சமூகச் சீர்திருத்தம் நூற்களஞ்சியம் - தொகுதி ஒன்று குடியரசு கட்டுரைகள் சாத்தன்குளம் அ. இராகவன் அமிழ்தம் பதிப்பகம் சாத்தன்குளம் அ. இராகவன் நூற்களஞ்சியம் தொகுதி ஒன்று குடியரசுக் கட்டுரைகள் | சாத்தன்குளம் அ. இராகவன் | பதிப்பாளர் : இ. வளர்மதி | முதல் பதிப்பு : 2015 | தாள் : 18.6 கி மேப்லித்தோ | அளவு : 1/8 தெம்மி | எழுத்து : 10.5 புள்ளி | பக்கம் : 16+312 = 328 | நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) | விலை : உருபா. 305 | படிகள் : 1000 | நூலாக்கம் : சரவணன், மலர் அட்டை வடிவமைப்பு : இ. இனியன், பாவாணர் கணினி, தியாகராயர் நகர், சென்னை - 17 | அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ஆயிரம் விளக்கு, சென்னை - 6 | வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம், பி-11, குல்மோகர் குடியிருப்பு, 15, தெற்கு போக்கு சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017 | கிடைக்குமிடம் : தமிழ்மண் பதிப்பகம், 2 சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர் சென்னை - 600 017, தொ.பே: 2433 9030 பதிப்புரை எம்பதிப்பகம் தமிழ்மொழி, இனம், கலை, நாகரிகம், பண்பாடு, இசை, நுண்கலைகள், தொல்லியல் ஆய்வு தொடர்பான அரிய செய்திகள் அடங்கிய நூல்களைத் தேடியெடுத்து இதுகாறும் வெளியிட்டு வருகிறது. கடந்த காலத்தில் நூலாசிரியர் சாத்தன்குளம் அ.இராகவன் எழுதிய எட்டு நூல்களை அமிழ்தம் பதிப்பகம் வாயிலாக வெளியிட்டுள்ளோம். உங்கள் கைகளில் தவழும் குடியரசுக் கட்டுரைகள் எனும் இந்நூல் கையெழுத்துப் படியாக நூலாசிரியர் இராகவன் அவர்களின் மகனார் இரா.மதிவாணன் அவர்களிடம் இருந்தது. எங்களுடைய வேண்டுகோளை ஏற்று மனமுவந்து கையெழுத்துப்படியினை கொடுத்து உதவினார். இதனை முதன்முதலாக வெளியிடுகின்றோம். மொழிக்கும் இனத்திற்கும் பெருமை சேர்க்கின்ற வகையில் அரிய நூல்களை வெளியிட்டுவரும் எங்கள் தமிழ்ப்பணிக்கு சென்னைப் பல்கலைக்கழகத் தமிழிலக்கியத் துறையின் தலைவர் பேரா. வீ. அரசு அவர்கள் தோன்றாத் துணையாக இருந்து வருகிறார். அவருடைய வழிகாட்டுதலின் பேரில்தான் நூலாசிரியரின் இன்னபிற நூல்களும் வெளி வருகின்றன. இந்த நூல்கள் செப்பமாகவும் நல்ல வடிவமைப் போடும் வருவதற்கு பல்லாற்றானும் துணை இருந்து உதவியவர். மேலும், இந்நூலுக்கு முன்னுரை அளித்துச் சிறப்பு செய்துள்ள பி.இராமநாதன் அவர்களுக்கு எம் நெஞ்சார்ந்த நன்றி. நுண்கலைச் செல்வர் இராகவன் அவர்கள் எழுதி அவருடைய காலத்தில் வெளிவந்த நூல்களையும், வெளிவராமல் கையெழுத்துப் படியாக இருந்தவற்றையும் , குடியரசு, ஜனசக்தி, அறிவு, தமிழ்முரசு இதழ்களில் வெளிவந்த அவருடைய கட்டுரைகளையும் தொகுத்து நூல் களஞ்சியங்களை பொருள் வாரியாகப் பிரித்து பதினாறு தொகுதிகளாக உங்கள் கைகளில் தவழவிட்டுள்ளோம். மரபு கருதி மூல நூலில் உள்ளவாறே வெளியிட்டுள்ளோம். செல்வி இர. பிருந்தாவதி, பேரா. அரசு அவர்களின் ஆய்வு மாணவர். இவர் பேராசிரியரின் வழி காட்டுதலோடு பல்வேறு வகையில் பங்காற்றியும் இந் நூல்கள் பிழையின்றி வருவதற்கு மெய்ப்புப் பார்த்தும் உதவினார். செல்வி பிருந்தாவதி அவர்களை நன்றி யுணர்வோடு பாராட்டு கிறேன். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த புலவர் முத்து ராமலிங்கம் அவர்கள் பாவாணர் நூல்கள் வெளியிட்ட போது பல்லாற்றானும் துணையிருந்த பெருமைக்குரியவர். அவர் அண்மையில் மறைந்துவிட்டார். மறைவுக்கு முன்பாக நூலாசிரியரின் தங்கை வீரலக்குமி அம்மையாரிடமும், மகன் இரா. மதிவாணனிடமும் உரிமையுரை வாங்கி உதவியதோடு இத் தொகுதிகள் வெளிவருவதற்குப் பெரிதும் துணை இருந்தவர். அவருக்கும் எம் நன்றி. இந்நூல் தொகுதிகள் நல்ல வடிவமைப்போடு வெளிவருவதற்கு உதவிய திருமதி. செல்வி (குட்வில் கணினி) அவர்களுக்கும், மெய்ப்புப் பார்த்து உதவிய கி. குணத் தொகையன், செல்வி பிருந்தாவதி, திருமதி கலையரசி, செல்வி கோகிலா, செல்வி அரு.அபிராமி ஆகியோர்க்கும், நூல்கள் நன்முறையில் வருவதற்கு மிகவும் உதவியாக இருந்த அரங்க. குமரேசன், மு.ந. இராமசுப்ரமணிய ராசா, சிறந்த வகையில் வடிவமைத்து ஒழுங்குபடுத்திய கணினி இயக்குநர் மலர், மேலட்டையை அழகுற வடிவமைப்பு செய்த இனியன் மற்றும் பிற வகைகளில் துணை இருந்த வே. தனசேகரன், இல.தருமராசு ஆகியோர்க்கு எம் நன்றியும், பாராட்டும். இந்நூல் தொகுதிகள் தமிழ் ஆய்வாளர்களுக்கும் தமிழ் உணர்வாளர்களுக்கும் பெரிதும் பயன்படத்தக்க அரிய நூல்களாகும். இதனை அனைவருக்கும் பயன்படத் தக்க வகையில் வெளியிட்டுள்ளோம். வாங்கிப் பயன் பெறுவீர். பதிப்பாளர் உரிமையுரை நுண்கலைச் செல்வர் சாத்தன்குளம் அ. இராகவன் அவர்கள் தமிழ்க்கலைகள் பற்றி விரிவாக ஆய்வு செய்து நூல்கள் எழுதியவர். அவர் எழுதிய நூல்கள் இப்பொழுது மீண்டும் அச்சாவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்நூல்கள் மீண்டும் அச்சாகுமா? என்ற சந்தேகத்தில் இருந்த எங்களுக்கு இச் செயல் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் செயலாகும். தமிழர் பண்பாட்டு வரலாறு, கலை வரலாறு, தொழில் நுட்ப வரலாறு, தொல்பொருள்ஆய்வு வரலாறு ஆகிய பல துறைகளில் நுண்கலைச் செல்வர் இராகவனார் எழுதிய நூல்களைத் தமிழுலகம் போற்றிப் பாராட்டும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. பல நூல்கள் கிடைத்தும் சில நூல்கள் கிடைக் காமலும் இருந்ததைக் கண்டு கவலை அடைந்த எங்களுக்கு அமிழ்தம் பதிப்பகத்தார் மூலம் இந் நூல்கள் வெளி வருவது எங்கள் குடும்பத்திற்கும் தமிழ் நாட்டிற்கும் பெரும் சிறப்பு என்றே கருதுகிறோம். தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் கோ. இளவழகன் அவர்களுக்கு எங்களது நன்றி என்றும் உரியது. அமிழ்தம் பதிப்பகத்தின் மூலம் இந்நூலை வெளியிடும் திரு இனியன் அவர்களை நாங்கள் பெரிதும் போற்றிப் பாராட்டுகிறோம். அமிழ்தம் பதிப்பகத்தார் நுண்கலைச் செல்வர் நூல்களை வெளியிடுவதை வாழ்த்தி வரவேற்று மகிழ்கிறோம். இரா. மதிவாணன் திருநெல்வேலி (அறிஞர் அ. இராகவனின் மகன்) நாள் கா. வீரலட்சுமி அம்மையார் 30.12.2005 (அறிஞர் அ. இராகவனின் தங்கை) முன்னுரை தந்தை பெரியாருக்கும் அவருடைய குடியரசு இதழுக்கும் தமிழர், தமிழக வரலாற்றில் தலைமையான இடமுண்டு. அறிஞர் சாத்தன்குளம் அ.இராகவன் தமிழிலக்கியம், சைவ சமயம், வரலாறு, தொல்லியல், கலை, பண்பாடு ஆகிய பல்துறை களிலும் வல்லவர்; ஆங்கிலமும் வல்லவர் கா.அப்பாத்துரை, ந.சி.கந்தையா பிள்ளை, மயிலை சீனி.வேங்கடசாமி போன்ற ஒரு சிலரோடு மட்டுமே ஒப்பிடத்தக்கவர். ஒரு கால கட்டத்தில் (1930களின் முற்பகுதி) அவர் பெரியாருடைய சுயமரியாதை இயக்கத்தோடு மனமார இணைந்து செயல் பட்டவர்; பல்துறை அறிவின் காரணமாக (குத்தூசி குருசாமி, இ.மு. சுப்பிரமணிய பிள்ளை, சாமி சிதம்பரனார் முதலியவர் களைப் போல) அவர் குடியரசின் திறன்மிகு கட்டுரையாளர் களுள் ஒருவராகத் திகழ்ந்தார். இத்தொகுப்பில் உள்ள முதல் 19 கட்டுரைகள் குடியரசில் 1930-33 ஆண்டுகளில் வெளிவந்தன. (கட்டுரைகள் 20-24 குமரன் இதழில் வெளிவந்தவை) இராகவன் பின்னாட்களில் பெரியார் இயக்கத்திலிருந்து சந்று மாறுபட்டாலும அடிப்படை உணர்வுகளில் மாறியவர் அல்லர். 2. ஒவ்வொரு கட்டுரையிலும் இராகவனின் பல்துறை நுண்ணறிவைக் காணலாம். பல செய்தி களைத் தெரிந்து கொள்ளலாம். குறிப்பாகத் தமிழர் சமயம், மெய்யியல் பற்றிய பல செய்திகளை அறியலாம். 3. 26.7.1931லேயே ஹிந்தியும், காந்தியும் என்ற கட்டுரையில் இந்தியால் தமிழுக்கு நேரவிருந்த கேட்டை இராகவன் முன்கூட்டியே உணர்ந்து தமிழர்க்கு விழிப்புணர்வு ஊட்டியவர். எனது இலங்கைப் பயணம் சுவையான பயணக்கட்டுரை; அன்றைய இலங்கையைப் படம் பிடித்துக் காட்டுகிறது. 4. ‘FomuR rhâ¤jJ v‹d? என்னும் கட்டுரையிலிருந்து பெரியாரும் குடியரசும் தமிழக வரலாற்றில் முக்கிய பங்கு வகித்ததை உணரலாம். 1933-1973 கால அளவிலும் பெரியாரும் (குடியரசுக்குப் பின்னர் வந்த) விடுதலை முதலிய இதழ்களும் தமிழக வரலாற்றில் முக்கிய பங்கு வகித்தது அனைவருக்கும் தெரியும். 5. இக்கட்டுரைத் தொகுப்பை வெளியிட்ட பதிப்பகத்தார் தமிழுலகின் பாராட்டிற்குரியர். பி.இராமநாதன் பொருளடக்கம் பதிப்புரை iii உரிமையுரை v முன்னுரை vi 1. கடவுளை நிந்திக்கும் கயவர்கள் யார் 3 2. இந்து மதமும் அதன் கொள்கையும் 31 3. சுயமரியாதை இயக்கத்தைச் சாராத ஆசியர்கள் போதிப்பது ஆதிகமா? 54 4. சாதிக்குறியும் சைவநெறியும் 60 5. சைவர்களின் மனப்பான்மை 80 6. சுயமரியாதை இயக்கமும் காங்கிரசின் மயக்கமும் 86 7. சைவத்தின் உண்மையும் ஜீவகாருண்யத் தன்மையும் 94 8. ஹிந்தியும் காந்தியும் 120 9. சீவகாருண்யச் சமயம் மகளிர் உரிமையை மறுக்குமா? 129 10. எனது இலங்கைப் பிரயாணம் 165 11. பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம் 181 12. குடி அரசு சாதித்ததென்ன? 186 13. சைவக்கோட்டை தகர்க்கப்பட்டது 195 14. கடவுள் வெறியும் மதவெறியும் 200 15. தன்மதிப்பியக்கமும் தனிப்பெருங்கடவுளும் 246 16. தன்மதிப்பியக்கமும் மதங்களும் 254 17. கடவுளுணர்ச்சியும் மதஉணர்ச்சியும் யாருக்குத்தேவை? 260 18. கத்தோலிக் மதமும் பெண்களும் 264 19. இந்திய வீரர் சுயமரியாதைக்கும் ரஷிய இளவரசி சமதர்த்திற்கும் திருச்சியில் திருமணம் 272 20. நாதிகர்கள் யார்? 279 21. காந்தீயம் (அ) நவீன இந்து சமயம் 287 22. சரவதி 294 23. தமிழர்களின் கோயில் மயக்கம் 299 24. பேதமை மாதர்க்கணிகலமா? 305 சாத்தான்குளம் அ.இராகவனாரின் வாழ்க்கைச் சுவடுகள் நெல்லையின் எல்லையில் ஏலே! அண்ணாட்சி வந்தாகளா? என்ன சொன்னாக? எனக்குத்தான் அயித்துப் போச்சு? - எங்காவது இந்தத் தமிழைக் கேட்டால் அது நெல்லை மாவட்டத்தார் குரல் என்று தெரிய வேண்டும். இந்த மாவட்டத்தில்தான் குற்றால அருவியின் கொஞ்சும் இசை! கிருட்டினாபுரத்து சிலைகளின் பேரழகு! ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர்! தன் பொருநையே நாகரிகத்தின் தலைவாயில் என்று போற்றப்படும் ஆதித்தநல்லூர்! சிவஞான முனிவர், குமரகுருபரர், திருமங்கையாழ்வார், குலசேகரஆழ்வார், நம்மாழ்வார், அதிவீரராமபாண்டியர், வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளார், என்றி ஆல்பர்ட்டு கிருட்டினார், திருகூடராசப்பக் கவிராயர் .. இன்னும் இன்னும்.. புதுமைப்பித்தன், மாதவையா, கா.சுப்பிரமணியனார், வையாபுரியார், பூரணலிங்கனார், சோமசுந்தர பாரதியார், பாரதியார், உமறுப்புலவர்.. இன்னும் இன்னும் தமிழ் மீட்பர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்- போன்ற அறிஞர்களின் அணிவகுப்பு இம்மாவட்டத்தின் சிறப்பேயாகும். ஓ! நுண்கலைச் செல்வர் சாத்தன்குளம் அ.இராகவனாரும் பிறந்து பெருமை சேர்த்தது இம்மாவட்டமே! நாகசுரமும், வில்லுப்பாட்டும் இங்கு புகழ் சேர்க்கும் கலைகளாகும். சாத்தான்குளம் நெல்லையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் உள்ள ஊராகும். வடிவேற்கவிராயர், கனகசபாபதிக் கவிராயர், குழந்தை வேல்சாமி போன்ற கவிஞர்கள் பிறந்து புகழ்பெற்ற ஊராகும். நுண்கலைச் செல்வர் அ.இராகவனார் அவர்கள் 22.04.1902 ஆம் ஆண்டு தோன்றினார். இவர்தம் பெற்றோர் திருவாளர் அருணாசலக் கவிராயர், திருவாட்டி ஆவுடையம்மாள் ஆவர். இவரது பாட்டனார் வடிவேற்கவிராயர் சிறந்த முத்தமிழ்ப்புலவர். இவரது முப்பாட்டனார் வீரபாகு ஓதுவார் மிகச்சிறந்த கவிஞர்; அதோடு வழக்கறிஞரும் கூட! இவரது முப்பாட்டனாரின் தம்பி அருணாசலக் கவிராயர் திருவனந்தபுரம் அரண்மனைப் புலவராக ஒளி வீசினார் என்பது மட்டுமின்றி குட்டிக் கவிராயர் என்ற அடைமொழியோடும் வாழ்ந்தவர். நுண்கலைச் செல்வரின் பிள்ளைத் திருப்பெயர் இரத்ன இராகவ உதய மார்த்தாண்டன் கவிராயர் என்பதாகும். பின்னர்தான் இராகவன் என்று மட்டுமே அழைக்கப்பட்டார். இளந்தைப் பருவத்தில் பிறந்த சாத்தான்குளத்திலேயே தொடக்கக்கல்வி பயின்றார். நெல்லை அரசினர் பயிற்சிப் பள்ளியில் ஆசிரியம் பயின்று ஆசிரியரானார். சுப்பிரமணியக் கவிராயரிடம் தமிழ் முடுதறக் கற்றும், தொண்டைமான் பிரம்ம முத்தையனிடம் ஓவியமும் கற்று சிறந்த ஓவியராக விளங்கினார். ஆசிரியத்தின் செழுமையில் 1924-1930 முடிய சமாலியா தொடக்கப்பள்ளியில் ஆசிரியப் பணியாற்றினார். ஆழ்வார் அம்மாள் பெண்கள் பள்ளி, இபுராகிம் முசுலீம் பெண்கள் பள்ளி, சமாலியா முசுலீம் பள்ளி, திருநாவுக்கரசு படிப்பகம், புலமாடன் செட்டியார் மேனிலைப்பள்ளி போன்ற பல்வேறு நிறுவனங்களைச் சொந்த ஊரிலேயே தொடங்கிப் பெருமை சேர்த்தார். இயக்கங்களின் வளமையில் சுயமரியாதை இயக்கம் நிகரமைய (சோசலிச) இயக்கம் பேராய இயக்கம் (காங்கிரசு) ஆகிய இயக்கங்களில் பொறுப்பு வகித்தார். நெல்லை மாவட்டப் பேராய உறுப்பினர், திருச்செந்தூர் வட்டப் பேராயச் செயலாளர், தமிழ்நாடு பேராயக் கட்சி உறுப்பினர் என இவர் அரசியலிலும் காலுன்றியிருந்தார்.பகுத்தறிவுப் பகலவன் பெரியாரின் நட்பு கிடைத்த பின்னர் ஈரோடு பகுத்தறிவுக் கழக அமைச்சரானார். ஏராளமான பகுத்தறிவு நூல்களை வெளியிட்டார். இவரெழுதிய, கடவுளை நிந்திக்கும் கயவர்கள் யார்? “bg©QÇikí« kjK«” v‹w üšfŸ gšyhÆu« gofŸ ɉW ‘ïuhft‹ ah®? என்பதைத் தமிழுலகம் அறியச் செய்தது. குடும்பத்தின் விளைவில் சாத்தான்குளம் அருணாசலக்கவிராயருக்கும் ஆவுடையம்மாளுக்கும் மக்கள் அறுவர். இவரே முதல் மகன். குடும்பத்திற்கும் .. கொஞ்சு தமிழுக்கும் இவரே முதல்வர். 2. குமார வடிவம்மாள் 3. வடிவேல் (இளந்தையிலே மறைந்தார்) 4. குமாரசாமி 5. காந்திமதி ம.பரமசிவன் .. ஒரே ஒரு பெண்மகள். அவர்தாம் ச. வீரலட்சுமி அம்மையார். இராகவனார் தாய்மாமன் மகளையே திருவாட்டி சுந்தரத்தம்மையாரை மணந்து இனிய இல்லறத்தின் நன்கொடை யாக மல்லிகா, சுதந்திரா,தமிழரசி, இரா.மதிவாணன் என மூன்று பெண்மக்களையும், ஒரு ஆண்மகனையும் வழங்கினார். தன் மக்களை பலர் மறுத்தபோதும் தமிழ வழிக் கல்வியிலேயே சேர்த்துப் படிக்க வைத்துள்ளார். தன் தங்கையார் திருமணம் நீங்கலாக எல்லாத் திருமணங்களையும் சீர்திருத்தத்திருமணமாகவே நடத்தித் தமிழுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார். தாயிற் சிறந்தொரு கோவிலுமில்லை என்று அடிக்கடி சொல்லியும் தாயும் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தார். சீவானந்தம், சாந்தம் சுந்தரவடிவேலு- போன்ற இவரோடு நட்புக் கொண்டு தமிழில் கொண்டுள்ள ஐயப்பாடுகளை அறிந்து கொள்வார்களாம். குறள் ஒப்புவித்தால் - காசு கொடுத்து ஊக்கப்படுத்திப் பாராட்டுவது இவரது இனிய வாழ்வியலாகும். அது இளஞ்சிறார்களாயிருத்தல் வேண்டுமாம்! அயலகக் களிப்பில் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற அயலகங்களுக்குச் சென்று மீண்ட நுண்கலைச் செல்வர் தமிழறிஞர்களான எங்கும் செல்லும் காசு.. கா.சுப்பிரமணியனார், தீந்தமிழ்ப்புலவர் திரு.வி.கலியாணசுந்தரனார், தந்தை பெரியார், தாரூல் இசுலம் ஆசிரியர் பா.தாவூத்சா, இலங்கை முதலமைச்சர் பண்டாரநாயக, கண்டி மேயர் சார்ச்-டி-செல்வா, அமைச்சர் பெரி.சுந்தரம் , மேயர் சரவணமுத்து, தமிழக சமன்மைச் சிந்தனையாளர் ப.சீவானந்தம் போன்றோரோடு நெருங்கிய தொடர்பு அவர்களால் பன்முறை பாராட்டப் பெற்றார். 1935 ஆம் ஆண்டு பெரியாரிடமிருந்து விலகி தோழர் ப.சீவானந்தத்தோடு சேர்ந்து சுயமரியாதை சமதர்மக் கட்சி என்றொரு கட்சியை நிறுவி அறிவு என்னும் திங்களேட்டிற்கம் ஆசிரியரானார். 1932இல் இலண்டன் பகுத்தறிவு சங்கம், விடுதலைச் சிந்தனையாளர் மன்றம், அமெரிக்காவிலுள்ள உண்மை நாடுவோர் கழகம்,போன்ற அமைப்புக்களோடு தொடர்பு கொண்டு உறுப்பினராகி பல்வேறு நூல்களை மொழியாக்கம் செய்து தந்தார். இலங்கையில் மனிதருள் மாணிக்கம் நேரு பெருமகனுக்கு ஆங்கிலத்திலும், தமிழிலும் நினைவு மலர் வெளியிடப் பெரிதும் உதவினார். சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தமிழ் முரசு என்ற இதழில் தொடர்கட்டுரை எழுதி வர அதன் ஆசிரியா கோ.சாரங்கபாணி வேண்டினார். தமிழர் பண்பாட்டில் தாமரை என்ற இவரது நூல் இளங்கலை வகுப்புகளுக்குப் பாடநூலாக மதுரைப் பல்கலைக்கழகம் ஏற்றுப் புகழ் கொண்டது. ஆய்வின் கூர்மையில் அவரது ஊருக்கு அண்மையிலுள்ள ஆதித்தநல்லூருக்குச் சென்றும், பல்வேறு பொருள்களைப் பார்வையிட்டும், சென்னை அருங்காட்சியகம் சென்றும் ஆய்வு செய்துதான் ஆதித்தநல்லூரும் பொருநைவெளி நாகரிகமும் என்ற நூலை எழுதியுள்ளார். சிந்து வெளி நாகரிகத்திற்கு ஒப்பிட்டுப் பார்த்து ஏராளமான கருவிகள், பொருள்கள் ஆகியவற்றின் படங்களை, அணிகலன்கள், விளக்குகள் ஆகியவற்றின் படங்களைத் தொகுத்து வெளியிட்டிருப்பது .. இவரது பனிமலை முயற்சிப் பாங்கினை- நமக்கு உணர்த்துகிறது. யாருமே செய்யாத புதுமையாக நுண்கலைச் செல்வர் அவர்கள் தன் மனைவியார் திருவாட்டி சுந்தரத்தம்மையாரைக் கொண்டு கலைநூற் பதிப்பகம் நிறுவி பல நூல்களையும் வெளியிட்டுத் தமிழ்ப் பணி செய்தார் என்பது உலக வரலாற்றில் புதுமையாகும். தம்மிடமிருந்த ஏராளமான காசுகள், நூல்கள், அரிய பொருள்கள் - ஆகியவற்றைத் திருச்சியிலுள்ள ஈபர் கண்காணியர் கல்வி நிறுவனத்திற்கு வழங்கினர் என்று அறிகிறோம். அவை அரிய கலைப் பொருள்களாகத் துலங்குகின்றன. இலங்கையில் ஒரு சின்ன நூல் அந்தக் காலத்தில் நூறு உரூபா கொடுத்து வாங்கி யுள்ளார் எனில் அவரது அறிவுத் தாகம் நமக்குப் புலப்படும். பாராட்டுத் தேன்மழையில் 1966 ஆம் ஆண்டு தென்னிந்திய தமிழ்ச் சங்கம், சட்டப் பேரவைத் தலைவர் மாண்பதை செல்லப்பாண்டியனார் தலைமையில் தமிழ்த்திரு குன்றக்குடி அடிகளார் இவருக்குப் பொன்னாடை போர்த்தி நுண்கலைச் செல்வர் என்ற பட்டத்தை வழங்கிப் பாராட்டியது. 1937ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற முகம்மது நபி உலக சமாதானத்திற்குச் செய்த தொண்டு என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் இவர் தங்கப் பதக்கம் பெற்றார். 1966-உலகத் தமிழ் மாநாடு மலேசியாவில் நடைபெற்ற போது தமிழ்நாட்டுக் காசுகள் என்ற கட்டுரை மிகச் சிறந்த கட்டுரையாகப் போற்றப்பட்டது. சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழ்மாநாட்டில் பழங்கால மரக்கலங்கள் 46 வடிவங்களை நெய்மவண்ணத்தில் (Oil paint) வரையப் பெற்றுக் காட்சிக்காக்கி பேரறிஞர் அண்ணாவே பெரிதும் போற்றியும், பாராட்டியும் மகிழ்ந்தார். தமிழ்வளர்ச்சி மன்ற உறுப்பினராகி தமிழ்நாட்டு வரலாறு தொல்பழங்காலம் நூல் வெளியிடும் குழுவில் இவரும் ஒரு உறுப்பினர் என்பது நினைந்த போற்றத்தக்கது. தமிழர் நாகரிகத்தை - பண்பாட்டை விளக்கும் .. ஏராளமான கலை நூல்கள் .. கலைப்பொருள்கள்..நாணயங்கள்,புதிய..ahU« கண்டுபிடிக்காத பழந்தமிழ்ப் பொருள்கள்.. இவர் தேடித் தேடிச் சென்று பல்வேறு பணிகளில்தம்kஈடுபடுத்திக்கொண்டிருந்தார். முடிவின் மடியில் மதுரைக்காமராச®பல்கலைக்கழக«.. தமிழ்ச் செம்மல்கள் பேரவை நடத்தும் ஐந்தமிழ் விழா.. 7.3.1981 காலை 10.00 மணியளவில் பழந்தமிழர் அணிகலன்கள் .. அரிய பேச்சு .. நூலாக வந்துள்ளது.. ஐயோ.. 8.3.1981 காலை.. 10.00 பழந்தமிழர் சிற்பக்கலை - இது தலைப்பு. நுண்கலைச் செல்வர் சாத்தான்குளம் அ.இராகவன் என்ற தமிழ்ப் பேரறிஞர்.. உரையாற்றிக் கொண்டிருக்கிறார்.. உணர்ச்சியுரை.. ஐயோ! மயக்கமாக வருகிறதே என்கிறார். .. மருத்துவமனைக்குச் கொண்டு செல்கின்றனர்..11 மணிக்கு தம் எழுபத்தொன்பதாம் அகவையில் பேரா இயற்கை எய்துகிறார்.. 22.4.1902லே தோன்றிய தமிழொளி..08.03.1981 .. மறைகிறது! சாவிலும் தமிழ்ப்படித்தே சாக வேண்டும் - என்றன் சாம்பலும் தமிழ்மணந்தே வேக வேண்டும் - என்ற கவிதை வரிகள் இவர்தம் புகழைப் பேசிக்கொண்டே இருக்கிறது ஆ.முத்துராமலிங்கம் தச்சநல்லூர் நுண்கலைச் செல்வர் சாத்தன் குளம் அ. இராகவன் தொகுதிகள் சமூகச் சீர்திருத்தம் 1. Fடியரசுக் கட்டுரைகள் ப©gh£L வரலாறு 2. தமிழர் பண்பாட்டில் தாமரை 3. தமிழ்நாட்டு திருவிளக்குகள் 4. தமிழக சாவகக் கலைத்தொடர்புகள் 5. இறைவனின் எண்வகை வடிவங்கள் 6. வேளாளர் வரலாறு தொழில்நுட்ப வரலாறு 7. நம்நாட்டுக் கப்பற்கலை 8. jமிழ்நாட்டு அணிகலன்கள் 9. தமிழ்நாட்டு படைகலன்கள் 10. தமிழ்நாட்டு கோயிற் கட்டிடகலை - 1 தமிழ்நாட்டு கோயிற் கட்டிடகலை - 2 11. இசையும் யாழும் தொல்பொருள் ஆய்வு 12. கோநகர் கொற்கை 13. ஆதிச்ச நல்லூரும் பொருநைவெளி நாகரிகமும் தமிழியல் ஆய்வு 14. அறிவு இதழ்க் கட்டுரைகள் 15. ஆய்வுக் கட்டுரைகள் (இதுவரை தொகுக்கப்படாதவை) குடியரசுக் கட்டுரைகள் கடவுளை நிந்திக்கும் கயவர்கள் யார்? பீடிகை யான் பேசப்புகு முன்னர் பீடிகையாக இரண்டொரு மொழிகள் பகரப் பெரிதும் விழைகின்றேன். அஃதென்னவெனில், சுயமரியாதைக்காரர்கள் கடவுளைப்பற்றி கவலைப்படாதவர்கள்; கடவுள் வணக்கத்தைவிட நல்லொழுக்கமும் மனித ஜீவ காருண்யமுமே சிறப்புடையதென்று செப்புகிறவர்கள்; கடவுள் சம்பந்தமான ஆபாசக்கதைகள் முதலியவற்றில் வெறுப்புக் கொள்பவர்கள். அப்படிப்பட்டவர்களுக்குக் கடவுளை நிந்திப் பவர்கள் யார் என்னும் ஆராய்ச்சி ஈண்டு வேண்டற்பாலதா? என்ற ஓர் அய்யம் உங்களில் பலருக்குத் தோன்றலாம். சில காலத்திற்கு முன்னர் அத்தகைய ஆராய்ச்சி வேண்டாமென்றே யானும் கூறினேன். ஆனால், யாண்டும் பல வைதீகர்கள் சுயமரியாதைக்காரர்கள் கடவுளை, சாத்திரங்களை, சமயங்களை, நிந்திக்கும் கயவர்கள் என கடவுள் பேரில் மூடப் பைத்தியம் கொண்ட பாமரமக்களிடம் கூறியும் புனித இயக்கக் கொள்கைகளை, அன்னார் காதுகொடுத்துக் கேட்கவும், அரிய பெரிய தொண்டாற்றும் நம் பத்திரிகைகளைக் கண்ணெடுத்துப் பார்க்கவும்கூடாது எனப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். எடுத்துக்காட்டாக, திருநெல்வேலி சைவப் பெரியோர்கள் என்று தங்களைத் தாங்களே கூறிக்கொள்ளும் சில தோழர்கள் கையெழுத்திட்டு இந்த நம் மாநாட்டிற்குப் பொது ஜனங்களை போகாதிருக்கும்படி வேண்டி ஒரு நோட்டீ வெளியாக்கியிருக் கிறார்கள். இவ்வாறாகவே மற்றும் சில சுயநலத்தோர் ஆதிகப் போர்வையைப் பூண்டு கொண்டு நம் மாசற்ற கொள்கைகளை யெல்லாம் திரித்துக்கூறி நம்மேல் பொதுஜனங்கள் வெறுப்புக் கொள்ளுமாறு நாம் கடவுளுக்கே விரோதிகள் என்றும், கடவுளை நிந்திக்கும் கயவர்கள் என்றும், புகன்று வருவதாலேயே கடவுளை நிந்தித்தோர், நிந்திக்கின்றனர். நிந்திப்போர் யார்? என உங்களிடம் ஒரு சொற்பொழிவு நிகழ்த்தினால் அவற்றைச் செவியுற்ற நீங்கள் அவற்றின் உண்மைகள் பலவற்றைப் பாமர மக்களுக்கு எடுத்தோதி கடவுளை நிந்திக்கும் கயவர்கள் நாமா? அன்றி, இவ்வாதிகர் களும் வைதீகப் புரோகிதப் பண்டிதக் கூட்டத்தினருமா? என்பதை நன்கறியச் செய்து அன்னவர்களின் பழிப்புக்கும் மிரட்டலுக்கும் ஒரு பொழுதும் ஆட்படாமல் இருக்கும்படி செய்வீர்கள் என்னும் உறுதிகொண்டே இச்சொற்பொழிவை நிகழ்த்த முன்வந்தேன். இன்றுகூட எம் நண்பரொருவர் எம்மை நோக்கி, சுய மரியாதைக்காரர்கள் சமூக முன்னேற்றத்திற்குத்தானே உழைக்கின் றார்கள் - அவர்கள் ஏன் கடவுளைப்பற்றியும், சமயங்களைப் பற்றியும், புராணங்களைப்பற்றியும் பேசவேண்டும்? அவ்வாறு பேசாமல் தங்கள் வேலையைச் செய்துகொண்டே போனால் அவர்களுக்கு மக்களின் பேராதரவு பெரிதும் உண்டாகும் என்று கூறினார். இவ்வபிப்பிராயத்தை மற்றும் சிலர் கொண்டிருக்கி றார்கள். ஆனால், அவர்களெல்லாம் சமூக முன்னேற்றத் துறையி லிறங்கிப் பாடுபட்ட அனுபவம் ஒரு சிறிதுமில்லாதவர்கள் என்று தான் கூறவேண்டும். ஏனெனில் சமூகப் புனருத்தாரண வேலையில் நாம் உழைக்கப் புகும்பொழுது நம் அருந்தொண்டிற்கு இடையூறாக நமக்குக் குறுக்கே வந்து நிற்பவைகள் பெரிதும் கடவுள், புராணம் சமயம் என்பவைகளே. உதாரணமாக நம் விழுமிய கொள்கைகளாக பெண்கல்வி, பெண்களின் சொத்துரிமை, மறுமணம், விவாகரத்து, வாலிப விவாகமொழித்தல், சமத்துவம், சகோதரத்துவம், தீண்டாமை, சாதிபேதம் ஆகியவற்றையொழித்தல், மூடநம்பிக்கையையொழித்தல், பகுத்தறிவை வளர்த்தல், மக்களுக்குள் ஒற்றுமையை உண்டாக்கல் முதலிய எல்லாச் சமுதாய முன்னேற்றக் கொள்கைகளுக்கும் வைதீகர்கள் எங்கள் கடவுள் இப்படிச் சொல்லியிருக்கிறார், நீங்கள் கூறுவதற்கு சாதிரத்தில் ஆதாரமில்லை, கந்தபுராணத்திலே இவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது, சிவ புராணத்திலே அப்படிச் சொல்லப் பட்டிருக்கிறது, மீன் புராணத்திலே அதற்கு ஆதாரம் கிடையாது, பன்றி புராணத்திலே அதை அனுமதிக்கவில்லை, கருட புராணத்திலே உங்கள் கொள்கைகளைக் கண்டிக்கிறது என்றும், சிலர் எங்கள் சமயம் பகுத்தறிவிற்கே விரோதம். உங்கள் கொள்கை களுக்கெல்லாம் அதுஅனுமதி நல்கவில்லையென்றும் கூறி நீதியும் பரிசுத்தமும் பொருந்திய நம்மியக்கத்தை வெற்றிபெறச் செய்யாது தடுத்து மக்களை விலங்குகளினும் கடையராய்க் கருதித் தங்கள் சுயநலத்திற்கு என்றென்றும் பழுதுவராமல் தடுக்க கடவுள், சமயம், வேதம், புராணம் முதலியவற்றை ஆயுதமாகக் கொண்டு நம்மியக் கத்திற்கு மட்டுமல்லாமல், மனித சமூக முன்னேற்றத்திற்கே பண்டு முதல் இன்று வரை இடர் விளைவித்துக் கொண்டு வருகின்றனர். பண்டைக் காலத்திலே தோன்றிய சில சமூக சீர்திருத்தப் பெரியார்களுக்கு இத்தகைய எதிர்ப்பு வந்த காலத்தே அவர்கள் கடவுள், வேதம், சமயம், புராணம் முதலியவற்றின் பெயரைக் கேட்ட மாத்திரத்திலே அதற்கு கட்டுப்பட்டும், எதிர்க்க அஞ்சியும் சீர்திருத்த இயக்கங்கள் தோல்வியுற்றது என்று நாங்கள் அறிந்ததே. இன்று எங்கள் முயற்சிக்கு எதிராகக் கொண்டுவரப்படும் கடவுள் வாக்கு, சமயம், புராணம் முதலியவற்றை பகுத்தறிவு என்னும் உரை கல்லில் உரைத்துக் குடிஅரசு முதலிய சர்ச் லைட்டை (சோதனை விளக்கை)ப் பிடித்து நீங்கள் யாவரும் அதன் உண்மையான மாற்றையுணர்ந்து எங்களோடு சேர்ந்து எம் எதிரிகளை ஒழித்து எங்கள் நல்லியக்கம் உலகெலாம் ஓங்கும்படிச் செய்ய உங்களை எமக்குத் துணையாக அழைக்கின்றோம். இஃதின்றேல், இத்துறைகளில் யாங்களிறங்கி எம் அரிய நேரத்தை வீணாக இதிற்செலவழித்திரோம். நாங்கள் கடவுள் ஒன்றில்லையென்றோ, பலவுண்டென்றோ, அவற்றிற்கு மனைவி மக்களுண்டென்றோ, கடவுள் நீண்டநாள் வாழ மக்க ளாகிய நாம் வாழ்த்த வேண்டுமென்றோ சொல்லுகின்றவர்கள் என்று எங்களை எவரும் கூறார். மக்கள் முன்னேற்றத்திற்குத் தடையாய், சில ஜாதியார்களின் ஆலயப்பிரவேசத்திற்கு மாறாய், அவர்களுட் புகுந்தால் யான் தீட்டுப்பட்டுப் போவேன் என்றோ அல்லது கோயிலைவிட்டு வெளியே போய்விடுவேன் என்றோ கூறும் சாமியோ, சாத்திரமோ எதுவானாலும் அவை மனித சமுதாயத்திற்கு ஏற்றவை அல்ல என்ப தோடு, அவற்றை ஒழியச் செய்ய வேண்டுமென்று அதன் வண்ட வாளத்தை உலகறியச் செய்ய உண்மையாய் உழைக்கும் கூட்டத்தார், இவ்விந்திய நாட்டில் ஒரே கூட்டத்தார்தான் உண்டென்றும், அவர்கள்தான் சுயமரியாதைக்காரர்களாகிய நாங்கள் என்றும் மிகமிகப் பெருமையுடன் கூறுகின்றதோடு, அன்பே தெய்வம், அறிவே கடவுள், முயற்சியே சிவம் என்று கூறும் சமயத்தார் யாராயினும் அவர்களுடன் ஒத்துழைக்க ஆசைப்படுகிறோம் என்றும், அவர்களது அப்படிப்பட்ட கடவுள் தன்மையைப்பற்றி எங்களுக்கு எள்ளளவும் பகையில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். ஆகவே, இவ்வாறு கூறும் நாங்கள் கடவுளை நிந்திப் பவர்களா? என்பதை யோசித்துப் பாருங்கள். அறிவுடையார் உண்மையைக் காணத்தயங்கார். எனவே, இனிக் கடவுளை நிந்திக்கிறவர் யார்? என ஆராய்வோம். கடவுள் தமிழ்நாட்டார் நம் தெய்வத்திற்கு வழங்கி வந்த பெயர்களில் சிறப்பானது கடவுள், மால், முருகன், முதலிய பெயர்களேயாம். முதலாவதாக கடவுள் என்னும் மொழி தனித் தமிழ்மொழி. அதற்குப் பொருள் கடந்த உள்ளமென்பதே. பண்டைத் தமிழ் மக்கள் இறைவன் ஒருவன் உளனா? அவன் எங்குளன்? எவ்வா றிருப்பான்? என்னும் துறையில் பல ஆண்டுகள் ஆராய்ந்து தன் சக்தியையும் அறிவையும் காலத்தையும் வீணே கழித்து முடிவில் அஃது மனிதன் அறிவைக் கடந்துள்ளது. இத்துறையிலிறங்கி ஒருவன் முயன்று முடிவுகாணல் அசாத்தியமான காரியம் என்று கருதி கட+வுள்=கடவுள் அதாவது, உள்ளத்தைக் கடந்துள்ளது என்ற பெயரை முதன்முதல் நல்கினர். உள்ளத்தைக் கடந்துள்ள ஒன்றை யறிய மனிதன் ஆராய்தல் அறிவுடைமையன்று என்று முடிவு கட்டிவிட்டனர். அதைத்தான் இன்று தன்மதிப்பியக்கத்தாகளாகிய நாங்கள் பண்டைக்காலத் தமிழர் முடிவுகட்டியவாறு நில்லுங்கள். கடவுள் உண்டா? இல்லையா? என்ற ஆராய்ச்சியிலிறங்காதீர்கள். கடவுள் ஒன்றிருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி நன்மை என்பதை நாடுங்கள், தீமை என்பதை விலக்குங்கள், ஒழுக்கத்தைக் கடைப்பிடியுங்கள் என்கிறோம். மேனாட்டு அறிஞர்கள் தங்கள் அறிவின் நம்பிக்கையாலேயே இந்தியாவிலிருந்துகொண்டு அமெரிக் காவிலிருக்கும் மனிதன் நேருக்கு நேராக நிற்பதுபோன்று அவனுடன் உரையாடுவதுடன், ஒரு வாரத்தில் அங்கிருந்து இங்கு வரவும் மக்கள் முதுமை நீங்கி இளமையெய்தவும் நீண்டகாலம் நாம் சாகாதிருக்க வும், பசி நோய் மக்களை வந்தனுகாதிருக்கவும், சந்திரலோகத்திற்குச் செல்லவும், பொம்மைகள் அறிவுடைய மனிதன்போல் பேசவும், நடக்கவும், மனிதன் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் கூறவும், சில இறந்தவர்களை எழுப்புவதுமான காரியங்களைச் செய்வதோடு, இன்னும் பல அபூர்வச் செயல்களையெல்லாம் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கும் இக்காலத்தே உள்ளதைக் கடந்துள்ள ஒன்றை, உருவமற்ற ஒன்றை பண்டைத் தமிழர் பல நாட்களாய் முயன்று பயன்பெறாது தோல்வியுற்ற ஒன்றைப்பற்றிய காரியத்தில் தலை யிட்டு, தேவாரத்தில் இப்படிச் சொல்லியிருக்கிறது; பிரபந்தத்தில் அப்படி சொல்லியிருக்கிறது; அவர் இப்படிச் சொன்னார்; இவர் அப்படிப் சொன்னார் என்று ஆகாயக் கோட்டைக் கட்டி அதற்குப் பொருள் இப்படித்தான் என்று கூறி, ஒருவரோடொருவர் கடவுள் நிலைப் பற்றிச் சண்டையிட்டு, ஏன் உங்கள் அறிவையும் காலத்தை யும் வீணாக்குகின்றீர்கள்? என்று யாங்கள் கூறுகின்றோம். மேற் கூறிய எம் கொள்கைகளை ஆதரித்து கவீந்திரராகிய ரவீந்திரநாத் தாகூரும், அறிஞர் காந்தியாரும் கூறிய கீழ்க்கண்ட நன்மொழிகளை ஆராய்க. எனக்கு உருவ வழிபாட்டில் சிறிதும் நம்பிக்கையில்லை. வணக்கம் வேண்டாம். கோயில் சென்று கும்பிட வேண்டாம். சாம்பிராணி முதலியன செலவு செய்து வணக்கம் புரிய வேண்டாம். தாழ்த்தப்பட்டவர்களையும், தீண்டத்தகாதவர்களென்று கொடுமை செய்யப்பட்டவர்களையும், நெற்றிவேர்வை நிலத்தில் சிந்த சரீரத்தால் வெய்யலில் பாடுபட்டு உழைக்கின்ற ஏழைகளையும் பார். அவர்களைக் கவனிப்பதில் கடவுளைப் பார் என்று தாகூரும், நெறி தப்பியொழுகுபவனொருவன் கடவுளொருவர் இருக்கி றார் என்பதைப் பூரணமாக நம்பினாலும் கடவுளிருக்கிறாரென்ற விஷயத்தையறிந்த இன்னொருவன் அறநெறிபற்றி யொழுகுவானா னால், பின்னால் சொல்லப்பட்ட இவனே உண்மையான பக்தனா கின்றான். பகவானைச் சேரும் வழியை (மன்னுயிரைத் தன்னுயிர் போலெண்ணுதலை)த் தவறவிட்டு நடப்பவன் இறைவனிருப்பதை யறிந்தென்ன? அறியாதிருந்தென்ன? என்று காந்தியாரும் சொல்லி யிருக்கிறார்கள். இப்படிச் சொன்ன இவர்களெல்லாம் சுயமரியாதைக்காரர் களல்லவே. நமது ஆதிகர்கள் இவர்களுக்கு இன்றைய நாள் வரை நாதிகப்பட்டம் நல்காதிருக்கும் காரணம் என்னவோ? யாம் அறிகிறோம் - ஆதிகர்கள் என்ன கூறினும், இவ்விரு பெரியோர் களும் கடவுள் பேரில் மிகப் பைத்தியங் கொண்டோர்களென உலகம் நன்கு அறியும். முருகன் தற்காலத்தில் கடவுள் என்ற மொழியை எல்லாச் சமயத்தாரும் ஒரு பொதுப்பெயராக ஒப்புக்கொள்கின்றனர். தமிழ்நாட்டின் சைவ சமயத்தார் பெரும்பாலும் கொண்டாடும் தெய்வத்தின் பெயரான முருகன் என்னும் மொழியும் தனித்தமிழ் மொழியே. முருகன் என்னும் வார்த்தை முருகு என்பதிலிருந்து உண்டாயிற்று. முருகு என்பதற்கு அழகு, மணம் என்னும் பொருள்களுண்டு. எனவே முருகன் என்பதற்கு அழகு, மணம் முதலியவற்றைக் கொடுப்பவன் என்று பொருள் கொள்ளலாம். ஆங்கிலம் படித்த சில சைவப் புலவர்கள் சிலரும், இயற்கைவாதிகள் சிலரும் முருகன் என்னும் பெயரைக் கொண்டு தமிழர் தெய்வநிலையைப்பற்றி ஆராய்ந்தறிந்த தன்மையை வியந்து பாராட்டுகின்றனர்; புத்தகம் எழுதுகின்றனர்; பத்திரிகைகளில் வெளியிடுகின்றனர். அவர்கள் கூறும் இயற்கைத் தெய்வமாம் முருகனைப்பற்றியவற்றிற் பெரும்பாலான எங்கட்கு உடன்பாடே. பண்டைய காலத்தில் தமிழ் மக்கள் இயற்கையோ டியைந்த வாழ்வு நடத்தினர். இயற்கையில்லமாகிய மலைப்பாங்கில் தான் பெரிதும் வசித்து வந்தனர். ஆண்டுள்ள நறுமணம் நாறும் நன் மலர்களின் இனிய வாசனையை நுகர்ந்து ஏதோ உருவமில்லாத ஒரு தன்மை (இயற்கை) நம் மனமின்புற வாசனையை (முருகை) நல்குகின்ற தால், இதை அவனுக்கு இரண்டு மனைவிகளுண்டு - அவர்களில் வள்ளியென்னும் தமிழ்மாதை ஏமாற்றி மணந்துவிட்டான் என்றும், அவளைக் கற்புடையாள் என்றுகூடச் சொல்ல வழியற்று யானை போன்ற பருத்த உருவமுடைய விநாயகனைக் கண்டு பயந்து சுப்பிரமணியனைக் கட்டிக்கொண்டாள் என்றும், சுப்பிரமண்யர் வாகை மலரையொத்த மிருதுவாகிய மேனியும், தளிர்கள் போன்ற கைகளும், குடங்களோ அல்லது யானை மதகமோ யென்றிருக்கும் தனங்களும், வர்ண நிறமான அவயங்களும் வாய்த்த வள்ளியைச் சிறிது நேரம் கெட்டியாகத் தன் மார்போடணைத்து மனதினால் சுகத்தை அனுபவித்து ரோமம் சிலிர்த்த திருமேனியுடன் ஆனந்த பரவஸராய் அவ் வின்பத்தைவிட்டுக் கடந்து அப்புறம் செல்லாது மதிமயங்கி இருந்தான் என்றும் (திருச்செந்தூர் முதலிய தல புராணங்கள் கூறுகின்றன. கந்தபுராணமும் இதை ஆதரிக்கின்ற துடன்) அவனுக்கு மாமன், மைத்துனன், வைப்பாட்டி உண்டெனக் கற்பித்தும் அவன் கலியாணத்திற்கும், அவன் மனைவியின் சடங் கிற்கும், அவன் இறந்து போனதற்கும் விழாக்களுண்டாக்கி அவன் எப்பொழுதும் வசிப்பதற்கு ஒரு கல்லு அல்லது செம்பு உருவமுண் டாக்கியும் அவன் பல மனிதர்களைக் கொன்றான் என்றெல்லாம் கூறுவதும் அப் புலவர்களின் ஆதாரமற்ற கற்பனையேயாகும். கோடிக்கணக்கான மக்கள் நாளைக்கு ஒரு நேரத்திய உணவிற்கும் வழியற்றுத் திண்டாட, பலகோடி இளங் குழந்தைகள் பாலில்லாமற் சாகுமிக் காலத்தே கல்லுக் கடவுளுக்குக் குடம் குடமாகப் பால் நெய், தேன் முதலியவற்றைக் கொட்டி உலகோர் நகைக்க அறிவீன மாய் அபிஷேகம் செய்தல்கூடுமா? தோற்றுவிக்கும் தன்மைக்கு முருகன் எனக்கூறினர்; அம்முருகன் மரங்களிலே வசிப்பதாக எண்ணி அம்முருகனை பாக்களால் பாடியும் ஆடியும் துதித்துக் களித்து வந்தனர். அம்மரங்களிடையில் பகலெல்லாம் வீற்றிருப்ப தால் பல நோய்கள் நீங்குவது கண்டு முருகனே அவ்வியாதிகளை நீக்குவதாய் எண்ணினர். இதுவரை யாம் அம்முருகனை - இயற்கைத் தன்மையை ஒப்புக்கொள்கின்றோம். முருகன் என்னும் அவ்வியற்கையைப் புலவர்கள் ஓர் ஆண் மகனாகப் பாவித்துக் கூறுவதும், மற்றும் முன் ஒரு யுகாந்திரத்தில் பரமேவரன் பார்வதிதேவியுடன் பல வருடங்களாக இடை விடாது புணர்ந்துகொண்டிருந்தது கண்டு தேவர்களெல்லாம் பயந்து பரமசிவனிடத்தில் போய் ஈவரா! வெகுகாலமாகத் தாங்கள் கீரீடையைச் செய்வதால் உற்பத்தியாகும் குழந்தை எவ்விதமான ரூபத்துடன் பிறக்குமோ? அது எங்களுக்கு என்ன இடையூறுகளை இயற்றுமோவென்று பயப்படுகிறோம் என்று கூற, அவர் நீங்கள் பூமிதேவியிடம் சொல்லுங்கள்; அவள் நம் புணர்ச்சி யாலுண்டாகும் வீர்யத்தைத் தாங்கிக் கொள்வாள். அப்பொழுது உங்களுக்கு நன்மையுண்டாகும் என்றனர். அவ்வாறே தேவர்கள் கூற்றிற்கு பூமிதேவி சம்மதிக்க பரமேவரன் வீர்யம்(விந்து) மலை போன்று வந்தது. அதைப் பூமிதேவி சில நாட்கள் தாங்கினள். பின்னர் தாங்கமுடியாமல் அக்கினியிடம் தள்ள, அதுவும் பொறுக்க மாட்டாமல் கங்கையில் தள்ள, கங்கை வீர்யத்தைக் கரையில்தள்ள அதிலிருந்து வெள்ளி, செம்பு, வெண்கலம், இரும்பு முதலானது களும், நாணல் காடுகளும் உண்டாயிற்று என்று ராமாயணத்தில் வால்மீகரும், நாணலிலிருந்து சுப்ரமண்யர் (முருகன்) உதித்தார், கோடிக்கணக்கான பொருள் செலவிட்டு கோயில்கட்டி விலை மதிக்க முடியாத நவரத்தினங்களையெல்லாம் அக்கற் கடவுளுக்கு அணிவித்து தேங்காய், பழம், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, பாயசம், பஞ்சாமிருதம் முதலியவற்றைப் படைப்பதும், அத் தெய்வம் தனியாக சாப்பிடக்கூடாதென்று ஒரு பார்ப்பான் கூட யிருந்து சாப்பிடுவதும், நாம் காணிக்கையாக அக்கடவுளுக்குத் தந்த சொத்தை ஒரு கூட்டத்தார் வயறு புடைக்கத் தின்பதும் நியாயமா? என்றால், இவ்வைதீக ஆதிகக் கூட்டம் அறிவிற்குப் பொருத்தமற்ற பதில்களைச் சொல்லி எம்மையும் ஏமாற்றப் பார்க்கின்றனர். இச்சுப்பிரமணியர் வரலாற்றைப்பற்றிக் கூறும் நூல்களை யான் காய்தல் உவத்தலின்றி ஆராய்ந்து பார்த்தபொழுது, ஆரியர்கள் இந்தியாவின் வடபாகத்திலிருந்து தென்னாட்டுத் தமிழர்கள் மேல் (அரசர்கள் மேல்) படையெடுத்து வந்தபொழுது அவர்களுக்குத் தலைமை பூண்டு வெற்றி கிடைக்கச் செய்த வீரர்களில் ஒருவன் என்றே காணக்கிடைக்கிறது. மற்றும் அவ்வீரர்களையெல்லாம் இந் நாட்டுத் தமிழ் மக்கள் வணங்கி வரும் கடவுள்களின் அவதாரமே எனக்கூறி ஏமாற்றிவிட்டதுடன், ஆரியர் தம் தலைவர்கள் இறந்து புதைக்கப்பட்ட இடங்களில் கல்லுருவங்களை நாட்டி வணங்கத் தலைப்பட்டுவிட்டனர். இவ்வுருவ வழிபாட்டைப்பற்றி வடமொழி யாராச்சியையுடைய ஒரு மகான் விக்ரகங்கள் இந் நாட்டு மக்களின் மடமையினால் அவர்களை அடிமையாக்கி விட்டது. முற்றுந் துறந்த முனிவர் தியானத்திலாழ்ந்திருப்பது போல் ஜைனர்கள் தங்கள் விக்ரகங்களை நிர்வாணமாக்கித் தொழுவதை இந்துக்கள் (ஆரியர்கள்) நோக்கி தாங்களும் அவ்வாறே செய்வதோடு, வரவர ஆடையாபரணங்களால் அலங்கரித்தும் வணங்கி வந்தார்கள் என்று கூறுகிறார்கள். அவ்வுருவாரங்கள் எல்லாம் கடவுள் சக்தி கொண்டவைகளாக இருக்குமானால், பெண் கடவுள்களின் உருவாரங்களை அதன் சேலைகளை அவிழ்த்து ஆண் மகனான பூசாரி அதன் அவயவங்களை எல்லாம் தொட்டுக் குளிப்பாட்டுவதற்கு அச்சாமிகளுக்கு கடுகளவு நாணமாவது, மானமாவது இல்லாமல் பிற புருடன் தன்னை நிர்வாணமாக்கி தன் புருடனோடு பள்ளி யறையிற் சேர்ப்பதற்கும் தன் பக்கத்தே நிற்பதற்கும் அனுமதித்துக் கொண்டிருக்குமா? அவர்களின் மக்களான பக்தர்கள் இவ்வலங் கோலத்தைப் பார்த்துக் கொண்டிருப்பது வெட்கமான செய்தி யல்லவா? ஆரியர்கள் தங்களுக்கு நன்மைபுரிந்த அரசர்களையும் தங்கள் எதிரிகளைக் கொடுமை செய்த பராக்கிரமமுள்ள துஷ்டர்களையும் கடவுளின் அவதாரமென்றும், அவர்களின் அயோக்கியத்தனமான நடத்தைகளையெல்லாம் கடவுளின் திருவிளையாடல் எனவும், தேவபாஷையென்று ஆரியர்கள் அறிவின்றிப் புகலும் வடமொழி யில் பாட்டுகளாகவும் இப்புண்ணிய கதையைப் பரமசிவன் பார்வதிக்குச் சொல்ல, பார்வதி வசிஷ்டருக்குச் சொல்ல, வசிஷ்டர் ஸுகருக்குச் சொல்ல, ஸுகர் தவளை (மண்டூக) முனிவருக்குச் சொல்லி தவளை முனி, நரி முனிக்குச் சொல்லி, நரி முனியால் அயோத்தி ஆரியனான அரசனுக்குச் சொல்லப்பட்டது. இதை நம்பினவர்களுக்கு மோட்சம், நம்பாதவர்களுக்கு நகரம் என்று கடவுள் பைத்தியம் மிகுந்த தமிழர்கள் பலரை ஏமாற்றி அவர்கள் ஆராய்ந்து உண்மையையறிந்துவிடாமல் இருக்கும்படி எல்லா வற்றையும் வடமொழியிலெழுதி அதை ஆரியரல்லாதார் படித்தல் கூடாதென்றும் கூறிவிட்டனர். மீறி எவனாவது படித்தால் உலகமே அழிந்துவிடும். ஆதலால், அப்படிப் படித்தவனை அரசன் கொன்று விடவேண்டுமெனச் சட்டம் விதித்துவிட்டனர். இவற்றை நன்றாய் அறிந்த தமிழ்ப் புலவர்களும் மானமற்று தேனினுமினிய தீந்தமிழில் அவ்வாரியப் புழுகுகள் நிரம்பப்பெற்ற தலப்புராணங்களை மொழிபெயர்த்து சுயநலத்திற்காக இன்றுவரை புற்றீசல் போல் தோன்றச் செய்து வருதலை நீங்கள் யாவரும் நன்கறிந்ததே. யானும் ஒரு தமிழ்ப்புலவர் குடும்பத்தைச் சேர்ந்தவன் தான். ஒருவர் சில நூறு ரூபாய்கள் கொடுத்து அவர் தம் ஊருக்கு ஒரு தல புராணம் உண்டு பண்ண வேண்டுமென்றால் அவ்வூருக்குப் பரம சிவனும் பார்வதியும் ஒருமுறை வந்ததாகவும், வந்தவிடத்தில் பார்வதி மாதவிடாய் ஆனதாகவும், அவள் நானம் செய்ததாகவும், அவ் வூரிலுள்ள ஒரு கிணற்றைச் சுட்டிக் காட்டி, அதில் குளித்தவர்கள் பிள்ளையில்லாவிடில் சற்புத்திரனை பெறுவார்கள். தாயை, சகோதரியைப் புணர்ந்த தோஷமானாலும் இப்புண்ய ஜலத்தில் மூழ்கி னால் விமோசனமாகிவிடும். காசியில் ஆயிரம் பார்ப்பனர்களைக் கொன்ற பாவமேயானாலும், ஒரு முறை இத்தீர்த்தத்திலே மூழ்கினால் போய்விடும். எத்தகைய கொடிய பாவத்தைச் செய்தவர்களாயினும் இத்தீர்த்தத்திலே விழுந்திருக்க முத்தியென்று அழகிய தமிழ்ப் பாவில் எழுதிவிட்டால் அதை மெய்யென்று நம்பி நடந்து பாக் களைப் பாராயணஞ்செய்யும் மூடநம்பிக்கைகள் கொண்ட தமிழ் மக்கள் நம்நாட்டில் பலருளர் என்பதை ஒரு தமிழன் என்ற முறை யில் வெகு நாணத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன். ஆகவே, இந்த உண்மைகளை வெளியிலெடுத்துச் சொல்லும்படியான நாங்கள் கடவுளை நிந்திக்கும் கயவர்களா? அல்லது நான் மேலே கூறியபடி எழுதி வைத்தவர்களும், அதைப் பிரச்சாரம் செய்பவர் களும், அப்பிரச்சாரத்தால் பிழைப்பவர்களும் கடவுளை நிந்திக்கும் கயவர்களா? என்பதை யோசித்துப் பாருங்கள். புராணங்களில் நடந்ததாகச் சொல்லப்படும் போர்களெல் லாம் தமிழர்களுக்கும், ஆரியர்களுக்கும் நடந்த சண்டைகளேயாம். அவை மிகப்பட தேவர்களுக்கும், இராட்சதர்களுக்கும் நடந்த போர் களென எழுதப்பட்டிருக்கின்றன. இதைப் பல சைவப் புலவர்கள் ஒத்துக்கொண்டு பண்டைக்காலத் தமிழரசர்களின் ஆட்சியை ஒழிக்க ஆரியர்கள் முனிவர்கள் வேடமிட்டுக் காடுகளில் வீற்றிருந்து கொண்டு உளவு அறிந்து கொண்டிருந்ததோடு, தமிழர்களின் ஆட்சியை ஒழித்துவிட பல வேள்விகள் புரிந்தனரென்றும், இராமர் ஒரு வடநாட்டு ஆரியன் எனவும், இராவணன் ஒரு சிவ பக்ததெனவும் தேவாரத்திலிருந்து மேற்கொள் காட்டி பல நூற்கள் எழுதி இருக் கின்றனர். சுவாமி வேதாசலம் என்னும் மறைமலை அடிகள் தாம் எழுதிய வேளாளர் நாகரிகம் என்னும் நூலின் 61 ஆம் பக்கத்தில் வேள்விகளை ( வெறியாட்டு நாத்திக வேள்விகளை) அழித்து அவற்றைப் புரிந்த ஆரியரை ஒழித்து அவர் தம் செருக்கை அடக்கின. ஆரியரின் இத்தகைய வெறியாட்டு வேள்விகளை அழித்து வந்த வீரர், சூரர், இராவணன் முதலான நிகரற்ற தமிழ் வேந்தர்களே ஆரியர்களால் அரக்கரென்றும், ராட்சதர் என்றும், சூரர் என்றும், அசுரர் என்றும் இகழ்ந்து பேசப்படுவாராயினர் என்றும்கூறி இருக்கிறார். இன்னும் ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் என்றும் செய்யுளாலும், இந்நாட்டில் வாழ்ந்த ஆரியர்களே தேவர்க ளென்றும், அசுரர்களே தமிழர்கள் என்றும் நன்கு புலனாகின்றது. ஆனால், சுயமரியாதைக்காரர்களான நாங்கள் பாமரர்களும் விளங்கிக் கொள்ளுமாறு எளிய தமிழ் நடையில் ஆரியர் தலைவனே நாம் வணங்கும் சுப்பிரமணியன் என்றும், சூரன்தான் தமிழர்களின் தலைவன் என்றும் இவர்களின் சரித்திரங்கள்தான் கந்த புராணத்தில் பொய்யும் புளுகுமாய் எழுதிவைக்கப்பட்டிருக்கிறது என்றும் இன்றுவரை இவ்வாரிய தலைவனாம் சுப்பிரமணியக் கடவுளுக்கு ஆரியன்போல் உடையணிவித்து பூணூலும் போட்டிருப்பதோடு அவனுடைய மனைவிகளுக்குப் பார்ப்பன பெண்டிரைப் போன்ற தாலியைக் கட்டுவதும் தங்கள் கூற்றை வலியுறுத்தும் என்றும் கூறினால், சைவப் பெரியார்க்கு தங்கள் மேல் அளவு கடந்த கோபமுண்டாகிவிடுகிறது. சமரச நோக்கமுடைய அறிஞர்கள் எல்லாம் தங்களின் வார்த்தையையும், சைவப் புலவர்களின் முன்பின் முரணான வார்த்தைகளையும் ஆராய்ந்தால் தனக்கொரு வழக்கும், பிறர்க்கொரு வழக்கும் பேசும் சுயநலப்பிரியர்களென்று அவர்களைக் கூறாதிருக்க முடியவே முடியாதென உறுதி கூறுகிறேன். இவ்வாரியக் கடவுளான சுப்பிரமணியன் கோயிலிற்றான் சில ஆண்டுகளுக்கு முன்னர் நம் தலைவர் திரு. ஆர். கே. சண்முகம் அவர் களின் குலத்தார்களாகிய வாணியச் செட்டியார்கள் எப்பொழுதும் போல் செல்லக்கூடாதெனத் தடுக்கப்பட்டனர். வேதாரண்யத்தில் வாணியச் செட்டியார்களை இன்றும் அனுமதிப்பதில்லை. ஒருநாள் மாலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு ஒரு பிராமணரல்லாதான் கொஞ்சம் எலுமிச்சம் பழங்கள் காணிக்கை யாகக் கொண்டு போனானாம். போகும்பொழுது வழியில் நின்ற பார்ப்பனன் அப்பார்ப்பனரல்லாதானை விளித்து ஓர் எலுமிச்சம் பழம் கேட்டானாம். உடனே அப்பார்ப்பனரல்லாத பக்தன், நான் ஸ்ரீ சுப்பிரமணியப் பெருமாளுக்கு கொண்டு போகிறேன். ஆகையால் உமக்குக் கொடுக்கமுடியாதெனக் கூறிவிட்டுப் போய் விட்டான். பின்னர், அவன் ஒரு மடத்தில் இரவு நித்திரை செய்தானாம். இரவில் அவன் கனவில் அச்சுப்பிரமணிய சுவாமி தோன்றி, அடே, எனது சொந்த அன்பனாகிய பூசுரனாகிய பிராமணனுக்கு (ஆரியனுக்கு)க் கொடுக்க மாட்டேன் என்று கொண்டுவந்த எலுமிச்சம் பழங்கள் எனக்கு வேண்டாம். அவருக்குக் கொடுத்தால் எனக்குக் கொடுப்பது போலாகும். ஆகையால், உன்னிடம் பழம் கேட்ட பார்ப்பன சிகாமணிக்கு அவர் கேட்டபடி பழத்தைக் கொடுத்துவிட்டால்தான் என் சன்னதிக்கு நீ வரலாம் என்று கூறி மறைந்தாராம். அவ்வாறே காலையிலெழுந்து நகர் முழுதுந் தேடி அப்பார்ப்பானைக் கண்டு பிடித்து அவனுக்கு வேண்டிய பழங்களைக் கொடுத்துவிட்டு எஞ்சி நின்றதை சுப்பிரமணியக் கடவுளுக்குக் கொண்டுபோய் கொடுத் தானாம். இக்கதையிலிருந்து நாம் அறியவேண்டியது யாதெனில், ஒரு பார்ப்பானுக்கு ஒரு எலுமிச்சம் பழம் கொடாததற்கு அவன் கனவில் தோன்றிக் கொடுக்கும்படி தூண்டின கடவுள், வாணியச் சகோதரர் களுக்கும், கோயிற்காரர்களுக்கும் கே நடந்த காலத்தில் கோயிற் காரர்களிடத்திலோ அன்றி ஜட்ஜுகளிடமோ கனவில் தோன்றி வாணியச் சகோதரர்கள் எனது அன்பிற்குரிய பக்தர்கள், அவர்களை யெல்லாம் கோயிலுக்குள் அனுமதிக்கவேண்டும் எனச் சொல்லாத தேனோ? மேலும், இச்சுப்பிரமணியருக்குத் தமிழ் மக்களாகிய நாடார் பெருமக்கள் பத்தி மேலீட்டால் ஆயிரம் ஆயிரமாகக் காணிக்கையாகப் பொருள் கொடுக்க அவற்றையெல்லாம் ஒரு ஜாதிக்காரரான பார்ப்பனர் மாத்திரம் தின்று கொழுக்க அக் கடவுள் பார்த்துக் கொண்டிருந்தால் நீதியா? நிச்சயமாய் அக் கடவுள் தமிழ் மக்களின் - ஏன் உலக மக்களின் பிதாவாக இருந்தால் இவ்வாறு தன் வாயைப் பார்ப்பனரல்லாதார் விஷயத்தில் மாத்திரம் பொத்திக் கொண்டிருத்தல் ஏன்? இக்கேள்விகளுக்குச் சுயமரியாதைக்காரர்கள் சுப்பிரமணியன் ஆரியக் கடவுள் என்றும், அவர் சரித்திரத்தை ஆராய்ந்தால் பல இடங்களில் பொய்யாய் இருத்தல் வேண்டு மென்றும் தமிழ்மக்களையும் அவர்களின் தலைவராம் சூரனையும் இழிவுபடுத்தி எழுதப்பட்டிருக்கிறதென்றும் எழுதுகிறார்கள். இதற்காகவே எங்கள் மீது சைவப் பெரியார்கள் சீறி விழுகிறார்கள். ஆனால், சைவ சமய ஆராய்ச்சி நிபுணரான பல்லாவரத்துப் பண்டிதர் சுவாமி வேதாசலம் அவர்கள், வேளாளர் நாகரிகம் பக்கம் 70இல் இன்றைக்கு அய்நூறு ஆண்டுகட்கு முன் தமிழ்நாட்டின்கண் இயற்றப்பட்ட கந்தபுராணத்தும் அதற்குச் சிறிது காலம் பிற்பட்டு கச்சியப்ப சிவாச்சாரியால் அதன் மொழிபெயர்ப்பாகச் செய்யப் பட்ட தமிழ்க் கந்தபுராணத்தும் இவ்வரலாறு அரிய வேதங்களையே குறிப்பதொன்றாகப் பார்ப்பனர்களால் கரவாய்ப் புரட்டுரை எழுதி சேர்க்கப்பட்டுள்ளது. அவ்வாறு அவர் செய்ததும் ஆரியர் நூல்கட்குப் பெருமை தேடிக் கொள்வதற்கேயாம். மெய்யும் பொய்யும் பகுத் துணரமாட்டாமல் ஆரியருக்கு அடிமைகளாய் திரியும் தமிழ்ப் புலவர் சிலரும் கந்தபுராணத்தை ஒரு மேற்கோளாய் எடுத்துக்கொண்டு ஆரிய வேதத்தையே சிவபெருமான் அருந்தவர்க்கு ஆலின் கீழ் அறி வுறுத்தினான் எனக் கூறுகின்றனர் என்று தெளிவாய்க் கூறி யுள்ளார். ஆனால், இவ்வாறெல்லாம் கூறிய இச்சைவப் பண்டிதர் மாத்திரம் நாதிகராகார் போலும். இன்னும் எம் கருத்தை வலியுறுத்தி ஓர் அய்ரோப்பியத் துரை மகனார். பரதகண்ட புராதனம் என்ற தம் நூலின் 27ஆம் பக்கத்தில், வீரர்களை வணங்கும் வணக்கமே அவர்களுடைய (ஆரியர் களுடைய) மதாச்சாரம்; வீரர் செய்த கிரியைகளை விவரித்து வருணிக்கும்பொருட்டு காவியங்கள் கட்டப்பட்டன. கேட்கிற வர்கள் காதுக்கு இன்பமுண்டாகப் புலவர்கள் அந்த வீரர்களின் செயல்களை மெச்சிச் சிறப்பித்துப் பற்பல காலத்தில் பற்பலபேர் செய்த வீரியக் கிரியைகளை ஒன்றாகத் திரட்டி, ஒரே வீரன் அவற்றை செய்ததுபோல் காட்டி வரவர அந்தக் கிரியைகளை நடப்பித்த வனை வீரனாக புகழ்ந்தது போதாதென்று சொல்லி அவனைத் தேவனாகவும் பாராட்டி, பின்பு மேலான தேவனென்று அக்காலத்து ஜனங்கள் வணங்கிவந்த தேவனெவனோ அவனோடு இவனைச் சமப்படுத்தி அந்தத் தேவனே இந்த வீரனாக அவதரித்தானென்று புராணங்கள் ஏற்படுத்தினார்கள்; புகட்டினார்கள். என்று கூறியிருப்பது ஆராயத்தக்கது. இதைப் போன்றே யாமும் வடநாட்டுஆரியர் தலைவன் இறந்து போனபின், அவன் சமாதியைப் போற்றிப் பின்னர் இந்நாட்டு மக்கள் வணங்கிய இயற்கைத் தெய்வ மாம் முருகனே இச்சுப்பிரமணியக் கடவுளாய் அவதாரம் புரிந்தனர் என்று ஆரியர் புளுகி, புராணங்கள் எழுதி விட்டனர். தமிழ் மக்களும் அதை நம்பி ஏமாந்துவிட்டனர் என்று கூறுகிறோம். இக்கருத்துக் களை மறுக்கமுடியாதென்றாலும், பழமையில் பற்றுக்கொண்டு கடவுள் என்று பலமாகச் சத்தம் போட்டாலும் பாவமென்று நினைப்பவர் எங்ஙனம் யாம் கூறும் உண்மையை ஒப்புக்கொள்வர்? இதைக் கேட்டாலும் இவனே கடவுளை நிந்திப்போன் என்று புகன்றும் விடுவர். இனி கடவுள்கள் தன்மைகளைக் கவனியுங்கள். பிரம்மா ஒருநாள் பிரம்மாவைப் பார்த்து மகா விஷ்ணுவானவர், நான் தான் உன்னை உண்டுபண்ணினேன் என்றார். பிரம்மா நான்தான் உண்டு பண்ணினேன் என்றார். இவ்வாறு இவ்விரு தேவர்களுக்கும் பெரும் விவாதம் நடந்து கொண்டிருக்கும்பொழுது ஆகாயத்தில் ஒரு புகை தோன்றி, விஷ்ணுவினால் பிரம்மா உண்டாக்கப் பெற்றார். பிரம்மாவே! இனி நீயே படைப்புக்களை உண்டாக்கு என்று சத்தம் வந்தது. பிரம்மா, அப்புகையை உற்று நோக்க அதில் ஒரு லிங்க ரூபம் தோன்றிற்று. அதன் அளவை அறிய பிரம்மா ஆகாயத்திலும், விஷ்ணு பாதாளத்திலும் சென்று சிவலிங்கத்தின் அடிமுடி காணச்சென்று பதினாயிரம் ஆண்டுகள் தேடியும் முடிவு காணவில்லை (இதைப்பற்றிய வரலாறு ஒவ்வொருநூலிலும் ஒவ்வொரு விதமாய்க் கூறப் பெற்றிருக்கிறது). அதுமுதல் பிரம்மா வானவர் இதுதான் (இந்த லிங்கந்தான்) கடவுள் - என்னை யுண்டு பண்ணியதும் இதுதான் என்றறிந்து அதுமுதல் அந்த லிங்கத்தை வணங்கினார் என்று சிவபுராணம் முதலிய நூற்களிலும் எழுதப்பட் டிருக்கிறதாம். இதிலிருந்துதான் லிங்க பூஜை ஆரம்பம். இதைப் பல சைவர்கள் ஒத்துக்கொள்ளாது சிவலிங்கம் என்று யாங்கள் வணங்கும் உருவம் பற்பல தத்துவப் பொருள்களைத் தன்னுள்ளடக்கிக் கொண்டிருக்கிறது என்று மொழிகின்றார்கள். திரு. க. சுப்பிரமணிய பிள்ளையவர்கள், சிவலிங்கம் ஆண்குறித் தெய்வம் என்று பொருள்படும் சிசிந தேவர் என்று ஆரியர் கொள்கின்றனர் என்று சைவர்களை அக்கொள்கையினின்றுந் தப்புவிக்க முயல்கின்றார்கள். இவற்றினால் கடவுள்களின் அறிவீனமான தர்க்கங்களையும், தங்கள் உற்பத்திக்குக் காரணமான ஆண்குறியே கடவுள் என்னும் முடிவிற்கு வந்த அன்னார் அறிவின்றிறத்தையும், சிவபெருமானின் லிங்கத்தின் நீளத்தையும், அதன் அடிமுடி காணக் கடவுள்களின் வல்லமையும், சிவலிங்கத்தை நாம் அறிவின்மையால் இதுவரை வணங்குதலையும் இக்கதையினால் நன்கறிவதோடு இவ்வாபாச தெய்வ நிந்தனையின்று விலக சைவர்கள் முயன்றிருக்கிறார்கள் என்றாலும், சிவலிங்கத்தை அடியோடழிக்க முயற்சிக்காமல் அதற்கு வேறு தத்துவப் பொருள் கொள்ளத் துணிந்த சைவப் புலவர்களின் மனப்பான்மையையும், தைரியமின்மையையும் நன்கு காட்டுகிறது. பிரம்மா தன் மகளாகிய சரவதி அழகிலும், அறிவிலும் சிறந் திருப்பதைக் கண்டானந்தித்து, மோகங்கொண்டு அவளைப் புணர எண்ணங்கொண்டார். அவளைக் கட்டியணைத்து இன்பம் துய்க்க தன் மகளின் பக்கஞ்சென்றார். சரவதியோ நாணமுற்று நான்கு திசைகளிலும் ஓடினாள். பிரம்மாவோ தான் கொண்ட காமவெறி யினால் அவளைப் பின் தொடர்ந்து நாலு திசைகளிலும் ஓட அவருக்கு நான்கு முகங்கள் உண்டாயின. பின்னரும் சரவதியை விடாது தொடர்ந்து செல்ல அவள் பூமிக்குள் மறைந்தும் வெளிப் பட்டும் ஓடிக்கொண்டிருந்தாள் (இச்செயலே இன்றும் சரவதி நதியாய் வடநாட்டில் ஓடிக்கொண்டிருக்கிறதாம்). உடனே பரம சிவன் பிரம்மாவின் சிரசை அறுத்துவிட்டார். அது முதல் அவருக்குப் பூஜையும் நின்றுவிட்டது (சில நூற்களில் பரமசிவன் மனைவி பார்வதியை மோகித்தபடியால் சிரம் அறுபட்டதென்றும், சில நூலில் பார்வதி பிரம்மாவைத் தன் கணவனாய் நினைத்து நடக்கும் படியாய் பிரம்மனுடைய உருவமானது பரம சிவனைப் போன்று அய்ந்து முகங்களிருந்ததால் சிவன் பிரம்மாவின் சிரசைக் கிள்ளினார் என்றும் பலவாறு கூறப்படுகின்றன). பிரம்மா தன் மகளாகிய சரவதியைக் கடைசியாகப் பிடித்துப் புணர்ந்து அவளைத் தேவர்களின் நூறு ஆண்டுகள் வரை வைத்திருந்தார். பின் அவளைத் தன் மகன் சுவாயம்பு மனுவுக்குத் திருமணஞ் செய்து கொடுத்தா ரென்றும் கூறப்பட்டிருக்கிறது. மேற்கண்டவற்றால் கடவுளைச் சாமி என்றும் - ஏன் - தன் மகளையே புணர்ந்த சண்டாளன் என்றும், சரவதி நதி உற்பத் தியைப் பற்றிப் புராண கர்த்தாக்கள் கொண்ட எண்ணம் எது வென்றும், பரமசிவன் மனைவியின் செயலைப்பற்றியும் பிரம்மா தன் மகள் சரவதியைத் தான் புணர்ந்ததோடமையாது தன் மகன் சுவாயம்புமனுக்கு மணஞ்செய்து - ஏன் - விபச்சாரஞ்செய்ய அனு மதித்த இழிசெயல்களையும் நன்கு தெரிகின்றோம். சகோதரர்களே! காமவிகாரக் கடவுள்களின் முன்னால் தனியே நம் சகோதரிகளை, மனைவியை எவ்வாறு தயங்காது அனுப்பத் துணிகின்றீர்? இவ்வாறு கடவுள் செய்திராது, இவையெல்லாம் புராணிகர்களின் கட்டுக் கதை என்ற நம்பிக்கை உங்கள் உள்ளத்தே பதிந்திருக்க வேண்டும். அன்றேல் கடவுள் என்பதும், திருவிளையாட்டென்பதும் ஒன்றும் கிடையாது. கோயிலினுள்ளிருப்பது வெறும்கல். அவற்றினால் ஒன்றும் புரிய ஆற்றல் கிடையாது என்று தைரியங்கொண்டிருக்க வேண்டும். இவ்விரண்டுமில்லாது உண்மையில் இது கடவுளின் செயல்தான் - நம் சகோதரி, மனைவி முதலியோரிடம் கடவுள் இத்தகைய திருவிளையாடல் புரிந்தாலும் அஃது பெரும் புண்ணியந் தான் என்று நினைத்துப் பெண்களை ஆலயம் செல்ல அனுமதிக்கும் ஆண்கள் நம் தமிழ் மக்களிலொருவனும் இரான் என்பது எனது திடமான நம்பிக்கை. இந்திரன் ஆரியர்களின் வேதகாலத்தில் சிறப்பாக கூறப்பெற்ற தெய்வ மாகிய இந்திரன் செய்ததாகக் கூறப்படும் இழி செயல்கள் எல்லாம் கணக்கிலடங்கலாகா என்றாலும், ஈண்டு ஒரு செயலைப் பற்றி மாத்திரம் சிறிது விளக்குவோம். முன்னொரு காலத்தில் இந்திர னானவன் கவுதம முனிவரின் மனைவி மிகுந்த அழகுள்ளவளாயிருப் பதைக் கண்டு அவன் உள்ளத்தே காமத்தீ பற்றியெரிய எவ்வாறாவது அந்த ரிஷி பத்தினியிடம் ஒரு முறையாவது சம்போகம் செய்துவிட வேண்டுமென்று துணிந்து நடு இராத்திரியில் முனிவரில்லத்தை யடைந்தான். அங்கு ஒரு கோழிபோலக் கூவினான். கூவவே கவுதமர் விடியற்காலமாகிவிட்டதென்று நினைத்துக் காலைக்கடன் கழிக்க வெளியில் புறப்பட்டுச் சென்றார். உடனே இந்திரன் முனிவர்போல் வேடம் பூண்டு வீட்டினுள் சென்றான். முனிவர் பத்தினி அகலிகை முதலிற் கண்டதும் தன் கணவன் என நினைத்தனள். ஆயினும், அவனைச் சமீபித்ததும் கணவனல்லவென்று தெளிந்தாள். உடனே இந்திரன் பல மோக வார்த்தைகளெல்லாம் புகன்று அவள் கற்பைப் கொள்ளைகொண்டான். கவுதமர் ஆற்றின் கரைக்குச் சென்றும் விடியாமலிருப்பது கண்டு ஏதோ சூது நடந்திருக்கிறது என்று வீட்டையடைந்தார். இந்திரனின் அயோக்கியத்தனத்தைக் கண்டார். இந்திரா! மாறுவேடங்கொண்டு வந்தவனே! நீ இச்சித்த அங்கமே உன் உடம்பு முழுவதும் உடையவனாவாய் என்று அதட்டிச் சபித்தார். அவ்வாறே இந்திரன் அங்கமுழுவதும் யோனித் துவாரங்களாய் மாறுபட அவன் வெட்கி ஒருவரும் காணா மறைவிடத்தில் ஒளிந்து கொண்டான் என்பது இராமாயணக் கதை. இக்கதையினால் இந்திரன் அழகுடைய பெண்களையெல்லாம் கற்பழிக்கும்படி செய்யும் தூர்த்தன் எனவும், கடைசியாய் முனிவரின் சாபத்தால் உடம்பு முழுவதும் பெண் குறியின் வடிவம் பெற்று அலைந்தது நன்கு தெரிகிறது. இத்தகையவனைத்தான் தேவர்களின் அரசன் என்று கூறப்பட்டிருக்கிறது. உண்மையில் இவன் மார்த்தர் களின் அல்லது வேறு எவர்களின் தேவனாய் விளங்கினாலும் இந்த இழி செயல்களுக்கு ஆட்பட்டிருப்பானா? என்பது எமது கேள்வி. உண்மையில் அவன் தேவனாயில்லாதிருக்க வேண்டும். அன்றேல் தேவன் பேரில் வீணாகப் புலவர்கள் பொய்யாகக் கதைகள் கட்டி யிருக்கவேண்டும். இந்திரன் பேரில் இத்தகைய ஆபாசக் கதைகள் இருப்பதையறிந்து இதற்குப் பல தத்துவப் பொருளைக்கூறி ஜனங் களை ஏமாற்ற முடியாதென்றறிந்த சுவாமி வேதாசலம் ஆரியர் வணங்கிய இந்திரனும், தமிழர் வணங்கிய இந்திரனும் ஒருவரல்லர். ஆரியர் கூறியபடி, மழை, மின்னல் முதலியவற்றிற்குரிய தெய்வமாத லோடு அவர் தம் பகைவரோடு போராடுங்கால் அவருக்கு உதவியும் துணையுமாய் நின்று அவருக்கு வெற்றியைத் தருபவனாம். அவர் தரும் சோமச்சாற்றையும், விலங்கின் இறைச்சியையும் நிறைய உட் கொண்டு அவருக்கு வேண்டிய நலங்களை யெல்லாம் விளைவிப்ப வனாகவும் சொல்லப்படுகிறான். தமிழர் வணங்கிய இந்திரனோ வயலும், வயல்சார்ந்த இடமுமாகிய மருத நிலத்திலுள்ள உழவர் களால் மழையின்பொருட்டு மட்டும் வேண்டி வணங்கப்பட்ட மழைக் கடவுள் ஆவன். மழையின் பொருட்டாக அன்றி வேறெந்த நன்மை பேற்றின் பொருட்டாகவேனும் தமிழர்களால் அவன் வணங்கப்பட்டவனல்லன் எனவும் அவனே உழவுத் தொழிலை தமிழர்க்கு நன்கு கற்பித்து தமிழ் மக்களை மேனிலைக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும்..... அவன் செய்த நன்றியை நினைத்து அவன் ஆவியை தமிழர்கள் போற்றியிருக்கலாம் என்று கூறுகின்றனர். விநாயகன் பார்வதி கர்ப்பத்தில் கருவுற்றிருக்கும்பொழுது ஒரு அசுரன் அக்கருப்பைக்குள் காற்று வடிவமாய்ப் புகுந்து கருவாயிருக்கும் குழந்தையின் தலையை அரிந்து விட்டு வந்தான். பின்னர் பார்வதி யானையின் தலையை வைத்து உயிரைக் கொடுத்து குழந்தையாகப் பெற்றுக்கொண்டதாகவும், அப்பிள்ளைக்கே விநாயகன், பிள்ளையார் என்று பெயர் கொடுக்கப்பட்டு - எக்காரியத்தை ஆரம்பித்தாலும் முதன்முதல் இக்கடவுளைத்தான் வணங்கி ஆரம்பிக்கிறோம் என்று ஒரு புராணம் கூறுகிறது. மற்றொரு புராணத்தில் இவ்விநாயகர் பிறப்பைப்பற்றி வேறு விதமாகக் கூறப்பெற்றிருக்கிறது. அதாவது ஒரு காட்டில் ஒரு ஆண் யானையும் பெண் யானையும் புணர்ந்ததாகவும், அதைக் கண்ட பரமசிவனுக்கு காமலாகிரி பெரிதுமுண்டாகத் தன் மனைவியாகிய பார்வதியைக் கண்டு ஆவலுடன் கலவி புரிந்ததாகவும், அக்கலவி யின் பயனாய் யானை முகத்தையுடைய விநாயகன் பிறந்ததாகவும் மற்றொரு சரித்திரம் கூறுகிறது. ஒருநாள் பார்வதி குளிக்கப்போகும்போது தன் தேகத்திலுள்ள அழுக்கைத் திரட்டி ஒரு குழந்தையாக்கி அதனிடம் நான் குளித்து வரும் வரை உள்ளே யாரையும் அனுமதிக்காதே என்று கூறிச் சென்ற தாகவும்; பின்னர் பரமசிவன் வந்து உள்ளே புக முயற்சிக்கையில், அழுக்குருண்டைப் பிள்ளை மறுக்க, பரமசிவன் கோபங்கொண்டு அப்பிள்ளையின் தலையை வெட்டிப்போட்டு விட்டு பார்வதி குளித்துக்கொண்டிருக்கும் இடம் போனதாகவும், உடனே பார்வதி அழுக்குருண்டைப் பிள்ளையைக் காவல் வைத்திருக்க நீர் எப்படி வந்தீர்? எனக்கேட்க அப்பிள்ளையின் தலையை வெட்டி வீசிவிட்டு வந்ததாகக் கூற, பார்வதி வருந்தியழ, உடனே பரமசிவன் வெளியே சென்று அப்பிள்ளையின் தலையைத்தேட, காணாமையால் ஒரு யானையின் தலையை வெட்டி அப்பிள்ளையின் உடலோடு ஒட்டிப் பார்வதியிடம் கொண்டுபோய் அவளுக்கு மகிழ்ச்சியை யுண்டு பண்ணியதாக மற்றொரு புராணம் கூறுகிறது. நம் விநாயகப் பெருமான் உற்பத்தியைப்பற்றி ஒவ்வொரு புராணமும் ஒவ்வொரு விதமாய்க் கூறுவதிலிருந்து விநாயகரைப் பற்றிக் கூறும் புராணம் முழுவதும் புலவர் கட்டுக்கதையென்ப தோடு, பார்வதியின் கர்ப்பத்தினுள் ஓர் அசுரன் புகுந்து உள் ளிருக்கும் கருவின் தலையை யறுக்கும்வரை கடவுளுக்கோ, அவன் மனைவிக்கோ அறிய முடியாமற்போன அவர்களின் வல்லமையும், பரமசிவனின் அறிவீனத்தையும், கோபத்தையும் இக்கதைகள் தெளிவாய்க் கூறுகின்றன. விஷ்ணு கிருஷ்ணனை விஷ்ணுவின் அவதாரமென்று நூற்களில் புகழப்பட்டிருக்கிறது. அதே நூல்களில் பதினாயிரம் பெண்க ளோடு ஒரே நேரத்தில் லீலைகள் புரிந்தான் என்றும், சில பெண்கள் தங்கள் சேலையை அவிழ்த்துக் கரையில் வைத்துவிட்டு நிர்வாண மாய் ஒரு தடாகத்தில் நானம் செய்யப் போனார்கள் என்றும், இதையறிந்த கிருஷ்ண பகவான் அங்கு சென்று அப்பெண்மணிக ளறியாமல் அவர்கள் சேலைகளை எடுத்துக்கொண்டுபோய் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கொண்டாரெனவும், அப் பெண்கள் குளித்துவிட்டு வெளியே வந்து பார்க்க, சேலையை காணாமல் அங்குமிங்கும்தேட, கடைசியில் கிருஷ்ணன் ஒரு மரத்தின் மீது அவற்றை எடுத்து வைத்துக்கொண்டிருக்கக் கண்டு, மிக வெட்க முற்று ஒரு கையால் தங்கள் மர்ம தானத்தை மறைத்துக் கொண்டு, மற்றொரு கையை நீட்டிக் கிருஷ்ணனிடம் கேட்க, அக்கிருஷ்ண பகவான் உங்களின் இரண்டு கைகளையும் நீட்டிக் கேட்டால் சேலையைத் தருவேன் என கூற, அவ்வாறே அப்பெண்கள் இரு கரங்களையும் நீட்டிக் கேட்க, கிருஷ்ண பகவான் நன்றாய் மர்ம தான தரிசனம் செய்துகொண்டு சேலையை அப்பெண்மணிகளிடம் கொடுத்துவிட்டாராம். இதைப் பற்றி பாகவதத்தில் விரிவாய்க் கூறப்பெற்றிருக்கிறது - காண்க. ஒருமுறை ஒரு முனிவர் கிருஷ்ணன் வீட்டிற்கு வர அவரைக் கிருஷ்ணன் நன்கு வரவேற்று உபசரித்தார். ஒருநாள் அம்முனிவன் நன்றாகப் பாயாசம் சாப்பிட்டுவிட்டு மீதியைத் தன் உடம்பில் பூசச் சொன்னாராம். உடனே, கிருஷ்ணனும் அவர் மனைவி ருக்மணியும் அம்முனிவரின் வதிரங்களைக் களைந்து அவரை நிர்வாணமாக்கி உடம்பின் சகல இடங்களிலும் இருவரும் சேர்ந்து பூசினார்களாம். முனிவர் உடனே எழுந்து நிர்வாணமாகவே தெருவிலோடி ஓர் விமானத்திலேறி அமர்ந்துகொண்டு கிருஷ்ணனையும், ருக்மணியை யும் இழுக்கச் சொன்னாராம். அவ்வாறே இழுத்து ஊர் முழுதும் சுற்றினார்களாம். இன்னும் இக்கிருஷ்ணனைப்பற்றிக் கூறும் லீலைகளையும் வஞ்சகத்தனங்களையும் கூறிக்கொண்டே போனால் ஒரு பெரிய புராணமாகிவிடும். நம் தலைவர் கூடி சகோதரிகள் கூடிய இவ்விடத் தில் இவ்வாபாச புராணக் கதைகளைக் கூறவேண்டாம் என்று எனக்கு 144 போட்டாற்போன்ற ஒரு தடையுத்தரவைப் போடுகின் றார்கள். ஆனால், கிருஷ்ணன் புரிந்த இவ்வாபாசச் செயல்களை மிகமிக அழகிய சித்திரத்தால் செய்யப்பட்டு ஒவ்வொரு வீடுகளிலும் கிருஷ்ணன் மரத்தின்மீது இருப்பதுபோலவும் கீழே சில பெண்கள் நிர்வாணமாய் நின்று கிருஷ்ணனிடம் கெஞ்சித் தம் சேலைகளைக் கேட்பது போலவும் படங்கள் வைக்கப்பட்டிருக்கிறதே. களக்காடு என்னும் நம் ஜில்லாவிலுள்ள ஓர் ஆலயத்தின் கோபுரத்தில் செய்யப் பட்டிருக்கும் ஆபாச உருவங்களை என்னென்று கூறுவது. ஒரு பெண் உருவம் நிர்வாணமாய் செய்யப்பட்டிருக்கிறது. அதன் பக்கத்தே ஓர் ஆண் உருவமும் நிர்வாணமாய் இருந்து கொண்டு....... செய்வதுபோலச் செய்யப்பட்டிருக்கிறது. மற்றும் அநேக ஆபாச உருவங்ளோடு ஆணும் ஆணும் சேர்வது போலும், பெண்ணும் பெண்ணும் சேர்தல் போலும் பல உருவங்கள் எல்லாம் செய்யப்பட்டிருக்கின்றன. பல கோயில்களில் பெண் ஆண் உரு வங்கள் எத்தனை கேவலமாய்ச் செய்யப்பட்டிருக்கின்றன? பிள்ளை யில்லாதவர்கள், அக்கோயிற் பிரகாரஞ் சுற்றிவருவார்கள். வரும் பொழுதெல்லாம் அவ்வுருவத்தில் இடித்துக்கொண்டே போக வேண்டும். இன்னும் இதைப்பார்க்கிலும் மோசமான உருவங்களை யும் படங்களையும் நம் சகோதரிகள் பார்க்கிறார்கள். மனைவியை ஒரு கடவுள் வேண்டுமென்று கேட்க அவன் அவ்வாறே கொடுத்த தாகவும், இதைவிட மோசமான சரித்திரங்களை வாசிக்கவும் செய்கி றார்கள். பட்டிசைந்த அல்குல்லால் என்னும் தேவாரப் பாட்டைப் பல ஆண் மக்கள் மிகுந்த பக்தியுடன் கேட்பதோடு, தம் சகோதரி களையும் கேட்கச் செய்கிறார்கள். வருளங் குரும்பை முலை வள்ளிக் கணவர் வருக வருகவே என்ற பாட்டை பெண்கள் மத்தியில் அழகாய் ஆலயத்தில் பாடுகின்றார்கள். நல்குவதென் இனி நங்கை கொங்கையைப் புல்குவ பூணும் அக்கொங்கை போன்றன அல்குலின் அணிகளும் அல்குலாயின பல்கலன் பிறவும் அப்படிவம் ஆனவே என்ற பாட்டை ஆண் பெண் கூட்டத்தே புலவர்கள் அழகாய்ப்பாடி சீதையினுடைய மார்பில் அணிந்திருக்கும் நகைகள் அவளுடைய தனம்போல் காணப்பட்டன என்பது போன்ற மிகு விதாரமாகப் புலவர்கள் கூறுவதை நம்மவர்கள் தலையை யசைத்தசைத்துப் பக்தி விவாசத்தோடு கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது அவற்றைக் கண்டித்து இன்றே நீக்கிவிட வேண்டுமென்பதில் என்ன ஆட்சேபணை? இனிமேலாவது அவ்வாபாசங்களை நீக்க தலைவர்-நம்போன்றவர்கள் - பெரியோர்கள் முயற்சிப்பார்களாக. மேற்கூறிய கதையினால் இந்திய நாட்டு பெரிய அறிஞர்கள் (மகாத்மா காந்தியுள்பட) எல்லாரும் தெய்வமாகக் கொண்டாடும் கிருஷ்ணனுடைய செயலையுணருங்கள். இப்பொழுது அக்கடவுள் உலகில் தோன்றி நம் சோதரிகள், மனைவிகள் முதலியோர் நானம் செய்யும்பொழுது அக்கடவுள் அவர்களின் சேலைகளைத் தூக்கிக் கொண்டுபோய் அவர்களிடம் பேசிய முறையில் பேசினால் நாம் அக்கடவுளை என்ன செய்வோம்? கடவுளின் திருவிளையாடல் என்று எந்த ஆண்மையுடைய மனிதனும் கேட்டுக் கொண்டிருப் பானா? கிருஷ்ணன் தன் மனைவியைக் கொண்டு ஒரு முனிவனை நிர்வாணத்துடன் அவன்மேல் பாயாசம் பூசச்செய்த மானங்கெட்ட செயலையெல்லாம் நன்குணர்கிறோம். ஆதிகர் இவை கடவுள் செயலென்று நிரூபிக்க ஆதாரங்கள் தேடுகின்றார்கள். ஆகவே, கடவுள்களை நிந்திக்கும் கயவர்கள் இக்கதைகளை எழுதின, நம்பின, மெய்யென்று நம்பும்படி பிரச்சாரம் செய்கின்ற, மற்ற மக்களையும் நம்பி படிக்கும்படி அச்சுப்போட்டு விற்கின்றவர் ஆதிகர்களா? அல்லது இவையெல்லாம் பொய் என்கின்ற சுயமரியாதைக் காரர்களா? பாரதத்தில் அத்திரிமாமுனி என்றொரு மகான் இருந்தார். அவர் மனைவி மிகு கற்புடைய உத்தமி. அவள் கற்பையழிக்க பிரம்மா, விஷ்ணு, சிவன் மூன்று கடவுள்களும் நினைத்து, அப்பெண்மணியின் வீட்டின் வாயிற்படியில் போய் நின்று கொண்டு பிச்சைக் கேட் டார்கள். அப்பெண்ணினல்லாள் பிச்சையிட வெளியில் வர இம் மூவரும் அவளை நோக்கி இவ்வாறு வந்து நின்று பிச்சைக் கொடுத் தால் நாங்கள் ஏற்றுக்கொள்ளோம். எங்களை இல்லத்துள்ளழைத்து, நீ நிர்வாணமாயிருந்து, எங்களுக்குப் பிச்சையிட்டால் நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்றனர். (அப்பெண் இம்மூன்று அயோக்கி யர்களின் வார்த்தையையும் கேட்டு வருந்தி) உடனே மூவர்களையும் வீட்டினுள் அழைத்து தம் கற்பின் திறத்தால் மூவர்களையும் சிறு பாலகராகும் படி சபித்துவிட்டாள். அவ்வாறே கடவுள்கள் சிறு பாலகராய் அழுதுகொண்டு அப்பெண்மணியின் வீட்டினுள் கிடந்தனர் என்று கூறியிருக்கிறது. சகோதரர்களே! இக்கதை உண்மையாய் நடந்திருக்குமா? நடந்திராதா? என்ற ஆராய்ச்சி ஈண்டு வேண்டற்பாலதன்று. குணம் குறிப்பில்லாத சுத்த சைதன்னியக் கடவுள் இத்தகைய ஈனச் செயல்களுக்கு ஆட்பட்டிருக்குமா? என்று தான் கேட்கிறேன். சாதாரணமாக ஒரு பாமரனும்கூட இத்தகைய வார்த்தைகள் புகலானே. இவ்வாறிருக்கக் கடவுளுக்கு இத்தகைய மிருக சுபாவமிருத்தல் கூடுமா? என ஆராய்க. பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் என்னும் மூன்று கடவுளும் செய்த அக்கிரமச் செயல்களை யெல்லாம் புராணங்களில் கண்ட சைவர்கள் இதற்கெல்லாம் தக்க சமாதானம் சொல்லுதல் கடினமென நினைத்து, எம் சமயத்தில் இம்மூவரையும் சிறந்த சிவபக்தராய், கூறப்பட்டிருக்கிறதோடு, இம்மூன்று கடவுளுக்கும் மேற்பட்டவர் ஒரு கடவுள் உண்டு. அவர் பெயர் பரமசிவம் என்று அதற்குத் தக்க மேற்கோளும் காட்டி வாதிக்க ஆரம்பித்துவிட்டதோடு இம்மூன்று கடவுளும் மார்த்தர் களின் கடவுள் என்றும் சொல்லிவிட்டனர். மற்றொரு புராணத்திலே, தேவேந்திரன் (ஆரியர்களுக்கரச னாய் பர்மா தேசத்தை ஆட்சிப்புரிந்தவன்) மகா தேவரைத் தரிசிக்கச் சென்றான். வழியில் கோரரூபமுடைய மனிதன் ஒருவன் ஒன்றும் பதில் கூறாது மவுனமுற்றிருந்தான். உடனே இந்திரன் அதிகக் கோபங்கொண்டு அம்மனிதனைப் பிரம்பால் வெகு பலமாய் அடிக்க, பிரம்பு சாம்பலாய் எரிந்தது. உண்மையில் அக்கோர ரூபமுடையவர் மஹாதேவனாயிருந்தபடியால் தன்னையடிக்கவந்த தேவேந்திரனையும் சாம்பலாக்கிவிட எண்ணினர். அவ்வமயம் தேவகுருவாகிய வியாழ பகவான் வந்து, இந்திரனுடன் சேர்ந்து இந்திரன் செய்த தவறுதலுக்கு வருந்தியதோடு மஹாதேவனை மிகவும் போற்றினார்கள். மஹாதேவர் இந்திரனை மன்னித்து அவர்களுக்கு வேண்டிய வரங்களைக் கேட்கும்படிக் கூறினார். இருவரும் அவரை நோக்கித் தங்கள் கண்களில் சுவாலித்தெரியும் கோபாக்கினியைத் தணித்துக்கொள்ளும்படி வேண்டினர். உடனே பரமன் அவ்வக்கினியைக் கடலில் எறிந்துவிட்டார். அவ்வக்கினிப் பொறி ஒரு பாலகனாய் ஆய்விட்டது. அப்பாலகனின் அழுகை உலகத்தைத் திடுக்கிடச் செய்து விட்டது. உடனே பிரம்மா வந்து அப்பிள்ளையை எடுத்து தன் மடிமீது வைத்துக்கொண்டார். அப் பிள்ளை பிரம்மாவின் தாடியைப் பிடித்து இழுக்க, பிரம்மாவுக்கு வலி தோன்றி கண்ணிலிருந்து ஜலம் வடிந்தது. அதனால் அப் பிள்ளைக்கு ஜலந்தரன் என்று பெயரிட்டார். பிரம்மா உத்தரவுப்படி அக்குழந்தை வாலிபமடைந்ததும் பூதங்களுக்குத் தலைவனின் மகள் பிருந்தை என்னும் அழகிய பெண்மணியை மணந்து கொண்டான். ஜலந்தரன் மிகுந்த பராக்கிரமம் பொருந்தியவனாய் வாழ்ந்தான். அவனை எதிர்ப்பார் யாண்டுமில்லை. அச் ஜலந்திரன் இந்திரனைச் சொர்க்கலோகத்திலிருந்து நீக்கிவிட்டான். மஹாதேவன் மனைவி பார்வதியைத் தனக்கு மனைவியாகக் கொடுத்து விடும்படி அவரிடமே கேட்டுவிட்டான். அவர் மறுத்து விட்டார். பின்னர், அவருடன் பிரம்மா விஷ்ணு முதலியோரும் சேர்ந்து எதிர்த்தும் ஜெயிக்க முடியாமல் போய்விட்டது. உடனே விஷ்ணு என்பவர் ஜலந்திரன் மனைவி கற்புடையவளாயிருந்ததினால் அவனைக் கொல்ல முடிய வில்லை என்று நினைத்து ஜலந்திரன் போன்று வேடந்தாங்கிச் சென்று அப்பெண்மணியின் கற்பை அழித்து விட்டார். அதைப் பிருந்தையெனும் பெண்மணி பின்னர்தான் அறிந்தாள். மிகுந்த கோபங்கொண்டாள்; விஷ்ணுவைச் சபித்தாள். பிறகு, இத்தேவர்கள் சூதால் ஜலந்திரனையும் கொன்று விட்டார்கள். இவற்றையெல்லாம் மனத்துட்கொண்ட பிருந்தை அக்கினிப் பிரவேசமாய்விட்டாள். அச்சாம்பலில் துளசி முளைத்தது. பிருந்தை என்பவளை அதிகமாய் மோகித்து, வெகு இன்பத்தை அவளிடம் அனுபவித்தபடியால், அச்சாம்பலின்று முளைத்த துளசியின்பேரில் விஷ்ணு பிரியங் கொண்டார். அப்பாவச்சுமையை நீக்கவே விஷ்ணு இராமனாகப் பிறந்து, மனைவியை இழந்து பரிதபித்தாராம். இக்கதையில் கடவுள் ஒரு கோபியென விளங்குவதோடு, மிகுந்த போற்றுதலை விரும்பு கிறவன் எனக் கூறப்படுகிறது. பிரம்மாவின் முகத்தில் பிறந்தவர் உயர்ந்த அசுரர்களாய் விளங்கவும், எல்லாரையும் (பிரம்மா, விஷ்ணு முதலியோரையும்) அழித்துவிடக் கூடிய வல்லமை பெற்ற ருத்ரனின் கண்ணின்று தோன்றிய ஜலந்தரனை இராக்ஷதன் என்று எழுதப் பட்டதும், பார்ப்பனர்கள் தங்கள் ஜாதியை உயர்த்த எவ்வளவு முயன்றிருக்கிறார்கள் என்பதைக் காட்டுகின்றதன்றோ? ஜலந்திரன் அறியாது தன் தந்தையின் மனைவியைப் பெண்டாள நினைத்தாலும் ருத்ரனாகிய அக்கடவுள் நான் உனக்குத் தகப்பன், இது என்னுடைய மனைவி எனக் கூறி அவனைச் செம்மைப்படுத்தியிருக்கலாமன்றோ? ஒருவனோடு சண்டை செய்ய முடியாவிட்டால், அவன் மனைவியின் கற்பை வஞ்சகமாகக் கெடுத்துவிடுவது ஒருவீரனுக்கோ, அல்லது கடவுளுக்கோ அழகாகுமா? இஃது பெரும் பேடித்தனமன்றோ? கடவுளின் காமவிகாரமும், துளசியின் பெருமையும், இராமாவ தாரத்தின் மகிமையும் நீங்கள் ஈண்டு தெளிவாய்க் காணலாம். இப் புராணங்கள் எல்லாம் சுயமரியாதைக்காரர்களால் எழுதப்பட்ட தன்று. ஆதிகப் பெயர்பூண்ட கடவுள் பக்தர்களாலே எழுதி, நம் மனைவராலும் பக்தியுடன் படிக்கப்பட்டுவந்தவை ஆகும். ஆகவே, கடவுளை நிந்திக்கும் கயவர்கள் சுயமரியாதைக் காரர்களா? அல்லது இப்புராணங்களை எழுதியவர்களும், அதைப் பிரசங்கம் செய்பவர்களுமா? என்பதைச் சற்று நடுநிலைமையி லிருந்து யோசித்துப் பாருங்கள். சிவன் சிவன் என்னும் மொழி தனித் தமிழ்மொழியென்றும், அது சைவர்களின் தலையாகிய தெய்வத்திற்கே இப்பெயர் கொடுக்கப் பட்டிருக்கிறதென்றும் வடமொழி வேதங்களில் சிற்சிலவிடங்களில் சிவன் என்னும் பெயர் எடுத்தாளப் பெற்றிருந்தாலும் அது முத் தேவர்களிலொருவரான ருத்ரனுக்கே வழங்கப்பட்டிருக்கிறது. சைவத்தில் கூறப்படும் சிவனோ, பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் முதலிய தேவர்களுக்குப் பெரியவர் என்று சைவர்கள் கூறுகின்றார்கள். எடுத்துக்காட்டாக, திரு. கா. R¥ãukÂa¥ ãŸis, v«.V., v«.vš., அவர்கள் தாம் எழுதிய, இந்து சமயங்களின் சுருக்க வரலாறும், சிவாலயங்களிற் சுமார்த்தக் கலப்பும் என்ற நூலில் சுமார்த்த மதத்தில் மும்மூர்த்திகளும் சமமாகிய பெருமையுடையவர்கள். ஆனால், அவர்கள் கருதுகின்றபடி ருத்ரனுக்கும், விஷ்ணுவுக்கும் தமிழ்நாட்டில் ஆலயங்கள் அமைக்கப்படவில்லை. இது நன்கு கவனிக்கத்தக்கது. சிவாலயம் மும்மூர்த்திகளில் ஒருவராகிய உருத்திர னையும், பிற தெய்வங்களையும் தமக்கு அடிமையாகவுடைய முழுமுதற் கடவுளாகச் சொல்லப்படுபவராகிய சிவபெருமானது வணக்கத்திற்குரியது என்று கூறியிருக்கிறார்கள். ருத்ரன் என்னும் தெய்வத்தின்பேரில் எழுதியிருக்கும் ஆபாசக் கதைகளைக் கண்டு அஞ்சி ருத்ரனாகிய சிவன் வேறு, சைவர்களாகிய நாங்கள் வழிபடும் சிவன் வேறு என்று அதற்குச் சில சான்றுகளும் காட்டி சைவ சமய சீர்திருத்தவாதிகள் செப்புகின்றனர். ஆனால், புராணக்காரர்கள் சைவர்கள் கூறும் சிவன், சுமார்த்தர்கள் கூறும் ருத்ரனென்னும் சிவனின் அயோக்கியத்தனத்திற்கு அணுவளவும் குறைந்தவர்கள் அல்லர் என்று காட்டியிருக்கிறார்கள். எனவே, இவ்விரு தேவர்களின் செயலையும் ஆராய்ந்து பார்ப்போம். அத்திரிமாமுனி என்னும் ஒரு தவ சிரேஷ்டரின் மனைவி மிகுந்த அழகுடையவளாயிருக்கிறாள் என்பதைப் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் என்னும் திருமூர்த்திகளும் அறிந்து பிராமணவேடம் பூண்டு அக்கற்புடைய பெண்மணி அநுசூயை இடம் சென்று அவளிடம் பிச்சை கேட்டார்களாம். அப்பெண்ணினல்லாள் பிச்சையிட வந்த போது, இம்மூன்று தேவர்களும்கூடி, இந்தப் பிச்சை எங்களுக்கு வேண்டாம். நீ நிர்வாணத்தோடு வந்து நின்றால், அதுவே எங்கட்கு இச்சையான பிச்சை என்று அச்சமுற்று மொழிந்தனர். அம் முனிவரின் மனைவி இம்மூன்று அயோக்கியர்களின் அறிவீனமான செயலையறிந்து, அவர்களுக்குச் சரியான புத்தி புகுத்தயெண்ணித் தம்வீட்டினுள் அழைத்து, மூவர்களையும் சிறு பாலர்களாகும்படி சபித்துவிட்டாள். அம்மும்மூர்த்திகளும் அதன்படி சிறுபாலர் களாய் போய்விடவே, உலகத்திலே சிருஷ்டி, சம்காரம், ரட்சிப்பு என்னும் முத்தொழிலும் நடைபெறாது போகவே, தேவர்களெல் லோரும் மிகுந்த கவலைப்பட்டு, நாரதமுனிவரிடம் நவில, அவர் ரிஷி பத்தினியிடம் சென்று மூவர்களையும் சிறுவர்களாய் சபித்துவிட்ட தால், உலகத்திற்கேற்பட்டிருக்கும் கெடுதல்களை விளக்கிக் கூறி, சாபத்தைத் தீர்த்து மும்மூர்த்திகளையும் போகச் சொன்னார் என்றும் முன்னரே கூறியிருந்தோம். இத்தகைய பாடுபட்டும் இத் தேவர்கள் புத்தியில்லாது பிருகு ரிஷியின் பத்தினி நாகவல்லியைக் கற்பழிக்க எத்தனித்தும், அவளும் அநுசூயை செய்தது போல் திரிமூர்த்திகளையும் குழந்தைகளாகச் சபித்து, உருட்டிப்புரட்டி ஒரு மூலையில் தள்ளிவிட்டாள் என்றால், இத்தேவர்கள் மடைமையை என்னென்போம்? மேற்கூறிய கதைகளை அறிவாளிகளெவரும் ஒப்புக்கொள்ளார். என்றாலும், பண்டைக் கால மக்களிற் சிலர் கடவுள்பேரில் எத்தகைய ஆபாசமான பொய்க்கதைகளை யுண்டு பண்ணியிருக்கிறார்கள் என்பதையும், பாமர மக்கள் பலர் உண்மை யில் இவையெல்லாம் கடவுளின் திருவிளையாடல் என நம்பிவந் தார்கள் - வருகிறார்கள் என்பதையும் விளக்கவே ஈண்டு எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது. தேவர்களும், அசுரர்களும் கூடி, முன் ஒரு காலத்தில் பாற் கடலைக் கடைந்தபொழுது பல அபூர்வ வதுக்களும், அமிர்தமும் தோன்றினதாம். அவ்வமிர்தத்தைப் பங்கு வைக்கும் விஷயத்தில் இரு தரத்தாருக்கும் விவாதம் உண்டாயிற்றாம். தேவர்களாகிய அயோக்கி யர்கள், தங்களுடன் பாற்கடலைக் கடைந்த இராட்சதர்களுக்கு அமிர்தம் கொடுத்தால் தமக்குத் துன்பம் உண்டாகுமென்று அஞ்சி, இராட்சதர்களுக்கு அதனைக் கொடுக்க முற்றும் மறுத்துவிட்டார் களாம். இராட்சதர்களோ, இத்தேவர்களை எளிதில் விட்டபாடில்லை. ஆதலால், தேவர்கள் கொண்டாடும் மகாவிஷ்ணு, ஓர் அழகிய இள மங்கையின் வேடந்தரித்துப்போய், இவ்விராட்சதர்களைத் தம் அழகால் மயக்கி, இராட்சதர்களுக்கு அமிர்தம் கிடைக்கவிடாமல் செய்துவிட்டாராம். ஆனால், அவ்வழகிய மங்கை வேடம் புனைந்த விஷ்ணுவைச் சிவன் கண்டு, மட்டிலடங்கா மையல் கொண்டு, விஷ்ணு வுடன் புணர்ந்தார் என்று புராணங்களில் கூறப்பெற்றிருக்கிறது. தேவர்களின் நீதியும், விஷ்ணுவின் தந்திரமும் இக்கதையில் விளங்குகின்றதோடு, சிவனின் காமவெறியும் நன்றாய் எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது. விஷ்ணுவாகிய பெண்வேடம் பூண்ட ஓர் ஆணும், சிவனாகிய ஓர் ஆண் கடவுளும் சையோகம் செய்தார் களென்பதின் பொருள் என்ன? ஆண் புணர்ச்சி செய்தார்கள் என்பதுதானே பொருள்? பல தேச பக்தர்கள் ஆண் புணர்ச்சியை இந்நாட்டிற்குக் கொண்டு வந்துவிட்டவர்கள் வேறு மததர்கள் எனக் கூறுகிறார்கள். ஆனால், ஈண்டு சிவனும் விஷ்ணுவும் இதை முதலில் ஆரம்பித்திருக்கிறார்களெனத் தெரிகிறது. பல பெரி யோர்கள் ஆரியர்கள் இந்நாட்டிற்கு வரும்பொழுது ஆண் மக்க ளாகவே வந்தனர். பெண்கள் அதிகப் பேர் வந்ததாகச் சரித்திர சான்று களில்லை. இந்நாட்டிலுள்ளோர் பெண் கொடுக்க மறுத்து வந்தனர். எனவே, தங்களின் காம இச்சையை அடக்க வழியற்று, ஆணும், ஆணும் புணர்ந்து வந்தார்கள். அதைக் கண்டு, இந்நாட்டு மக்கள் மிகக் கேவலமாய்க் கூற, ஆ! நாங்கள் மாத்திரம் இதைச் செய்ய வில்லை; கடவுளே இதைச் செய்திருக்கிறார் என்று கூறி, அதற்குச் சான்றாகக் கடவுள் பேரில் இத்தகைய பொய்க்கதையை அபாண்ட மாகச் சுமத்தியிருக்கிறார்கள் என்று அபிப்பிராயப்படுகிறார்கள். தாருகாவனத்தில் சில முனிவர்கள் தவம் புரிந்து அரிய பெரிய நிலையைப் பெற்றிருந்தார்கள். சிவபெருமான் அவர்களுக்குத் தன் பெருமையைக் காட்டவும், அம்முனிவர்களின் கர்வத்தை அடக்க வும் நினைத்து விஷ்ணுவைப் பெண்வேடம் பூண்டு, ரிஷிகளை மயக்கி, அவர்களின் தபசைக் கெடுக்கச் செய்வதோடு, தான் நிர்வாணமாய்ப் போய் ரிஷிபத்தினிகளனைவர்களின் கற்பையும் அழித்தான் என்றும், அதனால் முனிவர்கள் சாபத்தால் சிவனின் சிசினமற்றுப் போயிற்றென்றும் சொல்லப்படுகிறது. தாருகாவனத்து முனிவர்கள் சிருஷ்டிக்கவேண்டியதில்லை என்றும், கடவுள் கர்மமே எல்லாம் இயற்றப்பாலதென்ற மீ மாம்ச மதம்பற்றிக் கர்வம் பூண்டிருந்தார்கள் என்றும், இவர் கொண்ட நிலை தவறாமென்பதனையும், இவர் பிறர் வயப்படுகின்ற ஜீவர் களேயன்றித் தம்வயமுடையவர் அல்லர் என்பதையும் அறிவித்து உய்வித்தற்பொருட்டு அவர்கள் மேற்கொண்ட காருண்யத்தினாலே சிவன் பிச்சாடன மூர்த்தியாயும், விஷ்ணு மோகினி ரூபத்துடனும் சென்று, உண்மையை முனிவர்களுக்கு உணர்த்தினார்கள் என்று சில சிவபக்தர்கள் மேற்கண்ட கதைக்குத் தத்துவார்த்தம் செப்புகி றார்கள். முனிவர்கள் தவறான வழி செல்கிறார்களென்றால், விஷ்ணு இத்தகைய ஈனச் செயலினாலா அவர்களுக்கு உண்மை நெறியை உணர்த்த வேண்டும்? சிவபெருமான் இதற்கெல்லாம் உடந்தையாய் இருந்ததோடமையாது, ரிஷிகள் செய்த தவறுதலுக்கு அவர்தம் மனைவிகளின் கற்பை அழித்தார் என்று கூறல், இவர்தம் கடவுள் தன்மைக்கு அழகா? சிவன் செய்தது சரியான நீதியாக இருக்குமே யானால், அம்முனிவர்களின் சாபத்தால் சிவனின் சிசினமற்றுவிழக் காரணமின்னன்றோ! இதன்பிறகு, சிவனுடைய லிங்கம் (ஆண்குறி) கற்களில் செய்யப்பட்டு, மக்களால் வணக்கஞ் செய்யப்பட்ட தெல்லாம் எத்தகைய இழிந்த தன்மையுடையதென்றும் தெளிக. சிவபுராணத்தின் ஓரிடத்தில் ஒரு தடவை சிவனுடைய மனைவியாகிய பார்வதி தன்னைச் சேரும்படி பரமசிவனை வேண்ட, அவர் முதலில் மறுத்து பின்னர் இணங்கினாராம். பரமசிவன் புணர்ச்சி செய்யும்போது, பார்வதி நெருக்கப்பட்டு நடுக்கம் உறும்படி தம்முடைய ஆண்குறியை அதிகமாய் நீட்டினாராம். பார்வதி தன்னுடைய சகோதரனாகிய விஷ்ணுவிடம் முறையிட, விஷ்ணு தம் சக்கரத்தால் சிவனுடைய லிங்கத்தை அறுத்து விட்டாராம். இது முதல் கொண்டுதான் லிங்கபூஜை ஆரம்பமாம். இந்தப்படியும் மற்றொரு கதை கூறப்படுகிறது. இந்து மக்களென்போர் நாடோறும் வணக்கம் புரிந்து வருகின்ற சிவலிங்கத்தின் உற்பத்தி எத்தன்மையை உடையதென்று ஈண்டு தெளிவாய் விளங்குகின்றதல்லவா? ஆனால், சில சைவப் புலவர்கள். எங்கள் அக்காள்தான் விபச்சாரி, நான் அவ்வாறல்ல என்று கூறுவதுபோல், மார்த்தர்கள் வணங்கும் சிவலிங்கம்தான் நீங்கள் கூறும் ஆண்குறித் தெய்வமாகிய சிவலிங்கம்; நாங்கள் வணங்கும் சிவலிங்கமோ, சுத்த மாயா சொரூபமாய் விளங்கும் விந்து ரூபமே சிவசக்தியாகிய பீடமென்றும், சுத்த மாயானந்த நாதரூப மாகிய மூலத்தம்பமே சிவமென்றும், இந்த சக்தி சிவன் மிகையாகிய வடிவே சிவலிங்கமென்றும் உணர்க என்றும் பரிபாஷையில் கேட்போர்க்கு விளங்காவண்ணம் பதிலுரைப்பார்கள். இது எத்தகைய நேர்மையுடையதென்று வாசகர்கள் ஆராய்ந்துகொள்க. பிரம்மா சிவனின் மனைவியாகிய பார்வதியை இச்சித்தாராம். அதற்காகப் பிரம்மாவின் தலைகள் அய்ந்தில் ஒன்றைக் கிள்ளி விட்டாராம். அதனால் பிரம்மா மட்டிலடங்காக் கோபங்கொண்டு, ஏ! சிவனே! நாம் உனக்குத் தந்தையாயும், குருவாயுமிருக்க, நீ முன் பின் யோசியாது குருபாதகஞ் செய்தாய். ஆகையால், நீ கபாலி யாத்திரி என்று சபித்தான் என்றும்; மற்றொரு சமயம் ஒரு வேட னின் மனைவியின்பேரில் இச்சைகொண்டு அவ்வேடன் காலால் உதைப்பட்டார் என்றும்; மற்றொரு சமயம் தம்பேரிலன்பு கொண்ட பக்தரைச் சோதிக்க எண்ணி, தான் ஒரு சிவபக்தன்போல் வேடமிட்டு அப்பக்தனிடம் சென்று அவன் மனைவியைக் கேட்டார் என்றும் கூறுவதோடு, இன்னும் பலவிடங்களில் இவற்றைப் பார்க்கிலும் மிக ஆபாசமாய்ப் பத்திரிகைகளில் வெளியிடுவதற்குத் தகாத முறையில் ஏராளமான கட்டுக்கதைகள் எழுதப்பட்டுமிருக்கின்றன; (தல புராணங்களாய்) இன்னும் எழுதப்பட்டு வருகின்றன. அப்புராணக் குப்பைகளையெல்லாம் ஈண்டு கிளறிக் கொண்டே போனால், குடி அரசு இடந்தராதென்று இத்துடன் நிறுத்திக்கொள்கிறோம். சமயம் வாய்ப்பின் இடையிடையே யாம் எழுதும் கட்டுரைகளில் எடுத்துக்காட்டுவோம். கடவுள்பேரில் இத்தகைய ஆபாசமாக வேறு எச்சமயத்தாரா லும் கூறப்படவில்லை. இந்துசமயம் என்று சிலர் கூறும் சமயத்தில் தான் இப்போலிக் கதைகள் பல மலிந்துள்ளன. காரணமென்ன வென்றால், ஆதியில் இத்தகைய கதைகளை ஒருவன் எழுதியபோதே அதை கண்டியாதுவிட்டதினால் பண்டிதர்கள் என்போர் அதற்குப் பல தத்துவப் பொருள்கள் சொல்ல ஆரம்பித்ததினால் பல காம வெறி கொண்ட புலவர்கள் தத்தம் செயலை ஆதாரமாக வைத்து அழகிய பாக்களால் கடவுளை நிந்தித்த பல நூற்களை எழுதிவிட்ட னர். கவியழகில் பலர் மயங்கி அப் பாக்களைப் போற்றினர். கடவுள் பக்தியினால் இதுவும் கடவுளின் திருவிளையாடல் என்று ஏமாந்தோர் பலர். இது கடவுளின் நிலையுணர்ந்ததும், வேதாந்தம் என்று மயங்கிய வேதாந்திகள் சிலர் பெரியோர் வாக்கு, வேதவாக்கு, கடவுள்வாக்கு என்று சொன்ன மாத்திரத்திலே தாம் பகுத்தறிவைக் கொண்டு யோசித்து உண்மையை யுணரத் தலைப்படாமல், எதை யும் அப்படியே நம்பிவிடும் பாமரர்கள் நூற்றுக்குத் தொண்ணூற் றொன்பதின்மர். இந்த மாதிரி மக்களை நம்பி இந்நூல்களை மேலும் மேலும் எழுதி அச்சிட்டு விற்று, வயிறு வளர்க்கும் சமயக் காப்பாளர்கள் பலர். எனவேதான், இத்தகைய நூல்கள் அதிகப் பட்டு வருகின்றன. நம் மக்கள் எதையும் திடீரென்று ஆராய்ச்சி புரியாமல் நம்பிவிடுவதாலேயே இத்தகைய கேடுகள் அதிகமாய்ப் பரவுகின்றன. எடுத்துக்காட்டாக வடமொழியில், வேயா தரிசனம் புண்யம் பர்ஸன்ம் பாப நாஸம் சும்பனம் சர்வதீர்த்தானாம் மைதுனம் மோக்ஷசாதனம். அதாவது, வேசிகளைப் பார்த்தால் புண்ணியம்; அவர்களைத் தொடுகிறது பாபவிமோசனம்; அதரபானம் சகல சீர்த்தத்திற்கும் சமம்; சம்போகம் செய்தல் மோட்சத்தை அடையும் வழி என்ற பொருள் தரும் வடமொழி சுலோகத்தைக்கூட நம் மக்கள், இது கடவுள் வாக்கு என்றவுடன், காலையிலிருந்து மாலை வரை பாராயணம் பண்ண ஆரம்பித்துவிடுகின்றார்கள். அவர்களிடம் இதன் பொருளைச் சொன்னால் நம்பமாட்டேன் என்கிறார்கள். பண்டிதர்களிடம் சொன்னால், தத்துவப் பொருள்கூற ஆரம்பித்து விடுகிறார்கள். அவர்களை நோக்கி, நீங்கள் சொல்லும் தத்துவப் பொருளை உணர்ந்தவர்கள், உணரத்தக்கவர்கள் இந்நாட்டில் எத்தனைப் பெயருளர்? கடவுள் மக்களுக்குத் தந்தையாயும், அவர் மனைவி தாயுமானால், தந்தை - தாயார் இவர்களைப்பற்றி இத்தகைய கதை எழுதியதோடு, அதை நன்கு விளக்கி விக்ரகங்களும், விழாக்களும் செய்கின்றோமே இது சரியா? உம் தந்தையின் சில செயலை விளக்க, உம் தாயாரின் பல மேலான குணங்களைச் சொல்ல, அவர்கள் விபச்சாரம் செய்ததாகவும், மகன் தாயைப் புணர்ந்ததாயும், தங்கை சகோதரனைப் புணர்ந்ததாயும் சித்திரங்கள் எழுதி தெரு வீதிகளில் வைத்தும், சிறந்த புலவர்களைக் கொண்டு அழகிய கவிகளால் மேற்கண்ட செயலை விளக்கி, புத்தகமாக அச்சிட்டும் விற்பனை செய்தால், அதனுள் கூறியிருக்கும் தத்துவப் பொருளையுன்னி, நீரோ அல்லது உம் பெற்றோர்களோ மான நஷ்ட வழக்குத் தொடராது பொறுத்துக் கொண்டிருப்பீர்களோ? உங்களுக்குக் கடவுளின் தன்மையை விளக்க இவ்விபச்சாரக் கதை களைத் தவிர, வேறு அறியீர்களோ? என்றால் இதற்குத்தான் சுய மரியாதைக்காரர்கள் படிப்பில்லாதவர்கள், புல்லறிவினர், கடவுளை நிந்திக்கும் கயவர்கள் என யாண்டும் பறையடிக்கின்றனர். சுய மரியாதைக்காரர்களாகிய நாங்களா இக்கதைகளை உண்டு பண்ணிய வர்கள்? இக்கதைகளை நாங்கள் கூறி, கடவுள் இவ்வாறு செய்ய மாட்டார். அறிவில்லா மனிதர்களும், புரியாத தீச்செயல்களையும், இழிசெயல்களையும் கடவுள் ஒருபொழுதும் செய்யார். எனவே, கடவுளை நிந்தனை செய்யும் இப்புராணக் குப்பைகளை இன்றே நெருப்பிட்டுக் கொளுத்துங்கள். எதையும் கடவுள் வாக்கென்று நம்பி மோசம் போகாதீர்கள். உங்கள் பகுத்தறிவை உபயோகித்துப் பாருங்கள் என்று சொன்னால், பிற சமயத்தார் முன்னிலையில் நம்மைக் கேலி செய்யாதீர்கள், கடவுளை நிந்திக்கின்றீர்கள், வேதம் புராணங்களை நிந்திக்கின்றீர்கள் என்று இவற்றை எழுதியவர்கள் அதைப் பிரச்சாரம் புரிபவர்கள்மீது கோபங்கொள்ளாது எங்கள் மீது கோபங்கொண்டு எங்களுக்கு நாதிகப் பட்டத்தை நல்கின் றார்கள். இதுதான் எய்தவர்கள் அருகிலிருக்க, அம்மைப் பார்த்து நொந்த கதை போலிருக்கிறது. இப்போலிப் பண்டிதர்களும், பாமரர்களும் எங்களுக்கு நல்கும் நாதிகப் பட்டத்தைக் கண்டு நாங்கள் ஒருபோதும் அஞ்சோம். தீமையானதையும், பகுத்தறிவிற்கு ஒவ்வாததையும் அழித்து (நாதி செய்து) வருகின்றோம். அதனால் நாங்கள் நாதிகர்கள்தாம். அஃதன்றி நாதிகர் என்றால், கடவுளை அழிப்பவர் என்றால், எங்களால் அழியக்கூடிய தன்மையையுடைய கடவுள் உங்களுக்கும் எங்களுக்கும் என்ன பிரயோஜனம் செய்யப் போகின்றார்? அது அழிந்ததினால் என்ன கஷ்டம்? என்கிறோம். காவியம் புகலும் கல்யாணசுந்தரர், இயற்கைக்கு மாறு பட்டது எந்த சாதிரமானாலும் அதை நாம் ஒப்புக்கொள்வோம். இயற்கைக்கு மாறுபட்ட சாதிரங்களை ஒழிக்கவேண்டியது அவசியம் என்றும், மற்றொரு திருநெல்வேலி சைவ சமயத் தலைவர், பெரிய புராணம் ஒன்றே உண்மையான புராணம். மற்றவையனைத்தும் பொய்கள் பல மலிந்திருக்கின்றன என்றும், மற்றொரு சைவப் பெரியார், பெரிய புராணத்தில்கூட சில பொய் மொழிகள் புகுத்தியிருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்களே! இவர் களுக்கெல்லாம் ஏன் இந்த நாதிகப் பட்டம் கொடுக்கப்பட வில்லை? ஏன் என்றால், இவர்கள் எல்லாம் சமயத்திற்குத் தகுந்தாற் போல நடந்து கொள்ளும் அருங்குணம் பெற்றிருப்பதினாலே யாகும். ஆனால், சுயமரியாதைக்காரர்களோ எச்சமயத்திலும் தாம் கண்ட உண்மையை மறைக்காமலும், வாள் எடுத்துக்கொண்டு தம்மை உயிர்வதை செய்யவரும் எதிரியின் முன்னும் அஞ்சாமலும் தாம் தெரிவித்து வருவதினால் நாதிகர்களாக மதிக்கப்படுகின்றனர் போலும். நம் தேசம் உன்னத நிலை பெறவேண்டுமானால், நம் மக்கள் அறிவு விடுதலை பெறவேண்டியது அவசியம். மூடநம்பிக்கையாலே நம்மில் அடிமை வாழ்க்கை நிலைபெற்றுவிட்டது. உண்மையைக் கூறப் போகும் எவர்க்கும் பாமரர்களால் இம்சையும் நாதிகப் பட்டமும் கொடுக்கப்படுவது இயற்கையாயிருக்கிறது என்றாலும், முடிவில் உண்மையே ஜெயம் பெறும். பொய்யானது கட்டாயம் தோல்வியுறும். பொய்யானது வெற்றி பெறுவதுபோல் தோன்றினா லும், முடிவில் மெய்யே வெற்றியடையும்; பொய் அழிவுறும் என்பதில் பெரிதும் நான் நம்பிக்கையுடையேன். உலகை உய்விக்கத் தோன்றிய புத்தர்பிரான் நாதிகராக்கப் பட்டார். முடிவில் ஆதிக ராய் - ஏன் - விஷ்ணுவின் அவதாரமாகவும் எண்ணப் பட்டார். முகமத் நபியை அக்காலத்தே அரபியர்கள் அடித்தார்கள்; கொல்ல முயற்சித்தார்கள்; ஊரைவிட்டு விரட்டினார்கள். கடைசியாக முகமத் நபியே அந்நாட்டின் அரசராய் விளங்கினார். இயேசுவை யூதர்கள் நிந்தித்தார்கள்; சிலுவையிலடித்துக் கொன்றார்கள்; பண்டிதர்களெல்லாம் அவருக்கு விரோதமாய் சூழ்ச்சி செய்தார்கள். அவருடைய இயக்கத்தை அக்காலத்தில் படித்தவர்கள் ஆதரிக்க வில்லை என்றாலும், அவரியக்கம் உலக முழுவதும் பரவிவிட்டது. இச்சீர்திருத்தக்காரர்கள் காலத்திலெல்லாம் அவர்களிடையே வாழ்ந்த ஜனங்கள், நீங்கள் எங்கள் கடவுளை நிந்திக்கின்ற குணத்தை யுடையவர்கள்; எங்கள் பழைய பழக்க வழக்கங்களுக்கு விரோதமாய் நடப்பவர்கள் என்று கூறினார்கள். அச்சீர்திருத்தக்காரர்கள் கொள்கையை ஒப்புக் கொள்ளுகிறவர்களுக்கு இப்பொழுது சுய மரியாதை இயக்கத் தலைவர் இராமசாமி பெரியாருக்கும், அவர் களுடன் சேர்ந்தோர்க்கும் இயற்றும் துன்பத்தைவிட அதிகமான துன்பத்தைச் செய்து வந்தார்கள். அவற்றையெல்லாம் பொறுத்து, உண்மையை நிலைநாட்டப் போராடிய சீர்திருத்தவாதிகள், முடிவில் பண்டிதர்களாய், பணக்காரராய், உயர்குலத்தோராய் வாழ்ந்த அனைவர்களாலும் போற்றக்கூடிய பேற்றையடைந்தார்கள். அதிலிருந்து கடவுள்பேரில் ஆபாசமான கட்டுக்கதைகளை உண்டு பண்ணி, அதை நம்பிவந்த கயவர்களெல்லாம் எத்தகைய நிலையை அடைந்தனர் என்பதை நாங்கள் அறிந்து, தைரியமாய் எங்கள் கொள்கையை நிலைநாட்டப் போராடுகின்றோம். உண்மையில் கடவுள் என்று ஒருவன் இருப்பானாகில், அவன் நிர்க்குணனாய், பரிசுத்தனாய், நீதியுடையோனாய், சர்வசக்திகளும் நிரம்பப் பெற்றவனாய், எங்கள் நோக்கத்தை எங்கள் வேலையை அறியத்தக்க ஆற்றலையுடையவனாய் இருப்பானாகில், தன் பேரில் பல்லாண்டாய் அநியாயமாய், அவதூறாய் ஆயிரக்கணக்கான ஆபாசப் பொய்ப் புராணங்களில் ஏற்றியிருக்கும் மாசுகளைத் துடைத்து, அவனுடைய உண்மை நிலையை உலகிற்குணர்த்தும் சுயமரியாதைக்காரர்களின்அருஞ் செயலைக் கண்டு வாழ்த்துவான் என்பது நிச்சயம்! நிச்சயம்! சத்தியம்! சத்தியம்! சத்தியம்!!! நரகம் என்பது ஒன்று உள்ளதாயின், கடவுளை நிந்திக்கும் கயவர்களை - பொய்யாக வீண் புராணப் புளுகுகளை வெளியிட்ட பண்டிதர் களை - அதைப் பிரச்சாரம் புரியும் பாவலர்கள், நாவலர்கள், காவலர் களை, அதை உண்மையென்று நம்பிப் பாராயணஞ் செய்யும் பக்தர்கள் ஆகியவர்களுக்கே அந்நரகம் சொந்தமானதாயிருக்கு மென்று நாங்கள் உறுதி கூறுகிறோம். ஆனால், சுயமரியாதைக் காரர்களாகிய நாங்கள் கடவுள், நரகம் முதலியவற்றிற்காக எங்கள் நேரத்தையும், முயற்சியையும் வீணாகச் செலவழித்து, எங்கள் முடிவை மாற்றிக் கொள்ளுகிறவர்களல்ல என்று மீண்டும் தெரிவித்து, என் கட்டுரையை முடித்துக்கொள்ளுகிறேன். - பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன நூலாக வெளிவந்துள்ளது. இந்து மதமும் அதன் கொள்கையும் இவ்வுலகிலே கிட்டத்தட்ட ஆயிரத்தெட்டு மதங்களிருக்கிற தாக அறிஞர்கள் கணக்கிட்டிருக்கிறார்கள். இதில் நமது இந்து மதம் என்ற ஒருமதம் உண்டென்றுச் சொல்லிக் கொள்ளப்படுகிறது. ஆனால் இந்து சமயத்தார் என்று சொல்லிக் கொள்பவர்களிடத்தில் இந்து சமயம் என்றால் என்ன? அச்சமயத்தின் தலைவன்யார்? அத னுடைய வேதங்கள் எவைகள்? அம்மதத்தின் முக்கிய கொள்கைகள் என்ன? என்று வினவினால் பதில் சொல்ல வழியற்று விழிக்கிறார்கள். உண்மையில் இந்து சமயமென்று ஒன்றிருந்தாலன்றோ அதற்கு ஒரு தலைவனும், வேதமும், கொள்கையுமிருக்கும் இந்துசமயமென்பது பெரும்பாலும் இந்திய நாட்டிலேயுள்ளது. இச்சமயம் இந்திய நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு பெயரையுடைய தலைவனையும் வெவ்வேறு விதமான கொள்கைகளையும் கொண்ட வேதத்தைக் கொண்டதாயுமிருக்கிறது. ஒன்றிற்கொன்று முரண்பட்ட தாயுமிருக்கிறது. எனவே பலசமயங்களையும் ஒன்றாய் சேர்த்து இந்துமதம் என்று வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு ஒன்றாகச் சேர்க்கப்பட்டதற்குப் பல காரணங்களுண்டு. விரிக்கிற் பெருகும் ஆயினும் ஈண்டு சிலவற்றை சுருங்கச்சொல்லி விளங்க வைத்தல் என்னும் கூற்றை மனதுட்கொண்டு சில உரைகள் பகர விழைகின்றேன். நமது நாட்டிற்கு இந்தியா என்ற பெயர் கிடையா. பண்டை நூல்களிளெல்லாம் நம் நாட்டிற்குத் தமிழகம், குமரித் தீவு, சம்புத்தீவு முதலிய பெயர்களே வழங்கப்பட்டிருக்கிறது. இடைக் காலத்திலே வெளிநாட்டிலிருந்து இந்நாடு போந்தவர்கள் சிந்துநதியைக் கண்டதும் அது பாயும் சமவெளிகளுக்கு ஹிந்தியா வென்று வழங்கி யிருக்கலாமென்றும் பின்னர் அது இந்தியா வென்று மாறி இந்நாடு முழுவதற்கும் இந்தியாவென்று பெயர் வழங்கியிருக்கலாம் பின்னர் இந்நாட்டிலேயுள்ள சமயத்தாற்கு இந்துக்கள் என்று வைத்திருக்க வேண்டுமென்றும் சிலர் அபிப்ராயப்படுகிறார்கள். இந் நாட்டு மக்கள் பலர் பழங்காலத்தில் திருட்டு சுபாவமுடையவர்களா யிருந்தார்கள். அதனால் பார்சிக்காரர் இவர்களை இந்துக்கள் (பார்சியில் இந்து என்றால் திருடன் என்பது பொருளாம்) என அழைத்தார்கள் எனச் சிலர் சொல்லுகின்றார்கள். ஹிந்து என்ற பதமும் வட மொழியுமன்று தமிழ் மொழியுமன்று. வடமொழி நூட்களிலாவது தமிழ் மொழி நூட்களிலாவது இந்து மதம் என்ற வார்த்தைகள் கிடையாது. தற்காலத்தில் எழுதப்பட்ட நூல்களில் ஒரு சமயம் இருக்கலாம். ஹிந்து சமயம் பல சமயத்தின் கொள்கை களையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கிறது என்று சுவாமி விவேகானந்தர் கூறினார். ஆகையால் பல சமயக் கொள்கைகளை யும் திருடித் தன்னுள் வைத்துக் கொண்டிருப்பதால் இச்சமயத்தை இந்து சமயம் என்பது ஒருவாறு பொருந்தும். இந்து என்பவனுக்கு சமயப்பிரவேசக்கிரியையோ அன்றி ஒரு திரமான கொள்கையோ கிடையாது. அவன் எத்தகைய முறையில் நடந்துகொண்டாலும் கொள்ளலாம். தற்சமயமோ இன்னதென்று ஒரு சிறிதும் அறி யார்கள். எனவே ஒரு பெரியார் சமய ஆராய்ச்சித் துறையிலிறங்கி யறியா மாக்களே தங்களை இந்து என்று கூறிக் கொள்வார் என்று புகன்றது முற்றிலும் நியாயமானதே இதைப்பற்றி தமிழ்நாட்டின் இந்துசமயங்களின் சுருக்க வரலாறு நூலின் இரண்டாவது பக்கத்திலே சைவசித்தாந்த பெருந்தலைவரும் தமிழ் மொழியில் ஆராய்ச்சி வல்லுனர் என்று தமிழ் நாட்டு மக்களிற் பலர் போற்றும் திருநெல்வேலி திருவாளர் கா. சுப்பிரமணிய பிள்ளை எம்.