தமிழக வரலாற்று வரிசை -9 தாய்நில வரலாறு (முதல் பாகம்) ஆசிரியர் பேரா. முனைவர் கோ. தங்கவேலு மேனாள் வரலாற்றுத் திணைக்களத் தலைவர் மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் அமிழ்தம் பதிப்பகம் சென்னை - 600 017 நூற் குறிப்பு நூற்பெயர் : தமிழக வரலாற்று வரிசை - 9 தாய்நில வரலாறு - (முதல் பாகம்) ஆசிரியர் : பேரா.முனைவர். கோ. தங்கவேலு பதிப்பாளர் : இ. வளர்மதி முதற்பதிப்பு : 2008 தாள் : 18.6 கி. வெள்ளைமேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 12 புள்ளி பக்கம் : 14+ 298 = 312 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 290 /- படிகள் : 500 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : செல்வி வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்ஸ் இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம் “பெரியார் குடில்” பி-11, குல்மோகர் குடியிருப்பு, தியாகராயர் நகர், சென்னை - 600 017 தொ.பேசி: 24339030 அறிமுகவுரை உலக முதன்மொழி தமிழ்! உலக முதல் மாந்தன் தமிழன். உலகம் தோன்றிய போதே உடன் தோன்றி இன்றளவும் கன்னியாகவே இருப்பது தமிழ்நிலம். அத்தமிழ் நிலத்தைத் தாயகமாகக் கொண்டவனே தமிழன். அந்த தமிழனே தொல்மாந்தன். அவனுடைய தொல்பழங் காலந்தொட்டு இற்றளவுமுள்ள வரலாற்றுச் சுவடுகளைச் சுட்டிக் காட்டுவதே இத் "தாய்நிலவரலாறு"ஆகும். தமிழக வரலாற்றில் தலைசிறந்து நிற்பது கழக காலமாகும். வரலாற்று இலக்கணப்படி தன்னக, அயலக, தொல்பொருள், நாணயச் சான்றுகளைக் குறைவின்றிக் கொண்டமையால் கழகக் காலத்தைப் "பொற்காலம்” என்கிறோம். கடைக்கழகக் காலம் கி.மு. 300 முதல் கி.பி. 300 வரையிலானது அடுத்து வரும் களப்பிரர் காலம் கி. பி. 300 முதல் கி.பி. 600 வரையிலானது. இதனை "இருண்ட காலம்" என்று கூறுவது குருட்டுத் தனமான வரலாற்று மரபாகிவிட்டது. எப்பொழுதெல்லாம் ஆரியப் பண்புகளும், சமற்கிருத மொழியும் மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை உண்டாக்குகிறதோ அக் காலத்தைப் “பொற்காலம்" என்றும் ஆரிய மொழிக்கும் பண்பாட்டிற்கும் தாழ்வு ஏற்படுகிற அக்காலத்தை “'இருண்டகாலம்" என்றும் கூறுவதைத்தான் குருட்டுத்தனமான வரலாற்று மரபு என்கிறோம். இவ்வாறு தான் ஆரியப் பண்பாட்டையும், மொழியையும் மங்கச் செய்து, கழகக் காலப் பண்பாட்டையும், மொழியையும் மலரச் செய்த காலமே களப்பிரர் காலத்தில்தான். இக்காலம் தான் சமணத்துக்கும், சாக்கியத்துக்கும் ஆரியத்திற்கும் சாவுமணி அடித்த காலமாகும். தமிழ் இலக்கியங்களுக்கு இலக்கண நூல்களையார்த்த காலமே களப்பிரர் காலம் தான். எனவே, இதனை இருண்ட காலம் என்கின்றனர். களப்பிரரை யடுத்து தாய்நிலமாகிய தமிழகத்தைத் தோராயமாக கி, பி, 6ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 9ஆம் நூற்றாண்டு வரை ஆண்ட பல்லவர் காலத்தில் ஆரியம் தலை தூக்கியது. பல்லவர்கள், அயலகத்திலிருந்து ஆரிய பூசாரிகளைத் தமிழகத்திற்கு இறக்குமதி செய்து, தாய்நிலத்தை' "தேவதானம்", ''பிரம்மதேயம்", மகாதேவ மங்கலம்", முதலியனவாக கூறுபோட்டு, தமிழ் வழிபாடுகளை ஒழித்தனர். பூவைப் படைத்து பூசை செய்த தமிழன் அர்ச்சனைக்கு ஆட்பட்டான்! கி.பி. 9ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 12ஆம் நூற்றாண்டு வரையாண்ட முற்காலப் பாண்டியரும், சோழரும் தமிழர் உடலோடும் ஆரியப் பண்போடும்தான் ஆண்டனர். கலையும், பண்பாடும், வழிபாடும் மாறுபட்டன. ஆனால், கோயிற் கலைகளும், இறைநெறி (பக்தி) இலக்கியங்களும் தமிழின் கருவூலக் கணக்கில் சேர்ந்துவிட்டன. பிற்காலப் பாண்டியருக்குப்பின், தெலுங்கரின் விசய நகர ஆட்சியும், நாயக்கர், பாளையக்காரர் ஆட்சிகளும் தமிழகத்தை அலைக்கழித்து ஆங்கில ஆட்சிக்கு அடிகோலின. ஆங்கில ஆட்சி கி.பி. 1750லிருந்து கி.பி. 1947வரை தமிழகத்தில் நிலவியது. அது, புதுக்கால ஆட்சியாக விரிந்தது. ஆங்கில ஆட்சியை விடுதலை வேட்கைக் கொண்டு அகற்றிய பின், தமிழகத்தில் அரசியல் கட்சி சார்ந்த பாராளுமன்ற முறையிலான மக்களாட்சி ஏற்பட்டது. மீண்டும் தமிழ்ப்பண்பாடு களை மலரச் செய்ய கழக ஆட்சிகள் முயலுகின்றன. பொதுவாக, இந்திய வரலாற்றில் ஒவ்வொரு ஆறு நூற்றாண்டின் முடிவிலும் பண்பாட்டு மறுமலர்ச்சி ஏற்படுவதை உணருகிறோம் அத்தகைய மறுமலர்ச்சியைத் தமிழக வரலாற்றிலும் காண்கிறோம். ஆனால், கழகக்காலத்தை அடுத்து வரும் அத்தியாயங்கள் ஒவ்வொரு மூன்று நூற்றாண்டுக்கொரு முறை புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளன. எத்தகைய மாறுபட்டச் சூழலிலும், தமிழ்ப்பண்பாடு, அடி யோடு மாறியதும், மறைக்கப் பட்டதுமில்லை. இதற்கு ஒரே கரணியம் செம்மொழியான தமிழேயாகும். அம்மொழியைச் செம்மைப்படுத்த முதல், இடை, கடைக்கழகங்கள் தோராயமாக பத்து ஆயிரம் ஆண்டுகள் உழைத்தன. இன்றளவும் தோண்டத்தோண்டச் சுரக்கும் மணற்கேணி போல் சிறந்து விளங்கும் நாற்பது கழகக் காலநூல்களும், எண்ணிலடங்கா இறைநெறி இலக்கியங்களுக்கு தமிழ்மொழியின் கருவூலமாக உள்ளன. பேரூழிக்காலங்களிலும் தமிழ்மண் சாய்ந்ததில்லை! ஆரியம் தன்மய மாக்கியும் தமிழ்ப்பண்பு மாறியத்தில்லை! நான்கு வருண பாகுபாடு இங்கு இல்லை. வேற்றுமொழிகளாலும், மேலைநாட்டுப் பண்பாடுகளாலும் தமிழ் மொழியையும், பண்பாடுகளையுமாற்றி அமைக்க முடியவில்லை. காற்றசைவால் அசையும் நாணல்போல் வளையும், ஆனால் நிமிர்ந்து விடும்! சில பொழுது மாறுபட்டதைப் போல் தோற்றமெடுக்கும். ஆனால் ஒடிந்து உருமாறியதில்லை என்பதுதான் வரலாற்று உண்மை . , "ஓடும், உட்காரும், தாவும், தாண்டிக்குதிக்கும் ஆனால் ஒரே அடியாக அடிச்சுவடு அற்றுப் போகாது. இதுவே வரலாற்று இலக்கணம்" என்பார் உலக நாகரிக வரலாற்று நூலை யார்த்த ஏ.கே, தாயின்பி. இதற்கு முற்றிலும் எடுத்துக்காட்டாகத் திகழ்வதே தமிழக வரலாறு ஆகும். விடுதலைக்குப்பின்னும் இதே தனித் தன்மையோடு தான் தமிழக வரலாறு தொடருகிறது. தலைசாய்ந்து போனதைப் போல உணருவோம். ஆனால், கொடை சாய்ந்து விடவில்லை என்பதுதான் உண்மை! “மூலத்தின் கூறுபாடு பலவாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் மீண்டும் மூலமாகவே தோன்றும் என்பது மாந்தவியல் அறிவியலார் கண்டமுடிவு ஆகும். ஆனால், தமிழ்க்குருதியோடு காலந்தோறும் அறுபடாது திகழ்ந்த தமிழ் அறிஞர்களால் தமிழ்ப்பண்பும் தாய்நில வரலாறும் கட்டிக் காக்கப் பெற்றன. அவற்றின் வீரிய மறுமலர்ச்சிக்கு உந்து சக்திகளாகத் தோன்றியவர்களே தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவுமாவர். எனவே, தொல் பழங்காலந் தொட்டு, இன்றளவும் அறுபடாமல் தொடர்வது தாய்நில வரலாறே. இந்திய வரலாற்றில் இடையிடையே ஏற்பட்ட அந்நியர் ஆட்சிகளுக்கு மறுதலை இல்லாமல் தமிழகத்திலும் வேற்று நிலத்தார், வேற்றுமொழியார் ஆட்சிகளேற்பட்டாலும் அவை அசைவுகளாகவே நின்றனவே ஒழிய முற்றுப் புள்ளியாகவில்லை. இதுவே, தாய்நில வரலாற்றின் சீரிய தனித் தன்மையாகும். இத்தகைய மாண்புறு வரலாற்றுச் சுவடுகளைச் சுட்டிக் காட்டிச் செல்வதே இச்சிறுநூல். இந்நூல் உருவாக உதவிய அனைவருக்கும், குறிப்பாக இதனை அச்சேற்றி அழகுற அமைத்து, 'தமிழ்மண்' பதிப்பக உரிமையாளர், தமிழ்க்காவலர் கோ. இளவழகனார் அவர்களின் துணைவியார் அமிழ்தம் பதிப்பகம் வழி வெளியிடுகிறார். அவர்களுக்கு நன்றிக் கடப்பாடுடையேன். - கோ. தங்கவேலு பதப்புரை 'வரலாறு என்பது உணர்ச்சிகளின் தொகுப்பு அல்ல. உண்மை நிகழ்வுகளின் தொகுப்பு:' 'வரலாறு என்பது ஓர் இனத்தின் வாழ்வுக்கும் தாழ்வுக்கும் சான்று கூறும் நினைவுச் சின்னம்', 'வரலாறு என்பது மாந்த இனத்தின் அறிவுக்கருவூலம்', 'தமிழினத்தின் வரலாறு நெடியது; நீண்டது; பழம்பெருமை மிக்கது; ஆய்வுலகிற்கு அரிய பாடங்களைத் தருவது வரலாறு என்பது கடந்த காலத்தின் நிகழ்வுகளையும், வாழும் காலத்தின் நிகழ்வுகளையும், எதிர்காலத்தின் நிகழ்வுகளையும் உயிர்ப்பாகக் காட்டுவது. “வரலாறு என்பது என்ன? முற்காலத்தில் என்ன நடந்திருக்கலாம் என்பதைப்பற்றி பிந்தைய தலை முறையைச் சார்ந்த மாந்தனொருவன் தன் மனத்தில் உருவாக்கிக் கொள்வதே வரலாறாகும் என்பர் காரி பெக்மன்(GayBatmatJAOS-2005). இவ்வரலாற்றை எழுதுபவர் அறிவுநிலை, மனநிலை, சமுதாயப் பார்வை பட்டறிவு, கண்ணோட்டம், பிறசான்றுகளை முன்வைத்து எழுதுவர். அஃது அறிவியல், கலை, சமயம் ஆகியவற்றின் ஊற்றாகத் திகழ்வது. ஓர் இனத்தின் வாழ்வும் தாழ்வும் அந்த இனம் நடந்து வந்த காலடிச்சுவடுகளைப் பொறுத்தே அமையும். ஒரு நாட்டின் வரலாற்றிற்கு அந் நாட்டில் எழுந்த இலக்கியங்கள்,சண்டறியப்பட்டுள்ள கல்வெட்டுக்கள், புதைபொருள்கள், செப்பேடுகள், நாணயங்கள், பழங்காலக் கட்டடச் சிதைவுகள், சிற்பச்சின்னங்கள், சமயங்கள் தான் சான்று பகர்வன. அத்தனையும் பெருமளவு உள்ள மண் தமிழ்மண்ணே ஆகும். மொழி, இன, நாட்டு வரலாறு என்பது ஒரு குடும்பத்திற்கு எழுதப்படும் ஆவணம் போன்றது. இவ்வரலாறு உண்மை வரலாறாக அமைய வேண்டும் என்பார் மொழிநூல் மூதறிஞர் பாவாணர். இந்தியப் பெருநிலத்தின் வரலாறு வடக்கிலிருந்து எழுதப்படக் கூடாது. அந்த வரலாறு இந்தியாவின் தென்முனையிலிருந்து எழுதப்படவேண்டும். அதுவே உண்மை வரலாறாக அமையும் என்பது மனோண் மணீயம் சுந்தரனார் கூறியது; வின்சென்ட் சுமித் ஏற்றது. தமிழினத்தின் பழமையைப் பல்லாயிரம் ஆண்டுகள் பின்னோக்கிப் பார்த்து, தொல்காப்பியம் உட்பட்ட சங்கநூல்கள் அனைத்தையும் முழுமையாகச் செவ்வனே பயன்படுத்தி ஆங்கிலத்தில் முதன்முதலில் 1929இல் தமிழர் வரலாறு எழுதியவர் பிடி.சீனிவாசய்யங்கார் ஆவார். அந்நூலில் தமிழரே தென்னாட்டில், ஏன் இந்தியாவில், தொன்று தொட்டு வாழ்ந்து வரும் மண்ணின் மைந்தர்கள் என்பதைத் தம் ஆழ்ந்த ஆய்புல அறிவால் நிறுவினார். தமிழ்நாட்டில் இன்று வரலாறு, மொழியியல் போன்ற துறைகளில் வல்லுநராகத் திகழும் அறிஞர் பி. இராமநாதன் அவர்கள் அந்நூலினை தமிழாக்கம் செய்துள்ளார். அதனைத் தமிழர் வரலாறு (கிபி600 வரை) எனும் நூலாகத் தமிழ்மண் பதிப்பகம் 2008இல் வெளியிட்டுள்ளது. இவ்வரலாற்று வரிசைக்கும் திரு. இராமநாதன் அவர்கள் அறிமுகவுரைகள் வழங்கி அணிசேர்த்துள்ளார். ' பாண்டியர் வரலாறு, பிற்காலச் சோழர் சரித்திரம், பல்லவர் வரலாறு, களப்பிரர் காலத் தமிழகம் (வரலாற்றாசிரியர் நால்வர் நூல்களின் தொகுப்பு), கொங்கு நாட்டு வரலாறு, துளு நாட்டு வரலாறு, தமிழக வரலாறு, தாய்நில வரலாறு, தமிழகச் சமூகப் பண்பாட்டு வரலாறு, எனும் நூல்களைத் தமிழக வரலாற்றுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் தமிழக வரலாற்று வரிசை எனும் தலைப்பில் வெளியிடுகிறோம். இவற்றுள் பெரும்பாலானவை இன்றும் வரலாற்று மாணவர்களும், வரலாற்று ஆய்வாளர்களும் படிக்கவேண்டிய கருவி நூல்களாகவும், என்றும் பயன்தரும் (classic) நூல்களாகவும் கருதப்பட வேண்டியவை. பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழக வரலாற்றுத் துறைகள் ஆகியவற்றின் மாணவர்களும், கல்லூரி! பல்கலைக்கழக ஆய்வுத்துறைகளும் இந்நூல்களை வாங்கிப் பயன்கொள்வாராக. தமிழக வரலாற்றுக்கு அணிகலனாக விளங்கும் இவ்வரலாற்றுக் கருவூலங்களைப் பழமைக்கும் புதுமைக்கும் பெருமை சேர்க்கும் வகையில் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார், ஒளவை துரைசாமிப் பிள்ளை, மா.இராசமாணிக்கனார், இர.பன்னீர்செல்வம், மயிலை சீனி.வேங்கடசாமி, மு.அருணாசலம், புலவர் குழந்தை, நடன.காசி நாதன், பேரா. முனைவர். கோ, தங்கவேலு போன்ற பெருமக்கள் எழுதியுள்ளனர். இவ்வருந்தமிழ் பெருமக்களை நன்றி உணர்வோடு நினைவுகூர்கிறோம். தலைமுறை தலைமுறையாகச் சொல்லப்பட்டும் கேட்கப்பட்டும் வந்த அரிய செய்திகளைத் தம் அறிவின் ஆழத்தால் விருப்பு வெறுப்பு களுக்கு அப்பாற்பட்டு நடுநிலை நின்று உண்மை வரலாறாக எழுதி யுள்ள இந் நூல்கள் ஆய்வுலகிற்கும், தமிழ் உலகிற்கும் பெரிதும் பயன் படத் தக்க அரிய வரலாற்றுப் பெட்டகமாகும். பண்டைத் தமிழ்க்குலம் நடந்து வந்த பாதையை அறிந்து கொள்ளவும், இனி நடக்கவேண்டிய பாதை இது என அறுதியிட்டுக்கொள்ளவும், தள்ள வேண்டியவை இவை, கொள்ளவேண்டியவை இவை எனத் திட்ட மிட்டுத் தம் எதிர்கால வாழ்வுக்கு வளமானவற்றை ஆக்கிக் கொள்ளவும், தமிழ் இனத்தைத் தாங்கி நிற்கும் மண்ணின் பெருமையை உணரவும், தொலைநோக்குப்பார்வையுடன் இவ்வரலாற்று வரிசையைத் தமிழர் முன் தந்துள்ளோம். வாங்கிப் பயன்கொள்ளுங்கள். ,தொண்டு செய்வாய்! தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் துடித்தெ ழுந்தே! செயல்செய்வாய் தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் சீறி வந்தே , ஊழியஞ்செய் தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் உணர்ச்சி கொண்டே, பணிசெய்வாய்! தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் பழநாட் டானே. இதுதான் நீ செயத்தக்க எப்பணிக்கும் முதற்பணியாம் எழுக நன்றே . எனும் பாவேந்தர் வரிகளை நெஞ்சில் நிறுத்துங்கள். மொழியாலும், இனத்தாலும் அடிமைப்பட்ட வரலாறு தமிழரின் வரலாறு. இவ்வரலாற்றை மீட்டெடுக்க உழைத்த பெருமக்களை வணங்குவோம். அவ்வகையில் உழைத்து நம் கண்முன்னே வாழ்ந்து மறைந்த பெரு மக்களுள் தலைசிறந்தோர் தந்தை பெரியாரும், மொழி ஞாயிறு பாவாணரும் ஆவர். இப்பெருமக்கள் அனைவரையும் நன்றியுணர்வுடன் இந்த நேரத்தில் வணங்குவோம். அவர்கள் வழி பயணம் தொடருவோம். தமிழ் இனமே! என் தமிழ் இளையோரே! நம் முன்னோரின் வாழ்வையும்தாழ்வையும் ஆழநினையுங்கள். இனத்தின் மீளாத்துயரை மீட்டெடுக்க முனையுங்கள். - பதிப்பாளர். நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் பெரும்புலவர் இரா. இளங்குமரனார், முனைவர் ஒளவை. நடராசன், முனைவர் அ.ம.சத்தியமூர்த்தி, பி. இராமநாதன், ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி நூல் உருவாக்கம் நூல் வடிவமைப்பு - மேலட்டை வடிவமைப்பு செல்வி வ,மலர் அச்சுக்கோப்பு முனைவர் கி, செயக்குமார், ச.அனுராதா, மு.ந.இராமசுப்ரமணிய ராசா, மெய்ப்பு சுப.இராமநாதன், புலவர் மு. இராசவேலு, அரு.அபிராமி, அ. கோகிலா அரங்க, குமரேசன், வே, தனசேகரன், ரெ. விசயக்குமார், இல.தருமராசு, எதிர்மம் (Negative) பிராசசு இந்தியா (Process India) அச்சு மற்றும் நூல்கட்டமைப்பு ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்ஸ் இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் .... உள்ளடக்கம் அறிமுகவுரை பதிப்புரை நூல் 1, தமிழகத்தின் இயற்கை அமைப்பு 2. தொல்பழங்காலம் 3. இனவியற் கூறுகள் 4. கழகக்காலம் 5, தமிழகம் (கிபி.6-ஆம் நூற்றாண்டிலிருந்து 9ஆம் நூற்றாண்டு வரை) 6, பாண்டியரின் முதற்பேரரசு 7. சோழப் பேரரசு 8. பாண்டியரின் இரண்டாம் பேரரசு தாய்நில வரலாறு (முதல் பாகம்) (1) தமிழகத்தின் இயற்கையமைப்பு இற்றைத் தமிழ்நாடு இந்தியத் துணைக்கண்டத்தின் தென் கிழக்கு மூலையில் உள்ளது. ஞாலப் படத்தில் இதனைப் பார்க்கும்போது தெற்கே 8, 5° நெடுங்கோட்டிலிருந்து வடக்கே 13, 6° நெடுங்கோடு வரையிலும், மேற்கே 76, 15° குறுங்கோட்டிலிருந்து கிழக்கே 80, 20 கிழக்குக் குறுங் கோடு வரையிலும் பரவியிருப்பதைக் காணலாம். தமிழ்நாட்டிற்கு வடக்கில் ஆந்திரம், வடமேற்கில் கருநாடகம், மேற்கில் கேரளம் ஆகிய மாநிலங்கள் நில எல்லைகளாகவும் உள்ளன. கிழக்கில் வங்கக்கடலும், தெற்கில் இந்தியப் பெருங்கடலும் நீரெல்லை சுளாகவும் அமைந்து உள்ளன. தமிழகம் நிலத்தால் இந்தியத் துணைக் கண்டத்துடன் இணைந்து காணப்படினும் தன் பண்பாட்டிலும் மொழியிலும் தனித்து நின்று தனக்கென முதிர்ந்தவொரு பண்பட்ட வரலாற்றைப் பெற்றுள்ளது. இந்த உண்மையைத் தமிழ்நாட்டின் நிலவியல் தொன்மை உணர்த்துகிறது. தமிழ்நாட்டின் எல்லைகள் இன்று இவ்வாறு காணப்படினும் பண்டைக் காலத்தில் இதன் வடவெல்லை திருவேங்கட மலையாகும்; தெற்கெல்லை குமரிமுனையாகும். இதனை 'வடவேங்கடம் தென் குமரியா யிடைத் தமிழ்கூறு நல்லுலகு' என்னும் கழக(சங்கப்பாட்டால் அறியலாம். எனவே, இவ்வெல்லைகள் கழக(சங்கக் காலத்திலிருந்த தமிழகத்தின் எல்லைகள் ஆகுமென்றும், அதற்கு முற்பட்ட காலங்களில் வெவ்வேறு எல்லைகள் இருந்திருக்க வேண்டு மென்றும் அறிகிறோம். அஃதாவது முதற் கழகம் அல்லது தலைக்கழகக் காலத்திலும், இரண்டாம் கழகம் அல்லது இடைக்கழகக் காலத்திலும் தமிழகத்தின் தெற்கெல்லை இப்போதுள்ள குமரிமுனைக்குத் தெற்கே நிலப்பரப்பாயிருந்து, பின்னர் கடலுள் மூழ்கிய குமரி வரை இருந்தது என்பதனைத் தொல்காப்பியம் போலும் பழந்தமிழ் நூல்களிலிருந்து அறிகிறோம். ஆனால், தலைக்கழகக் காலத்தில் தமிழ்நாட்டு எல்லைகளைத் தெற்றென அறிவதற்கான சான்றுகள் நமக்கு இதுவரை கிடைக்கப் பெறவில்லை. ஆனால், கடைக் கழகக் காலத்தில் மேற்கே அரபிக்கடலும், கிழக்கே வங்கக்கடலும், தெற்கே குமரிமுனையும், வடக்கே வேங்கடமலையும் எல்லைகளாக இருந்தன. வென்பதைத் தெளிவாக அறிகிறோம். அஃதாவது, இப்போதுள்ள கேரளம், ஆந்திரம், கருநாடகம் என்னும் நாடுகளையும் உள்ளடக்கிய வாறே கழகக் காலத்துத் தமிழகம் விளங்கியது. அக் காலத்திற்கு முன் பிருந்தே தமிழர்கள் சிந்து, கங்கைச் சமவெளிப் பகுதிகளிலும் பரவி வாழ்ந் தார்கள் என்று கழகக்கால இலக்கியங்களும், பிறவரலாற்றுச் சான்று களும் காட்டுகின்றன. பனிமலை(இமயமலை) வடவெல்லையாக இருந்தது. தமிழ்நாட்டிலுள்ள மலைகளும், ஆறுகளும் மிகவும் பழமை யானவை யென்று ஆய்வாளர் கூறுகின்றனர். இங்குள்ள மலைகள் பனிமலைகள் அல்ல; பயிரிடுவதற்கேற்ற மண்வளம்கொண்டவை. எனவே, தமிழ்நாட்டு மலைகள் பலவற்றில் செழிப்பான காடுகளும், மரம், செடி, கொடிசுளும் காணப்படுகின்றன. பண்டைக்காலத் தமிழகம் நிலத்தின் வளத்திற்கேற்ப நாற்பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டிருந்தது என்பதனை அறிவோம். அவற்றுள் குறிஞ்சித்திணை நாகரிகம் மலைகளில் தான் தோன்றி வளர்ந்தது. மேற்குத்தொடர்ச்சி மலைகள் தமிழகத்தின் மேற்கில் மிகப் பெரியதொரு சுவர்போல் நீண்டு காணப்படும் மலைத்தொடருக்கு மேற்குத் தொடர்ச்சிமலை' என்பது பெயர். இஃதொரு சுவர் போல் தொடர்ச்சியாகக் காணப்படினும் இடை யிடையே பல கணவாய்களைப் பெற்றுள்ளது. கோவைக்கு அருகிலுள்ள பாலைக்காட்டுக் கணவாயும், கன்னியாகுமரி மாவட்டத்தி லுள்ள ஆரல்வாய்மொழிக் கணவாயும், நெல்லை மாவட்டத்திலுள்ள செங் கோட்டைக் கணவாயும் முகாமை வாய்ந்தவையாகும். இவற்றைத் தவிர கொல்லூர், நீலம்பூர், போடிநாயக்கனூர், அச்சன் கோயில் முதலிய கணவாய்களும் இம் மலைத்தொடரில் உள்ளன. மேற்கு மலைத்தொடரில் குதிரை மலை, குடகுமலை, ஆனைமலை, பொதிகைமலை முதலிய மலைகள் உள்ளன. அஃதாவது, இம்மலைத்தொடர்ச்சிக்கு ஆங்காங்கே வழங்கும் பெயர்களே இவை. இம் மலைத்தொடர்ச்சிமேலைக் கடற்கரை யோரத்தில் படிக்கட்டு களைப் போல் அமைந்திருப்பதால் இதனை ஆங்கிலேயர் 'மேலைப் படிகள்' (Western ghats) என்று அழைத்தனர். மேற்கு மலைத்தொடரிலுள்ள ஆனைமலைகளில் காடுகள் அடர்ந்து காணப்படு கின்றன. ஆழமான பள்ளத்தாக்குகள் பலவும், உயரமான மலைமுகடுகளும் உள்ளன. இக் காடுகளில் தேக்கு, மூங்கில், கடுக்காய், வேங்கை, நூக்கமரம் ஆகியவை செழித்து வளர்ந்துள்ளன. இக்காடுகளில் வாழும் வேங்கை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை, மான், கடம்பை, காட்டுப்பன்றி. முள்ளம் பன்றி முதலிய விலங்குகளைக் காட்டிலும் யானைகளே மிக அதிகமாகக் காணப்படுவதால் இம் மலைகளுக்கு யானை மலைகள்' என்று பெயர் - ஏற்பட்டது போலும்! மேற்கு மலைத்தொடர்ச்சியில் தேக்கடி, கோடை கானல், பழநிமலை முதலிய கோடை வாழிடங்கள் உள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலையும், கிழக்குத் தொடர்ச்சி மலையும் தமிழ்நாட்டின் மேற்குப்பகுதியில் கூடுகின்றன. இவை கூடும் இடத்திற்குக் கொங்கு நாடு' என்று பெயர். இங்குள்ள மலைகளை 'நீலமலைகள்" என்று அழைப்பர். இங்கு உதகமண்டலம், கூனூர் முதலிய கோடை வாழிடங்கள் உள்ளன. இன்றைய தமிழ்நாட்டின் மேற்கெல்லை நீலமலைகள் எனில் அது பொருத்தமாகக் காணப்படும். நீலகிரி மலையில் மிகவுயர்ந்த தொட்ட பெட்டா ' எனும் மலைமுகடு சிகரம் உள்ளது. இதன் உயரம் 277 மீட்டர் ஆகும். நீலமலைக்குத் தெற்கே ஏறத்தாழ 24 கிலோ மீட்டர் தொலைவுவரை இடைவெளியுள்ளது. இதற்குப் 'பாலைக் காட்டுக் கணவாய்' என்பது பெயர்.பொதுவாக மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள ஆனைமலைகளில் காணப்படும் 'ஆனைமுடி ' என்னும் மலை முகடுதான் தென்னிந்தியாவிலேயே மிக உயர்ந்த மலையுச்சி சிகரம்யாகும், இது தொட்டபெட்டா சிகரத்தைவிட 22 மீட்டர் அதிகமான உயரம் உடையது. ஆனைமலைக்குத் தெற்கே பழநிமலைகளும் அவற்றின் கிழக்குப் பகுதியில் கோடைக்கானல் மலைகளும் உள்ளன. பழநிமலை களுக்குத் தெற்கில் ஏலமலையும், அசுத்திய மலையும் உள்ளன. அகத்திய மலைகளில் தான் ஆரியன் காவுக்கணவாய், ஆரல்வாய் மொழிக் கணவாய் ஆகியவை உள்ளன. தமிழ் நாட்டிலிருந்து கேரளத்திற்குச் செல்வதற்கு ஆரியன்காவுக் சுக்கவாய் மூலம் தொடர் வழி (Railway5]ப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆரல்வாய்மொழிக் கணவாயின் வழியாகவும் கேரளத்திற்குச் செல்லலாம். மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வாழும் மக்கள் மரங்களை வெட்டியும், தேயிலை, ஏலம், கமுகு பாக்கு முதலியவற்றைப் பயிரிட்டும் பிழைக் கின்றனர். தொல்பழங்குடி மக்களான காடர், பளியர், இருளர் தோதவர், முதுவர், புலையர் முதலியோரும் இம் மலைத் தொடர்களில் வாழ்கின்றனர். கிழக்குத்தொடர்ச்சி மலைகள் தமிழ்நாட்டின் மேலைக்கரையிலுள்ள நீலமலையிலிருந்து திருப்பதி வரை தொடர்ந்து காணப்படும் மலைத்தொடரைக் கிழக்குத் தொடர்ச்சி மலை என்கிறோம். இக் கிழக்குத்தொடர்ச்சி மலைகளுக் கிடையே மேற்குத் தொடர்ச்சி மலைகளைவிட அதிக இடைவெளிகள் காணப்படுகின்றன. இவற்றின் உயரமும் மிகக்குறைவே. 300 முதல் 1000 மீட்டர் வரை உயரமுள்ள மலைகளே இத்தொடரில் காணப்படு கின்றன. இம் மலைத்தொடரில் சவ்வாதுமலை, சேர்வராயன்மலை, கல்லிராயன் மலை, கொல்லிமலை, பச்சைமலை, கஞ்சமலை முதலிய மலைகள் உள்ளன. சேர்வராயன்மலையின் உச்சியில்தான் 'ஏர்க்காடு' எனும் மலை வாழிடம் இருக்கிறது. மேற்குத்தொடர்ச்சி மலைகளைவிடக் கிழக்குத் தொடர்ச்சி மலைகளே பழமையானவை யென்று மண்ணியலார் (Geologist) ஆய்ந்து கூறுகின்றனர். ஆனால், கிழக்கிலுள்ள வங்கக்கடலைவிடமேற்கி லுள்ள அரபிக்கடலே பழமையானதென்று அறிவியலார் கூறுகின்றனர். இவ்விரு மலைத்தொடர்களும் நீலமலையில் ஒன்றுகூடித் தெற்கில் ஈழம் வரையில் தொடர்ந்து செல்கின்றன. அதற்கப்பால் இந்துமாக் கடலிலும் இம் மலைத்தொடர் தொடர்ந்திருந்தது என்பதைக் கட வாராய்ச்சியாளர் (ceanographers) கண்டுபிடித்துள்ளனர். இவ்வாறு கடலுள் மூழ்கிய மலையையே சிலப்பதிகாரம் குமரிக்கோடு' என்று குறிப்பிடுகின்றது போலும்! பனிஇமயமலை தோன்றுவதற்கு முன் இக் குமரிமலைதான் உலகிலுள்ள மலைகளுக்கெல்லாம் முசுடாக விளங்கிய தென்றும், அப்போது அதன் பக்கக் குன்றுகள் போல் மேற்கு, கிழக்கு மலைத்தொடர்ச்சிகள் விளங்கினவென்றும் கூறப்படுகிறது. 'ஆற்றுப் படுகைகளில்தான் நாகரிகங்கள் தோன்றின்' வென்ற கோட்பாட்டிற்கு மாறாக, மலைத்தொடர்களில் (குறிஞ்சி நிலத்தில் தமிழர் நாகரிகம் தோன்றி வளர்ந்தது எனும் கருத்து நிலவு கின்றமைக்கு மேற்கண்ட சான்றுகள் துணைபுரிகின்றன. ஆறுகள் தமிழ்நாட்டு நிலப்பரப்புப் பொதுவாகத் தென்கிழக்கு நோக்கிச் சற்றுச் சரிவாகவே உள்ளது. எனவேதான் பெரும்பாலான ஆறுகள் கீழ்த்திசையை நோக்கி ஓடுகின்றன. மாபெரும் ஆறுகள் மேற்குத் தொடர்ச்சி மலையில் தோன்றுகின்றன. கிழக்குத் தொடர்ச்சி மலை களிலும் ஆறுகள் தோன்றுகின்றன. அவற்றுள் பல மேற்குத்தொடர்ச்சி மலையில் தோன்றும் ஆறுகளுடனும் கலக்கின்றன. தமிழ்நாட்டில் பாயும் ஆறுகளைப் பொதுவாகக் 'காட்டாறுகள்' என்றே அழைப்பர். அவை சிந்து, கங்கையாறுசுளைப்போல் வற்றாத பேராறுகள் அல்ல, மழைக் காலங்களில் மட்டும் வெள்ளம் கரை புரண்டோடும் ஆறு களும், கோடைக் காலங்களில் வறண்டு கிடக்கும் ஆறுகளும் தமிழகத்தில் ஏராளமாயுள்ளன. ஆனால், இலக்கியச் சான்றுகளின் படியும், அறிவியல் ஆய்வுகளின்படியும் நோக்கும்போது தமிழகத்தி லிருந்த பல ஆறுகளில் எப்போதும் தண்ணீர் ஓடிக்கொண்டேயிருந்தது என்பதை அறிகிறோம். பாலாறு, தென்பெண்ணை, காவிரி, வெள்ளாறு, தென்வெள்ளாறு. வையை, குண்டாறு, வைப்பாறு, பொருதை தாம்பரபரணி, பழையாறு முதலியவை தமிழ்நாட்டில் பாய்ந்து வங்கக் கடலில் கலக்கும் ஆறுகளாகும். சந்திரகிரியாறு, நேத்திரகிரியாறு, சொர்ண கிரியாறு, சீதையாறு, பொன்னானியாறு, பேய்ப் பூராறு, வாவாளர்ப்பட்டினத்தாறு, பெரியாறு, பம்பையாறு முதலிய ஆறுகள் மேற்குத்தொடர்ச்சி மலையில் தோன்றி, அரபிக்கடலில் கலக்கின்றன. இந்த ஆறுகளின் கரைகளில்தாம் பண்டைக் காலத்தில் பெரிய நகரங்கள் தோன்றின. அந் நகரங்கள் நாகரிகத்தொட்டில் களாகவும் விளங்கின. கழகக் காலத்து இலக்கியங்களிலிருந்து அறியப்படும் பஃறுளியாறு, குமரியாறு முதலியவை தமிழகத்தின் தென்பாகத்தைக் கடல் கொண்டபோது அழிந்து போயின, பாலாறு இந்த ஆறு கருநாடக மாநிலத்திலுள்ள நந்திதுர்க்கம் எனும் மலையின் அருகில் தோன்றி, சுருநாடக மாநிலத்தைக் கடந்து, ஆந்திர மாநிலத்திலுள்ள சித்தூர் மாவட்டத்தின் வழியாகத் தமிழ்நாட்டை அடைகிறது. தமிழ்நாட்டில் வேலூர், திருவள்ளூர், மாவட்டங்களில் பாய்ந்து சதுரங்கப்பட்டினத்துக்கு அருகில் வங்கக்கடலில் கலக்கிறது. இதன் நீளம் தோராயமாக 890 கிலோ மீட்டர் ஆகும். செய்யாறு, வேகவதி யாறு ஆகியவை காஞ்சிபுரத்துக்கு அருகிலுள்ள திருமுக் கூடல் எனுமிடத் தில் பாலாற்றுடன் கலக்கின்றன. ஒரு காலத்தில் வற்றாத நீரோட்டத்தைப் பெற்றிருந்த பாலாறு இன்று காட்டாற்றைப் போல் மழைக்காலங்களில் மட்டும் நீரைப்பெறும் ஆறாகவுள்ளது. தென்பெண்ணையாறு இது கருநாடக மாநிலத்திலுள்ள சென்னகேசவ மலையில் தோன்றிக் கருநாடக மாநிலத்தின் வழியாகப் பாய்ந்து, சேலம் மாவட் டத்தைத் தாண்டி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பாய்ந்து, கடலூருக்கு அருகில் வங்கக்கடலில் கலக்கிறது. திருவண்ணாமலைக்கு அருகிலுள்ள சாத்தனூர் என்னு மிடத்தில் தென் பெண்ணையாற்றின் குறுக்கே சாத்தனார் அணை கட்டப்பெற்றுள்ளது. இந்த ஆற்றின் நீளம் தோராயமாக 420 கிலோ மீட்டர் ஆகும். காவிரியாறு வரலாற்றுச் சிறப்புமிக்க இக் காவிரியாறு தென்னாட்டுக் கங்கை" எனப் போற்றப்படுவதாகும். இது கருநாடக மாநிலத்தில் குடகு நாட்டில் சைய மலையில் தோன்றுகிறது. இந்த மலை மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாகும். கருநாடக மாநிலத்தின் தென்பகுதியில் பாய்ந்து அதனை வளமாக்கும் காவிரி அங்குக் கட்டப்பட்டுள்ள கண்ணம்பாடி எனும் அணையைத் தாண்டி சிவ சமுத்திரம் அருவி யாகக் காட்சியளித்துப் பின்னர், தமிழ்நாட்டைத் தொடுகிறது. கோவை, சேலம் ஆகிய மாவட் டங்களுக்கு எல்லையாக ஓடித் தகடூர் (தருமபுரி மாவட்டத்தையடைந்து, தகடூருக்கு 48 கிமீ தொலைவில் தோரா.! மாக 22 மீட்டர் உயரத்திலிருந்து ஓர் அருவியாக விழுகிறது. இந்த அருவிக்கு 'ஓகேனக்கல் நீர்வீழ்ச்சி" என்பது பெயர். பின்னர், காவிரியாறு சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூரையடையும்போது அதன் குறுக்கே மேட்டூர் அணை கட்டப்பட் டுள்ளது. இவ்வணைக் கட்டிலிருந்துதான் தமிழ்நாட்டிற்கு வேண்டிய மின்விசை உருவாக்கப் படுகிறது. சேலம் மாவட்டத்திலிருந்து காவிரி திருச்சி மாவட்டத்தை யடையுமுன் இதனுடன் பவானி, நொய்யல், திருமணிமுத்தாறு ஆகிய துணையாறுகள் கலக்கின்றன. திருச்சி மாவட் டத்தில் புகுந்தவுடன் ஆன்பொருநை (அமராவதி) எனும் துணையாறு கலக்கிறது. திருச்சிக்கு மேற்கே ஒன்பதாவது கல்லில் காவிரியாறு இரு கிளைகளாகக் பிரிகிறது. தென் கிழக்கில் காவிரி என்றும், வடகிழக்கில் கொள்ளிடம் என்றும் இஃது அறியப்படுகிறது. இவ்விரு கிளைகளும் சிறிது தொலைவு ஓடி மீண்டும் ஒன்று சேருகின்றன. இவற்றின் இடையிட்ட தீவில்தான் "திருவரங்கம் (ஸ்ரீரங்கம் எனும் பெயர்பெற்ற மாவியத் வைணவ தலம் உள்ளது. இதனையடுத்துத் திருவானைக்கா' எனும் சிவத் தலமும் உள்ளது. திருவரங்கத்தைப்போலவே கருநாடக மாநிலத்தில் சிவ சமுத்திரம் அருவிக்கு அருகில் அமைந்துள்ள தலையரங்கமும், மைசூர் நகரத்திற்கு 16 கல் தொலைவிலுள்ள திருவரங்கமும் (ஸ்ரீரங்கம்) மாலியத் தலங்கள் ஆகும். இம் மூன்றையும் மூவரங்கம் என அழைப்பர். கொள்ளிடத்தின் குறுக்கே கட்டப்பட்ட அணைக்கு மேலணை என்று பெயர். காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைக்குக் கல்லணை என்று பெயர். இதனைக் கரிகாற்சோழன் கட்டினான் என்பது வரலாறு. இக் கல்லணையைத் தாண்டியதும் காவிரி பல சிற்றாறு களாய்ப் பிரிகிறது. அவற்றுள் முகாமையானவை வெண்ணாறும், அதிலிருந்து பிரியும் குடமுருட்டியாறு, வெட்டாறு, அரிசிலாறு, வீரசோழன் ஆறு, திருமலைராசன் ஆறு ஆகியவையும் ஆகும், இவை யாவும் தஞ்சை மாவட்டத்தில் பாய்கின்றன. தரங்கம்பாடி எனும் ஊருக்கருகில் காவிரி கடலுடன் கலக்கிறது. தமிழ்நாட்டில் ஓடும் ஆறுகளில் காவிரியாது மிகவும் நீளமானது. இதன் நீளம் தோராயமாக 720 கி.மீ. ஆகும். இது கடலுடன் கலக்குமிடத்தில் சோழர்களின் பண்டைய கோநகரான பூம்புகார் அமைந்திருந்தது. இன்று அகழ்வாய்வின் பயனாக இப்பட்டினத் தின் அமைப்பும், அது கடல் வழியாக உரோமாபுரி முதலிய மேலை நாடுகளுடன் கொண்டிருந்த தொடர்பும் விளக்கப்பட்டுள்ளன. பூம்புகாரே யன்றி வளமிக்க நகரங்கள் பலவும் இவ்வாற்றின் கரையில் இருந்தன என்பதை அறிகிறோம். இந்த ஆறு மேற்குமலைத்தொடரின் பகுதியாகிய ஏலக்காய் மலையின் கிழக்குப் பகுதியில் தோன்றி மதுரை, தேனி, சிவகங்கை, இராமனாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பாய்ந்து மன்னார் வளைகுடா வில் கலக்கிறது. ஏலமலையின் மேற்கில்தடுகின்ற பேரியாற்றின் குறுக்காகப் பெரியாறு அணை எனும் அணையைக் கட்டி நீரைத் திருப்பிச் சுருளி யாற்றில் கலப்பதால் வைகையாறு நீரை மிகுதியாகப் பெற்று ஓடுகிறது. வைகையாற்றின் குறுக்கே வைகையணை எனும் அணை கட்டப்பட் டுள்ளது. பொருநையாறு (தாம்பரபரணி) இது பொருநையாறு என்றும் தாம்பரபரணியாறு என்றும் அழைக்கப்படுகிறது. இது மேற்கு மலைத்தொடர்ச்சியிலுள்ள அகத்திய மலையில் தோன்றித் திருநெல்வேலி மாவட்டத்தில் பாய்ந்து வங்கக் கடலிலுள்ள மன்னார் வளைகுடாவில் கலக்கிறது. வடமேற்குப் பருவக் காற்றினால் மேற்கு மலைத்தொடரின் தென்கோடியில் பெய்யும் மழைநீர் வெள்ளம் புரண்டோடித் தாம்பரபரணியாற்றை வற்றாத ஆறாகச் செழிக்கச் செய்கிறது. இதனைத் தென்பாண்டி நாட்டின் 'நீலாறு' (NilE River) என்பர். இதன் நீளம் தோராயமாக 120கி.மீ. ஆகும். இதில் பாபநாசம் அருவியும் உள்ளது. மணிமுத்தாறு, சித்ரா ஆறு என்பன இதன் முதன்மை யான துணையாறுகளாகும். சித்ரா வாற்றால்தான் குற்றாலம் அருவி ஏற்படுகிறது. தாம்பரபரணியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பல அணைக்கட்டுகளால் திருநெல்வேலி மாவட்டத்தின் பெரும்பகுதி நீர்வளம்பெற்றுள்ளது. கோதையாறு, பழையாறு குமரி மாவட்டத்தில் பாய்கின்ற முகாமையான ஆறுகள் கோதையாறு, பழையாறு என்பனவாகும், கோதையாறு, மகேந்திரகிரி மலையில் தோன்றி, விளவங்கோடு, கல்குளம் ஆகிய வட்டங்களில் பாய்ந்து அரபிக் கடலில் கலக்கிறது. பழையாறு இரண்டாவரி மலையில் தோன்றித் தோவாளை, அகத்தீசுவரம் வட்டங்களில் பாய்ந்து மணக்குடிக்காமல் எனுமிடத்தில் கடலில் கலக்கிறது. பழை யாற்றால் நாகர்கோவில், சுசீந்திரம், பூதப்பாண்டி முதலிய இடங்கள் பயன்பெறுகின்றன. பழையாற்றைப் 'பறளியாறு' என்றும் அழைப்பர். பழம் பஃறுளியாறே பறளியாறாகி இன்று பழையாறு என்று ஆயிற்றென்பர் சிலர். சமவெளிகள் தமிழகத்தின் நிலப்பரப்பு, கிழக்கு நோக்கிச் சற்றுத் தாழ்ந்திருப்ப தால் அதன் கிழக்குப் பக்கத்தில் பரந்த சமவெளி ஏற்பட்டுள்ளது. இதனைக் 'கருநாடகச் சமவெளி' என்பர். இதன் கடற்கரைப் பகுதியைச் சோழ மண்டிலக்கரை' எனவழைப்பர். இப் பெரிய கருநாடகச் சமவெளியை மூன்று பிரிவுகளாகப் பிரித்து, காவிரி பாயும் சமவெளி: வைகையும், தாம்பரபரணியும் பாயும் சமவெளி: வடக்கேயுள்ள தாழ் நிலங்கள் எனவும் அறியலாம். பொதுவாகக் கருநாடகச் சமவெளியில் ஆங்காங்கே கிழக்கு மலைத் தொடரைச் சேர்ந்த சிறுமலைகளும், குன்றுகளும் உள்ளன, கோவை மாவட்டம், தகடூர்(தருமபுரி மாவட்டம், சேலம் மாவட்டம், திருச்சி மாவட்டம், தஞ்சை மாவட்டம் ஆகிய ஐந்து மாவட்ட நிலப் பரப்பைக் காவிரி பாயும் சமவெளி என்கிறோம். காவிரியும், அதன் துணையாறுகளான பவானி, நொய்யல், ஆன் பொருனை அமராவதி) ஆகிய ஆறுகளும் இச் சமவெளியைச் செழிக்கச் செய்கின்றன. நெல், சோளம், கம்பு, கேழ்வரகு, பருத்தி, நிலக்கடலை, புகையிலை முதலியவை இச் சமவெளியின் விளை பொருள்களாகும், மதுரை, முகவை, நெல்லை ஆகிய மாவட்டங்கள் வைகையும், தாம்பரபரணியயும் பாயும் சமவெளிப் பகுதிகளாகும். இயற்கையாகவே இவை குறைவான மழையைப் பெறுகின்றன. இந்த ஆறுகளால்தாம் இச் சமவெளி ஓரளவு செழிப்புற்றுக் காணப்படுகிறது. நெல், கேழ்வரகு, பருத்தி முதலியவை இச் சமவெளியில் பயிராகின்றன. காவிரி பாயும் சமவெளிக்கும், கடற்கரைக்குமிடையேயுள்ள பகுதியையே வடக்கிலுள்ள தாழ்நிலங்கள்' என்கிறோம். இப் பகுதியில் சென்னை, செங்கழுநீர்ப்பட்டு, தென்னார்க்காடு, வடார்க்காடு ஆகிய நான்கு மாவட்டங்கள் உள்ளன. இப் பகுதியில் ஆண்டொன்றுக்குச் சராசரிசெமீ. மழை பெய்கிறது. பாலாறு, தென்பெண்ணை , செய்யாறு, ஆரணியாறு முதலிய ஆறுகள் இத் தாழ்நிலப் பகுதியைச் செழிக்கச் செய்கின்றன. நெல், கேழ்வரகு, கம்பு, நிலக்கடலை, கரும்பு முதலியவை இப் பகுதியில் பயிராகின்றன. தட்பவெப்ப நிலை தமிழ்நாடு 8.5 வடநெடுங்கோட்டிலிருந்து 13.3 வடநெடுங்கோடு வரை பரவியுள்ளதையறிவோம். நில நடுக்கோடு தமிழகத்தின் தெற்கே செல்கிறது. நில நடுக்கோட்டிலிருந்து வடக்கே 23.5 பாகையில் சுடசுவாரி (கடகரேகை செல்கிறது. அதாவது வட இந்தியாவிற்கும், தென்னிந்தியா விற்கும் சற்றேறக்குறைய நடுவில் கடகவரி செல்கிறது. நிலநடுக்கோட்டி விருந்து கட கவரி வரை வெப்ப மண்டலமாக இருக்கும் என்பதை அறிவோம். எனவே, தமிழகம் வடவெப்ப மண்டலத்தில் உள்ளது. மார்ச் 7 ஆம் நாள் முதல், செப்டெம்பர் 2 ஆம் நாள் வரையில் கதிரவன் நிலநடுக்கோட்டிற்கு வடக்கே இயங்குவதால் தமிழ்நாட்டின் மீது கதிரவனுடைய கதிர்கள் செங்குத்தாக விழுகின்றன. குறிப்பாக மே, சூன், சூலை, ஆகச்டு மாதங்களில் கதிரவனுடைய கதிர்கள் தமிழ்நாட்டின் மீது செங்குத்தாக விழுவதால் வெப்பம் அதிக மாக இருக்கிறது. கடல்கள் வெகு அருகில் சூழ்ந்திருப்பதால் கடற் கரைப் பகுதிக்கும் உள்நாட்டுப் பகுதிக்கும் வெப்ப அளவில் வேறுபாடு காணப்படுகிறது. ஆகவேதான் சூன், சூலை, ஆகச்டு ஆகிய கோடை மாதங்களில் உள்நாட்டுப் பகுதிக்கும், கடற்கரைப் பகுதிக்குமுள்ள வெப்பத்தாக்கம் வெகுவாக வேறுபட்டுக் காணப்படுகிறது. செப்டெம்பர் 2 முதல், மார்ச் 21 வரை கதிரவன் நில நடுக்கோட் டிற்குத் தெற்கே இயங்குவதால் நவம்பர் முதல் பிப்பிரவரி வரை தமிழ்நாட் டில் குளிர் அதிகமாக இருக்கிறது. அக்டோபர், நவம்பர், திசம்பர் மாதங்கள் தமிழ்நாட்டில் மழை பெய்யும் காலமாகக் கொள்ளப்படுகிறது. இக் காலத்தில் கடற்கரைப் பகுதிகளைவிட உள்நாட்டில் குளிர் அதிகமாக இருக்கும். தமிழ்நாடு தென்மேற்குப் பருவக்காற்று, வடகிழக்குப் பருவக் காற்றுகளால் மழைபெறுகிறது. மண் வகைகள் தமிழ்நாட்டில் பல ஆறுகள் ஓடுவதால் வண்டல் மண் படிந்த நிலப்பரப்புகள் பலவும் ஏற்பட்டுள்ளன. இத்தகைய வண்டல்மண் படிந்த நிலப்பரப்பில்தான் நெல், வாழை, கரும்பு, வெற்றிலை முதலிய பயிர்கள் செழித்து வளரும். இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் எனப் புகழப்படும் தஞ்சை மாவட்டம் ஆகும். இது காவிரியின் கழிமுகத்தில் அமைந்துள்ளது. நெருப்புப் பாறைகளால் உண்டாகும் கருநிறமுள்ள மண்ணுக்குக் கரிசல் மண் என்று பெயர். இத்தகைய கரிசல்மண் தமிழ்நாட்டில் கோவை, மதுரை, முகவைஇராம் நாதபுரம் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் அதிகமாகக் காணப்படு கின்றது. இம் மண் பருத்தி விளைவதற்கு ஏற்றதாகும். படிவுப் பாறைகள் நொறுங்குவதால் உண்டாகும் மண்ணுக்குச் சரளைமண் என்று பெயர். இதில் நீர்ம அமிலச் சத்து அதிகம் இருக்கும். மலைச்சரிவுகளில் இத்தகைய மண் அதிகமாகக் காணப்படுகிறது. சரளை மண்ணுடன் தாழ்நிலப் பகுதிகளில் குறுமண்ணும், களிமண்ணும் கலந்த புன்செய்த் தவசங்கள் பயிரிடப் படுகின்றன. இத்தகைய கலப்புமண் தமிழ்நாட்டில் வேலுார், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் திருச்சி, பெரம்பலூர், இராமநாதபுரம், விருதுநகர், சுன்னியாகுமரி, சென்னையின் வடக்கு, வடமேற்கு ஆசிய பகுதிகளில் காணப்படுகிறது. தனிச் சரளைமண் உதகை போன்ற மலைச்சரிவுகளில் தேயிலை பயிரிடுவதற்கு ஏற்றதாயுள்ளது. கனிப்பொருள்கள் (Minerals) தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் கஞ்சமலை, கோதுமலை, தீர்த்தமலை, கொல்லிமலை, பச்சைமலை, சுண்ணாம்புக்கரடு, சீராப் பள்ளி, சுஞ்சலூர், பெருமாள்மலை, சித்தேரிமலை, இராசிப்பூர், ஆற்றூர் (ஆத்தூர்) முதலிய இடங்களில் இரும்புக்கனி(தாது) கிடைக்கிறது, வேலூர் மாவட்டத்திலும் இரும்புத்தாதுவை அகழ்ந்தெடுப்பதற்கான ஆராய்ச்சி நடைபெறுகிறது. இரும்புக்கு அடுத்தபடியாக அலுமினியம் செய்யப் பயன்படும் "பாக்சைட்டு' என்னும் தாதுப்பொருளும் சேலம் மாவட்டத்தில் சேர்வராயன் மலைப்பகுதியில் கிடைக்கிறது. களி மண்ணுடன் கலந்து பைஞ்சுதை சிமெண்டு செய்ய உதவும் சுண்ணாம் புக்கல் சேலம் மாவட்டத்திலுள்ள சங்ககிரி துருக்கம், திருச்செங்கோடு முதலிய இடங்களிலும், மதுக்கரையிலும், திருச்சி மாவட்டத்திலுள்ள கல்லக்குடி யிலும், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தாழையூற்று. களக்காடு, வள்ளியூர், இராதாபுரம், சாத்தான்குளம் ஆகிய இடங்களிலும் சுண்ணாம் புக்கல் கிடைக்கிறது. உயிர் வாழ இன்றியமையாத பொருள் களுள் ஒன்றாகக் காணப்படும் கடல் உப்பு தமிழகத்தில் ஏராளமாகக் கிடைக்சிறது. தமிழகக் கடலோரப் பகுதிகளிலுள்ள னர்களில்உப்பை உருவாக்கும் பெரிய உப்பளங்கள் காணப்படுகின்றன. நிலைத் திணைகள் (தாவரங்கள்) மாந்தனுடைய முயற்சி இல்லாமல் தாமாகவே வளரும் மரம், செடி, கொடி, புல், பூண்டு ஆகியவற்றை நிலைத்திணைகள் (தாவரங்கள்) என்கிறோம். பொதுவாக, அதிகமாக மழை பெய்யுமிடங் களில் காடுகளும், அளவாக மழை பெய்யுமிடங்களில் புல்வெளிகளும், மழை குறைவான இடங்களில் வறண்ட பகுதிகளில் முட்புதர்களும் காணப்படும். இத்தகைய மூவகையான பகுதிகளும் தமிழ் நாட்டிலுள்ளன. தமிழ்நாட்டின் தென் மேற்குப் பகுதியில் 10 செ.மீ.க்கு மேல் மழை பெய்கிறது, அதனோடு அப் பகுதியில் வெப்பமும் அதிகமாகவுள்ளது. குறிப்பாகத் தமிழ்நாட்டில் தென்மேற்குப் பகுதியிலுள்ள ஏலக்காய் மலைச் சரிவுகளில் பெருமழை யும், அதிக வெப்பமும் உள்ளதால் தொய்வம்(rubber), கருங்காலி, கொங்கு முதலிய மரங்கள் வளர்கின்றன. இவை எப்பொழுதும் பசுமையாகவே காணப்படு வதால் இக் காடுகளைப் 'பசுமைமாறாக் காடுகள்' என அழைப்பர். அடுத்துத் தேக்கு, நாக்கு, சந்தனம் பூதலிய அகன்ற இலைகளை யுடைய மரங்கள் வளரும் காடுகளுக்கு 'அகலிலைக் காடுகள்' என்று பெயர். இத்தகைய காடுகள் நீலமலை, பழநிமலை, ஆனைமலை, சேர்வராயன் மலை ஆகிய மலைப்பகுதிகளில் அதிகம் காணப்படு கின்றன. நீலமலை களில் உயரமான பகுதிகளில் 'யூக்காளிப்டக', 'சின்கோனா' ஆகிய மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இவற்றின் இலைகளை நோக்கி, இவை வளரும் நாடுகளை 'பசியிலைக் காடுகள்' என்பர். இவற்றைத் தவிர தமிழ்நாடு முழுவதும் மழை குறைவான இடங்களில் குட்டையான மரங்களும், முட்புதர்களும் காணப்படு கின்றன. இக் காடுகளுக்குக் 'குறுங்காடுகள்' என்று பெயர். பொதுவாக நிலைத்திணைகளேயன்றி அவற்றில் வாழ்ந்து வரும் விலங்கினங் களும், பறவைகளும்கூடத் தமிழ் நாட்டின் செல்வங்களாகக் கொள்ளப்படுகின்றன. உணவுப் பொருட்கள் தமிழ்நாட்டிலுள்ள மக்கள் யாவரும் பெருவாரியாக அரிசி யுணவையே அதிகமாக உட்கொள்கின்றனர். நெல், தமிழ்நாட்டிலுள்ள ஆற்றுப்படுகைகளிலும், சமவெளிப் பகுதிகளிலும் பயிரிடப்படுகிறது: நீர்ப்பாசன ஏந்து இல்லாத விடங்களிலும் கிணற்றுப்பாசனம் வழியாகப் பயிரிடப்படுகிறது. பொதுவாகத் தமிழ்நாடு முழுவதிலும் நெல் பயிரிடப் படுகிறது. அரிசியுணவிற்கு அடுத்தபடியாகத் தமிழக மக்கள் உட் கொள்வது கேழ்வரகு, கம்பு, சோளம், வரகு, தினை, சாமை முதலிய தவச (தானிய வகைகளாகும். இவற்றுள்ளும் கேழ்வரகு, கம்பு, சோளம் ஆகியவையே அதிகமாக உட்கொள்ளப் பெறும் தவசங்களாகும். இவை திருநெல்வேலி, முகவை, கோவை ஆகிய மாவட்டங்களில் அதிகமாகப் பயிரிடப்பெறுகின்றன. கோதுமை இறக்குமதி செய்யப்படுகிறது. நீலமலை மாவட்டத்தில் மிகச்சிறிய அளவில் இது பயிரிடப்பெறுகிறது. இவற்றைத் தவிர தமிழக மக்கள் பயறு வகைகளையும், மீன், இறைச்சி ஆகியவற்றையும் உண்பர். கரும்பு, பருத்தி, புகையிலை, எண்ணெய் வித்துகள் முதலியனவும் தமிழகத்தில் பயிராகின்றன. மலைச் சரிவுகளில் பயிராகும் குளம்பி (Coffee), தேயிலை (Tea), நறுமணப்பொருள்கள் ஆகியவையும் மேற்கூறிய சுரும்பு, பருத்தி, புகையிலை, எண்ணெய் வித்துகள் ஆகியவையும் பாக்க (வணிகப் பயிர்களாகக் கொள்ளப்படுகின்றன. தமிழ்நாட்டிற்கு வேண்டிய பருத்தி தமிழகத்திலேயே விளைவதோடு பிறவிடங்களுக்கும் ஏற்றுமதி செய்யும் அளவிற்குப் பருத்தி ஆடைகளின் உருவாக்கம் (உற்பத்தி காணப் படுகிறது. பாசன ஏந்துகள் தமிழ்நாடு, பயிர்த்தொழிலை உயிர்நாடியாகப் பெற்றுள்ள நாடாகும். ஆனால், வற்றாதோடும் ஆறுகள் தமிழ்நாட்டில் அதிகம் இல்லை. எனவே, அவ்வப்போது பெய்யும் மழையால் வெள்ளப்பெருக் கெடுத்து ஓடிவரும் ஆறுகளுக்குக் குறுக்கே அணைகளைக் கட்டியும், இயற்கையாக ஏரி, குளங்களில் நீரைத் தேக்கியும் பாசன ஏந்துகளைச் சமன் செய்து பயிர்த்தொழில் செய்கின்றனர். இத்தகைய ஏந்துகளும் இல்லாதவிடங்களில் கிணறுகளை வெட்டிப் பாசன ஏந்துகளைப் பெருக்கியுள்ளனர். ஆகவே தமிழகத்தில் ஆற்றுப்பாசனம். ஏரிப்பாசனம், கிணற்றுப்பாசனம் என மூவகைப் பாசனங்கள் நடைமுறையில் உள்ளன. ஆற்று நீரைக் கால்வாய்களின் மூலம் வயல்களுக்குப் பாய்ச்சுவதுண்டு. பொதுவாகத் தமிழ்நாட்டிலுள்ள கால்வாய்களில் வெள்ளக் காலத்தில் மட்டும் நீரைப் பெறும் கால்வாய்களும், ஆறு களின் மூலம் நீரைப் பெற்று, வற்றாதோடும் கால்வாய்களும், நீர்த் தேக்கங்களிலிருந்து நீர்பெற்று ஓடும் நீர்த்தேக்கக் கால்வாய்களுமாகிய மூவகைக் கால்வாய்கள் உள்ளன. தமிழகத்தில் மேட்டூர்க் கால்வாய்த் திட்டம், மணிமுத்தாற்றுத் திட்டம், ஆரணியாற்றுத் திட்டம், ஆன்பொருநை அமராவதி அணைத் திட்டம், வைகை அணைத்திட்டம், சாத்தனூர் அணைத்திட்டம், கிருட்டிணகிரி அணைத்திட்டம், புதிய கட்டளைக் கால்வாய் அணைத் திட்டம், புதிய புள்ளம்பாடிக்கால்வாய் அணைத்திட்டம், வீடூர் அணைத் திட்டம், பரம்பிக்குளத் திட்டம் முதலிய ஆற்றுப் பாசன நீர்த்தேக்கத் திட்டங்கள் உள்ளன, தமிழகத்தில் சிறியவைப்பும், பிடாரியவைப்புமாகச் சுமார் ஏறத்தாழ 300 ஏரிகளும் குளங்களும் உள்ளன. காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஏரிகள் அதிகம் உள்ளன. இவற்றுள்ளும் காஞ்சிபுரம் மாவட்டத்தில்தான் மிக அதிகமான ஏரிகள் உள்ளன. செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரி, மதுராந்தகம் ஏரி, செங்கற்பட்டு ஏரி ஆகியவை இம் மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க மிகப்பெரிய ஏரிகளாகும். வேலூர் மாவட்டத்திலுள்ள காவேரிப்பாக்கம் ஏரியும், விழுப்புரம் மாவட்டத்தி லுள்ள வீராணம் ஏரியும் மிகப்பெரிய ஏரிகளாகும், பல்லவர்களும், சோழர்களும் பெயர்பெற்ற பல தடாகங் சளை (ஏரிகள் வெட்டி மக்களின் நல்வாழ்விற்குப் பாடுபட்டனர் என்பதை வரலாற்றுச் சான்றுகள் புலப்படுத்துகின்றன. ஆற்றுப் பாசனமும்ஏரிப்பாசனமும் இல்லாதவிடங்களில் கிணறு களை வெட்டிப் பாசன ஏந்துகளைச் செய்துள்ளனர். இன்று குழாய்க் கிணறுகளை அமைக்கும் புதிய முயற்சி ஆங்காங்கே மேற்கொள்ளப்பட் டுள்ளது. பிற தொழில்கள் வேளாண்மையோடு தொடர்புடைய தொழில்களைத் தவிர்த்த மற்ற வற்றைப் பிற தொழில்கள்' எனக் குறிப்பிடுகிறோம். அவற்றைக் குறிப்பாக ஆலைத் தொழில்கள், குடிசைத் தொழில்கள் என இருவகைகளாகப் பிரித்துக் கூறலாம். தமிழகத்தில் கோவை மாட்டத்தில் பெயர்பெற்ற பருத்தியாலைகள் உள்ளன. எனவேதான் இம் மாவட்டத்தைத் தென்னிந்தியாவின் மான்செசுடர்' (MoncEster) என்று அழைக்கின்றனர். கோயம்புத்தூர் மாவட்டம், பருத்தியாலைகளில் மெல்லிய நூலை நூற்பதற்கு ஏற்றவாறு ஈரப்பதமுள்ள காற்றைப் பெறுகிறது. பருத்தி அதிகமாக விளைகிறது. மின்னாற்றல் கிடைக்கிறது. பெரிய தொழிற் சாலைகளை அமைக்கச் செல்வர்கள் உள்ளனர். கோவை மாவட்டம் தவிர மதுரை தரத்துக்குடி, பாபநாசம், கோவில்பட்டி, நாசரேத்து, நாங்குநேரி, ஆரல்வாய் மொழி, நாகர் கோயில், சென்னை , சேலம் முதலியவிடங் களிலும் பருத்தி யாலைகள் உள்ளன. தமிழகத்தில் பருத்தியாலைத்தொழிலுக்கு அடுத்தபடியாக இரும்பு எஃகு ஆலைத்தொழில் சிறப்பாக நடைபெறுகிறது. இரும்பு மூலக்கனி, நிலக்கரி, மாங்கனீசு, சுண்ணாம்புக்கல் ஆகிய மூலப்பொருள்கள் இரும்பு எஃகு தொழிலுக்குத் தேவைப்படுகின்றன. சேலம் மாவட்டத்தில் இரும்பு மூலக்கனியும், சுண்ணாம்புக்கல்லும் கிடைக் கின்றன. நெய்வேலியில் நிலக்கரி கிடைக்கிறது. இதனால் சேலம் மாவட்டத்தில் இரும்பு எஃகு ஆலைகளை ஏற்படுத்தியுள்ளனர், தமிழ் நாட்டில் கரும்பு அதிகமாக விளைவதால் விழுப்புரம் மாவட்டத்தி லுள்ள நெல்லிக்குப்பம், மதுரை மாவட்டத்திலுள்ள பாண்டியராசபுரம், தஞ்சை மாவட்டத்திலுள்ள திருமண்டல்குடி, குருங்குளம், துகிலி, கரூர் மாவட்டத்திலுள்ள புகழுர், திருச்சி, காட்டூர், பேட்டைவாய்த்தலை, கோவை மாவட்டத்திலுள்ள ஆப்பக்கூடல், சேலம் மாவட்டத்திலுள்ள மோகனூர், தகடூர் மாவட்டத்தி லுள்ள பாலக்கோடு, வேலூர் மாவட்டத்திலுள்ள ஆம்பூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஆகியவிடங்களில் சர்க்கரையாலைகள் கள்ளன. தமிழகத்தில் சுண்ணாம்புக்கல், களிமண், 'ஜிப்சம்' ஆகிய மூலப் பொருள்களைக் கொண்டு மதுக்கரை, கல்லக்குடி, ஆலங்குளம், துலுக்கப் பட்டி, சங்ககிரிதுருக்கம், தாழையூற்று, கருவூர், அரியலுார் ஆகியவிடங் களில் பைஞ்சுதை சிமெண்டு உருவாக்கம் செய்யும் ஆலைகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. வேளாண்மைத் தொழிலுக்கு உறுதுணையானது உரத்தொழில் ஆகும், வேதியியல் இரசாயன உரத் தொழிற்சாலைகள் தமிழகத்தில் நெய்வேலி, கடலூர், அற்றூர். தூத்துக்குடி இராணிப்பேட்டைஎண்ணூர் ஆகியவிடங்களில் உள்ளன. மேற்கண்ட ஆலைத் தொழில்களைத் தவிர தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்களுக்கு ஊன்றுகோலாயிருப்பது சைத்தறி நெசவுத் தொழிலும், பிற பொருள்கள் செய்யும் குடிசைத் தொழில்களும் ஆகும். பருத்தி, பட்டு, தாவரி(கம்பளி நெசவுத் தொழில்களை இன்றும் தமிழகத் தில் குடிசைத் தொழில்களாக மேற்கொண்டுள்ள நகரங்களும் ஊர்களும் அதிகமாக உள்ளன. இவற்றைத் தவிர மரப் பொருள்கள், பிரம்புப் பொருள்கள், ஞெகிழிப்(Plastic) பொருள்கள், தோல் பதனிடுதல், தோற் பொருள் செய்தல், இலைச்சுருட்டுத்(Berdi) தொழில், செங்கல், ஓடு செய்தல், கோரைப்பாய் பின்னுதல், மண்மாழை ஏனங்கள் (பாத்திரங்கள்! செய்தல், பொம்மைகள் செய்தல் முதலிய குடிசைத் தொழில்கள் பெருவாரி யாக நடைபெறுகின்றன. கைநூற் கதர்) கைத் தொழில் நிலையங்களும், தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனங்களும் இத்தகைய குடிசைத்தொழில் களுக்கு உயிரூட்டிப் பேணி வளர்க் கின்றன. வாணிக வளர்ச்சி பண்டைய தமிழகத்தின் வாணிக வளர்ச்சியை ஆராய்ந்துள்ள அறிஞர்கள் தமிழகம் நண்ணிலக் கடல்(MediterEnean Sea) வழியாக மேலை நாடுகளுடனும், இந்துமாவாரி(Indian GCEMan)யின் வழியாகத் தொலைக் கிழக்கு நாடுகளுடனும் வாணிகத்தொடர்பு கொண்டிருந்தது என்கின்றனர். இன்று நமது அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ள பொருள்களும், இலக்கிய, வரலாற்றுச் சான்றுகளும் இக் கூற்றை மெய்ப்பிக்கின்றன. இன்றைய தமிழகமும் இத்தகையக் கடல் வாணிகத்திலும், நில வாணிகத்தி லும் சிறந்து விளங்குகின்றது. தமிழக அரசு வாங்கியுள்ள பெரியார்', 'அண்ணா ' என்னும் பெயர் பூண்ட இரண்டு நாவாய்கள் பூம்புகார் நாவாய் வாரியம்' என்னும் பேரமைப்பின் கீழ் வெள்ளோட்டம் சென்று பழந் தமிழர் புகழை மீண்டும் உலகெங்கும் பரப்புகின்றன. தமிழகத்திலிருந்து தோல், வெங்காயம், பருத்தித் துணிவகைகள் முதலியவை பெருவாரியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படு கின்றன. இயந்திரங்கள், மருந்துவகைகள், சில மூலப்பொருள்கள், இயங்கிகள் மோட்டர்கள், தாள்(paper) முதலான பொருள்களைத் தமிழகம் அயல் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது. உள்நாட்டு வாணிகத்திலும் தமிழகம் சிறந்த இடத்தைப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டி லிருந்து அரிசி, நிலக்கடலை, பருத்தி, தீப்பெட்டி, மத்தாப்பு,ஏலம் முதலிய பொருள்கள் இந்தியாவிலுள்ள பிற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப் படுகின்றன. சர்க்கரை, கோதுமை, பயறு வகைகள், மரம், சணல், கம்பளி, தாள் முதலிய பொருள்கள் பிற மாநிலங்களிலிருந்து தமிழ் நாட்டிற்குத் தருவிக்கப்பெறுகின்றன. வாணிக வளர்ச்சிக்கு உயிர்நாடியாகவிருப்பது சாலைப் போக்கு வரத்து ஆகும். தேசியச் சாலைகள், மாநிலச் சாலைகள், மாவட்டச் சாலைகள், ஊர்ச் சாலைகள் ஆகிய நால்வகைச் சாலைகள் தமிழ் நாட்டில் உள்நாட்டுப் போக்குவரத்துக்கு உதவியாக வாணிக வளர்ச்சிக்குப் பயன்பாடு ! கின்றன, தேசியச் சாலைகள் பெரும்பாலும் தலைநகரங்களையும், துறைமுகங்களையும், மாநிலச் சாலைகளையும் இணைக்கின்றன. இத் தேசியச் சாலைகளை இந்திய அரசும், பிற சாலைகளைத் தமிழக அரசும் கண்காணிக்கின்றன. சென்னையி லிருந்து கொல்கத்தாவுக்குச் செல்லும் நெடுஞ்சாலையும், சென்னையி லிருந்து மும்பைக்குச் செல்லும் நெடுஞ் சாலையும் தமிழகத்திலிருந்து செல்லும் முகாமையான நெடுஞ்சாலைக் ளாகும். இவற்றைத் தவிர தமிழகம் முழுவதிலுமுள்ள சிற்றுரர்களையும் பேரூர்களையும் இணைக்கும் சாலைப் போக்குவரத்துகளையும், மின் இணைப்பு ஏந்துகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இப்பாதை களைத் தவிர தமிழகத்திலுள்ள முகாமை நகரங்களையும், துறை முகங்களையும் இணைக்கும் இருப்புப்பாதைகளும் உள்ளன. திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் ஆகியவிடங்களிலுள்ள சிறியவானூரர்தி நிலையங் களும், சென்னையிலுள்ள பெரிய வானூர்தி நிலையமும், வான்வழிப் போக்குவரத்துக்குப் பெரிதும் பயன்படுகின்றன. இதைப் போலவே தமிழ்நாட்டில் நீர்வழி, உள்நாட்டு, அயல்நாட்டுப் போக்கு வரத்துக்குப் பயன்படுகின்றது. தமிழ்நாட்டிலுள்ள ஆறுகள் எதுவும் உள்நாட்டு நீர்வழியாகப் பயன்படவில்லை. ஆனால், நாகப்பட்டினம், மறைக்காடு வேதாரண்யம் கால்வாயும், ஆந்திர நாட்டில் கிருட்டிணை மாவட்டத் திலுள்ள பெத்தகாஞ்சம் என்னுமிடத்திலிருந்து, தமிழ் நாட்டில் கடலூர் மாவட்டத்தில் மரக்காணம் வரையில் செல்லும் பக்கிங்காம் கால்வாயும் ஒருகாலத்தில் உள்நாட்டு நீர்வழிகளாய்ப் பயன்பட்டன. தமிழ்நாட்டி லுள்ள துறைமுகங்களில் மிகவும் பெரியதும், முகாமையானதும் சென்னைத் துறைமுகம் ஆகும். தமிழ் நாட்டுக் கடற்கரைகள் இயற்கைத் துறைமுகங்கள் ஏற்படுவதற்கு ஏற்றவையாயில்லை. எனவேதான் அதிகமான துறைமுகங்கள் அமையவில்லை. ஆயினும் தூத்துக்குடித் துறைமுகம் செயற்கைத் துறைமுகமான சென்னைத் துறைமுகத்தை யடுத்துப் பெரிதும் பயன்படும் வகையில் திருத்தியமைக்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது. மக்கள் தொகை 2001 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கின்படி தமிழ்நாட்டில் 8,31I3839 பேர் வாழ்வதாக அறிகிறோம். இவர்களில் பெரும்பான்மை யோர் தமிழர். சிறுபான்மையினரான தெலுங்கர், சுன்னடர், மலை யாளியர் ஆகியோரும், உருது, ஆங்கிலம் ஆகிய மொழிகள் பேசுவோரும் உள்ளனர். இந்துக்கள் ஏறத்தாழ 80 விழுக்காடு உள்ளனர். கிறித்தவர் ஏறத்தாழ 5 விழுக்காடும், இசுலாமியர் ஏறத்தாழ 5 விழுக்காடும் உள்ளனர். இவர் களைத் தவிரச் சமணரும், சீக்கியரும், பிறரும் உள்ளனர். சுருங்கக் கூறின் மொழிவழியாகப் பார்க்கும்போது தமிழர்கள்ஏறத்தாழ 84.5 விழுக்காடும், தெலுங்கர்கள் 8.75 விழுக்காடும், கன்னடர் 25 விழுக்காடும், உருது பேசுவோர் 2 விழுக்காடும், மலையாளியர் 1, 4 விழுக்காடும் உள்ளனர். தமிழகத்திலுள்ள மாநிலத் தலைநகரத்திலும், மாவட்டத் தலைநகரங்களி லும், புனிதத் தலங்களுள்ள இடங்களிலும், தொடர்வழிச் சந்திப்புகளிலும் மக்கள் நெருக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. சராசரியாக ஒரு சதுரக் கிலோமீட்டருக்கு 317 பேர் வாழ்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மொத்தப் பரப்பு 1971 ஆம் ஆண்டின் கணக்குப்படி 13089 சதுரக் கிலோமீட்டராகும். தமிழக நிலப்பரப்பின் தொன்மை * பொய்யகவ நாளும் புகழ்விளைத்தல் என்வியயப்பாம் வையகம் போர்த்த வயங்கொளிநீர் - சேய்கலக் கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தே வாளொடு முற்றோன்றி மூத்த குடி " புறப்பொருள் வெண்பாமாலை உலகத்தில் கல்லும் மண்ணும் தோன்றுவதற்கு முன்பாகவே தமிழக நிலப்பரப்புத் தோன்றியது என்றும், அவ்வாறு தோன்றிய திருந்தும் இன்று வரை அந்நிலப்பரப்பு தனது கன்னித்தன்மையோடு விளங்குகிறது என்றும் கூறும் மொழி புகழ் மொழியன்று என்பதை இன்றைய ஆராய்ச்சியாளர்கள் மெய்ப்பித்துள்ளனர். அஃதாவது, உலகம் தோன்றியபோது உலகில் இன்று நாம் காணும்படியுள்ள நிலப்பிரிவு களும் நாடுகளும் இல்லை. பல தாழிகளின் மாற்றங்களால் அவ்வப் போது நிலப்பரப்புகள் மாறியும், மறைந்தும், எழுந்தும், குறைந்தும், கூடியும் வந்தன. அத்தகைய வழிகளி : லும் தமிழகம் தன் நிலப் பரப்பின் தெற்குப் பகுதியைக் கடலுள் இழந்து, தான்மட்டும் எத்தகைய மாறுதலுக்கும் ஆட்படாமல் தனித்து நின்றது! எடுத்துக்காட்டாக இங்கிலாந்து, அயர்லாந்து, ஃபிரான்சு ஆகிய நாடுகள் ஒரு காலத்தில் ஒருங்கிணைந்திருந்தன என்றும், இதைப் போலவே அலாஸ்கா, சைபீரியா, சப்பான் ஆகியவையும், மலைநாடு மலேசியா), சுமதுரை சுமத்ரா), சாலித்தீவு(Java), பொருநையோபோர்னியோ) ஆகியவையும் ஆசுத்திரேலியா, நியூகினி, தாசு மேனியா ஆகியவையும், இந்தியா, இலங்கை ஆகியவையும் ஒன்றிணைந்திருந்தன என்றும் ஆராய்ச்சி யாளர்கள் கூறுகின்றனர், இவ்வமைப்பில்தான் தெற்கே குமரிக் கண்டம் என்ற நிலப்பரப்பு ஒன்று இருந்ததென்றும், அதுவே பிறகு கடலுள் மூழ்கிவிட்டது என்றும் கூறுகின்றனர். இவ்வாறு உலக மேற்பரப்பில் ஏற்பட்ட பல்வேறு மாறுதல் களுக்குப் பின்னும் தமிழகத்தின் நிலப்பரப்பு மட்டும் எத்தகைய மாறுதல் களுக்கும் ஆட்படாமலிருப்பதை அதனுடைய மண், பாறை, உயிரினங்கள் முதலியவற்றை ஆராய்ந்து அதன் தொன்மையை அறிஞர்கள் மெய்ப்பித் திருப்பதைக் கண்டு வியப்படைகிறோம். அஃதாவது நாம் வாழும் இந்த உலகம் இன்றைக்கு 500 கோடியாண்டு களுக்குமுன் ஞாயிற்றினிடமிருந்து பிரிந்து வந்ததென்றும், முதலில் தணற் பிழம்பாக இருந்த இவ்வுலகத்தின் மேற்பரப்பில் தணற் பாறை களே தோன்றின வென்றும், பின்னர் அடியில் லிருந்து தணற்குழம்பு மேற்பரப்புக்குக் கொண்டு வரப்பட்டு ஆறியபின் படிவுப்பாறைகளாக மாறினவென்றும் கூறுவர். இவையே பின்னர் இயைபியல் மாற்றத்தின்போது தோன்றிய இடைவிடாத மழையால் ஊறிய நீர்ப்பகுதிகடல்கள் ஆனபோது மலைகளாகவும், குன்றுகளாகவும் மாறின. இம் மலைகளும், கடல்களும் ஏறத்தாழ 450 கோடியாண்டு களுக்கு முன் தோன்றின. பின்னர் கடல் நீர் பொங்கி மேட்டுப் பகுதியைக் கொள்வதும் வற்றுவதுமாக இருந்தது. இத்தகைய கடல் கோளை உணழிக்காலம்' என்பர். இக் கடல்கோள்கள், பேரளவில் தாக்கிய காலத்தைப் பேரூழி" என்பர். இத்தகைய ஊழி", பேரூழி மாற்றங்கள் காலந்தோறும் நிகழ்ந்து கொண் டேயிருந்தன. வாய்ப்பான சூழ்நிலைகள் ஏற்பட்டபோது இன்றைக்கு ஏறத்தாழ 8 கோடியாண்டு களுக்கு முன் உலகில் உயிரினங்கள் தோன்றின. ஏறத்தாழ4 கோடி யாண்டுகளுக்கு முன்தான் மாந்தன், குரங்கு ஆகியவற்றின் மூதாதை களான 'கிப்பன்' என்னும் தலைமைகள் தோன்றின. இத்தகைய ஒழி களும், பேரூழிகளும் நிகழ்ந்த காலங்களிலும் தமிழகம் முழுவது மாசுக் கடல்கோள்களால் அழியாமல் தனித்து நின்றது. இதனால் ஏறத்தாழ 300 கோடி முதல் 450 கோடி வரையிலான ஆண்டுகட்கு முன்னிருந்த உயிரினமற்ற பேரூழிக் காலத்தில் ஆர்க்கேயன் தோன்றிய தமிழகப் பாறைகள் இன்றும் அழிந்துவிடாமல் இருக் கின்றன. இன்று சேலம் மாவட்டத்திலுள்ள கஞ்சமலைப் பாறை இப் பேரூழிக் காலத்தில் தோன்றியதாகும். சென்னைக்கருகிலுள்ள பல்லாவரம் பகுதியில் கிடைத் துள்ள பாறைப் பகுதியொன்றினை ஆய்ந்த திரு, ஆவண்டு(Holland) என்பார் உலகில் வேறு எங்கும் கிடைக்காத மிகத் தொன்மைவாய்ந்த பாறையென்று இதனைக் குறிப்பிட்டுள்ளார். இரும்பும், மசனீசியக் சனிப்பொருள்களும் கலந்த இப்பாறை வகையை சார்னனகட்டுப் பாறை (Charmickitc) என்பர். மாமல்லபுரத்துக் குடைவரைக் கோயில்களும் இத் தொன்மை வாய்ந்த 'சார்னனகட்டுப்பாறையில் குடைந்தவையே ஆகும். தமிழகத்தில் நீலமலை, ஆனைமலை, பழநிமலை முதலியனவும் இத்தகைய பாறைகளால் ஆனவையே. இதனால்தான் உயிரினங்கள் தோன்று வதற்கு முன்னைய காலந்தொட்டே தமிழகம் பாறையாகவிருந்து பின் நிலப்பகுதி யாகி முதல் உயிரினம் தன்னகத்தே தோன்றுவதற்குத் தகுதியுடையதா யிருந்தது என்று அறிஞர்கள் கூறுகின்றனர். மேற்கூறிய உண்மைக்குச் சான்றாக வேறு பல எடுத்துக் காட்டுகளையும் கூறலாம். தமிழ்நால்களிலும், வடமொழி இலக்கியங் களிலும் கடல் கோள்கள் நிகழ்ந்தது பற்றிய சான்றுகள் காணப்படு கின்றன. இதனால் தமிழகத்தோடு நிலத்தால் தொடர்பு கொண்டிருந்த அதன் நீண்டதென்பகுதி கடலுள் மூழ்கியதை அறிகிறோம், மொழி நாலாரின் முடிவுப்படியும் தென்னகத்திலிருந்து இங்கிலாந்து நாடு வரை ஒருவகை மொழிக் கோர்வையிருந்தது என்றும், தென்னகத்தில் தோன்றிய முதல் மாந்தன் தென்னகம் கடல் கொண்டதால் ஆசியா, ஐரோப்பா முதலிய நாடுகளுக்குச் சென்று பின்னர் கைபர், போலன் கணவாய்கள் வழியாகத். தென்னகம் போந்தான் என்றும் நம்பப் படுகிறது. இதனால் இங்கிருந்த தொல்பழந்தமிழரேதிரவிடரே! பிற நாட்டு நாகரிகத்திற்கு மூலக்கூறாய் விளங்கினர் என்பதும், அவர்கள் தோன்றிய காலம் முதல் இன்றுவரை அவர்களின் பழந்தென்னாடு அழிந்துபடினும் அழியாமல் எஞ்சி நிற்கும் தமிழகத்தில் அவர்களின் நாகரிகம் நிலைத்திருக்கிறது என்றும் ஆராய்ச்சி யாளர் கூறுவர். இவர்களின் கூற்றை வலுப்படுத்துவதைப்போல் வானநூல், நிலநூரல், மண்ணியல் நூல், ஆவிமண்டல நூல் ஆகிய அறிவியல் நூல்களின் முடிவுகளும் தெரிவிக்கின்றன. இவை அனைத்துமே உலகில் மிகப் பழைய பகுதியும், நாகரிகத் தொடக்கம் ஏற்பட்ட இடமும், தென்னகம் அல்லது அதற்கும் தெற்கிலிருந்த ஒரு நிலப்பகுதியே என்கின்றன. அப் பகுதியைத் தான் 'இலெமூரியாக் கண்டம்' என்பர். இதுவே, 'குமரிக்கண்டம்" என்றப் பழந்தமிழ் நாடாக, பழம்பாண்டி நாடாக இருந்தது என்றும், கடல் கோளால் இஃது அழிந்து பட்டபின் எஞ்சி நிற்பதே இன்றையத் தமிழ்நாடு என்றும் கூறுவர். மாந்தவினம் இற்றைக்கு ஏறத்தாழ 4 கோடியாண்டுகளுக்கு முன் தோன்றியது என்றோம். அப்பொழுது வடஇந்தியப் பகுதி கடலாக இருந்தது என்றும், பின்னர்தான் பனிஇமயமலை தோன்றியதென்றும், அதற்குப் பின்னரே கங்கை, யமுனை முதலிய ஆறுகள் தோன்றின வென்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால், தமிழகத்தி லுள்ள மலைகளும், ஆறுகளும், உலகிலுள்ள பிற ஆறுகளும், மலைகளும் தோன்றுவதற்கு முன்பாகவே தோன்றியவையாகும். ஆகவே கங்கைக்குப் பின் காவிரிஉண்டானது என்று கூறுவது அறிவியல் முறைப்படி பொருத்த மற்றதாகும். இமயமலையில் பனிப்படலங்களில் கடலில் வாழ்ந்த உயிரினங் களின் எச்சங்களும், பிறவும் காணப்படுவதிலிருந்து இது முன்பு கடலாக இருந்தது என்பதனைத் தெளிவாக அறிகிறோம். வட இந்தியாவிலும், இமய மலைப் பகுதியிலுமுள்ள பாறை, மண் ஆகியவை தமிழகத்திலுள்ள பாறை, மண் ஆகியவற்றைக் காட்டிலும் அகவையில் வயதில்) மிகக் குறைந்தவையாய்க் காணப்படுகின்றன. இமயமலைப் பகுதிகளில் வளரும் செடி கொடிகளும், தமிழகத்திலுள்ள செடி கொடி வகைகளும் முறையே அண்மைக்கும் தொன்மைக்கும் எடுத்துக்காட்டுகளாய் உள்ளன. - மாந்தவியல் ஆராய்ச்சி முடிவின்படி தமிழகத்தில் நெல்லை மாவட்டம் ஆதிச்சநல்லூர் முதலிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட பழம்பொருள்கள் உலகின் மற்ற பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்ட பழம் பொருள்களைவிடப் பழமை வாய்ந்தவையெனக் கருதப்படுகின்றன. ஆகவேதான் தமிழகமே பெரும்பாலும் மாந்தவினம் தோன்றிய முதலிட மாக இருக்கலாமென நம்பப்படுகிறது. இதற்கு நாம் மேலே கூறிய சான்றுகளேயன்றி இதன் இயற்கைச் சூழலைத்தக்க களமாகக் கொண்டு அறியலாம். தமிழகம் நில நடுக்கோட்டிற்கு வெகு அருகில் இருப்பதாலும், உலகம் தோன்றிய காலம் முதல் இன்று வரை (தன் நிலப்பரப்பில் குறைந்தும் நிலப் பெயர்ச்சியடையாமல் நிலைத்து நிற்பதாலும், பனிப் படலங்கள் சூழ்ந்த வட, தென் முனைகளிலும், சுடல்கோள்களால் அடிக்கடி மூழ்கி எழுந்து இடமாற்றம் பெற்ற பிற இடங்களிலும் இல்லாத உயிரினம் தோன்றுவதற்கான சூழல்கள் இங்கே அதிகம் இருந்திருப்ப தாலும் முதன் முதலில் இங்குதான் மாந்தன் தோன்றினான் என்றும், அவன் படைத்த நாகரிகமே உலகில் பழமையானது என்றும் கூறுவர். ஆகவேதான் தமிழ்நாட்டின் தொன்மை அதன் நிலவியலாலும் பண்பாட்டாலும் முத்தது என்று யாவரும் கூறுவர்.படிமுறை வளர்ச்சியின்படி [evolutionary gOwth) நோக்கும்போதும், உலகம் தோன்றிய காலம் முதல் நிலப்பொதி யியல், மண்ணியல், உயிரியல், குமுகவியல்(சமுகவியல் போன்றவற்றின் எல்லாப் படிமுறை வளர்ச்சிக் கூறுபாடுகளையும் தமிழ்நாட்டில் காண்கிறோம், ஏறத்தாழ பதினோரு கோடியாண்டுகளுக்கு முன் தமிழகம் 'கோண்டுவானா" என்னும் பெருநில அமைப்புடன் இணைந்திருந்ததால் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா முதலியவற்றுடன் நிலத்தால் தொடர்பு கொண்டிருந்தது என்றும், ஆப்பிரிக்கா, ஆசுதிரேலியாக் கண்டங்களி லிருந்த உயிரினங்களும், நம் நாட்டிலிருந்த உயிரினங்களும் பரிமாற்றம் அடைந்தன வென்றும் அறிவியலார் கணித்துள்ளதோடு, அவற்றின் படிமுறை வளர்ச்சியினையும் விரித்துள்ளனர். இவ்வண்ணமே தமிழகம் கிழக்கிலும் மேற்கிலுமுள்ள தொலை நாடு களோடு கொண்டிருந்த உறவால்பண்பாட்டுப் பரிமாற்றங்கள் செய்து வந்தது என்பதனையும் அறிய முடிகிறது. இலெமூரியாக் கண்டம், அட்லாண்டிக் கண்டம், 'மூ' என்னும் பசிபிக் கண்டம் ஆகியவை இருந்தனவென்பதை அறிவியலார் இன்று முழுமையாக ஒப்புக்கொள்ளவில்லை. எனினும், இலங்கை, தென்னகத் துடன் இணைந்திருந்தது என்பதையும், குமரிமுனைக்குத் தெற்கேயும் நிலப்பரப்பு இருந்தது என்பதையும் ஏற்றுக்கொள்கின்றனர். இதைப் போலவே, தென்னகமும், ஆப்பிரிக்காவை யடுத்துள்ள மடகாசுகரும் ஒருங்கிணைந்திருந்தன என்பதையும் இன்றைய ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். தமிழ்நாட்டில் இன்றைக்கு மூன்றிலக்கம் ஆண்டு களுக்கு முன் எத்தகைய நிலவியக்க அசைவுகளோ நில நடுக்கங்களோ அல்லது எரிமலைக் குமுறல்களோ ஏற்படவில்லை யென்பதும் அதற்குப் பின்னரே ஐந்து பேருழிகள் ஏற்பட்டனவென்றும், அவ்வூழிகளால் கடலோரப் பகுதிகள் மட்டும் கடலுள் மூழ்கின வென்றும் அறிவியலார் கூறுகின்றனர். தமிழ்நாட்டிலுள்ள பாறைகளை ஆய்ந்த ஆராய்ச்சி யாளர்கள் தமிழ்நாட்டில் எக் காலத்திலும் பெரும் பனிGlacials) படர்ந்து மூடிக்கிடக்கவில்லை என்பதை உறுதிபடுத்து கின்றனர். இவ்வாறு பழிகளால் ஆட்கொள்ளப்படாமலும், பனிப்படலத் தால் மூடப்படாம லும், மாந்தவினம் வாழ்வதற்கேற்ற தோதுவான சூழ்நிலையையும், தட்பவெப்பத்தையும் தமிழகம் உலகம் தோன்றிய காலம் முதல் இன்றுவரை பெற்றிருக்கிறது. இதனால்தான் பனிபடர் வழிக் காலத்திலும் (glacial age) தமிழகம் உயிரினம் வாழ்வதற்கேற்ற தட்பவெப்ப நிலையைப் பெற்றிருந்தது என்பதால் இங்குதான் மாந்தவினமே முதன் முதலில் தோன்றியிருக்க வேண்டும் என் கின்றனர். இன்றைக்கு 15000 ஓரிலக்கத்தி யைம்பதி னாயிரம் ஆண்டு களுக்கு முற்பட்ட தமிழரின் மூதாதையர் இத்தகையப் பனிபடர் வழிகளையும் கண்கூடாகக் கண்டிருக்கலாம். இதனால்தான் நமது நாட்டினப்பாவலர் சுப்பிரமணிய பாரதியார் தமிழகத்தின் தொன்மை யைக் கூறும்போது, 'தொன்று நிகழ்ந்ததானத்தும் உணர்ந்திடும் சூழ்கயைாளர்களும் இவள் என்று பிறந்தவன் என்றுணராத இயல்பினளாமெங்கள் தாய்" என வியந்துரைக்கிறார். 2. தொல் பழங்காலம் வரலாற்றாசிரியர், வரலாற்றுக்கும் முற்பட்ட காலம் (Pre-Historic Period) என்றும், வரலாற்றுக் காலம் (Historic Period) என்றும் பகுத்துக் கொண்டு வரலாற்றை எழுதுதல் வழக்கமாக இருந்து வருகிறது. வரலாற் றுக்கு முற்பட்ட காலத்தைத் தொல் பழங்காலம் எனவும் அழைக்கலாம். இஃது எழுத்துச் சான்றுகள் தோன்றுவதற்கு முன்னுள்ள காலமாகும். எழுத்துச் சான்றுகள் தோன்றிய காலம் நாடுதோறும் வேறுபடு கிறது. எனவே தொல்பழங்காலம் என்பதன் காலவெல்லையும் நாடு தோறும் வேறுபடும். வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய இத் தொல் பழங்காலம் மிகுதியான காலக் கணக்கையுடையது. தொன்மாந்தன் வாழ்நிலையில் வளர்ச்சிப் பெற்ற நிலையே, வரலாற்றுக் காலத்தில் அவன் அடைந்த முன்னேற்றத்தின் படிநிலை. இதனால், வரலாற்றில் இக் காலத்திற்குரிய முகாமை விளங்கித் தோன்றும். தொல்பழங்காலத்தைக் கற்காலம்' என்றும், 'மாழைக் காலம்' (உலோகக் காலம் என்றும் இரண்டாகப் பகுத்து ஆராய்ந்து வந்தனர், மாழைக் காலத்தில் செம்புக் காலம் (Copper age), இரும்புக் காலம் (iron age) என்னும் பாகுபாடுகளும் இருந்தன இப் பாகுபாட்டில் வரலாற்றுக் காலத்தின் தொடக்கப் பகுதியும் அடங்குவது இயல்பே. பின்னர் அண்மைக்கால ஆய்வின் விளைவால் கற்காலமும் மேலும் பாகு படுத்தப் பெற்றது. பழைய கற்காலம் (Paleolithic period), புதிய கற்காலம் (neolithic period) என்றும், பழைய கற்காலத்தை முதற் கற்காலம் (lower paleolithic period), நடுக் கற்காலம் (middle paleolithic period), கடைக் கற்காலம் (upper paleolithic period) என்றும் பாகுபடுத்திக் காண் கின்றனர்.பழைய கற்காலத்திற் கும் புதிய கற்காலத்திற்கும் இடைப் பட்ட காலத்தை இடைக் கற்காலம் [mesolithic period) என்று அழைப்பர். மாழைக்காலம் என்று பாகுபாடு செய்வதற்குச் சான்றாகக் கிடைத்த பொருள்கள் பெரும்பாலும் புதைகுழி களிலிருந்தே (burials) கிடைத் துள்ளன. இப் புதைகுழிகளைப் பெருங்கற் படை' என்பது தமிழ் வழக்கு. எனவே, இக்காலத்தைப் பெருங்கற்படைக் காலம் எனப் பொருள்படும் வகையில் பெருங்கற்காலம்(mEgalithic period) என்றே குறிப்பிடுகின்றனர். இக் காலப்பாகுபாடு எல்லா நாட்டிற்கும் பொருந்தியவாறு இன்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வகையில் தமிழகத்தின் தொல் பழங்கால வரலாறு பழைய கற்காலம், இடைக் கற்காலம், புதிய கற்காலம், பெருங்கற்காலம் என்னும் பாகுபாட்டின் அடிப்படையில் இங்குக் கூறப்பெறுகின்றது. தொல்பழங்கால வரலாற்றையறிந்துகொள்வதற்கு நமக்குக் கிடைக்கும் மூலச் சான்றுகள் அக்கால மக்கள் பயன்படுத்திய கருவிகளே. அக் கருவிகளுடன் எலும்பு, மான்கொம்பு, மரம், சங்குப் பொருள்கள் முதலானவும் குறைந்த அளவில் ஆய்வின்போது கிடைத்துள்ளன. இப் பொருள்களைக்கொண்டு அக் கால மக்களின் வாழ்க்கை முறையினை உய்த்துணர வேண்டியுள்ளது. இவ்வுய்த் துணர்வுச் செய்திகளே தொல் பழங்கால வரலாற்றை நிரப்புகின்றன, காலக் கணிப்பு தொல்பழங்காலப் பொருள்களின் காலத்தைக் கணிப்பதில் மூன்று வகையான முறைகள் பின்பற்றப்பட்டுள்ளன. 1. பொருள் கிடைக்கப்பெற்றவிடத்தின் காலத்தைக் கணித்து, அதைப் பொருளின் காலமாகக் கொள்ளுதல். 2. எலும்பு முதலான பொருள்களைச் சாம்பரமடியவணுத்திறன் காலக் கணிப்பு (Potassium argonisotobic dating method) முறையில் காலத்தைக் கண்டறிதல். 3. செய்கருவிகளின் தன்மையை ஒப்பிட்டுக் காலம் காணல். நிலத்தின் மேற்பரப்பில் கிடைக்கும் பொருள்களின் காலத்தைக் கணிக்க மேற்கூறிய முதன்முறை பயன்படாது. அகழ்வாய்வின்போது ஆற்றுப்படுகை நிலத்தின் அடிப்பகுதியில் கிடைக்கும் பொருள்களுக்கே இம் முதன்முறையால் காலத்தைக் கணித்தறிய முடியும். ஆற்றுப் பள்ளத் தாக்கில் படியடுக்கு படிவடுக்கு என்னும் இரண்டு அமைதிகள் உண்டு, 'படியடுக்கு" என்பது ஆற்றின் அரிப்பால் தோன்றுவது. இதில் மேற்படிவில் கிடைக்கும் பொருள்களைக் காட்டிலும் கீழ்ப்படிவில் கிடைப்பவை காபத்தால் பிந்தியவை. *படிவடுக்கு" என்பது மண் படிந்து ஆறு மேலிடுவ தால் அமைவது. இதில் மேற்படிகளில் கிடைக்கும் பொருள்களைக் காட்டிலும் கீழ்ப்படிவில் கிடைப்பவை காலத்தால் பிந்தியவை. ஆற்றுப் படிவுகள், படிவு நேர்ந்த காலத்தின் தட்பவெட்ப நிலையைக் கண்டறியவும் உதவுகின்றன. கூழாங்கற்கள் மிகுதியாகப் படிந்திருப்பதால் பெருமழை பெய்த காலமெனலாம். களிமண் படிந்திருந்தால் அக் காலத்தில் காற்று மிகுதியாக வீசி மண்படிவு நேர்ந்ததெனலாம். இவற்றால் எச்சூழலில், எவ்வாறு தொல் பழங்கால மக்கள் வாழ்ந்தனரென ஓரளவு எண்ணிப் பார்க்கமுடியும், இன்றைய நில அமைப்பில் கடைசி நிலை 'பிளை சுதன்' (Pleist Arie) தாழியில் நிகழ்ந்த து. இதற்கு முற்பட்ட 'பிளியோசின்' (Fleiscent) காழியில் மாந்தர் இருந்தனர் என்பதற்கான அறிகுறிகள் காணப்பட வில்லை. இதுவரை கிடைத்துள்ள தொல்பழங்காலச் சின்னங்களில் மிகப் பழைமை யானவைகிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள தாங்கெனியாகா நாட்டு ஓல்டுவாய் (Oldvai) என்னுமிடத்தில் கிடைத்தனவாகும். அவை சாம்பரமடிய அணுத் திறன் கணிப்பு முறையில் ஆய்வு செய்யப்பட்டு ஏறத்தாழ இன்றைக்கு இருபதிலக்கம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை யென்று கணிக்கப்பட் டுள்ளன, உலகின் வடகோணப் பகுதிகளில் பனிபடர்வுச் சிற்றூழிகள் (glaciation) நிகழ்ந்தன. ஐரோப்பாவிலும், இந்தியாவில் இமயமலைச் சாரலிலும் அத்தகைய காலவூழிகள் இருந்தமைக்கான தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. உலகின் நிலநடுக்கோட்டுப்(quator) பகுதிகளில் இவற்றுக்குச் சமமான காலத்தில் பெருமழைச் சிற்றூழிகள் (Pluvial AgES) இருந்தனவென்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். ஆப்பிரிக்காவில் இச் சிற்றூழிகள் இருந்தமைக்கான சான்றுகள் தெளிவாகக் கிடைத்துள்ளன. தமிழ்நாட்டிலுள்ள ஆற்றுப்படுகைகளை நோக்கும்போது இரண்டு பெருமழைச் சிற்றூழிகள் இருந்தமை தெளிவாகிறது. இப்பெரு மழைச் சிற்றுாழிகளை யடுத்து இடைவெளி யூழிகளும்(Inter plurals) இருந்தன, இவ் வகையான பாகுபாடுகளைக்கொண்டு தொல்பழங்காலச் சின்னங்களின் காலம் கணிக்கப்படுகிறது. கற்கால வரலாற்றில் நாகரிகம், பண்பாடு, தொழில்நுட்பம், தொழில் முறை ஆகிய பாகுபாடுகள் உள்ளன. ஓரிடத்தல்லாது ஒரு குறுகிய வட்டார மக்கள் கற்கருவிகளை உருவாக்குவதில் ஒரு முறையினைப் பின்பற்றி யிருப்பர். இது தொழில்முறை Hindustry) என்று வழங்கப்படும். இத் தொழில்முறை உலகின் பல்வேறிடங்களில் காணப்படும் நிலையில் தொழில் நுட்பம் (technique) என்று கூறப்படும். இத்தொழில்முறை பரந்த அளவில் காணப்படின் அது பண்பாடு[culture) எனப்படும். ஒரே வகையான வாழ்க்கை முறையில் பல்வேறு பண்பாடுகளைக் கொண்டு வாழும் மக்களின் வாழ்க்கை நெறி, நாகரிகம் (civilization) என்று பெயர் பெறும். சென்னைத் தொழில் முறை' (Madras Industry), 'அசூலியன் தொழில் நுட்பம் (Achulean Techniques). அபவிலியோ அசூலியன் பண்பாடு (Abbevillip-Ahulean Culture) பழங்கற்கால நாகரிகம் ஆகிய சொல் வழக்குகளை இவற்றிற்கு ஒவ்வோர் எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். கற்கருவிகள் இருவகையின. மூலக்கல் ஒன்றில் பெயர்த்தெடுத்த சில்லுகளிலிருந்து உருவாக்கப் பெற்றவை ஒருவகை, அளவானவொரு கல்லில் சிறுசிறு சில்லுகளைப் பெயர்த்தெறிந்துவிட்டு உருவாக்கப் பெற்றவை மற்றொரு வகை. எக்கல்லில் செய்யப்பெற்றாலும் அதனை உருவாக்குவதற்குத் தனித் தொழில் நுட்பம் வேண்டும். கற்கால வரலாற்றில் தொழில் நுட்பங்கள் பலவுண்டு. அவற்றுள் கிளத்தோனியன்' (Elactonian), * அசூலியன்" (Achalean), "இலெவலாய்சியன்' (LEvalleisian) முதலானவை குறிப்பிடத்தக்கவையாகும். இயற்கையாகக் கிடைக்கக்கூடிய கல் அல்லது கர்பானங்களில் (பிளந்த சுல்லில் சில பெரிய சில்லுகளைப் பெயர்த்தெறிந்துவிட்டுக் கருவிகளாகப் பயன்படுத்தப்பெற்றவை 'கிளத்தோணியன் தொழில் நுட்பம் உடையவையாகும். நீளுருளைச் சுத்தியலைப் பயன்படுத்திப் பட்டையான சில்லுகளைப் பெயர்த்தெடுத்துக் கரடுமுரடான தோற்ற மின்றி, நேர்த்தியாகச் செய்யப்பெற்றவை 'அசூலியன்' தொழில்நுட்ப வகையினவாகும். அளவான ஒரு கல்லில் வேண்டிய வடிவம் கிடைக்கும் வரை மிக நுட்பமாகச் சில்லுகளைப் பெயர்த்தெறிந்து விட்டுக் கருவியின் கைப்பிடிப்பக்கமும் வேண்டியவாறு சில சில்லு களைப் பெயர்த்து விட்டுச் செய்யப்பெற்றவை இலெவலாய்சியன்' தொழில்நுட்ப வகையின. கருவிகளின் வடிவங்களை வைத்து அவற்றின் பயன்பாட்டை உய்த்துணர்ந்து பல பெயர்களிட்டு வழங்குதலுண்டு வெட்டிகள் (Choppers), சுரண்டிகள், கிழிப்பான்கள்(Cleavers), கைக்கோடரிகள் (Hand Axes) முதலானவை குறிப்பிடத்தக்கவை, மற்றும் அமைப்புகளை வைத்து வட்டக்கருவி, கோடக் கருவியாபீசிய வடிவம், முக்கோணக் கருவி, நீள் வட்டக் கருவி, பிறைக் கருவி முனைகள் என்றும் அழைப்பர். மேற்கண்ட பாகுபாடுகளும் பெயர்களும் நம்மால் உருவாக்கப் பெற்றவை என்பதை மறத்தலிபாகாது. இந்தியாவில் தமிழகத்தில்தான் முதல் முதலாகப் பழைய கற்காலக் கருவிகள் (Palaeoliths) கண்டுபிடிக்கப்பட்டன. 1853 ஆம் ஆண்டு இராபர்ட் புருசு புட்(Robert Bruce Futc) என்பவர் சென்னையை யடுத்த பல்லவபுரப் (பல்லாவரம் பகுதியில் அவற்றைக் கண்டு பிடித்தார். பின் அவருடைய தனிப்பெரு முயற்சியால் இந்தியா முழுவதும் பலவிடங்களில் தற்காலத் கருவிகள் கண்டுபிடிக்கப் பெற்றன. இந்தியத் தொல்லியல் துறை 1930 ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம், அத்திரம்பாக்கம் என்னுமூரில் கொற்றலையாற்றுப் படுகையில் ஆய்வு நடத்தியது. 1963 ஆம் ஆண்டு இவ் வட்டத்தில் குடியம் என்னுமூரிலுள்ள கற்காலக் குகையொன்று கண்டு பிடிக்கப்பட்டு, தொல்லியல் துறையினரால் ஆய்வு செய்யப்பெற்றது. மற்றும், மயில்சு பர்கிட் (Miles Burkict), பாட்டர்சன்(T.T. Paterson) விடி. கிருட்டிணசாமி, சாய்னர்(F.E. Zeuner), ஆல்சின்(Bridget Allchin) முதலா னோரும் தமிழகப் பகுதிகளில் ஆய்வுகள் நடத்தித் தம் முடிவுகளை வெளி யிட்டுள்ளனர். தமிழ்நாட்டில் முதற் கற்காலக் கருவிகளும் கண்டுபிடிக்கப்பட் டுள்ளன. பொதுவாகப் பாவாற்றுக்கு வடக்கே முதற் கற்காலக் கருவிகள் மிகுதியாகக் கிடைத்துள்ளமை நோக்கத்தக்கது. தென் மாவட்டங்களில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த திருமங்கலம், தேனி மாவட்டம் பெரிய குளம் பகுதிகளில் இடைக்கற்காலக் கருவிகள் கிடைத்துள்ளன. கிழக்குக் கடற்கரையோரமாகத் தரத்துக்குடிக்கு அருகில் கிடைக்கற்காலத்கருவிகள் மிகுதியான அளவில் கிடைத்துள்ளன. கொற்றலையாறு. திருவள்ளூர், பொன்னேரி வட்டங்களின் வழியாக ஓடி, எண்ணூருக்கு அருகில் கடலில் கலக்கிறது. பாலாறு பண்டைக் காலத்தில் இந்த ஆற்றில் ஓடிக்கொண்டிருந்ததாக மண்ணிய வார் (Geologists) கருதுகின்றனர். இந்த ஆற்றுப் படுகையில் படியடுக்கு களும், படிவடுக்குகளும் அமைந்துள்ளன, இவ்வடுக்குகளிலிருந்து கற்கருவிகள் கிடைத்துள்ளன. அவை ஈரிலக்கம் ஆண்டுகளுக்கு முற்பட்டனவாசுவும், ஓரிலக்கம் ஆண்டுகளுக்கு முற்பட்டனவாகவும் ஐம்பதினாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டனவாகவும் மூவேறு கால நிலையில் உருவாக்கப்பட்டனவாக உள்ளன. இங்குக் கிடைத்த கைக் கோடரிகளின் முதற்கட்டமான 'அபவிலியன்' பண்பாட்டினதாகவும், அடுத்த கட்டம்' அசூலியன்' பண்பாட்டினதாகவும் உள்ளது. சருவிகளின் அமைப்பைக் கொண்டு அவற்றின் பயன்பாட்டை உய்த் துணரbாம் அவை மண்ணைத் தோண்டுவதற்கும், மரத்தைக் கடைதற்கும், சீவுதற்கும், மரக்கிளை, இறைச்சி முதலானவற்றை வெட்டுதற்கும், தோலைக் கீறுதற்கும், விலங்குகளை எறிந்து தாக்குதற்கும் பயன்படுத்தப் பெற்றிருக்க வேண்டும் என்பது புலனா கிறது. இக் கருவிகளைப் பயன் படுத்திய மக்கள் வேட்டையாடுதலை மேற்கொண்டிருந்தனர் எனலாம். இவர்கள் எலும்புகளையும் கருவிகளாகப் பயன்படுத்தியிருக்கவேண்டும், மலைக் குகைகளில் இக் கருவிகள் கிடைக்கப் பெற்றமையின் இவர்கள் குகைகளில் வாழ்ந்தார்கள் அல்லது தங்கினார்கள் என்னும் முடிவுக்கு வரவேண்டி யுள்ளது. ஆற்றுப்படுகைகளில் இவர்கள் வேட்டையாடித் திரிந்தனர். இவர்தம் வேட்டை விலங்குகள் எவையெவையெனத் தெரிய வில்லை, இதே காலத்தில் மகாராட்டிரத்தில் நீண்ட கொம்புள்ள யானைகள், முக்குளம்புக் குதிரைகள், காட்டு ஆவினங்கள் முதலியன வாழ்ந் தமைக்கான தடயங்கள் காணப்படுகின்றன. முதற்காலக் கருவிகள் கூழாங்கல் திரளைகளினூடே கிடைப்பதிலிருந்து இக்காலத்தில் பெரு மழைபெய்தவண்ணமிருந்தது என்பது தெளிவாகிறது. கடற்கரையோரங் களில் இவர்கள் வாழ்ந்ததாகத் தெரியவில்லை. வேட்டையாடிய விலங்கு களின் இறைச்சி, இயற்கையாகக் கிடைத்த காய்கனிகள், கிழங்குகள் ஆகியனவற்றை இவர்கள் உண்டு வாழ்ந்திருக்கவேண்டும். நெருப்பைப் பற்றி இவர்கள் அறிந்திருக்கலாம். இக் கால மாந்தவெலும்புகள் கிடைக்கப்பெறவில்லை. எனவே, மாந்தர் எவ்வாறு தோற்றமளித்தார் என உய்த்துணர முடியவில்லை. இம் மாதிரியான கற்கருவிகளைச் செய்த மக்கள் ஆப்பிரிக்காவில் 'நிமிர் மாந்தன்' 'ஓமோ எரெக்டசு' (Horo Erectus) இனத்தைச் சேர்ந்தவராவர். - தமிழகத்தில் இக் காலத்தில் வாழ்ந்த மக்களும் ஓமோ எரக்டசு' இனத்தவ' ராகவே இருக்கவேண்டும். இவ் வினத்தி லிருந்தே நாம் வளர்ச்சி பெற்றுள் ளோம். கருவிகளைப் பயன்படுத்திய இம் மக்கள் சிந்தனைத்திறன் வாய்ந்தவராகவே இருக்கவேண்டும். ஏனெனில், இவ்வறிவுத்திறன் ஒன்றே விலங்குகளிலிருந்து மாந்தனை வேறுபடுத்திக் காட்டுவது. இவர்கள் தம் கருத்தைப் பிறருக்கு வெளிப் படுத்தும் வகையில் வெவ்வேறொவிகளை எழுப்பிப் பேசியிருக்க வேண்டும். இவர் தம் மொழியைப் பற்றி வேறொன்றும் கூறுதற்கிய லாது. தமிழகத்தில் இம் முதற்கற்கால நாகரிகம் ஈரிலக்கம் ஆண்டுகளுக்கு முந்தியதென்பது தெளிவு. இந் நாகரிகத்தில் காணப்படும் கைக்கோடரிப் பண்பாடு (Hand AXE Culture) வடஇந்தியாவில் நாலிலக்கம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகவும், ஆப்பிரிக்காவில் ஏழரையிலக்சும் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகவும் கொள்ளத்தக்க வகையில் தடயங்கள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் போதிய அளவு அகழ்வாய்வுகள் செய்யப்பெறவில்லை. எதிர் காலத்தில் நிகழ்த்தப் பெறும் அகழ்வாய்வுகளால் காலத்தால் முந்திய தடயங்கள் கிடைக்கப்பெறலாம். ஆப்பிரிக்கக் கைக்கோடரிப் பண்பாட்டுக்கும், தென்னிந்தியக் கைக்கோடரிப் பண்பாட்டுக்குமிடையே குறிப்பிடத்தக்க அளவில் ஒற்றுமைகள் உள்ளன, மக்களின் இடப்பெயர்ச்சியாலோ, எண்ணப் பெயர்ச்சியாலோ இவ்வொற்றுமைகள் காணப்பெறலாம். இடைக் கற்காலம் இந்திய வரலாற்றில் பழைய கற்காலத்தில் முதல், கடைக்கற்காலங் . களுக்கிடையே ஒரு காலக்கட்டம் இருப்பதைச் சங்காலியா என்பார் கண்டறிந்தார், அக் காலத்தைச் சுப்பராவ் என்பார் 'இடைக் கற்காலம்' எனக் குறிப்பிடலாமென்று குறிப்பிட்டதனைத் தொடர்ந்து இக் காலம் தனித்து ஆராயப்படுகிறது. தமிழகத்தில் இக் காலக் கருவிகள் பெரும்பா லும் முதற் கற்கால்க்கருவிகள் கிடைத்தவிடங்களிலேயே கிடைத்துள்ளன. திருவள்ளூர் மாவட்டம் - அத்திரம்பாக்கம் குடியம் மதுரை மாவட்டம் - புதுப்பட்டி சீவரக்கோட்டை தூத்துக்குடி மாவட்டம் - மெய்ஞ்ஞானம் (திருச்செந்தூருக்கருகில்) முதற்கற்காலக் கருவிகளைப்போலவே இடைக் கற்காலக் கருவி களும் தொல்லுயிரித் தடங்களோடு (fossils) கிடைக்கவில்லை . எனவே, இவை கிடைத்த ஆற்றுப்படுகை மண்ணின் நிலையைக் கருதியே காலத்தைக் கணிக்க வேண்டியுள்ளது. இவ்வாறு கணித்ததில் இவை இற்றைக்கு ஏறத்தாழ நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை யெனத் தெரியவருகிறது. இக்காலத்திலும் பெரும் மழை பெய்0 தவண்ணமிருந்தது. இக் காலத்துக் கருவிகள் பெரும்பாலும் சில்லுக் கருவிகளாகவே யுள்ளன. "சாசுப்பர்' (Jasper), செர்ட்' (Cher) கல் வகையில் இவைசெய்யப் பெற்றவைகளாகவுள்ளன (முதற்கற்காலக்கருவிகள் குவார்ட்டர் சைட்' இற்ைைதக் கண ஆற்றுப்பு சுல்வகையால் ஆனவை. இடைக்கற்காலக் கருவிகள் சிறியன; நுட்பமான வேலைப்பாடு கொண்டவை. அழகைக் காட்டிலும் பயன்படுத்தமே இக் கருவிகள் உருவாக்கப்படும்போது முதலிடம் பெற்றது. முதற்கற்காலக் கருவிகள் கையில் பிடித்துப் பயன்படுத்தும் தன்மையன. இடைக்கற்காலக் கருவிகளோ மரக்கிளை முதலான கைப்பிடிகளில் பொருத்திப் பயன் படுத்தும் தன்மையுடையன. இவர்கள் இக் கருவிகளை மரக்கொம்பு நுனிகளில் கட்டி வேல்களாகப் பயன்படுத்தியிருக்கவேண்டும். இக் கருவிகள் சிறியனவா யிருந்தமையின் நெடுந் தொலைவு அவற்றைச் சுமந்து செல்ல எளிதா யிருந்திருக்கும். எனவே, இவர்கள் வேட்டையாடிய நிலப்பரப்பு, முதற் கற்கால மக்களின் வேட்டை நிலத்தைவிட விரிந்திருக்கவேண்டும். கத்தி போதும் கூர்மையான கருவிகளால் விலங்குகளின் தோலைக் கிழித்துச் சீவியிருக்க வேண்டும். எனவே, இக் கால மக்கள் விலங்குகளின் தோலை ஆடையாகப் பயன்படுத்தியிருக்க வேண்டும், இவர்கள் முதற் கற்கால மக்களைப் போலவே மலையடிவாரங்களிலும் ஆற்றுப் படுகைகளிலும் வாழ்ந்தனர். நெல்லைக் கடற்கரைப் பகுதிகளில் இக் காலக் கருவிகள் கிடைப்பதால் இவர்கள் கடற்கரை யோரங்களிலும் வாழ்ந்திருக்க வேண்டும், மீன்பிடிக்கும் தொழிலையும் மேற்கொண்டிருக்கலாம். இவர்கள் நிலையாகத் தங்கி வாழ்ந்தார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை ). நம் நாட்டில் கிடைக்கும் இக் கருவிகள் நாற்பதினாயிரம் ஆண்டு களுக்கு முற்பட்டவை, உலக அளவில் இந் நாகரிகம் நூறாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகவும் காணப்படுகிறது. இலெவலாய்சியன் தொழில் நுட்பத்தையுடைய இக் கருவிகள் ஆப்பிரிக்கா, ஐரோப்பியப் பகுதிகளில் கிடைக்கும் சுருளிகளோடு ஒப்புமையுடையனவாயுள்ள மையை ஆல்சின் என்பார் எடுத்துக்காட்டியுள்ளார். இதனால் அக் காலத்தில் இவ்விரு பகுதி மக்களுக்குமிடையே உறவிருந்திருக்க வேண்டு மென மனசிக்கலாம். கடைக் கற்காலம் கடைக் கற்காலக் கருவிகளில் பெரும்பாலானவை ஒரு விரல் ( அங்குலத்திற்கும் குறைவான நீளமுடையவை. இவற்றில் பல குயின்று செய்யப்பெற்றவையாக உள்ளன. இவற்றைப் பிடிகளில் பொருத்தித்தான் பயன்படுத்தி இருக்க வேண்டும். இவற்றில் பல் இரு பக்கங்களிலும் முனைகளுடன் காணப்படுகின்றன. சிறு கம்பின் நுனியில் பொருத்தினால் அவை அம்பாகப் பயன்படும். இதனால் இக் கருவிகளைப் பயன்படுத்திய மக்கள் வில்லம்புகளை அறிந்தவர் களெனக்கொள்ளலாம். பல கருவிகளை இணைக்கத்தக்க மரத்துண்டில் பூட்டினால் கறுக்குடைய அரிவாள் அழையும், இதனால் இவர்கள் வேளாண்மையில் ஈடுபட்டு அறுவடை செய்தனர் எனக் கொள்வது பொருந்தும், மற்றும் பிறை வடிவுள்ள கற்கருவிகளும் கிடைத்துள்ளன. இவைமிகவுயரத்திலுள்ள பழங்களையும் தேனடைகளையும் எடுக்கப் பயன்படும் தொரட்டுகளாக இருக்க வேண்டும். கடற்கரையோரங்களில் வாழ்ந்த இம் மக்கள் ஒருவகை மிதவையைப் பயன்படுத்திக் கடலில் சென்றிருக்க வேண்டுமென்பது ஆல்சின் போன்றோர் கருத்தாகும். இக் கருவிகள் கிடைக்கப் பெற்றவிடங் களில் இவற்றைச் செய்வதற்கான மூலக்கற்கள் இல்லை. அவை நெடுந் தொலைவிலிருந்து கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும். இவர்களின் கருவிகள் மிக நுட்பம் உடையனவாக உள்ளமையின் அக் கருவிகளைச் செய்வதில் தேர்ச்சிபெற்ற கலைஞர்கள் இருந்தார்கள் எனவும் கொள்ளலாம். பொருதை தாம்பரபரணி யாற்றின் இருமருங்கிலும், நெல்லைக் கடற்கரையோரங்களிலுமுள்ள 'தேரி' என்னும் மணல் திட்டுப் பகுதிகளில்லும் கடைக்கற்காலக் கருவிகள் மிகுதியாகக் கிடைத் துள்ளன. அக் காலத்தில் இப் பகுதியில் கடல்மட்டம் இப்பொழுதுள்ள நிலையைவிட இன்னும் இருபது அடி உயரத்தில் இருந்தது. கடல் வடிந்தபோது காற்றினால் மணல் மேடுகள் தோன்றின. அம் மணல்மேடுகளே உள்நாட் டில் 10, 12 கிலோ மீட்டர் தொலைவு வரை 5 முதல் 50 மீட்டர் உயர முள்ளனவாகக் காணப்படுகின்றன. இப் படிவுகளை ஆராய்ந்த சாய்னர் என்பார் அவை கிமு. 4000 ஆண்டுகளைச் சேர்ந்தவையென்று குறிப்பிட் டுள்ளார். எனவே, இக் கடைக் கற்காலம் இக்காலத்தைச் சேர்ந்த தெனலாம். மற்றும் திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இடைக் கற்காலக் கருவிகள் கிடைக்குமிடங்களிலும், மதுரை மாவட்டத்தில் திருமங்கலம், தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டங்களிலும் தடைக் கற்காலக் கருவிகள் கிடைத்துள்ளன. திருமங் கலம் வட்டத்தில் சிறப்பாகத் திடியன், தே.கல்லுப்பட்டி முதலிய உணர்களை யடுத்த மலையடிவாரங்களிலும், போடிநாயக்கனூருக்கு அருகில் கோடாங் கிப்பட்டி, தாதனோடை ஆகிய ஊர்களையடுத்த மலையடிவாரங்களிலும் அடைக்கற்காலக் கருவிகள் ஏராளமாகக் கிடைத்துள்ளன. நெல்லைத் தேரி'களில் கிடைக்கும் இருபக்க அம்புமுனை ஈழத்தி லும். இந்தோனேசியாவிலும் கிடைக்கும் அக்கா அம்புமுனைகளோடு ஒப்புமை யுடையனவாயுள்ளன. இவ்வொப்புமை அந்நாடுகளுக் கிடையே மக்களுக்கிருந்த தொடர்பை உறுதிப்படுத்தத் துணை செய்கின்றது. கடைக் கற்கால மக்கள் இன்று ஆந்திரப் பகுதியில் வாழும் செஞ்சுகள்Chenichu), ஈழத்தில் வாழும் வேட்டர்கள் (Validah) ஆகியோரைப் போலவே வாழ்க்கை நடத்தியிருக்கவேண்டும் என்று ஆல்சின் கருதுகிறார். இம் மக்கள் சென்ற நூற்றாண்டில் வெளியுலகத் தொடர்பில் வாதபோது வில், அம்பு, தோண்டுதடி முதலான கருவிகளைக் கொண்டு வாழ்ந்து வந்தனர். பிரம்புக் கூடைகள், பாய்கள் முதலானவற்றைப் பின்னிக் கொண்டனர். நீர் நிலைகளை நோக்கியே அவர்தம் வாழ்விடங்கள் அமைந்திருந்தன. வேட்டர்கள் இறந்தவரைப் புதைத்துச் சடங்குகள் செய்தனர். வேட்டைக்கு உதவும் சிறு தெய்வங்களை வழிபட்டனர். அத் தெய்வங்களுக்குத் தம் தலையை வெட்டிக் காவு கொடுத்தனர்(கடைக் "கற்கால மக்களின் சின்னங்களாகக் கிடைத்துள்ள எலும்புகளில் தலை யெலும்பு கிடைக்காமை இவர்களும் அவ்வழக்கமுடையவரோ என்னும் ஐயப்பாட்டைத் தூண்டுகிறது. இவ்வாழ்க்கை முறை கடைக் கற்கால மக்களின் வாழ்க்கை முறையென எண்ணுவது ஓரளவு சரியே. பழைய கற்கால நாகரிகத்தின் இறுதி நிலையாகிய கடைக் கற்கால் நாகரிகமும் பண்பாடுகளும் முறையே முதற்கற்கால, இடைக்கற்கால நாகரிகப் பண்பாடுகளின் வளர்ச்சியெனலாம். புதிய கற்காலம் பழைய கற்காலத்திலிருந்த கருவிகளைப் போலல்லாமல் வழ வழப்பாக மெருகேற்றப்பட்ட கற்கருவிகளைப் பயன்படுத்திய மக்கள் வாழ்ந்த காலமே புதிய கற்காலமென்று முன்னாளில் கருதப்பட்டது. அத்துடன் வேளாண்மைத் தொழில் செய்து மக்கள் நிலைத்து வாழத் தலைப்பட்ட காலம் புதிய கற்காலம் என இக்காலத்தில் அறியப்பட் டுள்ளது. தொடக்கத்தில் புதிய கற்காலம் என்னும் காலக்கட்டம் இருந்ததா என்னும் ஐயப்பாடும் இருந்துவந்தது. கடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப் பட்ட ஆய்வுகளின் விளைவாகப் புதிய கற்காலம் என்னும் காலக்கட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம், தசுடுர் (தருமபுரி மாவட்டங்களில் சேர்வராயன்மலைத் தொடர்களிலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் சவ்வாதுமலை, ஏலமலைப் பகுதிகளிலும் புதிய கற்காலக் கற்கோடரிகள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டம்பையம் பள்ளியை அடுத்த மலையடிவாரத்தில் நடுவணரசுத்தொல்லியல் துறை அகழ்வாய்வு நடத்தி, இரு காலகட்டநாகரிகங்களை வெளிக் கொணர்ந்தது. முதற்காலக் சுட்டம் புதிய கற்காலத்தின் தொடக்கப் பகுதி, இரண்டாவது காலகட்டம் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த கால கட்டம். முதற்கால கட்டத்தில் எலும்பினால் செய்யப்பட்ட கருவிகளும், 'சாசுப்பர்', 'அகேட்', 'செர்ட்' ஆகிய கல்வகைகளைக் கொண்டு செய்யப் பெற்ற சிறு தூவற்கத்தி (Pen knife) போன்ற கருவிகளும், செல்ட்' என்று அழைக்கப்படும் வழவழப்பான கல்லாலாகிய கைக்கோடரிகளும் கிடைத்தன. இரண்டாம் காலகட்டத்தில் எலும்புக் கருவிகள் கிடைக்கப் பெறவில்லை. கிடைத்த பிற கருவிகள் தொழில்நுட்பம் மிகுந்தனவாய் இருந்தன. இரண்டாம் கால கட்டத்தில் குடியிருப்புகளிலும் முன்னேற்றம் காணப்பட்டது. மட்பாண்டங்களில் பளபளப்பான சாம்பல் நிறப் பானைகள்(grey"twares) முதற் காலகட்டத்தவை. செந்நிறப் பானைகள் (redwarts) இரண்டாம் கால கட்டத்தவை. பழைய கற்காலக் கோடரிகள் கையில் பிடித்துப் பயன்படுத்தும் தன்மையன. புதிய கற்காலக் கோடரிகளோ பிடியில் பொருத்திப் பயன் படுத்தும் தன்மையன.