ஆணை களை இந்தியப் படைஞர்கள் ஐயத்துடன் நோக்கினர். ஆங்கிலேயர் தங்களைக் கிறித்துவராக்கவே இச் சூழ்ச்சி செய்கின்றனர் என்று நம்பினர். தங்கள் சமயத்திற்கும் பண்புகளுக்கும். கேடு வந்து விட்டதாகக் கதறினர். ' 1806 ஆம் ஆண்டில் வேலூர்க் கோட்டையில் 370 ஆங்கில வீரர்களும் 1500 இந்தியப் படைஞர்களும் இருந்தனர். இந்தியப் ' படைஞர்கள் இத்தகைய படை ஆணைகளைத் தகர்க்கவும், ஆங்கி லேயரைஒழிக்கவும் கமுக்கமாக ஒரு சதித்திட்டத்தைத் தங்களுக்குள் தீட்டினர். சூலைத் திங்கள் பத்தாம் நாள் காலையில் திடீரெனப் புரட்சி செய்தனர்.- ஆங்கில வீரர்களும், அதிகாரிகளும் தங்கியிருந்த முகாம் களை நோக்கிச் சரமாரியாகக் குண்டுமழை பெய்தனர். வெள்ளையர் பலர் மாண்டனர். பலர் தப்பியோடினர். இந்தியப் படைஞர்கள் வெள்ளையரை விரட்டிவிட்டோமென்று வெற்றிமுரசு கொட்டினர். கோட்டையில் பறந்த ஆங்கிலக் கொடியை இறக்கிவிட்டுத் தங்கள் கொடியைப்பறக்கவிட்டனர். வேலூர்க் கோட்டையில் சிறைவைக்கப் பட்டிருந்த திப்பு சுல்தானின் இரண்டு பிள்ளைகளில் ஒருவனை மன்னரெனப் 'பிரகடனம் செய்தனர். மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஆடிக்களித்துக் கூத்தாடினர். இந்நிலையில் தப்பியோடிய வெள்ளையரில் ஒருவனான தளபதி கூட்சு (மேஜர் கூட்ஸ்) என்பவன் ஒரே மூச்சாக இராணிப் விந்தாப் போரில் தமிழகம் - காந்தி ஆண்டுமானம் பேட்டை வரையில் ஒடி அங்கிருந்த படையை அழைத்துக் கொண்டு வேலூர் திரும்பினான். (கர்னல்) வெல்லசுலி என்பவன் தலைமை யில் வந்த இப்படை முன்னூறு இந்தியப் படைகளைச் சுட்டுக் கொன்று கலகத்தை அடக்கியது. இக் கலகத்தில் மாண்ட ஆங்கில வீரர்களின் எண்ணிக்கை நூறு ஆகும். எஞ்சிய இந்தியப் படைஞர் கள் கடுந்தண்டனைகளைப் பெற்றனர். இக் கலகத்தில் விளைந்த இழப்புகளையும், இதன் கரணியத்தையும் உசாவிய ஆங்கில மேலிடம் கிரேதாக்கையும், ஆளுநரையும், பதிவியிலிருந்து நீக்கியது திப்புவின் மக்கள் கல்கத்தாச் சிறைக்கு அனுப்பட்டனர், புதிதாகக் கொண்டு வரப்பட்ட படைச் சீர்திருத்தங் கள் நீக்கப்பட்டன. வேலூரில் நடந்த இந்தப் படைஞர் (சிப்பாய்க் கலகம் கி.பி. 1857-ல் நடந்த மாபெரும் முதல் இந்தியப் போருக்கு வழி காட்டி ஆகும். சிலர் இதனைச் 'சாதாரணக் கலகமென்றும், இதற்கும் 1857 ஆம் ஆண்டுப் புரட்சிக்கும் வேறுபாடு உண்டு என்றும் கூறுவர். 1808 ஆம் ஆண்டில் மீண்டும் வெள்ளையரை வெளியேற்ற ஒரு திடீர்ப்புரட்சி வேலூரில் தோன்றியது. அதுவும் வெற்றி பெறவில்லை. அதில் பங்கேற்ற இந்தியப் படைஞர்களை ஆங்கிலேயர், பொது. மக்கள் முன்னிலையில் தூக்கிலிட்டனர். அவர்கள் தொங்கிய தூக்கு மரம் இன்றும் இலங்கை அகதிகள் நிலையத்திற்குள் உள்ளது. வேலூர் மக்கள் வேலூர்க் கோட்டைக்குள் அன்றும், அதற்குப்பின் நடந்த போராட்டங்களிலும், போர்களிலும் பங்கேற்ற வீரர்கள் பொது மக்களே ஆவர். ஆகவே, வேலூர்க் கலகம் இந்தியாவில் வெள்ளை யனை எதிர்த்து நடந்த விடுதலைப் புரட்சியே. வேலூர் கலகத்தில் அக் காலத்தில் இரும்புத் திரைகளாயிருந்த சாதி, சமயத்திரைகளைக் கிழித்துக் கொண்டு இந்து, முகமதியர், மேல் கீழ் சாதியினர் யாவரும் (படையினர்) ஈடுபட்டனர். எனவே தான் கி.பி. 1857-ல் வடநாடெங்கிலும் பரவிய இந்தியா விடுதலைப் போருக்கு (சிப்பாய்க் கலகம்) இஃதோர் 'ஒத்திகை' என்றனர். இது ஒரு 'சிப்பாய்க் கலகமா?' இல்லவே இல்லை. வஞ்சம் தீர்க்கவே முண்ட போர்; ஆங்கிலரின் அடிமைத் தளையை உடைத் தெறியும் தேசியப் போர்: நாட்டு மக்களின் நல்லாட்சிக்கு வித்திட்ட போர்; ஆங்கிலரைக் கொன்று குவித்த விந்தைப் போரேயன்றி வேறில்லை' என்று இரசல் என்னும் ஆங்கிலர் வேலூர்க் கலகத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். ஆயினும், வேலூர்க் கலகம் தோற்றது, முசுதாபாபேக் என்பவ னின் இரண்டகச் செயலே இதற்குக் கரணியமாகும். இவன் திப்பு சுல்தானின் மக்களிடமிருந்து பணத்தையும் பெற்று, கலகத்தையும் தூண்டி விட்டு, ஆங்கிலரிடமும் கலகத்தின் கமுக்கத்தைக் கூறி விட்டான். ஆங்கிலர் இவனுடைய காட்டிக் கொடுத்த பணிக்களித்த கைக்கூலி இரண்டாயிரம் வராகன் பணமாகும். ஆகவே, வேலூர் விடுதலைப்போர் முசுதாபாபேக்கின் சண்டாளத்தனத்திற்குப் பலியாகி விட்டது. 'கலகம்' எனும் களங்கமாகி விட்டது. மேற்கூறியவை மன்னர்களாலும், படைவீரர்களாலும் மேற் கொள்ளப்பட்ட விடுதலைப் போர்களென்றதனால் சிலர் பொது மக்கள் பங்கேற்காத போர்கள் விடுதலைப் போர்கள் ஆகாவென்பர். 'படை வீரர்களும், மன்னர்களும், மக்கள்தாம், தமிழ் மறவர்தாம் என்பதை யும், மன்னர்கள் ஆண்டு மானத்தில் பொது மக்கள். அதுவும் தமிழ்ப்பண்பில் தோய்ந்த பொது மக்கள் கிளர்ந்தெழ வாய்ப்பில்லை. அவர்களின் உணர்வுகளைத்தான் மேற்கண்ட பூழித் தேவனும், கட்டபொம்மனும், மருது பாண்டியரும், வேலூர் வீரர்களும் வெளிப் படுத்தினர். 1. வெள்ளையர் கலகம் கி.பி. 1809) வேலூர்க் கலகத்தின் கரணியமாகச் சென்னையாளுநர் வில்லியம் பெண்டிங்கு பதவியிழந்து இங்கிலாந்து சென்று விட்டான். அவனுக்குப்பின் சியார்சு பார்லோ (1807-13) காலத்தில் சென்னை யிலிருந்த வெள்ளையர்கள் 'கூடாரப்படி கேட்டுக் கலகம் செய்தனர். வெள்ளையரை வெறுத்த இந்தியப் படையினர் இவர்களுடன் சேர்ந்து கலகம் செய்யாமல் வாளாவிருந்துவிட்டனர். இதிலும் தமிழர் களின் உணர்வை அறிய முடிகிறது. 2. வேலுத்தம்பி கலகம் (1809 - 1310) 1795-ல் ஆங்கிலர் திருவிதாங்கூரில் தங்கள் படையொன்றை நிறுத்தி அதற்காகும் படைச் செலவை அளிக்கும்படி உடன்பாடு செய்துகொண்டனர். அதன்படி திருவிதாங்கூர் அரசர் ஆண்டொன் நுக்கு எட்டிலக்கம் 2 ருபாய் அளித்து வந்தார். 1909-ல் வேலுத்தம்பி என்பான் திருவிதாங்கூர் திவானானான். அவன் ஆங்கிலரையும் அயலார் ஆளுமையையும் வெறுக்கும் தன்மான வீரன், படைக் களிக்கும் பாதுகாப்புப் பணத்தை நிறுத்தினான். ஆங்கிலரை எதிர்த்துப் போர்க்கொடி உயர்த்தினான். 1810 - ல் ஆலப்புழையில் முப்பது ஆங்கிலப் படையினரையும், ஒரு படை அதிகாரியையும் கொலைசெய்தான். இதனையறிந்த சென்னை ஆளுநர் வயவர் சியார்சு பார்லோ பெரும்படையனுப்பித் திருவிதாங்கூரைத் தாக்கிப் பிடித்துக் கொண்டான். தன்மான வீரன் வேலுத்தம்பி பகைவரின் கையில் சிக்காமல் தற்கொலை செய்து கொண்டான். இந்தியாவில் விடுதலை இயக்கம் தோன்றுவதற்கான கரணியங் கள் பலவாயினும் அயலவரான ஆங்கிலரின் அடிமைத் தளையை அறுக்க வேண்டுமென்ற விடுதலை வேட்கையே முதுகுத்தண்டாகும். இவ்விடுதலை வேட்கை ஆங்கிலவாட்சி ஏற்பட்டு இருநூறு ஆண்டு கள் வரை, இலைமறைகாய் போல் இருந்து 19 ஆம் நூற்றாண்டில் விடுதலைப் போரில் தமிழகம் - காந்தி ஆண்டுமானம் வெளிப்பட்டு, இருபதாம் நூற்றாண்டில் பலன் தந்தது. இனத்தால், மொழியால், சமயத்தால், சாதியால் வேறுபட்டுப் பிரிந்து கிடந்த இந்தியர் ஒன்றுபட்டு ஆங்கிலரை அகற்ற முடியவில்லை. காலப் போக்கில் இவர்களிடையே எழுந்த இந்த விடுதலை வேட்கை வெற்றிபெற்றது. அவ்வாறு எழுந்த பல சோதனைகளைத் தாண்டி வெற்றி பெற்ற வீரவரலாற்றில் தமிழகம் படைத்த இயலை ஈண்டுச் சுருங்கக் காண்போம், வேலூர் வீரர்களின் விடுதலைக் கிளர்ச்சி அடக்கப்பட்ட பின்னும் தமிழகத்தில் புரட்சிக்கனல் நீறுபூத்து நின்றது, 1851 ஆம் ஆண்டில் சென்னை நகரெங்கிலும் ஆங்கிலருக்கெதிராக சுவரொட்டி கள் காணப்பட்டன. மக்கள் ஒரு பெரும் கிளர்ச்சிக்குத் தங்களை அணியப்படுத்திக் கொள்ளும்படியான ஆணைகளாக அவை காட்சி யளித்தன. விடுதலைப் போருக்குத் தமிழர்களை அணியப்படுத்திய சுவரொட்டிகளுக்குப் பின்னர் நடைமுறையில் தமிழகப் பாளையங் களில் புரட்சிக் கனல்கள் வெடித்தன. பாளையங்களிலெழுந்த புரட்சி களை நவாபு வயவர் சாலர்சங் அடக்கினான். 1857-ல் வடநாடெங்கணும் இந்தியப்படைவீரர்கள் ஆங்கி லரை எதிர்த்துப் போரிட்ட போது தமிழகம் அமைதியாகவே இருந் தது. இதற்கு அக்காலத்தில் போக்குவரத்து, செய்தித்தொடர்பு, முதலிய ஏந்துகள் ஏராளமாக இல்லாததே கரணியமாகும். மேலும், நாடு முழு வதும் திரண்டு மக்கள் ஒரு முகமாகப் போரிடும் பாங்கும் இக்காலத் தில் இல்லை. ஆயினும், இப்போரில் விடுதலை வீரர்களை மாய்த்துப் புகழ் பெற்று, பின்னர் 1857 செப்டம்பர் 20 ஆம் நாள் லக்னோவில் மாண்ட கர்னல் நீல் என்பவனுக்குச் சென்னையில் வைத்த சிலை, 'அவமானச் சின்னம்' எனக் கருதிய தமிழர்கள் கொதித்தெழுந்தனர். ஆனால், நெடுநாள்களுக்குப் பின்னரே சி. இராசகோபாலாச்சாரியார் முதலமைச்சராயிருந்த போது அச்சிலை அகற்றப்பட்டுச் சென்னை அரும்பொருள்காட்சிச் சாலையில் படைக்கலப் பிரிவில் வைக்கப் பெற்றது. 1857-க்குப்பின் ஆங்கில வணிகக்குழுவார் ஆட்சி ஒழிந்தது, ஆங்கிலவரசி இந்தியாவுக்கு அரசியானாள். இதற்குப் பின்னும் பேரரசியாரின் பேரறிக்கைக்கு மாறாக இந்தியரின் அடிப்படை உரிமைகளை ஆங்கில ஆட்சியாளர்கள் நசுக்கி வந்தனர். இந்தியா பிரிட்டானியரின் விற்பனைச் சந்தையாகவே திகழ்ந்தது. இந்தியச் செல்வம் பறங்கியரால் கொள்ளையடிக்கப்பட்டதால் நாட்டில் பஞ்சங் களும், பட்டினிச்சாவுகளும் அதிகரித்தன. ஆனால், அவற்றைப்பற்றி யே கவலைப்படாத அரசப் படிநிகராளிகள் ஆடம்பர வாழ்க்கையின் லும், வேடிக்கை விழாக்களிலும் களிப்புற்று நின்றனர். 1870 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து முப்பதாண்டுகளுக்கு மேல் நாட்டில் பல பஞ்சங்களும், கொள்ளைநோய்களும் தோன்றின. பல இலக்கம் மக்கள் பட்டினியால் மாண்டனர். பல இலக்கம் தமிழர்கள் தோட்டக் கூலிகளாய் அயல்நாடுகளுக்குச் சென்றனர். இந்நிலையில் அரசப் படிநிகராளியாகவிருந்த இலிட்டன் (1876-1880) 1877-ல் தில்லியில் ஒரு கும்பலை (தர்பாரைக் கூட்டி விக்டோரியா இந்தியாவின் 'பேரரசி' என்று அறிவித்தான். இதற்கு ஏராளமான பணத்தைச் செல் விட்டான். அடுத்து, வடமேற்கு எல்லை விவகாரத்தில் தலையிட்டு, ஆப்கானியப் போரிலிடுபட்டுப் பெருந்தொகையைச் செலவிட்டான். இத்தகைய செயல்களால் பஞ்சமும், பட்டினியும் அதிகரித்தன. 1876 முதல் 1876 வரை நாடே பஞ்சத்தில் மூழ்கிப் பட்டினிச் சாவுகள் அதி கரித்தன. இவ்வாண்டுகளில் பஞ்சத்தால் இரண்டு இலக்கம் மக்கள் மாண்டனர். இந்நிலையில் தாய்மொழித் தாளிகைகளைத் தடைப் படுத்தும் சட்டம் ஒன்றை இலிட்டன் கொண்டுவந்து இந்தியரின் செய்தித்தாள் உரிமையையும் பறித்தான். அவன் கொண்டுவந்த 'படைக்கலச் சட்டம் இந்தியர் எத்தகைய படைகளையும் (ஆயுதம்) ஏந்திச் செல்லத் தடைவிதித்தது. இந்திய வணிகத்தை முடமாக்கி இந்தியரை வறியராக்கும் இறக்குமதிச் சட்டம் ஒன்றையும் அவன் கொண்டுவந்தான். இந்தியாவிலிருந்து பஞ்சாக ஏற்றுமதியாகி, இங்கிலாந்தில் ஆடையாக நெய்யப்பட்டு இறக்குமதி ஆகும் பருத்தி யாடைகள் மீதிருந்த வரிகளை நீக்கி ஆங்கில வணிகருக்குப் பெரும் ஊதியந் தேடிக் கொடுத்தான். இவனுடைய இத்தகைய செயல்களா லும் இயற்கைக்கேடுகளாலும் இந்தியாவின் உணர்வுகள் ஒன்றுபட்டு ஆங்கில ஆட்சியை அடியோடு ஒழிக்கவேண்டுமென்று விடுதலை வேட்கை மேலிட்டது. நீதி வழங்குவதிலும் ஆங்கிலேயருக்கும் இந்தியருக்கும் இடையே ஏற்றத்தாழ்வுகள் காணப்பட்டன. பறங்கிக் குற்றவாளிகளை இந்திய நீதிபதிகள் உசாவுதற்குத் தகுதியற்றவர் என்று விதித்தனர். இதனைப் போக்க, கிழான் ரிப்பன் (1880-1984) காலத்தில் கொண்டுவரப்பட்ட 'இல்பர்ட் " சட்ட வரைவு மசோதாவும்) பயனற்றுப் போயிற்று. ரிப்பனின் கல்விச் சீர்திருத்தம், உள்ளாட் சியில் இந்தியர் பெற்ற பங்கு முதலியவற்றால் இந்தியர் மேலும் ஒரு மைப்பாட்டு உணர்வையும் விடுதலை உணர்வையும் பெற்றனர். தாளிகைகள் (இதழ்) மீதிருந்த தடைகள் நீக்கப்பட்டன. இதனால், இந்தியர் தங்களின் கருத்துகளை வெளியிடும் உரிமை பெற்றனர். அத்துடன் தங்களின் பாதுகாப்புக் கெனப் பல சங்கங்களையும் ஏற்படுத்திக் கொண்டனர். 1876-ல் இந்தியக் கழகம் சென்னை யில், 'சென்னைவாசிகள் சங்கம்' ஏற்படுத்திய தேசிய உணர்வைத் தூண்டும் கூட்டங்கள், மாநாடுகள் இச் சங்கங்களால் நடத்தப்பட்டன. பலதரப்பட்ட மொழிவழி நாளேடுகளும், கிழமை, திங்களேடுகளும் 'ஒரே மாதிரியான தேசிய உணர்ச்சியைப் பரப்பின. 1883-ல் கல்கத்தாவில் பன்னாட்டுக் கண்காட்சி ஒன்ற தொடங்கியது. பல். விடுதலைப் போரில் தமிழகம் - காந்தி ஆண்டுமானம் கழகங்களைத் தொடங்கித் தேசிய உணர்வை வளர்க்கும் வழிவகை களை ஆய்ந்தனர். இதில் இந்து, இசுலாமியத் தலைவர்கள் பலரும் வேறுபாடின்றிப் பங்கேற்றனர். பேராயக் கட்சியின் தோற்றம் (1885) இக்கட்சி இந்தியாவில் முதன் முதலில் தமிழகத்தின் தலைநக ரான சென்னை நகரில்தான் தோன்றியது. 1884-ல் திவான் பகதூர் இரகுநாதராவ்வீட்டில் பதினேழு பேர் கூடிப் பேராயம் ஏற்படுத்துவது பற்றிப் பேசினர். இவர்களில் குறிப்பிடத்தக்கவர் அனந்தாச்சார்யலு, அரங்கய்யா நாயுடு, ஜி. சுப்பிரமணிய அய்யர்), இரகுநாதராவ் ஆகிய தமிழர்களாவர். இவர்களின் முடிவுப்படி 1885-ல் பூனாவில் முதல் காங்கிரசு மாநாடு கூடுவதாயிருந்தது. ஆனால் பூனாவில் 'பிளேக் நோய் ஏற்பட்டதால் பம்பாயில் முதல் பேராயக் கட்சி மாநாடு கூடியது. இப்பேராயக்கட்சி தோன்றுவதற்கு முன்பே சென்னையில் 'மகாசன சபை' என்ற தேசிய நிறுவனத்தைத் தோற்றுவித்தவர்களும் இதில் பங்கேற்ற மேற்கண்ட தமிழர்களே ஆவர். இதில் இந்து, முகமதிய உறுப்பினர் பலரும் இருந்தனர். 1921ஆம் ஆண்டு பாலகங்காதர திலகர் சென்னை வந்த போது இச் சபை பேராயக் கட்சியின் கோட்பாடுகளை அப்படியே ஏற்றுச் செயல்பட்டது. பின்னர் இச்சபை பேராயக் கட்சியின் ஒரு கிளையாக வும், பல திறப்பட்ட இந்தியரைப் பண்பாட்டின் அடிப்படையில் ஒன்றுபடுத்தும் நிலையமாகவும் மாறியது. இலண்டன் மாநகரிலும் இந்தியர் சங்கம்' ஒன்று தோன்றியது. - தமிழகத்தில் நாட்டுப்பற்றும், விடுதலை வேட்கையும் ஏற்பட மேற்கண்ட சங்கங்களேயன்றித் தமிழ்மொழியும் ஒரு சிறந்த கருவி யாக அமைந்தது. நாம் கண்ட தமிழ் மறவர்களான பூழித்தேவன், கட்டபொம்மன் முதலியோரின் வாழ்க்கை வரலாறுகள் வீரப்பாவியங் களாவும், நாடகங்களாகவும் பரப்பப் பெற்று மக்களைத் தட்டியெழுப் பின. 'கட்டபொம்மன் சண்டைக் கும்மி' நாட்டுப்புற மக்களையும் தட்டியெழுப்பியது. இத்தகைய வீரப் பாவியங்களேயன்றி ஆன்மீகத் துறையிலும் தமிழர்களை ஒன்று படச் செய்யும் பல நூல்களும் தமிழில் தோன்றின, "நாமார்க்கும் குடியல்லோம். நமனை அஞ்சோம்' எனபதே தமிழர் சமயம், இதனை விடுதலை ஊழியிலும் காண்கி றோம், வடக்கே இராசாராம் மோகன்ராய், தயானந்த சரசுவதி, இராம கிருட்டிணர் தோன்றி ஆன்மநேய உடன்பாட்டை ஏற்படுத்தியதைப் போலவே இராமலிங்க அடிகளார் தமிழகத்தில் ஆன்மநேயத்தை உறுதிப்படுத்தினார். இவரையடுத்து மாயூரம் வேதநாயகனார், கோபால கிருட்டிண பாரதியார், உ.வே. சாமிநாதையர், பரிதிமாற் கலைஞர் (சூரியநாராயண சாத்தரி) பி. சுந்தரம் (பிள்ளை ) முதலி யோரின் அரும்பணிகள் தமிழையும் தேசிய உணர்வையும் ஆன்ம நேய முறையில் வளர்த்தன. டாக்டர். ஜி.யூ. போப், கால்டுவெல் முதலியோரின் அரும்பணியால் திராவிடர்கள் ஒரு தாய் மக்கள் என அறியப்பட்டுத் 'தென்னவர்' 'திராவிடர்' என்ற உணர்வு, தமிழகத்தில் தோன்றிய விடுதலை வேட்கைக்கும், ஒருமைப் பாட்டிற்கும் தமிழ் மொழியே அடிப்படையாக அமைந்தது. அ. முற்போக்காளர் பாலகங்காதர திலகர் பேராயக் கட்சியில் முடுக்கமாகப் பங் கேற்குமுன் அது ஒரு 'மனுப்போடும் கட்சியாகவும், படித்தவருக்கு வேலை தேடித் தரும் நிலையமாகவும் இருந்தது. 1905-ல் கர்சன் பிரபு (1889-1905) வங்காளத்தை இரண்டாகப் பிரித்து தேசியவாதி களின் எதிர்ப்புக்கு ஆளானான். இதனை எதிர்த்து எழுந்த கிளர்ச்சி யில் இந்துக்களும், முகமதியர்களும் ஒரு மனதாய்க் கலந்து கொண்ட னர். பின்னர், இது தேசியக் கிளர்ச்சியாக வளர்ந்தது. அரவிந்தர் வங்க ஏடுகளிலும், திலகர் மராத்திய ஏடுகளிலும் தேசிய உணர்ச்சிகளைத் தூண்டும் பல செய்திகளை வெளியிட்டனர். தமிழகத்திலும் பல தேசிய ஏடுகள் தோன்றின. 'தன்னுரிமை (சுதந்திரம்) எமது பிறப் புரிமை' என்ற திலகரின் குரல் இந்திய நாட்டு ஏடுகளிலெல்லாம் ஒலித்தது. 1905 ஆம் ஆண்டு முதல் 1920 ஆம் ஆண்டு வரை திலகர் பேராயக் கட்சியினின்று விலகி, 'தீவிரவாதியாகித் ' தேசியப்போரை முடுக்கித் திறம்படச் செயல்படும்படி செய்தார். பட்டதாரிகளும், மேட்டுக்குடியினரும் தன்னலத்திற்காகப் பயன்படுத்தும் கூடாரமாக இருந்த இக்கட்சி இவருடைய தலைமையில் ஏழை எளியவரின் (பாமரரின்) பாசறையாயிற்று. தாய்மொழி மட்டுமே கற்றவர்களும் தேசிய உணர்ச்சியைத் தூண்டும் வலிமை பெற்றனர். தமிழகத்தில் எட்டயபுரம் சி. சுப்பிரமணிய பாரதியார் அத்தகையவரில் ஒருவர், தமிழால் தரணியைத் தட்டியெழுப்பி, விடுதலைப் பாடல்களில் பண்பையும், வீரத்தையும், இறைநெறியையும், இயற்கையையும், 'தேசியம்' என்ற தேனில் குழைத்து இசைத்தவர்; முப்பது கோடி முகம் உடைய இந்தியத்தாய் பதினெட்டு முகாமை மொழிகளையும், பல்வேறு மொழிகளையும் பேசினாலும் அவள் பெற்ற குழந்தை கள், 'ஒருதாய் மக்களே" எனக்கூறி இந்திய ஒருமைப் பாட்டினைக் கண்ட பாரதி. இங்கு ஆயிரம் சாதிகளிருப்பினும் இந்தியர் ஒரே குடும்பத்தினரே; இதில் அயலனான ஆங்கிலன் தலையிட உரிமை இல்லை, என்றும் "வீட்டுக்குள்ளே சண்டை போட்டுக் கொள்வோம். வீடு தீப்பற்றி எரியும்போது ஒன்றுகூடித்தியோடு போராடுவோமென ஆங்கிலத் தீயை அணைக்க இந்தியரை அழைத்தவர் பாரதி. பாரதியா ரின் நண்பரான சுப்பிரமணியசிவம் ஒரு முற்போக்கான தேசியவாதி யும், தமிழ்த் தொண்டரும் ஆவார். இவருக்கு ஆங்கில அடக்கு முறையாட்சி பத்தாண்டு சிறைத் தண்டனை வழங்கியது. சிறை மீண்ட பின்னரும் இவர் பல நூல்களை எழுதினார். 'ஞானபானு' என்ற திங்க ளேட்டை நடத்தித் தேசிய உணர்வை வளர்த்தார். இவர் சிறைக் கூடத்திருந்த போது 'சச்சிதானந்த சிவம்' என்ற நூலை எழுதி வறுமை யில் வாடிய தன் மனைவிக்கு அளித்தாராம். இதைத்தவிர இவர் பல தூரல்களையும் எழுதினார். விவேகானந்தரின் ஆங்கில நூல்களில் சிலவற்றையும் தமிழிலாக்கினார். சங்க இலக்கியங்களுக்கு வழி நூல்களை எழுதித் தமிழர் வீரம் மறுமலர்ச்சியடையச் செய்தார். தாம் நடத்திய திங்கள்ஏட்டின் மூலம் 'இந்துநேசம்' 'சுதேசமித்திரன்' ஆகிய ஏடுகள் தன்மான உணர்வுகளும், தனித்தமிழ் உணர்வுமின்றிக் கிடப்பதை வெறுத்தார். சி. சுப்பிரமணிய சிவம் நடத்திய 'ஞானபானு' ஏடும் கப்ப லோட்டிய தமிழர் வ. உ. சிதம்பரனார் நடத்திய 'பாரதி' என்ற திங்க ளேடும் தேசிய வாதிகளை உலகறியச் செய்தன. வ.உ.சிதம்பரனார் ஒட்டப்பிடாரத்தில் பிறந்தவர். கட்டபொம்மனை விடுதலை வீரரெனப் பாவியம் பாடியவர்; தேசிய இயக்கத்தில் ஈடுபட்டு நாற்பது ஆண்டுக் காலம் சிறைத்தண்டனை அடைந்தவர்; பாரதியாரின் உயிர்த்தோழர்: சிறைத்தண்டனை பெற்றுச் சிறையிலேயே செக்கிழுத்த போதும் ஆன்ம சிந்தனையிலும், தமிழ் மொழியிலும் அறுபடா சிந்தனை கொண்டவர் வ.உ. சி ஆவார். வ. வே. சுப்பிரமணிய (ஐயர் வழக்கறிஞர் படிப்புக்காக இலண்டன் சென்றவர். நாட்டுப்பற்றால் வெள்ளையருக்கெதிராகச் செயல்பட்டு அவர்களின் தண்டனையிலிருந்து தப்பி மாறுவேடம் பூண்டு தமிழகம் போந்து திலகரின் முடுக்க இயக்கத்திலீடுபட்டவர். இவர், 'தேசபக்தன்' என்ற கிழமையிதழில் ஆங்கில ஆட்சியைச் சாடிய தால் ஒன்பது திங்கள் சிறையில் வசித்தார். சிறையிலிருந்தபோது கம்பரைப் பற்றிய ஆராய்ச்சி நூலை ஆங்கிலத்தில் எழுதினார். இவர் ஒரு தமிழ் இலக்கிய மேதை. ஆங்கிலம், ஃபிரேஞ்சு, அரபு, இந்துசு தானி ஆகிய மொழிகளிலும் வல்லவர். இவருடைய பன்மொழி அறிவும், 'பாரிஸ்டர்' படிப்பும், முடுக்கமான தேசப் பற்றும் தமிழகத் தில் பல் விடுதலை வீரர்களை வளர்த்தன. இவர் உருவாக்கிய தமிழ்க் குருகுல வித்தியாலயம்' இளைஞர்கள் நாட்டு விடுதலைப் போருக் குப் பயிற்சி பெறும் நிலையமாக விளங்கிற்று. திருநெல்வேலி மாவட்டம் கட்டபொம்மன் காலத்திலிருந்தே வீரத்தின் விளை நிலமாய் விளங்கியதாகும். வ.உ.சியும் பிறரும் தோன்றிய இம் மாவட்டத்தில் பரலி. சு. நெல்லையப்பர் தோன்றினார். இவருடைய அண்ணன் பரலி சு. சண்முகசுந்தரம் பிள்ளையை மக்கள் "வந்தே மாதரம் பிள்ளை "யென்றே அழைத்தனர். தேசியக் கவி சுப்பிரமணிய பாரதியாரின் உடன் பிறவாத் தம்பியாகக் கொண்டு விடுதலைப் போரில் ஈடுபட்டார். பாரதியார் நடத்திய 'இந்தியா' என்னும் கிழமை ஏட்டிலும், சுப்பிரமணிய சிவம் நடத்திய 'பால பாரதி யிலும், திரு. வி. க. நடத்திய 'தேசபக்தன்', 'நவசக்தி' ஆகிய நாளேடுகளிலும் நெல்லையப்பர் விடுதலைப் பாடல்களையும், கட்டுரைகளையும் எழுதினார். தாமே 'லோகோபகாரி' என்ற கிழமை இதழையும் நடத்தினார். இவ்வாறு தமிழர்கள் தமிழ்வழி விடுதலையை வழிபட்டனர் நாடெங்கணும் விழிப்புணர்ச்சியும் விடுதலை வேட்கையும் ஏற் பட்டன. திலகரின் முடுக்கமான போராட்டங்கள் தமிழகத்திலும் வெடித்தன. தேசியவாதிகள் புதுச்சேரியைப் பாசறையாகக் கொண்டு செயல்பட்டனர். 1911 ஆம் ஆண்டு தில்லியில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழா (தர்பார்) நடந்தது. இதற்குப் பதினான்கு கோடி செலவிடப்பட்டது. இந்நிகழ்ச்சி முற்போக்காளர்களை வெறிபிடிக்கச் செய்தது. மக்கள் பட்டினியால் வாடும்போது படாடோபச் செல்வா எனக் கொதித்தனர். நாடெங்கிலும் ஆங்கில் ரைப் பலவகைகளிலும் கொல்லும் சதித் திட்டங்கள் உருவாயின. தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியாளராயிருந்த ஆசுதிரை என்ற வெள்ளையனை வாஞ்சிநாதன் என்ற இளைஞர் சுட்டுக் கொன்றார். இதற்குக் காரணம் குற்றால அருவியில் வெள்ளையர் குளிக்கும்போது இந்தியர் யாரும் குளிக்கக் கூடாதென வெள்ளையர் போட்ட நிறத்திமிர்ச் சட்டமே. இச் சட்டத்தை எதிர்த்துத் தமிழர்கள் இலண்டன் உச்ச நீதிமன்றம் வரை வழக்குத் தொடுத்து வென்றனர். ஆயினும், தாழ்த்தப் பட்டவர் இதில் குளிக்கக் கூடாதென்ற உயர் சாதித்தமிழர் விதியை இலண்டன் அறமன்றமும் ஒப்புக் கொண்டது. (பின்னர் சி. இராசகோபாலாச்சாரியார் முதலமைச்சரான போது 1938 -ல் தாழ்த்தப்பட்டவரும் குற்றால அருவியில் குளிக்கலாமென உத்தரவிடப்பட்டது. ஆசுதுரையைச் சுட்டுக்கொன்ற வாஞ்சிநாதன் பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டான். இவருடன் சேர்ந்து இச்சதியில் ஈடுபட்ட பதினால்வர் மீது கொலைவழக்குத் தொடரப்பட்டது. சங்கர கிருட்டின அய்யர்), மடத்துக் கடை சிதம்பரம் பிள்ளை ), முத்துக் குமாரசாமி பிள்ளை ), சுப்பையா (பிள்ளை ), சகந்நாத அய்யங்கார்), பிச்சுமணி(அய்யர்), வேம்பு, அரிகரன் தேசிகாச்சாரி, அழகன் பிள்ளை , சாவடி அருணாசலம், பாடிபிள்ளை , வந்தே மாதரம் சுப்பிர மணியன் (அய்யர்) ஆகியோர் குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தப் பட்டனர். நீலகண்ட பிரமசாரி என்ற இளைஞர் முதல் குற்றவாளி யானார். இவர்கள் யாவரும் இளைஞர்களே. தீர்ப்பில் இவர்களுக்குச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. இத்தோடு தமிழகத்தில் விடுதலைப்போர் வேரூன்றிய ஆழமும் ஆங்கிலேயருக்கு அறிவுறுத் தப்பட்டது. இதனால் தமிழகத்தில் விடுதலைப்போர் மேலும் முடுக்கமடைந்தது. தலைமைக் காவலராகப் பணியாற்றிய குருநாத அய்யர்) என்பவர் வெள்ளையர் விடுதலை மறவர்களை ஒடுக்க மேற் கொள்ளும் திட்டங்களைத் தோல்வியடையச் செய்து, விடுதலை மறவருக்குப் படைகளைக் கொடுத்துதவினார். இதனால் இவர் ஆறாண்டுக் கடுங்காவல் தண்டனையும் பெற்றார். திலகர் தொடங் சிய தீவிர இயக்கத்தில் பங்கேற்றுச் சுதேசி இயக்கத்தைப் பரப்பிய 'சுதேசிய அய்யங்கார்' எனப்படும் பத்மநாபன் (அய்யங்கார்) அடக்குமுறைக்கு ஆளானார். ஆ. சுதேசிக் கப்பல் கழகம் 1906 விடுதலையே நமது குறிக்கோள் அதனை எப்பாடுபட்டே னும் அடைந்தே தீரவேண்டும்: விடுதலையின்றி வாழ்வதை விடச் சாவதே மேல் ஆன்மா அழிவற்றது. பொது நலத்திற்காகவும் நாட்டின் விடுதலைக்காகவும் உயிர்துறப்பவனே நற்பேறு அடை வான் என்று கூறி மக்களைத் தட்டியெழுப்பிய வ. உ. சிதம்பரனார் வெள்ளையனைக் கப்பலேற்றவே சுதேசிக்கப்பல் கழகத்தைத் தொடங்கினார். இவருடைய தேசியப் போராட்டத்திற்கு இருமுறை வாழ்நாள் தண்டனை வழங்கப்பட்டுப் பின்னர் குறைக்கப்பட்டது, 1906 - ல் சுதேசிக் கப்பல் கழகத்தைத் தொடங்கிய வ.உ.சி. மக்களிடம் நன்கொடை கேட்டார். பாரதியார் சி. இராசகோபாலச்சாரி (இராசாசி) முதலியோர் பொருள் திரட்டினர். சேலத்தில் வழக்குரை ஞராய்த் தம் பணியைத் தொடங்கிய இராசாசி தான் சேர்த்து வைத் திருந்த ஆயிரம் ரூபாயைத் தேசியக் கப்பல் கழகத்திற்கு அளித்தார். மக்கள் தலைக்கு நான்கு அணாமேனி (25 காசு) பொருளுதவி யளித்தனர். இவ்வாறு சேர்த்த பணத்திலிருந்து இரண்டு கப்பல்கள் வாங்கப்பெற்றன. வ. உ. சி. தமிழில் நூல்களை எழுதி விற்றுவரும் பணத்தை இக் கப்பல்கழக நிதியாக்க முயன்றார். அக்காலத்தில் தமிழ் நூல்களை யாரும் வாங்குவதில்லை. இராசாசி இவற்றைத் தாமே வாங்கிக் கொண்டார். அப் பணம் சுதேசிக் கப்பல் நிதியுடன் சேர்ந் தது. சுதேசிக் கப்பல் கழகம் உலகப் புகழ்பெற்ற, கடலாளுமை படைத்த வெள்ளையரை எதிர்த்து வெற்றி பெறுவது என்பது விண்கனவு. ஆயினும், விடுதலையுணர்வின் அடிப்படையிலேயே வ. உ. சி. கப்பலை அலைகடல் நடுவுள் செலுத்தினார். வ.உ.சியின் முயற்சிக்கு உறுதுணையாய் நின்றவர் பரலி சு. சண்முகசுந்தரம் (பிள்ளை ) ஆவார். வ.உ.சி. வந்தே மாதரம் பிள்ளை (பரலி சு. சண்முகசந்தரம் பிள்ளை ), சுப்பிரமணியசிவம் ஆகியோர் திருநெல்வேலிச் சீமையில் விடுதலை வேட்கையைப் பெருக்கெடுத்து : ஓடச் செய்தனர். சிதம்பரனார் ஓட்டிய கப்பல் மூடவரையும் உணர்வு பெற்று ஓடச் செய்தது. தூத்துக்குடியில் வாழ்ந்த வெள்ளையர்கள் இரவில் நகருக்குள் தூங்குவதற்கு அஞ்சி இரவு முழுவதும் படகுகளி லேறிக் கடலில் மிதந்து தூங்கினரென்றால் இவர்களின் விடுதலைப் போரின் வேகத்தை ஊகிக்கலாம். 1908-ல் தூத்துக்குடியில் 'கோரல்' ஆலைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். தேசிய விடுதலை வரலாற்றில் அரசியல் கலப்புடைய முதல் வேலைநிறுத்தம் இதுவே ஆகும். இதற்குத் தலைமை தாங்கி நடத்தியவர் வ.உ.சி.யாவார். இதனையும் ஒரு குற்றமாகக் கொண்டே அவருக்கு வாழ்நாள் தண்டனை வழங்கப் பட்டது. இந்தியாவிலேயே முதன் முதல் தொழிலாளர்களை ஒன்று படுத்தித் தொழிற்கழகத்தைத் தோற்றுவித்தவர்களும் விடுதலை மறவரே. 1918-ல் சென்னைத் தொழிலாளர் கழகம் நிறுவப்பட்டது. இதனை நிறுவியவர்கள் திரு. வி. கலியாண சுந்தரனார், குத்தி கேசவப்பிள்ளை , சி. செல்வபதி செட்டியார்), இராமானுசலு நாயுடு), வாடியா, எம்.சி. இராசா ஆகியோராவர். இவ்வாறு, கி.பி. 1920 ஆம் ஆண்டுக்குள் விடுதலை இயக்கம் படித்தவர், ஏழை எளியோர், பள்ளி மாணவர், தொழிலாளர் முதலிய எல்லாப் பிரிவினரிடையிலேயும் செல்வாக்கு பெற்றுவிட்டது. புரட்சி இயக்கங்கள் தமிழகமெங்கணும் அமைக்கப் பெற்றன. இத்தகைய இயக்கங்களுக்குப் பெரும் பொருள் உதவியவர் மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை ) ஆவார். இவருடைய தம்பியே டி. எசு. சொக்க லிங்கம் பிள்ளை) என்பார். தூத்துக்குடியைப் பின்பற்றிக் கருவூரி லும் விடுதலை இயக்கம் வலுப்பெற்றது. இதில் முகாமைப் பங்கேற்ற வர்கள் காஞ்சிபுரம் கிருட்டிணசாமி (சர்மா), வேங்கட ஆரியா ஆகி யோராவர். விடுதலைக்குயில் பாவலர் சுப்பிரமணிய பாரதியார் 1908-ல் புதுச்சேரியில் இடம் பெற்று இந்தியா' என்னும் தாளிகையை நடத்தி வந்தார். இவரைப் போலவே நாட்டுப்பற்றாளர் பலரும் புதுச்சேரி யைப் புகலிடமாகக் கொண்டு தமிழ்நாட்டில் விடுதலைக் கப்பலோட விசைக் கருவிகளாய் விளங்கினார்கள். புதுச்சேரி பிரெஞ்சியருக்குச் சொந்தமானதால் ஆங்கிலர்கள் அவர்களைத் தண்டிக்க முடி ய வில்லை . வெளிநாடுகளில் இந்திய விடுதலை வீரர்கள் இந்தியாவில் மட்டுமேயன்றி அயல்நாடுகளிலும் இந்திய விடுதலை வீரர்கள் இந்தியாவின் விடுதலைக்காகப் போராடினர், இந்தியச் சங்கமொன்று இலண்டனிலும் அமைக்கப்பட்டதைக் கண் டோம். இந்தியாவிடுதலையடையவேண்டும் என்பதில் மாந்தவுணர்வு கொண்ட வெள்ளையர், சிலரும் சிறப்பாக அமெரிக்கரும் அக்கறை காட்டினர், முதல் உலகப்போரின்போது பிரிட்டானியருக்குப் பகை வராயிருந்தவர்கள் அனைவரும் இந்திய விடுதலை இயக்கத்திற்கு விடுதலைப் போரில் தமிழகம் - காந்தி ஆண்டுமானம் ஆதரவு காட்டினர். குறிப்பாகச் செருமானியர் இந்தியருக்கு நேரடி யாகவே உதவ முன்வந்தனர். தாதாபாய் நவரோசி இலண்டனில் பொதுமக்கள் மன்றத்தில் உறுப்பாண்மை ஏற்று இந்தியருக்கு நீதி கேட்டு நின்றார். இந்நிலையில் இலண்டனில் படிக்கச் சென்ற சாவர்க்கர் என்ற இளைஞர் அங்கிருந்த வ.வே.சு. அய்யருடன் இணைந்து இந்திய விடுதலைக் கழகம் (ப்ரி இந்தியா சொசைடி) என்ற நிறுவனத்தை ஏற்படுத்தினார், கமுக்கமாய்ப் பல பயங்கர வேலைகளிலீடுபடப் பலருக்குப் பயிற்சியளித்தார். அத்தகைய பயிற்சி நிறுவனம் 'அபிநவபாரத்' எனப்பட்டது. இதில் பங்கேற்றவர் கள் ஸ்காட் லாண்டுயார்டு காவல் நிறுவனத்திற்குப் பெரும் பணியைக் கொடுத்தனர். சாவர்க்கர் போர் வாள்' என்ற தாளிகையை நடத்தி இங்கிலாந்தைத் திக்குமுக்காடச் செய்தார். சாவர்க்கர் சிறை செய்யப்பட்டு இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்டார். கப்பல் மார்செல்சு துறைமுகத்தை நெருங்கும்போது கடலில் குதித்துத் தப்ப முயன்றார்; ஆனால், பிடிக்கப்பட்டுவிட்டார். இதற்காகவும் சாக்சன் என்ற வெள்ளையனைக் கொலை செய்யத் தூண்டியதற்காகவும் ஐம்பது ஆண்டுகள் சிறைத்தண்டனைப் பெற்று அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டார். அந்நாளில் அந்தமான் விடுதலை மறவர்களின் நரக உலகமாக இருந்தது. இலண்டனில் இந்திய நண்பர்கள் நடத்திய இந்தியர் விடுதியில் இருந்து வ.வே.சு. அய்யர் இங்கிலாந்திலிருந்த இந்தியரை ஒன்று திரட்டி விடுதலைக்குப் பாடுபடச்செய்தார். வழக்குரைஞராகப் படிக்கச் செல்வோரும், உயர்படிப்புக்காகச் செல்வோரும் இந்திய விடுதலையையும், வ.வே.சு. அய்யரையும் அறிந்தனர். பின்னர், இலண்டன் ஒற்றாய்வரிடமிருந்து (இரகசியப் போலிசாரிடமிருந்து) தப்பி, மாறுவேடம் பூண்டு வ.வே.சு. அய்யர் பாண்டிச்சேரி புகுந்து பாரதியார், அரவிந்தர் முதலியோருடன் சேர்ந்து விடுதலை இயக்கத் தை முடுக்கினார். முற்போக்காளர், வெள்ளையர் பயணம் செய்யும் தொடர் வண்டிகளைக் (இரவில்) கவிழ்த்தல், தொலைவரிக் கம்பிகளை (தந்தி) அறுத்தல், காவல் நிலையங்கள், அஞ்சல் நிலையங்கள் முதலியவற்றைத் தாக்கியழித்தல், கைக்குண்டு வீசியும், வேட்டொத் தால் சுட்டும், நஞ்சிட்டும் வெள்ளையரைக் கொல்லுதல் முதலிய செயல்களிலீடுபட்டனர். இவற்றிற்கெல்லாம் மேலாக முதல் உலகப் போரின் போது ஆங்கிலரின் பகைவராகிய செருமானியருடன் தொடர்பு கொண்டு ஆங்கிலரை விரட்டத் திட்டமிட்டுச் செயல்பட்ட னர், 1911-ல் வங்காளத்தில் நடந்த விடுதலை இயக்கத்தோடு செருமானியர்கமுக்கமாய்த் தொடர்பு கொண்டு உள்நாட்டில் பெருங் கல்கத்தை விடுதலை மறவர்கள் தொடங்க வேண்டுமென்றும், அதே நேரத்தில் செருமானியர் நாட்டைச்சூழ்ந்து தாக்க வேண்டுமென்றும் திட்டம் தீட்டினர். செருமனியின் தலைநகரமான பெர்லின் நகரத்தில் 'இந்தியப் புரட்சியாளர் கழகம்' அமைக்கப்பட்டது. திருவாட்டி காமா. சியாம்சி கிருட்டிணவர்மா, வீரசாவர்க்கர். சீனிவாச ஆச்சாரி முதலியோர் செருமன் பேரரசர் கெய்சர் வில்லியத்துடன் தொடர்பு கொண்டு இந்திய விடுதலைக்கு வழிவகுத்தனர். செருமனிக்கும் காபூலுக்குமிடையே செய்தித் தகவல் தொடர்பு ஏற்பட்டது காபூல் அரசர் மகேந்திர பிரதாப் இந்தியத் தன்னுரிமை (சுதந்திர) அரசைக் காபூலில் அமைத்து அதன் தலைவராகவும் செயல்பட்டார். செருமன் தரைவழியாக ஆப்கானிசுத் தானத்தைத் தங்குதளமாகக் கொண்டு. இந்தியாவைத் தாக்கி, வெள்ளையனை வெளியேற்றி இந்தியருக்கு விடுதலையளிப்பது என்றும் திட்டம் வகுக்கப்பட்டது. இந்நிலையில் நீர் வழியாகவும் ஒரு பெருந்திட்டம் உருவாகி யது - காபூலில் அமைந்த இந்தியத் தன்னுரிமையரசின் தலைமை யமைச்சராகச் செயல்பட்டவர் பர்க்கதுல்லா என்பவர் ஆவார். அயலக அமைச்சராகச் செயல்பட்டவர் செண்பகராமன் பிள்ளை) என்னும் தமிழராவார். முதல் உலகப்போர் முடுக்கமாய் நடந்து கொண்டிருந் தது. பிரிட்டானியப் பேரரசு ஆட்டங்கண்டு சாய்ந்து கொண்டிருந்த்து. செண்பகராமன் (பிள்ளை) செருமானியப் போர்க் கப்பல் 'எம்டன்' என்பதில் புறப்பட்டார். கப்பல் இரவு நேரத்தில் சென்னைக் கடற்கரையை நெருங்கியது. திடீரென வெள்ளை யருக்குச் சொந்த மான எண்ணெய்க்கிடங்கின் மீது குண்டு வீசப்பட்டது. ஆள் சேதம் எதுவுமில்லை . இவ்வாறு துணிவுடன் வெள்ளையர் ஆட்சியைக் கலக்கிய வீரத்தமிழர் செண்பகராமன் அழுத்தமான நாட்டுப் பற்றுடையவர். கல்லூரிப் படிப்பைத் துறந்து திருவனந்தபுரத்திலிருந்த செருமானியர் கிதிரிக்லாண்டு என்பவன் உதவியுடன் சுமுகமாய்ச் செருமானி போய்ச் சேர்ந்து, அங்கு இந்தியக் கழகத்தில் மும்முரமாய்ப் பங்கேற்று, காபூலில் தன்னுரிமை இந்திய அரசை அமைத்து, அதன் அயலக அமைச்சராகித் தனது பெருந்திட்டத்தால் விடுதலையடைய விரும்பியவர்செண்பகராமன், செருமானியர் உதவியுடன் தன்நாட்டு விடுதலைக்கு வழிகானத் துடித்த இவர் இட்லரையே மன்னிப்புக் கேட்கச் செய்தார். இட்லர் இந்தியரை மிலேச்சர்கள், அடிமைகளாகவே இருக்கத் தகுதி படைத்த வர்கள் எனக் கூறியதை மறுத்து இந்தியரின் வீரப்பண்பையும், நாகரிகத்தையும் விளக்கிக் கூறி இட்லரை மன்னிப்புக் கேட்க வைத் தார். இவரை எப்படியும் சிறைப்பிடிக்கத் திட்டமிட்ட பிரிட்டானியர் உலகப் புகழ்பெற்ற அழகியும், வேவுக்காரியுமான மாதா அரி என்பவளையனுப்பி இவரை மயக்க முயன்று தோற்றனர். அந்த அளவு இவருக்கு நாட்டுப்பற்று குருதி தாளத்துடன் பாய்ந்தோடிய தால் பிற எதுவுமே இவரைத் தடுமாறச் செய்ய முடியவில்லை . தமிழர்களைப்போலவே பஞ்சாபிகளும் அயலகத்தில் இருந்து கொண்டு விடுதலைக்குப் பாடுபட்டனர். இலாலா அரிதயாள். கேகாசிங் பாக்னா ஆகிய பஞ்சாபித்தலைவர்கள் அமெரிக்காவில் 'கத்தார்' என்ற கழகத்தை அமைத்தனர். முதல் உலகப்போரின்போது சூயஸ் கால்வாயை அடைத்துப் பிரிட்டனுக்குத் தோல்விநேரச் செய்வது என்பது இவர்களின் திட்டம். ஆனால் இவர்களை அறியாமலேயே பிரிட்டானிய உளவாளிகள் கமுக்கத்தைப் பிரிட்டனுக்கு அறிவித்துவிட்டனர். இதனால், இவர்கள் யாவரும் சிறைப்பட்டனர். இவர்களால் சொந்தமாக வாங்கப்பட்ட 'கோம்கட்ட மாரு" என்ற கப்பலில் போர்ப்படைகள் ஏற்றப்பட்டு அக்கப்பல் கல்கத்தாத் துறையை அடையும்போது கமுக்கம் வெளியாகி, பிரிட்டானியரால் தாக்கப்பட்டனர். அதிலிருந்த விடுதலை வீரரில் பதினாறு பேர் கொல்லப்பட்டனர். எஞ்சியவீரர்கள் அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டனர். ஈ. தன்னாட்சி இயக்கம் இந்தியருக்குத் தன்னாட்சியில் பயிற்சியேற்பட்டால்தான் அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்படுமென்பதை முதலில் கூறியவர் சியாம்சி கிருட்டிணவர்மா என்பவராவார். இந்திய சோசலிஸ்டு' என்ற தாளிகையை இங்கிலாந்தில் நடத்தி அதன்வழித் தன்னாட்சி முறையை விளக்கினார். அன்னிபெசன்ட் அம்மையார் 1916 ஆம் ஆண்டு 'தன்னாட்சிக் கழகம்' என்ற ஒன்றைத் தொடங்கி இந்தியர் தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட படிநிகராளிகளால்தாம் தாங்கள் ஆளப்பட வேண்டுமென்பதை விளக்கினார். ஓராண்டுக்குள் இவ் வியக்கம் நாடு முழுவதும் பரவிப் பல கிளைக்கழகங்களைப் பெற்றது. சென்னையில் இது பெரும் வலிமை பெற்றது. அம்மையாரின் 'பிரமஞானசபை' ஆன்மீக வழியில் மக்களை ஒன்றிணைத்ததைப் போலவே தன்னாட்சி இயக்கமும் விரைந்து மக்களை ஒன்றுபடுத்தி யது. அருண்டேலும், வாடியாவும், அம்மையாருக்கு உறுதுணை யாயினர். 1917-ல் அம்மையார் பேராயத்தின் தலைவரானதும் இந்த இயக்கம் பேராயத்தின் கோட்பாடாகியது. இவர் தனது பொது நலம்' 'புத்திந்தியா' ஆகிய ஏடுகளில் தன்னாட்சிக் கோட்பாடுகளை விளக்கினார், அன்னிபெசன்ட் அம்மையாரைப் போலவே திலகரும் தன்னாட்சிக் கொள்கைகளைத் தனிப்பட்ட முறையில் பரப்பினார். ஆனால், அவருடைய மும்முர இயக்கமும், பிற்போக்கு இயக்கமும், ஒன்றுபட்டு காங்கிரசுக் கட்சியாக இணைந்தபின் தன்னாட்சிக் கோட்பாடுகள் காங்கிரசுக் கட்சியின் கொள்கைகளாயின. ஆகவே, பிளவுபட்ட காங்கிரசை இணைக்கும் பாலமாக அமைந்ததோடு ஆங்கிலேயருக்கு அதிர்ச்சி மருந்தாகவும், பயன்பட்டன. திலகரும், பெசண்ட் அம்மையாரும், அருண்டேலும், வாடியாவும், சிறைப் பட்டபோது மக்கள் கொதித்தெழுந்ததைக் கண்ட பிரிட்டானியர் வேறு வழியின்றித் தன்னாட்சியில் இந்தியருக்கு உரிமைகளை வழங்கும் 'மிண்டோ மார்லி சீர்திருத்தங்கள்' எனும் பெயரால் 1919 ஆம் ஆண்டு இந்திய அரசியல் சட்டத்தைக் கொண்டுவந்தனர். இந்நிலையில், அன்னிபெசன்டிற்கு உதவியாயிருந்தவர் சென்னை எசு. சுப்பிரமணியன் (அய்யர்) ஆவார். இவர் ஆங்கிலரின் அடக்குமுறைகளைக் கண்டித்து அமெரிக்க மக்கள் ஆட்சித் தலைவர் வில்சனுக்கு மடல் எழுதினார். இதனைக் கண்டு சீறிய ஆங்கிலரை எதிர்த்து அவர்கள் தனக்களித்த நீதிவான் பகதூர்', 'சர்' ஆகிய விருதுகளை வீசி எறிந்தார். தன்னாட்சி இயக்கத்தில் சேர்ந்து முடுக்கமாய் உழைத்த மற்றொரு தமிழர் வரதராசுலு (நாயுடு) என்பவராவார். இவர் நடத்திய 'பிரபஞ்சமித்திரன்' என்ற கிழமை யேட்டில் அரசு இரண்டகச் செய்தி வெளியிட்டதாக இவர்மீது வழக்குத் தொடரப்பட்டது. இவருக்காக வழக்காடியவர் இராசாசியா வார். வழக்கு மன்றத்தைவிட்டு வெளியேறும்போது இவரைக் காவலர்கள் சுட்டனர். தற்செயலாகத் தப்பினார். அக்காலத்தில் நீதி மன்றத்திற்கு வருவோரைக்கூடச் சுடுமளவுக்கு ஆங்கில ஆட்சியின் கொடுமை தலைவிரித்தாடியது. வரதராசுலு முடுக்கமான முற்போக் காளர். இவரை மக்கள் 'துப்பாக்கி நாயுடு' 'தென்னாட்டுத் திலகர்' என்றழைத்தனர். காந்தி அடிகளை அரசு சிறைப்படுத்திய அன்று 'அடிகளார் விடுதலை அடையும்வரை வரிகொடுப்பதில்லை என்று முடிவு செய்து கொண்டார். இதனால் இவருடைய சொத்துக்களும், வீடும், செல்வமும் பறிமுதல் செய்யப்பட்டன. ஆயினும், இவர் தம் முடிவில் இருந்து மாறி வரி கொடுக்கவில்லை . 1918-ல் பேராயக் கட்சியின் மாநாடு காஞ்சிபுரத்தில் கூடி யது. அதில் அப்பொழுது நடந்துகொண்டிருந்த முதல் உலகப் பெரும் போரில் இந்தியர் அரசுடன் ஒத்துழைப்பதா வேண்டாமா என்று விவாதிக்கப்பட்டது. ஒத்துழைக்க வேண்டுமென அன்னி பெசன்ட் அம்மையாரும், சி. பி. இராமசாமி அய்யரும், பிறரும் கூறினர். ஒத்துழைக்கக் கூடாதென இராசாசி, சத்தியமூர்த்தி, முத்து ரங்கம் முதலியோர் கூறினர். பின்னர் கட்சியே வென்றது இதனால் அம்மையார் செல்வாக்கு இழந்தார். அடுத்த ஆண்டு 1919 ஏப்ரல் 13 ஆம் நாள் 'விடுதலை வரலாற் நின் குருதி இயல்" சாலியன் வாலாபாக் பூங்காப் படுகொலை நடந் தது. ஜெனரல் டையர் குண்டுகளால் அப்பாவிகளை நோக்கிச்சுட்டும், இனியும் சுடத் தோட்டாக்கள் இல்லையே என்று வருந்தினான். இதனைக் கண்டு நாடெங்கிலும் கொந்தளிப்பு ஏற்பட்டது. அரசப்படி நிகராளியர் வைய்சராய்) சபையில் உறுப்பினராயிருந்த சி, சங்கரன் (நாயர்) தம் பதவியைத் துறந்தார். பாக்குயில் சரோசினி (நாயுடு), தனது 'கெய்ச்சர் - இ - இந்த்' விருதை வீசியெறிந்தார். நாட்டினப் பாவலர் தாகூர் - 'சர்' பட்டத்தை உதறினார். இந்நிகழ்ச்சியைப் பற்றி எழுதிய தாளிகைகளின் ஆசிரியர்கள் தண்டனைப் பெற்றனர். சென்னையில் நடத்தப்பட்ட இந்து' நாளேட்டிற்கு ஈராயிரம் உருபா பிணையத் தொகை விதிக்கப்பட்டது. விடுதலைக் கோருவதே குற்றம் என்று அரசு சட்டம் கொண்டு வந்தது. இதன் கீழ்ப் பலர் குற்றம் சாட்டப் பட்டுத் தண்டனை விதிக்கப்பட்டனர். இதற்கு எம். ஆர். செயகர், திலகர், காந்தியடிகள் முதலியோரும் இரையானார்கள். சென்னையில் 'பாரததேவி ஆசிரியருக்காக அல்லாடி கிருட்டிணசாமி அய்யர்) வழக்காடி வெற்றி கண்டார். 2. காந்திய ஆண்டுமானம் (1920-1947) 1918ஆம் ஆண்டில் பேராயக் கட்சி தில்லியில் கூடி 'மண்டிலத் தன்னாட்சி வேண்டுமென்று கோரியது. மேலும் செய்தித் தாள்கள் சட்டம், குற்றவியல் திருத்தச் சட்டம், அரச இரண்டகச் சட்டம் இந்தியப் பாதுகாப்புச் சட்டம் முதலியவற்றை நீக்கும்படியும் கோரி யது. மாநிலங்களுக்கு முழுமையாகத் தன்னாட்சி (மாநில சுயாட்சி) வேண்டுமென்று சிலர் வாதிட்டனர். இதனால் பேராயக் கட்சியினர், பிற்போக்காளர் (மிதவாதிகள்), முற்போக்காளர் (தீவிர வாதிகள்) என்று இரண்டாகப் பிரிந்தனர். இந்நிலையில் காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வந்தார். பீகாரில் சாம்ரான் மாவட்டத்தில் அவுரி பயிரிடுவோருக்கும், ஐரோப்பிய முதலாளிகளுக்கும் இடையே பூசல் ஏற்பட்டதும், பம்பாய் மாநிலத்தில் ஏற்பட்ட பஞ்சத்தால் வாடிய மக்களை வருத்தி ஆங்கில அரசு வரித்தண்டல் செய்ததும், காந்தியார் பாடுகிடப்பு (சத்தியாகிரகப் போரிலீடுபடக் காரணங்களாயின. வல்லபபாய் பட்டேல் இவருடைய போருக்குத் துணை நின்றார். முதல் உலகப்போரும் முடிந்தது. காந்தியாரும் தமது அமைதி (சாத்வீகப் போரில் வெற்றி கண்டார். இதுதான் பேராயக் கட்சியின் வெற்றிப் பாதையின் தொடக்கவியல் ஆகும். 1919 ஆம் ஆண்டு அரசியல் சட்டம் மாநிலங்களில் இரட்டையாட்சி முறையைக் கொண்டுவந்தது. விடுதலை மறவருக்கு இது ஒரு பெரிய ஏமாற்ற மாகியது. விடுதலை மறவர் இனித் தன்னாட்சியும், பொறுப்பாட்சி யும் கோருவதை விடுத்து முழு விடுதலை (பூரண சுதந்திரம் ) பெற முடிவு செய்தனர். இந்நிலையில் காந்தியடிகள் பேராயக் கட்சியின் தலைவரானார். பாடுகிடப்பு (சத்தியாகிரகம், அமைதி (சாத்வீக)ப் போராட்டம், வன்முறையற்ற ஒத்துழையாமை, சட்டமறுப்பு, உண்ணாநோன்பு முதலிய புதிய படைகளை (ஆயுதங்களைக் கொண்டுத் தனது விடுதலைப் போரைத் தொடங்கினார். ஏற்கனவே, சாலியன் வாலா பாக் படுகொலை, எவரையும் உசாவலின்றிச் பிறையிலடைக்கும் ரெளலட்' சட்டம் முதலியவற்றால் மக்கள் தமிழகசமுகப்பண்பாட்டு வரலாறு கொதித்துக் கொண்டிருந்தனர். பிரிட்டானிய ஆளுமையை எதிர்த்தெழுந்த அனைத்துலக இசுலாமியரின் கிலாபத் இயக்கம் ஒரு பயங்கரப் படையாயிற்று. இச்சூழலில் காந்தியடிகளின் தலைமை யில் பேராயக் கட்சி அடக்கு முறைகளுக்கு இடையில் மெய்யாய்வு (சத்திய சோதனைகளைத் தாண்டி வலுப்பெற்றது. 1908முதல் 1920வரை திலகர் காலம் படைத்த "தீவிர' இயலைச் 'சாத்வீக' இயலாக மாற்றியவர் காந்தியடிகளாவர். ஆகவே, 1920 ஆம் ஆண்டு முதல் விடுதலையடையும் வரை இந்தச் சாத்வீக முறையிலான 'காந்திய சகாப்தம்' தோன்றியது. இதில் தமிழர்களின் பங்கைச் சுருங்கக் காணலாம். காந்தியடிகளை 1920 ஆம் ஆண்டு நாகபுரியில் நடந்த மாநாடு பேராயக் கட்சியின் தலைவராக ஏற்றது. ஒத்துழையாமை இயக்கம் பற்றி இம்மாநாடு முடிவுசெய்து அதனைச் செயல்படுத்தத் தீர்மானித் தது. மொழிவழி மாநிலங்களைப் பிரிக்கும் கோட்பாடும் உறுதிசெய்யப் பட்டது. இதனால் ஆங்கில மொழியின் ஆதிக்கத்தைக் கற்றுத் தாய்மொழிகள் (இந்திய மொழிகள் வளரும் வாய்ப்பும், இதன்வழி ஆங்கில மேலாண்மைக்கு அடிப்படை உறுதியற்றுப் போகும் திட்டமும் ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆங்கிலக் கல்விச்சாலைகளை மறுப்பது, நாட்டினக் கல்விச்சாலைகளை அமைப்பது, நாட்டின் மொழியாகத் தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்ட இந்தியை ஏற்பது முதலிய தீர்மானங்களும் காந்தியடிகள் தலைமையில் நிறைவேறின. இந்நிலையில்தான் 'தாய் மொழிப்பற்றே தாய்நாட்டுப்பற்று' என்ற உண்மையுணர்வும் தோன்றியது. நாட்டினப் பாவலர் சுப்பிரமணி பாரதியாரும் செந்தமிழ் நாட்டினையும், தந்தையர் நாட்டையும், வாழிய பாரத மணித்திருநாடு' எனத் தாய்மொழியையும், தமிழையும் இந்திய நாட்டையும் வாழ்த்தினார். தேசியம்' இம்முறையில் புத் துணர்ச்சியுடன் வளர்ச்சியடைந்தது, விடுதலைப் போருக்குத் தாய் மொழிகளும், தாய்மொழி இலக்கியங்களும் மக்களைத் தட்டி எழுப்ப உதவின. ஆங்கில மோகம்" குறைந்தது. காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தைத் தமிழகத்தில் தொடங்கியவர் இராசாசியே. இதில் கிலாபத் இயக்கத்தினரும் (முகமதி யரும் பங்கேற்றனர். இதனால் பலர் முழுநேரமும் நாட்டுப் பணியி வீடுபட்டனர். பட்டி தொட்டிகளில் எல்லாம் விடுதலை இயக்கம் பரவியது. தீண்டாமையை ஒழிக்கும் இயக்கம் மும்முரமடைந்தது. சட்டமறுப்பு, ஒத்துழையாமை முதலியவற்றில் ஈடுபட்டுச் சிறைபுகு வதைப் புனிதப்பணியாக மக்கள் கருதினர். நயன்மை மன்றங்களை யும், பிற ஆங்கில நிறுவனங்களையும், வழக்குரைஞர் முதல் குடியா னவர் வரை யாவரும் புறக்கணித்தனர், பேராயக் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான இராசாசி 1921ஆம் ஆண்டில் தமிழக மெங்கும் ஒத்துழையாமை இயக்கத்தைப் பரப்பினர். இவ்வாண்டு விடுதலைப் போரில் தமிழகம் - காந்தி ஆண்டுமானம் டிசம்பர் 21 ஆம் நாள் இராசாசி. ஈ. வெ. இராமசாமி (தந்தை பெரியார்) ஆரணி சுப்பிரமணிய சாத்திரி முதலியோர் தடை உத்தரவை மீறி வேலூரில் ஒத்துழையாமை இயக்கத்தைப் பற்றிக் கூட்டத்தில் பேசினர். இராசாசி சிறை செய்யப்பட்டு மூன்று திங்கள் சிறைத் தண்டனை பெற்றார். பாடுகிடப்புச் சத்தியாகிரகம்) செய்து, ஒத் துழையாமை இயக்கத்தைத் தொடங்கி முதன்முதல் சிறை சென்றவர் இராசாசியே. இதற்கு வழிகாட்டியதும் தமிழகமே, 1. கள்ளுக்கடை மறியல் காந்தியடிகளின் ஆணையை ஏற்று ஒத்துழையாமை இயக்கத் தை மேற்கொண்ட தமிழகமே அவருடைய சமுதாயச் சீர்திருத்தங் களான கள்ளுக்கடைகளை மூடுதல், தீண்டாமை ஒழிப்பு கைநூல் (கதர்) கைத்தொழில்களைப் பரப்புதல் முதலியவற்றிலும் வழி காட்டியது. 1910-ல் ஈரோட்டில் ஈ. வெ. இராமசாமி (தந்தை பெரியார்) தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தி மதுவிலக்குத் திட்டத்தைத் தொடங்கினார். கள்ளுக்கடைகளின் முன் மறியல் செய்து சிறைப்பட்டார். இவருடன் இவருடைய மனைவியார் நாகம் மையும், தங்கை கண்ணம்மாளும் சிறைப்பட்டனர். சிறப்பாகப் பெண்கள், அதுவும் செல்வக் குடும்பத்துப் பெண்கள் காந்தியின் கட்டளைப்படி மறியலை நடத்திச் சிறைபுகுந்த வரலாறு தழிகத்தில் இதுவே முதலாகும். காந்தியார் தமிழகத்தில் கள்ளுக்கடை மறியலுக்கு வித்திட்டு வளர்த்தவர்கள் இப்பெண்களே' என்றார். தமிழகத்தில் "கள்ளுக்கடை மறியல்' இயலைத் தொடங்கியவரே பெரியார்தான், இவரைப் பின்பற்றித் தமிழகம் எங்கும் கள்ளுக்கடைகளின் முன் தொண்டர்கள் அமைதி நெறியில் மறியல் செய்தனர். மதுரையில் வைத்தியநாத அய்யர் என்பார் மறியலில் ஈடுபட்டபோது சினங் கொண்ட கடைக்காரன் கள் குடத்தை அவர் தலைமீது கவிழ்த்தான். அரக்கோணத்தில் ஆக்கூர் ஆனந்தாச்சாரி, சமதக்கனி ஆகியோர் மறியல் செய்த போது கடைக்காரன் சமதக்கனியைத் கத்தியால் குத்தினான். வடாற்காடு மாவட்டத்தில் கள்ளுக்கடை மறியலில் ஈடு பட்டுத் தொண்டர்கள் சிறை செய்யப்பட்டுப் பள்ளிக்கூடங்களிலும் சாவடிகளிலும் அடைக்கப்படுவதும், பின்னர் சிறைக்கு அனுப்பப் படுவதும் அக்கால வழக்கம். அவ்வாறு இராசாசி ஒரு பள்ளிக் கூடத்தில் அடைக்கப்பட்டிருந்த போதுதான் சகசானந்த அடிகள் என்ற துறவிக்கும், அவருக்கும் நட்புறவு ஏற்பட்டது. அன்று முதல் சகசானந்தரும் முற்போக்கான விடுதலை மறவரானார். வடார்க்காடு மாவட்டத்தில் பிறந்த இத் தவசீலரே பின்னர் சிதம்பரம் நந்தனார் கல்விச்சாலையை ஏற்படுத்தியவர். இவருடன் இராசாசி சம்பந்தியில் உண்டதற்காகப் பார்ப்பனர் பலரும் அவரைச் சாதியை விட்டு நீக்கினர். ஏனெனில் சகசானந்த அடிகள் ஒரு தீண்டத்தகாத தாழ் குலத்தவர், சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானத்தை அவர் இனத் தமிழக சமூகப்பண்பாட்டு வரலாறு தாரே சாதியை விட்டு நீக்கினர். அவர் இனத்தார் கள்ளிறக்கும் தொழி வில் ஈடுபட்டவர்கள். ஆனால் ம.பொ.சி. யோ காந்தியடிகள் கொள் கையால் ஈர்க்கப்பட்டார். "குடிகெடுக்கும் கள்' என்ற நூலையும் 'விமோசனம்' என்ற தாளிகையையும் இராசாசி வெளியிட்டார். 2. தீண்டாமை ஒழிப்பு பேராயக் கட்சியின் மற்றொரு கொள்கை தீண்டாமையை ஒழிப்பது. இதற்கும் தமிழகமே வழிகாட்டியாக அமைந்தது. இராசாசி திருச்செங்கோட்டில் 'புதுப்பாளையம்' என்ற ஊரில் 'காந்தி ஆசிரமம்' ஒன்றை 1924-ல் தொடங்கினார். இதில் சக்கரத்தைக் கொண்டு நூல் நூற்றல், புற ஒழுக்கம், நாட்டுப் பற்று, தீண்டாமை ஒழிப்பு முதலியற்றில் பயிற்சியளிக்கப்பட்டது. சேலம் நகரசபைத் தலைவராயிருக்கும் போது இராசாசி குழாய் பழுதுபார்க்கும் பணியில் தாழ்த்தப்பட்டவரை அமர்த்தித் தன் இனத்தவருக்குப் பகைவரானார். இதைப் போலவே இப் பாழியிலும் (ஆசிரமத்திலும் தாழ்த்தப்பட்ட வர்களையே பணியிலமர்த்தினார். அவர்தான் சிதம்பரம் சகசானந்த அடிகளுடன் சம்பந்தியில் உண்டார். இராசாசி தன் வாழ்நாள் முழு வதும் தாழ்த்தப்பட்டவரின் நலத்திற்குப் பாடுபட்டதை யாரும் மறுக்க முடியாது. 