ஏ.எம்.எல் அவர்கள் ஹிந்து என்ற பாரசீகச் சொல்லை கிரேக்கர் இந்து என வழங்க அவர் வழக்கை பின்பற்றிய மேலை தேசத்தார் யாவரும் இந்நாட்டிலுள்ளாரை இந்துக்கள் எனவும் இந்நாட்டை இந்தியா எனவும் வழங்கலாயினர். இந்து என்ற சொல் இப் பொருளில் ஆரியம் தமிழ் எனும் பண்டை இரு மொழி நூல்களிலும் கிடையாது. இந்நாட்டிலே சமயங்களைப் பற்றி யாதும் அறியாதவர்களே தங்கள் மதத்தை இந்து மதம் என்று கூறினார்கள். ஆனால் இந்நாட்டு மக்கள் புத்தர் காலத்திற்கு முன்பேயுங்கூட ஒரு சமயத்தைத் தழுவியதாகக் காணப்படாமையால் இந்து மதம் என்ற சொல் புத்தம், சமணம், மகமதியம், கிறிது மதம் என்பனவற்றை யொழித்து ஒழிந்த பிறசமயங்கள் அனைத்தையும் சுட்டும் பொது மொழியாகக் கருதப்படவேண்டும். ஆகவே இந்து மதம் ஒன்று உண்டு என்பது கிடையாது என்றமொழியை நன்கு ஆராய்ச்சி செய்க (19-8-30இல் நடந்த திருராபிதினத்தில் இந்து மதத்தை யான் பெரிதும் தாக்கிபேசி விட்டேன் என்று சந்திலும் பொந்திலும் கூடிப் பேசும் சாத்தான்குள வைதீர்கள் இதை ஆராய்ந்து பார்க்கட்டும்.) உலகிலுள்ள எச்சமயமும் அஃது தோன்றிய நாட்டின் பெயரால் அழைக்கப்படுவதில்லை. அமெரிக்காவில் தோன்றிய மதம் அமெரிக்க மதம் எனவும் அரேபியமதம் என்றும் யாண்டும் அழைக் கப்படுவதில்லை. அஃதேபோன்று இந்திய நாட்டிலுள்ள சமயத்தை யும் இந்து சமயமெனக்கூற எவ்வித நியாயமும் கிடையாது. உலகி லுள்ள ஒவ்வொரு மதமும் அதனதன் கொள்கையைக் கொண்டும் அதன் தாபகரின் பெயரைக் கொண்டும் அழைக்கப்படுகின்றன. அவ்வாறே இந்திய நாட்டிலே பல்வேறு சமயங்களிருக்க அவை களெல்லாவற்றையும் இந்துமதம் என அந்நியர் கூறிய கூற்றை இந் நாட்டினரும் ஒப்புக்கொண்டு அப்பெயரை ஏன் நிலைத்திருக்கும் படி செய்து விட்டனர் என்று ஒவ்வொருவரும் ஆராய்ச்சி செய்து பார்க்கவேண்டும். எமது ஆராய்ச்சியில் ஒரு சுயநலக் கூட்டத்தார் பல சமயத்தார்களையும் இந்து என்னும் வலைக்குள் வீழ்த்தி அவர்கள் (வலைக்குள்ளகப்பட்டோர்) கஷ்டப்பட்டு முகத்தின் வியர்வை நிலத்தில் விழ அரும்பாடுபட்டு சம்பாதித்த பொருள் களையெல்லாம் ஏமாற்றித் தங்கள் வயிற்றை நிரப்பிக் கொள்ளவே இந்துமதம்என்றவார்த்தையை ஒப்புக் கொண்டு அதைத் தங்களின் சக்தி நிறைந்த ஓர் ஆயுதமாகக் கொண்டு நம் மக்களிற் பலரை தங்களின் அடிமைகளாக்கிக் கொண்டனர். அதினின்று சில சைவத் தலைவர்கள் விடுவிக்கமுயன்றனர் ஆனால் முற்றிலும் வெற்றி பெறவில்லை. எனவே சுயமரியாதைக்காரர்கள் அஞ்சாநெஞ்சம் பூண்டு வீரகர்ஜனையுடன் நம் நாட்டு மக்கள் பலரை அடிமையாக்க வைதீகர்கள் கொண்ட ஒரு பெரும் ஆயுதமாகிய இந்து மதத்தை அழிக்க ஆரம்பித்து விட்டார்கள். இதனால் பல சைவர்களுக்கு இந்து மதப்பயித்தியம் முற்றிலும் ஒழிந்து விட்டது. முதன் முதலில் சைவம் வைஷ்ணவம், சமணம் முதலிய சமயங்களை மாத்திரம் தான் இந்துமதப் படுகுழியில் தள்ளினார்களென்பதில்லை. இலாம், கிறிது சமயம் முதலியவற்றையும் இந்து மதப்படுகுழியில் தள்ள முயன்றிருக்கிறார்கள். ஆனால் அம்முயற்சியில் வெற்றி பெறாது தோல்வியுற்றனர். இவ்வாறு புரிய முயன்றிருக்கின்றார்களென்று கூறச் சிற்சில சான்றுகள் இல்லாமல் போகவில்லை. முதலாவதாக, ஆண்டவன் அருள் அதிகம் பெற்ற அடியார்களென்று அழைக்கப் பெற்ற ஆரிய முனிவரால் எழுதப்பட்டதாகக் கூறுகின்ற உபநிஷத் களில் அல்லா உபநிஷத் என்றோர் உபநிஷத் சமகிருதத்தில் எழுதப்பட்டது. இது அக்பர் சக்கிரவர்த்தியின் காலத்தில் உண்டாக்கப் பெற்றிருக்க வேண்டுமென வடமொழிப்பயிற்சி பெற்ற அன்பர்கள் கூறுகின்றார்கள். அவ்வல்லா உபநிஷத்தின் பொருளைத் திட்டமாக யானறியேன். கூடிய சீக்கிரம் வட மொழி பண்டிதர் களிடம் கேட்டு அறிந்து பத்திரிகை வாயிலாக வெளியிடுகிறேன். யான் கூறப்போகும் அல்லா உபநிஷத்தில் எனக்கு வடமொழிப் பயிற்சியின்மையால் சில உச்சரிப்புகள் தவறுதலாக இருப்பினு மிருக்கலாம் அன்பர்கள் அதைப் பொருட்படுத்தாது மன்னிப்பீர் களாக, அல்லா உபநிஷத் ஓம் அமல்லம் இல்லா-நித்ரா வருணோ- திவ்ய நித்த, இலில்லா வருணோ ராஜ புணர்ந்தது: ஹயாமி மித்ரோ இல்லம் இல்லல்லாதி இல்லல்லாம் வருணோ மித்ரோ தேஜோமர் ஹேதார மிந்தரோ-மஹருர்ந்ரோ அல்லோஜ்யாதம துரய அல்லோ அல்லம் அதல்லா உருமேகாசாம் அல்லம் உகாம் நிகதாகாம்- அல்லோயக்கு-நஹுதாஹுத்தவாஹா அல்லா சூர்ய சந்தா சர்வ நஷத்ர: அல்லோ புருதிவ்ய அந்தநிஷ்ம் விவரூபம்- திவயநிதாதி, இலில்லா வருணோராஜ புனார்த்தது: இல்லாஹு வாரா, இல்லா ஹுவாரா இல்லில்லாதி இல்லில்லாஹ இல்லா இல்லில்ல அன திவரூப அநர்வனோ சாஹம் ஹுரும் ஹரிம் ஜானன பாவன ஹிதான ஜலசான அதிருஷ்டம் குருகுருபத் அஸூரனம் ஹாரினம் ஹம் அல்லோரசுர மஹமதாக வரய அல்லோ அல்லம் இல்லல் லாதி இல்லல்லாஹ - என்பதேயாம். இரண்டாவதாக போகர் ஜெனன சாஹரம் என்னும் நூலில் அரேபியாவிலுள்ள மக்கமா நகரில் முஹம்மது நபிய்யா தானே அவதாரம் புரிந்ததாய் போக முனிவர் சொன்னதாக ஒரு பெரும் கட்டுக்கதையை இடைச்செருகலாகப் புகுத்தி விட்டதோடு இன்னும் பல சித்தர் நூற்களில் இதற்கு ஏதுவான பல கதைகளும் சேர்த்து எழுதியிருக்கின்றனர்.mitfisbašyh« ஈண்டு விபரமாய் எடுத்துக்காட்டிக்கொண்டே போனால் இஃதோர் பெரும் நூற் போலாகிவிடுமென்றஞ்சி எடுத்துக்காட்டப்படவில்லை. மூன்றாவதாக இந்துக்களின் புண்யதலங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஸ்ரீரெங்கத்திலுள்ள சுவாமி ஸ்ரீ ரெங்க நாதர் ஒரு முலீம் பெண்ணை மணந்துகொண்டதாக ஒரு கட்டுக்கதையை உண்டாக்கினர். பாவம்! இவ்விரங்கநாதருக்கு தன் பக்த கோடிகளான இந்து மக்களில் ஒருபெண் கிடைக்காமல் போனது விந்தையினும் விந்தையே! இன்றளவும் ஸ்ரீ ரெங்கத்தில் அப்பெண் சாமிக்கு துலுக்க நாச்சியாரெனப் பெயரீந்து இந்து மததர் என்போர் பலரும் வணங்கி வருகின்றனராம் எமது சொந்த ஊரான சாத்தன் குளத்தி லும் பட்டாணி சாமி என்று பல விடங்களில் பீடங்கள் போட்டு அப்பிடங்களில் ஒரு பட்டாணி சாஹிப் போன்ற படம் வரைந்து இன்றளவும் வணங்கி வருகின்றார்களாம். இந்துக்கள் சாமிகளுக்கு மற்ற சாமிகள் போன்று தேங்காய், பழம், சர்க்கரைப் பொங்கல், பாயாசம் முதலியவைகள் படைத்து வணங்குவதில்லையாம். ரொட்டி யும் பாலுமே அவர்களுக்கு பிரியமான ஆகாரமென நினைத்து அவ்வாறே பீடத்தின் முன் வைத்து வணங்கி வருகின்றார்களாம். நான்காவதாக சில இந்துக்கோவில்களினுள் முலீம் களையும் வர அனுமதித்தல், பல இந்துக் கோயிலையடுத்து முலீம் பள்ளிகளையும் ஏற்படுத்தியிருத்தல், சில இந்துக்கள் கோவிலினுள் முலீம் பெரியார்களின் சமாதியிருப்பதாகக்கூறி அங்கு போய் முலீம்களையும் பாத்திஹா ஓதும்படி தூண்டல், சில முலீம் தர்கா போன்றவைகளுக்கு இந்துக்களே தர்ம கர்த்தாக்கள் (டிரடிகர்) ஆக இருத்தல் முதலியவைகள். ஐந்தாவதாக நாகூர் போன்ற நகர்களிலுள்ள இலாமியப் பெரியார்களின் சமாதிகளில் ஆயிரக்கணக்காய் இந்துக்களென் போர் சென்று காணிக்கைகள் கொடுத்து பிள்ளை வரம் பெறவும், நோய்கள் நீங்கவும், பேய்களைத் துரத்தவும் செல்வம் பெருகவும் வியாபாரம் விருத்தியாகவும் போய்ப் பிரார்த்தித்து வந்ததோடு அச்சமாதிகளின் முன்னே தங்கள் கோவில் போன்று மேளதாளம் போடவும் தாசிகள் நடனம் செய்யவும் வான வேடிக்கைகள் நடத்த வும் கூண்டு (சப்பரம்) எடுக்கவும் பஞ்சா போன்ற (ஐந்துவிரலை யுடைய கையுருவம்) உருவத்தை எடுக்கவும் தூண்டியதோடு தங்களின் பழக்க வழக்கங்களையும் அன்னாரிடம் புகுத்திவிட்டனர். இன்று அச்சமாதிகளில் நடைபெறும் இச்செயல்களை முலீம்கள் விட்டு விட்டாலும் இந்துக்கள் விடத் தைரியமில்லையென எம் முலீம் நண்பர் பலர் கூறுகின்றனர் ஆ! இஃது விந்தையினும் விந்தையே! ஆறாவது சில இந்துக்கோவில்களுக்கு முலீம் தர்ம கர்த்தாக்களை (டிரடிகளை) ஏற்படுத்திக்கொள்ளல், ஹிந்துக்கள் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களுக்கு முலீம்களுக்கு ஒரு கட்டளை ஏற்படுத்தி அவ்வாறே இன்றளவும் நடை பெற்று வரல் அச்சாமிகளுக்கு அக்கட்டளை நடத்தும் முலீம் தேங்காய், பழம், பட்டு, பூ முதலியவைகளைக் கொடுத்தல் பின்னர் பிரசாதம் பெறல் முதலியவைகளேயாம். இதோடு இன்னும் பல சூட்சிகள் புரிந்து முலிம்களை இந்து மதப் படுகுழியில் தள்ள முயன்றனர் குர் ஆன் அதர்வண வேதத்தின் பிரதியொலி என்றனர். ஆனால் இவ்விந்துக்களின் சூழ்ச்சிகள் ஒன்றும் பலியாமல் முலிம் பெரியார்கள் பலர் செய்துவிட்டனர். இந்து மதத்திற்கும் இலாத்திற்கும் யாதொரு சம்மந்தமுமில்லை யென முலிம் அறிஞர்கள் தெளிவுபடுத்திக் கூறிவிட்டார்கள். இந்துப் புரோகிதர்கள் சூழ்ச்சி பலிக்க வில்லையே என்று ஒரு மூலையில் போய் உட்கார்ந்து விட்டனர். என்றாலும் ஒருசில சுயநலக் கோஷ்டியார் இந்துப்புரோகிதர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி முலிம் பாமரர்கள் சிலரை ஏமாற்றி பொருள் பரிக்க ஆரம்பித்து விட்டனர். அவ்வழக்கம் இன்றளவும் இருந்து கொண்டேயிருக் கிறது. இப்பொழுது தான் அறிஞர் தாவூத்ஷா போன்ற பெரியார்கள் வெளிவந்து தாருல் இலாம் என்னும் வார வெளியீட்டின் மூலம் இலாத்தில் புரோகிதமில்லையென எடுத்துக்காட்டி முலிம் களை புரொகிதர்களின் மாயவலையினின்று விடுபடச் செய்து வருகின்றனர். இஃதே போன்று கிருணனே கிறிது வென்றும் இவர்க ளிருவர்களுக்கும் பல விஷயத்தில் ஒற்றுமையுண்டெனவும் கிருது மார்க்கத்தில் விபூதி பூசல், விக்ரகவணக்கம் முதலியவைகளுண் டெனவும் சித்தர் நூற்கள் சிலவற்றில் கிறிதுவும் அவர்தம் நண்பர் களும் இந்து சமயப் பெரியார்களின் அவதாரமென்றெல்லாம் கூறியிருப்பதாக எடுத்துக்காட்டி அவர்களையும் இந்து மதப்படு குழியில் தள்ளமுயன்றும் அதுவும் பலிக்கவில்லை. ஆனால் பாவம்! சைவர், வைஷ்ணவர், சமணர் முதலியோர் புரோகிதக் கூட்டத்தாரின் இந்துமதப்படுகுழியில் வீழ்ந்து தத்தளிக் கின்றனர். தத்தம் சமயக்கொள்கைகளும் வேதக்கோட்பாடுகளும் அறவே மறக்கப்பட்டு புரோகிதர்கள் இட்டதே சட்டமென நம்பி அவர்கள் கூறும் வழிகளிலெல்லாம் சென்று கை பொருளையிழந்து கண்கலங்கி நிற்கின்றனர். புரோகிதத்தை யொழித்து அன்பை அவனியில் நிலைநாட்ட தோன்றி ஆசியாவின் ஞானஜோதி என்று அறிஞர் கூறும் புத்தர் பெருமான் நிறுவிய புத்த சமயமே இந்தியாவை விட்டு கிட்டத்தட்ட ஓட்டப்பட்டுவிட்டதென்றால் புரோகிதத்தின் வன்மைதானென்னே! முடிவாக யான் கூறுகிறேன் இந்துமதம் என்றால் ஒரு மதமன்றென்றும் பல சமயக்கொள்கை களையும் ஒன்றாய்ச் சேர்த்துப் பல மக்களையும் ஏமாற்றிப் பொருள் பறித்து தங்கள் வயிற்றை நிரப்பவே இந்துமதம் என்ற வார்த்தையைப் புரோகிதர்கள் நிலை நாட்டினர் என்பதையும் அறிந்து பல பெரியார்கள் இந்துமத ஊழல்களையும் அதன் கொடுமைகளையும் எடுத்துக் கூற வந்தார்களென்றாலும் முற்றாகத் தங்கள் உள்ளத்தில் உள்ளதை ஒழியாமல் தைரியமாய் எடுத்துக்கூறவில்லை. அக்கால மும் இடங்கொடுக்கவில்லை. இவ்விருபதாம் நூற்றாண்டிலே இங்கிலீ அரசாங்கத்திலே சிறிது பேச்சு சுதந்திரமும் நீதியுமிருப்ப தால் மிகத்தைரியமாய் அஞ்சா நெஞ்சத்துடன் ஈரோட்டுப் பெரியார் ஈ.வெ. இராமசாமியார் குடி அரசு என்னும் சர்ச்லைட்டைப் பிடித்து அந்த காரிருள் சூழ்ந்த இந்துமத ஆபாசங்களை மக்களுக்கு எடுத்துக்காட்டி இந்துமதத்தை ஒழிக்க வாருங்கள்! வாருங்கள்! எனநம்தமிழ்மக்களைஅழைக்கின்றார்.mt® j« th®¤ij¡F¤ தமிழ்நாடு செவிமடுக்க ஆரம்பித்துவிட்டது. தற்காலத்தே இந்துக்கள் என்று கூறிக்கொள்ளும் மததர்கள் யார் என்றும் அம்மததர்களின் கொள்கைகள் என்னவெனவும் சிலரே அறிந்திருக்கக்கூடும். ஆகையால் ஈண்டு அவைகளை எடுத்துக் காட்டல் சாலச்சிறப்புடையது என்று கருதுகின்றேன். எத்துணை மதங்கள் இந்துமதப் படுகுழியில் தள்ளப்பட்டிருக்கிறது? என்றும் அவைகளின் வெவ்வேறு விதமான கொள்கைகளையும் அறிந்தால் தான் அப்படுகுழியினின்று கரையேற மக்கள் முயற்சிப்பாரென்ற கருத்துடன் இதனடியில் எடுத்துக் காட்டப்படுகின்றது. அன்பர்கள் கவனிப்பார்கள். இந்துமதப் படுகுழியில் தள்ளப்பட்ட சமயங்கள் மார்த்த சமயம், சைவசமயம் அதன் உட்பிரிவுகளான ஊர்த்த சைவம், அனாதிசைவம், ஆதிசைவம், மஹாசைவம், பேத சைவம், அபேதசைவம், அர்தாசைவம், குணசைவம், நிர்க்குணசைவம், அத்துவாசைவம், யோகசைவம், ஞானசைவம், அணுச்சைவம், கிரியா சைவம், யலூபாதச் சைவம், சுத்தசைவம் என்னும் பதினாறு சைவங் களும் உட்சமயமென்று சொல்லப்படும். வைரவம், வாமம், களா முகம், மாவிருதம், பாசுபதம் சைவம் என்று கூறப்படும் ஆறு உட் சமயங்களும் வீரசைவமும், வட நாட்டிலுள்ள தசானமி கண்டி சைவம், யோகசைவம், பரமஹம்ச சைவம், அகோரசைவம், ஊர்த்த பகாயி சைவம், ஆகாசமுகிசைவம், காசிசைவம், கூடார சைவம், ருகார, சுகார உகாரசைவம், காராலிங்கசைவம், நாக சைவம் முதலிய சைவங்களும், வைஷ்ணவ சமயமும் அதன் பிரிவான மாத்வவைணவமும் வல்லபாசாரியார் மதம், சாக்தமதம், சக்திமதம், காசிலியர்மதம், காரரிகள்மதம், பாகாமதம் முதலியவைகளும் வடநாட்டிலுள்ள காசிவைணவம், மரலுக்தாசிவைணவம், தாதுபந்து, இராயதாசி வைணவம், சேனாபந்திவைணவம், மீராபாய்வைணவம், இராதா வல்லபிவைணவம், சகிபரவ வைணவம், சாரணதாசிவைணவம், ஹரிச்சந்திரவைணவம், சாதனபந்திவைணவம், மாதோவைணவம், பிராணநாதனன் வைணவம், சாதுவைணவம், சதாரமவைணவம், சிவநாராயக வைணவம், திரிகண்டிவைணவம் முதலிய சமயங்களும் புத்தமதம், சமணமதம், ஜைனமதம், கவுரவமதம், சாந்திரமதம், நவக்கிரஹமதம், ஹீரண்யகர்ப்பமதம், காணா பத்தியமதம், காபாலிகமதம், லோகாயத்மதம், சாக்கியமதம், சார்வாகமதம், பஞ்ச பூதாத்தவாதிமதம், இந்திரியாத்மவாதிமதம், அர்தக்காணாக்மவாதி மதம், பிராணாத்மகாதிமதம், சூனிய வாதிமதம், சிவசமவாரதிமதம், அச்சமறாவாதிமதம், கௌமார மதம், வைரவமதம், சீக்யமதம் அதன் உட்பிரிவான சஞ்சபஷி சீக்கியமதம், இராமராயமதம், சூதிரசாஹி மதம், கோவிந்த சாஹிமதம், நிர்மலர்மதம், நாகர்மதம் முதலியவை களும் பிரமசமாஜம், ஆரியசமாஜம், தியாசபிமதம், தேவசமாஜம், புதுஇந்துசமயம் (இராமகிருஷ்ணபரமஹம்சர், விவேகானந்தர் உண்டாக்கியது) முதலிய சமயங்களும் இன்னும் பலவுமாம். இச்சமயங்களில் ஒவ்வொரு சமயத்தின் கொள்கைகளையும் எடுத்துக் காட்டினால் இஃதோர் பெரிய நூலாய் விடும். எனவே சிற்சில சமயங்களின் கொள்கைகளை மாத்திரம் ஈண்டு எடுத்துக் காட்டுவாம். மார்த்த சமயம்:- இச்சமயம் இன்ன காலத்தில் இன்னாரால் உண்டாக்கப்பட்டது என்று சொல்வதற்குரிய ஆதாரங்கள் எதுவும் கிடையாது. இந்திரன், பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் முதலியோர்களை முக்கியமான கடவுளாகக் கொண்டது. இச்சமயத்தார் முதன் முதலில் வேதமாக இருக்கு என்னும் ஒரே நூலையே கொண்டாடிப் பின்னர்வேதம் மூன்றாகக் கொண்டும் கடைசியில் இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் முதலிய நாலு வேதங்களையும் பிரமாணமாகக் கொண்டவர்கள். இச்சமயத்தார் இயற்கைப் பொருள்களாகிய நெருப்பு, சூரியன், மலை, தண்ணீர் முதலியவற்றையும் கூடக் கடவு ளாக வணங்குவர். இச்சமயம் பிராமணர்களுக்கே சொந்தமானது. இச்சமயத்தில் பிறஜாதியார் எவரும் சேருவதற்கு இடமில்லை. இச்சமயத்தின் பிரதானக்கொள்கை வருணாச்சிரம தர்மந்தான். பிராமணரல்லாதோர் எத்துணை ஒழுக்கமும் தர்மமும் கடவுள் பக்தியும் உடையவராயிருந்தாலும் அவர்களிறந்ததும் மோட்சம் செல்ல முடியாதென்பதும் அத்தகைய நல்லோர்கள் பிராமணராய்ப் பிறந்துதான் மோட்சமடைவர் என்றும் சொல்கிறது. இச்சமயத்தார் கடல் கடந்து செல்லக்கூடாது. இச்சமயத்தார் மது மாமிச போஜன முதலியவைகளில் பிரியமுண்டானால் யாகஞ்செய்து அருந்தலாம். புருடன் இறந்தால் புருடனோடு அவன் மனைவியும் சுட்டெரிக்கப்பட வேண்டுமென்பதும் விதவாவிவாஹம் கூடாதென்பதும் பெண் மக்கள் புபவதியாவதற்கு முன்னால் விவாஹம் செய்துவிட வேண்டு மென்பதும் பெண்களுக்கு தகப்பன் சொத்தில் உரிமை இல்லை என்பதும் பெண்கள் வேதத்தைப் படிக்ககூடாதென்பதும், தனக்கு பிரியமற்ற கணவரிடம் இருந்து விவாஹரத்து செய்யக் கூடாதென்பதும் இச்சமயக் கொள்கைகள். விக்கிரஹ பூஜை இச்சமயத்தில் சிறப்பாக உண்டு. இவர்களின் கோயில்கள் சிலவற்றில் ஆண்குறி வடிவமான ஒரு விக்ரகத்தை உண்டுபண்ணி வணங்கி வருகின் றார்கள். இச்சமயத்தில் மூட நம்பிக்கைகளும் அறிவிற்குப் பொருத்த மற்ற பல செய்கைகளுமுண்டு. இச்சமயத்தார் பணம் செலவழிக்காமல் கடவுளை வணங்க முடியாதவர்களா யிருக்கிறார்கள். இச்சமயத்தார் மேலே கூறிய இந்திய நாட்டின் பல சமயங்களையும் புதைத்து அதன் மேல் மார்த்த மதக்கொடியைக் கட்டிவிட்டனர். இச்சமயத்தார் தான் இப்பொழுது தங்களை இந்துக்களென்று அறியாமையால் கூறிக்கொள்ளும் கோடிக் கணக்கான மக்களை கடவுளிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் தரகர்களாய் விளங்குகின்றனர். இச்சமயத்தார் கடவுள் பேசும் மொழி சமகிருதமென்றும் அதையே தங்களுக்குக் கடவுள் தந்தருளினார் என்றும் சொல்லுகிறார்கள். இச்சமயத்தார் பழமையில் பெரிதும் பற்றுக் கொண்டவர்கள். இச்சமயத்தில் மறுபிறப்பு உண்டென்றும் கூறப்படுகிறது. இந்து சமயப் போர்வையைக் போர்த்திக்கொண்டு பிறசமயிகளிடம் பலவிதச் சடங்குகளையும் (கடவுள் பூசை, விவாஹம், சீமந்தம், பெயரிடல், ஓராண்டு நிரம்பல், ஏடுதுடங்கல், புபவதியாதல், சிரார்த்தம், மாசியம், கருமாதி, கிரஹதோஷநிவிர்த்தி முதலியவைகள்) ஏற்படுத்தி தன் உழைப்பின்றி ஏதோ ஒன்றிரண்டு சமகிருத வார்க்தைகளைச் சொல்லிவிட்டு ஏராளமான பொருளைப் பெற்றுக்கொண்டதோடு தாங்கள் பூசுரர் கடவுளுக்குப் பிரியமானவர்கள், தங்களுக்குச் சோறிடல், பணமீய்தல் முதலியவைகளில் பெரும் புண்யமிருக்கிற தென்று கூறி பல மக்களை ஏமாற்றி ஏராளமான பொருளைக் கவர்ந்து கொண்டதோடு, பார்ப்பனரல்லாதார்கள் பார்ப்பனருக்கு மாத்திரம் அன்னமிடும் பல சத்திரங்களை உண்டுபண்ணத் தூண்டி நம் நாட்டில் லட்சக்கணக்காய் சத்திரங்களை உண்டு பண்ணி, அதிலிருந்து தங்கள் ஜாதியார் கஷ்டமில்லாமல் சத்திரத்தில் சாப்பிட்டு, அவ்வூரிலுள்ள பிரபுக்களின் உதவியின் பேரில் ஆங்கிலக் கல்வி பெற்றுத் தரித்திரராய் விளங்கிய இச்சாதியார் ஆங்காங்கு பணம் பெரிதும் உடையவர்களாய் விளங்குகிறார்கள். இந்திய நாட்டுமக்கள் படிப்பில் பிற்போக்கடைந்திருப்பதற்குக் காரணம் இச்சமயத்தார்தான் என்று கூறல் மிகையாகா? இந்த இருபதாம் நூற்றாண்டுவரை பார்ப்பனர்கள் கொலைபுரிந்தாலும் அவர்களைத் தூக்கிடக் கூடாதென்று திருவாங்கூர் அரசாங்கச்சட்டத்தை மாற்றி யிருந்த இந்த மார்த்தமதத்தார் பழைய காலத்தில் பார்ப்பனரை ஒழித்த மற்றையோர் படித்தல் கூடாதென்று சட்டஞ்செய்தனரென் றால் அது அசாத்யமான காரியமா? மார்த்த மதத்தில் பிரவேசிப் பவர்கள் உபநயனம் செய்து காயத்ரி மந்திரம் பயின்று கொள்ள வேண்டும். அதுபோல் கம்மாளர்கள் உபநயனஞ்செய்து விசவப் பிராமணர் நாங்கள் பார்ப்பானைவிட உயர்ந்த ஜாதி என்று கூறினா லும் மார்த்த மதம் தங்களுக்கே சொந்தமென்று கொண்டாடி வரும் பார்ப்பனர்கள் தங்களோடு இவர்களைச் சேர்த்துக் கொள்வ தில்லை. இச்சமயம் இந்தியாவில் மட்டுமேயுள்ளது. அதிலும் வட இந்தியாவில் ஒருவிதமாகவும் தென்னிந்தியாவில் ஒரு விதமாகவும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன. இச்சமயத்தார்தான் இந்து சமயத்தார் என்று கூறிக்கொள்பவர்களுக்குப் புரோகிதம் செய்ப வர்கள். இச்சமயத்தின் கொள்கைகளில் பெரும்பாலானவைகள் தான் இந்து சமயிகளென் போரிடத்தில் பரவியிருக்கிறது. இச் சமயத்தில் பௌவுண்டரீகயாகம் போன்ற ஆபாசச் செயல்களெல் லாம் இருந்தன. தற்காலம் அவைக ளெல்லாம் சீர்திருத்தப்பட் டிருக்கிறது. சைவம்: இச்சமயத்தார் இருக்கு, யசுர், சாமம், அதர்வண முதலிய மார்த்த வேதங்களையே தங்களின் வேதங்களாகவும் பதிணென் புராணங்களையும் தங்களின் அறநூலாகவும் ஒப்புக் கொண்டவர்கள். சிவனையே கடவுளாகக் கொண்டவர்கள் என்றா லும் அவர் மனைவி பார்வதி, கங்கை, முதலிய பெண்களையும் அவருடைய மக்கள் விநாயகர், சுப்பிரமணியர், வயிரவர், வீரபத்திரர் முதலியவர்களையும் கடவுளாகக்கொண்டவர்கள். இச்சமயம் மார்த்த மதத்தின் கிளையாக இருந்தது. ஆறுமுகநாவலர், இராம லிங்கம் பிள்ளை முதலியோர்கள் இச்சமயத்தைச் சீர்திருத்த ஆரம் பித்தனர் என்றாலும் முற்றாகச்சீர்திருத்தம் செய்யமுடிய வில்லை. பார்ப்பனர்கள் கூற்றுப்படி பார்ப்பனரொழிந்த ஏனையோரெல் லாம் சூத்ரா அதாவது வேசி மக்கள், அடிமைகள், ஆசாரமில்லாத வர்கள் என்ற இழிந்த பட்டத்தினின்று சைவர்களை வேளாளர் களை விலக்க முடியாமல் அவர்களைச் சற்சூத்ரர் என்று கூறினர். அதாவது நல்ல வேசிமக்கள், நல்ல அடிமைகள், நல்ல ஆசார மில்லாதவர்கள் என்றுதான் கூறமுடிந்தது. பின்னர் தோன்றிய சுவாமி வேதாசலம், திரு.கா. சுப்பிரமணியம் பிள்ளை முதலியோர் தோன்றி இச்சமயத்தார்க்கு வேதம் தேவாரம், திருவாசகம், திருமந்திரம், திருக்குறள் முதலியவைகளேயென்றும் இச்சமயத்தில் பிற சமயத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் ஜாதி பேதம் இச்சமயத்தில் கிடையாதென்றும் மார்த்த மதத்திற்கும் இச் சமயத்திற்கு யாதொரு தொடர்பும் கிடையாதென்றும் இச்சமயத்திற் புகவேண்டுவோர் சிவதீட்சைபெற்றுக் கொள்ளவேண்டும் என்றும் இச்சமயத்தார் தங்களை இன்னசமயத்தார் என்று காட்ட விபூதியும் உருத்ராக்கமும் அணியவேண்டுமென்றும் இவைகளை யணிதல் புண்ணியமான செயலென்றும் எழுதினார்கள். சொல்மாரி பொழிந் தனர். இப்பெரியார்கள் செய்த சீர்திருத்தங்களிற் சில காலத்திற் கேற்றதுதான். என்றாலும் இவர்களாலயே அவைகளை அனுட் டித்துக் காட்ட முடியாமற் போய்விட்டது என்றால் பிறரை நாம் எங்ஙனம் அனுட்டானத்தில் எதிர்பார்ப்பது. மார்த்த மதம் எவ்வாறு பார்ப்பார்களுக்குச் சொந்தமாய் பிறர்புக உரிமையில்லை யென்று பார்ப்பனர் கூறிக்கொண்டிருக்கிறார்களோ அவ்வாறே வேளாளர் அதிலும் சிறப்பாக திருநெல்வேலி வேளாளர்களும் அவர் தம் உறவினர்களுக்குமே சொந்தமென்றும் அவர்கள் தாங்கள் சிவதீட்சை பெறாவிட்டாலும் மதுவருந்தினாலும், புலாலுண்டா லும் சைவர்களாகவே பாவிக்கப்பட்டு வருகின்றார்கள். இச்சமயம் உலகிலுள்ள எவ்வுயிர்க்கும் இன்னல் புரியக்கூடாதென்று கூறுகிறது என்றாலும் இச்சமயத்தார் மனிதப் பிராணிகளிடத்திலும்கூட அன்பு பாராட்டுவதுகிடையாது.v¤Jiznah சீர்திருத்தக்காரர்கள் தோன்றியும் இச்சமயத்தின் பேரில் மார்த்த பார்ப்பனர்களுக்குள்ள அதிகாரத்தையும் அவர்களால் ஏற்படுத்தியுள்ள சிரார்த்தம், விவாஹச் சடங்கு,கோவிலில் நடக்கும் பலவித அநாகரிகச் செயல்கள் முதலிய வைகளை ஒழிக்க வழியில்லை. வடமொழி, கடவுளுக்கு எவ்வாறு பிரியமான மொழியென்று பார்ப்பனர்கள் கூறினார்களோ அவ் வாறே தமிழும் சிவபிரானுக்குச் சொந்தமொழியென்றும் அவரால் தான் இம்மொழி உண்டாக்கப்பட்டதென்றும் இச்சீர்திருத்த வாதிகள் கூடச் சொல்லுகிறார்கள். சைவர்களையும் சூத்திரர்கள் என்று மார்த்தர்கள் கூறும் கூற்றுகளை இச்சீர்திருத்த சைவர்கள் ஒப்புக்கொள்ளமறுத்ததோடு இராமாயணம் முதலிய மார்த்த நூற்களை பண்டைக்கால சைவர்களே போன்று போற்றார்கள். இச் சைவத்தைச் சார்ந்த புலவர்களாலேதான் பல புராணங்கள் உண் டாக்கப்பட்டு, மக்கள் புத்திக்கும் யுக்திக்கும் ஒவ்வாத சில விஷயங்கள் புகுத்தப்பட்டது. கடவுள் பேரில் ஆபாசமான, பொய்யான பல கதைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இச்சமயத்தார் பிற ஜாதியார்களைத் தாழ்த்திவைத்ததில் பார்ப்பனரிலும் ஒருபடி உயர்ந்தவர்கள் என்று கூறலாம். இச்சமயத்தார்க்கு எவ்வித கட்டுப்பாடும் கிடையாது. பெரும்பாலான ஜனங்களுக்குத் தங்களின் சமயம் சைவம் என்று கூடச் சொல்லத்தெரியாது. இவர்களில் பலர் மாடன், கருப்பன், இடைச்சி, பேச்சி, காளி முதலிய தேவதைகளுக்கு உயிர்ப்பலி இட்டும், மது முதலியன படைத்தும் வணங்கி வருகின்றனர். தங்கள் பிள்ளைகளுக்கு அச்சாமிகளின் பெயர்களை இன்றளவும் இட்டு வருகின்றனர். இச்சமயத்தார்களின் ஆலயங்களில் தாசிகள் நடனம் ஆடி வருகின்றதை சில சைவர்கள் கண்டிக்கின்றனர் என்றாலும் வயது முதிர்ந்து விபூதி, உருத்ராக்கம் பூண்டு நாடோறும் கோயி லுக்குச் செல்லும் மனைவியையிழந்த சிலர் கோவிலில் தாசிகள் நடமாடுவதும் சிவபக்தர்களின் காம இச்சைகளை அத்தாசிகள் தணிப்பதும் அவர்களுக்குப் புண்ணியமான செயலென்று நம்பு கிறார்கள். ஒருவன் எவ்வளவு பாவஞ்செய்தாலும் கோவில் கட்டுவ தாலும் விக்ரஹ சுவாமிகளுக்கு நகைகள் செய்வதினாலும் தான் செய்த பாவத்தை போக்கி விடலாமென்றும் கருதுகின்றனர். அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், சம்பந்தர் முதலிய நால்வரையும் சமய ஆச்சாரியராகப் போற்றுகிறவர்கள். வைணவம்: மஹாவிஷ்ணுவைக் கடவுளாகக்கொண்டு வழிபடுவோர்க்கு வைஷ்ணவர் என்று பெயர். வடமொழி நூல்கள் சிலவற்றையும் நாலயிரப் பிரபந்தம் முதலிய தமிழ் நூற்களையும் வேதமாகக் கொண்டவர்கள். வருணாச்சிரம தர்மத்தில் மார்த் தர்கள், சைவர்கள் முதலியோர்களைவிட இவர்கள் மிகக்கண்டிப் புள்ளவர்கள். இச்சமயத்தில் பிரவேசிக்க முத்திர தாரணம் அல்லது சமாசிரயம் (சங்கு முத்திரை) தரித்தல் முதலியன செய்யவேண்டும். சமய அடையாளமாக நெற்றியில் சிவப்பு, வெள்ளை முதலிய குறிகள் போட்டுக் கொள்வர். இவர்களில் வடகலை, தென்கலை முதலிய பிரிவுகளுமுண்டு. இவர்களிலொரு பிரிவார் மற்றையப் பார்ப்ப னர்கள் போல் பெண்கள் கணவர்களை இழந்து விட்டால் அவர்களை மொட்டையடிப்பதும் வெள்ளையாடை அணிவிப்பதும் கிடையா. இவர்கள் விஷ்ணு உலகில் ஒன்பது அவதாரம் புரிந்திருக்கிறார் என்றும் இனிப் பத்தாவது கல்கி அவதாரமாய் வரப்போகிறார்கள் என்று கூறுகிறார்கள். விஷ்ணுவின் மனைவி லட்சுமியை மார்த்தர் களும் சைவர்களனைவரும் வணங்குகிறார்கள். இவ்வைணவர்கள் 12 ஆழ்வார்களையும் போற்றுவார்கள். இராமநுஜ ஆச்சாரியார் காலத்திலே இச்சமயம் கொஞ்சம் சீர்திருத்தப்பட்டது. ஜாதி பேதத்தைக் கண்டித்தும் மேல் கோட்டையில் சக்கிலியர், ஆதித் திராவிடர் முதலியோர் ஆலயத்துட்புகுந்து ஆண்டவனை வணங்கி வரவும் இரகசியமான மந்திரங்களைப் பல ஜாதியார்களுக்கும் கற்பிக்கவும் செய்தார். பல ஜாதிக்காரர்களையும் வைணவப் பிராமணராக்கினார். அவர்காலத்தில் வைணவப் பிராமணராக்கப் பட்ட ஜாதியார் முன்னுள்ள பார்ப்பன வைணவர்களோடு கலந்து விட்டனர் என்றாலும் கோத்திரப் பெயரிலிருந்து எந்த ஜாதியி லிருந்து இவர்கள் வைணவராக்கப்பட்டார் என்று இன்றுங்கூடத் தெரிந்துக் கொள்ளலாமென்றும் சிலர் சொல்லுகிறார்கள். வைணவப் பிராமணர்கள் சில கோத்திரப் பெயர்கள் ஏறியிறங்கும் திருமேனி கொட்டுக் கொட்டும் திருமேனி முதலியவைகளாயிருக் கிறது. இவைகளினால் நாடார்கள் வைணவர்களானதும் ஏறி யிங்கும் திருமேனி என்றும் ஓச்சர் வைஷ்ணவரானதும் கொட்டுக் கொட்டும் திருமேனி என்றும் வழங்கப்பட்டனர் என்று சொல்லப் படுகிறது. பிற்காலத்தில் வைஷ்ணவ சமயத்தைச் சேர்ந்த வேளாளர் கோனார் முதலியோர்கள் இன்னும் வைஷ்ணவ வேளாளராகவும் வைஷ்ணவக்கோனார்களாகவுமிருக்கின்றனர். இச்சமயத்தைச் சார்ந்த பட்டுநூல்காரர் பூணூல் போட்டும் இராமம் போட்ட தோடு நில்லாது ஐயங்கார் என்ற பட்டத்தைவைத்துக் கொண்டா லும் வைணவப் பார்ப்பார்கள் அவர்களைச் சமத்வமாய் நடத்துவது கிடையாது. இச்சமயத்தார் நடவடிக்கையில் பெரும்பாலும் மார்த்தப் பார்ப்பனர்களை ஒத்தே நடந்து வருவர். இம்மதத்தில் அநுமார் மிக பக்தியுடன் வணங்கப் பட்டுவருகிறார். தசானகண்டி சைவம்: சங்கராச்சாரியாருடைய வேதாந்த சித்தாந்தமே இவர்களின் முக்கிய கொள்கைகள். ஓம் நமச்சிவாயா என்று அடிக்கடி ஜெபித்துக்கொள்வார்கள். ஆதியில் இச்சமயத்தைச் சார்ந்தவர்கள் பார்ப்பனர்களாகவேதானிருந்தார்கள். இப்பொழுது எல்லாச் சாதியார்களிலும் இச்சமயத்தை சார்ந்தவர்களிருக்கிறார்கள். இவர்களிற் சிலர் தலைமயிர், தாடி, மீசை முதலியவைகளைச் சிரைத்துக் கொண்டும் காவியுடையணிந்து மிருப்பார்கள். பசி யுண்டானால் பார்ப்பனர்களின் வீட்டில் மாத்திரம் பிச்சை வாங்கிச் சாப்பிடுவார்கள். பலர் அத்திரிமாமுனிக்கும் அனுசுயா விற்கும் பிறந்த தத்தாத்திரேயரைக் குருவாகக் கொண்டவர்கள். இவர்கள் காசி முதலான விடங்களில் ஏராளமாக இருக்கிறார்கள். அகோரசைவம்: சிவபெருமானின் மனைவியாகிய துர்க்கா தேவியைப் பூஜிப்பார்கள், விபூதியணிவார்கள், ஜடை வளர்த் திருப்பார்கள், மரவுரியாடை புனைந்திருப்பார்கள். சில வேளை களில் மக்களின் மண்டைஎலும்பு ஓட்டைக் கையில் ஏந்திக் கொண்டு உடலில் பவத்தையும் உதிரத்தையும் பூசிக் கொண்டு யாசித்துப் பிழைக்கின்றனர். இவர்கள் மதுமாமிசங்களை அருந்திப் பலவிதக் கெட்ட செயல்களையெல்லாம் புரிவார்கள். ராமலிங்க சைவம்: இந்நெறிபற்றி யொழுகுபவர்கள் முற்றிலும் காம இச்சையையொழித்தவர்களாக இருக்க வேண்டும். இவர்கள் தங்கள் சமயக் கொள்கைப்படி நடப்பவர்கள் என்று உலக மறிவதற்காகத் தங்கள் ஆண்குறிகளில் களையத்தையும் இரும்புச் சங்கிலியையும் மாட்டிக் கட்டிக் கொண்டு சிவனைப் பூஜிப்பார்கள். நாக சைவம்: இன்னெறிபற்றியொழுகுபவர்களும் நீறணிப வர்களே. இவர்கள் துணி, மணி முதலிய ஆசைகளை நீத்து நிர்வாணிகளாக இருத்தல் வேண்டும். இச்சமயத்தார் ஏராளமாய் வசிக்கும் தலைமை நிலையம் வடநாட்டிலுள்ள பந்தல்கண்டு என்னும் இடமாம். இச்சைவர்கள் பெரும்பாலும் கட்டாரிகளைக் கொண்டும், கத்திகளைக் கொண்டும் வழி மறித்து பொருள் பரித்துத் திரியும் அறிவீனத்தையுடையவர்கள். ஹரித்துவாரத்தில் கடும் மஹாயோனத்தில் பெரும் கூட்டமாகப் போந்து அங்கு வந்திருக்கும் வைணவ சந்யாசிகளோடு சண்டைகள் புரிவார்கள். சைவர்களனைவரிலும் தாங்களே உயர்ந்தவர்கள் என்ற தற் பெருமையையுடையவர்கள். வாம மார்க்கம்: இச்சமயத்தார் பூமியின் மீதோ அல்லது பலகையின் மீதோ ஒரு முக்கோணத்தையேனும் சதுரத்தையேனும் சக்கரத்தையேனும் எழுதிக்கொண்டு அதன் மீது மது பானத்தை வைத்து வணங்கி, பின்னர் ஏ மதுபானமே! நீ பிரம்ம சாபத்தி லிருந்து நீங்கிப்போ என்ற மந்திரத்தை ஜெபிப்பார்கள். தங்கள் மார்க்கத்தைத் தவிர ஏனையோர் வரமுடியாது இடத்தில் ஆண் களும் பெண்களும் கூடி பெண்களை நிர்வாணமாக்கி பெண்குறிப் பூஜை புரிகின்றார்கள். பின்னர் அவ்விடத்தே தம் மனைவி, மகள், தாய், சகோதரி, முதலிய எவர்களாயிருந்தபோதிலும் அவர்களுடன் சம்போகம் செய்யலாம். பின்னர் ஒரு தட்டு நிரம்ப சாராயத்தை நிறைத்து மற்றொரு தட்டில் மாமிசமும் மற்றும் சில பலகாரங் களும் படைக்கிறார்கள். பிறகு அவர்கள் குருக்கள் அவைகளைக் கையிலேந்தி நான்தான் பைரவன், நான் தான் சிவன் என்று கூறி அதைக் குடித்தபின் மற்றவர்கள் எஞ்சியதை அருந்துவர். பின்னர் எந்தப் பெண்ணையாவது ஒரு வேசியானாலும் சரியே அல்லது ஒரு ஆடவனையாவது நிர்வாணமாகச் செய்து கையில் ஓர் ஆயுதமுடன் தேவி என்றோ மஹாதேவன் என்றோ கூறி அக்குறிகளை பூஜித்தல் வேண்டும். பின்னர் அத்தெய்வமும் மதுபானம் அருந்தியதாக எண்ணி எல்லோரும் மதுபானஞ் செய்கிறார்கள். மயக்கம் வருகிறவரையில் குடித்துவிட்டு தாய், சோதரி முதலிய எத்தகைய பெண்ணோடும் கலருவார்கள். அவ்வமயம் யாராவது வாந்தி பண்ணினால் அதை யுண்பவர்கள் சர்வசித்தியையும் அடைந்தவர்கள் (அகோரிகள்) என் றெண்ணி வருகின்றனர். ஆனால் வாம மார்க்கத்தார்கள் தந்திரங் களில் (பிரமாண நூல்களில்) தாய் ஒருத்தியைத் தவிர மீதி எவருட னும் (பெண் சோதரி முதலியவருடனும்) சம்போகம் செய்து கொள்ளலாம் என்று கூறுகிறது. இவர்கள் நூல்களில் பத்து மகா வித்தைகள் பெயர் பெற்றவைகளாகும். அவைகளின் மாதங்கி வித்தையில் தேர்ச்சி பெற்றவன் தாயுடனும் சமபோகம் செய்யலாம். சம்போக சமயத்தில் சித்தியடைவோம் என்ற மந்திரத்தை ஜெபித்துக் கொள்ளவேண்டுமாம். சோலீ மார்க்கம்: சோலீ மார்க்கத்தார் என்றால் ரவிக்கை வழியைப் பின்பற்றினவர்கள் என்று பொருள். இச்சமய நெறிபற்றி நின்றொழுகும் ஆண், பெண் முதலிய அனைவரும் இரகசியமான ஓரிடத்தில் கூடி மதுபானம் அனைவராலும் அருந்தப்பட்டபின் ஒரு பெண்ணை நிர்வாணமாக்கி அப்பெண்ணின் குறியைப் பூஜித்தல் துர்க்காதேவி பூஜை என்று சொல்லுகிறார்கள். அஃதேபோன்று பெண்டிர்கள் எல்லாரும் ஆடவனை நிர்வாணமாக்கியும் தொழு கின்றார்களாம். மது மயக்கம் தீர்ந்த பின் ஆண்டுள்ள பெண்க ளெல்லாம் தங்களின் ரவிக்கைகளை யெல்லாம் ஒரு மட்பாண் டத்தில் போட்டு குலுக்கி வைத்து விட்டு அங்கு குழுமியுள்ள ஆண் களெல்லாம் ஒவ்வொரு ரவிக்கையை எடுக்கவேண்டுமாம். அந்த ரவிக்கைக்குரியவள் தன் தாய் ஆனாலும் சரி சோதரியானாலும் சரி அச்சமயம் அவனுக்கு மனைவியாக இருக்கவேண்டும். இப் பூஜைகளெல்லாம் சூரியன் உதிப்பதற்கு முன்னாலே நடத்திவிட வேண்டுமாம். இச்சமயம் காசிலியர் மதம் என்று கூறப்படும். இம் மததர் இப்போது அபூர்வம். பீஜமார்க்கம்: சம்போக காலத்தில் ஜலத்தில் வீரியத்தைக் கலந்து குடிப்பதனால் மோட்சம் சித்திக்குமென்று நம்புகிறதுடன் இன்னும் பலவித மூடக்கொள்கைகளை நிரம்ப உடையவர்கள். புஷ்டி மார்க்கம்: இவர்களெல்லாரும் தங்களை கிருஷ்ண பகவானின் அவதாரம் என்று நினைக்கின்றார்கள். இவர்கள் மற்றவர்களை ஈடேற்றுவதற்காகவே உலகில் தோன்றியிருப்பதாக வும் தங்களையன்றி மக்களுக்கு ரட்சிப்பின் வழிகாட்டி வேறுயாரு மிலர் என்றும் கிருஷ்ணன் ஒருவரே உலகில் ஆண் என்றும் மற்றையோ ரெல்லாம் பெண்ணென்றும் கூறுகின்றனர். இச்சமயத்தார் தங்களின் குருவாகிய கோசேனருக்கு முதன்முதல் தங்களுக்குரிய பொருள் களையெல்லாம் மனைவியுட்பட சமர்பித்து எஞ்சியதைத்தான் தாங்கள் அனுபவிப்பார்கள். யாராவது சீடர்கள் கோசேனரை விருந்துக் கழைத்தால் பெண்கள் எல்லோரும் அவரைச் சூழ்ந்து உட்கார்ந்து கொள்ள வேண்டும். அவர் யாரிடம் அதிகமான பார்வையை செலுத்துகிறாரோ அவளே அதிக அதிருஷ்டசாலி யென்று அவள் புருஷன், தகப்பன் முதலிய அனைவரும் மகிழ்ச்சி அடைவார்களாம். இக்கோசேனரை வணங்கும்பொழுது அவர் எப்பெண்ணின் விரலை மிதிக்கிறாரோ அவளே புண்ணியவதியாம். இக்குருக்களின் வெத்திலை எச்சல் அருமையான பிரசாதமாக எண்ணி வெள்ளிக் கோப்பைகளில் ஏந்திவைத்து கொள்வார்களாம். இத்தகைய அருவெறுப்பான செயல்கள் போதாதென்று சாய நீரைப் பீச்சால் குழலில் இழுத்து ஹோளிப் பண்டிகை என்னும் விழாவில் மாதர்களின் இரகசிய தானங்களில், மறைவு தானங்களிலும் பீச்சுகிறார்களாம். இச்சமயத்தில் புரோகிதவலி அதிகம். இச்சமயத் தின் ஆபாசங்கள் பலவுள. ஆனால் ஈண்டு சுருக்கமாகவே எடுத்துக் காட்டப் பட்டிருக்கிறது. சாக்த மதம்: சக்தியே பிரம்மமென்றும் அச்சக்தியினிடத் திருந்தே இவ்வுலகை நடத்தும் பல தேவர்களும் தேவதைகளும் உண்டானார்களென்றும் கூறப்படுகிறது. இவர்களிற் சிலர் நான்கு வேதங்களையும் சிலர் புராணங்களையும் நம்புகின்றனர். சக்திக்குத் தற்கால பிரகிருதிகளாக இருக்கும் பெண்களை பெண் தெய்வங் களாக எண்ணிப் பூஜிக்க வேண்டும் என்றும் பெண்களை நிந்திப்பவன் பெரும்பாவியாவான் என்றும் பார்ப்பனப் பெண்களுக்கு ஆடை யாபரணங்கள் கொடுத்து வணங்குகிறதால் சாக்ஷாத் சக்தியை வணங்கிய பலன் சமீபத்தில் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இச் சமயத்தைப் பற்றிய விஷயங்கள் ஐந்தாம் வேதம் என்று கூறும் தாந்திர சாதிரங்களில் விபரமாக எழுதப்பட்டிருக்கிறது. சிவமாஹ சியம்,ருசிரயவம்,மந்திரம்,ஹோநிதி,சரதிலகம்,காலிக தந்திரம், குலசூடாமணி, குலார்ணகம் முதலான தந்திர சாதிரங்களே இவர்களின் பிரமாண சாதிரங்கள். இச்சமயிகள் வங்காளத்திலும் அதன் கீழ்ப்பிரதேசங்களிலுமுளர். தக்ஷணர்கள் சக்திமதம்: இவர்கள் துர்க்கையைப் பூஜிப்ப வர்கள். ஆட்டுக்குட்டியைக்கொன்று அதன் இரத்தத்தைக் கொண்டே பூஜை செய்வார்கள். இவர்களில் பல பிரிவுகளுண்டு அதில் ஒரு பிரிவார் பல சக்திகளையும் மாம்சம், மச்சம், மத்யம், மைதுனம் முத்திரையென்றும் ஐந்து மகாகாரங்களைக் கொண்டு பூஜிப் பார்கள் இவர்களிற் சிலர் நடுநிசியில் சுடு காட்டிற்குப்போய் புதைத்திருக்கும் பிரேதங்களை எடுத்து வைத்துக் கொண்டு அதனை மதுமாமிசாதிகளால் பூசிப்பார்கள். இவ்வழியைப் பின்பற்றி யொழுகுபவர்கள் நம் தென் இந்தியாவிலும் உளர். சிலர் பெண்களை நிருவாணமாக்கி குறிக்கு சந்தன, குங்கும புஷ்பாதிகளுமிட்டு மதுமாமிச பூஜை செய்கின்றார்கள். இப்பூஜைக்கு ஸ்ரீ சகீரம் அல்லது பூரண பிக்க்ஷை என்று பெயராம். இவ்வகுப்பில் பிராமணர்களும் சிலருண்டு. நெற்றியில் அர்த்த சக்கிர வடிவாக குங்குமத்திலகமும் கழுத்தில் உருத்ராக்கமும் பூஜாகாலத்தில் சிவப்பு ஆடை, சிவப்பு புஷ்பம் முதலியவைகளையும் தரிப்பார்கள். கபாலிகள் மதம்: இவர்கள் காளிகா தேவியைப் பூஜிப்பவர்கள். காளியை காபிலஷ், ஆரோரகாந்தி, சாமுண்டி என்ற பெயர்களால் வணங்குவர். உடம்பின் பல பாகங்களில் கூரிய ஆயுதங்களைக் கொண்டு காளிகாதேவியின் பொருளாலே யாதொரு வேதனையு மின்றியிருக்கிறோமெனச் சொல்வர். இவர்கள் சில சமயங்களில் நரபலியுஞ்செய்வர். (சில நாட்களுக்கு முன் நம் தமிழ் நாட்டிலே காளிகாதேவிக்கு நரபலி இட்ட தாக நடந்த கேசு ஒன்றை நண்பர்கள் மறந்திருக்கமாட்டீர்களென நம்புகிறேன்) பிராணநாத வைணவம்: இச்சமயம் அவுரங்கசீப் என்னும் இலாமியச் சக்ரவர்த்தி காலத்தில் பிராணநாதர் என்னும் ஒரு ஷத்திரிய மகானால் உண்டாக்கப்பட்டது. இவர் பந்தல் கண்டு மஹாராஜாவின் சீடரானபடியால் இச்சமயத்தார் பந்தல் கண்டில் அதிகமாயிருக்கிறார்கள். இவர்கள் வடமொழி வேதங்களிலுள்ள சிறப்பான கொள்கைகளையும் குர் ஆனில் (இலாமியர் வேதத் தில்) காணப்படும் சிறந்த கொள்கைகளையும் பின்பற்றி ஜாதி பேதத்தை யொழித்து எகெசாவாதிகளாய் இருக்கின்றனர். புத்தமதம்: இச்சமயம் மார்த்தமதத்தைச் சீர்திருத்தத் தோன்றிய சமயம். கி.மு. 628இல் மகத நாட்டை அரசாண்ட சத்தோ தனர் என்னும் ராஜாவின் புதல்வரான சித்தார்த்த சக்ரவர்த்தியால் இச்சமயம் உண்டாக்கப்பட்டது. இவருக்கு கௌதமர், சாக்கியமுனி, புத்தர் என்ற பெயர்கள் பிற்காலத்தில் இடப்பட்டவையாகும். சித்தார்த்தர் இளமையில் மார்த்த மதத்தின் இழிசெயலைக் கண்டு வெறுப்புற்று இல்லறம் விட்டு துறவுமேற்கொண்டு காட்டிடை பலநாள் தவம் புரிந்தும் முடிவில் ஒன்றும் காணாது இவ்வுலகி லுள்ள மக்களுக்குத் தொண்டு செய்வதே சிறந்தது என்று கருதி தமது புதிய சமயத்தை மக்களுக்குக் கூறினார். அக்கொள்கைகள் யாதெ னில் உலகமும் அதிலுள்ள பொருள்களும் இயற்கையால் தோன்றிய வைகளென்றும் இவ்வுலகப் பற்றை விட்டோர் தேவர்களாய் ஆவார் களென்றும் இச்சமயக் கொள்கைகளைத் தவராது அனுஷ்டிப்போர் நிர்வாணம் (ஒன்றுமில்லை) என்கிற மோட்ச பதவியை அடை வார்கள் என்றும் கூறுவதோடு ஜாதிபேதம், பொய், களவு, விபசாரம், மதுபானம், கொலை முதலியன கூடாது என்றும் விலையுயர்ந்த ஆடைகளையணிதல் கூடாது, தாசிகள் முதலான கூத்துகளைப் பார்த்தல் கூடாது, வாசனைத் திரவியங்கள், மதப்பயித்தியம், தையுத்தம், பரதிரி கவனம், ஒன்றுக்கதிகமான மனைவி, ஜீவவதை முதலியன அறவே கூடாதனவாகும். தரும சத்திரங்கள், சாலைகள் முதலியவற்றை உண்டாக்கி, பெரியவர்களுக்கும் பெற்றோர் களுக்கும் பெண்களுக்கும் பிரியத்தையும் பக்தியையும் காட்ட வேண்டும் என்பதும் சகல உயிர்ப் பிராணிகளிடத்திலும் அன்பு காட்ட வேண்டும் என்பதும் இச்சமயநெறிகள். இச்சமயத் தலைவர்கள் முற்றாக உரோமங்களைக் களைந்துவிடுவர். இடுப்பில் மஞ்சள் வதிரமும் கையில் ஜெபமாலையுடனுமிருப்பர். புத்தர் விக்கிரஹத்திற்கு வணக்கமும் பிச்சையெடுத்துண்ணுதலும் இவர் களுக்கு நல்ல செயல்கள். இச்சமயத்தில் மறுஜென்ம முண்டு. கடவுளைப் பற்றிய பேச்சே இச்சமயத்தில் கிடையாது. ஜைன சமயம்: இச்சமயம் பல கொள்கைகளில் புத்த சமயத்தை ஒத்திருந்தாலும் பலவிஷயத்தில் மாறான கொள்கையையுடையதாயு மிருக்கிறது. இச்சமயத்தின் கடவுள் பெயர் அருகன். இவ்வுலகம் அநாதியுள்ளதென்றும் இவ்வுலகத்திற்கு மேலுள்ள உன்னதமான ஓர் உலகத்தில் கடவுளிருப்பதாகவும் சொல்லுகிறார்கள். சோதிடத்தில் நம்பிக்கையும் விக்ரக வணக்கமுடையவர்கள் பிரம்மா, விஷ்ணு, சிவன், கணபதி முதலியவர்களையும் அவர்களின் மனைவி மக்களை யும் அருக தேவனுடைய பிரதான பக்தர்கள் என்று நம்புகிறார்கள். இல்லறத்தார், பெண், மிருகங்கள் முதலியவைகளுக்கு மோட்சம் கிடையாதாம். இச்சமயிகள் இரவில் விளக்குப் பொருத்துவதில்லை ஏனெனில் விளக்கில் ஏதாவது பிராணிகள் வந்து விழுந்து இறந்து விடும் என்பதற்காகவே. மாலையிலேயே சாப்பிட்டுவிடுவார்கள். புத்த சமயத்தார்களைவிட கண்டிப்புடன் ஜீவகாருண்யத்தை அனுட்டிப்பார்கள். இச்சமயம் இந்தியாவில் ஒரு காலத்தில் மிக பிரபல்யமடைந்திருந்தது. பழைய சங்கத்து நூல்களில் பல ஜைனர்களால் இயற்றப்பட்டது. கபாலிக மதம்: இச்சமயத்தார் நிர்வாணிகளாகி சுடுகாட்டுச் சாம்பலை உடம்பெல்லாம் பூசிக்கொள்வர். கையில் கட்டாரியும் கத்தியும் மண்டை ஓட்டையும் வைத்துக்கொண்டு பைரவா! பைரவா!!. எனப் பாடிக் கொண்டு மதுமாமிசங்களை யுண்டு மங்கையர் போகமே மோட்சம் எனத்திரிபவராம். இவர்களிலும் பிராமணர், சூத்திரர் என இருபிரிவுண்டாம். லோகாயத மதம்: இவ்வுலக இன்பமும் சுகமுந்தான் சிறந்தது என்பதும் மேலுலக சுகம் சொற்பனம் போலது என்றும் கூறுவ துடன் கடவுளையும் மோட்சம் நரகம் முதலியவைகளையும் அடியுடன் மறுப்பவர்கள். சூனியவாதிகள் மதம்: சூன்யவதிகள் கடவுள் ஒருவர் இருந்தால் அவர் காணப்படமாட்டாமையால் கடவுள் இல்லை யென்றும் எல்லாம் சூனியத்திலிருந்து தோன்றி முடிவில் சூன்யமாகி விடுகிறது என்பவர்கள். பிராணாத்ம வாதிகள்: பிராணவாயுவுக்கு மேற்பட்ட கடவுளில்லையென்றும் ஆத்மா என்பதும் ஒன்றில்லை யென்றும் கூறுவார்கள். பஞ்சபூதாத்ம வாதிகள் மதம்: பஞ்சபூதங்களுக்கு மேற்பட்ட ஈசனில்லையென்றும் அதன் பரிணமிப்புகளாகவே உலகமும் அதி லுள்ள எல்லா சீவப்பிராணிகளும் உண்டானதென்று கூறுவர். சீக்கிய மதம்: பாபு குருநானக் என்பவரால் இச்சமயம் உண்டாக்கப்பட்டது. இவர் இந்திய நாட்டிலுள்ள பல சமயங் களிலுள்ள சில கொள்கைகளோடு இலாம் மார்க்கத்திலுள்ள பல அரிய விஷயங்களையும் சேர்த்து இம்மதத்தை உற்பத்தி செய்தார். இச்சமயத்தார்க்கு சீக்கர் என்றுபெயர். சீக்கரென்றால் சாதுக்களான சீடர்களென்று பெயராம். இவர்களுடைய வேதத்திற்கு கிரந்தம் என்று பெயர். இச்சமயத்தில் ஜாதி பேதம் கிடையாது. லாகூர் முதலான இடங்களில் இவர்களுக்குக் கோவில்களுண்டு. இச்சமயத் தார் மிகுந்த பலமுடையவர்களாய் போர்த்திறம் பெரிதும் உடையவர்களாயிருக்கிறார்கள். குருநானக் இருமுறை அரேபியா விற்குச் சென்று முஹமத் நபியின் சமாதியைத் தெரிசித்து வந்திருக் கிறார். அவருடைய உடைகளிளெல்லாம் குர் ஆனின் வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருந்தனவாம். பிற்காலத்தில் இச்சமயத்திலும் உதாசீனர், கஞ்சபகஷி சீக்கியர், இராமராபிகள், சூதிர சாஹிகள், கோவிந்தசாஹிகள், நிர்மலர், நாகர், முதலிய பிரிவினைகள் தோன்றிவிட்டன. ஆரியசமாஜம்: சுவாமி தயானந்த சரவதியால் உண்டாக்கப் பட்டது. இவர்கள் இருக்கு, யசுர், சாமம், அதர்வண முதலிய வடமொழிவேதங்களைப் பண்டைய வைதீகர்கள் கருத்திற்கு மாற்ற மான பொருள்கூறி அதையே வேதமென நம்புவார்கள். இச்சமயம். கிறிது, இலாம் முதலிய சமயங்களுக்குச் சென்ற இந்துக்க ளென்போரை திரும்பத் தங்கள் மதத்திற்கு மாற்றவேயேற்பட்ட தெனலாம். பிறசமயங்களை நிந்தித்து சுவாமி தயானந்தர் எழுதிய சத்தியார்த்தப்பிரகாசம் சமய ஆராய்ச்சி செய்ய விரும்பும் அன்பர்கள் வாசிக்கத்தக்கது. இவர்கள் விக்ரக ஆராதனையையும் ஜாதி பேதத்தையும் கண்டிப்பவர்கள். வட இந்தியாவில் இச்சமயத் திற்கு மிகுந்த செல்வாக்குண்டு. இவர்களுக்கு கட்டுப்பாடான சங்கங்களும் பிரசாரர்களும் பத்திரிகைகளும் உண்டு. இச்சமயர் கொள்கையிற் பிரியப்பட்டு நாதீகர்களான அமெரிக்கா தேசத்து ஆல்க்காட் துரையும் ருஷ்யா தேசத்து பிளவிட்கி துரையும் இச் சமயத்தைச் சேர்ந்திருந்தனர். பின்னவர் இக்கொள்கை பிடியாமல் தியாஸபிட்டாக மாறிவிட்டார். இச்சமயத்தில் பெண்கள் விவாஹமாகி புருடனை இழந்து விட்டாலும் அல்லது ஆண்மை யற்றோ, வியாதியால் பலயீனமாகியோ இருந்தாலும் அப்பெண் மணிகள் தங்கள் வர்ணத்தில் மேம்பட்ட வர்ணத்திலுள்ள ஆண் களுடன் கலந்து மக்களைப் பெற்றெடுத்துக்கொள்ளலாம். இதற்கு நியோகம் என்ற பெயரையும் வைத்திருக்கிறார்கள். இச்சமயத்தா ரால் தான் நம் நாட்டில் இந்து முலிம் வேற்றுமைகள் பெருகின என்று பட்சபாத மற்றபல அறிஞர்கள் சொல்லுகிறார்கள். பிரம்ம சமாஜம்: இந்து சமயத்திலுள்ள விக்ரக வணக்கத்தாலே பல தீமைகளுண்டாகின்றது என்பதை முக்கியமாகக்கொண்டு ஜாதி பேதங்களையெல்லாம் நீக்கி இராஜாராம் மோகன்ராய் என்பவரால் இச்சமயம் நிறுவப் பெற்றது. இச்சமயத்தாரும் வேதம், புராண முதலியவற்றிற்குத் தங்கள் கருத்துக்கிசைய பொருள் சொல்லியே தங்கள் சமயப்பிரசாராத்தைச் செய்து வருகின்றார்கள். இச் சமயத்தைச் சார்ந்தோர்கள் வைதீகக் கொள்கைகளுக்கு முற்றும் விரோதமாகப் பேசுகின்றார்கள் என்றாலும் இச்சமயத்தலைவர் களிற் சிறந்த தேவேந்திரநாத டாகூர் முதலிய பெரியார்களும் கூடத் தங்கள் பூணூலையும் ஜாதிப் பெருமையையும் விட்டார்களில்லை யென்று கூறப்படுகிறது. இந்து சமயக்கொள்கைகளில் வெறுப்புக் கொண்ட பெரியார்கள் பலர் இச்சமயத்தைத் தழுவி வருகின்றார்கள். இச்சமயத்தில் கலப்பு விவாகம் செய்து கொள்வதும் சமபந்தி போஜனம் செய்தலும் என்ற சிறந்த கொள்கைகளுண்டு. இச்சமயத் தார் இந்து வரப்படி வேறு ஜாதியையும் மதத்தையும் சார்ந்த பெண்களைக் கலப்பு விவாகமாக செய்து கொள்ளுகின்றவர்களுக்கு பிதுராஜித சொத்துரிமை இல்லை யென்ற சட்டத்தைப்பற்றி அரசாங்கத்திடம் மனுச் செய்து 1872இல் ஒரு சட்டத்தை உண்டு பண்ணினார்கள். அச்சட்டப்படி இன்றும் எந்தச்சாதியாரும் 14 வயதிற்கு மேற்பட்ட பெண்ணும் 18 வயதிற்கு மேற்பட்ட ஆணும் யாதொரு மதச்சார்புமின்றி அரசாங்கத்தில் ரிஜிடர் செய்து மணம் செய்து கொள்ளலாம். இச்சமயத்தினுடையவும் சில கொள்கைகள் பிடிக்காமல் சாதாரண சமாஜம் இந்திய சமாஜம் முதலியனவும் தோன்றிவிட்டன. அன்பர்களே! இன்னும் ஒவ்வொரு சமயங்களைப் பற்றியும் கூறிக்கொண்டே போனால் நமதருமைக் குடிஅரசு இடந்தரா தென்று நினைத்து இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். இதிலிருந்தாவது இந்து சமயமென்பது ஒரு சமயம் அன்றென்றும் பல சமயங்களையும் சேர்த்து இந்து என்று அந்நிய நாட்டார் கூறிவந்ததை புரோகிதர்கள் சுயநலத்திற்காக அதை ஆமோதித்தனரென்றும் அதை நாமும் ஒப்புக்கொண்டு விட்டோம் என்றும் நன்கறியலாம். ஆனால் சிலர் நம்முள் பலவிதமான வேற்றுமைகளிருந்தாலும் பிறசமயத்தாரை எதிர்பதற்கு இந்து என்ற பொதுப் பெயரைவைத்துக்கொண்டு ஒற்றுமையாய் எதிர்ப்போ மானால் பல நன்மைகளுண்டு என்றும் ஆகையினால் இந்து என்ற பெயரை வைத்துக்கொள்ளலாம் என்பர். அவ்வாறு நம்முன் னோர்கள் வைத்துக்கொண்டிருந்ததால் ஒவ்வொரு சமயத்திலும் உள்ள நல்லகொள்கைகளெல்லாம் மறைந்து ஒரு சமயத்திலுள்ள தீயகொள்கைகள் பிற சமயத்தாரைப் பற்றியும் அச்சமயத்திலுள்ள கெட்ட கொள்கைகள் மற்றொரு சமயத்தைப் பற்றியும் நம் நாட்டைக் கெடுத்து விட்டது. மேலும் ஒன்றிற்கொன்றிற்கு முரண்பட்ட கொள்கைகள் பலதையுடையதாயுமிருக்கின்றன. ஒன்று விக்ரஹ வணக்கத்தைப் போற்றுகிறது; ஒன்று மிகு பலமாய் கண்டிக்கின்றது; ஒன்று பாலிய விவாகம் செய்தால் மோட்சம் சித்திக்குமென்று கூறுகிறது. மற் றொன்று பாலிய விவாகத்தினால் இவ்வுலகத்திலும் மறு உலகத்தி லும் நரகம் சித்திக்குமென்று கூறுகிறது. ஒன்று வருணாச்சிரமத்தை கைக்கொள்கிறது மற்றது அதைத் தூற்றுகிறது. ஒன்று இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் எங்கள் வேதம் என்கிறது. மற்றொன்று தேவாரம், திருவாசகம், திருமந்திரம் என்கிறது. அடுத்தது திருவாய்மொழி என்கிறது. பிறிதொன்று கிரந்த மென்கிறது. பிறிதொன்று கீதை யென்கிறது. ஒன்று உயிர்கொலை புரிந்து சாப்பிடலாம் என்கிறது. மற்றொன்று யாகம்புரிந்து சாப்பிடலாமே தவிர மந்திரம் சொல் லாது கொன்று தின்பது பாவம் என்கிறது. மற்றொன்று எக்காரணத் தாலும் ஒரு உயிரையும் கொன்று தின்பது கூடாதென்கிறது. ஒன்று பூணூல் அணியத் தூண்டுகிறது. ஒன்று விபூதி பூசி உருத்திராக்கம் அணியத் தூண்டுகிறது, மற்றொன்று நாமம் போடத் தூண்டுகிறது, ஒன்று ஒன்றும் அணிதல் வேண்டாமென்கிறது. ஒரு சமயம் கடவுள் ஒருவன் என்கிறது. மற்றொன்று மூன்று என்கிறது. பிறிதொன்று கடவுளே இல்லை எல்லாம் இயற்கையே என்கிறது. ஆகவே இத்தகைய ஒன்றிற்கொன்று முரண்பட்ட பல சமயத்தார் எவ்வாறு ஒன்றுகூடி வாழல் சாலும். ஒரு பொழுதும் முடியாது. ஆனால் ஒவ்வொரு சமயத்தாரும் தனித்தனியாக வாழ்ந்து விட்டுப்போகட்டுமென்றாலோ அச்சமயங்களெல்லாம் மார்த்த மததர்களால் கொல்லப்பட்டு பலவற்றை படுகுழியில் புதைத்து விட்டனர். பல குற்றுயிராய்க்கிடக்கிறது. பழைய சமய கொள்கை எடுத்துக்கூறினால் ஒரு கிறிதவனை இலாமிய சமயத்திற்கு அழைத்தது போலாகிறது. எடுத்துக்காட்டாக இப்பொழுது நம் நாட்டிலே வேளாளர் என்போர் அனைவரையும் சைவராகக் கூறப்படுகிறது. அவர்களில் நூற்றுக்குத் தொன்னூற்றொன்பது பேருக்குத் தங்களைச் சைவசமயத்தார் என்று கூடச் சொல்லத் தெரியார் வேண்டுமானால் இந்து என்றோ அஞ்ஞானியென்றோ தான் சொல்லத் தெரியும். அதிலும் திரு. கா. சுப்பிரமணியபிள்ளை, மறைமலையடிகள் போன்ற சைவப்பெரியார்கள் கூறும் சைவ சமயத்தை இப்பொழுது உள்ள சைவர்களென்போரிற் பலர் பார்த்து இது என்னவேடிக்கையாக இருக்கிறதே, சைவத்தில் ஜாதிபேத மில்லையாம். பறையனையும் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டு மாம், நாம் சூத்திரரில்லையாம், சைவர்கள் பார்ப்பனர்களைவிட உயர்ந்தோர்களாம். ஐயையோ பெரும் பாவமாம் இதெல்லாம் கலியின் கூற்று. இவர்களெல்லாம் பார்ப்பனத்துவேசத்தால் இப்படிக்கூறுகிறார்கள். வட மொழியில் வேதமிருக்க தமிழில் வேத மிருந்தது என்று இவர் கூறுவது முற்றும் புரட்டு. ஏதோ பார்ப்பன அதிகாரிகள் பலர் இவருக்குப் புரிந்த இடஞ்சல்களுக்காக இவ்வா றெல்லாம் பிதற்றி ஒரு நூதன சமயத்தை உண்டு பண்ணப்பார்க் கிறார்கள் என்று கூறுகிறார்கள். சைவ சமயக்கொள்கையைப் பிரசாரம்புரியக் கூடாதென்று சிலவாண்டுகளுக்கு முன்னர் சைவர்களின் கோட்டை என்று கூறப்படும் திருநெல்வேலியிலே நெல்லையப்பர் கோவில் பிரகாரத்திலே திரு. சுப்பிரமணிய பிள்ளை இடங்கொடுக்க மறுத்து விட்டார்கள். இதுபோலவே இந்து சமயத்திற்குள் அடங்கிய பல்வேறு சமயங்களும் தனித்தனியே பிரித்து அதன் அதன் கொள்கைகளைச் சீர்திருத்தம் செய்வது என்பது தற்காலத்தில் அசாத்தியமென்பது யாவரும் அறிந்த உண்மை. மேலும் அச்சமயங்களில் மக்கள் வாழ்க்கைக்கு கேடு சூழும் பல கொள்கைகளைத் தனது முக்கிய கடமையாகக் கொண்டிருப்பவைகளையெல்லாம் சீர்திருத்தம் செய்வது அசாத்தியான காரியம் என்பதோடு இனியும் அக்கொள்கை களை நிலைநிருத்தச் செய்தால் இதுவரையும் இச்சமயங்கள் நம்மை ஆக்கிய விலங்குத்தன்மையினும் கேடான நிலைமைக்குக் கொண்டு போவதுடன் உலகினர் பார்வையில் நாம் மிகக் கடையராய், அடிமைகளாய்ப் போவதுடன் மார்த்தமதக் கொள்கைகள் நம் எலும்பிலும் உதிரத்திலும் சேர்ந்து அறிவை இழந்து நமது பொருளையெல்லாம் பார்ப்பனர்களுக்கே யீந்து வறியராகி மார்த்தர்களுக்கு அடிமையாவதுடன் வெள்ளைக்காரர்களுக்கு அடிமையாகி நடைப்பிணமாய் வாழ்வோம் என்பது திண்ணம். இவ்வடிமை வாழ்விலிருந்து மக்கள் விடுதலை பெறவேண்டுமென்றே பண்டைக்காலத்தில் பல சீர்திருத்தவாதிகள் தோன்றியுழைக்க முன்வந்தனர். ஆனால் அவர்கள் கடவுள் வார்த்தைகள் என்று கூறப் படுபவைகள் எத்தகைய கெட்ட வார்த்தைகளாயிருந்தபோதிலும் கடவுள் செயல்கள் என்பவைகள் எத்தகைய ஆபாச, அநாகரீகச் செயலாயிருந்தபோதிலும் அவைகளை மறுத்தற்கஞ்சினார்கள். அக்காலத்திய அரசாங்கம் வைதீகவழியே சென்று வந்ததால் சீர்திருத்தவாதிகள் வெளிப்படையாய் தன் கொள்கையைப் பிரசாரம் பண்ணினால் தம் உயிருக்கு நிச்சயம் ஆபத்துவரும் என்பதை நன்கறிந்திருந்தார்கள். இவைகளினால் அவர்கள் தங்கள் உள்ளத்திலுள்ள உண்மைகளைவெளியிற் சொல்லி மக்களை இந்து மதப்படுகுழியினின்று கரையேற்ற முடியாமற் போய்விட்டது. தற்காலத்திலே பிரிட்டிஷ் அரசாங்கத்தில் வைதீகர்களுக்கு அதிக செல்வாக்கு இன்மையாலும் அரசர் கிறிதவராயிருப்பதாலும் மக்கள் வாழ்விற்கு நலந்தரும் பல கொள்கைகளை உலகின்கு எடுத்துக்கூறி இந்து மதத்தின் ஆபாசக்கொள்கைகளைப் பத்திரிகை வாயிலாய் வெளிப்படுத்தி நம்மக்கள் பார்ப்பனர்களால் மயக்கம் பூண்ட மன அடிமைத்தனத்தினின்றும் வெள்ளைக்காரனால் கட்டுப்பட்டு சுதந்திர மிழந்த உடல் அடிமைத்தனத்தில் வாழும் கேட்டினையும் ஒழிக்க இரவுபகல் இடைவிடாது ஊண் உறக்க மின்றி ஈரோட்டு இராமன் இந்திய நாட்டிற் பிரசாரம் புரிய ஆரம்பித்து விட்டார். தற்காலத்தே வாலிபருலகம் அவர்தம் வார்த்தைகளை யேற்றுக் கொண்டதோடு அப்பெரியார் ஈ.வெ. இராமசாமியாலும் அதிதீவிரமாய் பிரசாரம் புரியும் தீவிர சீர்திருத்தக்காரர்களான யுவர்களும் யுவதிகளும் தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கானபேர் தோன்றிவிட்டனர். வைதிகர்கள், யுவர்கள் முன் தங்கள் கொள்கைகளை எடுத்துக்கூற அஞ்சி சில அயோக்கியத் பத்திரிகை களுக்குப் பொருள் உதவிசெய்து சீர்திருத்தக்காரர்களான சுய மரியாதைத் தொண்டர்களை நாதிகர்களென்று பலவாறு வையும் படி தூண்டினர். அத்தகையோர் வார்த்தைகளை யேற்றுச் சுய மரியாதைக்காரர்களுக்கு ஏசல் மாலை சூட்டிவந்த பத்திரிகைகளும் மனிதர்களும் இப்பொழுது இருக்குமிடம் தெரியவில்லை. பின்னர் அடிதடியிலும் இறங்கிப் பார்த்தனர். அதிலும் தங்கள் காரியம் நடக்கவில்லை யென்று மூலையிற் பதுங்கி விட்டனர். இப்பொழுது நாடெங்கும் சுய மரியாதை உணர்ச்சிவளர ஆரம்பித்துவிட்டது. தாழ்த்தப்பட்ட மக்கள் பலர் தங்களின் மனித உரிமைக்காகப் போராட ஆரம்பித்துவிட்டனர். பாலிய விவாகம் நிறுத்துவதற்கு நம் நாட்டிலும் பல சுதேச ராஜ்ஜியத்திலும் சட்டஞ் செய்யப் பட்டாய் விட்டது. பரோடோவில் விவாஹரத்து சட்டம் ஏற்பட்டு விட்டது. திருவாங்கூரில் ஆலயங்களில் தேவதாசிகள் நடன மாடக்கூடா தென்று சட்டம் ஏற்பட்டுவிட்டது. மைசூர் பெண்களுக்குச் சொத் துரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டு விட்டது. காஷ்மீரத்தில் தீண்டாதவர்களுக்கு சாப்பாடு போட்டு கல்வி போதிக்க ஏற்பாடாகி விட்டது. எனவே இந்துமதக் கொள்கைகள் பல அழிக்கப்பட்டு வருகிறது என்பது பிரத்தியட்சம். எனவே மக்கள் வாழ்விற்கு இடையூரியற்றும் இந்துமதக் கொள்கைகள் அழிந்து சுயமரியாதைக் கொள்கைகள் நாடெங்கும் பரவப் பிராசாரம் புரியவேண்டும். யுவர்காள்! யுவதிகாள்!! உங்கள் நீண்ட துயிலினின்று விழிமின்! எழுமின்!! உண்மைப்பிரசாரம்புரிமின்!!! இந்துமதத்தை அழிமின்!!!! ஃ “ϪJ” v‹gj‹ bghUŸ âUl‹, fŸs‹, tÊk¿¥ gt‹, JZl‹, Ô§»iH¥gt‹, moik, fÇa‹, ÉgrhÇkf‹ v‹gdthF«.(FšÈkh¤nj லேக்ராம்) .................. ஹிந்துதானத்தையும் இந்து என்னும் பெயரையும் பற்பலவிதமான காரணங்களைக்கொண்டு வெறுத்துவருகிறோம். நம் வகுப்பாருக்கு இந்து என்னும் பெயர் எந்தவிதமான ஸம் கிருத கிரந்தங்களிலும் காணப்படவில்லை. மேலும் வேதங்களிலும் புராணங்களிலும் இச்சொல் காணப்படாததோடு அக்காலத்தி லிருந்த சத்திய நாராயணனது கதையின் காலம் வரையிலுங்கூட இந்த நாமத்தின் நமூதே கண்டு கொள்ளப்படவில்லை. ஆதலின் நமது பெயரை இந்து என்றழைப்பது கூடாது (பண்டிட் லேக்ராம் அவர்கள் எழுதிய ஆரியா இந்து நமதே). - (குடியரசு 7.9.1930, 21.9.1930, 28.9.1930, 5.10.1930) சுயமரியாதை இயக்கத்தைச் சாராத ஆசிரியர்கள் போதிப்பது ஆதிகமா? சுயமரியாதை என்பதற்குத் தன்மதிப்பு என்பது பொரு ளாகும். எனவே இவ்வுலகிலுள்ள ஒவ்வொரு மனிதனும் தன்மதிப் புடையோனாய் வாழவேண்டும் என்பதோடு தன்மதிப்பியக்கம் இத்தமிழ் நாட்டிலுள்ள மக்களுக்கு மட்டுமல்ல இவ்வுலகிலுள்ள மக்களனைவருக்கும் அவசியம் வேண்டிய ஒரு பெரும் பொது இயக்க மென்பது எனது தாழ்மையான அபிப்பிராயமாகும். சுயமரியாதையை விரும்பா மனிதன் மனிதனல்ல; அவன் விலங்கினும் இழிந்த மனிதப் பிராணியென யாவராலும் என்னப்படுவதற்குரியன் என்பது அறி வுடைய மனிதர் பலரும் ஒப்புக்கொள்ளத்தக்க உண்மையாகும். பண்டைக்கால முதலே பல சுய நலவாதிகள் அரசாங்க சட்ட மூலமா யும், கடவுள்வாக்கு என்று பொய்யாய் கூறப்பெறும் மதக் கிரந்தங்கள் மூலமாயும், பல மக்களைத் தாழ்த்தி எங்களுக்கு கென்ன சுய மரியாதை? நாங்கள் தாழ்த்தப்பட்டவர்களாய் இவ்வுலகில் வாழ இறைவன் படைத்துள்ளான் என்று கூறும்படி அன்னோர் அறிவை மங்கவைத்துவிட்டனர். ஆனால் அவ்வக்காலங்களில் பல அறவோர்கள் தோன்றி அக்காலத்திற்கேற்ப சில சில சீர்திருத்தங்கள் செய்ய ஆரம்பித்தனர். அச்சீர்திருத்தங்கள் எல்லாம் ஏட்டளவில் நின்றதேயொழிய பிரிதொரு பயனும் நல்கவில்லை. இவைகளை யெல்லாம் ஆராய்ந்து ஈரோட்டுப் பெரியார் ஈ.வெ. இராமசாமி மக்களின் சுய மரியாதைக்குப் பங்கமாக நிற்பவைகளைச் சீர்திருத்தம் செய்தால் பண்டைக்கால சீர்திருத்தவாதிகளின் நோக்கம் பயன் பெறாது போனது போல் நமதியக்கமும் போய் விடுமென்றெண்ணி சுயமரியாதைக்கு விரோதமாக இருக்கும் கடவுள், சமயம், வேதம், புராணம், பழக்க வழக்கம் முதலியவைகள் மட்டுமல்ல வேறு எதுவானாலும் அவைகளனைத்தையும் அடியோடழிக்க வேண்டு மென்றும் சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தார். சுயமரியாதை இயக்கம் அறிவு விடுதலை இயக்கமென்றும் தற்பொழுது அறிவின் விடுதலைக்காக அறிவு மங்க இளமையிலேயே அதிபாரமிடும் பாடசாலைகளில் மாணாக்கர் அறிவில் மேம்பட சுயமரியதை இயக்கக் கொள்கையை யுடைவர்கள் ஆசிரியராயிருத்தல் வேண்டுமென்றும் கூறினார். அதன்படியே சுயமரியாதை இயக்கத்தைச் சார்ந்த ஆசிரியர்கள் சிலர் சிலவிடங்களில் ஆசிரியராய் அமைந்து மாணாக்கரின் பகுத்தறிவு விருத்தியடையச் செய்கின்றனர். மாணாக்கர் சுயமரியதைப் பத்திரிகைகளையும் சுயமரியாதைப் பிரசங்கங் களையும் கேட்டனர். தங்களின் பழைய ஆசிரியர் கற்பித்த சுய மரியாதை யற்ற பாடங்களையெல்லாம் எண்ணி நகைத்தனர். இனி அத்தகைய ஆசிரியற்கு சுயமரியாதையை போதிக்க வேண்டுமென மாணாக்கர் முடிவும் கட்டிவிட்டனர். மாணாக்கர்கள் வயது முதிர்ந்த பிடிவாத வைதிகர்களைப் போன்று பழக்கவழக்கங் களைக் காரணமாகக் கொண்டு தங்கள் பகுத் தறிவிற்கு விரோதமான பல புராணக்கதைகளைக் கண்டித்து மாணாக்கர்களுக்குப் போதித்து வருவதால் பூமி சாதிரம், தேச சரித்திரம், விஞ்ஞான சாதிரம், வான சாதிரம் முதலியவைகளெல்லாம் கற்று அறிவு விசாலிக்கப் பெற்ற மாணவர்கள் தாங்கள் கற்ற அறிவு நூல்களுக்கு மாறாக ஆசிரியர்கள் (தமிழ் பண்டிதர்கள்) புராணக் குப்பை மூட்டைகளை அவிழ்ப்பதைக் கண்டு வகுப்புகளில் அவ்வாசிரியரிடம் பல கேள்விகள் கேட்பதும், நகைப்பதும், கைகொட்டுவதும் யாவரும் அறிந்தது உண்மை. என் போன்றவர்கள் இக்கதைகளை நேரிலே யறிவோம். எத்தனையோ தமிழ் பண்டிதர்கள் மாணாக்கர்கள் செய்யும் பரிகாசத்தைப் பொறுக்கமாட்டாமல் கண்ணீர்விட்டு கதறியிருக்கின்றார்கள். எத்தனையோ ஆசிரியர்கள் வித்தியார்த்திகள் தம்மிடம் நடந்து கொள்ளும் பான்மையை நினைந்து வருந்தி அவர் களை வைததினால் மாணாக்கர்களிடம் உதைபட்டு சென்றிருக் கின்றனர். சில வாயாடித் தமிழ்ப்பண்டிதர்கள் மாணாக்களிடம் இவ்வளவு கஷ்டமும் அவமானமும்பட்டு மாதம் 30, 40 ரூபாய் சம்பளம் பெறுவதைவிட ஏதாவது ஒரு தமிழ்ப் பத்திரிகையை ஆரம்பித்தால் வைதீகப் பெரியோர்களாவது நம்மை ஆதரிப்பார் களென்றெண்ணி சைவத்தின் பெயரால், ஆதிகத்தின் பெயரால், தேசத்தின் பெயரால் தங்களின் புராணப்பிரசாரத்தை ஆரம்பிக்கலா மென்று சென்னை முதலிய பட்டணங்களுக்குச் சென்று மாதப் பத்திரிகை, வாரப் பத்திரிகை ஆசிரியர்களாய் வெளிக்கிளம்ப லாயினர். ஆனால் சுய மரியாதை இயக்கம் காட்டுத் தீ போல் நாடெங்கும் அதிதீவிரமாய் பரவவே மக்கள் பலரும் விழிப்புற்று அவர்களின் பத்திரிகைகள் சுய நலத்திற்காக புராணப் பிரசாரம் புரியும் போலிப்பத்திரிகை யென்றும் அதனால் நம் நாடோ, அல்லது நம் சமூகமோ யாதொரு நலனும் எய்தப் போவதில்லையென்பதைத் தெற்றென அறிந்து தங்கள் ஆதரவை நிறுத்தவே சுயநலப் பத்திரிகை களெல்லாம் இருந்த விடங்கூட தெரியாமல் மறைந்து போய் விட்டது. ஆனால் பின்னர் தோன்றிய சில பண்டிதர்கள் தம் பத்திரிகைகளில், புராணப் பிரசங்கத்தோடு மக்கள் வாழ்விற்கு நலந்தரும் சில கொள்கைகளையும் பிரசாரம் புரிவதாக பெயரளவில் நடித்து வருகின்றார்கள். இக்கபடப் பத்திரிகைகளுக்குப் பொது ஜனங்கள் தம் தவறு கண்டு வருந்தும் படி செய்வார்கள் என்பது உறுதி. நிற்க, இப்பொழுது நமது கல்லூரிகளுக்கு மாணாக்கர்கள் அறிவு விசாலப்படும்படி போதிக்கத் தக்க சுயமரியாதை ஆசிரியர்கள் வேண்டும். அவர்கள் ஒரு பொழுதும் பூமி சாதிரம், வான சாதிரம், விஞ்ஞான சாதிரம், ரசாயன சாதிரம் முதலிய வற்றிற்கு விரோதமாய் போதித்து மாணாக்கர்களின் பரிகாசத்திற்கு ஆளாகாமல் அவர்களின் போதனையினால் மாணாக்கர்கள் புதிய புதிய விசயங்களைக் கேட்டு மாணாக்கர்களின் அறிவு விருத்தியாகி ஆசிரியர்கள் பேரில் அன்பும் மரியாதையும் கொள்ளுவதோடு மூட நம்பிக்கைகளையும், பிடிவாதத்தைவிட்டு மேனாட்டு சாதிரிகள் போல் விளங்க ஆரம்பிப்பர். தம் தாய்மொழியாம் தமிழ் மொழியின் பேரில் அன்பு கொள்வர் பாடசாலைகளிலே தமிழ்ப்பண்டிதர்க ளென்றால் மாணாக்கர்கள் மாத்திரமல்ல ஏனைய ஆசிரியர்களும் கேவலமாய் நினைக்கும் எண்ணங்களெல்லாம் ஒழியும். இக்காலத்திலே ஆசிரியர்களாய் வருபவர்களுக்கு உலகத்திலுள்ள பல விசயங்களைப் பற்றியும் ஆராய்ச்சியிருக்கவேண்டும். புராணக்குப்பையில் பிறந்து மூட நம்பிக்கையும் மூர்க்ககுணம் பிடிவாதக் கொள்கைகளுடைய பலரோடு கூடிவாழ்ந்து தமிழிலே தாம்கற்ற இரண்டொரு நூல்களிலே தாம் கற்கவேண்டிய விசயங்களையெல்லாம் கற்றுவிட்டதாயும் தமக்கு நிகராகக் கல்விகற்றோர் இவ்வுலகில் யெவருமிலர் என்றும் மமதைக் கொண்டு வாழ்ந்து மனிதர்களின் உடற்கூற்று நூல்களையும் மிருகப் பிராணிகளின் உடற்கூற்று நூற்களையும் நன்குபயிலாது ஒரு ஜாதி மிருகத்தோடு மற்றொரு ஜாதி மிருகம் புணர்ந்தாலும் அன்றி மனிதன் புணர்ந்தாலும் கருத்தரிக்க முடியாது என்ற உண்மையை யுணராது இயற்கைக்கு மாற்றமாக கலைக்கோட்டு மாமுனி மான் வயிற்றிலும், ஜம்புகர் நரிவயிற்றிலும், கவுதமர் பசு வயிற்றிலும், மாண்டவியர் தவளை வயிற்றிலும், கார்கேயர் கழுதை வயிற்றிலும், சௌனகர் நாயின் வயிற்றிலும், வள்ளி மான் வயிற்றிலும் பிறந்தார் களென்றும் ஒரு முனிவர் காட்டின் வழியே பிரயாணஞ் செய்து கொண்டிருக்கும்பொழுது ஆகாயத்தைப் பார்த்தார். கிரகங்கள் மிகுந்த நல்லநிலையிலிருப்பதால் இப்பொழுது ஒரு பெண் கர்ப்பந்தரித்தால் அப்பிள்ளை மிகுந்த அறிவுடையதாயிருக்கு மென்று நினைத்து தான்புணர காட்டினிடம் ஒரு பெண்ணாவது கிடைக்குமா எனத்தேடிப்பார்த்து, யாதொரு பெண்ணும் கிடையாமல் பலவந்தத் தால் தனது இந்திரியத்தை வெளிப்படுத்தி அதை ஒரு இலையில் வைத்தாராம், அதை ஒரு கிளி சாப்பிட்டுச் சுகப்பிர்ம்ம ரிஷி என்பவரை பெற்றதாகவும் கிணற்றுத் தவளைகள் போன்று, பிறபாசைகள், பிறநாடுகள், பிறநூல்களொன்றையும் அறியாது தமிழ்ப்புராணப் பாக்களிலே எல்லாமிருக்கிறது என்று தனது மூட அறிவை வியந்துகொண்டிருக்கும் ஆசிரியர்கள் மேற்கண்ட கதை களைக் கூறினால் பண்டைக்காலத்து மாணாக்கர்கள் கேட்டு நம்பிக் கொண்டு வந்தார்கள். சுயமரியாதை ஜோதி பட்டினங்களில் மட்டு மல்ல குக்கிராமங்களில் கூட பிரகாசிக்குமிக்காலத்தில் பெண்மக்கள் கூட இயற்கை தத்துவ சாதிரங்களெல்லாம் கற்றுவரும் இவ்விருப தாம் நூற்றாண்டில் தேக தத்துவ நிபுணர்களிடம் கசடறப் பயின்ற மாணவர்கள் வித்தியார்த்திகள் மனுஷ வீரியத்தால் பறவைகளானா லும், மிருகங்களானாலும் கருத்தரிக்க முடியாதென்றும் அதிலும் வீரியமானது யோனித் துவாரத்தின் வழியாய் கருப்பையிக்குள் செல்ல முடியுமே யொழி வாய்வழியாய் கருப்பைக்குள் செல்ல முடியாதென்றும், ஆண்மகனின் வீரியத்தையும் பெண்மகள் குடித் தாலும் கருத்தரிக்கமுடியாது என்ற உண்மையையறியாது போதிக்கும் தமிழ் பண்டிதரின் அறிவீனத்தை கண்டு எங்ஙனம் தேகதத்துவ சாதிரமறிந்த மாணவர்கள் கைகொட்டி நகையாமலும் அதைப் பற்றி கேள்விகேளாமலுமிருப்பர்? கடலால் சூழப்பெற்ற இப்பூமியை ஒரு பெண்ணாகவும், அப் பெண் இப்பூமியில் வாழும் இராட்சதர்களின் வேதனை பொறுக்க முடியாமல் பசுரூபமாகமாறி பிரமதேவனைச் சரண மடைந்து தனது கஷ்டங்களை முறையிட்ட பாரதகதையினையும் வராஹ அவதாரத்திலே (பன்றி அவதாரத்திலே) கனகாக்ஷனென்கிற அசுரன் பூமியைப் பாயாய்ச்சுருட்டி பாதாளத்திற்கொண்டுபோனபோது அவனை அழித்து மஹா விஷ்ணு பூமியை மேலாக கொண்டுவந்தார் என்றும், இன்னும் சிலர் பூமியை ஒரு பெண்தேவதையாகவும், பூமியி லுள்ள விந்தமென்னும் மலையானது எழும்பி சூரியனை மறைத்த தென்றும், பரமசிவன் இமயமலையில் திருமணம் முடிந்த பொழுது ஆங்கு விஜயஞ் செய்திருந்த மாப்பெருங்கூட்டத்தால் பூமியின் ஒரு கோடி உயர்ந்தும் ஒருகோடி தாழ்ந்தும் விட்டதென்றும் கூறும்படி யான பாட்டிகதைகளை யெல்லாம் பூமிசாதிரத்தை நுணுகி நுணுகியாராய்ந்த ஆங்கிலப் புலவர்கள் பால் கற்ற மாணாக்கர்கள், பூமியானது 125619567,000000,000000,000 டன் கனமுள்ளதாயும் உருண்டை வடிவமுடையதாயும் 25020 மைல்கள் சுற்றளவுள்ளதாயும், நிரக்ஷரேகைக்கு 7978 மைல் குறுக்களவுள்ளதாயும் பத்தொன்பது கோடியே எண்பத்தொன்பது லட்சத்து ஐம்பதினாயிரம் சதுர மையில்கள் விதிரணமுள்ள மேற்பரப்பையுடையதாய் ஆகாயத்தே யாதொரு சார்புமின்றி மணிஒன்றிற்கு அறுபத்தெட்டாயிரம் மையில் வீதம் சூரியனைச் சுற்றி வருவதாயும் ஐயந்திரிபறக் கற்ற மாணவர்கள் எங்ஙனம் நம்புவர். இதற்கு மாறாகக்கூறப்படும் புராணங்களையும் ஆசிரியர்களையும் எவ்வாறு மதிப்பர். சந்திரசூரியகிரஹணம் சூரியனை ராகுகேது என்னும் பாம்பு விழுங்குவதால் உண்டாகிறதென்றும், சூரியன் இராவணன் வீட்டிற்கு நேராகப் போவதற்குப் பயந்து சிறிது விலகிச் சென்றான் என்றும் சூரன் என்னும் அரக்கன் சூரியனைப்பிடித்துக் கொண்டு வந்து தன்மகன் பாநுகோபன் தொட்டிலின் காலிலே கட்டிவைத் திருந்தான் என்றும், சூரியன் என்னும் தேவன் ஓர் இரதத்தின்மேலேறி உலகத்தை சுற்றி வருவதாகவும் அவனுக்கு மனைவி, மக்கள் முதலிய சுற்றத்தார்கள் உண்டென்று புராணங்களில் கூறுபவைகளையெல் லாம் மெய்யென எண்ணி, அப்புராணங்களையெல்லாம் பாராயணம் பண்ணுவதால் மோட்சம் சித்திக்குமென்று மாணாக்கர்களுக்கு ஆசிரியர்கள் சொல்லும் வார்த்தைகளை வானசாதிரத்தை நன்கறிந்த அறிஞர்கள் மூலமாய் புத்திக்கு, யுக்திக்கு ஏற்ற வண்ணம் சந்திரனுக்கும், பூமிக்குமுள்ளதூரம் 240000 மையில்களென்றும், பூமிக்கும் சூரியனுக்குமுள்ள துரமானது, சந்திரனுக்கும் பூமிக்கு முள்ள தூரத்தைப் பார்க்கினும் 400 மடங்கு அதிகம் என்று சூரியன் ஓர் அக்கினி கோளமாய் ஆகாயத்தில் யாதொரு சார்புமின்றி தொங்கிக்கொண்டிருக்கும் ஒரு கிரகஹமென்றும், நமது பூமியைப் போல் 13 லட்சம் மடங்கு பெரியதென்றும், சூரியனுடைய குறுக் களவு எட்டு லட்சத்து எண்பத்து மூவாயிரத்து இருநூற்றுப் பதினேழு மையில்களென்றும், சந்திரன் பூமியைச் சுற்றி ஓடும் போது, அது சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலாவது அல்லது பூமி சூரிய சந்திரனுக்கு இடையிலாவது வரும்படி நேரிடுகிறது. இப்படி ஒரே நேர் கோட்டில் பூமிக்கும், சூரியனுக்குமிடையில் சந்திரன் வந்து சூரியனை மறைக்கும்போது சூரிய கிரஹணம் உண்டாகின்றதென் றும், பூமிக்கும், சந்திரனுக்குமிடையில் சூரியன் வரும்பொழுது சந்திர கிரஹணமுண்டாகிறதென்பவைகளை யெல்லாம் நன்கறிந்த மாணாக்கர்கள் புராணப் பெரும் புளுகுகளையெல்லாம் எவ்வாறு ஒத்துக்கொள்வர். சில தமிழ்ப் பண்டிதர்கள் இத்தகைய பூமி சாதி ரங்களை யெல்லாம் கற்றிருந்தாலும், புராணங்களில் சொல்லி யிருப்பவைகளே மெய்யென்றெண்ணுகிறார்கள். சிலர் புராணங் களைப் பொய்யென்றால் நரகஞ்சித்திக்குமென்றஞ்சுகிறார்கள். சிலர் நம் பெரியோர்கள் எத்தகைய அறிவுடையவர்கள், அவர்களைவிட வெள்ளைக்காரன் அறிவுள்ளவனா? அவன் சாத்திரங்களை நம்ப முடியாதென்றெண்ணுகிறார்கள். இவ்வாறெல்லாம் எண்ணி மாணாக்கர்களுக்கு கற்பித்துவந்ததால், ஆசிரியர் சொல்லை மறுத்தல் பாவமென்றெண்ணும் பண்டைகால மாணவரெல்லாம் அவர்களின் வார்த்தையில் நம்பிக்கைகொண்டு பகுத்தறிவை இழந்து உலகினர் நம்மைக் கண்டு பரிகசிக்கும் நிலையில் வந்துவிட்டனர். சுயமரியாதை இயக்கம் பரவவே, பகுத்தறிவின் மேன்மை விளங்கிவிட்டது. புராணப் பிரசாரம் புரியும் ஆசிரியர்கள் பாடு திண்டாட்டமாய் விட்டது என்றாலும், சில ஆசிரியர்கள் சில மாணவர்களைத் தம் மில்லிற்கழைத்தாவது தனிமையாக புராணம், வேதம் இவைகளைப் பற்றி வானமளாவப் புகழ்ந்து, சாகரர்கள் கடலை வெட்டினதினால் கடலுக்கு சாகரமென்று பெயர் வந்ததென்றும், அகதியர் கடலின் தண்ணீர் எல்லாவற்றையும் குடித்த கதையையும், சந்திரன் தனது குரு பத்தினியைப் புணர்ந்த கதைகளையும் நம்பும்படி 100க்கு 2 மாணவர் களையாவது செய்துவிடுகின்றனர். இளமையிற் கல்வி சிலையி லெழுத்து என்னும் நன்மொழிக்கேற்ப சிறுவயதில் கற்ற இப்புராண நம்பிக்கை இன்னோர் பி.ஏ.எம்.ஏ. படித்து பெரிய பட்டங்கள் பெற்ற பின்னரும் இவர்களை விட்டகன்றபாடில்லை. இத்தகைய ஆசிரியர் களால் நம்நாடு வறுமையுற்று பிறநாட்டார் பார்வையில் நாம் விலங் கினும் கடையராய் நமது பேரன், பூட்டன் காலத்தில் என்ன நிலையி லிருந்தோமோ அந்நிலையிலிருக்கின்றோம். இந்த நிலையிலிருந்து நமது மக்கள் மாறி பகுத்தறிவு உடையவர்களாய் புராண இதிகாசப் பொய்மொழிகளின் பேரில் கொண்ட மயக்கம் நீங்கி மாணாக் கர்கள் அறிவு விசாலமடைந்து மேனாட்டார் போன்று ஆகாயத்திற் பறக்கவும், கப்பல்களைச் செய்யவும், பீரங்கிகளைச் செய்யவும், கம்பி யில்லாத் தந்தி இயந்திரங்களைச் செய்யவும், இன்னும் பல இயந்திரங் களைச் செய்யவும் சக்தியுள்ளவர்களாய் விளங்க, ஆசிரியர்கள் சுயமரியாதை இயக்கத்தைச் சார்ந்தவர்களாயிருத்தல் வேண்டும், மத சம்மந்தமான போதனைகளை ஒழித்தல் வேண்டும், ஆசிரியர்கள் மத சம்மந்தமான போதனையில் நம்பிக்கையற்றவர்களாயிருக்க வேண்டும், அத்தகைய ஆசிரியர்களே பாட சாலைகளுக்கெல்லாம் வைத்தல் வேண்டும் என்று அறிஞர்களெல்லாம் செப்பிவர, சாத்தான் குளத்திலுள்ள ஒரு சில உலகமறியா மாக்கள் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் நாதிகத்தைத்தான் போதிப் பார்களென்று ஒரு பாட சாலை மானேஜருக்கு மனு எழுதினார் களாம். இவ்வைதீகக் குடுக்கைகளுக்கு நான் எடுத்துக்கூறுவது யாதெனில் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் போதிப்பது நாதிகமல்ல, அது அறிவு விடுதலை. மற்ற ஆசிரியர்கள் போதிப்பது மூட நம்பிக்கை, அனாச்சாரம், ஒழுக்கக் குறைவு முதலிய தீமை பயக்கும் செயல்களேயாம். எனவே யாண்டும் அறிவு விடுதலை பெருக சுயமரியாதை ஆசிரியர்களை பாடசாலைகளில் நிரப்ப அன்பர்கள் முயற்சிப்பாராக. - (குடியரசு 19.10.1930) சாதிக்குறியும் சைவநெறியும் சாதி யென்னும் வார்த்தை தமிழ்மொழியன்று. அஃது வடமொழியென்று பாஷா விற்பன்னர் பலரும் பகர்கின்றனர். எனவே சாதிபேதத்தை உண்டுபண்ணியவர்கள் ஆரியர்களென்பது நன்கறியக்கிடக்கின்றது. ஆரியர்களை நோக்கி கபிலர் என்னும் முனிவர் பாற்குலச் சாதியை இந்நாட்டில் நீர் நாட்டினீர் என்று கூறும் கூற்றும் மேற்கண்டவற்றை நன்கு வலியுறுத்தும். ஆரியர்கள் சுயநல மேலிட்டால் தம் குலத்திற்கு மேன்மை தேடவே இச்சாதிப் பிரிவையுண்டாக்க எண்ணி அதற்காதாரமாக பிற ஜாதியார் படிக்கக்கூடாதென்று கூறப்பட்ட வடமொழி வேதங்களிலே பிரம்மாவின் முகத்தினின்று பார்ப்பனர்களும் புஜத்தினின்று ஷத்திரியர்களும் தொடையினின்று வைசியர்களும் பாதத்தினின்று சூத்திரர்களும் தோன்றினார்களென்றும் மற்றையச் சாதிகளெல்லாம் விபசாரத்திலே தோன்றப்பட்டதாகவும் எழுதியிருப்பது இன்றும் அறியக்கிடக்கின்றது. அச்சாத்திரங்களிலே (மனுதர்ம சாத்திரம் முதலியவைகளிலே) பார்ப்பனர்களுக்கு விசேஷமான சலுகை பலவிடங்களிலும் காட்டப்பட்டிருப்பதோடு பார்ப்பானுக்குப் பணிவிடை புரிதலே கோஷமளிக்குமென்று வரையப்பட்டிருக் கிறது. இந்த நான்கு வருணத்தார்களின் வீட்டிலும் பிறக்கும் குழந்தைகளில் பார்ப்பான் வீட்டில் பிறக்கும் குழந்தைக்கு சாந்தத்தைக் கொடுக்கும் பெயரையும் க்ஷத்திரியனுக்கு வீரத்தைக் கொடுக்கக்கூடிய பெயரையும் வைசியனுக்குப் பொருளைத் திரட்டும் தன்மையுடைய பெயரையும் சூத்திரனுக்குத் தாழ்வைக் காட்டும்படியான பெயரையும் இடவேண்டுமென்றும் பிராமணர்கள் பிறருக்குத் துன்பம் புரிந்தாலும் பிராமணர்களை மற்றவர்கள் யாதொருவிதமான அவமானமும் செய்யக்கூடாதென்றும் பிராமணன் தான் மனிதரில் மேன்மையுள்ளவனென்றும் இந்த உலகத்திலே உண்டாயிருக்கிற சகல வருணத்தாருடைய பொருள்களையும் தானம் வாங்க உரியவனாயிருக்கிறான் என்றும், இறந்த முன்னோர் களின் ஆவி திருப்தியுற வேண்டுமானால் பிராமணர்களுக்கு ஏராளமான பொருளை யீய்தல் வேண்டுமென்றும் சூத்திரனுக்கு இம்மைக்குபயோகமான அர்த்த சாதிரத்தைச் சொல்லி வைக்கக் கூடாதென்றும் பிராமணனை அடிக்கவேண்டுமென்று ஆயுதத்தைக் கையினால் தூக்கினால் நூறுவருடம் வரையில் தாமிசிரமென்னும் நரகத்தில் விழுகிறான் என்றும், பிராமணன் தேகத்தில் உண்டு பண்ணின உதிரம் பூமியில் விழுந்து எவ்வளவு புழுதியை கிரகிக்குமோ அவ்வளவு வருடம் வரையில் இறந்த பிறகு அவன் இரத்தத்தை நரகில் நாய் நரி முதலான செந்துக்கள் சாப்பிடுகின்றன என்றும் அரசர்கள் பிராமணர்களை உபசரித்து அவர்கள் சொல்லுகிறபடி நீதி செலுத்தவேண்டுமென்றும் பிராமணர்கள் குற்றஞ் செய்தாரை அரசன் பொருட்படுத்தக்கூடாதென்றும், பிராமணமந்திரிகளிடத் தில் தான் எல்லாக்காரியங்களையும் யோசித்துச் செய்யவேண்டிய தென்றும், பிராமணர்களைப் பூஜித்தால் அரசர்களுக்கு மேலான மோட்சத்தைக் கொடுக்கிறதென்றும் அரசன் எளியவனாயிருப்பி னும் பிராமணனிடத்தில் தீர்வை வாங்கக்கூடாதென்றும் பிராமணன் தன் தேசத்தில் பட்டினியால் துன்பப்படும்படி பார்த்திருத்தல் கூடாது. அரசன் பூமியிலிருந்து புதையல் கண்டெடுத்தால் அதில் பாதியைப் பார்ப்பானுக்கும் பாதியைத்தன் பொக்கிஷத்தில் சேர்த்துக் கொள்ளவேண்டுமென்றும் பிராமணனுடன் அவர் ஆசனத்திலுட்கார்ந்த சூத்திரனை அவனுக்கு பிராணஹானி வராமலிருக்கும்படி இடுப்பில் சூடு போட்டாவது ஆசனத்தில் சிறிது அறுத்தாவது ஊரைவிட்டுத் துரத்த வேண்டியது என்றும் பிராமணனை சூத்திரன் அடித்தால் சூத்திரன் கைகளை வெட்டி விடவேண்டுமென்றும் பிராமணப் பெண்ணை சூத்திரன் பலவந்தமாய்ப் புணர்ந்தால் அவனுடைய ஆண்குறியை அறுத்து விடவேண்டும். பிராமணன் மற்றையச்சாதிப் பெண்களைப் பலவந்த மாய்ப் புணர்ந்தால் ஐநூறு பணம் தண்டமிட வேண்டும்; பிராமண ருக்குத் தலையை முண்டனஞ் செய்வது அது அவர்களுக்குத் தூக்குத்தண்டனைக் கொப்பாகும். எக்காரணத்தைக்கொண்டும் பிராமணணைத் தூக்கிலிடக் கூடாது (இவ்விருபதாம் நூற்றாண்டில் கூட சில இந்து அரசாங்கத்தில் இச்சட்டம் அமுலிலிருக்கிறதாம்) என்றும் பிராமணன் சம்பளம் கொடுத்தேனும் கொடாமலேனும் சூத்திரனிடத்தில் வேலை வாங்கலாம் ஏனெனில் பிராமணன் வேலைக்காக சூத்திரன் படைக்கப்பட்டிருக்கிறான் என்றும் பிராமணன் சூத்திரனிடத்திலிருக்கிற எந்தப் பொருளையும் (மனைவியேயானாலும் சரி) எளிதில் எடுத்துக்கொள்ளலாம். சூத்திரன் அவனிடத்திலிருக்கும் எந்தப் பொருளுக்கும் அவன் சொந்தக்காரனல்ல. பிராமணன் பொருளைக் கவர்ந்த சூத்திரனைச்சித்திரவதை புரிந்து கொல்கவென் றும் பிராமணன் ஞானியாயிருந்தாலும் மூடனாயிருந்தாலும் அவனே மேலான தெய்வம் என்றும் பிராமணர்கள் கெட்டவர்களா யினும் சுபாசுபகாரியங்களில் பூஜிக்கத்தக்கவர்கள். ஏனெனில் அவர்கள் மேலான தெய்வமென்றும் க்ஷத்திரிய சாதிக்கு நாசம் வந்தபோது க்ஷத்திரியப்பெண்ணைப்புணர்ந்து அச்சாதியை விருத்தி செய்தானாகையால் க்ஷத்திரியனுக்குப் பார்ப்பான் தகப்பனா யிருக்கிறான் என்றும் எழுதியிருப்பவையெல்லாம் ஆராய்ந்தால் பார்ப்பன ஜாதியை மேன்மைப்படுத்தவும் அவர்கள் கஷ்ட மில்லாமல் வாழவுமே இச்சாதிகளை ஏற்படுத்தினர் என்பது நன்கு புலனாகின்றது. இவ்வாறு தாங்கள் எழுதிய நூற்களைக் கடவுள் வாக்கென அரசர்களையும் மற்றும் மக்களையும் நம்பச்செய்து அரசாங்க சட்டமாகவும் ஏற்படும்படி செய்துவிட்டனர். நாளடை வில் ஜனங்களின் உள்ளத்தில் ஜாதீய வித்தானது வளர்ந்துவிட்டது. ஜாதிபேதமின்னதென்றறியாத தமிழ்மக்களிடையே ஆசியாவின் நடுப்பாகத்தே வசித்து வந்த இவ்வாரியர் கூட்டத்தார் தங்கள் ஆடுகளுக்கு நல்ல மேய்ச்சல் தரைகள் அதிகமாயுள்ள இமயமலைச் சாரலைநோக்கி வந்து கங்கைநதியின் பக்கலில் குடிபுகுந்தனர். நாளடைவில் பல நயவஞ்சகமொழிகளால் இந்நாட்டுமக்களை ஏமாற்றியும் சூதால் தமிழர்களை வென்றும் தங்கள் ஆட்சியை நிலைநிறுத்திக் கொண்டதோடமையாது பல சிற்றரசர்களைத் தம் வயப்படுத்திக் கொண்டு அவர்களுக்கு மந்திரியாய் அமைந்து கொண்டு அவர் அரசுகளையெல்லாம் அழித்துவிட்டனர். இவை களைப்பற்றி முப்புரி நூலில் பாப்புப் பெருத்தல்லவோ சம தானங்கள் பாழ்பட்டவே என்று ஒரு தமிழ்ப் புலவன் முற்காலத்திய நூலொன்றில் குறிப்பிட்டிருப்பதும் பாப்பொடு பழகேல் என்று ஔவையார் கூறியிருப்பதும் தக்க சான்றாகும். சாதிப்பிரிவிலிருந்தே தீண்டாமை என்னும் கொடிய வியாதியும் உற்பத்தியாய்விட்டது. தீண்டாமையும் ஜாதிவேற்றுமையுமே சமத்துவமாய் சகோதரத்வ மாய் வாழ்ந்த இந்நாட்டு மக்களுக்குள் வேற்றுமைகளையும் சண்டை களையும் பொறாமைகளையும் உண்டுபண்ணி ஆயிரக்கணக்கான கட்சிகளை யுண்டுபண்ணி முதலாவது முலிம்களிடத்திலும் பின்னர் கிறிதவர்களிடத்திலும் (வெள்ளைக்காரர்களிடத் திலும்) தோல்வியுற்று அடிமையாய் வாழச் செய்து விட்டது. சாதியென்பது பிரம்மாவினால் உண்டுபண்ணப்பட்டது என்று கூறுவது எத்துணை நேர்மையுடையது. அச்சாதி வேற்று மையை அக்கடவுள் வேறுபாடுகள் ஒன்றிலும் உண்டாக்காமல் பாழும் இந்தியநாட்டில் மட்டுந்தானா உற்பத்தி செய்ய வேண்டும்? அவன் முகத்தில் தோன்றிய பார்ப்பார்கள் உயர்ந்த ஜாதியாரென்றும் அதன் கீழ்ப்பாகிய புஜத்தில் தோன்றிய ஜாதியார்களாகிய க்ஷத்திரியர் அவர்களைவிட சிறிது தாழ்ந்த குலத்தாரென்றும் தொடையில் தோன்றிய வைசியர் க்ஷத்திரியரைவிட சிறிது தாழ்ந்த ஜாதியினர் என்று கூறல் சரியா? ஒரே மரத்தில் உச்சியிலும் இடையிலுள்ள கிளைகளிலும் அடியிலும் காய்கள் காய்க்கின்றன. உச்சியில் காய்க்கின்ற காய்கள் உயர்ந்த ருசியையும் அடியில் காய்த்த பழங்கள் எல்லாவற்றையும் விடத் தாழ்ந்த ருசியையுமுடையதாயிருக்கின் றதோ! அவ்வாறில்லாமல் எல்லாம் ஒரேவிதமான ருசியாயிருக்கிறதே அஃதேபோல் எல்லாச்சாதியாரும் சமமானவர்களாகத்தானே யிருக்கவேண்டும். கடவுளே ஜாதி, ஜாதியாக மனிதர்களை உற்பத்தி செய்திருந்தால் ஆடு, மாடு, குதிரை, யானை முதலியவைகள் வெவ்வேறு ஜாதி என்று காட்ட வெவ்வேறு உருவமுடையதாய் உற்பத்திசெய்திருப்பது போல் பார்ப்பானை ஒருவித வடிவமாகவும் சத்திரியனை வேறு உருவமாகவும் வைசியனை வேறு வடிவமாகவும் சூத்திரனை ஒரு வடிவமாகவும் உண்டுபண்ணியிருப்பானன்றோ? ஆடும் மாடும் புணர்ந்தால் கர்ப்பம் உண்டாவதில்லை. அஃதேபோல் வெவ்வேறு ஜாதியான பார்ப்பனப்பெண்ணும் சூத்திர ஆணும் கூடினால் கர்ப்பமுண்டாகாமலிருக்க வேண்டுமே? அவ்வாறின்மை யால் மனிதர்களனைவரும் ஒரேஜாதியென்பது விளங்கவில்லையா? முகத்தில் பிராமணன் தோன்றினாள் என்றுதானே சாத்திரங்கள் கூறுகின்றன. பிராமணத்தி எவ்வாறு வந்தாள் என்று கேள்வி கேட்க நேரிடும் என்பதை அவர்களறியாமலே இச்சாத்திரங்களை எழுத ஆரம்பித்துவிட்டனர். மேலும் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு பிரயாணமாய்ப்போகும் ஆண்கள் பெரும்பாலும் பெண் களைக் கூட்டிக் கொண்டு போவது வழக்கமில்லை. அஃதேபோல் அக்காலத்திலே நம் நாட்டிற்கு வந்த ஆரியர்கள் தனியாக பெண்க ளின்றி வந்ததால் பிராமணத்தியும் முகத்தில் தோன்றினாள் என்று எழுத வழியில்லாமல் போய்விட்டது. நாம் பழைய சாத்திரங்களை ஆராய்ந்தால் ஆரியர்கள் பெண்களன்றி இந்நாட்டிற்கு வந்து இந்நாட்டுப் பெண்களை மணந்துகொண்டார்களென்பது நன்கு புலனாகும். எடுத்துக்காட்டாக வியாசமுனி மீன் வாணிச்சியி னின்றும் கௌசிகமுனி சூத்ரச்சியினின்றும் விவாமித்திரர் சண்டாளச்சியினின்றும் வசிஷ்டர் வேசியினின்றும் சக்கிலிச்சி வயிற்றில் சத்தியமுனியும், புலைச்சி வயிற்றில் பாராசர முனியும் பிறந்ததாகக் காணக்கிடக்கின்றது. இவர்களில் எவரும் பிராமணத்தி யிடம் பிறக்கவில்லையென்றாலும் பார்ப்பார்களாக ஏன் அவர் களின் மேன்மை வாய்ந்த குருவாகவும் விளங்கியிருக்கின்றனர். இந் நால்வகைச் சாதியாரும் ஒரே காலத்திலுற்பவித்திருக்க ஒரு ஜாதியார் குறையவும் மற்ற ஜாதியார் கூடியிருக்கவும் காரணமில்லை. சென்ற முறை எடுக்கப்பட்ட ஜனசங்கைக் கணக்குப்படி 100-க்கு ஒருவர் பிராமணராயும் மீதி 99 பேரும் சூத்திரராயுமிருக்கின்றார்களே பார்ப்பனர்களின் தற்கால சித்தாந்தப்படி கலியுகத்தில் க்ஷத்திரியரும் வைசியரும் கிடையாது. பிரம்மாவின் மூத்த புத்திரர்களும், அதிகப் பிரீதியுடையவர்களும், பூசுரர்களுமான (பூலோக தேவர்களுமான) பார்ப்பனர்கள் மற்றைய ஜாதியார்களைவிட இத்துணை குறை வாகவும் சூத்ரயர்கள் பல்கிப் பெருகி இருக்கவும் காரணத்தா னென்னை? ஒரே ஜாதியான பார்ப்பனரிலே பல பிரிவினைகளுண் டாகி ஒருவர் வீட்டில் ஒருவர் உணவருந்த மாட்டேனென மறுத்தலும் ஏற்றுக்கு? பிரம்ம தேவன் முகத்திலும் புஜத்திலும் தொடையிலும் பாதத்திலும் பிள்ளை உண்டாவதாகயிருந்தால் அவனுக்கு மனைவி எதற்கென்றும் ஆண்குறி எதற்கென்றும் கேள்வி பிறக்கின்றது. எனவே பார்ப்பார்கள் தங்கள் ஜாதியை உயர்த்தவே இத்தகைய கட்டுக் கதைகளுண்டுபண்ணினர் என்பதை நிச்சயமாய் நாமறியலாம். ஜாதிப் பிரிவினையிலிருந்தே தீண்டாமையும் தோன்றி நம் நாட்டை பாழடையப்பண்ணிற்று, பண்ணுகின்றது. இதை யறிந்தே திரு. காந்தியவர்களும் ஹிந்துக்கள் வேண்டுமென்றே தீண்டா மையைத் தமது மதத்துள் ஒரு பாகமாகக் கொள்ளும் வரை ஹிந்துக்கள் தங்களுடன் பிறந்த சகோதரர்களைத் தீண்டுவது பாவம் என்று நினைக்குமட்டும் சுயராஜ்யப் பேறுபெறல் அரிதே என்று கூறி யுள்ளார். எனவே ஜாதியினடியாகப் பிறந்த தீண்டாமை நீங்கினால் ஒழிய நம் நாட்டிற்கு விடுதலை யுண்டாக்கப்போவதில்லை. அத்தீண் டாமையை வற்புறுத்திக் கூறப்பட்ட சாத்திரங்களின் தன்மையையும் அத் தீண்டாமையை மக்கள் எவ்வித முறையிலனுஷ்டிக்கின்றனர் என்பதை நாட்டின் விடுதலைக்காகப் போராடும் ஒவ்வொரு மனிதனும் ஆராய்ந்து பார்த்தல் அவசியம். தீண்டாமையின் பொது விதியானது எப்படியிருக்கிறதெனில் நம்மால் எது முடியுமோ அதற்கெல்லாம் தீண்டாமையை அனுஷ்டிக்கும் படியும் முடியாத தற்கெல்லாம் தீண்டாமை அனுஷ்டிக்க வேண்டாம் என்றும் கூறப்படுகிறது. உதாரணமாக ஒரு குளத்தில் பறையர், வேளாளர், நாடார், பிராமணர், வாணியர், குறவர், மறவர், முதலிய எல்லாச் சாதி யாரும் குளிக்கின்றனர். தண்ணீர் எடுக்கின்றனர். அதில் தீண்டாமை போய் ஒன்றுஞ் செய்யவில்லை. அதே தண்ணீர் குடத்திற்குள் வந்த வுடன் எவர் தொட்டாலும் தீண்டாமை வந்து பற்றிக்கொள்கிறது. ஒரு கோனார் வீட்டில் தண்ணீர் அருந்துதல் கூடாது. அத் தண்ணீரில் தீண்டாமை எளிதில் வந்து பற்றிக்கொள்ளுமாம். அதே தண்ணீரை அக்கோனார் மோரில் ஊற்றிக் கொடுத்தால் அம்மோரில் தீண்டாமை போயணுகாதாம். பென்சர் சோடா பாட்டலில் ஆதித்திராவிட சோதான் தண்ணீர் அடைத்துக் கொடுத்தாலும் சும்மா சாப்பிட லாம். தீண்டாமை அப்பாட்டலுக்குள் நுழையமுடியாதாம். விலை மாதர் வீட்டிற்கு ஆதி திராவிடர், பார்ப்பார், ஈழுவர், நாடார், வேளாளர் முதலிய பலஜாதியார்களும் போய் அவளுடன் சையோகம் செய்கிறார்கள். அவள் தீண்டாமைமென்பதைக் கவனிப்பதேயில்லை. அவளை யாரும் கோவிலுக்குள் அனுமதிக்க மறுப்பதில்லை. அவள் வீட்டிற்குச் செல்லும் எந்தப் பார்ப்பானும் அவள் கொடுக்கும் தண்ணீரையோ, காப்பியையோ, உணவையோ சாப்பிட மறுப்பதில்லை. அப்படிச் சாப்பிடுகிறவனைத் தீண்டாமை பற்றிக்கொள்வது மில்லை. ஜவுலிக்கடையிலிருக்கும் எந்தத் துணியையும் எந்தச் சாதியாரும் தொடலாம். தீண்டாமை அதைப் பற்றுவதில்லை. பழைய துணிகளிலே மாத்திரம் தீண்டாமையணு குமாம். ஆனால் வண்ணானைத் தொட்டால் தீட்டாம். அவன் வெளுத்துக்கொடுக்கும் பழைய வேட்டியில் தீண்டாமையில்லை யாம். அதில் கூட தீண்டாமை வந்து பீடித்திருக்குமென்று சில காலத் திற்கு முன்னால் பிராமணர்கள் அவ்வேட்டியை தண்ணீரில் நனைத்துக் காயப் போட்டு உடுத்தி வந்தார்கள். பின்னர் கோட்டு சர்ட்டுகளை கஞ்சி முறுக்கி தேய்த்து வண்ணார் கொடுப்பதை அணிந்து கொள்ளும் நாகரீகம் வந்தவுடனே அந்தத் தீண்டாமையும் போய் விடுகின்றது. பட்டிலோ பழமையானாலும் தீண்டாமை வந்து சேர்வதில்லை. மட்பாத்திரங்களில் தீண்டாமை பலமாகப் பிடித்துக் கொள்ளுமாம். எத்துணைசுத்தம் பண்ணினாலும் அதிலுள்ள தீண்டாமை போகாதாம். வெள்ளி பித்தளை பாத்திரங்களிலே தீண்டாமை வந்து பிடித்துக்கொண்டால் தண்ணீர் விட்டு சுத்தப் படுத்தினால் தீட்டுப் போய்விடுமாம். தங்கப் பாத்திரங்களில் எப் பொழுதும் தீட்டுப்போ யணுகாதாம் (இதற்கு தண்ணீர் விட்டால் பாலிஷ் போய்விடு மன்றோ?) எமது ஊர்ப்பக்கத்திலே ஆண்டுதோறும் தை மாதப்பிறப்பிற்கு முன்னால் பழைய பானை சட்டிகளை யெல்லாம் வெளியிற் கவிழ்த்து வைத்துவிட்டு புதுப்பானைகளில் சோறு சமைப்பார்கள். அப்பழைய பானைகளை நாடார் சோதரிகள் கிரயத்திற்கு வாங்கிக் கொண்டு போய் அதிலே பதினி காய்ச்சுகின் றார்கள். அப்பதினி கொதித்து பொங்கும் பொழுது ஆமணக்குக் கொட்டையைத் தட்டிப் போட்டு விடுவார்கள். சில சமயங்களில் அந்த ஆமணக்கு முத்தை வாயிற்போட்டு களைத்தே துப்பி விடுகி றார்கள். பதினியின் கொதிப்பு அடங்கிவிடுகிறது. அப்படிக்காய்ச்சும் அந்தக்கருப்புக் கட்டிகளில் தீண்டாமை போய் பற்றுவது கிடை யாது. ஆனால் அந்த நாடார் வீட்டுக்காப்பியில் தீண்டாமை பற்றிக் கொள்கிறதாம். அரசாங்க வைத்திய சாலையில் மருத்துவர், ஆதி திராவிடர் முதலியோர்களால் தண்ணீர் கலந்து கொடுக்கப்படும் மருந்துகளில் தீண்டாமையில்லை யென்று எல்லா ஜாதியார்களும் மருந்து தின்றார்கள். அவர்கள் வீட்டிலிருந்து கொடுக்கும் சுத்தமான தண்ணீரிலும் தீண்டாமையுண்டாம். ஆதித்திராவிடராயினும் இக் காலத்தில் சேர்ந்துவிட்டால் அவர்களைத் தீண்டாமையணுகாது. அவர்களை எல்லோரும் முதலாளி யென்று மரியாதையாகப் பேசுவார்கள். தீண்டத்தகாதவன் கிறிது மதத்தில் புகுந்து விட்டார் அவனிடம் தீண்டாமை நெருங்காது. மலையாளத்தில் சில தீண்டத் தகாத ஜாதியார்களென்போர் மேல் ஜாதியார்களின் வீட்டிற்குள் வரக்கூடாதாம் வந்தால் தீண்டாமை வீட்டையணுகி கொள்ளுமாம். அவசியமாய் அத்தீண்டாதார்கள் வீட்டினுள் வரவேண்டியதிருந் தால் தங்கள் வீட்டில் வாங்கி பத்திரமாய் ஒரு கயிற்றில் கட்டி வைத்திருக்கும் சிலுவையை எடுத்துக் கொடுத்து அதை யணிந்து கொண்டுதான் வீட்டினுள் வர அனுமதிப்பார்களாம். எனவே சிலுவை மனிதர்களின் தீட்டைப் போக்கும் சக்தியுடையது என நம்பப்படுகிறது. ஆகவே தீண்டாமையென்பது மனிதர்கள் அறிவிற் கும் தர்க்கத்திற்கும் பொருந்தாத ஒரு கொள்கை யென்றும் அது மனிதர்களை விலங்குகளினும் கடையராக்கிவிடுகின்றதோடு பார்ப்பார்களின் சுய நலத்திற்காக இத்தீண்டாமையையும் இந்து மதத்தையும் உண்டு பண்ணின என்பதும் அறியக் கிடக்கின்றது. இதையறிந்தே தீண்டாமை ஹிந்துமதத்தின் ஜீவாதாரமென என் முன்னிலையில் உறுதி கூறப்படுமேல் ஹிந்துமதத்திற்கு நேர்மாறாக யான் கிளர்ச்சிசெய்ய புறப்படுவேன் என்று திரு. காந்தி கூறியுள்ளார். எனவே தீண்டத்தக்கவர்கள் இவர்களெனவும் தீண்டத் தகாதவர்கள் எனவும் எளிதிலறிந்து கொள்ளவே ஒவ்வொரு ஜாதியானின் பெயருக்குப் பின்னும் பிள்ளை, முதலியார், ஐயர் முதலிய பேர்களை எழுதப் பார்ப்பனர் தூண்டி விட்டனர். பிராமணர், ஷத்திரியர், வையர், சூத்திரர் என்ற நான்கு மொழி களும் வடமொழியாயிருப்பதினாலே சாதி பேதத்தை இந்நாட்டில் நிலைநாட்டியவர்கள் ஆரியர்தான் என்று ஐயமறக்கூற இடமுண்டு. இந்துதேச சரித்திர ஆரியர்கள் பலரும் அதற்குச் சான்று பகர்கின் றனர். ஆரியர்கள் இந்நாட்டிற்கு வருவதற்கு முன்னர் இத்தமிழ்நாட் டில் சாதிபேதம் கிடையாதோவெனில் ஒருசிறிது இருந்தது என்று கூறலாம். அது எப்படிப் பட்டதெனின் ஒவ்வொருவரும் இருக்கும் (வசிக்கும்) நிலம்பற்றி சாதி வகுக்கப்பட்டிருந்தது. பூமி நான்கு வித மான தன்மையுடைய நிலங்களாகப்பிரிக்கப்பட்டு அதில் வாழ்ந்த மக்களை குறிஞ்சி நிலமக்கள், நெய்த நிலமக்கள், மருதநிலமக்கள், முல்லை நிலமக்கள் என வகுக்கப்பட்டிருந்தனர். குறிஞ்சி நிலத்தில் வசிப்போன் அசௌகரியத்தினால் மருத நிலத்தில் போய் வசித்தால் அவன் மருத நிலமக்கள் என்றே அழைக்கப்பட்டு வந்தான். இவ்வாறு ஒவ்வொரு நிலத்தாரும் தத்தம் இஷ்டம்போல் முல்லை நிலமக்களாகவும் நெய்தனிலமக்களாகவும் மருதநிலமக்களாகவும் மாறிக்கொண்டதோடு ஒருவருக்கொருவர் பெண் கொடுக்கல் வாங்கல் முதலியனவும் செய்து வந்தனர். ஆரியர் இந்நாட்டிற்புகுந்து பல தமிழர்களை வஞ்சனையால் கொன்றும் படை அரசர்களிடம் மந்திரியமைந்தும் ஜாதிபேதங்களையும் பார்ப்பார்களுக்கு வேண்டிய நலத்தையும் அரசாங்க சட்டத்தில் புகுத்தி தமிழ்மக்களை அதற்குட் பட்டு நடக்கும்படி செய்ததோடு தங்கள் பூலோக தேவர்கள் என்றும் கடவுள் தங்கள் மூலமாய்ப் பல சாதிரங்களை வெளியிட்டிருக் கிறார் என்றும் கூறி கடவுள் பேரில் வைத்திருந்த தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டனர் என்றாலும் பிற்காலத்தில் இதன் உண்மைகளை யெல்லாம் உணர்ந்த திருமூலர், சத்தியமின்றித் தனிஞானந் தானின்றி யொத்தவிடயம் விட்டோரும் உணர்வின்றி பத்தியுமின்றிப் பரலுண்மை யின்றியூண் பித்தேறும் மூடர்பிராமணர்தாம் என்று நவின்றுள்ளார்; என்றாலும் அக்காலத்தில் அரசர்களெல் லாம் பார்ப்பன தாசர்களாயிருந்ததால் பகிரங்கமாய் பிராமணர் சாத்திரங்களில் செய்த படுமோசங்களை விளக்கிக் காட்ட முடி யாது போயிற்று. பார்ப்பனர் ஆதிக்கமிருந்த அக் காலத்தில் கூட பல தமிழ் மக்கள் வருணபேதத்தை ஒப்புக் கொள்ள மறுத்து தங்கள் பேருக்குப் பின்னும் தங்கள் ஜாதிப் பெயரைச் சேர்க்கவில்லை. எடுத்துக்காட்டாக கம்பன், புகழேந்தி, ஒட்டக்கூத்தர், நக்கீரர், முதலியோர்களாவர். பெண்மக்களோ அன்று முதல் இன்றுவரை பார்ப்பனரால் வகுக்கப்பட்ட ஜாதிகளையொப்புக் கொள்ளாமல் எச்சாதியி லுதித்தவராயிருப்பினும் ஜானகி, திலகவதி, மாரியம்மாள், பேச்சியம்மார் என்றே கூறிவருகின்றனர். ஆராய்ச்சியும் அறிவும் மிகுந்த இவ்விருபதாம் நூற்றாண்டில் தான் தமிழ்மக்கள் நன்றாய் விழிப்புற்று, பிரிட்டிஷ் அரசாங்கத்தில் பார்ப்பனர்கள் புகுந்து உத்தியோகப்பதவிகள் முழுவதையும் கொள்ளையடித்து தாங்களும் தங்கள் உறவினர்களும் ஏகபோகமாய் அனுபவித்து பழைய துருப் பிடித்த ஆயுதங்களாகிய மனுமிருதிபோன்ற கொடிய நூற்களில் கூறிய சட்டங்களை, தங்கள் சொந்த ஹோதாவில் பிரயோகம் பண்ணுவதைக்கண்டு பார்ப்பனரல்லாதார் கட்சி ஒன்றை நிறுவி கல்வியில் சிறிது முற்போக்கடைந்து பார்ப்பனரல்லாதாரைத் தாழ்த்தி, நூல்கள் பலவற்றில் எழுதி வைத்திருப்பதையும் கண்டு ஆங்காங்கு கண்டிக்க ஆரம்பித்தனர். இதற்கிடையே சைவசமய எழுச்சி ஒன்றும் தோன்றியது. அப்பொழுது சைவசமயத்திற்கோ அரும்பெரும் தலைவராய்த் திகழ்ந்த ஆறுமுக நாவலர் என்னும் வேளாளர் வடமொழி வேதங்களையும் சாதிரங்களையும் பயின் றார் என்றாலும் வடமொழி வேதங்களைப்பின் பற்றித்தான் சைவம் உண்டாகியிருக்கிறது. அவ்வேதத்தின் படி வேளாளராகிய நாமெல் லாம் சூத்ரர் அதாவது வேசிமகன், ஆசாரமில்லாதவன், ஒழுக்க மில்லாதவன் என்று பொருள்படுவதோடு கொட்டடிப்பதும் பார்ப்பனர்கள் எளிய தொழிலைச் செய்து அவர்தம் புறவாயில் காத்து ஆண்டுபோடும் எச்சிலையுண்டன்றோ காவல் கழித்தல் வேண்டுமென்றஞ்சினார். பிரம்மா நான்கு ஜாதியை தம் உடலி னின்று உற்பத்தி செய்தார். இவர் தம் பேனாமுனையினால் மற்றொரு சாதியை சிருட்டித்து அதற்குச் சற்சூத்திரர் எனப் பெயர் கொடுத்து நிகண்டிலும் வேளாளர் சற்சூத்திரர் எனப் புகுத்தினார். அதன் பின்னர், கனகசபைப்பிள்ளை போன்ற அறிஞர்கள் தோன்றி சற்சூத்ரர் என்றால் நல்லவேசிமகன், நல்ல ஆசாரமில்லாதவன், நல்ல ஒழுக்கமில்லாதவன் என்று தானே பொருள் என்றெண்ணி சைவர்கள் பெரிதும் மதிப்பு வைக்கும் ஆறுமுக நாவலரை மிகப் பலமாய்க் கண்டித்து