புதிய கற்காலத்தில் கல்லுளி,கல்வாய்ச்சி, கற்கொத்து முதலான கருவிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.கடைக் கற்கால மக்கள் மரப்பிடிகளில் பொருத்திப் பயன்படுத்திய கறுக்கரி வாள் போன்ற கருவிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சுற்கொத்தும், சுறுக்கரிவாளும் வேளாண்மைக்குப் பயன்படுவன. வாய்ச்சியும், உளியும் மரத்தைச் சீவித் துளையிட உதவும். மற்றும் விதையூன்றப் பயன்படும் தோண்டு தடியின் தலையில் கனத்திற்காகப் பொருத்தப் பட்டவை யென்று கருதப்படும் துளையிடப்பட்ட வட்டங்களும் கிடைத்துள்ளன. மற்றும் தும்மி, குழவி, திரிகைமுதலானவையும் கிடைத்துள்ளன. எலும்புக் கருவிகளில் துளையிடும் கருவிகள் முனைபோன்ற கருவிகள், சுரண்டுகருவிகள் முதலானவை குறிப்பிடத்தக்கவை. இவை தோல் தைக்கப் பயன்பட்டிருக்க வேண்டும். சாம்பல்நிற மண்பாண்டங்களின் வாய்விளிம்பில் செங்காளி யினால் {red ochre) வண்ணம் தீட்டப்பட்டிருந்தது. பானைகளோடு, மண்ணால் செய்யப்பட்ட ஒரு முயல் பொம்மையும் கிடைத்துள்ளது. கருநாடகப் பகுதிகளில் அக்கால மக்கள் தங்கள் குடியிருப்புகளுக்கு அருகிலுள்ள பாறைகளில் திமிலும், நீண்டகொம்புகளுமுடைய மாட்டு உருவங்களைத் தீட்டியிருந்தனர். அப்பகுதிகளில் மாட்டுருவம் கொண்ட மண் பொம்மை சுளும் கிடைத்துள்ளன. இவை அக்கால மக்களின் கலையுணர்வை எடுத்துக்காட்டுவன். மற்றும் கேழ்வரகு, கொள்ளு, பச்சைப்பயறு ஆகியன தீய்ந்த நிலையில் கிடைத்துள்ளன. இவற்றை அக் கால மக்கள் பயிரிட்டனர் எனலாம். இவற்றை இவர்கள் சேமித்து வைத்தனரெனக் கொள்ளத்தக்க வகையில் வீட்டில் தவசத்தோடு கூடிய பெரிய மட்கலம் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாடு, ஆடு, கோழி, புள்ளிமான், பன்றி, காட்டுப்பூனை, காண்டாமா காண்டாமிருகம் முதலான விலங்குகளின் எலும்புகளும் கிடைத்துள்ளன. இவ்விலங்குகளின் இறைச்சியை அக்கால மக்கள் உணவாகப் பயன்படுத்தி னர். ஆடு, மாடு, கோழி முதலானவை வீட்டிலும் வளர்க்கப்பட்டிருக்க லாம். கருநாடகப் பகுதிகளில் சாணச் சாம்பல் படிவுகளும் காணப்பட் டுள்ளன. இவை அக் கால மக்கள் ஆடு மாடுகளைக் கிடையமைத்து வாழ்ந்த பாங்கை யுணர்த்துவன. தமிழ்நாட்டிலும் இவ் வாழ்க்கை முறை இருந்திருக்க வேண்டுமென்பதைத் தமிழக, கருநாடகப் புதிய கற்காலப் பண்பாட்டுக் கூறுகள் பலவகையில் ஒத்திருப்பதை எண்ணுகையில் உய்த்துணரமுடிகிறது இவர்களது குடியிருப்புகள் குறிஞ்சி நிலத்தில் அமைந்திருந்தன. பையம்பள்ளி அகழ்வாய்விலிருந்து இவர்களது வீடுகளைப்பற்றி ஒருவாறு உய்த்துணரமுடிகிறது. மக்கள் குடிசைகளில் வாழ்ந்தனர். குடிசைகள் பெரும்பாலும் வட்டம் அல்லது நீள்வட்ட வடிவின: ஓரிரு அறைகளைக் கொண்டவை; சுவர்கள் மூங்கில் சுழிகளை நிறுத்தி அமைக்கப்பட்டிருக்க வேண்டுமென்று கொள்ளத்தக்க வகையில் துளைகள் காணப்படுகின்றன! வாயிற்படி அமைப் பிருந்தது. தளம் பெரும்பாட்டைக் கற்களால் பாவப்பட்டிருந்தது; அதன்மேல் கூழாங்கற்களையும் மண்ணையும் சேர்த்துப் பிசைந்து பரப்பிக் கெட்டிப்படுத்தப்பட்டிருந்தது; அக் கெட்டித்தரை சாணத்தாலோ சுண்ணம் கலந்த சாணத்தாலோ மெழுகப்பட்டிருந்தது; வீட்டில் ஒரு பக்கம் கல்லடுப்பு மற்றொரு பக்கம் தவசம் வைத்திருந்த பெரிய மட்கலங்கள் குடிசைக்கு வெளியில் குப்பைகளைக் கொட்டி வைத் திருந்தனர் என்று கொள்ளத்தக்க குழிகள் முதலியனவும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. சேர்வராயன், சவ்வாது ஆகிய மலைப்பகுதிகளில் வாழ்ந்த அக்கால் மக்களின் குடியிருப்புகளில் சில இயற்கையாகவே பாறை களாலான அரண் கொண்டவையாய் விளங்கின. சில குடியிருப்புகளில் பெரும்பாறைகளை உருட்டி ஊரைச் சுற்றிலும் அரண் அமைத்துக் கொண்ட பாங்கும் காணப்படுகிறது. கருநாடகப் பகுதிகளில் ஓர் அரண் எல்லைக்குள் 10, 15 குடிசைகள் காணப்பட்டன. ஒரு குடிசையில் 5,5பேர் வாழ்ந்தனர் எனக் கொண்டால் ஓர் நனரில் ஏறத்தாழ 100 பேர் வாழ்ந்திருக்கலாம். ஒரே மலையில் 23 ஊர்கள் இதுபோல் காணப்படுவதால் ஒரு மலைப்பகுதியில் ஏறத்தாழ 200, 300பேர் வாழ்ந்தனர் எனலாம். பையம்பள்ளியில் காணப்படும் இப் புதிய கற்காலச் சின்னங்கள் கி. மு. 1300 - 1200-ஐச் சார்ந்தனவாகவுள்ளன. வடக்கில் இக் காலச் சின்னங்கள் கிமு. 2300 - 1050 -கச் சார்ந்தனவாகவும், ஈரான் நாட்டில் கி.மு. 4000 -ஐச் சார்ந்தனவாகவும் பாவகத்தினத்தில் கி. மு. 8000 -ஐச் சார்ந்தன வாகவும் உள்ளன. மற்றும் அக் கால ஈரான் நாட்டு மட்பாண்டங்கள் தமிழ்நாட்டுச் சமகால மட்பாண்டங்களைப் பெரிதும் ஒத்துள்ளமையை ஆல்சின், சங்காலியா முதலான அறிஞர்கள் கண்டறிந்து, ஈரான் மக்கள் தென்னாட்டில் குடிபுகுந்திருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். இவர்களின் கருத்தை உறுதிப்படுத்த வேறு சான்றுகள் இல்லை. தமிழ்நாட்டில் வாழ்ந்த புதிய கற்கால மக்கள் தற்காலத்தில் திரவிட மொழிகள் பேசும் மக்களின் மூதாதைகளாக இருக்கலாம் என்று ஆல்சின் கருதுகிறார். பெருங் கற்காலம் (Megalithic Period) பெருங்கற் காலம் என்னும் தொடரில் பெருங்கல் என்பது கற்கருவியை உணர்த்தாது. பழைய கற்காலம், புதிய கற்காலம் என்பவற்றில் கல் கற்கருவிகளை உணர்த்தும், பெருங் கற்காலம் என்பதிலுள்ள கல், கல்லறைக்குழிகள் மீது போடப்பட்டிருந்த பெருங்கற்களை உணர்த்தும் பெருங்கற்காலச் சின்னங்களில் பெரும்பாலானவை இறந்தோரின் எலும்புகளைப் புதைத்த புதைகுழிகளில் கிடைத்தமையான் இக் கற்காலத்தை பெரும் கற்காலம்' என்று வழங்குகின்றனர். இக் காலச் சின்னங்களில் இரும்பாலான பொருள்கள் மிகுதியாகக் கிடைத்தமையால் இதனை "இரும்புக் காலம்' என்றும் கூறி வந்தனர், பெருங்கல் சின்னங்கள் திரு. வி.டி. கிருட்டிணசாமி என்பார் பெருங்கற் சின்னங்களை வகைப்படுத்திக் கூறியுள்ளார். அவற்றுள் சிலவற்றைக் காணலாம். கல்திட்டை இது நிலமட்டத்திற்கு மேல் அமைக்கப்பட்டிருக்கும். இயற்கை யான கற்கள் பக்கத்திற்கு ஒன்றாகச் சாயாவண்ணம் நான்கு பக்கங்களிலும் நிறுத்தப்பட்டிருக்கும். இடையிலுள்ள அறையில் ஈமப் பொருள்கள் இடப்பட்டிருக்கும். தலைப்பக்கம் ஒரு கல் வைத்து மூடப்பெற்றிருக்கும். இரண்டு மூன்று. சற்களால் மூடப்பட்டிருப்பதும் உண்டு, பக்கச்சுவர் கற்களுக்குத் துணையாகச் சிறு கற்சுவர்கள் அமைக்கப் பெறுவதுண்டு. இவ்வாறான சுவர்கள் இரண்டு மூன்று அமைந்தனவும் உண்டு. இறுதியில் கூழாங்கற்கள், சரளை, மண் முதலியவற்றின் துணை கொண்டு மூடப்பட் டிருக்கும். இஃதொரு திட்டுப்போல் காணப்படும், சில சமயம் இத் திட்டுகள் சிதைவுறா திருக்கப் பெரிய உருண்டைக் கற்களை வட்டமாக வைப்பதும் உண்டு. கல்பதுக்கை இது நிலமட்டத்திற்குக் கீழே அமைக்கப்பட்டிருக்கும். செதுக்கப் பட்ட கற்கள் பக்கச் சுவர்களாகப் பயன்படுத்தப் பெற்றிருக்கும், பக்கச் சுவர்கள் 'ஸ்வஸ்திகா' வடிவில் துருத்திய நிலையில் சாயாமல் நிறுத்தப் பெற்றிருக்கும் அறையில் ஈமப் பொருள்கள் இட்டு மூடப் பெற்றிருக்கும், பிற பாதுகாப்புகள் கல்திட்டைக்கு உள்ளது போல் அமைக்கப் பெற் திருக்கும். இக் கல்திட்டையிலும், கல்பதுக்கைகளிலும் இறந்தவர்களின் சதை பிரிந்த எலும்புகளே இடப்பெற்றன. பிணம் இடம்பெற்றதற்கான சான்று கிடைக்கவில்லை. சில கல்திட்டைகளில் மண்ணாலானதும், சில சமயம் கால்கள் சித்திர வேலைப்பாடு கொண்டதுமான ஒன்றிரண்டு ஈமத் தொட்டிகளும் வைக்கப்படுவதுண்டு. ஆடு போலும் புருவங்கொண்ட ஈமத் தொட்டி ஒன்றும் கிடைத்துள்ளது. எலும்புகளோடு பல அணிமணிகள், மட்பாண்டங்கள் இரும்பினால் செய்யப்பெற்ற கலங்கள் முதலானவற்றை யும் இட்டுவைத்தனர். கல்திட்டையிலும் கல்பதுக்கையிலுமுள்ள பக்கக்கல் ஒன்றில் இடுதுளை(port hole) அமைக்கப்பட்டிருக்கும். இடுதுளை பெரும்பாலும் 15 செ.மீ. விட்டம் கொண்டதாயிருக்கும், ராள் நுழையும் அளவுக்குப் பெரியதான இடுதுளை உடையனவும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இடுதுளை பெரும்பாலும் கிழக்கு நோக்கியிருக்கும் வேறு திசைகளிலும் காணப்படுவது உண்டு. மண்குவை, கல்குவை, கல்கிடை இவை சுல்திட்டை அல்லது கல்பதுக்கையின்றி மூடப்பெற்றவை, தாழியோ ஈமத்தொட்டியோ ஈமச்சின்னங்களுடன் இவற்றில் புதைக்கப் பட்டிருக்கும். புதைக்கப்பட்டவிடத்தில் மண் குவிக்கப்பட்டிருந்தால் அதனைக் "மண்குவையென்றும், கற்கள் குவிக்கப்பட்டிருப்பின் அதனைக் "கல்குவை' என்றும், பெருங்கற்கள் கிடத்தப்பட்டிருப்பின் அதனைக் கல் கிடை' யென்றும் வழங்குவர். குத்துக்கல், கல்வரிசை சிலவிடங்களில் ஈமப் பொருள்கள் புதைக்கப்பட்ட இடத்தின் மீது ஒருகல் நிறுத்தப் பெற்றிருக்கும். இதனைக் குத்துக்கல்' என்று குறிப்பிடுவர். பல கற்கள் ஒரு வரிசையாகவும், பல வரிசையாகவும் நடப்படுதலும் உண்டு. இதனைக் 'கல்வரிசை' யென்பர். இவ் வகையில் நிறுத்தப்பட்ட கற்கள் பெரும்பாலும் இரு மீட்டர் உயரம் கொண்டவை, 44 மீட்டர் உயரம் கொண்ட கற்கள் நிறுத்தப்பட்ட சின்னங்களும் உண்டு. குத்துக்கற்கள் செதுக்கப்பட்டும், செதுக்கப்பெறாமலும் காணப்படும். தொப்பிக்கல், குடைக்கல், குடைவரைத் தாழ்வறை இவை கேரளநாட்டுப்பகுதியில் காணப்படுவன.செப்பம் செய்யப் பட்ட சுற்களைச் சாய்வாகக் கூம்பு போல் நிறுத்தி அதன் உச்சியில் வட்டவடிவமானகல் வைத்து மூடப்பட்டிருக்கும் சின்னம் தொப்பிச்சல்' எனப்படும். இது காளானைப் போன்று தோற்றமளிக்கும். இதில் குத்துக் கற்களுக்கிடையே தரைமட்டத்திற்குக் கீழே தோண்டப்பட்ட குழியில் ஈமச்சின்னங்கள் வைக்கப்பட்டிருக்கும். 'குடைக்கல்" கேரகராப் பகுதியில் பயன்படுத்தப்படும் வட்டமான குடையைப் போன்றது. இதற்குக் குத்துக்கல் இல்லை. சமப் பொருள்கள் புதைக்கப்பட்ட இடத்தின்மீது அப்படியே கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும். சிலவிடங் களில் பாறை களைத் தாழ்வாகக் குடைந்து ஈமச் சின்னங்கள் வைக்கப்பட்டிருக்கும். அவற்றைக் "குடைவரைத்தாழ்வறையென்று குறிப்பிடுகிறோம். இதனை அமைப்பதற்குப் பாறையில் ஓர் ஆள் இறங்குமளவுக்குச் சதுரமான பள்ளம் முதலில் தோண்டப்படும் பள்ளத்தின் அடிமட்டத்தையொட்டிப் பக்கச் சுவரொன்றில் ஆள் நுழையும் அளவுக்கு ஒரு துளை செய்யப்படும். இத் துளையை வாயிலாகக் கொண்டு உள்ளே அறை தோண்டப்படும். அவ்வறையில் விசிப் பலகை, முக்காலி போன்ற அமைப்புகளுடன் கல்லிலேயே மேடைகள் செதுக்கப் பெறும். இம் மேடைகளின்மீது ஈமப்பொருள்கள் வைக்கப்படும். அறையின் நடுவில் தூண் நிற்குமாறு விடப்பட்ட அறைகளும் உண்டு. ஒன்றுக்கு மேற்பட்ட அறைகளைக் கொண்ட குடைவரைத்தாழ்வறைகளும் உண்டு. ஈமச் சின்னங்கள் உள்ளே வைக்கப்பட்டபின், வழியாக அமைக்கப்பட்ட துளையும் கவ்வைத்து மூடப்பெறும். இவை தொல்பழங்காலக் குடைவரைக் கலைக்கு எடுத்துக் காட்டுகளாகவும் திகழ்கின்றன. தாழி இதனை 'முதுமக்கள் தாழி' என்று கூறுகின்றனர். இத் தாழிகள் மிகவும் பெரியவை. தாழிகளின் அளவைவிடச் சற்றுப் பெரிதான பள்ளம் தோண்டி அதில் தாழி இறக்கப்படும், குழியின் அடியில் திண்ணை யமைக்கப்பட்டு ஈமப்பொருள்கள் வைக்கப்பட்ட பின் தாழி இறக்கப் படும்.தாழிவெறும் மண்ணால் நிரப்பப்படும். சிலவிடங்களில் தாழியிலும் எலும்புகள் இடப்பட்டன. இறுதியில் குழி பழைய மண்ணைக் கொண்டோ புது மண்ணைக் கொண்டோ மூடப்படும். பெருங்கல் சின்னங்களில் சில பொதுவாகத் தமிழ்நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் உள்ளன. வட்டார வாரியாக அவற்றின் சிறப்புத் தன்மைகளை மட்டும் நாம் காண்போம். கேரள நாட்டில் காணப்படுவதாகக் கூறப்படும் தொப்பிக்கல், குடைக்கல் ஆகியவை கோவை மாவட்டத்தில் பவானியாறு, மொய்யாறு. நொய்யல் ஆகிய ஆற்றுப்பகுதிகளில் காணப்படுகின்றன. நீலமலைப் பகுதியில் ஆயிரக்கணக்கான கல்குவைகள் காணப்படு கின்றன. இவற்றிலுள்ள ஈமச்சின்னங்களுடன் உரோமானியக் காசுகளும் இருந்தமை குறிப்பிடத்தக்கது. கல்குவையில் கிடைத்த மட்பாண்டங்களில் பல விலங்குருவத்தோடு கூடிய மூடிகள் உடையனவாக இருந்தமை அக்கால் ' மக்களின் கலையுணர்வை வெளிப்படுத்தும் சான்றாகும். வெண்கல் ஏனங்கள் பலவும் இவற்றில் கிடைத்துள்ளன. தென் மாவட்டங்களில் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டத்தில் தாழிகள் புதைக்கப்பட்ட இடத்தின் மீது எந்த அறிகுறிகளும் காணப்படவில்லை. குற்றாலம் பகுதியில் கற்குவைகள் காணப்படுகின்றன. தென்காசிப் பகுதியில் மண் குவைகள் காணப்படு கின்றன. அலெக்சாந்தர் ரே காயல்பட்டினத்திற்கு அண்மையிலுள்ள தாழிக்காட்டைக் கண்டுபிடித்தார். ஆதிச்சநல்லூர்த் தாழிக்காடு அகழ் வாய்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு ஒன்றின் மேல் ஒன்றாகப் புதைக்கப்பட்ட டிருந்த தாழிகளும் காணப்படுகின்றன. இந் நிலை, இதி தாழிக்காடு பல்லாண்டுகளாகப் பயன்படுத்தப்பெற்றமையைக் காட்டுகிறது. மண் கலங்கள், இரும்பு, வெண்கலம், தங்கம் ஆகிய மாழைப் பொருள்களுடன் தாழிகளில் முழு எலும்புக்கூடும் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மதுரை மாவட்டத்தில் அனுப்பானடி, விளாங்குடி, பரவை முதலான ஊர்ப்பகுதிகளில் தாழிக்காடுகள் உள்ளன. கோடைக்கானல், பழனிமலைப் பகுதிகளில் கல்திட்டைகள் பல காணப்படுகின்றன. இங்கு மக்கள் எப்போதுமே வாழ்ந்திராத கல் மதில்கள் கொண்ட பகுதிகள் பல உள்ளன. இவைகளில் தாழிகள் உள்ளனவாகத் தெரிகிறது. புதுக்கோட்டைப் பகுதியில் குரங்குப்படை, மதமதக்கத் தாழி, பாண்டவர் குழி என்னும் பெயர்களால் மக்கள் வழங்கும் சுல்பதுக்கை களும் கல்திட்டைகளும் காணப்படுகின்றன. குறுங்கற்ப.ை- முது மக்கள் தாழி பண்டையார்குழி அல்லது பண்டைக்குழி என்பவை இவ்வாறு திரிந்து 'பாண்டவர்குழியென்னும் வழக்கினைப் பெற்றிருக்கலாம். சித்தன்னவாசல், ஆரணிப்பட்டி, குரந்தப்பட்டி, தக்கன்பட்டி, தொடையூர், முத்துக்காடு, காணியப்பட்டி, களக்குடிப்பட்டி, திருப்பூர் முதலான பார்களில் கல்திட்டைகள் அகழ்வாய்வு செய்யப்பட்டுள்ளன. நடுவறை வெளியறை, வெளியறையில் மேல் கீழறைகள், அறைகளுக் கிடையே இடுதுளைகள் முதலான அமைப்புகளுடன் சுல்குவையைச் சுற்றி ஒரு கல்வட்ட அமைப்பும் சில இடங்களில் உள்ளன. *புல்வயல்' என்னும் காட்டிலிருந்த தாழிகள் இரண்டுள் இரு முழுமாந்தவெலும்புக் கூடுகள் கிடைத்துள்ளன. இவ்வெலும்புக் கூடுகள் உட்கார்ந்த நிலையில் வலக்கையில் குறுவாளைப் பிடித்துக் கொண்டும் இடக்கையைத் தம் தொடைமீது வைத்துக்கொண்டும் காட்சியளித்தன. திருச்சி மாவட்டம் பெருமாள்பாளையத்தில் ஒரு பெரிய சுல்குவை கண்டுபிடிக்கப்பட்டது. கருவூர்-திண்டுக்கல் சாலையிலுள்ள மலைக் கோவிலூரில் கல்குவைகளையும், கல்திட்டைகளையும் கொண்ட ஒரு பெரிய ஈமக்காடு உள்ளது. மற்றும் திருச்சி, தஞ்சை மாவட்டங்களிலும் பல கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. சேலம், தர்மபுரி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ளவை இன்னும் தெளிவாக ஆய்வு செய்யப்படவில்லை. திருவள்ளூர் மாவட்டத்தில் 'லேட்டரைட்' பாறைகளாலான சின்னங்கள் நன்கு ஆய்வு செய்யப்பட் டுள்ளன. எலும்புச் சின்னங்கள் மாந்தனின் எலும்புக்கூடுகள் முழுமையான அளவில் ஒன்றிரண்டு கிடைத்திருப்பினும் பெரும்பாலானவை சிற்சில எலும்பு களைக் கொண்டவையாகவே உள்ளன. சிலவிடங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட மாந்தவெலும்புகள் ஒரே சின்னத்தில் புதைக்கப்பட்டிருந்தன. ஒருவேளை அவர்கள் ஒரே சமயத்தில் இறந்தவர்களாக இருத்தல் வேண்டும். இவ் வெலும்புகள் எரிக்கப்பட்டவையாகத் தெரியவில்லை. பிணம் வீசி யெறியப்பட்டு நீண்ட நாட்களுக்குப்பின் எஞ்சிய எலும்புகள் எடுத்துப் புதைக்கப்பட்டன போலும் புதிய கற்கால மக்கள் பிணங் களைத் தங்கள் வீடுகளிலோ வீடுகளுக்கு அருகிலோ புதைத்தார்கள், பெருங்கற்கால் மக்களோ தனித்தவிடத்தில் வேளாண்மைக்குப் பயன்படாத நிலத்தில் புதைத்தனர். பெருங்கல் சின்னங்கள் காணப்படும் இடங்களுக்கு அருகில் நீர்வளம் குறைந்த பகுதிகள் காணப்படுகின்றன. எனவே, அக் கால மக்களின் ஊர்கள் நீர் வளம் குறைந்த பகுதிகளில் அமைந்திருந்தன எனலாம். ஈமப் பொருள்கள் கிடைத்துள்ள மட்பாண்டங்கள் நிறத்தால் நான்கு வகைப்படு கின்றன. முதல்வகை சிவப்பு மட்பாண்டங்கள் (red wares). இவை உருவில் பெரியவை.தவசச் சேமிப்புப் பானைகளாகவும், தண்ணீர்ப் பானைகளாக வும், தாழிகளாகவும் அக்கால மக்களால் இவை பயன்படுத்தப் பெற்றன வெனலாம். குச்சியால் பதிவுகள் செய்து அமைத்த கலை வேலைப்பாடு களும் இவற்றில் காணப்படுகின்றன. இரண்டாவது வகை, கருப்புநிற மட்பாண்டங்கள் (black Wares) காற்று புகாதபடி வைத்துச் சுட்டால் மட்பாண்டம் கருநிறம்பெறும். இம் முறையில் இவை செய்யப்பெற்றவையெனலாம். அளவில் சிறியனவாக வுள்ள இவை சமையல் பாண்டங்களாகப் பயன் படுத்தப்பட்டன. மூன்றாம் வகை, கருப்பு - சிவப்பு மட்பாண்டங்கள்(black andredwares) இப் பாண்டங்களின் உட்பகுதியும், கழுத்துக்கு மேலுள்ள பகுதியும் கருநிறமும் பிற புறப்பகுதி செந்நிறமும் கொண்டு விளங்கும். கருநிறம் காற்று புகாமல் வைத்துச் சுட்டதனால் அமைந்தது. இவற்றில் கீறல்களும், கீறல்களில் சுண்ணாம்புக் கோடுகளும், சுண்ணாம்புக் கோடுகளின்மீது செங்காவி பூசும் போது மஞ்சள் நிறமாக மாறிய கோடுகளும், சில கீற்றோவியங்களும் கொண்ட பாண்டங்களும் உண்டு. இவை அளவில் சிறியனவாயும், வீட்டில் அழகுப் பொருள்களாகவும் பயன்படுத்தப் பெற்றவையெனலாம். நான்காவது வகை செம்பூச்சு மட்பாண்டம் (red slipcdware), கருப்பு சிவப்புப் பாண்டங்களுக்கும் இதற்குமிடையே நிறம் மட்டும் வேறுபடு கிறது. அளவு, பயன்பாடு ஆகியவற்றில் வேறுபாடு இல்லை . மண்டை , சட்டி, சருவச்சட்டி, கிண்ணம், தட்டு, பொகனி, உலை மூடி முதலான பல்வேறு பாண்டங்கள் உருவில் இவை கிடைத்துள்ளன. இரும்புப் பொருள்கள் மரப்பிடிகளில் பொருத்திப் பயன்படுத்தக்கூடிய மண்வெட்டி, கொத்து, கோடரி, அறுவாள், கறுக்கரிவாள், வேல், வாள், ஈட்டி, அம்பு, பட்டாக்கத்தி முதலான கருவிகளும், சிறு கத்தி, உளி, வாய்ச்சி, தமருசி, ஆணி, தாண்டில், குதிரைக் கடிவாளம், தொங்குவிளக்கு, பலமுனை விளக்குக் கொக்கிகள், முக்காலிகள் முதலான பொருள்களும் இரும்புப் பொருள்களாகக் கிடைத்துள்ளன. அக்கால மக்கள் இரும்பை எல்லா வகையிலும் பயன்படுத்தினார்கள் என்பதற்கு இவை சான்றுகளாக உள்ளன, தங்க, வெண்கலப் பொருள்கள் நீலமலை, ஆதிச்சநல்லூர் ஈமச் சின்னங்களோடு வெண்சுவதி தாலான பாண்டங்களும் கிடைத்துள்ளன. சாடி + குவளை, வளையல், மணிச்சிலம்பு, பன்னீர்க்குழல் முதலானவை வெண்கலத்தால் ஆனவை. இவை கீற்றோவியங்களாலும், அமைப்பாலும் கலைத்திறன் வேலைப்பாடு களைக்கொண்டு விளங்குகின்றன. ஏனங்கள் சாயாமல் வைப்பதற்குப் பயன்படும் கலவடைகள் பல, ஆடு, புலி, கருமை, சேவல், ஸ்மான் போன்ற விலங்குருவங்கள் பொருத்தப்பட்டுக் கலைத்திறன் வேலைப்பாடுகளுடன் கிடைத்துள்ளன. இலையோடு கூடிய கொடியமைந்த வேலைப்பாடு கொண்டவைகளும் உண்டு, ஆதிச்சநல்லூரில் இலைகள் உருவில் தங்கத் தகடுகள் சில கிடைத் துள்ளன. அவற்றின் இரு முனைகளையொட்டித்துளை காணப்படுவதால் அவை நெற்றிப் பட்டமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று சுருதப்படுகிறது. தங்கத் தகடுகளைக் கொண்ட தாழிகள் பிற தாழிகளை விட அதிக ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்க செய்தி யாகும். மேற்கண்ட பொருள்களேயன்றி, வெள்ளி, செம்பு முதலான மாழை களைக் கொண்டும், சங்கைக் கொண்டும் 'காரினீலியன்', 'ஜாஸ்பர்', * அகேட்' 'ஆனிக்ஸ்', 'செர்பன்டைன்', "படடைட்', 'லாபிஸ் வழங்லி', 'குவாட்' முதலான அரிய சவ்வகைகளைக் கொண்டும், கண்ணாடியைக் கொண்டும், மணிகளைக் கொண்டும் செய்யப்பட்ட பொருள்கள் கிடைத்துள்ளன. இவை ஒவிய வேலைப்பாடு கொண்டு விளங்கின. கண்ணாடி, பளிங்கு, சங்குகளாலான வளையல்கள் ஆதிச்ச நல்லூரில் கிடைத்துள்ளன. எட்டு முக்குக் கொண்ட அகல் விளக்கு, மண்ணால் செய்யப்பட்ட காதுக்கம்மல் முதலானவையும் இங்குக் கிடைத்துள்ளன. பையம்பள்ளியில் மண் பொம்மை கிடைத்தமைபற்றி முன்னரே குறிப்பிட்டுள்ளோம். அதிச்சநல்லூரில் வெண்கல ஏனத்தின் மீது அப்பியபடி பருத்தித் துணியின் எச்சங்களும் கிடைத்துள்ளன. பெருங் கற்கால ஊர்கள் கோட்டை கொத்தளங்களோடு பெருங்கற்காலத்தில் கட்டப்பட்ட தணர்கள் அழிந்து மண்மேடான நிலையில் வட இந்தியாவில் சில நகரங்கள் உள்ளன. தென்னிந்தியாவில் அது போன்ற நிலைகள் காணப்படவில்லை. எனினும் மதுரை, உறையூர், காஞ்சி முதலான நகரங்களுக்கு அடியில் இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. பையம்பள்ளியில் வீட்டுச் சின்னங்கள் ஓரளவுக்குக் காணப்படுகின்றன. பையம்பள்ளி வீடுகள் குடிசைகள் எனலாம். அவை 1.5-3 மீட்டர் வரை விட்ட அளவுள்ள வட்ட வீடுகளாகவும், 1.7-4 மீட்டர் வரை விட்ட அளவுள்ள முட்டை அல்லது நீள்வட்டடத் தளமுள்ள வீடுகளாகவும் உள்ளன. சுவரில் மாடங்கள் இருந்ததற்கான குழிகள் உள்ளன. இக்குழிகள் கற்களில் செய்யப்பட்டுக் கிடத்தப்பட்டவை. வீட்டின் ஓரம் கற்களாலும் இடைப்பகுதி சுண்ணாம்புச் சரளையாலும் பாவப்பட்டிருந்தது. இவை புதிய கற்கால வீடுகளை ஒத்திருந்தன. பையம்பள்ளி ஒரு மலையைச் சார்ந்தவூர். எனவே, இங்குக் குறிஞ்சிநில நாகரிகமே நிலவியிருத்தல் வேண்டும். அதே காலத்தில் நிலவிய மருதநில நாகரிகத்தின் சின்னம் கிடைக்குமாயின் அவை பெரிய மாடி வீடாயும் இருக்கக்கூடும் என்பதை நாம் இவ்விடத்தில் நினைவுகூர்தல் வேண்டும். வாழ்க்கை முறையும் பண்பாடும் நன்செய் பயிரான நெல்லும், புன்செய் பயிர்களான கொள்ளு, கேழ்வரகு, சோளம் முதலியனவும் இவர்களால் பயிர் செய்யப்பெற்றன எனலாம். இத் தவசங்கள் இவர்களது சேமிப்புகளில் கருகிய நிலையில் காணப்பட்டதே இதற்குச் சான்றாகும். தென்னிந்தியாவில் இக்காலத்தில் பயிரிடப்படும் குறுவை நெல் போன்றது இவர்கள் பயிரிட்ட நெல் என்பது கிடைத்துள்ள நெல்லை ஒப்புநோக்குகையில் புலனாகிறது. ஏரிகளுக்கு அருகில் வாழ்ந்த அக்கால மக்கள் தம் கூட்டு முயற்சியால் ஏரிகளை உருவாக்கியிருத்தல் வேண்டும். கூட்டுப் பண்ணைகளாகக் கூட அவர்களது வேளாண்மை அமைந்திருக்க முடியும். மண்கலம் வனையும் தொழில், கொல்லுத் தொழில், கன்னாரத் தொழில், மரத்தச்சு, கல்தச்சுத் தொழில்கள், தட்டாரத் தொழில், நெசவுத் தொழில் முதலான கலைத்தொழில்கள் அவர்களால் பேணி வளர்க்கப் பட்டன எனலாம். ஓவியம், சிற்பம் முதலான நுண்கலை களையும் அவர்கள் போற்றி வந்தனர். கிடைத்துள்ள வில், வாள், வேல் முதலானவற்றை நோக்குகையில் அவர்கள் சிறந்த போர் வீரர்களாக விளங்கினார்கள் எனலாம். தூண்டில், வேல் முதலான கருவிகள் அவர்கள் வேட்டையாட வும் பயன்பட்டிருக்கும். கிடைத்துள்ள மணிகளைGas) நோக்கும்போது அவர்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்வதிலும் நாட்டமுள்ளவர்க ளாகத் திகழ்ந்தார்கள் எனலாம். கல்வடையில் காணப்படும் கலைவேலைப் பாட்டை நோக்கும்போது அவர்கள் 'ஆடம்பரமாகவும் வாழ்ந்திருக்க முடியும் என எண்ண வேண்டியுள்ளது. சமயமும் நம்பிக்கையும் இறந்த மக்களின் எலும்புகளுக்கு இவர்கள் செய்த சடங்கு முறைகளைக் கவனித்தால் இவர்கள் மறுமை வாழ்வில் கொண்டிருந்த நம்பிக்கை புலனாகிறது. இடுதுளைகள் பல பகுதிகளில் கிழக்கு நோக்கி அமைந்திருப்பதை எண்ணிப் பார்த்த சிலர் இவர்களுக்கும் கதிரவன் வணக்கத்திற்கும் தொடர்பிருப்பதாகக் கூறுவர். வெண்கல முடியிலுள்ள சேவல் உருவம் முருகனின் சேவற் கொடியோடு தொடர்புடையதெனச் சிலர் கருதுகின்றனர். இவற்றால் சிவனையும் முருகனையும் கடவுளராகக் கொண்டிருந்தனர் எனக் கருத இடமுண்டு. திரிசூலம், வேல் முதலான படைக்கருவிகளும் இக் கடவுளிரோடு தொடர்புடையன. – காலம் இந்தியாவைப் பொறுத்தவரை தென்னிந்தியாவில்தான் பெருங்கல் சின்னங்கள் மிகுதியாகவுள்ளன. எனவே, இந்த நாகரிகம் தமிழ் நாகரிகம் (திரவிட நாகரிகம் என உறுதியாகக் கூறலாம், தமிழ்நாட்டிலுள்ள பெருங்கற்கால நாகரிகம், இரும்புக்கால நாகரிகம் நிலவியிருந்த காலமாகும். அதாவது கி.மு. 17 ஆம் நூற்றாண்டி லிருந்துதான் தொடங்குகிறது. வெளிநாடுகளில் அவை கி.மு. 3000 - 1800 காலவெல்லை உடையனவாக வுள்ளன. தமிழ்நாட்டில் ஒரு சின்னத்தில் ஒரு மாந்தனின் எலும்புதான் பெரும்பாலும் கிடைக்கிறது. மேலைநாடுகளில் 300-க்கும் மேற்பட்ட மாந்தர் எலும்புகளை ஒருங்கே கொண்ட சின்னங்களும் உண்டு. மேலை நாட்டுச் சின்னங்களில் 10 கல்லெடைடன் கொண்ட கற்களும் பயன்படுத் தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் அவ்வளவு பெரிய கற்கள் பயன்படுத்தப் பெறவில்லை. பையம்பள்ளிச் சின்னங்கள் கி.மு. 3ஆம் நூற்றாண்டிலிருந்து நிலவியவை, கோவை மாவட்டம் சூலூர்க் கல்பதுக்கையில் கி.மு. 3 ஆம் நாற்றாண்டை சேர்ந்த ஒரு காசு கிடைத்துள்ளது. நீலமலையில் கி பி 4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த உரோமானியக் காசு ஒன்று கிடைத்துள்ளது. கருப்பு-சிவப்பு மட்பாண்டங்கள் கி.மு. 10 ஆம் நாற்றாண்டிலேயே புழக்கத் திற்கு வந்தவை. இவற்றையெல்லாம் ஒருங்குதிரட்டிப் பார்க்கும்போது fநீலிமலைத் தடயத்தை நீக்கிவிட்டால் பெருங் கற்காலச் சின்னங்கள் கி.மு. 3 ஆம் நாற்றாண்டிலிருந்து கிபி. முதலிரு நூற்றாண்டுகள் வரை அமைத் தவையெனக் கொள்ளலாம். சங்ககாலத்தின் முற்பகுதியும் இக் காலப் பகுதியில் அடங்குவதை நாம் மனத்தில் நிறுத்தல் வேண்டும், பெருங்கற்சின்னங்களை ஒரு நாகரிகம்' என்றோ ஒரு பண்பாடு' என்றோ கொள்ளுவது பொருந்தாது. ஒரு பண்பாட்டுக் குறைவென்றே கொள்ளவேண்டும். கருப்பு - சிவப்பு மண்பாண்டங்களைப் பயன்படுத்தியவர்கள் ஆரியர்களாக இருக்கமுடியாது. கருப்பு - சிவப்பு மட்பாண்டங்கள் கி. மு. 2000 முதலே வடஇந்தியாவில் காணப்படுவதே இதற்குக் கரணியமாகும். ஆரியர்கள் கி.மு. 1500-ல் தான் இந்தியாவினுள் அடியெடுத்து வைத்தனர். எனவே, இப் பாண்டங்களை முதன்முதலில் செய்து பயன்படுத்தியவர் திரவிடரே என்று பி. சுப்பாராவ் என்பார் கருதுகிறார். சிந்துவெளி மக்களுக்கும் தமிழ்நாட்டிலுள்ள பெருங்கற்கால மக்களுக்குமிடையே நெருங்கிய தொடர்பிருப்பதாக பி. சி. லால், ஈரிடங்களிலுள்ள பானைக் கீறல் குறிகளை ஆராய்ந்து முடிவுக்கு வருகிறார். இவற்றிற்கெல்லாம் தீர்வான முடிவுகாண முடியாத நிலையிலேயே தமிழ்நாட்டுப் பெருங்கற் கால நாகரிகம் உள்ளது. 3. இனவியற் கூறுகள் இனவியல் ஆய்வு என்பது சிக்கல் மிகுந்த கலையாகும் எனக் கூறுவர். இக் கலையியலில் இதுவரை வெளிவந்த ஆய்வு முடிவு களும் வலிமை வாய்ந்தவையாகத் தெரியவில்லை. வெளிவந்த ஆய்வு முடிவுகள் வளர்ந்துவரும் புதிய ஆய்வுகளால் மாற்றம் பெற்று வருகின்றன. இன்றைய நிலையில் உலக மக்களிடையே இனக்கலப்பு மிகுந்து காணப்படுகின்றது. எனவே, மக்களினத்தைப் பற்றி மேற்கொள்ளப்பெறும் ஆய்வுகள் இக்கால இறுதிமுடிவாக நிலைபெறா. தமிழகத்தில் தொன்றுதொட்டு மாந்தர் தோன்றி, வாழ்ந்து . வருகின்றனர் என நம்பப்பெறுகின்றது. இத்தகைய தொல்குடியினர் இந்து மாவாரியில் மூழ்கிப் போன குமரி நாட்டில் தோன்றி, உலகின் பல்வேறு திசை நோக்கிப் பரவினர் என்று கொள்ளப்பெறுகின்றது. அண்மைக்கால் இனவியலார் இந்தியாவில் வாழும் மக்களைத் தனி இனத்தவர் என்று கூறுகின்றனர். இவர்களின் ஆய்வு முடிவு தமிழர், தமிழகத்தில் குமரி நாடு உட்பட தோன்றித் தொன்றுதொட்டு வாழ்ந்து வருபவர் என்னும் கருத்துக்கு வலுவூட்டுவதாக அமைந்துள்ளது. இக் கருத்துக்கு மாறாக, உலக மக்கள் எல்லாரும் நண்ணிலக் கடற்பகுதியில் தோன்றிய மக்களின் பிரிவினராவர் எனச் சிலர் கருதுகின்றனர். அப்பகுதியில் தோன்றிய மக்கள் வாழ்வுக்காக உலகெங்கும் பரவினர் என இவர்கள் நம்புகின்றனர். உலகின் மாந்தவினத் தோற்றம் பற்றியும் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. உயிரினம் தோன்றுவதற்கேற்ற தட்பவெப்பச்சூழல் அமைந் துள்ள உலகின் பல்வேறு நிலப்பரப்புகளில் மாந்தனோ அவனது மூதாதை உயிரியோ தோன்றியிருக்கலாம் என்பது ஒரு கொள்கை. இவ்வாறு பல்வே றிடங்களில் தோன்றிய மாந்தனின் வளர்ச்சியில், பல்வேறு மாற்றங்களும் சகிலப்புகளும் ஏற்பட்டு இனப்பாகுபாடுகள் தோன்றுவதற்குக் காரண மாகியது எனலாம். உலகில் மாந்தவுயிரினத் தோற்றம் ஓரிடத்திலேயே நிகழ்ந்திருக்க வேண்டுமென்பது மற்றொரு கொள்கையாகும். இக் கொள்கைக்கு நிலவியல், மண்ணியல், மொழிநூல் ஆய்வுகள் அரண் செய்கின்றன. இக்கொள்கைப்படி குமரிக் கண்டத்தில் தோன்றிய முதன் மாந்தனின் வழியினரே உலகெங்கும் பரவினர் என்பது பெறப்படும். மாந்தவினவியலார் உலகில் வாழும் மக்களை முப்பேரினங்களாகப் பிரிக்கின்றனர். நீகிரோவார்(Negroid), ஐரோப்பியர் (Europecid), மங்கோலியர் (Mangcloid) என்பன அப்போரினங்களாகும். இந்தியர் அனைவரையும் ஒரு தனிப்போரினமாகக் கொண்டு உலக மக்களை நாற் பேரினமாக ஆராய்வோ ரும் உண்டு. இந்தியாவிலும் குறிப்பாகத் தமிழகத்திலும்கூட இம் முப் பேரினத்தவரும் உண்டு எனக் கருதப்படுகிறது. உடலியலமைப்பு, குமுகாயப் பண்பாடு, மொழியமைப்பு ஆகிய வற்றின் அடிப்படையில் பாகுபாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றினுள் உடலியல் அமைப்பினை அடிப்படையாகக்கொண்டு செய்யப்பெறும் ஆய்வு முடிவே வலிமையுடைத்தாகும் எனக் கருதப்படுகிறது. எனினும், குமுகாயப் பண்பாடு, மொழி இவற்றின் அடிப்படையில் செய்யப் பெற்ற இனப்பாகுபாடுகளும், உடலியலமைப்பு இனப்பாகு பாடுகளோடு ஓரளவு தொடர்புடையனவாய்க் காணப்படுவதை ஆராய்ச்சியாளர் ஏற்கின்றனர். உடற்கூற்றைக் கொண்டு இனத்தைப் பாகுபடுத்துகையில் மேனி நிறம், மண்டையோட்டின் அமைப்பு, தலைமயிர், உடல், உதடு முதலானவை அளவுகோல்களாகக் கொள்ளப்பெறுகின்றன. நீகிரோவர் இப் பேரினத்தை ஈரினங்களாகப் பகுக்கின்றனர். அவர் ஆப்பிரிக்க நீகிரோவர். ஆசுத்திரேலியா(Australoid) என்பவர் ஆவர். ஆப்பிரிக்க நீகிரோவர் கரிய மேனியர். அடர்பழுப்பு நிற மேனியரும் இவ்வினத்தாரிடையே உண்டு. இவர்களது தலை மயிரும், கண்ணும் கருப்பு நிறம் உடையன. இவர்களது மண்டை வட்ட வடிவிலானது; தலைமயிர் சுருண்டிருக்கும்; மேனியிலுள்ள மயிர் அடர்த்தி குறைந்து தனித்தனியா யிருக்கும் மூக்கு அகன்று பெரியதா யிருக்கும். காதுகள் குவிந்து சிறியனவா யிருக்கும்; கைகள் நீளமானவை. இவர்களில் ஐந்தடி உயரமுள்ள *பிக்மி' மாந்தரும் உண்டு; ஏழடி உயரமுள்ள 'வாத்தூசி' (Watussi] மாந்தரும் உண்டு. தென்னிந்தியாவில் வாழும் பழங்குடி மக்களிடம் இவ்வினத்த வரின் கூறுபாடுகள் காணப்படுவதாக அட்டன் (Hutton), குகா (B.S, Guha) முதலான அறிஞர்கள் கூறுகின்றனர், அசாமில் வாழும் நாகர், மலையாவில் வாழும் பழங்குடி மக்கள் ஆகியோரிடமும் இவ்வினக் கூறுபாடுகள் உள்ளன வென்பது அவர்களின் கருத்து, இந்திய மக்களில் நீகிரோ இனக் கூறுபாடு உடையவர் உள்ளனரா என்பதில் அறிஞர் களிடையே ஒருமித்த கருத் துடன்பாடு இல்லை . கேரளப் பகுதியில் வாழும் காடர் முதலான பழங்குடி மக்களிடம் நீகிரோ இனக் கூறு உள்ளதென்று பிரியர்சு, சொர்க்கி, சுேடன், இலாபிக்யூ முதலான அறிஞர்கள் கருதுகின்றனர். தென்னிந்தியப் பழங் குடிகளைப்பற்றி ஆய்ந்த தர்சுட்டன் என்பார் இக் கூற்றை மறுக்கிறார். ஆப்பிரிக்க நாட்டு நீகிரோவரும், திராவிடநாட்டுப் பழங்குடியினரும் உலக முதன் மாந்தனின் நேர்வழித் தோன்றல்கள் என செனகல் ஆப்பிரிக்கா) நாட்டுக் குடியரசுத் தலைவர், அறிஞர் இலியோபோல்டு சேதார் செங்கார் என்பார் கூறுகிறார். நெல்லை, குமாரி மாவட்டங்களில் வாழும் காணிகாரர் மற்றும், செம்மாங்கு பொழில் வாய்ச்சி ஆனை மலைக் காடர், நீலமலைப் பழங்குடிகள் முதலானோரிடம் இவ்வினக் கூறு இருப்பதாகச் சிலர் கருதுகின்றனர். எப்படியாயினும் இவர்கள் வெளிநாடுகளிலிருந்து தமிழகத் தில் குடியேறியவர்கள் என்று கொள்வதற்குச் சான்றுகள் வலிமையா யில்லை , நீகிரோவர் பண்பாடு வில் செய்து முதன்முதலாகப் பயன்படுத்தியவர்கள் இவர்களே, இவர்கள் அத்தி மரத்தை வழிபட்டதாகத் தெரிகிறது. இறந்தவரைப்பூதம் காவல்புரிவதாக இவர்கள் நம்பினர், மீன், விலங்குகள், செடிகொடிகள் முதலானவற்றை இவர்கள் குலச் சின்னங்களாகக் கொண்டிருந்தனர். இப் பழக்க வழக்கங்கள் இவர்களிடமிருந்து பின்வந்தவர்களால் பின்பற்றப் பட்டவையாகத் தோன்றுகின்றன. இவர்கள் மொழி என்னவென்று தெளிவாகத் தெரியவில்லை . எனினும், இவர்களது பேச்சு திரவிட மொழி களில் எந்தத் தாக்கு தலையும் உண்டாக்கவில்லையென்று சுநீத்குமார் சட்டர்சி என்பார் கூறுகிறார். ஆப்பிரிக்க- திரவிட மொழி நூலாய்வாளர் கருத்தின்படியும் நோக்கினால் இவர்கள் பழந்தமிழ்திரவிடமொழியே பேசி வந்தனர் என்பதை உணரலாம். ஆசுத்திரேலியர் நீகிரோப் பேரினத்தில் மற்றொரு பிரிவு ஆசுத்திரேலிய இனமாகும், ஆசுத்திரேலியர்மேனி கருப்பொடு நெருக்கமான நிறத்தினையுடையது. நடுநிலை வெண்பழுப்புநிற மேனியுடையாரும் இவர்களிடையே உண்டு தலைமயிர் நெளிவுடையதும் நேரானதுமா யிருக்கும். முதுமையில் இவர்கள் தலை வழுக்கையாகிவிடும். மேனியெல்லாம் மயிரிருக்கும். கண்கள் ஆழ்ந்து காணப்படும். தென்னிந்தியப் பழங்குடி மக்களான மலைவேடர், இருளர், குறும்பர், காடர், சோழகர், பழநிமலைப் பளியர், இலங்கையில் வேட்டை யாடி வாழும் மக்கள் முதலானோர் இவ்வினத்தவர் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். இன்று தாழ்த்தப்பட்டவர் எனக் கருதப்பெறும் பள்ளர் பறையர் முதலான தொல்தமிழர் எல்லாருமே இவ்வினத்தவர் எனக் சுருதுவோரும் உண்டு. இவ்வினம் நாளடைவில் ஆப்பிரிக்க நீகிரோவர் இனத்தொடு கலந்துவிட்டது. ஆசுத்திரேலியர் பண்பாடு நெல், வெற்றிலை, கரும்பு, பருத்தி முதலியவற்றைப் பயிரிட்டும், பருத்தியை நூற்று ஆடை நெய்தும் வாழ்ந்து வந்தனர். யானைகளைப் பழக்கிப் பயன்படுத்துதல், மஞ்சள், குங்குமம் பயன்படுத்துதல், வெற்றிலைப் பாக்குக்கொடுத்தல், அரச மரத்தைச் சுற்றுதல், கண்ணேறு கழித்தல், தீட்டுவிலக்குக் கொள்ளுதல், திங்களை அடிப்படையாகக் கொண்டு காலத்தைக் கணித்தல் முதலான பழக்கவழக்கங்கள் இந்த மக்களிடையே தோன்றியவையெனக் கருதப்படுகின்றன, 'பூமரங்கு" என்னும் வளைதடி, ஊதுகுழல்சுணை முதலான தொல்பழங்காலப் போர்க் கருவிகளை இவர்கள் முதன் முதலாகப் பயன்படுத்தினர். விலங்குகளைப் பற்றியக் கதைகள் முதன்முதலாக இவர்கள் உள்ளத்தில் தோன்றின. தாழிகளில் புதைத்தல், முன்னோரை வழிபடல் முதலான நெறிகளும் இவர்கள் வழித் தோன்றின. இவர்களது பழக்க வழக்கங்களில் பல இன்றும் தமிழர்களது பண்பாட்டில் கலந்துள்ளமையைக் காணலாம். நண்ணிலக் கடற்பகுதி இனத்தவர் நீகிரோவரின் ஈரினத்தவரின் கூறுபாடுகளும் தமிழக மக்களிடையே காணப்படுகின்றன என்று கூறப்படுவது போலவே, ஐரோப்பாவில் பேரினத்தவரின் கூறுபாடுகளும் தமிழக மக்களிடையே காணப்படுகின்றன என்னும் கருத்தும் நிலவுகிறது. தென்னிந்தியாவி லுள்ள திரவிடர் இவ் வினத்தவரென்று அட்டன் என்பார் கருதுகிறார். ஐரோப்பியர் பொதுவாக வெண்ணிற மேனியர். எனினும், ஐரோப் பாவில் வடமுனை (துருவப்பகுதியிலிருந்து தெற்கே வரவர வெண்மையில் --அழுத்தம் காணப்படுகிறது. நண்ணிலக்கடற்பகுதி மக்கள் மஞ்சள் கலந்த பழுப்பு நிதா(tab)முடையவர், அரேபியப் பகுதியில் வாழும் இப்போரினத்தவர் பழுப்பு நிறமுடையவர். துருவப் பகுதியில் வாழும் ஐரோப்பியப் பேரின் மக்களுடைய கண் நீலநிறமுடையது. நண்ணிலக்கடற் பகுதியில் வாழ்வோ ருடைய கண் கரும்பழுப்பு நிறமுடையது. பொதுவாக இவர்களது தலை மயிர் மஞ்சள், சிவப்பு, பழுப்பு, கருப்பு நிறங்களிலும், கலப்பு நிறங்களிலும் காட்சியளிக்கும், அவை நேராகவும் தனித்தனியாகவும் இருக்கும். இவர்களது மூக்கு அகன்று உயர்ந்து துளைகளை யுடையதாய் உயர்ந்து குறுகி விளங்கும். வாயிதழ்கள் மெலிந்திருக்கும், மங்கோலியர் இவர்கள் மஞ்சள் நிறமுடையவர்கள். தீடித்த, கருத்த நீண்ட தலைமயிரை உடையவர்கள், இவர்களின் நீண்டு உயர்ந்த முகம், புடைத்த கன்ன எலும்புகளுடன் காணப்படும். கன்னத்தில் கொழுத்த சனத் படிந் திருக்கும். கைகால்கள் குட்டையானவை. உகிர்கள் (நகங்கள் உட்புறம் குழிந்தனவாய்க் காணப்படும். இக் கூறுபாட்டினை யுடைய மங்கோலிய இனத்தவரும் தமிழகப் பகுதியில் வாழ்ந்தனர் என்பது எக்சுதெட்டு(Eickstedlt) என்பார் கருத்து. வைநாட்டுப் பகுதியில் வாழும் பழையன் இனத்து மக்கள் இப் பேரினத்தைச் சேர்ந்தவர் சென்று அவர் குறிப்பிடுகிறார், இங்குக் கூறப்பெற்ற பல்வேறு இனத்தவரும் எங்கிருந்து வந்தன ரெனக் கருதுகையில் ஒவ்வோரினத்தவரும் பெருந்தொகையினராய் உலகில் வாழும் பகுதிகளிலிருந்து தமிழகத்திற்கு வந்திருக்கவேண்டும் என்னும் முடிவுக்கு வருகின்றனர். இவ்வகையில் திரவிடர் நண்ணிலக்கடற்பகுதியி விருந்து இந்தியாவின் வடமேற்குக் கணவாய் வழியாகவும் மங்கோலியர் நடு ஆசியாவிலிருந்து இமயமலையிலுள்ள வடப்புறக் கணவாய்களின் வழியாகவும் வந்தனர் என்று கருதப்படுகிறது. மற்றும், ஆசுத்திரேலியப் பேரினத்தில் ஒரு சிற்றினத்தாராகிய மெலேனேசியர்(MelanEsian) (பசிபிக் கடல் தீவுப் பகுதி மக்கள் இனமும் தமிழகத்தில் உண்டு என்பது எக்சுதெட்டு என்பாரின் கருத்தாகும். சந்தவர், முண்டர்,ஏனாதியர் முதலானோர் இவ்வினத்தவர் என்று அவர் குறிப்பிடு கிறார். இவர்கள் கருமை கலந்த பழுப்புநிற மேனியுடையவர். இனப்பாகுபாடு தமிழகத்தைப் பொறுத்த அளவில் தனித்து ஆய்வு செய்யப்பெறவில்லை; இந்தியா என்னும் அளவிலேயே செய்யப்பட்ட டுள்ளது. சிந்துவெளியில் கிடைத்த சில மண்டையோடுகளை, இக்கால மக்களிடம் ஆய்ந்து கண்ட இனப்பாகுபாட்டு முடிவுகளோடு ஒப்பிட்டுச் சிலர் ஆராய்ந்தனர். இவாமார்க்கு (Larruark), தூர்வின் (Larwin) முதலானோர் இவர்களில் குறிப்பிடத்தக்கோர் ஆவர். தமிழகத்தில் ஆதிச்சநல்லூரில் கிடைத்த பதின்மூன்று மண்டையோடுகளும் ஆய்வு செய்யப்பெற்றன. தொடக்கத்தில் இவற்றைப்பற்றிய சரியான முடிவுகள் வெளியிடப் பெறவில்லை . பிகே. சட்டர்சி(B.K, Chatterjee), பி. குப்தா (P. Gupta) ஆகி யோர் அவற்றை ஆராய்ந்து தம் முடிவுகளை வெளியிட்டுள்ளனர். ஆதிச்ச நல்லூர் மண்டையோடுகள் ஆஸ்த்ரேலியரின் மூதாதையர்(Proto-Asioloid) நண்ணிலக் கடற் பகுதியினர் ஆகிய இனத்தவருடையவை என்பது அவர்களின் கருத்து'. திரவிடர் திபெத்திலிருந்து வந்த மங்கோலிய இனத்தவர் என்று கனகசபைப்பிள்ளை கருதுகிறார். வில்லவரும், மீனவரும் தமிழகத்தில் வாழ்ந்த பழங்குடியினர்; அரை நாகரிகமுடைய இக் கிளையினங்களை, நாகரிக வளர்ச்சியுடையபெருந்தொகையினரான நாகர் என்னும் வகுப்பார்' என்றனர். இவர்கள் இலங்கை, இந்தியா காழகம்பருமாயொன்மர் முதலிய பகுதிகளில் பரவி வாழ்ந்தனர். நாகர்களில் எயினர், ஒளியர், அருவாளர், பரதவர் முதலான பல கிளையினர் இருந்தனர் ஆரியர் இந் நாகரிடம் முதன்முதலாக எழுத்து முறையைக் கற்றுக்கொண்டனர். இதனால் அவர்கள் எழுத்து நாகரிதேவநாகரி எனப்பட்டது. பின்னர் வடமேற்குக் கனவாய் வழியாக ஆரியர்கள் இந்தியாவில் நுழைந்தனர். நடு ஆசியாவில் வாழ்ந்த ஆரியரில் மற்றொரு சாரார் திபெத்து, நேப்பாளம் வழியாக இந்தியாவினுள் நுழைந்தனர். முன்னவர் வெண் பொன்னிற மேனியர், பின்னவர் மஞ்சள் கலந்த பசும்பொன்னிற மேனியர், முன்னவர் பின்னவரை இயக்கர்(Yakshis) என்று அழைத்தனர். பின்னவர் உயர்ந்த நிலப் பகுதிகளில் வாழ்ந்தமையாலும், அறிவிலும், பண்பாட்டிலும் முன்னவரைக் காட்டிலும் சிறந்து விளங்கியமையாலும் உயர்ந்தவர்' எனப் பொருள்படும் “வானவர்" என்னும் சொல்லால் குறிக்கப்பெற்றனர். இவர்கள் நாளடைவில் வங்காளம் முழுவதும் பரவி வங்காள விரிகுடா வழியாகத் தமிழகத்திற்கும் இலங்கைக்கும் பரவினர். பின்னவர் மங்கோலிய மரபினரான மாறர் (பழையர், பாண்டியர், திரையர் சோழர்), வானவர்சேரர்) ஆகியோர் முறையே தமிழகத்தில் நுழைந்து பரவினர். இவர்கனையடுத்துக்கோசர்கள் (குசானர்கள் தமிழகத்தில் குடி புகுந்தனர். வம்ப மோரியர் இவர்களுக்குத் துணையாகத் தமிழகத்தில் நுழைந்து போரிட்டனர்' என்று சுனகசபையார் கூறுகிறார். மேலே கூறப்பெற்ற கனகசபையாரின் கருத்துகளில் பெரும் பாலானவை சொற்களை அடிப்படையாகக் கொண்டு உய்த்துணரப் பெற்றவை. சில பிற்கால இலக்கியக் குறிப்புகளைக் கொண்டும் கூறப் பெற்றவை. எனவே, வரலாற்று நோக்கில் இவற்றை முழுமையான அளவில் சரியென ஏற்பதற்கு இல்லை . ஏறத்தாழ கி. மு. 3000-ல் தொடங்கி கி.மு. 1800-ல் பேரனவில் எகிப்திலிருந்து வந்த மக்கள் இந்தியாவில் வாழ்ந்த பழங்குடி மக்களுடன் இரத்தக்கலப்புற்றுத் திரவிடர் ஆயினர் என்று எலியட்சிமிது (G, Elliot Srith), கார்டூலியசு (I.T. போTIelius) ஆகியோர் கருதுகின்றனர். திரவிடர் நடு ஆசியாவிலிருந்து பலுச்சிசுத்தானம் வழியே வந்து, இந்தியாவிற்குள் நுழைந்து இக் காலத்தில் தென்னிந்தியாவில் வாழ்கின்றனர் என்று கால்டு வெலார் மொழியடிப்படையில் ஆய்ந்து கூறியுள்ளார். நண்ணிலக் கடற்பகுதி மக்களுக்கும், திரவிடருக்குமிடையே யுள்ளன பண்பாட்டுக் கூறுகளை ஆராய்ந்த கென்னடி என்பார் திரவிடர், நண்ணிலக் கடற்பகுதியிலிருந்து வந்தவர் என்று கூறியுள்ளார். சேம்சு ஆர்னல்(JarTIES HOTTIEll) என்பார் திராவிடர் வருவதற்கு முன்பே தமிழகத்தில் ஓரினத்தவர் வாழ்ந்ததாகக் கூறுகிறார். உலகின் பல்வேறு பகுதிகளிலும் மக்களினம் தோன்றியிருக்க முடியும் என்னும் கருத்தையொட்டி, மக்களினம் தோன்றிய பகுதி களுள் ஆசியாவின் தென்கிழக்குப் பகுதியும் ஒன்று என்று அறிஞர் சிலர் கருதுவர். சிகாட்டு எலியட்டு(ScottElliot) என்பார் இப்போதுள்ள இந்துமாவாரியில் இருந்து கடல் கொள்ளப்பட்ட இலெமூரியாவே மாந்தன் பிறந்த மென்று கூறுகிறார். இலெமூரியாவைத் தமிழர் குமரிநாடு" என்று வழங்கிவந்தனர். இங்குத் தோன்றிய மக்கள் கடல் பொங்கியெழுந்தபோது உலகின் நாற் பக்கங்களிலும் ஓடிப் பிழைக்க முயன்றனர். இம் முயற்சியில் வடதிசையை நோக்கி வந்து பிழைத்தவரே இன்றைய தமிழக நிலப்பரப்பில் ஓங்கி வாழ்ந்தனர். உலகின் பல்வேறு பகுதி மக்கள் குடிபெயர்ந்து வந்து கலப்புற்ற போது திரவிடராக மாறிவிட்டனர். இதுவே மேற்கண்ட அறிஞர் கூறும் கருத்து. இலெமூரியாவைக் கடல்கொண்ட காலம் வரை உலகில் மாந்தர் தோன்றவில்லையென்று மண்ணியலார் (Geologist) கூறி, மேற்கண்ட முடிவை ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர். இலெமூரியாக்கண்டம் இருந்த காலத்தில் மாந்தன் தோன்றவில்லையெனின் மாந்தனின் மூதாதை யான விலங்கு ஒன்று அப்பகுதியில் வாழ்ந்திருக்கவேண்டும். கடல் கோளின் போது அவ்விலங்கு மாந்தன் தமிழகத்திற்கு வந்து, பிறவிடங் களில் மாந்தன் தோன்றினானென்பது போல, அவ் விலங்கிலிருந்து அதே காலத்தில் தமிழகத்திலும் மாந்தவினம் தோன்றியிருக்கலாம். எனவே, திரவிடரோ, அதாவது தமிழரோ அல்லது தமிழரின் மூதாதையரோ தமிழகத்தில் தோன்றித் தொன்றுதொட்டு வாழ்ந்து வந்தனர் என்னும் உண்மை வலிமை பெறுகிறது. | திரவிடரின் பண்பாடு தமிழர் திரவிடர்) அல்லது தமிழரின் மூதாதையர் எனக் கொள்ளத் தக்க ஆசுத்திரேலிய இனத்தவர் தமிழகத்தின் சிற்றூர்ப்பகுதிகளில் வாழ்ந்து வந்தனர். திரவிடரோ நகர்ப்புறங்களில் வாழ்ந்த நாகரிகமுடையோர் ஆவார். திரவிடர் சுவடிகளில் எழுதி வந்தனர். கோ', இறைவன்' என்னும் பெயர்க ளால் கடவுளைக் குறிப்பிட்டு வழிபட்டனர். திருமணம் செய்துகொண்டு அவர்கள் வாழ்க்கை நடத்தினர். சட்டங்களும், வழக்காற்று நெறிமுறை களும் அவர்களிடத்தில் இல்லை . ஈயம், வெள்ளீயம், துத்தநாகம், நீங்கலாகப்பொன், வெள்ளி முதலான பல்வேறு மாழைப் பொருள்களையும் அறிந்து அவர்கள் பயன்படுத்தினார்கள். உழவு, நெசவு கடல்வாணிகம் முதலான தொழில்களிலும் ஈடுபட்டிருந்த தொடு, அவற்றில் தேர்ச்சி பெற்றவராகவும் விளங்கினர். கலைத்துறையிலும், ஆன்மிகத் துறையிலும் நுண்மாண் நுழைபுலம் மிக்கோராய்த் திகழ்ந்தனர். இவர்கள் மலர்கள் தூவி இறைவனை வழிபடும் நெறியுடையவர். தாய்வழி மரபுரிமையைப் போற்றினர். இன்றைய இந்தியப் பண்பாட்டில் எண்பது விழுக்காடு திரவிடருடைய பண்பாடே என்று இந்தியப் பண்பாட்டாராய்ச்சியாளர் கூறுகின்றனர், 4.கழகக் காலம் தாய்மொழியாம் தமிழை வளர்ப்பதற்கென்றே தமிழகத்தில் தலை சிறந்த கழகம்சங்கம் ஒன்று வழிவழியாகச் செயல்பட்டு வந்தது என்பது செவிவழிச் செய்தியாகும். இத்தமிழ் வளர்த்த கழகத்தை "வழுதியர் அவை என்று குறிப்பிட்டனர். சான்றோர் பலரும் இதில் பங்கேற்றதால் இந்த அவை "சான்றோர் அவை' என்றும் அழைக்கப்பட்டது. கூடல், அவை, மன்றம் ஆகிய சொற்களாலும் தமிழ்க் கழகம் அழைக்கப்பட்டது. பாண்டி யரின் கோநகரப் புலவர் கூடித் தமிழ் வளர்த்ததால் 'கூடல்" என்றே அழைக்கப்பட்டது. இதனைச் சிறப்பாகத் தமிழ் கெழு கூடல்' என்று அழைத்தனர். கி. பி. 470-ல் வச்சிரநந்தி மதுரையில் சமணர்ச் சங்கம் ஒன்றைத் தொடங்கினான் என்பது வரலாற்றில் தெளிவாகக் காணப்படும் செய்தி யாகும். இது போன்ற சமண, சாக்கிய சங்கங்கள் தமிழக மெங்கும் தொடங்கப் பெற்றுச் சிறப்புற வளர்க்கப்பெற்றன. சிறப்புற்று நின்ற இச் சங்கங்களைப் போலவே கூடலிலிருந்த தமிழ்க் கழகமும் சிறப்புற்றிருந்த தால் இவர்கள் அதனையும் சங்கம்' என்றே அழைக்கத் தொடங்கினர். ஆகவேதான் சங்கம்' என்ற சொல் பிற்காலத்து வழக்கில் வந்தது என்றும், இது "கூடல்' என்ற சொல்லுக்கு நேராக உள்ளதென்றும் கூறுகிறோம். இதனால் “சங்கம்' என்ற சொல்லே சங்க இலக்கியங்களில் காணப்பட வில்லையென்றும், ஆகவே, சமற்கிருதம் தமிழகத்தில் கால்கொண்ட பிறகே 'தமிழ்ச் சங்கம்' ஏற்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறும் கூற்று ஏற்புடைத்தன்று என்பது புலனா கிறது. இறையனார் களவியல் உரை என்னும் நாலில்தான் முதன்முதலாகச் *சங்கம்' என்ற சொல்லும், தமிழகத்தில் மூன்று சங்கங்களிலிருந்தது பற்றிய வரலாறும் காணப்படுகின்றன. தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச் சங்கம் ஆகிய மூன்று சங்கங் களும் முறையே பாண்டியர்களின் கோநகர்க ளான கடல் கொண்ட தென்மதுரை, கபாடபுரம் கதவபுரம், வடமதுரை ஆகிய நகரங்களில் அமைந்திருந்தன. பாண்டியர் குமரிமுனைக்கும் அப்பாவிருந்த மதுரையைக்கோநகரமாகக் கொண்டு ஆண்டபோது அம் மதுரையே சங்கத்தின் தலைமை இடமாக இருந்தது. கடல்கோளால் குமரிக்கோடும், குமரிநாடும் அழிவுற்ற பின்னரும் அதற்கும் சற்று வடக்கிருந்த கதவாகபாடபுரத்தைக் கோநகரமாகக் கொண்டு ஆண்ட போதும் பாண்டியர் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தனர். அதுவும் கடலால் கொள்ளப்பட்டதால் அதற்கும் வடக்கிருந்த மதுரை இன்றைய மதுரை அவர்களின் கோநகராகவும், சங்கத்தின் தலைமை இடமாகவும் ஆகியது. இன்றைய மதுரை பண்டைய மதுரையை நோக்கி வடமதுரை ' யென்றும், இதை நோக்கி அழிந்துபட்ட பண்டைய மதுரை தென் மதுரை' என்றும் அழைக்கப்படுகின்றன. தலைக்கழகம் (சங்கம்) கடல் கொண்ட தென் மதுரையில் இருந்த தலைக்கழகத்தில் (சங்கத்தில்) "சிவபெருமான்' தலைவராயிருந்தார். அகத்தியர், முருகக் கடவுள், முரஞ்சியூர் முடிநாகனார், குபேரன் முதலாய ஐந்நூற்று நாற்பத் தொன்பது புலவர்கள் அதில் வீற்றிருந்தனர். அச் சங்கத்துடன் தொடர்பு கொண்ட 4449 புலவர்கள் நாடெங்கிலும் இருந்தனர். இச் சங்கம் 444) ஆண்டுகள் நடைபெற்றது. முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை முதலிய எண்ணிறந்த நூல்கள் இக்காலத்தில் இயற்றப்பட்டன. காய்சினவழுதியால் அமைக்கப்பெற்ற அக் கழகத்தை அவனுக்குப் பின்வந்த எண்பத்தெட்டு அரசர்கள் இதன் புரவலர்களாக நின்று காத்தனர் என்று களவியலுரை : கூறுகின்றது. தலைக்கழகத்து கால்கள் கடல்கோள்களால் அழிந்துபட்டன, எப்படியோ தப்பிய இலக்கண நூர்-லான அகத்தியம் மட்டும் அக் கழகத் தின் எச்சமாகவிருந்தது. அகத்தியத்தை இயற்றிய அகத்தியரிடம் தொல் காப்பியர், அதங்கோட்டாசான், காக்கைப்பாடினியார் முதலான பன்னிரு மாணவர்கள் கல்விகற்று அசத்தியத்திற்கு வழிநூலாகத் தொல்காப்பியம், வாய்ப்பியம், அவிநயம், காக்கைப் பாடினியம் முதலிய நூல்களை இயற்றினர். இப் பன்னிருவரும் கூட்டாகச் சேர்ந்து 'பன்னிருபடலம்' என்னும் இலக்கண நூலையும் இயற்றினர். அகத்தியம் தவிர்த்த மேற்கூறிய பிற நூல்கள் யாவும் பிற்காலத்தன. இடைக்கழகம் தென்மதுரை கடல் கொண்டபின் கதவாகபாடபுரத்தில் இரண் டாம் கழகம் ஏற்பட்டது. இதை முதல், மூன்றாம் கழகங்களை நோக்கி இடைக்கழகம் என்கிறோம் தொல்காப்பியர் உள்ளிட்ட ஐம்பத்தொன்பது புலவர்கள் இச் சங்கத்தில் அமர்ந்து தமிழாய்ந்தார்கள். வெண்டேர்ச் செழியன் முதலாகப் பாண்டியன் முடத்திருமாறன் ஈறாகஐம் பத்தொன்பது புரவலர்கள் இக் கழகத்தைக் காத்தனர். இவர்களுள் இவர்புபவர்களாகவும் இருந்தனர். இச் சங்கம் மூவாயிரம் ஆண்டுகள் நடைபெற்றது. இச் சங்கதி தோடு தொடர்பு கொண்ட புலவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்து எழுநாறு ஆகும். இவர்கள் இயற்றிய நூல்களும் கணக்கில் அடங்கா. கலி, குருகு, வெண்டாளி முதலிய இலக்கியங்களும், அகத்தியம், தொல் காப்பியம், மாபுராணம், இசை நுணுக்கம், பூதபுராணம் முதலிய இலக்கண நூல்களும் இக் காலத்தில் வழக்கில் இருந்தன. கடைக்கழகம், இடைக்கழகமிருந்த கதவகபாடபுரமும் கடல் கொண்டபின் வட மதுரையில் உத்தர மதுரை கடைசியாகப் பாண்டியர் கழகம் அமைத்துத் தமிழ் வளர்த்தனர். இக்கழகத்தில் நாற்பத்தொன்பது புலவர்கள் வீற்றிருந்து தமிழாய்ந்தனர். இவர்களுள் மூவர் பாண்டிய மன்னர். இக் கழகத்தை நிறுவிய முடத்திருமாறன் முதல், பாண்டியன் உக்கிரப் பெருவழுதி ஈறாகப் பாண்டிய மன்னர் பலரும் இதன் புரவலர்களாயிருந்தனர். இஃது 1850 ஆண்டுகள் நீடித்தது. இன்று நமக்குக் கிடைத்துள்ள எட்டுத்தொகை, பத்துப்பாட்டு முதலிய நூல்களும், அழிந்துபட்ட பல நூல்களும் இக் காலத்து நூல்களேயாம். கழகம் இருந்ததா? இவ்வாறு மூன்று சங்கங்களைப்பற்றி இறையனார் களவியல் உணரகாரர்தெளிவாகக் கூறியிருப்பினும் 'கழகம்' என்ற ஒரு நிறுவனமே இல்லையென்பாரும் உளர். இதற்கு அவர்கள் கூறும் உரைகள் மிகஎளியன. சிவபெருமான் தலைமை தாங்கியது. நக்கீரன் அவரிடத்தில் சொற் போரிட்டது முதலியன அறிவியலுக்கும், அளவையியலுக்கும் ஏற்புடைத் தன்று என்பதும், ஆகவே 'சங்கம்' என்பது ஒரு தொல்கதை போன்ற புனை கதையே என்பதும் அத்தகை யோர் கருத்து. பிற்காலத்துத் தோன்றிய குமுகாய மனவளர்ச்சியும், சமண, சாக்கிய, ஆரிய சமயங்கள் தோற்று வித்தத் தெய்வீகத் தன்மையுமே இவ்வாறு எந்த ஒரு நிறுவனத்தையும், அல்லது நற்செய்தியையும் கடவுளோடு தொடர்புடையதாய்க் கற்பித்துக் கூறி அதனைப் பேணிக்காக்கும் கடமையைப் புனிதமுடையதாக ஆக்குவது மரபாயிற்று. சிவன், முருகன் முதலிய கடவுளரை விடுத்துக் கழகம் ஆற்றிய பணிகளை நோக்கின் அத்தகையதொரு நிறுவனம் இருந்தது உறுதியாகிறது, அடுத்து, முதல், இடை, கடைக் கழகங்கள் நடைபெற்ற ஆண்டுக் கணக்குகள், புலவர், புரவலரின் எண்ணிக்கைகள் முதலிய வற்றையும் இவர்கள் ஏற்றினர். நாம் மேலே கூறியபடி இறையனார் 'களவியல் உரை கி, பி, ஏழாம் நாற்றாண்டில் எழுந்தது. செவி வழிச் செய்தியாகக் கேட்டதையே இவ்வுரையாசிரியர் எழுதினார். இதில் கூடுதல், குறைவுகள் இருக்கலாம். ஆயினும் தள்ளமுடியாத அளவுக்கு உண்மை களும், சான்றுகளுமாகக் கழக நூல்களும் உள்ளன. மூன்றாவதாகப் பாண்டியர் அவையிலும், பிற மன்னர்கள் அவை களிலும் புலவர்கள் கூடுவது இயல்பே யென்றும், நாடு முழுவதிலு மிருந்த புலவர்கள் ஆங்காங் கேயும் பல நூல்களை அல்லது பாடல் களை யாத்திருப்பரென்றும், ஆகவே 'சங்கம்' என்ற நிறுவனத்தான் 'கால்களை' அரங்கேற்றியது என்பது ஏற்புடைத்தன்று என்பதும் இவர்களின் கூற்றாகும். நாமறிந்தவரை இருமுறை தமிழகத்தில் கடல் கோள்கள் ஏற்பட்டிருக்கின்றன. இதனால் நூல்களும் அழிந்து பட்டிருக்கலாம். உயிர் தப்பிச் சென்ற புலவர்கள் சிலரின் நூல்களையும் ஆங்காங்கே சிதறிக் கிடந்த பாடல்களையும் தொகுத்து வகைப்படுத்தி வெளியிடப் புலவர்கள் பலரைக் கொண்ட குழு இருந்தேயாதல் வேண்டும். அத்தகைய புலவர்கள் அடங்கிய நிறுவனமே 'சங்கம்' (கழகம் ஆகும், இக் கழகம் இருந்ததற்கான எண்ணிறந்த சான்றுகள் பிற்கால நூல்களில் காணப்படுகின்றன. அயலசுச் சான்றுளும் உண்டு. நாயன்மார்கள், ஆழ்வார்கள் முதலியோரும் மதுரையில் சங்கம் இருந்ததைப் பற்றிக் குறிப்பிடுகின்றனர். இவர்களின் பாடல்கள் இறை நெறிப்பாடல்களாகவும், தொல்கதைபுராணக் கருத்துகளைக் கொண் டவையாகவும் இருப்பதால் இவற்றை வரலாற்றுச் சான்றுகளாகக் கொள்ள முடியவில்லை. ஆயினும், சங்கத்தை நடுவாகக் கொண்டே இவை புனையப்பட்டிருப்பதால் கழகம் என்ற நிறுவனமிருந்ததை உறுதிப்படுத்த முடிகிறது. மன்னர் பலரும், உரையாசிரியர்களும் மதுரையில் கழக மிருந்ததை உறுதிப்படுத்துகின்றனர். இதிலிருந்து தமிழைப் பாடிய நிறுவனமிருத்தவிடம் 'மதுரை' எனப்பட்டதென்றும், புலவர்கள் கூடும் (வாதிட்ட ஆய்ந்து தமிழ் நூல்களை வெளியிடும் பொருட்டுக்கூடிய) இடமாக இருந்ததால் மதுரை 'கூடல்' எனப்பட்ட தென்றும் அறிகிறோம். கழக (சங்க)க் காலம் எது? ஆயின் அக்கழகக் காலம் எது? இது பற்றியும் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. சுருங்கக்கூறின் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கிபி. பத்தாம் நூற்றாண்டு வரையிலான கால இடை வெளிக்குள் இவர்களின் கருத்துகள் அடங்குகின்றன, ஈண்டு காலம் கணித்துப் பேசப்படும் கழகம் கடைக் கழகமே ஆகுமென் பதையும் நாம் நினைவுகூர்தல் வேண்டும். கால்டுவெல் கிபி. 9 ஆம் அல்லது 10 ஆம் நாற்றாண்டிற்குப் பிறகே கழகம் இருந்தது என்றார். அவர் காலத்தில் தொல்காப்பியமும் பிற கழக நூல்களும் நன்கு அறியப்படவில்லை. எனவே மகத்தால் இந்த முடிவுக்கு வந்தார். பரிபாடலிலும், சிலப்பதிகாரத்திலும் காணப்படும் சில நிகழ்ச்சி களைவானியலடிப்படையில் ஆராய்ந்த எல்.டி சாமிக்கண்ணுப்பிள்ளை கழகக் காலம் கி.பி. 7 ஆம் அல்லது 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்கிறார். இவருடைய கணிப்புத் தவறானது என்று நிமித்த நூல் வல்லுநர் களான கே.சி. சங்கரையர், கே.சி. சேசையர், திருவாரூர் எசு. சோம் சுந்தரதேசிகர், பிடி சீனிவாசையங்கார் முதலியோர் கூறுகின்றனர். மணிமேகலையில் வரும் 'குச்சரக் குடிகை குமரியை மரீஇ' என்ற தொடர்களைக் கொண்டு குச்சரர் வாழ்ந்த சிபி. ஆறாம் நூற்றாண்டில்தான் கழகம் இருந்ததென்று மு. இராகவையங் காரும்,பர். காண்பி. சக்கரவர்த்தியும் ஒப்புகின்றனர். மு. இராகவையங்கர் பின்னர் சுழசுசிகாலம் கிபி. நான்காம் நூற்றாண்டாகும் என்று தம் கருத்தை மாற்றிக்கொண்டார். ; கழக நூல்களில் யவனர்களைப் பற்றிப் பல குறிப்புகள் காணப்படு கின்றன. 'யவனர்' என்ற சொல் கிரேக்கரையும் உரோமரையும் குறித்தது. யவனருக்கும் தமிழகத்திற்கும் இடையே யிருந்த தொடர்புபற்றித் தமிழ் இலக்கியங்களேயன்றி அயலகச் சான்றுகளும் கூறுகின்றன. பாண்டிய நாட்டுத் தூதுவர் இருவர் உரோமப் பேரரசன் அசுசுத்தசுAugustus) அவைக்குச் சென்றதையும், ஆர்மசு துறையிலிருந்து இந்தியாவுக்கு ஏறத்தாழ நூறு மரக் கலங்கள் ஓடியதைப் பற்றியும் சித்திராபோ (Strabo) என்ற கிரேக்க ஆசிரியர் குறிப்பிடுகிறார். செங்கடல் தரைச் செலவு(Periplus of the crithran 5Ea) என்னும் ஞாலவியல் நூலிலும் தாலமி (Ptolemy) என்பாரின் குறிப்புகளி லிருந்தும் தமிழகம் கிரேக்கருடன் கொண்டிருந்த வணிகத் தொடர்பை அறிகிறோம். இவை யாவும் இன்றைய அகழ் வாராய்ச்சிகளில் கிடைத்துள்ள உரோம நாணயங்களாலும், குறிப்பாக அரிக்கமேட்டில் கிடைத்துள்ள பண்டகச் சாலைகள், சாயத் தொட்டிகள், கண்ணாடி, பளிங்கு, பவழம் மணிவகைகள், பதக்கங்கள், மட்பாண்ட ஓடுகள், மதுச்சாடிகள், முதலியவற்றாலும் உறுதி செய்யப்படுகின்றன. இவற்றை ஒப்புநோக்கிக் கடைக்கழகக் காலத்தைக் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து முதல் மூன்று நாற்றாண்டுகளுக்குள் கிபி. மூன்றாம் நூற்றாண்டு வரையுள்ள காலத்தில் நிலைப்படுத்தலாம். பேராசிரியர் எசு. வையாபுரிப்பிள்ளை கழகக் காலப் புலவர்கள் கி.பி. முதல் மூன்று நாற்றாண்டைச் சேர்ந்தவர்கள் என்றும், ஆனால், அவர்களின் பாடல்கள் கி.பி. ஆறாம் நூற்றாண்டில்தான் நூல்களாகத் தொகுக்கப் பெற்றன வென்றும் கூறுவது ஏற்புடைத்தாயில்லை, மேற்கண்டபடி சமகாலத்தன்னக, அயலகச் சான்றுகளின் அடிப்படையில் கழகக்காலத்தைத் தற்காலிகமாய்க் கணித்து விட்டோம். ஆயினும் மேற்கண்டார் கூற்றுகளுக்குச் சுருக்கமாக விடையளித்தலும் சுடமையாகும். பல்லவர், களப்பிரர் காலம் கிபி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது. இவர்களைப் பற்றிக் கழகக்கால நூல்களில் குறிப்புகள் இல்லை. ஆகவே, கழகக்காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டது எனக் கோடல், பொருத்தமாயில்லை. கிபி. ஏழாம் நூற்றாண் டில் தோன்றிய பத்தி யியக்கம்இறைநெறி இயக்கம் நாயன்மார் களையும் ஆழ்வார்களையும் உலகிற்கு அளித்தது. அவர்களின் பாடல்களுக்கும் கழகப் பாடல்களுக்கும் இடையே தோன்றும் உளப்போக்கு, வடிவம், குமுகாய, அரசியல் வடிவங்கள் முதலிய வேறுபாடுகளைக் கொண்டும் கழக நூல்கள் இவற்றிற்கு முற்பட்டவை யென்பதை உணரலாம். மோரியர் மெளரியர், தமிழகத்தின் மீது படையெடுத்த செய்தியை அகநானூறு, புறநானூறு முதலிய சங்க நூல்களில் காண்கிறோம். அவ்வாறு படை யெடுத்த மெளரியமோரிய) மன்னன் பிந்துசாரன் என்பானேயாவான். அவன் கிமு. 300-லிருந்து 272 வரைமௌரியப் பேரரசனாக விளங்கினான், ஆகவே, கழகக்காலம் கி.மு. 300-க்கும் முற்பட்டதென்பது தெளிவாகிறது. அசோகனுடைய கல்வெட்டுகளிலும், சேர, சோழ, பாண்டியர், சத்திய புத்திரர் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. சந்திரகுப்த மெளரியன் தென்னகம் போந்து வெள்ளைக்குளத்தில் சரவணபெலகோலா) உயிர் நீத்ததையும் அறிகிறோம். இவர்களின் காலங்களை மனத்திற்கொண்டு நோக்கும் போது கழகக் காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதே யென்பது தெளிவாகிறது. சேரன் செங்குட்டுவன் சுண்ணகிக்குச் சிலையமைத்து விழாயெடுத்தபோது இலங்கை மன்னன் முதலாம் சுயவாகு (கி.பி. 171 10வும் விழாவில் கலந்துகொண்ட செய்தியி லிருந்தும் இக் கருத்து வலிவுபெறுகிறது. மேலும், சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் சாதவாக னர் மரபைச் சார்ந்த யக்ஞஸ்ரீ சதகர்ணி நாற்றுவர் கன்னர் கிபி.170 முதல் 19 வரை ஆண்டவன். இவன் சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலை வடிக்க இமயமலைக்குச் சென்றபோது கங்கையைக் கடக்க உதவிய செய்தியும் சிலப்பதிகாரத்தில் பெறப்படுகிறது. இதிலிருந்து கழகக்காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதே என முடிவு செய்யலாம். பிற்கூறிய சான்றுகளைக் கொண்டுதான் திரு. கனகசபைப் பிள்ளை, பர். எசு. கிருட்டிணசாமி அய்யங்கார் ஆகியோர் கி.பி. இரண்டாம் நூற்றாண்டே சங்க காலம் என்றனர். இவர்களுக்கும் ஒருபடி மேலாக திரு. எம். எசு. பூரணலிங்கம்பிள்ளை , திரு. கா. சுப்பிரமணியம் பிள்ளை திரு. வீ. ஆர். இராமச்சந்திர தீட்சதர், டாக்டர். உ. வே. சாமிநாதையர், தெ. பொ. மீனாட்சி சுந்தரம் முதலியோர் கிபி. முதல் நாற்றாண்டே சங்க காலம் என்றனர். முடிவுரை கிமு 300-க்கும் சி.பி.300-க்கும் இடைப்பட்ட காலமே கழகக் காலம் ஆகும், (அ) கழகக்காலச் சேரமன்னர்கள் சேரநாடு தமிழ்நாடே இன்றைய கேரள நாடேகழகக்காலத்தில் சேரநாடு எனப்பட்டது. இது செந்தமிழ் வழங்கியநாடாகவிருந்த போது ஆண்டமன்னர்களே சேர மன்னர்கள் ஆவர். ஆனால், கி.பி. 16ஆம் நூற்றாண்டில் எழுந்த கேரள உற்பத்தி, 'கேரள மான்மியம்' என்ற இரு நூல்கள் கேரளம் தமிழ்கூறு நல்லுலகமாக இல்லை யென்றும், கேரளர் தமிழர் அல்லர் என்றும் கூறுகின்றன. இது முற்றிலும் தவறான கருத்து. தமிழ்நாட்டுச் சேரர் வழக்காற்றில் சேரலர் எனப்பட்டனர். சேரலர் என்ற சொல் பின்னர் கேரளர் எனவாயிற்று. சேரநாடு சாரல் நாடு என்பதாம் (சாரலம்- சேரலம்-கேரளம்) கேரள நாடாயிற்று. இடைக்காலத்துத் தமிழ்க் கல்வெட்டுகளில் காணப்படும் அந் நாட்டு ஊர்களும், மக்களும் செந்தமிழ்ப் பெயர்க ளாகவே உள்ளன. கி.பி. 17ஆம் நாற்றாண்டுவரை இந் நாட்டில் மக்கள் பேசிய மொழியும், அரசியல் மொழியும் தமிழாகவே இருந்தது. கடல் சேர்ந்த நிலத்தைச் சேர்ப்பு என்றும், அந்நிலத்துத் தலைவர் களைச் சேர்ப்பர் என்றும் கூறுவது தமிழ்நூல் வழக்கு, இதன்வழி சேரநாடு முதலில் சேர்ப்புநாடு' என்றும், மன்னர் சேர்ப்பர்' என்றும் வழங்கப் பட்டுப் பின்னர் சேரநாடு, சேரர் என வழங்கலாயினர். சேரர், சேரலர், சேரல் எனவாகி, அயலவரால் கேரளர்' என அழைக்கப்பட்டனர். மலைசூழ்ந்த அந் நாடு 'மலைநாடு' என்றே முதலில் அறியப்பட்டது. அயலவரால் பின்னர் 'மலபார்' (மலைவாரம்) என்று அழைக்கப்பட்டு விட்டது. ஆகவே, சேரநாடு செந்தமிழ் நாடே என்பதையும், தொன்று தொட்டு அங்கு ஆண்டு வந்த மன்னர்களும் தமிழர்களே என்றும் தெளிவாக அறியலாம். இவர் சோழ பாண்டியரிலும் காலத்தால் முந்தியவர் என்றும் தமிழகத்தையாண்ட முடியுடை வேந்தர் மூவரிலும் முதலில் வைத்து எண்ணத்தக்கவர் என்றும் கூறுவர். | சேரநாட்டின் தொன்மை சேர நாட்டின் தொன்மையைக் கணித்துக் கூற முடியவில்லை. இந் நாட்டைப் பற்றிய குறிப்புகள் கழகத்தொகை நூல்களில் காணக் கிடைக் சின்றன. பதிற்றுப்பத்தில் பத்துச் சேர மன்னர்களைப்பற்றிக் கூறப்படுகிறது. ஆனால், அதில் முதற்பத்தும், கடைசிப் பத்தும் நமக்குக் கிடைக்கவில்லை. ஆதலால் எட்டுச் சேர மன்னர்களைப் பற்றித்தான் அதில் அறிய முடிகிறது, அகநானூறு, புறநானூறு ஆகிய நூல்களில் வரும் குறிப்புகளும், சங்க மருவிய காலத்து நூல்களான சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களில் வரும் விரிவான குறிப்புகளும் நமக்குத் தக்க சான்றுகள் ஆகின் றன. இவ்விரு நூல்களும் கிறித்தவ ஆண்டுமானசகாப்தத்திற்குப் பிற்பட் டவை. எனவே, கிறித்துவுக்கு முற்பட்ட சேரநாட்டு வரலாற்றை அறிவதற் கான சான்றுகள் தொல்காப்பியமும், கழகத்தொகை நூல்களுமேயாம். கிறித்துவுக்கு முற்பட்ட சேரநாட்டைப் பற்றி அறிவதற்கு அயலகச் சான்றுகள் ஏராளமாய்க் கிடக்கின்றன. அவற்றுள் இரிக்கு வேதம் (Rig Wedn), தைத்தீரியம், வியாசபாரதம், இராமாயணம் ஆகிய வற்றில் சேரர்களே யன்றி, சோழ பாண்டியரும் அறியப்படுகின்றனர். இரிக்கு வேதத்தில் முடியுடை வேந்தர் மூவர் பற்றியும் குறிப்புகள் காணப்படுகின்றன. உதிட்டிரன் செய்த இராசசூய வேள்விக்கு மூவரும் வந்தனர் என்று பாரதம் கூறுகிறது. இவ்வாறு வேத, இதிகாச காலங்களிலும் சேர, சோழ, பாண்டியர் சிறப்புற ஆண்டதையறிகிறோம். அசோகருடைய கல்வெட்டில், சேர, சோழ, பாண்டியர் குறிப் பிடப்படுகின்றனர். இவர்கள் அசோகருடைய ஆட்சிக்கு உட்படாமல் ஆண்டனர் என்றும், ஆயினும் இவர்களுடைய நாடுகளிலும் யவன அரசனான ஆண்டி யோகசு நாட்டிலும் தம்மால் அனுப்பப்பட்ட புத்தத் துறவிகளால் பிக்குகளால் புத்தம் பரப்பப்பட்டது என்றும் அசோகர் குறிப்பிடுகிறார். ஆண்டியோகசு கி.மு. 261-லிருந்து 246 வரை சிரியா, மேலையாசியா ஆகியவற்றை ஆண்டவன். அசோகர் கி.மு. 273 விருந்து 234 வரை வட இந்தியாவை ஆண்டவர். ஆகவே, கி.மு. மூன்றாம் நூற்றாண்டி. லும் சேர, சோழ, பாண்டியநாடு தனிச் சிறப்புகளுடன் திகழ்ந்ததை அறிகிறோம் கிமு, ஐந்தாம், ஆறாம் நூற்றாண்டுகளுக்கு முன்பே கிரேக்கர்கள் மேலைக்கடல் துறைகளுடன் வாணிபம் செய்தனர். கி.மு. நான்காம் நூற்றாண்டில் சந்திரகுப்த மெளரியனின் அவைக்கு வந்த செல்யூச்சு நிகேட்டர் விடுத்த மெக்சுதனிசு என்னும் தூதுவர் சேரர்களைப் பற்றியும், குடநாட்டு மற்றவரைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். தென்பாண்டிநாட்டு வேந்தன் ஒருவன் யவனவேந்தனான அக்சுத்தசு(Augustus) அன்வைக்குத் தாது அனுப்பினான் எனவும், அந் நாட்டுத் தூதுவரைத் தான் வரவேற்றான் எனவும் அறிகிறோம். தமிழ்நாட்டு வாணிபம் பற்றியும், மரக்கலங்களைப் பற்றியும் பருவக் காற்றுகளைப் பற்றியும், கடல் அமைப்புகளைப் பற்றியும், யவன நாட்டில் பல நூல்கள் எழுதப்பட்டன, 'பெரிப்புளுசு' என்ற தால் அவற்றுள் சிறப்பானது. இதற்கு முன்பாகவே எகிப்தையாண்ட தாலமிகள் அரபிக்கடலில் வீசும் பருவக் காற்றை ஆய்ந்து வெளியிட்டுள்ளனர். இப்பாலசு' என்னும் கிரேக்கன் அரபிக்கடலில் வீசும் பருவக்காற்றைக் கண்டறிந்து கூறியதால் கிரேக்கர்கள் துப் பருவக்காற்றை 'இப்பாலசு' என்றே அழைத்தனர். கிபி, முதலாம் நாற்றாண்டில் பிளைனி என்பான் அரபிக்கடல் செலவு பற்றிய நூலொன்றை எழுதினான். இவன் எகிப்தி லுள்ள ஓசெலிசு துறையிலிருந்து பாண்டிநாட்டுத் துறையான கொற்கை வரையுள்ள கடல்வழியை விவரித்துள்ளான்; சேரநாட்டு முசிறித் துறையைவிடப்பாண்டிநாட்டுத் துறை சிறந்ததென்று கூறுகிறான். மேலும் இவன் சேர, பாண்டிய மன்னர்கள் பற்றியும் குறிப்பிடுகிறான். இதனால், கிமு முதலாம் தாற்றாண்டில் சேரநாட்டின் தென்பகுதியில் பாண்டியநாடு இருந்ததென்பதையற்றியலாம். இதே நாற்றாங்காடில் வாழ்ந்தவன் ஆசிரியன் பெத்ரோனியசுயவன மகளிர் தமிழகத்து ஆடம்பரப் பொருள்களுக்குப் பெருந்தொகையை வீணாக்கியதையும் தங்கள் உடல், புறத்தே தெரியுமாறு 'பாலாவி யன்ன தமிழக ஆடைகளை அவர்கள் அணிந்ததையும் கண்டித்துக் கூறியுள்ளான். இவ்வாடைகள் காற்றால் ஆகியவை முகிலால் ஆகியவை என்றெல்லாம் கூறுகிறான். கி.பி. 126-16-ல் வாழ்ந்த தாலமி என்பான் சேரமன்னரைப் பற்றியும், கருவூரைப்பற்றியும் எழுதியுள்ளான். கிபி. 226 அளவில் எழுதப்பட்ட பியூதிங்கர் அட்டவணையில் முசிறியி விருந்த யவனரின் குடியிருப்புப்பற்றியும், அங்கிருந்த துக்கத்தக் கோயில் பற்றியும் குறிப்பிடப்படுகிறது. மணிமேகலையில் கோவலனுக்கும் ஒன்பது தலைமுறைக்கு முன் வாழ்ந்த அவன் மூதாதையொருவனின் நண்பனான சேர வேந்தன் "குடக்கோசி சேரலன் -குட்டுவன் பெருந்தகை* இமயத்தில் விற்கொடி பொறித்தான் எனக் குறிப்பிடப்படுகிறது. கோவலன் வாழ்ந்த காலம் தோராயமாக கி.மு.180 எனலாம். ஆகவே, குடக்கோச் சேரவன் குட்டுவன் பெருந்தகையின் காலம் தோராயமாகக்கிமு. 130 180 - 50=130கிமு ஆகும். கி.மு. முதல் நூற்றாண்டிலேயே சேரர் இமயமலை வரை ஆளுமை பெற்றிருந்தனர் என்பதை இதனால் அறிகிறோம். சேரநாட்டின் எல்லைகளும் பிரிவுகளும் பண்டைய சேரநாட்டின் எல்லைகள் எவையெனத் திட்டவட்ட மாக வரையறுக்க முடியாது. ஏனெனில், காலந்தோறும் இதன் எல்லைகள் வேறு வேறாகவிருந்தன. ஆயினும் இயற்கையமைப்பு களையொட்டி இதன் எல்லைகளைக் கணித்துக் கூறலாம். மேற்கில் அரபிக் கடலையும், கிழக்கில் கிழக்குத் தொடர்ச்சிமலையையும், வடக்கில் தபதியாற்றையும், தெற்கில் பொதிகை மலையையும் இஃது எல்லைகளாகப் பெற்றிருந்தது. வடக்கி அன்னவாணியாறும், தெற்கிலுள்ள பொன்வானியாறும் முறையே இதன் வடக்கு, தெற்கு எல்லைகளாக இருந்தனவென்றும் கூறுவர். இத்தகைய எல்லைகளுக் கிடையில் மலைகள் பலவற்றையும் மேடுபள்ளங்களையும் கொண்டு இயற்கை இடர்ப்பாடுகளுக்கிடையில் திகழ்ந்த இந் நாடு மேன்மை யடைவதற்குப் பல காலமாகியிருக்க வேண்டும். இது மேலைக் கரையில் அமைந்திருந்தமையும் இடர்ப்பாடுகளுமே இதன் முற்போக் குக்குக் காரணிகளாக அமைந்தன. முசிறி, தொண்டி, மாந்தை முதலிய துறைமுகப் பட்டினங்கள் இந்நாட்டின் வணிக வளத்தைப் பெருக்கின. பண்டைய சேரநாடு பூழி, குடம், மங்களபுரம், குளத்து நாடு. வள்ளுவ நாடு, ஏரநாடு, கற்கா, குட்டம், வெங்காநாடு, ஒட்டநாடு, வேணாடு, நாஞ்சில் நாடு என்னும் பன்னிரண்டு பகுதிகளாகப் பிரிக்கப் பட்டிருந்தது. இப் பிரிவுகளும் நிலைத்ததாயில்லை. ஒரு காலத்தில் சேரநாடு இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. வடபாகம் குட்டநாடு என்றும், தென்பாகம் குடநாடு என்றும் அழைக்கப்பட்டன. காலப்போக்கில் பொறைநாடு, கடுங்கோநாடு, பூமிநாடு என்னும் பிரிவுகளும் ஏற்பட்டன. இவற்றில் அரசிளங்குமரர்கள் ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தப்பட்டு முடியுடை வேந்தருக்கு அடங்கியாண்டனர். இவர்களில் யார் மூத்தவனோ அவனே அடுத்த முடியுடை வேந்தனாக வருவான். பொறை நாட்டை யாண்டவன் *பொறையன்" என்றும், கடுங்கோ நாட்டை யாண்டவன் "கடுங்கோ' என்றும், குட்ட நாட்டை ஆண்டவன் குட்டுவன்" என்றும், குடநாட்டையாண்டவன் குடக்கோ' என்றும் அழைக்கப்பட்டனர். கொண்கனநாடு, புன்னாடு ஆகியவற்றை யாண்டவர்கள் சேரர் குடிக்குரிய நன்னர் மரபினர் ஆவர். தகடூர் நாட்டை யாண்டவர் வேளிர் தலைவரான அதியமான்ளார். இவர்களும் சேரர்குடி மரபினரே. இவர்களைத் தவிர சிற்றரசர் பலரும், குறுநில மன்னர்களும், பல குடியினரும் சேர நாட்டில் இருந்தனர். அரசுரிமை ஒரு வேந்தனுக்கு மூன்று புதல்வர்கள் இருப்பின் அகவைப்படி ஒருவர் பின் ஒருவராகப் பட்டத்துக்கு வருவர். பிறங்கடை உரிமைப்படி பட்டமேற்கும் வழக்கமில்லை. மருமக்கள் தாயமுறை பின்வந்த ஆரியப் பார்ப்பனர்களால் நம்பூதிரிப் பார்ப்பனர் கையாளப்பட்டதேயொழியச் சேரருக்குள் இவ் வழக்க மில்லையெனச் சிலர் கருதுகின்றனர். (எ-டு) உதியஞ்சேரலாதனுக்கு இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பல்யானைக் செல்கெழு குட்டுவன் என்ற இரு புதல்வர்கள் இருந்தனர். உதியஞ்சேர வாதன் முடியுடை வேந்தனாக இருந்தபோது இவ்விருவரும் வெவ்வேறு நாடுகளில் இளவரசர்களாக இருந்தனர். இவனுக்குப் பின், மூத்தவனான இமயவரம்பனும், அவனுக்குப் பின் இளையவன் பல்யானைச் செல்கெழு குட்டுவனும் ஒருவர் பின் ஒருவராக முடியுடை வேந்தராயினர். இதைப் போலவே இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும் இரு வேறு மனைவியர் ~~ களுக்கும் பிறந்த களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆகியோர் மூத்தவனுக்குப்பின் அடுத்த மூத்தவன் என்ற முறையில் ஒருவர் பின் ஒருவராக ஆண்டனர். இதே முறையைத்தான் சோழரும் பாண்டியரும் கையாண்டனர். மருமக்கள் தாயமுறையே தொன்று தொட்டுச் சேர நாட்டில் நிலவிவந்தது என்று நாவலர் சோமசுந்தர பாரதியார் கூறுகிறார். சேரரின் சிறப்புப் பெயர்கள் வானவரம்பன், வானவன், குட்டுவன், குடக்கோ, பொறையன், இரும்பொறை, கடுங்கோ, கோதை முதலியன சேரரின் சிறப்புப் பெயர்களாம். சேரலர், சேரல், சேரமான் என்பன பொதுப்பெயர்களாம். சேரமன்னர்களின் வரலாற்றை யறியும்போது உதியன் குடும்பத்தார், பொறையன் குடும்பத்தார் எனப் பிரித்துப்பார்த்தலும் உண்டு கோநகரம் சேரநாட்டுப் பகுதிகளில் குட்டநாடுசெழிப்புடையதாக இருந்தது. இங்கிருந்துதான் சேரர் ஆட்சி படிப்படியாக வளர்ச்சியடைந்திருக்க வேண்டும். இதில்தான் கோநகரான வஞ்சிமாநகர் (அல்லது) திருவஞ்சிக் களம் இருந்தது. குடநாட்டிலிருந்த தொண்டியும் கோநகரமாக இருந்திருக் கிறது. தொண்டி, முசிறிக்கு அடுத்த முகாமை வாய்ந்த துறைமுகப்பட்டின மாகவும் விளங்கியது. பண்டைய யவனர்களாலும் இந்து அறியப்பட் டிருந்தது என்பதைப் பெரிபுளுசு" என்னும் நூலிலிருந்து அறிகிறோம். கழக நூல்களும் இவ்விரு கோநகரங்கள் பற்றியும் முசிறி பற்றியும் கூறுகின்றன. சிலபோது சுருஷரும் கோநகராய் விளங்கியது. இனி முகாமை யான சேரர்களைப் பற்றி அறிவோம். கழகக்காலச் சேர மன்னர்களுக்கு "இமய வரம்பன்', 'வான வரம்பன்' என்ற விருதுப் பெயர்கள் மாறி மாறி வருவதைக் காண்கிறோம். இவர்களில் முகாமையான எழுவரைப் பற்றிக் கூறியபின் இவர்களின் தாயமுறையினரான கொங்கு நாட்டையாண்ட பொறையன் குடும்பத்தைச் சேர்ந்த முகாமையான அறுவரைப் பற்றிக் கூறுவோம், உதியன் குடும்பத்து அரசர்களை மூத்த கால்வழியினர் என்றும், பொறையன் குடும்பத்து அரசர்களை இளைய கால்வழியினர் என்றும் குறிப்பிடலாம். சேரவேந்தர் உதியன் குடும்பம் (மூத்த கால்வழி) (1) பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் (வானவரம்பன்) இவன் உதியன் குடும்பத்தில் தோன்றிய முதல் சிறப்பான அரசன். இவனுக்கு ஆதியரசன், உதியஞ்சேரல், உதியன் சேரலாதன், பெருஞ் சோற்று உதியன் முதலிய பெயர்களும் உண்டு. பொதுவாகச் சேரநாட்டு வேந்தனை வானவன் என்றும். சேர நாட்டு மக்களை வானவர் என்றும் அழைப்பர். உயர்ந்த மலைகளில் வசிப்பவர்கள் 'வானவர்" என்றே அழைக்கப்பட்டனர். சேரர் விந்திய மலைத்தொடரை அல்லது இமய மலையைத் தம் நாட்டின் எல்லையாகப் பெற்றதால் 'வானவரம்பன்' என்று அழைக்கப்பட்டனர் போலும் புறநானூற்றில் முரஞ்சியூர் முடிநாகராயர் பாடிய பாடலில் இவன் ஐவருக்கும் பாண்டவருக்கும் நூற்றுவருக்கும் கெளரவருக்கும் நடந்த பாரதப்போரில் நடுநிலைமை தாங்கிப் புண்பட் டாருக்குப் பெருஞ் சோறு வழங்கினான் என்கிறார். மாமூலனாரும், பின்வந்த இளங்கோ வடிகளும் இதே செய்தியைக் கூறுகின்றனர். ஐவர் என்பதனைப் பஞ்சபாண்டவர் என்றும், நூற்றுவர் என்பதனை துரியோத னாதிகள் என்றும் கொண்டு பாரதப் போர்க் காலத்தில் இவன் அறங் காவலனாயிருந்து உண்டி வழங்கிய செய்தியையறிகிறோம். பாண்டியருக் குள்ளேயே ஐந்து பிரிவினர் இருந்தரென்றும், அவர்களுக்கும், கெளரியர் என்ற பிரிவினருக்கும் நடந்த போரில் உதியன் குடும்பத்தைச் சேர்ந்த இவன் நடுநிலைமை தாங்கி நின்று சோறிட்டான் என்றும், பாரதப் போருக்கும் இதற்கும் தொடர்பில்லை யென்றும் கூறுகிறார் மயிலை சீனி வேங்கட சாமி. எப்படியாயினும் இவனுடைய பெருந்தன்மையும், வள்ளற்றன்மை யும் இச்செயலால் அறியப்படுகின்றன. இவனுக்குப் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன்' என்ற விருதுப் பெயரும் இச் செயலாலே ஏற்பட்டது. இவன் பொறை, சூழ்ச்சி, வலி, தெறல், அலரி ஆகிய ஐந்து பண்புகளையும் உடையவ னென்றும், குணகடலையும், குடகடலையும் தம் நாட்டின் எல்லைகளாக உடையவ னென்றும் கூறப்படுவதால் இவன் காலத்துச் சேரநாடு, சோழ, பாண்டிய நாடுகளைத் தவிர்த்த கொங்கு, தொண்டை ஆகிய நாடுகளைத் தன்னகத்தே பெற்றிருந்தானென்பதை அறியலாம். (2) இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்(வானவரம்பன்) உதியன் சேரலுக்குப்பின் அவனுடைய மூத்த மகனான நெடுஞ் சேரலாதன் சேரவேந்தன் ஆனான். உதியன் சேரலுக்குப் பல்யானைச் செங்குட்டுவன் என்ற மற்றொரு மகனும் இருந்தான். நெடுஞ்சேரலாதனை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரமான் குடக்கோ நெடுஞ்சேர லாதன், குடக்கோ நெடுஞ்சேரலாதன், குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன் முதலிய பெயர்களாலும் அழைப்பர். கழக்காலத்தில் சேரலாதன்' என்னும் பெயர்கொண்ட சிறப்பான சேரவேந்தர் மூவர் இருந்தனர். அவர்கள் பெருஞ்சோற்றுதியன் சேரலாத னின் மூத்த மகனான நெடுஞ்சேரலாதனான இவன், கரிகாற் சோழனோடு போரிட்டு முதுகில் புண்பட்டதால் போர்க்களத்திலேயே வடக்கிருந்து உயிர் துறந்த பெருஞ்சேரலாதன், நெடுஞ்சேரலாதனின் மகனான ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆகியவராவர். பதிற்றுப்பத்தில் இம் மூவரும் முறையே இரண்டாம் பத்திலும், நான்காம் பத்திலும், ஆறாம் பத்திலும் அறியப்படுகின்றனர், போர்கள் நெடுஞ்சேரலாதன் அரபிக்கடல் தீவுகளின் மன்னனான கடம் பனைத் தாக்கி வெற்றிபெற்றான். அவனுடைய காவல் மரமான கடம்ப மரத்தின் அடிப்பகுதியைக் கொண்டு அக் கால வழக்கப்படி தனக்குப் போர்முரசு செய்து கொண்டான். இப் போரில் இவன் ஆணைப்படி ஈடுபட்டவன் இவன் மகன் செங்குட்டுவனேயாவான். கடற்கொள்ளைக் காரர்களை அடக்கவே இத்தீவுகளின் மீது போர் தொடுத்தானென்றும், அக் கொள்ளைகளில் ஈடுபட்டிருந்த வன்சொல் யவனர்களைப் பிடித்து அவர்களின் கைகளைப் பின்புறம் கட்டி, தலையில் நெய்யை ஊற்றி அழைத்து வந்தான் என்றும் கூறப்படுகிறது. அடுத்து நெடுஞ்சேரலாதன் இமயம்வரை படையெடுத்துச் சென்று, பல மன்னர்களை வென்று இமயத்தில் தன் விற்கொடியைப் பொரித்து, அதனைத் தன் நாட்டின் எல்லையாக்கினான். இச் செயலுக்காகவே இவனை 'இமயவரம்பன்' என்னும் விருதுப்பெயரால் அழைக்கின்றனர். இவன் வடநாடு சென்றிருந்த போது உள்நாட்டுப் பகைவர்கள் இவன் நாட்டைத் தாக்கத் தொடங்கினர். நாடு மீண்ட இவன் அவர்களையும் தோற்கடித்தான். நெடுஞ்சேரலாதன் சோழ அரசன் வேல்பஃறடக்கைப் பெருநற் கிள்ளி என்பானுடன் போர்' என்னும் நகருக்கருகில் திருப்பூர் போரிட்டு மார்பில் வேல் பாய்ந்து மாண்டான், இப் போரில் சோழமன்னனும் மாண்டான். (3) பல்யானைச் செல்கெழுகுட்டுவன் இவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் தம்பியாவான். போர் நகரில் நெடுஞ்சேரலாதன் இறந்தவுடன் இவன் அரசு கட்டில் ஏறினான். இவனைப் பற்றிய செய்திகள் பதிற்றுப்பத்தில் இரண்டாம் பத்தில் பாலைக்கௌதமனார் என்ற புலவரால் சிறப்பித்துக் கூறப்படுகின்றன, அதனை நோக்கும்போது இவன் உம்பற்காட்டுக்கு வடக்கிலிருந்த பூழி நாட்டில் இருந்துகொண்டு அரசாண்டான் எனத் தெரிகிறது. உடம்பற்காடு என்பது ஆனைமலையைக் குறிக்கும் அந்த உம்பல் நாட்டையும் இவன் வென்றான். பூமியிலிருந்து ஆண்டதால் இவன் பூழியர்கோ' என்றும் அழைக்கப்பட்டான். மணிக்கற்களை நிரம்பவுடைய செருப்பு மலை பூழி நாட்டில் இருந்தது. இவன் உம்பற்காட்டைத் தன்னடிப்படுத்தியதும் அசுப்பாக்கோட்டையைக் தாக்கித் தீக்கிரையாக்கினான். அக் கோட்டை யைக் கைப்பற்றி அங்கிருந்த பாண்டியரை வெளியேற்றினான். இவன் தன் அண்ணனுக்காகவே அகப்பாக் கோட்டையைத் தாக்கி வெற்றி பெற்றான் என்றும் கூறுவர். இவனது முன்னேற்றத்தைத் தடுக்கும் பொருட்டுச் சோழரும், பாண்டியரும், வேளிர் மன்னர்களும் இணைந்து இவன் மீது போர் தொடுத்தனர். ஆனால், இவன் அவர்களை முதற்சுற்றுப் போரிலேயே தோற்றோடச் செய்தான். இவன் இருபத்தைந்து ஆண்டுகள் ஆட்சிபுரிந்து உலகின் நிலையாமையை எண்ணிக் காடு புகுந்தான் எனக் கூறப்படுகிறது. இவன் பல யானைகளைத் தம் படையில் கொண்டிருந்தமையால் 'பல்யானை' என்ற பட்டம் பெற்றான். இத்தகைய வீரன் தன்னைப் பாடிய பாலைக் கௌதமன் என்னும் பார்ப்பனப் புலவனின் விருப்பத்திற்கேற்பப் பத்து வேள்விகளைச் செய்து அவனோடு தானும் கடல் நீராடிக் காடு புகுந்தான். இவன் சிறந்த வள்ளலாகவும், வாய்மையாளனாகவும், தெளிவும், தேர்வுமுள்ளவனாகவும் இருந்தான், தன் புலவரை மகிழ்விக்கவே வேள்விகள் செய்ததோடு, அவனுடைய அறிவுரைப்படி, கடல் நீராடிக் காடு புகுந்தான். (4) களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்(வானவரம்பன்) இவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் மூத்த மகன் ஆவான், இவனைப் பற்றி நான்காம் பத்தில் கூறப்படும் செய்தியிலிருந்து இவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும், அவனுடைய இரண்டாவது மனைவி வேண்மாள் என்பவளுக்கும் பிறந்தவன் என்பதும், தன் பகை யரசன் இரண்டாம் நன்னனைப் பெருந்துறையில் தோற்கடித்துத் தன் தந்தை இழந்த நாட்டை மீட்டான் என்பதும் அறியப்படுகின்றன. இவன் முடிசூடிய போது தன் முன்னோர் மணிமுடி பகைவரிடம் இருந்ததால் களங்காயால் சுண்ணியும், தாரால் முடியும் அணிவிக்கப்பட்டான் என்பர். பகைவனை வீழ்த்தித் தன் நாட்டையும், மணிமுடியையும் இவன் மீட்டான். தன் தந்தை உயிருடன் இருக்கும்போது மகந்தை என்னும் நகரில் இருந்து கொண்டு அவனுக்குக் கீழ்ப்பட்டு ஆட்சி புரிந்தான். மரந்தை (மாந்தை) சேரர் துறைமுகங்களுள் ஒன்று. இவன் நெடுமிடல் அஞ்சி முதலான பல அரசர்களை வென்றான். சோழன் பெருந்திருமாவளவனை மணக்கிள்ளி) குராப்பள்ளியென்னு மிடத்தில் வென்று நேரிமலையைக் கைப்பற்றினான். சோழன் மணக்கிள்ளி போர்க்களத்திலேயே உயிர் நீத்தான். இதனால் இவன் 'குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்' என்று அழைக்கப்படுகிறான். நார்முடிச் சேரல் சிறந்த போர்த் துறையைத் தன் கோநகரில் கொண்டிருந்தான் என்றும், வள்ளல் தன்மையில் சிறந்தவனென்றும் அறியலாம். (5) கடற்பிறக்கோட்டிய செங்குட்டுவன் (இமயவரம்பன்) இவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும் அவனுடைய மூத்த மனைவி சோழன் மணக்கிள்ளி மகள் நற்சோணைக்கும் பிறந்த மூத்த மகன். இவனுடைய இளவலே சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகள் ஆவார். அஃதாவது,செங்குட்டுவனும், இளங்கோவடி களும் இமயவரம்பன் நெடுஞ் சேரலாதனுடைய மூத்த மனைவி நற்சோணையின் பிள்ளைகள். இரண்டாம் மனைவி வேண்மாளின் பிள்ளைகள்தாம் கனங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலும் ஆடுகோட் பாட்டுச் சேரலாதனும். இவன் நார்முடிச் சேரல் ஆட்சியில் குடகு நாட்டுக்குத் தலைவனாயிருந்து அவனுக்கு உறுதுணையாய் நின்றான், அவன் இறப்புக்குப் பின் சேரநாடு முழுவதற்கும் அரசன் ஆனான், குட்டுவன் செங்குட்டுவன் மணிக்குட்டுவன், என்றெல் லாம் இவனைக் குறிப்பிடுவர். சிவந்த மேனியன் ஆதலாலும், குடநாட் டிற்குத் தலைவனாக இருந்ததாலும் இவனைச் செங்குட்டுவன் என்ற சிறப்புப் பெயரால் அழைத்தனர். கடற்பிறக்கோட்டிய செங்குட்டுவன் என்பது இவனுடைய விருதுப் பெயராகும். இவனைப் பரணர் ஐந்தாம் பத்தில் பாடி உம்பற்காட்டு வரியையும், இவன் மகன் குட்டுவன் சேரலையும் பரிசாகப் பெற்றார். போர்கள் 1) இவன் தன் தந்தை இறந்தவுடன் தன் அன்னை நற்சோணையுடன் வடநாட்டுக்குப் புனிதப் பயணம் மேற்கொண்டான். தம்மைத் தடுத்த ஆரிய அரசர்கள் ஆயிரவரை எதிர்த்து வெற்றி பெற்றான். இதனை இளங்கோ வடிகள் சிலப்பதிகாரத்தில் விளக்கியுள்ளார். இது இவனுடைய கன்னிப் போராகும். (2) இந்த வடநாட்டு வெற்றிக்குப்பின் சோழர், பாண்டியர் உதவியுடன் போர்தொடுத்த கொங்கு மன்னர்களைக் கொடுகூர் என்னு மிடத்தில் சோழ, பாண்டியரோடு சேர்த்துத் தோற்கடித்தான். கொங்கு மன்னர்கள் திறை செலுத்த ஒப்புக்கொண்டனர். (3) மேலைக்கடலில் கடற்கொள்ளையடித்துவந்த கடம்பரை யடக்கத் தன் கடற்படையைச் செலுத்தி வெற்றி பெற்றதால் "கடற்பிறக் கோட்டிய செங்குட்டுவன்' ஆனான். (4) பழையன் என்னும் குறுநில மன்னன் பாண்டியனுடைய படைத் துணைவன், இவனுக்கும் செங்குட்டுவனுடைய படைத் துணைவன் அறுகை என்பவனுக்கும் மூண்டபோரில் செங்குட்டுவன் அறுகைக்குத் துணைநின்று பழையனின் மோகூரை முற்றுகையிட்டுத் தாக்கி வீழ்த்தி னான். பழையனுடைய காவல் மரமான வேப்பமரத்தை வெட்டி அவ னுடைய உவளகத்து அந்தபுரத்துப் பெண்களை மொட்டை யடித்து, அம் மயிரைக் கொண்டு திரித்த கயிரால் அந்த வேப்ப மரத்தைப் பிணைத்துக் கட்டி, யானையால் இழுத்து வந்து போர் முரசுசெய்தான், 5) தன் தாய்மாமன் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளியின் மகன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளிக்கு இளவரசுப் பட்டம் கட்டக் கூடா தென்று கலகம் செய்த அவனுடைய தாய்வழிச் சோழர் ஒன்பதின்மரையும் நேரி வாயில் என்ற இடத்தில் தோற்கடித்து, அவனுக்கு உறையூரில் முடிசூட்டினான், 6} பத்தினிக் கடவுளான கண்ணகிக்குச் சிலையெடுக்கும் பொருட்டு இமயம் சென்றபோது தம்மையெதிர்த்த ஆரிய அரசர்களை வென்று கண்ணகிக்குச் சிலையெடுத்து, கங்கையில் நீராட்டி, கனக விசயரின் தலையில் ஏற்றிவந்து வஞ்சிக்கு அருகிலுள்ள கொடுங் கனூர் ரில் அச் சிலையை வைத்துக் கோயில் கட்டினான். இதே காலத்தில் இவனைப் பின்பற்றி நூற்றுவர் கன்னர் மாளவத்திலும், கயவாகு இலங்கை யிலும், சோழன் பெருங்கிள்ளி உறந்தையிலும், வெற்றிவேற்செழியன் என்ற பாண்டியன் கொற்கையிலும், கொங்கு இளங்கோசர் துளு நாட்டிலும் சுண்ணகிக்குக் கோயில் கட்டியதாகக் கூறப்படுகிறது. இக் காலம் தோராய மாசு கி.பி. 150 ஆகும். அப்பொழுது செங்குட்டுவனுக்கு அகவை ஐம்பது இருக்கலாம். (7) கடைசியாக இவன் சோழரை எதிர்த்து இடும்பவனம் என்னு மிடத்தில் போரிட்டு வெற்றி பெற்றதாகக் கூறப்படுகிறது. இவனுடன் போரிட்ட சோழன் யாரென்பது தெரியவில்லை. செங்குட்டுவன் ஐம்பத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்து அறம்பல் செய்து உயிர் நீத்தான். இவனுடைய தம்பியான இளங்கோ துறவு பூண்டு முத்தமிழைக் கற்றுத் தேறி நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தை இயற்றி னார். இயல், இசை, நாடகமென்னும் முத்தமிழும் விரவி நிற்கும், இச் சிலப்பதிகாரம் கூறும் கருத்துக்களும் மூன்றுதாம். அவை அரசியல் பிழைத் தோரை அறமே கூற்றாய் நின்று கொல்லும்; கற்புடைய மகளிரை மண்ணவரேயன்றி விண்ணவரும் வாழ்த்தி வணங்குவர்; ஒரு பிறவியில் செய்த வினையின் பயன் மறுபிறவி யிலும் தொடரும் என்பனவாம். (6) ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் (வானவரம்பன்) ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் செங்குட்டுவனுக்குப் பின் அரசு கட்டிலேறினான். இவன் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலின் தம்பி யாவான். இமயவரம்பனுக்கு மொத்தம் நான்கு பிள்ளைகள். அவர்கள் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், செங்குட்டுவன், இளங்கோவடிகள் என்பவராவர். பின் கூறப்பட்ட இருவரும் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனுக்கு மாற்றாந்தாய் மக்கள். இவனை ஆறாம்பத்தில் பாடியவர் காக்கை பாடினியார், நச்செள்ளையார் என்னும் புலத்தியராவார். இவன் தன் தமையன் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலுக்குப் படைத்தலைவனாகவிருந்து வயவர் பெருமகன்" (Lordofthe knigta) என்ற பட்டம் பெற்றான். இவன் தந்தையின் காலத்திலும், தமையன் காலத்திலும், செங்குட்டுவன் காலத்திலும் மொத்தம் முப்பத் தெட்டு ஆண்டுகள் தனித்தாண்டான். தொடக்கக் காலத்தில் பெருந்துறை யையும் அதனையடுத் திருந்த பகுதிகளையும் ஆண்டான்.குட்டநாட்டிற்கு வடக்கேயிருந்த நறவுத்துறையையடுத்து வாழ்ந்த மக்களுக்கும் கொண்கான நாட்டு மக்களுக்கும் இவன் தலைவனாகத் திகழ்ந்தான். செங்குட்டுவன் ஆண்டபோது இவன் குட்டநாட்டு ஆட்சிப் பொறுப்பையும் ஏற்றான், ஆக, இவனது ஆட்சிக்காலம் முழுவதும் எல்லைகளைக் காக்கும் வீரனாகவே விளங்கினான். தன்னை அண்டிய மழநாட்டு மக்களைக் காத்தான். குதிரைமலை வில்லோருக்கும் பாதுகாப்பளித்தான். இவன் வடவாரியர் நாட்டின்மீது படையெடுத்துச் சென்று தண்ட காரணியம்' என்னும் பகுதியையாண்ட ஆரியரை வென்றான். போருக்கு முன் அவர்கள் நாட்டிலிருந்த வருடை என்னும் இனத்தைச் சேர்ந்த வெள்ளாடுகளையும் ஏனைய கால்நடைகளையும், பெண் களையும், தாபதர்களையும் தீங்கு நேராமல் தம் நாட்டிற்கு அனுப்பினானென்பதி லிருந்து தமிழரின் போர் முறையையும், போர்ப் பண்பையும் ஆரியருக்கு உணர்த்தினான் எனக் கொள்ளலாம். வெற்றிபெற்று மீண்டதும் கவர்ந்து வந்த ஆடு, மாடுகளைத் தொண்டியிலிருந்த பார்ப்பனருக்குத் தலைக்கு ஓர் ஊரும், ஆடும், கபிலைநிறப்பசுவும் தானம் கொடுத்தான். இவனைப் பாடிய காக்கைப்பாடினியார் நச்செள்ளையாருக்கு ஒன்பது காணம் பொன் கொடுத்து நகை செய்து போட்டுக்கொள்ளும்படி செய்ததோடு நாறாயிரம் காணமும் பணமும் கொடுத்து அத்தாணி மண்டபத்தில் தன் பக்கத்தில் உயர்ந்த இருக்கை தந்து அவரை அமர்ந் திருக்கும்படி செய்தான். வறியர் தம் நாட்டில் காணப்படாததால் வெளி யிடம் சென்று வறியரைத் தேடிப் பிடித்துத் தன் தேரில் ஏற்றி வந்து அவர்கள் வறுமை நீங்கப் பொருள் வழங்கினான். பொதுமக்களோடும், வெற்றிபெற்றபின் வீரர்களோடும் ஆண்களும் பெண்களும் கைகோர்த்து, கட்டித் தழுவியாடும் துணங்கைக் கூத்தாடினான், வானவரம்பன் என்றப் பட்டப் பெயருடைய இவன் ஆரிய நாட்டி லிருந்து வருகை ஆட்டினத்தைக் கவர்ந்து வந்ததாலோ, துணங்கை யாடிய தாலோ 'ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்' என அழைக்கப் பெற்றான். (7) குட்டுவன் சேரல்கோக்கோதை மார்பன்) குட்டுவன் சேரல் செங்குட்டுவனின் மகனாவான். அவனைக் குட்டுவன்கோதை, கோதை மார்பன், கோக்கோதை மார்பன், மாக்கோதை மார்பன், கடுமான் கோதை, செங்கோல் குட்டுவன், கடும்ப கட்டியானை நெடுந்தேர்க்குட்டுவன், வலிதுஞ்சு தடக்கைவாய்வாள் குட்டுவன் முதலிய விருதுப்பெயர்களாலும் அறிகிறோம். இளமை யிலேயே தன் தந்தையான சேரன் செங்குட்டுவனால் பரணருக்குப் பரிசாக அளிக்கப்பட்டான். ஆதலால், அப் பெரும் புலவரிடம் தமிழையும், அரசியல் அறிவையும் தெற்றெனக் கற்றுத் தேறினான். இவனை அம்மூவனார் என்ற புலவர் ஐங்குறுநாற்றிலும், நற்றிணை யிலும், மாடலன் மதுரைக் குமரனாரும் பொய்கையாரும் புறநானுற்றிலும் பாடியுள்ளனர். இவர்களுடைய பாடல்களிலிருந்து இவன் சிறந்த செங்கோலன் என்றும், போர் வீரன் என்றும், வள்ளல் என்றும் அறிகிறோம். பாண்டியன் போர் குட்டுவன் சேரல் காலத்தில் பாண்டிய நாட்டையும், சோழ நாட்டையும் முறையே பாண்டிய, சோழர் குடும்பத்தினர் பல பிரிவுகளாய்ப் பிரிந்து ஆண்டனர், பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் இவனுடைய முசிறிப்பட்டினத்தின் மீது படையெடுத்து அங்கிருந்த தெய்வச் சிலையொன்றைக் கைப்பற்றிச் சென்றான் என அகநானூற்றுச் சான்றுகளிலிருந்து அறிகிறோம். சோழன் போர் சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன் சேர நாட்டின் மீது படையெடுத்து அதன் கோநகரான வஞ்சியில் கருவூர் குட்டுவன் சேரனைத் தோற்கடித்தான் என்று புறநானூற்றுச் சான்றால் அறிகிறோம். குட்டுவன் சேரல் கோட்டம்பலம் என்னும் ஊரில் இறந்தான், இதனால் "சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை மார்பன்' என்றும் கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்' என்றும் அறியப்படு கிறான். இவன் காலத்தில் சோழநாட்டில் சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவனும், பாண்டிய நாட்டில் பாண்டியன் தலையானங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனும் கொங்குநாட்டில் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையும், இலங்கையில் முதலாம் கயவாகுவும், அவன் மகன் குஞ்ச நாகனும் ஆண்டனர் என்பதை அறிகிறோம். இவனுக்குப் பின்னும் சேரநாட்டைச் சிலர் ஆண்டனர். ஆயினும் இவனே கழகக்கால சேர நாட்டுப் பெருவேந்தரில் கடைசி அரசன் ஆவான். இவனுக்குப் பின் சேரநாட்டைக் களப்பிரர் கைப்பற்றிக் கொண்டதால் 'இருண்ட காலம்' ஏற்பட்டது. கடைக்கழகக்கால் முடிவில் தோரா. கி.