1923-ல் தந்தை பெரியார் பேராயக் கட்சியின் தமிழ் நாட்டுத் தலைவரானார். ஈரோட்டிலிருந்த அவர் வீடே கட்சியலுவலகமாகவும், தொண்டர்களுக்கு அறச்சாலையாகவும் மாறியது. தாழ்த்தப்பட்ட மக்கள் தமிழகமெங்கும் கேவலமாய் நடத்தப்பட்டனர். கோயில் களில் நுழைய அனுமதிக்கப்படவில்லை , 1919-ல் திருவிதாங்கூரில் கோயிலுக்குச் செல்லும் உரிமை கோரி கிளர்ச்சி நடத்தினார். அதற்கு டி. கே. மாதவன் என்பவர் தலைமை தாங்கினார். 1923-ல் காக்கிநாடாவில் மௌலானா முகம்மதலி தலைமையில் பேராயக் கட்சி தாழ்த்தப் பட்டவர்களைக் கோயிலுக்குள் அனுமதிக்கும்படி தீர்மானம் போட்டது. 1924-ல் கேரளாவிலுள்ள வைக்கம் என்ற ஊரில் ஒரு கோயிலுள்ள தெருவில் கூடத் தாழ்த்தப் பட்டவர்கள் போகக்கூடாதென்ற தடையை எதிர்த்துப் போராட்டம் தொடங்கப் பெற்றது. இதனைத் தலைமைதாங்கி நடத்தியவர் தந்தை பெரியார் ஆவார். தடியடிக்குப் பின்னரும் உறுதியுடனிருந்து இதில் வெற்றி கண்ட பெரியார் வைக்கம் வீரர்' ஆனார். 1932-ல் குருவாயூர் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்டோர் அனுமதிக்கப்பட வேண்டும் எனக் கேளப்பன் என்பார் உண்ணா நோன்பு நோற்றார். ஆனால், 1936-ல் சி. பி. இராமசாமி (அய்யர்) திருவிதாங்கூர் திவானாக இருந்த போதுதான் கேரளக் கோயில்கள் தாழ்த்தப்பட்டோருக்குத் திறந்து விடப்பட்டன. 4-4-1939-ல் இராசாசி சென்னை மாநில முதலமைச்ச ராயிருந்த போது தாழ்த்தப்பட்டோரின் குறைகளையும் முயற்சியில் 'கோயில் நுழைவு' முதல் கட்டமாகத் தொடங்கப் பெற்றது. விடுதலைப் போரில் தமிழகம் - காந்தி ஆண்டுமானம் இவ்வாறு, தீண்டாமையை ஒழிக்கக் காந்தியரும் பேராயக் கட்சியும் மும்முரமாக முனைந்தபோது பேராயக் கட்சியிலும் தீண்டாமை இருந்தது. பாழியிலும் இது கடைப்பிடிக்கப்பட்டது. பார்ப்பனர் உயர்ந்தவர்களாகக் கருதப்பட்டனர். இந்நிலையில் சென்னை மாநிலத்தை ஆண்ட நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களை வஞ்சித்தது. கட்சியில் சாதி வேறுபாடு இருப்பதை எதிர்த்துத்தான் பெரியார் பேராயக் கட்சியைவிட்டு 1925-ல் நீங்கினார், 3. கைராட்டை காந்தியின் உயிர்நாடியான கைராட்டையால் நூல் நூற்றுக் கதரைப் பரப்பும் பணியில் தமிழகத்தில் முதலிடம் பெற்றவரும் தந்தை பெரியாரே ஆவார். செல்வரான அவர் கைந்நூற்றுணி மூட்டை யைத் தோள்மீது சுமந்து தெருத்தெருவாய் அலைந்து விற்றார். திலகர் கைநூல் தொழிலைப் பரப்புவதற்காகத் தமிழகத்தில் ஒரு கோடி உருபாய் திரட்ட வேண்டுமென்றார். ஆனால், அன்று தமிழகத்தி விருந்த பெரும்பணக்காரர் நீதிக் கட்சியைச் சேர்ந்தவர்களாயும், காந்தியையும், பேராயக் கட்சியையும் எதிர்ப்பவர்களாயும் இருந்த தால் ஏழை மக்களே ஈரிலக்கம் வரை பொருள் அளித்தனர். கைநூல் உற்பத்தியால் காந்தி மகிழ்ந்தார். 'சேவா கிராமம் பிறந்தது சர்வோத்து யம்' தோன்றியது. இவ்வாறு காந்தியடிகளின் திருப்பணிகளில் ஈடுபட்டத் தமிழகத் தொண்டர்களை எண்ணிலடக்க முடியாது. 1921-ல் விருதுநகரில் தந்தை பெரியார் பேராயக் கட்சியின் கோட்பாடு களையும் காந்தியாரின் சமுதாயப் பணிகளையும் விளக்கிப் பேசிய பேச்சுகள் பத்தொன்பது அகவையே நிரம்பிய இளைஞர் கு. காமராசரைக் கவர்ந்தன. எரிமலையான ஜீவானந்தம் (முக்காண்டி) முதலிய இலட்சக்கணக்கான தமிழ் மறவர்கள் இப்பணிகளில் ஈடுபட்டனர். சதாவதானம் தெ. பொ. கிருட்டிணசாமிப் பாவனின் நாடகக் குழுவினர் 'கதரின் வெற்றி' என்ற நாடகத்தை நடத்தினர். இதில் டி.கே. எசு. உடன்பிறப்பார் (சகோதரர்கள் பங்கேற்றனர். இது போன்ற பல நாடகங்களும், நூல்களும், தாளிகைகளும், மதுவிலக்கு, தீண்டாமை, கைநூல் முதலிய இயக்கங்களை வளர்க்க உதவின. 4. சைமன் ஆணைக்குழு 1927-ல் இந்தியருக்கு விடுதலையளிப்பதைப் பற்றி நேரடியாக உசாவல் நடத்தக் கிழான் சைமன் தலைமையில் ஒரு குழு இந்தியாவுக்கு வந்தது. 'இஃது ஒரு கண் துடைப்பு' என அறிந்த விடுதலை மறவர் இதனை எதிர்ப்பதென முடிவு செய்தனர். நாடெங் கிலும் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. 'வெள்ளை.ஆணைக் குழுவே திரும்பிப் போ' என்று மக்கள் ஆரவாரம் செய்தனர். இதனால், நாடெங்கிலும் தடியடியும், துப்பாக்கிச்சூடும், நடந்தன. பஞ்சாபு அரிமா இலாலாலசபதிராய் தடியடிபட்டு மாண்டார். பகத்சிங் மண்டார். தொண்டர்களின்மீது பொய் வழக்குகள் புனையப்பட்டு, வழக்குத் தொடரப்பட்டுத் தண்டிக்கப்பட்டனர். பலர் தூக்கிலிடப் பட்டனர். வெள்ளையரைக் கொல்லும் முயற்சிகள் தாடெங்கிலும் நடந்தன. சென்னையில் ஆந்திரகேசரி டி. பிரகாசம் தலைமைதாங்கி சைமன் ஆணைக் குழுவை எதிர்த்தார். துப்பாக்கியைக் காட்டி ஓடிப் போகும்படி எச்சரித்த வெள்ளைக் காவலதிகாரிக்குச் 'சுடடா துணிவிருந்தால்' என்று சட்டையைக் கிழித்து மார்பைத் திறந்து காட்டினார் பிரகாசம், இதனைக் கண்டு அசந்துபோன அந்த அதிகாரி துப்பாக்கியைக் கீழே போட்டுவிட்டு கைநடுங்க வணங்கினான், அந்த இடத்தில்தான் (அண்ணாமலை மன்றத்திற்கெதிரில்) இன்று பிரகாசத் திற்குச் சிலைவைக்கப் பட்டுள்ளது), பிரகாசம் அச்சமென்பதையே அறியாத நாட்டுப் பற்றாளர். இலாகூர்ச் சதிவழக்கிலீடுபடுத்திச் சிறைத் தண்டனை பெற்றவர்களில் தமிழகத்தில் காமராசரும் ஒருவர். 5. உப்புச் சத்தியாகிரகம் (பாடு கிடப்பு) 1930 சனவரி முதல் பகலுக்குள் இந்தியாவுக்கு 'டொமினியன்' (குடியேற்ற நிலை உயர்வு கொடுத்துவிட்டு, இந்தியரே ஆளும்படி விட்டுவிட்டு, ஆங்கிலர் வெளியேற வேண்டுமென மோதிலால் தலைமையில் கூடிய அனைத்துக் கட்சிகள் மாநாட்டில் தீர்மானிக்கப் பட்டுப் பிரிட்டனுக்கு அறிவிக்கப்பட்டது. ஆனால், காந்தி யடிகளுடன் பேச்சுகள் நடத்திய அரசப்படிநிகராளி விடுதலை மறவர்களுக்குச் சில சலுகைகளை மட்டுமே அளித்தார். 'ரொட்டி கேட்கப்பட்டது. கல் தான் கொடுக்கப்பட்டது' என்றார் காந்தி அடிகளார். எனவே காந்தியார் சட்டத்தை மீறி ஒவ்வொரு இந்திய னுக்கும், உரிமையான உப்பெடுக்கும் போராட்டத்தைத் தொடங்கி னார். "செய் அல்லது செத்து மடி' என்று ஆணையிட்டார்! நாடெங்கிலும் தலைவர்களின் தலைமையில் தொண்டர்கள் கடலில் இருந்து உப்பெடுக்கும் உரிமைப் போராட்டத்தைத் தொடங்கினர். காந்தியடிகள் தலைமையில் 1930-ல் மார்ச் 12ஆம் நாள் தொண் டர்கள் தண்டிக்குப் புறப்பட்டனர். மேத்திங்கள் நான்காம் நாள் காந்தி சட்டத்தை மீறி உப்பு எடுத்ததற்காகப் பூனாவிலுள்ள எரவாடா சிறையிலடைக் கப்பட்டார். காந்தியாரைத் தொடர்ந்து ஏப்ரல் பதினான்காம் நாளில் தமிழகத்தில் இரசாசியின் தலைமையில் நூறு தொண்டர்கள் திருச்சியில் இருந்து திருமறைக்காட்டிற்கு (வேதா ரண்யம்) உப்பெடுக்கும் புனிதப் பயணத்தை மேற்கொண்டனர். திருச்சி டி. கே. எசு. இராசன் அவர்கள் வழியனுப்பி வைத்தார். சிவகுருநாதன் என்ற யாழ்ப்பாணத்துத் தொண்டர் சங்கு ஊதி முன்செல்லத் தொண்டர்கள் இறை நெறிப் பாடல்களைப் பாடி கொண்டே பின் நடந்தனர். தொண்டர்களுக்கு வழியில் நீர் கொடுப்ப வரும் தண்டிக்கப்படுவரென்று அரசு ஆணை பிறப்பித்திருந்தது. தொண்டர்கள் பாரதியாரின் வீரமிக்க விடுதலைப் பாடல்களையும், 7g சிறப்பாக நாமக்கல் கவிஞரின் 'கத்தி யின்றி இரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது; சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்' என்ற பாடலையும் வழிநெடுகப்பாடிச் சென்றனர். தொண்டர்கள் திருத்துறைப்பூண்டியில் நிலக்கிழார் இராமச் சந்திர நாயுடுவால் வரவேற்கப்பட்டனர். இதனால், நாயுடு கைது செய்யப்பட்டார். தொண்டர் படை திருமறைக்காட்டை நெருங்கும் போது சர்தார் வேதரத்னம் (பிள்ளை) தன் புகையிலைத் தோட்டத் தையே அழித்துத் தொண்டர்களுக்குக் கூடாரமிட்டுத் தங்கவும், உணவு முதலிய ஏந்துகளையும் செய்து கொடுத்தார். இராசாசி, கே. சந்தானம், மட்டப்பாறை வேங்கடராமையர், கே. எசு. சுப்பிர மணியம், சி. இராமச்சந்திரன், உருக்குமணி லட்சுமிபதி ஆகியோரின் தலைமையில் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து தொண்டர்கள் மறியல் செய்தனர். காவல்துறையினரும் தொடர்ந்து இவர்களைச் சிறைப்படுத்தினர். சென்னைக் கடற்கரையில் சர். நடராசன் என்பார் தலைமையில் தொண்டர்கள் உப்புப்பாடு கிடப்புச் செய்தனர். இவர் சத்தியமூர்த்தி யைப் போல் ஆங்கிலத்தில் பேசும் ஆற்றல் படைத்தவர். இதில் துர்க்கா பாய் அம்மையார், சமதக்கனி முதலியோரும் பங்கேற்றனர். காவல் துறையினர் தடியடி செய்ததில் பலரின் கை கால்கள் முறிந்தன. * உப்புப் பாடுகிடப்பின்போது அறப்போராட்ட வீரர்களைத் தாக்கிய அரசைக் கண்டித்துச் சென்னைத் திலகர் கட்டடத்தில் நடந்த கூட்டத்தின்மீது காவலர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஈ.கே. கோவிந்த சாமி என்ற தொண்டர் குண்டுக்கு இரையானார். 1932ஆம் ஆண்டு சனவரி 26-ல் தமிழகமெங்கிலும் தடை யை மீறி 'விடுதலைநாள்' கொண்டாடப்பட்டது. சென்னை பார்வலத் தில் எம். பக்தவச்சலமும், முத்துரங்க (முதலியாரும், ஆதிகேசவலு (நாயுடுவும் பிறரும் கலந்துகொண்டனர். இம்மூவரையும் காவலர் தடியால் அடித்துச் சிறையிலடைத்தனர். 1932-ல் தடையுத்தரவை மீறி ஊர்வலம் சென்றதால் ம. பொ. சிவஞானமும் சிறைத் தண்டனை பெற்றார். இதனால் இவர் செய்துவந்த அச்சுக்கோக்கும் வேலையும் போயிற்று. இவரைப் போல் நாட்டுப்பற்றாளர் பலரும் வாழ்விழந்தனர். இதில் கணவன் மனைவியும், குடும்பமும், குடும்பங்களும், ஓர் ஊரும் கூட ஒட்டு மொத்தமாகப் பங்கேற்றனர். தொண்டர்கள் ஒருபுறம் பெருகும் போது, தடை உத்தரவுகளும், அடக்குமுறைகளும் மறுபுறம் அதிகரித்தன. 'சுதந்திரச்சங்கு' தாளிகையின் ஆசிரியர் சங்கு கணேசன், நாட்டுப்பற் றைத் தாண்டும் நூல்களை மலிவுப்பதிப்பில் வெளியிட்ட சி.நடேசன், சுப்பிரமணியசிவம், சி. எசு. சொக்கலிங்கம், சீனிவாச வரதன், கல்கி சதாசிவம் முதலியோரின் பணிகள் போற்றத் தக்கன. இக்காலத்தில் எழுச்சிமிகு பேச்சுக்குச் சத்தியமூர்த்தியே முகடானவர். இவருடைய அரசியல் மாணவர்தான் பெருந்தலைவர் காமராசர், உப்புப்பாடு கிடப் பில் ஈடுபட்ட காமாரசருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனைக் கிடைத்தது. இவரைத் தலைவர் சத்தியமூர்த்தி 'தமிழ்நாட்டின்' தலைசிறந்த வாழியர் எனது அருமைத் தோழர், ஆலோசகர்" என்று கூறுவார் பேட்டை முத்துரங்க (முதலியாருக்கு எம். பக்தவச்சலம் அரசியல் மாணாக்கர். காந்தியாருக்குப் பல கோடி மாணாக்கர்களிருந் தனர். அவர்களில் தலைசிறந்தவர் நாத்திகரான கோரா' (இராம் சந்திர ராவ்)என்பாரும் ஒருவர். காந்தியார் காலத்தில் பேராயக்கட்சி வளர்ந்து வலிமைப் பெற்றது. நாடே நாட்டுப்பற்றால் உந்தப்பட்டது. உப்புப் பாடுகிடப்பின் எதிரொலியாக நாடெங்கிலும் தொடர்ந்து கிளர்ச்சிகள் நடந்தன. அரசப் படிநிகராளி இர்வின் பிரபு (1926-31) காந்தியுடன் ஓர் உடன்பாடு செய்துகொண்டு (காந்தி - இர்வின் ஒப்பந்தம்) தலைவர்களை விடுவித்தான். உப்பு வரி நீக்கப்பட்டது. பேராயக் கட்சி தன்னாட்சி முறைக்கு அணியப்படுத்திக் கொண்டது. சட்ட "மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. 5. வட்டமேசை மாநாடும் பூனா ஒப்பந்தமும் 1932 இந்திய விடுதலைக்கு முட்டுக் கட்டைகளாயிருந்தவை சாதிகளும் சமயங்களுமாகும். இசுலாமியர் தனியே பிரிந்துவிட முடிவு செய்தனர். அவர்களின் இயக்கம் வலுப்பெற்றது. தாழ்த்தப் பட்ட மக்களும் ஒன்றிணைந்து தங்களை மக்களாக மதிக்கும் மாந்தத் தன்மைக்குப் போராடினர். போராடியே உள்ளாட்சித் துறைகளில் இவர்கள் நிகராண்மைப் பெற்றனர். கல்வியிலும் முன்னேறினர். 1930-ல் ஆதிராவிடர் மகாசன சபையின் மாநாடு சென்னையில் நடந்தது. அதில் பதினாறு தாழ்த்தப்பட்டோர் சங்கங்கள் பங்கேற்றன. ஆளுநரின் நிருவாகச் சபை முதல் எல்லா இடங்களிலும் தங்களுக்குப் படிநிகராளியம் கோரினர். தனி வாக்காளர் பட்டியல் தங்களுக்கென உருவாக்க வேண்டுமென்றும் கோரினர். சைமன் ஆணைக்குழுவும் இவர்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் தனிப்படி நிகராளி யம் ஒதுக்கியது. தாழ்த்தப்பட்டோர் நலன்களைக் கவனிக்கத் தொழி லாளர் துறை ஏற்பட்டது. இந்நேரத்தில்தான் இவர்களுக்குக் கோயில் நுழைவு உரிமை கோரி கிளர்ச்சிகள் நடந்தன. டாக்டர். பி. ஆர். அம்பேத்கார் தனித்தொகுதிக் கொள்கையில் உடும்புப் பிடியானார். இந்நிலையில் இந்திய அரசியலில் இந்தியருக் குத் தரும் உரிமைகள் பற்றி ஆராய 12-11-1930-ல் இலண்டனில் முதல் வட்டமேசை மாநாடு கூட்டப்பட்டது. அதில் தாழ்த்தப்பட் டோரின் தலைவர்களான பி. ஆர். அம்பேத்காரும் இரட்டைமலை சினிவாசனும் இந்தியச் சமுதாயத்தில் தாழ்த்தப்பட்டோரின் நிலைமைகளைப் பற்றி விளக்கினர். 1931, செப்டம்பர் 7ஆம்நாள் இராண்டாவது வட்ட மேசை மாநாடு இலண்டனில் கூடியது. அதில் பேராயக்கட்சியின் சார்பில் காந்தியடிகள் கலந்து கொண்டார். இதில் தாழ்த்தப்பட்டோருக்குத் 'தனித் தொகுதி வேண்டுமெனக் கோரி டாக்டர். பி. ஆர். அம்பேத்காரும், தமிழ்நாட்டில் இருந்து சென்ற இரட்டை மலை சீனிவாசனும் தாழ்த்தப்பட்டோரின் சார்பில் போராடினர். 1932 பிப்ரவரித் திங்களில் 'லோதியன் குழு' சென்னை வந்தது. ஆதிதிராவிடர் தங்களுக்குத் தனிவாக்காளர் பட்டியலும், தனித் தொகுதியும் வேண்டுமென அக்குழுவிடம் கோரினர், ஏ. டி. பன்னீர்ச் செல்வம், எம். சி. இராசா முதலியோரும் தனித் தொகுதி' கோரினார். சென்னைச் சட்டமன்றத்திலிருந்த 215 இடங்களில் தாழ்த்தப்பட்டோர் நிலைமை பற்றி அரசியல் வட்டாரத் தில் வலிமையான பரிந்துரைகள் நடந்த வண்ணம் இருந்தன. நாடெங்கணும் ஆங்கிலரை வெளியேற்றும் போராட்டங்கள் தொடர்ந்து நடந்தன, சட்டமறுப்பு இயக்கம் மறுபடியும் தொடங்கப் பெற்றது. இதில் ஈடுபட்டப் பலரும் சிறையிலடைக்கப் பெற்றனர். இராசாசி நான்காம் முறையாகச் சிறைப்பட்டார். காந்தியாரும் சிறைப் பட்டார். இந்நிலையில் 1932 ஆம் ஆண்டு மெக்தனால்டு 'வகுப்புத் தீர்ப்பு' என்னும் வகுப்புவாரி நிகராளியத்தை வெளியிட்டார். இதன் படி மாநிலச் சட்டமன்றங்களிலும், நடுவண் சட்டமன்றத்திலும் இசுலாமியர், சீக்கியர், இந்தியர், கிறித்துவர், ஆங்கில இந்தியர் ஆகியோருக்குத் தனியிடங்கள் ஒதுக்க வழிசெய்யப்பட்டது, தாழ்த்தப்பட்டோருக்கெனத் தனி வாக்காளர் பட்டியல் உருவாக்கம் செய்து தனியே அவர்களுக்குத் தேர்தல் நடத்தும் வழியும் காணப் பட்டது. தங்களின் படிநிகராளிகளை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளவும், பொதுத் தொகுதிகளில் வாக்களிக்கவும் அவர்களுக்கு வழிகள் செய்யப்பட்டன. இந்திய வரலாற்றிலேயே முதன்முறை யாகத்தாழ்த்தப்பட்டவருக்கு அரசியல் அதிகாரம் (உரிமை வழங்கப் . பட்டது இந்த அறிக்கையில்தான் எனப் பலரும் போற்றினர். பொது வாக இந்தியச் சமுதாயத்திற்கு இந்த முறை நன்மை தருவதே ஆகும்' எனப் பண்டித சவகர்லால் நேருவும் கூறினார். ஆனால், தாழ்த்தப்பட்ட மக்களைக் கடவுளின் குழந்தைகள் (அரிசனங்கள்) என்றழைத்த காந்தியடிகள் இதனை எதிர்த்துச் சிறை யிலிருந்தபடியே உண்ணாநோன்பை மேற்கொண்டார், பூனாவி லுள்ள எரவாடாச் சிறையில் உண்ணாநோன்பை மேற்கொண்ட காந்தியார் இந்த வகுப்புவாத அறிக்கைக்காகச் சாகும் வரை உண்ணா நோன்பிருக்க முடிவு செய்தார். இராசாசி, சாப்ரு, சயக்கர், மாளவியா, பிரசாத், பிர்லா, சோலங்கி முதலியோர் ஒருபுறமும், டாக்டர். அம்பேத் கார், என். சிவராசு, இரட்டைமலை சீனிவாசன், எம். சி. இராசா. முதலியோர் மறுபுறமுமிருந்து வழக்காடி 'பூனா ஒப்பந்தம் செய்து கொண்டனர். இரசாசாசி கொண்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை, ''காந்தியடிகளின் உயிர் டாக்டர். அம்பேத்காரால் காப்பாற்றப் பட்டது; இது அவருக்குப் புனர்சென்மம்'', என்றார். இதன்படி தனித்தொகுதி கைவிடப்பட்டது. ஆனால் தாழ்த்தப் பட்டோருக்குச் சட்டமன்றங்களிலும் அரசுப்பணிகளிலும் சலுகை கள் வழங்க உறுதியளிக்கப்பட்டது. இந்தப் பூனா ஒப்பந்தத்தை ஏற்று, அரசும் 'வகுப்புத்தீர்பை நீக்கியது. சென்னைச் சட்டமன்றம் இதனைக் கடைபிடித்துத் தாழ்த்தப்பட்டோருக்கு நயன்மை வழங்க முன்வந்தது. ஆனால் சுப்பராயன் ஆட்சியில் 1933-ல் பயனற்றுப் போயிற்று. இராசாசி காலத்தில்தான் இது வெற்றிப் பெற்றது. தமிழகத்தில் 1937-ல் நடந்த பொதுத்தேர்தலில் பேராயக் கட்சி 215 இடங்களில் 150 இடங்களைப் பெற்றது. இராசாசியும், சத்தியமூர்த்தியும் செய்த சொற்பொழிவுகளே இந்த வெற்றியைத் தேடித்தந்தன. ஆளுநர் தனது தனியதிகாரங்களைக் கையாளா விட்டால் தாமே அமைச்சரவையை அமைப்பதாய் இராசாசி கூறினார். அவ்வாறு ஆளுநர் வாக்களித்தபின் பேராயக் கட்சியின் அமைச்சரவை (1937-39] இராசாசி தலைமையில் அமைந்தது , ஆனால், இரண்டாம் உலகப் போரில் கட்சியைக் கலக்காமலேயே பிரிட்டன் இந்தியரைப் போரில் ஈடுபடச் செய்ததை எதிர்த்து, இராசாசி அமைச்சரவையைக் கலைத்தார், 1942-ல் கிரிப்சு என்பவர் தலைமையில் ஒரு குழு பிரிட்டா னியப் பேரரசால் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டது. போர் முடிந்தவுடன் இந்தியாவுக்கு விடுதலை வழங்குவதைப் பற்றிய அறிக்கையை அக்குழு வெளியிட்டது. அதில் பாகிஸ்தான் பிரிவினைப் பற்றியும் காணப்பட்டது. காந்தியடிகள் பாகிஸ்தான் பிரிவினையை விரும்ப வில்லை . இராசாசியும், காமராசரும், மற்றும் தமிழகத் தலைவர்களும் பாகிஸ்தான் பிரிவதை விரும்பினர். முகமதலி சின்னா 'எங்களின் பிணங்களின் மேல் பாகிஸ்தானைக் கட்டுவோம்' என்றார். இந்நிலை யில் காந்தியடிகள் பம்பாய் மாநாட்டில் "வெள்ளையனே வெளி யேறு' என்றார். ஆனால் ஜின்னா 'இந்தியாவைப் பிரித்துவிட்டு வெளியேறு' என்று முழங்கினார், காந்தி தாழ்த்தப்பட்ட மக்களை அழுத்தியதைப்போல் முகமதியரை அழுத்த முடியவில்லை பாகிஸ் தான் பிரிவது உறுதியாயிற்று. 7. ஆகச்டுப் புரட்சி 1943 கிரிப்சு அறிக்கையை எதிர்த்து நாடெங்கிலும் புரட்சி ஏற் பட்டது. பல ஆயிரம் பேர் மாண்டனர். நாசவேலைகள் பெருகின. தலைவர்கள் யாவரும் சிறையிலடைக்க ப்பட்டனர். நாடு குருதி வெள்ளத்தில் மூழ்கியது. வடாற்காட்டில் பனப்பாக்கம் பொதுப் - பணித்துறைக் கட்டடமும், வேலூர்க் காவலர் இல்லங்களும் இடிக்கப் பட்டன. தண்டவாளங்கள் பெயர்த்து எறியப்பட்டன. தந்திக் கம்பி கள் அறுக்கப்பட்டன. தென்னாற்காடு, செங்கழுநீர்ப்பட்டு, மதுரை, கோவை, முதலிய மாவட்டங்களில் அரசுடைமைகள் அழிக்கப்பட்டன. முகவை மாவட்டத்தில் புரட்சி உச்சகட்டம் அடைந்தது. திரு நெல்வேலியிலும் இது கனல் தெறிக்கப் பரவியது. ஆகச்சுடுப் புரட்சி யைத் தமிழகமெங்கும் பரப்பியவர் காமராசரே, சுபாசு சந்திரபோஸ் கல்கத்தாவில் இருந்து மறைந்தார். 1943 -ல் சிங்கப்பூர் சேர்ந்து 'இந்தியத் தன்னுரிமைக் கழகம்' (இந்தியச் சுதந்திர வீக்) என்னும் நிறுவனத்தின் தலைவராகி 'இந்திய தேசியப் படை"யை ஏற்படுத்தி னார். பிரிட்டனை எதிர்த்து அப் படை போரிட்டது. ஆனால் 1945. ஆகச்சுடு 18 - ல் வீழ்ந்தது. போசு மறைந்து போனார், கடற்படை யினரும் வெள்ளையரை எதிர்த்தனர். இதுவும் அடக்கப்பட்டது. தேசியப் படையினரை ஆங்கில அரசு உசாவித் தண்டனை வழங்கியது. 8. இடைக்கால அரசும் விடுதலையும் இரண்டாம் உலகப்போர் முடிந்தது. பேராயக் கட்சியின் தலைவர்கள் விடுதலை பெற்றனர். இடைக்கால அரசு ஏற்பட்டது. நேரு தலைமையில் நடுவண் அமைச்சரவை 2-9-1946-ல் பதவி ஏற்றது. இடைக்கால அரசை எதிர்த்து இசுலாமியர் நாட்டையே குருதி வெள்ளத்தில் மூழ்கடித்தனர். 23-3-1947- ல் இந்தியாவுக்கு 1948-க்குள் சுதந்திரம் அளிப்பதாய்த் தலைமையமைச்சர் அட்லி உறுதியளித்தார். அரசப் படிநிகராளி மவுண்டு பேட்டன், இசுலாமியர் கழகத்தையும் முஸ்லீம் லீக்) பேராயக் கட்சியையும் கலந்து கொண்டு இங்கிலாந்து சென்று இந்தியாவுக்குத் தன்னுரிமை உடனே வழங்க வலியுறுத்தினார். சூலை, 1947-ல் பிரிட்டானிய நாடாளு மன்றத்தில் 'இந்தியத் தன்னுரிமைச் சட்டம்' நிறைவேறியது. இதன் படி இந்தியா பாரதம், பாகிஸ்தான், என்று பிரிக்கப்பட்டு 15-8-1947 -ல் விடுதலையடைந்தது. 16 அ) நீதிக்கட்சியின் ஆட்சி (1920-1937) 1) நீதிக் கட்சியின் தோற்றமும் வளர்ச்சியும் 2) நீதிக் கட்சியின் சாதனைகள் அ) கல்விப்பணிகள் ஆ) பொருளாதார வளர்ச்சிப்பணிகள் இ) வேளாண்மை வளர்ச்சிப்பணிகள் ஈ) வகுப்புவாரிப்படி நிகராளியம் உ) இந்து சமய அறநிலையச் சட்டம் ஊ) ஊரக மேம்பாடுகளும் ஆதி திராவிடர் முன்னேற்றமும் எ) பெண்கள் முன்னேற்றம் ஆ) காங்கிரசுக் கட்சியின் ஆட்சி (1937-1939) முன்னுரை சாதனைகள் 11 சிவில் உரிமைத்தடை நீக்கச் சட்டம் (1938) 21 மலபார்கோயில் நுழைவுச் சட்டம் 3) சென்னைக் கோயில் நுழைவுப் பிரகடனம் (1939) 4) கோயில் நுழைவுக் காப்புரிமைச் சட்டம் (1939) 5) குற்றால நீர்வீழ்ச்சியில் தீண்டப்படாதவரும் குளிக்காலமென உத்திரவிடுதல் பிற்சேர்க்கை அமைச்சரவைப் பட்டியல் (1920-1947) சென்னை மாகாணத்தில் 1919 ஆம் ஆண்டு மாண்டேகு செம்சுபோர்டு அரசியல் சட்டப்படி நடந்த தேர்தலில் வெற்றி பெற்று 1920 ஆம் ஆண்டு முதல் இம்மாகாணத்தை ஆண்ட கட்சி தான் நீதிக்கட்சி ஆகும். இக்கட்சி 1919 ஆம் ஆண்டு அரசியல் சட்டப்படி நடந்த தேர்தலில் வெற்றி பெற்றுக் காங்கிரசு கட்சி 1937-ல் ஆட்சிக்கு வரும் வரையில் ஆண்டது. ஆங்கிலேயரின் ஆட்சியில் ஒரு புதிய திருப்பமாக இக்கட்சி பொதுத் தேர்தலுக்குப் பின் சனநாயக ரீதியில் சுமார் 17 ஆண்டுகள் ஆண்டு ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியதால் வரலாற்றில் இக்கட்சி ஒரு முக்கிய இடத்தைப் பெறுகின்றது. 1) நீதிக்கட்சியின் தோற்றமும் வளர்ச்சியும் தோன்றுவதற்கான காரணங்கள் தமிழக அரசியல், பொருளாதாரத்தில் தமிழ்ச்சமுதாயம் உரிய சமத்துவத்தோடு இல்லை . அரசுப் பணிகளிலும், கல்வியிலும் குறிப் பிட்ட ஒரு சாதியாரே மேலாண்மை பெற்றிருந்தனர். எனவே, சமுதா யத்தில் வண்டி குடை சாய்ந்து கிடப்பதைப் போல் ஏற்றத் தாழ்வு களே காணப்பட்டன. 1914-ல் ஏற்பட்ட முதல் உலகப் போருக்குப் பின் இந்தியாவுக்கு விடுதலை கிடைப்பதாயிருந்தது. மாறாக 1919ல் ஏற்பட்ட அரசியல் சட்டப்படி இரட்டை ஆட்சிமுறை ஏற்பட்டது. அதில் பங்குபெறும் முன்பே சமத்துவமற்றச் சமுதாய மக்கள் ஒன்றிணைய வேண்டுமென முற்பட்டனர். 1909 ஆம் ஆண்டு மிண்டோ - மார்லி அரசியல் சீர்திருத்தச் சட்டப்படி, அகில இந்தியக் காங்கிரசு கேட்டபடி இந்திய - மயமாக்கு தல் கோட்பாட்டிற்கிணங்க, ஒரு சில துறைகளில் ஆங்கிலேயருக்குப் பதிலாக இந்தியரும் பங்கு கொண்டு ஆட்சி புரிய முற்பட்டனர். ' வைசுராய் சபையிலும், ஆளுநர் சபையிலும் முதன் முறையாக இந்தியர் அங்கம் வகித்தனர். 1910 ஆம் ஆண்டு ஆளுநர் சபையில் பொப்பிலி ராசா இடம் பெற்றார். இவர் பார்ப்பனரல்லாதவர் ஆவார். இந்திய வரலாற்றிலேயே பார்ப்பனரல்லாத ஒருவர் ஆளுநர் அவை யில் இடம் பெற்றது என்பது இதுவே முதல்முறை ஆகும். இதனைப் பார்ப்பனர் எதிர்த்தனர். எதிர்ப்பின் காரணமாகப் பொப்பிலிராசா 1911ஆம் ஆண்டிலேயே தம் பதவியைத் துறக்க வேண்டி வந்தது. அவ் இடத்தில் நீதிபதி கிருட்டிணசாமி அய்யர் அமர்த்தப்பட்டார். அவருக்குப்பின் பி. இராசகோபாலாச்சாரி என்ப வரும், அவரை அடுத்து சி.பி. இராமசாமி அய்யரும் அப்பதவியை ஏற்றனர். வைசுராய் சபையில் எஸ்.பி. சின்னா என்ற பார்ப்பனர் அமர்த் தம் செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்தும் பார்ப்பனர்களே வைசிராய் சபைக்கு அமர்த்தம் செய்யப்பட்டனர், ஆனால், 1919 ஆம் ஆண்டு அரசியல் சட்டப்படி ஆளுநர் அவையில் ஓர் இந்தியருக்குப் பதில் இரண்டு இந்தியர் இடம் பெற வாய்ப்பு ஏற்பட்டது. அந்த இரண்டு இடங்களிலும் பார்ப்பனரே அமர்த்தப்பட்டனர். 1921-ல் முகமது அபிபுல்லா சாகிபும், சீனிவாச அய்யங்காரும் அமர்த்தப்பட்டனர். இவ்வாறு, நூற்றுக்கு மூவராய் உள்ள பார்ப்பனர் ஆங்கிலே யருக்கு அடுத்தபடியாக ஆளுமைப் பெற்று நூற்றுக்குத் தொண்ணூற் றெழுவராய் உள்ள பார்ப்பனரல்லாதவரை அழுத்தி ஆளுமைச் செய்வதை, பிராமணரல்லாதவர் அறிவுக்கண் திறந்து நோக்கத் தொடங்கினர். வாழையடி வாழையாக அரசர்களின் ஆதரவில் பிரமதேயம், தேவதானங்களைப் பெற்று, சமற்கிருதப் பாடசாலைகளுக்கு வரம்பில்லாத மானியம் பெற்றுக் கல்வி அறிவில் தொடர்ந்து முன்னேறி வந்த பார்ப்பனர்கள் ஆங்கிலேயன் ஆட்சியிலும் கல்வியில் முன்னிலை வகித்தனர். எனவே அரசுப் பணிகளிலும் அவர்களின் மேலாண்மையே ஓங்கி நின்றது. - ஆங்கிலேய அடிமைத்தன்மை ஒழித்து, மக்களாட்சி, மலர் வேண்டுமென்ற புதிய தொடர் பலம் பெற்றுவரும் வேளையில், ஆங்கிலேயன் பூட்டிய அடிமை விலங்கு ஒடிந்தாலும் பார்ப்பனருக்கு அடிமையாகவே இனி இருக்கவேண்டுமென்ற எண்ணம் பார்ப்பன ரல்லாதாரிடையே உருவாகிவிட்டது. எனவே, வெள்ளையன் நாட்டை விட்டு ஓடுமுன், பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டுமென்றுதி பூண்டனர். இதனைத் தீர்க்கமாக ஆய்ந்து பார்ப்பனரல்லாதார் மனதில் படும்படி, பசுமரத்தாணிபோல் முதலில் அறைந்தவர் நீதிபதி சி.சங்கரன் நாயர் என்னும் பார்ப்பனரல்லாத் தீர்க்கதரிசி ஆவார். இவர் 1915ஆம் ஆண்டு வைசுராய் சபையில் கல்வி உறுப்பினர் (அமைச்சர் பதவி யில் அமர்த்தப்பட்டிருந்தார். 1916 ஆம் ஆண்டு மைய சட்டமன்றத்திற்கு நடந்த தேர்தலில் டாக்டர் டி. எம். நாயர் என்றப் பார்ப்பனரல்லாத அறிஞர் பார்ப்பனரால் தோற்கடிக்கப்பட்டார். நூற்றுக்குத் தொண்ணுற்று எழுவராய் உள்ள பார்ப்பனரல்லாதார் நூற்றுக்கு மூவராயுள்ள பார்ப்பனரால் தோற்கடிக்கப்பட்டார் என்ற இந்தச் சம்பவம்தான் பார்ப்பனரல்லாதாரின் அகப், புறக்கண்ணைத் திறந்தது. இதற்குக் காரணம் பார்ப்பனரல்லாதவர் மந்தைகளைப் போல் உள்ளனர் என்பதும், உரார்வற்ற இடங்களாக உள்ளனர் என்பதுமே ஆகும். எனவே, தங்களுக்கென ஒரு தனி இயக்கம் தேவை என்பதைப் பார்ப்பனரல்லாதார் உணர்ந்து உடனே செயலில் இறங்கினர். தமிழகத்தில் மக்களாட்சியின் தொடக்கம்" தென்னிந்திய நல உரிமைச் சங்கம் பார்ப்பனரல்லாதாரின் நலங்களைக் காத்து, அவர்களைச் சமூக, அரசியல், கல்வித்துறைகளில் முன்னேற்றுவதற்காகவே, சர். பி.ட்டி. தியாகராசச் செட்டியார் தலைமையில் 1916 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 26 ஆம் நாள் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தொடங்கப் பட்டது. இதில் அன்று பல துறைகளிலும் தலைசிறந்து விளங்கிய பார்ப்பனரல்லாதார் பங்கேற்றனர். டாக்டர் டி. எம். நாயர், வழக்கறிஞர் எத்திராச முதலியார் முதலிய தலைசிறந்த ஆர்வலர்கள் பங்கேற்றனர். அன்றைய சென்னை மாகாணத்தில் தமிழகம், ஆந்திரம், கருநாடகம், கேரளம் ஆகியவற்றின் பகுதிகளும் சேர்ந்திருந்ததால், தமிழ், தெலுங்கு கன்னடம், மலையாளம் ஆகிய மொழி பேசுவோர் பெரும் பயன் கருதி திராவிடன்' 'ஆந்திரப் பிரகாசா' ஆகிய தமிழ், தெலுங்கு இதழ்களும் ஆங்கிலத்தில் 'நீதி' (JUSTICE) என்ற இதழும் இச்சங்க த்தால் வெளியிடப்பட்டன. இவை, பார்ப்பனரல்லாதாரின் நிலைமை களை விளக்கி, அவர்களை விழிப்படையச் செய்தன. இவற்றைத் தழுவி எழுந்த நூல்களும், துண்டுப் பிரசுரங்களும், பார்ப்பனரல்லா தாரைத் தட்டி எழுப்பி, வீறு கொண்டு எழச் செய்தன. மேடைப் பேச்சுகள், மேடை நாடகங்கள் பலவும் எழுந்தன. அளப்பறிய பேச்சாளர்களும், ஆய்வாளர்களும் பார்ப்பனரல்லா தாரைத் தட்டியெழுப்பினர். இவ்வாறு, தென்னிந்திய நல உரிமைச் சங்கம் ஒரு யுகப் பிரள யத்தையே ஏற்படுத்திவிட்டது. படிப்பு, உத்தியோகம் இவற்றில் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதாரின் புள்ளி விவரங்களைப் பாமரரும் அறிந்தனர். இச்சங்கம், பல மாநாடுகளை நடத்தியது. இந்தியாவுக்குப் படிப்படியாகத்தான் விடுதலை அளிக்க வேண்டும் என்றது. உடனடியாக விடுதலையளித்தால் பார்ப்பனரல்லாதார் படுபாதாளத்தி லேயே தங்கி விடுவர் என்றும், பார்ப்பனர், அவர்கள்மீது ஆதிக்கம் செலுத்துவர் என்றும் கூறியது. இந்தியருக்கு வாக்குரிமை அளிக்கப் பட்டது. சொத்துரிமை உள்ளவருக்கே வாக்குரிமை என்ற விதி இருந்தது. இதனை இச்சங்கம் எதிர்த்து வரிச்செலுத்துவோர் அனை வருக்கும் வாக்குரிமை வேண்டும் என்றது. இத்தகைய வாக்குரிமை யைச் சாதிவாரியாகக் கொடுக்க வேண்டும் என்றது. எனவே, வாக் குரிமை உடையவரைச் சாதிவாரியாகப் பிரிக்கவேண்டும் என்றும் கேட்டது. சட்டமன்றங்களில் சாதிக்கேற்ற படிநிகராளியம் தரவேண் டும் என்றும், குறிப்பாக உள்ளாட்சித் துறையில் மக்களின் பங்கே நிறைந்திருக்க வேண்டும் என்றும் டி. எம். நாயர் பெரிதும் வலியுறுத்தி னார். இதற்குப் பின் தான் தன்னாட்சி முறை செம்மையாகச் செயல் ஆக்கம் பெற முடியும் என்றார். தமிழக சமூகப்பண்பாட்டு வாரியாறு தென்னிந்திய முற்போக்குக் கூட்டணி தன்னையொத்த முற்போக்குக் கருத்துக்களையுடைய, பார்ப்பன ரல்லாதார் பலரையும் தன்னோடு சேர்த்துக்கொண்டு, தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தென்னிந்திய முற்போக்குக் கூட்டணி என்ற பெயரில் கூட்டாகச் செயல்படத் தொடங்கியது. கட்டாயக் கல்வியை அமுலாக்க வேண்டும் என்றது. இந்துச் சமய அறநிலையச் சட்டங்களைத் திருத்தியமைத்து, கோயில் சொத்துக் களின் உபரி வருவாயைச் சமுதாய நலன்களுக்குப் பயன்படுத்த வேண்டும் என்றது. சாதி வாரியாகப் பயன்படும் எத்தகைய திருத்தத்தையும், இச்சங்கம் வரவேற்பதாயும், சொத்துரிமையை வைத்துத்தான் வாக்குரிமை உண்டு என்ற விதியை மாற்றிச் சாதிவாரியாக வயது வந்தோருக்கு வாக்குரிமை தரவேண்டும் என்றும் இச்சங்கம் கேட்டது. இவ்வாறு சாதிவாரியாக வாக்குரிமை அளிப்பதால் சமுதாய சமநிலையும், நீதியும் ஏற்படும் என்று 1917ஆம் ஆண்டு டிசம்பரில் சென்னையில் நடந்த தென்னிந்திய நல உரிமைச் சங்க மாநாட்டில் இத்தகைய தீர்மானங்கள் நிறை வேறின. இந்த தீர்மானங்களை 1918 ஆம் ஆண்டில் நடந்த மாநாட்டிலும் வலியுறுத்தியது. சவுத் பரோ வாக்குரிமைக்குழு இந்தியருக்கு வாக்குரிமை வழங்குவதற்கான தகுதிகளை ஆராய இங்கிலாந்தில் இருந்து சவுத் பரோ என்பவரின் தலைமையில் ஒரு குழு அனுப்பப்பட்டது. அக்குழுவில் இரண்டு இந்தியரும் இடம் பெற்றிருந்தனர். வி. எசு.எசு. சீனிவாச சாத்திரி, எசு. என். பானர்சி ஆகிய அவ்விருவரும் பார்ப்பனர்கள். சாதி அடிப்படையில் வாக் குரிமை வேண்டும் என்ற தங்களின் கருத்தை இந்தப் பார்ப்பனர் ஏற்க மாட்டார்கள் என்பதை உணர்ந்த தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் இக்குழுவைப் புறக்கணித்து நாடெங்கிலும் கிளர்ச்சி செய்தது. மேலும் 1919 ஆம் ஆண்டில் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தனியே ஒரு மாநாடு கூட்டிச் சவுத் பரோ குழு முன் தோன்றி வாக்கு மூலம் அளிப்பதில்லையெனத் தீர்மானித்தது. சவுத்ரோ குழுவும் சாதி அடிப்படையிலான வாக்காளர் பட்டியலைத் தயாரிக்க ஒப்புக் கொள்ளவில்லை. ஆயினும், ஆதி திராவிட மகாசன சபையின் தலைவர் எம்.சி., இராசாவின் தலைமையில் ஆதி திராவிட மகாசன சபை தனி வாக் காளர் பட்டியலையும், தனித்தேர்தல் முறையையும் ஆதி திராவிடருக் குத் தரவேண்டுமென வற்புறுத்தியது. எம். சி. இராசா தலைமையில் ஒரு குழு சவுத் பரோ குழுவைச் சந்தித்து இவ்வாறு வாக்குமூலம் அளித்தது. ஆதிதிராவிடருக்குத் தனி வாக்காளர் பட்டியலும், தனித் தொகுதியும் வேண்டும் என்ற இக்குழுவின் வேண்டுகோளை சவுத் பரோ குழு ஏற்றது. தென்னிந்திய நல உரிமைச் சங்கம் அதன் செயலர் டாக்டர். டி - எம். நாயர் தலைமையில் ஒரு குழுவை அமைத்து நேரே இலண்டனுக்குச் சென்று சாதிவாரியாக வாக்குரிமை வேண்டும் எனக் கேட்க அனுப்பியது. ஆனால், குழுத் தலைவர் டாக்டர் டி. எம். நாயர் இலண்டனில் திடீரெனக் காலமானார். உடன்சென்ற குழு உறுப்பினர் கே. பி. ரெட்டி தலைமை தாங்கிச் சாதி அடிப்படையில் வாக்குரிமைப் பட்டியலைத் தயாரிக்கவேண்டும் என விண்ணப்பம் செய்தார். இதற்கான காரணங்களை அந்த விண்ணப்பத்தில் விளக்கி இருந்தனர், பார்ப்பனர், சாதிவாரியாக வாக்குரிமை கொடுத்தால் இந்தியா சிதைவுண்டு போகும் என்றனர். எனவே ஆங்கிலேயர்கள் பார்ப்பனரும், பார்ப்பனரல்லாதாரும் இணைந்து பேசி ஒருமித்த கருத்தைக் கூறும்படிக் கேட்டனர். இவ்விரு வகுப்பாரும் பல முறை கூடிப் பேசியும் முடிந்த முடிவைக் காண முடியவில்லை ! இதற்கிடையில் சென்னை ஆளுநராகயிருந்த வெலிங்டன் பிரபு பார்ப்பனரல்லாதாருக்கு ஐம்பது விழுக்காடு இடம் ஒதுக்கு வதாய் அறிக்கை வெளியிட்டார். இதனைப் பார்ப்பனரல்லாதவர் ஏற்க மறுத்து எழுபத்தைந்து விழுக்காடு ஒதுக்கீடு கேட்டனர். இந்நிலையில் ஆதி திராவிட மகாசனசபை ஆதி - திராவிடரைப் பார்ப்பனரல்லாதார் பட்டியலில் சேர்க்கக்கூடாது என்றும், தாங்கள் பார்ப்பனரும் இல்லை, பார்ப்பனரல்லாதாரும் இல்லை. ஆனால் தனிவகுப்பார்' என்று கூறியது. எனவே, தங்களுக்கெனத் தங்களின் மக்கள் தொகைக்கேற்ப தனியே ஒதுக்கீடு வேண்டும் என்றும், அதற்கான தனி வாக்காளர் பட்டியலைத் தயாரிக்க வேண்டும் என்றும் கேட்டது. இந்தச் சிக்கலைத் தீர்க்க ஆங்கில அரசு புதிதாக 'மெசுடன்' என்பவரின் தலைமையில் ஒரு குழுவை அனுப்பியது. அக்குழுவில் பார்ப்பனரும், பார்ப்பனரல்லாதாரும் இடம் பெற்றிருந் தனர். இக்குழு வழங்கிய தீர்ப்பு மெசுடன் தீர்ப்பு' (Milesten Award) என அழைக்கப்பட்டது. இத்தீர்ப்பில் கூறப்பட்ட கூறுபாடுகள் யாவும் 1918 ஆம் ஆண்டு அரசியல் சட்டத்தில் இடம்பெற்றன. இவற்றின் படி : சென்னைச் சட்டமன்றத்தில் தேர்தல் முறைப்படியும், நியமன முறைப்படியும் உள்ள உறுப்பினர் எண்ணிக்கை 132 ஆகும். இதில் நியமன உறுப்பினரின் மொத்த எண்ணிக்கை 34 பேர் ஆகும். இவர்களில் 10 பேர் ஒடுக்கப்பட்ட இனத்தவர். பின் தங்கிய மாவட் டங்களில் இருந்து நியமனம் செய்யப்பட்ட ஒடுக்கப்பட்ட இனத்த வர் ஒருவர். ஆக ஒடுக்கப்பட்ட இனத்தில் இருந்து 11 பேர் இருப்பர். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் சாதிவாரியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 98 ஆகும். இதில் நகரங்களில் வாழும் இசுலாமியருக்கு இரண்டும், மாவட்டங்களில் வாழும் இசுலாமியருக்கு: பதினோரு இடங்களும், ஆங்கிலோ-இந்தியருக்கு ஓரிடமும் இந்தியக் கிறித்துவருக்கு ஐந்து இடங்களும், ஐரோப்பியருக்கு ஓரிடமும் ஒதுக்கப்பட்டன. பொதுத்தொகுதியில் இருந்து இசுலாமியருக்கு ஒன்பது இடங்களும் மற்றவருக்கு ஐம்பத்து ஆறு இடங்களும் ஒதுக்கப் பட்டன. மற்றவை பல்கலைக் கழகம், வணிக நிறுவனம், தொழில் நிறுவனம், நிலக்கிழார்கள் ஆகியோருக்கும் ஒதுக்கப்பட்டன. இவ்வாறு, தென்னிந்திய நல உரிமைச் சங்கமும், ஆதி - திராவிட மகாசன சபையும் கேட்டக் கோரிக்கைகளை 1919 ஆம் ஆண்டு அரசியல் சட்டம் நிறைவேற்றியது. பார்ப்பன மேலாண்மை யை எதிர்த்து, தென்னிந்திய நல உரிமைச் சங்கமும், சாதி இந்துக் களின் மேலாண்மையை எதிர்த்து ஆதி திராவிட நலச்சங்கமும் சரியான தீர்ப்பைப் பெற்றன. இவ்வாறு, மெசுடன் தீர்ப்பு சாதிகளின் நீதியை நிலைநாட்டியது. நீதிக்கட்சி தென்னிந்திய நல உரிமைச் சங்கம் சமூக நீதிக்காக ஏற்பட்டது. 'நீதி' (Justice) பத்திரிக்கை என்ற ஆங்கில இதழ் அதன் குரலை ஒலித்தது. எனவே, 1920-ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றுத் தனது முதல் அமைச்சரவையை அமைத்தது. . முதல் அமைச்சரவையின் முதலமைச்சராக ஏ. சுப்புராயலு ரெட்டியார் பொறுப்பேற்றார். பனகல் அரசர், குருமா வேங்கட ரெட்டி, ஏ.பி. பாத்ரோ ஆகியோர் அமைச்சரவையில் இடம் பெற்றனர். மூன்றாண்டுகள் கழித்து 1923 ஆம் ஆண்டு நடந்த தேர்தலி லும் நீதிக்கட்சியே வெற்றிபெற்றது. இம்முறை பனகல் அரசர் முதல் வராகவும் ஏ.பி. பாத்ரோ, டி.என். சிவஞானம் பிள்ளை ஆகியோர் அமைச்சர்களாகவும் பொறுப்பேற்றனர். 1926-ல் நடந்த மூன்றாவது தேர்தலில் பெருவாரியான வெற்றி கிடைக்காததால் டாக்டர் பி. சுப்பராயன் சுயராஜ்ஜியக் கட்சிக்கு மாறி முதலமைச்சரானார். அவருடன் ஏ. அரங்கநாத முதலியார், ஆர்.என். ஆரோக்கியசாமி முதலியார், முத்தையா முதலியார், எம். ஆர். சேதுரத்தினம் அய்யர் ஆகியோர் அமைச்சர்களாகச் செயல்பட்டனர். 1927இல் கோவையில் நடந்த நீதிக்கட்சி மாநாட்டில் விருப்ப மானவர்கள் காங்கிரசு கட்சியில் சேர்ந்து நீதிக் கட்சியின் கோட்பாடு களை அங்கே புகுத்தலாம் என்றும், மாநிலங்களுக்கு சுயாட்சி கொடுக்க வேண்டும் என்றும், நம்பிக்கைத் துரோகம் செய்து கட்சி மாறி விட்ட டாக்டர் பி. சுப்பராயன் அமைச்சரவை மீது நம்பிக்கை யில்லாத் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்றும், முடிவெடுக்கப் பட்டது. இந்நிலையில் இந்தியாவுக்கு வந்த 'சைமன் குழுவை' வெறுத்தொதுக்க வேண்டும் என்று சுயராச்சியக் கட்சி முடிவெடுத்தது. டாக்டர். பி. சுப்பராயன் அக்கட்சியின் தயவால்தான் அமைச்சு ரவை அமைத்து, முதல்வரானார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். ஆனால், டாக்டர் பி. சுப்பராயன், தான் சென்னை மாகாண முதல் அமைச்சர் என்ற முறையிலும், சைமன் தன்னுடன் ஆக்சுபோர்டு பல்கலைக் கழகத்தில் பயின்ற சகதோழர் என்ற முறையிலும், கட்சிக் கட்டுப் பாட்டையும் மீறிச் சைமன் குழுவை வரவேற்றுவிட்டார், எனவேதான் சுயராச்சியக் கட்சி உறுப்பினர்களான ஆரோக்கியசாமி முதலியாரும், அரங்கநாத முதலியாரும், அமைச்சர் பதவியை விட்டு விலகினார்கள். இச்சமயத்தில் பார்ப்பனரல்லாத டாக்டர். சுப்பராய னுக்கு நீதிக் கட்சி ஆதரவு அளித்தது. 1919 ஆம் ஆண்டு அரசியல் சட்டப்படி மூன்றாண்டுக்கு ஒரு முறை தேர்தல் வரும். ஆகவே 1930 ஆம் ஆண்டுவந்த நான்காவது பொதுத் தேர்தலிலும் நீதிக் கட்சியே வெற்றி பெற்றது. 1927-ல் வலு விழந்த இக்கட்சி 1930-ல் வெற்றிப் பெற்று நான்காவது அமைச்சர் வையை அமைத்தது. இந்தப் பெருவாரியான வெற்றிக்கு அதன் தலைவர்களும், குறிப்பாக ஆதிதிராவிட மகாசன சபையின் தலைவர்களான இரட்டைமலை சீனிவாசன், எம்.சி. இராசா, என். சிவராசு, வி.ஐ. முனுசாமிப் பிள்ளை முதலியோரின் பங்கேற்பும் ஆகும். நீதிக் கட்சி என்பது ஒடுக்கப்பட்டோருக்கு விடுதலையளிக் கும் கட்சியென இத்தலைவர்கள் தம் மக்களிடையே கூறி அடித் தளத் தொண்டர்களாக்கினர். பொதுமக்களையே நேருக்குநேர் சந்தித்து அறியாத நீதிக்கட்சித் தலைவர்களைப் பொதுமக்கள் அறியும்படிச் செய்தவர்கள் இந்த ஆதி திராவிட அடிமட்டத் தொண்டர்களே. இந்த நான்காவது அமைச்சரவையில் பி. முனுசாமி நாயுடு முதலமைச்சராகவும், பி.டி. இராசன், எசு. குமாரசாமி ரெட்டியார் துணை அமைச்சர்களாகவும் பொறுப்பேற்றனர். 1932-ல் நடந்த தேர்தலிலும் நீதிக்கட்சியே வெற்றி பெற்று பொப்பிலியரசர் முதல்வராகவும், பி.டி. இராசன், எசு. குமாரசாமி ரெட்டியார் ஆகியோர் பிற அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். இத்தேர்தலில் நீதிக் கட்சி ஆட்டம் கண்டது. இதற்கு இரண்டு காரணங்கள் கூறுப்படுகின்றன. ஒன்று 1932-ல் நடந்த நீதிக்கட்சி மாநாட்டில் பார்ப்பனரும் நீதிக்கட்சியில் சேரலாம் என அழைப்பு விடுத்துப் பார்ப்பனரை நீதிக்கட்சிக்குள் நுழைய விட்டதும், மற்றொன்று ஆதி - திராவிடரையும் அவர்களின் தலைவர்களையும் சட்டை செய்யாமல் விட்டதுமாகும். நீதிக் கட்சியின் தொடக்கக் காலத்திலிருந்தே அதன் அடித்தளத்தூண்களாக நின்ற எம். சி. இராசா, என். சிவராசு முதலியோருக்கு 1920 முதல் 1937 வரை ஆண்ட நீதிக் கட்சி ஏழு முறை அமைச்சரவைகளை அமைத்ததில் ஒரு முறையும் இத்தலைவர் களை அமைச்சர்களாக்கவில்லை. 1929 ஆம் ஆண்டில் தான் எம்.சி. இராசாவை இக் கட்சியின் சட்டமன்றத் துணைத் தலைவ ராக்கினர். ஆனால், இக் கட்சிக்கு நெருக்கடி நேரும் போதெல்லாம் எம். சி. இராசாவின் மக்களே ஊன்றுகோலாய் நின்றனர். ஆயினும், அக்கட்சியின் இறுதிக் காலத்தில் 1936-ல் நடந்த தேர்தலில் பி.டி. இராசன் முதல்வராக இருந்தார். அவருக்குத் துணையாக எசு, குமாரசாமி ரெட்டியார், முத்தையா ரெட்டியார் அமைச்சர்களாக இருந்தனர். ஏழாவது அமைச்சரவையில் பொப்பிலி இராசா முதல்வராகவும், பி.டி. இராசன், குமாரசாமி ரெட்டியார் எம்.ஏ., முத்தையா முதலியார், எம்.ஆர். சேதுரத்தினம் அய்யர் ஆகியோர் பிற அமைச்சர்களாகவும் இருந்தனர், பார்ப்பனரை எதிர்த்துத் தோன்றிய நீதிக்கட்சி அமைச்சரவை யில் அதன் இறுதிக் காலத்தில் எம்.ஆர். சேதுரத்தினம் அய்யரைச் சேர்த்தனர். ஆனால், அக்கட்சியின் தூணாக நின்ற ஆதி திராவிடரைச் சேர்க்கவில்லை . எனவே, ஆதி திராவிடர் கிளர்ந்து எழுந்தனர். மேலும், 1935ஆம் ஆண்டு அரசியல் சட்டம் அமுலாகும் நேரமும் நெருங்கிவிட்டது. எனவே எட்டாவது (இடைக்கால்) அமைச்சரவை யில் எம்.சி. இராசாவைச் சேர்த்த னர். அவர் 1.4.1937 முதல் 14.7.1937 வரை 105 நாட்கள் இடைக்கால அரசாங்கத்தில் அமைச்சராகப் பதவி வகித்தார். இதற்குள் 1935ஆம் ஆண்டு சட்டப்படி தேர்ந்தெடுக்கப் பட்ட அகில இந்திய காங்கிரசு பெரும்பான்மையாக வெற்றி பெற்றுச் சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரியாரின் தலைமையில் அமைச்சரவை அமைத்தது. 2. நீதிக்கட்சியின் சாதனைகள் (1920-1937) (அ) கல்விப்பணிகள் இலவசக் கட்டாயக் கல்வி : கல்வித் துறையில் ஐரோப்பிய, ஆங்கிலோ - இந்தியக் கல்வியைத் தவிர்த்த மற்றவை தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச் சரவைக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் தொடக்கக் கல்வி, பள்ளிக் கல்வி, கல்லூரிக் கல்வி ஆகியவற்றில் நீதிக் கட்சிக் கல்வி முறையில் ஒரு சிறந்த முன்னேற்றத்தைக் காட்டியது. இலவசக் கட்டாயக் கல்வி முதலில் சென்னை நகரில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் அறிமுகப் படுத்தப்பட்டது. குறிப்பாக பெண் குழந்தைகளின் கல்வியில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. அவர்களுக்கு எட்டாம் வகுப்புக்கு மேலும் இலவசக் கல்வி அளிக்கப்பட்டது. சென்னை நகரையடுத்து, இத்தகைய இலவசக் கல்விப் பல நகரங்களிலும் செயல்படுத்தப் பட்டது. இரண்டாவது தேர்தலில் வெற்றி பெற்றதும் 1925 - ல் மொத்தமுள்ள இருபது நகரசபைப் பள்ளிகளில் பதினெட்டு நகர சபைப் பள்ளிகளுக்கு இலவசக் கல்வி கொண்டு வரப்பட்டது. மதிய உணவுத் திட்டம் - பதவிக்கு வந்த ஐந்து ஆண்டுகளில் 500 மக்கள் தொகைக் கொண்ட கிராமங்களில் தொடக்கக் கல்வி இலவசமாகச் செயல் பட்டது. குறிப்பாக மீனவர் குப்பங்களில் அக்கறையோடு தொடக்கக் கல்வி செயல்படுத்தப்பட்டது. 1921-ல் சென்னை மாநகர ஆட்சியின் தலைவராயிருந்த பி. தியாகராசன்(செட்டியார்) மதிய உணவுத் திட்டத்தை மாநகரப் பள்ளிகளில் செயற்படுத்தினார். அதிலிருந்து இத் திட்டம் தொடர்ந்து செயல்பட்டது. ஐந்து ஆண்டுகளில் சென்னை நகரம் முழுவதுமுள்ள பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டு, ஆண்டுக்கு ஏழாயிரம் உருபாய்க்கு மேல் செலவிடப் பட்டது. இதனால் பள்ளிக்கு வரும் மாணவரின் எண்ணிக்கையும் அதிகரித்தது. தொடக்கக்கல்விச் சட்டம் திருத்தியமைத்தல் தொடக்கக் கல்வியைக் கட்டாயக் கல்வியாக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதனை 1935ஆம் ஆண்டு வரைத் திருத்தி அமைத்துக்கொண்டே வந்து தொடக்கக் கல்வியை அதிகம் விருத்தி செய்தது. இதனால் கல்வியின் தரமும் உயர்ந்தது. சித்த மருத்துவக் கல்வி பனகல் அரசர்காலத்தில் சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி மருத்துவ முறைகளைப் பெருக்க முயற்சி மேற்கொள்ளப் பட்டது. இவற்றில் உயர்கல்விமுறையும் ஆராய்ச்சியும் வளர்ந்தன. சென்னைப் பல்கலை கழகச் சட்டம் (1923) சென்னைப் பல்கலைக் கழகம் 1857இல் தொடங்கப்பட்டது. 1904 ஆம் ஆண்டு வரை இது ஒரு தேர்வாணைக் குழுவைப் போலவே செயல்பட்டது. 1904-ல் தான் விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், முதலியோர் அமர்த்தப்பட்டு மாணவர்களுக்கு முறையாகப் பாடங்கள் கற்பிக்கப்பட்டன. வகுப்புகள், நூலகங்கள், அறக்கட்டளை கள், சோதனைக் கூடங்கள் முதலியன ஏற்படுத்தப்பட்டன. இதனால் கற்பிக்கும் முறையும், கற்றுக் கொள்ள மாணவர்களும், கற்பிக்கப் பேராசிரியர்களும், ஒழுக்கமும், கல்வி உயர்வும், தேர்வு முறையும் பட்ட மளித்தலும் மேம்பட்டன, 1923-ல் நீதிக் கட்சியின் ஆட்சியில் சென்னைப் பல்கலைக் கழகம் கலைக்கல்லூரிகளுக்கும், தொழிற் கல்லூரிகளுக்கும் தாயக மாய் விளங்கத் தொடங்கியது. அதற்கான சட்டமும் நிறைவேற்றப் பட்டது. பல்கலைக்கழகத்தில் ஆளவைக்கும் ஏற்பட்டது. பாடத் திட்டக்குழுவும் ஏற்பட்டது. பல்வேறு துறைகளில் இருந்து இவற்றிற் கான உறுப்பினர்கள் தேர்தெடுக்கப்பெற்றனர். ஆட்சி மன்றக் குழுவில் இருந்து சென்னைச் சட்ட மன்றத்திற்குப் பிரதிநிதிகளை அமர்த்தும் வழக்கமும் ஏற்பட்டது. இதனால் சென்னைப் பல்கனலக் கழகம் உயிரோட்டமாக வளர்ச்சியடைந்தது. ஆந்திரப் பல்கலைக் கழகத்தின் தோற்றம் (1989) சென்னைப் பல்கலைக்கழகத்தின் தீர்மானத்தின்படியே தெலுங்கு மொழியின் வளர்ச்சிக்காக விசாகப்பட்டினத்தில் ஆந்திரப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. அதில் தெலுங்கு, கன்னடம் ஓரியா ஆகிய மொழிப் பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அது வரை சென்னைப் பல்கலைக் கழகத்தில் சமற்கிருதத்திற்கும், பார்ப் பனியப் பண்பாட்டிற்குமே முதலிடம் தரப்பட்டிருந்தது. தெலுங்க ரின் உணர்வைக் கொண்ட தமிழரும் சென்னைப் பல்கலைக் கழகத் தில் தமிழுக்கும், தமிழ்ப் பண்பாட்டு வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்க முற்பட்டனர். பொருளாதாரத் துறையில் வளர்ச்சிப்பணிகள் கல்வித் துறையைப் போலவே நீதிக் கட்சி சென்னை மண்டலத்தைப் பொருளாதாரத் துறையிலும் முன்னேற்ற முயன்றது. கே. வி. ரெட்டி நாயுடு தொழில்துறை அமைச்சரானதும் சென்னை யைத் தொழில் வளர்ச்சியில் முன்னேறச் செய்தார். பழைய, புதிய தொழில்கள் தொடங்கப்பட்டன. குறிப்பாகக் குடிசைத் தொழில் களுக்கு அதிக ஊக்கம் அளிக்கப்பட்டது. தொழில் தொடங்கக் கடன் வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. பங்குதாரர் முறையிலும் தொழில்கள் தொடங்கப்பட்டன. ஊக்கத் தொகை கணிக்கும் முறையும் செயல் படுத்தப்பட்டது. தொழில் தொடங்க இடங்களைப் பார்த்து அளித்தல், வரிகளில் இருந்து விலக்களித்தல் முதலிய ஏந்துகளை அரசு அளித்துத் தொழில் முனைபவர்களை ஊக்கப்படுத்தியது. - இவற்றால், சர்க்கரை ஆலைகள், பொறியியல் தொழிலகங்கள், தோல் பதனிடும் சாலைகள், முந்திரித் தொழிற் சாலைகள், மின் தொழி லகங்கள், அலுமினியம், தச்சு, சிமெண்ட், சோப்பு, எண்ணெய் வித்துத் தொழிற்சாலைகள் முன்னேறின. தொழிற்கல்வி தொழிலகங்களை மட்டுமேயல்லாது தொழிற்கல்விக் கூடங் களையும் நீதிக்கட்சி விருத்தியடையச் செய்தது. இதனால் கோழிக் கோடு, பெல்லாரி, மங்களூர், முதலிய இடங்களிலும் சுமார் 72தொழிற் கல்விக்கூடங்கள் சென்னை மண்டலத்திலும் ஏற்பட்டன. இவற்றில் பயிலும் மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகையும் வழங்கப் பட்டது. 1935-ல் இதற்காகவே மாநில அரசின் தொழிற்கல்வி உதவித்தொகைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இவேளாண்மை வளர்ச்சிப் பணிகள் வேளாண்மை முன்னேற்றத்திற்காகவே நீதிக்கட்சி பல புதிய சட்டங்களையும், திட்டங்களையும் கொண்டு வந்தது. 1935-ல் குடியானவர் கடன் சட்டச் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டது. பல ஆயிரம் குடியானவரின் விவசாயக் கடன் தள்ளுபடியானது. ஏழை உழவர்களுக்குக் கடன் கொடுத்து, அதனைச் சுலபத் தவணையில் தண்டல் செய்யும் வகையில் சென்னைக் கூட்டுறவு நில அடமான வங்கிச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. 