வருணசிந்தாமணியென்ற ஒரு பெரிய நூலை எழுதி அதில் வேளாளரை வையர் என்பதற்கு பல ஆதாரங்களைக் காட்டித் தன் கொள்கையை நிறுவியுள்ளார். அதன்பின்னர் தோன்றிய சைவசிந்தாதிகளாகிய வேளாளத் தலைவர்கள் தாங்கள் வைராயா யினும் பார்ப்பனர்களுக்குத் தாழ்ந்தவர்களே யென்றெண்ணி பார்ப்பனர் வேதங்களையும் பிற நூற்களையும் கண்டித்து சைவம் வடமொழி வேதத்தினின்று தோன்றவில்லை யென்றும் சைவ வேளாளர்களே உயர்ந்த ஜாதியார்களென்றும் பார்ப்பனர்கள் அவர்களைவிடத் தாழ்ந்த ஜாதியாரென்றும் கூறத் தலைப்பட்டனர். அதற்குச்சில பாக்களை ஆதாரமாகக் கொண்டு இங்கு பிரசாரம் பண்ணத் தலைப்பட்டார்கள். ஆனால் அக்கொள்கைளும் சிறிது காலத்தே மறைந்தது. ஏனெனில் வேளாளரில் புலாலுணவு உண்டு வந்த ஒரு சில கூட்டத்தார் புலால் உணவை ஒழித்து நெடுநாள் ஆகியும் அவர்கள் பெயரளவில் சைவராகிய உயர்ந்த சாதி வேளாளர் சமத்துவம் கொடுத்து அவர்களை வீட்டில் உணவருந்தாமலும் பெண்கொடுத்தல், பெண் எடுத்தல் முதலியன செய்யாது அவர் களைத் தாழ்த்தி வருவதையும் கண்டு வருந்தி அவர்களிற் சிலர் சைவ சித்தாந்தத்தை நன்கு அறிந்து சிவதீக்கை பெற்று இச்சாதிபேதத்தை அடியோடழிக்க முயன்றனர். அவர்களின் செயலுக்கு சமரச நோக்க முடைய உயர்ஜாதி சைவவேளாளரிற் சிலர் ஆதரவும் நல்கினர். அன்னார் சைவர்களின் நூற்களை நன்கு ஆராயத் தலைப்பட்டு தங்க ளின் கொள்கைக்கு அனுகூலமான சான்றுகளைத் தேடிப்பலவற்றை கண்டனர். எடுத்துக்காட்டாக சாத்திரம் பலபேசும் சழக்கர்காள் கோத்திரம் குலமும் கொண்டென் செய்வீர் என்று அப்பர் சுவாமிகள் பாடியிருப்பதையும் மற்றொரு சமய குரவராகிய மணிவாசகப் பெருமான் பின்வருமாறு மலர் வாய்பெய் திருப்பதாயும் கூறுகின்றார்கள் சாதிகுலம் பிறப்பென்னும் சுழிபட்டுதடுமாறும் ஆதிமிலி நாயேனை அல்லறுத்தாட்கொண்டு எனக்கூறி யிருப்பதையும் மற்றும் பல ஆதாரங்களையும் காட்டி வாதித்து வந்தனர். சைவசித்தாந்தத்தை நன்கு படித்த பெரியார்கள் கூட இக்காலத்து இவர்களின் கூற்றிற்கு மாறாகக் கிளர்ச்சி செய்கின் றனர். இப்பொழுது வேளாளரல்லாத பிறசாதியார்களும் சைவரா னால் அவர்களை சைவசமயிகளென சமத்வமாய் நடத்த மறுக்கும் வேளாள சைவர்களுக்கு விரோதமாய் சைவசித்தாந்தம் ஜாதி பேதத்தை ஒழிக்கவந்த நெறியென்றும் கிளர்ச்சி செய்கின்றார்கள். இதனிடையே திரு . காந்தியாரின் இயக்கம் தோன்றிற்று. நாட்டில் அவருக்குப் பெருஞ் செல்வாக்கும் தோன்றியது. அவர்வருணாசிரம தர்மத்தைச் சிறிது ஆதரித்த போதிலும் தீண்டாமையை ஒழித்து விடவேண்டுமென ஆங்காங்கு போதிக்க ஆரம்பித்தார். அவர் வழிநின்று தொண்டாற்றிய எம் நண்பர் திரு. வி. கல்யாணசுந்தர முதலியார்போன்ற சைவர்களும் திரு. காந்தியின் கொள்கையை ஒப்புக்கொண்டு சைவத்தில் ஜாதிபேதம் கிடையாதெனப் பகிரங்க மாக முன்னிலும் சிறிது அழுத்தமாகவும் திருத்தமாகவும் எழுதவும் பேசவும் ஆரம்பித்து விட்டார். ஓரிடத்தில் திரு முதலியார் அவர்கள், கடவுள் படைப்புக்குட்பட்டமக்களுக்குள் தீண்டாமை எங்கிருந்து முளைத்ததோ தெரியவில்லை? எங்ஙணும் நீக்கமற நிறைந்துள்ள ஆண்டவன் தீண்டாத மக்கள் உள்ளத்திலுமிருக்கிறான். ஆண்டவன் உறையும் திருக்கோவில்களாகிய ஏழைமக்கள் உடலில் தீண்டாமை யேது? ஆண்டவன் இயற்கை நிலையங்களைத் தீண்டாத் திருமேனி என்று இகழ்ந்து கூறுவதாகும். கடவுளிடத் தன்புடையார்க்கு தீண்டாமையுமில்லை, வேற்றுமை யுமில்லை என்று தீண்டாமையைக் கண்டித்தும் சைவ சமய சாரம் என்னும் நூலில் சைவம் அன்பை அறிவுறுத்தலால் அச்சமயத்தை அவலம்பித்து ஒழுகுவோர் சாதி பேதம் முதலியன பாராட்டாது எவ்வுயிரிடத்தும் அன்பு செலுத்த வேண்டும் எல்லாவுயிர்களிடத்தும் அன்பு செலுத்துபவரே சைவ ரெனப்படுவர்: ....................irtrka¤â‰F அடிப்படைஅன்பேயாகும். அவ் வன்பைத் தாங்காது சிவசின்னங்களை (விபூதி, உருத்திராக்கங்களை)த் தாங்கி, உயிர்களுக்குத் தீங்கு நினைப்பவர்கள் சைவர்களாகமாட் டார்கள், எவ்வுயிரும் பராபரன் சந்நிதியாகும் இலங்கும் உயிர் உடலனைத்தும் ஈசன்கோயில் என்ற கொள்கையில் தலைசிறந்து விளங்கும் மக்கள் எத்தேசத்தவர்களாயினும் எக்குலத்தவர்களா யினும் எவ்வேடத்தவர்களாயினும் - அவரனைவரும் - சைவரேயாவர். சுருங்கக்கூறின் அன்பர் அனைவரும் சிவனடியாரேயாவர் என்று மிக அழகாக கூறியுள்ளார். இந்நண்பரின் கூற்று பேச்சளவில் மிக நன்றாக தானிருக்கிறது. இதை எக்கட்சியாரும் ஒத்துக்கொள்ளத் தான் செய்வர். ஆனால் இப்பொழுது சைவர்கள் என்போர் யார்? அவர்கள் மனப்பான்மையென்ன? சைவசித்தாந்தத்தின் கட்டளை களை (கொள்கைகளை) ஒப்புக் கொண்டிருக்கிறார்களா? ஏன் - பேச்சளவிலாவது ஒப்புக்கொள்கின்றார்களா? என்று நாம் நன்கறிய வேண்டும். சைவர்கள் என்றால் வேளாளர்தான் என்று சொல்லப்படு கிறது. அவ்வேளாளன் என்போன் சிவதீக்கை பெறாவிட்டாலும் பஞ்சமாபாதங்களைப் பகிரங்கமாய் புரிந்துவரினும் எத்தகைய ஆசாரமின்றி, ஒழுக்கமில்லாதவறாய் சைவசித்தாந்த உண்மைகளை ஒரு சிறிதும் உணராதவனாயிருப்பினும் அவன் சைவனாகக் கருதப்படுகின்றான். பிறசாதியார் சிவதீக்கை பெற்று சைவசமய உண்மைகளைக் கசடறக்கற்று அதன்படி யொழுகும் உண்மைச் சைவனாய் விளங்கினாலும் அவனைச் சைவனென ஒப்புக்கொள்ள மறுக்கப்படுகின்றது. இதைக் கண்டித்து வேளாளச் சைவர்கள் நிரம்பிய இடங்களில் எவராவது பேச ஆரம்பித்தாலோ அவர் பாடு எத்துணை சங்கடமாகும் என்பதை ஈண்டு விவரித்தெழுதல் முடியாது. அநுபவித்துப்பார்த்தோர்கள்தான் நன்கறிவர். ஆனால் ஒரு பிரசங்கி பார்ப்பார்கள் வேளாளர்களாகிய நம்மவரைத் தாழ்த்திவிட்டார்கள். பார்ப்பார்கள் சொல்வதாகிய ஜாதிப் பிரிவுகள் முழுவதும் பொய், பார்ப்பான் நம்மைவிட உயர்ந்தவனா? ஏன் நம் வீட்டில் அவன் சோறு சாப்பிடக்கூடாது? வேளாளர் களாகிய நாம் ஆதியிலிருந்தே பெரும் பிரபுக்கள். பார்ப்பார்கள் தங்கள் பெயராகிய ஐயர் என்ற வார்த்தையினாலே பிச்சைக் காரர்கள் என்று காட்டிநிற்கவில்லையா? பார்ப்பார்கள் கோயிலில் போகும் எல்லைவரை நாமும் போக வேண்டும். பார்ப்பார் நம் நாட்டு பறையரை விடத்தாழ்ந்தவர்கள்தான் பார்ப்பானுக்கு மூத்தான் பறையன் கேட்பாரில்லாமல் கீழ் சாதியானான். எனவே பார்ப்பான் வேளாளரைவிடத் தாழ்ந்த சாதியே, அவனிடம் என்ன ஒழுக்கமுண்டு? என்ன ஆசாரமுண்டு? கோவிலில் கூட பார்ப்பானை வைத்துப் பூசை பண்ணக்கூடாது என்று நம் தமிழ் மறையாகிய திருமந்திரத்தில் திருமூலநாயனார், பேர்கொண்ட பார்ப்பான் பிரான் தன்னையர்ச்சிக்கில் பேர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லாவியாதியாம் பார் நாட்டிற்கு பஞ்சமுமரமென்றே சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே எனக் கூறியுள்ளார். ஔவையார்கூட ஆத்திச்சூடியில் பாப்பொடு பழகேல் என்று கூறியுள்ளார். பின்னால் பார்ப்பார்கள் பாம்பொடு பழகேல் என்று திருத்திவிட்டார்கள். ஒரு எழுத்தும், ஒரு வார்த்தையும் வீணாக உபயோகியாத ஔவையார் அரவம் ஆட்டேல் என்று கூறிவிட்டு மற்றோரிடத்தில் பாம்பொடு பழகேல் எனக் கூறமாட் டார் என்றும் இன்னும் பார்ப்பனர் செய்யும் கொடுமைகளையும் எடுத்துக் கூறினால் சைவர்கள் கரகோஷம் புரிகின்றார்கள். கேளுங்கள். கேளுங்கள்! கேளுங்கள்!! என்று கூறுகின்றனர். பேசகிற வர்களைப் பெரிய தலைவர்களாக்கி விடுகின்றனர். ஆனால் சைவத்தில் சாதிபேதம் கிடையாது வேண்டுமானால் தொழிலாலும் ஒழுக்கத்தாலும் ஜாதி யுண்டென்றால் ஒத்துக்கொள்ளலாம். பிறப்பால் ஜாதியுயர்வுண்டு என்று அறிவுடையார் ஒப்புக் கொள்ளார், பிறப்பொக்கு எல்லாவுயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையால் என்றும், ஒழுக்கம் உடமை குடிமை இழுக்கம் இழித்த பிறப்பாய் விடும் என்றும் மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர், கீழிருந்தும் கீழல்லார் கீழல்லர் என்றும் தமிழ் மறையாகிய திருக்குறளில் மிகத் தெளிவாய் விளக்கப்பட்டிருக்கிறது. இதன் பொருளை நீங்கள் அறியாவிடினும் சீரிய ஆரியப்புலவராகிய கபிலரென்னும் பேரறிஞர், குலமும் ஒன்றே குடியும் ஒன்றே இறப்பும் ஒன்றே பிறப்பும் ஒன்றே வழிபடு தெய்வமும் ஒன்றே யாதலால் முன்னோருறைந்த மொழிதவறாமல் என்னாளா யினும் இரப்பவர்க்கிட்டு புலையும் கொலையும் களவும் தவிர்ந்து நிலைபெற அறத்தின் நிற்பதையறிந்து ஆணும் பெண்ணும் அல்லதை யுணர்ந்து பேணியுரைப்பது பிழையெனப் படாது சிறப்பும் சீலமுமல்லது பிறப்பு நலந்தருமோ பேதையீரே! என்று கூறியுள்ளதையாவது நன்கறிந்து உண்மையை அறிந்துய்வீர் களாக. அன்றேல் பாடசாலைச் சிறார்கள் பல நாடொறும் ஓதி வரும் நீதிநெறிகள் அமைந்த பாட்டுக்களில் சாதியிரண்டொழிய வேறில்லை, சாற்றுங்கால் நீதிவழுவா நெறிமுறையின் - மேதினியில் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் பட்டாங்கிலுள்ளபடி நல்ல குல மென்றும் தீயகுல மென்றும் சொல்லளவிற் பொருளில்லை - தொல் சிறப்பின் ஒன்பொருள் ஒன்றே தவம் கல்வி ஆழ்வினை யென்றிவற்றால் ஆகும் குலம் கல்லா ஒருவன் குல நலம் பேசுதல் நெல்லினுட்பிறந்த பதராகும்மே என்று கூறப்பட்டிருப்பதையும் ஆராய்ந்து பார்த்து தெளிவீர்களாக. சாதியானது ஆண்டவனால் அமைக்கப்படவில்லை. மனிதர் களாலே அமைக்கப்பட்டதாய்த்தான் பல அறிஞர்களும் சாத்திரங் களும் கூறுகின்றன. ஜாதிபேதம் நமது நாட்டில் மட்டும்தானிருக் கின்றன. அச்சாதிபேதமே மக்களிடையே பகையையும் பொறாமை யையும் வளர்த்து நாட்டை பாழாக்கியதோடு அடிமை வாழ்க்கை யையும் நிலைபெறும்படி செய்துவிட்டது. மேனாட்டி லெல்லாம் தொழிற் பற்றித்தான் ஜாதி பிரிக்கப்பட்டுள்ளது. அதுவே நியாயமான காரியமென அறிவுடையோர் ஒப்புக்கொள்வர். அஃதின்றி நான் பரம்பரைச் சைவன் நான் எத்தகைய ஒழுக்கங் கெட்டவனாயும் அகங்காரமும் பொய்யும் பொறாமையையும் பூண்டு வஞ்சகமும் விபசாரமும் மது வருந்துதலும் உடையோ னாயினும் நான் சைவனே. எம்மைச் சைவனல்ல வென்று கூற யாரே உரிமையுடையார் என்று போலிச் சைவன் கூறுவதை அறிவுடையா ரெவராவது ஒப்புவரோ? சைவ சமயம் அன்பை அறிவுறுத்தலால் அதற்கு அன்பு நெறி என்று பெயர் கூறலாம். சைவம் சிவ சம்பந்தமுடையது சிவம், அன்பு, அன்பே சிவம். எனவே சிவநெறிபற்றி யொழுகுவோர் அன்புமயமாய் விளங்கக் கடமைப்பட்டுள்ளார். சைவப் பெரியார்களிற் சிறந்த திருமூல நாயனார், அன்புஞ் சிவனுமிரண் டென்ப ரறிவிலார் அன்பே சிவமாவ தாரு மறிகிலார் அன்பே சிவமாவதாருமாறிந்தபின் அன்பே சிவாமாயமர்ந்திருப்பாரே என்றும், சமரச நோக்கமுடைய சைவப் பெரியார் எனப் பலரும் போற்றும் அறிஞராம் இராமலிங்க சுவாமியும் அன்பு - என்பதே சிவம் உணர்ந்திடுக என எனக்கு அறிவித்த சுத்த அறிவே எனக் கூறியதும் சைவசமயம் அன்பின் சாரம் எனக் கூறும் கூற்றை வலியுறுத்தும். ஆனால் சைவசமய உலகில் ஏட்டளவில் இக்கொள்கை இருக்கின்றதே யொழிய செய்கையில் இக்கொள்கைகள் பொதுவாக சைவர்களிடத்தில் உண்டா? என்று வினாவினால் இல்லையென்ற விடையே வரும். உண்மையில் மார்த்தர்களை விட சைவர்களிடத் தில் தான் அதிகச் சாதிக் கொடுமைகள் நிரம்பிக் கிடக்கின்றது. சைவர்கள் உள்ளத்தில் அன்பு என்னும் செந்நெறி சிறந்துவிளங்குமே யானால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எனப்பாடசாலையோ, கிணறு களோ, அன்றி ஆலயப்பிரவேசம் முதலியவற்றிற்கு உதவிகளோ புரிந்து அவர்களை மேனிலைக்குக் கொண்டு வர சைவ சமய உண்மை களைப் போதித்து சைவத்தில் சேர்த்துக்கொண்டு அவர்கள் பேரில், தங்களுடன் வாழும் பிற சைவச் சோதரர்களை விட அதிகமாய் அன்பு செலுத்துதலன்றோ நியாயமாகும். அஃதன்றி, புலையரே யெனினும் ஈசன் பொலன்கழ லடியிற்புந்தி நிலையரே அவர்களுக்கு பூசை நிகழ்த்துதல் நெறியேயென்றும் தலைவரே யெனினும் ஈசன் றாமரைத்தாளின் நேசம் இவரெனில் இயற்றும் பூசை பலந் தருவாரே யாரே? என்று சிவதருமோத்திரம் கூறுகிறது என்றும் முண்ட கோபநிடதத் தில் சண்டான நமித்தான் ஒருவன் சிவன் என்ற வார்த்தையைக் கூறினாலும் அவனோடு அருகிருந்து உண்ணு என்று கூறியதன் கருத்தைக்கொண்டு ஒரு சைவப் பெரியார், சிவனெனு மொழியைக் கொடிய சண்டாள செப்பிடினவனுடனுறைக அவனுடன் கலந்துபேசுக அவனோடருகிருந் துண்ணுகவென்னும் உண்மையில் கருதிப் பொருள்தனை உயர் பட்டோடுன் பயில்கொடியோர் இவனெனக் கழித்தால் ஐயனே கதிவேறெனக்கிலை கலைசையாண்டகையே என்றும் எங்கள் சமயத்தில் கூறியிருக்கிறது என்று பாக்களை அழகாகப்பாடுவதால்யாது பயன். செயலில் காட்டினாலன்றோ சைவர்களை உலகம் போற்றும். செய்கையில் இதற்கு மாறாக நடந்து கொண்டு புத்தகங்களில் பாக்களை மிக அழகாய் எழுதுவதனால் என்ன பிரயோஜனம். எடுத்துக்காட்டாக இத்திருநெல்வேலியில் தான் சைவர்கள் மிகுதி. இங்கு தான் ஜாதிக்கொடுமையும் அதிகம். சைவர்கள் பிறஜாதியார்க்கு இழைத்த பெருந்தீங்கின் பயனாகத்தான் இந்தியாவில் ஏனைய இடங்களைப் பார்க்கிலும் இங்கு நாளடை வில் கிறிதவர் தொகைப் பெருகிவருகின்றது. அரசாங்க ரோட்டி லும் நடக்கக்கூடாது, கல்விகற்கக் கூடாது, பெண்கள் அரைக்கு மேல் சேலையைஅணிதல் கூடாது என்றும் எத்தகைய உயர்ந்த ஒழுக்கமுடையவராயினும் தாழ்த்தப்பட்ட சாதியார் என்போர் களை வாடா, போடா என்றும் கூறியதுடன் ஆலயத்துக்குள் வரவும் மறுத்துவிட்டனர். எனவே தங்களுக்கு வேறுபுகலிடம் அகப்படாது பல ஜாதியார் கிறிதுவமதத்திற்குப்போக நேரிட்டது. ஆனால் துரதிஷ்டவசமாய் அங்கும் ஜாதித்தொல்லை. அங்கும் அவர்களை விட்டபாடில்லை என்றாலும் தங்களின் பழய நிலைமாறி கல்வி கற்று தங்களை முன் கொடுமைப்படுத்திய சாதியார்களின் தெருக்களின் வழியாய்ப் போகவும் அவர்களுடன் சமத்வமாய் உட்காரவும் ஏன் உத்தியோகம் பெறச்செய்து தாழ்த்தப்பெற்ற மக்களென்போரைக் கண்டு இச்சைவர்களென்போர் தம் மேல் வேஷ்டியை அறையிற் கட்டி மிகு பயபக்தியுடன் வணங்கி எஜமான் என்று கைகட்டி நிற்கவும் செய்துவிட்டது என்பதுமெய்யாகும். தாழ்த்தப்பட்ட மக்களை இத்தகைய உயர் நிலைக்காவது உயர்த்திய கிறிது மதத்திற்கு நாம் என்றென்றும் நன்றி பாராட்டக் கடமைப்பட் டுள்ளோம். மக்களுக்கு வேண்டியது உயிரினும் பெரிதாகிய சுய மரியாதை. சுயமரியாதைக்கு பங்கமியற்றும் மதம் எதுவானாலும் அச்சமயத்தை அன்றே விட்டொழித்து பிற மதம் புகுதலே சாலச் சிறப்புடையது. சமயம் மக்களுக்காகவே உண்டாக்கப்பட்டிருக் கிறது. சமயத்திற்காக மக்கள் உண்டாக்கப்படவில்லை என்பதை ஒவ்வொருவரும் உள்ளத்தில் மறவாதுகொள்ளல் வேண்டும். நம் நாட்டிலே எண்ணத் தொலையாத முறை சைவம் சாதி பேதத்தை ஒழிக்க வந்த ஒரு சமயம் என்று சைவத்தலைவர்கள் பலரும் கட்டுப்பாடு போட்டார்கள், போடுகிறார்கள். ஆனால் சாதியை ஒழிக்க அவர்கள் இதுவரையிலும் என்ன வேலைகள் செய்திருக் கிறார்கள் என்பது எந்தப் பத்திரிகையிலாவது காணக்கிடக்கின்றதா? இல்லவே இல்லை. அல்லது தாங்களாவது பகிரங்கமாய் நான் ஜாதிபேதத்தை விட்டுவிட்டேன் என்று கூறி ஏனைய சகோதரர் களையும் அவ்வாறு செய்யத் தூண்டுகிறார்களா? தங்கள் பெயருக்குப் பின்னால் போடும் முதலியார், பிள்ளை, நாட்டார், செட்டியார் முதலிய ஜாதியைக் காட்டும் பெயர்களையாவது ஒழித்துவிட்டார்களா? தாழ்த்தப் பட்ட ஜாதியார்களென்போரால் ஒழுக்கமும் அறிவும் பெற்றும் புலால் உணவு மறுத்து உண்மைச் சைவர்களாய் விளங்குபவர் வீட்டில் எந்த சைவத் தலைவராவது உணவு உட்கொள்ளவும் கலப்பு மணமும் செய்யத்தயாராயிருக் கின்றார்களா? அன்றேல் அவ்வாறே செய்கின்ற பேரறிஞர்களுக்கு ஆதரவு செய்ய யாராவது முன் வருகின்றனரா? ஆதரவு புரியா விடினும் அந்தச் செயலை எதிர்க்கும் சிவநேயர்களைக் கண்டிக்கவாவது முயல்கின்றனரா? ஒன்றும் புரியாது பசுத்தோல் போர்த்த புலியென எப்பத்திரிகையின் முகப்பிலாவது சாதி ஒழியச் சமய பேதம் ஒழிய, நீதிதழைய நினைப்பேன் பரம்பொருளே என்றும் எல்லாரும் ஒன்றென்னும் எண்ணம் பிறந்தெவரும், நல்லாராய் இன்பத்தை நாடுவதிற் துன்பமுண்டோ? என்று கொட்டை யெழுத்தில் போட்டிருப்பது கண்டால், இக் காலத்தில் சாதி பேதம் வேண்டும் என்று கூறுகின்றவன் எத்தகைய மகாத்மாவாயிருந் தாலும் சரி, அரசனாயிருந்தாலும் சரி, பேச்சிலும் எழுத்திலும் வன்மை பெற்ற புலவனேயானாலும் சரி, வேறெவ்வகை யாக வாய்க்கப் பெற்றவனேயானாலும் சரி உலகினர் ஒரு பொழுதும் மதியார் என்பதையறிந்து தம் வயிற்றுப் பிழைப்பிற்காக சாதி பேதம் ஒழிக்கத் தான் விரும்புவது போல உலகிற்குக் காட்டி சில சந்தாக்களை அதிகமாச் சேர்த்துக்கொள்ளவே இத்தகைய சூழ்ச்சியில் இறங்கி யிருக்கிறார்கள் என்று மக்கள் கருதுவது இயற்கைதானே. சைவசமய மறைகளில் ஒன்றாய் திருமந்திரம் மதிக்கப்படுகின்றது. அவ்வரிய நூல் ஆலயங்களை படமாடும் கோயிலாகவும் உயிர்ப் பிராணி களை நடமாடுங் கோயில்களாகவும் கூறியதுடன் இவ்விரண்டினுள் நட மாடும் கோயில் வழிபாடே சிறப்புடையது என்று சைவ சமயத்தின் மேலான கருத்தை உலகிற்கு எடுத்துக்காட்டத்தக்க சான்றாய் அமைந்திருக்கின்றது. அப்பாடல் பின் வருமாறு:- படமாடக் கோயில் பகவற் கொன்றீயின் நடமாடக் கோயில் நம்பர்க்கா காது நடமாடக் கோயில் நம்பர்க் கொன்றீயின் படமாடக் கோயில் பகவற் கங்காமே (திருமந்திரம்) ஆனால் அச்செய்யுளைப் பல முறை பல பண்டிதர்கள் கூறுவதையும் பல சங்கங்களில் தலைவர்களென்போர் தலையை அசைத்து அசைத்துப் பக்தியுடன் பாடுவதையும் யான் கேட்டுளேன். ஆனால் செய்யுளின் பொருளை அறிந்து அதன் படி ஒழுகுகிறவர்களை யாவது, இச்செய்யுளின் மேலான கருத்தை அறிந்து அதன்படி தங்கள் சோதரர்களுக்கு எடுத்துக் கூறித் தாங்கள் தலைமை வகிக்கும் சங்கங்களில் கோயிலுக்கு என்று இனி ஒரு பைசாவேனும் செலவழியாது மக்கள் முன்னேற்றத்திற்கே தங்களால் இயன்றவற்றை யெல்லாம் செலவு செய்யவேண்டும். கோடிக்கணக்கான மக்கள் தீண்டத் தகாதார்களென்றும் இழிந்த பெயருடன் அறிவு வளர்ச்சி யின்றி, ஆசாரமின்றி, நல்ல வீடின்றி அல்லற்படும் பொழுது கல்லுக் கடவுளுக்குப் பாலும் நெய்யுந்தேனும் ஊற்றி யாகஞ்செய்வித்து பனாரின் பட்டாடை புனைந்து லக்ஷக்கணக்காய், கோடிக்கணக்காய் வைர முதலிய விலையுயர்ந்த இரத்தினங்கள் பதிக்கும் பைத்தியக் காரச் செயல்களை நீக்கும்படி அந்த சைவத்தலைவராவது பிரசங்கிக் கின்றாரா? எந்த சங்கமாவது இதைப்பற்றித் தீர்மானஞ் செய்திருக் கிறதா? நான் அறிந்த அளவில் சுயமரியாதைச் சங்கத்தைத் தவிர வேறொரு சங்கமும் இதில் கவலை யெடுத்துக்கொண்டதாகக் காணோம். எவ்வுயிரும் நீங்காதுறையும் இறை சிவனென்று எவ்வுயிர்க்கும் அன்பாயிறு என்று சைவசமய நெறியிலும், சைவ சமயப் பெரியாராகிய தாயுமான சுவாமிகள் தம் நூலில் எவ்வுயிறும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்று மறியேன் பராபரமே என்ற அருமையான வாக்கியங்களையும் சைவத்தலைவர்கள் என்போர் மதிக்கின்றார்களா? பல சைவர்களின் தலைவர்களென் போர் வேளாளர் உள்ளத்தில் ஈசனுளன் அவர்கள் உடலைத்தான் நடமாடும் கோயில் என்று கூறப்பெற்றிருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். சைவத்தில் சாதி பேதம் கண்டிக்கப்படுகின்றது என்பது மெய் படுமாயின் சைவசித்தாந்தப் பெரியோர்களின் வாக்கில் அச்சமயத் தலைவர்களுக்கு நம்பிக்கை இருக்குமாயின் சைவமென்னும் அருள் நெறி உலகமெல்லாம் பரவவேண்டும் என்று சைவப்பிரமுகர்கள் விரும்புவது உண்மையாயின் திரு. கா. சுப்பிரமணியம் பிள்ளையவர் களைப் போன்று...... சைவத்திலும் வைணவத்திலும் சமயப் பிரவேசக் கிரியை பார்ப்பான் முதல் பறையன்வரை எல்லார்க்கும் உரியதே. சமயத்திற்சேர்ந்து சமய ஆசாரம் கைக்கொண்ட ஒருவன் எம்மரபைச் சார்ந்திருப்பினும் அவன் ஆலய வழிபாட்டிற்குரியவன். ஆலயத்துள் பஞ்சமர் செல்லக்கூடாதென்ற கொள்கை வருணாச்சிரமக் கொள்கை பரவியதால் எழுந்ததாகும். இன்னொரு விசித்திரம் என்னவென்றால் சில மரபினர் ஓர் இடத்திலுள்ள ஆலயத்தில் பிரவே சிக்க உரிமை உடைமையும் மற்ற இடங்களிலுள்ள ஆலயத்தில் பிரவேசிக்க உரிமையின்மையுமேயாகும். தற்காலத்திலே ஒரு வகுப்பார் கோயி லுள் செல்லவேண்டுமென்று முயல்வார்களாயின் அவர்கள் செல்லக் கூடாதென்பதற்குத் தெளிவான காரணமிருந்தால் ஒழிய வருணங் காரணமாக அவர்களைத் தடைப்படுத்துவது தக்கதன்றாம் என்று புத்தகத்தில் எழுதிவிட்டு காலையிலெழுந்து நானஞ்செய்து ஆலயத்திற் சென்று கல்லுருவத்தின் முன்னால் தோப்புக்கர்ணம் நாடோறும் போட்டுக்கொண்டுவராமல் தீண்டத்தகாதார் என்போர் ஆலயத்திற்குள்வர நாடுவாராயின் உடனே அவர்களைக் கூட்டிக் கொண்டுபோக சைவசித்தாந்தத் தலைவர்களென்போர் இன்றே முயற்சிக்கவேண்டும். பொது ஜனங்களால் மறுக்கப் படுமாயினும் உடனே சத்யாக்ரகம் செய்ய முன்வரவேண்டும். அதற்கும் இப்பொழுது சந்தர்ப்பம் வாய்க்காவிடின் தங்களுடைய சகோதரர்களாகிய பிற சாதியாரை அனுமதிக்கப்படாத ஆலயங்களுக்குத் தாங்கள் போகா திருப்பதுடனே ஏனைய சைவர்களையும் அந்த ஆலயத்தைப் பகிஷ் கரிக்க தூண்டும் தங்களுக்கு உண்மையில் கடவுள் நம்பிக்கையிருக் குமேயானால் அக்கல்லுக்கடவுள் முன் சென்று ஏ கடவுளே மக்கள் யாவரும் உனது பிள்ளைகள். எனவே எனது சகோதரர்களாகிய ஒரு சாதியார் ஆலயத்தினுள் வந்து உன்னைத் தரிசிக்கும் விருப்பத்தை நீ நிறைவேற்றும் வரை உன்னை யான் இந்த ஆலயத்திற்குள் வந்து வணங்குவேன். இது சத்தியம், சத்தியம் என்று கூறிவிட்டு வெளியே வந்து தீண்டத்தகாதார்களை அவ்வாலயத்தில் புக அனுமதிக்கபடும் வரை சைவசமயத்தின் தலைவர்களென்போராவது போகாதிருந்தால் தான் உண்மையில் சைவந்தழைக்கவும் கஷ்டப்படும் கோடிக்கணக் கான மக்கள் பேரில் அன்புடையோர்களாகவும் தீண்டத்தகாத ஆறு கோடிமக்களின் சுயமரியாதையைக் காக்கவும் விருப்பங் கொண் டுழைப்பவர்களாகவும் அன்பானது அவர்கள் உள்ளத்தில் பெருகி அன்பாகிய இறைவனையடைவர். அந்த அன்புக் கடவுளை அவர்கள் கண்டுவிட்டதோடு பிறரையும் அவ்வழி செல்லத்தூண்டும் சைவத்தின் உண்மையான கொள்கைகளை நன்கு அறிந்து அதன்படி யொழுகியும் உருத்ராக்கம், திருநீறு பூண்ட தீண்டத்தகாத மக்க ளென்ற சோதரர்கள் ஆலயத்தின் பக்கம் செல்லவும் கூடாதென்று கொடுஞ்சட்டம் செய்து விட்டு பிற சமயத்தார்களாகிய கிறித வர்கள், முலிம்கள் என்போர் பூட்காலுடன் உள்ளே போகவும் அனுமதிக்கப்படுமாயின் சைவர்களின் அறியாமையை பேடித் தன்மையை மார்க்கம் அபிமானம் இன்மையைக் கண்டு உலகம் நகையாதா? என்பதை எண்ணிப்பாருங்கள். இப்பொழுது உலகம் வேண்டற்பாலது பேச்சன்று, செய்கையைத் தான் உண்மையில் சைவர்களென்போர் நாங்கள் புலாலுணவு நீத்துவிட்டோம் என்று கூறிக்கொள்வதில் பயனில்லை. மிருகங்களைவிட மேலான பிறவி யாகிய மனிதனை மிருகங்களைவிட கேவலமாய் மதித்து பன்றி யும் நாயும் ஈயும் எறும்பும் செல்லும் ஆலயங்களிலும் மக்களில் ஒரு வகுப்பார் செல்லக்கூடாதென்று தடுத்தல் ஜீவகாருண்யமற்ற கொடுஞ்செயலாகும். அதை நீக்க சைவத் தலைவர்கள் என்போர் பிரத்தியட்சத்தில் காட்டினால்தான் சைவத்தில் சாதிபேதம் கிடையா தென்றும் ஆலயத்தில் எல்லா சகோதரரும் செல்லலாம் என்றும் சிவ தீக்கை என்றால் துட்டுக்கு எத்தனை பலம் என்று கேட்கும் சைவர்கள் இல்லை. வேளாளர்கள் உண்மையை அறிந்து உய்வதோடு சைவ சமயத் தலைவர்களும் சைவ சமயத்திற்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்தவராவார்கள். சைவ சித்தாந்த தலைவர்களே! பண்டிதர்களே!! நம் நாடு எழுதியும் பேசியும் அலுத்துப் போய் விட்டது. இனி அவைகளினால் பயனில்லை பேச்சளவில் எழுத் தளவில் உலகத்தை ஏமாற்றி விடலாம் என்பதற்கு இது காலமல்ல. உண்மையை சமயப்பற்றுள்ள வட நாட்டு இந்துக்கள் என்போரின் மதபக்தியை நினைத்துப்பாருங்கள். தீண்டத்தகாத மக்கள் என்போர் பலர் கையெழுத்து இட்டு ஒரு தேதி குறிப்பிட்டு அதற்குள் தங் களுக்கு ஆலயப்பிரவேச உரிமை அளிக்காவிடில் நாங்கள் பிறசமயம் புகுந்துவிடுவோம் என்று நோட்டீ கொடுத்துவிடுகின்றனர். பலயிடங்களில் அந்நாட்டுத் தலைவர்களின் அரும்முயற்சியால் ஆலயங்கள் யாவருக்கும் பொதுவாக உபயோகித்துக் கொள்ளும் படி செய்கின்றனர். இது எதற்கு என்பதை ஆராய்ந்துபாருங்கள். தம் சமயம் சீக்கிரத்தில் இறந்து போய்விடும். பிற சமயத்தார் பெருகிவிடுவர். அரசாங்க அதிகாரமுழுவதும் பிற மதத்தார் கை களுக்குப் போய்விடுமென்ற அச்சத்தாலும் மதபக்தியினாலு மல்லவா? நீங்களும் அவன் கிறிதவனாய் போனால் நமக்கென்ன என்ற சோம்பேறித்தனத்தை விட்டுவிட்டு வட நாட்டு இந்துக்கள் என்போரின் கருத்தை அனுசரித்தாவது தீண்டாமையை ஒழிக்க முன்வர மாட்டீர்களா? இனி அறிஞர்கள் உங்களின் பூஜையையும் திருநீற்றையும் உருத்திராக்கத்தையும் கண்டு ஏமாறார்கள். உண்மை யான தொண்டர்களைத்தான் இப்பொழுது உலகம் நாடி நிற்கின் றது. வேஷம் பூண்ட சிலபோலிச் சைவத் தொண்டர்களை நாங்கள் மாத்திரமன்று பட்டினத்தடிகள் முதலிய பெரியோர்களே பின்வரு மாறு கண்டித்திருக்கின்றார்கள். நேமங்கள் நிட்டைகள் வேதங்கள் ஆகம நீதிநெறி ஓமங்கள் தர்ப்பணம் சந்தி செபமந்திர யோக நிலை நாமங்கள் சந்தனம் வெண்ணீறு பூசி நலமுடனே சாமந்தோறும் இவர் செய்யும் பூசனை சர்ப்பனையே மேற்கூறிய பாட்டானது தற்காலச் சைவர்களுக்கு முற்றமுற்ற பொருந்தும். முடிவாக சைவசித்தாந்தத் தலைவர்கள் என்போருக்கு யான் கூறுவது என்ன வெனின் தாழ்த்தப்பட்ட ஆறு கோடி மக்கள் மேல் ஜீவகாருண்யம் பூண்டு அவர்களின் மனித சுதந்திரங்களை நல்குவதோடு அவர்கள் உன்னத நிலையை அடைவதற்குரிய எல்லாப் பணியையும் புரிய முன்வரவேண்டும். உங்கள் சைவநெறி சாதி பேதத்தை அழிக்கவந்த மெய்நெறி என்பது உண்மையாயின் இன்றே உங்களின் ஜாதீயபெயர்களை ஒழித்துவிடுங்கள் கலப்பு மணத்தை ஆதரித்து நீங்களும் உங்கள் உறவினரும் அனுஷ்டித்துக்காட்டுங்கள். தாழ்த்தப்பட்ட ஜாதியார்கள் ஆலயப்பிரவேசம் அனுமதிக்கப்படும் வரை அவ்வாலயங்களைப் பகிஷ்கரியுங்கள். அன்றேல் சத்தியாக்ரகம் செய்யமுன் வாருங்கள். ஆலயங்களுக்கு மக்கள் பொருளை ஏராள மாய்ச் செலவுசெய்யும் தீய செயல்களை ஒழித்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்விச்சாலை, கிணறு முதலிய எல்லா வசதிகளும் செய்து கொடுப்பதுடன் அவர்களுக்குச் சுயமரியாதை உணர்ச்சியை உண்டு பண்ணுங்கள். தாழ்த்தப்பட்ட மக்கள் உயர்த்தப்பட செய்யும் நற்பணியே தற்காலத்திற்கேற்ற சிவத்தொண்டாகும். சிறுதொகை யினராகிய நீங்கள் உங்களுடன் வாழும் கோடிக்கணக்கான மக்களை பார்ப்பனர்களின் சுயநலத்தால் உண்டாக்கப்பட்ட சமயங்களின் மயக்கால் மருண்டு, தீண்டாதார் என்று தாழ்த்தி கொடுமைப்படுத்தி யிருப்பதினாலே முப்பத்து மூன்றுகோடி மக்களையும் அடிமை யாக்கி சிலவெள்ளைக்காரர்கள் ஆண்டு வருவதுடன் தென் னாப்பிரிக்காவில் பார்ப்பானாயினும் சரி, வேளாளனாயினும் சரி ஐரோப்பியரால் தீண்டத்தகாதவனாகத்தான் கருதப்படுகிறான் என்பதையும் உணர்ந்துபாருங்கள். இந்திய நாட்டிலுள்ள சாதிப் பூசலினாலே நம் நாட்டில் வேற்றுமை பெருகி அடிமை வாழ்க்கை நிலைபெற்று வருகின்றது என்றும் தேசவிடுதலைபெற சாதிப்பேய் ஒழிதல் வேண்டும் என்பதையும் நினைந்து பணியாற்ற வாருங்கள் எவரிடத்திலிருந்து மன்பதைகளுக்கு அதிகமான நன்மை யுண்டா கிறதோ அவரே மனிதரில் மகாசிலாக்கியமுள்ள மனிதராயிருக்கிறார் என்று மக்கத்து சீர்திருத்தகாரமகான் மொழிந்த மெய்யுரைகளை எண்ணி ஒழுகுங்கள். உலகம் இலக்கணம் பயின்ற பண்டிதனை நாட வில்லை. உருத்ராக்கம் பூண்டு திருநீறணிந்து நெற்றியில் சந்தனத் திலகமிட்டு போலிச்சைவனை நாடவில்லை. காலையிலெழுந்து ஆற்றில்போய் நானஞ் செய்து ஏழு கூடை பூக்களைக் கொண்டு 6 மணி முதல் 9 மணி வரை தவறாது பூஜை புரியும் பக்தனை நாட வில்லை. சாதிபேதத்தை ஒழிக்க முன்வரும் சற்புருசர்களையே தாழ்த் தப்பட்ட மக்களுக்காக உழைக்கும் தக்கோனையே நாடுகின்றது. சைவ தலைவர்களே! உங்கள் சமயம் சாதிபேதத்தைக் கண்டிக்கிறது என்பது மெய்யாயின் அதை தாபிக்க நீங்கள் முன்வருவீர்களா? அன்றேல் உங்களின் அரியசைவமும் அதி சீக்கிரத்தில் ஒழிந்துவிடும் என்பதுமெய். சாதியும் அதைபேணும் சமயமும் ஒழிக! குறிப்பு:- சைவத்தில் சாதிபேதமில்லையென்ற பிரசங்கம் புரிந்ததற்கு பிரசங்கம் முடியும் வரை சும்மாவிருந்துவிட்டு வீட்டில்போய்ப் பலவாறு பேசித்திரிந்த சாத்தான் குளத்திலுள்ள சில போலிச் சைவர்கள் இதையும் ஆராய்ந்து பார்ப்பார்களாக. - (குடியரசு 9.11.1930, 23.11.1930, 21.12.1930) சைவர்களின் மனப்பான்மை ஒரு மதம் எத்தகைய தன்மையுடையது என்றறிய விரும்பு கின்றவர்கள் பெரும்பாலும் அச்சமய சாத்திரங்களையே பெரிதும் ஆராயப்புகுவர். தற்காலத்திலே ஒருவன் அவ்வாறு ஆராய்ச்சி செய்து சைவசமய உண்மைகளை அறிதல் மிகுந்த கஷ்டமான காரியம். ஏனெனில், சைவசித்தாந்தத் தலைவர்களுக்குள்ளே சைவர் களுக்கு தமிழிலே வேதமிருந்தது, அது சிவபெருமானால் நான்கு முனிவர்களுக்கு கல்லானின் கீழ் வைத்து உபதேசிக்கப்பட்டது. பின்னர் அவ்வேதம் கடல் கொள்ளப்பட்டுப்போயிற்று. அவ்வேதத் தின் கருத்தைக் கொண்டு தேவாரம், திருவாசகம், திருக்குறள், திரு மந்திரம் முதலிய நூற்கள் தோற்றுவிக்கப்பட்டது என்று சொல்லு கின்றனர். இவர்கள் சொல்வது முற்றிலும் தவறு. வடமொழி வேதங் களான ரிக்கு, யஜுர், சாமம், அதற்வணம் முதலிய வேதங்களே சைவர் களின் திருமறையென்றும், அபிப்பிராயபேதங்கொண்டு ஒருவருக் கொருவர் வைதுகொண்டிருக்கின்றனர். சாதாரண மக்களிலே நூற்றுக்கு தொன்னூற்றொன்பதின்மர் தங்களைச் சைவர்களென்று கூறிக்கொள்ள அறியாதவராய்த் தங்களை அஞ்ஞானிகளென்றும் இந்துக்களென்றும் கூறிக்கொள்கின்றனர். அவர்கள் சிவ தீட்கை என்றால் இன்னதென அறியார். சிவபெருமான் என்றால் ஒருசிறிதும் கவனியாது இசக்கியம்மன், மாரியம்மன், பேச்சியம்மன், கருப்பன், காட்டேரி, மாடன் முதலிய தெய்வங்களுக்குப் பலர் ஆடு, கிடா, பன்றி, எருமைக்கிடா முதலியவைகளை வெட்டி கள்ளு, சாராயம் முதலியவைகளைப் படைத்து ஆடிப்பாடி நிற்கின்ற தங்கள் குலமே மிகுந்த உயர்ந்தது என்ற தற்பெருமையாலே கல்வியைப் புறக் கணித்து, கொண்டதே கோலம் கண்டதேகாட்சி என்று வாழ்கின் றனர். சிவஞான போதத்திலிருந்தோ, திருக்குறளிலிருந்தோ, திருமந்திரத்திலிருந்தோ அவர்கள் மூடப்பழக்க வழக்கங்களுக்கு விரோதமாய் ஒரு ஆதாரத்தை எடுத்துக்காட்டி கண்டித்தாலும் அவர்கள் ஒரு சிறிதும் ஒப்புக்கொள்ளாது கண்டிப்பவர் மீது கடுஞ்சினங்கொள்வர். எனவே சைவ சித்தாந்தத்தின் உண்மைகளை அறிய விரும்புபவர்கள் சைவர்களின் மனப்பான்மையைத்தான் அறியவேண்டியதிருக்கிறது. ஆகவே மூடப்பழக்க வழக்கம் நிறைந்த சைவர்களின் மனப்பான்மை எத்தன்மையுடைய தாயிருக்கிறது என்று ஈண்டு எடுத்துக்காட்டுவது அவசியம். அசுத்தமான ஆதிதிராவிடனிடமிருந்து ஒருவன் கள்ளை அருந்தினால் அவனைச் சைவர்களென்போர் பெரிதும் கண்டியார். ஜாதிப்பிரஷ்டம் செய்யார். ஒருவன் சுத்தமான ஆதிதிராவிடன் வீட்டில் நல்ல தண்ணீரை யருந்தினாலும் அதைப் பெரிய குற்றமென்று பாவித்து ஜாதிப்பிரஷ்டஞ்செய்ய முற்படுவர். ஆதித்திராவிடன் போய்வரும் ஒரு வேசியின் வீட்டில் எந்தச் சைவனும் தண்ணீர் சாப்பிடலாம், அது ஜாதிக்கு எவ்வித இழுக்குமில்லையென்றெண்ணு கின்றனர். கோவிலிலுள்ள விக்ரகத்தின் மேல் ஊற்றப்படும் தண்ணீர் அசுத்தங்கள் நிரம்பிய பார்ப்பான் காலில்பட்டு வெளியிலுள்ள தொட்டியில் வந்து விழுந்து பலநாள் தேங்கி நின்று துர்நாற்ற மெடுத்து புழுக்கள் தோன்றியிருந்தாலும் அதை எவ்வித ஆச்சேபணையு மின்றி எல்லாச் சைவர்களும் குடிப்பர் தலையில் தெளித்துக் கொள்வர். மனிதனுடைய மலத்தையும், அசுத்தமான தண்ணீரையும் குடிக்கும் பசுவின் மூத்திரத்தையும் சாணத்தையும் பஞ்ச கௌவிய மென்று உண்ணுவார்கள். இதில் பல நன்மையுண்டென்று சொல்ல மேனாட்டு ஆங்கில மருத்துவர்களின் அபிப்பிராயத்தையும் துணை தேடுவார்கள். சைவன் என்பவன் ஒருவன் எத்தனை பெண்களானாலும் வைப்பாகவைத்துக்கொள்ளலாம். அப்பெண்கள் வேசியாயிருந் தாலும் சரி, விதவையாயிருந்தாலும் சரி, பிறனுடைய மனைவியா யிருந்தாலும் சரி, தாழ்ந்த ஜாதிப்பெண்ணாயிருந்தாலும் சரி எவரும் குறைகூறார். அவ்வாறு பல பெண்களை வைத்திருப்பது சிலவிடங் களில் அவனுக்கு (ஒருவனுக்கு) பெருமையாகவும் கொள்ளப்படு கிறது. ஆனால் ஒருவன் பிற ஜாதிப்பெண்ணை நியாயமான முறை யில் திருமணஞ்செய்துகொள்ளுதல் மிகத் தவறானதாகவும் மிகுந்த கொடிய பாவகரமான தொழிலென்றும் சைவர்களென்பவர்கள் கருதுகின்றார்கள். தங்கள் சாமியும், சமயமும், வேதமும் தங்களின் இம்முட்டாள்தனமான செயல்களுக்கு ஆதரவு செய்வதாகவும் கூட எண்ணிக் கொள்கின்றனர். கலப்பு மணத்தை ஆதரித்து சைவசமய சாத்திரத்திலிருந்து எத்தனை ஆதாரங்கள் காட்டினும் சைவர்கள் மனம் திரும்பவே திரும்பாது. பத்து வயதில் ஒருபெண் கைம்மை எய்தி வீட்டிற்குள் ளடைபட்டு கிடந்தாலும் தகுந்த பிராயத்திலுண்டாகும் தன் இயற்கை யுணர்ச்சியை அடக்கமுடியாது பக்கத்து வீட்டுப் பையனோடோ அன்றி தம்வீட்டு வண்டிக்காரனோடோ விபசாரம் புரிந்தாலும் புரியலாம். சோரபுருடனோடு கலவி செய்ததில், கருவுண்டாகி வைத்தியர்மூலமாய் கருவைச் சிதைத்தோ அது முடியாமற் போனால், இரகசியமாய் குழந்தைகள் பெற்று குழந்தையை கழுத்தை நெறித்து வீட்டின் தோட்டத்தில் புதைத்தோ அன்றி பிள்ளை களைப் பெற்று அனாதை ஆச்சிரமங்களில் கொடுத்துவிடுவதோ ஆகியவை நீதியென்றும், பிரியப்பட்ட விதவைகள் விவாஹம் செய்து கொள்வது என்பது மாத்திரம் அநீதியென்றும் அநாச்சாரம் என்றும் சைவத்திற்குப் புறம்பான கொள்கையென்றும் சைவர்கள் நினைக்கின்றார்கள். விதவாவிவாஹம் செய்வது சைவ சமயத்திற்கு மாறுபட்ட கொள்கையல்லவென்று சுயமரியாதைப் பண்டிதர் சாமி சிதம்பரனார் மட்டுமல்ல சைவசமய ஆராய்ச்சியில் நிபுணரெனக் கருதும் திரு. வி. கல்யாண சுந்தர முதலியாராலும் பக்கம் பக்கமாகப் பலப்பல ஆதாரங்காட்டி விளக்கினாலும் தங்களின் தற்காலப்பழக்க வழக்கங்களே தம் சமயக்கட்டளைகளென்றெண்ணியிருக்கும் சைவர்கள் ஒரு சிறிதும் ஒப்புக்கொள்ளாது தங்களின் மனப் பான்மையை ஒரு சிறிதும் மாற்றிக்கொள்ளாதிருந்து வருகின்றனர். தங்களின் பழக்கவழக்கங்களுக்கு விரோதமாய் எந்த நாயன்மார் சொன்னதாகவோ நடந்ததாகவோ யிருந்தாலும் சரி, சிவபெருமான் சொன்னதாகவோ, நடந்ததாகவோயிருந்தாலும் சரி எந்த ஆதாரத்தைக் காட்டினும், கூறினும் சைவர்கள் அதைப் பொருட் படுத்தார். பஞ்சமாபாதகம் புரிந்தாலும், வேறு எத்தகைய தீமையைப் புரிந்தாலும் ஒருமுறை காசிக்குச்சென்று விசுவநாதரைத் தெரிசித் தாலோ அல்லது குருக்குத்துரை குமரவேல் கோவிலுக்கு ஓராண்டு மாதாந்தம் நடந்தாலோ அன்றி திருப்பதிக் கடவுளுக்கு தம் தலை மயிரை கொடுத்துவிட்டாலோ அல்லது பழனித்தண்டாயுதபாணிக்கு பத்து ரூபாய் செலவு செய்து காவடி எடுத்து தேங்காய், பழம், பஞ்சாமிர்தம் முதலியவை படைத்துப் பூஜை செய்துவிட்டாலோ எல்லாப்பாவமும் தொலைந்துவிடும் என்று எண்ணிக்கொண்டு மேலும் மேலும் தீயவழிகளில் பிரவேசித்து வருகின்றனர். நல் லொழுக்கத்தை விட கடவுள்வணக்கமே சிறப்புடையதென்ற மனப் பான்மையை என்றைக்கு சைவர்கள் பெற்றார்களோ அன்றுமுதல் தான் சைவ உலகில் தீமைகள் மலிந்து தீமையான செயல்களெல்லாம் நற்செயலென்றமனப்பான்மையை சைவர்கள் பெறலாயினர். மனிதர்களைச் சித்ரவதைபுரிந்து கொல்பவனாயினும், பன்றி யும், நாயும், ஈயும், எறும்பும், வேசியும், விபசாரகனும், குடிகாரனும், கள்ளனுமான வேளாளர் பார்ப்பனர் முதலியோர்களை எல்லாம் ஆலயத்திற்குள் அனுமதித்துக் கொண்டு ஒழுக்கம் உடையோரா யினும் புலால் உணவு உட்கொள்ளுகின்றனர், உட்கொண்டனர் என்ற காரணத்திற்காக அன்னோரிற் சிலரின் மனித உரிமையைக் கடிதலே சிறப்புடைய நற்செயல் என்று மூட்டை, பேன், ஈ, எறும்பு முதலிய பிராணிகளை மனமாரக் கோடிக்கணக்காய் கொல்கிற வர்களும் தங்களின் பிள்ளைகள் சுகயீன முற்றால் நூற்றுக்கணக் கான புழுக்களையும், காட்லீவர் ஆயில் (மீன் எண்ணை) முதலிய வற்றையும் கொடுக்கும் ஜீவகாருண்ய மனதை சைவர்கள் பெற்றிருக் கின்றார்கள். செட்டிமார் நாட்டில் மட்டுமல்ல கேரள நாட்டிலும் இந்தியாவின் ஏனைய விடங்களிலும் ஆதித்திராவிடர் போன்ற சில ஜாதியார்களை ஆங்காங்குள்ள மேல் ஜாதியார்கள் என்போர் அடித்து, ஹீம்சித்து, தொந்தரவுகள் புரிவதோடு, பெண்கள் மார்பைத்துணியால் மூடக்கூடாதென்று தடுத்து, தகாத முறைகளில் நடந்து வருவதையும் நேரில் கண்டும், பத்திரிகையில் படித்தாலும் மனமிளகாது, ஆதித்திராவிட மக்களுக்கு இவ்வளவு அகம்பாவமா? மேல் ஜாதியார் முன்னே மேல் வேட்டி போட்டுக்கொள்வதும், அதைப்போன்று பெண்கள் மேல் சேலை போட்டு மார்பை மூடிக் கொள்வதும், அக்கிரமமல்ல என்று எண்ணிக்கொண்டு, புறா, கிளி, கோழி முதலியபட்சிகளை விற்பதற்காக சில கடைக்காரர்கள் தலை கீழாய்த் தொங்கவிட்டிருப்பதையும் வேட்டைக்காரர்கள் எப் பிராணியையும் கட்டுக்கட்டிக்கொண்டு போவதையும், வண்டி களில் கழுத்துப்புண்ணுள்ள மாடுகள் இழுத்தும் செல்வதையும் கண்டு, மிகுந்த மனமிளகியவர்கள் போல் நடித்து, நாடெங்கும் ஜீவகாருண்யச் சங்கம் நிறுவவேண்டுமென்று சைவர்களின் மனம் நாடுகின்றது. திருமந்திரம் முதலிய நூற்களிலே நடமாடும் கோவில்கள் என்று சிறப்பித்துக் கூறப்பட்ட கோடிக்கணக்கான மக்கள் நம் நாட்டில் ஒரு நேரத்திய உணவிற்கும் உடைக்கும் வழியற்று மாய் கின்றார்கள். கோடிக்கணக்கான சிறு குழந்தைகள் பால் கிடையாது மரணமாகின்றார்கள். இவைகளையெல்லாம் நன்கறிந்தாலும் ஒரு சிறிதும் கவனியாது லட்சக்கணக்காய், கோடிக்கணக்கான பொருள் களைப் பல நடமாடுங்கோயில்களை அழித்துப்பெற்று அப்பொரு ளாலே மனிதர்கள் சஞ்சரிக்காத காடுகளிலெல்லாம் கருங்கல்லால் கோவில்கள் கட்டி, தங்கம், செம்பு, வெள்ளி முதலிய உலோகங் களால் விக்கிரகம் செய்து அதையும் குளவிக்கல்லையும் நவரத்தினங் களால் அலங்கரித்து நெய், பால், தேன், பழம் முதலியவற்றால் அபிஷேகம் புரிந்து அவ்விக்கிரகசாமிக்கு கல்யாணம் பட்டினப் பிரவேசம் முதலியவைகளுக்கு ஏராளமான பொருளைச் செல விடுதலே அன்பு நெறி அறிவுறுத்துகிறது என்று அறிவுடைய சைவர்கள் நினைக்கின்றனர். பிறசமயத்தார் எங்கள் சமயத்தின் உண்மையை அறிந்து எங்கள் சமயத்திற்கு வர இசைந்தாலும் அவர்களை எங்கள் சமயத்தில் சேர்த்துக்கொள்வோம் என்று கூறுவதோடமையாது வேளாளரல்லாத பிறசாதியார்கள் எங்கள் சமயத்திலிருக்கும் வரை அவர்களுக்கு சுதந்திரமும் சமத்வமும் கொடோம். அவர்கள் பிற சமயஞ்சென்று கல்வி கற்று நாகரிகமடைந்து வந்தால் சகோதரத்வ மாய் சமயத்துவமாய் நடத்துவதுடன் ஐயா! வாருங்கள் என்று மரியாதையாய் அழைத்தாலும் அழைப்போம். எங்கள் சமயத்திலே யிருந்து கொண்டு, கல்வி கற்று, நாகரிகம் பெற ஒரு பொழுதும் சம்மதியோம். அவ்வாறு கல்வி கற்று எமது சமய உண்மைகளைக் கசடறக்கற்று, புலாலுணவு நீத்து, விபூதி, உருத்திராக்கம் முதலிய சிவவேடந் தாங்கி, எங்களிலும் அதிக ஒழுக்கமுடையோராய், சிவ தீக்கைபெற்று வாழ்ந்தாலும், அவர்களை மரியாதையாய் அழை யாது வாடா, போடா என்று தான் அழைப்போம், ஆலயப்பிரவேச உரிமை ஒரு பொழுதும் கொடோம். அவர்களை மரியாதையாய் நடத்தி ஆலயப்பிரவேசம் முதலிய உரிமை நல்கும்படி எந்த சாத்திரங்கள் கூறினாலும் அவைகளைப் பொருட்படுத்தி நடக்க எங்கள் மனம் இடங்கொடுக்கவில்லை என்று சைவர்கள் கூறிவிடுகின்றார்கள். புராண இதிகாச முதலிய குப்பை கூளங்களையெல்லாம் ஒன்றாய்ச்சேர்த்து அதை ஒரு பொழுதும் நெருப்பிலிடோம். அப் புராண இதிகாச குப்பை கூளங்களெல்லாம் நாளடைவில் கெட்டு துர்நாற்றமெடுத்து பக்கத்து வீட்டுக்காரர்களாகிய பிற சமயத்தார் அறிந்து எங்களைப் பலவாறு கேலிபண்ணுகிறார்கள் என்பதையும் நாங்கள் அறிவோம். ஆனால் எங்கள் வீட்டிலே வாழும் சுய மரியாதைக்காரர்கள் அக்குப்பை கூளங்களை தீயிட்டுக் கொளுத் தவோ, அன்றி அதனுடைய கெடுதியை விளக்கிக்காட்டி புராணக் குப்பைகளை அகற்றச் சொல்வதோ எங்களுக்கு பெரும் அவமான மாயிருக்கிறது. நன்மையைக் கூறினும் இவர்கள் கூற்றுக்கு இணங்க வும் எங்கள் மனம் ஒப்பவில்லை. அதனால் கெடுதியுண்டாகிறது என்றும், அதை அப்புறப்படுத்துவது அவசியமென்றும், கல்வியறிவு அதிகம் பெறாத சுயமரியாதைக்காரர்களைப் பார்க்கிலும் எங்களுக்கு நன்கு தெரியும் என்று மொழிகின்றார்கள். பரமசிவன் தன்பேரில் பக்திகொண்ட ஒரு பெண்ணை மற்றொரு ஜாதியைச் சேர்ந்த சுந்தர மூர்த்தி நாயனாருக்கு கலப்பு மணம் செய்ய நடுநிசியில் கூட அஞ்சாது அலைந்து, தூது சென்று, திருமணம் நடத்தினார் என்பதையும், எங்கள் நாயன்மாரின் அடிச் சுவட்டைப்பின்பற்றி நாங்கள் நடக்கக் கடமைப்பட்டுள்ளோம் என்பதையும் நன்கறிவோம். என்றாலும் தற்காலத்தில் எம் பழக்க வழக்கங்களுக்கு விரோதமாய் எமது நாயன்மாரின் அடிசுவட்டைப் பின்பற்றித் கலப்புமணம் செய்யும் சுயமரியாதை வீரர்களையும், எம்மிறைவனாம் பரம சிவனைப்போன்று கலப்பு மணம் செய்து வைக்க முயற்சி செய்யும் சுயமரியதை இயக்கத்தையும் ஈரோட்டு இராமனையும் கண்டிக்காமலிருக்க எங்களுளம் இடங்கொடுக்க வில்லையே என் செய்வது! எனச் சிவநேயர் பலர் செப்புகின்றார்கள். எங்களைப் பல சாத்திரங்களில் இழிவாய் சூத்திரர்கள், வேசி மக்கள், அடிமைகள் ஆசாரமில்லாதவர்கள் என்று கூறினாலும், எங்கள் சமயக் கொள்கைகளுக்கு விரோதமாய்ப் பார்ப்பனர்கள் படுமோசமாய்த் தங்கள் மார்த்த மதப்படு குழியில் தள்ளினாலும், எங்களுடைய ஆலயங்களையெல்லாம் நாளடைவில் ஏமாற்றி, எங்களிடமிருந்து தம் வசப்படுத்திக் கொண்டு எங்கள் ஆலயத்தினுள் நுழைய ஒரு சிறிதும் தகுதியில்லாத பார்ப்பார்கள், தங்கள் சமயக் கொள்கைக்குத் தக்கவாறே பூசை செய்து கொண்டு, பார்ப்பனர்கள் செல்லும் இடம் வரை எங்களை வரவிடாது தடுத்தும், எங்கள் சைவ சமயத்தார் அரசாங்க உத்தியோகத்திற்கு வரவொட்டாது பலவித சூழ்ச்சியால் தடுத்தும், எங்களை மிருகங்களைவிடக் கேவலமாய் மதித்திருந்தாலும், அப்பார்ப்பனர்களை சுவாமி யென்றும், ஐயர்வாள் என்றும், சாஷ்டாங்க தெண்டனிட்டு வணங்கவும், அவர்கள் வாக்கை வேதவாக்கென்று நம்பவும், மனம் ஒருப்படுவதோடு, சில சமயம் சுயமரியாதைக்காரர்கள் சொல்வதெல்லாம் நீதியாய்த் தோன்றினாலும், பார்ப்பனர்கள் கூறுவது போல் பழையகாலத்து இராட்சதர்களாகிய இராவணன், சூரன் முதலியவர்களைப் போன்றவர்களிவர்களென்றும், இவர்களை ஒழித்துவிடவேண்டு மெனவும் நாங்கள் விரும்புகின்றோம். முற்காலத்தில் இராவணாதி கூட்டங்களை ஒழிக்கத் தோன்றிய இராமபிரானுக்கு, நம்முன்னோ ராகிய அனுமார், சுக்கிரீவன் முதலியோர் எவ்வித உதவிபுரிந்தார் களோ, அவ்விதமாய் இராமசாமி நாயக்கராகிய இராட்சதனையும், அவன்வழி நிற்கும் வீரர்களையும், அழித்துவிட பூதேவர்க ளாகிய பார்ப்பனர்களுக்கு நம்மால் இயன்றதை யெல்லாம் செய்யவேண்டு மென எங்கள் மனம் ஒருப்படுகின்றது என்று சொல்லுவார்கள். இவையே இன்றைய சைவர்களின் மனப் பான்மையாயிருக்கின்றது. - (குடியரசு 1.2.1931) சுயமரியாதை இயக்கமும் காங்ரசின் மயக்கமும் மக்கள் அறிவு விடுதலை பெற்றாலன்றி தேசிய விடுதலை பெற முடியாதென்ற உண்மையை, தேசீய வாழ்விலும், மற்றையப் பொது வாழ்விலும் தம் அனுபவத்தால் கண்ட இருபதாம் நூற்றாண்டு பௌத்தரெனப்பலரும் போற்றும் பெரியார் ஈ.வெ. இராமசாமி அவர்கள் இன்றைக்கு ஐந்து ஆண்டுகட்கு முன்னர் தன் மதிப்பியக்கத்தை ஆரம்பித்தார். இச்சுருங்கிய காலத்தே அவ்வியக்கம் தமிழ் நாட்டிலே எத்தகைய உணர்ச்சியையும் கிளர்ச்சியையும் உண்டுபண்ணியிருக் கிறது என்று ஈண்டு எடுத்துக்காட்டல் அவசியமாகும். பண்டிதர், பணக்காரர், பார்ப்பனர், பிறர் உழைப்பால் வாழ்பவர், வைதீகப் பித்தர்கள் முதலிய சுயநலமும் மூட பக்தியும் சூழ்ச்சியும் குடி கொண்ட மனப்பான்மையையுடைய மக்களுள் எவராயிருந்தாலும் சுயமரியாதை என்ற வார்த்தையைக் கேட்ட மாத்திரத்திலே இடி யோசை கேட்டநாகமென நடுநடுங்குவது செய்ததுகண்டே இவ் வியக்கம் இச்சுருங்கிய காலத்தில் எத்தகையதொண்டு செய்திருக்கின் றது என்பது விளங்கும். தாழ்த்தப்பட்ட அல்லது ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு உயர்ந்த சாதியார்களால் இடப்பட்ட சாத்திர விலங்குகளையெல்லாம் ஒடித்தெரிந்து தன்னின் மனித உரிமையைப் பெற ஆங்காங்கு முழக்கும் போரொலியே அவ்வியக்கம் செய்த தொண்டை நன்கு எடுத்து காட்டும். இற்றைஞான்று பாலர்களும், பெண்களும் கூட வேதம், புராணம், சமயம் பழக்கவழக்க முதலிய எல்லாக் கட்டுப்பாடுகளையும் ஒழித்து பகுத்தறிவையே தமக்குற்ற துணைவனாய் கொள்வதும், யுவர்கள் பலர் கலப்புமணம், காதல் மணம், விதவை மணம், முதலியவைகளை ஆதரித்து புரோகிதக் கொள்கைகளை வெறுத்து வருவதும் அவ்வியக்கத்தால் தோன்றிய சிறிய பலன்கள் ஆகும். இப்புனித வியக்கத்தை அடியுடன் அழித்து விடத் தோன்றிய வெளியீடுகள் பல, அறிஞர்களென்போர் பலர் மடாதிபதிகள் பலர், ஐசுவரியவான்கள் பலர், அதிகாரிகள் பலர், என்றாலும் நாளடைவில் இவ்வியக்கம் தமிழ் மக்களின் உள்ளத்தை ஈர்த்துக்கொண்டு வருகின்றதென்பதிலையமொன்று மில்லை. இவ்வியக்கத்தை அழித்து விட ஆள் வலி, தோள் வலி, அருள்வலி, பொருள் வலி, ஆண்டவன் வலி, பத்திரிகை வலி முதலிய பல சாதனங்களைக் கொண்டு வெளித் தோன்றிய மக்களெல்லாம் இப்பொழுது எங்கு சென்றனர் என்பதைத் தமிழ் மக்கள் நன்கறிவர். இவ்வியக்கம், சைவக்கோட்டை இங்கு சுயமரியாதைக்காரருக்கு இடமில்லை என்று கூறப்பெற்ற திரு நெல்வேலிச்சில்லாவும் கூட இற்றைஞான்று சுயமரியாதைக்காரர் களால் பிடிக்கப்பட்டதும் . அச்சில்லாவிலே சைவர்கள் பார்ப்ப னர்கள் முதலியோர்களின் கொடிய ஆதிக்கத்தைக் கண்டஞ்சாது யுவர்கள் பலர் முனைந்து பல விடங்களில் சுய மரியாதை சங்கங்களும் மகாநாடுகளும் நடத்த முனைந்து விட்டதும் தக்கசான்றாகும். சுயமரியாதைச் சோதியின் முன்னே வைதீக இருள் எவ்வாறு நிற்றல் சாலும். சுய மரியாதை இயக்கத்தின் நோக்கம் சுயராட்சியம் அடை வதே. மக்கள் சுயராட்சியம் என்னும் இன்ப நிலையத்தையடையச் செல்வதற்குப்பாதையில் தடையாயிருக்கும் கல் முள் போன்ற ஜாதி சமய சாத்திரம் மூட நம்பிக்கை முதலிய தீய பழக்க வழக்கங்களை ஒழித்து மக்கள் நேரான பாதையில் சீராக பார்ப்பானும் பறையனும், தோளோடு தோளுற ஒற்றுமையாய் சகோதரத்வமாய் செல்வதற்கே தோன்றியதென்று சுயமரியதை இயக்க மாபெரும் தலைவர் ஈரோட்டு இராமன் அடிக்கடி கூறி வந்ததும் உயர்திரு. ஆர். கே. க்ஷண்முகம் எம்.எல்.ஏ. விருதுநகரில் சுயமரியாதை இயக்கம் வெற்றி பெறா விடில் காங்கிர கோரிய சுயராஜ்யம் கிடையாது. காங்கிர சுய மரியாதை இயக்கத்தைக் கண்டித்தால் நான் காங்கிரசினின்று விலகிவிடுவேன். என்று மொழிந்த மெய்யுரைகளின் பொருளையும் உணராது சில தேசீய வெறியர்கள் சுயமரியாதை இயக்கம் இந்தியர் சுயராட்சியம் பெற இடையூரியற்றுகிறது என்றும் பொய்ப்பிரசாரம் பண்ணி வந்தததுடன் உலகம் தெரியா உன்மத்தர்கள் சிலர் குடி அரசுப் பத்திரிகை காங்கிர இயக்கத்திற்கு விரோதமாய் நின்றதி னால் அதன் சந்தா மிகவும் குறைந்துவிட்டது என்று பொய்பிரசாரம் கூடப் பண்ணுகின்றனர். ஒரு மாதத்தில் சில சந்தாதாரர்கள் பத்திரிகை களை நிறுத்தலாம். அடுத்த மாதத்தில் பல சந்தாதாரர்கள் புதிதாய்ச் சேரலாம். இதுவே பத்திரிகை உலகில் இயற்கையில் நடைபெறும் செயல்கள். இவ்வாறு குடி அரசுப் பத்திரிகைக்கும் ஏற்பட்டிருக்க லாம். அஃதன்றி இவ்வருட ஆரம்பத்தில் குடி அரசுப் பத்திரிகைக்கு சென்ற ஆண்டிருந்த சந்தாவிற்கு குறைவில்லையென்றும், வேண்டு மானால் அதிகப்பட்டிருக்கலாம் என்றும் குடிஅரசுப் பத்திரிகை ஆபீசின் பொறுப்புள்ள ஓர் உத்தியோகதர் மூலம் அறிந்தேன். எனவே சுயமரியாதை இயக்கத்தின் எதிரிகள் சமயத்தின் பேராலும் தேசத்தின் பேராலும் இவ்விதமான பல பொய் மொழியால் அவ் வியக்கத்தை அழித்துவிடலாம் என்ற எண்ணத்தை ஒழித்துவிடு வார்களாக. மெய்யே வெற்றிபெறும். பொய் அழிந்துவிடும். அழிந்து வருகிறதுஎன்றதை உணர்வதோடு சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகள் நாட்டில் நிலவுமுன் சுயராஜியப் பேறுபெறலரிதே என்பதையும் ஒரு சமயம் பல சூழ்ச்சி முறையால் வெள்ளைக் காரனிடமிருந்து இந்திய நாட்டைப் பிடுங்கி விட்டாலும் உண்மைச் சுயராச்சியத்தைக் காணமுடியாது என்பதை அறிவார்களாக. நாட்டில் சாந்தியும் சமாதானமும் நிலவாது ஜாதிப்பூசல், சமயப் பூசல் பல மலிந்து நாடெங்கும் இரத்த ஆறு பெருகுவதோடு கூடிய சீக்கிரம் வேறு நாட்டாரிடம் அடிமையாகச் சிக்கி அவதிபட நேரிடும் என்பது மெய். இதன் உண்மையைத் தான் அறிஞர் ஒருவர் வெளிப் பார்வையில் நாம் சுதந்தரத்தைப் பெற்றாலும் அஃது பார்வைக்கு அழகிய ஒரு கனிந்த பழம் போன்றிருக்கும் அரித்துப் பார்த்தால் உள்ளெல்லாம் சொத்தையாயிருக்குமே தவிர வேறில்லை என்ற மெய் மொழியின்படி உண்மையான விடுதலையை இந்தியா பெறவேண்டுமாயின் சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகள் நாடெங்கும் பரவவேண்டும். உண்மையாகவே சுயராஜியத்தை விரும்புபவர்கள் சுயமரியதை இயக்கம் வெற்றி பெற உழைக்க முன் வருவார்களாக. இதன் உண்மையையறிந்து உலகத்தின் பல பாகத்தின் மக்களிற் பலர் தலைவராகவும் கடவுளின் அவதார மாகவும் நினைத்துக் கொண்டிருக்கும் கிருஷ்ணமூர்த்தி என்பவர், நமது சொந்த அறிவை உபயோகிக்காமல், இது வெகு நாளாகக் கையாண்டு வந்த சம்பிரதாயம் அல்லது பழக்க வழக்கம், என்று ஒன்றைச் செய்யும் மனப்பான்மையே சுதந்தர வாழ்வின் உண்மையான விரோதி. உயிரற்று உலர்ந்து போன பழங்காலத்து கோட்பாடுகளால் தற்கால வாழ்வை வளர விடாமல் கட்டுப்படுத்தி அடிமையாக்கும் மனப்பான்மையே சுதந்திர வாழ்வின் உண்மை யான விரோதி. பழங்காலத்து கோட்பாடுகளும் சம்பிரதாயங்களும் இந்தியாவைக் கட்டுப்படுத்தி மூச்சுப்போகும் வண்ணம் திணறச் செய்வது போல உலகத்தில் வேறு எந்த நாட்டையும் செய்யவில்லை. இந்தியாவிற்கு இப்பொழுது ஏற்பட்டிருக்கும் பெரிய கஷ்டம் இஃது ஒன்றே. இந்த ஒரு பெரும் சங்கடத்தைப் போக்குவீர்களானால் இந்தியாவை முன்னேற்றமடையவிடாமல் தடுக்கும் இடையூறுகள் யாவும் சூரியனைக் கண்ட பனிபோல மறைந்துவிடும். மனித வாழ் வின் நியதிகளுக்கும் விரோதமாக யார் தான் செல்ல முடியும்? அதனை ஏமாற்ற ஒருவராலும் முடியாது என்று ஆழ்ந்து அறிந்து கூறிய அரிய மொழியை ஆராய்ந்தால் சுயமரியாதையியக்கக் கொள்கை களே இந்தியாவிற்கு உண்மையான சுயராஜியத்தை அளிக்கவல்லது என்பது நன்கு விளங்கும். சுயமரியாதை இயக்கம் திரு. கிருஷ்ண மூர்த்தியின் கொள்கைகள் பலவற்றில் கருத்துவேற்றுமை கொண் டிருந்தாலும் உண்மையாய் தம் மனதில் கண்டவைகளை ஒளியாது வெளியிட்டதற்கு நாம் அவரைப் போற்றுகின்றோம். காங்கிர மகாசபை பல அறிவாளர்களை அங்கத்தவராயும் பல வீரதியாகிகளைத் தலைவராயும் கொண்டிருந்தாலும் அஃது உண்மைச் சுயராஜ்யத்தை அண்மையில் காணும் வழியில் வேலை செய்யவில்லை. காங்கிரகட்டும் சுயராஜ்ய மளிகைக்கு போதிய அதிவாரமிடாது மேலே கட்டிடத்தை கட்டுவதினால் அடிக்கடி அச்சுவர்கள் கீழேவீழ்த்துவிட்டது, வீழ்ந்து வருகிறது. காங்கிரஸால் தோற்றுவிக்கப்பெற்ற தற்காலக்கிளர்ச்சிகள் முதலில் வீறுகொண் டெழுந்தது உண்மையே. ஆனால் தற்காலம் அஃது எந்நிலையிலிருக் கின்றது என்று ஆராய்வார்க்கு உண்மை புலனாகாமற் போகாது. சுய மரியாதை இயக்கத்தலைவரும் இதைத்தான் ஆதிமுதல் கூறுகிறார்கள். எனவே மக்களின் சக்தியை பயனற்ற வழியில் தூண்டி முடிவில் தோல்வி ஏற்படச் செய்வதிலிருந்து நாட்டின் நன்மைக்காக வளர்ச்சி செய்யும் சக்தி மக்களிடையே தளர்ச்சியடைந்து விடுகின்றது. பயனற்ற வழிகளில் மக்களின் சக்திகளை வீணாக்குவதினால் மக்கள் அடைந்துள்ள அலுப்பிலும், சோர்விலும் நின்று உணர்ச்சி பெற்று கிளர்ச்சியையுண்டு பண்ணுதல் அதிக சிரமம். ஆகவே தற் காலத்தில் நடந்துவரும் உப்புச் சத்யாக்கிரகப்போரில் மக்கள் தம் சக்தியை செலவிடுவதைவிட தீண்டாமை, பார்க்காமை, பாலிய விவாஹம், விதவை மணம், மூட நம்பிக்கை முதலியவைகள் ஒழிந்து உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, பணக்காரன், ஏழை, தொழிலாளி, முதலாளி, ஆண் பெண் முதலிய சகல பேதங்களும் அற்று அன்புடன் ஒன்றாய் குழுமி சுயராஜியத்தை நாடுவார்களாயின் அதே நிமிஷத்தில் வெள்ளைக்காரர்கள் இங்கு நமக்கு வேலையில்லை என்று தம் பெண்சாதி பிள்ளைகுட்டி மூட்டை முடிச்சுகளுடன், சீமைக்குப் பிரயாணமாய் விடுவார்கள். இத்தகைய நிலைமையடைய நாடெங்கும் சமதர்ம சாத்தீகப் போர் எழல் வேண்டும். என்று இந்நாட்டில் அப்போர் ஆரம்பிக்குமோ அன்றே உண்மையான விடுதலைக்கு பலமான அதிவாரமிடும் நன்னாளாகும். இதுபற்றி திரு. கிருஷ்ண மூர்த்தி நமது வாழ்வில் பிறர்நலம் கருதும் தன்மையும், பிறர்மேல் உண்மையும் இல்லாமற் போயின. தொன்று தொட்டு வழங்கி வந்த கோட்பாடுகளில் நம்மைத் தற்காலம் பலமாகக் கட்டுப்படுத்துவது எதுவென்று பாருங்கள். சுயநலமும் கொடுமையும் பற்பல சம்பிர தாயங்களாக உருவெடுத்து நிற்கின்றன. பாலிய விவாஹமும் விதவை களுக்கு இட்ட இரக்கமற்ற இடையூறுகளும், பொதுவாக திரீகளை நடத்தும் முறையும் தீண்டாமை என்ற கொடியவழக்கமும் இவை யெல்லாம் என்ன? மனிதவாழ்விற்கு இன்பத்தையும் சமரசத்தையும் அளிக்கவல்ல நல்ல உணர்ச்சிகள் யாவையும் நமது உள்ளத்தினின்று கசக்கிப் பிழிகின்ற வழக்கம் வழக்கம் என்று சொல்லப்படும் கட்டுப் பாடல்லவா? இனி ஜாதிவித்தியாசம் என்று சொல்வதுதான் என்ன? அது மனிதர்களுடைய சுய நலத்திற்கு ஆதாரமான ஏற்பாடேயன்றி வேறல்ல. ஒரு மனிதன் மற்றொரு மனிதனைக் காட்டிலும் வேறானவ னென்றும் மற்றவர்களுக்கில்லாத ஒரு பெருமையும் உண்மையும் தனக்குண்டென்றும் நினைத்து ஆனந்தப்படுவதற்கும் ஒரு ஏற்பாடாக இருக்கின்றதே யொழிய வேறில்லை. இவையும் இன்னும் இவை போன்ற பலவுந்தான் நாம் நம் முன்னோர்களிடமிருந்து பெற்ற செல்வமாகப் பாராட்டிப் பாதுகாத்து வருகின்றோம். இவை களுடைய பாரத்தினால்தான் நாம் நசுக்கப்பட்டு வருந்துகின்றோம்...... இந்தியாவின் ஆதமரூபத்தை மறைத்து அதனைத் தோன்ற விடாமல் செய்யும் களங்கத்தைப் போக்குவீர்களாக ...............ïªj ஆத்மசக்திவிடுதலையடைந்Jவெளிப்பLமானால்உலகமுழுJம்ஒருòதுஉணர்¢சிஉண்டாFம்அற்புதத்iதநhம்கண்ணாuக்காணலா«. அத்தகைய ஆத்ம சக்தியினால் ஆகாதது ஒன்றுமேயில்லை. அதுமாத்திரம் விடுபடுமானால் அதை எதிர்த்து நிற்க எதனாலுமாகாது. இந்தியாவின் அரசாங்க விசயத்தில் சர்வசாதாரணமாக சுதந்திரத்தைக் கொண்டு வந்து விடுவதோடுங் கூட இந்தியா தேசமானது எந்த மேலான வாழ்விற்குக் காத்துக் கொண்டிருக்கின்றது என்று நான் நம்புகிறேனோ - அஃதாவது உலகமுழுவதும் ஆத்மஞான ஒளியை வீசக்கூடிய ஆத்மஞான சூரிய னாக விளங்கும் உத்தமமான வாழ்வை இச்சாமாத்திரத்தில் அடையச் செய்யும் என்பது - அந்த மேலான வாழ்வு நிச்சயம் கிடைத்துவிடும் என்று கூறிய அறிஞர்கிருஷ்ணமூர்த்தி கூறும் அனுபவத்தை Rயkரியாதைக்காரர்கள்bசயற்கையில்bசய்துகாட்டKயற்சிக்»ன்றார்கள். இப்பொழுதில்லாவிடினும் இன்னும் சில காலத் திற்குள்ளாவது காங்கிர வாதிகள் சுயமரியாதை இயக்கம் இந்தியா வின் விடுதலைக்காக ஏற்படுத்திய அரும் பெரும் திட்டம் கண்டு ஆனந்தித்து அதன் வழினின்று தொண்டாற்ற முன்வருவார்கள் என்பது நிக்ஷயம். நம்மிடத்தில் நம் விடுதலைக்கு மாறாக ஏதேனும் குறைக ளிருக்குமேயானால் அவைகளைப் பகிரங்கமாய் எடுத்துக் காட்டி அவைகளை உடனே ஒழித்துவிட முயற்சிக்க வேண்டு மென்பதே சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய கொள்கை. அந்தக் கொள்கை யின் பேரிலே நம் சமூகத்தை பீடித்துள்ள மூட நம்பிக்கை, பழக்க வழக்கம் முதலிய எல்லாத்தொத்து நோய்களுக்கும் காரணமாய் மிளிருவது நமது நாட்டுப்பழங்காலப் புராணக் குப்பைகளே என்று எடுத்துக்காட்டி அக்குப்பை கூளங்களை ஒன்றாய்க் கூட்டி எரித்து விட்டால் தொத்து நோய்களை அடியுடன் ஒழித்துவிடலாம் என்று கூறுகிறது. காங்கிர இயக்கமோ உண்மையையறியாமல் நம் மிடத்திலுள்ள குற்றங்களை வெளியே எடுத்துக்காட்டுவது மிகவும் கேவலம். சுயராஜியம் வந்தால் எல்லாம் சரிபட்டுப்போகும் என்று கூறுகிறார்கள். இத்தொத்து வியாதியாய் நாம் சுயராஜ்யம் கேட்கப் போவதற்கு எழுந்து நடக்கவும் சக்தியற்றிருப்பதோடு புராணக் குப்பையால் நம்மக்களிடையே உண்டாக்கியப் பைத்தியமோ சுயராஜியம் கேட்கப்பல ஜாதியார்களும் ஒன்றாய்ப் போகும் வேளையில் ஒரு பார்ப்பனப் பைத்தியகாரன் பக்கத்தே செல்லும் ஆதிதிராவிட சகோதரனைப்பார்த்து அடே நீ என்பக்கத்தில் வரவா, அடே பரப்பயலே உனக்கு அவ்வளவு கொழுப்பா? என்று கூறுகின் றான் மற்றொரு வெள்ளாளன் பக்கத்தே சுயராஜியம் கேட்கச் செல்லும் நாடார் சகோதரனைப் பார்த்து, நெறுங்கிச் செல்லுவதைப் பார்த்து, சீறுகின்றான். இவ்வாறு சுயராஜ்யம் கேட்கச்செல்லும் பொழுது ஒருவன் கழுத்தை ஒருவன் பிடித்து நெரித்துக் கொன்று விட வேண்டுமென்று முயற்சிக்கின்றான். ஜனத்தொகையில் குறையும் பலமும் படிப்பும் குறைந்த ஜாதிக்காரர்களோ இச்சாதியிறுமாப்பார் களின் செயலைக்கண்டு வெள்ளைக்காரன் ஒரு மத்தியதனா யிருக்கும் பொழுது உயர்ந்த ஜாதிக்காரர்கள் நமக்குப் பல துன்பங்க ளியற்றி வந்தனர், வருகின்றனர். போனது போகட்டும் சுயராஜியம் வந்தால் எல்லாம் சரிப்பட்டுப் போகும் என்று அவர்களோடு சேர்ந்து சுயராஜியம் கேட்கச்செல்லும் பொழுதே (காங்கிரஸில் சேர்ந்து உழைக்கும் பொழுதே) நம்மைப் பக்கத்தில் நிற்கவும் சம்மதமின்றித் திட்டுகின்றார்களே இச்சாதி திமிர்கொண்ட பைத்தியக்காரர்கள் வசம் நாடும் அதிகாரமும் சிக்கிக்கொண்டால் நம்மையெல்லாம் நேராக மோட்சலோகத்திற்கு பா போர்ட்டு கொடுத்து அனுப்பி விடுவார்கள் என்று மேல் ஜாதியார்களாகிய தேசியவாதிகள் என்ப வர்கள்மீது நம்பிக்கையற்று சுயராட்சியம் வேண்டாம் வெள்ளைக் கார ராஜியமே வேண்டுமென்று திரும்பிவிடுகின்றார்கள். எனவே நாமெல்லோரும் ஒற்றுமையாய் ஒன்றுசேர்ந்து ஏக சகோதரர்கள் போல் அன்புடன் கூடிவெள்ளைக்காரனிடமிருந்து நம் இராஜி யத்தை மீட்க விரும்பினால் நம்மிடையே அண்டிநிற்கும் குற்றம் குறைகளையெல்லாம் மக்களுக்கு எடுத்துக்காட்டி அவைகளை ஒழித்து நம்மிடையே பற்றிநிற்கும் தொத்து நோய்களுக்கெல்லாம் மூலாதாரமான புராணக்குப்பைகளையெல்லாம் பகுத்தறிவு என்னும் அக்கினிகொண்டு நாசமாக்கி நம் கால்களையும் கைகளையும் கட்டியிருக்கும் கயிறுகளை (பழக்க வழக்கங்களை) அறுத்தெரிதல் வேண்டும் என்று ஓயாது திரும்ப திரும்ப சுயமரியாதை இயக்கம் பேரொலி புரிகின்றது. இதன் உண்மையான கொள்கையைக் கண்டு அறிஞர் கிருஷ்ண மூர்த்தி ................ பெருவாழ்வை இந்தியா அடையு மாறு அதனை எழுப்புவதற்கு நாம் செய்ய வேண்டியதென்ன? முதலாவது நமது வாழ்க்கையில் உண்மை விளங்க வேண்டும். நமது குற்றம் குறைகளை ஒழிக்காமல் நேராகப் பரிசோதிக்கும் மனப் பான்மையை அடைய வேண்டும்; இவ்வாறு தெளிவாய் ஆராய்ந்து பார்த்ததினால் அந்தக்குற்றங் குறைகளைப் போக்க வேண்டும் என்று தணிக்கமுடியாத தாகம் வேண்டும். பிறகு அதனால் என்ன கஷ்டம் வந்தாலும் சரி, நம்முடைய வீட்டையே நாம் ஒழுங்குபடுத்தத் தீர்மானமான ஒரு முயற்சி செய்யவேண்டும்; அவசியமானால் பழயகட்டுப்பாடுகளை உதறித்தள்ளி தற்கால உணர்ச்சியை மேலாக மதித்துப் புதிய வாழ்வை ஏற்றுக்கொள்ள வேண்டும். நம்மைக் கட்டியிருக்கும் கனமான சங்கிலிகளை இழுத்துக் கொண்டே அவதைப்படுங்காலம் போய்விட்டது. நமது தினசரி வாழ்வில் பிறநாட்டார் கண்டு நகைக்கக்கூடிய அம்சங்கள் இருப்பது இழிவென்று உணரவேண்டும். நமது குற்றங்குறைகளை உலகத்தின் கண்கள் பார்த்துக்கொண்டு அவற்றை ஆதாரமாகக் கொண்டு நம்மைப்பற்றி அபிப்பிராயப்படும் சமயத்தில் நாம் மாத்திரம் கண் மூடித்தனமாய் வீண் ஜம்பம் பேசிக்கொண்டிருப்பதில் என்ன பயன்? சுருங்கச் சொல்லுமிடத்து நமது இந்திய நாட்டின் வாழ்வை மனித வாழ்வின் உண்மையான போக்குடன் இசையும்படி முழுதும் மாற்ற வேண்டும். அப்படி மாற்றுவதற்கு நாம் எல்லோரும் முன் வந்தால் தான் இந்தியாவிற்கு உண்மையான விடுதலை ஏற்படும் என்று திரு. கிருஷ்ணமூர்த்தியவர்கள் மொழிந்துள்ளார்கள். அவர் மொழிந் துள்ள வாக்கியங்களில் சுயமரியாதை இயக்கம் என்ற வார்த்தையை உபயோகிக்காவிடினும் அவர் மொழிந்துள்ள கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு வேலை செய்யும் இயக்கம் ஒன்றே ஒன்றுதான் இந்திய நாட்டிலுண்டு. அதுதான் சுயமரியாதை இயக்கம் என்று திரு. கிருஷ்ணமூர்த்தி மட்டுமல்ல இத்தமிழ்நாட்டு சிறார்களும் நன்கறிவர். இனி திரு. கிருஷ்ணமூர்த்தியவர்கள் தாம் நன்கறிந்து கொண்ட செயல்களை இந்திய நாட்டின் விடுதலைக்காக செய்கையில் காட்டுவதோடு தாம் கண்டமேலான கொள்கை களுக்கு தம் முழுச்சக்தியையும் செலவழிக்கும் சுயமரியாதை இயக்கத்திற்கு தம்மாலியன்ற ஆதரவு காட்டுவாராக. இறுதியாக யான் கூறுகிறேன் சுயமரியாதை இயக்கம் இந்தியா சுயராட்சியம் அடைவதற்கு விரோதமாய் வேலை செய்யவில்லை யென்றும் அவ்வாறு வேலை செய்வதாகப் பொய் பிரசாரம் புரியும் தேசீயப் பேரவையைப்பூண்ட சுயநலத்தோர் தன்மதிப்பியக்கத்தின் உண்மைத் தத்துவத்தை உணராதவர்கள் என்றும் காங்கிர இந்திய நாட்டை வெள்ளைக்காரன் ஆட்சியினின்று பிடுங்கி பணக்காரர்கள் உயர்ந்த ஜாதிக்காரர் முதலியவர்களின் ஆதிக்கத்திற் குள் கொண்டு வர நினைந்து வெற்றிபெற முடியாத வழியில் வேலை செய்து வருகிறதென்றும் தன்மதிப்பியக்கமோ இந்நாட்டை வெள்ளைக்காரனிடமிருந்து மீட்டி அரசாங்கத்தில் ஏழைகள் தாழ்ந்த சாதியர், பெண்கள் முதலிய யாவர்களுக்கும் பொதுவான ஒரு சமதர்ம ஆட்சியை ஏற்படுத்தி மக்கள் யாவரும் சகோதரத்வமாய் ஒருவருக்கொருவர் அன்பு பூண்டு எக்காலத்தும் இந்திய நாடு இந்தியர்கள் கையிலேயிருக்கும் படியான சாவதமான பலமுடைய அரசாங்கத்தை எளிதில் பெறும் படியான வழியில் வேலை செய்து வருகின்றதென்றும் தன் மதிப்பியக்கத் தலைவர்களெல்லாம் ஒத்துழையா இயக்க காலத்தில் தமிழ் நாட்டில் அரும் பெரும் தியாகங்கள் செய்த வீர புருடர்களென்றும் பொது ஜனங்களுக்கு ஈண்டும் ஒரு முறை எடுத்துக் காட்டி காங்கிர இந்திய நாட்டு விடுதலைக்காகச் செல்லும் தவறான வழியினின்று தன் மதிப்பியக்கம் செல்லும் வழிநின்று தொண்டு புரிந்து இந்தியாவின் உண்மையான விடுதலைக்கு தொண்டாற்ற முயலும் நாளே இந்தியாவின் விடுதலைக்கு திரமான அதிபாரமிடு நன்னாளாகும். அந்நாளை ஆவலு டன் எதிர்பார்க்கின்றோம். இனியாவது காங்கிர வாதிகள் தாம் கொண்டமயக்கத்தினின்று தெளிந்து சுயமரியாதை இயக்கத் தின் மேன்மையை உணர்ந்து தொண்டுபுரிய முன் வருவார்களாக. - (குடியரசு 8.2.1931) சைவத்தின் உண்மையும் ஜீவகாருண்யத் தன்மையும் சைவ சமயம் பன்னூறு ஆண்டுகட்கு முன்னர் இவ் விந்திய நாட்டில் தோன்றிய தமிழ் மக்கள் கண்ட ஒரு பெரும் நெறியாகும். அச்சமயம் அன்பை அடிப்படையாகக்கொண்ட ஒரு தூநெறி யென்றும், அஃது கடவுளாம் சிவம் அன்பு வடிவ மாயிருக்கிற தென்றும், அச்சமயநெறி நின்றோர் அனைவரும் அன்பு நிறைந்த மனத்தையுடைய மாண்புடையோர்களாய் விளங்கவேண்டும் என்றும், எல்லாம் அன்புமயமாய்மிளிரும் இச்சை நன்னெறியே, இந்நில உலகத்திலே சிறந்த ஒரு சமய மென்றும், சமயகுரவர்கள், சமய ஆச்சாரிகள் சமய பக்தர்களெல்லாம் ஏடுகளில் பீடுற எழுதி கோவில்தோரும் சென்று பண்ணுறப்பாடி மண்ணுற்றனர் எனச் சைவ சமய அறநூற்கள் பல கூறுகின்றன. ஈறிலாப்பதங்கள் யாவையுங் கடந்த இன்பமே என்னுடையன்பே. என்ற மணிவாசகப் பெருமான் மலர் வாய்ப்பெய்த வாசகத்தேன் என்று அழகொளிரப்பகரும் திருவாசகத்தின் அரும்பாவும், அன்பனே அரனே என்று அரற்றுவார்க்கு, இன்பனாகும் எறும்பியூர் ஈசனே என மொழிந்து பல மக்களை சமய வெறியால் கொலை செய்யக் காரணமாய் விளங்கியவரென சைவ சமய அறிஞர்கள் இவற்றை ஞான்று வரை செப்பும் சைவசமய குரவராகிய அப்பர் சுவாமிக ளாகிய திருநாவுக்கரசரின் திருவாக்கும், ஈசனுக்கு அன்பிலார் அடியவர்க்கும் அன்பிலார், எவ்வுயிர்க்கும் அன்பிலார், தமக்கும் அன்பிலார் எனக்கூறிவிட்டு, எல்லா அன்பினும் பதி அன்பே (கடவுள் பேரில் செலுத்து அன்பே) சிறந்தது என்று இவ்வுலகமன்பதைகளிடம் எவ்வித அன்புச் செயலையும் காட்டாது விபூதி உருத்திராக்கம் பூண்டு கோயில் தோறும் சென்று மணி அடித்து பூஜை புரிந்து தமக்கு வரும் வீடொன்றை நினைந்து நினைந்து மகிழ்ந்து உயிர் நீத்த அருண்நதி சிவம் என்னும் சைவசமய ஆச்சாரி ஒருவரின் அருள் வாக்கும், அன்பு என்பதே சிவம் உணர்ந்திடுக, என எனக்கு அறிவித்த சுத்த அறிவே என்னும் சைவ சமய பக்தர்களில் சிறந்தவர் என்று பலரும் போற்றும் பெரியார் இராமலிங்க சுவாமிகளின் அருட்பாவும், எங்கெங்கே பார்த்தாலும் எவ்வுயிர்க்கும் அவ்வுயிராய், அங்கங்கிருப்பது நீ யன்றோ பராபரமே எவ்வுயிரும் என்னுயிர்போல் எண்ணி இரங்கவும் நின்தெய்வ அருட்கருணை செய்வாய் பராபரமே என்ற தாயுமான சுவாமிகளின் பெருவாக்கும் இன்னும் பலவும் சைவர்களின் ஆதாரங்களாகும். இதை இக்கால சைவப்பண்டி தர்கள் பலரும் கருத்து வேற்றுமையின்றி ஒத்துக் கொள்கின்றனர். இவைகளைப்பற்றி எம் சுயமரியாதை இயக்கத்தைச் சார்ந்த அன்பர்களுக்கும் கூட ஆட்சேபனையிருக்க இடமில்லையென்பதே என் முடிவான எண்ணம். இவ்வறிஞர்கள் மொழிந்து சென்ற கூற்றின்படி அன்பு வடிவாகிய இறையை உயிர்களடைந்து (இரண்டறக்கலந்து) இன்புற மக்கள் யாவரும் அன்புமயமாய்த் திகழல் வேண்டும். உயிர்கள் அன்புவடிவாய் மாறாவிட்டால் அன்பாகிய சிவத்தோடிரண்டறக் கலத்தல் முடியாதென்பது அறிஞர்கள் எவரும் ஒப்பமுடிந்த வுண்மை. எந்நாட்டினராயிருந்தாலும், எச்சமயத்தவராயிருந்தாலும், எக்குலத்தவராயிருந்தாலும், எவ்வேடத்தவராயிருந்தாலும் எவருளம் அன்பால் நிரம்பப்பெற்றதா யிருக்கின்றதோ அவரே உண்மைச் சைவர் ஆவார் என்பதும் ஏனையோரெல்லாம் அசைவர்களாவார் என்பதும் எவருக்கும் மறுக்கமுடியா உண்மையாகும். இஃதின்றி ஞான பூமியாகிய தமிழ் நாடாகிய திருவாரூரில் பிறந்தேன், காசியி லிறந்தேன் என்பதினாலோ பாடல் பெற்ற தலமொன்றில் இலட்சக் கணக்காய் பொருளை வாரி வாரி இறைத்துக் கருங்கல்லால் ஒரு திருவாலயப்பணி முடித்து விட்டேன் என்பதினாலோ, பரம்பரைச் சைவமரபில் (வேளாள குலத்தில்) பிறந்தவன் என்பதினாலோ தேவார திருவாசக முதலிய சைவத்திருமறைகளை கசடறக்கற்று பண்ணுறப் பாடுவதினாலோ திருநீறு, உருத்திராகம் முதலிய சில வேடத்தாங்கிய உடலோடு திரிவதினாலோ இரவும் பகலும் இறைவன் வாழும் திருக்கோயி லென்று திருமந்திரம் முதலிய நூல்களில் சிறப்பித்துக் கூறப்பெற்ற மக்களுக்கு அளவிலாக் கேடுகள் புரிந்தும் கொன்றும், சித்ரவதை புரிந்து ஆடு, மாடு, பேன் மூட்டை முதலிய எண்ணிறந்த உயிர்களை அடித்தும் கொன்றும், வாழ்பவராயினும் அவர் புலால் உணவு உண்ண மறுப்பவர் என்பதினாலே ஒருவர் உண்மைச் சைவராகி அன்பாம் சிவத்தை அடைதல் அரிதென்பதே சைவ சமயத்தைக் காய்தல் உவத்தலகற்றி நடுநிலையினின்று ஆராய்ந்தறிந்த அறிஞர்கள் கண்ட முடிந்த முடிபாகும். அன்பு என்பதின் அரும்பொருளை அணுவளவும் அறியாது சில கிரியைகள் மட்டிலும் புரிந்து கொண்டும் தாம் பிறப்பிலே சைவனென்று கூறிக் கொண்டும், அன்பு நெறி அவனியெல்லாம் ஓங்கத் தொண்டு புரியும் கூட்டத்தான்யானென்றும் பிறர் நினைத்துக் கொள்ளும்படி வேடம் புனைந்து திரிபவர்களைத்தான் நாம் போலிச் சைவர்களென்றியம்பு கின்றோம். நேமங்கள் நிட்டைகள் வேதங்கள் ஆகம நீதிநெறி, ஓமங்கள் தர்ப்பணம் சந்தி ஜெப மந்திர யோகநிலை நாமங்கள் சந்தனம் வெண்ணீறு பூசி நலமுடனே சாமங்கள் தோறும் இவர் செய்யும் பூசைகள் சர்ப்பனையே என்று சைவச்சித்தாந்த அறிஞர்கள் பலரும் போற்றும் பட்டினத் தடிகள் பகர்ந்ததும் சில குடியரும், கொலைஞரும் விபூதி ருத்ராட்சம் தரித்து அச்சின்னங்களின் மாண்பைக் கெடுத்து வருகிறார். மடங் களிலும் சிவ சின்னங்களின் மாண்பு இறந்துவிட்டது. ஊரை வஞ்சிப்பதின் பொருட்டே சில சகோதரர்கள் சிவவேடம் பூண்கிறர்கள். என் செய்வது? ஈண்டு கவனிக்கற்பாலது ஒன்றே அஃது அன்புநெறிக்கு அடையாளமாகவே விபூதி ருத்ராட்சதாரணம் ஏற்பட்ட தென்பது, சைவ சமயத்திற்கு அடிப்படை அன்பேயாகும். அவ் வன்பைத்தாங்காது சிவ சின்னங்களைத் தாங்கி உயிர்களுக்குத் தீங்கு நினைப்பார்கள் சைவர்களாகமாட்டார்கள் என்று சைவ சமயப் பிரசாரத்தால் சுய மரியாதை இயக்கத்தை அழித்துவிட ஆண்டவன் அருள் வலிகொண்டு வெளிப்போந்து இப்பொழுது தாமிருக்கு மிடம் பிறரறியாவண்ணம் வாழ நினைக்கும் திரு.வி. கல்யாண சுந்திர முதலியார் அவர்கள் கூறும் திருவாக்கும், போலிச்சமரசமும் பொருந்தாப்பற்றாகம போல இன்னும் பல பிறழ்வுணர்ச்சிகளும் சைவஜன சமூகத்தில் காணவுள்ளன. அவற்றிலொன்று தென்னாட்டில் தமிழரில் ஒரு சாதியினர் மட்டுமே (திருநெல்வேலி வேளாளர் மட்டுமே) சைவரென்பது இவ்வாறு பிறப்பால் சைவம் பேசுவோர் தொகை இந்நாளில் அருகிவருகின்றது. இவர் கூற்றின் வலுவின்மையை விளக்கப் பெரியபுராணச்சரித்திரங் களே போதும். மற்றொன்று புலாலுண்ணாமையே சைவமென்பது. அன்பின் வழித்தாய் அவ்வொழுக்கம். நிகழுமிடத்து அது சைவ ஒழுக்கமே என்று மிக மதிக்கப்படும். அன்பில்லாவிடத்து அது சைவமாய்விடாது. ஆகுமென்னின் ஆடு, மாடு, யானை, குதிரை முதலியவைகளும் (புலாலுண்ணாமையினால்) பரம்பரைச் சைவர் களே என்ன நேரிடும். தீக்கையும் கிரியையும், சைவமென்று கூறவுங் கூடாது. சைவநெறியிற் (அன்புநெறியிற்) செல்லுவதற்கு உதவிசெய்யும் சாதனங்களாய் இவை அமைக்கப்பட்டன................ ஆண்டவனிடத்தும் ஆருயிரிடத்தும் அன்புகாட்டாத வன்நெஞ்சங்கள் , மனவலிய னொருவன் ஆசாரி அபிடேகம் பெற்றவனா யிருப்பினும் சரியே அனுட்டான விதிகளை வெகு அழகு பெற செய்பவனாயினும் சரியே சிவலிங்க பூசையை ஆகம விதிப்படி செய்து காட்டுபவனாயினுஞ் சரியே அவன் உண்மையிற் சைவனாவான். இத்தீக்கையும், கிரியை யும் பூசையும் பொருந்தா திருப்பினும், பிறிதுனோய் தன்னோய் போற் போற்றுமியற்கையும் இறைவன் சேவடி மறவாச் சிந்தையும் படைத்துள ஒருவன் உண்மைச் சைவனேயாவான் (இங்கு இறைவன் சேவடி மறவாச்சிந்தை என்றது அன்பை மறவாச் சிந்தை என்பதே. அன்பும் சிவமும் இரண்டென்பரறிவிலார் என்ற திருமந்திரவாக் கால் சிவமெனும் இறைவன் அன்பே என்பது நன்கு அறியக்கிடக் கின்றது) என மொழிந்த திரு. சச்சிதானந்தம் பிள்ளை பீ.எ.எல்.டி. அவர்கள் கூறிய நல்வாக்காகும். கண் ஒளியைத் தேடுகின்றது. நிறைந்த அன்பு கடவுளைத் தேடுகின்றது. உயர்ந்த அறிவும் நூலாராய்ச்சியும் கடவுளை ஒரு போதும் காண்பதில்லை. அன்பானது பெரிய மலையை அதனது இடத்திலிருந்து அப்புறப்படுத்தக்கூடும் என்று திரு. அ. குமாரசாமி முதலியாரவர்கள் கூறியதும், சைவசமய அடையாளங்களை மாத்திரம் அணிந்தமையால் ஒருவர் சைவசமயியாகார். அடையாளங்களின் உட்கிடைகளை யறிந்து அதனை மனதிற் சிந்திக்கவேண்டும் திருநீறானது உலக நிலையாமையையும் திருவருட்பேற்றினையும் விளக்குவதால் அதனை அணிகின்றவர்கள் நிலையாமையுணர்ச்சியையும் திருவருள் வழிநிற்றலும் கடைபிடித்தொழுகவேண்டும் உருத்திராக்கமென்பது கடவுள் உயிர்களின்மீது வைத்த இரக்கத்தைக் காட்டுவதால் அதனை அணிகின்றவர்கள் எவ்வுயிர்களிடத்தும் இரக்கமுடையவர்களா யிருத்தல் வேண்டும் என்றும் சைவசமயத்தின் உயர்ந்த கொள்கை யையும், விரிந்த நோக்கத்தையும் சைவர்கள் ஒவ்வொருவரும் நன்கறிய வேண்டும். திருநீறணிந்த அளவில் ஒருவன் சைவமாகிவிட மாட்டான்... பூசனிக்காய் புடலங்காய் நீறுபூத்திருப்பதுபோல இவர்கள் திருநீறணிந்தவர்களாவார்கள். சிறுதெய்வங்கட்கு கொடை கொடுப்போர் கடவுளின் சிறுவேலைக்காரர்கட்கு கைக் கூலி கொடுப்பது போலாகும் இரக்கமின்றி உயிர்பலி இடுவோர் தீய பேய் வழிபாடு செய்பவராவர். ஒழுக்கம் அருள் அன்பு முதலியன இல்லாதவர் எத்தெய்வத்தையும் வழிபடுதற்குத் தகுதியில்லாதவர் என்று செய்கையில் ஒன்றும் முடியாவிடினும் சைவ சமயத்தின் தலை வர்கள் போன்று இல்லாது கள்ளங் கபடற்றுக்கூறும் கா. சுப்பிர மணியபிள்ளையவர்கள். எம்.ஏ.எம்.எல். திருநெல்வேலி சைவசித் தாந்த சங்கத்தின் 7,8 ஆம் ஆண்டுவிழாவில் நிகழ்த்திய சொற் பொழிவும். irt« ‘m‹ò’ v‹D« xU bkhÊ¡FŸ ml§» É£l bj‹gJ«, m‹ã‹nwš irtK«-V‹?-m¢rka அறக்கடவு ளாம் சிவமும் இன்றென்றும் நன்கறிவதோடு அன்பு உள்ளத்தே நிலவப்பெறாத மாக்கள், பலகிரியைகளையும், அனுட்டானங்களை யும் உயர்குலப் பிறப்பையும் உடையவரா யிருப்பினும் அறிஞர் களால் சைவர் என்றழைத்தற்குத் தகுதியிலார்; வேண்டுமானால் போலிச்சைவர் என்று கூப்பிட அருகதையுடையவர் என இங்கு நன்கு எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது. இன்று அன்பு என்பதின் பொருளை அணுவளவும் அறியாமக்கள் பலரையும் சைவராக எண்ணப்படுகிறது. சமீபத்தில் நடந்த ஜனசங்கைக்கணக்கில் இந்துக்கள் என்று சொல்லப்படும் வகுப்பார் அனைவரையும் சைவர் என்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இக்குடி மதிப்புக்கணக்கில் சைவசமயம் அதிக அபி விருத்தியடைந்திருக்கின்றது என்றுசில போலிச் சைவத் தலைவர்கள் சொல்லிக்கொள்ள வழியேற்பட்டதே யொழிய இதனால் உண்மைச்சைவநெறியாகிய அன்புநெறி அதிக மாய்ப் பரவி விட்டதென்றெண்ண இடமில்லை. தன்னைச்சைவன் என்று கூட சொல்லிக்கொள்ளத்தெரியாது இந்து, அஞ்ஞானி என்று கூறிய மக்கள் பலரையும் சைவராகச் சேர்ந்துக் கணக்கெடுக்கப்பட் டிருக்கிறது என்றாலும் இன்று தங்களைத் தாமே சைவரென்று கூறிக்கொண்டிருக்கும் ஒரு கூட்டத்தார் பிறசாதியார்கள் தங்களைப் பார்க்கிலும் எத்தகைய மேலான சைவ ஒழுக்கத்தைப் பழுதறப் பூண்டிருந்தாலும் அவர்களைச் சைவராக இப்பிறவிப் போலிச் சைவர்கள் புகலார் என்றாலும் திரு. அ. வரத நஞ்சைப்பிள்ளை அவர்கள் செந்தமிழ் செல்வி சிலம்பு 7 பரல் 2இல் எச்சாதியாரா யினும் உண்மை நெறியில் உயிர்கட்கிரங்கி நல்லொழுக்கம் நாடுவார் களாயின் அவர்கள் உயர்வுடைய மரபினரே. ஒழுக்கம் விடுத்து தான் பிறந்த குல நலத்தால் உயர்வேன் என்பவன் மிகவும் கீழ்ச் சாதியானே இஃதே பண்டைப் பெரியார் உட்கோளாம் என்றும், சுவாமி வேதாசலம் என்னும் மறைமலையடிகளால் நடத்தப் பெறும் அறிவுக் கடல் (ஞானசாகரம்) என்னும் திங்கள் வெளியீட் டில் ஓர் உண்மைச் சைவர் என்னும் புனைப்பெயருடன் அறிஞர் ஒருவர் ஜாதி வித்தியாசமும், போலிச் சைவரும் என்ற தலையங்கத் துடன் எழுதிய ஒரு நீண்ட கட்டுரையில், பிறப்பினால் சைவரென்று தம்மை உயர்த்திச் சொல்லிக் கொள்வோரிற் சிலர் சீவகாருண்யமும், சிவபக்தி, அடியார் பக்திகளும் இல்லாராய் அகங்காரமிருந்து பொய்யும், புனைவும், வஞ்சகமும் பொறாமையும் நிரம்பிப் பிறரைக் கொல்லாமற் கொல்லுவதில் கருத்தூன்றி அலைகிறார்கள்; இத்தன்மையோரை உயர்ந்த குலம் என்று கூற அறிவுடையோர்க்கு நாஎழுமா? உலகத்தாரும், அறிவுடையாரும் ஒருவன் பிறப்பை நோக்காது அவன் நற்குணம் உள்ளவனா? நல்லொழுக்கம் வாய்ந்தவனா? என்றன்றோ வினாவுகின்றார்கள். ஆசிரியர் தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனாரும் தம் குடிமை என்னும் அதிகாரத் தில் உயர்குலம், இழிகுலம் என்பன ஒழுக்கத்தாற் சிறந்த குலம், ஒழுக்கத்தாற்றாழ்ந்தகுலம் என்று வெள்ளிடைமலைபோல் விளங்க உரைத்தாராகவும். ஆசிரியர் கருத்தறிந்த பரிமேலழகரும் நான்கு வருணத்திலும் உயர்குலமும் தாழ்குலமும் உண்டென்பதை விளக்கினாராகவும் அவற்றையறியும் அறிவு சிறிதுமில்லாத போலிச் சைவர் குலம் பிறப்பினாலேதான் என்று நாயனாரும் சொன்னா ரெனத் தோன்றியவாறெல்லாம் பிதற்றுவர்; அவர் பிதற்றுரையின் பொய்மையை யாம்மேலே எடுத்துக் காட்டிய ஒழுக்கம், உடமை, குடிமை, இழுக்கம் இழிந்த பிறப்பாய்விடும் என்னும் நாயனார் அருமைத்திருவாக்கால் தெளிந்துணர்க என்றும் திரு. கா. R¥ãu kÂa ãŸis v«.V.v«.vš., அவர்கள் செந்தமிழ் செல்வி சிலம்பு 5 பரல் 4இல் சமய உயர்ச்சி என்றெழுதிய கட்டுரையில் சிலர் சாதியைச் சமயமென்றெண்ணி சாதியுணர்ச்சி மிக்குடையவராய் சம யத்தைக் கைப்பற்றுபவரை மதியாது, சாதியைக் கைப்பற்று பவரையே பெரிதும் போற்றுகின்றனர். நமது சிவாலயங்களில் சாதியுணர்ச்சி மிகையினால் சமயம் நிலைகுலைத்து நிற்கின்றது. சைவசமயக்கொள்கையும், சைவசமய ஒழுக்கமுமில்லாத பிறர்க்கும் சைவசமயிகளைப் பார்க்கிலும் சிறந்த உரிமைகள் ஏற்பட்டுவிட்டன. சைவசமயத்தைப் பற்றி யொழுகும் கீழ் குலத்தார்க்கு அவர் பிறப்புக் காரணமாக கோயில் புகாமல் முதலிய பல இடஞ்சல்கள் ஏற்பட்டு விட்டன. இவையெல்லாம் மெய்ச்சமய உணர்ச்சி செம்மையாக நிலையாமையான் வந்த கேடுகளாகும். இவையெல்லாம் உண்மைச் சைவக் கொள்கையை மறுப்பனவாகும். சிவதருமோத்தரத்தில், புலையரே யெனினும் ஈசன் புலன் கழ லடியிற்புந்தி நிலையரேல் அவர்க்குப்பூசை நிகழ்த்துதல் நெறியே யென்றும் தலைவரே யெனினும் ஈசன் தாமரைத்தாழில் நேசம் இலரெனின் இயற்றும் பூசைப் பலன்தரு வாரே யாரே என்று கூறியிருக்கிறது என்பதையும் எடுத்துக் காட்டியுள்ளார். இத்தகைய சீர்திருத்த சைவ அறிஞர்கள் கூறிய கூற்றிலிருந்து யாம் ஒரு முடிவிற்கு வரவேண்டியதிருக்கிறது. அஃதென்னவெனின் அறிவுடையார் ஒருவரால் மதிக்கப்படும் ஒரு கொள்கையே சிறப் பானதே யொழிய அறிவிலா மக்கள் ஆயிரவர் மதிப்பினும் அஃது சிறப்புடையதாகா. இதுபற்றியே திரு.எம். கே. காந்தி அவர்களும், காட்டுமிருகங்களாகிய கரடி, புலி, சிங்கம் முதலியவற்றிலும் மனுஷன் பலத்திற் குறைந்தவனாயினும், தன்னிடத்துள்ள புத்திக் கூர்மையினாலல்லவா அக்கொடிய மிருகங்களை யடக்கியாண்டு வருகின்றான்? அதுபோலவே மனுஷருக்குள்ளும் விவகாரம் நேர்ந் தால் சனத்தொகையிற் கூடிய கட்சி வெற்றியடையுமென்றெண்ணு வது அறியாமையாம். புத்திமான் பலவானாவான் புயபராக் கிரமத்தை நுட்பபுத்தி வெல்லுவதுபோல அறநெறிபற்றி யொழுகுவ தாலுண்டாகும் தைரியம் புய பராக்கிரமத்தையும் வெல்லும் என்று கூறியதும் நம் கருத்தை நன்கு வலியுறுத்தும். எனவே அன்பு என்பதே சிவம் எனவும், அதுவே சைவம் எனவும் சைவர் என்று கூறிக்கொள்ள விரும்புவர் எத்தேசத்தவராயினும் எக் குலத்தவராயினும் எவ்வேடத்தவராயினும் அன்பின் வழி வாழ்வ ராயின் அவரே உண்மைச் சைவர் என்பதும் இதுவே. சைவத்தின் உண்மையென்பதும் அறியக் கிடக்கின்றது. இனி சீவகாருண்யத் தன்மையைப்பற்றி ஆராய்வோம். சீவகாருண்ணியம் என்பதன் பொருள் உயிர்களிடத்தில் இரக்கம் கொள்ளல் என்பதே. உயிர் என்பது மனிதன், மிருகம், பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, மரம், செடி, கொடி முதலிய எல்லா வளர்ச்சியுள்ள பொருள்களைக் குறிப்பதென்றாலும் சைவர்கள் என்பவர்கள் பெரும்பாலும் உயிர்கள் என்பவைகள் மிருகம் பறவை, ஊர்வன, நீர்வாழ்வன முதலியவைகள் தான் என்று எண்ணிக் கொள்ளுவதுடன் அவைகளிடத்தில் மாத்திரம் அன்பு பாராட்ட வேண்டும் என்று எண்ணிக்கொண்டும், சொல்லிக் கொண்டுமிருக்கி றார்கள். வைதீகச்சைவப் பெரியார்களிற் சிலர் உயிர்களிடத்தில் அன்பு பாராட்டினாலும் சரி, பாராட்டாமல் விட்டினும் சரி முழு முதற் கடவுளாகிய சாஷாத் எம் பெருமானாகிய சிவபெருமா னிடத்தில் அன்பு பாராட்டுவது தான் மேலானது, அதுவே நம் பிறவிப்பிணியைப் போக்கவல்லது, கண்ணப்ப நாயனார் சீவ காருண்யம் என்றால் இன்னதென்றறியாது புலாலுணவு உண்டுவந்த வேடராயிருந்தாலும் இறைவன் பேரில் மிகுந்த அன்பு (பக்தி) கொண்டிருந்ததினால் இறைவன் அவர்பால் பேரன்பு கொண்டு இன்ப வீடளித்தான். சைவப் பெருமக்களால் இன்றளவும் அக் கண்ணப்பர் நாயனாராகப் போற்றப்பட்டு வருகின்றார் என்று பல உதாரணங்கள் காட்டித் தங்கள் கொள்கையை நிலை நிறுத்தப் பார்க்கின்றார்கள். ஆனால் இவர்கள் கூறும் கூற்றுகள் எல்லாம் சைவத்தின் உண்மை நிலைக்கு முற்ற முற்ற மாறுபட்டதாகும். சைவசமய சாத்திரங்கள் எல்லாம் இறைவனை ஒரு ஆண் என்றோ, பெண் என்றோ, அலியென்றோ, வேறு பொருள்களென்றோ கூறவில்லை. அஃது அன்பு, அன்பு என்று பலகாலும் அறிவுறுத்து கின்றது. அன்பாகிய இறையை நாம் அடைய நம் உள்ளம் அன்பால் நிரம்பப் பெற்றிருத்தல் வேண்டும். அன்பின் வடிவமாகிய இறைவன் இப்படியன், இந்நிறத்தன், இவ்வண்ணத்தன் என்று எவராலும் காட்ட முடியாது. எனவேதான் அவ்வன்பாகிய இறைவனையடைய நம்முள்ளத்தில் அன்பை வளரும்படி செய்யவேண்டும். ஆனால் அந்த அன்பை எவ்வாறு நம்முள்ளத்தில் நிலவச் செய்வது என்பதே ஈண்டு நம்முன் ஒரு பெருங்கேள்வியாய் நிற்கின்றது. இக்கேள்விக்குத் தக்கபதில் நம் முன்னோர்கள் பலப்பல சைவ நூற்களிலும் எழுதி விட்டுச் சென்றிருக்கிறார்கள். சைவர்களிற்பலர் அதன் நுண் பொருள்களை யுணர்வதில்லை. உணர்ந்த சைவத் தலைவர்கள் என்போர் மக்கள் யாவரும் விளங்கிக்கொள்ளும் முறையில் கூறாது பரிபாசையில் கூறுகின்றார்கள். பலர் இதன் கருத்துக்களைத் திரித்துக் கூறி மக்களை வழிகெடுத்து வருகின்றார்கள். எனவே சைவத்தின் அடிப்படையான இக்கொள்கையைக் கூட சைவ மக்கள் நன்கறிந்து கொள்ளாது பெயரளவில் சைவராக இருந்துகொண்டு சைவத்தின் உண்மைக்குமாறான கொள்கையைப் பின்பற்றி, தெய்வம் அன்பு அன்பு என்று அரற்றிய நாயன்மார்கள் திருவாக்கின் பொருளையும், அறிவான தெய்வமே அறிவான தெய்வமே என்று மொழிந்த தாயுமானவர் முதலிய அறிஞர்களின் ஆழ்ந்த கருத்துக்கள் பொதிந்த அமிர்த மொழிகளையும் நம்பி நடவாது இவ்வுலகில் சைவர்களென்போர் மூட நம்பிக்கையிலாழ்ந்து, அறிவான தெய்வத்தைக் காணாது பகுத்தறிவை யிழந்து அநாகரீகச் செயல் களுக்கிருப்பிடமாய் விளங்கி எல்லாவற்றிற்கும் தாங்கள் கஷ்டப் பட்டுத் தேடிய பொருள்களை வீணாகச் செலவழித்து வறியராய் இன்று உலக மக்களின் கண்களுக்கு விலங்குகள்போல் தோற்றப் படுகின்றனர் என்பது ஒரு சிறிதும் மிகையாகா. அறிவான தெய்வமே என்று பாடிய பெரியார்களின் கூற்றை இற்றைஞான்று வாழும் சைவத் தலைவர்கள் சிறிது நேரமாவது சிந்தித்துப் பார்த்து அதில் தாம் கண்ட உண்மையை உலகிற்கு வெளியிடுவார்களேயானால் சைவ உலகம் அதி சீக்கிரம் உன்னத நிலையையடையும் என்பதில் எம்போன்றோர்க்கு எள்ளளவும் ஐயமின்று. இது நிற்க, நாம் அன்பின் வடிவமாய் விளங்க நம்முள்ளத்தே சிறிது சிறிதாக அன்பை வளர்த்தல் வேண்டும். முதலில் இயற்கையாகவே நாம் ஒரு பெண் மகளிடத்தில் அன்பு செலுத்த ஆரம்பிக்கிறோம். இஃது உலகி லுள்ள ஒவ்வொரு உயிர்ப்பிராணிக்கும் உற்ற வயதில் தோன்றிவருவது பிரத்தியட்சம். எனவே அழகிற்கோ, பொருளிற்கோ, ஏனைய நலத் திற்கோ ஒரு பெண்பால் அன்பு கொள்ளாது இயற்கையாகவே தோன்றும் அன்பை செலுத்துவதற்கே காதல் என்ற பெயர். இக்காதல் தான் அன்பாகிய தெய்வம். நம்முள்ளத்தே வளரச்செய்வ தற்குரிய அதிவாரம் என்று சொல்லவேண்டும். இதனால்தான் சைவ சித்தாந்த அருந்தலைவர் உயர் திரு. கலியாணசுந்தர் முதலியாரவர்கள் முதலாவதாக இருவர்பாலும் காதல் நிலவல் வேண்டும். அக்காதல் பெருநிலைகூட்டும். காதலாவது தலைவி தலைவர்களுக்குள் நிகழும் கடவுள் அன்பு. தலைவி தலைவனைக் கடவுளாகக் கோடலும், தலைவன் தலைவியைக் கடவுளாகக் கோடலும் காதலாகும். கடவுளாவது எல்லாவற்றையும் கடந்து நிற்பது. இந்நிலை பெருவோர்க்கு கூடாவொழுக்கம் இயல்பில் நிகழாது. இக்காதல் வழி யெய்தாதார் காமவயபட்டு வாழ்வைக் குலைத்துக் கொள்வர் என மொழிந்துள்ள வார்த்தைகளின் நுண்பொருள்கள் எம் கருத்தை வலியுறுத்தும். சுவாமி வேதாசலம் என்னும் மறைமலையடிகள் திருப்பாதிரிப்புலியூர் சைவப்பெரியார் மஹாநாட்டுத் தலைமைப் பிரசங்கத்தில் உலகிய வொழுக்கத் திற்கும் இறைவன் திருவடிப்பேற்றிற்கும் ஆணிவேர்போல் இருப்ப தாகிய இவ்வின்ப ஒழுக்கமானது மெய்யன்பின் வழி நடக்குமாயின் அப்போதுதான் அது காதலின்பம் என உயிர்த்து பேசப்படுமென் பதும், அஃது அங்ஙனம் அன்பின் வழி நடவாதாயின் இழிந்த காமம் என இழித்துப் பேசப்படுமென்பதும் நம் செந்தமிழ்த் தெய்வ ஆசிரியர் வாக்கு எல்லார்க்கும் ஒத்தமுடிபாயிருகின்றனஎன்று கூறியதும் செந்தமிழ்ச் செல்வி சிலம்பு 6 பரல் 12இல் சைவப் புலவர் இளவழகனாரவர்கள் மக்களுயிர்களின் அறியாமைத் தேய்வுக்கும் அறிவு வளர்ச்சிக்கும் காதலுணர்ச்சி வாய்ந்த இல்லறவாழ்க்கை இன்றியமையாத கருவியாய் முடிகின்றதென்பது தெளிவாய் விளங்கும். எனவே அறியாமையை ஒழித்து அறிவைப் பெருக்கிக் கொள்ளும் அரிய நோக்கத்தோடு பிறக்கும் ஒவ்வொருவரும் காதல் மணம் புணர்ந்து இல்லறம் நிகழ்த்துதலான பெருங்கட்டாயத்தி லிருக்கின்றாரென்பது சொல்லாமலே பெறப்படுகின்றது. இன்றேல், அவர்க்கு அறியாமை கழலலும் அரிதாய்ப் பின்னர் அறிவு விளங் களும் அரிதாய், அவ்வாற்றல் இறைவன் திருவருளுற்று வீறு பெருத லும் முற்றும் அரிதாய் முடிவில் யாதும் இல்லையாய் அவர் பிறப்பின் நோக்கம் நிறைவேறாதாய் ஒழிந்திடும் என்று கூறியவைகளும் மேலும் மேலும் எம் கருத்தை அரண்செய்வதாயிருக்கிறது. முதலாவதாக அன்பைப் பெருக்க மனைவியிடத்திலும் பின்னர் மக்களிடத்திலும் பின்னர் உலகிலுள்ள ஏனைய மக்களிடத் திலும் செலுத்திப் பின்னர் ஏனைய உயிர்ப்பிராணிகளிடத்திலும் செலுத்தி அன்பு வடிவமாய்மிளிர்தல் சாலும். அஃதன்றி உருவ முடைய கடவுள் ஒருவன் இருக்கின்றான் என்றோ அவனிடத்தில் மக்கள் அன்பு பாராட்ட இலட்சக்கணக்காய்ப் பொருள் செலவு செய்து ஆலயங்கட்ட வேண்டுமென்றோ சுவர்ண விக்கிரகம் செய்து நவரத்தினங்களால் அலங்கரித்து பொங்கல், புளியோதரை, தேங்காய், பழம் முதலியவைகள் கொடுத்தல் வேண்டுமென்றோ சைவம் கூறவில்லை. உயிர்களிடத்தில் அன்பு கொள்ளலே இறைவன் பால் செலுத்தும் அன்பு என்று சைவம் முழங்குகின்றது. எவ்வுயிரும் பராபரன் சந்நிதியதாகும் இலங்கு முயிர் உடலனைத்தும் ஈசன் கோவில் என்ற சிவஞான தீபத்தின் மெய்மொழியாலும் உயிர்களே பராபரன் சந்நிதியென்றும் உடல்களே ஈசன் வாழுங் கோவிலென்று முணர்ந்து உயிர்களிடத்து அன்பு பூண்டு மக்கள் வாழக்கடமைப்பட்டுள்ளார். அஃதன்றி உயிர்களிடத்து சிறிதும் காருண்யம் காட்டாது இறைவன் கற்பணியினாலமைக்கப்பட்ட இருட்டறையாகிய கோவில்களிலும் பெரிய தேரிலுந்தான் வாசம் செய்கிறான் என்று அங்குபோய் பொருளை வாரி வாரி யிறைத்து சாம்பலுடன் திரும்புவர் நிச்சயமாய் ஏமாற்றமடைவர். தேரைத் திருநாளைச் சேவிப்பார் தம்மைவிட்டங் காரைத் தொழப் போரார் ஐயகோ! தேரிடையே பார்க்கின்ற தெய்வம் பரிபூரண மலவோ யார்க்குந் தெரியாத தோ என்று கூறிய சொரூப சாரத்தின் நன்மொழியும், எல்லா உயிர்களின் உடலும் இறைவன் வாழும் இல்லமே என நினைந்து எல்லா உயிர்களிடத்தும் அன்பு கொள்ளு என்ற சைவசமய நெறியிற்கண்ட பொன் மொழியும், நாம் கோயிலென்று கூறி கட்டிடத்தைக் கட்டிவிடுவதால் அதில் கடவுள் வசிப்பது நிச்சயம் என்று நினைப்பது மூட நம்பிக்கை யாகும் என்ற திரு. எம். கே. காந்தியவர்களின் கூற்றையும் ஆராய்ந் தால் இறைமாட்டு மக்கள் அன்பு செலுத்துதல் அரிதென்பதும் உயிர்களிடத்தில் செலுத்தும் அன்பே இறைவனிடத்தில் செலுத்தும் அன்பு என்பதும், ஆலயம், விக்ரகம், நைவேத்தியம் முதலியவற்றில் மக்கள் பணத்தை வீணாக விரையஞ் செய்வதினால் இறைவனை (அன்பை அல்லது அறிவை) அடைதல் முடியாதென்பதும் ஈண்டு நன்கறியக் கிடக்கின்றது. எனவே இனி அன்பை உயிர்களிடத்தில் எவ்வாறு காட்டலாம் என்பதையும் ஒருவன் ஏனைய உயிர்களிடத்து எத்துணைதூரம் அன்புகாட்ட முடியும் என்பதையும் அவ்வாறு உயிர்களிடத்து காட்டும் அன்பை ஜீவகாருண்யத்தை எத்தனை வகையாய்ப் பிரிக்கலாம் என்பதும் உயிர்கள் என்பது மனிதப் பிராணிமட்டும்தானா? அல்லது நடப்பன, பறப்பன, நீர்வாழ் வன, ஊர்வன, மரஞ்செடி, கொடி முதலிய எல்லாமடங்குமா? என்றும் அவைகளிடத்தில் காட்டவேண்டிய ஜீவகாருண்ய முறையைப் பற்றியும் இனி ஆராய்வோம். சைவரொழிந்த ஏனைய சமயத்தினர் எல்லோரும் மனிதர் களைத்தவிர ஏனைய பொருள்களுக்கெல்லாம் உயிர் இல்லை யென்று சிலரும், பகுத்தறிவு இல்லையென்று சிலரும், ஊமைப் பிராணிகளென்று சிலரும் கூறி வந்தனர். ஆனால் அறிஞர் ஜெகதீச சந்திரபோ அவர்கள் ஆராய்ச்சிக்குப் பின்னர் மரம், செடி, கொடி முதலியவைகளும் பேசும் திறமும் அறிவும் பெற்றிருக்கின்றது என்ற முடிவுக்கு வந்தபோதிலும் தற்காலச் சைவர்களோ மனிதர்களைத் தவிர மற்றையப் பிராணிகளெல்லாம் உயிர்கள் என்ற அறியாமை மிகுந்த தம் கொள்கையை எவ்விதத்திலும் மாற்றிக்கொள்கின்றார்க ளில்லை. தலைவர்களோ அதைப் பற்றிக்பேசுகின்றார்களில்லை. எடுத்துக்காட்டாக நம் நாடெங்கும் ஆடு, மாடு, கோழி முதலிய பிராணிகளை இம்சிக்காது தடுக்க ஆங்காங்கே சைவர்கள் என்போர் ஜீவகாருண்யப்பிரசாரம் செய்கின்றார்களே யொழிய இலங்கை, மலாய், பிஜி முதலிய நாடுகளில் இந்திய மக்கள் இலட்சக்கணக்காய் நாயினும் கேவலமாய் நடத்தப்பட்டும் உயிர்க்கொலை செய்யப்பட் டும் இந்திய நாட்டிலே பலவூர்களிலே பன்றி, நாய், கழுதை முதலிய பிராணிகள் செல்லுமிடங்களில் கூட மனித உடல் தாங்கியுள்ள உயிர்ப்பிராணிகள் நடமாடவொட்டாது விரட்டியடிப்பதும் ஈ, எறும்பு, புறா, கிளி, யானை, ஒட்டகம் முதலிய பிராணிகள் எல்லாம் செல்லும் ஆலயங்களில் மனிதரிற்சிலர் உட்புகுந்தால் விரட்டி யடித்து அவர்களை இம்சிப்பதும், தாழ்ந்த ஜாதியார் என்று பெயர் சூட்டியுள்ள மக்கள் உடற்பிணியால் தனியே காட்டில் வீழ்ந்து கிடந்து வருந்தி தண்ணீர் தாகத்தினாலோ, நோயின் கொடுமையி னாலோ ஐயா! ஐயா!! என்று கதறினும் அவனருகே சென்று அவ னுக்கு உதவி புரியாத மனப்பான்மையைப் பெற்றிருப்பதும் என்று நாம் நாளடைவில் கண்டும் கேட்டும் வருவதும் மக்களின் அறியா மையைப் போக்கி அறிவை வளர்க்கும் பாட சாலையில் மேல் சாதிக்காரர்கள் என்போர் தாழ்ந்த சாதிக்காரர்கள் வந்து கல்வி பயில வொட்டாது தடை செய்வதும் எத்துணை கொடிய தாகத்தினால் வந்தாலும் உயர்ந்த குலத்தார்கள் என்பவர்கள் தண்ணீர் எடுக்கும் கிணறுகளில் தாழ்ந்த ஜாதியார் என்போர் தொட்டு தண்ணீர்எடுக்க மறுப்பதும் அக்கிணற்றிலே மீன், பாம்பு முதலிய பிராணிகள் எப்பொழுதுமிருக்க மன மகிழ்ச்சியுடன் இசைவதும், தாழ்த்தப் பட்ட சாதி ஆண்மக்களிற்சிலரை உயர்ந்தோர் கண்டால் மேல் வேட்டி சட்டைகள் போடக்கூடா தென்று கட்டாயப்படுத்துவதும் அக்குலப்பெண்மக்கள் ரவிக்கைகள் போடக்கூடாதென்பதோடு மட்டுமல்லாது மேலே சேலையும் போடாது மார்புதிறந்திருக்கும் படி செய்வதும் இச்செயல்கள் பலவற்றிற்கும் சைவர்கள் காரணமா யிருப்பதோடு பல செயல்களை பிறசமயக்கொள்கையைப் பின் பற்றுகிறவர்கள் செய்யும் பொழுது சைவர்கள் களிப்புடன் பார்த்துக் கொண்டிருப்பதும் கண்டால் சைவர்களெல்லாம் மனிதர்களிடம் காட்டும் அன்பு, ஜீவகாருண்யம் ஆகாது. மிருகம், பட்சி முதலிய வற்றிடம் காட்டும் அன்புதான் ஜீவகாருண்யம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நன்கு காட்டும். எனவே ஜீவகாருண்யத்தின் தன்மையை சைவர்கள் என்போர் ஒருசிறிதும் அறியாது மயங்கிக்கிடக்கின்றார் என்பது நன்கறியலாம். இது பற்றியே காங்கிரஸின் தனிப்பெருந்தலைவர் திரு. எம். கே. காந்தி அவர்கள் ஹிந்து சமூகம் தன்னால் ஒடுக்கப்பெற்றவை (தீண்டாதார் என்று சொல்லப்படுவோரை) உயர்த்துவது ஹிந்து மதத்திலுள்ள மாசைத்துடைப்பதாகும். இவ்வகுப்பாரை இப்பொழுது நடத்தும் முறை சமய ஞானத்துக்கும் ஜீவகாருண்ய ஒழுக்கத்திற்கும் மாறு பட்டதாகும் என்று கூறிய வாக்கிலிருந்தும் மக்களிடத்தில் சைவர்கள் நடந்து கொள்ளுமுறையிலிருந்து அன்னோர் மக்களிடத்தில் காட்டும் அன்பிற்கும் ஜீவகாருண்யம் அன்றென்றோ அல்லது ஜீவ காருண்யத்தின் தன்மையை ஒரு சிறிதும் அறியாதவர்களென்றோ மறுபடியும் மறுபடியும் கூறவேண்டியதிருக்கிறது. நிற்க இனி ஜீவகாருண்யம் காட்ட வேண்டிய முறையை மூன்றாக வகுத்து முதலாவதாக மக்களிடத்தில் காட்டும் அன்பு, இரண்டாவதாக மிருகம், பறவை முதலியவற்றிடம் காட்டும் அன்பு, மூன்றாவதாக நகராப்பிராணியாகிய மரம், செடி, கொடி முதலிய வற்றிடம் காட்டும் அன்பு என்பதாக வகுத்துக்கொண்டு ஜீவ காருண்யத்தன்மையை ஆராய்வோம். மனித உடல்தாங்கியுள்ள உயிர்களிடத்தில் காட்டும் ஜீவகாருண்யம் உலகிலுள்ள எல்லாச் சீவப்பிராணிகளுள்ளும் மனித பிராணியே உயர்ந்தது என்று எல்லாச்சமயமும் ஒத்துக் கொள் கின்றது. சைவம் அதை எவ்விடத்திலும் மறுக்கவில்லை. எனவே மனிதப்பிராணிகளிடம் ஜீவகாருண்யம் காட்டுதலே மக்களின் தலையாய கடன் என்பதை யாவரும் அறிவர். பிறசமய மஹான் ஒருவர் தன் கண்முன்காணப்படும் சகோதரனிடம் அன்புகாட்ட முடியாவிட்டால், தன் கண்முன் காணப்படாத கடவுளிடம் அன்பு பாராட்ட முடியாதென்று கூறியுள்ளார். ஆகையினால்தான் கடவுளிடம் அன்பு பாராட்டி மோட்ச சாம்பிராஜ்யத்தையடைய அவாவுற்று நிற்கும் ஆதிகப் பைத்தியக்காரனும் மனிதர்களிடத் தில் காருண்யம் காட்டினால்தான் ஆண்டவனிடம் அன்பு பாராட்ட முடியுமென்பதை அறிந்திருக்கக் கடமைப்பட்டிருக் கிறான். இதையெல்லாம் கவனியாது நமது முன்னோர்கள் முட்டாள்களா? அவர்களுக்குத் தெரியாததையா தற்கால சீர்திருத்தக்காரர்களறிந்து விட்டார்கள்? பசு (உயிர்கள்) அன்பை விட பதி (கடவுள்) அன்பே சிறந்தது என்று, மக்களுக்கு அளவிடற் கரிய அருந்துன்பங்களெல்லாம் அல்லும் பகலும் இடைவிடாது புரியும் கொடிய துஷ்டனும் காலையிலெழுந்து குளித்து திரு நீரணிந்து நித்யகாமானுஷ்டாணங்களைச் சரிவரப்புரிந்து உருத்தி ராக்கம் பூண்டு ஆலயம் புகுந்து 108 முறைவலம் வந்து சிவ, சிவ என்று கோடிமுறை யுச்சரித்து தாம் கொண்டுவந்திருக்கும் தேங்காய் பழம் கர்ப்பூரம் முதலியவற்றை அர்ச்சகப்பார்ப்பான் கையிற் கொடுப்ப தோடு இரண்டணா தட்சணையும் கொடுத்து தீபாராதனையைக் கண்குளிரக்கண்டு மகிழ்ந்து அப்பார்ப்பான் கொடுக்கும் பிர சாதத்தை கண்ணிலொற்றி விபூதிப்பிரசாதத்தை வாயிலும், தலை யிலும் போட்டு நெற்றியிலணிந்து குரல்வளையை இறுக்கி பிடித்துவிட்டு சந்தனம் முதலியவைகளை யணிந்தும் ஆங்கு போந்த தாசியின் கடைக்கண் பார்வையில் மயங்கி உடலெல்லாம் புளகாங் கிதம் பூண்டு நிற்கும்போது ஒரு கோயிற் பார்ப்பான் விலகிநிற்கும்படி வாழைமட்டையால் முதுகில் அடிக்கும் அடியையும் பெற்றுக் கொண்டு வெளிவந்து ஆஹா! இன்று என்ன பிரமானந்தம் அந்த எம்பெருமான் காட்சியை என்னென்று மொழிவது என்று கூறிக்கொண்டிருப்பது உயிர்களிடத்தில் காட்டும் கருணையிலும் மேலானது. இதைத் தான் நமது முன்னோர்களும் அனுட்டித் தார்கள். நாமும் அனுஷ்டித்துக்கொண்டிருக்க வேண்டுமென்று கூறினால் நாங்கள் சிறிது கடுமையாக அவர்கள் வடிகட்டின முட்டாள்களாயிருக்கிறார்களென்றோ சைவத்தின் உண்மையை யும் சீவகாருண்யத் தன்மையையும் ஒருசிறிதும் உணராத சமயப் புல்லுருவிகளென்றோ கூறவேண்டியது நேரிடுகின்றது என்று வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு எடுத்தற் கெல்லாம் முன்னோர்சென்ற வழி முன்னோர்சென்ற வழி, என்று பகுத்தறிவைப் புறக்கணித்து வாழும் மக்களைக் குறித்துத்தான் சுவாமி விவேகானந்தர், ஆயிரக்கணக்கான வருஷங்களாக ஏற் பட்ட பயிற்சிக்குப்பின், நாம் திரமான ஒரே மாதிரியில் உண்டு குடித்து குளித்து உறங்கி நடக்கும்படி நமது முன்னோர்கள் நம்மை அவ்வளவு ஒழுங்காகவும் சரியாகவும் பயிற்றுவைத்திருக்கிறார்கள்; பலன் யாதெனில், நாம் மெல்ல மெல்ல வெறும் யந்திரங்களாய் விட்டோய்; ஜீவன் நம்மிடத்தினின்றும் வெளியே போய்விட்டது. ஆம் என்றோ, அல்லது இல்லையென்றோ சொல்லாத, முன்னோர்கள் சென்ற வழியிலேயே சென்றுகொண்டிருக்கின்ற, கடைசியில் அழுகி மரிப்பதற்குத் தயாராகி ஆலோசனைக்குள்ள வதந்திர சக்தியையெல்லாம் இழந்துவிட்ட அத்தனை அசையும் யந்திரங்கள் மாத்திரமேயாயிருக்கின்றோம் என்று கூறியுள்ளார்கள். உயர்திரு. குத்தூசி அவர்கள்.....xU கொள்கையைப் பலபேர் வழி பட்டிருப்பதாலும், அல்லது அதை நூற்றாண்டுகளாய் நம்பி வருகிற படியாலும், அல்லது ஜனங்கள் பூஜிக்கத்தக்க புதகத்தில் அது எழுதப்பட்டிருப்பதாலும் தீயதை ஏற்றுக்கொள்ளக்கூடாது; விசயத்தை நீயே யோசித்து அது சரிதானா என்பதை நீயே மதிக்க வேண்டும் என்று மொழிந்துள்ளார். பெரியார் கௌதமபுத்தர், அங்கூத்திர நிக்கியாவில் காலமாசூத்திரத்தில், எது ஒரு விஷயத்தை யும் அதை சும்மா சொன்னதினாலும் சரி, அல்லது பண்டைய நாட்களிலிருந்து வந்த ஐதீகமானாலும் சரி, வதந்தியானாலும் சரி, பெரியார்கள் எழுதிவைத்த சாசனமாக விருந்தாலும் சரி, ஏதோ ஒரு சுவாமியின் அருள் வாக்காயிருக்கலாம் என்று நிதானிக்கக் கூடியதா னாலும் சரி, தெய்வாதீனமான ஒரு முடிவாக நாம் அனுமானித்துக் கொண்டிருந்தாலும் சரி, நமது ஆசாரியர்கள், குருக்களாகிய இவர் களுடைய பிரமாணமாக விருந்தானாலும் . அதை நம்பக்கூடாது. ஆனால் சாசனம், கொள்கை, போதனை எதுவும் நம்முடைய சுய புத்திக்கும் மனச்சாக்ஷிக்கும் ஒத்துவருமானால் அப்போது அதை நம்பவேண்டும் என்று கூறிவிட்டு கடைசியாய் இதற்காகத் தான் நான் சொல்லக்கேட்டதால் நீங்கள் வெறுமையில் நம்பக்கூடாது. ஆனால் உங்கள் மனச்சாட்சி அறிய நம்பினீர்களானால் அப்போது அதன் படி தாராளமாய் நடந்து கொள்வீர்களென்று கூறியுள்ள மொழிகளெல்லாம் ஆராய்ச்சி செய்தற்குரியது. ஜீவகாருண்யம் காட்டும் முறையிலும் முன்னோர் வழியைப் பின்பற்ற முயற்சித்தல் மூடத்தனம், முன்னோர் வழியில் நல்லதுமுண்டு தீயதுமுண்டு. எனவே அறிவையுபயோகித்து நலமானதைக் கைக்கொள்ளலே சிறப்புடையது. இதை யுன்னித்தான் சைவ சமயப் பெரியார்களி லொருவரான உமாபதி சிவாச்சாரியார், தொன்மைய வாமெனுமெவையு நன்றாகா வின்று தோன்றியநூலெனு மெவையுந் தீ தாகா என்று மொழிந்துள்ளார்கள். எனவே உண்மை சைவர்கள் பழமை, புதுமை என்பதைப் பற்றி ஆராயாது எப்பொழுதும் அன்பைச்சிவ மாகவும், அறிவைச் சக்தியாகவும் கொண்டு வாழக்கடமைப்பட் டுள்ளார். சைவர்கள் மக்களை விலங்கினும் இழிந்ததாய் கருதாது மனிதர்களாய்க் கருதுவார்களாயின், உண்மைச்சைவ ஒழுக்கத்தைப் பின்பற்றி நடப்பார்களாயின் லட்சக்கணக்காய், கோடிக்கணக்காய் மக்கள் உண்ண உணவின்றி தவிக்க பாழான கல்லுக்கு ஆண்டிற்கு ஒருமுறை கோடிக்கணக்கான பொருள் செலவுசெய்து கற்கோவி லமைத்து பழம், பாயாசம், தயிர், பால், பன்னீர், தேன் முதலிய பொருள்களால் அபிஷேகம் செய்வதும், லட்சக்கணக்கான நம் நாட்டுமக்கள் தங்கள் மானத்தை மறைக்க சுத்தமான துணியற்று கந்தையாடையைக் கட்டி அரை நிர்வாண அலங்கோலமாய்த் திரியும் பொழுது அறிவிலாக் கல்லுக்கு விலையுயர்ந்த பட்டாடை புனைகின்ற முட்டாள் தனமும், லட்சக்கணக்கான குழந்தைகள் பால் கிடையாது நெய் கிடையாது நோய்வாய்ப்பட்டிருக்கும் பொழுது பாலபிஷேகம் செய்வதும் நெய் அபிஷேகம் செய்வதும் சுருக்கமான செலவில் மிகப்பிரகாசமான மின்சார விளக்குகள் போடுமிக்காலத்தில் மிக மங்கலான நெய்விளக்கும் நெய்த் தீவட்டிகள் போடுவதும் உண்ண உணவும், உடுக்க உடையும் வசிக்க வீடுமற்று பல்லாயிர மக்கள் தெருவினின்று அலைய அவர்களுக்கு ஒரு சிறிதும் உதவிபுரியாது ஏராளமான சொத்தும் அழகிய மாளிகையும் திருப்தியான உணவும் உள்ள பார்ப்பானுக்கு அன்ன தானம் பற்பல சத்திரங்கள் மூலமாய்ச் செய்தும் வருவார்களா? இஃது ஜீவகாருண்யச் செயலாகுமா? அறிவுடையோரால் போற்றப் படும் கொள்கையாகுமா? ஐரோப்பாவில் பெரும் போர் நிகழும் போது நம்நாட்டுச் சைவர்கள் எங்கு சென்றார்கள்? இவர்கள் உண்மைச்சைவர்களாயிருப்பின் ஒருசில மக்கள் தங்களின் உயிரைத் தியாகஞ்செய்து சத்யாக்கிரகத்தினால் கோடிக்கணக்கான மக்கள் இறவாது அப்பெரும்போரை நிறுத்தியிருத்தல் வேண்டாமோ? அதுவன்றோ உண்மைச் சைவம். அறிஞர் புத்தர் பிரான் ஆடுகளை யாகத்திற்காகக் கொண்டுபோகும் பொழுது, தமது உயிரைத்துரும் பென நினைத்துப் போந்து ஆடுகள் ஒன்றும் கொலைபுரியாமல் காப்பாற்றினாரே! அவ்வழி நின்று சைவர்களும் மக்களுயிர் விலங்கு களின் உயிரைவிடச் சிறந்தது என்றும் தாங்கள் ஜீவகாருண்ய முடையோர்களென்றும் காட்டக் கிடைத்த பெரும்போரின் சந்தர்ப்பத்தையிழந்து விட்டார்கள். பின்னர் யுத்தத்தில் காயப்பட்ட கோடிக்கணக்கான மனிதர்களுக்கு பல வழியில் உதவி புரிந்திருக் கலாம். அதையும் விட்டுவிட்டார்கள். ஜீவகாருண்யப் பெருக்கினால் தெருவில் நடக்கக் கூடாதென்று கொடுஞ்சட்டம் செய்த திரு வாங்கூர் அரசாங்கத்தின் சட்டத்தை மாற்றி மனிதருரிமையை தாபிக்க வைக்கத்தில் உயர்திரு. இராமசாமி அவர்களால் ஆரம்பிக்கப்பெற்ற அறப்போரில் (சத்தியாகிரகத்தில்) சைவர்களும் சைவத்தலைவர்களும் கலந்து தங்கள் சமயம் ஜீவகாருண்ய சமயம். தாங்கள் சீவகாருண்யச் சீலர்களென்று உலகிற்குக் காட்டியிருக்க லாம். அஃதில்லா விட்டாலும் சமீபத்தில் செட்டி நாட்டில் மேல் சாதித்திமிர் கொண்ட சிலமக்களால் தாழ்த்தப்பட்ட ஆண்கள் சட்டையும் மேல் வேஷ்டியும் போடக்கூடாதென்றும் பெண்மக்கள் தோள்மேல் சேலைபோடக் கூடாதென்றும் ராவிக்கை போடக் கூடாதென்றும் கொடிய இம்சைகள் செய்து வருவது உலக மறிந்த விஷயமாயிருக்க எந்தச் சைவசமயியாவது ஜீவகாருண்யத்தோடு அக்கொடுமைகளை யொழிக்க முயற்சித்தானா? எந்தச் சைவனாவது சட்டசபையில் இதைப்பற்றி ப்ரதாபித்தானா? எந்தச் சைவ பத்திரிகையாவது இதுவிஷயமாய் கிளர்ச்சிசெய்ய மக்களைத் தூண்டிற்றா? vªj¢ irt¡fHfkhtJ (r§fkhtJ) ïij¥g‰¿ áu¤ij vL¤jjh?