பி. 250 - 300 சேர, சோழ, பாண்டிய நாடுகள் அனைத்தும் களப்பிரர் வயமாயிற்று. இவர்கள் தோரா. கி.பி. 575 முதல் 500 வரை ஆண்டனர். கொங்குநாட்டுச் சேரர்கள் பொறையன் குடும்பம் (இளைய கால்வழி) (1) அந்துவன் பொறையன் (அந்துவன் சேரல் இரும்பொறை) உதியன் குடும்பமும், பொறையன் குடும்பமும் தாய் வழியினர். உதியன், இமயவரம்பன், வானவரம்பன், குட்டுவன் என்பன உதியன் குடும்பத்தாருக்குரிய விருதுப் பெயர்களாகும். அந்துவன், கடுங்கோ , மாந்தரன், பொறையன், இரும்பொறை என்பன பொறையன் குடும்பத் தாருக்குரிய விருதுப் பெயர்கள் ஆகும். ஆதன், கோதை, சேரல், சேரமான் முதலியன இரு குடும்பத்தாருக்கும் உரிய பொதுவான பட்டப்பெயர்களாம் முதலாம் அந்துவன் சேரல் இரும்பொறை என்பவன் பொறையன் குடும்பத்து முதல்வன் ஆவான். இவனுக்குப் பின்னால் இரண்டாம் அந்துவன் சேரல் இரும்பொறை என்பவன் கருவூரில் இருந்து ஆண்டான் எனத் தெரிகிறது. இவனுக்கு அந்துவன் இயற்பெயர், 'சேரல்' சேரர் குடும்பத்தில் பொதுப்பெயர். இரும்பொறை குடும்பப் பெயர். இவன் ஒரு தந்தை என்ற வேளிர் குடிமன்னனின் மகள் பொறையன் பெருந்தேவியை மணந்து செல்வக்கடுங்கோ வாழியாதனைப் பெற்றான். கொங்கு நாட்டில் சில ஊர்களைக் கைப்பற்றி அங்குப் பொறையர் ஆட்சியை நிறுவினான். கொங்குநாட்டில் கருவூரை வென்றதால் இவனைக் கருவூர் ஏறிய ஒள்வாள் பெருஞ்சேரல் இரும்பொறை' என்றும் அழைப்பர். இப் போரில் இவனுக்குத் துணையாக நின்றவன் இவனுடைய அண்ணன் மகன் பல்யானைச் செல்கெழுகுட்டுவன் ஆவான். இவன் தோராயமாக இருபது ஆண்டுகள் கொங்கு நாட்டை ஆண்டான். இவனுக்குப் பின் இவன் மகன் செல்வக்கடுங்கோ வாழியாதன் அரசன் ஆனான். அந்துவன் பொறையன் வழித்தோன்றல்களே பொறையன் குடும்பத்தினர்' அல்லது இளையகால் வழியினர்" ஆவர். (2) செல்வக் கடுங்கோ வாழியாதன் (முதலாம் மாந்தரன்) கொங்கு நாட்டையாண்டபொறையன் குடும்பத்தில் சிறப்புடைய வேந்தன் செல்வக்கடுங்கோ வாழியாதன். இவன் அந்துவன் சேரலிரும் பொறைக்கும், பொறையன், பெருந்தேவிக்கும் பிறந்தவன். இவன் பூழி நாட்டுநேரிமலைப் பகுதியை ஆண்டவன். பூழி நாட்டில் செருப்புமலைப் பகுதியை இவன் காலத்தில் ஆண்டவன் முன்பு கூறப்பட்ட பல்யானைக் குட்டுவன் ஆவான். நோரிமலைப் பகுதியில் மணிக்கற்களும், பலாப்பழமும் மிகுதியாகக் கிடைத்தன. இவன் குதிரை மலைப் பகுதியிலிருந்த வில்லோர் என்னும் குடியினருக்குப் பாதுகாவலனாக இருந்தான். தன் தந்தைக்குப்பின் கொங்கு நாட்டுக் கருவூரைக் கோநகராகக் கொண்டு ஆண்டான். இவனுடைய வெற்றிகளைக் கூர்ந்து நோக்கும்போது பல்யானைக் குட்டுவன் அகப்பாக் கோட்டையை அழித்தபோது அவனுடன் இணைந்து இவனும் போரிட்டான் என்றே கொள்ள வேண்டியுள்ளது. இவனிடம் நாற்படைகளும் இருந்தன. பகையரசன் ஏறி வந்த யானையின் மருப்பொடித்து வந்து இவனுடைய வீரர்கள் தாங்கள் உண்ட கள்ளுக்கு விடையாக அளித்தனராம். இவன் தான் பெற்ற கொண்டிப்பொருள்களை வந்தவருக்கெல்லாம் வாரி வழங்கினான். சேர நாட்டுப் பந்தர் துறையில் கிடைத்த முத்து, களிறு, குதிரை முதலான யாவற்றையும் வேறுபாடு நோக்காது பரிசிலாக வழங்கினான். வழங்கியதை மறந்து வழங்கிக் கொண்டே இருந்தான். தன்னைப் பாடிய கபிலருக்கு தாறாயிரம் காணம் பணமும், நன்றா என்னும் குன்றின்மீது ஏறி நின்று தன் கண்ணில் பட்டம் இடமெல்லாவற்றையும் பரிசிலாக அளித்தான். பார்ப்பனருக்கல்லாது யாருக்கும் பணியான், தன் குடி மக்களுக்கே அஞ்சுவான்; பகைவரைக் கண்டு அஞ்சியதில்லை. உலகமே பிறழ்ந்தாலும் சொன்ன சொல் தவறான். இத்தகு பண்பு நட்பங்கொண்ட இவன் பார்ப்ப னரின் சொல்படியே பலவேள்விகளைச் செய்து அவர்களுக்கு எண்ணிறந்த செல்வங்களைத் தாரை வார்த்துத் தந்தான் வேள்வி செய்த வைணவப் பார்ப்பானுக்கு நெல் மிகுதியாக விளையும் ஒகந்தூர் என்னும் ஊரையே தானமாகக் கொடுத்தான்; தமிழை வளர்த்தான். நாடோடிகளாய்த் திரிந்தவரை நிலைபெற்று வாழச் செய்தான். ஆதன் என்ற இயற்பெயர் கொண்ட இவனுக்குக் கோ ஆதன் செவ்வக்கோ, செல்வக்கோமான், வாழியாதன் செல்வக் கடுங்கோ வாழி யாதன், சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழி யாதன் முதலிய பெயர்கள் உண்டு. இவன் சிக்கற்பள்ளி என்னு மிடத்தில் பாண்டி யனுக்குத் துணையாகச் சென்று போரிட்டு மாண்டான். பாரி இறந்தபின் கபிலர் இவனிடம் வந்து தங்கியதாகக் குறிப்பிடப் படுவதால் இவன் பாரிக்கும், பல்யானைக் குட்டுவனுக்கும் சமகாலத்தவன் ஆவான் என்பதை அறியலாம். இவன் சேரர்குடியில் தோன்றியவனே. இவனைப் பாடிய புலவர்கள் கபிலரும், குண்டுகட்பாவியாதனாரும் ஆவர். (3) தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை செல்வக்கடுங்கோ வாழியாதனுக்குப் பின் அரசு கட்டில் ஏறியவன் அவன் மகன் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை என்பவன் ஆவான். இவன் சேர, பாண்டியரையும், கொல்லிக் கூற்றத்து வல்வில் ஓரியையும், தகடூர் (தருமபுரி நாட்டு அதியமான் அஞ்சியையும் வென்றான் என அறிகிறோம். கழுவுளை வென்றது கழுவுள் என்ற ஆயர் தலைவன் காமூரிலிருந்துகொண்டு வெளிர் பலருக்கும் தொல்லை தந்த ஆயர் தலைவன். இவன் தொல்லையைப் பொறுக்க முடியாத வேளிர் பதினால்வரும் ஒன்று சேர்ந்து காரைத் தீக்கிரையாக்கி இவனை விரட்டியடித்தனர். தப்பியோடிய இவன்கொல்லி மனலக்குத் தென் பகுதியில் தங்கி ஆயர் தலைவன் ஆனான். பெருஞ்சேரல் இரும்பொறை இவனது தோட்டி மலையைக் கவர்ந்து, கோட்டை கொத் தனங்களைத் தகர்த்தான். புகழடைந்த இவன் பின்னர் நண்பன் ஆனான், கொல்லிக் கூற்றத்தைக் கைப்பற்றுதல் வல்வில் ஓரி கொல்லிக் கூற்றத்தின் நாமக்கல் தலைவன் ஆவான். இவன் சேரனுடைய நண்பனான திருக்கோவிலூர்க் காரியைத் தாக்கித் திருக்கோவிலூரைக் கைப்பற்றிக்கொண்டான். தனக்குத் துணை நின்ற தகடூர் அஞ்சிக்குப் பாதி நாட்டை அளித்தான். காரிக்கு உதவப் பெருஞ் சேரல், ஓரி மீது போர்த்தொடுத்தான். கொல்லிக்கூற்றத்தின் பெருநகராகிய நாமக்கல்லில் நடுத்தெருவில் நடந்த போரில் வல்வில் ஓரி மாண்டான். கொல்லிக் கூற்றம் சேரன் வயப்பட்டது. தகடூரைக் கைப்பற்றுதல் ஓரிக்குத் துணையாகக்காரியைத் தாக்கியதகடூர் நாட்டு அதியமான் அஞ்சியையும் சேரன் விடவில்லை. பெரும்படை கொண்டு தகடூரைத் தாக்கி அதியமானையும் கொன்று தகடூர் நாட்டையும் கைப்பற்றினான். காரியைத் திருக்கோவிலுாருக்கு மீண்டும் அரசனாக்கிவிட்டுக்கொல்லிக் கூற்றத்தையும், தகடூர் நாட்டையும் சேர நாட்டுடன் இணைத்துகி கொண்டான். இவ்விரு நாடுகளையும் கண்காணிக்க இவற்றிற்கிடையில் இருந்த மலையில் தங்கு தளமொன்றை ஏற்படுத்திக்கொண்டான். இம் மலை இன்று இவன் பெயரால் சேர அரையன் மலைசேர்வராயன்மலை) என அழைக்கப்பெறுகிறது. பெருந்தன்மையும் தமிழ்ப்பற்றும் தன்னைப் பதிற்றுப்பத்தில் எட்டாம் பத்து பாடிய அரிசில் கிழாருக்குத் தன் நாட்டையே பரிசிலாக வழங்கினான். அப் புலவர் பெருமான் அவனையே அரசுக் கட்டிலில் அமர்த்தித் தான் அமைச்ச னாகவிருந்து அருந்தமிழ் உரைத்தார். ஒருக்கால் இவனை நாடி வந்த மோசி கீரனார் என்னும் புலவர் இவனுடைய போர் முரசுக் கட்டிலில் அயர்ந்து தூங்கிவிட்டார். போர் முரசுக் கட்டிலில் அமர்வோருக்குக் கொலைத் தண்டனையளிப்பது அக் கால வழக்கம். தமிழுள்ளங் கொண்ட சேரன் அவருக்குக் கவரி வீசி இனிதே உறங்கச் செய்தான். (4) குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை இவன் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையின் தம்பி மகன் ஆவான். தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையின் சொந்த மகன் இளஞனாயிருந்தமையால் இவன் அரசுக் கட்டில் ஏறினான். இவனைப் பற்றிப் பதிற்றுப்பத்தின் ஒன்பதாம்பத்தில் பாடியவர் பெருங்குன்றத்தூர்க் கிழார் ஆவார். கொங்கு நாட்டை ஆண்டதால் இவனுக்குக் கொங்கர்கோ' என்ற விருதுப் பெயரும், குட்டுவர் ஏறு, பூழியர் மெய்ம்மறை, மாந்தை யோர் பொருநன், கட்டூர் வயவர் வேந்தன், தொண்டியோர் பொருநன் முதலிய வேறுபல விருதுப் பெயர்களும் உண்டு. இவற்றால் இவன் கொங்கு நாடு, குட்டநாடு, பூழிநாடு, மாந்தைப்பட்டினம், கட்டூர், தொண்டித் துறைமுகப்பட்டினம் ஆகியவற்றை ஆண்டான் என்பதும் தெளிவாகிறது. புன்னாட்டைச் சேரநாட்டுடன் இணைத்தல் இவன் அரசு கட்டில் ஏறும்போது மிக இளஞனாகவிருந்தான். ஆயினும் தன் பெரியப்பன் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை கொங்கு நாட்டிலிருந்த காமூர், கொல்லிக் கூற்றம், தகடூர் நாடு முதலிய வற்றை வென்று தன்நாட்டுடன் இணைத்ததைப் போல் தானும் தன் ஆட்சிக்கு உட்படாமல் இருந்த வடகொங்கு நாடுகளை வென்று தன் ஆட்சியுடன் இணைக்க விரும்பினான். இதனால், இவன் ஆட்சிக்கு உட்படாமலிருந்த வட கொங்குநாட்டிலிருந்த புன்னாட்டின் மீது முதலில் படையெடுத்து அதனை ஆண்டுவந்த குறுநில மன்னனைத் தோற்கடித்து அதன் தலைநகரான கட்டூரைக் கைப் பற்றினான். புன்னாடு, நீலக்கல் கோமேதகம் நிரம்பக் கிடைக்கும் நாடு. தற்பொழுது இது கன்னட நாட்டில் எகடதேவன்கோட்டை வட்டமாக உள்ளது. இதன் தலைநகரான கட்டூர்,கிட்டூர் என மறுவி இன்று கீர்த்திபுரம் என்று அழைக்கப்படுகிறது. விச்சிப் போர் புன்னாடு வெற்றிக்குப் பின் இளஞ்சேரல் இரும்பொறை வட கொங்கு நாட்டிலிருந்த மற்றொரு நாடான விச்சியூர் என்பதனையும் வெல்ல நினைத்தான். இதனை ஆண்ட மன்னன் "விச்சிக்கோ' எனப் பட்டான். இந் நாடு ஒரு மலைநாடு. இதிலுள்ள மலை உச்சிமலை எனப்பட்டது. இன்று திருச்சி வட்டத்திலுள்ள பச்சை மலையே அன்றைய விச்சிமலை என்பர் சிலர். பாரி இறந்தபின் கபிலர் அவன் மகளிரை அழைத்துச் சென்று விச்சிக் கோவை மணக்கும்படி வேண்டினார் என்பதும் ஈண்டு நினைவுகூரத் தக்கதாம். இளஞ்சேரல் இரும்பொறை விச்சியூரின் மீது போர் தொடுத்ததை யறிந்த சோழ, பாண்டியவேந்தர் தங்கள் படைகளையனுப்பிவிச்சிக்கோவுக்கு உதவச் செய்தனர். ஆனால், இளஞ்சேரல் இரும்பொறை விச்சிக்கோவையும், சோழர், பாண்டியர் படைகளையும் ஒருங்கே தோற்கடித்தான். விச்சிக்கோவின் கோட்டையை யும் கைப்பற்றினான். சோழர் போர் சோழன் பெரும்பூண் சென்னி, இளஞ்சேரல் இரும்பொறை கைப்பற்றிய புன்னாட்டை வயப்படுத்த அந் நாட்டின் மீது போர் தொடுக்கத் தன் தானைத் தலைவன் பழையனை அனுப்பினான். பழையன் புன்னாட்டின் தலைநகரான சுட்டூரை நெருங்கியதும், இளஞ்சேரல் இரும்பொறைக்குக் கீழடங்கிய தன்னன், ஏற்றை, அத்தி, சுங்கன், சட்டி புன்றுறை ஆகிய சிற்றரசர்கள் ஒன்று கூடிப் பழையனை எதிர்த்துப் போரிட்டனர், பழையன் போர்க்களத்திலேயே மாண்டான். சுட்டூர்ப் போரில் தன் தானைத்தலைவன்மாண்டதையறிந்த சோழன் பெரும்பூண் சென்னி பழிவாங்கத் துடித்தான், இளஞ்சேரல் இரும் பொறைக்கு உட்பட்ட கொங்கு நாட்டிலிருந்த கழுமலம் என்னும் இடத்தைத் தாக்கிக் கைப்பற்றி அதனைக் காத்து நின்ற தானைத் தலைவன் கணையனையும் சிறைபிடித்துச் சென்றான். இதனையறிந்த இளஞ்சேரல் இரும்பொறை பெரும்படையொன்றை அனுப்பிச் சோழனைத் தோற்கடித்துக் கழுமலத்தையும், கணையனையும் மீட்டான். இப்போரில் சோழப் படைகள் போர்க்களத்தில் போட்டுவிட்டு ஓடிய வேல்கள் இளஞ்சேரல் இரும்பொறையின் பாட்டன் செல்வக் கடுங்கோ வாழியாதன் கபிலருக்குக் கொடுத்த ஊர்களைவிட அதிகமானவை என்று பெருங் குன்றத்தூர்க்கிழார் பாடியுள்ளார், மற்றொரு வெற்றி இந்த வெற்றிக்குப் பின் இளஞ்சேரல் இரும்பொறை சோழநாட்டுப் பொத்தி என்னும் ஊரையாண்ட பெருஞ்சோழன் என்பவனையும் அவனுடைய தானைத் தலைவன் இளம்பழையன் மாறனையும் வென்றான். (5) யானைக்கண்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை (இரண்டாம் மாந்தரன்) இவன் செல்வக் கடுங்கோ வாழியாதனின் (மாந்தரன்) பெயரன். இவனைப் புறநானூற்றில் பாடிய புலவர் குறுங்கோழியூர்க் கிழார் * வேழ நோக்கின் விறல் வெஞ்சேய்' என்று அழைப்பதால் யானைக் கண்சேய் என்னும் அடைமொழி பெற்றான். இப் புலவர் இவனை வீரனென்றும், இவன் நாட்டின் மண்ணைப் பகைவர்கள் தொட்ட தில்லை யென்றும் கூறுகிறார். இவன் கொங்கு நாட்டுக் கொல்லிக் கூற்றத்தையும், மேலைக் கடலோரத்திலுள்ள தொண்டியையும் பெற்றிருந்தான். இவன் விளங்கில் என்ற ஊரில் பசுைவருடன் பொருது நின்று வெற்றிபெற்றானென்பதையும் இந்த வெற்றியைப் பொருந்தில் இளங்கீரனார் புகழ்ந்து பாடினாரென் பதையும் புறநானூற்றிலிருந்து அறிகிறோம். இவன் இராசசூயம் வேட்ட சோழன் பெருநற்கிள்ளியுடன் பொருதிப் போரில் தோற்றான். இப்போரில் சோழனுக்குத் துணையாக நின்றவன் தேர்வன் மலையன் என்பவன் ஆவான். அடுத்துப் பாண்டிய வேந்தன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ் செழியனுடன் பொருத அப் போரிலும் இவன் தோற்றுப் பாண்டியனால் சிறை பிடிக்கப்பட்டான். பின்னர் சிறையிலிருந்து தப்பினான் என்பதனைப் புறநானூற்றிலிருந்து அறிகிறோம். இவன் இறந்த செய்தியைக் கூடலூர்க் கிழார் புறநானூற்றில் கூறி யுள்ளார். வானத்து விண்மீன் எரிந்து விழுந்ததைக் கண்ட இப் புலவர் நாளையும் கோளையும் கணக்கிட்டு ஏழாம் நாள் இம் மன்னன் இறப்பா னென்று கணித்துக் கூறினார். அதன்படியே இவன் இறந்தான். (புறம். 229, 1-12). (B) கணைக்கால் இரும்பொறை யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறைக்குப்பின் கொங்கு நாட்டை ஆண்டவன் கணைக்கால் இரும்பொறை ஆவான். சங்க காலத்து இரும்பொறையர்களில் இவனே கடைசி வேந்தன் ஆவான், இவனுடைய பெற்றோர், முந்தைய வரலாறு முதலியன் அறியமுடிய வில்லை . இவன் ஒரு புலவனாகவும் திகழ்ந்தான். இவனுடைய பாடல் புறம், 74) இவனுடைய வரலாற்றைக் குறிப்பாக உணர்த்துகிறது. இதிலிருந்து இவன் சோழன் செங்கணானுடன் பொருது தோற்றுச் சிறைபிடிக்கப் பட்டானென்றும், சிறையிலிருக்கும்போது இவன் கொண்ட நீர் வேட்கைக்கு நீர் கொடுக்க மறுக்கப்பட்டானென்றும், அதற்காக வருந்திச் சிறையிலேயே உயிர்நீத்தானென்றும் அறிகிறோம். இவன் சிறையில் உயிர் துறக்கவில்லை யென்பதும், சிறைமீண்டு, மீண்டும் தன் நாட்டை ஆண்டான் என்பதும் கலிங்கத்துப் பரணி, களவழி நாற்பது ஆகிய நூல்களி விருந்து அறியப்படுகிறது. பொய்கையார் என்னும் புலவர் களவழி நாற்பது (என்னும் நூலைப் பாடி இவனை விடுவித்தார் என்று கூறப்படுகிறது. இக் சுருத்தை விக்கிரம சோழன் உலாவும் வலியுறுத்துகிறது. கழகக் காலத்துக் கொங்குநாட்டை ஆண்ட பொறையன் குடும்பத் துக் கடைசியரசன் இவனேயாவான். இவனுக்குப்பின் களப்பிரரின் இருண்ட காலம் தமிழகத்தைத் தழுவியது. அதற்குப் பின் கி.பி. எழுநூறு வரையிலும் சேரர் கால்வழியினரில் சிலர் இங்குமங்குமாக ஆண்டனர். (ஆ) கழகக்காலச் சோழ வேந்தர் சோழநாட்டின் தொன்மை சேர, பாண்டியர் வரலாற்றைக் கூறும்போது சோழர்களுடைய தொன்மை பற்றியும் கூறப்பட்டது. மறைகளிலும், தொல்கதைகளிலும் வரலாற்றுக்கு முற்பட்ட சான்றுகளிலிருந்தும் சோழநாட்டைப் பற்றி யறிகிறோம். எனவே, இதன் தொன்மைக் காலத்தை நம்மால் கணிக்க முடியவில்லை. கிமு. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த வட இந்திய, அயல் நாட்டுக் குறிப்புகளிலும், கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகரின் கல்வெட்டுகளிலும் இந் நாட்டைப் பற்றிய செய்திகள் அறியப்படுகின்றன. இவ்வாறு கிறித்துவுக்கு முன்பிருந்தே இந்நாடு பற்றிய செய்திகள் துண்டுதுண்டாகக் காணப்படுகின்றனவே யொழியக்கோவை யாக இதன் வரலாற்றையறியும் அளவுக்கு இல்லை . கழக இலக்கியங்கள், இன்றைய அகழ்வாராய்ச்சிகள், சமகால அயலக வரலாற்றுச் சான்றுகள் ஆகியவற்றைக்கொண்டு சோழர் வரலாற்றைக் கணித்தறியலாம். தொல் சுதைகளோடு இவர்கள் வரலாறு கலந்து காணப்படுவதால் தொடக்க வரலாற்றைத் துல்லியமாகக் கூறமுடியவில்லை . எல்லைகள் கழகக்காலத்துச் சோழநாட்டின் எல்லைகள் கழக இலக்கியங்களின் 'துணைகொண்டு ஆராயப்படுகிறது. சோழநாடு சங்க காலத் தமிழகத்தில் கீழைக் கரையோரமாகப் பரவியிருந்தது. ஆகவே, இதன் கிழக்கெல்லை குணகடல் ஆகும். மேற்கே கொங்குநாடும், வடக்கே தென்பெண்ணை யாறும், தெற்கே பாண்டி நாடும் இதன் எல்லைகளாயிருந்தன. இதன் தென்பகுதியிலிருந்த கொடும்பாளூரை இருக்குவேளிர்கள் ஆண்டனர், கொங்குநாடு, கருவூர், சேலம் முதலிய பகுதிகளைக் கொண்டிருந்தது, 'சோழநாடு சோறுடைத்து' என்னும் பெருமைக்கு இந் நாட்டில் பாய்ந் தோடிய காவிரிதான் கரணியமாகும். ஊர்களும் நகரங்களும் சோழநாட்டின் கோநகரம் உறையூர் உறந்தை!. இது காவிரியின் தென்கரையில் அமைந்திருந்த கோட்டை கொத்தளங்களையுடைய நகரம். இதைச் சூழ்ந்து துருத்தி சீரங்கம் இருந்தது. தாலமி உறையூரை ஓர்தொவுரா(Orthdvra) என்று குறிப்பிடுகிறான். உயையூருக்குக் கிழக்கே காவிரி கடலில் கலக்குமிடத்தில் பூம்புகார் என்னும் துறைமுகப் பட்டினம் இருந்தது. "சாக்கியர்கள் இதனைக் "கவேரிப்பட்டினம்' என்றழைத்தனர். காவிரிப் பூம்பட்டினத்தில் கடற்கரையையொட்டிய இதன் பகுதி மருவூர்ப் பாக்கம் என்றும், கோட்டைமதில்கள் சூழ்ந்த பகுதி பட்டினப்பாக்கம் என்றும் இரு பிரிவுகள் இருந்தன. இஃது அக்காலத்தில் உலகப் புகழ்பெற்ற துறைமுகப் பட்டினமாக இருந்தது. பெரியபுளுசு' என்னும் நூலில் இது 'கமர' என்று அழைக்கப்படுகிறது. மதில்கள் சூழ்ந்ததும், சோழரின் வைப்பகமாகவும் திகழ்ந்ததும் குடந்தை (கும்பகோணம் என்னும் நகர மாகும். சோழநாட்டில் ஆர்க்காடு என்னும் நகரம் இருந்தது. இந்து ஆர்க்காட்டுக் கூற்றத்தின் தலை நகரம் ஆலங்கானம் தலையாலங்கானம், பிடவூர், நெய்தலங்கானல், குளமுற்றம், கழார், போர்த்திருப்போர்), பொத்தி, தலைச்சங்காடு, சாய்க்காடு, வல்லம், வெண்ணி முதலிய பெரிய பர்சுளும் சோழ நாட்டில் இருந்தன. கழகக்காலத்துச் சோழர்கள் நாம் மேலே கூறியபடி சோழ மன்னரின் வரலாற்றைக் கோவையாக -வும், விரிவாகவும் அறிதல் கடினமாகவுள்ளது. ஆயினும் அகநானூறு, புறநானூறு முதலான கழக இலக்கியங்களைக் கொண்டு ஆய்வோம். சோழர்கள் ஒன்பது குடியினராய்ப் பிரிந்து தங்களுக்குள் அடிக்கடி உள்நாட்டுப் போரில் ஈடுபட்டதாலும், சேர், பாண்டியரோடு போரிட்டுக் கொண்டதாலும் கழகக் காலத்தில் தலை சிறந்த சோழப் பேரரசர்களைக் காணமுடியவில்லை. மேலும் வரன் முறைப் படி ஆண்டவர் பட்டியலை யும் தொகுத்துரைக்க முடிய வில்லை. இலக்கியங்களில் கிடைத்துள்ள சான்றுகளைக் கொண்டு ஒருவாறு சுருங்கக் கூறப்படுகிறது, நாவாய் ஓட்டிய சோழன் என்பவன் கரிகாலனுக்கும் முற்பட்டவன் என்றும், கப்பலைக் கடலில் செலுத்தி வெற்றி கண்டவனென்றும் அறிகிறோம். இவன் பருவக்காற்றை வளிதொழில்) நன்கறிந்த பெரிய கடல்களை இருமுந்நீர்க் கடந்து வெற்றி கண்டான் என்ற செய்தியைத் தவிர இவனைப் பற்றி வேறொன்றும் அறிய முடியவில்லை. இவனுக்குப் பின் பலர் ஆண்டிருக்கலாம். தித்தன் வெளியன் என்பான் உறையூரை ஆண்டான். இவன் காலத்தில் பூம்புகாரும் கானலம் பெருந்துறையும் சிறந்து விளங்கின. இவன் தன் பிறந்த நாள் விழாவைக் கோட்டைக்குள் கொண்டாடக் கிணைப் பறையை ஒழித்தான். அதைக் கேட்ட பகைவர்க ளான வான அரசனும், சுட்டி அரசனும் அஞ்சியோடினராம்! இவனுக்கு ஐயை என்ற மகளும், போர்வைக்கோ பெருநற்கிள்ளி என்ற மகனும் இருந்தனர். தித்தனுக்குப் பின் போர்வைக்கோ பெருநற்கிள்ளி அரசுக் கட்டில் ஏறினான். இவன் மற்போரில் வல்லவன். சோழநாட்டுத் திருப்போர் (போர்) என்னுமூரிலிருந்த பழையன் மாறன் என்பானை வென்று அவ்வூரைத் தன் நாட்டுடன் சேர்த்துக் கொண்டான். இதனாற்றான் இவனுக்குப் போர்வைக் கோ' என்னும் சிறப்புப்பெயர் ஏற்பட்டது. இவனுக்கு 'முடிதலைக்கோப்பெருநற்கிள்ளி" என்னும் பெயரும் உண்டு. இவன் நக்கணையார் என்னும் புலத்தியைக் காதலித்தான். அப்புலத்தியார் பெண் புலவர் பாடிய பாடல்கள் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன. இவனும் சேரன் அந்துவன் சேரல் இரும்பொறையும் சமகாலத்தவர் தோரா, கி.பி. முதல் நாற்றாண்டு) என்பதை உறையூர் ஏணிச்சேரி முடமோசியாரின் புறநானூற்றுப் பாடலிலிருந்து (புறம்.13) அறிகிறோம். சோழன் மணக்கிள்ளியென்பவனைப்பற்றிய விரிவான வரலாற்றுக் குறிப்புகள் நமக்குக் கிடைக்கவில்லை. இவனுடைய மகள் நற்சோணை என்பவளைச் சேரன் நெடுஞ்சேரலாதன் மணந்தான் என்றும், அவன் கடற்பிறக்கோட்டிய செங்குட்டுவனைப் பெற்றாள் என்றும் அறிகிறோம். இவனுடைய இளையமகனே சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோ வடிகளார், மணக்கிள்ளி கிபி. முதல் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந் திருக்கலாம். கரிகாலன் கரிகாலன் என்னும் பெயரில் சோழ அரசர்கள் பலர் இருந்ததாகக் கூறுவர். கரிகாலன் என்னும் சோழமன்னன் ஒருவனே என்பதைச் சான்றுகள் பலவும் நிறுவுகின்றன. அவனுடைய பல்வேறு பெயர்களையும் செயல்பாடுகளையும் கொண்டு பல "கரிகாலன்'கள் இருந்ததாகச் சிலர் முடிவு செய்கின்றனர். அது தவறு. திருமாவளவன், சோழன் கரிகாற் பெருவளத்தான், பெருவளக்கரிகாலன், கரிகாலன் எனப் பல்வேறு பெயர்களால் சுட்டப் பெறுகிறான். கடியலூர் உருத்திரங் கண்ணனார் பட்டினப்பாலையிலும் முடத்தாமக்கண்ணியார் பொரு நராற்றுப் படையிலும் புறநானூற்றிலும், பத்துப்பாட்டிலும் பல்வேறு பெயர்களால் குறிப்பிடப்பெறுபவன் இவன் ஒருவனே. போர்கள் இத்தகைய பெருமை வாய்ந்த கரிகாலன் இளைஞனாக இருந்த போது நடத்திய போரில் வேளிர்கள் பதினொருவரையும் வேந்தர் இருவரையும் வெற்றி கொண்டான். இப்போரில் வேளிர்களும் சேரனும் பாண்டியனும் கொல்லப்பட்டனர். இதனை வெண்ணிப் பறந்தலைப் போர் எனச் சிறப்பித்துக் கூறுவர், இப்போரினையடுத்து வாகைப் பறந்தலை என்னுமிடத்தில் நடந்த போரில் மன்னர்கள் ஒன்பதின்மரையும் புறமுதுகிட்டோடச் செய்தான். இவ்விரு போர்களன்றி வேறு பல போர்களிலும் கரிகாலன் வெற்றி கொண்டான். கரிகாலன் இலங்கை மீது படையெடுத்துச் சென்று பன்னீராயிரம் பேரைச் சிறைப்படுத்தித் தமிழகத்திற்குக் கொணர்ந்தான் என்றும், அவர்களைக் கொண்டு காவிரியின் இரு மருங்கிலும் கரைகளை அமைத்தான் என்றும் இலங்கை வரலாற்று நூலான இராசாவளி கூறுகிறது. இவ் வெற்றியின் மூலம் கரிகாலனிடம் சிறந்ததொரு கப்பற் படை இருந்தது என்பதை அறிகிறோம். ஆட்சி முறை கரிகாலன் அறத்தை அடிப்படையாகக் கொண்டுசெங்கோலாட்சி நடத்தினான். இவனுடைய ஆட்சியின் கீழ் பல்வேறு நாடுகள் அடங்கி யிருந்தன. ஆனால் அவற்றை அடிமை நாடுகளாக நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தலைநகரான புகார் நகரத்தில் மக்களுக்கு உணவளிக்கும் அட்டில் சாலை ஒன்றை ஏற்படுத்தினான், காடு திருத்தி நாடாக்கி, குளம் தொட்டு வளம் பெருக்கினான். இதனால் நாட்டில் பஞ்சமில்லை; எனவே பஞ்சத்திற்கு அஞ்சி மக்கள் நாட்டைவிட்டு வெளியேறிப் பிழைப்பிற்காகப் பிற நாடுகளுக்குச் செல்லும் தேவையின்றிச்சோழ நாட்டிலேயே வனத்துடன் வாழ்வதற்கான வழிவகைகளை மேற்கொண்டான். காவிரியின் குறுக்கே உறையூருக்குக் கிழக்கில் கல்லணையைக் கட்டிப் பாசனத்தைச் சீரமைத்தான். சல்லணையைக் கரிகாலன்தான் கட்டினான் என்பதற்கான அகச் சான்றுகளோ இலக்கியச் சான்றுகளோ காணப்பெறவில்லை. இருந்த போதிலும் செவிவழிச் செய்திகள் கரிகாலன் கட்டியதாகவே வழங்கிவருகின்றன. வாணிகம் கரிகாலன் காலத்தில் புகார் நகரம், அயல் நாட்டு கடல் வாணி கத்திலும் உள்நாட்டு தரை வாணிகத்திலும் சிறந்த விளங்கியது. இறக்குமதி செய்யப்பட்டனவும் ஏற்றுமதி செய்யப்படுவனவுமாகிய பொருள்கள் புகார் துறைமுகத்தில் குவிந்து கிடந்தன. அரசு அதிகாரிகள் அவற்றை ஆய்வுசெய்தும், சரிபார்த்தும் புலிமுத்திரைச் சின்னம் பதித்துப் பாதுகாத்த னர். அரபிக் கடல் வழியாக வந்த உயர் வகைக் குதிரைகளும் இலங்கையின் விருந்து கொண்டு வரப்பட்ட உணவுப் பொருள்களும் காழகம் (பர்மா - மியான்மர்) என்னும் நாட்டிலிருந்து வந்த பொருள்களும், வங்கக்கடல் வழியாக வந்தத் தேக்கும் சேர நாட்டிலிருந்து வந்த மிளகுப்பொதிகளும், புகார்த் துறையில் நிறைந்து காணப்பட்டன. வடமலையில் கிடைத்த பொன்மணிகளும், குடமலைச் சந்தனமும், கங்கைச் சமவெளிப் பொருள்களும் தரை வழியாகவும் கடல் வழியாகவும் புகாரில் வந்து இறங்கின. காவிரிப்படுகையில் விளைந்த கரும்பு வெல்லம்), இஞ்சி, மஞ்சள் முதலியனவும் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக இங்கு வந்து சேர்ந்தன. இவற்றிலிருந்து கரிகாலன் காலத்தில் சோழரின் உள்நாட்டு, அயல் நாட்டு வாணிகம் பெற்றிருந்த வளமையினையும் பெருமையினையும் அறியலாம். புதுப்புனல் விழா வாழ்க்கையை இன்பமயமாகக் கழிப்பதில் தமிழர்கள் மேலோங்கிய வர்கள். பல்வேறு விழாக்களைக் கொண்டாடி மகிழ்ந்தனர். சோழநாடு கடலையொட்டி அமைந்திருந்தமையால் கடல் நீர் விளையாட்டுகள் பேரளவில் நடைபெறும். புகார் நகரில் கடலில் நீராடும் விழா' என்பது சிறப்பாகக் கொண்டாடப் பெறும். இதனை "வேந்தர் விழா'' அதாவது இந்திராவிழா" என்று அழைத்தனர். உள்நாட்டில் உறை யூரில் நடைபெற்ற "குளநீராடுவிழா" என்பது "பங்குனி மயக்கம்" என்று அழைக்கப்பெற்றது. கழார் நகரில் நடைபெறும் விழா புதுப்புனல் விழா" எனப்பெயர் பெற்றது. கரிகாலன் தன் மனைவியுடனும் சுற்றத்தாருடனும் இவ்விழாவில் கலந்து கொண்டான். இவனுடன் ஆயத்தார், ஆடும் பெண்கள், பாடும் பெண்கள், அரசிளங்குமரர் உரிமைச் சுற்றம் என்னும் பலரும் கலந்து கொண்டனர். களவேள்வி வேள்வி வேட்டல் என்பது அக்காலத் தமிழ் மன்னர்களின் வழக்க மாக இருந்தது. கரிகாலனும் தன்னுடைய வெற்றிகளைக் கொண்டாடும் வகையில் பல களவேள்விகளைச் செய்தான். இதன் மூலம் ஆரிய சமயத்தின் - பார்ப்பனியத்தின் காய்கனல் கரிகாலன் காலத்திலேயே கணடுருவியிருந்தது என்பது தெளிவாகிறது. மறைவு காதலையும் வீரத்தையும் தன் வாழ்க்கைப் பட்டாங்காய்க் கொண்டு வீழ்ந்த கரிகாலன், காதல் உணர்வால் மனைவியர் பலரை மணந்திருந்தான். அவன் மறைவுற்றபோது அவனின் மனைவியர் தங்கள் அணிகலன்களைக் களைந்து பட்ட மரம் போல் நின்றனர். அவனுடைய மகள் அதிமந்தை யாவாள். இவளைச் சேர இளவரசன் ஆட்டனத்தி என்பான் மணந்தாள். காவிரியில் ரூராடும்யாது புதுவெள்ளத்தில் சிக்கினான். பின்னர் மீட்கப்பட்டான். இவன் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இருந்தவன். சேரன் செங்குட்டுவனும், கொங்கு நாட்டு வேந்தன் பெருஞ்சேரல் இரும்பொறை யும் இவனுடைய காலத்தவர் ஆவர். இவனைக் கடியலூர் உருத்திரங்கண்ண னாரும் முடத்தாமக்கண்ணியாரும் வெண்ணிக்குயத்தியாரும் கழாத்தலை யாரும் பாடியுள்ளனர். இவன் ஆட்சிக்கு வராதபடி இவனுடைய தாய முறையினர் இவனைச் சிறையில் அடைத்தனர். இவன் அச் சிறையினின்று தப்பிவெளிவந்து அரசுக்கட்டில் ஏறினான். வெண்ணிப் போருக்குப்பின் தொண்டை நாட்டையாண்ட தொண்டைமான் இளந்திரையன் மீது படையெடுத்து வெற்றி கண்டான். தொண்டை நாடு அருவா நாடு என்றும், அந்நாட்டு மக்கள் அருவாளர் என்றும் அக் காலத்தில் அறியப்பட்டனர். கொடும்பாளூரை ஆண்ட இருங்கோவேள் மன்னனையும், பொதுவர் என்பாரையும், ஒளியர் என்பாரையும் இவன் வென்றதாக அறிகிறோம். கொங்கு நாட்டையாண்ட பெருஞ்சேரல் இரும்பொறை தகடூர் எறிந்தபின் சோழரின் புகாரையும் கைப்பற்றினான். கரிகாலன் புகாரை மீட்டபின் அவளின் வெளியூரில் பொருதி நின்று வெற்றிகண்டான். இஃது இவனுடைய இரண்டாவது வெண்ணிப் போராகும். இப் போரில் பெருஞ்சேரல் இரும்பொறைமுதுகில் புண்பட்டு அவமானம் தாங்காமல் போர்க்களத்திலேயே வடக்கு இருந்து உயிர்நீத்தான், கரிகாலன் தொண்டை நாட்டில் காடு கொன்று நாடாக்கி வளப் படுத்தி 'மாவளவன்' என்னும் விருதுப்பெயரும் பெற்றான். காவிரிக்குத் குறுக்கே கல்லணையொன்றைக் கட்டி நீர்ப்பாசன ஏந்துகளைச் செய்தான். காவிரிக்குக் குறுக்கே கல்லணை சுட்டஇவன் இலங்கையிலிருந்து 12,000 ஆட்களைக் கொண்டு வந்தான் என்றும், பின்னர் அந் நாட்டு அரசன் முதலாம் சுயவாகு சோழனை வென்று அவர்களை மீட்டுச் சென்றதோடு, சோழ நாட்டிலிருந்து 1200 ஆட்களையும் அடிமைப்படுத்திச் சென்றான் என்றும் அந்நாட்டு இராசாவளி" என்னும் பிற்கால நூல் கூறுகிறது. இவன் உறையூர்க் கோட்டையை வலுப்படுத்தினான். முதியவன் போல் உருமாறி முறை வழங்கினான்; தம்மைப் பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணன் னாருக்குப் பதினாறிலக்கம் பொன்னைப் பரிசாகக் கொடுத்ததோடு, பதினாறுகால் மண்டபம் ஒன்றையும் அவர் நினைவாக உறையூரில் கட்டினான்' முடத்தாமக்கண்ணியார், வாணர், பாணர், பாடினி முதலி யோருக்குப் பொன்னையும், முத்தையும் பரிசாக அளித்தான் மணி மேகலையின் அன்னை மாதவி, சோழனுடைய அவையில் அரங்கேற்றம் செய்தாள் என்னும் செய்தியை ஆய்ந்து நோக்கும்போது, அவள் அரங் கேறிய அவை கரிகாற் பெருவளத்தானுடைய அவையாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது. முதலாம் கிள்ளிவளவன் நெடுமுடிக்கிள்ளி) கரிகாற் பெருவளத்தானுக்கு ஆண் வாரிசு இல்லை. அவனுக்குப் பின் அரசுக் கட்டில் ஏறிய முதலாம் கிள்ளிவளவனுக்கும் கரிகாற் பெருவளத் தானுக்கும் உறவுமுறை என்னவென்பது தெரியவில்லை. ஆனால், சிலர் இவன் கரிகாலன் மகன் என்று கூறுகின்றனர். மணிமேகலையில் இவன் கிள்ளிவளவன், நெடுமுடிக்கிள்ளி, வடிவேற் கிள்ளி, தொடுகழற்கிள்ளி, மாவண்கிள்ளி முதலிய பெயர்களால் அறியப் படுகிறான். இவன் தொண்டை மண்டலத்து வாணர் அரச குலத்து இளவரசி சீர்த்தி என்பவளை மணந்தான். இவ்விருவருக்கும் பிறந்தவனே கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மணிமேகலையைக் காதலித்துக் கொலையுண்ட உதயகுமரன் என்பான். இவன் காலத்தில் தொண்டை நாடு சோழநாட் டுடன் இணைக்கப்பட்டிருந்தது. இதனை இவன் தம்பி இளங்கிள்ளி (இளங்கோன்) காஞ்சியிலிருந்து ஆண்டு வந்தான். இளங்கிள்ளி தன் அண்ணனின் ஆணைப்படி தொண்டை மண்டலத்தைக் கைப்பற்ற வந்த சேர, பாண்டியரைக் காரியாற்றங் கரையில் தோற்கடித்தான். இவன். நாகநாட்டு யாழ்ப்பாணம்) இளவரசி பீலிவளை என்பவளைக் களவு மணம் பூண்டதாகக் கூறப்படுகிறது. கிள்ளிவளவன் காலத்தில் தமிழகம் தொலைக்கிழக்கு நாடுகளுடன் நெருங்கிய வாணிகத்தொடர்புகொண்டிருந்தது. சாவக நாட்டு அரசன் புண்ணியராசன் அனுப்பிய தூதுக்குழு கிள்ளி வளவனிடம் வந்து சென்றதையும் அக்குழுவினர் அறவண அடி களையும், மணிமேகலையை யும் கண்டுசென்றதையும் மணிமேகலை யால் அறிகிறோம். இவனுடைய காலத்தில் பெரும்புயலால் பூம்புகார் மூழ்கியதையும் இக் காப்பியம் கூறுகிறது'. இவன் காரி யாற்றங்கரையில் துஞ்சினான். இவன் காலம் தோரா. கி.பி.150 ஆக இருக்கலாம் கோப்பெருஞ் சோழன் கோப்பெருஞ் சோழன் கிள்ளிவளவனுக்குப் பின் அரசுக்கட்டில் ஏறினான். இவனுக்கும் பிசிர் என்னும் ஊரிலிருந்த ஆந்தையாருக்கும் இடையே ஒருவரையொருவர் காணாமலே இருந்த நட்பைப் பற்றிய கதை அக் காலத்தில் பலபடப் புகழ்ந்து பேசப்பட்டதாகும். இச் சோழனைக் கொங்கு நாட்டுச்சேரன் இளஞ்சேரல் இரும்பொறை வென்றான் என்று தெரிகிறது. இவனுக்குப் பிள்ளைகள் இருவர் இருந்தனர் என்றும், அவர்கள் இவன்மேல் காழ்ப்புக் கொண்டு இவனைத் தாக்க முனைந்தனர் என்றும், இதனால் இவன் மனம் வருந்தி வடக்கிருந்து உயிர் நீத்தான் என்றும் புறநானூற்றுச் சான்றுகளால் அறியப்படுகிறது. அவனுடைய நண்பரான பிசிராந்தையாரும் இவனுடைய பிரிவாற்றாழையைத் தாங்காது வடக்கிருந்து உயிர்நீத்தாராம்', கோப்பெருஞ் சோழனுக்குப் பின் சேட்சென்னி நலங்கிள்ளி என்பவனும், அவன் தம்பி இளஞ்சேட்சென்னியும் முறையே புகாரையும் அதன் கடற்கரைப் பகுதியாகிய நெய்தலங்கானலையும் தலைநகராகக் கொண்டு அரசாண்டனர். சேட்சென்னி நலங்கிள்ளியை, உறையூரை யாண்ட இவனுடைய தாய்வழி நெடுங்கிள்ளி எதிர்த்தான். உறையூர் முற்றுகை யிடப்பட்டது. அங்குப் போந்த புலவர் கோவூர்க்கிழாரின் தலையீட்டால் சமைதி சமாதானம் ஏற்பட்டது. உறையூர் நலங்கிள் ளிக்குக் கொடுக்கப்பட்டது. நெடுங்கிள்ளி தன் தலைநகரை ஆவூருக்கு மாற்றிக் கொண்டான். இதனால் சோழநாடு முழுவதும் நலங்கிள்ளி வயமாயிற்று. இவன் பாண்டியரோடு போரிட்டு ஏழெயில் என்னும் தோட்டையைக் கைப்பற்றி அக் கோட்டைக் கதவில் தன் புலிச் சின்னத்தைப் பொறித்தான், இதொரு வாகைப் போர், வாகைப் போர் வெற்றிக்காக மட்டும் மேற்கொள்ளும் போர்; வஞ்சிப் போர் என்பது நாட்டைக் கைப்பற்ற மேற்கொள்ளும் போராகும். இவன் தம்பி இளஞ்சேட்சென்னி இவனுடைய ஆணைப்படி துளுவ நாட்டுப் பாழியூரை வென்று செருப்பாழி யெறிந்த இளஞ்சேட் சென்னி' என்று பெயர் பெற்றான். சேரருடைய பாமூரையும் வென்றான், இவன் கடைசிவரை தன் அண்ணனுக்குத் துணையாகவே பெருமகன்) இருந்தான். சேட் சென்னி நலங்கிள்ளி காரியாற்றங் கரையில் இறந்தான். இறப்பின் கரணியம் தெரியவில்லை . இவர்களுக்குப்பின் சோழ நாட்டையாண்டவன் பெரும்பூட் சென்னியாவான். இவன் அழும்பில், குடவாயில் கும்பகோணம் முதலான ஊர்கனை யாண்டான். இவன் தன்னுடைய தானைத் தலைவனையனுப்பிக் கொங்கு நாட்டுச்சேரன். இளஞ்சேரல் இரும்பொறையின் கீழிருந்த புன்னாட்டின் மீது படையெடுக்கச் செய்தான். சேரணுக்குத் துணையாக இவர் போரில் கலந்து கொண்ட தால் பழையன் தோற்றதோடு போர்க் களத்திலேயே கொல்லப் பட்டான். பின்னர் பெரும்பூட்சென்னிசேரருக்கு உட்பட்டிருந்த கழுமலத்தைக் கைப்பற்றி அதனைக் காத்து நின்ற கணையன் என்பவனையும் சிறைப் பிடித்துச் சென்றான். இதனையறிந்த இளஞ் சேரன் இரும்பொறை தன் படைகளையனுப்பி அதே சுழுமலத்தில் சோழப் படைகளைத் தோற்கடித்து, அவர்கள் போட்டுவிட்டு ஓடிய படைகளை யும் கைப்பற்றச் செய்தான். இவ்வளவே இவனைப்பற்றி நாம் அறிய முடிகிறது. இரண்டாம் கிள்ளிவளவன் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்) கரிகாற் பெருவளத்தானுக்குப்பின் ஆண்ட கிள்ளிவளவனை முதலாம் கிள்ளிவளவன் என்றதால் இவனை இரண்டாம்கிள்ளி வளவன் என்கிறோம். இவன் உறையூரையாண்டவன். இவனுக்கு நெடுமாவளவன், பசும்பூண் கிள்ளிவளவன், பொன்னியல் பெரும்பூண்வளவன், பொலம் பூண்வளவன் என்ற விருதுப் பெயர் களும் உண்டு. இதனால் இவன் பொன் அணிகள் அணிவதில் விருப்ப முள்ளவன் என்பது தெரிகிறது. இவன் காலத்திலும் உள்நாட்டுப் போர்கள் ஏற்பட்டன, அவற்றினின்று தன்னாட்சியை நிலை நிறுத்திக் கொண்டு, சேர நாட்டின் கோநகரான கருவூரை முற்றுகையிட்டு வென்றான். முள்ளூர் மன்னன் மலையமானிடம் பகைமைகொண்டு அவனுடைய இரு குழந்தைகளைப் பிடித்துவந்து யானைக்காலில் இட்டுக்கொல்லமுயன்றான். இதனையறிந்த கோவூர்க் கிழார் தக்க அறிவுரை கூறி அச் சிறார்களை மீட்டார் என அறிகிறோம். பாண்டியன் கோதை மார்பன் மேல் படையெடுத்த இவனைப் பாண்டியனுடைய படைத்தலைவன் பழையன் மாறன் கூடலுக்கு அருகில் தோற்கடித்தான். அப்பொழுது பாண்டிய நாட்டையாண்டவன் தலை யாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஆவான். இவர்களுடைய காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியாகவும், மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கமாகவும் இருக்கலாம். இவன் குராப்பள்ளியில் (குளமுற்றம் இறந்துபட்டான். இதனால் இவனைச் 'சோழன் குராப் பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன்' அல்லது "குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்' என்று அழைக்கின்றனர். இவனுக்குப் பின் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்பான் ஆண்டான். இவன் கொங்கு நாட்டையாண்டயானைக் கண்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையுடன் போரிட்டு வெற்றியடைந்தான். இதைத் தவிர இவனைப் பற்றிய வேறு முகாமைச் செய்தி எதுவும் நமக்குக் கிடைக்க வில்லை . சோழன்செங்கணான் இரண்டாம் கிள்ளிவளவனுக்குப்பின் அரசாண்டவரில் குறிப்பிடத் தக்கவன் சோழன் செங்கணான்' ஆவான். கழக இலக்கியங்களில் அறியப் படும் கடைசியரசன் இவனேயாவான். இவன் கொங்கு நாட்டையாண்ட சேரன் கணைக்கால் இரும்பொறையுடன் சுழுமலம் என்னுமிடத்தில் போரிட்டு வெற்றி கண்டான். மீண்டும் போர்' என்னும் ஊரில் இருவரும் மோதிக்கொண்டனர். அதிலும் பொறையன் தோற்றுச் சிறைப் பிடிக்கப் பட்டான். சோழ நாட்டுச் சிறையில் வாடிய பொறையன் ஒருநாள் நீர்வேட்கை மேலிட்டு நீர் கேட்க, அவனைக் காவலர்கள் இழிவாக நடத்தினர். மானம் தாங்காது பொறையன் சிறையிலேயே உயிர் நீத்தான் என்று அவனே பாடியதாகக் கருதப்பெறும் புறப்பாடலிலிருந்து அறிகிறோம். சிறைமீண்ட இவன் தன் நாட்டிலிருந்து சோழனுக்கடங்கி ஆண்டானென்பது கலிங்கத்துப்பரணியில் காணும் செய்தியாகும், செங்கணான் ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் ஆண்டான். தோராயமாக கி.பி. 225-ல் இவன் இறந்திருக்கலாம். இவனுக்குப்பின் களப்பிரர் சோழநாட்டைக் கைப்பற்றிக் கொண்டனர். இவனோடு கழகக்காலச் சோழர் ஆட்சியும் முடிவடைந்தது. (இ) கழகக்காலப் பாண்டிய வேந்தர் தமிழ்க்கழகம் என்றவுடன் பாண்டியரின் தமிழ்ச்சங்கமே நினை வுக்கு வரும். சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த அப் பாண்டிய வேந்தரின் வரலாற்றைச் சற்றே அறிவோம். கழகக்காலப் பாண்டியநாடு எல்லைகள்: பழம்பாண்டிய நாடு என்பது தமிழகத்தின் தென் பகுதியில் இருந்தது. இதன்மேற்கிலும் கிழக்கிலும் கடல்களேஎல்லை களாயிருந்தன.கழகக்காலத்தில் இலங்கைக்கும் பாண்டிய நாட்டிற்கு மிடையில் குறுகலான சிறுகடல் ஒன்று இருந்தது. இதனை 'ஆர்கலிக் கடல்' என்றனர். இக் கடல் பற்றித் தாலமியின் குறிப்புகளிலும், பெரிப்புளுசு' என்ற நூலிலும் அறியப்படுகின்றது. அவற்றில் இஃது 'ஓர்கலிக் கடல்' (Orgalic Sea) என்று குறிப்பிடப்படுகிறது. கிழக்கு, மேற்குக் கடல்களையும், இந்த ஆர்சுலிக் கடலையும் யவனர்கள் பொதுவாக 'எரிதிரைக்கடல்' செங் கடல்) என்று அழைத்தனர். இதனைத் தமிழிலக்கியங்கள் கொற்கைக் கடல்' அல்லது 'கொற்கைக் குடாக்கடல்" என்று அழைத்தன. அக் காலத்தில் தாம்பரபரணியாறு இந்தக் கொற்கைக்குடாக்கடலில் கலந்தது. இந்த ஆறு கடலுடன் கலக்குமிடத்தில்தான் கொற்கைத் துறைமுகப் பட்டினம் இருந்தது. இத்துறைமுகப்பட்டினத்தில் கிடைத்த முத்துகளைப் பற்றி அக் கால உலக இலக்கியங்களும், வரலாறுகளும் பலப்படப் பேசுகின்றன, சாணக்கியன் தனது அருத்தசாத்திரத்தில் கொற்கையின் முத்துச் செல்வத்தைப் போற்றிக் கூறியுள்ளான். இத்தகைய சிறப்புவாய்ந்த இக் கொற்கைத் துறை தோராயமாக கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் தார்ந்து போயிற்று. இன்று இங்கு மாறமங்கலம் என்னும் சிற்றூரே காணப்படும் கிறது. கழகக்காலத்தில் பாண்டிய நாட்டின் தென்பகுதி இற்றை இராமேசு வரத்தையும் தாண்டியிருந்தது. தோராயமாக கி.மு. 500 ஆண்டுகட்கு முன்புதான் பெரும்புயலால் கடல் பொங்கி அரிப்பு ஏற்பட்டதால் இராமேசுவரம் தனித்தீவு ஆகியது. போர்த்துக்கீசிய வணிகர்கள் கடலரித்த பகுதியை ஆழப்படுத்திக் கப்பல் போக்குவரத்துக்குப் பயன்படுத்திக் கொண்டனர். இதற்கும் பலவாயிரம் ஆண்டுகட்கு முன் இராமேசுவரத்தைப் போல் இலங்கையும் பாண்டிய நாட்டுப் பகுதியிலிருந்து பிரிந்து விட்டது. இதனை ஈழநாட்டு நூலான மகாவம்சத்தில் விரிக்கக் காணலாம். அவ்வாறு இலங்கைக்கும், தென்பாண்டி நாட்டின் தென்கரைக்குமிடையில் துண்டிப்பு ஏற்பட்ட பின் நீரில் மண் கரைந்துவிட்டது. ஆனால், பாறை களும், குன்றுகளும் இன்றுள்ளன. இஃது இயற்கையால் நேர்ந்த செயல். ஆனால், 'பாமரர்' இவை இராமர் இலங்கைக்குச் செல்லும்போது வானரங்களால் போடப்பட்ட கற்கள் என்கின்றனர். இலங்கை, தமிழகத்தினின்று பிரிந்தது போல், பழந்தமிழகத்தின் தென்பகுதி கடல் கொண்ட செய்தியை இறையனாரகப்பொருள் உரைப் பாயிரம், சிலப்பதிகாரம், கலித்தொகை முதலிய நூல்களும் கூறுகின்றன. இதனாற்றான் முதல் இடைக் கழகங்களைக் கடல் கொண்டதென்றும், இன்றைய அகழ்வாராய்ச்சியும், மண்ணியலும், கடல் நூலும் இதனை உறுதிப்படுத்துகின்றன என்றும் கூறுகின்றனர். கழகக்காலப் பாண்டிய நாட்டின் மேற் கெல்லை கடல் என்றாலும் நுணுகிப்பார்க்கும்போது இன்றைய தென்திருவிதாங்கூர், பொதிகைமலை, நாஞ்சில்நாடு முதலியவற்றை இது தன்னகத்தே கொண்டிருந்தது. பொதிகை மலையில் ஆய்என்னும் வேளிர்கள் பாண்டியருக்கு உட்பட்டு ஆண்டனர். விழிஞம் வேளிர் துறைமுக மாகும். இன்றைய தனுசுகோடி முதுகோடி) அன்றைய பாண்டிய நாட்டின் வடவெல்லையாக இருந்தது. வடப்புறத்தில் கொடும்பாளூர் கொடும்பை) இருந்தது. அதனையடுத்துச் சோழ நாடு இருந்தது. கொடும்பாளூரையாண்ட குறுநில மன்னர்கள் இருங்கோ வேள்' எனப்பட்டனர். இவர்கள் சமயத்திற்கேற்றபடி பாண்டியரோடும், சோழரோடும் கூட்டுச் சேர்ந்து கொள்வர். மலைகளும் குன்றுகளும் கழக இலக்கியங்களை ஆயும்போது பாண்டிய நாட்டிலிருந்த மலைகள், குன்றுகள், ஆறுகள், துறைமுகங்கள், நகரங்கள் முதலியவை பற்றிய விவரங்கள் கிடைக்கின்றன. இன்றைய மதுரைக்கு வடக்கிலுள்ள இருங்குன்றம் கழகக் காலத்தில் திருமால்குன்று, திருமாலிருஞ்சோலை, சோலைமலை முதலிய பெயர்களால் அறியப்படுகிறது. இதன் உச்சியிலிருந்த இயற்கைக் குகையில் சமண, சாக்கிய முனிவர்கள் வாழ்ந்தார்கள். இதன் கல் படுக்கைகளிலுள்ள பிராமிக் கல்வெட்டு இவ் வுண்மையைத் தெளிவாக்குகிறது, கழகக்கால் நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் பாடிய திருப்பரங்குன்றம்' என்னும் திருப்பதியிலும், சமண சாக்கிய முனிவர்கள் வாழ்ந்த இயற்கைக் குகையும், கல் படுக்கைகளும் காணப்படுகின்றன. இதிலுள்ள பிராமிக் கல்வெட்டில் கீழகப்புலவர் நல்லந்துவனார்பெயரும் காணப்படுகிறது. இதைப்போலவே ஆனைமலையின் உச்சியில் இயற்கைக் குகையும், கல்படுக்கைகளும் உள்ளன. இதிலுள்ள பிராமிக் கல்வெட்டு கழகக் காலத்துச் சாக்கிய முனிவர்கள் இங்குத் தவம் செய்தனர் என்பதைக் கூறுகிறது. சங்க நூல்களில் அறியப்படும் பொதிகைமலை பாண்டிய நாட்டில் இருந்தது. மலயத்துவச பாண்டியன் இதில் தவம் செய்ததாகக் கூறப்படு கிறது. அகத்தியருக்கும் இம் மலைக்கும் தொடர்பு இல்லை. அவரைப் பிணைத்துப் படைத்த கதை கிபி. 8 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. சங்க நூல்களில் பெருமையுடன் பேசப்படும் பறம்பு மலையும், பறம்புநாடும் பாண்டிய நாட்டில்தாம் இருந்தன. இதில் வாழ்ந்த பாரியின் காலம் தோராயமாக. கிபி. 100-125 ஆக இருக்கலாம். இன்று கழுகுமலை என . வழங்கப்படும் குன்றுகளில் குகைகளும், கல்படுக்கைகளும் காணப்படுகின் றன. அவற்றிலுள்ள பிராமிக் கல்வெட்டுகள் பாண்டியன் நெடுஞ்செழியன், நந்தி ஆசிரியர் என்னும் முனிவருக்கு ஒரு குகையைத் தானம் செய்ததைக் கூறுகின்றன. இக்கல்வெட்டுகிமு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. ஆறுகள் வைகை, தாம்பரபரணி, சிலம்பாறு, பஃறுளியாறு, குமரியாறு முதலிய ஆறுகள் பாண்டிய நாட்டில் பாய்ந்தோடியதைக் கழக இலக்கியங் சுகளிலிருந்து அறிகிறோம். இவற்றில் பஃறுளியாறும், குமரியாறும் கடல் கொண்ட பாண்டிய நாட்டுடன் கடலில் மறைந்து விட்டன. துறைமுகப்பட்டினங்கள் தொண்டிமருங்கூர்ப்பட்டினம், கொற்கை, குமரி, விழிஞம் முதலிய துன்முகங்களின் பெயர்கள் கழக இலக்கியங்களில் அறியப்படுகின்றன. இவற்றில் ஏற்றுமதியான பொருள்கள் பற்றியும், அயலகச் சுலுங்கள் இவற்றில் வந்து போனமைபற்றியும் கழக இலக்கியங்களிலேயன்றி அயலகச் சான்றுகளிலும் குறிப்புகள் காணப்படுகின்றன. நகரங்கள் பாண்டிய நாட்டின் முகாமை நகரங்களான தென்மதுரையும் கதவ புரமும் கடலுள் மூழ்கின. கூடல் (மதுரை), மோகூர், தங்கால், அலைவாய் செந்தில், பிசிர் ஆகியவை சங்ககாலப் பாண்டியர் நகரங்களாகும். பாண்டியரின் கொடிவழித் தானைத் தலைவர்கள் (பழையர், பழையன் மாறன் மோகூரில் இருந்தனர், பாண்டிய நாட்டின் தொன்மை பாண்டிய நாட்டின் தொன்மையைப் பற்றி மேற்கண்ட செய்திகளி விருந்தே ஒருவாறு ஊகித்தறியலாம். தமிழக வரலாறு' பாண்டிய நாட்டில் தான் தொடங்குகிறது. உலக வரலாறே இலெமூரியா அல்லது கடல் கொண்ட தென்னாட்டிலேதான் தொடங்குகிறது. முதல் மாந்தன் இங்கு தான் தோன்றினான் என்றெல்லாம் கூறும்போது பாண்டிய நாட்டின் தொன்மையைக் கணித்துக் கூறவியலாது. கிமு. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த இலங்கை வரலாறு தீபவம்சம் அந் நாட்டு முதல் சிங்கள மன்னனான விசயகுமாரன் பாண்டியன் மகளை மணந்ததோடு அவனுடைய ரப்ப தோழர்களும் பாண்டிய நாட்டின் பெண்களை மணந்து கொண்டு பாண்டியருக்கு ஆண்டுதோறும் விலையுயர்ந்த முத்துக்களையும், பிற பொருள்களையும் பரிசாக அனுப்பினர் எனக் கூறுகிறது. பாண்டியன் தன் மகளைக் கொடுத்ததோடு பரிவாரங்களையும், பதினெண் வகைத்தொழி லாளர்களையும் இலங்கைக்கு அனுப்பி, அந் நாட்டை நாகரிகமுடைய நாடாக்கினான் எனவும் அறிகிறோம். கி. மு. நான்காம் நாற்றாண்டில் அரசாண்ட சந்திரகுப்த மௌரியருடைய அவைக்கு வந்த மெக்சுத்தனிசு என்ற யவனத் தூதுவன் பாண்டிய நாட்டில் ஒரு பெண் அரசாண்டதாக குறிப்பிட்டுள்ளான்.கிமு. மூன்றாம் நூற்றாண்டில் மௌரியப் பேரரசராய் விளங்கிய அசோகர் தமது பாறைக் கல்வெட்டுகளில் மூவேந்தர்களைப் பற்றிக் குறிப்பிடுவதையறிவோம். கிமு 185 ஆம் ஆண்டில் பொறிக்கப்பட்ட கலிங்க நாட்டுக்காரவேலனின் அத்திகும்பாக் குகைக் கல்வெட்டில் அவனுடைய பாண்டிய நாட்டுப் படையெடுப்பு குறிப்பிடப் படுகிறது. இவற்றைத் தவிர நாம் மேலே கண்ட குன்றுகளிலுள்ள பிராமிக் கல்வெட்டுகள் கழகக்காலத்தில் பாண்டிய நாட்டில் சமணமும், சாக்கியமும்பெற்றிருந்த சிறப்பினை அறிவிக்கின்றன. பாண்டிய வேந்தர் இறையனாரகப் பொருளுரைப்படி கதவபுரத்திலிருந்து ஆண்ட பாண்டிய வேந்தரில் முடத்திருமாறன் கடைசியரசன் ஆவான். இவருக்குப் பின் ஆண்ட வேந்தர்களின் விவரம் கோவையாகத் தெரியவில்லை. கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் வெட்டப்பட்ட மேற்கூறிய கழுகுமலையி லுள்ள கல்வெட்டின்படி முதலாம் பாண்டியன் நெடுஞ்செழியனை முடத்திருமாறனை யடுத்து அறிகிறோம். இக் கல்வெட்டு மதுரைக்கு வடகிழக்கே பதினாறு கல் தொலைவிலுள்ள அரிட்டாபட்டி என்னும் ஊருக்கு அருகிலுள்ள மாங்குளம் என்னும் ஊரிலுள்ள குன்றுகளில் காணப்படுகிறது. தமிழக மன்னர்களின் பிராமிக் கல்வெட்டுகளில் மிகவும் பழமையானது இதுவேயாகும். இப் பாண்டியன் தன் குலக்குரு நந்தி ஆசிரியனுக்கும், அவரைச் சேர்ந்தவருக்கும் தவம் செய்ய இக் குடைவரை யையும், கற்படுக்கைகளையும் சமைத்துக் கொடுத்தான் என்ற செய்தியே இக் கல்வெட்டில் காணப்படுகிறது. இதனைச் சமைத்த பெருந்தச்சன் பழையன் கடலன்வழுதி என்றும், மற்றும் சடிகன், இளஞ்சடிசன் ஆகிய அரச ஊழியர்களின் பெயர்களும் இதில் காணப்படுகின்றன. இவற்றைத் தவிர இக் கல்வெட்டில் இவனைப் பற்றி வேறொன்றும் அறிய முடியவில்லை , முதலாம் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு முன் ஆண்டவர் யாரென்று தெரியாதது போலவே பின் ஆண்டவர்-யாரென்றும் தெரிய வில்லை. ஆயினும் புறநானூறு ஒன்பதாம் பாடலில் 'நெடியோன்” என்பவனைப்பற்றிக் கூறப்படுகிறது. இவன்தான் பஃறுளியாற்றை வெட்டி நீர்ப்பாசன ஏந்துகள் செய்தான் என்பதையும், முந்நீர் விழா (வாரணன் விழா எடுத்தான் என்றும் இப் பாடலிலிருந்து அறிகிறோம். இந்த ஆறு கடல்கோளால் அழிந்துபட்டது என்பதிலிருந்து இவன் கி.மு. முதலாம் நூற்றாண்டுக்கும் முற்பட்டவன் எனத் தெளியலாம். நெட்டிமையார் என்னும் புலவர் (புறம் 15இதனைப் பஃறுளியாற்று மணலினும் அதிகமான ஆண்டுகள் வாழும்படி வாழ்த்துகின்றமையால் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி பஃறுளியாறு கடல் கொள்ளப்படு வதற்கு முன் ஆண்டதாகக் கருதப்படு கிறது. ஆனால், அது பொருத்தமா யில்லை, சிலப்பதிகாரத்தின் காலமான கி.பி. 180க்கு முன்பே ஆண்டிருக்க வேண்டுமென அறிகிறோம். புறநானூறு தரும் சான்றுகளிலிருந்து இவன் பல நாடுகளை வென்றா னென்றும், வென்ற நாடுகளிலிருந்த நகரங்களைக் கழுதைகளைக் கட்டி ஏர் உழுதவனென்றும், வென்ற நாடுகளில் கிடைத்த கொண்டிப் பொருள்களைப் புலவருக்கும், வறியருக்கும் வாரி வழங்கியவனென்றும் அறிகிறோம். இவ்வாறு பல நாடுகளையும் வெற்றி கொண்ட பெருமிதத் தால் இவன் வேள்விகள் பல செய்து 'பல்யாகசாலை' என்னும் விருதும் பெற்றான். பின் எழுந்த மதுரைக் காஞ்சியிலும் "மாங்குடி - மருதனார்' தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனை வாழ்த்தும்போது பல்யாகசாலை முதுகுடுமியைப்போல் பல சிறப்புகள் பெற்று வாழுமாறு வாழ்த்து கிறார் (மது. 759.763). கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட வேள்விக் குடிச் செப்பேட்டிலும் இவனைப் பற்றிய குறிப்புகள் காணப்படும் கின்றன. இவன் ஆண்ட ஆண்டுகளில் எண்ணிக்கையும், இவனுக்குப்பின் ஆண்டவர்களின் பெயர்களும் தெரியவில்லை. அடுத்து ஆண்ட பாண்டியன் பெருவழுதி என்பவனைப்பற்றிப் புற நானூறு வாயிலாக அறிகிறோம். இவன் போரில் வல்லவன் (கருங்கை ஒள்வாள் பெருவழுதி என்றும், கவுரியர் மருகன் என்றும் இரும்பிடர்த் தலையார் என்னும் புலவர் பாடுகிறார். இதைத் தவிர இவனைப் பற்றியறிய வேறு செய்திகள் கிடைக்கவில்லை. இவனுடைய தம்பி இளம்பெருவழுதிஎன்பவன் ஒரு புலவன் ஆவான். இவன் புறநானூற்றில் 12 ஆம் பாடலை யும், பரிபாடலில் 15 ஆம் பாடலையும் பாடியவன். இவன் கலத்தில் செல்லும் போது கடலில் மூழ்கி இறந்தான். அடுத்து அறியப்படும் பாண்டியன் ஒல்லையூரை வென்ற ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் என்பவன் ஆவான். ஒல்லையூர்ச் சிற்றரசன் சோழருக்கு உட்பட்டவன். ஆதலால் சோழன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தான். அப் போரில் பூதப் பாண்டியன் மாண்டான். அவனுடலைத் தீயிலிட்டபோது பூதப்பாண்டியன் கோப்பெருந்தேவியும் உடன்கட்டையேறினாள். அடுத்து அறியப்படும் பாண்டியன் பசும்பூண்பாண்டியன் ஆவான். இவன் பொதிகை மலையில் அரசாண்ட ஆய் அண்டிரன் துணையுடன் கொங்கு நாட்டின் கிழக்குப் பகுதியைக் கைப்பற்றினான். அக் காலத்தில் கொங்கு நாட்டின் நடுவில் தகடூர் இருந்தது. அதனையாண்ட நெடுமிடல் அஞ்சியைப் பசும்பூண் பாண்டியன் துளுவநாட்டின் மீது போர் தொடுக்கச் செய்தான். அப்போரில் நெடுமிடல் அஞ்சி இறந்துபட்டான். ஆகவே, இப்போரில் பாண்டியன் தோல்வி கண்டான். ஏனெனில், தகடூர் நெடுமிடல் அஞ்சி பாண்டியனின் தானைத்தலைவன் ஆவான். இப் பாண்டியனுக்கு இருந்த மற்றொரு தானைத்தலைவன் கள்வர் பெருமகன் தென்னவனாவான். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கிமு, இரண்டாம் நூற்றாண்டிலிருந்த நெடுஞ்செழியனை முதலாம் நெடுஞ்செழியன் என்றோம். இவன் கி.பி. 2 ஆம் நூற்றாண்டினிடைப் பகுதியில் பாண்டிய நாட்டையாண்டவன் .வடபுலத்தி லிருந்து தென்னகத் தின் மீது படையெடுத்து வந்த யவு தேயர் என்னும் கூட்டத்தாரின் ஆரியப் படையைத் தோற்கடித்துத் துரத்தியதால் இவன் 'ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்" என்று அழைக்கப்படுகிறான். இவன் சிறந்த அறிஞன். கல்வி கற்றலின் பயனைப்புறம்.183ஆம் பாடலில் சிறப்புறப் பாடியுள்ளான். இவன் அரசியல் பொறுப்புகள் அனைத்தையும் தம் ஊழியர் கனையே நம்பி விட்டுவிட்டு நேரடிக் கண்காணிப்புச் செய்யாமல் பொறுப்பின்றிக் கிடந்தான். ஒரு சமயம் வார்த்திகன் என்னும் பார்ப்பன னுடைய மகன் திருடியதாக ஊழியர்கள் மூலம் கேட்டுத் தீர உசாவாமல் அவனைச் சிறையில் அடைத்தான்; வார்த்திகன் மனைவி கார்த்திகை என்பவள் கொற்றவைக்கோயில் முன் முறையிட்டாள். அக் கோயில் கதவு தானாகவே மூடிக்கொண்டது. தவற்றையுணர்ந்த பாண்டியன் பார்ப் பனனை விடுவித்து மன்னிப்புக்கேட்டதோடு தன் குற்றத்தின் கழுவாயாக நிலங்களையும் அவனுக்கு அளித்தான். இதைப் போலத்தான் தன் நகருக்குப் பிழைப்புத் தேடிச் சிலம்பு விற்க வந்த கோவலனைக் கள்வனென்று கூறிய அரண்மனைப் பொற்கொல்லன் பேச்சை நம்பித் தீர உசாவாமல் கோவலனைக் கொலைசெய்யும்படி ஆணையிட்டான். பின்னர் கண்ணகி முறை யிட்டுச் சிலம்பின் கதையை விளக்கும்போது மன அதிர்ச்சியால் அரசுக் கட்டிவிலேயே மாண்டான். இதனால் இவன் 'அரசுக் கட்டிலில் துஞ்சிய நெடுஞ்செழியன்' எனப் பட்டான். இவனுடைய முறையற்ற செயலைக்கண்டு கொதித்தெழுந்த நகர மக்கள் அரண்மனையைத் தீயிட்டுக்கொளுத்தினர். இதையே கண்ணகி மதுரையை யெரித்ததாகக் கூறுவர். தோராயமாககிபி.180-ல் இவன் இறந்திருக்கலாம். இவன் காலத்தில் சேரநாட்டையாண்டவன் சேரன் செங்குட்டுவன். இச் செங்குட்டுவன் பாண்டியர் தானைத் தலைவன் மோகூர்ப்பழையன் மாறன் தன் நண்பன் அறுகையென்னும் அரசனைப்போர் செய்து கொன்றான் என்பதற்காக மோகூர்மீது படையெடுத்து, பழையன் மாறனுடைய காவல் மரமான வேப்ப மரத்தை வெட்டி, அவனையும் கொன்று, அந்த வேப்பமரத்தை அவனுடைய உவளகப் பெண்களை மொட்டையடித்துக் கூந்தலால் திரித்த சுயிரைக் கொண்டு பிணைத்து, யானையால் இழுத்து வரச்செய்தான். இப் போர் சேரன் செங்குட்டுவன் இளவரசனாக இருக்கும் போது நடந்தது. இச் சேரனே பின்னர் கற்புத்தேவதை கண்ணகிக்குச் சிலை யெடுத்தவன் ஆவான் சாத்தனாரும் இவ்விரு மன்னர்களுடைய காலத்தவரே ஆவார். பாண்டியன் நன்மாறன் இவனுடைய இயற்பெயர் வெற்றிவேற் செழியன் என்பது. அவன் கொற்கைப்பட்டினத்தில் இளவரசனாக நெடுஞ்செழியனுக்குத் துணை யாக ஆண்டு வந்தான். நெடுஞ்செழியன் இறந்தபின் அரசுக்கட்டில் ஏறியதும் 'பாண்டியன் நன்மாறன்' என்று பெயர் பூண்டான். கண்ணகி வழக்குரைக்க வந்து இவ் வழக்கில் நெடுஞ்செழியன் தீர்ப்புக்கூறுமுன் தானே இறந்தான். கண்ணகியும் மதுரையை விட்டு வெளியேறினாள். ஆகவே, அரசு முறைப்படி அவ் வழக்கை உசாவித் தீர்ப்புக் கூறும் பொறுப்பை அடுத்து வந்த இப் பாண்டியன் ஏற்றான். கோவலனைக் குற்றவாளியாக்கி அவன் கொலைக்குக் கரணியமாயிருந்த அரண்மனைப் பொற்கொல்லனையும், அவனுக்கு உறுதுணையாக நின்ற பொற்கொல்லர் பலரையும் கொலைச்செயலுக்குத் தூண்டிய தற்காகவும், அரசமாதேவியின் சிலம்பைத் திருடியதற்காகவும், அக் கால் முறைப்படி அவர்களின் தலைகளை வெட்டும்படி தீர்ப்பளித்தான். நெடுஞ்செழியன் தானே இத் தீர்ப்புக்கு ஆளாகி ஏற்கெனவே மாண்டதால் தப்பினான். சேரன் செங்குட்டுவன் வடபுலம் சென்று, சுனாவிசயரை வென்று சுண்ணகிக்குச் சிலையெடுத்து மீண்டான். பின், அக் கனக விசயரைப் பாண்டியன் நன்மாறனுக்குக் காட்டும்படி அனுப்பினான். அவர்களைத் துறவி வேடத்தில் கண்ட நன்மாறன் போர்க்களத்தில் தோற்றுத் துறவி வேடம் பூண்டவரைச் சிறைப்பிடித்து வந்தது தமிழர் பண்புக்குப் புதுமை யானதுஎன்றானாம்! இவன் அரசுக்கட்டிலேற தாயமுறையினர் செய்த சூழ்ச்சி களையும், கலகங்களையும் வென்று காலம் தாழ்த்தியே முடி சூட்டிக் கொண்டான், இவன் தலைசிறந்த வீரன் என்பதைக் காரிக்கண்ணனார், மருதன் இள நாகனார் முதலிய புலவர்கள் பாடிய புறநானூற்றுப் பாடல்களால் அறியலாம். இவன் இலவந்திகைப் பள்ளி அல்லது கடகாரம் என்னும் மாளிகைச் சோலையில் துஞ்சினான்.சாத்தனார் பாடிய பாடலின் கீழுள்ள குறிப்பில் இவன் சித்திர மாடத்தில் துஞ்சியவன்' எனவும் அறியப்படு கிறான். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் இவன் பாண்டியன் நன்மாறனுக்குப்பின் அரசுக்கட்டில் ஏறியவன். 'நெடுஞ்செழியன்' என்னும் வரிசையில் இவன் மூன்றாம் நெடுஞ்செழியன் ஆவான். இவன் சிறந்த புலவனாகவும் இருந்தான், இவன் மாங்குடி மருதனாரிடம் முறைப்படி தமிழ் பயின்றான். தன்னை எதிர்த்துப் போரிட்டசோழனையும், சேரனையும், அவர்களுக்குத் துணையாக வந்த திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேள், பொருநன் ஆகிய ஐந்து அரசர்களையும் தலையாலங்கானம் என்னும் ஊரில் நடந்த போரில் வென்று, 'தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்' ஆனான். இவ் வெற்றியைப் புகழ்ந்து மாங்குடி மருதனார் மதுரைக்காஞ்சி' பாடினார். நக்கீரர், இடைக்குன்றூர்க்கிழார், கல்லாடனார், பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணியார் ஆகியோரும் இவன் வெற்றியைப் புகழ்ந்து பாடியுள்ளனர். பிற வெற்றிகள் தலையாலங்கானத்து வெற்றிக்குப்பின் வேள்என்வி என்பவனுடைய மிழலை நாட்டையும், முத்தாறு என்னும் ஊரையும், அழும்பில் வேள் என்பவனுடைய அழும்பில் என்னும் பலரையும் வென்றான். கொங்கு நாட்டுச் சேர மன்னன் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்பவனைப் போரில் வென்று சிறைப்பிடித்தான். பின்னர் இச் சேரன் பயம்புக் குழியில் அகப்பட்ட யானை தன் முயற்சியினால் குழியிலிருந்து தப்பிஓடியது போல் சிறையினின்று தப்பி ஓடிவிட்டான். சோழவேந்தன் கிள்ளிவளவன், சேரன் யானைக்கண்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையை வென்றான். பின்னர் பாண்டிய நாட்டின்மீது படையெடுத்தான். கூடலுக்கருகில் அவன் படைகள் நெருங்கியதும் நெடுஞ்செழியனின் தானைத் தலைவன் மோகூர்ப்பழையன் மாறன் அவைகளைச் சிதறடித்தான். சோழன் படைகளைப் போர்க்களத்திலேயே விட்டுவிட்டு ஓடினான். அவற்றைத் தானைத் தலைவன் கைப்பற்றினான். நெடுஞ்செழியன் சேர நாட்டின் மீது படையெடுத்துக் குட்டுவன் சேரலின் செங்குட்டுவன் மகன் துறைமுகமாகிய முசிறியை முற்றுகை யிட்டு, அங்கிருந்த தெய்வச் சிலையைக் கவர்ந்து வந்தான். இவன் ஆண்ட காலத்தை நம்மால் கணிக்க முடியவில்லை. உக்கிரப் பெருவழுதி தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்குப் பிறகு பாண்டிய நாட்டையாண்டவன் உக்கிரப் பெருவழுதி ஆவான். இவனைப் பற்றி அறிவதற்கு விரிவான சான்றுகளில்லை, இவன் சோழநாட்டுக் கோட்டைகளை வென்றான். அத்தகைய ஒரு கோட்டைகானப்பேரெயில் என்பதாகும். எனவே, இவள் "சானப் பேரெயில் கடந்த உக்கிரப் பெரு கிவழுதி' என அழைக்கப்படுகிறான். இவன் சிறந்த புலவனும் ஆவான். அகநானூற்றையும், நற்றிணையையும் தொகுப்பித்தான். இவன் காலத்தில் நல்லந்துவனார், மருதன் இளநாகனார் முதலிய புலவர்கள் இருந்தனர். கடைச் சங்கத்தில் வீற்றிருந்த புலவர் நாற்பத்தொன்பதின்மரில் இவனும் ஒருவன். எனவே, இவன் கடைக்கழகத்தின் புரவலனாகவும், புலவனாகவும் திகழ்ந்தான். கிபி. 3ஆம் நூற்றாண்டில் இவ் வுக்கிரப் பெருவழுதியின் காலத்தில்தான் பாண்டிய அரசும், கடைக்கழகமும் குலைந்தனவென்று கருதப் பெறுகின்றது. பாண்டிய வேந்தரில் இவனே கடைசியரசன் ஆவான். இவனுக்குப் பின் பாண்டிய நாட்டைக் களப்பிரர் கைப்பற்றிக்கொண்ட னர். களப்பிரர் ஆட்சியி. ஆறாம் நூற்றாண்டுவரை நிலைத்திருந்தது. கிபி. ஏழாம் நாற்றாண்டில் மீண்டும் பாண்டியரின் ஆட்சி ஏற்பட்டது. (ஈ) கழகக்காலக் குறுநில மன்னர்கள் கழகக்காலத்தில் சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு கொங்கு நாடு, துளுநாடு, தொண்டைநாடு அருவாநாடு என்று தமிழகம் பல பகுதிகளாக அறியப்பட்டாலும் சேரநாட்டிலும், கொங்கு நாட்டிலும் சேர வேந்தர் மாறிமாறியும், ஒரே சமயத்திலும் ஆண்டதைப்போலவே பிற முடியுடை வேந்தர்களும் துளு நாட்டிலும், தொண்டை நாட்டிலும் ஆண்டுள்ளனர். ஆகவே, யார்யார் எந்தெந்த நாடுகளை எவ்வெப் பொழுது ஆண்டனர் என்பதை வரையறுத்துக் கூறமுடியாது. ஆயினும், சேரரைப் பற்றியறியும் போது சேரநாட்டையாண்டவர், கொங்கு நாட்டையாண்டவர் எனப்படித்தறிய ஏந்தாக அவ்வாறு பிரித்துக் கொண்டோம். உண்மையில் அஃதொரு சரியான முறையேயன்று. குறுநில மன்னர்களின் நாடுகளும், நாட்டின் எல்லைகளும்கூட வரையறுத்துக் கூறமுடியாதவையே. ஆயினும் இலக்கியங்களில் கண்டவாறு அவர்களைப்பற்றிக் கூறலாம். குறுநில மன்னர்கள் வள்ளல்களாகவும், பெருவேந்தர்களைப் போல் சிறப்பெய்தியவர்களாகவும், மக்களின் மதிப்பைப் பெற்றவர்களாக வும் திகழ்ந்தார்கள். பர். வி. ஏ. சிமித்தின் கணக்குப்படி சங்கக்காலத்தில் தோராயமாக நூற்றுயிருபதுக்கும் மேற்பட்ட குறுநில மன்னர்கள் இருந்த தாக்கூரப்படுகிறது. அவர் சேர, சோழ, பாண்டியர் கொடிவழியினரையும் சேர்த்துக் கணக்கிட்டிருக்கிறார். நமது கணக்கின்படி ஏறத்தாழ எழுபத் தாறு குறுநில மன்னர்களே காணப்படு கின்றனர். இவர்களில் ஒருசிலரைப் பற்றி மட்டும் கூறுவோம். கடையேழு வள்ளல்களின் பட்டியலைத் தொகுத்துக் கூறும் பெருஞ்சித்திரனார், நத்தத்தனார் ஆகிய புலவர்கள் அவ்வேழு வள்ளல் களையும் குறுநில மன்னர்களாகவே காட்டியுள்ளனர். ஆகவே, கடையேழு வள்ளல்கள் எழுவரும் குறுநில மன்னர்களே. பறம்பு மலைப் பகுதியை யாண்டவனும், முல்லைக்குத் தேர்ந்தவனுமான பாரி, மலையமான் நாடு முள்ளூர்ப் பகுதியையாண்டகாரி, சென்னி மலைப் பகுதியையாண்டரி, கண்மரமலைப் பகுதியையாண்டநள்ளி, பழனிமலைப் பகுதியையாண்ட பேசுள், பொதிய மலைப்பகுதியை யாண்ட ஆய், தகடூர்ப்பகுதியையாண்ட அதியமான் ஆகிய கடையேழு வள்ளல்களும் சங்க காலக்குறுநில மன்னர் களே. இவர்கள் ஒவ்வொருவரும் கொடைச் செயலில் புகழ்பெற்றவர்கள். முதிரமலைப்பகுதியையாண்ட குமணன், சிறுகுடியில் வாழ்ந்த பண்ணன், வல்வார் என்னும் நகரில் வாழ்ந்த பண்ணன், சந்தூர் பகுதியில் வாழந்ததோயன் மாறன், ஓய்மாநாட்டு நல்லியக்கோடன், கோடைக்கானல் பகுதியையாண்டபண்ணி, நாஞ்சில்நாட்டு வள்ளுவன் தொண்டை நாட்டு இளந்திரையன், பொதியமலைத் திதியன், கருவூரையடுத்த தான்தோன்றி மலைப்பகுதியையாண்ட தாமான் தோன்றிக்கோன், சோழநாட்டுப் பூச்சாற்றூரில் வாழ்ந்த பார்ப்பனன் விண்ணத்தாயன், வேங்கடமலைப் பகுதியையாண்ட ஆதனுங்கன், கரும்பனூர்ப் பகுதியை யாண்ட சுரும்ப தூர்க் கிழான், ஓய்மான் நாட்டு வில்லியாதன், மனோக்கத்தைச் சூழ்ந்த பகுதியை யாண்ட அவியன், குதிரைமலைப் பகுதியையாண்ட பிட்டன், தென்னாட்டுச் சிறுகுடியென்னும் ஊரில் வாழ்ந்த வாணன், இரும்பை என்னும் ஊரில் வாழ்ந்த விரான், அம்பர்என்னுமூரில் வாழ்ந்த அருவத்தை, தருமபுத்திரன் முதலிய பிற வள்ளல்களும் குறுநில மன்னர்களே, பொதியமலைப் பகுதியையாண்டதிதியன், வாகையைக் கோநகர மாகக் கொண்டு வேணாட்டையாண்ட ஆய்எயினன், மோகூர்ப்பகுதியை யாண்ட பழையன் மாறன், காவிரியாறு பாயும் போர் என்னும் கர்ப் பகுதியையாண்ட பழையன், மைசூர்ப்பகுதியை யாண்ட மையூர்க்கிழான், செல்லூர்ப் பகுதியை யாண்ட ஆதன் எழினி, விளங்கில் பகுதியையாண்ட சுடவன் ஆகியோர் தமிழகத்தின் மேலைப்பகுதியில் தெற்கிலிருந்து வடக்கு வரையிலிருந்த குறுநில மன்னர்கள் ஆவர். வேங்கடத்தையாண்ட புல்வி, சோணாட்டுப் பகுதியிலிருந்த ஆர்க்காட்டையாண்ட அழிசி , அவன் மகன் சேந்தன், மல்லியையாண்ட காரியாதி, பச்சை மலையையாண்ட விச்சிக்கோ , நீடூர்ப் பகுதியையாண்டஎவ்வி. கொடும்பாளூர்ப்பகுதியை யாண்ட புலிகடிமால் ஆகியோர் வடக்கிலிருந்து தெற்கே நோக்கித் தமிழகத்தின் கிழக்குப் பகுதியிலிருந்த குறுநில மன்னர்கள் ஆவர். நன்னன் என்பவனும் குறுநில மன்னனே. இப் பெயரில் நால்வர் இருந்ததாக அறிகிறோம். அவர்கள் கோசர் குடியைச் சேர்ந்த பாழியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட நன்னன், வேளிர் குடியைச் சேர்ந்த வியாரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட நன்னன் வேண்மான், ஆய்குடியைச் சேர்ந்த பறம்புமலைப் பகுதியையாண்ட நன்னன் ஆய், சேய்குடியைச் சேர்ந்த நாகர்குடி செங்கண்மா பகுதியைசெங்கம் யாண்ட சேய் நன்னன் ஆகியோர் ஆவர். இவர்களில் பாழியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டதன்னோடு கூட்டுச் சேர்ந்து, முடியுடை வேந்தரோடு பகைமை கொண்டு எதிர்த்தவர்கள் அறுவர். அவர்கள் ஏற்றை, அத்தி, சுங்கன், சுட்டி , பூந்துறை புன்றுறை), சுணையன் என்போர் ஆவர். இவர்கள் தமிழகத்தின் வடக்கெல்லை யோரங்களில் ஆட்சி செலுத்தி வந்தனர். மூவேந்தர்களின் துணைவர்களாய் விளங்கிய பலரும் குறுநில மன்னர்களே. இவர்கள் இவ்வேந்தர்களுக்குத் தானைத்தலைவர் களாய்ப் பயன்பட்டனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் சோழனுக்கு உதவிய பழையனும், பாண்டியனுக்குதவிய பழையன் மாறன், நாகன், அதிகன் ஆகியோரும், தென்னவனுக்கு உதவிய கந்தன், பண்ணி என்போரும், வானவனுக்கு உதவிய பிட்டன், அறுகை ஆகியோரும் ஆவர். மற்றும் சோழரிடத்தில் 'ஏனாதி' பட்டம் பெற்ற ஏனாதி திருக்கிள்ளி, சோழிய ஏனாதி திருக்குட்டுவன், மலையமான் சோழிய ஏனாதி, திருக்கண்ணன் முதலியோரும் குறுநில மன்னர்களைப் போல் இருந்தனர். "கிழார்' என்னும் பெயர் பெற்றிருந்த பலரும் மக்களின் செல் வாக்கைப் பெற்றுச் சிறப்புடன் வாழ்ந்தனர். இவர்களை மன்னரின் அலுவலாளர் எனக் கூறுவதைவிட மக்கள் தலைவர் எனக்கூறுவது மிகவும் பொருத்தமானது. ஆவூர் கிழார், கருவூர் கிழார், கூடலூர் கிழார், செல்லூர் கிழார், சிறுகுடிகிழான் பண்ணன், வல்லார்கிழான் பண்ணன், சுரும்பலூர் கிழான், மையூர் கிழான், அம்பர் கிழான், ஈந்தரர் கிழான்,ஒல்லையூர் கிழான், கொண்கானங் கிழான் மல்லிகிழான், நாலை கிழவன், இலங்கை கிழவோன், நீடூர் கிழவோன், அம்பர் கிழவோன், வேங்கடங் கிழவோன், வல்லங் கிழவோன், காவிரிக் கிழவன், பொறையாற்றுக் கிழான், மலைக் கிழவன், வரைக்கிழவன் முதலியோர் முகாமையானவர்கள் ஆவர். (உ) கழகக்கால ஆட்சிமுறை கழகக்காலத்தில் தமிழகத்தையாண்ட சேரர், சோழர், பாண்டியர் ஆகிய முடியுடை வேந்தர்களுடையனவும், மற்றும் குறுநில மன்னர்க ளுடையனவுமான ஆட்சிமுறையே ஈண்டுக் கழகக் கால ஆட்சி முறை யாகக் கூறப்படுகிறது. மூவேந்தரேயன்றித் தோராயமாக 120 குறுநில மன்னர்களும் கழகக் காலத்தில் ஆண்டனர். ஆயினும், தமிழ்கூறு நல் லுலகத்தில் இவர்கள் நடத்திய ஆட்சிமுறை ஒரே மாதிரியாகவே இருந்தது. பிறங்கடையுரிமை பண்டைக்காலத்தில் பிறநாடுகளில் தோன்றியதைப்போலவே தமிழகத்திலும் அரசப்பதவி தோன்றியது. மூத்தவன் அரசனாக வேண்டுமென்ற மரபுவழிமுறை நீடித்தது. தந்தைக்குப் பின் மூத்த மகன், அவனுக்குப் பின் அடுத்த மூத்தமகன் என்னும் முறையிலே கழகக்கால் மன்னர்கள் அரசுக் கட்டில் ஏறினர். ஓர் அரசனுக்கு இருவேரு மனைவியருக்குப் பிறந்த மூன்று பிள்ளைகள் இருந்தாலும் அவர்களின் அகவைப்படி மூத்த வனுக்குப் பின் இளையவன் என்ற முறையில் முடிசூடிக் கொண்டனர். பிறங்கடையுரிமைப்படி மூத்த மகனுக்குப்பின் அவனுடைய மூத்த மகன்! அரசுரிமை இல்லை . கரிகாலனைத் தவிர வேறு எந்த மன்னனும் மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. மூத்தவன் ஆளும்போது இளையவர்கள் பிறபகுதிகளுக்கு இளவரசர்களாயிருந்து மூத்தோனுக்கு உறுதுணையாயிருப்பர். இதனால் அவர்களுக்கு. ஆளும் நாட்டுப் பகுதி களைக் கொண்டே விருதுப்பெயர்களும் ஏற்பட்டன. தானைத் தலை வர்கள் தனிநகரங்களில் வாழ்ந்தனர். மோகூர் என்ற ஊரில் வாழ்ந்த சோழர் தானைத்தலைவன் “பழையன்" என்றும், சேரமன்னரின் தானைத்தலைவன் 'பழையன் மாறன்' என்றும் அழைக்கப்பெற்றனர். பொதுவாக இவர்களை *வயவர் பெருமகன்' வீரர்களின் தலைவன்) என்றே அழைப்பர். இத்தகைய வயவர் பெருமானாகவும் இளவரசர்கள் இருப்பதுண்டு. நாமறிந்தவரை கழகக் காலத்தில் மகளிர் அரசாண்டதாகச் சான்றில்லை. பாண்டிய நாட் டில் தடாதகைப் பிராட்டியார் ஆண்டதாகக் கூறப்படுவது தொல்தைச் செய்தியே. அரசவை பாண்டிய, சோழவேந்தர் தங்களை மதிக்குலம் சந்திரகுலம்), கதிர்க் குலம் சூரியகுலம் ஆகியவற்றைச் சார்ந்தவரென்றும், இதிகாசவீரர்களின் வழிவந்தவரென்றும் கூறிக்கொள்வது அக்கால வழக்கு முடிசூட்டு விழா நடக்கும்போது மூத்தோர் அவையினரும், பிறரும் கூடி அம் மன்னனை ஏற்பதாய் ஒப்புவர். மன்னனும் அறவழி நடந்து குடிமக்களைத் தன் மக்கள் போல் காப்பான், ஆயினும் அவனுக்கு அறிவுரை கூறப் புலவர்களும், அமைச்சர்களும், பூசாரிகளும் இருப்பர். பொதுவாக அரசவையில் இருப்பவர் குடி, கல்வி, வாய்மை, தூய்மை, நடுநிலைமை, தன்னலமின்மை ஆகிய பண்புகள் நிறைந்த சான்றோராகத்திகழ்வர். இவர்கள் அரசனுக்கு அடிக்கடி அறத்தை வலியுறுத்தி நயன்மையின் காவலனாக இருக்கும்படி செய்வர். அரசன் அன்றாடம் அரசவையைக் கூட்டி, காட்சிக் கெளிய னாகிக் குடிமக்களையும் அரசவையில் அமர்த்திக் குறைகேட்டு முறை வழங்குவான். அயலகத் தூதுவர்களும், அயலக விருந்தினரும் அரசவையில் வரவேற்கப்பட்டனர். தாய்மொழியாம் தமிழைக் கற்றறிந்த அறிஞர் பெருமக்களை வாழ்த்தியும், போற்றியும் பரிசில் வழங்கியும், அரசவையில் சமமாக இருக்கையளித்தும், பெருமைப்படுத்தும் மரபுவழக்கம் தமிழரசர் யாவரிடத்திலும் இருந்தது. ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும் அரசமைப்பின் முகாமையுறுப்புகளாகும். கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் எழுந்த திவாகர நிகண்டில் அமைச்சர், புரோகிதர், தானைத்தலைவர், தூதுவர், சாரணர் ஆகியோர் ஐம்பெருங் குழுவில் இடம்பெற்றிருந்தனர் என்றும், கரணத்தியலவர், கரும விதிகள், சுனசுச் சுற்றம், கடைக்காப்பாளர், நகரமாந்தர், படைத் தலைவர், யானை வீரர், குதிரை மறவர் ஆகியோர் எண்பேராயத்தி லிருந்தனர் என்றும் கூறப்படுகிறது. ஐம்பெருங் குழுவின் மந்திர மொழிகளை அரசன் ஏற்றான். இது மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட அமைப்பாகுமென்று ஒரு சாரார் கருதுகின்றனர். இது மன்னன் தன்னிச்சை போல் மாறாமல் தடுத்து நிறுத்தும் குழுவென்பது சிமித்தின் கருத்தாகும், எண்பேராயம் அரச னுடைய ஆட்சி முறைக்கு உறுதுணையாக நின்ற செயற்குழுவாக இருந் திருக்கலாம். இவர்களைத் தவிர திறம்படைத்த, நுண்ணறிவுள்ள அமைச்சர் களைக்கொண்ட குழுவொன்றும் இருந்தது. அரசனை நெறிப்படுத்தவும், செயல்படாமல் தடுத்து நிறுத்தவும் இந்த அமைச்சரவைக்கு அதிகாரம் இருந்தது. சிறந்த அமைச்சர்களுக்கு விருதுப் பெயர்களும் வழங்கப் பட்டன. அமைச்சர்களுக்கு அடுத்தபடியாக அரசியலில் உறுப்பாண்மை பெற்றோர் தூதுவர்களே. இவர்கள் அரசனின் உள்ளமாக இருந்து அதனை எதிரொலித்தனர். அயலகம் சென்று அரசரின் கருத்துகளைக் கூறவும், அயலசு அரசரின் பதில்களைப் பெற்று வந்து கூறவுமான முகாமைச் செயல் சுளில் ஈடுபட்டனர். இவர்களிலும் மூவகைப் பிரிவினர் இருந்தனர். புலவர்கள் தாமே பெரும்பாலான சமயங்களில் தூது சென்ற நிகழ்ச்சி சுளையும் பார்க்கிறோம். ஒற்றர் என்போர் தூதுவரினும் வேறுபடுவர். இவர்கள் வேவு அல்லது ஒற்றுப் பணியைச் செய்தனர். அரசனின் கண்ணாகவும், காதாகவும் இருந்து செயல்பட்ட. ஒற்றர்கள் பகைவரைப் பற்றிய செய்திகளை முன்கூட்டியே தெரிந்து அறிவிப்பர். இவர்கள் கமுக்கக் குறிகளைக் கையாண்டனர். ஒற்றர்கள் மூவகைப்படுவர் என்றும், ஒருவன் கூறியதை மற்ற இருவரைக் கொண்டு உறுதி செய்த பின்னரே அரசன் செயல்படவேண்டுமென்றும் வள்ளுவர் கூறுகிறார். தூதுவனை அரச னுக்கு ஈடாக மதித்து நடத்த வேண்டும். ஆனால், ஒற்றனைக் கொன்று விடலாம் என்பது கழாக்கால மரபு. படை படை, கொடி, அரியணை, வான், வெண்சாமரம் (கவரி), முரசு முதலியவை அரசின் இன்றியமையாத பொருள்களாய் மதிக்கப் பெற்றன, படையற்ற அரசன் நிலையற்ற குமிழியாகக் கருதப்பட்டான். 'வல்லான் வகுத்ததே வழி" என்னும் கோட்பாடு நிலவிய அக் காலத்தில் படை யில்லாமல் எந்த நாடும், அரசியலும் இயங்க முடியாது. ஆகவே, தமிழக மன்னர்களும் படைகளை வைத்தே மக்களைக் காத்தும், பிற நாடுகளைக் கவர்ந்தும் அவர்களுக்கு ஆக்கமளித்தும் வந்தனர். யானை, குதிரை தேர் படைகளும், காலாள் படைகளும் ஒவ்வொரு மன்னரிடமும் இருந்தன. பெருவேந்தர்களிடம் கப்பற்படையும் இருந்தது. தமிழ் மறவர் யாவரும் வேறுபாடின்றிப் படையில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். வடபுலத்தி விருந்ததைப் போல் குறிப்பிட்ட சத்திரியக் குலத்தவர் மட்டுமே படையில் இருக்க வேண்டும் என்ற நெறியைத் தமிழகப் படையில் காணமுடிய வில்லை. அரசனது மெய்க்காவல் படை அவனுடைய உடலுறுப்புகளைப் போல் செயல்பட்டது. படைவீரர்கள் படம் குப்பாயம், மெய்ம்மறை, வட்டுடை முதலிய ஆடைகளையும், வீரக்கழலையும், காலுறையும் அணிந்தனர். வீரம் இவர்களின் மூச்சாகவும், வீரப் பண்பு இவர்களின் குருதியாகவு மிருந்தது. போர்க்களத்தில் மாள்வோர் வீரத்துறக்கம் அடைவரென்ற கோட்பாட் டில் இவர்கள் நம்பிக்கையுடையவர்கள்.வீரப்பிள்ளைகளைப் பெற்றதால் தாய்மார்கள் பெருமித மடைந்தனர். பெற்ற வயிற்றைப் புலிக்குகை யென்றும், வீரனைப் புலியென்றும் கூறினர். போரில் மாண்டவருக்கு வீரக்கல்நாட்டி, மலர்சூட்டி வணங்கினர். அவர் பிறங்கடையரை வீரர் வழிவந்தோர் எனப் போற்றினர். வீரர்களுக்கு அன்றாடம் முறையான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இவர்கள் பிறவியிலேயே வீரர்களாயி ருந்தனர். முன்வைத்த காலைப் பின்வைக்காதவரும், மார்பில் அம்புபட்டு மாள்பவரும், தன் தலைவனுக்குத் தன்னையே படைப்பவரும் பெரும் வீரர்களாகக் கருதப்பட்டனர். நாட்டுப்பற்றும், செஞ்சோற்றுக் கட்டணுமே இவர்களின் கடமை வரலாறாகும். கொல்லர்களால் வடித்தளிக்கப்பட்ட வேல், வாள், கோல் முதலிய தாக்கும் படைகளையும், கேடயம், கவசம் முதலிய காக்கும் படைகளையும் இக்கால வீரர்கள் கையாண்டதாக அறிகிறோம். வில்வீரரும், வேல் வீரரும் இக் காலத்தில் புகார்படப் பேசப்பட்டனர். தோலாலான நகையுறைகளும், காலுறைகளும் இருந்தன, வாள், வேல், அம்பு முதலியன வைக்கவும் தோலுறைகள் இருந்தன. யானை களுக்கும், குதிரைகளுக்கும் கூடத்தாக்கும் படைகளும், காக்கும் படைகளும் பொருத்தப்பட்டன. பலவகைப்பட்ட வாள்களும், வேல் களும் பற்றிய விவரங்களைக் கழக இலக்கியங்களி லிருந்து அறிகிறோம். போர் போர்மேற் செல்வதற்கு முன் போர் வீரர்கள் புனித நாளில் படைகளை நீராட்டி, பூச்சூடிக் காலக்கணக்கர் குறித்த நேரத்தில் போருக்குப் புறப்படுவர். புறப்படுமுன் வீரர்களும், அரசனும் பகைவரை வென்று திரும்புவோம் - இன்றேல் செத்து மடிவோம்' எனச் சூளுரைப்பர். இதனை 'வஞ்சினம்' கூறுதலென்று அழைப்பர். வாள், குடை. முரசு ஆகியவற்றுடன் போர் முரசம் கொட்ட அணிவகுப்பு ஊர்வலம் நடக்கும், வீரர்கள் வெள்ளாடையணிந்து போருக்குப் புறப்படுவர். தங்களின் படையெடுப்பை முன்கூட்டியே பகையரசனுக்கு அறிவிப்பர். மூப்படைந் தோர், குழந்தைகள், ஊனமுற்றோர், இயலாதோர், பெண்டிர் முதலியோரை யும், ஆபசுக்களையும், பார்ப்பனரையும், நன்மக்கனையும் வெளியேறும் படி செய்வர். மறவன் மறவனோடுதான் மோத வேண்டும் என்பது மரபுப் பண்பு. படைவீரர்கள்தானைத்தலைவர்களைப் பின்தொடர்ந்து செல்வர், தலைவர்களும், அரசனும் யானை மீதமர்ந்து மெய்க்காப்பாளருடன் செல்வர், அவர்கள் அமர்ந்துள்ள யானைகளின் மீதுள்ள அம்பாரிகளின் மேல் கொடிகள் பறக்கும். ஆகவே, பகைவர் படைத் தலைவரையும் அரசனையும் தொலைவிலிருந்தே அடையாளம் கண்டுகொள்வர். போர், பெரும்பாலும் கோடைக்காலத்தில் சமதளத்தில் நடக்கும். இருவருடைய எல்லைகளைக் குறிக்கும் கோடுகள் அல்லது இயற்கை எல்லைகள் அமைக்கப்படும். குறிப்பிட்ட நேரப்படியே போர் தொடங்கும். தொல் காப்பியத்தில் போரின் ஐந்து நிலைகள் கூறப்பட்டுள்ளது. அவை வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை என்பனவாம். பகைவன் நாட்டைத் தாக்கும் முன் அவனுடைய கால்நடைகளைக் கவர்வது வழக்கம். இதற்கு ஆநிரை கவர்தல்" என்று பெயர், ஆநிரை கவர்வோர் வெட்சி மாலையைச் சூடிச் செல்வர் இவர்கள் சகுனம் பார்த்துச் செல்வர். தற்காப்பு முயற்சில் ஈடுபட்டவரும், படையெடுத்துச் செல்வோரும் வஞ்சி மாலையைச் சூடினர். கோட்டையை முற்றுகையிடுவோர் உழிஞை மாலையையும், முற்றுகையை உடைத்து வெற்றி பெறுவோர் தும்பை மாலையையும் சூடுவர். பொதுவாகப் போர்க் களத்தில் வெற்றி பெற்றோர் 'வாகை' மாலையைச் சூடுவர். பொதுவாக ஒரு நாட்டைமண்ணைக் சுவரும் நோக்கத்துடன் தொடுக்கும் போருக்கு வெட்சிப்போர்' என்றும், பழிவாங்கும் நோக்கத்தோடு அல்லது அடக்கியாளும் நோக்கத்தோடு வெற்றிக்கு மட்டும் தொடுக்கும்போருக்கு வாகைப் போரென்றும் பெயர். போரில் புறமுதுகிட்டு ஓடும் பகைவரையும், ஆடையிழந்து நிற்போரையும், மேய்ச்சல் நிலத்தில் வாழ்வோரையும், நீரில் பாய்ந்தோரை யும், படைக்கலங்களின்றித் தவிப்போரையும், புண்பட் டோரையும், முதியோர், பெண்டிர், குழந்தைகள் முதலியோரையும் போர்க்களத்தில் எதிர்த்துப் போரிடமாட்டார். முற்றுகைக்கு உட்பட்டவன் கோழைத்தனத் தால் உள்ளிருக்கச் செய்வது மிகத் தாழ்வாக மதிக்கப்பட்டது. போர்தி தலைவன் அல்லது அரசன் போர்க்களத்தில் இறந்தால் அவனுடைய படைகள் தொடர்ந்து போரிடா. போரில் கையாளப்பட்டவலக்காரங்கள், உத்திகள் முதலியன பற்றியும் அறிகிறோம். போர்த் தொடர்ந்து நடக்கும் போது வீரர்களும், தலைவர்களும், அரசனும் பாசறைகளமைத்து அவற்றில் தங்குவர். அப் பாசறைகளின் அமைப்புப் பற்றிய விரிவான விளக்கங்கள் புறநானூற்றிலிருந்து அறியப்படுகின்றன. இப் பாசறைகள் எல்லா ஏந்துக்கள்நடனும் அமைக்கப்பட்டு ஓர் ஊரைப் போலவே இருக்கும், இதனால் பாசறைகள் அடங்கிய இருப்பைக் கட்டூர்' என்றனர். அரசனது பாசறையின் கூரையில் அவனுடைய கொடி பறக்கும். அரசனின் பாசறை செங்கற்களால் கட்டப்பெற்றுப் பல் அறைகளாகப் பகுக்கப்பட்டிருந்தது.' பகலில் மட்டுமே போர் நடக்கும், இரவில் ஓய்வு கொள்ளும்போதும் அரசன் வீரர்களைக் கண்டு ஊக்கமூட்டுவான்; மறுநாள் நடக்கப்போகும் போரையெண்ணியவாறு விழித்திருப்பான். வெற்றியடைந்தவர் விழாக் கோலம் பூண்டு ஆடி மகிழ்வர். வீரர்கள் தக்கவாறு பரிசளிக்கப்படுவர். மதுவருந்தி, பேருண்டிமண் உணவு உண்டு, துணங்கையாடிக் களிப்பர்; கொள்ளைப் பொருள்கள் கொண்டிப் பொருள், வீரர்களுக்குப் பகிர்ந் தளிக்கப்படும்; சிலபோது குடிமக்களுக்கும் இது பகிர்ந்தளிக்கப்படும்; வீரர்களுக்குப் பொன்மலர் பரிசளிக்கும் சமயங்களும் உண்டு. தோல்வி கண்டவர்கள் பல்வேறு துன்பங்களுக்கும் ஆளாவர். அவர்களை இழிவாக நடத்துவதும் உண்டு. கையில் விலங்கு மாட்டுதல், தலையில் நெய்யூற்றுதல் - முதலியவற்றிற்கும் ஆளாவர். கனகவிசயர் துறவி வேடமிட்டு ஓடியும், விடாது பிடித்துக் கண்ணகியின் சிலையைச் சுமக்கச் செய்தது ஈண்டு குறிப்பிடத்தக்கது. பகைவரின் காவல் மரத்தை வெட்டி, அவனுடைய உவளகத்தார் அந்தப்புறத்துப் பெண்களின் கூந்தலை இழுத்து, கயிறு திரித்து, அக்சயிரால் அம்மரத்தின் அடிப்பாகத்தைக் கட்டியானையைக் கொண்டு இழுத்து வந்து போர் முரசம் செய்வதும், தோற்ற அரசனின் கோட்டை களையும், பிற கட்டடங்களையும் இடித்து நிரவிக் கழுதை களைக் கட்டி ஏர் உழுதலும், ஊர்களைத் தீயிட்டுக் கொளுத்துவதும் அக் கால வழக்க மாகும். போர்க்களங்களிலும் புலவர்கள் நுழைந்து இருதரத்தாருக்கும் அறிவுரை கூறிப் போரைத் தடுத்துள்ளனர். இதைப் போலவே போரைத் தொடங்காமல் காத்ததும் உண்டு. பகைவன் பணிந்தால் மன்னித்து அவன் நாட்டையும், உடைமைகளையும் அவனுக்கே திருப்பித் தருவதும் உண்டு. போரிலும் அறவழியே கடைபிடிக்கப்பட்டது, முறை வழங்குதல் படைக்கும் நயன்மைக்கும் நீதிக்கும்) அரசனே தலைவன். அரச னுடைய கொலுமண்டபமே அறநீதிமன்றம், அவனுடைய அவையில் எவரும் முறையிட்டுத் தீர்ப்புப் பெறலாம். பெரும்பாலான சுழசுக்கால் மன்னர்கள் பன்னூற் பண்டிதர்களாயிருந்ததால் நீதி நூல்களின்படியே தீர்ப்பு வழங்குவர். மனச்சான்றே அவர்களின் தீர்ப்புக்கு அளவுகோல். ஆயரினும், அறிவுரை கூற அறிஞர்களும் இருந்தனர், அவர்களைக் கலக்காமலே அரசன் தீர்ப்பு வழங்கியதும் உண்டு. ஆனால் அரசன் இல்லாமல் அவையினர் தீர்ப்பு அளிப்பதில்லை. இறைவனைச் சான்றிட்டு வழக்குகள் உசாவப்பட்டன. அரசன் நயன்மையில் பிழைசெய்தால் நாட்டில் பருவமழை பொய்க்கும். கற்புடைய மகளிர் அருகுவர்; தவம் கெடும் என்று மக்கள் நம்பினர். நயன்மையில் பிழை செய்த அரசன் வழித்தோன்றல்களை நன்மக்கள் மதியார், புலவர்கள் பாடமாட்டார்கள்.' அரசன் தானே குற்றவாளியெனத்தெரிந்தாலும் தனக்குத்தானே தண்டனை யளித்துக் கொள்வான். குற்றவாளி தன் மக்களாயினும், உறவினராயினும் அல்லது நண்பர்களாயினும் தப்பாமல் தண்டிப்பான். கொடுக்கல், வாங்கல், உடன்படிக்கை, ஒப்பந்தங்கள் முதலிய பொருளியல் குற்றங்களும், அரசுரிமைகளுக்கு அழிவுதேடல், பார்ப்பனனைக் கொல்லுதல், ஆப்பக) மடியறுத்தல், கருக்கலைப்பு, மாந்த உயிர்க்கொலை, முதலிய பெருங் குற்றங்களும் அக் காலத்தில் நடந்தன. பின்கூறப்பட்ட பயங்கரக் குற்றங் சுளுக்குக் கொலைத்தண்டனை தலையை வெட்டுதல், யானைக் காவில் இட்டுக் கொல்லுதல் முதலியன) விதிக்கப்பட்டன. பிறனில் விழையும் குற்றத்திற்கும், மாற்றாள் கணவனை விரும்பும் குற்றத்திற்கும் உறுப்பு களைச் சிதைக்கும் தண்டனையும் வழங்கப்பட்டது. திருட்டுக் குற்றத்திற் குத்தண்டமும், சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டன. கப்பலில் துடுப்புத் தள்ளுதல், கோயிலுக்கு விளக்கேற்றுதல், பொதுப்பணிகளைச் செய்தல் முதலிய தண்டனைகளும் விதிக்கப்பட்டன. பொன், யானை, குதிரை, மாடு, ஆடு முதலியவற்றை இழப்பீடாகப் பெறும் தண்டனைகளும் வழங்கப் பட்டன. - கரி சாட்சிகள் உசாவப்படுவதும், பாம்புக்குடத்தில் கைவிடும்படி செய்து குற்றவாளியை அறிதலும் உண்டு தெரிந்தே சான்று கூற மறுப்பவ ரும், பொய்ச் சான்று கூறுவோரும் தண்டனை பெற்றனர். காதலித்துக் கைவிட்ட ஒருவனைப் பிடித்து அவையாரே திருமணம் செய்வித்த நிகழ்ச்சியும் உண்டு. அரசுக்குச் செலுத்த வேண்டிய வரி களைச் செலுத்தாத வர்களும் தண்டனைப் பெற்றனர். கழகக்காலத்தில் சிறைகள் நிலையான கட்டடங்களாகவே இருந்தன. சிறையில் குற்றவாளிகள் தொடரி சங்கிலிர யால் பிணைக்கப் பட்டிருந்தனர். குற்றவாளிகளுக்கு நீர் கொடுக்காமலும், உணவிடாமலும், சித்திரவதை செய்யப்படுவதுண்டு. ஆயினும், அவர்களை நோயாளிகளைப்போல் அன்பாக நடத்த வேண்டுமென்பது அக்கால நெறி. நகரங்களும் மார்களும் நகரங்களிலும் ஊர்களிலும் தனித்தனி மன்றங்கள் இருந்தன. இவை தங்களுக்குட்பட்ட நிருவாகத்தையும், முறைவழங்கும் திட்டங்களையும் கவனித்தன. பெரும்பாலான ஊர் மன்றங்கள் மரத்தடியிலும், குளக் கரையிலும் அல்லது பொதுக்கட்டடத்திலும் கூடின. ஒழுக்கம், கல்வி, பக்தி ஆகியவற்றை காரில் வளர்க்கும் தலைமையிருக்கையே இந்த ஹர்மன் நங்கள். இவற்றில் அகவை முதிர்ந்தோரும், கல்வி கேள்விகளில் சிறந்தோ ரும் பங்கேற்றனர். நாடு கோட்டங்களாகவும், ஊனர்களாகவும் பிரிக்கப்பட் டிருந்தது. கோட்டங்கள் இளவரசர்களால் இளங்கோ) ஆளப்பட்டன. துறைமுகப்பட்டினங்கள் - வணிக நகரங்கள், கோட்டத் தலைநகரங்கள், அரசனின் கோநகரம், படைத்தலைவர் வாழ்ந்த நகரங்கள் என்று நகரங்கள் பலவகையாய் அமைந்து நகர வாழ்க்கை சிறந்து காணப்பட்டது. இவை அகழியாலும் சூழப்பட்டிருந்தன. அரண்மனை கோயில்' எனப்பட்டது. இதனைத் தனிக்காவலர்கள் காத்தனர். இவர்கள் பொருநர், புலவர், பரணர், பார்ப்பனர் ஆகியோரை மட்டுமே தடையின்றி உட்செல்ல இசைவர். ஆனால், அரசியாரின் இருக்கைக்கு அரண்மனையைச் சேர்ந்தவர் தவிர பிற ஆடவர்செல்ல இசையார். அரண்மனைக்குள்ளேயே உவளகம் இருந்தது. இதிலிருந்த அழகிய மகளிர் உரிமை மகளிர்' எனப்பட்டனர். வருவாய் கழகக்காலத்தில் ஆட்சியைச் செவ்வனே நடத்த வருவாய் தேவைப் பட்டது. இதற்காகப் பல விதிகளின் வரிகள் தண்டப்பட்டன. கொடுப்போ ருக்குத் துன்பம் ஏற்படாதவாறும், அவர்களே மனமுவந்து கொடுக்கு மாறும் வரித்தண்டல் செய்தனர். விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு வரியாகச் செலுத்தப்பட்டது. சில சமயங்களில் வரித்தள்ளுபடி செய்தலும் உண்டு. அரசனுக்கு நிலவரியைத் தவிர உல்கு வரி, போரில் கிடைத்த கொண்டிப் பொருள், 'சிற்றரசர்களும், தமக்கு அடங்கியாள்வோரும் செலுத்திய திறைகள், உரிமையற்று நிற்கும் சொத்துகள் முதலியனவும் வருவாயாக வந்தன்.வாணிபம் செய்வோர் தனிப்பட்ட முறையில் வணிகவரிசெலுத்தி னர். நயன்மைநீதி மன்றங்களில் விதிக்கப்படும் தண்டங்களும், ஏற்றுமதி, இறக்குமதிப் பொருள்களின் மீது விதிக்கப்பட்ட வரிகளும், அன்பளிப்பாக அளிக்கப்பட்ட பொருள்களும் வருவாய்களே. அளவைகள் கழகக்காலத்தில் நீட்டலளவை, முகத்தலளவை, எடுத்தலளவை, எண்ணல் அளவை ஆகியவையும் வழக்கத்தில் இருந்தன. சுழிச்சிக்காய் (சுழங்கு என்பது எடை அளவாகக் கொள்ளப்பட்டது. தொள்ளாயிரம், ஆயிரம், நூறாயிரம், வெள்ளம், ஆம்பல், தாமரை முதலிய எண்ணப் பெயர்களும், காணி, முந்திரி முதலிய பின்னங் களும் வழக்கில் இருந்தன. கன்னத்தைக் குறிச்சுப் பாழ்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. மா, வேலி முதலியன நில அளவைக் குறித்தன. அம்பணம் என்பது முகத்த வளவையாகும். இது ஒரு மரக்காலுக்குச் சமமாகலாம். தங்கம் துலாக் கோலினால் நிறுக்கப்பட்டது. அது 'சா' எனப்பட்டது தாடி' என்பது எடையில் மிகச் சிறிய அளவாக இருக்கலாம், கா, கானம், பொன் முதலியன பொன்னின் எடையைக் குறித்தன. இவைபொற்காசுகளாகவும் இருக்கலாம். ஏனெனில் கழகக் காலத்தில் தமிழகத்துடன் வாணிபம் செய்த உரோமர், பொற்காசுகளையே கையாண்டிருக்கின்றனர். ஆகவே, இவர்க ளும் பொற்காசுகளைப் பயன்படுத்தியிருக்கலாம், ஆகப் பண்டமாற்ற முறைக்கும் மேம்பட்ட காசுப் பழக்கத்தையுடைய சிறந்த நாகரிகத்தைக் கழகக்காலத் தமிழர்கள் பெற்றிருந்தனர். - (ஊ) கழகக்காலப் பொருளியலும் வாணிகமும் வேளாண்மை கழகக்காலக் குமுகாயத்தில் ஏற்றத் தாழ்வுகள் இருப்பதைக் கண்டோம். அவர்கள் வாழ்ந்த இடங்களும் செய்த தொழில்களுமே இவ் வகை ஏற்றத் தாழ்வுகளுக்குக் காரணியங்களாயமைந்தன. வேளாண்மை இக் காலத்தில் சிறந்து விளங்கிய தொழில், இந்து உயிர்நாடியானதும் ஆகும். ஊர்ப்புறத்து மக்களேயன்றி நகரங்களில் வாழ்ந்த மக்களில் ஒரு சாராரும் இத் தொழில் செய்தனர். இத்தொழிலுக்கு இன்றியமையாத மாடுகளைப் பெற்றிருந்தனர். வைக்கோலால் வேய்ந்த வீடுகளிலே வாழ்ந்தார்கள் என்பதை மருதநில வாழ்க்கையால் அறிகிறோம். இவர்களிடம் இருந்த காளைகள், கலப்பைகள், இவற்றிற்கான கொட்டில்கள் முதலிய வற்றைக் கொண்டு ஒரு கலப்பை உழவைக் கொண்டவரும், பல கலப்பை உழவைக் கொண்டவர்களும் இருந்தனர் என அறிகிறோம். மருத நிலத்து உறவுமுறை ஏறக்குறைய இன்றைய தமிழ்நாட்டு உழவு முறையைப் போலவே இருந்தது. சேற்றில் நாற்று நடுவது, புழுதியில் விதைப்பது, அறுத்தல், அடித்தல், குவித்தல் யாவும் இன்றுபோல் அன்றும் நடந்தன. 'வெண்ணெல்" செந் நெல்' என்று பலவகையான நெல் வகைகளும் பயிரிடப்பெற்றன. கரும்புப் பயிர்பற்றியும், கரும்பாலை பற்றியும் அறிகிறோம். நெல்லை யறுத்தவுடன் உளுந்துப்பயிரும் பின்னர் சுரும்பும் பயிரிடப்பெற்றன. நஞ்சைக்கு ஆறு, குளங்களிலிருந்து நீர்ப் பாய்ச்சப்பட்டது. மருத நிலத்தில் பெரும்பாலும் நன்செய்ப் பயிர்களும் பிற நிலங்களில் புன்செய்ப் பயிர்களும் பயிரிடப் பெற்றன, வரகு, தினை, எள், அவரை முதலிய புன்செய்த தவசங் களும், மலைநெல்லும்ஐவனம்தோரை எனப்படும் ஒருவகை நெல்லும், இஞ்சி, ஐயவி கடுகு, கவலைக் கிழங்கு முதலியவையும் குறிஞ்சி முல்லை நிலங் களில் விளைவிக்கப்பெற்றன. கரும்பும், வாழையும் முல்லையிலும் விளைந் தன. மூங்கில் நெல்லும், நாவற்கனியும், உயவைக் கொடியும், கூவைக் கிழங்கும், மா, பலா, தென்னை முதலியனவும் இயற்கையாக விளைந்தன. கோடைக்காலத்தில் ஒரு வகைப் பருத்தி பயிரிடப்பெற்றது. வேளாண்மை யில் ஈடுபட்டோர் ஓரளவு தன்னிறைவோடு வாழ்ந்தனர். ஆயினும் இன்றுபோல் அன்றும் இவர்களின் அல்லல் தீரவில்லை. ஆயர் தொழில் வேளாண்மையையடுத்துக் கழகக்காலத்தில் ஆடு, மாடு வளர்த்தல் ஒரு முகாமைத்தொழிலாக இருந்தது. மாடுகள் வேளாளரின் கூட்டாளிகள், ஆடுகள் பாலுக்கும் இறைச்சிக்கும் பிறவற்றிற்கும் பயன்பட்டன. ஆபசு), காளை, எருமை, நாகு முதலிய மாடுகளின் சிறப்புகளும், குறும்பை , வருடை முதலிய ஆடுகளின் சிறப்புகளும், இவற்றை வளர்க்கும் முறைகளும் பிறவும் அறியப்படுகின்றன. பிற தொழிலாளர்கள் வேளாளருக்கு உறுதுணையாயிருந்த சங்கறுப்போர், மணிகளை துளைப்போர், பொன்னகை செய்வோர், பொன்னை மாற்றுக் காண்போர், துணி, செம்பு, சுராலை(சாம்பிராணி) முதலியன விற்போர், ஓவியர் முதலான யாவரையும் சும்மியர் என்றே மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது. கொல்லனும், தச்சனும் வேளாண்மைக்கும், வீடு கட்டுதலுக்கும், தேர் செய்தலுக்கும், அரண்மனை யமைத்தலுக்குமாக மக்கள் நாகரிகத்தின் முதுகெலும்பாய் நின்றார்கள். கருவிகளும், படைகளும் இவர்களால் செய்யப்பட்டன. ஆகவே, இவர்களைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் பலபடப் பேசுகின்றன. செம்பு, வெள்ளி ஆகியவற்றாலும் ஏனங்கள் செய்யப்பட்டன. குயவர் மண்பாண்டம் செய்தனர். பொற்கொல்லர் நகைகள் செய்தனர். பருத்தி, பட்டு ஆடைகளை நெய்தவர்களைப் பற்றியும், கசங்காத ஆடைகளை நெய்தவர்களைப் பற்றியும் அறிகிறோம், எலி மயிரைக் கொண்டு தாவரி கம்பன்) ஆடைகள் நெய்யப்பட்டன. பருத்தியைப் பதப்படுத்தி நாற்றல் பெண்களுக்கும், நெய்தல் ஆண்களுக்கும் உரிய பரிகளாயிருந்தன. கடற்கரைப்பகுதியில் வாழ்ந்தோர் மீன்பிடிக்கும் தொழில் செய்தனர். உலர்த்தியும் உப்பிட்டும் மீன்களைப் பதப்படுத்தும் முறைகளையும் இவர்கள் அறிந்திருந்தனர். உப்பு எடுக்கும் தொழிலும் கடலோரங்களில் நடந்தது. முத்துக் குளித்தல், சங்கறுத்தல், தோல் பதனிடுதல் முதலிய தொழில்களும் நடைபெற்றன. நற்றிணையில் தோல் வேலை செய்பவன் இழிந்தவனாகக்குறிப்பிடப்படுவதால் தொழில் வழிச் சாதிகள் ஏற்பட்டன என்பதை அறிய முடிகிறது. வாணிகம் உள்நாட்டு வாணிகம் கழகக்காலத்தில் உள்நாட்டு வாணிகமும், அயல்நாட்டு வாணிகமும் நடந்தன. கழக இலக்கியக் குறிப்புகள் பெரும்பாலும் உள்நாட்டு வாணிகத்தைப் பற்றியும், கிரேக்கக் குறிப்புகள் அயல்நாட்டு வாணிகத்தைப் பற்றியும் அறிய உதவுகின்றன. உள்நாட்டு வாணிகத்திற்கு இன்றியமையாத போக்குவரத்துப் பாதைகளும், பிறதுணைக்காரணிகளும் அக்காலத்தில் அதிகமில்லை . ஆயினும் வண்டிகளின் மீது தவசங்களையும் உப்பு முதலிய வற்றையும் ஏற்றிச்சென்று விற்றனர். வணிகருக்குத் துணையாகக் காவலர்களும் சென்றனர்.