9. சென்னைக் குடிவார நிலச்சீர்திருத்தச் சட்டம் (1934) நிலக்கிழார்கள், சிற்றரசர்கள் முதலியோர் கணக்கில்லாத பல ஏக்கர் நிலங்களை வைத்திருந்தனர். இவற்றைப் பயிரிட்ட ஏழை உழவர்களை வெளியேற்றும் அநீதிகள் அடிக்கடி நடந்தன. அவர் களைக் கசக்கிப் பிழிந்து எதிரிகளாக்கி வந்தனர். இதனை ஒழிக்கவே இச்சட்டம் பொப்பிலி ராசாவால் 1934-ல் கொண்டு வரப்பட்டது. இதனால், பயிரிடும் உழவர்கள் காப்பாற்றப்பட்டனர். இந்நிலங் களின் சொந்தக்காரர்கள் உழைப்பே அறியாத இனாம்தாரர் ஆவர். இவர்களின் கொடுமையில் இருந்து பயிரிடுவோர் தப்பினர். உழவர் களின் குடிவாரம் உறுதி செய்யப்பட்டது - அவர்களை நிலத்தில் இருந்து அப்புறப்படுத்துவது தடுத்து நிறுத்தப்பட்டது. எனவே, இதனை 'இனாம்தாரிச் சட்டம்' அல்லது 'குடிவாரச் சட்டம்' என்றும் அழைப்பர். மலபார் குடிவாரச் சட்டம் (1930) சென்னைப் பெரும் நிலச்சொந்தக்காரர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்களாகவே இருந்தனர். இவர்களுக்கு அரவர்கள் பல நூறு ஏக்கர் நிலங்களை இனாமாகக் கொடுத்திருந்தனர். இதைப் போலவே மலபாரிலும் நம்பூதிரிப் பார்ப்பனர்கள் பல நூறு ஏக்கர்களைப் பெற்றிருந்தனர். அவர்களின் பிடியில் சிக்கிய ஏழை உழவர்களைக் காப்பாற்றவே இச்சட்டம் 1930- ல் கொண்டுவரப்பட்டது. இது 1925லேயே சட்டமுன்வரைவாக அறிமுகப்படுத்தப்பட்டாலும் நம்பூதிரிகள் ஆளுநரவையில் பேராண்மைப் பெற்றிருந்ததால் தாமதமானது. உழவர்களைத் திடீரென வெளியேற்ற முடியாமல் அவர்களின் பணி பாதுகாக்கப்பட்டன. ஈ) வகுப்பு வாரிப் படிநிகராளியம் இத்தகைய வேளாண்மைச் சீர்திருத்தங்களால் நீதிக்கட்சி சமூக நீதியைத் தேடித் தந்தது. இதைப் போலவே, அரசுப்பணிகளி லும், கல்வித்துறையிலும் வகுப்பு வாரிப் படிநிகராளிய ஆணையைக் கொண்டுவந்து சமூக நீதியை நிலைப்படுத்தியது. இதன்படி பார்ப்பனர், ஆங்கிலோ இந்தியர், கிறித்துவர், இசுலாமியர், ஆதிதிராவிடர், பார்ப் பனரல்லாத மற்ற வகுப்பாருக்கு மக்கள் தொகைக்கேற்ப அரசுப் பணிகளிலும், கல்வித்துறையிலும் இட ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனால் படிப்படியாகப் பார்ப்பனர் மேலாண்மை ஒழிக்கப்பட்டுச் சமுதாயச் சமநிலை ஏற்பட்டது. உ) இந்துச்சமய அறநிலையத்துறைச் சட்டம் சென்னை மண்டலத்தில் கோயில்களுக்கும், மடங்களுக்கு மாகக் கோயில் சொத்துக்கள் ஆதீனச் சொத்துக்கள் எனக் கணக்கில்லாமல் குவிந்து கிடந்தன. பல ஆயிரம் வேலி நிலங்களும், கோயிலிலுள்ள விலையுயர்ந்த தங்க, வயிர மணிக்கற்கள் முதலிய சொத்துகளும் இதிலடங்கும். இவற்றிற்கு வரவு, செலவு முதலிய கணக்கு வழக்குகள் இல்லை. எனவே, கோயில் ஆட்சிமுறையை ஒழுங்குபடுத்த நீதிக்கட்சி 1922-ல் இச்சட்டத்தைக் கொண்டு வந்தது. இச்சட்டம் 1926-ல் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. கோயில் சொத்துக் களுக்கான சரியான கணக்கு வழக்குகளைக் கண்காணிக்க இந்துச் சமய அறநிலையத்துறை ஏற்படுத்தப்பட்டது, கோயில் வருவாயில் உபரி வருமானம் சமூக நலன்களுக்காகப் பயன்படுத்தப்பட்டது. இத னால் கோயில்கள் அரச ஆணையர்களால் கண்காணிக்கப் பட்டன, அறங்காவலர்களாக எல்லா வகுப்பாரும் அமர்த்தப்பட்டனர். இதற்குப் பிறகு கோயில் நிருவாகம் சீர்பட்டது. நள) ஊரக மேம்பாடுகளும், ஆதிதிராவிடர் முன்னேற்றமும் ஊரக வளர்ச்சியிலும் பல மேம்பாடுகள் ஏற்பட்டன. சாலை வசதிகள், சுகாதார வசதிகள் முதலியன ஏற்பட்டன. குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளுக்கான சாலைப் போக்கு வரத்து, குடிநீர் வசதி, வீட்டுமனைகள், இடுகாடுவசதிகள் முதலின் செய்யப்பட்டன. 1920-ல் டாக்டர் சி. நடேசன் சென்னை மாநகர ஆவணங்களில் ஆதி திராவிடர்' என்ற சொல்லைப் பதியச் செய்தார். . இதற்காகவே 1922-ல் சென்னைச் சட்ட மன்றத்தில் எம், சி. இராசா ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்து 'ஆதி திராவிடர்' என்ற பெயரை அரசு ஆவணங்களில் பதியும்படிச் செய்தார். இவர்களுக் காக 1919 ஆம் ஆண்டு ஏற்பட்ட தொழிலாளர் நலத்துறை மூலம் தனியே பள்ளிகள் ஏற்பட்டன. இவர்களின் முன்னேற்றத்திற்காகப் பல நலத் திட்டங்களை இத்துறை செயல்படுத்தியது. எ) பெண்கள் முன்னேற்றம் ஆரிய சமாசம், பிரம்ம சமாசம் போன்ற சமூக சீர்திருத்த இயக்கங்கள் பெண்களுக்குக் குழந்தை மணம் கூடாது. உடன் கட்டை ஏறக் கூடாது. விதவைத் திருமணம் வேண்டும், போன்ற வற்றை மட்டுமே வலியுறுத்தின. ஆனால், பெண்களைத் தேவதாசி களாகப் பொட்டுக்கட்டி விடக்கூடாது. அவர்களுக்குச் சொத்தில் உரிமை வேண்டும், வாக்குரிமை வேண்டும் போன்றவற்றைப் பற்றிப் பேசவே இல்லை. இவற்றைச் சட்டத்தின் மூலம் நடை முறைப்படுத்தி யது நீதிக்கட்சியே ஆகும். எனவேதான், இக் கட்சியைச் சமூக மறு மலர்ச்சி இயக்கத்தின் வேர் என்கிறோம். 1) பெண்களுக்கு வாக்குரிமை 1920-ல் நீதிக்கட்சிப் பொது மக்களால் வாக்குரிமையளித்துத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த வாக்குரிமை சொத்து உள்ள, வயது வந்த ஆண்களுக்கு மட்டுமே இருந்தது. ஆனால் பெண்களுக்கு இவ் வுரிமை மறுக்கப்பட்டது, பெண்களுக்கும் வாக்குரிமை வேண்டு மெனப் போராட மகளிர் சங்கங்கள் தோன்றின. அவற்றின் இடை. விடாத போராட்டத்தால் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப் பட்டது. பெண்கள் ஆண்களைப்போல் ஆற்றல் இல்லாதவர்கள்; ஆண்களின் உணர்ச்சிகளைப் பூர்த்தி செய்யவே படைக்கப்பட்டவர் கள்; இளமையில் பெற்றோரின் பாதுகாப்பிலும், திருமணம் ஆன பின் கணவரின் பாதுகாப்பிலும், பின்னர் பிள்ளைகளின் பாதுகாப்பி லும் இருக்க வேண்டியவர்கள். எனவே இவர்களுக்கு எந்தவித உரிமைகளும் கிடையாது என்பது மனுதருமம். முசுலீம்கள் ஆட்சியில் இவர்களை முக்காடு போட்டு உருவத்தையே மறைத்து விட்டனர். இத்தகைய அடிமைமுறை ஆங்கிலேயர் காலத்திலும் தொடர்ந்தது. ஆங்கிலக் கல்வியும், மேலைநாட்டு நாகரிகமும் இவர் களை விழிப்படையச் செய்தன. எனவே, இவர்கள் உடன்கட்டை ஏறும் பழக்கம் குழந்தைத் திருமணம், விதவைக் கோலம் இவற்றை எதிர்த்த னர். 1919-ல் ஏற்பட்ட இந்திய அரசியல் சட்டம் வந்தபின் தேர்தல் முறை வந்தது. வாக்காளர் பட்டியலைத் தயார் செய்யச் சட்டம் 1921-ல் வந்தது. அதில் வாக்களரின் தகுதிகளைப்பற்றிக் கூறும் போது ஆண்களைப் பற்றியே கூறப்பட்டது. பெண்களைப் பற்றிக் கூறப்படவில்லை, சுதந்திரப் போராட்ட வீரர்களும் குறிப்பாக டாக்டர் அன்னி பெசன்ட் அம்மையாரும் பெண்களின் வாக்குரிமை பற்றிப் போராட்டம் தொடங்கினர். இந்தியப் பெண்கள் சங்கம் பெட்லாந்து பிரபு சென்னை ஆளுநராக இருந்தபோது முதல் உலகப்போர் நடந்தது. பெண்கள் உலகப் போருக்காக மக்களைத் தட்டி எழுப்பினர். அன்னிபெசன்ட் அம்மையாரின் தன்னாட்சி இயக்கத்திலும் பங்கேற்றனர். இதே ஆண்டில் (1917) கசின் என்ப வர் 20 பெண்களடங்கிய ஒரு பேராள் வட்டத்தைக் கவிக்குயில் சரோ சினி நாயுடு தலைமையில் மாண்டேகு பிரபுவைச் சந்திக்க அனுப்பி னார். இதில் பெயர் பெற்ற பெண்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட னர். பெண்களுக்கும் வாக்குரிமை வேண்டுமென வற்புறுத்தினர். 1918-ல் 'மாண்டேகு செம்சு போர்டு திட்டம்' தயாரானது. இதில் பெண்களுக்கு வாக்குரிமை இல்லையெனக் குறிப்பிடப்பட்டிருந் தது. இதனால் பெண்களின் போராட்டம் வலுத்தது. இந்திய வாக்காளர் பட்டியல் பற்றி ஆராய 'சவுத்பரோ குழு' ஏற்படுத்தப்பட்டு, அக்குழு இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்தது. இந்தியாவிலிருந்த பல்வேறு பெண்கள் சங்கங்கள் இக் குழுவைச் சந்தித்துப் பெண்களுக்கும் வாக்குரிமை வேண்டுமென வலியுறுத்தியது. வைதீக இந்துக்கள் பெண்களுக்கு வாக்குரிமையளிப்பதை எதிர்த்தனர். எனவே, சவுத்பரோ குழு 1919-ல் வெளியிட்ட தனது அறிக்கையில் பெரும்பாலான இந்துக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் பெண்களுக்கு வாக்குரிமை மறுக்கப்படுகிறது என்று குறிப்பிடப் பட்டது. 1919 ஆம் ஆண்டு இந்தியப் பெண்கள் தங்களின் உரிமைப் போராட்டத்தை வலுவடையச் செய்தனர், இந்தியப் பெண்கள் சங்கமும் மற்றும் 45 பெண்கள் சங்கங்களும் ஒட்டு மொத்தமாகச் சேர்ந்து போராட்டத்தைத் தொடங்கின. இதற்குத் துணையாக இந்திய தேசியக் காங்கிரசும், குறிப்பாக டாக்டர். அன்னிபெசன்டும் ஆதரவளித்தனர். 1919-ல் சரோசினி நாயுடு, திருமதி. டாக்டர். சி. சங்கரன் நாயர், அன்னிபெசன்டு ஆகியோர் இலண்டனிலுள்ள வாக்குரிழைக் குழுவுக்குப் பெண்களுக்கு வாக்குரிமை வேண்டு மென' மனு கொடுத்தனர். இலண்டனிலுள்ள பெண்கள் சங்கமும் இதற்கு ஆதரவு அளித்தது. இதற்குப்பிறகு 1919 ஆம் ஆண்டு அரசியல் சட்ட ஆணைக்குழு பெண்களுக்கு வாக்குரிமை வழங்கு வதை ஏற்றுக் கொண்டது. 1919 ஆம் ஆண்டு சட்டப்படி உள்நாட்டு ஆட்சிமுறை மாநில ஆட்சியின் கீழ் வந்ததால் வாக்குரிமை அளிக்கும் பொறுப்பும் மாநில ஆட்சிக்குட்பட்டதாயிற்று. எனவே, மாநில மேலவையில் இதற்கான சட்டம் இயற்றும் பொறுப்பு விடப் பட்டது. அன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அவையில் - மூன்று பேர் அமைச்சர்களாக இருந்தனர். ஏ. சுப்புராயலுசெட்டியார் முதல் அமைச்சராகவும், பனகல் அரசர், குருமா வேங்கடரெட்டி 'நாயுடு. ஏ. பி. பாத்ரோ ஆகியோர் மற்ற அமைச்சர்களாகவும் 17-12-1920-ல் பதவி ஏற்றனர். இதற்கிடையில் மகளிர் தலைவி களான திருமதி. சதாசிவ ஐயர், திருமதி. இராமராவ், திருமதி. குருசாமி செட்டி: டாக்டர். முத்துலெட்சுமி ரெட்டி, திருமதி, இலட்சுமிபதி, திருமதி. ஆனரா தாசா, மற்றும் பலரும் திருமதி. சதாசிவ அய்யர் தலை மையில் கே. சீனிவாச ஐயங்காரிடம் வாக்குரிமை கேட்டு மனு கொடுத் தனர். அவர் அப்பொழுது சட்ட மன்ற உறுப்பினராக இருந்தார், பெண்கள் வாக்குரிமை மட்டுமே கோரினர். தேர்தலில் வேட்பாளர் ராக நிற்கும் உரிமையைக் கோரவில்லை. எனவே, வாக்குரிமையைக் கொடுத்து விடலாம் என்றத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால், பெண்கள், குழந்தைகள், மனநோயாளிகள் தேர்தலில், வாக்குரிமை யற்றவர்கள் என்ற விதியைச் சுட்டிக்காட்டி மறுத்தனர்; மேலும் முசுலிம் பெண்கள் பர்தா அணிபவர்கள். அவர்கள் வெளிப் படையாக வந்து வாக்குரிமையைச் செலுத்த முடியாது என்றும் சுட்டிக்காட்டினர்; சொத்துரிமை' வாக்குரிமை அளிக்க விதிக்கப் பட்டுள்ள அடிப்படைத் தகுதி ஆகும். எனவே, பெண்கள் சொத் துரிமை இல்லாதவர் என்றனர்; பெண்பாலார் பலவீனமானவர் என்ப தும் வாக்குரிமை அளிக்க மறுத்தமைக்கு மற்றொரு காரணமாகும். சிறுவர்கள், குற்றவாளிகள், மனநோயாளிகளுக்குப் பெண் களை ஒப்பிட்டு வாக்குரிமை வழங்குவதைத் தடுப்பது தவறானது என்று சட்டமன்றத்தில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது: 'வீட்டுக்கு சாணி பெண்கள்' குழந்தைகள் நலத்தில் கெட்டிக்காரியான பெண்ணைப் பலவீனமானவள் என்று கூறக்கூடாதென முகமது உசுமான் சாயபு என்ற உறுப்பினர் கூறினார். கணவன் வாக்குரிமை அளிக்கச் சொத்துரிமை இருக்கும்போது மனைவிக்கும் அந்த உரிமை உண்டு என்றனர். வரிகட்டும் பெண்களுக்கும், பட்டதாரிப் பெண்களுக்கும் அவர்கள் பட்டமும் சொத்துரிமையாகும் என்றனர். பெண்கள் வாக்குரிமைச் சட்டம் 1921 இத்தகைய விவாதங்களுக்குப்பின் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் சட்டம் 10-5-1921 அன்று நிறைவேறியது. இதையே 'பெண்கள் வாக்குரிமைச் சட்டம்' என்று கூறுவர். ஒருவர் பெண் என்பதற்காகவே அவருக்கு வாக்குரிமையை மறுக்கக் கூடாது என்பதே இதன் கருப்பொருள் ஆகும். இச்சட்டம் 'தேசபக்தன்' 'நவசக்தி' முதலிய ஏடுகள் பெண் களைப் 'பாரதமாதா' ஆக்கிவிட்டன எனப் புகழ்ந்தன. இந்தியாவி லேயே தமிழகத்தில்தான் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை பெண் களுக்கு அளிக்கப் பெற்றது. 1930-31-ல் இலண்டனில் நடந்த வட்ட மேசை மாநாட்டிலும் பெண்கள் பங்கேற்றனர். பின் தேர்தலில் வேட்பாளராக நிற்கவும் உரிமைப் பெற்றனர்; சொத்துரிமைச் சட்டமும் வந்தது. 2. தேவதாசி முறை ஒழிப்பு அடுத்து, பெண்களின் வாழ்க்கை முறையைச் சீர்திருத்த தாசிகள் (பரத்தையர்) என்றிருந்த இழுக்கை அகற்றும் சமூக சீர் திருத்தம் தமிழ்நாட்டில்தான் முதலில் எழுந்தது. இதற்கு உறுதுணை யாக இருந்தவர் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி என்ற ஒரு மாதரசி யாவார். 'தேவதாசி' என்ற சொற்றொடருக்குக் கடவுளின் பணியாள் என்பது பொருளாகும். திருமணமாகாத இந்துப் பெண் ஒருத்தியை ஆண்டவனுக்குத் திருமணம் செய்து அவனுடைய பணிக்காக அவளை அர்ப்பணிப்பார்கள், கோயில் திருவுருவச் சிலை முன் ஆண்டவனே கட்டுவதைப் போல் சாத்திர சம்பிரதாய, சடங்கு களுடன் பூசாரி அவள் கழுத்தில் தாலிகட்டுவான். இதற்குப் பொட்டு கட்டிவிடுதல்' அல்லது 'கச்சு கட்டுதல் என்று பெயர். அதற்குப் பின் அவள் மானுடன் எவனையும் மணக்க மாட்டாள் தேவனே அவளுடைய மானசீகக் கணவன் ஆவான். அயினும் அவள் பிறருக்கு வைப்பாட்டியாக வாழ்வாள். எனவே இவளுக்கு நித்திய கல்யாணி ' என்று பெயர். இக்குல மரபில் வரும் தேவதாசிகள் கைக்கோளர், இசைவேளாளர், நாயர், முதலியார் வீட்டில் இருந்து சிறுமிகளைத் தத்தெடுத்துப் பொட்டுகட்டி அன்றாடம் சாமிமுன் இசை நடனம் ஆடச் செய்வர். ஊர்வலத்திலும் சாமி முன் ஆடிப்பாடிச் செல்வர். தேவதாசிகளைக் கோயில்களுக்குக்சதேவதானம் அளிப் பதைப் போலவே தேவதாசி மானியமும் வழங்குவர். இவர்கள் கோயிலுக்குத் தானமும் பூசை ஆராதனைகளுக்கு நிவந்தமும் அளிப்பர். இத்தகைய தேவதாசி முறையால் பல் நிலச்சுவான் தாரர்களும், பணக்காரர் களும், சீரழிந்து நடுத்தெருவில் அலைந்தனர். கணவன்மார் பலர் மனைவி, மக்களைக் கைவிட்டுத் தேவதாசிகள் வீடுகளில் அடைக்கலம் புகுந்து சமுதாயத்திற்குக் கேடுகள் விளைத்தனர். எனவே, இந்தத் தேவதாசி முறையை ஒழித்து இல்லற வாழ்க்கையை நல்லறமாக்க வேண்டுமெனச் சமூகச் சிந்தனையாளர் முனைந்தனர். முதலியார், நாயுடு, வேளாளர் நாயர் குடும்பங்களில் இருந்து தேவதாசி முறைக்குப் பெண்களை அனுப்பினார்கள். சுசீந்திரம் கோயிலில் அதிகமாகக் கேரள நாட்டு நாயர் பெண்களே தேவதாசிகளாக இருந்தனர் என்றும் அவர்களோடு தமிழ் வேளாளர் பெண்களும் இருந்தனர் என்றும் திருவாங்கூர் சமஸ்தான புள்ளி விவரம் கூறுகிறது. பெரும்பாலான தேவதாசிகள் கைக்கோளர் சாதியிலிருந்தே தத்து எடுக்கப்பட்டவர் களென்ற வருவாய்த் துறைப்புள்ளி விவரம் கூறுகிறது. கோயில்கள் அதிகமுள்ள கோயில் நகரங்கள், பிரபுக்கள், சிற்றரசர்கள் அதிகமுள்ள அரண்மனை நகரங்கள். அயல்நாட்டார் அதிக நடமாட்டமுள்ள துறைமுகப் பட்டினங்கள், விழாக்கள், சந்தைகள், கூடுமிடங்கள் ஆகியவற்றில் தேவாசிகளின் நடமாட்டம் அதிகமிருந்தது. வெள்ளையர் ஆண்ட காலத்தில் தங்களின் படைவீரர்கள் தங்கும் தங்குதளங்கள், துறைமுகங்கள் முதலிய இடங்களில் இவர்களைத் தடுக்க நடவடிக்கை எடுத்தனர். ஆங்கிலேயர்களால் இந்தியக் குற்றவியல் சட்டங்கள் இந்தியத் தண்டனைச் சட்டங்கள், மகளிர், இளம்பெண்கள், பாதுகாப்புச் சட்டங்கள் கொண்டுவரப் பட்டன். தேவதாசிகளுக்குத் தனியே மருத்துவமனைகளைத் தொடங்கினர். இதனால் தங்கள் படையினருக்குப் பாலியல் நோய்கள் வராமல் தடுத்தனர். வழுக்கி விழுந்தப் பெண்களுக்கெனக் காப்பகங் களையும் கொண்டு வந்தனர். ஆயினும், தேவதாசி முறையை ஒழிக்க முடியவில்லை, ஏனென்றால் இது இந்துமதத் தோடு தொடர்புடையதாக இருந்தது. இந்துக்களின் மனம் புண்படும் செயல்களில் ஆங்கிலேயர்கள் இறங்கமாட்டார்களென 1954ல் விக்டோரியா அறிக்கை யில் இது உறுதி செய்யப்பட்டிருந்தது. தேவதாசி முறையும் நீதிக்கட்சியும் 'சமுதாயச் சீர்திருத்தமும், பெண்கள் முன்னேற்றமும் நீதிக் கட்சியின் இரு கண்களாகும். எனவே, தேவதாசி ஒழிப்பு நீதிக்கட்சி ஆட்சிக்காலத்தில் தொடங்கியது. , கி.பி. 1927 - ல் இந்தியாவிலேயே முதல் பெண் சட்டசபை உறுப்பினரும் சென்னை மேலவையின் துணைத் தலைவருமான டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி என்ற பெண்மணி தேவதாசி முறை யை ஒழிக்க வேண்டுமென உறுதி பூண்டு தமிழ்நாடு முழுவதும் பொதுக் கூட்டங்கள் நடத்திப் பெண்மைக்கு இதனால் ஏற்பட்டுள்ள இழிவை எடுத்துக் கூறிப் பொது மக்களின் நல்வாழ்வையும், தமிழ்ப்பண்பாட்டிற்குள்ள கேட்டினையும் விளக்கிக் கூறினார். எதிர்காலத்தில் 'தேவடியாள் சமுதாயமே' இருக்கக் கூடாது என்றார். அகில இந்திய மாதர் சங்கம் இச்சங்கம் இவருடைய போராட்டத்திற்குக் ஆதரவு அளித்தது "சிறீதர்மம்' என்னும் இதழில் தொடர்ந்து தேவதாசி முறையின் கேடுகளை வெளியிட்டு வந்ததோடு, அரசுக்கும் பெண்கள் சார்பில் அதனை ஒழிக்க வேண்டுகோளும் விடுத்து வந்தது. இதில் மாதர் சங்கக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் வெளி யிடப்பட்டன. வேதங்களிலும், சாத்திரங்களிலும், ஆகமங்களிலும் தேவதாசி முறையை ஆதரித்து எழுதி இருப்பதை இவ்விதழ் மறுத்து எழுதியது. முத்துலட்சுமி ரெட்டியின் தேவதாசி ஒழிப்புப் போராட்டத்திற் காக நாடு முழுவதும் ஆதரவு பெருகியது. 'தேவதாசிப் பெண்கள் சங்கம் "தேவதாசி ஆண்கள் சங்கம்' ஆகியவை இம்முறையை ஒழிக்க வந்தன. 1917-ல் சட்டமன்றத்திலேயே தேவதாசி முறையை ஒழிக்க ஒரு சட்ட முன்வரைவைக் கொண்டு வருவதாய் முத்துலட்சுமி ரெட்டி கூறினார். எனவே, 'தேவதாசி ஒழிப்பு முறை என்பது தமிழகம் மட்டுமில்லாது அகில இந்திய ரீதியிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிவிட்டது. இந்நிலையில் சென்னை மண்டிலத்தை ஆண்ட நீதிக்கட்சி 'தேவதாசி முறையென்பது சமுதாயத்தை மட்டுமே அல்லாது சமயத்தையும் சார்ந்து உள்ளதால் இதில் கை வைத்தால் பொது மக்களின் எதிர்ப்பு ஏற்படும்" என்று கூறியது. ஆனால், முத்துலட்சுமி ரெட்டி இதற்காகப் பொது மக்கள் கருத்தை இதற்குத் தகுந்தபடி உருவாக்கித் தர உத்திரவாதம் அளித்தார். அதற்காக அல்லும் பகலும் உழைத்துப் பொதுக் கூட்டங்கள், அறிக்கைகள், விளம்பரங்கள், வேண்டுகோள்கள் மூலம் மக்கள் மனதைப் பக்குவப் படுத்தினார். இந்தியத் தேசியக் காங்கிரசும், பிற அரசியல் கட்சிகளும், இதழ்களும் ஆதரவு தேடித்தந்தன. தேவதாசி முறை ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டுவரும்படி ஆட்சியாளரைக் கேட்டுக்கொள்ளும் தீர்மானத்தை 'மணிமேகலைச்சங்கம்' எனும் தேவதாசிகளின் சங்கமே 2-11-1927 - இல் ஒரு தீர்மானத்தைப் போட்டு அரசுக்கு அனுப்பியது. இதைப் போலவே செங்குந்தர் மகாசனச்சங்கம் மற்றும் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு தேவதாசிச் சங்கங்கள் தீர்மானங்களை நிறைவேற்றின. அமைச்சரவை பொதுமக்கள் உணர்ச்சிகளைத் தூண்டும் செயலாக இருப்பதால் பொறுத்திருந்து பார்ப்போம்' என்றது. ஆயினும், டாக்டர் முத்துலட்சுமி 'இது அவமானச் செய லாகும். இதனை ஆண்டவன் பெயரால் செய்வது கொடுமையிலும் கொடுமை ஆகும்" என்றார். ஆனால், திடீரெனத் தேவதாசிகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துவிட்டனர். முத்துலட்சுமி ரெட்டி மனம் தளரவில்லை. 1926 ஆம் ஆண்டு 'இந்து அறநிலையச் சட்டத்தைத் திருத்தி அமைத்து ' இளம் பெண்களைத் தேவதாசிகளாகக் கோயில்களுக்குப் பொட்டுக் கட்டி விடும் பிரிவை நீக்கக் கோரினார்'. இந்தத் திருத்தப்பட்டச் சட்டப்படி தேவதாசிகளுக்கு விடும் 'தாசி மானியம் ஒழிக்கப்பட்டது. எனவே கட்டாயத் தேவதாசித் தொழில் செய்வது நின்றது. இதனால் சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறியது. தமிழ்நாட்டைப் பார்த்துத் திருவாங்கூர் சமஸ்தானத்திலும், புதுக்கோட்டைச் சமஸ்தானத்திலும் தாசிமானியம் ஒழிந்தது. கூடவே தேவதாசி முறையும் ஒழிந்தது. தேவதாசி முறை ஒழிந்ததால் அரசு தரும் தேவதாசி மானியத் திற்குக் குறிப்பிட்ட வரிகட்டினால் போதும், கோயில்களில் ஆடல் பாடல் நிகழ்த்தத் தேவை இல்லை; இனிவரும் இளம் பெண்களைப் பொட்டுக்கட்டிக் கோயில்களுக்குத் தேவதாசிகளாகப் படைக்கக் கூடாது என்றதால் தேவதாசி மரபே ஒழிந்தது. நீதிக்கட்சி ஆட்சி அமைத்தபின் பனகல் அரசர் 1920-1923 ஆகிய ஆண்டுகளில் இரண்டுமுறை முதலமைச்சராக இருந்தார். மூன்றாவதாக டாக்டர் பி. சுப்பராயன் 1926-ல் முதல் அமைச்சரா னார். 1927இல் டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி தேவதாசி முறை ஒழிப்பு சட்ட முன்வரைவை சட்ட மன்றத்தின் முன் வைத்தார். பூசாரிகள், நிலப்பிரபுக்கள் முதலியோரின் தலையீட்டால் இது நிறை வேறாமல் இழுத்துக் கொண்டே போனது காந்தியடிகள், பெரியார் (ஈ. வெ. ரா) முதலிய பலரும் அதனை நிறைவேற்ற வேண்டுமெனக் கேட்டுக் கொண்டனர். ஆனால், முடியவில்லை டாக்டர். முத்து லட்சுமி ரெட்டியாரின் விடா முயற்சியால் 1929-ல் நிறைவேறியது: தமிழகத்தில் மக்களாட்சியின் தொடக்கம் 3. சென்னை விபசார ஒழிப்புச் சட்டம் 1930 பெண்கள் பரத்தமைத் தொழில் செய்வது தமிழகத்தில் சங்க காலம் தொட்டே உள்ளது. இதனைத் திருவள்ளுவர் முதல் பல் நீதிமான்கள் இழித்துக் கூறியும் இந்து இன்றுவரை தொடர்கிறது. பரத்தனம் என்பது பெண்களுக்கு மட்டும் உரிய தொழில் அன்று ஆண்களும் ஈடுபட்டுள்ளனர், தனது உடலை விலைக்கு அல்லது வாடகைக்கு விடுவதுதான் பரத்தமை என்று ஆக்ஸ்போர்டு அகராதி யில் பொருள் கூறப் பட்டுள்ளது. "பணத்தைப் பெற்றுக் கொண்டு உடலை விற்கும் மாதரைத் தழுவுபவன் இருட்டறையில் பிணத்தைத் தழுவுபவன் ஆவான்' என்கிறார் திருவள்ளுவர் ஆக வள்ளுவர் காலம் முதல் இத்தொழில் சமுதாயத்தில் தொடர்ந்து நடக்கிறது. இதனை அரசும் அங்கீகரித்து அத்தொழில் செய்வோரிடம் தொழில் வரி" வாங்கி வந்தது. இத்தகையப் பரத்தமைத் தொழிலைத் தடுப்பதற்காக 1930 ஆம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதுவரை தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் 'பரத்தமையர் வீடுகள்" "பரத்தமையர் பகுதிகள்' என்று தனியாகவே பல இருந்தன. அரசர்கள் ஆண்ட காலத்தில் அரசவையிலும், உவளகத்திலும், பரத்தமையர் அரச மரியாதையோடு செயல்பட்டனர். முகலாய மன்னர்கள் நூற்றுக்கணக்கான வரை உவளகத்தில் வைத்திருந்தனர், ஆங்கிலேயர் காலத்தில் புதிதாக ஏற்பட்ட தொழிற்சாலை நகரங்களி லும், உல்லாச இடங்களிலும் பரத்தமையர் அதிகமாகக் காணப்பட்ட னர். துறைமுகப்பட்டினங்களிலும் அதிகம் காணப்பட்டனர், தங்களின் படை வீரர்கள், கப்பல்படை வீரர்கள் ஆகியோருக்கு இவர்களால் பால்வினை நோய்கள் ஏற்படுவதைத் தடுக்க ஆங்கில அரசு தனியாக மருத்துவமனைகளை ஏற்படுத்தியது. பரத்தமையரை மருத்துவப் பரிசோதனைக்குள்ளாக்கினார்கள். இதற்குப்பின் பரத்தமைத் தொழில் நடத்த உரிமம் வழங்கினார்கள். ஆங்கில அரசு கி.பி. 1854-ல் படைகள் தங்கும் தண்டுகளில் ஒழுங்கு செய்ய ஒரு சட்டம் கொண்டு வந்தது பால்வினை நோய் களைத் தடுக்கும்படி உள்ளாட்சிகளுக்கும் ஆணை பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து பல சட்டங்கள் வந்தன. கி.பி. 1868இல் கொண்டு வரப்பட்ட சட்டத்தின்படி 'பரத்தமையர் தொழில் சட்டப்படி அனு மதிக்கப்பட்டதால் உரிமம் பெற்றுப் பரத்தமைத் தொழிலை நடத்தி னர். காலவாரியாக இவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைச் செய்து சான்றிதழும் வழங்கப்பட்டது. இதற்குப் புறம்பானவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதிலும் தேவதாசிகள், சிலருக்கு வைப்பாட்டிகள் என்று தப்பித்து விட்டனர். பல இளம் பெண்களைக் கடத்திப் பம்பாய், கல்கத்தா போன்ற நகரங்களுக்குச் சென்று விற்று தரகர்கள் பணம் சம்பாதித்தனர். எனவே, இத்தொழில் மேலும் செழிப்பாக வளர்ந்தது. சமூக நீதியையே தன் மூச்சாகக் கொண்ட நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்தபின் உடலை விற்றுப் பணம் சம்பாதிக்கும் இந்த மனிதாபிமான மற்ற தொழிலை ஒழிக்க முயன்றது. 1923-ல் வங்காளத்தில் 'பரத்தமையர் ஒழிப்புச் சட்டம்' கொண்டு வரப்பட்டது. இதன்படி 13 வயதிற்குட்பட்டப் பெண்களைப் பரத்தையர் இல்லங்களில் வைத்து விபசாரம் செய்யக் கூடாது என்று விதிக்கப்பட்டது. இதன்படி 13 வயதிற்குட்பட்டப் பெண்கள் விபசார விடுதிகளில் இருந்து மீட்கப்பட்டனர். இச்சட்டத்தை எல்லாத் தரப்பினரும் இதழாளர்களும் பாராட்டினர். 1925ஆம் ஆண்டு சென்னை விழிப்புணர்வு சங்கம்' ஏற்படுத் தப்பட்டது. இதனை இந்திய மாதர் சங்கம் ஏற்படுத்தியது. இதுவரை ஏற்பட்ட சட்டங்களும், சங்கங்களும் பரத்தையருக்குப் பாதுகாப்பும், பாலியல் நோய்களும், பிற துன்பங்களும் ஏற்படாதவாறு மட்டுமே பார்த்தன. ஆனால் பரத்தைத் தொழிலையே ஒழிக்க முன் வரவில்லை . இதனால், மேலும் மேலும் விபசார விடுதிகள் பெருகின. இத்தொழிலில் இடைத் தரகர்கள் கொழுத்த பணம் சம்பாதித்தனர். விபசார் ஒழிப்பும், பெண்கள், சிறுமிகளை விபசாரத்தில் ஈடுபடுவதைத் தடுத்தலுமான விபசாரக் கற்பழிப்புக் குற்றச் சட்டமுன் வரைவு 1928: 1928-ல் சட்ட மன்றத்தில் உறுப்பினர் கே. ஆர். வெங்கட் ராம் அய்யர் இந்தச் சட்ட முன் வரைவைக் கொண்டு வந்தார். அதனை டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி வழிமொழிந்தார். இந்தச் சட்டமுன் வரை வைக்கொண்டு வந்த போது டாக்டர். பி. சுப்பராயன் இரண்டாம் முறையாக முதலமைச்சராக இருந்தார். இதற்கும் ஏகப்பட்ட எதிர்ப்புகள் எழுந்தன. விபசார விடுதிகளில் இருந்து மீட்கப்படும் பெண்களை எங்கே எப்படி வைத்துக் காப்பது என்றும், தேவதாசிகளின் உரிமைகளுக்கு இது கேடு விளைவிக்கும் என்றும் சிக்கல்கள் விவாதிக்கப்பட்டன. சத்தியமூர்த்தி, சென்னை நகரக் காவல் துறைச் சட்டங்களே விபசாரத்தைத் தடுக்கப் போதுமானவை யாக உள்ளதால் தனியே சட்டம் தேவை இல்லை' என்றார். ஆயினும் டாக்டர். முத்துலட்சுமி ரெட்டியின் விடாப்பிடியால் இரண்டு ஆண்டுகள் நடந்த விவாதங் களுக்குப் பிறகு 1930-ல் இது சட்டமாக நிறைவேறியது. விபசாரம் மற்றும் கற்பழிப்புக் குற்றச் சட்டம் 1930 . . - . 1930இல் சென்னைச் சட்ட மன்றத்தில் சட்டமாக நிறை வேற்றப்பட்ட 'விபசாரம் மற்றும் கற்பழிப்புக் குற்றச்சட்டம்' கீழ்க் கண்ட கூறுபாடுகளைக் கொண்டதாகும். இச்சட்டத்தின் கூறுபாடுகள் விபசார விடுதிகளை வைத்து விபசாரம் நடத்துவது குற்றமாகும். இக்குற்றத்திற்காக இரண்டு ஆண்டுகள் வரை சிறைவாசமும் ஆயிரம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். பதினெட்டு வயதிற்குட்பட்ட விபசாரிகளை நீதிபதிகள் விடுதி யில் இருந்து மீட்க உத்திரவிடலாம். மீட்கப்பட்ட பெண்களை 'வழுக்கி விழுந்தோர் விடுதிகளில் " வைத்துக் காக்க வேண்டும். காவல் நிலையத்திலோ, சிறையிலோ இவர்களை அடைக்கக் கூடாது. விபசாரக் குற்றம் நிரூபிக்கப்பட்டபின் நீதி மன்றம் விதிக்கும் தீர்ப்பின்படி அவர்களுக்கு இரண்டு ஆண்டுவரை சிறைத் தண்டனை உண்டு. விபசாரத்தில் ஈடுபடுத்துவோருக்கும், விடுதியாளருக்கும் கூட இரண்டு மாதம் வரை சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் உண்டு. மேற்கூறிய சட்டத்தை மக்களும் இதழ்களும் வரவேற்றன, அப்பொழுது சென்னை நகரில் மட்டும் சுமார் 500 விபசார விடுதிகள் இருந்தன. இவற்றில் 12 முதல் 13 வயதுடைய இளஞ்சிறுமிகள் பல ஆயிரம் பேர் இருந்தனர். 'இந்தியப் பெண்கள் சங்கம்' மீட்கப்பட்ட இவர்களைக் காப்பாற்றப் பேருதவி செய்தது. இச்சட்டம் 1931-ல் மீண்டும் திருத்தப்பட்டு மீட்கப்பட்ட சிறுமிகளுக்கு மறுவாழ்வு கொடுக்க வழி செய்த்து, திருத்தங்களுடன் 30-10-1931-ல் இச்சட்டம் முழுமை யாக நிறைவேற்றப்பட்டது. அதுவும் 1932-ல் மீண்டும் திருத்தப் பட்டதும் காவல்துறை கெடுபிடியால் விபசாரிகள் நகரத்தைவிட்டுச் சுற்று வட்டார ஊர்களில் குடியேறிப் பல குடும்பங்களை அழித்தார்கள். இதனால் நீதிக் கட்சி அரசாங்கம் 1934-ல் மீண்டும் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தது. 4. பெண்கள் பாதுகாப்புச் சட்டமுன்வரைவு 1934 விபசாரம் அரசாங்கத்தின் ஒழுங்கு முறைக்கு அடங்காமல் பல்வேறு வடிவத்தில் பரவிக் கொண்டிருப்பதைத் தடுக்கவே 1934 ஆம் ஆண்டும் பெண்கள் பாதுகாப்புச் சட்டமுன்வரைவு' ரகுபர் சிங் என்பவரால் மத்திய சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட் டது, இதனைச் சென்னை அரசாங்கத்திற்கும் அனுப்பி அபிப்பிராயம் கேட்கப்பட்டது. இச்சட்டம் கொண்டு வருவதின் உள் நோக்கமே சிறுமிகளை விபசாரத்திற்காக விற்பதைத் தடுப்பதாகும். இதில் குழந்தைத் திருமணம் செய்துகொண்டு விதவையான சிறுமிகளும் அடங்குவர். தமிழக சமூகப் பண்பாட்டு வரணறு. 1935-ல் சென்னை ஆளுநராக இருந்த எர்ஸ்கின் பிரபு ஒரு மாநாடு கூட்டிப் பொதுமக்கள் விபசாரத்தை ஒழிக்க ஒத்துழைக்க வேண்டும், வழுக்கி விழுந்த பெண்களைக் காப்பாற்றப் போதிய பொருளுதவி செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். நகர மன்றங்களும் வழுக்கி விழுந்தோர்க்கும் பாதுகாப்பு இல்லங்களை வைத்து நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். விபசாரிகளை மட்டும் மல்லாது, விபசாரத் தொழிலில் ஈடுபடுத்துவோரையும் பொதுமக்கள் கண்காணித்துத் தடுக்க வேண்டும் என்றார். இவ்வாறு படிப்படியாகப் பெண்களுக்கு இருந்த இழிவுகள் நீங்கின. சட்டங்களால் மட்டுமேயல்லாமல் மக்களின் மனமாற்றத்தால் தான் இத்தகையச் சமூகக் கேடுகள் ஒழிக்கப்படும் என்பதற்கு நீதிக் கட்சி ஆட்சியில் நடந்த சம்பவங்கள் சிறந்த எடுத்துக் காட்டுகளாகும். ஆகாங்கிரசு கட்சியின் ஆட்சி (1937-39) முன்னுரை இந்த அமைச்சரவையில் இராசகோபால் ஆச்சாரி முதல்வராக வும் மற்றும் பத்து அமைச்சர்களும் இடம் பெற்றனர். ஆதி திராவிடர் வகுப்பில் இருந்து வி.ஐ.முனுசாமிப் பிள்ளையும் இந்த அமைச்சரவை யிலிடம் பெற்றார். இஃது பதினெட்டே மாதங்கள் பதவியில் இருந்து. ஆங்கில அரசு இரண்டாம் உலகப்போரில் இந்தியரைக் கலந்து ஆலோசிக்காமலேயே இந்தியாவையும் போரில் ஈடுபடுத்தியதைக் கண்டித்து அமைச்சரவை பதவி துறந்தது. ஆயினும், இக்குறுகிய காலத்தில் இந்த அமைச்சரவைச் சாதித்தவற்றை அறியலாம். கி.பி. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் காங்கிரசு இயக்கம் தீவிரவாதம், மிதவாதம் என இரு கூறுகளாய்ச் செயல்பட்டது. தீவிர வாதிகள் கத்தி முனையில்தான் விடுதலை அடைய முடியும் என நம்பினர். இதனால் ஆங்கிலேயரைக் கொல்லுதல், தந்திக்கம்பிகளை அறுத்தல், தண்டவாளங்களைப் பெயர்த்தல், அஞ்சல் நிலையங் களைக் கொளுத்துதல் முதலிய கொடுஞ்செயல்களில் ஈடுபட்டனர். 1914-18-ல் நடைபெற்ற முதல் உலகப்போருக்குப்பின் இந்தியா வுக்கும் படிப்படியாகச் சுதந்திரம் கிடைக்குமென ஆங்கிலேயர்கள் வாக்குறுதி அளித்தனர். ஆனால், முதல் உலகப்போரின் முடிவில் ஆங்கிலேயர்கள் இந்திய விடுதலைப் பற்றிய தீர்மானம் எதுவும் கொண்டுவரப்படவில்லை . இந்நிலையில், 18-4-1919 ஆம் நாள் மாலை 4.30 மணிக்குப் பஞ்சாபிலுள்ள சாலியன் வாலா என்ற பூங்காவில் கூடிய சுமார் பத்தாயிரம் பொது மக்களை முன்னெச் சரிக்கை எதுவுமின்றி, பஞ்சாபு மாநிலத் துணை ஆளுநராக இருந்த சர். மைக் கேல் ஓ. டயர் என்பவன் நாற்புறமும் கதவுகளை மூடிவிட்டுப் பொறியில் சிக்கிய எலிகளைச் சுடுவது போல் சுட்டு வீழ்த்தினான். பீரங்கிப் படை 1,650 முறை சுட்டது. பிணக்குவி யலைக்கண்டு மகிழ்ந்தான்! ஒத்துழையாமை இயக்கம் 1920-ல் இருந்து மகாத்மா காந்தியடிகள் காங்கிரசுக்குத் தலைமையேற்றார். ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். சட்டமறுப்புப் போராட்டமும் தொடங்கியது. சாத்வீக முறையில் தொடங்கப்பட்ட இப்போராட்டத்தின்போது சௌரி சௌரா என்னு மிடத்தில் மூவாயிரம் மக்கள் ஒன்று கூடி ஒரு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு இருபத்தொரு காவலர்களையும், ஒரு காவல்துறை அதிகாரியையும் கொன்றனர். சாத்வீகம் பலாத்காரமாக மாறியதைக் கண்ட காந்தியார் ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தினார். காந்தியைக் கைது செய்து ஓராண்டு சிறைத் தண்டனையளித்த ஆங் கில அரசு பிறதொண்டர்களையும் சிறையிலடைத்தது. சுயராச்சியக் கட்சி காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கம் கைவிடப்பட்டதை எதிர்த்து, அரசியலில் பங்கு பெற வேண்டுமெனும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டதே சுயராச்சியக் கட்சி ஆகும். சி. ஆர். தாசு, மோதிலால் நேரு, கே. சி. கேர்கர் போன்றவர்கள் சட்ட சபைக்குள் புகுந்து போராடிப் படிப்படியாகச் சுதந்திரம் பெற வேண்டும் என்றனர். காந்திஜியின் கொள்கைப்படிதான் காங்கிரசு சட்டமன்றத் தேர்தலில் நிற்கவில்லை. இதனைப் பயன்படுத்தித்தான் நீதிக்கட்சி 17 ஆண்டுகள் ஆட்சியிலமர்ந்தது. ஆனால், சி. ஆர். தாசின் தலைமை யில் சுயராச்சியக் கட்சி வங்காளச் சட்டமன்றத்தில் கொடிகட்டிப் பறந்தது. நடுவண் சட்டமன்றத்தில் மோதிலால் நேரு சட்டமன்றத் தலைவரானார். இதற்குப்பின்னர் 'முடிமான் குழு', 'சைமன் ஆணைக்குழு', 'நேரு அறிக்கை', 'வட்டமேசை மாநாடு', 'காந்தி - இர்வின் ஒப்பந்தம் முதலியன ஏற்பட்டன. 1932-ல் பூனா ஒப்பந்தம் ஏற்பட்டது. 1933-ல் மெத்னால்டின் வகுப்புத் தீர்ப்பு ஏற்பட்டது. இதற்குப்பின் காங்கிரசு சட்டசபையில் நுழைந்து படிப்படியாக விடுதலை பெற முடிவெடுத்தது. 1935-ல் கொண்டு வரப்பட்ட அரசியல் சட்டப்படி 1937-ல் நடந்த பொதுத் தேர்தலில் காங்கிரசு கட்சி முதன் முதலாகத் தேர்தலில் நின்று ஏழு மாநிலங்களில் வெற்றி பெற்றது. சென்னை மாநிலத்தில் வெற்றி பெற்றக் காங்கிரசு, சக்கரவர்த்தி இராச கோபாலச்சாரியாரின் (இராசாசி) தலைமையில் அமைச்சரவை அமைத்தது. இச்சட்டத்தால் இரட்டை ஆட்சி முறை நீக்கப்பட்டு 'மாநில சுய ஆட்சிமுறை ஏற்பட்டது. சட்டமன்றத்தில் நியமன முறை, தேர்தல் முறை, வகுப்பு வாரிப்படிநிகராளியம், சமநிலை பிரதிநிதித்து வம் ஆகியவை கையாளப்பட்டன. உறுப்பினருக்கு வயது வரம்பும், தமிழக சமூகப் பண்பாட்டு பேரயாறு சொத்துரிமையும், சம்பளமும் உண்டு. இராசாசி தலைமையில் பத்து அமைச்சர்கள் பதவி ஏற்றனர். சாதனைகள் 1) ஆதி திராவிடர்களின் சிவில் உரிமைத் தடை நீக்கும் சட்ட முன் வரைவு(1938) இந்தச் சட்ட முன்வரைவைச் சட்ட மன்றத்தில் கொண்டு வந்தவர், எம். சி. இராசா ஆவார். இராசாசி முதல்வரானவுடன் நிறை வேற்றப்பட்ட முதல் சட்டமுன்வரைவு இது தான். சமுதாய மரபுவழி. பழக்கவழக்கங்களின் படி ஆதி - திராவிடர்கள் பொது நீர் ஊற்றுகள், ஆறுகள், குளங்கள், ஏரிகளில் இறங்கிக் குளிக்கவோ, நீர் பருகவோ கூடாது. அவ்வாறு செய்தால் சட்டப்படிக் குற்றமாகும். அக் குற்றத்திற்காகத் தண்டிக்கப்படுவர். இதைப்போலவே, பொதுப் பாதைகளில் நடந்தாலோ, பொதுக் கழிப்பிடங்களைப் பயன்படுத்தி னாலோ, பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்தாலோ அவையும் குற்றமாகும். இவ்வாறு இந்தக் குறிப்பிட்ட இனத்தவரைத் தீண்டாத வராகக் கொண்டு அவர்களைப் பார்த்தால், தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளும் என்றும், அந்தத் தீட்டைக் கிரிமினல் குற்றமாக்கி அவர் களைத் தண்டித்தனர். இத்தகைய சிவில் உரிமைகளை மறுக்கும், மரபுவழிப் பழக்க வழக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே, எம். சி. இராசா இந்தச் சட்டமுன் வரைவை இராசாசி அமைச்சரவையில் கொண்டு வந்தார். இதனை மகிழ்ச்சியோடு ஏற்று. இராசாசியும், சட்டமன்றமும் ஒருமனதாய் நிறைவேற்றியது. எம். சி. இராசாவின் இந்த முயற்சி இந்திய வரலாற்றின் சமுதாய வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியது. சென்னைச் சட்டமன்றத்தின் 1938ஆம் ஆண்டின் 21-வது சட்டமாக நிறைவேறிய இச்சட்டம் ஒரு செல்லாத காசு ஆகி விட்டது. காரணம் இராசாசியின் அமைச்சரவை 1939-ல் தீடீரெனப் பதவி துற்ந்தது. 1939 -ல் இருந்து, 1946 வரை ஆங்கிலேயேரே நேரடியாகச் சட்டசபை இல்லாமல் இடைக்கால அரசில் மக்களாட்சி யில் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டத்தைக் குப்பைக் கூடையில் போட்டு விட்டனர். காங்கிரசு தலைவர்கள் எல்லாம் சிறையிலடைக் கப்பட்டனர். 1942-ல் தோன்றிய 'வெள்ளையனே வெளியேறு' என்ற மக்கள் புரட்சியில் ஈடுபட்டக் காங்கிரசுக்காரர்களை அரசு முன்றாண்டுவரை சிறையில் தள்ளியது. 1942க்கும் 194சிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் பாகிச்சுதான் பிரிவினைக் கோட்பாடு வலுப்பெற்றது. 1945-ல் சிம்லா மாநாடு கூட்டப்பட்டது. வேவல் பிரபு பொதுத் தேர்தலை நடத்தினார். இதில் முஸ்லீம் லீக் தனக்கு ஒதுக்கப் பட்ட இடங்களில் வெற்றி பெற்று நடுவண் சட்ட மன்றத்திலிடம் பெற்றது. அப்து சிந்து. வங்காளம் ஆகிய மாநிலங்களில் வெற்றி பெற்று அமைச் சரவை அமைத்தது. இதனால் இசுலாமியர் பாகிச்சுதான் கோட் பாட்டில் நம்பிக்கை அடைந்தனர். 1946-ல் ஏற்பட்ட இடைக் கால அரசு ஆட்சியில் காங்கிரசும் முஸ்லீம் லீக்கும் இடம்பெற்றன. மீண்டும் ஆட்சியலமர்ந்த காங்கிரசு முதல் வேலையாக இராசாசி நிறைவேற்றிய எம். சி. இராசாவின் ஆதி திராவிடர் சிவில் உரிமைத் தடை நீக்கும் சட்டத்தைச் செயல்படுத்த முற்பட்டது. இடைக்கால ஆட்சியில் டி. பிரகாசம் முதலமைச்சரானார். பதின்மூன்று அமைச்சர்கள் அவருடைய அமைச்சரவையிலும் இடம் பெற்றனர். இந்த அமைச்சரவை 1-5-1946 முதல் 23-3-1947 வரை பதவியிலிருந்தது இந்த அமைச்சரவையில் இந்தச் சட்டத்தைப் பல திருத்தங்களுடன் 1947 ஆம் ஆண்டு சென்னை சிவில் உரிமைத் தடை நீக்கும் திருத்தச் சட்ட முன்வரைவாக, டி. பிரகாசம் அமைச் சரவையிலிருந்த ஆதி - ஆந்திரர் வேமுல கூர்மையா மீண்டும் அறிமுகப் படுத்தினார். அந்தச் சட்டமுன்வரவை அறிமுகப்படுத்தும் போது 1920 லேயே தொழிலாளர் நலத்துறை தோன்றியது என்றாலும் ஆதி திராவிடரை இன்னமும் நாயினும், பன்றியினும் கேவலமாய் நடத்துகிறார் கள், 1939 முதல் 1946 வரை நடந்த ஆட்சி அரசு செலவில் வெட்டிய கிணற்றில் நீரெடுக்க ஆதி திராவிடருக்கு உரிமை இல்லை என்றது. பொது வழியில் நடக்கவும் உரிமை இல்லை அது சர்க்கார் போட்டப் பாதை என்றாலும் ஆதி திராவிடர் நடக்கக் கூடாதென்றனர். உணவு விடுதிகளில் நுழைய அனுமதிக்க வில்லை. எனவே, இதனை மீண்டும் சட்டமாக நிறைவேற்ற வேண்டும் என்று கூர்மையா கூறினார். 1938-ல் எம். சி. ராசா கொண்டுவந்த சட்டத்தில் அது சமயச் சார்பற்றச் சட்டம் என்று குறிப்பிடவில்லை, ஆனால் கூர்மையா சட்டத்தில் தெளிவாக இது சமயச் சார்பற்ற சட்டம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. சில உறுப்பினர்கள் சுடுகாடு , இடுகாடு ஆகியவை சமயச் சார் பானவை என்றனர். எனவேதான், அவையும் சமயச் சார்ப்பற்றவை என்றும், ஏரி, குளம், ஆறு, நீர் ஓடை, பாதை, உணவு விடுதி, சத்திரம் சாவடி முதலியனவும் சமயச் சார்ப்பற்றவை என்றும் விளக்கமளிக்கப் பட்டபின் சட்டம் நிறைவேறியது ஆகவே, இராசாசியின் மனங் கவர்ந்த இந்தச் சட்டம் ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னும் உயிர் பெற்று நிறைவு பெற்றது. 2) மலபார் கோயில் நுழைவுச்சட்டம் (1938) அடுத்து இராசாசியின் காலத்தில் 'மலபார் கோயில் நுழைவுச் சட்டம்' கொண்டு வரப்பட்டது. 1936-ல் திருவாங்கூர் சமஸ்தான திவானாகயிருந்த சர். சி. பி. இராமசாமி அய்யர் அச் சமசுதானத்தில் உள்ள கோயில்களையெல்லாம் தீண்டப்படாதவர்களுக்குத் திறந்து விட்டார். இச்சம்பவம்1938-ல் சென்னை மாகாண முதல்வராயிருந்த இராசாசிக்கு ஓர் உந்துகோலாய் ஆகிவிட்டது. எனவே தான் முதல்வ ரானவுடன் தமிழ் நாட்டிலுள்ள கோயில்களையும் தீண்டப்படாத வர்களுக்குத் திறந்து விட வேண்டுமெனத் துடித்தார், 4-7-11938-ல் வடார்க்காடு மாவட்ட ஆதிதிராவிடர் மகாசன சபை திருப்பத்தூரில் ஆதி திராவிடர்களுக்குக் கோயில்களைத் திறந்து விடவேண்டுமெனத் தீர்மானம் போட்டது. இந்நிலையில்தான் எம். சி. இராசா 17 - 8 - 1938-ல் தனது கோயில் நுழைவுச் சட்ட முன்வரவைச் சட்டமன்றத்தில் சமர்ப்பித்தார். அன்று சட்டமன்றத்தில் மொத்தம் 30 தாழ்த்தப்பட்ட உறுப்பினர்கள் இருந்தனர். அதில் 28 பேர் எம். சி. இராசாவின் சட்டமுன் வரைவை எதிர்த்தார்கள். இதற்குக் காரணம் எம். சி. இராசா எப்பொழுதுமே டாக்டர் பி. ஆர். அம்பேத்காரை எதிர்த்தும் காந்தியையும், காங்கிரசை யுமே தூக்கிப்பிடித்திருந்ததுதான். காந்தியும், தமிழ்நாட்டு அரிசனங் கள் இராசாசியை ஒரு துணை மகாத்துமாவாகவே கொள்ளவேண்டும் என்றும் அவரைவிட்டால் அரிசனங்களுக்கு வேறு கதி மோட்சம் இல்லை என்றும் கூறி வந்தார். தனது முயற்சி தோல்வியடைந்ததைக் கண்ட எம். சி. இராசா பூனா ஒப்பந்தத்தை இந்துக்கள் குப்பையில் போட்டு விட்டார்கள் என்றும், பூனா ஒப்பந்தம் இந்துக்கள் அரிசனங்களுக்கு எழுதிக் கொடுத்த ஒரு பிரமாணப் பத்திரம் என்றும் கூறிய இராசாசியே தன்னை ஆதரிக்கவில்லையே என்றும், வருந்தினார். இராசாசியே எம். சி. இராசாவைத் தன் சட்ட முன் வரைவைத் திரும்பப் பெறும்படிச் செய்தார், - இதற்குப் பின்புதான் மலபார் கோயில் நுழைவுச் சட்ட முன் வரைவை இராசாசி கொண்டு வந்தார். இதன்படி, பொது மக்கள் சம்மதத்தின் பேரில் கோயில்கள் தீண்டப்படாதவர்களுக்குத் திறந்து விடப்பட்டன. இந்தச் சட்டத்தைக் காந்தியாரே எதிர்த்தார். அரிசனங் களைக் கோயிலுக்குள் விடுவதற்கு இது தக்க தருணமல்ல என்றார். இன்னமும் மக்கள் மனம் பக்குவப்படவில்லை என்றும் அரிசனங் களுக்குத் தனியே கோயில் கட்டிக்கொடுத்து விடலாம் என்றார். 30 12 - 1938-ல் ஈரோட்டில் நடந்த ஆதி திராவிட மகாசன சபை மாநாட் டிற்குத் தலைமை தாங்கிப் பேசிய எம். சி. இராசா மலபார் கோயில் நுழைவுச் சட்டம் ஒரு கண்துடைப்பு என்றார். இதனை மகாத்து மாவும் ஏற்கவில்லை அரிசனங்களும் விரும்பவில்லை - என்றார். மேலும் 1926 ஆம் ஆண்டு இந்துச் சமய அறநிலையச் சட்டத் தில் விதி 40 -ல் பரம்பரையாகத் தடைசெய்யப்பட்ட சாதியாரைக் கோயிலுக்குள் விட்டால் அறங்காவலரும் அர்ச்சகரும் தண்டிக்கப் படுவரென்ற விதியுள்ளது. இதனால் வரி கொடுப்போர் 50 பேரிடம் சம்மதம் பெற்றபின்புதான் அரிசனங்களைக் கோயிலுக்குள் விட வேண்டியிருந்தது. இந்த முட்டுக்கட்டையைப் போக்க இராசாசி தீவிரமாக யோசித்தார். 3)சென்னைக்கோயில் நுழைவுப்பிரகடனம் (1939) 1935 ஆம் ஆண்டு அரசியல் சட்ட விதி 38 - ல் சட்டசபை நடக்காமலிருக்கும் காலத்தில் முறைப்படிச் சட்டமியற்ற முடியாது, அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டுமானால் ஆளுநரைப் பேராணை விடுக்கச் செய்து, அப்பேராணையின்படி சட்டம் கொண்டு வரலாம். அப்பேராணையால் பிரகடனம் செய்யப்பட்ட சட்டத்தை ஆறு மாதத்திற்குள் முறையாகச் சட்ட மன்றத்தின் மூலம் சட்டமாக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது - இந்த விதியைப் பின்பற்றி இராசாசி அன்றைய ஆளுநர் எர்ஸ்கின் பிரபுவை தமிழ்நாட்டிலுள்ள கோயில் கள் யாவும், தங்குத் தடையின்றித் தீண்டப்படாதவருக்குத் திறந்து விடப்படுவதாகப் பிரகடனம் செய்யச் சொன்னார். அதன்படியே அவர் பிரகடனப்படுத்தினார். எனவே, இந்துச் சமய அறநிலையச் சட்ட விதி 40 காலாவதியாகிவிட்டது. அறங்காவலர்களும், அர்ச்சகர் களும் தண்டனை இன்றித் தப்பித்துக் கொண்டனர். இராசாசிஉடனடி யாகச் சென்னைக் கோயில் நுழைவுச் சட்டத்தைச் சட்ட சபையில் 1939-ல் நிறைவேற்றினார். நீதிக்கட்சியின் ஆட்சியின் போது படு தோல்வியடைந்த கோயில் நுழைவு மசோதா இராசாசியின் ஆட்சியில் வெற்றி பெற்றது. எனவே, ஆளுநரின் அவசரப் பிரகடனத்திற்குப் பதில் முறையான சட்டமே நிரந்தரமாக நிலை பெற்றுவிட்டது. இராசாசியின் இந்தத் தைரியமான செயலுக்குப் பின்னணியாக நின்றவர் மதுரை வைத்தியநாத அய்யர். அவருடைய கோயில் நுழைவு இயக்கம் பொது மக்கள் மனதைப் பக்குவப்படுத்தியது. இராசாசி சீர்திருத்தவாதிகளேயன்றிச் சனாதனிகளும் போற்றுமாறு உயர்வடைந்தார். சனாதனிகள் எதிர்த்து வழக்குத் தொடுத்துத் தோற்றுப்போயினர். * சென்னை மண்டிலத்தில் 140 பெரிய கோயில்களும், 18 சிறிய கோயில்களும் தீண்டப்படாதவர்களுக்குத் திறந்து விடப்பட்டன. தீண்டப்படாதவர்களாகக் கருதப்பட்ட நாடார்களும் கோயில்களுக் குள் அனுமதிக்கப்பட்டனர். காந்தியடிகளின் கட்டளையின் படி தமிழ்நாடு முழுவதும் கோயில் நுழைவு இயக்கம் மும்முரமாகத் தொடர்ந்தது. 4) கோயில் நுழைவு காப்புரிமைச் சட்டம் (1939) இந்து சமய அறநிலையச் சட்டத்திலுள்ள விதி 40 - இன் படி தீண்டப்படாதவர்களை மரபு வழக்கத்திற்கு மாறாகக் கோயிலுக்குள் அனுமதித்தால் கோயில் அறங்காவலரும் அர்ச்சகரும் தண்டனை பெறுவார்களென்ற விதியை ஆளுநரின் அவசரப் பிரகடனப் படிச் செல்லாததாக்கி அவர்களுக்குக் காப்புரிமையளித்து, கோயிலுக்குள் தொந்தரவதனன். டுத்துருந்து) செல்லும் தீண்டப்படாதவர்களும் சட்டப்படித் தண்டிக்க முடியாத படி காப்புரிமை அளித்து அதற்காக நிரந்தரச் சட்ட மொன்றை இராசாசி சட்டமன்றத்தில் நிறைவேற்றினார். அதுவே, கோயில் நுழைவுக் காப்புரிமைச் சட்டமாகும். இதுவரை, மகாத்மா காந்தியில் இருந்து அனைவரும் கூறிவந்த சாக்குப்போக்கு மக்கள் மனம் பக்குவப்படவில்லை என்ப தாகும். ஆனால், ஆளுநர் பிரகடனத்திற்குப் பிறகு கோயில்களில் தீண்டப்படாதவர்கள் தாராளமாக நுழைந்து வழிபட்டனர். அவர்களின் தீட்டுப்பட்டுக் கொந்தளிப்போ, பூகம்பமோ ஏற்படவில்லையே! எனவே, ஆண்டவனே இதனை ஏற்றுக் கொண்டான் என்று இராசாசி இந்தச் சட்டவரைவை அறிமுகப்படுத்தும்போது கூறினார். அரிசனங் கள் கோயிலுக்குள் சென்றால் வடக்கில் இருந்து வரும் புனித யாத்திரி கர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் கோயிலுக்குள் வர மாட்டார்கள் என்று உறுப்பினர்கள் கூறியபோது பக்தர்களைக் கண்டவுடன் இவன் அரிசன், இவன் அய்யர், கவுண்டர் என்று முகத்தைப் பார்த்தவுடன், அதுவும் வடக்கில் இருந்து வருபவன் எப்படிக் கூற முடியும்? என்று இராசாசி கேட்டார். கண்கூடாக ஒரு சோதனையும் செய்தார். தன் அமைச்சரவையிலுள்ள உள்ளாட்சித்துறை அமைச் சரும், ஆதி திராவிடருமான உதகை வி. ஐ. முனுசாமிப்பிள்ளையை மீனாட்சியம்மனை வழிபட மதுரைக்கு அனுப்பினார். அவரை அர்ச்சகர்கள் பூரணக் கும்பத்துடன் வரவேற்றுக் குளத்தில் முழ்க வைத்துச் சாமியை வழிபட வைத்தனர். அர்ச்சனையும் செய்தனர். அவரும் நலமோடு சென்னை திரும்பினார். பொது மக்கள் எதிர்ப்பு இல்லை! கோயில் இடிந்து போக வில்லை! எனவே மனப்பக்குவம் ஏற்பட்டு விட்டது என்று இராசாசி கூறினார். உறுப்பினர் பலரும் இராசாசியைப் புகழ்ந்தனர். 'ஆண்ட வன் கோயிலுக்குள் இல்லை. இருந்திருந்தால் இத்தனை ஆண்டு களாக எங்களை வெளியில் நிற்க விட்டிருப்பானா? கோயிலுக்குள் சென்று வழிபடுவதால் திடீரென எங்கள் மீது அன்புகொண்டு மோட்சத்திற்கு இட்டுச் செல்வாரென்ற நம்பிக்கையில் நான் இந்தச் சட்ட முன்வரைவை வரவேற்கவில்லை. ஆனால், மண்ணின் மைந்த ராகிய எங்களுக்கு இந்நாட்டில் எந்த மூலைக்கும் செல்லும் அடிப் படை உரிமையும், சிவில் உரிமையும் ஏற்படுகிறதே என்பதற்காகவே இதனை ஆதரிக்கிறேன் என்று ' டாக்டர் பி.ஆர். அம்பேத்காரின் வலதுகரமாகத் திகழ்ந்த பேராசிரியர் என். சிவராஜ் கூறினார். சட்டம் நிறைவேறியது எந்தப் பார்ப்பனர் சாதித் தடைகளை ஏற்படுத்தினரோ அவர்களே அதற்கு விடிவும் கண்டனர். நீதிக்கட்சி யால் சாதிக்க முடியாததை, சூத்திரர்களால் எதிர்க்கப்பட்ட கோயில் நுழைவைப் பார்ப்பனர் இராசாசி நிறைவேற்றிக் காட்டினார் என்று கே. வி. ரெட்டி பாராட்டினார். இச்சட்டத்தின் படி எந்த ஒரு பழக்க வழக்கத்தையம், மரபு வழிகளையும் பின்பற்றி எவரும் தடுக்க உரிமை இல்லை . அரசாங்க அதிகாரிகள், அர்ச்சகர்கள், அறங்காவலர் கள் அல்லது வேறு எவரும் அவர்களை எக்காரணம் காட்டியும் தடுக்கக்கூடாது அவ்வாறு தடுப்பவர் மீது இச்சட்டப்படித் தக்க நடவடிக்கை எடுக்கப்படுமென இச்சட்டம் உறுதி அளித்தது, குற்றாலம் நீர் வீழ்ச்சியிலும் தீண்டப்படாதவர் குளிக்கலாம் சுதந்திரப் போராட்ட காலத்தில் தீவிரவாதிகள் வெள்ளையரைக் கொன்றனர். அதிலொரு சம்பவம்தான் திருநெல்வேலி ஆட்சித் தலைவர் ஆசுதுரையை வாஞ்சிநாதன் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தனக்குத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டான். இதிலீடு பட்ட 14 பேருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இக் குற்றவாளிகள் யாவரும் இளைஞர்கள். எனவே, கருணை மனு போட்டனர். அக்காலத்தில் இலண்டன் பிரிவுக் கவுன்சில்தான் இந்தியாவின் உச்ச நீதி மன்றம், கருணை மனுவை உசாவிய பிரிவுக் கவுன்சில் நீதிபதி ஆசுதுரையைக் கொல்ல உடனடிக் காரணம் அல்லது சந்தர்ப்பம் சூழ் நிலை எப்படி ஏற்பட்டதென்றார். குற்றவாளி கள் குற்றால நீர் வீழ்ச்சி எங்களுடைய நாட்டிலுள்ளது. அதில் வெள்ளைக்காரர்கள் குளிக்கும் போது, நாங்கள் குளிக்கக்கூடாது என்று இந்த ஆசுதுரை உத்திரவு போட்டிருந்தார். இதனால் கோபம் கொண்டு அவரைக் கொன்றோம் என்றனர். பரிவோடு ஏற்று அவர் களுக்குத் தூக்குத் தண்டனையில் இருந்து விடுதலை வழங்கப்பட்ட தோடு இனித் தாராளமாகக் குற்றால அருவியில் குளியுங்கள் என்று - வாழ்த்தினார் நீதிபதி, உடனே இந்தத் தேச விடுதலை வீரர்கள் அதில் பரம்பரையாகப் பள்ளர், பறையர் முதலிய ஒதுக்கப்பட்ட சாதிகள் குளிப்பதில்லை . எனவே, அவர்கள் தவிர பிறர் குளிக்கலாமென உத்தரவு இடுங்கள் என்றனர். நீதிபதி அப்படியே ஏற்றார். நாட்டு விடுதலைக்கு உயிர்விட்ட இவர்கள் தீண்டாமையைக் காக்கவும் உயிர் விடத் தயாரானார்கள். இந்த உத்தரவை இராசாசி 1938-ல் நீக்கிப் பள்ளுப்பறையரும் குற்றாலத்தில் குளிக்கலாம் என்ற மறு உத்தரவு பிறப்பித்தார், 17 விடுதலைக்குப்பின் தமிழகம் அ. (பேராயக்கட்சி ஆட்சி 1947 முதல் 1967 வரை) முதலமைச்சர் 1. ஓ.