சில பல சீர்திருத்தக் கொள்கைகள் மிளிரும் தீர்மானங்கள் மூலமாய் உலகத்தை ஏமாற்றிவிடலாமென்று நினைத்த சில சைவப் பெரியார்களால் நடத்தப் பெற்ற திருநெல்வேலிசீமைச் சைவர் முதலாவது மகா நாட்டிலாவது இதைப்பற்றி ஏதாவது தீர்மானங்கள் செய்யப்பட்டதா? செய்கையும் ஒன்றும் புரியாது இப்போலிச் சைவர்கள் ஜீவகாருண்யம்! ஜீவ காருண்யம்!! என்று வாய் கொண்டமட்டில் பிதற்றித்திரிவர். காரியத்திலோ ஒன்றுஞ் செய்யத்துணியார். ஏனெனில் இப்போலிச் சைவர்கள் தங்கள் முன்னோர் வழியைப்பின்பற்றும் சுபாவமுள்ள வர்களாதலினாலே இரக்கமற்று ஆயிரக்கணக்கான சமண மக்களை கழுவேற்றிய பெரியார்களின் அடிச்சுவட்டைப்பின்பற்றி வாழுமிவர்கள் எவ்வித ஜீவகாருண்ய உளத்தோடு வாழ்வார்? இன்று சமணர்கள் கழுவேற்றப் பட்டதை சுயமரியாதைக்காரர்கள் விளக்கியதும் சைவர்கள் அதற்கு அகச்சான்றில்லை, ஆகமச் சான்றில்லை. அதற்குப் பொருள் வேறு. இதற்குப் பொருள் இவ்வாறுதான் என்றெல்லாம் மறுப்புகள் கூறி சைவர்கள் கழுவேற்றவில்லை. மானம் பொருக்கமாட்டாது எண்ணாயிரம் பேரும் தானாகக் கழு வேறி விட்டார்கள் என்று கொஞ்சமும் பகுத்தறிவிற்குப் பொருந்தாத முறையில் கூறி வருவதை ஒப்பினாலும் கழுவேற்றியவிழா இன்று வரை நடப்பதும், திருவிளையாடற்புராணத்தின் கழுவேற்றிய படலத்தில் பின்பு நன்றி தெரியாத சமணர்கள் மானமழிந்து வெட்கங்கெட்டு திருஞான சம்பந்தப்பிள்ளையாருக்கு முன்னே நின்று இன்று நாங்கள் உமக்குத்தோற்றோம் நீரே வென்றீரென்று சொல்ல அதைக்கேட்ட சம்பந்தப்பிள்ளையார் அவர்கள் பிழைக்கும் வழியைக்கண்டு இன்னும் உங்களுக்குத்தரும வழியாகவே சொல்லுகின்றோம், நீங்களேன் வீணேயிறந்து போகிறீர்கள். எல்லோருக்கும் தாய்போற் சிறந்த எங்களுக்கு அடிமையாய் பிழையுங்கள் என்று சொல்ல அதற்குச் சமணர்கள் ஏடசிறு பிள்ளாய்! நீ ஏன் தகாத மொழி சொல்லுகிறாயென்று மானங்கொண்டு தாங்களே கழுக்களி லேறியிறந்தார்கள். அப்படிப்போயேராத சமணர்களையெல்லாம் சைவாசாரத்தைக் கொண்டவர்கள் ஒவ்வொருத்தராக பிடித்து அந்த முத்தலைக்கழுமரங்களிலே ஏற்றியிருத்திக் கொன்றார்கள் என்று கூறப்பட்டிருப்பதுபோன்று இன்னும் பல நூல்களிலும் கூறப்பட் டிருப்பதால் அம்முன்னோர் வழிபற்றியொழுகும் சைவர்களுக்கு ஜீவ காருண்ய மனப்பான்மை யிருக்குமென்று எதிர் பார்த்தலே தவறு என்று கூறும் அன்பர்கள் பலரின் அபிப்பிராயத்தை காய்தல் உவத்த லகற்றி எதையும் ஆராய விரும்பும் அறிஞர்களெல்லாரும் ஒத்துக் கொள்வரென்பது திண்ணம். வட்டிக்குப்பணம் கொடுத்தலும் வாங்கலும் தவறென்று பிற சமயப் பெரியரொருவர் தெளிவாய்க் கூறியிருக்கின்றார். ஏனெனில் வட்டிக்குப்பணம் கொடுப்பவன் ஈர நெஞ்சமுடையவனாயிருக்க முடியாது. ஈர நெஞ்சம் படைத்தவனாயினும் வட்டிவாங்குபவன் நாளடைவில் கன்னெஞ்சனாய் விடுவான். அன்பு என்பது அவன் உள்ளத்தில் அணுவளவுமிராது. ஜீவகாருண்யமென்பது அவன் சிந்தையிலும் இராது என்னும் நோக்கத்தோடு கூறியுள்ளார். இஃது மெய்யேயானால் நம் நாட்டில் சைவத்தில் பிறந்து வளர்ந்த சோதரர் பலர் நூற்றிற்கு இரண்டு, மூன்று, ஐந்து, பத்து வட்டி (வாங்குவதும்) நாள் வட்டி மணிவட்டி நாளிகை வட்டி முதலிய பலவழிகளிலும் மக்களின் இரத்தத்தையுரிஞ்சி அவர்கள் கஷ்டப்பட்டுத்தேடிய பொருள்களையெல்லாம் வட்டி, வட்டியென்று பெற்றுக்கொண்டு முதலை அவன் கொடுக்க வழியற்று நிற்கும் நிலைமையையுண்டு பண்ணி அதன் மேல் கோர்ட்டில் நம்பர் போட்டு டிக்ரி பண்ணி அவன் வீட்டை ஜப்தி செய்து அவன் பிள்ளை குட்டி முதலியன தெருவினின்று தியங்கியழச் செய்யும் காட்சியைக் கண்ட எவனும் சைவர்களுள்ளத்தில் ஜீவகாருண்யம் உண்டென்று கூற நினைப் பானா? ஆதிகாலந்தொட்டு நம்மோடு வாழ்ந்து வரும் ஒருசில சோதரர்களைத் தீண்டாதார் என்று ஒதுக்கிவைத்துவிட்டு அவர் களை மனிதர்களாய் எண்ணாது மிருகங்களாய் மதித்து நடந்து வருகின்றோம். சீர்திருத்தக்காரர்கள் சைவர்களே! அவர்களிடத்தி லும் உங்களில் அன்பெனும் சிவனும் அறிவெனும் சக்தியும் வசிக் கின்ற தல்லவோ? ஆண்டவன் வாழும் கோயிலில் சிலவற்றை தீண்டாத்திருமேனியென்று ஒதுக்கிவைப்பது நியாயமா? அவர் களுக்கு உங்களாலியன்ற நன்மை புரியவேண்டும். சமத்வம் நல்க வேண்டுமென மொழிந்தால், ஆம்சார் நீங்கள் சொல்வதெல்லாம் மெய்தான். ஆனால் இத்தாழ்த்தப்பட்ட கூட்டத்தார்கள் துப்புரவா யிருப்பதில்லை, எப்பொழுதும் அழுக்குடை அணிந்திருக்கிறார்கள். மேலெல்லாம் துர்நாற்றம் வீசுகின்றது. அவர்கள் கல்வி, நாகரீகம் முதலியன பெறாது நிரக்ஷரகுக்ஷிகளாயிருக்கிறார்கள். புலாலுணவு உட்கொள்ளுகின்றார்கள் என்றெல்லாம் பலகாரணங்கள் கூறுகின் றார்கள். ஆனால் நாம் ஜீவகாருண்யத்தோடு அவர்கள் துப்புரவா யிருக்க கிணறு வெட்டிக்கொடுத்தோமா? அல்லது நமது கிணறு, குளம் முதலியவற்றில் குளிக்கவும், தண்ணீர் எடுத்துக்குடிக்கவும் அனுமதித்தோமா? உயர்ந்த ஜாதியனாயிருப்பினும் பத்து நாள் குளியாமலிருப்பின் அப்பறையரைப்போல் மேலெல்லாம் துர்நாற்றம் வீசும் என்பது எவருமறிந்த உண்மைதானே. தாழ்த்தப் பட்டோர் உயர்த்தப்பட கிறிதவர்கள் செய்யும் ஜீவகாருண்ய வேலையில் நூற்றில் ஒரு பங்காவது எடுத்துக் கொண்டு எங்காவது ஒரு பாடசாலை, கைத்தொழிற்சாலை வைத்து அவர்களில் எவரை யாவது படிப்பித்தோமா? அல்லது தங்களுடைய கல்லூரிகளி லாவது சேர்ந்து படிக்க அனுமதித்தோமா? படிக்கவிரும்பும் மாணாக்கர்களுக்கு பண உதவிபுரிந்து கல்வியிலுயர்த்தினோமா? புலாலுணவு உண்ணக்கூடாதென்று ஆதித்திராவிடர்களுக்கும் ஏனைய துன்புறுத்தப்பட்ட கூட்டத்தாருக்கும் பிரசாரம் செய்தார் களா? புலாலுணவை ஒழித்து துப்புரவாயிருந்து சைவாசாரத்தைக் கொள்ளும் தாழ்த்தப்பட்ட மக்களை சமத்வமாய் நடத்துவோம். அவர்களை ஆலயத்திற்குள் அனுமதிப்போம் என்றவாக்குறுதி அளித்து அவர்களை உயர்த்த முயன்றோமா? அவர்களுக்கிந்த வாக்குறுதியை அளித்திருந்தால் தாழ்த்தபட்ட மக்களில் இன்று குடிக்கிறவர்கள், புலாலுணவு உண்பவர்கள், துப்புறவுக்குறைவா யிருப்பவர்கள் நூற்றிற்குப் பதின்மர் இருப்பாராவென்பது சந்தேகம். ஆனால் இன்று சைவர்களென்று சொல்லிக்கொள்பவர்களில் நூற்றிற்கு இருபதின்மர் துப்புரவுக்குறைவாய் இருக்கின்றார்கள். குடிக்கின்றார்கள், புலாலுணவு உட்கொள்கின்றார்கள். கல்வியறிவு பெறாத மூடர்களாயிருக்கின்றார்கள். அவர்களை ஆலயத்தில் புக அனுமதிப்பதும் அவர்களைத் தீண்டிக்கொள்வதும் அவர்களை சமத்துவமாய் நடத்துவதும் நீதியா? ஒருவன் பிறப்பினால் சைவனாக முடியுமா? ஒழுக்கத்தினால் தான் ஒருவன் சைவனாக முடியுமென்று சைவசித்தாந்த சாதிரங்களெல்லாம் கோஷிக்கின்றதே. ஒழுக்க முடமை குடிமையி ழுக்கும் இழிந்த பிறப்பாய் விடும் என்றல்லோ உங்கள் நான் மறையில் ஒன்றாகிய விதிவேதமாம் திருக்குறளில் கூறப்பட்டிருக்கின்றது. நாம் நமது சைவத்தின் அறிய கொள்கையை விட்டுவிட்டு பார்ப்பனர் ஏற்படுத்திய ஜாதி என்னும் மயக்கினில் வீழ்ந்து ஆதித்திராவிடர் என்றால் விலங்குகளைவிட கேவலமான பிராணியென மதித்து நடத்தல் நீதியா? பார்ப்பன சாதிரங்களை மெய்யென நம்பி அவர்களை இழிபிறப்பாள ரென்று கண்டாலும், தொட்டாலும், பேசினாலும், தீட்டு, பாபம் என்றெண்ணி அவர்களுக்கிழைத்து வரும் துன்பத்தை அநீதியைப் பார்த்தால் சைவர்களுக்கு ஜீவ காருண்யமுண்டென்று எந்த பைத்தியக்காரனாவது கூறுவானா? பார்ப்பன சாதிரங்களிலே உங்களுக்கு எவ்வளவு மரியாதை கொடுத்திருகின்றது என்பதை நீங்கள் அறிவீர்களா? யாம் ஆதித்திராவிடர்களுக்காகப்பரிந்து பேசு வதற்காக எமது ஊரில் ஆங்காங்குள்ள சுவர்களில் உயர் ஜாதி அறிவிலிகள் ராகவன் ஆதிதிராவிடன் என்று எழுதிவருகின் றார்கள். என்னே இவர்களறிவீனம்! இந்நாட்டில் இரண்டு முக்கிய பிரிவார்களிருக்கின்றார்கள். ஒன்று ஆரியர், மற்றொன்று திராவிடர் (தமிழர்). இதனால்தான் தேவாரத்தில் கூட ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் என்ற செம்மொழியும் தோன்றியிருக்கிறது. ஆதித்திராவிடன் என்றால் பழந்தமிழன் என்பதுதானே பொருள். அவ்வாறிருக்க எம்மூர் சைவர்கள் எம்மை ஆதிதிராவிடன் என்றால் தாம் யார் என்பதை அறிவார்களா? இனி அவர்கள் ஆரியர் என்று கூறவேண்டும், அல்லது சூத்திரர் அதாவது வேசிமக்கள், ஒழுக்க மிலாதவர்கள், அடிமைகள் என்ற பட்டப்பெயரை ஒப்புக்கொள்ள வேண்டும். இதில் அவர்கள் எதை விரும்பினும் விரும்புகயானோ சைவர்களெல்லோரும் ஆதிதிராவிடரென்றே கூறுவேன். ஆராய்ச்சி யுடைய சைவப்பெரியார்கள் இதை ஒத்துக் கொண்டிருக்கின் றார்கள். எனவே உண்மைச்சைவ நெறி ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்ற கொள்கையையுடையது என்பதையெண்ணி எல்லோரையும் சகோதரராகப் பாவித்து சமத்வமாய் நடப்பது ஜீவகாருண்யமாகும். அன்புமிக்க சைவர் சோதரர் காள்! எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்றிக்கொண்டிருக்கலாம் என்ற மூட எண்ணத்தை விட்டு விட்டு சைவம் ஜீவகாருண்ய சமயம் என்று இன்றே உலகிற்கு எடுத்துக் காட்ட முன் வாருங்கள். இன்றேல் சைவத்தை நீங்களே ஆழக்குழி தோண்டிப்புதைத்தவர்களாவீர்கள். இப்பொழுது சைவம் குற்றுயிராய்க் கிடக்கின்றது. அதைக்கொன்று புதைக்கப் போகின்றீர்களா? அன்றேல் அதை உயிர்ப்பிக்கப் போகின்றீர்களா? உயிர்ப்பிக்க விரும்பினால், தாழ்த்தப்பட்ட ஏழைகட்கிரங்குங்கள், ஆதிதிராவிடர் இல்லங்கட்கேகுங்கள். அங்கு நாளெல்லாம் நமக் காக உழைத்து தன் முழு சக்தியையும் செலவழித்து கஷ்ட நிலைமையி லிருக்கும் பல மக்களின் துன்ப நிலையைக் காணுவீர்கள். அந்தோ! எத்தனை எலும்புக்கூடு போர்த்த மனிதப்பிராணிகள்! எத்தனை ஒட்டிப்போன கன்னங்கள்! குழி விழுந்த கண்கள்! பட்டினியில் காதடைத்த பெண்கள்! அரை நிர்வாண மனித யந்திரங்கள்! எழுந்து நடக்கச் சக்தியற்று உருளும் கிழவர்கள்! பால் கொடுப்பார் யாரு மற்று பரிதவிக்கும் பாலர்கள்! ஐயகோ! எங்கும் அழுகைக்குரல், துன்பநிலை, இவைகளைக் காண, கேட்க உங்கள் மனம் உருக வில்லையா? கண்ணீர் சிந்தவில்லையா? ஆறு கோடி மக்கள் இவ்வித நிலையில் மேல் ஜாதிக்காரர்கள் கால்களால் நசுக்கப் பட்டுக் கிடக்கும் மக்களை மீட்க சைவர்கள் உங்கள் சமயத்திற்கு சக்தியில்லையா? உங்களுக்கு அன்பில்லையா? இவ்வாறு கோடிக் கணக்கான மக்கள் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாய் கஷ்டப் பட்டு வாழும்படி செய்யும் கொடிய இந்து மதத்தில் பிறந்த திரு. காந்தியும், கிறிதவப் பாதிரிமார்கள் தாழ்த்தப்பட்டமக்களை உயர்த்த தங்கள் மதத்தில் சேர்ப்பார்களாயின் அவர்களை இந்தியாவை விட்டு துரத்துவேன் என்று கூறுகின்றாரே? இது நீதியா? ஜீவகாருண்யமா? நாங்கள் (இந்துக்கள்) எத்துணை கொடுமை புரிந்தாலும் புரிவோம். பிற சமயத்தார் அவர்களுக்கு நன்மை புரிந்து தங்கள் மதத்தில் சேர்த்து அவர்களை உயர்த்தப்படாது என்பது திரு. காந்தியின் எண்ணமே யானால் தீண்டாமை ஹிந்து மதத்தின் ஜீவாதாரமென என் முன்னிலையில் உறுதிப்படுமேல் இந்துமதத்திற்கு நேர்மாறாகயான் கிளர்ச்சி செய்வேன் என்றும் தீண்டாமை இந்து மதத்தின் பாற் பட்டதென்று நான் நம்பவில்லை. அது அம்மதத்தின் பாற்பட்ட தென்று சொல்லப்படின், அந்த ஹிந்து மதம் எனக்குறியதாகாது என்று கூறிய தெல்லாம் வீண் புரட்டன்றோ? சைவர்காள்! Ô©l¥ glhj k¡fisí« kÅj®fshf¥ ghɤJ V‹?----- அவர்களை இறைவனாக எண்ணிபணியாற்றுவீர்களானால் தான் நீங்கள் ஜீவ காருண்ய மனிதர்களாக எண்ணப்படுவீர்கள். சைவம் சீவகாருண்ய மதம் என்று உலகோரும் அறிவார்கள். வாய்பேசாப் பிராணிகளென்று நாம் கூறும் மிருகம், பறவை முதலியவைகளிடம் காட்டும் ஜீவகாருண்யம்:- மனிதனுக்கு அடுத்த அறிவுள்ள பிராணிகள் மிருகங்களே என்று எவரும் நன்கறிவர். பிராணிகள் உற்பத்தியைப்பற்றி மிக நுணுக்கமாய் ஆராய்ந்தரிந்த பெரும்புலவர் டார்வின் அவர்கள் தம் நூற்களில் மனித உற்பத்தியைப்பற்றிக் கூறும்பொழுது முதலா வது உஷ்ணத்தினால் புழுக்கள் தோன்றி பின்னர் பலப்பல பிராணி களாய் மாறி கடைசியாய்க் குரங்காகி குரங்கினின்று மனிதன் தோன்றினான் என்று கூறியிருப்பதோடு அறிவிலும் மனிதனுக்கு அடுத்தபடியாயிருப்பது குரங்கினமே என்றும் கூறியுள்ளார். எனவே மனிதன் தனக்கு அடுத்த அறிவுள்ள இப்பிராணிகளிடமும் மனிதர் களைப்போல் அன்பு பாராட்டக் கடமைப்பட்டுள்ளான். இதையே சைவத்திருநெறியும் வற்புறுத்திக் கூறுகின்றது. சைவசமயப் பெரியராகிய தாயுமான சுவாமிகள். எவ்வுயிரு மென்னுயிர்போ லெண்ணியிரங்கவு நின் றெய்வ வருட்கருணை செய்யாய் பராபரமே என்று கூறியுள்ளார். சைவம் வற்புறுத்திக் கூறும் இச்ஜீவகாருண்யச் செந்நெறியின் தன்மையை சைவர்கள் எத்துணை தூரம் அறிந்திருக் கிறார்கள்? என்று வினவினால் சைபர் (0 சூன்யம்) என்றே கூற வேண்டியதிருக்கிறது. தற்காலத்தே சைவர்கள் என்று கூறிக்கொள்ப வர்களெல்லாம் புலாலுண்ணாமையே சைவம் என்று கூறுகின் றார்கள், செய்கின்றார்கள். உயிர்ப்பிராணிகளுக்கு இம்சைசெய்வதும் அவைகளைக் கொல்வதும் சைவத்தின் பாற்பட்டதல்லவென்றே நினைக்கின்றார்கள். உண்மையை ஆராய்ந்தால் புலாலுண்ணுவ தினால் சைவத்திற்கு ஒரு சிறிது ஆக்ஷேபணை இல்லையென்றே கூற வேண்டும். உண்மையான சைவக்கொள்கையின் படி ஒரு உடலி னின்று உயிரைப்பறித்தலே ஜீவகாருண்யமற்ற செயல். அப் பிராணியை ஏரில்கட்டி கூறிய தார்கம்பால் குத்தி உதிரம் பெருக வதைப்பதும் மாடுகளை வண்டியில் பூட்டி சாட்டையால் அடிப் பதும் கழுத்தில் புண்ணுண்டாகும் வரை வண்டியில் மாட்டி இம்சிப் பதும் குதிரையை மிக விரைவாய் ஓடும்படி அடிப்பதும் ஜீவ காருண்யமற்ற செயல்களேயாகும். ஆனால் தாமே இறந்துகிடந்த அல்லது மனிதர்களை இம்சிக்கிறது என்பதற்காக ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒரு பிராணியின் உடலைப் புசிப்பது ஜீகாருண்யமற்ற செயல் என்று தர்க்கபூர்வமாய் எவராலேயும் நிரூபிக்க முடியாது. இதையே இன்று உலகத்தின் பெரும்பாலான மக்களால் போற்றப் பட்டுவரும் புத்தர் பெருமானும் கூறியுள்ளார். இறந்து போன மாமிசத்தைப் புசிப்பது சுகாதாரத்திற்கு ஏற்றதன்று என்று கூறலாம். ஆனால் இங்கு ஜீவகாருண்யச் செயலெது? ஜீவகாருண்ய மற்ற செயலெது? என்று ஆராய்ச்சி செய்கின்றோமேயொழிய சுகாதாரத் திற்கு ஏற்ற செயலெது? என்பதைப்பற்றி யன்று. இதைக்கேட்ட சைவர்களெல்லாம் எம்மீது சீறிவிழலாம். சீறி விழுந்தாலும் என்ன? எம்மனதில் கண்ட உண்மையைச் சொல்லியே ஆகவேண்டியதிருக் கிறது. ஆனால் யான் எல்லோரையும் புலாலுணவு உட்கொள்ளச் சொல்லுகின்றேன் என்று எண்ணிவிடற்க. உண்மை இவ்வாறிருக் கிறது என்றே இங்கு எடுத்துக்காட்டவந்தேன். புலாலுணவு உண்ணாமையினால் ஒருவர் சைவராகிவிட முடியாது. அப்படி யானால் புலாலுணவே புசியாத குரங்குகளும், கழுதைகளும், பரம்பரைச் சைவர்களென்று சொல்ல நேரிடுமல்லவா? ஆனால் சைவர்களென்பவர்கள் எறும்பு, ஈ, புழு, பூச்சி முதலிய பிராணிகளை நாளொன்றுக்கு நுற்றுக்கணக்காய் கொல்வது சைவநெறிக்கு மாறுபட்டது என்று எவராவது எண்ணுவதில்லை. ஆனால் ஒருவன் புலாலுணவுண்டால் அவனை மிகத்தாழ்வாய் மதிக்கின்றார்கள். ஆனால் புலாலுணவு உட்கொள்ளும் வெள்ளைக் காரனையல்ல, நம் நாட்டுக் கிறிதுவனையல்ல, மகம்மதியனை யல்ல, இந்து மதத்தில் யான் பிறந்தேன் என்று சொல்லி புலா லுணவைக் கொள்ளும் இந்திய மக்களைத்தான் தாழ்வாய் மதிப்பர். மிகமரியாதைக் குறைவாய்ப் பேசுவர். ஆலயப் பிரவேசஞ் செய்ய மறுப்பர். வெள்ளைக்காரனைக் கண்டால் மேல் வேஷ்டியை எடுத்து அரையிற் கட்டிக்கொண்டு குனிந்து வணங்கி துரையே என்பர். மகம்மதியனைக்கண்டால் முதலாளி சலாம் என்பர். கிறிது வனைக் கண்டால் குட்மார்னிங் சார் என்பர். இவைகளெல்லாம் நாம் அனுபவத்தால் கண்டுவரும் உண்மையாகும். தங்களின் ஜீவ காருண்யத் திருநெறியாகிய சைவ நன்னெறியே உலகத்திலுள்ள ஏனைய சமயங்களைவிடச் சிறந்தது ஏனென்றால், பிறசமயங்க ளெல்லாம் மனிதர்களிடம் மாத்திரம் ஜீவகாருண்யம் காட்டக் கற்பிக்கின்றது. சைவப் பெருநெறி மாத்திரம் உலகத்திலேயுள்ள எல்லா சீவப்பிராணிகளிடத்திலும் அன்புபாராட்டக் கற்பிக்கின்ற அருள்நெறி என்று கூறுவர். ஆனால், தாங்கள் குடிக்கும் தண்ணீரில் எத்தனையோ கோடிக் கணக்கான கிருமிகளிருக்க, அதை நன்கறிந் திருந்தும் சாப்பிடுவதையும் தம் இந்திரியத்தில் லட்சக் கணக்காய் கிருமிகளிருக்க அவைகளை அனாவசியமாய் வீணே செலவழித்துக் கொள்வதையும் தங்களின் ஒவ்வொரு சுவாசத்திலும் எத்தனையோ கிருமிகளிருப்பதையும் கவனியாது சுவாகித்துக் கொல்லுவதையும் தங்கள் வீடுகளிலுள்ள கட்டில் முதலியவற்றில் மூட்டைகளிருந்தால் வெந்நீர் ஊற்றிக் கொல்வதையும், தேள், பூரான், முதலிய பூச்சி களைக் கண்டால் உடனே கொன்று விடுவதையும் தங்கள் மக்களுக்கு நோயுண்டானால் மண்ணுள்ளிருக்கும் ஒரு சில புழுக்களைக் கொன்று மருந்தாக்கிக் கொடுப்பதையும், ஆங்கில மருத்துவச்சாலை யில் காட்லீவர் ஆயீல் என்னும் மீன் எண்ணை முதலியவைகளை அருந்தியும் வருகின்றார்கள். இதைப்பற்றிக் கூறுவானேன். மச்சக் காவடி என்று மீனை உயிருடன் அறுத்து ஒரு மட்பாத்திரத்தில் கட்டி காவடி எடுப்பதும் பின்னர் அம்மீன் உயிர் பெற்று ஓடுவதாய் ஜனங்களுக்குக் சொல்லி ஏமாற்றுவதும், இன்றுவரை சிவாலயங்களில் தேரிழுக்கும்பொழுது ஆடு, கோழி முதலியவைகளைப் பலியிட்டுப் பின்னர் தேரிழுப்பதும் ஜீவகாருண்ய ஒழுக்கமாகுமா? மேலும் பல பல பெரிய சிவாலயங்களிலெல்லாம் கிளி முதலிய உயிர்ப் பிராணி களைப் பிடித்துக் கூண்டில் வைத்து அடைத்து அது சுதந்திரத்துடன் தமக்கு இஷ்டமான இடத்திற்குச் சென்று தமக்குப் பிரியமான ஆகாரங்களை சாப்பிட்டு வரவும், உலகத்திலுள்ள எல்லாப் பிராணி களுக்குமுரிய காதலின்பத்தை அனுபவிக்கவிடாமலும் சைவர்கள் தடுத்துக் கொண்டிருத்தல் நீதியா? ஜீவகாருண்யம்! ஜீவகாருண்யம்!! என்று கூறிக்கொண்டு தங்கள் வீடுகளில் இளம் பெண்கள் விதவை யாயிருக்கும் பொழுது ஆண் மக்களைப்போல் தமக்கு வேறோர் துணையைத் தேடிக்கொள்ளவிடாமல் வீட்டிற்குள் வைத்துப்பூட்டிக் காவல்காத்து வரும் சைவர்கள் மிருகங்களின் மீது ஜீவகாருண்யம் எப்பொழுது காட்டப் போகின்றார்கள். விதவைகள் திருமணஞ் செய்து கொள்ளலாம் என்று தங்கள் கூட்டங்களில் தீர்மானஞ்செய்து சைவத் தலைவர்களென்போர் அதை அனுஷ்டானத்தில் செய்து காட்டும் காலம் வரை சைவத்தை ஜீவகாருண்யச் சமயம் என்று கூற சைவர்களே! உங்களுக்கு வெட்கமில்லையா? என்று இன்று சுயமரியாதை இயக்கத்தைச் சார்ந்த பத்து வயதுப் பாலர்களும் பரிகாசம் செய்வதை சைவத்தலைவர்களே! நீங்களறியீர்களா? நியூஜிலண்டு முதலிய தேசத்தில் மீனைப்போன்ற சில நீர்வாழும் ஜெந்துக்களைத் தவிர வேறு மரஞ்செடி கொடி முதலியன ஒன்றும் கிடையாது. அந்நாட்டில் வாழும் மக்கள் ஜீவகாருண்ய விரதம் பூண்டு ஒன்றையும் சாப்பிடாது உயிர் துறப்பதா? நம் நாட்டில் கூட பலவித நோய்களையுண்டாக்கும் விஷக்கிருமிகளிருக் கின்றன. அவைகளைக் கொல்லாமல் நம் நாட்டு மக்களெல்லாம் நோயாலிறப்பதா என்பவைகளை யெல்லாம் சைவர்கள்யோசித்தல் வேண்டும். சைவம் மனுஷர் புத்திக்கும், யுக்திக்கும் ஏற்ற சமயமே யொழிய வைதீகர்களின் கூற்றுப்படி பகுத்தறிவிற்கு விரோதமான சமயமன்று. மேலும் சைவம் மக்களுக்காக மனிதர்களால் ஏற்படுத்தப் பட்ட ஒரு சங்கமே யொழிய சைவத்திற்காக மக்கள் ஏற்படவில்லை என்பதும், சைவத்தை காலத்திற்கேற்ற முறையில் திருத்தவும் புதிய சட்டங்களை உற்பத்தி செய்யவும் மக்களுக்கு உரிமையுண்டு. இவ்வுலகமே துன்பம் நிறைந்தது அதில் பிற உயிர்களுக்கு ஹிம்சை செய்யாமல் மனிதன் வாழ முடியாதிருக்கிறது என்று திரு. எம்.கே. காந்தி முதலியோரும் கூடசொல்லி விட்டனர். எனவே இவ்வுலகில் ஒவ்வொரு மனிதனும் இயன்றவரை பிற உயிர்களுக்கு ஹிம்சை உண்டாக்காமல் வாழ வேண்டுமே யொழிய ஜீவகாருண்யப் பைத்திய மிகுந்து சைனர்கள் போன்று கட்டிலில் மூட்டைப் பூச்சிகள் அதிகமாயிருந்தால் அதைக்கொல்வது பாவம்; அதில் படுத்துக் கொள்ளாமலிருந்தால் அப்பூச்சிகளுக்கு உணவின்றி இறந்து போம்; அதுவும் பாவம் என்றெண்ணி அக்கட்டிலில் படுத்துக் கொள்வதற்கு நாள் ஒன்றுக்கு ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் சம்பளம் பேசி அவ்வேலையாளைக் கட்டிலில் படுக்கும்படி செய்வார்களாம். இத்தகைய முட்டாள் தனத்திற்கோ, தண்ணீரில் பல புழுக்களிருப் பதால் அதை அருந்தாமலும் காற்றில் பல கிருமிகளிருப்பதால் அதைச் சுவாசியாமலுமிருந்து சாவதற்கு சைவம் அனுமதிக்கவில்லை. அதைத் தற்கொலை யென்றும் அத்தகைய கொடிய செயலில் மக்களீடுபடக்கூடாதென்றும் சைவம் கண்டிக்கிறது. தற்காலம் உலகம் இருக்கும் உன்னத நிலையையும் மக்களின் ஆராய்ச்சியின் போக்கையும் சைவர்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஒரு நண்பர் முட்டை சாப்பிடுவது சரியா? தவறா? என்ற ஓர் ஆராய்ச்சியை மிக விரிவாய் ஆராய்ந்துள்ளார். அதில், முட்டையினுள் கரு இருக்கிறது. அக்கரு மனிதனுடைய வீரியத்திற்குச் சமமானதே. தம் மனைவி யோடு சம்போகிக்கும் சம்போகத்தில் எவ்வளவு இந்திரியத்தை வீணாகச் செலவழிக்கின்றோம். அது குற்றமற்ற செயலானால் முட்டை சாப்பிடுவது எவ்வாறு குற்றமான செயலாகும். ஆனால், அவ்விச்சையை நாம் அளவுக்கு மீறி அடக்கி, ஆள ஆரம்பித்தோமே யானால் அப்பொழுது அநேக வியாதிகள் உற்பவித்து, நாளா வட்டத்தில் நமது ஒவ்வொரு தொழிலும் பாதிக்கப்பட்டு, நடை பெறாது போய்விடுகின்றது. முக்கியமாகப் பெண்கள் ஆடவர்களின் சம்போகமின்றி அதிக நாட்களிருப்பார்களேயானால், அவர்களுக்கு இன்னும் அதிக மாகவே பலவிதத் துன்பங்கள் நேரிடுகின்றன யென அவர் குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தகுந்த விஷயமாகும். இவைகள் யாவும் பக்குவ வயதினையடைந்த மாந்தர்களையே குறிக்கின்றதென்பதை ஞாபகத்தில் வைக்கும்படியாக வாசகர்களைக் கேட்டுக் கொள்ளுகின்றோம். ஏனெனில், சிறுவர்களும், சிறுமி களும், குறித்த ஒரு வயது வரையிலும் கண்டிப்பாக இந்திரிய நிக் கிரகம் செய்தேதான் தீரவேண்டுமென அநேகடாக்டர்களின் அபிப் பிராயங்களிலிருந்தும், அப்போதைக்கப்போது வெளியிடும்படியான அறிக்கைகளின் மூலமாகவும் நாம் அறிந்திருக்கின்றோம். ஏனெனில், அப்பொழுதுதான் அவர்களுடைய தேகமும், மனதும் பலமடைந்து, அவர்களுடைய பிற்கால வாழ்க்கையும் மிக்க இன்பகரமாக இருக்கும். வாலிபவயதில் ஒருவன் தன்னுடைய காம இச்சைகளை அடக்காமல், திரீ லோலனாகத்திரிய ஆரம்பித்தானேயானால் அப்பொழுது அவனுடைய உடல் நலம் குன்றி, பலவித வியாதி களுக்கு ஆளாவதுமன்றி, விவாகமாகிய பிறகும் தானும் சுகப்படா மல், தன்னுடைய மனைவிக்கும் போதுமான இன்பத்தை அளிக்க சக்தியற்றவனாகி, அவளையும் துன்பமடையும்படி செய்கிறான். அத்தகையோனைக் கண்ணுறும் பலரும் பிஞ்சில் பழுத்தவன், அதோ போகிறான் பார்! எனவும், இதோவருகின்றார் பார் பிஞ்சில் பழுத்தவன்! எனவும், சாடையாகக் கைநீட்டி காண்பித்துப் பேச ஆரம்பிக்கின்றார்கள். அப்படிக் கூறுபவர்கள் மீது நாம் ஆத்திரப் படுவதிலும், கோபமுறுவதிலும் பயன் யாதொன்றுமில்லை. இக் காரணத்தைக் கொண்டே தான் ஆதியில் நமது முன்னோர்கள், பாலிய வயது நீங்கிய ஒவ்வொரு ஆடவனும் சில வருஷங்களாவது பிரமசரிய விரதத்தை கண்டிப்பாய் அனுஷ்டித்தேதான் தீரவேண்டு மெனவும், அதற்குப்பிறகுதான் கிரகதாரமத்தை மேற்கொள்ள வேண்டுமெனவும் வகுத்திருக்கின்றார்கள். ஆகையால், ஆடவர்கள் இருபத்திரண்டு வயதுக்கப்பாலும், பெண்கள் பதினாறு வயதுக்கப்பாலும் விவாகம் செய்துகொள்ளு வதே சாலவும் சிறந்ததாகும். ஆடவர்களிற் பலரும், பெண்களில் சிலரும் தங்களுடைய ஆயுள்வரை விவாகம் செய்து கொள்ளாமலே காலத்தைக் கழித்துக்கொண்டும் வருகின்றார்கள். இது விரும்பத் தக்கதல்ல. ஏனெனில் டாக்டர் சார்ல ஆர். டைய்டேல் என்பவர் தாம் எழுதிய ஒரு புத்தகத்தில் பிரான்சு, பெல்ஜியம், ஹாலண்டு தேசங்களில் வாசஞ்செய்யக்கூடிய மக்களில் விவாகமே யில்லாமல் தங்களுடைய ஆயுள் பரியந்தம் பிரமசரிய விரதத்தை அனுஷ்டித்துக் கொண்டு வருபவர்களைக் காட்டிலும், விவாகம் செய்துகொண்டு வாழக்கூடியவர்கள் அதிக காலம் ஜீவித்திருக்கின்றார்கள். மேலும் விவாகமில்லாது தனிவாழ்க்கை நடத்துபவர்களைவிட விவாகம் செய்து கொண்டவர்களுக்கு ஏதாகிலும் சன்மார்க்கத்தில் பிரவேசிக் கவோ அல்லது கொடிய குற்றங்கள் புரியவோ அவர்களுக்குப் போதிய சாதனங்களில்லை. ஆனால், விவாகமில்லாதவர்களுக்கோ இன்னும் பைத்தியமே பிடிக்கக்கூடிய பல சாதனங்களுமிருக் கின்றன மேலும், பொதுவாக திரீகள் யாவருமே பதினெட்டு வயதிற்குமேல் ஆடவர்களின் சம்போகத்தில் ஈடுபட்டு இன்பத்தை அனுபவித்துக்கொண்டுவருவார்களாயின் அது அவர்களுடைய தேகாரோக்கியத்திற்கு நன்மையை விளைவிக்குமென்பதை, உலகப் போக்கிலிருந்து நாம் சுலபமாகவே அறிந்து கொள்ளலாம். குற்றவாளிகளின் எண்ணிக்கைகளை அறிவிக்கும் அறிக்கை களை நாம் கவனித்துப் பார்த்தோமேயானால், அப்பொழுது அவ் வறிக்கையில் விவாகமாகிய குற்றவாளிகளின் எண்ணிக்கையைவிட, விவாகமாகாத ஆண், பெண் குற்றவாளிகளின் எண்ணிக்கையே அதிகமாக இருப்பதைக் காணலாம். நாம் மேலே கூறிய மூன்று தேசங்களிலும் விவாகமாகாத ஒவ்வொரு 10,000 ஆண்களிலும், பெண்களிலும் 3.95 பெயர்கள் பைத்தியத்தால் அவதிப்பட்ட தாகவும், ஆனால் விவாகமாகியவர்களில் 2.17 பெயர்கள் மட்டும் பைத்தியத்தால் துன்பமடைந்ததாகவும் அத்தேயங்களில் வெளியிடப் பட்ட அறிக்கைகளில் காணப்படுகின்றது மேலும், பெண் பைத்தியக் காரர்களின் எண்ணிக்கைகளை மட்டும் தனியாகக் கணக் கெடுத்ததில் ஒவ்வொரு 10,000 விவாகமாகாத பெண்களில் 3.4 பெயர்கள் பைத்தியத்தால் பாதிக்கப்பட்டவர்களாகவும், விவாக மாகிய பெண்களில் 1.9 பெயர்கள் மட்டும் பாதிக்கப்பட்டதாகவும் காணப்படுகின்றது. இவ்வறிக்கையிலிருந்து பெண்களுக்கு விவா கங்கள் செய்வதால், அவர்களின் பைத்தியக்காரர்களின் எண் ணிக்கை பேர்பாதி குறைந்து விடுகின்றதென்பதை நாம் காணலாம். மரண அறிக்கைகளை நாம் ஆராய்வோமேயானால், அப்பொழுது இன்னும் இதைவிட திடுக்கிடச் செய்யும் விஷயங் களை அறியலாம். ஒரே வயதினையுடைய விவாகமாகிய ஆடவர் களின் மரண எண்ணிக்கையைக் காட்டிலும், விவாகமாகாத ஆடவர்களின் மரண எண்ணிக்கையும், மனைவிமார்களைப் பரிகொடுத்த ஆடவர்களின் மரணயெண்ணிக்கையும் மொத்தத்தில் சராசரி இரண்டு, மூன்று மடங்கு அதியமாகவே காணப்படுகின்ற தென பிரான்சுதேசத்திய பெர்ட்டிலன என்பவர் அறிந்து எடுத் துரைக்கின்றார். மேலும், டாக்டர் மேயர் என்பவர் தாம் எழுதிய ரேப்போர்ட்கான்ஜுகா (Rapports Conjugaux) என்பதில் பாமர மக்களின் மரணயெண்ணிக்கையைவிட, பிரமசரியவிரதத்தை அனுஷ்டித்துக் கொண்டுவரும் பாதிரி (கிறிதுவ குருக்)களின் மரண எண்ணிக்கையானது ஏறக்குறைய இரண்டுமடங்கு அதிக மாகவேக் காணப்படுகின்றது என குறிப்பிட்டிருக்கின்றார். மேற்கூறிய சம்பவங்களையும், உண்மைகளையும் அறிந்து கொண்டபிறகுகூட, கர்ப்பத்தடைகளுக்கேற்ற முறைகளில், இந்திரிய நிக்கிரகம் செய்வதும் ஒரு முறையாகுமென நாம் புகழ்ச்சி யாகத் துணிந்து கூறுவதற்கு முடியுமா? இந்திரிய நிக்கிரகம் செய்வதற்காக, சம்போகத்தை அறவே நீக்குவதனால் மக்களின் தேகாரோக்கியம் எவ்வளவு தூரம் பாதிக்கப்படுகின்றதோ, அவ்வாறே குழந்தைகளின் பிரசவத்தை விரும்பி, குழந்தைகளை உற்பத்தி செய்வதற்காக, பிரமசரிய விரதத்தி னின்றும் தவறுவதாலும் ஏற்படுகின்றது. மேலும், காம இச்சை களைப் பூர்த்திசெய்து இன்பத்தை யளிக்கக்கூடியதோடு, தங்க ளுடைய அருகாமையிலிருக்கும் பொழுது, போதியமட்டும் காம இச்சையைப் பூர்த்திசெய்து இன்பத்தையடைவற்கில்லையே யென்னும் ஓர் ஏக்கம் மனதில் அடிக்கடித் தோன்றிக்கொண்டே யிருக்குமானால், அது, மனிதர்களுக்கு இன்னும் பேராபத்தை விளை விக்க கூடியதாயிருக்கின்றதென அநேக டாக்டர்கள் அபிப்பிராயப் படுகிறார்கள். இவ்வித முறைகளால் மக்களின் அபிவிர்த்தியை குறைக்கமுடியமென நினைக்க கூடியவர்கள் தன் அடக்கம் என் பதை மக்களுக்கு இன்னும் வேண்டிய அளவுக்கு அதிகமாகவே போதிக்க வேண்டியிருக்கின்றது. வருஷத்திற்கொரு தடவை மட்டும் ஒருவன் சம்போகித்து, இன்பத்தை நுகர்வானேயானால், அவனை யாவரும் இந்திரியம் வென்றவன் எனவும் தன் அடக்கமுள்ளவன் எனவும் கூறுகின்றார்கள். அப்படியிருந்த போதிலும்கூட, ஒரு தீரிக்கு மடியில் ஒரு குழந்தையும், வயிற்றில் ஒரு குழந்தையும்யிருப் பதற்கு அந்த ஒரு வருஷத்திற்கு ஒருமுறை சம்போகம் செய்வதே போதுமானதல்லவா? இவ்விதமாகவே, அவள் தன்னுடைய கௌமாரப்பருவம் (அதாவது பதினாறு வயதிற்கு மேலும் முப்பத் திரண்டு வயதினுள்ளுமாகிய பெண்பருவம்) வரையிலும் வருஷத்திற்கொரு குழந்தையாகப் பிரசவித்துக்கொண்டே வருவா ளானால்-அவளும் இறவாமல், அவளுடைய குழந்தைகளும் இறவாம லிருந்தால் - பதினாறு குழந்தைகளை உற்பத்தி செய்திருக்க வேண்டும். சந்தோஷகரமான, இன்பவாழ்க்கையை நடாத்தும் சாதாரண மக்களுக்கு கார்ப்பத்தடை முறைகள் எவ்வளவு இன்றியமையாத தாகக் காணப்படுகின்றதோ, அவ்வாறே தான் வருஷத்திற்கொரு குழ்ந்தையைப்பிரசவிக்கும் இந்திரியம் வென்றவன் எனவும் தன் அடக்கமுள்ளவன் எனவும் பெயர் வாங்கிய மக்களுக்கும் இன்றி யமையாததாகக் காணப்படுகின்றது. கர்ப்பத்தடைக்காக வேண்டி சிறிது காலத்திற்காவது சம்போகத்தை நீக்கி, இந்திரிய நிக்கிரகம் செய்வதால் உண்டாகக் கூடிய தீமைகளினின்றும் சில மனிதர்கள் தப்பித்துக் கொண்டி ருக்கின்றார்களென்பதும் உண்மையேதான். தங்களுடைய மனோ வலிமையினாலும், யோக சாதனையினாலும், ஐம்புலன்களையும் வென்று, இந்திரிய நிக்கிரகத்தை சர்வசாதாரணமாக நினைத்து, நடந்து வரக்கூடிய மகா புருஷர்கள்தான் அவர்கள். ஆனால், அத்தகைய புருஷர்களைக் காண்பதே அரிதாயிருக்கின்றமையால் அவர்களைபற்றி நாம் இங்கு ஆராய்ந்தறிய வேண்டிய அவசிமே யில்லை. மேலும், அவர்களுடைய பிரச்சினைகளை யெல்லாம் அவர்களே தீர்த்துக் கொள்ளவும் சக்தியும், சாமர்த்தியமும் வாய்ந்தவர்களாய் இருக்கின் றார்கள். - (குடியரசு 5.4.1931, 3.5.1931, 10.5.1931, 24.5.1931) ஹிந்தியும் காந்தியும் தமிழ்ப்பண்டிதர்களே! இன்னும் தூக்கமா? செந்தமிழ் நாட்டு சீரியமக்களுக்குச் சில்லாண்டுகளுக்கு முன்னர் ஹிந்தி யென்றால் இன்னதெனத் தெரியவராது. உயர்திரு. காந்தியவர்கள் அரசியலில் புகுந்து தனது செல்வாக்கை உயர்த்திக் கொள்ள முதலாவதாக பார்ப்பனர்களின் தயவை நாடி, பார்ப்பனர் களுக்கு அரணும் ஆயுதமும்போன்ற இந்து மதத்தையும் மார்த்த மறைகளையும் போற்றி, பார்ப்பன பாஷையாகிய சமகிருதத்தை உயிர்ப்பிக்க நாடி அதில் பயன்பெற முடியாதென்று காணவே அதன் பிள்ளையாகிய ஹிந்தியை ஆதரிக்க முனைந்து வெள்ளைக் காரர்கள்மேல் வெறுப்புக்கொண்ட நம்மக்களிடம் ஆங்கிலம் படிப்பது அடிமைப்புத்தியை வளர்க்கின்றது. எனவே ஆங்கில கல்லூரிகளை பகிஷ்கரியுங்கள். நம்நாட்டு ஹிந்தி மொழியைப் பயிலுங்கள், ஹிந்திபாஷை நம் நாட்டில் மூன்றில் இரண்டு பாகத்தில் பரவியிருக்கின்றது; அதுவே நம்நாட்டுப்பொதுபாஷை யாவதற்கு முற்ற தகுதியுடைய தென்றுகூறிய பின்னர் தான் ஹிந்தி என ஒரு பாஷையுண்டென்று நம்மில் பலரறிந்தனர். தீண்டாமையை ஒழித்து விடவேண்டும். இன்றேல் நாம் சுயராஜியம் பெறலரிது என்று கூறிய பொழுதும், தாழ்த்தப்பட்ட மக்களென்போர்களை பல்லாயிரக்கணக்கான வருடங்களாய் இந்நாட்டு பார்ப்பனர்களும் அவர்கள் வால்பிடித்து நிற்கும் பார்ப்பனரல்லாத மக்களிற் பலரும் கொடிய ஹிம்சைகள் புரிந்தும் கோயிலினுள் வரவொட்டாது தடுத்தும் வந்திருக்க, திரு. காந்தியவர்கள் அதைப்பற்றி ஒன்றும் பேசாதிருந்துவிட்டு தன்னை ஆலயத்தினுள் விடமறுத்தபின்னே வேசிகளின் வீடுகளில் கடவுள் வீற்றிருந்தாலும் வீற்றிருப்பர்; கோயில்களில் கடவுள் ஒரு பொழுதும் வசியார் என்று (காந்தி) ஆத்திரப்பட்டு மொழிந்த வார்த்தைகளைக் கேட்டு அவரைப் தம்வாய் கொண்ட மட்டும் தீட்டிய வைதீகப்பார்ப்பனர்களெல்லாம் காந்தி பார்ப்பனீயத்தையும் வடமொழியின் பிள்ளையாகிய ஹிந்தி யையும் ஆதரித்து அதன் மூலம் பார்ப்பனரல்லாத மக்கள் சுய மரியதையைப் பறித்துவிட்டதோடு பார்ப்பனரல்லாத மக்கள் ஆங்கிலம் படித்து பார்ப்பனரோடு உத்தியோகத்தில் போட்டி போடாமல் தடுக்க ஆங்கிலம் படித்தல் கூடாதென்று கூறி சம கிருத சாயலிலுள்ள தேவநாகரிலிபியைக்கொண்ட ஹிந்தியைப் பொதுப்பஷையாக்கி பார்ப்பனரல்லாத தமிழ் மக்கள் படிப்பதற்கு மிகக் கஷ்டமான அப்பாஷையால் பார்ப்பனரல்லாதார் முன் னேற்றத்தைத் தடுத்துவிட வேண்டுமென்றும் ஹிந்திப் பிரசாரத்தின் மூலமாய் பல பார்ப்பனர்களுக்கு வயிற்றுப்பிழைப்பும் நடக்கவே, காந்தியை மகாத்மா எனப் போற்றினர். விஷ்ணுவின் அவதாரமெனப் பாத நமகாரம் புரிந்தனர். தேவர்கள் வந்து பேசிப்போகின்றனர் என்று நாடெங்கும் பொய்ப்பிரசாரம் பண்ணினர். விஷ்ணு போன்று பாம்பின் மேல் பள்ளிகொண்டிருக்க பக்கத்தே அவர் மனைவி கதூரிபாய் காந்தி லக்ஷ்மி போன்று வீற்றிருப்பது போன்றும், வெள்ளைக்காரன் ராக்ஷதனைப்போன்று நிற்கவும் காந்தி விஷ்ணு போன்று இராட்டினத்தை (சக்கராயுதத்தை) கையிலேந்தி சம்ஹாரஞ் செய்யவந்து நிற்பது போன்றும் படம்போட்டு நாடெங்கும் பரப்பினர். காந்திபடத்தை தேரில் வைத்து இழுத்தனர். சப்பரத்தில் வைத்துப் பல மக்கள் தூக்கி தெருவெங்கும் சுற்ற பலமக்கள் தேங்காய், பழம், சூடம், சாம்பிராணி முதலியவைகள் கொடுத்து தூப, தீப ஆராதனை செய்து வணங்கச் செய்ததோடு இவைகளையெல்லாம் வானமளாவ புகழ்ந்ததுடன் காந்திக்குப் பெரும் பேற்றையு முண்டாக்கி விட்டது. காந்தியை ஒரு மடாதிபதியாயும் (சங்கராச்சாரியாய்) ஆக்கி அவர் மடத்தை இக்காலத்திலில்லாவிட்டாலும் பிற்காலத்திலாவது பார்ப்பனச் சோம்பேரிகளுக்குப் புகலிடமாயிருக்கும்படி செய்து விட்டார்கள் என்பது சமரச நோக்கமுடைய பலரும் அறிவர். மேலும் ஹிந்தி சமகிருதத்தின் பிள்ளையெனக்கூறவும், அஃது பார்ப்பனீயத்தை திரமாய் தாபிக்கவும் செய்யும் சூழ்ச்சியே யாம் என்பதற்கு ஹிந்தி முதற்பாட புத்தகத்தில் முகவுரையில் 5ஆம் பக்கத்தில் நம்முடைய தாய்ப் பாஷைகளுக்குத் தாயாகிய சம கிருதத்தின் மேல் அபிமானம் யாருக்குண்டோ அவர்கள் அவசிய மாய் (ஹிந்தியையும்) அதையும் கற்றுக்கொள்வார் என்று கூறப்பட் டிருக்கிறது. (இந்நூல் சென்னை ஹிந்தி சாஹித்ய சம்மேளன்பிரசார காரியத்தாரால் வெளியிடப்பட்டது) இந்தியாவிலுள்ளவர் களில் மூன்றில் இரண்டு பாகத்தினர் ஹிந்தி பேசிவருகின்றனர் என்று கூறுவது முற்றிலும் புரட்டேயாகும். இந்தியாவிலே தமிழ், தெலுங்கு, கன்னடம், துளு, மலையாளம், சிம்ஹளம், மராட்டி, குஜராத்தி, சௌராஷ்டிரம், பஞ்சாபி, வங்காளி, உரியா, பார்ஸி, ஹிந்தி, ஹிந்துதானி, அரபி, ஆங்கிலம், பிரஞ்சு முதலிய 229 பாஷைகள் பேசப்பட்டு வருவதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. அதில் ஹிந்துதானி மாத்திரம் பேசுவோர் 18 கோடி யென்று கணக் கிடப்பட்டிருக்கிறதென்றால் 2/3 ஹிந்தி பேசுகிறார்கள் என்று கூறுவது எத்துனை புரட்டு என்பது விளங்கும். அது உண்மையா யிருந்தாலும் ஒரு மொழியை அதிகப்பேர் பேசுகின்றார்களென்பதற் காக அதைப்பொது மோழியாக்கிவிடலாமா? அதன் இலக்கண, இலக்கியத்தன்மைகளையும் அதிலடங்கிய இதரநூல்களின் பெருமையையும் நாம் ஆராயவேண்டாமா? இன்று ஆங்கிலத்தை பொது மொழியாக்கிக் கொள்ளுவதற்காக இருக்கும் வசதிகள் ஹிந்தி யிலுண்டா? உலகத்திலேயே பெரும்பாலோர் பேசுவது ஆங்கில மன்றோ? ஒருபாஷை மனிதனுக்கு எவ்வாறு அடிமைப்புத்தியை யுண்டாக்கும்? இன்று ஆங்கிலம் படித்தவர்களே சுதந்திர புருடர் களாய் விளங்குகின்றனர். காந்தியும், நேருவும், இதர பார்ப்பன தலைவர்களும் ஆங்கிலம் பயிலாவிட்டால் அவர்களுக்கு சுதந்திர உணர்ச்சி தோன்றியிருக்குமா? நம்நாட்டில் ஆங்கிலப்படிப்பில்லாத வர்கள் எத்துணைபேர் சுதந்தர நினைவுடனிருக்கிறார்கள் என்பதை ஆராய்ந்தால் உண்மைவிளங்கும். ஹிந்தியில் விஞ்ஞான சாதிரங் களோ, அரசியல் நூல்களோ, சுதந்தர உணர்ச்சியை யூட்டும் நூல் களோ உண்டா? லிங்கபுராணம், பத்மபுராணம், மஹாபாரதம், இராமாயணம், தேவிபாகவதம், நாந்தம் முதலிய புராணங்களைத் தவிர வேறு எந்த மேலான நூற்கள் ஹிந்தியிலுண்டு? மேலும் எல்லாவற்றிற்கும் மெஜாரட்டியைக் கவனிக்கலாமா? உலகிலே பெரும்பாலார் குடியர்களாயிருந்தால் குடியை ஆதரித்து எல்லோ ரும் குடிக்கவேண்டுமென்று கூறல் நீதியாகுமா? மெஜாரட்டியார் கொள்கையாயிருந்தாலும் மைனாரட்டியார் கொள்கையாயிருந் தாலும் அக்கொள்கையின் தன்மையையன்றோ ஆராய்ந்து பார்த்தல் வேண்டும். ஹிந்திப்பிரசாரத்தால் பார்ப்பனீயத்தை நிலைநாட்ட முயற்சித்தால் சுயமரியாதையுடைய எந்த மனிதனும் பார்த்துக் கொண்டிருக்கலாமா? இது பற்றியே சென்னையினின்று வெளிவரும் ஒரு அரிய வார வெளியீட்டின் ஆசிரியர்குறிப்பில், இந்தியாவில் நடப்பதென்ன? பார்ப்பனர்கள் தங்கள் பழைய பல்லவியை பாட ஆரம்பித்துவிட்டார்கள். ஹிந்திகழகத்தினரை ஏமாற்றி அவர்கள் தலைமிதமர்ந்தாகிவிட்டது. இனி இதர கழகத்தினரையும் வசப் படுத்த வழி பார்க்கின்றார்கள். முகலாய மன்னர்கள் காலத்தில் அரசாட்சியின் லகானைகையிற்பிடித்திருந்த சூத்திரத்தாரிகள் பார்ப்பனரே. பின்னர் ஆங்கிலம் வந்ததால் அதில் நிபுணத்வம் பெற்று ஆட்சியினராய் விளங்குபவரும் பார்ப்பனரே; இனி இந்தியா வின் ஆட்சியைத் தங்கள் வயப்படுத்த என்னென்ன சூழ்ச்சிகள் புரியவேண்டுமோ, அவையனைத்தும் இப்போதுமுதலே ஆரம்பிக் கப்பட்டு வருகின்றன. ஒரு புராணமொழியினை பார்ப்பனர்கள் பலர் ஏற்கனவே அறிந்திருந்தும் அதனை அறியாத பார்ப்பனர்களும் முன்னமே சமகிருதம் படித்திருக்கக்கூடுமாகையால் அந்த லிபியி லுள்ள ஹிந்தியை இலகுவில் படித்துக் கொள்ளக்கூடும் சம கிருதம் படித்தவர்கள் இப்போதும் அர்த்தம் தெரியாமல் ஹிந்தி படித்தல் கூடும். xU bghJ bkhÊÆid¥ bghJ bkhÊÆš bkhÊ bga®¤JÉ£lhš m¥nghJ« gh®¥gdnu murh£á Æ‹ N¤âujhÇfshf ïU¡fyhk‹nwh? என்று கூறப்பட்டதி லிருந்தும் வருங்காலத்திய சுயராஜிய அரசாங்கத்திலே ஹிந்தியைப் பொதுப்பாஷையாக்கி விட்டால் தாங்கள் எளிதாய் கற்கத்தக்க அல்லது கற்ற ஹிந்திப்பரீக்ஷையில் தேறி உத்தியோகங்கள் எல்லா வற்றையும் தாங்களே கொள்ளையடித்து இப்பொழுது உத்தியோகத்தி லிருக்கும் பார்ப்பனரல்லாத மக்களை வெறுட்டிவிட்டு தாங்களே ஏகபோகமாய் ஆண்டு பார்ப்பனரல்லாத மக்களைத் தாழ்த்தி அவர் களுக்கு வேண்டும் கொடுமைகளியற்றி அடிமைகளைப் போல் நடத்திவரலாமென்ற எண்ணத்தினாலன்றோ ஹிந்திப் பிரசாரம் நடைபெற்று வருகிறது. நமது மக்கள் பகுத்தறிவிற்கு மதிப்புக் கொடுப்பதில்லை. நம்மவர் பகுத்தறிவிற்கு ஒத்திருந்தாலும் சரி, ஒத்திராவிட்டாலும் இது பெரியோர் வாக்கு ஆச்சாரியார் மொழி, நாயன்மார் பாட்டு, மகாத்மாவின் அருள் வாக்கு, என்பதில் நம்பிக்கை கொள்ள ஆரம்பித்தார்களோ அன்றே மூடநம்பிக்கைகள் மலிந்து அடிமை வாழ்க்கை நிலைத்து விட்டது. இது பற்றியே தான் திரு. லெட்பீட்டர் அவர்கள் ஒரு விஷயம் பைபிளில் எழுதியிருக்கிறது என்பதால் அதை நம்புகிறவன் சந்தேகமின்றி அந்த விஷயம் வரைக்கும் மூட நம்பிக்கையுடைவன் எனலாம். ஏனெனில் அந்த நம்பிக்கைக்குத் தகுந்த முகாந்திரம் அவனுக்குத் தெரியவில்லை. அப்படியிருக்க மேடம் பிளவட்கி அம்மையார் இவ்விதம் சொன்னார் அல்லது (Secret Doctrine)š அவ்விதம் எழுதியிருக்கிறது என்று சொல்லுவதும் மூடநம்பிக்கையைவிட ஒருபடி தான் முந்தி வந்திருக்கிறது. அது ஒரு படிதான் ஏனெனில் செயின்ட் பால் அல்லது மற்ற புராதன ஆசிரியர்களைவிட மேடம் பிளவட்கி அம்மையாருக்குத் தான் சொல்லும் விஷயங்கள் தெரிந்திருந்தது என்பதற்கு அநேக அத்தாட்சிகள் இருக்கின்றன என்றாலும் செயிண்ட் ஜேம் அல்லது செயிண்ட் பீட்டர் அவர்கள் சொன்னார் என்பதை விட மேடம் பிளவட்கி சொன்னார் என்பதால் அது நம்முடைய சொந்த அனுபவமாகப்போகிறதில்லை. நாம் ஒரு விஷயத்தைத் தெரிந்து கிரஹித்துக்கொண்டு அதை நம்மறிவோடு அறிவாகச்சேர்த்து அதில் நாம் வளரவேண்டும். அதை நம்மில் வேரூன்றவிட வேண்டும். நாம் கிளிப்பிள்ளைபோல் வாசித்ததைச்சொல்லிக் கொண்டிருக்கும் வரையில் விஷயங்கள் எல்லாம் மூடநம்பிக்கை களே. இங்கே இதை எழுதியிருக்கின்றது. அங்கே எழுதியிருக் கின்றது என்பதைவிட்டு நல்ல முகாந்திரம் தெரிந்து கொள்ளா விடில் உண்மைப்பொருளில் இருக்கும் நம்பிக்கைகூட மூட நம்பிக்கைதான். நம்முடைய மனதோடு மனதாகும் போது அது எனது என்னுடைய சொந்தம், நான் ஏன் நம்புகிறேன் என்று எனக்குத் தெரியும். ஆதலால் எனது நம்பிக்கை அறிவோடுள்ள நம்பிக்கை அது மூடநம்பிக்கையல்ல என்றுசொல்லலாம். அநேக சந்தர்ப்பங்களில் உண்மையாயிருக்கும் விஷயத்தில் கூட தெரியாத நம்பிக்கைகள் அதிகம் இருக்கின்றன என்று கூறியுள்ளார். இதை யறியாமல் நமது பார்ப்பனரல்லாத மக்கள் இன்னும் ஒருவர் சொல்லும் வார்த்தையின் பொருளையறியாமல் லாமெம்பர் சர்.சி.பி. ராமசாமி சொல்லிவிட்டார். சாதிரியார் கூறிவிட்டார். ஆசாரி யார் அறைந்துவிட்டார். மகாத்மா சொல்லிவிட்டார் என்று ஒருவர் கூறிவிட்டதால் அதை ஆராய்ந்து பாராமல் அவர்கள் வார்த்தைகள் பார்ப்பனரல்லாத சமூகத்திற்கே கேடு விளைப்பனவாக இருந்தாலும் அவமானத்தை விளைப்பனவாக விருந்தாலும் ஒரு சிறிதும் கவலை யின்றி அவ்வார்த்தையைப் பின்பற்றி நடக்க ஆரம்பித்து விடுகி றார்கள். ஆனால் தம்முடன் வாழும் பார்ப்பனர் மனப்பான்மையை ஒரு சிறிதும் ஆராய்ந்தார்களில்லை. திரு. காந்தியவர்களானாலும் பார்ப்பனர் ஜாதிப் பெருமைக்கு விரோதமாகவோ, அவர்களின் அதிகாரத்திமிரை அடக்கும் நோக்கம் கொண்டோ, அல்லது அவர்களின் மதக்கொள்கைகளுக்கு விரோதமாகவோ ஒரு வார்த்தை மொழிவாரானால் இன்று விஷ்ணுவின் அவதாரம், மகாத்மா மனித சிரேஷ்டர் என்றெல்லாம் விளம்பரப்படுத்தும் ஆச்சாரிகளும் சாதிரிகளும் சர்மாக்களும் பார்ப்பனபத்திரிகைகளும் காந்தி பேரில் ஏராளமாக வசைபுராணங்கள் பாடி அவருடைய மகாத்மா பட்டத்தைப் பறித்துக்கொண்டு காந்தி சாந்தியின்று மந்திபோன்று திரிந்தலைத்துழலும்படி செய்துவிடுவர். பார்ப்பனர்கள், எம்மனித ராயினும் தங்களுக்கு அனுகூலமாயிருக்கும் வரை அவரைப்பெரிய மனிதராக்கி, தங்கள் காரியம் நடக்கும் வரையில் போற்றிக்கொண்டு அப்புறம் அவர்களை ஆழக்குழியில் தள்ளிவிடுவார் என்பதை நம் மக்கள் உணரவில்லை. ஹிந்திப்பாஷை விஷயத்திலும் காந்தியை தம் மிஷ்டம்போல் நடக்கச்செய்து ஹிந்தியின் பேரால் ஆண்டொன் றிற்கு பார்ப்பனச்சோம்பேறி கூட்டங்கள் லட்சக்கணக்கான ரூபாய் களைக் கொள்ளையடிக்கும் பார்ப்பனர் வயிற்றுப்பிழைப்பு நாடகம் தமிழ்நாட்டின் பிரதான நகரங்களிலெல்லாம் நடைபெற்று வரு கின்றது. இதனால் யான் ஹிந்திபாஷையே படித்தல்கூடாதென்று கூறுவதாக எண்ணிவிடற்க. ஹிந்தியைக் கற்பவர் கற்கட்டும். ஹிந்தியைப் பொதுபாஷையாக்கி பார்ப்பனரல்லாத மக்கள் படித்து முன்னேற முடியாத இப்பாஷையால் பார்ப்பனரல்லாத மக்களின் அபிவிர்த்திக்கு தடையை யுண்டாக்கி வகுப்புவாரி பிரதிநிதித்துவ மில்லாத வருங்கால சுயராஜிய அதிகாரப்பதவிகளை தாங்களே கொள்ளை கொண்டுபோக நினைக்கும் சூழ்ச்சியையும் ஹிந்திப் பிரசாரத்தின் பேரால் பார்ப்பனச்சோம்பேரிகள் லட்சக்கணக்கான ரூபாய்களை ஆண்டுகள் தோறும் விழுங்குவதையும் நாம் வன்மை யாய்க்கண்டிக்கின்றோம். இன்று உண்மையாய்க் கண்டிக்கின்றோம். இன்று உலகப்பொது மொழியாய் விளங்குவது ஆங்கிலமே. எந் நாட்டாருமே ஆங்கிலத்தை அறிந்தவர்களாய் இருக்கின்றார்கள். இங்கிலாந்தின் பிடிப்பினின்று விலகிவாழ நினைக்கும் இந்தியர் உலகப்பொது மொழியாய் விளங்கும் ஆங்கிலத்தை அறவே வெறுப்பது அறிவுடைமையாகாது. நமக்கு எம்மொழியின் பேரிலும் பகையில்லை. அங்கிலேயரிடமும் பகையில்லை அவர்கள் ஆட்சி முறையைத்தான் நாம் வெறுக்கின்றோம், கண்டிக்கின்றோம், அழிக்க விரும்புகின்றோம். எனவே நம் தமிழ் மக்கள் கிணற்றுத்தவளைகள் போன்றில்லாது உலகத்தோடு ஒட்ட ஒழுகவிரும்பினால் ஆங்கி லத்தையே உலகப்பொது பாஷையாகக்கொள்ளக்கிளர்ச்சி செய்ய வேண்டும். வேண்டுமானால் தற்கால ஆங்கிலப்படிப்பு முறைகளை மாற்றிக்கொள்ளட்டும். பின்னர்பிற எம்மொழிகளுக்கும் இலக்கண இலக்கியச்செறிவில் தலைகவிழ்க்கும் தன்மையில்லாத பிறபாஷை யின் உதவியை ஒரு சிறிதும் நாடாது தனித்தியங்க ஆற்றலுடைய அமிழ்தினுமினிய தமிழ் மொழியை இயற்கைத்தூ மொழியை காவியம், ஓவியம், இலக்கணம், இலக்கியம், நீதிநூல் முதலிய பல அரிய நூற்கள் பல திகழும் உயர்தனிச்செம்மொழியை இந்தியா வுக்குப்பொது மொழியாக்கவேண்டும். தமிழர்களே! இதற்காக நீங்கள் கிளர்ச்சி புரிதல் வேண்டாமா? உங்களால் கிளர்ச்சிபுரிதல் கூடாதா? உங்களின் உடலில் தமிழரின் இரத்தம் ஓடுகின்றதா? ஓடுகின்றதெனின் உங்கள் தமிழ்த்தாயை இந்திய நாட்டிற்கு அரசியாய் சிம்மாசனத்தின்மீதிருத்தி சக்கிரவர்த்தினியாய்க்கண்டு களிக்கும் விருப்பமில்லையா? ஒரு காலத்தே இந்தியா நாட்டிற்கே - ஏன்? - உலகத்திற்கே ஒரு சக்கிரவர்த்தினியாய், சதுமறை ஆரியம் வருமுன் சகமுழுது நினதாயின் முதுமொழி நீ அனாதியென மொழிகுவது வியப்பாமே என்று போற்றப்பட்ட தமிழ்த்தாய் ஆரியம், ஹிந்துதானி, ஆங்கிலம் முதலிய பாஷைகளுக்குக் கீழ்ப்பட்டு தம் அரசுரிமையை யிழந்து இந்தியாவின் தென் கோடியில் அவள் மக்களாலே கவனிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு உண்ண உணவும் உடுக்க உடையும் இருக்க இடமும் இன்றி இருப்பதா? இறப்பதா? என்று தத்தளித்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழர்களே! தூக்கத்தினின்று விழித்து உங்கள் தாயின் துன்பந்துடைத்து அவளைச் சக்கிரவர்த்தினி யாக்க வேண்டியது உங்கள் கடமையன்றோ? நீங்கள் நினைத்தால் முடியாத தென்பதில்லை. இன்னும் தமிழ்த்தாயின் விரோதியாகிய சமகிருதத்தின் மகள் ஹிந்தி என்றும் மாதரசியின் கீழ் உங்கள் தாயாகிய கன்னித் தமிழ்த் தாயார் அடிமையாய் வாழச்செய்யும் காந்தி அவர்களின் சூழ்ச்சிக்கு இடங்கொடாதீர். தமிழர்களே! இடங்கொடுத்துவிட்டால் உங்களுக்கு வரப்போகும் கேடுகள் பலவுள. எமது சகோதரர்களாகிய தமிழ்ப்பண்டிதர்களே! சைவத்தலைவர் களே! எழுந்திருங்கள்! நீங்கள் இத்தனை நாட்களாய்த்துயின்றது போதும். தன்மதிப்பியக்கத்தாரால் தஞ்சை ஜில்லா நன்நிலத்தில் கூடிய மஹாநாட்டிலே பழையபுராணக்கதைகளை சொல்வதைத் தவிர வேறு அறிவு வளர்ச்சிக்கும் மற்றப்பொது விஷயங்களுக்கு உதவாத சமகிருதம் ஹிந்தி முதலிய பாஷைகளைத் தேசீயத்தின் பேரால் அரசியல் காரணங்களுக்காக வென்று படிக்கச் செய்வ தானது பார்ப்பனீயத்திற்கு மறைமுகமாக ஆக்கம் தேடுவதாகு மென்று இம்மஹாநாடு கருதுவதோடு, தற்கால விஞ்ஞான அறிவை நமது மக்களிடம் பரப்பவும் நவீன தொழில் முறைகளை நாட்டில் ஏற்படுத்தவும் மற்றதேசங்களில் எழும்பியிருக்கும் சீர்திருத்த முற் போக்கு உணர்ச்சிகளை நமது மக்களிடம் புகுத்தவும் உலக பாஷை யாக வழங்கி வரும் இங்கிலீஷ் பாஷையையே நமது வாலிபர்கள் கற்க வேண்டுமென்று இம்மஹாநாடு தீர்மானிக்கிறது என்ற சங்கத் தொனியையும் தமிழ் நாட்டில் ஆங்காங்கே உயர்திரு ஈ.வெ. இராம சாமி அவர்கள் தமிழ்த்தாய்க்கு யோக்கியதை இருந்து அவள் தகுந்த மானமுள்ள மக்களைப்பெற்று இருந்தால் நாட்டுநலனுக்கு ஏற்ற சகல விஷயத்தையும் தமிழிலேயே ஆக்கியிருக்க வேண்டும். நாட்டிற்கு தமிழே போதுமானதாயிருக்கவேண்டும். அப்படியில்லை யானால் தமிழ்த்தாயின் தகுதிக்கும் அவசியத்திற்கும் ஏற்றது எதுவோ அதைக்கொள்ள வேண்டும் என்றும் யாண்டும் இடியோசை யென எக்காளம் ஊதிவருவது உங்கள் செவியிலேறவில்லையா? உங்கள் உடன் பிறந்த சகோதரர்களாம், தமிழ்த்தாய் பெற்ற மக்கள் போல் பாசாங்கு செய்யும் மாற்றாந்தாயாகிய வடமொழி மாதின் புதல்வர்களாகிய பார்ப்பனர் மயக்க மருந்தை யூட்டி தூக்கத்திலே உங்கள் அரிய காலத்தையெல்லாம் வீணாக்கி உங்கள் தாயை இன்னலுறச்செய்தது போதும். படமுடியா தினித் துயரம்பட்ட தெல்லாம் போதும் என்று உங்கள் தாய் அலறுகின்றாள். அவள் கூப்பாட்டிற்கு செவி சாய்க்காது உங்களுக்குள்ளே பிளவு பட்டு ஒருவரை யொருவர் திட்டிக்கொண்டு உங்கள் தாயின் பழைய நிலையையும் உடையையும் அழகையும் புகழ்ந்து கொண்டிருக்கப் போகின்றீர்களா? பண்டித சகோதரர்களே! சைவசபைகளிலேயும் தமிழ்ச்சங்கங்களிலேயும் நீரிலங்கும் நெற்றியினராய் உடலில் உருத்திராக்கம் புரள சிவ சிவ என்னும் சீரிய மந்திரதையுச்சரித்து நூற்றிற்கு தொண்ணூற்றொன்பதின்மர் விளங்கிக்கொள்ளமுடியாது பிற மொழிகலப்பில்லாத தூய தனித் தமிழ்ப்பிரசங்கத்தை ஆரம் பித்து இடையே, கடையுழி வருந்தனிமை கழிக்க வன்றோ அம்பலத்துள் உடையார் உன் வாசகத்தில் ஒரு பிரதி கருதினதே என்று ராவ்பஹதூர் சுந்தரம் பிள்ளை எம். ஏ. அவர்கள் பாடிய தமிழ் வணக்கச்செய்யுளையும், எடுக்க வின் பெறு கண்டனும் தென் திசை நோக்கி அடுக்க வந்து வந்து ஆடுவான் ஆடலின் இழைப்பு நீங்கி விடுக்க வார மென் கால் திருமுகத்திசை வீசி மடுக்கவும் தமிழ் திருச் செவி மாந்தவு மன்றோ என்ற பாடலையும் இன்னும் தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததும் என்ற பாடலையும் இன்னும் தமிழின் பெருமையைக் குறித்து பாடிய பலபுலவர்களின் அழகிய பாக்களையும் பாடிவிட்டு தென்னாடுடைய சிவனே போற்றி, என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று கூப்பாடு போட்டு விட்டுப்போவதில் பயனில்லை. அல்லது ஆரியத்துக்கு முந்திய மொழி தமிழ். உலகிலே அதிக மூச்சை செலவழியாது இலகுவில் பேசும் இயற்கை மொழி என்று அதன் தொன்மையையும் நன்மையையும் 50 பக்கத்தில் புத்தக ரூபமாய் வெளியிட்டு இரண்டு ரூபாய் விலைக்கு விற்பதினால் தமிழுக்கு நன்மை யுண்டாகப்போவதில்லை. இன்னும் எச்சங்க விழாவிற்கு சொற்பொழிவாற்ற அழைத்தாலும் ஒரு பிரசங்கத்திற்கு 300 ரூபாய்க்குக் குறைந்து செல்லும் வழக்கம் கிடையாதென்று கூறிக்கொண்டிருக்கும் துறவிகளினாலே அல்லது நமக்குத்தான் தமிழ் பண்டிதர் உத்தியோகத்தில் ரூ.80 சம்பளம் கிடைக்கிறதே! தமிழின் முன்னேற்றத்தை கருதியுழைக்கப்போய் அங்கு காந்தியின் ஹிந்தி க்கொள்கையைக் கண்டித்து காந்தியர்களின் தூற்றலுக்கும் மிரட்டலுக்கும் நாம் ஆட்படுவதோடு ஒரு சமயம் நம் உத்தியோகத் திற்கே அபாயம் வந்தாலும் வந்துவிடும் என்றஞ்சி தன் சாப்பாட்டின் பேரிலே கண்ணாயிருக்கும் தமிழ்பண்டிதராலேயாவது நன்மை யானதாயிருந்தாலும் சுயமரியாதைக்காரர்கள் சொல்லிவிட்டால் நான் அதை ஒத்துக்கொள்ள மாட்டேன் என்று கூறும் முதலியார் களாலாவது தமிழ்ப் பாக்ஷை முன்னோற்றமடையப் போவதில்லை. சுயநலத்தை தியாகம் செய்து எதற்கும் அஞ்சாது உண்மைக்கு உழைக்கும் உத்தமர்கள் தமிழ்த்தாயின் இன்னலை நீக்க முன் வந்தால் ஏதாவது நடைபெறும். அன்றேல் வருங்கால சரித்திரத்திலே தமிழ் என்று ஒரு பாஷை இருந்தது என்றுதான் எழுதப்படும் என்பது உறுதி என்று தமிழர்களுக்கு எச்சரிக்கை செய்கிறேன். பார்ப்பன ரல்லாதார் நலங்கள் வருங்காலத்தில் ஹிந்தி பாஷையால் பறிக்கப் படுமெனப்பகர்கின்றேன். ஆகையால் அன்பர்களே! ஹிந்தியைக் காந்தி பொதுப்பாஷையாக்கத் துணிவது பார்ப்பனரல்லாதார் பார்ப்பனர்களோடு உத்தியோகத்துறைகளிலும் இதர துறைகளிலும் போட்டிபோட்டு தங்கள் உரிமையைப் பெற வொட்டாது தடுக்கும் பார்ப்பன சூழ்ச்சி யென்பதை நன்கறிந்து தமிழறிஞர்களெல்லாம் உலகத்திற்குப் பொதுமொழி ஆங்கிலமாக இருக்கவேண்டுமென்றும் இந்திய நாட்டிற்கு பொது பாஷையாக தமிழ் இருக்கவேண்டும் என்றும் கிளர்ச்சி செய்யுங்கள். இக்கிளர்ச்சியைப்புரிய நம் தமிழ் நாட்டில் ஒரு மஹாத்மா இல்லையா? அடிகளும், முதலியாரும் பிள்ளையும், நாட்டாரும் முன்வரப்போகின்றார்களா? இல்லையா? பார்ப்போம்! - (குடியரசு 26.7.1931) சீவகாருண்யச்சமயம் மகளிர் உரிமையை மறுக்குமா? இவ்வுலக ஆக்கத்திற்கே நிலைக்களனாய் விளங்கும் பெண் மக்களுக்கு உரிமைவழங்க வேண்டுமா? வேண்டாமா? என்னும் ஒரு பெரும் ஆராய்ச்சி நமது இந்திய நாட்டிலே இது போழ்து பெரிதும் நடைபெற்று வருகின்றது. இதைக்கண்டு, ஆணின் மறு பாதியாகிய பெண்ணிற்கு அவர்தம் நியாயமான உரிமைகளை வழங்க இத்துணை ஆராய்ச்சியா? பெண்ணின் உரிமையை மறுக்கும் இந்தியருக்கு ஆங்கிலேயர் எப்படி உரிமை வழங்க இசைவர் என்று பிறநாட் டறிஞர் பலர் எள்ளி நகையாடுகின்றனர். யாண்டு பெண்டிர் உரிமை குன்றி அடிமை வாழ்க்கையில் அழுந்திக் கொண்டிருக்கிறார்களோ ஆங்குதான் சமுதாயம் முழுவதும் குன்றி வருகின்றதென்பது அறிஞர்கள் கண்ட அனுபவம். இருபாலரும் உரிமையெய்தி சமத்வ மாய் ஒத்து வாழும் சமூகந்தான் உயர்வடையும். இந்நில உலகிலே பெண்சாதியின் உரிமையை விலங்குகளும் கூட மறுக்காதிருக்கும் பொழுது ஆறறிவுடையதென்று கூறும் மனிதர்கள் மகளிர் உரிமைக்குக் கேடு சூழ்ந்து வருவது எத்துணை கொடுமையாகும். இது பற்றியே அறிஞர் ஒருவர், பெண்ணுரிமைக்குக்கேடு எவ்வுலகில் விளைந்திருக்கிறது? அஃறிணையுலகிலா? ஆறறிவுடைய மக்கள் உலகிலா? வெட்கம்! வெட்கம்! புல், செடி. கொடிகளில் ஆணினம் தன் பெண்ணினத்தின் உரிமைத்தகைந்திருக்கிறதா? ஆண்பறவை பெண்பறவையின் உரிமை கெடுத்திருக்கிறதா? எவ்விலங்காவது தனது பெண்ணினத் தின் உரிமை உடைத்திருக்கிறதா? அஃறிணை உலகில் பெண் ணுரிமைக்குப் பழுது நிகழ்ந்ததில்லை. பாழான ஆறறிவுடைய உயர் திணை யுலகிலே அவ்வுரிமைக்குப் பழுது நேர்ந்திருக்கிறது என்று கூறியுள்ளார். சைவம் உலகிலுள்ள ஒவ்வொரு நாடும் பெண்களுக்கு உரிமை நல்கியபின்னரே சுதந்திர மெய்திச் சுகவாழ்வு பெற்றதென்பது சரித்திர வாயிலாய் நாம் காணும் உண்மை. அஃதிவ்வாறிருந்தும் இந்திய நாட்டின் விடுதலைக்கென்று உழைக்கும் ஒருபெரும் தேசியமஹா சபை பெண்ணுரிமையை ஒரு சிறிதும் பேணாது இந்திய நாட்டின் சுதந்திரத்தை எளிதில் பெற்று விடலாமென்று எண்ணுவது எத்துணை குறுகிய நோக்கமானது என்றும் அறிக. அத்தேசிய மஹாசபையில் பெண்ணிற்கு உரிமை நல்கக்கூடிய ஒரு திட்டமும் இல்லாமையானும் பெண்ணுரிமையை வேரறுக்கும் தலைவர்களின் ஆட்சியின் கீழ் அம்மகாசபை அகப்பட்டுக் கொண் டிருத்தலாலும் அம்மாகாசபை இந்திய நாட்டிற்கு விடுதலையைக் கொண்டு வரமுடியாதென்றும், அஃது ஒரு சமயம் விடுதலையைக் கொண்டுவந்தாலும் அது உண்மையான விடுதலையாகாதென்றும் அறிந்தே ஆங்காங்கு பெண்ணுரிமை பேணும் பல பல இயக்கங்கள் தோன்றின. அத்திபூத்தாற்போன்று ஆங்காங்கே ஆடவர்களின் எதிர்ப்பை ஒரு சிறிதும் பொருட்படுத்தாது கல்வி கற்ற ஒரு சில பெண்மணிகள் தங்கள் ஜாதியின் உரிமைக்குப்பாடுபட ஆரம்பித் தார்கள். ஆனால் கடவுள், வேதம், சமயம், சமயத்தலைவர் முதலியன பலவும் பெண்கள் உரிமைக்கு எதிரிடையாகயிருக்கவே அவைகளை யெல்லாம் அன்றே மறுக்கவோ, எதிர்க்கவோ, அழிக்கவோ, ஆற்றலற்று அவ்வியக்கங்க ளெல்லாம் மாய்ந்தொழிந்தன. சீர்திருத்த விருப்பங்கொண்டு முன் வந்த செல்வியர் பலரும் செல்வாக்கிழந் தனர். இதன் பிறகுதான் தன்னந்தனியராய் தனிகர் ஈரோட்டு இராமன் தன்மதிப்பியக்கம் எனும் தனிப்பேரியக்கங்கண்டார். அது பெண்ணுரிமையாகிய மறுமணம், காதல் மணம், சொத்துரிமை, விவாஹரத்து, பாலிய விவாஹ மறுப்பு முதலிய விழுமிய கொள்கை களை தம் நோக்கமாகக்கொண்டுழைக்க ஆரம்பித்ததோடு தம் கொள்கைகளுக்கு எதிரிடையாக இருக்கும் கடவுள், வேதம், சமயம், சமய ஆச்சாரிகள் முதலிய பலவற்றையும் எதிர்த்து அவைகளை யெல்லாம் நிர்மூலப்படுத்துவதும் தம் கொள்கைகளென்று சொல்லவே அறிஞர்பலர் தாராளமாய் வந்து ஆதரிக்கவும் எளிதில் நாடெங்கும் பரவவும் ஆரம்பித்து நாட்டில் அதன் செல்வாக்கு உயரவே ஒவ்வொரு சமயத்தலைவரும் எனது சமயந்தான் பெண்ணுக்கு பெரிதும் உரிமை நல்கிய சமயம் எனதுமதந்தான் பெண்ணின் உரிமையை வழங்கும் மதம் என்றுகூப்பாடுபோட ஆரம்பித்தார்கள். ஆனால் மார்த்த சமயத்தலைவர்களோ பகிரங்க மாய் தம் சமயம் பெண்ணுரிமைக்கு எதிரிடையாயிருக்கின்றது என்று கூற ஆரம்பித்துவிட்டார்கள். உண்மையில் அஃதோர் சீவ காருண்யமதமுமன்று. ஆனால் தன்மதிப்பியக்கத்தாரால் அம்மதம் அதிசீக்கிரம் அழிக்கப்பட வேண்டியது அவசியமே. ஆனால் உலகிலுள்ள பல்வேறுமதங்களிலும் சீவகாருண்ய நெறியை திறம்பட பேணும் சமயம் சைவமே என்று கூறப்படும் செந்தமிழ் நாட்டின் தென் கோடியிலுள்ள ஒரு வகை மக்களால் அனுஷ்டிக்கப் படும் சைவ சமயத்தை ஆராய்ந்தாலோ, எவ்வுயிரும் பராபரன் சந்நிதியதாகும் இலங்கு முயிர் உடலனைத்தும் ஈசன் கோவில் என்று கூறப்படுகிறது. எனவே எல்லா உயிரினிடத்திலும் ஈசன் வீற்றிருப்பதால் எல்லா உயிர்ப்பிராணியையும் ஈசனென எண்ணி (தன்னுயிர்போல் எண்ணி) வாழல் சைவர்களின் கடப்பாடாயிருக் கிறது. இச்செய்யுளைப் பார்த்து நாம் மகிழ்வதோடு சைவர்கள் தங்க ளால் போற்றப்படும் கடவுளை ஒரு பெண்ணாகக்கண்டு வணங்கு வதும் மகிழத்தக்கதே. எடுத்துக்காட்டாக, காணும் பல பல தெய்வங்கள் வெவ்வேறு பூணும் பலபல பொன்போலத் தோன்றிடும் பேணும் சிவனும் பிரமனும் மாயனும் காணும் தலைவி நற்காரணிகாணே (திருமந்திரம்) என்ற செய்யுளும் சத்தியாய்ச்சிவமாகி என்ற செய்யுளும் இன்னும் பலவும் ஆதாரமாகக்காட்டப்படுவதோடு செல்வத்தைக்கொடுக்கும் கடவுள் லக்ஷிமி என்று கூறும் தெய்வம் பெண்ணாகவும் கல்வியைக் கொடுக்கும் கடவுள் சரவதி என்னும் தெய்வம் பெண்ணாகவும் இன்றுவரை சைவர்களால் போற்றப்படுவதாகவும் இன்னோரன்ன பல உதாரணங்களை எடுத்துக்காட்டலாம். பெண்ணுரிமையைப் பெரிதும் ஏற்றிப்போற்றும் சைவப்புலவர் உயர்திரு. கலியாணசுந்தர முதலியாரவர்களும், பெண்மை என்பது அமைதித்தன்மை என்று மேலே சொல்லப்பட்டது. அமைதிநிலை இறைமை என்பது, அவ் விறைமையையுடைய தாயை வெறும் பெண்ணென்றா கூறுவது? கூடாது. அவளைப்பெண்தெய்வமென்று போற்றுதல் வேண்டும். பெண் தெய்வம், பெண் தெய்வம், பெண்தெய்வம் முழுமுதற்பொருள் தன்மை வெம்மையெனும் இரண்டு சக்திகளாக உலகை இயக்குகிறது என்று நூல் தொடக்கத்தில் குறிக்கப்பட்டிருக்கிறது. அத்தன்மையின் கூறு பெண் உலகு . பெண் பிறந்து, உலகவளர்ச்சிக்குத் துணைபுரிந்து மீண்டும் அத்தன்மைத் தெய்வமாகிறாள். பெண் மகளாகத் தோன்றினாள், மனைவியாக வாழ்ந்தாள், தாயாகத் தொண்டு செய்தாள், இப்பொழுது தெய்வமாகக்காட்சி யளிக்கிறாள். உலகீர்! அக்காட்சி காணுங்கள். தெய்வம் தெய்வ மென்று எங்கு ஓடுகிறீர்? நூற்களை ஏன் ஆராய்கிறீர்? இதோ தெய்வம், பெண் தெய்வம், காணுங்கள் கண்டு வழிபடுங்கள். பெண்மை என்புதோல் போர்த்த உடலன்று. அவ்வுடலுள்ளேயுள்ள நுண்மை, இறைமை, பெண்மை என்க. அத்தகைய பெண்மை வாழ்க என்று கூறியுள்ளார். பெண்ணைத் தெய்வமாகக்கொண்டு தொழும் சைவர் பெண்ணிற்கு எத்தகைய உரிமையைக் கொடுத் துள்ளார்கள்? தெய்வத்தை கல்லாக (விக்ரஹமாக) வைத்துத் தொழும் சைவர் பெண்களையும் அவ்வுணர்ச்சியற்ற கல்லாக (தெய்வமாக) எண்ணி பெண்டிர் துவனையிழந்தால் உணர்ச்சி யற்ற கல்தெய்வம்போல் நடத்தி வருவதும், அக்கல் தெய்வம் போல் எண்ணி பெண்ணிற்கு கல்வி கற்றுக் கொடுக்காமலும், பசித்தால் சாப்பிட வழியற்றும், தம்மிஷ்டம்போல் விரும்பிய இடத்திற்குச் செல்லவிடாது வீட்டிற்குள் பூட்டிவைத்திருப்பதும் பெண்களை மிக இழிவாய் நடத்தி வருவதும் பெண்களைக்கல்லாக (தெய்வமாக) திரு.வி. கல்யாணசுந்ததரமுதலியாரவர்கள் கூறியபடி போற்றிவருகிறார்க ளென்பது மெய்யே. இதைத்தவிர பெண்ணிடம் சைவர்கள் எத்தகைய சீவகாருண்யமும் காட்டவில்லை என்பது நாமறிந்த உண்மையாகும். ஏட்டிலும் பாட்டிலும் பெண்டிர்க்கு சைவம் உரிமை கொடுத் திருக்கிறது என்று செய்யுளின் பொருளைப் புரட்டிப் பண்டிதர்கள் கூறலாமேயொழிய சைவர்கள் பெண்களிடத்தில் சீவகாருண்யம் காட்டவில்லையென்பது மட்டுமல்ல. பெண்களிடத்தில் சீவ காருண்யம் காட்டி அவர் தம் உரிமைக்காக பாடுபடும் அறவோர்களையெல்லாம் நிந்தித்து அவர்களால் ஆற்றப்படும் சீவகாருண்யத்தொண்டிற்குத் தங்களாலியன்ற இடையூறியற்றி வருவதோடு விதவாவிவாஹம், கலப்பு மணம் முதலியனபுரியும் வாலிபர்களைச் சமூகபகிஷ்காரம் செய்யவும் அவர்களுக்குத் தங்களாலியன்ற இன்னல்கள் பலபுரிந்துவருவதும் அனுபவத்தில் நாடொறும் நாமாண்டுவரும் மறுக்கமுடியா உண்மையாகும். சைவத்தின் பெருமையை இடைவிடாது புகழ்ந்துவரும் சைவர்கள் வீட்டிலே பெண்கள் விலங்கினும் கடையராய் இன்றள வும் மதிக்கப்பட்டு வருகின்றார்களென்றால் அது ஒரு சிறிதும் மிகையாகா. ஒவ்வொரு சைவன் வீட்டிலும் பெண்மணிகள் கணவன் சாப்பிட்ட எச்சி இலையிலேதான் சாப்பிடவேண்டும் என்பது கட்டாயவிதி. இவ்விதி பெண்கள் திருமணஞ் செய்யப்பட்ட நாளிலிருந்து அவளிறக்கும் பரியந்தம் செய்ய வேண்டிய முக்கிய கடமைகளிலொன்று. இதுவே கற்புடைய பெண்டிரின் லட்சண மாகும். கணவன் எச்சியிலையில் மனைவி சாப்பிடுவதே அவள் கற்பிற்கும், அவள் அனுபவிக்கப்போகும் மோக்ஷத்திற்கும் வித்தாக இருப்பதினால் தான் எச்சியிலை சோற்றிற்காக புருஷன் வந்து சாப்பிடும் வரை மனைவி காத்திருக்கவேண்டும். புருஷன் பல அசந்தர்ப்பங்களால் சாப்பிடவேண்டிய நேரத்திற்கு 3,4 மணி கழித்து வந்தாலும் பெண் பசியால் எத்துணை சோர்வுற்றாலும் புருடன் வரும் நேரத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்க வேண்டியதே. அந்தோ! சைவர்கள் வீட்டில் பெண்டிரிடம் எத்துணை சீவ காருண் யம் காட்டப்படுகிறது. வெட்கம், வெட்கம் இச்சீவகாருண்யமற்ற கொடுஞ்செயலையொழிக்க எந்தச் சைவத்தலைவராவது முயன்றனரா? எந்தச் சைவப்பத்திரிகையாவது கிளர்ச்சி புரிந்ததா? இல்லை, இல்லை. இன்னும் பல சைவர்கள் வீட்டில் புருஷன் அயலூருக்குச் சென்றிருந்தால் அவன் சென்றிருக்கும் திசைக்கு நேராகக் கால் நீட்டி படுத்தலும் கூடா. அவன் ஊரிலில்லா சமயம் நல்ல சேலையும், பூவுமணிந்து திலகமும் இடக்கூடாதாம். இக் கட்டுப்பாடுகள் பட்டினங்களில் வசிக்கும் சைவர்கள் வீட்டில் குறைந்திருந்தாலும் கிராமங்களில் (சைவர்கள் வீட்டில்) இன்றளவும் நடந்தே வருகிறது. இன்னும் கணவன் பெயர், மாமன், சின்னமாமன், பெரியமாமன், மாமி, சின்னமாமி, பெரியமாமி, மைத்துனன், கொழுந்தன் முதலியோர்களின் பெயர்களைக்கூடக் கூறக்கூடா தென்பதோடு அவர்கள் பெயரின் முதலெழுத்து வரும் எந்த வார்த்தையும் கூறக்கூடாது. உதாரணமாக எமது பாட்டியாரின் கணவன் பெயர் கணபதியா பிள்ளை, அதனால் எனது பாட்டியார் கண், கல், களவு, கம்பு முதலிய எந்தவார்த்தைகளையும் கூறார். கந்தசாமி என்று கூறவேண்டுமானால் திருச்செந்தூர் சாமி பெயரைச் சொல்லு என்பார். சண்முகமா? என்றால் இல்லை யென்பார் பின் வேலாயுதமா? என்றால் அதுவும் இல்லையென்பார். அதன் பிறகு சிறிது யோசித்து இராமசாமி பிள்ளையின் மூத்தமகன் பெயரைச் சொல்யென்பார். கந்தசாமி என்று சொல்லிவிட்டால் அவ்வம்மையார் தான் பி.ஏ. பரீஷையில் தேறிவிட்டது போன்று மகிழ்ந்து ஆமாம் அப்பெயர்தான் என்பார். சைவர்கள் இத்தகைய மூடக்கட்டுப்பாடுகளுக்குள்ளே தம் வீட்டுப் பெண்களை வைத்துக் கொண்டு எமது சமயந்தான் பெண்டிர்க்குப் போதிய உரிமை நல்கி யிருக்கிறது என்று கூப்பாடு போடுவதில் யாது பயன். பெண்கல்வி: பெண் உரிமைக்காக ஆண்மக்கள் அதிகமாய் உழைக்கவும், அதற்காகப் போராடவும், மேனாடுகளில் நாம் அதிக மாய்க் காணமுடியா. பெண்களே தம் உரிமைக்காக தைரியமாய் முன்வந்து போராடுகின்றார்கள். காரணம், அவர்கள் கல்வி கற்றவர் களாயிருப்பதே. நமது நாட்டிலே சைவத்திருநெறியைச் சேர்ந்த கொடியர்கள் முதலாவது பெண்கல்வியின் வாயில் மண்ணை யள்ளிப்போட்டு மகளிரை விலங்காக்கி - ஏன் - பிள்ளைபெறும் யந்திரமாக்கி தங்கள் வழியிலாட்டி கணவன் மொழியே வேதவாக் கென்று கடைபிடித்தொழுகும்படி செய்துவிட்டனர். கல்விக்குத் தெய்வமாகிய சரவதி யம்மாளின் சாதியார்களாகிய பெண் டிர்கள் இன்று நிரக்ஷர குட்சிகளாய், மூடர்களாய் வாழ்ந்து வருகின் றார்கள். இன்று சீர்திருத்தவாதிகளின் இடைவிடா உழைப்பின் பயனால் பெண் கல்விக்கு எதிரிடையாக வாதிப்போர் தொகை குறுகி விட்டதென்றாலும் சைவர்கள் தம் பெண் மக்களுக்கு நன்றாய்க் கல்வி கற்பிக்க முயற்சிக்கின்றார்கள் என்று கூறமுடியாது. சைவர்கள் பெண் கல்வியில் சிரத்தை கொண்டிருந்தால், பணக்காரச் சைவர்கள் மிகுந்த, சைவக் கோட்டையென்று கூறப்படும் திரு நெல்வேலி ஜில்லாவில் பெண்களுக்கென்று ஒரு ஹைகூலாவது இல்லாதிருக்குமா? சிறு ஜனத்தொகையையுடைய கிறிதுவர்களுக் கென்று எத்தனை காலேஜ், எத்தனை ஹைகூல்கள், எத்தனை ஹையர் எலிமெண்டரி கூல்கள். ஏழைக் கிறிதுவர்கள் மிகுந்த இத்திருநெல்வேலி ஜில்லாவிலே எத்தனை பி.ஏ.பட்டம் பெற்ற பெண்கள். எத்தனை கூல் பைனல் படித்த பெண்கள். நூற்றுக் கணக்காய் - ஏன் - ஆயிரக்கணக்காயிருக்கின்றார்கள். இச்சில்லா வில் சைவப்பெண்களில் எத்தனைபேர் பி.ஏ.பட்டம் பெற்றிருக் கின்றார்கள் என்று வினவில் சைபர் (0) என்றுதான் கூறவேண்டும். சில நண்பர் குலசேகரன் பட்டினத்தைச் சேர்ந்த அறிஞர் சி.டி. நாயகம் அவர்கள் தம் மகளை பி.ஏ. பட்டதாரியாக்கியிருக்கின்றார்கள் என்று கூறலாம். அப்பெரியாரும் அவர் தம் துணைவியாரும் சைவ மனப் பான்மையையுடையவர்களாயிருந்தால் ஒரு பொழுதும் தம் புதல்விக்கு இத்தகைய உயர்தரக் கல்வியை யூட்டியிருக்கமாட் டார்கள். அவர்கள் உண்மையான சுயமரியாதை வீரர்களின் மனப்பான்மையுடையவர் களாயிருந்ததினால்தான் தம் புதல்வி உயர்தரக்கல்வி பெறச் செய்தனர். இப்பொழுது அதுபோல் ஏனைய பெண்களும் கல்விபெற உழைத்து வருகின்றார்கள். அவ்வழியில் அரும்பாடுபட்டுவரும் ஸ்ரீமதி சி.டி. நாயகம் அவர்களுக்குப் பெண்களுலகம் என்றும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளது. அஃதல்லாமல் திருநெல்வேலி ஜில்லாவிலே கூல் பைனல் பா பண்ணிய பெண்மணிகள் இரண்டு மூன்று பெயராவது இருப்பார் களா? என்பது சந்தேகம். ஆங்கிலக்கல்வியல்லாமல் தமிழிலாவது கசடறக்கற்று பெண்கள் உரிமைக்காக சொற்பொழிவுகளாற்றத்தக்க சில பெண்மணிகளும் கூட இரார்கள் என்பதே எனது திடமான அபிப்பிராயம். இந்த நிலையில் சைவர்களிருந்து கொண்டு தங்கள் சமயம் பெண் கல்விக்கு ஆதரவு கொடுக்கிறதென்றோ சைவர்கள் பரந்த நோக்கமும் சீவகாருண்யக் கொள்கையுமுடையவர்கள் என்றோ கூறல் வீண்பிதற்றலேயாம். மக்களினத்தை விலங்கினமாக்கும் ஒரு கூட்டத்தார் எங்ஙனம் சீவகாருண்ய முடையவர்களாவார். வள்ளுவர், சைவர்களின் திருமறையில் யொன்றாக கூறும் திருக்குறளில் விலுங்கொடு மக்களனையரிலங்கு நூல் கற்றாரோடேனையவர் என்று கூறுவதை அறிந்தாவது விலங்குத் தன்மையையுடைய கல்லாத பெண்ணுலகை கல்வி மயமாக்க முயற்சிப்பாராக. அஃதன்றி பத்திரிகைகளிலும், புத்தகங்களிலும் சைவம் எத்துணை உரிமை நல்கியிருக்கிறது. ஔவையைப்பார், காரைக்காலம்மையைப்பார் என்று வாய்வேதாந்தம் பேசி நாட்டை ஏமாற்றுங்காலம் மலை யேறிப்போய்விட்டதென்று அறிந்து பெண் கல்விக்கு உழைப்பார் களாக. சைவர்கள் பேச்சிலும் எழுத்திலும் வல்லவர்கள் தான், செய்கையில் அன்னோர் சைபர் (0) என்று உலகம் பரிகசிக்கும். இழிந்த பட்டத்தை மாற்ற ஆங்காங்கு முயற்சிப்பார்களாக. சைவச்சோதரர்களே! நீங்கள் மகளிர்க்கு எந்த உரிமையும் கொடுக்கவேண்டாம். ஆங்காங்கே பெண்கள் ஹைகூல்கள் ஏற்படுத்தி கல்வியைப் பரப்பிவிடுவீர்களாயின் நீங்கள் பெண்களுக் குரிய எல்லா உரிமையையும் நல்கிய அறவோர்களாவீர்கள். ஓர் ஆண்டிற்கு பெண் சாமிகளுக்கு கொடுக்கும் காணிக்கை, நகை, அபிஷேகச்சிலவுகள், பட்டாடை, திருக்கலியாணச் செலவுக ளனைத்தையும் நிறுத்திவிட்டு அதில் மிச்சப்படும் பணத்தைப் பெண் கல்விக்குச் செலவழிப்பீர்களாயின் உங்கள் வீடுகளிலெல்லாம் சரவதி என்னும் தெய்வத்தை காணலாம், அதில்லாமல் எத்தனை ஆண்டுகள் பூஜித்தாலும் நீங்கள் சரவதியைக் காணமாட்டீர்கள். சரவதியென்னும் தெய்வத்திற்கு சுயமரியாதை கிடையாதா? உண்டு அதினால்தான் நீங்கள் எத்துணை அன்புடன் பூஜித் தாலும் தனது ஜாதியாராகிய பெண்களின் கல்வி உரிமைக்கு பங்கமியற்றும் ஆண்களின் கண்களின் முன் தோன்றாமலிருக் கின்றாள் என்று கூறுவது மிகையாகாது. மணம்: ஒரு ஆடவனும், ஒரு பெண்ணும் இவ்வுலக வாழ்க்கை யில் ஒற்றுமையோடும், ஒருவருக்கொருவர் உதவி செய்து, சமத்துவ மாய் வாழ இருவரும் மன ஒருமையுடன் செய்து கொள்ளும் ஒப்பந் தமே திருமணம் என்று வழங்கப்படுகிறது. இத்திருமண விஷயத்தில் பெரிதும் ஆண்மகனுடைய உரிமைதான் கவனிக்கப்படுகிறதே தவிர, பெண்மக்கள் உரிமை கவனிக்கப்படவில்லை என்பது மட்டுமல்ல, அப்பெண்டிர் உரிமை முற்றும் பறிக்கப்பட்டு, முன்பின் அறியா ஓர் ஆண் மகனுக்கு அடிமைப் படுத்தப்படுகின்றாள் என்று தான் கூற வேண்டும். பண்டைக்காலத்திலே சைவர்கள் இல்லை தமிழர்கள் திருமண விஷயத்தில் மகளிர்களுக்கு சமத்வமான உரிமையை நல்கியிருந்தனர் என்று பல தமிழ்நாட்டறிஞர்கள் சாற்றுகின்றார்கள். உயர்திரு. சோமசுந்திர பாரதியவர்கள், வாழ்க்கைத் துணைவரில்லாக் காலத்தில் வந்தபகைவரை எதிர்த்துச் செருமுறையிற் பொருதமகளிரையும் தேச நன்மை செய்த உபகாரிகளாகவே தமிழுலகம் போற்றியிருக்கிறது. புறத்துறைகளிற் றோள்வலியாலும்,தாளாண்மையாலும் மாளுந்தன்மைக்குரிமை பற்றி யாடவராயினோர், தம்மனையறஞ்சிறக்க இல்லத்தையாளும் பெட்புடமையார் பேணத்தகும் பெண்டிரைப்பெரிதும் மதித்தும் பாராட்டிப் பேணல் கடன். இத்தகைபற்றியே மெல்லியலாரைப் பெண்மைத்திறஞ்சிறத்தல் காட்டிப்பெண்டிரென விசுந்து பேணிப் பேசியதென்ப வான்றமிழ் வாணர்; எனவே தமிழகத்தில் அடிப் பட்ட நல்ல முறைப்பெண்டிர் புருடரோடொக்க நன்கு மதிக்கப் படுவதேயாமென்பது தெளிவாகும். இளமை மணம், மறுமண மறுப்புகள் பெண்டிர் பீடிக்கப்படுந் தற்காலக் குறைவுகள் பண்டைத் தமிழ் வழக்கின்றி யிடைப்பிற வரலாறாயெழுந்துள்ளன; கைமை நோற்று ஒன்றிவாழுமுயன்ற பெண்டிருமல்லேம்; காதலனிறந்த தற்காக நீர்வீழ்ந்தும், நெருப்புப்புகுந்தும் கசப்பான கைமை தவிர்க்க வேண்டும்; சிறுமைப் பெண்டிருமல்லேம்; துணைவனுயிர் துறத்த லறிந்தவுடன் உயிர்தானே கழியு மூதானந்தமுது சீர் முறையுடையேம் நாமென்று, செயலின்றி விருப்பாலுயிர் துறக்கவல்ல கற்பரசி களிருந்த (அத்தகைய கற்பரசர்கள் எங்கு சென்றனர்? ஆண் பிள்ளை சிங்கங்களுக்கு கற்பெதற்கு என்று கூறும் தற்காலத்திய கொள்கை அக்காலத்திலும் இருந்தது போலும்) தமிழ் நாட்டில் மணவினைப் பொருளுமறியா இளமைக்காலத்தில் மகளிரையவர் விருப்பமறியா மல் மணம் புகுத்தி, வாழ்க்கை மணமறிய மலராமுன் கைமைச் சிறைக்கிரையாக்குவது, அறத்துரைக்கடாதது போலவே தமிழ் முறைக்கு முறணாவதேயாம் என்று மிக அழகுபடக் கூறியுள்ளார். இவைகளிற் பல நமக்கு உடன்பாடில்லா திருந்த போதிலும் இத்தகைய உரிமையாவது தற்காலப் பெண்டிர்க்கிருக்கின்றதா? அவர் தம் உரிமையை நாளடைவில் பறித்துக் கொண்டே முற்காலத்திய பழைய சுவடிகளில் கூறியிருப்பவைகளைப் புகழ்ந்து கொண்டிருப்பதில் யாது பயன்? இன்று தங்களைச் சீவகாருண்ய சீலர்கள் என்று தொண்டை கிழியக் கத்திக்கொண்டிருக்கும் சைவர்களில்லங்களில் நடைபெறும் திருமணங்கள் எவ்விதமாய் நடைபெறுகின்றன? ஆண் மகன் தனக்கு விருப்பமான பெண் இதுவென்று கூறவும், அப்பெண் அழகுடைய வளாய் இருக்க வேண்டும், கற்றவளாயிருக்கவேண்டும் என்றெல் லாம் கேட்க உரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது. பெண்மகளோ வாய் திறக்கக்கூடாது. தமக்கு வரப்போகும் புருஷன் இத்தகையவனா யிருக்க வேண்டுமென்று கூறவோ, தனக்கு விருப்பமான துணைவன் இவனென்று சொல்லவோ, தனக்கு கணவனாய் நிச்சயிக்கப்பட்ட புருஷனைப் பார்க்கவோ ஒரு பொழுதும் முடியாது. அவன் குரூபி யானாலும், மூடனேயானாலும், குடிகாரனானாலும் பெற்றோர் களால் ஒருவன் நிச்சயிக்கப்பட்டால், பெண்கள் மறுத்துக்கூற பெற்றோர்கள் இடமளிப்பதில்லை. ஒருசமயம் பெண் சிறிது தைரியங்கொண்டு எனக்கு அப்புருஷன் பிடித்தமில்லை என்று கூறி விட்டாலோ, அம்மம்மா! அப்பெண் தாய் தகப்பனின் ஏச்சி னாலும், உறவினர்களின் வசைச் சொல்லினாலும் படுந்துன்பம் கொஞ்ச நஞ்சமல்ல. பல பெண்மணிகள் இத்தகைய சந்தர்ப்பங் களில் தம் வீட்டைத் துறந்தோ, தற்கொலை புரிந்தோ கொள்கின் றனர். இத்தகைய செயல் பல நம்நாட்டில் நடைபெறுவதைக் கண்டும், கேட்டும் வருகின்றோம். இக்கொடுமைகளெல்லாம் நம் நாட்டு மக்களுக்கு சீவகாருண்யச் செயலாகத் தெரிவது நமது நாட்டின் துரதிருஷ்டம் என்றே கூறவேண்டும். இளமை மணம்: இளமை மணம் கொடிது, கொடிது என்று கூப்பாடு போடும் தொண்டர்கள் நம் நாட்டில் பலருண்டு. ஆனால், அவர்கள் தம் மத சாதிரங்களுக்கும், தம் வீட்டிலுள்ள வைதீக கிழங்களுக்கும் பயந்து இக்கொடிய செய்கையை யொழிக்க முன் வராதிருக்கின்றனர். இவ்விளமை மணம் யொழிந்து விட்டால் நம் நாட்டு விதவைப் பெண்களின் தொகையும் குறைந்துவிடும். பொது வாக நம் நாட்டில் இளமையில் இறந்துபோவோர் தொகைதான் அதிகமாயிருக்கின்றது. ஆகையால் தான் இளமை மணம் குறைந் தால் விதவைகளாவோர் தொகையும் குறையுமென்று சொல்லுகின் றோம். இதையறிந்துதான் தோழர் ஹரிபிலாதா சாரதாஅவர்கள் சாரதா சட்டம் என்னும் இளமை மணத்தடுப்புச்சட்டம் ஒன்றை நிறைவேற்றினர். அதை அமுலுக்குக் கொண்டு வராது செய்ய நம் வைதீகப்பேய்கள் செய்யும் சூழ்ச்சிகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. இவ்வைதீகக்குடுக்கைகளுக்கு நம் நாட்டிலுள்ள பெண் மக்கள் முன்வந்து தக்க பாடம் கற்பியாமல் வாளாவிருப்பதினாலே இவர் களின் ஆர்ப்பாட்டம் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இலாத்தில் பால்ய விவாகம் இல்லை யென்பது தெளிவாயிருந்தும், சில முலீம் தோழர்கள் இச்சாரதா சட்டத்தை ஒழிக்கத்துணைபுரிவது தான் விந்தையினும் விந்தையாயிருக்கிறது. இவ்விளமை மணத்தி னால் எத்தனை உயிர்கள் துன்பமடைகின்றன. எத்தனை பெண்கள் மரணத்திற்காட்படுகின்றார்களென்று நாம் சிந்திப்பதே கிடையாது. பத்துவயதுப் பெண்ணை மணஞ்செய்த முப்பது வயது ஆடவன் எவ்வாறு அப்பெண்ணினிடம் நடந்து கொள்வான் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? எத்துணையோ விடங்களில் இப்பெண் குழந்தைகள் தம்வாலிப புருடனின் இச்சைக்காட்பட்டு உடனே இறந்திருக்கின்றனர். பத்திரிகைகள் ஒழுங்காய் படிக்கும் நண்பர் களுக்கு இது புதிதல்ல. கல்கத்தாவில் இத்தகைய ஒரு சம்பவம் நடை பெற்றதை அறிந்து திரு. காந்தியவர்கள் இக்கொடுஞ்செயலைக் கண்டித்துள்ளார். ஆனால் இவ்விளமை மணம் என்னுங் கொடுஞ் செயலைப் பற்றி யாம் கண்டிக்கும் பொழுது மணம் புரியும் யுவர் களை மாத்திரமல்ல. அன்னோர் பெற்றோர்களைத்தான் பெரிதும் கண்டிக்கின்றேன். இதைப்பற்றிச்சொல்லும் பொழுது நம் ஜீவ காருண்யக்கோலம் பூண்டோர் ஐயா! நீங்கள் சொல்லுவது முழு வதும் மெய்யே! ஆனால் இது எமது கொள்கையல்ல. பார்ப்பனர் கொள்கை. சைவத்தில் இளமை மணத்திற்கிடமில்லை. இன்னும் விரிவாய்ச் சொன்னால், தமிழர்களே இவ்விளமை மணம் செய்பவர் களல்ல என்று சாதித்துவிடுவர். ஆனால் நாங்கள் இச்சைவ சமய குரவர்களிலொருவரான திருநாவுக்கரசு நாயனாரின் சகோதரியும், நாயனாரை சமண சமயத்திலிருந்து சைவத்திற்குமீட்ட பெருந் தகைப்பிராட்டியுமான திலகவதியார் இளமையில் விதவையாக்கப் பட்டு சிவாலயத்தில் தேவ அடியாராக இருந்தார்களே யென்று கூறினால், சுயமரியாதைக்காரர்களுக்கு ஆராய்ச்சியில்லை, படிப் பில்லை என்று கூறுவார்கள் என்பதினாலே நான் அதைப் பற்றி இங்கு விரித்துக்கூறப்போவதில்லை. நம் இந்திய நாடு உஷ்ண பூமி. உஷ்ணத்தினாலும், ஏனைய சில காரணங்களினாலும் தற்சமயம் பெண்கள் 9 வயதிலிருந்தே பூப்பெய்துகின்றார்கள். பூப்பெய்தி ஒன்றிரண்டு ஆண்டுகளில் சாதாரணமாய் சைவர்கள் வீட்டிலெங்கும் திருமணம் செய்யப்பட்டு வருகின்றது. இது இளமை மணமாகாதா? என்று சைவ நண்பர்களை வினவுகின்றேன். பெண்களுக்கு இருபது வயது மட்டும் கல்வி கற்கும் வயது. அதற்குள் நடைபெறும் மண மெல்லாம் இளமை மணமே என்று பல பெண் அறிஞர்கள் சொல்வது கவனிக்கத் தக்கதேயாகும். 10,11 வயதிலே திருமணஞ் செய்யப்பட்ட பெண்; போதிய கல்வி கற்கச் சந்தர்ப்பம் பெறாதபெண்; உடலின் உள் உறுப்புகளெல்லாம் முற்றாய் வளர்ந்து உடல் நலம் பெறாத பெண்; புருஷனின் கூட்டுறவால் இளமையில் ஒளிமழுங்கி, உடல் உரம் குன்றி, தம் இருபது வயதிற்குள் 5,6 பிள்ளைகளுக்குத்தாயாகி, குடும்பக் கவலை, மக்களின் தொல்லை முதலிய பலவற்றாலும் கஷ்டப்படுவதோடு, எலிக்குஞ்சுகள் போன்று இளமையில் பெற்ற தம் மக்கள் அடிக்கடிநோயால் கஷ்டப்பட நேர்வதால், அப்பொழு தெல்லாம் தாம்பத்தியம் காத்து கஷ்டப்பட்டு, புல் தடுக்கினும் பொத் தென்று கீழே விழுந்து, இறந்து போகக்கூடிய பலயீனதிதிக்கு பெண்களையாக்குவது சீவகாருண்ய நெறியா? பிள்ளை பெறுவதை இயன்ற மட்டும் தடுக்கச் சொல்பவர் ஜீவகாருண்யமற்றவர்களா? வைதீகராகிய திரு. காந்தி, கலியாண சுந்தரனாரும் கூட இயற்கை முறையில் பிள்ளைகள் அதிகம் பெறுவதைத் தடுத்தல் வேண்டும் என்று கூறி வருகின்றார்கள். இயற்கை முறையில் தடுப்பவர் தடுத்துக் கொள்ளட்டும். அவ்வாறு தடுக்க முடியாதோர் செயற்கை முறையி லும் தடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறுபவர்கள் சீவகாருண்ய மற்றவர்களா? அன்பர்களே! உண்மையில் ஒரு பிள்ளை பெறுவதில் பெண்மக்கள் எத்துணை கஷ்டப்படுகின்றார்களென்பதை நன்கு அறிந்தால் நிக்ஷயமாகவே இப்பெண்மக்களை இக்கஷ்டத்திலிருந்து மீட்பதே ஜீவகாருண்யமென்று உணர்வீர்கள். நண்பர்களை யான் பார்த்திருக்கின்றேன்; தம் சோதரி, மனைவி பிரசவவேதனையால் போடும் சத்தத்தைக் கேட்டு யாறு போன்று கண்ணீர் சிந்துகின் றார்கள். பெண்டிர் பிள்ளைகள் சுருக்கமாகப் பெற்றால், பிள்ளை களைச் செம்மையாய் வளர்க்கவும், அவர்களுக்குப் போதிய கல்வி யளிக்கவும் கூடும். பிள்ளைகளை முற்றாய் பெறாதவர்களே உலகிற் கியன்ற தொண்டாற்றவும் தமக்குரிய உடல், பொருள், ஆவி மூன்றை யும் எளிதில் தத்தம் செய்யவும் கூடும். பிள்ளை பெறுவதைத் தடுத்து வாழும் முறையை அறியாத நம் முன்னோர்களிற் பலர் இயற்கைக்கு முற்றும் முரணான பிரமச்சரிய வாழ்க்கையை மேற் கொண்டு கஷ்டப்பட்டு அலைந்தார்களென்பதை நாம் நன்கு அறிய வேண்டும். இவைகளொன்றையும் கவனியாது தம் வாழ்க்கையில் நடந்து வருஞ் செயல்களே தம்முன்னோர் நடந்து வந்த நடத்தைகளே ஜீவகாருண்யச் செயலென மூட நம்பிக்கை கொண்டு இறுமாப்புடன் ஜீவகாருண்ய நெறியின் தன்மையை யறியாது பிதற்றுவோர் நமது நாட்டுச் சைவர்களே என்பது புலனாகும். காதல்: இதன் பொருள் அன்பு என்றாலும் பொதுவாக ஒரு ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் நட்புக்கொண்டிருப்பதையே காதல் என்று வழங்கப்படுகிறது. மனித வாழ்க்கையில் பசியும் காதலுமே முக்கிய அம்சங்களாய் விளங்குகின்றன. இக்காதலை வெறுக்கும் மனிதர்களே இவ்வுலகில் ஒருவருமிரார். கடலால் சூழப் பெற்ற இவ்வுலகமே காதலால் சூழப்பட்டிருக்கிறது. காதல் என்பது ஒன்றில்லையாயின் இவ்வுலகமே நடைபெறாது. ஆனால் மக்கள் யாவரும் காதலின் உண்மைத் தன்மையை உணர்ந்து நடப்பார் களாயின் நாட்டில் குலமேது? உயர்வு தாழ்வேது? பால்யமணமேது? முதலாளி, தொழிலாளி வேற்றுமையேது? பிராமணர் சூத்திரர் பாகுபாடேது? சண்டை சச்சரவுகளேது? கொலைகளேது? எங்கும் சாந்தம், எங்கும் அமைதி, எங்கும் இன்பம், எங்கும் சமத்துவம். எனவேதான் நாட்டில் வேற்றுமையுணர்ச்சி பெருகவும், சுயநலத் தோர் வயிற்றுப்பிழைப்பு நாடகம் நடைபெறவும் மதத்தின் பேரால், கடவுளின் பேரால் காதலின் வாயில் மண்ணைவாரிப்போட்டு அதை நம் தமிழ் நாட்டிலில்லாது விரட்டி விட்டார்கள்-இல்லை-கொன்றுவிட்டார்கள் என்றே கூறவேண்டியதிருக்கிறது. இக் காதலை மனிதர்கள் தங்கள் சமயத்தின் பேரால், கடவுள் பேரால், பழக்கவழக்கத்தின் பேரால், எத்துணை தூரம் ஒழித்து விட முயற்சி செய்யினும் மக்களின் உள்ளத்தில் இயற்கையில் தோன்றிய இவ் வின்ப உணர்ச்சியை முற்றாய் ஒழித்து விட்டார்கள் என்று கூற முடியாது. அதை எவராலும் ஒழித்துவிடவும் முடியாது. இதைப் பற்றி திரு. பென்லின்சே என்னும் அறிஞர் காதலென்பது சரீரத் தோடு பிறந்ததோர் உண்மை உணர்ச்சி. நமக்குப் பசி எவ்விதம் உண் டாகிறதோ அதேபோன்றுதான் காதலும் உண்டாகிறது. பசியை எவ்விதம் சட்ட சம்மதமானதென்றோ அன்றி சட்டவிரோதமான தென்றோ கூறமுடியாதோ அதே மாதிரியே காதலையும் கூற முடியாது. காதலை ஒழுக்கமென்றோ அன்றி ஒழுக்கமற்றதென்றோ கூறவும்முடியாது. பசியை அதிகாரத்திற்கும் சட்ட திட்டங்களுக்கும் உட்பட்டதாக எவ்விதஞ் செய்யமுடியாதோ அதே போன்றே காதலையுஞ் செய்ய முடியாது. இச்சட்ட திட்டங்களுக்கெல்லாம் அது உட்பட்டதல்ல வென்று நமது உள்ளுணர்ச்சியே தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது என்று கூறியுள்ளார். காதலின் பெருமையை வியந்து அறிஞர் ரகின் என்பார் ஒரு திரீயினுடைய காதலினால் சுத்தப்படுத்தப்படாமலும் அவளுடைய தைரியத்தினால் பலமளிக்கப் படாமலும் அவளுடைய பகுத்தறிவினால் வழிகாட்டப்படாமலு மிருந்த மனிதன் எவனும் சரியான வாழ்க்கையில் வாழ்ந்ததில்லை என்று கூறியுள்ளார். இன்னும் டெனிசன், செகப்பிரியர் போன்ற ஐரோப்பிய மேதாவிகள் பலரும் காதலைவியந்து கூறினர், பாடினர், தம் நாட்டில் காதல் செழித்தோங்க வழியுங்கோலினர். இது கண்ட சைவத் தலைவர்களென்போர் தமது சமயம் காதலைப் போற்று கிறது என்று கூற நினைத்தனர். இன்றேல் உலகம் சைவத்தை, மக்களின் ஜீவாதாரமான உரிமையை மறுக்கும் ஒரு போலிச்சமயம் என்று கருதிவிடும் என்று எண்ணினர். தேவாரம், திருக்கோவையார் முதலிய நூற்களில் தம் கொள்கைகளுக்கு ஆதரவுத்தேடி நுணுகி நுணுகி ஆராய்ந்து சில செய்யுட்களைக்கண்டு ஆனந்தித்து கருத்துக் களைப்புரட்டி கவின்புறநூற்கள் எழுதினர். பத்திரிகைகளிலும், பிரசங்கங்களிலும் தம் புதிய கொள்கைகளை வற்புறுத்தினர். எடுத்துக்காட்டாக திரு. வேதாச்சலம் அவர்கள், சாதிவேற்றுமை என்னும் கொடிய தூக்குக்கயிறானது காதலன்பின் கழுத்தை இறுக்கிவிட்டது. காதலன்பில் சிறந்து மறுவற்ற மதிபோல் விளங்கத்தக்கவரான நம் பெண்மணிகளின் கற்பொழுக்கத்தை நிலை குலைத்து அதனை பழிபாவங்களால் மூடி விட்டது. எந்தப் பெண்மகளாவது தான் காதலித்த இளைஞனை மணம்கூட இடம் பெறுகின்றனளா? எள்ளளவுமில்லையே ஏன்? ஒரு சாதிக்குள்ளே இருபது வீடுகளேயுள்ளன, ஒரு இனத்திலே அவள் ஒருவனை மணக்க வேண்டும். அவள் கயல்மீனையொத்த கண்ணழகியாயிருந்தாலென்ன! கண்குருடானவனைத் தவிர வேறு மணமகன் தன் இனத்தில் கிடைத்திலனாயின் அவள் அவனையே தான் மணந்துதீரல் வேண்டும். அவள் முத்துக்கோத்தாலொத்த பல்லழகியாயிருந்தாலென்ன? தன் பாழும் இனத்தில் ஒரு பொக்கை வாய்க்கிழவனைத்தவிர வேறுமணமகன் கிடைத்திலனாயின் அவள் அவனையேதான் மணந்துதீரவேண்டும். அவள் பல கலைகற்று கல்வியறிவிலும், இசைபாடுவதிலும் நுண்ணறிவிலும் சிவநேய அடியார் நேயங்களிலும் சிறந்த கட்டழகியாயிருந்தாலென்ன? இறுமாப்பே குடிகொண்ட தன் சிறுமாக்குடியில் கல்வியிருந்த மூலையே கண்டறியாதவனும் பாட்டுப்பாட வாயைத்திறந்தால் ஓட்டமாய் வர வண்ணானை வருவிப்பானும் அறிவை - ஓட்டிவிட்ட வெறும் மூளையுடையானும் குடித்து வெறுப்பானுமாகிய ஒருவனைத்தவிர வேறு மணமகன் கிடைத்திலனாயின் அவள் சாதியைவிட்டு வேறு சாதியிற் கலக்கலாகாமையின் அக்கல்லாக் கயவனையே கணவனாய் கொள்ள வேண்டும். ஆ! பொருளற்ற இச் சாதி வேற்றுமைக்கொடுமையால் நம் அருமைப்பெண்மணிகள் படுந்துயர் மலையினும் பெரிதோ, அன்றிக்கடலினும் பெரிதோ, அன்றி ஞாலத்தினும் பெரிதோ இவ்வளவுதான் என்று கூறல் எம் ஒரு நாவால் இயலாது. விலங்குகளும், பறவைகளும் கூடத்தான் தாம் விரும்பிய துணையையே கூடி இனிது வாழா நிற்க ஆறறிவுடைய மக்கட் பிறவி யிற் பிறந்து ஆறறிவையும், அழகையும், நற்குணத்தையும் கண்டு பாராட்டிக் காதலன்பு கொள்ளத்தக்க ஆண் பெண் மக்கள் மட்டும் இடையே புகுந்த சாதி வேற்றுமையென்னும் கொலைஞனால் வெட்டியழிக்கப்பட்டு காதலன்பு என்னும் உயிர் ஓடிபோனபின் இழிந்த காமப்பிண வாழ்க்கையில் காலங்கழிக்கும்படி கட்டாயப் படுத்தப்பட்டால் இதனினும் வேறு கொடுங்கொலை உளதோ! கூறுமின்கள் அறிஞர்களே! உலகியலொழுக்கத்திற்கு அடிப்படை யாய் நிற்கும் காதலன்பைக் கீழறுத்து விட்டால் அதன் மேல் நிற்கும் அவ்வுலகியல் வாழ்க்கை கீழ்விழுந்து நொறுங்காதொழியுமோ! என்றும், இளமைப்பருவத்தில் ஆண்பெண் என்னும் இருபாலார்க்கும் தோன்றுவதாகிய இன்ப உணர்ச்சியானது அழகு, அறிவு, நல் லியற்கையினால் உந்தப்பட்டு எழும் அன்பின்வயமாகி ஒருவரை யொருவர் இன்றியமையாராய் ஒருங்கு பொருந்தும் ஆண்பெண் மக்களுக்கு இவ்விழுமிய காதலின்பத்தையூட்டி அவரது வாழ்க்கையை தூய்மை செய்து அதனைப்பெரிதும் பயன்படச்செய்வதாகும் என்றும் கூறியுள்ளார். இதை ஆதரித்துத் திரு.