உப்புவணிகர் உமணர் எனப்பட்டனர். இவர்கள் பரதவர் அல்லர். இவர்கள் நாடோடிகளாகத் திரிந்தவர்கள். கூட்டம் - கூட்டமாய் வண்டிகளில் உப்பை ஏற்றிக்கொண்டு ஓர் ஊரே நகருவதைப் போல் குடும்பங்களுடன் ஊர் ஊராகச் சென்று இவர்கள் உப்பு வணிகம் அப்புறம் செய்தனர். குறிப்பிடம் விற்போரும், செய்தனர். ஆறலைக் கள்வராலும், மழையாலும் இவர்களின் வணிகப் பொருளுக்குத் தீங்கு நேரிட்டது. கழுதைகளின் மீதும் இவர்கள் உப்பை ஏற்றிச்சென்றனர். இவர்களைப்போலவே தவச வாணிகர்களும், மலைப் பொருள்களையும் கடற்பொருள்களையும் விற்போரும், பண்டமாற்று முறையில் வாணிகம் செய்தனர். குறிப்பிட்டச் சாலைகள் சேருமிடங்களி லும், எல்லைப் புறங்களிலும் சுங்கச்சாவடிகள் இருந்தன. இச் சாவடிகளே இத்தகைய வணிகர்களுக்கு பண்டமாற்றும் நிலையங்களாகவும் பயன் பட்டன. சிற்றூர்களிலும், பேரூர்களிலும் இத்தகைய பொருள்களை விற்கும் அங்காடிகள் இருந்தன, தெருக்களில் ஆய்மகள் தயிர், நெய் முதலியவற்றை விற்றுவிட்டு நெல்லையும், உப்பையும் வாங்கிச் சென்றாள். பான்மகள் மீனவப் பெண்) இதைப் போலவே மீனைவிற்று உணவுத் தலசங்களை வாங்கிச் சென்றாள். உழவப்பெண் புதுமலர்களைத் தெருக்க ளில் விற்றாள். இவ்வாறு, மொத்தமாக ஊர் ஊராக வந்து விற்போரும், குறிப்பிட்ட இடங்களில் சந்தை மாற்றிக் கொள்வோரும், ஊர் அங்காடி வணிகரும், தெருவில் விற்போரும் அக் காலப் பொருள் நடமாட்டத்திற்கு ஊக்கமளித்தனர். ' நகர அங்காடிகள் மதுரை. பூம்புகார் முதலிய நகரங்களிலிருந்த நாளங்காடி அவ்லங் காடி முதலிய கடைவீதிகளைப் பற்றியும், அவற்றில் விற்கப்பட்ட பொருள்களைப் பற்றியும் ஏற்கெனவே கூறிவிட்டோம். ஆகவே, நகரங் கரில் நடந்த வாணிகத்தைப்பற்றி விவரிக்கத் தேவையில்லை, அயலக வாணிகம் தமிழகத்தில் மூன்று பக்கத்திலும் நீர் சூழ்ந்திருப்பதால் கடல் கடந்தும் வணிகத் தொடர்புகள் தொன்றுதொட்டே இருந்துவந்தன. உப்பு எடுத்தல், முத்துக் குளித்தல், கப்பல் கட்டுதல், கைத்தொழில்கள் ஆகியவை அயலக வாணிகத்திற்கு உறுதுணையாயிருந்தன. முடியுடை வேந்தரின் கடல் ஆளுமையும், அயலகங்களில் தமிழ் நாட்டின் செல்வாக்கு ஓங்கி வளரக் கரணியமாகியது. தமிழர்கள் பலதரப்பட்ட கல்ங்கள் கட்டிக் கடல் வாணிகத்தையும், கடல் ஆளுமையும் பெற்றனர் என்பதைக் கழக இலக்கியங்களிலிருந்தும், அயலகக் குறிப்புகளிலிருந்தும் அறிகிறோம். வங்கம், நாவாய் என்னும் கலங்கள் பெருங்கடலில் நெடுந்தொலைவு சென்றன. இவையானைகள் போன்று பெரியவை, கடலில் நிற்கும் கப்பல் களிலிருந்து சரக்குகளை இறக்குவதற்கும் அல்லது ஏற்றுவதற்கும் பயன் பட்டவை தோகரிகளென்றும், இவை கழிகள் மூலம் சுரைகளைச் சேரு மென்றும், கடற்கரை ஓரங்களிலுள்ள ஊர்களுடன் வணிகம் செய்யப் பயன்பட்டவை என்றும், பஃறி என்பது ஒருவகைக் காலம் என்பதையும், இத்தகைய பஃறிகள் குதிரைகளைப்போல் வரிசையாகக்கரைகளில் நின்று, கொள்ளுத் தின்னும் குதிரைகள் தலையை அசைப்பதைப்போல் இவை அசைந்து நின்றனவென்றும் அறிகிறோம். ஆகவே, நாவாய், வங்கம், தோணி, பஃறி முதலிய கலங்களும் அம்பி, திமில் எனப்படும் மீன்பிடி கலங்களும் இக் காலத்தில் இருந்ததையறிகிறோம். கிபி 75-ல் எழுதப்பட்ட *எரித்திரியக் கடற்செல்வு' என்னும் கிரேக்க நாவில் பல மரங்களைக் கொண்டு கட்டப்பெற்ற 'சங்கரா'(சங்காடம் என்ற கலமும், மிகப் பெரிய உருக்கொண்ட கொலாண்டியா' என்ற கலமும், கரையோரமாகச் செல் லும் நாட்டுக் கலமுமாக மூவகைக் கலங்கள் தமிழகத்தில் இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. கலங்களைப்பற்றிய குறிப்புகளைப் போலவே தமிழகத் துறை முகங்களைப் பற்றிய குறிப்புகளும் இலக்கியங்களிலும், கழக அயல்சுச் சான்றுகளிலும் காணப்படுகின்றன, மேற்குக் கரையில் முசிறி, பந்தர், கொடுமணம் முதலிய துறைமுகங்களும், கிழக்குக் கரையில் கொற்கை, மருங்கூர்ப்பட்டினம், காவிரிப்பூம்பட்டினம், எயிற்பட்டினம் முதலிய துறைமுகங்களும் இருந்தன. மேற்கூறிய 'எரித்திரியக் கடற்செலவு" என்னும் நூலில் நகரை, திண்டிசு ஆகிய துறைமுகங்கள் குறிக்கப்படுகின்றன. நகர என்பது கண்ணனூராகவும்நறவு), திண்டிக் தொண்டியாகவும் இருக்கலாம். மேலும், இந் நூலில் இவை சேரநாட்டுத் துறைகள் எனவும் சுட்டப்படுகின்றன. தாலமி என்ற கிரேக்க ஆசிரியரும் இத் துறைகளையும், யவனர்களில் கப்பல்கள் வந்துசென்ற வகைகளையும், வணிகம் செய்த பொருள்களையும் பற்றிக் குறிப்பிடுகிறான். பக்கரையென்ற துறையைப் பற்றிப் பிளைனி குறிப்பிடுகிறான். இது வைக்கரையாகலாம். நீர்க்குன்றம், வைக்கரை ஆகிய இவை குட்ட நாட்டிலிருந்த துறைமுகங்கள். இதற்கும் தெற்கே பரலியா' என்ற துறை இருந்ததாகக் கிரேக்கர்கள் குறிப்பிட்டுள்ள னர். இது 'பலித' (வர்க்கலை என்னும் துறையாகலாம். கீழ்க்கரையில் கொல்கி, கமர பொதுக்கே, சோபட்மம் முதலிய துறைமுகங் களிருந்ததைக் கடற்செலவு நூல் குறிப்பிடுகிறது. இவை முறையே கொற்கை, காவிரிப் பூம்பட்டினம், புதுச்சேரி, மரக்காணம் ஆகிய துறைகளாகலாம். கொற்கை யில் முத்துக்குளித்தலைப் பற்றி இந் நூலில் வெகுவாகப் பேசப்படுகிறது. இன்று புதுவைக்கருகில் அரிக்கமேட்டில் நடத்தப் பெற்ற அகழ்வா ராய்ச்சி இந் நூலின் கூற்றை மெய்ப்பிக்கிறது. சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை ஆகியவற்றில் முறையே எயிற்பட்டினம், நீர்ப் பெயற்று என்ற துறைமுகங்கள் குறிப்பிடப்படுகின்றன. இவற்றில் நீர்ப் பெயற்று இன்றைய மாமல்லபுரம் ஆகலாம். பண்டைய தமிழகத்துடன் கிரேக்கம், உரோமப் பேரரசு, எகிப்து, அரேபியா ஆகிய மேலை நாடுகளும், மலைநாடு மலேயா), கிழக்கிந்தியத் தீவுகள், ஈழம், சீனம் முதலிய சீழைநாடுகளும் வாணிகத் தொடர்பு கொண் டிருந்தன. கிரேக்கம் தென்னகத்தோடு நேரடித் தொடர்பு கொண்டிருந்தது. அலெக்சாந்திரியா இந்திய வாணிகப் பொருள்களால் சிறப்புற்றது. , உரோமப் பேரரசு வாழ்ந்ததற்கும், வீழ்ந்ததற்கும், தமிழகத்தோடு அது கொண்டிருந்த வாணிகத் தொடர்பே கரணியம் எனினும் மிகையாகாது. ஆண்டொன்றுக்கு ஏறத்தாழ 120 கப்பல்கள் உரோமாபுரிக்கும் தென்னகத் - திற்கும் இடையே நடமாடின. பண்டைய தமிழகம் மேலை நாடுகளுடன் தான் அதிகமான நெருங்கிய வாணிகத் தொடர்புகொண்டிருந்தது, இழை நாடுகளுடன் அவ்வளவு நெருங்கிய தொடர்புகள் இல்லை, இதை இன்றைய அகழ்வாராய்ச்சிகள் வலியுறுத்துகின்றன. பொன்னை யேற்றி வந்த யவனரின் கலங்கள் பொன்னைக் கொடுத்து மிளகையும், கடல் விளை பொருள்களையும், மலைபடுபொருள்களையும் ஏற்றிச் சென்றன. 'புட்ப ராகம்' என்னும் அரிய மணிக்கல்லும், மெல்லிய துணிகளும், ஓவிய வேலைப்பாடுகள் நிறைந்த நாராடைகளும் லினன், அஞ்சனக்கல், பவளம், கண்ணாடி, செம்பு, தகரம், மதுவகைகள், தாளகம் அரிதாரம், செந்தகாளம் ஒருவகை மருந்து முதலியனவும் இறக்குமதி செய்யப் பட்டன. பலவகை முத்துகள், யானை மருப்பு, பட்டுத் துணி, கங்கைப் பகுதியில் கிடைத்த இலாமிச்சை, மரபத்திரம், கண்ணாடிக் கற்கள், வயிரம், நீலம், சங்கு முதலிய பொருள்கள் இங்கிருந்து மேலை நாடுகளுக்கு ஏற்றுமதியாயின, இந்தியாவின் உள்நாட்டுப் பகுதிகளிலிருந்து வந்த பொருள்களும், கிழக்கிந்தியத் தீவுகளிலிருந்து வந்த பொருள்களும் தமிழகத் துறைமுகங்களிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. இதைப் போலவே யவனர்கள் அரபு நாடுகளிலும், நண்ணிலக் கடற்பகுதிகளிலும், பிற ஐரோப்பிய நாடுகளிலும் கிடைத்த பொருள்களை இறக்குமதி : செய்தனர். இவர்களுக்கென்று பண்டக சாலைகளும், குடியிருப்புகளும் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டன. இத்தகைய ஏற்றுமதி, இறக்குமதிகளால் அரசுக்குச் சுங்கவரி அதிகம் கிடைத்தது. மாமல்லபுரத்தில் நீர்ப்பெயற்று) உயர்ந்த மாடி வீடுகள் இருந்தன. வாணிகச் செட்டிகள் (பரதவர்) இருந்த னர்; வெள்ளைக் குதிரைகளும், கங்கைப் பகுதியில் விளைந்த பொருள் களும் இத் துறையில் அதிகம் காணப்பட்டன; இங்கு உயர்ந்த கலங்கரை விளக்கமிருந்ததெனப் பெரும்பாணாற்றுப்படை கூறுகிறது. ஏற்றுமதி யான பொருள்களில் ஏலக்காய், அகில், சந்தனம் முதலிய நறுமணப் பொருள்களும், யானை மருப்பு, வயிரம் முதலியவை குறைந்த அளவிலும், மிளகு முத்து, பட்டு, அரிய கல்வகைகள் பெரிய அளவிலும் இருந்தன. இறக்குமதியான பொருள்களில் பொற்காசுகளும், குதிரைகளும், மதுவகை களும் அதிகமாக இருந்தன. இத்தகைய வாணிகப் பொருள்களால் சிறப்படைந்த தமிழக நகரங்களும், அயல் நாட்டு நகரங்களும் பிற்காலத்தில் வரலாற்றிலும், இலக்கியங்களிலும் இடம்பெற்றன. (எ) கழகக் காலக் குமுகாயம் மெய்ப்பொருள் வாழ்வு சுழசுக்காலத் தமிழ்க்குமுகாயம் வாழ்க்கை நெறியைச் சிறந்த பட்டாங்குகளின் தத்துவங்களின் மேல் கட்டியிருந்தது. தனக்கென வாழாத் தகைமையாளரே கழகக்காலத் தமிழர். தன்னையும், தன்னுடைய ஆற்றவையும் வளர்த்து அதன்வழி தன்னைச் சார்ந்த குமுகாயத்திற்கும், நாட்டிற்கும், மொழிக்கும் வளர்ச்சி தந்து, அறநெறி நின்று, வாழ்வாங்கு வாழும் நெறியே அன்றைய தமிழ்க்குமுகாய நெறியாகும். ஆகவே, பண்டைய கிரேக்கரைப் போல் – அரசியலுக் காகவே வாழும் கோட் பாடோ, இவ்வுலக இன்பத்தை மட்டும் நுகரும் கோட்பாடோ, துறக்கத் தையே யெண்ணி உலக இன்பங்களைத் துறக்கும் சமயக் கோட்பாடோ தனித்து இவர்களிடம் காணப்பட வில்லை. தாம் வாழும் இடம், காலம் ஆகியவற்றை முதற் பொருளாகவும், உயிரினங்களையும் உலகப் பொருள் களையும் கருப் பொருளாகவும் கொண்டதால் தமிழர் உலகியல் வாழ்க்கையை மனமார நுகர்ந்து. தாமும் வளர்ந்து, உலகையும் வளர்த்துச். சிறந்த தொரு நாகரிகத்தைத் தம் அடிச்சுவடாக விட்டுச்சென்றனர். தாம் வாழ்ந்த இடத்தைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்திணைகளாகவும், காலத்தைக் காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம், வைகறை என்னும் சிறுபொழுதுகளாகவும், நொடி, நாழிகை, நான், திங்கள், ஆண்டு எனவும், தட்பவெப்பத்திற்கேற்பக் கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் ஆகியவை யாகவும் பிரித்து வாழ்க்கை யைக் காலத்திற்கேற்பக் கணக்கிட்டு நடத்தினர். காலம் பொன் போன்றது; கடமை கண் போன்றது எனக் கருதிய இவர்களின் வாழ்க்கை நெறியால் குமுகாயம் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு ஏற்றம் பெற்றதில் வியப்பில்லை . நானிலத்திலும் வாழ்ந்த மக்கள் காதலால் ஒன்றுகூடி வாழும் இல்லற வாழ்க்கையை 'அகம்' என்றும், அதற்கான தளன்று கோலாயுள்ள அரசியலும், போரும், பொருளீட்டலும் 'புறம்' என்றும் கொண்டனர். அறமும், பொருளுமுடைய வாழ்க்கையே இன்பமாயிற்று. எனவேதான், சங்க இலக்கியங்களில் பெரும்பாலானவை அகப்பொருள் பற்றியே பேசுகின்றன. ஆணும் பெண்ணும் காதலித்து இல்லறம் மேற்கொள்ளும் நிலையில் மட்டும் அமையாது மண்ணும் பொன்னும் அகவாழ்வுக்கு அடிப்படையாக அமைந்ததால் இவ் வாழ்வுக்குப் புறத்தேயும் அவர்கள் செயல்பட்டனர். காதல் களவாகிப்பின் கடிமண மாக முடியும். பின்னர் கற்பு நெறியைக் கடைப்பிடித்து ஒழுகுதல் இவர்களின் கடைமை யாயிற்று. போர் மேற்சென்று வெற்றி பெறுதலும், திரைகடல் ஓடிப் பொருள் தேடலும் ஆணின் புற ஒழுக்கமாயிற்று. அவ்வாறு போர் மேற்சொல்லும் போது வீரமரணமெய்துவதும், வெற்றி பெறுவதும் சிறப்பென்றே கருதப் பட்டன.வீரச் சாவு எய்துவதும், இவர்களின் மறுவுலகக் கோட்பாடாகும். துக வாழ்வு சிறக்க அயலகம் சென்று பொருள் தேடலின் பொருட்டும், ஓதலின் பொருட்டும், போர்க்களம் போதலின் பொருட்டும் காதலன் காதலியைப் பிரிந்து செல்வான். போர் மேற்சென்றவன் கார் காலத்தில் திரும்பி வருவதாய்க் கூறிச் செல்வான். அவன் வரும் கார் காலத்தை இயற்கையின் அறிகுறிகள் காதலிக்கு நினைவூட்டும், காதலி அவன் வருகையையெண்ணி வாடி, மெலிந்து, வளைகழன்று வழிமேல் விழி வைத்து நோக்குவாள். காதலன் வெற்றிச் செல்வத்துடன் திரும்புவான். குளிர்காலம் முழுவதும் கூடிக் களிப்புற்று வாழ்வர். இவ்வாறு காலம், இடம் (நிலம்) ஆகியவற்றிற்கேற்ப அவர்கள் நடத்திய நானில வாழ்க்கை நெறி யினைச் சுருங்கக் கூறுவோம். பொதுத் தன்மைகள் பண்டைய தமிழ்க்குமுகாயத்தில் ஆணும் பெண்ணும் கூடி வாழும் அமைப்பாகிய 'குடும்பமே" முகாமை உறுப்பாகும். குடும்பத்தலைவன் கிழவன் என்றும், தலைவி மனையோள் என்றும் அறியப்பட்டனர். பல குடும்பங்கள் சேர்ந்து வாழ்ந்த இடம் *சேரி' எனப்பட்டது. பல சேரிகளைக் கொண்டது ஓர் உளர். ஒவ்வோர் பளரிலும் தொழில் வழி மக்கள். அறியப்பட்டனர். இதன் வழி அவர்கள் வாழ்ந்த சேரியும் அழைக்கப் பட்டது. ஒவ்வொரு தொழிற்குழுவுக்கும்சேரிக்கும் தலைவன் ஏற்பட் டான். இத் தலைவர்களின் கீழ் குழு மனப்பான்மை வளர்ந்து குமுகாயக் கட்டுக்கோப்புக்குத் துணைபுரிந்தது. பண்டைத் தமிழர் வாழ்ந்த இடங்களுக்கேற்ப மேற்கண்டவாறு சேர்ந்து வாழ்ந்த சேரிகளடங்கிய இவர்களின் வாழ்க்கை நெறிகளும் வேறுபட்டன. தமிழகம் குறிஞ்சி, முல்லை , மருதம், நெய்தல் என்று நானிலமாக இயற்கையினடிப்படையில் பிரித்தறியப்பட்டது. இவற்றில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை நெறிகள் வாழும் நிலத்திற்கேற்ப அமையப் பெற்றதால் தமிழகத்தில் நில வழி, தொழில் வழி பலதிறப்பட்ட குமுகாய அமைப்புகள் ஏற்பட்டன. காலப்போக்கில் இவர்கள் தங்களின் முன்னோர் களின் கால்வழியே தங்களைப் பிரித்துக் கூறிக் கொண்டனர். ஆகவே, குடிகள்(குலம்) பல தமிழகத்தில் தோன்றின, அவ்வாறு தோன்றிய குடிகளுள் குறவர்குடி வேட்டுவர்குடி ஆயர்குடி, கானவர்குடி, உழவர்குடி, பரதவர்குடி, நுளையர்குடி எயினர்குடி, மறவர்குடி முதலியன குறிப்பிடத் தக்கன. இவ்வாறு, இவர்கள் வாழ்ந்த நிலத்திற்கும், செய்த தொழிலுக்கு மேற்பப்பல குடிகளாய் அறியப்பட்டனரேனும் இவர்கள் யாவரும் தமிழ்க் குடிகளே; துடியன், பாணன், பறையன், கடம்பன் முதலியோர் வீரக் குடியினர். நடுகல்லையே வணங்கியவர். கழகக்காலத்தில் மன்னரும், தானைத் தலைவர்களும், அதிகாரி சுளும் கோட்டை கொத்தளங்களுடன் அமைக்கப்பட்ட நகரங்களில் வாழ்ந்தன ரென்பதால் நகர வாழ்க்கையும், நாட்டுப்புற வாழ்க்கையும் ஓரே போது இருந்தன வென்பதையறிகிறோம். ஆகவே, நானிலத்தில் வாழ்ந்த மக்களைப் பற்றி யறிவதோடு, நகர வாழ்க்கை முறையினையும் அறிதல் வேண்டும். நானில் வாழ்க்கை குறிஞ்சி : மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சி எனப்படும். குறிஞ்சிச் செடிகள் மிகுந்து காணப்பட்டதால் இந் நிலம் குறிஞ்சி எனப் பட்டது. குறிஞ்சி நில வளர் குறிச்சி என்றும், மக்கள் குறவர் என்றும், கானவர் என்றும் அழைக்கப்பெற்றனர். ஆடவர் குறவன், கானவன், வெற்பன், புனவன் என்றும், மகளிர் குறத்தி, கொடிச்சி, என்றும் அழைக்கப் பெற்றனர். இவர்கள் மரக்கிளைகளில் சிறு குடில்களை யமைத்து வாழ்ந்தனர். மலைநெல் (ஐவனம்), தினை, வள்ளிக் கிழங்கு, வாழைமுதலிய வற்றைப் பயிரிட்டும், விலங்குகளை வேட்டையாடியும், பழங்களையும், கிழங்குகளையும், தேனையும், சுனை நீரையும் உண்டும், பருகியும் வாழ்ந்தனர். பரண் அமைத்து அதன் மீதமர்ந்து பயிர்களைப் பாதுகாத்தனர். பெண்கள் பரண்கள் மீது அமர்ந்து பல ஓசைகளையெழுப்பி விலங்கு களையும், பறவை களையும் ஓட்டுவதும், இரவில் தீமூட்டி விலங்குகளை விரட்டுவதும் இனிய காட்சிகளாகும். இவர்களின் கடவுள் சேயோன் என்னும் முருகனாகும். குரவைக்கூத்தாடி பண்டங்களைப் படைத்து, காவு கொடுத்துச் சேயோனாகிய முருகனை வழிபட்டனர். முல்லை : காடும், காடுசார்ந்த இடமும் முல்லை எனப்படும். இங்கு முல்லைக் கொடிகள் அதிகமிருந்ததால் இந்நிலம் முல்லை யெனப் பட்டது. இங்கு வாழ்ந்த மக்கள் கோவலர்,இடையர், ஆயர், ஆய்ச்சியர் எனப்பட்ட னர். இவர்கள் கேழ்வரகு, வரகு அவரை முதலிய புன்செய்ப் பயிர்களைப் பயிரிட்டனர். ஆடு, மாடுகளைச் சொத்தாகக் கொண்டிருந்தனர். எனவே, புன்செய்த் தவச உணவு களையும், பாற்பொருள்களையும் பெரிதும் உண்டனர். மண்சுவர் எழுப்பிய சிறு குடிசைகளில் வாழ்ந்தனர். ஆடு, மாடுகளை மேய்க்கும் இவர்களின் கோவலர் வாழ்க்கை இனிமையானது. குழலூதி மந்தையை நடத்திச் செல்லும் காட்சி இனியது. பாற்பொருள் களையும், தோற்பொருள்களையும் விற்றுத்தங்களுக்கு வேண்டிய வற்றைப் பெறுவர். இவர்கள் தினையரிசி உண்டாலும் பாலைச் சேர்த்தே உண்பர். அந்த அளவு பால் இவர்களுக்குப் பெருமிதமாய்க் கிடைத்தது. பெண்கள் பால், தயிர், நெய் விற்கும் காட்சியும், கிளிகளுடன் கொஞ்சும் காட்சியும் பிறவும் இனியன. இவர்கள் கடவுள் மாயோன் ஆவான். மருதம் காட்டுக்கும் கடலோரத்திற்குமிடைப்பட்ட செழிப்புநிலம் மருதம் எனப்படும். மருத மரங்கள் அதிகம் வளர்ந்ததால் இந்நிலம் மருதம் எனப்பட்டது. இது வயலும் வயல் சார்ந்த இடமுமாகும். இங்கு வாழ்ந்த மக்கள் உழவர், களமர், கடையர் எனப்பட்டனர். பெண்கள் உழத்தியர். கடைசியர் எனப்பட்டனர். இந் நிலத்துத் தலைவன் மகிழ்நன், ஊனரன் என்றும், தலைவி மனைவி என்றும் அழைக்கப் பெற்றனர், உழுதொழில் செய்து வாழ்ந்த இம்மக்களின் வாழ்க்கை சிறப்புடையதும் மகிழ்வுடையது மாகும். பலதரப்பட்ட நெற்பயிர் களையும், வெற்றிலை, கரும்பு, வாழை முதலியவற்றையும் பயிரிட்டனர், ஆடவர் சிறப்பும், காளை நோக்கும் பெண்களின் சிறப்பும் ஈண்டு கண்டு களிக்கத்தக்கனவாகும். இவர்களின் கடவுள் வேந்தன் இந்திரன் ஆவான். நெய்தல் : கடல் சார்ந்த நிலங்களும், கடலோரப்பகுதிகளும் நெய்தல் நிலப்பகுதியாகும். மணல் நிறைந்த இப் பகுதி பெரு மணல் உலகம்' எனப்பட்டது. இந் நிலத்தில் வாழ்ந்தவர் பரதவர் (பரவர் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் வாழ்ந்த பகுதி பாக்கம், குப்பம் என்று அழைக்கப்பட்டது. இவர்கள் கடலில் மீன் பிடித்தனர். இம் மக்கள் நுளையர் எனவும் அழைக்கப்பெற்றனர். இவர்களின் தலைவன் சேர்ப்பன், புலம்பன் கொண்கன், துறைவன் என்னும் பெயர்களால் அறியப்பட்டான். கடற்கரைகளையொட்டி உப்பங்கழிகளும் இருந்தன. எனவே, இம் மக்கள் மீனையும், உப்பையும் விற்றே வாழ்ந்தனர். கடற்கரையோரங்களில் பனை, தென்னை, புன்னை, ஞாழல், சுண்டல், தாழை கைதை), அடப்பங் கொடிகள் முதலியன செழித்து வளர்ந்தன. புன்னை மரத்தடியில் இவர்களின் ஊர் மன்றங்கள் கூடும். கட்டுமரத்தில் இவர்கள் கடல்மேற் சென்று மீன் பிடிக்கும் தொழில் நெறியும், குப்பத்தில் வாழும் வாழ்க்கை நெறியும் சுற்றுப்புறச் சூழல்களுக்கேற்ப அமைந்தன. இவர்களின் வழிபடு தெய்வம் வாரணன் (வருணன் ஆகும், பாலை: பாலையென்ற நிலப்பகுதி தமிழகத்தில் நிலையாக அமைந் திருக்கவில்லை. பருவமழை பொய்ப்பதால் மேற்கூறிய நிலங்கள் வறண்டு பாலை போல் காட்சியளிப்பதையே பாலை என்றனர். ஆயினும், பாலை என்ற ஐந்தாவது நிலத்தையும், அதன் இயல்புகளையும் அதில் வாழ்ந்த மக்களையும் நூலில் கண்டவாறு சுருங்கக் கூறுவோம். பாலையில் வாழ்ந்த மக்கள் வேட்டுவர், எயினர், மறவர் எனப் பட்டனர். சிலர் வழிப்பறி செய்தே வாழ்ந்ததால் 'ஆறலைக் கள்வர்' எனப்பட்டனர். பெண்கள் எயிற்றியர், மறத்தியர் எனப்பட்டனர். இவர்கள் வாழ்ந்த கார்கள் குறும்பு, பறந்தலை எனப்பட்டன. இவர்களின் வழிபாடு தெய்வம் கொற்றவை (யை)யாகும் இவர்கள் வாழ்ந்த பகுதியில் இருப்பை, ஓமை, நெமை, பாலை, யா என்னும் மரங்கள் வளர்ந்தன. இவர்களிடம் 'அஞ்சாமை' என்னும் பண்பே அதிகம் காணப்பட்டதால் "மறக்குடி' மாண்புக்கு இவர்கள் எடுத்துக்காட்டாயினர். இந்த அஞ்சாமை பெண்களிடமும் காணப்பட்டது. நகர வாழ்க்கை சுழசுக்காலத்து முடிவுடை வேந்தர்களும் அவர்களைச் சேர்ந்த அரச குடும்பத்தாரும் வாழ்ந்த நகரங்களிலும், பிற குறுநில மன்னர் களும், தானைத் தலைவர்களும் வாழ்ந்த நகரங்களிலும் பேரதிகாரி களும் அயல் நாட்டவரும், செல்வர்களும், வணிகர்களும் வாழ்ந்தனர். ஆகவே, முடியுடை வேந்தர் மூவருடைய கோநகர்களேயன்றிப் பல நகரங்கள் சங்க காலத்தில் இருந்தன. ஆயினும், கழகக்கால நகர வாழ்க்கையைப் பொதுப் பட விளக்கு முன் பாண்டியரின் கோநகரான கூடலம்பதியைப் பற்றியும், சோழரின் கோநகரும், துறைமுகப்பட்டின முமான பூம்புகாரைப்பற்றியும் குறிப்பாகக் கூறலாம். கூடல் (மதுரை) நகர வாழ்க்கை நாளங்காடி : மதுரையில் நாளங்காடி (பகற்கடைத்தெரு, அல்லுங் காடி (இரவுக் கடைத்தெரு என்னும் இருவகைக் கடைத்தெருக்கள் முறையே பகலிலும், இரவிலும் செயல்பட்டன. வைகை ஆற்றுத் துறை களில் உள்ள சோலைப்பகுதிகளில் பெரும்பாண்" மக்கள் வாழ்ந்தனர். நாட்டை இழந்த மன்னர்களும், குடியிழந்த பிறநாட்டு மக்களும், பாண்டிய நாட்டை தாக்கித் தோற்ற மன்னர்களும் மதுரை நகரின் கோட்டைக்குள் அமைந்திருந்த உயர்ந்த மாடி வீடுகளில் வாழ்ந்தனர். பாணர் நகரின் அகன்ற தெருங்களில் ஆங்காங்கே இசையையெழுப்பிக் கொண்டிருந்தனர். இசையைக் கேட்டுச் சிலர் மகிழ்ச்சியில் ஆடினர். விழாக் கொடி, மன்ன னின் பல்வேறு கொடிகள், கள்ளுக்கடையில் பறக்கும் கொடி முதலிய பல கொடிகள் அகன்ற தெருக்களில் இரு மருங்கிலும் பறந்தன. கள்ளுண்ட மறவர் செருக்கோடு சென்றனர். யானைகள், தேர்கள், குதிரைகள் வந்து போய்க் கொண்டிருந்தன, பல்வகை மலர்கள், மலர் மாலைகள், மேனி மணப்பொடிகள், வெற்றிலை, அடைக்காய் (பாக்கு, சுண்ணாம்பு முதலிய பொருள்களை விற்போர் படைநடமாட்டத்திற்கு அஞ்சி மாடி வீடுகளின் நிழலில் நின்று விற்றனர். பல்வேறு அகவையினரான பெண்களும் கடை வீதிக்கு வந்து வேண்டிய பொருள்களைக் கலைவேலைப்பாடுடைய செப்புகளில் வாங்கிச் சென்றனர், பண்பற்ற சில ஆண்கள் இவர்களைக் கண்டு நகையாடி நின்றனர். இத்தகைய போக்குவரத்தால் எழுந்த ஆரவார ஒலிமன்னனின் வெற்றிக்குப் பின் ஏழு நாள்கள் நடக்கும் பெருஞ்சோற்று விழாவில் எழும் ஆரவாரத்தையொத்திருந்தது'. அல்லங்காடி முன்னிரவு : முன்னிரவில் செல்வர்கள் குதிரைகள் பூட்டிய தேரில் காவலர் பின்தொடர உலா வந்தனர். மகளிர் மாடங்களின் மீதுள்ள நிலா முற்றங்களில் நடமாடினர். தாய்மார்கள் குழந்தை களையும், பூசைப் பொருள்களையும் ஏந்திக்கொண்டு சிவன் கோயிலுக்குச் சென்றனர்.குன்று குடைந்தன்ன அந்தணர் வீடுகளில் மறையொலி கேட்டது. சமணப் பள்ளிகளில் பூவும், புகையும் மணந்தன. பல பொருள்களையும் விற்று முத்தும் மணியும் விலை யாகப் பெற்றுத் திரும்புவோரும், விலையுயர்ந்த பொருள்களை விற்று வீடு திரும்புவோரும், வேந்தனுக்கு உதவிய கலைஞர் களும் பிறரும் வீதிகளில் காணப்பட்டனர். மா, பலா, முதலான கனிகளும், கிழங்கு களும், தனன் சோறும் பிறவும் விற்கும் கடைகளில் அவற்றை உண்ட மக்கள் ஆரவாரம் செய்தனர். முழு நிலாவொளியில் தங்களைப் பலவாறு ஒப்பனை செய்துகொண்டு பொதுமகளிர் மேனி மினுக்கி அடித்திளைத்த னர். பொங்கலிட்டுப் பூசை செய்த இளம் பிள்ளைத் தாச்சியரும், சாமி யாடும் சாலினியும், வெறியாடும்வேலரும் குரவைக் கூத்தாடிக்கொண்டு சென்றனர். சேரிகளில் சொற்பொழிவுகளும், இசையும், கூத்தும் நிகழ்ந்த ன. நள்ளிரவு : நள்ளிரவில் விற்பனைக் கடைகள் மூடப்பட்டன. அடை, பாயசம் (விசயம்), கொழுக்கட்டை மோதகம்) முதலியவற்றைக் கூவி விற்றனர்.விழாவில் மூங்கிலை நிறுத்திக் கட்டிய கயிற்றின் மேல் ஆடிய வயிரியர் தாங்கினர். தர்க்காவல் படையினர் நடமாடிய வண்ண மிருந்தனர் பின்னிரவு : வைகறையில் அந்தணர் வீடுகளில் மறையொலி கேட்டது யாழ் வல்லோர் மருதப்பண் பாடினர்; களிறுகளுக்கு உணவு உருண்டைகள் இடப்பட்டன; கடைகள் மெழுகப்பட்டன; அள்விற்போர் விலைகூறி விற்றனர்; கள்ளுண்டோரின் கரகரப்பான ஒலி கேட்டது; மன்னன் துயிலெழச் சூதர்கள் பாடினர்; விண்ணியலர் (மாகதர்) நேரத்தை யறிவித்தனர்; வேதகாளி என்னும் இசைக்கருவி முழங்கிற்று: மகளிர் கதவுகளைத் திறக்கும் ஒலிகேட்டது. துயிலெழுந்த மன்னன் கடமைகளை முடித்துக்கொண்டு கொலு மண்டபத்தில் அமர்ந்து மறவருக்கும், புலவருக்கும், கலைஞருக்கும் பரிசுகள் வழங்கினான். பொற்கலத்தில் மகளிர் தந்த தேறலைப் பருகினான். யாவரும் வாழ்த்தும் வாழ்த்தொலிகள் கேட்டன். இவ்வாறு அரசன் அறம் புரிதல், அரசியல் நடத்துதல், இன்பமாய்க் காலங்கழித்தலென ஒரு நாளை மூன்றாகப் பகிர்ந்து பணியாற்றுவான். மேற்கூறிய முறையிலேயே புகார் நகர வாழ்க்கையும் அமைந் திருந்ததைப் பட்டினப்பாலையால் அறிகிறோம். புகார்செல்வம் கொழித்த நகரம். அதில் வாழ்ந்த செல்வரும் வணிகரும், பொன்னும் மணியும் விரவப் பெற்றிருந்தனர். பரதவர் பாணர், யவனர் சேரிகளிலும் மக்கள் மகிழ்ந்து வாழ்ந்தனர். பல்வகைத்தொழிலாளர் களும், உழவர்களும், கலைவல்லார் களும் இந் நகரில் வாழ்ந்தனர். சங்கு அறுத்தல், யானை மருப்புகளைக் கடைதல், பொன்வேலை, மனரி வேலை, செம்பு வேலை, மார்புக்கச்சை செய்தல்(வம்பு முடிதல்), ஓவியம் தீட்டுதல், மாலை கட்டுதல், சுண்ணம் இடித்தல், திரையல் மடித்தல் பீடா) முதலிய சிறுதொழில்களும்," வெண்கல வேலை, நெசவுவேலை, சிவிகை, வண்டி தேர் மெய்ப்புக் கவசம், யானையை அடக்கும் தோட்டிகள், கையில் மாட்டிக் கொள்ளும் தோலுறைகள், மருந்துகள், சூழியம் , வெண்சாமரம், பலவகையான கேடயங்கள் செய்யும் தொழில்களும் மதுரையில் நடந்தன. மதுரையிலும், புகாரிலும் பல்வேறு தவசங்களை விற்கும் வாணிகத் தெருக்களும் இருந்தன. தவசம் விற்போர் கூலவாணிகர் எனப்பட்டனர். கப்பல் வாணிகத்தில் ஈடுபட்டோர் மாசாத்து வணிகர் எனப்பட்டனர். உப்பு வணிகரும், எண்ணெய் வணிகரும்கள், தேறல், தோப்பி, மட்டு மகிழ், நறவு, நனை, அரியல் முதலிய பலதரப்பட்ட மதுவகைகளை விற்போரும், அப்பம், பிட்டு பண்ணியம், ஊன்உணவு முதலிய உணவுகளை விற்போ நம் பூ பூமாலை, விரைமாமேனி மணப்பொடி), பொன், முத்துகள், பவழம், வைரம் முதலியன விற்போரும், பூவேலைப்பாடுடைய ஆடைகள் விற்போரும், பல்வகை ஆடைகள் விற்போரும், ஓவியங்கள், பொம் மைகள், வலைப்பின்னல், விளையாட்டுப்பொருள்கள் விற்போரும், இன்னபிற எண்ணிலா வணிகர்களும் மதுரை, புகார் கடை வீதிகளில் காணப்பட்டனர். கடல் வழிவந்த அயல்நாட்டுப் பொருள்களும் இந் நகரங்களில் விற்கப்பட்டன. குதிரைகள், மிளகு, மணிக்கற்கள், அகில், சந்தனம் முதலியனவும் விற்கப்பட்டன. அயல்நாட்டு வணிகரும் தமிழக வணிகரும் பல்வேறு மொழிகளில் பேசிக்கொண்டனர். மருவூர்ப் பாக்கத்திலும் இத்தகு வணிகர் இருந்தனர். அரண்மனை வாழ்வு | மேற்கூறிய மகிழ்ச்சி ஆரவாரங்களுடன் கூடிய நகரத்தின் நடுவில் அரசன் வாழும் கோயில் அரண்மனை இருக்கும். மன்னன் வைகறையில் துயிலெழுந்து வெளுத்த ஆடையணிந்து அறம் செய்து, செங்கோலோச் சுவதாகக் கூறினோம். இவன் இரவுப் பொழுதை மகளிரொடு இன்பமாய்க் கழித்தான். பொன் மணிகளாலான அணிகளையும், பலதரப்பட்ட ஆடை களையும் அணிந்து ஒப்பனை செய்யப்பட்ட அரண்மனையில் வாழ்ந்த மன்னனின் வாழ்க்கையும், உறைவிடமும் செப்புதற்கரிய சிறப்புடையன. கழகக்கால மன்னர் பெண்டிர் பலரை மணக்கும் வழக்கமுடையவர். அரசியாரும் அரசனுடன் கொலுவீற்றிருந்தார். அரசன் இறந்தால் அரசி யும், படைத் தலைவரும் பிறரும் உடன் கட்டையேறும் வழக்கம் இருந்தது. யானையேற்றம், குதிரையேற்றம், வேட்டையாடுதல், பிற பெண் களுடன் பெண்டாட்டிகள் கூடிக்களித்தல் முதலிய பழக்கவழக்கங் களும், மன்னரிடமுண்டு. மக்கள் இதுவரை நாம் கண்ட கழகக்காலத்து நானில வாழ்க்கைமுறை களையும், நகர வாழ்க்கைமுறையையும் துய்த்த மக்கள் யாவரும் தமிழர்களே. இவர்கள் இடத்தால், தொழிலால் வேறுபட்டனரேயொழிய, உள்ளத்தால் தமிழர்களே. உழவர், தொழிலாளர், கலைஞர், புலவர், வணிகர் முதலிய பலதிறப்பட்டவர்களைக் கண்டோம். இனி இம் மக்களின் உணவு, உடை அணிகலன்கள், பொழுது போக்குகள், சமயக் கோட்பாடு, வாழ்வியல் வேறுபாடுகள் முதலியன பற்றிச் சுருங்கக் கூறுவோம். உணவு இக் கால மக்கள் ஒரேவகையான உணவை உண்டனர் எனக் கூற முடியாது. அவரவர் வாழ்ந்த இடங்களுக்கேற்ப உணவு, உடை, உறை விடங்கள் அமைந்ததை மேலே கண்டோம். ஆயினும் பெரும்பாலான மக்களின் உணவு அரிசிச் சோறேயாகும். வரகு, சாமை முதலிய புன்செய்த தவச உணவையும், மீன் இறைச்சிகளையும், கனி, கிழங்குகளையும் உண்ட மக்களையும் கண்டோம். மிளகு, புளி, உப்பு முதலியனவும் உணவில் சேர்த்துக் கொள்ளப்பட்டன. அரசன் அளிக்கும் விருந்துகளிலும், பிற விருந்துகளிலும் உண்ட உணவுக்கும், தனி மாந்தன் உண்ட உணவுக்கும், ஐந்நில மக்களும், அரண்மனையில் வாழ்ந்தோரும் உண்ட உணவுக்கும் வேறுபாடுகள் காணப்பட்டன. கைம்பெண்டிர் விதவைகள், துறவிகள், வீரர்கள் முதலியோரின் உணவு வகைகள் வேறு வேறாக இருந்தன. அறச்சாலைகள் பல இருந்தன. பல்வேறு சிற்றுண்டிகளும் சிற்றுண்டி விற்போரும் அறியப்படு கின்றனர். பலதரப்பட்ட பழச்சாறுகளையும், பலதரப்பட்ட கள்ளையும், சுவை நீரையும், குடிவகைகளையும் இக் காலத்தில் காண்கிறோம், ஊன் உண்ணும் வழக்கம் எல்லோரிடமும் இருந்தது. வெள்ளாடு, செம்மறியாடு, மான், முயல், ஆமான், மீன், நண்டு, ஈயல், கோழி, காட்டுக்கோழி, காடை உடும்பு முதலியவற்றை உண்டனர். பாலும், பால் பொருளும், பருப்பு வகைகளும் உண்ணப்பட்டன. நான் உணவைப் போலவே கள்ளுண்ணும் பழக்கமும், தேறலைப் பருகும் பழக்கமும் பலரிடமும் காணப்பட்டது. பிற்காலத்தில் கள்ளுண்ணு தலின் கேடுகளையுணர்ந்தோர் கள்ளுண்ணாமையை வலியுறுத் தினர். உடை கழகக்காலச் சான்றுகளிலிருந்து அக்கால மக்கள் தழைகளாலும், பூக்களாலும், கொடிகளாலும் ஆன ஆடைகளையும் அணிந்தனர் என்பது புலனாகிறது. நாராலும், மரப்பட்டையாலுமான மரவுரி ஆடையும் இருந்ததைப் பத்துப்பாட்டிலிருந்து அறிகிறோம். புலித்தோல், மான்தோல் முதலியவற்றைப் படுக்கைக்கும், இருக்கைக்கும் பயன்படுத்தினார்கள். , பருத்தியாலான மென்துகில், கலிங்கம், வண்ண ஆடைகள் முதலியன அணியப்பட்டன. வெண்மையான ஆடைகள் துண்டுதுண்டாக இருப்பின் அறுவையென்றும், மூங்கிலின் மேல் ஓடு போலவும் பாலாடை போலவும் இருப்பின் மென்துகில் என்றும் அறியப்பட்டன. கலிங்க நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட பருத்தி யாலான ஆடையே கலிங்கம் என்றும், பட்டாடைக்கு வழங்கிய பெயரே கலிங்கம் என்றும் பலவாறு கூறப்படு கிறது. நாலாக்கலிங்கம், ஒண்பூங்கலிங்கம் என்று கலிங்கத்தைப் பலவகை யாகக் கூறினர். நுரை போன்ற வெண்மையான துணி. மூங்கிலி லிருந்து உரிக்கப்பட்ட வெள்ளியதோல் போன்ற கண்ணுக்குத் தெரியாத இழைக ளால் நெய்யப்பட்ட துணி ஆகியவையே முறையே நூலாக்கலிங்கம், ஒண்பூங்கலிங்கம் என்று அறியப்பட்டன. மணப்பெண் அணிந்த ஆடை. கோடிக்கலிங்கம் எனப்பட்டது. சுருங்காத கலிங்கத்தை மணமகள் அணிந்தான் எனவும் கூறப்படுகிறது. இதிலிருந்து சுசங்காத அல்லது சுருங்காத வெள்ளிய ஆடை கலிங்கம் எனப்பட்டிருக்கலாமெனத் தெரி கிறது. நீலம், சிவப்பு முதலியவண்ணங்களாலான ஆடைகளும் இருந்தன. பட்டாலும், எலிமயிராலும் ஆடைகள் நெய்யப்பட்டன. ஆடை களில் பின்னல் வேலைப்பாடுகள் செய்யப்பட்டன. பின்னல் வேலை செய்தவர் சாலியர் எனப்பட்டனர். ஆண், பெண் இருபாலரும் பல்வகை யான ஆடைகளையும் அணிந்தனர். நீண்ட கொய்சகம் வைத்து ஆடை அணியும் வழக்கம் கழகக்கால மகளிரிடையே காணப்பட்டது. இவர்கள் "வம்பு'. 'வார்' என்னும் மார்புக் கச்சைகளை அணிந்தனர். மறவர்கள் வெட்டுடையணிந்தனர். ஆண்கள் அரியும் சட்டை 'படம்' மெய்ப்பை முதலிய பெயர்களால் அறியப்பட்டன. ஆணும், பெண்ணும் ஒன்றுக்கு மேற்பட்ட ஆடைகளை அணிந்தனர். தலைப்பாகை அணிவதும், மேல் --- துண்டு போடுவதும் உண்டு. அணிகள் சுழசுக்காலத் தமிழர்கள், அணிந்த அணிகலன்கள் அணி, பூண், இழை, கலம், தொடி, குழை, வளை முதலிய சொற்களால் அறியப்படு கின்றன. கால் முதல் தலை வரை பல்வேறு அணிமணிகளை இவர்கள் அணிந்தார்கள். ஆண்கள் மறவர்) காலில் வீரக்கழல் அணிவர். பெண்கள் தண்டு, சிலம்பு முதலியவற்றைக் காலில் அணிந்தனர். கிண்கிணி என்னும் சிறு சதங்கையும் சிறுவர்களுக்குக்காலில் அணிவிக்கப்பட்டது. கழுத்தில் ஆண்களும் பெண்களும், முத்து, பொன் மாலைகளையும், கற்கள் பதித்த மாலைகளையும் அணிந்தனர். ஆண்கள் தோளில் தொடி, கழல்தொடி, கொடி ஆகியவற்றையும், கையில் கடகத்தையும் அணிந்திருந்தனர். பெண்கள் முன்கையில் தொடியும், அதனையடுத்து வளையும் அணிந்தனர். குறுந்தொடி, அவிர்தொடி, ஆய்தொடி பூந்தொடி, செறிதொடி எனப் பலவகையான தொடிகள் இருந்தன. செல்வமகளிர் தோளுக்குக் கீழ் அணிந்த ஒருவகை அணி வந்த" எனப்பட்டது. இதனை வங்கி எனலாம். பொன்னாலும், முத்தாலுமன்றிச் சங்காலும் வளையலும், பிறவும் செய்தணியப்பட்டன. வலம்புரிச் சங்காலான வளை "வலம்புரிவளை' எனப்பட்டது. அறுத்துச் செய்யப்பட்ட வளை எல்வளையென்றும் இலுங்குவளையென்றும் அழைக்கப்பட்டது. மகளிர் பூங்குழை பொலங் குழை, சிறுகுழை, ஒண்குழை, வார்க்குழை, கனங்குழை, பொல்லாங்குழை, மகரக்குழை, வரிக்குழை முதலிய பலதரப்பட்ட காதணிகளை அணிந் திருந்தனர். இவற்றிலிருந்து பொன்னால் செய்த பூப்போன்ற குழையும், சும்பி போன்ற குழையும், வார்ப்புக் குழையும், பச்சைக்கல் பதித்த குழையும் அல்லது தழை, கொடி போன்ற குழையும் பிறவும் இவர்களால் அணியப் பட்டனவென்பதை அறிகிறோம், பெண்கள் கூந்தல் ஒப்பனைக்குப்பின் தலையில் பொன்னாலான தலையணி, சுரிதகம் முதலிய அணிகளையும் அணிந்தனர். அரசர்களின் முடிசுள் நீலமணிகள் பதித்து அணிசெய்யப்பெற்றிருந்தன. அவர்கள் மார்பிலும், கழுத்திலும், இடுப்பிலும், தோளிலும் கையிலும் பல்வேறு அணிகளையணிந்தனர். இவ்வாறு நோக்கும்போது சங்ககாலத்தில் ஆண், பெண், சிறுவர், சிறுமியர் யாவருமே ஏழை, செல்வந்தர் என்ற வேறுபா டின்றி அணிமணிகளை அணிந்தனர் என அறிகிறோம். முத்து, மணி, பொன், கொடி, வாரை மூங்கில், சங்கு முதலியவற்றாலான அணிகள் இருந்தனவென்பதையும் அறிகிறோம். குறும் பொறி, சில்காழ், பருமம், பல்காழ், வைக்காழ் முதலியன இடையணிகளாகும். மார்பில் அணிந்த அணி "மதாணி' எனப்பட்டது. யானைக்கு முகபடாம் குழி) என்னும் பொன்னணி போடுவதுண்டு. சிறுவர்களுக்குப் புலிப்பல் கோத்த தாலிகளையும், ஐம்படைத் தாலிகளையும் அணிவிப்பர். கூந்தலைச் சடையாகப் பின்னி அதில் திருசியணியப்படும் அணி சுரிதகம் என்று அழைக்கப்பட்டது. தலைமயிரை வாரிவகிடு எடுத்து ஒன்பது மணிகளைப் பதித்த ஒருவகை அணியை அணிவார்கள். அதற்குத் 'தொய்யகம்' என்று பெயர். இதனைத் தலைப்பாளை என்றும் அழைப்பர், மகரப்படுவாய் என்பது சுறாமீன் வடிவிலான ஒருவகை அணியாகும். சுறா வடிவிலான மணிபதித்த பொன்வளையம் 'மகரவளையம்' எனப்பட்டது. நீலமணி பதித்த பொன்னணி 'குணிம்பை' எனப்பட்டது. வாகு வளையம், நித்திலமதாணி முதலிய அணிகளின் பெயர்களும் தொன்மணிகளால் (நவமணிகள்) ஆன நகைகளின் பெயர்களும் அறியப்படுகின்றன. நறுமணப் பொருள்கள் நறுமணப் பொருள்களைப் பயன்படுத்தும் வழக்கம் அக் கால் மக்களிடம் காணப்பட்டது. மலர்கள், காய்கள், மரக்கட்டைகள், விலங்குப் பொருள்கள் முதலியவற்றை இடித்து நறுமணப் பொடிகளும் நறுமணப் பொருள்களும் செய்யப்பட்டன. பூக்களைச் சூடிக்கொள்வதும், படுக்கை யில் தூவுவதும் நறுமணம் கருதியே யாகும். பல்வேறு மலர்களையும், கொடிகளையும், காய்களையும், சேர்த்துக் கூட்டப்பெற்ற கதம்ப மாலை களைப்பற்றியும், அவற்றி லிருந்து எழுந்த நறுமணம் பற்றியும் அறிகிறோம். வெறியாடும், வேலன் அட்டிகம் சாதிக்காய், தக்கோலக் காய், காட்டுமல்லி, வெண்ட காளி மலர் ஆகியவற்றைக் கலந்து கதம்ப மாலை யணிந்தான். கஞ்சங்குல்லைப் பூவை மகளிரும், குழந்தைகளும் தலையில் அணிவ துண்டு. இவ்வாறு நானில மக்களும் பல்வேறு மாலைகளைச் சூடியதை யறிகிறோம், செங்கழுநீர் மாலை, காந்தள்கண்ணி, களங்காய்க்கண்ணி, வெண்டாளிமாலை, பித்திமாலை முதலிய மாலைகளைப் பற்றியும் அறிகிறோம். பொன்தகடு, தொண்மணிகள், சந்தனம், கருப்பூரம் முதலியவற்றைப் பனிநீரில் நனைத்து இடித்துச் சுண்ணம் உருவாக்கி விரைமாவாகமேனிப் பொடியாக-Powderப் பூசிக்கொண்டனர். மணப்பொருள்களை அம்மியில் அரைத்துச் சாந்தாகவும் பூசிக்கொண்டனர். அகிற்புகைபோட்டுத் துணிகளையும், கூந்தலையும் மணமடையச் செய்தனர். இதனால் துணிகள் பூச்சியரிக்காமலும் காக்கப்பட்டன. விழாக்களும் விளையாட்டுகளும் அவ்வந்நிலத்திற்கேற்றபடி விழாக்களும், விளையாட்டுகளும் இருந்தன. பொதுவாக விளக்குகளை ஏற்றிக் கொண்டாடும் விளக்கீட்டு விழா' எல்லோரிடத்திலும் காணப்பட்டது. அறுமீன் சேரும் முழுநிலா நாளில் மாலை வேளையில் இவ் விழா நடைபெறும், தெருக்களில் விளக்குகளை ஏற்றி, மலர் மாலைகளைத் தொங்கவிட்டுப் பால் பொங்க விட்டு விழாக் கொண்டாடுவர். மலைகளின் உச்சிகளிலும் விளக்குகளை யேற்றுவர், திருமால் உலகத்தில் தோன்றிய நாளை 'ஓணம்' என்னும் விழாவாகக் கொண்டாடுவர். அன்று வீரர்கள் யானைகளைப் போரிடச் செய்து கண்டுகளிப்பர். தைந்நீராடும் விழா, பேராறுகளில் புனல் நீராடும் விழா, மணியை இடுப்பிலே கட்டிக்கொண்டு தெருவிலே ஆடும் உள்ளி விழா, முதன்முதலில் வீரர் அம்பு தொடுக்கும்போது கொண்டாடும் வீரர் விழா', கூத்தர்கள் கொண்டாடும் கோடியர் விழா, மேழிசித்திரை) ஓரையில் முழுநிலாக் காலத்தில் கொண்டாடும் வேந்தர் இந்திர விழா, இளவேனிற் காலத்தில் கொண்டாடப்படும் காமவேள் விழா முதலிய விழாக்களைக் கழகக்கால மக்களிடையே காண்கிறோம். விழாக்களைப்போலவே பல்வேறு விளையாட்டுகளிலும் இவர்கள் ஈடுபட்டனர். பல்வேறு வகையாகத் தனித்தும், பலர் கூடியும் நீரில் விளையாடினார்கள். பெண்கள் மணல்வீடு கட்டுதல், கழற்சிக்காய், அம்மானைக்காய் முதலியன ஆடுதல், பறவைகளைவைத்தாடுதல், ஊஞ்சலாட்டம், புனலாட்டம் முதலிய ஆட்டங்களில் ஈடுபடுதலும் உண்டு. பொருநையாற்றங்கரையில் பெண்கள் கைகோத்துப் பின்னியாடிய விளையாட்டு தெற்றிக் கிழங்கு விளையாட்டு' அல்லது குரவை வினை யாட்டு' எனப்படுகிறது. பாவைகள், பூக்கள், கிழங்குகள் முதலியவற்றைக் கொண்டு, சிற்றில் கட்டியும், சோறாக்கிக் குடும்பம் நடத்தியும் சிறுமிகள் விளையாடினர். கன்றுகளுடன் சேர்ந்தும், நீரில் மூழ்கியும், மரத்திவேறியும் சிறுவர்கள் விளையாடினர். இச் சிறுவர், சிறுமியர் விளையாட்டுகளும், பெரியோர்கள் விளையாட்டுகளும் நானிலத்திற்கேற்றவாறு பலவகையாக இருந்தன். வீரர்கள் விளையாட்டுக் களங்களில் பல விளையாட்டுகளையும், உடற்பயிற்சி களையும் செய்தனர். யானையோடு உடல் வலிமையைச் சோதிக்கும் விளையாட்டு, காளைகளைத் தழுவும் விளையாட்டு முதலிய அஞ்சத்தக்க விளையாட்டுகளையும் இவர்கள் விளையாடினார்கள். கர்திகள் கழகக்காலத்தில் நீர், நிலம், வான்வழிகளைக் கடக்க ஊர்திகள் இருந்தன. யானை, குதிரை, எருமை, கோவேறு கழுதை முதலிய வற்றின் மீதும், குதிரை, மாட்டுவண்டிகளின் மீதும் ஊர்ந்து சென்றனர். வேந்தரும், வீரரும், ஆண்களும் தேரில் சென்றனர். தேர்களின் வகைகள் விரிவாக அறியப்படுகின்றன. வண்டிகள் தவசங்களை ஏற்றிக்கொண்டும், உப்பு முட்டைகளை ஏற்றிக்கொண்டும் வரிசையாகச் சென்ற காட்சிகள் சித்தரிக்கப்படுகின்றன. நீரைக் கடப்பதற்குக் கட்டுமரங்களும், மரக்கலங்க களும் இருந்தன, பெரிய கப்பல்கள் 'கலம்' என்றும், சிறு ஓடங்கள் 'தோணி" என்றும் அழைக்கப்படுகின்றன. தோணிகள் கலம்புக முடியாத கழிகளிலும் செல்லும். வீடு போன்ற பெரிய படகுகளில் மீன் விற்ற நெல் மூட்டைகளை அடுக்கி வந்ததாக அறியப்படுகிறது. திமிலி என்ற தோணி நீரைப்பிளந்து விரைந்து செல்லக்கூடியது. அயலகம் சென்ற கலம் வங்கம்' எனப்பட்டது: நாவாய் என்றும் இதனையழைப்பர். வான்வழியாகச் செல்லும் வானவூர்திகள் கழகக்காலத்தில் இருந்தனவா என்பது பற்றித் திட்டமாகக் கூறமுடியவில்லை. ஆயினும் வானவூர்தி' என்னும் தொடர் புறநானூற்றிலிருந்து அறியப்படுகிறது. "வலவன் ஏவா வானவூர்தி' என்று அஃது சுட்டப்படுவதால் ஓட்டுபவன் இல்லாமலேயே அது சென்றதென அறியப்படுகிறது, நம்பிக்கைகள் கழகக்கால மக்களிடம் பலதரப்பட்ட நம்பிக்கைகள் இருந்தன. சகுனம் பார்த்தல், நற்சொல் கேட்டல் முதலியவற்றில் அவர்கள் பெரிதும் நம்பிக்கை யுடையவர்கள். கதிரவன், நிலவு, விண்மீன்கள் ஆகியவற்றில் இடப் பெயர்ச்சிகளினால் விளையும் கேடுகளையும் நன்மைகளையும் பற்றிப் பல நம்பிக்கைகளைக் கொண்டிருந்தனர். கிரகணம் ஏற்படுவதைத் திங்களைப் பாம்பு விழுங்குகிறதென்று நம்பினர், விண்மீன் குறித்த காலத்தில் விழுமானால் அரசர் போலும் தலைவர்கள் இறப்பர் என்று நம்பினர். போர்க்களத்திலும், இடுகாட்டிலும் பேய்களிருப்பதாயும், அவை பிணங்களைத் தின்று வாழுமென்றும் நம்பினர். நெய்யையும், வெண்சிறு கடுகையும் கலந்து தூவிக் கண்ணேறு கழிப்பார்கள். பேய்கள் நெருங்கா வண்ணமும் இவற்றைத் தலையில் அப்பிக்கொள்வார்கள். பாம்புகள் மாரிக்கக் கற்களை உமிழும் என்று இவர்கள் நம்பினார்கள். பறவைகள், ஓணான், நிறைகுடம் முதலியவை எதிர்ப்படுதலைக் கொண்டும், நேரத்தைக் கொண்டும் நிமித்தம் பார்த்து நடக்கும் நம்பிக்கை சுழசுக்காலத் தமிழர்களிடம் உண்டு, யாரோ இருவர் பேசும் சொல்லைத் தாம் எண்ணிய எண்ணம் நிறைவேறுமா என்பதற்குப் பார்க்கும் செயல் விரிச்சி கேட்டல் எனப்படும். "வருந்தற்க', 'வருவான்' என்று பேசிக் கொண்டால் நினைத்தவன் வருவான் என்றும், மாறாகப் பேசிக் கொண்டால் வாரானென்றும் நம்பினர். வளைசிறுத்தல், உறுப்புகள் துடித்தல், கனவுகள், பல்லி சொல், காக்கை கரைதல் பூதலியவற்றிலும் இவர்களுக்கு நம்பிக்கையுண்டு. மரம், சுனை, ஓடை ஆறு, கடல் முதலிய வற்றிலும் தெய்விகம் உரைவதாய் நம்பினர். அறத்தால் நற்பிறவி கிட்டும் என்றும், அன்றேல் குறைபட்ட பிறவியே கிட்டும் என்றும், இம்மை, மறுமையில் அவர்கள் நம்பிக்கை வைத்தனர். குறத்தி குறி சொல்லும் வழக்கமும், முற்றத்தில் நெல்லைப் பரப்பிக் குறி கேட்டல், ஒற்றை இரட்டையெனயெண்ணி முடிவெடுத்தல், தெய்வம் வந்து ஆடுதல் வேலன் வெறியாடல், சாலினி பேயாடல்) முதலியவற்றிலும் நம்பிக்கை வைத்திருந்தனர். முடிவுரை கழகக்காலக் குமுகாயத்தை ஆய்ந்து, நோக்கும்போது மன்னரும், செல்வரும், மன்னர் குடும்பத்தினரும், பேரதிகாரிகளும், தானைத்தலை வர்களும், இவர்களைச் சேர்ந்த தொழிலாளர்களும், கலை வல்லுநர்களும் நகரங்களில் இன்ப வாழ்க்கையை நுகர்ந்தனர் என்றும், இவர்களில் உணவு, உடைஅணிகள் முதலியனவும் பொழுதுபோக்குகளும் ஏதோ ஒரு கனவு உலகில் காணும் காட்சிகளாக உள்ளனவென்றும் அறிகிறோம். ஆனால், நாளில் மக்களையும், பாலைநில மக்களையும் பற்றி அறியும்போது நாகரிக மறியாத தொடக்கக்கால மக்களைப் போலவே வேட்டையாடியும், ஆடு, மாடு மேய்த்தும். கிழங்கு காய்களையுண்டும், மரவுரியும், தழை, தோலாடைகள் ஆகியவற்றை உடுத்தியும் வாழ்ந்ததைக் காண்கிறோம். கடையேழு வள்ளல்களையும், மன்னர்களின் கொடைத்தன்மை களையும் இவர்களை நாடிச் செல்லும் புலவர்களையும், பாணர் களையும் காணும் போது கஞ்சிக்கழும் மக்கள் ஒருபுறமும், செல்வத்தை மலையெனக்குவித் துள்ள செல்வர்கள் ஒரு புறமும் இருக்கக் காண்கிறோம், கற்பின் மேன்மை பற்றியும் பேசப்படும் அதே நேரத்தில் பரத்தையர் பற்றிப் பலவாறு அறிகிறோம். உவகைப் பெண்களோடும் பல் அழகிய மனைவியரொடும் அரசர்கள் மதுவுண்டுகளிக்கும் காட்சியும், மறவர் காட்டுக் கிழங்கைக் கிளறியுண்டு, நாட்டுக்காகப் போரிடும் காட்சியும் காணப்படுகின்றன. பார்ப்பனர், குமுகாயத்தில் உழைக்காமல் ஏற்றம் பெற்றுள்ளனர். வணி கர்கள், பெருஞ்செல்வத்தைக் குவித்துள்ளனர். வறியர்கள், வள்ளல்களை நாடிப் பழுத்தமரம் நாடிச் செல்லும் பறவைகள் போல அலைகின்றனர், முருகன், திருமால், வேந்தன் இந்திரன்), வாரணன் (வருணன்), கொற்றவை முதலிய தெய்வங்களும், சமண, சாக்கிய சமயங்களும் நிலவிநின்றன. சதுக்கப் பூதங்கள், பேய்கள் முதலியன பற்றியும் துறக்கம், மறுபிறப்பு பற்றியும் இக் கால மக்கள் அறிந்திருந்தனர். பொதுவாக ஒழுக்கமும், வீரமும், பண்பும் இவர்கள் யாவரிடத்தும் காணப்பட்டன. கற்றவரும், புலவரும், துறவிகளும், ஒழுக்கமுடையாரும், கற்புடைப் பெண்டிரும் யாவராலும் போற்றப் பட்டனர். கல்வியும், பொரு, ளும் மக்களிடையே விரவி, பரந்து வளரவேண்டுமென்ற அடிப்படைக் கொள்கை அந்நாளில் இல்லை. 'சிறு மீன்களைப் பெருமீன்கள் விழுங்கு வதைப்போல் வல்லவர்களே பிறரை யடக்கியாண்டனர். அடிக்கடி மாறும் ஆட்சியாலும், இயற்கைக் கோடுகளாலும் அவதியுற்ற மக்கள் தங்கள் வாழ்க்கையைப் பற்றி மிகுதியாக ஓராமல் சிந்திக்காமல் தன்னொழுக்கத் தையே வளர்த்து வாழ்வாங்கு வாழ்ந்தனர். (ஏ) கழகக் காலச் சமயம் கழகக்காலத் தமிழர் இயற்கையைத் தெய்வமாக வழிபட்டவர்கள், இவ் வழிபாடே பழமையானது. இதன் வளர்ச்சிப்பாங்கில் சிவன், மால், கொற்றவை, முருகன் முதலான தெய்வ வழிபாட்டு முறைகள் தமிழர் வாழ்வில் இடம்பெற்றன. மற்றும் மரம், நடுகல், பேய்த் தெய்வங்கள் பெண் தெய்வங்கள், சிறு தெய்வங்கள் முதலியனவற்றையும் கழகக்கால மக்கள் வழிபட்டனர். வந்தேறிகளும், வந்தேறிகளின் மாயவலைப்பட்டவர்களும் ஆரியத் தெய்வங்களையும், சமண, பௌத்தத் தெய்வங்களையும் வழிபட்டு வந்தனர். இன்றுபோல் கழகக் காலத்திலும் தமிழகம் பல்வேறு சமயங் கனின் புகலிடமாக விளங்கியது. இயற்கை வழிபாடு திங்கள், ஞாயிறு, மழை ஆகியவற்றை வாழ்த்தி இளங்கோவடிகள் தம் சிலப்பதிகார நூலைத் தொடங்குகிறார். இது தமிழர் நெறியில் அமைந்த வழிபாட்டுமுறை, ஞாயிறு, திங்கள், தீ ஆகிய முச்சுடர் வழிபாட்டுமுறை கொடி நிலை, வள்ளி, கந்தழி என்னும் பெயர்களால் தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது தொல். 1034). பிற கழகப் பாடல்களிலும் இச் சுடர் வழிபாடு பற்றிய குறிப்புகள் உள்ளன. விண்மீன் வணக்கம் (நற். 231), காற்றுத் தெய்வ வணக்கம்(கலி. 15, கடல் தெய்வ வணக்கம் அகம். 240) முதலான வழிபாடுகளும் கழகக் காலத்தில் நிலவி வந்தன. ஆலமர் செல்வன் (புறம். 198), வோம்படிக் கடவுள் (அகம். 309), பனையடிக் கடவுள்(நற். 3030), கள்ளி மரத்தடிக் கடவுள்புறம். 260), உன்னமரக் கடவுள் தொல். 1006) முதலான மரத்தடிக் கடவுளரும் கழகக் காலத்தில் வழிபடு சுடவுளராய் விளங்கினர். கழகக்கால மக்கள் வீட்டுத் தெய்வ வழிபாடு செய்தனர். அகம். 282, நற். 2, 35, கலி. 133, பதிற். 84). தெய்வங்கள் பல்வேறு உருவங்களைக்கொண்டவையாக விளங்கினகுறி. A). பொதியில்சாவடி, மன்றம், திண், வீட்டுத் திண்ணை , மரத்தடி முதலான பல இடங்களில் கடவுளின் திருவுருவங்கள் வைத்து வழிபடப்பட்டன. சேயோன் முருகன் அல்லது சிவன், மாயோன் திருமால் வேந்தன் இந்திரன்), வாரணன்(கடல் தெய்வம் ஆகிய தெய்வங் களைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. இத்தெய்வங் களுடன் பலராமன், காமன் சாமன்(கலி. 94), ஏணோன(கலி. 26 பிரமன்(கலி.2,129, நற். 337, முருகு 165), மாநிதிக் கிழவன்(அகம். 5கி), கூற்றுவன்(பதிற். 71, *பாசம்' புறம். 195), இந்திரன்முருகு 159) முதலான தெய்வங்களும் கழகக்காலத் தமிழர்களால் வழிபடப்பட்டன. பெண் தெய்வங்களில் கொற்றவைதொல். 10051, திருமகள் (புறம், 658), மாயவள் (கலி.35) கலைமகள்கலி.36), சூலி(குறுந். 21) கடல்தெய்வம் (அகம். 370), நீரர மகளிர்புறம். 42), வரையர் மகளிர்(ஐங். 191.204), சூரர மகளிர் அகம். 162, முருகு 12-37 முதலான தெய்வங்களும் வழிபடப் பட்டன. ' மற்றும் கொல்லிப் பாவை அகம். 62, நற். 201), தாது செய்பாவை (அகம். 392, வண்டற்பாவை(அகம். 258), உப்பியற்பாவைகலி. 138) மன்றங்களில் அமைந்த மண் சிலை அகம் 157முதலான பாவை உருவங் களும் வழிபடப்பட்டன. அச்சந்தரத்தக்க பேய், கமுது, அணங்கு, சூர், முதலானபெயர்களால் குறிப்பிட்டுக் கழகக்கால மக்கள் வழிபட்டுவந்தனர். -- மக்களைக் காக்கப் போரிட்டு மாய்ந்த வீரர்களுக்குக் கல்நாட்டுத் தெய்வமாக்கி வழிபட்ட நடுகல் வழிபாடு கழகக்கால வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற ஒன்று. இது கோயில் கட்டி வழிபடும் நிலைக்கு வளர்ந்ததைச் சிலப்பதிகாரம் காட்டுகிறது. வழிபாட்டு முறை பச்சிலைபுறம். 105, முருகு, 37, மலர் முதலானவற்றைத் தூவியும், நறை விரை புகைத்தும் குறி. 5-7), பொங்கலிட்டுப் படைத்தும், அருகம்புல், பூளாப்பூ, நெல், தினை முதலானவற்றைத் தூவியும் கழகக்கால மக்கள் கடவுளை வழிபட்டனர். நீராடிய பின்னரே அவர்கள் வழிபாடு செய்தனர். (பதிற். 88). சம்மணம் போட்டு உட்கார்ந்து கொண்டும் முருகு]4), நின்று கொண்டும் அவர்கள் வழிபாடு செய்தமைக்கான குறிப்புகள் உள்ளன. கடவுளின் முன்னர் யாழ் மீட்டியும் வழிபாடு செய்தனர்நற் 189). மகளிர் கூட்டம் கூட்டமாகக் கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்தனர். நடுகல்லுக்குப் பீலிசூட்டியும், துடி முழக்கியும், தோப்பி, கள் முதலான வற்றைப் படையல் செய்தும் வழிபாடு செய்தனர். அகம்.385), வெள்ளாட்டுக் குட்டி முதலான விலங்குகளைக் காவு கொடுத்து வழிபட்டதும் உண்டு (அகம். 156. சந்தன மாலையை வழிபாட்டின் போது ஒரு மாலையாகப் செபமாலையாகப் பயன்படுத்தியதாகவும் தெரிகிறது அசும். 13). மழை பெய்வதற்காகவும், பெய்யும் மழையை நிறுத்துவதற்காகவும் அவர்கள் வழிபாடு செய்ததுண்டு புறம்.143). இவை தமிழர் வழிபாட்டு முறைகள். ஆரியப் பார்ப்பனர் சமற்கிருத வேதம் ஓதி, காலையிலும், மாலையிலும் வழிபாடு செய்தனர். அவர்கள் தீ வளர்த்து வேள்வி செய்து வழிபட்டனர். உருத்திரன், சுப்பிரமணியன், கிருட்டிணன் முதலான தெய்வங்கள் தொடர்பான கட்டுக்கதைகளைத் தமிழர் தெய்வங்களுக்கு இட்டுக்கட்டி இணைத்துவிட்டனர். இதனால், சங்ககாலத்திற்குப் பின்னர் சிவணியம்சைவம், மாலியம்/வைணவம்) என்னும் சமயப்பிரிவுகள் புதிதாக முளைத்தன. சமண, பௌத்த நெறிகள் கழகக்காலச் சமணர் குகைகள், தமிழ்நாட்டில் பரவலாகக் காணப் படுகின்றன. மதுரைக்காஞ்சி, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலான நூல்களிலும், சமண, பௌத்த நெறிச் செய்திகள் இடம் பெற்றுள்ளன, இவற்றைக் கொண்டு இச் சமயநெறிகள் கழகக்காலத்தில் தொடக்க நிலையிலும், சங்கம் மருவிய காலத்தில் ஓரளவு செல்வாக்குப் பெற்ற நிலையிலும் விளங்கினவென்று கூறலாம். ஓக இலக்கியங்கள் 36 நூல்களைக் கழக நூல்கள் என்று பிற்காலத்தவர் குறிப்பிட்டனர். அவற்றுள் 18 நூல்களை மேற்கணக்கு நூல்கள் என்றும், 18 நூல்களைக் கீழ்க் கணக்கு நூல்கள் என்றும் பகுத்து வழங்கினார்கள், மேற்கணக்கு நூல்களுள் பத்துப்பாட்டு 10 நூல்), எட்டுத்தொகை (8 நூல்) ஆகியவற்றை அடக்கினார்கள். சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்களைக் கழக நூல்கள் என்றும், கழகக்கால நூல்கள் அல்லவென்றும், இரு வேறு கருத்துகளைக் கூறிவருகின்றனர். இந் நூல்களின் காலம் தொடர்பாக நாம் ஒரு தெளிவான முடிவிற்கு வரமுடியவில்லை என்றாலும் அவை பல்லவர் காலத்திற்கு முந்தியவை யென்று தெளிவாகக் கூறலாம். இதனால், இவற்றைக் கழகம் மருவிய கால நூல்கள் எனலாம். அதாவது கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்கும் மூன்றாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தவையெனலாம். பத்துப்பாட்டு நீண்ட பாடல்களைக் கொண்ட பத்து நாங்கள் இத் தொகைக் குறிப்பால் சுட்டப்படுகின்றன. அவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருந ராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படை என்னும் மலைபடுகடாம் ஆகிய ஐந்து நூல்கள் இரவலரைப் புரவலர்பால் ஆற்றுப்படுத்தும் ஆற்றுப்படை நூல்களாக அமைந்துள்ளன, முல்லைப்பாட்டு குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை ஆகிய மூன்றும் அகத்திணை நூல்கள், மதுரைக்காஞ்சி தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைச் சிறப்பித்துப் பாடிய புறத்திணை நூல், நெடுநல்வாடையும் அவனது சிறப்பினைக் கூறுகிறது. இது புறத்திணை நூல் என்பது தொல்லோர் முடிவு. இக் கால ஆராய்ச்சி யாளர்களில் சிலர் அகத்திணை நூல் எனவும் கூறுகின்றனர். இந்த நூல்களைப் பாடியோரையும் பாடல்களில் சிறப்பிக்கப்பட்டோரையும் காட்டும் அட்டவணையை அடியில் காணலாம். பாடியவர் சிறப்பிக்கப்பட்டவர் எண் 1. திருமுருகாற்றுப்படை நக்கீரர் முருகக் கடவுள் 2. பொருநராற்றுப்படை முடத்தாமக் கரிகாப்டன் சுண்ணியார் சிறுபாணாற்றுப்படை நத்தத்தனார் . நல்லியக்கோடன் பெரும்பாணாற்றுப்படை உருத்திரங் கொண்டைமான் கண்ணனார் இளந்திரையன் 5. முல்லைப்பாட்டு நப்பூதனார் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் 6. மதுரைக்காஞ்சி மாங்குடி மருதனார் 7. நெடுநல்வாடை நக்கீரர் பாண்டிய நெடுஞ்செழியன் 8. குறிஞ்சிப்பாட்டு சுடரிடர் பிரகத்தன் சி. பட்டினப்பாலை உருத்திரங் கரிகாலன் சுண்ணனார் 11) மண்ணபடுகடாம் கௌசிகனார் - நன்னன் எட்டுத்தொகை எட்டுத்தொகை நூல்கள் இந்தத் தொகைக் குறிப்பால் சுட்டப் படுகின்றன. இவற்றுள் புறநானூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல் ஆகிய மூன்று நூல்களும் புறத்திணைப் பாடல்களைக் கொண்டவை. இவற்றில் பல்வேறு மன்னர்களைப் பற்றியும் குறுநிலத் தலைவர் களைப் பற்றியும், மறக்குடி மக்களைப்பற்றியும், பல்வேறு புலவர்கள் பாடிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவை சங்ககால மக்களின் வாழ்க்கைப் பாங்கினை யும், பண்பாட்டுச் சிறப்பினையும் வெளிப் படுத்தும் கருவூலங்களாகத் திகழ்கின்றன. ஐங்குறுநாறும், கலித்தொகையும் அகத்திணை நூல்கள். இவற்றில் ஒவ்வொரு திணையைச் சேர்ந்த பாடல்களை ஒவ்வொரு புலவர் பாடி உள்ளார். இதனைக் கீழே உள்ள அட்டவணையில் காணலாம். குறிஞ்சி கபிலர் யிலர் முல்லை சோழன் நல்லுருத்திரன் பேயனார் மருதம் மருதனிளநாகனார் ஓரம்போகியார் நெய்தல் நல்லந்துவனார் அம்மூவனார் பார்ப்பு பெருங்கடுங்கோ ஓதலாந்தையார் குறுந்தொகை, நெடுந்தொகை என்னும் அகநானூறு, நற்றிணை ஆகிய மூன்று நூல்களில் பல்வேறு புலவர்கள் பாடிய அகத்திணைப் பாடல்கள் உள்ளன. அவற்றுள் குறுந்தொகை 4-8 அடிகளை உடைய பாடல்களைக் கொண்டது. நற்றிணைப் பாடல்கள் -12 அடிகளைக் கொண்டவை. அகநானூற்றுப் பாடல்கள் 1337 அடியளவுடையன. மேலே கூறப்பட்ட அகத்திணைப் பாடல்கள் யாவும் தமிழர் வாழ்வில் அமைந் திருந்த ஆண், பெண் உறவுப் பாங்கின் மேன்மையை உணர்த்து கின்றன, பாடல்கள் புனைந்துரையின்றி இயல்பாக இயற்கை யோடும், வாழ்க்கை யோடும் இயைந்து காணப்படுவது சிறப்புக்குரிய தாகும். பரிபாடலில் ஒவ்வொரு பாடலுக்கும் இசை குறிப்பிடப் பட்டுள்ளது. இதனால், இதனை இசைத்தமிழ் இலக்கியம் என்று கூறலாம். திருக்குறள் முதலான பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் குமுகாய நலம்கருதி மக்கள் எவ்வாறு வாழவேண்டும் என்று அறநெறி புகட்டும் பாடல்கள் அமைந்துள்ளன. சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. சிலப்பதிகாரம், இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ்க்கூறுகளையும் தன்னகத்தே கொண்டுள்ள முத்தமிழ்க் காப்பியம் சேர, சோழ, பாண்டிய நாட்டையும் அவற்றின் மன்னர்களையும் கோவலன், கண்ணகி வரலாற்றின் வாயிலாக இது சிறப்பித்துக்காட்டுகிறது. மணிமேகலை புத்த மதத்தின் மேன்மையை விளக்கும் நாள். தொல்காப்பியம் கிடைத்துள்ள தமிழ் நூல்களில் பழமையானது தொல்காப்பியம். இது இலக்கண நூல்; என்றாலும் இதிலுள்ள பொருளதிகாரத்தில் தமிழரின் வாழ்க்கைப் பாங்குகள் எதிரொலிக்கின்றன. (ஓ கழகக் காலக் கலைகள் கழகக்காலத் தமிழரின் வாழ்க்கை மகிழ்ச்சியாகக் கழிந்தது என்பதைப் பார்த்தோம், அத்தகைய மகிழ்ச்சியினூடே அவர்களின் பலதரப்பட்ட கலைகளைப் படைத்திருப்பதைப் பார்க்கிறோம். அவ்வாறு படைக்கப்பெற்ற கலைகளைக் கட்டடக்கலை, ஓவியக்கலை, சிற்பக்கலை முதலியனவாக அறியலாம். கட்டடக்கலை கழகக்காலத்தில் வீடுகள், மாளிகைகள், கோட்டை கொத்தளங்கள் கட்டப்பெற்றன. கட்டடக்கலையென்பது முதலில் இயற்கையாக அமைந்த சந்து, குடை, குகை முதலியவற்றிலிருந்தே தோன்றியிருக்க வேண்டும். ஆகவே, பாறைகளிலும், குன்றுகளிலும் இயற்கையாக அமைந்த குகைகள் பண்டைக் காலத் தமிழகத்தில் கோயில்களாகவும், முனிவர்கள் வதியும் இடங்களாகவும் பயன்பட்டன. பாண்டிய வேந்தர் இத்தகைய குகைகளைச் சாக்கிய முனிவர்களுக்கு ஒதுக்கியதாக இலக்கியம், கல்வெட்டுச் சான்றுகளின் லிருந்து அறிகிறோம். மதுரை மாநகரில் வாழ்ந்த அந்தணரின் வீடுகள் குன்றுகுடைந்தாற் போலிருந் தனவென்று மதுரைக் காஞ்சியில் கூறப் பெறுவதால், குன்றுகளைக் குடைந்து கோயில்களாகப் படைக்கும் பழக்கம் இருந்ததை அறியலாம். கருங்கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி அமைக்கப்பெற்ற கருங்கற் கட்டடங்கள், குடைவரைகளுக்குப் பின் ஏற்பட்டிருக்கலாம் இத்தகைய கருங்கற்கட்டடங்களைக் கற்றளிகள்' என்கிறோம். இவற்றிற்கெல்லாம் மூலமான குடிசைப் படிவத்திலிருந்து தோன்றிய மரத்தாலான கட்டடங்கள் பண்டைத் தமிழகத்தில் இருந்திருக்க வேண்டும். இன்றும் தில்லையில் சவை மண்டபமும், கேரளத்திலுள்ள கோயில்கள் பலவும் மரக்கட்டடங்களாயிருப்பதை அறியலாம். செங்கற் களையும், சுண்ணக் காரைகளையும் பயன்படுத்திக் கட்டப்பெற்ற கட்டடங்களும், கழகக்காலத்தில் இருந்தன. இன்றைய அகழ்வாய்வில் கழகக்காலத்திலிருந்த செங்கற் கட்டடங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இதற்கொரு சிறந்த எடுத்துக்காட்டுப் புதுச்சேரிக்கு அருகிலுள்ள அரிக்க மேடு அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்டதாகும். இத்தகைய செங்கற் கட்டடங்கள் பல இருந்தனவென்பதற்கு இலக்கியச் சான்றுகள் ஏராளமா யுள்ளன. கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்னும் புலவர் செப்பனிடப் பெறாத செங்கற்சுட்டடம் இடிந்து போனதை உவமையாகக் காட்டி அழகுபடக் கூறியுள்ளார்'. கழகக்காலச் சோழன் செங்கணான் திருமாலுக் கும் சிவனுக்கும் எழுபதுக்கும் மேற்பட்ட கோயில்களைக் கட்டினான் என்று பிற்காலத்துத் திருமங்கையாழ்வாரும், திருநாவுக்கரசரும் அழகு படக் கூறியுள்ளனர். சிலர் கழகக்காலத்தில் கருங்கற்கட்டடமே இல்லையென்று கூறு கின்றனர். கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வடஇந்தியாவை ஆண்ட அசோகப் பேரரசர் காலத்தில் கவ்வை மெருகிடும் கலை மிகச்சிறந்து காணப்பட்ட தென்பதை இன்றும் நாம் கண்டு வியக்கிறோம். மேலும், பாறையைக் குடைந்து குகையைச் சமைக்கும் கலையைப்பற்றிக் கழக இலக்கியங்களில் கூறப்பெறுகின்றது. ஆயின் இயற்கையாகக் கிடைக்கும் கருங்கற்களைக்கொண்டு கட்டடம் அமைப்பதைக் கழகக் காலத் தமிழர் உறுதியாக அறிந்திருக்க வேண்டும். மேலும் செங்கற் களைச் சமைப்ப தென்பது ஓர் அரிய முயற்சியாலான கலையாகும். அத்தகைய முயற்சிக்கும் முற்பட்ட சுவையறிவே சுருங்கற்கட்டட மாகும். இதன் தாய் மரக்கட்டட மென்றும், மரக்கட்டடத்தின் சேய் கருங்கற்கட்டடமென்றும், அதற்குப் பின்னரே பிற பொருள்களைக் கொண்டு கட்டும் கட்டடங்கள் தோன்றின் வென்றும் கலைஞர் இபி. ஏவல்(E. B. Havell) கூறுவது ஈண்டு. ஆய்ந்து நோக்கத்தக்கதாம். வலிவான கோட்டை கொத்தளங்களில் கருங்கல்லோடு பிற பொருள் களும் பயன்படுத்தப் பெற்றிருக்கலாம். கழகக்காலத்தில் மன்னர்கள் வாழ்ந்த கோநகர்கள் தாமரை மலர் வடிவில் அமைக்கப்பெற்றிருந்தன. சோழரின் கோநகரான காவிரிப்பூம் பட்டினத்தின் அமைப்புப் பற்றிச் சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய இலக்கியங்களில் காணலாம். இது நீள் சதுர வடிவில் அமைந் திருந்ததாகக் கூறப்படுகிறது. இத்தகைய கோநகர்கள் மிளைக்காடு காவற்காடுகள், அகழிகள், புறமதில்கள், அகமதில்கள் முதலியவற்றால் பாதுகாக்கப் பட்டனவென்றும், இவற்றிற்குள் அரசனும், அமைச்சரும், பிற அதிகாரி களும் வதிவதற்கான பலதரப்பட்ட கட்டடங்கள் இருந்தனவென்றும் அறிகிறோம். அகழியை நிரப்புதற்குச் சுருங்கைத் தூம்பின் வழியாக நீர் ஓடிவந்ததென்றும், அஃது யானையின் துதிக்கை போன்று நீண்டிருந்த தென்றும் கூறப்பெறுகின்றது. கோட்டை வலிவாகவும், பாதுகாப்பாகவும் இருந்ததென்றும், மதில் உயர்வாகவும் அகலமாகவும், திண்மையாகவும், அருமையாகவும் இருந்ததென்றும் கூறப்பெறுகின்றது. கோட்டைகள் மண்ணாலும், செங்கல்லாலும், கருங்கல்லாலும் கட்டப்பட்டன. கருங் கற்களை இணைப்பதற்குச் செம்பு, ஈயம் ஆகிய மாழைகள் உருக்கி வார்க்கப் பெற்றன, மதில்கள் விண்ணுற வோங்கி வளர்ந்து நின்றன. அவற்றின் மேல் பந்தும், பாவையும், சிலம்பும், தழையும் அழகுறப் பொறித்து அணி செய்யப்பட்டன. அவற்றின் மேற்புறத்திலும், உட்புறத் துளைகளிலும் பலதரப்பட்ட பொறிகள் பொருத்தப்பட்டிருந்தன. அவற்றுள், விற்பொறி, குரங்குப்பொறி, கவண் பொறி, யானைப்பொறி, தூண்டிற்பொறி, தொடக்குப்பொறி, அடுப்புப் பொறி, கவைப்பொறி, கழுப்பொறி, புதை கதவு, ஐயவித்துலாம், சிரற்பொறி, பன்றிப்பொறி, முரசுப்பொறி முதலியன குறிப்பிடத்தக்கன. கோட்டையின் வாயில்கள் போர்வீரர்கள் யானையின் மீதமர்ந்து கொடிகளையேந்தி உட்செல்லும் அளவுக்கு அகன்றும், உயர்ந்தும் இருந்தன. இவை மலைகளைக் குடைந்தாற்போன்று அமைந்திருந்தன வென்று மதுரைக் காஞ்சியில் கூறப்பெறுகின்றது. கதவுகள் கைதேர்ந்த கம்மியரால் செய்யப் பெற்றவை: அவை கெடாமலிருக்க நெய் பூசப் பட்டது. இருப்புப் பட்டைகள் அவற்றின் மீது சுற்றப்பட்டிருந்தன. வில், புலி, கயல் ஆகிய சின்னங்கள் முறையே சேர, சோழ, பாண்டியர் கதவுகளில் பொறிக்கப்பட்டிருந்தன. இவற்றைத் தவிரப் பல சிறு கதவுகளும் கோட்டைகளில் இருந்தன, ஆறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருக்களும் கழகக்காலத்தில் இருந்ததாக நெடுநல்வாடை முதலிய கழக இலக்கியங்கள் கூறுகின்றன. மொகஞ்சாதாரோ, அரப்பா முதலியவிடங்களில் காணப் படும் கட்டடங் களும் பிற நாகரிகச் சின்னங்களும் இலெமூரியாக் கண்டம் கடலுள் மூழ்கியபோது அங்கிருந்து தப்பிவடக்கில் குடியேறிய பண்டைய திரவிட மக்களின் கனவுச் சின்னங்களேயென்று இன்றைய உருசிய நாட்டு மண்ணியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆகவே, கழகக்காலத்து வீடுகளின் அமைப்பையும், தெருக்களின் அமைப்பையும் மொகஞ் சாதாரோ, அரப்பா நகரங்களில் கண்கூடாகக் காணலாம். மதுரை நகரின் அமைப்பை மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, சிலப்பதிகாரம் முதலிய கழக இலக்கியங்கள் சிறப்புறச் செப்புகின்றன. இந் நகரிலிருந்த நாளங்காடி, அல்லங்காடி ஆகியவற்றைப் பற்றிய விவரங்கள் ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. தனித்தனியாக அமைந்த சேரிகள் பற்றியும் கூறப்பட்டுள்ளது. இதைப்போலவே பூம்புகார் அமைப்புப் பற்றியும் அதன் அருகிருந்த மருவூர்ப்பாக்கம் பற்றியும் கூறப்பட்டது. இன்றைய அகழ் வாய்வில் கட்டடக்கலையமைப்பு வெளியுலகுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் ஆகிய இரு பகுதிகளுக்கிடையில் பெருஞ்சாலை யொன்று இருந்ததென்றும், அச் சாலையில்தான் நாளங் சாடி என்னும் பகற்சந்தை கூடுமென்றும் அறிகிறோம். மருவூர்ப்பாக்கத் தில் தொழி லாளர்களும், பிற எளிய மக்களும் வாழ்ந்தனர். பட்டினப் பாக்கத்தில் மன்னனும் பிற உயர்குடி மக்களும் வாழ்ந்தனர். ஆகவே, வணிகர் வதிந்த மாடவீதிகள், கோவியர் வீதி கொடித்தேர் வீதி, பீடிகைத் தெரு, அந்தணர் இருக்கை முதலிய பெருந்தெருக்கள் பலவும் மாட மாளிகைகளும் பட்டினப்பாக்கத்தில் இருந்தன. மேலும், அமரர் தருக் கோட்டம் வென்யானைக்கோட்டம், நாகர்தண்கோட்டம், உச்சிக்கிழான் கோட்டம், ஊர்க்கோட்டம், வேற் கோட்டம், வச்சிரக்கோட்டம் முதலிய கோட்டங்களும், சிவன், முருகன், திருமால், பலதேவன், இந்திரன் முதலானோருக்கான கோயில்களும் இங்கிருந்தன. "வானோங்கு சிமையத்து வாளொலி சைத்தியம்' பூம்புகாரில் இருந்ததென்று கூறப் படுவதால் சாக்கியர் கோயில்களும், இலங்கொளிச் சிலாதளமிடப்பட்ட வான்பெரு மன்றம்' ஐந்து தெருக்கள் கூடுமிடத்தில் இருந்ததென்று கூறப்படுவதால் சமணர் கோயில்களும் இருந்தனவென்பது தெளிவா கிறது. வெள்ளிடை. மன்றம், இலஞ்சிமன்றம், நெடுங்கல்மன்றம், பூதச் சதுக்கம், பாவைமன்றம் என்ற ஐவகை மன்றக் கட்டடங்கள் இருந்ததாகக் கூறப்படுவதால் கழகக் காலத்தில் பலதரப்பட்ட கட்டடங் களும் இருந்தனவென அறிகிறோம். புகாரில் மிகச் சிறந்த துறை முகமும், கலங்கரை விளக்கமும், ஈமப்புறங் காடுகளும் அமைக்கப் பட்டிருந்தன. கடற்கரையையடுத்திருந்த பகுதி "நெய்தலங்கானல்' எனப் பட்டது. இங்கு மதிக்குண்டம் சோமகுண்டம்), கதிர்க்குண்டம் சூரியகுண்டம் என்னும் ஈரேரிகளும் குளங்களும்) காமவேளுக்கு ஒரு கோயிலும் இருந்தன. இன்றைய அகழ்வாய்வாளரால் காவிரிப்பூம் பட்டினத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புத்த விகாரையின் அமைப்பையும் அளவையும் கொண்டும் கழகக் காலக் கட்டடக் கலையைக் கண்கூடாகக் கண்டுகளிக்கலாம். பட்டினப்பாலையில் உறைகிணற்றுப் புறஞ்சேரி' என்று குறிப்பிடப்பெறும் உறைகிணறுகள் பல காவிரிப்பூம் பட்டினத்தின் கடற்கரையோரங்களில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இங்குக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள குளம் சுட்ட செங்கல்லால் சுட்டப் பட்டுள்ளது. அதற்கு உள்புறம் நீர் வரவும், வெளிப்புறம் நீர் செல்லவும் ஏந்தாகப் பொறியியல் நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ள நீர்ப்பாதை கண்டுகளிக்கத்தக்கதாம். இவ்வாறு கழகக்காலத்தில் தனிக் கட்டடங்களும், பெரிய கோட் டைகளும், மதில்களும், குளங்களும், ஏரிகளும், இயந்திர வாவிகளும், கழிநீர் வடிகால்களும் காணப்பட்டன. பந்தல், சிற்றில், மாளிகைகள், மாடங்கள், கோயில்கள், கோட்டங்கள் முதலியன இடத்திற்கும் பயனுக்கு மேற்ப அமைக்கப்பட்டிருந்தன. குவிமாடம், மதகலைமாடம், அராமியம், நிலாமுற்றம், முன்றில், முற்றம், பள்ளியறை, உவளகம் அந்தப்புரம்) முதலியன அழகிய அமைப்புகளொடும், கதவுகள், சாளரங்கள், நிலைகள் முதலிய அமைப்புகளுடன் நல்ல காற்றோட்டமும் வெளிச்சமும் பெறுதற் கேற்பவும் அமைக்கப் பட்டிருந்தன. இத்தகைய ஏந்துகள் கோயில்களில் காணப்படவில்லை. அவை மனத்தை ஈர்த்துப் பக்குவப்படுத்தும் வகையில் சமைக்கப் பட்டிருந்தன. கழக இலக்கியங்களில் "மயன் மதம்' என்னும் கட்டடக் கலைக்கோட்பாடு இருந்ததாகக் கூறப்படுகிறது. நெடுநல்வாடை யில் குறிப்பிடப் பெறும் இம் மயன் வீதி' இன்று கேரளத்தில் கிடைத் துள்ள 'மயன் மதம்' என்னும் வடமொழிக் கட்டடக்கலை நூலில் காணப்படுகின்றது. இந்நால் கிரந்த எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. இதன் மூவலூரல் கழகக்காலத்தில் இருந்து, அழிந்துபட்டிருக்கலாம். கழகக்காலத்தில் கட்டடக்கலையில் கையாளப்பெற்ற பல்வேறு அளவு முறைகளைப் பற்றியும் கழக இலக்கியங்களிலிருந்து அறிகிறோம், எடுத்துக்காட்டாக, மாதவி ஆடிய மேடை தரையிலிருந்து ஒரு கோல் உயரத்தில் அமைந்திருந்தது. அஃது ஏழுகோல் அகலிடத்தையும் எண்கோல் நீளத்தையும் கொண்டிருந்தது. அரங்கத்தின் மேல்மைந்த உத்தரப்பலகை நாலுகோல் உயரமிருந்தது எனக் குறிப்பிடப்படுகின்றது. இவ்வரங்கத்தின் இருமருங்கிலும் படிக் கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன எனவும் கூறப் பட்டுள்ளது. இங்கு ஒரு கோல் என்பது ஏறத்தாழ 2 அடி விரல் ( அங்குலமாகும். இவ்வாறு வைத்துக் கணக்கிட்டால் மாதவி ஆடிய அரங்கத்தின் அளவை யறிந்து கொள்ளலாம். ஓவியக்கலை கழகக்காலத்தில் ஓவியங்கள் தீட்டுவதற்கென்றே அரசமாளிகையில் தனிமாடம் ஒதுக்கப்பட்டிருந்தது என்பதைக் கழக இலக்கியங்களிலிருந்து அறிகிறோம். பாண்டியன் நன்மாறன் தன் ஓவிய மாடத்தில் தங்கியிருக்கும் போது இறந்துபட்டதால் 'பாண்டியன் சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன்' என்று புறநானூற்றில் சுட்டப் படுகிறான். மதுரைக்காஞ்சியில் மாங்குடி மருதனார் பாண்டியரின் ஓவிய மாடத்தைக் 'கயங்கண்டன் வையங்குடை நகரத்துச் செம்பியன் றன்ன செஞ்சுவர் புனைந்து' என்று விவரித்துள்ளார். இதிலிருந்து கிழக்காலத்தில் பெரும்பாலான ஓவியங்கள் செப்புத்தகடுகளைப் போல் பளபளப்பாகமெழுகப்பட்ட சுவர்ப்பகுதியில் தீட்டப்பட்டனவென்பதை அறிகிறோம். மேலும், இச் சுவர் வெண்சாந்து பூசப்பெற்று வழவழப் பாக்கப் பெற்ற தென்றும், அதில் தச்சர், கம்மியர் முதலி யோரின் கைவண்ணத்தினாலான கட்டடத்தின் உருவங்களும், செடி, கொடி, பூமுதலிய இயற்கைக் காட்சிகளும் தீட்டப்பெற்றனவென் றும் அறிகிறோம். நக்கீரர் பாடிய நெடுநல்வாடையில் பாண்டியனுடைய சித்திரமாடத்தில் வெண்சாந்தும், நீலமையும், செம்புநிறமும், பச்சைநிற மும் கொண்ட வண்ணங்கள், ஓவியங்கள் வரையப் பயன்பட்டன வென்னும் செய்தியறியப்படுகிறது. இத்தகைய சித்திரமாடம் மதுரைக்கு அருகிலுள்ள திருப்பரங்குன்றம் மலையிலுள்ள முருகன் கோயிலை யடுத்தும் இருந்ததென்பதைக்குன்றம்பூதனார் என்னும் புலவர் பரிபாடலில் கூறுகிறார். இம் மாடத்தில் திட்டப்பெற்ற ஓவியங்களை இக்கோயிலுக்கு வரும் மக்கள் சென்று கண்டுகளித்தனர். இதில் காமன், இரதி, அகலிகை, அகவிதையிடம் செல்லும் இந்திரன், அகலிகையின் கணவன் கவுதம் முனிவன், அம்முனிவனைக் கண்டதும் பூனையின் உருவங்கொண்டு ஓடும் இந்திரன் முதலியோர் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தன. இதேபோன்ற சித்திரக்கூடம் திருச்சிக்கு அருகிலுள்ள திருவெறும்பூரில் இருந்ததைக் கல்வெட்டுச் சான்று மூலம் அறிகிறோம். சித்திரக்கூடம் எனும் பெயரில் ஓவியக்கூடங்கள் தில்லைப் பெருங்கோயில், திருவரங்கத்துப் பெருங் கோயில் ஆகிய இடங்களில் சித்திரக்கூடம் இருந்ததற்கான குறிப்புகள் உள்ளன. மேற்கண்ட எடுத்துக்காட்டுகளிலிருந்து கழகக்காலத்தில் ஓவியக் கலையை வளர்ப்பதற்கென்றே அரசர்கள் தங்கள் அரண்மனையை யடுத்துச் சித்திரக்கூடமொன்றைத்தனியே சுட்டி வைத்திருந்தனர் என்பதை யும், இத்தகைய சித்திரக்கூடங்களைக் கோயில் போன்ற புனிதவிடங்களி லும் கட்டி இக் கலையைப் போற்றிக்காத்தனர் என்பதையும் அறிகிறோம். கண்ணில் காணுமாறு பொருள்களை ஓவியங்களாகத் தீட்டும் இவ் வோவியக் கலைஞர்கள் கழகக் காலத்தில் "கண்ணுள் வினைஞர்', என்று அழைக்கப்பட்டனர். தொல்காப்பியத்தில் வீரக்கல் அல்லது நடுகல் என்பது பற்றிய செய்தி குறிப்பிடப்படுகின்றது. போரில் விழுப்புண்பட்டு இறக்கும் வீரனுக்கு இத்தகைய நடுகல் நடுவது வழக்கம். அவனைப் புதைத்தவிடத்தில் அல்லது அவன் விழுப்புண்பட்டு விழுந்தவிடத்தில் அவன் நினைவாக நடப்படும் அக்கல்லில் அவ் வீரனின் உருவத்தைத் தீட்டுவது வழக்கம், கழகக்கால நடன மகளிர் நடனத்தோடு வேறுபல கலைகளையும் கற்றனர். அவற்றுள் ஓவியக்கலையும் ஒன்றாகு மென்று சிலப்பதிகாரம் கூறுகிறது. மாதவி நடனமாடிய அரங்கத்தின் மேற்கூரையில் பல ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தன வென்றும், இம் மேற்கூரை 'ஓவிய விதானம்' எனப்பட்டதென்றும், மாழையாலான கேடயங்களிலும் கண்சுவர் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தனவென்றும் சிலப்பதிகாரம் செப்புகிறது. இதைப் போலவே தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் கோப்பெருந்தேவி படுத்திருந்த பள்ளியறையின் மேற் கூரையிலும் பலவகை ஓவியங்கள் தீட்டப்பெற்றிருந்தன. அவற்றுள் திங்களின் பக்கத்தில் உரோகிணி இருப்பதுபோன்ற ஓவியமும் ஒன்றாகும். தன் கணவனாகிய திங்களோடு உரோகிணி இணைந்திருப்பதுபோல் தானும் தன் கணவனோடு இணைந்திருக்க முடியவில்லையென்று எண்ணிக் கோப்பெருந்தேவி பெருமூச்சு விட்டாளென்று நெடுநல்வாடை கூறுகிறது. செல்வர் வாழும் வாழ்னைச் சுவர்களின் மீதும், மாடங்களின் மீதும் தேவர் முதல் எல்லாவுயிர்களையும் குறிக்கத்தக்க ஒவியங்கள் தீட்டப் பெற்றிருந்தனவென்றும், அவ்வோவியங்கள் வெண்சுதை பூசிய பளபளப்பான பரப்பில் தீட்டப்பட்டிருந்தனவென்றும் மணிமேகலை -- கூறுகிறது. இத்தகைய எடுத்துக்காட்டுகளிலிருந்து கழகக்காலத்தில் தனியார் வீடுகளிலும் ஓவியங்கள் தீட்டும் வழக்கம் இருந்ததென்றும் அரண்மனையில் பல்வேறிடங்களிலும், பள்ளியறையிலும் ஓவியங்கள் இடம்பெற்றிருந்தனவென்றும் அறிகிறோம். ' சுவர்களில் மட்டுமன்றித் துணிச்சீலைகளிலும் ஓவியங்கள் தீட்டும் வழக்கம் கழகக்காலத்தில் இருந்தது. இவ்வாறு ஓவியம் தீட்டப்பட்டத் துணிச் சீலையைப் படா அம்' அல்லது 'படம்' என்றே அழைத்தனர்.தான் விரும்பிய பெண்ணை மணக்க முடியாத காதலன் ஒரு துணியில் அவளுடைய உருவத்தை ஓவியமாக வரைந்து கொண்டு மடலேறுவான் என்று அகப்பொருள் நூல்கள் கூறுகின்றன. ஓவியங்களையமைத்து ஆடை நெய்தல் கழகக் காலத்தில் காணப் பட்ட ஒரு சிறந்த கலையாகும். இதனை மணிமேகலையில் வரும், ''வித்தகன் இயற்றிய விளங்கிய கவிளைச் சித்திரச் செயற்கைப் படாம் போர்த்ததுவே ஓப்பத் தோன்றிய உவவனம்" - என்னும் வரிகளால் அறிகிறோம், ஒவியங்களை முதலில் மேலோட்டமாக உருவத்தின் அமைப்பை மட்டும் கீற்றாக (putlinc) வரைவர். இதனைச் சங்ககாலத்தில் “புனையா ஓவியம்' என்று அழைத்தனர். இதற்குப் பின்னரே வேண்டிய வண்ணங் களைப் பயன்படுத்தி இவற்றை உயிரோட்டமுள்ள ஓவியங்களாக்கு வார்கள். இவ்வோவியக் கலையே கட்டடக்கலை, சிற்பக்கலை, நடனக் காலை முதலிய எல்லாக் கலைகட்கும் அடிப்படையாக அமைந்தது. ஒரு கட்டடத்தைக் கட்டுவதற்கு முன்பும், சிற்பத்தைச் செதுக்குவதற்கு முன்பும் அவற்றை ஓவியமாக வரைந்து கொண்டு, பின்னரே கட்டடம் கட்டும் பணியும் சிற்பம் செய்யும் பணியும் தொடங்கப்பெற்றன. இத்தகைய ஓவியங் களைப் பற்றிய ஓவிய நூலொன்று கழகக்காலத் திலிருந்தது என்பதை அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகின்றார். ஓவியத்தை வட்டிகைச் செய்தி யென்று மணிமேகலை குறிப்பிடு கின்றது. வட்டிகையென்னும் பெயர், ஓவியம் வரையப்படும் தரரிகையால் (Brush) வந்தது, ஓவியங்களைத் தீட்டுவதற்கு முன் இத் தூரிகையால் வண்ணங்களைத் தொட்டுக் குழைக்கும் பலகைக்கு வட்டிகைப் பலகை யென்பது பெயர். தூரிகை, பாதிரிப் பூவைப் போலிருந்ததென்பதனை நற்றிணையின் கூற்றால் அறிகிறோம். அக் காலத்துப் பெண்களை ஓவியத்தைப் போலுள்ளனரென்றும், ஓர்மை (சிந்தனை) யிலாழ்ந்து அசையாதிருப்பவர்களை ஓவியங்களைப்போல் உள்ளனரென்றும் உவமை காட்டிப் பேசுவது வழக்கம். இதனைச் சீவகசிந்தாமணி, மணிமேகலை முதலிய நூல்களில் காணலாம். ஒளியக் கலைஞன் நகை, உவகை, அவலம், வீரம் முதலிய எண்வகை மெய்ப்பாடுகளையும் இருத்தல், கிடத்தல், நிற்றல் முதலிய ஒன்பான் வகையான விருத்திகளையும் தனது ஓவியங்களில் சித்தரித்துக் காட்டினான் என்பதைப் பெருங்கதையில் விரிக்கக் காணலாம். சீவகசிந்தாமணியின் ஆசிரியரான திருத்தக்கத்தேவர் மரம், செடி, கொடி போன்ற நிலைத் திணைகளையும், மான், மறி போன்ற விலங்குகளையும் அழகிய உறுப்பு . களையுடைய பெண்களையும், தெய்வத்தின் உருவத்தையும், மயிற்பொறி போன்ற வியத்தகு விமானத்தையும் தீட்டிய கலைஞர்களைப்பற்றி விவரித்துக் கூறுகிறார். ஆகவே, கழக இலக்கியங்களில் கூறப்படும் ஓவியக் கலை பிற்காலத்திலும் தொடர்ந்து போற்றிக் காக்கப்பட்டது என்பதைச் சீவகசிந்தாமணி முதலிய நூல்களினால் அறியலாம். சிற்பக்கலை போரில் புண்பட்டு மாண்டவீரர்களுக்கு நடுகல் நடுவதிலிருந்தும், கற்புடைய மகளிருக்குப் பத்தினிக்கல் (மகாசதி நடுவதிலிருந்தும் சிற்பங்களைச் சமைக்கும் வழக்கம் ஏற்பட்டதென்பதைக் கழகக்கால இலக்கியங்களிலிருந்து அறிகிறோம். இதனைத் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - புறத்திணையியல் 5 ஆம் பாட்டிலிருந்து அறியலாம். அவ்வாறு நடுகல் நட்டு அவ்விடத்தில் 'வீரசாலை' என்னுமொரு சுட்டடத்தையெழுப்பி, இறந்துபட்ட வீரனது புகழைப் பாணர்களைக் கொண்டு பாடும்படி செய்வதும் அக்கால வழக்கமாக இருந்தது. இத்தகைய வீரக்கல் நடுதலும், பத்தினிப் பெண்டிருக்கும் "சதிக்கல்' எடுப்பதும் கழகக்காலத்திற்குப் பிறகும் தமிழகத்தில் இருந்துவந்த மரபுகள் என்பதை யும் இவை வடநாட்டில் இல்லாத தமிழர்களுக்கேயுரிய மரபுகள் என்பதை யும் பிற்காலப் புறப்பொருள் வெண்பாமாலை போன்ற நாய்களிலிருந்தும் அறியலாம். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட திவாகர நிகண்டில் கல், மாழை, செங்கல், மரம், மண், சுதை, மருப்பு, சருக்கரை, அரக்கு, மெழுகு ஆகிய பத்துப் பொருள்களைக் கொண்டே சிற்பங்கள் செய்யப் பட்டன வென்று கூறப்படுகிறது. மணிமேகலையில் மாசில்லாத மரமும், மண்ணும், கல்லும் சிற்பம் செய்வதற்குச் சிறந்தவை யென்றும், இவற்றாலான சிற்பங்கள் பல பூம்புகாரில் இருந்தன வென்றும் கூறப்படுகிறது. இந்திர விழாவின்போது பூம்புகாருக்கு வந்த மக்கள் அந் நகரிலிருந்த மாட மாளிகைகளில் வானவர் முதலான தெய்வவுருவங்களும், பிறவுயிர்களின் உருவங்களும் சிற்பங் களாகவும், ஓவியங்களாகவும் கண்ணைக் கவருமாறு களிதுற விளங்கியதைக் கண்டு வியந்து நின்றனரென்பதை மணிமேகலை யின் வாயிலாக அறிகிறோம். கழகக்கால் நகரங்களில் உயர்ந்து நின்ற மாடங்களிலும், மாடிவீடுகளிலும், நிலாமுற்றங்களிலும் பலதரப்பட்ட சிற்பங்கள் இருந்ததைப் பெரும்பாணாற்றுப்படையும் குறிப்பிடுகிறது. மன்னர்களின் அரண்மனைகளையும், பிற கட்டடங்களையும் அமைப்ப வர்சுள் சிறந்த நூலறி புலவர்களாக இருந்ததோடு, கணிதம், வானநூல், நிமித்திகம், பொறியியல் முதலியவற்றிலும் தேர்ச்சியடைந்திருந் தார்கள். இத்தகைய தங்கள் அறிவைக் கொண்டு அரண்மனைகள் அமைத்தும், திசைக்கேற்பத் தெய்வப் படிமங்களையமைத்தும் பிற உருவங்களைச் சமைத்தும் நாகரிகத்தைப் படைத்தார்களென்பதை நெடுநல்வாடை போன்ற கழக இலக்கியங்களிலிருந்து அறிகிறோம். கழகக்காலத் தமிழகத்தில் இருந்த கோயில்கள், அவற்றிலிருந்த தெய்வப் படிமைகள் முதலியவை பற்றிச் சிலப்பதிகாரத்தில் குறிப்புகள் காணப்படுகின்றன. பிறவா யாக்கைப் பெரியோன் கோயில் சிவன் கோயில்), அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயில், வால்வளை மேனி வாலியோன் பலராமன்) கோயில், நீலமேனி நெடியோன் திருமால்) கோயில் முதலியன இருந்தனவென்பதைக்கூறும் சிலப்பதிகாரச் செய்திகளி விருந்து சிவன், முருகன், பலராமன், திருமால் ஆகிய கடவுளரின் உருவங் சுளும், வண்ணங்களும் படிம வடிவங்களில் தெளிவுபடுத்தப்படுகின்றன என்பதையறியலாம். மணிமேகலையில் சக்கரவாளக் கோட்டத்தில் இவ்வுலகத்தின் போலிகை யுருவமொன்று மண்ணீட்டில் செய்து வைக்கப்பட்டிருந்த செய்தி குறிப்பிடப்படுகிறது. அதில் செய்து வைக்கப்பட்டிருந்த உலக வுருண்டையைப்(globe) பற்றிய வண்ணனையும் காணப்படுகிறது. "கடல் சூழ்ந்துள்ளது, அதன் நடுவில் மேருமலை, மேருமலையைச் சுற்றிலும் ஏழுவகைக் குன்றுகள், நானிலம் காட்டும் பெருந்தீவு, சுற்றிலும் ஓராயிரம் சிறு தீவுகள், அங்குள்ள நில அமைப்புகள், அங்கு வாழ்ந்த உயிரினங்கள், சூழல்கள் அனைத்தும் அமைக்கப்பட்டிருந்தன. இது காண்போர் அறிவு பெறும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. இது “மயன்' என்னும் பொறியாளரால் அமைக்கப்பட்டாற் போன்று இருந்தது." சுழசுக்காலத்தில் புத்தரை வணங்குவதற்கு, அவருடைய பாதபீடிகை படிமமாகச் செய்யப்பெற்றுத் தொழப்பட்டது என்பதை மணிமேகலை யும். சிலப்பதிகாரமும் கூறுகின்றன. பிற்காலத்தில்தான் புத்தருக்கு உருவம் கற்பிக்கப்பட்டு அவருடைய இருந்த கோலத்தையும், நின்ற கோலத்தை யும், கிடந்த கோலத்தையும் அமைத்தார்கள். இதே முறையைப் பின்பற்றித் தான் வைணவர் களும் திருமாலின் உருவத்தையமைத்தார்கள். இதனாற் நான் சில அறிஞர்கள் புத்த விகாரைகளை அழித்துத் திருமால் கோயில்க ளாகக் கட்டினரென்று முழக்கமிடுகின்றனர். கழகக்காலத்தில் தெய்வத் திருவுருவங்களைப் படிமங்களாக வைத்து வணங்குவதற்கு ஈடாகத் தெய்வங்களின் சின்னங்களைச் சிற்ப வடிவிலமைத்து வணங்கினார்கள் என்பதையும் அறிகிறோம். எடுத்துக்காட்டாக முருகனை வணங்குவதற்கு அவனுடைய வேலையும், இந்திரனை வணங்குவதற்கு அவனுடைய வச்சிரப்படை அல்லது அவனுடைய வெள்ளையானை, கற்பகத்தரு ஆகிய வற்றையும் வைத்து வணங்கினார்கள். இதனால்தான் வேற்கோட்டம், வச்சிரக்கோட்டம், வெள்யானைக்கோட்டம், அமரரிதருக்கோட்டம் முதலிய பலதரப்பட்ட கோட்டங்கள் பற்றிய செய்திகளைச் சிலப்பதிகாரத் தில் காண்கிறோம். திருமுருகாற்றுப்படையில், முருகன் கையிலேந்தும் வேலையும், சேவற் கொடியையும் மக்கள் வணங்கியதாக அறிகிறோம், இவ்வாறு தமிழகத்தில் வளர்ந்த மரபு முறையைப் பின்பற்றித்தான் புத்தருடைய பாதபீடிகை போதிமரம் முதலிய சின்னங்களை வணங்குவது கழகக்காலத்திலேயே வழக்காற்றில் வந்ததென்பது சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றால் அறியக் கிடக்கின்றது. பின்னர்தான் கடவுளரும், கடவுளரின் குடும்பங்களும் உதிரித் தேவதைகளும் சிற்பங்கள் னாகவும் சித்திரங்களாகவும் முழுவுருவில் படைக்கப் பெற்றன, தெய்வவுருவங்களேயன்றி ஆண், பெண், செடிகொடி, விலங்குகள், திங்கள் கதிரவன், விண்மீன்கள் முதலியவற்றின் உருவங்களையும் கழகக் கால மக்கள் சிற்பங்களாகச் சமைத்தார்கள், ''நுண்மாண் நுழைபுலம் தில்லான் எழில்நலம் மண்மாண் புனைபாவை யற்று " எனக் கூறும் திருக்குறளிலிருந்து மண்ணாலும் மக்களின் உருவங்கள் செய்யப்பட்டனவென்பதை அறியலாம். அழகான ஆடவனைப் பற்றி வருணிக்கும் போது அவன் வல்லான் இயற்றிய பாவை போல் இருந்தா னென்று மதுரைக் காஞ்சியில் கூறப்படுகிறது. தேர், சகடம், வண்டில், கட்டில், இருக்கை, மணிமுடி முதலியன செய்யும் கலைஞர்களும், வாள், வேல் முதலியன செய்யும் கம்மியரும், கட்டடப் புலவரும், மண்ணீட் டாளரும், சுற்றச்சரும், பொற்கொல்லரும் இத்தகைய படிமங்கள் செய்வதில் கூட்டுறவாகச் செயல்பட்டனர் என்பதை மணிமேகலையில் காண்கிறோம். இவர்களுக்கெல்லாம் தலைமையேற்ற சிற்பியைப் பெருந் தச்சன்' என்றனர். இத்தகைய தொழில்கள் யாவும் மரபு கொடி வழியாக வளர்ந்தன வென்பதைப் பெரும்பாணாற்றுப்படை, அகநானூறு, சிலப்பதிகாரம் முதலிய நூல்களிலிருந்து அறிகிறோம். தமிழகத்திலிருந்த பலதரப்பட்ட மரபுவழிக் கலைஞரோடு பிறநாட்டுக் கலைஞரும் வந்து இணைந்து பணியாற்றினரென்பதை மணிமேகலை கூறுகிறது. வேந்தனின் பூங்கா மண்டபத்தை அமைப்பதில் மகத வினைஞர், மராட்டக் கம்மியர், அவந்திக்கொல்லர், யவனத் தச்சர் ஆகியோர் தமிழகத்துக் கலைஞரோடு இணைந்து செயல்பட்டனர். இச் செய்தியிலிருந்து ஒவ்வொரு கைவினைஞரும் ஒவ்வொரு தொழிலில் நுட்பத் திறமையைப் பெற்றிருந்தனர் என்பதையும், இத்தகையத் தொழில் திறமை கொடிவழியாக வளர்ந்திருந்ததோடு, நாடு வழியாகவும் வளர்ந்து, கலைக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்தது என்பதையும் அறிகிறோம். இதனால் தான் இத்தகைய நுண்ணிய திறமை படைத்த கலைஞர்களை நுண்கலைக் கம்மியர், கைவினை முற்றிய நுண்கலைக்கொல்லர், சுருந்தொழிற் கொல்லர் எனக் கழக இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. பாவை விளக்கு அமைப்பதில் யவனரே தலைசிறந்தவர் என்று நெடுநல்வாடைகூறுகிறது. (ஓ) களப்பிரர் கழகசங்கக் காலம் தோராயமாகக் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் முடிந்தது. அதற்குப்பின் கி.பி. நான்காம் நூற்றாண்டு முதல் ஆறாம் நாற்றாண்டு வரை தமிழகத்தில் களப்பிரர்" என்னும் புதிய இனத்தவர் தோன்றி, தமிழக வரலாற்றைக் 'களங்கம் அடையச் செய்தனர். இக் களப்பிரரின் தாயகம் எது? அவர்களின் பண்டைய வரலாறு யாது? என்பன போன்றவை இன்னமும் ஆய்ந்து முடிவு காணப் பெறாமல் உள்ளன. ஆனால், இவர்களைப் பற்றிக் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் மாறன் சடையன் எனப்படும் ஜடி லபராந்தக பாண்டியனால் வெளியிடப்பெற்ற வேள்விக்குடிச் செப்பேடுகளில் முதன்முதலாக அறிகிறோம்.பாண்டியர் நாட்டைக் களப்பிரர் வென்றனர் என்றும் அதனை ஜடிலபராந்தகன் மீண்டும் கைப்பற்றினான் என்றும் இவ் வேள்விக்குடிச் செப்பேட்டி லிருந்து அறிகிறோம். மேலும், களப்பிரர் கலியரசன் என்பான் மன்னர்கள் பலரை வென்று நாடுகளைக் கைப்பற்றிக்கொண்டான் என்பதையும் அவனைப் பாண்டிய மன்னன் கடுங்கோன் வென்று அவனிடமிருந்த நாடுகளைத்தான் கைப்பற்றிக் கொண்டதையும் இச்செப்பேட்டிலிருந்து அறிகிறோம் இக் களப்பிரர் யாவர், எங்கிருந்து வந்தனர் என்ற வினாக்களுக்கு இன்னமும் உரிய விடைகள் இல்லை. 'களப்பாளர்' என்ற இனத்தவரே களப்பிரர் என்று அறியப்பட்டனர் எனவும், இவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் பிடிசீனிவாசையங்கார் முதலானோர் கருதுகின்ற னர். திருவேங்கடமலைக்கு அருகில் வாழ்ந்த 'களவர்' என்பாரே களப்பிரர் என்று எசு. கிருட்டிணசாமி ஐயங்கார், ஆர்.சத்தியநாதையர் முதலானோர் கருதுகின்றனர். "கள்வர்' என்ற சொல்லே பின்னர் 'களப்பிரர்' என மருவிய தாகடிஏ.கோபிநாதராயர் கூறுகிறார். மேலும், முத்தரையர் இக் களப்பிரர் இனத்தவரே என்றும் அவர் கருதுகிறார். தென்னகத்தில் வாழ்ந்த ஒளியர் என்ற வகுப்பைச் சார்ந்தவர்தாம் களப்பிரர் என்பது டிவி. மகாலிங்கத்தின் கருத்து. குறும்பர்கள் ஒன்றுசேர்ந்து கலகம் விளைவித்து மூவேந்தரையும் வென்று நாட்டைக் கைப்பற்றியாண்டதால் அவர்கள் 'களப்பிரர்' எனப் பட்டனர் என்பதும் ஒரு கோட்பாடாகும். மேற்கூறிய யாவும் ஊகங்களே. ஆயின் களப்பிரர் யாவர்? அவர்கள் தமிழர்கள் அல்லர். எங்கிருந்து வந்தனர்? கன்னட நாட்டிலிருந்து வந்தனர். சான்றுகள் யாவை? (பெரியபுராணம், கல்லாடம் முதலியவற்றில் காணப் படுகின்றன. கருநாடக மன்னனொருவன் பாண்டிய நாட்டைக் கைப்பற்றி யாண்டான் என்றும், அவன் காலத்தில் தமிழகத்தில் சைவம் சாய்ந்து சமணம் தழைத்தது என்றும் இவற்றிலிருந்து அறியப்படுகின்றன. மேலும் கன்னட நாட்டில் பேளூருக்கு அருகில் கிடைத்துள்ள கல்வெட்டிலும், ஓசுபெட்டுக்கு அருகில் கிடைத்துள்ள ஒரு வீரக்கல்லிலும் இவர்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இக் குறிப்புகளிலிருந்து இங்கு வதிந்தவர் 'கள்போரர்' என்றும், இவர்கள் நந்தி மலையடியில் கி. பி. எட்டாம் நூற்றாண்டு வரை ஆண்டனர் என்றும், பின்னர் அவர்களுடைய நாடு சாளுக்கியர், மேலைக் கங்கர் நாடுகளுடன் இணைக்கப்பட்டு விட்டது என்றும் அறிகிறோம். இதனை யாப்பருங்கலமும் வலியுறுத்து கிறது. இவர்கள் ஏன் தமிழகம் வந்தனர்? சாதவாகனப் பேரரசால் நெருக்கப் பட்டும், சமய வெறிகொண்டும் கி.பி. நான்காம் நூற்றாண்டில் இவர்கள் தமிழகம் போந்தனர். இவர்கள் சமண, சாக்கிய சமயங்களைச் சார்ந்த வர்கள் என்பதும், தமிழகத்தில் ஏற்கெனவே குடிகொண்டிருந்த இச் சமயங்களுக்கு ஊக்கமும், ஆக்கமும் தேடவே இவர்கள் தமிழகம் போந்தன் ரென்பதும் ஊகித்தறிய வேண்டியவை யாகும். இவர்கள் தமிழகம் போந்த நேரத்தில் சமணம், சாக்கியம் புத்தம் சோழ, பல்லவ நாடுகளில் சாய்கா லுடன் விளங்கின. எனவேதான் சமணத்தைப் பரப்பும் நோக்குடன் இவர்கள் கிபி 47-ல் தமிழகத்தில் திரமிள சங்கம்' என்ற கழகத்தை நிறுவிச் சமணசமயக் கோட்பாடுகளைப் பரப்பினர். சங்ககாலந்தொட்டே கன்னடர் தமிழகத்திற்கு வந்து குடியேறிய வண்ணம் இருந்ததால் களப்பிரர் திட்டவட்டமாக்சிபி நான்காம் நூற்றாண்டில்தான் தமிழகம் போந்தனர் என்றும் கூறமுடியவில்லை. பழநிமலையில் ஏற்கெனவே குடியேறிய தென்கன்னட நாட்டவர் அதனைப் 'பன்றிநாடு' என்னும் பெயருடன் ஆளுமை செய்ததையும் அறிகிறோம். ஆகக் கன்னடர் கிபி. நான்காம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரை கூட்டம் கூட்டமாகத் தமிழகத்தில் குடியேறிப் பெருவாரியான நிலப்பரப்பில் ஆளுமை பெற்றனர் என்பதைப் பல்வேறு சான்றுகளால் அறிகிறோம். அவ்வாறு வந்தவர்களின் தலைவர்களைப் பற்றியும் அவர்கள் நடத்திய போர்களைப் பற்றியும் விவரமில்லை. ஆயினும் " அச்சுதவிக்கந்தன்' என்பான் மாபெரும் படை திரட்டி வந்து தமிழ்நாட்டு மூவேந்தர் களையும் வென்றான் என்ற செய்தி கிபி, ஐந்தாம் நாற்றாண்டில் வாழ்ந்த புத்த தத்தர் என்பார் எழுதிய 'வினைய வினிச்சயா' என்ற நூலில் காணப்படுகிறது. இந்த அச்சுளிக்கந்தன் சோழ நாட்டில் ஆட்சி புரிந்தான் என்பதையும், இவன் புத்த சமயத்தவன் என்பதும் இந் நூலிலிருந்து அறியப்படுகின்றன. இவனைப் போலவே தொண்டை நாட்டிலும் களப்பிரர் ஆண்டனர் என்பதும் அறியப்படுகிறது. சிவனடியாரில் ஒருவரான "கூற்றுவ நாயனர்' 'களந்தைமன்னர் களப்பிரர்' என்று சேக்கிழார் கூறுவதிலிருந்து இதையறிகிறோம். இவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட களப்பிரர் குடும்பங்கள் தமிழகத்தில் குடியேறி ஆங்காங்கே ஆண்டமை அறியப்படுகிறது. களப்பிரர் ஆட்சியால் தமிழகத்தில் விளைந்தவை யாவை? அமைதி கெட்டது; கலகங்கள் தோன்றின; மக்கள் வாழ்க்கை சீர்குலைந்தது; தமிழ் மரபு நூல்கள் அழிந்தனபோன்ற குற்றச் சாட்டுகளே க்ளப்பிரர் ஆட்சியைப் பற்றிக் கூறப்படுகின்றன. சைவத்தில் நாட்டம் கொண்டவரே இத்தகைய குற்றச்சாட்டுகளைக் கூறுகின்றனர். களப்பிரரால் தமிழ்க் கழகம் அழியவில்லை . ஏற்கெனவே கழகக்காலம் முடிந்து, கழகமருவிய காலம் தொடங்கியிருந்தது. களப்பிரர் வேற்று மொழியினர் சமண, சாக்கிய சமயங்களைப் பின்பற்றியவர்கள்; அவர்கள் தமிழகத்தில் ஆளுமை பெற்ற போது இச் சமயங்கள் சாய்காலுடன் இருந்தன. ஆகவே, அவர்களின் தொடக்ககால ஆக்கம் அச் சமயங்களின் கொள்ளிட மொழிகளாய் விளங்கிய பாலி, பிராகிருதம், சமற்கிருதம் ஆகிய மொழிகளுக்கே பயன் பட்டது, இது வரலாற்றுப் போக்கில் வளர்ந்த புதிய இயலே யன்றிக் களப்பிரரால் விளைந்த கேடு எனில் முற்றும் பொருந்தாது. ஆயின், பின்னர் வந்த பல்லவர் காலத்தில் சமற்கிருதம் ஆக்கம் பெற்றதேன்? களப்பிரர் ஆட்சியில் சமணர்கள் தமிழைப் பேணிக் காத்தனர். தமிழில் பல அரிய இலக்கண இலக்கிய நூல்கள் இவர்களால் எழுதப் பெற்றன. ஏற்கெனவே கி.