பி. இராமசாமி ரெட்டியார் (1947-49) பிற அமைச்சர்கள் அ) அரிசன நலத்துறை தனியே ஏற்படுத்துதல் ஆ) கோயில் நுழைவுச் சட்டம் (1947) இ) கல்வி மேம்பாடு முதலமைச்சர் 2. பி. எசு. குமாரசாமி ராசா (1949-52) பிற அமைச்சர்கள் அ) வகுப்புவாரி ஆணைத்தள்ளுபடியும் - உயிர்ப்பித்தலும் (1951) ஆ) முதல் ஐந்தாண்டுத் திட்டம் (1951-56) முதலமைச்சர் 3, சி, இராசகோபாலாச் சாரியார் (1952-54) பிற அமைச்சர்கள் | அ) குலக் கல்வித் திட்டம் ஆ) எதிர்ப்புக் கிளர்ச்சிகள் முதலமைச்சர் 4. கு. காமராசர் (1955 - 63) பிற அமைச்சர்கள் அ) கல்விக் கூடங்களின் வளர்ச்சி - ஆ) பொது நலமுன்னேற்றம் முதலமைச்சர் 5. எம். பக்தவச்சலம் (1953-7) பிற அமைச்சர்கள் அ) இந்தி எதிர்ப்புப் போராட்டம் (1964) - ஆ) 1967 - பொதுத் தேர்தலில் காங்கிரசு தோல்வி 6. காங்கிரசு கட்சி ஆட்சியின் சாதனைகள் 1. மகளிர், குழந்தைகள், நல மேம்பாடுகள் 2. கல்வி வளர்ச்சி 3. பொருளாதார வளர்ச்சி 4. அமைச்சரவைப் பட்டியல் விடுதலைக்குப்பின் தமிழகம்1 இன்றைய தமிழ்நாடு - மாவட்டங்கள் கட்சி படம் - 5 17. விடுதலைக்குப்பின் தமிழகம் (பேராயக்கட்சி ஆட்சி 1947 முதல் 1967 வரை) வெள்ளையரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்திய நாடு 1947 -ல் விடுதலையடைந்தது. விடுதலையடைந்த உடனே 'ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று' ஆடிப்பாடி மகிழ்ந்தாலும் இந்தியாவை எதிர்நோக்கியிருந்த ஏராளமான சிக்கல்களை இந்திய மக்கள் சந்திக்க வேண்டியிருந்தது. இதைப் போலவே இந்தியாவில் ஒரு பகுதியாகத் திகழும் தமிழகத்திலும் பல மன்னார்குடா ஈ இரசாயனப்பொருட்கள் மன்னரியாகுமரி இந்தியப் பெருங்கடம் படம் - 6 சிக்கல்களேற்பட்டன. அவற்றிலொன்றுதான் மொழி வழி மாநில அமைப்பால் எழுந்த சிக்கல்களும், போராட்டங்களுமாகும், மொழிவழி மாநிலக் கோட்பாடு : மொழி வழி மாநிலம்" என்றால் என்ன? ஒரே மொழியைப் பேசும் மக்களெல்லாம் ஒரே மாநிலத்தின் கீழிருப்பதுதான் மொழி வழி மாநிலமாகும். ஒரே மொழியைப் பேசும் மக்கள் பல மாநிலங் களின் கீழுமிருக்கலாம். ஆனால், பிற மாநில மக்களோடு இருக்கமூடி யாது என்பதுதான் அரசியல் அறிவியலார் கூற்று. அம்மக்களோடு ஒப்பிட்டு அவர்களைப் பெருவாரியான அல்லது சிறு வாரியான தமிழ்நாடு - நீர்ப்பாசனம் மற்றும் மின்சக்தி டி நீர்த்தேக்கம் ஆந்திரப் பிரதேசம் – இந்தியப் பெருங்கடல் படம் - 7 மக்களெனப் பிரித்தறியக்கூடும் அவ்வாறு பாகுபட்டு நிற்கும்போது. மொழி , மக்கள்தொகை, கலை, கலாச்சாரம் பண்பாடு நாகரிகம் முதலிய பல்வேறு மாறுபட்ட சிக்கல்களேற்படும். இதனால் அம்மாநிலத்தில் மக்களொற்றுமையும், ஒருமைப்பாடும் ஏற்படாது. இதனடிப்படை யில்தான் 1905ஆம் ஆண்டிலேயே அரசப் படிநிகராளியான கர்சன் பிரபு மாநிலங்களின் பிரிவினையை ஏற்படுத்தினார். சென்னை மண்டிலத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலை யாளம் முதலிய மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களிருந்தனர். நாடு விடுதலையடைந்த வுடன் இவர்களும் மொழிவழியாகப் பிரிய முற்பட்டனர். 'விசால ஆந்திரம்' பிரிய வேண்டுமெனக் கோரி ஆந்திரர் போராட்டம் செய்தனர். இதனால் 1-10-1953-ல் ஆந்திரம் தனி மாநிலமாயிற்று. தமிழகத்தில் சில மாவட்டங்கள் ஆந்திரத்தோடும், கேரளத் தோடும் இருப்பதைத் தமிழகத்தோடு சேர்க்க வேண்டுமென 'தமிழரசுக் கழகம்' வடக்கிலும், 'தாய்த் தமிழகக் கழகம்' தெற்கிலும் போராடியும், தெற்கிலும் சில வட்டங்களைத் தமிழகத்துடன் சேர்த்தன. இதற்குப் பிறகு, மொழி வழி மாநில எல்லைகள் தீர்மானிக் - கப்பட்டன. தமிழகம், சென்னை மாநிலம்' என அழைக்கப்பட்டது. 1-11-1956-ல் தமிழ்நாட்டைச் சென்னை மாநிலமென அழைக்கும் ஆணையும் பிறந்தது. இதனால், தமிழ் மொழி வழங்கும் மாநிலமான சென்னை மாநிலத்தில் மொழிவழி உணர்வுகள் வளர்ந்தன. ஆயினும், சென்னை மாநிலத்தைத் 'தமிழ்நாடு" என அழைத்து, அதற்கான ஆணை பிறப்பித்தவர் அறிஞர் அண்ணாதான். 1. ஓ. பி. இராமசாமி ரெட்டியார் - (23-3-1947 முதல் 6-4-1949 வரை ) இந்திய விடுதலைக்கு முன்னரே 1946-ல் நடந்த தேர்தலில் காங்கிரசுக் கட்சி வெற்றி பெற்று அமைச்சரவை அமைத்தது. இதன் முதல் அமைச்சராக ஆந்திரகேசரி டி. பிரகாசம் பதவி ஏற்றார். இவருடைய அமைச்சரவை 1-5-1946 முதல் 23-3-1947 வரை பதவி வகித்தது. அன்றைய சென்னை மாநிலம் ஆந்திரமும், மலபாரும் உள்ளிட்டத் தமிழகமாகயிருந்தது. இரண்டாம் உலகப்போரின் பின் விளைவுகளும், பொதுஉடைமைக்கட்சியின் பல்வேறு புரட்சிகளும், காங்கிரசுக் கட்சிக்குள்ளேயிருந்த உட்பூசல்களும் பிரகாசம் அமைச்சரவைக்குச் சவாலாக நின்றன. இவற்றைச் சமாளிக்க முடியாமல் பிரகாசம் தனது பதவியைத் துறந்தார். அரும்பணிகள்; இதனையடுத்து, ஓமந்தூர் பி. இராமசாமி ரெட்டியார் முதல்வரா னார். அவருடைய அமைச்சரவை 23-3-1947 முதல் 8-4-1949 வரை பதவியிலிருந்தது. பொது உடமைக் கட்சிக்காரர்களின் கிளர்ச்சிகளைச் சமாளிக்க 1947-ல் 'பொது ஒழுங்கு பேணும் சட்டம் இயற்றப் பட்டது. பஞ்சத்தைச் சமாளிக்க ஓமந்தூரார் நாடு முழுவதும் 11,701 நியாயவிலைக் கடைகளைத் திறந்தார். பத்தாயிரம் பள்ளிகளில் காய்கறித் தோட்டங்கள் போட வேண்டுமென விதைகளை விலை யின்றி இலவசமாக வழங்கினார். ஆடுதுறை, திண்டிவனம் முதலிய நெல் # பருத்தி தமிழ்நாடு - உணவு மற்றும் || வணிகப் பயிர்கள் M மக்காச் சோளம் காப்பி கரும்பு * தேயிலை பட * வாழை * புகையினால் தேங்காய் ஆந்திரப்பிரதேசம் கர்நாடகம் வங்காள விரிகுடா படம் - நீ இடங்களிலிருந்த வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்களை விரிவு படுத்தினார். ஒசூர் கால்நடைப் பண்ணையில் செம்மறி ஆடுகளை வளர்க்கும் திட்டத்தைச் செயல்படுத்தினார். வெள்ளாடு வளர்க்கும் வழக்கத்தை ஒழித்து வேளாண்மைக்கிருந்த கோட்டை நீக்கினார். தென்தமிழ் மாவட்டங்களைப் பஞ்சப்பகுதியாக அறிவித்து, பஞ்சத்தைச் சமாளிக்கத் தனி அலுவலரை அமர்த்தினார். அங்கெல் லாம் நெல் கொள்முதல் செய்வதை நிறுத்தினார், ஒரிசாவில் இருந்து அரிசி வாங்கி நியாயவிலைக் கடைகள் மூலம் ஏழைகளுக்கு அளித் தார். தொழிற்சாலை அமைக்க நஞ்சை நிலத்தைப் பயன் படுத்தக்கூடா தென ஓர் ஆணை பிறப்பித்தார். பொதுப்பணித் துறையை முடுக்கி விட்டு ஏரி, குளங்களைச் செப்பனிட்டு நீர்ப்பாசன ஏந்துகளை விரிவு படுத்தினார். இதற்காக 19 கோடி ரூபாய் செலவுத் திட்டம் ஒன்றையும் தயாரித்து நடுவண் ஆட்சிக்கு அனுப்பினார். 1852-ல் சர். ஆர்தர், காட்டன் என்ற பொறியாளர் தென்னாட்டு ஏரிகளில் நீரைத் தேக்கினால் பஞ்சமே வராது என்றுரைத்த வாசகங்களை ஓமந்தூரார் நினைவு கூர்ந்தார். ஆற்றுப் பாசனம், ஏரிப் பாசனம் ஆகியவை பழைய அரசர்கள் கட்டிவைத்தவை. அவற்றை ஆங்கில அரசுப் புதுப்பிக்கவில்லை . கிழக்கிந்தியக் கம்பனியார் ஆட்சிக் காலத்தில் 'சாப்பர்ஸ் அண்டு மைனர்ஸ்' என்ற படைப் பிரிவைச் சேர்ந்த படைவீரர்கள் தாம் அன்றைய ஏரி, குளம், ஆற்றுப் பாசனங்களைச் சரிசெய்தனர், நெடுஞ்சாலைகளைப் போட்டனர், காடுமலைகளைக் கடக்கச் சாலைகளை அமைத்தனர். அவர்களைப் பயன்படுத்தி, அவர்களிடம் தற்பொழுதுள்ள பெரிய தூர்வாரி, மண் வாரி இயந்திரங்களைப் பயன்படுத்தி, சுமார் இரண்டு கோடி ரூபாய் செலவீட்டில் தென்னாடு பொன்னாடு ஆகும் என்றார். கீழ்பவானி அணைக்கட்டு, வீடுர் அணைக்கட்டு, கர்னூல் கடப்பா கால்வாய், மலம்புழாத் திட்டம், பெரியாறு நீர் மின்சாரத் திட்டம், துங்கபத்திராத் திட்டம் முதலியன பல்வேறு காலங்களில் நிறைவேற்றப்பட்டாலும் ஓமந்தூரார்தான் இவற்றிற்கு ஒப்புதல் அளித்துத் தொடங்கச் செய்தார். உடனடிப் பசியைப் போக்க மாநிலம் முழுவதும் கஞ்சித் தொட்டிகளைத் திறந்தார். 'ஆசிய இந்தியக் காங்கிரசு அமைப்பு' 1947-ல் காந்தியப் பொருளாதார நிபுணர் ஜே.சி.குமரப்பா தலைமையில் சில உச்ச வரம்புச் சட்டத்தை நிறைவேற்றுவதற்காக ஒரு குழுவை நியமித்தது. அதில் ஓமந்தூராரும் ஓர் உறுப்பினர். உச்சவரம்பை ஒப்புக்கொள் ளாத இவர் உழவரின் திறமைக்கும், உற்பத்திக்கும் உச்சவரம்பு தடையாகும் என்றார். 'பயிர் பாதுகாப்புத் திட்டம்' கொண்டுவர வேண்டும் என்றார். ஏரி, குளம், நீர் பற்றியும், உழவுத்தொழில், வாணிபம், அரசு அலுவலகம், வேலை ஆகிய நான்கும் சமநிலை அமையும் வரை விவசாயத்திற்கு நிலையான மேம்பாடு ஏற்படாது என்பது பற்றியும் அவர் கூறிய கருத்துகள் நூல்களாக வெளிவந்தன. 'விவசாயச் சீர்திருத்தமும், தொழில் சமநிலையும்' என்பது அவருடைய சிறந்த நூலாகும். இவருக்கு முன் முதல்வராயிருந்த டி. பிரகாசம் காந்தியப் பொருளாதாரக் கோட்பாட்டைக் கடைப்பிடித்து தமிழ்நாட்டிலிருந்த நூல் ஆலைகளையே மூடினார். 1 1949-ல் தொழிலாளர் நலத் துறையால் 1200 பள்ளிகள் நடத்தப்பட்டன. இவற்றில் படிக்கும் மாணவருக்கு மதிய உணவு வழங்கப்பட்டதால் 3.05 இலட்சம் ரூபாய் செலவானது. அரிசன விந்தனைக்குப்பின் தமிழகம் தமிழ்நாடு - இருப்புப் பாதைகள் பெங்களுர் காஞ்சிபுரம் திருப்பத்தூர் **நெய் - கோயம்புத்தூர் 1 பாக்யது 4 திருச்சிராப்பள்ளி 'துரி - - நாம தாங்கப்பட்டினம் திண்டுக்கல் பாக் நீரிணைப்பு வங்காள விரிகுடா 54 நாட்கவாரம் காத்துக்குடி ஒருநல்ல திருவணந்தபுரம்" மண்ணாதுடா. கன்னியாகுமரி இந்தியப் பெருங்கடல் படம் - 3 நலத்துறை அவற்றையெடுத்துக்கொண்டபின் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகமானது. மொத்தம் 242 மாணவர் விடுதிகள் ஏற் படுத்தப்பட்டன. இதற்காக 10 இலட்சம் தபாய் செலவிடப்பட்டது. மாணவர் விடுதிகளைக் கண்காணிக்க ஒரு குழுவும் நியமிக்கப்பட்டது. அரிசன நலத் துறைக்கென 1949-50 ஆம் ஆண்டில் செலவிட மொத்தம் 60 இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஓமந்தூரார் காலத்தில் தான் இந்தியாவிலேயே முதன்முதலாக ஒரு அரிசன் கோயில் அறங் காவலராக நியமனம் செய்யப்பட்டார், திண்டிவனம் அரிசன சட்ட மன்ற உறுப்பினரான குலசேகரதாசு திருப்பதி தேவதானத்தின் அறங் காவலராக நியமனம் செய்யப்பட்டதோடு, ஓமந்தூரார் தலைமை யிலேயே திருப்பதி கோயிலுக்குள் சென்று வழிபாடும் செய்தார். இதைப் போலவே, ஓமந்தூரார் பல அரிசனங்களை அழைத்துக் கொண்டு போய் இராமேசுவரம் கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்யும்படி செய்தார். இதற்குப் பின்தான் அரிசனங்களைக் கோயில் அறங்காவலர்களாக நியமனம் செய்யும் வழக்கம் ஏற்பட்டது. ஓமந்தூரார், பிரகாசம் முடிய ஆலைகளை மீண்டும் திறந்தார். புதிய ஆலைகளையும் திறந்தார். கோயில்பட்டி, சாத்தூர் வட்டங் களில் ஏற்பட்ட பஞ்சத்தின் காரணமாக அரசச் சட்டத்தையும் மீறி ஒரு ஏக்கருக்குப் பத்து ரூபாய்க்கு மேல் ரொக்கமாக நிவாரணம் வழங்கினார். அ) அரிசன நலத் துறை தனியே ஏற்படுத்துதல்: 1919 ஆம் ஆண்டு தொழிலாளர், அரிசனங்கள் ஆகியோரின் நலன்களைக் கவனிக்கவும், அவர்களுக்குக் கல்வி, குடியிருப்பு முதலியவற்றில் தனிப்பட்ட முறையில் உதவிகள் நல்கவும் இத்துறை "தொழிலாளர் துறை' என்ற பெயரில் ஏற்பட்டது. தொழிலாளர் சிக்கல் கள் நாளுக்கு நாள் பெருகத் தொடங்கின. எனவே, அவர்களுடன் அரிசன முன்னேற்றத்தையும் கவனிக்க இத்துறையால் முடியவில்லை யென்பதை அறிந்த ஓமந்தூரார் 1 - 4 - 1948 - ல் அத்துறையை இரண்டாகப் பிரித்தார். ஒன்று தொழிலாளர் துறை' என்றும், மற்றொன்று அரிசன தலத்துறை' என்றும் அழைக்கப்பட்டன. அரிசன நலத்துறை தனியே செயல்பட்டால் அதற்காகத் தனியே வரும் ஐந்தாண்டுத் திட்டங்களில் பண ஒதுக்கீடு செய்து அரிசனங்களை விரைந்து முன்னேற்றலாமென்பது ஓமந்தூராரின் எண்ணமாகும். ஆ) கோயில் நுழைவுச் சட்டம் (1947) ஏற்கனவே, இராசாசியால் கொண்டு வரப்பட்ட 'மலபார் கோயில் நுழைவுச் சட்டம் (1938)', 'சென்னை கோயில் நுழைவுச் சட்டம் (1939]' ஆகியவற்றால் சென்னை மண்டலத்திலுள்ள 140 பெரிய கோயில்களும், 18 சிறிய கோயில்களும் அரிசனங்களுக்கும் மற்றும் ஒடுக்கப்பட்டச் சாதிகளுக்கும் திறந்து விடப்பட்டன. ஆயினும், பல கோயில்களுக்குள் அரிசனங்கள் நுழைய முடியாமல் சாதி இந்துக்கள் தடுத்து வந்தனர். இதனால்தான் கோயில் நுழைவுச் சட்டத்தை அதிகாரப் பூர்வமாக 6-6-1947 அன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றினார். இச்சட்டத்தின்படி அரிசனங்கள், பூசாரிகள், அறங்காவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் எத்தகையத் தடைகளுக்கும் ஆளாகாமல் கோயில்களில் நுழைந்து வழிபாடு செய்யலாம். அவ்வாறு, கோயில்களுக்குள் வழிபாடு செய்யச் செல்லும்போது அவர்கள் புனிதக் குளங்களிலும், ஆறுகளிலும் விடுதலைக்குப்பின் தமிழகம்1 323 நீராடவும், புனிதப் பாதைகளில் நடந்து செல்லவும் எவரும் எத்தகைய தடையும் விதிக்கக் கூடாது. அவர்களுக்கும் மற்ற இந்துக்களைப் போலவே பூசாரிகள் பூசைகள் செய்துதர வேண்டும். இந்துக்களின் மரபுவழிப் பழக்க வழக்கங்கள், சாத்திர சம்பிரதாயங் களின் அடிப்படையில் அரிசனங்களின் கோயில் வழிபாட்டு உரிமைகளுக்குத் தடையாக எவரும் இருக்கக் கூடாது. சுருங்கக்கூறின், அரிசனங்கள் கோயில் வழிபாடு செய்யச் சட்டப்படி அவர்களுக்கு உரிமையுண்டு என்பதை நிலைநாட்டவே இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இதனால், 1926 ஆம் ஆண்டு இந்துச் சமய அறங்காவல் சட்டம், பிரிவு 40-ன்படி தீண்டப்படாதார் கோயிலுக்குள் நுழைந்தால் பூசாரிகள், அறங்காவலர்கள், கோயில் அதிகாரிகள் ஆகியோர் தண்டிக்கப்படுவர் என்ற விதி நீக்கப்பட்டது. இச்சட்டம் நிறைவேறியதும், இதன் முன்வரைவைச் சட்ட மன்றத்தில் அறிமுகப்படுத்திய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் டி. எசு. எசு. இராசனும் அரிசனத் தலைவர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். இ கல்வி மேம்பாடு இரண்டாம் உலகப் போரினால் ஏற்பட்டப் படிப்பினையால் ஏட்டுப் படிப்போடு அறிவியல் செயற்பாடுகளும் விரிவடைய வேண்டும் என்ற கோட்பாடு ஏற்பட்டது. தொழில்நுட்ப வல்லுநர்கள் படைத் துறைகளுக்கும், பொதுத் துறைகளுக்கும் மிகவும் தேவைப் பட்டனர். இதன் காரணமாகத் தொழிற்கல்வி முறை பள்ளிகளில் அறிமுகப்படுத்தப் பட்டன. இவை அரசுப் பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும் தொடங்கப்பட்டன. 1946-ல் இருந்து 'ஆதாரக் கல்வி' தொடங்கப்பட்டது. தமிழ் பயிற்று மொழியானது. 1947-ல் 'மாநிலக் கல்வி ஆலோசனைக் குழு ஏற்படுத்தப்பட்டது. இக்குழு கல்வித் துறையின் சீர் அமைப்புகள், விரிவாக்கங்கள் முதலியவற்றை ஆய்ந்து வளர்ச்சிக்கான வழி. வகைகளைக் கூறியது. நாடு விடுதலை பெற்றவுடன் முன்னேற்றத் திற்குத் தேவைப்படும் சமூகப் பொருளாதாரத் தொழில் வளர்ச்சி களுக்கு முன்னுரிமை தரப்பட்டது. இவற்றினடிப்படையில் தான் கல்வியும் அமைய வேண்டுமெனும் 'கல்விக் கோட்பாடு வகுக்கப் பட்ட து. 1946-ல் தொடங்கப்பட்ட 'ஆதாரக் கல்வி' பள்ளிகளும், ஆசிரியப் பயிற்சிப் பள்ளிகளும் ஆண்டுதோறும் வளர்ந்து கொண்டே சென்றன. 1949-ல் 171 ஆக இருந்த ஆதாரப்பள்ளிகள் 1950-ல் 40 ஆகவும், 1952-ல் 520 ஆகவும் உயர்ந்தன. இவற்றில் 39,344 மாணவர்களும், 23, 215 மாணவிகளும் பயின்றனர். ஆதார ஆசிரியப் பயிற்சிப் பள்ளிகளும் 1949-ல் 4 மட்டுமே இருந்தன. இப் பள்ளிகள் 1952-ல் 56 ஆக உயர்ந்தன. 1953-ல் 1200 மாணவர்கள் ஆசிரியப்பயிற்சி பெற்றனர். 1935-ல் கொண்டு வரப்பட்ட கட்டாயக் கல்வித் திட்டம் 1938-ல் சென்னை மண்டிலத்திலிருந்த 84 நகராட்சிகளில் 28 -ல் அறிமுகப்படுத்தப்பட்டது. 1947-க்குள் சுமார் 1331 இடங்களில் கட்டாயக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வர ரூபாய் 70 இலட்சம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அத்திட்டம் தற்காலிகமாகத் தள்ளி வைக் கப்பட்டது. ஒரே விதமாக இலவசத் தொடக்கக் கல்வியைத் தர வேண்டும் என்ற அரசின் நோக்கம் 1950-ல்தான் நிறைவேறியது. அரசியல் சட்டம் 45-வது விதி 'தாட்டிலுள்ள 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குக் கட்டாய இலவசக் கல்வி தரப்பட வேண்டும்' எனக் கூறியது. 1946-ல் சென்னை தொடக்கக் கல்விச் சட்டம்' மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. இதனால் தொடக்கக் கல்விக்கு அரசு தொடர்ந்து நிதியுதவி அளித்தது. 1947-க்கும் 1952 -க்கும் இடைப் பட்ட காலத்தில் 500-க்கும் மேற்பட்ட ஊர்களில் தொடக்கப் பள்ளிகளைத் தொடங்கும் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டது. இதனால்தான் இவர் காலத்திற்குப்பின் 1953-ல் 38,000 தொடக்கப் பள்ளிகளேற் பட்டான். இதைப் போலவே 24 நகரங்களிலும், 224 நகர்ப்புறங் களிலும், 783 - ஊனர்ப் புறங்களிலும் கட்டாயக் கல்வி செயற்படுத்தப் பட்டது. 1940 - ல் உயர்நிலைப் பள்ளியின் இறுதியாண்டுப் படிப்பைப் புதுமுகப் படிப்பு என்றும், தொழிற்சார்ந்த படிப்பு என்றும் விரிக்கத் திட்டமிடப்பட்டது. 1946-ல் பள்ளிக் கழகம் என்பது உயர்நிலைப் பள்ளிக் கழகமாயிற்று. அதே ஆண்டில்தான் தமிழ் உயர்நிலைப் பள்ளி வரைப் பயிற்றுமொழியாயிற்று. நாட்டின் விடுதலைக்குப்பின் தொழிற்கல்வி, விருப்பப்பாடம், குடிமைப் பயிற்சி முதலியன ஏற்பட்டன. 1948 - 49 -ல் கைத்தறியால் துணி நெய்தல், மரவேலை செய்தல், தோட்ட வேலை, பயிர் செய்தல் ஆகியவை உயர்நிலைப் பள்ளியில் பாடமாகப் புகுத்தப்பட்டன. தொடக்கக் கல்வி, உயர்நிலைப் பள்ளிப் படிப்பு ஓரளவு விரிவடைந்தாலும், கல்லூரிப் படிப்பு, விரிவடையவில்லை. இடை யில் ஏற்பட்ட இரண்டாம் உலகப் போரே இதற்குக் காரணமாகும். நாடு விடுதலையடைந்த பிறகு, ஒரு மாவட்டத்திற்கு ஒரு கல்லூரி யெனத் திட்டமிடப்பட்டு 82 கல்லூரிகள் தொடங்கப்பட்டன, 1940 ஆம் ஆண்டு சட்டப்படி ""கல்வி" மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட துறையாயிற்று. 1953 - ல் சென்னை மாநிலத்தில் இருந்து ஆந்திரா வும், மலபாரும் பிரிக்கப்பட்டபின் சென்னைப் பல்கலைக் கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு மட்டுமே தமிழகத்திலிருந்தன. ஓமந்தூரார் முதலமைச்சராக இருந்த போதுதான் நாடு 15-8-1947-ல் விடுதலையடைந்தது. 1948-ல் புதுக்கோட்டை யில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டுத் தமிழ்நாடு அரசுடன் இணைக்கப் பட்டது திருச்சி மாவட்டத்தின் ஓரங்கமாயிற்று. இவருடைய ஆட்சிக் காலத்தில்தான் (30-1-1948) காந்தியடிகள் மரணமடைந்தார். 6-4-1949-ல் ஓமந்தூரார் அமைச்சரவைப் பதவி துறந்தது. 3. பி. எசு - குமாரசாமிராசா (7-4-1949, 4-1952) ஓ. பி. இராமசாமி ரெட்டியார் பதவி நீங்கியவுடன் பி. எசு. குமார் சாமி ராசா முதல்வரானார். இவருடைய அமைச்சரவையில் பதினேழு உறுப்பினர் இருந்தனர். ஆட்சிக்கு வந்ததும் பொது உடமையாளர் இயக்கங்களை ஒழிக்க முயன்ற குமாரசாமி ராசா நீதிமன்றம் குறுக் கிட்டதால் அதில் வெற்றி பெறவில்லை. பஞ்சங்களும், பட்டினிச்சாவு களும் இவருடைய ஆட்சியிலும் தொடர்ந்தன. உணவுப்பொருள் பகிர்ந்தளிக்கும் கடைகள் அதிகரிக்கப்பட்டன. திராவிட இயக்கங்கள் ஆட்சியாளரின் திறமை இன்மையைக் கண்டித்தன. தமிழகத்தின் வடக்கிலும், தெற்கிலும் எல்லைச் சிக்கல்களும் போராட்டங்களும் வலுத்தன. காங்கிரசுக்குள்ளேயே டி. பிரகாசம் பலத்த எதிர்ப்புகளை எழுப்பினார். வகுப்புவாரிப் படிநிகரானிய அரசு ஆணைத் தள்ளுபடி (1951) இந்நிலையிலும், பி.எசு-குமாராசமிராசா ஒரு மாபெரும் சவாலைச் சந்தித்தார். 1920 - ல் நீதிக்கட்சியால் கொண்டு வரப்பட்ட வகுப்பு வாரிப் படிநிகராளிய ஆணை 1950-ல் இந்திய அரசியல் சட்டத்தால் உறுதியாக்கப்பட்ட அடிப்படை உரிமைகளைச் சுட்டிக்காட்டி 1951 -ல் தள்ளப்பட்டது. முப்பது ஆண்டுகளாகத் தாழ்த்தப்பட்ட, பிற்படுத் தப்பட்ட மலைவாழ் மக்கள் அனுபவித்த இட ஒதுக்கீடு 'அற்றுப் போயிற்று. இதனை மீண்டும் புதுப்பித்து உயிர்கொடுக்கக் குமாரசாமி ராசா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து வெற்றி பெற்றார். இஃது அவர் ஆட்சியில் நிகழ்ந்த மிகப்பெரும் சாதனை ஆகும். வழக்கு விவரம்: 1950-ல் 37 வயதான ஒரு பார்ப்பன விதவை வகுப்புவாரிப் படிநிகராளிய அரசு ஆணை செல்லாதெனச் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவர் பெயர் திருவாட்டி செண்பகம் துரைராசன் என்பதாகும். அவர் 15 ஆண்டுகளுக்கு முன் சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி. பி. எசு. பட்டப்படிப்பில் சேர மனு செய்தார். தான் போதிய மதிப்பெண் பெற்றிருந்தும் தனக்குக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்றும், தன்னை விடக் குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருந்த பிற்பட்ட தாழ்த்தப்பட்ட மலைவாழ் மாணவர்களுக்கு அவர்களின் சாதிகளை அடிப்படை யாகக் கொண்டு இடம் கிடைத்தது என்றும், தான் ஒரு முற்பட்ட (பார்ப்பன) சாதியைச் சேர்ந்தவரென்பதால் தனக்கு இடம் கிடைக்க வில்லை என்றும், இஃது இந்திய அரசியல் சட்டத்தில் வழங்கப் பட்டுள்ள அடிப்படை உரிமையை மீறுவதாகும் என்றும் வழக்குத் தொடுத்தார். சாதி, சமயம், பிறப்பிடம் கருதி எவருக்கும் எந்த உரிமை யும் மறுக்கப்படாது என்று கூறும் அடிப்படை உரிமையை இது மீறுவதாகும் என்றும் கூறி, அத்தகைய அநீதியை நீக்கி, சம உரிமை வழங்க வேண்டும் என்றும் கேட்டார். இவரைப் போலவே சி. ஆர். சீனிவாசன் என்ற பார்ப்பன மாணவனும் தனது சாதியின் அடிப்படையில் தனக்குப் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்று உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இவ்விருவரின் வழக்குகள் நியாயமானவையே என்று. பார்ப்பனர் இதழ்கள் கூறின. தமிழகத்திலிருந்த மிகச் சிறந்த, மூத்த பார்ப்பன வழக்கறிஞர்கள் இந்த வழக்குகளில் திருவாட்டி செண் பகம் துரைராசா, சீனிவாசன் ஆகியோருக்காக வழக்காடத்தாமே முன் வந்தனர். சேலம் பார்ப்பனர் சங்கம்' பார்ப்பனர் அனைவருடைய ஆதரவையும் திரட்டி வழக்காட முன்வந்தது. இவ்விரு வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்றத் தலை மை நீதிபதி இராசமன்னார், நீதிபதி விசுவநாத சாத்திரி, நீதிபதி சோம் சுந்தரம் ஆகியோர் கொண்ட நீதிமன்றக் குழு விசாரித்தது. திருவாட்டி செண்பகம் துரைராசுக்காக வழக்காட இந்திய அரசியல் சட்டமன்றத் தின் உறுப்பினரும், முன்னாள் இந்தியத் தலைமை நீதிபதியுமான அல்லாடி கிருட்டிணசாமி அய்யரும், சீனிவாசனுக்காக வழக்காட முன்னாள் நீதிபதி வி. வி. சீனிவாச அய்யங்காரும் நீதிபதிகள் முன் தோன்றினர். இவ்வழக்கறிஞர்கள் தமிழ்நாடு அரசின் வகுப்புவாரிப் படிநிகராளிய அரசாணை, 1950 ஆம் ஆண்டில் ஏற்பட்ட இந்திய அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகளைப் பரிக்கிறது என்றும், விடுதலை பெற்ற நாட்டில் சாதி அடிப்படையில் இத்தகைய அரசாணை இருப்பது அரசியல் சட்டத்திற்கு மட்டுமே யன்றி மனித நாகரிகத்திற்கே புறம்பானது என்றும், இதனால் ஒட்டு மொத்தமாக மனிதவர்க்கத்தின் இயற்கை யான அறிவுத்திறனும், முன்னேற்றமும் பாதிக்கப் படுகிறது என்றும் கூறினர். மேலும், தாழ்த்தப்பட்ட குடியில் பிறந்த டாக்டர் பி. ஆர். அம்பேத்கார் இந்த நாட்டிற்கே அரசியல் சட்டம் வகுத்தளித்த மேதை யாக வில்லையா? பிற்பட்ட வகுப்பில் பிறந்த சாமி விவேகானந்தர் உலகம் போற்றும் மெய்யறிவாளராகவில்லையா? அறிவும், ஆற்ற லும் சாதியோடு பிறக்கவில்லை. அவற்றைக் கட்டுப்படுத்த சாதி அடிப்படையிலான அரசாணை விடுதலை பெற்ற நம்நாட்டிற்குத் தேவை இல்லை. ஆயின் அடிப்படை உரிமைகளுக்கு அஃது புறம்பானதாகும் என்றனர். இவர்களின் ஆணித்தரமான வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் அவ்வாணை செல்லாதெனத் தீர்ப்பளித்தனர். குறிப்பாக 17 -5 - 1948 - ல் புதுப்பிக்கப் பெற்ற ஆணை (1254) செல்லாதெனத் தள்ளுபடி செய்யப்பட்டது. ஏறத்தாழ முப்பது ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்ட நீதிக் கட்சியால் வழங்கப்பட்ட வகுப்புவாரிப் படிநிகராளிய ஆணையைச் சென்னை உயர்நீதி மன்றம் செல்லாதெனத் தீர்ப்பளித்ததைக் கண்ட முதலமைச்சர் குமாரசாமிராசா உடனே இத்தீர்ப்பை எதிர்த்துத் தில்லி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். சென்னை மாநில அரசின் தலைமை வழக்கறிஞரை அனுப்பி உச்சநீதி மன்றத்தில் வாதாடி வெற்றி பெற வேண்டும் என்றார். மேல்முறையீட்டில் இவ்வழக்கறிஞர் சென்னை மாநிலத்தில் கடந்த சுமார் முப்பது ஆண்டுகளாகச் செயல்படுத்தப்பட்டு வந்த வகுப்புவாரிப் படிநிகராளிய ஆணை இன்றைய அரசியல் சட்டத்தால் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவது ஆகாது என் றும் கூறினார். சமூகத்தில் சமூக நிலையிலும், கல்வியிலும், பொருளா தாரத்திலும் பிற்பட்ட வகுப்பாருக்கு மாநில அரசு விரும்பினால் அவர்களை இத்துறைகளில் முன்னேற்றத்தகுந்த வழிகனளச் செய்ய லாமென அதே இந்திய அரசியல் சட்டம் விதி 46 - ல் கூறப்பெற் றுள்ளது, அதன்படிதான் சென்னை மாநிலமும் இவ்வாணையின்படி பிற்பட்ட வகுப்பாருக்குக் கல்வி நிறுவனங்களிலும், அரசுப் பணி களிலும் ஒதுக்கீடு அளித்தது என்றும் எடுத்துக்கூறினார், 'பிற்பட்ட வகுப்பு' என்பது சமூகத்திலும், கல்வியிலும் பொருளாதாரத்திலும் பிற்பட்டவர் என்பது இந்த விதி 46 -இன்படி பொருத்தும் என்றனர். 'பிற்பட்ட வகுப்பார்' என்று அரசியல் சட்டத் தில் இல்லையென்றாலும் மேற்கண்ட விளக்கமே பிற்பட்ட வகுப்பா ரென்பதைத் தெளிவுப்படுத்தும் என்றனர். வகுப்புவாரிபடிநிகராளிய அரசு ஆணையைச் செல்லாதாக்கிய நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்துத் தமிழகம் முழுவதும் தந்தை பெரியார் (தி.க), அறிஞர் அண்ணா தி.மு.க.) ஆகியோர் தலைமையில் கிளர்ச்சிகள் நடந்தன. நாடே கிடுகிடுத்து விட்டது. சென்னைச் சட்ட மன்றத்திலும் இது பற்றிய காரசாரமான விவாதங்கள் நடந்தன. இந்த வழக்கை விசாரித்த தில்லி உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி சுலிபா, நீதிபதிகள் ஃபாசல் அலி, பதஞ்சலி சாத்திரி, கோசங், பி. கே. முகர்சி, கே. ஆர். தாசு, போசு ஆகியோர் அடங்கிய நீதிக்குழு, சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்பையே உறுதிசெய்து இவ் வழக்கைத் தள்ளிவிட்டனர். இதனால் சென்னை மாநிலத்திலிருந்த வகுப்புவாரிப் படிநிகராளிய அரசாணை ஒழிக்கப்பட்டு விட்டது. ஆணையை உயிர்ப்பித்தல்: இக் குழுவில் இந்திய அரசியல் சட்டத் தந்தையும், அன்றைய சட்ட அமைச்சருமான டாக்டர் பி.ஆர். அம்பேத்கார், பிரதமர் நேருவை அணுகி, 'நேரு விரும்பும் சமதர்ம சமுதாயம், மலரவேண்டுமானல் பின்னடைந்துள்ள சமுதாயத்தைக் கைதூக்கி விட வேண்டும். அதற்கு ஒரே வழி வகுப்புவாரிப் படிநிகராளியமே' என்றார். மீண்டும் இவ் வானை உயிர் பெற வேண்டுமானால் அதனை உள்ளடக்குமாறு அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்றார். நேருவும், அவரது அமைச்சரவையினரும், அம்பேத்காரின் யோசனையை ஏற்று முதல் அரசியல் சீர்திருத்தத்தை (1951) ஏகமனதாய் நிறைவேற்றினார். எனவே, பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீடு அடிப்படை உரிமைகளைக் கூறும் விதிகளில் துணைவிதிகளாக்கப்பட்டது. இவ்வாறு, அம்பேத்காரின் பெருமுயற்சியாலும், அவர் பிற்பட்ட வகுப்பாரிடம் கொண்டுள்ள அக்கரையாலும் மீண்டும் இட ஒதுக்கீடு ஆணை உயிர் பெற்றது. அதற்கு அடிப்படை உந்துகளாக நின்றவர் கள் முதல்வர் குமாரசாமிராசாவும், அறிஞர் அண்ணாவும், தந்தை பெரியாரும் ஆவர். பிற்பட்டோருக்கு வகுப்புவாரிப் படி நிகராளியும் வாய்ப்பாக அமைய அரசியல் சட்டத்தைத் திருத்தியளித்த டாக்டர் அம்பேத்கார் போற்றுதற்குரியராவார். முதல் ஐந்தாண்டுத் திட்டம் (1951-1956) அடுத்து, குமாரசாமிராசா காலத்தில் முதல் ஐந்தாண்டுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது. இதில் வேளாண்மைக்கு 16 கோடி ரூபாயும், நீர்ப்பாசனத்திற்கு 96 கோடி ரூபாயும் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டது. மொத்தத்தில் 1951 - 55 ஐந்தாண்டிற்கு 137 கோடி ரூபாய் தமிழகத் திற்கு ஒதுக்கப்பட்டது. பொதுவாக 1951-52 ஆண்டிற்காக வரவு - செலவுக் கணக்கில் கீழ்கண்டவாறு ஒதுக்கீடு செய்தது. 1. கல்வி - 1,180 இலட்சம் ரூபாய் 2. பொது சுகாதாரம் 483 இலட்சம் ரூபாய் 3. வேளாண்மை 389 இலட்சம் ரூபாய் 4, நெடுஞ்சாலைகள் - 1. 146 இலட்சம் ரூபாய் 5. கிராம் முன்னேற்றம் இலட்சம் ரூபாய் 6. அரிசன முன்னேற்றம் 113 இலட்சம் ரூபாய் 7. காவல்துறை 688 இலட்சம் ரூபாய் 8. பொது நிருவாகம் - 712 இலட்சம் ரூபாய் இதில் மிக அதிகமாகக் கல்விக்குத் தான் செலவிடப்பட்டது. 1945-46-ல் கல்விக்குச் செலவிடப்பட்ட பணம் 460 இலட்சம் 38 ரூபாய் மட்டுமே, 1945-46 -ல் 29 இலட்சம் அரிசன முன்னேற்றத் திற்காக ஒதுக்கப்பட்டது. 1-4-1947-ல் அரிசன நலத்துறை தனியாக இயங்கத் தொடங்கியதால் 29 இலட்சத்தில் இருந்து 113 இலட்சம் ரூபாயாக இது உயர்த்தப்பட்டது. 1950-ல் சென்னைத் தொடக்கப் பள்ளிக் கல்விச் சீர்திருத்தச் - சட்டம் கொண்டு வரப்பட்டுத் தொடக்கக் கல்விக்குத் தலையாய முன்னுரிமை வழங்கப்பட்டது. இதனால் உள்ளாட்சி மன்றங்களால் நடத்தப்பட்ட பள்ளிகளுக்கும் அதிக நிதியுதவி கிடைத்தது. 1950 - ல் 36,000 தொடக்கப் பள்ளிகளிருந்தன. இவை 1953-ல் 38,000 ஆக உயர்ந்தன. 1949-ல் 171 ஆக இருந்த ஆதாரக் கல்விக் கூடங்கள் 1950-ல் 402 ஆகவும் 1952-ல் 520 ஆகவும் உயர்ந்த ன. 1953-ல் 1200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆதாரக் கல்விப் பயிற்சி பெற்றனர். இவ்வாறு, குமாரசாமிராசா மூன்றே ஆண்டுகள் பதவியிலிருந் தாலும் அவர் காலத்தில் தொடக்கக் கல்வியும், ஆதாரக்கல்வியும் சிறப்பான முன்னேற்றம் கண்டன. 1950 ஆம் ஆண்டு இந்திய அரசியல் சட்டப்படி 1952 - ஏப்ரவில் நடந்த இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலில் நாட்டின் விடுதலைக் காகப் போராடிய காங்கிரசுக் கட்சி தோல்வியுற்றது. போதிய பெரு வாரி கிடைக்கவில்லை. மொத்தமிருந்த சட்டமன்ற உறுப்பினர் 375 பேர்தான் காங்கிரசு கட்சியினர். இதனால் குமாரசாமிராசா பதவி விலகினார். அவருடைய அமைச்சரவை கலைக்கப்பட்டது. காங்கிரசு கட்சியின் தமிழ்நாடு பிரிவுத் தலைவராயிருந்த காமராசர் பொதுநலக் கட்சியின் தலைவரான மாணிக்கவேல் நாயக்கரையும், உழைப்பாளர் கட்சித் தலைவரான ராமசாமி படையாச்சியையும் காங்கிரசு அமைச் சரவையில் சேர்த்தார். காங்கிரசுக் கட்சியை விட்டு விலகிச் சென்றிருந்த இராசகோபாலாச்சாரியை அழைத்து முதலமைச்சராக்கினார். இதனால் காங்கிரசு அமைச்சரவை தன் ஆட்சியைத் தொடர்ந்தது. குமாரசாமிராசா காலத்தில் காங்கிரசு தோற்றதற்குக் காரணங்கள் பல உள்ளன. காங்கிரசு மக்களிடையே செல்வாக்கு இழந்துவிட்டது. பஞ்சம், உணவுப் பற்றாக்குறை, பங்கீடு, கஞ்சித் தொட்டி முதலியன மக்களை ஆட்சியின்மேல் வெறுப்படையச் செய்துவிட்டன. டி. பிரகாசம், தென்னட்டி விசுவநாதன், என். சி. இரங்கா மற்றும் பலரும் காங்கிரசில் இருந்து பிரிந்து சமதர்மக் கொள்கையுடைய கிஸ்ஸான் மஸ்தூர் பிரஜாதகட்சி' (கே.எம்.பியிலும், மற்றும் சில கட்சிகளிலும் சேர்ந்து கொண்டனர். இதனால் காங்கிரசு மகா நிறுவனம் ஆட்டம் கண்டுவிட்டது. 1948-ல் இருந்து அரிசிப் பஞ்சம் ஏற்பட்ட தமிழகத்தில் 1949-ல் ஆளுக்கு 1 அவுன்சு மேனி உணவுப் பங்கீடு அட்டை யின் வாயிலாக வழங்கப்பட்டது. 1952-ல் இது 6 அவுன் சாகக் குறைக்கப் பட்டதால் மக்களின் துன்பம் பெருகியது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு அதிகரித்தது. இதனால் எதிர்க்கட்சிகளுக்கு மக்களின் செல்வாக்கு அதிகரித்தது, சொத்துரிமையின் பேரில் வாக்குரிமை இருந்தது போய், வயது வந்தவர்களுக்கெல்லாம் வாக்குரிமை அளிக்கப்பட்டதால் இளைய தலைமுறையினர் அரசியல் மாற்றத்தை விரும்பினர். காந்தியமும், மரபுவழிப் பண்பாடுகளும் அவர்களுக்கும் கசப் பாயின. புதிய, புதிய வரி விதிப்புகளையும், மதுவிலக்குக் கொள் கையையும், அரிசன முன்னேற்றத்திற்காக அரசு காட்டும் பரிவு களையும் மக்கள் வெறுக்கத் தொடங்கினர். எனவே தான் 375 இடங்களில் 152 இடங்களையே காங்கிரசு பெற முடிந்தது. சி. இராசகோபாலாச்சாரியார் (10-4-1953, 12-4-1954) 1952-ல் இந்தியாவில் முதல் பொதுத் தேர்தல் நடந்தது. அன்று தமிழகத்தில் சிறந்து நின்ற காங்கிரசுக் கட்சியும் பொது உடைமைக் கட்சியும் பிறவும் தேர்தலில் போட்டியிட்டன. மொத்தச் சட்டமன்ற இடங்கள் 375 ஆகும், இதில் 3 இடங்களில் போட்டி இல்லை . மீதி யுள்ள 372 இடங்களில் வெற்றிபெற்றது. இதில் ஆந்திராவில் 43 காங்கிரசுக்காரர்களும், கருநாடகத்தில் 9 காங்கிரசு காரர்களும், கேரளாவில் காங்கிரசுக்காரர்களும் வெற்றி பெற்றனர். மீதியுள்ள ஓகி காங்கிரசுக்காரர்கள்தான் தமிழகத்தில் வெற்றி பெற்றனர். மொழிவழி மாநிலங்கள் பிரிய வேண்டும் என்ற உணர்ச்சி மேவிட்டு நின்ற இக்காலத்தில் ஆந்திரரும், கேரளரும் கட்சிக்கு அப்பாற்பட்டுத் தமிழராகிய இராசாசி முதல்வராவதை விரும்பவில்லை . மேலும் அவர் தேர்தலில் நின்று, வெற்றி பெற்றுச் சட்டமன்ற உறுப்பினராக வில்லை. ஆயினும் தமிழ்நாடு காங்கிரசு கட்சியின் தலைவரான காமராசரின் வேண்டுகோளுக்கிணங்க சி. இராசகோபாலாச்சாரி தமிழக முதல்வரானார். தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியின் செயலாளரான ஏ. சுப்பிரமணியன் என்பவரைச் சந்தித்து இராசாசி ஆதரவு கேட்டார். இதைப் போலவே வன்னியர் பொது நலக் கட்சியின் தலைவரான மாணிக்கவேல் நாயக்கரும் இராசாசியின் வேண்டுகோளுக்கேற்ப அவருக்கு ஆதரவு நல்கினார். மாணிக்கவேலு நாயக்கருக்கு இராசாசி அமைச்சரவையில் பதவி கொடுக்கப்பட்டது. மொழி வழி மாநிலங்களேற்பட்டபோது ஆந்திரமும் மைசூரும் சென்னை மண்டலத்தில் இருந்து பிரிந்து சென்றன. இதனால் ஆந்திரா வுக்கு 140 சட்டமன்ற உறுப்பினர்களும், மைசூருக்கு சட்டமன்ற உறுப்பினர்களும் ஆக 145 பேர் பிரிந்து சென்றுவிட்டனர். இதனால் சென்னைச் சட்டமன்றத்தில் (375-145,230) 230 சட்டமன்ற உறுப் பினர்களே எஞ்சி நின்றனர். சுருங்கக் கூறின் இராசாசியை எதிர்த்த அத்தனைப் பேரும் சட்டமன்றத்தில் இல்லாமல் போயினர். இதனால், அவருக்குத் தன்னை எதிர்ப்பவர்கள் எவருமில்லையென்ற தைரியம் வந்துவிட்டது. இதற்குப்பின் இவர் ஒரு புதிய கல்வி முறையைக் " கொண்டு வந்தார். அ) குலக்கல்வித் திட்டம் இது இராசாசியே தன்னிச்சையாக எவரையும் கேட்காமல் தொடங்கியக் கல்வி முறை ஆகும். அவர் ஆட்சிக்கு வந்தபோது 38,000 தொடக்கப்பள்ளிகளிலும், 24 நகரமன்றத் தொடக்கப் பள்ளி களிலும் 'மாற்றியமைக்கப்பட்ட கல்வித்திட்டம்' என்ற பெயரில் கல்வி முறையைப் புகுத்தினார். இத்திட்டம் 35,000 ஊரகப் பள்ளி களில் செயல்படுத்தப்பட்டன. மீதியுள்ள 3,000 தாரகப் பள்ளிகளி லும் அடுத்த ஆண்டு தொடங்குவதாக இருந்தது. இக்கல்வி முறை சிறுவர்கள் படிக்கும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையுள்ள தொடக்கப்பள்ளிகளில் செயல்பட்டன. காலை யில் மூன்று மணி நேரம் படிப்பும், மாலையில் விடுமுறை என்றும் பகுதிநேரப் படிப்பு ஏற்பட்டது. மாலையில் பாதிப்பேர் மூன்று மணி நேரம் படிக்க வருவர். அவர்கள் காலையிருந்து மாலைப்பள்ளிக்கு வரும் வரைத் தங்களின் பெற்றோருடன் இணைந்து அவர்களின் குலத்தொழிலைச் செய்ய வேண்டும். இதைப்போலவே, காலை வகுப்பு முடிந்து செல்லும் மாணவர்களும் மாலையில் அவர்களின் பெற்றோருடன் இணைந்து குலத்தொழிலைச் செய்ய வேண்டும். ஊர்ப்புறங்களில் தச்சுவேலை, கருமான்வேலை, உழவுவேலை, ஆடு மாடு மேய்த்தல் முதலியவைதான் ஊர் மக்கள் தொழில்களாக இருக்கும், இந்த வேலைகளைத்தான் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குக் கற்றுத் தர வேண்டும். இக்குழந்தைகள் முதல் 11 வயதிற்குள் அடங்குவர் இவ்வாறு பெற்றோரின் தொழில்களைக் குழந்தைகளைச் செய்ய வைத்தல் இக்கல்வியை அனைவரும் 'குலக்கல்வி என்றனர். இது பெரிய பஞ்சாயத்துக்கள், நகரமன்றங்கள் முதலியவற்றில் உள்ள பள்ளிகளில் அறிமுகப்படுத்தப் பட வில்லை. சிறு ஊர்களிலுள்ள தொடக்கப்பள்ளிகளில் மட்டுமே செயல்பட்டது. ஆ) குலக்கல்வித் திட்ட எதிர்ப்புக் கிளர்ச்சிகள்: இத்திட்டத்தைப் பார்ப்பனரல்லாதார் ஒரே முகமாய் எதிர்க்கத் தொடங்கனார்கள். திராவிடர் கழகமும் அதன் தலைவர் தந்தை பெரியாரும், திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் தலைவர் அறிஞர் அண்ணாவும் குலக்கல்வித் திட்டத்தால் சூத்திரர்கள் பண்டைய நான்கு வருணப் பாகுபாட்டிற்கே தள்ளப்பட்டதை உணர்ந்தார்கள், தொடக்கப் பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பிறகு 21-6 - 1953 அன்று திறக்கப்படுமென்பதை அறிந்து, அதே நாளில் குலக்கல்வித் திட்ட எதிர்ப்பு நாள் என அறிவித்து விட்டு எதிர்ப்புக் கிளர்ச்சிகளில் "ஈடுபட்டனர். டாக்டர் வி. வரதராஜுலு நாயுடு இராசாசியின் தலைமை யில் நம்பிக்கை இல்லையென அரசுக்கு மனு ஒன்றைக் கொடுத்தார். காங்கிரசுத் தலைவர்களும், ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தனித்தனியே குலக்கல்வித் திட்ட எதிர்ப்பு மனு கொடுத்தனர். இத்தகைய மனுக்கள் 8-7-1953 முதல் அன்றாடம் வந்து குவிந்தன. 14-7-1953 அன்று திராவிடக் கழகத் தளபதி கி. வீரமணி அவர்களின் தலைமையில் திராவிடக் கழகத்தினர் சட்டமன்றத்திற்குள் புகுந்தனர். அமளி ஏற்பட்டது. திராவிடக் கழகத்தினர் கைது செய்யப்பட்டனர். அதே நாளில் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் முதலமைச்சர் இராசாசியின் வீட்டை முற்றுகையிட்டனர். அறிஞர் அண்ணா , நாவலர் நெடுஞ்செழியன், என். வி. நடராசன், ஈ.வி.கே. சம்பத்து, மதியழகன் முதலிய தலைவர்கள் கைது செய்யப்பெற்றனர். தி.மு.க. தொண்டர் களும், பிறரும் துாத்துக்குடி, கல்லக்குடி முதலிய இடங்களில் மாபெரும் போராட்டத்தில் இறங்கினர். அங்கெல்லாம் காவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். திராவிடக் கழகத்தார் அடுத்தக் கட்டமாக சூலை 20 ஆம் நாள் முதற்கொண்டு தொடக்கப்பள்ளிகளின் முன் அணியணியாகத் தொடர் முற்றுகையிடத் தொடங்கினர். பலரும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். இத்தகைய முற்றுகைப் போராட்டங்களும், எதிர்ப்புக் கிளர்ச்சி களும் தமிழகம் முழுவதும் நடந்தன. சிறைச்சாலைகள் நிரம்பி வழிந்தன. எண்ணில் அடங்காப் பேரணிகள் நடந்தன. தமிழகமே அல்லோல கல்லோலப்பட்டது. சட்டமன்றத்தில் சரமாரியாகக் கேள்விக் கணைகள்தொடுக்கப்பட்டன. வெளிநடப்புகள் ஏற்பட்டன. இத்தனையும் கண்கூடாகக் கண்டுகொண்டிருந்த முதலமைச்சர் இராசாசி, தமிழர் குரலுக்குச் செவிசாய்க்கவில்லை , தந்தை பெரியாரும் அறிஞர் அண்ணாவும் சூறாவளிச் சுற்றுப்பயணம் செய்து தமிழ் நாட்டையே சூடாக்கி அனல் காற்று வீசச் செய்தனர். காங்கிரசு மேலிடமே இராசாசியை அழைத்து, குலக்கல்வித் திட்டத்தை உடனே கைவிடும்படிக் கூறியது. இவ்வாறு, பொதுமக்களும், சமூக அரசியல் தலைவர்களும், தான் சார்ந்துள்ள காங்கிரசுக் கட்சியும் தனக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியதைக் கண்ட இராசாசி வேறு வழியறியாது தனது பதவியைத் தானே துறந்து 1-4-1954-ல் வெளியேறினார். காங்கிரசு மேலிடம் அன்றைய தமிழ்நாடு காங்கிரசுக் கட்சியின் தலைவராயி ருந்தகு. காமராசரை முதலமைச்சராகப் பதவியேற்கக் கேட்டுக் கொண்டது. கொந்தளிப்பில் கலத்தில் மாலுமியான காமராசர் பின்னர் குடியாத்தம் இடைத்தேர்தலில் இந்திய முஸ்லீம் லீக், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒத்துழைப்புடன் வெற்றி பெற்றார். 333 1935ஆம் ஆண்டு முதலே கல்வி மாநிலத் துறைக்கு மாறி விட்டது. எனவே இதில் என்ன மாற்றம் செய்தாலும் நடுவண் ஆட்சி தலையிடாது என்ற தைரியத்தில் இராசாசி குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார். கடைசியில் அதுவே அவருடைய புகழுக்கு அழிவு தேடித் தந்து விட்டது. பதவியைக் கட்டாயச் சூழலில் தானே துறக்க வேண்டி வந்தது. சி. முதலமைச்சர் கு. காமராசர் (1954-1963) இராசாசி பதவி விலகியதும் தமிழ்நாடு காங்கிரசுக் கட்சியின் தலைவர் கு. காமாராசர் 3 - 4 - 1954-ல் தமிழக அமைச்சரவையின் முதல்வரானார். அவருடன் எம். பக்தவச்சலம், ஏ,பி, செட்டி, பி. பரமேசுவரன், சி. சுப்பிரமணியம், சண்முகராசேசுவர சேதுபதிராசா, எம்.ஏ. மாணிக்கவேலு நாயக்கர், எசு. எசு. இராமசாமி படையாச்சி ஆகிய எழுவரும் அமைச்சரானார்கள். இந்த அமைச்சரவை 12-4-1957 வரை பதவி வகித்தது. 1957-ல் நடந்த இரண்டாவது பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரசு மீண்டும் கு. காமராசரையே முதல்வராக்கியது. இந்த அமைச்சரவையில் எம். பக்தவச்சலம், சி.சுப்பிரமணியம், எம்.ஏ. மாணிக்கவேலு நாயக்கர், ஆர்.வேங்கடராமன், பி. கக்கன், இராமையா, லூர்து அம்மாள், சைமன் ஆகிய எழுவருமே அமைச்சரானார்கள். 1962-ல் நடந்த மூன்றாவது பொதுத்தேர்தலிலும் காங்கிரசு வெற்றி பெற்று அமைச்சரவையை அமைத்தது. இந்த அமைச்சர் வைக்கும் கு. காமராசரே முதல்வரானார். அவர் 15-3-1962 முதல் 12 10- 63 வரை மட்டுமே பதவி வகித்தார். காங்கிரசு கட்சியை வலுப் படுத்தவும், வளர்ந்துவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தை மட்டுப் படுத்தவும் ஒரு திட்டத்தைத் தயாரித்தார். அதுவே, "காமராசர் திட்டம் என்பதாகும். அதன்படி கட்சியின் மூத்தத் தலைவர்கள் தாம் வகிக் கும் பதவிகளிலிருந்து விலகி, கட்சிப்பணி செய்யவேண்டும். தானே ஓர் எடுத்தக்காட்டாக விளங்கவே 1967 - வரை முதல்வராக இருக்க வேண்டிய காமராசர் 1963 - லேயே பதவி விலகினார். அவரிடத்திற்கு எம். பக்தவச்சலம் அமர்த்தப்பட்டார் அவர் 5-1-1963 முதல் 5-3-1967 வரை பதவியிலிருந்தார். அவரே காங்கிரசுக் கட்சியின் கடைசி முதலமைச்சர். அவருக்குப்பின் அக்கட்சி வீழ்ந்தது. அண்ணா துரை 6-3-1989 வரை தான் இறக்கும் வரை முதல்வராக இருந்தார். கல்வியின் புரட்சி அ) கல்விக்கூடங்களின் வளர்ச்சி தொடக்கப் பள்ளிகள் சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரியார் (இராசாசி முதலமைச்சர் ராகப் பணியாற்றிய இரண்டு ஆண்டுகளில் (10-4-1952, 13-4-1954) சுமார் 15 ஆயிரம் தொடக்கப்பள்ளிகளில் 6 ஆயிரம் பள்ளிகளை : முடினார். அத்துடன் ஊர்ப்புறத் தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவருக்கே அரைநாள் படிப்பு மீதி அரைநாளில் அவரவர் சாதித் | தொழிலைச் செய்ய வேண்டும் என்றக் குலக் கல்வித் திட்டத்தைச் * செயல்படுத்தினார். ஏற்கனவே அவர் 1937-39- ல் முதல்வராக இருந்த போது சுமார் 25,000 தொடக்கப்பள்ளிகளை மூடினார், காமராசர் முதல்வரானதும் அவர் செய்த முதல்பணி இராசாசி யின் 'குலக்கல்வித் திட்டத்தை' ஓழித்ததுதான். அவர் முடிய 4 ஆயிரம் பள்ளிகளைத் திறந்ததோடு மேலும், 12 ஆயிரம் புதிய பள்ளிகளைக் காமராசர் திறந்தார். இதனால் 1965-க்குள் தமிழகத்தில் சுமார் 27,600 தொடக்கப்பள்ளிகள் செயல்பட்டன. சுமார் 500 மக்கள்தொகை கொண்ட சிற்றூர்களிலெல்லாம் தொடக்கப்பள்ளிகள் ஏற்பட்டன. பின்னர் 300 பேர் கொண்ட ஊர்களிலும் பள்ளிகள் ஏற்பட்டன. 1956-57 மற்றும் 1957-58 ஆண்டுகளிலும் தீப்தி புதிய வகுப்புகள் தொடங்கப்பட்டன. அவர் காலத்திலேயே தமிழ்நாட்டில் பள்ளிக்கூடமில்லாத ஊரே இல்லை' என்ற பெருமை ஏற்பட்டது. பள்ளி வயதடைந்த மாணவர்களில் 75 விழுக்காட்டினர் பள்ளிக்குச் சென்றனர். சுமார் 2 இலட்சம் பேர் பள்ளிகளில் படித்தனர். முதல் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் கல்விக்காக ஐந்து கோடி ரூபாய் செல் விடப்பட்டது. ஆனால், காமராசர் முதல்வர் ஆனதும் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் அது பன்னிரெண்டு கோடியாக உயர்த்தப் பட்டது. மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் அது மேலும் உயர்ந்து 25. 4 கோடி ரூபாயாக ஒதுக்கப்பட்டது. காமராசரின் 'கல்விக் கோட்பாடு' என்பது எல்லோருக்கும் கல்வி' என்பதுதான் 1955-56-ல் எட்டாம் வகுப்புவரை எல்லோருக் கும் இலவசக்கல்வியும், ஏழைக் குழந்தைகளுக்கு இலவச ஆடை யும் அளிக்கப்பட்டது. 1961-62 ஆம் ஆண்டில் உயர்நிலைப் பள்ளி இறுதி வகுப்புவரை இலவசக்கல்வி அளிக்கப்பட்டன. இதனால் ஒரு இலட்சத்து அறுபதாயிரம் ஏழைப்பிள்ளைகள் பயனடைந்தனர். அரசுக்கு 58 இலட்சம் ரூபாய் அதிகம் செலவானது. உயர்நிலைப் பள்ளிகள் காமராசர் முதலமைச்சரானபோது உயர்நிலைப்பள்ளிகள் எண்ணிக்கை 637 ஆக இருந்தன. இவர் ஆட்சிக்காலத்தில் 1337-ஆக உயர்ந்தன. இவற்றில் 14 முதல் 17 வயது வரை உள்ள மாணவர்கள் 18,000 பேர் படித்தனர். இவர்கள் ஒன்பது, பத்து, பதினோராம் வகுப்புகளிலிருந்தனர். பின்னர் இதுவே 22,000 மாணவர் என்று எண்ணிக்கையில் உயர்ந்தது. ஒரு வியப்பான செய்தி என்னவென் றால் சென்னை, மாகாணமாயிருந்தபோது 24 மாவட்டங்களிலிருந் தன. இவற்றில் மொத்தம் 450 உயர்நிலைப் பள்ளிகளேயிருந்தன. ஆனால் காமராசர் காலத் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் 1337 உயர்நிலைப் பள்ளிகளேற்பட்டன. இராசாசியின் ஆட்சியின் போது உயர்நிலைப் பள்ளிகளில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை 3, 91, 000 பேர்தான். காமராசர் ஆட்சியில் 7, 16,000 பேர் படித்தனர். 1959-60 - ல் ஐந்து மைல் சுற்று வட்டாரத்திற்கு ஒரு உயர்நிலைப் பள்ளியும், மூன்று மைல் சுற்று வட்டாரத்திற்கு ஒரு தொடக்கப்பள்ளியும் அல்லது நடுநிலைப்பள்ளியும் ஏற்பட்டன. 1961-ல் 120 உயர்நிலைப் பள்ளிகளும், 18 - நடுநிலைப்பள்ளி களும் புதிதாகத் தொடங்கப் பெற்றன. ஒரு மைல் சுற்றளவுக்குள் ஒரு தொடக்கப்பள்ளியெனத் தொடங்கப்பெற்றது. பள்ளிச்சீரமைப்புக்கெனப் பொதுமக்களே முன்வந்து சுமார் ஏழுகோடி ரூபாய் தந்தனர். இதனால் கல்வித்தரம் மேலும் உயர்ந்தது. வேலை நாட்கள் உயர்தரப் பள்ளிகளில் 180 -ல் இருந்து 200 ஆக உயர்த்தப்பட்டது. தொடக்கப்பள்ளிகளில் ஆங்கிலக் கல்வியைக் கற்பித்தல்: இதுவரை ஆறாம் வகுப்பில் இருந்து ஆங்கிலம் கற்றுக் கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால், காமராசராட்சியில் ஐந்தாம் வகுப்பிலிருந்தே ஆங்கிலம் கற்பிக்கப்பட்டது. இதனால் மேலும் உயர்கல்வி கற்ற ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதற்குத் தகுந்தபடி நூல் நிலையங்களும், நூல்களும் உயர்ந்தன, கட்டாயக் கல்வி: காமராசர் 195] - 1-ல் 2400 பார்களில் கட்டாயக் கல்வியைச் செயல்படுத்தினார். புதிதாக 2875 ஆசிரியர்கள் அமர்த்தப்பட்டனர். இதற்காக ரூபாய் 24 இலட்சம் ஒதுக்கப்பட்டது. இலவச உணவுத் திட்டம் கல்வியை எல்லோருமே பெற வேண்டும் என்ற காமராசரின் தணியாத ஆசை முற்றுப்பெற வேண்டுமானால் ஒருவேளை உணவுக்கே வழியற்ற குழந்தைகளுக்கு மதிய உணவாவது அளித் தால்தான் அவர்கள் படிக்க வருவார்கள் என்று அவருடைய தீர்க்க தரிசனத்தின் படியே 'இலவச மதிய உணவுத் திட்டம்' தொடங்கப் பெற்றது. அரசு இத்திட்டத்தைச் சட்டரீதியாகத் தொடங்குவதற்கு முன்பா கவே அன்றைய பொதுக்கல்வி இயக்குநராயிருந்த நெ. து. சுந்தர வடிவேலு முதல் அமைச்சரின் உள்ளக்கிடக்கையைக் கோயில்பட்டி யில் வெளியிட்டார். நாகலாபுரம் என்ற ஊர்க்காரர்கள் முன்வந்து, ஒவ்வொருவரிடமும் தானியம் தண்டல் செய்து பள்ளி மாணவருக்கு மதிய உணவு கொடுக்க முனைந்தார்கள். அரசின் நிதி உதவியைப் பெறாமல் மக்களே முன்வந்து இந்த இலவச மதிய உணவுத் திட்டத்தை ஏற்று நடத்தினார்கள். பலரும், பணமும், பண்டமுமாகக் கொடுத்து இத்திட்டத்தை வெற்றி பெறச் செய்தார்கள். பின்னர்தான் 1956 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் முதல் நாள் ஏழைப்பிள்ளை களுக்கு நடுப் பகல் இலவச உணவளிக்கும் திட்டம் அரசால் தொடங்கப்பட்டது. காமராசர் ஆட்சிக் காலத்திலேயே தமிழகத்தி லுள்ள எல்லாப் பள்ளிகளிலும் பகல் உணவு அளிக்கப்பட்டது. இதனால் சுமார் 10 இலட்சம் குழந்தைகள் பயனடைந்தார்கள். இதற்காக 137 இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு மேலும் இஃது விரிவாக்கப்பட்டது. இத்திட்டத்தைக் கண்ட அமெரிக்கா காமராசரைப் பாராட்டி சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள உணவுப் பொருள்களை இதற்காக அளித்து மகிழ்ந்தது. ஆசிரியர்கள் வாழ்க்கைத் தரம் உயர்வு மாணவர் முன்னேற்றத்திற்கு அடித்தளமாயுள்ள ஆசிரியர் களின் வாழ்க்கைத் தரத்தையும் காமராசர் உயர்த்தினார். 