வி கல்யாணசுந்தர முதலியார் அவர்களும் திரு. கா. சுப்பிரமணியபிள்ளையவர்களும், வேறு பல சைவத்தலைவர்களும் திறம்பட மொழிந்துள்ளார். இதனால் அறிவுடையார் எவரும் சைவம், காதல் மணத்தை ஆதரிக் கிறது என்று கூறத்துணியார். உண்மையில் சைவம் காதல் மணத்தை ஆதரிக்குமாயின் தற்காலச் சைவர்களிற் சிலராவது காதல் மணத்தை அனுஷ்டானத்தில் செய்து காட்டவேண்டும். நல்லமரம் நல்ல கனி கொடுக்கும், கெட்ட மரம் கெட்டகனி கொடுக்கும் என்னும் பழ மொழிப்படி உண்மையில் சைவம் காதல் மணத்தை ஆதரிக்கு மாயின் இன்று சைவர்களிடம் அக்காதல்மணம் அனுபவத்தில் காண லாம். இன்றைய சைவர்கள் காதல் மணத்தை ஆதரிக்காவிடினும் அதற்கு எதிரிடையாக இல்லாமல் இருந்தாலாவது சைவம் காதல் மணத்தைத் போற்றுகிறது என்று கூறலாம். ஆனால், சைவத்தலைவர் களே! தம்மக்கள் ஒரு காதலனை விரும்பித்தேர்ந்து மணந்து கொள்ள இசைந்து நிற்கையில் அதைத்தடுத்து சுமார் 30 வயது வரை யும் தம்மகள் தான் காதலித்த புருடனை மணக்க இடங்கொடாது அவள் தம் காதலை நினைந்து நினைந்து நைந்து வருந்தும் படி செய் கின்றார்கள் என்றால் மற்றவர்களைப்பற்றி கூறவும் வேண்டுமோ? இத்தகை அன்பர்களைத்தான் நமது தேசீயக்கவி திரு. பாரதியார், நாடகத்தில் காவியத்தில் காதலென்றால் நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றாமென்பர்; ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோரத்தே ஊரினிலே காதலென்றால் உறுமுகின்றார்; பாடைகட்டி யதைக்கொல்ல வழிசெய்கின்றார் பாரினிலே காதலெனும் பயிரைமாய்க்க; மூடரெல்லாம் பெருமையினால் விதிகள் செய்து முறைதவறி யிடரெய்திக் கெடுக்கின்றாரே என்று கூறியிருக்கின்றார் போலும். இன்று உலகம் ஒரு மதத்தின் கொள்கையை அறிய அம்மத நூற்களில் கூறியிருப்பவைகள் என்ன வென்பதை அறிய விரும்பவில்லை. மதநூற்களில் சொல்லப்பட் டிருப்பவைகளை புலவர்களின் திறமைக்குத் தக எப்படி வேண்டுமா னாலும் பொருளைப் புரட்டிக் கூறலாம் என்பதை நன்கறிந்திருக் கிறது. எனவே ஒரு மதத்திலுள்ள மக்களின் செயலைக் கொண்டே அம்மதத்தின் தன்மையை முடிவுகட்டுகின்றது. ஆகையால் சைவம் காதல் மணத்தை ஆதரிக்கிறதா? இல்லையா? வென்பதை அறிய அம்மதத்திலுள்ள மக்களின் நடவடிக்கைகளைக் கண்ணுறுவது நியாயமன்றோ? எனவே சைவம் மக்களின்மேல் ஜீவகாருண்யம் காட்டுஞ் சமயம் என்பதை உலகிற்கு நிரூபிக்க சைவர்கள் விரும்பினால் வீணாக, சுடர்த்தொடீஇய் கேளாய் தெருவில் நாம் ஆடும் மணற்சிற்றில் காலில் சிதையா அடைச்சிய கோதை பரிந்து வரிப்பந்து கொண்டோடி நோதக்க செய்யுஞ் சிறுபட்டி மேலோர்நாள் அன்னையும் யானும் இருந்தேமா, இல்லிரே! உண்ணு நீர் வேட்டேன் எனவந்தார்ற் கன்னை அடர்பொற் சிரகத்தால் வாக்கிச் சுடரிழாய் உண்ணு நீர் ஊட்டிவா வென்றாள், எனயானும் தன்னை யறியாது சென்றேன்மற் றென்னை வளைமுன்கை பற்றி நலியத் தெருமந்திட்டு அன்னாய் இவனொருவன் செய்தது காண் என்றேனா அன்னை யலறிப் படர்தரத் தன்னையான் உண்ணுநீர் விக்கினான் என்றேனா அன்னையும் தன்னைப் புறம்பழித்து நீவமற் றென்னைக் கடைக்கண்ணாற் கொல்வான் போல் நோக்கி நகைக்கூட்டம் செய்தான் அக்கள்வன் மகன். என்ற கலித்தொகை என்னும் அரிய பழந்தமிழ் நூலிலுள்ள செய்யுளைக் கூறி கையை நீட்டி நீட்டிப் பிரசங்கிப்பதையும் இன்னும் இறையனார் அகப்பொருள் போன்ற நூலின் செய்யுளை இசை யுடன் தலையை அசைத்து அசைத்துப் பாடுவதையும் விடுத்து மகளிரின் உரிமையில் பிரதானமாய் விளங்கும் காதல் மணம் பெருக தக்கனபுரிதல் வேண்டும். இன்றேல் அவ்வழியில் தொண்டர்களுடன் சேர்ந்து பணிபுரிதல் வேண்டும். அஃது மின்றேல் தம் சமயத்தில் சாதியில் காதல் மணம் புரியும் சுயமரியாதைத் தொண்டர்களுக்கு இடையூறு புரியாமலும் இழித்துரையாமலும் இருத்தல் வேண்டும். இஃதல்லாமல் இன்னும் உள்ளொன்று வைத்துக்கொண்டு புறமொன்று பேசி காதல் மணத்தை வேருடன் கல்லிக்கொண் டிருந்தால் அன்னோர்களும் அவர் தம் சமயம், கடவுள், வேதம், புராணம் முதலியனயாவும் அதி சீக்கிரம் ஒழிக்கப்படும் என்ப தையும் ஒழிக்கப்படவேண்டியது என்பதையும் அறிஞர் யாவரும் கூறுவர். அஃதுடன் காதல் மணத்திற்கு இடையூறு புரிபவர் எவரும் இவ்விருபதாம் நூற்றாண்டிலே தங்களை ஒரு ஜீவகாருண்ய மததர்கள் என்று கூறல் முடியாதென்பதையும் உணரக்கடவர். காதலினாற் மானுடர்க்குக் கவிதையுண்டாம் கான முண்டாம், சிற்பமுதல் கலைகளுண்டாம் ஆதலினாற் காதல் செய்வீர் உலகத்தீரே, அஃதன்றோ இவ்வுலகத் தலைமை இன்பம் காதலினாற் சாகாமல் இருத்தல் கூடும் கவலைபோம் அதனாலே மரணம் பொய்யாம் என்று பாரதியார் பாடிய செய்யுளை சைவர்கள் மாத்திரமல்ல தங்களைக் காந்தீயம் என்னும் ஜீவகாருண்ய மதத்தார் (அஹிம்சா வீரர்) என்று கூறும் தேசீய வீரர்களும் காதலைக் கண்டிக்கும் வைதீக பித்தம் பிடித்த திங்கள் வெளியீடுகளின் ஆசிரியர்களும் ஆராய்ந்து பார்க்கட்டும். விவாஹரத்து: ஒரு பெண் தன் கணவனன்றி வேறு ஆண் மகனுடன் சோரம் போனாலும், அவள் பிள்ளை பெறாத மலடி யாய்ப் போய்விட்டாலும், குஷ்டம் போன்ற கொடிய நோய் வாய்ப் பட்டாலும், அதிகமாய் பிள்ளைகள் பெற்று மெலிவுற்று அழகு குறைந்து ஆண்மகனின் இச்சையைப் பூர்த்திசெய்யத்தக்க சக்தி யற்றிருந்தாலும், அல்லது தாம் விரும்பியவாறே அழகு, படிப்பு, நகை முதலியன குறைவாக இருந்தாலும் அல்லது தமது கட்டளைத் தவறாக இருந்தாலும் மனைவி கீழ்ப்படிந்து நடக்காவிட்டால் அவளை விவாஹரத்து செய்துவிட்டு வேறொரு பெண்ணை மணந்து கொள்ளவும் முதல் மனைவியிருக்கும்போதே ஒன்றல்ல - இரண்டல்ல - தசரதன் போன்று அறுபதினாயிரம் பெண்களை மணந்துகொள்ளவும் அதுவும் போதாவிடில் லட்சக்கணக்கான பெண்களை வைப்பாட்டியாக வைத்துக்கொள்ளவும் நமது ஜீவ காருண்ய மதங்கள்அனுமதி கொடுக்கின்றன. ஆனால் ஒரு அழகிய நற்குணவதியான பெண்மகளுக்கு வாய்த்த கணவன் எத்துணை குரூபியாயிருப்பினும், பல்லிழந்த கிழவனாயினும், தொழுநோய் பற்றிய தோலனாயினும், ஆண் தன்மையிழந்த அலியாயினும், குணங் கெட்ட குடிகாரனேயாயினும், விபசாரமே தனது தொழிலாய்க் கொண்டலையும் வீணனேயாயினும், தம்மனைவியைக் கூட்டிக் கொடுத்துப் பொருள் சம்பாதிக்கும் தகைமையானாயினும் இன்னும் எத்துணை தகாத செயலை யுடையவனேயாயினும் அவனைவிட்டு விவாஹரத்துச் செய்து சுகமே தமக்கியைந்த நல்ல துணைவனுடன் வாழ நமது ஜீவகாருண்ய மதம் இன்றை நாள் வரை இடங்கொடுக்க வில்லை. கணவன் எத்தகைய துன்பத்துக்குட்படுத்தினும் அவனுடன் மனைவியிருந்து வாழ்ந்து தொலைக்க வேண்டியதாகவே யிருக்கிறது. தெய்வம் தொழாஅள் கொழுநற்றொழுதெழுவாள், பெய்யெனப் பெய்யுமழை என்று கூறும் நமது மதம், கற்பெனப்படுவதே சொற்றிறம்பாமை என்று சொல்லும் நம் சமயம், தம் மனைவியை ஒரு சில பக்தர் விரும்பிக்கேட்க உடனே தம் இல்லாளை அச்சிவ பக்தனிடம் கூட்டிவிட்டு அப்பக்தனுக்குத் தம் சுற்றத்தாரால் இன்னல் விளையாது காத்து வந்த கொடுஞ் செயலைப் போற்றி அஃதே புண்ணிமான செயல்; மோக்ஷத்தை அளிக்கவல்ல அருஞ் செயல்; அவரே எம் சமயத்தை உய்விக்கவந்த நாயன்மார் என்று கூறும் சமயம் எவ்வாறு மகளிர் உரிமைக்காக முன்வந்து ஆண் மக்களைப் போன்று பெண்மக்களுக்கும் விவாஹரத்துச் செய்து கொள்ளவோ அல்லது ஆடவனைப் போன்று ஒரு கணவனிருக்க மற்றொருவனை விவாகஞ்செய்ய அனுமதி நல்கும். துரோபதை ஐந்து கணவரை மணந்ததைப் போற்றி அவளைக் கற்புடையாள் என்று போற்றும் ஒரு மதம் தற்காலப்பெண்களுக்கு மாத்திரம் வேறு சட்டம் செய்வானேன்? என்பதை நமது மக்கள் யோசிப்பதில்லை. ஆண் தான் விரும்பியவாறெல்லாம் சட்டம் அமைத்துக் கொண்டு அநீதியான வழிகளிளெல்லாம் திரிந்து கொண்டு பெண் நியாயமான உரிமைகளையும் அனுபவிக்கவிடாது தடுக்கும் சட்டங்கள் அமைக்கப்பட்ட இந்துசமயங்களை ஓர் அறிஞர் பெண் கொலை மதம் என்று கூறியது மிகப்பொருத்தமானதே. கணவர்களால் அநீதியான முறையில் அடித்து விரட்டப்பட்ட பெண்களிற் பலர் வேறு புருடர்களை மணந்து சுகமாய் வாழ வழியின்றி விபசாரஞ் செய்து தம் பசிப்பிணியைப்போக்கி வருகின்றது நண்பர்கள் பலருமறிந்தே இருப்பீர்கள். புருடர்கள் விலக்கப்பட்டோ அல்லது புருடனை விலக்கிய பெண்களையோ வேறு புருடனை மணந்து கொள்வது கூடாது; சட்டப்படி அவ்வாறு வேறு விவாகஞ் செய்து அவர்களைத் தண்டிக்க அதிகாரமுள்ள நமது மதம் விபசாரஞ் செய்துகொள்ள சட்டப்படி அனுமதிக்கிறது. இதைவிட அம்மதத்திற்கு வேறு என்ன கேவலம் வேண்டும். இவ்வாறு ஆணுக்கொரு நீதியும் பெண்ணுக்கொரு நீதியும் வழங்கும் ஒரு மதத்தை எங்ஙனம் ஜீவகாருண்யமதம் என்று கூறுவது? என்று தான்ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே சட்டத்தையுண்டு பண்ண வேண்டியது என்று நம் மக்களின் மனப்பான்மை மாறுமோ அன்றுதான் நமது நாட்டின் அதிர்ஷ்ட நாளாகும். இத்தகைய மனப்பான்மையையுடையோர் பலர் பெருக இன்னும் பன்னாள் செல்லவேண்டும் என்றே கருதவேண்டியதிருக்கிறது. பெண்ணே தெய்வம், பெண்ணைப் போற்றுக, பெண்ணை வணங்குக என்று கூறிய சைவத்தோழர் திரு. வி. கல்யாணசுந்தரமுதலியார் அவர்களும் கூட தம் பெண்ணின் பெருமை என்னும் நூலில் பெண்மகளின் கவலையீனத்தாலோ வேறு எக்காரணத்தாலோ பொருந்தா நாயகன் வாய்க்கப்பெறுவனேல் என் செய்வது? பெண்மகள் அவனுடன் வாழ்வதா அல்லது வாழாது அவனைவிடுத்துப் பிரிவதா? பிரிதல் வேண்டுமென்று சொல்ல இந்தியாவில் பிறந்த எனக்கு நாவெழ வில்லை. எங்ஙனமாவது முயன்று அப்பொருந்தாத் தன்மையைப் போக்கவே பெண்கள் முயலல்வேண்டும். பெண்மை என்பது தாய்மை என்றும் தாய்மை என்பது தொண்டு என்றும் மேலே சொல்லப் பட்டன. அத்தொண்டைப் பொருந்தா நாயகனை ஒழுங்குபடுத்துவ தில் பெண்கள் நிகழ்த்தலாம் அன்றோ? தொண்டில் விருப்புடைய பெண்ணிற்கு அஃதொரு வாய்ப்புமாகும். தனக்கு வாய்ந்த நாய கனைப் பண்படுத்தப் புகுந்தொண்டினும் வேறு தொண்டு ஏற்றுக்கு? அத்தொண்டு வழியில் வாழ்வு செலுத்தும் பெண்மணி வாழ்க. அவள் பால் கடவுள் என்றும் நிலவுக என்று கூறுயுள்ளார். என்னே இவரின் புலமைத்திறம்! பசப்பு வார்த்தையின் பகட்டு! ஜீவகாருண்ய மதம் என்று தற்பெருமை பேசும் சைவ சமயத்திலேயுள்ள தலைவர் களின் பெண் உரிமை விஷயத்தில் தாராள புத்தியையுடைய நமது தோழர் திரு. வி.க.. அவர்களேயாகும். இவருடைய நிலையே இத்தகையதானால் மற்றையோரைப்பற்றி வினவவும் வேண்டுமா, பெண்ணிற்கு இஷ்டப்பட்ட கணவரைத் தெரிந்தெடுக்க உரிமை யில்லை; கல்வியில்லை; ஆண்மகன் எடுத்தற்கெல்லாம் மனைவியை அடிக்கவும் அவளை நீக்கவும், வேறு மணம் செய்யவும் உரிமை சட்ட பூர்வமாய்ப் பெற்றுவருகிறான். சட்டதைரியத்தாலே ஆண்கள் அதீதமான முறையில் நடந்து பெண்களை இம்சித்து வருகிறார்கள். அத்தகைய ஆண்மகனை எவ்வித வழியிலும் கட்டுப்படுத்தமுடியாத இச்சீவகாருண்யசீலர் பொருந்தா நாயகனாயிருப்பினும் அவனுடன் கட்டியழுது தொலைப்பதே புண்ணியமென்று கூற முற்பட்டு விட்டார். அதுவே ஒரு இந்தியனின் மனப்பான்மை என்று கள்ளங்க படின்றி கூறியும் விட்டார். இவைகளை எல்லாம் ஆராய்ந்தே நமது பெண்மணிகளிற் சிலர் நாம் ஆண்மக்களின் துணையின்றி நாமாகவே நம் உரிமைக்காகப் போராடி நமது உரிமைக்கு எதிராக இருப் பவைகளனைத்தையும் ஒழித்து விடவேண்டுமென்று கூறுகின்றனர் போலும். ஆண்மக்களிற் பெரும்பாலார் சுயநல மனப்பான்மையை விட்டு விட்டதாய்த் தெரியவில்லை. எனவே தோழர் இந்திராணி பாலசுப்பிரமணியம், தோழர்கள் குஞ்சிதம், பீ.ஏ. எல்.டி, நீலாவதி, விசாலட்சி, மரகதவல்லி முதலியோர்கள் முன்வந்து ஆண் மக்களின் மனப்பான்மையையும், ஜீவகாருண்யமதமென்று பெண்களைக் கொலைபுரியும் மதங்களின் நிட்டூரங்களையும் இன்று பிரசங் கங்கள் மூலமாயும் குடிஅரசு போன்ற பத்திரிகைகள் மூலமாகவும் உள்ளங்கை நெல்லிக்கனியென விளக்கி வருகின்றார்கள். இப் பொழுது எச்சமயம் ஜீவகாருண்யமதம் எனச் சொல்ல முன்வரு கிறது பார்ப்போம் என்று பெண்டிர் சேலஞ்ச் (பந்தயம்) பண்ணு கின்றார்கள். அவர்கள் முன் எச்சமயம் வந்து நிற்கும். உடையும் முடியும்: உடை விஷயத்தில் ஆணுக்கொரு நீதியும் பெண்ணுக்கொரு நீதியும் இந்திய நாட்டின் பல விடங்களிலும் வழங்கப்பட்டு வருகிறது. மஹாரஷ்டிரம் முதலிய நாடுகளிலே பெண்டிர்கள் 24 முழச் சேலைகள்கட்டவேண்டும். அதிலும் கதர் சேலை கட்டுவதென்றால் எத்துணை கஷ்ட மென்பதை யூகித்துக் கொள்ளுங்கள். அந்தோ! கொடுமை! கொடுமை!! பெண்டிர்களை மனித உருவமென்றெண்ணாது ஒரு கழுதைப் பொதியை அவர்கள் எப்பொழுதும் சுமந்து திரியும்படி செய்வது அறமா? ஜீவகாருண்ய விஷயத்தில் உலகிலுள் எல்ல சமயத்திலும் சிறந்து விளங்குவது சைவம் என்று அச்சமயத்திலுள்ளோர் பலராலும் போற்றப்படும் ஒரு சமயத்தை ஆராய்ந்தால் அஃது எவ்விஷயத்திலாவது பெண் மணிகளிடம் ஜீவகாருண்யம் காட்டுகிற தில்லையென்பது விளங்கும். சைவப் பெண்கள் எங்காவது 12 முழத்திற்குக் குறைந்த உடை கட்ட அனுமதிப்பில்லை. பெரும்பாலோர் 16 முழச் சேலைதான் கட்டி வருகின்றார்கள். உஷ்ணப்பிரதேசங்களில் வாழும் ஆண்கள் உடம்பில் ஒன்றும் அணியாது இடுப்பில் 4 முழ வேஷ்டியும் மேலே 8 முழத் துண்டும் போட்டுக் கொள்வதே சிரமாயிருக்கிறது. பல விடங்களில் நமது அன்பர் திரு. காந்தியவர்களைப் போல் அரையில் ஒரு சிறு துண்டு மாத்திரம் அணிந்து கொண்டிருக்கும் மனிதருமுளர். அதிகமான உஷ்ணத்தினால் புழுக்க மேற்பட்டால் எந்தப்பெண்கள் முன்னிலையிலும் ஆண்மகன் அரையில் ஆடையின்றி ஒரு சிறு கௌபீனம் மாத்திரம் கட்டிக் கொண்டு விசிரியினால் வீசிக் கொண்டிருக்க நாம் அடிக்கடி பார்க்கின்றோம். பெண் மக்களே16-20 முழச் சேலைகளையும் ஒன்றுக்கு மேல் ஒன்றாக இரண்டு மூன்று சட்டையும் அணிவதுடன் அவர்களின் ஆடை பாதந்தெரியாது கட்டப் பட்டிருக்க வேண்டும் என்பது ஆண்மக்களின் விருப்பம், மதத்தின் நோக்கம். அஃதன்றி பெண்டிர்கள் கொஞ்சம் கரண்டைக் கால் தெரியும் படியோ சிறிது மெல்லிய ஆடையோ அணிந்து விட்டால் வந்தது அவர்களின் கற்புக்கு ஆபத்து என்று கூப்பாடு போட்டு விடுகிறார்கள். இவ்வாறு விரும்பும் ஆண்மகன் கட்டி யிருப்பதோ 4 முழமுள்ள கிளாகோமல். காற்றடித்தாலோ கேட்க வேண்டியதில்லை. இப்புண்ணியவான்களிற் பலரை யான் திருச் செந்தூர் முதலிய புண்ணிய தலங்களில் பன்முறையும் கண்டிருக் கின்றேன். தம் மெல்லிய வதிரத்தோடு குளித்து விட்டு அந்த ஈர வேஷ்டியுடன் ஆண் பெண் முதலியோர் கூட்டங்களுக்குள் வந்து நிற்கின்றார்கள். என்னே ஆபாசம்! இவர்கள் ஏன் இந்த அரை வேஷ்டி யும் அணிந்திருக்கிறார்கள் என்பதே என் மனத்தில் ஊசலாடிக் கொண்டிருக்கும் வினாவாகும். இத்தகைய யோக்கியர்களும் பெண்டிர்களின் ஆடையின் நீளத்தைக் குறைக்க வேண்டு மென்றால் சம்மதிக்க வழியில்லை. (பெண்கள் ஆடை முரடாயிருக்க வேண்டு மென்பது எனது நோக்க மன்று) ஆணுக்கொரு நீதி பெண்ணுக் கொரு நீதி இவ்வுடை விஷயத்திலுமா யிருக்கவேண்டும்? பெண்கள் சில மிருக சுபாவமுள்ள ஆண் மக்களிடம் தனியான யிடத்தில் அகப் பட்டுக் கொண்டால் அந்த ஆண் கொடியர்களிடம் இருந்து தப்பித்துக் கொண்டு ஓடி விடுவதற்கு தடையாக மூன்று நாலு சுத்துப் போட்டுக் கட்டிய அன்னார் சேலைகள் தாம் என்று சொல்வது மிகையாகா. எனவேதான் சுயமரியதை இயக்கத் தலைவர்கள் பெண் மக்கள் பால் ஜீவகாருண்யம் கொண்டு அவர்களின் உடையில் சில மாற்றங்கள் செய்ய வேண்டுமென்று சொல்லுகிறார். அதாவது அரையில் 4 அல்லது 4½ முழ முரட்டுத் துண்டு கட்டிக் கொள்வது பெண்களுக்கு மிக நல்லது. அது முகமதிய சகோதரர்களின் சாரங் களைப் போன்று இரு பக்கங்களும் மூடப்பட்டிருத்தல் வேண்டும். மேலே ஒரு சட்டையும் சுமார் 4 முழத்தில் ஒரு தாவணியுமிருத்தல் வேண்டும். இதுவே பெண்களுக்கு ஏற்ற உடை; இந்திய நாட்டிற் கேற்ற தேசீய உடை பெண்களின் சுகாதாரத்திற்கும் ஆபத்தின் பொழுது திடீரென ஓடவும் கஷ்டமின்றித் துவைக்கவும் ஏற்றதாகும். அசாம், திருவாங்கூர் இராஜ்ஜியத்தில் மட்டுமல்ல, மலாய் நாட்டி லும் இந்த உடை பணக்காரர் முதல் ஏழைகள் வரை உடுத்தப்பட்டு வருகிறது. மேலும் இவ்வுடை வெள்ளை உடையாக இருப்பது நலம் பொதுவாக உடை அதிக மினுக்காகவும் மனதை மயக்கத்தக்கதாகவும் இருக்கக் கூடாது. பெண்டிர்களின் இயற்கை யழகை அதிகமாய் செயற்கை யழகால் பெருக்கிக் காட்டுவதினால் உடல்வலி அதிகம் பெற்று மனவலி குறைந்த சில ஆண் பேய்கள் மயக்கமுற்று சிற்சில விடங்களில் பெண்மக்கள் துன்பத்திற்காளாக்கப் படுகின்றார்கள். இலாத்திலும் கூட மினுக்கான அதாவது ஆடவர்கள் மனதைக் கொள்ளைகொள்ளும்படியாக பகட்டுடைகள் அணிவது மறுக்கப் படுகிறது. மேலும் வெள்ளையுடை அசுத்தத்தை உடனே நன்கு எடுத்துக் காட்டுவதுடன் பெண்களின் சுகாதாரத்திற்கும் ஏனைய நலத்திற்கும் ஏற்றதாய் இருக்கிறது. இது பெரும்பாலும் ஐரோப்பிய பெண்மணிகளால் தேசத்திற்கேற்ப சில மாறுதல்களுடன் அனுஷ் டிக்கப்படினும் அன்னோர்களின் மாலையுடை வெள்ளையேயாகும். கிருதுவ சகோதரிகள் கூட சிற்சிலவிடங்களில் இதை அனுஷ்டித்து வருகிறார்கள். அவர்களின் மதம் பழக்க வழக்கம் இதற்கு எட்டுணை யும் மாறுபட்டிருக்கவில்லை. நம் நாட்டிலுள்ள ஜீவகாருண்ய மதமோ பெண்வெள்ளையுடை அணிவதை கண்டிக்கிறது. விதவைகள் மாத்திரம் தான் வெள்ளையுடை அணியலாம் என அறைகிறது. தமிழிலுள்ள பழைய நூற்களை நுணுகி ஆராய்ந்த அறிஞர்கள் பண்டைக்காலத்து தமிழ் நாட்டிலுள்ள பெண்கள் விவாஹம் ஆவ தற்கு முன்னரும்கூட வெள்ளையுடை அணிந்திருந்தார்கள் என்று கூறினாலும் சீவகாருண்ய அன்பர்கள் அதைப்பற்றி அறியார்கள். சுய மரியாதைத் தலைவர் கூறியபடி சுருங்கிய ஆடைகள் பெண்கள் அணிவதற்கு அவர்களின் பழக்க வழக்கம் இடங்கொடுக்கவில்லை. ஆண்மகன் தன் உடையை காலத்திற்குக்காலம் மாற்றி வருகின்றான். வேஷ்டிகட்டியவன் ஐரோப்பியன்போல் காற்சட்டையும், பூட்சும், தொப்பியும் அணிந்து கொள்கின்றான். பெண்மணிக்கோ ஒன்றும் மாற்றஞ்செய்ய உரிமையில்லை. வெயிற்காலத்தில் செருப்புப்போட்டு நடக்கவும் குடைப்பிடித்து நடக்கவும் வழியில்லை. அந்தோ! கொடுமை!! கொடுமை!!! இத்தகைய கொடியோர்களுக்கு சீவ காருண்யமும் ஒருகேடா? தங்களை கடவுள் நம்பிக்கையுடையவர் களென்று சொல்ல வெட்கப்படவேண்டாமா? பெண்மக்களை இத்தகைய கொடுமைக்காட்படுத்துவபர்களுக்கு எக்கடவுள்தான் ஆதரவுகாட்டும். ஆதரவு காட்டும் ஒரு பொருளிருந்தால் அதைக் கடவுளென உலகத்திலுள்ள அறிவுடைய அன்பர்கள் ஒப்புக்கொள் வார்களா? இத்தகைய கொடுமைகளை ஒழித்து பெண்டிர்களுக்கு நன்மை செய்பவர் எவராயிருப்பினும் அவரே சீவகாருண்ய சீலர் என்பது எனது அபிப்பிராயம். ஆண்பெண் இருபேர்களுக்கு இயற்கையாகவே மண்டையில் முடிமுளைக்கின்றது. இயற்கையுடன் வாழ்ந்த ஆண் பெண்ணாகிய பண்டைய தமிழ் மக்கள் தலைமயிரை நீளமாய் வளர்த்து வந்தனர். பின்னர் பல அசௌகரியத்தின் காரணமாக ஆண்கள் அன்பர் காந்தியைப்போல் உச்சியில் சிறிது முடியை வைத்துக்கொண்டு மற்றவைகளைச்சிறைத்து வந்தனர். பின்னர் ஐரோப்பிய நாகரீகங் கண்டு மிக வசதியாய் கிராப் செய்து கொண்டனர். பெண்மகள் கதியோ அதோகதிதான். அவள் தன் வசதிக்கேற்றவாறு மயிரில்கூட சீர்திருத்தம் செய்யவழியில்லை. பெண் நீண்ட கேசத்தினால் படுந் துன்பம் அதிகம். ஒரு பகலில் அதிகமான நேரம் அவர்கள் தலை மயிரைக் கவனிப்பதிலேதான் செலவிடப்படுகிறது. சில வீடுகளில் பெண்டிர்கள் காலையிலெழுந்து நானஞ் செய்துவிட்டால் சுமார் 9 மணிவரை தம் வீட்டிற்குள்ளிருந்து தலைமயிரை உலர்த்துகின் றார்கள் பின்னர் எண்ணெய் தேய்த்து சடைபின்னிக் கொள்வதற்குள் மணி 11 ஆகிவிடுகிறது. பின்னர் காற்றினால் சீவியதலை உலைந்து விட்டால் மாலையிலும் சில மணி நேரம் சீவுவதில் செலவிடுகின் றார்கள். பெண்களின் நிலையை என்னென மொழிவது! சிற்சில சமயங்கள் மாலைவேளைகளிலோ இரவிலோ நானஞ்செய்யும் படி நேரிட்டால் தலை உலராமல் பெண்கள்படும் கஷ்டங்களும் அதனால் மண்டையிடி முதலிய வியாதிகளுக்கு ஆட்படுவதும், ஒன்றிரண்டு நாள் தலையைக் கவனியாதிருந்து விட்டாலே பேன்கள் பற்றுவதும் பின் சீவி ஒரு தடவைக்கு நூற்றுக்கணக்கான உயிர்களைக் கொள்வதும், பேன் அதிகமாய்ப் பெருகி மண்டையில் பொடிப்பு, சிரங்குகள் உண்டாவதுடன் ஒருவிதக் காய்ச்சலை உண்டாக்கி அவதிப் படச் செய்வதும்தான் சைவர்கள் கண்ட சீவகாருண்ட உண்மை போலும். சில பெண்களுக்கு 4,5 அடி நீளம் தலைமயிரிருக்கிறது. அவர்கள் எப்படித்தான் ஜீவிக்கிறார்களென்பது எனக்குத் தெரிய வில்லை. இவ்வாறு நீளமான கூந்தலினால் பெண்களுக்கு என்ன நலம். மனுஷத் தன்மையையறியாத புருஷர்கள் வாய்த்தால் இந் நீண்ட கூந்தலை நன்றாய் பிடித்துக்கொண்டு முதுகில் படீர் படீர் என அடிக்கத்தான் வசதியேயொழிய வேறு நலம் பெண்களுக் கிருப்பதாகத் தெரியவில்லை. நம் நாட்டிலுள்ள ஆடவர்கள் பலர் நமது பெண்கள் ஐரோப்பிய பெண்களைப் போன்று முடியை வெட்டிக் கொண்டால் அவர்களின் அழகே போய்விடுமென்று வாதிடுகின்றார்கள். என்னே இவர்களின் மனப்பான்மை! பெண்கள் ஆண்களால் அழகு பார்க்கவும், தங்களின் காம இச்சையை பூர்த்தி செய்விக்கவும் தோன்றிய அசேதனப் பொருள்களா? பெண் மக்களெல்லாம் ஆண் மக்கள் தலையை கிராப் செய்துகொள்வது அழகாயில்லை தலைமுடியை நீளமாய் வளர்த்து பின்னி ஜடை போட்டுக் கொள்ள வேண்டும் என்று எழுதினால், கூறினால் எத்தனை ஆண்கள் அதை ஒப்புக்கொண்டு நடப்பர். பெண்மக்கள் அவ்வாறு கேட்க உரிமையில்லையா? இந்திய நாட்டிலுள்ள சில தமிழ்ப் பண்டிதர்கள் இச்சமயம் இயற்கையைக் கொண்டுவந்து புகுத்தி மக்களை ஏமாற்றப் பார்க்கின்றனர். இவ்வியக்கச் சட்டம் பெண் மக்களுக்கு மட்டுமா? ஆண்மக்களுக்குகில்லையாவென அப்புலவர் களைப் பன்முறையும் வினவுகின்றேன். ஐரோப்பிய பெண்கள் தலை முடியைத் தங்கள் வசதிக்கேற்ப வெட்டியிருக்கின்றார்கள். அவர் களுக்கென்ன அழகில்லையா? அழகில்லையென்று அவர்கள் கணவர்கள் அவர்களை விரும்புவதில்லையா? அவர்கள் பிள்ளைகள் பெறுவதில்லையா? அதனால் அவர்களுக்கு நேர்ந்துள்ள கெடுதல்கள் இன்னதென்று நம் தமிழ் நாட்டுப் பழமை விரும்பிகள் விளக்கு வார்களாவென்று கேட்கிறேன். இப்பழமை விரும்பிகளால் பெண் உலகு பாழ்பட்டு வருகின்றது. நமது நாட்டில் ஆண்களின் ஜனத் தொகையை பெண்களின் ஜனத்தொகையை விட நசித்து வருகிற தென்பதை எந்த இந்திய தேசாபிமானியாவது அல்லது எந்த சீவ காருண்ய மததனாவது உணர்ந்து அதற்காவன புரிய முன்வந்தானா! இல்லை! இல்லை!! எல்லாம் சுயநலம்! சுயநலம்!! இக்கிளர்ச்சியிலும் ஏதாவது தன்னலமிருக்கக் கண்டால் எத்துணையோ தேசீய வீரர்கள் வெகு கம்பீரமாய் வீர கர்ஜனையுடன் பிரசாரமும், பத்திரிகை கிளர்ச்சியும் செய்துவிடுவர். பாவம்! பெண்களுக்குப் பரிந்து பேசு வதனால் யாதொரு பிரயோஜனமுமில்லையென்று திட்டமாக அறிந்தே தேசாபிமானிகள் பெண் நலன் பேணல் என்னும் நல் லறத்தைப் புறக்கணித்து விட்டு பெண் நலத்திற்கு இடையூறியற்றும் பேயர்களையெல்லாம் தேசாபிமானிப் பட்டமீய்ந்து அவர்களுக்கு மேதை மரியாதையும், பத்திரிகையில் அவர்களைப் பற்றி பெரிய விளம்பரங்களும் மிகத்தடபுடலாய் செய்யப்படுகிறது. பெண் நலம் பேண முன் வருபவர்கள் நிந்திக்கப்படுகிறார்கள். பத்திரிகைகள் அவர்களின் செல்வாக்கைக் குறைக்க வழி தேடுகின்றன. இவை களெல்லாம் ஜீவகாருண்யமென எவரே வாதிக்க வல்லவர் என அறிவுடைய மக்களை வினவுகின்றேன். நகைகள்: தமிழ் நாட்டிலே இதுகாலையாண்டும் நகையைப் பற்றிய பேச்சாகவே இருக்கிறது. எத்தகைய திருமணப் பேச்சிலும் முதலாவதாகக் கேட்கப்படுகிறது நகை எவ்வளவு என்பதே. பெண் நகைக்காக விருப்படுகின்றாளே யொழிய அவள் குணம், நடை, அறிவு, அழகு முதலியவற்றிற்கு மணம் நடைபெறுவது தமிழ்நாட்டி லில்லை. ஒவ்வொரு ஆண் மகனும் தன் மனைவியுடைய நகையின் பெறுமானம் இவ்வளவென்றும், அதன் வேலைப்பாட்டின் தன்மையையும் சொல்லப் பெருமைப்படுகின்றான். எவ்வளவு எளிய வனாயினும் கடன் கொண்டாவது தன் மனைவிக்கு கொஞ்சம் நகை போட்டுப் பார்க்க ஆசைப்படுகிறான். ஆண் மகனோ காலத்தை அனுசரித்து காதில் போடும் கடுக்கன், முருகு, பச்சைக்கல் முதலிய வைகளை அநாகரீகச் செயலென்று நிறுத்திக்கொண்டான். பெண் மக்களையோ அலங்கரித்துப் பார்த்து மகிழத்தக்க பொம்மை யாய் பாவித்து உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை நகைகளைப் பூட்டி விடுகிறான். பணக்காரன் வீடுகளிலோ ஒரு ஆள் சுமைக்கும் கூடுத லாக பாரமுள்ள நகைகளால் பெண்கள் சுமக்கமுடியாது கஷ்டப் படுத்தப்படுகிறார்கள். இச்செயல்கள் பட்டணங்களில் கொஞ்சம் குறைவுற்றிருப்பினும் கிராமங்களில் லேசாய் ஒழிவதாய்க்காணோம். சிலயிடங்களில் பெண்கள் இந்த நகைகளால் தினந்தோறும் செத்து செத்துப் பிழைக்கின்றார்களென்று தான் கூற வேண்டியதிருக்கிறது. ஊரில் கள்ளர்கள் என்றால் வீட்டில் பெண்களுக்குத் தூக்கம் கிடையா. காட்டுவழி போனால் பெண்களுக்கு கள்ளன் கள்ளன் என்றே நெஞ்சுதுடிக்கிறது. தென்னிந்தியப் பெண்களுக்குப் பிடித்த இந்த நகைப்பேயால்தான் நாட்டுப்புறங்களில் சுகாதாரத்திற்கேற்ற விதமாய் வீடுகட்டி வாழக்கூட வசதியில்லாதிருக்கிறது. நகையணி வது மட்டுமல்ல தங்கத்தினால் தாலி கட்டுவதுங்கூட தமிழர்களின் நாகரீகமன்று என அறிஞர்கள் செப்புகின்றார்கள். மாலையிடல் தான் பண்டை காலத்தின் மணவினைக்குறியதாய் விளங்கியது. அவ்வாறிருக்க தமிழர்களை அந்த நாகரீகப்பேய் விட்டபாட்டைக் காணோம். இந்த நகையினால்தான் பெண்கள் கள்ளர்களால் பல விடங்களில் துன்பத்திற்காளாவதும் தவிர கோழைத்தனமும், பயமும் குடிகொண்ட உள்ளமுடையோராய் ஆகிவிடுகின்றனர். இதைப் பற்றிக் கூட யான் அதிகமாய்க் கவலைப்படவில்லை. வேண்டு மானால் பெண்களுக்கு ஆபத்துக்காலத்தில் இந்நகைகளை விற்றுப் பிழைத்துக் கொள்ளக் கூட வழியிருக்கிறது என்று மனதை சமா தானம் செய்து கொள்வேன். ஒரு சிறியமுள் தங்கள் மக்கள் காலிற் தைப்பினும் பொறுக்க முடியா மனதையுடைய மாதாபிதாக்களும் இயற்கையில் மக்களுக்கு ஏற்பட்ட நவத்துவாரங்களோடு கூரிய ஊசியால் இரத்தம் சிந்த உடலில் பல துவாரங்கள் போடும்படி சொல்வதும் அதைப்பார்த்து மகிழ்ந்து கொண்டிருப்பதும் நீதியா? காருண்யச் செயலா? என்பது தான் என் மனத்தில் உள்ள ஒரு பெரும் பிரச்சினை. இதற்கும் சைவர்களின் சீவகாருண்ய மதம் இடங் கொடுக்கிறதா? ஆடுமாடுகளை அடிக்கவும் பறவைகளை தலை கீழாய்த் தூக்கவும் பெறாத ஜீவகாருண்ய சங்கம் இதைப்பற்றி ஆராயாதது வியப்பாக இருக்கிறது. பெண்கள் நிலை இந்தப் பறவை களைவிட கேவலமாய் இவர்களுக்கு தோன்றிற்று போலும். சொத்துரிமை: பெண் மக்கள் அடிமை வாழ்க்கையிலீடு படுவதற்கும் விபசாரத் துறையிலிறங்குவதற்கும் முக்கிய காரணம் பெண்களுக்குச் சொத்துரிமையில்லாததேயாகும். பெண்களுக்குச் சொத்துரிமை இருந்தால் அவர்களின் பிள்ளைகள் நான் இன்னான் மகன் என்று கூறாது நான் இன்னாள் மகன் என்று கூறுவர். பெண் களுக்குரிமையுள்ள நாடுகள் பலவற்றில் முற்காலத்திலும் இக் காலத் திலும் ஆண்மகன் தான் இன்னாள் மகன் என்றே கூறி வந்திருக்கி றான். இதுவே ஒழுங்கும் நீதியுமாகும். இவ்வாறு பெண்களுக்கு சொத்துரிமை மறுக்கப்பட்டதினால் சிற்சில சமயங்களில் கோடீ வரனின் மகளும் பிச்சைக்காரியாய் தெருவினின்று தியங்கித் தவிக்க வேண்டியதிருக்கிறது. சிறு வயதில் தந்தைக்கும் பின்னர் தன் சகோதர் களுக்கும் மணமான பின் கணவனுக்கும் கணவனிறந்த பின் மக்களுக்கும் மக்களும் கணவனுமின்றேல் தன் சோதரன் வீட்டையடைந்து தன் நாத்திமார் இடும் சோற்றையுண்டு யாதொரு உரிமையுமற்ற அசேதனப் பொருளைப் போல் வாழ வேண்டியதிருக்கிறது. தெளிவாக் கூறினால் மிருகம், பறவை முதலியவைகளின் பெண்களினங்கள் அனுபவிக்கும் உரிமையும் இன்றைய ஆறறிவுடைய பெண்களுக் கில்லை. பொருளிலார்க் கின்பம் இல்லை; புண்ணியமில்லை; என்றும் மருவுறு கீர்த்தியில்லை; மாந்தருட் பெருமையில்லை கருதிய கருமம் இல்லை; கதிபெறு வழியும் இல்லை, பெருநிலத்திடை நடக்கும் பிணமெனப் படுவரன்றே. என்ற முதுமொழிப்படி இவ்வுலக வாழ்வில் மகளிர் சொத்துரிமை யில்லாமல் எவ்வித இன்பமும் நுகர்ந்து இனிது வாழ முடியாது நடைப்பிணங்களாய் வாழ்ந்து வருகின்றார்கள் என்பது மெய்யே. பண்டைக்காலச் சரித்திரங்கள் சிலவற்றில் சிற்சிலவிடங்களில் பெண்கள் சொத்துரிமை பெற்று வாழ்ந்தனர் என்பது வரலாற்று நூற்கள் மூலமாய் நாமறிந்தாலும் பிற்காலத்தே தோன்றிய மதச் சட்டங்களால் தன்னலங் கொண்ட ஆண்மக்கள் பெண்ணுரிமையை கடிந்து அவர்கள் எக்காலமும் அடிமையாய் மானுஷீக உரிமையற்ற பேடிகளாய் வாழும்படி செய்திருக்கிறார்கள் என்பதை யூகித்தறிய லாம். இப்பிரதான பெண் உரிமையில் ஆண் மக்கள் மண்ணை யள்ளிப் போட்டு விட்டதினால் பெண் சுதந்திரமிழந்து நாயினும் கடையாய் மதிக்கப்படுதற்கு ஏதுவாயிற்று. இன்று புண்ணிய நாடாகிய இப்பரத கண்டத்திலே ஜீவனாம்ச வழக்குகளென்று கணக்கற்றதாவாக்கள் நடைபெறுகின்றது. அவைகளினால் கோடிக் கணக்கான ரூபாய் விரையமாகின்றது. இவ்வீண் விரையத்திற்குக் காரணம் பெண்ணிற்குச் சொத்துரிமையில்லாத பெருங்குறை யல்லவா? இவைகளையெல்லாம் ஓர்ந்து சில சீர்திருத்தவாதிகள் பெண்களுக்குச் சொத்துரிமை வழங்க வேண்டுமென்று கூறினால் வைதீகப் பேய்கள் பெருங்கூப்பாடு போட்டு பெண்களுக்குச் சொத் துரிமை வழங்கவா? அவ்வுரிமை வழங்கினால் உலகமே கெட்டுப் போய்விடும். பெண்கள் ஆண்களுக்கு அடங்கி நடக்கமாட்டார்கள். காலம் கெட்டுப் போய் விட்டது. எல்லாம் கலிகாலக் கூத்து என்றெல்லாம் சொல்லுகிறார்கள். சட்டஞ் செய்ய முனைந்தால் சூழ்ச்சி முறையால் அதற்கு ஊறுவிளைவிப்பதோடு அந்நல்வழியில் ஈடுபட்ட சட்டசபை அங்கத்தினர்கள் பின்னர் சட்டசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படாது தங்களுக்குரிய எல்லாச் செல்வாக்கையும் உபயோகித்துச் சீர்திருத்தவாதிகள் தோல்வி யடையும்படி செய்துவிடுகின்றார்கள். இவ்வைதீகக் குழுவினர் தாம் தங்களைப் பெரிய சமய பக்தர்கள், தேசீயத் தலைவர்கள் என்றுகம்பீரமாய்க்கூறிக்கொள்வதோடுதம்தீயகொள்கைகளை, சமூகச் சீர்திருத்தத்திற்காக ஆரம்பிக்கப் பெற்ற பத்திரிகைகள் என்று கூறி சமூக சீர்திருத்தத்திற்கு விரோதமாய் தேசீய பிரசாரமும் சமயப் பிரசாரமும் செய்யும் பத்திரிகைகளில் எழுதி நாடெங்கும் பரப்பி வருகின்றனர். வடநாட்டு மாதர்கள் தேசீயத்திற்கு விரோதமாய்ப் பேசும் ஆண்களுக்கு வளையல் வழங்கினார்கள். ஆனால் தமிழ் நாட்டில் மகளிரின் ஜீவாதாரமான உரிமைகளுக்கெல்லாம் விரோத மாய்ப் பேசியும் எழுதியும் வரும் தேச பக்தர்களுக்கும் சமய பக்தர் களுக்கும் வளையல் வழங்கியும் பொது கூட்டங்களில் பேசவொட் டாது அவர்களை மறியல் செய்யவும் துணியாதது தமிழ்நாட்டு மாதர்களின் தைரியக் குறைவும் உரிமை வேட்கையின் குறைவும் ஆண்மக்கள் (சீர்திருத்தவாதிகள்) பெண்மக்களுக்குக் கூறும் உற்சாகக் குறைவும் பெருங் காரணங்களாகும். நாட்டிலே ஜீவகாருண்ய மதங்களென்று கூறிக் கொள்பவைகள் சொத்துரிமையை மகளிர்க்கு மறுத்துக் கொண்டு தன்னைச் சீவகாருண்ய மதம் என்று கூறிக் கொள்ள அம்மதத்திற்கு (மத பக்தர்களுக்கு) ஒரு சிறிதும் வெட்க மில்லையா? இனி நாட்டில் எம்மதம் தன்னை ஜீவகாருண்ய மதம் என்று சொல்லிக் கொள்ள விரும்பினால் பெண்களின் நியாயமான உரிமைகளையெல்லாம் உடனே அளித்து விட வேண்டும். இன்றேல் மக்களுக்கு இத்துணை ஆண்டுகளாய் இயற்றி வந்த கொடுஞ்செய லால் கொதித்துள்ள மாதருலகம் அதி சீக்கிரம் மதமொழிப்பு வேலையிலிறங்கிவிடும். அவ்வாறு செய்ய வேண்டியது நீதியேயாகு மென்று சமரச மனப்பான்மையையுடைய தக்கோர்கள் எவரும் சாற்றுவர். நீதி நெறியைக் கடைப்பிடித்தொழுகும் அறவோர் எவரும் பெண் உரிமையை மறுக்கும் வேதங்களையும் சாதிரங் களையும் சுட்டுப் பொசுக்க ஆரம்பிப்பர். பெண்களிடம் ஒரு சிறிதும் காருண்யம் காட்டாது மதச் சட்டத்தின் பேராலும், அரசாங்கச் சட்டத்தின் பேராலும் பெண் ணுரிமைக்கு முற்றாக் கேடுபுரிந்து அவர்களை அடிமைத்தளையி னால் சிறைப்படுத்திவிட்டு இன்றைய ஆணுலகம் விடுதலை விடுதலை யென்று கூறியும் வேதங்கள் எவ்வுயிர்களையும் தெய்வமாய்ப்போற்றி எழுதியிருப்பதாகக்கூறி சிலர் எழுதித்திரிகிறார்கள். அவர்களைக் கண்டித்தே தேசீயக் கவிஞர் பாரதியார் - பெண்ணுக்கு விடுதலையென்றிங்கோர் நீதி பிறப்பித்தேன் அதற்குரிய பெற்றிகேளீர் மண்ணுக்குள் எவ்வுயிருந் தெய்வமென்றால் மனையாளுந்தெய்வமன்றோ? மதிகெட்டீரே? விண்ணுக்குப் பறப்பதுபோற் கதைகள் சொல்வீர், விடுதலையென்பீர் கருணைவெள்ளமென்பீர் பெண்ணுக்கு விடுதலை நீரில்லையென்றால் பெண்டாட்டிதனையடிமைப் படுத்தவேண்டிப் பெண்குலத்தை முழுதடிமைப் படுத்தலாமோ பின்னிந்த வுலகினிலே வாழ்க்கையில்லை என்று கூறியிருப்பவைகளெல்லாம் தேசீயப்புலிகள் என்போர்களும் ஜீவகாருண்யச் சமயத்தைச் சார்ந்தோர் என்று கூறும் வைதீகச் சைவரும் நன்கு ஆராய்ந்து பார்ப்பார்களாக. ஜீவகாருண்ய மதங்கள் என்று கூறிக்கொள்பவைகள் பெண் களுக்குள்ள இயற்கை உரிமையாகிய கலப்புமணம், காதல்மணம், மறுமணம், விவாஹரத்து, சொத்து முதலியவைகளையும் இன்னும் பலவற்றையும் மறுத்துவருவதுடன் இளமைமணத்தால் அவர்களை வருத்தியும் பொட்டுக்கட்டி விபசாரஞ்செய்யத் தூண்டிப் புண்ணும் பொடியும் பெற்று இவ்வுலகிடையே அவர்களை எரிவாய்நரகில் வீழ்ந்து தவிக்கவும், சென்ற நவம்பர் மாதம் 16ஆம் நாள் வெளியான சண்டமாருதத்தில் கேதரநாத் என்னும் பார்ப்பான் தனது பத்து வயது மனைவியாகிய ராமகாளி என்னும் சிறுமியை பலவந்தமாகவும் இயற்கைக்கு விரோதமாயும் புணர்ந்து அதனால் பலதொல்லை களுக்குட்பட்டு நோயுற்ற 4 அடி உயரமும், 44 பவுண்டு நிறையுமுள்ள அச்சிறுமி நடக்க முடியாது தன் இருகரங்களாலும் இரு முழங்கால் களாலும் நகர்ந்து சர்க்கார் ஆபத்திரிக்கு வந்து சிகிச்சை செய்ய வந்ததும் பின்னர் கே நடைபெற்று, அவளைப் பலவந்தமாய்ப் புணர்ந்த புருஷனுக்குப் பத்துவருஷம் நியாயாதிபதியால் கடுங்காவல் தண்டனையடைந்தது போன்ற சம்பவங்கள் பல நடைபெற்று வெளிக்குத் தெரியாமல் மறைந்துபோயிருக்கின்றன என்று கூறி யிருப்பதும் கவனிக்கத்தக்கது. இவ்வநியாயக்கொடும் இளமைமணத் தினால் படுக்கையறையிலே பல சிறுமிகள் உயிர்நீத்திருக்கின்றனர். ஜீவகாருண்ய மதங்கள் பெண்களுக்கு எத்துணையோ கொடுமை களும் பங்கமும் புரிந்துவருகின்றது. ஒவ்வொரு நாட்டின் உயர்வையும் அந்நாட்டிலுள்ள பெண்களின் நாகரீகத்தைப் பொறுத்தே முடிவு செய்ய வேண்டும். எனவேதான் மேனாட்டறிஞர்களெல்லாம் பெண்ணுரிமை கடியும் இந்திய நாட்டு மக்களையும் மதங்களையும் நாகரீக நுட்பமுணராத மிலேச்சர், அஞ்ஞான மதம் என்றெல்லாம் இழிவுபடுத்திக் கூறிவருகி றார்கள். மேயோ போன்ற பெண்மணிகள் பெண்ணுரிமை மறுக்கும் இந்திய நாட்டு மதங்களையும், மக்களின் தன்மையையும் பற்றி மிக இழித்துக் கூறி எழுதிய புத்தகங்கள் லட்சக்கணக்காய் விற்றுவரு கிறது. நமது தேசீய வீரர்களும் வைதீக மதத்தலைவர்களும் மேயோ பேரில் சீரி விழுந்தார்களேயொழிய அவர்கள் கூறிய குறைகள் உண்மைதானா? வென்று ஆராய்ந்து அதை நீக்க முயற்சித்தார்களா வென்றால் ஒரு சிறிதுமில்லையென்ற பதிலே கிடைக்கும். உரிமை யற்ற நடைப்பிணங்களாகிய மகளிர்களின் வயிற்றில் தோன்றிய ஆண்மக்கள் எவ்வாறு சுதந்தர உணர்ச்சியுடன் உரிமைபெற உயிரைத் தியாகஞ் செய்யக் கூடிய வீரர்களாய் வரக்கூடும். தேசீய விடுதலைக் காதலால் காந்தியவர்களால் காந்தீயம் என்று இவ்விருபதாம் நூற்றாண்டில் நிறுவிய புதிய அஹிம்சாதர்மம் என்ற மதத்தின்படி யொழுகும் ஜீவகாருண்ய சமயத்தார் ஆராய்ந்து பார்க்கட்டும். பெண் மக்கள் எவ்விதக்கட்டுப்பாடுமின்றி, இடுக்கணுமின்றி பிறப்புரிமை இன்பத்தை எங்கே நுகர்கிறார்களோ அங்கேயுள்ள ஆண்மக்கள் நாகரீக நுட்பமுணர்ந்தவர்களாகிறார்கள். அந்நாடே நாகரீகம் பெற்ற நாடாகும் என்றும் பெண்ணுரிமை பொதுவாக உலகில் பல விடங்களிலும் சிறப்பாகச் சிலவிடங்களிலும் பின்னை நாளில் கடியப்பட்டது. உரிமையுள்ள நாடுகள் செழுமையுற்றிருப்பதும், அவ்வுரிமையில்லா நாடுகள் செழுமையற்றிருப்பதுங் கண்கூடு. பெண் நாட்டின் தாயாகலால் அவள் அடிமைப்படுமிடம் அடிமைப் படல் இயல்பு என காந்திய மதத்தைச் சார்ந்த அன்பர் திரு.வி. கல்யாணசுந்தரமுதலியார் அவர்கள் கூறியதையும் தமிழ் நாட்டுத் தேசீய வீரர்களாகிய காந்தி பக்தர்கள் ஆராய்ந்து பார்க்கத்தக்கது. உரிமையற்றோர் எந்நாட்டினராலும் தன் மதிர்பிழந்தவ ராகவே கருதப்படுவர். உலகிலே வலிமையுள்ளோர் வலிமை யற்றவர் உரிமைகளைப்பறித்து அவர்கள் உழைப்பால் தாம் சுக மடைந்து வாழலாம் என்ற பேராசையாலே நாட்டில் அடிமை வாழ்வென்று ஒரு பேச்சுத் தோன்றியது. இப்பொழுது இந்தியாவிலே நமது தாய்மார்களின், சோதரிகளின், மனைவிமார்களின் உரிமை களைப் பறித்து அவர்களுக்கு உரிமை கொடுத்தால் அவர்கள் புருஷனுக்கடங்கி நடக்கமாட்டார்கள், விபசாரிகளாய்ப் போய் விடுவர், கற்பென்பது இல்லாமல் போய்விடும் என்றெல்லாம் கூறி பெண்களின் உரிமைக்குக் கேடு சூழும் நாம் தேசீய விடுதலை யடைந்து சுதந்திரம் பெற விரும்பி கிளர்ச்சி செய்யும்பொழுது வெள்ளைக்காரன் இந்தியர் சுயராஜ்யமடைய இப்பொழுது லாயக் கில்லை; இன்று நாங்கள் உரிமை கொடுத்துவிட்டால் நாளைய தினம் தங்களுடன் வாழும் தாழ்த்தப்பட்ட சோதரர்களை துன் புறுத்துவர். பக்கத்து தேசத்திலுள்ளவர்கள் படையெடுத்து வந்தால் தன்னைக் காத்துக்கொள்ளும் சக்தி இந்தியர்களுக்கில்லை. ஆகை யால் இந்தியா உரிமைபெற இப்பொழுது லாயக்கில்லை என்று கூறினால் உடனே சீரியெழும் தேசபக்தர்கள் பெண்மக்களுக்கு நீவீர் உரிமை பெறலாயக்கில்லை யென்று கூறிய தன்கொடு மொழியை நினைந்து பார்ப்பதில்லை. ஒருவர் உரிமைக்கு மற்றொருவர்கேடு சூழ்வதினும் கொடுஞ்செயல் உலகில் இல்லை. தான் அனுபவிக்கும் உரிமையை பிறருக்கு வழங்க மறுப்பவன் மனிதனாகான் வலிமையுள்ள ஆண்மகன் இந்தியாவில் வலியற்ற பெண்களின் உரிமையைப்பறித்து அவர்களை அடிமையாக்கிய கொடுஞ் செயலுக்காக பலமற்ற இந்தியர்களை வலிமையுள்ள வெள்ளைக்காரன் உரிமை கடிந்து அடிமையாக்கி அடக்கியாளும் படி இறைவன் செய்துள்ளான் போலும் என்று ஆதிக அறிஞர் கூறுகின்றது பெரிதும் கவனிக்கத்தக்கது. தோழர்களே! உலகிலுள்ள பல்வேறு சமயங்களும் தங்களை ஜீவகாருண்ய நெறியென்று கூறிக்கொண்டு பெண்ணுரிமையைப் பறித்து கடவுள், வேதம், மதம், சாதிரம் முதலியவற்றின் பேரால் செய்துவந்த கொடுமைகளைப் போலவே இப்பொழுது தோன்றிய காந்தீயம் என்ற போலி மதத்தையும் யொழித்து ஆணும் பெண்ணும் சமத்துவ உரிமைபெற்று உலகிலுள்ள எத்தேசத்தவருடனும் சமத்துவ மாய் வாழத் தன்மதிப்பியக்கம் தோன்றி மக்கள் முன்னேற்றத்திற்கு இடையூறாய் நிற்கும் மதங்களையொழித்து நாடெங்கும் கலப்பு விவாகம், விதவைமணம், காதல்மணம் பெருக்கி இளமைமணம், இணக்கமற்ற மணம் முதலியவற்றையொழித்து, பணக்காரன் ஆதிக்கத்தை வேருடன் கல்லி, உயர்வு தாழ்வுகளை வெட்டி வீழ்த்தி, யாண்டும் ஜீவகாருண்யம் பொங்கி சமத்துவம், சகோதரத்துவம், சுதந்தரம், வீரம், பகுத்தறிவு முதலிய உணர்ச்சிகளை உண்டாக்க சுயமரியாதை இயக்கம் சண்டமாருதம் போல்யெங்கும் வீசி குடிஅரசு நிறுவ முரசறைந்து வருகின்றது. எனவே அன்பர்களே! இவ்வியக்கம் வெற்றி பெறாவிடில் இந்தியாவிற்கு விடுதலையில்லை. தேசம் விடுதலையடைய நமது சகோதரர்களாகிய தாழ்த்தப்பட்ட சகோதரர்களுக்கும் உரிமையிழந்த சகோதரிகளுக்கும் நீதிவழங்க முதலில் முயற்சிப்போமாக. அதுவே விடுதலை. அதுவே ஜீவ காருண்யம். அதுவே நமது தேசப்பணி. பெண்ணிற்கு ஞானத்தை வைத்தான் - புவி பேணிவளர்த்திடுமீசன் மண்ணுக்குள்ளே சில மூடர் - நல்ல மாதரறிவைக்கெடுத்தார். கண்களிரண்டினி லொன்றைக் குத்திக் காட்சிகொடுத்திடலாமோ? பெண்களறிவை வளர்த்தால் - வையம் பேதமையற்றிடும் காணீர் (பாரதியார்) பதியிலார்: குறிப்பிட்ட கணவனின்றி கண்டவருடனெல் லாம் காமவெறிகொண்டும், பொருளாசையாலும், ஏனைய ஆசை யாலும் புணர்ந்து வாழும் பெண்களையே பதியிலார் என்று ஈண்டு குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவர்களை வேசிகள், தாசிகள், தேவடி யாள்கள், பொதுமகளிர்கள், வரைவின்மகளிர், கணிகயர், பரத்தையர் எனப் பலப்பல பெயர்களால் அழைக்கப்பட்டு வருகின்றது. இக் கூட்டம்உலகின்பலவிடங்களிலும் இருந்துவருகின்றது என்றாலும் இந்தியாவைப் போல் சரித்திர காலத்திற்கு முற்பட்டே உலகின் ஏனையவிடங்களில் இருந்து வந்ததாகத் தெரியவில்லை. மேலும் உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டிலும் விபசாரிகளின் தொகை களைக் குறைக்க அந்நாட்டறிஞர்கள் நுணுகி ஆராய்ந்து சில திட்டங்கள் அமைத்து அதை அனுஷ்டித்துப் பார்த்ததில் வெற்றி கண்டுள்ளார்கள். எடுத்துக்காட்டாக சமதர்ம ஆட்சியொளிரும் ரஷியதேசத்திலே புரட்சி நடைபெறுவதற்கு முன் மாகோ நகரில் (மட்டும்) 1,8000,00 ஜனங்கள் வசித்துவந்தனர். இவர்களின் 20000 பேர்கள் பதிவு செய்யப்பட்ட விபசாரிகள். 1928 - வது வருஷத்தில் ரஷியாவில் 2,500,000 பேர்கள் வசித்துவந்தனர். அப்பொழுது 3000 விபசாரிகளே இருந்தனர். இப்பொழுது மாகோ நகரில் 500 விபசாரிகளே இருக்கின்றனர். 1928வது வருஷத்திலிருந்து விபசாரி களின் தொகை குறைந்திருப்பதற்குக் காரணம் நாட்டில் வேலை யில்லாத் திண்டாட்டமின்றியிருப்பதும் கலைவளர்ச்சிக்கு ஏற்ற சந்தர்ப்பமிருப்பதுமே. இன்னும் ஒரு வருஷத்தில் மாகோ நகரில் விபசாரிகளே இல்லாது போய்விடுவார்கள் என்று மான் செடர்கார்டின் என்னும் ஆங்கில வாரப்பத்திரிகை வெளியிட்ட ஒரு கட்டுரையைசண்டமாருதம் போன்ற பத்திரிகைகள் மொழி பெயர்த்து வெளியிட்டிருப்பதை நேயர்கள் அறிந்திருப்பர். நாதிகம் பரவும் ரஷிய தேசத்து அறிஞர்கள் விபசாரத்தை ஒழித்து வருகின் றார்கள். ஆதிகம் அளவுக்கு மிஞ்சித் தாண்டவமாடும் இந்தியா வின் இந்து சைவமதங்கள் விபசாரிகளுக்கு ஆதரவு காட்டுகின்றன. ஆண்டுகள்தோறும் விபசாரிகள் தொகை பெருகிக்கொண்டே வருகின்றது. சமயமும் அறிஞர்களும் விபசாரத்தை ஒழிக்க முன்வரும் சீர்திருத்தவாதிகளுக்கு எதிராக இருந்து வேண்டும் இன்னல்கள் புரியத் தூண்டிவருகிறார்கள். மற்றையநாட்டில் விபசாரிகள் பெருகப்பலவித காரணங் களிருக்கலாம். இந்தியாவிலோவென்றால் இளமை மணம், விதவை மணம் மறுத்தல், பெண்டிர்கள் பொருந்தா நாயகனைப் பெற்றோர் விருப்பப்படி கட்டாயமாய் மணம்புரிதல், பெண்களுக்குச் சொத் துரிமை மறுத்தல், கடவுளின் பெயரால் பெண்டிர்கள் பொட்டுக் கட்டுதல், பிறப்பையொட்டி சாதி வகுக்கப்பட்டதுபோல் இவ்விழி தொழில்புரிந்தோர்மக்களையும் ஒரு சாதியாய் சிருஷ்டித்த மக்களின் பெருங்குற்றங்களும் முக்கியகாரணங்களாய் மிளிர்கின்றன. இளமை மணத்தால் கணவனுடன் வெறுப்புற்றோரும், சிறுவயதில் கணவனை இழந்து கைம்மையடைந்த மகளிரும் பெரும்பாலும் விபசாரி களாய்ப் போகின்றனர். விதவையான பெண்களிற்பலர் தம்முள் தோன்றும் இயற்கையுணர்ச்சியை அடக்கமுடியாதவராகி பக்கத்து வீட்டு பையனுடனோ அன்றி தன் வீட்டு வேலைக்காரனோடோ சோரத்தனமாய்ப்புணர்ந்துகருவுற்று,கருவுற்றதை இரகசியமாய் சிதைக்க முயன்றும், பயன்படாமல் ஊரைவிட்டோடி பட்டினங் களில் போய் குழந்தையைப் பெற்று அனாதை ஆசிரமங்களிற் கொடுத்துவிட்டு பகிரங்கமாய் விபசாரத் தொழிலிற் பிரவேசித்து விடுகின்றனர். பெண்டிர்கள் ஒரு புருடனைக் காதலித்திருக்க குலம், பணம், அந்தத்து முதலியவைகளை விரும்பி பெற்றோர் மகளின் விருப்பிற்குமாறாக ஒருவனுக்கு மணஞ்செய்து கொடுக்க அப்பெண் அப்புருஷன் மேல் அன்பற்றவளாகி கலகம்பல விழைத்து தாம் இளமையில் காதலித்த யுவனோடு சோரத்தனமாய் கூடலும், அஃதல்லாமல் கணவன் பல்லிழந்த கணவனாய் வாய்த்தது கண்டு வேறு தமக்கொத்த வாலிபனோடு கலத்தலும் அதை ஜனங்களறிந்து தூற்ற அப்பெண்கள் ஓடி வேறு ஊர்களுக்குப் போய் பிழைக்க வழியற்று விபசாரம் புரிதலுமுண்டு. சில பெண்களுக்கு தகப்பன் சொத்திலும், கணவன் சொத்திலும் உரிமையில்லாததால் பிழைக்க வழியற்று விபசாரம் செய்து வயிற்றுப் பிழைப்பு நடத்தலும் உண்டு. ஒரு சாதியாரை மதத்தின் பேரால் கடவுளுக்கு மனைவியாக்கி பின்னர் புரோகிதனும், அதன் பிறகு ஏனையோரும் புணர்ந்து கொள்ளலாம் எனச்செய்து பொருள் சம்பாதிக்கும் ஒரு கூட்டமும் நம் நாட்டிலே, நம் சமயத்திலே உண்டு. ஆனால் இவைகள் எல்லாம் நம் சமயத்தின் சார்பாக உண்டாக்கப்பட்டிருப்பினும் கடைசியாய் கூறியபொட்டுகட்டும் வழக்கம் அல்லது விபசாரம் செய்ய லைசென் கொடுத்தல்என்னும்கொடுஞ்செயலேசமயத்துடன் நேரடியாகச் சம்மந்தம் கொண்டது என்று சைவசமயத் தலைவர்களே ஒத்துக் கொள்கிறார்கள். ஒரு காலத்திலே விவாகத்தில் விருப்பமில்லாத பெண் களும் இளமையில் விதவையான பெண்களும் திருமண வாழ்விற்கு உரியரல்லாத மகளிரும் கோயில்களில் சென்று ஆண்டுமெழுகிடல், பூக்கொய்தல், கோலமிடல் முதலிய பல்வேறு தொண்டுகள் செய்து வந்தனர் என்பது பண்டைக்காலத்து நூற்கள் சான்றளிக்கின்றன. திருநாவுக்கரசு நாயனார் சகோதரியாம் இளம் விதவை திலகவதி, பரவையார் இன்னும் பலரும் கோயிலிலே திருப்பணி செய்து கொண் டிருந்தார்கள் என்று நூல்கள் தெரிவிக்கின்றன. இத்தகையோரைத் தான் ஆதியில் தேவடியாள், தாசி என்று அழைக்கப்பட்டது என்று பல அறிஞர்களும், அச்சொற்களின் பொருளும் நமக்கு நன்கு எடுத்துக்காட்டுகின்றது என்பதை எவரும் அறிவர். இப்பணி புரியும் மகளிர்கள் கோயில்களில் ஆடலும், பாடலும் புரிந்தும் வந்திருக்கின்றனர். இது கோயிலில் நடக்கும் பூஜையின் ஓர் அங்கம். இதைப் பற்றி மிகவிரிவாய் சென்னை சட்டசபையில் திரு. முத்துலட்சுமி அம்மையாரின் பொட்டறுப்பு மசோதாவை எதிர்த்து திரு. சத்தியமூர்த்தி பேசியதும் அதற்கு அம்மையார் பூஜை செய்தல் என்னும் புண்ணியத் தொழிலைச் செய்யும் பார்ப்பனர் பூஜையின் ஓர் அங்கமாகிய ஆடல்பாடல்களையும் மற்றும் தொழிலையும் தம் பார்ப்பனச் சோதரிகளைக் கொண்டே செய்து அப்புண்ணியத்தைப் பெற்றுக் கொள்ளக்கூடாதா? அதற்காக ஏன் ஒரு ஜாதியாரை ஏற்படுத்தி அவர்களைக் கட்டாயப்படுத்த முயற்சிக்கிறீர்கள் என்று கொடுத்த சாட்டை அடியும் லோகப்பிரசித்தமானது. நிற்க இத் தகைய கோயிற்றிருப்பணிபுரிந்து வந்த பெண்கள் கோயில் அர்ச்சகர், தர்மகர்த்தாக்கள் முதலியவர்களோடு அடிக்கடி பழகநேர்ந்தது. இப்பழக்கம் நாளடைவில் முதிர்ந்து அப்பெண்கள் சோரத்தனம் புரிய ஆரம்பித்துவிட்டனர். பலபெண்கள் பிழைக்க வழியற்ற சில சோம்பேறிக் கூட்டம் சிவவேடந்தாங்கி கோயில்கள் தோறும் சென்றுபக்தியுடன்தீர்த்ததலயாத்திரை வருவதுபோல் பாசாங்கு காட்டி தாங்கள் முற்றுந் துறந்த முனிவர்கள் போன்று பாவனை காட்டிகோயில்களில்திருப்பணி செய்து கொண்டும், பாடிக் கொண்டும் ஆண்டுவதியும் தேவடியாள்கள் மீது கண்ணோட்டஞ் செலுத்திவருவதும் நாளடைவில் இருவர் மனமும் ஒருமைப்பட்டு காதல் தடித்து மெய்யுறுபுணர்ச்சியிலிறங்குவதும், பல பெண்கள் இச் சிற்றின்பத்தைத் துறந்து பேரின்பமடைதலே நமது பிறவியின் நோக்கம் என்ற மனப்பான்மையை யுடையவராயினும் சிவனடியார் களின் காமவேட்கையைத் தணிப்பது சிவப்பணியென்றும் அது மோட்சத்தை கொடுக்கவல்லதென்றும் சிவனடியார்கள் விருப்பிற்கு மாறாக நடப்பவர்கள் பொன்றாநரகத்தையடைவதென்றும் கொண்ட நம்பிக்கையினால் விலைமகளிர் கூட்டம் நாட்டில் பெருகிவிட்டது. (இக் கொள்கையைப் பெரிய புராணத்தில் நன்கு காணலாம்) கடவுள் பெயரால் விபசாரம்புரியும் இக்கூட்டத்தை ஒழிக்க சமூகசீர்திருத்த அறிஞர்கள் செய்யும் நன் முயற்சிக்கு சமயபக்தர் இடையூறுபுரிவ தோடு இந்த விபசாரக் குழுவிற்கு வைதீகப் புலிகள் உற்சாகமூட்டி வருகின்றனர். சைவப்பெரியார்களெல்லாம் தங்கள் ஆதிக்கத்தி லுள்ள ஆலயத்தில் கூட ஆடலும் பாடலும்புரிய அனுமதிப்பதுடன் தங்கள் வீட்டில் நடைபெறும் திருமணம், பூப்புப்புனித நீராட்டு விழா முதலிய பல விழாக்களுக்கு இவ்விலைமகளிரை அழைத்து ஆடல் பாடல் புரியச் செய்து பெரும் பொருள் ஈய்தலும், அக் குடும்பத்திலுள்ள முக்கியதர்கள் அவ்விலைமகளிடம் தம் இச்சையை நிறைவேற்றிக் கொள்வதும் ஒரு பெரும்பெருமையாக நினைத்துவருகின்றார்கள்.Égrhu« பெருகுவதால்நாட்டின் நன்மையைத் தாங்கி நிற்கும் பிரதான தூண்களின் ஒரு பகுதியாகிய பெண்களிற் பலர் விபசாரத்திலீடுபட்டு நோய்வாய்ப்பட்டு அல்லற்படுவதோடு, அந்நோய் அவர்களுடன் கலந்துஆண்களுக்கும் பற்றிப் பின்னர் அவர்களின் மனைவிக்கும் பிறகு அவர்களின் வம்சங்களுக்கும் அந்நோய் பீடித்து நாளடைவில் இந்தியாவே ஒருநோய் கொண்ட தேசமாய்விடும் என்பது யாதொரு ஐயமுமின் றாம். m¥bgU« nehŒ ehsilÉš bgU» tU»‹wbj‹gij f‹Ånknah ngh‹wt®fŸ TWtij kW¥ãD« irt¥ bgÇah® âU.É. கல்யாணசுந்தர முதலியாரவர்கள் தம் பெண்ணின் பெருமை என்னும் நூலில், பதியிலார் என்னுங்குலத்தவர் மட்டும் இப்பொழுது விலைமகளிராகிறாரில்லை. வேறு பல குலத்தினின் றும் பல காரணங்களால் ஒதுக்கப்பட்ட சகோதரிகளும் விலை மகளிராகிறார்கள். நாளுக்கு நாள் விலைமகளிர் கூட்டம் பெருகு கிறது. அத் தொழிற்கென வீடுகள், விடுதிகள், வாணிபங்கள், தரகுகள் முதலியன ஏற்பட்டிருக்கின்றன. இதற்கு வறுமை ஒரு காரணம். பொதுவாக நாட்டில் சிறப்பாக ஹிந்து மதத்தில் பெண்ணுலகிற்கு ஏற்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றொரு காரணம். தற்கால நாகரீகம் இன்னொரு காரணம். வேறுசிலகாரணங்களுமுண்டு என்று கூறுவதை ஆதிகர் என்று கூறிக்கொள்பவரிற்யாரே மறுக்க வல்லார். இவ்வித விபசாரப் பெண்களால் நாட்டிலுள்ள மக்களை மேகரணம், அரையாப்பு, சிரங்கு முதலியகொடிய நோய்பற்றி மக்களுயிர்க்கு ஊறுசெய்கின்றது. அதினின்று தப்புவோரும் கூட நடைப்பிணங் களாய் வாழுகின்றனர். விலைமகளிர்க்காக ஆண்மக்களிற் சிலர் போடும் போட்டியினால் நாட்டிலுண்டாகும் கொலைகளோ ஆனந்தம். இதனாலேற்படும் போர்களும், பொறாமைகளும், பண விரையமும் தற்கொலைகளும், மருந்தீடுகளும் ஏனைய கொடுஞ் செயல்களும் அம்மம்மா! சொல்லத் தரமன்று. விபசாரம் நாளடை வில் இவ்வுலகிலேயே பல மக்களை எரிவாய் நரகிடைக் கிடந் துழலும் படி செய்துவிட்டது. விலைமகளிர் வீட்டில் பிறந்த பெண்டிர் ஒருவனை மணந்து ஒழுங்காய் இல்லறம் நடத்தவிரும்பினும் அவர் களை சாதிவெறி, சமயவெறி கொண்ட மக்கள் முன் வருத்தினால் அம்மகளிரும் வேறு வழியற்று விபசாரத்துக் காட்டப்படுவதை நீக்க போதிய முயற்சிகள் நடைபெறவில்லை. தற்சமயம் விபசாரத் தொழி லிலீடுபட்டிருப்பவர் தாம் புரியும் தொழில் தீதானது என்று உணர்ந்து அத்தொழிலை விட்டுவிடினும் அவர்களுக்கு வேறு கைத் தொழிலோ, கல்வியோ கற்பித்து உணவீய்ந்து காப்பாற்றதக்க அறச் சாலைகள் நிறுவ நமது ஜீவகாருண்யமதம் இடந்தரவில்லை. தலைவர் மனம் விசாலமடையவில்லை. ஜீவகாருண்ய சங்கங்கள் இத்தொண்டிலிறங்க விருப்பப்படவில்லை. பணக்காரர் உளம் இவ் வறப்பயனைப் பெறவிரும்பவில்லை. கொடுஞ் செயல்கள் பெருக நம் ஹிந்து சமயமும், சைவ சமயமும் இடங்கொடுக்கின்றதே யொழிய நம்மிடையே வாழும் கிறிதுவர்கள் முலீம்களிடையே இவ்விபசாரிகள் கூட்டம் பெருகாதிருக்கின்ற காரணத்தையும் ஜீவ காருண்ய சமயத்தார் என்று கூறுபவர்கள் ஆராய்ந்து பார்க்கட்டும். அவர்களின் சமயம் விபசாரத்திற்கு எட்டுணையும் இடம் கொடுக்கா திருப்பதுடன் விபசாரம் பெருக காரணமாகவுள்ள செயல்கள் அனைத்தையும் அச் சமயத்தில் வேருடன் களையப்பட்டிருக்கிற தென அறிந்து பெண்களிடத்தில் - இல்லை - இந்தியாவினிடத்தில் ஜீவகாருண்யம் காட்டி விபசாரத் தொல்லையையொழிக்க சமயத் தலைவர் முன்வருவாராக. விதவை மணம்: துணைவனை இழந்த பெண்ணை நமது புண்ணிய நாட்டிலே விதவையர், கைம்மையர், அறுதலி, முண்டச்சி, நூலிழந்தோர், அமங்கலி முதலிய பல பெயர்களால் அழைக்கப்பட்டு வருகிறது. ஆண்மகன் தன் துணைவியை இழந்தால் அவனை இத் தகைய பெயர்களால் அழைக்கப்பட வேண்டியது நியாயமாயிருக்க, அவனை எவரும் அவ்வாறு அழைப்பதில்லை. துணைவி இழந்த ஆண்மகனை எவ்விதத்திலும் மதச்சட்ட திட்டங்கள் பாதிப்ப தில்லை. ஏனெனில் மதச்சட்ட திட்டங்களெல்லாம் பெரும்பாலும் ஆண்மக்களே வகுத்திருப்பதினால் தங்களுக்கு இடஞ்சலில்லா வழி யில் மதக் கொள்கைகளை அமைத்துக் கொண்டு பெண்ணுலகிற்கு பெரிதும் கேடு விலைத்திருக்கின்றார்கள். சீவகாருண்மில்லா கொடிய ஆண் பேய்கள் மதத்தின் பேரால், கடவுளின் பெயரால், மகாத்மாக் களின் பெயரால், கற்பின் பெயரால் துணைவனை இழந்த பெண்ணை அவனுடன் உயிருடன் வைத்து சுட்டெரித்து விட வேண்டுமென்று சட்டஞ்செய்து கோடிக்கணக்கான நம்மிந்தியச் சோதரிகளை அவ்வாறே இரக்கமின்றி சுட்டெரித்து வந்தார்கள். இதைத்தான் உடன்கட்டையேறல் அல்லது சதி என்று கூறுவது. பண்டைக் காலத்திலே தசரதன் போன்று பல ஆயிரக்கணக்கான மனைவிகளை மணந்து வாழும் வழக்கமிருந்ததால் ஒரு ஆண் மகனிறந்துபோனால் அவனுடைய துணைவிமார்களாகிய ஆயிரக்கணக்கான பெண் மணிகள் சுட்டெரிக்கப்பட்டுவந்தனர். இவ்வாறு உடன்கட்டை ஏறினால் அப்பெண்களுக்கு சொர்க்கம் கிடைக்குமென்று சாதிரங் களில் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் அச்சாதிரத்தில் சொல்லப் பட்டிருக்கும் மோட்சத்தை நம்பி எம்பெண்மணியும் தானே மனமுவந்து உயிர் துறக்க இணங்கார். பலவந்தமாக அக் காலத்திய பெரியார்கள் ஒரு ஆணுக்காக ஆயிரக்கணக்கான பெண்களை அவர்கள் மனந்துடிதுடிக்க சுட்டெரித்திருக்கின்றார்கள். அந்தோ கொடுமை! கொடுமை! அக்கொடுஞ்செயலெல்லாம் ஜீவ காருண்யம் என்றுதான் அக்காலத்து வைதீக மக்கள் எண்ணினர் போலும். இப்பாதக செயலைக்கண்டு மனமிரங்கி இந்திய நாட்டுச் சீர்திருத்தவாதிகள் பெருங் கிளர்ச்சிபுரிய அரசாங்கமும் சிறிது கருணைகொண்டு இப்பாதகச் செயலைச் சட்டபூர்வமாகத் தடுத்துவிட்டார்கள். அதன் பின்னர் துணைவனை இழந்த பெண்களை மொட்டை யடித்து மூலையிலுக்காரச் செய்து ஒரு நேரத்திய உணவு மட்டு முண்டு வாழவேண்டுமென்று நகைகளும், நல்ல ஆடைகளும் அணியக் கூடாதென்றும், அவர்கள் ஒரு நல்ல காரியங்கள் செய்யப் போகும்போது எதிரில் வரக்கூடாதென்றும் இன்னும் பல கொடுஞ் சட்டங்களும் செய்து துன்புறுத்துவதோடு ஆண்மகனைபோல் பெண்மறுமணஞ்செய்யக் கூடாதென்றும் நம் நாட்டில் தோன்றிய ஜீவகாருண்ய மதம் கட்டளையிடுகிறது. விதவைப் பெண்களை வீட்டில் உற்றார் உறவினர் முதலிய பலரும் காய்கின்றார்கள். தாய் தந்தையர் வெறுக்கின்றார்கள். அண்ணன் தம்பிமார்கள் அவ மதித்துப் பேசுகின்றார்கள். சுமங்கலியான அக்காள் தங்கைமார்கள் அடிக்கடி குறை கூறுகின்றார்கள். எத்தனையோ சோதரிகள் இக் காய்வும், வெறுப்பும், அவமதிப்பும் தாங்கப்பொறாது தற்கொலை செய்து கொள்ளுகின்றார்கள். பலர் பட்டினங்களிற் போய் சுயேச்சையுடன் விபச்சாரத்தனம் செய்து பிழைக்கின்றார்கள். பலர் மலேயா, இலங்கை முதலிய இடங்களுக்குப் போய் தோட்டக் காட்டில் மானமிழந்து கூலி வேலை செய்து பிழைக்கின்றனர். பலர் கால் வயிறுண்டு சாவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஜீவ காருண்ய மதத்தலைவர்கள் என்போர் இதைப்பற்றி ஒரு சிறிதும் கவனிக்கின்றார்களில்லை. ஒரு சில முற்போக்குள்ள தலைவர்கள் விதவை மணத்திற்கு ஆதரவு காட்டிப் பேசினாலும் நீண்டநாள் வழக்கம், ஒழுக்கம் என்னும் பேய்களும், சாதிரம், கடவுள், சாதி கட்டுப்பாடு முதலிய பூதங்களும் அவர்களுடைய கையிலும், காலி லும் விலங்கை மாட்டிவிடுகின்றன. அரசாங்கம் மறுமணத்திற்கு ஆதரவு காட்டினும் நடைமுறையில் போதிய பலன் கிடைக்கவில்லை. எனவே தான் பெண்மக்களின் மறுமணத்திற்கு எதிரிடையாக இருக்குங் கடவுள், வேதம் , சமயம், புராணம், பழக்கம், ஒழுக்கம் முதலிய அனைத்தையும் ஒழித்தால் விதவைப் பெண்கள் விமோசனம் அடைவர் என்ற பெரு நோக்கோடு தோழர் ஈ. வெ. இராமசாமி அவர்கள் சுயமரியாதை இயக்கங்கண்டார். சுயமரியாதை இயக்கம் வெற்றி பெறாவிடில் நாட்டில் பெண்களைப் பிடித்துள்ள விதவை எனும் பெரும் நோய் நீங்காதென்பதோடு பெண்ணுலகிற்கே விமோசனம் அண்மையில் இல்லை என்றே கூறலாம். விதவையான பெண்டிர் படுந்துயரை நினைக்கும் பொழுது பண்டைக்கால வைதீகர்கள் செய்த சதி என்னும் உடன்கட்டை ஏறச்செய்த கொடுஞ்செயல் எவ்வாற்றானும் உயர்ந்த நற்செய லென்னும் முடிவிற்கே வரவேண்டியதிருக்கின்றது. உடன்கட்டை ஏறல் ஒரு நாள் துன்பம் விதவையானால் ஆயுட்கால முழுதுந் துன்பம். இத் துன்பத்தினின்று பெண் மக்கள் விடுபட சமூக சீர் திருத்த விருப்பம்கொண்ட அறிஞர்கள் ஊக்கங்குன்றாது உழைத்தும் லாகூர். ஸர். கங்காராம் போன்ற தனவந்தர்கள் இலட்சக்கணக்கான பொருள்களைக் கொடுத்தும் விதவைகள் துன்பம் நீங்கியபாடில்லை. காரணம் ஜனங்கள் கடவுள், சாதிரம், பழக்கவழக்க முதலியவற்றிற் கொண்ட மோகமேயாகும். இந்த மோகம் ஒழியும் வரை விதவைச் சோதரிகட்கு மீட்சியில்லை. விதவைகள் மீட்சியடையும் வரை இந்து மதத்துக்கும் இந்தியாவுக்கும் மீட்சியில்லை. இது பற்றியே தமிழ் நாட்டின் தேசீயத்தலைவர் ஒருவர், நமது நாட்டில் இலட்சக்கணக் கான சிறு குழந்தைகள் கைம்பெண்களாயிருக்கிறார்கள். இவர்கள் கதியென்ன? திருமணம் இன்னதென்றுணரா முன்னர் ஏன் சிறுமி யர்களை திருமணஞ்செய்து கொடுத்தல் வேண்டும்? கைம்மை யடைய நேர்ந்தால் அவர்களை ஏன் கூட்டிலடைத்து வருத்தல் வேண்டும்? அவர்கள் வழுக்கி வீழ்வரேல் அவர்களை அடிக்கிறது ஊரைவிட்டோட்டுகிறது சமயம் நேர்ந்தால் கொல்கிறது இப் பாவங் களை நிகழ்த்திவரும் நாட்டிற்கு உய்வுண்டா? உரிமையுண்டா? நாயகனுடன் ஒருபொழுதும் கூடி யின்பம் நுகராத பெண்மகள் கைமை நிலையெய்தினால் மீண்டும் மணஞ்செய்து கொள்ள லாகாதா? மணம் என்பது யாது? பந்தரா? கோயிலா? மந்திரமா? மாலையா? ஒருவனுடன் கூடி இன்பம் நுகரும் நாள் திருமணம் முடிந்த நாளாகும்.ïsik மணத்தை விலக்காது மறுமணத்தையுந் தடுப்பது அறமாகாது என்று கூறியதும் கவனிக்கத்தக்கது. புண்ணிய நாடென்று போற்றப்பெறும் இப்பாழும் இந்தியா வில் இதிலும் கொடிய இந்துமதத்தில் தான் மறுமணம் மறுக்கப் பட்டிருக்கிறது. 1921 ஆம் ஆண்டில் ஜனக்கணிதப்படி ஒரு வயது முதல் பதினைந்து வயது வரை விதவையாய் வாழும் இந்துப் பெண்கள் 329,076. அந்தோ கொடுமை! கொடுமை! இக் கொடுமைக்குக் காரணர் யார்? இந்து மதமென்றே கூறவேண்டும். எனவே தான் அறிஞர்கள் இந்து மதம் பெண் கொலை மதம் என்று இயம்பி வருகின்றார்கள். இத்தகைய இளம் பெண்கள் மறுமணஞ் செய்யா விட்டால் மக்களுக்கு இயற்கையாக உண்டாகும் இன்ப உணர்ச்சியை எவ்வாறு அடக்கிக்கொண்டிருப்பர். நூற்றிற்கொருவராவது இருக்க முடியுமா? என்பது சந்தேகம். இத்தகைய கைம்பெண்கள் சோரத் தனமாய் விபசாரம் புரிந்து பிள்ளையுண்டாவதும், கருச்சிதைக்க மருந்துட்கொள்வதும் பிள்ளை பிறந்துவிடின் சங்கைநெறித்துச் சாக்கடையிலும், கத்தாழைக்காட்டிலும் வீசிவிடுவதும், வாய்க்காலி லும், ஆற்றிலும் உயிருடன் வீசிவிடுவதும் சில இரக்கமுள்ள தாய்மார்கள் மானத்தைவிட ஜீவகாருண்யமே பெரிது என்றென்னி அநாதைப்பாடசாலைகளுக்கு கொண்டு போய் ஒருவரும் அறி யாமல் கொடுத்துவருவதும் நம் நாட்டில் நடக்கவில்லை யென்று எவராவது கூறமுடியுமா? எமது திருநெல்வேலி ஜில்லாவிலே கிறிதுவப் பெண்மணிகளால் டோனாவூர் என்ற ஒரு கிராமத்தில் நிறுவியிருக்கும் அனாதைப்பாடசாலையில் சுமார் 400 க்கு மேற் பட்ட குழந்தைகள்படித்துவருகின்றார்கள்.ïij¥ngh‹w  அனாதைகளின் புகலிடங்கள் பல இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் ஏராளமான பிள்ளைகள் படிக்கின்றார்கள் எல்லாம் கிறிதுவ மிஷனரிகளாலே நடைபெறுகின்றன. ஜீவகாருண்யமததர்கள் என்று கூறும் இந்துக்களோ அல்லது வடிகட்டிய ஜீவகாருண்ய சமயத்தார் தாங்கள் தான் என்று கூறும் சைவர்களோ நாட்டில் ஆண்டொன்றிக்கு ஆயிரக் கணக்காய் நடைபெறும் இச்சிசுக் கொலைகளைப் பற்றி சிறிதாவது கவலை கொள்கின்றார்களா? அக்கொலைகள் நடைபெறும் காரணங்களை அறிந்துஅதற்காவன புரிந்தார்களா? அன்றேல் சிசுக்கள் கொலை செய்யப்படாமல் காப்பாற்ற அனாதை ஆசிரமங்கள் நிறுவியிருக்கின்றார்களா? கிறிதுவர்களுக்கு இருக்கும் ஜீவகாருண்யம் இந்துக்களுக்கோ, அன்றி சைவர்களுக்கோ ஒரு சிறிதும் கிடையாது என்பது எவரும் அறியக்கிடக்கும் உண்மையாகும். கிறிதுமதமும்இலாமு பெண்களிடத்தில்ஜீவகாருண்யம்கொண்டுமறுமணஞ் செய்து கொள்ள அனுமதித்திருப்பதுடன், அனுஷ்டானத்திலும் இன்றளவும் இருந்து வருவதினாலன்றோ மதங்களையே ஒழித்துவிடவேண்டும் என்று விரும்பும் சுயமரியாதைத் தலைவர்களும் அச்சமயங்களைப் போற்றி வருகின்றார்கள். (இஃது தலைவர்களின் சொந்த அபிப் பிராயமே யொழிய இயக்கத்தின் கொள்கையன்றென்பதை நேயர்க ளறிவார்களாக) எனவே ஜீவகாருண்ய சமயங்களென்று கூறிக் கொள்ளும் இந்து சமயம், சைவ சமயம் தங்கள் அழிவிற்கு முன் பெண் மக்களிடம் ஜீவகாருண்யம் கொண்டு பெண்களின் மறு மணத்தை அனுஷ்டா பூர்வமாய் செய்துகாட்ட முன்வர அச்சமயத் தலைவர்கள் முயற்சிப்பாராக. - (பெண்ணுரிமையும் மதமும்என்னும் தலைப்பில் -திராவிடர் கழகம் வெளியிட்டுள்ளது. எனது இலங்கைப் பிரயாணம் இயற்கை வளமும், செயற்கை நலமும் செழித்து ஒளிரும் எழின்மிகும் இலங்கைத் தீவிற்கு எமது ஊர்வாசிகளில் பெரும் பாலோர் சென்று வாணிபத்தில் பெரும் பொருளீட்டி வருகின்றனர். எம் உற்றாரும் நண்பருமான பல்லோர் ஆண்டு வசித்து வருகின்றனர். அன்னோர் இணையிலா இந்தியா நன்னாட்டினருகில் இலங்கும் இலங்கைமாநாட்டிற்கு ஒரு முறையாவது போந்து ஆண்டு உள இயற்கைக் காட்சிகளையும், மக்களின் நாகரிகங்களையும், பழக்க வழக்கங்களையும் கண்டுவருவதுடன் தங்களுடன் சிறிது நாட்கள் வதிந்து வரும்படி வேண்டிக்கொண்டனர். அவர்களின் விருப்பப்படி கிறிதும விடுமுறை நாட்களை ஆண்டு கழித்துவிட்டு வரலா மென்று 18.12.31இல் தூத்துக்குடி மூலமாய் கப்பலேறிச் சென்றேன். கப்பலிலே 3வது வகுப்புப் பிரயாணிகள் படும் கஷ்டங்கள் அளவிட்டு உரைக்க முடியா. பொதுவாக முதல், 2வது வகுப்புகளில் பிரயாணஞ் செய்வோர் நோயற்ற யாக்கையுடையவர்கள் என்று இலங்கை அரசாங்கத்தார் எண்ணி 3வது வகுப்பிலும், டெக்கிலும் பிரயாணஞ் செய்வோருடைய உடைகள் மருந்து கலந்த தண்ணீரில் அவிக்கப் படுவது உடன் அவர்களும் அங்குள்ள தண்ணீரில் குளிக்கப்பட வேண்டும் எனச்செய்து இருக்கின்றனர். முதல் வகுப்பு, 2ஆம் வகுப்புப் பிரயாணிகளுக்கு இத்தகைய தொல்லையில்லை. தூத்துக்குடி இலங்கை சுங்கவரி இலாகா (கடம் ஆபீ)வில் கைக் கூலிக்காரர் களின் தொல்லையும், கூலிகளின் தொந்தரவும் அதிகம். கப்பல் பிரயாணத்தினால் எனக்கு ஒரு சிறிதும் மயக்கமோ, கிறுகிறுப்போ உண்டாகவில்லை. பெரிதும் உற்சாகமும் ஊக்கமுங் கொண்டே சென்றேன். இந்துமஹா சமுத்திரத்தின் தண்காற்று உடலிற்கு இன்ப மூட்டியது. பொதுவாக நம் தமிழ் மக்கள் பண்டைக்கால முதலே பார்ப்பன இந்துமதக் கொள்கையாகிய கடல் கடத்தல் கூடாது! என்ற முட்டாள் சட்டத்தைப் புறக்கணித்து திரைகடலோடியும் திரவியந்தேடு என்ற தமிழ்க்கிழவியின் அமிர்தமொழியைக் கடை பிடித்து நீண்ட தூரம் கப்பல் பிரயாணஞ் செய்ய அஞ்சினாலும் இவ்விலங்கைத் தீவிற்காவது வந்திருக்கின்றார்களே என்று தமிழர் களின் இந்நல்ல கொள்கையை எண்ணி எண்ணி இறும்புதெய்தி னேன். தூத்துக்குடியில் மாலை 5 மணிக்குப் புறப்பட்ட கப்பல் மறுநாள் காலை 9-மணிக்கு கொழும்பின் அழகிய துறைமுகத்தை அடைந்தது. அங்கு எமது நண்பர்கள் பலரும் கப்பலுக்கே நேராக வந்து என்னைத் தமது இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர். இத் துறைமுகத்திற்கு தோழர் ஈ.வெ.ரா. அவர்கள் ஈஜிப்ட் தேசத்தில் கண்ட எம்பிர ஆப் பிரிட்டன் என்னும் உலகத்தின் பெரிய கப்பல் வந்தது யானும் பார்த்து களிக்கும் சந்தர்ப்பம் பெற்றேன். கொழும்பின் காட்சி இலங்கை தேசத்தின் தலைநகர் கொழும்பே ஆகும். இஃது ஒரு சிறந்த துறைமுகப்பட்டினம். இந் நகரத்தின் கடற்கரை மிகப் பிரசித்தி பெற்றது. இங்கிலாந்து தேசத்தின் மாஜி பிரதம மந்திரி லாயிட் ஜார்ஜ் கனவான் கூட இக்கடற்கரையின் அழகை வியந்து பாராட்டி இருக்கிறார். உலகத்திலுள்ள அழகிய கடற்கரையில் இது ஒன்றாம். இவ்வூர் நகராட்சி கழகத்தை (கார்பரேஷனை) எவரும் போற்றாதிருக்க முடியாது. நகரத்தின் எல்லாப் பக்கத்திலும் தார் பூசிய அழகிய ரோடுகள் மிகச் சுத்தமாய் வைக்கப்பட்டு இருக்கிறது. நகரத்தின் பற்பல பாகத்திலும் புற்கள் நிறைந்த மைதானங்களும் சிறுவர்களும் பெரியவர்களும் தேகாப்பியாசங்கள் செய்து கொள்ளக் கூடிய வசதியான விளையாட்டு தலங்களும் நகராட்சிக் கழகத்தின் செலவிலேயே செய்யப்பட்டிருக்கிறது. இங்குள்ள போலீகாரர்கள் எல்லாம் ஆங்கிலம் படித்தவர்களாக இருக்கிறார்கள். நான் பார்த்த அளவில் அவர்கள் கண்ணியமாக நடந்து கொள்பவராகக் காணப்படுகிறார்கள். இவ்வூர் சென்னையைப் போன்ற பெரிய நகரமில்லாததாய் இருப்பினும் பெரிய குதிரைப்பந்தயம் என்னும் சூதாடும் இடமும், சுமார் 15க்கு மேற்பட்ட சினிமாக்களும் நகரத்திற்குள் பிரதானமான ரோடுகளிலே கள்ளுக்கடைகளும் வைக்கப்பட்டிருக்கிறது. இஃது இந்த நகருக்குப் பெரும் இழிவைத் தருவன வாகும். இங்கு பம்பாய் சென்னை முதலிய இடங்களைப் போல் பெரிய கட்டிடங்கள் அதிகமில்லை. உயர்தரக் கலாசாலைகளும் மிகச்சிறிய கட்டிட மாகத்தான் இருக்கிறது. சிறியதாய் இருப்பினும் ஐரோப்பிய முறையில் வீடுகள் பலவும் நாகரிகமாயும் சுத்தமாயும் நன்கு அலங் கரிக்கப்பட்டிருக்கிறது. மேல்மாடிகள் இல்லாத பங்களாக்களே அதிகம். இந்நகரத்தின் மத்திய பாகம் அதிக ஜனநெருக்கும், வியாபாரப் பழக்கமும் அதிகமான இடமாக இருந்தாலும், கொள், பிட்டி, வெள்ளவத்தை, பொறளை முதலிய இடங்கள் கிராமாந்திரங்கள் போன்று யாண்டும் மரஞ்செடிகொடிகளும் அழகிய பூஞ் செடிகளும் நிறைந்து, கண்ணிற்கு இனிய காட்சியாக விளங்குகின்றதோடு வீடுகள் அதிக நெருக்கமில்லாததாய் இருக்கின்றன. ஐரோப்பிய நாகரீகம் நேராக இலங்கைக்குத் தான் வந்து இறக்குமதி யாகிறது என்று கூறலாம். இங்குள்ள மக்கள் யாவரும் நடையுடை பாவனை முதலிய எல்லா வற்றிலும் ஐரோப்பியர்களையே பின்பற்றுகின்றனர். கூலிகளும், ரிக்ஷா வண்டி இழுப்பவர்களும் காற்சட்டை, பூட் ஐரோப்பிய தொப்பி யாகிய ஹேட்டும் அணிந்தும் விலை யுயர்ந்த நேவிகட் சிகரட்டும் குடித்து - ஆங்கிலம் பேசி வருகின்றார்கள். நமது நாட்டில் நம் வீட்டிற்கு வரும் நண்பர்களை உபசரிப்பதற்கு முதலாவதாக வெத்திலை பாக்குக் கொடுப்பது போல் நாம் எந்த சினேகிதர்கள் வீட்டிற்குப் போனாலும் முதலாவது தேநீரும் ஒரு சிகரெட்டும் தான் முதலில் வரும். கொழும்பு செல்வங் கொழிக்கும் ஒரு நகரமாயினும் அத்தீவின் முக்கிய விளைபொருள்களாகிய தேயிலை, ரப்பர், கொக்கோ, கொப்பரா முதலியவைகளின் விலையிறக்கத்தினாலும் உலகம் எங்கும் தோன்றிய வியாபார மந்தத்தினாலும் ஜனங்கள் பெரும் அல்லல் பட்டுக் கொண்டும், வேலையில்லார் தொகை அதிகப் பட்டுக் கொண்டும் வரும்பொழுது இலங்கை அரசாங்கத்தார் ஜீவகாருண்யமும் முன் யோசனையும் இன்றி முட்டாள்தனமாய்ப் புதிதாய் வருமானவரி (இன்கம் டாக்) ஏற்படுத்தியது இலங்கை மக்களை என்றுமில்லாத துக்கத்துக்குள்ளாக்கியது. இந்நிலையில் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் போல் கட்டுப்பாடும், சுயராஜிய அபிமானமும், ஆங்கிலக் கல்வியில் அதிக முன்னேற்றம் அடைந்து அரசாங்க உத்தியோகம் முழுவதையும் பேங்குகள், பாடசாலைகள் முதலியவைகளில் உள்ள உத்தியோகங்களையும் கைப்பற்றிக் கொண்டு, பிறஜாதியார்கள் அங்கு நுழைய விடாமல் பாதுகாத்துக் கொள்ளும் யாழ்பாணத் தமிழர் பண நெருக்கடி உள்ள இச் சந்தர்ப்பத்தை சமாளித்துக் கொள்ளக் கருதி தேசீய இயக்கம் ஒன்று கண்டு அதன் மூலமாய் ஐரோப்பிய உடைகளை வெறுத்து தேசீய உடையணிந்து வருகின்றார்கள் (கதர் உடையல்ல) தேசீய உடை என்பது அரையில் வேஷ்டியும் ஒரு ஆபாரமும் நீண்ட அங்க வதிரமும், எந்நாட்டுத் துணியை அணிந்திருந்தாலும் அது தேசீய உடையாகவே கொள்ளப்படுகிறது. இத்தேசத்தின் வியாபாரங்கள் பெரும்பாலும் முலிம்கள் இடத்திலே இருக்கிறது. சிங்களவர்கள் வியாபாரத் துறையிலோ, உத்தியோகத் துறையிலோ அதிக முன்னேற்றமடையாது இருப்பினும் தற்சமயம் இத் துறைகளில் முன்னேற்றமடைய வேண்டும் என்ற உணர்ச்சியுடன் இந்தியர் களுக்கு விரோதமான கிளர்ச்சியும் நாளடைவில் கைக் கொண்டு வருகின்றனர். அது விருத்தியாகிக் கொண்டு வருகிறது. இங்கு தொழிலாளர் இயக்கம் அதிக முன்னேற்றமடைந்து வருகின்றது. தொழிலாளர்களுக்குத் தலைவராய் குணசிங்கம் என்னும் சிங்களவர் வாய்த்தது தொழிலாளர்களின் பாக்கியம் என்றே கருதவேண்டியது. இவர் சாதாரண மனிதராகவே இருந்து வந்தார். பணக்காரரும் அல்ல, ஆங்கில பட்டதாரியுமல்ல என்றாலும், தொழிலாளர் களுக்குத் தலைவராய் வந்ததும் தம் செல்வாக்கைப் பெரிதும் உயர்த்திக் கொண்டு இலங்கை சட்ட சபைக்கு நடந்த தேர்தலில் போட்டி போட்டு வெற்றிபெற்று இப்பொழுது ஓர் அங்கத்தினராய் இருந்து வருகிறார். இவருக்கு சமயோசித புத்தியும், எதிரியைத் தம் வசமாக்கிக் கொள்ளத்தக்க பேச்சுவன்மையும் பெரிதுமுண்டாம். இவரை இலங்கைத் தொழிலாளிகள் இலங்கை முஸேரனி என்று கூறி வருகின்றார்கள். இவருக்கு இந்திய காங்கிரசிடத்திலும், தோழர் காந்தியிடத்திலும் விசேஷஅன்புண்டு. கல்வி கேம்பிரிட்ஜ் சர்வகலா சாலையைச் சேர்ந்த பற்பல கல்லூரிகள் காலேஜ்கள் இருக்கின்றன. ஆண்களும், பெண்களும் தாராளமாய் கல்வி பயின்று வருகின்றார்கள். பாடசாலைகளில் பெரும்பாலும் ஆங்கிலத்திலே கல்வி போதிக்கப்படுகிறது. பாடசாலைகளில் மாண வர்கள் ஆங்கிலத்தைத் தவிரவேறு பாஷைகளில் சம்பாஷணை செய்யக் கூடாதென்று கட்டுப்பாடும் உண்டு. எனவே 3வது, 4வது வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் நன்றாக ஆங்கிலம் பேசுகின் றார்கள். ஆங்கிலம் பயில செலவு அதிகமாய் இருக்கிறது. 3வது பாரத்தில் படிக்கும் ஒரு மாணாக்கனுக்கு மாதம் 60 ரூபாய் செல வாகிறது. இப்பொழுது தான் தாய்பாஷையாகிய தமிழுக்கு விசேஷ மதிப்புக் கொடுக்க வேண்டும் என்ற உணர்ச்சி தோன்றி தமிழ் நாட்டுக் கலாசாலைகளைப் பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் ஜனங்கள் உள்ளத்தில் தோன்றிவருகிறது. அங்கு கேம்பிரிட்ஜ் பி.ஏ. பட்டதாரிகளுக்கு மதிப்பு சென்னை சர்வகலாசாலை - இல் எம். ஏ. பட்டம் பெற்று எல்.டி பா பண்ணியவருக்கு கிடையாது என்பது ஒரு சிறிதும் மிகையாகா. கலாசாலைகள் எல்லாவற்றிலும் கணித சாதிரம் மிகக்குறைவாகவே கற்பிக்கப்படுகிறது. மாணவர்கள் நன்றாகவும், விரைவாகவும் ஆங்கிலம் பேசினாலும், எழுதுவதிலும் பேசுவதிலும் பெரிதும் இலக்கண தப்பு போட்டுவிடுகின்றார்கள். பெண் கல்விக்கு மாறுபட்ட அபிப்பிராயம் இந்நாட்டில் அதிக மில்லை என்றே கூறலாம். இலங்கையில் கல்வி அபிவிருத்திக்கு பெரும்பாலும் கிருதவர்களே காரணம் என்று கூறலாம். கிறிதவ கலாசாலைகள் பல இருக்கின்றன. இரட்சண்ய சேனை கிறிதவக் கூட்டத்தின் ஆர்ப்பாட்டம் இங்கு அதிகம். பெண் கல்லூரிகளில் இந்தியாவைப் போன்று உத்தியோகக் கல்வி கற்பிக்கப்படுகிறதே தவிர, பெண்கள் இல்லறத்தை செம்மையாக நடத்தத் தக்ககல்வி போதிக்கப்படுவதாகக் காணோம். ஆண் பிள்ளைகள் கல்வி பயிலும் பல கல்லூரிகளில் பெண்மக்கள் பலர் ஆசிரியராய் அமைந்து இருக்கின்றனர். பத்திரிகைகள் இங்கு ஜனத்தொகை மிகச் சுருக்கமாய் இருப்பினும் மக்களின் கல்வி அபிவிருத்தியால் பத்திரிகை அதிகமாகத் தோன்றி வருகின்றன. சிலோன் டெயிலி நியூ, மார்ணிங் லீடர், அப்ஸெர்வர், இண்டிபெண்டன்ட், டைம் ஆப் சிலோன் முதலிய ஆங்கில தினசரிகளும், சிலுமினா, டினமினா முதலிய சிங்கள தினசரிகளும் வீரகேசரி என்னும் தமிழ் பத்திரிகையும் வெளியாகிவருகிறது. சமீபத்தில் தினவர்த்தமானி என்ற தமிழ் தினசரியும் வெளியாகப் போகிறதாய் வதந்தி மலையாளம் டெயிலி நியூ, மலையாளி, மனோகரா முதலிய மலையாள தினசரிகளும் இன்னும் கணக்கற்ற வாரப்பத்திரிகைகள், மாதப் பத்திரிகைகள் வெளிவருவதுடன் மேனாட்டில்வெளியிடப்படும் பல பத்திரிகைகளும் இங்கு விற்கப் படுகிறது. இங்குள்ள தமிழர்கள் தமிழ்நாடு, குடியரசு, புதுவைமுரசு, தமிழன் இந்தியா முதலியவைகளை விசேஷமாய் படித்து வருகின் றார்கள். குடியரசைப் பரப்ப இங்குள்ள சுயமரியாதை இயக்கத் தொண்டர்கள் விசேஷ முயற்சி எடுத்து வருகின்றார்கள். விசேஷ மான அபிவிருத்தியும் அடைந்து வருகின்றது. இதற்கு தோழர்களான ஈ.வெ.ரா, ராமநாதன் முதலியவர்களின் விஜயமே பெரிதும் காரண மாய் மிளிர்கின்றன. இங்கு வெளியிடப்படும் வீரகேசரி என்னும் தமிழ் வெளியீடு தோழர் சுப்பிரமணியஞ் செட்டியார் எனும் ஒருவ ரால் வெளியிடப்பட்டது. அவர் சமூக சீர்திருத்த விருப்பம் கொண் டவர் என்பதாயும்,பத்திரிகைஆரம்பகாலத்தில் அக்கொள்கைகள் பெரிதும் காணக்கிடந்தது என்றும் நம் நண்பர் மூலமாயும் அறிந்தேன். பின்னர் அப்பத்திரிகைக்கு ஆசிரியராய் பார்ப்பனர்கள் நுழைந்ததும் சமூக சீர்திருத்தத்தைப் புறக்கணித்து தேசீயப் பத்திரிகை போல் நடித்து வருகிறது. அதைப்பற்றி நாம் ஒரு சிறிதும் கவலைப் படவில்லை என்றாலும் தம் கொள்கைக்கு விரோதமாய் நடை பெறும் எந்த இயக்கத்தைப் பற்றியும் தம் பத்திரிக்கையில் வெளி யிடுவதில்லை என்று ஒரு தீர்மானஞ் செய்து கொண்டிருப்பதாயும் யான் இலங்கை சென்றதும் அறிந்தேன். பல அன்பர்களிடத்திலும் அதைப்பற்றி விசாரித்தேன். சுயமரியாதை இயக்க சம்பந்தமாயும், ஆதிதிராவிடர்கள் சங்கவிஷயமாயும் சிறிதும் அப்பத்திரிகை பிரசுரிப்பதில்லை என்றும் அதுவிஷயமாய் பல அன்பர்கள் கடிதம் எழுதியும் வீரகேசரி ஆசிரியர் எவ்விதப்பதிலும் எழுதினார் இல்லை என்றும் அறிந்தேன். இதுபற்றிய விஷயங்கள் சுயமரியாதைத் தொண் டர்களும் இதர சமூக சீர்திருத்த தொண்டர்களும் அறிந்து வேறு ஒரு தமிழ் தினசரி தோன்றச் செய்ய வேண்டுமென்று முனைந்து வேலை செய்வதோடு வீரகேசரியைப் பகிஷ்காரஞ் செய்யவும் வேண்டும் முயற்சியும் எடுத்து வந்தனர். இதனிடையே இலங்கையில் செல்வாக்குள்ள ஆங்கில தினசரியாகிய டெயிலி நியூ, அப்ஸெர்வர் பத்திரிகைகளையும் தினமினா என்னும் சிங்களதினசரியையும் வெளியிடும் ஒரு கம்பெனியார் தீனவர்த்தமானி என்னும் தமிழ் தினசரிவெளியிடப் போவதால் அதை ஆதரிக்க வேண்டுமென்று முடிவு செய்திருந்தனர். இதனிடையே இலங்கை இந்தியர் சுய மரியாதைச் சங்கத்தின் 11வது மாதாந்தர கூட்டத்தில் வீரகேசரி ஆசிரியர் தோழர் பி.பி.ஆர் சுப்பிரமணியன் செட்டியார் தலைமை வகிக்கப் போவதாக அழைப்பிதழ் ஒன்றும் எனக்கு வந்தது. எனவே இனியாவது வீரகேசரி ஆசிரியர் தம் கடமை உணர்ந்து நடப்பா ரென நம்புகிறேன். பெண்மணிகள் சிங்களப் பெண்மணிகளே இந்நாட்டில் விசேஷித்தவர் களாய்த் தோன்றுகின்றார்கள். சுயமரியாதைக் கொள்கை இன்னது என்பதை இவர்கள் அறியாவிடினும் இவர்களிடத்தில் சுயமரியாதைக் கொள்கைகள் பூரணமாய்க் குடிகொண்டு இருக்கின்றது என்று கூறலாம். தமிழ்நாட்டுப் பெண்களைப்போல் உடையணிவார்கள் .ஆனால், எவரும் அவர்களைத் தமிழ்ப்பெண் என்றே மொழிவர். பெண்கள் செவ்விய நிறமும் நீண்டு அடர்ந்த கருத்த கூந்தலும், நல்ல தேகக்கட்டும் உடையவர்களாய் இருக்கின்றார்கள். அதிகக் குள்ள மாகவோ, நெட்டையாகவோ இராது சமமான வளர்த்தியை உடைய வர்கள். அவர்கள் நடையுடை பாவனை முதலியவைகளில்ஆண்மை பொலிந்து விளங்கும். அவர்களின் கம்பீரமான பார்வையும், பிடி நடையும் உள்ளத்தைக் கொள்ளைக் கொள்ளும் தன்மையன. சிங்கள ஆண்களைப் பார்க்கிலும் பெண்கள் அதிகமாய் வியாபாரத் துறையிலும் ஏனைய தொழிலிலும் ஈடுபட்டு இருக்கின்றார்கள். ஒரு சிங்களப் பெண்மணியே இப்பொழுது சட்டசபை உறுப்பினராய்த் தேர்ந்துஎடுக்கப்பட்டு இருக்கிறார். பெரும்பாலான பெண்மணிகள் கல்வியிலும் தையல் வேலையிலும் விசேஷ முற்போக்கு அடைந்து இருக்கிறார்கள். இவர்கள் அரையில் சுமார் நாலுமுழ நீளத்தில் இரு பக்கங்களும் மூடப்பட்ட கைலியும் மேலே ஒரு சிறிய ரவிக்கையும் பெரும்பாலோர் அணிந்து இருக்கிறார்கள். சில கல்விகற்ற பெண்கள் ஐரோப்பியப் பெண்கள் போன்று கவுனும் சில பெண்கள் இந்தியப் பெண்கள் போன்று சேலை அணிந்து இருந்தாலும் சுமார் 8 முழ நீளமுள்ளதாகவே இருக்கிறது. பெண்கள் விசேஷமாய் நகை அணிந்து கொள்வது கிடையாது. பெண்களுக்குச் சொத்துரிமை, விஹாகரத்து, விதவை மணம் முதலிய உரிமைகள் இருக்கிறது. இளமை மஞ்செய்யும் வழக்கம் கிடையாது. தாலி கட்டும் வழக்கம் இவர்களுக்குள் அறவே கிடையாது. ஆண்களிலும் பெண்களே அதிக மத பக்தி உடையவர்களாகத் தோன்றுகிறார்கள். புத்த மதக் கோவில்களிலும் விழாக்களிலும் பெரும்பாலும் பெண்களே விசேஷமாகக் கலந்து கொள்ளுகின்றார்கள். புருஷர்கள் பெண் களுக்கு விசேஷ மரியாதை காட்டுவதோடு சிறிது அச்சமும் கொள்கி றார்கள். சமயம் வாய்ப்பின் ஆண்மக்களுடன் போரிட அவர்கள் (பெண்கள்) அஞ்சுவதே கிடையாது. பெண்கள் கல்வி கற்கக் கூடா தென்று சட்டமின்மையால் பெரும்பாலோர் தாய்ப் பாஷையிலும் சிலர் ஆங்கிலக் கல்வியும் கற்றிருக்கிறார்கள். பெண்களுக்கு விசேஷ மான சங்கங்களும் கிளப்களும் இருக்கிறது. நாட்டுப்புறத்தில் பெண் மக்கள் இவ்வளவு நாகரீகமுடையவர்களாய் இல்லை. அங்கு நமது நாட்டுத் தாழ்த்தப்பட்ட பெண்மணிகள் போன்ற சில ஜாதியார்கள் காணப்படுகின்றார்கள் அவர்கள் நடையுடை பாவனை நிறம் முதலியவற்றில் இந்நாட்டுத் தாழ்த்தப்பட்ட மக்கள் போன்றே இருக்கின்றார்கள் என்றாலும் நமது நாட்டைப்போன்று பிற ஜாதியார்களால் அவர்களுக்கு எவ்விதத் துன்பமும் உண்டாக்கப் படுவதாய்க் காணோம். இங்குள்ள முலீம் பெண்களும் உடை, நடை, கல்வி, நகை, முதலியவைகளில் நாகரீகம் பெற்று வருகி றார்கள். என்றாலும் வெளியில் செல்லும்போது ஒரு வெள்ளைப் போர்வையைப் போர்த்திக்கொண்டு தாராளமாய் எங்குஞ் சென்று வருகின்றார்கள். ஆனால் முலீம் பெண்களில் மலேயா முலீம் பெண்கள் விசேஷ முன்னேற்றம் அடைந்து இருக்கின்றார்கள். பலர் ஆங்கில கல்விகற்று கவுன் அணிந்து இருக்கின்றார்கள். பலர் பார்சி உடை அணிந்து இருக்கின்றார்கள். அவர்கள் தாராளமாய்க் கடற் கரைக்கும் வேறு இடங்களுக்கும் செல்ல பூரண உரிமை பெற்று இருக்கின்றார்கள். ஆண்கள் பெண்மக்களையும் நீங்கள் என்று மரியதையாகவே பேசுகின்றார்கள். பெண்களுக்கு அவர்கள் உரிமை களை எல்லாம் வழங்கும் தாராளமான மனத்தை மலேய முலீம் ஆண்கள் பெற்றுள்ளார்கள். தென் இந்தியாவில் இருந்து குடியேறி இருக்கும் முலீம் பெண்கள் பழய கருப்பனே கருப்பன் என்றபடி இன்னும் அலுக்குத்து என்னும் காதணியையும் குன்னி முத்து சேலையையும், தங்கள் கை யால் தைத்துப்போடும் பெரிய சட்டையையும் நெல்லிக்காய்மணி, ஆலங்காய் மணி, கடுகுமணி முதலிய ஆபாசமான நகைகளையும் மாற்றிக் கொண்டதாகவோ கல்வி அபிவிருத்தி அடைந்ததாகவோ காணோம். பொதுவாக இந்தியாவைப் போன்று கொடிய கோஷா முறை அங்கு அனுஷ்டிக்கப்படுவதாகக் காணோம். யாழ்ப்பாணத் தமிழ்ப்பெண் மக்கள் எல்லா விசயத்திலும் மிகுவிரைவான முன் னேற்றம் அடைந்து வருகின்றார்கள். அங்குள்ள பெண் மக்களில் சுயமரியாதை இயக்கம் என்றால் என்ன? என்பதை எவராவது அறிந் திருப்பார்களா என்பது சந்தேகம். அங்குள்ள பெண்களிடையே சுயமரியாதை இயக்கத் தொண்டர்களான பெண்மணிகள் கொஞ்சம் வேலை செய்வார்களானால் அதிகமான பலனை கூடிய சீக்கிரம் எதிர்பார்க்கலாம். சமூகசீர்திருத்த கழகங்கள் ஓராண்டிற்குள் பலப்பல சமூக சீர்திருத்த கழகங்கள் தோன்றி வந்திருக்கின்றது. அக்கழகங்களின் நிர்வாகிகள் கழக முன்னேற்றம் கருதி அதிக ஊக்கத்துடன் உழைத்து வருகின்றார்கள். யான் அங்கு விஜயஞ்செய்து இருந்த காலத்தில் இந்தியர் சுயமரியாதை சங்கம், வாலிப சுயமரியாதை சங்கம், மலையாளி சுயமரியாதை சங்கம், இராமநாதபுரம் ஜில்லா ஆதிதிராவிட சங்கம், மருத்துவர் கல்விச் சங்கம் முதலியவற்றில் சொற்பொழிவாற்றும் பாக்கியம் பெற்றேன். அங்கு இவர்களுக்குள்ள சுயமரியாதை உணர்ச்சியும் சமூக சீர்திருத்த வேட்கையும் என் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்துவிட்டது. ஆதி திராவிடதோழர்கள்ஒவ்வொருகூட்டத்திற்கும்,ஏராளமாய் விஜயஞ்செய்ததுடன் உடையிலும் ஒழுக்கத்திலும் சுத்தத்திலும் பேச்சிலும் விசேஷ முன்னேற்றம் பெற்றிருக்கிறார்கள். பலர் சொற் பொழிவாற்றும் திறனும் பெற்று இருக்கின்றார்கள். குலாபி விருத்தி யில் பிற எந்த ஜாதியாருக்குமில்லாத ஊக்கங் கொண்டவர்கள் ஆயிருக்கிறார்கள். எக்காலத்திலும்ஆதித்திராவிட தோழர்கள் சுய மரியாதைக் கொள்கையும் வேட்கையும் உடையவர்களாய் விளங்கி வருகின்றார்கள் என்பதற்கும் சுயமரியதை இயக்கம் சில ஆண்டுகளுக்கு முன்னர் தோழர் ஈ.வெ.ரா. அவர்களால் உண்டாக்கப் பட்ட ஒரு நவீன இயக்கம் அன்றென்றும், அது 1000-கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றி தோழர் ஈ.வெ.ரா அவர்களால் 7 ஆண்டிற்கு முன் புத்துயிர் அளிக்கப்பெற்ற ஒரு பெரும் நல்லியக்கம் என்றும் யான் பலமுறை எழுதியும் பேசியும் வந்ததற்கு கொழும்பில் ஓர் ஆதாரம் கண்டு உள்ளேன். அதாவது குடியரசு தோன்றுவதற்கு 4, 5 ஆண்டிற்கு முன்னர் ஆதிதிராவிடன் என்றொரு மாதப் பத்திரிகை கொழும்பிலிருந்து வெளியாயிற்று. 1921 - ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான பத்திரிகையில் தோழர் வீரநாமனார் என்பவர் சுயமரியாதை என்றொரு கட்டுரை எழுதியிருக்கின்றார். அதை அதிலுள்ள படியே வெளியிடுகின்றேன். அன்பர்கள் ஆராய்ந்து பார்ப்பார்களாக. சுயமரியாதை (வீரநாமனார் வரைகின்றார்) ஒருவன் தன்னைத்தானே கௌரவித்துக் கொள்ளுதலையே சுயமரியாதை என்கிறோம். தன்னைப் பற்றி ஒருவன் கேவலமாய் நினைத்துக் கொண்டு அப்படியே நடந்துவருவானாயினால் அவனை மற்றவர்கள் மதியார் என்பது நிச்சயம். அதனால்தான் மணம்போல் வாழ்வு என்று சொல்லுகிறார்கள். இவ்விதமே ஒரு வகுப்பாரைப் பற்றியும் சொல்லலாம். பிற்போக்கான நிலைமையி லிருக்கும் ஒரு வகுப்பார் முன்னேற்றமடைய வேண்டுமானால் முதன்முதலாக அவ்வகுப்பாருக்குஉள் சுயமரியாதை உதிக்க வேண்டும். வர்ணாசிரமதர்மம் என்கிற மிலேச்சக் கட்டுப்பாட்டி னால் இந்தியதேசத்தில் சுயமரியாதை குன்றி அடிமைப்புத்தி பெருகிக் கிடக்கிறது. பார்ப்பன வகுப்பார் தவிர மற்ற வகுப்பாரெல்லாம் அதிகமாகவோ, (அல்லது) சொற்பமாகவோ இந்த அடிமைத் தனத்தில் ஆழ்ந்து தான் கிடக்கின்றனர். அநேகர் இதை உணர வில்லை - சிலர் இப்படிப்பட்ட அடிமைத்தனம் தான் எங்களுக்குப் பொருந்தும் என்று கொஞ்சமேனும் நாணமில்லாமல் சொல்லிக் கொள்ளுகிறார்கள். காரணம் என்ன? அவர்களுக்கு சுயமரியாதை இல்லை. அதுதான் காரணம். ஆதிராவிடர் என்னும் பழங்குடிகள் இந்த மிலேச்சக் கட்டுப்பாட்டுக்குப் புறம்பே இருக்கிறார்கள். ஆயினும் வர்ணாசிரம கட்டுப்பாட்டை அநுசரிக்கிறவர்களின் கொடுமையினால் தங்கள் பண்டைப் பெருமையையும் சுய மரியதையையும் இழந்து மிகவும் கேவல நிலையில் இருக்கிறார்கள். இவர்கள் தான் தற்சமயம் இந்திய ஜனசமூகத்தின் அடிப்படையாக இருப்பதால் இவர்கள் சீரும் சிறப்பும் பெற்றால் அன்றி இந்தியா பெருமையடைவது முடியாத காரியம். இதை எல்லாவகுப்பாரும் நன்குணர வேண்டும். சுயராஜ்யம் என்று கூச்சலிட்டுக் கொண்டு பொது ஜனங்களை மருட்டித்திரியும் போலிக்கட்சியார் இவ்வித மாய் கவனஞ் செலுத்துவார்களானால் தேசத்துக்கு நன்மை செய்த வர்களாவர். தீண்டாமையை ஒழித்துவிட வேண்டும் என்று பத்திரிகை களில் எழுதுவதும் பிரசங்க மேடைகளில் சொல்வதும் போதா. செய்கையில் காட்ட வேண்டும். ஆலயங்களில் பிரவேசித்து பூஜை காண ஆதிதிராவிட வகுப்பார்களுக்கு இடங்கொடுக்கப்பட வேண்டும். இல்லையேல் தீண்டாமை ஒழிய மாட்டாது. இனி ஆதிதிராவிட சகோதரருக்கு ஒருவார்த்தை உங்கள் மீட்சி (அல்லது) தாழ்ச்சி உங்கள் கையில் இருக்கிறது. உங்கள் மனம் போலவே உங்கள் அந்ததும் இருக்கும். உயர்ந்த எண்ணமும் பெரிய மனமும் கௌரவ நடத்தையும் வீரகுணமும் உள்ளவர்களாக முயலுவீர்களா னால் அதற்கேற்ப உங்கள் நிலைமையும் மேன்மையடையும். அதற்கு மாறாக மனோபயம் தன்னையே கேவலமாய் நினைத்தல், சொந்த வகுப்பாரை பிறர் முன்னிலையில் இகழ்தல் அற்ப நினைவு பொறாமை, கோழைத்தனம் முதலிய சிறுமைக்குணங்களை வளர்ப்பீர்களாயின் உங்களின் வருங்கால நிலைமை தற்கால நிலைமையிலும் அதிக கேவலமாயிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் பட்டணத்தில் நீக்ரோவர்கள் ஒரு மகாநாடு கூட்டினார்கள் அப்பொழுது, அந்த நிக்ரோவரின் தலைவ னான மார்க் கார்வே என்பவர் பின் வருமாறு கூறினார்:- இரு நூற்று 50 வருடங்களாக அடிமைப் பூச்சிகளாக இருந்து வந்திருக் கிறோம். இப்பொழுது இந்த அடிமைத் தனத்தை எல்லாம் ஒழித்து விடநாம் முயற்சிக்கிறோம். இனி நமக்கு பயமே இல்லை. நாம் இனி மேல் ஒருங்கிப் பதறுவதில்லை. இச்சகம் கூறி இரப்பதுமில்லை. பரிந்து வேண்டிக் கொள்வதுமில்லை. ஆண்மைத் தனத்தில் சுதந்திரங் களுக்காகவும் பூரண சுயாதீனத்துக்காகவும் நிக்ரோவரே! நீங்கள் திரைதோள் நிமிர்த்துச் செயல் செய்தல் வேண்டும். நீங்கள் உங்களுக் காக செய்யுமளவு வேறெவரும் உங்களுக்கு செய்ய முடியாது. உங்கள் உரிமைக்காக நீங்கள் பாடுபட முடியாதாயின் நீங்கள் அழிந்துபோவதே மேல். ஏனெனில் நம்பிக்கையற்ற ஒரு ஜாதி, மானம் மரியாதைகளை காப்பாற்றிக் கொள்ள முடியாத ஒரு ஜாதி, தன்னம்பிக்கையற்ற ஒரு ஜாதி இந்த காலத்தில் நிலை நிற்க முடியாது. அவரது வீரமொழி களை ஒவ்வொருவரும் கவனிக்க வேண்டும். எத்தனை நூற்றாண்டு களாக நீங்கள் அடிமைத்தனத்திலே ஆழ்த்தப்பட்டுக் கிடக்கிறீர்கள். நம் முன்னோர் பூர்ண சுதந்திரர்களாக ஜீவித்திருந்த இம்மகாநாடு இன்று நம் முன்னோருக்கு அடிமைத்தன தேசமாகிவிட்டதே! எத்தனை நூற்றாண்டுகள் கழிந்தன. எத்தனை இராஜியப் புரட்சிகள் நடந்தன. எத்தனை இராஜ்யங்கள் எழுந்தன. எத்தனை வீழ்ந்தன? பழந்தமிழ் மக்களே! உங்களுக்குள் இன்னும் பலத்த உணர்ச்சி தோன்றவில்லையா? அருணோதயம் ஆகிவிட்டது. விழித்தெழும் புங்கள். சுயமரியாதையை வளருங்கள். என வரையப்பட்டிருக்கும் கட்டுரைகளுடன் இந்துமத ஆபாசங்களையும் காந்தியின் தவறான கொள்கைகளையும் விளக்கி வர்ணாசிரம அதர்மக் கொடுமைகளைக் கண்டித்தும் வேதப் புரட்டு களையும் புராணப் புரட்டுகளையும் வெளிப்படுத்திய பல கட்டுரைகள் மிளிர்கின்றன. தோழர்களான சனகசங்கரகண்ணப்பர், சாமவேத னார், தாமபாலையா, வாமி அத்வைதாநந்தா முதலிய அறிஞர்கள் பலரின் கட்டுரை ஆதித்திராவிடனில் இடம்பெற்று விளங்குகிறது. அப்பத்திரிக்கைகள் ஒன்றில் தமிழ்நாடு வாரப்பத்திரிக்கையின் விளம்பரமொன்று காணப்படுகிறது. அதில் டாக்டர் வரதராஜீலு நாயுடு அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு இப்பொழுது ஈ.வெ. ராம சுவாமி நாயக்கர் அவர்களால் பிரசுரிக்கப்பட்டு வரும் தமிழ்நாடு என்று விளம்பரம் செய்யப்பட்டு இருக்கிறது. துரதிஷ்ட வசமாய் நம் குடியரசு தோன்றுவதற்கு முன்னரே ஆதித் திராவிடன் ஆதரிப்பாரின்றி நிறுத்தப்பட்டுப் போய்விட்டது. யான் கொழும்பில் பற்பல கழகங்களின் ஆதரவில் பேசினேன். மலையாளி சுயமரியாதைச் சங்கத்தில் கண்ட காட்சி என்றும் மறக்கத் தக்கனவல்ல. அக்கூட்டம் செனட் ஆண்டர்சன் கலாசாலை யில் நடைபெற்றது. தலைவர் லாரென் கலாசாலை ஆசிரியர் தோழர் குஞ்சிராமன் பி.ஏ. என்பர் ஆவர். அவருடைய முன்னுரை ஆங்கிலத்தில் தெள்ளத் தெளிய சுயமரியாதை இயக்கம் கொள்கை களை விளக்கிக் கூறியதும் யானும் தோழர்களான குமாரன், வேலாயி, தர்மகந்தபிக்ஷீ (புத்த மதசந்நியாசி) முதலியோர்களால் சொற் பொழிவாற்றப்பட்டது. எல்லா மலையாளி யுவர்களும் சுயமரியாதை இயக்கத்தின் நுண்ணிய கொள்கைகளை எல்லாம் நன்றாகவும், ஹாயமாகவும் பேசினார்கள். கனிந்த மொழியும், கவினுறு தோற்றமும், கூறிய அறிவும், நேரிய உடையும் உடைய அன்பர்களான குஞ்சிராமன், குமாரன், வேலாயி முதலியோர் ஈழுவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் தெருவில் நடக்கவும், ஆலயத்திற் குள் செல்லவும் அனுமதிக்கப்படாத மதத்தையும் அரசாட்சியையும் நினைந்து நினைந்து கண்ணீர் பொங்கிற்று. ஆ! இக்கொடுமைகளை ஒழிக்க இதுவரை நம் நாட்டிலொரு பகத்சிங்கும் தோன்றவில்லையே என்ற ஏக்கமுடனிருந்த என் நிலை என்றும் என் வாழ்நாளில் மறத் தற்கு உரியதன்று. நம் இயக்க முன்னேற்றத்திற்காக இலங்கையில் அரும்பாடு பட்டு வரும் தோழர்களான குஞ்சிராமன் பி.ஏ. குமாரன், எ.ஆர். முத்தையா, கனகசபை அருமைநாயகம், பரமசிவம், ஆறுமுகம், விவநாதன், ஓ.கே. முஹியிதீன், அளகே, சதாசிவம், முத்துசாமி (ஹட்டன்) முதலிய அன்பர்களின் ஊக்கமும் எமக்குச் செய்த உபசாரமும் என்றும் யான் மறக்கத் தக்கன அல்ல. இந்தியர் சுயமரியாதைச் சங்கம் ஆரம்பித்து ஓராண்டு முடியப்போகிறது. அதன் நிறைவு விழாவும் அகில இந்திய சுயமரியாதை மஹாநாடு ஒன்று தோழர்களான ஈ.வெ.ரா, இராமநாதன் இவர்கள் தலைமை யில் நடத்தவேண்டும். அவர்கள் சமீபத்தில் வராவிடில் இந்தியாவி லிருந்து தக்க கனவான்களை அழைத்து இருகூட்டங்களும் செம்மை பெற நடத்தவேண்டும் என்று பலரும் விரும்புகின்றார்கள். ஐரோப்பாவில் பிரயாணஞ் செய்து கொண்டிருக்கும் நம் தோழர்கள் சமீபத்தில் இங்கு வரமுடியாதென்று தெரிவதால் வேறு தக்கோர்கள் தலைமையில் மகாநாட்டை நடத்த அன்பர்கள் தளர்வுறா ஊக்கத் துடன் வேண்டும் நடவடிக்கைகள் எடுத்துக் கொள்வார்கள் என நம்புகிறேன். இலங்கையில் யாண்டும் நாளடைவில் நம்மியக்க அன்பர்களின் தொகை பெருகிக்கொண்டே வருகிறது. இவ்வமயம் மகாநாடும் நடைபெற்றால் தக்கோர் பலர் ஆதரவும் ஏற்படும் என்பதையும் உணர்ந்து இலங்கையின் நாட்டுப்புறங்களிலும் யாழ்ப் பாணத்திலும் உள்ள சுயமரியாதை இயக்கம் அன்பர்களும் கொழும் பிலுள்ள தோழர்களும் கொழும்பு இந்தியர் சுயமரியாதைச் சங்கத் துடன் ஒத்துழைத்து ஒரு சரியான வரவேற்புக் கழகம் ஒன்று ஏற் படுத்தி இயற்கையிலேயே தன் மதிப்புத் தாண்டவமாடும் இலங்கை யில் எங்கும் சுயமரியாதை ஜோதி நிலவச் செய்வார்களாக. யான் கொழும்பில் கிறிதவர்கள் நிறைந்த கூட்டங்கள் சிலவற்றில்பேசியஅனுபவத்திலிருந்துபலகிறிதவஅன்பர்கள் சுயமரியாதை இயக்கம் இந்துக்களுக்காகவே தோன்றிய ஓர் இயக்கம் என்றும் அது ஹிந்துமதத்தையே கண்டிக்கிறது என்றும் கிறிதவ மதத்தைப் போற்றுகிறது என்றும் கிறிதுமதம் பரிசுத்தமான மதம் என்றும் அதை எவரும் குறை கூற முடியாது என்றும் கனவு காண் கின்றனர் என்பதையும் அறிகின்றேன். எனவே நம்மியக்கத்தைச் சேர்ந்த அன்பர்களான பல கிறிதுவர்களின் விருப்பப்படி கிறிது மார்க்கத்தைப் பற்றித் தொடர்ச்சியாக இனிப்பல கட்டுரைகள் வரையத் தவறேன் என்று சுயமரியாதை இயக்கம் மக்கள் முன்னேற் றத்திற்கு இடையூறாக இருக்கும் மதமோ, வேதமோ, கடவுளோ, புராணங்களோ, அரசாங்கமோ, பழக்க வழக்கங்களோ எல்லா வற்றையும் நிர்மூலமாக்கவே தோன்றியிருக்கிறது என்று பல முறை யும் கூறப்பட்டு வருவதை இப்பொழுதும் கிறிதவத் தோழர் களுக்கு ஞாபகமூட்டுகின்றேன். அங்கு நானிருந்த பொழுது மிரபோஜன் பிரசரண சங்கத்தார், அருந்ததியார் மகாசபை, கண்டி மருத்துவர் சங்கம், ஹட்டன் சுயமரியாதை சங்கம் முதலிய பல சங்கத்தினர் அழைப்பை ஏற்று சொற்பொழிவற்ற முடியாமல் போனதற்கு மிக வருந்துகின் றேன். அவர்களழைப்பிற்கு நன்றி செலுத்துவதுடன் இன்னும் இலங்கை செல்ல நேர்ந்தால் அவர்கள் எண்ணத்தைப் பூர்த்தி செய்யத் தவறமாட்டேன். கொழும்பில் சிலநாள் தங்கிவிட்டுப் பின்னர் எம் நண்பர்கள் சிலருடன் இலங்கையிலுள்ள பலபாகங்களைச் சுற்றிப் பார்க்க புறப் பட்டோம். புறப்பட்டு நீர்க்கொழும்பு, சிலாவை, புத்தளம், அநுராக புரம், கக்கோரியா, திருக்கோணமலை, ஹப்புத்தலை, கண்டி, ஹட்டன் முதலிய ஊர்களைப் போய்பார்வை இட்டோம். சுமார் 500 மைல்களுக்கு மேல் சுற்றியிருப்போம். மலைகளினூடே செல்லும் சிறிய ரோடுகளும் தார்பூசிமிக அழகாக வைக்கப் பட்டிருந்தது. பாதைகளின் இருபுறமும் மிக உயர்ந்த மரங்களும், கான்யாறுகளும், பார்ப்பதற்கு மிக ரம்மியமான காட்சியாக இருந்தது. இடையிடையே யானைகளும் மான்களும் புலிகளும் மயில்களும் ஏனைய பறவைகளும் மிருகங்களும் எங்கள்முன் தோன்றி மறையுங்காட்சி பயங்கரமும் வேடிக்கையும் கலந்த காட்சியாகத் தோன்றிற்று. யாங்கள் போகும் வழியில் புத்தளத்திற்கு சமீபத்தில் நம் நாட்டின் எருமைக் கடாவைப்பூட்டி ஓட்டும் வண்டிகளைப் போல் 2 யானைகள் கட்டிய வண்டியைப் பார்த்துப் பெரும் வியப்புற்றோம். அநுராச புரத்திலே யுள்ள அழிந்துபோன பல சிங்கள அரசர்களின் மாளிகைகளையும் தேசவிசாரணை புரியும் நியாய மன்றங்களையும் அந்தப் புரங்களின் அமைப்பையும் கண்டு ஆச்சரியமுற்றோம். அங்கு கல்லினால் செய்யப்பட்டு அழகிய சித்திரவேலைகளில் சிறப்புற்றவர்கள் தாம் என்று தற்பெருமை கொள்ளும் தமிழர்களைத் தோற்கடிக்கக் கூடியதான பல சிற்பவேலைகள் இருக்கிறது. அதன் வேலைப்பாடு களைக் கண்டு பல ஐரோப்பிய சித்திர விற்பனர்கள் கூட ஆச்சரியப் படுகின்றனர். அங்குள்ள பெரிய புத்தமத தூபியையும் பெரிய புத்த விக்கிரகத்தையும் அக்கோயிலினுள்ளே வைக்கப்பட்ட சிங்கள அரசர்களை வென்ற தமிழ் அரசர்களின் உருவங்களையும் மற்றோ ரிடத்தில் மலையின் மேலுள்ள புத்தர் உருவங்களையும் கண்டோம். புத்தர் உருவங்கள் கத்தோலிக்கர் கோவிலினுள் வைத்திருக்கும் அழகிய பொம்மைகள் போன்று மிக அழகாய்ச் செய்யப்பட் டிருக்கிறது. புத்தமதக்கோயிலுள்ளே எம்மததரும் தாராளமாய் அனுமதிக்கப்படுகிறார்கள். அங்குள்ள மக்கள் எங்களிடம் மிகுந்த அன்புடனும் மரியாதையுடனும் நடந்து கொண்டனர். பின்னர் யாங்கள் திருக்கோணமலைக்குப் போனதில் அது ஓர் இயற்கை துறைமுகத்தை போன்றும் அங்குமிகப் பழய டச்சுகோட்டையும் கப்பற்படையும் இருக்கிறது. முற்காலத்தில் இவ்வூர் பிரபல்ய நகர மாய் இருந்ததாயினும் தற்சமயம் அவ்வளவு சிறப்பில்லை. இவ் வூருக்கு இப்பால் சுமார் 7,8 மைல் தூரத்தில் ஒரு பாழுங்கட்டிடம் இருக்கிறது. அங்குதான் வெந்நீர் ஊற்றுகள் இருக்கின்றது. வெந்நீர் ஊற்றில் நானம் செய்கிறது உடம்பிற்கு மிக நல்லது என்று ஐரோப்பியர் பலரும் ஆங்குபோந்து குளித்துவிட்டுச் செல்லு கிறார்கள். முலீம்களும் இந்துக்களும் தங்கள் புராணக் கதை களுடன் இதைச்சேர்த்துக் கதைகளுண்டாக்கிக் கொண்டு இதில் குளித்தால் மோட்சம் உண்டென்றும் சிலர் எண்ணிக் கொள்கின் றனர். இங்குள்ள ஒரு ஊற்றில் தண்ணீர் அதிக உஷ்ணமுடையது. மற்றைய ஊற்றுக்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் குறைந்த உஷ்ணத்தை உடையதான 5,6 ஊற்றுக்கள் இருக்கின்றன. யான் அங்கு போய் நானஞ்செய்துவிட்டு கண்டிவந்து சேர்ந்தேன். கண்டி ஒரு அழகிய நகரம். இங்கு சிறந்த கல்லூரிகளும், உலகத்திலுள்ள பற்பல விநோதச் செடிகள் பல அடங்கியதுமான ஒரு விநோதமான பூங்காவும் இருக்கிறது. இங்கு புத்தர்பல் ஒன்றை வைத்து இருக்கும் ஒரு புத்தர்கோயிலும் புத்தமதப்புத்தகங்கள் பல நிறைந்த ஒரு விசேஷித்த நூல் நிலையம் ஒன்றும் இருக்கிறது. அவைகளை எல்லாம் பார்த்துவிட்டு கடல் மட்டத்திற்கு 7000 அடி உயரமுள்ள இலங்கையிலேயே அதிக குளிர்ச்சியுள்ளதுமான நூரெலுயா என்னுமிடத்தையும், சிவனடிபாதம் (அல்லது) ஆதம்மலை என்று கூறுமிடத்தையும் பார்த்துவிட்டு வரவேண்டுமன்று ஹட்டன் என்ற ஊரையடைந்தோம். அன்று மாலை எனது உடம்பிற்கு சுரம் அடித்ததால் மறுநாள் போகலாம் என்றிருந்தோம். மறுநாள் யான் அங்கு இருப்பதை எவ்வாறோ அறிந்து நம் சுயமரியாதைத் தோழர்கள் பலரும் வந்து தமதில்லத்திற்கு அழைத்துச் சென்று எனக்குத்தக்க ஔடதம் கொடுத்து வேண்டிய உபசாரமும் செய்தனர். அவர்கள் விருப்பப்படி அங்கு சொற்பொழிவு ஆற்ற என் உடல் நிலை இடங் கொடாததால் பின்னர் ஒரு முறை வருவதாய்க் கூறிவிட்டு நேராக இலங்கை வந்துவிட்டேன். புத்தமதம் புத்தமதம் அசோகர் என்னும் சீரிய அரசர்காலத்தில் உலகம் எங்கும் புத்தமதக் கொள்கைகளைப் பரப்ப வேண்டுமென்று புத்தர் மஹாசபையின் தீர்மானிக்கப்பெற்று அசோகரின் பேருதவியின் மேல் ஜப்பான், சீனா, ஆப்கானிதானம், பெலுசிதானம், இலங்கை முதலிய பல நாடுகளுக்கும் புத்த மதப் பிரசாரர்கள் அனுப்புவிக்கப்பட்டனர். அவ்வாறே இலங்கை அரசர்புதல்வராகிய மகேந்திரன் என்பாரும் புதல்வியாகிய சங்கமித்திரை என்னும் பெண்மணியும் சென்று புத்தமதப் பிரசாரம் செய்தனர். அப்பொழுது அரியாசன மேறிய இலங்கை அரசன் தேவனாம்பியதிஷ்யன் என்னும் இலங்கை யரசனும் அவன் குடும்பத்தாரும் புத்தமதத்தை தழுவ நாளடைவில் பிரஜைகளும் புத்தமதத்தை ஒப்புக்கொண்டனர் என்று பல சரித்திராசிரியர் கூறி வருகின்றனர். ஆனால் எல்.சி.பிளேசி பி.ஏ என்னும் அறிஞர் ஆங்கிலத்தில் எழுதிய இலங்கை வரலாறு என்னும் நூலில் புத்தர் தம் ஜீவிய காலத்தில் மும்முறை இலங்கைக்கு வந்திருப்பதாயும் அப்பொழுது அவர் அனுராதபுரத்திற்கும் ஆதம் மலைக்கும் போனார் என்றும் எழுதியிருக்கிறார். ஜீவகாருண்யத்தை யும் புரோகிதர் ஆட்சியையும் பெண் அடிமைத்தனத்தையும் கடவு ளுணர்ச்சியால் மக்களடையும் அல்லலையும் ஒழித்து யாண்டும் இலங்கையில் வீரத்தையும் சுதந்தரத்தையும் சகோதரத்துவத்தையும் பகுத்தறிவையும் ஜொலிக்கப் புத்த மதம் வெகு சீக்கிரத்தில் செய்து விட்டது. பார்ப்பனீய சூட்சி அங்கு செல்ல இந்தியாவிற்கும் இலங் கைக்கும் இடையில் கடலிருந்ததால் பிராமணீயம் கடல் கடப்பதைத் தடுத்துக் கொண்டிருப்பதால் அங்கு சென்று புத்த மதத்தை இந்தியா விற் செய்ததுபோல் ஒழித்துவிட முடியாமல் போய்விட்டது. என்றாலும் இலங்கை மக்களின் துரதிஷ்ட வசமாய் மூட நம்பிக்கை நாளடைவில் மல்கி புத்தமதத்தின் உன்னதக் கொள்கைகள் மறைந்து விட்டது. புத்த மதத்தைப் பற்றியான் கொண்ட உயர்ந்த எண்ணங்கள் எல்லாம் இலங்கையிலுள்ள புத்த சமயிகளின் நடவடிக்கைகளைப் பார்த்ததில் இருந்து என் உள்ளத்தினின்று பறந்தோடிவிட்டது. கடவுளுணர்ச்சி, கடவுள் நம்பிக்கை முதலியவற்றினால் மக்களுல கிற்கு பெரியகேடுகள் விழைகின்றன என்றும் கடவுள் நம்பிக்கை யினாலே புரோகிதக் குழாங்கள் பெருகி மக்களின் செல்வத்தையும் அறிவையும் கொள்ளை கொண்டு போவதையும் முன்னி இவ்விரண் டையும் கண்டிப்பாய் விலக்கியும் பிற்கால புத்தசமயிகள் புத்தரைக் கடவுளாக எண்ண ஆரம்பித்து விட்டனர். புத்தமதப் பிரசங்கம் புரிந்து வந்த துறவிகள் புரோகிதராய் மாறிவிட்டார்கள். இன்று மஞ்சயக் காயாசம் பூண்டு இத்துறவிகள் புத்த மதக் கோவில்களிலும் ஏனைய இடங்களிலும் புரிந்து வரும் திருவிளையாடல்களைச் சொல்லி முடியா. நாடொறும் இலங்கையில் இப்பொல்லாத் துறவி களின் திருவிளையாடல்களைப் பற்றிப் பத்திரிகைகளிலும் கோர்ட்டுகளிலும்விசேஷமாகப்பார்க்கலாம்.