பி, 470 -ல் வச்சிரநந்தி என்பான் அமைத்த "திரமிள சங்கம்' சமண சமய வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்று இத்தகைய நரல்கள் வெளிவர உதவியது. நாலடியார் போன்ற பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களும் சமண சாக்கிய சமயச் சார்புடைய நூல்களே. இவை கழகம் மருவிய காலத் தில் தோன்றியவையே. ஆகவே, களப்பிரர் ஆட்சியால் தமிழகத்தில் புதிய பொலிவு ஏற்பட்டது, மொழி வளர்ச்சி யேற்பட்டது என்பதையே உணரமுடிகிறது. ஆனால், களப்பிரர் தமிழகத்தில் இருண்ட காலத்தை ஏற்படுத்திவிட்டனர் எனப் பலரும் புலம்புகின்றனர். அவ்வாறே எழுதியும் நம்பவைத்து விட்டனர். இவர்களின் புலம்பலுக்கும் காரணம் இல்லாம வில்லை, களப்பிரர் வருகையால், தமிழகத்தில் கால்கொண்டிருந்த 'வருணாசிரம தருமம்' ஆட்டங்கண்டது: பார்ப்பனியம் நசிந்து போயிற்று. சமணமும், புத்தமும் இவற்றை ஒழிக்கவே வீறிட்டெழுந்த சமயங்க ளென்பதையும், களப்பிரர் இச் சமய வீரர்களென்பதையும் மனத்திற் கொண்டு நோக்கினால் உண்மை ஒளி தெரியும். இந்திய வரலாற்றில் எப்பொழுதெல்லாம் எங்கெல்லாம் பார்ப்பனியம் செழித்துக் காணப்படும் கிறதோ அப்பொழுதெல்லாம் அங்கெல்லாம் பொற்காலம்' எனப் போற்றப்படுவதையும், பார்ப்பனியத்திற்கு மாறாகத் தோன்றும் ஆட்சி, அல்லது மாறாகத் திளைக்கும் கருத்துச்சுடர் நிலவும் போதெல்லாம் "இருண்ட காலம்' என இழித்துரைக்கப்படுவதையும் காண்கிறோம். உலக வரலாற்றிலேயே சிறந்த இடத்தைப் பெறுவது அசோகர் காலம்' இந்திய வரலாற்றில் புத்தம் தலைசிறந்து விளங்கியதும் அசோகர் காலமே. ஆனால், இதனைப் பொற்காலம் எனப் போற்றினரா? இல்லை, ஆரியம் செழித்து, மிளிர்ந்த குப்தர் காலத்தையே பொற்காலம் என்கின்றனர். மெளரியர் காலத்தில் புத்தகக் கலைகளும், அறிவியல் நூல்களும் ஏராளமாய்த் தோன்றின; உலக நாடுகளிலெல்லாம் பரவின; உலக நாடுகளிலிருந்து பல்வேறு பண்பாடுகள் இந்தியாவிற்குள் நுழைந்தன. ஆயினும், இதனைப் 'பொற்காலம்' என்றனரில்லை. இதைப் போலவே புத்தம் புகழ்பெற்ற குசானர் காலமும், வர்த்தனர் காலமும் பொற்காலமாகவில்லை, இவை யாவும் ஆரியரின் 'வருணாசிரம தருமத்திற்கும் வேள்வி முறைக்கும் மாறாகச் செயல்பட்ட ஆட்சியமைப்புகள். தமிழகத்திலும் ஆரியத்திற்கு ஏற்றமளித்த பல்லவர் ஆட்சிக் காலத்தையும், சோழர் ஆட்சியின் ஒரு பகுதியையும் பொற்காலம் என்றனர். ஆகவே, சமணமும் புத்தமும் தழைக்கவும், "வருணாசிர தர்மம்' ஒழியவும் பாடுபட்டளப்பிரர் ஆட்சிக் காலத்தை இருண்ட காலம்' என்று அழைப்பதைக் கண்டு வியப்படையத் தேவையில்லை. ஆரியம் சிறந்தோங்கி நின்ற காலங்களையே இந்திய வரலாற்றில் பொற்காலம்' என்பர். இது கண்மூடித்தனமாகக் கையாளப் படும் பொது நெறி, களப்பிரர் வீழ்ச்சி - கிபி. ஆறாம் நூற்றாண்டில் பாண்டிய, பல்லவ அரசுகள் தழைத் தோங்கத் தொடங்கியதால் களப்பிரர் வீழ்ச்சியடைந்தனர். பாண்டிய மன்னன் கடுங்கோனும், பல்லவ மன்னன் சிம்மவிசுணுவும் களப்பிரரை வென்று, தமிழகத்தினின்று வெளியேற்றினர். ஆயினும், கிபி. எட்டாம் நாற்றாண்டுவர இங்குமங்குமாகத் தமிழகத்தில் சிற்றரசர்களாய் இவர்கள் ஆண்டு இருக்கலாம். இவர்கள் பின்வந்த "முத்தரையர்களாக' ஆண்டனர் என்பது பொருந்தாது. முத்தரையர் வேறு, களப்பிரர் வேறு என்பதே தெளிந்த முடிபு. களப்பிரர் கங்கரேயென்றும், இவர்கள் ஒருசில ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டனரென்றும் ஒருசிலர் கூறுகின்றனர். இது ஆய்வுக்கு உரியதே. 5. தமிழகம் 1. (கி.பி. 6 ஆம் நூற்றாண்டிலிருந்து 9 ஆம் நூற்றாண்டு வரை) 4 ஆம் நூற்றாண்டு முதல் 9 ஆம் நூற்றாண்டு வரையில் தமிழகத்தில் பல்லவர்களின் ஆட்சி நிலை பெற்றிருந்தது. தக்கணத்தில் கிபி. ஆறாம் நூற்றாண்டிலிருந்து பன்னிரண்டாம் நாற்றாண்டு வரையிலும் சாளுக்கியர் ஆண்டனர். பல்லவர்களின் சம காலத்தில் ஆண்ட வாதாபிச் சாளுக் கியர்கள் முற்கால மேலைச் சாளுக்கியர் எனப்பட்டனர். இவர்களில் முதலாம் புலிகேசிகி.பி. 535-586) இம் மரபில் 'மகாராசா' என்னும் விருதுடன் ஆண்ட முதலரசன் ஆவான். இவனுக்குப்பின் முதலாம் கீர்த்தி வர்மன்(கிபி 57 - 598), மங்களேசன்கிபி. 598-50, இரண்டாம் புலிகேசி (கிபி. 10-542) ஆகியோர் ஆண்டனர். இரண்டாம் புலிகேசி தென்னகக் கடற்கரையோரமாகப் படையெடுத்துப் பல கோட்டைகளைக் கைப்பற்றி னான் என்று அவனுடைய அய்கோலிக் கல்வெட்டுக் கூறுகிறது. பல்லவ மன்னன் மகேந்திரவர்மனைத் தன்னுடைய காஞ்சிக் கோட்டைக்குள் பதுங்கும்படி செய்தான் என்றும், பின்னர்க் காவிரி ஆற்றைக் கடந்து சோழர், கேரளர், பாண்டியருடன் நட்புறவு பூண்டு பாதாமி திரும்பினான் என்றும் அக் கல்வெட்டுக் கூறுகிறது. இவன் காலத்தில் பல்லவருக்கும், சாளுக்கியருக்கும் இடையே பரியலம், மணி மங்கலம், சூரமாரம் முதலிய இடங்களில் போர் நடந்ததாகப் பல்லவர் செப்பேடுகளும் கூறுகின்றன. கடைசியாக இவன் பல்லவரிடம் தோற்றுத் தன் கோநகரையே இழந்த தாகவும் அறிகிறோம். இரண்டாம் புலிகேசிக்குப் பின் முதலாம் விக்கிர மாதித்தன் கிபி 855-57), விநயாதித்தன்சிபி. 5-6ாது, விசயாதித்தன் கிபி. 69-13), இரண்டாம் விக்கிரமாதித்தன் கி.பி. 734-745), இரண்டாம் கீர்த்திவர்மன் பி.745-757 ஆகியோர் ஆண்டனர். இவர்கள் காலத்திலும் பல்லவருக்கும், சாளுக்கியருக்கும் இடையே போர்களும், சச்சரவுகளும் முண்டன. கடைசியாக, இந்த இரண்டாம் கீர்த்திவர்மனுடன் வாதாபி (அல்லது) பாதாமிச் சாளுக்கியர் ஆட்சி மறைந்தது. பின்னர் இருநூறு ஆண்டுகள் வரை இவ்வாட்சி இராட்டிரகூடர் ஆட்சியின் கீழிருந்தது. இந்த இராட்டிரகூடரைக் கிபி. 973-ல் இரண்டாம் தைலன் என்பவன் தோற்கடித்து இரண்டாம் மேலைச் சாளுக்கியர் ஆள்குடி மரபை ஏற் படுத்தினான். இவர்கள் கல்யாணியைக்கோநகராகக்கொண்டு ஆண்டனர். தமிழகம் (கிபி 6ஆம் நூற்றாண்டிலிருந்து 9ஆம் நூற்றாண்டு வரை) 137 பாதாமிச் சாளுக்கியர் ஆட்சியைக் கைப்பற்றிய இராட்டிரகூடர் களின் ஆட்சி கிபி. எட்டாம் நூற்றாண்டிலிருந்து தக்கணத்தில் சிறந்து விளங்கியது. இவர்களில் முதலாம் கிருட்டிணன் கி.பி. 158-773), இரண்டாம் கோவிந்தன்கிபி.773-780), துருவன் கிபி 780-793) மூன்றாம் கோவிந்தன்(கிபி. 793 - 516, அமோகவர்சன்கிபி. 814-878), இரண்டாம் கிருட்டிணன்கிபி 876-14) முதலியோர் குறிப்பிடத்தக்கவர். இவர்களில் துருவன், மூன்றாம் கோவிந்தன் ஆகியோர் காலங்களில் இராட்டிரகூட ருக்கும் பல்லவருக்கும் மோதல்கள் ஏற்பட்டுள்ளன. கடைசியாகக் கி.பி. 973-ல் இராட்டிரகூடர் ஆட்சியை மேற்கூறிய இரண்டாம் தைலன் கைப்பற்றி இரண்டாம் மேலைச் சாளுக்கியர் ஆட்சியை ஏற்படுத்தினான். மேலைச் சாளுக்கிய மன்னர்களான இரண்டாம் தைலன் கிபி 973 997), முதலாம் சோமேசுவரன் கி.பி. 104257), இரண்டாம் சோமேசுவரன் கி.பி. 108-75), ஆறாம் விக்கிரமாதித்தியன்(கி.பி. 1076-1126), மூன்றாம் சோமேசுவரன்கிபி. 1757-36) ஆகியோர் தொடர்ந்து ஆண்டபின் மேலைச் சாளுக்கியர் ஆட்சியும் ஒரு முடிவுக்கு வந்தது. கடைசியாகக் கி.பி. 1190-ல் இது மறைந்தது. கி.பி. ஏழாம் நாற்றாண்டிலிருந்தே வேங்கியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட கீழைச் சாளுக்கியர் ஆட்சியும் இருந்தது. இரண்டாம் புலிகேசி மராத்திய நாட்டின் வடபகுதியையும், தென் பகுதியையும் கி.பி. 15-ல் வென்று தன் தம்பியான விசுணுவர்த்தனனைகிபி. 815-33) ஆளச் செய்தான். இந்த விசுணுவர்த்தனன்தான் பின்னர் இப் பகுதியைத் தனித்தாண்டு கீழைச் சாளுக்கிய மரபைத் தோற்றுவித்தான். இவனுக்குப் பின் முதலாம் செயசிம்மன் கி.பி. 633-63 முதலானோர் தொடர்ந்து ஆண்டனர். இம் மரபில் தோன்றிய விமலாதித்தியன் என்பவன் சோழ அரசன் முதலாம் இராசராசன் மகளான குந்தவை என்பவளை மணந்தான், இவன் மகன் இராசராச விசுணுவர்த்தனன் தாய்மாமன் முதலாம் இராச ராசன் மகள் அம்மங்க தேவியை மணந்தான். இவன் மகன் இரண்டாம் இராசேந்திரன். இவன் கி.பி. 1067-ல் சாளுக்கிய நாட்டின் அரசு கட்டில் ஏறினான். இவன் காலத்தில் சோழ நாட்டின் அரசுரிமைக்குப் பிறங்கடை யில்லாததால் இவனே சோழ நாட்டின் மன்னன் ஆனான். அவ்வாறு அரசனான வுடன் இவன் 'முதலாம் குலோத்துங்கன்' எனப் பெயர் பூண்டான். அதாவது இரண்டாம் இராசேந்திரன் என்னும் இயற்பெய ருடன் சாளுக்கிய நாட்டையாண்ட இவன் சோழ நாட்டின் அரசனாக முடிசூட்டிக் கொண்டவுடன் முடிசூட்டுப் பெயராக அபிசேக நாமம்) *முதலாம் குலோத்துங்கன்' என்னும் பெயரைச் சூடிக்கொண்டான். இதனால் சோழநாடும் சாளுக்கியநாடும் ஒரு குடைக்கீழ் இணைந்தன. இவ்வாறு, தக்காணத்தில் இருந்த சாளுக்கிய இராட்டிரகூட அரசர் சுளுக்கும் பல்லவ, சோழ அரசர்களுக்கும் தொடர்புகள் இருந்ததை யறிகிறோம். சிறப்பாக, ஈண்டு முதலில் பல்லவர்களைப்பற்றியும், பின்னர்ச் சோழர்களைப் பற்றியும் கூறப்படுகிறது. (அ) பல்லவர் வரலாறு இன்றுவரை பல்லவரின் தாயகம் பற்றி ஆய்ந்த அறிஞர்கள் முடிந்த முடிவாக எதையும் காணவில்லை. ஆயினும், அவர்களின் ஆய்வுகளின் தன்மைகளைப்பற்றி மட்டும் ஈண்டுக் கூறுதல் இன்றியமையாதது. இவர்களைப் பஹ்லவர் என்றும், பாரசீக நாட்டிலிருந்து வந்தவர்கள் என்றும், குறும்பர் கோபாலர், பாவர் போன்ற இந் நாட்டு இனத்தவரி லிருந்து வந்தவர் என்றும் இருவகை ஆய்வுகள் காணப்படுகின்றன. தாற்காலிகமாக இவர்கள் ஆந்திரப் பேரரசு(சாதவாகனப் பேரரசு) அழிந்தபின் அவர்களுக்குக்கீழ்ச் சிற்றரசராயிருந்த இவர்களின் மூதாதையர் சிறிது சிறிதாக வலுப்பெற்றுத் தமிழகம் போந்து, பல்லவப் பேராட்சியை . ஏற்படுத்திக் கொண்டனர் என்று கூறலாம், இப் பல்லவர் ஆட்சியை நிறுவியவன் 'பப்பரதேவன்' என்றும், இவனுக்குப் பின் தொடர்ந்து மன்னர்கள் பலர் ஆண்டனர் என்றும் பல் சான்றுகளிலிருந்து அறிகிறோம். இவ்வாறு ஆண்ட பல்லவர்களை முற்காலப் பல்லவர்கள், இடைக்காலப் பல்லவர்கள், பிற்காலப் பல்லவர்கள் என மூவகையாகப் பிரித்தும் கூறுவர். கிபி. 250 முதல் 340 வரையில் ஆண்ட பல்லவர் முற்காலப் பல்லவர் - என்றும், கிபி. 340 முதல் 55 வரையில் ஆண்டவர் இடைக்காலப் பல்லவர் என்றும், கிபி.75 முதல் 900 வரை ஆண்டவர் பிற்காலப் பல்லவர் என்றும் அறியப்படுகின்றனர், ஈண்டு நாம் பிற்காலப் பல்லவர்களைப் பற்றிச் சுருக்கமாக அறியலாம். இவர்களிலும் முதல் ஏழு பல்லவ மன்னர்கள் “மூத்த கால்வழியினர்' என்றும், பின்வரும் மன்னர்கள் 'இளைய கால்வழியினர்' என்றும் அறியப்படுகின்றனர். சிம்மவிகணுமுதல் தொடங்கும் இவர்களின் பட்டியல் அபராசிதவர்மன் வரையில் சென்று முடிகிறது. சிம்மவிசுணு கிபி.570 முதல் 60 வரையில் ஆண்டான். அபராசிதவர்மன் கிபி. 895 முதல் 13 வரை ஆண்டான். ஆக, பிற்காலப் பல்லவர்களின் ஆட்சி தோராயமாக மூன்றரை நூற்றாண்டுகள் இருந்தது எனலாம். சிம்மவிசுணு (கி.பி. 570-60 சிம்மவிசுணு இடைக்காலப் பல்லவரின் கடைசியரசனான மூன்றாம் சிம்மவர்மன் கி.பி. 550-570) என்பானின் மகன் ஆவான். அஃதாவது முதலாம் நந்திவர்மன் என்பானின் ஒன்றுவிட்ட உடன்பிறந்தானின் மகன் ஆவான். இவனுடைய தம்பியே பீமவர்மன் என்பவன். இதுவரை இவன் காலத்துப் பட்டயம் எதுவும் கிடைக்கவில்லை, "அவந்தி சுந்தரி கதை யி விருந்து இவன் கங்க அரசனான துருவிநீதன் என்பானுக்கும், சாளுக்கிய அரசனான விசுணுவர்த்தனன் என்பானுக்கும் சமகாலத்தவன் என்பதை அறிகிறோம். கங்க, சாளுக்கிய அரசர்களின் காலவரையறைகளை மூலமாகக் கொண்டும் வேலூர்ப்பாளையம், காசக்குடி, கூரம் பட்டயங் களைக்கொண்டும் இவனுடைய காலத்தைக் கணிக்கலாம். இவன் மகனான முதலாம் மகேந்திரவர்மன், தான் இயற்றிய 'மத்தவிலாசப் பிரகசனம்" என்னும் நூலில் 'பல்லவக்குலத்தைத் தாங்கும் மலை போன்றவன்' என்றும், 'நுகர்ச்சிப் பொருள்கள் அனைத்தையு முடையவன்' என்றும், 'பல் நாடுகளையும் வென்றவன்' என்றும், 'வீரத்தில் இந்திரனையும், செல்வத் தில் குபேரனையும் ஒத்தவன்' என்றும், அரசர்களுள் அரிமாவென்றும் சிம்மவிசுணுவைப் புகழ்ந்துரைக்கிறான். சிம்மவிசுணு, சோழ பாண்டிய சேரரை வென்றதோடு, ஈழத்திலும் பல்லவராட்சியை நிலைநாட்டினான் என்பதைப் பிற்காலப் பட்டயங்கள் கூறுகின்றன. வேலூர்ப்பாளையம் செப்பேடுகளில் இவன் சோழநாட்டை வென்ற செய்தி சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. “ஒளிரும் கமுக மரங்களையும், செந்நெல் வயல்களையும் தனக்கு அணிகலன்களாக அணிந் துள்ள கவேரன் மகளான காவிரியினால் செழுமையடையும் சோழ நாட்டைச் சிம்மவிசுணு கைப்பற்றினான்.' 'அதன் பிறகு இப் புவியுலகில் அரிமாப் போன்று சிறந்திருந்த சிம்மவிசுணு சிம்மன் என்பானை வெற்றி கொண்டான். மாளவத்தையும் பிறகு களப்பிரர், சோழர், பாண்டியர் ஆகிய மன்னர் களையும், தன் தோள்வலியால் இறுமாப் புற்றிருந்த சிங்கள அரசனையும், கேரள அரசனையும் வெற்றி கொண்டான்' என்று காசக்குடிச் செப்பேடுகளில் காணப்படுகிறது'. இத்தகைய சான்றுகளிலிருந்து இவன் தென்னாட்டு அரசர்களை வென்று, காவிரியாறு வர தனது ஆட்சியை விரிவுபடுத்தினான் என்பதை யும், இவனே முதன்முதலாகக் காஞ்சியைக் கொநகராகக் கொண்டு ஆண்டான் என்பதையும் ஊகித்தறியலாம். இவன் காலத்தில் தான் காஞ்சி களப்பிரரிடமிருந்து கைப்பற்றப்பட்டது எனக் கருதுவாரும் உண்டு. இவன் காஞ்சியைக் கைப்பற்றியதால் கற்றவரைப் பகைவரிடமிருந்து காப்பாற்றினான் என்று அவந்தி சுந்தரி கதை'யில் போற்றப்பெறுகிறான். இங்குக் "கடிகா' என்பதைக் காஞ்சிபுரம் என்றே யாவரும் கொள்வர், 'கடிகா' என்பது மறையியல் கல்லூரி யென்றும், அஃது அமைக்கப் பெற்றிருந்த காஞ்சிபுரத்திற்கே அதன் வழி அச் சிறப்புப் பெயர் ஏற்பட்ட தென்றும் ஆர். கோபாலன், சராசுப் பாதிரியார் முதலியோர் கருது கின்றனர்'. சிம்மவிசுணு புதுக்கோட்டை வரையிலுள்ள சோழ நாட்டை வென்றான் என்பதைக் கஞ்சனூரர்ப் பட்டயத்திலிருந்து அறிகிறோம், இவற்றை விழுப்புரம் மாவட்டத்தி லுள்ள திருக்கோவிலூர் முதலியவிடங் களைக் கொண்ட, அக் கால நாடு மழவர் நாடு -மலைநாடு அல்லது மலாடு என்று அழைக்கப்பட்டது. அதனையும் சிம்மவிசுணு வென்றான். இவ்வாறு ஒரு பெரும் நிலப்பரப்பிற்கு அரசனாய்த் திகழ்ந்த சிம்மவிசுணு காஞ்சியைக் கோநகராய்க்கொண்டு சிறந்த ஆட்சி முறையை நிலைநாட்டினான். பல போர்களுக்குப் பின் அமைதியை நிலைநாட்டிய இவன் ஒரு சிறந்த வைணவன் ஆவான். விசுணுவைத் 'தன் பத்தியால் வணங்கியவன்' என்று இவனை உதயேந்திரம் செப்பேடு புகழ்ந்துரைக் கிறது. மாமல்லபுரத்திலுள்ள ஆதிவராகர் கோயிலிலுள்ள சிம்மவிசுணு வின் சிலை அவனுடைய சமயப்பற்றை உறுதிப்படுத்துவதாயுள்ளது. ஆனால் இக்கோயில் அவனுடைய மகனான முதலாம் மகேந்திரவர்மனால் கட்டப்பட்டது. . இவ்வுருவச் சிலையின் எதிரேயுள்ள பாறையில் 'ஸ்ரீமகேந்திரன் போதாதி ராஜன்' என்று பல்லவ- கிரந்த எழுத்துகளில் பொறிக்கப்பட் டுள்ளது. இங்குக் காணப்படும் மற்றோர் உருவச் சிலை மகேந்திரவர்ம னுடையது. இவன் இளவரசனாயிருந்தபோது தன் தந்தை சிம்மவிசுணு வுடன் இக்கோயிலுக்கு வந்திருக்கக் கூடுமென்றும், எனவே, இக்கோயில் சிம்ம விசுணுவின் காலத்தில்தான் கட்டப்பெற்றிருக்க வேண்டுமென்றும் கூறுவார். ஆனால், இது தவறான கருத்தாகும். இக்கோயில் மகேந்திரவர்மன் காலத்தில்தான் கட்டப்பெற்றதென்பது ஆராய்ச்சியாளர் முடிவாகும். சிம்மவிசுணு சிறந்த வைணவப்பித்தனாக இருந்ததோடு சிறந்த கலைஞனாகவும், கலைஞர்களைப் போற்றிப் புரப்பவனாகவும் விளங்கினான். தண்டி என்னும் வடமொழிப் புலவரும், பாரவி என்னும் மற்றொரு வடமொழிப் புலவரும் இவனுடைய அவையிலிருந்தோரில் குறிப்பிடத்தக்கவர் ஆவர். அவந்தி சுந்தரி கதை, சிறந்த இலக்கண நூலாகிய தண்டியலங்காரம் முதலிய நூல்களைத் தண்டியும், கிரதார்ச்சுனியம் என்னும் நாலைப் பாரவியும் எழுதினர். அவந்திசுந்தரி கதையிலிருந்து கீழைச் சாளுக்கிய மன்னனான விசுணுவர்த்தனினும், கங்க அரசனான துருவிநீதனும் சிம்மவிசுணுவின் காலத்தவர் என்பதை அறிகிறோம். இவன்" காலத்தில் மாறவர்மன் அவனி சூளாமணி என்பான் பாண்டிய நாட்டு அரசனாக இருந்தான். இவ்வாறு சிம்மவிசுணு தென்னகத்தில் பல்லவருக் கான ஒரு புதியவியலைத் தொடங்கித் தன் வாழ்நாளிலேயே பல்லவமரபை வரலாற்றில் இடம்பெறச் செய்துவிட்டு மறைந்தான். இவனுக்குப் பின் இவன் மகனான முதலாம் மகேந்திரவர்மன் அரியணையேறினான், முதலாம் மகேந்திரவர்மன் (கி.பி. 600-630) சிம்மவிகணுவுக்குப் பின் அரியணையேறிய அவனுடைய மகனான முதலாம் மகேந்திரவர்மன், தன் தந்தையால் ஆளப்பெற்ற வடக்கே கிருட்டிணையாறு முதல் தெற்கே புதுக்கோட்டை வரையி லுள்ள பெருநிலப் பரப்பிற்குத் தலைவன் ஆனான். இவன் இளவரச னாக இருந்த போது தெலுங்கு நாட்டில் தங்கியிருந்தான் என்றும், இதனைக் குண்டூர் மாவட்டத்தில் சேசர்லா என்னுமிடத்திலுள்ள கபோதேசுவரன் கோயில் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது என்றும் கூறுவர். இவன் காலத்தில் பல்லவ - நாட்டின் வடவெல்லையிலிருந்த சாளுக்கிய நாட்டையாண்ட இரண்டாம் புலிகேசி கதம்பர், கங்கர், ஆளுபர், மயூரர் முதலிய சிற்றரசர்களையடக்கிப் பேரரசை நிலை நாட்டினான். இவனுடைய அய்கோலிக் கல்வெட்டில் தான் வேங்கியை வென்றபின் பல்லவ நாட்டையும் தாக்கியதாகக் குறிப்பிடு கின்றான். இதிலிருந்து சிம்மவிசுணு காலத்தில் தொடங்கிய பல்லவர் சாளுக்கியர் பகைமை தொடர்ந்து மகேந்திரவர்மன் காலத்திலும் நிலவியதை அறிகிறோம். 'புலிகேசி தன்னுடைய சேனையை நடத்திச் செல்லும் போது கிளம்பிய தூளியானது எதிர்க்கவந்த பல்லவ மன்னனின் ஒளியை மங்கச் செய்தது, புலிகேசியின் பெரும் படைக்கடலைக் கண்டு காஞ்சிபுரத்தரசன் காஞ்சிக்கோட்டையில் ஒளிந்து கொண்டான் என்றும், பல்லவர்களின் படையாகிய குளிர்ந்த பனிக்குக் கடுங்கதிரா யுள்ள கதிரவனைப் போன்ற அவன் (புலிகேசி) சோழ, பாண்டிய, கேரளர் களுக்குப் பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கினான் என்றும் அய்கோலிக் கல்வெட்டுக் கூறுகிறது' இத்தகைய சான்றுகளிலிருந்து முதலாம் மகேந்திரவர்மன் சாளுக் கிய நாட்டை யாாண்ட இரண்டாம் புலிகேசி (கி.பி. 500-542என்பானிடம் தோற்று ஆந்திர நாட்டிலிருந்த தன் நாட்டின் ஒரு பகுதியைச் சாளுக் கியருக்குப் பறிகொடுத்தான் என்பதை அறிகிறோம். அப்பகுதி வேங்கியை உள்ளடக்கியதாகும். அப் பகுதியைப் பல்லவரிடமிருந்து கைப்பற்றிய இரண்டாம் புலிகேசி தன் தம்பியாகிய விசுணுவர்த் தனனைத் தனக்கு அடங்கியாளும்படி அமர்த்தினான். பின்னர் விசுணுவர்த்தனன் இதனைத் தனித்தாள முற்பட்டுத் தனிமரபையும் ஏற்படுத்திக் கொண்டான். இவன் வழித்தோன்றியவேங்கிநாட்டுச் சாளுக்கியர் *கீழைச் சாளுக்கிய ரென்று அழைக்கப் பெற்றனர். அதனால் வாதாபியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மூலச் சாளுக்கியர் "மேலைச் சாளுக்கியர்' என்று அழைக்கப் பெற்றனர். மகேந்திரவர்மன் இரண்டாம் புலிகேசியிடம் தோற்றுத் தனது ஆட்சியின் வடவெல்லையை இழந்தானாயினும், கடைசியாகப் புலிகேசி யையும் அவனுக்குத் துணையாக நின்ற அரசர்கள் பலரையும் காஞ்சிக்கு வடக்கே பதினைந்து கல் தொலைவிலுள்ள புள்ளலூர் என்னுமிடத்தில் புறங்காணச் செய்தான். புள்ளலூரில் எதிரிகள் அனைவரையும் அவன் அழித்து அவர்களை வேரறுத்தான். பின்னர் அவன் கட்டளை அனைவ ராலும் ஏற்றுக்கொள்ளப்பெற்றது என்றும், இந்திரனைப் போன்று கீர்த்தி வாய்ந்த மகேந்திரவர்மன் பூமண்டலத்தைப் பாதுகாத்து வந்தான் என்றும் காசக்குடிச் செப்பேடுகள் புகழ்ந்துரைக்கின்றன. தன் நாட்டின் வடபகுதியைப் புலிகேசியிடம் தோற்றபின் மகேந்திர னின் ஆட்சி வடக்கே வடபெண்ணையாற்றிலிருந்து தெற்கே புதுக் கோட்டை வரையில் தொண்டை மண்டலத்தையும், சோழ மண்டலத் தையும் கொண்டதாக இருந்தது, அஃதாவது இன்றைய நெல்லூர் மாவட்டத்தின் தென்பகுதி, சித்தர், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை , சேலம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி நின்றது. இவன் காலத்தில் மல்லை அல்லது கடல்மல்லை இன்றைய மாமல்லபுரம் சிறந்த துறைமுகப்பட்டினமாகத் திகழ்ந்தது. இது தொண்டைமான் இளந்திரையன் என்னும் சோழ மன்னன் காலத்திலேயே சிறந்து விளங்கிய துறைமுகப்பட்டினமாகும். இதனைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடிய பெரும்பாணாற்றுப்படையில் காண் கிறோம்'. மகேந்திரன் ஒரு சிறந்த கட்டடக்கலை வல்லுநன். இவனால் அமைக்கப் பெற்ற ஊர்களும், ஏரிகளும் இன்றும் இவன் பெயரை நிலைநாட்டி நிற்கின்றன. மாமண்டூர்ப்பற்றில் தன் பெயரால் மகேந்திர மங்கலம்' என்னும் ஊரை ஏற்படுத்தினான் என்பதனைத் திருப்பருத்திக் குன்றத்து வர்த்தமானர் கோயில் கல்வெட்டுக் கூறுகிறது'. வடார்க்காடு மாவட்டம் வாலாஜாபேட்டை வட்டத்தில் சோழலிங்க புரத்திற்குத் தென்கிழக்கே மூன்று கல் தொலைவிலுள்ள 'மகேந்திரவாடி' என்னும் ஊரும் இவனால் ஏற்படுத்தப் பெற்றதாகும். இவ்வூருக்குச் சிறந்த நீர்ப் பாசன ஏந்திற்காக 'ஸ்மகேந்திரத் தடாகம்' என்னும் ஏரியையும் இவன் வெட்டுவித்தான். இது போன்ற மற்றொரு சிறந்த ஏரியை மாமண்டூரிலும் அமைத்தான். அதற்குச் சித்திரமேகத் தடாகம்' என்று பெயர், மகேந்திரன் தன் பெயரால் 'மகேந்திரப்பள்ளி" என்னும் உரையும், சிவன் கோயிலையும் சோழநாட்டில் அமைத்தான். இன்று இவ்வூர் *கோயிலடிப்பாளையம் என்று வழங்கப்படுகிறது. இச் சிவன் கோயில் செங்கல், கல், காரை, மாழை முதலியவற்றால் அமைக்கப் பெற்றிருக்கலாம். இதுபோன்ற பல கட்டுமானக் கோயில்களை இவன் அமைத்தான் என்பதை ஆராய்ச்சியாளர்கள் பலரும் ஒப்புகின்றனர். இவனுடைய விருதுப் பெயர்களை இவன் காலத்துக் குடைவரைக் கோயில்களிலும், பிற சான்றுகளிலும் காணலாம். வல்லம் குடைவரையில் 'மயேந்திரப் போத்தரெசரு' என்று தமிழிலும், மாமல்லபுரத்து வராகர் குடைவரையில் "ஸ்ரீமஹேந்த்ர போத்ராதி ராஜன்' என்று பிராகிருதத்தி லும், பல்லாவரம், திருச்சி ஆகிய குடைவரைகளில் 'ஸ்ரீமவேஹந்த்ர விக்ரம்' என்று சமற்கிருதத்திலும் காணப்படுகின்றன, “பிண பிணக்கு' என்று தமிழிலும் இவன் விருதுபெயர் திருச்சிக் குடைவரையில் பொறிக்கப்பட்ட டுள்ளது. இவன் இளவரசனாக இருந்தபோது ஆந்திர நாட்டில் இருந்தான். இதனால் தெலுங்கிலும் இவனுக்குப் பல சிறப்புப் பெயர்கள் உள்ளன, அவை சிவில்ந்து, தில்விலோனையம்பு, வேந்துலுவித்து, பசரம்பு, சிலம்பு, மலாயு, கடுத்தரம்பு முதலியனவாகும். மகேந்திரவிக்ரமவர்மன், மகேந்திர போத்தரசன், பாகப்பிடுகு, லலிதாங்குரன், குணபரன், மத்த விலாசன், அவனியாசன், சத்திய சந்தன், புருசோத்தமன், சத்துருமல்லன், சங்கீர்ண சாதி, சித்ரகாரப்புலி, சேத்காரி, விசித்ரசித்தன், அலுப்தகாமன், கலகப் பிரியன், அபிமுகன், மகாமேகன் நரேந்திரன் முதலிய சிறப்புப் பெயர்களும் இவனுக்குண்டு. இவன் குடைவரைகளை அமைத்ததால் சேதகாரி (சைத்தியக்காரன் என்றும், இசைக்கலையில் வல்லவனானதால் சங்கீர்ண சாதி என்றும், ஓவியக்கலையில் வல்லவனானதால் சித்திரக்காரப்புலி என்றும், மத்தவிலாசம் என்னும் நகைச்சுவை நாடகத்தை இவன் எழுதிய தால் மத்தவிலாசன் என்றும் சிறப்பாக அழைக்கப்பெற்றான். இத்தகைய விருதுப்பெயர்களைக் கொண்டே இவன் காலத்தில் இவனால் வளர்க்கப்பெற்ற கலைகளைப்பற்றி அறியலாம். குடைவரைக் கோயில்களைத் தமிழகத்தில் முதன் முதலில் சிறப்புற அமைத்தவன் இவனே. இவனுக்கு முன்னும் குடைவரைகள் தமிழகத்தில் இருந்தன என்பதற்கான இலக்கியச் சான்றுகள் உள்ளன. ஆயின் இன்றளவும் நாம் கண்டுகளிக்கும் நிலையிலுள்ள பல்வேறு குடைவரைகளைச் சமைத்தவன் இவனேயாதலால் இவன் பெரிதும் போற்றப்படுகிறான். 'கோயில்' என்பதே இவன் காலத்தில்தான் முதன் முதலாகத் தமிழகத்தில் கட்டப்பெற்றது என்று நினைப்பது தவறு. கழகக்காலத்திலும், அதற்கு முன்னும் தமிழகத்தி லிருந்த மண்டளி, கற்றளிகளைப்பற்றி விரித்தறிகிறோம். கட்டடக் கலையைத் தமிழர்கள் செவ்வனே அறிந்து வளர்த்தனர். அதிலொரு புதுமையை இவன் புகுத்தினான் என்பதற்காகவே இவனைப் போற்று கிறோம். கற்றுண்டு களை அடுக்கிக் சுற்றளிகளை அமைத்த இவன் பின்னர் பெரும்பாறை களைக் குடைந்து குடைவரைகளை ஏற்படுத்தினான் என்பதாலேயே இவனைச் சேர்க்காரி' என்றனர். இவனால் அமைக்கப் பெற்ற சுற்றளிகள் அழிந்துபட்டன. காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் வெள்ளு வரா பெளர்ணமி மண்டபக்கருங்கல்தூண் ஒன்றில் காணப்படும் - அபிமுக, சித்ரகார புவி, கூற்றம்பு முதலிய வெட்டெழுத்துக்களைக் கொண்டு இவனால் கட்டப்பெற்ற ஒரு கற்றளியிலிருந்த இத் தூண் எஞ்சி நின்று இம் மண்டபத்திற்குப் பயன்படுத்தப்பெற்றது என்பதையறிகிறோம். இதைப்போலவே மேற்கூறிய மகேந்திரப் பள்ளிச் சிவன் கோயிலும் இவனால் கட்டப்பெற்றதே. இன்று இந்து அழிந்துபட்டாலும் திருஞான சம்பந்தரின் தேவாரத்திலிருந்து இதன் சிறப்பைக் காணலாம். இவனால் சமைக்கப்பெற்ற குடைவரைகளைப் பற்றியும், இவனுடைய பிற கலைப் பணிகளைப்பற்றியும் பல்லவர் கலைப்பணி" என்னும் தலைப்பில் விளக்கம் காணலாம். சமயம் மகேந்திரவர்மன் காலத்தில் தமிழகமெங்கும் புத்தமும் சமணமும் சிறந்து விளங்கின. மக்களுள் பெரும்பாலோர் இவ்விரு சமயங்களையே பின்பற்றினர். மகேந்திரனும் சமணனாகவே இருந்தான். இவனது பிற்கால ஆட்சியில் சைவம் தலைதூக்கத் தொடங்கியது. திருஞானசம்பந்தரின் தந்தையான சிவபாத விருதையர் இவன் காலத்தில் வாழ்ந்தவர். அவர் புத்தமும், சமணமும் செழித்து, சைவம் மங்கி நின்றதைக் கண்டு மனம் வருந்தினார் என்பதைத் திருஞான சம்பந்தரே தம் தேவாரத்தில் கூறி யுள்ளார்? பாண்டிய நாட்டிலும் சமணம் சிறப்புற்றுச் சைவம் குன்றிப் போனதைச் சேக்கிழார் பெருமானும் குறிப்பிட்டுள்ளார். இக் காலத்தில் சைவமும், வைணவமும் குன்றியிருந்தன. ஆயினும், அவ்விரு சமயங்களும் மக்களால் பின்பற்றப்பெற்றன. ஒருபுறம் இவ்விரு சமயங்களும் எழுச்சியுறத் துடித்தன. மறுபுறம் சமணமும் புத்தமும் சிறப்புற்று நின்றன. ஆக இக் காலத்தில் இறைநெறி இயக்கம்' நாடெங்கி லும் விறுவிறுப்பாக வளர்ந்து நின்றது, நாளாவட்டத்தில் சைவநாயன்மார் களும், வைணவ அடியார்களும் பெரிதும் முயன்று தங்கள் சமயங்களை வளர்க்கவும், பிற சமயங்களை வீழ்த்தவும் முற்பட்டனர். இதனால் இவன் காலத்தில் சமயப் பூசல்கள் நாடெங்கணும் காணப்பட்டன. இப் போரில் சமண - புத்த சமயங்கள் வீழ்ச்சியடைந்து மங்கின, சைவம் தலைதூக்கி நின்றது. இதற்குப் பெரிதும் உறுதுணையாய் நின்றவர் திருநாவுக்கரசர் ஆவார். தம் வாழ்நாளில் பெரும் பகுதியைச் சமணத்தின் சமயகுருவாக இருந்து கழித்த இவர் தம் சூலைநோய் தீரச் சிவனை வழிபட்டுச் சைவர் ஆனார். பாடலிபுரத்தில் சமணர் குருவாக இருந்தபோது இவரைச் சமணர்கள் 'தருமசேனர்' என்று அழைத்தனர். சைவரானபின் சைவ இறைநெறி இயக்கத்தைப் பரப்பித் திருநாவுக்கரசர்' என்னும் சிறப்புப் பெயர் பெற்றார். இவருடன் சேர்ந்து திருஞானசம்பந்தரும் சைவத்தைப் பரப்பினார். சம்பந்தர் இளைஞர்; முதுமையில் சைவம் சேர்ந்த நாவுக் கரசரை இவர் அப்பரே' (தந்தையே என்று அழைத்ததால் நாவுக்கரசருக்கு 'அப்பர்' என்னும் சிறப்புப் பெயரும் உண்டாயிற்று. சமணம் விடுத்துச் சைவம் தழுவிய திருநாவுக்கரசரே சமணத்தில் ஆழ்ந்திருந்த மகேந்திரவர்மனையும் சைவம் தழுவச் செய்தார். சைவம் தழுவிய மகேந்திரன் பின்னர் சமணத்தை அழிக்க முற்பட்டான் என்பதனைப் பெரியபுராணத்திலிருந்து அறிகிறோம். பெரியபுராணத்தில் வரும் அப் பாடலில் மகேந்திரன் பாடலிபுரத்துச் சமணப் பள்ளியை இடித்து, அக் கற்களைக் கொண்டு, திருவதிகைச் சிவன் கோயிலைக் கட்டினான் என்று கூறப்படுகிறது'. இதில் வரும் காடவன், பல்லவன், குணதரன் என்னும் சிறப்புப் பெயர்கள் மகேந்திரனையே குறிக்கின்றன. அவனது திருச்சிக்குடைவரையில் விங்கத்தை வழிபடும் குணபரன் என்ற சிறப்புப் பெயர் கொண்ட அரசன் இந்த லிங்கத்தினால் புறச் சமயத்திலிருந்து திரும்பிய ஞானம் மெய்யறிவு) இவ்வுலகத்தில் நீண்டு நிலைநிற்பதாக" என்று பொறிக்கப்பட்டுள்ளது' இவ்வாறு, பெரியபுராணச் சான்றுகளாலும், மேற்கண்ட கல்வெட்டுச் சான்றாலும் மகேந்திரன் சமணத்திலிருந்து சைவ சமயத்திற்கு ! மாற்றப் பெற்றான் என்பதைத் தெளிவாக அறிகிறோம். மேலும், திருவதிகையிலிருந்த குணதரவீச்சரம்' என்னும் சிவன் கோயிலைக் கட்டிய "குணபரன்' இவனே என்பதையும் பல்வேறு சான்றுகளிலிருந்தும் தெளிவுறுகிறோம். இவன் தோராயமாக கி.பி. 620 - ல் சைவனாக மாறியிருக்கலாம் இவனைத் தொடர்ந்து குடிமக்களும் விரைந்து சைவர் ஆயினர். இவனால் சமைக்கப்பெற்ற வல்லம், தளவானூர், சீயமங்கலம், பல்லாவரம், திருச்சி முதலிய குடவரைகள் சிவன் கோயில்களாகவும், மகேந்திரவாடிக் குடை வரை பெருமாள் கோயிலாகவும் இருப்பதால் வைணவத்தை இவன் வெறுக்கவில்லை என்பதை அறியலாம். ஆனால், சமணம் குன்றி அழியத்தொடங்கியது. கலைப்பணி மகேந்திரவர்மன் பாறைகளைக் குடைந்து கோயில்களைச் சமைக்கும் சிறந்த கலைப்பணியைச் செய்தான் எனக்கூறினோம். இதுவன்றி இசை, நடனம், சிற்பம், ஓவியம், நாடகம் ஆகிய கலைகளையும் இவன் சிறப்புற வளர்த்தான். சித்தன்னவாசலில் உள்ள குடைவரைக் கோயிலி லுள்ள ஓவியங்கள் இவன் காலத்தவை என்று கூறப்பட்டது. ஆனால் இன்று ஆராய்ச்சியாளர்கள் இவை பாண்டியர் காலத்தவை என்று கூறுகின்றனர். நடனமாதர்கள் இருவர் இங்கு கண்கவர் ஓவியங்களாகத் திட்டப் பெற்றுள்ளன. இன்தொரு சமணக் கோயிலாதலின் தீர்த்தங்கரர் ' உருவச் சிலைகளும் இதில் காணப்படுகின்றன. இவற்றால் அக்காலச் சிற்பக் கலையின் பெருமையை உணரமுடிகிறது. எனவே, மகேந்திரவர்மனின் சித்தன்னவாசல் குடைவரைக் கோயில் ஓவியம், சிற்பம், நடனம் ஆகிய மூன்று கலைகளையும் உணர்த்தும் கூடமாகத் திகழ்கிறது. இவன் ஒரு சிறந்த இசைப் புலவனும் ஆவான். அக் கலையின் வளர்ச்சிக்காகப் புதுக்கோட்டையிலுள்ள குடுமியான்மலைப் பாறை ஒன்றில் இவன் இசையின் ஓசை நயங்களைப் பற்றிய செய்திகளைச் செதுக்கியுள்ளான். 'இந்தக் கல்வெட்டு இசை மாணவர் நன்மைக்காகப் பெண்களை வகுத்துத் தந்த உருத்திராச்சாரியார் என்பவரின் மாணவனான மன்னரின் கட்டளைப் படி வெட்டப்பட்டது" என்று அக் கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ளது. சிலர் இக்கல்வெட்டு இவன் காலத்திற்குப் பிறகு வெட்டபெற்றது என்றும் கூறுவர். எனவே, இதுபற்றிய இறுதியான முடிவு இன்னும் ஏற்படவில்லை ! மாமண்டூரிலுள்ள கல்வெட்டு ஒன்றில் காணப்படும் சொல்லாட்சிகளை யும் அவற்றில் காணப்படும் சுரம், வர்ணம், இவற்றை வகுத்த வான்மீகியா ரைப் பற்றியதாகக் காணப்படும் குறிப்பையும், மத்தவிலாசப் பிரகசனம் பற்றிய குறிப்பையும், அறிந்த அறிஞர்கள் சிலர் இவை குடுமியான் மலையிலுள்ள கல்வெட்டோடு ஒத்து இருப்பதாகக் கூறுகின்றனர், மேலும், குடுமியான்மலைக் கல்வெட்டும், திருச்சியிலுள்ள குடைவரைக் கோயில் கல்வெட்டும் பலவற்றாலும் ஒன்றே போல் உள்ளன. எனவே தான் குடுமியான் மலைக் கல்வெட்டுமகேந்திரன் கட்டளையால்தான் வெட்டப் பெற்றது என்றும், இதனால் அவன் இசைக் கலையில் வல்லவனாக இருத்தல் வேண்டுமென்றும் ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர்'. மகேந்திரவர்மன் ஒரு சிறந்த நூலாசிரியனும் ஆவான். மாமண்டூர்க் கல்வெட்டில் குறிக்கப்பெற்ற மத்தவிலாசப் பிரகசனம் என்னும் நகைச் சுவை நாடகத்தை இவன் வடமொழியில் எழுதினான். இதில் பல சமயத்தவரும், தனிப்பட்ட நிலையில் நடத்திய வாழ்க்கை முறைகளை நகைச்சுவையோடு மகேந்திரன் விளக்குகின்றான். இந் நூலில் சத்துரு மல்லன், அவனிபாகன், குணபரன், மத்தவிலாசன் என்னும் அவனுடைய சிறப்புப் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. பார்ப்பனனுக்குப் பூநூலும், சுபாலிசுனுக்கும் சுபாவமும் இன்றியமை யாதவை என்பதனையும், புத்த பிக்குகள் தங்கள் துறவுநெறிகளை மறந்து இன்பமாசுக்காலம் கழித்தார்கள் என்பதனையும், இச் சமயத்தவர் யாவரும் ஒருவருக்கொருவர் தங்களுக்குள் பூசலிட்டுக் கொண்டிருந்ததையும் வேடிக்கையாகவும், நகைச்சுவையாக வும் இந் நால் விவரிக்கிறது. , . - முதலாம் நரசிம்மவர்மன் (மாமல்லன்) (கி.பி. 630-668) முதலாம் மகேந்திரனுக்குப் பிறகு அவன் மகனான முதலாம் நரசிம்மன் தோரா) கிபி. 630-ல் அரசு கட்டில் ஏறினான். இவன் கிபி.130 இலிருந்து நீக்கி வரை ஆண்டான்'. இவனை "வாதாபிகொண்ட நரசிம்ம வர்மன்' என்றே சிறப்புற அழைப்பர். உலகப் புகழ்பெற்ற மாமல்லபுரத்து அழியாத சிற்பங்களைச் சமைத்த இவனை மாமல்லன்' என அழைப்பதே சாலவும் சிறப்புடைத் தென்பர். இவன் இளவரசனாக இருந்தபோது கடல்மல்லை என்னும் துறைமுகப்பட்டினத்தில் வாழ்ந்து வந்தான் என்றும், தான் அரசுக் கட்டிலேறியதும் தன் பெயரையே இதற்கு இட்டு 'மாமல்லபுரம்' என்று அழைத்தான் என்றும் அறிகிறோம். இவனுக்கும் பன்னெடுங்காலத்திற்கு முன்பிருந்தே இது கடல்மல்லை, நீர்ப்பெயற்று, மல்லை (மலங்கு என்னும் பெயர்களால் அழைக்கப் பெற்ற சிறந்த துறை முகப்பட்டினமாக இருந்தது. இதனைப் பண்டைய கிரேக்கரும் உரோமரும் யவனரும் நன்கு அறிந்திருக்கின்றனர். புகாரும் கொற்கையும் போலவே இத் துறைமுகப்பட்டினமும் பண்டைய கடல் வாணிக நடுவ மாகத் திகழ்ந்ததைத் தன்னக, அயலகச் சான்றுகளிலிருந்து அறிகிறோம். இம் மாமல்லன் முடிசூட்டிக் கொண்ட போது நரசிம்மவர்மன் என்ற பட்டப் பெயரைச் சூடிக் கொண்டான் என்றும், இவன் இயற்பெயர் மாமல்லனே என்றும் கூறுவர். பல்லவ-சாளுக்கியப் போர் தந்தையைப் போலவே வீரமும், தீரமும் கொண்டு திகழ்ந்த இவனுடைய காலத்தில் தென்னக வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற பல்லவர் சாளுக்கியப் போர்' நடந்தது. மாமல்லனின் தந்தையிடம் கடைசியாகப் படுதோல்வியடைந்த சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி இவன் அரசுக் கட்டிலேறிய சில ஆண்டுகளுக்குள் பல்லவ நாட்டின் மீது படை யெடுத்தான். ஆனால், நரசிம்மன் சாளுக்கியர் படைகள் காஞ்சியை அணுகுமுன் அந் நகருக்கு இருபது கல் தொலைவிலுள்ள மணிமங்கலம் என்னுமிடத்திலும், பரியளம் சூரமாரம் முதலிய இடங்களிலும் சாளுக் கியப் படைகளைத் தாக்கி முறியடித்தான். இதனைக் கூரம் செப்பேடு மிக அழகாகச் சித்தரிக்கிறது. " 'இம் மரபில் உதயகிரியிலிருந்து கிழக்கு மலையி லிருந்து) ஆதவனும் நிலவும் தோன்றுவது போல் தோன்றி, தலை வணங்காத இம் மரபு மன்னர்களின் மணிமுடியில் சூடாமணி போல் விளங்கி, பகை மன்னர்க ளாகிய யானைக் கூட்டங்களுக்கு அரிமா போன்று நரசிம்மமூர்த்தியே மண்ணுலகில் அரச குமாரனாக அவதரித்ததைப் போல் நரசிம்மன் உதித்தான்; இவன் சோழர், கேரளா, களப்பிரர், பாண்டியர்களைத் திரும்பத் திரும்பவென்று ஆயிரங்கை களைக் கொண்டவன்(கார்த்தவீரியன் போல் விளங்கினான்; பாரியளம், மணிமங்கலம், சூரமாரம் முதலிய போர்களில் புறங்காட்டியோடிய புலிகேசியின் முதுகாகிய பட்டயத்தில் வெற்றி" என்னும் சொல்லைப் பொறித்தான். இதற்குப்பின், கும்பமுனிவர் (அகத்தியர்), வாதாபியைா வாதாபி என்ற அசுரனை அழித்ததைப் போல் இவன் வாதாபியை புலிகேசியின் கோநகரை அழித்தான். பல்லவரின் வெற்றி கண்டும் மனம் நிறைவு பெறாத நரசிம்மவர்மன் பல்லவரின் பிறவிப் பகைவனான இரண்டாம் புலிகேசியை அடியோடு அழித்து விடத் தீர்மானித்தான். இதற்கு ஆயத்தமாயிருந்த போது புலிகேசி மீண்டும் பல்லவ நாட்டின் மீது படையெடுத்து வந்தான். நரசிம்மவர்மன் இம் முறை அவனை யெதிர்த்துப் போர் செய்து வெற்றி பெற்றதோடு அவனைப் போர்க் களத்திலேயே கொன்றான். அத்துடன் நில்லாமல் சாளுக்கியர் படைகளைத் துரத்திச் சென்று அந் நாட்டின் கோநகராகிய வாதாபியையும் கைப்பற்றி அழித்தான். இதனால், இவனுக்கு 'வாதாபி கொண்ட நரசிம்மன்' என்ற விருதுப் பெயர் ஏற்பட்டது. இவன் வாதாபியை வெற்றி கொண்ட செய்தியை உதயேந்திரம் பட்டயமும், காசக் குடிப் பட்டயமும்', வேலூர்ப்பாளையம் பட்டயமும் சிறப்புறச் செப்பு கின்றன. நரசிம்மவர்மன் வாதாபியின் மேற் படைகொண்டு சென்றபோது அப் படைக்குத் தலைமை தாங்கிச் சென்றவர் பரஞ்சோதியார் என்பவர் ஆவார். இவரே பின்னர் சிறுத்தொண்ட நாயனார், என்று திருத்தொண்டத் தொகையில் இடம்பெற்றார். இவருடைய வாதாபி வெற்றியையும் அங்கு இவர் பெற்ற செல்வத்தையும் பற்றிச் சேக்கிழார் தமது பெரியபுராணத்தில் புகழ்ந்தேற்றினார். வாதாபியை வெற்றிகொண்ட நரசிம்மன் புலிகேசியைத் தான் வாதாபியைக் கைப்பற்றுவதற்கு முன்னமேயே கொன்று விட்டானா அல்லது வேறு அரசர்கள் புலிகேசியைக் கொன்று விட்டார்களா என்ற ஐயம் அறிஞர்களிடையே இன்னமும் தீரவில்லை. இரண்டாம் புலிகேசி கிபி.642ல் இறந்தான் என்பது ஆராய்ச்சியாளரின் முடிவு. ஆயின், நரசிம்ம வர்மனும் கிபி.642-ல் தான் வாதாபியைக் கைப்பற்றியிருக்க வேண்டும். அந் நகர் ஏறக்குறைய பதின்மூன்று ஆண்டுகள் பல்லவர் கையில் இருந்தது என்பதற்கான சான்றுகள் உள்ளன. வாதாபியிலுள்ள தக்காண ஈரப்பன் என்னும் கோயிலுக்கருகிலுள்ள கம்பம் ஒன்றில் நரசிம்மவர்மனது பதின் மூன்றாம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. அதிலுள்ள வெட்டெழுத்து சிதைந்து காணப்படு கின்றன. ஆயினும், நரசிம்மவர்மன் தனது வாதாபி வெற்றியை அதில் பொறித்துள்ளான் என்பதை அறிய முடிகிறது '. அதிலுள்ள வெட்டெழுத்து ஒன்று காணப்படுகிறது. தன் தந்தை முன்னர் சாளுக்கியரிடம் இழந்த ஆந்திரப் பகுதியையும், நரசிம்ம வர்மன் வென்றதோடு வாதாபியையும் கைப்பற்றியாண்ட பெருமை பல்லவரின் வீரவரலாற்றில் பொன்னெழுத்துகளில் பொறிக்கப்பட்ட தாகும். கி.பி. 555 - ல் பல்லவரிடமிருந்து மீண்டும் வாதாபி சாளுக்கியர் வசமாயிற்று. அதனைப் புலிகேசியின் இளைய மகனான முதலாம் விக்கிர மாதித்தன் கிபி. 555 - இலிருந்து 81 வரையில் ஆண்டான். இவன் அரசுக் கட்டிலேறியவுடன் பல்லவரைப் பழிவாங்கும் பொருட்டு மீண்டும் பல்லவ நாட்டின்மீது படையெடுத்தான். இதனால், பல்லவர்- சாளுக்கியர் பகை வலுப்பெற்றது. விக்கிரமாதித்தன் தன்னுடைய கருநால் பட்டயத்தில் தனது தந்தையாகிய இரண்டாம் புலிகேசி மூன்று பசையரசர்களால் தோல்வியுற்ற தாகவும் இதனால் வாதாபியிலிருந்த கோயில்கள் வருவாயின்றித் தவித்த தாகவும் குறிப்பிடுகின்றான். இம் மூன்று அரசர்கள் யாவர் என்பதில் அறிஞர்களிடையே கருத்துவேறுபாடுகள் காணப்படுகின்றன, புலிகேசி யை வென்ற அரசர்கள் மூவர் நரசிம்மவர்மன் மானவர்மன், சமராபிராமன் ஆகிய மூவர் ஆவர்.மானவர்மன் என்பவன் இலங்கை அரசுக்கு உரியவன்; தனது அரசையிழந்து நரசிம்மவர்மனிடம் வந்து அடைக்கலம் புகுந்து காஞ்சியிலே நெடுங்காலம் தங்கியிருந்தவன். இவன் நரசிம்மவர்மனுடன் சேர்ந்து புலிகேசியுடன் போர் செய்தான் என்பதனை மகாவம்சம் என்னும் ஈழநாட்டு வரலாற்று நூலில் காண்கிறோம். மூன்றாவது அரசனான சமரா பிராமன் புதுக்கோட்டையைச் சேர்ந்த கொடும்பாளூரை ஆண்டவன் ஆவான். இவன் சாளுக்கிய அரசனை அதிராமங்கலம் என்னும் ஊரில் கொன்றான் என்றும், இவனுடைய தகப்பனான பரதுர்க்கமர்த்தனன் வாதாபியை வென்றான் என்றும், கொடும்பாளூரில் உள்ள மூவர்கோயில் கல்வெட்டுக் கூறுகிறது. ஆனால், இந்த மூன்றாவது அரசன் ஆந்திர நாட்டில் பல்லவரின் படிநிகராளியாகவிருந்த சிம்மவிசுணுவின் தம்பியான இரணியவர்மனின் வழித்தோன்றலுள் ஒருவனாக இருக்கலாம் என்று கருதுவாரும் உண்டு போர்க்களத்தில் புலிகேசி இறந்தபிறகுதான் நரசிம்மன் வாதாபிமேல் படையெடுத்தான் என்பதே பொருத்தமானது. பல்லவர் - பாண்டியர் போர் நரசிம்மவர்மன் காலத்தில் பாண்டிய நாட்டு அரசனாக இருந்தவன் அரிகேசரிபராங்குசன்நெடுமாறன்) (கி.பி. 641-570) என்பவன் ஆவான். இவன் சோழரிடம் பெண் கொண்டு உறவினனாகிச் சேரரையும், பிற குறுநில மன்னர்களையும் வென்று தென்னாட்டிலேயே சிறந்த தளபதியாக விளங்கினான். இவன் சக்கரமங்கை என்னுமிடத்தில் பல்லவனைப் புறங்கண்டான் என்று சின்னமனூர்ச் செப்பேடு கூறுகிறது'. ஆனால், நரசிம்மவர்மன் சேர, சோழ, பாண்டிய, களப்பிரருடன் போரிட்டான் என்று கூரம் செப்பேடுகள் கூறுகின்றன. புலிகேசி முதன்முறையாகப் பல்லவ நாட்டின் மீது படையெடுத்தபோது, 'சேர, சோழ, பாண்டியர் மனம் மகிழும்படி காவிரிக்கரையை அடைந்து பல்லவனைப் புறங் கண்டான்' என்று சாளுக்கியர் செப்பேடு கூறுவதால் இத் தமிழரசர் மூவருக்கும் பொதுப் பசுைவராசுப் பல்லவர் இருந்தனர் என்பது தெளிவா கிறது. அடுத்து, இரண்டாம் முறையாகப் புலிகேசி பல்லவர் நாட்டின்மீது படையெடுத்தபோது நரசிம்மவர்மன் அவனைத் தோற்கடித்துக் கொன்ற தோடு அவனுடைய கோநகரையும் கைப்பற்றினான் என்பதை அறிவோம். கோநகர் வாதாபியைக் கைப்பற்றுவதற்கு ஒரு பெரும்படையுடன் தம் தானைத் தலைவரான பரஞ்சோதியை அனுப்பிவிட்டுத் தான் மட்டும் மூவேந்தர்களுடனும், களப்பிரருடனும் நரசிம்மன் போரிட்டான். முதலில் சக்கரமங்கை என்னுமிடத்தில் தோல்வியுற்ற அவன் தனது பெரும்படை உதவிக்கு வந்தவுடன் இந் நால்வரையும் தோற்கடித்திருக்கலாம். ஆக, நரசிம்மவர்மன் சாளுக்கியர்களையும் சேர, சோழ, பாண்டிய, களப்பிரர் களையும் முடிவில் வெற்றி கொண்டான் என்பதில் எத்தகைய ஐயமும் இல்லை பல்லவர்-கங்கர் போர் இரண்டாம் புலிகேசி கி.பி. 642-ல் இறந்ததையும் வாதாபி பதின்மூன்று ஆண்டுகள் பல்லவர் வசம் இருந்ததையும், கி.பி. 655-ல் புலிகேசியின் மக்கள் மூவரில் ஒருவனான முதலாம் விக்கிரமாதித்தன் அரசுக் கட்டிலேறியதையும் அறிவோம். ஆனால் இவன் இயல்பாக அரசுக்கட்டில் ஏறவில்லை , இவனுக்குச் சந்திராதித்தன், ஆதித்த வர்மன் ஆகிய அண்ணன் மார் இருந்தனர். ஆதித்தவர்மனுக்கும் முதலாம் விக்கிரமாதித்தனுக்கும் அரசுரிமைப் போர் ஏற்பட்டது. இதில் ஆதித்தவர்மன் நரசிம்மவர்மனின் துணையை நாடினான். விக்கிரமாதித்தன் தன் தாய் வழிப்பாட்டனான துர்விநீதன் துணையை நாடினான். துர்விநீதனுக்கு நரசிம்மவர்மனுக்கும் ஏற்கனவே பகைமை உண்டு. துர்விநீதன் ஆண்ட கங்கநாட்டின் ஒரு பகுதி யான கொங்கு நாட்டை நரசிம்மவர்மன் கைப்பற்றித் துர்விநீதனுடைய தம்பியைக் கொங்குநாட்டிற்கு அரசனாக்கியதால், துர்விநீதனுக்கும், நரசிம்மவர்மனுக்கும் பகைமை ஏற்பட்டது. இதனால், சாளுக்கிய நாட்டு அரசுரிமைப் போரில் கங்கனும், பல்லவனும் எதிர் எதிர்க்கட்சிகளை ஆதரித்தனர். பின்னர், தங்களுக்குள்ளும் போரிட்டுக் கொண்டனர். கடைசியில், இப் போரிலும் நரசிம்மவர்மனே வெற்றி பெற்றான் எனக் கோடல் சிறப்புடைத்தாகும். ஈழநாட்டுப் போர் ஈழநாட்டு அரசன் மானவர்மன் (மானவம்மா) என்பவனை அட்ட தத்தன் என்பவன் துரத்தியடித்துவிட்டு அரசைக் கைப்பற்றிக் கொண்டான், மானவர்மன் பல்லவநாடு போந்து நரசிம்மவர்மனிடம் அடைக்கலம் புகுந்து அவன் மனம் மகிழுமாறு அவனுக்கு உறுதுணையாய் நின்று அரிய பல பணிகளைச் செய்தான். நரசிம்ம வர்மன் இரண்டாம் புலிகேசியுடன் செய்த போரிலும் மானவர்மன் ஆற்றிய பணி அளவிடற்கரியது. இத்தகைய செயல்களால் மகிழ்ச்சி அடைந்த நரசிம்மவர்மன், மானவர்மனுக்கு மாபடை, மக்கள்படை, மரக்கலப்படை முதலியவற்றை அனுப்பி, அவன் இழந்த பட்டத்தைப் பெற உதவினான். முதலில் வெற்றிகண்டமானவர்மன் தமிழர் படைகள் காஞ்சிக்கு மீண்டதும் பகைவனால் தோற்கடிக்கப்பட் டான். மீண்டும் மானவர்மன் காஞ்சிக்கு வந்து சில காலத்துக்குப் பின்னர் நரசிம்மவர்மனின் பெரும்படையுடன் மாமல்லபுரத்துத் துறைமுகப்பட் டினத்திலிருந்து கப்பலேறி ஈழத்திற்குச் சென்று, தன் பகைவனை வென்று ஆட்சியைக் கைப்பற்றினான். இவ்வாறு இரண்டு முறை பல்லவப் படைகள் கடல் கடந்து சென்று இலங்கையில் வெற்றி பெற்றதோடு மான வர்மனுக்கு அவனுடைய அரசுரிமையையும் மீட்டுத் தந்தனவென்பதைக் காசக்குடிச் செப்பேட்டிலும், ஈழநாட்டு வரலாற்றைக் கூறுகின்ற மகா வம்சம் என்னும் நூலிலும் தெளிவாக அறிகிறோம், சமயம் நரசிம்மவர்மன் சைவ சமயத்தைப் பின்பற்றினான். இவன் தந்தையின் காலத்தில் சைவம் செழித்தோங்கத் தொடங்கியது என்பதையும் முன்னரே கண்டோம். இந் நூற்றாண்டில் தோன்றிய இறைநெறி இயக்கம் சமண, புத்த சமயங்களை அழிக்கவும், சைவநெறியைப் பரப்பவும் முனைந்தது. நரசிம்மவர்மன் காலத்தில் பல்லவ நாட்டிற்கு வந்த கி.பி. 640} யுவான் சுவாங்கு என்ற சீனப்பயணி பல்லவரின் கோநகராகிய காஞ்சிபுரம் ஆறு கல் சுற்றளவு உள்ளதென்றும், அக் காலத்துத் தமிழக நகரங்களுள் இது மாபெரும் நகரமாகக் காட்சியளித்த தென்றும், இந் நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தப் பள்ளிகள் இருந்தன வென்றும், அவற்றில் பதினாயிரம் பிக்குகள் தங்கி அறம் வளர்க்க ஏந்துகள் அமைக்கப்பட்டிருந்தனவென் றும் குறிப்பிடுவதிலிருந்து இக் காலத்தில் புத்த சமயம் பெற்றிருந்த மேம்பாட்டையறியலாம். இப் பள்ளிகளில் பயின்று பெரிய அறிஞராகிய வர்களில் தருமபாலர் என்பாரும் ஒருவராவர். இப் பேரறிஞர்தான் நாளந்தாப் பல்கலைக்கழகத்தில் புத்த சமயப் பேராசிரியராகத் திகழ்ந்தவர் ஆவார். யுவான் சுவாங்கின் குறிப்பிலிருந்து காஞ்சிபுரத்தில் எண்பதிற்கும் மேற்பட்ட கோயில்கள் இருந்தனவென்றும், அவை பெரும் பாலும் திகம்பரர்களுக்கு சமணர்களுக்கு உரியவையென்றும் தெரிகிறது. மேலும், இந் நகரில் அசோகப் பேரரசரால் கட்டப்பட்ட நூறு அடி உயரமுள்ள ஒரு பள்ளி இருந்ததென்றும் இவன் குறிப்பிடுகிறான். புத்த பெருமான் இந் நகருக்கு வந்து தங்கி மக்களைத் தம் சமயத்திற்கு மாறும்படி செய்தா ரென்றும் அவன் கூறுகிறான். தான் ஈழத்திலிருந்து காஞ்சிக்கு வந்திருந்த முந்நூறு புத்தப்பிக்குகளுடன் உரையாடி யதையும் சீனப்பயண குறிப்பிடு கிறான். இவனுடைய குறிப்புகளி லிருந்து காஞ்சிபுரம் ஒரு தலைசிறந்த பல்கலைக்கழக நடுவமாக விளங்கியது என்பதையும், இந் நாட்டில் கற்றுத்தேர்ந்த அறிஞர்கள் கூடுகின்ற இடமாக இது இருந்த தென்பதை யும் இங்கிருந்து ஈழநாட்டிற்குக் கடல் வழியாகச் செல்வதற்கு மூன்று நாள்கள் ஆகுமென்பதையும் அறிகிறோம். பல்லவ நாட்டில் மட்டுமே யன்றிப் பாண்டிய நாட்டிலும் புத்தம் சிறப்புற்றிருந்தது. இந் நாட்டின் தலைநகராகிய மதுரையில் புத்தம் சிறுபான்மையாகவும், திகம்பர சமயம் பெரும்பான்மையாகவும் இருந்ததென்றும், இந்நகரின் கிழக்குப் பகுதியில் அசோசப் பேரரசரின் தம்பியானமகன் மகேந்திரன் சுட்டிய புத்த விகாரை இடிந்துபோன கட்டடமாக இருந்ததென்றும் யுவான் சுவாங்கு குறிப்பிடு கிறான். இவ்வாறு அசைக்கமுடியாத அளவிற்குப் பெரும் சாய்கால் பெற்று விட்ட புத்த, சமணசமயங்களுக்கு எதிராகத் திருநாவுக்கரசர், அப்பூதி யடிகள், சிறுத்தொண்டர், திருஞானசம்பந்தர், திருநீலகண்டர், நெடுமாற நாயனார், மங்கையர்க்கரசியார், குலச்சிறையார், திருநீலநக்கர், முருக நாயனார், குங்கிலியக் கலையர் முதலான சைவசமய அடியார்கள் சைவ சமயத்தை மக்களிடையே பரப்பத்தொடங்கினார்கள். இவர்களில் திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் தமிழ்நாடெங்கிலும் சுற்றுப் பயணம் செய்து புத்த, சமண சமயங்களை முடுக்கமாக எதிர்த்துப் போராடி மக்களைச் சைவர் ஆக்கினார்கள். இவர்களால் பாடப்பெற்ற தேவாரம், திருவாசகப் பாடல்கள் பின்னர் சைவ சமயத் திருமுறைகளாகத் தொகுக்கப்பெற்றன. இதனால், தமிழரின் சமய நெறிக்கும், மொழி வளர்ச்சிக்கும் பேருக்கமும் பேராளுமையும் ஏற்பட்டன. சைவ அடியார்களைப் போலவே வைணவ அடியார்களும் இறை நெறி இயக்கத்தை முடுக்கமாகப் பரப்புவதற்குப் பாடுபட்டார்கள். முதல் ஆழ்வார்கள் என்று சிறப்பித்துக் கூறப்படும் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும் பாடிய பக்திப்பாடல்கள் தமிழரின் தூய வாழ்வையும், தமிழின் மேன்மையையும் உயர்த்தின. இவர்களைத் தவிரத் திருமழிசை ஆழ்வார் என்பவரும் நரசிம்மவர்மன் காலத்தில் இருந்தார். இவர்களால் வைணவ சமயம் மறுமலர்ச்சி பெற்றது. இவர்கள் இயற்றிய தெய்வீகப் பாடல்கள் யாவும் 'நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்' என்னும் பெரு நாடாசுத் தொகுக்கப்பெற்றது. மகேந்திரவர்மன் காலத்தில் தொடங்கப்பெற்ற இறைநெறி இயக்கம் நரசிம்மவர்மன் காலத்தில் பெரிதும் வலுப்பெற்று விட்டதால் சமணமும் புத்தமும் குன்றிச் சைவம் தலைசிறந்து நின்றது. வைணவமும் மறுமலர்ச்சிபெற்றது. மேற்கூறிய இசைநெறி இயக்கத்தின் சின்னங்களாக வாதாபி கொண்ட நரசிம்மன் பலதிறப்பட்ட குடைவரைக்கோயில்களை மாமல்ல புரத்திலும், பரவலாகத் தமிழ்நாடெங்கணும் சமைத்தான். திருச்சியிலுள்ள குடைவரைக் கோயிலும், நாமக்கல் மலையடியிலுள்ள நரசிங்கப் பெருமாள் குடைவரைக் கோயிலும் இவன் காலத்தவையெனக் கருதப்படும் கின்றன. இவற்றைத் தவிர மாமல்லபுரத்தில் மகிடாசுர மண்டபம், வராக மண்டபம், திருமூர்த்தி மண்டபம் முதலியனவும் இன்று பஞ்சபாண்டவர் இரதங்கள்' எனப் பொதுவாக அழைக்கப்படும் ஒற்றைக் கற்றோர்களும் இம் மன்னனால் சமைக்கப்பட்டவையாகும். இவ்வாறு இவன் கலைக்கும், சமயத்திற்கும் ஒருங்கே பணிபுரிந்து உலகம் போற்றும் கலைச் செல்வத்தை மாமல்லையில் படைத்து, அதனோடு தானும் அழியாது நிற்கின்றான். மாமல்லபுரத்தில் பெரும் பாறைகளின்மீது இவனால் செதுக்கப்பெற்ற புடைப்போவியங்கள் உலகக் கலைஞர்களின் சுவனத்தை ஈர்ப்பனவாய் உள்ளன. அவற்றுள் கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடிக்கும் கண்ணனின் சிற்பமும், கங்கைக்கரைக் காட்சியும் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கனவாகும். இவனுடைய குடைவரைக் கோயில்களில் ஒற்றைக் கற்றேர்களிலும் பாறைச் சிற்பங்களிலும் காணப்படும் கலையழகு கலைஞரின் எண்ணத்தைக் கிளர்த்துவதாயுள்ளது. இவனால், திருச்சிக்கு அருகில் திருத்தவத்துறை லால்குடியையடுத்த பெருவளநல்லூரர் என்னும் ஊருக்கு அருகிலுள்ள பல்லாவரம் என்னும் சிற்றூரில் ஒரு கோட்டை சட்டப்பெற்றதென்றும், பின்னர், அவரது அழிந்துபட்டதென்றும் கூறுவர். தன் தோள்வலியாலும், மனவலியாலும், அறிவுத்திறத்தாலும் மேம்பட்ட நரசிம்மவர்மன், தான் சமைத்த கோவில்களிலெல்லாம் தனது விருதுப்பெயர்கள் பலவற்றை வெட்டுவித்துள்ளான். அவை மாமல்லன், ஸ்ரீபரன், ஸ்ரீமேகன், புவனமாஜன், அத்தியந்தக்காமன், அமேயமாயன், இரணசயன், நயநாங்குரன் முதலியனவாகும். மாமல்லபுரத்துத் திருமூர்த்திக் குடைவரையில் இவன் பெயர் 'மல்ல' என்று பல்லவக் கிரந்த எழுத்தில் செதுக்கப்பெற்றுள்ளது. திருக்கழுக்குன்றத்து ஒற்றைக் கல் மண்டபக். குடைவரையில் "வாதாபி கொண்ட நரசிங்கப் போத்தரசர்' என்று தமிழில் செதுக்கப் பெற்றுள்ளது. சமற்கிருதத்திலும் இவனுடைய விருதுப் பெயர்கள் பொறிக்கப்பெற்றுள்ளன. இத்தகைய பேரும் புகழும் பெற்று வாழ்ந்த மாமல்லனுடைய பல்லவப் பேரரசு வடக்கே வடபெண்ணையாறு முதல் தெற்கே வெள்ளாறு வரையில் பரவியிருந்தது. அதாவது இது தொண்டை நாட்டையும், சோழநாட்டையும் தன்னுள் கொண்டிருந்தது. தருமராசர் தேரில் இவனுடைய உருவம் புடைப்புச் சிற்பமாக அமைந் துள்ளது. இந்த உருவம் தனியே சமைக்கப்பட்டு இருப்பதாலும், காது சுளில் குண்டலங்களும், மார்பில் பூணூாலும், வெறுமேனியும் கொண்டு திகழ்வதாலும் இவனுடையசைவசமயப்பற்றை இதன் தோற்றத்திலிருந்து அறியக்கூடும் என்பர். இரண்டாம் மகேந்திரவர்மன் (கி.பி. 668-70) இரண்டாம் மகேந்திரவர்மன் முதலாம் நரசிம்மவர்மனுக்குப் பிறகு அரியணையேறினான். ஆனால், அவனுக்கு முடிசூட்டு விழா எப்போது நடந்தது. அவன் எத்தனையாண்டுகள் ஆண்டானென்பன பற்றிய திட்ட வட்டமான சான்றுகள் கிடைக்கவில்லை. பிற்காலப் பட்டையங்களிலும் இவனுடைய ஆட்சியில் நடந்த நிகழ்வுகள் பற்றிய குறிப்புகள் ஏதும் காணப்படவில்லை, ஆனால், இவன் அவ்வகுப்பார் ஒழுகவேண்டிய முறைகளைக் கூறும் அறநூல் வழி ஆண்டானென்று மட்டுமே வேலூர்ப் பாளையம் பட்டயம் கூறுகிறது. 'கடிகைகளை வளர்த்தான்" என்னும் குறிப்பிலிருந்து இவன் கல்விக்கூடங்களை யமைத்துக் கற்ற பார்ப்பனர் களை யமர்த்தி. அக் கால முறைப்படி கல்வியை வளர்த்தான் என அறிய லாம். சாளுக்கியர் பட்டையங்சுனில் மகேந்திரனின் புகழை விக்கிர மாதித்தன் மறையச் செய்தான் என்று கூறப்பட்டிருப்பதால், இவன் சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தனுடன் பொருதான் என்ற செய்தி அறியப்படுகிறது. இதைத் தவிர முன்னாள் மைசூர் மாநிலத்தில் சிமோகா மாவட்டத்திலுள்ள சத்தமனே என்னும் ஊரில் கன்னட மொழியில் காணப் படும் நடுகல் கல்வெட்டொன்றிலும் இவன் வடவரசன் ஒருவனுடன் போரிட்ட செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. முதலாம் பரமேசுவரவர்மன் (கி.பி.670-95) இவன் இரண்டாம் மகேந்திரவர்மனின் மகன் ஆவான். இவன் அளித்த கூரம், உன்னக்குரவப்பாளையம் ஆகிய செப்பேடுகளிலும், வேலுார்ப்பாளையம், உதயேந்திரம் ஆகிய செப்பேடுகளிலும், சாளுக்கியர் செப்பேடுகளிலும், பெரிய புராணம் முதலிய இலக்கியங்களிலும், மாமல்லபுரம் கல்வெட்டுகளிலும் இவனைப் பற்றிய குறிப்புகள் காணப்படு கின்றன, உன்னக்குரவப்பாளையம் செப்பேட்டிலிருந்து இவன் தோராய மாகக் சிபி, 568-59-ல் அரசுக்கட்டி போனான் எனக் கருத இடமேற்படு பல்லவர் - சாளுக்கியர் போர். இவன் காலத்தில் நடந்த பல முகாமை நிகழ்ச்சிகளில் இவன் -- சாளுக்கிய ரோடு பொருதி வெற்றிகண்டது சிறப்புடையதாகும். சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியின் மகனான முதலாம் விக்கிரமாதித்தன் கி.பி. 555-580) தன் தந்தை பல்லவரிடம் தோற்றுத் தலைநகரையிழந்த இழிவையெண்ணிப் பல்லவரைப் பழிவாங்கும் பொருட்டுத் தொண்டை நாட்டின் மீது படையெடுத்தான், முதலில் பல்லவரையெதிர்த்து வெற்றி பெற்ற இவன் காஞ்சியைக் கைப்பற்ற முற்பட்டான். சாளுக்கியரிடம் தோற்ற பல்லவர் படைகள் கோட்டை மதிலுக்குள் பதுங்கிக்கொண்டன. பின்னர், சாளுக்கியர் படைமதிலைத் துளைத்துக் காஞ்சியைக் கைப்பற்றிக் கொண்டது. இவ்வெற்றிக்குப்பின் விக்கிரமாதித்தன் காவிரிக்கரையிலுள்ள உறையூரில் வந்து தங்கினான். இதற்கிடையில் தோல்வியடைந்த முதலாம் பரமேசு வரவர்மன் ஆந்திரநாட்டிலிருந்து பெரும்படை திரட்டிக் கொணர்ந்து திருச்சிராப்பள்ளிக்கு அருகிலுள்ள பெருவளநல்லூரில் விக்கிரமாதித் தனைத் தோற்கடித்தான். போரில் தோற்ற விக்கிரமாதித்தன் உடுக்க உடையின்றிக் கந்தையைச் சுற்றிக்கொண்டு ஓடினானென்று கூரம் செப்பேடு கூறுகிறது. ஆக, சாளுக்கியர் பட்டயங்கள் விக்கிரமாதித்த னுடைய வெற்றிகளையும், பல்வேர் பட்டை யங்கள், பால்பவர் வெற்றிகளை யும் கூறுகின்றனவே யொழிய, அவரவர் தோல்விகளைக் கூறவில்லை. " எனவேதான் ஈராகப் பாதிரியார், சோவே துப்ராய்ல் போன்ற வரலாற் நாசிரியர்கள் இருதரத்தாரும் வெற்றியும், தோல்வியும் மாறிமாறிப் பெற்றுக் கடைசியாகப் பல்பவர் வாகை சூடியிருக்க வேண்டும் என்கின்றனர். காஞ்சிக் கயிலாசநாதர் கோயிற் கல்வெட்டொன்றில் 'பரமேசுவரன் வாதாபியை அழித்தானெனப் பொறிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து தன் பாட்டனைப் போலவே நரசிம்மவர்மனைப் போலவே சாளுக்கியர் தலை நகரினையும் அழித்து மீண்டானெனக் கொள்ளலாம். கலைப்பணி பரமேசுவரவர்மன் ஒரு சிறந்த சிவனடியான் ஆவான், நாடு முழுவதிலும் பல சிவன் கோயில்களைக் கட்டியதோடு பாழடைந்த கோயில்களைப் புதுப்பித்தான். இவ்வாறு இவன் கட்டிய கோயில்களுள் குறிப்பிடத்தக்கது காஞ்சிக்கு அருகிலுள்ள கூரம் என்னும் ஊரில் கட்டப்பட்ட சிறு கட்டுமானக் கோயிலாகும். தமிழகத்தில் கட்டடப்பட்ட முதற்கற்றளி இதுவேயெனக் கூறுவாருமுளர். முதலாம் மகேந்திரனே கற்கோயில்களையும் கட்டினானென்பதை ஏற்கனவே கூறியுள்ளோம். இச் சிவன் கோயிலுக்கு இவன் பரமேசுவரமங்கலம் என்னும் ஒரு சிற்றூரை மானியமாக அளித்தான் என்றும், இக் கோயில் “வித்யாவிந்த பல்லவ பரமேசுவர கிருகம்' என பெயர்பெற்றது என்றும் அறிகிறோம். - இவன் காலத்தில் கோயில்களில் காலமுறை தவறாமல் வழிபாடுகள் நடந்தனவென்றும் பொதுமக்களுக்காகக் கோயில்களில் பாரதம் படிக்கப் பட்டதென்றும் கூரம் செப்பேடுகளிலிருந்து அறிகிறோம். மாமல்லபுரத்திலுள்ள ஒற்றைக்கல்லாலான சுணேசர் தேரையும், இராமாநுசர் மண்டபத்தையும், தருமராசர்தேரில் மூன்றாவது மாடத்தை யும் இவன் சமைத்தானென்று கூறப்படுகிறது. கணேசர் தேரில் இவன் வெட்டுவித்த பதினோரு சமற்கிருதப் பாடல்கள் உள்ளன. இவை இவ னுடைய சிறந்த பண்புகளையும் சிவன் மீது இவன் கொண்ட பத்தியையும் சிறப்புறச் சிலேடையாகச் செப்புகின்றன. தருமராசர் தேரின் மூன்றாம் அடுக்கில் இரணசயன், அத்தியந்தக் காமன் என்னும் பட்டப்பெயர்கள் காணப்படுகின்றன. இதனால் இத் தேருக்கு அத்தியதந்தக் காமப் பல்லு வேசுரம்' என்ற பெயர் உண்டென்பதையும் அறிகிறோம், பரமேசுவரவர்மனுக்குச் சித்திரமாயன், குணபாசனன், அத்தியந்தக் காமன், ஸ்வஸ்தன், ஸ்ரீநிதி, ஸ்ரீபரன், இரண்சயன், தருணாங்குரன், காமராகன் முதலிய விருதுப் பெயர்களும் உண்டு. இவற்றிலிருந்து இவனுடைய சிவபக்தியையும், வீரத்தையும், இவன் வடமொழியில் பெற் திருந்த புலமையையும் நன்கு அறியலாம். இவன் கங்கரோடும் போரிட்டா னென்றும் கூறுவர். இச்செய்தியைக்கங்க மன்னன் சீவிக்கிரமன் (கிபி. 55() 7) பட்டயத்திலிருந்து அறிகிறோம். ஆனால், பல்லவர் பட்டயங்களில் இதற்கான சான்றுகள் இல்லை. இராசசிம்மன் (இரண்டாம் நரசிம்மவர்மன் - கி.பி. 695-722) பல்லவர்-சாளுக்கியர் போர் - முதலாம் பரமேசுவரவர்மனுக்குப் பிறகு அவன் மகன் இரண்டாம் நரசிம்மவர்மன் அரசுக்கட்டில் ஏறினான், அவனுடைய ரேயூருச் செப்பேடுகளிலிருந்து அவன் கி.பி. 700 ஆம் ஆண்டில் அரசுக்கட்டில் ஏறியிருக்கலாம் எனவும் கூறுகின்றனர். அவனுடைய கல்வெட்டுகள் யாவும் சமற்கிருதத்தில் உள்ளன. இக் கல்வெட்டுகளிலிருந்து அவனுக்கும், சாளுக்கிய அரசனான விநயாதித்தன் (கிபி 87-59 என்பவனுக்கும் போர் நடந்ததையறிகிறோம். எனவே, அவன் காலத்திலும் பல்லவ-சாளுக்கியர் போர் நடந்தது என்பதையறிகிறோம். சில ஆசிரியர்கள் அவன் காலத்தில் போரே நடக்கவில்லை எனக் கூறுவது தவறான கருத்தாகும். சாளுக்கியர் பட்டயங்களில் “சாளுக்கியர் மரபின் அழிவிற்கும், தாழ்விற்கும் பல்லவரே பொறுப்பாளிகள்' என்றும், 'விநயா தித்தன் பல்லவனது முழுப்படையையும் கைப்பற்றினான்; சோழர், பாண்டியர், சிங்களர் முதலியோரிடம் திறை வாங்கினான்' என்றும் கூறப்படுகின்றன. இதிலிருந்து விநயாதித்தன் பல்லவர், சோழர், பாண்டியர், சேரர் முதலியோரை ஒடுக்கி அமைதி உண்டாக்கப் பல படையெடுப்பு களை மேற்கொண்டான் என்பதும் புலனாகிறது. பல்லவர் கல்வெட்டுகளில் இரண்டாம் நரசிம்மவர்மன் பல படப் புகழப் பெற்றுள்ளான். அவனுடைய அறிவுக்கூர்மை, உடல் வலிமை, போர்த்திறன், அழகு, ஆண்மை , வீரம், மேன்மை , புகழ் முதலியன மிகச் சிறப்புற விவரிக்கப்பட்டுள்ளன. இதிகாச வீரர்களான அருச்சுனன், இராமன் முதலியோரின் விற்போருக்குச் சமமாக இவனுடைய வில்வலி புகழப்பட்டுள்ளது. உடல் வலியாலும் புகழாலும் இவன் நரசிம்ம அவதாரத்தை ஒத்தவன் என்றும், போரில் சிம்மன் போன்றவன்; போரில் மிகக் கொடியவன்; பகைவரை அழிப்பவன்; பகைவருக்கு இடியேறு போன்றவன்; வீணரையழிப்பவன்; மனவுறுதி யுடையவன்; செல்வத்தை யும், பேரரசுகளையும் கைப்பற்றுபவன்; களைப்படையாதவன்; இடிக்கும் இடி போன்றவன் என்றெல்லாம் கல்வெட்டுகளில் இவனுடைய வீரம் விளக்கப்பெற்றுள்ளது. இத்தகைய விளக்கங்களிலிருந்து இவன் பல போர்களில் ஈடுபட்டு வெற்றி கண்டவன் என்பதைத் தெளிவாக அறியலாம். ஆயின் இவனோடு போரிட்டவர்களில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவன் சாளுக்கிய மன்னனான விநய பாதித்தனே ஆவான். முதலாம் பரமேசுவரவர்ம னிடம் விநயாதித்தனுடைய தந்தையான முதலாம் விக்கிரமாதித்தன் . பெருவளநல்லூரில் முறியடிக்கப்பட்டான் என்பதை அறிவோம். தன் தந்தைக்கு ஏற்பட்ட இழிவைப் போக்கவும், பல்லவரைப் பழிவாங்கவும் விநயாதித்தன் பல்லவ நாட்டின் மீது படையெடுத்தான். இவ்வாறு இரண்டாம் புலிகேசியும், அவனுக்குப்பின் முதலாம் விக்கிரமாதித் தனும், அவனுக்குப் பின் விநயாதித்தனும் தொடர்ந்து பல்லவ நாட்டின் மீது படையெடுத்துத் தோல்வியையே சண்டனர். இனி விநயாதித் தனுக்கும் இரண்டாம் நரசிம்மவர்மனுக்கும் நடந்த போரினைச் சற்று விளக்குவோம். விநயாதித்தனுக்கும் இரண்டாம் நரசிம்மவர்மனுக்கும் எப்பொழுது போர் நடந்தது என்பது திட்டமாகத் தெரியவில்லை, ஆயினும் இவ் விருவருக்கும் கடுமையான போர் நடந்தது என்பதையும், அப்போரினால் நாட்டிலொரு கொடிய பஞ்சம் ஏற்பட்டதென்பதையும் கல்வெட்டுச் சான்றுகளிலிருந்து ஊகித்து அறிய முடிகிறது. பல்லவ நாடும், சாளுக்கிய நாடும் இப் பஞ்சத்தால் வாடினஎன்ற செய்தியை மட்டும் நாம் சுருக்கமாக அறியலாம். பல்லவர் - கங்கர் போர் இரண்டாம் நரசிம்மவர்மன் கங்கர் நாட்டின் மீது போர் தொடுத்தான். தாம் சாளுக்கியர்களுடன் போர் செய்து கொண்டிருந்த போது அவர்கள் தனக்கிழைத்த இன்னலுக்காக அவர்களைப் பழி வாங்கினான். கங்கபாடியை ஆண்ட முதலாம் சீமாறன்(கி.பி, பி.726) என்பவன் பல்லவனை வென்றான் என்று கங்கர் பட்டயம் கூறுகிறது. இத்தகைய மாறுபட்ட கருத்துகளால் யார் யாரை வென்றது என்ற உண்மையை உணரமுடியவில்லை. ஆயினும், பல்லவருக்கும், கங்கருக்கும் போர் நடந்தது மட்டும் உறுதியாகிறது. இம் மன்னன் திபெத்தியர்களோடு போர் புரிவதற்காகப் படைக் கலன்கள் கேட்டுச் சீனப் பேரரசருக்குத் தன் தூதுவனை அனுப்பினா னென்றும், அவன் வேண்டுகோளுக்கிணங்கச் சீனப் பேரரசனும் தம் படைக்கலங்களைக் கொடுத்து உதவினானென்றும் சீன வரலாற்றுக் குறிப்பொன்று கூறுகிறது. ஆனால், இவன் திபெத்தின் மீது படை யெடுத்தானா இல்லையா என்ற விவரம் அதில் குறிப்பிடப்படவில்லை, சமயம் இராசசிம்மன் என்ற சிறப்புப் பெயர் பெற்ற இம் மன்னன் ஒரு சிறந்த சிவபக்தன் ஆவான். தொடர்ந்து நடந்த பல்லவர் - சாளுக்கியர் போர்களாலும், பல்லவர் - கங்கர் போர்களாலும் நாட்டில் பெரும்பஞ்சம் ஏற்பட்டது. இப் பஞ்சம் மூன்றாண்டுகள் நீடித்தது. அப்பொழுது வச்சிரபோதி என்னும் புத்தப் பெரியார் காஞ்சிக்கு வந்தார் என்றும் இராசசிம்மன் பஞ்சம் நீங்க இறைவனை வேண்டுமாறு அப்பெரியாரை வேண்டிக் கொண்டதாகவும், அப் பெரியாரின் வேண்டுதலுக்கேற்ப மழைபெய்து பஞ்சம் நீங்கியதாகவும் சீன நூல் குறிப்பொன்று கூறுகிறது. பஞ்சம் நீங்கியபின் இராசசிம்மன் காஞ்சியிலிருந்த கடிகையைச் செம்மைப் படுத்தினானென்று வேலூர்ப்பாளையம் செப்பேடு கூறுகிறது. இதனை யடுத்து இவன் காஞ்சியில் கயிலாசநாதர் கோயிலையும், ஐராவதேச்சுரர் கோயிலையும், மாமல்லபுரத்திலுள்ள கடற்கரைக் கோயிலையும் பனை மலைச் சிவன் கோயிலையும் கட்டினான். இக் கோயில்களிலெல்லாம் இவனுடைய விருதுப்பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவ் விருதுப் பெயர்களிலிருந்து இவன் சிறந்த சிவ பக்தன் என்பதையும், சைவ சித்தாந்தத்தில் பேரறிவு உடையவன் என்பதையும், இசைக்கருவிகளை இசைப்பதில் சிறந்த கலைஞ னென்பதையும், சிறந்த இசைப்புலவன் என்பதையும் அறியலாம். பார்ப்பனர்களுக்குச் சிறந்த கல்லூரியை அமைத்து அதில் அவர்களைப் போதிக்கும்படி செய்தான் என்பதையும் தன் கீழுள்ள நிலங்களை அப் பார்ப்பனர் நுகருமாறு செய்தான் என்பதையும் இக் கல்வெட்டுகளிலிருந்து அறிகிறோம். இவனுடைய பத்தியை மெச்சிய சிவபெருமான் திருநின்றவூர் (திண்ணனூர்) என்ற இடத்தில் தன் அருளை வெளிப்படுத்தினாரென்று பெரியபுராணத்திலும், சுல்வெட்டுகளிலும் கூறப்படுகிறது. இம் மன்னனுக்கு அரங்கபதாகை என்று ஒரு தேவி இருந்தாள். இவள் சிறந்த கலைச்செல்வியாவாள். இவ னுடைய சிவபக்திக்கு மூலகரணியமாகவும் இவள் விளங்கினாள். பல்வேறு கோயில்களுக்கும் இவள் தன் பெயரால் மானியங்கள் அளித்தாள். பொருளியல் நிலைமை இராசசிம்மன் காலத்தில் மூன்றாண்டுகள் நீடித்த ஒரு கொடிய பஞ்சம் ஏற்பட்டதைச் சீன நூல் வாயிலாகவும் அறிந்தோம். இக்கொடிய பஞ்சத்தால்தான் திருநின்றவூரிலிருந்த பூசலார் என்ற சிவபத்தர் தான் விரும்பியபடி கோயில் அமைக்கமுடியாமல் தம் மனத்திலேயே சிவனுக்குக் கோயில் எடுத்தார் என்பதனைப் பெரிய புராணம் வாயிலாகவும் அறிகிறோம். மேலை நாட்டவரான அரேபியரும், கீழை நாட்டவரான சீனர்களும் வாணிகத்தில் தங்களுக்குள் போட்டியிட்டுக் கொண்டதால் தமிழ்நாட்டு வாணிகம் பாதிக்கப்பட்டது. புதிதாகப் பேரரசாக வளர்ந்த திபெத்து, சீனாவை அடக்கியது. இதனால் சீனாவோடு உறவு கொண் , டிருந்த பல்லவர் பெரிதும் பாதிக்கப் பட்டனர். ஆகவே இராசசிம்மன் காலத்தில் பொருளியல் நெருக்கடியும் பஞ்சமும் ஏற்பட்டதில் வியப் பொன்றுமில்லை. ஆயினும், அவன் தன் தோள்வலியால் துண்டை அயலவர்களை வென்றும், சீன நாட்டோடு உறவு கொண்டும் பொரு, ளியலைப் பெருக்கிக்கொண்டான். இப் பொருளியல் வளத்தை இவ னுடைய கயிலாசநாதர் கோயிலிலும், கடற்கரைக் கோயிலிலும் பனை மலைக்கோயிலிலுமுள்ள கலைச் செல்வத்தால் கணித்து உணரலாம் இவன் காலத்தில் பல்லவராட்சி பல தீவுகளிலும் நிலவியிருந்தது என்பதை யும் கிழக்கிந்தியத் தீவுகளிலிருந்த அரசர்களுடன் இவன் நட்புறவு வைத் திருந்தான் என்பதையும் கொண்டு பல்லவநாடு அயலக வாணிகத்தால் வளர்ச்சியடைந்தது எனக் கூறலாம். கலைப்பணிகள் இராசசிம்மன் ஒரு தலைசிறந்த கலைஞன். இவன் சமைத்த கயிலாச நாதர் கோயில் அக் காலத்தில் உலக நாடுகள் அனைத்திலும் காணமுடியாத சிறந்த சிற்பங்களைக்கொண்டு திகழ்ந்தது. இன்றும் நம்மைக் கவர்ந்து திற்கும் கடற்கரைக்கோயில் இவன் படைப்பே யாகும். சுருங்கக்கூறின் மாமல்லபுரமே ஒரு சிறந்த நகரமாக அமைக்கப் பட்டது இவன் காலத்தில் தான். அங்குக் காணப்படும் பாறைச் சிற்பங்கள் இவன் காலத்தவையாகும். இத்தகைய கலைப் பணிக்கே யன்றி மொழிப்பணிக்கும் இவன் சிறந்த காவலனாகக் கருதப் படுகிறான். இவனால் ஆதரிச்சப்பட்டதண்டி என்னும், புலவர் பெயர் பெற்ற 'தண்டியலங்காரம்' என்னும் இலக்கண நூலை எழுதியுள்ளார். "காவியதர்சம்" என்னும் நூலையும் இவர் எழுதியுள்ளார். இராசசிம்மன் ஒரு சிறந்த சமற்கிருதப் புலவனும் ஆவான். இசை, நடனம், ஓவியம், சிற்பம் ஆகிய கலைகளில் வல்லவனாகவும் இருந்தான். இவன் ஒரு சிறந்த நாடக அறிஞனாகவும் விளங்கினான். இதற்காகத்தான் இவனுக்கு "வாத்யவித்யாதரன்' என்னும் பட்டப்பெயர் ஏற்பட்டது. இவன் காலத்தில் கட்டப்பட்ட கயிலாசநாதர் கோயிலில் இத்தகைய கலைச்செல்வங்கள் அனைத்தையும் ஒருங்கே காணலாம். இதனால் தான் இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் காஞ்சியைக் கைப்பற்றிய வல்லபன் என்ற சாளுக்கிய மன்னன் கயிலாசநாதர் கோயில் கலைச்செல்வத்தைக் கண்டு வியந்து அதனை அழிக்காது விட்டு விட்டுச் சென்றான் என்று சாளுக்கியப் பட்டை யங்கள் பசுருகின்றன. இரண்டாம் பரமேசுவரவர்மன் (கி.பி. 122-730) இராசசிம்மனுக்குப் பிறகு அவன் மகனான இரண்டாம் பரமேசுவர வர்மன் அரசுக் கட்டில் ஏறினான். இவனுடைய மூன்றாவது ஆட்சி யாண்டில் வெளியிடப்பட்ட கல்வெட்டு ஒன்று வீரட்டானேச்சுரர் கோயிலில் காணப்படுகிறது. இதைத் தவிர இவன் வரலாற்றை அறிவதற் கான சான்றுகள் ஏதும் காணப்படவில்லை. இதனால் இவன் சிறிது காலமே அரசாண்டிருக்க வேண்டுமெனக் கருதுகின்றனர். காசாக்குடிச் செப்பேட்டில் இவன் பரமேச்சுவரபோத்தவர்மன்' எனக் குறிப்பிடப்படு கிறான், பல வகையான செல்வங்களையும், அரசர் களையும் வெற்றி கொண்ட புகழாகிய செல்வங்களையும் உடையவன் என்றும் பிரகசுபதி யின் நயன்மைவிதிகளின்படி நாட்டை நடத்திச் செல்பவனென்றும், தன்னுடைய அறிவுத்திறனால் எல்லா உலகங் களையும் காப்பவனென்றும் அப் பட்டையத்தில் இவன் போற்றப்படு கிறான். மேலும், இப்பட்டயத்தி லிருந்து இவன் அமைதியான வாழ்க்கையை நடத்தினான் என்பதையும் அறிகிறோம், வேலூர்ப் பாளையம் பட்டயத்திலும் இவன் "மனுநீதி" முறைப்படி நாட்டை யாண்டு “கலி நீங்கும்படிச் செங்கோல் செலுத்தி னான் எனப் புகழப் பட்டுள்ளான். இவன் காஞ்சியிலுள்ள பரமேச்சுர விண்ணகரம் எனப்படும் வைகுந்தப் பெருமாள் கோயிலைக் கட்டியவன் என ஆர்கோபி நாதராவ் போன்ற அறிஞர்கள் கூறுகின்றனர். திருவதிகையி லுள்ள சிவன் கோயிலைக் கற்றளியால் அமைத்தவன் இவனே யென்றும் கூறுவர். ஆனால், இக்கோயில் இவன் தந்தையால் சுட்டப் பட்டதே என்பதை நாம் ஏற்கனவே கூறியுள்ளோம். இவனுடைய ஆட்சியின் இறுதியாண்டுகளில் சாளுக்கியர்கள் பல்லவ நாட்டின்மீது படையெடுத்தார்கள் என்பதை உள்களக் கல்வெட்டிலிருந்து அறிகிறோம், விளந்தை என்ற ஊரில் நடைபெற்ற போரில் இவனைக் கங்க மன்னன் சீபுருசன் என்பான் கொன்றான். பரமேசுவரன் இறந்த பிறகு நாட்டில் அரசுரிமைக் குழப்பம் ஏற்பட்டது. இந் நிலையில் பல்லவ நாட்டின் அரசுரிமையை ஏற்க யாருமே முன்வர வில்லை. இதனால், மக்கள் பல்லவரின் இளைய கால்வழியைச் சேர்ந்த இரணியவர்மன் என்பவனிடம் சென்று தங்கள் நாட்டை ஆளுவதற்குத் தக்க அரசனை அனுப்புமாறு வேண்டினர். அவர்களின் வேண்டுகோளுக் கிணங்க அவன் பன்னிரண்டு அகவை நிரம்பிய தன் இளைய மகன் பரமேசுவரன் என்பவனைப் பல்லவ நாட்டிற்கு அரசனாக அனுப்பினான். இரண்டாம் பரமேசுவரவர்மன் இறந்த பின் நாட்டில் ஏற்பட்ட குழப்பத் தையும் அதனைப் போக்க அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சியினையும், இரணியவர்மனிடம் முகாமையானோரும் மகாசாமந்தரும் சென்று வேண்டி, பரமேசுவரகனை அரசனாகப் பெற்றதையும் காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோயிலிலுள்ள புடைப்போவியச் சிற்பங்களிலிருந்தும், கல்வெட்டுகளிலிருந்தும் அறிகிறோம். பரமேசுவரன் என்னும் இயற்பெயர் கொண்ட பன்னிரண்டு அகவை நிரம்பிய சிறுவனைப் பல்லவ நாட்டின் அரசுக்கட்டிலேறுவதற்கு மக்கள் அழைத்துச் சென்றபோது அவனை அரசவை அலுவலர்களும், உயர் அதிகாரிகளும், அமைச்சர்களும் பிற பெரியோர்களும் எதிர்கொண்டு அழைத்துச் சென்று அரசுக் கட்டிலில் அமர்த்தினார்கள் என்பதையும் இக் கல்வெட்டுகள் சிறப்பு எடுத்துக்காட்டுகின்றன. தந்திவர்ம பல்லவ மல்லன் (இரண்டாம் நந்திவர்மன் - கி.பி. 730-95) இதுவரை நாம் சிம்மவிசுணுவின் மரபில் வந்த பல்லவ அரசர் சுகளைப் பற்றிப் பார்த்தோம். இம் மரபில் கடைசி அரசனான இரண்டாம் பரமேசுவரவர்மன் கி.பி. 722-730) இறந்த பின் இளைய மரபைச் சேர்ந்த இரணியவர்மனின் கடைசி மகனான பரமேசுவரனை மக்கள் அழைத்து வந்து அரியணையேற்றினர். இவன் 'நந்திவர்ம பல்லவ மல்லன்' என்ற பட்டத்துடன் முடிசூட்டிக் கொண்டான். தொடர்ந்து வந்த பல்லவர் வரலாற்றில் இவனை வரவாற்று ஆசிரியர்கள் இரண்டாம் நந்திவர்மன். என்றே குறிப்பிடுகின்றனர், இவனைத் தொடர்ந்து ஆண்ட அரசர்கள் 'புதிய பல்லவ மரபினர்' அல்லது இளைய கால்வழியினர்' என்று அழைக்கப் பெற்றனர். இவன் அரசுசட்டில் ஏறுவதற்குச் சில தடைகள் இருந்ததாகவும், காலஞ்சென்ற இரண்டாம் பரமேசு வரவர்மனுக்குச் சித்திரமாயன் என்ற ஒரு மகன் தனக்கு அரசுரிமை வேண்டுமென்று கலகம் செய்ததே அதற்குக் கரணியம் என்று கூறுவர். இரண்டாம் நந்திவர்மனைப்பற்றி அறிவதற்கு நமக்கு ஏராளமான சான்றுகள் கிடைக்கின்றன. பல்லவர் செப்பேடுகள், பாண்டியர் செப்பேடுகள், சாளுக்கியர் செப்பேடுகள், இராட்டிரகூடர் செப்பேடுகள், வைகுந்தப் பெருமாள் கோயில் சிற்பங்கள், கங்கர் கல்வெட்டுகள், திருமங்கையாழ் வார் பாடல்கள் ஆகியவை இவனுடைய வரலாற்றையறிய உதவும் முகாமைச் சான்றுகளாகும். பல்லவர் பட்டயங்களுள் இவனால் வெளியிடப்பட்ட உதயேந்திரம் பட்டயம், காசாக்குடிப் பட்டயம், தண்டன் தோட்டப் பட்டயம், கொற்றங்குடிப் பட்டயம் ஆகியவை சிறப்பான மூலச்சான்றுக னாகும்." பல்லவர் - சாளுக்கியர் போர் நாம் ஏற்கனவே சாளுக்கியருக்கும், பல்லவருக்குமிடையே நடந்த போர்களைப்பற்றி அறிந்தோம், மகேந்திரன்-புலிகேசி போர், நரசிம்ம வர்மன்-புலிகேசி போர், பரமேசுவரவர்மன்-விக்கிரமாதித்தன் போர், இராசசிம்மன்-விநயாதித்தன் போர், இரண்டாம் பரமேசுவரவர்மன் - சாளுக்கியர் போர் என்று பல்லவருக்கும், சாளுக்கியருக்குமிடையே தொடர்ந்து பல போர்கள் நடந்ததை விவரித்துள்ளோம், பல்லவர் சாளுக்கியர் பகைமை தொடர்ந்து இரண்டாம் நந்திவர்மன் காலத்திலும் போராக வெடித்தது. இரண்டாம் நந்திவர்மன் அரசுக் கட்டிலேறிய சில ஆண்டுகளுக்குள் தோராயமாக கிபி. 740 சாளுக்கிய நாட்டை யாண்ட இரண்டாம் விக்கிரமாதித்தன்(கி.பி 733-746 காஞ்சிபுரத்தின் மீது படையெடுத்தான். இப்போரின் நிகழ்ச்சியைப்பற்றி சாளுக்கியர் பட்டயங் களே விரித்துரைக்கின்றன. இரண்டாம் விக்கிரமாதித்தன் பல்லவரைப் பழிவாங்கக் காஞ்சியின் மீது படையெடுத்துப் பல்லவமல்லன்னத் தோற் கடித்தான். தோற்றுவிட்ட பல்லவன் காஞ்சியைக் கைவிட்டு ஒரு கோட்டைக்குள் ஓடி ஒளிந்து கொண்டான்; காஞ்சி சாளுக்கியர் வசப் பட்டது. பல்லவனுடைய கடுமுசுவாத்தியம், சமுத்திரகோசம், கத்வாங்கம், போர்யானைகள், விலையுயர்ந்த மணிகள் ஆகியவற்றைச் சாளுக்கியன் கைப்பற்றினான். ஆனால், கயிலாசநாதர் கோயில் சிற்பச் செல்வங்களைக் கண்டு வியந்து அதனை அழிக்காமல் விட்டுவிட்டான்; ஏழைகளுக்கும், பார்ப்பனர்களுக்கும் பொன்னை வழங்கினான். நந்திவர்மன் சேர, சோழ, பாண்டியர்களோடு போரில் கடுமையாக ஈடுபட்டிருந்தபோதுதான் விக்கிரமாதித்தன் காஞ்சியைக் கைப்பற்றினான் என்றும், சிறிது காலம் காஞ்சியில் இருந்துகொண்டு கடிகையார், கோயிலார் மனம் மகிழப் பரிசுகள் வழங்கியதோடு தனக்கு முந்திய சாளுக்கியர்கள் கைப்பற்றிச் சென்றிருந்த விலையு யர்ந்த அணிகலன்களை யும், கடிகைக்கும் கோயில்களுக்கும் திருப்பித் தந்தான் என்றும் கூறுகின்ற னர். தமிழகத்திலிருந்த கைதேர்ந்த சிற்பிகளைத் தன் நாட்டிற்கு அழைத்துச் சென்று பட்டடக் கல் முதலிய இடங்களில் தமிழகப் பாணியில் பல கோயில்களையும் இம் மன்னன் சுட்டுவித்தான். காஞ்சியை இழந்த நந்திவர்மன்திறன்மிக்கதம் படைத்தலைவனான உதயசந்திரன் என்பவனுடைய துணைகொண்டு காஞ்சியை மீட்டுத் கொண்டான். இராட்டிரகூட அரசிளங்குமரியான ரேவா என்பவளை மணந்து அவள் வழிதந்திவர்மன் என்பானை மகனாகப் பெற்றான். இவன் தன் தாய்வழிப் பாட்டனான தந்திதுருக்கன் நினைவாகத் தந்திவர்மன் என்று பெயர் சூட்டப்பெற்றான் போலும். பல்லவர் - பாண்டியர் போர் நந்திவர்மன் (கொங்கு நாட்டின் மீது நடரிமை கொண்டாடி அதனைத் தன் நாட்டுடன் சேர்த்துக் கொள்வதற்காகப் போர் தொடுத்தான். அவ் வமையம் பாண்டிய நாட்டையாண்டுவந்த அரிகேசரி பராங்குச மாற வர்மன். நந்திவர்மனோடு பொருதி நின்றான். குடந்தைக்கு அருகிலுள்ள நாதன் கோயில் என்னும் பெருமாள் கோயிலையடுத்த கோட்டைக்கு நந்திபுரக் கோட்டை என்பது பெயர். இது பல்லவ நாட்டின் தென்புறக் காவற்கோட்டையாகத் திகழ்ந்தது. தஞ்சை சுண்டியூருக்கு அருகிலுள்ள வீரசிங்கம் பேட்டைப் பகுதி பண்டு நந்திபுரம் என்ற பல்லவர் கோநகரமாக விளங்கியது. அக்கோட்டையில் தங்கியிருந்த நந்திவர்மனைப்பாண்டியன் திடீரென தாக்கியதால் நந்திவர்மன் கோட்டைக்குள் அகப்பட்டுத் தவித்தான். இதனையறிந்த வில்வளம் என்னும் ஊருக்கும் வேகவதி யாற்றுக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியின் தலைவனாக இருந்த உதய சந்திரன் தன் படையுடன் சென்று பாண்டியனைத் தாக்கிப் பல்லவனை மீட்க முற்பட்டான். பாண்டியன் படைகளை இவன் நிம்பவனம், சூத் வனம், சங்கர கிராமம், மண்ணைக்குறிச்சி, குரவழுந்தூர் முதலிய இடங் களில் தோற்கடித்தான். இறுதியில் இப்போர் பல்லவருக்கு வெற்றியாக முடிந்தது. பல்லவர் - கங்கர் போர் – இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் கங்கநாட்டையாண்டவன் சீபுருசன் கிபி. 775-778) என்பவன் ஆவான். இவனுக்கு ஸ்ரீபுருசகொங்கணி, மகாதிராசா என்ற பட்டப்பெயர்கள் உண்டு. இவன் பெயரில் இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபுருசமங்கலம் சீயமங்கலம்) ஏற்பட்டது. போரின் தொடக்கத்தில் கங்க மன்னன் வெற்றி கண்டான், பல்லவரின் கொற்றக் குடையையும், 'பெருமானபு' என்ற விருதையும் பறித்துக்கொண்டான். ஆனால், போரின் இறுதியில் நந்திவர்மனே வெற்றி பெற்றான். கங்கர்களுக்குச் சொந்தமான "கங்கபாடி- ஆறாயிரம்' என்ற நிலப்பகுதியைக் கைப்பற்றிப் போரில் தனக்கு உதவியாக நின்ற பாண மன்னனுக்கு அளித்தான். இவ்வாறே தனக்கு உறுதுணையாய் நின்ற உதயசந்திரனுக்கு நன்றியறிதல் கடனாகப் பாலாற்றங்கரையின் மேலிருந்த குமாரமங்கல வெள்ளட்டும் என்ற ஊரின் பெயரை மாற்றி 'உதயசந்திர மங்கலம்' என்று பெயரிட்டான். இச் சிற்றூரை நூற்றெட்டுப் பார்ப்பனர் களுக்குத் தானமாக வழங்கினான் என்று உதயேந்திரம் செப்பேடுகள் கூறுகின்றன. அங்கு ஏற்கனவே குடியிருந்த மக்களை அகற்றிவிட்டுப் பார்ப்பனர்கள் அங்குக் குடியேற்றப்பட்டனர். இந்தப் பார்ப்பனர்கள் யாவரும் வடஇந்தியாவினின்றும் வரவழைக்கப்பட்டுக் குடியமர்த்தப் பட்டவர்களே யாவர். சமயப்பணி இரண்டாம் நந்திவர்மன் ஒரு சிறந்த வைணவன் ஆவான். இவனைக் காசாக்குடிச் செப்பேடு 'அரிசரனபலன்' என்றும், தண்டன் தோட்டப் பட்டயம் முகுந்தன் திருவடிகளைத் தவிர வேறொன்றிற்கும் அவன் தலை வணங்கவில்லை" என்றும் கூறுகின்றன. திருமங்கையாழ்வார் பாடியருளிய நந்திபுர விண்ணகரப்பதிகம், பரமேச்சுர விண்ணகரப்பதிகம் ஆகியவற்றி விருந்தும், கொற்றங்குடிச் செப்பேட்டிலிருந்தும் இவனை ஒரு சிறந்த வைணவன் என்றே அறிய முடிகிறது. காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோயிலையும் முத்தே கவரர் கோயிலையும் கூரத்திலுள்ள கேசவப் பெருமாள் கோயிலையும், திருவதிகை வீரட்டானேசுவரர் கோயிலை யும், புதுக்கோட்டை குன்றாண்டார் கோயிலையும் இவன் கட்டியதோடு பல்வேறு கோயில்களுக்கும் தானங்கள் வழங்கினான். இவன் ஒரு சிறந்த வைணவனாயினும் இவன் காலத்தில் சிறப்புற்றிருந்த சமண சமயத்தையும் இவன் ஆதரித்தான், ஆர்க்காடு நகருக்கருகிலுள்ள பஞ்சபாண்டவர் குகை என வழங்கப்படும் குடைவரையை இவன் சமணத் துறவிகளுக்காகக் குடைவித்தானெனக் கூறுவர். கல்விப்பணி இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் நான்கு வேதங்கள், ஆறு அங்கங்கள் முதலிய மறையியலில் வல்ல பார்ப்பனர்கள் குமுகாயத்தில் முதலிடம் பெற்றுத் திகழ்ந்தனர். அவர்களுக்குப் பலதர்கள் தானங்களாக வழங்கப்பட்டன. செய்யுள், கூத்து, இதிகாசம் கதைகள் இவற்றில் வல்லவ ரென்றும், எல்லாவகைச் சடங்குகளிலும் தேர்ச்சியுற்றவரென்றும், நல்ல ஒழுக்கமுடையவரென்றும், இருள கற்றும் ஒளியனையரென்றும், காசாக் குடிச் செப்பேடுகளில் இவர்கள் போற்றப்படுகின்றனர். கடிகை எனப்படும் சிறந்த பல்கலைக்கழக நிறுவனத்தில் குடியமர்த்தப்பட்ட இவர்களால் சமற்கிருத இலக்கியங்களும், தொல்கதைகளும், இதிகாசங்களும், மறை சுளும், பிறவும் வளர்க்கப்பட்டன. பல்லவ மல்லனே சிறந்த கல்விமானாக வும், இசைப்புலவனாகவும், செய்யுள் புலவனாகவும், பிரகசுபதி போன்ற அறிவுக் கூர்மையுடையவனாகவும் விளங்கினானென்று பட்டையங்கள் பகருகின்றன. தந்திவர்மன் (கி.பி. 796-846) இரண்டாம் நந்திவர்மனுக்குப் பிறகு மணிமுடி சூட்டிக் கொண்ட வன் இவன் மகன் தந்திவர்மனாவான். இவன் இராட்டிரகூட அரசிளங் குமரியும், இரண்டாம் நந்திவர்மனின் பட்டத்தரசியுமான ரேகாவுக்குப் பிறந்தவனாவான். இவனுக்கு வயிரமேகன்' என்ற விருதுப் பெயரும் உண்டு. இவனுடைய செப்பேடுகள், கல்வெட்டுகள் ஆகியவைகளி லிருந்து இவன் குறைந்தது 5 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தான் எனக் கூறலாம், பல்லவர் - இராட்டிரகூடர் போர் தந்திவர்மனின் தாயான ரேவாவின் தந்தை தந்திதுர்க்கன் இறந்தபின் அவன் மாமனான முதலாம் கிருட்டிணன் இராட்டிரகூட அரசனானான். சாளுக்கிய மரபையழித்த இவன் எல்லோராவிலுள்ள கயிலாசநாதர் கோயிலைக் கட்டுவித்துவிட்டுக் கிபி.727ல் இறந்தான். இவனுக்குப் பிறகு துருவன் என்னும் இவனுடைய இளையமகன் இராட்டிரகூட அரசனா னான். இவனுடைய மூத்த மகனான கோவிந்தன் என்பவனுக்கும், துருவனுக்கு மிடையே போர் ஏற்பட்டது. துருவனுக்குப் பல சிற்றரசர்கள் உதவினார்கள். கோவிந்தனுக்கும் கங்கபாடி, வேங்கி அரசர்களும், பல்லவ அரசன் தந்திரவர்மனும் உதவி செய்தனர். ஆனால், போரின் முடிவில் துருவனே வெற்றிபெற்றான். வெற்றி பெற்ற துருவன் தன் அண்ணனுக்குத் துணையாக நின்ற கங்கபாடி, வேங்கி அரசர்களை வென்று, காஞ்சியை முற்றுகையிட்டுத் தந்திவர்மனைத் தோற்கடித்தான். தந்திவர்மன் துருவனுக்கு அடங்கித் திறை செலுத்த ஒப்புக் கொண்டான், துருவன் கிபி.794-ல் இறந்தான். தான் இறப்பதற்கு முன் கோவிந்தன் என்ற தனது மூன்றாம் மகனுக்கு முடிசூட்டினான். மீண்டும் இராட்டிரகூட நாட்டில் அரசுரிமைப் போர் தொடங்கியது. முதல் மகனான கம்பரசன் அரசுக்கட்டிலேறிய மூன்றாம் கோவிந்தனஎதிர்த்துப் போரிட்டான். இப் போரிலும் அரசர்கள் இருபக்கங்களிலும் பிரிந்து நின்றனர். இதனடிப் படையில் மூன்றாம் கோவிந்தன்-தந்திவர்மனைத் தோற்கடித்தான். இதனைப் பல்லவருக்கும், இராட்டிரகூடருக்கும் நடந்த இரண்டா வது போர் எனலாம். மூன்றாவது முறையாகவும் பல்லவருக்கும், இராட்டிரகூடருக்கு மிடையே போர் மூண்டது. மூன்றாம் கோவிந்தன் வடநாடுகளை வெற்றி கொள்ளச் சென்றிருந்த சமயம் கங்கபாடி அரசனும், தந்திவர்மனும், சேர், சோழ பாண்டியர்களும் ஒன்று சேர்ந்து அவனுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர். வடநாடுகளிலிருந்து மீண்ட மூன்றாம் கோவிந்தன் தந்தி வர்மனைத் தோற்கடித்துத் தனக்குத் திறை செலுத்தி அடங்கியிருக்குமாறு செய்தான், இவ்வாறு தந்திவர்மன் காலத்தில் இராட்டிரகூட அரசன் துருவன் ஒரு முறையும், மூன்றாம் கோவிந்தன் இருமுறையும் பல்லவர் நாட்டின் மீது போர் தொடுத்தனர். இதனால் பல்லவ நாட்டின் பொருளியல் சீர்குலைந்தது; பல்லவப் படையின் பெரும்பகுதி அழிந்தது. பல்லவர்-பாண்டியர் போர் பாண்டிய நாட்டையாண்ட வரகுணபாண்டியன் (கி.பி. 800-830) தகடூரை ஆண்ட அதிகனை எதிர்த்தபோது தந்திவர்மன் அதிகனை ஆதரித்தான். இப் போரில் வரகுணபாண்டியன் அதிகனையும், தந்தி வர்மனையும் அவர்களோடு சேர்ந்த சேரனையும் தோற்கடித்தான். முடிவில் பல்லவ நாட்டுக்குச் சொந்தமான சோழநாட்டுப் பகுதியையும், தொண்டை நாட்டில் பெண்ணையாற்றங் கரையிலுள்ள பகுதியையும் பிடித்துக் கொண்டான். இவ்வாறு தந்திவர்மன் வடக்கே இராட்டிரகூடர்களையும், தெற்கே பாண்டியர்களையும் தனக்குப் பெரும் பகைவர்களாகப் பெற்று அல்லலுற்றான். சுருங்கக்கூறின் இவன் இராட்டிரகூடருக்கு அடங்கித் திறை செலுத்திக்கொண்டு வந்ததால் பாண்டியரையும் எதிர்க்கத்திறனற்றவு னாகி விட்டான். தந்திவர்மன் இத்தகைய போர்களுக்கு இடையிலும் தன் நாட்டில் நீர்ப்பாசன ஏந்துக்காகப் பல ஏரிகளை வெட்டுவித்தான். திருச்சிக்கோட் டத்தில் ஆலம்பாக்கம் என்னும் சிற்றுாருக்கு அருகிலுள்ள மார்ப்பிடுகு ஏரி, புதுக்கோட்டையிலுள்ள வாலியேரி, திருவெள்ளறை என்னும் ஊரிலுள்ள மார்ப்பிடுகு பெருங்கிணறு, திருச்சியையடுத்த வைரமேகன் வாய்க்கால்; திருவிப்பிரம்பேட்டுஏரி முதலியன இவன் காலத்தில் வெட்டப்பட்டவை யாகும், திருச்சிக் கோட்டத்திலுள்ள ஆலம்பாக்கத்திற்குத் 'தந்திவர்ம மங்கலம்' என்று பெயரிட்டு, அங்குக்கயிலாசநாதர் கோயில் ஒன்று கட்டிப் பார்ப்பனர்களுக்கு அவ்வூரை பிறகு தானமாக வழங்கினான். இவன் சிறந்த வைணவனாயினும் சிவனுக்கும் கோயிலெடுத்தான் என்பதை இதிலிருந்து அறிகிறோம். காஞ்சியிலுள்ள பரமேச்சுர விண்ணகரம் எனப்படும் வைகுந்தப் பெருமாள் கோயிலுக்குப் பொற்குடம் ஒன்றையும் தானமாக அளித்தான். இதைப்போலவே பல்வேறு கோயில்களுக்கும் பார்ப்பனர் களுக்கும் இவன் வழங்கிய மானியங்களையும் தவசங்களையும் பட்டையச் சான்றுகளிலிருந்து அறியலாம். சென்னை நகரிலுள்ள திருவல்லிக்கேணிப் பார்த்தசாரதி கோயிலில் அதன் அன்றாட பூசையும், அமுதூட்டலும் நடைபெற இவன் ஏற்பாடு செய்த மானியமுறை சிறப்பாகப் பொறிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு இவன் தன் நாடு முழுவதிலுமிருந்த பல கோயில் களுக்கும் தானம் செய்ததை அறிகிறோம். மூன்றாம் தந்திவர்மன் (கி.பி. 846-869) இவன் தந்திவர்மனின் மகன் ஆவான். தந்திவர்மன் கதம்ப அரசன் மகளை மணந்தான் என்ற செய்தி பட்டயங்களில் சிறப்பாகப் பேசப்படும் கிறது. மூன்றாம் நந்திவர்மன் அந்தக் கதம்ப இளவரசியின் மகனாக இருக்க வேண்டுமென்பதை வேலூரர்ப்பாளையம் பட்டயத்தி லிருந்து தகிக்க முடிகிறது. இவனுக்குத் தெள்ளாறெறிந்த நந்திவர்மன்' என்ற விருதுப் பெயர் உண்டு. இதனை இவனது பத்தாம் ஆட்சி யாண்டில் வெளியிடப் பட்ட கல்வெட்டு ஒன்றில் காணலாம். அக் கல்வெட்டு திருநெய்த்தானம் (தில்லைஸ்தானம்) கோயிலில் உள்ளது. இவனுடைய தெள்ளாறு வெற்றியைப் புகழ்ந்து "நந்திக்கலம்பகம்' பாடப்பட்டுள்ளது. அதில் இவன் திங்கள் மரபினன்; சேர, சோழ, பாண்டியரை வெறியலூர், பழையாறு, வெள்ளாறு, தெள்ளாறு இவற்றில் நடந்த போர்களில் முறியடித்தவன்; மூவேந்தரிடமும், வடபுலத் தரசரிடமும் திறைபெற்றவன் என்பன போன்ற செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவனுடைய விருதுப்பெயரான 'அவணி நாராயணன்' என்ற பெயரால் காவேரிப்பாக்கம் என்ற ஊர் ' அவனி நாரண சதுர்வேதி மங்கலம்" என்று பெயர்பெற்றது. இவன் காலத்தில் தமிழ் நாட்டு வணிகனொருவன் சயாம் நாடு சென்று ஒரு குளத்தை வெட்டி அதற்கு 'அவனி நாரணன் குளம்' என்று பெயரிட்டான் என்பதையறியும் போது இவன் காலத்தில் தமிழகம் பெற்றிருந்த கடல் வாணிகவளர்ச்சியை அறிய முடிகிறது. நந்திக் கலம்பகத்தில் இவனிடம் ஒரு சிறந்த கடற்படை இருந்ததாகவும் கூறப்படுகிறது, பல்லவர் - இராட்டிரகூடர் போர் தந்திவர்மன் காலத்தில் பல்லவநாட்டை இருமுறை வென்ற இராட்டிரகூட அரசன் மூன்றாம் கோவிந்தன் இறந்தபிறகு அவனுடைய ஆறு அகவையே நிரம்பிய முதலாம் அமோகவர்சன் அரசனானான். தன் தந்தை இராட்டிரகூடருக்குப் பணிந்து திறை செலுத்தி வரும் இழிவைப் போக்க வெண்ணி மூன்றாம் நந்திவர்மன் இராட்டிரகூடர்மீது போர் தொடுத்தான். இவனுடைய வீரச் செயல்களையும் வென்ற தர்களையும் நந்திக்கலம்பகம் சிறப்புறச் செப்புகிறது. இவனது வடபுல வெற்றியை வேலூர்ப்பாளையம் பட்டையமும் குறிப்பிடுகிறது. இவ் வெற்றியால் தன்னாட்டின் வடவெல்லையைக் காத்துக்கொண்டதோடு இராட்டிர கூடருக்கு அடங்கித் திறை செலுத்திவரும் இழி செயலையும் போக்கிக் கொண்டான். இதனால் இவன் பேரரசன்" என்று புகழப் பட்டான். அத்தோடு கங்சு அரசனான அமோகவர்சனுடைய இளைய மகள் சங்கா' என்பவளை மணந்து கொண்டான்: அமோகவர்சனுடைய மற்றொரு மகளான 'சந்திரப் பலப்பை ' என்பவளைக்கங்க அரசன்பூதுகன் மணந்து கொண்டான். அமோக வர்சனுடைய மற்றொரு மகளான சந்திரப் பலப்பை' என்பவளை கங்க அரசன் பூதுகன் மணந்துகொண்டான், இதனால் இராட்டிரகூடருக்குக்கங்களும், பல்லவனும் மருமகன்மாராகி விட்டனர், எனவே, நாட்டின் தென்திசையில் அவனுக்குப் பகைவர் இல்லாமற் போய்விட்டனர். பல்லவர்-பாண்டியர் போர் மூன்றாம் நந்திவர்மன் இராட்டிரகூடரை ஒறுக்கத் தம் படையுடன் வடபுலம் சென்றிருந்தபோது பாண்டிய மன்னன் சேர சோழரோடு இணைந்து பல்லவ நாட்டின் மீது படையெடுத்தான், அப் பாண்டிய மன்னன் வரகுணன் மகனான சீமாறன் சீவல்லபன் என்பவன் தனக்கு அடங்கிய சோழ, சேரருடன் சேர்ந்து கொண்டு பெண்ணை யாற்றைத் தாண்டி வடஆர்காட்டுக் கோட்டத்திலுள்ள வந்தவாசிக் கூற்றத்தில் வந்துகொண்டிருந்தபோது மூன்றாம் நந்திவர்மன் தம் படையுடன் வடபுலத்திலிருந்து மீண்டு தெள்ளாறு என்னுமிடத்தில் இவ்வரசர்கள் அனைவரையும் ஒட்டு மொத்தமாகத் தோற்கடித்தான். தோற்றோடிய பகைவர்களைக் கடம்பூர், வெறியலூர், வெள்ளாறு, பழையாறு என்னு மிடங்களில் தோற்கடித்துப்பாண்டிய நாட்டுக் குள்ளும் சென்று எல்லைப் புறத்துக்கோட்டையில் ஒளிந்திருந்த பாண்டியனை முறியடித்து மீண்டான் என்று நந்திக்கலம்பகம் நவில்கின்றது, - இப் போரில் நந்திவர்மன் பெற்ற வெற்றி நந்திக்கலம்பகத்தில் மட்டுமேயன்றி அவனது பத்தாம் ஆட்சி ஆண்டுக்குப் பின் வந்த கல்வெட்டு களிலும், பட்டயங்களிலும் சிறப்பாகக் குறிக்கப்பட்டுள்ளன, இவன் காவிரி நாடான சோணாட்டைக் கைப்பற்றியதால் காவிரி நாடன், காவிரி வெளநாடன், காவிரி நன்னாடன், பொன்னி நன்னாட்டு மன்னன் முதலியன வாகக் கலம்பகத்தில் விளிக்கப்படுகிறான். தஞ்சைக் கோட்டத்திலுள்ள திருநெய்த்தானம் என்னுமிடத்தில் இவனுடைய கல்வெட்டு காணப்படும் கிறது. இதிலிருந்தும் இவனது ஆட்சி தஞ்சைக் கோட்டத்தில் நிலைத்து இருந்தது என்பதை யறியலாம். -- வடபுலத்திலும் தென்புலத்திலும் வெற்றிகண்ட நந்திவர்மனுக்கு வடபுலத்தரசரும், மூவேந்தரும் திறையளித்தனர்; காவிரிப்பூம்பட்டினம் இவனது ஆட்சிக்குட்பட்டிருந்தது என்பன போன்ற செய்திகளும் நந்திக்கலம்பகத்தில் காணப்படுகின்றன. இவன் சிறந்த செங்கோலனாகவும், அறம் காத்த பெருமகனாகவும், இருந் தானென்பதைச் சேக்கிழாரும் பாராட்டியுள்ளார். இவன் சிறந்த புலவனாகவும், கலைஞனாகவும் திகழ்ந்தான். இவனது மற்றொரு மனைவியான சாத்தன்மாறம் பாவையார் என்பவள் பல கோயில் களுக்குத் திருப்பணிகள் செய்தாளென்பதையும் சிறந்த சிவபத்தி உடைய னென்பதையும் பெரிய புராணத்தின் வாயிலாக வும் அறிகிறோம். இவ்வரசன் பல ஊர்களைத் தேவதானமாக விடுத்தான்; பலகோயில்களுக்கு மானியங்களை வழங்கினான்; திண்டிவனம் கூற்றத்தில் ஒரு பெருமாள் கோவிலையும் கட்டியுள்ளான்; அவனி நாரண சதுர்வேதி மங்கலம் எனப்படும் காவேரிப்பாக்கத்தைப் பிரம்ம தேயமாக அளித்தான், பொன்னேரிக்கடுத்த திருக்காட்டுப்பள்ளியிலுள்ள சிவன் கோயிலுக்கு அவ்வூரையே தேவதானமாக அளித்தான் திருவல்லம் கோயிலுக்கு மூன்று சிற்றுார்களைத் தேவதானமாக அளித்தான்; என்பன போன்ற பல்வேறு சான்றுகளையும், இவன் செய்த எண்ணிலடங்காத் திருப்பணிகளும், 'சிவனைமுழுதும் மறவாத சிந்தையன்' என்று கலம்பகம் போற்றுவதையும், சுந்தரமூர்த்தி நாயனார் தமது திருத்தொண்டத்தொகையில் இவனை ஒரு சிவனடி யானாகப் புகழ்ந்து பாடியுள்ளதையும் கண்டு இவனது சிவத் தொண்டை நன்கறியலாம், வேலூர்ப்பாளையம் பட்டயத்தில் 'சிவனது திருவடையாளம் நெற்றியில் கொண்ட நந்திவர்மன் கைகளைக் குவித்து, தனக்குப் பின்வரும் அரசர் இந்தத் திருப்பணியைப் பாதுகாப்பாராக" என்று வேண்டுவதைக் காண்கிறோம். பாரதம் பாடிய பெருந்தேவனார் இவன் காலத்தில் சிறந்து விளங்கிய புலவர் என்பது சிலரது கருத்தாகும். பிற்காலப் பல்லவர்கள் நிருபதுங்கவர்மன் (கி.