1-4-1955 முதல் எல்லா ஆசிரியர்களும் காப்பீடு, ஓய்வுக்கால ஊதியம், வருங்கால வைப்புநிதி ஆகிய மூவகை நன்மைகளையும் பெற்றனர். இத்தகைய மூவகை நன்மைகளை இந்தியாவிலேயே தமிழகத்து ஆசிரியர்களுக்கு அளித்தவர் காமராசர்தான், ஆசிரியரது பிள்ளை களுக்கு உயர்நிலைப் பள்ளிப் படிப்பு வரைச் சம்பளமில்லாமல் இலவசப் படிப்பையும் அளித்தார். இந்தச் சலுகையைக் காவலர்கள், கடைநிலைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கும் அளித்தார். இவர்களுக்கும் குடியிருப்புகள் கட்டியதும் காமராசர் ஆட்சிக் காலத்தில் தான். தொழிற்கல்வி தொழில் வளரத் தொழிற்கல்வி அவசியம் என்பதையுணர்ந்து காமராசர் கிண்டி + கோவை ஆகிய இடங்களிலுள்ள பொறியியல் கல்லூரிகளில் இருந்து வந்த மொத்தம் 875 இடங்களை 1960-61-ல் 1375 ஆக உயர்த்தினார். இதனால் 75 விழுக்காடு வீதம் மாணவர் சேர்க்கை அதிகரித்தது. மேலும் இவர் காலத்தில் மொத்தம் 10 பொறியியல் கல்லூரிகள் தமிழகத்தில் ஏற்பட்டன. இவற்றைத் தவிர, தொழில் பள்ளிகளும் ஆங்காங்கே ஏற்பட்டன. 1950 - 1-ல் இவற்றின் எண்ணிக்கை 500 ஆயிற்று. காமராசர் அமைச்சரவை 12-4-1957 வரை பதவி வகித்தது. காமராசர் ஆட்சிக்காலத்தில் மருத்துவக் கல்லூரிகளில் அதிகமான மாணவர் கள் சேர்ந்து படிக்க வாய்ப்பு ஏற்பட்டது. சென்னைப் பொது மருத்துவமனையில் 150 பேரும், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 125 பேரும், மதுரை மற்றும் தஞ்சை மருத்துவமனைகளில் 200 பேரும், இந்திய மருத்துவக் கல்லூரியில் விடுதலைக்குப்பின் தமிழகம்1 75 பேரும், ஆக மொத்தம் 550 மாணவர்கள் சேர்ந்து படித்தனர். பின்னர் மேலும் மூன்று மருத்துவக்கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இவற்றைத் தவிர வேலூரில் கிறித்து பேச் சபையாரின் தனியார் மருத்துவக் கல்லூரியும் இருந்தது. கால்நடை மருத்துவக் கல்லூரி சென்னை வேப்பேரியில் கால்நடை மருத்துவக் கல்லூரியும், ஓசூர், ஒரத்தநாடு, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் கால்நடைத் துணைப் படிப்புப் பள்ளிகளும் இருந்தன. கால்நடை மருத்துவக் கல்லூரியில் முனைவர் பட்டப்படிப்பும் ஏற்பட்டது. மாணவர் எண்ணிக்கை 1960-ல் 930 ஆக உயர்ந்தது. மாணவர் விடுதிகள்: பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த 14,000 மாணவர்களுக்குக் காமராசர் காலத்தில் மாணவர் விடுதிகள் ஏற்படுத்தப்பட்டன. ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளை அரசே எடுத்து நடத்திவந்தது. காமராசர் காலத்தில் அத்தகைய ஆதிதிராவிடர் மாணவ விடுதிகள் 95 இருந்தன. இவற்றில் பிற்படுத்தப்பட்ட முற்பட்ட மாணவர்களும் தங்கிப் படிக்க வழிவகை செய்யப்பட்டது. கிறித்துவ சமயத்திற்கு மாறிய ஆதிதிராவிட மாணவர்களுக்கும் கல்விச் சலுகையும், இலவச விடுதி களும் அளிக்கப்பட்டன. புதிய பல்கலைக் கழகங்கள்: கோவையிலிருந்த வேளாண்மைக் கல்லூரியோடு காமராசர் காலத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும் ஒரு வேளாண்மைக் கழகம் தொடங்கப்பட்டது, காட்பாடியில் ஒரு வேளாண்மைப் பள்ளி திறக்கப்பட்டது. கோவை, மதுரை ஆகிய இடங்களில் புதிய பல்கலைக் கழகங்கள் திறக்கப்பட்டன. மதுரைப் பல்கலைக் கழகம் 'மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம்' என்றே பெயர் சூட்டப்பெற்றது. காமராசர் காலத்தில் நிதிநிலை அறிக்கையில் மொத்தத்தில் நாலில் ஒரு பாகம் கல்விக்காகச் செலவிடப்பட்டது. இது இராசாசியின் காலத்தில் செலவிடப்பட்டதை விட இரண்டரைப் பங்கு அதிகமாகும். இராசாசி காலத்தில் மொத்தம் 41 அரசுக் கல்லூரிகளிருந்தன. காமராசர் காலத்தில் 59 கல்லூரிகளாயின. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் 7-ல் இருந்து 17 ஆக உயர்ந் தன: ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் 107-ல் இருந்து 133-ஆக உயர்ந் தன; கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் இராசாசி காலத்தில் 352 இடங்களே இருந்தன. ஆனால் காமராசர் காலத்தில் 930 இடங்களாக உயர்ந்தன. மருத்துவக் கல்லூரிகள் 4-ல் இருந்து பிஆக உயர்ந்தன; மாணவர் எண்ணிக்கையும் இரண்டு மடங்காக உயர்ந்தது, இவற்றில் சேரும் வழிவகைகளும் எளிதாக்கப்பட்டன. பொறியியல் கல்லூரி களில் காமராசர் காலத்தில் 75 விழுக்காடு மாணவர்கள் அதிகம் சேர்ந்தனர். 1960-61-ல் மட்டும் 1357 மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்தனர். இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் கல்விக்காக மட்டும் 231 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டது. ஆ) பொதுநல முன்னேற்றம் : மருத்துவம், மருத்துவமனை, பொது சுகாதாரம் விரிவடைதல்: பளர்ப்புறங்களில் தொடக்கப் பொதுநல நிலையங்கள் தொடங் கப்பட்டன. 1958-ல் 57 நிலையங்கவிருந்தன. 1980 -ல் இது 122 ஆக உயர்ந்தது. 1961-ல் 20 புதிய நிலையங்கள் ஏற்பட்டன. பொதுநல மருத்துவம், பொது சுகாதாரம் ஆகியவை ஊர்ப் புறங்களில் விரிவடைந்தன. மருத்துவப் பட்டதாரிகள் ஊர்ப்புறங் களில் பணியாற்றினால் அவர்களுக்கு ஊக்கத் தொகையளிக்கப் பட்டது. 1960-61-ல் மூன்று அல்லது நான்கு ஊர்களுக்கு ஒரு மருத்துவமனையும் 181 இலட்சம் ரூபாயம் செலவிடப்பட்டது. இதைப் போலவே, காமராசர் ஆட்சிக் காலத்தில் 1190 மைல் தூரத்திற்குச் சாலைகள் போடப்பட்டன. 1961-62 சாலை பராமரிப்புக் கென 255, 55 இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. 'சேரி சீரமைப்புத் திட்டம்' இவர் காலத்தில் செயல்பட்டது. இவர்களின் நலனுக்காக ருபாய் 6, 870 செலவில் 26,000 கட்டடங்கள் (வீடுகள் கட்டப் பட்டன. இத்திட்டம் மதுரை, திருச்சி, சேலம், கோவை ஆகிய நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கிராம் அதிகாரிகள் உள்ளாட்சி மன்ற ஊழியர்கள் ஆகியோருக்கும் ஊழியர் குடியிருப்புகள் கட்டப்பட்டன. காமராசர் ஆட்சிக்காலத்தில் கீழ்பவானித் திட்டம், காவிரிச் சமவெளிக் கால்வாய், மணிமுத்தாறு, மேட்டூர் கால்வாய், ஆரணி ஆறு, வைகை நீர்த்தேக்கம், அமராவதி நீர்த்தேக்கம், சாத்தனூர் அணை, கிருட்டிணகிரி திட்டம் முதலிய பெரிய நீர்ப்பாசனத் திட்டங்களும், கட்டளை மேல் கால்வாய் திட்டம், விடுர் அணைத் தேக்கம், பரம்பிக்குளம் நெய்யாறு கால்வாய் முதலிய சிறுதிட்டங் களும், பல குளங்கள், வடிகால் திட்டங்களும் நிறைவேற்றப்பட்டன. இவற்றைத் தவிரதீவிர மின்சாரத் திட்டம், நிலக்குத்தகைச் சீர்திருத்தச் சட்டம், நெய்வேலி பழுப்பு நிலக்கரித் திட்டம், சேலம் எஃகு உருக்காலைத் திட்டம் முதலியவற்றை நிறைவேற்றி வேளாண்மை வளர்ச்சியையும், தொழில் வளர்ச்சியையும் ஏற்படுத்தினார். மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில் தமிழ்நாட்டில் 50 ஆயிரம் டன் உற்பத்தி செய்யும் உருக்காலைகள் உருவாக்கப்பட்டன. தொழிற்பேட்டைகளை அமைக்க 396 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டது. இவற்றில் 3,000 பேர் பணியாற்றத் தொடங்கி னர், கிராமக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் வேளாண்மை வளர்ச்சி அடைந்தது. பல விற்பனைச் சங்கங்களும், 500 சேமிப்புக் கிடங்குகளும் ஏற்பட்டன. காமராசர் காலத்தில்தான் 1958, ஜனவரி 14-ல் தமிழ் ஆட்சி மொழியானது. தமிழ் வளர்ச்சியில் தனி அக்கறைச் செலுத்தப்பட் டது. இவருடைய காலத்தில் முதல் மூன்று ஐந்தாண்டு திட்டங்களில் தமிழ்நாட்டுக்குத்தான் அதிகத் தொகை ஒதுக்கப்பட்டது. 1954-ல் ஏற்பட்ட சமூக நலத்துறை 1961-ல் சமூகநலக் கழகம், மகளிர் நல சமூக மேம்பாட்டுத் துறை ஆகியவற்றுடன் இணைந்து, 'சமூக நலத் துறை ' என்னும் பெயரால் அழைக்கப் பட்டது. இத் துறையின் மூலம், சத்துணவுத் திட்டம் கர்ப்பிணிப் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பெரும்பயன் அளித்தது. உடல் ஊனமுற்றோர், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விதவைகள், அநாதைகள் ஆகியோர் 13 வயதில் இருந்து 30 வயதிற்குட்பட்டவர்களானால், அவர்களுக்குத் தாம்பரம், கடலூர், தஞ்சாவூர் முதலிய இடங்களில் அமைக்கப்பட்ட சேவா இல்லங்களில் மறுவாழ்விற்கான வழிவகை கள் செய்யப்பட்டன. பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்காக 44 தொழிற் பயிற்சி மையங் களும், 7 உற்பத்தி மையங்களும் ஏற்பட்டன. மொத்தத்தில் மகளிர் முன்னேற்றத்திற்காக 12,765 மாதர் நல மன்றங்களேற்பட்டன. இதைப் போலவே, குழந்தைகளைப் பராமரிக்கச் 'சிறார் பராமரிப்பு இல்லங்கள்' சுமார் 747 ஏற்படுத்தப்பட்டன, 1962-63 இல் 'குழந்தைகள் அவசர நிதி உதவித் திட்டம்' ஏற்படுத்தப்பட்டது. இதனால், பள்ளிவயதிற்கு முற்பட்ட குழந்தைகளும், கர்ப்பிணிப் பெண்களும் சத்துணவு முதலியவற்றால் பெரும்பயன் அடைந்தனர். சிறுவர்கள் அறியாப் பருவத்தில் குற்றங்களைப் புரிந்து, குற்ற வாளிகளென அறிவிக்கப்பட்டால், அத்தகைய குழந்தைக் குற்ற வாளிகளைச் சீர்திருத்தி, நல்ல குடிமக்களாகக் கொண்டு வர அவர் களுக்கென சிறுவர் இல்லங்களேற்பட்டன. 1955-ல் தீண்டாமை கொடுங்குற்றமாக்கப்பட்டு, அக்குற்றத் தைச் செய்பவரைத் தண்டிக்க 'வெங்கொடுமைச் சட்டம் ஒன்றை நடுவண் ஆட்சி கொண்டு வந்தது. அதனைக் காமராசர் கடுமையாக நடைமுறைப்படுத்தினார். 1959-ல் இந்து அறநிலையச் சட்டம் திருத்தியமைக்கப் பட்டதோடு, எந்தச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டமுன் வரைவு கொண்டு வரப்பட்டது. ஆனால், அது உச்சநீதிமன்றத்தால் மறுதலிக்கப்பட்டது. 5, எம். பக்தவச்சலம் (2-10-63, 5-3-7) ''முத்த காங்கிரசு உறுப்பினர்கள் பதவி துறந்து கட்சியின் முன்னேற்றத்திற்குப் பாடுபட வேண்டுமென்பது காமராசர் திட்டம்.'' தனது 'காமராசர் திட்டப்படி, "2-10-1963-ல் காமராசர் முத1} மைச்சர் பதவியைத் துறந்து, அகில இந்தியக் காங்கிரசு தலைவரானார். எம். பக்தவச்சலம் இவரிடத்தில் முதலமைச்சராகப் பதவி ஏற்றார். அவருடைய அனமச்சரவையிலும் ஏழு அமைச்சர்களே இருந்தனர். அவர்கள் திருவாட்டி சோதிவெங்கடாசலம், ஆர். வெங்கடராமன், பி, கக்கன், வி. இராமையா, நல்லசேனாபதி, சருக்கரை மன்றாடியார், ஜி. பூபெராகன், எசு. எம். அப்துல் மசீது ஆகியோராவர். மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம் (1961-6) 1966-ல் முடியும் முன்பே காமராசர் பதவி விலகிவிட்டதால், அதனை எம், பக்தவச்சலம்தான் முடித்து வைத்தார். அவர் முதலமைச்சர் ஆனா பின்னும் கல்வித் துறையைத் தன்னிடமே வைத்துக் கொண்டார். காமராசரின் உயிர் மூச்சான் சமதர்ம சமுதாயத்தை அமைக்கும் கோட்பாட்டைத் தானும் ஏற்று அதனைச் செயல்படுத்தத் தீர்மானித்தார். வருமான உச்சவரம்பு இல்லாமல் எல்லா மாணவருக்கும் பள்ளி இறுதி வகுப்பு வரை கட்டணமில்லாமல் இலவசக் கல்வியளித்தார். 1965-ல் முன்னூறு மக்கள் தொகை கொண்ட எல்லாக் கிராமங்களிலும் தொடக்கப் பள்ளிகளைத் தொடங்கினார். காமராசர் காலத்தில் 500 மக்கள் தொகை கொண்ட ஊர்களுக்கொரு பள்ளி இருந்தது குறிப்பிடத்தக் கது. 1966-67-ல் பெண்களுக்கெனத் தொழில்நுட்பப் பள்ளிகளைச் சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் தொடங்கினார். 1965-ற்றி - ல் மொத்தமிருந்த 25 தொழில்நுட்பப் பள்ளிகளில் 2,167 மாணவர்கள் படித்தார்கள். இதே ஆண்டில் சேலத்தில் புதிதாக ஒரு பொறியியல் கல்லூரி தொடங்கப்பட்டது. 1964 - 65 - ல் திருச்சியில் வட்டாரப் பொறியியல் கல்லூரி தொடங்கப்பட்டிருந்தது. எம். பக்தவச்சலம் உண்மையாகவே கல்வி முன்னேற்றத்தில் அக்கறைக் கொண்டவர். தன் காலத்தில் ஒரு மைல் சுற்று வட்டாரத் திற்கு ஒரு பள்ளியை ஏற்படுத்தினார். 1965 - 66 ஆம் கல்வியாண்டில் மட்டும் 8.5 இலட்சம் மாணவர்கள் தொடக்கப் பள்ளிகளில் சேர்ந் துள்ளனார். 4.71[) ஆசிரியர்கள் புதிதாக அமர்த்தப்பட்டனர். கிராமப் புறங்களிலுள்ள ஆசிரியைகளுக்கு 75[] குடியிருப்புகள் கட்டப் பட்டான். ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது 55லிருந்து 53 ஆக உயர்த்தப்பட்டது, அவர்களுக்கு ஊதியத்துடன் அகவிலைப் படியும், குடும்ப ஓய்வு ஊதியமும் அளிக்கப்பட்டன. 1963-64 ஆம் கல்வி பயாண்டில் 5 அரசுக் கடிகாக் கல்லூரிகளிருந்தன. 1965-ல் பொன்னேரி, திருச்சி, தருமபுரி, இராமநாதபுரம், அரியலூர், வேலூர் ஆகிய ஐந்து இடங்களில் அரசுக் கலைக் கல்லுாரிகளேற்பட்டது. ஆறு தனியார் கல்லுாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 1965 341 86-ல் மூன்று புதிய மாலை நேரக் கல்லூரிகளும், 1966-67-ல் மூன்று புதிய மாலை நேரக் கல்லூரிகளும் ஆக மொத்தம் ஆறு மாலை நேரக் கல்லுாரிகள் பக்தவச்சலம் காலத்தில் தொடங்கப்பட்டன. அவர் 6-2-1966 - ல் மதுரைப் பல்கலைக் கழகத்தைத் தொடங்கித் தமிழறிஞர் தெ. பொ. மீனாட்சி சுந்தரத்தைப் பல்கலைக் கழகத் துணை வேந்தராக்கினார். 1965-66-ல் புதிதாகச் செங்கல் பட்டு, திருநெல்வேலி, கோவை ஆகிய இடங்களில் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கிவைத்தார். 196இலேயே செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி தொடங்கப் பெற்றாலும் இவர் காலத்தில் தான் அஃது முழுமை அடைந்தது. 1956-ல் மட்டும் ஓராயிரம் செவிலி யர்கள் பயிற்சியில் சேர்க்கப்பட்டனர். காமராசரின் அடியொற்றிக் கல்விப் பணியாற்றிய பக்தவச்சலம் இந்தியைக் கட்டாயப் பாட மாக்கியதால் வீழ்ந்தார். அவரோடு தமிழ்நாட்டில் காங்கிரசு ஆட்சியும் மறைந்தது. அ) பக்தவச்சலம் ஆட்சியில் - இந்தி எதிர்ப்புப் போரட்டம் (1964) நாடு விடுதலையடைந்தபின், இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்க இந்திய அரசியல் சட்ட நிர்ணய சபை கூடியது. இந்தியா தேசிய உணர்வோடு ஒன்றுபட வேண்டும்; இந்திய மக்கள் ஒன்று பட்டுக் கட்டுண்டிருக்க வேண்டுமென்பதுதான் இச்சபையின் அடிப்படை நோக்கமாகும். இதற்கான மனத்திற் கொண்டுதான் பல்வேறு மொழிகளைப் பேசும் இந்திய மக்களிடையே அனை வருக்கும் பொதுவான ஒரு மொழியை ஆட்சிமொழியாக ஆக்க வேண்டுமென ஆய்ந்த இச்சபை, வழக்காற்றிலுள்ள ஆங்கில மொழியையே ஆட்சிமொழியாக்க முடிவு செய்தது. ஆயினும், ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த நாம் இனியும் அவர்கள் மொழிக்கு அடிமைப்பட்டுக் கிடப்பதாயெனத் தன்மானத்தோடு சிந்தித்து, இந்தியாவில் பெருவாரியான மக்களால் அறியப்படும் இந்தியை ஆட்சிமொழியாக்குவது என்று இச்சபை தீர்மானித்தது. இந்திய அரசியல் சட்டசபையில் இருந்த மொத்த உறுப்பினர் 299 பேரில், காங்கிரசு கட்சியைச் சேர்ந்த 200 பேரும் ஒருமுகமானவர் களல்லர், நேரு தலைமையில் நடந்த இக்கூட்டத்திற்கு 88 காங்கிரசு உறுப்பினர்களே வந்திருந்தனர். காங்கிரசுக் கட்சிக்காரர்கள் அனை வரும் ஒரே கருத்துடன் செயல்பட வேண்டுமென்பதற்கில்லை. சனநாயக முறையில் அவரவர் விருப்பம்போல் செயல்படலாம் என்று நேரு கூறினார். இதனடிப்படையில் வந்திருந்த 88 காங்கிரசு உறுப்பினரில் 44 பேர் இந்திதான் இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்றும், மீதி 44 பேர் ஆங்கிலம்தான் ஆட்சி மொழியாக இருக்கவேண்டும் என்றும் வாக்களித்தனர். ஒருமித்த கருத்து ஏற்படாததால், அடுத்த கூட்டம் நடத்தப்பட்டது. இதில் 154 உறுப்பினர் கலந்து கொண்டனர். இதிலும் 77பேர் இந்திக்கும், 77 பேர் ஆங்கிலத்திற்கும் வாக்களித்தனர். குழுக் கூட்டத்தின் தலைவரா யிருந்த பட்டாபி சீத்தாராமையாவாக்கால் ஒரு வாக்கு அதிகம் பெற்று இந்தி வெற்றி யடைந்தது. இவ்வாறு ஒரு வாக்கு அதிகம் பெற்று இந்தி இந்திய ஆட்சிமொழியானது. பொதுவான ஆட்சிமொழியான இந்தியையும், ஆங்கிலத்தை யும், அவரவர் தாய்மொழியையும் கற்க வேண்டும் என்ற 'மும் மொழித் திட்டம்' உருவானது. இந்தி பேசும் மாநிலங்கள் இந்த மும் மொழித் திட்டத்தை ஏற்க மறுத்தன, இந்தியக் கல்வி அமைச்சரான எம். சி. சுக்லா எதிர்க் கட்சிகளைக் கலந்தாலோசிக்க முனைந்தார். ஆனால், எதிர்கட்சிக்காரர்கள் நீண்ட காலமாக ஆட்சியிலிருக்கும் காங் திரசைக் கவிழ்க்க இதுதான் தக்க சமயமெனக்கொண்டு, இந்திக்கு எதிராகப் போர்க்குரல் எழுப்பிப் பொதுமக்களைத் திரட்டினர். தமிழகத்தில் அறிஞர் அண்ணாவும், தந்தை பெரியாரும் மாணவர் களை இப்போரில் பங்கேற்கச் செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத் தில் 1964 ஆம் ஆண்டு, டிசம்பர் 7ஆம் நாள் இந்தி எதிர்ப்புப் போர்' தொடங்கியது. பல பேருந்துகள் சாம்பலாக்கப்பட்டன: அரசுக்குச் சொந்த மான சொத்துகள் அழிக்கப்பட்டன. காவல்துறை கட்டவிழ்த்து விடப்பட்டது. கண்டவுடன் சுடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது; தமிழ்நாடு முழுவதும் இரத்த ஆறு ஓடியது. இந்நிலையில் தமிழக முதல்வராகயிருந்த எம். பக்தவச்சலம் மும்மொழித் திட்டத்தை மாற்றியமைக்கவும், இந்தியை அகற்றயும் மறந்துவிட்டார். ஆயிரக் கணக்கான மாணவர்கள் அடிபட்டனர்; சிறையிலடைக்கப்பட்டனர். நாடு முழுவதும் கல்விச் சாலைகள் மூடப்பட்டன. இச்சூழலில் இந்தியப் பிரதமராக இலால் பகதூர் சாத்திரி இந்தியக் குடியரசு நாளான 26-1-65ல் இருந்து இந்தி ஆட்சி மொழி யாகச் செயல்படும் என்று அறிவித்தார். மாநிலங்களுக்கிடையே ஆங்கிலம் தொடர்பு மொழியாகவும், அதில் கூறப்படும் வாசகங்கள் இந்தியிலும் செயல்படும் என்றார். இஃது எரிகிற தீயிலே எண்ணெய் பற்றுவதைப் போலாயிற்று. ஆட்சிமொழிச் சட்டத்தைக் கூறும் இந்திய அரசியல் சட்டப் பகுதியைக் கொளுத்தித் தி.மு.க., தனது பெரும் போரைத் தொடங்கி யது. 1965 பிப்ரவரியில் இருந்து தொடர்ந்த இந்தி எதிர்ப்புப் போர் தீவிரமடைந்தது. தி.மு.க. நடுவண் ஆட்சி அலுவலகங்களின் முன் கூடிப் போர்க் குரல் எழுப்பியது. இருபது ஆண்டுகளாக ஏகபோக மாக ஆண்ட காங்கிரசுக் கட்சியின் பெருமை குன்றியது. தன்மானத் தமிழர்களான சி. சுப்பிரமணியமும், ஓ.வி. அளகேசனும் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகினர். -- 'கள் பங்கேற்றில் தமிழ் தஞ்சை ஆகி 3-2-1965-ல் 'தமிழ்நாடு இந்தி எதிர்ப்பு மாணவர் குழு" அமைக்கப்பட்டது. தமிழ்நாட்டிலிருக்கும் அனைத்துக் கல்லூரி மாணவர்களும், அண்டை மாநிலக் கல்லூரிகளிலிருந்த மாணவர் களும் இக்குழுவில் உறுப்பினரானார்கள். சென்னை, தஞ்சை ஆகிய நகரங்களில் மாநாடுகள் நடந்தன. இவற்றில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வந்த மாணவர்கள் பங்கேற்றனர். ஆந்திரம், மைசூர், மேற்கு வங்கம் ஆகிய மாநில மாணவர்களும் பங்கேற்றனர். வரப்போகும் 1967 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் காங்கிரசை முறியடித்து, இந்திக்குச் சமாதி கட்டுவது என்று இம்மாநாடுகளில் முடிவு செய்யப் பட்டது. இவற்றில் பெரும் பங்கேற்ற தி. மு. கழகம் மக்கள் கழகமாக மாறியது. ஆ) 1967 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் காங்கிரசு படுதோல்வி: இந்தியை எதிர்த்து நடந்த கடும்போரில் தமிழர் சிந்திய இரத்தம் தமிழுக்கு உரமானதோடு தி.மு.க.வின் வெற்றிக்கு வழிவகுத்தது. 1967 ஆம் ஆண்டு பிப்பிரவரித் திங்களில் நடந்த பொதுத் தேர்தல் தி.மு.க.வுக்கும் காங்கிரசுக்கும் நடந்த நேரடிப் போட்டித் தேர்தல் ஆகும், 'மக்கள் சக்தியே மகேசன் சக்தி' என்ற தி.மு.க.வின் குரல் மக்களை அவர்கள் பக்கத்தில் இணைத்துக் கொண்டது. இதுவரை காங்கிரசிலிருந்த மூதறிஞர் இராசாசி, அதைவிட்டுப் பிரிந்து 'சுதந்திரா கட்சி யெனத் தொடங்கிக் காங்கிரசுக்குச் சமாதி கட்டுவதென வஞ்சினம் கூறினார். எதிரியை வீழ்த்த, எதிரியின் எதிரியோடு கூட்டுச் சேர வேண்டும் என்ற சாணக்கியத்தை நன்கறிந்த இராசாசி தி.மு.க.வுடன் கூட்டுச் சேர்ந்தார். இந்திய முஸ்லீம் லீக், ஃபார்வர்டு பிளாக், இடதுசாரி பொது உடைமைக் கட்சி, பிரஜா சமதர்மக் கட்சி தமிழரசு கட்சி ஆகிய கட்சிகளும் தி.மு.க.வுடன் கூட்டுச் சேர்ந்தன, இந்த ஏழு கட்சிகளும் ஒரே சுடட்டணியாக நின்று காங்கிரசை எதிர்த்த ன. மக்கள் மத்தியில் காங்கிரசு ஒரு எதேச்சாதிகாரக் கட்சி என்றும், நீண்டநாள் பதவியிலிருப்பதால் சனநாயகத்தையே குழி தோண்டிப் புதைத்துவிட்டது என்றும், மக்களின் உணர்வை அறிய மறுத்து இந்தி யைத் திணித்தது என்றும், உணவும், உடையும் கூட மக்களுக்குப் போதிய அளவு வழங்காமல் விட்டது என்றும், மக்கள் அக்கட்சியின் மீது வெறுப்படையுமாறு கருத்துக்களைப் பரப்பினர். தேர்தலின் முடிவில் 13 இடங்களைத் தி.மு.க. பெற்று அமைச்சரவை அமைத் தது, அதன் கூட்டணிக் கட்சிகள் மொத்தம் 46 இடங்களையே பெற்ற தால் அமைச்சரவையில் அவற்றிற்கு இடமில்லாமல் போயிற்று. ஆண்ட காங்கிரசு கட்சி 49 இடங்களைப் பெற்று எதிர்க்கட்சியானது நாடாளுமன்றத்திற்குத் தி.மு.க. 25 உறுப்பினர்களை அனுப்பியது. அகில இந்திய காங்கிரசுக் கட்சியின் தலைவர் கு. காமராசர் தி.மு.க. மாணவர் அணித்தலைவர் பி, சீனிவாசனால் விருதுநகர் தொகுதியில் தோற்கடிக்கப்பட்டார். முதலமைச்சர் பக்தவச்சலம் திருப்பெரும்புதூர் தொகுதியில் இராசரத்தினம் என்ற தி.மு.க. வேட்பாளரால் தோற்கடிக்கப்பட்டார். தமிழக அமைச்சர்களும், தமிழ்நாட்டில் இருந்து சென்ற நடுவண் அமைச்சர்களும் தோல்விகண்டனர். இவ்வாறு, ஒரு யுகப்பிரளயமே ஏற்பட்ட பின் தி. மு. க. அறிஞர் அண்ணாவின் தலைமையில் ஆட்சியை அமைத்தது. தி.மு.க. பின் வெற்றிக்கும், காங்கிரசின் தோல்விக்கும் காரண, காரியங்களை ஆய்ந்து தேடவேண்டிய அவசியமில்லை, வளர்ந்து வரும் தி.மு.க. வின் வலிமைக்கும், மக்களிடையே அதற்கேற்பட்ட செல்வாக்குக்கும், அறிஞர் அண்ணாவே நடுநாயகமாவாரென்பதைக் காமராசர் அறிந்துதான் 'காமராசர் திட்டம் 'கொணர்ந்தார். அவர் பதவி விலகியதே காங்கிரசு வீழ்ச்சிக்கு முதல் படியாயிற்று. பக்தவச்சலத் தின் உடும்புப்பிடியால் இந்தி திணிக்கப்பட்டதும், அவர் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட பஞ்சமும், அரிசிக்கு 5 அவுன்சு உணவுப் பங்கீட்டு அட்டை கொடுத்ததும் உடனடிக் காரணங்களாகும். தென் னாட்டுச் சாணக்கியர் இராசாசியும், மற்றக் கட்சிகளும் ஓரணியில் நின்று தி.மு.க.வுக்கு ஆதரவாகவும், காங்கிரசுக்கு எதிராகவும் செயல்பட்டதும் ஒரு காரணமாகும். காங்கிரசு கட்சி ஆட்சியின் சாதனைகள்: 1, மகளிர் குழந்தைகள் நல மேம்பாடுகள் 1961-ல் இருந்து சமூகநலம் புதுப்பொலிவுடன் வளரத் தொடங்கியது. மகளிர் மன்றங்கள் 17765 ஆக உயர்ந்தது. இதைப் போலவே குழந்தை இல்லங்களும் பெருகின. 1962 - ல் இந்த இல்லங்களின் எண்ணிக்கை 747 ஆக உயர்ந்தது. 1953-ல் 'இணைக்கப்பட்ட குழந்தைகள் நலத்திட்டம் உருவானது. இதனால் குழந்தைகள் பற்றிய தகவல்களும், பேணிக் காக்கும் திட்டங்களும் உருவாயின. பெண்களின் ஒழுக்க வாழ்வுக்காக 1947-ல் 'பரத்தமை ஒடுக்கும் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுப் பெண்களின் ஒழுக்க நெறி காப்பாற்றப்பட்டது. 1958-ல் இச்சட்டம் திருத்தப் பட்டு நடைமுறைக்கு வந்தது. இதன்படி குற்றவாளிகள் மட்டுமே யன்றி, துணை நிற்பவர்களும் தண்டிக்கப்பட்டனர். இதைப்போலவே, 1947-ல் ஓ. பி. இராமசாமி ரெட்டியார் ஆட்சிக் காலத்தில் தேவதாசி ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதனால் மகளிர் பெருமை மேலும் உயர்ந்தது. பெண்களுக்குப் பெற்றோரின் சொத்தில் உரிமை நல்கும் சட்டமும் இவ்வாண்டு கொண்டு வரப்பட்டது. இதனால், ஒரு குடும்பத்தில் பிறந்த ஆண் மகனுக்கும், பெண் மகளுக்கும் பெற்றோரின் சொத்தில் சம உரிமைமாறு இயகல்வித் திட்ட இந்தியர் - விடுதலைக்குப்பின் தமிழகம் | ஏற்பட்டது. சென்னைத் திருமணச் சட்டம்" வரதட்சணைக் கொடுமை யைத் தடுத்தது. 1953-ல் 'வரதட்சணைத் தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டு, வரதட்சணைக் கொடுப்போர், வாங்குவோர், உடந்தை யாயிருப்போர் ஆகியோரைத் தண்டிக்க வழிவகை செய்தது. 2. கல்வி வளர்ச்சி விடுதலைக்குப்பின் தமிழகத்தில் கல்வி வாழ்க்கைக்கு முழு வதும் பயன்படுமாறு இருக்க வேண்டும் என்ற கருத்து ஏற்பட்டது, இதனடிப்படையில் ஆதாரக்கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி ஏழு ஆண்டுகளுக்குள் இந்தியர் அனைவருக்கும் 'கட்டாயக் கல்வி அளிக்கவேண்டுமென இலக்கு நிர்ணயிக்கப் பட்டது. கட்டாயக் கல்வியைத் தாய்மொழி வாயிலாகவே கற்பிக்க வேண்டும் என்றும், உடலுழைப்பு, மரபுவழித் தொழில் ஆகியவற் றில் மாணவர்களுக்கு ஆர்வமூட்ட வேண்டும் என்றும், இதனால் ஏட்டோடு இல்லாமல் வாழ்க்கையிலும் கல்வியை நேரடியாகப் பயன்படுத்தலாம் என்றும் கூறப்பட்டது. 1946-ல் தொடங்கப் பட்ட இந்த ஆதாரக் கல்வித் திட்டம் வெகுவாக வளர்ந்து ஆதாரப் பள்ளிகள் 1949-ல் 171 ஆகவும், 1963-ல் 4,300 ஆகவும், 1964 - ல் 4, 84 ஆகவும், உயர்ந்தன. 1964- ல் மட்டும் இப்பள்ளிகளில் 5, 22, 3 மாணவர்களும், 3 74,014 மாணவிகளும் பயின்றனர், அரசுக்கு 4,486 கோடி ரூபாய் செலவானது. ஆதாரக் கல்வியை ஆராய 1961-ல் 'அரியநாயகம் குழு' ஏற்பட்டது. அக்குழு தனது அறிக்கையில் ஆதாரக் கல்வியை இனி விரிவாக்கம் செய்தல் கூடாதெனக் கூறியது. 1947-ல் ஏற்படுத்தப் பட்ட 'மாநிலக் கல்வி ஆலோசனை வாரியம்' கூறிய ஆலோசனை களின் படி 500-க்கும் மேற்பட்ட மக்கள் தொகைக் கொண்ட கிராமங் களிலெல்லாம் பள்ளிகள் அமைக்கப்பட்டன. இந்திய அரசியல் சட்டப்படி 14 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு இலவச கட்டாயக் கல்வி அளிக்கப்பட்டது. 195] - ல் 'சென்னை தொடக்கக் கல்விச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. இதன்படி திராட்சி மன்றப் பள்ளிகளுக்கும் அரசு கட்டாய நிதியுதவி அளித்தது. முதலாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் முடிவுக்குள் மாணவர் எண்ணிக்கை 32, 5 விழுக்காடாய் உயர்ந்தது. 1953-ல் இராசாசி 'புதிய தொடக்கக் கல்வித் திட்டம்' ஒன்றைக் கொண்டு வந்து, தொடக்கப் பள்ளி மாணவர்கள் பாதி நேரம் படிப்பு, மீதி நேரம் குலத் தொழில் என்ற முறையை அறிமுகப் படுத்தினார். இதனை வருணாசிரமப்படிக் கொண்டு வரப்பட்டக் கல்வி முறையெனக் கூறி மக்கள் எதிர்த்ததால் இம்முறை கைவிடப் பட்டது. காமராசர் ஆட்சிக்காலத்தைக் 'கல்வி மறுமலர்ச்சிக் காலம்" என்பர். இராசாசியின் புதியத் தொடக்கக்கல்வித் திட்டத்தால் மூடப் தமிழக சுமூகப் பண்பாட்டு வரலாறு பட்ட தொடக்கப் பள்ளிகளைக் காமராசர் திறந்தார், வேலை இழந்த ஆசிரியர்கள் மீண்டும் வேலை பெற்றனர். மேலும் 26 ஆயிரம் பள்ளிகள் புதிதாகத் திறக்கப்பட்டன. 1957-ல் கல்வித் தரம் முன் னேற்றம் பற்றி ஒரு வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட்டது. படித்து வேலை இல்லாத பட்டதாரிகளுக்கு வேலை கொடுக்க வேண்டுமென்பதற்காக 1958-ல் 881 தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டன, 'பள்ளி முன்னேற்ற மாநாடுகள்' பல நடத்திப் பள்ளி முன்னேற்றத்திற்காகப் பொது மக்களிடமிருந்து பணம், பண்டம் முதலியன பெறப்பட்டன. 1964-க்குள் 170 மாநாடுகள் நடத்தி 2513. 36 இலட்சம் ரூபாய் நன்கொடையாகப் பெறப்பட்டது. 1958-ல் கட்டாயக் கல்வித் திட்டம் 'கேர்' எனும் அமெரிக்க உதவியுடன் சிறப்பாக நிறைவேற்றப்பட்டது. 1961-ல் சீருடை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இவ்வாறு, கட்டாயக்கல்வி, மதிய உணவு, சீருடை ஆகிய திட்டங்களால் தொடக்கப் பள்ளிக் கல்வி முழுமையாக முன்னேறியது. 1957-ல் தொடங்கப்பட்ட தொழில்நுட்பக் கல்வி இன்று 54 பொறியியல் கல்லூரிகளுடனும், 132 பயிலகங்களுடனும் விளங்குகிறது. 3. பொருளாதார வளர்ச்சி வேளாண்மை: தமிழகத்தில் 60 விழுக்காடு மக்கள் வேளாண்மையிலும், 40 விழுக்காடு மக்கள் பிற தொழில்களிலும் ஈடுபட்டுள்ளனர். வேளாண்மையில் கரும்பு, பருத்தி, வாழை, மஞ்சள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் போன்ற பயிர் செய்வது இன்று அதிகமாகி வருகின்றன. மக்கள் தொகைக்கேற்ற விளைநிலம் தமிழகத்தில் இல்லை. எனவே 43 விழுக்காட்டினர் வேளாண்மைக் கூலிகளாய் உள்ளனர். முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் வேளாண்மைக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. பல் நீர்ப்பாசன ஏந்துகள் செய்யப் பட்டன. காடுகள் கழனிகளாயின. நவீன முறையில் விவசாயம் செய்யப்பட்டது. 1948 - ல் 'சமீன் ஒழிப்புச் சட்டம்' கொண்டு வரப்பட்டதாலும் 1961-ல் 'நில உச்சவரம்புச் சட்டம் கொண்டு வரப்பட்டதாலும், ஓரளவு உழவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. 1948, 1959 ஆம் ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட 'பண்ணையாள் கூலி நிர்ணயச் சட்டங்கள்' 1952, 1957 ஆம் ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட 'உழவர் நலச் சட்டங்கள் உழவர்களின் பாதுகாப்புக்கும், வேளாண் மையின் மேன்மைக்கும் நற்பயனளித்தன. ஐந்தாண்டுத் திட்டங் களில் வேளாண்மைக்கு முதலிடம் அளித்ததால் முதல், இரண்டு, மூன்று ஆகிய ஐந்தாண்டுத் திட்டங்களின் முடிவில் உணவு உற்பத்தி முறையே 30. 4, 51, 57, 50 இலட்சம் டன்களாக வளர்ந்தன. நவீன கலப்பைகள், உரங்கள், பூச்சிக் கொல்லி விடுதலைக்குப்பின் தமிழகம்1 மருந்துகள் முதலியவற்றால் வேளாண்மையில் உற்பத்தி அதிகமானது. நீர்ப்பாசன ஏந்துகள்: முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் நீர்ப்பாசன வசதிக்காக 12.34. இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. புதிய நீர்ப்பாசன ஏந்துகளால் முதல் முன்று ஐந்தாண்டுத் திட்டக் காலங்களில் முறையே 1.322.09, 2, 5 இலட்சம் ஏக்கர் உபரி நிலங்களில் வேளாண்மை செய்யப்பட்டது. தொழிற்சாலை வளர்ச்சி: தமிழகத்தில் ஏற்பட்ட தொழிற்சாலை வளர்ச்சியைக் கனரகத் தொழிற்சாலை கள் வளர்ச்சி, சிறுரகத் தொழிற்சாலைகள் வளர்ச்சி யென இரு கூறுகளாகப் பிரித்து அறியலாம். பெரம்பூர் இரயில்வே இணைப்புப் பெட்டித் தொழிற்சாலை, திருச்சி கனரக அனல் மின்கருவி உற்பத்திச் சாலை, நெய்வேலிப் பழுப்பு நிலக்கரி வெட்டி யெடுக்கும் கழகம் முதலியன கனரகத் தொழிற்சாலைகளுள் அடங் கும். இவற்றைத் தவிர பல தனியார் தொழிற்சாலைகளும் ஏற்பட்டன. இதனால் தமிழகம் தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே முன்றா வது இடத்தைப் பிடித்தது. திருச்சியில் துப்பாக்கித் தொழிற்சாலை யும், உதகையில் படச்சுருள் தொழிற்சாலையும் பலருக்கு வேலை வாய்ப்பைக் கொடுத்தன. நெசவுத் தொழில், காகிதம், சிமெண்டு. மோட்டார், மோட்டார் உதிரிப் பாகங்கள், இரப்பர், தோல் முதலிய சிறு தொழிற்சாலைகள் பெரும்பாலும் தனியாரால் நடத்தப்படுகின்றன. 1965-ல் இராமநாதபுரம் ஆலங்குளத்தில் 'தமிழகத் தொழில் வளர்ச்சி நிறுவனம் தொடங்கத் திட்டமிடப்பட்டது. 1970 -ல் இங்குச் சிமெண்டு ஆலை தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் 47 தொழில் திட்டங்களைத் தீட்டி 205 கோடி ரூபாய் மூலதனத்தில் உப் நிறுவனங்களைத் தொடங்கியுள்ளது. முதல், இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டக் காலங்களில் முறையே 12 இலட்சம் ரூபாயும், 395 இலட்சம் ரூபாயும் சிறுதொழில் வளர்ச்சிக் கென ஒதுக்கப்பட்டது. இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் கிண்டி, விருதுநகர் மார்த்தாண்டம், நெல்லை, மதுரை, திருச்சி, காட்பாடி, சேலம், அம்பத்தூர் முதலிய இடங்களில் தொழிற்பேட்டை களை உருவாக்க 154 இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. 1956-ல் கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கம் தோன்றி யது. இதற்குத் தனியாக இயக்கமும் ஏற்பட்டது. தமிழகத்தில் மொத்தம் 4. 27 இலட்சம் கைத்தறிகள் உள்ளன. இவற்றில் 3.6 இலட்சம் கைத் தறிகள் 1,400 பிரதான நெசவாளர் கூட்டுறவு அமைப்பின் கீழ் செயல் படுகின்றன. அரசு ஆண்டு ஒன்றுக்கு 500 கோடி ரூபாய் நெசவாளர் முன்னேற்றத்திற்கு ஒதுக்குகிறது. நெசவுத் தொழிலைப் போலவே, குடிசைத் தொழில்களுக்காகக் 'குடிசைத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் '1960-ல் தொடங்கப் பட்டு பல ஆயிரம் கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பளிக்கிறது. வேளாண்மைக்கும், மற்றும் பல தொழில்களுக்கும் வளர்ச்சி யளிப்பது வணிகம் ஆகும். வணிகத்திற்குச் சாலைப் போக்கு வரத்துக்கள் அவசியமாகும். இத்தகைய சாலைப் போக்கு வரத்துக்களை விருத்தி செய்வதற்கே 'தமிழ்நாடு சாலைப் போக்கு வரத்துக் கழகம் ஏற்பட்டது. இன்று 1. 70 இலட்சம் கிலோ மீட்டர்கள் தூரத்திற்குத் தமிழ்நாடு பேருந்துகள் ஓடுகின்றன. தொழிற்சாலைகள், தொழிற்பேட்டைகள் வளர்ச்சியுற்ற போதே, தொழிலாளர் தொகையும் அவர்களின் சிக்கல்களும் அதிகரித் தன. இதனால், அவர்கள் பல தொழிற் சங்கங்களை ஏற்படுத்தினர். இச்சங்கங்களின் மூலம் தங்களுக்கும், முதலாளிக்கும் இடையே தோன்றும் சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ளுவதோடு, தொழிலாளர் மேம்பாடுகளை உயர்த்திக் கொள்ளுகின்றனர். தொழிலாளர் சட்டங் கள், தொழிலாளர் அலுவலர்கள் இவர்களுக்குப் பாதுகாப்பாக உள்ளன. தமிழ்நாட்டில் தொழிற்சங்கங்களின் தந்தையெனப் போற்றப் படுபவர் என். எம். ஜோசி ஆவார். அவரை அடுத்து, சர்க்கரைச் செட்டியார், பி, பி. வாடியா, திரு. வி. க. + எம். சி. இராசா, அந்தோனிப் பிள்ளை போன்றோர் தொழிற்சங்கங்களின் வளர்ச்சிக்கு அரும் பாடுபட்டனர். அகில இந்தியத் தொழிலாளர் ஒன்றியம், அகில இந்தியத் தொழிலாளர் சங்கம் இந்து மஸ்தூர் சபை முதலிய தொழிற்சங்கங்கள் இன்று சட்டப்படி இயங்கி வருபவை ஆகும். ஆ. (தி.மு.க. ஆட்சி 1967 முதல் 1976 வரை) 1. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோற்றமும், வளர்ச்சியும், ஆட்சியைக் கைப்பற்றலும் அ. தேர்தல் களத்தில் தி.மு.க., - வெற்றிவாகை ஆ. 1967 - இல் தி.மு.க. - வெற்றிக்கான காரணங்கள் தி.மு.க. ஆட்சி சி. என். அண்ணாதுரை (1967 - 1959) அ. சென்னை மாகாணத்தை 'தமிழ்நாடு ஆக்குதல்'' ஆ. சுயமரியாதைத் திருமணச்சட்டம் இ. தங்கப்பதக்கம் வழங்குதல் 4. சாமிப்படங்களை அரசு அலுவலகங்களில் இருந்து நீக்குதல் 2. இரா. நெடுஞ்செழியன் (3. 2, 1969 - 10. 02, 1969) 3. மு. கருணாநிதி (1969 - 1971 ; 1971 - 1976) அ. தீண்டாமை ஒழிப்புக்குற்றச்சட்டம் தீவிர அமுலாக்கம் ஆ. சிவில் உரிமைப் பாதுகாப்புச்சட்டம் இ. அர்ச்சகர் சட்ட முன் வரைவு ஈ. ஆதிதிராவிடர் அறங்காவலர் ஆதல் உ. வகுப்பு வரி ஆணை ஊ. சிறீதன திருத்தச் சட்டம் (1968) எ. கருக்கலைப்புச் சட்டம் (1971) தி.மு.க. வின் தோல்விக்குக் காரணங்கள் தி.மு.க. ஆட்சியின் சாதனைகள் 1. கல்வி வளர்ச்சி 2. தொழில் வளர்ச்சி 3. வேளாண்மை வளர்ச்சி ஆ. (தி.மு.க. ஆட்சி 1967 முதல் 1976 வரை) முன்னுரை 1919 ஆம் ஆண்டு அரசியல் சட்டப்படி 1920-ல் நடந்த பொதுத் தேர்தலில் நீதிக்கட்சி வெற்றிப் பெற்று ஆட்சியை அமைத்து 1937- வரை ஆண்டதையும் அதற்குப்பின் ஏற்பட்ட இராசாசியின் 18 மாதக் காங்கிரசு ஆட்சியையும் (1937 - 1939) பின்னர் ஏற்பட்ட காங்கிரசு (1947-1967 வரை) ஆட்சி நிலவியதையும் கண்டோம். 1967-ல் புதிதாகத் தோன்றிய வட்டாரக் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைக் கைப்பற்றி ஆண்டதைக் காண்போம். 1. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோற்றமும், வளர்ச்சியும், ஆட்சியைக் கைப்பற்றலும் திராவிட முன்னேற்றக் கழகம் தாய்க் கழகமான திராவிடக் கழகத்தில் இருந்து பிரிந்து 17-9-1949-ல் தோன்றியது. சமூகக் கழகமாக விளங்கி, 17 ஆண்டுகளில் தமிழக ஆட்சியையே கைப் பற்றி ஆண்டது. இது ஒரு வியத்தகு வளர்ச்சி ஆகும். நீதிக்கட்சியைச் சேலம் மாநாட்டில் 'திராவிடக்கழகம்' எனப் பெயர் மாற்றம் செய்தவர் சி. என். அண்ணாதுரையாவார். அப் பொழுது ஈ.வே. இராமசாமி நாயக்கர் நீதிக்கட்சியில் இருந்தார். 1949 -ல் இருந்து அண்ணாதுரை தனிக்கட்சித் தொடங்கி திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க.) எனப் பெயரிட்டு அதன் பொதுச் செயலாளர் ஆனார். ஆயினும் ஈ.வே. இராமசாமி நாயக்கர் (தந்தை பெரியார், அண்ணாதுரை (அறிஞர் அண்ணா ) இருவருமே சமுதாய இழிவுகளுக்கு இந்துச் சமயமும், சாத்திர, சம்பிரதாயங்களும், இவற்றை மக்களிடையே பரப்பும் பிராமணருமே காரணம் என்றனர். பெரியார் 'கடவுள் இல்லை! இல்லவே இல்லை !" என்றார். உருவவழிபாடு செய்வோரை இழித்துரைத்தார். உருவச்சிலை களை உடைத்தார். தமிழர் தன்மானம் கொள்ள வேண்டும் என்றார்; பொதுவாக கடவுளும் இல்லை, சமயமும் இல்லை என்பதே பெரியாரின் சித்தாந்தமாகும். திராவிட முன்னேற்றக் கழகத்தைத் (தி.மு.க.) தொடங்கியதும் அண்ணா வருணதருமத்தைப் பரப்பும் பிராமணியத்தை வெறுக்கி றேன். ஆனால் தனிப்பட்ட பிராமணனை வெறுக்கவில்லை என்றார். ஆனால் பெரியார், "பாம்பையும், பார்ப்பானையும் கண்டால் பார்ப் பானை முதலில் அடித்துக் கொல்; பிறகு பாம்பை அடி ''யென்றார். பாம்பு கடித்தவுடன் அதன் நஞ்சு குறைந்துவிடும். ஆனால் பார்ப்பன வர்க்கம் இருக்கும்வரை வருணாசிரம நஞ்சு இருக்கும் என்பது பெரியாரின் பட்டாங்கு. பெரியாரின் இந்தப் போக்கினால் பல் பிராமணர்கள் தி. மு. கழகத்தை ஆதரித்தனர். தி. மு. கழக வளர்ச்சிக்குரிய காரணங்கள் அண்ணாவின் நாவண்மையே தி.மு.க. வளர்ச்சியின் முதலீடு ஆகும். அவரைப் பின்பற்றிய அனைவரையும் உடன் பிறந்த 'தம்பிகளே' என்று அழைத்த உடன்பிறந்தார் பாசப்பிணைப்பு மற்றொரு காரணமாகும். இக்கட்சி 'திராவிடக்குடும்பம்" ஆனது. அண்ணா தலைமை ஏற்று ஒரே உடலாகி உயிராகிய அண்ணாவின் கட்டளைப்படி அசைந்தது. தொடங்கிய சிறிது காலத்திற்குள் அதன் உறுப்பினரின் எண்ணிக்கை பல ஆயிரங்கள் ஆயின. 1955 - 5ல் தி.மு.க.வில் 2,50,000 உறுப்பினரும், 1959. 70-ல் 4,00,000 பேரும் உறுப்பினர்களா யிருந்தனர். இதில் இளைஞர்களே அதிகம். இதற்கு முக்கியக் காரணம், அன்றைய அகில இந்திய காங்கிரசு ஆட்சியில் பெரும் பணக்காரர்களும், ஆலை உரிமையாளர்களும், நிலப்பிரபுக் களும் இருந்தனர். சாமன்யருக்கு இடமில்லை . குறிப்பாக இளைஞர் களுக்கு முக்கியத்துவம் கிடையாது. ஆனால் தி.மு.க., வில் அரும்பு மீசைக்கூட்டமே அதிகம். மிட்டா மிராசுதார்களும், பட்டா ஜமீன்தாரர் களும் நிறைந்த காங்கிரசைப் புறக்கணித்து அன்றாடம் காய்ச்சிகள், அரைவயிற்றுக் கஞ்சிக்காரர்கள். ஆனால் கொள்கைத் தூண்கள் தி.மு.க.வில் சேர்ந்தனர். இளைஞர்களின் வேலை யில்லாத் திண்டாட் டமும் மற்றொரு காரணமாகும். 'ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண இளைஞர்கள் தி.மு.க.வில் சேர்ந்தனர். 'ஒன்றே குலம் ஒருவனே தேவன் ' என்பதை நிலை நாட்டச் சேர்ந்தனர். 'இந்திய தேசியம்' என்றக் குரலுக்குப்பதில் 'தமிழ்த்தேசியம்" என்றக் குரலை ஒலித்த்தால் பிராமணரும் தி.மு.க.வில் சேர்ந்தனர். திராவிடப் பண்பாடுகளை விளக்கும் ஏராளமான தமிழ் இலக்கியங் களையும், கலைகளையும், இசை, நடனம், கூத்து முதலியவை களையும் மக்களிடையே மீண்டும் உயிர்ப்பிக்கச் செய்ததால் இந்த 'மறுமலர்ச்சியைக் கண்டு தீந்தேனில் விழுந்த ஈக்கள் போல் மக்கள் தி.மு.க.வில் சேர்ந்த னர். அ) தேர்தல் களத்தில் தி.மு.க., - வெற்றிவாகை சமூகச் சீர்திருத்த இயக்கமாகத் தோன்றிய தி.மு.க. முதலில் தங்களின் கொள்கை, கோட்பாடுகளை ஆதரிக்கும் கட்சிகளுக்குத் தேர்தலில் ஆதரவு திரட்டுவது என்றுதான் முடிவெடுத்தது. பாரளு மன்றம் சென்னைச் சட்ட மன்றம் ஆகியவற்றிற்குப் போட்டியிடும் 15 பேருக்கு ஆதரவாகத் தி.மு.க. நின்றது. இதில் வன்னியர்கள் சார்பில் நின்ற மாணிக்கவேலு நாயக்கர் தி.மு.க. ஆதரவில் வெற்றி பெற்றார். ஆனால், தேர்தலில் பெரியார் காமராசரை ஆதரித்து, தி.மு.க. வை அடியொடு ஒழிக்க வேண்டுமென முழங்கினார். 1957 - தேர்தல் 1956 -ல் திருச்சியில் நடந்த தி.மு.க, மாநாட்டில் கட்சித் தொண்டர்களின் விருப்பத்திற்கேற்பத் தேர்தலில் தி.மு.க. நிற்பது என முடிவாயிற்று. எனவே, 1957ஆம் ஆண்டு நடந்த நாட்டின் இரண்டா வது பொதுத்தேர்தலில் தி.மு.க. முதல்முறையாக நேரடி. யாகத் தேர்தலில் போட் டி யிட்டது. சென்னைச் சட்ட மன்றத்தின் மொத்தத் தொகுதிகள் 205 ஆகும். இதில் காங்கிரசு 201 இடங்களுக்குப் போட்டியிட்டு 151 இடங்களில் வெற்றி பெற்றது. தி.மு.க., 124 இடங் களில் போட்டியிட்டு 15 இடங்களைப் பெற்றது. பாராளுமன்றத்துக்குரிய 41 இடங்களில் 31 இடங்கள் காங்கிரசுக்கும், 2 இடங்கள் சுயேச்சைகளுக்கும் கிடைத்தன, இந்தத் தேர்தலில் காமராசர் வேட்பாளரின் சாதி, செல்வாக்கு. பணம் ஆகியவற்றின் அடிப்படையில் வேட்பாளர்களை நிறுத்தினார். பெரியார் தி.மு.க.வை ஒழிக்கக் கங்கணம் கட்டிப் பச்சைத் தமிழர் காமராசரை ஆதரித்தார்; அண்ணா முன்வைத்த தமிழ்த் தேசிய கோட் பாட்டைப் பிரிவினை வாதமாகக் கருதினார்; இதழ் உலகமே காங்கிரசு கையில் இருந்தது. எனவே, தி.மு.க.வுக்கு எந்த விளம்பரமும் இல்லாமல் இருட்டடிப்பு செய்து விட்டன. இக்காரணங்களால் தி.மு.க. தோற்றது. ஆனாலும், தி.மு.க. 14.6 சதவீதமும் காங்கிரசு 45.3 சதவீதமும் வாக்குகள் பெற்றன. இது தி.மு.க.வுக்கு மக்களிடையே உள்ள செல்வாக்கையும் முயன்றால் முடியும் என்ற நம்பிக்கை யை யும் எடுத்துக் காட்டியது. இந்தத் தேர்தலில் தி.மு.க.விடம் 70,000 ரூபாய் மட்டுமே இருந்தது . இதை வைத்து 15 இடங்களைப் பெற்றது என்பது தொண்டர்களின் உழைப்பால்தான் என்று அண்ணா கூறினார். மலை போன்றக் காங்கிரசை எதிர்த்து ஒரு 'அரசியல்கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றதற்கு விழா எடுத்தார். சென்னை மாநகராட்சித் தேர்தல் சட்டமன்றத் தேர்தலில் 15 இடங்களையே தி.மு.க. பெற்றது. ஆனால், சென்னை மாநகராட்சித் தேர்தலில் 100 இடங்களில் 45 இடங்களைப் பெற்றது, தி.மு.க., ஆதரவுடன் நின்றவர்கள் 37 இடங்களைப் பெற்றனர். இவ்விரண்டு தேர்தலுக்குப்பின் இந்திய கம்யூனிசக் கட்சி (சி.பி.ஐ யுடன் தி.மு.க. இணைந்து போட்டி இடுவதென முடி வெடுத்தது. மூன்றாவது பொதுத்தேர்தல் (1963) 1962-ல் நடந்த இந்தியத்துணைக் கண்டத்தின் மூன்றாவது பொதுத்தேர்தலில் 206 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், 41 நாடாளு மன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் தி.மு.க. தொகுதிகளில் போட்டியிட்டு 50 இடங்களைப் பெற முடிந்தது. காங்கிரசு 193 தொகுதிகளில் போட்டியிட்டு 139 இடங்களைப் பெற்று அமைச்சரவை அமைத்தது. சென்ற தேர்தலில் 15 இடங்களைப் பெற்ற தி.மு.க. இந்த தேர்தலில் 50 இடங்களைப் பெற்றது என்பது முன்னேற்றம் தான் இத் தேர்தலுக்கு முன் 1960-ல் தி.மு.க. வின் தூணாக இருந்த ஈ. வெ. கி. சம்பத்து தி.மு.க. வை விட்டு விலகித் தனியே 1961- இல் ''தமிழ்த் தேசியக் கட்சி' என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கி விட்டார். இந்தத் தேர்தலில் தி.மு.க. 4 இலட்சம் ரூபாய் செலவு செய்தது, ஆனால், இந்தியக் கம்யூனிசக் கட்சி தனியே விலகி விட்டது. இராசாசி காங்கிரசின் மீதுள்ள வெறுப்பால் தி.மு.க.வை ஆதரித்ததால் பிராமணர் களின் வாக்குகள் தி.மு.க.வுக்குக் கிடைத்தன. தி.மு.க.வின் நிறுவனரான அண்ணாவே தன் சொந்த ஊரில் காங்கிரசு வேட்பாளர் நடேச முதலியாரால் தோற்கடிக்கப்பட்டார். ஆனால், நாடாளுமன்ற மேலவைக்கு நியமன உறுப்பினரானார். உள்ளாட்சி மன்றத் தேர்தல்கள் 1964 1962-ல் சட்டமன்ற, நாடாளுமன்ற பொதுத்தேர்தல்கள் நடந்த பின் 1964-ல் உள்ளாட்சி மன்றங்களுக்குத் தேர்தல்கள் நடந்தன. 1964 பிப்பிரவரியில் நடந்த இத்தேர்தலில் 56 நகரமன்றங் களைத் தி.மு.க. கைப்பற்றியது. சென்னை மாநகரத் தேர்தலில் 49 இடங்களைப் பிடித்தது. காங்கிரசுக்கு 40 இடங்களே கிடைத்தன. எனவே, தி.மு.க. சென்னை மாநகர ஆட்சியைக் கைப்பற்றியது. காங்கிரசு எதிர்க்கட்சி வரிசையிலமர்ந்தது. நான்காவது பொதுத்தேர்தல் 196ா தி.மு.க. வெற்றி 1967-ல் தி.மு.க. வின் வயது 18 ஆண்டுகள் ஆகும். ஆனால், காங்கிரசின் வயது 32. எனவே இத்தேர்தல் சிக்கும் 18க்குமிடையே நடந்த போட்டி ஆகும். இத்தேர்தலில் சென்னைச் சட்ட மன்றத்தில் 5] இடங்களைப் பெற்றுக் காங்கிரசு எதிர்கட்சி வரிசையில் அமர்ந்தது. இருபது ஆண்டுகள் (1947-1967) அசைக்க முடியாதபடி ஆட்சிப்பீடத்தில் அமர்ந்திருந்த காங்கிரசு தோற்றது ; காமராசர் 28 வயது நிரம்பிய பி. சீனிவாசன் என்ற மாணவனிடம் தோற்றார். முதல் மைச்சர் எம். பக்தவச்சலமும் தோற்றார். நாடாளும் மன்றத்திற்கு 25 இடங்களில் போட்டியிட்டு 25 இடங்களையும் தி.மு.க. வென்றது. ஆ) 1967-ல் தி.மு.க. வெற்றிக்கான காரணங்கள் : 1962 ஆம் ஆண்டு தேர்தலுக்கும் 1967 ஆம் ஆண்டு தேர்தலுக் கும் இடையிலான ஐந்தாண்டு காலத்தில் தமிழ்நாட்டில் 12.5 சதவீதம் வாக்காளர் அதிகமாயினர். இவர்கள் யாவரும் இளைஞர்கள் நமிழக சமூகப் பண்பாட்டு வரலாறு அண்ணாவின் பேச்சாற்றலில் மயங்கியவர்கள். தி.மு.க. கட்சியின் சித்தாந்தத்தில், நம்பிக்கைக் கொண்டவர்கள், இவர்களுக்குக் காங்கிரசார் செய்த தியாகங்கள் பின்னணிகள் தெரியாது. சில வற்றை அந்தக் கட்சியே இளைய தலைமுறைக்குக் கற்பிக்கவில்லை. மேலும், காங்கிரசுக்காரரிடம் அசைக்கமுடியாத தன்னம்பிக்கை இருந்தது. இதனை இளைஞர்கள் இறுமாப்பு' எனக் கருதினர். ஆனால், தி.மு.க. தொண்டர்கள் எதிர்மாறானவர்கள். மிக, மிகச் சாமன்யரையும் வணங்கி, கெஞ்சிக் கூத்தாடி தங்களின் நிலை களை எடுத்துக் கூறினார்கள். காமராசர் காலத்தில்தான் மலை முகட்டில் இருந்து காங்கிரசு சாமான்யரிடம் வந்தது. ஆனால், அவரே பொங்கி எழும் திராவிட இளைஞர்களையும், அண்ணாவையும் கண்டு பதவி துறந்து விட்டார் . எனவே, மக்கள் வாக்கே மகேசன் வாக்கு ஆகி விட்டது. தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் பேச்சாற்றல் பெற்றிருந்த னர். ஆனால், காங்கிரசுக்காரர்கள் தாங்கள் சாதித்ததைக் கூட எடுத்துச் சொல்லும் ஆற்றல் அற்றவராயிருந்தனர். தி.மு.க.வோடு ஏழு கட்சி கள் ஓரணியில் சேர்ந்தன. தென்னாட்டுச் சாணக்கியர் இராசாசியும் தி.மு.க. வை ஆதரித்தார். காங்கிரசுக்கட்சியின் ஆட்சிமுறையும், தவறுகளுமே அவர் களின் வீழ்ச்சிக்குக் காரணமாயின், குறிப்பாக, உணவுப் பற்றாக் குறையைச் சமாளிக்க முடியாமல் தோற்றது, தேவை இல்லாமல் இந்தி வெறிகொண்டு தமிழர் மீது இந்தியைத் திணித்தது போன்ற வற்றைச் சொல்லலாம். இந்தத் தேர்தல் அறிக்கையில் அண்ணா சோசலிசச் சமதர்மத் திற்கு முகாமை இடம் கொடுத்தார். ஏழை, எளிய மக்கள் தங்களின் ஒளிமயமான எதிர்காலத்தைத் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி யில் அடைந்துவிட்டதாகக் கண்டு ஆடினார்கள், பள்ளு பாடினார்கள். தேர்தல் பணியில் தொண்டர்களை அணிவகுக்கும் முறை, தேர்தல் வேட்டை முதலியவற்றில் புதிய உத்திகளை அண்ணா புகுத்தினார். பல இலட்சம் தொண்டர்களும் ஒரே ஆள் போல் செயல் பட்டனர். இதில் மக்களைக் கவர்ந்த சினிமாக் கலைஞர்களும் - பங்கேற்றனர். தி.மு.க. தமிழன், தமிழ்ப்ப ண்பாடு, நாகரிகம் இவற்றின் பாதுகாப்புக் கூடாரம் என்பதாகத் தமிழர்கள் உணர்ந்தனர். காங்கிரசு எதேச்சாதிகாரம் கொண்ட தில்லியின் முகவர் கூடாரம் என்றனர், பாமரரைச் சுட்டி இழுக்கின்ற பல சொல்லாட்சிகளை அண்ணா தமிழில் உருவாக்கினார், அவை தேர்தல் ஊர்வலத்தில் முழங்கப்பட்ட போது பாமரனும் கவரப்பட்டான். தி.மு.க.வின்பின்னால் சென்றான். இதற்குத் தலைமை தாங்கிய கலைஞர் கருணாநிதி நிறைய தேர்தல் 'நிதியைச் சேகரித்தார். இந்தத் தேர்தலில் தென் சென்னைப் பாராளுமன்றத் தொகுதி யில் இருந்து அண்ணா தேர்ந்தெடுக்கப்பட்டுத் தலைநகர் தில்லிக்குச் சென்றார். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி (6.3.1967-31.1.1976) 1. பேரறிஞர் சி. என். அண்ணாதுரை (5.3.1967-31.1.1969) அ) சென்னை மாகாணத்தைத் தமிழ்நாடு ' ஆக்குதல் விடுதலைக்குப்பின் 1952 1957, 1962, 1967 ஆகிய ஆண்டுகளில் நான்குப் பொதுத்தேர்தல்கள் நடந்தன. ஐந்தாவது பொதுத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது, அறிஞர் சி. என். அண்ணாதுரை முதலமைச்சரானார். ஆனால், அவர் இரண்டு ஆண்டுகளுக்குள் புற்றுநோயால் மரணமடைந்தார். ஆயினும், இக்குறுகிய காலத்தில் அரிய பல் சமுதாயச் சீர்த்திருத்தங் களை அண்ணா செய்துள்ளார். ஆ) சுயமரியாதைத் திருமணச் சட்டம் 1955ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 'இந்துத் திருமணச் சட்டம் என்பதைத் திருத்தி அத்துடன் சில சீர்திருத்தங்களைச் சேர்த்து 'சுயமரியாதைத் திருமணச்சட்டம்' 1967-ல் அண்ணாவால் கொண்டு வரப்பட்டது. இதற்குப் பின்னால் ஒரு வரலாறே அடங்கியுள்ளது. தந்தை பெரியார் 1925ஆம் ஆண்டு 'சுயமரியாதை இயக்கம்' தொடங்கினார். இதில் பிராமணரல்லாதவர் உறுப்பினர் ஆயினர், இதனுடைய முக்கியக் கொள்கை சமுதாயச் சீர்த்திருத்தம் ஆகும். வருணாசிரம தருமப்படி பிராமணர்கள் உயர்ந்தவர் என்ற கோட்பாட் டை இந்த இயக்கம் அடியோடு மறுத்தது; சாதி முறையே வேண்டாம் என்றது, 1938 ஆம் ஆண்டு பெரியார் நீதிக்கட்சியின் தலைவரானதும் சுயமரியாதை இயக்கம் ஒரு போராட்ட முகாமாக மாறியது. 1944-ல் நீதிக்கட்சிக்கு திராவிடர் கழகம்' என்று பெயர் மாற்றம் பெற்ற பின் இது ஒரு அரசியல் கட்சியாகவே மாறிவிட்டது எனலாம். 'தன்னாட் சிக்கு முன் தன்மானம் வேண்டும்' என்றார் பெரியார். சாதிகளற்ற தாகச் சமுதாயம் மாறவேண்டும். சாதியை ஆதரிக்கும் சமயம், கடவுள், புனிதச் செயல்கள், சடங்குகள், சாங்கியம், சம்பிரதாயம், மரபுகள் முதலியன ஒழிய வேண்டும் என்றார். சுருங்கக் கூறின் "சுயமரியாதை இயக்கம் (தன்மான இயக்கம்) என்பது பிராமண ருக்கும், பிராமண வேதங்களுக்கும், புராண இதிகாசங்களுக்கும் எதிரியாக மாறியது. எதையும் பகுத்தறிவு கொண்டு சிந்திக்க வேண்டு மென மக்களைக் கேட்டுக்கொண்டது. மூடப்பழக்க வழக்கங்களை ஒழிக்க வேண்டும் என்றும், உயர்வு தாழ்வு கற்பிக்கும் கடவுள், மதம், ஆகியவற்றை ஒழிக்க வேண்டும் என்றும் கூறியது, எல்லா மனிதரும் சமமானவர்கள், தந்திரம், ர் ப ன் படிக்கப் பொது வானவர் பூ.! என்றெல்லாம் இவ்வியக்கம் கூறியது. பெண்களுக்கு ஆள்களிடமிருந்து விடுத}ை {வண்டும்: திரு, பார் செய்துகொள்வது ஆண், பெண் விருப்பத்தைப் பொறுத்தது. அதில் சாதகம், சாத்திரம், கும்பம், சாத்திரம், சாம்', சம்பிரதா பட: குறுக்கே நிற்கக்கூடாது; திருவாதத்தில் பிராணன் தான் தாலி எடுத்துக் கொடுத்து , -- ரியாது t fந்திரத்தைச் சொல்லி நடத்தி வைக்கக் சகூடாது. மரனரகனும், மனமகளும் இருக்கோம் தத்தால் திருட்டிணம் என்றெல்லாம் தப்பான இடங்கள் பிடறியது. எதற்கும் பிராமணன் தான் நான் குறிக்க பாண்டும் என்ற) -4 14.மை மனப்பான்மையும், பிராமணன் 47. யர்ந்தவன் என்ற தாழ்வு மனப்பான்னை! 12ம் தல்லாம் விருப்பதே தன்யா 5னார் E1ன்றது. இக்கோட்பாடுகளின் அடிப்படையில்தான் 12 -ல் இருந்து! டொரிடார் பிராமணன் இல்லாமல் தன்மானத் திருமணங்களை நடத்தி வந்தார். தன்! thiன இயக்கக் கோட்பாடுகளையும், சுயமரியாதைத் திருஈங் களளயும் பாரியாரின் 'த) யரச ' இதழ் விளம்பரப்படுத்தி 1.து . தான 'சபமாரியாக தத் திருமண Eையம் ஒன்றைப் பெரியார் தொடங்கினார். அதன் மூலம் பலருக்குக் காப்புத் திருமணங்களும் செய்து வந்தார். அதுக்கும், பெண்களுக்குத. 17ன் திருமகனாயே ஒழிய மரிதருக்கும் விலங்கிற்குமோ திருமணம்? அப்படிச் செய்தால் அதுதான் 'சுப்பு திருபானம்' என்பார் பெரியார். 1929-ல் பெரியாரே தலைமை தாங்கு புரோகிதர் இல்லாயாடிப் அருப்புக்கோட்டை வட்டம் சுக்ச1) நத்தம் என்னுடர் 32 ரில் ஒரு திரு மணத்தை நடத்தி 4:31 புத்தார். 1டனடியாக இத்திருமணம் சட்டப் படம். பதிவு செய்யப்பட்டது. (தப்பா 44. பித்தா பாப் தார திசா, பானாங்க. வர்ர இரதப் போரிவே! நடந்தா , 1935-ல் இதற்காகவே ஒரு சங்கம் தொடங்கப்பட்டத' : --அகர்ரப் 'புரோகிதர் உட்ப்புச் சங்கம்' என்: டெ: பயர். இதன் மலம் சுயமரியாதைத் திரு கரங்கள் தொடர்ந்து கி.பி., 1851 -ல் அன்றைய த, பகிப் அரசு ''சாதிக்கேடுகளை தேரழிக்ரும் சட்டம்" என்ற சட்டத்தைக் கொண்டு வந்தது. திரு 42 போன்றவற்றிற்குச் சாதி தனட யாக இருக்கக் கூடாது என்பதற்கே இச்சட்டம் வந்தது. இதனைப் பின்னணயாகக் கொண்டு 1872-si) சிறப்புத் திருமணச் சட்டம் ஒன்றும் கொண்டு வரப்பட்டது. இதன் பட்டி. பேய வந்த எந்த ஓi:""; ஆ றும், ஒர் பெண்ணையும் விருப்பப் !_சட்டத் திரு III:337 செய்து! கொள்ளார். அதற்குச் சாதி தடையாக இருக்காது. அசசட்..த்தாள். சுப்புத் தி], [ணங்கள் கூட்டம்:7) கடந்தேறின. இச்சட். டத்தைச் சிறிது தீர்ருத்தி அமைத்த 1954 - இந்தியப் பார்த்த பன்றத்தில் திருந்திய சட்டம் பெளியிடப்பட்டது. சிறப்புத் திருமணச்சட்டம், இந்து திருமணச்சட்டம் 1 872-ki> <காண்டு வந்த சிறப்புத் திருப்பாணாச் சட்டத்திற்கும், 1951-ல் கொண்டு வரப்பட்ட இந்தத் திருப்ணச் சட்டத்திற்கும் வேறுபாடுகள் உள்ளனர். சிறப்புத் திருப்பாச் சட்டப்படி சாதி, சப்படம், மூலம், கோத்திரம், தாய்பாகம் தலிபாகவனிக்கப்படும். புரோகிதர் கள் இதனை நடத்தி வைப்பார். பேரறிஞர் அண்ணா ? -முதலமைச்சராகனப்புடன் 1957-ல் சுய 4.4 ரியா ஈனதத் தரு பானாச்சட்டம் ( = ப்லது சீர்திருத்தத் திருடா சாச் சட்டம் என்பதைத் தெ trண்டு ஏந்த பரர். இது! திரு. மணச்சட்டக் சுறு:டாடு சளைக் கொண்டதாகும். மண மகனும், மனர் மகளும் 1.IT IT 3: (1) மார்ச் , கோள்களா 6ாய் - 2014 ( 2 113 4* If ாதிரம் மாற்றிக் 'காள்ளலாம். விருப்பப் படித் திருட்ணம் செய்து கொண்டதாக உறுதி அளிக்க வேன்டும். தே தேவ பட்டால் தாயும் சுட்டிக் கொள்ளலாம். இ +37வ எதற்கும் இனடயில் டர் ரோதம் இருக்க பாட்டார். இந்தச் சட்டம் பாடலைக்கு வரவதற்கு, முன்னும் இ) நாரதப் போர்ப் நடந்த அத்தனனத் திருமண சார் கதா, 41 சட்டப்டர் ! செல்லுபடி ஆகும். இன்பத்திறனம் தெய்வீகத்தன்மையானது என்பர். ஆனால் சுயமரியாதைத் திருமணம் 'ல! [க்க ஒப்பந்தம்' என்னுமாறு சிவில் சட்டப்பூச் டி புனர் நிதரது. அன்ர 11 சட்... - மார்சராக இந்த கா, எசு. மாதவன் இதன் சட்ட ரன்கரைகளைக் கொண்டு வந்தார். பொன்னப்ப நாடார். கருத்திருப்ன் தேசிய காங்கிரக்காரர்களின் விளாதத்திற்குப்பின் ஒரு பட்னதாய்ச் சட்டமாக நின்ற பெரியது - இதற்கு 17- 1 -1 #tit- +1 +1:7, யாட்சித் தன்பேரும் ஓப்புதல் அளித்து விட்டார். பெரியாரும், புன்னனாவின் முயற்சியால் பிறரும்,தங்காயின் முயற்சி வெற்றி பெற்றதைக் கண்டு மகிழ்ந்தார். இ. தங்கப்பதக்கம் வழங்கும் திட்டம். ( 1 ஓ57) சுய மரி: தைத் திருமணச் சட்டம் கொண்டு வரும். பாதே அண்ணா 1947 ஆம் ஆண்டு வரவு - செலவுக் கணக்கில் 1 {} ஆசீரம் உ...;பாய் ஒதுக்கினார். ஒரு தாழ்த்தப்பட்ட ஆண் 11ல்லது பெண்ணும் கலப்புத்திருமணம் செய்து கொண்டால் தங்கப்பதக்கம் தருவது எள் பது அவருடயாத் திட்! - 1.பாகும், அதற்கான உத்தரரேம் 2 நடா: ஒதுக்கினார். இத்திட்டம் அண்337 Tற்குப் பிறகு ப் காதரால் கடை, ப்டபிடிக்க பட்ட து. 144 முதல் 1974 வரை இத்திட்டத்தின் கீழ் 4 17 தம்பதிகள் தங்கப்பதக்கப் பெற்றார்கள். சுயமரியாதைத் திருப்பரத்தின் தாக்கம் #141 LE: படாதந் திருமணம் செய்து சுொண் - தம்பதிகளுக்கு -அரசாங்கத்தில் வேனனாய்ப்பு முதஎர்ய சலுகைகளைக் கொடுத் திருக்க வேண்டும். கலப்புத் திருமணம் செய்து கொண்டவரின் வாரிசு தமிழக =:14Aப் பண்பாட்டு நேராக 2:ர் தந்தை சாதி பு! 3:4! மல், தாய்ப் சாதி : 1971ல் மூன்றாவது சாதி!ALAIT:த சங்கர நாத் தடுக்கப்பட்டது. இதனால் 1917-ல் நீதிக்கட் : தோல்வியைக் கவ்வியது!.. சுப் புத்தி சுபராத்தா ! சாதி ஒழி:பும் என்று டி-சசி.பாரு. , --4 கண்ணாா்பும் நினைத்தார்கள். ஆனால், கேது சாதிகள் சதாள்.) சிட்... 31. தட்டச்சப் பிரசாரம் 797 ரல்லாதவரே கலப்புத் தமணத்தை எதிர்த்தனர். பிரா: 8: 3ர்காக் ம் தீண்டாத பாருக் ய் நாரானார் . 11 51 ப்புத் திருமணம் நடந்தது. பிராமணப் பெற்றோர் திருத்தத் 3831001 ரரயப் பேரன், பேத்திகள் சிலுக்காக போடு முன்னேறுவார் பாளென்ரி திகதி3ரப்போர் தங்களின் பெண் ராணத் தாராளமாகத் தாழ்த்தப்ச்.சட்ட. ஆண்களுக்குத் திருமணம் செய்து 431.தனர். 45 1:1;ரா Lணர், 1 த த ரயத்துகள் ஈரற்க சார். 'ரசரான |=pdf Jார்கள் கிரகித்துச் சிதம்161 1 முதலியவற்றைச் செய்யமாட்டார் கர், 7. வே சுயசம் F3 தைத் திருமணம் அன்பர்களிடம் எந்த ஒt, 1.1:47ர் ரத்னாதா I.;ப் பிர... பித்த கபி:11 231கப், தொல்காப் போனால் அதற்கு பித்தகுதான் பிராமணர்க்னக னபேத்துப் புரோகிதம் செய்ய. 217. தீண்டப் | டார் டான்றோரும் பிராரF; 1 : ரோத்கார தத்துத் திரு Li4ம் செயதார்கள். 7. 14, ஃப் // +14->தத் தி3,மணந்தாட் அர: கடல் = 33. பார்க்க , நல் விளம்பரம் கிடைத்தது. குறிப்பிட்டுச் சொல்கிப்போனJ =L ச ய ய ாதைக் கட்சிக்காரர்சார் பட்டி 2, 111 7 1.1 17 ததை தங்கப் பதக்கம் தொண்டு -3 என் நணப்பிப்பதில் 11:11. போன் கப் சு!Luரியாதைத் திருமணம் என்பது பறக்கப்பட்ட 3 வரலாற்றுச் சம்பாரியிட்டது. சாம்' ப .ங்கனள ப ர க க வ க ங்க எல் இ ருந்து நீக்க திண்ணா ! ஆன ராயிட்டதால் இந்துக்கள் மனம் புண்பட்டது. பலன் ஏதும் ஏற்.11. 2013). 5. இரா. நெடுஞ்ச பூன் 3. 2, 19ES-34, ப. 17f9) டாரப் ஈர் அண்ரா 3. . 1 - கடப்பநோயாப் தி ச ரிரளாக் சமாதால் டாக்டர். இரா. நெடுஞ்செழியன் முதல் சு! நமச்சராகப் பொறுப்பேற்றார். எட்டு நாட்கள் வாசல் மச்ச ர -47க இருந்தார் . அ ப ருக்குப் பின் தி. மு. க யீன் மூன்றாவது முதலமைச்ச ராகக் கலைஞர் கருணாநிதி பொறுப்பேற்றார். 3- கருFTHYாநிதி {1. 2. 1863 - நா. 1, 4:1) 1 {}, 3, 17 -- 17 IE, ஈருணாநிதி தHT Lt:ச்சரானார், பள்! முதல் படம் 'காகச் சீர்திருத்தப்சி Eளti , JE Fபம் பாப்.க்கு கடடடங் களையும் செயல்படுத்தினார். Tபது மனிதன் என பப் பார் தன்ர தொடச்சுட டாது என்பதாகும். டயர் ப் எங்கும் இப்பாத இந்தத் தீண்டாய் இந்தியாவில் மட்டும் இருக்கிறது. மக்களாட்சி 12லர்ந்த எல்லாரும் ஓர் எடை என் இக்காலத்திலும் இருக்கிறது, இந்திய அரசியல் சட்டம் பிதி 17 - F் 'எண்--T51Lt. ஓரிச்சுப் ப.சட்டுவிட்டது, தீண்டாமை யின் காரணமாக, ரெற்டாடும் எந்த:ெ7th 14க் குற்றமும் தண்ட. எனக் சரியது' என்கிறது. தீண்டாமை:51:1பக் கடைப்பிடிப்பது சட்டப்ட/டித் தண்டிக்கப்பட வேண்டி யது என்று சாடறும் அப ரசியல் சட்டம் தீண்ட.சா G57க் குற்றங்கள் பாட்டி யவையும் ஒவ்வொன்றுக்கும் படரி : தாடரை சப்&TTடம் பற்றி பிரிக்காவில் 1. 34தாக 37 செகள் ஆரா நடடிர்ரசாயனப் பற்றியும் - பிரிக்காவில்: அ) தீண்டாமை ஒழிப்புக் குற்றச்சட்டம் 1955 எனவே 1955 - ல் நடுவர் சட்டமன்றத்தில் 'தீண்டாம் ஒழிப்புக் குற்றச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்திலும், 'குற்றம் பற்றிய சரியாக பிளக்கமும், 17 வரU: இல்லை. அந்தவகையர் ரற்றங்காநக்குச் சரியான தண்டனைகள்: 11-ம், டசன் என்றய காங்கிரசு சக பட்ச செயல்படுத்தவில்10. தட்ட நாட்டில் தி. (LLY . க. ஆக, டசிக்கு பந்த் மு. கருணாநிதி தனைச்ச ராகம்!... பன்டாராமக் குற்றங் கனளக் கடுபிடித்துத் தண்டனை வழங்கத் தொடங்கியது! - ஆசிவில் சரிமைப் பாதுகாப்புச் சட்டம் 1973 4.in{கே டி.பபப்பட்ட தீண்டாய் ஒழிப்புக் குற்றச்சட்டத்தில் ப10) மாற்றங்களைச் செய்து 'சிவில் சரபப ட. துகாப்புச் சட்டம் " என் ) E_F1பரில் சட்டம் சொண்டு ! 1.படட்டது, தீண்டாமை: 'தாடர்பான எத்,23,431கயக் குற்றங்களும் சட்டப்படி 15 ந LIGாரா 3-51! 47ாறும் எக்கார 337 > காட்டி யும் ,ரத்தினின்று தப்பிக்க முடியாது என்றும் இச்சட்டம் - 1 - இச்சட்டத்தைக் தானாகர் 122 நம்பரில் இருந்து செயல் படுத்தினார். இச்சட்டப்படி, திண்ட'யைக் குற்றம், சிறைத் தண்டனைக்கும், அட சாதம் செலுத்தக் கூடாது. யது! 17 :தற்றமானதாக,ம். இதில் தந்த என் பெரும் எத்தகையக் காரணம் காட்டி யும். தப்பிக்க முடி யாது. தீண்டாமையைப் பற்றிப் பேசினாலோ அல்து அது பற்றி பிரசாரம் செய்தாலோ, சரவ்ல! சாறு சாப்பவருக்கும், அல்லது செய்யும் குழு *1பிற்கும் திரட்டுமொத்தமாகத் தட.. தசரா டெண்டு. மாநில அரசா, இத்தகைய பொக்கில் பாதிக்கப்பட்ட தண்டப் படாதவர்களுக்காக வழக்கறிஞர்கள் அமர்த்தி அரசே நிபழக்க தடத்த உதவ வேண்டும். இதற்காசி: மன்றங்களை ஏற்படுத்தலாம். ப [ க்கு விசாரணையில் உதவிடத் தனிக்குழுக்களையும், அரசு =41): 1577 க்க பாப்: இக்குழு தீண்டாமைக் குற்றங்கள் நிகழும் . பகுதிகளைக் குறிப் பிட்டு, முன் எச்சரிக்கையாக அவை நிகழாமல் தடுக்க யோசனைகள் கூறலாம். கலைஞர் ஆட்சியில் மாநில, மாவட்ட , வட்ட நிலைகளில் ஆதி திராவிடர் நலம் காக்கும் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. இவை சிவில் உரிமைச்சட்டக் கூறுபாடுகளைப் பாதுகாத்தன. ஒவ்வொரு வட்டத்தி லும் ஆதிதிராவிட வட்ட ஆட்சியாளர்கள் நியமிக்கப்பட்டனர். குழுக் களில் இந்த ஆதிதிராவிட ஆட்சியாளர்களும் பஞ்சாயத்து ஒன்றிய ஆணையாளரும், மாவட்டத் துணைக் காவல் துறை அதிகாரியும், நல அதிகாரியும் உறுப்பினராயிருப்பர். இதைப் போலவே மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியாளரும், மாவட்டக் காவல்துறை கண் காணிப்பாளரும், பிறரும் இருப்பர். 1972-ல் ஒவ்வொரு மாவட்டத்திலும் பறக்கும் காவல்படை அமைக்கப்பட்டுத் தீண்டாமைக் குற்றங்கள் நடவாதவாறு கண்காணித்தது. இத்தகையப் பறக்கும் காவல்படை கோவை, திருநெல்வேலி, திருச்சி, மதுரை, தஞ்சை, தென் ஆற்காடு ஆகிய மாவட்டங்களில் முதலில் அமைக்கப்பட்டன. சிவில் உரிமைப் பாதுகாப்புச் சட்டத்தின்படி 1975 ஆம் ஆண்டு முடிய தீண்டாமைக் குற்றங்கள் 3,642 நடந்ததாகப் பதிவாகி உள்ளன. இவற்றில் 2,441 குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். 532 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்தியாவிலேயே சிவில் உரிமைச்சட்டத்தைச் செயல் படுத்திக் கண்டிப்பாக நடத்திய பெருமை தமிழ்நாட்டிற்கே உண்டு. தங்கப் பதக்கம் வழங்குதல், 'அரிசன வாரம் கொண்டாடுதல், 'சம்பந்தி போசனம்', ஜனவரி 30 ஆம் நாள் தியாகிகள் தினம் கொண்டாடு தல். அதில் 'தீண்டாமையைக் கடைப்பிடிப்பதில்லை' என்று உறுதி எடுத்தல் முதலியன செயல்படுத்தப்பட்டன. ஆயினும், தமிழகத்தில் தீண்டாமை ஒழியவில்லை. சிவில் உரிமைச் சட்டத்தையே நீக்கும் படி குறிப்பிட்ட இனத்தார் போராட்டம் செய்து வருகின்றனர், அர்ச்சகர் சட்ட முன்வரைவு கோயில்களில் பூசை செய்வோரை அர்ச்சகர், பூசாரிகள், குருக்கள் முதலிய பெயர்களால் அழைப்பார்கள். இவர்கள் மந்திரங் களை ஓதியும் கோயில்களிலுள்ள திருவுருவங்களுக்கு முன் நின்று பூசை செய்பவர்கள். கலைஞர் 10. 2. 1969-ல் முதலமைச்சரான வுடன் தீண்டாமை ஒழிப்புக்கு ஒருபடியாக கோயில் பூசாரிகள் பணிக்கு எல்லா சாதியாரையும் அமர்த்தினால் வழி ஏற்படும் என நினைத்தார். கிறித்துவ தேவாலயங்களில் பூசாரிகளாவதற்குத் தகுதி யுடையவர்கள் எந்தச் சாதியராயினும் அதற்குரிய தேர்வுகளில் தேற வேண்டும். இப்படித்தான் சாதி வேறுபாடின்றி இந்துக்கோயில்களில் விடுதலைக்குப்பின் தமிழகம் || பூசை விதி முறைகளைக் கற்றுத் தேறிய எவரும் பூசாரி ( அர்ச்சகர்) ஆகலாமெனக் கூறினார். ஆனால், இந்துக் கோயில்களில் அர்ச்சகராக உள்ள எல்லோருமே பிராமணராக இருக்க வேண்டும் என்ற மரபுவிதியுள்ளது. இதன்னை மாற்றிப் பூசை விதிளைக் கற்றுத் தேறிய எந்தச் சாதிக்காரரும் அர்ச்சகராகலாம் என்று முன்வரைவைக் கொண்டு வந்தார். இந்தச் சட்ட முன்வரைவைச் சட்டமன்றத்தின் முன் வைப்பதற்கு முன் 'இந்துச் சமய அறநிலைய அறக்கட்டளைச் சட்டத்தைத் திருத்த வேண்டும். இச்சட்டம் 1959-ல் தமிழ்நாடு சட்டம் 22 என நிறைவேற்றப்பட்டது. இதில் 55, 56 ஆகிய விதிகள் உள்ளன. விதி - 55-இன் படி இந்துச் சமய அறநிலைய அறக்கட்டளைப் படி இயங்கும் நிலையங்களிலுள்ள பணிகள் வாழையடி வாழை யாக வருபவை. அவ்வாறு இல்லாமல் வேறு ஆளை நியமிக்க வேண்டுமானால் அப்பணியை அறங்காவலர்களே நிரப்ப வேண்டும். அரசாங்கம் தலையிடக்கூடாது என்பது விதி ஆகும். விதி 56-ல் அர்ச்சகர் பதவி என்பது தகப்பனுக்குப்பின் மகன் என்ற வாழையடி வாழையாக வரக்கூடிய ஒன்று என்பது இதன்படி, உறுதி ஆகிறது. அப்படியே வாரிசு இல்லாவிட்டாலும், தகுதியுடைய வாரிசை நியமிப்பது அறங்காவலர் பொறுப்பு ஆகும். தவறு நடந்தாலும் இந்து சமய அறநிலையத்துறை துணை ஆகரணயரிடம் முறை யிட்டுச் சரிப்படுத்த வேண்டுமென்பதும் விதி ஆகும். இவ்வாறு, 1959 ஆம் ஆண்டு சட்டத்திலுள்ள 55-விதி அர்ச்சகர் பதவி மரபுப்படி வாரிசுகளுக்கே சொந்தமானது என்று திட்டவட்ட மாகக் கூறுகிறது. கோயில் நிருவாகத்தில் தவறுகள் நடந்தாலும் அவற்றை அறங்காவலர்கள், ஆணையர் மூலமே தீர்த்துக் கொள்ள வேண்டுமென விதி 56 கூறுகிறது. எனவே அரசு தலையிட உரிமை இல்லை என்பது தெளிவாகிறது. இதனால் எந்தச் சாதியாரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டமுன் வரைவுக்கு முன்னால் இந்த 1959 ஆம் ஆண்டுச் சட்டத்தின் வீதி 55, விதி 56 ஆகியவற்றைத் தகுந்தபடி திருத்த வேண்டும் அல்லது அவற்றை நீக்க வேண்டும். எனவே இந்துச் சமய அறநிலைய அறக்கட்டளைச் சட்டத்தை (சட்டம் 22, 1959) திருத்தும் பணியில் தி.மு.க. ஆட்சி முற்பட்டது. அதற்காகச் சட்டமுன் வரைவு 1970-ல் {பில் நெ. 15/1970) கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டமுன் வரைவு சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தும் போது கலைஞர்இதன் நோக்கமே 'ஆண்டவன் முன் அனைவரும் சமம்' என்பதற்காகவே இஃது கொண்டு வரப்படுப்படுகிறது என்றார். இதற்கு முன் கோயில் களைத் திறந்துவிட்டதால் தீண்டாமையின் தாக்கம் குறைந்தது என்றும், அர்ச்சகராக ஆதிதிராவிடர்களும் வந்தால் ஆண்டவன் முன்னால் தீண்டாமை சாம்பலாகிப்போகும் என்றும் கூறினார், G.க. வி. சுப்பையன் என்ற 2 -ப்பினார் 3>5:24 )) தcைt 4517.யாக பெரும் கிராம் பணக்காரர் வக்ர ய Lifற்றக் :: 1- 1 தென்று உச்சநீதி மன்றத் தீர்ப்பு :பக் கூறி, அர்ச்சகர் வேல் 60 யும் அப்பு! டி. : .சட்ட..துதான் என்றார். ஆ, நான் இந்தி 44.1 அரசியல் சட்டம். 162 - 1) சாதி, சனம், மதம், பால், பாரட், சிறப்பிடம் தன் படபர்ன் டேரில் வேறு 1.1 டு காட்டன் பா..டாது என்றுள்ளதால் பிராட்ட்னாச் சாதி பட்டும் அர்ச்சகராகலாம். பிற சாதி அர்ச்சகராகத், தசதியற்றவர்களா 57 - T.பத்து! சட்...ட்ட 14 தங்கராதம் இன பாதிக்கப்பட்டது. 1 ? . ல் அரசால் 'பு. சயிக்கப்பட்ட 'இளைய பெருமாள் குழு.' அறிக்கை கடல் ஆதிதிராவிடர் சளை அர்ச்சகராக்க வேன்டும் 1737ச் சிபாரிசு. 'சய்யப்பட்டுள்ளதையும் உறுப்பினர்கள் சட்டிக்காட்டினர். 5 நாள், --கங்கள், பத்திரங்களைப் பாராயணம் செய்தல், திருபாச கத்திகம் கதர்ச்சி பெற்றிருத்தல் ஆகிய தத்திகரள உடையவர் எவராக 28ம் அர்ச்சகரா.: 117மெளா அதன் அடிப்படையில் இந்துச் சமய அற நிலையச் சட்டவிதிகள் 55, ஆகியவற்றைத் திருத்தி அர்ச்சகர் சட்ட-பன்வாரின்பேக் 'காண்டு வரலாயெனத் தீர்மானச்ச-படட்ட-தா. [ரசுக் கழகத் 3.43 517 vர் பி , டொ , சிவ ஞான பம்: 'இந்தச் சட்டபூர் நரராயக் கொண்டு புகுபதில் இருந்து தி.மு.க. கடன் மறுப்பு சர். கட்சி அல்ல என்பது உறுதிப் பாடத்திட்டது' என்றார். ''த,514) இடம் : 44711தானம் ! பாரச் சென்றும் அடிபட்ட 23. சி# 24 ஆதிதிராவிடர்கள் இதனால் டெ !வர்'' என்று என். இரசாங்கம் கூறினார். அர்ச்சகர் ... ஆதிதிராஃபி..எருக்கம் இ. இதுக்கீடு வேண்டு4 Ts-37 இந்தியக் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த கே. Li, ii). LE கனி வேண்டுகோள் விடுத்தார். மேலும் பல பார்த்தேன். 2:17:5 கருக்கு திதிரா'.." உத்சாரிகளிருப்பாதம்.ம்: அவர் சட்டக் காட்டி எரார். 1ார், 1/31 1 1. இந்துவாக இருப்பாரும், இந்துக் கடவுளிடம் நப்டரிக்கை , பனட ட. பருப்பு ராச்சகராக வருவதால் எதிர் : 13.4 இடப்பா E] 77 5144 யானதாகக் கூர்ச் சட்., முன்வரF116 ஏராக்கெ 7 4:15ண்டது. வே, இந்துச் சம 1 அறநிலை-1 * சட்டத்தி!ETTEளர விதிகள் 53, 5 ஆகியன! தகுந்த 44 411, திருத்தப்பட்டு, 3. 11. 1971 - இல் 1971) அம் - ஆண்டு தமிழ்நாடு இது ச் சமய' s 74 7151) ப றக்கட்டா : சட்டத் திருத்தம் என்று 43. எண்டு கப் பட்டது. ஆளுநரும் ஏற்றுக் மாண்டார். பின்னர் அரசிதழில் பாரிய[டட்டாட்டது. 'கடவுள் இல்க்காக! " என்ற தந்த பெரியார் பிராபானுக்குச் சட்டமாக அள்விலக்கும் அர்ச்சகராவதால் இதனை ஏற்றுக் கொண்டார். த' ல் மந்திரங்களைச் சால் = அர்ச்-2 கான செக் படக் எமொத் கூறப்பட்டது. பின் பஞர், தேர்தல் அறிக்கையில் கூறியபடி- அர்ச்சகர் சட்டத்தை அடக்கும் பூப் 41 1சியல் வெற்றி பெற்று விட்டதாக, Lழத்தார். ஆனால் பிரானா ர்ச்சகர்கள் தங்களின் மரபு வழி உரிமை பறிபோய்விட்டதாக ஆகமங்களை மேற்கோள் காட்டி உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அரசாங்கம். சமய உரிமைக்கான -அரசியல் சட்டத்தில் அளிக்கப்பட்ட அடிப்படை டா if}னாயட்! பறிட்டதாகுமெனக் கூர்னர். இதனடிப்படையில் அர்ச்சகரை மாபுக்கு மாறாக நியமிக்கக் கூடாதென உச்சநீதிமன்றத் தீர்ப்புக் கூறிவிட்டது. தி.மு.க. ஆட்சி எடுத்த அத்தனை முயற்சிகளும் உச்ச நீதிமன்ற ஒரு துளி பேனா மையால் நிராகரிக்கப்பட்டுவிட்டடது!. ஈ) ஆதி திராவிடர் கோயில் அறங்காவலர் ஆதல் 1972 அ,4ம் ஆண்டு இந்துச் சமய அறநி£ைLC யச் சீர்த்திருத்தம் சட்டம் சட்டம் எண் 29, 19731 சு 31.ஞா ஆட்சியின் நிறைவேற்றப் டாட்டது! - இதன்டசிபு. ஆதிதிராகரி.. குட்டைப் 1. சேர்ந்தவர்கள் அ;T) : க1 vizhiர்கா:க நியமனம் செய்யபப்டட்டதாக 'இந்து' இதழ் கூறுகிறது அன்றைய --34 நில்ய க 31 சச்சராக இருந்த + - கன்னாப்டரன் ! - ரய் _ 611 அரங்க, T11 E0ர் / க ர நீக்க ட்படுவதாகக் கூறினார். இந்துக்கள் அல்ல - தவர்களுக்க, 1. இந்துக்கோட்டிகளில் து37 LA வழிவகுப்பதாகவும் சு. ரீனார். உ) வகுப்புவாரிப் படிநிகராளியம் பிற்பட்டோர்) தி.மு.க. கட்சிக்காலத்தில் 13 தட்டவாரியம் ; ' 1. படகராசாரியர் 47ன் பாடப்பட்டோர் பாட்டி நிகர rs1f1 என்பதையே குறிக்கும், 'பி படபட சார் என் +. 11: இசை ரி ராம். குத்தது. பின்னர் --அரசு? பபரரிகளில் அதிகரிக்காதவர்களையும் குறித்தது. 1951-ஆம் -சந்டண்டு ட. சக்டர்.சி. - . -கரம்பேத்கர் 1ய்தல் அரசியல் சட்டத்திருத்தம், செய்த பின் துயர் ''ச1முதாய அந்தஸ்த்திலும், சங்கபியிலும் பிற்பட்ட 14 ர்கள் " 7 [சார், க." = பட 4 பக்கில் இவர்களுக் சக். 41 kisu , pம். அரசுப் டாப்பிலும் சமூகஈக தந்ததால் மேலும் மேலும் முன்னேறினார் கள். இதைக்கண்ட 4 பேரும் பிற்பட்டோர் பட்டம் பாலி = சேர்ந்தனர். இந்த னால் 1.4 15 -> 113 சாதிகளாக இருந்த பிற்பட்ட வகுப்டரில் #1- ல் 120 4412ம். 1921 - 15 ஆ, சுவும் 1951-ல் 154 ஆகவும் சாதி கள் சுப்புட்டா , 1955-ல் நடுபண் அரசு பிற்பட்டோர் ஆணைக். சு பொசுன்77 நீ ! கனம் செய்தது. சென்7753 / னாடகத், தில் 15 சாதிகள் பிற்பட்ட வகுப்பில் இருப்பதாகக் கண்டறிந்தது. அதாவது டொத்த தமக்கள் தொகையில் 70 விழுக்காடு பிற்பட்டோர் என அறியப்பட்டது. 1963 - ல் தமிழக அரசு 21) சாதிசாளாப் சிற்பம் டோர் பட்டியலில் சேர்த்தது. இதில் ஆதிதிராவிட வகுப்பில் இருந்து கிறித்துவம் தழுவியவா ரயும், இவ்வாறே) தீண்டப்படாத வகுப்பில் இருந்து இசுலாம் தழுவிய பென: ரயும் சேர்த்துக் கணக்கிட்டது. இதனாகப் பிற்பட்ட வகுப்பில் சாதிகளின் எண்ணிக்கையும் மக்கள் தொகையும் கூடிவிட்டது. வகுப்புவாரிப்படிநிகராளித்துவப்படி பிற்படுத்தப்பட்டோருக்கு 32% ஒதுக்கப்பட்டுக் கல்வி நிலையங் களிலும் அரசுப்பணிகளிலும் இடங்கள் ஒதுக்கப்பட்டன. 'பிற்பட் டோர் நலத்துறை என்பதைத் தனியாகவே பிரித்து அதற்குத் தனி அமைச்சரவையும் கலைஞர் ஏற்படுத்தினார். அவ்வாறு பிற்பட்ட நலத்துறையின் முதல் அமைச்சரானவர் என். வி. நடராசன் ஆவார். புரட்சித்தலைவர் எம். ஜி. ராமச்சந்திரன் முதல்வராயிருந்த போது மேலும் பல சாதிகள் பிற்பட்டோர் வகுப்பில் சேர்ந்துள்ளதால் இடஒதுக்கீடு 32 விழுக்காட்டில் இருந்து 50 விழுக்காடாகவே இருந்தது. இது அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்ட சதவீதமாகும். 1971-ல் கலைஞர் ஆட்சியின் போது ஏ. என். சட்டநாதன் தலைமையில் ஒரு பிற்பட்டோர் ஆணைக்குழு அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகளின் பேரில் பிற்பட்ட வகுப்பாருக்கு மேலும் பல நன்மைகள் செய்யப்பட்டன. (ஊ) சிறீதன திருத்தச் சட்டம் (1968) தி.மு.க. ஆட்சிக்கு வந்த அடுத்த ஆண்டே அறிஞர் அண்ணா முதல்வராய் இருந்த போதே மணமான பெண்கள் சிறீதனக் கொடுமையால் படும் துன்பங்களைக் கண்டு 1961-ல் கொண்டு வரப்பட்ட சீறிதனத்தடுப்புச்சட்டம் திருத்தப்பட்டது. இச்சட்டத்தின் படி மணமகன் அல்லது மணமகள் பெற்றோர் அல்லது பாதுகாவலர் அல்லது உறவினரிடமிருந்து நேரடியாகவோ அல்லது மறைமுக மாகவோ சிறீதனம் அல்லது வரதட்சணை வாங்கினால் அவர்கள் ஆறு மாதம் முதல் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனைப் பெறுவார்கள், இச்சட்ட விதி 3-ன்படி வரதட்சணை வாங்குவதும் கேட்பதும் குற்றமாகும். ஏற்கனவே இந்தியக் குற்றவியல் சட்டம் விதி 498-ன்படி வரதட்சணைக் கேட்டு ஒரு பெண்ணைக் கொடுமைப் படுத்தினால் தண்டனை உண்டு என்றுள்ளது. இதற்காக மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், அபராதமும் உண்டு. 1973 ஆம் ஆண்டு சட்டப்படி அரசுப் பணியாளர்கள் வரதட்சணைக் கேட்டால் தண்டனை அளிக்கப்பட்டது. குற்றவியல் சட்டம் விதி 174-ல் 3 - இன்படி ஒரு பெண் திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் வரதட்சணைக் கொடுமையால் இறந்தாலும் அவள் சாவுக்கு எவர் காரணமானாலும் அவர்கள் தண்டணைக்குள்ளாவர்கள். (எ) கருக்கலைப்புச் சட்டம் 1971 கருக்கலைப்பது கொலைக்குற்றத்திற்குச் சமமாகும் என்று தண்டனைச் சட்டம் இருந்தது. இதனால் உடல்நலம், குடும்பநலம் விந்தாக்குப்பின் தமிழகப் 11 இதுபற்றிற்காகக், டி.டக் கருக்கலைக்க முடியாமல் ஏற்பட்ட சங்கடங் சுளுக்குத் தீர்வு காணா தி.மு.க. ஆட்சியரில் 1871 - ல் சுருக்க61) டப்பது சட்டப்படிச் செல்லுபடியாக்கப்பட்டது. இதைச் சரியான ட ச சிற்சி பெற்ற மருத்துவரிடம் செய்து கொள்ள வேண்டும். தி.மு.க. தோல்விக்குக் காரணங்கள் (1976) 1967-ல் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த தி.13.சு. 1971-ல் நடந்த தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது, கலைஞர் கருணாநிதி 1, 2, 18 முதல் 31. 1. 1976 வரை மூன்று முறை தமிழரசு முதல்வராக இருந்தார். திராவிடப் பாரம்பரிய ஆட்சி யெனும் நீதிக் கட்சி ஆட்சி 17. 2. 14 ) [] - ல் தொடங்கியது. அந்தப் பாரம்பரியத்தில் தான் வந்ததாகக் கூறும் கர ப்ஞர் முன்]; முறை) முதல்வராக இருந்தார். ஆகவே தமிழகத்தின் ஈழச்சியோ, பிரச்சி யோ, காங்கிரசுக்குப் பின் வந்த ஆண்டுகளில் இவரையே சேரும். இதழ் 71.ப், பேச்சாளர் பணியை, பண வலி ஆகியவற்றுடன் திகழ்ந்த இக்கட்சி' சின மாடல்பூரம் கொண்டிருந்தது. ஆடு,யிலும், 1977 கால் நடந்த தேர்தலில் தோற்றது என்ன்? பரம்! 6ாகக் கூறப்படும் காரணம் இதழ், பிரசாரம் பெற்றால் கவரப்பட்ட மக்கள் எம்.ஜி.ஆர் பக்கம் திரும்பிவிட்டனர். இதனால் அவர் தொடங்கிய அண்ணா திராவிட மன்ன ற்றக் கழகம் அவர்களை ஈர்த்தது. எனவே 'தி - {1.க தோற்று: அ.தி.மு.க. வெற்றி பெற்றது' என்பது பிடர்துவான கருத் தாகும். இதனையே காமராசர் 'சீரியாக் கவர்ச்சி " என்றார். ( பிராண எதிர்ப்பு முதலியன வைதீக இந்துக்களை வெறுப்படையச் செய்த தால் தி.பூ.க. தோற்றது என்றனர் அவர். 'புதியகள் 24ஆத்தும், டகயன சுழிதலும் கழுவல்' என்ற படியே தி. க. 45. தோற்று அ தி மு.க. வென்றது என்பதுதான் வரலாற்று உராய, தி.மு.க., ஆட்சியின் சாதனைகள் திராவிட முன்னேற்றக் கழகம் -ஆண்ட 17 முதல் 127 143ர பிலாக்கா காக்கட்டத்தில் ஏற்படுத்திய மாறுதல்களையே 'சாதனைகள் என்கிறோம், இச்சாதனனகள்ஓரளவு அக்கட்சிதனது 'தேர்தல் உறுதி மொழிகளில் பயவற்றைச் சாதித்துள்ளதால்' அறிகிறோம். 25.2.1987 - 13 சட்டமன்றத்தில் பேசிய கன1157ர் சுரணாநிதி, எனக்கென்று சாதிப்பதாம் கிடையாது , மிக மிகப் பின்னடைந்த சமுதாயத்தைச் சார்ந்தவன்; எனக்கென்று குடும்பப் பாரம்பரியம் பிட, பாதா: ரான் 4, சுதூர், திவான்பகதூரர் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்று கூறும் படம் நTLE Gாக்க் கல்லை கல்லூரிப் பட்டம் எனக்கில்லை ; நான் புகுந்ததெப்போம் ஈரோட்டுப் பள்ளியும் கார்சிக் கல்லுாரியும் A கும்" என்றார், ''என்', தி.gr/.க. ஆட்ச ன்,ப், எளிய மருத்தரவர்க்கத்துக்காகப் பாடுபடும் பகுத்தறிவாளர் கட்சி, ஆதலால் சமுதாய மறுமலர்ச்சிக்கும், சல்வி, பொருளாதார வளர்ச்சிக்கும் டபாடு..டும்'' என்றார், 1. கல்வி வளர்ச்சி விடுதலைக்குப்பின் 20 ஆண்டுகள் தொடர்ந்து ஆண்ட் காங்கிரசு ஆட்சியில் 100-க்கு 10பேர்களே படித்தவர் இருந்தனர், தி.மு.க ஆட்சியில் தொடக்கப்பள்ளிகளின் எண்ணிக்கை 32,632 ஆக உயர்ந்தது; உயர்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை 2,572 ஆக உயர்ந்தது. 1970 - 71இல் கல்லூரிகளின் எண்ணிக்கை 11 ஆனது ஆசிரியப்பயிற்சியில் 230 பேர் பயின்றனர். புகுமுக வகுப்புவரை (பி. யு. சி) இலவசக் கல்வி அளிக்கப்பட்டது. மதிய உணவு, இலவசப் புத்தகங்கள் முதலியன வழங்கப்பட்டன. முதியோர் கல்வி நிலையங்கள் ஏற்பட்டன. 1968 ஆம் ஆண்டு முதல் இந்தி மொழி நீக்கப்பட்டது. பள்ளிகளில் இருமொழிக் கொள்கை (தமிழ், ஆங்கிலம்) செயல் பட்டது. தொழிற்கல்வி, மருத்துவம், பொறியியல் படிப்புக்கான ஏந்துகளும், மானியமும் அதிகரிக்கப்பட்டன. 2. தொழில் வளர்ச்சி தொழில்கள் தொடங்குவதற்கு உரிமம் நடுவண் ஆட்சியிட மிருந்துதான் பெற வேண்டும். இதற்கான பொருள் உதவியும் பெற வேண்டும். எனவே தொழில்கள் தொடங்குவதில் தாமதம் ஏற் பட்டது. 1967-க்கு முன்பு நான்கு ஐந்தாண்டுத் திட்டங்கள் செயல் படுத்தப்பட்டன. அவற்றில் தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சிக்குப் போதிய வனக்கமும், நிதியும் ஒதுக்கவில்லை . 1967-க்குப் பின் தி.மு.க. ஆட்சி போராடி "சேலம் உருக்காலை' திட்டத்தை 100 கோடி ரூபாய் செலவில் பெற்றது. இதில் 12,000 பேர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்பட்டது. இதனைச் சுற்றித் துணைத் தொழில்கள் பல தொடங்கப்பட்டன. இதனையடுத்து நெய்வேலிப் பழுப்பு நிலக்கரி எடுக்கும் திட்டமும் விரைந்து செயல்பட்டது. தூத்துக்குடியில் இரசாயன உரத் தொழிற்சாலை அமைக்க அரசும், தனியாரும் இணைந்து 52 கோடி ரூபாய் முதலீட்டில் திட்டம் தொடங்கப்பட்டது. ரூபாய் 6.77 கோடி செலவில் தினசரி 1200டன் உற்பத்தி செய்யும் சிமெண்ட் தொழிற்சாலை ஆலங்குளத்தில் தொடங்கப் பட்டது. மணலியில் 80 கோடி ரூபாயில் பெட்ரோ கெமிக்கல்ஸ்" தொழிற்சாலை ஒன்று தொடங்கப்பட்டது. மூடப்பட்ட நூற்பாலை களுக்கு 1.71 கோடி ரூபாய் செலவிட்டு 'பஞ்சாலைக் கழகம் ஒன்றும் தொடங்கப்பட்டது. இதைப் போலவே கூட்டுறவுச் சர்க்கரை ஆலை களைப் பராமரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் மொத்தம் 15 கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகள் செயல்பட்டன. 'சிறுதொழில்கள் வளர்ச்சிக்காகத் 'தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம்' என்ற தனிநிறுவனம் அமைக்கப்பட்டது - இதனால் 1952இல் 98 கோடி ரூபாயாக இருந்த மாநில தொழில் உற்பத்தி வருவாய் 1970இல் 320 கோடி ரூபாயாக உயர்ந்தது. விடுதலைக்குப்பின் தமிழகம் II * தமிழ்நாட்டில் சவுளி ஆலைகளின் முன்னேற்றத்திற்காகச் 'சவுளி ஆலைகளின் கழகம்' தொடங்கப்பட்டது. மின்சார வரிச் சலுகைகள் தரப்பட்டதால் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் 163 பஞ்சாலைகள் 175 ஆக உயர்ந்தன. தமிழ்நாட்டில் விளையும் 60 வீழுக்காடு பஞ்சையும், நூலையும் வட மாநிலங்களிலுள்ள பஞ்சாலைகள் வாங்கி, ஆடையாக நெய்து தமிழகத்தைச் சந்தை யாக்கிக் கொழுத்தன. இதனால், தமிழகத்தில் 12,500 விசைத்தறி களைப் புகுத்தவும், "மனைகளைக் கொடுத்துத் தொழில் தொடங் கும் திட்டப்படி'' இதனைத் தொடங்கவும் தி.மு.க. ஆட்சித் திட்டம் வகுத்தது. இதனால் சவுளித்துறை சிறந்து விளங்கியது. சர்க்கரை உற்பத்தித் துறைக்கும், சவுளித்துறை உற்பத்தித் துறைக்கும் தனித்தனியே இயக்குநரகம் ஏற்பட்டது. தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ரூபாய் நாணயம் மதிப்புக் குறைந்தது. பொருளாதார மந்தம் ஏற்பட்டது; நான்காவது ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்ட முதலீடுகள் உடனடியாகக் கிடைக்கவில்லை; ஆயினும், தமிழ்நாட்டில் தொழில் தொடங்க உரிமம் உடனடியாகக் கிடைக்கவில்லை. ஆயினும், தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி அதிகம் ஏற்பட்டது. இதற்குக் காரணம் தி.மு.க. அரசு கொடுத்த ஊக்கமே ஆகும். மத்தியத் தொழிற்கூடங்கள் இரவில் இயங்குவ தானால் 40 விழுக்காடு மின் தொழிற்சாலைக்கு மின்கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டது: மேட்டூர் அருகேயுள்ள தொழிற்சாலை கள் பாசனக் காலங்களில் மட்டும் மின்சாரத்தை எடுத்துக் கொண்டால் 25 விழுக்காடு மின்சார வரிச் சலுகை அளிக்கப்பட்டது. தொழில் துறையில் பின் தங்கிய இடங்களில் தொடங்கப்படும் தொழில்களுக்கு 18 விழுக்காடு வரிச்சலுகை அளிக்கப்பட்டது. 3, வேளாண்மை வளர்ச்சி தமிழ்நாட்டில் 90 விழுக்காட்டினர் வேளாண்மையை நம்பியே வாழ்கின்றனர், தி.மு.க. ஆட்சியில் வேளாண்மை வளர்ச்சிக்கு முதலிடம் அளிக்கப்பட்டது. உலக வங்கியில் இருந்து 45 கோடி ரூபாய் வேளாண்மை வளர்ச்சிக்கு வாங்கப்பட்டது, சேலம், வடஆற்காடு மாவட்டங்களில் வேளாண்மை முன்னோடித் திட்டத்திற்கு ரூபாய் 2 கோடி மானியம் கொடுத்துள்ளது. தீவிர வேளாண்மையால் குடும்பச் சராசரி ஆண்டு வருமானம் 6,320 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆறு டிராக்டர் உற்பத்தி நிலையங்களை ஏற்படுத்தவும், மூவாயிரம் டிராக்டர்களை வாங்கவும், உலக வங்கிக் கடன் உதவி பெறவும் ஏற்பாடு செய்தது. வேளாண் கூலித் தொழிலாளருக்குக் கூலி நிர்ணயம் செய்யப்பட்டது. கோதுமை விலையைக் குறைத்து விற்க ஏற்பாடு செய்தது. தமிழ்நாடு வேளாண்மைக் கழகம் உழவர் களுக்கு 300 டிராக்டர்களை மானிய விலையில் விற்றுள்ளது. நிலப் பட்டாக்களைத் தாராளமாக வழங்கியது. 1970-71-ல் மட்டுமே 2,30,000 ஏக்கர் நிலத்திற்குப் பட்டா வழங்கப்பட்டது. புஞ்சை நிலத் திற்கு வரி முற்றிலும் நீக்கப்பட்டது. சாகுபடி நிலப்பரப்பும், உணவு உடற்பத்தியும் அதிகரிக்கப்பட்டன. 1970-71-ல் 47 இலட்சம் டன் உணவுப் பொருள் உற்பத்தி ஆனது. தமிழ்நாட்டிலுள்ள சாகுபடி நடைபெறும் மொத்த நிலப்பரப்பு 66 இலட்சம் ஏக்கர் ஆகும். இதில் 375 இலட்சம் ஏக்கர் நிலம் சாகுபடி ஆனது. புதுக்கோட்டையில் 'அண்ணா பண்ணை ' எனும் விவசாய ஆராய்ச்சிக் கழகமும், வேளாண்மைக் கல்லூரியும் 1000 ஏக்கர் பரப்பில் ஏற்படுத்தப்பட்டன. குறுகிய கால் அறுவடைக்காகப் புதிய விதைகள் கண்டு பிடிக்கப்பட்டு, மேலை நாட்டு முறையில் பயிரிடப் பட்டன. விமானம் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தியாவிலேயே மிக அதிகமாக தமிழ்நாட்டில் தான் முந்திரி உற்பத்தி செய்யப்பட்டது. இதற்காகத் 'தீவிர முந்திரி உற்பத்தித்திட்டம் தொடங்கப்பட்டது. நீலகிரி, கன்னியாகுமரி, மதுரை மாவட்டங் களில் 'தீவிரத் தென்னை உற்பத்தித் திட்டம்' செயல் படுத்தப்பட்டது. வாழை உற்பத்தியை அதிகரித்து அயல்நாடுக ளுக்குத் தாராளமாக ஏற்றுமதி செய்தது. மஞ்சள் பயிரிடுவதற்காகக் கடனுதவி செய்யப் பட்டது. 1988 - 70இல் 10,356 பம்பு செட்டுகளுக்கு 248 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது. 'விதைப்பண்ணைகள்' பல அமைக்கப்பட் டன. நிலத்தீர்வைக்கேற்றவாறு பத்திரப்பதிவுக் கட்டணம் நிர்ணயிக்கப் பட்டது. உழவு மாடுகள் வாங்கப் பின்தங்கிய வகுப்பிற்கு மானியம் அளித்தது. இத்தகைய நடவடிக்கைகளால் உணவு உற்பத்தி அதிகரித்தது. இதனால் உணவுக் கட்டுப்பாடு நீக்கப்பட்டது. இதனால் பசுமைப்புரட்சியும் ஏற்பட்டது. புதிய நீர்ப்பாசன ஏந்துகளும் இதற்குத் துணைநின்றன. புதிய நீர்ப்பாசனத் திட்டங்கள் 1. நெல்லை மாவட்டத்தில் இராமநதி, நதித் திட்டம் 2. வடார்க்காடு மாவட்டத்தில், தண்டரைத் திட்டம் 3. தென்ஆற்காடு மாவட்டத்தில் நந்தன் கால்வாய்த்திட்டம் 4. இராமநாதபுரம் மாவட்டத்தில் பிள்ளைவாய்க்கால் திட்டம் 5. நெல்லை மாவட்டத்தில் வைப்பாற்றுக் குறுக்கே அணைகட்டும் திட்டம் 6, தருமபுரி மாவட்டத்தில் தொட்ட ஹெல்லாத் திட்டம் ஆகியவை தொடங்கப்பட்டன. இவையாவும் சிறிய நீர்ப் பாசனத் திட்டங்களே ஆகும். பரம்பிக்குளம்-ஆளியாறு திட்டம் கேரள அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே பிரச்சனை யாகவே உள்ளது. வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்குக் குடிநீர் கொண்டு வரும் 25 கோடி ரூபாய்த் திட்டம் நிறைவேறமால் போனது. ஆயினும் சென்னை நகருக்கும். அனைத்து ஊர்களுக்கும் குடிநீர் வழங்கும் திட்டம் நிறைவேறிவிட்டது. 1969ஆம் ஆண்டு பஞ்சம் அண்ணா மறைந்து கலைஞர் ஆட்சிப்பொறுப்பை ஏற்றவுடன் அவர் சந்தித்தது தமிழ்நாட்டில் 1969 பிப்ரவரியில் ஏற்பட்ட கொடிய பஞ்சமே ஆகும். நிவாரணப்பணிகள் ஏரிகள், கிணறுகள், குளங்கள் ஆகியவை செப்பனிடப்பட்டன. இதனால் கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பும் கூலியும் கிடைத்தன. இதற்குச் செலவான மொத்தத் தொகை 17 கோடியில் நடுவண் அரசு 14 கோடி ரூபாய் கொடுத்தது. கிராமப்புறச் சாலைகளும் போடப் பட்டன. 5. மின்உற்பத்தி நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தில் 170 கோடி ரூபாய் மின் உற்பத்திக்குச் செலவிடத் திட்டமிட்டப்பட்டு கீழ்க்கண்டதிட்டங்கள் தொடங்கப்பட்டன. 1. கோவை மாவட்டத்தில் கடம்பரை நீர் மின் திட்டம் 2. நீலகிரி மாவட்டத்தில் சோழாட்டிப்புழா நீர் மின் திட்டம் 3. மதுரை மாவட்டத்தில் சுருளியாறு நீர் மின் திட்டம் 4. நெல்லை மாவட்டத்தில் மேல் தாமிரபரணி நீர் மின் திட்டம் 5, கோவை மாவட்டத்தில் நெல்லித்துறை நீர் மின் திட்டம் 6. குமரி மாவட்டத்தில் பரவையாறு நீர் மின் திட்டம் ஆகிய தமிழ்நாடு அரசு நீர்மின் திட்டங்களும், கல்பாக்கத்தில் இந்திய அணு ஆராய்ச்சி நிறுவனத்தால் அணு மின் நிலையமும் நிறுவப்பட்டன, 6. அரசுப் பணியாளருக்கு நன்மைகள் ஆங்கிலேயர் காலத்தில் பணியாளருக்கு இரகசியக் குறிப்பு முறை எழுதும் திட்டம் தொடங்கப்பட்டது. விடுதலைக்குப் பின்னும் அம்முறையை அரசு பின்பற்றி வந்தது. தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அம்முறை ஒழிக்கப்பட்டது. மாநில அரசு ஊழியர்களுக்கு நடுவண் அரசு ஊழியர்க்கு வழங்கும் அகவிலைப்படி, நகர ஈட்டுப்படி, விடுப்பு நாட்களைப் பணமாக மாற்றிக் கொள்வது போன்றவை நடை முறைப்படுத்தப்பட்டன. காவல் துறையில் பணியாற்றும் ஊழியர் களுக்குக் காவல் துறை ஆணைக்குழு' ஒன்றை ஏற்படுத்தி அதன் பரிந்துரைகளின் பேரில் பல சலுகைகள் செய்யப்பட்டன. காவலர் எண்ணிக்கையும், காவல் நிலையங்களும் உயர்த்தப்பட்டன. காவலர் குடியிருப்புகள் அமைக்கப்பட்டன, 7. ஏழைகுடியிருப்பு வசதிகள் - ஏழைகளுக்கு வீடு கட்ட முதலில் கடன் உதவி செய்வதற்கு வங்கிகள் மூலம் 10 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இந்தத் திட்டம் 84 நகரசபைகள் 45 பேரூராட்சிகள் ஆகியவற்றில் செயல்பட்டது. 'வீட்டு வசதி வாரியம்" தொடங்கப்பட்டது 1956-ல் இருந்து 1967 வரை கட்டப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 4,073 ஆகும். ஆனால் தி.மு.க. ஆட்சியின்போது 1967-70 - ல் கட்டப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 6,850 ஆகும், குறைந்த வருவாய், நடுத்தர வருமானம் உள்ளவருக்குக் கட்டப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 1967-70இல் 10,028 வீடுகள் ஆகும். 3. குடிசைப்பகுதி மேம்பாட்டுத்திட்டம் சென்னை நகரில் குடிசைப்பகுதிகளை மாற்றி அமைக்க நடுவண் அரசிடமிருந்து 11 கோடி ரூபாய் பெற்று, 6 கோடியே 87 இலட்சம் ரூபாயில் 11,508 குடி இருப்புகளை மாநில அரசு கட்டியது. இதைத் தவிர தீப்பிடிக்காத சிமெண்ட் ஓடுகள் போட்டு 6,000 வீடுகளைக் கட்டியது. மூன்றாவதாக மாடிக் குடியிருப்புகளைக் கட்டிக் குடிசைவாசிகளைக் குடியேற்றியது. நான்காவதாக ரூபாய் 40 கோடி செலவில் 'குடிசை மாற்றுத்திட்ட வாரியம்' ஒன்று அமைத்து 7 ஆண்டுகளில் குடிசைகளை மாற்றி அமைக்கத் திட்டமிட்டபடி செயல்பட்டது. தி.மு.க. மேற்கொண்ட சமூக நீதிகள் 1. பேருந்துகள் நாட்டுடைமையாதல் அண்ணா முதலமைச்சரானவுடன் முதல் முதலில் செய்தது சமதர்ம சமுதாயத்தை உருவாக்க மேற்கொண்ட பேருந்துகளை நாட்டுடைமையாக்கும் திட்டம்' ஆகும். 75 மைல்களுக்கு மேல் ஓடும் பேருந்துத் தடங்கள் யாவும் நாட்டுடைமையாக்கப்பட்டன. பேருந்து உரிமையாளர்கள் இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்காடித் தோற்றனர். முதல் கட்டத்திலேயே 1969-ல் பிக்ப் பேருந்துத் தடங்கள் அரசுடைமை ஆக்கப்பட்டன 1969-70-ல் மேலும் 60 பேருந்துத் தடங்கள் அரசுடைமை ஆயின. 1976-ல் மொத்தம் 400 தடங்கள் அரசுடைமை ஆயின. இதனால் பல முதலாளிகள் சமுகத்தில் மறைந்தனர். சமூகம் சோசலிசத்தை நோக்கி நகர்ந்தது. 2. நில உச்சவரம்புச் சட்டம் 30 ஏக்கர் என்று இருந்த நிலஉச்சவரம்புச் சட்டம் 15 ஏக்கராகக் குறைக்கப்பட்டது. மேய்ச்சல் நிலம், காடு கரம்பு, சவுக்குத் தோப்பு நிலம் முதலியவற்றையும் சேர்த்துக் கணக்கு எடுக்கப்பட்டது. இத்திட்டத்தால் 'நிலப்பிரபுகள்' பட்டியல் சுருங்கியது. நிலமற்ற ஏழைகளுக்கு 21 இலட்சம் ஏக்கர் நிலத்திற்குப் பட்டா வழங்கியது. காட்டு நிலங்களில் பயிரிடப்படாத நிலங்களை ஏழைகளுக்கு வழங்கி உரிமையாக்கியது. 3. பண்ணைத் தொழிலாளர் ஊதிய நிர்ணயச் சட்டம்-1969 பல ஆயிரம் ஏக்கர்களை ஒருவரே வைத்துக்கொண்டு பயிரிட்டுக் கொழுத்தப் பெரிய பண்ணையாளர்கள் அவர்களுக்குக் கூலி கொடுப்பதையும் குறைத்து வந்தனர். இதனைப் போக்கவே பண்ணைத் தொழிலாளர்களுக்கு உழுவதற்கென்றும், அறுவடை செய்வதற்கென்றும் கூலி நிர்ணயிக்கப்பட்டது. அறுவடை முடிந்த வுடன் கூலியை உடனே கொடுத்து விட்டுத்தான் விளைப்பொருளை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்டது. 'வேலையாளின் வியர்வை காயுமுன் அவன் கூலியைக் கொடு' என்பது திருக்குரான் வாக்கு. இத்திட்டத்தால் பண்ணைக் கூலியாள் பண்ணையார் சிக்கல்கள் தீர்ந்தன, 4. புஞ்சைக்கு வரிவிலக்கு வானம் பார்த்த பூமியான புஞ்சை நிலத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது. இது சமதர்ம சோசலிசமாகும். 5. ஐந்து ஏக்கர் நஞ்சை நிலமுள்ள சிறு உழவர்களுக்கு வரி இல்லை , ஐந்து ஏக்கர் நஞ்சை நிலமுள்ள சிறு உழவர்க்கும் நிலவரியில் இருந்து விலக்களிக்கப்பட்டது. இதனால் அரசுக்கு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. 6. சுயமரியாதைத் திருமணங்கள் வேதாகமப்படி அக்கினி வளர்த்து ஏழு அடி நடந்து அருந்ததி பார்த்தால்தான் திருமணம் செல்லும் என்ற நிலைமையை மாற்றி ஆணும், பெண்ணும் கணவன் மனைவியாகச் சேர்ந்து வாழ்ந்தாலே அத்திருமணம் செல்லும் என்றும், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை களும் சட்டப்படியான வாரிசுகள் என்றும் இத்திருமணச்சட்டம் கூறியது. எனவே, வைப்பாட்டியின் மகனும் சட்டப்படியாக வாரிசு ஆனான். பிற்பட்டோர் நலத்துறை வகுப்புவாரி படிநிகராளியம் பற்றிக் கூறும்போது பின் தங்கிய வகுப்பார் பற்றியக் குறிப்புகளைப் பார்த்தோம். அரசியல் சட்டம் 46வது விதி 'எந்த ஒரு சமூகம் கல்வி, பொருளதாரம் ஆகியவற்றில் மிகவும் பின் தங்கியுள்ளதோ (குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களின்) அவர்களைச் சமுதாய அநீதியில் இருந்து காக்க வேண்டியது அரசின் கடமை ஆகும்' என்று கூறுகிறது. எனவே, இந்த வகுப்பாரைக் காக்கச் சிறப்பான விதிமுறைகளை ஏற்படுத்தி முன்னேற்ற இந்திய அரசு, மாநில அரசுகளைப் பணித்து ஆவன செய்ய ஆணையிடும் உரிமை பெற்றுள்ளது என இந்திய அரசியல் சட்டவிதி 244 கூறுகிறது. அரசியல் சட்டம் 16வது பகுதியில் சில வகுப்பாரை முன்னேற்ற அரசு தனிக் கவனம் செலுத்த வேண்டுமென வற்புறுத்துகிறது. இதன்படி மாநில, மத்திய சட்ட மன்றங்களில் தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்கு இட ஒதுக் கீட்டைப் புதுப் பிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உண்டு. மேற்கண்டவாறு தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களைப் பற்றிக் கூறும் அரசியல் சட்டம் பிற்பட்ட மக்களைப் பற்றி எதுவும் கூறவில் லை. தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களைப் பற்றி விளக்கும் அரசியல் சட்டத்தில் உள்ளதைப்போல் பிற்பட்டவர் யார் என்ற விளக்கம் கூட இல்லை. எனவே மாநில, அரசுதான் இதற்கு வழி செய்ய வேண்டும். இதற்கு அரசியல் சட்டத்தில் வழியைக் கண்டுபிடித்து அதனைச் செயல்படுத்தியது தமிழ்நாட்டு அரசே ஆகும், 1. பிற்பட்டோர் 1953இல் இந்திய அரசு காகா சாகேப் கலேல்கார் தலைமையில் 11 உறுப்பினர் கொண்ட ஒரு குழுவை அமைத்துப் பிற்பட்டோரை அடையாளம் காணச் செய்தது. அக்குழு தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்கு நலத்துறை வேண்டும்' எனப் பரிந்துரைத்தது. ஆனால் 1967 வரை அரசை ஆண்டவர்கள் இதில் அக்கறை காட்டவில்லை. 1967-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின்தான் பிற்பட்டோர் நலத்துறை தொடங்கப்பட்டது. இதற்காக இந்திய அரசியல் சட்டம் விதி 340-ல் கூறியுள்ள படி 1958-ல் ஏ.என், சட்டநாதன் தலைமையில் மூன்று உறுப்பினரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்த ஆணைக்குழுவின் பரிந்துரைப்படி பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர் என இரு வேறு உட்பிரிவுசாதிப்பட்டியல்கள் தயாரிக்கப்பட்டன. 1964ஆம் ஆண்டில் பிற்பட்டோர் பட்டியலில் 17 சாதிகள் இருந்தன. பிற்பட்டோர் சாதிகளில் இருந்து கிறித்துவம், இசுலாம் மதத்திற்கு மாறியவர்களும், பிறரும், பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டதால் எண்ணிக்கை மேலும் கூடியது. 2. மிகவும் பிற்பட்டோர் 'மிகவும் பிற்பட்டோர்' என்பது சட்டநாதன் ஆணைக்குழுவின் புதிய கண்டுபிடிப்பு ஆகும். இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டவருக்கு அதிகம் தரவேண்டும் என்பதும் பொறியியல், மருத்துவப் படிப்பு களில் குறிப்பிட்ட மதிப்பெண்களுக்குக் கீழிருந்தால் சேரமுடியாது என்ற விதியையும் இவர்களுக்குத் தளர்த்தினார்கள். பிற்பட்டோர் நலத்துறை என்று தனியாக ஒரு துனறனயயும் அமைச்சரையும் ஏற்படுத்தியப் பெருமை கலைஞரையே சாரும். 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்குப்படி தமிழ் நாட்டின் மொத்த மக்கள் தொகை 412 இலட்சம் பேர் ஆவர், அவர்களில் பிற்பட்டோர் 51.13 சதவீதம் பேர் இருந்தனர். இதில் 28.76 சதவிகிதம் பிற்பட்டோர் என்றும் 22.37 சதவிகிதம் மிகவும் பிற்பட்டோர் என்றும் பிரிக்கப்பட்டனர். இவர்களில் பலரும் சமுதாயத்தின் அடித் தட்டிலுள்ள ஏழைகள், படிக்காதவர்கள். அந்தஸ்த்தில் உயர்ந்து நின்றவர்கள் 1.13 விழுக்காடு பேர் ஆவர். படிக்காத சமூக அந்தஸ்த்தில் குறைந்தவர்கள் 50 விழுக்காடு ஆவர். எனவே, மக்கள் தொகையில் பாதியாக உள்ள இவர்களை முன்னேற்றுவது அரசின் கடமை என உணர்ந்துதான் பிற்பட்டோர் நலத்துறை'யைத் தி.மு.க. அரசு ஏற்படுத்தியது. இத்துறையின் மூலம் பிற்பட்டோர் நலன்களை மேம்படுத்தியது. 