étfhU©a¤ij அடிப்படையாகக்கொண்டுபுத்தமததர்கள்இந்தியாவிலுள்ள சைவர்கள் போன்று கொடிய பாம்பையும் தேளையும் கூட எவரும் கொல்லச் சம்மதியார். இத்தகைய அன்புருவம் கொண்ட மக்கள் தான் அற்ப விஷயத்திற்கும் தம் போன்ற மனிதர்களை திடீரெனக் கத்தியால் குத்திக் கொன்றுவிடுவர். பௌத்த மததனின் கடமை களில் மிக முக்கிய 8 கடமைகளில் திருட்டு, பொய், குடி, விபசாரம் முதலியவற்றை நீக்கல் என்று கூறப்பட்டிருந்தும் இன்று அவைகள் புத்த மததர்களிடம் பெருகி இருக்கக் காணலாம். சுருக்கமாகச் சொன்னால் புத்த மதக்கொள்கைகளை அறிந்தவர்கள் ஆயிரத்தில் ஒருவர் காண்பதும் அறிது. புத்தமதக் கோயில்களுக்கு விசேஷமாய் பெண்மக்களே போய்வருகின்றனர். கண்டி புத்தகோயிலில் யாம் கண்ட காட்சி வியக்கத்தக்கன. கண்டியில்தான் புத்தருடைய பல் ஒன்று வைக்கப்பட்டு இருக்கிறது. இந்தப்பல் மனிதர்களுக்குரிய இயற்கையான பல்லைவிட மிகப் பெரியதாய் இருக்கிறது. ஐரோப்பிய துரைமகள் ஒருவள் இது யானை தந்தத்தினால் செய்யப்பட்டது என்று தம் நூலென்றில் எழுதியிருக்கிறாள். யான் இப்பல்லிருக்கும் இடத்திற்குப் போனதும் அங்குள்ள புரோகிதர் காணிக்கை போடும் படி கூறினார். யாங்கள் காணிக்கைப் போட மறுத்துவிட்டோம். அங்கு பல பெண்மணிகளும் சில ஆண்களும் அப்பல்லின் மேல் போட புஷ்பங்களும் காணிக்கையும் கொண்டுவந்து கொடுத்து விட்டுப் பின்னர் அப்பூவில் சிறிது பாகமும் பெற்றுக்கொண்டு சிறிது நேரம் முழங்கால் படியிட்டு பூஜிக்கின்றனர். இப்பல்லை மட்டுந் தான் பூஜிக்கின்றாரோ? இல்லை! இல்லை! அக்கோயிலில் பூஜை செய்து இறந்து புதைக்கப்பட்ட ஒரு புரோகிதரின் சமாதியையும் புத்த மதக் கிரந்தங்கள் வைக்கப்பட்டிருக்கும் புத்தக நிலையத் தையும் மிகப் பக்தியுடன் வணங்கி வருகின்றனர். ஆங்காங்கே புரோகிதர்கள் நின்றுகொண்டு காணிக்கையாகப் பணம் பறித்துக் கொள்கின்றனர். அப்புத்த மதக் கோவிலில் அருமையான சித்திர வேலைப்பாடுகள் நிறைந்திருக்கின்றன. இன்னும் இலங்கையின் பல்வேறிடங்களில் உள்ள புத்தமதக் கோயில்களைக் கண்டேன். அங்கே சுமார் 4 அடிக்கு மேற்பட்ட புத்தர் உருவமும் இன்னும் எண் ணிறந்த சிறிய விக்கிரகங்களும் வரிசை வரிசையாக வைக்கப்பட்டிருக் கின்றன. இலங்கையில் எங்கு பார்த்தாலும் மஞ்சக்காயாசம்தரித்த புத்த சந்நியாசிகளே காணப்படுகின்றனர். அவர்களில் பலருக்கு புத்தமதத்தின் உண்மைகள் தெரியவில்லை. ஆங்கிலங் கற்ற சில நண்பர்கள் வெள்ளைக்காரர்கள் எழுதிய நூலுதவி கொண்டே சிறிது புத்த சமயத்தை உணர்ந்து இருக்கின்றார்கள். உண்மையான புத்தமதம் ஆங்கு நிலவியிருந்தால் பெரும் நன்மை விளைந்திருக்கும். துரதிஷ்டவசமாய் இலங்கை புத்த மக்களைப் பற்றியமூடநம்பிக்கை, பகுத்தறிவின்மை முதலியவைகளைப் போக்கி சுயமரியாதை ஒளிவீச நம் சுயமரியாதைத் தொண்டர்களாய் இந்தியாவிலிருக்கும் அன்பர்கள் மறவாதிருப்பார்களாக. அங்கு நாம் தொண்டாற்றினால் நாம் எதிர்ப்பார்ப்பதைவிட அதிகப் பலன் எளிதில் கிடைக்கும். புத்த மதக் குருவாகிய தோழர் தர்மகந்தபிஷீ போன்ற அன்பர்கள் நம்மை வரவேற்கின்றார்கள். எனவே வேலைகள் முடிந்ததும் நான் சுகமே புறப்பட்டு எனது ஊர் வந்துசேர்ந்தேன். யான் அங்கு தங்கி யிருந்த காலத்தில் எனக்குப் பேருதவிபுரிந்த சுயமரியாதைத் தொண் டர்கள் அனைவருக்கும் மறுமுறையும் எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். - (குடியரசு 27.3.1932, 10.4.1932, 17.4.1932) பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம் நமது நாட்டு மக்கள் கொண்ட பழைய பழக்க வழக்கங்களை யும் மூடநம்பிக்கைகளையும் ஒழித்தும் யாண்டும் பகுத்தறிவு ஜோதி பிரகாசிக்க விடாது தடை செய்யும் புராணங்களையும் அதை மிகை படுத்தி எழுதியிருக்கும் உரை நூற்களையும் ஆதரித்தும் எழுதிய பாடப்புத்தகங்களையும் ஒழித்து, அறிவியல் நூற்களைத் தோற்றச் செய்ய இதுவரை யாதொரு முயற்சியும் நம்நாட்டில் நடைபெற வில்லை. சிற்சில பத்திரிகைகளிருந்தாலும் அவைகள் எல்லாம் ஒரு தனிப்பட்ட நபரின் அதிகாரத்திலே இருப்பதால் அந்நபர்களின் காலத்திற்குப் பின் அப்பத்திரிகைகளில் ஒன்று வைஷ்ணவப் பிரசாரமும், மற்றொன்று சைவப்பிரசாரமும் பிறிதொன்று கிறிது மதப்பிரசாரமும் வேறொன்று பௌத்தமதப் பிரசாரமும் செய்ய நேரிட்டாலும் நேரிடலாம். எனவே பகுத்தறிவு இயக்க மக்கள் பலரையும் பங்காளிகளாகக் கொண்ட இத்தகைய கழகம் ஒன்று நிறுவ முன் வந்தேன். ஆகையால் பகுத்தறிவு இயக்கத்தை ஆதரிக்கும் மக்கள் ஒவ்வொருவரும் தங்களாலியன்ற பங்கெடுத்து இதை ஆதரிக்கும்படி கேட்டுக் கொள்கின்றேன். இது சம்பந்தமான கடிதப் போக்குவரத்து செய்து கொள்ள விரும்புபவர்கள் கீழ்கண்ட விலாசத்திற்கு எழுதி விபரமறிந்து கொள்ளலாம். கழகத்தின் சட்டங்களும் நோக்கங்களும் I. இக்கழகம் தமிழில் பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம் என்றும் ஆங்கிலத்தில் “The rational books publishing society” என்றும் அழைக்கப் பெறும். II. இக்கழகத்தின் பதிவு செய்யப்பட்ட நிலையம் [Office] நிறைவேற்றற் கூட்டத்தால் தீர்மானிக்கும் இடத்தில் நிலை பெறும். கிளைச்சபைகள் இந்தியாவிலுள்ள பல்வேறிடங்களில் இலங்கை, பர்மா முதலான இடங்களிலும் நிறுவப்பெறும். III. இக்கழகத்தின் நோக்கங்களாவன :- 1. எந்த நூலாக இருந்த போதிலும் பகுத்தறிவுக் கொள்கைக்கு மாற்றமில்லாததாய் இருந்தால் பதிப்பித்து விற்பனை செய்தல். 2. பகுத்தறிவு கொள்கைக்கு மாற்றமில்லாத பழைய நூற்களைப் பதிப்பித்தலோடு அறிவுடைய தோழர்களைக் கொண்டு புது நூல்களியற்றச் செய்து பதிப்பித்து விற்பனை செய்தல். 3. பகுத்தறிவுக் கொள்கைகளைப் பற்றியனவும் அவற்றிற்கு மாறுபாடு இல்லாததுமான பொருள்களைத் தனிநூல்கள்/ மாதப் பத்திரிகைகள், வார தினப் பத்திரிகைகள் தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி முதலிய மொழிகள் வாயிலாக எளிய உரைநடையில் எழுதுவித்துப் பதிப்பித்து விற்பனை செய்தல். 4. ஆங்கிலத்திலும் மற்றும் பல மொழிகளிலுள்ள அறிவியல் நூற்களையும் கழக நோக்கத்திற்கு மாறுபாடில்லாத எந்நூற் களையும் தமிழ் மொழி பெயர்த்து விற்பனை செய்தல். 5. தமிழ் நூற்களை ஆங்கிலத்திலும் பிறமொழிகளிலும் மொழி பெயர்த்து பதிப்பித்து விற்று முதல் செய்தல். 6. இக்கழகத்தில் பதிப்பிக்கப்படும் நூல்களுக்கு அச்சிடும் உரிமை (Copy Right) இக்கழகத்திற்கு வைத்துக் கொள்ளல் அல்லது நூலாசிரியர், உரையாசிரியர், மொழிபெயர்ப் பாசிரியர், பதிப்பாசிரியர்களுக்கு அச்சிடும் உரிமையை வைத்துக் கொள்ளும்படி செய்வித்து நூல்களைப்பதிப்பித்தல். 7. நூலாசிரியர், மொழிபெயர்பாசிரியர் இவர்களுக்குப் பிரதி பலன் அளித்தல் அல்லது அச்சிடப்படும் நூற்களில் சிலபாகம் கொடுத்தல். 8. நூலாசிரியர், மொழிபெயர்ப்பாசிரியர், உரையாசிரியர் இவர் களுக்கு மாதாந்திர அலவன் அல்லது போன (நன் கொடை) கொடுத்து உதவி செய்தல். 9. இக்கழகத்தின் அச்சுவேலைகள் நடத்துவதற்கு அவசியமான அச்சுயந்திரங்கள் ரூலிங் யந்திரங்கள் அவ்வவற்றிற்குரிய சாமான்கள் கிரயத்திற்கு அல்லது வாடகைக்கு அமைத்தல். 10. கூலிக்கு வரும் அச்சுவேலைகள் முதலியவற்றையும் நடத்தல். 11. இக்கழகத்தின் உபயோகத்திற்கும் அச்சுவேலை முதலியவற்றிற் கும் அவசியமான காகிதங்கள் முதலியன மொத்தமாய்த் தரு வித்துக் கொள்ளுதல் அவைகளை விற்று முதல் செய்தல் 12. இக்கழகத்தின் நன்மைக்காக பலவிடங்களிலும் புத்தகக் கடைகள் ஏற்படுத்திப் புத்தகம் வியாபாரம் செய்தல். 13. பலவிடங்களில் கமிஷன் ஏஜண்டுகள் ஏற்படுத்திப் புத்தக விற்பனை செய்தல். 14. புத்தக வியாபாரிகளிடத்திலும் நூலாசிரியர்கள் இடத்திலும் புத்தகங்களைக் கமிஷனுக்கு வாங்கி விற்பனை செய்தல். 15. மூலதனத்தில் உபயோகத்திற்கு அவசியமில்லாத் தொகைகளை யும் உபநிதி (Deposit) ஆகவரும் தொகைகளையும் சரியான பாங்கர்களிடத்திலும் சரியான பிணைப்பத்திரத்தின் (Security Bond) மேலும் உறுதிமொழிப் பத்திரங்களின் (Promissory Notes) மேலும் வட்டிக்கு கொடுத்து வாங்குதல். 16. இக்கழகத்தின் தொழில்கள் நடத்துவதற்கு ஆபீ நடத்து வதற்கும் அவசியமான கட்டிடங்கள் கிரயத்திற்கு அல்லது வாடகைக்கு அமைத்தல் அல்லது மனைகிரயத்திற்கு வாங்கிக் கட்டிடம் கட்டுதல் மராமத்துகள் [Repairs] செய்தல். 17. இக்கழகத்திற்கு அவசியமில்லாத தாவரசங்கம் சொத்துக்களை விற்பனை செய்தல். 18. இக்கழகத்தின் தொழில் நடத்துவதற்கு அவசியமான தொகை களை உறுதிமொழிப் பத்திரங்கள் (Promissory Notes) கடன் பத்திரங்கள் (Depenture Bonds) இவைகளின்மேல் அல்லது இக்கழகத்தின் சொத்துக்கள் விடுமுதற் தொகைகளை (Including uncalled Capital) இவைகளின் மேல் பிணைப் பத்திரங்கள் (Seaolity Bonds) கொடுத்தாவது கடன் பெறுதல். 19. இக்கழகம் ஏற்படுத்துவதற்காக நேரிடும் அச்சுக் கூலிகள், காகிதக்கிரயங்கள், விளம்பரச் செலவுகள், சிப்பந்திச் செலவுகள், வண்டி வாடகை, படிச்செலவுகள், பங்குகள் சேர்ப்பதில் ஏற்படும் கமிஷன்கள் இக்கழகம் ரிஜிடர் செய்வதில் ஏற்படும் டாம்புச் செலவுகள் ரிஜிடர் கூலிகள் முதலிய ஆரம்பச் செலவுகளைக் கொடுத்தல். 20. இக்கழகத்தின் கொள்கைக்கு விரோதமில்லாத பிற சங்கங் களையும் அவைகளின் நிதிகளையும் இக்கழகத்துடன் ஒன்று சேர்த்தல். 21. இக்கழகத்தின் மூலதனம் இடம் கொடுக்குமாயின் இயந்திர சம்பந்தமான கைத்தொழில்சாலைகள் நிறுவுதல். 22. இக்கழகத்தின் மிச்ச லாபத்தை இதன்கீழ் கண்ட பிரகாரம் நம்மியக்க வளர்ச்சிப் பண்டிற்காக ஏற்படுத்தி இருக்கும் தொகைகளைப் பிரத்தியேகமாக வைத்து அதிலிருந்து அடியிற்கண்ட நற்செயல்களை நடத்தல். a) திருநெல்வேலி, மதுரை, இராமநாதபுரம் ஜில்லாக்களில் ஒன்றில் நிறைவேற்ற கூட்டத்தார் (Directors) குறிப்பிடு மிடத்தில் தலைமையாகவும், மற்றும் பலவிடங்களிலும் கிளைகளாகவும் பகுத்தறிவு கழகங்கள், பாடசாலைகள், புத்தகசாலைகள், வாசகசாலைகள் ஏற்படுத்தியும் பகுத் தறிவு பிரசாரகர்கள் திட்டஞ்செய்து பலவிடங்களுக்கும் அனுப்பி நம்மியக்கக் கொள்கைகளைப் பிரசாரஞ் செய் வித்து நம் கொள்கைகளை யாண்டும் பரவச்செய்தல். b) பகுத்தறிவிற்கு விரோதமான விழாக்கள், திருமணங்கள் முதலிய செயல்களைப் பற்றிய மூடக் கொள்கைகளை விளக்கி துண்டு பிரசாரம் வெளியிடல். c) பகுத்தறிவு கொள்கைகளை யாவரும் எளிதில் மனதிற் கொள்ளும் வண்ணம் அக்கொள்கைகளைப் பரப்பும் நாடகம் முதலிய கம்பெனிகளை நிறுவல். d) பகுத்தறிவுக் கொள்கைகளை விளக்கி மூட நம்பிக்கை களையும் பழைய குருட்டு பழக்கவழக்கங்களையும் இளமை யிலேயே ஓட்டிவிட வேண்டுமென்ற நோக்கங்கொண்ட ஆசிரியர்களைக் கொண்ட ஓர் உயர்தரக் கல்லூரியை நிறுவுதல். e) இதன் தலைமை நிலயத்தில் திக்கற்றபிள்ளைகள் கைம் பெண்கள் ஆதரவற்ற மகளிர் முதலியோர்களை ஆதரித்து காப்பாற்றத்தக்க ஒரு நிலையமொன்று நிறுவி அவர்களுக்கு கல்வி, தொழில் முதலியன கற்பித்து திருமணம் நடத்திக் கொடுத்தல். f) இந்த 22-வது உட்பிரிவு a to e வரையுள்ள அறங்கள் சரியாய் நடத்துவதற்கு இக்கழகத்திலிருந்து கிடைக்கும் தொகை பொருள் தவிரவேறு நன்கொடைப்பொருள்கள் சேகரித்து நம்மியக்க வளர்ச்சிப் பண்டுடன் சேர்த்தல். 23. 1) இக்கழகத்தின் அவயவிகள் (Shareholders) பொறுப்பு அவர் அவர்கள் பங்குத்தொகைக்கு மேற்போகாமல் வரையறுக்கப் பட்டிருக்கிறது. 2) இக்கழகத்திற்கு லாபகரமான விதத்தில் இவைபோன்ற பிற தொழில்களையும் செய்தல். IV. 1) இக்கழகத்தில் பகுத்தறிவு கொள்கைகளை உடைய வர்களும் அதற்கு விரோதமில்லா கருத்துக்களை உடையவர்களும் பங்காளிகளாய் இருக்க உரியவராவார்கள். ஆனால் பகுத்தறிவு கொள்கைகளுக்கு மாறுதலான எந்த விஷயங்களும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. 2) இக்கழகத்தின் மிச்சலாபத்தில் நிறைவேற்றற் கூட்டத்தார் காப்புத் தொகையாக எடுத்து வைத்துக்கொள்ளும் தொகை போக மீதிலாபமானது வசூலாயிருக்கிற மூலத்தின் மேல் வருஷம் 1-க்கு 12- வீதம் அல்லது அதற்குக் குறைவாக இருந்தால் அவ்வித மிச்ச லாபத்தில் பாதியை இக்கழகத்தின் பங்காளிகள் ஆதாலவீதமாக (Divedend) பிரித்துக் கொள்வார்கள், மற்ற பாதியும் இக்கழகத்தின் மிச்சலாபமானது 1-க்கு, 100 க்கு 12 வீதத்திற்கு மேற்படுமானால் அந்த லாபத்தில் பாதியும் இக்கழகத்தின் நோக்கத்தில் (22) உட் பிரிவிற் கண்ட விஷயங்களுக்கு பாத்தியப்பட வேண்டியது. மேற் கண்ட பிரசாரம் 1-க்கு 100-க்கு 12 வீதத்திற்கு மேற்கண்ட நம்மியக்க வளர்ச்சி நிதியுடன் சேர்ந்த பாதி போக மற்ற பாதியை விசேஷ நிதியாகப் பிரத்தியேக கணக்காக வைத்து அதிலிருந்து அமைச்சர், நூலாசிரியர்கள் உரையாசிரியர்கள் மொழிபெயர்ப்பாசிரியர்கள் இக்கழகத்தின் உத்தியோகதர்கள் இவர்களுக்கு கொடுக்க வேண்டிய வெகுமதி (Bonus) உத்தியோகத்தினின்று விலக்கினவர்களுக்குக் கொடுக்கும் பென்ஷன் இவைகள் நிறைவேற்றற் கூட்டத்தார் அபிப்பிராயப்படி கொடுக்கப்படும். V. 1) இக்கழகத்தின் மூலதனம் ரூ 50,000 மும், பங்கு 1-க்கு ரூ 10 வீதம் 5000 பங்குகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. மூலதனத்தை அதிகப்படுத்துவதற்காக பங்குகளை அதிகப்படுத்த இக்கழகத்தா ருக்கு அதிகாரமுண்டு. 2) இக்கழகத்திற்குப் பங்குகள் சேர்த்துக் கொடுப்பவர்களுக்கு அவர்கள் சேர்த்த பங்குகளுக்கு வசூலாயிருக்கிற தொகையின் மேல் 100-க்கு 2 1/2 வீதம் அல்லது நிறைவேற்றற் கூட்டத்தினர் கூட்டியோ குறைத்தோ தீர்மானிக்கிறபடி கமிஷன் கொடுக்கப்படும். 3) இக்கழகத்திற்கு 100 பங்குகள் சேர்ந்ததும் லிமிடெட் கம்பெனிகள் ரிஜிடர் செய்யப்பட்டு வேலைகளை துவக்கப்படும் குறிப்பு இக்கழகத்திற்கு பங்குகள் சேர்ப்பதற்காக ஏப்ரல் மாதம் 20-ஆம் தேதிக்குமேல் சுற்றுப்பிரயாணஞ் செய்யத் தீர்மானித்திருப்பதால் ஆங்காங்குள்ள அறிவியல் இயக்க அன்பர்கள் போதிய ஆதரவு காட்டும்படி கேட்டுக்கொள்கிறேன். இது சம்பந்தமான விபரங்கள் அறிய விரும்புவார்கள் அடியிற்கண்ட எனது விலாசத்திற்கு கடிதம் எழுதவும். - (குடியரசு 24.4.1932) குடி அரசு சாதித்ததென்ன? குடிஅரசிற்குக் கால்கோலி சென்றவாரத்துடன் ஏழாண்டு கள் நிறைவுற்றது. இவ்வாரம் எட்டாவதாண்டு ஆரம்பிக்கின்றது. ஏழு ஆண்டுகளாய் பல பல இன்னல்களுக்கிடையே குடி அரசுக் கொள்கைகள் யாண்டும் பரவிவருகிறது. முதலாவதாக உங்கள் குடி அரசு பார்ப்பனீயத்திற்குப் பகையாகவும் பின்னர் அரசிய லுக்கு விரோதமாயும், அதன் பிறகு இந்து மதத்திற்கும் அதன் கிளை மதங்களாகிய கிறிது மதம், காந்தீயம், சைவம், வைணவம் முதலியவற்றிற்கும் விரோதமாயும் பிறகு மக்களுலகிற்குப் பெரும் கேட்டை விளைவிக்கும் சாத்திர வெறி, கோத்திரவெறி, கடவுள் வெறி, மகளிர் உரிமையை மறுக்கும் வெறி முதலிய பல வெறி களுக்கும் காரணமாய் மிளிரும் கடவுள், வேதம், புராணம், காவியம், ஓவியம், மூடப்பழக்க வழக்க ஒழுக்கங்களனைத்தையும் ஒழிக்க முனைந்து வேலை செய்தது. இவ்வாண்டு முதல் தான் மேற்போட்டுக் கொண்ட பல தொண்டுகளுடன் முதலாளி, தொழிலாளி, ஆண் பெண் முதலிய சகல பேதங்களுமற்ற சமதர்ம குடி அரசைக் காண உங்கள் குடி அரசு தன் கொள்கையாய்க் கொண்டு மிகு தீவிரமாய் வேலை செய்யப்போகிறது. இனி உங்கள் குடிஅரசின் கொள்கைகள் கண்டு பயந்து பல நண்பர் ஓடலாம். புதிய நண்பர்கள் புகுந்து பல அருந்தொண்டு ஆற்றலாம். புதிய எதிரிகள் முளைக்கலாம். எனவே இனி உங்கள் குடி அரசிற்கு ஒரு பெரும் சோதனை காலம் என்பதே எனது நம்பிக்கை. நிற்க பல அன்பர்கள் பல விடங்களிலும் ஏழு ஆண்டுகளாய் உங்கள் குடி அரசு சாதித்ததென்ன? என்று வினவுகின்றார்கள். இந்தியாவின் சமுதாய வாழ்விலும் மதவியலிலும் அரசியற் கொள்கையிலும் மாசுபடிந்து, தலைவர்களின் உள்ளத்தில் புகழ், தன்னலம் முதலிய பல பேய்கள் சூழ்ந்து மேலும் மேலும் இந்தியாவை அடிமைக்குழியிலாழ்த்தி பகுத்தறிவைப் பகையாக்கி வந்த ஞான்று எவருடைய தயவு தாட்சண்ணியத்திற்கும் அஞ்சாது தம் மனதிற் கண்டவைகளை மிகத்தைரியமாய் எடுத்துக்கூறி மக்கள் வாழ்விற்கு இடையூறாயிருக்கும் யாவற்றையும் ஒழித்து விடவேண்டுமென கூறிவந்தது உங்கள் குடி அரசு என்பதை எவரே மறுக்கவல்லர். உலகிலெவர்க்கும் பயப்படாது உண்மையை உரைத்து வரும் அதன் உயரிய குணத்தைக் கண்டு பல உத்தமர்கள் அக்கொள்கைகளை ஆதரிக்க முன்வந்தனர். குடி அரசு தோன்றிய சில ஆண்டிற் குள் குடி அரசுக்கோமான் ஈ.வெ. ரா. அவர்கள் சுயமரியாதை யென்னும் வெடிகுண்டுடன் ஒவ்வொரு ஜில்லா, தாலுகாக்கள் தோறும் சென்று படை திரட்டி பகைமையுடன் அரும்போர் ஆற்றி வந்தனர். குடி அரசின் கொள்கையை நன்கு உணராது பல்லோர் தங்கள் சுயநலத்திற்கும் தங்கள் மதத்திற்கும் தங்கள் கட்சிக்கும் ஆதரவாயிருக்குமென்று நம்பி பலரும் குடி அரசுப் படையிற் சேர முன்வந்தனர். குடிஅரசிற்கு அடி கோலிய அன்பரும் அறிஞரும் சுயமரியாதை வெடிகுண்டை உண்டாக்கியவருமான (தன் மதிப்பியக்கத்தின் வளர்ப்புத்தந்தையுமாகிய பெரியார்) ஈ.வெ.இராமசாமி அவர்களின் இடைவிடாத உழைப்பும், அஞ்சா நெஞ்சமும் தம் கொள்கைகளை ஆன்றோர்களும் பாமரர்களும் எளிதில் விளங்கும் வண்ணம் தெளிவாய் எடுத்துக்காட்டும் பேச்சு வன்மையும், எத்துணை உயர்தர ஆங்கிலப்பட்டம் பெற்ற அறிஞரும் தமிழ்க்கலா வல்லுனரும் மறுக்க முடியாத ஆணித்தரம் பொருந்திய தர்க்க வாதங்களும் குடி அரசே தமிழ் நாட்டில் சிறந்த கொள்கையும் இனிய தமிழும் பரந்த நோக்கமும் மிகத்தைரியமு முடையது என்று அறிஞர்களெல்லாம் போற்றும்படி செய்தது. பின்னர் குடி அரசின் சேனைகளெல்லாம் 1929-இல் செங்கற்பட்டில் கூட்டப்பட்டு பயிற்சி செய்யப்பட்டன. தலைவர்களின் பேரொலிக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் செவி கொடுத்து ஏராளமாக கூடி வெற்றி முரசொலிக்க குடி அரசிற்கு ஜேய்! என்னும் கோஷத்துடன் சமதர்மக் கொடியுயர்த்தப்பட்டது. குடி அரசின் உண்மைத்தத்துவம் அங்கு நன்கு வெளியாயின. குடி அரசுக்கொள்கைகள் தங்கள் தன்னலத்திற்கெல்லாம் ஆக்கந்தரும் என்று நம்பிபோந்த செல்வான்களும் மிராசுதார்களும் ஜமீன் தார்களும் மந்திரிமார்களும் இதர உத்தியோகதர்களும் பதவி வேட்டைக்காரர்களும் ஜில்லாபோர்டு, தாலூக்காபோர்டு தலைவர்களும், உறுப்பினர்களும், சட்டசபை அங்கத்தினர்களும் பெரிய ஏமாற்றமடைந்தனர். இஃது தங்களுக்கு விரோதமான ஓர் இயக்கமென்று எண்ணிப் பயந்தனர். பத்திரிகைகளிலும் பல விடங்களிலும் கண்டனங்கள் செய்தனர். நாடெங்கும் குடிஅரசுக் கொள்கையைப் பற்றிய பேச்சாகவே காணப்பட்டது. ஆனால் இது தொழிலாளர்கள், ஏழைகள், பெண்மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் முதலியோர் உரிமையை நிலைநாட்டும் இயக்கமென நன்கு வெளிப் படவே ஈரோட்டிலும் விருதுநகரிலும் குடி அரசு இயக்கம், விருது பெற முதலாளிகள், மந்திரி முதலிய உத்தியோகதர்கள் பதவி வேட்டைக்காரர்களில்லாது ஏழைகளும் தாழ்த்தப்பட்ட மக்களும் பெண்களுமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் குடி அரசு படை வீரர்களாய்ப்பதிவு செய்து கொண்டு வெற்றி முழக்கத்துடன் சமதர்மக் கொடியை உயர்த்தினர். இதனிடையே குடி அரசு இயக்கத்தான் என்றால் பலருக்கு பார்க்கவே வெறுப்பாய் விட்டது. குடிஅரசு கட்சியைச் சார்ந்தவன் எங்கும் ஹிம்சிக்கப்பட்டான். குடி அரசு பகிஷ்காரம் என்று பேச்சு எழுத்தளவில் வலுத்து நின்றது. தோழர்கள் பலர் குடி அரசைஒழிக்க அல்லும் பகலும் அரும்பாடுபட்டனர். ஆதிகச் சங்கமொன்று தோன்றி மடாதிபதிகளின் பண உதவியுடன் வெகு அயோக்கியத் தனமாய் பிரசாரம் புரிந்தது. தமிழ்நாட்டிலே சுமார் ஒரு டஜன் பத்திரிகைகள் குடி அரசை எதிர்க்கத் தோன்றி தம் பக்கங்கள் முழு வதையும் குடி அரசைப் பற்றிய கண்டனங்களாக வெளியிட்டன. தேசீயப் பத்திரிகைகள் பல பக்கமேளம் அடித்தன. இந்நிலையில் குடிஅரசை ஆதரித்த அன்பர்களில் சிலர் கூட குடிஅரசு கொள் கைகள் அதி தீவிரமானது. கடவுளைக் கண்டபடி தாக்குகிறது. தேசீ யத்தை இடைவிடாது கண்டிக்கிறது. அது தன் கொள்கையை சிறிது தளர்த்திக் கொண்டால் நாட்டிலதற்குப் பேராதரவு கிடைக்கும் என்ற கூறினர். குடி அரசுக் கொள்கைகள் ஒரு சிறிதும் தளர்த்தப் படாமல் மேலும் மேலும் அதி தீவிரமாய் வேலை செய்யப்பட்டு வந்தது. அதன் எதிரிகள் குடிஅரசுக் கொள்கைகளும், சுயமரியாதை வெடி குண்டுகளும் செங்கற்பட்டிலே புதைக்கப்பட்டுவிட்டது என்றே கூறி வந்தார்கள். ஆனால் இரண்டு மூன்று ஆண்டில் குடி அரசை எதிர்க்கத் தோன்றிய பத்திரிகைகளும் தலைவர்களும் ஆதிகக் கழகமும் இருக்குமிடந் தெரியாமற் போய் விட்டதை யாவரும் அறிவர். குடி அரசோ சென்ற ஏழு ஆண்டுகளாய் விதவித மான வேடமிட்டுத் தோன்றிய பல எதிரிகளின் எதிர்ப்புகளையும் சூழ்ச்சிகளையும் தாண்டி தமிழ்நாட்டினரின் பூரண ஆதரவுடன் ஈரோட்டிலும் விருதுநகரிலும் வெற்றிக் கொடியுயர்த்தி பல புதிய வீரர்கள் வந்து சேரவே அதன் எதிரிகள் பலரும் தலை கவிழ்ந்தனர். நாலாவது முறையாக நாஞ்சில் நாட்டில் பிரதான நகரமாகிய நாகர்கோவிலில் குடிஅரசுக் கொடி உயர்த்தப்படுமுன் உங்கள் குடிஅரசுக் கோமான் சமதர்ம ஆட்சியின் தலைவர் தோழர் ஈ.வெ.ரா. அவர்கள் தம் மதிமந்திரியாம் தோழர் இராமநாதன் எம். ஏ.பி.எல். அவர்களுடன் குவலயமெங்கும் போய் ஆங்காங்குள்ள குடிஅரசின் தன்மையை ஆய்ந்து வர இத்தள்ளாத கிழப் பருவத்தில் மக்களுக்குச் சேவை செய்யவே நான் பிறந்திருக்கிறேன். அதற்காகவே நான் உயிர் வாழ்ந்திருக்கிறேன் என்று எண்ணி, தம் உடலுக்குற்ற பிணியையும் பொருட் செலவையும் பொருட்படுத்தாது மக்கட்கு சேவை செய்யக் கிடைத்த சந்தர்ப்பத்தை யுன்னி மகிழ்ந்து தம் நரம்புகளெல்லாம் இரும்பென முருக்கேறி வாலிப உணர்ச்சி ததும்ப பதினாயிரக் கணக்கான மைல்கள் கப்பலிலும் ரயிலிலும் பிரயாணம் செய்து வருகிறார். குடிஅரசை நிலைபெற விடாது தடுத்துப் பெரும் இடை யூரியற்றுவது, மனிதனை மனிதன் மதியாது வாழும் மாயமும் பெண்ணைக் கண்ணெனக் கருதாது கீழ்மைப் படுத்தும் ஆணாதிக்க மும் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்று எண்ணி கொடுமை பல புரியும் ஜாதிப்பித்தும் சாத்திரப் பைத்தியமும் கோத்திரக் கொடுமையும் முதலாளி தொழிலாளி, ஆண் பெண் என்ற வேற்றுமை நோய்களும் தீண்டாமைப் பேயும் மதமெனும் மாய்கையால் மருண்டு, கவலும் எண்ம் நம்மைச் செம்மையாகக் காக்கும் கருணாகரக் கடவுள் எனக்கருதிப்பசியால் நோயால் நலிவுற்று சுத்த தண்ணீரும் தக்க மருந்தும் கிடையாது தத்தளித்து மாளும் கோடானு கோடி மக்களை கண்ணெடுத்தும் பாராது கல்லுருவங்களின் மேல் பாலும் தேனும் நெய்யும் ஊற்றி பட்டாடை புனைந்து பார்க்கும் முட்டாள் தனத்தை வளர்க்கும் மதமும் என்றும் இவைகள் உலகில் நிலைபெற்று நிற்க ஆதரவாய் நிற்கும் பகுத்தறிவின்மை, மூட நம்பிக்கை என்னும் புல்லுருவிகளே என்பதையும் பொது வாழ்க்கை யில் தாம் நீண்ட நாள் ஈடுபட்ட அனுபவத்தின் பயனாய்க் கண்டு மொழிந்த தோழர் ஈ.வெ.ரா. அவர்களின் அமிர்த மொழிகளைக் கடைபிடித்துகுடிஅரசின்பகைவர்களின்முன்னே,பலஅன்பர்களின் துணையுடன் பகைமையை யொழிக்க பலவாறு முயன்று வெற்றி மாலை சூடி வருகின்றார். குடி அரசு தோன்றிய இச்சுருங்கிய காலத்திலே பல இன்னல்களுக்கிடையே மிகுந்த தொண்டுகளாற்றியிருக்கிறது. இப்பொழுது காந்தீய மதம் அவதார புருஷர், மகாத்மா என்ற பெயர்களால் மக்களை மருட்டி கிளர்ச்சி செய்யும் சுயராஜ்யம் என்னும் போலிக் கூப்பாடு முதலாளி ஆதிக்கத்தையும், பார்ப்பனிய அரசாட்சியையும் நிலை நாட்டவே பாடுபடுகிற தென்பதையும் மக்கள் அறிவு விடுதலை பெற்றாலன்றி தேசீய விடுதலை இல்லை என்பதையும் தெளிவு படுத்திவிட்டது. அவ்வாறு பெற்றாலும் பயனில்லையென்பதையும் சொத்துரிமை, மறுமண உரிமை, விவாகரத்துரிமை, காதல் மண உரிமை, கலப்பு மண உரிமை முதலி யன வெல்லாம் பெண்களுக்கு வேண்டுமென்று பெண்ணுலகில் பெரிய விழிப்பையுண்டாக்கி விட்டது. தங்கள் உரிமையை பெற அஞ்சாது போரிட ஆயிரக்கணக்கான பெண் மக்கள் முன் வந்து விட்டனர். ஆதிதிராவிடர் முதலிய கொடுமைப்படுத்தப் பட்ட மக்கள் தங்கள் உரிமையை அறிந்து தாங்கள் எவர்க்கும் தாழ்ந்தவர் களல்லேம் என்றும் சமத்துவம் நாட்டி கிளர்ச்சி செய்ய தூண்டி விட்டது. ஏழைகளைக் கொள்ளையடித்தே ஒரு சிலர் பணக்காரர் களாய் முதலாளிகளாய் ஆனார்களேயொழிய முன் ஜென்மத்தில் அவர்கள் செய்த புண்ணியத்தினாலல்ல என்பதை தொழிலாளிகள் தெளிவாய் உணரும் படி செய்து விட்டது. கோவில், சமய சாத்திரம், சாமி முதலிய பெயர்களை தெளிவாய் உச்சரிக்கப்பயந்த மக்களை யெல்லாம் (சிறுவர்களைக் கூட) அவைகளின் ஆபாசங்களையும் கெடுதிகளையும் கூறி அவைகளனைத்தையும் தைரியமாய்க் கண்டிக்க முன் வரும்படி செய்துவிட்டது. ஜாதிப் பித்து தமிழ் நாட்டைவிட்டு தலைவிரித்தோடும் படி செய்து விட்டது. எல்லாச் சாதியார்களும் ஒரே தாய் வயிற்றில் உதித்த மக்களைப் போல அளவளாவி ஒன்றாய் வீற்றிருந்துண்ணும்படி செய்துவிட்டது. சுயநலங்கொண்ட தேசீய வீரர்களினுள்ளம் திடுக்கிடச் செய்தது. புராணப்பிரசங்கம் புரிந்து மக்கள் கஷ்டப்பட்டு தேடிய பொருள்களை பகற்கொள்ளைக் காரர்களைப்போல் பறித்துக்கொண்டு போகும் புராணிகர்கள் வயிற்றிலிடி விழச் செய்தது. பகுத்தறிவை இளமையிற்கல்லும் தமிழ் பண்டிதர்கள் வாயடங்க பாலர்களெல்லாம் பற்பல விநோத வினாக்களைப் போடும் படி செய்துவிட்டது. பெண்ணடிமை கொண்ட பேடிகளைமுக்காடிட்டு மூலையிற் பதுங்கும் படி செய்துவிட்டது. கலப்பு மணம், காதல் மணம், விதவை மணம் ஏராளமாய் நடக்கும் படி செய்துவிட்டது. கதர்புரட்டுகளையும் ஹிந்திபுரட்டுகளையும் பார்ப்பனீய புரட்டுகளையும் சைவக் கொடுமைகளையும் எல்லோருக்கும் எளிதில் விளக்கிற்று. எதற்கும் ஆமாம் போடாமல் எங்கும் ஏன்? எங்கே? எதற்கு? என்ற வினாக்கள் போடும் படி செய்துவிட்டது. இன்னும் ஏழாண்டிற்குள் உங்கள் குடி அரசு புரிந்ததொண்டுகளை இங்கு எழுத இடம் போதாது. இது நிற்க சிலர் உங்கள் குடிஅரசு இவைகளையெல்லாம் சாதித்துப்பயனென்ன? நீங்கள் கூறும் சமதர்ம குடிஅரசு பூரணமாய் தாபிக்க எத்துணையாண்டுகள் செல்லும். நெடுகிலும் பிரசாரம் பண்ணிக்கொண்டே போவதில் பயனென்ன? சுவாமி விவேகானந்தர் நாம் பல விஷயங்களைப்பற்றி யெண்ணுகிறோம், ஆனால் அவற்றைச் செய்வதில்லை கிளிப்பிள்ளைகளைப்போல் பேசுதல் நமது வழக்கமாய்விட்டது. செயலில் ஒன்றும் நடத்துவ தில்லை என்று கூறியமொழிகளின் படியே பேச்சிலே ஜனங்களை ஏமாற்றிவிடலாம் என்று எண்ணுகிறீர்களோ, முதலாளி ஆதிக்க மும் பணக்காரர் தொல்லையும் அரசாங்கத்தார் கொடுமையும் வைதீகர்களின் ஆர்ப்பாட்டமும் அதிகப்பட்டுக்கொண்டே வருகிறது. ஏழைகள் வறுமையினாலும் பசியாலும் நோயாலும் இன்னும் பலவற்றாலும் பெரும் இடுக்கணுற்று வர நீங்கள் இவைகளை அழித்து ஏழைகள் இன்பமடைய சமதர்ம குடி அரசை திரமாய் நிலைநாட்டி பகைவர்களை நாசஞ்செய்யாது காலந்தாழ்த்து வதுதான் என்னே! எனக் கேட்டுவருகின்றனர். குடிஅரசு இயக்கம் காங்கிர இயக்கம் போன்ற முதலாளிகள் இயக்கமன்று. காந்தியைப் போன்ற அவதாரப்புருடர்களாகிய கடவுளைத்தலைவராகக் கொண்ட இயக்கமன்று. சார்ந்தார்க்கு இப்பொழுது புகழைக் கொடுக்கும் இயக்கமன்று. எம்மியக்கம் ஏழைகளின் இயக்கம். எம் தலைவர் நம்மைப்போன்று சாதாரண மனிதரே. அவரைக்கடவுள் வழிநடத்தவில்லை. பகுத்தறிவின்படியே நடப்பவர். ஓராண்டிற்குள் சுயராஜ்யம் வாங்கித்தந்துவிடுவேன் என்றோ, யான் சுயராஜ்யமடைய இறுதியாக சத்தியாக்கிரகப் போருக்குத் துணிந்து தாண்டி உப்பளமுற்றுகைக்குச் செல்லு கிறேன். வெற்றிபெற்று வாகை மாலைசூடித்தான் ஆசிரமம் வருவேன். இன்றேல் தாண்டி கடற்கரையில் பிணமாய் மிதப்பேன் எனக்கூறி முன் கூறியமொழிகளை மறந்து ஆச்சிரமம் புகுந்த தலைவர்களைப்போல் ஏமாற்றுந்தலைவர்களல்ல. தலைவர்கள் எம்மை ஏமாற்ற நாம் ஏமாந்தவர்களுமல்ல. இவ்வியக்கத்திற்கு உழைக்க எல்லோரும் முன் வரமுடியாது. தன்னலமற்ற தியாகிகளே உயிரைத் துரும்பென மதிக்கும் உத்தமர்களே, பொருளை, (ஆண்டவன்) அருளை ஆன்மீக லாபத்தை விரும்பாத ஆன்றோர் களே இதை ஆதரிக்க முடியும். பெண் நலம் பேணும் பெரியோர் களே இவ் வியக்கத்தைப்பற்றிப் பேசக்கூடும். ஜாதிப் பற்றை சமயப்பற்றை துறந்து உற்றோர் உறவினர் அரசாங்கத்தார் கொடுமை களைப் பொறுமையுடன் பொருத்துக்கொள்ளும் பொறுமை சாலிகளே இதைப்போற்றக்கூடும். தன்வலியும் மாற்றான்வலியும் துணை வலியும் எம் தலைவர்கள் நன்கறிவர். தற்சமயம் நமக் கிருக்கும் ஆதரவு நமது இறுதிப்போரை ஆரம்பித்து சமதர்ம ஆட்சியை நிறுவ போதியதாகாது. பகுத்தறிவை நம்பி நம்பி நடக்கும் தலைவர்கள் பகுத்தறிவை கொண்டு ஆராயாது போரிட்டு தோல்வியுற்று கடவுள் தலையில் பாரத்தைப்போடவழியில்லை. மேலும் இந்தியமக்கள் இன்னும் அதிகமான கஷ்டநஷ்டங்களுக்கு ஆளாகவேண்டும். அப்பொழுது நமது படைக்குப் போதிய பலமுண்டாகும். இந்தியா அதிகமான தொல்லைகளுக்கு ஆட்படும் நாளே இந்தியா சமத்துவப் போருக்கு பக்குவமான நன்னாள் என்று நம்மவர்கள் கூறும் விடைகண்டு அந்தோ! இப்பொழுது மக்கள் படும்பாடு போதாதா? இன்னுமா கஷ்டப்படவேண்டும்? பட முடியாதினித் துயரம்பட்ட தெல்லாம் போதும் என்று கூறி உங்களுக்கு இரக்கமுள்ள நெஞ்சல்ல. உங்கள் தலைவர்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதென்கின்றனர். ஆனால் அவர்கள் ருஷியதேசத்தில் நடந்த பின்வரும் சம்பவத்தை ஆராய்ந்தால் நாம் கூறும் உண்மைகண்டு தெளிவடைவார்கள் எனவே லிவிங் எஜ் என்ற பத்திரிகையில் கண்ட அச்சம்பவத்தை இதன் கீழே வெளியிடு கின்றேன் அன்பர்கள் ஆராய்ந்து தெளிவார்களாக. இல்லை; இந்தவழி சரிப்படாது என்று ஓர் இளைஞர் தன் சகோதரனுக்கு மரணதண்டனை விதிக்கப் பட்டதைக் கேட்டதும் உரத்துக்கூறினான். இச்சோதரன் மூன்றாம் அலெக்சாண்டர் சார் என்னும் ருஷிய சக்கிரவர்த்தியைக் கொலை செய்ய முயன்றதாக மரண தண்டணை விதிக்கப் பட்டவன், பின்னர் அச்சோதரனை கொலையாளிகள் கொலைக்கூடத்திற்கு அழைத்துச் சென்றதும் அந்த இளைஞர் அனுதாப வார்த்தை ஒன்று கூடக்கூறவில்லை. இல்லை இந்த வழி சரிப்படாது என்று மட்டுமே அவன் கூறினான். அந்த மொழியைக் கேட்டவர்களெல்லாம் பயமடைந்தார்கள். அவ் விளைஞனுக்கு அப்பொழுது வயது பதினேழு. இரண்டு ஆண்டு கட்குப்பின்னர் பஞ்சத்தினால் அல்லற்படும் ருஷியர்களுக்கு உதவி செய்வதற்காக கூடிய ஒரு கமிட்டிக் கூட்டத்தில் நாடுகடத்தப்பட அதே இளைஞன் தோன்றினான். பஞ்ச நிவாரணஞ்செய்ய அங்கு நடந்த சில சொற்பொழிவுகளைக்கேட்டு அவன் குதித்தெழுந்து வேண்டாம்! வேண்டாம்!! ஏழைகளாகிய எங்களுத்குதவி வேண் டாம் என்று கூவினான். பஞ்சத்திலடிபட்ட எங்களுக்குதவி செய்வது தவறு. அது சார் என்னும் நம்கொடுங்கோலரசனுக்கு உதவிசெய்வ தாகும். இன்னும் நாங்கள் அதிக பசியினாலும் கொடுங்கோலாட்சி யினாலும் கஷ்டமுற்றால்தான் இவ்வரசாட்சியை ஒழிக்க அழைக்கும் கூப்பாட்டிற்கு செவிமடுத்து ஒற்றுமையுடனும் உற்சாகத்துடன் குழுமி இவ்வரசியலை ஒழிக்க முடியு மென்றும் வாதமிட்டான். அவன் ஆத்திரமுடன் மொழிந்த கம்பீரத்தொனியைக்கேட்டு அங்கிருந்தவர்களெல்லாம் நடுங்கிப்போனார்கள். கடைசியில் எல்லோரும் ஆலோசித்து அவனைப் பைத்தியக்காரன் என்று பிடித்து வெளியே தள்ளிவிட்டார்கள். காரணம், யாருடைய தயவை யும் தாட்சண்த்தையும் எதிர்பாராமல் வேலை செய்வதேயாகும். ஒரு கொள்கையைப் பிரசாரம் பண்ண ஏற்பட்ட எந்தப் பத்திரிகை யாகட்டும், எந்த ஊழியராகட்டும், பிறருடைய தயவு தாட்சணயத் திற்குக் கட்டுப்படாமலிருந்தால்தான் கொள்கைக்காக உழைக்க முடியும் என்ற தத்துவத்திலிருந்து சிறிதும் பிசகாமலே குடி அரசு இதுவரையிலும் இருந்து வருகிறது. எண்ணற்ற எதிர்ப்புக்களிருந்தும் குடி அரசு பொது ஜனங் களின் கவனத்தை நாளுக்குநாள் எதிர்பார்ப்பதற்கு அதிகமாகவே கவர்ந்து வருவதற்கு அதன் அசைக்கமுடியாததும், பகுத்தறிவுக்குப் பொருத்தமானதும் உண்மையில் நாட்டில் சமதர்மத்தையுண் டாக்கத் தகுந்ததும் ஆகிய கொள்கைகளே காரணமாகும் என்று நாம் கூறுவது மிகையேயாகும். ஆரம்பத்தில் குடி அரசை த் தங்களுடைய தேர்தல் பிரசாரத் திற்கு உபயோகப்படுத்திக்கொள்ளலாமென்று கருதி அந்தக் கொள்கைகளை ஒப்புக்கொள்வதுபோலச் சிலர் நடித்துவந்தார்களா னாலும் நாளடைவில் அவர்கள் குடி அரசின் உண்மைக் கொள்கை ளையும் அது யாருடைய தயவையும் போற்றுதல், தூற்றுதல் களையும் எதிர்பார்ப்பதல்ல என்பதையும் அறிந்தபின் குடி அரசு படிப்பதையும் அதன் கொள்கைகளைப் பற்றிப் பேசுவதையும் விட்டுவிட்டதோடு மாத்திரமல்லாமல் மறைமுகமாகச் சிலர் எதிர்ப் பிரசாரங்கூடச் செய்ய ஆரம்பித்தார்கள் என்னும் விஷயம் குடி அரசு வாசகர்களில் பலருக்குத் தெரிந்திருக்கலாம். இப்படி இருந்தும் குடி அரசின் கொள்கைகளுக்கும் குடி அரசுக்கும் ஒரு குறைவும் உண்டாகவில்லை. வைதீகர்களும் பார்ப்பனர்களும் காங்கிரகாரர்களும் குடி அரசை உபயோகப்படுத்திக் கொள்ள எதிர்பார்த்து ஏமாந்தவர் களும் குடி அரசை ஒழிக்கப்பாடுபட்டாலும் ஆரம்பத்தில் குடி அரசின் சீர்திருத்தக்கொள்கைகளை ஆதரித்துவந்த பணக்காரர் களும் உத்தியோதர்களும் மந்திரிமார்களும் குடிஅரசை ஆதரிக்கவும் சுயமரியாதைக் கூட்டங்களுக்கு வரவும் பயந்து ஒதுங்கி யிருந்தாலும் பணக்காரர்களில் சில உண்மையான சுயமரியாதைப் பற்றுடையவர்களைத் தவிர மற்ற எல்லாப் பணக்காரர்களும் ஜமீன்தார்களும் பெரிய உத்தியோகதர்களும் இவர்களுடைய கையாட்களாக வேலை செய்யும் ராஜ்யவாதிகளும் குடி அரசுக் கொள்கையை முந்திய ஆண்டுகளைவிடச் சென்ற ஆண்டில் அதிக மாக எதிர்த்துப் போராடினாலும் அதன் வேலை சென்ற ஆண்டி லேயே அதிகமாக நடைபெற்றிருக்கிறது என்று தைரியமாகவே கூற வேண்டும். உதாரணமாகச் சென்ற ஆண்டில் நடைபெற்ற சுய மரியாதை மகாநாடுகளை எடுத்துக்கொள்ளலாம். சென்ற ஆண்டில் தூத்துக்குடியில் ஒரு சுயமரியாதை மகா நாடு, காரைக்குடியில் ஒரு சுயமரியாதை மகாநாடு, பொறையாற்றில் ஒரு சுயமரியாதை மகாநாடு, நன்னிலத்தில் ஒரு சுயமரியாதை மகாநாடு, லாலுகுடியில் இரண்டுசுயமரியாதை மகாநாடுகள், விருதுநகரில் மாகாணச்சுயமரியாதை மகாநாடு, நாகப்பட்டினத்தில் ஒரு சுயமரியாதை மகாநாடு, சென்னையில் ஒரு சுயமரியாதை மகா நாடு ஆக பத்து சுயமரியாதை மகாநாடுகள் நடந்திருக்கின்றன. இவைகளைத்தவிர நாடெங்கும் நடைபெற்றுள்ள பொதுக்கூட் டங்கள் எண்ணற்றவை. இந்தமகாநாடுகளின் பயனாலும் பொதுக் கூட்டங்களின் பயனாலும் ஆயிரக்கணக்கான மக்கள் சுயமரியாதை யியக்கத்தின் உண்மைக்கொள்கைகளையறிந்து, அவைகளைக் கூடிய வரையிலும் பின்பற்றி நடக்கக் கூடியவர்களாவும் இருக்கின் றார்கள் என்பதையும் யார் மறுக்க முடியும்? இவற்றுக்கெல்லாம் குடி அரசின் அச்சமற்ற ஊழியம் அன்றோ காரணம். சுருங்கக் கூறவேண்டுமானால் சென்ற ஏழாண்டுகளாகக் குடி அரசு தனது கொள்கையை விட்டு நழுவாமலும் யாருடைய தயவுக்கும் கட்டுப்படாமலும் எவருக்கும் அஞ்சாமலும், உழைத்து வந்ததன் பலன் வீண் போகாமல் நாளுக்கு நாள் அதிகமான மக்கள்-ஆரம்பத்தில் அதன் கொள்கைகளில் நம்பிக்கையில்லாமலிருந்த வர்கள் கூட அதன் கொள்கைகளைப்பற்றிச் சிந்திக்கவும் பின்பற்ற வும் முன்வருகிறார்கள் என்ற உண்மையை அறியும்போது குடி அரசும் அதன் வாசகர்களும் பெருமையும் மேலும் மேலும் உறுதி யோடும் அஞ்சாமையோடும் பிரசாரம் பண்ணுவதில் ஊக்கமும், தைரியமும் அடையவேண்டுமேயொழிய வேறு தளர்ச்சியோ, கவலையோ படவேண்டிய அவசியமில்லையென்றே நிச்சயமாகக் கூறுவோம். மற்றொரு விஷயத்தையும் குடி அரசின் வெற்றிக்கு உதாரணமாகக்குறிப்பிடலாம். சென்ற நாலைந்து மாதங்களாக நமது ஆசிரியர் நமது நாட்டில் இல்லாமல் மேல்நாட்டுச் சுற்றுப் பிரயாணத்திற்காக தோழர். இராமநாதன் அவர்களுடன் சென்றிருந் தும் குடி அரசின் வளர்ச்சியில் ஒரு விதமான குறைவும் ஏற்பட வில்லை என்பதைக்கொண்டும் அதன் கொள்கைக்கு தேசத்தில் எவ்வளவு ஆதரவு இருக்கிறது என்பதை அறியலாம். இனி எதிர்காலத்தில் சென்ற ஆண்டுகளைவிடக் குடிஅரசின் வளர்ச்சியும் அதன் கொள்கைகளுக்கு ஆதரவும் அதிகப்படும் என்றே எதிர்பார்க்கிறோம். நமது ஆசிரியர் ஈ.வெ. இராமசாமி அவர் களும் தோழர் எ. ராமநாதன் அவர்களும் மேல் நாட்டினர் மத சமுதாய விஷயங்களில் எவ்வாறு முன்னேறியிருக்கின்றார்கள் என்பதையும் அவ்வாறு முன்னேறி யிருப்பதற்குக்காரணங்கள் என்ன என்பதையும் நேரில் பார்த்து அறிந்து கொள்ளும் பொருட்டு மேல் நாடுகளில் இப்பொழுது சுற்றுப் பிரயாணம் பண்ணிக் கொண்டிருக் கின்றனர். அவர்கள் சுற்றுப்பிரயாணத்திலிருந்து திரும்பி வந்தவுடன் குடி அரசின் கொள்கைக்காக வேண்டி இன்னும் அதிதீவிரமாக உழைப்பார்கள் என்பதில் ஐயமில்லை. ஆகவே இனிவருங்காலத்தில் பொது ஜனங்களின் கவனமும் வாசகர்களின் ஆதரவும் குடி அரசினிடமும் அதன் கொள்கைகளிடமும் அதிகமாகவே ஏற்படு மென்று உறுதியாக நம்புகிறோம். சைவக்கோட்டை தகர்க்கப்பட்டது திருநெல்வேலி ஜில்லா சைவர்களுக்கு ஒரு பெருங் கோட்டை யாய் விளங்கிற்று. சைவக் கோட்டையாம் திருநெல்வேலி ஜில்லாவிற்குள் சுயமரியாதை வீரர்களுக்கு நுழையும் ஆற்றலுண்டா? என்று ஆதிகப் பத்திரிகைகள் ஒரு சமயம் அறை கூவி அழைத்தன. திருநெல்வேலி ஜில்லாவிலே சைவர்களின் ஆதிக்கம் அதிகம். ஆங்கு சைவர்களே பெரும் பணக்காரர்களாயும் மிராசுதார்களாயும் இன்னும் பல செல்வாக்குடையவர்களாயும் இருக்கின்றார்கள். தாழ்த்தப்பட்ட மக்களை அதிகமாய் இம்சிப்போர் பார்ப்பனரல்ல சைவர்களே. முதன்முதலாக சுய மரியாதை இயக்கத்திற்கு பெரிய எதிர்ப்பும் சைவப் பெரியார் மகாநாடும் இவ்விடத்தில் தான் கூடின. இச்சில்லாவில் உள்ள தன்னலமற்ற தாழ்த்தப்பட்ட மக்களின் தைரியத்தாலும் பகுத்தறிவு இயக்கத்தைப் போற்றும் சில சைவப் பிரபுக்களின் ஆதரவுகளி னாலும் தோழர் எ. ராமநாதன், தங்கவேல், வைகுண்டம் போன்ற அன்பர்களின் இடைவிடா உழைப்பினாலும் திருநெல்வேலி டவுனில் மூன்று ஜில்லா மகாநாடுகளும் தூத்துக்குடியில் ஒரு ஜில்லா மகாநாடும் கல்லிடைக்குரிச்சியில் ஒரு சீர்திருத்த மகாநாடும் நடை பெற்றதோடு திருச்செந்தூர், ஏரல், நாகலாபுரம், புதியம் புத்தூர், பணகுடி, களக்காடு, சாத்தன்குளம், நாசரேத் முதலிய விடங் களில் தன் மதிப்பியக்கத் தொண்டர்களால் பிரசாரம் செய்யப் பட்டது. என்னென்னவோ செய்து விடுவதாய் பயங்காட்டிய சைவப் பக்தர்கள் எல்லாம் சுயமரியாதை வீரர்கள் தங்கள் சைவக் கோட்டையைத் தகர்த்து, வெற்றி முரசொலிக்க வீரகர்ஜனை புரிந்து வருவதைக்கேட்டு மூலையில் பதுங்கிவிட்டனர். இவ்வாண்டு திருநெல்வேலி ஜில்லா 5-வது சுயமரியாதை மகாநாடு, சைவர்கள் ஆதிக்கம் மிருந்த சாத்தன் குளத்திலே கூட்ட வேண்டுமென்று பல அன்பர்கள் விரும்புகின்றார்கள். இவ்வூர் ஒரு காலத்திலே சுய மரியாதை இயக்கத்திற்கோர் பேர் அரணாய் இருந்ததென்று கூறத் தக்க சரித்திரச் சான்றுகளுள்ள ஊர். அதாவது சாத்தன் என்னும் ஓர் ஆதிதிராவிட அரசரின் ஆளுகையிலிருந்தது. பின் அவருடைய ஏவலாட்களான வேளாளர்கள் சூழ்ச்சி முறையால் ஆதிதிராவிட அரசனைக்கொன்று தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்ட னர். இவ்விஷயம் திரு. எச். ஆர். பேட் . ஐ. சி. எ. என்பவரால் எழுதப் பெற்ற திருநெல்வேலி கெஜட்டு என்னும் நூலிலிருக்கிறது. இன்னும் பல சான்றுகளும் இருக்கிறது. சாத்தன் என்னும் ஆதிதிராவிட அரசரிடம் அடிமைத் தொழில் புரிந்த ஒரு வேளாளர் வமிசத்தி லுள்ள தோழரே இன்று சாத்தன் குளத்தில் சுயமரியாதை மகாநாடு நடத்தவிடாமற் தடை செய்யப்போவதாயும் மகாநாடு நடத்த முன் வரும் தோழர்களை அவ்வூரைவிட்டே விரட்டிவிடப்போவதாகவும் பயமுறுத்தி வருகின்றார். இவ்வித பயமுறுத்தல் கண்டு ஒரு சுய மரியாதை வீரனும் அஞ்சப் போவதில்லை. பனங்காட்டுநரி வீண் சிலுசிலுப்பிற் கஞ்சுமோ? அஞ்சாது எனவே இச்சில்லாவில் இதற்கு முன்னர் நடந்த நாலுமகாநாட்டிலும் இவ்வைந்தாவது மகா நாட்டை அஞ்சாது மிக நன்றாய் நடத்த சுயமரியாதைத் தொண்டர் களெல்லாம் மிக தீவிரமாய் பாடுபட முன் வருவார்களென்று நம்புகிறேன். கடந்த நாலு ஜில்லா மகாநாடுகள் நடந்ததிலிருந்து ஒவ்வொரு யுவர்களின் உள்ளத்திலும் சுயமரியாதைக் கொள்கைகள் பசுமரத் தாணி போல் பதிந்திருக்கின்றது என்றாலும் செய்கையிற் காட்ட இதுவரைப் பலர் முன் வரவில்லை. காரணம் ஜாதிப் பித்தம் தலைக் கேறிய சைவர்களின் கொடுமைக்கு பயப்படும் யுவர்களின் தைரிய மற்ற மனப்பான்மையே. என்னுள்ளத்தே இதர ஜில்லாக்களிலிருந்து கலப்புமணம், காதல்மணம், விதவை மணம் புரிந்து மகாநாடு களுக்கு வரும் தம்பதிகளைப் பார்த்து மிகுந்த பொறாமை தோன்றுவ துண்டு. ஐயோ! நமது ஜில்லாவிலிருந்தும் இத்தகைய கலப்பு மணம், காதல் மணம், விதவை மணம் புரிந்து வாழும் தம்பதிகளைப் பார்க்க முடியவில்லையே யென்று பல நாள் வருந்தியதுண்டு. இதைப் பற்றி பல சைவத் தலைவர்கள் என்பவர்களிடம் விவாதித்ததும் உண்டு. சைவத் தலைவர்கள் தம் மனதிற்குள் இத்தகைய மணங்களை அறவே வெறுத்தனராயினும் கேள்விக்குத் தக்க பதிற்கூற வழியற்று இவைகள் சைவத்திற்கு உடன்பாடே, இவைகளை சுயமரியாதைக்காரர்கள் இன்று புதிதாய் கண்டுபிடிக்கவில்லை. எங்கள் சமயப் பெரியார் களாம் சுந்தர மூர்த்திநாயனார், திருவள்ளுவ நாயனார் முதலிய பேரறிஞர்கள் கலப்பு மணம், காதல் மணம், பொட்டறுப்பு மணம், விதவை மணம் முதலியன செய்திருக்கின்றார்கள் என்று கூறிவிட்ட னர். உங்கள் நாயன்மார்கள் இத்தகைய மணங்களை உங்களுக்கு முன் மாதிரியாய் செய்து காட்டியிருக்க அவர்களுடைய அடிச் சுவட்டைப் பின்பற்றி நடப்பதாய்க் கூறும் நீங்கள் ஏன் அதை அனுஷ்டிப்பதில்லை. நாயன்மார்கள் அனுஷ்டித்துக் காட்டி எத்தனையோ நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகியும் உங்களின் ஆதரவோடு அதேயொத்த ஒரு சில விவாகங்களைக்கூட நடத்திய தாகக்காணோமேயென்றால் ஒன்றும் பேச வழியற்றுத்திகைத்து நிற்பர். சில வாயாடிகள் நாயன்மார்கள் செய்ததைப்போன்று நாம் நடக்க முடியுமா? அவர்கள் நிலைமையில் நாமிருக்கின்றோமா? அவர்களைப் போன்று எல்லாப்பற்றையுந்துறந்த ஞானிகளே ஜாதிபேதமற்று இத்தகைய மணங்கள் செய்ய முடியும் என்று புகன்று, கேட்டவர்களுக்கு ஏதோபதில் கூறிவிட்டோமென்று மனத் திருப்தியடைந்து விடுகின்றனர். ஜீவகாருண்யம்! ஜீவகாருண்யம்! என தொண்டை கிழியக் கத்தி ஆண்பெண் என்னும் இரு உயிர்களுக்கும் இயற்கையாயுள்ள காதலின்பத்தைப் பெண்மக்கள் பெரிதும் நுகரவிடாதபடி தடுத்து அவர்களுக்கு இஷ்டப்பட மனமில்லாத ஆண்களுக்கு பலாத்கார மாய் விவாகஞ் செய்து கொடுத்து அவர்கள் வாழ்நாள் முழுதும் துன்பம் அனுபவிக்கவும் இளவயதிலே கலியாணமாகி இரண்டு மூன்று நாட்களுக்குள்ளே கணவனை இழந்த விதவைப் பெண்ணா னாலும் வேறு புருடனை மணந்து கொள்ளக்கூடாதென்று ஜெயிலுக்குள் அடைத்து வைப்பதைப் போன்று காற்று வெளிச்சம் முதலியவற்றைக் காணாத இருட்டறைக்குள் அடைத்து, அவர்கள் புருஷ இன்பத்தை நினைந்து நினைந்து நைந்துவாடி நெஞ்சம் புண்ணாகி அல்லற்பட்டு, அழுது யாதொரு வழியுமற்று கள்ளத் தனமாய் பக்கத்துவீட்டுப் பையனோடோ அன்றிவீட்டிலுள்ள வேலைக்காரனோடோவிபசாரஞ்செய்துகருவுற்றுப்போனால் கருச்சிதைக்க பலமருந்துகள்கள் கொடுத்துக் கொலைபுரிதலும் முடியாது குழந்தை பிறந்துவிட்டால் உடனே கழுத்தை நெறித்து சாக்கடையிலோ வாய்க்காலிலோ போட்டுவிடுவதோ அல்லது உயிரோடே கொண்டுபோய் அனாதைச்சாலையிலோ அல்லது குளத்துக்கரை, ஆற்றுக்கரை, கள்ளியின் பக்கம் கொண்டுபோய் விடுவதோ நாள் தவறாது நம் ஜில்லாவில் நடைபெற்றுவருவதும் விரும்பிய கணவன் வேறு ஜாதியையோ அல்லது வேறு மதத்தையோ சேந்தவனாய்விட்டால் தாம் விரும்பிய அதே கணவனையடைந்து இன்பந்துய்க்க வழியற்றிருக்கும் தம் மதக்கட்டுப்பாடு, ஜாதிக்கட்டுப் பாடு பழக்கவழக்க முதலிய மூடப்பேய்களுக்கு பயந்து தற்கொலை புரிந்துகொள்பவர்களைப் பலர் இத்துன்பங்களை யொழித்து அன்னாரிடம்ஜீவகாருண்யம் காட்ட எத்தனை நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகியும் சைவத்திற்கு ஒன்றுஞ் செய்யமுடியாமற்போய் விட்டால் அச்சமயம் இருந்துதான் என்னபயன்? ஜீவகாருண்யம் பேணுப வர்கள் என்றுகூறிக்கொள்ள சைவர்களுக்கு வெட்கமில்லையா? என்று கேட்கிறேன். எத்துணை நாளைக்கு ஜீவகாருண்யம்! ஜீவ காருண்யம்! என்றுமக்களை ஏமாற்றுவது, எல்லோரையும் எக்காலமும் ஏமாற்றமுடியுமா? இனி ஒருநிமிடமும் சைவர்களின் ஏமாற்றம் செல்லாது. ஏமாற்றுவதற்கு இதுபோழ்து ஏமாறுபவர்கள் இல்லை. எனவே சைவக்கோட்டையைத் தகர்த்து ஆங்கு ஆயிரக் கணக்கான சுயமரியாதை வீரர்கள் உள் நுழைந்துவிட்டார்கள், ஆங் குள்ள போலிசைவத்தைக்கொன்று சுயமரியாதை வெற்றி முரசை யொலிக்க ஆரம்பித்துவிட்டார்கள். திருநெல்வேலி இளைஞர் சுயமரியாதைச் சங்கத்தின் ஆதரவில் நடைபெறும் விதவா விவாக சபைக்கு நூற்றுக்கணக்கான சைவ யுவர்கள் விண்ணப்பமனு (அப்ளி கேஷன்) அனுப்பி நாங்கள் விதவைப் பெண்ணை மணந்து கொள்ளத் தயார். பெண் எச்சாதியைச் சார்ந்திருந்தாலும், எம்மதத்தைச் சார்ந் திருந்தாலும் இருக்கட்டும் என்று மிகத் தைரியமாய் முன்வந்து விட்டார்கள். ஆனால் யுவர்கள் போன்று யுவதிகளான கைம் பெண்கள் முன்வரவில்லை, எனவே திருநெல்வேலி ஜில்லாவில் போதிய விதவா விவாகம் நடத்த முடியாதிருக்கிறது. இதற்கு ஒரு சுயமரியாதைப் பெண் தொண்டர் நியமித்துப் பிரசாரஞ் செய்ய ஏற்பாடு செய்தால் பெருநலமடையலாம் என்பது என் நம்பிக்கை. இதனிடையே சென்ற ஆண்டு டிசம்பர் மாதக்கடைசியில் தூத்துக் குடியில் உயர்திரு. மறைமலையடிகள் புதல்வியார் சோதரி திருவரங்க நீலாம்பிகை அம்மையார் அவர்கள் தலைமையில் கூடிய சைவர் களின் கூட்டத்தில் விதவைகளுக்கு ஓர் ஆச்சிரமம் நிறுவவேண்டும் என்று தீர்மானஞ் செய்திருப்பதாய் சுதேசமித்திரன் மூலமாய் அறிந்து கழிபேருவகையடைகின்றேன் என்றாலும் அவ்வாச்சிரமத் தின் முழு நோக்கம் தெளிவாய் தெரியவில்லை. ஆச்சிரமம் நிறுவி விரும்பும் கைம்பெண்களை மணஞ் செய்து கொடுக்கவா? அல்லது விதவைகளைச் சேர்த்து சிவத் தொண்டு புரியக் கற்பிக்கவா? அல்லது முற்காலம் போல் விதவைகளுக்கு தேவாரம் பாடவும், திரு மெழுகிடவும், திருக்கோலம் போடவும், பூக்கொய்துவரவும் செய்வதோடு, சிவனடியார்களின் காம இச்சையைத் தணிக்கவும் செய்யத்தக்க நல்ல தேவரடியார்களை உற்பத்தி செய்யவா என்பது விளங்கவில்லை. விதவைத் தன்மை யடைந்த பெண்களை ஆச்சிரமத் தில் சேர்த்து அங்கு அவர்களுக்குக் கல்வி, கைத்தொழில் கற்பித்து விரும்பிய பெண்களை மணஞ்செய்து கொடுப்பது அவ் விதவா ஆச்சிரமத்தின் நோக்கமென்றால் யாமும் எம்போன்ற சுய மரியாதைத் தொண்டர்களும் அவ்வாச்சிரமத்துக்கு போதிய உதவி புரியக் காத்திருக்கின்றோம் என்பதோடு திருநெல்வேலி விதவா விவாக சங்கத்திற்கு மனுச்செய்து விவாகஞ் செய்து கொள்ள விரும்பும் யுவர்களின் அப்ளிக்கேஷன் எல்லாவற்றையும் தூத்துக்குடி சைவ விதவைப்பெண்கள் விடுதிக் காரியதரிசிக்கு அனுப்பவும் தயாரா யிருக்கின்றோம். விதவைகளை மணஞ் செய்து கொடுத்தல் நீதி யென்ற கருத்தோடு விடுதி ஆரம்பிப்பது மெய்யானால் தூத்துக்குடி சைவ மங்கையரின் ஜீவகாருண்யச் செயலைப் போற்றுவதோடு தீர்மானஞ் செய்து நிறைவேற்றி அதை அனுஷ்டானத்திற்கு கொண்டு வரப்பாடுபடும் சோதரிகட்கு என் முழு நன்றியையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன். ïj‹ K‹d® ö¤J¡FoÆY« ghisa§nfh£il ÆY« ïu©L, _‹W Éjth Éthf§fŸ eilbg‰w nghâY« ï›th©ony m‹g® âUTl Rªju« v«.V.,ã.vš., செய்த கலப்பு மணமும் சுயமரியாதை வீரர்களான ஏ. இராமநாதர் செய்த விதாவா விவாகமும் தோழர் இரத்தினசபாபதி செய்த கலப்பு விதவா விவாகமும் குலசேகரன் பட்டினம் தோழர் சி.டி. நாயகம் அவர்களின் அருமுயற்சியால் குலசேகரன் பட்டினத்திலுள்ள ஒருசைவ விதவைப் பெண்ணிற்கும் வெள்ளூரிலுள்ள ஒரு சைவ ஆண்மகனுக்கும் செய்த திருமணமும் மிக விசேஷமானது. ஆனால் பிற்கூறியமூன்று திருமணங்களும் ஒரு மாதத்திற்குள் நடைபெற்றன. எனவே சுய மரியாதைக் கொள்கைகள் அதிதீவிரமாய் திருநெல்வேலி ஜில்லா வில் பரவி வருகிறதென்பதோடு வருங்காலத்திலே சுயமரியாதை முன் னின்று நடத்த இச்சில்லாவின் சைவ இளைஞர்களே முன்வருவர் என்பதும் எனது நம்பிக்கை. இத்திருமணங்கள் நடைபெற்றதைக் கேட்டு சைவர்கள் வாய் பேசாது மௌன முற்றுவிட்டார்கள். இன்னும் அவர்கள் தம் வாயைத்திறவாது மோனமுற்றிருந்தால் நலமடைவர். அன்றேல் சுயமரியாதை என்னும் வெடி குண்டின் முன் அகப்பட்டு அல்லற்பட்டொழிவர் என்பது திண்ணம். திருநெல் வேலி ஜில்லாவில் சுயமரியாதை இயக்கம் வெற்றிபெற வேண்டுமா னால் நிரம்ப காதல் மணம், கலப்புமணம், விதவை மணம் பெருகத் தொண்டர்கள் போதிய முயற்சி செய்வார்களாக. சைவக் கோட்டையைத் தகர்த்து,பொதுவாகச்சமீபத்தில் சுயமரியாதை மணஞ் செய்த அன்பர்களுக்கும் சிறப்பாக தோழர் இரத்தின சபாபதி அவர்களுக்கும் என் நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன். - (குடியரசு 15.5.1932) கடவுள் வெறியும், மதவெறியும் கடவுள் என்றால் என்ன? யாண்டுளது எத்தன்மையது? அத் தகைய பொருளொன்று ஏனிருத்தல் வேண்டும் என இவ்வுலகந் தோன்றிய நாள்முதல் கேட்கப்பட்டுவருகிறது. அதற்குத்தகுந்த விடை எவராலும் இன்றுவரை கொடுக்கப்படவில்லை. ஒவ்வொரு சமயதாபகர்களும் தத்தமக்குத் தோன்றியவாறு கூறிச்சென்றார் களேயொழிய மக்கள் கொண்ட ஐயத்தைப் போக்கினார்களில்லை. ஒருவர் சக்தியே கடவுள் என்றார், மற்றொருவர் அன்பே இறைவ னென்றார், பின்னொருவர் அறிவே ஆண்டவனென்றார், இன்னொ ருவர் எல்லாம் நானே என்றார், பிறிதொருவர் கடவுள் உண்டென் றால் உண்டு இல்லையென்றால் இல்லை என்றார், ஒருவர் இது சம்பந்தமாய் பேசுவதே பாவம் இவ்வித ஐயம் கொண்டவர் பெருநர கடைவரென மொழிகின்றார். ஒவ்வொரு சமய ஆச்சாரிகளும் கடவுள் இந்நிறத்தன், இவ்வண்ணத்தன் என்று கற்பனை செய்து மக்கள் வாழ்க்கை ஒழுங்குற நடைபெறத்தங்களாலியற்றப் பெற்ற சட்டங்களை கடவுளால் சொல்லப்பட்டது, எழுதப்பட்டது. நம்பி நடந்தால் மோட்சம், இல்லாவிடில் நரகம் என்று பயங்காட்டி தாங்கள் வகுத்த சட்டங்களின்படி நடக்கத் தூண்டினர். அக்காலத்திய மக்கள் பலர் ஏற்றுக்கொண்டனர். பிற்காலத்தில் கடவுளுணர்ச்சி யும் கடவுளால் உண்டாக்கப்பட்ட கதைகளும் அதன் சட்டதிட்டங் களும் மக்களுக்குக்கேடு விளைப்பனவாய் விடவே புத்தர்பிரான் போன்ற அறிஞர்கள் மக்களுக்கு வேண்டிய சட்டதிட்டங்களை உண்டாக்கி கடவுளுணர்ச்சியை உலகினின்று ஓட்டப் பெருமுயற்சி புரிந்தனர். கடவுளுணர்ச்சி குறையவே சுயநலமிகளான புரோகிதர்கள் பிழைப்புக்குப் பங்கமேற்பட்டது. உடனே பலவித சூழ்ச்சிமுறை யாலும் புத்தர்கண்ட நல்லியக்கத்தை இந்தியாவைவிட்டுத் துரத்தி விட்டனர். பொய்யுடையொருவன் சொல்வன்மையினால் மெய் போலுமே மெய்போலுமே என்ற முதுமொழிக்கிணங்க வாக்கு வல்லமை கொண்ட புரோகிதப் பூண்டுகள் கடவுள் பெயரை தாபிக்கக்கையாண்ட முறைகள் மிகமிக இழிந்ததாயிருந்தது. கனவிலும் நினைவிலும் கடவுள் வந்து பேசிய கட்டுக்கதைகளும் ஊமைகள் பேசிய கதைகளும் அறுக்கப்பட்ட மச்சங்கள் துள்ளிக் குதிக்கும் கதைகளும், பிள்ளையில்லாதவர்கள் கடவுளை வணங்கிப் பிள்ளை பெற்ற கதைகளும் புருஷனே அறியாத கன்னிகைகள் பிள்ளைபெற்ற புராணங்களும் நாடெங்கும் பரவும்படி செய்துவிட் டனர். யாண்டும் அசைக்க முடியாத படி கடவுளுணர்ச்சி திரப் பட்டு விட்டது. கடவுளுணர்ச்சியினாலே உலகிலே எண்ணத் தொலையாத மதங்களும் வேதங்களும் புராணங்களும் சாதிகளும் கட்டுப்பாடுகளும் தோன்றி மக்களை நாளடைவில் அஞ்ஞானப் படுகுழியிலாழ்த்தி ஊரெங்கும் நாடெங்கும் கோவில்களென்னும் கள்ளர்குகைகளை-இல்லை-விபசாரவிடுதிகளைப் பெருக்கி மக்கள் கஷ்டப்பட்டுத்தேடிய பொருள்களை பயனற்ற வழியில் வாரி யிறைத்து அதனால் மக்களுலகிலே ஹிந்து, முலீம், கிறிதுவன் என்ற மத பேதங்களையும் பார்ப்பனர், வேளாளர், மறவர், இடையர், யூதர், ஆங்கிலேயர், நீக்ரோவர் முதலிய பேதங்களையும் பெருக்கி என்றுமுலகில் வேற்றுமையும் விரோதத்தையுமுண்டாக்கி ஒருவருக் கொருவர் சண்டையிட்டு இரத்த ஆறுபெருகிக் கோடிக்கணக்கான மக்கள் சாகும்படி செய்துவிட்டது. வியாதியினால் இறந்த மனிதர் களைப்பார்க்கிலும் உலகிலே கடவுள் பக்தியினால் வெறிகொண்டு சண்டையிட்டு இறந்தமனிதர்கள் பலர். எனவே கடவுளுணர்ச்சியி னால் நாட்டில் நடைபெறும் அக்கிரமங்களையும், அவமானங் களையும் விபரமாய் வெளியிட்டால்தான் அவ்வுணர்ச்சி ஒழிதல் அவசியமென்னு முடிவிற்கு மக்கள் எளிதில் வரக்கூடும். எனவே இதனடியில் அவைகளை வெளியிடுவாம். மக்களுலகிற்கு கடவுளைப் பற்றிய எண்ணமும் கொள்கையும் பெருந்தீங்கு விளைவித்துக் கொண்டு இருப்பதினாலேயே கடவுளைப்பற்றிய கவலைகளையும் ஆராய்ச்சிகளையும் தர்க்கங்களையும் புராணங்களையும் ஒழித்து விட வேண்டுமென்று சுயமரியாதை இயக்கம் சொல்லுகிறதே தவிர கடவுளில்லையென்று பிரசாரம் பண்ணவரவில்லை. இவ்விதம் கூறுவதிலிருந்து அவ்வியக்கத்தின் எதிரிகள் இது ஒரு நாதிக இயக்கம் என்று பிரசாரம் பண்ண ஆரம்பிக்கவே, ஆம் நாம் நாதி கர்கள் தாம், உங்கள் மிரட்டலுக்கு அஞ்சுபவர்கள் யாங்களல்ல நீங்கள் சொல்லுகிற வடிவமும் தன்மையும் குணமுமுடைய ஒரு கடவுள் உண்டென்று நிரூபிக்க நீங்கள் காட்டும் ஆதாரங்களைவிட அத்தகைய கடவுள் இல்லையென்று காட்டத்தக்க ஆதாரங்கள் அனந்தமுண்டு என்று தோழர்களான சிங்காரவேலு, நாதிகன் குப்புசாமி முதலிய நல்லோர் நயம் பெற நவில்கின்றனர். அவர் களுடைய மறுக்கமுடியாத கேள்விகளுக்கு யாரே பதில் கூறவல்லார். மேனாட்டில் தோன்றிய பல நிரீச்சுரவாதிகளாகிய பென்சர், கார்லைல், டைண்டால், ஹக்ஸி முதலிய அறிஞர்களினும் மேம் பட்ட பெரியார் இங்கர்சாலின் சொற்பொழிவின் முன்னே அறிவில் மேம் பட்ட மேனாட்டு ஆதிகக்குழாங்கள் இடியோசை கேட்ட நாகம் போற் பதுங்கிவிட்டனர். நமது நாட்டிலும்கூட இந்து மத பிரமாண நூல்களாகிய ஆறு சாதிரங்களில் கிட்டத்தட்ட நான்கு சாதிரங்கள் நிரீச்சுவர சாதிரமாய்த்தான் மிளிர்கின்றன. சுமார் 60, 70 ஆண்டுகளுக்கு முன்னர்கூட திருச்சியில் தோன்றிய பேரறிஞர் முத்துசாமி முனிவர் விஞ்ஞான சாதிரம் (ளுஉநைஉந டிடிம) என்றொரு சிறந்தநூல் அச்சிட்டிருக்கிறார். துரதிஷ்ட வசமாய் அந்நூல் போதிய பிரபல்யம் பெறாமற்போய் விட்டது. அந்நூலிலே கடவுள், வேதம், மதம், உலக உற்பத்தி முதலியவைகளைப் பற்றி அவர் கூறும் கூற்றுக் களை வாசகர்களின் நன்மையை உத்தேசித்து வெளியிடுவோம் அன்பர்கள் ஆராய்ந்து பார்ப்பார்களாக. கடவுளிருந்தால் தன்னைக் காட்டுவாரென்பது 1. அண்டமுதற் பலவான உருவமெல்லாம் அமைத்து வைத்த கடவுளென்போரருகிருந்தால் தொண்டரென விளங்கும் உருவங்கள் காண தோன்றி யவர்பலதுன்பத்துயரை நீக்கி விண்டதென தன் செயலை யார்க்குங்காட்டி விளங்காரோ மனத்துதித்த விசனந்தீரக் கண்டாரார் அமுதுகரங் குவித்தலாலே காணவசமாமோ பொய்க் கதையின் கட்டே கடவுள் எந்த சத்துடையது 2. சத்தன்றிப் பொருளுண்டோ அறிவுள்ளோர்க்கு சாட்சியன்றிப் பேசிடவும் வாய்தானுண்டோ பற்றன்றி நின்ற வொன் றுளதோ வென்று பாராமற் புலம்பி வயிர் வளர்க்கும் பேர்கள் எத்தன்றி செய்வதென்ன முன்னோர்கூடி இசைத்த பொய்யை மெய்யெனவே இருமாப்புண்டு சுற்றன்றி வழிகண்டோம் வாங்களென்று சூதுடைய நூல் வலையிற் சுருக்கினாரே தெய்வம் பொய்யெனல் 3. ஐயமொன்றில்லா நம்மை யமைத்துளமிருப்பானாகிற பொய்யன் எவ்வாறு நம்முட்புகுந்தனனவனையன்றி மெய்யனும் பொய்யனோடு மென்னுடன் மூன்றாய்நின்றால் வையகந்தனிலே யொன்றாய் வாழ்த்துதென்ன கண்டே. கடவுளைக்காணாமல் தொழுகிறவர் பலன் பெறார் எனல் 4. யசமானை யின்னவனென்ற றிந்திடாமல் யெய்ப் பிளப்பில்லாமலே இருளன்மண்ணை வசமாக வெட்டியன்று முழுதும் போட்டு வாடி நின்றால் அவன் கூலி வருமோகையில் நிசமாக எதையும்முற்றே யாய்ந்திடாமல் நின்றனந்த நூல்கள் செய்த நேர்மையாலே பிசகாமல் மனுச்செய்த தவசு நோன்பைப் பெற்றவரார்கண்டு செய்யார் பெறுவதேதே பஞ்சபூதியங்களாற் சகலமும் உண்டாயிற்றெனல் 5. கருத்து நின்ற ஐம்பூதம் ஒன்றோடொன்று கலக்கும் விவகாரத்தால னேகமாக உதித்தவைகள் மென்மேலு மாறலாலே உண்டான வுருபேதம் கணக்கிற்கெட்டா மதித்தறிவதறிவாகும் வெளியினாட்டம் மாய்கை யென்பார் தனையறியா மாய்கை தன்னை விதித்த விதம் சித்தர்கள் வந்துரைத்திட்டாலும் விளங்காது மாய்கைகொ ண்ட வேடத்தோர்க்கே. இரண்டு பொருளிருக்குமெனில் ஒன்றையொன்று தொழதெனல் 6. பண்டான ஐம்பூதமன்றி யொன்றைப் பார்க்கவென்றால் அதின் மேலோர் பலனுமில்லை துண்டாகி நிற்குதென்ற மனப்பேயற்கு தோற்றது தோற்றுதற்குப் பொருளுமில்லை கண்டாய்ந்து வுண்மைவெளிப் படவெல்லோரும் கட்டியதோர் நூலாலும் கருத்தினாலும் உண்டான பொருளதென்று காட்டவல்லோர் உலகில் முன்னுமில்லை பின்னுமில்லை உண்மைதானே. சீவர்கள் வரும் விதம் 7. சிறந்தவுயிர் தனையொரு வனனுப்பவந்து செனித்ததென்று நூல்தோ றுஞ் செய்தார் முன்னோர் பறந்த புவிதனைத் தேடித் தடாகஞ் செய்து பாங்கான புனல் நிரம்பிச் சில நாட்சென்றால் நிரந்தரமாய் அடர்ந்த சத்துத் திரண்டங்கங்கு நீங்காத ஊர்வனவாம் சீவர்கோடி தறந்தறமாய் யியல்பாய் வந்து திக்கும்மல்லால் தானொருவன் படைத்த னெற்ற தன்மையேதே. ஒருபொருளை உண்டு பண்ணினவன் அழிக்கானெனல் 8. கற்றோன் ஓடந்தனைச் சமைத்துக் கருதியதைப் பின்னு டைப்பானோ எத்தேவரையுமுருக்களை யேதுக்கமைத்தான் ஏனழித்தான் பித்தோவவனைப் பெரும்பேயோ பிடைத்தோபடைத்துப் பிழை செய்தான் சற்றேயிதனைப் பகுத்தறிந்தால் சகத்தினியல்பு வெளியாமே. என்று கூறியிருப்பதோடு இன்னும் பல அறிஞர்கள் கடவுளென்ப தொன்றில்லை யென்று போதிய ஆராய்ச்சியுடன் நூற்களெழுதி யுள்ளார்கள். சைவசித்தாந்தம் கூட கடவுளால் உயிர்கள் உற்பத்தி செய்யப்படவில்லை யென்பதை ஒத்துக்கொள்கிறது. மேனாட்டு விற்பன்னரான டார்வின் சித்தாந்தம் கடவுளால் மனிதன் முதலில் தோன்றினான் என்ற கொள்கையைத் தவிடுபொடியாக்கி விட்ட துடன், விஞ்ஞான சாதிரங்களின் உண்மை வெளிப்பட கடவுள் உண்டென்று கூற முடியாததாய் விட்டது. உலகிலே கிட்டத்தட்ட 2 கோடி நாதிகர்கள் பெருகிவிட்டார்கள். கடவுள் மறுப்புச் சங்கம் பல நாடுகளில் தோன்றி மறுக்க முடியாத காரணங்களைக் காட்டி, கடவுள் உண்டென்று பேச வழியில்லாமற் செய்து விட்டது. உலகிலே ஒரு பெரிய மகாத்மாவாய் போற்றப்பெறும் தோழர் காந்தியும் ஒரு சிறு மாணாக்கனிடம் கடவுள் உண்டென்று நிரூபிக்க முடியாமல் எல்லாம் நம்பிக்கையைப் பொறுத்ததே, உண்டென் றால் உண்டு இல்லையென்றால் இல்லையென்று கூறிவிட்டார். இவ்வாறெல்லாம் இருந்தும் சுயமரியாதைச் சங்கம் கடவுள் இல்லை யென்று பிரசாரஞ்செய்யாமல் கடவுளைப் பற்றிக் கவலை கொள்ளவேண்டாம், கடவுளுக்கென காசைச் செலவழிக்கவேண் டாம், கடவுள் பேரிற் கூறும் விபசாரக்கதைகளில் நம்பிக்கை கொள்ளவேண்டாம், கல்லைக் கடவுளென நம்பி மோசம் போக வேண்டாம், கடவுளால் உண்டாக்கப்பட்டதாகச் சொல்லும் சாதிரங்களும் வேதங்களும் ஜாதிகளும் பார்ப்பனரல்லாதா ரிடமுள்ள பொருளைப்பறித்து, அவர்களைத்தாழ்த்தி, அவர்கள் அறிவில் சிறந்து விளங்க விடாமற் செய்யும் ஆயுதங்களென்றே இன்று வரை சுயமரியாதை இயக்கம் சொல்லிவருகிறது. கடவுள் (பொருள் ஒன்றிருக்க) இல்லை என்று சொல்வதில் சுயமரியாதை இயக்கத்திற்கு எவ்வித லாபமுமில்லை. சுயமரியாதைக் காரர்களில் எவராவது கடவுள் இருக்கிறதா? இல்லையா? என்ற ஆராய்ச்சித் துறையில் இறங்கவில்லை. இறங்குவது ஒரு நாளைக்கு 0-1-9 அணா வரும்படியுள்ள சராசரி 24 வயதுள்ள நமக்கு (இந்தியர்களுக்கு) வேண்டாம். சராசரி ஒரு நாளுக்கு 4 க்கு மேற்பட்ட வரும்படியுள்ள, சராசரி 56 வயதுக்கு மேற்பட்டவயதுள்ள அமெரிக்கர்கள் செய்து கொண்டிருக்கட்டும் என்று கருதுகின்றது. இதுவரை கடவுளைப் பற்றி ஆராய்ச்சி செய்துள்ள இந்திய ஆதிகர்களும் கடவுளை யான் கண்டேன், காணும்வழி இதுவென்றும் கூறாமல் கடவுள் காண முடியாதது, அறிய முடியாதது, இப்பேர்பட்டது என்று சொல்ல முடியாதது, ரூபமில்லாதது, அரூபமில்லாதது சூன்யமானது (ஒன்று மில்லாதது) வெட்ட வெளி, வெறும்பாழ் என ஏதேதோ வாய்க்கு வந்ததெல்லாம் பிதற்றுவதுடன் கடவுளைக்காண வேண்டுமானால் பரதேசிகளுக்கும் கோயில்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் உன் சொத்தைக்கொடு, உன்மனைவியைக் கேட்கும் சிவபக்தர்களுக்குக் கொடுத்துவிடு, தாய்தந்தை அண்ணன் தம்பி முதலியவற்றை வெறுத்து நாடுதுறந்து காடுபுகுந்து அன்னந்தண்ணீரின்றி காற்றை நுகர்ந்து நிர்வாணமாய்த் திரிந்தால் கடவுளைக்காணலாம். அதாவது நீ சாகலாம் என்பதுதான் ஆதிகர் சிகாமணிகளின் உபதேசம். எனவே தான் இத்தகைய போலிமிரட்டுகளையெல்லாம் கண்டு சுய மரியாதை இயக்கம் கடவுள் சம்பந்தமாய் தான் கண்ட உண்மை களைத் தெளிவாய்ப்போதித்து வருகிறது என்றாலும் எம் ஆதிகத் தோழர்களே! ஒரு சுயமரியாதைக்காரன் உங்கள் பிடிவாதத்திற் கிணங்க கடவுள் ஒருவர் உண்டென்று ஒத்துக்கொண்டாலும் (பகுத்தறிவுவாதிகள் அவனை மூடநம்பிக்கைகாரன் என்று எண்ண இடங்கொடுத்தாலும்) கடவுளுணர்ச்சியும் அது சம்மந்தமான புராணங்களும் புரட்டுகளும் ஒழியக் கூடாதென்பதையும் ஒப்புக் கொண்டால் அவன் ஒரு சுயமரியாதைக்காரனாக விளங்க முடியா தென்பதோடு உலகில் இன்று பரவி நிற்கும் அடிமைவாழ்க்கையை யும் மூடநம்பிக்கையையும் ஒழித்து, முதலாளி தொழிலாளி, பணக்காரன் ஏழை, உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி முதலியவேற்றுமை களை அழித்து பகுத்தறிவை வளர்த்து மனுக்குலம் சுபிக்ஷமாய் வாழச்செய்ய முடியாமற்போகும் என்பது பின்வரும் காரணங்களால் உங்கட்கு தெற்றென விளங்கும். விபசாரத்தை விருத்தி செய்கின்றன கடவுள் உணர்ச்சியே நாட்டில் விபசாரத்தை மலியச்செய்து விட்டது என்பது மறுக்க முடியா உண்மையாகும். எந்த அயோக்கிய மான செயலைக் கடவுள் செய்யும்படி அனுமதி கொடுத்திருக்கிறார் என்று ஒரு மூடன் ஒரு நூல் எழுதிவிட்டால் அதை நம் நாட்டி லுள்ள எல்லா அறிஞர்களும் மறுக்காமல் ஒத்துக்கொள்ளும் மனப் பான்மையைப் பெற்ற மக்களைக் கொண்ட நாடு நம்மிந்தியா. எனவே உலகில் பல படித்த அயோக்கியர்கள் தாங்கள் செய்துவரும் விபசாரக்குற்றத்தை மறைக்க கடவுளும் பல விபசாரம் புரிந்ததாக கதைகட்டிவிட்டார்கள். எனவே உலகில் விபசாரம் புரிதல் தவறானசெயல் அல்லவென்று மக்களில் பலர் எண்ணும்படி செய்து விட்டது. அஃதுடன் எத்தகைய விபசாரம் புரிந்தாலும் பலவந்தமாய் ஒரு பெண்ணுடன் புணர்ந்தாலும் கடவுளுக்கு காணிக்கை கொடுத்து விட்டாலோ அல்லது 4 மாதாந்தம் திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலுக்குச் சென்றுவந்தாலோ, அல்லது பத்து பார்ப்பார்களுக்கு பிராமணபோஜனஞ் செய்து வைத்தாலோ, இராமேவரம் போய்த் தீர்த்தமாடினாலோ எல்லாப்பாவமும் விமோசனமாய் விடும் என்று கடவுள் கூறியிருக்கிறார் என்பதை மக்கள் நம்புவதினால் நமது நாட்டில் நாளடைவில் விபசாரம் பெருகி வருகிறது. அரசாங்கத்தார் எத்துணை கடுமையான முறையைக் கையாண்டு விபசாரத்தை நிறுத்த முயற்சித்தாலும் பலனுண்டாகப் போவதில்லை. சட்டத் தோடு மக்களுக்குண்டாகிய மதபக்தியை (அதாவது மதவெறியை) ஒழிக்கவும் பிரயத்தனப்பட வேண்டும். கடவுள் பக்தர்கள் அல்லது பார்ப்பனப் புரோகிதர்களின் காம இச்சையைத் தணிப்பது புண்ணியமான செயலென்ற நம்பிக்கை மக்களுக்கு இருந்துவரும் வரை விபசாரதோஷம் தீர்த்த யாத்திரையால் ஒழிந்துபோகுமென்ற மூட எண்ணமிருக்கும் வரை விபசாரம் ஒழியப்போவதில்லை. இன்று நாட்டில் விபசாரிகள் பெருகுவதற்கு பெரும்பாலும் காரணங் களாய் மிளிர்வது கோயில்கள், விழாக்கள், பொட்டுக்கட்டல் (அதாவது கடவுள் விபசாரம் செய்ய அனுமதி கொடுத்தல்) முதலியவை களாகத் தானிருக்கிற தென்பதை யாரே மறுக்கவல்லார். சைவசமய அன்பரிலொருவர் சிவபக்தர் ஒருவர் தன்மனைவியை விழைந்தார் என்பதையறிந்த உடனே அவரிடம் தம்மனைவியைக் கூட்டிக் கொடுத்தார் என்றும் அதனால் அவர் நாயனார் பட்டத்தைப் பெற்றார் என்பதையும் மக்கள் நம்பிக் கொண்டிருக்கும் வரை நாட்டில் எவ்வாறு விபசாரம் ஒழியும். விபசாரம் பெருக நம்மக்கள் கொள்ளும் பிள்ளைப் பைத்தியமே பெரும் வழியாகக் காணப் படுகிறது. பல வீடுகளில் பிள்ளையென்று பற்பல கோவிலுக்குச் செல்வதும் மாவிளக்கு பாற்பதும், வசனமிருப்பதுமாய் கோவிலில் தங்கியிருப்பதும் கோவிலிலேயுண்டு கொழுத்து வாழும் தடியர்கள் இப்பெண்களை பெண்டாள்வதும் பலபேதைப் பெண்கள்கடவுளே நமக்குப் பிள்ளை கொடுக்க வந்து நம்முடன் சம்போகம் பண்ண வந்திருக்கிறார் என்று கண்ணை இறுக மூடிப்படுத்துக்கொள்வதும் அத்தடியர்கள் பேதைப்பெண்களை கற்பழித்துச் செல்வதும் சிற்சில சமயம் அச்சம்போகத்தினால் குழந்தை உற்பத்தியானால் கடவுள் அருளால் குழந்தை யுற்பத்தியானதாக அப்பெண்மணிகள் அக்கட வுளைப் பற்றி பெரிய விளம்பரம் செய்து ஏராளமான பெண்களை கோயிலுக்குப்போகச் செய்வதும் அக்கோயிலிலுள்ள சாமியின் பெயரை தம் பிள்ளைக்கு இடுவதும், வேறுசிலர் மந்திரவாதிக ளென்று பிள்ளை கொடுத்து விடுவேன் என்று வீடுகளுக்கு வந்து 40 நாள் பூஜை 60 நாள் பூஜை என்று ஏராளமான ரூபாய்ச் செலவை யிழுத்து விட்டு, வீட்டிலுள்ள பெண்களை பற்பல ஏமாற்று வழி களால் கற்பழிப்பதும் சில அறிவிலாப் பெண்கள் அவ்வயோக்கிய மந்திரவாதிகளின் கையிலிருந்து தப்பிக்கவழி தெரிந்தும் பிள்ளைப் பைத்தியத்தால் மயக்குண்டு எப்படியாவது பிள்ளைகிடைத்தால் போதுமென்று சும்மாவிருப்பதும் நாம் கண்டும் கேட்டும் வருகின் றோம். பிள்ளைப்பைத்தியத்தால் கடவுள் பிள்ளை தந்து விடுவார் என்ற மூட நம்பிக்கையால் நடந்த உண்மையான சம்பவங்கள் சில வற்றை கீழே தருகின்றோம். அன்பர்கள் ஆராய்ந்து பார்த்து தெளிவார்களாக. எமது ஜில்லாவின் பிரதான நகரமொன்றிற்கு அருகிலுள்ள சிற்றூரில் இற்றைக்கு எட்டு ஆண்டுகட்கு முன்னர் ஓர் அழகிய யுவதி ஒருவள் வடநாட்டிலிருந்து வந்து குடி புகுந்தாள். அப்பெண்மணி செண்பகமலரெனச் சிவந்த மெய்யினள். அவளது அழகிய முகார விந்தம் கண்டோரை வசீகரிக்கும். அவளுக்கு வயது சுமார் 20 அல்லது 22 என்று மதிக்கலாம். அவளுடைய பேச்சும் நடையுடைகளும் மிகுந்த நாகரிகமுடையதாயிருந்தது. அவளிடம் உரையாடிய எவரும் இனி இம்மங்கை நல்லாளோடு எப்பொழுது பேச சந்தர்ப்பம் வாய்க்கும் என்று எண்ணி ஏமாந்திருப்பர். இம்மடமாது இவ்வூருக்குப் போந்த சின்னாட்களுக்குள் தாம் வசிக்கத் தகுந்த ஜாகையொன்றை அமைத்துக்கொண்டாள். அங்கு ஆண்மக்கள் எவரும் போக முடியாது. தனக்கு உரிய வேலையாட்களெல்லாம் பெண்களாகவே வைத்துக்கொண்டாள். தம் ஜாகைக்குள் ஒரு பெரிய பூஜை மடம் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டாள். காலையி லும் இரவிலும் பூஜை நடைபெறும். அப்பூஜைக்கு ஏராளமான பெண் மக்கள் சென்று வந்தனர். திடீரென அப்பெண்மணியின் பெயர் ஜில்லா முழுவதும் பிரபல்யமாயிற்று. அப்பெண்மணி நல்ல ஜோதிட சாதிரியென்றும் எத்தகைய பேய் பிசாசுகளையும் விரட்டியடிக்கத் தக்க மாட்சியுள்ளவள் என்றும் வைத்தியத்தில் மிகுந்த நிபுணத்துவமுடையவள் என்றும் எங்கும் பெரிய விளம்பர மாகி விட்டது. ஏராளமான பெண்மணிகள் தங்களைப் பீடித் திருக்கும் கெட்ட காலங்கள் எப்பொழுது நீங்குமென்றும் தங்கள் மக்களுக்கு எப்பொழுது மணம் நடைபெறும் என்றும் தங்கள் பந்துக்களுக்கு கருப்பு அணுகியிருக்கிறதைப் போக்குதல் வேண்டு மென்றும் நீண்ட நாளாய் தங்களுக்குப் பிள்ளையில்லை ஆகையால் பிள்ளை வரம் வேண்டுமென்றும் கேட்டுப்போய் வந்தனர். பெண்கள் அதிகப் பேர் போய் குழுமியதால் அங்கு சில அயோக்கியர்கள் நடந்துகொண்ட துஷ்டத்தனமான செயல்களுக்குஅளவேயில்லை. பிள்ளையில்லை, பிள்ளை வரம் வேண்டுமென்று சென்ற பெண் களில் வாலிபமும் அழகும் இல்லாத பெண்களுக்கு உனக்கு பிள்ளை வரம் கிடைக்க முடியாதென்று கூறி அம்மாது அனுப்பி விடுவாள். அழகிய யுவதிகளைப் பார்த்தால் உனக்குப் பிள்ளை வேண்டுமா னால் நீ மடத்தில் 40 நாள் நோன்பு இருக்கவேண்டுமென்பாள். அப்பெண்ணும் இணங்கியிருப்பாள். அப்பெண்ணின் உறவினரான ஆண் மக்கள் எவரும் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. இரவில் மிகுந்த சுத்தமான ஓர் அறையில் அப்பெண் தனியாக நித்திரை செய்ய வேண்டும். மாந்திரிகக்காரியாகிய இப்பெண் பிள்ளைவரம் பெற ஆங்கு போந்த பெண்ணை அழைத்து, அம்மா உன் விஷயமாய் நமது தேவியிடம் எவ்வளவோ மன்றாடி கேட்டிருக்கிறேன். இன்றைக்கு பதினைந்தாம் நாள் இரவில் நடுயாமத்தில் அம்மன் உன் மீது வந்து விளையாடுவாள். அப் பொழுது கண்களைத் திறந்து பார்க்கவே கூடாது. மீறிப்பார்த்தால் கண்கள் பொட்டையாய் விடும். பிறகு என்மீது குறைகூறக்கூடாது. அம்மன் உன்னை விட்டு நீங்கி, அரைமணி நேரத்திற்குப் பின்னரே கண்விழிக்கவேண்டுமென்று காதில் ரகசியமாய் ஓதிவிடுவாள். அவ்வாறே குறிப்பிட்ட நாளிரவில் அம்மன் போய் அப்பெண்மணியுடன் சம்போகஞ்செய்து விட்டுப் போய்விடும். அரைமணி நேரங் கழித்துப் பெண் கண் விழித்துப் பார்த்தால் உண்மையிலே தன்னுடன் அம்மன் வந்து சம்போகித்து விட்டுப்போயிக்கிறாள் என்று பேதைப் பெண்கள் பலர் எண்ணி னார்கள். இப்படி எத்தனையோ பணக்காரர் வீட்டுப்பெண்மணி களெல்லாம் பிள்ளை வரம் பெற்று திரும்பி வந்ததில் அநேகர் பிள்ளைகளுமுண்டானார்கள். சிற்சில சமயம் இம்மந்திரகாரி பெரிய மிட்டாதார்கள், பிரபுக்கள் வீடுகளுக்கு நேராகப் போயும் ஜோதிட முதலியன பார்த்து வந்தாள். இவ்வாறு ஒரு கனவான் வீட்டிற்குப்போயிருந்து வெகுநேரம் சம்பாஷித்துக் கொண்டிருந்து விட்டு தம் ஜாகைக்குத் திரும்பும்பொழுது அவ்வீட்டுக் கனவான் அம்மையே இரவாகி விட்டபடியால் இரவு எமது இல்லத்தில் தங்கிவிட்டு காலையில் போகலாம் என்று கட்டாயப்படுத்தி அன்று தம்மில்லில் தங்கிப் போகும்படி செய்து விட்டார். மந்திரக்கார பெண்மணி இரவில் எவர் வீட்டிலும் தங்கும் வழக்கமும் கிடையா தென்றாலும் தம் மனதிற்கொண்ட சில பேரவாவை நிறைவேற்ற இதுவே சமயமென்று இரவு தங்க இசைந்து கொண்டாள். இரவு போஜனமருந்திவிட்டு அவ்வீட்டில் புஷ்பவதியாயிருந்த ஒரு பெண்ணுடன் இரவு படுத்திருந்தாள். இரவு சுமார் 1 மணிக்கு அப் புஷ்பவதியான பெண் பெரும் கூக்குரலிட்டது. எல்லோரும் விழித்து விஷயமென்னவென்று விசாரிக்க ஓர் ஆண்மகன் தன்னிடம் வந்து பலவந்தமாய் புணரமுயன்றதாய் தன் தாயிடம் கூறினாள். தாய் தன் மகனிடம் கூறினாள். மகன் எங்கும் நன்றாய்ப் பார்த்துவிட்டு கனவாயிருக்குமென்று எண்ணிவிட்டு தன்கருத்தை நிறைவேற்ற இதுதான் சமயமென்று மந்திரகாரியாகிய பெண்ணை ஒரு அறைக்குள் அழைத்து பலவந்தமாய் சோதித்துப்பார்க்க அவள் பெண்ணல்ல, ஒர் ஆண் என்பதை அறிந்து போலீசாரிடம் ஒப்பு வித்தார். விஷயம் ஊரெங்கும் பரவிவிட்டது. பிள்ளைவரம் கேட்கச் சென்று பிள்ளையைப் பெற்றெடுத்த பெண்களெல்லாம் வெளியில் வர வெட்கமுற்று வாயடங்கிவிட்டனர். இதனால் கற்பழிந்துபோன பெண்கள் கணக்கிலர். அவர்கள் கற்பழிந்துபோனது கடவுள் பேரில் கொண்டவெறியும் அதனால் மக்கள் கொண்ட மூட பக்தி யுமல்லவா? என்பதை ஆலோசித்துப்பாருங்கள். (சிற்சில காரணங்கள் இவைகள் நடந்த இட முதலிய விவரங்களை வெளியிட முடியா திருக்கிறது.) இன்னும் சிலவிடங்களில் பிள்ளைவரம் வேண்டுமென்று சுவாமியை நினைந்து பெண்மணிகள் தங்கள் சக்திக்கேற்ப ஒரு முறை இருமுறை சுவாமிபுணர இடங்கொடுப்பதாய் தீர்மானித்துக் கொண்டு சில குறிப்பிட்ட ஆபாசமான விக்ரகங்களுடன் பெண்கள் கூத்தாடி இரவில் கோவிலின் அருகிலுள்ள பச்சையிலைகளால் அலங்கரிக்கப்பட்ட பந்தலில் சயனித்துக்கொள்வார்களாம். இரவில் கோயிற்சோற்றையுண்டு கோவிலிலே வசிக்கும் சில குண் டர்கள் இப்பெண்களோடு புணர்ந்து வருகின்றனர். அப்பெண் மணிகள் உயிரற்ற சாமிகளே தம்முடன் வந்து சேர்ந்துபோனதாக இன்றளவும் எண்ணிவருகின்றார்களாம். டி.பி. ஹண்டு என்ற துரைமகனாரால் எழுதப்பெற்ற கிறிது மார்க்க அத்தாட்சி என்ற நூலின் 109ஆம் பக்கத்தில் கத்தோலிக்க மார்க்கத்தார் கடவுள் வார்த்தைகளுக்கு கீழ்படிந்து நடக்கவேண்டும் என்ற நம்பிக்கையினால் ஏற்படுத்திய ஆணும் பெண்ணும் விவாகம் பண்ணாதிருத்தலும் பாவ மன்னிப்பு என்ற ஒரு மூடச்செயலாலும் உண்டாகும் விபசாரத்தை விளக்கியிருக்கின்றார். அதன் சாரம் பின்வருமாறு. குருமார் விவாகம் பண்ணாதபடி மரிப்பதினாலும், கன்னியா திரீ மடங்களிலே பெண்களும், சந்நியாசி மடங்களிலே ஆண் களும் விவாகம் பண்ணாமலிருக்கச் செய்வதினாலும் பாவ உத்திரவுச் சீட்டு விற்பதினாலும் சொல்ல முடியாத வேசித்தனமும் கொலை பாதகமும் நடக்க ஏது உண்டானது. கிப்பன் என்பவர் ஒரு பேர் பெற்ற சரித்திரக்காரர். அவர் ஒரு அவிசுவாசி. அவர் புரோட்டெ டாண்டு மார்க்கத்தாருக்காகப் பொய் சொல்லுவாரென்று யாதொரு வரும் நினைக்கவிடமில்லை. அவர் சொல்லுவது- பன்னிரண்டாம் யோவானாகிய பாப்புரோமை திரீகளோடு வெளிவெளியாய் வேசித்தனஞ் செய்தார். பாப்புவின் அரண்மனை வேசிகள் வீடு போலிருந்தது. அவர் கன்னிகளையும், கைம்பெண்களையும் வலோற் காரம் செய்தபடியால், சம் பேதுருவின் கல்லறைக்கு யாத்திரை போவதைப் பெண்கள் விட்டுவிட்டார்கள். பத்தாம் லியோவாகிய பாப்புவின் காலத்தில் பாவ உத்திரவு வரியுண்டாக்கப்பட்டது. அதன்படி முறையற்றவர்களோடு செய்யும் விபசாரங்கள் கண்டு பிடிக்கப்படாவிட்டால் அதற்கு வரி ஐந்து குறோஷென், கண்டு பிடிக்கப்பட்டால் ஆறு குறோஷென். அப்படி மறு விபசாரத்துக்கும் சிசுவதைக்கும், மற்றும் பாவங்களுக்கும் வரி நியமிக்கப்பட்டது. அக்காலத்தில் பரிசுத்தவான்களுடைய கல்லறைகளுக்கும் யாத்திரை நியமிக்கப்பட்டது. இந்த யாத்திரைகள் அநேக பாவங்களை நீக்கப் போதிய புண்ணியமுள்ளதென்று ரோமைக் குருமார் போதித் தார்கள். அவைகள் தான் மிகுதியான விபசாரத்துக்குக் காரணமானது. இவைகளைப் பற்றி அக்காலத்துச் சரித்திரக்காரர்கள் எழுதியிருக் கிறார்கள். ஐயப்படுபவர்கள் சரித்திரங்களை ஆராய்ந்து பார்ப்பதே தகுதி. குருமார் வைப்பாட்டி வைத்திருக்கலாமென்று, பாப்புமார் காலத்துக் காலம் உத்திரவு பண்ணியிருக்கிறார்கள். 1484ஆம் ஆண்டு பாப்பு பட்டத்துக்கு வந்த இன்னோசன் என்பவர் பேர்பெற்ற விபசாரி. அவருக்குப்பின் பாப்புவான அலக்குசாந்தர் சகல வேசித் தனத்திலும் அசுத்தத்திலும் மிருகத்தன்மையானவர். இன்வெசுறா (Infessura) என்னும் சரித்திரக்காரன் சொல்வது மிகுதியான ரோமைக் குருமாருக்கு வைப்பாட்டியிருந்தார்கள் ரோமைப் பட்டணத்தி லுள்ள சகல கன்னியாதிரி மடங்களும் வேசிகள் குகையாயிருந்தது என்கிறார். கன்னியாதிரி மடங்களில் பலமுறையுமிப்படித் தீமைகள் நடக்கிறதென்பதைக் காலாகாலங்களில் கத்தோலிக்க அரசாட்சியாரு மறிந்து அக்கூட்டங்களைக் குலைத்து கட்டிடங்களை அரசாட்சியா யிருக்கப் பிடித்து அவைகளை பள்ளிக்கூடங்களாகவும் மறியல் வீடுகளாகவும் மாற்றினார்கள். சுவர்களை இடித்தபோது அதிலே முப்பது நாற்பதுக்கணக்காய் சிறுபிள்ளைகளின் எலும்புக் கோர்வைகள் காணப்பட்டன. இவைகள் நிஜமான காரியங்கள். கன்னியாதிரி மடங்களிலே பெண் பாடசாலை யிருப்பதுண்டு ஆனால் கன்னியாதிரிகளுடைய அறைக்குள்ளோ எந்த பெண் பிள்ளைகளும் ஒருக்காலும் போகப்படா தென்பது திட்டமான கட்டளையாம், அவர்கள் கொம்பியாரிக்கிற குருமார் மாத்திரம் போகலாம், பெண்பிள்ளைகளும் போகக் கூடாதென்பதின் கருத்தென்ன, புத்தியுள்ளவன் யோசிக்கட்டும் மோசம் வந்த காலத்தில் பெறலாம், கொல்லலாம், அடக்கம் பண்ணலாம், உலகம் அறியமாட்டாதென்பதல்லவே? இவைகள் இப்படித்தான் என்பதைக் கன்னியாதிரி மடங்களில் ஒரு முறை இருந்து பின்பு ஓடித் தப்பினவர்கள் சொல்வதனாலறியலாம். காலத்துக்குக்காலம் ஓடித்தப்பினவர்கள் எழுதின புத்தகங்கள் பலவிருக்கின்றன என்ப தும் இன்னும் கத்தோலிக் குரு ஒருவர் எழுதிய பாவ சங்கீர்த்தனத் தினால் உண்டாகும் விபசாரம் என்னும் நூலில் (இந்நூல் அறிஞர் ஒருவரால் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்க்கப் படுகிறது. கூடிய சீக்கிரம் வெளிவரும்) என்னும் கடவுள் வாக்கால் விபசாரம் பெருவதைக்காணலாம். இந்து மதத்தில் ஒருபிரிவான காசிலியர் மதத்திலுள்ளோர் மனிதசஞ்சாரமில்லாத ஓரிடத்தில் தங்களின் கடவுள் வார்த்தைப் படி ஆண்களும் பெண்களும் இரவில் கூடி தங்கள் கடவுளாகிய லக்ஷிமிதேவிக்கு மதுமாமிசமிட்டு பூசிப்பதோடு, தம் கோஷ்டியைச் சார்ந்த திரிகளுடைய இரவிக்கைகளை கழற்றி மஞ்சள் நீர்நிறைந்த ஒரு தொட்டியிற் போட்டு அந்த இரவிக்கைத்துணியை ஆண் பிள்ளைகள் எடுக்கவேண்டும். எந்த மனுஷனுக்கு எவள் ரவிக்கை கிட்டுகிறதோ அப்பெண் அந்த மனுஷனுக்கு அந்த இரவு முழுவதும் சொந்தமான திரியாக அவனோடு இன்பமெய்த வேண்டுமாம். இதற்கு இரவிகலு பூஜை என்று பெயர். இத்தகைய பூஜைகள் எம் திருநெல்வேலி ஜில்லாவிலே சில ஆண்டுகளுக்கு முன்னரே நடந்தது என்றும், சீர்திருத்த சைவக்கட்சியைச் சார்ந்த சில உயர்தரக்குடும்ப இளம்விதவைப்பெண்கள்இக்குழுவில்சேர்ந்திருந்ததாக நம்பிக்கை வாய்ந்த தோழர்கள் மூலமாயறிகிறோம். இன்னும் ஒரிசா முதலிய விடங்களிலுள்ள ஹிந்துக்கள் சில தேவதைகளை திருப்திப்படுத்தும் பொருட்டுத் தங்களுக்குப் பிறக்கும் பெண் குழந்தைகளிலொன்றைக் கோயிலுக்கு கடவுளின் பொருட்டு கொடுத்து விடுகிறோம் எனப் பிராத்தனை புரிந்து சங்கீதமும் நாட்டியமும் கற்பித்து தக்க பருவத்தில் கோயிலில் கொண்டு போய்விட்டு விடுவார்களாம். இத்தகைய வழியை தமிழ்நாட்டிலுள்ள சைவர்களும் பின்பற்றி வந்ததினாலே நம் நாட்டிலே தேவதாசி என்றொரு சமூகம் பெருகி விட்டது. இச்சமூகத்தாலே மக்கள் எய்தும் துன்பமும் நாடு அடை யும் அவமானமும் அளவிட்டுரைக்கமுடியா. திருவிழா! திருவிழா!! என நாடெங்கும் நடைபெற்றுவரும் ஏமாற்றுக் கூட்டத்தைப் பார்ப்பதற்காக யுவர்கள் அறியாமையால் சென்று இவ் வேசையர்கள் மயக்கினில் வீழ்ந்து புண்ணும் பொடியும் மேகமும் அரையாப்பும் பெற்று அல்லலுறுவதோடு சில பணக்காரரான யுவர்கள் திருவிழாப் பார்க்கச் சென்றால் ஆங்குள்ள புரோகிதர்கள், முதலாளி அவர்களே! மெத்தையில் போய் சௌகரியமாய் படுத்துக் கொள்ளுங்கள். ஆச்சி யம்மாள் (60 வயதுடைய ஐயரின் பதினாறு வயதுடைய மனைவி) உங்களுக்கு வேண்டிய சௌகரியங்களைச் செய்வாள் நான் கோயி லுக்குபோய் விட்டு விடியற்காலந்தான் வருவேன் என்று கூறிச் செல்வதும், இரவில் அய்யர் மனைவி முதலாளிக்குப் பிரியமான எல்லா உபசாரமும் புரிந்து நூற்றுக்கணக்காவோ, ஆயிரக்கணக் காகவோ ரூபாய்களை பறித்துக்கொள்வதும் இப்பொழுதுள்ள புண்யதலங்களில் நடைபெற்றுவரும் விபசார விழாவைப்பற்றி எம் அருமைத் தோழர் அ. பகவதி ஆதித்தர் போன்ற அன்பர்கள் மிகுந்த ஆதாரத்துடன் உலகிற்கு வெளிப்படுத்தி வருகிறார்கள். இன்னும் ஏரல், திருச்செந்தூர், குரங்கணி முதலிய கோயில்களில் கூட்டங்களில் நடைபெறும் விபசாரக்கூத்துக்களை கூறவே வெட்கமாயிருக்கிறது. இன்னும் கடவுள் வாக்கின்மேல் கொண்ட நம்பிக்கையினாலன்றோ மலையாள நாட்டில் பார்ப்பான் நாயர் ஜாதியைச் சேர்ந்த ஒருவன் மனைவியைத் தனது சொந்த சொத்துப் போல் எண்ணி நடந்துகொள்ள நாயர் ஜாதி புருஷனே இடங் கொடுப்பதும், பல உயர்ந்த நாயர்குடும்பங்களில் பிறமனிதரிடம் தங்களுடைய குடும்பத்தின் சொத்து, தயாளகுணம், கல்வித்தேர்ச்சி முதலியவற்றைக் கூறுவதோடு எங்கள் குடும்பப் பெண்களுக்கு இன்னவூரிலுள்ள இன்ன நம்பூதிரி பார்ப்பானுடைய சம்ஸர்க்கமும் உண்டு என்று பெருமையாகக் கூறுவதுமுண்டு. பண்டைக்காலத் திலே பல அரச குடும்பங்களில் குழந்தையில்லாதிருந்தால் அக் குடும்பப் புரோகிதனான பார்ப்பான் போய் குழந்தையில்லாத பெண்ணோடு போய்ச் சேர்ந்து குழந்தை உற்பத்தி செய்திருக்கின் றார்கள். தசரத சக்ரவர்த்திக்கு அவ்வாறே ஒரு முனிவரால் குழந்தைகள் உற்பத்தி செய்யபட்ட விபரம் அறிஞர் சந்திரசேகரப் பாவலர் அவர்களால் எழுதிய இராமாயண ஆராய்ச்சியிற்கண்டு தெளிக. ஒரு கன்னியாதிரி போகவிருப்பத்தினால் தன்னைவிட உயர்ந்த ஜாதியானை தானாக வந்தடைந்தால் அவனைத் தண்டிக்கக் கூடாது (மனுமிருதி அத்தி-9. சுலோகம் 365) ஒருவனுக்கு நிலமில்லாமல் வித்துள்ளவனாயிருந்தால் மற்று மொருவனை யடைந்து உன்னிலத்தில் நான் பயிரிடுகிறேன், அப்பயிர் நம்மிருவருக்கும் பொதுவாயிருக்கட்டு மென்று ஏற்பாடு செய்து கொண்டு பயிரிடுகிறாப்போல் ஒருவன் மனையாளிடத்தில் மனைவி இல்லாத மற்றொருவன் பிள்ளையையும் உண்டு பண்ணலாம். இந்த ஏற்பாடு இல்லாவிட்டால் உடையவனைச் சாருமென்பது பிரத்தியக்ஷ மாகவேயிருக்கிறது. ஏனெனில் பீஜத்தைவிட நில முயர்ந்ததல்லவா? (மனு 9 அத்தியாயம் லோகம் 52) பிள்ளையில்லாமல் அந்தக்குலம் நசிக்கிறதாயிருந்தால் அப்போதந்த திரீ தன் கணவன் மாமனார் முதலியவர்களின் உத்திரவு பெற்றுக்கொண்டு தன் மைத்துனன் அல்லது தன் கணவ னுக்கு ஏழுதலைமுறைக்குட்பட்ட பங்காளி இவர்களோடு மேற் சொல்லுகிறபடி புணர்ந்து குலத்திற்குத் தக்கதான ஒரு பிள்ளையைப் பெற்றுக்கொள்ளலாம் (மனு 9-59) விதவையிடத்தில் பெரியோர்களின் அனுமதி பெற்றுக் கொண்டு புணரப்போகிறவன் தன் தேகமெங்கும் நெய்யைப் பூசிக் கொண்டு இரவில் இருட்டான இடத்தில் அவளைப் புணர்ந்து ஒரே பிள்ளையையுண்டுபண்ண வேண்டியது. (மனு 9-60) ஒரு பிள்ளையிருப்பதை பிள்ளையிராததற்கு சரியென்று சாதிரம் சொல்லுகிறபடியால் இரண்டாவது பிள்ளையையும் உண்டுபண்ணலாமென்று புத்ரோற்பத்தி சாதிர மறிந்த சில பெரியோர்கள் சொல்லுகிறார்கள் (மனு 9-61) என்னும் நூல்களையெல்லாம் மதத்தின் முக்கிய சாதிர மாகப் பின் பற்றும் ஒரு நாட்டில் ஏன் விபசாரம் பெருகாது? மேலும் பௌண்ட ரீகயாகம் எனும் மூடச்செயலினாலும் கொச்சி திருவாங்கூர் முதலிய மலையாள நாட்டில் பார்ப்பார்களை பூசுரர்களாகவும் அவர்கள் கூற்று வேதத்தின் சம்மதம் எனக் கடவுள் கூறியிருக்கிறார் என்கிற நம்பிக்கையினாலும் அந்நாட்டு நம்பூதிரி பார்ப்பார்கள் அறுபத்து நான்கு வகை சயோக பேதங்கள் முற்றும் வழுவற அறிந்த கன்னிகைகளே சிறந்தவர்கள் என்று கூறும் அயோக்கிய வார்த்தையை பூரணமாக நம்பி உயர்குலத்திலுள்ள அழகிய செல்வக் கன்னிகைகளுக்கு லீலைகளை கற்பிப்பதாக விபசாரம் புரிந்து அப் பெண்களின் பெற்றோரால் வெகுமதியும் சம்பளமும் பெற்று வருவது இன்றளவும் நடைபெற்று வருகிறதாம். இன்னும் இந்துமத சாதி ரங்களை பண்டைக் கால முனிவர்களின் சரிதைகளையும், தேவர் களின் நடவடிக்கைகளையும் ஆராய்ந்து பார்த்தால் எங்கும் விபசார மயமாகவே காணப்படுகிறது. மேலும் பாழும் இந்துமதத்தில் விதவைகள் மணஞ் செய்யக்கூடாதென்ற கொடுஞ் சட்டத்தினால் விதவையான இளம் பெண் மக்களுக்கு இயற்கையாய் எழும் உணர்ச்சியை அடக்கச் சக்தியற்று விபசாரம் புரிந்து அதனால் கரு வுண்டாகி, கள்ளிக்காட்டிலும் வாய்க்காலிலும் குளத்திலும் சாக் கடையிலும் வீசி வருவது யாமெல்லாம் கண்டு வருமுண்மையே யாம். இன்னும் யாரும் அறியாமல் குழந்தை பெற்று சப்தமிடாது கழுத்தை நெரித்து ஆழக்குழி தோண்டிப் புதைத்து விடுவதும் குழந்தைகளைப் பெற்று அனாதை ஆச்சிரமங்களில் கொடுத்து வருவதும் யாமறிய முடியாததே. ஆங்காங்கு அனாதை விடுதிகள் பெருகிவருவதும், பிள்ளை நாளுக்கு நாள் கூடிவருவதும் நம் நாட்டில் விபசாரம் பெருகி வருவதை ஐயமறக் காட்டி வருகிற தன்றோ. அறுபது வயதுக் கிழவனுக்கும் பத்து வயது அழகிய சிறு பெண்ணிற்கும் ருதுவாகுமுன் விவாகஞ் செய்யவேண்டுமென்னும் வேதவிதிப்படிபெயர்ப்பொருத்தம், லக்னப் பொருத்தம், நட்சத்திரப் பொருத்தம், லிங்கப்பொருத்தம், யோனிப்பொருத்தம் முதலிய எல்லாப் பொருத்தமும் பார்த்து விவாகஞ் செய்விப்பதும், பின்னர் குழந்தையில்லாமற் போவதும் தீர்த்தயாத்திரை செல்வதும், அங்கு இக்கிழவனிடமிருந்து வாலிபர் திருவிழாவிற்கு வரும் சில பெண் வேட்டையாடிகள் அடித்துகொண்டுபோய் சில நாட்கள் எங்காவது கொண்டுபோய் வைத்து விபசாரம் புரிந்து அவளிடமுள்ள நகை முதலியவற்றை யெல்லாம் ஏமாற்றிப் பறித்துக் கொண்டு அவளைக் கைவிட்டு விடுவதும், அப்பெண் யாதொரு வழியுமறியாது பட்டினங் களில் போய் பகிரங்கமாய் விபசாரஞ்செய்து கொடிய வியாதிகளைப் பெற்று துன்பமெய்திச் சாவதும் நாம் கண்டும் கேட்டும் வருகின் றோம். ஒத்தகுணமும், ஒத்த அழகும், ஒத்த படிப்புமில்லாத ஆண் பெண்களை தாய் தகப்பன்மார்கள் தங்கள் வசதிக்கேற்ப ஜோடி சேர்த்து விடுவதால் பின் அவர்கள் ஒருவருக்கொருவர் பிடித்த மில்லாதவராகின்றார்கள். நம் மதம் அப்பேர்ப்பட்டவர்கள் விவாக ரத்துச் செய்துகொள்ள இடங்கொடாததால் அப்பெண் தனக்குப் பிரியமான ஒருவனைக் காதலித்து அவனோடு கள்ளத்தனமாய் புணர்ந்து வருவரும் அதனால் நாட்டில் ஏற்படும் கொலையும், களவும், அடி தடி கோர்ட்டு விவகாரங்களும் கணக்கிலடங்கா. இன்னும் இலாம் மதத்தினர் சமாதிப்பூஜை, பஞ்சா பூஜை முதலிய பல விழாக்களில் துலுக்கத் தாசிகள் என்னும் ஒரு கோஷ்டி யார் ஏற்பட்டு ஆடல் பாடல் புரிந்து ஆண்டு குழுமும் வாலிபர்களை தம் வயப்படுத்தி விபசாரத்தினால் பணம் சம்பாதித்து வருகின் றார்கள். இன்னும் பல வைதீக முலீம்கள் எங்கள் மதத்தினர் கலியாணஞ் செய்வதோடு புறசமயப் பெண்களை (அடிமைகளை) வைப்பாக வைத்துக்கொள்ள அனுமதிக்கிறது என்றும், அவ்வாறே எங்கள் நபிகள் நாயகம் நாற்பது வைப்பாட்டிகள் (ஸுரிய்யத்) வைத் திருந்தார்கள் என்று கூறுவதுடன் பல புராண ஆதாரங்களை எடுத் தியம்புகின்றார்கள் (இவைகள் இலாத்திற்கு முற்றும் மாற்ற மானது என்று சில சீர்திருத்தவாதிகள் கூறிவருவதை யாம் அறிவோம்) இன்னும் புத்தமதத்திலுள்ள மஞ்சக்காஷாயம் பூண்ட துறவிகள் என்னும் கூட்டத்தார்களை பிரமச்சாரிகள் என்று கூறி பல பெண் களை ஏமாற்றி விபசாரக் குழியிலாழ்த்திவருவதையும், சைவ, வைண மடாதிபதிகளால் ஏற்படும் விபசாரதோஷமும் அளவிட்டுரைக்க முடியா. இந்த விபசாரங்களுக்கெல்லாம் தாயாக இந்துமதமே மிளிர்கிறது என்பதை யாவரும் நன்கறிவர். எனவே மக்கள் கடவுள் வாக்கு, வேதத்தின் சம்மதம் என்று கூறிய உடனே நம்பி நடவாது தங்கள் பகுத்தறிவை உபயோகித்து நடந்து வந்தால் எந்த மார்க்கத் திலும் விபசாரம் பெருக இடமே இல்லை. கடவுள் பக்தியும் மத வெறியும் அதிகமுடையதாய் ரஷிய தேசமிருந்த பொழுது தேச முழுதும் விபசாரத்தில் ஆழ்ந்திருந்தது. ருஷிய தேசத்தின் தலைநகரில் மட்டும் 25000 வேசிகள் இருந்து வந்தார்கள். கடவுள் வெறியும் மதவெறியும் ஒழிந்து விட்டதால் இன்று விபசாரிகள் மருந்திற்கும் காண முடியாததாய்ப் போய்விட்டதென்பதை நீங்களெல்லோரும் பத்திரிகை வாயிலாய் படித்திருப்பீர்கள். நாட்டில் நடைபெறும் விபசாரத்திற்கெல்லாம் மூலகாரணமாய் நிற்பது கடவுளும் மதமுமே யாகும். விரித்துக்கூறினால் இஃதோர் விபசார புராணமாய் மாறு மென்று எண்ணி இத்துடன் நிறுத்தப்படுகிறது. கொலை செய்யத்தூண்டுகின்றது அறிஞர் ஒருவர் கடவுள் பக்தி அபினிக்கு சமானமாயிருக் கிறது என்றார். கடவுள் பக்தி அதிகமுடையோர் வெறிகாரர் போன்று மயக்கமுற்று, அறிவிழந்து, அன்பிழந்து தம் கடவுளுக்கோ அன்றி மதத்திற்கோ விரோதமாய்ப் பேசுகிறவர்களையும், எழுது கிறவர்களையும், சித்திரவதை செய்யவும், கொலை செய்யவும் தைரியமாய் முன்வருகின்றனர். அவ்வாறு செய்வது புண்யமான செயல் எனவும், கடவுளுக்கும் மதத்திற்கும் விரோதியாயுள்ளோர் களைக் கொல்லாதிருத்தல் கொடிய பாவம் என்று எண்ணுகின்றனர். அவர்கள் மதமும் அவ்வாறே தூண்டுகிறது. மதத்தாலும் கடவுளா லும் இறந்தவர்களே உலகிற் பெரும்பாலர் என்பதையும், கடவுள் பக்தி மிகுதியுமுடையோர் இரக்கமற்ற வன்னெஞ்சக் கயவர்களாய்ப் போய் விடுகிறார்கள் என்பதையும் கீழ்கண்ட சரித்திரங்களே சான்று பகர்கின்றது. புரோட்டெட்டாண்டு மதக்கிளர்ச்சி தோன்றிய பொழுது அம்மார்க்கத்தை தழுவினவர்களை விசாரிக்க கத்தோலிக்கர் ஒரு கோர்ட்டு ஏற்படுத்தி 30 வருஷங்களில் லட்சத்து ஐம்பதினாயிரம் பேரைக் கொலை செய்துவிட்டார்களாம். யெசுயிற் (Jesuits) என்னும் ரோமச்சபையின் உபத்திரவத்தால் அது ஆரம்பிக்கப்பட்ட 1540 ஆம் ஆண்டு துவங்கி 1580 ஆண்டு வரைக்கும் ஒன்பது லட்சம் பேர் அநீதியாய் கொலையுண்டார்களாம். அல்வா நாட்டின் டுயூக் என்னும் அதிபதியும், பிறரும் செய்த உபத்திரவத்தால் உலந்து (Holland) நாட்டுப் பகுதிகளில் ஐம்பதினாயிரம் புரோட்டெடாண்டு மததர் கத்தோலிக் மதத்தைவிட்டு விலகியதற்காக தூக்கிலிடப் பட்டும், சுட்டெரிக்கப்பட்டும், சிரச்சேதம்பண்ணப்பட்டும், உயி ரோடு புதைக்கப்பட்டும் மாண்டார்கள். பிரஞ்சு தேசத்திலே பார்த்தலேமேயு என்னும் சங்காரத்திலும், இங்கிலாந்திலே இரத்த மரியாள் என்னும் ராஜாத்தியின் சங்காரத்திலும், போப்பு மார்க் கத்தை பரப்பச் செய்த சகல சண்டைகளிலும் இறந்தசேனாவீரர் களையும் இந்த தொகையுடன் கூட்டவேண்டும்............. உவால்டென்சர், அப்பிசென்சர், பொகீமியர் உக்கிஷலீவர் முதலிய புரோட்ட டெண்டுகளில் ஐந்து கோடி இரத்தம் சிந்தப்பட்டது. கத்தோலிக்க மதத்தை பரவச்செய்ய போப்புவின் உத்தரவுப்படி பானியர் செய்த யுத்தங்களிலும், கியூபாவிலும், மெக்சிகோவிலும், தென் அமெரிக்கா விலும் ஒரு கோடியே ஐம்பது லட்சம் அமெரிக்க இந்தியர்களின் இரத்தம் சிந்தப்பட்டது. பானியாவில் (Spain) மூன்றரை லட்சம் யூதரும் சோனகரும் இந்த கத்தோலிக்கர்களால் கொலையுண் டார்கள். அப்படியே ஆறுகோடியே எண்பத்தைந்து லட்சம் மனிதர்கள் இந்த கத்தோலிக்கர்களால் மதவெறிக்கொண்டுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்றும் மிகுவிரிவாயும் விளக்கமாயும் பற்பல சரித்திர ஆதாரம் கொண்டு ரெவரெண்டு. டி.பி ஹண்ட் (Rev. T.P. Hunt) தாம் எழுதிய கிறிது மார்க்க அத்தாட்சி (Evidences of Christianity) என்ற நூலில் கூறியிருக்கிறார். ஐந்தாவது நூற்றாண்டில் ஒரு சிறந்தகலைஞான வல்லளாகிய கீப்பதியா (Hypatia) என்பாள் தன் வண்டியிலிருந்து, தான் பிரசங்கஞ் செய்யும் மண்டபம் நோக்கிச் சென்றபோது, அவளைப்பிடித்து இழுத்து அலெக்சாண்ரியா என்னும் பெரிய கோவிலுள்ளே கொண்டு போய் நிருவாணமாக்கி, அவள் தோலைஉரித்து, அவளை அடித்து, அவள் சரீரத்தை இப்பியோடுகளினாலே சின்னாபின்னங்களாக வெட்டிப் பின்னர் எரித்து விட்டார்கள். அலெக்சாண்டிரியா விலுள்ள வாலிபன் ஒருவனைப் பழைய தெய்வங்களை வழிபடும்படி செய்தமையே அவள் செய்தகுற்றமாகும். கிறிதுவ பிஷப்பாகிய சைறில் (CyrI) என்பானுடைய சேனையாகிய துறவிகள் பைபிளிலே யுள்ள யாத்திராகமம் 22-ஆம் அதிகாரம் 20-ஆம் வசனத்திலே, கருத்தர் ஒருவர்க்கே ஒழிய வேறே தேவர்களுக்குப் பலியிடு கிறவன் சங்கரிக்கப்படக்கடவன் என்று சொல்லப்பட்ட விதி கொண்டு அவளைமேலே சொல்லியவாறு கொலை செய்து விட்டார்கள். தீயடோனா என்னும் சக்கரவர்த்தினியின் பரிபாலன காலத் திலே (Empress Theodopa) ஆர்மினியாவில் நூறாயிரம்பேர் பிடிபட்டு அவர்பொருள் பறிபட்டு அவர்கள் சரீரங்கள் அக்கினியிலே பொடி படுத்தப்பட்டன. 1099 ஜெருசலேம் நகரம் பிடிபட்டபோது கிறிதுவின் சைனியங்கள் முழங்கால்களினின்று எழுந்து நகரத்துத் தெருக்க டோறும் திரிந்து ஆண்பாலர் பெண்பாலர் பிள்ளைகளானோரை யெல்லாம் அற்பமேனும் இரக்கமின்றிக் கொலை செய்து விட்டார்கள். இலான்குவிடாக் (Languedoc) என்னும் செழிப்பும் சீர்திருத்தமும் உள்ளதுமாகிய தேசம் பாழுங் கிறிதவர்களாலே பாழாக்கப் பட்டொழிந்தது. அத்தேசத்து நகரங்கள் சுடப்பட்டொழிந்தன. குடிஜனங்கள் நெருப்பாலும் வாளாலும் மாண்டொழிந்தார்கள் பேசீயார் என்னும் நகரத்தை எரித்து உடைத்து அழிக்கப்புகுந்த போது மனுஷனென உடல் எடுத்தான் ஒருவனையும் உய்யவொட் டாது அறுபதினாயிரம் பேரை அழித்துவிட்டார்கள். கடவுள் தம் சொந்தம் எதுவென அறிவார் எவரையும் தவறவிடாதீர்கள்! எல்லோரையும் கொல்லுங்கள்! என்பதே அந்த கிறிது சேனைக்குக் கொடுக்கப்பட்ட சட்டமாம். பைபிளின் உபாகமம் பதின்மூன்றாம் அதிகாரத்திலே விதிக்கப்பட்ட யேகோவாவின் துஷ்ட கட்டளையைக் கைக்கொண்டு தங்காரியத்தை மேலே கூறியவாறு இரக்கமின்றி முடித்தார்கள். 1480 பெர்டுனாண்டு அரசனாலும் அவன் மனைவியினா லும் ஆளப்பட்ட லூசியா என்னும் மாகாணத்தில் மூவாயிரம் பேர் நெருப்பிலிட்டு பொசுக்கப்பட்டார்கள். பதினேழாயிரம் பேர் வேறு வகையாக தண்டிக்கப்பட்டார்கள். இருநூற்று முப்பத்தாறு வருஷங்களுக்கிடையிலே பானியாதேசத்தில் உயிரோடு நெருப்பி லிட்டு எரிக்கப்பட்டோர் தொகை முப்பத்தோராயிரத்துத் தொளா யிரத்துபன்னிரண்டு. சீயுடட்றீயல் என்னும் இடத்திலே தொளாயிரத் தைம்பது பேர் உயிரோடு தகிக்கப் பட்டார்கள். பானியாவிலே, இறுதியாக நூற்றேழு வருஷங்களுக்கு முன்னையதாகிய 1731 நவம்பர் மீ 7ஆம் தேதி பேயோடிணக்க முடையவளென்று கொண்டு ஏழைப் பெண்ணொருத்தி நெருப்பிலிட்டெரிக்கப் பட்டாள். நெதர் லாண்ட் (Nether lands) தேசத்திலே அல்வா என்பான் தனது பரிபாலனம் செலுத்தப்பட்ட நாலைந்து வருஷங்களுக்குள்ளே பதினெண்ணாயிரம் பேரைக் கொலைசெய்து விட்டேனென்று புளுகினான். ஒருவருஷத் திலே எண்ணாயிரம் பேர்தகிக்கப் பட்டும் வதைக்கப்பட்டும் போயினர். 1566 ஐம்பதினாயிரம் பேர் கொலை செய்யப்பட்டார். பாரீ பட்டணத்திலே 1972 ஆகடு மீ24 தேதி ஹீயூஜ் நட் என்னும் ஒரு சாராரில் ஆயிரத்து நானூறு பேரை ஓடவிட்டு அவர்மீது அரசன் தனது அரண்மனைச் சன்னலிலிருந்து பாணப் பிரயோகம் செய்து, அவர்களைப் பறவைகள் போலக்கொன்றான். தம் மதத்துக்குச் சேர இசையாதோரை நன்றாகக்கட்டி, வேதனா யந்திரத்துக்குள்ளே செலுத்தி, அதன் வாயினுள் விரிந்த வாயுள்ள குழாய்களை மாட்டி, அக்குழல் வழியாக அவர் தொண்டையிலே இறங்கும்படி திராக்ஷரசத்தைப் புகைகிளம்ப புகட்டி, அவர் அறிவை மயக்கிக் கத்தோலிக்கிறிதவராய் வருவோமென்று சொல்லுவண்ணம் செலுத்தி வருத்தினார்கள். அம்மட்டோ? அவர்களை முற்றும் நிருவாணிகளாக்கி, ஆயிர வகைப்பட அவமானம் செய்து தலை யிருந்து கால்பொருக்கக் குண்டூசிகளினாலே குற்றிப்பேனாக்கத்திகளினாலே வெட்டி, ஒழுகக்காச்சிய குறடுகளினாலே அவர் மூக்குகளை கிளித்து விட்டார்கள். செக்க அங்குலேன் என்னும் வைத்தியர் ஒருவர் புளோறென்சிலே 1337 கிறிதவரால் ததிக்கப் பட்டொழிந் தார், 1415 ஜோன் ஹன் என்பவரும் சுட்டொழிக்கப் பட்டார், ஒருவர் சித்திரவதை செய்யப்பட்டு தகிக்கப்பட்டார். 