பி. 870-895) இவன் மூன்றாம் நந்திவர்மனுக்கும் இராட்டிரகூட அரசன் அமோகவர்ச நிருபதுங்கன் மகளான சங்காஎன்பவளுக்கும் பிறந்தவன். இதனால்தான் தன் தாய்வழிப் பாட்டனின் பெயர் இவனுக்குச் சூட்டப் பட்ட து. பல்லவர் - பாண்டியர் போர் இவன் காலத்தில் சீமாறன் சீவல்லபன் என்ற பாண்டிய மன்னனும், அவனுக்குப் பின் அவனுடைய மகனான இரண்டாம் வரகுண பாண்டிய னும் ஆண்டனர். சீமாறன் தெள்ளாற்றுப்போரில் தோல்வியுற்ற பிறகு அந்த இழிவைப் போக்கிக்கொள்ளப்பலவாண்டுகள் கழித்து நிருபதுங்கவர்மன் காலத்தில் பல்லவ நாட்டின் மீது படையெடுத்தான். நிருபதுங்கன் தன் படைத் தலைவனையனுப்பி அவனை எதிர்க்கும்படி செய்தான். இரு திறத்துப் படைகளுக்கும் குடந்தைக்கருகிலுள்ள குடமுக்கு என்னுமிடத் தில் போர் நடந்தது. அப்போரில் பாண்டியன் வெற்றி பெற்றான். பின்னர் நிருபதுங்கவர்மன் தானே படைக்குத் தலைமை தாங்கிப் பெரும்படை யுடன் சென்று பாண்டியனை அரிசிலாற்றங்கரையில் தோற்கடித்தான். முன்பு ஒரு முறை பாண்டியருக்குத் தோற்ற பல்லவர் படை இப்போது அரசன் அருளால் வெற்றி பெற்றது' என்று நிருபதுங்கன் வெற்றியைப் பாகூர்ப் பட்டயம் புகழ்ந்துரைக்கின்றது. ஈழநாட்டுப் படையெடுப்பு ஈழநாட்டு அரசனான இரண்டாம் சேனன் என்பவனிடம் பாண்டிய மன்னன் சீமானுக்குப் பகைவனான மாயபாண்டியன் என்பவன் சரணா டைந்தான். சீமாறபாண்டியன் தன் உள்நாட்டுப் பகைவனான நிருபதுங்க பல்லவனிடம் நட்புறவு கொண்டு அவனுடைய கடற்படையின் துணை யுடன் இலங்கையின் மீது படையெடுத்தான். இப் படையெடுப்பில் நிருபதுங்கவர்மன் பாண்டியனுக்குப் பெரும் வெற்றியைத் தேடித்தந்தான். இலங்கையின் அரசனான இரண்டாம் சேனன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்துவந்து மதுரையைக் கைப்பற்றித் தமிழகத்தின் தென்பகுதியைக் கலக்கிய காலத்தில் நிருபதுங்கன் பாண்டியருக்குத் துணையாய் நின்று இலங்கை வேந்தனைத் துரத்தியடித்தான் என்றும், அப்போது பாண்டிய நாட்டையாண்ட மன்னன் வரகுண மகாராசன் என்று கூறுவாரும் உளர், திருப்புறம்பியம் போர் சீமாறன் சீவல்லபனுடைய மகனான இரண்டாம் வரகுண பாண்டியன் முதலில் நிருபதுங்கனிடம் நட்புறவு கொண்டிருந்தான், நிருபதுங்கன் முதுமை யெய்தியபோது வரகுண பாண்டியன் பல்லவ நாட்டின் மீது படையெடுத்தான். அவனையெதிர்த்து நிருபதுங்கனின் மாற்றாந்தாய் மகனான அபராசிதவர்மன் தானே போர்க்களம் சென்றான், அவனுக்குத் துணையாக அவனுடைய தாய்வழிப் பாட்டனும், கங்க அரசனுமான முதலாம் பிருதிவிபதியும் தன் படையுடன் சென்றான். மூன்றாவதாகச் சோழ அரசன் விசயாலயன் மகன் ஆதித்த சோழனும் தன் படையுடன் பல்லவருக்குத் துணையாய்ச் சென்றான். இம் மூவரும் பாண்டியனைக் குடந்தைக்கு அருகிலுள்ள திருப்புறம்பியம் என்னு மிடத்தில் எதிர்த்துப் போரிட்டனர். கடும் போருக்குப்பிறகு பாண்டியனின் படைகள் தோற்றோடின. இப் போர் தோராயமாக சி.பி. 895 - ல் நடந்திருக்கலாம் இப் போரின் முடிவில் பல்லவனைவிடச் சோழனே பெருத்த நன்மை யடைந்தான். சோழநாடு முழுவதையும் தன்வயமாக்கிக் கொண்டதோடு செங் கழுநீர்ப் பட்டு செங்கற்பட்டு வரையிலுள்ள * தொண்டைநாட்டையும் கவர்ந்து கொண்டான். இப்போரில் பிருதிவிபதி இறந்தான். இப்போர் முடிவுற்ற பிறகு இருபத்தாறு ஆண்டுகள் வரையில் நிருபதுங்கனைப் பற்றிய செய்திகள் கிடைக்கவில்லை, அவனுடைய நாற்பத்து ஒன்பதாம் ஆட்சியாண்டில் நாட்டிய கல்வெட்டு ஒன்று திருத்தணிக்கு அருகிலுள்ள மடவளம் என்னும் ஊரில் காணப்படுகிறது. நிருபதுங்கன் இறந்த பின்பு அபராசிதன் இயற்கையாகப் பட்டத் திற்கு வந்தான் என்றும், திருப்புறம்பியம் வெற்றிக்குப் பின் அவனிட் மிருந்து அபராசிதன் பறித்துக்கொண்டானென்றும் இருவகைக் கருத்துகள் நிலவுகின்றன. இதற்குக் கரணியமானது மேற்கண்ட மடவளம் கல்வெட்டுகளாகும். அபராசிதவர்மன் கி.பி. 895-913) திருப்புறம்பியத்தில் வெற்றிகண்டு தன் மாற்றாந்தாய் மகன் நிருபதுங்கவர்மனிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றிய அபராசிதவர்மன் பதினெட்டு ஆண்டுகள் ஆண்டான் என்பதை நிருபதுங்கவர்மனுடைய நாற்பத்தொன்பதாம் ஆட்சியாண்டின் கல்வெட்டிலிருந்து அறிகிறோம். நாட்டையிழந்த நிருபதுங்கவர்மன் மறைந்து நின்று அபராசிதனுக்குத் தொல்லைகள் கொடுத்தானெனினும், பின்னர் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான் என்றும் கூறுவர். மேற்கூறிய அவனுடைய கல்வெட்டு, திருத்தணிக்கு அருகிலுள்ள மடவளம் என்ற ஊரில் காணப் படுகிறது. இதிலிருந்துதான் நாம் நிருபதுங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தான் என ஊகிக்க முடிகிறது. அபராசிதன் தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றியாண்ட சோழர்களோடு மோதவேண்டியதாயிற்று. சோழர்களுடைய கல்வெட்டுச் சான்றுகளிலிருந்து இவன் தோற்று மாண்டான் எனக் கூறலாம். வீரதிரா சேந்திரச்சோழனின் சுன்னியாகுமரிக் கல்வெட்டு ஒன்றில் அபராசிதன், ஆதித்த சோழனால் போரில் கொல்லப்பட்டான் எனக் குறிப்பிடப்படு கிறது. ஆதித்த சோழனுக்கும், அபராசிதனுக்கும் நடந்த போரைப் பற்றி இராசேந்திர சோழனின் திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் குறிப்பிடு கின்றன. அபராசிதனுக்குப் பிருதிவிமாணிக்கம், வீரமகாதேவியார் என்று மனைவியர் இருவர் இருந்தனர். பிருதிவிமாணிக்கம் பல கோயில்களுக்குத் தானங்கள் செய்த செய்திகளைக் கல்வெட்டு வாயிலாக அறிகிறோம். உக்கல் என்ற தளரில் கட்டப்பட்ட திருமால் கோயிலுக்கு இவள் நினை வாகப் புவன மாணிக்க விஷ்ணுகிரகம் என்று பெயரிடப்பட்டது. இவள் பெயரால் 'பிருதிவி மாணிக்கம் படி' என்ற முகத்தலளவை வழக்கில் இருந்தது. மற்றொரு மனைவியான வீரமகாதேவியாரும் இரணிய சுருப்பம், துலாபாரம் என்ற சடங்கு களைச் செய்துகொண்டு துலாபாரம் பொன்னில் ஐம்பது கழஞ்சு எடுத்து அன்றாடப் பூசைகளுக்காகக் கோயில்களுக்குத் தானமாக வழங்கினாள் என்று திருக்கோடிக்கா கல்வெட்டொன்று கூறுகிறது. இவ்வாறு நிருபதுங்கவர்மன் தனது பதினெட்டு ஆண்டுகள் ஆட்சிக்காலத்தில் கோயில் திருப்பணிகள் பல செய்து இராட்டிரகூட அரசன் அமோகவர்சனுக்கு ஒப்பாக வாழ்ந்து இறந்தான். பல்லவர் ஆட்சியின் முடிவு அபராசிதனுக்குப் பிறகு மீண்டும் நிருபதுங்கனின் உடன் பிறந்த தம்பியான கம்பவர்மன் பட்டம் ஏற்றானென்றும் ஊகித்தறிய முடிகிறது. இவர்களுக்குப் பின்னர் ஒருசிலர் காஞ்சியின் அரியணையில் வீற்றிருந் திருந்துள்ளனர். ஆனால், திறமையற்றவர் களால் வடக்கிலும் தெற்கிலும் வளர்ந்து வரும் பாதைகளுக்கிடையே தங்கள் நாட்டை ஒன்றுபடுத்தி ஆள் முடியவில்லை . அவர்களுக்குக் கீழிருந்த சிற்றரசர்களும், தானைத் தலைவர் களும், மாநில ஆளுநர்களும் நாட்டைச் சிறுசிறு துண்டுளாக்கித் தனித்தாள முற்பட்டார்கள். இவ்வாறு உருமாறி, நிலை தடுமாறித் திறன் குன்றிப்போன பல்லவ நாட்டைக் கி.பி. 909-ல் இராட்டிரகூடர்கள் கைப்பற்றிக்கொண்டனர். (ஆ) பல்லவர் கலைப்பணி தமிழக வரலாற்றில் பல்லவர்பெறும் சிறப்பிடத்திற்குக் கரணியம் அவர்கள் கலைக்கு ஆற்றிய பணியே ஆகும். மாமல்லபுரத்திலும் பிறவிடங் களிலும் காணப்படும் அவர்களின் கலைச் சின்னங்கள் உலகக்கலை வரலாற்றில் ஓர் உன்னத இடத்தைப் பெற்றுள்ளன. தமிழரின் நாகரிகத் திற்கும், பண்பாட்டுக்கும் புறம்பானவர்களான பல்லவர்கள் தமிழகத்துக்கு வந்தபிறகு நாளடைவில் தாமும் தமிழராகவே மாறிவிட்டனர். தொடக் கத்தில் வடமொழியைத் தம் ஆட்சிமொழியாகக் கொண்டிருந்தனரேனும், காலப்போக்கில் அவர்கள் தமிழையும் தம் ஆட்சிமொழியாகக் கொண்ட னர். அவர்கள் காலத்தில் பல வடமொழி நூல்கள் தோன்றின. வடமொழி நூலாசிரியர்கள் பலர் பல்லவராட்சியில் மேம்பாடுற்றனர். பல்லவர்கள் தமிழையும் பேணி வளர்த்தனர். கல்விக்கூடங்கள் - கலைகளை வளர்ப்பதற்கெனப் பல்லவர்கள் பல் கலைக் கழகங் களை அமைத்திருந்தனர். காஞ்சியில் உயர்தரக் கல்வி கற்பிக்கும் தலை சிறந்த வடமொழிக் கல்லூரி ஒன்று இருந்தது. அது சமற்கிருத மறைகளை யும் ஆன்மீகம் பற்றிய உயரிய ஆராய்ச்சிகளையும் கற்பித்தது. இவற்றில் தேர்ந்த மாணவர்கள் பின்னர் இந்தியா முழுவதும் சென்று அறிவை வளர்த்தனர். இக் கல்லூரியில் பயின்ற கதம்ப அரசன் மயூரசன்மனும், சமந்தபத்திரர், பூச்சியபாதர் முதலிய சமண ஆசிரியர்களும் குறிப்பிடத்தக்க வர் ஆவர். இங்குப் பயின்ற தரும்பாலர் என்பவர்தான் நாளந்தாப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக விளங்கினார். அரக்கோணத்துக்கு அருகிலுள்ள சோழலிங்கர் என்ற ஊரில் மலைமீது ஒரு கல்விக்கூடம்(கடிகை) இருந்ததென்றும், இங்கு வைணவ சமயத் தொடர்பான கல்வி கற்பிக்கப்பட்டதென்றும், இதற்கு இரண்டாம் நந்திவர்மன் மானியம் விட்டானென்றும் திருவல்லம் கல்வெட்டு குறிப்பிடு கிறது. இதைப் போலவே கடலுார் மாவட்டத்திலுள்ள பாகூர் என்னு மிடத்தில் ஒரு வடமொழிக் கல்லூரி இருந்ததைப் பாகூர்ச் செப்பேட்டி லிருந்து அறிகிறோம். இக் கல்லுாரியில் பயின்றவர் அனைவரும் பார்ப்ப னர்களேயென்றும், இங்குப் பதினான்கு கலைகளும், பதினெண் வித்தை களும் கற்பிக்கப்பட்டனவென்றும் தெரிய வருகிறது. இக் கல்லூரிக்குச் சேட்டுப்பாக்கம், விளாங்காட்டான், சுடுவலூர்,இறை புனைச்சேரி ஆகிய மூன்று தளர்கள் மானியமாக விடப்பட்டனவென்பதும் செப்பேடுகளி விருந்து அறியப்படுகிறது. இத்தகைய கல்லூரிகளேயன்றி வேதங்களிலும், ஆகமங்களிலும், வித்தைகளிலும் சிறந்த பார்ப்பனர்களுக்கென்று பல சேரிகளும் கட்டப் பட்டன. இவற்றிற்குப் பார்ப்பனச் சேரிகள்' அல்லது 'அக்கிரகாரங்கள்' என்பது பெயர். இவற்றில் வதிந்த பார்ப்பன் மாணவர்களுக்கும், ஆசிரியர் களுக்கும் அரசர்களும், செல்வர்களும் எண்ணிறந்த மானியங்களைக் கொடுத்தனர். இம் மானியங்களையும், பிற பொருள்களையும் கட்டிக் காக்கப் பார்ப்பனர்களுக்கெனத் தனி வனராண்மைக்கழகங்கள் ஏற்பட்டன. இவ்வூர்களுக்குக் 'குடி' அல்லது 'சதுர்வேதிமங்கலம்' என்று பெயர். பேரூர்களிலும், நகரங்களிலும் கலை வளர்ச்சிக்காகப் பார்ப்பனர்கள் தங்கியிருந்த இடம் 'பிரம்மபுரி' எனப்பட்டது. இவர்களுக்குக் கல்வி கற்பிப்பதற்காக நிலம் மானியமாக விடப்பட்டது. கல்வியில் சிறந்தவர். களுக்குப் பட்ட விருத்தி' என்ற பட்டமளிக்கப்பட்டது. தனிப்பட்ட சிறந்த கல்வியாளர்களுக்கும் மானியமும், பரிசுகளும் வழங்கப்பட்டன என்பதைப் பல்லவர்செப்பேடுகளிலிருந்து அறிகிறோம். பல்லவர் காலத்துக் கோயில்கள், மடங்கள் முதலியனவும் சமயக் கல்விக்கும், பிற கலைகளுக்கும், நிலைக்கலன்களாய்த் திகழ்ந்தன. குறிப்பாக, இன்று நாம் காணும் பல்லவர் கலைகள் அனைத்தும் கோயில்களிலேதான் குடி கொண்டுள்ளன. பெரிய கோயில்கள், படிக்கும் மண்டபம், நடன மண்டபம், நாடகமண்டபம், தருக்க மண்டபம், சமய நாங்கள் ஆவ ணாங்கள் பத்திரங்கள் முதலியன பாதுகாக்கப்படும் அறைகள் முதலியன வும் இக் கோயில்களில் இருப்பதை அறியலாம். சைவ, வைணவ பெளத்த, சமய மடங்களும், மடாதிபதிகள் நம் சமய நூல்களையும், கலைகளையும் போற்றிக்காத்தனர். கல்லூரிகளும், கலைக் கூடங்களும் மடத்து ஆட்சிக் குழுக்களும், அரசரின் மேற்பார்வையில் இயங்கின. கட்டடக்கலை பல்லவர்கள் வளர்த்தகவைகளைப் பொதுவாகக் குடைவரைகள், சுட்டுமானக் கோயில்கள், ஓவியங்கள் என முப்பெரும் பிரிவுகளாக அறிய கலாம். குடைவரைகளிலும், கட்டுமானக் கோயில்களிலும் அமைந்துள்ள சிற்பங்களை அவற்றோடே சேர்த்தும் அறியலாம். அவற்றைத் தவிர நான்காவது பிரிவாகக் காணப்படுவது அவர்களின் தனிக் கற்களாலான தேர்கள் முதலியனவாகும். இத்தகைய ஒற்றைக்கல் தேர்சுளும் கோயில் சுளும், தனிக்கல்லாலான உருவங்களுமே உலகப் புகழ்பெற்று விளங்கு கின்றன, குடைவரைகள் பெரும் பாறை அல்லது மனலனய வரையைக் குடைந்து ஆக்கப் பட்டகோயில்களையே பல்லவர் குடைவரைகள் அல்லது குடைவரைக் கோயில்கள் என்கிறோம். பல்லவருக்கு முன்பும், தமிழகத்தில் பல்வேறு கோயில்கள் இருந்தன, குடைவரைகளும் இருந்ததற்கான கழக நூற் சான்றுகளைப் பார்க்கிறோம். வடஇந்தியாவில் பெரும் புகழுடன் ஆண்ட அசோகனால் குடையப்பட்ட பராபரக் குடைவரைகள், அசினிகர் எனப்படும் சமணத் துறவிகளுக்கு உறைவிடங்களாய்த் திகழ்ந்தனவென்ற செய்தியைக் கொண்டு வட இந்தியாவில் கி.மு. 3ஆம் நூற்றாண்டுக்கு முன்பும் குடைவரைகள் இருந்தனவென்பதை அறிகிறோம். சாளுக்கிய ராலும் பல்லவராலும் தென்னகத்தில் குடைவரைகள் பல சமைக்கப் பட்டன. இவர்களைப் பின்பற்றிப் பின்வந்தோரும் குடைவரைகள் சமைத்தனர். ஆயினும், குடைவரைகள் பற்றிய அறிவு தமிழகத்தில் தொன்று தொட்டே இருந்துவந்தது என்பதை நாம் மறத்தலாகாது. பல்லவரின் குடைவரையின் மூலம் ஆந்திர நாட்டிலிருந்தோ, உரோம நாட்டிலிருந்தோ வந்ததென இதுவரை நாம் கொண்டிருந்த கருத்து தவறானதாகும். இது தமிழ் மூலத்திலிருந்தே தோன்றியது. மூவகைக் குடைவரைகள் முதற் பருவம் பல்லவர்களில் முதன் முதலாகப் பாறைகளைக் குடைந்து குடைவரைக் கோயில்களைச் சமைத்தவன் முதலாம் மகேந்திரவர்மன் துவான். இவன் காலத்தில் குடையப்பட்ட குடைவரைகள் முதற்பருவக் குடைவரைகள் எனப்படும். அவை மண்டகப்பட்டு, மாமண்டூர், மகேந்திர வாடி, பல்லாவரம், குரங்கணில்முட்டம், வல்லம், தளவானூர், சீயமங்கலம், திருச்சிராப்பள்ளி, விளாப்பாக்கம், சித்தன்னவாசல் முதலியவிடங்களிலும் காணப்படுகின்றன. இரண்டாம் பருவம் மகேந்திரன் பாணியில் அவனுக்குப்பின் வந்தவர்களான மாமல்லன், இரண்டாம் மகேந்திரன், முதலாம் பரமேசுவரவர்மன், நரசிம்ம வர்மன் ஆகியவர்களால் குடையப்பட்ட குடைவரைகள் இரண்டாம் பருவக் குடைவரைகள் எனப்படும். அவை திருக்கழுக் குன்றம்; (ஒரு கல் மண்டபம், மாமல்லபுரம் கொடிக்கால் மண்டபம், சிங்கப்பெருமாள் கோயில், சிங்கவரம், மேலைச்சேரி, மாமண்டூர், மாமல்லபுரம் தருமராசர் மண்டபம், சாளுவன்குப்பம் முதலியவிடங் களில் காணப்படுகின்றன. " மூன்றாம் பருவம் மகேந்திரன் பாணியைப் பின்பற்றித் தொண்டை மண்டலத்தில் குடையப்பட்ட சிறுகுடைவரைகள் மூன்றாம் பருவக் குடைவரைகள் எனப்படும். அவை வல்லம், சீழ்மாவிலங்கை முதலியவிடங்களில் காணப் படுகின்றன. முதலாம் மகேந்திரன் பாணியின் தனிச்சிறப்புகள் மேற்கண்ட மகேந்திரன் பாணியிலான குடைவரைகளில் பல சிறப்புத் தன்மைகள் காணப்படுகின்றன, (அ) மண்டபங்கள் ; இப் பாணியிலான மண்டபங்கள் எளிமை யாகவும், சோடனையாகவும், திட்டமிட்டபடி மிகப்பெரிய அளவிலும் காணப்படுகின்றன. ஒவ்வொரு மண்டபமும் உட்புறத்தில் இரு பிரிவுக் ளாகப் பிரிந்து முறையே முசுமண்டபம், இடைமண்டபம் என அறியப் படுகின்றன. அகன்ற கதவுகளையும், தாழ்வாரத்தையும் நான்கு தூண்களை யும் பெற்றுள்ளன. ஆம் தூண்கள் : ஒற்றை முற்றத்தையுடைய இம் மண்டப வாயிற் படிகளில் திரு மருங்கிலும் ஏறத்தாழ ஏழடி உயரமும், இரண்டடிக் குறுக்களவுமுள்ள தூண்கள் உள்ளன. தூண்களின் அடிப்பகுதியும் மேற்பகுதியும் சதுர வடிவிலும், நடுப்பகுதியும் மூன்றாவது பகுதியும் எண்கோண வடிவிலும், காணப்படுகின்றன. சதுரப்பகுதியின் நடுவில் தாமரை மலர் வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. 1. தூண் தலைப்பு : தூண்களின் தலைப்புப் பகுதி தடிப்பாகவும், வனை வடைப்புகளுடனும் காணப்படுகின்றன. அணியழகும் சோடனை யும் அதிகமில்லை . மிக எளிமையாகக் காட்சியளிக்கின்றன, 2. போதிகை : தூணில் பளுவைத் தாங்கும் பகுதிக்குப் பொதிகை என்று பெயர். மகேந்திரன் காலத்துப் போதிகைகள் முக்கோண வடிவிலும், வளைவான வடிவிலும் அமைந்து முறையே கோணப்போதிகை, வளைப் போதிகை எனப்பட்டன. 3. பலகை : தூண்களில் தலைப்புக்கும், தாமரைக்கட்டுக்கும் இடையில் உள்ள பாகம் பலகை எனப்பட்டது. இக் காலப் பலகையின் விளிம்பு சோதனையின்றி எளிமையாகக் காணப்பட்டது. 4. பட்டம் :போதிகையின் நடுப்பாகத்தில் போதிகையைச் சுற்றிலும் வரும் கச்சை போன்ற ஒரு பட்டைக்குப் பட்டம் என்று பெயர். மகேந்திரன் காலத்தில் இது எத்தகைய சோடனையுமின்றி எளிமையாகக் காட்சி யளித்தது. டு மண்டபத்தின் வெளிப்பகுதிகள் : மகேந்திரன் காலத்து மண்டபத்தின் முன் தோற்றம் எத்தகைய விதியுமின்றி விருப்பப்படி அமைக்கப்பட்டது. பாறைகள் கிடைத்த வாட்டத்தை வைத்தே இதன் வெளிப்பகுதிகள் செதுக்கப்பட்டன. ஆயினும், ஒரு கோயிலின் கூரைப் பகுதி வரையிலுள்ள தொடக்ககால வளர்ச்சியை இம் மண்டபங்கள் பெற்றுள்ளன. படிக்கட்டுகள், மாடக்குழிகள் உச்சிப்பிதுக்கம், கபோதம், சுவர்க்கம்பம் முதலியனவும், உட்புறத்தில் கருவறையும், வாயிற் படியில் வாயிற்காப்போரின் புடைப்போவியங்களும் இவற்றில் காணப் படு கின்றன. வாயிற்காப்போரைக்கொண்டு மூலவர அறியலாம். அதாவது உள்ளுறை தெய்வம் சிவனா, விசுணுவா அல்லது பிரம்மனா அல்லது தேவதையா என்பதை வாயிற்காப்போரின் உருவங்களைக்கொண்டு அறியலாம்." மாமல்லன் பாணி மாமல்லன் பாணியில் சிறப்பாக அமைவன மாமல்லபுரத்து ஒற்றைக் கற்றோர்களும், தனிக்கல்உருவங்களும் ஆகும். அவை திரௌபதை தேர், அருச்சுனன் தேர், பீமன் தேர் தருமராசர் தேர், சகாதேவன் தேர், கணேசர் தேர், வலையன்குட்டைத் தேர்கள் ஆகியவையும், யானை, அரிழா, எருது ஆகிய உருவங்களும் ஆகும். இதில் முதல் ஐந்து தேர்களைப் பஞ்சபாண்டவர் தேர்கள் என்று கூறுவர், வலையன்குட்டை என்னு மிடத்தில் பிடாரித்தேர்கள் எனப்படும் இரண்டு ஒற்றைக்கல் தேர்சுளும் காணப்படுகின்றன. இவற்றை நாம் தேர்கள் என்று பொதுவாக வழங்கினும் இவையாவும் அக் காலத்தில் தனிக்கற்களில் செதுக்கி, சமைக்கப்பட்ட கோயில்களே ஆகும். எடுத்துக்காட்டாகத் திரெளபதைத் தேர் ஒரு கொற்றவைக் கோயி லாகும். இதுவும் கணேசர் தேரும், கருவறையும், மாடக் குழியையும் விமானத்தையும், பிற உறுப்புகளையும் உடையன வாகும், தனிப் பாறைக்குன்றுகளைச் செதுக்கி சமைக்கப்பட்ட இந்த ஒற்றைக் கற்கோயில்கள் யாவும் பண்டைய திரவிடக் கோயில்களின் மாதிரிகள் அனைத்தையும் ஒருங்கே காட்டுவதற்காக ஈண்டு சமைச்சுப் பெற்றன வென்றும் இவை இல்லாவிடில் பழங்காலத் திரவிடக் கோயில் பாணிகள் மறைந்துபட்டிருக்குமென்றும் ஈராகப்பாதிரியார் கூறுகிறார். மகேந்திரவர்மன் பாறைகளைக் குடைந்து திரவிடப் பாணியின் அடித்தளச் சின்னமாக மண்டபங்களை மட்டும் சமைத்தான்; அவனால் நிறைவு செய்யப் பெறாத விமானங்களும், அவற்றை யொட்டிய பிறவுறுப்புகளும் மாமல்லனால் இந்த ஒற்றைக் கற்றேர்களில் படைக்கப்பட்டுத் திரவிடக் கட்டடப்பாணி நிறைவு செய்யப்பெற்றது. கற்றளிகள் பல்லவர் கட்டிய கற்கோயில்களைக் கற்றளிகள் என்கிறோம். இவை மேற்கூறிய குடைவரைகளைப் போலும் சுற்றோர்களைப் போலு மல்லாது கற்களை அடுக்கிக் காரை, மாழை (உலோகம் முதலிய வற்றையும் பயன் படுத்திக் கட்டப்பட்டவையாகும். இத்தகைய கட்டடங்களைக் கட்டிச் சிறப்புற்றவர்கள் இராசசிம்மனும், நந்தி வர்மனும் ஆவர். இவர்களுடைய கட்டடங்களும் முறையே இராசசிம்மன் பாணி, நந்திவர்மன் பாணி என அறியப்படும். இராசசிம்மன் பாணி - இவன் கட்டிய கோயில்கள் யாவும் எடுப்புத் தோற்றத்தில் ஒரு தேரைப் போலவே இருக்கும் பெரும்பாலும் நாற்கர வடிவில் அமைந் திருக்கும்; அடியிலிருந்து மேலே செல்லச்செல்ல விமானத்தட்டுகள் குறைந்து கொண்டே சென்று முடியும். விமானம் கருவறைக்கு மேலே இருக்கும்; கல்சக் கல்லும், மூலலிங்கமும் ஒரேவகைக் கல்லாலானவை; ஒவ்வொரு தட்டின் மூலையிலும் சிறு கலச உருவங்களும், அரிமாவின் உருவங்களும் காணப்படும்; கட்டடத்தின் மூன்று பக்கங்களிலும் கிழக்கு அல்லது மேற்கு நோக்கிய பெருமாடக்குழிகள் காணப்படும் மாடக்குழி களிலும், கருவறையில் உள்ளது போன்ற லிங்கங்கள் காணப்படும்; லிங்கங்களில் மேடு, பள்ளங்கள் எட்டு அல்லது பதினாறு பட்டைகள் காணப்படும்; துாண்களுக்கு அடியிலும், உட்புறச் சுவர்களிலும்கூட அரிமாக்கள் காணப்படும் தூண்களுக்கு அடியில் காணப்படும் அரிமாக்கள் பின்னங்கால்களை நன்றி எழுந்து நிற்கும், அமர்ந்திருப்ப தாயின் முன்னங்கால்களை நன்றி உரசிக்கொண்டிருக்கும் கருவறையில் லிங்கத்திற்குப்பின்னாலுள்ள சுவரில் சோபாகசந்தர் உருவம் காணப்படும் சிவனும், பார்வதியும் கட்டில் போன்ற இருக்கையில் அமர்ந்து இருக்கவும், பார்வதியின் தொடையில் கந்தன் அமர்ந்திருக்கும் படியாகச் சித்தரிக்கப்பட் டுள்ள சிற்பம் சோமாசுகந்தர் உருவம் எனப்படும் பொதுவாக இந்துக் கோயில்களில் கருவறைகளில் மூலவரைத் தவிர வேறு உருவங்கள் காணப் படா. ஆனால், நரசிம்மன் கட்டிய கோயில் கருவறைகளில் சோமாஸ்கந்தர் உருவமும், பிற சிற்ப அணிகளும், சோடனைகளும் காணப்படும், பனைமலைச் சிவன் கோயில், மாமல்லபுரத்து மகிசாசுர மண்டபத் துக்கு மேற்கிலுள்ள சிவன் கோயில், பண்டைய சாளுவன் குப்பத்திலுள்ள முகுந்த நாயனார் சிவன் கோயில், மாமல்லபுரத்துக் கடற்கரைக் கோயில், காஞ்சிக் கயிலாசநாதர் கோயில், காஞ்சி வைகுந்த பெருமாள் கோயில் முதலியன இராசசிம்மனால் கட்டப்பட்டவையாகும். இவற்றில் மேற் கண்ட சிறப்புகளைக் காணலாம். இதில் காஞ்சி வைகுந்த பெருமாள் கோயில் இரண்டாம் நந்திவர்மனால் கட்டப்பட்டது என்றும் கூறுவர். நந்திவர்மன் பாணி நந்திவர்மனும், அவனுக்குப் பின்வந்தோரும் கட்டிய கட்டடங் களை நந்திவர்மன் பாணி என்கிறோம். இக் காலத்தில் பல்லவப் பேரரசு பகைவர்கள் கையில் சிக்கிப் பல போர்களில் ஈடுபட்டுத் தேய்ந்துவரவா யிற்று. இதனால், இவன் பாணியினாலான கட்டடங்களில் கலையழகும், உருவ அமைப்பும் தேய்ந்து காணப்படுகின்றன. கயிலாசநாதர் கோயில், வைகுந்தப் பெருமாள் கோயில் முதலியவற்றைப் போல் ஒரு மாபெரும் கட்டடத்தை இக்காலத்தில் நாம் காண முடியவில்லை. சிறிய கட்டடங்க ளாயினும் இவற்றில் பல்லவர் கலையணிகள் சிறுத்து. ஆனால் பெருத்த அழகுடன் காணப்பட்டன. - நந்திவர்மன் பாணியில் கட்டப்பட்ட ஒரு சில கோயில்களை மட்டும் குறிப்பிடுவோம். அவை கூரம் கற்கோயில், ஒரகடம் வாடா மல்லீசுவரம் கோயில், திருத்தணிவீரட்டானேசுவரன் கோயில், குடிமல்லம் பரசுராமேசுவரன் கோயில், காஞ்சியிலுள்ள முத்தேசுவரன்கோயில், மதங் கேசுவரன் கோயில், திருப்பராந்த கேசுவரன் கோயில், ஐராவதேசுவரன் கோயில் முதலியனவாகும். சிறப்புத் தன்மைகள் குதிரைக் குளம்பாணி வடிவிலான தரைமட்ட அமைப்பினையும், தூங்கானை மாடத்தினையும் கொண்டு விளங்குவது நந்திவர்மன் பாணியில் கட்டப்பட்ட கோயில்களின் தனிச் சிறப்பாகும். 'லிங்கத்தின் வடிவத்தையே கோயிலாக அமைப்பது' என்பது தூங்கானை மாடத் கோயிலின் தத்துவமாகும். யாளி, அரிமா, பலகணிணிச் சாளரம் ஆகியவை முந்திய பாணிகளில் சிறப்பிடம் பெற்றிருக்க இப் பாணியில் அவற்றிற்குச் சிறப்பிடம் இல்லை . பலகணியின் நடுவில் விசிறி போன்ற உருவமும் அமைந்து இருப்பது இதன் தனித்தன்மையாகும். நந்திவர்மன் பாணியில் கட்டப்பட்ட கோயில்களில் கொற்றவை, ஆனைமுகன், கந்தன் ஆகி யோரின் உருவங்கள் புதுமையாகவும், சிறப்பாகவும் காணப்படுகின்றன, தூண்களின் அடியில் அரிமாவின் உருவம் அமர்ந்து, சிலிர்த்து உரறும் பாணியில் அமைந்துள்ளன. விங்கங்கள் புதுமையானவை, எடுத்துக் காட்டாகக் குடிமல்லம் பரசுராமேசுவரன் கோயிலிலுள்ள லிங்கத்தில் வில்லேந்திய உருவம் காணப்படுகிறது. உலகத்தில் வேறெங்கிலும் இத்தகைய லிங்கம் காணப்படவில்லை. ஒரகடம் வாடாமல்லீசுவரன் கோயில், குடிமல்லம் பரசுராமேசுவரன் கோயில் ஆகியவை தூங்கானை மாடக் கோயில்கள் ஆகும். நந்திவர்மன் பாணியில் கட்டப்பட்ட கோயில்கள் உயர்ந்த மேடை யின் மீது அமைந்து நீண்ட படிக்கட்டுகளைப் பெற்றிருக்கும். கருவறை யிலும் அதனுடைய பின்புறத்திலும், மண்டபத்திலும் கூடச் சிற்பங்கள் காணப்படும். சிற்பங்களின் பின்புறத்திலும், படைகளின் பின்புறத்திலும் ஒளிப்பிழம்பு அமைந்திருப்பது இப் பாணியில் காணப்படும் புதுமை யாகும். சிற்பக்கலை பல்லவர்காலச் சிற்பங்களை இரு வகையாகப் பிரித்தறியலாம். ஒன்று பெரும்பாறைப் புடைப்புச் சிற்பங்கள், மற்றொன்று குடைவரை மண்டபங்களிலும், கோயில்களிலுமுள்ள சிற்பப்படிமங்கள். மாமல்லையி லுள்ள மிகப்பெரிய பாறைமீது செதுக்கப்பட்டுள்ள அருச்சுனன் தவம்" எனப்படும் சிற்பம் சிறப்புடையதாகும். இதனைப் பகீரதன் தவம்" என்றும், 'கங்கைக் கரைக்காட்சி' என்றும் அழைக்கின்றனர். இதில் பலதிறப்பட்ட மக்களையும், நாகர்களையும், விலங்கு இனங்களையும், ஆறு, மணல் போன்ற இயற்கைக் காட்சிகளையும் நாம் காண்கிறோம். சுருங்கக் கூறின் பல்பவரின் குடைவரைக் கோயில்கள், கற்றளிகள், ஒற்றைக் கற்றோர்கள் ஆகிய எல்லாவற்றிலும் காணப்படும் பலதிறப்பட்ட உருவங்களும், இயற்கைக் காட்சிகளும் இப் பெரிய சிற்பத் தொகுப்பில் இடம் பெற் றுள்ளன. இதே போன்ற மற்றொரு பெரும் பாறைச் சிற்பம் தொடங்கப் பெற்று முடிவுறாமல் நிற்கிறது. அதனையடுத்து முடிவு பெறாமல் நிற்கும் மற்றொரு சிற்பம் ஒரு யானையின் உருவமாகும். அதற்கு மேலும் கீழும் முடிவுறாத சிறிய யானைகளின் உருவங்களும், மயிலும், குரங்கும் காணப் படுகின்றன. திரௌபதைத் தேரிலும், அருச்சுனன் தேரிலும், தருமராசர் தேரிலும் அழகிய சிற்பப்படிமங்கள் பல காணப்படுகின்றன. திரெளபதைத் தேரின் கருவறையில் புடைப்போவியச் சிற்பமாகத்தாமரை மேடைமீது நிற்கும் கொற்றவையின் சிற்பம் காணப்படுகிறது. எதிரில் தலைக்காவு கொடுக்கும் பத்தனும், அதனை நடத்திவைக்கும் பூசாரியும் மண்டியிட்டுக் காணப்படுகின்றனர். அருச்சுனன் தேரில் காணப்படும் சிற்பங்களில் புதுமையானவை கருடாழ்வாரின்மீது அமரும் திருமாலின் சிற்பமும், அரசனும் அரசியும் உள்ள சிற்பமும், வாயிற்காப்போரின் சிற்பங்களும் ஆகும். தருமராசர் தேரில் ஒவ்வொரு மூலையிலும் இரண்டு சிற்பங்கள் மேனி, மொத்தம் எட்டுத் தெய்வச் சிற்பங்கள் காணப்படுகின்றன. சிவன் பல்வேறு வடிவங்களில் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டு உள்ளார். மாதொரு பாகனாகக் காட்சியளிப்பது அவற்றுள் சிறப்பானது. இக்கோயி வின் ஒவ்வொரு களத்திலுமுள்ள ஒவ்வொரு பக்கச் சுவரிலும் சிவனது திருவிளையாடல்களைக் குறிக்கும் சிற்பங்களும் உள்ளன. நான்முகன், திருமால், கதிரவன் முதலியோரின் சிற்பங்களும் இதில் காணப்படுகின்றன, கட்டுமானக்கோயில்களில் சிறப்பான சிற்ப அணிகளை உடையது காஞ்சிக் கயிலாசநாதர் கோயிலாகும். இதன் முன் கோயிலிலுள்ள லிங்கம் பதினாறு பட்டைகளை உடையதும், சிறந்த வேலைப் பாடுடையது மாகும். இந்த லிங்கம் உள்ள பின்புறச் சுவரில் சோமாஸ் கந்தர் உருவம் செதுக்கப் பட்டுள்ளது. சுவர்களில் "லதாவ்ரிசிக" நடனமாடும் சிவனுருவம் செதுக்கப் பட்டுள்ளது. கோயிலின் புறச் சுவரில் அழகிய லிங்கங்களும், யாழ் மீட்டும் விஞ்சையர்களும், எட்டுக் கைகளையுடைய அகோர வீரபத்திரனும், தட்சிணாமூர்த்தியும் காணப்படுகின்றனர். மேற்புறச் சுவரில் சிவன் யானைக்கை நடனமாடுகிறார். மண்டபச் சுவரில் இராசசிம்மனும், அவனுடைய மனைவியர் இருவரும், மகனும் சிற்பங்களாகத் திட்டப்பட்டுள்ளனர். இதனையடுத்து அரிமாவின்மீது அமர்ந்துள்ள காளியின் உருவம் செதுக்க பட்டுள்ளது. இக் காளிக்குப் பக்கத்திற்கு எட்டு மேனிப் பதினாறு கைகள் உள்ளன. திருச்சுற்றுப் பாதைக்கடுத்த மதிலின் உட்புறத்தில் 58 மாடக்குழிகளும், அவற்றில் சிவனின் திருவிளையாடல் சிற்பங்களும் காணப்படுகின்றன. கொற்றவையின் உருவங்களும், உருத்திர மூர்த்தியின் பதினாறு உருவங் களும் எதிர்ப்புறச் சுவரில் காணப்படுகின்றன. அரிமாத் தூண்களும், அவற்றின்மீது வீரர்களும் அமர்ந்து காணப்படுகின்றனர். பின்புறச் சுவர் களில் அரிமாக்கள் பின்னங்கால்களை ஊன்றி நிற்கும் காட்சி அழகாகக் காணப்படுகிறது. சிவன் ஆடும் பல்வேறு நடனக் காட்சிகளோடு, பூதக் கணங்களும், எருதும்கூட நடனமாடுகின்றன. சிவனாரின் நடனங்களில் "குஞ்சிதபாத நடனம்' சிறப்பானது. காஞ்சியிலுள்ள வைகுந்தப் பெருமாள் கோயிலில் காணப்படும் சுவாப்புடைப்போவியச் சிற்பங்கள் பல்லவர் வரலாற்றை வரிசையாக விளக்கிச் செல்லும் சிற்பங்களாகும். இவற்றில் முடிசூட்டு விழாவைக் குறிக்கும் சிற்பங்களும், வீரர்கள் அணிவகுத்துச் செல்லும் சிற்பங்களும் மிக அதிகமாகக் காணப்படுகின்றன. மாமல்லபுரத்திலுள்ள கடற்கரைக் கோயிலில் காணப்படும் சிற்பங்களில் சிறப்பானவை நான்கு கைகளை உடைய வாயிற்காப்போரின் உருவங்களும், ஒவ்வொரு தளத்தின் மூலை யிலும், சுவர்களின் மீதும், பிறவிடங்களிலும் காணப்படும் அரிமாவின் உருவங்களும், கருவறையின் பின்புறச் சுவரில் காணப்படும் சோமாஸ்கந்தர் உருவமும் சிறப்பானவை யாகும். கருவறைச் சுவரிலும், பிற சுவர்களிலும் சோடனைகளும், சிற்ப அணிகளும் மிகுந்து காணப்படுகின்றன. இங்கும் பெரும்பாறைச் சிற்பத்தைப் போன்ற, ஆனால், சிறிய அளவில் காணப்படும் 'பகீரதன் தவக்காட்சி காணப்படுகிறது. இக்கோயிலின் சுற்று மதிற்சுவரின் மேல் வரிசையாக அமர்ந்துள்ள எருதுகளின் உருவங்கள் காணப்படு கின்றன. இக் கோயிலின் மூலவரான பள்ளிகொண்ட பெருமாளின் உருவமும் புடைப்புச் சிற்பமாகவே செதுக்கப் பட்டுள்ளது. பிற்பட்ட பல்லவர் பாணியில் கட்டப்பட்ட திருத்தணி வீரட்டா னேசுவரர் கோயிலில் காணப்படும் சிற்பங்கள் யாவும் தொடக்ககாலச் சிற்பங்களைப் போலுள்ளன. இரண்டு கைகளை உடைய வாயிற்காப் போரும், பட்டையின்றிக் காணப்படும் லிங்கமும், முற்காலப் பல்லவர் பாணியில் செதுக்கப்பட்ட சிற்பங்களாகும். சிவன் திருமால், நான்முகன் ஆகியோரின் உருவங்கள் கருவறைச் சுவரின் வெளிப்புறத்திலுள்ள மாடக் குழிகளில் காணப்படுகின்றன. முகமண்டபத்தில் நான்கு கைகளுடன் நின்றவாறுள்ள கொற்றவை காணப்படுகிறாள். தலைக்கு மேலுள்ள மாடக்குழியில் யாள வரிசை. ஒதிம வரிசை ஆகியவை காணப்படுகின்றன. சங்கு சக்கரத்தில் ஒளிப்பிழம்பு காணப்படுகிறது. குடிமல்லம்பரசுராமேசு வரன் கோயில் மூலவராகவுள்ள லிங்கமே ஒரு புதுமையான சிற்பமாகும். உலக உயிர் உண்டானதைக் குறிக்கும் மெய்ப்பொருள் வடிவமாக(தத்துவ மாக இந்த லிங்கம் காட்சியளிக் கிறது. ஓவியக்கலை பல்லவரின் குடைவரைக் கோயில்கள் எல்லாவற்றிலும் அழிந்து பட்ட வண்ண ஓவியங்களின் எச்சங்கள் காணப்படுகின்றன. எஞ்சி யிருக்கும் ஓவியங்களில் சிவப்பு, ஆரஞ்சு சிவப்பு வண்ணங்கள் மட்டும் அழியாமல் காணப்படுகின்றன. பல்லவர் ஓவியங்களில் காணப்படும் ஒரு சிறப்புத்தன்மை கீற்றுக்கோடும், வண்ணங்களும் சிறப்பாக அமைந்திருப்பு தாகும். சிறுகீறலை யமைத்து முகத்தோரணையையும், உடலுறுப்பின் அசைவையும் தெளிவாக விளக்கிக் காட்டும் நுணுக்கம் பல்லவ ஓவியக் கலைஞனுக்கே உரிய திறமையாகும். பல்லவரின் தாமரை மலர், தாமரைக் குளம், மீன்கள், யானை முதலிய விலங்குகள் இலைக்கொத்தணிச்சோட னைகள், நடன மகளிர்கள், அவர்களின் கூந்தல், ஆடை, அணிகள் முதலி யவை பிற்காலத்துச் சோழர், பாண்டியர் ஓவியங்களிலும் எதிரொலிக் கின்றன. முதலாம் மகேந்திரவர்மனுக்குச் சித்திரக்காரப் புலி' என்ற விருதுப்பெயர் உண்டு. தக்கணச் சித்திரம்' என்ற நூலுக்கு இவன் உரை எழுதினான். இவற்றிலிருந்து இவனால் சமைக்கப்பட்ட குடை வரைகள் யாவற்றிலும் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டனவென்பதையும், காலப் போக்கில் அவை அழிந்துபட்டனவென்பதையும் அறியலாம், இராசசிம்மன் காலத்தில் கட்டப்பெற்ற பனைமலைக் கோயிலில் ஓர் அழகுத் தேவதை மணிமுடி தரித்து, தலைக்குப் பின்புறத்தில் குடை விரித்து நின்றவண்ணம் காட்சியளிக்குமாறு ஓர் அழகிய வண்ண ஓவியமாகத் தீட்டப்பெற்றுள்ளது. இடக்காலை மடக்கி, வலக்காலில் நின்று அழகாகக் காட்சியளிக்கும் அத் தேவதையினுருவம், அமராவதி, அசந்தா ஆகிய விடங்களில் காணப்படும் தேவதைகளின் உருவங்களைப் போல் காட்சியளிக்கின்றது. இவ்வாறு நிற்கும் காட்சி 'லலித்திலக பாணி" என அழைக்கப்படும். காஞ்சிக் கயிலாசநார் கோயிலைச் சுற்றியுள்ள சிறு மண்டபங்கள் சிலவற்றுள் இராசசிம்மன் காலத்து ஓவிய எச்சங்கள் காணப்படு கின்றன. முன் கோயில் கருவறைச் சுவரில் காணப்படும் சோமாஸ் கந்தரின் வண்ண ஓவியம் தலையாய சிறப்புடையதாகும். காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோயில் விமானத்திலும், மாமல்லைத் தருமராசர் தேரின் மேல் தட்டுகளிலும் வண்ண ஓவியங்களின் எச்சங்கள் காணப்படுகின்றன. கயிலாசநாதர் கோயிலில் பல்வேறு பகுதிகளில் அழிந்துபட்ட ஓவியங்களின் எச்சங்களும், அறைகுறையாகக் காணப்படும் வண்ண ஓவியங்களும் உள்ளன. இன்று காணப்படும் பல்லவர் கால ஓவியங்களில் ஓரளவு அழியாமல் முழுவதுமாகக் காணப்படும் ஓவியங்கள் சித்தன்னவாசல் குடைவரைக் கோயிலில் உள்ளதாகும். இவற்றுள் சிறப்பானவை மார் பளவே வரையப்பட்டுள்ள அரசனும், அரசியுமுள்ள ஓவியம், தூண் களில் வரையப்பட்டுள்ள நடனமகளிர் ஓவியங்கள், தாமரைக் குளம் ஆகியவை யாகும். நடனமகளிர் இருவர் தாணுக்கு ஒருவர் மேனி நடனமாடும் காட்சி சிறப்புடையது. வலப்பக்கமுள்ளவள் தன் இடக்கையைத் துதிக்கை போல் வைத்துக்கொண்டு வலத்து உள்ளங்கையைச் சதுரவடிவில் காட்டி ஆடுகிறாள். இது சிவனாரின் 'நாதாந்த' நடனம் என்பர். இடப்பக்க முள்னவள் 'லதாவிரிசிசு' நடனப் பாணியில் காட்சியளிக்கிறாள். இவ் விருவரின் உருவங்களும் இடுப்பளவே காணப்படினும் இவர்கள் அணிந் துள்ள ஆடை அணிகலன்களும் விளக்கும் மெய்ப்பாடுகளும் நம்மை மெய்சிலிர்க்கச் செய்கின்றன. இக் குடைவரையின் முன்மண்டபக் கூரையில் தீட்டப்பட்டுள்ள தாமரைக்குளக் காட்சி இயற்கையாகவும், பல்வேறு குறிகளுடனும், உருவங்களுடனும் காட்சியளிக்கின்றன. (இ) பல்லவர்கால இலக்கியங்கள் பல்லவர்கள் சமற்கிருத இலக்கிய வளர்ச்சிக்கே பாடுபட்டனர் என்பது ஓரளவு பொருத்தமான கூற்றேயாயினும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் அவர்கள் பணியாற்றினர் என்பதையும் மறுத்தல் ஆகாது. (அ) சமற்கிருத இலக்கியங்கள் (1) பட்டயங்கள்: பல்லவரின் சமற்கிருதப் பட்டயங்களையே சிறந்த இலக்கிய ஏடுகளாகக் கூறலாம். பரமேச்சுரவர்மனால் வெளியிடப்பெற்ற கூரம் பட்டயம் கூறும் பெருவளநல்லூர்ப் போர் வண்ணனையைப் படிக்கும்போது இப் பட்டயம் ஒரு தலைசிறந்த சமற்கிருத இலக்கியமே 184 எனக் கூறலாம். இரண்டாம் நந்திவர்மனுடைய காசாக்குடிப் பட்டயமும், தண்டன் தோட்டப் பட்டயமும், மூன்றாம் நந்திவர்மனுடைய வேலூர்ப் பாளையப்பட்டயமும் சிறந்த சமற்கிருத நடையினை யுடையனவாகும், (2) கல்வெட்டுகள்: பல்லவரின் கல்வெட்டுகளும் பட்டயங்களைப் போலவே சிறந்த சமற்கிருத நடையில் வெட்டப்பட்டுள்ளன. இராசசிம்ம னுடைய கயிலாசநாதர் கோயில் கல்வெட்டுகள், முதலாம் பரமேச்சுர வர்மனுடைய மாமல்லபுரக் கல்வெட்டுகள் முதலியன சிறந்த இலக்கிய நடையுடன் காணப்படுகின்றன. (3) நூல்கள்:லோகவிபாகம், கிராதார்ச்சுனீயம், அவந்தி சுந்தரி கதை, மத்தவிலாசப் பிரசனம், காவியதரிசனம் முதலியன பல்லவர் காலத்தில் எழுந்த சமற்கிருத நூல்களாகும். (ஆ) தமிழ் இலக்கியங்கள் பல்லவரில் மகேந்திரவர்மன், இரண்டாம் நந்திவர்மன், மூன்றாம் நந்திவர்மன். அபராசிதவர்மன் ஆகிய மன்னர்களே தமிழறிவு உடையவர்கள் ளாகக் காணப்படுகின்றனர் என்பதனை தளவானூர்க் கல்வெட்டு, திருமங்கை ஆழ்வாரின் பாடல்கள், திருத்தணிகைக் கல்வெட்டு, நந்திக் கலம்பகம் முதலியவற்றால் அறியலாம். பல்லவர் காலத்தில் பாச்சில்வேன் நம்பன், ஆசாரியர் அநிருத்தர், கோட்டாற்று இளம்பெருமானார், குவாவங்காஞ்சன் முதலிய தமிழ்ப் புலவர்கள் இருந்தனரென்பதையும் அறிகிறோம். இவர்களைத் தவிர பல புலவர்கள் வாழ்ந்தனர் என்பதை அறியும்போது அவர்கள் இயற்றிய நூல்களைப்பற்றி நாம் தெளிவாக அறிய முடியவில்லை . யாப்பருங்கல விருத்தியும், உரையும் பல்லவர் காலத்தில் ஆனவை யாகும். யாப்பருங்கலக் காரிகை உரையில் காணப்பெறும் சில நூல்களும் தொல்காப்பியச் செய்யுளியல் உரையில் காணப்பெறும் சில நூல்களும் இவர்கள் காலத்தனவாகக் காணப்படுகின்றன. யாப்பு நூல்கள், யாழ் நூல், காந்தர்வ நூல், பருப்பதம், தந்திரவாக்கியம், வஞ்சிப்பாட்டு, மோதிரப் பாட்டு, சுடசுண்டு, விளக்கத்தார் கூத்து முதலிய நூல்களின் பெயர்கள் இவற்றால் அறியப்படுகின்றன. திருமூலர் திருமந்திரம், பேயம்மையார் பதிகங்கள், சமயகுரவர் திருமுறைகள், ஐயடிகள், சிவத்தளி வெண்பா (ஷேத்திர வெண்பா, திருத்தொண்டர் தொகை, சேரமான் பெருமாள் அந்தாதி, உலா முதலிய சைவத் திருமுறைகள் பல்லவர்கள் காலத்தில் எழுந்தனவாகும். மூன்றாம் நந்திவர்மனைப் பற்றிய நந்திக்கலம்பகம் சிறப்புடைய தமிழ் இலக்கியமாகும். இத்தகைய சிறப்பான பாநூலைப் பாடியவரின் பெயர் தெரியவில்லை. இவ்வரசன் காலத்தில் வாழ்ந்த பெருந்தேவனார் "பாரத வெண்பா' எனும் சிறப்புடைய நூலை யாத்தார். மேற்கூறிய நூல்களைத் தவிரப் பல தனிப்பாடல்களும் இவர்கள் காலத்தனவாகக் கொள்ளப்படுகின்றன. சேரமான் பெருமாள் பாடிய வண்ணத்து அந்தாதி, மும்மணிக்கோவை, ஞானஉலா ஆகிய மூன்றும் இக் காலத்து நூல்களுள் தலையாய சிறப்புடையனவாகும், வைணவ ஆழ்வார்களின் நாலாயிரப் பிரபந்தம் பல்லவர் காலப் படைப்பேயாகும். பல்லவ மன்னரில் சிலரும் புலவர்களாகத் திகழ்ந்ததோடு பல புலவர்களும் இவர்களால் ஆதரிக்கப் பெற்றனர். இவர்களும், பல்வேறு கலைஞர்களும் இயல், இசை, நாடகமெனும் முத்தமிழையும் வளர்த்தனர். கழகசங்கக் காலத் தமிழ் நடை சமற்கிருதத்தோடு விரவி மணிப்பவர் நடையாக மாறத் தொடங்கியது பல்லவர் காலமே. ஆயினும், சமற்கிருதத் தொடர்பால் தமிழில் புதிய இலக்கிய வகைகள் உருவாகத் தொடங்கின. இதனால் அணி இலக்கணமும், கலம்பகமும், வெண்பாவும் மேலும் சிறப்புற்றன. (ஈ) பல்லவர் ஆட்சி முறை நாட்டுப் பிரிவு : பல்லவர் ஆட்சிமுறையைப் பற்றி அறிவதற்குச் செப்பேடுகளும், கல்வெட்டுகளும், சமகாலப் பட்டயங்களும் துணைபுரி கின்றன. இவற்றை ஆய்ந்து நோக்கும்போது இரண்டு கருத்துகள் தெளிவா கின்றன. ஒன்று பல்லவர் தமிழகத்தில் வந்தேறிகள் என்பது, மற்றொன்று பழந்தமிழ் மன்னர் முறைகளைப் பின்பற்றியே நாட்டை யாண்டனர் என்பது. இவர்கள் முதலில் ஆந்திரப் பகுதியில் வாழ்ந்தவர் களென்பது, சாதவாகனப் பேரரசு அழிந்த பின்னர் அதன் தென் பகுதிக்குத் தலைவர்க ளாகவிருந்த இவர்கள் தனியரசர்களாகி, மெல்ல மெல்லத் தமிழகத்தில் கால்கொண்டு தமிழக மன்னர்களாயின ரென்பதும் இவர்களின் ஆட்சிப் பிரிவுகளிலிருந்து அறியப்படுகிறது. மெளரிய, குப்த மன்னர்களைத் தழுவி ஆட்சி முறையினை அமைத்துக் கொண்ட சாதவாகனர்கள் தம் நாட்டை இராட்டிரம், விசயம்(விஷயம் அல்லது கோஷ்டம், கிராமம் முதலியவை யாகப் பிரித்து ஆண்டதைப் போலவே பல்லவரும் ஆந்திரப் பகுதியிலிருந்த தங்கள் நாட்டைப் பிரித்தாண்டனர். முண்டராட்டிரம், வெங்கோராட் டிரம் என்பன ஆந்திரப் பகுதியிலும், துண்டகராட்டிரம் தமிழ்ப்பகுதியி லும் இருந்தன. துண்டராட்டிரம் என்பது தொண்டை மண்டலத்தைக் குறிக்கும் மண்டலப் பகுதியாகும். ஈண்டு இராட்டிரம் என்பது மண்டலம் என்ற பிரிவையும் விஷயம் அல்லது கோஷ்டம் என்பது கோட்டம் என்ற பிரிவையும் குறித்தன, பல்வேருக்கு முன் தொண்டை நாட்டை ஆண்டுவந்த மன்னர்கள் கோட்டம், நாடு, கர் எனப் பிரித்து ஆண்டனர். பல்லவரும் அப்பிரிவுகளை அப்படியே ஏற்று ஆண்டனர். புதிதாகக் கால் கொள்ளும் எந்த ஆட்சியும் வந்தேறும் நாட்டின் பழக்கவழக்கங்களை மேற்கொண்டு ஆட்சி நடத்தினால்தான் நிலைபெற முடியும் என்ற உண்மையை இவர்களும் உணர்ந்தே தொண்டை மண்டலத்தில் தொன்று தொட்டு இருந்து வரும் ஆட்சிப் பிரிவுகளை மாற்றாமல் மேற்கொண்டனர் போலும். ஆகவே, இவர்களுடைய ஆட்சிப் பிரிவுகளும், ஆட்சிமுறையும் வடக்கிலிருந்து கடன் வாங்கப்பட்டவையல்ல. இம் மரபின் இடைக்காலப் பல்லவர் வரை வெளியிடப் பெற்ற சமற்கிருதப் பட்டயங்களில்தாம் பெரும்பாலும் இத்தகைய ஆட்சிமுறைப் பிரிவுகளும், மகா ராஜாதி ராஜா', 'தர்மமகாராஜா' முதலிய அடைமொழிகளும் காணப்படுகின்றன. பிற்காலப் பல்லவர்களின் பட்டயங்களிலும், கல்வெட்டுகளிலும் இத்தகைய சமற்கிருதச் சொற்கள் அதிகம் காணப்படவில்லையென்பதும், அவர்களில் பலர் தமிழ்ப் புலவர்களாகவும் இருந்தனரென்பதும் குறிப்பிடத் சாதவாகனப் பேரரசு ஆரிய சமயப் பண்புகளைப் பரப்பி அவற்றை மும்முரமாக நடைமுறைப்படுத்தியது. அவ்வாட்சியில் பேரதிகாரிகளா யிருந்து பின்னர் தனி அரசர்களான பல்லவரும் தம் ஆட்சியிலும் ஆரியப்பண்பைப் பரப்பினர். இதனால்தான் கழகக் காலப் பண்பாட்டின் அடிவந்த தமிழகத்தில் ஆரியப் பண்பும், மொழிக் கலப்பும் ஏற்பட்டன. தமிழ் மொழியில் சமற்கிருதம் கலந்து மணிப்பவழ நடை ஏற்பட்டது. ஆரியப் பூசாரிகள் இறக்குமதி செய்யப்பட்டுக் கடிகைகள், பார்ப்பனச் சேரிகள் அக்கிரகாரம், பிரம்மதேயங்கள், பிரம்மபுரிகள் முதலியவற்றில் குடியேற்றப்பட்டதாலும் அவர்களுக்கெனக் குமுகாய, அரசியல் பாது காப்புகளைத் தனிப்பட்ட விதிகளின்கீழ்த் தேடித் தந்ததாலும் பல்லவர் அரசியல் அமைப்பிலும் பல ஊடுறுவல்களை புதிய துறைகளைக் காண்கிறோம். பார்ப்பனரும் தம் இனத்திற்கும், மொழிக்கும், சமயத்திற்கும் தனி விதிகளை ஏற்படுத்திக் கொண்டு பல்வேறு சலுகைகளைத் துய்த்தனர். பார்ப்பனர் பல்லவர் ஆட்சியில் பெற்ற தனிச் சலுகைகளையும், அவற்றைப் பாதுகாக்க நின்ற தனித்துறைகளையும் ஊகித்துணரலாம். பல்லவ மன்னர்கள் முடிசூடுமுன் இயற்பெயரையும், முடிசூடியபின் வேறு விருது பெயரையும் கொள்வது மரபு. எ-டு.) இராசசிம்மன் இயற்பெயர்: இரண்டாம் நரசிம்மவர்மன் முடிசூட்டுப் பெயர். பரமேசு வரன் இயற்பெயர்: இரண்டாம் நந்திவர்மன் முடிசூட்டுப்பெயர். முடி சூட்டுப் பெயரையும் சமற்கிருதத்திலேயே அவிஷேக நாம்' என்றழைத்த னர். ஆரியப் பண்பாட்டைப் பரப்பிய அரசர்கள் “மகாராசன்', 'தரும் மகாராஜன்', 'மகாராசாதிராசன்' முதலான விருதுகளைப் பூண்டதோடு தாங்கள் செய்த வேள்விகளையொட்டியும் பட்டம் பெற்றனர்.சிவசுகந்த வர்மன் தன்னை 'அக்நிஷ்டோம- வாஜபேய - அசுவமேதராஜ்' என்ற பட்டங்களுடன் அழைத்துக் கொண்டான் இவையாவும் ஆரியவேத முறைப்படி செய்யப்படும் வேள்விகளாகும்). தொண்டை மண்டலம் பல்லவர் வருகைக்கு முன்பே 24 கோட்டங் களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. பல்லவரும் இப்பிரிவினையை அப்படியே மேற்கொள்ளலாயினர். பல்லவரின் கடைசி ஆட்சிப் பிரிவு 'ஊர்' ஆகும். தொண்டைநாட்டின் எல்லைகள் வடக்கே சுவர்ணமுகி யாறும், தெற்கே தென்பெண்ணையாறும், கிழக்கே வங்கக் கடலும், மேற்கே மேலைத் தொடர்ச்சி மலையுமாகும். அதாவது இவ்வெல்லைக்குள் இன்றைய காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, சித்தூர், வேலூர், திருவண்ணா மலை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் அடங்கியிருந்தன வெனலாம். தமிழ்ப்பண்பாட்டிற்கேற்பப் பல்லவ அரசர்களும் தெய்வங்க " ளாகவே மக்களால் மதிக்கப்பட்டனர். 'மன்னர் உயிர்த்தே மலர் தலை, உலகம்', 'மன்னன் எப்படி பன்னுயிர் அப்படி" என்றநெறிகளே அக்கால மரபாயிருந்தன. அரசன் அறவழி நின்று, தந்தை மக்களைக் காப்பதைப் போல் குடிகளைக் காத்தான். மக்கள் உயிர் நீத்தும் அரசைக் காக்கும் அறத்தை மேற்கொண்டனர். தந்தைக்குப் பின் மூத்த மகன் என்ற முறைப்படி அரசுக்கட்டிலேறினர். அரசுரிமையாளர் அற்றபோது அரசரது தம்பி மகன் அல்லது நெருங்கிய உறவினர் அல்லது பொருத் தமான ஒருவனைத் தேர்ந்தெடுத்து அரசுக்கட்டிலேற்றுவது பொறுப் புள்ள மக்களின் சுடமையாக இருந்தது. இலச்சினை பல்லவரில் பெரும்பாலோர் சைவர் ஆகவே நந்தி இவர்களது இலச்சினை ஆயிற்று. இதனை அவர்களது பட்டயங்களிலும் கோயிற் சிற்பங்களிலும் கொடிகளிலும் காண்கிறோம், உருவப்பள்ளி, பிகாரச் செப்பேடுகளில் 'அரிமா'வின் இலச்சினை காணப்படுகிறது. இச் செப்பேடுகள் போர்க்களங்களில் அல்லது பாசறைகளிலிருந்து வெளி யிடப்பெற்றவை. ஆதலால் வீரப்பண்பைக்குறிக்கும் 'அரிமா'வின் உருவம் இவற்றில் பொறிக்கப்பெற்றன. 'விடேல் விடுகு' என்பது விடை+வெல்+ விடுகு என்பதனடியாகப் பிறந்த சொற்களாகும். வெற்றியுடைய நந்தி இலச்சினையோடு விடப்பெற்ற ஆணை" என்பதே இதன் பொருள். ஆகவே, பல்லவர்களுக்கு விடேல்விடுகு' என்ற விருதுப்பெயரும் உண்டாயிற்று. பிற்காலப் பல்லவர்கள் சைவ சமயத்தில் திளைத்துவிட்டதால் தம் சமய அடையாளமாகக் 'கத்வாங்கம்' எனப்படும் சிவன் படையைக் கொண்டனர். முதலாம் பரமேசுவரவர்மன் சுவாங்கத்தைத்தம் கொடியில் இலச்சினையாகக் கொண்டான் என்பதைக் காசாக்குடிப் பட்டையத்தி விருந்து அறிகிறோம். இரண்டாம் நந்திவர்மனுக்கு அளித்த பலவகைப் படைகளில் கத்வாங்கமும் ஒன்றாகுமென்பதை வைகுந்தப் பெருமாள் கோயில் புடைப்போவியங்களிலிருந்து அறிகிறோம், நடுவண் ஆட்சி - அரசவை அமைச்சர்கள் அரசனுக்கு உறுதுணையாக அமைச்சரவை இருந்தது. சிவசு சுந்தவர்மனுடைய அமைச்சர் பெயர் ' அமாகத்தியர்' என்பதனை இரகத கள்ளிச் செப்பேட்டால் அறிகிறோம். மகேந்திரவர்மன் தன் அமைச்சனை யனுப்பித் திருநாவுக்கரசரை அழைத்து வந்ததாகப் பெரியபுராணம் கூறுகிறது. அரசனுக்குத் துணைபுரிய அமைச்சர்கள் குழுவொன்று இருந்ததென்பதையும், அவ் அமைச்சர்களில் பெரும் பாலோர் தந்தைக்குப் பின் மகன் என்ற முறையில் அமைச்சராயினர் என்பதையும் பார்ப்பனரும் அமைச்சர்களா யிருந்தனரென்பதையும், அமைச்சர்களுக்கும் பல விருதுப் பெயர்கள் உண்டென்பதையும் பட்டயம், கல்வெட்டுச் சான்றுகளிலிருந்து அறிகிறோம். நந்தி வர்மனுடைய அமைச்சன் பெயர் பிரம்மஸ்ரீராஜன்' என்பது. இவன் ஒரு பார்ப்பனன். நந்திவர்மனுடைய அமைச்சன் 'நம்பன் இறையூர் உடையான்" என்பதாகும். இவனுடைய முன்னோரும் அமைச்சர் களாயிருந்தனர். பிரம்மராயன்(பிரம்மராஜன்), பேரரையன் முதலியன அமைச்சர்களின் விருதுப்பெயர்களாகும். அரசு, போர்ச் செயல், சமயம், குமுகாயம் ஆகியவை செவ்வனே இயங்க இவர்கள் அரசாணை களைச் செயல்படுத்தினர். முடிசூட்டு விழா, அரசனைத் தேர்ந் தெடுக்கும் சவை, அறங்கூறவையம், அயலகத்தாது முதலிய வற்றிலும் அமைச்சர்கள் சிறந்த பங்கேற்றனர், செயன்மையர் (Excutives) அமைச்சர்களையொத்த செயல் படைத்தவர்கள் பலர் ஒவ்வொரு துறையின் ஆட்சிமுறையினைக் கவனித்தனர். இவர்களை இக் கால் ஆட்சியமைப்பில் செயலாளர்களுக்கு (Secretaries) ஒப்பிடலாம். அரசருக்குத் தனியாக ஒரு செயலர் இருந்தார். இவருக்கு உடன்பாடு கருமத் தலைவர்' என்பது பெயர். இவரைத் தவிர வாயில் கேட்பார்'செயலர், *கீழ்வாயில் கேட்பார்' (துணைச் செயலர்) ஆகியோரும் இருந்தனரென் பதைச் செப்பேடுகளிலிருந்து அறிகிறோம். நடுவண் ஆட்சிக்கு உதவியாக அமைச்சர் அமாத்தியர்), சுங்க அதிகாரி(மாடலிகர், நாட்டாட்சி செய்வோர்தேசாதிகர்), அரையர் மாணிக்கப் பண்டாரம்கருவூலக் காப்பாளர்), கருவூல மேற்பார்வையாளர் கோசா அத்தியட்சா, நயன்னமயர் அதிகரணிகர்) முதலிய அதிகாரிகள் இருந்தனர். ஊர்க்காப்பாளர் கிராமப் போசகர்), ஆநிரை காப்போர்கோவல்ல் பர்), அரக்திகர் காவலர்), குமிகர், தூதிர், நெய்கர், சஞ்சாந்தர் முதலிய அலுவலர் பெயர்களும் இரகதகள்ளரிச் செப்பேட்டில் காணப்படுகின்றன, காடுகளை மேற்பார்வையிட்டோர் 'குமிகர்' எனப்பட்டனர். குளியர் குளங்கீர்த்தங்களில் குளிப்போரைக் காத்தவர் தீர்த்திகர்' எனப்பட்டனர். அரண்மனையில் பல்வேறு தட்டார்களும், அலுவலர்களும் இருந்தனர். 1 நயன்மை மன்றம் அறங்கூறவையங்கள் பல்லவர் பெருநகரங்களில் இருந்தன. அவை 'அதிகரணங்கள்' என்று அழைக்கப்பெற்றன. இந்த அவையங்களின் தலைவர் * அதிகரணப்பாசகர்' எனப்பட்டார். அவையங்களின் அலுவலர் அதிகாரிகள்' எனப்பட்டனர். சிற்றூரர் அறமன்றம் "கரணம்' என்றும், பேரூர் அல்லது நகர அறமன்றம் 'அதிகரணம்' என்றும் அழைக்கப் பெற்றன. இக்கால உயர் அறமன்றத்திற்கு ஒப்பாகத் தருமாசனம் இருந்தது. இது பல்லவப் பேரரசின் பொது மன்றமாகும். அதிகரணம் என்பது குற்ற வழக்குகளை உசாவும் மன்றமென்றும், தருமாசனம் என்பது பொது வழக்குகளை உசாவும் மன்றமென்றும் கொள்வாருமுளர். எத்தகைய வழக்காயினும் மூன்றுவகை மரபுகளைக் கையாண்டே தீர்ப்பு வழங்கப் படும். அவை ஆட்சி, ஆவணம், அயலார் காட்சி என்பனவாம். ஆட்சி என்பது மரபுவழி ஒழுக்கத்தையும், ஆவணமென்பது வழக்குச் சுவடிகளை யும், அயலார் காட்சி என்பது உசாவலைக் கண்ணுற்றார் தரும் ஒப்பந்த இசைவுகளையும் குறிக்கும். அவர்களின் கையொப்பச் சுவடிகளை அரசின் ஊர்ப்பொது அறச்சாலையில் பாதுகாத்து வைப்பர். சிற்றூர்களில் இத்தகைய அறச்சாலைகளைக் காப்பவருக்குக் காரணத்தான்' என்று பெயர், சான்றாகக் கையொப்பமிடுபவருக்கு மேலெழுத்திட்டவர்' என்று பெயர். இத்தகைய ஆவணங்களை (பத்திரங்களை) எழுதவும், பட்டயங் களைச் செதுக்கவும் தனித்திறமை வாய்ந்தவர்கள் இருந்தனர். பொதுவாக அரண்மனைக்கு வேண்டிய அணிகலன்களைச் செய்வோரும், பட்டயம் தீட்டுவோரும் பொற்கொல்ல ரேயாவர். அரசிக்கு அணிகலன் செய்வோர் 'மாதேவி தட்டார்' எனவும், பட்டயம் தீட்டுவோர் பட்டய எழுத்தாளர்' எனவும் அழைக்கப்பட்டனர். இத்தகைய பட்டயங்களையும் கல்வெட்டு களையும் சிறப்பாக வரைவதில் திறமிக்க புலவர்கள் காரணிகர்' எனப் பட்டனர், படைகள் பல்லவரிடம் யானைப்படை, குதிரைப்படை, காலாள்படை சுப்பர் படை முதலியன இருந்தனவென்பதை ஓவியம், சிற்பச் சான்றுகளிலும் நந்திக்கலம்பகம் போன்ற இலக்கியங்களிலிருந்து அறிகிறோம். படைத் தலைவருக்குச் சேனாதிபதி' என்பது பெயர். வாதாபிப் போரில் பரஞ் சோதியார் சேனாதிபதியாகச் சென்றார் என்பதை அறிவோம். இவர் நரசிம்மவர்மனின் படைத்தலைவர் ஆவார். சிம்மவர்மனுக்கு விசுணு வர்மன் என்பவனும், இரண்டாம் நந்திவர்மனுக்கு உதயச்சந்திரனும், மூன்றாம் நந்திவர்மனுக்குப் பூதி விக்கிரமகேசரியும் படைத் தலைவர்சுளா யிருந்தனர். பல்லவரிடம் தேர்ப்படை இருந்ததாவென்பது தெரியவில்லை, ஆனால், சிறந்த கடற்படை நிரந்தரமாயிருந்த தென்பதை அறிகிறோம். நரசிம்மவர்மன் தன் நண்பனுக்கு உதவ இருமுறை ஈழத்திற்குத் தன் கடற்படையை அனுப்பியதும், சீமாறன் சீவல்லபன் என்ற பாண்டிய மன்னன் நிருபதுங்கனிடம் கடற்படை பெற்று ஈழத்தின் மீது படை. யெடுத்தான் என்பதையும், இராசசிம்மன், தன் கடற்படையைக் கொண்டு இலக்கத்தீவுகளை வென்றான் என்பதையும் அறியும்போது பல்லவரிட மிருந்த கடற்படை வலிமையை நன்கு அறியலாம். பல்லவர் படைகள் பண்பட்ட பயிற்சி யுடையவை. இதனாற்றான் தொடர்ந்து பல போர்களி லும் வாகை சூடி.வந்தன. மண்டில் ஆட்சி இராட்டிரம் என்பது ஆட்சிப் பிரிவில் மிகப்பெரிய பிரிவாகும், இதனை "மண்டிலம்' எனலாம். இம் மண்டிலங்களுக்கு மாநிலங்களுக்கு ஒப்பானவை) அரசரின் பிள்ளைகள், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் தலைவர்களாயிருந்தனர். அரசனின் பிள்ளைகள் யுவராஜாக் கள்', 'யுவ மகாராஜாக்கள்' என அழைக்கப்பட்டனர். சில சமயங்களில் இளவரசர்களும், அரச குடும்பத்து இளைஞர்களும் படைத்தலைவர்கள் -ளாகவும் அமர்த்தப்பட்டனர். இம் மாநில. ஆட்சியில். உதவி புரிய * ஆயுக்தகர்ள்', 'அத்தியக்ஷர்கள்' முதலிய உயர் அதிகாரிகளும் இருந்தனர். மண்டிலத் தலைவர்களும், இந்த உயர் அதிகாரிகளும் அரசரால் நேரடியாக அமர்த்தப்பட்டவர்கள். மண்டில ஆட்சியாளரோ, அரசரைத் தலைவராகக் கொண்டு திகழும் அமைச்சரவையோ ஊராட்சி முறையில் நேரடியாகத் தலையிடுவதில்லை. அவற்றை மேற்பார்வையிட இன்றைய ஆணையருக்கு ஒப்பான 'ஆளுங்கணத்தார்" எனப்படும் அதிகாரிகள் அமர்த்தப்பட்டனர். நாட்டாட்சி பல்லவர் ஆட்சியில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது ஊராட்சி முறையே யாகும். ஆயினும், நடுவண் ஆட்சிக்கு ஒப்பான அரசவையார் ஆட்சிக்குக் கீழ் 'நாட்டாட்சி' என்பதும் இருந்திருக்கிறதென்பதை அறிகிறோம். நாடு தாரைவிட பெரிய பகுதியாகும். அப் பகுதிக்குரிய " சான்றோர் "நாட்டார்' எனப்பட்டனர். ஊர் அல்லது சிற்றூருக்குச் சற்றுப் பெரிய நாடு ஆகும். இதன் ஆட்சி முறையை நாட்டாட்சி என்றனர். இது கராட்சியிலும் வேறுபட்ட தென்பதைத் திட்டவட்டமாகப் பிரித்துக் கூறும் பல்லவர் செப்பேடுகள் பல உள்ளன. ஆனால், இதன் நடைமுறை பற்றிய விரிவான விளக்கம் நமக்குத் தெரியவில்லை, அரசனது ஆணையை ஊராட்சிக்கு மேலாக) நிறைவேற்றியவர்கள் நாட்டார் எனப்பட்டனர் என்பதை மட்டும் அறிகிறோம், இதைப் போலவே இவர்கள் மூலம் அரசனுக்குத் திருமுகம் (விண்ணப்பம் படைக்கப்பட்டதென்பதையும் அறிகிறோம். நாட்டார் குறிப்பிட்டகராட்சிக்குட்பட்ட நிலம் அல்லது ஊரைத் தேவதானமாகவும், பிரம்மதேயமாகவும் அரசரது ஆணைக்கிணங்க அவற்றை நராட்சியினின்று பிரித்துத் தேவதானமாகவும், பிரம்மதேய மாகவும் மாற்றிய செய்திகளே பட்டயங்களில் மிக்குக் காணப்படுகின்றன. ஆகவே, இவர்கள் அரசனது பேராணையை நிறைவேற்றும் அதிகாரிக ளாகத் திகழ்ந்தன ரெனலாம். இதிலிருந்து அக் காலத்தில் கோயிலும், பார்ப்பனரும் அரசரிடம்பெற்றிருந்த செல்வாக்கையும் அறியலாம். இக் கால் விரைவுக்காலச் சட்டப்படி ஆள் தூக்கிச் சட்டம், அடிப்படை உரிமைகளையும், நடைமுறைச் சட்டங்களையும் செல்லாக்காசாக்கி மக்க ளாட்சித் தலைவர் பேராணை விடுப்பதுபோல் பார்ப்பனருக்குத் தனிச் சலுகைகள் வழங்கத் திருமுகங்களை விடுத்து நாட்டாரை நிறைவேற்றும் படி செய்துள்ளனர். ஆயினும், பொதுவாக ஊராட்சி முறையின் உரிமைகள் பாதிக்கப்படவில்லையென்பதையும், அது தமிழரின் வழிவந்த சொத்தென்பதையும் நாம் உணர்தல் வேண்டும். ஊராட்சி ஊரார் என்போர் அரையாண்ட அவையினர் ஆவர். இந்த ஊரார் ஆண்ட ஆட்சிமுறையினைப்பற்றி அறிய திருமால் விண்ணகரப் காவேரிப்பாக்கம் பட்டயங்களும் பிறவும் உதவுகின்றன. வேளாண்மை , நீர்ப்பாசனம், கோயிற் பணிகள், அறங்கூறல் முதலிய பணிகளை ஊர் மன்றங்கள் கவனித்தன. பட்டயங்களின்படி நோக்கும்போது சுமார் இருபது ஊர் மன்றங்கள் பல்லவராட்சியில் இருந்தனவென அறிகிறோம். மேலும் பலவும் இருந்திருக்கலாம். பளர் மன்றம் பல பிரிவுகளாகப் பிரிந்து செயல்பட்டது. ஒவ்வொரு பிரிவும் வாரியம்' எனப்பட்டது. இந்த வாரியங்களில் பங்கேற்றவர்கள் 'வாரியப் பெருமக்கள்' எனப்பட்டனர். தோட்ட வாரியம், ஏரி வாரியம், பொன் வாரியம் என்று பல வகை வாரியங்கள் இருந்தன. ஏரிகளைப் பழுதுபார்க்க ஒதுக்கும் மானியம் “ஏரிப்பட்டி எனப்பட்டது. சில சிற்றூர்கள் அரசின் நேர்முகப் பொறுப்பாளரால் ஆளப் பட்டன. அப் பொறுப்பாளர் 'ஆளுங்கணத்தார்' எனப்பட்டார். சார் மன்றங்களைக் கண்காணிக்க அரசால் அமர்த்தப்படும் ஆணையர் 'ஆளுங்கணத்தார்' எனப்பட்டார். கோயில்களைப் பராமரிப்பது தலை யாய அறமாகக் கருதப்பட்டது. அத்தகைய கோயில் ஆட்சியாளர்கள் அமிர்தணத்தார்' எனப்பட்டனர். பிரம்மதேயச் சிற்றூர்கள் பார்ப்பனருக்கென உண்டாக்கப்பட்ட சிற்றூர்கள் பிரம்மதேயச் சிற்றுார்கள் ஆகும். இவை எத்தகைய வரியுமின்றித் தனித்திருந்தன. உதயச் சந்திரமங்கலம், தாயமுகமங்கலம், பட்டத்தான்மங்கலம் முதலியன அத்தகைய பிரம்மதேயச் சிற்றூர்களாகும். தேவதானச் சிற்றூர்கள் இவை கோயில்களுக்கு விடப்பட்ட சிற்றூர்களாகும். இவற்றி லிருந்து வரும் வருவாய் முழுவதும் கோயில் திருப்பணிகளுக்கே செலவிடப் படும் பொன்னேரியை அடுத்த திருக்காட்டுப்பள்ளி அத்தகைய தேவதானச் சிற்றுாரில் ஒன்றாகும். இத்தகைய சிற்றூர்களிலிருந்து வரும் வருமானமேயன்றி கோயில் களிலிருந்து வரும் வருமானமும், கோயிலுக்கெனத் தனியார் தரும் தானங் களும் கோயிற்பணிகளுக்கே பயன்பட்டன. தேவதானம், பிரம்மதேயத் தைப் போலவே சமணப்பள்ளிகளுக்கும் மானியம் விடப்பட்டது. இது பள்ளிச்சந்தம் எனப்பட்டது. வருவாய் பல்லவராட்சிக்கு நிலவரியே பெரும் வருவாயாக இருந்தது. நிலக் கிழார்கள் தாமே உரிமையுடன் கொண்டிருந்த நிலம் 'பயல் நிலம்' எனப்பட்டது. பெருநிலக்கிழார்கள் தம் நிலங்களை வாரத்திற்குப் பயிரிடும்படி சிறு குடியானவர்கள் அல்லது உழவர்களிடம் விட்டனர். விளைச்சலில் பாதி நிலக்கிழாருக்கும், பாதி பயிரிடுவோருக்கும் சேர்ந்தது. அரசாங்கத்திற்கெனத் தனிப்பட்ட முறையில் நிலம் ஒதுக்கப் பட்டிருந்தது. இது 'அடைநிலம்' எனப்பட்டது. அடைநிலத்திலிருந்து அதன் விளைச்ச வில் பாதி வாரியாக அரசுக்குச் செலுத்தப்பட்டது. இதனைப் பயிரிடும் உரிமை அடிக்கடி மாற்றப்பட்டது. சிறந்த நீர்ப்பாசன ஏந்துகள் அமைக்கப் பட்டிருந்ததால் நிலங்கள் தரிசாக விடப்படவில்லை. உப்புக் காய்ச்சுதலும், சர்க்கரை காய்ச்சுதலும் அரசின் தனியுரிமைச் சொத்து ஆகும். பார்ப்பனருக்குச் சலுகைகள் பிரம்மதேயம், தேவதானம் எனப்படும் சிற்றூர்களில் அக்கிரகாரம் வசித்த பார்ப்பனர்களுக்கு எத்தகைய வரியும் இல்லை. இவ்வூர்களில் வளர்க்கப்படும் தென்னை மரங்களுக்கு வரி இல்லை, இவற்றில் கள் இறக்கவும் கூடாது. ஆனால், இதையே பார்ப்பனர் அல்லாதார் பயிரிட்டால் இதன் விளைச்சலில் வருமானத்தில் பாதியை அரசுக்கு வரியாகக் கொடுக்க வேண்டும். இவர்களின் நிலத்திலுள்ள கமுகு, பனை, தென்னை மரங்கள் வெட்டப்பட்டால் அவற்றின் அடிப்பாகத்தை அரசுக்குக் கொடுக்கவேண்டும். சீன நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட அரிய செடியான மருக்கொழுந்தைப் பார்ப்பனர் தவிர மற்ற யாரும் பயிரிடக்கூடாது. அவ்வாறு பயிரிடத் தனியாக அரசிடம் உரிமை பெறவேண்டும். அதற்கானப் பெரும் தொகையை வரியாகச் செலுத்த வேண்டும். பார்ப்பனரல்லாதார் 'நீலோற்பலம்'(குவளை நடுவதற்குக் 'குவளை நடுவரி', மலரை விற்பதற்குக் 'குவளைக்காணம்' ஆகிய வரிகளைச் செலுத்தவேண்டும். செங்கழுநீர்க் கொடியை நடுவதற்கும் இதைப் போலவே வரிகள் செலுத்த வேண்டும். ஆனால், இவற்றைப் பார்ப்பனர் பயிரிட்டால் எத்தகைய வரியும் செலுத்த வேண்டியதில்லை. நிலவரியைத் தவிரபலதிறப்பட்ட வரிகளைப் பல்லவர் பெற்றனர். அவை காணம், இதை, காயம், சாற்று, பூச்சி, விலை, பாடு முதலிய பெயர்களால் அறியப்படுகின்றன. தென்னை, பனை ஆகிய மரங்களி விருந்து கள் இறக்குவதற்கு ஈழநாட்டிலிருந்து வந்தவர் தனியே செலுத்திய கள் வரிக்கு 'ஈழப்பூச்சி' என்று பெயர். ஆடுமாடு களை மந்தையாக வைத்திருந்த இடையர்கள் செலுத்தியதாகக் கூறப்படும் வாரி இடைப்பூச்சி" எனப்பட்டது. தென்னை, பனை மரங்களி லிருந்து சாறு இறக்கவும், பனைவெல்லம் செய்யவும், பாக்கு விற்கவும் வரிகள் செலுத்தப்பட்டன, "கல்லால் காணம்' என்பது கண்ணாலக்காணம் திருமண வரி) என்றும், கல்லால மரத்திற்குச் செலுத்தப்பட்ட வரியென்றும் கூறுவர். சித்திரமூலம் எனப்படும் செங்கொடி பயிரிடுவோர் செங்கொடிக் காணமும், கருசலாங் கண்ணி பயிரிடுவோர் கண்ணிட்டுக் காணமும் செலுத்தவேண்டும். மேற்கூறிய வரிகளைத்தவிர நிமித்தத் தொழிலை மேற்கொண்டோர் (புரோகிதர்) *பிராமணராச காணம்' என்ற வரியையும், மட்பாண்டம் செய்வோர் குசக்காணம்' என்ற வரியையும், தட்டார் 'தட்டுக் காணத்தை யும் செலுத்தினர். ஊர்த்தலைவன் மக்களிடமிருந்து பெற்ற அல்லது அரசுக்குச் செலுத்திய வரி விசக்காணம் (வியவன் காணம் எனப்பட்டது. துணி வெளுப்போர் வண்ணார் பாறைக்காணமும், படகுக்காரர் பட்டிகைக் காணத்தையும், சுத்தி செய்வோர் கத்திக் காணத்தையும், திருமுகம் ஓலபெறுவோர் திருமுசுக் காணத்தையும் செலுத்தினர். தரகர், வாணிகர், நூல் நூற்போர், துணி நெய்வோர், ஆடை விற்போர், மீன் பிடிப்போர், தரகு செய்வோர், பறையடிப்போர்,நெய்விற்போர் முதலியோ ரும் வரி செலுத்தினர், அறுவடைக் காலங்களில் திறை பெறவரும் அதிகாரிகட்குச் சிறு தொகை படியாகச் செலுத்தப்பட்டது. இது எல் சோறு நாள்சோறு) எனப்பட்டது. நயன்மை மன்றத்தில் நாயத்தாரால் விதிக்கப்படும் தண்டமும்(மன்றுபடு அரசுக்கு வருவாயாக அமைந்தது. (உ பல்லவர் காலச் சமயம் பல்லவர் காலத்தில் முகாமையாக இருந்த சமயங்கள் மூன்று ஆகும் அவை சமணம், புத்தம், சைவம் ஆகியவை. சமணத்தை ஆருகத சமயம்" என்றும் புத்தத்தைச் சாக்கிய சமயம்' என்றும் அழைப்பர். சமணர் புத்தக் கோயில்களைப் பள்ளி யென்றும் அவற்றிக்கு விடப்படும் மானியங்களைப் பள்ளிச்சந்தமென்றும் வழங்கினர். சமணத் துறவிகளுக்கும் புத்தத் துறவிகளுக்கும் முறையே பாழி, விகாரை எனப்படும் மடங்களிருந்தன. இவை செல்வத்தால் செழித்தன. மக்களுள் பெரும்பாலோர் இவ்விரு சமயங்களைப் பின்பற்றினர். தொண்டை நாட்டிலும், சோழ நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் இவ்விரு சமயங்களே சிறந்து காணப்பட்டன. இந் நாடுகள் சில போது முழுவதுமாக பல்லவராட்சியின் கீழிருந்தனவென் பதைப் பார்த்தோம். ஆகவே, பல்லவர் காலத்தில் தமிழகம் முழுவதும், சமண சாக்கியரீபுத்தம் சமயங்கள் நிலவிச் செல்வாக்குப் பெற்றிருந்தன. மகேந்திரவர்ம பல்லவன் முதலில் சமண சமயத்தவனாக இருந்தான், பாண்டிய நாட்டரசன் நெடுமாறன் சமணனாக இருந்தான். மன்னன் எவ்வழி மக்களும் அவ்வழியாயினர். பாண்டிய நாட்டின் பல குன்றுகளில் சமண முனிவர்களின் குடை வரைகள் இருந்தனவென்பதற்குப் பெரியபுராணத்திலும் சான்றுகள் உள்ளன. நரசிம்மவர்ம பல்லவன் காலத்தில் தோராயமாக கிபி. 540-ல் தமிழகம் போந்த சீனப்பயணி யுவான் சுவாங்கு தாம் எழுதிய 'புத்த நாடு சுளின் ஆவணங்கள்''ஷியூகி' என்ற நூலில் தமிழகத்துச் சமயங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறான். பவ்வவரின் கோநகரான காஞ்சியில் மட்டும் நாற்றுக்கும் மேம்பட்ட புத்தப் பள்ளிகள் இருந்தனவென்றும் ஆயிரத்திற் கும் மேம்பட்ட புத்தத் துறவிகளும் இருந்தனரென்றும் யுவான் சுவாங்கு கூறுகிறான். மேலும், எண்பதுக்கு மேம்பட்ட கோயில்களும் அங்கு இருந்தனவென்றும், அவை சமணர்களுக்கு உரியன திசம்பரசமணசமயப் பிரிவினருக்கு வென்றும் குறிப்பிடுகிறான். அசோகரால் கட்டப்பெற்ற ஒரு புத்தப் பள்ளியைத் தாம் காஞ்சியில் கண்டதாகவும், எண்ணூறு புத்தத் துறவிகள் ஈழநாட்டிலிருந்து காஞ்சிக்கு வந்திருந்ததைத் தாம் கண்டதாக வும் யுவான் சுவாங்கு குறிப்பிடுகிறான். இங்குப் புத்தர்கள் சிறுபான்மையின் ராகவும் சமணர்கள் பெரும்பான்மையாகவுமிருந் தனரென்றும், அசோக ருடைய மகனாகிய தம்பி? மகேந்திரனால் கட்டப்பெற்ற ஒரு புத்த மடா வயத்தை மதுரையில் தான் கண்டதாகவும் யுவான் சுவாங்கு கூறுகிறான். மேற்கூறிய சான்றுகளிலிருந்து கிபி. ஏழாம் நூற்றாண்டில் தமிழகத் தில் சமணமும், புத்தமும் செழித்திருந்தனவென்பதைத் தெளிவாக அறி கிறோம். ஆயினும், தமிழரின் இரு கண்களான சைவமும், வைணவமும் தமிழகத்தில் இருந்தன. அவை சமண, சாக்கிய சமயங்களைப் போல் செழித்துக் காணப்படாவிடினும் மங்கிக்கிடந்தன. அதுபோது தமிழகத் தில் சைவ, வைணவ நெறியாளர்கள் தோன்றி இறைநெறி இயக்கம்" (பத்தி இயக்கம் என்னும் பேரியக்கத்தைத் தொடங்கினர். அதன் கரணியமாகச் சைவமும் வைணவமும் புத்துயிர் பெற்றெழுந்தன. இப்புத்துணர்ச்சியின் முதிர்ந்த பலனால் புத்தம் தமிழகத்தை விட்டேயகன்றது. சமணம் போராடிப் போராடி ஓய்ந்தது. திருநாவுக்கரசர் சைவத்தின் மறுமலர்ச்சி இவருடைய தந்தையாராகிய புகழனார் தமிழரின் உயிர் நாடியான சைவம் குன்றிச் சமணமும், சாக்கியமும் மிளிர்ந்து ஒளிர்வதைக் கண்டு மனம் புழுங்கினாரென்று சேக்கிழார் தம் பெரியபுராணத்தில் கூறுவதி விருந்து வடக்கிருந்து வந்தேறிய சமணமும், புத்தமும் சொந்த நாட்டுச் சைவத்தைச் சாய்த்து விட்டதேயென்னும் உணர்வும், அவை குடிகொண்ட பள்ளிகளிலே சிவனையமர்த்திக் காணவேண்டுமென்ற எழுச்சியும் தமிழர்களிடையே எழுந்தனவென அறிகிறோம். நாடெங்கிலும் வெறும் மேனியோடு திரிந்த சமணத்துறவிகளையும், முக்குடை தாங்கித் திரிந்த புத்த பிக்குகளையும் இவர்களுக்கு அரசரிடத்தும், மக்களிடத்து மிருந்த செல்வாக்கையும் கண்ட சைவர்கள் இவர்களை அழித்து, அந்த அழிவை உரமாகக்கொண்டே சைவப் பயிரைத் துளிர்விடச் செய்ய வேண்டும் என்றனர். பண்டைய தமிழரின் பண்பையும், சைவத்தில் அவர்கள் கொண் டிருந்த மேன்மையையும் மக்களுக்கு எடுத்துக்கூறி ஒரு புதிய புரட்சிக்கு அணியமாகும்படி, மக்களை வேண்டினர். சமண, சாக்கிய படங்களில் குவிந்த செல்வத்தால் இச் சமயங் களைச் சேர்ந்தவர்களின் படங்களில் வாழும் வாழ்க்கையில் உலக இன்பங்களைத் துய்க்கும் போக்கே அதிகரித்தது. சமணத்துறவிகள் வெற்றுடம்புடனும், குளிக்காமலும் திரிந்ததோடு உலக வாழ்க்கையை ஓளிபபற்றதாகவும், துன்பச் சகதியாகவும் கற்பித்துக் காட்டியது மக்களை மருளச்செய்தது. புத்த மடங்களில் பெண் துறவிகளும் தங்கியதாலும், செல்வம் மேலிட்டதாலும் புத்தரின் பாதையிலிருந்து வழுவி உலக இன்பங்களில் ஈடுபட்ட மடத்து வாசிகளின் வாழ்க்கை பொதுமக்களால் வெறுக்கப்பட்டது. இதுபோது சைவத்தின் எழுஞாயிறாகத் திருமுனைப்பாடி நாட்டில் திருவாரூரில் திருநாவுக்கரசர் தோன்றினார். இளமையில் இவரும் சமண சமயத்தைப் பின்பற்றி அச் சமயத்தின் குருவாகப் பாடலிபுரத் திருந்த மடத்தில் வதிந்தார்(பாடலிபுரம் - கடலூர் மாவட்டத்திலுள்ளது). அப்பொழுது அவருக்குத் "தருமசேனர்' என்று பெயர். இளமையில் தமக்கு ஏற்பட்ட சூலைநோய் தீரச் சிவபெருமானை வழிபட்டார். சூலைநோய் தீர்ந்தது. சிறந்த சிவபக்தராகித் திருநாவுக்கரசர் எனும் பெயருடன் தமிழகமெங்கும் சுற்றிச் சிவத்தைக் கற்பித்தார். தம் சமயத்தை விட்டுவிலகிய இவரைப் பழிவாங்கச் சமணர்கள் சமணனான மகேந்திரவர்மப் பல்ல வனை அணுகினர். பல்லவ மன்னனும் பல இடர்களை நாவுக்கரசருக்கு விளைத்தான். இடர் நீங்கி அருள்பாடிய அவரையே அவனும் பின்பற்றி னான். சமணத்தைப் பின்பற்றிய மன்னனேசைவனாகிப்பாடலிபுரத்திருந்த சமணப்பாழியை இடித்துத் தள்ளினானெனில் நாவுக்கரசரால் சைவம் பெற்ற மறுமலர்ச்சியை உய்த்துணரலாம். திருநாவுக்கரசரின் ஓயாத சமயப்பணியால் மங்கிய சைவம் தழைத்தது. தமிழகமெங்கிலும் சைவ அடியார்கள் தோன்றினர். அப்பூதி யடிகள், முருக நாயனார், சிறுத்தொண்ட நாயனார், திருநீலநக்கர்,நெடுமாற நாயனார், பாண்டிமாதேவியார், குலச்சிறையார், குங்குலியக் கலயர், திருஞானசம்பந்தர், திருநீலகண்டயாழ்ப்பாணர் முதலியோர் தீவிரமாகத் தமிழகத்திலும், இலங்கையிலும் சைவத்தைப் பரப்பினார்கள். நாவுக்கரசர் எண்பத்தோர் ஆண்டுகள் வாழ்ந்தார். மகேந்திரவர்மனுக்குப் பின் அரசாண்ட நரசிம்மன் காலத்திலும் வாழ்ந்தார். இவர் வாழ்நாளிலேயே சைவ நெறியை அசைக்கமுடியாத அளவுக்கு வேரூன்றச் செய்து போர்ப் படை வீரர்களைப் போன்ற சைவ அடியார்களை அணி வகுக்கச் செய்து மறைந்தார். திருஞானசம்பந்தர் சீர்காழியில் தோன்றிய திருஞானசம்பந்தர் இளமையிலேயே சைவ சமய அடியாராகிச் சமண, சாக்கிய சமயங்களைச் சாய்ப்பதில் முடுக்க மான பங்கேற்றார். இவரைப் பின்பற்றி அடியார் பலரும் சைவத்தைப் பரப்புவதில் பழிக்கும் அஞ்சாது உழைத்தனர். திருநாவுக்கரசருக்கு இளையவரான இவர் அவரைப் போலவே சைவசமயத்தைப் பரப்புவதில் ஈடுபட்டதால் அவருடன் இணைந்து பாடுபட்டார். அவரை ஞான சம்பந்தர் முதிர்ந்த அகவையின் கரணியமாக "அப்பரே' என்றே அழைதி தார். எனவே, நாவுக்கரசருக்கு அப்பர் என்ற பெயர் சிறப்பாக வழங்கப் பட்டது. சம்பந்தருடன் அக்காலத்தில் சிறந்து விளங்கிய சிறுத்தொண்டர் (பரஞ்சோதியார், திருநீலநக்கர், முருகநாயனார், குங்கிலியக்கலயர் முதலிய சிவனடியார்களும் சேர்ந்து சைவ நெறியைத் தீவிரமாகப் பரப்பினார்கள். பாண்டிய மன்னன் பாண்டியன் நெடுமாறன் கூன்பாண்டியன் என்பானைச் சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்குத் திருப்பிய பெருமை திருஞான சம்பந்தரையே சாரும், தலங்கள்தோறும் சென்று இனிய பாடல்களைப் பாடி மக்களிடையே இறைநெறி இயக்கத்தைப் பரப்பிய சம்பந்தரின் பாடல்களைத் திருநீலகண்ட யாழ்ப்பாணர் என்னும் அடியார் தம் யாழில் இசைத்து மக்களைக் கவர்ந்தார். - இவ்வாறு ஊர்தோறும் சைவ நெறியைப் பரப்பிய சம்பந்தர் பதினாறாவது அகவையிலேயே மண்ணுலகைவிட்டு மறைந்தார். இவரை "சைவக்குஞ்சு' என்று யாவரும் அழைப்பர். இவரால் மும்முரப்படுத்தப் பட்டசைவ இறைநெறி இயக்கம் இவருக்குப் பின் மிக மும்முரமடைந்து தமிழகமெங்கணும் பரவியது. பல்லாயிரம் அடியார்கள் சைவநெறியைத் தழைக்கச் செய்தனர். பிற அடியார்கள் அத்தகைய அடியார்களுள் சிறப்பாக குறிப்பிடப்படவேண்டியவன் பாண்டிய மன்னன் நெடுமாறன் ஆவான். இவனுக்குக் கூன்பாண்டியன், அரிகேசரி, அசமசமன், மாறவர்மன், அலங்கிய விக்ரமன், அகால காலன், மாறவர்மன் முதலிய வேறுபெயர்களும் உண்டு. முதலில் சமணனாகவிருந்த இவனைச் சம்பந்தர் சைவனாக மாற்றினார் எனக் கூறினோம். இவன் பின்னர் தம் மனைவி மங்கையர்க்கரசி, அமைச்சர் குலச்சிறை நாயனார் முதலியோரையும் சைவர் ஆக்கினான். நாவுக்கரசரையும், பாண்டிய நாட்டிற்கு வரவழைத்துப் போற்றினான். அடுத்து, அப்பூதியடிகள் என்ற பார்ப்பனரும், முருக நாயனார், குங்கிலியக்கலயர் ஆகிய கோயிற் பூசாரி களும், திருநீலநக்கரும் சம்பந்தரோடு இறைநெறி இயக்கத்தில் ஈடுபட்டனர். இவர்கள் யாவரும் சம்பந்தருடன் சேர்ந்து அறிவு ஒளியில் கலந்து மறைந்ததாகப் பெரிய புராணம் கூறுகிறது. மாமல்லனின் தானைத் தலைவராகவிருந்த பரஞ்சோதியார் சிறந்த சிவனடியாராகிச் சிறுத் தொண்ட நாயனார் என்று அறியப்பட்டுத் தன் மகன் சீராளனைச் சிவனுக்கு அமுதாகப் படைத்துப் பேறுபெற்றார். இவ்வாறு சைவ சமயம் பெறற்கரிய தம்பிள்ளையைக்கூட வெட்டிச் சிவனடியாருக்குத் திருவமுது படைக்கு மளவுக்கு முடுக்கமாக வளர்ந்து விட்டது. காஞ்சி, மயிலை, கொடும்பாளூர், திருப்பூந்துருத்தி முதலிய இடங்களில் சைவ மடங்கள் தோன்றின. இம்மடங்கள் சைவ நெறியைப் பரப்புவதற்கும், சைவக் கல்வியை வளர்ப்பதற்கும், சிறந்த தலங்களாயின. அரசர்களும், அரச குடும்பத்தினரும் செல்வர்களும் இவற்றிற்கு மானியங் களும், நிவேதனங்களும் அளித்தனர். சைவக்குரவர்களின் பத்திப் பாடல் களையும், அவர்களின் வாழ்க்கை நெறிகளையும் பாமரரும் அறியும்படி இம் மடங்கள் தமிழையும் சைவத்தையும் உடலாகவும் உயிராகவும் இணைத்துக் கற்பித்தன. பொதுப் பகைவர்களான சமணர்களையும், சாக்கியர்களையும் எதிர்த்து வளர்ந்த சைவம் நாளடைவில் தம்முள்ளேயே பல பிரிவுகளுக் கும், வேற்றுமைகளுக்கும் ஆளாகியது. ஆரிய மறைகளும் ஆரியப் பண்புகளும், வளர்ந்து நின்று சைவத்தில் இடம் பிடித்துக்கொண்டன. இதனால் இயற்கை நெறியில் நின்ற சைவத்தில் பல ஆரியக் கேடுகள் முளைத்துவிட்டன. காவு கொடுத்தல் உயிர்ப் பலியிடுதல், உடலை வருத்துதல் முதலிய பல தீச்செயல்கள் சைவத்தில் புகுந்தன. சைவரின் கடவுளான சிவன் ஆரியக்கலப்பால் உருத்திரன் ஆனான்; வேள்வி செய்து அவனைப் போற்றி மகாதேவன் ஆக்கினர்; தமிழ்க் கடவுளாகிய முருகன் கந்தனாகவும், சுப்பிரமணியனாகவும் மாறினான், வீரத்தின் சின்னமான கொற்றவை ஆரியக்கலப்பால் துர்க்கையானாள். ஐயனாரும், கபாலிகரும், துர்க்கையும் பாசுபதரும் சைவத்தைப் பாழ்படுத்திவிட்டனர். சிவனுக்குப் பார்வதி, கணேசன், சுப்பிரமணியன் முதலிய குடும்பங்களைப் படைத்தனர். இத்தகைய கேடுகளால் சைவத்தில் மயேச்சுரர் எனப்படும் பாசுபதப் பிரிவினரும், கபாலிகர் எனப்படும் பிரிவினரும் காவு கொடுத்தல், இறைச்சி படைத்துண்ணல் முதலிய சைவத்திற்கு நேர்மாறான வழிபாடுகளில் ஈடுபட்டனர். பாசுபதப்பிரிவினர் 'சிவக்கணங்கள்' என்ற குட்டிச் சிவன் படைகளை நம்பினர்; மாந்தரைக் காவு கொடுத்தல், இறந்தோரின் இறைச்சியைப் படைத்தல் ஆகிய வழிபாடுகளை மேற்கொண்டனர். காபாலிகர் சிவனைப் பைரவமூர்த்தியாக நாய் முகனாசுக் கற்பித்து மாந்தரைக் காவு கொடுத்தும் பிற உயிர்களைக் காவு கொடுத்தும் இறைச்சி, மது முதலியவற்றைப் படைத்தும் வணங்கினர். கபாலிகர் பெண்களை " ஆதிசக்தியின் தோற்றங்களாய்க்கொண்டனர்.சக்தி வழிபாடு சிறப்புற்றது, இவர்களைப் பின்பற்றியோர் சாதி வேறுபாடுகளை மறுத்தனர். ஏனை யோர் சைவத்தை ஆரியத்திற்கு ஈடாக்கி, தமிழ்ப் பண்புகளைக் கொன்று சாதிப்பாகுபாடுகளை மும்முரமாக்கினர். சைவ வேளாளர், செட்டிகள், பார்ப்பனர் முதலியோர் தாழ்த்தப்பட்டோரை அடிமைகளாக்கிக் கொழுத்தனர். இவ்வாறு, பல்வேறு பிரிவுகளுடன் மும்முரமாக வளர்ச்சியடைந்த சைவம் தம்மை எதிர்த்து நின்ற சமணத்தை முடுக்கமாகச் சாடியது. அரசர்களைத் தன் பக்கம் சேர்த்துக் கொண்டு சமணர்களைக் கழுவில் ஏற்றியது. சைவ சமணப் போராட்டங்கள் தொடர்ந்தன. இந் நிலையில் சைவ சமயத்தில் அமைதியை ஏற்படுத்த 'மிதவாதிகள் தோன்றினர். இவர்கள் பக்திப் பாடல்கள், மந்திரங்கள் ஆகியவற்றால் மக்களைக் வர்ந்தனர். இவர்களுக்குக் காளாமுகர்' அல்லது லகுலீச பாசுபதர்' என்று பெயர். மேற்கண்ட பிரிவுகளைக் காட்டும் சைவசமயச் சின்னங்களை நாம் இக் காலச் சிற்பங்களிலும் காணலாம். பைரவமூர்த்தி, நான்முகனுடைய ஒரு தலையைக் கொய்யும் சிற்பம் இக் காலக் கோயில்களில் இடம் பெற்றது. இதனைக் காஞ்சிக் கயிலாசநாதர் கோயிலிலும் காணலாம். கபாலிகரும், பாசுபதரும் பைரவரைத் தொழுதனர். கபாலிகர் வழிபட்ட துர்க்கையின் சிற்பம் பல்லவர் கோயில்களில் சிறப்பிடம் பெற்று விளங்கியது. காஞ்சிக் கயிலாசநாதர் கோயில், திருச்சிக் குடைவரை, புள்ளமங்கைச்சிவன் கோயில், மாமல்லை வராசுமண்டபம் முதலியவற்றில் துர்க்கை அச்சுறுத்தும் வடிவில் தோற்றமளிப்பதையும், மழு, கோடாரி முதலியன ஏந்தி நிற்பதையும், பக்தர் தம் தலையை வெட்டிப் படைப்பாதை யும் காண்கிறோம் தலைக்காவுகொடுக்கும் வழக்கம் பல்லவர் காலத்திலிருந் ததைச் சீசைலம் கல்வெட்டிலும் காணலாம். கொங்குநாட்டு வீரர்கள் தம் தலை, நாக்கு, தொடைகண்டம் ஆகியவற்றைப் படைத்ததாக இதில் அறியப்படுகிறது, சுந்தரர் தமது திருத்தொண்டர் தொகையில் சுழற்சிங்கன் என்பானைப் பற்றிக் குறிப்பிடுகிறார். சிங்கம் அல்லது சிம்மன் என்ற பெயர் வாதாபி கொண்ட நரசிம்மனையும், இரண்டாம் நரசிம்மனையும் இராச சிம்மன்) குறிக்கும். வாதாபி கொண்ட நரசிம்மன் திருஞானசம்பந்தர், அப்பர் ஆகியோர் காலத்தில் வாழ்ந்தவன். இராசசிம்மன் சுந்தரர் காலத்தில் வாழ்ந்தவன். இவனைத்தான் சுந்தரர் 'கடல்சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான் காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்' எனப் பாடுகிறார். இதிலிருந்து இராசசிம்மன் சிறந்த சிவனடியான் என்பதைத் தெளிவாக அறிகிறோம். இவன் சிவசூடாமணி" எனப் புகழப்பட்டான். பெயர் பெற்ற காஞ்சிக் கயிலாசநாதர் கோயிலைக் கட்டியவனும் இவனே யாவான். - சுந்தரரை எடுத்து வளர்த்த நரசிங்கமுனையர் என்பார்ப்ல்ல வருக்குத் திறை செலுத்தி வந்த சிற்றரசர் ஆவார். இத்தகைய சிற்றரசர் களும், பேரரசர்களான பல்லவர், சேரர், சோழர், பாண்டியர் களும் சுந்தரர் காலத்தில் பூசலின்றி ஒற்றுமையுடன் இருந்தனர். இதனாலும் சைவ சமயம் தமிழகத்தில் செழித்தது. தேவாரத்தைப் பாடுவதற்கே ஒதுவார் எனப்படும் குடியினர் தமிழகத்தில் இருந்தனர். மக்களும், மன்னர்களும் அவர்களைப் பெரிதும் மதித்தனர். சைவ சமயத்தையொட்டிய விழாக்களும், நோன்பு சுளும் ஊர்தோறும், கோயில்கள் தோறும் கொண்டாடப்பட்டன. பாமரரும் இவற்றால் ஈர்க்கப்பட்டனர். எனவே, சைவம் செழித்தது. ஆயினும், ஆரியக் கலப்பாலும், பின்னர் ஆரியம் ஆடிய பேய்க்கூற்றாலும் கபாலிகரும், சாதி வேறுபாட்டால் காளாமுகர்களும், பைரவர்களுமாகப் பிரிந்ததால் சைவத்தில் வேறுபாடுகள் முளைத்தன. மாணிக்கவாசகர் சைவக் குரவர்களில் நான்காமவராகப் போற்றப்படும் மாணிக்க வாசகர் பாண்டிய மன்னனிடம் அமைச்சராயிருந்து பின்னர் துறவி ஆனவர். இவர் பாடிய பாடல்கள் 'திருவாசகம்' என்னும் நூலாகத் தொகுக்கப் பெற்றுள்ளது. இதைத் தவிரத் திருக்கோவையார்' என்று" நாலும், திருவெம்பாவை' என்ற நூலும் இவரால் பாடப்பெற்ற பாடல் களின் தொகுப்புகளே, இவர் ஈழநாட்டுப் புத்தர்களையும் வாதில் வென்று சைவத்தைத் தழுவச்செய்தார். திருத்தொண்டத்தொகையில் அறுபத்து மூன்று நாயன்மார்களைப் பற்றிப் பாடப்பெற்றுள்ளது. அவர்களுள் திருமூலர் என்பாரும் ஒருவர். அவர் பாடிய பாடல்களின் தொகுப்புக்குத் திருமந்திரம்' என்று பெயர். இது மூவாயிரம் பாடல்களைக் கொண்டது. இவர் கிபி. ஏழாம் நூற்றாண் - டிற்கு முன் வாழ்ந்தவர். இவர் சைவ சமயத்தில் தோன்றிய வேறுபாடு களையும், பிற சமயத்தவரின் குறுகிய நோக்கங் களையும், பூசல்களையும் , கண்டு பொறாதவராய் எச் சமயத்திலும் உண்மையுண்டு என்றும், அவை. கூறும் பொருள் ஒன்றேயென்றும், மக்களுக்குள் ஏற்பட்டுள்ள சாதி சமய வேறுபாடுகள் மெய்ப்பொருளை அடைவதற்குத் தடையாயுள்ளன வென்றும் கூறினார். அவர் கூற்றே ஒன்றே குலமும், ஒருவனே தேவனும்" என்பதாகும். இவருடைய கருத்துகளையே சிறந்த முடிவுகளாக ஏற்றுச் சித்தாந்தங்களாகக் கொண்டனர். இவர் கண்ட 'சமரச சன்மார்க்கத்தைப்' பின்னவர்களான தாயுமானவரும், இராமலிங்க அடிகளும் விரித்துரைத் தனர். வைணவ சமய மலர்ச்சி சைவம் மறுமலர்ச்சியடைந்து சமணத்தை வீழ்த்தியது. இதனைக் கண்ட வைணவமும் மறுமலர்ச்சியடையத் தொடங்கியது. இதனால் சைவத்திற்கும், வைணவத்திற்குமிடையே சமயப் பூசல்கள் ஏற்பட்டன. வைணவம் வீறுபெற்று வளர்ந்ததை ஈண்டுச் சுருங்கக் கூறுவோம். பொதுவாகப் பல்லவர் காலத்தில் தோன்றிய இறைநெறி இயக்கம் சைவத்திற்கேயன்றி வைணவத்திற்கும் புத்தொளியளித்தது, சைவத்தில் சிவனடியார்கள் தோன்றி சமயத்தொண்டு செய்ததைப் போலவே வைண வத்திலும் ஆழ்வார்கள் எனப்படும் அடியார்கள் தோன்றி னவணவத்தை வளர்த்தனர். அவர்களுள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்கள் பொய்கை யாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய முதலாழ்வார் மூவரும், திருமழிசையாழ்வார் என்பவரும் ஆவார், பொய்கையாழ்வார் காஞ்சியில் தோன்றிய இவர் சிறந்த யோகியாகிப் பல பத்திப் பாடல்களைப் பாடித் தம் பற்றற்ற வாழ்க்கை நெறியால் மக்களைக் கவர்ந்தார். சமணம், சாக்கியம், சைவம், வைணவம் ஆகிய சமயங்களுக் கிடையே பூசல்களும், மோதல்களும் ஏற்பட்ட காலத்திலும் இவர் ஓகத்தில் யோகம் ஆழ்ந்து கிடந்தார். இவர் பாடிய நூறு வெண்பாக்கள் திருவந்தாதியில் முதலிடம் பெறுகின்றன, பூதத்தாழ்வார் இவர் மாமல்லபுரத்தில் தோன்றியவர். இவரும் பொய்கையாழ் வாரைப் போலவே பற்றற்ற துறவியாக வாழ்ந்தவர். இவர் இயற்றிய நூறு வெண்பாக்கள் திருவந்தாதியில் இரண்டாம் பகுதியாக வுள்ளன, பேயாழ்வார் இவர் சென்னைத் திருமயிலையில் பிறந்தவர். மேற்கூறியவர் களைப் போலவே சிறந்த துறவியாக ஒகத்தில் ஆழ்ந்து கிடந்தவர். முதலில் சைவரா யிருந்த திருமழிசையாழ்வாரை வைணவத்தில் சேர்ந்தவர் இவரேயாவார். இவர் இயற்றிய இயற்பாக்கள் திருவந்தாதியில் மூன்றாம் பகுதியாக வுள்ளன. யிருந்தது. அந்த துறவியாக கைத்துவில் பிறந்தவர், மேத். திருமழிசையாழ்வார் திருமழிசை என்னும் தளரில் தோன்றிய இவர் முதலில் புத்த சமயத்தவராகவிருந்து, பின்னர் சமண சமயத்தைத் தழுவிக் கடைசியாகப் பேயாழ்வாரால் வைணவத்திற்கு ஈர்க்கப்பட்டார். இவர் சைவராயிருந்த போது இவருக்குச் சிவவாக்கியர் என்ற பெயரும், வைணவரானபின் பத்திசாரர் என்ற பெயரும் வழங்கினர். இவர் மேற்கூறிய முதலாழ்வார்களைப் போலில்லாமல் வெளிப்படையாகவே சமணர், சாக்கியர், சைவர்களைச் சாடித்தம் சமயத்தை உயர்த்திப் பாடினார்.குடந்தையில் வாழ்ந்து மறைந்த இவர் பாடிய தொண்ணூற்றாறு வெண்பாக்களும், திருச்சந்தவிருத்தம் நாற்றிருப்பதும், நாலாயிரத் திவ்வியப்பிரபந்தத்தில் தொகுக்கப் பட்டுள்ளன. பிற ஆழ்வார்கள் மேற்கூறிய வைணவ அடியார்களையடுத்து திருமங்கை யாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார் முதலியோரும் வைணவத்தை வளர்த்தனர். பல்லவ வேந்தர்களில் பலர் வைணவர் களா யிருந்தனர். அவர்களெல்லாம் தம்மைப் 'பரம பாகவதர்' 'சமயங்காப்போர்' என்றெல்லாம் அழைத்துக் கொண்டனர். இளவரசன் விசுணுகோபன், இரண்டாம் சிம்மவர்மன், விசுணுகோபவர்மன் முதலியோரும், பிற்காலப் பல்லவருள் சிம்மவிசுணு நரசிம்மவர்மன், இரண்டாம் நந்திவர்மன் முதலியோரும் சிறந்த வைணவ அடியார் களாயிருந்தனர். பல்லவ நாட்டில் தலைசிறந்த விண்ணகரங்கள் பெருமாள் கோயில்கள் எழுந்தன. குடைவரைகள் பல வைணவத் தலமாயின.சைவத்தைப் போலவே வைணவமும் முடுக்கமாக வளர்ந்தது. பல மடங்கள் வைணவர்களுக்காக அமைக்கப்பட்டன. ஆகவே, வைணவமும் ஆக்கமும் செல்வாக்கும் பெற்றுத் திகழ்ந்தது. காஞ்சியிலுள்ள வைகுந்தப்பெருமாள் கோயில் பரமேசுரவிண்ண கரம், மதங்கேசுரர் கோயில் ஆகியவற்றைக் கட்டியவன் இரண்டாம் நந்திவர்மன் ஆவான். அவனுடைய பட்டத்தரசி முக்தேசுரர் கோயிலைக் கட்டினாள். இவன் காலத்தில்தான் திருமங்கையாழ்வார் வாழ்ந்தார். ஆழ்வார்கள் மொத்தம் பன்னிருவராவர். அவர்கள் பொய்கையாழ் வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், மதுரகவியாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள் நாச்சியார் தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார், குலசேகரப் பெருமாளாழ்வார் ஆகியோராவர். இவர்கள் யாவரும் கிபி. 500-க்கும் 800 க்குமிடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்கள், பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பாடிய பாடல்கள் 'நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்' என்னும் பெருநூலாகத் தொகுக்கப்பெற்றுள்ளது. இவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தோன்றியவர்கள். வைணவக் கோயில் களில் இவர்களால் பாடப்பெற்ற தலங்களை 'மங்களா சாசனம் பெற்ற தலங்கள்' என்பர். வைணவர்கள் மூலவர் அருகிருந்தும், அவரைத்தொட்டு வணங்கியும் வழுத்துவர்; இதனால்தான் வைணவம் சாதி வேறுபாடற்ற சமயமாக எல்லோராலும் எளிதில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சைவம் உயர் சாதியினரிடமே செல்வாக்குப் பெற்றது. கீழ்ச்சாதியார் மூலவரைத் தொடவும் நெருங்கவும் விடாது தடுக்கப்பட்டனர். சைவர்கள் பின்னர் அவ் வுரிமையினை இறக்குமதி செய்யப்பெற்ற ஆரியாரிடம் விட்டுத் தேவாரத் தையும், திருவாசகத்தையும் மறந்து ஆரிய மறையொலிசிவன்கோயில்களில் எழும்பும் வண்ணம் செய்தனர். ஆகவே, இக் கால் வைணவம் தமிழகத்தில் சாதி வேற்றுமைகளை யகற்றி ஒற்றுமைக்கு வழி கண்டது எனலாம். இச் சமயம் சைவர்களையும், சாக்கிய, சமணர்களையும் எதிர்த்தது, ஆழ்வார் களின் பக்திப் பாடல்கள், பச்னைகள் பாமரரை எளிதில் கவர்ந்தன. நம்மாழ்வார் வேளாளர் குலத்தைச் சேர்ந்தவர் பெரியாழ்வார் பார்ப்பனர், திருப்பாணாழ்வார் பாணர் எனப்படும் தீண்டத்தகாதார் இனத்தைச் சேர்ந்தவர். இவர்கள் யாவரும் குமுகாய ஒற்றுமைக்கே பாடுபட்டார். இக் கால இறைநெறி இயக்கத்தின் முகாமைக் கூறுபாடும், மேலோங்கிய நோக்கமும் சாதி வேறுபாடுகளை ஒழிப்பதும், தமிழ்க் குமுகாயத்தை ஒன்றிணைப்பதுவுமேயாகும். 6. பாண்டியரின் முதற் பேரரசு சங்கக்காலப் பாண்டியர் வரலாற்றை உக்கிரப் பெருவழுதி வரையில் ஒருவாறு பார்த்தோம். இவனுக்குப் பின் பாண்டிய நாடு களப்பிரர் ஆட்சிக்கு உட்பட்டுவிட்டது. களப்பிரர் கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரையில் பாண்டிய நாட்டைக் கைப்பற்றி ஆண்டார்கள். பின்னர் களப்பிரரிடமிருந்து பாண்டிய நாடு மீட்கப்பட்டு, மீண்டும் பாண்டியரின் அரசு நிலைப்படுத்தப் பெற்றது. இவ்வாறு நிலைப்படுத்தப் பெற்ற ஆட்சி கிபி. பத்தாம் நூற்றாண்டின் இறுதி வரையிலும் தொடர்ந்து நடைபெற்றது. - கி.பி. ஆறாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நாற்றாண்டு வரை நிலைப் படுத்தப்பெற்ற இப் பாண்டியராட்சியை முதற் பேரரசு' என்பர்: சங்க காலத்தில் முடத்திருமாறன் முதல் உக்கிரப் பெருவழுதிவரை ஆண்ட மன்னர்கள் முற்காலப் பாண்டியர்' அல்லது தொடக்கக் காலப் பாண்டியர்' என்றும், களப்பிரரிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றி ஒரு பேரரசை ஏற்படுத்தியாண்ட சுடுங்கோன் முதல் ஆண்ட மன்னர்கள் 'இடைக்காலப் பாண்டியர்' என்றும், கிபி. பத்தாம் நூற்றாண்டிற்குப் பிறகு அமைக்கப்பெற்ற இரண்டாம் பேரரசையாண்ட மன்னர்கள் பிற்காலப் பாண்டியர்' என்றும் அழைக்கப்படுகின்றனர். களப்பிரராட்சி தோராயமாகக் கி.பி. 575-ல் பாண்டிய நாட்டி னின்றும் மறைந்தது. பொதுவாகவே பாண்டிய நாட்டிலிருந்தும் பிற சேர, சோழ நாடுகளிலிருந்தும் இந் நூற்றாண்டின் முடிவுக்குள் களப்பிரர் மறைந்தனர் எனலாம். இவர்களிடமிருந்து பாண்டிய நாட்டைக் கைப்பற் நிய கடுங்கோன் முதற்பாண்டியர் ஆட்சியைத் தொடங்கினான். செப் பேட்டுச் சான்றுகளிலிருந்து முதற்பாண்டியப் பேரரசை நிலை நாட்ட அதன் ஆளுமையை வலுப்படுத்தியாண்ட முதற்பேரரசன் இவனேயென் பதை அறிகிறோம். இவனால் ஏற்படுத்தப் பெற்ற இம் முதற்பேரரசு கிபி. பத்தாம் நாற்றாண்டின் தொடக்கம் வரையில் பராந்தக சோழன், மதுரையைக் கைப்பற்றும் வரையில் நீடித்தது. இக் கடுங்கோனைப் பற்றியும், அவன் மகன் மாறவர்மன் அவனி சூளாமணி என்பவனைப் பற்றியும் நாம் அதிகமாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை. கடுங்கோன் 'தரணி மங்கையைப் பிறர்பால் உரிமைத்திரவீதின் நீங்கித் தன்பால் உரிமை நன்கணமமைத்தவன்' என்று வேள்விக்குடிச் செப்பேட்டில் புகழப்படுவதால், இவன் களப்பிரரிடமிருந்து நாட்டைக் கைப்பற்றினானென்பதைத் தெளிவாகத் தெரிந்துகொள்கிறோம். இவன் களப்பிரர் என்னும் இருளால் சூழப்பட்டிருந்த பாண்டிய நாட்டின் எழுஞாயிறு போல் தோன்றி அந் நாட்டை மீட்டுத் தமிழரது மானங்காத்தவனென்றும் வேள்விக் குடிச் செப்பேடுகள் செப்புகின்றன. சுடுங்கோனுக்குப் பிறகு, அவனுடைய மகன் மாறவர்மன் அவனி சூளாமணி முதற்பேரரசின் அரசுக்கட்டில் ஏறினான். இவன் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரசு செலுத்தியவன். வேள்விக்குடிச் செப் பேட்டில் கதிர்வேல் தென்னவன்' என்று இவன் போற்றப்படு கின்றான். ஆகவே, இவன் தன் தந்தையால் மீட்கப்பெற்ற பாண்டிய நாட்டைத் தமிழருக்கேயுரிய தன்மானத்தோடும், வீரத்தோடும் காத்தவன் என்பதை அறிகிறோம். மாறவர்மன் அவனி சூளாமணிக்குப்பின் அவன் மகன் செழியன் சேந்தன் அல்லது சமயவர்மன் பேரரசன் ஆனான். இவன் கி.பி. 645 முதல் எவரையில் ஆண்டிருக்கலாமெனப் பேரா. க. அ. நீலகண்ட சாத்திரியார் கருதுகிறார். இவனைச் 'சிலைத் தடைக்கை கொலைக் களிற்றுச் செழியன்" என்றும், செங்கோல்வேந்தன்' என்றும் வானவன்' என்றும் வேள்விக் குடிச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. வானவன் என்னும் விருதுப் பெயரால் குறிப்பிடப்படுவதால் சேரர்களை. இவன் வென்றதாகக் கருதலாம். *வேந்தர் வேந்தன்' என்றும் வேள்விக்குடிச் செப்பேடுகளில் இவன் புகழப்படுவதால் இக்கருத்து வலுப்பெறுகிறது. சீனப்பயணி யுவான் சுவாங்கு குறிப்புகளைக் கொண்டு இவன் கி.பி. 570-ல் இறந்தானெனக் கருதுவாரும் உண்டு. செழியன் சேந்தனுக்குப்பின் மாறவர்மன் அரிகேசரி பாண்டியப் பேரரசன் ஆனான். இவன் இலக்கியங்களில்கூன் பாண்டியன், நெடுமாறன், சுந்தரபாண்டியன் என்னும் பெயர்களால் குறிப்பிடப் பெறுகிறான். சமணனாகவிருந்த இவனைத் திருஞானசம்பந்தர் சைவனாக மாற்றினா ரென்பது சைவ சமய வரலாறு. இவனையும், இவன் மனைவி மங்கையர்க் கரசியாரையும் அமைச்சர் குலச்சிறை யாரையும் 63 நாயன்மார்களின் திருக்கூட்டத்துள் இடம் பெற்றவராகக் கூறுகின்றனர். வேள்விக்குடிச் செப்பேடுகளில் குறிப்பிடப்பெறும் கடைசி அரசனும் சின்னமனூர்ச் செப்பேடுகளில் தொடங்கும் முதலரசனும் இவனேயாவன். இவனுடைய கோப்பெருந்தேவி மங்கையர்க்கரசி அம்மையார் சோழ அரசனின் மகளாவார். இவன் காலத்தில் உறையூரிலிருந்து சோழ நாட்டையாண்ட மன்னன் மீது படையெடுத்துச் சென்று பகற்பொழுதிலேயே உறையூரைக் கைப்பற்றிக் கொண்டான் என்பதனைப் 'பகல் நாழிகை இரவாமைக் கோழியுள் வென்று" என்று வேள்விக்குடிச் செப்பேடு செப்புகிறது. இவன் காலத்தில் பல்லவ அரசு தொண்டை நாட்டில் பரந்து திகழ்ந்தது. | பாண்டிய நாட்டின் தென் பகுதியில் வாழ்ந்தவர் பரதவர் தென் பரதவர்' எனப்பட்டனர். இவர்கள் சங்ககாலம் முதற்கொண்டே பாண்டி யருக்கு அடங்காது அடிக்கடி கலகம் விளைவித்து வந்தார்கள். இவர்களை மாறவர்மன் அரிகேசரி அடக்கினான் என்ற செய்தியை வேள்விக்குடிச் செப்பேடுகள் விரவிவந்து அடையாத பரதவரைப் பாழ்ப்படுத்தான்' என்று கூறுகின்றன. . இவன் காலத்தில் மேலைக் கடற்கரைப் பகுதியை ஆண்ட கேரளர்கள் பல சிற்றரசர் துணையுடன் பாண்டிய நாட்டின் மீது படை யெடுத்தனர். அவர்களைப்பாழி, நெய்வேலி, செந்நிலம் ஆகியவிடங் களில் தோற்கடித்தான், இச் செய்தியைச் சூழியானை செலவுந்திப் பாழிவாய் அமர் கடந்தும், வில்வேலிக்கடற்றானையை நெல்வேலிச் செருவென்றும்' என்றுவேள்விக்குடிச் செப்பேடுகள் கூறுகின்றன. நெல்வேலியில் பெற்ற இவனுடைய வெற்றியைப் பிற்காலத்துத் திருத்தொண்டர்தொகை பாடிய சுந்தரமூர்த்தி நாயனார், நெல்வேலிவென்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன் என்று பாடியுள்ளார். இவன் செந்திலும் பகுதியில் பகைவர் களைப் பெரிய யானைப் படையைச் செலுத்தி வென்றான் என்ற செய்தியைக் “கைந்நலத்த களிறு உந்திச் செந்நிலத்து செருவென்றும்' எனவரும் செப்பேட்டுக்குறிப்பால் அறியலாம். மற்றும் ஒருமுறை கொங்கு நாட்டின் வழியாக உறையூர்ச் சோழரைத் துணைக்கொண்டு பாண்டிய நாட்டின் மீது படையெடுத்த கேரளரை மாறவர்மன் புவியூர் என்னு மிடத்தில் தோற்கடித்தான். பின்னர் அவனுக்குத் துணைநின்ற சோழனை உறையூரில் வென்றானென்று செப்பேடுகள் கூறுகின்றன. இத்தகைய இவனுடைய போர்களையும் வெற்றிகளையும் புகழ்ந்து இறையனார் அகப்பொருளுரை யாசிரியரும், இவற்றை மேற்கோள் பாடல்களாகப் பாடியுள்ளார். இவன் சிறந்த சிவபத்தனென்பதையும், இவ்வுரையாசிரியர் தனது மேற்கோள் பாடல்களில் குறிப்பிட்டுள்ளார். இவனுடைய ஆட்சியின் தொடக்க காலத்தில் காஞ்சிக்கு வந்த சீனப் பயணி யுவான் சுவாங்கு பாண்டிய நாட்டைப்பற்றித் தான் கேள்வியுற்ற செய்திகளைத் தன் பயணக்குறிப்பில் குறித்துள்ளான். அக் குறிப்புகளி விருந்து பாண்டிய நாடு வெப்பமிகுந்த நாடென்றும், மக்கள் கருமேனிய ரென்றும், ஆனால், உறுதியும் பொலிவும் மிக்கவரென்றும், வாணிகத் தாலும், செல்வத்தாலும் சிறந்து விளங்குபவரென்றும், பாண்டிய நாட்டில் உப்பும் முத்தும் அதிகமாகக் கிடைக்கிறதென்றும் அறிகிறோம். அரிகேசரி மாறவர்மன் காலத்தில் மதுரையையடுத்துள்ள யானை மலை, நாகமலை ஆகிய பகுதிகளில் சமண முனிவர்கள் தங்கள் சங்கங்களையமைத்துச் சமயப்பணிபுரிந்து வந்தனர். அரச குடும்பத்தின ரும், மக்களில் மிகப்பலரும் இச் சமயத்தைத் தழுவியவராயிருந்தனர். இதனைப் 'பூழியர் தமிழ்நாட்டுள்ள பொருவில் சீர்ப்பதிகளெல்லாம், பாழியம் அருகர் மேவும் பள்ளிகள் பலவுமாகி..' என வரும் சேக்கிழார் வாக்காலறியலாம். இந் நிலையில் தான் அரிகேசரி மாறவர்மனைத் திருஞானசம்பந்தர் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாற்றினார். சைவத் திற்கு மாறிய அரிகேசரி அந்தணர்க்கு அளவிலாத கொடைகளை நல்கி இரணிய கருப்பதானம். துலைத்தானம் பல செய்தானென்று வேள்விக் குடிச் செப்பேடுகள் கூறுகின்றன. அரிகேசரி மாறவர்மன் இறந்தபின் அவன் மகன் கோச்சடையன் இரணதீரன் மன்னர் மன்னன் ஆனான். வேள்விக்குடிச் செப்பேடுகளில் இவன் மன்னர் மன்னன் கொங்கர் கோமான், வானவன் செம்பியன், மதுர கருநாடகன் என்னும் விருதுப் பெயர்களால் அறியப்படுகிறான். இவற்றி லிருந்து இவன் கொங்கு, சேர, சோழ, கருநாடக நாடுகளை வென்று திறை பெற்றானெனக் கருதலாம். தென்னகம் முழுவதற்கும் இவன் தலைவனாக விளங்கினானென்னும் கருத்தை வலியுறுத்துவது போல் செங்கோல் தென்னவன்" என்னும் தொடர்வேள்விக்குடிச் செப்பேட்டில் ஆளப்பட்டுள்ளது. இவன் மங்களபுரத்தில் வெற்றி பெற்றானென்று வெள்விக்குடிச் செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. மங்களபுரமென்பது தென் கன்னட மாவட்டத்திலுள்ள மங்களுரென்றும், அவ்விடத்தில் நடந்த போரில் இவன் கொங்கு மன்னனை வென்று கொன்றானென்றும் பேரா. க. அ. நீலகண்ட சாத்திரியார் கருதுகிறார். இக்கருத்தை ஆராய்ச்சியறிஞர் தி. வ. சதாசிவப் பண்டாரத்தார் மறுக்கிறார். கி.