1949-ல் தனியாக ஆதிதிராவிடர் நலத்துறை ஏற்படுத்தப் பட்ட போது, பிற்பட்டோர் நலனையும் இத்துறை கவனித்தது. ஆனால் கலைஞர் 1969-ல் பிற்பட்டோர் நலத்துறையை ஆதி திராவிடர் நலத்துறையில் இருந்து தனியே பிரித்துத் தனிக் கவனம் செலுத்தி அவர்களை முன்னேற்றினார்கள். இதனால் பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், சீர்மரபினர் ஆகியோர் நலம் மேம்பட்டது. பிற்பட் டோர் நலத்துறை இயக்குநராக ஒரு இந்திய அரசுப்பணித்துறை (ஐ . ஏ . எஸ்) அதிகாரி அமர்த்தப்பட்டார். மாவட்ட ஆட்சித் தலை வர்களின் அலுவலகங்களிலும் தனி அதிகாரிகள் பிற்பட்டோர் நலனைக் கவனிக்க ஏற்பட்டனர். மதுரை மாவட்டத்தில் கள்ளர் களின் மறுவாழ்வுக்காகத் தனியாகத் துணை ஆட்சியாளர்கள் நியமிக் கப்பட்டனர். - எனவே, பிற்பட்டோர் முன்னேற்றத்திற்காக, அமைச்சரும், துறையும், அலுவலர்களும் ஏற்பட்டுவிட்டதால், அவர்களும் கல்வி, பொருளாதாரம் முதலியவற்றில் விரைந்து முன்னேறினார்கள், 1967 முதல் 1975 வரையில் தொடர்ந்து ஆண்டுதோறும் பிற்பட்ட மாணவர் களும், கல்வி உதவித்தொகையும், விடுதிகளும், இடஒதுக்கீடும் ஏறிக்கொண்டே போனது. 1967-68இல் 32,797 பிற்பட்ட மாணவர்கள் கல்வி உதவித் தொகையாக 82, 32 இலட்சம் ரூபாய் பெற்றனர். 1972-73இல் 1, 88,225 மாணவர்கள் 324,80 இலட்சம் ரூபாய் கல்வி உதவித் தொகையாகப் பெற்றனர். இதைப்போலவே, பிற்பட்ட மாணவர்களுக்கான விடுதிகளும் ஏறிக்கொண்டே போனது. 1959-ல் 11 விடுதிகளே இருந்தன. 1975-76-ல் 19 விடுதிகளாக உயர்ந்தன. இவற்றில் 12,095 மாணவ, மாணவியர்கள் தங்கிப் படித்தனர். இவற்றைத்தவிர அரசு நிதி உதவி பெற்றுத் தனியார் நடத்தும் விடுதிகளில் பிற்பட்ட மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை அளிக்கப்பட்டது. 3. பிற்பட்ட மாணவருக்குத் தனிப் பயிற்சி நிலையம் இந்திய ஆட்சிப் பணித் தேர்வு அரசு முதலிய தேர்வுகளுக்குச் செல்லும் பிற்பட்ட இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக முன் பயிற்சி நிலையம் ஒன்றை 1971-ல் சென்னை யில் தி.மு.க. அரசு தொடங்கியது. ஐம்பது மாணவர்களை ஆண்டு தோறும் இதில் சேர்த்துப் பயிற்சி அளித்துத் தேர்வுக்கு அனுப்பியது. இவர்களுக்குத் தங்கம் விடுதியும், உணவும் இலவசமாக அளிக்கப் பட்டன. இதில் பயிற்சி பெறும் மாணவர்கள் ஆண்டுதோறும் இந்திய ஆட்சிப் பணிகளில் சேர்ந்து வருகின்றனர். 4. பொருளாதார முன்னேற்றம் வீட்டுமனைக்குடியிருப்புகள், ஆகியவையும் பிற்பட்டோருக்கு தரப்படுகின்றன. குறிப்பாக நாவிதர்கள், சலவைத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு இத்தகைய உதவிகள் செய்யப்படுகின்றன. 5. சீர் மரபினர் கள்ளர், மறவர்களுக்காகவே தனியாகப் பள்ளிகள் ஏற்படுத் தப்பட்டன. ஆங்கிலேயர் காலத்தில் அவர்களைக் குற்றப் பரம்பரை யினர்' என்றனர். 1967 - 68 - ல் 32 பள்ளிகள் இவர்களுக்காக இருந்தன. இந்த எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 1975-76 - ல் 276 ஆனது. இதில் பயின்ற மாணவ மாணவிகளின் எண்ணிக்கை 40,017 பேர் ஆவார். இதில் 232 தொடக்கப்பள்ளிகளும் 34 உயர் தொடக்கப்பள்ளிகளும் 10 உயர் நிலைப்பள்ளிகளும் அடங்கும். இவர்களுக்கெனத் தனியாக விடுதிகளும் கட்டப்பட்டன. 1967-68-ல் 15 விடுதிகளே இருந்தன. 1975-76-ல் இவை 53 ஆக உயர்ந்தன. தனியார் நடத்தும் விடுதிகளிலும் இவர்கள் சேர்ந்தனர். அதற்காகும் செலவை அரசே அளித்தது. பொருளாதார உதவி: சீர்மரபினருக்கு அரசு மாடுகள் வாங்கவும் தொழில் உபகரணங் கள் வாங்கவும் பண உதவி செய்தது. உதவித் தொகை 1967-ல் 50, 400 ரூபாய் வழங்கப்பட்டது. இது படிப்படியாக உயர்ந்து 1975-ல் ஒரு இலட்சம் ரூபாயாக அளிக்கப்பட்டது. 6. பிரான்மலைக் கள்ளர் பொதுநிதி பிரான்மலைக் கள்ளர்களின் முன்னேற்றத்திற்காக தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நிதி ஒதுக்கியது. இந்த நிதி முறையால் பிரான்மலைக் கள்ளர் இனம் பொருளாதாரத்தில் முன்னேறியது. சாதி வேறுபாடு பார்க்காமல் வறுமைக்கோட்டிற்கும் கீழே உள்ளவர்கள், முதியோர்கள், விதவைகள், பிச்சைக்காரர்கள் முதலி யோருக்கும் சிறப்பான பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. (அ.இ.அ.தி.மு.க ஆட்சி ) இ. அனைத்திந்திய அண்ணா தி.மு.க ஆட்சி அ இ - அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அமைத்தல் அ - இ - அ.தி.மு.க. முதல் அமைச்சரவை (1977 - 1980) அ - இ - அ.தி.மு.க. இரண்டாம் அமைச்சரவை (1980 - 1985) அ.இ.அ.தி.மு.க. மூன்றாம் அமைச்சரவை (1985 - 1937) செல்வி செயலலிதா முதல் முறை) முதலமைச்சரானார் (1981 - 1986) அ - இ - அ.தி.மு.க. ஆட்சியின் சாதனைகள் இ. அனைத்திந்திய அண்ணா தி.மு.க ஆட்சி (1977 - 1988 - 1991 - 1996 - 2001 - லிருந்து) 1971-ல் இலங்கையிலுள்ள கண்டி நகரத்தில் பிறந்த மருதூர் கோபாலன் என்பவருடைய இளைய மகனான இராமசந்திரன் தனது இரண்டாம் அகவையில் தந்தையை இழந்து 1919-ல் தன் தாய் சத்தியபாமா, தமயன் சக்கரபாணி, தமக்கையுடன் கும்பகோணம் குடிபெயர்ந்து, பின்னர் மதுரைக்குச் சென்று நாடகக்குழுவில் நடித்து அங்கிருந்து சென்னை வந்து திரைப்பட உலகில் கொடிகட்டிப் பறந்தவரான இவரைத் தமிழக மக்கள் மருதூர் கோபாலன் இராமசந்திரன் எம்.ஜி.ஆர் என்றே அழைத்தனர். கேரளத்தைச் சேர்ந்த இவர் தந்தை இலங்கையிலுள்ள கண்டி சென்று அங்கொரு சட்டக்கல்லுாரி முதல்வராயிருந்து அங்கேயே காலமாயினார். ம. கோ.ரா. (எம்.ஜி.ஆர்.) 1953 வரை அகில இந்தியப் பேராயக் கட்சியில் இணைந்து காந்தி அடிகளோடும், தேசியத் தலைவர்களோ டும் தேசிய உணர்வால் பிணைந்திருந்தார். நகைச்சுவைத் திலகம் என். எசு. கிருட்டிணன் அவர்களால் திராவிட தேசிய உணர்வுக்குப் பின் திராவிடத் தேசிய உணர்வுக்குத் திரும்பி, பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரோடும், பேரறிஞர் அண்ணாவோடும் நெருக்கமாகி, திராவிட இயக்கத்தின் மக்கள் திலகம் ஆனார். தனது நடிப்புத்திறமை யாலும், கவர்ச்சியாலும் தமிழக மக்களைத் திராவிடர் இயக்கத்திலீடு படச் செய்தார். பேரறிஞர் அண்ணாவும் மற்றும் பலரும் தந்தை பெரியாருடன் கருத்து மாறுபாடு கொண்டு பிரிந்து சென்று ''திராவிட முன்னேற்றக் கழகம்" என்னும் கட்சியைத் தோற்றுவித்த போது, ம. கோ. ரா. (எம். ஜி. ஆர். ரயும் அண்ணாவுடன் இணைந்து திராவிட முன்னேற்றக் கழகத்தில் முடுக்க மான உறுப்பினரானார். இவருடன் இவருடைய இரசிகர் மன்றத் தாரும் தி.மு.க வில் இணைந்தனர். இதனால் தி.மு.க., மலை யென வளர்ந்தது. 1969-ல் அண்ணா காலமானார் தொடர்ந்து 13 ஆண்டுகள் மு. கருணாநிதியே முதலமைச்சராயிருந்தார். ஆனால், 1972-ல் தி.மு.க.வில் ''கட்சிப்பூசல் ஏற்பட்டது. கழகப் பொருளாளரான ம. கோ. ரா. எம்.ஜி.ஆர்.) கணக்கில் ஆளழல் நடந்திருப்பதை வெளிப் படையாகவே விமர்சித்தார். சினங்கொண்ட மு.கருணாநிதி (முதல் மைச்சர்) இவரைக் கட்சியிலிருந்து வெளியேற்றுவதாக அறிவித்தார். அதற்குள் தானே திராவிட முன்னேற்றக் கழகத்தைத் துறந்து ம. கோ. ரா. (எம்.ஜி.ஆர்.) வெளியேறினார். அவருடைய ஆதரவாளர்களும், இரசிகர்மன்றத்தாரும் வெளியேறினர். விடுதலைக்குப்பின் தமிழகம் [[1 அ.இ.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அமைத்தல் தி.மு.க., வை விட்டு வெளியேறிய ம. கோ. ரா. (எம்.ஜி.ஆர்.) 18.10.1972 இல் "அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம்" என்னும் கட்சியைத் தொடங் கினார். பின்னர் அக்கட்சி ''அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" என அழைக்கப்பெற்றது. மிகக் குறுகிய காலக் கட்டத்திலேயே பல இலக்கம் உறுப்பினர்கள் இதில் சேர்ந்தனர். அ, இ - அ.தி.மு.க. முதல் அமைச்சரவை (1977 - 1980) 1977-ல் நடந்த பொதுத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க, திராவிட முன்னேற்றக் கழகத்தைத்தைத் தோற்கடித்து வெற்றி பெற்றது. ம. கோ. இராமசந்திரன் தலைமையில் அமைச்சரவை அமைத்தது. அ.இ.அ.தி.மு.க. இரண்டாம் அமைச்சரவை (1980- 1985) 1980 - இல் நடந்த பொதுத்தேர்தலிலும் அ.இ.அ.தி.மு.க. வே வெற்றி பெற்றது. மீண்டும் ம. கோ.ரா. எம்.ஜி.ஆர்.). தலைமையில் அமைச்சரவை அமைத்தது. அ.இ.அ.தி.மு.க. மூன்றாம் அமைச்சரவை (1985 - 1987) 1985-ல் நடந்த பொதுத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. வே வெற்றி பெற்றது. மூன்றாவது முறையாக ம. கோ. ரா. (எம். ஜி. ஆர்.) முதலமைச்சரானார். ஆனால், அவர் 1987-ல் மறைந்தார். அவரை யடுத்து அவருடைய மனைவி சானகி இராமச்சந்திரன் முதல்வரானார். ஆனால், சட்டமும் ஒழுங்கும் கெட்டதால் 13 ஆம் நாளிலேயே ஆட்சி கலைக்கப்பட்டுக் குடியரசுத்தலைவராட்சி ஏற்பட்டது. 1989-ல் நடந்த பொதுத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றது. மு. கருணாநிதி முன்றாவது முறையாகத் தி.மு.க.வின் முதலமைச்சரானார். இந்த ஆட்சி சனவரி 1991 வரை பதவியிலிருந்தது. சட்டம் ஒழுங்கு கெட்டதால் கலைக்கப்பட்டுக் குடி யாட்சித் தலைவர் ஆட்சி ஏற்பட்டது. அதன் முடிவில் நடந்த பொதுத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. வெற்றிபெற்றது. அ.இ.அ.தி.மு.க.வின் அமைச்சரவை நான்காம் முறையாக அமைத்தது. செல்வி செயலலிதா முதல் முறை) முதலமைச்சரானார் (1981 - 1998) செயலலிதா அமைச்சரவை 1996 - வரை பதவியிலிருந்தது. 1996 - ல் நடந்த பொதுத்தேர்தலில் திராவிட முன்னேற்றக்கழகம் வெற்றி பெற்றது. மு. கருணாநிதி நான்காம் முறையாக முதல் அமைச் சரானார். தி.மு.க 1996-லிருந்து 2001 வரை பதவியிலிருந்தது. 2001-ல் நடந்த தேர்தலில் அ.இ.அ.தி.மு.க வெற்றி பெற்றது. ஆனால், கட்சித்தலைவரான செல்வி.செ. செயலலிதா தேர்தலில் நிற்க முடியவில்லை. அவருக்குக் கருணாநிதி ஆட்சியில் ஊழலுக்காக மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டதால் தேர்தலில் நிற்கும் தகுதியை இழந்தார். அதற்காக மேல்முறையீடு செய்திருந்தார். அ.இ.அ.தி.மு.க. பெருவாரியான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருந்ததால் அன்றைய ஆளுநராக இருந்த செல்வி, பாத்திமா பீவி அ.இ.அ.தி.மு.கட்சியின் தலைவரான செல்வி. செயலலிதாவை ஆட்சி அமைக்கும்படிப் பணித்தார். முதலமைச்சராகி, ஆறு திங்களுக்குள் தேர்தலில் நின்று வெற்றி பெற்றுத் தன்னைத் தகுதி யுடையவராக்கிக் கொள்ள வேண்டுமென்பது மரபு. இதனை மனதிற்கொண்டுதான் பாத்திமா பீவீ அவரை முதல்வராக்கினார். அவர் ஏற்கனவே உச்சநீதிமன்ற நீதி அரசராயிருந்தவரென்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தபின் ''தனழல் குற்றவாளியெனத் தீர்ப்பானவரை முதல் அமைச்சராக அமர்த்தியது செல்லாது என்ற முடிவுவந்தது. எனவே, முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். பெரிய குளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஓ. பன்னீர் செல்வம் முதல்வராகச் செயல் பட்டார். ஆளுநர் செல்வி. பாத்திமா பீவி பதவி துறந்தார், பின்னர் உச்சநீதிமன்றமேல்முறையீட்டில் செல்வி செயலலிதா ஊழல் குற்றமற்றவர் எனத் தீர்ப்பு வந்தது. தேர்தலில் நிற்கும் தகுதியும் பெற்றார். ஆண்டிப் பட்டிச் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுச் சட்டமன்ற உறுப்பினரானார். அவரைக் கட்சித்தலைவராக அ.இ.அ.தி.மு.க.வினர் தேர்வு செய்தனர். இதனடிப்படையில் அன்றைய ஆளுநர் இவரை முதலமைச்சராக்கினார். 2. 3. 2002லிருந்து செயலலிதா அமைச்ச ரவைச் செயல்படத் தொடங்கியது. அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் கோட்பாடுகள் 1972-ல் தொடங்கப்பட்ட அ.இ.அ.தி.மு.க. ஐந்தாண்டுகள் கழித்து 1977-ல் நடந்த பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. அதன் தலைவர் மருதூர் கோபாலன் இராமசந்திரன் (ம. கோ. ரா (அல்லது) எம். ஜி. ஆர். சென்னைப் பரங்கிமலைச் சட்ட மன்றத் தொகுதியிலிருந்து தேர்தெடுக்கப்பட்டார். அவர் தேர்தலில் நிற்கும்போது, தேர்தல் அறிக்கையைக் கீழ்க்கண்டவாறு வெளியிட் டார். அதில் கட்சியின் கொள்கைகளைப் பற்றியும் வெளியிட்டார். 1. மாநில-மைய ஆட்சிகளுக்கு இடையிலான உறவுமுறைகள் மக்கள் பெரியார், அண்ணா கேட்ட தனி திராவிட நாடு கோரிக் கையும், வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்று கூறியதையும் மனதில் வைத்திருப்பார்களென்றுணர்ந்த ம. கோ. ரா. எம்.ஜி.ஆர்.) பெரியார், அண்ணா வழிவந்த அ.இ.அ.தி.மு.க.வின் கொள்கை கோட்பாடுகளைத் தெளிவாக விளக்கினார். நடுவண் ஆட்சிக்கும், மாநில ஆட்சிக்கும் நடுவே நிலவும் விடுதலைக்குப்பின் தமிழகம் III உறவுமுறைகள் ஒன்றோடொன்று இயைந்தும், நயந்தும் காணப் பெறுமென்றார். நடுவண் ஆட்சியிலேயே அதிகாரம் குவிந்து கிடக்கக் கூடாதென்றும், மாநிலங்களுக்கென்றும் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென்றும் கூறினார். மாநிலங்கள் தனித்தும் சுதந்திரதோடும், தன்னிச்சையாகச் செயல்படவும் கூடாதுயென்றும், நடுவண் ஆட்சி யைத் தழுவியும் அதன் ஆணைகளுக்கு உட்பட்டே நடக்க வேண்டு மென்றும் கூறினார். ஆனால், அதேசமயம் மாநிலங்கள் தங்களின் உரிமைகளை இழந்து நடுவண் ஆட்சியை மட்டுமே தழுவி நிற்க வேண்டும் என்ற விதிக்கும் கட்டுப்படக்கூடாது என்றும் கூறினார். இதையே பேரறிஞர் அண்ணா அவர்கள் "திராவிடக் கூட்டாட்சி"' என்று கூறிவந்தார், "தனிக்காரியங்களில் பிரிந்தும், பொதுக்காரியங் களில் இணைந்தும் தனக்கெனத் தனி ஆட்சியைக் கொண்டு நடுவண் ஆட்சியோடு இணைந்து செயல்படுவதே "திராவிடக் கூட்டாட்சி" என்பது அண்ணாவின் திராவிடக் கூட்டாட்சி விளக்கமாகும். 2. மொழிக் கொள்கை தமிழ் மட்டுமே ஆட்சிமொழியாக இருக்கவேண்டும். ஆங்கிலம் தொடர்பு மொழியாக இருக்கவேண்டும் இதுவே ம. கோ.ரா, (எம். ஜி. ஆர். ரவின் மொழிக் கோட்பாடு ஆகும். 3. பிற்படுத்தப்பட்டோர் நலம் காத்தல் தமிழ்நாட்டில் 33 சதவிகிதத்தினர் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். அவர்களின் வாழ்வு நலம், எல்லாத் துறைகளிலும் செழிப்பதே அ.இ.அ.தி.மு.க.வின் நோக்கமாகுமென்றார். 4. நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்குப் பாடுபடுவதே அ. இ. அ.தி.மு.க.வின் கடமையாகும் வேளாண்மையில் விவசாயிகளுக்கு மானியங்களை வழங்கி வேளாண்மையை ஊக்குவித்தாலும், கூட்டுறவுத் துறையை விரிவு படுத்தி வலுப்படுத்துவதாலும் வேளாண் துறையில் முன்னேறும் தொழிலாளர்களுக்கு வாரத்தில் ஐந்து நாட்களுக்குக் குறையாமல் வேலையும், கூலியும் கொடுப்பதாலும் அவர்களுக்கு வீட்டுவசதி, விபத்துக் காலக் காப்புறுதி, காப்பீட்டு நிதி, தொழில் தகராறில் அரசு தலையிட்டுத் தீர்த்து வைத்தல் ஆகியவை தொழில் முன்னேற்றத் திற்கு வழிவகுக்கும். நெசவாளர், பொற்கொல்லர், மீனவர், வேலை யில்லா இளைஞர்கள் முதலியோருக்கு அரசு உதவி செய்யும், இத்தகையச் செயல்களால் அ.இ.அ.தி.மு.க அரசு பொதுவான நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துமென்று தனது தேர்தல் அறிக்கையில் உறுதி கூறியது. 5. கல்வி மேம்பாடு பட்டிதொட்டிகளெல்லாம் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பெறும்! பட்டப்படிப்புவரை அனைவருக்கும் இலவசக்கல்வி அளிக்கப் படும்: ஏழை மாணவர்கள் படிக்கும் போதே பகுதிநேர வேலை வாய்ப்பு அளித்து அவர்களின் படிப்புக்குக் குந்தகம் ஏற்படாமல் காப்பதும், படித்து முடித்த அனைவருக்கும் வேலை வாய்ப்பு அளிப் பதும் அரசின் கடமையாகும். ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வும், உரிய வசதிகளும் அளிக்கப்படும். கிராமக் கல்வி கைத்தொழில் வளர்ச்சிக்குரிய இடம் அளிக்கப்படும் என்றும் தமது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டார். 5. ஆட்சிமுறையில் தூய்மை வாழ்லை அறவே ஒழிப்பதும், பழலை ஒழிப்பதற்காகத் தனி அதிகாரிகளை ஏற்படுத்தி ஊழலே தலையெடுக்காமல் காப்பதும் அரசின் தலையாய கடமையாகும், ஆட்சியை ஊழலற்றதாக்கி அதனைத் தூய்மைப்படுத்துவதும் அரசின் பணியாகும் என்பது அ.இ.அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் முகாமை வாய்ந்த தாகும். 7. மகளிர் முன்னேற்றம் தொடக்கக் கல்விக் கூடங்களில் மகளிர் மட்டுமே ஆசிரியை களாக அமர்த்தப்படுவர். அரசுப்பணிகளிலும், குழுக்களிலும் மகளிர் ஊரிய இடம் அளிக்கப் பெறுவர், மகளிருக்கு எல்லா வகைகளிலும் பாதுகாப்பு அளிப்பது அரசின் தலையாய கடமையாகும். * 8. உள்ளாட்சித் துறைகள் | உள்ளாட்சித் துறைகளைச் சீரமைப்பதும், அவற்றில் அதிக எண்ணிக்கையில் பொது மக்கள் பங்குபெறுமாறு நிகராளியம் அளிப்பதும், பஞ்சாயத்துத் தலைவர்களை உறுப்பினர் தேர்ந் தெடுப்பதைத் தவிர்த்து மக்களே நேரடியாகத் தேர்ந்தெடுப்பதும், பஞ்சாயத்துகளுக்கு அதிக அதிகாரம் அளிப்பதும் உள்ளாட்சிகளின் வளர்ச்சிக்கு வேண்டிய நிதி உதவிகளையும், மானியங்களையும் வழங்குவதும் அரசின் கடமையாகும். இத்தகையத் தேர்தல் அறிக்கைகளால் ஈர்க்கப்பட்ட வாக்காளர் கள் இடைத்தேர்தல்களிலும், பொதுத்தேர்தல்களிலும் அ.இ.அ. தி.மு.க.வுக்குத் தங்களின் வாக்குகளைத் தாராளமாக அளித்தனர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக ஆட்சியின் சாதனைகள்: 1977ஆம் ஆண்டில் ஆட்சியைக் கைப்பற்றிய அ.இ.அ.தி. மு. க தொடர்ந்து மூன்று முறை வெற்றிபெற்று ம. கோ. இராமச் சந்திரன் தலைமையில் அமைச்சரவை அமைத்து ஆட்சி செய்தது 31 நான்காம் முறை அவருடைய மறைவால் ஏற்பட்டக் குழப்பத்தால் . குடியரசுத்தலைவர் ஆட்சி ஏற்பட்டது! அதற்குப்பின் நடந்த பொதுத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று இரண்டு ஆண்டுகளே ஆட்சியின் லிருந்தது! ஈழப் போராளிகளால் ஏற்பட்ட குழப்பத்தால் தி.மு.க., ஆட்சி கலைக்கப்பட்டுக் குடியரசுத் தலைவராட்சி ஏற்பட்டது! 1991 -ல் நடந்த தேர்தலில் மீண்டும் அ.இ.அ.தி.மு.க. வெற்றி பெற்று 1996- வரை செல்வி.செ, செயலலிதா தலைமையில் ஆட்சி நடந்தது. 1996-ல் நடந்த தேர்தலில் மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்து 2001 வரை ஆட்சி நடத்தியது. பின்னர் நடந்த தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியில் உள்ளது. இவ்வாறு, 1977 முதல் ஆட்சியில் இருந்த அ.இ.அ.தி.மு.க. காலத்தில் இடையில் ஏழு ஆண்டுகள் தி.மு.க. ஆட்சி நடந்தது. ' எனவே, ஏறத்தாழ பதினெட்டு ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆண்ட அ.இ.அ.தி.மு.கவின் சாதனைகளைச் சுருக்கமாய்க் கூறுவோம். 1. பிற்பட்டோர் நலம் காத்தல்: ''திராவிட இயக்கங்களின் ஒரே குரல் பிற்பட்டோரை அல்லது பிராமணரல்லாதாரைக்காப்போம்" என்பதாகும். கூடவே, தாழ்த்தப் பட்ட, மலைவாழ் மக்களைக் காப்போமென்பதையும் சேர்த்துக் கூறியே ஆட்சிக்கு வந்தனர். அ.இ.அ.தி.மு.க. இம் முறையில் பிற்பட் டோரை டயர்த்துவதில் அதிக அக்கறை காட்டியது. 1986-ல் பிற்படுத்தப்பட்ட சாதிகளைக் கணக்கெடுத்து அதில் 201 சாதிகள் இருப்பதாகக் கணக்கிட்டது. அதாவது, தமிழக மக்கள் தொகையில் 54 சதவிகிதத்தினர் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த வர்கள்' எனக் குறிப்பிடப்பட்டனர். இவர்கள் கல்வி, பொருளாதாரம், சமுதாய நிலை (அந்தஸ்து) முதலியவற்றில் மிகவும் பிற்பட்டுள்ளதை யும் கண்டறிந்தது. 1951-ல் ஏற்பட்ட முதல் அரசியல் சீர்திருத்தச் சட்டத்தில் அரசியல் சட்ட விதி 15 (4) மற்றும் 16 (4) ஆகியவற்றில் பிற்பட்டோருக்கான விளக்கமும் பாதுகாப்பு விதிகளும் புகுத்தப் பட்டன. 1967-ல் ஆட்சிக்கு வந்த திராவிட முன்னேற்றக் கழகம், ''பிற்பட்டோர் நலத்துறை "' ஒன்றைத் தனியே ஏற்படுத்தியது. இத் துறை 1969-ல் தொடங்கப்பட்டு, என்.வி. நடராசனை முதல் பிற்பட்ட நலத்துறை அமைச்சராக அமர்த்தியது. அடுத்து, 1977-ல் ஆட்சியைப் பிடித்த அ.இ.அ.தி.மு.க. பிற்பட்டோர் நலத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கியது. 1980-பிப்பிரவரி முதல் தேதியிலிருந்து பிற்பட்டோருக்கான ஒதுக்கீட்டை 31- லிருந்து " 50 ஆக உயர்த்தியது. அதே ஆண்டில் ''பிற்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்" ஒன்றைத் தோற்றுவித்தது. 1986 - 87-ல் பிற் பட்டோர் நலனுக்காக 193.82 கோடி உருபாயை அரசு செலவிட்டது. இந்து பிற்பட்ட சாதிகளிலிருந்து கிறித்துவம், இசுலாம் மதத்திற்கு மாறியவர்களையும் பிற்பட்ட வகுப்பினராகவே சேர்த்துக் கணக்கிட்டது. இதனால் மக்கள் தொகையில் 65 சதவிகிதத்தினர் பிற்படுத்தப்பட்டவரென அரசுக் கூறியது. 2. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் முன்னேற்றம் : 1980-81-ல் அ.இ.அ.தி.மு.க. அரசு ஆதி திராவிடப் பழங்குடி வகுப்பாருக்கு, அவர்களின் முன்னேற்றத்தை விரைவுபடுத்தத் தனியாக ஒரு திட்டத்தை ஏற்படுத்திச் செயல்படுத்தியது. 1974-ல் தமிழ்நாடு ஆதி - திராவிடர் வீட்டு வசதிவாரியம் ஏற்படுத்தப்பட்டது! அவ்வாரியம் செவ்வனே செயல்பட 1985 - 86 ஆம் ஆண்டில் உருபாய் 14.62 கோடி ஒதுக்கியது. அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பதினெட்டுச் சதவிதிகள் ஒதுக்கீடு கல்வி நிறுவனங் களிலும், அரசுப் பணிகளிலும் ஒழுங்காகக் கடைபிடிக்கப்படுகிறதா என்பதில் தனி அக்கறை செலுத்தப்பட்டது. கலப்புத் திருமணம் செய்யும் ஆதி திராவிடருக்குத் தங்கப் பதக்கம் வழங்கும் திட்டமும் ரூபாய் 4,500 வழங்கும் நிதி உதவித் திட்டமும் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டன. பழங்குடி மக்கள் மீது தனிக்கவனம் செலுத்தப்பட்டது. 3. அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் பெண்கள் முன்னேற்றம் ஒரு பின்னோட்டம்: 26 - 01 - 1850 -ல் நடைமுறைக்கு வந்த இந்திய அரசியல் சட்டத்தில் இந்தியக் குடிமக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் ஆண், பெண் ஆகிய இருபாலருக்கும் பொதுவாகவே உள்ளன, சட்டத்தின் இருபாலாரும் சமம் ஆயினர், "பெண் என்ற பால் வேற்றுமைப்படுத்தி எந்த ஒரு பணிக்கும் பெண்ணாயிருப்ப தால் தகுதியற்றவர் என்று தள்ளிவிடக்கூடாது'' என்று அரசியல் சட்ட விதி 16 (2) கூறுகிறது. மேலும் அரசியல் சட்டவிதி 23 (1) -ல் ''எந்த ஒரு குடிமகனையும் எவரும் அடிமைப்படுத்தவோ, அல்லது அடிமையாக விற்கவோ கூடாது. அவ்வாறு செய்வோருக்குக் கடுமையான தண்டனை உண்டு' என்றும் கூறப்பட்டுள்ளது. அரசியல் சட்டம் நான்காம் பாகத்தில் "வழிகாட்டும் நெறிமுறை கள்'' உள்ளன. இதில் அடிப்படை உரிமைகள் பற்றி விதிகள் 36 - லிருந்து 51 - வரை கூறப்பெற்றுள்ளன. இவற்றில் கூறப் பெற்றுள்ள அடிப்படை உரிமைகளை எதிர்த்து எவரும் நீதி மன்றம் செல்லமுடி யாது என்பது குறிப்பிடத்தக்கதாம். இதிலுள்ள விதி 39), ''ஆண், பெண் ஆகிய குடிமக்கள் இருபாலரும் வாழ்வதற்கேற்றப் போதிய வசதிபெறும் உரிமை உடையவர்களாவர்'' என்று கூறுகிறது. எனவே, பெண்களுக்கு அரசியல் சட்டத்தால் அளிக்கப் பட்டுள்ள மேற்கண்ட அடிப்படை உரிமைகளை எதிர்த்து எந்த ஒரு விந்தாக்குப்பின் தமிழகம் 111 383 ஆணும் நீதி மன்றம் செல்ல முடியாது. மேலும் ஆண்களைப் போலவே பெண்களும் எந்த ஒரு பணிக்கும் செல்லும் உரிமையை அரசியல் சட்டவிதி 39 அளிக்கிறது இதையும் எந்த ஆணாலும் தடுக்க முடியாது. ''நியாயமான, மனித நேயமான பணிச்சூழலையும், தாய்மைக் கால நிவாரணத்தையும், பெண்களுக்கு அரசு அளிக்க வேண்டும்'', என்று பணிக்குச் செல்லும் பெண்களுக்கு அரசியல் சட்ட விதி 42-ல் பணிக்கப்பட்டுள்ளது! இத்தகைய அரசியல் சட்டப் பாதுகாப்புகளைத் தவிர கூடுதலாக அரசே தனிப்பட்ட பல சட்டங்களை இயற்றிப் பெண் களுக்குப் பாதுகாப்பு அளித்துள்ளது. எடுத்துக் காட்டாக, 1951-ல் ''சென்னை வரதட்சணை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது, இச்சட்டம் 1958, 1961 ஆம் ஆண்டுகளில் மேலும் திருத்தி அமைக் கப்பட்டது! 1955-ல் இந்துத் திருமணச் சட்டம், 1956-ல் இந்து வாரி வாரிசுரிமைச்சட்டம், இந்து மகமைச்சட்டம் (தத்தெடுப்புச் சட்டம்), வாழ்வுரிமைச்சட்டம் (சீவனாம்சச் சட்டம்) ஆகியவை கொண்டு வரப்பட்டன. இந்துத் திருமணச் சட்டத்தின்படி ஏற்கனவே திருமணமான ஆண் முதல் மனைவி இருக்கும் போதே மற்றொரு பெண்ணை மறுமணம் செய்யக் கூடாதென்றும், திருமண வயது வந்தபின் திருமணம் செய்ய வேண்டும் என்றும் கூறுப்பட்டுள்ளது! பலதாரங்களை மணக்கும் ஆணும், பல ஆண்களை மணக்கும் பெண்ணும் இந்தியத் தண்டனைச் சட்டம் விதிகள் 294 மற்றும் 295-இன் படி தண்டனைக் குள்ளாவார்கள். இவைபோன்ற சட்டங்களால் பெண்களுக்குப் பாதுகாப்பும், அவர்களின் முன்னேற்றமும் மேம்பட்டன. 1967 - முதல் 1976 வரை ஆண்ட தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 1967-ல் சுயமரியாதைத் திருமணச் சட்டம் அல்லது சீர்திருத்தத் திருமணச் சட்டம் அறிஞர் அண்ணாவால் கொண்டு வரப்பட்டது. இதனால் திருமணச் சடங்குகள், செலவுகளின்றி எளிதாகத் திருமணங்கள் முடிந்தன. 19்தி - ல் "வரதட்சணைத் தடுப்புச் சட்டம் கொண்டு வரப் பட்டு வரதட்சணைக் கொடுமைகள் ஒழிக்கப்பட்டன. 1996-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த போது உள்ளாட்சி மன்றங்களில் பெண் களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு ஏற்பட்டது. விதவைத் திருமண உதவித் திட்டம், கலப்புத்திருமண உதவித்திட்டம், முதலியனவும் பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்தின. 'பெண்களுக்குச் சொத் துரிமை'' ஏற்பட்டதால் வரதட்சணைக் கொடுமைகள் குறைந்தள். அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் ஏற்கனவே குறிப்பிட்டபடி இவ் வாட்சிக் காலத்தில் ''வழிகாட்டும் மையங்கள் மூலமும் தமிழ்நாடு பெண்கள் வளர்ச்சிக் கழகம் மூலமும் பெண்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டது! பெண்களைக் காவல் துறையில் அதிக மாகச் சேர்ந்தனர். 'மகளிர் காவல் நிலையங்கள்' ஏற்பட்டன. இவை பெண்களால், பெண்களுக்காகவே செயல்பட்டன. துணை ஆட்சி யாளர் துணைக் காவல்துறைக் கண்காணிப்பாளர்கள் போன்ற தமிழ் நாடு ஆட்சித் துறையின் முதல் நிலைப் பணிகளில் பெண்களுக் கெனப் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டன. இதனால் எல்லாத் துறைகளிலும் துறைத் தலைவர்களாகப் பெண்கள் வரும் வாய்ப்பு ஏற்பட்டது! பல் பெண் நீதிபதிகளும் ஏற் பட்டனர். காவல் துறையில் பெண் காவலர்கள், பெண் கண்காணிப் பாளர்கள் முதலிய பதவிகளில் தாழ்த்தப்பட்ட பழங்குடி. வகுப்பாருக் குரிய பதவிகளில் 10 சதவிகித இடஒதுக்கீட்டைக் கண்டிப்பாகப் பின்பற்றச் செய்துள்ளனர். முதல்வர் செல்வி. செ. செயலலிதா மேல்நிலைப் பள்ளி வகுப்புகளில் படிக்கும் தாழ்த்தப்பட்ட மாணவி களுக்கு இலவச இருசக்கர வண்டிகளை வழங்கினார். வழிகாட்டும் மையங்கள் மூலம் மூன்று சேவை இல்லங்கள், எட்டுத் தொழில் உற்பத்தி மையங்கள் முதலியன பெண்களுக்காக ஏற் படுத்தப்பட்டன. உருபாய் 12.5 இலட்சம் செலவில் 11, 220 மகளிர் மன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. இரண்டு அகவை முதல், ஐந்து அகவைக்கு உட்பட்ட குழந்தைகளுக்காக 2,988 குழந்தைக் காப்பகங்கள் ஏற்படுத்தப்பட்டன. விதவை மறுமணத்திற்கு ஆகும் செலவை அரசே கொடுத்தது! விதவைகள், குழந்தைகள் நலனுக்காக மட்டும் 1986-87-ல் உருபாய் . 117.82 இலட்சம் செலவிடப்பட்டது. அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பெண்களைக் கேலி கிண்டல் முதலிய குறும்புகளைச் செய்வோரைத் தண்டிப்பதற் கென்றே தனியே குற்றவியல் சட்டம் கொண்டு வரப்பட்டதால் இத்தகைய விலங்காண்டித்தனமான செயல்கள் குறைந்துள்ளன. 4. குழந்தைகள் நலம் காத்தல் 1982 - ஆம் ஆண்டு, சூலைத்திங்கள் முதல் நாள் முதலமைச்சர் சத்துணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. 1984-85 ஆம் ஆண்டில் மட்டும் இத்திட்டத்திற்கு உருபாய் 28.74 கோடி செலவிடப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் ஆண்டு முழுவதும் குழந்தைகளுக்குச் சத்துணவு வழங்கப்பட்டது. பற்பொடியும், வழங்கப்பட்டது. இதற்காகத் தமிழ்நாடு முழுவதும் 113 சத்துணவு ''குழந்தை நல மையங்கள்" ஏற்படுத்தப்பட்டன. ஆண்டு முழுவதும் குழந்தை களுக்குச் சத்துணவோடு, சத்துணவு உருண்டைகளும் வழங்கப் பட்டன. அவர்களின் உடல் நலத்தை மருத்துவர்கள் சோதித்தறிந்து மருந்து கொடுத்தனர். தட்டம்மை, மஞ்சள் காமாலை, முடக்குவாதம், யானைக் கால்நோய் முதலியன வருமுன் காக்கும் மருத்துவ உதவி களும் செய்யப்பட்டன. இத்தகையச் செலவினங்களுக்காக, சமுதாய நலத்துறைக்கு அரசு 1984 - 85 ஆம் ஆண்டில் மட்டும் உருபாய் 12.28 கோடி செலவிட்டது. 5. ஊரக வளர்ச்சி மேம்பாடு ஊர்ப்புறங்கள் தன்னிறைவு பெற வேண்டும் என்றக் கொள்கை யின் அடிப்படையில் பாதுகாக்கப்பட்ட குடிநீர்', ''நகர்புறங்களை ஊர்ப்புறங்களோடு இணைக்கும் சாலைகள், பாலங்கள், ஆதி திராவிட குடியிருப்புப் பாதைகள் அமைத்தல், குளங்கள், ஏரிகள், சிறு நீர்நிலைகள், மருத்துவமனைகள், தாய்-சேய் நலவிடுதிகள், பள்ளிக் கூடங்கள் முதலியனவற்றை ஊர்ப்புறங்களில் ஏற்படுத்துவதால் அவை தன்னிறைவு பெற்றவையாகும். குறிப்பாக ஆதி - திராவிடர் குடியிருப்புகளை அரசே அமைத்தளித்தது. அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் ஊர் வளர்ச்சிக்கெனவே, 378 வட்டாரங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்த 378 வட்டாரங்களில் அடங்கிய ஊர்களைத் தன்னிறைவு பெறச் செய்வதற்காக அரசு முன்று கட்டங்களில் பகுதி, பகுதியாகத் தன்னிறைவு அடையச் செய்தது. முதல் கட்டமாக: 1980 - 81-ல் 89 வட்டாரங்கள் தன்னிறைவு பெறுவதற்காக அரசு உரூபாய் 46. 42 இலட்சம் செலவிட்டது. இரண்டாவது கட்டமாக : 1981 - 82 - ல் 150 வட்டாரங்கள் தன்னிறைவு பெற்ற அரசு வேண்டிய நிதி ஒதுக்கியது. மூன்றாவது கட்டமாக: 1982-83-ல் 159 வட்டாரங்களைத் தன்னிறைவு அடையச் செய்தது. இதற்காக அரசு 113 கோடி உருபாய் செலவிட்டது. இத்தகையத் தன்னிறைவுத்திட்டங்களால் ஊர்ப்புறங்களின் போக்குவரத்துக் கள் அதிகரித்தன. பொருளாதாரமும் வளர்ச்சி அடைந்தது. 6. தமிழ் மொழி வளர்ச்சி 1956-ல் "தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் உருவானது. 23-1 1957 முதல் தமிழே ஆட்சிமொழி ஆனது, தமிழ் வழி நிருவாகத்தை நடத்த அரசு முனைவது பற்றி ஆய்ந்துரைக்க, "ஆட்சிமொழி ஆய்வுக் குழு ஒன்றையும் அரசு ஏற்படுத்தியது. இக்குழுவால் வழிவகைகள் ஆயப்பட்டதோடு ஆட்சியாளரின் கையேடாக 1966 -ல் ஆட்சிச் சொல் அகரமுதலி' ஒன்றையும் தயாரித்துக் கொடுத்தத்து! "தமிழ் தட்டச்சுகள்"' பயன்பாட்டிற்கு வந்தன. தமிழ் தெரிந்தவர்களே அரசுப் -பணிகளில் அமரும் கட்டாயம் ஏற்பட்டது. அரசு அலுவலகங்களில் "தமிழ்மொழிபெயர்ப்புப்பிரிவு""ஒன்றும் ஏற்பட்டது. துறைவாரியாக ஆங்கிலத்தில் கையாளப்படும் செயல் முறைத் திட்டங்களில் வரும் சொற்களுக்கென விளக்கக் குறிப்புகளும் வெளியிடப்பட்டன. 1965 - ல் "தமிழ்ச் சுருக்கெழுத்து " நூல் வெளியிடப்பெற்றது. சாதாரண எழுத்தர் முதல் எல்லா அதிகாரிகளுக்கும், இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளுக்கும், இந்தியக் காவல்பணி அதிகாரி களுக்கும், கோப்புகளைத் தயாரித்தல், கையாளுதல் முதலியவற்றில் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. தேர்வுகளும் நடத்தப்பட்டன. இதற்காகவே 1968-ல் 'தமிழ் வளர்ச்சித்துறை ஏற்படுத்தப்பட்டது. ஆட்சிமொழி வளர்ச்சிக்கு உதவுவதோடு, இத்துறை வேறுசில் பணிகளை யும் மேற்கொண்டது. கி.பி. 1857முதல் 1957வரை வெளியிடப் பெற்ற தமிழ் நூல்களின் விவரப் பட்டியலும், தமிழக வரலாறும், பள்ளி, கல்லூரிகளுக்கான பாடநூல்களும், சிறந்த ஆங்கில நூல்களைத் தமிழில் பெயர்த்து எழுதுவதையும் மேற்கொண்டது! பின்னர் பாடநூல்களை வெளியிடத் தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம் நிறுவப் பட்டது. சிறந்த தமிழ் மொழி பெயர்ப்பு நூல்களுக்குப் பரிசுகளும், வெளியீட்டுச்செலவும் அளிக்கப்பட்டன. பிற மாநிலங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் தமிழ்மொழி வளர்ச்சிக்கு வகை செய்யப் பட்டன், தமிழ் அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் பரிசுகளும், வறுமை யில் வாடும் தமிழ் அறிஞர்களுக்குப் பண உதவியும் அளிக்கப் - பட்டன. அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் அரசவைக் கவிஞர் அமர்த்த ப் பட்டுப் பெருமைப்படுத்தப்பட்டார். தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தமிழ்த் தட்டச்சும், தமிழ்ச் சுருக்கெழுத்தும் ஆட்சிமுறையில் அலுவலகங்களுக்கும் பயன்பட்டன. அதற்கேற்றாற் போல் தமிழ் எழுத்துகளின் உருவ அமைப்புகளை மாற்றி அமைக்கும் கட்டாய மும் ஏற்பட்டது. தமிழ் எழுத்துச் சீர்திருத்தங்களைச் செய்ய மகா வித்வான் மே.வி. வேணுகோபால் பிள்ளை தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது, திருத்திய தமிழ் எழுத்துகளைத் தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் ம. கோ. ரா., (எம் ஜி ஆர்,), 1978 - ல் ஈரோட்டில் நடந்த கூட்டத்தில் அறிமுகப்படுத்தினார். இவ்வாறு, அறிமுகப்படுத்தப்பட்ட எழுத்துச் சீர்திருத்தம் தமிழ்" வளர்ச்சித்துறை மூலமாகச் செயல்படுத்தப்பட்டது. அதற்கென அலுவலர்கள் அமர்த்தப்பட்டனர், படிப்படியாக, இவ்வெழுத்துச் சீர் திருத்தம் ஒவ்வொரு துறையாகச் செயல்படுத்தப்பட்டது. இதனையே முனைப்புத் திட்டங்களென்பர். 4-10-1991-ல் மதுரையில் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டது. அதில் முதல்வர் ம. கோ.ரா. (எம்.ஜி. ஆர். "உலகச் செம்மொழி தமிழே!' யெனப் பேரறிக்கை செய்தார். விந்தனைக்குப்பின் தமிழகம் II 7. பொருளாதார வளர்ச்சி (அ) வேளாண்மை : - வேளாண்மையே தமிழகத்தின் உயிர் நாடி யாகும். இதன் வளர்ச்சியே தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊன்றுகோல் ஆகும். அரசு வேளாண்மை வளர்ச்சிக்கு ஏந்தாக வேளாளர்களில் ''சிறு உழவர்கள்' என்போரைத் தனியே பிரித்து உதவ முன் வந்தது! அரசு பத்து குறுக்கம் (ஏக்கர்) வரை நிலமுள்ளவரைச் "சிறு உழவர் கள்" என்று பிரித்தது ! இவர்களுக்காக வேளாண்துறையின் கீழ் இயங்கும் படி ''உழவர்கள் நலக் குழு ஒன்றை அமைத்தது. அவர் களின் விவசாயக் கடன்களை அரசு தள்ளுபடி செய்தது! இவ்வாறு, ம.கோ. ரா. (எம். ஜி. ஆர். ஆட்சியில் தள்ளுபடி செய்யப்பட்ட கடன் சுமை மட்டும் ஏறத்தாழ 72 கோடி உரூபாய் ஆகும். அடுத்து, வேளாண்மை வருமானத்திற்கென்று வருமான வரி கட்டப்பட்டதை யும் வரிவிலக்களித்துத் தள்ளிவிட்டது. இதனால் 20 குறுக்கம் நிலம் வைத்திருக்கும் உழவர்கள் இத்தகைய வேளாண் வருமான வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டனர். குத்தகைதாரர்கள் வருவாயில் 75 சதவிகிதம் கிடைக்க வகை செய்யப்பட்டது; சிறுஉழவர்களுக்கு மின் கட்டணம் குறைக்கப் பட்டது; அவர்களுக்கு உரம் போன்ற இடுபொருள்கள் மானிய விலையில் கொடுக்கப்பட்டன. கூட்டுறவுச் சங்க வங்கிகள் மூலம் உழவர்களுக்குக் குறைந்த வட்டியில் கடன் கொடுக்கப்பட்டது: மண் பரிசோதனை செய்து விளைச்சலை அதிகப்படுத்த வழிசெய்யப்பட்டது. விலை பொருள் கள் விற்பனைச் சந்தைகள் ஏற்படுத்தப்பட்டன; பஞ்ச நிவாரணம் அளிக்கப்பட்டது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம்'', "தமிழ் நாடு பண்ணை வளர்ச்சிக் கழகம்", "தமிழ் நாடு சர்க்கரைக் கழகம்". ''தமிழ்நாடு விவசாயப் பொறியியல், தொழில் வளர்ச்சிக் கழகம்", முதலியன சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வேளாண் வளர்ச்சிக்கு உறுதுணையாயின. 1981-ல் 'தமிழ்நாடு கூட்டுறவுப் பால் உற்பத்தி இணை யம்'' நிறுவப்பட்டது! இதற்காகச் சிறந்த கால் நடைத் தீவன முறை யும் மேம்படுத்தப்பட்டது. பால் வளத்தால் "வெள்ளைப் புரட்சியும், மீன் வளத்தால் "நீலப் புரட்சியும் தமிழகத்திலேற்பட்டன. (ஆ) காடு வளர்ப்பு: 1986-ல் ''சமுதாயக் காடுகள் மேம்படுத்தப்பட்டுக் காடுகள் காப்பாற்றப் பட்டன. குமுகாயக் காடுகளால் 14.2 மிலியன் எடை (டன்) விறகு உற்பத்தியானது. 1986-87-ல் காடுகளை மேம்படுத்த 20, 28 கோடி உருபாய் செலவிடப்பட்டது. கால்நடை மேம்பாட்டுத் திட்டத்திற்காக உரூபாய் 27.23 கோடி செலவிடப்பட்டது. வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப் பதும், நகர்ப்புறமும், ஊர்ப்புறமும் பொருளாதாரத்தில் சமமாக முன் னேறுதலும் அ.இ.அ.தி.மு.க. அரசின் நோக்கமாகும். தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம்" கரும்பு உற்பத்தி, சிமெண்டு உற்பத்தி, காகித உற்பத்தி முதலியவற்றிற்கான தனித்தனி வளர்ச்சிக் கழகங் கள் ஏற்படுத்தப்பட்டன. - அரசின் தொழில் வளர்ச்சிச் செயலாக்கத்திற்காக முனைப்புத் திட்டங்கள் வகுக்கப்பட்டன. அவை ஊர்ப்புற வளர்ச்சித் திட்டங்கள், நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்கள் என இருவகைப்படும், பளர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் = பட்டுப் பூச்சிகளை வளர்த்தல், பீங்கான் தொழில்கள், உலோகத் தொழில்கள், கை நூல் (கதர்) தொழில், பனைப் பொருள்கள் தயாரித்தல், எண்ணெய், சோப்பு, மரச்சாமான்கள் செய்தல் முதலியவற்றால் ஊர்மக்களுக்கு வேலை வாய்ப்புகள் ஏற்பட்டன, (F) பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ஏந்துகள் வேளாண்மையேதமிழகப் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பு ' ஆகும். வேளாண்மைக்கு நீர்ப்பாசன ஏந்துகளே அடிப்படையாகும். இதற்காக முதல்தர, இடைத்தர், சிறு நீர்ப்பாசன ஏந்துகளுக்காக அரசு பல கோடி உருபாய் செலவிடுகிறது. - முதல்தர, இடைத்தர நீர்ப்பாசன ஏந்துகளுக்காக 1985ஆம் ஆண்டில் அரசு 48.12 கோடி உருபாய் செலவிட்ட தென்றும், சிறு நீர்ப்பாசன திட்டத்திற்காக உரூபாய் 4.62 கோடி செலவிட்டதென்றும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. பஞ்ச நிவாரணத்திற்காக 1986 ஆம் ஆண்டில் உரூபாய் 153.69 கோடி செலவிடப்பட்டது. பஞ்ச நிவாரணத் திட்டத்தின் கீழ் குடிநீர் ஏந்துகள் பலவும் மேற்கொள்ளப்பட்டன. 'வயிற்றுக்குச் சோறு" எனும் திட்டத்தின் கீழ் வேலையில்லா உழவர்களுக்கு வேலையும் கடனுதவியும் தரப்பட்டனர். தவசச் சேமிப்புக் கிடங்குகள் கட்டப்பட் டன்: சிமெண்டு உற்பத்தி அதிகரிக்கப்பட்டது; வீடு கட்டக் கடன் வழங்கப்பட்டது. மற்றும் பஞ்ச நிவாரணப் பணிகள் அளிக்கப் பட்டன. கையால் உற்பத்தித் தொழிலில் மட்டும் 1,28, 800 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது! மொத்தத்தில் தமிழ் நாட்டில் தொழில் உற்பத்திக்குச் செலவிடும் தொகையில் 38.5 சதவிகிதம் வளர்ப்புற வளர்ச்சிக் கெனவே செலவிடப்பட்டது. 8. கல்வி வளர்ச்சி: ம. கோ.ரா. (எம்.ஜி.ஆர்.). முதல்வரானதும் 1977-78 -ல் கல்வி வளர்ச்சிக்காகவே உருபாய் 160 கோடி செலவிடப்பட்டது. 1985 - 86 ஆம் ஆண்டில் இது ரூபாய் 534 கோடியாக உயர்ந்தது! ஓளர்ப்புறத்திற்கே கல்லூரிப் படிப்பு வந்துவிட்டது. பள்ளிப் படிப்பு பத்தாண்டுகளுக்குப்பின் நகரங்களுக்குச் சென்று கல்லூரி, களில் படிப்பதைத் தவிர்த்து பள்ளிப் படிப்பு, மேல் நிலைப்பள்ளிப் படிப்பு ஆகிய இரண்டுமே கர்ப்புறங்களிலேயே வந்துவிட்டன. எனவே, கல்லூரிப் படிப்பு கர்ப்புற வாசலுக்கே வந்துவிட்ட தென்பர். அங்கிருந்து மாணவர்கள் நேரே மருத்துவம், பொறியியல் ஆகிய பட்டப்படிப்புகளுக்காகக் கல்லூரிகளுக்குச் சென்றனர். எனவே, ஒரு மாணவனைப் பொறியாளன், மருத்துவன் என்பதை ஊரிலேயே தீர்மானித்தனர். திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக் கழகமும், கோவையில் பாரதியார் பல்கலைக்கழகமும் தொடங்கப்பட்டன. அன்னை தெரசாப் பல்கலைக்கழகம் கோடைக்கானலிலும், தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகமும் தோன்றின. அண்ணா பொறியியல், தொழில் நுட்பப் பல்கலைக்கழகம் சென்னையிலும், அழகப்பா பல்கலைக் கழகம் காரைக்குடியிலும் தோன்றின. அஞ்சல் வழிக் கல்வி முறையில் தமிழ் வழிக் கற்பிக்கும் முறை வந்தது. முறை சாரா கல்வி முறை பல்கலைக்கழகங்களில் தொடங்கப்பட்டது. அரசு செலவிடும். கல்வித் தொகையில் 80 விழுக்காடு பள்ளிக் கல்விக்கும், மதிய உணவுத்திட்டம், இலவசச் சீருடை, பாடநூல்கள், கற்பலகைகள் முதலியன வழங்கும் திட்டத்திற்குமே செலவிடப் பட்டது. இதனால் பள்ளிகளில் மாணவர் வருகை அதிகரித்தது. இடையிலே பள்ளிப் படிப்பை நிறுத்துவதும் குறைந்தது. உள்ளாட்சிப் பள்ளிகளிலிருந்த வேறுபாடுகள் நீக்கப்பட்டன. யாவும் "அரசுப்பள்ளிகள்"" என அறிவிக்கப்பட்டன. இவற்றிற்கு ஒரே சீரான மானியம் வழங்கப்பட்டது. ஆசிரியர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது! ஒரே சீரான ஊதியம், ஓய்வு ஊதியம் ஆகியன நிர்ணயிக்கப்பட்டன. கல்லூரி ஆசிரியர்களுக்குப் பல்கலைக்கழக மானியக்குழு நிர்ணயித்த ஊதியம் வழங்கப்பட்டது! தனியார் கல்லூரி ஆசிரியர் களுக்கு அரசே நேரடியாக ஊதியம் வழங்கியது! அரசுக் கல்லூரி ஆசிரியர்களைப்போலவே ஊதியம், ஓய்வு ஊதியம் முதலியன வழங்கப்பட்டன. இத்தகைய கல்விச் சீர்திருத்தங்கள் பொறியியல், மருத்துவம், வேளாண்மைக் கல்லூரிகளிலும் செய்யப்பட்டன. 9. சுகாதார நல மேம்பாடு ஊர்ப்புற மக்களுக்கும் நகர்ப்புற மக்களுக்கும் சுகாதார ஏந்துகளை ஏற்படுத்துவதே அரசின் நோக்கமாகும். சுற்றுச்சூழலைத் தூய்மைப்படுத்துவது, தொற்று நோய்களைப் பரவாமல் தடுத்தல், வருமுன் காக்கும் முறைகளைக் கையாளுதல், தரமான மருந்துகளையும், சிகிச்சைகளையும் அளித்தல் , குறிப்பாகத் தாய் - சேய்களுக்கு நோய்த் தடுப்பு முறைகளைப் பின்பற்றுதல், உரிய தரமான மருந்து அளித்தல், சிகிச்சைகளை அளித்தல் வளர்ப்புற சுகாதார ந ன க ப்படுத்துதல் - தக்ய 14:37) க+37ா - ரச கையாண்டது !' குறிப்பாகச் சத்துணவு வழங்கும். திட்டம் : மாயனார் மக்களின் சுகாதார மேம்பாடு இவற்றிலும் அரசு 15:37ப்பாகச் செயல்பட்டது!. - அரசு 67ட்டு மருத்தபேக் கல்லுாரிகளை அமைத்தது! ஆக,ண்டு தோறும் பெற்றிருந்து 1,115 பருத்துவர் பரிசுப் பெற்றனர். அவர் கரில் 45{] சிபர் மேல் பட் - ft.ருத்து வேட்படிப்பிற்காக அனுப்பப் பட்டனர். மாவட்ட மருத்துவனைகள் பதினான்கும், வட்ட மருத்துவ Ifனனகள் டிராகட்டும், தொடக்கச் சுகாதார நிப் 14 சங்சுள் பாவம் செயல் பட்டன. இவற்றில் தரமான மருந்துகளும், சிகிச்சைகளும் அர்த்தப்பட்டதோடு நோய்த் தடுப்பு (4/கைகளும், குடும்பக் கட்டுப் பாடும் சகயாலாப்பட்டனர். 10. ரின் வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டம்: இன்றைய வாழ்க்கைக்கு மின்சாரம் இன்றியமையாத ஒன்றாகி நரிட்டது. ராட் 17 ன் ன ாழில் வளர்ச்சி, பனபு 5ற்பத்தி, 1.ாாதுகாப்.. முதலியவற்றிற்கும் மின்சாரம் அடிப்படைத் தேவைய!, விட்டது'. 1970-71 - 1, 5. {057 மெகாவாட் 43Fட்டுசுளாயிருந்த மின்" உற்பத்தி அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் 1435 - 33 - ல்) 11.0? மெகா பா- பூரிகளாய் உயர்ந்தது - 145 - A; (t - 1 இன் 1 ற்ப த்திக், காக 17 - FIFபாய் 1 17.22 , 4, ரா (1) செலவிடப்பட்டது. (வண்டிய நிலக்கரி இறக்குமதி செய் பயப்பட்டது. 1956-ஆம் ஆண்டில் மட்டும் 4.5 இலட்சம் ச,டிசைகளுக்குக் தசரந்த சட்ட பிணத்தில் ரின்சாரம் வழங்கப்பட்டது ! 19-ஆர்: ஆ, ராடி வதந்து 14 ( 12 - திராவடர் குடி, ஈசைகாரக்கு, பள்ளர் பரின்சாரம் வழங்கப்பட்டது. 1931-35-ல் F {}, 74 இலட்சம் விவசா4! | 1.மோட்டார்களுக்கு, மீன் பிரயோகம் செய்யப்பட்டது, 11. போக்குவரத்து பந்துகளை அதிகப்படுத்துதல். ப : (இ. அ. தி. க. , - 'பின்டாது! னார்ப்புறங்களllல் வசித்து சிப்க்கள் தொகை 3.14 கோடியாகும். 1. பஞ்சாயத்துக்களின் எண்ணிக் க. 12,212 ஆ. (கும். நகர் - தி ராயாப் போக்கு 3 ரத்துச் சாகா . சுள் -34திகரிக்கப்பட்டன. அப்போது 4:11 நரங்கபாடப் 1யர் பக்கங்கள் டோய் பர்பி பெரிதும் டதரிசன. தமிழகத்தில் ஒ 1:டய 15, 1][] (பருந்துகள் பன்னிரண்டு பாக்கு, 6.பரத்துக் க[[சங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. தமிழ்நாட்டில் 51த்த இடத்திலிருந்தும் எந்த ஒரு இடத்திற்கும் செல்வப் பேருந்து தொடர்புகள் உள்ளன, அ.இ.அ.தி.மு.க., ஆட்சிகாலத்தில் ஏற்பட்ட இந்தகை!ப் பேருந்து வசதிகளால் 4, 41 கிராமங்கள் பருத்துத் தடங் சாரல் இணைக்கப்பட்டுள்ளன. இதற்காக 13 கே ராபு. உரூபாய் செட்டவில் fi, [1] [1) புதிய பேருந்துகள் பொங்கப்பட்டன, விடுதலைக்குப்பின் தமிழகம் 111 12. சமுதாயச் சீர்திருத்தங்கள்: ம. கோ. இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர் ஆட்சியில் சிறந்த சமுதாயச் சீர்திருத்தங்களாகக் கொள்ளப்பட்டவை கிராம் மணியக் காரர், கணக்கப்பிள்ளை ஆகிய பணிகளைப் பரம்பரைப் பணிகளாய் இல்லாமல் அரசுப் பணிகளாய் மாற்றி, அதற்கும் அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளின் மூலம் தேர்ந்தெடுத்தவர்களையே அமர்த்தி யதுமாம். இதனால் இப்பணிகளில் அரசாணைப்படிவகுப்புவாரிப்படி நிகராளிய முறைப்படி எவரும் அமர்த்தப்பட்டனர். இதன் விளை வாக ஆதி - திராவிடரும் மணியக்காரர்களாகவும், கணக்கர்களாகவும் வரும் வாய்ப்பைப் பெற்றனர்ஒருசாதிச்சான்றிதழ் வாங்க முடியாமல் தவித்த ஓர் இனம் சான்றிதழையே வழங்கும் அதிகாரம் பெற்றது. ஒரு சமுதாயப் புரட்சிதான். இவர்களைக் கிராம அலுவலர் என்றழைத்தது, ஒரு நூற்றாண்டு காலமாக ஆதி திராவிடத் தலைவர்கள் ஓயாது வற் புறுத்திக் கேட்டு வந்த இந்தக் கோரிக்கையை ம. கோ. ரா. (எம்.ஜி.ஆர். நிறைவேற்றிவிட்டார். போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற ஆதி - திராவிடப் பெண்களும் கிராம் அதிகாரிகளாக உள்ளனர். இதைப் போலவே மேல் சாதிக் கட்டுப்பாட்டிலிருந்த வரு வாய்த்துறை அல்லது) இறைநெறிக்கழகம் ஒழிக்கப்பட்டுச் சமுதாய நீதி யாவருக்கும் சமமாகக் கிடைக்க வழி செய்யப்பட்டது. இதனை 1-12-1980 - ல் ம. கோ.ரா. ( எம்.ஜி.ஆர்.) தனது அரசாணையால் ஒழித்தார். அடுத்து, உள்ளாட்சியில் பஞ்சாயத்துத் தலைவர்களாக வரும் வரும் வகுப்புவாரிப் படி நிகராளிய ஆணைப்படிதான் வரவேண்டும் என்று ஆனதால் ஆதி திராவிடர்களும், ஆதி திராவிட மகளிரும் பஞ்சாயத்துத் தலைவர்களாக வரும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். இது காந்தி அடிகளாரின் கனவாயிருந்தது. இதனைச் செயல்படுத்திக் காட்டியது அ.இ.அ.தி.மு.க. அரசுதான். ஆயினும், சாதி உணர்விலே ஊாறிவிட்ட சாதி - இந்துக்கள் இதனைப் பொறுத்துக் கொள்ள முடியா மல் கலவரத்திலும், வன்முறையிலும் ஈடுபடுகின்றனர். ம. கோ.ரா. எம்.ஜி.ஆர். ஆட்சியில்தான் சாதிப் பட்டங்களைத் தாங்கி நின்ற சாலைகள், வீதிகளின் பெயர்களிலிருந்து "சாதிப் பட்டங் கள்"* ஒழிக்கப்பட்டன. " பிராமணர் உணவகம்'' என்பது மரக்கறி உணவகமாகும். ஆனால், அதில் பிராமணர் என்பது குறிப்பிட்ட சாதி யைக் குறிப்பிடுவதால் தந்தை பெரியார் நீண்ட காலப் போராட்டம் நடத்தினார். பல நூறு தொண்டர்கள் சிறைப்பட்டனர். பெரியாரின் பாசறையில் வளர்ந்த ம. கோ.ரா. (எம்.ஜி.ஆர்.) சாதிப் பெயர்களைத் தாங்கிய பலகைகளையும் அகற்றினார், - சுப்பு ஐயர் தெரு, சுங்குராமச் செட்டித் தெரு, நடேச முதலியார் சாலை முதலியவற்றிலிருந்த ஐயர், செட்டி, முதலியார் ஆகியோர் மறைந்தனர். இதற்குக் கூடப் படித்ததோ ஈரோட்டுப் பள்ளியிலே பட்டம் பெற்றதோ காஞ்சிப் பல்கலைக் கழகத்திலே" என்று கூறிய அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மு. கருணாநிதி எதிர்ப்புத் தெரிவித் தார். ''அரிசன்" என்று காந்தியடிகளால் அழைக்கப்பட்டிருந்தும் அது வேற்று மொழியாக உள்ளதால் தமிழிலே அவர்களை 'ஆதி - திராவிடர்" என அழைக்கும்படி ஆணை பிறப்பித்தவர் ம. கோ.ரா. (எம்.ஜி.ஆர்.) தான், இத்தகைய செயற்கரிய செயல்களுக்காகத்தான் அவரைப் புரட்சித்தலைவர் என்றனர் அறிஞர் பெருமக்கள். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் சட்ட முன்வரைவு: ஒருபின்னோட்டம்: 26-1-1970 - நாள் இந்தியக் குடியரசின் 20 - வது ஆண்டு விழா நாளாகும் அன்று இந்துக் கோயில்களின் கருவறைக்குள் நுழையும் கிளர்ச்சியைத் தந்தை பெரியார் நடத்தப் போவதாக அறிக்கை வெளியிட்டார். அன்று நடந்து கொண்டிருந்த தி.மு.க. அரசு 1971-ல் ''இந்துச் சமய அறநிலையப் பாதுகாப்புத் திருத்தச் சட்டம்' கொண்டுவருவதாக இருந்த்தால் அண்ணாவின் வேண்டுகோளுக்கிணங்க தந்தைப் பெரியார் தன் கிளர்ச்சியைக் கைவிட்டார். தி.