1619 கலைஞான மறிந்த இத்தாலியதேசத்து தத்துவ ஞானியான வாணினி என்பாருடைய நாக்கைக்கிழித்து தவுலவு நகரத்திலே அவருடலை நெருப்பிலிட்டுப் பொரித்துவிட்டார்கள். காத்லாந்து மேலைப் புறத்திலேயுள்ளாருடைய இடங்களெல்லாம் அழிக்கப்பட்டன; வீடுகள் எரிக்கப்பட்டன, மனிதர் சித்திரவதை செய்யப்பட்டனர், பெண்கள் கற்பு நிலைகுலைக்கப்பட்டனர்; 1770 உத்திரவில்லாத படி பிரசங்கம் செய்தவர் எவரும் கொலை செய்யப்படத்தக்கா ரென்று மஹாமந்திர சபையிலே சட்டமொன்று பிறப்பிக்கப் பட்டது. காத்லாந்தார் தம் பொருள் எல்லாம் இழந்தார், உடை யெல்லாம் கிழிக்கப்பட்டார்; வயல்களிலே நிருவாணமாக சாக விடப்பட்டார்; அனேகர் அதிபயங்கரப்படத்தக்க சித்திரவதை செய்யப்பட்டார்; தாய்மார் கைகளிலிருந்து பிடுங்கி எடுக்கப் பட்ட பிள்ளைகள் தூற்றப்பட்டார். தாய்மாருக்கும் அவர் பெண் குழந்தைகளுக்கும் நேர்ந்த கொடிய விதியை நோக்கினால் அவரைக் கொலை செய்து விடுதல் அதனும் மிக இனியதென்று தோன்றும்; ஒரு குருவுடைய வீட்டின் கீழ்ப்புறத்தே தவளைகளும் வேறு விஷ ஜந்துக்களும் நிறைந்த ஆழமாகிய குழியொன்றிலே பெண்ணொருத் தியைப் எறிந்துவிட விதித்துவிட்டார்; அவள் அந்த நரகக்குழியிலே கிடந்து அலறிக் கூவிய சத்தம் வெகுதூரத்துக்கு எட்டியதாம். வேறு இருவர் பெருவிரல்களை ஒன்றோடொன்று கயிற்றினாலே பிணித்து மரத்திலேமாட்டி இரவுமுழுதும் தொங்கும் படி செய்து வருத்தி விட்டார்கள். மற்றொரு பெண்ணைப் பிடித்துக்கட்டி அவள் விரல் களிலே பல நீண்ட நேரம் தீயாற்சுட்டு வருத்தினமையால் அவள் மனம் மயங்கிப்போயினாள். அவள் தன் கைகளிலொன்றை இழந்து சில நாளைக்குள்ளே இறந்து போயினாள். 5-வது நூற்றாண்டில் ஏபிஸிய என்னுமூரில் நடந்த பெரிய பாதிரிகள் கூட்டத்தில் பிளேவியம் என்னும் பாதிரி, கிறிதுவுக்கு விரோதமாக பேசினதுபற்றி வதைத்துக் கொல்லப்பட்டான். அவன் கட்சியில் சேர்ந்தவர்கள் அடிப்பட்டார்கள் என ஐரோப்பிய தேச சரித்திராசிரியர்களால் விளக்கப்பட்டிருக்கிறது. 1229ஆம் வருஷத்தில் தொலூ (Toulouse) என்னுமூரில் நடந்த பெரிய மீட்டிங்கில் ஊர்கள் தோறும் கூட்டங்களேற்படுத்தி, ஒவ்வொரு கூட்டத்திலும் ஒரு குருவும் இரண்டு சீடர்களும் இருக்க வேண்டுமென்று தீர்மானித்தார்கள். அக்கூட்டத்தார், அந்த ஊரில் கிறிதவர்களாகாதவர்களைப் பிடித்து கிறிதவர்களாக்கவும், ஆகமாட்டோமென்பவர்களைக் கொலை செய்யவும் வேண்டும். இதற்கு மேல்விசாரணைக் கர்த்தர் 9-வது »nu»Ç(Gregory IX)ah«. கிறிதவராகாதவர்களை நிர்வாணமாக நிறுத்துதல், மொட்டை யடித்தல், வேதனை செய்யும் யந்திரத்தில் படுக்கவைத்துக் கட்டல், அதிலேயே கால்களை விரித்துக் கட்டல், சதை நசுங்கவுடலை யந்திரத்தில் வைத்தழுத்தல் முதலிய கொடுமைகளை கூட்டத் தாரும் அவர்களைச் சார்ந்து பின்வந்தவர்களும் செய்தார்களென சிவிலி என்னுமூருக்கு விசாரணைத் தலைவனாயிருந்தவனின் கைப் புத்தகத்தில் வரையப்பட்டிருந்தது. இதன் விரிவை டாக்டர் ரூல் (Dr. Rule) என்பவரால் எழுதப்பட்ட விசாரணைச் சரித்திரப் புத்தகத் தில் காணலாம். (Appendix to Vol.l. P. 339 to 359 Dd. in 1874) ஆளைவைத்து அளுத்திக்கொல்லத்தக்க (Chevolet) என்னும் யந்திரத்தில் பிகுவா யழுத்தித் துணியை தொண்டைவரையிலழுத்திக் கொல்லல் முதலியன செய்தார்கள். பானியா தேசத்தில் கூட்டத்தாரால் 31,912 பேர் உயிரோடு கொளுத்தப்பட்டார். குரூரமாக தண்டிக்கப்பட்டவர்கள் 2,91,450 பேர். அநேக குடும்பங்கள் அழிக்கப்பட்டன. தங்களுடைய மதக்கோட்பாடுகளுக்கு விரோதமாய் பிரசாரம் புரிந்த கலீலியோ (Calileo) என்னும் வானசாதிரியை சிறையில் சித்திரவதை செய்ததும், ப்ரூனோ (Burno) அத்வித சாதிர வல்லுனரை அக்கினிபகவானுக்கு அர்ப்பணம் செய்ததும், பிரஞ்சு தேச விற்பன்னர் வால்டேர் (Voltaire) என்பவரை ஆயுட்கால முழு வதும் சிறையிலிட்டனர். இன்னும் பல நாதிகர்களைக் கொன்றவர் களையும் மற்றும் பல கொலைச் செயல்களும் ஹாலம் (Hallam) ட்ரேபர் (Draper) எலக்கி (Lecky) முதலியோர்களின் நூலில் நன்கு விவரிக்கப்பட்டிருக்கிறது. புரோட்டொடாண்டு மததர்கள் மதத்தை தழுவாத 1200 பேர்களை ஒரு சமயத்தில் கொலை செய்யப்பட்டதாக டாக்டர் பிரிஜ் வாட்டர் [Dr. Bridge watter] எழுதியிருக்கிறார். காஷெல்பட்டினத் திலுள்ள மேற்றிராணியாரின் கால்கள் சுத்தியலால் அடித்து முறிக்கப் பட்டது. நகங்களில் ஊசிகள் சொருகப்பட்டன. நீற்றாத சுண்ணாம்பும் எண்ணையும் கலந்து இரும்பு பூட்ஸில் விட்டு அதிலவருடையகால்களை வைத்து வெகுநாளைக்கு அப்படியே விட்டுவிட்டபடியால் கால்களின் மாம்சமெல்லாம் நாளுக்கு நாள் இத்துப்போய் விழுந்து விட்டது. பின்னரும் கால்களை வெட்டி மூளை தெறிக்க தடியாலும் கல்லாலும் அடிக்கப்பட்டாராம். எலிசபெத்து அரசியின் காலத்தில் கத்தோலிக்ககுருக்களும் சந்நியாசியுமாக 51 பேர்களை தேசப்பிரஷ்டம் பண்ணி நடுக்கடலில் கொண்டு போய் தாழ்த்துவிடப்பட்டதாம். இப்படிப்பட்ட பல ஆயிரக்கணக்கான கொலைகள் புரோடடாண்டு மார்க்கத்தா ரால் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டிருக்கிறது. (அயர்லாந்து தேசத்து சங்பேட்லி என்பவரால் எழுதப்பெற்ற சத்திய வேதத்தைக் கண்டுணர நிச்சயமானவழி என்னும் நூலைப்பார்க்கவும்.) 1502-ஆம் பிப்ரவரி மீ-த்தில் பெயின் தேசத்தில் பெர்டினாண்ட் (Ferdinand) என்னும் அரசன் தன் ஊரில் நெடுங்கால மாகக் குடியிருந்த முலீம்களில், கிறீது மததர்களாகமாட்டோ மென்று சொன்ன (3,000000) முப்பது லக்ஷம் முலீம்களை ஊரை விட்டு ஏப்ரல் த்திற்குள் போகவேண்டுமென்றும் அப்படிப் போகாதவர்களை கொலை செய்யப்படுமென்றும் பொன் வெள்ளி முதலிய சொத்துக்களை எடுத்துக் கொண்டு போகப்படாதென்றும் இன்னும் பற்பல வுத்தரவுகளையும் பிறப்பித்தான். அங்ஙனமே பிது ராஜ்ஜிதமான எல்லாச்சொத்துக்களையும் இழந்து ஐயோவென்று அழுது புலம்பிப்போய்விட்டார்கள். காட்லாண்டு தேசத்தில் 1670ஆம் த்தில் உத்திர வில்லாமல் பிரசங்கம் செய்யப்படாதென்று சட்டம் பிறந்தது. 1674 த்தில் நியாயம் பேசும் அட்வக்கேட்டர்களைத் துரத்திவிட் டார்கள். 1678ஆம் த்தில் மலையிலிருந்த ஜலண்டர்களை வர வழைத்து அவர்கள் இஷ்டப்படி ஜனங்களைக் கொல்லவும் திருட வும் கொளுத்தவும் அனுமதி கொடுத்தார்கள். ஆயுதபாணிகளான 8000 ஜலண்டர்களைத்தருவித்து காட்லந்து வடபாகத்திலுள்ள கிராமங்களின் மேல் பாய உத்தரவளித்தான். அவர்கள் அங்ஙனமே சென்று ஜனங்கள் சொத்துக்களைப் பிடித்து, திரீகளை நிர்வாணிகளாக்கி அனேக அக்கிரமங்கள் செய்தார்கள். இரண்டு பேர்களை ஒன்றாகக்கட்டி, இருவர் பெருவிரலையொன்று சேர்த்து இருக்குமரத்தில் தொங்கவிட்டார்கள். ஒரு பெண்பிள்ளையை ஜெபாலயத்தலைவன் வீட்டிற்கு அருகிலிருக்கும் (தவளை முதலிய ஜெந்துக்களுள்ள) பெரும்பள்ளத்தில் தள்ளினார்கள். ஒருத்தியை வெகு நேரம் வரையில் தீக்குச்சியை கொண்டு விரல்களைக் கொளுத்தி னார்கள். இந்த உபத்திரவம் பொருக்காமல் அவள் சில நாளை யில் செத்துப்போனாள். டார்க்விமோடா என்பவன் அதிகாரம் செலுத்தின பதினெட்டு வருஷத்திற்குள் கிறிது மதவிரோதிகளான 10, 220 பேர் உயிருடன் கொல்லப்பட்டார்கள். அவனால் சாகிறமட்டும் ஜெயிலுக்கு இரை யானவர்களும் சொத்துக்களைப் பறி கொடுத்தவர்களும் 97,321 பேர்கள் (History of the inquisition by Dr. W.H. Rule vol. I. Page 150) இவனே சலமான்கா என்னும் ஊரின்கண் யூதமததர் அபிப்பிராயத்தைச் சொல்கின்றதென, 6000 கீழ்திசை சாதிரங்களை அக்கினிக்குத் தத்தஞ் செய்தான். (Draper’s conflict of religion and science, page 146) 1481ஆம் வருஷத்தில் ஆண்ட லூஷி சாவில் 4வது போப் சிக்ட என்பவனால் நியமிக்கப்பட்ட விசாரணைச் சபையார் 2, 005 பேரை உயிரோடு கொளுத்தினதோடு 17000 பேருக்கு அபராதமும் ஜன்ம தண்டனையும் விதித்தார்கள். அங்கரி என்னுமூரில் பீகாட் என்னும் ஒரு வகுப்பினரைக் கொலை செய்தவன் கிகா உ ஸைட் என்பவன் என்றும் வரலாற்று நூல்களில் காணக்கிடக்கின்றன. விக்ரகத் தொழும்பும், பெண் அடிமைத்தனமும், மூட நம்பிக்கையும், அர்த்தமற்ற அநாகரிக்கப்பழக்க வழக்கங்களு மலிந்து நின்ற அராபிய நாட்டிலுள்ள முரட்டுதனமுள்ள அராபிய மக்களிடம் முஹமத் என்னும் அறிஞர்தோன்றி சீர்திருத்தத் தொண் டாற்றிய ஞான்று அம்மூடமக்கள் அப்பெரியாரை அடித்தும் வைதும் இரத்தமொழுக கல்லாலெறிந்தும் கொலைசெய்ய முயன்ற துடனமையாது, அவரைப்பின் பற்றிப்போகும் சீர்திருத்த தொண் டர்களான ஹாரி என்பவரை கத்தியால் குத்திக்கொன்றதும், பிலால் என்னும் ஒரு தொண்டரை அவர் தம் கழுத்தில் கயிற்றைக் கட்டி பிள்ளைகளைக் கொண்டு உதிரஞ்சிந்த தெருத்தெருவாய் இழுத்ததுடனில்லாது அவருக்கு இரும்பு அங்கிகளைமாட்டி, அரபிய நாட்டின் கொடிய வெய்யிலில் நிறுத்தியும், சிற்சில சமயம் மக்காவிற்கு புறம்பேயுள்ள மணல் வெளியிற் ஆடைகளை பிடுங்கிக் கொண்டு நிர்வாணமாய்க் கிடத்திச் சரீரத்தின் மீது பாரமான கற் களை ஏற்றிவைத்தும், பலநாள் ஆகாரம் கொடுக்காமல் பட்டினி போட்டும், மழைகாலங்களில் யாதொரு ஆடையுங்கொடாது இரவெல்லாம் முற்றத்தில் நிற்கவைத்து அடித்தும், கப்பாப் என்னும் சீர்திருத்தவாதியை நெருப்பில் முதுகுபடும் படிகிடத்தி புரண்டு விடாதபடி நெஞ்சின்மேல் காலை வைத்து இறுத்திக் கொண்டதும், முலீம்களுக்கும் விக்ரகவணக்கக்காரர்களான அராபியாதேசத்து ஹிந்துக்களுக்குமுண்டான பத்ருசண்டை, உஹத்சண்டை, அகழ் சண்டை, கைபர்சண்டை, மூத்தாத்சண்டை, தகபூக்சண்டை முதலிய போர்களில் பதினாயிரக்கணக்கான மக்கள் மாண்டதும் அப் போரில் ஹிந்தா என்ற பெண் சீர்திருத்தவாதியும் முஹமத் நபியின் சிறியதகப்பனாருமான ஹம்ஸா என்பவரை வஹ்சி என்பவரை தூண்டிக் கொலைசெய்யத்தூண்டி உயிரற்ற அவ்வுடலை துண்டு துண்டாய் வெட்டி அவைகளை கோத்து மாலையாகப்போட்டுக் கொண்டதும் இன்னும் மதவெறியால் மக்களுலகிற்குண்டான பெரும் நஷ்டம் என்பதை கனம் தாவுத்ஷா சாஹிப் அவர்களால் வெளியிடப்பட்டுவரும் நாயகமான்மியம் போன்ற சரித்திர நூற்கள் சான்று பகிர்கின்றது. இன்னும் மதப்பித்தங்கொண்ட முலிம்களாலே இலாமிய அறிஞரான இமாம் அபூஹனிபா என்பவரை சிறையிலிட்டு விஷமிட்டுக் கொன்றதுடனமையாது, அவரிறந்த பிறகு அவருடைய பிரேதத்திற்குச் செய்த கொடுமைகள் இவ்வளவு என்று எழுதவும் கை நடுங்குகிறது என்று காஜி தூருல்லா ஷுடரி கூறியிருக்கிறார். இன்னும் இமாம், ஷாபியும் இப்லீ ராப்ஜி என இழித்துறைக்கப்பட்டு சிறையிடப்பட்டார். இமாம் இப்னுதைமியா சிறையிடப்பட்டு சிறைச்சாலையிலே மாண்டார். காஜா ஜுனைத் பக்தாசி வேட்டையாடப் பட்டார். இன்னும் பல மேதாவிகள் தம் கொள்கைகளுக்கு (மதத்திற்கு) விரோதமாயிருப்பதாய் வெட்டப் பட்டும் சித்திரவதை செய்யப்பட்டும் முதுகுத் தோலையுரிக்கப்பட்டு கொல்லப்பட்டதும் இலாமிய சரித்திரங்கள் இன்றளவும் கூறிக் கொண்டிருக்கின்றது. நியமித்துல்லாகான் என்னும் ஓர் அஹ்மதி முலிமை ஆப்கன் தேசத்து வைதீக முலீம்கள் அரசாங்க அனுமதி பெற்று கற்களால் எறிந்து கொன்றது அம்மூடமாக்கள் கொண்ட மதப்பித் தென்பதை யாரே மறுக்கவல்லார்? சுவாமிசிரத்தாநந்தர், ராஜபால் ஆகிய ஆரிய சமாஜிகளை இரு முலீம்கள் கொன்றது, காபிர்களை (இலாமிய விரோதி களை) கொல்லுங்கள் என்றும், அவ்வாறு கொன்றால் உங்களுக்கு எவ்வித விசாரணையும் புரியாது சுவர்க்க வாசலைத் திறந்து வைத்து விடுவோம் என்று கடவுள் தம் வேத புத்தகத்தில் கூறியிருப்பதாக நம்பி நடந்ததும் மதவெறியன்றோ? மேலும், 1931-ஆம் ஆண்டு ஆகட்டு மாதம் பரூக்காபாத் ஜில்லாவிலுள்ள தீர்வா என்னுமூரில் கடவுள் பித்தம்கொண்டு அங்குள்ள சமகிருத பாடசாலையில் படித்திருந்த ஒரு சிறுவன் ஸ்ரீ தவநேவர மகா தேவாலயத்தில் பாதி கழுத்தை அறுத்து இரத்தப் பெருக்கெடுத்து விழுந்து கிடந்ததைக் கண்டு சிலர் ஓடிப் போய் பார்த்ததில் அவன் தன் முன் நிற்கும் ஜனங்களை நோக்கி பரம சிவனுக்கு தனது தலையைச்சீவி பலியாக அர்ப்பணம் செய்துவிட்ட தாகக் கூறினானாம். (சண்டமாருதம் 2-9-31) ஆகவே இவனை கலியுக கண்ணப்பன் - இல்லை அவனுக்கு மேற்பட்டவர் என்று கூறினும் கூறலாம். கண்ணப்பருக்கு காட்சியளித்து கண்ணையீய்ந்த கடவுள் இது போழ்து ஒளித்துக் கொண்டதேனோ? அந்தோ! மக்களின் கடவுள் வெறி! கிழக்கு வங்காளத்திலுள்ள பாங்குரா என்னுமிடத்தில் ஜுரத்தால் மரணமாகிப் புதைக்கப்பட்டிருந்த ஒரு குழந்தையின் பிரேதத்தை தோண்டி எடுத்துக் கரிசமைத்து சாப்பிட்டதாக அஜீத் கோஷலால் என்ற குல்னா ஜில்லாவாசி ஒருவர் பேரிலும் பங்குரா வாசி சக்கா ஆச்சாரியா என்னும் மற்றொருவர் பேரிலும் இ.பி.கோ. 297-வது பிரிவின்படி பங்குரா சப்டிவிஷனால் ஆபீசர் ராவ் சாகிப் சஷிபூஷன் பாட்டாச்சாரியா என்பவரிடம் கே தொடுத்து விசாரிக் கப்பட்டு தண்டனையடைந்தார்கள். விசாரணையின்போது அப் பிரேதத்திற்கு பூஜை முதலானவைகள் செய்து புஷ்பங்களால் அலங்காரம் செய்து, மது அபிக்ஷேகம் புரிந்து சாப்பிட்டதாகத் தெரிந்தது. அவ்வெதிரியிலொருவன் கோர்ட்டில் நான் குல்னா ஜில்லாவைச் சேர்ந்தவன். நான் சந்நியாசி வாழ்க்கை நடத்தி வருகிற வன் நான் பாண்டுரா சென்றேன், அங்கு ஜனங்கள் என்மீது அதிக பற்றுடையவர்களானார்கள். அவர்கள் என்னைச்சாதுவென்று பூஜித்து வந்தார்கள். நான் குழந்தையின் பிரேதத்தை எடுத்து கறி சமைத்தேன். ஆனால் நாய்க்கு கொடுப்பதற்காக அக்கறியை சமைத்தேன். அக்குழந்தையின் ஹிருதயத்தை நானும் கொஞ்சம் சாப்பிட்டேன். குழந்தையின் ஹிருதயத்தை சாப்பிடுவது எனது மதக் கொள்கை என்று நான் நம்பினேன், ஆதலால் அவ்விதம் செய்தேன் என்று வாக்குமூலம் கொடுத்த விஷயங்கள் (சண்டமாருதம் பத்திரிகை யில் 6-9-31லும் மற்றும் பல தினசரிகளிலும் வெளிவந்தது) சிறுத் தொண்டரிடம் பிள்ளைக் கறி கேட்ட பரமசிவன் பிள்ளைக்கறியின் ஆசையால் இக்கலிகாலத்தில் ஒருவரும் தம்பிள்ளையைக் கறி சமைக்கக்கொடார் என்று கருதி பிரேதத்தை எடுத்துச் சாப்பிட்டார் போலும். இக்கட்டுரை கண்டதும் தமிழ்நாட்டில் பரமசிவனுக்கு கறி சமைத்துச் சாப்பிட எத்தனை பிள்ளைவேண்டுமானாலும் கொடுக்கத்தயார் என்று தமிழ்நாட்டு சைவவீரர்கள் முன்வந்து இதை மறுத்து கட்டுரை எழுத முன்வரினும் வருவர். என்னே நம் மக்களின் மதவெறி! தஞ்சை ஜில்லா பாபநாசத்திற்கு அடுத்த சருக்கை கிராமத்தில் காலஞ்சென்ற முன் சீப் ரங்கமணி அய்யங்காரின் 28 வயதுள்ள புதல்வன் மணப்பாறைக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்திலிருந்து 12 வயதுள்ள தன் மனைவியைப் பார்க்கச் சென்றிருந்தான். அப் பொழுது அவனுக்கு மோட்சப்பைத்திய முண்டாயிற்றாம். அப் பொழுது அக்கிராமவாசிகளுக்கு கனகசபைத்திருநடனம் கற்பித் தாராம். இறப்பதற்கு முந்தின நாள் அவர் வனயாகம் என்னும் பெய ரால் ஒருயாகம் செய்தாராம். ஒருபெரிய குழிவெட்டி விறகுகளை அடுக்கி தீ மூட்டி ராம நாமம் ஜபித்துக்கொண்டு யாககுண்டத்தைச் சுற்றி அவர் தாண்டவமாடினாராம். அப்பால் வீட்டிற்குச் சென்று மறுநாள் காலை யாககுண்டத்தில் பாய்ந்து விட்டதாகச் சொல்லப் படுகிறது. இந்த சமாச்சாரம் கிராமத்தாருக்குத்தெரிய வந்ததும் அவர்கள் வந்து பார்த்தனர். அப்பொழுது, அவர் உடல் பாதிக்கு மேல் வெந்து கரிக்கட்டையாகக்கிடந்தது. கடைசியில் போலீசார் வந்து மரணவிசாரணை நடத்தி பிரேதத்தை தகனம் செய்ய பந்துக்களிடம் கொடுத்தார்களாம் (சென்னை மெயில் 15-9-31) மதவெறியாலுண்டான மோட்சப்பைத்தியம் 28 வயதுள்ள ஓர் இந்திய யுவனை தற்கொலை செய்யத்தூண்டியதுடனமையாது 12 வயதுள்ள அவனது மனைவியை தம் வாழ் நாள் முழுதும் விதவையாய் துயரக்கடலில் ஆழ்ந்து தவிக்கும் படி செய்துவிட்டது. ஒரு சிறுமியின் வாழ் நாள் முழுவதையும் பாழக்கிய ஹிந்து மதமே! நீயொழியும் நாள் என்னாளோ? திருவாங்கூரிலுள்ள ஒரு பார்ப்பன பி.ஏ. பட்டதாரியொருவர் பிரமஞான சபையைச் சேர்ந்தவர். இவ்வுலகம் துன்பம் நிறைந்தது எனவும் இவ்வுடல் பொய்யெனவும் நம் ஆன்மாபிரம்மத்தின் ஒரு பாகமெனவும் நாம் மாயையாகிய இவ்வுடலினின்று பிரிந்தால் பிரம்மத்தோடு இரண்டரக்கலந்து விடாலாமென்று எண்ணி திரு வாங்கூர் பக்கத்திலுள்ள கடலில் சுமார் 4,5 ஆண்டுகட்கு முன்னர் விழுந்து இறந்தது சுதேசமித்திரன் முதலிய பத்திரிகைகளில் வெளி வந்தது. வேதாந்த மதமே, பிரம்மஞானமே நீ மக்களுக்கு ஆற்றும் தொண்டேதொண்டு. கோயமுத்தூர் ஜில்லாவிலும் மற்றும் பல இடங்களிலும் சில மத பக்தர்கள் சிறுவர்களைப் பிடித்துக்கொண்டு போய் பலியிட முயற்சித்ததுமான பல சம்பவங்கள் பத்திரிகைகளில் அடிக்கடி வாசித்திருப்பீர்கள். எமது ஊரிலிள்ள ஒரு பையன் கூட 4, 5 ஆண் டிற்கு முன் இலங்கையிலிருந்து ஒரு சந்நியாசியால் ஏமாற்றப்பட்டு தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள ஒரு காட்டிற்கு அழைத்துக் கொண்டு போகப்பட்டு, அங்கு அம்மதவெறி கொண்ட மூடச்சந்நியாசி இச் சிறுவனைப் பலிகொடுக்கப் போவதற்கு முந்தினநாள் விடியற்காலம் தப்பியோடி வந்துவிட்டதற்கு அப்பையனே சாட்சியாக இன்றளவும் இருந்து வருகின்றான். போலிச்சந்நியாசிகளின் மதபக்தி-இல்லை-மத வெறியினால் மக்களுலகிற்கு உண்டாகும் கேடுகள் பலப்பல வென் றாலும் மக்களெவரும் அக்கேட்டையொழிக்க முன் வந்தார்க ளில்லை ஹா! இந்து மதங்களுக்கும் மதங்கொண்ட மக்களுக்கும் வெற்றிகாலமா? இஸரவேலருக்கும், அம்மோனியருக்கும் போர்மூண்ட பொழுது யெப்தானென்பவன் நான் அம்மோனியரை வெற்றி கொண்டால் வெற்றியுடன் திரும்பி என் வீட்டுக்கு வரும் பொழுது எதிர்ப்பட்டது எதுவோ அதை எனது கடவுளாகிய எகோவுக்கு தகனபலி கொடுப்பேன் என்று சங்கற்பம்பண்ணினான். அவ்வாறே அம்மோனியரோடு யுத்தம் செய்து அவர்களை சங்காரஞ்செய்து அவர்களின் பட்டினங்களையெல்லாம் பிடித்துக்கொண்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் வெற்றி முரசொலிப்ப தன் இல்லத்திற்கு திரும்பி வந்தான். அவ்வமயம் அவன் புதல்வி தன் தந்தையின் வெற்றிச் செய்தி கேட்டு அகமகிழ்ந்து மிருதங்கத்தோடு நடனஞ்செய்து அவனை எதிர்கொண்டழைக்கவந்தாள். அவள் அவனுக்கு ஒரேபிள்ளை வேறு புத்திரியோ, புத்திரனோ கிடையாது. அவளைக் கண்டதும் அவன் தன் பொருத்தனையைக்கூறி வருத்தப்பட்டு அவளை ஆண்ட வனுக்குப் பலிகொடுக்க நேர்ந்ததற்கு வருந்தினான். அதற்கு அவள் ஆண்டவனுக்குக் கொடுத்த வாக்குப் படியே செய்யும்; அம்மோனியர் மேல் உமக்கு வெற்றிகிடைக்கச் செய்ததே போதுமென்றாள். பின்னும் தன் தந்தையை நோக்கி தந்தையே! நான் மலைகளின் மேல் உலாவித் திரிந்து என் தோழிகளுடனே என் கன்னிமையின் நிமித்தம் துக்கங் கொண்டாடும்படி எனக்கு இரண்டு மாதத்தவணை தரவேண்டு மென்றாள். அதற்கவன் நீ போய்வாவென்று அவளை இரண்டு மாதத் திற்கு அனுப்பிவிட்டான். அவள் தன் தோழிகளுடனே போய் தன் கன்னிமையினிமித்தம் மலைகளின் மேல் துக்கங்கொண்டாடி இரண்டுமாதம் முடிந்தபின் தன் தகப்பனிடம் திரும்பி வந்தாள். அப்பொழுது அவன்தான் பொருத்தனைபண்ணியிருந்தபடியே அவளை கடவுளுக்கு பலியிட்டான் என்பவைகள் கிறிது வேத புத்தகமாகிய பைபிளின் நியாதிபதி அத்.11.வசனம் 30-40இல் விரிவாய் கூறப்பட்டிருக்கிறது. கன்றுக்குட்டியை பூசித்ததினிமித்தம் ஒவ்வொருவனும் தன்தன் சகோதரனையும் சினேகிதனையும் கொன்று போடும்படி கர்த்தர் சொன்னதாய் மோசே சொல்ல, லேவியன் புத்திரர் 3000 பேரைக் கொன்றார்கள். (பைபிள் யாத்திராகமம் அதி 32 வசனம் 27,28) இச் சங்காரத்தில் மோசேயின் சகோதரன் ஆரோன்மட்டும் கொல்லப்பட வில்லை. பின்பு இவன் குருவாகவும் நியமிக்கப்பட்டான். ஒருசிறுவன் தேவதூஷணம் செய்ததற்காக கர்த்தர் அவனைக் கல்லால் எறிந்து கொல்லச் சொன்னார், அவ்வாறே கொன்றார்கள் (லேவியர் 24. 10,16) தாய்தந்தையர்கள் சொல்கேளாமலும் கீழ்ப்படியாமலுமிருக் கிற பிள்ளையை (தாய் தந்தையர்கள்) மூப்பரிடத்தில் கொண்டு போய் இவன் பெருந்தீனிக்காரனும் குடியனுமாயிருக்கின்றான் என்று (இல்லாததைச்) சொல்லவேண்டும், எல்லாரும் அவனைக் கல்லால் எறிந்து கொல்லக்கடவர்கள்(பைபிள் 22 பாகமம் 21. 18, 21) கண்டனனாயின் முக்கட் கடவுளை நிந்திப்போனைத் தண்டனைபுரிந்து கொல்க வரிதெனிற் சமிக்க நின்றி மண்டனில் வலியனன்றேல் வான்செவித்துணைகள் பொத்திக் கண்டவன் அகன்று செல்க குலைகுலைந்தமல பத்தன் என்று சைவசமய நூல்களில் ஒன்றாகிய சித்தாந்த சிகாமணி என்னும் நூலில் கூறப்பட்டிருக்கிறது. சைவசமய நாயன்மாரில் ஒருவராகிய திருஞான சம்பந்தர் வாதத்தில் தம்மிடம் தோல்வியுற்ற - இல்லை - ஏமாற்றப்பட்ட சமணர் களை நோக்கி நீங்கள் தோற்றால் நீங்கள் 8000 பேரும் கழுவேற வேண்டும் என்றுயான் கூறிய பந்தயத்திற்கு இணங்கித் தோல்வியுற்று (ஏமாற்றப்பட்டு) போனீர்கள். அதன்படி நீங்கள் கழுவேறி இறக்க வேண்டியவர்களே. ஆனால் எங்களுக்கு நீங்கள் அடிமையாய் இருக்க சம்மதித்தால் கழுவிலேறி சாகவேண்டியதில்லையென்று கூற சிலர் மானம் பொறுக்கமாட்டாது கழுவிலேறி யிறந்தார்கள். எஞ்சிய வர்களை சைவர்கள் பிடித்து அந்த முத்தலைக் கழுமரத்திலேற்றி யிருத்திக்கொன்றார்கள். கழுவிலேறியிறந்தவர்களையெல்லாம் பருந்து, காகம், கழுகு, நாய், நரிகள் முதலியவைகள் இழுத்து இழுத்து தின்ன உடலானது கழுவில் கிடந்தது என்பதைத் திருவிளையாடற் புராணம் இன்றும் கூறிக் கொண்டிருப்பதோடு, மதுரையில் நடை பெறும் கழுவேற்றிய திருவிழாவும் போதிய சான்றாய் விளங்கு கின்றது. சைவர்காள்! c§fË‹ étfhU©a« e‹W!நன்று!! விஷ்ணுவே மேலான தெய்வமென்று தொழும் வைஷ்ண வரில் ஒரு பிரிவினரான தென்கலையாரின் பரமகுருவும் உபதேச ரத்னமாலை, நூற்றந்தாதி முதலிய நூற்களின் ஆசிரியருமான மணவாளமாமுனி என்பவர் சைவசமயப் பண்டிதரான சிவவிக் கிரக யோகியாருடன் தஞ்சாவூர் சரபோஜி மஹாராஜாவின் முன்னர் சமயவாதஞ்செய்து தோல்வியுற்றார். அன்றிரவே மணவாளமாமுனி கோபங்கொண்டவராய் சிவவிக்கிரகயோகி யாரை யொழிப்பதே தம் சமயத்திற்கு செய்யும் அரும்பணியென எண்ணி யோகியர் நித்தரை செய்து கொண்டிருக்கும் பொழுது நடு இரவில் அவர் தூங்கும் வீட்டைக்தீக் கொளுத்திவிட்டார். இச்சரித்திரத்தின் விரிவு பாவலர் சரித்திர தீபகம் என்னும் நூலில் நன்றாய் விளக்கப்பட்டிருக்கிறது. இன்னும் ஆராய்ந்து கொண்டே போனால் சமயவெறியால் நடந்த கொலைகளும் போர்களும் அளவிட்டுரைக்க முடியா. இவை களினால் மதபக்தி மிகுந்தவன் மதங்கொண்டவனாகின்றான் என்பது நன்கு புலனாகும். அப்பரும் சம்பந்தரும் கொலைபுரிந்ததும் பெற்றோர் இரக்கமென்பதை அறவே துறந்து சீராளதேவரை கறிசமைத்ததும் அன்பு அணுவளவுமின்றி சண்டேசுர நாயனார் தம் தந்தையாரை வெட்டியதும் மணவாளமாமுனி சிவவிக்கிரகயோகி யாருக்கு செய்த கொடுமையும் இன்னும் நம் நாட்டில் நடைபெற்ற சைவ வைஷ்ணவ போர்களும் வடகலை தென்கலை சண்டைகளும் இது போழ்து நடைபெற்றுவரும் ஹிந்து முலீம் சச்சரவுகளும் ஐரோப்பாவில் நடைபெற்ற கத்தோலிக்க-புரோட்டேடாண்டு யுத்தங்களும் மதங்களுக்கு விரோதமாய் எழுதியும் பேசியும் வந்த பிளேட்டோ (Plato) என்னும் தத்துவ சாதிரியும் சமதர்ம இயக்க தருமான அறிஞரின் கொள்கையை பிரசாரம்பண்ணிய ஹைபேசியா (Hypatia) என்னும் பெண்மணியின் தோலுரித்து, அம்மாதை நிர்வாண மாக்கி தெருவிலிழுத்து தடியாலடித்துக் கொன்றதும் புரூனோ (Burno) என்னும் அத்துவித சாதிரியை நெருப்பிலிட்டுக் கொன்றதும் வானினி (Vanini) என்னும் இத்தாலியா தத்துவஞானியின் நாக்கு அறுக்கப்பட்டதும், முலீம் மேதாவிகளான சீர்திருத்தவாதிகள் பலர் அம்மததர்களாலே தோலுரிக்கப்பட்டதும், கல்லாலடிக்கப் பட்டிறந்தும் கோடிக்கணக்கானமக்கள் சமயப்போரால் மாண்ட தும், மாண்டுவருவதும் மதவெறியன்றேன எவரே மறுக்க வல்லார் இது பற்றியன்றோ மேனாட்டறிஞர்கள் பலர் மதத்தை ஒழிக்க வேண்டுமென்று கூறிவருகிறார்கள். மதத்தையொழித்து ருஷியா தேச மெங்கும் சமாதானமும் சந்தோஷமும் பொங்கி ஒற்றுமை வளர்ந்து வருகிறது. இதன் உண்மையை அறிந்தே நமது இயக்கத் தோழரும் ஏழைகளின் நண்பருமான திரு. எ. ராமநாதன் அவர்கள், மதமென்று மனிதச்சமூகத்தில் அறிவும் அன்பும் உதய மாகாமல் மிருகத்தன்மை ஓங்கியிருந்தகாலத்தில் தந்திரசாலி களான ஒரு சிறு கூட்டத்தார் பெருவாரியான மக்களை அடக்கியாள ஏற்படுத்திய ஒரு சூட்சியாகும். அம்மதமே மக்களிடத்தில் மிருக சுவாபத்தையும் மூடநம்பிக்கையையும் வளர்த்து வரும் ஒருதாபன மாய் விளங்குகிறது. அதை ஒழிக்க முயற்சிக்க வேண்டியது ஒவ்வொரு சமதர்மவாதியின் கடமையாகும் என்று கூறியுள்ளார். கடவுள் வெறியும் மதவெறியும் கொண்டவன் எத்தகைய அறிவியல் நூல்களைக் கசடறக்கற்றிருப்பினும் தம் மத நூல்களில் கடவுள் என்பவர் தம் பகுத்தறிவிற்கு மாறாக ஒன்றைக்கூறியிருப் பதாக படித்திருந்தால் தம் பகுத்தறிவு கூறுவது தவறென்றும், கடவுள் கூறியது அல்லது தம் சமயப்பெரியார் கூறியவைகளே சரியென்றும் நம்புகின்றான். kj üšfËš flîŸ T¿ajhf T¿ÆU¥gJ m¿Éyh® flîŸ bgauhš T¿ÆU¡F« ï~njh® f£Liu ba‹W«, ï~J gF¤j¿É‰F r‰nwD« bghU¤jk‰wbj‹W« vtdhtJ T¿dhš clnd MÞâf bt¿a®fŸ mtidí«, mtdJ gF¤j¿ití« FiwT¿ bghJ #d§fŸ mt‹nkš JntõK©lhF« go T¿, TLkhdhš mtid¡ bfhiy brŒaî« ö©oÉL»‹wd®.ã.V.,v«.V., பட்டம் பெற்று உயர்ந்த அறிவியல் நூற்களைக் கற்றவனாயினும் ஆதிக வெறி கொண்டவனாயிருப்பின் இந்துமத புராணத்திற்கூறியபடி ஆயிரத் தெட்டு அண்டங்களையும், நூற்றெட்டு சதுர்யுகமாண்ட சூரபத்ம னென்னும் அரக்கர் குல அரசன் கால், கை, முகம் முதலிய உறுப்பு களையுடைய சூரியனாகிய உயிர்ப்பிராணியைப் பிடித்து வந்து தன் மகன் பானுகோபன் தொட்டிலில் கொண்டு வந்து கட்டியிருந்தான் என்றும் அவனுக்கு மனைவி மக்கள் முதலிய சுற்றத்தார் உண்டென் றும் சூரியனாகிய தேவன் ஆகாயத்தில் ஏழுபச்சைக்குதிரைகள் கட்டிய இரதத்தின் மேல் ஏறிச்செல்கிறான் என்றும் அவனுக்கு ஒரு கண்ணில்லையென்றும் தக்கனுடைய யாகத்தில் அவனுடைய பற்கள் பிடுங்கப்பட்டதென்றும் அவ்வாறே சந்திரனும் மனுஷரூ முடையவனென்றும் தாரகை என்னும் தன் குருவின் மனைவியை இச்சித்து அவன் ஒளிமழுங்கி பின் இப்பொழுதேபோல் அமாவாசையி லிருந்து ஒளிவளரும்படி விமோசனம் பெற்றான் எனவும் சூரியனை யும் சந்திரனையும் இராகு கேது என்னுமிருபாம்புகள் விழுங்கி விட்டுவிடுகிறதென்றும் அவ்வாறு சூரிய சந்திரனைக் கடிக்கும் விஷம் மனிதர்மேலும் வந்து சாரும் எனவே அப்பொழுது நானம்பண்ண வேண்டும் என்றுக் கூறியவைகளை நம்பி நடந்து வருகின்றார்கள். அவ்வமயம் ஒருவன் சூரியன் ஓர் அக்கினிகோளம். அதன் சமீபத்தில் எவராலும் செல்லமுடியா, பூமியிலிருந்து சூரியனை நோக்கி 100மைல் ஆகாயக்கப்பலில் போவதற்குள்ளே உஷ்ணத்தால் ஆகாயக்கப்பல் புகையாய் போய்விடும், பூமிக்கும் சூரியனுக்குமுள்ள தூரம் 93 மிலியன் மைல்கள், அதன் குருக்களவு 865,500 மைல், அஃது பூமியைவிட 330000 பங்குபெரியதென்று கூறினால் வைதீகனாகிய எம்.ஏ. பட்டம் பெற்ற அறிஞன் அவன்மீது தன்பகுத்தறிவிழந்து நாய் போற்சீறி நமது வேதம் பொய்யா? வெள்ளைக்காரன் என்ன கண்டான்? நமது பெரியவாள் வார்த்தையை பொய்யென்று கூறலாமா? அம்மம்மா! கலிகாலம் என்று கூறிவிட்டு சிவ சிவ என்று இவன் கூறிய வார்த்தைகளைச் செவிகளிலேற்காது காதைப் பொத்திக்கொள்கின்றான். ஆதிக வெறிகொண்ட மனிதன் சுகாதார உத்தியோகதன் (Health officer) ஆயினும் கோயிலுக்குப்போய் நல்ல காற்றும், வெளிச்சமுமில்லாத கோயிலினுள் சென்று பலமணி நேரம் நிற்கவும், அங்குள்ள அற்ப மான பிராணவாயும் ஆங்குள்ள பெரிய கூட்டத்தினரால் கரிவாயு வாக்கப்பட்டு அதைப்பல மணிநேரஞ் சுவாசஞ் செய்யவும், புரோகிதப் பார்ப்பான் மலஜலங்களையெல்லாம் மிதித்துக்கொண்டுவந்து தண்ணீர் எடுத்துவந்து விக்ரகத்தின் மேல் ஊற்ற அத்தண்ணீர் புரோகிதப் பார்ப்பான் காலில்பட்டு அவன் காலிலுள்ள அழுக்கு மலஜலம் முதலியவைகளைக் கரைத்துக்கொண்டு பலவருடங் களாய் தீர்த்தத்தண்ணீர் தேங்கி புழுக்கள் பல மலிந்திருக்கும் தீர்த்தத்தொட்டியில் விழுவதையுமறிந்தும், பகுத்தறிவையிழந்து வாயிலூற்றிக் கொள்வதையும், தலையில் தெளித்துக்கொள்வதையும் ஒவ்வொரு கோயிலிலும் நாம் கண்டும், கேட்டும் வருகின்றோம். மேலும் எத்தனையோ அரசாங்க உயர்தர உத்தியோகதர்கள்கூட தங்கள் வீடுகளில் நடக்கும் சிரார்த்த தினங்களில் பஞ்சகௌவியம் சாப்பிட்டுத்தானேவருகின்றார்கள். பஞ்ச கௌவியம் என்றால் பசு மாட்டின் சாணி, மூத்திரம், பால், தயிர், நெய் முதலியவைகள் என்று எல்லோரும் அறிந்திருந்தும், மதவெறியன்றோ பகுத்தறிவிழக்கச் செய்து மாட்டுச்சாணியையும் மாட்டு மூத்திரத்தையும் சாப்பிடச் செய்யும்படி செய்கிறது. இதற்கு சில ஆங்கில பட்டதாரிகள் மேனாட்டு அறிஞர்கள் கூறியிருப்பதாக சில ஏமாற்று மொழிகளைக் கூறி இப்படிச் சாப்பிடுவதில் உடலுக்கு மிகவும் நன்மையென்று நாட்டு மக்களை ஏமாற்றி வரும் புரட்டை நினைக்க நினைக்கவே மிக வேடிக்கையாகயிருக்கிறது. இன்னும் மக்கள் அறிவைப்பாழ் படுத்தும் புராணக் கூற்றுக்களிலுள்ள இத்தகைய ஆபாசங்களை நாம் எடுத்துக் கூறி இவைகளைப் பகுத்தறிவிற்குப் பொருத்தமற்ற தெனக் கூறினால் மத நம்பிக்கையற்ற அனைவருமே இத்தகைய மூடச்செயலை அறவே வெறுக்கின்றனர். ஆனால் மதப்பைத்தியம் பிடித்த மக்களோ நாம் சொல்வதின் உண்மையை ஒப்புக்கொண்டாலும் மதப் புத்தகங்கள் அவர்களறிவைச் சிறிது நேரத்தில் மாற்றி கடவுள் வார்த்தையிலும் பகுத்தறிவு பெரிதோ, வேதங்கள் எழுதிய பெரியார்கள் முட்டாள்களா? அவர்களுக்கு இது தவறு என்று அறியும் சக்தி கிடையாதா? அவர்களைவிட இப்பொழுது பகுத்தறிவுப் பிரசாரம் புரியும் சு.ம காரர்களும் அறிவியல்வாதிகளும் பெரிய மேதாவிகளா? நமது முன்னோர் கூறியதன் உண்மையை இக் காலத்துள்ளோர் அறியாது பிதற்றுகிறார் என்று தாம் ஒப்புக் கொண்டிருந்த பகுத்தறிவு ஜோதியை மதப்பைத்தியம் என்னும் இருட்படலம் மறைத்துகொண்டு வருகிறது. உதாரணமாக யான் ஒரு சமயம் புகை வண்டியில் போகும்போது பஞ்ச கௌவிய மருந்தும் பைதியக்காரத்தனத்தைப்பற்றி ஒரு பிராமண ரல்லாத சோதரன் ஓர் ஆங்கிலப்பட்டம் பெற்ற ஒரு பிராமணரிடத்தில் தெளிவாய் விவரித்தார். உடனே அப்பார்ப்பனர் ஐயா நீங்கள் கூறுவது சரிதான் கலியுகத்தில் அவ்வாறு பகுத்தறிவைப்பின்பற்றி வேதங்களிற் கூறிய தெல்லாம் தவறு என்று கூறுவார்களென பகவான் கூறியிருப்பதற் கொப்ப நீங்களெல்லாம் முளைத்துவிட்டீர்கள். பகுத்தறிவால் காணப்படும் பொருளெல்லாம் அழியக்கூடியதே. நாம் இந்தப் புறக்கண்ணால் காணு பொருளெல்லாம் பொய்யானதே. மெய்யான பொருள் அந்த நித்தியப்பிரம்மம் ஒன்றே. சிருஷ்டி கர்தாவான நான்முகக்கடவுள் புத்திரரும், சர்வஞ்ஞரும் சூரியகுல குருவுமான வசிஷ்டமகாரிஷிக்குப் பௌத்திரராகிய பராசரர் தம் மிருதியில் பிராயச்சித்த காண்டம் எட்டாவது அத்தியாயம் 22 லோகத்தில் கோமூத்திரம், கோமயம், பசுவின் பால், பசுவின் தயிர், பசுவின் நெய், தர்ப்பஜலம் இவைகள் கூடியது பாபத்தைப்போக்குவதும் பரிசுத்தமான பஞ்ச கௌவியமென்று பெரியோர்களால் சொல்லப்பட்டிருக்கிறது என்றும், 35ஆம் அத்தியாயத்தில் ஹோமம் செய்துவிட்டு எஞ்சியதைப் பிராமணன் பிரணவத்தைச் சொல்லிக்கையிட்டுக் கலக்கி சமித்தினால் கடைந்து பிரணவத்தைச் சொல்லி எடுத்துப் பிரணவத்தைச் சொல்லி பானஞ்செய்ய வேண்டும் என்று கூறி யிருக்கிறது. 36இல் மனிதர்களுடைய சரீரத்தில் எலும்பு தோல் இவைகளைப் பற்றியதாகிய எல்லாப் பாபங்களையும் கிளர்ந் தெரிகிற அக்கினியானது கட்டையைத் தகிர்ப்பதுபோல் பிரம கூர்ச்ச பஞ்சகவியமானது கொளுத்தும் என்றும் 38,39இல் தேவர்களால் வசிக்கப் பட்டதாகிய பஞ்சகவியமானது மூன்று லோகங்களிலும் பரிசுத்தமானது கோமூத்திரத்தில் வருணனும் கோமயத்தில் அக்கினியும் தயிரில் வாயுவும், பாலில் சந்திரனும் நெய்யில் சூரியனும் வசிக்கிறார்கள். இன்னும் கடன்மடைதிறந்தாற் போன்று மடமடென சமகிருத லோகங்களைச்சொல்லி அதற்குரிய இந்த மொழி பெயர்ப்பைக்கூறி நம்பெரியவாள்கள் கூறியிருக்க நிறைவற்ற இந்த அற்பப் பகுத்தறிவைக்கொண்டு அவர்கள் கூறியது தவறு என்று கூறல் எத்துணை அறியாமை என்று கண்கள் சிவக்கக் கூறினார். எமது சோதரரும் இன்னது கூறுவதென்று அறியாது தவித்தார். நானும் அப்பார்ப்பன நண்பரிடம், சாரதா மசோதாவின் நன்மையை எடுத்துக்கூறியும் பாலிய விவாகத்தினால் இந்தியப் பெண்களின் உடல் வலிமை குன்றி நடைப்பிணங்களாய் வாழ்வதை யும் இளமை மணத்தால் பால்ய விதவைகள் மலிவதையும் மறுமண மில்லாது விபசாரம் பெருகுவதையும் சிசுக்கொலைகள் அதிகப் படுவதையும் விளக்கிப் பண்டைக்கால ஆரிய முனிவர்கள்கூட ருதுவான பெண்களை மணஞ்செய்திருக்கிறார்கள் என்பதற்கு பண்டைக் காலப் புராண இதிகாசங்களெல்லாம் கூறுகிறதே அவ்வாறிருக்க வைதீகப் பார்ப்பார்களெல்லாம் சாரதா சட்டத்தை எதிர்த்து ருதுவாகு முன்னர் மணஞ்செய்து கோர்ட்டுகளில் அபதாரங்கள் விதிக்கப்பட்டாலும் செலுத்திவிட்டு மீண்டும் சாரதா சட்டத்தை மீறித்திருமணம் நடத்துகின்றனரே இது சரியா என்று வினவினேன். உடனே அப்பார்ப்பன நண்பர் என் பக்கம் திரும்பி முன் யுகங்களில் ருதுவாகுமுன்னர் மனுமிருதியை அனுசரித்து திருமணம் நடந்து வந்தது. பின்னர் பாராசரர் மனுமிருதியை ரத்துச் செய்து இக்கலியுகத்திலுள்ளோர்க்கு பராசர மிருதியை ஏற்படுத்தியுள்ளார். அந்த மிருதியில் பிராயச் சித்த காண்டம் நாலாவது அத்தியாயத்தில், எட்டு வயதினையுடையவள்கௌரி, ஒன்பது வயதினை யுடையவள் ரோகினி, பத்து வயதினையுடையவள் கந்நிகை, பத்து வயதிற்கு மேற்பட்ட வயதினையுடையவள் ரஜவலை என்று என்னப்படுவார்கள். கௌரி, ரோகினி, கந்நிகை ஆகிய மூவரும் விவாகத் திற்குத்தக்கவர்கள், ரஜவலை விவாகத்திற்குத் தகாதவள். அவளைத் தானம் செய்கிறவன் நரகத்தை அடைகிறானென்று பிரகபதி சொன்னார். பனிரெண்டாவது வயது வந்தபின் (ருது உண்டாவதற்கு முன்) எவன்தன் கந்நிகையைத் தானம் செய்யவில்லையோ அவ னுடைய பிதிர்க்கள் அந்தப் பெண்ணினுடைய பிரதிமாத ருது மலத்தைப் புசிக்கிறார்கள். விவாகஞ் செய்வதற்குமுன் பெண்ணைத் தன் வீட்டில் ரஜவலையாகப் பார்த்த அந்தப் பெண்ணினுடைய தாய் தந்தை மூத்த சோதரன் இம்மூவரும் நரகத்தையடைகிறார்கள். இதனால் ருதுவாகிறதற்குமுன் கந்நியாதானம் செய்யாதவன் தன் பிதுர்க்களை நரகத்தில் தள்ளுவது போல் தானும் குடும்பத்துடன் நரகத்தில் விழுகிறானென்பது சொல்லப்பட்டது. திரிகளுக்கு மனதில் காமம் தோன்றும் காலம் வந்தால் சோமதேவனும் ருது பருவம் வந்தால் கந்தருவனும் தனம் புறப்பட்டால் அக்நிதேவனும் அவர்களை அனுபவிக்கிறார்களாகையால், கந்நிகை ரஜவலை யாவதற்கு முன்னமே பிதா அவளை யோக்கியனாகிய ஒருவனுக்கு விவாகஞ்செய்விக்க வேண்டுமென்று ஸம்வர்த்தனர் சொன்னார். ஒரு பெண் லஜ்ஜையடைந்து தன்யோனி முதலிய அங்கங்களை எவ்வளவு காலம்வரையில் மறைத்துக்கொள்ளவில்லையோ அதுவரையிலும் அவள் கன்னிகையென்னப்படுவாளென்று புராணசாரத்தில் சொல்லப் பட்டது. எட்டு வயதுடைய பெண் கௌரி என்னப்படுவாள். அவளைத் தானஞ் செய்தவன் சுவர்க்கலோகத்தையடைகிறானென்றும், ஒன்பது வயதுடையவள் ரோஹிணி எனப்படுபவள், அவளைத் தானம் செய்தவன் வைகுண்டத்தை அடைகிறான் என்றும் பத்து வயதுடையவள் கந்நிகை யெனப்படுவாள், அவளைத் தானஞ் செய்தவன் பிரம்மலோகத்தை அடைகிறான் என்றும் அதற்கு மேல் ரஜவலை எனப்படுபவள் அவளைத் தானஞ் செய்தவன் ரௌர மென்னும் நரகத்தை அடைகிறான் என்றும்....... கூறிக் கொண்டே தன் பிரசங்கத்தை நீட்டிக்கொண்டு போனார். யானும் ஏன்தான் இவ ரிடம் பேச்சுக் கொடுத்தோம் என்று எண்ணினேன். யான் போக வேண்டிய ரயில்வே டேசனும் சமீபித்தது, உடனே ஐயரை நோக்கி நல்லது ஐயா! நான் இரங்கவேண்டிய டேசன் சமீபித்துவிட்டது. பராசரர் சொன்னார் மனு சொன்னார், வியாசர் சொன்னார் என்ப தெல்லாம் இருக்கட்டும். எல்லா சாதிரங்களும் மக்களுக்காகவே செய்யப்பட்டிருக்கிறதே யொழிய அச்சாதிரங்களுக்காக மக்கள் உண்டாக்கப்படவில்லை. அக்காலத்திலே இந்தச் சட்டங்கள் அவசியப்பட்டிருக்கலாம். அதனாலும் சிறிது நன்மையும் ஏற்பட் டிருக்கலாம். ஆனால் இப்பொழுது இவைகளினால் முற்ற முற்றத் தீமைகளுண்டாவதை யறிந்தும் நம் புத்திக்கும், யுக்திக்கும்அவைகள் தீதானதெனத் தெரிந்தும் அவைகளை நம்பி அதன்படி நடக்க வேண்டுமென்று கூறல் அறிவுடைமையா? என்று பல ஆதாரங்காட்டி விளக்கினேன். அவர் கோபப் பார்வையோடு நீங்கள் இராமசாமி நாயக்கன் கட்சி போலிருக்கிறது. அதனால்தான் இப்படியெல்லாம் பேசுகின்றீர்கள். பகுத்தறிவினால் தெய்வ கட்டளையின் தன்மையை உணரமுடியாது. மத விஷயத்திலும் பகுத்தறிவை உபயோகிப்பது மடமையாகும். எல்லா விஷயத்திலும் பகுத்தறிவை உபயோகித்தால் என்று ஆரம்பித்த உடனே நான் ஐயா! நீர் பகுத்தறிவற்றவர் அல்லது பகுத்தறிவிற்குப் பகைவர் என்று முன்னமே யறிந்திருந்தால் உம்முடன் இத்துணை தூரம் பேசியிருக்கமாட்டேன். நீர் ஆங்கிலம் பயின்றிருப்பதினால்உமக்குக்கொஞ்சமாவதுபகுத்தறிவுஇருக்கு மென்றேண்ணினேன். பகுத்தறிவு அற்ற மாக்கள் குழுவில் சேர்ந்தவ ரானபடியினால்தான் அறிவியல் இயக்கத் தந்தையாய் விளங்கும் அறிஞர் ஈ.வெ. இராமசாமி அவர்களை மரியாதைக் குறைவாய் பேசினீர்போலும். பகுத்தறிவற்ற மக்கள் நெடுநாள் இந்தியாவில் வாழ முடியாதென்பதை திட்டமாயறிந்து கொள்ளும் என்றேன். யான் இறங்கவேண்டிய டேசனில் புகைவண்டியும் நின்றது. நண்பர்களிடம்விடைபெற்றுக்கொண்டு யானும் என்வழியே சென்றேன். எத்துணைதூரம் ஆங்கிலப்புலமை, வடமொழிப் புலமை யுடையவராயினும் மதத்திற்கு அடிமைப்பட்டார் பகுத்தறிவற்ற விலங்கினங்கட்கொப்பாவாரேயன்றி மனித வர்க்கத்திற் சேர்ந்தவ ராகார். மத நம்பிக்கையுடையோர்களிற் சிலர் பகுத்தறிவு வாதியாய் விளங்குவதற்குக் காரணம் அவர்கள் தம் மதக் கட்டுப்பாடு அல்லது நம்பிக்கை என்னும் பிடிப்பினின்று தங்களைச் சிறிதுதளர்த்திக் கொண்டதினால் தான் பகுத்தறிவு வாதியாய் விளங்குகின்றார்கள். சுயமரியாதைக்காரர்கள் தங்களது மதப்பைத்தியத்தை குடிஅரசு என்னும் அமிர்த சஞ்சீவியையுண்டு தங்களின் பைத்தியத்தை ஒழித்து விட்டதினாலன்றோ, இப்பூமியை ஆதிசேடன் என்னும் பாம்பு சுமந்துகொண்டிருப்பதாயும்,அதற்குஒருதோள்வலியுண்டானால் மற்றொரு தோளிற்கு மாற்றுவதால் பூமியதிர்ச்சியேற்படுவதாயும்; ஓர் அசுரன் பூமியைப் பாயாகச் சுருட்டி கடலுக்குள்கொண்டுபோய் ஒளித்துவைத்துக்கொண்ட பொழுது விஷ்ணு பன்றியவதாரமெடுத்துக் கடலினுள் சென்று பூமியை வெளியே கொண்டுவந்ததையும்; பூமியை ஒரு பெண்ணாகவும் அப்பெண்ணிற்குப் புருஷனும் மக்களும் உண்டென்று கூறியிருப்பதையும் மலைகளுக்கு சிறகு இருந்தது, அவைகள் திருவிளையாடற் புராணகாலத்தில் கூட பறந்து சென்ற தென்பதையும் குடத்திற் பிறந்த குள்ளனாகிய அகதியர் கடல் களையெல்லாம் சாப்பிட்டதையும்; சாகரர்கள் கடல் வெட்டிய கதையையும்; நட்சத்திரங்களையெல்லாம் உயிருள்ள தேவர்களான ஆண்களும் பெண்களுமாமென்றும், இடியும் மின்னலும் மேகமும் ஒவ்வொரு தேவர்களாலே உண்டாக்கப்படுகிறதென்றும், ஒற்றைப் பார்ப்பான் பூணூல்காரன், பூனை, எண்ணைக்குடம், விதவை, விறகுக்கட்டு முதலியவைகள் எதிரில் வந்தால் கெட்ட சகுனமுண் டாகுமென்றும் ஜீவகாருண்யமற்று பால்ய மணம் செய்யவேண்டும், விதவை மணம் கூடாது, விவாகரத்து கூடாது, கலப்பு மணம் கூடாது, பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கக்கூடாது, ஏழை, பணக்காரன், முதலாளி, தொழிலாளி, உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்றவைகளும் மக்கள் பிறந்தது முதல் இறப்புவரையும்-ஏன்-அதற்கு பின்னரும் நடைபெறும் வீண் சடங்குகளான பிள்ளை பிறந்த பதினாறாம்நாள் சடங்கு, நாற்பதாம் நாள் சடங்கு, பெயரிடும் சடங்கு, ஜாதகமெழுதுஞ் சடங்கு, சோறூட்டுஞ் சடங்கு, ஒரு வயது நிரம்பியதும் பிறந்த நாள் சடங்கு, (ஜன்ம நட்சத்திரச்சடங்கு) படிக்கவைக்குஞ் சடங்கு, திருமணச் சடங்குகள், மறுவீட்டுச் சடங்கு, சிசுமந்தச் சடங்கு, சஷ்டிபூர்த்திச் சடங்கு, மரணச் சடங்கு, காடாற்றுச் சடங்கு, கல்லெடுப்புச் சடங்கு, மாசியச் சடங்கு, சிரார்த்தச் சடங்கு முதலிய ஆயிரக்கணக்கான சடங்குகளையும் பழக்க வழக்கங்களிலுண்டான மூடச் செயல்களையும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைத்துவரும் அநீதிகளையும், பெண் மக்களுக்குச் செய்துவரும் கொடுமைகளை யும் இன்னும் எண்ணத்தொலையாத......... மி. மேயோ போன்ற அந்நிய நாட்டுப் பெண்களும் நம்மை இழித்துக்கூறிவரும் அநாகரீகச் செயல்களையெல்லாம் வேறோடு கல்லியெறிந்து பகுத்தறிவுச் சோதியைப் பிரகாசிக்கச் செய்யவிடாது தடுக்கும் மதவெறியினின்று மீளச் செய்ததையும் யாரே மறுக்க வல்லார்? எனவே மக்கள் உலகில் பெருந்தீங்கு விளைவித்து இந்து மக்களின் முன்னேற்றத்திற்குப் பெருந் தடைக் கல்லாயிருக்கும் மூட நம்பிக்கையை ஒழித்து பகுத் தறிவு ஜோதியை வளரவிடாது தடுத்து நிற்கும் மத வெறியை முதலில் வேறோடு பெயர்த்தெரியவேண்டும். கிறிது மதத்திலும் ஏனைய சமயங்களைப்போல் பகுத்தறிவுக் கொவ்வாக் கொள்கைகள் பல மலிந்து கிடக்கின்றன. எடுத்துக்காட் டாக உலகமும் அதிலுள்ள சகல பொருட்களும் தோன்றுவதற்குமுன் கடவுள் (தேவ ஆவியானவர்) சலத்தின்மேல் அசைவாடிக் கொண்டி ருந்தார் என்றும், முதலில் வெளிச்சத்தையுண்டாக்கிவிட்டு பின் மூன்றாம் நாள் சூரியன், நக்ஷத்திரங்கள் முதலியவற்றைப் படைத்தார் என்றும் ஆதிமனுஷனாகிய ஆதாமை மண்ணினாலே உருவாக்கி அதன் நாசியிலே தேவன் சீவசுவாசத்தை ஊதியதும் அவன் மனித னாக எழும்பி உலகில் வசித்தான் என்றும், பின்னர் அவன் விலா எலும்பைக்கொண்டு ஏவாள் என்னும் மனுஷியை உண்டாக்கினான் என்றும் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் காயீன், ஆபேல் என்றிரு ஆண் மக்கள் பிறந்தார்கள். காயீன் ஆபேலைக் கொன்றதன் பின் காயீன் நோத் என்னும் தேசத்தில் குடியிருந்தான். அங்கே தன்மனைவியை அறிந்தான் என்றும் அக்காலத்தில் பூமியில் இராக்ஷதர்களும் குடி யிருந்தார்கள், தேவகுமாரர்கள் பூமியிலுள்ள மனுஷகுமாரிகளை மணந்தார்களென்றும் தேவன் உலகத்தையும், அதிலுள்ள சகல பொருட்களையும் ஆறு நாட்களுக்குள் படைத்து விட்டு ஏழாம் நாள் ஓய்ந்திருந்தார். ஆகையால் மனிதர்களும் அந்த ஓய்வு நாளில் யாதொரு வேலையும் செய்யாது ஓய்ந்திருக்கவேண்டும் என்றும் இன்னும் பல விஷயங்களும் கிறிதுவவேதப் புத்தகமாகிய பைபிலின் ஆதியாகமம் என்னும் ஒரு சிறுநூலில் மட்டும் காணக்கிடக்கின்றது. மதப்பற்று மிகுந்த மக்களிடம்,இறைவன் உலகத்தையும், அதிலுள்ள பொருட்களையும் படைப்பதற்கு முன் ஜலத்தின்மேல் எவ்வாறு அசைவாடிக் கொண்டிருத்தல் சாலுமென்று வினவினால் ஒரு சிறிதும் தங்கள் பகுத்தறிவுக் கண் கொண்டு பாராது தேவனால் முடியாத காரியமொன்றுமில்லை எல்லாம் அவனாலே ஆகும் என்றும் அறைகுவர். ஆனால் பிறசமயத்திலோ இத்தகைய விஷயம் ஒன்று காணப்படுமாயின் சகோதரர்களே! பாருங்கள் எவ்வாறு கடவுள் உலகத்தை உண்டாக்குமுன் ஜலத்தின் மேல் அசைவாடிக் கொண்டிருந்தல் கூடும், இவைகளெல்லாம் பகுத்தறிவுக் கொவ்வாத அறிவிலார் கூற்று இதை நம்பாதீர்கள் என்று கிறிதுவர்கள் உறம்பட மொழிகுவர். இஃதே போன்று முதலில் வெளிச்சத்தையும், மூன்றுநாள் சென்றபின்னர் சூரியன் சந்திரன் நக்ஷத்திரங்கள் முதலிய வற்றையும் படைத்தார் என்றும் கூறுவது எத்துணை அறியாமை. ஒருவன் முதல்நாளில் வெளிச்சத்தையும், இரண்டாம் நாள் தீபத்தை யும் ஏற்றினான் என்று கூறினால் பாடசாலையில் முதலாவது வகுப்பில் கல்விபயிலும் சிறார்களும் கூட எள்ளி நகையாடுவா ரன்றோ? இனிப்பை இன்றைக்கும் சர்க்கரையை நாளைக்கும் கொடுக்க முடியுமா? கேவரில் (கேப்பையில்) நெய்வடிகிறதென்றால் கேட்பாருக்கு புத்தியில்லையா? என்ற முதுமொழிக்கொப்ப இவ் வறிவிலாக் கூற்றுக்களைக் எவரேயொப்புக்கொள்வார். சூரியன் உண்டாக்கப்படுமுன் எவ்வாறு நாட்கள் கணிக்கப்பட்டது? இவை களெல்லாம் கிறித்துவரல்லாத மக்களிடம் கூறினால் கைகொட்டி நகைத்து ஆ! எத்துணைபெரும் பொய் இதையும் நம்பும் மனிதர் களும் உலகிலுளரோ என்று கூறுகின்றனர். ஆனால் கிறிதவர்களி லும்கூட மதவெறி குறைந்த மக்கள் இக்கதைகளெல்லாம் பண்டைக் காலத்திலுள்ள பாமரமக்கள் கூற்று, அவைகளெல்லாம் இவ்விருப தாம் நூற்றாண்டிலுள்ள மக்கள் எவ்வாறு ஒத்துக்கொள்வர் என்று கூறி விடுகின்றனர். ஆனால் மதப்பற்று மிகுந்த கிறிதுவர்களோ அறிவை அறவே புறக்கணித்து ஆண்டவனால் ஆகாதகாரிய மொன்றுமில்லை. வேதத்தில் கூறப்பட்டுள்ள வார்த்தைகளின் தன்மையை உங்களால் அறிய முடியாது, அதற்குப் பொருள்வேறு, இதற்குப் பொருள்வேறு என்று கூறி தப்பித்துக்கொண்டு போய் விடுகின்றனர். ஆதியிலே கடவுள் களிமண்ணினாலே மனுஷனை உண்டாக்கி நாசியில் ஜீவ சுவாசத்தை ஊதி மனுஷனை உண்டாக்கி னார் என்று கிறிதுவ வேதம் கூறுகின்றது. இக்கொள்கை தற்கால விஞ்ஞான சாதிர ஆராய்ச்சியால் நீர்த்துளியாக்கப்பட்டு ஒழிந்து போய்விட்டது. ஐம்பூதங்களிலிருந்து பிராணவாயு (Oxygen) உப்புவாயு (Nitrogen) ஆகியவற்றின் சேர்க்கையால் ஆதியில் தாது வக்கப் பிராணிகளும் பின்னர் கந்தமூலப்பிராணிகளும் கிருமிகள், வண்டுகள்,ஊர்வன, பறப்பன ஆகிய பிராணிகளும் தோன்றி அவைகள்யாவும் மாண்டு மண்ணாகி,--அந்த மண்ணிலிருந்த பிராணவாயுவினால் தவளையும் அதைப்போன்ற உயிரினங்களும், பின் அந்தப்பிராணவாயு மலைகள் கற்கள் முதலியவைகளில் மோதி மான், கரடி, யானை, ஒட்டகம் ஆகிய மிருகங்கள் தோன்றியதாகவும், பின்னர் அவைகளெல்லாம் நசித்து, ஒரு பெரும் மழையினால் அப் பிராண வாயுவின் அம்சங்களெல்லாம் கடலில் போய்ச் சேர கடலில் மீன்களாகியும், அம்மீன்கள் கடலில் உள்ள பாசி முதலியவைகளை யுண்டு வாலும் காலுமுள்ள ஒருவகை உருவத் தோற்றங்களாக மாறி, பின் அவ்வகை உருவத்தோற்றங்கள் நாளடைவில் குரங்குகளாக மாறி அக்குரங்குகளிலிருந்து வாலில்லாக் குரங்குகளாகி அவைகள் நாளா வட்டத்தில் வெயிலுக்கும் குளிருக்கும் மரக்கொம்புகளில் வாழ்ந்து, தினே தினே அறிவு வளர்ச்சி பெற்று ஈற்றில் மனுஷர்களாக மாறி விட்டதென்றும் இவ்வகை மனுஷத் தோற்றங்கள் நிரக்ஷ ரேகைக்கு சமீபத்தில் பல்வேறிடங்களில் உண்டாயிருக்கலாமென்றும் இவ்வாறுவெவ்வேறிடங்களில் மனிஷர்கள் தோன்றியதனால்தான் வெவ்வேறு தேசங்களிலும் வெவ்வேறு விதமான உருவமும் நிறமும் அங்க அமைப்புகளுமுடைய மக்கள் இருக்கின்றார்களென்று டார்வின் முதலிய அறிஞர்களால் கண்டு பிடிக்கப்பட்டு, கிறிதுவப் பாதிரிமார்கள் பலராலும் எதிர்க்கப்பட்டு முடிவில் மேனாட்டு விஞ்ஞான விற்பன்னரால் ஒப்புக்கொள்ளப்பட்ட சர்வகலாசாலை களிளெல்லாம் இத்தகைய நூற்கள் பாடபுத்தகமாக வைக்கப்பட் டிருக்கிறது. இவ்விதமாக வெகு விரிவாய் ஆராய்ச்சி செய்து பகுத்தறி விற்குப் பொருத்தமாக உலகமொத்துக் கொள்ளும்படியான ஒரு கொள்கையைத் தம் வேதபுத்தகத்தில் வேறு விதமாய்ச் சொல்லப் பட்டிருக்கிறது என்னும் ஒரே காரணத்திற்காக டார்வின் ஒரு நாதிகன், அவர் கொள்கை எவ்வளவு புத்திக்குப் பொறுத்தமானதாக இருப்பினும் உலகமே ஒத்துக் கொண்டதானாலும் நாங்கள் ஒப்புக் கொள்ளோம் என்று கிறிதுமத பக்தர்கள் கூறிவருவதிலிருந்து மத வெறி மக்களின் அறிவைப் பாழ்ப்படுத்தி வருகிறது என்பது வெள்ளிடைமலையென விளங்குகின்றதல்லவா? மேலும் மனிதனுள் ஆண்டவனால் ஊதப்பட்ட ஜீவ சுவாசமாகிய பிராணவாயுவைத் தவிர ஆத்மாபோன்ற வது எங்கிருந்து வந்தது என்று கிறிதவர் களிடம் வினவினால் அவர்கள் என்ன கூறுவார்கள் என்றும், ஆதாமின் விலா எலும்பிலிருந்து மனுஷியைப் படைத்தது மெய்யானால் பெண்ணிற்கு இருப்பதைவிட ஒரு விலா எலும்பு குறைவாக இருக்கவேண்டுமென்று கிறிதவ அன்பர்களைக் கேட்டால் பல இடங்களில் தங்கள் மனுஷீகத் தன்மையை மீறி, வைது கலகம் பண்ணி வருவதையான் நேரில் பலவிடங்களில் கண்டிருக்கிறேன். ஆதாமுடைய இரு ஆண்மக்களில் ஒருவன் கொல்லப்பட்டுப் போனபின் மற்றொருவன் நோத் என்னும் தேசத்தில் போய் எவ்வாறு தன்மனைவியை அறிந்தான். அங்கு பெண் எப்படி வந்தாள்? இராக்ஷதர்கள் பூமியில் எவ்வாறு தோன்றினார்கள்? அவர்களை உண்டாக்கினவர்கள் யார்? அவர்கள் பூமியில் இப்பொழுது எங்குள்ளார்கள்? தேவர்கள் யார்? அவர்கள் மனுஷகுமாரிகளை எவ்வாறு மணந்தார்கள்? மணந்து சதிபதிகளாக யாண்டு வசிக்கின் றார்கள்? தேவர்கள் தூலசரீரிகளா? சூக்கும சரீரிகளா? என்ற விஷயங்களையெல்லாம் ஆராய்ச்சி செய்ய கிறிதவர்கள் மனம் தைரியப்படுவதில்லை. இத்தகைய விஷயங்களைப்பற்றிச் சந்தேகித் தலே பெரும்பாவம் என்று கிறிதவபக்தி மிகுந்த ஒரு பக்தன் கூறுகின்றான். வேதத்தில் கூறப்பட்ட கருத்துக்களை மனிதன் தன் சிற்றறிவினால் ஆராய்ந்து உண்மையை உணர முடியாதென் றெண்ணுகின்றனர். சர்வ சக்தியும் வல்லமையுமுள்ள கடவுளுக்கு உலகத்தையும் அதில் உள்ளபொருட்களையும் உண்டுபண்ண ஆறு நாட்கள் செல்ல வேண்டுமா? உண்டாகுக என்று கூறிய க்ஷணத்திலே உண்டாகி விடாதா? சர்வக்கியத்துவமும் ஆற்றலுமுள்ள இறைவனுக்கு களைப்புத்தோன்றி ஓய்வு பெறுவானா? அதைப்போன்று மனிதர் களும் ஏன் ஞாயிற்றுக்கிழமையை ஓய்வு நாளாகவும் அதைப் பரிசுத்த நாளாகவும் அந்நாளில் கிறிதவர்கள் தங்கள் மனைவி, மக்களோ, வேலைக்காரர், மிருகங்கள் முதலியவைகளோ எவ்வித அவசரத்தையிட்டும் வேலை செய்யாதிருத்தல் வேண்டுமோ. யூதர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் அன்றைக்கு வேண்டிய ஆகாரமும் கூட முந்தின நாளில் செய்து கொண்டு ஓய்வுநாளில் யாதொரு வேலையும் செய்யாது சோம்பி இருப்பார்களாம் ஞாயிற்றுக் கிழமைகளில் வேலை செய்தால் அதைவிடப் பாவம் வேறில்லையாம். இதைப் பகுத்தறிவினால் அலசி ஒரு கிறிதுவனிடம் கூறினாலும் அவன் கடவுள் கட்டளையை யான் ஒரு பொழுதும் மீறேன் என்று பிடிவாதஞ் செய்வானே யொழிய அவனுடைய அறிவுக்கு ஒரு சிறிதும் மதிப்புக்கொடுக்கத்துணியான். கிறிதுவர்கள் கொள்கைப்படி உலகம்தோன்றி கிட்டத்தட்ட ஆறாயிரம் வருடங்களாயின. (சென்ற திங்களில் இலாமியப் பத்திரிகையாகிய சென்னை சைபுல் இலாம் பத்திரிகையில் அபுல் ரஹாலன் என்பார் உலகம் உண்டாகி ஏழாயிரம் வருடங்களாகிறது என்று கூறியிருப்பதால் முலிம்களும் இதை ஒத்துக் கொள்கிறார் களென அறியலாம்.) இஃது பிரபல பிஷப்மார்களால் பைபிளை நுணுகி ஆராய்ந்து வெளியிட்ட உண்மையாகும். இதையே எல்லாக் கிறிதுவர்களும் ஒத்துக் கொள்கின்றார்கள். பூமி உண்டாகி கோடிக்கணக்கான வருடங்களாயின வென்றும் அதில் மனிதர்கள் தோன்றியும் லக்ஷக்கணக்கான ஆண்டுகளாயிற்றென்றும் பூமி சாதிரம் (Geography) சிந்தாந்தப்படுத்துகிறது. நமது உலகத்திற்கு ஆதாரமாக இருக்கும் சூரிய உலகம் உற்பத்தியாகி முப்பத்தைந்து கோடியே ஐம்பது லட்சம் வருடங்களானதாக லீகாண்டி என்னும் விஞ்ஞான விற்பன்னர் கணித்துள்ளார். ஆதியில் அக்னி மயமா யிருந்த இந்த உலகம் குளிர்ந்து கட்டி மயமாக 8,00,00,000 எட்டு கோடி வருஷங்களான தன்றியில்; இது சூரியனிடமிருந்து பிரிந்த போது 2,00,000 சென்டிகிரேட் உஷ்ணத்திலிருந்து 200 சென்டிகிரேட் குளிர்ச்சிக்கு வர 350000000 முப்பத்தைந்து கோடி வருஷங்களாயின. இப்படி ஜனித்த பிபஞ்ச பிண்டமானது இப்போது 125,619,567,000, 000,000,000,000 டன் கனமுள்ளதா யிருப்பதாக லெப்ரோடிக் (Leprotic) என்னும் சாதிரியார் கணித்துள்ளார். மேலும் ஒளியானது விநாடி யொன்றுக்கு 192,500 மைல்கள்வீதம் செல்வதாக வான சாதிரம் கூறுகிறது. உலகத்திற்கு மிகச் சமீபத்திலிருப்பது போல் தோன்றும் நக்ஷத்திரங்கள் பூமியிலிருந்து அநேக கோடி மைலுக்கு அப்பாலிருக்கிறது, அந்த நட்சத்திரங்களின் ஒளி பூமியில்படுகின்ற தற்கு 50000 வருஷங்களுக்கு மேலாயிருக்குமென்று விஞ்ஞானப் புலவர்கள் தக்க ஆதாரத்துடன் இயம்புகின்றார்கள். நக்ஷத்திரங்கள் 6000 வருடங்களுக்கு முன் சிருஷ்டிக்கப்பட்டிருந்தால் அந்த நக்ஷத்திரங்களின் ஒளி இன்னும் 50000 வருடங்கள் சென்றல்லவா பூமியில் படவேண்டும்? இப் பொழுது அதன் ஒளி பூமியில் படுவதேன் என்று கூறிய கலிலியோ என்ற வானசாதிரி கிறிதுவ மதவெறியர்களால் கொல்லப்பட்டு போயினும் இன்றைய பகுத்தறிவு உலகம் இதைவினவாமலிருக்குமா? இன்னும்பல நுண்ணிய கருவியி னாலும் நுட்பமான அறிவினாலும் இப்பொழுது பூமிக்கு ஒளி கொடுக்கும் நக்ஷத்திரங்களின் ஒளியானது அதனின்று பூமிக்கு வந்த சேர பல லக்ஷ வருஷங்களாகியிருக்குமென்று ஏர்ஷெல் என்னும் சிறந்த பண்டிதர்கள் கூறியிருக்கின்றார்கள். நியூஆர்லியன் என்னுமிடத்தில் மிஸிஸி பள்ளத்தாக்கிலிருந்து வட அமெரிக்கா வரை மனிதர் எலும்புகள் பூமியிலிருந்து வெட்டி எடுக்கப்பட்டுப் பார்த்ததில் அவை குறைந்தது ஐம்பதினாயிரம் வருஷங்களுக்கு அதிகமாகவே புதைக்கப்பட்டிருக்கலாமென பௌதீக சாதிரிகள் கணக்கிடுகின் றார்கள். அமெரிக் காவில் இருபதினாயிர வருஷங்களுக்கு அதிகமாக ஒரு மரம் நிற்பதாக மரங்களின் ஆயுளைத் தீர்மானிக்க வைத்திருக்கும் இயந்திரத்தின் உதவியால் அறிந்து அம்போல்ட்டு என்னும் அறிஞர் சொல்லுகின்றார். இன்னும் பல மேதாவிகளும் பூமி உண்டாகி 6000 வருஷம் என்று கூறும் கூற்றைத் தவிடு பொடியாக்கியுள்ளார்கள். மதப் பித்தர்கள் என்னதான் கூறினும் அதை ஒத்துக்கொள்ளார். சில படித்த கிறிதவர்கள் பைபிளில் நாள் என்று கூறியிருப்பது தற்பொழுது நாம் கூறும் 24 மணிநேரத்தைக் கொண்டதல்லவென்று கூறி பொது மக்களை ஏமாற்றப்பார்க்கின்றார்கள். டாக்டர் ஜாண் மீத் என்னும் பாதிரியார் ஒரு நாள் என்று பைபிளில் கூறுவது பல லக்ஷ வருஷங்களைக் கொண்டது என்று கூறியுள்ளார். இது மெய்யானால் இன்னும் ஓய்வு நாள் வரவில்லையே யென்பதை கிறிதவர்கள் உணரவேண்டியதோடு இதுவரை ஓய்வு நாள் என்று சோம்பியிருந்ததெல்லாம் பயனற்றதென்றும் கிறிதவர்களுக்கு எடுத்துக்காட்டினாலும் மதவெறியினால் பகுத்தறிவு மங்கிக் கிடக்கும் மக்கள் ஒரு பொழுதும் ஒப்புக்கொள்ளார். எனவே நாட்டில் பகுத்தறிவு ஜோதி பிரகாசிக்க வேண்டுமானால் மதவெறியும் கட்டாயம் ஒழிதல் வேண்டும் என்னும் முடிவுக்குவராமல் கடவுள் வெறியும் முடியாதென்பதை வாசகர்கள் நன்கறிவர். இதுபற்றியே மதநம்பிக்கையுடையவரும் பிரபல பண்டிதரும் ஆராய்ச்சி மிக்காருமான டாக்டர் அன்னிபெசண்டு அம்மையாரும் ஹிந்து மத தூக்ஷணையின் பரிகாரம் (In Defence of Hinduism) என்னும் நூலில், மேல் நாட்டில் நடைபெறுகிற கிறிதுமதம் தத்துவ ஞானிகளை முற்றும் தவிர்த்து விட்டது. அவர்களை மதத்திற்குப் புறம்பாகத் தள்ளிவிட்டது. புதகங்களையும் பொது ஜனங்களை யும் மாத்திரம் ஆதரவாகப் பெற்று இப்போது நடைபெறுகின்றது. அதனால் பிரத்தியக்ஷப்பிரமாணங்களின் ஆராய்ச்சியால் ஏற்பட் டுள்ள புலனறிவு சாதிரங்களின் முன்னிற்க இயலாமலும் அதன் ஆக்ஷேபணைகளுக்குச் சமாதானம் சொல்ல அசக்தமாகவும் இருக் கிறது. கிறிது மதத்தின் உண்மைகளையுணர்ந்த தத்துவ ஞானி களை சாதாரண கிறிதவ மூடச்சனங்கள் பகைத்தார்கள்; தவிரவும் சாதிரப் பயிற்சியுள்ள (Moors) ஜாதியார்களை வெறுத்தார்கள். இவ்விரண்டு காரணங்களால் கிறிதுமதம், அறிவின் ஆதாரத்தின் மேல் நிற்காமல் சாதாரண ஜனங்களுடைய மூட நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டது, ஞான வெளிச்சத்தைக் கண்டு மறைந்தது. இக்காரணம்பற்றி அறிஞர்கள் கிறிதுவமதத்தில் நம்பிக்கையை விட்டார்கள். கிறிதுவ மதம் செல்வாக்குள்ள காலத்தில், அம் மதத்தின் சித்தாந்தங்களின் அபிப்பிராய பேதத்திற்காக மனிதர்களை சிறையில் அடைக்கிறதும் கிட்டி போட்டு ஹிம்சிக்கிறதும் நெருப்பில் போட்டுத் தகிக்கச் செய்வதும் இன்னும் பல விதக்கொடுமைகளைச் செய்து அம்மதத்தின் மீது துரபிமானமுள்ளவர்களாகச் செய்து விட்டார்கள். இக்கொடுமைகளின் நினைவு சாதிரிகளின் மனதில் இருந்து கொண்டிருக்கிறபடியால் ஒரு நூதனவிஷயம், சாதிர ஆராய்ச்சியினால் கண்டு பிடிக்கப்பட்டு அது கிறிதுமார்க்கத் திற்கு விரோதமாக இருந்தால் அப்புது விஷயத்தை ஆதாரமாகக் கொண்டு கிறிதுமதக் கொள்கைகளின் அறிவின்மையைத் தூற்றிச் சின்னா பின்னப்படுத்துவதில் சாதிரிகள் அத்துவர்ப்பாக இருக்கி றார்கள். அத்தகைய கொள்கைகள் அநேகம் விஞ்ஞான வாதிகளின் வாதக்குண்டுகளால் சிதறிச்சிதைந்து போயின - சில முந்திய உருவம்முற்றும் மாற்றப்பட்டு ஞானதத்துவங்களாக மாறியிருக் கின்றன; புத்தகங்களை ஆதாரமாகக் கொண்டிருந்த மதிமயக்கம் நீங்கிக்கொண்டு வருகிறது கிறிதுமதமானது மேல் நாட்டில் இவ்வாராய்ச்சி என்ற அக்கினியில் பிரவேசித்துப் புனிதமாக வேண்டும். கீழ் நாடுகளில் ஹிந்துமதம், பௌத்தமதம், இலாம் இவைகள் இத்தன்மையான, பரீக்ஷையான அக்னியில் பிரவேசஞ்செய்து தேறிவர வேண்டும். மதசம்பந்தமான தத்துவங்கள் எப்பொழுதும் அழியா, ஆனால் மதங்கள் அழியும், முன்னும் அழிந்திருக்கின்றன இனியும் அவைகள் அழியும். மாறிக்கொண்டிருக்கும் காலதேசவர்த்தமானங்களுக்குத் தக்கவாறு தாம் மாறாமல், ஒரேபிடிவாதமாக நின்று கொஞ்சமேனும் இளகாமல் இருக்கும் மதம் அழியும்; அதனால் அதன் உயிர்ப்பக்கம் நீங்கிவிட்ட தெனத்தெரியவரும், உயிருள்ள சரீரம் இடத்தைநோக்கி தன்னைமாற்றிக்கொள்ளுமல்லவா? மாற்ற இயலாமல் போனால், மரண தர்மம் வந்து விட்டதென நினைக்கற்பாலது. மூட நம்பிக்கையை வளர்க்கின்றன கடவுள் பக்தியும் மத நம்பிக்கையுமே நாட்டில் மூட நம்பிக்கையை வளர்த்து வருகின்றன. எனவே இவையிரண்டும் ஒழிந்தாலல்லது இவ்வுலக மக்களைப் பீடித்துள்ள மூட நம்பிக்கை யென்னும் கொடும் பேய் ஒழியாதென்று பல அறிஞர்களும் புகன்று வருகின்றார்கள். மூட நம்பிக்கைக்குப் பிறப்பிடமாயுள்ளது மத சாதிரங்களும் அதற்கு ஆதரவு காட்டி நிற்கும் தரகர்கள், சோதி டர்கள், சாமியாடிகள், லோக குருக்கள், பார்ப்பனர்கள், பாதிரிகள், மௌல்விகள், ஆலிம்கள், மதான்கள் முதலிய சுயநலப் புல்லுருவி களேயாவர் என்பதையறிந்து உங்கள் குடி அரசு இன்னோர்களின் பித்தலாட்டங்களையும் மூடநம்பிக்கையை வளர்க்கும் முறைகளை யும் முயற்சிகளையும் தெள்ளத் தெளியப் பாமரர்களும் விளங்கிக் கொள்ளும் வண்ணம் விளக்கி, நம் நாட்டில் அறிவு ஜோதியை தோன்றச் செய்து வருவது பிரத்தியக்ஷம். இதற்காகவே அச்சுயநலக் கோட்டான்களின் கூட்டம் பகுத்தறிவு என்னும் ஞானசூரியன் உதயமானதைப்பார்க்க அஞ்சி அறியாமை என்னும் இருளில் வாழும் மக்களிடம் போய் பகுத்தறிவுக்காரர்களை காபிரென்றும் நாதிகர் என்றும் நேச்சரி என்றும் பலவாறு நிந்தித்து வந்தார்கள், வருகின்றார்கள். ஆனால் இவர்களின் ஜம்பம் இனி ஒரு பொழுதும் பலிக்கப்போலதில்லை; பகுத்தறிவுச்சூரியன் உச்சதானத்திற்கு வந்துவிட்டான். மூடநம்பிக்கை யென்னும் துயிலிலிருந்த மக்கள் பலரும் விழித்தெழுந்து பகுத்தறிவுச் சோதியைக்கண்டு ஆனந்த சாகரர்களாய் மகிழ்ந்து ஆனந்தத் தாண்டவம்புரிய ஆரம்பித்து விட்டார்கள். என்றாலும் எங்கெங்கோ சிற்சில மூலையில் சுயநலக் கூட்டம் கும்மாளம் போட்டு வருவது என்பது யாவருமறிந்த உண்மை. இந்த மூடநம்பிக்கையினாலே சுட்டுண்டு கிடக்கும் மாக்களிற் பலர் தாம்கொண்ட மூடநம்பிக்கை மூடபக்தி, மூடபழக்கவழக்கம் முதலிய வைகளே அறிவுடைய செயலென்றெண்ணி மூட நம்பிக்கையினின்று விடுபட்ட மக்களைக் கண்டு எள்ளி நகையாடியும் பழித்தும் பலாத்காரத்தால் தம் வழிக்குத்திருப்பவும் முயன்று வருகின்றார்கள். இந்த மூடநம்பிக்கையினாலேதான் நமது நாட்டில் வியாதிகளும் விபசாரங்களும் பெருகிவருகின்றன. தீண்டாமையென்னும் கொடும் பேய் தலை விரித்தாடி வருகின்றது. பெண்ணுரிமை பெரிதும் பறிக்கப்பட்டு வருகிறது. கொலைகளும் குற்றங்களும் மலிந்து வருகின்றன. ஒற்றுமை குலைந்து வருகின்றது. ஒற்றுமை குறைந்து வருகின்றது. மக்களின் செல்வமெல்லாம் வீணில் பாழ்படுத்தப்பட்டு வருகின்றது. முயற்சி என்னும் அருங்குணம் முற்றாய் ஒழிந்து வருகின் றது. மக்கள் சோதிடம், சகுணம், குறிபார்த்தல், சாமியாடல், பேய்கள், ஆத்மா, கடவுள் பக்தி முதலிய வீணான கொள்கையில் நம்பிக்கை கொண்டு காலத்தையும் செல்வத்தையும் ஊக்கத்தையும் பறிகொடுத்து நாளடைவில் பகுத்தறிவற்ற மிருகங்களின் நிலைக்குச் சென்று கொண்டிருக்கின்றனர். உலகத்தில் பெருகிவரும் எல்லாத் தீமைகளுக்கும் இந்த மூடநம்பிக்கைதான் காரணமாய் மிளிர் கின்றது. இந்த மூடநம்பிக்கையோ கடவுள் பேராலும் மதத்தின் பேராலும் வளர்க்கப்பட்டுவருகிறது. இதுபற்றியே பிரமஞான சபையைச்சேர்ந்த மாடர் குதூமீ என்னும் அறிஞரும் கருணாநிதி யாயுள்ள கடவுளின் பெயரைச் சாட்டி ஜனங்கள் இந்த நடுக்கமுறும் மூடக்கொள்கைக்கு வழிபட்டு அநேக குற்றங்களைச் செய்திருக் கிறார்கள் என்று கூறியுள்ளார். எனவே கடவுள் வெறியும் மத வெறியும் இந்த மூடநம்பிக்கையின் வாயிலாகவே தம் ஆர் பாட்டத்தை செலுத்திவருகின்றதென்பது மறுக்க முடியா உண்மை யாகும். பகுத்தறிவை வளரவிடாது தடுத்து நிற்கும் இந்த மூட நம்பிக்கை ஒழிந்தாலல்லது இந்திய நாடு விடுதலை பெறப்போவ தில்லை. மூடநம்பிக்கை என்னும் கொடும் பேய் உலகிலேயே அதிகமாய் நர்த்தனம் செய்யும் நாடு இந்தியாதான். ஆகையால் இந்தியா விடுதலைபெற உழைக்கும் அன்பர்கள் முதலாவது மூட நம்பிக்கையை வேருடன் அறுக்கும் வேலையில் முனைந்து தொண் டாற்ற வேண்டும். மூடநம்பிக்கையை ஒழியாது சுயராஜ்யம் பெற்று விட்டாலும் அது சுயராஜ்யமாயிராது துன்பம் தரும் ரபுடீன் ராஜ்யமாகவே இருக்குமென்பது நிக்ஷயம். மூடநம்பிக்கை செய்துவரும் பெரும்வேலைகளுள் மாந்திரீகம் என்னும் மயக்க மொழிகளால் அதுசெய்து வரும் ஆர்ப்பாட்டம் கொஞ்ச நஞ்சமன்று. இந்து மூடநம்பிக்கையினாலே எத்தனையோ குடும்பங்களில் தன் கணவனை தன்வயப்படுத்த யெண்ணி இறுதி யில் புருஷனையே கொன்றிருக்கின்றனர். இந்த மாந்திரீக நம்பிக்கை யினாலேயே உயர்குலப் பெண்களைக்கூட பேய்ப்பற்றியதாக சாமியாடும் சில குடிகாரர்களும் விபசாரர்களுமான அயோக்கியர்கள் முன்னிருத்தி அவர்களால் பிரம்படிபடுமாறு செய்தும் அவர்கள் எச்சிலையுண்டு வாழும்படி செய்தும் வருகின்றனர். நாசிக்கிலிருந்து 18 மைல் தூரத்திலுள்ள பில்பல்சாவனிக்கருகிலிருக்கும் ஒரு கிராமத்தில் பயங்கர சம்பவமொன்று நடைபெற்றது. அதாவது அக் கிராமத்திலுள்ள ஜனங்களுக்குக் காலரா நோய்கண்டது. அக் கிராமத்திலுள்ள மாந்திரீக ஜாதியாராகிய கோலிஜாதியார் தான் மந்திரஞ்செய்து காலராவை அக்கிராமத்திற்கு கொண்டு வந்து விட்டார்கள் என்று அக்கிராம ஜனங்கள் கருதி, கோலி ஜாதியாரை அடித்தனர். கோலிஜாதியார் அஃது தங்கள் செய்கையல்லவென்று எவ்வளவோ தெரிவித்தும் பயன்படாததால் அவர்கள் அக் கிராமத்தைவிட்டு ஓடிவிட்டனர். ஆனால் பாவம் ஒரு வயோதிக மாது அக்கிராமத்தில் அகப்பட்டுக்கொள்ளவே கிராம ஜனங்கள் அவளது கை கால்களைக்கட்டி அடுக்கிய கட்டைமேல் அவளை வைத்து உயிருடன் தீக்கொளுத்தினர் என்ற விஷயம் டைம் பத்திரிகையின் நாசிக்நிருபரால் 1-9-31 இல் மேற்படி பத்திரிகையில் எழுதப்பட்டிருந்தது. தூர் ராவுத்தர் என்றொரு முலீம் மைம்பொன் என்னும் தன் மகளைக்கோட்டூரிலுள்ள சின்னப்பைய ராவுத்தருக்குக் கலியாணம் செய்து கொடுப்பதாக நிச்சயம் செய்துகொடுத்ததன் பின், சேத்துமடையில் வண்டி ஓட்டுபவராகிய அப்பாவுராவுத்தர் என்பவர் தன்மகனுக்கு மேற்படி பெண்ணைவிவாகம் செய்து கொடுக்கும்படி வற்புறுத்தியதாகவும் ஆனால் பெண்ணின் தகப்பன் மறுக்கவே, மேற்படி பெண்ணை எப்படியாவது கெடுத்துவிட வேண்டுமென்று கெட்ட எண்ணத்தின்மீது மாந்திரீக சக்தியால் வசியம் செய்ய எத்தனித்ததாகவும் சொல்லப்படுகிறது. மேற்படி அப்பாவுராவுத் தருக்கு மாந்திரீகம் தெரியுமெனவும் அவருடைய மந்திரத்தின் மீது மேற்படி பெண்ணுக்குச் சிலகாலமாகப் புத்திவாதீனமில்லா மல் காற்றுப் பிடித்தவளைப் போலிருந்தாளெனவும் சொல்லப்படு கிறது. மேற்படி காற்றுத் தோஷத்தைப்போக்குவதற்காக மாந்திரீகர் களைக் கொண்டு வந்து பரிசோதித்ததில் மேற்படி பெண்ணுக்குக் காற்றுத் தோஷம் யாதொன்றுமில்லையெனவும் யாரோ மாந்திரீக சக்தியால் புத்திவாதீனமில்லாமல் செய்திருப்பதாகவும் சொல்லப் பட்டதாம். அதன்மீது வீட்டிலும் வீட்டைச்சுற்றியும் பரிசோதித்துப் பார்த்ததில் வீட்டின் முன்கதவில் வாசற்படிக்குக்கீழ் ஒரு முட்டை யும் சில எலும்புத் துண்டுகளும் பறித்துக்கீழே வைக்கப்பட் டிருப்பதைக் கண்டெடுத்தார்களாம். முட்டையின் மீது உர்தூவில் சில சக்கரங்கள் வரையப்பட்டிருக்கின்றனவாம். கோட்டூர் போலீ இமாமை வரவழைத்து கேட்டதில் மேற்படி முட்டையின் மீது எழுதப்பட்டிருக்கிற எழுத்துக்களைப் பரிசோதிக்கும்படி கேட்டதில் மேற்படிஎழுத்துக்கள் பெண்ணை வசீகரிக்கவும் தன் கணவனுடன் கூடியிருக்க இயலாதபடியும் கண்டிருப்பதாகவும் சொன்னார். மேற்படி முட்டை மந்திரித்து வாசற்படிக்குகீழ் வைத்த தேதியிலிருந்து மேற்படி பெண்ணுக்குப்புத்திவாதீனமில்லாமல் இருப்பதுடன் மாந்திரீக வசீகரத்தின் பலத்தால் எதிரி வீட்டிற்குப் போகப் பிரயத்தனமும் தன் கணவனைக்கண்டால் அருவருப்பும் உண்டாகிவருவதாகச் சொல்லப்படுகிறது. கோட்டூர் போலீஸார் புலன் விசாரித்து வருகின்றனர். சுஜாலி என்ற கிராமத்தில் பழையபழக்கங்களில் மிகுந்த நம்பிக்கையுள்ள முகம்மத் உமாரா என்ற ஒரு பெண்ணும் மற்றும் சில பெண்களுஞ் சேர்ந்து பாடிக்கொண்டிருக்கும்போது திடீரென்று தொண்டை கெட்டுப்போய்ப் பாடமுடியாமல் போய்விட்டதாம். அதை உத்தேசித்து சரவதிதேவிக்கு சுமார் 8 வயதுடைய குனியா என்ற சிறுமியைப் பலியிட்டுக்கொலை செய்த குற்றத்திற்காகப் பாரெயிச் செஷன் ஜட்ஜால் தூக்குத்தண்டனை விதிக்கப்பட் டாள். வழக்குவிசாரணையின் போது திடீரென்று எல்லாப் பெண் களுக்கும் தொண்டை கெட்டுப் பாடமுடியாமல் போய்விட்ட தென்றும் பிறகுதான் பகவதி சரவதிக்கும் ஒரு நரபலி கொடுப்ப தாக வேண்டி அதற்காக ஒரு நாள் குனியாஎன்ற 8 வயதுச் சிறுமியை மரத்தில் கட்டி வைத்து ஒரு மண்வெட்டியால் அவளைத்தலையில் அடித்துக் கொன்றதாகவும் அதன்பிறகுதான் தொண்டை சரிப்பட்டு நன்றாகப்பாட முடிந்தது என்பதாகவும் சொன்னாள். (தாருல் இலாம்) சூதியா என்னும் வடஇந்தியாவிலுள்ள ஒர்ஊரில் பெரும் பாலான குடும்பங்கள் அரந்தான் (சமைக்காமலிருத்தல்) கொண் டாடினார்கள். இவ்வினோதக்கொண்டாட்டம் ஒருபடகுக்காரனின் பயமுறுத்தலால் நேர்ந்ததாம். அப்படகுக்காரன் படகில்சென்று கொண்டிருக்கும்போது தன்முன் ஒரு பெண்ணுருவம் தோன்றிய தாகவும் திடீரென்று அவ்வுருவம் மூன்று தேசகன்னிகைகளாக மாறிச்செவ்வாய்க்கிழமையாகிய அன்றையத்தினம் யாராவது சமைத்தால் அந்நகரத்தில் கொடிய வியாதிகளைக்கொண்டுவந்து சேர்த்து நகரவாசிகளையெல்லாம் கொன்று தண்டிப்பதாக பய முறுத்தியதாகவும் கூறி இதை அப்படகுக்காரன் நகரில் யாவரிடமும் அறிவித்து விட்டான். பல கல்வியறிவுடைய கனவான்களும் கூட இவ்விஷயத்தைப் பிரமாதமாகக் கருதித்தங்கள் வீட்டில் சமையல் செய்யாமல் தடுத்துப்பட்டினி கிடந்தார்கள். (திராவிடன்) இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் எமது ஊரிற்குப் பக்கத்திலுள்ள ஓர் ஊரில் ஒரு பூசனிச்செடியில் ஒரு பூசனிக்காய் அதிகப்பருமனுள்ள தாயிருந்ததாகவும் ஒரு நாள் திடீரென்று அக்காய் வெடித்தபொழுது இரண்டு சிறுவர்கள் தோன்றியதாகவும் அச்சிறுவர்கள் இரவில் நடுச்சாமத்தில் அழுதுகொண்டு ஊருக்குள் வந்து கதவுகளைத் தட்டுவதாகவும் எந்த வீட்டுக்கதவுகளைத் தட்டுகின்றதோ அவ்வீட்டில் ஒருவித காய்ச்சல்தோன்றி எல்லோரும் செத்துப்போவதாகவும் ஆனால் யார் வீட்டின் கதவுகளில் வைஷ்ண வர்களின்குறியாகிய ஒய் மார்க்காகிய ராமம் போடப்பட்டிருக் கிறதோ அவ்வீட்டின் கதவைத் தட்டுவதுகிடையாதென்று ஊரெல் லாம் பிரதாபம் பெருகவே ஊரிலுள்ள ஹிந்து, முலீம், கிறிது வர்கள் வீடெல்லாம் இவ்வித அடையாளம் போடப்பட்டது. இவ் விதக்கோலம் பலகிராமங்களிலும் பரவினது இவைகளும் இன்னும் பலசெயல்களும் நாம் நேரிலும் பத்திரிகை வாயிலாகவும் கண்டும் கேட்டும் படித்தும் வருகின்றோம். இன்னும் பலர் கனவில் காணும் செயல்களெல்லாம் கடவுளோ அன்றி இதரசிறுதேவதைகளோ தம்மிடம்வந்து கேட்பதாகப் பொருள்கொண்டு ஆடு மாடு பலியிடுவதும் கள், சாராயம் வைத்துப் பூஜிப்பதும் திருமாலைப்பூஜை, கோடைமுதலிய விழாக்களில் செலவு செய்வதும் மச்சம், பாம்பு முதலியவைகளைக்கொன்று தெய்வபக்தி யால் எடுக்கப்படும் மச்சக்காவடி சர்ப்பக்காவடி முதலிய காவடி நேர்ச்சையில் உயிர்பெற்று எழுந்ததாகவும் நம்புவதும் இன்னும் தீக்குழிபாய்வது, உடம்பெல்லாம் வேல்களைக் குத்திக்கொள்வது போன்ற அநாகரிகச்செயலும் பல கூத்தாடிகளால் செய்யப்படும் ஜாலவேடிக்கைகளும் கடவுள் பக்தியால் நடப்பதாகநம்பி மூடப் பக்திகொண்டு பொருளைச்செலவுசெய்து பகுத்தறிவிழந்து மூட நம்பிக்கையெனும்இருட்படலத்தின்முன்னின்றுதத்தளிப்பதினா லென்பதை அறிவிற்குமதிப்பீந்து வாழும்மக்களில் எவரே மறுக்க வல்லார். எனவேதான் முதலாவது நாம் இந்த மூடநம்பிக்கையை ஒழிக்க அதற்கு மூலகாரணமாயிருக்கும் கடவுள் வெறியையும் மதவெறியையும் ஒழிக்கவேண்டும் என்கிறோம். மூடநம்பிக்கையையோட்டி பகுத்தறிவு பெற விரும்புகிறவன் முதலாவது ஒரு விஷயத்தைப்பற்றியாராயும் போது இது இன்னா ரால் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகையால் இது சரியாகத்தா னிருக்கும். அவர் நம்மிலும் எத்துணை பெரியார் அவர்கூறியதுதவ றென்றோ மூடநம்பிக்கையால் கூறியதென்றோ எண்ணுதல் தகாது. இதற்காகத்தான் சுயமரியாதை இயக்க அன்பன் தோழர் ஈ.வெ. இராம சாமியவர்கள் தான் சொன்னதற்காக நீங்கள் எதையும் நம்பிவிட வேண்டாம். நீங்கள் வீட்டிற்குப்போய் நான் சொன்னவைகளை சாவதானமாய் ஆலோசித்துப் பாருங்கள். சரியென்று கண்டால் அதன்படி நடக்க முயலுங்கள், இன்றேல் எனது பேச்சை மறந்து விடுங்கள் கூடுமானால் எனது தவறான பிரசங்கத்தைக்கேட்ட காது களை லோஷன் விட்டுக்கழுவி விடுங்கள் என்று கூறிவருகிறார்கள். இதையே பகுத்தறிவை வளர்த்த புத்தரும் எது ஒரு விஷயத்தையும் அதைசும்மா சொன்னதானாலும் சரி அல்லது பண்டைய நாட்களி லிருந்து வந்த ஐதீகமானாலும் சரி வதந்தியானாலும் சரி பெரியார்கள் எழுதி வைத்த சாசனமானாலும் சரி ஏதோ ஒரு சாமியின் அருள் வாக்காயிருக்கலாம் என்று நிதானிக்கக்கூடியதானாலும் சரி தெய்வாதீனமாய் ஒரு முடிவாக நாம் அனுமானித்துக் கொண் டிருந்ததானாலும் சரி நமது ஆசாரியர்கள் குருக்களாகிய இவர் களுடைய பிரமாணமாக விருந்ததானாலும் சரி அதை நம்பக் கூடாது. ஆனால் சாசனம், கொள்கை, போதனை எதுவும் நம்முடைய சுயபுத்திக்கும் மனச்சாட்சிக்கும் ஒத்துவருமானால் அப்போது அதை நம்பவேண்டும்...... இதற்காகத்தான் நான் சொல்லக்கேட்டால் நீங்கள் வெறுமையில் நம்பக்கூடாது. ஆனால் உங்கள் மனச்சாட்சியறிய நம்பினீர்களானால் அப்போது அதன்படி தாராளமாய் நடந்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். எனவேதான் தன் மதிப்பியக்கத்தின் தலைவர் தோழர் ஈ.வெ.ரா. அவர்கள் எவ்விஷயத் திற்கும் மகாத்மா இவ்வாறு கூறியுள்ளார். நாயன்மார்கள் அவ்வாறு பாடியுள்ளார்கள். ஆழ்வார்கள் அப்படி அறைந்துள்ளார்கள். சித்தர்கள் இக்கருத்தை ஆதரித்துச்செப்பியுள்ளார்கள் என்று பெரும்பாலும் மேற்கோளாக எடுத்துக்காட்டுவது கிடையாது. எவரால் கூறப்பட்டிருந்த போதிலும் மக்கள் மனதிற்கு ஒத்திருந்தால் ஒப்புக்கொண்டு நடக்கவும் இன்றேல் அவைகளைத்தள்ளி விடவும் தக்க மனப்பான்மையுடையவராய் மக்களைப் பழக்க வேண்டு மென்பதே அவரது பேரவா. அவ்வாறு செய்யாததினால் தம் இயக்கம் சிறிது மெதுவாகப் பரவுவதிற்கூடப் பாதகமில்லையென்பது அவரது எண்ணம். மூடநம்பிக்கையால் தம் இயக்கத்தைப்பலரை ஆதரிக்கச் செய்வதினும் பகுத்தறிவு விளக்கத்தால் சிலரை ஆதரிக்கச் செய்வதே சிறப்புடமை என்பது அவருடைய கொள்கை. அதனாலேயே இன்று சுயமரியதைக்காரர்கள் மகாத்மா, லோககுரு, ஆழ்வார்கள், நாயன்மார்கள், அவதார புருடர்கள், நபிமார்கள், கடவுள் குமாரர்கள், கடவுள்கள் முதலிய எவருடைய வார்த்தையாயிருப்பினும், செயலா யிருப்பினும் தங்கள் அறிவிற்குப் பொருந்தியிருப்பின் அதை அஞ்சாது ஏற்றுக்கொண்டும் இன்றேல் தள்ளிவிடவும் செய்து விடுகின்றனர். ஒரு கொள்கையைப் பெரும்பாலோர் ஒப்புக் கொண்டிருப்பதாலும் அதைப்பல்லாயிர ஆண்டுகளாகக் கோடிக்கணக்கான மக்கள் நம்பி வருவதாலும் எல்லோரும் போற்றத்தக்க நூலில் எழுதப்பட்டிருக் கிறது என்பதாலும் அதை ஏற்றுக்கொள்ள சுயமரியதைக்காரன் எவனும் துணியமாட்டான். எக்கொள்கையாயிருப்பினும் தம் அறிவிற்கும் அனுபவத்திற்கும் ஒத்து வருகிறதா என்பதை ஆலோசித்து சரியென்றால் ஏற்றுக்கொள்வது பிழையென்றால் தள்ளிவிடுவதுமே அவனுடைய மூலக்கொள்கையாயிருக்கிறது. இதை ஆதரித்தே சி. டப்ளியு. லெட்பீட்டர் என்னும் அறிஞர் ஒரு விஷயம் பைபிளில் எழுதியிருக்கிறது என்பதால் அதை நம்பு கிறவன் சந்தேகமின்றி அந்த விஷயம் வரைக்கும் மூட நம்பிக்கை யுடையவன் எனலாம். ஏனெனில் அந்த நம்பிக்கைக்குத் தகுந்த முகாந்திரம் அவனுக்குத்தெரியவில்லை, அப்படியிருக்க மேடம் பிளவட்கி அம்மையார் இவ்விதம் சொன்னார் அல்லது (Secret Doctrine)ïš அவ்விதம் எழுதியிருக்கிறது, என்று சொல்வதும் மூட நம்பிக்கையைவிட ஒரு படிதான் முந்தி வந்திருக்கிறது. அப்படிதான் செயின்ட்பால் அல்லது மற்ற புராதன ஆசிரியர்களைவிட மேடம் பிளவட்கி அம்மையாருக்குத் தான் சொல்லும் விஷயங்கள் தெரிந்திருந்தது என்பதற்கு அநேக அத்தாட்சிகள் இருக்கின்றன என்றாலும் செயின்ட் ஜேம் அல்லது செயிண்ட்பீட்டர் அவர்கள் சொன்னார் என்பதைவிட மேடம் பிளவட்கி சொன்னார் என்ப தால் அது நம்முடைய சொந்த அனுபவமாய் போகிறதில்லை. நாம் ஒரு விஷயத்தை தெரிந்து கிரகித்துக்கொண்டு அதை நம்மறிவோடு அறிவாகச்சேர்த்து அதில் நாம் வளர வேண்டும். அதை நம்மில் வேரூன்றிவிடவேண்டும். நாம் கிளிப்பிள்ளைகளைப்போல் வாசித் ததைச் சொல்லிக்கொண்டிருக்கும் வரையில் விஷயங்கள் எல்லாம் மூடநம்பிக்கைகளே. இங்கே எழுதியிருக்கின்றது, அங்கே எழுதி யிருக்கின்றது என்பதை விட்டு நல்ல முகாந்திரம் தெரிந்து கொள்ளா விடில் உண்மைப்பொருளிலிருக்கும் நம்பிக்கைகூட மூடநம்பிக்கை தான். நம்முடைய மனதோடு மனதாகும் போது அது எனது என் னுடைய சொந்தம் நான் ஏன் நம்புகிறேனென்று எனக்குத் தெரியும். ஆதலால் எனது நம்பிக்கை அறிவோடுள்ள நம்பிக்கை மூடநம்பிக்கை யல்ல என்று கூறலாம் எனக்கூறியுள்ளார். இவைகளினால் பெரும்பாலும் மூடநம்பிக்கை வளர்வதற்கு மூலகாரணமாயிருப்பது கடவுள், மதம், அவதார புருடர், வேதம், பெரியார் வாக்கு முதலியவைகளே என்பதும் அதனாலேதான் நாட்டில் விபசாரம், பகுத்தறிவின்மை, தீண்டாமை, கொலை, களவு, குடி, மூடநம்பிக்கைகள், பணச்செலவுகள், ஒற்றுமையின்மை, தரித்திரம் முதலிய பல்வேறு துன்பங்களுக்கும் பழக்கம் வழக்கம் என்னும் பேய்களுக்கும் மக்கள் ஆட்பட்டு மோட்சம் நரகம் என்னும் கட்டுக்கதையில் காதல் கொண்டு தம் இன்பவாழ்வைக் குலைத்து உலகில் சாந்தியின்றி எப்பொழுதும் தரித்திரத்திலும் துன்பத்திலும் மூழ்கித்தத்தளித்து நம்முன் காணப்படும் மிருகங்கள் பறவைகள் புழுக்கள் முதலியவைகளைவிடக் கேவலமாக வாழ்ந்து வருகின் றார்கள். எனவே மக்கள் சாந்திவாழ்வைப் பெறவேண்டுமானால் இவ்வுலகினின்று கடவுள் வெறியும் மதவெறியும் ஒழிக்கப்பட வேண்டும். அதனையொழித்து பகுத்தறிவைத்துணை கொண்ட உருசியா தேசம் இன்று விபசாரம் என்பதை அறவேகளைந்து பசி, பட்டினி, வேலையில்லாத் திண்டாட்டம், களவு, பொய் முதலியவை கள் இன்னதென்பதையறியாது ருசியர்கள் மண்மீது தேவர்களைப் போல்வாழ்கிறார்களெனஉலகப்பெரியார்களான டாக்டர் ரவீந்திரநாத்தாகூர், பெர்னாட்ஷா முதலியோர்களின் போற்று தலுக்கும் வாழ்த்துதலுக்கும் காரணமாய் விளங்குகிறது என்பதை யுணர்ந்து நம்நாட்டினரும் கடவுள் வெறியும் மதவெறியும் அழியப்பாடுபட முன்வருவார்களாக. - (குடியரசு 31.7.1932, 7.8.1932, 21.8.1932, 28.8.1932, 11.9.1392, 25.9.1932, 2.10.1932) தன் மதிப்பியக்கமும், தனிப்பெருங் கடவுளும் தாருல் இலாத்தின் தவறான கூற்றுகள் பகுத்தறிவே தன் பேராயுதமாய்க்கொண்டு உலகமெங்கும் சமத்வம், சகோதரத்வம், சுதந்தரம் முதலிய கொள்கைகளை அதிபாரமாகக்கொண்டு, யாண்டும் முதலாளி-தொழிலாளி, ஏழை - பணக்காரன், உயர்ந்த சாதி - தாழ்ந்த சாதி, ஆண் - பெண் முதலிய சகல வேற்றுமைகளையும் ஒழித்து விடுதலை! விடுதலை!! என்ற ஆரவாரத்துடன் மக்கள் சக வாழ்வடைய உலகமெங்கும் ஒரு பெரும் மாறுதலையுண்டாக்கி வருவது நம் தன்மதிப்பியக்கமே யாகும். இவ்வியக்கம் பற்பல நாடுகளிலும் பற்பல விதமான பெயர் களால் மன்பதைகட்கு அரும்பெருந்தொண்டாற்றி எங்கும் சாந்தி யும் சமாதானமும் பொங்கித்ததும்பும்படி செய்து வருகிறது. இவ் வியக்கம் மனிதர்களின் முன்னேற்றத்திற்குத் தடையாயிருப்பவைகள் பழைய கொள்கையாயிருப்பினும் புதிய கொள்கையாயிருப்பினும் அவற்றை ஒழித்துவிட்டு, புதுமையாயினும் பழமையாயினும் மக்கட்கு நலந்தருவனவாயிருப்பின் அவைகளைக் கைக்கொள்ளும் படி முரசறைந்து வருகின்றது. இவ்வியக்கத்திற்கு எந்த மதத்தினிட மும் எந்தக்கடவுளிடமும் பகையில்லை. மக்கட்கு இன்னல் செய்து வரும் மதத்தையும் கடவுளுணர்ச்சியையும் ஒழித்துவிட இவ்வியக்கம் என்றும் தைரியமாய் முன்வரும். இவைகளைக் கொண்டு பல பழமை விரும்பிகளும் இவ்வியக்கத்தை மேற்போந்த வாருணர்ந்த வர்களும் பகுத்தறிவிற்குப் பகையாயிருக்கும் மாக்களும் இஃதோர் நாதிக இயக்கமென்று நவில்கின்றனர். ஆனால் இவ்வியக்கத்தின் கொள்கைகள் ஒருபொழுதும் நாதிகமாகா. இதுவரை சுய மரியாதை இயக்கத்தின் எந்த மஹாநாடுகளிலும் கடவுளில்லை என்று தீர்மானிக்கவில்லை. ஆனால் பற்பல மகாநாடுகளிலும் கடவுளுக்கும் மனிதர்களுக்கு மிடையே தரகர்கள் வேண்டாம், கடவுளுக்கென்று இனி ஒரு பைசாவும் செலவழிக்கக்கூடாது என்பன போன்ற தீர்மானங்கள் தான் நிறைவேற்றப்பட்டிருக்கிறதே யொழிய கடவுளில்லையென்று எங்கும் தீர்மானிக்கவில்லை. ஆனால் சுயமரியாதை இயக்கத்தில் உறுப்பினராயிருக்க ஆதிகனுக்கும் நாதிகனுக்கும் இடமுண்டு. எவராயிருப்பினும் சுயமாரியாதைச் சங்கத்தின் தீர்மானங்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பவராயிக்க வேண்டும் என்பது சுயமரியாதை இயக்கத்தலைவர்களின் அபிப் பிராயம். இந்நிலையில் சுயமரியாதை இயக்கத்தில் நாதிகர்கள் சிலரும் இருக்கலாம். குடிஅரசு, அவர்களின் பகுத்தறிவிற்குப் பொருந்தியவாதங்களையும் பிரசுரித்திருக்கலாம், இவைகளினா லெல்லாம் சுயமரியாதை இயக்கம் நாதிக இயக்கம் என்று நவின்று விட முடியாது. சுயமரியாதை இயக்கத்திலுள்ள ஆதிகர்களும் கூட கடவுளைப்பற்றியாயினும் பேய்களைப்பற்றியாயினும் வேறெவைகளைப்பற்றியாயினும் ஆராய்ந்து தம் அறிவிற் கண்ட விசயங்களைத்தான் நம்புவார்களேயொழிய எவைகளைப் பற்றியும் மூட நம்பிக்கைகொள்ளார். கொள்ளவும் கூடா. கடவுள் வெறியும் மதவெறியும் கொண்டவன்இதை ஆதரித்து பிரமஞான சபை யின்தலைவியார்திரு. அன்னிபெசண்டம்மையார், உனது மனச்சாக்ஷிக்கு சரியென்றுபடும் சிறுவிஷயங்களையும் செய்ய முன்வா. மற்றவனது மனசாக்ஷி எப்பேர்பட்டது என்பதற்காக வாவது அல்லது அவன் தன் மனசாக்ஷியின்படி நடக்கிறானா என்பதற்காகவாவது நீ உத்திரவாதியல்ல. உனக்குக் கஷ்ட நிஷ்டூரங்கள் இருந்தபோதிலும் உன்னுடைய மனசாக்ஷியின்படி நடக்க நீ உத்தரவாதியாயிருக்கின்றாய். நஷ்டம் என்பது வெளித் தோற்றமே தவிர உண்மையிலல்ல என்பதைக் கவனத்தில் வை; சரியென்று தெரிந்திருப்பதைச் செய்வதில் உனக்கு ஒரு நஷ்டமு மில்லை. ஆனால் விஷயமொன்றை உன்னுடைய மனோபாவனையி லாவது பக்ஷபாதமாகவாவது பித்தமயக்கத்திலாவது சரியென்று மதித்துக்கொள்ளாமலிருக்க ஜாக்கிரதையோடிருக்கவேண்டும் என்றும் சபையின் மற்றொரு தலைவராயிருந்த திரு.லெட்பீட்டர், (எத்தகைய பெரியாருடைய வார்த்தையாயினும்) அது தம்முடைய சொந்த அனுபவமாகப் போகிறதில்லை. நாம் ஒரு விஷயத்தைத் தெரிந்து கிரகித்துக்கொண்டு அதை நம்மறிவோடு அறிவாகச்சேர்த்து அதில் நாம் வளர வேண்டும். அதை நம்மில் வேரூன்ற விட வேண்டும். நாம் கிளிப்பிள்ளைகளைப் போல் வாசித்ததைச் சொல்லிக் கொண்டிருக்கும் வரையில் விஷயங்க ளெல்லாம் மூடநம்பிக்கைகளே. இங்கே எழுதியிருக்கின்றது, அங்கே எழுதியிருக்கின்றது என்பதை விட்டு நல்ல முகாந்திரம் தெரிந்து கொள்ளாவிடில் உண்மைப் பொருளில் இருக்கும் நம்பிக்கை கூட மூடநம்பிக்கைதான். நம்முடைய மனதோடு மனதாகும் போது அது எனது, என்னுடைய சொந்தம் நான் ஏன் நம்புகிறேனென்று எனக்குத் தெரியும். ஆதலால், எனது நம்பிக்கை அறிவோடுள்ள நம்பிக்கை மூடநம்பிக்கையல்ல என்று சொல்லலாம் என்று கூறியது எங்களுக்கு பெரிதும் உடன் பாடேயாகும். தன் மதிப்பியக்கத்தார்கள் கடவுளைப்பற்றிக் கவலைப்படுகின்றவர் களல்ல. அல்லது சைவர்களைப்போல் கடவுள் பல காலம் உயிரோடு வாழப் பல்லாண்டு பாடுகிறவர்களல்ல. கடவுளை சிங்கம் போன்ற ஒரு பயங்கர வதுவென்றோ, கொடூர குணமுள்ள ஒரு சக்தி யென்றோ, பணம், சோறு, பழம், பாயாசம் முதலியவைகளில் விருப்பமுள்ளவனென்றோ எண்ணுவதில்லை. கடவுளைக் கல் என்றோ, புல்லென்றோ, கட்டையென்றோ, மட்டையென்றோ, செம் பென்றோ, பித்தளையென்றோ, யானையென்றோ, சிங்கமென்றோ, பாம்பென்றோ, குளமென்றோ நதியென்றோ நினைத்து அடி பணி கின்றவர்களல்ல. கடவுள் கடவுளென்று முயற்சியை கைவிட்டு விடுகிறவர்களல்ல. எல்லாவற்றிற்கும் கடவுளையும் விதியையும் நம்பியிருப்பவர்களல்ல. தன் மதிப்பும் தன் நம்பிக்கையும் எக் காலத்தும் கைவிடுகிறவர்களல்ல. தன் மதிப்பியக்கத் தனிப் பெருந் தலைவர் ஈ.வெ.ராமசாமி கடவுள் உண்டோ இல்லையோ வென்ற ஐயப்பாட்டிலும் ஆராய்ச்சியிலும் மக்கள் ஈடுபட்டு காலத்தை வீய்க்கழித்துக் கொண்டிருக்க வேண்டாம். கடவுள் ஒன்றிருந் தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி மனிதன் மக்களுக்கு நன்மைதரும் தொண்டைச் செய்து கொண்டிருப்பதே சாலச்சிறப்புடையது என்று கூறியுள்ளார். யாங்களும் தரித்திரமும் நோயும் பெரும்பாலும் பீடித்துள்ள இந்தியர்கள் முதலில் மனிதனின் அறிவுக்கும் ஆராய்ச் சிக்கும் எட்டாத ஒன்றைக்கண்டு பிடிக்க முயன்று கஷ்டமுற்று சாவதைவிட முதலாவதாக தரித்திரத்தையும் நோயையும் போக்கும் வழியை முதலாவதாகக் கண்டுபிடித்து சுகவாழ்வை அடைந்த பின்னரே கடவுளைக்காண வேண்டுமானால் முயற்சிப்போம் என்றே கூறுகின்றோம். கடவுளைப் பற்றி யாதொன்றும் அறியாது வெறும் மூட நம்பிக்கை கொண்டு கடவுளுக்காக மக்களை கரு வறுக்கும் காதகர்களினும் கடவுள் பேரில் மிகுந்த பக்திகொண்ட சாது போல் நடித்து கொலை, களவு, கள், காமம், சூது முதலிய தீய விஷயங்களைப் புரிந்து வரும் ஆதிகனினும் கடவுளின் பேரால் மதவேற்றுமைகளையும் ஜாதிப்பிரிவையும் ஏனைய உயர்வு தாழ்வு களையும் உலகில் நிலைநாட்டி மதப்போர், ஜாதிப்போர், தொழி லாளி முதலாளிப் போர்களையும் வளர்த்து வரும் வன்கண்ணர் களினும் கடவுள் பக்தன் என்று பிறர் எண்ணும்படி தாடி, தலைப் பாகை, உருத்திராட்சம், விபூதி, துளசிமணி முதலியவைகள் அணிந்து மக்களை ஏமாற்றி வயிறு வளர்ப்பவனிலும் மோட்சம், நரகம் முதலியவற்றினைப்பற்றி மக்களுக்குப் பயங்காட்டி முரீது, ஞான தீட்சை, பாவசங்கீர்த்தனம் என்னும் பெயர்களால் பணத்தையும் கன்னியர்களின் கற்பையும் கவரும் கசடர்களினும் இன்னோரன்ன பிற செயல்களைப் பூண்டுவரும் மக்களினும் கடவுள் இருப்பினும் இருக்கட்டும் இல்லா தொழியினும் ஒழியட்டும் எனக்குக் கவலை யில்லை. மண்பதைகள் சுகவாழ்வடைய என்னாலானதையெல்லாம் செய்வதே எனது கடமை. அதற்காக எனது வாழ்நாளை தியாகஞ் செய்யவும் அஞ்சேன். என்னோடு கருத்துவேற்றுமை கொண்ட தற்காக எவரையும் தூஷியேன், கொலைபுரிய நாடேன் எனக்கூறி நன் மனதாலும் கொலை, களவு, கள், காமம்,சூது முதலிய தீய செயலை நாடாத ஒருவனை நாங்கள் ஒரு பொழுதும் நாதிகனென்று நவி லோம். அவனே முற்கூறிய செயலினையுடைய ஆதிகனிலும் சிறந்த உத்தமனென்றும் நித்தமும் போற்றுவோம். கடவுள் நம்பிக்கையுடையோனாய் பலப்பலதீய செயல்களைப்புரிந்து வந்த ரஷியதேசத்து கபடசந்நியாசியாகிய ரஷ்புட்டினை ஆதிகனென்று உலகம் மதித்துக்கொள்வது, இல்லற ஞானியாய், சமதர்மவாதியாய் தம்கனவிலும் நனவிலும் ஏழைகளின்தோழனாய், மனிதப்பிராணி களின் நல்வாழ்விலும் இரவும்பகலும் கவனம் செலுத்திவரும் ரஷிய தேசசர்வாதிகாரி டாலின் என்பவரை நாதிகர் என்று கூறும் உலகினரைக் கண்டு நாங்கள் ஆச்சரியப்படுகின்றோம். எவரிடத்திலிருந்து மண்பதைக்கெல்லாம் அதிக நன்மை யுண்டாகிறதோ அவர் தாம் மனிதர்களுக்குள் மகாசிலாக்கிய மானவர் என்றும், ஆண்டவனுடைய படைப்புக்களெல்லாம் அவனுடைய குடும்பத்தில் சேர்ந்தவையாயிருக்கின்றன; ஆதலின் ஆண்டவனுடைய படைப்புகளுக்கு அதிகமான நன்மையைச் செய்வ தற்கு எவரொருவர் பிரயத்தனப்படுகிறாரோ அவரே ஆண்டவனுக்கு அதிக உவப்புள்ளவராயிருக்கின்றார் என்ற முகம்மது நபி அவர் களின் திருவாக்கியத்தை ஏன் தன்மதிப்பியக்கத்தார்பாலும் உப யோகப்படுத்தக் கூடாது? ஒருவனை ஆதிகன் நாதிகன் என்று முடிவுகட்ட அவனுடைய பேச்சைக்கொண்டும் வேடத்தைக் கொண்டும் முடிவு கட்டல்தவறு, அவ்வாறு முடிவு கட்டவும் முடி யாது, ஆனால் அவனுடைய செயலையே நாம் ஆராய்தல் வேண்டும். சுயமரியாதை இயக்கத்தாரின் செயலைக்கொண்டு எவரே அவர் களை நாதிகரென்று நவிலவல்லார்? தன்மதிப்பு இயக்கத்தின் கொள்கையன்றோ உலகிற்கொரு ஒப்பற்ற ஆங்கிலக்கவிஞராய் விளங்கும் ரவீந்திர நாத்தாகூர் எனக்கு உருவவழிபாட்டில் சிறிதும் நம்பிக்கையில்லை. வணக்கம் வேண்டாம். கோயில் சென்று கும்பிட வேண்டாம். சாம்பிராணி முதலிய செலவுசெய்து வணக்கம் புரிய வேண்டாம் தாழ்த்தப்பட்டவர்களையும் தீண்டாதவர்கள் என்று கொடுமை செய்யப்பட்டவர்களையும் நெற்றி வேர்வை நிலத்தில் சிந்த சரீரத்தால் வயல்களில் பாடுபட்டு உழைக்கின்ற ஏழைகளையும் பார் அவர்களைக் கவனிப்பதில் கடவுளைப்பார் என்று கூறுவதில் யாது தவறுளது? எனவே சுயமரியாதை இயக்கத்தார்கள் செயலில் ஆதிகராயிருக்கின்றார்களா? நாதிகராயிருக்கின்றார்களா? என்றே அறிவுடையவர்கள் ஆராயவேண்டும். அஃதன்றி அவர்கள் சொல்லிற்கு தவறான பொருள்கொண்டும் அவர்களின் வேடத்தைக் கொண்டும் முடிவு கட்டல்தகாது. இஃது இங்ஙனமிருக்க, தென்னாட்டிலே ஒப்பற்ற முலிம் பகுத்தறிவுப்பத்திரிக்கையாய் விளங்கும் தாருல் இலாம் என்னும் வாரவெளியீட்டின் ஆசிரியரும், நம் அன்பிற்கு முற்றும் பாத்திரரா யிருக்கும் தோழர் பா.தாவூத்ஷாசாஹிப் அவர்கள் 1-7-32இல் வெளி யான தம் பத்திரிகையில் காபிரினும் நாதிகர் நல்லவரே! என்ற தலையங்கத்தின் கீழ் இத்தமிழ் நாட்டின் கண் ஈரோட்டு இராம சாமிப் பெரியாரால் சுமார் ஏழாண்டுகளுக்கு முன்னே நிறுவப் பட்ட சுயமரியாதை இயக்கம் என்பதை அறியாதார் நம் நண்பர்களுள் எவருமிரார் என்றே எண்ணுகின்றோம். அன்னவரின் சுயமரியாதை இயக்கத்தில் நாதிகமென்பது ஒருமூலக் கொள்கையாக அங்கீகரிக் கப்பட்டிருப்பதாய் யாம் அப்பெரியாரிடமிருந்து தெரிந்துகொள்ள முடியவில்லை. அவருடைய பிரசங்கம் சிலவற்றை யாம் செவிமடுத் ததிலிருந்து அன்னவர் தமது இயக்கத்தில் தெய்வம் உண்டென்ப வர்களும் தெய்வம் இல்லையென்பவர்களும் சரி சமானமாகவே அங்கம் வகித்திருக்கலாமென்று கூறியிருப்பதாகவே அறிகின்றோம். தெய்வமிருந்தால் இருக்கட்டும்; அதற்காக நாம் கவலைப்பட வேண்டுவதின்று ஆனால் அத்தெய்வத்தின் பெயரால் மனிதர்களை மனிதர்கள் ஏமாற்றிப் பொருள் பறிப்பதையும் அடக்கியொடுக்கி சவாரிசெய்வதையுமே கண்டிக்க வேண்டுமென்றே அன்னவர் கூறி வருகின்றார். மனிதனினும் தாழ்ந்துகிடக்கும் மிருகங்கள், உலோகங் கள், கற்கள், மரஞ்செடி கொடிகள், பாம்பு புற்றுகள், நதிக்கரை, கடற்கரைகள், பருந்துகள், குரங்குகள், பன்றிகள், மீன்கள், பாம்புகள், புழுக்கள், சாணம் ஆகியவற்றையெல்லாம் தெய்வங்களென்று பூஜிக்காமலிருப்பதே அன்னவரின் சுயமரியாதைக்கொள்கை என நன்கெடுத்துக்காட்டுகின்றது. ஆதலினாற்றான் அந்தப் பு---ம--- ஆதிகர்களைப்பார்க்கினும் இந்த சு - ம - நாதிகர்கள் என்பவர்கள் தன்மதிப்புள்ளவர்களாகவும் மானுஷீகத்தன்மை வாய்ந்தவர் களாகவுமே காணப்படுகின்றனர் என்று எழுதிவிட்டு, 19-8-32இல் ஸயன் ஞானமும் ஆதீகவாதமும் என்ற தலையங்கத்தின் கீழ் லயன் வாதங்களுள் நாதிகத்தையே மேற்கொண்டிருக்கும் ஒரு சில கிரந்தங்களைப் பின்பற்றியே இக்கால நாதிகர்கள் தெய்வமே இல்லையென்று விவாதித்து வருகின்றனர். இத்தகையோருள் சேர்ந்தவர்களே நம் ஈ.வெ. ராமசாமிப் பெரியாரைப்பின் பற்றி யொழுகும் தென்னாட்டுச் சுயமரியதைக்காரர்களுமாவார். இக் கொள்கையினைப் பின்பற்றியே குடிஅரசு முதலிய சு. ம. பத்திரிகை களில் பலர் கட்டுரைகள் வரைந்து வருவதை நம் நேயர்கள் அறிந்தே யிருக்கின்றனர். இன்னும் சிற்சில சமயங்களிலும் சுயமரியாதை இயக்கத்தை நாதிக இயக்கமென்று பிரசாரஞ் செய்ய முற்பட்ட இரகசியமிஃதென எனக்கு விளங்கவில்லை. இவ்வாறு ஆசிரியர் எழுதியதிலிருந்து தாருல் இலாம் பத்திரிகையில் சிற்சில வினாக் களும் என்.ஏ.ஏ. கரீம் போன்ற தோழர்களால் சுயமரியாதை இயக்கத் தின் கொள்கையை உணராது வரைந்திருக்கும் கட்டுரையிலிருந்து நம் நாட்டு முலிம்களிடையே பகுத்தறிவு என்னும் ஞானஜோதியை வளர்க்க முனைந்த தாருல் இலாம் வீணான தர்க்கங்களில் மாட்டிக்கொள்ளப் போவதாய் விளங்குகின்றது. இதனால் சுய மரியதை இயக்கத்தின் கொள்கைகளை அறிந்தோ அறியாமலோ பல முலீம் வாலிபர்கள் கட்டுரைகள் எழுதவும் சுயமரியாதை இயக்கத்து யுவர்கள் இலாத்தைப் பற்றியோ முலிம்களைப் பற்றியோ கட்டுரைகள் எழுதவும், அதனால் வீண் தர்க்கங்களும் விவாதங்களும் உண்டாகும்படி மக்களைத் தூண்டியதாகுமல்லவா? யான் இவ்வாறு கூறுவதனால் தாருல்இலாம் நண்பர்கள் வினா விற்கு சுயமரியாதைக்காரர்கள் விடை கூற முடியாதென்றோ, அன்னார் நாதிகர் என்று கூறிவிடுவதனால் தன்மதிப்பியக்கத் தார்கள் பயந்து விடுவார்களென்றோ எவராவது எண்ணுவது பெரும் அறியாமை யென்று எச்சரிக்கின்றேன். பகுத்தறிவை நாட்டில் வளர்த்து எங்கும் சாந்தியும் சமத்துவமும் பெருக உழைக்கும் இரு பத்திரிகைகள் தங்களுடைய ஆக்க வேலையை விட்டு விட்டு ஒருவர் மேலொருவர் வசை புராணம் பாடி வீணான தர்க்கத்தில் ஏன் சிக்கிக் கொள்ள வேண்டும்? இருபத்திரிகைகளும் ஒன்றையொன்று தாக்காது தங்கள் தங்கள் நோக்கத்தை பிரசாரஞ் செய்து கொண்டு போகட்டும். இதுவரை குடிஅரசு, தாருல் இலாத்தை, வலியசண்டைக் கிழுத்தது கிடையாது. அவ்வாறிருக்க தாருல் இலாம் ஏன் பயனற்ற வாதங்களில் தலையிட வேண்டுமென்று அப்பத்திரிகையைப் பன்முறையும் வினவுகின்றேன். தாருல் இலாம் வாசகர்களே! குடி அரசு நாதிகர்களை அவர்கள் கொள்கைகளைக் கூற தம்மிதழில் இடங்கொடுப்பதால் அதை நாதிகப் பத்திரிகையென்று கூறுவது நியாயமாகுமா? அப்படி யானால் உங்கள்அன்பிற்குறிய தாவுத்ஷாசாஹிப் அவர்கள் 19-8-32இல் .......njhH® ம. á§fhuntY ã.V.ã.vš., (சென்னைஹைகோர்£வக்கீல்)பிரபஞ்சமு«கடவுளும்’என்னு«ஆராய்ச்áநூலொன்று«வெளியிட்டுள்ளார். அச்சிறு நூலில்தோழ®ம.சி. தக்க ஆராய்ச்சியுடனே தமது புத்திக்கெட்டிய வரையில் சைன் ஞானத்தைக் கொண்டு தெய்வமேயில்லை யென்று நிரூபணஞ் செய்து முடிவு கட்டியுள்ளார். எனவே, அந்நூலினை ஆதிகர் நாதிகர் அனைவரும் வாசித்துணர வேண்டுமென்பதே எனது ஆர்வமிக்க கோரிக்கையாகும். ஆதிகர்களென்போரும் அதனைப் படித்துணர்வதால் நற்பயன்பெறுவார்களென்பதேஎமதுதிண்ணியஎண்ணமாகும். என்று கூறியிருப்பது கொண்டு தோழர் தாவுத்ஷா சாஹிப் அவர்களை ஸைபுல் இலாம் - இல்லை - நீங்கள் நாதிகர்கள் என்று TறKன்வருவீர்களா?எனவே இந்த வீண் ஆதிக நாதிகத் தர்க்கத்தில் வீணாகத் தலையிட்டு உங்கள் காலத்தையும் நேரத்தை யும் åணாக்காதுcண்மையானMதிகர்களென்பதைÚங்கள்bசயலில்fட்டKன்tருங்கள். உலகில் நாதிகம் பெருகுவது ஆதிகர்களினாற்றான் என்பதை சமரச நோக்குடைய பெரியார் யாரும் மறுக்கார். கடவுளின் பெயரால் எழுதப்பட்ட கட்டுக்கதை களும் ஆபாசப் புராணங்களும் இன்று வரை நடைபெறும் கொலைகளும் உயர்வு தாழ்வுகளும் பக்தர்கள் போன்று வேடமிட்டு உலகை வஞ்சித்து மக்கள் பாலுள்ள நல்லொழுக்கத்தை வேருடன் கல்லியெறிந்து வரும் பண்டாரச்சன்னதிகளும் போப்களும் பிஷப்பு களும் மௌல்விகளும், பிக்ஷூக்களும் வேதங்களும் புராணங்களும் மூடநம்பிக்கைகளும் பழைய பழக்க வழக்கம் என்னும் பேய்களுமே காரணமென்பதை நன்றாய் ஆராய்ந்து, நீங்களாவது உங்களை உங்கள் செயலைக்கொண்டு நாதிகர்கள் போற்றும்படி செய்ய முன்வருமாறு முயலும்படி உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். இதுவே உங்களின் சிறந்த ஆதிகப் பிரசாரமாகும். மேலும் நாம் இன்ன மதத்தைச் சேர்ந்தவரென்று சீட்டெழுதிக் கட்டிக் கொள்வதைக் குறித்து ஆண்டவன் இப்பொழுது ஒன்றும் கேட்பதில்லை. இனியும் கேட்க மாட்டானென்றும் ஆனால் நாம் என்னவிதமாய் இருக்கிறோம், அஃதாவது என்ன செய்து வருகிறோம் என்பதைப்பற்றித்தான் அவன் இப்பொழுதும் கேட்கிறான் இனியும் கேட்பானென்றும் நான் நிச்சயமாக நம்பியிருக்கிறேன் என்பது எனக்குத்தெரியும். அவனிடத்தில் செய்கைதான் சிரேஷ்டமாகக் கருதப்படுகின்றது ஆனால் செய்கையில்லாத வெறும் நம்பிக்கை மட்டும் அவன்பால் ஒன்றும் பயன்பெறமாட்டாது என்றும் கூறிவிட்டு இறுதியில் மகாத்மா தன்னை ஒரு பக்கா ஹிந்து வென்று கூறிக்கொண்ட போதிலும் அவரிடம் காணப்படுஞ் செயலால் அவரை அவர் அறிமாலே தன்னையோர் முஸல்மானாக செய்து விட்டார் என்னும் பொருள்பட மகாத்மா உண்மை முலிம் என்னும் தலையங்கத்தின் கீழ் தோழர் பா. தாவுத்ஷா சாஹிப் அவர்கள் தாருல் இலாத்தில் 1924ஆம் ஆண்டின் நவம்பர்மாத திங்கள் வெளியீட்டில் விரிவாய் கூறியதும், முகம்மத் நபி அவர்கள் தம் எதிரிகளுடன் செய்த போரில் கைதியாக்கப்பட்ட ஹாத்திமுடைய குமாரத்தி ஸபானா என்பவள் முகமத்நபியை நோக்கி, நபியே யான் யாருமற்ற அஃதியாயிருக் கிறேன், என்னை மீட்பதற்கு யாருமில்லை, என் தந்தை கீர்த்தி வாய்ந்தவர், எங்கள் கூட்டத்தாரில் அரசனுக்கு சமமாய் வாழ்ந்தவர், எத்தனையோ சிறையாளர்களைப் பணம் கொடுத்து மீட்டியுள்ளார் பெண்களின் கௌரவத்தைக் காப்பாற்றியுள்ளார், ஏழைகளைப் போஷிப்பித்துள்ளார் துன்பப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளித் திருக்கின்றார், கேட்டவர்களுக்கு இல்லையென்று கூறார் என்று மொழிந்ததும் ஒரு முலிமிடமுள்ள நற்குணங்கள் உன் தந்தையிட மிருந்தன என்று கூறி அப்பெண்மணியை வாதீனமாய்ச் செய்து விட்டதோடமையாது, அப்பெண்மணியின் வேண்டுகோளின்படி அவளுடைய உறவினர்களும் சிறையினின்று விடுவிக்கப்பட்டனர் என்று உங்களின் நாயகம் முகம்மத் அவர்களின் சரித்திரம் கூறு கின்றது. இவைகளினால் ஒருவர் நாதிகராயிருப்பினும் தம்மை நாதிகர் என்று நவின்று கொண்டிருந்தாலும் அவரை உலகம் ஒரு பக்கா நிரீச்சுவரவாதியென மொழியினும் நல்லொழுக்கமும் நற் செயலுமுடையவராயிருப்பின் அவர் தன்னை யறியாமலே ஒரு ஆதிகராயிருக்கிறார் என்றும் உலகினர் உண்மையறியாமல் உளறிக்கொட்டுகிறார் என்றும் குடிஅரசில் கட்டுரை எழுதுபவர் களோ அன்றி ஏனைய தன்மதிப்பியக்க அன்பர்களோ மேற்கண்ட குணமுடையவராயிருப்பின் அவர்கள் நாதிகர் என்று நவின்று கொண்டிருப்பினும் அறிவுடையார் அவர்கள், தங்களையறியாமலே ஓர் உண்மை ஆதிகர்களாயிருக்கிறார்கள் என்று கூறுவதில் என்ன தவறுஎன்றுதா.