பி. 674-ல் சாளுக்கிய அரசனான முதலாம் விக்கிரமாதித்தனுக்கும் கோச்சடையன் இரணதீரனுக் கும் திருச்சி மாவட்டம் கொள்ளிடத்தின் வடகரையி லுள்ள மங்கள மென்னும் ஊரில் போர் நடந்தது. இப்போரில் பாண்டியன் சாளுக்கியனை வென்றான். இந்த மங்களம்தான் மங்களபுர மென்று வேள்விக்குடிச் செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதென்பது திரு. பண்டாரத்தாரின் கருத்தாகும். இதே கருத்தைத்தான் வரலாற்று அறிஞர் துப்ரேய்லும் கொண்டுள்ளார். மேலும், இரணரசிகன், இரணபராசிரமன், இரணராகன் முதலிய விருதுப் பெயர்களைச் சாளுக்கியர் கொண்டிருந்தன ரென்றும், அவர்களை வென்றதால் கோச்சடையன் இரணதீரன்' என்னும் விருதுப் பெயரைக்கொண்டானென்றும் இவ்வாராய்ச்சி யாளர்கள் கருதுகின்றனர். கோச்சடையனின் ஆட்சி கொங்கு நாட்டிலும், சாளுக்கிய நாட்டிலும் ஆளுமை பெற்றிருந்தது. பாண்டியரில் ஒரு கிளையினர் மேலைக் கடற்கரைப்பட்டினமான மங்களூர் என்னும் மங்கள புரத்தைக் கோநகராகக்கொண்டு ஆண்டனர். மற்றொரு கிளையினர் கருநாடகத்தை ஆண்டனர். இவற்றைக் கல்வெட்டுச் சான்றுகளாலும் அறிகிறோம். ஆய்வேளின் தலைவன் ஒருவன் பொதிகை மலையில் பெரும்படையுடன் திகழ்ந்தானென்றும், அவனால் தோற்றுவிக்கப்பட்ட உள்நாட்டுக் கலகத்தை யடக்குவதற்குப் படை கொண்டு சென்று அவனை மருகூரில் எதிர்த்துப் போரிட்டுக் கோச்சடையன் வெற்றி கண்டானென்றும் வேள்விக்குடிச் செப்பேடு செப்புகிறது. சிறந்த சிவனடியானான இவன் சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமாள் நாயனார் ஆகியோரைத் தன் கோநகருக்கு வரவழைத்துப் போற்றினான். கோச்சடையனுக்குப் பின் அரிகேசரி பராங்குசன் மாறவர்மன் பாண்டிய மன்னன் ஆனான். இவன் கி.பி. 710 முதல் 755 வரையில் ஆண்டிருக்கலாம். இவன் பல்லவ மல்லனொடும், மன்னர் பலரொடும் போர் புரிந்து வெற்றி பெற்றானென்று வேள்விக்குடிச் செப்பேட்டால் அறிகிறோம். இவன் நெடுவயல் குணமடைமண்ணிக்குறிச்சி, திருமங்கை, பூவாளூர், கொடும்பாளூர் முதலியவிடங்களில் பல்லவ மல்வளை வெற்றி கண்டானென்றும், கடைசியாகக்குழும்பூரில் பல்லவர் தானைத்தலைவன் உதயச்சந்திரன் பல்லவ மல்லனை மீட்டுச்சென்றானென்றும் உதயேந்திரம் செப்பேடுகள் கூறுகின்றன. ஆனால், வேள்விக்குடிச் செப்பேட்டில் உள்ள சமற்கிருதப்பகுதியில் பல்லவ மன்னன் போர்க்களத்திலிருந்து ஓட்ட மெடுத்ததாகக் கூறப்படுகிறது. இப் பாண்டியன் இன்றைய திருச்சி, தஞ்சை மாவட்ட எல்லையிலிருந்த "மழகொங்க நாடு' என்பதனைக் கைப்பற்றித் திறை பெற்ற தொடுமழவராசனின் மகளையும் மணந்து கொண்டான். சங்க அரசனின் மகளான பூசுந்தரியையும் இவன் மணந்தான். இந்தக் கங்க இளவரசி பூசுந்தரியிடம் பிறந்த மூத்த மகனான நெடுஞ்சடையன் பராந்தகனே இவனுக்குப்பின் பாண்டியநாட்டின் அரசன் ஆனான். 'நின்றிலங்கு மணிநீர்முடி, நிலமன்னவன் நெடுஞ்சடையன்' என்று வேள்விக்குடிச் செப்பேட்டில் புகழப்பெறும் இம் மன்னனே வேள்விக் குடிச் செப்பேட்டை வழங்கியவன் ஆவான். தன் தந்தையைப் போலவே பல போர்களை மேற்கொண்டு வெற்றிபெற்ற இவன் பல்லவ அரசனைக் காவிரியின் தென்கரையிலுள்ள பெண்ணாகடத்தில் நிகழ்ந்த போரில் புறங்காட்டி ஓடச் செய்தான்; ஆய்வேளவென்றான். பெண்ணா கடத்தில் இவனிடத்தில் தோல்வியுற்ற பல்லவன் நந்திவர்மப் பல்லவன் ஆவான். ஆயிரவேலி ஆயிரூர், புகழியூர் ஆகிய இடங்களில் அதியமானை வென்ற போது அவனுக்குத் துணையாக வந்த பல்லவனையும் இவன் வென்றா னென்று சீவரமங்கலச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட அதியமான் கொங்கு நாட்டையும் கைப்பற்றியாண்டான். அவனையும், அவனுக்குத் துணையாக வந்த சேர பல்லவர்களையும் தெடுஞ்சடையன் பராந்தகன் தோற்கடித்து, அதிய மானைச் சிறைப் பிடித்து, மதுரைச் சிறையிலடைத்தான். நெடுஞ்சடையன் பராந்தகன் வேணாட்டுத் தலைவனான ஆய்வேளையும் வென்றான். அவனுடைய காவற்பெருநகராய் விளங்கிய விழிஞம் என்னும் துறைமுகப்பட்டினத்தையும் முற்றுகை யிட்டு வென்றான்.வேணாடு கொல்லத்துக்கும், திருவிதாங்கோட்டுக்கும் இடையி விருந்தது. சங்க காலத்தில் ஆய் அண்டிரனும் அவன் வழிவந்தோரும் இந் நாட்டை ஆண்டார்கள். நானவே, இதற்கு 'ஆய்நாடு' என்னும் பெயரும் வழங்கியது. நெடுஞ்சடையன் பராந்தகன் தென்திசையில் தான் வென்ற நாடுகளைப் பாதுகாக்கவும், குறுநில மன்னர்களைக் கண்காணிக்கவும் கரவந்தபுரத்தில் ஆழமான அகழியையும், உயர்ந்த மதிலையும் கொண்ட பெரிய கோட்டை யொன்றைக் கட்டி, அதில் வலுவான படையொன்றை யும் நிறுத்தினான். இக் கரவந்தபுரம் இன்று திருநெல்வேலிப் பகுதியிலுள்ள உக்கிரன் கோட்டையாக இருக்கலாம். இக் கரவந்தபுரத்தில் இவனுக்குத் தானைத் தலைவராகவிருந்து ஆட்சி புரிந்தோரில் குறிப்பிடத்தக்கோர் மாறன்காரி. அவனுடைய தம்பியான மாறன் எயினன் முதலியோர் ஆவர். மாறன்காரி கி.பி. 77f1-ல் யானைமலையில் திருமாலுக்கு ஒரு சுற்றளி யமைத்தான் என்பதை அவன் அமைத்தயானைமலை நரசிங்கப் பெருமாள் கோயில் கல்வெட்டிலிருந்து அறிகிறோம். இவர்களுக்குப் பின் சாத்தன் கணபதி என்பவனும், அவன் தம்பி ஏனாதி சாத்தஞ்சாத்தன் என்பவனும், "ஏனாதி யென்னும் பட்டத்துடன் விளங்கினர், நெடுஞ்சடையனுக்குப் பிறகு, அவனுடைய மகனான இராசசிம்மன் அரசுக்கட்டிலேறினான். இவன் ஏறத்தாழ கி.பி. 79-92) ஈராண்டுகள் ஆண்டான். இவனுக்குப்பின் இவன் மகன் வரகுண மகாராசன் அரசன் ஆனான். இவனுடைய கல்வெட்டுகள் சோழநாடு முழுவதும் காணப் பெறுவதால் இவன் சோழ நாட்டையும் தன் ஆட்சிக்கு உட்படுத்தி யிருந்தானெனக் கூறலாம். தொண்டை மண்டலத்தின் தென்பகுதியும் இவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. இவன் சைவப்பற்றுடையவன் என்றும், மாணிக்கவாசகருடன் தொடர் புடையவன் என்றும் சதாசிவப் பண்டாரத்தார் கூறுகிறார். இவன் கிபி 792 முதல் 8.35 வரையில் ஆண்டான். இவனுக்குப்பின் இவன் மகனான சீமாறன் சீவல்லபன் 835-ல் அரசுக் கட்டில் ஏறினான். இவன் சீர்கெழு செங்கோல் சீவல்லபன்' என்று ஒரு கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறான். இவன் பல்லவர், சேரர், சோழர், கங்கர் உள் ளிட்ட பல மன்னர்களையும் வென்றானென்று சின்னமனுார்ச் செப்பேடுகள் பாராட்டுகின்றன. குன்னூர், சிங்களம், விழிஞம் ஆகிய விடங்களில் இவன் போர்புரிந்து வெற்றி பெற்றானென இச்செப்பேடுகளில் கூறப்பெறுவதால் ஈழத்தீவிலும் இவன் வெற்றி பெற்றான் என்பதை அறிகிறோம். இவன் ஈழத்தின் மீது படையெடுத்து அதனையாண்டு வந்த முதலாம் சேனனைத் தோற்கடித்து மலை நாட்டிற்குத் துரத்தினான் என்றும், பல நகரங்களை அழித்தான் என்றும், பொன்னாலான புத்தர் சிலைகளையும், பொன்னையும், மணியையும் கவர்ந்து கொண்டு சிங்களத்தை வறுமையில் ஆழ்த்தினான் என்றும் மகாவம்சம் கூறுகிறது. கி.பி. 854-ல் இவன் பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மனுடன் தெள்ளாற்றில் போர்புரிந்து தோற்றான். இதில் வெற்றிபெற்ற நந்திவர்மன் தெள்ளாறெறிந்தவன்' என்னும் விருதுப்பெயரைப் பெற்றான். இப்போரி னால் இவன் தொண்டை மண்டலத்தில் பெற்றிருந்த செல்வாக்கையும் இழந்தான். சீமாறு சீவல்லபன் கி.பி. 852-ல் இறந்தான். இவனுக்குப் பின் இவன் மகன் இரண்டாம் வரகுண பாண்டியன் அரியணையேறினான். இவனுக்குப் பின் இவன் தம்பியான பராந்தகப்பாண்டியன், 'சடைய வர்மன்" என்னும் பட்டப்பெயருடன் அரியணையேறினான். இவனுக்கு வீரநாரா யணன்" என்னும் மற்றொரு பட்டப்பெயரும் உண்டு. சேரநாட்டு இளவரசி வானவன் மாதேவி என்பாளை இவன் மணந்தான். இவன் பெண்ணா கடத்தை அழித்தான் என்றும், கொங்கர்களை வென்றான் என்றும், கோயில்களுக்கும், அந்தணர்களுக்கும், சமணப் பள்ளிகட்கும் கொடை சுகள் வழங்கினான் என்றும் சின்னமனூர்ச் செப்பேடுகள் கூறுகின்றன. நெடுஞ்சடையன் பராந்தகன் காலத்தில் தெற்கெல்லையில் கரவந்தபுரத்தில் அமைக்கப்பெற்ற காவற் கோட்டையிலிருந்துகொண்டு படைத்தலை வர்கள் தென்பகுதியைக் கண்காணித்தார்கள் என்பதைப் பார்த்தோம். ஆனால், வீரநாராயணன் காலத்தில் கரவந்தபுரத்துத் தலைவன் பாண்டிய அரசுடன் முரண்பட்டு நின்றான். வீரநாராயணனுக்கும், வானவன் மாதேவிக்கும் பிறந்த மூன்றாம் இராசசிம்மப் பாண்டியன் வீரநாராயணனுக்குப் பிறகு கி.பி. 900-ல் பாண்டிய நாட்டின் அரசன் ஆனான். இவன்தான் சின்னமனூர்ச் செப்பேடுகளை வழங்கியவன் ஆவான். இவன் பல போர்களில் வெற்றி பெற்றவன் என்பதைச் சின்னமனூர்ச்செப்பேட்டால் அறியலாம். ஆனால், கிபி 910-ல் இவன் பராந்தகச் சோழனிடம் தோல்வியுற்றான் என்பதைச் சோழர் கல்வெட்டுகள் கூறுகின்றன. இவனுடைய கோநகரை வென்ற முதலாம் பராந்தகன் * மதுரை கொண்ட கோப்பரகேசரி* என்னும் விருதுப்பெயரைப் பெற்றான். தன் கோநகரை இழந்த மூன்றாம் இராச சிம்மன் ஈழநாட்டிற்கு ஓடிப், பின்னர் அங்கிருந்து தன் தாயின் பிறந்தது மாகிய சேரநாட்டிற்கு ஓடிவிட்டான். அவ்வாறு ஓடிவரும்போது தன் மணிமுடியையும், அரசச் சின்னங்களையும் ஈழநாட்டிலேயே வைத்து விட்டு வந்து விட்டான். இதற்குமேல் அவனைப்பற்றி அறிந்து கொள்வ தற்கு எத்தகையச் சான்றுமில்லை. மூன்றாம் இராசசிம்மனோடு பாண்டி யரின் முதற் பேரரசு மறைந்தது எனலாம். இவனுக்குப் பின் இவன் மகன் வீரபாண்டியன் கிபி. 946-68) ஆண்டான். இவன் சோழரிடமிருந்து பல பாண்டிய நாட்டுப் பகுதிகளை மீட்டான். கி.பி. 956-ல் இவன் போரில் உயிர்நீத்தான். இவனுக்குப்பின் பாண்டியர்கள் புகழ் மங்கிச் சோழர்களின் ஆட்சிக்கு உட்பட்டுத் திறை செலுத்தி, சிற்றரசர்களா யிருந்து ஆண்டனர், சுமார் மூன்று நூற்றாண்டுகள் வரை பாண்டிய நாடு சோழரின் ஆளுமைக்கு உட்பட்டிருந்தது. இந்த மூன்று நூற்றாண்டுகளிலும் ஆண்ட பாண்டி யர்கள் சோழருக்கு உட்பட்டுத் திறை செலுத்திய மன்னர்களே! 7. சோழப் பேரரசு தமிழ்நாட்டையாண்டமுப்பெரும்குடிகளுள் சோழர் குடிமுதலில் வைத்து எண்ணத்தக்கதாகும். இவர்கள் ஆண்ட பகுதியைச் சோழ மண்டலம்' என்று அழைத்தனர். அது வடக்கே நெல்லூரிலிருந்து தெற்கே புதுக்கோட்டை வரையில் பரவியிருந்தது. அசோகனுடைய கல்வெட்டு களிலும் சேர, சோழ, பாண்டியர் குறிப்பிடப்படுவதாலும், இதிகாசங் களிலும் இவர்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுவ தாலும், கிமு முதல் நூற்றாண்டில் தமிழ்நாடு போந்த யவன ஆசிரியனானதாலமி இவர்களைப் பற்றிக் குறிப்பிடுவதாலும், பண்டைய மேலைநாட்டு நூலான பெரிப்ளசு என்ற நாவிலும் இவர்களைப்பற்றிய செய்திகள் காணப்படுவதாலும், இவர்களுடைய தொன்மையை நம்மால் கணிக்க முடியவில்லை, இவர்களைப் பற்றி அறிவதற்கு எண்ணிறந்த கல்வெட்டுகளும், செப்பேடு களும், கட்டடங்களும், இலக்கியங்களும் உள்ளன. கரிகாற்சோழன் சோழ மன்னர்களில் வரலாற்றுக் கெட்டிய வரையில் அறியப்படும் கரிகாற்சோழன் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்தான். கழக இலக்கியங்களின்படி நோக்கும்போது இவனுக்கு முன் எண்ணிறந்த சோழ அரசர்கள் ஆண்டிருப்பதை அறிகிறோம், இவன் சேர, பாண்டியர்கள் இணைந்து வந்து தாக்கியபோது கோயில் வெண்ணி" என்ற இடத்தில் அவர்களை ஒருங்கே வீழ்த்தினான். ஈழநாட்டின் மீது படையெடுத்து, அங்கிருந்து பன்னீராயிரம் அடிமை களைக் கொணர்ந்து காவிரியின் குறுக்கே கல்லணையைக் கட்டினான், தம்முன்னோர்கள் காலத்திலிருந்த உறையூரிலிருந்து தாம் புதிதாகக் கட்டிய காவிரிப்பூம்பட்டினத்திற்குத்தன் கோநகரை மாற்றினான். இக் காவிரிப்பூம்பட்டினம்தான் மணிமேகலை, சிலப்பதிகாரம் முதலிய இலக்கியங்களில் பெருமையாகப் பேசப்படுகிறது. இன்றைய அகழ்வாராய்ச்சியாளரின் கவனத்தை இது பெரிதும் கவர்ந் துள்ளது. இவனுக்குப் பின் அரசு கட்டிலேறிய இவன் பெயரனான நெடுமுடிக் கிள்ளி காலத்தில் இக் காவிரிப்பூம்பட்டினம் கடலால் அழிக்கப் பட்டது. சேரரும், பாண்டியரும், பல்லவரும் அடிக்கடி சோழ நாட்டின் மீது படையெடுத்து அதன் புகழை மங்கச் செய்தனர். கி.பி. எட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு பல்லவரின் வலிமை குன்றியது. இதனால் சோழ அரசு மீண்டும் துளிர்த்தது. இச் சமயத்தில்தான் கரிகாலன் மரபில் தோன்றிய விசயாலய சோழன் என்பான் தஞ்சையை முத்தரையாரிடமிருந்து கைப்பற்றி மீண்டும் சோழர் ஆட்சியைத் தோற்றுவித்தான். விசயாலயன் கிபி. 850-71) முத்தரையரிடமிருந்து தஞ்சையைக் கைப்பற்றியபோதும் தன் வெற்றியின் சின்னமாக நிசும்பசுதனி என்னும் கோயிலைக் கட்டினான். உறையூருக்கு அருகில் பல்லவரின் கீழ் ஒரு குறுநில மன்னனாக இருந்த இவன் தஞ்சையைக் கைப்பற்றிச் சோழப் பேரரசு மரபை உருவாக்கித் தமிழக வரலாற்றில் ஒரு திருப்பத்தைக் கண்டான். தான் இறப்பதற்கு முன் சோழப் பேரரசை நிலைத்து நிற்கும்படி செய்துவிட்டு இறந்தான். முதலாம் ஆதித்தன் (கி.பி. 871-907) விசயாலயனுக்குப் பிறகு அவன் மகன் முதலாம் ஆதித்தன் கிபி 87ால் சோழ வேந்தன் ஆனான். இவன் சோழ நாட்டை விரிவுபடுத்த விரும்பி னான். தன் முன்னோர் ஆண்ட சோழ நாட்டின் பெரும் பகுதி பல்லவரின் கீழ் இருப்பதைக்கண்டு அவற்றை மீட்கப்பல்லவர் மீது போர்த்தொடுத்துத் தொண்டைநாட்டைக் கைப்பற்றினான். இதனால் சோழநாடு விரிவடைந் தது. இராட்டிரகூட மன்னன் இரண்டாம் கிருட்டிணன் மகள் இனங் கோன்பிச்சி என்பவளையும், பல்லவன் மகள் ஒருத்தியையும் இவன் மணந்தான். கொங்குநாடு, தாழைக்காடு (Tala Kad] முதலியவற்றையும் வென்றான். மேலைக் கங்கரிடமிருந்து சோழ நாட்டின் ஒரு பகுதியைக் கைப்பற்றி னான். சேர மன்னனோடு நட்புறவுகொண்டு காவிரியின் இரு கரைகளிலும் சிவனுக்குப் பல கோயில்களைக் கட்டிப் பெரும் புகழோடு வாழ்ந்த இம் மன்னன் தொண்டைமான் நாடு என்னுமிடத்தில் உயிர் நீத்தான். இவ் விடத்தில் இவன் மகன் பராந்தகன் 'கோதண்டராமேசுவரம்" என்னும் கல்லறைக்கோயில் ஒன்றைக் கட்டினான். முதலாம் பராந்தகன் (907-55) முதலாம் ஆதித்தனுக்கு முதலாம் பராந்தகன், கன்னரதேவன் ஆகிய புதல்வர் இருவர் இருந்தனர். கன்னரதேவன் இராட்டிரகூட இளவரசி. இளங்கோன் பிச்சி என்பவரின் மகன் ஆவான். ஆதித்தனுக்குப் பிறகு, முதலாம் பராந்தகன் அரசுக்கட்டில் ஏறினான். இவனே முதன் முதலில் தென்னகத்தில் சோழப் பேரரசை விரிவு படுத்தி நிலைநாட்டியவனெனில் பொருத்தமாகும் இவன் தெற்கில் பாண்டியரைத் தோற்கடித்துக் கன்னியா குமரி வரை தன் ஆட்சியை விரிவுபடுத்தினான். இவன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்துச் சென்ற போது பாண்டிய மன்னன் மூன்றாம் இராச சிம்மன்(கி.பி. 90-ல்) நாட்டை விட்டே ஓடிவிட்டான். இராசசிம்மன் ஈழத்திற்கு ஓடித்தன் செங்கோலையும், மணிமுடியையும் ஈழ மன்னனிடம் அடைக்கலம் வைத்துவிட்டுச் சேர நாட்டிற்கு ஓடி விட்டான். அச் செங்கோலையும், மணிமுடியையும் பெறுவதற்காகப் பராந்தகன் ஈழநாட் டின் மீது படையெடுத்தான். ஆனால், ஈழமன்னன் நான்காம் உதயன்(கிபி, 945-53) அவை இரண்டையும் எடுத்துக்கொண்டு உரோகணம் என்னு மிடத்திற்கு ஓடிவிட்டான். பராந்தகன் வெறுங்கையோடு திரும்பினான். முதல் பாண்டியப் பேரரசு இவனால் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. இராட்டிரகூட மன்னன் இரண்டாம் கிருட்டிணன் தன் மகள் வயிற்றிற் பிறந்த கன்னரதேவனைச் சோழநாட்டின் மன்னனாக்க விழைந்து பராந்தகனை எதிர்த்துப் படையெடுத்தான். இதனால் இராட்டிரகூடர் சோழர் போர் கி.பி. 90-11-ல் திருவல்லம் என்னுமிடத்தில் நிகழ்ந்தது. இரண்டாம் கிருட்டிணன் படுதோல்வியடைந்தான். பராந்தகன், வாண கோவர், வைதும்பர் முதலியோர் மீதும் படையெடுத்து வெற்றி பெற்றான். சிற்றரசர் பலர் இவனுக்குத் திறை செலுத்தினார்கள். இவன் வீரத்தைக் கண்டு இராட்டிரகூடரும், கீழைச் சாளுக்கியரும் அஞ்சி நடுங்கினர். இராட்டிர கூடரும், சங்கரும் பிற பகைவர்களும் ஒன்றிணைந்து கிபி. ஓ49-ல் சோழ நாட்டின் மீது படையெடுத்தனர். அவர்களையெதிர்த்து இவனுடைய மகன் இராசாதித்தன் தக்கோலம் என்னுமிடத்தில் கடும் போர்புரிந்தான். இப் போரின் நடுவில் இராட்டிரக்கூட வீரன் ஒருவனால் இராசாதித்தன் கொல்லப்பட்டான், தக்கோலம் போரில் வெற்றி பெற்ற இராட்டிரகூட மன்னன் மூன்றாம் கிருட்டிணன் இராமேசுவரம் வரை சென்று தன் கோநகரம் மீண்டான். முதலாம் பராந்தகன் மிகச்சிறந்த வீரன்; சிவபக்தன்; நூலறிஞன்; அறிஞர்களைக் காத்தவன். இவன் காலத்தில் ஊர்மன்றங்கள் சிறப்புற்றிருந்தன என்பதற்கு உத்திரமேரூர் மன்றமே எடுத்துக்காட்டாகும். மாமன்ன ன் முதலாம் இராசராசன் (கி.பி. 985-1015) முதலாம் பராந்தகனுக்குப் பிறகு சோழர் ஆட்சியில் ஒரு பெருங் குழப்பம் ஏற்பட்டது. இவனையடுத்துப் பட்டத்துக்கு வந்த கண்ட ராதித்தன், அரிஞ்சயன், இரண்டாம் பராந்தகன் முதலியோர் காலத்தில் சோழராட்சி அவ்வளவு சிறப்பாகக் காணப்படவில்லை. உத்தம் சோழனுக்குப் பிறகு முதலாம் இராசராசன் மாமன்னன்' என்ற விருதுப் பெயருடன் சோழ நாட்டின் வரலாற்றில் ஒரு புத்தியலைத் தொடக்கி வைத்தான். சோழ அரசர்களில் தலைசிறந்த பேராண்மை படைத்தவன் இவனேயாவான். இவன் இளவரசனாயிருந்தபோதே பல்வேறு போர்களில் ஈடுபட்டுப் பல விருதுப்பெயர்களையும் பெற்றான். இவன் பெற்ற வெற்றி களை இவனுடைய இருபத்தொன்பதாம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டு சிறப்புடன் செப்புகிறது. இவன், தான் அனுப்பிய தூதுவனை அவமதித்த சேர மன்னன் பாசுகரவர்மனை ஒறுக்க அந் நாட்டின் மீது படையெடுத் தான், வழியில் சேர மன்னனுடன் நட்புறவு பூண்டிருந்த பாண்டியன் இராசராசனை எதிர்த்தான். இதனால் பாண்டியனைப் புறங்கண்டு சேர நாட்டின் கடற்கரைப்பட்டினமாகிய காந்தளூர்ச்சாலையை அடைந்தான். அங்கு நடந்த போரில் சேரமன்னன் தோற்கடிக்கப்பட்டான். பின்னரும் விழிஞம் என்னுமிடத் திலும் சேரர் தோற்றனர். பொற்குவியல்களையும், களிற்றுநிரை களையும் கைப்பற்றித் தன் நாடு திரும்பினான். பின்னர் இராசராசன் குடமலை (குடகு நாட்டின்மீது படையெடுத் தான். இப் படையெடுப்பில் சோழர் படைக்குத் தலைமை தாங்கியவன் இவன் மகன் இராசேந்திரன் ஆவான். சோழர் படை, குடகு நாட்டைத் தாக்கியதோடு அதனைச் சுற்றியிருந்த கங்கவாடி, நுளம்பவாடி தடிகை வாடி ஆகியவற்றையும் வென்றது. இவையாவும் இன்றைய கருநாடக மாநிலத்தில் மைசூரையொட்டியுள்ள பகுதிகளாகும். ஈழத்தை வென்று அங்குத் தன் தந்தையால் மீட்கப்படாமல் நிற்கும் பாண்டியன் முடியையும், செங்கோலையும் மீட்கவும், ஈழமன்னனை ஒறுக்கவும் எண்ணி ஈழத்தின்மீது இராசராசன் படை யெடுத்தான், அப்போது ஈழநாட்டின் அரசனாயிருந்தவன் ஐந்தாம் மகிந்தன் என்பவன் ஆவான். சோழர் படையைக் கண்டதும் மகிந்தன் தென்கோடியிலுள்ள உரோகண நாட்டிற்குதீவு) ஓடி விட்டான். சோழர் படை அவனுடைய கோநகராகிய அநுராதபுரத்தை அழித்தது. ஈழநாட்டின் வடபகுதி முழுவதும் கைப்பற்றப்பட்டுச் சோழநாட்டின் ஒரு மாநிலம் ஆக்கப் பட்டது மும்முடி மண்டலம் பொலன்னறுவா அம்மாநிலத்தின் தலைநக ராயிற்று. இப் படையெடுப்பின் போதும் சோழர் படைக்குத் தலைமை தாங்கியவன் இராசராசனின் மகன் இராசேந்திரனேயாவான். பொலன்னறு வாவில் பெயர் பெற்ற சிவன் கோயில் கற்றளியாகச் சோழரால் கட்டப் பெற்றது. இராசராசன் தன் மகன் இராசேந்திரனை இரட்டபாடி ஏழரை யிலக்கம் என்னும் நாட்டின் மீது படையெடுக்கும்படி அனுப்பினான். இராசேந்திரன் அந் நாட்டின்மீது படையெடுத்து அதன் அரசனாகிய சத்தியாசிரியன் என்ற இராட்டிரகூட மன்னனைத் தோற்கடித்து அதனைக் கைப்பற்றினான். இந் நாடு இன்றைய மராத்திய மாநிலத்தில் இருந்தது. பின்னர் சிட்புலி, பாகி நாடுகளையும் சோழன் கைப்பற்றினான். இராசேந் திரன் இரட்டபாடி ஏழரையிலக்கத்தைக் கைப்பற்றி அதற்கு எரியூட்டிப் பெண்கள் கற்பைச் சூறையாடி, பார்ப்பனரையும், குழந்தைகளையும் கொன்றான் என்று சத்தியாசிரியனுடைய கல்வெட்டுக் கூறுகிறது. இது ஏற்புடைத்தன்று. - இராசராசன் கீழைச் சாளுக்கிய நாட்டில் நடந்த அரசுரிமைப் போரில் தலையிட்டுச் சத்தியவர்மன் என்பவனுக்கு உதவி அரசுக் கட்டில் ஏறச் செய்தான். மேலும் தன் மகள் குந்தவையை அவனுடைய தம்பி விமலாதித்தனுக்கு மணம் செய்து கொடுத்தான். இதனால் மேலைச் சாளுக்கியரும், கீழைச் சாளுக்கியரும் இணையும் வாய்ப்பு முறிந்தது. இராசராசன் கலிங்க நாட்டின் மீதும் படையெடுத்து வென்றான். சேர நாட்டு மன்னன் இவனுக்கு நண்பனாயிருந்தான். இதனால் சேர நாட்டின் மீது அடிக்கடி படையெடுத்துத் தொல்லைகள் கொடுத்து வந்த அரபிக்கடலிலிருந்த முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரம்' என்னும் தீவுகளில் இருந்தவர்களைத் தாக்கி அவற்றைக் கைப்பற்றினான். இதுவே, அவ் னுடைய கடைசிப் படையெடுப்பாகும். இராசராசன் ஒரு சிறந்த சிவ பக்தன். 'சிவபாத சேகரன்' என்று சைவர்களால் அழைக்கப்பட்டவன். தஞ்சைப் பெருவுடையார் கோயிலைக் கட்டித் தன் புகழையும், சோழப்பேரரசின் புகழையும் நிலை நாட்டியவன் தான் வென்ற நாடுகளில் கிடைத்த திறைப் பொருள்களைக் கொண்டுஇப் பெருங்கோயிலைப் படைத்தான். இவன் நாகப்பட்டினத்தில் புத்தக் கோயில் கட்டுவதற்கும் பொருளுதவி புரிந்ததோடு மானியங்களும் வழங்கினான். சைவநாயன்மார்களின் திருவுருவங்களைத் தஞ்சைக் கோயிலில் படைத்தான். தான் வென்ற நாடுகளிலிருந்து கலைஞர்களையும் கலைப்பொருள்களையும் கொண்டு வந்து தமிழகத்தில் கலைகள் வளர்த்தான். கல்விக் கூடங்களை நிறுவினான். சிறந்த ஆட்சி முறையை அமைத்தான். இவன் காலத்தில் பலர் மன்றங்கள் மிகச்சிறந்த முறையில் செயல்பட்டன. காவிரியி லிருந்து பல கால்வாய்களை வெட்டி, நீர்ப்பாசன ஏந்துகளை விரிவு படுத்தினான். காவிரியின் கிளையாறுகளான முடி கொண்டான், உய்யக்கொண்டான் இன்றும் இவன் பெயரைத்தாங்கி நிற்கின்றன. கிபி. 10-ல் வருவாய்த் துறைக்காக ஒரு புள்ளி விவரக்கணக்கை உருவாக்கினான். ஒரு வேலி நிலத்தை மிகச்சிறிய அளவாகப் பகிர்ந்து, அளந்து ஆவணங்களை உருவாக்கினான். கி.பி. 1012-ல் திருவிசனூரர் என்னும் பலரில் இராசராசனுக்குத் துன்பநிரை விழா நடை பெற்றது. அவ் விழாவின் முடிவில் தன் மகன் முதலாம் இராசேந்திரனே தனக்குப்பின் அரசன் ஆவானென்று அறிவித்தான். அவ்விழாவில் கிடைத்த பொன்னைக் கொண்டு திருவலஞ்சுழியில் கோயில் கட்டினான். முதலாம் இராசேந்திரன் (கி.பி. 1012-1044) கங்கைகொண்ட சோழன், உத்தமச் சோழன் முதலிய விருதுப் பெயர்களால் அறியப்படும் முதலாம் இராசேந்திரன் இளமையிலேயே தன் தந்தையுடன் இனணந்து பல போர்களை மேற்கொண்டவன் என்பதை யறிவோம், இவன் இளவரசனாயிருந்தபோது ஈழநாட்டிலும், குந்தன நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் போர்களை நடத்தி வெற்றி பெற்றான். அரசுக் கட்டிலேறிய சிலவாண்டுகளுக்குள் இராசேந்திரன் ஈழநாடு முழுவதையும் தன் ஆட்சியின்கீழ்க் கொண்டுவந்தான். மேலைச் சாளுக்கி யருக்குச் சொந்தமான இடைத்துறை, வனவாசி, கொள்ளிப் பாக்கை, மண்ணைக் கடகம் ஆகியவற்றின் மீது படை யெடுத்துச் சென்று தன்னடிப் படுத்தினான். ஈழத்தை வென்ற பின்னர், முன்பு இராசசிம்ம பாண்டியன் இலங்கை மன்னனிடம் அடைக்கலமாக வைத்திருந்த முடி, எயையும், செங்கோலையும் இந்திர ஆரத்தையும் கைப்பற்றினான். சிங்கள வேந்த னுடைய முடியும், அவன் தேவியர் முடியும் கைப்பற்றப்பட்டன. மீண்டும் எழுச்சி பெற்று வந்த மேலைச் சாளுக்கிய வேந்தனை முயங்கி என்னு மிடத்தில் தோற்கடித்து மணித் திரள்களையும், பெரும்பொருட் குவியல் கனளயும் கைப்பற்றித் திரும்பினான். தான் தோற்றுவித்த புதிய தலைநகரைத் தூய்மைப்படுத்த, கங்கை யாற்று நீரைக் கொண்டு வருவதற்கு வடநாடு சென்றபோது பால் வட இந்திய மன்னர்களோடு போரிட வேண்டியதாயிற்று. சக்கரக்கோட்டம், ஒட்டர் நாடு, கோசலநாடு ஆகிய நாடுகளைக் கைப்பற்றிய பின் வங்காளத்திலுள்ள பால அரசனின் தண்டபுத்தி என்ற நாட்டையும், தக்கணபாடம் என்ற மற்றொரு நாட்டையும், உத்திராடம் என்ற நாட்டையும், கீழ் வங்காள நாட்டையும் இவன் கைப்பற்றியதாக இவனுடைய கல்வெட்டுச் சான்று களிலிருந்து அறிகிறோம், இப் படையெடுப்புக்குப்பின் கங்கை நீரைக் கொண்டு வந்ததால் இவன் "கங்கை கொண்ட சோழன்' எனப் புகழப்படு கிறான். கங்கை பாயும் நாடுகளை வெற்றிகொண்டவன் என்பதே இதன் பொருள். இவன் தனது சிறந்த கப்பற்படையின் துணை கொண்டு கடல் கடந்து கடாரத்து அரசனை வென்று அவனது பட்டத்து யானை, வித்தியாதரத் தோரணம் ஆகியவற்றையும், பெரும்பொருளையும் கவர்ந்து வந்தான். மேலும், கடல் நடுவிலிருந்த சீவிசயம், பண்ணை , மலையூர், மாயி குடிங்கம், இலங்காசோகம், பப்பாளம், இலிம்பங்கம், வெள்ளைப்பந்தர், தக்கோலம், மாதமாடிங்கம், இலாமுரி தேசம், நக்கவாரம், கடாரம் ஆகிய இடங்களைக் கைப்பற்றினான். இவ்விடங்கள் யாவும் மலேயா, சுமத்திரா சாவாரிசாலி ஆகிய தீவுகளில் உள்ளவை. இதனால்தான் இராசேந்திரன் 'கடாரம் கொண்டான்' என்று அழைக்கப்படுகிறான். இராசேந்திரன் பல போர்களில் வெற்றியடைந்தானாயினும் அவன் கங்கை கொண்டதைப்பும், கடாரம் தொண்டாதமே சிறப்பாக அக்காலச் கல்வெட்டுகளிலும், புலவர் பாடல்களிலும் புகழ்ந்துரைத் தனர். 'களிறு கங்கை நீருண்ண மண்ணையில் காய்சினத் தொடே கலவு செப்டரியகள் தரிசு தெண்டிரைக் குரைகடாரமுங் கொண்டு மண்டலங் குடையுன்வைத்தலும்..... என்று செயங்கொண்டார் தமது கலிங்கத்துப் பரணியிலும், -- . - . - - - ......... - தண்டேவித் கங்கா நதியுங் கடாரமுங் கைக்கொண்டு கங்காபுரிபுரந்த கற்பகம்' என்று விக்கிரம சோழன் உலாவிலும், 'கங்கா நதியுங் கடாரமுங் கைக்கொண்டு சிங்காதனத்திருந்த செம்பியார்கோன்" என்று தனது குலோத்துங்க சோழன் உலாவிலும் பாவரசர் ஒட்டக் கூத்தர் புகழ்ந்துரைத்தலும் ஈண்டு உணர்ந்து மகிழ வேண்டியவையாம். சுடார வெற்றிக்குப் பின்னும் இராசேந்திரன் பல வெற்றிகளைப் பெற்றான் என்பது அவனுடைய மகன் இராசாதிராசன் மெய்க்கீர்த்தி யால் வெளிப்படுகிறது. மலைநாடு, ஈழநாடு, மேலைச் சாளுக்கியர்நாடு ஆகியவற் றோடு இவன் மீண்டும் போர் தொடுத்தான் என்பதையும், அப்போர்சுளில் இவன் மகன் இராசாதிராசன் பங்கேற்றான் என்பதையும் அறிகிறோம். இராசேந்திரன் ஆளுகைக்கு உட்பட்டிருந்த பாண்டிய நாட்டிலும், சேர நாட்டிலும் கலகங்கள் எழுந்தன. இதனால் அதனையாண்டு கொண்டிருந்த இவனுடைய இளையமகன் சோழ பாண்டியனுக்குத் துணையாக மூத்தமகன் இராசாதிராசனை அனுப்பினான். இராசாதி ராசன் படைகொண்டு பாண்டிய நாடு சென்று மானாபரணபாண்டியன், வீரகேரளன் ஆகியோரைக் கொன்று சுந்தர பாண்டியன் என்பவனைப் போர்க்களத்தினின்று தலைவிரித்து ஓடச் செய்தான். பாண்டிய நாடு இம் மூவரால் ஆளப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கதாம். இதைப் போலவே சேரர்களும் சோழ பாண்டியனை விரட்டித் தங்கள் நாட்டைத் தனித்தாள முற்பட்டனர். இராசேந்திரன் தன் மகன் இராசாதிராசனை அனுப்பிச் சேரரை ஒடுக்கினான். அப்பொழுது சேர நாடு சிற்றரசர் பலரால் ஆளப்பட்டது. வேணாட்டரசன் இராசாதிராசன் வாளுக்கு இரையானான். அவனுக்கு உதவிய கூபக நாட்டு மன்னனும் இராமகுட நாட்டு மன்னனும் தோற்கடிக்கப்பட்டனர். சேரர்களை அடக்கிய பின் தம் ஆட்சியின் கீழிருந்த ஈழ நாட்டிவெழுந்த புரட்சியை யடக்கி அதனைத் தன்னடிக்கீழ் தொடர்ந்து வைத்துக் கொண்டான். இவ்வாறே மீண்டும் கிளர்ந்தெழுந்த மேலைச் சாளுக்கியரை அடக்கினான். இராசேந்திரன் மதுராந்தகன் என்ற இயற்பெயரைப் பெற்றவன். இராசேந்திரன் என்பது அவனது முடிசூட்டுப் பெயர். உத்தம சோழன், சோழேந்திரசிம்மன், விக்கிரம சோழன், முடிகொண்ட சோழன், பண்டிதச் சோழன், சுடாரங்கொண்டான், கங்கைகொண்டான் என்பன இவனுக்கு வழங்கும் விருதுப் பெயர்களாகும். அரச குடும்பத்தினர் தங்கி வாழ்ந்த பழையாறை என்னும் நகர் இவன் காலத்தில் முடி கொண்ட சோழபுரம் என்று அழைக்கப்பட்டது. அந்நகருக்குத் தெற்கே ஓடும் சோழப்பேராறு' இவனால் வெட்டப்பட்டது, இவனது கோநகர் * கங்கை கொண்ட சோழபுரம்', இஃது இவனால் அமைக்கப்பெற்றது. இந் நகருக்கருகில் சோழகங்கம் என்னும் ஏரியும் வெட்டப்பட்டது. இராசேந்திரன் இறந்தபின் அவன் மகன் முதலாம் இராசாதிராசன் அரசுக் கட்டில் ஏறினான். அவனுக்குப் பின் அவன் தம்பியர்களாகிய இரண்டாம் இராசேந்திரன், வீர இராசேந்திரன் என்போர் முறையாக ஆண்டனர். இராசேந்திரனுக்கு மனைவியர் பலர் இருந்தனர். அவர் களுள் திரிபுரணம் அல்லது வானவன் மாதேவியார், முக்கோட்டிழாள், பஞ்சமன் மாதேவியார், வீரமாதேவியார் ஆகியோரின் பெயர்கள் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது. இவன் இறந்தபின் வீரமாதேவியார் உடன்கட்டை யேறினாள். இவனுக்கு அருண்மொழி நங்கை, அம்மங்கதேவி என்னும் புதல்வியர் இருவர் உண்டு. அம்மங்கதேவிதான் கீழைச் சாளுக்கிய மன்னனான விமலாதித்தியன் முதலாம் இராசராசன் என்பவனை மணந்து முதலாம் குலோத்துங்க மன்னனைப் பெற்றாள். முதலாம் இராசாதிராசன் (கி.பி. 1018 - 1054) இவன் கிபி 18-ல் இளவரசர் பட்டம் பெற்றான். தன் தந்தையுடன் இணைந்து இருபத்தைந்து ஆண்டுகள் அரசியற் பொறுப்புகளில் ஈடுபட்டு ஆட்சித்திறனும் போர்த்திறனும் கைவரப் பெற்றான். இவனுக்கு விசய ராசேந்திரன், ஆசுவமவ்ல குலகாலன், கல்யாணபுரம்கொண்ட சோழன், வீரராசேந்திரவர்மன், சமயம் கொண்ட சோழன் என்னும் சிறப்புப் பெயர்களும் உண்டு இவன் அரசுக்கட்டிலில் ஏறியவுடன் சிங்கள நாட்டில் சோழர் ஆட்சியையெதிர்த்துக் கலகம் ஏற்பட்டது. இதனால் இவன் ஈழ நாட்டின்மீது படையெடுத்துச்சென்று அந்நாட்டு மன்னன் விக்கிரமபாகு என்பவனைத் தோற்கடித்தான். விக்கிரம பாண்டியன் என்னும் மற்றொரு ஈழநாட்டு அரசனையும் இவன் தோற்கடித்ததாக அறிகிறோம், இவன் பாண்டிய நாட்டை இழந்து ஈழத்தின் ஒரு பகுதியை ஆண்டுகொண்டிருந்த மன்னன் ஆவான். இவ்விரு மன்னர்களுடைய மணிமுடிகளையும் இராசாதி ராசன் இலங்கையிலிருந்து கைப்பற்றி வந்தான், கன்னியா குப்சத்தை ஆண்ட வீரகலாமோகன் என்பவன் தன் நாட்டை விட்டுச் சென்று ஈழத்தில் ஒரு பகுதியை ஆண்டு வந்தான். அவனையும் இராசாதி ராசன் தோற்கடித்தான். வீரராசமோகனின் தாயின் மூக்கையரிந்தான், வீரகலாமோகன் மீண்டும் போரிட்டு உயிர் துறந்தான். கன்னரன் வழியில் வந்த இலங்கையிலிருந்த சீவல்லவன், மதனராசன் என்ற அரசர்களுடைய மணிமுடியையும் இராசாதிராசன் கவர்ந்து கொண்டான். இவன் பாண்டியர், திருவாங்கூர் அரசர் ஆகியவர்களுடன் நடத்திய போர்களும் சிறப்புடையனவாகும். மானாபரணனுடைய பொன்முடி தரித்த தலையை வெட்டினான், வாரால் இறுக்கப்பட்ட வீரகண்டா மணியையுடைய வீரகேரளனை முனைவயிற்பிடித்துத் தனது களிற்றால் உதைப்பித்தான். புகழ்மிக்க சுந்தரபாண்டியன் தன் வெண்கொற்றக் குடையையும் வெண் கவரியையும் அரியணை யிருக்கையையும் போர்க் களத்தில் இழந்து முடி கீழேவிழத் தலையை விரித்துக்கொண்டு, கால்கள் தள்ளாட ஓடினான். அவனை இராசாதிராசன் முல்லையூருக்குத் துரத்தினான். சேரனை, இராசாதி ராசன் வஞ்சிசூடிக் காந்தளூர்ச் சாலையில் தோற்கடித்தான். சேரன் தோற்று நாட்டை விட்டுக் காட்டிற்கு ஓடினான். திருவாங்கூர் அரசனையும் சோழன் ஊரைவிட்டுத் துரத்தினான்; இராமகுடத்திலுள்ள அரசர்கள் மூவரைக் கொன்றான். இராசாதிராசன் சாளுக்கியரின் எழுச்சியையடக்க அந் நாட்டின் மீது படையெடுத்துச் சென்று அதனை ஆண்ட மன்னன் சோமேசு வரனைத் ஆகவமல்லன்) தோற்கடித்து அவன் கோநகரான கல்யாண புரத்தை(கல்யாணி, இடித்துத் தரைமட்டமாக்கினான். கல்யாணபுரத்தி லேயே வீரமுழுக்குச்வீராபிடேகம் செய்து கொண்டு விசயராசேந்திரன் என்ற விருதுப்பெயரையும் சூட்டிக்கொண்டான். இப்போரில் சாளுக்கியப் படைத்தலைவர்களாகிய கண்டப் பையனும், கங்காதரனும் இறந்தனர். வித்தி, விசயாதித்தன்.சாங்கமயன் ஆகியோர் தோற்றோடினர். இராசாதி ராசன் அவர்களுடைய யானை, குதிரைகளைக் கைப்பற்றிக் கொள்ளிப் பாக்கை என்னும் இளரைத் தீக்கிரையாக்கினான். இரண்டாம் முறையாகவும் கி.பி. 1044-45 இராசாதிராசன் சோமேசுவரனோடு போர் புரிந்தான், சாளுக்கியர் படையிலிருந்த கண்டர், தினகரன், நாராயணன், கணபதி, மதுசூதனன் ஆகியோர் புறங்காட்டி ஓடினர். பிறகு கம்பிளி நகரிலிருந்த சாளுக்கியர் அரண்மனையை இராசாதிராசன் இடித்துத் தள்ளி அங்கொரு வெற்றித்தூணையும் நாட்டினான். இப் போர்களி லிருந்து இவன் மணிகளையும், பொற்குவியல்களையும் பெற்றான். கி.பி. 1052-ல் சோமேசு வரன் (சோழ நாட்டின் மீது படையெடுத்து வந்தான். அவனை இராசாதி ராசன் தம்பியான இராசேந்திரன் கொப்பம் என்னுமிடத்தில் கடும் போரிட்டுத் தோற்கடித்தான். ஆயினும், இப் போரில் இராசாதிராசன் யானைமீதமர்ந்து கடும்போர் புரிந்து கொண்டிருந்த போது பகைவனின் அம்புதைத்துப் போர்க் களத்திலேயே உயிர்நீத்தான். எனவே, இவன் கல்வெட்டுகளில் 'சல்யாணபுரமும், கொள்ளாபுரமும் எரிந்து யானை மேற்றுஞ்சின உடையார் விசய ராசேந்திர தேவன் என்று குறிப்பிடப்படு சிறான். இராசாதிராசன் தன் சிறிய தந்தையாகிய எறிவலி கங்கை கொண்ட சோழன், தன் தமயன், புதல்வர்கள் ஆகியோருக்கு வானவன், வல்லவன், மீனவன், தங்கள் இலங்கையர்க்கிறைவன் பொலங்கழல் பல்பவன், கன்னக் குச்சியக் காவலன் முதலிய விருதுகளை வழங்கி அவர்களைப் பெருமைப் படுத்தியதோடு அவர்களை நாட்டின் பல பகுதிகளுக்கும் தலைவர்களாக்கி ஆளும்படி செய்தான். இரண்டாம் இராசேந்திரன் (கி.பி. 1052 - 1064) இராசாதிராசன் (கொப்பம் போர்க்களத்தில் இறந்தவுடன் அவன் தம்பியாகிய இராசேந்திரன் கி.பி. 1052-ல் அப் போர்க்களத்திலேயே முடிசூட்டிக் கொண்டான். இவன் தன் அண்ணன் இராசாதிராசனுடன் இணைந்து பல போர்களில் உதவி புரிந்தான். இவன் சாளுக்கிய நாட்டின் மீது படையெடுத்து சோமேசுவரனைக் கி.பி. 1067-ல் தோற் கடித்து இரட்டபாடி ஏழரையிலக்கம் என்னும் பகுதிகளைக் கைப்பற்றிக் கொள்ளாபுரம் என்னுமிடத்தில் வெற்றித் தாண் ஒன்றை நாட்டிச் சாளுக்கியருடைய யானை, குதிரை, கருவூலம் ஆகிய வற்றைக் கைப்பற்றி னான். அடுத்து ஈழநாட்டின் மீது போர் தொடுத்து அதன் தென்பகுதியாகிய உரோகண நாட்டையாண்ட சிங்கள மன்னனை வென்று மீண்டும் அவன் கலகம் செய்யாதவாறு அடக்கினான். கி.பி. 1059-ல் தன் மூத்த மகனான இராச மகேந்திரனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டினான். ஆனால், அம் மகன் இளமையிலேயே இறந்துவிட்டான். இதனால் இரண்டாம் இராசேந்திரனின் தம்பியாகிய முதலாம் வீரராசேந்திரன் இளவரசுப் பட்டம் பெற்றான். கிபி 1054-ல் இரண்டாம் இராசேந்திரன் இறந்தவுடன் இவனே ஆட்சிக்கு வந்தான். கிபி 11755-ல்சோழநாட்டில் ஒரு பெரும்பாஞ்சம் ஏற்பட்டதாகவும் அறிகிறோம். முதலாம் வீரராசேந்திரன் (கி.பி. 1064 - 1070) தன் தமையனுக்குப்பின் அரசனான இவன் தன் முன்னோர்களைப் போலவே பெரும் வீரனாகத் திகழ்ந்தான். மேலைச் சாளுக்கிய மன்னன் சோமேசுவரன் கூடல்சங்கம் களத்தில் தன்னைச் சந்திக்கும்படி வீரராசேந் திரனுக்கு அறைகூவல் விடுத்தான். ஆனால், இவன் படையெடுத்துச் சென்ற போது அவன் எதிர்த்து நிற்கவில்லை படையெடுத்துச் சென்ற வீரராசேந் திரன் துங்கபத்திரையாற்றங் கரையில் தன் வெற்றித்தூணை நாட்டிவிட்டு முதலாம் சோமேசு வரனின் கொடும்பாவி ஒன்றையெரித்து விட்டுத் தன் நாடு திரும்பியதாகக் கூறப்படுகிறது. சோமேசுவரன் மேலைக் கடலோரம் ஓடி ஒளிந்து கொண்டான் என்றும், பின்னர் அவனுக்கு ஏற்பட்ட கொடிய காய்ச்சலைத் தாங்கமுடியாமல் துங்கபத்திரையில் மூழ்கித் தற்கொலை செய்துகொண்டான் என்றும் அறிகிறோம். வேங்கியை ஆண்டு கொண்டிருந்த கீழைச் சாளுக்கியர்கள் இராச ராசன் காலம் முதலே சோழர்களுக்கு நெருங்கிய உறவினர்களாக இருந்தனர், மேலைச் சாளுக்கியர் தம்மவர் சோழரோடு உறவு கொண் டிருப்பதைக் கண்டு வருந்தி அவர்களைச் சோழரிடம் இருந்து பிரிக்க எண்ணினர். அச் சமயத்தில் கி.பி. 1142) கீழைச் சாளுக்கிய மன்னனும், கங்கை கொண்ட சோழனின் மருமகனுமாகிய இராசராச நரேந்திரன் வேங்கி நாட்டில் இறந்தான். மேலைச் சாளுக்கிய மன்னன் முதலாம் சோமேசுவரன் வேங்கியைத் தன் ஆட்சியின் கீழ்க் கொண்டுவர முனைந் தான், தன் படிநிகாராளியாக வனவாசியை ஆண்டுவந்த சாமுண்டராயன் என்பவனை வேங்கியைத் தாக்கும்படி அனுப்பினான். இதனால், தம் உறவினரான வேங்கி நாட்டவர்க்கு உதவி செய்ய வீரராசேந்திரன் படை கொண்டுசென்று மேலைச் சாளுக்கியரைத் தோற்கடித்து, சாமுண்ட ராயனையும் கொன்றான். இதனால் இரு சாளுக்கியர்களும் ஒன்று சேர முடியாமல் போயிற்று. அடுத்து, கிளர்ந்தெழுந்த பாண்டியரையும், கேரளரையும் வீர ராசேந்திரன் ஒடுக்கினான். உரோகண நாட்டையாண்ட விசயவாகு ஈழத்திலிருந்து சோழரை விரட்ட முற்பட்டபோது இராசேந்திரன் ஒரு பெரும் படையை ஈழத்திற்கு அனுப்பி அவனை ஒடுக்கினான். பின்னர் அச் சோழர்படை சி.பி. 1069-ல் கடாரத்தைசீவிசயம் வென்று சோழருக்கு வேண்டிய ஒருவனை அந்நாட்டிற்கு மன்னராக்கித் திரும்பியது. | முதலாம் சோமேசுவரனுக்குப் பிறகு இரண்டாம் சோமேசுவரன் சாளுக்கிய நாட்டின் மன்னன் ஆனான்(கி.பி. 1038), இவன் தம்பியாகிய விக்கிரமாதித்தியனுக்கும் இவனுக்கும் பிறங்கடையுரிமைப் போர் ஏற்பட்டது. இப்போரில்விக்கிரமாதித்தியன் வீரராசேந்திரனின் உதவியை நாடி வெற்றியும் பெற்றான். பின்னர் இவன் ஆறாம் விக்கிரமாதித்தியன் என்ற முடிசூட்டுப் பெயரோடு சாளுக்கிய நாட்டை ஆண்டான் சோழ இளவரசியை மணந்து சோழரோடு நட்புறவு கொண்டான். வீரராசேந்திரனுக்குப் பல விருதுப்பெயர்கள் உண்டு. இவன் தில்லையம் பலத்துக் கூத்தரசன் மணிமுடியை அணி செய்யத் திரை லோக்கிய சாரம் என்ற விலைமதிப்பற்ற மாணிக்க மணியொன்றை வழங்கினான். தன் கோநகராகிய கங்கைகொண்ட சோழபுரத்தில் பல வெற்றி விழாக்களைக் கொண்டாடினான். இறை பணியும், கல்விப் பணியும் பல செய்த இம்மன்னன் கிபி.1070-ல் உயிர்நீத்தான். அதிராசேந்திரன் முதலாம் வீரராசேந்திரன் இறந்தவுடன் சோழநாட்டில் கொந்த ளிப்பு ஏற்பட்டது. சாளுக்கிய மன்னனான ஆறாம் விக்கிரமாதித்தியன் தன் படையுடன் சோழநாடு சென்று தன் அளியன் மைத்துனன் அதிராசேந் திரனை அரியணையேற்றினான்; ஆனால், தன் நாடு திரும்பிய சில நாள்களுக்குள் அதிராசேந்திரன் கொல்லப்பட்ட செய்தியைக் கேட்டுத் திடுக்குற்றான். விசயாலயன் மரபின் முடிவு முத்தரையரிடமிருந்து கி.பி. 850-ல் தஞ்சையைக் கைப்பற்றிச் சோழப் பேரரசு மரபைத் தோற்றுவித்த விசயாலயன் நேர்வழி ஆள்குடி கிபி. 1070-ல் அதிராசேந்திரனோடுமுடிவுற்றது. இவனையடுத்துச் சோழ நாட்டின் அரசுக் சுட்டிலேறியவன் சாளுக்கிய நாட்டில் பிறந்த சோழ இளவரசியின் மகன் முதலாம் குலோத்துங்கன் ஆவான். முதலாம் குலோத்துங்கன் (கி.பி. 1070 - 1120) இவன் இராசராச சோழனின் மகன் முதலாம் இராசேந்திரனின் மகள் அம்மங்கதேவிக்கும், கீழைச் சாளுக்கிய மன்னன் முதலாம் இராச ராசனுக்கும் இராசநரேந்திரன் பிறந்தவன். இவனுடைய தந்தையான முதலாம் இராசராசன் விமலாதித்தனுக்கும், முதலாம் இராசராச சோழன் மகள் குந்தவைக்கும் பிறந்தவன். ஆகவே, இவன் முதலாம் இராசராச சோழனின் கொள்ளுப் பெயரன் ஆவான். சாளுக்கிய மன்னன் முதலாம் இராசராசன் கிபி. 1801-ல் இறந்தவுடன் தந்தைக்குப் பின் மகன் என்ற முறையில் இவன் வேங்கி நாட்டுக்கு அரசன் ஆனான். அச் சமயத்தில் மேலைச் சாளுக்கிய மன்னன் ஆறாம் விக்கிரமாதித்தியனுடனும் குறுநில் மன்னர்கள் வேறு சிலருடனும் போரிட்டு வெற்றி கண்டான். அதிராசேந் திரன் இறந்தவுடன் சோழ அரசுக்கு உரியவனாக தன் தாய் வழியில் இவன் முதலாம் குலோத்துங்கன் என்ற பெயருடன் அரசுக்கட்டில் ஏறினான். இவனுக்கு இயற்பெயர் இராசேந்திரன் என்பதாகும். இஃது இவனுடைய தாயின் தந்தை பாட்டன் இராசேந்திரன் பெயர் என்பதை நோக்கவும். இவன் சோழநாட்டு அரசுக்கட்டி லேறியவுடன் காலச்சூரி மரபைச் சேர்ந்த யசகர்ணன் என்பவன் வேங்கி நாட்டின்மீது படையெடுத்தான். அவனைக் குலோத்துங்கன் தோற்கடித்து விரட்டினான். இவன் இளவர சனாயிருந்தபோது ஆற்றிய அருஞ்செயல்பற்றியும் இவன் மெய்க் கீர்த்தியில் காணலாம். 'சக்கரக் கோட்டத்திற்குச் சென்று அங்கு ஆண்டு வந்த அரசனைப் பணிய வைத்தான்; வயிராகரத்துப் போர் முனையில் குந்தள் நாட்டு அரசனைத் தோற்கடித்து எண்ணற்ற யானைகளைக் கைப்பற்றி னான். சாளுக்கிய அரசனின் சேனையைப் புறங்கண்டான்; காவிரியை "ஆடையாக அணிந்துள்ள சோழ மண்டலமாகிய பெண் தனக்குத் தலைவி னின்றித் தனிமையாயிருப்பதை அறிந்து உளமுவந்து மணிமகுடத்தை உரிமையினால் சூடிக்கொண்டான்' என்று அவன் இளமைப் பருவத்தைப் பற்றி அவனது மெய்க்கீர்த்தி கூறுகிறது. மேலும், தான் சோழ நாட்டின் வேந்தனாவதற்கு முன்பாகவே சிங்கள நாட்டு மன்னன் முழு உரிமை பெற்று விட்டதை அறிந்தான். மேலும், சிங்கனவேந்தன் சோழ நாட்டின் பகை அரசர்களோடும் உறவு கொண்டிருப்பது குலோத்துங்கனுக்குத் தெரியவந்தது. அப் பகைவர் களுள் சேரரும், பாண்டியரும் முகாமை வாய்ந்தவர்களாவர். இதனால், சிங்கள மன்னன் விசயவாகுடன் நட்புறவு செய்துகொண்டு தன் மகள் திரிலோசு சுந்தரி என்பவளையும் அவனுக்கு மணமுடித்து வைத்தான், குலோத்துங்கன் கடாரத்தை வென்றான் எனவும் அவன் மெய்க் கீர்த்தியிலிருந்து அறிகிறோம். கடாரத்தரசன்விரும்பி வேண்டிக் கேட்டதற் கேற்ப இவன் நாகப்பட்டினத்திலிருந்த இரண்டு புத்த விகாரைகளுக்கு ஏற்கனவே இவன் முன்னோர்களால் அளிக்கப்பட்ட தானங்களை உறுதிப் படுத்தி ஓர் வரையும் இறையிலியாக மாற்றிக் கொடுத்தான். இவ்விரு புத்த விகாரைகளும், முறையே இராசேந்திரப் பெரும்பள்ளி, இராசராசப் பெரும்பள்ளி என்று அழைக்கப்பட்டன. குலோத்துங்கன் தன்னோடு மாறுபட்ட பாண்டியனுடைய பெரிய தலையைப் பருந்து குலைத்திடச் செய்தான் என்று அவனுடைய மெய்க் கீர்த்தி கூறுகிறது. பாண்டிய நாட்டின் மீது படையெடுத்துத் தன்னை எதிர்த்த ஐந்து பாண்டியர்களையும் தோற்கடித்து அவர்களின் முத்துக் குளிக்கும் இடத்தையும், பொதியமலையையும், யானைகள் நிறைந்த மேற்குத் தொடர்ச்சி மலையையும், குடமலை நாட்டுக் கோட்டாற்றையும் கைப்பற்றிக் குலோத்துங்கன் மீண்டான். கோட்டாற்றில் குலோத்துங்கனின் நிலைப் படைகள் நிறுவப்பட்டன வென்பதை அவனுடைய மெய்க்கீர்த்தி களில் காண்கிறோம். குலோத்துங்கன் மேற்கொண்ட படையெடுப்புகளில் கலிங்க நாட்டுப் போர்களே வரலாற்றுச் சிறப்புமிக்கவையாகும். இரு முறை கலிங்க நாட்டின் மீது படைகொண்டு தாக்கிய இவனுடைய கலிங்க வெற்றிகளைப் புகழ்ந்து செயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப்பாண சிறப்புடைய தாழிசைப் பாவாலான நூலாகும். இவன் கிபி. 106-ல் முதன் முறையாகவும் அதற்குப் பின் கி.பி. 71I0-ல் இரண்டாம் முறையாகவும் கலிங்கத்தின் மீது படையெடுத்தான். படகங்கவேந்தன் அருந்தவர்மன் சோடாங்கன் (கிபி 1076-1130) சோழ இளவரசி இராசசுந்தரியின் மகன். இவன் சோழருக்கு வரி கொடுக்க மறுக்கவே குலோத்துங்கன் கலிங்க நாட்டின் மீது படையெடுத்தான். இப்படை யெடுப்பில் சோழர் படையை நடத்திச் சென்றவன் கருணாகரத் தொண்டைமான் எனும் படைத்தவை வன் ஆவான். கலிங்கிரைப் புறங்கண்டு பொற்குவியலையும், யானை, குதிரை, ஒட்டகம் முதலியவற்றையும் மகளிரையும் கைப்பற்றிய சோழர் படை, சுவிங்கநாட்டைக் கைப்பற்றவில்லை. சி.பி. 1098-ல் வேணாட்டில் சோழரையெதிர்த்து எழுந்த கிளர்ச்சி சினயச் குலோத்துங்கன் தன் படைத்தவன் நரலோகவீரன் என்பவனை அனுப்பி அடக்கினான். கி.பி. 111.5-ல் ஒய்சாள போசள்) அரசன் விச்சுண வர்த்தனன் சோழராட்சிக்குட்பட்ட சுங்கவாடி, நுளம்பவாடி, ஆகிய வற்றைக் கைப்பற்றிக் கொண்டான். பின்னர் தாழைக்காட்டையும், தன்னாடிப்படுத்திக் கொண்ட அவன் 'தாழைக்காடு கொண்டான்" என்னும் விருதுப் பெயரும் பூண்டான். தடுப்பாரின்றி இம் மன்னன் இராமேசுவரம் வரை சென்று மீண்டான். கி.பி. 1178-<வ் மேலைச் சாளுக்கிய மன்னன் ஆறாம் விக்கிர மாதித்தி யன் வேங்கியைக் கைப்பற்றிக்கொண்டான். குலோத்துங்கன் மேலைச் சாளுக்கியரை ஒறுத்து வெங்கியையும், கங்கவாடியின் ஒரு பகுதியையும் மீட்டுக் கொண்டான்; அவற்றைத் தன் நாட்டுடன் இணைத்துக் கொண் டான், ஆகச், குலோத்துங்கன் காலத்தில் ஈழம் முழுவதுமாகச் சோழ நாட்டினின்று விடுபட்டுவிட்டது. வோங்கியும், சுங்சவாடியின் ஒரு பகுதியும் சோழ நாட்டுடன் இணைந்தன. இவன் காலத்தில் நாட்டில் அமைதி பரவியது. இவன் கி.பி. 11786-ல் நில அளவைப் புள்ளி விவரங்களை உருவாக்கினான். மீண்டும் கிபி. 1110-ல் மற்றொரு புள்ளிவிவரம் உருவாக்கப் பட்டது. சில பொருள்களைக் கொண்டு செல்லும் பயணிகள் பல்முனைச் சுங்கவரிகளைச் செலுத்தி வந்தனர். இவன் அவற்றை நீக்கியதால் "சுங்கம் தளிர்த்த சோழன்' என்று போற்றப்பட்டான், இவனுக்குப் புதல்வர் எழுவரும், புதல்வி ஒருத்தியும் இருந்தனர், அவர்களுள் சோடகங்கன், மும்முடிச் சோழன், வீரசோழன், விக்கிரம சோழன் ஆகியோர் வேங்கி நாட்டுப் பகுதிகளில் ஆட்சிப் பொறுப் பேற்றனர். மகள் சிங்கள இளவரசனை மணந்தாள். இவன் தன் அரசியர் தியாசவல்லி, ஏழிசைவல்லி ஆகியோருடன் காஞ்சியிலிருந்த தன் பொன் மாளிகையில் வீற்றிருந்து மகிழ்ந்ததாகக் கூறப்படுகிறது. மதுராந்தகி' என்ற மற்றொரு அரசியாரும் இவனுக்குண்டு. இவன் காலத்திலும் கங்கை கொண்டசோழபுரமே சோழ நாட்டின் கோநகராய் இருந்தது. விக்கிரமச்சோழன் (கி.பி. 1118 - 1135) முதலாம் குலோத்துங்கனையடுத்து அவனுடைய மூத்தமகன் விக்கிரமச் சோழன் கி.பி. 1120-ல் அரசுக்கட்டிலேறினான். இவன் தன் தந்தையால் தொடங்கப்பெற்ற பல கோயில் திருப்பணிகளைச் செய்து முடித்தான். அவற்றுள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை தில்லையம் பலத் துக்குத் திருச்சுற்று மதில் எழுப்பியதும், பல தானங்கள் வழங்கியதுமாகும். இன்றும் இவன் எழுப்பிய அப் புறமதிற் சுவருக்கு விக்கிரம சோழன் திருமாளிகை" என்றே பெயர் வழங்குகிறது. இதைப்போலவே திருவரங் கத்துத் திருமாளிகையொன்றையும் இவன் அமைத்தான். இவன் நாடு முழுவதும் அடிக்கடி சுற்றுலா சென்று மக்களை நேரடியாகச் சந்தித்துக் குறைகளைக் கேட்டறிந்து செங்கோலொச்சினான். எனவேதான் மக்கள் இவனைத் 'தியாக சமுத்திரம்' என்று புகழ்ந்தனர். , இவன் தன் கீழிருந்த வேங்கியை வலுப்படுத்தினான். சுங்க வாடியின் சில பகுதிகளையும், குறிப்பாகக் கோலாரையும் மீட்டுக் கொண்டான். இவன் காலத்தில் வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கி.பி. 1125 பெரும் பஞ்சம் ஏற்பட்டதாக அறிகிறோம். விக்கிரம சோழன் உலாவில் இவனுக்குக் கீழ்ப்பட்டிருந்த குறுநில மன்னர் களைப்பற்றியறிகிறோம். சூரை நாய்க்கன் (மாதவராயன்), சம்புவராயர்கள், திருக்காளத்தியாதவர்கள் முதலியோர் அக்குறுநில மன்னருன் குறிப்பிடத் தக்கவர் ஆவர். இரண்டாம் குலோத்துங்கன் (கி.பி. 1135 - 50) " இவன் விக்கிரம சோழனின் மகன் ஆவான். கிபி 1133 யிலேயே இளவரசுப் பட்டம் சூடிய இவன் தில்லையில் முடிசூட்டிக்கொண்டு, அம்பலத்துக்குப் பொன் வேய்ந்தான். அதற்குள்ளிருந்த கோவிந்தராசர் சிலையை எடுத்துக் கடலில் வீசினான். இவன் சைவனாதலால் வைணவத் தின்மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியை இதனால் அறியலாம். இவன் காலத்தில் சைவ வைணவப் பூசல்கள் ஏற்பட்டன. சேக்கிழார், ஒட்டக் கூத்தர், கம்யர் ஆகிய பெயர் பெற்ற அறிஞர் பெருமக்கள் இவன் காலத்தில் வாழ்ந்த னர். இரண்டாம் இராசராசன் (கி.பி. 1150 - 1175) இவன் இரண்டாம் குலோத்துங்கனின் மகன். தன் தந்தை உயிருடன் இருக்கும்போதே பல ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பேற்று நடத்தினான். தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்டு முத்தமிழ்த் தலைவன்' என்ற விருதுப் பெயர் பூண்டான். இவன் காலத்தில் சோழராட்சி தளர்ச்சியடைந்தது. மண்டிலத் தலைவர்கள் கட்டுப்பாடின்றி ஒழுகலாயினர்.விசுணுவர்த்தனன் ஒய்சாள நாட்டின் அரசனானதுமே சோழரின் புகழ் மங்கியதெனவாம். பின் வந்தோர் இரண்டாம் இராசராசனுக்குப்பின் விக்கிரம சோழன் மகள் வயிற்றுப் பெயரன் இரண்டாம் இராசாதிராசன் சோழநாட்டின் மன்னன் ஆனான். இவன் காலத்தில் பாண்டிய நாட்டில் ஏற்பட்ட அரசுரிமைப் போரில் சோழநாடு ஈடுபட்டதால் சோழர், பாண்டியர், சிங்களர் பகைமையும், நட்பும் மாறிமாறி வளர்ந்தன. இவனுக்குப்பின் வந்த மூன்றாம் குலோத்துங்கன் பாண்டிய நாட்டுச் செய்தியில் தலையிட்டுக் குலசேகர பாண்டியனை அரசனாக்கினான். இதனால் சிங்கள நாட்டு மன்னன் பாண்டிய நாட்டின் மீது படை யெடுத்தான். அவனைச் சோழர் படை முறியடித்தது. இவன் காலத்தில் கொங்கு நாட்டில் எழுந்த கிளர்ச்சிகள் அடக்கப்பெற்றன. தெலுங்குச் சோழரிடமிருந்த காஞ்சியைக் கைப்பற்றிக் கொண்டான்! பாண்டிய நாட்டின்மீது படையெடுத்துச் சடையவர்மன் சுந்தர பாண்டியனைத் தோற்கடித்து, மதுரையிலிருந்த முடிசூட்டு விழா மண்டபத்தை இடித்துத் தள்ளினான். ஆனால், சடையவர்மனை யடுத்துப் பட்டத்திற்கு வந்த "மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழ நாட்டின்மீது படையெடுத்து வெற்றி கண்டான். இவ்வாறு சோழர் பாண்டியர் பகை வளர்ந்ததால் சோழர் ஆட்சி சீர்குலைந்தது. இச் சீர்குலைவைப் பயன்படுத்திக்கொண்டு, தெலுங்குச் சோழர்கள், காடவர், சம்புவராயர்கள், பாணர்கள், அதியமான் = - கள், மலையமான்கள் முதலிய குறுநில மன்னர்கள் கட்டுப்பாடின்றி வளரத் தொடங்கினர். இச் சமயத்தில் நாட்டில் கொடிய பஞ்சமும் ஏற்பட்டது. இவன் காலத்தில் கட்டப்பட்ட திரிபுவனம் சிவன்கோயில் தஞ்சைப் பெருவுடையார்க் கோயில், கங்கைகொண்ட சோழீச்சுவரம் போன்ற கோயில்களைப்போல் சிறப்புடையதாகும், மூன்றாம் குலோத்துங்கனையடுத்து மூன்றாம் இராசராசன் பட்ட மேற்றான். இவன் காலத்தில் குறுநில மன்னர்களும், பெரும்பகைவரான பாண்டியரும் இவன் அரியணையை அகற்ற முயன்றனர். அரசியல் வலக்காரமறியாத இவன் பாண்டியர்மீது படையெடுத்தான். பாண்டியர் சோழ நாட்டைத் தாக்கிக்கோநகரான கங்கைகொண்டசோழபுரத்தைக் கைப்பற்றினர். தப்பியோடிய இவன் காடவராயன் கோப்பெருஞ்சிங்கன் என்பவனால் சேந்தமங்கலத்தில் சிறையில் அடைக்கப்பெற்றான். இந் நிலையில் சோழ இளவரசி ஒருத்தியின் மகனான நரசிம்மன் என்ற போசளராசன் சோழனுக்குத் துணையாகப் படையெடுத்து, காடவராயன் கோப்பெருஞ்சிங்கனையும், பாண்டியரையும், அவர்களுக்குத் துணை நின்ற சிங்களவரையும் வென்று சோழனை மீட்டான். இதற்குப் பின் " சோழர்கள் போசளருக்கும் பாண்டியருக்கும் அடங்கியவர் ஆயினர், இவனையடுத்து அரசுக்கட்டி லேறிய மூன்றாம் இராசேந்திரன் காலத்தில் பாண்டியர் முழுவதுமாகச் சோழநாட்டையடிப்படுத்தித் திறை பெற்றனர். இவனுக்குக் கீழிருந்த கோப்பெருஞ்சிங்கன் (கி.பி. 1229-1278) சோழர், பாண்டியர், போசளர் ஆகியோரின் புகழை மங்கவைத்து விட்டான். கடலூர் மாவட்டத்திலுள்ள சேந்தமங்கலத்தி லிருந்து அரசாண்ட இவன் சிதம்பரம் கோயில் தெற்குக் கோபுரத்தைக் கட்டினான், இச் சமயத்தில் பாண்டிய நாட்டில் கிபி.1251-ல் சடையவர்மன் என்பவன் அரசுக்கட்டி லேறினான். பாண்டிய நாட்டு வரலாற்றில் ஒரு திருப்பக் கட்டத்தையேற்படுத்திய இவன், சோழரையும் போசளரையும் வென்று அடிமைப்படுத்தினான். இதனால் மூன்றாம் இராசேந்திரனே சோழர் ஆள்குடியின் கடைசி அரசன் ஆனான். இதற்குப்பின் சோழநாடு பாண்டிய ராட்சியுடன் இணைந்துவிட்டது. பின்னர் தோன்றிய விசயநகரப் பேராட்சியில் சோழர் சுவடுகளைக் காண்கிறோம் (அ) சோழர் ஆட்சி முறை நடுவண் ஆட்சி " சோழர்கள் மக்களை ஆட்கொண்டார்களே தவிர ஆட்சி புரிய வில்லை. குடியோம்பிக் காத்தலையே தம் கடமையாகக் கொண்டனர். பிறங்கடை உரிமைப்படி அரசுக்கட்டிலேறும் மன்னன் கொலுமண்டபத் தில் வீற்றிருக்கும் போதும் அல்லது பயணங்களை மேற்கொள்ளும் போதும் குடிமக்கள் நேரில் சந்தித்துக் குறைகளைக் கேட்டறிந்து கடமை யாற்றுவான். அவர்களின் முறையீடுகளை உடனுக்குடன் பதிவு செய்து கொள்ளவும், அவற்றிற்காகப் பிறப்பிக்கப்படும் ஆணை களைப் பதிப்பிக்க வும் தனிச்செயலர் அவனுடனேயே இருப்பார். அவருக்கு ஓலை நாயகம்" என்று பெயர். அரசவைகொலுமண்டபம் ஆடம்பரமாகச் சோடிக்கப்பட்டுக் கம்பீரமாகக் காட்சியளிக்கும். தலைமையமைச்சர், புரோகிதர், படைத் தலைவர், தூதுவர், ஒற்றர் ஆகிய ஐவரடங்கிய ஐம்பெருங்குழுவும், கணக்கர், கலைஞர், கருவூல அதிகாரி, மெய்க்காப்பாளர், நகரத்தார், யானைப்படைத் தலைவர், குதிரைப் படைத்தலைவர் ஆகிய எண்ம் ரடங்கிய எண்பேராயமும் அரசனைச் சூழ்ந்து நிற்கும், உயர்ந்த அரியணையில் அரசன் அரசியாருடன் வீற்றிருந்து, செங்கோலேந்தி, மணிமுடி தரித்து, இரு பக்கமும் மகளிர் கவரி வீச, அவன் ஆணைகளை ஓலை நாயகம் பதிவு செய்து, செயல்படுத்தக் கொலுமண்டபம் உயிரோட்ட மாகக் காட்சியளிக்கும். அயலகத்திற்குத் தூதுவரை அனுப்புவதும், அயலகத் தூதுவரை வரவேற்பதும், சிற்றரசர்கள் திறையுடன்வந்து வணங்கித் திறைகளைப் படைப்பதும் கண்ணுக்கினிய காட்சிகளாகும், அரசனது விருதுப்பெயர்களும், கோயில்களிலுள்ள மூலவர்களின் பெயர் களும் ஒன்றாயிருப்பதுண்டு. தானேயன்றித் தன் குடும்பத்தாரும் இத்தகைய வும் தனவும், அவற்றின் முறைய கோயில்களைக் கட்டுவதிலும், தானங்கள் செய்வதிலும் ஈடுபட்டதால் மக்கள் அவனைப் பூலோகத்தேவன்' என்றே போற்றினர். அறிஞர்கள், அவனால் ஏற்றப்பட்டனர்; கலைஞர்கள் சிறப்பிக்கப்பட்டனர். அரசன் அறத்தின் பாதுகாவலனெனத் தன்னைக் கொண்டதால் மக்களுக்குத் தீங்கு ஏற்படுவதில்லை . ஆயினும், அவனுக்கு அறிவுரைகள் கூறவும், அரசு வினைப்பாடுகளில் உதவி செய்யவும் அமைச்சரவை யிருந்தது, துறைவாரியாக அமைச்சர்கள் பங்கேற்றனர். புரோகிதரும், படைத்தலைவருங்கூடக் கலந்தாலோசிக்கப்பட்டனர். ஆணைகள் அரசனது கையொப்பம்முத்திரை" பெற்றே வெளிவரும். ஆயினும் அவற்றைச் செயல்படுத்துமுன் தொடர்புள்ள துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகளுள் இருவராவது அடியொப்பமிடவேண்டும், அதிகாரி களுக்கு இருந்த பொறுப்பையும், அரசன் கட்டுக்கடங்காதவன் அல்லன் என்பதையுமே இது காட்டுகிறது. அரசனது இலச்சினை புலியின் உருவ மாகும். ஆணைகளிலும் இஃது முத்திரை வடிவில் இடப்படுவதுண்டு. வருவாய்கள் அரசுக்கு நிலவரியே முகாமை வருவாயாகவிருந்தது. தனிப்பட்டவர் நிலம், குமுகாயப் பொதுநிலம், அரசனுக்குச் சொந்தமான நிலம் என நில உரிமையை மூவகையாகப் பிரிக்கலாம். பொதுவாக ஆறிலொரு பங்கு வரி செலுத்த வேண்டுமென்பதே அன்று நிலவிய விதியாகும். ஆனால், வரிவிதிப்பு இடத்திற்கேற்றவாறு மாறுபட்டது. நிலவரியைத் தவிர தொழில்வரி, வணிகவரி, சுங்கவரி, துறைமுக வரி, உப்புவரி, நீர்ப்பாசனவரி முதலிய வரிகளும் நயன்மை மன்றங்களில் விதிக்கப்படும் தண்டங்களும் அரசுக்கு வருவாய் கற்றுகளாயமைந்தன. நீர்ப்பாசன வரியென்பது அரசால் அல்லது ஊர் மன்றத்தால் அமைக்கப்படும் கால்வாய்களிலிருந்து நிலத்திற்கு நீர்ப்பாய்ச்சி மூன்று போகமும் பயிரிட்டால் 1/3 பங்கும், மூன்று போகங்களுக்குக் குறைவாகப் பயிரிட்டால் அதற்குத் தக்கவாறும் வரிதண்டப்படும். இது நிலைப்பாடற்ற நிலவரியாகும். எடுத்துக்காட்டாக, முதலாம் இராசராச சோழனும், முதலாம் குலோத்துங்கனும் நிலங்களை அளந்து, தரம்பிரித்து வரிவிதித்த னர், இதில் நீர்ப்பாசனத்தையும், தரத்தையும் அடிப்படையாகக்கொண்டு வரிவிதிக்கும் முறை கையாளப்பட்டது. ஆயினும், விளைச்சலுக்குத் தக்கபடி வரித்தண்டல் செய்யவேண்டும் என்ற அறத்தினடிப்படைக் கொள்கை மேற்கொள்ளப்பட்டதால், தரமும், நீர்ப்பாசனமும் மட்டும் ஒரு நிலைப்பாடாக எடுத்துக்கொள்ளப்பட வில்லை. எனவே, ஒரே நிலத்திற்கு ஆண்டுதோறும் நிலவரி விதிப்பு மாறலாம். விளைச்சலில்லாத போதும், பஞ்ச காலத்திலும் வரித் தண்டல் இராது. மாறாக, அரசு உதவி களும் கிடைக்கும். இச் சமயங்களில் பிற வரிகளின் மூலம் வரும் வருவா யினையும், சுருளுவு நிலைப்பணத்தையும் பயன்படுத்துவர். பிற வரிகளும் சிலபோது தள்ளுபடி செய்யப்படும். எ-டு. குலோத்துங்கன் சங்கம் தவிர்த்ததை நோக்குக. நிலவரி கட்டத்தவறும் நிலக்கிழார் அல்லது வேளாளருடைய நிலங்களை ஏலத்தில் விற்றும் பணம் தேடும் உரிமை அரசுக்குண்டு, கோவில் நிலங்களும் இத்தகைய விதியினின்று தப்பமுடி யாது. வாரி, பணமாகவோ, பொருளாகவோ செலுத்தப்படலாம். செலவுகள் பொதுத்துறை, படை, நாவாய்த்துறைகள், சாலைகள், நீர்ப்பாசன ஏந்து களுக்கான ஏரிகள், கால்வாய்கள் முதலியவற்றிற்கு அரசின் வருவாய் செலவிடப்பட்டது. பொதுத்துறை அதிகாரிகளுக்குப் பண மாகவும், நிலமானியமாகவும் ஊதியம் வழங்கப்பட்டது. படைத்துறை சோழரிடம் யானை, குதிரை, காலாள் முதலிய படைப் பிரிவுகள் இருந்தன. இவற்றைத் தவிர அக் காலத்தில் வேறு எவரிடமுமில்லாத வலிமை படைத்த நாவாய்ப்படை சோழரிடமிருந்தது. இப் படைகள் யாவும் சிறந்த கட்டுப்பாட்டையும், கடமையுணர்ச்சியையும், பண்பட்ட பயிற்சியையும் பெற்றிருந்தன. சோழரிடம் மொத்தம் ஓரிலக்கத்து ஐம்பதினாயிரம் படைகள் இருந்தனவென்றும் இதில் யானைப்படை மட்டும் அறுபதினாயிரம் இருந்ததென்றும் கணக்கிடப்படுகிறது. படை வீரர்களைத்தவிர மன்னனின் மெய்க்காப்பாளர்கள் வேலைக் காரர்கள் பலருமிருப்பர். இவர்கள் மன்னனின் உயிராகவும் உடலாகவும் செயல் பட்டுத் தங்களை அவனுக்குப் படையலாக்க எப்பொழுதும் அணியமாக விருப்பர். உயர்வகைக் குதிரைகள் அரேபியாவினின்றும் தருவிக்கப்பட்டுச் சோழர் படையில் வைக்கப்பட்டன. ஆனால், இவை தமிழகத்தின் தட்ப வெப்பம் தாங்க முடியாமல் குறுகிய காலத்திலேயே இறந்துபடுவதுண்டு. படைத்தலைவருக்கு நாயசம், தண்டநாயகம், சேனாதிபதி முதலிய பட்டங்கள் வழங்கப்படும். படையில் வேளாளர், பார்ப்பனர் மற்றும் பல இனத்தவரும் இருப்பர், வீரதீரச் செயல்களுக்காகப் படை வீரர்களைப் பாராட்டிச் சத்திரியசிகாமணி* போன்ற விருதுகள் வழங்கப் படும். போரில் குழந்தைகளும், பெண்களும்கூடக் கொல்லப்படுவதும், அவமானப் படுத்தப்படுவதும் உண்டு, யானைகளையும், குதிரை களையும் படைவீரர், களைப் போலவே காக்க வேண்டும், அவை களுக்கும் விருதுப்பெயர்கள் வழங்கப்பட்டன. இவற்றை அரசன் நாள்தோறும் பார்வையிடுவான். சோழர் நாவாய்ப் படையினர் இந்துமாக்கடலில் சிறு குளத்தில் விளையாடுவதுபோல் விளையாடி அடிக்கடி ஈழத்தையும் தொலைக் கிழக்குத் தீவுகளையும் வென்றனர். எனவே, இக்கூடல் சோழர் ஏரி" என்றே அழைக்கப்பட்டது. அரபிக்கடலும் அவர்களின் ஏரியாகவே திகழ்ந்தது. சிலப்பதிகாரத்தில், சோழர் கரைகளில் நின்ற கலங்கள், குதிரை தலை அசைத்தவாறே கொள்ளுத் தின்பதைப்போல் அலைகளின் நடுவில் ஒய்யாரமாய் அசைந்து நின்றன வென்றும், கார்காலங்களில் வெட்டிய உயர்ந்த பனைமரங்களை நட்டு அவற்றின் தலையிலே ஏற்றிய கலங்கரை விளக்குகள் கப்பல்களுக்கு வழிகாட்டினவென்றும் கூறப்படுவதிலிருந்து சோழரின் நாவாய்ப்படை 'பரந்த இந்தியாவைப் படைப்பதற்கும், கடல் வாணிகத்தைப் பெருக்குவதற்கும் பயன்பட்ட பாங்கினை அறியலாம், நீர்ப்பாசனம், போக்குவரத்து ஏந்துகள் கரிகாலன் கட்டிய கல்லணையும், பிற சோழமன்னர்கள் வெட்டிய கால்வாய்களும் ஏரிகளும் அக்காலத்தில் சிறந்த நீர்ப்பாசன ஏந்துகளாகப் பயன்பட்டன. உணர் மன்றங்கள் ஒவ்வோர் ஊரிலும் இத்தகைய ஏரிகளை யும், குளங்களையும், கால்வாய்களையும் வெட்டுவதைத் தம் தலையாய பணியாகக் கொண்டன. சோழர்கள் கட்டிய கோயில்கள் கலையுலகில் சிறப்பிடம் பெறுகின்றன.தஞ்சைப் பெருவுடையார்கோயில் உலகப் புகழ் படைத்ததாகும். அரசரும் அரச குடும்பத்தினரும் செல்வரும் அதிகாரி களும் கோயில் திருப்பணிகளை மேற்கொண்டனர். சோழர் காலத்துப் பெருவழிச் சாலைகளில் வடக்கு வழி என்பது சிறப்பானது. அது கன்னியா குமாரியிலிருந்து கங்கை வரை மகாநதியையொட்டிச்சென்றது. ஆறுகளும் போக்குவரத்துக்குப் பயன்பட்டன. நாட்டுப் பிரிவுகள் சோழநாடு பல மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இம் மண்டலப் பிரிவை இன்றைய மாநிலப் பிரிவுக்கு ஒப்பிடலாம். இதுபோன்ற மண்டலங்கள் காலந்தோறும் எண்ணிக்கையில் வேறு பட்டுக் காணப்படு கின்றன, அவை ஆறு முதல் எட்டு வரையில் காணப்படுகின்றன, தொண்டை மண்டலம், சோழ மண்டலம், இராசராச மண்டலம், அதிராச மண்டலம் கொங்கு நாடு, கங்கைகொண்டசோழ மண்டலம், நிகராழிச் சோழ மண்டலம் என்று ஆறு மண்டலங்களின் பெயர்கள் அறியப்படும் கின்றன. ஒவ்வொரு மண்டலமும் பலகோட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. 'கோட்டம்' வனநாடு எனப்பட்டது. வளநாடு பல நாடுகளாகப் பிரிக்கப் பட்டது. ஒவ்வொரு கோட்டத்தின் கீழும் பல்கூற்றம் அல்லது தார்க் கூற்றங்கள் இருந்தன. பல ஊர்களின் ஒன்றியமே கூற்றம் என அழைக்கப் பெற்றது. ஒவ்வொரு கூற்றமும் பல உட்பிரிவுகளாகக் குடும்புகளாகப் (wards) பிரிக்கப்பட்ட து. மண்டலத் தலைவன் மண்டலத்தின் தலைவன் மண்டலாதிபதி' எனப்பட்டான். இவன் அரசனால் நேரடியாக அமர்த்தப்படும் அரசப்படிநிகராணி ஆவான். பெரும்பாலான மண்டலத் தலைவர்கள் அரசருக்குத் தம்பியர் அல்லது பிள்ளைகளாகவே இருப்பர். அரச குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்களும் இப் பதவியில் இருப்பர். அரசரின் ஆணைகளை நிறைவேற்றுவது இவர்களின் கடமையாகும். தாங்கள் அரசருக்கு ஆற்றும் கடமைகளைப் பற்றியும், நாட்டின் நிலவரங்கள் பற்றியும் காலந்தோறும் அரசருக்குத் தெரிவிப்பர். மண்டலத்தைப் பொறுத்த வரையில் எல்லாத் துறைகளுக்கும், பணிகளுக்கும் இவர்களே பொறுப்பாளிகளாவர். இவர்களுக்கு நிருவாகத் தில் உதவிபுரிய அதிகாரிகள் பலரிருப்பர். பணித்துறை யேடுகள், ஆவணங்கள் ஆகிய வற்றை ஒழுங்கு முறைப்படி நிலைப்படுத்தி வைப்பது இவர்களின் கடமைகளுள் ஒன்றாகும், ஊர் மன்றங்கள் சோழப் பேராட்சியில் சிறப்பானது ஊராட்சி முறையேயாகும். தனியாக ஒவ்வோரூருக்கும் கார் மன்றம் இருந்தது. இதனைத் தனியூராட்சி' என்பர். பல ஊர்களுக்கு ஒரே ஊராட்சி மன்றம் இருந்தது. இதனைக் "கூற்றாட்சி' என்றனர். இம் மன்றங்களில் பங்கேற்கும் உறுப்பினர்களுக்கு "ஊரார்' என்று பெயர். இதன் வழி இம் மன்றங்களும், ஊரவை' அல்லது பேரவை'(மகாசபை என்றே அழைக்கப்பட்டன. இம் மன்றங்கள் எல்லா வகையிலும் முழு உரிமையுடன் தனித்தே செயல்பட்டன. ஆயினும், அரசின் சார்பில் இவற்றைக் கண்காணிக்க அதிகாரிகள்' அமர்த்தப்பட் டிருந்தனர், அனர்மன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினருக்குக் கீழ்க் காணும் தகுதிகள் வரையறுக்கப்பட்டிருந்தன. அந்த உறுப்பினர் தன் பகுதி அல்லது பிரிவுக்கு உட்பட்ட மக்களின் படிநிகராளியாக மன்றத்தில் அவர்களின் குரலை ஒலிப்பார். (1) உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படவேண்டியவர் குறைந்த அளவு 1/4 வேலி1 ஏக்கர் நிலத்திற்குச் சொந்தக்காரராயிருக்க வேண்டும் (2) தனது சொந்தமனையில், தான் சொந்தமாகக் கட்டிய வீட்டில் குடியிருப்பவராக இருக்க வேண்டும். (3) முப்பத்தைந்துக்கும் எழுபத்தைந்துக்குமிடைப்பட்ட அகவை (வயது)யுடையவராகவும், நல்ல ஒழுக்கமுடையவராகவும் இருத்தல் வேண்டும் (4) வேதமந்திரப் பிராமணங்களில் ஆழ்ந்த அறிவுடையவராக இருத்தல் வேண்டும். இவ்வறிவு இல்லையெனில் 1/8 வேலி (3/4 ஏக்கர் நிலத்திற்குச் சொந்தக்காரராகவும், ஒரு வேதத்திலும், ஒரு மொழியிலும் அறிவுடையவராகவும் இருத்தல் வேண்டும். கீழ்க்காணும் முவினத்தார் உறுப்பினராவதற்குத் தகுதியற்றவர்கள் ஆவர்: மூன்றாண்டுக்கு மேல் ஒரு குழுவில் உறுப்பினராக இருந்தவர் மீண்டும் உறுப்பினராவதற்குத் தகுதி யற்றவர். ஒரு குழுவில் உறுப்பினராயிருக்கும்போது வரவசெலவுக் கணக்கு களைச் சரிவரக் காட்டாதவர் அல்லது குழுத் தொடர்பான கடமைகளில் பொய்த்தவர் உறுப்பினராகத் தொடர்வதற்குத் தகுதியற்றவ ராவார். பெருங்குற்றங்களைச் செய்தோரும், ஐம்பெருங்கரிக்கன் (பஞ்சமா பாதகங்கள் புரிந்தோரும் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் - பெறுவதற்குத் தகுதியற்றவராவார், (பஞ்சமா பாதகங்களாவன :பார்ப்பனனைக் கொலை செய்தல், மது வருந்துதல், திருடுதல், குருவின் மனைவியைப் புணருதல், இத்தகைய குற்றவாளிகளுடன் சேர்தல்) தேர்தல் முறை முப்பது குடும்பங்களைக்கொண்ட பகுதி ஒரு குடும்பு' (Ward என்று கொள்ளப்பட்டது. ஒவ்வொரு குடும்பிலிருந்தும் ஓர் உறுப்பினர் தேர்ந் தெடுக்கப்படுவார். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவோரின் மொத்த எண்ணிக்கை முப்பதாகும். இம் முப்பது உறுப்பினரில் பன்னிருவர் ஆட்சிக் குழுவிலும், பன்னிருவர் தோட்டக் குழுவிலும், எஞ்சிய அறுவர் ஏரிக் குழுவிலும் இடம் பெறுவர். ஊருக்குத் தகுந்தவாறு உறுப்பினர் எண்ணிக்கையும், குழு உறுப்பினர் எண்ணிக்கையும் மாறுபடும். பொது வாகத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் ஏதாவதொரு குழுவில் இடம் பெற்றுப் பணியாற்றுவார். மேற்கண்ட தகுதியுடையவர்களின் பெயர்களைப் பனையோலை களில் எழுதி ஒரு குடத்தில் போடுவார். அதனை நன்கு குலுக்கியபின் சிறுவன் ஒருவனையழைத்து ஓரோலையை எடுக்கச் சொல்வர். அதில் யார் பெயர் இருக்கிறதோ அவர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டதாக அறிவிக்கப் படுவார். இது குடும்பு வாரியாக நடக்கும். பின்னர் குழு உறுப்பினராவ் தற்கும் இதே முறையைத்தான் கையாள்வர். இதனைக் 'குடவோலை முறை' என்பர். பொதுவாக ஆர் மன்றம் கோயில் அல்லது வளர்ப்பொது மண்டபத் தில் கூடும். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஏதாவதொரு குழுவில் உறுப்பாண்மை பெறுவர். இக் குழுக்கள் வாரியங்கள்' எனப்பட்டன. இவற்றில் பங்கேற்றவர்கள் வாரியப் பெருமக்கள்' எனப்பட்டனர். பொதுவாகக் கீழ்க்காணும் வாரியங்கள் ஊர்ப்பொது வினைப்பாடுகளைக் கவனித்தன. இவர்களின் பதவிக்காலம் ஓராண்டு ஆகும். (1) தோட்ட வாரியம் : இதில் பன்னிருவர் உறுப்பினர் ஆவர். இவர்கள் தோட்டக்கால் பயிர்கள், சாலைகள், நீர்பாய்ச்சுதல், அறுவடை, பாதுகாப்பு முதலியவற்றைக் கவனித்தனர். (2) ஏரிவாரியம் : இதில் அறுவர் உறுப்பினராகவிருந்தனர். இவர்கள் ஏரிகள், குளங்கள் முதலியவற்றைப் பழுதுபார்த்தல், மீன் பிடித்தல், நீர் நிரப்புதல், வடித்தல் முதலியவற்றைக் கவனித்தனர். நீர்ப்பாசனத் திற்கு நிலங்களை வாங்கவும், வாரிகளை விதிக்கவும் இவர்களுக்கு முழு உரிமை உண்டு. (3) நயன்மை வாரியம் (நியாய வாரியம்) : இது நீதி வழங்கும் மன்றமாகச் செயல்பட்டது. (4) பொன் வாரியம் : இதில் அறுவர் உறுப்பினர் ஆவர். இது காசு (நாணய முறையைக் கவனித்தது. 5) அர்ப்பணி வாரியம் கிராம் காரிய வாரியம் : இதில் மொத்தம் பன்னிருவர் உறுப்பினர்களாயிருந்தனர். இவர்கள் யாவரும் முன் பட்டறிவுடையோர், இவர்கள் எல்லா வாரியங்களையும் மேற் பார்வையிடுவர். 6) அறவாரியம் தருமவாரியம்): இது கோயில்கள், அறச்சாலைகள் முதலியவற்றைக் கண்காணிக்கும், மேற்கூறிய மன்றத்தில் ஒரு சிக்கலை முடிவுக்குக் கொண்டுவர ஓலையெடுப்பு நடைபெறும். ஒரு மனதாய் நிறைவேற்றுவதும் உண்டு. இத்தகைய வலிமை வாய்ந்த நடுவண் ஆட்சி அலுவலர்களும், திறம்படைத்த பலர்மன்றத்தாரும் ஆற்றிய கடமை, பொறுப்புகளால் உண்மையான குடிமை உணர்ச்சியும், அப்பழுக்கற்ற திறன்மிக்க ஆட்சிமுறையும் தமிழகத் தில் ஏற்பட்டது. (ஆ) சோழர்காலப் பொருளியல் சோழர் காலத்தில் பொதுவாக மக்கள் செல்வத்தில் செழித் திருந்தனர் எனலாம். மன்னர்கள் அயல் நாடுகளின்மீது படையெடுத்துக் கவர்ந்த செல்வங்களும், திறையாகப் பெற்ற செல்வங்களும் கோயில்களைக் கட்டவும், அரண்மனைகளைச் சோடிக்கவும், வீரர் களுக்குப் பகிர்ந் தளிக்கவும், விருதுகள் வழங்கவும் பயன்பட்டன. சோழர் காலத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க கடல் வாணிகம் நடந்தது. நகரத்தார், வளஞ்சியர் முதலியோர் பல் வணிக நிறுவனங்களை நிறுவி அயல்நாடுகளுடன் வாணிகம் நடத்தி வந்தனர் என்பதைக் கல்வெட்டுகளும், இலக்கியங்களும் கூறுகின்றன. வளஞ்சியர் என்ற வணிகக் குழுவினர் பல பிரிவினராய்ப் பிரிந்து, நான்கு திசைகளுக்கும் சென்று வாணிகம் நடத்தினார்கள், செட்டிகள், செட்டிப் பிள்ளைகள், கவுரவர்கள், கந்தழிகள், பத்திரர்கள், காவுண்டசாமிகள், சிங்கம், சிறுபுலி, வலங்கை, வாரியன் ஆகியவர்கள் இக் குழுவிலிருந்தனர் எனக் காட்டூர்க் கல்வெட்டுக் கூறுகிறது. தட்டார், தச்சர், கருமார், கன்னர் முதலிய தொழிலாளர்கள் தங்களின் பணிக்கான தொழிற்கூடங்களையமைத்துக்கொண்டு தொழில் வளத்தைப் பெருக்கினர். அரண்மனைகளில் பணியாற்றும் தட்டாருக்குத் தனி மதிப்பும் சாய்காலும் செல்வாக்கும் இருந்தது. பொன்னை உரைத்துப் பார்ப்பதற்கே பொன் வாரியமிருந்ததை நோக்க இக் காலத்தில் பொன் எளிதாக எங்கும் புழக்கத்தில் இருந்ததையறி கிறோம். கோயில்களுக்குத் தானங்கள் வழங்குவோர் பொதுவாகப் பொன்னை அளவாகக் கொண்டே வழங்கினர். உலகின் பல பகுதிகளிலு மிருந்து பெறப்பெற்ற மணிகளும், பாண்டிய நாட்டு முத்தும் மிகுந்து காணப்பட்டன. ஆயிரக்கணக்கான கோயிற் படிமங்கள் பொன்னாலும் மணியாலும் செய்யப்பட்டன. சோழர்கால வரிவிதிப்பு முறையைக் கொண்டு விளைபொருள் களின் மிகுதிப்பாட்டினை நாம் எளிதில் அறியலாம். விளைபொருள் களையும் நிலத்தின் மண்வளத்தையும் கொண்டு நிலங்கள் தரம் பிரிக்கப்பட்டன. நில அளவை சோழர்காலத்தில் இருமுறை முழுதுமாக மேற்கொள்ளப் பட்டது. நெல்வயல், தரிசாகவிருந்து பண் படுத்தப்பட்ட நிலம், காடு திருத்தியநிலம், கடைப்பூ நிலம், இறைப்பு நிலம், வாழைத்தோட்டம், கரும்புத் தோட்டங்கள், செந்தாமரை பூக்கும் சதுப்புநிலம், மஞ்சள், இஞ்சி, வெங்காயம், வெள்ளைப்பூண்டு விளையும் தோட்டங்கள், சுத்தரிக்காய், பூசுனைக்காய் முதலிய காய்கள் விளையும் நிலங்கள், நெல், பருத்தி, வரகுப்பருத்தி, சுடுகு, பனிக்கடலை, கோதுமை, குசும்பை முதலியன விளையும் நிலங்கள், ஏரிவாய், தாங்கால்வாய், கொள்ளு விளையும் பகுதி, எள் விளையும் புன்செய், தனிப்பருத்தி, தனியா மணக்கு, தினை, பனிவரகு, சாமை முதலியன விளையும் நிலங்கள், வேதிக்கொழுந்து, ஒளிமுழுக் கொழுந்து விளையும் நிலங்கள், பாக்கு, தென்னை, பலா விளையும் நிலங்கள் முதலியனவாக நிலங்கள் தரம் பிரிக்கப்பட்டு அவற்றுக்கு ஏற்ப வரிகள் விதிக்கப்பெற்றன. இதிலிருந்து சோழர் காலத்தில் காடு சுரம்புகளும், மேடு பள்ளங்களும், சதுப்பு நிலங்களும் கூட விளை நிலங்களாக இருந்ததையறிகிறோம். மேலும், சோழ மன்னர்கள் பல அணைகளையும், நீர்ப்பாசனக் கால்வாய்களையும் அமைத்து நீர் வளத்தைப் பெருக்கினார்கள். ஊர்கள்தோறும் ஏரிகள் சமைக்கப் பெற்றன. எருமைக்கும், ஆர்பசுவுக்கும் வரிகள் விதிக்கப்பெற்றன என்பதிலிருந்து சோழர் காலத்தில் பால்வளம் பெருகி இருந்ததையறி கிறோம், 'சுங்கம் தவிர்த்த சோழன்' என்று விருதுப்பெயர் பெறுமளவுக்கு அக்காலத்தில் பண்டங்களின் புழக்கம் இருந்தது. தந்திரிமார் செட்டி, கைக்கோல் நெசவாளர், சாலிய நெசவாளர். நியாயத்தார், மன்றாடிகள், சரிகைத் தறிநெய்வோர், குயவர், நாவிதர், வண்ணார், கள்ளக் காணன், வாணியர், பறையர் முதலியோர் தொழில்வரி செலுத்தினர் என்று அறியப்படுவதிலிருந்து நெசவுத் தொழில் பெற்றிருந்த ஏற்றத்தையும், அரசு, தொழில் வரியால் பெற்ற வருமானத்தையும் அறிகிறோம். நயன்மை மன்றங்களில் விதிக்கப்பெற்ற தண்டங்களும் அரசுக்கு வருவாயாக வந்தது. கோயிற் பண்டாரமும், மக்களின் சிறுசேமிப்பு வைப்பகங்களும் இக் காலத்தின் வைப்பகங்கள் (Eanks] போல் செயல் பட்டன, நம்பிக்கை, நல்லொழுக்கம் நாணயம் இவையே அக் காலக் கொடுக்கல் வாங்கலில் கடைப்பிடிக்கப்பெற்றன. ஆயினும் பொய்க் கையெழுத்திடல், பொது மக்கள் பணத்தைக் கையாடல் முதலிய குற்றங் களும் காணப்பட்டன. அதிகாரிகள், பெருநிலக் கிழார்கள், பார்ப்பனர்கள் ஆகியோர் தாம் மிகுதியாக இத்தகைய குற்றங்கள் புரிந்தனர். கோயிற் சொத்துகளைக் கொள்ளையடிப்பதில் பார்ப்பனருக்கு நிகர் பார்ப்பனரே. உணவு அக் கால மக்களின் உணவுப் பண்டங்களில் அரிசியே முதலிடம் பெற்றது. பாற்சோறு, அக்கார அடிசில், புளியங்கறி என்று பலவகை யாகச் சோற்றைச் சமைத்துண்டனர். பாற் பொருள்களும், பயறு வகைகளும், சோனம், தினை, அவரை, மலையரிசி, வரகு, கம்பு, எள், உழுந்து முதலியனவும் உட்கொள்ளப்பட்டன. முயல், பன்றி, கோழி, முள்ளம்பன்றி, மான், மீன் முதலியவற்றின் இறைச்சிகளையும் உண்டனர். நோன்பு நோற்போர், கைம்பெண்டிர், முனிவர்கள் முதலியோரின் உணவு மிசு எளிமையாகக் காணப்பட்டது. சமண முனிவர்கள் புல்லரிசி, அல்லிக்காய், மூங்கிலரிசி, கேழல், தோரை, அரிசி, காய், கிழங்கு, பழவகைகளையே உண்டனர். கள் உண்டு களித்தல் பெரிதாகப் பேசப்பட்டது.கள் சாடிகளில் பதப்படுத்தப்பட்டது. பெண்கள் காமபானம் என்ற மதுவை அருந்தினர், வெற்றிலையுடன் பச்சைக் கற்பூரத்தைச் சேர்த்து மெல்லுவதும், பழச்சாற் ரில் இஞ்சியை ஊறவைத்து உண்ணுதலும் உண்டு. தேன் கலந்து ஈசல் முதலியவற்றையும் உண்டனர். விருந்தினருக்கும் கள், தேன், சுவை (நறுமண) நீர் முதலியவற்றைப் படைத்தனர். ஆடையணிகலன்கள் ஆண், பெண் இருபாலாரும் மேலாடையின்றியே இருந்தனர் என்பதைச் சோழர் கால ஓவியங்கள், சிற்பங்கள் முதலியவற்றி லிருந்தும் இலக்கியங்களிலிருந்தும் அறிகிறோம் ஆண்கள் தலைப்பாகையணிந்தனர். பெண்கள் கூச்சு அணிந்தனர். சில சமயங்களில் பெண்கள் மேலே உத்தரியம் போட்டனர். அடைகள் வெண்மை , காவி, சிவப்பு முதலிய வண்ணங்களில் காணப்பட்டன. பருத்தி, பட்டு, தாவரி(கம்பளி முதலியவற்றாலான ஆடைகளும், அயல்நாட்டு ஆடைகளும் இருந்தன, எலி மயிரைக் கொண்டு நெய்யப்பட்ட ஆடைகள் போர்வைகளாகவும் பயன்பட்டன. வீரர்கள் வட்டுடை அணிவதும், வேடர்கள் செருப்பு அணிவதும் சிறப்பாகக் காணப்பட்டன. ஆடைகளுக்கு நறுமணம்(Cent) பட்டப் பெற்றது. ஆண்களும் பெண்களும் அணிகலன்கள் அணியும் வழக்கமுடை யவர்கள். பெண்கள் தலை முதல் கால் வரை பல்வேறு நகைகளை யணிந்தனர். தலையில் சுட்டி, தெய்வ உத்தி, பொற்பூ ஆகிய நகைகளையும், நெற்றியில் சூட்டு என்ற நகையையும் அணிந்தனர். சுறவமகரக்குழை போன்றவை காதுகளிலும், முத்துமாலை, பிறைவிடம், விண்மீன் (நட்சத்திரம், மணிமாலை, வலம்புரிமுத்து வடம், நிரைத்தாலி, மாணிக்கத் தாலி,தாலி மணிவடம் முதலிய நகைகளைக் கழுத்திலும் அணிவர். சுறாமீன் வடிவமுள்ள தோளணியையும், மகரமீன் வடிவமுள்ள தொடையணியை யும் அணிவர். பவழத்தாலான மேகலையை மார்பகத்தில் அணிவர், பாதங்களில் தவளைக் கிண்கிணி, பாடகம், சிலம்பு, விரலாழி முதலிய வற்றையும் அணிந்தனர். ஆண்கள் தோள்பட்டைகளில் கடகம் வங்கி) என்ற காப்பையும், கால்களில் வீரக்கழலையும் அணிந்தனர். குறிப்பாக, அரசர்கள் தலைமுதல் கால் வரை பல்வேறு. நகைகளை அணிந்தனர். "சோழர் காலத்து நகைவகைகளை நம்மால் வரையறுத்துக் கூறமுடியாது. ஒப்பனைக் கலை பெண்கள் மேற்கண்ட நகைகளைப் பூண்டு, ஆடைகளையும், அணிந்ததோடு தங்களைத் தேவதைகளைப் போல் ஒப்பனை செய்து கொண்டனர். நறுமணம் கலந்த நீரில் குளித்து, கண்ணுக்கு மை தீட்டி, மார்பில் குங்குமக் குழம்பைத் தடவி, விரல்களிலும், பாதங்களிலும் செம் பஞ்சுக் குழம்பையூட்டி, நறுமணப் புகையூட்டிய மாலைகளை யணிந்து செல்வர். கொண்டையில் மலர்களையும், மலர் வளையங் களையும் அணிவர். பலவகை மலர்மாலைகளேயன்றி, மலர் போல் ஆக்கப்பெற்ற பொன்மாலைகளையும், பொன் மலர்களையும் பெண்கள் அணிந்தனர். மணப்பெண்ணுக்கு உடல் முழுவதும் செந்நிறம் பூசப்படும். நறுமணம் நாட்டிய கூந்தலை யானையின் மருப்பினாலான தலைவாரியால்சீப்பால் வாரி, பல்வேறு வகையாகச்சோடி அலங்கரிப்பார்கள், தொண்(நவ. மணிகளில் இழைத்த பொற்றலைவாரிகளும் இருந்தன. இத்தகைய ஒப்பனைகளுக்குப் பின் பெண்கள் தங்கள் உடல் நளினங்களுடன் அழகாகவும் செம்மையாகச் செழிப்பாகவும் தோற்றமளித்தனர். குறிப்பாகத் தேவரடியார்கள் இக் கலையில் சிறந்து காணப்பட்டனர். பிற கலைகள் புல்லாங்குழல், வீணை, யாழ், பறை, முழவு முதலிய எண்ணிறந்த இசைக்கருவிகள் இக்காலத்தில் இருந்தன. இக்கால நடனங்கள், நாட்டிய மேடைகள், நாடக அரங்குகள், கூத்துகள், கூத்தாடிகள் முதலியவற்றைப் பற்றிக் கூறின் விரியும் இசையும், நாடகமும் சோழர் காலத்தில் சிறப்புற்று நின்றன. விழாக் காலங்களில் இவற்றில் வல்ல கலைஞர்கள் தம்வண்ணம் காட்டி மக்களைக் கவர்ந்தனர். இசை, நாடகம் ஆகியவை பொதுவாக மக்களைக் கவர்ந்த கலைக ளாயினும் ஓவியம், சிற்பம், கட்டடம், எழுத்து முதலிய கலைகளும் இக் காலத்தில் சிறப்புற்றிருந்தன. நிமித்திகசோதிடக் கலை பெரிதும் அறியப்பட்ட சுவையாகும். நிமித்திகக்கலை வல்லார்சுள் முடிசூட்டும் நேரம் முதல் திருமணம் செய்ய வேண்டிய நேரம் வரை கணித்து மக்களை அன்றாடப் பணிகளில் அக்கலையைப் பின்பற்றி நடக்கச் செய்தனர். திருமணம் தக்க அகவையில் வயதில் மணம் முடிப்பதும், பெண் வீட்டிற்குத் தேடிப்போய் அவளுக்குப் பரியம் - பரிசம் வழங்கி மணம் முடிப்பதும் அக் கால வழக்கமாகும். மாப்பிள்ளை வரிசைவரதட்சிணை வழங்கும் வழக்க மில்லை. இஃது ஆரியரின் பண்பாடு, ஆணைத் தேடிப்போய் "வரதட்சிணை' வழங்குவது ஆரியர் பண்பு. தன் வீரத்திற்கு அறிகுறியாகப் புலிப்பல்லைத் தாலியாக்கி அவளைத் தொடும் உரிமைக்கு ஸ்பரிசம் அல்லது தொடுவிலைப்பரியம் - பரிசம் சுட்டி ஆடை அணிகலன்களைக் கொடுத்துப் பெண்ணை மணப்பதே பழந்தமிழர் மரபு. பரியத்தை 'முலைவிலை" என்று கழகக்காலத் தமிழர்கள் அழைத்தனர். பெண்கள் பெற்றோரிடமிருந்து நிலங்களைப் பெண்வழிச்செல்வமாக சீதனமாகப் பெறுவர். இதில், கணவனுக்கு உரிமையில்லை . பரியம் வழங்கும் வழக்கத் தைத் தமிழரிடமிருந்து கையாண்ட பார்ப்பனர்கள் தங்கள் இனத்தவரால் தண்டனை பெற்றதாக அறிகிறோம். திருமணத்தில் பல சடங்குகள் நடந்தன. பன்னீரகவையில் பெண் ணுக்குத் திருமணம் நடக்கும், திவலம் வருதல், ஓமத்தில் நெற்பொறி யிடுதல், அம்மி மிதித்தல், அருந்ததிகாட்டுதல் ஆகிய சடங்குகளும் பெண்ணைத் தாரை வார்த்துத் தரும் சடங்கும் மணமகள் காலை மணமகன் பாலால் கழுவும் சடங்கும் ஆரியப்பண்பாடு தமிழகத்தில் காலூன்றி நிலைத்த பின்னர் சோழர் காலத்தில் மிகுதியாகப் பின்பற்றப் பட்டன. தொண்மணிகள் பதித்த தாலியும், புலிப்பல் கோத்த பொற்றாலியும் கட்டப்படும். மணமக்களின் கட்டிலைச் சுற்றி 'எந்திர எழினி" என்னும் எந்திரத்தால் இயக்கப்பெற்ற கொசுவலை சுட்டப் பெற்றது. சோழர்காலக் குமுகாயத்தில் கழகக்காலத்தில் காணப்பட்ட நம்பிக் கைகளும், பழக்கவழக்கங்களும் அப்படியே இருந்தன வெனலாம். ஆட்டுச் சண்டை கோழிச் சண்டை காளைச் சண்டையானைச் சண்டை முதலிய வற்றை ஆண்கள் கண்டுகளித்து இன்பமாகப் பொழுதுபோக்குவர். பெண்கள் மனசலாடுதல், பொம்மைக் கலியாணம், பந்து விளையாட்டு, நீர் விளையாட்டு இசைக்கருவிகளை மீட்டுதல் முதலியவற்றில் இன்பமாய்ப் பொழுது போக்குவர். நோய் தீர்க்கும் பல மருந்துகளை இக் கால மக்கள் அறிந்திருந்தனர். இல்லற வாழ்க்கையொடு மடத்து வாழ்க்கையும் இந் நாளில் அறியப்பட்டது. (இ) சோழர்காலக் குமுகாயம் அரசர்கள் சோழர்காலக் குமுகாயத்தில் அரசர்களும் அரச குடும்பத்தினரும் உயர்வாக மதிக்கப்பட்டனர். அவர்களுக்கென்று தனி அரண்மனைகள் இருந்தன. அவற்றில் பல் பணியாளர்களும், மெய்க்காப்பாளர்களும் இருந்தனர். அரண்மனைப் பணிப்பெண்கள் பெண்டாட்டிகள்' எனப் பட்டனர். அரண்மனைப் பணியாளருக்கெனத் தனி விடுதிகளும், தெருக்க ளும் இருந்தன. அவ் விடுதிகள் வேளம்' என்றழைக்கப்பட்டன. ஒவ்வொரு தொழிலுக்கேற்ப வேளங்கள் ஒதுக்கப்பெற்றன. கோநகருக்கு அப்பாலி ருந்த புறம்பாடியில் இவ் வேளங்கள் இருந்தன, இவ் வேளங்களில் குடியமர்த்தப்பட்டவர்களில் பெரும்பாலானவர் போரில் சிறைப்பிடிக்கப் பட்டவர்கள் ஆவார், அரசர்களில் பெரும்பாலோர் சைவர்களாயிருந்தனர். சைவ குருமார் களுக்குக் குமுகாயத்தில் தலையாய சிறப்பிடமிருந்தது. அரசவையிலும் குருக்கள் இடம்பெற்றனர், அரசன் குலகுருவைக் கலந்தே எதையும் செய்வான். மன்னர்கள் கடவுளின் திருவுருவ மாகவே போற்றப்பட்டனர். மன்னரேயன்றி, பட்டத்தரசியாரும், அரச குடும்பத்தாரும் மக்களால் பெரும் பக்தியுடன் பூசனை செய்யப்பெற்றனர். மன்னரின் கோநகரிலும், அரச குடும்பத்தார் வாழ்ந்த நகரங்களிலும் மக்கள் நெருக்கமாக வாழ்ந் தார்கள். காஞ்சி, தஞ்சை, மதுரை முதலிய நகரங்களில் மக்கள் நெருக்கமும், குடிவளமும் உடையவையாய்க் காணப்பட்டன. ஆகவே, அக்கால மக்கள் நகர வாழ்க்கை முறையை நன்கு அறிந்திருந்தனர் என அறிகிறோம். . அரசர்களின் அரண்மனை வாழ்க்கை இன்பபுரியாகக் காட்சி அளித்தது. அரசர்களும், பெருஞ்செல்வர்களும் பெரிதும் ஆடம்பரமாகப் பகட்டாக வாழ்ந்தார்கள். ஒவ்வோர் அரண்மனையும் ஒரு நகரமாகவே விளங்கியது. அதனுள் காவற்காரருக்குத் தனி அறைகள் இருந்தன. திறை களைச் சேமித்து வைக்கவும், பெண்களின் உடைமைகளைப் பாதுகாத்து வைக்கவும், படைக்கலன்களை வைப்பதற்கும் தனித்தனி இடங்கள் இருந்தன. கூத்துப்பள்ளி, கோயில் முதலியனவும் அரண்மனைக்கு உள்ளேயே இருந்தன. அரண்மனையைச் சுற்றிலும் அகழியும், அதில் முதலைகளும் சுறா மீன்களும் இருந்தன. மிலேச்சர்கள் வாயில்களைக் காத்தனர். அரசியரின் உவனகத்தில் அந்தப்புரத்தில் படையேந்திய காவற்பெண்டிர் பணிபுரிந்தனர். உவளகத்தில் வண்ணத்திரைச்சீலைகளும், அழகிய பட்டால் போர்த்தப் பட்ட நிலைக் கண்ணாடிகளும் இருந்தன. பெண்கள் விளையாடத் தனிவனங்களும், குளித்து நீராடப்பொழில்களும், பின்னர் உல்லாசமாயமர்ந்து இன்புற மணிமண்டபங்களும், அரண் மனைக்கு உள்ளேயே இருந்தன. அங்குப் பன்மணிகள் பதிக்கப்பெற்ற பொன்னூஞ்சல்கள் இருந்தன. பொன்னாலும், வெள்ளியாலும் செய்யப் பெற்ற யானைகள், மான்கள் முதலிய படிமங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அரசன் கொலுவீற்றிருந்த மேடை இவற்றிற்கெல்லாம் மேலாக அழகும் ஆடம்பரச்சோடனைகளும் பெற்றுத் திகழ்ந்தது. பார்ப்பனர்கள் சோழர் காலத்தில் பார்ப்பனர் குமுகாயத்தில் அளவிட முடியாத அளவுக்கு ஏற்றம் பெற்றிருந்தனர், பல்லவர் காலத்தில்தான் முதன் முறையான அயலகத்திலிருந்து பார்ப்பனப் பூசாரிகள் தமிழகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்டு, பிரம்மதேயச் சிற்றூர்களில் குடியமர்த்தப் பட்டுப் பல அரிய சலுகைகள் வழங்கப்பெற்றனர். தொடர்ந்து இவர்கள் தமிழகத்தில் குடியேறிய வண்ணம் இருந்தனர். சோழர் காலத்தில் மன்னர்கள் இவர்களை மண்ணுலகத் தேவர்களாகக் கொண்டு எண்ணிறந்த சலுகைகளை வழங்கினர். இதனால் இவர்கள் தமிழ்க் குமுகாயத்தை ஆட்டிப்படைத்தனர். மன்னர்கள் இவர்களின் ஆணைகளைத் தலைமேற் கொண்டு நிறைவேற்றினர். கழகக்காலப் பார்ப்பனர் தமிழ் மொழியைத் தவிர வேறு மொழி அறியாதவர்; தமிழ்ப் பண்பாட்டில் ஊறியவர்கள். ஆனால், சோழர்காலப் பார்ப்பனர்கள் அயலவர்; வடமொழியைத் தவிர வேறு மொழியை அறிய மறுத்தவர்கள் தமிழையும், தமிழரையும் பழித்தே முன்னேறியவர்கள். கல்விக்கூடங்கள், கோயில்கள், அரண்மனைகள், கொலு மண்டபங்கள் முதலிய எல்லாவற்றிலும் ஆளுமைப் பெற்று ஆசிரியர்களாகவும், அருச்சகர்களாகவும்', 'புரோகிதர்களாகவும்', வேதப் பாராயணம் செய்வோர்களாகவும்ஓதுவார் இடம் பிடித்துக் கொண்ட பார்ப்பனர் மன்னர்களைப் பல வேள்விகளைச் செய்யும்படி தூண்டினர். ஆரியம் தழைப்பதற்கு அயராது உழைத்தனர். இவர்களுக்கு மன்னரேயன்றி மக்களும் பொன்னையும் பொருளையும் பல்வேறு உரிமைகளையும் கொடுத்து ஏமாளிகள் ஆயினர். பார்ப்பனருக்கு வழங்கப் பட்ட பணர்கள் அக்கிரகாரம், அகரம், சதுர்வேதிமங்கலம், பிரம்மதேயம் என்றெல்லாம் வழங்கப்பெற்றன. இவ்வூர்கள் யாவும் அவர்களின் பொறுப் பிலேயே விடப்பட்டன. அரசனது ஆணைகள் அவற்றினுள் செயல்பட வில்லை. இவ்வூர்கள் எல்லாவகைப் பொதுச் சட்டதிட்டங்களினின்றும், வரிகள், கட்டணங்கள், முதலியவற்றினின்றும் விலக்களிக்கப்பெற்றன. இவ் வூர்ப் பேரவைமகாசபையின் தீர்மானங்களுக்கு அரசனும் பணிந்தான். இவ்வாறு ஏற்றம் பெற்ற பார்ப்பனர்கள் தங்களின் உயர்ந்த நிலையைக் காப்பாற்றிக் கொள்ளப் பல சூழ்ச்சிகளைச் செய்தனர். தமிழையும், தமிழ் நெறியையும் சாய்த்தனர்; தாமே புவியுலகின் தேவர் என்றனர். சமற்கிருதமேதேவமொழியாயிற்று. கோயில்களில் குடியேறிக் கோயிற் செல்வத்தைத் தமதாக்கிக்கொண்டனர். போர்களால் கிடைத்த கொள்ளைப் பொருள்களும், முறையாகக் கொடுக்கப்படும் நிவேதனங் களும், தானங்களும், பொதுமக்களும், பெருஞ்செல்வர் களும், அதிகாரி களும், அரசமா தேவியரும், அரசகுடும்பத்தினரும் வழங்கும் பொருள் களும் கோயிற் சொத்துகளாகக் குவிந்தன. கடவுளுக்கே இவற்றின் கணக்குத் தெரியும்! இவையாவும் பார்ப்பனரின் உல்லாச வாழ்வுக்கும் தமிழரை நசுக்கவும் பயன்பட்டன. அரச குடும்பத்திலேயே பல "கோத்திரங்களைக் கற்பித்துத் தமிழரின் ஒற்றுமையைப் பார்ப்பனர் குலைத்தனர். தமிழ்க் குமுகாயம் நூற்றுக்கணக்கான சாதிகளாய்ப் பிளவுண்டது. நெல்லிக்காய்கள் போல் சிதறிய தமிழ்க் குமுகாயம், பார்ப்பனர், தம்மைக் கொள்ளையடித்துச் சுரண்டுவதை மறந்து தமக்குள்ளேயே சாதி சமயம், குலம் கோத்திர வேறுபாடுகளாய்ப் பிரிந்து நின்று தற்கொலை புரிந்து செத்துக் கொண்டிருந்தது. வேளாளருக்கும் கைக்கோலருக்கும் சலுகைப் போர்: வலங்கைக்கும் இடங்கைக்கும் உரிமைப்போர் என உள்ளகப் - போர்களில் வெட்டி மடிந்தது. இப் போர்த் தீயை மூட்டிய பார்ப்பனர் அசையாமல் அமர்ந்து செல்வத்தில் புரண்டு இன்பத்தில் ஆழ்ந்து கிடந்தனர். சாதி வேறுபாடுகள் 'குமுகாயம் ஏற்கனவே எண்ணிறந்த சாதிகளாய்ப் பிரிந்து சித றுண்டதைக் கண்டோம், ஆரியம் கற்பித்த இப் பிரிவால் வலங்கை, இடங்கை என்று தமிழ்க் குமுகாயம் இருபெரும் கூறுபாடுகளாய்ப் பிரிந்து நின்றது. ஒவ்வொரு பிரிவிலும் ஓ8 சாதிகள் இருந்தன. இவற்றை நிலைப் படுத்தத் தனித்தனியாசுத் தொல்கதைபுராணம்களும் சுட்டுக்கதைகளும் எழுதப்பெற்றன. ஒவ்வொரு பிரிவிலும் கலப்பினத்தவரே மிக்குக் காணப் பட்டனர். இவ்விரு பிரிவுகளைத் தவிர வேறு பல சாதிகளும் இருந்தன. பெரும்பிரிவுகளுக்கு உட்பட்ட இவர்களை அடிப்படையாகக் கொண்டு வலங்கை, இடங்கைக் கோயில்கள், மண்டபங்கள், தேவரடியார்கள் முதலிய பாகுபாடுகள் ஏற்பட்டன. ஆடை அணிகலன்கள், உணவு முதலிய வற்றிலும் வலங்கை இடங்கைப் பாகுபாடுகள் ஏற்பட்டன. இதனால் கோயில் முதல் எல்லாவிடங்களிலும் சாதிப் பூசல்கள் ஏற்பட்டன. குருதி ஓடிற்று; பலர் மாண்டனர். இத்தகைய பூசல்கள் ஒன்றில் சோழ இளவரசன் ஒருவனும் இறந்தான்; பல கோயில்கள் இடித்துத் தள்ளப்பட்டன; சிலைகள் சுளவாடப் பெற்றன போன்று செய்திகளையும் சுல்வெட்டுகளில் லிருந்து அறிகிறோம். - வலங்கை, இடங்கைச் சாதிகளேயன்றி வேறு சில சாதிப் பிரிவு சுளும் இருந்தன. இரதகாரர் என்பது ஒருவகைச் சாதிப் பிரிவு - இவர்கள் தேர்களைச் சமைத்தல், பார்ப்பனரின் வேள்விகளுக்கு வேண்டிய சட்டுவங்கள், தட்டுகள் முதலியவற்றைச் செய்தல் ஆகிய பணிகனைச் செய்தனர். மண்பாண்டங்கள் செய்தலும், மன்னருக்கு மணிமுடிகள் வனைதலும் இவர்களுடைய பணிகளாகவுமிருந்தன. இவர்கள் இவற்றைத் தவிர வேறு தொழில்களைச் செய்யக் கூடாதென்ற விதியும் பார்ப்பனர்க ளால் விதிக்கப்பட்டது. இவர்கள் "அனுனோமர்' குலத்தைச் சேர்ந்தவர்கள். அனுலோமர், பிரதிலோமர் குலத்தைவிட உயர்ந்தவர்கள் என்று கல்வெட்டுகள் கூறுகின்றன. ஓர் உயர்குலத்துத் தந்தைக்கும், தாழ்குலத்துத் தாய்க்கும் பிறந்தவர்கள் அனுலோமர்' எனப்படுவர். தாழ்குலத்துத் தந்தைக்கும், உயர்குலத்துத் தாய்க்கும் பிறந்தவர்கள் 'பிரதிலோமர்' எனப்பட்டனர். 