மு.க. அரசே இச்சட்டத்தைக் கொண்டு வந்தது. 1. அச் சட்டத்தின்படி அதுவரை இந்துக் கோயில்களில் அர்ச்சக ராகவும், இதர பணியாளர்களாகவும் இருந்தவர்கள் அரசுப் பணியாளர் சட்டத்திற்குட்பட்டவர்களாகக் கருதப்படவில்லை, ஆனால் இனி அவர்கள் அரசுப் பாணியாளர்களே யென்றும், அரசுப் பணியாளருக்குரிய கட்டுத்திட்டங்களுக்குட்பட்டவர் களே என்றும் ஆயிற்று. அவர்களின் நியமனம், அவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் முதலியவற்றில் உள்துறைப் பணியாளர்கள் போலவே இனி நடத்தப்படுவரெனவும் இச் சட்டம் கூறியது. எனவே, அரசுக்குக் கட்டுப்படாமல் தனிச்சலு கைகளுடன் இனி அவர்கள் நடக்க முடியாதென ஆயிற்று. இச் சட்டத்தின் 55-வது விதி தெளிவாகக் கூறுகிறது. அதாவது, அர்ச்சகர் பதவி காலியானால் இதுவரை, அர்ச்சகரின் வாரிசுக்குத் தான் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனை இனிச் செல்லா தென்றும் தகுதியுள்ளவர்களை அரசே தேர்ந்தெடுத்துத் தரு மென்றும் கூறியது. இதனால் அர்ச்சகர் பதவிக்குத் தகுந்த படிப்பும், தேர்ச்சியும், மற்ற தகுதிகளுமுடையவருக்கே அளிக் கப்படும் என்பது உறுதியாகிவிட்டது. இத்தகைய தகுதியுடைய எவரும் அப்பதவிக்கு வரலாமென்பதும் உறுதியாயிற்று. இச்சட்டத்தின்படி தகுந்த படிப்பு, வயது, போட்டித் தேர்வில் தேர்ச்சி, இதரத் தகுதிகளுடைய எந்தச் சாதியைச் சேர்ந்தவரும் மற்ற அரசுப் பணிகளில் அமர்த்துவதைப் போலவே அமர்த் தப்படுவர். வாழையடி வாழையாகப் பிராமணர் மட்டுமே அர்ச்சகராகும் தனி உரிமை (ஏகபோக உரினம்) இச்சட்டத்தால் ஒழிக்கப்பட்டது. அர்ச்சகரும் அரசுப்பணியாளரானதால் அரசுப் பணியாளர்களைப் போலவே சட்டத்திற்கும், ஒழுங்கு நடவடிக்கைகளுக்கும் கட்டுப்பட்ட சாதாரண பணியாள ராயினர். இச்சட்டத்திற்கு எதிர்ப்பு: இச்சட்டத்தைப் பிராமணர்கள், வைதீகப் பிராமணரல்லாதார், இராசாசியின் சுதந்திரா கட்சி, இந்து முன்னணிரி முதலிய பிற்போக்காளர்கள் எதிர்த்தனர். எதிர்ப்புக்கு அவர்கள் கூறிய காரணங்களாவன: இச்சட்டம்மனுதருமத்திற்கும் ஆகம விதிகளுக்கும் எதிரானது; அரசுக்குச் சமயத்தில் தலையிட உரிமை இல்லை ; சமயம், சாத்திரம், சம்பிரதாயம் இவை அரசுக்கு அப்பாற்பட்டவை. மரபு முறையை எந்த அரசும் சட்டத்தின் மூலம் திருத்தக் கூடாது என்றனர். இச்சட்டத்தை எதிர்த்து அவர்கள் தில்லியிலுள்ள உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். மேற் கூறிய காரணங்களைக் கூறி, அரசியல் சட்டத்தில் உள்ள சமய உரிமைகளின் படி தீர்ப்பு வழங்கக் கோரினர். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு: 1. அர்ச்சகர்கள் கோயில் பணியாளர்களே" என்று கூறும் அரசின் சட்டம் சரியானதே. ஆனால் இது அர்ச்சகரின் ஆசாரங் கள், சடங்குகள் அரசுக் கட்டளைகளை விதித்து அவற்றில் அரசு தலையிட்டுள்ளது. இதனை எதிர்க்க அர்ச்சகருக்கு உரிமை யுண்டு; ஒரு குறிப்பிட்ட கடவுளை (உருவத்தை வழிபட, அதற்குரிய சடங்குகளைத் தெரிந்தது, அவற்றில் பயிற்சியுடைய அர்ச்சகர் தானிருக்க வேண்டும். அதிலும் அவற்றில் வாழையடி வாழையாகப் பயிற்சியுடைய ஒரு குறிப்பிட்ட சாதியார்தான் இருக்க வேண்டும்; இதுவே, ஆகமவிதி: ஆகமங்களால் அங்கிகரிக்கப்படாத பிற சாதியார் அர்ச்சக ரானால், கடவுளின் உருவம் அவர்கள் தொடுவதால் தீட்டுப் பட்டு விடும் அத்தகையச் செயலை அரசின் ஆணைப்படி செய் தாலும், ஆகமம் அனுமதிக்காது. இவ்வாறு, சமய நம்பிக்கையிலும், பழக்க வழக்கத்திலும், சாத்திர சம்பிரதாயத் திலும் எவர் தலையிட்டாலும், ஆகம விதிகளேயல்லாமல், அரசியல் சட்டவிதிகளும் அனுமதிக்காது; அரசியல் சட்ட விதி 25(1) கூறுவதாவது: எவருக்கும் எந்தச் சமயத்தையும் பின்பற்றி நடக்கவும், விருப்பம் போல் வழிபடவும், சமயச் சடங்குகளைச் செய்யவும், மனச்சாட்சிப்படி நடக்கவும், அடிப்படை உரிமையுண்டு. இதனைச் சட்டத்தால் மட்டுப்படுத்தவோ, தடுக்கவோ, திருத்தி அமைக்கவோ முடியாது." எனவே, இச்சட்டம் அரசியல் சட்டம் வழங்கும் சமய அடிப்படை உரிமையான விதி 25 (1) -க்கு எதிரானது என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பில் இரண்டு கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன. அர்ச்சகர்கள் அரசுப்பணியாளர்களேயென்ற சட்ட வாசகம் தீர்ப்பில் ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால் பிராமணர் தவிர வேறு சாதியார் அர்ச்சகராக முடியா தென்பதுமாகும். இந்த இரண்டாவது கருத்தே சட்டத்தைச் செல்லாததாக்கி விட்டது அரசியல் சட்ட விதிகள் 15 மற்றும் 16 - களில் "எந்த ஒரு பணிக்கும் எவருக்கும் சாதி, சமயம், பிறப்பிடம் முதலியன தடை யாக அமையக் கூடாது'' என்கின்றன. மற்றும் அரசியல் சட்ட விதி 17-இன்படி தீண்டாமை அடியோடு நீக்கப்பட்டு விட்டதென்றும், தீண்டாமையை எந்தவடி வில் கடைப்பிடித்தாலும் தண்டனை யுண்டென்றும் கூறப்படுகிறது! ஆனால், உச்சநீதி மன்றத் தீர்ப்பில் பிராமணச் சாதி மட்டுமே அர்ச்சகராகத் தகுதியுடைய வரென்றும், மற்றச் சாதியார் தகுதியற்றவரென்றும் கூறப்பட்டுள்ளது. இது அடிப்படை உரிமையை வழங்கும் அரசியல் சட்ட விதிகள் 15 மற்றும் 16 -களுக்கு எதிரானதாகும். பிராமணர் தவிர மற்றச் சாதியார் சாமியைத் தொட்டால் தீட்டு என்று கூறிய தீர்ப்பும் அரசியல் சட்ட விதி 17-க்கு எதிரானதாகும்: தி.மு.க ஆட்சிக்காலத்தில் இந்து சமய அறநிலையப் பாதுகாப்புச் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்த அரசு இத்தீர்ப்பை எதிர்த்துப் போரிடவில்லை . ஆனால், ம. கோ.ரா. (எம்.ஜி.ஆர்.). முதல்வரானதும் இச்சட்டத்தை எப்படியும் செயல்படுத்திக் குமுகாய நீதி காண முயன்றார். இதற்காக 1982-ல் நீதி அரசர், டாக்டர். எசு. மகாதேவன் தலைமையில் ஒரு குழுவை ஏற்படுத்தி இது பற்றி ஆய்ந்து அறிக்கையளிக்கக் கேட்டுக் கொண்டார். அக்குழுவைக் கீழ்க்கண்ட கருத்துக்களை ஆழமாக ஆயும் படிக் கேட்டுக் கொண்டார். 1. ஏன் பிராமணர் தவிர மற்ற சாதியார் அர்ச்சகராகக் கூடாது? ஆகக்கூடாது என்று கூறும் ஆகமங்கள் எவை? அதற்காக அவை கூறும் மறுப்புக் கருத்துக்கள் யாவை? காதோ சாப்பிட தடகம்: 111 வேதாகச் சத்துக்களுக்குச் சரியாச்சாரிகள் கூறும் கருத்து கள் யாவை? இக்கருத்துக்கு, அரிதுநர் பெருமக்களும், பொது மக்களும், (பக்கர் தலைவர்களும் சரம் பி11.- கள் ய.சனவ? மக்களாட்சியில் சாதிக்கும், சட்டத்திற்கும், சாத்திர, சம்பிரதாயங் களாக்கும் இடம் கண்டா ? சட்... ஆட்சிக் கோட்டாடு, ஈ, முகாய நீதிக் சுஈட்பாடு திக்பந்தன் நிகரடியன்ன? தமிழக முதல்வர் ம. கோ. ரா. {ய்.ஜி. ஆர். வின் இத்தகைய பிளாக்கர் க்கு, விடை கண்டு அதனை அழிக் பல்1 க ய ாக இக் கு, பூ ஆகரித்தது. சுக்கு, பூல் தான் சிறந்த, டர்ரிரண்டுபேர் உறுப்பினர் களாயிருந்தார். இவர்களில் ஐந்து பேர் பிரானார்கள். \ன்றுபேர் டயர்சாதி முதலியார்கள், ஒருவர் டயர் சாதிச் செட்டியார், மீதமுள்ள கிரகம்: 2 யர் சாதியினரே, ஆ: பூம்பூம், கரகாட்டம் கொண்ட நீண்ட , பக்குப்பின், இத் குழ 1982 - ம் ஆண்டு 2றிப்பாக 631 ய ச எரித்தது. அதில் கூறப் !பட்டுள்ள கருத்துக்கள் வருமாறு: குழுவின் அறிக்கை : 1951 - 19: இந்து சப்ய -அதிலயச் சட்டம் விதி 55-இனடடி ,பிரா தேரார் மட்டுமே பரர்.சார்பாக அர்ச்சகராக இருக்க வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது; ஆனால் இந்தப் பர..ரை உரிகம், 1971-ம் ஆண்டுச் சட்டப்படி நீக்கப் பட்டுவிட்டது. இதனானா நாதிசத்துத் தான் அர்ச்சகர்கள் டச்ச நீதி 4.பன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். டாக்டர்31ர பாரபு வர் பழக் கத்37, குடிப்பதன் -து-ரசியல் சட்டம் 11ளித்த அடிப்படை 171 ETIL மீறுப்பாகும் என்றும், தர்:ச, திரான தாம் TTLE 11 1271 - Li: ,கனச் சட்டம் - சென்477 தென்றும் பொதி டனர். இதையே தீர்ப்பாக உச்ச நீதிமன்றம் கூறியிட்டது. ஆனால் தமிழ்நாட்டி ஆள் TF LIFL கோல்காமல் பிராமணரல்லா தா; 7, துர்ச்சகராக புள்ளனர். மேலும் அரிசன மக்களும் கே! ட்ரிக்குள் நுழைந்த சடயே, ள் பரிபரடு [ படர வழிபாடு) செய்கின்றனர். (திட்டு மறந்து விட்டது துள.! டொல்காம் ஆகப் பதிகங்க3157ா மீறிய செயல்களாகும். தேசதாசி முறை, 5). யிர்க் காவு கொடுக்கும் முறை ஆகிய வார கரரின் சட்...ங்களால் ஒழித்துவிட்டனர். இவர் ஆகம விதிகளுக்கு எதிராகச் செயல்களோ. தீண்டாமையும் அரசியல் சட்டத்தால் ஒழிக்கப்பட்டுவிட்டது . இந்திய அரசியல் சட்டத்தை அடியொற்றி இத்தகைய சமுதாயச் சீர்திருத்தங்களைச் செய்துள்ளனர். எனவே, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம். இதற்கு அரசியல் சட்டமே துணை நிற்கிறது! சிலசமயம் தடையாக நிற்குமானால் அத்தகைய விதிகளைத் திருத்தி அல்லது மாற்றி அமைக்கலாம். ஏனென்றால் "மாந்தருக்கேசட்டம், சட்டத்திற்கு மாந்தரல்ல" என்பது அரசியல் சட்டத்தந்தை டாக்டர். அம்பேத் காரின் கருத்தாகும். ஆகமநெறிகளை அர்ச்சகர்கள் கற்று ஆகவேண்டும் என்றால் அத்தகைய ஆகமக் கல்லூரிகளை அரசே நடத்த வேண்டும், அவற்றில் மற்றக் கல்வி நிலையங்களில் வகுப்புவாரியாக மாணவர்களைச் சேர்ப்பதைப்போல் எல்லாச் சாதிமாணவர் களையும் சேர்க்க வேண்டும் (இதுவரை ஆகமப் பாடசாலை களை நடத்தியவர்கள் உயர் சாதிக்காரர்களும், மடாதிபதிகளுமே யாவர் என்பது குறிப்பிடத்தக்கது.) குழுவின் இத்தகையப் பரிந்துரைகளை ஏற்று ம. கோ.ரா. (எம். ஜி. ஆர்) வால் உடனே செயல்படுத்த முடியவில்லை. நீண்ட யோசனைக்குப்பின் மீண்டும் இதுபற்றித் தெளிவாக ஆய்ந்துரைக்க ஒரு குழுவை நியமித்தார். அதற்கு ஓய்வுபெற்ற நீதி அரசர் கிருட்டிண சாமிரெட்டியார் தலைமை தாங்கினார். இக்குழுவும் அறிக்கை அளித்துவிட்டது. இதற்குப்பின்னும் அரசால் தனித்து "எல்லாச் சாதியினரும் அர்ச்சகராகத் தகுதியுடைய வரே'' என்று சட்டம் இயற்ற முடியவில்லை . செல்வி. செ. செயலலிதா முதலமைச்சரானபின், மகாராசன் குழுவின் பரிந்துரைப்படி அரசு ஆகமக்கல்லூரியைத் தொடங்கியுள் ளார். அதில் பலசாதி மாணவர்களையும் சேர்த்து உள்ளார். இது எந்த அளவு பலன் தரும் என்று தெரியவில்லை . அ.இ.அ.தி.மு.க. ஆட்சியும் பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடும் நயன்மைக் கட்சி ஆட்சிக்காலத்திலேயே வகுப்பு வாரி படிநிகராளிய இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டு, அது 1951-ல் அரசியல் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளைக் காட்டித் தள்ளுபடி செய்யப்பட்டதையும் அறிவோம். ஆனால், பெரு முயற்சிக்குப்பின் 1951-ல் முதல் அரசியல் சட்டத் திருத்தத்தில் அது மீண்டும் உயிர் பெற்றதையும் அறிவோம். அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அதன் நிலை என்ன என்பதைக் காண்போம். 1977-ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றதும் அமைக்கப் பட்ட முதல் அ.இ.அ.தி.மு.க ஆட்சிக் காலத்திலிருந்து பிற்பட்ட வகுப்பாருக்கு இடஒதுக்கீட்டு முறையில் உயர்வு ஏற்பட்டுக் கொண்டே போனது. அப்பொழுது பொருளாதாரத்தை அடிப்படை யாகக் கொண்டே இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கருத்துக்கு எதிர்ப்பு நாலாபக்கமுமிருந்து வந்து வலுத்துக் கொண்டே போனது. இதனடிப்படையில் ம. கோ.ரா. (எம். ஜி. ஆர். ]வும் ஆண்டு வருமானத் தை அளவுகோலாகக் கொண்டு பிற்படுத்தப்பட்டோரில் அதிக வரு மானமுள்ளவருக்கு இடஒதுக்கீடு இல்லை என்பதைக் கைவிட்டார். பின்னர்தான் சாதிய ஏற்றுத்தாழ்வுதான் குமுகாயத்தில் ஏற்றத் தாழ்வுக்குக் காரணம், பொருளாதார மல்லயென்பதை உணர்ந்து குமுகாய நிலையிலும் அந்தஸ்திலும்), படிப்பிலும் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்ட எல்லோருக்கும் இடஒதுக்கீடு கொண்டுவந்தார். - எனவே, இடஒதுக்கீடு யென்பதைச் சாதி அடிப்படையில்தான் கொடுக்க வேண்டும், பொருளாதார அடிப்படையில் அல்லவென்ப தாயிற்று. எனவே, பிற்படுத்தப்பட்டோருக்கு 31 விழுக்காட்டி விருந்து 50 விழுக்காடாக உயர்த்தப்பட்டது! இதனால் பொது ஒதுக் கீட்டில் 19 விழுக்காடு குறைந்தது! அடுத்து வந்த தி.மு.க. ஆட்சியில் இது 31 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது! இதற்குக் காரணம் உச்சநீதி மன்றம் பிற்பட்டோர். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோரின் ஒதுக்கீடு மொத்தத் தில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருக்கக்கூடாது என்று தீர்ப் பளித்ததேயாகும். அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் தீர்மானம்: அடுத்து ஏற்பட்ட அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் செல்வி. செயலலிதா முதலமைச்சரானதும் இதற்கோர் முடிவுகட்டப்பட்டது! சட்டமன்றத்தில் இதுபற்றி விவாதிக்கப்பட்டு, ஒரு தீர்மானமும் நிறை வேற்றப்பட்டது. 1. இட ஒதுக்கீடு சாதி அடிப்படையில் செய்யப்படுவதாகும், தமிழகத்தில் மொத்தமுள்ள மக்கள்தொகை 5.59 கோடியா கும். இதில் பிற்படுத்தப்பட்டோர் 3.70 கோடி பேராவர். தாழ்த் தப் பட்ட, பழங்குடியினர் மக்கள் தொகை 1.12 கோடியாகும் இவர்களுக்கெல்லாம் இடஒதுக்கீடு மக்கள் தொகை கணக்குப் படி செய்தால் 5.59 கோடியில் 4.82 கோடியாகும். குறிப்பாக பிற்படுத்தப்பட்டோருக்கு 5.59 கோடியில் 3.70 கோடியாகும், எனவே, 50 சதவிகிதம் ஒதுக்கீடு செய்தது நியதியானதே! மேலும், அவர்களுக்கு 50 விழுக்காட்டிற்கும் அதிகமாக ஒதுக் கீடு செய்ய வேண்டுமெனவும் சட்டமன்றம் வற்புறுத்தியது. எனவே, மொத்த ஒதுக்கீடு 50 விழுக்காட்டைத் தாண்டி (50+18= d8) னாலும் அது அரசியல் சட்ட விதி 16 (4)க்குட் பட்டதே என்றும், இதனால் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட 50 சதவிதம் தொடர்ந்து இருக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேறியது. இந்தத் தீர்மானத்தை மாநில ஆட்சி நிறைவேற்றியபின் சட்ட மாகக் கொண்டு வந்தது. இதனை அரசியல் சட்டம் 9-வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்றும் கோரப்பட்டது! தீர்மானமே பின்னர் சட்டமாகவும் நிறைவேறியது. இதனை நாடாளும் மன்றமும் ஏற்றுக் கொண்டு அரசியல் சட்டம் அட்டவணை - இன் கீழ் இணைத்து விட்டது! முக்கிய குறிப்பு: "ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டு, அது 9-வது அட்டவணை யுடன் இணைக்கப்பட்டுவிட்டால், அந்தச் சட்டத்தைப் பற்றி மீண்டும் நீதிமன்றம் விவாதிக்கவோ, மறு பரிசீலனைச் செய்யவோ முடியாது!'' என்பது அரசியல் சட்டவிதி 31 (சி) ஆகும். இதனடிப் படையில் தமிழ் நாட்டில் செய்யப்பட்ட இட ஒதுக்கீட்டு முறை 50+1+1 = 68 விழுக்காடு அரசியல் சட்டமாகிவிட்டது. இனி நீதிமன்றம் இதில் தலையிடாது! ஆனால் 1994-95-ல் இதற்கு ஓர் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. தடை நீங்கி இன்றும் இது செயல்படுகிறது. காவிரி ஆற்றுநீர் பிரச்சனை ஒரு பின்னோட்டம்: கரிகாலன் காவிரிக்குக் குறுக்கே கல்லணை கட்டினான் என்பது செவிவழிச் செய்தியாகும், இதற்கான அடிப்படை அதிகாரப் பூர்வ மான சான்றுகள் சங்க இலக்கியங்களிலும், மற்றும் கரிகாலனைப் பற்றிய வரலாற்றிலுமில்லை , கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் கிடைக்கும் அயலகச் சான்றை வைத்தே ''கரிகாலன் கல்லணையைக் கட்டி னான்'' என்று கூறுகின்றனர். இப்படித்தான் இன்றும் காவிரி பிரச் சனைத் தமிழகத்திற்கும் கன்னடத்திற்கு மிடையே ஒரு சிக்கலாகவே உள்ளது. கி.பி. 1788-89-ல் பொதுப்பணித்துறையின் பொறியாளராக யிருந்த வயவர், ஆர்தர் கார்ட்டன் (சர், ஆர்தர் கார்ட்டன்) என்பவர் காவிரி ஆற்றிலிருந்து வெள்ளாறு பிரியுமிடத்தில் காவிரிக்கும், வெள்ளாற்றுக்கும் மதகுகள் கட்டினார். வெள்ளையர் ஆட்சியில்தான் கொள்ளிடத்தில் மேல் அணை யும், 1936-ல் கீழ் அணையும் கட்டப்பட்டன கி.பி. 1882-ல் "சென்னை மாகாணம்" உருவாகி ஆங்கிலேயர்களால் நேரடியாக ஆளப்பட்டது. கி.பி. 1892-ல் சென்னை மாகாண அரசும், மைசூர் அரசும் தங்களுக்குள் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டன. அதன்படி இவ்விரு அரசுகளும் தங்கள் தங்கள் மாநிலங்களில் காவிரிக்குக் இறு குறுக்கே அணைகள் கட்டிக் கொள்ளவும், காவிரியிலிருந்து கால் வாய்கள் வெட்டிக் கொள்ளவும் ஒப்புக் கொண்டன. ஆனால், இவற்றைத் தொடங்கும் முன் ஒன்றுக் கொன்று ஒப்புக் கொண்டு மற்றதின் அனுமதியுடன் செய்தல் வேண்டுமென்பதே இந்த ஒப்பந் தத்தில் உள்ள நிபந்தனையாகும். இதில் ஏதேனும் சிக்கல் ஏற்படுமே யானால் நடுவண் ஆட்சி மூலம் அல்லது நடுவர் மன்றத்தின் மூலம் அதைத் தீர்த்துக் கொள்ளவேண்டும்மென்பது அந்த ஒப்பந்தித்தி லுள்ள மற்றொரு கூறுபாடு ஆகும். இந்த ஒப்பந்தத்தை முதலில் மீறியது மைசூர் அரசுதான். 1892-லேயே மைசூர் கண்ணம்பாடி அணையைக் கட்டியது. சென்னை அரசிடம் முன் அனுமதி கோரவில்லை. 1911 ஆம் ஆண்டு கோலார் தங்கச் சுரங்கத்திற்காக மின் உற்பத்தி செய்ய மைசூர் அரசு சிவ சமுத்திரம் நீர் வீழ்ச்சியை அமைக்கும் பணியைத் தொடங்கியது. இதனைச் சென்னை அரசு மறுத்தும் மைசூர் சட்டை செய்யாமல் கட்டிமுடித்தது. - ஒப்பந்தத்தை மீறிய இத்தகையச் செயல்களை எதிர்த்து சென்னை அரசு நயன்மை மன்றத்தை நாடியது. இந்த வழக்கு அலகாபாது நயன்மை மன்றத்தில் உசாவப்பெற்றது. நயன்மை கிரிபிஃன் சென்னை அரசுக்குச் சாதகமாகவே தீர்ப்பு அளித்தார். இதனை எதிர்த்து மைசூர் அரசு மேல் முறையீடு செய்தது. அன்றைய இந்தியாவின் உச்ச நயன்மை மன்றமான பிரிவி கவுன்சில் இலண்ட னிலிருந்தது. அம்மன்றம் இரண்டு அரசுகளும் இத் தகராரைத் தங்களுக்குள் கலந்து பேசித் தீர்த்துக் கொள்ளவேண்டும் எனத் தீர்ப்பு அளித்தது. 18.2.1924-ல் இரண்டு அரசுகளும் ஒப்பந்தத்தைப் புதுப் பித்துக்கொண்டன. அதன்படி ஒன்று மற்றொன்றின் அனுமதியின்றி அணை கட்டுவதோ, அல்லது கால்வாய் வெட்டுவதோ கூடாது என முடிவாயிற்று! இந்த ஒப்பந்தத்தின் படியே சென்னை அரசின் முன் அனுமதி யுடன் 1929-ல்"கிருட்டிண ராசாகர் ஆணை "'யும், மைசூர் அரசின் முன் அனுமதியுடன் 1934-ல் மேட்டூர் அணையும் கட்டி முடிக்கப் பட்டன. இவ்வணைகளைக் கட்டி முடித்த பிறகு இரு மாநிலங்களும் கால்வாய்களை வெட்டும் திட்டங்களைத் தொடங்கின. மைசூர் மாநிலம் கன்வா, பைரமங்களா, பார்மகோகள்ளி, சிம்சா முதலிய கால் வாய்களையும், சென்னை மாநிலம் பவானி, கீழ் பவானி, பவானி சாகர் அமராவதி முதலிய கால்வாய்த் திட்டங்களையும் தொடங்கின. பிரச்சனையின் தோற்றம் : இவ்வாறு ஒப்பந்தபடி இருமாநிலங்களும் அணைகள் கட்டு வதும், கால்வாய்கள் வெட்டுவதும் சுமூகமாக நடந்தன. ஆனால், 1956 - ல் மொழிவழி மாநிலங்கள் பிரிந்து அவற்றின் எல்லைக் கோடுகள் வரையறுக்கப்பட்டபின் கருநாடகம் (மைசூர்) தமிழ்நாடு (சென்னை) ஆகிய மாநிலங்களுக்கிடையே காவிரி நதிநீர் பங்கீட்டுச் சிக்கல் தோன்றியது. 1. கருதாடக அரசு, தமிழ் நாட்டு அரசை மதிக்காமல் 1892, 1924 ஆகிய ஆண்டுகளில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங் களைக் காற்றிலே பறக்கவிட்டது. தமிழ்நாட்டின் இசைவைப் பெறாமலேயே கருநாடகம் பல புதிய நீர்த் தேக்கங்களையும் கால்வாய்களையும் அமைத்தது: இதன் விளைவாகக் காவிரியின் நீர்த்தேக்கப்பரப்புகள் கருநாடகத்தில் அதிகமாயின! இதனைத் தமிழகமேயன்றி காவிரி பாயும் பிற மாநிலங்களும் எதிர்த்தன. இவ்வாறு, காவிரி நதி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சனை 1968 லிருந்து மாநிலங்களுக்கிடையே தீவிரமடைந்தது. 4. 1971-ல் தமிழகம் இப் பிரச்சனையைத் தீர்க்க ஒரு ''நடுவர் மன்றம் அமைக்க தில்லி உச்ச நயன்மை மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. ஆனால், நடுவண் அரசு இதில் தலையிட்டுக் கருநாடகமும், தமிழ்நாடும் இதனைப் பேசித் தீர்த்துக் கொள்ள. லாம் என்று கூறி, வழக்கைத் திரும்பப் பெறச் செய்தது, 1971-72-ல் கேரளம், கருநாடகம், தமிழகம் ஆகிய காவிரி பாயும் மாநிலங்கள் ஒன்று கூடிப் பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு வந்தன, இந்த முடிவின் படி 1924ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தப் படியே 'முன் இசைவு பெற்று அணைகள், கால்வாய்கள் அமைக்கலாம்' என்று மீண்டும் 1974-லும் 1976-லும் இரண்டு ஒப்பந்தங்களேற்பட்டன. அப்பொழுது தமிழகத்தில் தி.மு.க கட்சியின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. இந்த ஒப்பந்தகளுக்குப் பிறகும் கருநாடகம் தம் விருப்பம் போல் அணைகளைக் கட்டவும், கால்வாய்களை வெட்டவும் தொடங்கியது. 1924 ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி. நடக்கவே 1974, 1976 ஒப் பந்தங்கள் செய்யப்பட்டன. கருநாடகம் 1924ஆம் ஆண்டு ஒப்பந்தம் இந்தியா அடிமை நாடாக இருந்தபோது ஆங்கில ஆட்சியாளரின் கட்டாயத்தின் பேரில் செய்து கொள்ளப்பட்ட தால் இன்றும் இதன் கூறுபாடுகளை ஏற்கமுடியாது என்று கூறி 4] விட்டது! எனவே, அதன் கூறுபாடுகளின் மேல் கட்டப்பட்ட 1974, 1976 ஒப்பந்தங்கள் செல்லாது எனக் கருநாடகம் அறிவித்து விட்டது அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 30.06.1977-ல் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி தொடங்கியபோது மா.கோ. ரா. முதல்வராக இருந்தார். அவருடைய ஆட்சி அவர் மறையும் வரை 1987- வரை இருந்தது. 1983-ல் தமிழ்நாடு "'உழவர்கள் நல உரிமைச் சங்கம்" தில்லி உச்ச நயன்மை மன்றத்தில் உரிமைப் பேராணை கேட்டு வழக்குத் தொடர்ந்தது. 24.04.1990-ல் நடுவண் ஆட்சி தலையிட்டு இந்த வழக்கைத் திரும்ப பெறச் செய்தது இரண்டு மாநிலங்களும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்'' என்ற பழைய பல்லவியையே நடுவண் ஆட்சி பாடியது, பேச்சுவார்த்தைகள் நடந்தன. அவையும் பழைய படியே தோல்வியுற்றன. நடுவர் மன்றம் அமைத்தல் : தமிழக அரசின் வேண்டுகோளுக்கிணங்க, நடுவண் அரசு நடுவர்மன்றம் ஒன்றை அமைத்தது. அதில் நயன்மையர் சிட்ட கோசு முகர்சி (ஓய்வு), என். எசு. ராவ், எஸ்.டி. அகர்வால் ஆகியோர் இடம் பெற்றனர். இந்நடுவர்மன்றம் காவிரி பாயும் மாநிலங்களைச் சுற்றிப் பார்த்து, உசாவி, பின்னர் தன் அறிக்கையைக் கொடுத்தது. பின்னர், அதுவே அதன் தீர்ப்பானது. நடுவர் மன்றத் தீர்ப்பு: "கருநாடகமும், தமிழகமும் வாராவாரம் காவிரி நீரைக் கணக் கிட்டுத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளவேண்டும்" என்பதே நடுவர் மன்றத் தீர்ப்பு ஆகும். ஆனால், இந்தத் தீர்ப்பைக் கருநாடகம் ஏற்கவில்லை . மேலும், 'இந்த நடுவர் நீதி மன்றத்திற்குத் தீர்ப்புக் கூறும் அதிகாரமும், தகுதியுமில்லை 'யெனவும் கூறிவிட்டது. இதற்கும் ஒருபடி மேலாகக் கருநாடகம் இத் தீர்ப்பை எதிர்த்து ஒரு அவசரச் சட்டமும் பிறப்பித்தது. இச்சட்டத்தை உச்ச நயன்மை மன்றம் மறுத்தது. ''கருநாடக அரசுக்குத் தன்னிச்சையாக அவசரச் சட்டம் பிறப்பிக்கும் உரிமை இல்லையென்றும், இதன் செயல் இந்திய அரசியல் சட்டத்திற்குப் புறம்பானதென்றும் கூறியது: 'நடுவர் மன்றத் தீர்ப்பே முடிவானது என்றும் கூறியது. இதனைநடுவண் அரசு தனது சிறப்பு அரசிதழில் 20 - 02-1991-ல் வெளியிட்டது. அப்பொழுது - தமிழகத்தின் முதல்வராயிருந்தவர் மு. கருணாநிதியாவார். செல்வி செ. செயலலிதாவின் உண்ணா நோன்பு: செல்வி.செ.செயலலிதா முதற்கட்டமாக 25.06.1991-லிருந்து 2-03-1996 - வரை அ.இ.அ.தி.மு.க., ஆட்சியில் தமிழக முதல்வராக இருந்தார். ஒப்பந்தங்களையும், சட்டத்தீர்ப்புகளையும் மதிக்காத கருநாடக அரசு தமிழகத்திற்குத் தண்ணீர் விடத் தொடர்ந்து மறுத்து வந்தது. எனவே, அறவழிப் போராட்டத்தில் தமிழக முதல்வர் செல்வி. செ.செயலலிதா இறங்கினார். சென்னைக் கடற்கரையிலுள்ள புரட்சித் தலைவர் ம. கோ. ரா (எம். ஜி. ஆர். வின் சமாதியருகில் அமர்ந்து கருநாடகம் மனந்திருந்த வேண்டுமென 18.07.1993 முதல் 21.7.1993- வரை உண்ணா நோன்பு இருந்தார். மீண்டும் நடுவண் ஆட்சியே இதில் தலையிட்டு நீர்ப்பாசன அமைச்சர் சுக்லா அவர் களை அனுப்பி, உண்ணா நோன்பை நிறுத்தியது. ''நடுவர் மன்றத் தின் மூலம் இப்பிரச்சனையைத் தீர்த்து வைப்பதாக உறுதியளித்து உண்ணா நோன்பைக் கைவிடச் செய்தார்கள். கண்காணிப்புக் குழு அமைத்தல் முதல்வரின் உண்ணாநோன்பால் தமிழகத்திற்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. நடுவண் அரசு ஏற்கனவே உள்ள நடுவர் மன்றம் கருத்துக் கூறியும் தமிழகத்திற்குத் தண்ணீர் விட கருநாடகம் மறுத்துவிட்டது. நடுவர்மன்றத் தீர்ப்பு நிறைவேற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க ஒரு "கண்காணிப்புக்குழு' அமைக்கப் பட்டது. இதுதான் உண்ணாநோன்புக்குக் கிடைத்த வெற்றியாகும். இரண்டாண்டுகள் கழித்துச் செல்வி, செ. செயலலிதா 11-12 1995-ல் உச்சநயன்மை மன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அதில் காவிரி நீர் இல்லையென்றால் தமிழ்நாட்டில் காவிரிப் படுகையில் பயிரிடப்பட்டுள்ள உருபாய் 800 கோடி மதிப்புள்ள பயிர்கள் அழிந்து விடும் என்றும், நடுவர் மன்றத் தீர்ப்பைக் கண்காணித்த, கண்காணிப் புக் குழுவின் தீர்ப்பையும் மனதிற் கொண்டு கருநாடகம் காவிரி நீரைத் திறந்துவிட வேண்டுமென்றும், இதற்காகத் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டார். உச்ச நயன்மையர் மன்றம் ஆய்ந்து, உசாவி, காவிரிப் படுகையிலுள்ள 13.3 இலட்சம் குறுக்கத்திலுள்ள பயிரைக் காப்பாற்ற தண்ணீர் விடவேண்டுமெனத் தீர்ப்பு அளித்தது! இவ்வாறு, நடுவர்மன்றம், கண்காணிப்புக்குழு, உச்சநயன்மையர்மன்றம் ஆகிய மிக உயர்ந்த தீர்ப்புகளை மதியாத கருநாடகம் இன்றும் அப்படியே தான் செயல்படுகிறது. இன்று கூட, முதல்வர் எசு.எம். கிருட்டிணா" ஐக்கிய நாடுகளின் நயன்மை மன்றம் சென்றாலும் கவலையில்லை. தண்ணீர் விடமாட்டேன் என்கிறார் இறுமாந்து. அனைத்துக் கட்சிக் கூட்டம் தமிழக முதல்வர் அனைத்துக் கட்சிகளிலுமுள்ள 78 நிகராளி களைக் கூட்டி, நடுவர் மன்றத் தீர்ப்புப்படி கருநாடகம் தமிழகத் திற்குத் தண்ணீர் விட வேண்டுமெனத் தீர்மானம் போட்டார்! உச்ச நயன்மை மன்றத் தீர்ப்பையே மதியாத கருநாடகம் மக்கள் மன்றத்திற்கான மதிப்புக் கொடுக்கும்? தமிழக முதல்வர் செல்வி செயலலிதாவும், இந்தியப் பிரதமர் வாஜ்பாயும் சந்திப்பு: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானம் பலனளிக்காமல் போகவே, தமிழக முதல்வர் செல்வி. செயலலிதா 31.2.1995-ல் பாரதப்பிரதமர் வாஜ்பாய் அவர்களைத் தில்லியில் சந்தித்து வாடும் பயிர்களைக் காப்பாற்ற காவிரி நீர் வேண்டும் என்றார். பிரதமர் 6.டி.எம்.சி. தண்ணீ ர் விடும்படிக் கருநாடகத்தைக் கேட்டுக் கொண்டார். அவர் வேண்டுகோள் செவிடன் காதில் போதிய சங்காயிற்று. பின்னர் அமைக்கப்பெற்ற "மூவர்குழுவாலும்" பலன் இல்லை. 2-3-1996-ல் அ.இ.அ.தி.மு.க ஆட்சியும் முடிந்தது. அதனை யடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க ஆட்சி மு. கருணாநிதி தலைமையில் 13-5-1996 முதல் 26-5-2001 வரை பதவியிலிருந்தது. அந்த ஆட்சி முடிந்து மீண்டும் அ - இ - அ - தி.மு.க. ஆட்சித் தொடங்கி நடந்து வருகிறது. இன்னமும் காவிரி நீர்ப் பிரச்சனைத் தீர்ந்த பாடில்லை . - நீதி மன்றத்தில் வழக்கு, நடுவண் ஆட்சித் தலையீடு, கலந்து பேசுதல் ஆகிய செக்கு மாட்டுப் பயணமாகவே இன்றும் காவிரி நீர் பிரச்சனை நடந்து வருகிறது. முடிவுரை: கிரேத, திரேத, துவாபர, கலி ஆகிய நான்கு உகங்களையும் கண்ட சாம்புவனைப் போல் பிரித்தானியர் ஆட்சி, பேராயக்கட்சி ஆட்சி, தி.மு.க., ஆட்சி , அ.இ.அ.தி.மு.க. ஆட்சி ஆகிய நான்கு ஆட்சிக் காலத்தையும் கடந்தும் காவிரி நீர்ப்பிரச்சனை இன்னமும் நீடித்து நடந்து வருகிறது. ஒப்பந்தம், நடுவர் மன்றம், நீதிமன்றம், கண்காணிப்புக் குழு பேச்சுவார்த்தை ஆகிய அங்கங்களே இந்த நாடகத்தில் மாறி, மாறி வருகின்றன. இத்தகைய அங்கங்களையும் தாண்டி, எதற்கும் அசைந்து கொடுக்காத மலை போல் கருநாடகம் சொன்னதையே சொல்லும் இயந்திரம் போல் "முடியாது" என்ற ஒரே சொல்லைத் தான் சொல்லிக் கொண்டிருக்கிறது. ''ஒரே முடிவு நதிகளைத் தேசிய மாக்குதல்தான்" 25-12-1995-ல் தமிழகம் சட்ட மன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தையும், 25-06-1991-லேயே உச்சநயன்மை மன்றம் இட்டப் பேராணையையும், இதையே நடுவண் அரசு சிறப்பு அரசிதழில் வெளியிட்டதையும் 28-7-1993-ல் தமிழக முதல்வர் செயலலிதா தொடங்கிய உண்ணா நோன்பையும், இதன்பின் ஏற்பட்ட கண்காணிப்புக் குழுவின் பரிந்துரையையும், 78 பேர் கொண்ட அனைத்துக் கட்சிகளின் ஒட்டுமொத்த வேண்டுகோளை யும், பாரதப் பிரதமரின் 31- 1.1995-ல் வேண்டிக் கொண்ட 6 டி. எம்.சி நீரைக் கூட விடமறுத்தையும், மூவர் குழுவின் பரிந்துரையை யும் கேட்காத கருநாடகம் இனியும் எதையும் கேட்காது. உலக நாடுகள் மன்றமே கூறினாலும் ஏற்கமுடியாது என் கிறதே. அகன்ற நீர்ப்பரப்பை நீர்த்தேக்கங்களாகவும், கால்வாய் களாகவும் கொண்டுள்ள கருநாடகம் அவற்றை நிரப்பி விட்டு. அடுத்து தமிழகத்திற்கு எப்படி நீரைவிடும்? காவிரி கருநாடகத்திற்கு மட்டுமே என்பதும் வழிந்தோடும் அல்லது சிந்துகின்ற நீரே மற்ற தற்கு என்பதுவுமே அதன் கோட்பாடு: செல்வி செயலலிதா கூறியதைப் போல் தமிழகத்தைக் காவிரியின் வடிகால் நில மாகவே கருநாடகம் பயன்படுத்துகிறது'' என்பதே உண்மை . பிற்சேர்க்கை 1 அமைச்சரவைப் பட்டியல் (1920-1947) (அ) நீதிக்கட்சி அமைச்சரவை முதலமைச்சர் ஏ, சுப்புராயலு ரெட்டியார் (12-12-1920 -10-7-1921) (1) பிற அமைச்சர்கள் 1, பனகல் அரசர் 2. குருமா வேங்கட ரெட்டி நாயுடு 3. ஏ. பி. பாத்ரோ (2) முதலமைச்சர் பனகல் அரசர் (19 - 11-1923 - 3-12-1925) பிற அமைச்சர்கள் 1. எ. பி. பாத்ரோ 2. டி. என். சிவஞானம் பிள்ளை (3) முதலமைச்சர் டாக்டர் பி. சுப்பராயன் (4-12-1926 - 8-3-1930) பிற அமைச்சர்கள் 1. ஏ. அரங்கநாத முதலியார் 2. ஆர். என். ஆரோக்கியசாமி முதலியார் 3. முத்தையா முதலியார் 4. எம். ஆர். சேதுரத்தினம் அய்யர் (4) முதலமைச்சர் பி. முனுசாமி நாயுடு (27-10-1930 - 4-11-1932) பிற அமைச்சர்கள் 1. பி. டி. இராசன் 2. எஸ். குமாரசாமி ரெட்டியார் (5) முதலமைச்சர் பொப்பிலி அரசர் பிற அமைச்சர்கள் 1. பி. டி. இராசன் 2. எஸ். குருசாமி ரெட்டியார் (6) முதலமைச்சர் பி. டி. இராசன் (4-4-1936 - 14-8-1936) 1. எஸ். குருசாமி ரெட்டியார் (7) முதலமைச்சர் பொப்பிலி அரசர் (14-8-1936 - 11-3-1940) பிற அமைச்சர்கள் 1. பி. டி. இராசன் 2. எஸ். குமார ரெட்டியார் 3. எம். ஏ. முத்தையா செட்டியார் (8) முதலமைச்சர் குருமா வெங்கட ரெட்டி நாயுடு (1-4-1937 - 14-7-1937) பிற அமைச்சர்கள் 1. எம். ஏ. முத்தையா செட்டியார் 2. எ. டி. பன்னீர் செல்வம் 3. பி. சாகிப் பகதூர் 4. எம். சி. இராசா 5, ஆர்.எம். பாலட் ஆ) காங்கிரசு அமைச்சரவை [1] முதலமைச்சர் சி. இராசகோபாலாச்சாரி (14-7-1937 - 29-10-1939) பிற அமைச்சர்கள் 1. டி. பிரகாசம் 2. யாகூப் ஆசன் 3. டாக்டர் பி. சுப்பராயன் 4. டாக்டர் டி. எஸ். எஸ் இராசன் 5. பி. ஐ. முனுசாமிப்பிள்ளை 6. வி. வி. கிரி 7. எஸ். இராமநாதன் பிள்ளை 8. கே. இராமன் மேனன் 9. பி. கோபால் ரெட்டி 10. வி. ஜே. வர்கீஸ் (2) முதலமைச்சர் டி. பிரகாசம் (1-5-1946 - 23-3-1947) டபிற அமைச்சர் 1. வி. வி. கிரி 2. எம். பத்தவச்சலம் 3. டி - எஸ். அவிநாசிலிங்கம் செட்டியார் 4, கே, பாசியம் 5. பி. எஸ். குமாரசாமிராசா 6. டேனியல் தாம்சு 7. திருமதி. ருக்குமணி யட்சுமிபதி 8. கே. ஆர். கரந்த் 9. கோட்டி, ரெட்டி 10, வேமுல கூர்மையா 11, பி. வீராசாமி 12, பி, இராகவமேனன் 13. பி. வேங்கடரத்தினம் பிற்சேர்க்கை II அமைச்சரவைப் பட்டியல் விடுதலைக்குப்பின் காங்கிரசு அமைச்சரவை (1947-1967) 1. முதலமைச்சர் ஓ.பி. இராமசாமி ரெட்டியார் (23-3-1947, 24-4-1949) பிற அமைச்சர்கள் டாக்டர் பி, சுப்பராயன் டாக்டர் டி. எசு.எசு. இராசன் பி. கோபால் ரெட்டி எம், பக்தவச்சலம் டி, எசு, அவினாசிலிங்கம் செட்டியார் தேனியல் தாமசு வேமுல கூர்மையா எச். சீதாராமரெட்டி கே. சந்திரமெளலி கே. மாதவமேனன் கலாவெங்கடராவ் ஏ.பி. செட்டி டாக்டர் எசு. குருபாதம் 2. முதலமைச்சர் பி. எசு. குமாரசாமி இராசா (7-4-1949, 9-4-1952) பிற அமைச்சர்கள் டாக்டர் டி. எசு.எசு. இராசன் பி. கோபால் ரெட்டி எம். பக்தவச்சலம் எச். சீதாராமரெட்டி கே, மாதவ்மேனன் கே. சந்திரமௌலி ச லாவெங்கடராவ் ஏ.பி. செட்டி பி. பரமேச்வரன் சி. பெருமாள்சாமி ரெட்டியார் ஜே.எல்.பி. உரோச் விக்டோரியா என். சஞ்சீவ்ரெட்டி நமிழக சமூகப் பண்பாட்டு வரலாறு 3. முதலமைச்சர் சி. இராசகோபாலாச்சாரி (10-4-1952, 12-4-1954) பிற அமைச்சர்கள் எம். பக்தவச்சலம் ஏ. பி. செட்டி சி. சுப்பிரமணியம் கே. வெங்கிடசாமிநாயுடு என். அரங்காரெட்டி எம்.பி. கிருஷ்ண ராவ் வி. சி. பழனிச்சாமி கவுண்டர் யு. கிருட்டிணராவ் , ஆர். நாகன கௌடா . சண்முக ராசேசுவர சேதுபதிராசா எம்.ஏ. மாணிக்கவேலு * கே.பி. குட்டி கிருட்டிணன் நாயர் எசு.பி. பட்டாபி ராமராவ் என் சங்கராரெட்டி டி. சஞ்சீவி அய்யா ! கே. இராசாராம் திருவாட்டி சோதிவெங்கடாசலம் 4. முதலமைச்சர் கு. காமராசர் (13-4-1954, 12-4-1957) எம். பக்தவச்சலம் பி. பரமேசுவரன் ஏ.பி.ஷெட்டி சி. சுப்பிரமணியம் சண்முக ராசேசுவர சேதுபதிராசா எம்.ஏ. மாணிக்கவேலு நாயகர் எசு.எசு. இராமசாமி படையாச்சி 5. முதலமைச்சர் கு. காமராசர் (13-4-1957, 14-3-1962) பிற அமைச்சர்கள் எம். பக்தவச்சலம் சி. சுப்பிரமணியம் எம்.ஏ. மாணிக்கவேலு நாயக்கர் ஆர், வெங்கடராமன் பி. கக்கன் வி. இராமையா திருவாட்டி லூர்து அம்மாள் சைமன் 6. முதலமைச்சர் கு. காமராசர் (15-4-1962, 2-10-1963) பிற அமைச்சர்கள் எம். பக்தவச்சலம் திருவாட்டி சோதிவெங்கடாசலம் ஆர். வேங்கடராமன் பி. கக்கன் வி, இராமையா நல்ல சேனாபதி சருக்கரை மன்றாடியார் ஜி பூவராகன் எசு. எம். அப்துல் மஜீத் - 7. முதலமைச்சர் எம். பக்தவச்சலம் (2-10-1963, 5-3-1967) பிற அமைச்சர்கள் திருவாட்டி சோதி வெங்கடாசலம் ஆர்.வேங்கடராமன் * பி. கக்கன் வி. இராமையா நல்லசேனாபதி சருக்கரை மன்றாடியார் ஜி. பூவராகன் எசு. எம். அப்துல் மஜீது, பிற்சேர்க்கை III, "திராவிட முன்னேற்றக் கழக அமைச்சரவை 6.3.17- 31.1.1975 முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை (6.3. 1967-31. 1. 1969) பிற அமைச்சர்கள் 1. இரா. நெடுஞ்செழியன் 2. மு. கருணாநிதி 3, க.அ. மதியழகன் 4. அ. கோவிந்தசாமி 5, திருமதி. சத்தியவாணிமுத்து 6. செ. மாதவன் 7. சு. சே. சாதிக்பாட்சா 8. மா. முத்துசாமி முதலமைச்சர் இரா. நெடுஞ்செழியன் (3.2.1969-10. 2. 1959) பிற அமைச்சர்கள் 1. மு. கருணாநிதி 2. க. அ. மதியழகன் 3. அ. கோவிந்தசாமி 4. திருமதி. சத்தியவாணி முத்து 5. செ. மாதவன் 6. எசு, சே, சாதிக்பாட்சா 7. மா. முத்துசாமி முதலமைச்சர் மு. கருணாநிதி (10. 2. 1969 - 15. 3, 1971) பிற அமைச்சர்கள் 1. இரா. நெடுஞ்செழியன் 2. க. அ. மதியழகன் 3, அ. கோவிந்தசாமி 4. திருமதி. சத்தியவாணி முத்து 5. செ. மாதவன் 6. எசு. சே. சாதிக்பாட்சா 7. மா. முத்துசாமி 8. பா. உ. சண்முகம் 9. கே.வி. சுப்பையா 10. சி. பா. ஆதித்தனார் 11. ஒ. பி. இராமன் 12. க , வேழவேந்தன் 13. என். வி. நடராசன் முதலமைச்சர் மு. கருணாநிதி (15. 3. 1971 - 31. 1. 1976) பிற அமைச்சர்கள் 1. இரா. நெடுஞ்செழியன் 2. க. அன்பழகன் 3. என்.வி. நடராசன் 4. திருமதி. சத்தியவாணி முத்து (மே 1974 வரை) 5. என். இராசாங்கம் 6. ப.உ. சண்முகம் 7. சி.பா.ஆதித்தனார் 8. ஓ.பி. இராமன் #, செ. மாதவன் 10. ஏ. பி. தர்மலிங்கம் 11. க. இராசாராம் 12. ச. இராமச்சந்திரன் 13, மு, கண்ண ப்பன் 14. சி. வி. எம். அண்ணாமலை 15. எசு. சே. சாதிக்பாட்சா பிற்சேர்க்கை IV . அ.இ.அ.தி.மு.க அமைச்சரவைப் பட்டியல் 30.6.1977 முதல் 18.2.1980 வரை 1. ஆளுநர்: பிரபுதாசு பட்டுவாரி 2. முதலமைச்சர்: மகோ. இராமச்சந்திரன் முதல் முறை 3051977 - 182 1980 3. பிற அமைச்சர்கள்: 1. நாஞ்சில் கி. மனோகரன் 1 பண்ருட்டிச. இராமச்சந்திரன் 3. க.அ. கிருட்டிணசாமி 4. எசுடி சோமசுந்தரம் 5. கோ. இரா. எட்மண்ட் 5. இராம. வீரப்பன் 7. க. நாராயணசாமி 8. செ. அரங்கநாயகம் 9. கா.காளிமுத்து 10. இராகவானந்தம் 11. செளந்தர பாண்டியன் 12. சி.பொன்னையன் 13. பெ, குழந்தைவேலு 14. கா. இராசாமுகமது 15. செளந்தரராசன் *16. திருவாட்டி பிடி. சரசுவதி 17. திருவாட்டி சுப்புலட்சுமி செகதீசன் குறிப்பு: 18.198 அமைச்சரவைக் கலைக்கப்பட்டுக் குடியரசுத் தலைவர் -ஆட்சி ஏற்பட்டது, பிற்சேர்க்கை V அ.இ.அ.தி.மு.க அமைச்சரவைப்பட்டியல் (9.6.1980 முதல் 14.2.1985 வரை ) ஆளுநர்: பிரபுதாசுபட்டுவாரி - முதலமைச்சர்: ம. கோ. இராமச்சந்திரன் (2ஆம் முறை) - ஓ5980 - 1421985 3. பிற அமைச்சர்கள்; 1. இரா. நெடுஞ்செழியன் 2. பண்ருட்டி ச. இராமச்சந்திரன் , 3, க. அ. கிருட்டிணசாமி. 4. எசுடி. சோமசுந்தரம் -- 5, இராம வீரப்பன் 6, செ. அரங்கநாயகம் 7. கா.காளிமுத்து 8. சி, பொன்னையன் 9. பெ.குழந்தைவேலு 10. ச. இராகவானந்தம் 11. எச். வி. அண்டே 12. கா. இராசாமுகமது 13. செ. முத்துச்சாமி 14. எசு. திருநாவுக்கரசு 15. எசு.எசு. இராசேந்திரன் 16, எம், விசயசாரதி 17. திருவாட்டி கோமதி சீனிவாசன் 18. எசு. ஆர். இராதா. 19. எம். ஆர்.கோவேந்தன் 17.1983 - 102.1985) 20. விசயலட்சுமி பழனிச்சாமி 1/1981 - 12/1985 21. ஆர். சௌந்தராசன் ஓஓ.1981 - 10/1985 27. ஒய்.எசு. எம், யூசுப் ஓஓ.1983 - 10/05 23. இரா. அருணாச்சலம் ஓதி 3 - 102985 24. கே. கலைமணி 25. டி வீராச்சாமி - 591984 -14 1985 26, கே.கே.எசு.எசு. ஆர். இராமச்சந்திரன் 531984 - 1421985 . பிற்சேர்க்கை VI அ.இ.அ.தி.மு.க அமைச்சரவைப்பட்டியல் (14.2.1985 முதல் 24.12.1987 வரை ) ஆளுநர்: சுந்தர்லால்குரானா 2 முதலமைச்சர்; ம.கோ. இராமச்சந்திரன் 3ஆம் முறை 142.1985 - 24.12.1987 3. பிற அமைச்சர்கள்: 1. இரா. நெடுஞ்செழியன் 2 பண்ருட்டி இராமச்சந்திரன் 3. க.அ. கிருட்டிணசாமி 47.85 - ஓ5.1985 2211885 - 163.1987 4. இராமவீரப்பன் 431985 = 21.jd.1985 5.1987 - 24.12.1987 5, சு, இராசாராம் 331985 - 2412.1987 6. ப.உ. சண்முகம் 33.1985 - 2412.1987 - 7. செ.அரங்கநாயகம் 1431985 - 2.10.1986 8. கா.காளிமுத்து 142.1985 - 241/1987 9. சி.பொன்னையன் 1421985 - 201986 10. எச்.வி, அண்டே * T4285 - 14121987 11. செ. முத்துசாமி 1431985 - 74131987 12, எசு. திருநாவுக்கரசு 142.1985 - 24iz.1987 13. வி.லி. சாமிநாதன் 331985 - 2.10.1987 418' தமிழக. பூகப் பண்பாட்டு வரலாறு 14. ஆ. செளந்தரராசன் 141FJg85 - 24.12.1987 15, டி வீராச்சாமி 331985 - 163.1987 16, ஆனூர்.சி.செகதீசன் 3.3.1985 - 153.87 17. என். நல்லுச்சாமி 331985 - 210.1986 18. டி இராமசாமி 19. அ. அருணாச்சலம் '' 3.3.1985 - 16.3.1987 20, எம் ஆர்.கோவேந்தன் 1431985 - 21/01ுதிதி 21. திருவாட்டி கோமதி சீனிவாசன் 1431985 - 2015 22 திருவாட்டி விசயலட்சுமிசெகதீசன் 142 1985 - 21.10.1986 23. ஒய்எசு.காம். யூசுப் . 142.1985 - 12.101988 24 கே.கே.எசு.எசு. ஆர். இராமச்சந்திரன் 1421985 - 14121987 பிற்சேர்க்கை VII அ.இ.அ.தி.மு.க அமைச்சரவைப்பட்டியல் 7.1.1988 - 20.1.1988) 1. ஆளுநர்: பிசி. அலெக்சாந்தர் 2. முதலமைச்சர்: திருவாட்டி சானகி இராமச்சந்திரன் 7/1988 - 20.1.1988 3. பிற அமைச்சர்கள்: 1. இராமவீரப்பன் 2. ப. உசண்முகம் 3. சி.பொன்னையன் 4. செ. முத்துசாமி 5, வி.வி. சாமிநாதன் 5, டி இராமசாமி 7. அ. அருணாச்சலம் குறிப்பு : அமைச்சரவை பெரும்பான்மை இன்மையால் கவிழ்ந்தது. எனவே, 201988 முதல் 35 வரை குடியாட்சித் தலைவர் ஆட்சி நடந்தது. பிற்சேர்க்கை VIII திராவிட முன்னேற்றக் கழக அமைச்சரவைப் பட்டியல் (27.1.1989 - 1.6.1991) ஆளுநர்: பிசி. அலெக்சாந்தர் நாராயணசிங் 2. முதலமைச்சர்: மு. கருணாநிதி மூன்றாம் முறை) 2711989 - 6.199ர . 3. பிற அமைச்சர்கள்; 1. க. அன்பழகன் 2, எசு, சே, சாதிக்பாட்சா 3. நாஞ்சில் கி. மனோகரன் 4. மு. கண்ண ப்பன் 5. கேபி. கந்தசாமி 6. கோசி. மணி 7. நா. வீராசாமி 8, பொன், முத்துராமலிங்கம் 9. வீரபாண்டி எசு. ஆறுமுகம் 10. துரைமுருகன் 11. திருவாட்டி சுப்புலட்சுமி செகதீசன் 17. டாக்டர். இராமகிருட்டிணன் 271.1989 - 15.6.1990 13. டாக்டர்.க பொன்முடி 14. கே.என்.நேரு 15. டாக்டர். கே. சந்திரசேகரன் 16. ச.தங்கவேலு 17. க. சுந்தரம் IA.Agழf]- Thug பிற்சேர்க்கை IX அ.இ.அ.தி.மு.க. அமைச்சரவைப்பட்டியல் (25.6.1991 முதல் 2.3.1996 வரை) 1. ஆளுநர்: நாராயணசிங் டாக்டர். எம். சென்னா ரெட்டி முதலமைச்சர்: செல்வி.செ. செயலலிதா முதன் முறை) 2561991 - 231996 3. பிற அமைச்சர்கள்: 1. இரா. நெடுஞ்செழியன் 2. க. அ. கிருட்டிணசாமி 3. எசுடி சோமசுந்தரம் 4. இராமவீரப்பன் 5. க. இராசாராமன் 6, செ, அரங்கநாயகம் 7. செ. முத்துச்சாமி' 8, கே.ஏ.செங்கோட்டையன் 9. இ. மதுசூதனன் 10. எசு, கண்ண ப்பன் 11. அழகு திருநாவுக்கரசு 12, குயா. கிருட்டிணன் 13, டி.எம். செல்வகணபதி 14. முகம்மது யூசப் 15, திருவாட்டி இந்திரகுமாரி 16. எம். ஆனந்தன் 17, டி.செயகுமார் பிற்சேர்க்கை X திராவிட முன்னேற்றக் கழக அமைச்சரவைப்பட்டியல் (13.5.1996 முதல் 26.5.2001 வரை ) ஆளுநர்: செல்வி பாத்திமா பீவி 2. முதலமைச்சர்: மு. கருணாநிதி 4ஆம் முறை! 135.1996 - 3852017 3. பிற அமைச்சர்கள்: 1. க, அன்பழகன் 2 நா.வீராசாமி 3. நாஞ்சில் சி. மனோகரன் 4. கோ.சி. மணி 5. வீரபாண்டி. எசு. ஆறுமுகம் 6. துரைமுருகன் 7, டாக்டர், க, பொன்முடி. 8. டாக்டர். மு. தமிழ்க்குடிமகன் 9. கே.என். நேரு 10, க, சுந்தரம் 11. ஏ. இரகுமான்கான் 12. ஆலடி அருணா 13, வே, தங்கப் பாண்டியன் 14, என். கே, பெரியசாமி 15, எம். ஆர்.கே. பன்னீர்செல்வம் 16. பொங்கலூர் பழனிச்சாமி 17. கு பிச்சாண்டி 18. இட பெரியசாமி 19. வி. முல்லைவேந்தன் 20. பி.எம்.செங்குட்டுவன் 2. திருவாட்டி எசுபி.சற்குணபாண்டியன் 22. சமய நல்லூர் செல்வராசு 23. எசு, சுரேசு ராசன் 24. அந்தியூர்.செல்வராசு 25. திருவாட்டி எசு.சென்னிஃபர்சந்திரன் தமிழகம் முகப்பண்பாட்டு வரலாறு பிற்சேர்க்கை XI அ.இ.அ.தி.மு.க. அமைச்சரவைப்பட்டியல் (21.9.2001-23.2002) ஆளுநர்: டாக்டர்.சி. அரங்கராசன் பொறுப்பு) 2. முதலமைச்சர்: ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பிற அமைச்சர்கள் (29207 -202002) பிற்சேர்க்கை XII அ.இ.அ.தி.மு.க. அமைச்சரவைப்பட்டியல் (2.3.2002 - 12.5.2006) 1. ஆளுநர்: இராமன் மோகன்ராவ் 2. முதலமைச்சர்: செல்வி. செ, செயலலிதா (3ஆம் முறை) 2.3.2002 முதல்.. 3. பிற அமைச்சர்கள்: 1. ஓ. பன்னீர் செல்வம் 2. சி. பொன்னையன் 3. டாக்டர். எம். தப்பித்துரை 4. டி. செயகுமார் 5. பி.சி. இராமசாமி 6. எசு. செம்மலை 7. சி. துரைராசு 8. பி. தனபால் 9. என் தளவாய் சுந்தரம் 10, ஆர், சிவானந்தம் 11. திருவாட்டி. பி. வளர்மதி 12. எசு, கருப்புசாமி 13. ஆர். விசுவநாதன் 14. நைனார் நாகேந்திரன் 15. சி.ம. வேலுச்சாமி 16. பி. மோகன் 17. ஆர். விசுவநாதன் 18. அனிதா, ஆர். இராதாகிருட்டிணன் 19. கே. சுதர்சனம் 20. வே.து. நடராசா 21. எக, இராமச்சந்திரன் 22. கே.கே. பாலசுப்பிரமணியன் 23. எம்.சி. சம்பத்து 24. வி. சோமசுந்தரம் 25. எம். இராதா கிருட்டிணன் 25, ஏ, பில்லூர் பிற்சேர்க்கை XIII திராவிட முன்னேற்றக் கழக அமைச்சரவைப் பாட்டியல் (13.05.2008 முதல்) 1. ஆளுநர்: சுர்ஜித் சிங் பர்னாலா 2. முதலமைச்சர்: மு. கருணாநிதி (ஐந்தாம் முறை) 3, பிற அமைச்சர்கள்: கே. அன்பழகன் 2.ஆற்காடு நா.வீராசாமி 3. மு.க.ஸ்டாலின் 4, கோ.சி.மணி 5. வீரபாண்டி ஆறுமுகம் 6. துரைமுருகன் 7. க.பொன்முடி 6, கே.என்.நேரு 9. எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 10, ஐ.பெரியசாமி 11 என்.சுரேஷ்ராஜன் 1உபரிதி இளம்வழுதி 13.தண்டராம்பட்டு தா.வ.வேலு 14.சுப்தங்கவேலன் 15. கே.கே.எஸ்.எபஸ்.ஆர்.ராமச்சந்திரன் 16. தா.மோ.அன்பரசன் ரா, கே.ஆர்.பெரியகருப்பன் 18. தங்கம் தென்னரசு 19. எஸ்.என்.எம்.உபயதுல்லா 20. டி.பி.எம்.மைதீன்கான் 21 என்.செல்வராஜ் 2. வெள்ளகோவில் சாமிநாதன் 23. பி.கீதா ஜீவன் 24. ஆதமிழரசி 25. கே.பி.பி.சாமி 26. உமதிவாணன் 27. கா.இராமச்சந்திரன் 28. பொங்கலூர் நா.பழனிச்சாமி ஆசிரியர் பற்றிய குறிப்பு : கோ. தங்கவேலு தகப்பனார் பெயர் : கோபால் நாராயணன் தாயார் : இலக்குமி - பிறப்பிடம் : திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், 5 புத்தூர் என்ற சிற்றூர் குடும்பம் : மிக எளிய குடும்பம் பிறந்த தேதி : 1929 அக்டோபர் 16 ஆம் நாள் உடன்பிறந்தோர் : எழுவர் படிப்பு : பிறந்த திரில் தொடக்கப் பள்ளியும் இல்லை. ஆதலால், ஆரணியையடுத்த காமக்கூர் பாளையம் என்ற ஊரில் தன் அத்தை வீட்டில் தொடக்கப்பள்ளியில் படிப்பையும், பின்னர் ஆரணியில் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பையும் முடித்து, வேலூரிலுள்ள, ஊரிசுக் கல்லூரியில் 1952-ல் இண்டர்மீடியட் முடித்தார். சென்னை அஞ்சல் பிரிப்பகத்தில் இரவில் பணியாற்றிக் கொண்டே பகலில் பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம், முதுகலை வரலாறு ஆகிய பட்டங்களைப் பெற்றார். இரவில் பணியாற்றிக் கொண்டே சென்னைப் பல்கலைக்கழகத்தில் இதழ்இயல் பட்யைப் படிப்பும், சட்டக் கல்லுாரியில் இளங்கலைச் சட்டப்பட்டயப் பட்டமும் பெற்றார், சென்னைப் பல்கலைக் கழகத்தில் தனியே எழுதி தமிழ்ப் புலவர், இலக்கியம் தொல்பொருள், கல்வெட்டு முதலியவற்றில் பட்டயங்களைப் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டதால் கருநாடகப் பல்கலைக்கழகம், தார்வார் சென்று அரசியல் அறிவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். ஆசிரியர் குறிப்பு 1955 முதல் 1987 வரை அரசுக் கல்லுாரிகளில் வரலாற்றுப் பேராசிரியராகப் பணியாற்றினார். தானே பணிதுறந்து 1987 முதல் 1990 வரை மதுரைக் காமராசர் பல்கலைக் கழக வரலாற்றுத் திணைக்களத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். அரசுக் கல்லூரிகளில் பேராசிரியராக இருக்கும்போது தமிழ்ப் பேரறிஞர் டாக்டர் மு. வரதராசனார் அழைப்பை ஏற்றுத் தமிழ்நாட்டு வரலாறு படைக்கும் குழுவில் பதிப்பாசிரியராக 1973 முதல் 197ழ்வரைப் பணியாற்றினார். படைப்புகள் : தமிழ் 1. இந்திய வரலாறு கி.பி. 1506 வரை) 2. இந்திய வரலாறுகிபி. 1526 முதல் இன்று வரை) 3. இந்திய வரலாறு (கி.பி. 1773 முதல் இன்று வரை! 4. இந்தியக் கலை வரலாறு கட்டடக் கலை முதல் மடலம் 5. இந்தியக் கலை வரலாறு சிற்பக்கலை, ஓவியக் கலை இரண்டாம் மடலம் 5. சப்பானிய வரலாறு - 7, தமிழ்நிலவரலாறு 8. சம்புவராயர் வரலாறு 9. தமிழன் அயோத்திதாசப் பண்டிதர் 10. அம்பேத்கார் நாட்பொத்தகம் ஆங்கிலம் 1. Essays on the History of Pallavar 2. Social Justice in Tamilnadu 3. Communal reservations and constitutional safe guards in Tamilnadu (1920 - 197HA.D.) 4. Social legislations on depressed classes 5. Religion and society in Tamilnadu - Secularism and communal harmony 6. Hindutuva and its impacts on Tamil society பதிப்பித்தவை : 1. தமிழக வரலாறு - தொல் பழங்காலம் 2. தமிழக வரலாறு - சங்ககாலம் இரண்டு மடலங்கள் தமிழக வரலாறு - பல்லவர் பாண்டியர் காலம் இரண்டு மடங்கள் 4. தமிழக வரலாறு - சோழர் காலம் இரண்டு மடங்கள் 5. தமிழக வரலாறு - பாண்டியர் பெருவேந்தர்கள் 6. தமிழக வரலாறு ஆய்வுப்பணிக்கு உதவி எம்.ஃபில். மாணவர் - எபேர் பி.எச்டி. மாணவர் - 11பேர் வேறு பணிகள் I. தமிழ்நாட்டுத் தேர்வாணைய அறிவுரையாளர் 2 அனைத்திந்தியத் தேர்வாணைய அறிவுரையாளர் 3. நடுவண் ஆட்சிப் பணிகள், வங்கிப் பணிகள். தேர்வுக் குழுக்களின் அறிவுரையாளர் 4. அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தேர்வுக்குழு அறிவுரையாளர் 5. மதுரைப் பல்கலைக்கழக ஆளவை உறுப்பினர் க., அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆளவை உறுப்பினர் 7. தலைவர் - கோபால் நாராயணன் அறக்கட்டளை ஏற்படுத்தியவர் : டாக்டர் கோ. தங்கவேலனார், சமூக, கல்வி, பொருளாதார அறக்கட்டளை