'சத்திரியத் தந்தைக்கும், வைசியத் தாய்க்கும் பிறந்தவர் *மாகிசியர்' என்றும், வைசியத் தந்தைக்கும் சூத்திரத் தாய்க்கும் பிறந்தவர் 'கரணீகர்' என்றும் மாசிசியர் தந்தைக்கும் கரணீகத் தாய்க்கும் பிறந்தவர் தாம் 'இரதகார்" என்றும் அறியப்பட்டனர். இவ்வாறு குலுங்சுள் ஒன்றோ டொன்று கலக்கும் போது பல புதிய குலங்கள் தோன்றின. பறையர் என்போர் மேற்கூறிய குலங்களைச் சேராமல் தனித்துத் தனிச் சேரிகளில் வாழ்ந்தனர். அவர்களுக்கென்று தனிச் சுடுகாடுகள் இருந்தன. ஆனால், அவர்களுக்கென்று சொத்துரிமை, குடிமையுரிமை முதலிய யாவும் உண்டு. இவர்கள் ஆவணங்களில் கையெழுத்திட்டால் தான் அவை முழுமை பெற்றதாகும். இவர்களிலும் புல்லுப்பறிக்கிற பறையர், பளர்ப் பறையர், ஆவுரிக்கும் பறையர் என்று பல பிரிவினர் இருந்தனர். பறையர்கள் பிற குடிமக்களைப் போலவே கோயில்களுக்கு நிவேதனங்கள் செய்தனர். தீண்டப்படாதவர் சண்டாளர் போன்ற சொற்களால் இவர்கள் அறியப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்க தாம். அந்தணர் மிக உயர்ந்த சாதியாகவும், அரிப்பார்மிகத் தாழ்ந்த சாதியாகவும் தமிழ்க்குமுகாயம் இரு முனைதுருவங்களைப் பெற்றது. மண்ணாரித்துப் பொன்னெடுப்பார் அரிப்பார் எனப்பட்டனர்.) மகளிர் நிலை சோழர் காலத்துப் பெண்கள் கட்டுப்பாடற்றவர்கள். ஆனால், கற்பு நெறியில் தவறாதவர்கள், அரண்மனையிலும்உவளகத்திலும் மகளிர் படை யேந்திப் பணிபுரிந்ததைப் பார்த்தோம். ஆகவே, இவர்களிடமும் வீரப் பண்பு மேலிட்டுக் காணப்பட்டது. இவர்களுக்குத் தனியாகச் சொத்தும், சொத்துரிமையும் உண்டு. மன்னரும் செல்வரும் பல பெண் களை மணந்தனர். ஆனால், இவ்வழக்கம் பொதுவாகக் குடிமக்களிடம் இல்லை. உடன்கட்டை ஏறும் வழக்கம் உண்டு. ஆனால், அது கட்டாயமாக்கப்பட வில்லை . அரசனுக்கு உதவும் அரசியர் போல், கணவனுக்கு மனைவி பலவினைகளிலும் உறுதுணையாய் நின்றாள். கோயில் திருப்பணிகளிலும், அறச்செயல்களிலும் பெண்கள் தனித்தும் ஈடுபட்டனர். தேவரடியார்கள் கோயிற் பணிகளுக்கென விடப்பட்ட பெண்கள் தேவரடியார்கள் எனப்பட்டனர். இவர்களைத் தலைக்கோலிகள். தளிச்சேரிப் பெண்கள், பதியிலார், கோயிற்பிணாக்கள் என்றெல்லாம் அழைப்பர். கோயிலில் திருவிளக்கிடுவதும், திருமெழுக்கிடுவதும், மலர் தொடுத்தலும், ஆடிப் பாடி இசைப்பதும் இவர்களின் திருத்தொண்டுகளாகும். எனவே, இவர்கள் இசை, நடனம், ஒப்பனைக்கன்பே முதலியவற்றில் சிறந்து காணப்பட்டனர். இவர்களுக்குத் தனியாக விடுதிகளும், மானியங்களும் விடப்பட்டன. கழகக்காலத்தில் விறலியரும், பாணரும் வளர்த்த சுலைகளைச் சோழர் காலத்தில் தேவரடியார்கள் வளர்த்தனர் எனலாம். கோயில்களில் தேவரடியார்களைத் தவிர நட்டுவனார் பாணர் முதலியோரும் இருந்தனர். இவர்களால் கோயில்களில் கூத்தும், இசையும் முழங்கின. சாந்திக்கூத்து. ஆரியக்கூத்து, சாக்கைக் கூத்து, தமிழ்க்கூத்து, தெருக்கூத்து முதலிய கூத்துகள் அக் காலத்தில் இருந்தன, இவற்றில் ஆண்களும், பெண்களும், தேவரடியார்களும், நட்டுவனார்களும் கலந்து கொண்டனர். பொதுவாகக் கூத்தாடுவோர் கூத்தப் பெருமக்கள்' என்று அழைக்கப்பெற்றனர். இத்தகைய கூத்துகள் கோயில், மடம் ஆகியவற்றில் நிகழ்த்தப்பெற்றன. அடிமைகள் அடிமைகள் என்று தனியாக அக் காலத்தில் ஒருவருமிலர். ஆனால், மக்களே தம்மைக் கோயில்களுக்கு அடிமைகளாக்கிக் கொண்டு திருத் தொண்டு செய்தனர். ஒரு குடும்பத்தில் பல தலைமுறைகள் கோயில்களுக்கு அடிமைகளாயிருந்து தொண்டாற்றியவர்களை அறிகிறோம், (ஈ) சோழர்கால இலக்கியம் சோழர் காலத்தில் எழுந்த இலக்கியங்கள் மன்னர்களின் சீரிய பண்புகளையும், குமுகாயத்தின் சிறப்புகளையும் அறிவதற்குப் பெரிதும் உதவுகின்றன. அக் கால மக்கள் உலகியலில் திளைத்தனர். எனவே, சோழர்கால இலக்கியங்களில் பெரும்பாலானவை உலகியலைப் பற்றிய தாகவே உள்ளன. சோழர் காலத்தைப் பாவிய காலம்"(காவியகாலம் என்று அழைப்பர். அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கினையும் உள்ளடக்கிய காவியம் 'பெருங்காப்பியம்' என்றும், இவற்றிலொன்று குறைந்தாலும் அது சிறு காப்பியம்" என்றும் அழைக்கப்படும். சோழர் காலத்தில் இவ்விரு வகைக் காப்பியங்களும் எழுந்தன. அக் கால மக்கள் பிராமணரியாவைதிக சமயங்களைப் பின்பற்றினர். இதனால், பல சமய இலக்கியங்களும் தோன்றின. இத்தகு கரணியங்களால் சோழர்காலத்தில் உலாக்களும், பராரிகளும், பாவியங்களும், திருமுறைகளும், புராணங் களும் தோன்றின. உலகப் புகழ் படைத்த கம்பனும், ஒட்டக்கூத்தனும், செயங்கொண்டாரும், புகழேந்தியும் இக்காலத்தில் தோன்றினர். பாவியங்கள் காப்பியங்கள்) ஐம்பெருங்காப்பியங்களுள் சீவகசிந்தாமணி, வளையாபதி. குண்டலகேசி ஆகிய மூன்றும், ஐஞ்சிறு காப்பியங்களான சூளாமணி, யசோதர காவியம், உதயண குமார காவியம், நீலகேசி, நாககுமார காவியம் ஆகியவையும் சோழர் காலப் படைப்புகளே என்பர். இவை யாவும் பிறநாட்டுக் கதைகளைக் கூறும் நூல்களேயாயினும் தமிழகத்தில் சமணம் பெற்ற சிறப்பினை இவைகூறா நிற்கின்றன. சிற்றிலக்கியங்கள் செயங்கொண்டார் பாடிய "கலிங்கத்துப்பரணி" என்னும் நூல் முதலாம் குலோத்துங்கனின் கலிங்க வெற்றியைப்பற்றிக் கூறுகிறது. விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன் ஆகிய மூவரையும் பற்றி ஒட்டக்கூத்தர் 'மூவருலா' எனும் சிறப்பான 'பிரபந்த' நூலை இயற்றினார். இவற்றொடு இவர் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், தக்கயாகப் பரணி எனும் பிரபந்தங்களையும் பாடி யுள்ளார். இரண்டாம் குலோத்துங்கன் காலத்திலிருந்த புகழேந்திப் புலவர் 'நளவெண்பா'ப் பாடினார். இவர் வெண்பாவில் புகழேந்தி' என்னும் சிறப்பெய்தியவர். வேறு பல நூல்களும் இவரால் ஆக்கப்பட்டன, இவை யாவும் சிற்றிலக்கியங்கள் எனப்படும். இலக்கண நூல்கள் சோழர் காலத்தில் சமற்கிருதமும், ஆரியப் பண்பாடும் தமிழகத்தில் பேராளுமை பெற்றுத் திகழ்ந்தன. இதனை இலக்கியத்தில் மட்டுமேயன்றி இலக்கண வளர்ச்சியிலும் காண்கிறோம். அமிதசாகரர் இயற்றிய யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை, புத்தமித்திரர் இயற்றிய வீரசோழியம், குணவீர பண்டிதர் இயற்றிய நேமிநாதம், பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூரல், நற்கவிராசநம்பி இயற்றிய நம்பியகப்பொருள், தண்டியாசிரியர் இயற்றிய தண்டியலங்காரம் முதலிய இலக்கண நூல்கள் சோழர் காலத்தவையாகும். இவற்றுள் சில பல்லவர் காலத்தவையெனவும் கூறப்படுகின்றன. சிவக்கொண்முடிபு நூல்கள் (சைவ சித்தாந்தங்கள்) சிவக்கொண்முடிபு நூல்கள் சைவசித்தாந்த சாத்திரங்கள் பதினான் கில் பெரும்பாலானவை இக் காலத்தில் எழுந்தவையாகும். அவை திருவுந் தியார், திருக்களிற்றுப் பாடியார், சிவஞானபோதம், சிவஞான சித்தியார், இருபா இருபஃது, உண்மை , சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினா வெண்பா, போற்றி பஃறொடைகொடிகவி, நெஞ்சுவிடு தூது, உண்மை நெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் ஆகியவையாகும். சிவத்திருமுறைகள் பன்னிரண்டும் இக்காலத் தவையே. தொன்மங்கள் புராணங்கள்) அநபாயன் காலத்தில் வாழ்ந்த சேக்கிழார் பெரியபுராணம் என்னும் நூலை இயற்றினார். இது 4286 பாக்களைக் கொண்டது. பெரியபுராணம் சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகையினையும், நம்பியாண்டார் நம்பி பாடிய திருத்தொண்டர் திருவந்தாதியினையும் அடிப்படையாகக்கொண்டு பாடப்பெற்றதாகும். பெரும்பற்றப்புலியூர் நம்பி என்பார் சிவபெருமான் மதுரையில் நிகழ்த்திய திருவிளையாடல் களைத் திருவிளையாடற் புராணம்' என்னும் நூலாகப் பாடியுள்ளார். பட்டினத்தாரின் பக்திப்பாடல்களும், கந்தபுராணம் என்னும் நூலும் இக் காலத்தவையே. மாலிய (வைணவ) இலக்கியங்கள் இக் காலத்திலெழுந்த மாலிய இலக்கியங்களுள் தலையாயது கவிச் சக்கரவர்த்தி கம்பன் இயற்றிய கம்பராமாயணம்' என்னும் உலகமாபாவிய மாகும். இக் காலத்தில் மாலியத்தைப் பரப்பியவர்கள் தமிழும், சமற்கிருத மும் கலந்த மணிப்பிரவாள நடையில் பல நூல்களை இயற்றினர். நம்மாழ் வாரின் திருவாய்மொழிக்குக் குருகைப்பிரான்பிள்ளான் என்பவர் எழுதிய 'ஆயிரப்படி என்பதும், கோனேரிதாசியை என்பார் எழுதிய விளக்கமும் சிறப்பானவையாகும். திருவரங்கத்து அமுதனார் என்பவர் இயற்றிய இராமாநுசர் நூற்றெட்டந்தாதி" என்னும் நூல் சிறப்புமிக்க பத்தி நூலாகும். வேதாந்த தேசிகர் தமிழில் 24 பிரபந்தங்களையும், வடமொழியில் 84 பிரபந்தங்களையும் இயற்றினார். இவர் வளர்த்த மாலியமரபு 'வடகலை" எனப்பட்டது. இறைவனை நாமே பற்றிக் கொண்டிருக்க வேண்டும் மென்பது வடகலை மெய்ப்பொருள். நம்மைக் காப்பாற்றுவது இறைவ னுடைய கடமை என்பது தென்கலை மெய்ப் பொருள், காஞ்சிபுரம் வடகவைக்கும், திருவரங்கம் தென்கலைக்கும் சிறப்பிடங்களாயின, உரையாசிரியர்கள் இளம்பூரணர், சேனாவரையர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார் ஆகிய தொல்காப்பிய உரையாசிரியர்கள் இக்காலத்தில் வாழ்ந்தவர்களாவர். சிலப்பதிகாரத்திற்கு உரை வகுத்த அடியார்க்கு நல்லாரும், திருக்குறளுக்கு உரை வகுத்த பரிமேலழகரும் இக் காலத்தவரே. மேற்கூறிய நூல்களேயன்றி இக் காலத்தில் தோன்றிய பல நூல்கள் அழிந்து பட்டனவென்பதனைக் கல்வெட்டுச் சான்றுகளி லிருந்தும், உரையாசிரியரின் மேற்கோள்களிலிருந்தும் அறிகிறோம். (உ) சோழர் கலைப்பணி (1) கட்டடக்கலை சோழர் காலத்தில் வளர்ச்சி பெற்ற கலைகளைக் கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலையென்று மூவகையாகப் பிரித்து அறியலாம், இவற்றுள் கட்டடக்கலையென்பது இவர்கள் கட்டிய கோயில்களைக் குறிக்கும். சோழர் கோயில்களின் சிறப்பியல்புகள் 1. சோழரின் தொடக்க காலக் கோயில்கள் சிறியனவாகவும் பெரும்பாலும் சமசதுரக் கருவறையுடனும் காணப்படும், 2. பொதுவாக ஒரே இடைநாழிகை மட்டுமிருக்கும்; எங்கோ ஒருசில கோயில்களில் மட்டும் பெருமண்டபம் இருக்கும், 3. பெரும்பாலான கோயில்கள் ஒற்றைத் தளமுடையனவாகவும், ஒருசில மட்டும் இரட்டைத் தளமுடையனவாகவும் வெகுசில இரண்டுக்கு மேற்பட்ட தளமுடையனவாகவும் இருக்கும். ) 4. சோழர் கோயில்களில் அதிக எண்ணிக்கையிலானவை சிவன் கோயில்களாகும். அடுத்து அதிக எண்ணிக்கையுடையவை திருமால் கோயில்களாகும். இவற்றையடுத்து முறையே பிடாரி, கொற்றவை, முருகன் கோயில்கள் காணப்படுகின்றன. (குறிப்பு: நீள்வட்ட வடிவமான தூங்கானை மாடக்கோயில் சோழர் காலத்தில் இல்லை, இந்து பல்லவரின் கடைசிக் காலத்தில் ஏற்பட்ட பாணியாகும். முதற்கட்ட வளர்ச்சி சோழர் காலத்துக் கோயில் வளர்ச்சியை மூன்று கட்டங்களாகப் பிரித்து அறியலாம். இதில் முதற்கட்டமென்பது பல்லவர் பாணியின் தொடர்ச்சியாகும். இப்பாணியில் பல்லவர் பாணியுடன் புதிய உறுப்புகள் சேர்ந்து காணப்படும். அப் புதிய உறுப்புகள் அடுத்த கட்டத்தில் சோழர் பாணியில் முகாமை அல்லது பொது உறுப்பு களாகக் காட்சியளிக்கின்றன, (எ-டு. நார்த்தாமலை விசயாலயச் சோழீச்சுரம் : இதன் கருவறை சதுரமாகவும், திருச்சுற்று வட்டமாகவும் உள்ளது. இது மூன்று தளங்களையுடையது. கொடுங்கைக்கு மேலுள்ள அரிமா அணிவரிசையும், வாயிற்காப் போரின் உருவங்களும் பல்லவர் காலத்தில் காணப்பட்ட விடைக்கு நந்திக்குப் பகரமாக யானையின் உருவமும் காணப்படுகிறது, அணி வரிசைகளின் மூலைகளில் அரிமாவுக்குப் பதில் மீன் தலைகள் உள்ளன. மண்டபத்தூண்கள் பல்லவர் பாணியிலேயே உள்ளன. இக் கட்டடத்தில் காணப்படும் கோயில்களில் சிற்பங்கள் இயற்கையான அதனதன் பருமனுக்கேற்ப அமைந்து காணப்படு கின்றன. வெளிப்புற மாடக்குழிகள் மூலைகள் ஆகியவற்றில் திசைக்குத் தக்கவாறு தெய்வங்களின் உருவங்கள் அமைக்கப் பட்டிருக்கின்றன. சிற்ப அணி வரிசைகளில் புதுமையான விலங்குகளின் தலைகள் முதன்முறையாகச் சோழர்காலச் சிற்பங்களில் காணப்படுவதும் இம் முதற் சுட்டக் கோயில்களில்தான். சாளுக்கியர் கோயில்களில் இவை காணப்பட் பாலும் சோழர் காலத்தில்தான் இவை தெளிவாகச் சமைக்கப்பட்டுள்ளன. ஒற்றைக் கொம்புள்ள விலங்கின் தலை, இருவேறு உருவங்களிணைந்து காணப்படும் விந்தையான விலங்கு, அரக்கரும் மாந்தரும் இணைந்துள்ள உருவம், யாளி, தீயுண்ணும் விலங்கு முதலியன இவற்றுள் குறிப்பிடத் தக்கனவாகும், இரண்டாம்கட்ட வளர்ச்சி முதற்கட்டத்துக்கோயில்கள் சிறியவை. ஆனால், இந்த இரண்டாம் கட்டக்கோயில்கள் அவற்றைவிடப் பெரியவை. அடுத்த கட்டத்தை ஒப்பு நோக்கின் இவை நடுத்தரக் கோயில்களாகும். இவற்றில் பல்வேறு உறுப்பு களும் அளவுக்கு மீறிய ஒப்பனை வேலைப்பாடுகளும் காணப்படுகின்றன, தூண்களின் கழுத்தில் 'வரிகள்' காணப்படுவதும், தலைப்பிற்குக் கீழ் 'சுலசம்" காணப்படுவதும் இக் கட்டத்தில் காணும் புதுமைகளாகும். படிமங்கள் மிகப்பெரிய அளவில் திசைக்குத் தக்கவாறு அமைக்கப் பட்டுள்ளன. எடு. சீனிவாசநல்லூர்க் குரங்கநாதன் கோயில், மூன்றாம் கட்ட வளர்ச்சி பரிவாரக் கோயில்கள் இக் கட்டத்தில் காணப்படும் புதிய தோற்ற மாகும். பரிவாரக்கோயில்கள் ஏற்கனவே வடபுலத்தில் காணப்பட்டாலும் இக் கட்டத்தில் மூலக் கோயிலைப் போலவே இவை மூலக்கோயிலைச் சுற்றிலும் தமிழகத்தில் வளர்ச்சியடைந்தன. இவை முத்தேர், ஐந்தேர் முதலியனவாக வளர்ந்தன. சோழர் கட்டடக்கலையின் பொற்காலம் | தஞ்சைப் பெருவுடையார்கோயில், கங்கைகொண்டசோழீச்சுரம் முதலிய மாபெருங் கோயில்களைச் சோழர்கள் கட்டத் தொடங்கிய காலத்தையே பொற்காலம் என்கிறோம். இப் பொற்காலக் கோயில் ஒவ்வொன்றும் ஒரு சிறந்த கலைக்கூடமாகும். அமைப்பில் மட்டுமே யன்றிச் சிற்ப எண்ணிக்கையிலும் இவை பரந்து காணப்படுகின்றன. தமிழரின் சிவன், உருத்திரன், பைரவன், கபாலி முதலிய பல்வேறு தோற்றுங்கள் இத்தகைய கோயில்களில் அதிகம் காணப்படுகின்றன: தமிழகம் ஆரியமயமாக்கல்" அதாவது ஆரியப்பண்புகளைத் தமிழகத்துப் பண்புகளுடன் இரண்டறக் கலக்கச் செய்தல்' என்னும் முயற்சி பல்லவர் காலத்திலேயே முற்றுப்பெற்றுவிட்டது. சோழர் காலத்தில் ஆரியமே காணப்பட்டதெனினும் தமிழ்ப்பண்பின் மேற் பூச்சாகவே இந்து காணப் பட்டது. இதனால்தான் சோழர் கோயில்களில் புராண இதிகாசக் கதைகள் சிற்பங்களாய்ச் சமைக்கப்பட்டன. சோழர் காலக் கோயில்கள் மிகப்பெரிய பரப்பில் கட்டப்பெற்ற போதிலும் துாய திரவிடப் பாணியிலேயே அமைக்கப்பெற்றன வென்றும், குறிப்பாக அவற்றிற் காணப்பெறும் அகன்ற திருச்சுற்று களும், மிகவுயர்ந்த கோபுரங்களும், சிற்பச் சோடனைகளும் பின்வந்த பாண்டியர், நாயக்கர் களால் பின்பற்றப்பட்டன வென்றும் சேம்சுபர்குசன் கூறுகிறார். மேலும், சோழர்களின் கோயில்கள் பேருடலுடன் காணப்பட்டாலும் அவற்றிற் காணப்படும் நுணுக்கமான வேலைப்பாடுகள் பொன்வகை செய்யும் தட்டானின் கை வண்ணத்தையும் மிஞ்சிவிட்டனவென்றும் கூறுகிறார். அவர்கள் சுட்டிய கோயில்கள் எண்ணிலடங்கா காவிரியின் இருமருங்கி லும் அவர்கள் கட்டிய கோயில்கள் காணப்படுகின்றன. அழிந்தவைபோக இன்றும் நின்று ஒளிதரும் கோயில்களும் ஏராளமாயுள்ளன. எனவே, மாதிரிக்கு ஒரு சிலவற்றைப்பற்றிக் கூறலாம். குரங்கநாதன் கோயில் சோழரின் தொடக்கக் கால வளர்ச்சியின் மாதிரியாகவுள்ள கோயில்களில் திருச்சி மாவட்டம் சீனிவாசநல்லூரிலுள்ள குரங்க நாதன் கோயில் குறிப்பிடத்தக்கதாகும். இது திரவிடப் பாணியில் முதன்முறையாக மண்டபம், விமானம் ஆகியவற்றையும் அவற்றில் முழுவுருவில் சிற்பங் களையும் பெற்றுத் திகழும் கோயில் ஆகும். பல்லவர் பாணியினின்று இது வேறுபடுவதோடு திரவிடப் பாணியில் ஒரு புதிய மாதிரியாகவும், சோழர்களின் தொடக்கப் பாணியாகவு முள்ளது. இக் கோயில் 25 அடிப்பக்கமுள்ள சமசதுரப் பரப்பில் அமைந் துள்ளது. இதன் கருவறைக்கெதிரில் 4 அடி தவிர அகல்) அங்குல முள்ள இடைகழி அந்தராளம் உள்ளது. அதனையடுத்து 24 அடி நீளமும் 20 அடியகலமுமுள்ள இடை நாழிகை அர்த்தமண்டபம் உள்ளது. இரண்டு தளமுள்ள இக்கோயில் விமானம் அதன் கருவறையிலிருந்து 50 அடி உயரம் நிமிர்ந்துள்ளது. முதல் தளம்25 அடி நீளமும், 20 அடி அகலமும் கொண்ட நீள்சதுரவடிவிலானது. இரண்டாம் தளம் 25 அடிப்பக்கமுள்ள சமசதுர மானது. முதல் தளத்தின் மேல்பகுதியில் குமுதப்பட்டை யாளவரிசை ஆகிய சோடனைகள் காணப்படுகின்றன. கருவறையின் வெளிப்புறச் சுவரிலுள்ள மாடக்குழிகளில் நான்முகன், சிவன் முதலியோர் உள்ளனர். மாடக்குழிகளைச் சுற்றிலும் பணிப்பெண்கள், தேவமகளிர் உருவங்கள் உள்ளன. ஆக, இக் கோயில் சோழர் கோயில்கள் பலவற்றிலும் சிறிது வேறுபட்டுக் காணப்படுகிறது. கொடும்பாளுர் மூவர் கோயில் - இரண்டாம் பராந்தகனால் கட்டப்பெற்ற இக் கோயில் சமசதுர வடிவிலான மூன்று கருவறைகளையுடையது. இவற்றிற்குப் பொதுவாக அடி நீளமும் 47 அடியகலமுமுள்ள ஒரு மாமண்டபம் உள்ளது. இதற்கு எதிரில் 17 அடிப்பக்கமுள்ள சதுர வடிவிலான விடை நந்தி மண்டபம் உள்ளது. கருவறையின் வெளிப்புறச் சுவரிலும், விமானச் சுவர்களிலும் முறையே சோடனைகளும், திங்கள், கதிரவன், உமையாள், சேட்டாதேவி, ஏழுமகளிர், மோகினியர் முதலிய உருவங்களும் காணப்படுகின்றன. இரண்டு தளங்களையுடைய இக் கோயிலில் சாலைகள், கூடங்கள் ஆகியவையுள்ளன. இதன் சிகரம் நடுவில் பிதுங்கி நான்கு பக்கங்களுடன் காணப்படுகிறது. சிகரத்தின்மேல் சதுரமான துமுளியுள்ளது. , தஞ்சைப் பெருவுடையார் கோயில் இராசராசனால் சுட்டப்பெற்ற இக்கோயில் இந்தியக் கோயில்கள் எல்லாவற்றிலும் பெரியதும் மிகவுயரமானதுமாகும். இதன் நீளம் 500 அடி அகலம் 25(0) அடி. இதனைச் சுற்றிலும் அகன்ற முற்றமும், மதில்களும் முள்ளன. மதிலில் உட்புறத்தில் நான்கு மூலைகளிலும் நான்கு கோயில்கள் உள்ளன. நான்கு சுவர்களிலும் தக்க இடைவெளி விட்டுப் பல பரிவாரக் கோயில்கள் அமைக்கப் பெற்றுள்ளன. இவற்றை உள்ளடக்கித் திருச்சுற்று மாளிகை(நடைகூடம் உள்ளது. மதில்கள் உட்புற மதில், வெளிப்புற மதில் எனவாக இரண்டு உள்ளன. இவற்றின் தக்க பகுதிகளில் உட்புற, வெளிப் புறக் கோபுர வாயில்கள் அமைந்துள்ளன. உட்புறம் இடை நாழிகைப் பெருமண்டபம், விடை மண்டபம், ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளன. இதன் கருவறை 45 அடிப்பக்கமுள்ள சமசதுர வடிவமானது. இதில் 5 அடி அகலமுள்ள வலம்வரும் பாதையுள்ளது. அப் பாதையில் உட்சுவர் களில்தாம் வண்ண ஓவியங்கள் காணப்படு கின்றன. கருவறையில் 54 அடிச்சுற்றளவும் அடியுயரமுமுள்ள ஆவுடையாரின் மேல் 17 அடியுயர முள்ள லிங்கமுள்ளது. இதனைத்தான் இராசராசேச்சுரலிங்கம் அல்லது. "பிரகதீச்சுரர் லிங்கம்' அல்லது பெருவுடையார் லிங்கம்' என்பர். இந்த லிங்கம் இக் கோயிலின் இரண்டாவது அடுக்குமாடி வரை உயர்ந்து நிற்கிறது. இதன் விமானம் தோராயமாக 216 அடி உயரமுள்ளது. இதனை தக்கணமேரு' என்பர். வடஇந்தியாவில் மிக உயரமான விமானம் ஒட்டா நாட்டுப் புவனேசுரத்திலுள்ள லிங்கராசா கோயில் விமான மாகும். இதன் உயரம் 160 அடிதான். ஆகவே, இந்தியாவிலேயே மிகவுயர்ந்த விமானம் தஞ்சைப் பெருவுடையார் கோயில் விமானமே. இவ் விமானத்தின் உச்சியில் துமுளி மாடத்தில் 25 அடிப்பக்கமுள்ள ஏறத்தாழ 80டன்! கல்லெடையுள்ள ஒரு பலகைக் கல் பொருத்தப் பட்டுள்ளது. இதனைத் "தக்கணமேருக்கல்" என்று அழைப்பர். இப் பெரிய கல்லை எப்படி அவ்வளவு உயரத்திற்குத் தூக்கிப் பொருத்தினார் களென்பது இன்றும் வியப்பாகவுள்ளது. | இக் கோயில் பரந்த கட்டட அமைப்புக்கேயன்றி சிற்பம், ஓவியங் களுக்கும் சிறப்புடையதாகும். ஆயினும், இது முழுக்க முழுக்கத் திரவிடரின் கைவண்ணமே தவிர பிறநாட்டுச் சாயல் துளிகூட இதிலில்லை, இந்தியக் கட்டடக்கலையின் முகடாக நிற்பது இப்பெருவுடையார் கோயிலே யாகும். இக் கட்டடம் முழுவதும் கருங்கல்லாலேயே கட்டப்பட்ட தென்பதும் ஈண்டு நினைவுப்படுத்திப் பார்த்தல் நலமாகும். இதன் கருவறை யிலிருந்து விமான உச்சியைக் கண்டால் நெஞ்சம் கலங்கும். அத்தோடு அடியிலிருந்து முனைவரை பல்வேறு வெளி அமைப்புகளையுடைய இவ் விமானம் உட்புறம் மட்டும் ஒரே வகையாய் முறையே நீண்டும், குறுகியும் காணப்படும் கல் வரிசைகளையுடையது. இதுவே தமிழரின் கட்டடக் கலைத் திறனை விளக்கும் நுணுக்கவிடமாகும். கோயில்களுக்கெல்லாம் கோயிலாக மிகவுயர்ந்த விமானத்துடன் திகழ்வது பெருவுடையார் கோயிலாகும். இதனை மாதிரியாகக் கொண்டே இராசராசன் மகனான இராசேந்திரனால் கங்கை கொண்ட சோழபுரத்தில் ஒரு கோயிலைக் கட்டினான். முற்காலச் சோழர் கோயில்களில் குரங்கநாதன் கோயில் ஒரு சிறந்த சிறு கோயிலெனில் இவ்விரு கோயில்களும் அதன் மாபெரும் வளர்ச்சிகளாகும்' என்று கலைஞர் பெர்சி பிரவுன் கூறுவது ஈண்டுஓர்ந்து உணரத்தக்கதாகும். கங்கைகொண்ட சோழீச்சுரம் சோழரின் பொற்காலப் பெருங்கோயில்களில் இராசேந்திரன் தன் கோ நகரில் கட்டிய கங்கைகொண்ட சோழீச்சுரம் தஞ்சைப் பெருவுடை யாருக்கு அடுத்ததாகவும் அதே சமயம் அதனோடொப்ப வைக்கும் சிறப்புடையதாகவும் விளங்குகிறது. இக்கோயிலின் அடிப்பகுதி 340 அடி நீளமும், 110 அடி அகலமும் உடையது. இதன் விமானம் 100 அடிப்பக்க முள்ள சமசதுர அடிப்பகுதியை யுடையது. இதன் உயரம் 186 அடியாகும். ஆகவே, இது தஞ்சைப் பெருவுடையார் கோயிலைக் காட்டிலும் சிறிய தெனத் தெரிகிறதல்லவா? ஆயினும், இதன் அழகிய நுட்பமான சுவை வேலைப்பாடுகள் அதனினும் சிறப்பானதெனவாம். சோழர் வரலாற்றின் மேடு பள்ளங்களை அல்லது ஏற்றத்தாழ்வு களைக் காண்பதற்கு அவர்களின் கோயில்களே அடிகளாயுள்ளன. பொற்காலக் கோயில்களுக்குப்பின் கட்டப்பெற்ற கோயில்கள் பரப்பிலும், உயரத்திலும், கலையழகிலும் தேய்ந்து காணப்படுகின்றன. இராசராசனும், இவன் மகன் இராசேந்திரனும் அயலகங்களை வென்றும், தொலைநாடுக ளுடனும் வணிக உறவு கொண்டும் பெற்ற செல்வச் செழிப்பே, பெரு வுடையார் கோயிலிலும் கங்கைகொண்ட சோழீச்சுரம் கோயிலிலும் காணப்படுகின்றன, பிற்காலத்தில் கட்டப்பெற்றவை சோழப் பேரரசு தேய்ந்ததையே நினைவூட்டுகின்றன, தந்தை இராசராசன் கட்டிய தஞ்சைப் பெருவுடையார்கோயில் ஓர் 'ஆண்மை 'ச் சாயலிலும் (Mesculine look) மகன் இராசேந்திரன் கட்டிய கங்கை கொண்ட சோழீச்சுரம் கோயில் "பெண்மை'ச் சாயலிலும் தோற்ற மளிப்பதாகக் கூறப்படுகிறது. (2) சிற்பக்கலை பொதுத் தன்மைகள் சோழர் கட்டிய கோயில்களில் உயிரோட்டமாய்க் காணப்படுவன சிற்பங்களே கட்டடம் முண்டம் என்றால் சிற்பங்கள் தலைகளாகும். இக் கோயில்களின் நடுவிலும், மூலைகளிலும், தளங்களிலும், திசைக்கும், மரபிற்கும் ஏற்றவாறு தெய்வத் திருவுருவங்களையும், பூதக்கணங்களையும் அமைத்த பெருமை சோழச் சிற்பிகளையே சாரும். பொதுவாகச் சிவன் கோயிலின் மேற்றிசையில் மாதொரு பாகனும், வட திசையில் நான்முகனும், தென்திசையில் தென்முகனும் தட்சிணா மூர்த்தியும் இருக்கும்படி அமைத்துள்ளனர். வாயிற்படி கிழக்கு நோக்கியே இருக்கும். ' தெய்வ உருவங்கள் மிகப் பெரியனவாகவும், ஆளுயரத்திற்கும் அமைக்கப்பட்டிருக்கும். விமானம், கோபுரம் ஆகியவற்றின் தோற்றத்திற்கு எடுப்பணிகளாய்த் திகழ்வன இந்த உருவங்களேயாகும். தனி முழுவுருவச் "சிற்பங்களேயன்றிப்புடைப்போவியச் சிற்பங்களும் இவ்வாறே ஆளுயரத் தில் அமைக்கப்பட்டிருக்கும். தெய்வவுருவங் களேயன்றி அரசன், அரசியார், இளவரசன், இளவரசி முதலியோரின் உருவச்சிலைகளும் புரவலர் சிலைகளும் பேருருவில் காணப்படுகின்றன, கருவறைச் சுவர்களிலுள்ள சுவர்த் தூண்களிலும் பெரிய அளவி லான புடைப்போவியங்கள் காணப்படுகின்றன, அவை பெரும்பாலும் தொன்மங்புராணக்கதைகளில் வரும் உருவங்களை விளக்கும் சிற்பங்களா யிருக்கும். திசைக்கேற்ற உருவங்களைக் கொண்டுள்ள சோழர் கோயில் களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு குடந்தை நாகேசுவரர் கோயிலாகும். விமானத்தோற்றத்தைப் பொலிவுபடுத்தும் சிற்பங்களையுடைய கோயில் களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு கொடும்பாளூர் மூவர் கோயிலாகும். சோழர் கோயில்களில் சிற்பங்களேயன்றிச் சிறந்த செப்புமேனி சுகளும் உள்ளன. செப்பால் செய்யப்படும் தெய்வப்படிமைகளும், மேனி சுளும் சிறப்பாகத் தொடங்கப்பெற்றுப் புகழடைந்த காலமும் சோழர் காலமேயாகும். செப்புப் படிமங்களில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது கூத்தரசனின் நடராசரின் திருமேனியாகும். இந்தியாவிலுள்ள எல்லாப் பொருட்காட்சிச் சாலைகளிலும் தலைசிறந்த உலகப்பொருட்காட்சிச் சாலைகளிலும் இத் திருமேனியுள்ளது. கூத்தரசரேயன்றி இவனுடைய பல்வேறு திருமேனி களும் நான்முகன். அன்னையர் எழுவர் (சப்தமாதர், திருமால், நிலமகள், திருமகள், சைவ நாயன்மார்கள், இராமன், சீதை முதலியோரின் திருமேனி களும் சோழர் காலத்துக் கோயில்களில் காணப்படுகின்றன. சோழர்காலச் சிற்பிகள் கல்லில் உருவங்களைச் செதுக்குவதாயி னும் செப்பால் வார்ப்பதாயினும் புடைப்போவியங்களாய்ச் செதுக்குவ தாயினும் சுதையால் செய்வதாயினும் அக்காலச் சமய, குமுகாயப் பண்பு : களையும், பழக்கவழக்கங்களையும் நடையுடை அணிகலன் களையும் மனத்திற்கொண்டு ஆக்கியுள்ளனர். இவர்கள் எல்லாக் கலை களிலும் வல்லவர்கள், ஓர் ஆணின் சிற்பத்தைக் கண்டவுடன் அது அரசனா, இளவரசனா, அமைச்சனா, அதிகாரியா அல்லது காவலனா என்று நாமே சட்டென உணரும்படி உடை அணிகலன்கள், எடுப்புத் தோற்றம் முதலிய வற்றைப் படைத்துக் காட்டும் திறமை இவர் களுக்கே யுண்டு. மாடக்குழி களிலுள்ள தெய்வத் திருமேனிகளுக்கும், வாயிற்காப்போருக்கும் வேறுபாடுகள் உண்டு. இதைப்போலவே பெண்ணின் உருவத்திலும் சப்தமாதர்களையும், திருமகள் சீதை முதலியோரையும், சாதாரணப்பணிப் பெண்களையும் பிரித்தறியும்படி இவர்கள் சமைத்துள்ளனர். இவற்றில் இவர்கள் கையாண்டுள்ள கலை நுணுக்கம் மிக எளியது. ஆனால் தனித் தன்மை வாய்ந்தது. உடலமைப்பில் வேறுபாட்டைப் படைப்பது, உடை, அணிகலன்கள், படை ஆயுதம்) ஆகியவற்றில் வேறுபாட்டைப் படைப் பது, சினம், அமைதி சாந்தம், அச்சம் முதலிய உணர்ச்சிகளைக் காட்டும் உறுப்புகளை மட்டும் திடமாகவும், தெளிவாகவும் படைத்தல், நளினங் களைக் காட்டும் கோடுகளையும், வரிகளையும் தக்கவிடங்களில் வரைதல் முதலியவற்றால்தான் உருவத்திற்கு உருவம் வேறுபடுத்தி இந்த உருவம் இந்த ஆளைக் குறிக்கிறதென்று அறியும்படி செய்துள்ளனர். (எ-டு) ஒரு வேதியனும், வேடுவனும் மேலாடையின்றி வெறும் மேனியாக இருந் தாலும் இருவரையும் தனித்தனியே அறிய வேதியனுக்குரிய உடலும். பூணூலும், குடுமியும், கையில் தருப்பைப் புல்லும், நீர்க் கமண்டலமும் பிறவும் சித்தரிக்கப்பட்டு எளிதில் அடையாளம் காண உதவுகின்றன. உருண்டு திரண்ட உடலும் வில்லும் அம்பும் சினங்கொண்ட பார்வையும் பிறவும் வேடனையறிய உதவுகின்றன. மேற்கண்ட சோழர்காலச் சிற்பங்களின் பொதுத் தன்மைகளை அடுத்து ஒருசில சிற்பங்களை மட்டும் கூறி முடிப்போம். முதலாம் ஆதித்தன் கண்ணனூரில் கட்டிய பாலசுப்பிரமணியர் கோயிலில் காணப் படும் முருகன் சிற்பம் புதுமையானது. முருகன் யானைமீத மர்ந்து சங்க இலக்கியங்களில் கூறப்படும் கூற்றை மெய்ப்பிக்கிறான். அடுத்து முதலாம் ஆதித்தன் காலத்துச் சிற்பமான திருக்கட்டளையி லுள்ள சேட்டாதேவி யின் சிற்பமாகும். மாதொருபாகன் அர்த்தநாரி சிற்பமும், கொற்றவையின் சிற்பமும் பெரும்பாலான சோழர்காலக் கோயில்களில் காணப்படுகின்றன. ஆணும் பெண்ணும் சரிநிகரானவர் என்பதனையும், வீரமே தமிழரின் மூச்சு என்பதனையும் இவை முறையே குறித்து நிற்கின்றன. மாதொரு பாகன் பெரும்பாலும் நின்ற வண்ணத்திலும் கொற்றவை பல கைகளுட னும் காட்சியளிக்கின்றனர். தன்னந்தனியே ஒவ்வொரு சோழ அரசரின் சிற்பங்களையும் பற்றிக் கூறிச் சென்றால் விரியுமென்றெண்ணி முடிப் போம்', (3) ஓவியக் கலை தமிழக வரலாற்றில் சோழர் ஆட்சிக்காலத்தைக் கோயில் ஆண்டு மானம் " (சகாப்தம் எனலாம். இக்கோயில்களும், இவற்றில் காணப் படும் சிற்பங்களும், ஓவியங்களும். ஆரியத் தோற்றத்துடன் காணப்படினும் தமிழ் ரின் மரபுவழிப்பண்பையே இவை உள்ளீடாகக் கொண்டிருக்கின்றன, இவ் வகையில் சோழர்கால ஓவியங்கள் தமிழரின் வழிவழி வந்த மரபு நெறி வண்ணமாகவே இருக்கின்றன. ஓவியங்களின் தோற்றங்கள்தான் ஆரியக் கலப்பைக்காட்டுகின்றனவேயொழிய அவற்றுள் பொதிந்துள்ள கலைத்திறன் தமிழரின் மரபுவழிச் சொத்தே யாகும். பறக்கும் தேவதைகள், பன்முகங்களையும், கைகளையு முடைய கடவுள்கள் முதலியன ஆரியக் கற்பனைகள்தாம். ஆயினும், அவற்றைப் படைத்த கலைஞர்கள் தமிழர் களே! சோழர்காலக் கோயில்களில் அழிவுற்றவைபோக எஞ்சி நிற்பவை வெகு சிலவே யாகும். அவற்றுள்ளும் ஓவியங்களையும், ஓவிய எச்சங்களை யும் அழிவுறாமல் பெற்றுள்ள கோயில்கள் மிகச் சிலவேயாகும். அத்தகைய மிகச் சில ஓவிய எச்சங்களைக் கொண்டே சோழர் கால ஓவியத் திறனை உய்த்துணருகிறோம். பரிபாடலில் சோழரின் கோநகரான பூம்புகாரிலிருந்த ஓவியங்களைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இன்று பூம்புகாருமில்லை, அதிலிருந்த கோயில்களுமில்லை. இவ்வாறு அழிந்து பட்ட கலைக்கூடங்கள் எத்தனையோ! தஞ்சைக் கோயிலில் ஒரு கலைக் கூடம் இருந்ததாகக் கல்வெட்டுக் கூறுகிறது. அக் கூடத்தையே இன்று காணோம். எண்ணிறந்த படிமங்கள் இதிலிருந்ததாக இலக்கிய, கல்வெட்டுச் சான்றுகளிலிருந்து அறிகிறோம். அவையும் இன்று காணப் படவில்லை. போனவைபோக எஞ்சியுள்ள ஒரு சிலவே நமக்கு எச்சங்க ளாய் உதவுகின்றன. சோழர் கால ஓவியங்களில் மிகவும் பழமையானவை நார்த்தா மலையிலுள்ள விசயாலயச் சோழீச்சுரம் கோயிலில் காணப்படுபவை யாகும். இக்கோயில் அகநாழிகைச் சுவர்களில் காணப்படும் ஓவியங் களில் காளி நடனமாடும் ஓவியம் சிறப்பானது. முற்காலச் சோழரின் கோயில்கள் பலவற்றில் ஓவிய எச்சங்கள்தாம் எஞ்சியுள்ளன. ஆகவே, அவற்றை முழுவதுமாகக் கண்டு மகிழ முடியவில்லை , இன்றுனளவு முழுவதுமாகக் காணப்படும் ஓவியங்களில் தஞ்சைப் பெருவுடையார் கோயில் ஓவியங்கள் தலையாய சிறப் புடையன வாகும். இவை 1930 ஆம் ஆண்டில்தான் பேராசிரியர் எசு.கே. கோவிந்தசாமி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டன. இவை கருவறைச் சுற்றுமதிற் சுவர்களிலும், கூரையிலும் காணப்படுகின்றன. இவற்றுள் சிறப்பானவை சுந்தரமூர்த்தி நாயனாரின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் ஓவிய அணியும், சிவபெருமான் தென்முகனாகவும் முப்புரமெரிக்கும் முக்கண்ண ராகவும் தோன்றும் காட்சிகளுமாகும். சுந்தரரைத் திருமணக்கோலத்தில் சந்திக்கும் சிவனார் கிழவேதியனாக வந்து தடுத்தாட்கொள்ளும் காட்சியில் சிவனாரின் தோற்றமும், மறையவரின் தோற்றமும் மற்றவரின் பல்வேறு தோற்றங்களும் உணர்ச்சிகளும் கலைஞரின்கைத்திறனைக் காட்டுகின்றன. வியப்பு, ஐயம், அச்சம், சினம் முதலிய உணர்ச்சிகளைப் பல்வேறு முகங்களில் எதிரொளிபிரதிபலிக்கச் செய்யும் கலைஞன் கைவண்ணத் தில் மட்டுமேயன்றி மெய்யுணர்விலும் சிறந்த பயிற்சியுடையவன் என்பதை யறிகிறோம். தடுத்தாட்கொண்ட காட்சியைத் தஞ்சையிலே ஒவியமாகக் காணும் நாம் இதையே தாராசுர ஐராவதேச்சுரம் கோயிலில் சிற்ப வடிவில் காண்கிறோம். இக் காட்சியையடுத்துச் சுந்தரர் யானைமீதமர்ந்து கைகளில் தாளம் வைத்துக் கொண்டு சேரமான் பெருமாள் குதிரைமீதமர்ந்து பின்தொடர்க் கயிலை செல்லும் காட்சி வண்ண ஓவியமாகத் தீட்டப்பெற்ற றுள்ளது. இவர்களைக் காணும் தேவர்கள் வானவீதியில் ஆடிப்பாடி மகிழ்கின்றனர். கீழே அலைகடல் உள்ளது. அதில் மீன்கள் துள்ளி விளையாடுகின்றன. இங்குக் காணப்படும் ஓவியங்களில் ஒன்று தென்முகன்(தட்சிணா மூர்த்தி) புலித்தோல் மீதமர்ந்திருக்க அருகிலே பூதக்கணங்கள் சூழ்ந் திருக்கும் ஓவியமாகும். அவருடைய ஊர்தியான விடைகாளை) படுத்த வண்ணமுள்ளது. இதனைச் சூழ்ந்து தேவமாதர் இருவரின் நடனக் காட்சியும், சிவன் கோயிலைச் சிலர் வழிபடும் காட்சியும் காணப்படு கின்றன. அடுத்து சிவன் முக்கண்ணராகத் தோன்றி முப்புரத்தையெரிக்கும் காட்சியாகும். சிவன் மூன்று கண்கள், எட்டு கைகள், அவற்றில் படைகள் ஆகியவற்றுடன் காட்சியளிக்கிறார். வில்லை வளைத்து அம்பையெய்தா மலேயே புன்முறுவல் பூத்து நெற்றிக் கண்ணால் முப்புரத்தை எரிக்கும் காட்சி சிறப்புறச் சித்தரிக்கப்பட்டுள்ளது. எதிரில் அசுரர் சிலர் அஞ்சி யோடுவதும், சிலர் மலைகளையும் மரங்களையும் பிடுங்கியெறிவதும் விறுவிறுப்பைக் காட்டுகின்றன. சோழர் கால ஓவியங்களில் முற்கூறிய தொன்மங் தொல்கதை) களைச் சித்தரிக்கும் ஓவியங்களோடு நாட்டிய மகளிரின் ஓவியங்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கனவாகும். இவர்கள் பல்வேறு கோணங்களில் தோன்றும் காட்சிகளும், இவர்களின் ஆடை அணிகலன்களும் ஒப்பனை களும் நம்மைப் பெரிதும் ஈர்ப்பதோடு அக்கால நாட்டிய மகளிரின் ஆடை அணிகலன்களையும் ஒப்பனைகளையும் நாம் நேரில் கண்டுகளிக்க முடிகிறது. இவர்கள் தங்கள் தலைமயிரைப் பலவகையாகஒப்பனை செய்து கொண்டுள்ளனர். பெருத்த வட்டம் கொண்ட சுருள் சுருளாகத் தொங்கும் மயிர்த்திரள்கள், தூக்கிச் செருகிய மயிர், தூக்கிக் கட்டிய கொண்டை , பின்புறம் தொங்கும் சடைப்பின்னல் முதலியனவாகஒப்பனை செய்யப்பட் டுள்ளது. இவர்களின் அணிகலன்களைவிட இவர்களின் கைகளிலேயுள்ள பல்வேறு இசைக்கருவிகள் நமக்கு அக் கால இசைக்கலையைப் பற்றியும் அறியவுதவுகின்றன. இதைப்போலவே அரசர்கள், மறையவர், அதிகாரிகள், பொதுமக்கள் முதலியோரின் தோற்றங்கள் சோழர்காலக் குமுகாயப் பண்பாட்டை விளக்குகின்றன. 8. பாண்டியரின் இரண்டாம் பேரரசு பிற்காலப் பாண்டியர்கள் இடைக்காலப் பாண்டியர் அமைத்த முதற்பேரரசு மூன்றாம் இராச சிம்மனோடு முடிவுற்றது. கி.பி. 970-ல் முதலாம் பராந்தகச் சோழன் பாண்டிய நாட்டைக் கைப்பற்றி "மதுரை கொண்ட கோப்பரகேசரி" என்னும் விருதுப்பெயர் பெற்றான். நாடிழந்த இராசசிம்மன் ஈழநாட்டிற்கு ஓடி உதவி பெற்றும் வெற்றி பெற முடியாமல்-தின் மணிமுடியையும் வேறுசில அரசச் சின்னங்களையும் ஈழ மன்னனிடம் வைத்துவிட்டுத் தன் தாய் வானவன் மாதேவியின் பிறந்தகமாகிய சேரலம் சேர்ந்தான். இதற்கு மேல் இவனுடைய வாழ்க்கை வரலாற்றைப் பற்றியறிய முடியவில்லை யென்ற செய்திவரை பாண்டியரின் முதற்பேரரசு' என்னும் தலைப்பின்கீழ் கண்டோம். இவ்வாறு இராசசிம்மன் ஈழ நாட்டில் வைத்து வந்த மணிமுடியை யும், பிற அரசச்சின்னங்களையும் மீட்கப் பராந்தகச் சோழன் முயன்று தோற்றான். ஆனால், அவனுக்குப் பின்வந்த இராசேந்திரச் சோழன் சிங்கள நாட்டை வென்று பாண்டியனின் மணிமுடியையும் பிற அரசச் சின்னங் களையும் அடைந்தான்.கிபி.29 ல் பாண்டிய நாட்டைப் பராந்தகன் சோழ நாட்டுடன் இணைத்து ஆள் முற்பட்டான். மூன்றாம் இராசசிம்மனுக்குப் பின் அவன் மகன் வீரபாண்டியன்சிபி. 45-6 சோழரைவென்று ஒரு சில பகுதிகளை மீட்டான். இவன் சோழ இளவரசரின் தலையைக் கொய்தான் என்பதனாலோ என்னவோ இவனுக்குச் சோழன் தலை கொண்ட கோவீர பாண்டியன்" என்ற விருதுப் பெயர் காணப்படுகிறது. வீரபாண்டியன் கிபி. 965-ல் இறந்தான். இவனுடைய கல்வெட்டுகள் மதுரை, திருநெல்வேலி முகவை இராமநாதபுரம் மாவட்டங்களில் காணப்படுவதாலும், முதற்பராந்தகனுக்குப்பின் ஆண்ட கண்டராதித்தன், அரிஞ்சயன் ஆகியோரின் கல்வெட்டுகள் இவ்விடங்களில் காணப்படாத தாலும் "வீர பாண்டியன்' சோழருக்குத் திறை செலுத்தாமல் முடி மன்ன னாகவே ஆண்டிருக்க வேண்டுமென்பது சதாசிவப் பண்டாரத்தாரின் கருத்தாகும். வீரபாண்டியனுக்குப்பின் அமரபுயங்கன் பாண்டிய நாட்டின் அரசனானான். இவனை முதலாம் இராசராச சோழன் வென்று பாண்டிய நாட்டைச் சோழநாட்டுடன் இணைத்துக்கொண்டான். பின்னர், அவன் சேரநாட்டையும் பாண்டிய நாட்டையும் ஒன்றிணைத்து 'இராசராச மண்டலம்' எனப் பெயரிட்டான். முதலாம் இராசேந்திரனுக்குப் பிறகு சோழ மன்னர்களின் படி நிகராளிகளாக மதுரையிலிருந்து ஆண்ட சோழ இளவரசர்கள் *சோழபாண்டியர்' என அறியப்பட்டனர். முதலாம் இராசேந்திரச் சோழன் மகன் சுந்தரசோழபாண்டியன் எனவும் பின்வந்தோர் விக்கிரம சோழபாண்டியன் பராக்கிரமசோழபாண்டியன் எனவும் அறியப்படுகின்றனர். இளவரசர்களாயிருந்து பின்னர் சோழ, பாண்டிய நாடுகளுக்கு முடியுடை வேந்தர்களாய் வந்தோரும் இவ்வாறே "சோழபாண்டியர்' என்றே அழைக்கப்பட்டனர். இவ்வாறு, பாண்டிய நாடு முடியுடை மன்னரை இழந்து சோழ நாட்டுடன் இணைக்கப்பட்டுச் சோழ மன்னர் கொடிவழியினராலேயே ஆனப்பட்டது. இராசராசன் காலத்தில் பல பிரிவுகளாய்ப் பிரித்து ஆண்ட பாண்டியர் சிலர் சோழப் படிநிகராளிக்கு அடங்காது கலகம் விளைவித்தன ரென்றும், அவர்களை இராசராசன் அடக்கினானென்றும் பண்டாரத்தார் கூறுகிறார். அவர்களில் மானாபரன், வீரகேரள பாண்டியன், சுந்தரபாண்டியன், விக்கிரமபாண்டி யன், வீரபாண்டியன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். சீவல்லப் பாண்டியன், இவன் மகன் பாண்டியன் வீரகேசரி ஆகியோர் சோழருக்குத் திறை செலுத்திப் பாண்டிய நாட்டின் ஒரு பகுதியை ஆண்டனர். கிபி. 1070 -ல் சோழ மன்னன் அதிராசேந்திரன் இறந்தான். சோழ அரசுக்குத்தக்க மன்னர் இல்லை . எனவே, கிபி.1070 முதல் 08 வரை பாண்டியர்கள் தங்கள் நாடுகளைத் தன்னுரிமை யுடன் சுதந்திர மாசு) ஆண்டனர். பின்னர் சோழநாட்டின் அரசுக் கட்டிலேறிய குலோத் துங்கன் கிபி.1087-ல் பாண்டியநாட்டின் மீது படையெடுத்து அந்நாட்டை ஐந்து பகுதிகளாகப் பிரித்து ஆண்டுவந்த ஐந்து பாண்டிய மன்னர்களையும் வென்றான். குலோத்துங்கனின் மெய்க்கீர்த்தியால் அறியப்படும் இப் பாண்டியர் ஐவர் யாவரென்பது விளங்கவில்லை. ஆயினும், சடையவர்மன் சீவல்லபன், மாறவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி, பராக்கிரமபாண்டியன், சடைய வர்மன், பராந்தகபாண்டியன் ஆகியோர் குலோத்துங்கன் காலத்திலிருந்து வர்கள் என்பது தெரிகிறது. இவர்களையடுத்துக் கிபி. 1132ல் மாறவர்மன் சீவல்லபன் பாண்டிய நாட்டின் ஒரு பகுதியை ஆண்டதாக அறிகிறோம். இவனுக்குத் திருவிதாங்கூர் நாட்டு வீரவர்மன் திறை செலுத்தியதாகவும் அறிகிறோம். ஆகவே, இவன் கிபி.162 வரை தென்பாண்டி நாட்டில் அரசு செலுத்தியிருக்கலாமெனக் கருதப்படுகிறது. மாறவர்மன் சீவல்லபனுடைய மகன் சடையவர்மன் குலசேகர பாண்டியன் ஆவான். இவன் திருநெல்வேலியிலிருந்து பாண்டிய நாட்டின் தென்பகுதியை ஆண்டவன். இவனுக்கும் மதுரையிலிருந்து கொண்டுவடம் பகுதியை யாண்ட பராக்கிரம பாண்டியன் எனும் இவனுடைய தாயாதிக் கும் பகைமை ஏற்பட்டது. இதில் சிங்கள மன்னன் பராக்கிரம பாண்டி யனை ஆதரித்தான். பராக்கிரம பாண்டியனைக் குலசேகரப் பாண்டியன் கொன்றான். போர்களுக்கும், கொலைகளுக்கும் பின் சோழமன்னன் இரண்டாம் இராசேந்திரன் துணையுடன் சிங்களவர் வெளியேற்றப் பட்டனர். ஆனால், குலசேகர பாண்டியன் நன்றி மறந்து சிங்களவனுடன் கூடிச் சோழனுக்கு இரண்டாம் செய்ததால் குலசேகரன் தன் நாட்டைச் சோழனிடம் இழந்தான். பின்னர் பராக்கிரம பாண்டியன் மகன் சடைய வர்மன் வீரபாண்டியனைச் சோழன், பாண்டிய நாட்டின் அரியணை யேற்றினான். இப்பாண்டியன் கி.பி. 1175 முதல் 1180 வரை ஆண்டான். இரண்டாம் இராசேந்திரனுக்குப் பின் மூன்றாம் குலோத்துங்கன் சோழ நாட்டின் மன்னன் ஆனான். இவன் சடையவர்மன் வீரபாண்டிய னோடு வேற்றுமை கொண்டு அவனை நீக்கிவிட்டுச் சடையவர்மன் குலசேகரன் மகன் மாறவர்மன் விக்கிரம பாண்டியனைக் கி.பி. 1180-ல் அரியணை யேற்றினான். இவன் குலோத்துங்கனிடம் நன்றியுணர்வுடன் நடந்துகொண்டதோடு பகைவரிடமிருந்து காத்துக்கொள்ள அவனையே சார்ந்து நின்றான். இவன் கிபி.1190-ல் இறந்தான். மாறவர்மன் விக்கிரமபாண்டியனுடைய மகன் முதலாம் சடைய வர்மன் குலசேகர பாண்டியன் கி.பி.1190-ல் அரசன் ஆனான். இவனிடம் பகைமை பூண்ட மூன்றாம் குலோத்துங்கன் மதுரைமீது படையெடுத்து, இவனைத் தோற்கடித்து, மதுரையிலிருந்த அரண்மனைகளை இடித்து அழித்து விட்டுச் சோழ பாண்டியன்' எனும் விருதுப்பெயருடன் மதுரை யில் முடிசூட்டிக்கொண்டான். சில ஆண்டுகளுக்குப் பின் குலோத்துங்கள் பாண்டிய நாட்டை முதலாம் சடையவர்மன் குலசேகரனுக்கேயளித்தான். குலசேசுரனுக்குப்பின் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் மதுரையில் அரசுக் கட்டிலேறினான். இவன் கிபி. 1216 முதல் 1238 வரை ஆண்டதாக அறிகிறோம் இக்காலத்தில் சோழநாட்டையாண்ட மூன்றாம் குலோத்துங்கன் இறந்ததும் அவன் மகன் மூன்றாம் இராசராசன் அரியணையேறினான்.மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழநாட்டின்மீது படையெடுத்து மூன்றாம் இராசராசனைக் கிபி.1219-ல் தோற்கடித்து அவன் நாட்டையும் பிடித்துக்கொண்டான். ஆனால், பின்னர் சோழ நாட்டை இராசராசனுக்கே அளித்தான். இதனால், இவனுக்குச் சோணாடு வழங்கிய சுந்தரபாண்டியத்தேவர்' என்ற விருதுப் பெயரும் ஏற்பட்டது. இரண்டு ஆண்டுகள் வரை திறை செலுத்திவந்த மூன்றாம் இராசராசன் திறை செலுத்துவதை நிறுத்திவிட்டான். சினங்கொண்ட சுந்தரபாண்டியன் கிபி 1231-ல் சோணாட்டின் மீது படையெடுத்து இராசராசனை நாட்டை விட்டே விரட்டினான். ஓட்டமெடுத்த இராசராசனைக் கோப்பெருஞ் சிங்கன் சிறைப்பிடித்துச் சேந்தமங்கலம் சிறையில் அடைத்தான். இவ்வாறு முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் பாண்டியர் வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியதோடு பாண்டியரே ஏற்றமுடையவர் என்பதையும் தம் வாழ்நாளில் செயல்படுத்திக் காட்டி இறந்தான். சுந்தரபாண்டியனுக்குப்பின் இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் என்பவன் பாண்டிய மன்னன் ஆனான். இவனுக்குப் போசள் மன்னன் வீரசோமேசுவரன் மாமன் ஆவான். கொங்கு நாட்டையாண்ட விக்கிரமச் சோழன் அளியன் மைத்துனன் ஆவான். இவன் காலத்தில் சோழ நாட்டையாண்டவன் மூன்றாம் இராசேந்திரன். இச்சோழ மன்னன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்துச் சென்று அதனைக் கைப்பற்றிக் கொண்டான். போசள மன்னன் வீரசோமேசுவரனையும், சோழனையும் தோற்கடித்துப் பாண்டிய நாட்டை மீட்ட இரண்டாம் மாறவர்மன் தன் கல்வெட்டுகளில் தன்னைப் 'பாண்டிய குல சம்ரட்சகன்' என்றும், 'இராசேந்திரனைப் போரில் வென்றவன்' என்றும் குறிப்பிட்டுள்ளான். மாறவர்மன் சுந்தரபாண்டியனுக்கு மதுரையில் இரண்டு அரியணைகள் இருந்தன. அவை முறையே 'மழவராயன்', 'பல்லவராயன்' என அழைக்கப் பெற்றன. இரண்டாம் மாறவர்மனுக்குப்பின் முதல் சடையவர்மன் சுந்தர பாண்டியன் கி.பி. 1251-1258) அரசுக் கட்டிலேறினான். பாண்டியருள் பெரும் புகழ்படைத்த இம்மன்னனைப் புகழ்ந்து பேசும் தமிழ், சமற்கிருதக் கல்வெட்டுகள் பலவுள்ளன, இவன் சேர மன்னன் வீரரவி உதயமார்த் தாண்டவர்மனை வென்றான். மலை நாட்டையழித்துக் கண்ணானூரி லிருந்து ஆண்டுவந்த போசள மன்னன் சோமேசு வரனைக் கிபி. 1262-ல் கொன்றான். சேந்தமங்கலத்திலிருந்து ஆண்ட காடவமன்னன் கோப் பெருஞ்சிங்கனைப் பணிய வைத்தான். இவ்வாறு சேர, போசள், காடவ மன்னர்கள் பாண்டியருக்கு உட்பட்ட ஆட்சியாளர் ஆயினர். சோழ அரசனை வென்று சடையவர்மன் அவனிடமிருந்து ஆண்டுதோறும் திறை பெற்றான். இக் காலத்தில் சோழநாட்டையாண்ட மன்னன் மூன்றாம் இராசராசன் மகன் மூன்றாம் இராசேந்திர சோழன் ஆவான். இவனுடைய இறப்புக்குப்பின் சோழமண்டலம் பாண்டியர் ஆளுகைக்கு உட்படுத்தப் பட்டது. மேற்கண்ட வெற்றிகளைக் கொண்டாடித் தில்லைக்கூத்தரை வணங்கி, திருவரங்கத்தில் துலைத்தானங்கள் துலாபாரங்கள் செய்து சடையவர்மன் சுந்தரபாண்டியன் மகிழ்ந்தான்.கிபி 123456-ல் ஈழநாட்டின் மேல் படையெடுத்து அதன் வடபகுதியைக் கைப்பற்றினான். இவ்வாறு தான் அரசுக் கட்டிலேறிய ஆறு ஆண்டுகளுக்குள் சேரர், சோழர், போசளர், சிங்களர் ஆகியோரை வென்று தன் ஆளுமையை ஏற்கச் செய்தான். இதனால், இவனுடைய ஆட்சி எல்லை தெற்கே கன்னியாகுமரி யிலிருந்து வடக்கே கடலூர் வரை நீண்டது. எஞ்சிநின்ற வாணர்களுடைய மகத நாட்டையும் வென்றான். இது சேலம், விழுப்புரம் மாவட்டங்களுக் கிடையிலிருந்த நிலப்பகுதியாகும். இதனையாண்டவர் வாணகோவரையர் என்பவர் ஆவர். பின்னர், தெலுங்குச் சோழன் விசய்கண்டகோபாலனை வென்று போர்க்களத்திலேயே அவனைக் கொன்றான். காகதியன் கணபதியை வென்று காஞ்சியைக் கைப்பற்றினான். நெல்லூரைக் கைப்பற்றி அங்கு மறுமுழுக்குச் (வீராபிடேகம் செய்து கொண்டான். இவ்வாறு பல நாடுகளை வென்று தன்னிகரில்லாது திகழ்ந்த சடைய வர்மன் 'மகாராசாதிராசா', 'பரமேசுவரன்', 'எம்மண்டலமும் கொண் டருளியவன்', 'எல்லாம் தலையான பெருமாள்' முதலிய விருதுகளைப் பெற்றான். தில்லையம்பலத்திற்குப் பொன் வேய்ந்தும், மேலைக் கோபுரத்தைக் கட்டியும் திருப்பணிகள் பல செய்தான், இக் கோபுரம் 'சுந்தரபாண்டியர் கோபுரம்' என்று அழைக்கப்பெற்றது. இதைப்போலவே திருவரங்கப் பெருமான் கோயிலுக்கும் பொன் வேய்ந்து, பல துலைத் தானங்கள் செய்து, திருப்பணிகளை முடித்தான் இத் திருப்பணிகளால் இவன் பொன்வேய்ந்த பெருமாள்' என்று அழைக்கப் பெற்றான். இவன் பெயரால் அழைக்கப்பெற்ற படிமங்களுக்கு இவன் பிறந்த மேழசித்திரைத் திங்கள் மூலநாளன்று விழாக்கள் நடக்கவும் ஏந்துகள் செய்தான். இதே நாளில் திருவானைக்காத் திருக்கோயிலில் ஆண்டுதோறும் விழாக்கள் நடத்த முட்டைபாடி, வீரதொங்கபுரம், பாகன்குடி ஆகிய மூன்று ஊர்களையும் நிலைத்த தானமாகக் கொடுத்தான். இது, சேரனை வென்றான் திருநாள்' எனக் கொண்டாடப் பெற்றது. இவனுக்குக் 'காஞ்சிபுரங்கொண்டான்' என்ற விருதுமுண்டு. இவன் காலத்தில் சடைய. வர்மன் வீரபாண்டியன், சடையவர்மன் விக்கிரமபாண்டியன் முதலியோர் ரும் பாண்டிய நாட்டுப் பகுதிகளை ஆண்டதாக அறிகிறோம். இவர்களுக்கும் இவனுக்குமிடையேயிருந்த உறவு முறைகளும், ஆட்சித் தன்மை களும் விளங்கவில்லை. வெனிசு நாட்டுப்பயணி மார்க்கோபோலோ தன் குறிப்பில் பாண்டியர் ஐவர் தனித்தனியே ஆண்டு வந்தனர் என்றும், வாசாப், பாண்டியர் மூவர் தனித்தனியே ஆண்டு வந்தனர் என்றும் கூறுவதும் ஈண்டு ஆராயத்தக்கதாம். ஆனால், பாண்டியர் பலர் ஒரே சமயத்தில் ஆண்டதறி கான கல்வெட்டுச் சான்றுகளோ, இலக்கியச் சான்றுகளோ இல்லை, முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனையடுத்து முதல் மாற வர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1768-131) அரசுக்கட்டிலேறினான். இவனும் சுந்தரபாண்டியனைப் போலவே கேதரனர், சோழர், போசளர் முதலியோரை வென்றான். கொல்லங்கொண்ட பாண்டியன்', 'புவனேசு வரன்', 'எம்மண்டலமும் கொண்டருளியவன் முதலிய விருதுப் பெயர்கள் இவனுக்குண்டு. இவன் காலத்தில்தான் வெனிசு நாட்டுப் பயணி மார்க்கோ போலோ இந்தியாவுக்கு வந்து பாண்டிய நாட்டைப் பற்றி எழுதியுள்ளான். பாண்டிய மன்னர் ஐவருள் குலசேகரனே மூத்தவன்: செல்வம் படைத்தவன்; சிறந்தவன் என்று இவன் எழுதி யுள்ளதோடு பாண்டிய நாட்டின் செல்வங் களைப் பற்றியும், மக்களைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளான். முகலீம் பயணி வாசப் பாண்டிய நாட்டிற்கு வந்த மலைபோன்ற கலங்களைப் பற்றியும், அவை சீனம், காண்டன், இந்து, சிந்து ஆகிய இடங்களிலிருந்து ஏற்றிவந்த பொருள்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளான். இப் பாண்டியனுடைய பொருளியல், கடல் வாணிகத்தால் பெரிதும் வளர்ந்ததென்றும், சுங்க அமைச்சு அப்துர் ரகிமான் என்பவனிடம் ஒப்படைக்கப் பெற்றிருந்த தென்றும் இகலாமிய வரலாற்று ஆசிரியர்களின் குறிப்புகளால் அறி கிறோம். இவன் காலத்தில் பாண்டிய நாட்டின்மீது எத்தகைய படை யெடுப்பும் நிகழ்ந்ததில்லை. ஆனால், இவன் ஈழநாடு சென்றும் வெற்றி பெற்றான். இவன் பண்டாரத்தில் ஆயிரத்து இருநூறு கோடிப் பொன்னும், முத்து, மாணிக்கம், நீலம், பச்சை முதலிய அரிய மணிகளும் பிற பொருள் களும் குவிந்து கிடந்தன, தாம்பரபரணியாற்றின் கூடலிலிருந்த காயல் பட்டினம் இக் காலத்தில் தலைசிறந்து விளங்கிய துறைமுகப்பட்டின மாகும், பாண்டியரின் இரண்டாம் பேரரசின் பொற்காலமென இவ னுடைய ஆட்சியைக் கூறலாம். இவனுக்குப்பின் இப்பாண்டியப் பேரரசில் தோன்றிய உள்நாட்டுக் குழப்பங்களும், அரசுரிமைப் போராட்டங்களும் முசுலீம்கள் தமிழகத்தில் தங்கள் ஆட்சியை நிலைநாட்டவும், செல்வங் களைக் கொள்ளையடிக்கவும் வாய்ப்பளித்தன. பாண்டியரின் அரிய செல்வங்களும், அரும்பாடுபட்டு வளர்த்த அரிய தமிழ்க் கலைகளும் பறிபோயின. மதுரையே தீக்கிரையாக்கப்பட்டது. இந் நிகழ்ச்சிகளை யடுத்துப் பாண்டியப் பேரரசும் ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. ஆகவேதான் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனும், அவன் மகன் முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனும் ஆண்ட காலத்தை இப் பேரரசின் பொற்காலமென்றும், பொற்காலத்தின் முகடென்றும் கூறுகிறோம். பாண்டியரின் வீழ்ச்சி அரசுரிமைப் போரும் உள்நாட்டுக் குழப்பங்களும் - மாறவர்மன் குலசேகர பாண்டியனுக்குப் புதல்வர் இருவர் இருந்தனர். ஒருவன் சடையவர்மன் சுந்தரபாண்டியன். இவன் குலசேகர பாண்டியனின் பட்டத்தரசியின் மகன். மற்றொருவன் சடைய வர்மன் வீரபாண்டியன். இவன் குலசேகர பாண்டியனின் வைப் பாட்டியின் மகன்; சுந்தரபாண்டியனைவிட அகவையில் இளையவன். ஆனால், குலசேகர பாண்டியன் அகவையில் பெரியவனும் பட்டத் தரசியின் மகனுமான சடையவர்மன் சுந்தரபாண்டியனை விட்டு, இளையவனும் வைப்பாட்டி யின் மகனுமான சடையவர்மன் வீரபாண்டியனுக்கே முடிசூட்டினான். சினங்கொண்ட சுந்தர பாண்டியன் தன் தந்தை குலசேகரனை கிபி.1370-ல் கொன்று விட்டான். இதனை வாசப், அமீர் குசுரு ஆகிய முசுலீம் ஆசிரியர்களின் குறிப்புகளாலும் அறிகிறோம். இவ்விரு புதல்வர்களும் பாண்டிய நாட்டின் இருவேறு பகுதிகளை ஆண்டனரென்பதை இவர் களின் கல்வெட்டுச் சான்றுகளிலிருந்து அறிகிறோம். சடையவர்மன் சுந்தர பாண்டியன் கி.பி. 1303 முதல் 13 வரை மதுரையை ஆண்டதாகவும், சடையவர்மன் வீரபாண்டியன் கி.பி.1246முதல் 1342 வரை உறையூருக்கருகி லுள்ள பகுதியை ஆண்டதாகவும், இக் கல்வெட்டுச் சான்றுகளைக் கொண்டு அறியலாம் என்கிறார் சதாசிவப் பண்டாரத்தார். மாலிக்காபூரின் படையெடுப்பு திவ்விச் சுல்தான் தில்லிப் பேரரையன்) எனப்படும் அலாவுதீன் கில்சியின் படைத்தலைவன் மாலிக்காபூர் தென்னிந்தியாவை நோக்கிப் படையெடுத்து வந்தான், அச்சமயம் வீரபாண்டியனை ஒறுக்க எண்ணிய சுந்தரபாண்டியன் மாலிக்காபூரைத் தனக்கு உதவுமாறு வேண்டினான். மாலிக்காபூர் உறையூரைத் தாக்கிக் கைப்பற்றி வீரபாண்டியனை விரட்டினான். உறையூரை விட்டு வெளியேறிய வீரபாண்டியன் பலவிடங் சுளுக்கும் சென்று மாலிக்காபூரைமறைந் திருந்து தாக்கினான். மாலிக்காபூ ரும் அவனை விடாது துரத்திப் பல இடங்களில் அவனுடன் மோதினான். இவ்வாறு மாலிக்காபூர் வீரபாண்டியனைத் துரத்தியவாறு சென்றதால் தமிழகத்தின் பல இடங்களில் குழப்பங்களும், கொள்ளைகளும் நடந்தன. மீண்டும் உறையூருக்கு அருகிலிருந்த பீர்தால்' என்ற இடத்தில் வீரபாண்டி யன் மறைந்து நின்று மாலிக்காபூரைத் தாக்கினான். மாலிக்காபூர் அவ னிடம் மோதும் போது வீரபாண்டியனிடமிருந்து 20,000 இசுலாமியப் படை வீரர்களும் மாலிக்காபூருடன் சேர்ந்துகொண்டு வீர பாண்டியனுக்கு இரண்டகம் செய்துவிட்டனர். செய்வதறியாது வீரபாண்டியன் கண்ணனூர் நோக்கி ஓடினான், மாலிக்காபூர் அவனைப் பின்தொடர்ந் தான். வழியில் பொன்னும், மணியும் ஏற்றிச்சென்ற பாண்டியனின் 126. யானைகளையும் மாலிக்காபூர் கைப்பற்றினான். வீரபாண்டியனைத் தேடி சிதம்பரம் வந்தடைந்த மாலிக்காபூர். பொன்னம்பலத்தில் வேய்ந்திருந்த பொன் தகடுகளைப் பெயர்த் தெடுத்துக்கொண்டு கோயிலையும் பலரையும் தீக்கிரையாக்கினான், மக்களைக் கொன்று குவித்தான், தான் கொள்ளை யடித்த பொன்னையும், பொருளையும் அங்குக் கிடைத்த 250 யானை சுகளையும் கைப்பற்றிச் சென்றான், மீண்டும் பீர்தால் வழியே சென்று திருவரங்கத்தையடைந்தான். கிபி.13ல் திருவரங்கப் பெருமான் கோயிலை இடித்துப் பொன்னையும் பொருளையும் சூறையாடினான். வழியில் தென்பட்ட மக்களைக் கொன்று குவித்தவண்ணம் மதுரைக்குச் சென்றான். அவன் வருகையை முன்கூட்டியறிந்த சுந்தரபாண்டியன் செல் வங்களை வாரிக்கொண்டு ஓடிவிட்டான். மதுரையை அடைந்த மாலிக் காபூர் மூன்று யானைகள் மட்டுமே விடப்பட்டிருப்பதைக் கண்டு ஏமாற்றமடைந்து மீனாட்சி கோயிலுக்குத் தீயிட்டு அழித்தான். சுந்தர பாண்டியனின் சிற்றப்பன் விக்கிரம பாண்டியன் பெரும்படை திரட்டி மாலிக்காபூரை எதிர்த்தான். மாலிக்காபூர் மதுரையை விட்டு வெளி யேறித் தெற்கு நோக்கிச் சென்று இராமேசுவரமடைந்து அங்கிருந்த மக்களைப் படுகொலை செய்து பொன்னையும் பொருளையும் கைப்பற்றினான். அங்கே தன் வெற்றியின் சின்னமாக ஒரு பள்ளிவாசலைக் கட்டினான் என்று இசுலாமிய வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர், சேரர் படையெடுப்பு . இவ்வாறு பாண்டிய நாட்டைப் பாழ்படுத்திவிட்டுப் பெரும் செல்வத்துடனும், குதிரை, யானை, கொள்னைப் பொருள்களுடனும் மாலிக்காபூர் தில்லிக்குத் திரும்பினான். இவன் கி2 யானைகளையும், 20000 குதிரைகளையும், 96,000 மணங்குப் பொன்னையும் அளவிட முடியாத முத்துகளையும் கொள்ளையிட்டுச் சென்றதாகக் கூறப்படு கிறது. மீண்டும் சுந்தரபாண்டியனும், வீரபாண்டியனும் தொடர்ந்து பாண்டிய நாட்டை யாண்டு வந்தனர். ஆனால், நாடு படைவலிமையும், பணவலிமையுமின்றி வளங்குன்றிவிட்டது. மக்களிடையே வறுமையும், கொந்தளிப்பும் காணப் பட்டது அரச குடும்பத்தினர் ஒற்றுமையின்றித் தம்முள் பூசலிட்டு நின்றனர். இச் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு சேரன் இரவிவர்மன் என்பான் சோழ, பாண்டிய நாடுகளின் மீது படையெடுத்து வெற்றி கண்டான். அவனுடைய கல்வெட்டுகள் திருவரங்கம், காஞ்சி, பூவிருந்த வல்லி ஆகியவிடங்களில் காணப்படு வதாலும், அவன் வேகவதியாற்றங் கரையில் சோழ பாண்டிய நாடுகளின் பேரரசனாக முடிசூட்டிக் கொண் டானென்று அறியப்படு வதாலும் அவன் காஞ்சியையும் கைப்பற்றினா னென்பது தெரிகிறது. அக் கல்வெட்டுகளில் அவன் சுந்தர பாண்டியனை யும், வீரபாண்டியனையும் வென்றதாகவும் குறிப்பிட்டுள்ளான். ஆனால், வீர பாண்டியன் போசளர் உதவியை நாடித் தன் அரியணையைத் தக்க வைத்துக்கொண்டான். காகதியர் படையெடுப்பு அடுத்துக்காகதிய மன்னன் பிரதாபருத்திரன் பாண்டிய நாட்டின் மேல் படையெடுத்து மற்றொரு 'அபாய கட்டத்தை ஏற்படுத்தினான். தானைத் தலைவன் முப்பிடிநாயகன் தலைமையில் அனுப்பப்பட்ட காகதியப் படைகளைப் பாண்டிய மன்னர் இவர் ஒன்றுகூடி எதிர்த்தும் வெற்றிபெற முடியவில்லை. வீரபாண்டியனும், சுந்தரபாண்டியனும் இவர்களுக்குத் துணையாக நின்ற விக்கிரம பாண்டியன், குலசேகர பாண்டியன், பராக்கிரமபாண்டியன் ஆகியோரும் படுதோல்வியுற்றனர், உள்நாட்டுப் பூசல்கள் இந் நிலையில் மீண்டும் உள்நாட்டுக் கிளர்ச்சிகள் பல எழுந்தன, வீரபாண்டியனுக்கு எதிராக அவனுடைய மக்களான சமுத்திர பாண்டி யனும், பராக்கிரம பாண்டியனும் கலகம் செய்து அரியணையைக் கைப்பற்ற முனைந்தனர். அரியணை ஆட்டங்கண்டதையறிந்த குறுநில மன்னர்கள் திறை செலுத்துவதை நிறுத்தியதோடு தனித்தாளவும் முற்பட்டனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவன் தொண்டை மண்டலத்துப் படைவீட்டுக் கோட்டத்தையாண்ட குலசேகரன் ஆவான். அவன் இப்பகுதியையாண்ட சம்புவராயர் மரபில் தோன்றியவன். இவன் கி.பி. 1317-18-ல் தன்னுரிமை பெற்ற மன்னன் ஆனான். சம்புவராயர்கள் முதலில் சோழருக்கும், பின்னர் பாண்டியருக்கும் திறை செலுத்தியாண்ட குறுநில மன்னர்கள் ஆவர். சம்புவராயன் குலசேகரனைப்போலவே மூன்றாம் இராசேந்திரன் மகன் சேதுப்பிள்ளை என்பவனும், பாண்டிய நாட்டு வாணாதிராயரும் திறை மறுத்துத் தன்னுரிமை பெற்ற மன்னர்கள் ஆனார்கள். மதுரையில் சிற்றரையர்(சுல்தான்கள்) ஆட்சி (கி.பி. 1335 - 78) தில்லிச்சுல்தான் கியாசுதின் துக்ளக் தன் மகன் உலுகான் என்பவனைப் பெரும்படையுடன் தென்னகத்திற்கு அனுப்பி கிபி. 1327-ல் மதுரையைக் கைப்பற்றினான். இந்த உலுகான் தான் பின்னால் தில்லி சுல்தான்களில் விந்தை மனிதனாகக் கருதப்பட்ட முகமது பின் துக்ளக் என்பவன். இவன் சலால் உதின் அசன்சா என்பவனை மதுரைக்கு ஆளுநனாக அனுப்பினான். மதுரை, சுல்தானியத்தின் ஒரு மாநிலம் ஆயிற்று. இந்த சலால்உதின் அசன்சா தில்லியில் ஏற்பட்ட குழப்ப நிலைகளைப் பயன்படுத்திக்கொண்டு கிபி. 1335-ல் தானே மதுரையைத் தனித்தாள முற்பட்டான். இவனையே இசுலாமிய வரலாற்று ஆசிரியர்கள் "முதல் மாபார் சுல்தான்' என்பர். மதுரையை இவர்களே முதன் முதலாக 'மாபார்' என்று குறிப்பிட்டனர். சவால் உதீன் அசன்சா (கி.பி. 1335 - 1340) இவன் 1335-ல் தன் பெயராலேயே காசுகளை நாணயங்களை) வெளியிட்டான். இவன் தன்னை முகமது நபிகள் நாயகத்தின் கொடிவழி மரபினன் என்று கூறிக்கொண்டான். இவனுடைய மகளை மணந்தவன் " தான் பெயர்பெற்ற இசுலாமிய வரலாற்றாசிரியன் இபின் பதூதா என்பவன். கொலை வெறியனான இவனை இவனுடைய அமீர்களில் ஒருவனான அலாவுதீன் உதாசி என்பவனே கொன்றான். பின் அலாவுதீன் உதாசி தானே 'மாபார் சுல்தான் ஆனான். இவன் இந்து அரசர்களை அடக்க முற்பட்டு முதலாகத் திருவண்ணாமலையி லிருந்தவல்லாளனை எதிர்த்தான். ஆனால், அவனுடன் நடந்த போரில் விழுப்புண்பட்டு இறந்தான். இவனுக்குப் பின் இவனுடைய மருமகன் கியாசுதீன் பிரோசா 'மாபார் சுல்தான்' ஆனான். இவன் நாற்பது நாள்களே அரியணையில் இருந்தான். கியாசுதின் தங்கணி என்பவன் இவனைக் கொன்றுவிட்டுச் சுல்தானியத்தைக் கைப்பற்றிக் கொண்டான். கியாசுதீன் தங்கணி (கி.பி. 1340 - 42) - சுல்தானியத்தைக் கைப்பற்றிய கியாசுதீன் தங்கணி மூன்று ஆண்டுகளே ஆண்டானா யினும் இவன் மேற்கொண்ட கொடுஞ்செயல் சுளும், கொலைச் செயல்களும் எண்ணிலடங்கா. இவன் முதல் *மாபார்' சுல்தானான சலால்உதீன் அசன்சாவின் மகளை மணந்தான். அசன்சாவின் மற்றொரு மகளை இபின் பதூதா மணந்தான். இக் கால இசுலாமியர் வரலாற்றையறிவதற்கு இபின் பதூதாவின் குறிப்புகள் பெரிதும் பயன்படு கின்றன, வீரவல்லாளன்(மூன்றாம்வல்லாளன் பலமுறை இலாமியரைத் தென்னகத்திலிருந்து விரட்ட முயன்று தொண்டை மண்டலப் படை ! வீட்டுக்கோட்டத்தையாண்ட சம்புவராயர்களைப் பாண்டிய நாட்டின் வடபகுதியைக் கைப்பற்றியாளும்படி ஊக்கமளித் தான். இதனால் *மாபார் சுல்தான்கள்” இவனை ஒடுக்குவதற்கு சமயம் பார்த்திருந்தனர். கியாசுதீன் காலத்தில் இவன் கண்ணனூர்க் கொப்பம் என்னுமிடத்தி லிருந்த முசுலீம் கோட்டையை முற்றுகையிட்டான். முன்னறிவற்ற 80 அகவையான இவ் வல்லானன், கியாசுதீனால் தோற்கடிக்கப்பட்டுச் சிறைப் பிடிக்கப்பட்ட டான். அவனுடைய யானைகளும், குதிரைகளும், செவ்வங்களும் கியாசு தீனால் கைப்பற்றப்பட்டன. வல்லாளனைக்கியாசுதீன் கொன்று, தோலை உரித்து அதில் வைக்கோலைத் திணித்து மதுரை நகர் மதில்மேல் தொங்க விட்டான். சிறைப்பிடிக்கப்பட்ட பல்லாயிரம் இந்துக்களும் இவனால் படுகொலை செய்யப்பட்டனர். பெண்கள் கழுத்தை நெறித்துக்கொல்லப் பட்டனர்;தாயின் மார்பகத்தில் பாலுண்டபச்சிளங் குழந்தைகளும் அவன் வாளுக்கு இரையாயின; தலைகள் மாலையாகக் கோர்க்கப்பட்டுச் சூலங்களில் மாட்டப் பெற்றன. இக் காட்சிகளை நேரில் கண்ட இபின் பதூதா இதனைக் காணப்பொறாமல்தான் விரைந்து மதுரையை விட்டு வெளியேறியதாகக் கூறியுள்ளான். இத்தகைய கொடுஞ்செயல்களைப் பொறுக்க மாட்டாத 'கடவுள்' கியாசுதினை இவ்வுலகினின்று அழைத்துக் கொண்டார் என்றும் பதூதா குறிப்பிட்டுள்ளான். – கியாசுதீனுக்குப் பின் அவன் மருமகன் நசீருதீன் கி.பி. 1342-44) மதுரையின் சுல்தான் ஆனான். இவனுக்குப்பின் அதில்சா(கிபி 1344-59) என்பவனும், பின்னர் முபாரக்சாகிபி.1359-68) என்பவனும், கடைசியாகச் சிக்கந்தர் சாகிபி.1368-78)என்பவனும் மதுரையை ஆண்டனர். இவர்களின் ஆட்சிக் கொடுமையைத் தாங்கமுடியாமல் இந்துக்கள் பரிதவித்தனர். மதுரையில் சுல்தான்கள் ஆண்டபோது பாண்டிய நாட்டிலும், சோழ நாட்டிலும் மன்னர்கள் பலர் ஆண்டனர். பாண்டியன் மாறவர்மன் குலசேகரன் கிபி.13141346, சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் (கிபி. 1315-1347, மாறவர்மன் வீரபாண்டியன் கி.பி. 1334-1380), மாறவர்மன் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1325-1352) முதலியோர் பாண்டிய நாட்டின் பல பகுதிகளிலும் ஆண்டனர். இவர்களுள் சடையவர்மன் பராக்கிரமன் மதுரையில் ஒன்பது நிலை மாடக் கூடத்தைக் கட்டினான். தொண்டை நாட்டாரும், போசளரும், சோழ நாட்டாரும்கூட முஸ்லீம்களை விரட்ட வேண்டுமென்று முயன்றனர். ஆனால், இவர்களிடம் ஒற்றுமையும், படைவலிமையும் இல்லை இச்சமயத்தில் விசயநகர மன்னர்களின் கவனம் தமிழகத்தின் மீது திரும்பியது. இந்துக்களையும், இந்துப் பண்பாட்டையும் இசுலாமியரிடமிருந்து காப்பதற்கே விசயநகர ஆட்சி ஏற்பட்டது என்பதை நாம் நினைவு கூர்தல் வேண்டும், மாபார் சுல்தானியத்திற்கு முற்றுப்புள்ளி " விசயநகர மன்ன ன் முதலாம் புக்கன் கி.பி. 1344-77) மகன் கம்பண்ணன் மதுரையை முசுலிம்களிடமிருந்து மீட்கும் பொருட்டுப் படையெடுத்தான். முதலில் சம்புவராயர்களை வென்று அவர்களையும் உடன் சேர்த்துக்கொண்டு, பின்னர் மதுரைச் சுல்தானன வென்றான். கம்பண்ணன் மனைவி கங்காதேவி தன் கணவனுடைய இவ் வெற்றியை ஓர் அழகிய சமற்கிருதப் பாவியமாக எழுதியுள்ளாள். அது 'மதுரா விஜயம்' எனப்படும். சம்பண்ணன் கனவில் ஒரு தேவதை தோன்றி, வாளொன்றைக் கொடுத்து இந்துக் கோயில்களை இடிக்கும் மிலேச்ச 'ரை யழித்து இந்துக்களைக் காப்பாற்றும்படி கூறியதாம். அதன்படியே இவன் துலுக்கரைத் தமிழகத்திலிருந்து அழித்துப் பாண்டியரை ஆளும்படி செய்தான் என்பது அந் நூலின் சுருக்கமாகும். இவளைத் தொடர்ந்து வந்த விசயநகர மன்னரின் உதவியால் கடைசி யாகக் கி.பி. 1378-ல் 'மாபார் சுல்தான்களின் ஆட்சி மதுரையிலிருந்து அடியோடு மறைந்தது. தம்பண்ணன் தொடங்கியசெயலைத்தொடர்ந்து இரண்டாம் அரிகரன் மதுரையில் சுல்தான்களால் ஏற்பட்ட இடிபாடு களைக் களைந்து இந்து சமயத்திற்கும், இந்துக்களுக்கும் புத்துயிரளித்தான். இவன் திருக்காளத்தி, திருப்பருப்பதம், சிதம்பரம், அகோபிலம், திருப்பதி, திருவரங்கம் முதலிய இடங்களிலுள்ள சைவ, வைணவ கோயில்களுக்குத் திருப்பணிகள் - செய்து மானியங்களும் வழங்கினான். பாண்டியர் செய்யத்தவறிய அல்லது செய்ய முடியாத ஒரு மாபெரும் பணியை விசயநகர மன்னர்கள் செய்தனர். முசுலீம்களைத் தமிழகத்திலிருந்து விரட்டினர். பாண்டியநாடும், சோழ நாடும், கொங்கு நாடும், பின்னர் விசயநகரப் பேரரசின் ஒரு சிறு பகுதியாக மாறின, பாண்டியர் ஆட்சிமுறை பிற்காலப் பாண்டியர் ஆட்சிமுறை, முற்காலப் பாண்டியர் ஆட்சி முறையினையும் சோழர் ஆட்சிமுறையினையும் தழுவியே அமைந் திருந்தது. ஆகவேதான் சிலர், ஆட்சிப் பிரிவுகள் அலுவலர்கள் ஊர் மன்றங்கள் படைப் பிரிவுகள் முதலியவற்றை ஒன்றுக்கொன்றாகக் கொண்டு மயக்கத்தில் ஆழ்த்துகின்றனர். எனவே ஈண்டுக் கூறப் படுவன திட்டமாகப் பிற்காலப் பாண்டியருடையவையே எனக் கொள்ளுவதை விடப் பொதுவாக இடைக்காலத் தமிழகத்தில் நிலவிய ஆட்சி முறை யமைப்புகளேயெனக்கோடல் சிறப்புடையதாகும். ஆட்சிப் பிரிவுகள் நாடு ஆட்சி முறைக்கு இசைவாக மண்டலம், வளநாடு, ஊர் எனும் பிரிவுகளாகப் பிரிக்கப்பெற்றிருந்தது. கல்வெட்டுச் சான்று களின்படி நோக்கும்போது மதுரோதய வளநாடு, வரகுண வளநாடு, கேரளசிங்க வளநாடு, திருவழுதி வளநாடு, சீவல்லப வளநாடு, பராந்தக வளநாடு, அமிதகுண வளநாடு முதலியனவாக இது அறியப்பட்டதை யறிகிறோம், பாண்டிய நாட்டில் நாற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் இருந்தனவென்று சதாசிவப் பண்டாரத்தார் குறிப்பிடுகிறார். இரணிய முட்டம், புறப்பனை நாடு பாகனூரர்க்கூற்றம் என்பனவற்றின் இறுதியில் முட்டம், நாடு, கூற்றம் என வருதலைக் காண்கிறோம். எனவே, இக் காலத்தில் வழங்கிய நாட்டுப் பிரிவு முட்டம், கூற்றம் முதலியனவாகவும் அறியப்பட்டன எனலாம். இவ்வாறாகப் பாண்டிய நாட்டில் களக்குடிநாடு, தென்பறம்பு நாடு, வடபறம்பு நாடு பொங்கலூர் நாடு, பூங்குடி நாடு, தும்பூர்க்கூற்றம், கீரனூர் நாடு, தென்கல்லை நாடு, செவ்விருக்கை நாடு, களாத்திருக்கை நாடு, அளநாடு, துறையூர் நாடு, வெண்பக்குடிநாடு, தெச்சுர நாடு, சூரன்குடிநாடு, ஆமூர் நாடு, ஆண்மாநாடு, கீழ்க்களக்கூற்றம், கீழ்வேம்பநாடு, மேல்வேம்ப நாடு, தென்வாரி நாடு, வடவாரி நாடு, குறுமறை நாடு, குறுமலை நாடு, முள்ளி நாடு, திருவழுதி நாடு, முறம்பு நாடு, தென்களவழி நாடு, வானவன் நாடு, குடநாடு, ஆரி நாடு, திருமல்லிநாடு, கருநீலக்குடிநாடு காணப்பேர்க் கூற்றம், சுடலையூர் நாடு, திருமலைநாடு, தொழுவூர்க் கூற்றம், தாழையூர் நாடு, முத்தூர்க்கூற்றம், கீழ்ச்செம்பிநாடு, செம்பி நாடு, வடகலைச் செம்பிநாடு, வேண்புல நாடு, பருத்திக்குடி நாடு, புறமலை நாடு, துளுமா நாடு, மிழலைக்கூற்றம், இடைக்குளநாடு கோட்டுர் நாடு முதலியனவாகப் பல நாடுகள் இருந்தனவாம். அரசு ஆட்சி நாடு முழுமைக்கும் அரசனே தலைவன் ஆவான். ஆட்சி, படை நயன்மைநீதி ஆகியவற்றிற்கு அவனேநடுநாயகமாகத் திகழ்ந்தான். அரசன் அவ்வத் துறைக்கு ஏற்றபடி ஆணைகளைப் பிறப்பித்து முறைவழுவாது ஆண்டான், மண்டபத் தலைவர்களாகத் தம் மக்களை அமர்த்தி *இளவரசர்' எனும் பட்டம் சூட்டி எதிர்கால அரசியலை நடத்திச் செல்லும் பெரும்பணியில் அவர்களைப் பழக்கினான். மன்னனின் முடிசூட்டு விழா, பிறந்தநாள் விழா, இளவரசருக்குப் பட்டம் சூட்டுவிழா முதலியன நாட்டின் பொது விழாக்களாகவும், பெரும் விழாக்கனாகவும் கொண்டாடப்பெற்றன. இவ் விழாக் காலங்களில் குற்றவாளிகளை (மன்னித்து விடுதலை செய்தல் வரி நீக்குதல் முதலியன மன்னனின் பரிசுகளாக மக்களுக்குக் கிடைத்தன, அரசனுக்கு ஆட்சியில் துணைபுரிய அமைச்சர்கள் இருந்தனர், அவர்கள் மகாமாத்திரர்' எனும் பெயரால் அழைக்கப்பட்டனர் போலும். படைத்தலைவன் 'சேனாதிபதி' என்றும், படைகள் அனைத்துக்கும் தலைவன் 'மகாசாமந்தன்' என்றும் அழைக்கப்பட்டிருக்கலாம், காளிங்க ராயன், மழவராயன், பல்லவராயன், முனையாதிராயன் முதலிய உயர் அலுவலர்களும் ஆட்சியில் அரசனுக்குத் துணைநின்றனர். அரண்மனைப் பணிகளைக் கவனித்தவர்கள், 'அகப்பரிவாரமுதலி', 'திருவாசல் முதலி" எனும் பட்டப் பெயர்களால் அறியப்பட்டனர். அந்தப் புரத்துப் பணிப் பெண் 'திருவுடையாள்' எனப்பட்டாள். அரசன் கொலு வீற்றிருக்கும் போதும், உலா செல்லும் போதும், வேட்டையாடும் போதும் கூட மக்களின் நலம் கருதி ஆணைகளை இடுவான். அவை உடனுக்குடன் செயல்படுத்தப்பெறும், வருவாய்த்துறை 'புரவு வரித்திணைக்களத்து முகவெட்டி' என அழைக்கப்படும் அதிகாரிகள் வருவாய்த்துறையில் பணியாற்றினர். இவர்களின் தலைமை யதிகாரி திணைக்களநாயகம்' எனப்பட்டான். நிலங்கள் அளக்கப்பட்டுத் தரம் பிரிக்கப்பட்ட பின்பே தரப்படி வரிகள் விதிக்கப்பட்டன. இவ்வாறு நில அளவை மேற்கொள்ளும் அதிகாரிகள் 'நாடுவதை செய்வோர்' எனப்பட்டனர். வரித் தண்டல் செய்த அதிகாரி முதலி' எனப்பட்டான். நிலவரியே பெரும் வருவாயாக இருந்தது. நிலத்தின் தரம், விளைச்சல் முதலியவற்றைக்கொண்டு ஒரு மாவுக்கு இவ்வளவு மரக்கால் என்று வரி விதிக்கப்பட்டது. வரிபண்டமாகவும் பணமாகவும் செலுத்தப் பட்டது. விளைச்சலின்மை , அழிவு, பஞ்சம் முதலியன ஏற்படும்போது வரி தள்ளுபடி செய்யப்படுவது உண்டு. நிலவரியைத் தவிர சுடமை, விநியோகம், அக்குவரி, அந்தராயம், வெட்டிப் பாட்டம், பஞ்சுபீலி, சந்திரவிக்கிர உறப்பேறு, வாசல்பேறு, இலஞ்சினைப் பேறு, உழுதுக்குடி, பாடிகாவல், தட்டாரப் பாட்டம், இடைவரி, பொன்வரி, தறிஇறை, செக்கிறை முதலிய பல்வேறு வரிகளும் பாண்டியர்கள் காலத்தில் தண்டல் செய்யப்பட்டன. நில உரிமை குடிமக்களுக்கே இருந்தது. நிலத்தை விற்றலும் வாங்கலும் உண்டு. அதனை எழுத்து மூலமாக எழுதிப் பதிவு செய்வர். இந்த நில ஆவணம் (பத்திரம்) *விலையோனல' எனப்பட்டது. அவையோர் இதற்குச் சான்றுகூறி நீரொட்டிக் கொடுப்பர். விலையோலைகளை எழுதுவதற்கென்றே தனி அலுவலர் இருந்தனர். இவர்கள் கரணத்தார்' எனப்பட்டனர். அரசனுக்கென்று தனி நிலங்கள் இருந்தன. இவற்றை 'அரசமானியம் Wri Larids) என்றனர். குடிமக்களிடமுள்ள நிலங்கள் தனக்குத் தேவைபட்டால் அரசன் அவர்களிடமிருந்து விலைகொடுத்தே வாங்குவான். வரித்தண்டல் முறையில் சில கொடுமைகள் நிகழ்ந்ததையும் அறிய முடிகிறது. வரி செலுத்த முடியாதவர் நிலங்களை விற்று வரி செலுத்தினர். ஓர் ஊரார் வரி செலுத்த முடியாமல் போன போது அதனை உட்கொண்ட நாட்டார் யாவரும் சேர்ந்து அவ்வரியைச் செலுத்தினர். தனிப்பட்டவன் வரி செலுத்தத் தவறினால் அவனுடைய பிணையாளன் அதனைச் செலுத்த வேண்டும். வரித்தண்டல் செய்யப், படை அதிகாரிகளும் அமர்த்தப் பட்டனர். அவர்கள் படைக்கரணவர்" எனப்பட்டனர். தனிப்பட்டவருக்கு வரித்தண்டல் உரிமை பன மானியமாக வழங்கியதையும் இக் காலக் குறிப்புகளிலிருந்து அது நாம் பாடி காவல் பணிக்காக ஒருவனுக்குச் சில வரிகளைத் தண்டல் செய்துகொள்ளும் உரிமை வழங்கப்பட்டதைப் பராக்கிரம பாண்டியன் செப்பேடுகளிலிருந்து அறிகிறோம். சிலருக்கு அரசன் நிலங்களை மானியங்களாகக் கொடுத்தான். அத்தகைய மானியங்களுக்கு வரி கிடையாது. சிவன் கோயில் மானியம் இறையிலி என்றும், திருமால் கோயில் மானியம் திருவிடையாட்டம் எனவும், சமண, புத்த மடங்களுக்கு விடப்பட்டவை பள்ளிச்சந்தம் எனவும், பார்ப்பனருக்குத் தானமாக அளிக்கப்பட்டவை பிரம்மதேயம், பட்டவிருத்தி எனவும், மடங்களுக்கு வழங்கப்பட்டவை மடப்புறம் எனவும், புலவர்களுக்கு அளிக்கப்பட்டவை புலவர் முற்றுரட்டு எனவும், நிமித்திகர் சோதிடர்களுக்கு அளிக்கப்பட்டவை கணிமுற்றூட்டு எனவும் அழைக்கப்பெற்றன. படைத்துறை பாண்டியரிடம் யானை, குதிரை, தேர், காலாள்படை ஆகிய படைப் பிரிவுகள் இருந்தன. அவை நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஆங்காங்குள்ள கோவில், வருவாய்த் துறை முதலிய பொதுத்துறை நிருவாகத்தினருடன் ஒத்துழைத்தும் ஆட்சிக்கு இப் படையினர் உறுதுணையாய் நின்றனர். பாண்டியரிடம் சிறந்த குதிரைப் படை இருந்தது. கொற்கை, தொண்டி முதலிய துறைமுகங்களில் அயலகக் குதிரைகள் ஆயிரக்கணக்கில் இறக்குமதி செய்யப்பட்ட செய்தியினை வாசப், மார்க்கோபோலோ முதலிய அயல்நாட்டு ஆசிரியர்கள் குறிப்பிடு வதிலிருந்து அறிகிறோம். இவற்றைத்தவிர நெருக்கடி ஆபத்துக் காலங் களில் துணைபுரியும் 'முனையெதிர் மோகர்', 'தென்னவன் உதவிகள்' எனப்படும் படைப்பிரிவுகளும் பாண்டியரிடம் இருந்ததையறிகிறோம். படைகளில் பல பிரிவுகள் காணப்பட்டன. பெரும்படை முன்பேர்படை வலங்கை மாசேனை முதலியனவாக அவை அறியப்பட்டன. முதலாம் படை இரண்டாம் படை என எட்டு வகையாகவும் இப்பிரிவுகள் காணப் பட்டன. படை வீரர்களுக்கும், படைத் தலைவர்களுக்கும் நிலங்கள் மானி யங்களாக வழங்கப்பட்டதாகவும் அறிகிறோம். படைகள் பாசறைகளில் (முகாம் தங்கி இருக்கும் போது கட்டுத் திட்டங்களுடனிருந்தன. பாசறை யைக் கண்காணித்தவர் ஆராய்ச்சி நாயகம்' எனப்பட்டார். படை வீரர் களும், படைத் தலைவர்களும் கோயில்களைக் காத்தமைப் பற்றியும், கோயில்களுக்கு இறையிலி வழங்கியதைப் பற்றியும் அறிகிறோம். நயன்மைத்துறை பாண்டியர்கள் நயன்மைநீதி வழங்குவதில் நேர்மையானவர்கள் என்பதை இலக்கியச் சான்றுகளிலிருந்து அறிகிறோம். ஆயினும், பிற்காலப் பாண்டியரின் நயன்மைத்துறை பற்றி விரிவான செய்திகள் நமக்குக் கிடைக்கவில்லை. மேலே கூறியபடி அரசனே நயன்மைக்கும் தலைவனாக விளங்கினான். அத்தகைய நயன்மை மன்றம் 'தர்மாசனம்" என அறியப் பட்டது. ரார்நியாயத்தார் குற்றவாளிகளை உசாவி விசாரித்துத் தங்களால் தீர்ப்புக் கூறமுடியாவிட்டால் 'தர்மாசனத்திற்கு மேல் முறை யீடுகளை அனுப்புவர். கொலைகாரனுக்குக் கொடிய தண்டனை வழங்கப்பட்டது. அவனுடைய சொத்துகள் பறிக்கப்பட்டன. அவனுடைய குடும்பத்தார் அடிமையாக்கப்பட்டனர். பொருளியல் குற்றங்களில் இழப்பீடு வழங்குவ துண்டு *பாவமன்னிப்புத் தீர்ப்புகளில் குற்றவாளி, கோவில் பணிசெய்யப் பணிக்கப்படுவது உண்டு. குற்றவாளியின் குற்றத்தை மெய்ப்பிக்க, காய்ச்சிய இரும்பைத் தொட்டெடுத்தல், நீரில் மூழ்கச் செய்தல் ஆகிய கடும் பயிற்சிகள் சோதனைகள் கையாளப்பட்டன. சாதிக்கேற்ற நயன்மை வழங்கப்பட்டதையும் அறிகிறோம். பார்ப்பனக் குற்றவாளிகள் பெரும் பாலும் பாவமன்னிப்புப் பெற்றனர்: பறையர் கடுமையாகத் தண்டிக்கப் பட்டனர். பாண்டியராட்சியின் முதுகெலும்பாய்ச் செயல்பட்டது ஊராட்சி யாகும். ஊர் மன்றம் *மன்று' என்றும், மக்கள் சவை அல்லது மகாசவை என்றும் அழைக்கப்பட்டது. இதில் உறுப்பினராவதற்கும், சனவ நடவடிக்கைகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தன. உறுப்பினர் தகுதி, ஆட்சிமுறைமை ஆகியவை சோழர் கால் ஊர் மன்றங்கனை ஒத்திருந்தன. சில வரலாற்று ஆசிரியர்கள் பிரம்மதேய ஊர்மன்றங்களில் தாம் இத்தகைய சீரான ஊராட்சிமுறை இருந்தது என்றும் மற்ற ஊர்களில் இல்லையென்றும் கூறுகின்றனர். பொதுவாக ஊரில் சட்டம், அமைதி, அறப்பணிகள், கோயில் திருப்பணிகள், மக்கள் நலம், புற ஒழுக்கம் முதலியவற்றை மஹர் மன்றங்களே கவனித்தன. பார்ப்பனர் வதிந்த பிரம்மதேயச் சிற்றூர் மன்றங்கள் தனித்துத் தங்களுக்குள்ளான நயன்மை, நிருவாகம், ஆட்சிப் பொறுப்புகளைக் கவனித்தன. மற்ற ஊர் மன்றங்கள் தனித்தும், இணைந்தும் செயல்பட்டன. "ஊர்' என்பது தனியூர் மன்றங் சுளையும், "நாடு" என்பது பல ஆயர்களின் ஒன்றிய மன்றத்தையும் குறித்தன. 'நாடு' என்ற பேரவை உறுப்பினர் நாட்டார்' எனப்பட்டனர். பெரும் பாலும் இம் மன்றங்கள் குற்றங்களுக்குத் தண்டம் விதிப்பதையும், அறம் கூறி ஒற்றுமைப்படுத்துவதையுமே மேற்கொண்டன. பாண்டியர் காலத்தில் புழக்கத்திலிருந்த காசுகளின் எண்ணிக்கை களையும், மதிப்பீடுகளையும் கொண்டு அக் காலப் பொருளியல் வளர்ச்சி யினை நன்கறிய முடிகிறது. வெள்ளி, செம்பு, ஈயக் காசுகள் புழக்கத்தில் இருந்தன. அவற்றில் கயல்மீன் உருவமும், மலைகளின் உச்சியில் கொடிகள் பறப்பது போன்ற உருவங்களும், யானையின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளன. பழங்காசு, பணம், திராமம், காணாம் முதலிய வற்றின் மதிப்பீடுகளை ஒருவாறு அறிய முடிகிறது. ஒரு காசு என்பது ஒரு கழஞ்சுப் பொன்னுக்கு ஈடானது. பத்துச் செம்பொன் காசுகள் ஒரு காசுக்கு ஈடானவை. பழங்காசு மிகவும் மதிப்புள்ளது. ஒரு பழங்காசு1 திராமம் மதிப்புள்ளது. ஒவ்வொரு பாண்டிய மன்னன் காலத்திலும் வெவ்வேறு வகையான காசுகள் அச்சிடப்பட்டன. காசுகளைப் போலவே நீட்டல், முகத்தல், எடுத்தல் முதலிய அளவுகள் துல்லியமாகக் கடைப்பிடிக்கப்பட்டன. பத்துக் காரணம் ஒரு கழஞ்சு என்றும், நூறு பலம் ஒரு துலாம் என்றும் எடுத்தல் அளவையில் கையாளப்பட்டன. முசுத்தலில் செவிடு, ஆழாக்கு, உழக்கு, உரி, நாழி, குறுணி, கலம் ஆகிய அளவைகள் கையாளப்பட்டன, இவ்வாறு பிற்காலப் பாண்டியர் ஆட்சி ஒவ்வொரு துறையிலும் - சிறப்புடையதாக விளங்கியது. சுருங்கக்கூறின் தமிழகம் முழுவதுமிருந்த ஆட்சிமுறையினையே இவர்களும் பின்பற்றினர். பாண்டியர் கலைகள் கட்டடக்கலை பாண்டியர் காலத்தில் சுட்டப்பட்ட கோயில்கள் யாவும் சோழர் பாணியைத் தழுவி எழுந்தவை எனலாம். சோழருக்குப் பின் தோராயமாக இருநூறு ஆண்டுகள் தமிழகக் கட்டடக்கலையில் தேக்கம் காணப் பட்டது. இதற்கு அரசியல் குழப்பங்களும், இசுலாமியர் ஆட்சி தமிழகத் தில் ஏற்பட்டதுமே கரணியமெனலாம். சோழர் கட்டடங்களைத் தழுவிப் பாண்டியர் கட்டடங்கள் எழுந்தனவாயினும் அவை பல மாறுபட்ட வளர்ச்சி நிலைகளைப் பெற்றன. சோழர் காலம் வரை கருவறைக்கு மேலுள்ள விமானமே முகாமை பெற்ற எடுப்பான உறுப்பாகக் காணப் பட்டது. கருவறையும், திருச்சுற்றுப் பாதையும், முகமண்டபங்களும், முன்மண்டபங்களும் சிறப்பாக அமைந்தன. ஆனால், பாண்டியர் காலத்தில் நுழைவாயில் முகாமை பெற்றுவிட்டது. கருவறைக்கு நேரேயமைந்த நுழை வாயிலும், பின்னர் முப்புறமும் அமைந்த நுழைவாயில்களும் எடுப்பும், சிறப்புமிக்க கோபுரங்களைப் பெறலாயின. எனவேதான் தமிழகக் கட்டடக்கலையில் கோபுரக் காலம் (சகாப்தம் பாண்டியர் காலத்தில் தொடங்கி விசய நகர், நாயக்கர் காலங்களில் தலைசிறந்து நின்றதென்பர். பாண்டியர் கோபுரத்தின் தன்மைகள் பாண்டியர் காலத்துக் கோபுரங்களை இரு வகையாகப் பிரித்து அறியலாம். அவை நாற்கர வடிவில் நெட்டையாய் நெடிது வளர்ந்து செல்லும் கோபுரங்கள்: நாற்கர வடிவில் தட்டையாகக் கீழ் சரிந்து உயர்ந்து வளர்ந்த கோபுரங்கள் ஆகியவையாம், பெரும்பாலும் அடிமட்டத்தி லுள்ள தளத்தின் சரிபாதியாக அடுத்த தளமும், அதற்குச் சரிபாதியாக அடுத்த தளமுமாக இக் கோபுரங்கள் மேல்நோக்கி வளர்ந்து செல்லும், அடிமட்டத்திலிருந்து 25 பாகை குறுகிக் கொண்டு போய்க் கோபுரம் முடியும். நெட்டைத் தளங்களும், குட்டைத் தளங்களும் பல்வேறு பிரிவுகளையும், வளைவு, நெளிவுகளையும் பெற்றிருந்தாலும் அவை கடைசி வரை நேர்நேராக வளர்ந்து சென்று முடியும். நெட்டைத் தளங்களில் மலர், இதழ், கொடி வடிவங்களும், குட்டைத் தளங்களில் தேவர் உருவங்களும் காணப்படுவது பொதுத்தன்மைகளாகும். கோயில் மூலவருக்கேற்பத் தேவ உருவங்கள் அமைக்கப்படும். கோபுரம் நீண்ட சதுரவடிவில் காணப்படும். ஒவ்வொரு தளத்திலும் வாயில் வெளிகள் இருபுறமும் காணப்படும். மேற்பகுதியில் உருள் தொட்டி வடிவில் கோபுரம் முடியும். உருள் தொட்டி வடிவின் முதுகில் கலசங்கள் அமைக்கப்படும். அதன் முகங்கள் அரைவட்ட வடிவில் அணிசெய்த படிமையைப்போல் காணப்படும். பிற சிறப்புத் தன்மைகள் பாண்டியர் கட்டடங்களிலுள்ள தூண்களில் பலகைக்குக் கீழுள்ள பாகம் மலர் வடிவமாயிருக்கும். போதிகை பருத்திருக்கும். அதனையடுத்த வளை வடைப்புத் தூண் தலைப்பிலிருந்து நெடிது தொங்கும். பலகை பரந்து பெரிதாகக் காணப்படும். தொடக்கத்தில் கோபுர வாயில்கள் கருவறைக்கு வெகு அருகில் கட்டப்பட்டன. இதனால் இடைநாழிகை (முற்றம் சிறிதாக இருந்தது. இவை பின்னர்ப் பெரிதாகக் கட்டப்பட்டன. முன்னதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு திருச்சிக்கருகிலுள்ள சம்புகேசுவரன் கோயிலும், சிதம்பரம் கோயிலின் தெற்குப்புறத்திலுள்ள சுந்தரபாண்டியன் கோபுரமும் ஆகும். திருவண்ணாமலையில் உள் வலம் வரும் பாதையி லுள்ள (உட்பிரகாரத்திலுள்ள) இழைக்கோபுரமும், குடந்தைக் கோபுரமும் இக் 'காலத்தவையே, இக் கோபுரங்களிலுள்ள சாலைகள், மாடங்கள், மூலைகள் ஆகிய யாவற்றிலும் சிறப்பான அணிகளும், ஒப்பனைகளும் காணப்படுகின்றன. பாண்டியர் ஆட்சியின் முடிவில் கட்டப்பட்டதஞ்சை மாவட்டத்திலுள்ள தாராசுரம் ஐராவதேச்சுரன் கோயில் பாண்டியர்களின் பிற்காலப் பாணிக்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டாயுள்ளது. இதன் மேலைக் கோபுரம் *பிரமிடு' வடிவில் உள்ளது. இக் கோயிலிலுள்ள தூண் தலைப்புகள், வளைவடைப்புகள், மூலைக் கோப்புகள், உத்தரங்கள் முதலியன பல்லவர்கால மாமல்லபுரக் குடைவரைகளை நினைவூட்டு கின்றன. இது பல்லவர் பாணியையும், சோழரின் அழகு முதிர்ச்சியையும் பெற்று, பிற்காலவிசயநகரப் பாணிக்கு வழிகாட்டுகிறதென்பர். உருளைகள் பூட்டப்பெற்றதுபோன்ற அமைப்புடைய இக் கோயிலின் நடுப்பகுதி சிறப்பான வேலைப் பாடமைந்த தூண்களாலும், மண்டபங்களாலும், உருவச் சிற்பங்களாலும் பொலிவுடன் திகழ்கின்றது, பாண்டியர் காலத்துப் பெருங்கோயில்களுக்குள் அம்மனுக்கென்று தனிக் கோயில்களைக் கட்டும் வழக்கம் ஏற்பட்டது. திருச்சுற்றிலும் கலைச்சின்னங்கள் எழுந்தன. பாண்டியர் காலத்தில் சிற்பக் கலையிலும் ஒரு சில மாறுதல்கள் ஏற்பட்டன. தொண்கோள்களை (நவக்கிரகங்கள் வட்டமான ஓரே கல்லில் படைக்கும் கலையும், பலவகைச் சிற்பங்களைக் கொண்ட தூண்கள், நடனச் சிற்பங்கள் முதலியனவும் இக் காலத்தில் சிறப்புடன் காணப்பட்டன. பிற்காலத்தில் இத்தகைய சிற்பங்கள் கோபுர வாயில்களிலும், கோபுரங்களிலும் இடம் பெற்றுத் திகழ்ந்தன. இதைப் போலவே ஓவியம், இசை நடனக்கலைகளும் இக் காலத்தில் மீண்டும் வளர்ந்தன. 1. Ancient India, Bulletin of the Archaeological Survey of India Nos. 20-21(1964-65) 1. புறநா . 85 : 3-இ-தி-11, 10-15 3. இம் மண்டபம் கி.பி. 13ஆம் நாற்றாண்டில் சோழநாட்டின்மீது படை யெடுத்த மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி. 1216-17:38) என்பவனால் இடித்து நிரவப்பட்டது. இன் தஞ்சையிலும் உறையூரிலுமிருந்து சுட்ட டங்களை இடித்து நிரஷியன் , N[]. 373 S.ILI, Mul, 14' 1. மனமே 19 : 119-12) 3. மணமே 25 : 14-18 3, மணிமே 15: £01-20 புறநா . 31-17 1. இவன் கொற்கைக்கிழான் நற்கொற்றனுக்கு வெள்ளிக்குடியென்னும் ஊரைக் கொடி வழியாக ஆண்டு துய்த்துக் கொள்ளும்படி தானமாகத் தந்தான். கடைக் கழகக்காயத்தின் இறுதியில் களப்பிரர் தமிழகம் முழுவதையும் கைப்பற்றிக் கொண்டனர், ஏறத்தாழ முன்னூறு ஆண்டுகள் கழித்துக் களப்பிரரை அகற்றி மீண்டும் பாண்டியர் ஆட்சி ஏற்படுத்தினர், கொற்கைக் கிழான் நற்கொற்றனுடைய கொடி வழியினர் முதுகுடுமி வழங்கிய செப் பேட்டைக் கி.பி. 8ஆம் நாற்றாண்டில் பாண்டிய நாட்டையாண்ட நெடுஞ்சைடயனிடம் காட்டி வேள்விக் குடியைத் திருப்பிப் பெற்றனரெனும் செய்தி இச் செப்பேட்டில் கூறப்பட்டுள்ளது. வேள்விக்குடிச் செப்பேடு வரி. 1-79). அகு. பண்டைத் தமிழகத்தில் நால்வகைக் குடிக்ளேயிருந்தன என்று கூறும் கூற்று ஏற்புடையதன்று. துடியன் பாணன், பறையன், கடம்பன் என்று இந் நான்கு அல்லது குடியும் இல்லை' என்ற மாங்குடிக்கிழாரின் பாடலைக் கொண்டு சிலர் ஆரியர் வருகைக்கு முன் துடியை முழக்கும் துடியன், பண்ணிசைக்கும் பாணன், பறை அறையும் பறையன், குடமுழா அறையும் கடம்பன் என்ற நால்வகைச் குடியினரே இருந்தனரெனக் கூறுகின்றனர். மாங்குடி க்கிழார் மறவர் குடிக்கு உறுதுணையாக நின்ற தொழிலாளர் நால்வரையும் அம் மறவர் உண்ட சத்துணவாகிய வரகு, தினை, கொள்ளு, அவரை ஆகிய நான்கையும் அவர்கள் சூடிய குருந்தம்பூ. முல்லைப்பு முதலிய நான்கையும் "மூதின், முல்லை' என்னும் துறையில் கூறியுள்ளார். அவருடைய பாடல்கள் மேலும் கிடைக்கவில்லை . அவற்றில் பிற குடிகளைப் பற்றிக் கூறியிருக்கக்கூடும். மேலும், அவர் மறவர் குடிக்கு உறுதுணையான நான்கு தொழிலா னர்களைப் பற்றியே கூறியுள்ளதால் வேறு குடிகளிருந்தனர் என்பது தெளிவாகிறது. வரகு, தினை, கொள்ளு, துவரை ஆகிய நான்கோடு வேறு பவதவசங்களும் இருந்ததைப் போலவே, நால்வகைப் பூக்களோடு பல நாறு பூக்களும் இருந்ததைப்போலவே நால்வகைக் குடிகளோடு பல குடிகளும் இருந்தனர், 1. மதுரைக்காஞ்சி : 332-430 3 மதுரைக் காஞ்சி 521-853 2. மதுரைக் காஞ்சி 431-420 4. மதுரைக் காஞ்சி 654 - 685 1. மதுரைக் காஞ்சி 687 - 782 1. அகநானூறு 167 2 பெரும்பாணாற்றுப்படை 402 - 405 124 - 1 வேலுார்ப்பாளையம் செப்பேடுகள்- சொலவம் 10 பல்லவர் செப்பேடுகள் 30 தமிழ் வரலாற்று வெளியீடு - I (196, பக். 250 [3.LLI. Wal. II-part4.pp. 501-516 2 காசாக்குடிச் செப்பேடுகள் - சொல்லும் பல்லவர் செப்பேடுகள் 30 தமிழ் வரலாற்றுக் கழகம்-பக். 174 (196) [3.1.1. Wgl. II Par5-Pp. 143-155 1. (a) R. Gopalan "Pallavas of Kanchi' p. 53 (1928) (b) Father Heras "Studies in Pallava History' -p. 20 2. உதயேந்திரம் செப்பேடுகள் சொலவம்-3வரி II (பல்பவர் செப்பேடுகள் 30 பக். 333, தமிழ் வரலாற்றுக் கழக வெளியீடு-1நிதி, 43.I.I. Vol II. p. 74 3. Dr. S. Krishnaswamy Iyenger. The Antiquities of Mahabalipuram'.p.31 1. காசாக்குடிச் செப்பேடுகள் - சொலவம் 2 (பல்லவர் செப்பேடுகள் 30) தமிழ் வரலாற்றுக் கழக வெளியீடு-19த்தி-பக்174] [S.I.I. Vol. II pp. 342-361) 3. மயிலை சீனாவேங்கடசாமி, 'நட்சந்திரன்ரின்', கழகம், 1955, பக். 4. 3. 'நீர்ப்பெயர் எப்படி போடு....." பெ, பா. படை வரி 31g 4. Epi. Ind, WHl. HII, H, 15, p. 115, 1. G.Jouvean-Dubreuil, Conjeevaram Inscription of Mahendravarman-II 161-170 திரைதரு பவளமுஞ் சீர்திகழ் வயிரமும் சுரைதரு முகிலொடு கனவனள புகுதரும் விரைவிலா லெயி லெய்த மயேந்திரப் பள்ளியுள்' கொண்டல்சேர் கோபுரங்கோலமோர் மாளிகை சுண்டலுங் கதையும் காலமார் வாவியும் வண்டுவரும் பொழிலணி மயேந்திரப் பள்ளியுள்' 'நித்தியத் தொகைபல நிரைதரு மிகப்ரெளச் சித்திரப்புனரி சேர்த்தித் திகழ்ந்தவன் சாமத்திகழ் சாரடன் மயேந்திரப் பள்ளியுள்" . 2 மேதினிமேல் சமண்கையர் சாக்கியர்தம் பொய்ம்மிகுந்தே ஆதியரு மறைவழக்கம் அருகிபரன் அடியார்பால் பூதிசா தனவிளக்கம் போற்றல் பெறாதொழிபயக்கண்டு - ஏதமில்லூர்ச் சிவபாத இருதாரர்தாம் இடருழந்தார்.' 1. 'பூழியர் தமிழ்நாட்டுள்ள பொருளில் சீர்ப் பதிகள் எல்லாம் பாழியும் அருகர்மேலும் பள்ளிகள் பவனம் ஆகிச் சூரருட் குழுக்கள் போலத் தொடைமப்பிற் பீவியோடு மூழிநீர் கையிற் பற்றி அமணரே யாகி மொய்ப்ப' 'பறிமயிர்த் தலையும் பாயும் பீலியும் தடுக்கும் போனில் செறியுமுக் குடையு மாகித் திரிபவர் எங்கும் ஆகி அறியுமச் சமய நூலின் அளவினில் அடங்கிச் சைவ "நெறியினிற் சித்தஞ் செல்லா நிலைமையில் நிகழுங் காலை" 2. பாடலிபுரம் தென்னார்க்காடு மாவட்டத்திலுள்ள திருப்பாதிரிப் புவியூர் என்பர். 3. அக்கோயில் 'குணதரவீச்சரம்' எனப்பட்டது. 1. South Indian Inscriptions, Vol. I. p, 29 1. J.G. Dubreuil; 'Pallavas', p. 23. 2. Dr. N. Venkataramanayya, 'Durvinita and Vikramaditya' 'TIRLIMENI', p.116. 1 கூரம் செப்பேடு - சொலவம் 4, வரி 12 பல்லவர் செப்பேடுகள் முப்பது தமிழ் வரலாற்றுச் சழகம்-1956, பச்சும், 55, 3.I.. Mol. 1, pp. 144-45. 1 'பரியன மணிமங்கல் (சூரமாரம் முதலான இடங்களில் வல்லப ராஜனைப் பலமுறை வென்று, வாதாபியை அழித்த அகத்தியரைப்போல), வாதாபியை அழித்த நரசிம்மவர்மன், அவனுக்கு (மகேந்திரவர்மனுக்கு மகனாகப் பிறந்தான்." உதயேந்திரம் செப்பேடுகள், சொல்பவம் , வரி II, பல்லவர் செப்பேடுகள் முப்பது - தமிழ் வரலாற்றுக் கழகம் 1956, பக்கம் 133-134, 3.I.L, Wal, II, pp. 381. * பெங்கையை வென்ற இராமனுடைய வீரத்தைத் தாழ்த்தும்படியான வீரம் கொண்டவனும், பகை அரசர்களின் கூட்டங்களை அழிப்பதில் தாம் கேதுவைப் போன்றவனும், குடமுனியைப் போல் வாதாபியை வெற்றி கொடைவணும், குடமுளியை விட வேகமுள்ளவனும் வெற்றி வீரனுமான நரசிம்மவர்மன்" - சாதிக்குடிச் செப்பேடுகள் -சொளவம் 22-பல்லவர் செப்பேடுகள் முப்பது - தமிழ் வரலாற்றுக் கழகம், 1986, பக்கம் 174, 3.I.I.Vol. II, p. 34). 'உபேந்திரனை விசுணுப்போன்று புகழ்படைத்தவனம் பார்பவர் கூட்டங் களை வென்று வாதாபி நகரத்தின் நடுவில் வெற்றித் தூணைக் கைக்கொண் டவனுமாகிய நரசிம்மன், மகேந்திரவர்மனுக்கு மகனாகப் பிறந்தான்', வேலூர்ப் பாளையம் செப்பேடுகள் சொலவம் II- "பல்லவர் செப்பேடுகள் முப்பது பக்கம் 25, தமிழ் வரலாற்றுக் கழகம்19திதி, 3.1.1. Wol. II, p. 3102. 4. 'மன்னவர்க்குத் தண்டுபோய் வடபுலத்து வாதாபித் தொன்னகரம் துகளாகத் துனள நெடுகை வனரயுகத்தும் பன்மணியும் நிதிக்குவையும் பகட்டினமும் பரிந்தொகையும் இன்ன எண் ணிவகவர்ந்தே இகலரசன் முன்கொணர்ந்தார்" சேக்கிழார்-சிறுத்தொண்டர் புராணம்-5! 1. மாமல்லன் 'கதிதி புஜாங்கரேஸர பல்லவ நரசிம்ம விஷ்ணு ', Indian Anti quary, Vol. II, p. 199, 2. மயிலை சீனி. வேங்கடசாமி, 'வாதாபி கொண்ட நரசிம்மன்' சுழ்சம் (1957), பசும்பு 1. டாக்டர். மா. இராசமாணிக்கனார். பல்லவர் வரலாறு. கழகம் [1971], பக். 114 1. பல்லவர் செப்பேடுகள் முப்பது-த.வெ.க., 41#திரி, காசாக்குடி பட்டயங்கள்-சொலவம் 22 K.அ) 'பல்லவர்செப்பேடுகள் முப்பது', தமிழ் வரலாற்றுக் கழகம், 1986, பக்கம் 174, 3.1.1. 4'ol. II, p. 343, (ஆ) மகா வம்சம் சூல்வ ம்சம்-இயல் 47, THUTOur's Translation, Chapter 7, 1. C.S. Srinivasachari, 'History and Institution of the Pallavas', p.15 i R. Gobinatha Rao, 'History of Sri Vaishnavas' 2 C. S. Srinivasachari, 'History and Institution of the Pallavas' 1 பர். சே, கே, பிள்ளை , 'தமிழக வரலாறு-மக்களும் பண்பாடும் " 1. ' - பர். கே.கே. பிள்ளை , தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்' 1 பர். கே.கே. பிள்ளை , "தமிழர் வரலாறு மக்களும் பண்பாடும்' த.பா.நி, 1972 அவை, I. புழல்கோட்டம், ஈக்காட்டுக்கோட்டம், 3. மார்க் கோட்டம், 4. செங்காட்டுக் கோட்டம், 5. பையூர்க் கோட்டம், க. எயில் கோட்டம், 7. தாமல் கோட்டம், 8. பற்றுக்காட்டுக் கோட்டம், தி.களத்தூர்க் கோட்டம், பு, செம்பூர்க் கோட்டம், 11. ஆம்பூர்க் கோட்டம், 12 வெண்குன்றக்கோட்டம், 13. பல்குன்றக் கோட்டம், 14. இலங்காட்டுக் கோட்டம், 5. கலியூர்க்கோட்டம், 16, செங்கரைக் கோட்டம், 17. படுவூர்க் கோட்டம், 18. கடிகூர்க் கோட்டம், 9. செந்திருக்கைக் கோட்டம், 20. குன்றவட்டான கோட்டம், பா. வேங்கடத் கோட்டம், 27. வேலூர்க் கோட்டம், 23. சேத்தூர்க் கோட்டம், 34, புலியூர்ச் கோட்டம் என்பனவாம் i Prof. K. A. Nilakanda Sastri-'The Pandian Kingdom',-1972. 1. குறிப்பு : மாந்தரின் உடல் மேலுள்ள தோலை உரிப்பதில் கை தேர்ந்த பவ தொழிலாளர்கள் தில்சர் ககன்தான்களால் அரபு: துருக்கிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டனர், சுவ்தாள்கள் பகைவர்களைக் குறிப்பாக, இந்துக்களை அச்சுறுத்துவதற்காகத் தங்களை எதிர்ப்பவர்களைப் படுகொலை செய்து வண்டிகளில் அவர்களின் பிணங்களை ஏற்றிச் சென்று ஊர் ஊராக வலம் வருதலும், தோலையுரித்து வைக்கோல் அடைத்து மரக்கிளைகளிலும், மதில்களின் மேலும், பொது இடங்களிலும் தொங்கவிடுவதுமுண்டு. தலைகளை மாலையாகக் கோர்த்துச் சூலங்களில் மாட்டுதலுமுண்டு. இபின் பதூதா இத்தகைய காட்சிகளைத் தாமே நேரில் கண்டு எழுதியுள்ளார்,