ï. அன்பர்களைவினவுகின்றோம்.m‹g®fns! காய்தல் உவத்தல் அகற்றி ஆராய்ந்து நேர்வழியடைவீர்களாக. - (குடியரசு 9.10.1932) தன்மதிப்பியக்கமும் மதங்களும் தாருல் இலாத்தின் தவறான எண்ணம் சென்ற ஆண்டு விருதுநகரில் கூடிய நமது மாகாண மூன்றா வது சுயமரியாதை மகாநாட்டிலே (a) மனிதத் தன்மையைத் தடைப்படுத்துவதற்கு மதங்களின் பேரால் ஏற்பட்டுள்ள பழக்க வழக்கங்களே காரணமாயிருப்பதால் அப்படிப்பட்ட எல்லாமதங் களும் மறைந்து போகவேண்டு மென்றும் மதங்கள் ஒழியும்வரை மனிதர்களுக்குள் சகோதரத்துவம் வளராதென்றும் இம்மகாநாடு அபிப்பிராயப்படுகிறது. (b) இந்திய தேசத்தில் தோன்றியுள்ள மதவேற்றுமைகளும் பகைகளும் அழியவேண்டுமானால் அறிவுள்ள இந்தியர்கள் முதலில் மத உணர்ச்சியைப் புறக்கணிக்க வேண்டுமென்று தீர்மானிக்கிறது. என்ற தீர்மானம் தோழர் திருச்சி கே.எம். பாலசுப்பிரமணியம் பி.ஏ.பி. vš., அவர்களால் பிரேரேபிக்கப்பட்டு மகாநாட்டில் நிறை வேற்றப்பட்டதென்பதை நேயர்களறிந்ததே. இந்தத்தீர்மானத்தை ஆழ்ந்து படித்துணர்ந்த எந்த பகுத்தறிவு வாதியும் இதை மறுக்கார் என்பதே எனது முடிவான எண்ணமாகும். ஆனால் முலிம் பகுத் தறிவு வெளியீடாகிய தாருல் இலாத்தில் நமது தன்மதிப்பியக்கத் தொண்டர் தோழர் குலாம் அவர்களும் ஏனைய அன்பர் சிலரும் இத்தீர்மானங்கண்டு வெகுண்டெழுந்து சில கட்டுரைகள் எழுதியதை யுன்னும் பொழுது அன்னோர் அவசர புத்தியால், மதப்பற்றின் மிகுதி யால் இரண்டொரு வியாசங்கள் எழுதிவிட்டார்களென்றே எண்ணு கின்றேன். விஷயத்தின் உட்கருத்துணராது பின்னும் சில நண்பர்கள் தன்மதிப்பியக்கந் தீர்மானித்த மதக் கண்டனம் விஷயமாய்த் தத்தம் மனம் போனவாறு எழுதிவருகின்றார்கள். எமது மதிப்பிற்குரிய தாருல் இலாமும் அதற்கு இடமளித்து வருகிறது. பகுத்தறிவு இயக்கத்தைப் போற்றும் நம் அருமைத் தாருல் இலாம் அபிமானி களும் நமது தொண்டர் தோழர் குலாம் அவர்களும் மதங்களின் பேரால் பல குருட்டு பழக்க வழக்கங்களும் மூட நம்பிக்கைகளும் கொலையும் களவும் காமமும் சூதும் இன்னோரன்ன பிறதீச்செயல் களும் பெருகி வருவதால் அல்லது பெருக்குவதால் அம்மதங்களை ஒழித்துவிடத் தீர்மானித்த தீர்மானம் தவறா என்பதை இன்னொரு முறை ஆலோசிக்குமாறு வேண்டிக்கொள்கின்றேன். மதம் மக்களுக் காக ஏற்பட்டுள்ளதே யொழிய மதத்திற்காக மக்கள் ஏற்படவில்லை. மக்களுக்காக ஏற்பட்ட மதங்கள் மக்களுலகை பாழ்படுத்தி வேற்றுமையைப் பெருக்கி வேலையில்லாத் திண்டாட்டத்தைப் பரப்பி பணக்காரன் - ஏழை, தொழிலாளி - முதலாளி - ஆண்-பெண் முதலிய பேதத்தையும் மூடப்பழக்க வழக்கங்களையும் தரித்திரத்தை யும் பெண் அடிமைத்தனத்தையும் நோயையும் மதச்சண்டை களையும் பெருக்கி இன்று மக்கள் வாழ்வு மிருகவாழ்வினும் நூறு மடங்கு தாழ்வாய்ச்செய்து விட்டது செய்துவருகின்றது. இத்தகைய மதம் இந்துமதம் என்றாலும் சரி, இலாம் மதமென்றாலும் சரி, கிறிதுமதமென்றாலும் சரி, பௌத்தமதம் என்றாலும் சரி அவை களை ஒழித்து விடுவதும் இவையல்லாது மேற்கூறிய தீமைகளைக் களைந்து நன்மைதரும் மதங்களை வளர்ப்பதிலும் எங்கட்கு ஒரு சிறிதும் கருத்து வேற்றுமையில்லை. இதனை விளக்கியே சுயமரியாதை இயக்கப் பெரியார் தோழர் ஈ.வெ. இராமசாமியவர்கள் சென்ற 1931-ஆம் ஆண்டு ஜூலை மாதம் சாத்தான் குளத்தில் நடந்த மிலாதே ஷரிப் என்னும் முகம்மத் நபியவர்களின் பிறந்த நாள் திருவிழாவின் போது மதம் என்பது மனிதனின் உலக வாழ்க்கையின் நடப்பிற்கு ஒரு வழி காட்டியான கொள்கைகளைக் கொண்டது. அது நம்மைப் போன்ற ஒரு மனிதனால் ஏற்படுத்தப்பட்டது. அது காலதேச வர்த்தமானப்படி மக்கள் சௌகரியத்திற்காக திருத்தியமைக்கக் கூடிய உரிமையுள்ளது. மனிதனுடைய அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் இடம் தரக்கூடியது என்று சொல்லுகின்ற மதத்தைப் பற்றி நான் எப்போதும் அது கூடவே கூடாது என்று சொன்னதே கிடையாது. இந்தப் பொருளின் மீது இருப்பதாக ஒப்புக்கொள்ளுகின்ற மதங் களிடம் எனக்கு அதிகந்தகறாரே கிடையாது. அப்படிப்பட்ட மதம் என்பது வேண்டியதேதான். அதாவது ஒரு பொதுச்சங்கமோ, ஒரு வாசகசாலையோ, ஒரு வியாபாரச் சங்கமோ, ஒரு வக்கீல் சங்கமோ, ஒரு விளையாட்டு சங்கமோ, ஒரு சீட்டாட்ட சபையோ என்பதாக ஒரு தாபனமிருந்தால் அந்த தாபனத்திற்குச் சில விதிகள் இருக்க வேண்டியது அவசியமாகும். இந்த விதி, அந்த தாபன மக்கள் நன்மைக்கும் தாபனம் சரிவர நடந்தேறுவதற்கும் அனுகூலமானதாகவும் அந்த தாபனக்காரர் களால் ஏற்பட்டதாகவும் இருக்கவேண்டும் என்பதுபோலவே, கூடி வாழ நினைக்கும் மனிதனின் உலக வாழ்க்கை நலத்திற்கும் ஏதாவது விதிகள் வேண்டும் என்பதில் குற்றமில்லை. அவ்விதிகளுக்குப் பெயர் கொள்கை என்றாலும் திட்டம் என்றாலும் மதமென்றாலும் மார்க்மென்றாலும் ஒன்றேதான். நமது நாட்டில் பல பாஷைகள் வந்து கலந்து விட்டதால் கொள்கைகளுக்கு மதமென்றும் சமயமென்றும் மார்க்கமென்றும் சொல்லப்படுகின்றது என்பதாகப் பண்டிதர்கள் சொல்லுகின் றார்கள். ஆதலால் அந்த அளவில் நான் எந்த மதத்திலும் தகறாருக்கு வரக் கூடியவனல்ல. இதில் ஒன்றும் ஒளிவுமறைவோ, தத்துவார்த்தமோ இல்லை. வெளிப்படையாகவே சொல்லுகின்றேன். என்று கூறியதும், பின்னர் அதே ஆண்டில் நடைபெற்ற ஈரோட்டு மிலாதெஷரிப் விழாவில் சகோதரத் தன்மையும் சமத்துவமுமுள்ள கொள்கையை ஏன் எல்லோரும் தழுவக்கூடாது. இதற்குப் பெயர் இந்துமதம் என்பதாயிருந்தாலென்ன? இலாம் மார்க்கம் என்பதாயிருந்தாலென்ன? வேறு என்னவாயிருந்தா வென்ன? சகோதர மார்க்கம் சமத்துவமார்க்கம் என்பதாகவுள்ள எதையும் அறிவுள்ள மனிதன்ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். என்றும் தெள்ளத்தெளிய விளக்கியிருப்பதை இலாமியப் பகுத்தறிவு இயக்க அன்பர்களெல்லோரும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். எந்த மத பக்தனும் தம்மதத்தை தங்கள் பகுத்தறிவு என்னும் உரை கல்லில் உரைத்து அது பத்தரை மாற்றுப் பசும்பொன் என்று கண்டால் அதை ஒப்புக்கொள்ளுங்கள், இன்றேல் குப்பைத்தொட்டி யில் எறிந்துவிடுங்கள் என்று கூறும் எந்த மதத்தோடும் மதபக்த னோடும் தன்மதிப்பியக்கத்திற்குப் பகையில்லையென்று கூறும் பொழுது தா.இ. அன்பர்கள் இதை மறுத்துக்கூற ஒருப்படுகிறார் களா என்று வினவுகின்றேன். இன்றைய உலகில் நடைபெறும் வகுப்புத்துவேஷங்களும் கலகங்களும் கொலைகளும் பெண்ணை மண்ணாய் மதித்து அடக்கியொடுக்கும் அநீதமும் ஈயும் எறும்பும் பன்றியும் நுழையும் கோயிலில் தாழ்த்தப்பட்டார் வரக்கூடாது என்று கூறும் ஜாதித்திமிரும் இந்திய நாட்டிலே ஒரு நேரத்திய உணவும் கிடையாது தவிக்கும்படி ஐந்துகோடி மக்களை பெருக்கிய கர்மமும் தாதிகள், வேசிகள் முதலிய பெண் பேய்களை வளர்க்கும் சாத்திரங்களும் விஞ்ஞான சாத்திரத்திற்கும் பகுத்தறிவிற்கும் மாறான வேதங்களில் நம்பிக்கைக்கொண்டு அவ்வித அறிவியல் சாத்திரங் களின் கொள்கைகளை வெறுத்து மூடநம்பிக்கையில் வாழ்ந்து வருமாறும் மனிதன் பிறந்தது முதலிறக்கும்வரை என்னத்தையுண் போம் என்று தவிக்கும்படி இன்னும் பல தொல்லைகளையும் விளைவித்து வரும் மதம் நமக்கு எதற்கு? ஒரு மதத்தில் சில நல்ல கொள்கைகள் இருக்கலாம். அதற்காக அம்மதத்தால் விளையும் கணக்கிலடங்காத தீமைகளையெல்லாம் பொறுத்துக் கொண் டிருக்க முடியுமா? எனவே நம் தா.இ. அபிமானிகள் எம் மதம் மனித னுக்கு வேண்டிய பூரணமான எல்லா நலங்களையும் கொடுக்கிறதோ அம்மதத்தை ஏற்றுக்கொள்வதில் தன்மதிப்பியக்கத்திற்கு எள்ளவும் ஆக்ஷேபணையில்லை. சில அன்பர் சுயமரியாதை இயக்கம் மதங் களையெல்லாம் அழித்துவிட்டு சுயமரியாதை இயக்கம் என்றொரு மதத்தை வளர்க்கிறது என்று கூறுகின்றார்கள். வாதவம் சுய மரியாதை என்பது இன்று இயக்கம் என்று கூறப்பட்டாலும் ஒரு நாள் மதம் என்று கூறப்படலாம். ஆனால் எக்கொள்கையும் மதம் என்றோ இயக்கம் என்றோ, சங்கமென்றோ கூறுவதில் யாருக்கும் கவலையில்லை. தோழர் குலாம் கூறுகின்றபடி மதம் கடவுள் என்ற மொழிகளைக் கொண்டு எந்த சுயமரியாதைக்காரனும் பயப் படவோ, சீறவோ, துள்ளிக்குதிக்கவோ, செய்யார்கள். இவ்வெறும் வார்த்தைகளுக்குள்ள மதிப்பு எவ்வளவென்பதையும் அவர்கள் அறிவார்கள். ஆனால் ஒரு மதத்திற்கும் ஒரு இயக்கத்திற்குமுள்ள வித்தியாசமென்னவென்றால் ஒரு மதத்திலுள்ள கொள்கை காலதேச வர்த்தமானங்களுக்குமாறாக இருந்தால் அதை மாற்றி நாட்டிற்கும் காலத்திற்கும் ஏற்றபடி மாற்ற எந்த சங்கராச்சாரிக்கும் போப்புக்கும் மௌல்லிக்கும் வேறெந்த மகா சபைக்கும் அதிகாரமில்லை. ஆனால் ஒரு சங்கம் அல்லது இயக்கத்திலுள்ள கொள்கைகளை மதம் என்றாலும் சரியே, சமயம் என்றாலும் சரியே, சட்டம் என்றாலும் சரியே அவைகளின் கொள்கையைத் தழுவியிருக்கும் மக்கள் தங்கள் நாட்டிற்கோ, சமூகத்திற்கோ அவை எவ்வாறு மாறுபட்டிருக் குமோ அவ்வளவையோ அன்றி முற்றாகவோ சீர்திருத்தியோ அன்றி முற்றாக அழித்துப் புதிய கொள்கைகளை நிறுவியோ மக்கட்கு நன்மையுண்டாக்கக்கூடும். ஆனால் தற்சமயமிருக்கும் மதக் கொள்கைகளில் ஒன்றையும் மாற்ற முடியாது. ஆனாலும் எல்லா மதவாதிகள் எம்மதமும் எக்காலத்திலும் எச்சமயத்திற்கும் ஏற்றது என்றே கூறிவருகின்றார்கள். சில கொள்கைகள் காலத்திற்கும் தேசத்திற்கும் மாறுபட்டிருந்தாலும் கூட அவைகளைச் சீர்திருத்த அம்மதப் பெரியார்களுக்கே தைரியமற்று அக்கொள்கைகளுக்குப் பல தத்துவ அர்த்தங்கள் கொண்டோ அல்லது தம் கல்வி அறிவால் அக்கொள்கையைப் புரட்டி அதற்குப் பொருள் அப்படி, இதற்குப் பொருள் இப்படி, அவர் செய்த அர்த்தம் தவறு, அவர்கொண்ட பொருள் வேறு என்றெல்லாம் உலகை ஏமாற்றி அச்சமயத்தில் கூறிய கொள்கைகளை மாற்றி தங்கொள்கைக்கு திருப்பமுயன்று அதில் முதலைக்குணம் பூண்ட மூடமதவெறிகொண்ட மக்களால் சொல்லுதற்கடங்காத துன்பம் அனுபவித்தும் தம் கருத்து நிறை வேறாது அளவிடற்கடங்காத் துன்பங்களையெய்தி ஒழிந்துபோனதை யும் இன்னும் அனுபவித்து வருவதையும் மனச்சாட்சியின்படி வாழும் மக்கள் எவரும் மறுத்துக் கூறார். எனவே மதம் என்ற வார்த்தையின் பேரிலோ அல்லது மதத்தின் பேரிலோ சுயமரியாதைக்காரர்களுக்கு பகையோ, பயமோ இல்லையென்றும் பகுத்தறிவிற்குப் பொருந்திய தும் மக்களுக்கு நன்மை பயப்பதுமான கொள்கைகளை மதம் என்றழைத்தாலும் சரி, சங்கமென்றழைத்தாலும் சரி அவைகளை தன்மதிப்பியக்கத்தார் ஒருபொழுது மறுக்கவில்லை, மறுக்கவும் மாட்டார்கள். இதையே தோழர் ஈ. வெ இராமசாமியவர்கள் மேற்கண்ட சாத்தான்குள மிலாதெஷரிப் விழாவில் தெளிவுபடுத்தி யிருக்கின்றார்கள். எனவே சு. ம. இயக்கத்தீர்மானமாகிய மதக் கண்டன விஷயமாய் நம் தோழர் குலாம் அவர்களுக்கும், ஏனைய நண்பர்களுக்கும் எம்மிடம் கடிதம் மூலமாய் இதை வினவும் பல தா. இ. அபிமானிகளுக்கும் கொண்ட ஐயப்பாடுகள் ஒருவாறு நீங்கு மென்று நம்புகின்றேன். ï‹D« ‘kjbkhÊ¥ò’ v‹w th®¤ijia¡ nf£lîl‹ eL§» gythW TW« njhH®fŸ mbkÇ¡fhÉš ï§f®rhš v‹D« m¿P® ‘kj« v‹gJ v‹d? என்று செய்த பிரசங்கமும் மற்றும் பலநுட்பமான வியாசங்களும் ஆங்கிலத்தில் புத்தக ரூபமாய் இருக்கிறது. வேண்டுவோர் ஒவ்வொரு முக்கிய ரயில்வே டேஷன்களிலுமுள்ள ஹிக்கின் பாதம் புத்தகசாலை யிலும் (Robert G. Ingersalls works 3 vol விலை ரூ. 2.3.0) கிடைக்கும் வாங்கி வாசித்து உண்மையையுணர்ந்து கொள்வார்களாக இறுதியாக யான் விரும்புவது என்னவென்றால் பகுத்தறிவிற்கும் மக்களின் முற்போக்கிற்கும் தடையாயிருந்து மனிதத்தன்மையை வேருடன் கல்லியெறியும் மதத்தையொழித்து விடவேண்டும் என்று கருத்துப்பொதிந்த விருதுநகர் சுயமரியாதை மகாநாட்டின் தீர் மானத்தை சிறிது அவசரபுத்தியின்றி ஆலோசித்து மனிதனை மனித னாக்காது மனிதனை மிருகத்திற்கும் தாழ்ந்த நிலைக்கு இட்டுச் செல்லும் மதம் இலாமல்ல - பிற எந்த மதமானாலும் சரி ஒழித்து விடவேண்டுமென, அஃதன்றி மனிதனை மனிதனாக்கும் பகுத்தறிவு மதம் ஹிந்து மதமானாலும் சரி, இலாம் மதம் ஆனாலும், கிறிது மதமானாலும் அவைகளுக்கும் நமக்கும் யாதொரு தகராறுமில்லை யென்ற கொள்கைக்கு வர எவரே மறுப்பர்? முதுகில் புண்ணிருந்தா லன்றோ குனியப்பயம் என்ற பழமொழிக் கேற்ப குற்றமில்லாத பரிசுத்த பகுத்தறிவு சமயத்தைக் காக்க எவரும் முன்வர வேண்டாம் என்றும் அத்தகைய சமயத்தையொழிக்க எந்த பைத்தியக்காரனும் துணியான் என்பது நிச்சயம். மதத்தைப்பற்றி தோழர் இங்கர்சால் கூறிய பொன்மொழிகள் :- பணக்காரர்கள் ஏழைகளிலிருந்து மதத்தால் பிரிக்கப்படுகின் றார்கள். நான் மதத்திற்கு விரோதமாய் ஒன்றுஞ்சொல்லவில்லை. நமது விஷயம் அதுவல்ல. எந்தமதம் வாரத்தில் ஒரு நாளாவது அல்லது வருஷத்தில் ஒரு மணியாவது ஏழைகளையும் பணக்காரர் களையும் ஒன்று சேர்க்கிறதோ அந்த மதத்தை நான் நன்கு மதிப்பேன். மதம் பரீட்சிக்கப்பட்டது ஆனால் எல்லா தேசங்களிலும் எல்லாக்காலங்களிலும் பிசகியது மதம். அது மனிதர்களை இரக்க முள்ளவர்களாகச் செய்யவில்லை. விசாரணைச் சங்கத்தை ஞாபகத் தில் வைத்துக்கொள்ளுங்கள். அடிமைத்தனத்தை மதம் என்ன செய்தது? மதம் எப்பொழுதும் கல்விக்கும் ஆராய்ச்சிக்கும் சிந்தனைக்கும் விரோதியாயிருந்து வருகிறது. ஒருபொழுதும் மதம் மனிதர்களை சுயேச்சையுள்ளவர்களாகச் செய்யவில்லை. மதம் மனிதர்களை சன்மார்க்கமுள்ளவர்களாக, தாளாண்மையுள்ளவர் களாக, யோக்கியமானவர்களாகச் செய்யவில்லை. உலகத்தின் கண்ணுள்ள உண்மையை தேடுவாய், அறிவை விருத்தி செய்வாய், ஏழைகளைக் காப்பாற்றுவாய், உண்மையைக் காப்பாற்றுவாய் இதுவே உண்மை மதம், இதுவே நியாயமான ஆராதனையாகும். மதம் என்பது என்ன? பயம் நிறைந்ததே மதம். அடிமைக்கு அடிப்படை மதம். பொய்யும் பித்தலாட்டமும் இன்றேல் மதமில்லை. - (குடியரசு 23.10.1932) கடவுளுணர்ச்சியும் மத உணர்ச்சியும் யாருக்குத் தேவை? இவ்வுலகிலுள் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு கூட்டம் சிறிதாகவோ, பெரிதாகவோ இருந்து கொண்டு எங்களுக்குக் கடவுளுணர்ச்சியும் மத உணர்ச்சியும் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறது. அக்கூட்டம் நாளடைவில் பெருகிக் கொண்டே வருவதும் சில இடங்களில் அக்கூட்டத்தாரே அரசாங்கத்தை தன்வயப்படுத்திக் கொண்டதும் பல இடங்களில் கைப்பற்றும் தருவாயில் இருப்பதும் பல இடங்களில் கைப்பற்ற முயற்சிகள் நடந்து வருவதும் நேயர்கள் அறிந்ததே. பன்னெடுங்காலமாய் மக்களின் ஊனிலும் உதிரத்திலும் ஒன்றித்திருந்த இக்கடவுளுணர்ச்சியையும் மத உணர்ச்சியையும் மக்கள் ஒழிக்க முன்வரும் காரணந்தான் என்ன? மக்களுக்கு கடவுள்மேல் பொறாமையா? அல்லது மக்களின் செல்வத்தை கடவு ளென்று சொல்லப்படும் வது கொள்ளை அடித்துக் கொண்டதா? அவ்வாறு கூறுபவர்கள் உலகிலுள்ள மதங்களை ஒழித்து புதியமதம் நிறுவி தாம் புகழ்பெற விரும்புகின்றார்களா? அல்லது பைத்தியம் கொண்டு பிதற்றுகின்றார்களா? அவர்களின் கூற்றிற்குத் தக்க காரணங்கள் ஏதும் இல்லையா? என்று பகுத்தறிவுள்ள மக்கள் எல்லோரும் சிந்தித்துப்பார்க்க வேண்டியது அவசியத்திலும் அவசிய மாகும். இவ்வுலகம் இதுவரை கடவுளுணர்ச்சியிலும் மத நம்பிக்கை யிலும் பெரிதும் ஈடுபட்டு தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சங்களிலும் கடவுளுணர்ச்சியையும் மதக் கட்டளைகளையும் புகுத்தி வாழ்ந்து பார்த்தாய்விட்டது. எதிர்பார்த்த பயன் ஒன்றும் கிட்டாது போனதன்றி, இவ்வுணர்ச்சியும் நம்பிக்கையும் மக்கள் வாழ்க்கைக்குப் பெருங்கேடு தருவனவாய்விட்டன. மக்களை வெறியர்களாக்கி ஒற்றுமைக்குறைவை உண்டாக்கி மனிதனை மனிதன் வதைத்துக் கொல்லவும், பலரை அடிமை ஆக்கி ஒரு சிலர் சுகபோகமாய் வாழவும் துணையாய்விட்டது. உலகத்தின் ஜனத் தொகையான பெண்கள் சமுதாயத்தை பலமற்ற பிறவி என்று கூறி உயிரற்ற பொருளாக மதித்து அடக்கி ஆண்டு தங்கள் காம இச்சையைத் தீர்க்கும் இயந்திரமாக உபயோகிக்க இடம் கொடுத்துவிட்டது. ஒரு சில சூழ்ச்சிக்காரர்கள் உலகத்தின் செல்வங்களையும் நிலங்களையும் தமதாக்கிக்கொண்டு நாள்முழுவதும் பாடுபட்டு கஷ்டப்படும் ஏழைகளுக்கு போதிய ஊதியம் கிடைக்காமல் அறை வயிற்றுக் கஞ்சியும் கிடையாது தவிக்க, பலகோடி மக்கள் யாதொரு தொழிலும் கிடையாது கஷ்டப்பட்டு பட்டினி கிடந்து நலியவும் துணை செய்து விட்டது. யாண்டும் மூடநம்பிக்கைகள் பெருகவும் காதல்மணம், கலப்புமனம், கைம்மைமணம் முதலியவற்றிற்கு மாறாக சில சுயநல வாதிகளுக்கு ஆதரவு காட்டி வருகிறது. சுருங்கச் சொல்ல வேண்டுமானால் மக்கள் உள்ளத்தே சாந்தி நிலவவிடாது எப்பொழுதும் கவலையில் நைந்து இறக்கவும் மக்களின் இன்ப வாழ்க்கைக்கு இடையூறாய் சதா துன்பசாகரத்தில் மூழ்கும்படி மேல்கண்ட கடவுள் உணர்ச்சியும் மதநம்பிக்கையும் செய்துவிட்டது என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனால் ஆயிரத்திற்கு ஒருவர் இவ்வுலகில் சுகமாக வாழ்க்கை நடத்துவதைக் காணலாம். எனினும்அவர்களெல்லாம் சூழ்ச்சி முறையால் கடவு ளுணர்ச்சியையும் மத உணர்ச்சியையும் தங்கள் சூழ்ச்சி முறைக்கு ஆதாரமாக வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றி வாழ்கின்றார் களேயொழிய வேறல்ல. ஆகவே ஏழைமக்களை ஏமாற்றி அவர்களின் உழைப்பால் வாழும் சோம்பேறிகட்கு கடவுள் உணர்ச்சியும் மத நம்பிக்கையும் தேவையாயிருக்கலாம். ஆனால் சூரியஉதய முதல் அதமனம் வரை நெற்றி வேர்வை நிலத்தில் விழப்பாடுபட்டு போதிய ஊதியங்கிடையாது அரைப்பட்டினியாய் வாழும் மக்க ளுக்கு கடவுளுணர்ச்சியும் மத நம்பிக்கையும் என்ன பயன் விளை விக்கும்? இன்று கடவுணர்ச்சி குன்றிவிடாதபடியும் மதநம்பிக்கை குறைந்துவிடாதபடியும் பெருங்கிளர்ச்சி செய்யத்தூண்டுபவர்கள் யார்? கஷ்டப்பட்டு தவிக்கும் ஏழைகளா? அல்லது தன் நகத்தில் ஒரு சிறிதும் அழுக்குப்படாது ஊரார் உழைப்பில் வயிற்றை நிரப்பும் சோம்பேறிகளான முதலாளிமார்களும் குருமார்களும் உயர்ந்த சாதியாரும் பணக்காரர்களுமா? என்பதை ஆராய்ந்து பார்ப்பவர் உண்மையை உணர்ந்து கொள்வார். ஆடு நனைகிறது என்று ஓணாய் ஊளையிட்டழுதது என்ற முதுமொழிக்கொப்ப ஏழைமக்கள் கடவுள் உணர்ச்சியையும் மத உணர்ச்சியையும் தங்கள் ஆயுதமாக வைத்துக் கொண்டே, மக்கள் தங்கள் அறியாமையினின்று விடுபட்டு பகுத்தறிவைக் கடைபிடிக்க ஆரம்பிக்கும் பொழுதெல்லாம், இது நம்மதத்தில் இல்லாதது. இது கடவுளுக்கு வெறுப்பானது என்று கூறி அவர்களை ஏமாற்றுவதுடன் மீறி நடந்தால் கடவுள் உங்களை நரகத்தில் போட்டுவிடுவார் என்று நரகத்தைப் பற்றிப் பலவிதமான கதைகள் மூலம் மக்களுலகை ஏமாற்றி விடுகின்றார்கள். இன்று பட்டினியால் கஷ்டப்பட்டு வருந்தும் ஏழையுலகம் எங்களுக்கு மோட்சமும் வேண்டாம் நரகமும் வேண்டாம், அதை அடையும் மார்க்கமும் வேண்டாம். இப்பொழுது எங்களுக்கு வேண்டியது உணவும் உடையுமே. இவ்விரண்டையும் கொடுக்கும் மதமோ கடவுளோ அல்லது வேறு எதுவோ இருந்தால் எங்கட்கு காட்டுங்கள் அவைகளை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். அஃதன்றி வேறுமதங்களையும் கடவுளையும் நாங்கள் ஒப்புக்கொள்ளோம் என்பது மாத்திரமல்லாமல் கூடுமானால் எங்களுக்கு ஊனும் உடையும் கொடுக்க முடியாமல் எங்களை இத்துணை நாட்களாக இன்னலுக்கு ஆளாக்கிய கடவுளுணர்ச்சியையும் மத நம்பிக்கையை யும் இவ்வுலகினின்று ஓட்டிவிடுவோம் என்று கூறுகின்றது. சோம்பேறித்தனத்தால் மக்களை ஏமாற்றி வாழும் கொள்ளைக் காரர்கள் தங்களின் தரகர்களான புரோகிதர்கள், குருமார்கள் மூல மாய் கஷ்டப்படும் மக்களே வருந்தாதீர்கள்; இது ஆண்டவனுடைய சோதனை; இச்சோதனையில் நீங்கள் தேறிவிட்டால் மறு உலகத்தில் ஆண்டவன் என்றும் அழியாத மோட்சலோகத்திலுள்ள அழகிய பூங்காவனத்தில் என்றுமே இளமை நீங்காத தேவலோகப் பெண் களோடு சதா இன்பந்துய்த்துக் கொண்டு இருக்கும்படி உங்களைச் செய்வான் என்று கூறி மக்களை ஏமாற்றி வந்தார்கள், வருகின் றார்கள். இன்றைய ஏழை மக்களின் உலகம் விழித்துக் கொண்டது. சாப்பாடும் உடையுமற்று தவிக்கும் எங்கட்கு தேவகன்னிகைகள் எற்றுக்கு? எங்கள் பட்டினியை நீக்க ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள்? எங்கட்கு வேண்டியது கஞ்சியே ஒழிய கடவுளும் மதமுமன்று என்று கூறுகின்றார்கள். அவர்கள் கூறுவதை அறிவும் ஜீவகாருண்யமுமுள்ள எவரும் குறைகூற முடியாது. உலகந்தோன்றிய காலந்தொட்டு இதுவரை கடவுளும் மதமும் சூழ்ச்சிக்காரர்கள் சௌகரியமாக வாழ இடமளித்தது. கோடிக் கணக்கான மக்கள் மதவெறி கொண்டு ஒருவரை ஒருவர் வெட்டி மடியச் செய்தது. பெண்களில் பலரை விபசாரிகளாக்கி புண்ணும் பொடியும் பெற்று உயிர் துறக்கச் செய்தது. பொய்யும் களவும், கள்ளும் காமமும், வஞ்சகமும் சூதும், பொறாமையும் ஆணவமும் இன்னோரன்ன பிறதீச்செயல்களும் பெருகச் செய்ததே தவிரவேறு நலஞ்செய்ததாகக் கூற முடியுமா? ஆனால் கடவுள் நம்பிக்கையும் மத நம்பிக்கையும் ஒழித்த நாட்டில் இன்று மக்கள் எவரும் பட்டினி யின்றி வாழ்வதோடு பொய், களவு, காமம், சூது, வஞ்சகம் முதலியவை ஓங்காது ஆணும் பெண்ணும் சமத்வமாய் சதா இன்பசாகரத்தில் வாழ்ந்து வருகின்றார்கள் என்பதை பத்திரிகைகள் மூலமாய் மட்டுமல்ல இன்று உலகப் பெரியார்களாய் போற்றப்பெறும் கவிந்திரராகிய ரவிந்திரநாத் தாகூர் அவர்களாலும் மற்றொரு கதாசிரியராய் வாழும் பெர்னாட்ஷா என்பவர் மூலமாயும் அறிந்திருக் கின்றோம். இவர்களின் வார்த்தையைப் பொய்யென்றோ இவர்கள் எல்லாம் கடவுள் உணர்ச்சிக்கு விரோதமாயும் மத நம்பிக்கைக்கு விரோதமாயும் இருக்கிறார்கள் என்றோ எவரும் கூற முடியாது. ஆனால் அவர்கள் தாங்கள் கண்ட உண்மையை உலகத்திற்குச் சொல்லியிருக்கின்றார்கள். எனவே சோம்பேறித்தனமாய் வாழநினைக்கும் பகற் கொள்ளைக் கூட்டத்தார்களாகிய முதலாளிவர்கத்திற்கும் அவர்களின் தரகர் களாகிய மதகுருக்களுக்கும் புரோகிதர்களுக்கும் கடவுள் தேவையா யிருக்கிறது என்பதை எவரும் மறைக்க முடியாது. ஆனால் பட்டினியின்றி வாழநினைக்கும் ஏழைகளுக்கும் தம் உழைப்பிற்கு தகுந்த பலனையனுபவிக்க நினைக்குந் தொழிலாளி களுக்கும் சமதர்மத்தை உலகில் நிலை நாட்ட விரும்பும் சுய மரியாதைக்காரர்களுக்கும் கடவுள் உணர்ச்சியும் மதநம்பிக்கையும் இன்று தேவையே இல்லை. - (குடியரசு 21.11.1932) கத்தோலிக் மதமும் பெண்களும் உலகத்திலுள்ள பல்வேறு மதங்களில் பெரிதும் பெண் உரிமையைக் கல்லும் மதம் கத்தோலிக் மதமேயாகும். அம் மதவேதமாகச் சொல்லப்படும் பைபிளில் உலக உற்பத்தியைப் பற்றிக் கூற வந்தவிடத்து இறைவன் உலகத்தையும், அதிலுள்ள பலபொருள் களையும் படைத்தபின்னர் ஆதாம் என்னும் ஓர் ஆண்மகனைச் சிருஷ்டித்து பின்னர் அவன் விலா எலும்பினின்று ஏவாளைச் சிருஷ்டித்தான் என்று கூறியிருப்பதோடு இறைவனுடைய கட்டளைக்கு விரோதமாய் பிசாசின் வலையில் சிக்கி நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியைத் தன் கணவனைப் புசிக்கச் செய்து இருவரும் பாவிகளானார்கள் என்றும் இன்னும் புத்திக்கும் யுத்திக்கும் ஒவ்வாத பல்வேறு விஷயங்களும் கூறப்பட்டிருக்கிறது. பெண்ணே உலக உற்பத்திக்கு நிலைக்களனாய் இருக்கிறாள். பெண்ணே கருவுற்று ஆண், பெண் மக்களைப் பெறுகின்றாள். இதுவே உலக இயற்கையாய் இருக்கிறது. ஆனால் கத்தோலிக் வேதத்தின் பழைய ஏற்பாட்டிலுள்ள பஞ்ச ஆகமங்களையும் எழுதியவன் மோயீசன் என்னும் ஓர் ஆண்மகனாய் இருப்பதால் பெண்ணிற்கு முதன்மை கொடுக்கக்கூடாது என்ற உத்தேசத்தின் மேல் இயற்கைக்கும் அறிவிற்கும் மாறாக ஆணினின்று பெண் தோன்றினாள் என்று எழுதிவிட்டான் என்பதை பகுத்தறிவுள்ள எவரும் ஒப்பார். முதலாவதாக ஆணினின்று பெண்ணைத் தோன்றும்படி செய்த இறைவன் எப்பொழுதும் ஆணே பிள்ளை பெறும்படி ஏன் செய்யவில்லை என்று இன்று பாடசாலையிற் பயிலும் பத்துவயதுப் பாலகர்களும் பரிகாசம் பண்ணுகிறார்கள். இதற்கு விடையளிக்க கத்தோலிக்க மதத்திலுள்ள பேராசிரியர்களும் திண்டாடி வருவதை யான் பலமுறை கண்டிருக்கிறேன். எனவே இவ்வேதத்தின் ஆரம்ப நோக்கமே பெண் அந்ததைப் பறித்துத் தாழ்த்துவதாகவே இருக் கின்றது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி ஆகும். மேலும் ஆதாமி னின்று ஏவாளைத் தோன்றும்படி செய்த இறைவன் கன்னிமரியா ளினின்று இயேசுவை ஏன் படைத்தான்? ஏன் ஓர் ஆணினின்று சிருஷ்டித்திருக்கக் கூடாதென்பதை கத்தோலிக் நண்பர்கள் ஆலோசித்துப் பார்ப்பார்களாக. இரண்டாவதாக, ஏவாள்சாத்தானுடைய வார்த்தையில் மயங்கித் தன் கணவனையும் ஆண்டவன் கட்டளைக்கு விரோதமாய் நடக்கும்படி தூண்டிவிட்டாள் என்பதாக எழுதி வைத்துக்கொண்டு பெண்கள் பேதையர் என்றும் எளிதில் ஏமாந்துவிடுவர் என்றும் பெண் சொல்லைக்கேட்டு நமது ஆதித்தந்தையாகிய ஆதாம் பாவியாகி விட்டதோடு அவன் மக்களாகிய நாமும் பாவிகளாகிவிட்டோம் என்று பல கிறிதுவ மேதாவிகள் தற்காலத்தில் வியாக்கியானஞ் செய்து பெண்ணைத் தாழ்வுபடுத்தும்படி செய்யப்பட்டிருக்கிறது. இன்னும் பைபிளில் பலவிடங்களில் பெண்களை எத்துணை துரம் இழிவுபடுத்திக் கூறக்கூடுமோ அத்துணை தூரம் இழிவு படுத்திக் கூறப்பட்டிருக்கிறது. இத்தகைய ஆதாரங்களை வைத்துக் கொண்டே செயின்ட் கிரிகிரி என்ற பெரிய போப்பானவர் பெண் ணானவள் கொடிய விரியன் பாம்பின் விஷத்தையுடையவள் என்றும் கொடிய கற்பித பறவை நாகரிகத்தின் பொறாமையைப் படைத் தவள் என்றும் செயின்ட் ஜான் கிரிஸாஷ்டம் என்பவர் பெண் ணின் மூலமாகவே சாத்தான் வெற்றியடைந்தான். அவளாலே வர்க்க போகத்தை இழக்க வேண்டியதாயிற்று. எல்லாக் கொடிய பிராணிகளிலும் பெண் மகாஆபத்தான பிராணி என்றும் மேலும் அவர் பெண், பொய்யின் மகள் நரகவாயில் காப்பவள் சமா தானத்தின் விரோதி இவளால் ஆதாம் வர்க்க போகத்தை இழந்தார் என்றெல்லாம் கூறுகிறார். இன்னும் செயிண்ட் இப்ரியன், நம்முடைய ஆத்மாவை அடிமையாக்க பிசாசு உபயோகிக்கும் கருவி பெண்ணே என்றும் கிறைசாடம் என்னும் ஒரு கிறிதுவ சந்நியாசி பெண் அத்யாவசியமான ஒரு துன்பமாகவே அமைந் திருக்கிறாள். இயற்கையில் தோன்றியிருக்கும் காமக் கருவியாகவும் அத்தியாவசியமான துரதிஷ்டமாகவும் வீட்டுக்கு வேண்டிய நரகமாகவும் மரணத்தை உண்டாக்கக்கூடிய மோகமாகவும் வர்ணம் தீண்டப்பட்ட தீமையாகவும் காணப்படுகிறார்கள் என்று கூறி இருக்கிறார். இத்தகைய கிறிதுவப் பெரியோர்கள் இவ்வளவு மோசமாய் பெண்களைப் பேசக் காரணம் என்ன? அவர்களுடைய மனப்பான்மையும் பெண்களைப் பற்றி அவர்கள் வேதம் கற்பித்த கற்பனையுமே ஆகும். இந்த வேதத்தை மோயீசனல்லாது ஒரு பெண் எழுதியிருந்தால் பெண்ணுரிமையை மறுத்து இத்துணை கேவல மாய் பெண்ணைப் பற்றி எழுதியிருப்பார்களா? அந்தோ முதன்மை வகிக்கவேண்டிய பெண் ஆணின் சுயநலத்தால் எத்துணை தூரம் தாழ்த்தப்பட்டு பெருமையிழந்து நிற்கின்றாள். இது நிற்க, பழைய ஏற்பாட்டின் சட்டங்களை எல்லாம் கேன்சல் செய்து எழுதப்பட்ட புதிய ஏற்பாட்டிலாவது பெண்ணிற்கு சிறிதாவது மரியாதையும் உரிமையுமுண்டோ? என்றால் பழைய ஏற்பாடாவது தேவையில்லை என்று சொல்லக்கூடிய நிலையிலே தான் இருக்கிறது. பாபம், பெண்ணின் மூலமாகவே தோன்றி அவள் காரணம் பற்றியே நாம் எல்லோரும் இறக்கின்றோம் என்றும், மனைவிமார்களே! உங்கள் புருஷர்களுக்கு அடிமைப்பட் டிருப்பீர்களாக என்றும் உங்கள் பெண்கள் கோவில்களில் மௌனம் சாதிப்பார் களாக அவர்கள் பேசப்படவில்லை. ஆனால் அவர்கள் தாழ்மைத் தனத்திலே இருக்கும்படி ஏவப்பட்டிருக்கின்றனர். அப்படியே சட்ட மும் கூறுகிறது. அவர்கள் ஏதாவது தெரிந்து கொள்ள வேண்டு மானால் வீட்டிலே தங்கள் புருஷர்களைக் கேட்கட்டும் ஏன் என்றால் பெண்ணானவள் கோயிலில் பேசுவது அவளுக்கு அவமான மானதாகும். பெண் மௌனமாக இருந்து முழு அடிமைத்தனத்துடன் தெரிந்து கொள்ளட்டும். ஆனால் அவள் மௌனமாய் இருப்பதை விடுத்து ஒரு பெண் கற்பிக்கவும் அதிகாரத்தை அடையவும் நான் இடங்கொடேன். ஏனென்றால் முதலாவதாக ஆதாம் சிருஷ்டிக்கப் பட்டார். அதன் பிறகுதான் ஏவாள். ஆதாம் ஏமாற்றப்படவில்லை. ஆனால் திரி ஏமாற்றப்பட்டமையால் அவளே அதிக்கிரமம் செய்த வள் ஆகின்றாள் என்றும், பெண்கள் முக்காடிட்டு கோவிலுக்குச் செல்ல வேண்டுமென்றும் ஆண்களுக்கு அது வேண்டியதில்லை என்றும் பெண்கள் ஆலயத்திலே பேசக்கூடாது என்றும், இன்னும் பல கருத்துகளை உடைய வேதவாக்கியங்கள் பல பைபிளில் மலிருந்திருப்பதைப் பார்த்தால் கிறிது மதமே--ஏன்? கத்தோலிக் கிறிது மதமே பெண்ணை ஓர் உயிரற்ற ஜடப்பொரு ளாய், காமப் பொருளாய், பேதையராய், அடிமையாய்க் கருதிக் கொண்டிருக்கிறது என்பது தெளிவு. கத்தோலிக் மதம் ஆணையும் பெண்ணையும் சமத்துவமாய்ப் பாவிக்கும் மதமாயிருக்கும் பட்சத் தில் கிறிதுமதம் தோன்றிய காலந்தொட்டு இதுவரை ஒரு பெண்ணை போப்பாகவோ வேறு அதற்கும் கீழ்பட்ட குருமா ராகவோ நியமிக்காது இருக்குமா? என்பதை அறிவுடைய பெண்கள் எவராவது சிந்திக்காமல் இருப்பார்களா? மேலும் ஆங்காங்கே நடைபெறும் கத்தோலிக் பாடசாலைகளைப் பார்த்தால் எல்லாம் ஆண்கள் கல்லூரிகளாகவே இருக்குமே அல்லாது பெண்கள் கல்லூரியை அதிகமாகக் காண முடியாது. அவ்வாறு ஒன்று இரண்டு இருந்தாலும் அவைகள் கத்தோலிக் பெண்களுக்குப் பயன் படாத ஊரில் தானிருக்கும். அவ்வூரில் கூட ஒன்றிரண்டு அழ குடைய கத்தோலிக்க பெண் படிக்க ஆரம்பித்தால் அவர்களைத் தங்கள் நயவஞ்சகமொழிகளால் ஏமாற்றி கன்னியாதிரி ஆக்கி விடுவது இன்றைய நடைமுறையில் இருந்து வரும் விஷயமாகும். இக்கன்னியாதிரிக் கூட்டம் கிறிது பிறப்பதற்கு முன் யூத ஜாதியார் தங்கள் வீட்டில் கிறிது பிறக்கமாட்டாரா? என்று தத்த முடைய மகளை கன்னியாகவே வைத்திருந்தார்களாம் ஏனென்றால் ஒரு கன்னிகையின் வயிற்றிலே கிறிது பிறப்பார் என்ற தீர்க்க தரிசனத்தை நம்பியே இவ்வாறு நடந்து வந்தது என்று ஒரு கிறிதவ வேத ஆராய்ச்சிக்காரர் மொழிந்துள்ளார். அதன் பிரகாரம் கிறிது பிறந்த பின் இக்கன்னியாதிரிக் கூட்டம் இருக்க எத்தகைய அவசியமுவில்லை. கிறிதுவைப் பின் பற்றி ஒரு சில ஆண்மக்கள் பிரமச்சாரியாய் வாழ்ந்தால் வாழட்டும் அதைப்பற்றி நமக்குக் கவலையில்லை. இயற்கைக்கு மாறாய் பெண் களை கன்னியாதிரிமடம் என்னும் சிறைக்குள் அடைத்து மனித இயற்கைக்கு மாறாய் அவர்களை நடக்கும்படி சாமியார்களாகிய ஆண்கள் செய்வது எதற்கு என்பது தான் நமக்கு விளங்கவில்லை. இயற்கையை மீறி நடக்க எவராலும் முடியாது. ஒரு பெண்ணோ, ஆணோ தக்க காலத்தில் ஒன்றோடொன்று சேர்ந்து வாழ்வதே இயல்பு. அந்த இயல்புக்கு விரோதமாய் கத்தோலிக் பாடசாலையில் பயிலும் பல பெண்களை ஏமாற்றி கன்னியாதிரி என்று மொட்டை யடித்து மடத்திலடைத்து வைப்பதால் அவர்கள் இயற்கை உணர்ச்சியை அடக்கிக் கொண்டிருத்தல் சாலுமோ? மேனாடுகளில் கன்னியா திரிகள் மடங்களில் நடக்கும் அக்கிரமங்களை மிகத் தைரியமாய் பத்திரிகைகளாலும் புத்தகங்களாலும் வெளிப்படுத்தப்பட்டாய் விட்டது. இப்பொழுதும் வெளிப்பட்டுக் கொண்டு வருகிறது. “Confession of a nun” “Love letters of nun” “Prest in absolution” “Convent life unvield” “Jesuit father;Religious Rogues” “Pope Alexander VIth & his loves” போன்ற பல நூல்களும் “Truth seeker” “Literary Guide” போன்ற பத்திரிகைகளும் முரசறைந்து வருகின்றன. மேலும் இப்பாதிரிக் குழுக்கள் பாவ மன்னிப்பின் பேரால் பெண்களை எத்துணை தூரம் கெடுத்துவிடு கிறார்கள் என்பதைப் பற்றி கத்தோலிக் சாமியாராய் இருந்த தோழர் செனிக்யூ அவர்கள் தெளிவாய் எழுதியுள்ளார்கள். அவர் கூறும் கூற்றையோ மற்றும் ஆதாரங்களையோ மறுத்துக் கூற வழியற்ற கத்தோலிக் பத்திரிகைகள் செனிக்யூ அயோக்கியன், காமாதூரன், முட்டாள் என்று வைவதால் எவரும் ஏமாறி விடமாட்டார்கள் என்றே நம்புகிறேன். தோழர் செனிக்யூ கத்தோலிக் மதத்தின் சாமியாராகத் தெரிந்தெடுக்கும் முன்னரே அவர் ஓர் அயோக்கியராய் இருந்தார். அவர் திருந்திவிடுவார் என்று கல்வி கற்பித்து சாமியார் பட்டம் கொடுத்தார்கள் பின்னரும் அவர் காமாதூரனாகவும் அயோக்கியனாகவும் இருந்ததால் கத்தோலிக் மதத்தை விட்டு விலக்கப்பட்டுவிட்டார் என்றும் கத்தோலிக் பத்திரிகைகள் கூறு கிறது. இதிலிருந்து சாமியாராக குருப்பட்டம் அயோக்கியர்களுக்கும் புரட்டர்களுக்கும் கொடுக்கப்படுகிறது என்றும் குருமார்களில் காமாதூரர்களும் பொய்யர்களும் இருந்தார்கள், இருப்பார்கள் என்று எல்லாம் எண்ண இடம் ஏற்படுகிறது. ஆனால் தோழர் செனிக்யூவைப் பொறுத்த வரை இக் கத்தோலிக் பத்திரிகைகள் என்னதான் மொழியினும் அவர் கத்தோலிக் மதத்தின் குருவாகவே இருந்து கொண்டே குருமார்கள் என்பவர்கள் பெண் உரிமைக்குப் பங்கமிழைத்து அவர்களைக் கெடுத்து வருகிறார்கள் என்பதையும் தம்மைவிட உயர்ந்த குருமார்களுக்கு கடிதப் போக்குவரத்துச் செய்தார். குருமார்களோ அவைகளுக்குத் தக்க பரிகாரந்தேட முயற்சியாது தங்கள் சபைகளில் நடக்கும் அயோக்கியத் தனங்களை மறைக்க முயன்றதினால் தோழர் செனிக்யூ கத்தோலிக் மதம்விட்டு வெளியே வந்தார். அவர் எத்தகைய யோக்கியமுடையவராய் இருந்தார் என்பதற்கு அவருக்கு அக்காலத்தில் கத்தோலிக் உயர்தரக் குருமார்கள் எழுதிய கடிதங்களே தக்க சான்றாகும். அக்கடிதங்களில் பெரும்பாலான கடிதங்கள் “Fifty years in the church” என்ற நூலிலும் “Priest the woman & confessional” என்ற நூலிலும் வெளியிடப்பட்டு உள்ளன. அவைகளைப் படித்தால் செனீக்யூ வினைப் பற்றி கதை கட்டுவதைவிட்டு, அவர் கூறும் கூற்றை மறுக்க இனியாவது முன் வருமாக. அதுவே ஆண்மையும், அறிவுடமையுமே ஆகும். நிற்க, பழைய காயலைச் சேர்ந்த தோழர் X. M. பாண்டியா என்பவர் காதலித்து வந்த (தற்சமயம் திருச்சி கத்தோலிக் மடத்தில் கன்னியாதிரியாய் இருக்கும் ஒரு பெண்) மிக்கேலாள் பெண்டிக்ற் மேரி என்னும் ஓர் அழகிய நங்கையை பல்வேறு சூழ்ச்சிகளிலோ, பலாத்காரத்தாலோ மடத்தில் அடைத்து வைத்துக் கொண்டதும் அப்பெண்மணி மடத்திலிருந்து கொண்டே தோழர் பாண்டியா அவர்களுக்குப் பல காதற் கடிதங்கள் எழுதியதும் தோழர் பாண்டியா அவர்களுக்குப் பல காதற் கடிதங்கள் எழுதியதும் தோழர் பாண்டியா அவர்களால் வெளியிடப்பட்ட நோட்டீசுகளும் அதிலுள்ள அப் பெண்மணியின் கடிதங்களும் நன்குணர்த்துவதோடு திருமணத்தில் பேராவல் கொண்ட எத்துணை பெண்மணிகள் கன்னியாதிரி மடங்களில் சிக்கி இவ்வாறு அல்லற்படுவார்களோ என்பதை நம்மால் அளவிட்டு உரைக்க முடியவில்லை. இன்னும் பாவமன்னிப்பின் பேராலும் மற்றும் பலவற்றின் பேராலும் குருக்கள்மார் என்போர் பெண்களை உயிரற்ற ஜடப் பொருளாக நினைத்து நடக்கும் பலாத்காரச் செயல்கள் எல்லாம் கத்தோலிக் சமயகுருக்களின் பணத்திமிரால் அடக்கப்பட்டு வந்தா லும் பொது ஜனங்கள் அவைகளை எல்லாம் அறியாமலில்லை. அவர்கள் இரத்தம் கொதியாமலும் இல்லை. இன்னும் சமய குருவாகத் தலைமை பூண்டுள்ளவரும் ஏசு கிறிதுவின் பிரதிநிதிகளாய் இருந்தவர்களுமான போப்புகளே பல பெண்மக்களை வஞ்சித்து பல பெண்களைக் கெடுத்துள்ளார்கள். இயற்கையை மீறி ஆண் பெண் பிரமச்சரிய விரதமேற்கொண்டு வருவதால் கத்தோலிக் மதத்தில் விபசாரம் பெருகிவருகிறது. எடுத்துக்காட்டு ஜோ ஆன் என்னும் போப் ஆண்வேடந்தரித்த பெண். அவள் 8ஆம் யோவான் என்ற பெயருடன் போப் ஆனாள். அவள் கள்ளத்தனமாய் விபசாரஞ் செய்து, கருவழிந்து ஆலயத்துக்குப் போகிற வழியிலே செத்துக்கிடந்தாள் என்று பிளற்றினா (Platina) என்னும் கத்தோலிக் சரித்திரக்காரர் கூறுகிறார். 2ஆம் யோவானாகிய போப் முறைகேடான உறவினரோடு விபசாரஞ் செய்து ரோமையிலே வெளியாகக் குற்றஞ் சாட்டப் பட்டார். 13ஆம் யோவானாகிய போப், போப் பட்டத்தைப் பலாத் காரமாய் பெற்றவர். வேட்டையாடுவதிலும் சிற்றின்பத்திலும் சொல்லத்தகாத பாவங்களிலும் ஈடுபட்டவர். அவரை விளக்கத் திற்கு அழைத்தபோது தப்பியோடி வேசித்தனஞ் செய்யும் பொழுது கிரிசால் குத்துண்டு மாண்டார். நாலாம் சிக்ர ரோமையிலே வேசிகள் வீடு உண்டாக உத்தரவு கொடுத்தார். ஆறாம் அலெக்சாந்தர் என்னும் போப் விபசாரஞ் செய்து அதனால் பிறந்த மகளாகிய லூக்கிற்றாவுடன் விபசாரம் புரிந்தார். இவைகள் எல்லாம் குசியாடினி (Guicciardini) சியக்கோனிய (Ciaconius) முதலிய கத்தோலிக் சரித்திரக்காரர்களால் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. 12-ஆம் யோவானாகிய போப் பகிரங்கமாய் வேசித்தனத்தில் ஈடுபட்டிருந்ததால் - பாப்புவின் அரண்மனை வேசிகள் வீடுகள் போலிருந்தது. அவர் கன்னிகளையும் கைம்பெண்களையும் விபசாரம் செய்தபடியால் சங். பேதுருவின் கல்லரைக்கு யாத்திரை போவதைப் பெண்கள் நிறுத்திவிட்டார்கள் (English Readers reffred to cibbo II 353) 10ஆம் லியோ ஆகிய போப்புவின் காலத்தில் பாதவரி உண்டாக்கப்பட்டது. அதன்படி முறையற்றவர்களோடு செய்யும் விபசாரங் கண்டுபிடிக்கா விட்டால் அதற்கு வரி 5 குறோஷன். கண்டுபிடிக்கப்பட்டால் 6 குறோஷன். அந்தப்படியே மறு விபசாரத்திற்கும் சிசுவதைக்கும் மற்ற பாவங்களுக்கும் வரி நியமிக்கப்பட்டது. இவைகள் மிகுதியாக விபசாரத்திற்குக் காரணமாய் இருந்தது. (See merle D’ Aubigne on Reformation vol.1.p.41) குருமார்கள் வைப்பாட்டிகளை வைத்திருக்கலாம் என்று போப்மார்கள் காலத்திற்கு காலம் உத்தரவு இட்டிருக்கிறார்கள். 1484ஆம் ஆண்டு போப் பட்டத்திற்கு வந்த இன்னோசான் என்பவர் பெயர் பெற்ற விபசாரகர் (See Elliott 1.447 Note) இவருக்குப் பின் போப்பாக வந்த அலெக்சாந்தர் சகல வேசித் தனத்திலும் மிருகத்தனமானவர். பெரும்பாலான ரோமைக் குருமாருக்கு வைப்பாட்டிகள் இருந்தார்கள். ரோமைப் பட்டினத்தி லிருந்த சகல கன்னியாதிரி மடங்களும் வேசிகள் குகையாயிருந்தது என்று இன்வெறா (Infessura) என்ற சரித்திரக்காரர் கூறுகிறார். கன்னியாதிரி மடங்களில் பல முறையும் இப்படிப்பட்ட (விபசார) தீமைகள் நடக்கிறது என்பதை காலா காலங்களில் கத்தோலிக்க அரசாட்சியாரும் அறிந்து அக்கூட்டங்களைக் குலைத்து கட்டிடங்களை அரசாட்சியாருக்காகப் பிடித்து அவைகளைப் பாடசாலைகளாகவும் சிறைச்சாலைகளாகவும் மாற்றினார்கள். அவைகளை இடிக்கும் பொழுது அதிலே 30, 40 கணக்காய் சிறு பிள்ளைகளின் எலும்புக் கோவைகள் தென்பட்டன. இவைகள் நிஜமான காரியங்கள். கன்னியாதிரி மடங்களிலே பெண்பாட சாலைகள் இருப்பது உண்டு. ஆனால் கன்னியாதிரிகளுடைய அறைக்குள்ளோ அந்த (கன்னியாதிரி) பெண்பிள்ளைகளும் ஒருக்காலும் போகக்கூடாது என்பது திட்டமான கட்டளையாம். அவர்கள் கொம்பியாரிக்கிற குருமார் மாத்திரம் போகலாம். பெண் பிள்ளைகள் போகக்கூடாது என்பதன் கருத்து என்ன? புத்தியுள்ள வர்கள் யோசிக்கட்டும். மோசம் வந்த காலத்தில் பெறலாம், கொல்லலாம், அடக்கம் பண்ணலாம் உலகம் அறிய மாட்டாது என்பதல்லவோ? இவைகள் இப்படித்தான் என்பதை கன்னியாதிரி மடங்களில் ஒரு முறை இருந்து பின் தப்பியோடி வந்தவர்கள் சொல்வதினால் அறியலாம். காலத்திற்குக் காலம் ஓடித் தப்பிப் போனவர்கள் எழுதிய புத்தகங்கள் பல இன்று சாட்சியாக இருக்கின்றன. இவைகள் மாத்திரமல்லாமல் இன்னும் பல அயோக் கியச்செயல்களையும் விளக்கிக் கிறிதுமார்க்க அத்தாட்சி என்னும் நூலில் கூறப்பட்டிருப்பது நன்கு காணலாம். எனவே தோழர்காள்! கத்தோலிக் மதத்திலுள்ள சில ஆண் மக்கள் குருமார் என்று பெயர் வைத்துக் கொண்டு தங்களின் காம இச்சைகளைப் பூர்த்தி செய்ய மடங்கள் என்றும் கன்னியாதிரிகள் என்றும் ஏற்படுத்திப் பெண் உரிமையைப் பறித்து அவர்களைத் தங்களின் காமப் பொருளாக நினைத்து அனுபவித்து வருகிறார்கள் என்பதும் பெண் மக்களுக்கு விவாகரத்துரிமை முதலியன கொடாது அவர்களை ஹிம்சித்து கொடுமைப்படுத்தி வருகிறார்கள் என்றும் பாவமன்னிப்பின் பெயரால் எல்லாப் பெண்மகளின் இரகசியங் களையும் அறிந்து அப்பெண்மக்கள் தங்கட்கு (குருமார்களுக்கு) விரோதமாய் நடக்காமல் அவர்களின் குடுமியை தங்கள் பாதத் திற்குள் வைத்துக் கொள்கிறார்கள் என்பதும், பணத்திமிரினால் தாங்கள் செய்யும் அட்டூழியங்களையும் மறைத்துக் கொள்கிறார்கள் என்பதும் இவைகளுக்கெல்லாம் கத்தோலிக் வேதம் தாராளமாய் இடங்கொடுத்து வருகிறது அறியக்கிடக்கின்றது. இப்பொழுது ஆங்காங்கே தாழ்த்தப்பட்ட கிறிதவர்கள் மகாநாடு கூடி கத்தோலிக் குருமார்களின் கொடுமையைக் கண்டித்து வருகிறது போற்றத்தக்கதே என்றாலும் கத்தோலிக் மதத்தின் ஜனத்தொகையில் ஒருபாதியாகிய பெண்களும் இன்று தாழ்த்தப்பட்டவர்களாகவே கருதத் தகுந்தவர்கள். ஆகையால் தாழ்த்தப்பட்ட பெண்கள் மகாநாடும் நடைபெற ஆங்காங்குள்ள கத்தோலிக் யுவர்கள் முயற்சி செய்வார்களாக. பெண்கள் தைரிய மாய் முன் வந்தால்தான் குருமார்களின் யோக்கியதையும் தாராள மாய் வெளிவரும். கத்தாலிக் மதமும் அதி சீக்கிரம் ஒழிய வழியுண் டாகும். தாழ்த்தப்பட்ட தோழர்காள்! நீவிர் எத்துணை தூரம் முன் வரினும் தாழ்த்தப்பட்ட பெண்கள் முன்வந்து தாங்கள் உயர்த்தப் பட பாடுபட முன்வராவிடின் உங்களின் நன்முயற்சி ஒருபொழுதும் பயன்படா. எனவே கத்தோலிக் மதத்திலுள்ள தாழ்த்தப்பட்ட ஆண்களும் எல்லா தாழ்த்தப்பட்ட பெண்களும் உயர்வடைய தங்கள் உரிமைகளைப் பெற முன் வருவார்களாக. சுயமரியதை இயக்கம் அவர்களுக்குத் தன்னாலியன்ற உதவிபுரிய, உற்சாக மூட்ட, சகோதரத்துவம் காட்ட முன் வந்து நிற்கின்றது. கத்தோலிக் தோழர்களே! தோழிகளே! உங்கள் நீண்ட துயிலினின்று விழிமின்! எழுமின்! அஞ்சாது உங்கள் உரிமைக்கு விரோதமாயிருப்பவைகளோடு போராடி அவைகளை நிர்மூலமாக்க வம்மின்! வம்மின். இந்திய வீரர் சுயமரியாதைக்கும் ரஷிய இளவரசி சமதர்மத்திற்கும் திருச்சியில் திருமணம் இளஞ்சோதி குடியரசின் முன்னெச்சரிக்கையான ஏற்பாடுகள் உலகிலே சில தன்னலவெறியர்களான முதலாளிகள், செல்வ வான்கள், புரோகிதர்கள் முதலானவர்கள் ஊரார் உழைப்பின் பயனை அனுபவிப்பதற்கு சாதகமாக சமயம், சாத்திரம், கோத்திரம், பழக்கவழக்கம், நியாயம், ஒழுக்கம் முதலிய கோட்டைகளை நிறுவி அதன் தலைவனாய் கடவுள் என்ற பெயரளவில் உள்ள ஒரு வதுவையும் சிருஷ்டித்து வைத்துக் கொண்டு நெடுநாட்களாக மக்கள் எல்லோருக்கும் பொதுவாக இருக்க வேண்டிய சுகபோகங் களைத் தாங்களே ஏகபோகாமாய் ஆண்டு அனுபவித்து வந்தனர். சிற்சில சமயங்களில் மக்கள் விழித்தெழிந்து தமது பிறப்புரிமையை நினைக்க ஆரம்பித்தால் அவர்களை நரகம், ராஜதுரோகம் முதலிய பல்வேறு பாணங்களைக் காட்டி பயமுறுத்தி வந்தனர். ஆனால் முதலாளித்துவ வெறிகொண்ட பேராசைக்காரர்கள் சுயநலமிகுதி யால் ஒருவரை ஒருவர் அடிமை ஆக்கி வாழநினைத்து கோடிக் கணக்கான ஏழை மக்களை பலியிட்ட ஐரோப்பிய பெரும்போர் வீரர்கள் சிந்திய இரத்தத்தினின்று உண்டாகிய விசித்ரவிஷக்கிருமி களால் டிப்ரஷன் (Dipression) என்னும் வறுமை நோயால் பல்லாயிரக் கணக்கான பேர் மாண்டு மடியவும், லட்சக்கணக்கான முதலாளி மார்கள் பாப்பர் விண்ணப்பம் கொடுத்துப் பரிதவிக்கவும் கோடிக் கணக்கான பேர் வேலையில்லாது அழுது தவிக்கவும் ஆரம்பித்த ஞான்று, ஜெர்மன் தேசத்து யூத அறிஞராம் தோழர் காரல்மார்க் என்னும் பேரறிஞரின் செல்வப்புதல்வியாம் பொதுவுடைமை என்னும் மாதரசியாரின் அருமருந்துகளால் ரஷிய தேசத்திலே உள்ள தோழர் லெனின் டாலின் முதலிய அறிஞர்கள் தங்கள் நாட்டைப் பிடித்த வறுமை எனும் தொத்துநோயை ஒழித்துக் கைமாறாக பொது உடமை எனும் வைத்தியச் செல்வியை ஏகசக்கரவர்த்தினி ஆக்கிவிட்டனர். இதையறிந்த ஒவ்வொரு தேச அறிஞரும் தத்தம் நாட்டிலுள்ள வறுமை எனும் கொடுநோயை ஒழித்து சுகமுற பொது உடமை எனும் பேரரசியாரின் அருமருந்தைக் கொடுத்து வருகின்றனர். இம்மருந்தின் புகழ் உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டிலும் சந்திலும் பொந்திலும் பிரதாபிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் நமது பாழும் பாரத நாட்டை இத்தொத்து நோயி னின்று காப்பாற்ற பல்லோர் பலவிதமுறைகளை கையாடி ஏழை மக்களை மீட்க முயன்று முடியாது, சில தேசியவாதிகள் என்போர் (ஈ.வெ.ரா உள்பட) நாட்டில் வறுமை என்னும் தொத்து நோயை ஒழிக்க ஒத்துழையாமை, சட்டமறுப்பு, வரிகொடாமை, அந்நிய நாட்டுச் சாமான் பகிஷ்காரம் முதலியவற்றைச் செய்தும் அபின், கஞ்சா முதலிய லாகிரி வத்துக்கள் கலந்த மருந்துகளைக் கொடுத் தும் பயன்பெறாது வருந்திக் கொண்டிருந்த பொழுது தோழர் இராமசாமி புதியவழி காண ஆரம்பித்தார். இன்று 8ஆண்டு பிராயம் நிறைந்து 9 வயதை அடைந்த ஈ.வெ.ராவின் இன்புதல்வனாம் குடி அரசு மிகு தைரியமாய் அஞ்சா நெஞ்சம் பூண்டு தலைவிதி, மூடநம்பிக்கை முதலிய இருளுலகினின்று தவித்து நிற்கும் மக்களுக்கு பகுத்தறிவு என்னும் சர்ச்லைட்டை காட்டி தற்கால சாந்தியாக கலப்பு மணம், காதல் மணம், விதவை மணம் முதலிய மருந்துகளைக் காட்டி தொழிலாளர்களே! ஏழைமக்களே! பெண்மணிகளே! உங்களுக்குற்ற கொடுமை நீக்கவிடாது நீங்கள் இன்னலுற்று இறக்கும் படி செய்து மகிழ்ந்திருக்கும் முதலாளித்துவம் புரோகிதம் முதலிய பெரும் பகைவர்களை ஒழித்து அவர்களின் அரிய கோட்டைகளாகிய சமயம், சாத்திரம், கோத்திரம், நீதியொழுக்கம் முதலியவைகளை இடித்து நிர்மூலமாக்கி நம் பகைவர்களின் தலைவனாம் கடவுளை இருக்குமிடம் தெரியாமல் பண்ணி சமத்வமெனும் கொடியை நிலைநாட்டி சுயமரியாதை எனும் தம் இளஞ்சோதரனை சிம்மாசனம் ஏற்றினால்தான் நமது மக்களின் தொத்து நோயைப் போக்க முடியும். எனவே முதலாளித் துவத்திற்கும் புரோகிதம் முதலியவைகளுடன் யாம் தொடுக்கும் அறப்போருக்கு ஏழைகளே! தொழிலாளர்களே! வேலையில்லாது தவிக்கும் இளைஞர்களே! தாழ்த்தப்பட்ட நன்மக்களே! பெண்மணிகளே! ஒன்று சேர்க! இன்றே பொருளாதாரப் புரட்சிப் போருக்குத் தயாராகுமின் என்று நம் இளம் சேனாதிபதி புன்னகை அரும்பும் முகத்துடன் தம் தடக்கையில் தாங்கிய வெற்றிக் கொடியுடன் உங்கள் முன் கூறி நிற்கின்றான். இதனிடையே திருநெல்வேலியிலே கருவுற்று செங்கற்பட்டிலே பிறந்து ஈரோட்டிலே தவழ்ந்து விருதுநகரிலே பயின்று திருச்சியிலே திருமணம் செய்யப்போகும் இளங்கோவாம் குடியரசின் உடன் பிறந்தான் சுயமரியாதையின் எழிலழகு கண்டு பலரும் மயங்கினர். சைவர்கள் தமது புதல்வியாம் சைவத்தின் பாலே காதல் கொண் டுள்ளனர். அவளையே மணப்பெண் என்று மகிழ்ந்து இருந்தனர். கிறிதுவர்கள் தமது செல்வியை நத்துவன் என நம்பி நின்றனர். புத்தர்கள் தமது புத்திரியைத்தான் விரும்புகின்றான் எனக்களித்திருந் தனர். முலீம்கள் தம் புதல்வியாம் இலாத்தையே தழுவுவான் என்று இரும்பூதி நின்றனர். எல்லோரும் ஏமாற்றமுற சுயமரியாதைச் செல்வனோ காரல் மார்க்ஸின் இளைய புதல்வியாம் சமதர்மம் என்னும் சாத்வீகச் செல்வியின் பால் கட்டில் அடங்காக்காதல் கொண்டுவிட்டான். இதனை உணர்ந்த தந்தையார் இந்திய முறைப்படி (சுயமரியாதையின் திரு உருவப்படத்துடன் சுயமரியாதை இயக்க கொள்கைகளுடன்) மேனாடு சென்று தற்சமயம் கத்தோலிக்க குருக்களெல்லாம் மணந்து கொள்ளும்படி சிபார்ஷ் செய்யும் முசோலினியின் குமாரி பாஸிஸம் என்னும் பாவையையும் தற்பொழுது அரசாட்சி செய்யும் நாஸிஸம் எனும் நங்கையையும் பெயினில் செல்வாக்குள்ள சிண்டிகலிஷம் என்னும் மங்கையை யும் ரஷியாவில் தனியரசு புரியும் கம்யூனிசத்தின் இளஞ்சோதரி சோஷியலிஷம் என்னும் சமதர்மத்தையும் பார்த்து விட்டு நமது மகன் சுயமரியாதை கழறும் காதலி சமதர்மமே அவனுக் கேற்ற எழிலும் குணமும் படைத்த ஏந்திளையாள் என்று அவனது உருவப்படத்தை அவளிடம் காட்டினாராம். காட்டியதும் அவள் ஆ இவனே செம்மனத்தான், தண்ணனியான், செங்கோலான், மங்கையர்கள் தம்மனத்தை வாங்கும் தடந்தோளான் இவனே எனக் கேற்ற மணாளன் என்று இவனை மணக்க முற்றிலும் இசைகின்றேன் என்று கூறியதுடன் தம்மாமனார் விருப்பப்படி இந்திய நாட்டிற் கேற்ற முறையில் தம் நடையுடைபாவனைகளை எல்லாம் மாற்றிக் கொள்வதாகவும் கூறிவிட்டதோடு தம் உருவப்படத்தையும் கொடுத்தனுப்பினாள். தோழர் ஈ.வெ.ரா. இந்தியா வந்ததும் தமது மகன் சுய மரியாதையின் காதலி சமதர்மம் எனும் அரசிளங் குமரியின் உருவப்படத்தை தமது தோழர்களுக்கு காட்டியது மட்டுமல்லாது தமது குடியரசு மூலமாய் தமது புதல்வன் உருவப்படத்தையும் மருமகளாவாள் (அதாவது சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படை யான கொள்கை) சுயமரியதை சமதர்ம இயக்கத்தின் வேலைத்திட்டம் என்பனவுமாகும். குடியரசு மூலமாய் வெளியிட்டார் இவ்விரு திருவுருவப் படங்களைக் கண்டதும் பலர் திகைத்தனர், சிலர் பதைத்தனர், பலர் மருண்டனர், சிலர் வெருண்டனர், சிலர் சுய மரியாதைக்கே உயிராபத்து வரப்போகிறது என்றனர். பகைவரின் சிலர் சுயமரியாதையின் தந்தையும் அவர் தோழர்களும் சிறையிடப் படுவர் என்றனர். சிலர் ஈ.வெ.ரா. வின் தோழர் இராமநாதனைப் பற்றி தப்புந் தவறுமாய்க் கூறி சுயமரியாதைக்கு ஏற்ற காதலி பாஸிஸமே ஒழிய சோஷியலிசம் அன்று என்று கூறியதாகக் கூடப் பிரதாபித் தனர். தோழர்களான சௌந்திர பாண்டியன், வி.வி. ராமசாமி ஆகிய சுயமரியாதையின் பிராமண சினேகிதர்கள் இனி சுய மரியாதையின் அருகிலே வரப்போவதில்லை என்றும் கடபடாம் செய்தனர். இப்பொல்லா சுயநல நயவஞ்சகர்கள் நாணுற தோழர் இராமநாதன் சென்னையின்று கொண்டு சுயமரியாதை இயக்கத்தின் செவ்விய வடிவத்தையும் அவனுக்கு வாய்க்கப் போகும் சமதர்மம் என்னும் எழிலார் கோதையின் ஒத்த குணமும் ஒத்த பண்பும் பற்றி வாயாயரப் புகழ்ந்து அவனது திருமணத்திற்கு எதிரிடையாக நிற்கும் கத்தோலிக்கிறிதுவர்களுக்கு நல்ல சாட்டையடி கொடுத்ததையும் அதை ஆதரித்து இந்தியன் எக்பிர செய்த சங்கநாதமும் நீங்கள் அனைவரும் அருந்திருப்பீர்கள். மேலும் தோழர்களான சௌந்திர பாண்டியரும் வி.வி. ராமசாமியாரும் திருமண ஆலோசனையில் (மதுரை ஜில்லா சுயமரியாதை முதலாவது மகாநாட்டில்) கலந்து கொண்டது நமது பகைவர்களுக்கு தம் சூழ்ச்சிஎண்ணத்தில் மண் விழுந்தது என்று உப்புக்கண்டம் பறிகொடுத்த பாப்பாத்திபோல் திகைப்புண்டு இருக்கின்றனர். மேலும் நம் தோழர் சமீபத்தில் கூடப் போகும் கலியாண ஆலோசனைக் கூட்டத்திலே (மாகாணமகா நாட்டிலே) இதைப் பற்றி ஆலோசிப்போம் என்று நவின்றது சட்ட சபைகள் முதலிய தாபனங்களைச் சுயமரியாதை இயக்கத் தோழர்கள் கைப்பற்ற முன் வருதையும் கண்டு பல சுயநலக் கோட் டான்கள் வயிற்றில் இடிவிழுந்தது போலாயிற்று. திருமணப் பேச்சை யெடுத்தாலே சிறைவாசம், எழுதினால் தேசப்பிரஷ்டம், எவரையும் திருமணத்திற்கு அழைத்தால் தூக்குத் தண்டனை என்று பயங்காட்டியும் மனுக்கள் எழுதியும் வந்த புலவர்களும் சுய மரியாதை இயக்கத்தை நசுக்கிவிட்டோம் சுயமரியாதை இறந்து விட்டது என்றெல்லாம் இயம்பிய போலிப்புலிகளும் மூலையில் பதுங்கி முக்காடிட்டு விட்டனர். சுயமரியாதையுவன் தம் தோழர் களின் ஆதரவாலும் தம் திருமண விஷயத்தைப் பற்றி பல்வேறு புதிய நண்பர்கள் தோன்றி எதிர்ப்பினை உன்னாது சமதர்மத்தை திருமணம் புரி என்று மொழியும் ஆதரவுக் கடிதங்களையும் கண்டு களிப்பேர் உவகையுடன் எங்கும் நடனஞ் செய்கின்றான். தந்தையார் ஈ.வெ.ராவின் பேருழைப்பினாலும் குடி அரசு உடன் பிறந்தானின் விடாமுயற்சி யாலும் இந்தியாவின் நாலாவிடங்களில் மட்டு மல்லாது இலங்கையிலும் பர்மா, மலாக்கா, ஜாவா முதலிய இடங்களிலும் தினேதினே ஆதரவுமிக்குப் பெருகி வருகிறது என்பதற்கு சான்றாக தோழர் ஈ.வெ.ராவின் மேனாட்டு விஜயத்திற்குப் பின் இச்சுருங்கிய காலத்திற்குள் குடியரசிற்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட கையொப்பங்கள் (கையொப்பம்) வந்து சேர்ந்திருப்பதே போதுமானது என்பதையும் உணர்ந்து கொண்டான். சிறிதுகாலம் தலைமறைவாகத்திரிந்து கொண்டிருந்து மேனாடெல்லாம் சுற்றி வந்த குடியரசின் மற்றொரு சோதரன் ரிவோல்ட்டும் மதுரையில் கூடிய தோழர்கள் விருப்பப்படி சீக்கிரம் வெளிவருவான் என்று நிச்சயமாய் நம்புகிறேன். திருச்சியிலே சமீபத்திலே திருமண விசேஷமாய் கூடும் கூட்டத்தில் பெரும் ஆலோசனைகளும் எதிர்ப்புகளும் வந்தாலும் பெரும்பாலும் இத்திருமணத்தை சிறிது காலம் தாழ்த்தி நடத்திக் கொள்ளலாம் என்பாரும் மணமகளாம் சோஷியலிசம் (சமதர்மம்) மேனாட்டு நடையுடை பாவனைகளை ஒழித்து இந்திய நடையுடை பாவனைங்களைப் பின்பற்றுவதனால் அத்திருமணம் எங்கட்கு உடன்பாடு என்பாரும் மணமகள் தனக்கு ஒரு லட்சம் தோழர்களையும் (அங்கத்தினர்) ஒரு லட்ச ரூபா மூலதனத்தையும் தனக்கேற்ற அரண்மனைகளையும் (சங்கக் கட்டிடங்கள்) சேனாதி பதிகளையும் போர் வீரர்களையும் (பிரசாரர்களை) பொருளாதாரப் புரட்சிக்கு வேண்டிய ஏனைய சாதனங்களையும் தயார் செய்திருப் பதை நம்மிடம் காட்டிய பிறகே நாம் இத்திருமணத்திற்கு ஆதரவு காட்ட முடியும். திருமணத்திற்கு பல நவீன எதிரிகள் தோன்றலாம் எனச் செப்புவாரும் இருக்கிறார்களே ஒழிய திருமணத்தை முற்றிலும் மறுக்கும் சுயமரியாதை இயக்கத் தோழர்களை யாம் இன்று கண்டிலம். இத்திருமண ஆலோசனைக் கூட்டத்திற்குத் தலைமை வகிக்க இலங்கைப் பெருநிலக்கிழாரும் தனகோடி பிரபுவாயும் விளங்கும் தோழர்சர்.rhybkh‹lahÞ பண்டாரநாயக், Kt, K.C.M.G, J.P, U.P.M, F.R.E.S, M.C.P.B.R.A.S, M.P.P.B, அவர்களின் சிரேஷ்ட புதல்வரும் இலங்கை சட்டசபை உறுப்பினரும் தொழிலாளர் நண்பருமான தோழர் S.W.R. டயர பண்டாரநாயக் பி.ஏ (ஆக்ஸன்) - பார்- அட் - லா. அவர்களைத் தலைமை வகிக்க முடியுமா என்று இந்திய தோழர்கள் பலர் வினவியதற்கு அவர் இணங்கியுள்ள தாக இலங்கையிலுள்ள எல்லா En-Ta-Hin-Mala முதலிய தினசரிகளி லும் வெளிவந்திருப்பதுடன் இலங்கை சட்டசடைகளிலும் இதைப் பற்றி பிரதாபிக்கப்பட்டிருப்பதை பத்திரிகை வாயிலாய் அறிந்து கழிபேருவகை அடைகின்றேன். பெருந்தனவந்தரும் மேனாடு களுக்குச் சென்று உயர்தர ஆங்கிலக் கல்வி கற்று வந்தவரும் இளைஞ ரேனும், சிங்கள சமூகத்திலேயுள்ள சிறந்த தலைவரும் ஏழை மக்களின் பெருமதிப்பை பெற்றவருமான இவர் சுயமரியாதை - சமதர்ம திருமண ஆலோசனை கூட்டத்தில் தலைமை வகிப்பதற்கும் -ஆதரவு கிடைத்தால் திருமணத்தை நடத்தி வைப்பதற்கும் தக்க ஆற்றலும் அறிவும் படைத்தவரேயாகும். இவர் இத்திருமண விழா விற்கு வர இசைந்தது சுயமரியாதைக்கு ஓர் ஒப்பற்ற பெரும் மதிப் பாகும். சரித்திரத்திலே மிகபிரசித்தி பெற்றதாய் விளங்கப் போகும் இத்திருமண ஆலோசனைக் கூட்டத்திற்கு தலைமை வகிக்க சந்தர்ப்பம் பெற்ற தோழர் பண்டாரநாயக் உலகுள்ளவரை என்றும் அழியாப் பெரும் புகழைப் பெறுவார் என்பதும் நிட்சயம். எவ்வாறாவது இத்திருமண ஆலோசனைக் கூட்டம் கூடிய விரைவில் நடத்த சுயமரியாதை இயக்கத் தோழர்கள் முன் வருவார்களாக. நிற்க இத்திருமணத்திற்கு தீவிரமாய் ஆதரவு தேடும் உங்களை இளைஞர் சேனாதிபதியும் - பொருளாதாரப் புரட்சியை நடத்தத் தக்க ஆற்றலும் அறிவும் பெற்ற குடிஅரசு சென்ற ஆண்டைவிட இந்த 9வது வயதில் பெரும் எதிர்ப்பையும் இன்னலையும் வரவேற்க வேண்டியவனாய் இருக்கிறான். போலீ புலிகளின் பொய்யும் புழுகும் நிறைந்த கட்டுமான கேகளும் மதவெறிகொண்ட இந்து கிருதுவ முலீம் சோதரர்களின் எதிர்ப்புக்கும் நல்வரவு கூறி அவர்களிடம் அஞ்சாநெஞ்சத்தோடு ஏ புத்தர்களே! கிறிதவர் களே! முலீம்களே! உங்கள் விருப்பப்படி உங்கள் குமாரிகளிடம் (மதங்களிடம்) என் சோதரன் காதல் கொண்டதுண்டு. ஆனால் உங்கள் குமாரிகளின் உண்மையான குணம் ஈதெனக் கண்டதும் அவளை மணக்க விரும்பவில்லை. இன்றும் உங்களுடைய குமாரி களிடத்தில் சுயமரியாதையாம் எம் சோதரன் விரும்பும் குணமுண்டு என்று நிரூபிக்க உங்களால் முடியுமா? உங்கள் புதல்வி அரசுபுரியும் நாட்டில் மக்கள் எவராவது பட்டினியின்றி வாழும்படி செய்திருக் கின்றாளா? உங்கள் குமாரி தம் தேசமக்களை பொய் சொல்லாதே, களவுசெய்யாதே, விபசாரம் செய்யாதே, பொறாமை கொள்ளாதே என்று கூறினாளே ஒழிய அவ்வாறு மனிதன் தவறான காரியம் செய்ய நேரமும் இடமும் சந்தர்ப்பமும் கிடையாதபடி ஏதாவது செய்து இருக்கின்றாளா? அவளது நாட்டில் நாளடைவில் பொய்யும் திருட்டும் பொறாமையும் விபசாரமும் போரும் மலிந்து வருகின்றதே ஒழி நலிந்தபாடு இல்லையே. மேலும் உங்கள் குமாரிகள் தற் பொழுதிய உலக நெருக்கடியை, வேலையில்லாத் திண்டாட்டத் தைப் போக்க ஏதாவது வழி கண்டுபிடித்திருக்கின்றார்களா? அவர் களது நாட்டில் எங்கும் துன்பம்! துன்பம்! என்ற கூக்குரல் வேலை யில்லை! வேலையில்லை! என்ற பரிதாபக் குரலும் பசிப்பிணியால் உயிர்விடும் பல பரிதாபக் காட்சிகளும் காண்கின்றோமே ஒழிய வேறில்லையே. சமதர்மம், அரசின் நாட்டிலேதான் ஒருவன் பொய் சொல்ல வும் களவு செய்யவும் பொறாமைப்படவும் விபசாரஞ் செய்யவும் சந்தர்ப்பமில்லாது செய்திருக்கின்றாள். அப்பேரரசியை மணப் பதால் ஹிந்து, முலீம், கிறிதுவ, புத்த மததர்களாகிய எல்லோரும் சமயப் பிணக்கின்றி, பட்டினியின்றி, கவலையின்றி சாந்தியுடன் இவ்வுலகில் வாழ முடியும் என்ற உண்மை மக்க ளெல்லோருக்கும் வெளியாக்கி சுயமரியாதைத் தோழர்களை கோடிக்கணக்காய்ப் பெருக்க, இவ் 9ஆம் ஆண்டிலே இடை விடாது இன்று 9 வயதடைந்த உங்கள் குடியரசு சங்கநாதஞ் செய்வான் என்று நம்புகின்றோம். இத்திருமணத்தில் கருத்து வேற்றுமை கொண்ட அன்பர்கள் எவர்களாவது இருப்பாராயின் அவர்கள் தம் கருத்து வேற்றுமையை சாக்காக கொண்டு எதிர்ப்பிரசாரம் புரியத்துணிவது மக்கள் பகுத்தறிவு பெற்று விளங்க தம் முழு ஆதரவையும் பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகத்திற்கு ஈந்து அதன் வாயிலாய் பல அறிய நூல்கள் வெளியாகவும் கலப்பு, காதல் மணம் பெருகவும் இன்னும் பல அரும் பணிகளையும் செய்ய முன்வரும்படி அவர்களை அன்புடன் அழைக்கின்றேன். அதனால் அரசாங்கமோ, வேறு நபரோ எள்ளள வும் பகைகொள்ள அவசியமின்று. இதுவே உங்கள் குடியரசின் ஆரம்பத்தொண்டு ஆகும். எனவே அறிஞர்கள் ஆராய்ந்து ஆவன செய்மின்! யுவர்காள் அஞ்சாது உலகமே எதிர்ப்பினும் உங்கள் மனம் நியாயம் என்று கண்டதை வெளியிட முன்வருமின். குடி அரசு துலங்குக! சுயமரியாதை ஓங்குக! சமதர்மம் பொங்குக! - (குடியரசு 30.4.1933) நாதிகர்கள் யார்? இந்திய நாட்டு மக்களின் அறிவு விடுதலைக்கென்று ஆரம்பிக்கப் பெற்ற இயக்கங்கள் எல்லாம் அவ்வவ்காலங்களில் தோன்றிய சமய ஆச்சாரிகள், சமய பக்தர்கள் முதலியோர்களால் பல்வேறு சூழ்ச்சிகளால் அழிக்கப்பட்டு போயிற்றென்பது வரலாற்று நூல்களில் நாம் கண்ட உண்மையாகும். அஃதே போன்று இந்த 20ஆம் நூற்றாண்டில் மக்களின் அறிவு விடுதலைக்கென்று வைதீகப் புலி களின் சூழ்ச்சிகளை எல்லாம் நன்கறிந்த அறிஞர் ஈ.வெ.ரா அவர் களால் சுமார் 6 ஆண்டுகட்கு முன்னர் ஆரம்பிக்கப் பெற்ற சுயமரியாதை இயக்கத்திற்கும் தங்கள் முன்னோர் முறைகளைப் பின்பற்றி சமய பக்தர்களும் சமய குருக்களும் அவர்தம் ஆணைவழி நின்றொழுகும் சில சுயநலமிகளும் பல வழியில் கேடுசூழ முயன்றும் யாதொரு பயனுமின்றி தோல்வியுறவே, சுயமரியாதைக்காரர்கள் நாதிகர்கள் என்றும் பொய்ப் பிரசாரத்தை யாண்டும் பரப்பி அப்புனித இயக்கத்தை அழித்துவிட ஆரம்பித்துவிட்டார்கள். எனவே நாதிகர்கள் யார்? என்ற ஓர் ஆராய்ச்சியினால் மக்களின் ஐயத்தை நீக்கிவிட வேண்டியது என் போன்ற சுயமரியாதை இயக்கத்தார்களின் கடமை என்று நினைத்தே இக்கட்டுரையை எழுதுகின்றேன். கடவுள் ஒருவர் இல்லையென்றும், இவ்வுலகமும் அதிலுள்ள எல்லாப் பொருள்களும் கடவுளால் படைக்கப்பட்டன அல்ல என்றும் இவ்வுலகத்தில் மக்கள் செய்யும் தீமைகளுக்குத் தக்கவாறு மறுவுலகில் தண்டனையும் நன்மைகளுக்கு தக்கவாறு இன்பமும் கடவுள் கொடுப்பது கிடையாது என்றும் சொல்லும் சமயத்திற்கும் வேதத்தை நிந்திக்கின்ற சமயத்திற்கும் (நாதிகோ வேத நிந்தக) நாதிக மதம் என்று பெயர். இச்சமயம் ஐரோப்பிய நாடுகளில் அறிவில் சிறந்த புலவர்களாகிய ஹாமில்டன், கோம்தோ, நிரோ, மான்ஸெல், டார்டவின், கிப்பன், ஹியூம், ரீட், பக்கல், மாகிரி, ஹக்லி, டைண்டால், பென்ஸர், வால்டயிர், லெக்கி, டீபன், ஜாண்மில், பிராட்லா முதலியோர்களால்தான் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது என்பது நமது நாட்டு மக்கள் பலரின் அபிப்பிராயம். மேற்கூறிய அபிப்பிராயம் முற்றமுற்றத் தவறேயாகும். ஏனெனில் இந்து சமயமே ஒரு நாதிக சமயமென்று கூறப் பல ஆதாரங்களிருக்கின்றன. இந்து சமயத்தின் முக்கிய கிளை மதங் களாகிய மார்த்த மதம், சாங்கிய மதம், சார்வாக மதம், பிரகபதி மதம், சூன்யவாதிகள் மதம், லோகாயத மதம், பஞ்ச பூதாத்மவாதி களின் மதம் இந்திரியாத்ம வாதிகள் மதம், பௌத்த மதம், சைவ சமயம் முதலியவற்றை எல்லாம் காய்தல் உவத்தலகற்றி ஆராய்ந்து பார்த்தால் அவைகள் நாதிக மதம் என்னும் முடிவிற்கு எளிதில் வரலாம். இவைகளை எல்லாம் ஆதிக மதம் என்று சமயத்தின் உட்கருத்தையறியாது மூடநம்பிக்கை கொண்ட மக்களெல்லாம் நம்பி இக்கட்டுரை கண்டு வெகுண்டெழுந்து இது முழுப் பொய்! இந்துமதம் எவ்வாறு நாதிக மதமாகும்? இந்து மததான் என்று கூறப்படுவோன் உலகிலுள்ள ஏனைய மததர்களை விட கடவுள் பக்தியுடையவன். உதாரணமாக நீங்கள் கிறிதுவ ஆலயம் ஒன்றிற்குச் சென்று பார்த்தால் அதன் உண்மை தெரிய வரும். அங்கு பக்தி சிறிதுமின்றி பக்கத்தே உட்கார்ந்திருக்கும் பெண்களைக் கவனித்துக்கொண்டு இருப்பதும் பிரசங்கம் நீடித்து விட்டாலோ அன்றி உஷ்ணத்தினால் புழுக்கம் அதிகரித்துவிட்டாலோ ஒரு நிமிஷம் கூட அங்கு உட்கார்ந்திராது ஒரு சிறிதும் பக்தியின்றி எழுந்துவீட்டிற்குப்போய்விடுவார்கள்.Mdhš xU ÏªJnth தன் கோயிலில் காற்றின்றி எவ்வளவு புழுக்கமாயிருந்தாலும் அழகிய தாசி ஒருவள் பக்கத்தே நடனமாடிக் கொண்டிருப்பினும் மற்றொரு வேசி வேண்டுமென்றே தம் முன்பக்கம் வந்து நின்று நெருக்கினும் ஒரு பார்ப்பான் விக்ரஹத்தின் பக்கம் செல்ல விரும்பி வழி இன்றி யிருப்பதால் இப்பக்தன் முதுகில் வாழை மட்டையால் பளீர் பளீர் என அடிப்பினும் பக்தியின் பரவசத்தால் தன்னை மறந்து (எருமை மாடு போல்) ஒன்றையுங் கவனியாது நிற்பதைக் காணலாம். மேலும் தம் இயற்கையழகை பாழ்படுத்துகின்றதே என்றெண்ணாமல் உடம்பு எல்லாம் சாம்பலைப் பூசிக்கொண்டு போதாக்குறைக்கு ஏராளமான உருத்திராக்கங்களை தலை, கழுத்து, கைகள் முதலிய பல அவயவங்களில் தரிப்பதோடு அமையாது தாம் நூற்றுக்கு ஐந்து வட்டி வரையில் கஷ்டப்பட்டு தேடிய அரிய பொருள்களை ஆயிரக் கணக்காய் ஏன் - லட்சக்கணக்காய் கடவுளுக்காக செலவழித்து வரும் இந்துக்களை நாதிகர்கள் என்று சொல்லுவார்கள் என மிகக் கோபமாய் கூறுவர். ஆனால் சிறிது பொறுமையுடனிருந்து ஒரு ஹிந்து மததன் முழுவதையும் ஆராய்வானானால் நிச்சயமாக வும் தன்னை ஒரு நாதிகன் என்று ஒத்துக்கொள்வான். மார்த்த சமயம் அல்லது இந்து மதத்தின் முக்கியமான சமயத்திலொன்றான பிராமண சமயம் ஒரு சமயத்தின் தன்மையை ஆராய விரும்புப வர்கள் முதலாவதாக இவ்வுலக உற்பத்தியைப் பற்றி அச்சமயம் என்ன கூறுகின்றது என்று ஆராயக் கடமைப்பட்டு உள்ளார்கள். அவ்வாறே இந்த மார்த்த மதத்தை ஆராய்ந்தால் பிரம்மமானது மாயா சம்பந்தப்பட்டு இவ்வுலகில் பல்வேறு உயிர்களாகத் தோன்றி யிருக்கிறது. இவ் உயிர்களாகிய நாம் இன்று இந்த மாயையினின்று விடுபட்டோமானால் கடவுளாய் ஆய்விடுவோம் என்பதாகும். இதே கொள்கையைக் கொண்டு தான் சுவாமி விவேகானந்தர் முதலிய அறிஞர்கள் மேனாடெங்கும் பிரசாரம் செய்து வந்தார்கள். இதைப் பற்றித் தமிழ்நாட்டு இந்து சமயங்களின் சுருக்க வரலாறு என்னும் நூலில் எல்லாங் கடவுளே என்ற தத்துவக் கொள்கையானது அவர்கட்குள் எழுந்த காலத்தே மும்மூர்த்திகளும் ஒரே பிரம்மத்தின் பிரதி பிம்பங்களென்பதும் பிரமத்தைத் தவிர வேறொரு பொருளும் உண்மையில் இல்லை என்பதும் அவர்கள் (மார்த்தர்கள்) கொள்கைகளாயின. ஆன்மா என்பது இன்னதென்று சொல் லொணாத மாயையின் வழியாகக் காணப்படும் பிரம்மத்தின் பிரதி பிம்பம் என்பதே அவர்கள் கருத்து. இக்கொள்கை சில உபநிடதங் களில் காணப்படுகின்றன. சீவான்மா பிரமத்தின் சாயலே அன்றி உண்மையில் இல்லாத பொருளெனின் அதன் உறுதியைப் பற்றிப் பேச இடமில்லை. அது பிரமத்தின் பகுதியெனில் அதுவும் பிரமமே. ஆகவே பிரமம் தன்னை வழிபட வேண்டியதுமில்லை. ஆதலால் தன்னைப் பிரமம் என்றறிபவன் யாதொன்றையும் வழிபட வேண்டி யதுமில்லை என்பதே சங்கரர் நூலின் முடிந்த கொள்கை எனக் கூறப்பட்டிருக்கிறது. இச்சமயக் கொள்கைப்படி நாமே கடவுள் என்றேற்படுவதால் தமிழ் நாட்டறிஞர் ஒருவர் இவர்களைப்பற்றி கூறும்பொழுது தாமே கடவுளென்றிடும் பாதகத்தவர் என்று கூறியுள்ளார். வடமொழி ஆராய்ச்சி மிக்க மற்றோர் அறிஞர் .... சங்கரமதத்தை (மார்த்த மதத்தை) பிரசன்ன புத்தமதம் (வைதீகப் போர்வையைப் போர்த்த நாதிக மதம்) என்று சொல்வார்கள். இதனால் பௌத்த சமயக் கூற்றுவனாய் இருந்த சங்கரர் பௌத்தர் களின் தத்துவ நூற்களை வடமொழியில் எழுதி உபநிஷதங்கள் என்ற பெயரைக் கொடுத்தார் என்று எண்ணவிருக்கிறது என்று கூறுவதி லிருந்து பகிரங்க நாதிக மதமாகிய புத்தமதக் கொள்கையே மார்த்த மதமாய் பரிணமத்திருக்கிறது என்பது நன்கறியக்கிடக் கின்றது. மேலும் மார்த்த மதத்திற்கு ஆதாரம் நாலுவேதம் ஆறு சாதிரம் பதினென்புராணங்களும் மற்றும் பல நூல்களுமாம். இவ்வாறு சாதிரமாகிய நியாய, வைசேஷ்ய, சாங்கிய, மீமாம்ச, யோக, வேத மற்றும் சாதிரம் என்பவற்றில் மீமாம்ச சாதிர மானது ஜெயமுனிவரால் உண்டு பண்ணப்பட்டது. இன்பதுன்பங்கள், பாக்கிய நிர்பாக்கியங்கள் முதலான சகலமும் கர்மத்தினால் உண்டா கிறது எனச் சொல்லப்படுகிறது. மனிதர்களில் இன்றுமே யாராவ தொருவன் எப்போதாவது பிரம்மாவாகவும் ஒருவன் சிவனாகவும் ஆகிவிடுகிறான் என்று சொல்லப்படுகிறது. உலகத்திற்கு ஆதியந்த மில்லை யென்றும் மலைகளும் கடலும் எப்போதும் உள்ளதென்றும் ஜடங்கள் உருவாவது சிறிய அணுக்களால் என்றும் கூறுகிறதாம். சாங்கிய சாதிரமும் ஆண்டவன் படைக்கிறதில்லை என்றும் சகலவதுகளும் பிரகிருதியினால் உண்டாகிறதென்றும் அதாவது பிரகிருதி முதற் காரணமென்றும் பிரபஞ்சமென்றும் சகல படைப்பு களும் அநாதியானவை என்றும் சொல்லப்படுகிறது. இன்னும் எந்த வதுவும் அழிந்துபோகும் என்பதை மறக்கின்றது. இச் சாதிரம் ஒருவகை நாதிகத்தைப் போதிக்கிறது என்று இதுமதம் ஆதிக மதம் என்று சாதிக்க சேலம் பகடால நரசிம்ம நாயுடவர்களும் கூட மத விருக்ஷம் என்னும் தம் நூலின் 217ஆம் பக்கத்தில் கூறியுள் ளார்கள். எனவே மார்த்த மத சாதிரங்கள் பலவற்றிலும் நாதிக மதவாசனை வீசுகின்றது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். மேலும் மார்த்த மதக்கொள்கையின்படி நாமே பிரமம் (கடவுள்) என்றேற்படுகிறபடியால் நம்மைத் தவிர வேறு கடவுளே கிடையாது என்றேற்படுவதால் கடவுள் வணக்கமும், கோயில் திருப் பணி முதலியவைகளும் அவசியமில்லை என்பதோடு மக்களைத் தவறான நிலைக்கும் இட்டுச்செல்கிறது. (எ.கா) பின்வரும் கதையே (ஒரு) தக்க சான்றாகும். ஒரு ஊரில் மார்த்தகுரு ஒருவர் இருந்தார். அவரிடம் ஒரு பிரமச்சாரியான வாலிபன் மார்த்த மத வேதாந்தங்களைப் பயின்றுகொண்டிருந்தார். எல்லாம் பிரம்மம் என்னும் கொள்கை அவர் மனதில் நன்கு பதிந்துவிட்டது. இஃது இவ்வாறிருக்க, குருவி னுடைய வாலிப மனைவிக்கும் இப்பிரமச்சாரியான வாலிப சிஷ்யருக்கும் அதிக நேசம் உண்டாய்விட்டது. வாலிப பிரம்மச்சாரி குருவின் மனைவியுடன் சேர்வதைக் குற்றமாக எண்ணினானில்லை. ஏனென்றால் நாமும் பிரமம், அப்பெண்ணும் பிரமம், இரண்டு பிரமும் ஒன்றாய் கலந்திருப்பதால் தவறு ஒன்றுமில்லையே என்ற தத்துவப் பொருளை நன்கு ஆராய்ந்தே இவ்விஷயத்தில் இறங்கி யுள்ளான். ஒரு நாள் குருவின் மனைவியும் சிஷ்யனும் ஓர் இடத் தில் சரச சல்லாபங்களைப் புரிந்து ஈருடலும் ஓருயிரும் என்னக் களிப்புற்று இருக்கையில் குருவானவர் கண்டு சிஷ்யனை நோக்கி அடே பாதகா! அங்கு என்ன செய்கிறாய் என்று அதட்டிக் கொண்டு கையில் ஒரு தடிக் காம்புடன் செல்ல சிஷ்யன் குருவை நோக்கி சுவாமி யான் தவறொன்றும் செய்துவிடவில்லையே. உலகத்தி லுள்ளஎல்லாஉயிர்களும்பிரமம்என்றுகற்பித்திருக்கின்றீர்களே. m›thwhdhš j§fŸ kidÉí« ãu«kk‹nwh?அப்பிரமமும் (குருவினுடைய மனைவியும்) இந்த பிரமமும் (சிஷ்யனும்) ஒன்றாய் கலப்பதில் பக்கத்திலிருக்கும் மற்ற பிரமத்திற்கு (குருவிற்கு) என்ன ஆஷேபனை என்றுவினவினான். அது முதல் மார்த்த வேதாந்த மாகிய நானே பிரம்மென்னும் தவறான தத்துவத்தின் தீமையை யுணர்ந்து அதைவிட்டு நீக்கிவிட்டார். இஃது பண்டைக்காலம் முதல் நம் நாட்டில் வழங்கிவரும் ஒரு கதையாகும். இவைகளினால் மார்த்த மதம் ஆதிக மதமா? நாதிக மதமா? என்னும் உண்மைகள் தெளிவாய்த் தெரிவதோடு அம்மதக் கொள்கை களினால் வரும் கேடுகள் நன்கு விளங்கும். இந்து மதத்தின் ஒரு கிளைமதமான சார்வாக மதம், பிரத்தி யட்ச பிரமாணங்களைத் தவிர மற்றப் பிராமணங்களை நம்புகிற தில்லை. மேலும் பிருதிவி (மண்) அப்பு (ஜலம்) தேயு (அக்கினி) வாயு (காற்று) என்ற 4 பூதங்கள் மாத்திரம் உண்டென்றும் ஆகாயம் என்னும் பூதமில்லை என்றும் ஆன்மா என்ற வதுவே கிடையா தென்றும் பூதங்கள் கூடிச்சேர்வதால் பிராணன் உண்டாகிற தென்றும் இப்படியாதல் இயற்கையென்றும் மற்றபடி ஆன்மா, கடவுள், விண்ணுலகம், மோக்ஷம் முதலானவைகளுண்டு என்று நம்புவது மூடத்தனமென்றும் இறப்பதே முத்தியென்றும் இறந்த பிறகு பூதங்களாலாகிய தேகம், பூதங்களாக மாறிவிடுகிறபடியால் ஒன்றுமில்லை என்று கூறுகிறது. மற்றொரு கிளை மதமாகிய லோகாயத மதம் இவ்வுலக சுகமே சிறந்த சுகமென்றும் இவ்வுலகத்தை விட்டு மேலுலகங்களில் போய் அனுபவிக்கும் சுகம் சொற்பனம் போல் என்றும் கடவுளும் நரகமும் சொர்க்கமும் இல்லையென்றும் சாதிக்கின்றது. பஞ்சபூத தத்துவவாதிகள் கொள்கையோ, பஞ்சபூதங்களுக்கு மேல் ஒரு கடவுள் இல்லை என்றும் இப் பூதங்களின் பரிணமிப்புகளாலே தேகாதி பிரபஞ்சங்களுண்டென்றும் கூறுகிறது. இன்னும் சாங்கிய, பிரகபதி, சூன்யவாதிகள், இந்திரி யாத்ம வாதிகள், பௌத்த மதம் முதலிய மதங்களெல்லாம் இந்து மதங்களாயிருந்தும் அவைகளெல்லாம் கடவுளில்லை என்று கூறும் பகிரங்க நாதிக மதமேயாகும். நம் நாட்டில் இன்று குற்றுயிராய்க் கிடக்கும் சைவ சமயமோ பதி, பசு, பாசம் என்னும் முப்பொருளுண்மையை ஒப்புக்கொள்ளும் ஒரு சமயமாகும். அதாவது கடவுள், உயிர், மாயை இம் மூன்றும் அனாதியாக உள்ளது என்று சொல்லுகிறது. இச்சமயக் கூற்றுப்படி மனிதனுடைய ஆவியானது கடவுளால் உண்டாக்கப்படவில்லை. கடவுள் என்று தோன்றியுள்ளானோ அன்றே உயிரும் தோன்றி யுள்ளது என்பதோடு கடவுள் உயிர்களைத் தன்னோடு சேர்த்துக் கொள்ள வேண்டுமென்ற கருணை மேலீட்டால் இவ்வுடலை உயிர் களுக்கு நல்கினான் என்பது சைவர்களின் சித்தாந்தம். உடலோ - மனிதன், மனுஷி சேர்க்கையால் மக்களாலே உண்டாக்கப்படுகிறது என்பது நமது பிரத்தியட்ச அனுபவமாகையினால் உடலும் கடவு ளால் உண்டாக்கப்படுகிறதில்லை என்பது தெளிவாகிறது. உடலும் உயிரும் கடவுளால் உண்டாக்கப்படவில்லை என்பது சைவர்களின் கொள்கை என்று பொதுமக்கள் நன்கறிவார்களேயானால் கடவு ளில்லை என்று பகிரங்கமாகப் பேசும் நாதிகர்களினும் சைவர் களே மிக மிகத் தீயவர்கள்; அன்னோர் நூல்களை வாசித்தலும் அவர்களின் பிரசங்கங்களைக் கேட்கச் செல்வதும் அவர்களுடன் பழகுவதும் தீதென்றும் பொது ஜனங்கள் யாவரும் கூறிவிடுவர். மேலும் இன்றுயான் ஆதிகன், கடவுள் நம்பிக்கையுடை யோன் என்று கூறித்திரியும் மக்களில் எத்துணை பேர்க்கு உண்மை யில் கடவுளிருக்கிறார் என்ற நம்பிக்கை உண்டு என்று வினவுகின் றோம்? இன்று ஆதிகர்கள் என்று கூறும் மக்களில் பலர் கோர்ட்டுகளில் வாதியாகவோ, பிரதிவாதியாகவோ, சாட்சியாகவோ பலமுறையும் வந்து ஆண்டவன் பேரில் சத்தியம் செய்து தாம் உண்மையைச் சொல்லுகிறோம் என்று சத்தியம் பண்ணியே வாக்கு மூலம் கூறுகின்றார்கள். ஆனால் கடவுள் நம்பிக்கையுள்ள ஆதிகக் கூட்டங்கள் அங்கு சொல்வது முழுவதும் பொய்யே. இன்னும் ஆண்டவன் ஒருவனிருக்கின்றான் என்று இவர்கள் நம்புவார்களா யின் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆலயப்பிரவேசம் அளிக்க மறுப்ப துடன் தெருவில் நடக்கவொட்டாமலும் பொதுக்கிணறுகளில் தண்ணீர் இறைக்க ஒட்டாமலும் தாழ்த்தப்பட்ட பெண்கள் சேலை யால் மார்பை மூடக் கூடாதென்றும், எளியோர் வலியற்றோர் முதலியோர்களுக்கு அளவிடற்கரிய தீமைகள் புரிந்தும் வருவதோடு பெண்மக்கள் விதவையானால் அவர்கள் மறுமணஞ் செய்தல் கூடாது, பெண்களுக்கு சொத்துரிமை கூடாதென்று எல்லாம் மக்கள் சட்டங்களேற்படுத்தி இருப்பார்களா? ஆண்டவன் ஒருவன் உண்டென்பதையும் அவன் நம் குற்றங்களுக்குத் தக்க தண்டனை யளிப்பான் என்பதையும் உலக மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் உலகில் கொலையேது, களவேது, குடியேது, சண்டையேது? எங்கும் சாந்தம், எங்கும் அமைதி நிலவி எங்கும் இன்ப மயமாயன்றோ விளங்கும்? எனவே இன்று உலக மக்களெல்லோரும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களாய் இருக்கின்றார்கள் என்பது நாம் பிரத்தியிட்சத்தால் காணும் உண்மையாகும். மேலும் இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையுமே நாதிகமாய்த்தான் பிறக்கின்றது. ஆண்டவன் ஒருவனிருக்கிறான் என்று பின்னர் தாய் தகப்பன் ஆசிரியர்கள்கற்பித்தபின்னரேஆண்டவன்என்றவார்த்தையைக் கூட அறிய ஆரம்பிக்கின்றது. ஆனால் சுயமரியாதைக்காரர்களோ, கடவுள் ஒருவர் உண்டா? இல்லையா? என்று மக்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டாம் என்றே கூறுகின்றார்கள். காண முடியாத கடவுளைக் காண மக்கள் முயன்று தங்கள் வாணாளை வீணா ளாக்க வேண்டாம். வேண்டுமானால் செல்வம் கொழிக்கும் அமெரிக்கர்கள் கடவுளைப்பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கட்டும். சராசரி ஒரு நாளைக்கு ஒரு நேரத்திய உணவிற்கும் வழியற்ற இந்திய நாட்டுமக்கள் அவ்விதப் பயனற்ற ஆராய்ச்சியில் தலையிட வேண் டாம். ஆண்டவனிருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி நல்லவ னாய் நட; நன்மைசெய் என்றே சுயமரியாதை இயக்கம் கூறுகின்றது. ஆனால் சுயமரியாதை இயக்கத்தாரிடம், எக்காலத்திலாவது ஒருவன் கடவுளிருக்கிறான் என்பதை பிரத்தியட்ச பிரமாணத்தினால் காட்டுவானாயின் உடனே அவ்வியக்கம் ஒத்துக்கொள்ளத் தயாரா யிருக்கிறது. கடவுளில்லை என்று சாதிக்கும் இந்து மதமே அவ்வாறு ஒத்துக்கொள்ள ஒருபொழுதும் முடியாது. கடவுள், சமயம், வேதம் என்றெல்லாம் கூறிக்கொண்டிருக்கும் மதங்களால் மக்கள் உலகிற்கு நன்மையில்லை. உலகத்தில் வியாதிகளினாலும் ஏனைய வழிகளிலும் இறந்தவர்களிலும் கடவுள், சமயம், வேதம் முதலியவைகளினால் இறந்தவர்கள் தொகை அதிகமாயிருக்கின்றது. எனவே தான் கடவுள் வெறி, சமயவெறி, வேதப்பற்று முதலியவைகளினால் ஜாதி வேற்றுமை மிகுந்து மக்கள் உலகில் வேற்றுமை பெருகி நாளுக்கு நாள் ஜாதிப்போர் தாண்டவமாடி வருகின்றது. ஜாதி வேற்றுமைகளை கடவுளே சிருஷ்டித்தார் என்று ஒருவர் கூறும் பொழுது சுய மரியாதைக்காரர்கள் மக்களுக்குள் வேற்றுமைகள் பெருகி ஒருவருக் கொருவர் சண்டையிட்டுக்கொண்டு இறப்பதற்குக் காரணமாகிய உயர்வு, தாழ்வு என்ற ஜாதிக்கொடுமைகளை ஆண்டவன் உண்டு பண்ணியிருந்தால் அக்கடவுள் கழுத்தில் பாரக்கல்லை கட்டி அட்லாண்டிக் மகா சமுத்திரத்தில் ஆழ்த்திவிட வேண்டுமென்று சுயமரியாதைக்காரர்கள் (சொல்வதிலிருந்து புராண மரியாதைக் காரர்கள் சுயமரியாதைக்காரர்கள்) கடவுள் உண்டென்னும் கொள்கையை ஒழிக்கப் பார்க்கின்றார்கள், கடவுளை நிந்திக்கின் றார்கள் என்று சுயமரியாதைக்காரர்கள்மேல் குறை கூறுகின்றார்கள். இவைகளெல்லாம் அன்னோர் அறியாமையினால் பிதற்றும் புண் மொழிகளென நாங்கள் கருதுகின்றோம். ஆண்டவன் ஒருவன் இருக்கும்பொழுது ஒருசில சுயமரியாதைக்காரர்கள் இல்லை என்று கூறிவிடவோ, அக்கடவுளை ஒழித்துவிடவோ முடியுமா? அப்படி முடியுமென்னின் சில சுயமரியாதைக்காரர்களால் அழித்துவிடக் கூடிய கடவுள் இருப்பதில் பயனென்ன? இறப்பதில் நமக்கு வருத்த மென்ன? ஆதிகர்களே! உங்கள் கடவுள் சக்தியில் ஏன் நம்பிக்கை குறைவு கொள்கின்றீர்கள்? நீங்கள் உண்மையாக கடவுள் இருக் கிறார், அவர்சர்வவல்லமையுள்ளவர் என்று நம்புவீர்களாயின் சுய மரியாதைக்காரர்களின் பிரசாரத்தைக் கண்டு அஞ்சாதீர் என்று அவ்வியக்கப் பெரியோர் ஈரோட்டு இராமன் அடிக்கடி மொழிந்து வருவது உங்கள் செவியிலேறவில்லையா? தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்கு விரோதமாய் கடவுளிருக்கிறது என்று சொல்லும் பொழுது அக்கடவுளை கடலில் கொண்டுபோய் ஆழ்த்திவிட வேண்டுமென்று யாங்கள் கூறுகின்றோம். அது கடவுள் நிந்தனை யாகவோ நாதிகமாகவோ ஒருபொழுதும் ஆகாது. கடவுள் என்று ஒருவன் இருப்பானாகில் இவ்வித அநீதியான சட்டங்களை உண்டு பண்ணமாட்டான் என்று யாங்கள் கொண்டிருக்கும் உறுதியான எண்ணத்தையே அது காட்டுவதாயிருக்கிறது. இதனால் எங்களை நாதிகர் என்றால் திருவள்ளுவர் முதலிய அறிஞர்களும் நாதிகர் களாகத்தானிருக்கின்றார்கள் என்பதை நீங்களறிதல் வேண்டும். பிச்சை எடுத்துண்ணும்படியாகக் கடவுள் சில ஜனங்களைப் படைத் திருக்க மாட்டான் என்று வள்ளுவர் உலகிற்கு எடுத்துக் கூற வந்த பொழுது, இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து கெடுக உலகிய ற்றியான் என்று கூறினார். அதாவது, இவ்வுலகத்தைப் படைத்தவன் மக்களில் சிலரை முயற்சி புரிந்து ஜீவனம் செய்தலையல்லாது பிச்சை எடுத்துப் பிழைக்கும்படி விதித்திருப்பானாயின் அக்கொடியோன் அம்மனிதர் களைப் போல் எங்கும் அலைந்து கெடக்கடவன் என்று கூறியுள் ளார். இதிலிருந்து வள்ளுவரையும் நாதிகன் என்று ஆதிகர்கள் கூற முன் வருவார்களா? இவைகளினால் சுயமரியாதைக்காரர்கள் நாதிகர்கள் அன் றென்று சைவம் மார்த்தம் மற்றும் ஏனைய மதங்களை எல்லாம் தன்னுள்ளடக்கி நிற்கும் இந்து மதமே நாதிக மதமென்றும் - ஏன்? - அதைவிடக் கொடிய கேவலமான மதம் என்றும் சுயமரியாதை இயக்கமே மக்களின் அறிவு விடுதலை இயக்கம் என்றும் மக்களறி வார்களாக. சைவர்களும் காங்கிரகாரர்களும் சிறுகச் சிறுக அறிந்து தங்கள் மஹா நாடுகளில் தீர்மானங்கள் மூலமாய் ஒப்புக்கொண்டு விட்டார்கள். இன்னும் அதி சீக்கிரத்தில் சுயமரியாதைக் கொடியின் கீழ்நின்று மக்களின் அடிமை வாழ்க்கையை அழிக்க சமதர்மப் போர்புரிய அதி சீக்கிரம் வந்து சேரப்போகின்றார்கள். உலகமே சுய மரியாதை இயக்கத்தின் மேன்மையை அறிந்து வருகின்றது. சைவர் களே! சுயமரியாதைக்காரர்களை நிந்திப்பதைவிட்டு நீங்குவீராக. சுயமரியாதை ஓங்குக! சமதர்மம் ஆட்சி வாழ்க!! வாழ்க!! - (குமரன், சதங்கை 9) காந்தீயம் (அ) நவீன இந்து சமயம் பரந்தநிலப்பரப்பைஉடையபாரதநாட்டிலேஎண்ணத் தொலையாத சமயங்களும் சாதிரங்களும் சாமிகளும் அவதார புருடர்களும் மஹாத்மாக்களும் முனீவரர்களும் புற்றீசல்கள் போல் தோன்றித் தோன்றி மறைந்து வருகின்றன. என்றாலும் இந் நாடோ அன்றி மக்களோ எவ்வித முன்னேற்றமுமடையாது மூட நம்பிக்கையிலும் மிருக சுபாவத்திலும் மூழ்கி அடிமைத்தனத்தி லாழ்ந்து, ஒற்றுமை குன்றி, அறிவியக்க விரோதிகளாய் நாளடைவில் பெரும் பெரும் அவதிக்குட்பட்டு வருகின்றனர். இத்தொல்லைகளி னின்று விடுபட்டு நடெங்கும் சமத்துவமும் சகோதரத்வமும் சுதந்திரமும் மல்கி பிற நாட்டாரோடு நாம் எத்துறையிலும் போட்டி போடத் தக்க ஆண்மையும் அறிவும் பெற்று நமக்குள் ஒற்றுமை பெருகத்தக்க வழிகள் ஈதென ஆராய்ந்து அறிஞர் பலர் அவனியெங்கும் தம் அறிவியல் இயக்கத்தைப் பிரசாரம் செய்ய ஆரம்பிக்கும் பொழுது, இந்திய நாட்டின் துரதிஷ்டவசமாக காந்தீயம் என்னும் ஒரு புது நோய் பற்றிக் கொண்டது. பல்லாண்டாய் அடிமைத்தனம் என்ற சிறையில் அல்லற்பட்டு சுதந்தர தாகமுற்ற மக்களுக்கு விடுதலை அல்லது சுயராஜ்யம் என்னும் பாலுடன், மதம் என்ற நஞ்சையும் கலந்து இப்பொழுது ஊட்டப்பட்டு வருகிறது. இதனால் மூட நம்பிக்கைகளும் கோழைத்தனங்களும் அநாவசியச் செலவுகளும் பெருகி, இந்தியாவின் விடுதலை பன்னூறு ஆண்டுகளுக்கு அப்பாற் செல்லும்படி செய்துவிட்டது. எனவே நமது முற்போக்கிற்குத் தடையாய், நம் அறிவியக்கத்திற்கு மாறாய் இருக்கும் காந்தீயம் என்னும் நவீன இந்து சமயத்தின் கொள்கையை நன்றாய் ஒவ்வொரு இந்தியனும் அறிந்து அப்பாழும் மதக்குழியினின்று விடுபடவேண் டியது அவசியமாகையினாலே, சமதர்மக் கொள்கை உலகமெங்கும் பரவவேண்டுமென நினைக்கும் எம்போன்ற அறிவியல்வாதிகள் உங்க ளெல்லோருக்கும் அதை எடுத்தியம்பக் கடமைப்பட்டு உள்ளோம். அன்பர்கள் தயை கூர்ந்து ஆராய்ந்து பார்ப்பார்களாக. சமயத்தின் பெயர் - காந்தீயம் (அ) நவீன இந்து சமயம். இது பெரும்பாலும் இந்து சமயக் கொள்கையாகிய வர்ணாசிரம தர்மம் கர்மம், மறுபிறப்பு, உயர்வு தாழ்வு, விக்ரஹ வணக்கம், சாதிக்குறி, சமயக்குறி, அவதாரங்கள், தீர்த்தயாத்திரை, பிராமணீயம் முதலிய வற்றை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் தேசபக்தி என்னும் ஒருபுதிய கொள்கையையும் தன்னகத்தே கொண்டது. கடவுள் - பாரதமாதா தான் பிரதானமான கடவுள் என்றாலும் இந்து மதத்தில் சொல்லப்பட்ட முப்பத்து முக்கோடித் தேவர் களுக்கும் இச்சமயத்தில் இடமுண்டு. அவதாரம் - மகாத்மா காந்தி அல்லது தரித்ர நாராயணன் என்பவர். இவர் குஜராத்திலே வைசியர் குலத்திலே பிறந்தும், இலட்சுமி தேவியாராய் அவதாரம் புரிந்த ஸ்ரீமதி கதூரிபாய் காந்தியை மணந்து தேவர்களாகி, ஆரியர்களுக்கு ஹிம்சை புரிந்துவரும் இராட்சதர்களாகிய வெள்ளைக்காரர்களோடு அறப்போர் புரிந்து, இப்பொழுது எதிரிகளின் கையில் சபர்மதி சிறைச் சாலையில் கிருஷ்ண பரமாத்மாபோன்று தவம்புரிந்து வருகின்றார். இவருக்கு நினைத்தால் சிறைச்சாலையைவிட்டு வெளியே போகவும் கூடும். ஒவ்வொரு நாள் இரவு தம் ஆச்சிரமத்திற்கு எவரும் அறியாமல் போய் வருகின்றார். இவருடைய ஆயுதம் இராட்டினம். கிருஷ்ண பரமாத்மாவின் சக்கரம் போன்று இவருடைய இராட்டினம் 8000 மைலுக்கப்பாலுள்ள எதிரிகளையும் சம்ஹாரம் செய்துவருகிறது. முன்னொரு காலத்திலே இராமாவதாரம் எடுத்திருந்த பொழுது இராட்சதர்களில் ஒருவரான விபீஷணர் தமக்குக் கிடைத்ததே போன்று, இவ்வவதாரத்திலும் இராட்சதர் குலத்திலுதித்த மி சிலேட் என்ற பெண்மணி கிடைத்துள்ளார். விபீஷணருக்கு விபீஷணாழ்வார் என்ற பட்டம் கொடுத்தது போன்று இவ்வம்மை யாருக்கு மீராபாய் என்று பட்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது. வேதம் - கீதையும் ராமர்வாக்கும். உபநிஷதங்கள் - பழைய இந்துமத உபநிஷத்துகளும் ஆரோக்கிய வழி, சிறைச்சாலை அனுபவங்கள், இந்திய சுயராஜ்ஜியம் போன்ற பல நூல்களும் புராணம் - காந்திபுராணம், திலகர்மான்மியம் இவ்விரண்டும் பண்டித அசலாம்பிகை அம்மையாரால் எழுதப்பெற்றது. கிண்டற் காரன் எழுதிய காந்தி மான்மியம் முதலிய இன்னும் பலவுண்டு. இதிகாசங்கள் - தேவர்களாகிய ஆரியர்களோடும் வானர சேனைகளோடும் இங்கிலிஷ்காரர்களாகிய இராட்சதர்கள் செய்யும் கொடும்போரைப்பற்றி உயர்திரு பண்டிதர். திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் அவர்களால் செய்யுள்வடிவமாக எழுதப்பட்டிருக்கிற தாம். இன்னும் அச்சிடவில்லையாம். ஆலயங்கள் - வட இந்தியாவில் பாரதமாதாவிற்கு ஆலயங் கட்டப்பட்டாய்விட்டது. காந்தியின் சிலை அங்கு பிரதிஷ்டை செய்யப்படவில்லை. அவர் உயிருடன் இருக்கும் பொழுது அவரை நேரில் கண்டு பாதநமகாரம் செய்யவேண்டும் என்பது சாதிர விதியாம். அவர் சமாதியடைந்த பின்னரே நாடெங்கும் கோவில்கள் கட்டி அவருடைய சிலையைப் பிரதிஷ்டை செய்து வணங்கவேண்டு மாம். ஆனால் விருப்பமுள்ள பக்தர்கள் காந்தி படத்தை வைத்து வணங்கிக் கொள்ளலாம் என்று காந்தீய ஆச்சாரிகள் அருளவே, தமிழ்நாட்டில் மட்டுமல்ல சுயமரியாதை தாண்டவமாடும் தேசம் என்று கூறும் திருவாங்கூர் ராஜ்யத்திலும் காந்திபடத்தை ஒரு சப்பரத்தில் வைத்து பூமாலையால் ஜோடித்து ஊர்வலமாகத் தூக்கிக்கொண்டு சென்றார்கள். வீடுகள் தோறும் தேங்காய் பழம் கொடுத்து சாம்பிராணி சூடம் முதலியன புகைத்து பக்தியுடன் காணிக்கை செலுத்தி பிரசாதம் பெற்றுச் சென்றனர். நாடோறும் பம்பாயில் வந்துபோகும் காந்தியவர்கள் ஐந்துதலை நாகத்தில் மகா விஷ்ணுவாக சயனித்துக் கொண்டு தன்பக்கத்தில் லெக்ஷிமி போன்று கதூரிபாய்காந்தியை வைத்திருக்கும் அழகியபடத்திற்கு சந்தனப் பொட்டிட்டு பூஜை செய்துவருகிறார்கள். இதனால் ஜப்பான் தேசத் திற்கு கற்பூரம் கொளுத்துவதினால் 25 லட்சம் ரூபாய் போய்க் கொண்டிருந்தது. இவ்வாண்டில் அது இரட்டிப்பாய்விடும். சமயக்குறி - சைவர் விபூதியையும், வைணவர் ஒய் (Y) மார்க்கு யூ (U) மார்க்கு அடையாள முமிட்டிருப்பது போன்று காந்தி சமயத் தார் கதர் ஆடை புனைந்திருக்கவேண்டும். ஜெயகோஷம் - முலீம்கள் அல்லாஹீ அக்பர் என்றும் சைவர்கள் அரஹர நமப்பார்பதிபதே என்றும் வைணவர்கள் கோவிந்த நாமசங்கீர்த்தனம் கோவிந்தா! கோவிந்தா!! என்றும் கூறுவதுபோல் காந்தீயர்கள் மகாத்மா காந்தீக்குஜேய்! வந்தே மாதரம் என்று கோஷம்செய்வார்கள் விழாக்கள் - கிருஷ்ணஜெயந்தி போன்று காந்தியின் பிறந்த தினம் கொண்டாடப்படும். இதுவே சிறந்த விழாவாகக் கருதப்படு கிறது. அவர் சிறைபட்ட தினங்களில் பல அன்பர்கள் கந்தர்ஷஷ்டி போன்று உண்ணாவிரதம் இருப்பதுமுண்டு. இந்திய சுதந்திரதினம் போன்ற பலவிழாக்களும் உண்டு. ஆண்டிற்கொருமுறை திருச் செந்தூர் வைகாசி விசாகம்போன்று ஒரு கூட்டம் கூட்டுவதுண்டு. அதனால் மக்களடையும் அல்லல்கள் எவ்விதத்திலும் வைகாசி விழாவிற்கு தாழ்ந்ததன்று; கொடியேற்று விழாவும் உண்டு. முனிவர்கள் - இவர்களில் பலர் மஹாதேவ ஐயர் அவர்கள் போன்று தாடியும் வளர்த்து இருப்பர். பலர் தாடியில்லாமலும் இருப்பர். திருச்செந்தூர் முக்காணியர்கள் என்னும் பார்ப்பனர்கள், கட்டளை நெல் என்று கிராமங்கள் தோறும் சென்று நெல்கோட்டை கோட்டையாய் கொள்ளையடித்துக்கொண்டு போவதுபோல், கிராமாந்திரங்களில் அரிசிப்பிச்சையும், பட்டினங்களில் ரயில்களி லும் பெருங்கூட்டங்களில் உண்டியல் பிச்சையும் உயர்திரு. திரிகூட சுந்தரனாரைப் போன்ற முனீவரர்கள் ஆயிரங்கணக்கான ரூபாய்கள் தேசத்தின் பெயரால் காந்தியடிகளின் பேரால் சுயராஜ்ஜியத்தின் பேரால் யாசகம் செய்வதுமுண்டு. பலர் தங்கள் மடத்தில் (காங்கிர ஸில்) யாசகம் வாங்கிக் கொடுத்துவிட்டு சாப்பிட்டுக் கொண்டிருப்பது முண்டு. பலர்தம் பெண்டுபிள்ளைகள் சுகமாய்ச் சாப்பிடும்படி தம் மனைவி பேருக்கு பாங்கியில் போட்டுவிடுவதுமுண்டு. பல முனிவர்கள் சாராயம் குடிக்கக் கூடாது என்று பிரசங்கம் புரிவர். சத்யாக்கரம் என்னும் சண்டித்தனத்தால் கள்ளுக்கடை பக்கம் வேறு எவரும் வந்து குடியாது தடுத்துவிடுவர். சில சமயம் பண்டைக்கால ஆரிய முனிவர் சோமபானமும் கஞ்சாவும் குடித்து மனம் ஒருமை நிலையடையச் செய்யவென்று கூறி உலகை ஏமாற்றியது போல், இரவில் கள்ளுக்கடையில் போய்தேசிய முனிவர்கள் வயிறு நிரம்பக் குடித்துவிடுவதுமுண்டு. இது திருச்செந்தூர் தாலூகாவில் கூட நடந்ததாம். தேவபாஷை - பார்ப்பன மதமாகிய மார்த்த மதக் கடவுள் களும் முனிவர்களும் பேசும்பாஷை சமகிருதம் என்றும் சைவமதக் கடவுள்களும் அவர்களின் மனைவிமக்களும் ஏனைய குட்டித் தேவதைகளும் பேசும்பாஷை தமிழ் எனவும் இலாமிய சமயக் கடவுள் பேசும்பாஷை அராபு எனவும் அந்தந்த சமயமக்கள் செப்பு வது போல காந்தீய சமயக் கடவுளாம் பாரதமாதா பேசும்பாஷை ஹிந்தி. நாயன்மார்கள்-தாதாபாய் நெளரோஜி, கோபாலகிருஷ்ண கோகேலே, பாபு சுரேந்திரநாத் பானர்ஜி, லாலாலஜபதிராய், பண்டிதமோதிலால் நேரு முதலியோர்களாவர். இவர்களெல்லாம் பூதஉடலை நீத்து பாரதமாதாவோடு இரண்டறக் கலந்துவிட்ட பெரியோர்களாவர். இவர்கள் இறைவி திருவடி நிழலை யடைந்த இலக்கணத்திலே ஆங்காங்கே காந்தீய பக்தர்களால் குருபூஜைகள் நடத்தப்படும். புண்யதலம் - இந்துக்கள் என்று கூறிக்கொள்பவர் காசியை யும் வைணவர்கள் திருப்பதி, ஸ்ரீவைகுண்டம் முதலியவற்றையும் முலீம்கள் மக்கா, மதினா நகரத்தையும் புத்தர்கள் கயாவையும் புண்ணிய க்ஷேத்திரமாக நம்பி அங்கு போனால் தங்கள் பாவங்கள் ஒழிந்து சுவர்க்கம் கிட்டும் என கோடிக்கணக்கான மக்கள் நம்பி ஏராளமாய்ப் பொருள் செலவுசெய்து யாத்திரை செல்வதுண்டு. காந்திய நெறியைக் கடைபிடித்து ஒழுகுபவர்கள் சபர்மதி ஆச்சிரமம், ஏர்வாடா ஜெயிலும் புண்ணியதலமாகக் கொண்டு யாத்திரை செல்வார்கள். புதியதான ஒரு புண்ணிய க்ஷேத்திரமும் இச்சமயத்தா ரால் சிறிதுகாலத்தில் கண்டுபிடிக்கப்படும். அது தோழர் காந்தி யவர்கள் இறந்து புதைக்கப்பட்ட இடமாக இருக்கும். திருநெல்வேலி ஜில்லாவிலேயுள்ள ஏரலில் வாழ்ந்த ஒரு யூனியன் போர்டுத் தலைவர் புதைக்கப்பட்ட இடத்திற்கே ஒவ்வொரு விழாவிற்கும் பதினாயிரக் கணக்கான மக்கள் யாத்திரை செல்லுகின்றனர். நாகூர் போன்ற இடங்களிலுள்ள முலிம் பெரியார்களின் சமாதிக்கு ஆயிரக்கணக் கான மக்கள் செல்கின்றனர். அப்படியிருக்க மஹா விஷ்ணுவின் அவதாரமாகிய ஸ்ரீ காந்தியவர்கள் இறந்து புதைக்கப்பட்ட இடம் ஒரு புண்ணிய க்ஷேத்திரமாய்க் கருதப்படும் என்பதில் சந்தேகப் படவும் வேண்டுமோ? மடங்கள் - மடங்கள் பெரும்பாலும் ஒவ்வொரு பட்டினங் களிலும் தவறாதிருக்கும். ஒன்றுக்கும் உதவாத சோம்பேறிக் கூட்டங்கள் எல்லாம் இங்குள்ள மடாதிபதிகளின் சிஷ்யராயிருப்பர். வஞ்சகம், பொறாமை, திருட்டு முதலிய தொழில்களில் தேர்ச்சி யடைந்த பேர்விழிகளே இம்மடாதிபதியாய், காங்கிர கிளைச் சபைகளின் தலைவராய் இருப்பர். தமது பேச்சுகளுக்கு மாற்றிப் பொருள் சொல்லுவதிலும் பொதுஜனங்களிடமிருந்து ஏமாற்றிப் பொருள் பறிப்பதிலும் வல்லவர்களாயிருப்பார். பிரசாரம் - மடங்களில் வாழும் சோம்பேறிக் கூட்டங்களே பிரசாரர்களாய் இருப்பர். இவர்கள் பள்ளிக்கூடமிருக்கும் திசையை எக்காலத்திலும் அறியாதவர்கள். இயற்கையறிவோ அற்பம். அனுபோக அறிவோ சைபர். பிறரைத் திட்டுவதிலும் பின்னர் மன்னிப்புக் கேட்பதிலும் மிகுந்த அனுபவமும் சாமார்த்தியமுண்டு. பெரும்பாலும் இப்பிரச்சாரத் தொழிலில் ஈடுபடுபவர்கள் வாய்க்கு அரிசிக்கு வழியற்ற பேர்வழிகளாகவே இருப்பர். சில அறிவாளிகள் தாங்கள் ஏதாவது தொழில் புரிந்து கொண்டு தம் மனைவியைத் தேசத்தொண்டு புரியக் கற்பித்து அதாவது வெள்ளைக்காரர் களையும் அரசாங்கத்தையும் தாறுமாறாக வைது சிறைசெல்லும்படி செய்து தாமும் புகழைச் சம்பாதித்துக் கொள்வர். சிலர் தடபுடலாய் பிரசாரம் புரிவர். 144 ஐக்கண்டால் பதுங்கிக் கொள்வர். அகப்பட்டுக் கொண்டால் மன்னிப்பும் கேட்பர். பின்னர் அமளிகள் அடங்கி விட்டால் பிரசாரம் புரியமுன்வந்துவிடுவர். இவைகளெல்லாம் காந்தீயத்திற்கு இழுக்கல்ல. அஹிம்சை என்று கத்துவர் எவரேனும் சிறிது கோபமாய் பேசினால் பற்களை உதிர்த்துவிடுவர். ஒன்றிரண்டு போலிகாரர்களைக் கண்டால் வைவர், உதைப்பர். பின்னர் ரிஸர்வ் போலிகாரர்களிடம் தடிக்கம்பு பூஜைபடும் முட்டாள் தனமான அறிவும் இவர்களுக்குண்டு. அஹிம்சை அஹிம்சை என்று கத்துவர். இரகசியத்தில் இம்சை புரியத்தூண்டுவர். கொலைபுரிந்த வர்களை வீரர்கள், தேசிய பக்தர்கள், தியாகிகள் எனப்போற்றுவர். கொலையாளிகளை அரசாங்கத்தார் கழுவிலேற்ற முற்பட்டால் அவர்களை மன்னித்துவிடவேண்டும் என்றும் அல்லது கழுவேறாது தண்டிக்க வேண்டும் என்றும் பதினாயிரக்கணக்காய் கையெழுத் திட்டு மனுக்கொடுப்பர். கூட்டங்கள் கூட்டி தீர்மானஞ் செய்து அரசாங்கத்தாரைக் கெஞ்சுவர். இவைகள் எல்லாம் பிரசாரகர் தன்மைகள். பத்திரிகைப் பிரசாரம் தமிழ்நாட்டிலுள்ள ஒன்றிரண்டு சுயமரியாதை இயக்கப் பத்திரிகைகளையும் முலீம் பத்திரிகைகளையும் நீக்கி மீதி எல்லாப் பத்திரிகைகளும் காந்தீயத்தை ஆதரிப்பவைகளே ஆகும். சமூக சீர்திருத்திற்கென்று ஆரம்பிக்கப்பட்ட எத்தனையோ பத்திரிகைகள் எல்லாம் தம் வயிற்றின் கொடுமையால் காந்தீயத்திற்கு ஆதரவுகாட்டி வருகிறது. காந்தியைக் கடவுளாகவும் அரசாங்கத்தை கேவலமாக வும் தூஷித்தெழுதத் தெரியாத பத்திரிகைகளே இந்தியநாட்டில் இல்லை என்று கூறலாம். அரசாங்கப் பத்திரிகைகளுக்கு வாய்ப் பூட்டு போட்டுவிட்டாலே அச்சட்டத்தை ஒன்றிரண்டு காந்தீயப் பத்திரிகைகளே மீறும். மற்றவைகளெல்லாம் வாயைப் பொத்திக் கொண்டேயிருக்கும். இப்பத்திரிகைகள் பெரும்பாலும் பார்ப்ப னீயத்தையும் மூட நம்பிக்கையையும் வளர்த்து பார்ப்பனர்களுக்கு அரசாங்க உத்தியோகம் பெறச்செய்யவே அந்தரங்கத்தில் வேலை செய்து வருகிறது. பார்ப்பனர் முன்னேற்றத்திற்கு விரோதமாய் காந்தி வேலை செய்வதாய்த் தெரிந்தாலே அவருடைய மகாத்மா பட்டத்தைப் பிடுங்கிக்கொண்டு அறுபதிற்குமேல் கிறுகிறுப்பு என்பதைப் போல் காந்திக்கு 60 வயதிற்கு மேல் கிறுகிறுப்பு ஆரம்பித்துவிட்டது என்று கூறிவிடும். பார்ப்பனீயத்திற்கு பேராதரவு அளித்ததினால் கிருஷ்ணன் இராமன் முதலானவர்கள் பார்ப்பனர் களால் எப்படி மஹாவிஷ்ணு அவதாரமாக்கப்பட்டார்களோ, அதேமாதிரிதான் காந்தியும் பார்ப்பனர்களாலும் பார்ப்பனீயப் பத்திரிகைகளாலும் அவதாரமாகப் பிரசாரம் செய்யப்படுகிறார். அவருடைய கதர் போர்டு என்னும் மடதாபனத்தின் பெரும் பாலான ரூபாய்கள் சங்கராச்சாரிக்குக் கொடுத்த பணம் போலப் பார்ப்பனர்கள் வயிற்றில்தான் சேர்க்கப்படுகிறது. அதில் ஏதாவது காந்தி கையை வைக்க ஆரம்பித்தால் கூட ஆபத்துதான். தீண் டாமையைப் பற்றி சிறிது வற்புறுத்தியும் பிராமணத் தன்மையைப் பற்றி சிறிது விளக்கியும் சமத்வத்தைப்பற்றி சிறிது வாயைத்திறந்ததி னாலும் காந்தியாரை நம் தமிழ் வைதீக பார்ப்பனப் பத்திரிகைகளும் ஆச்சாரியர் மூர்த்திகளும் படுத்தின பாட்டை அவர் ஒருபொழுதும் மறக்கார். எனவே பார்ப்பனீயத்தை ஆதரித்துக் கொண்டிருக்கும் வரை காந்தி பக்கம் சரியானபடி பிரசாரப் பத்திரிகைகள் வேலை செய்யும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இப்பத்திரிகைகள் எல்லாம் சிறைச்சாலையை தவச்சாலை என்றும் காந்தி இந்தியா விடுதலையடைய தவங்கிடக்கின்றார் என்றும் கத்தும். ஏன் இந்தியாவின் விடுதலைக்காக சில ஆண்டு சிறையில் தவங்கிடக்க இப்பத்திரிகைகள் வாயைப்பொத்திக் கொண்டிருத்தல் கூடாது? காந்தி வெளியிலிருந்தால்தானே பார்ப்பனீயப் பிரசாரம் நடை பெறும். இத்தகைய போலி வெளியீடுகளாலேயே காந்தீயம் இன்று இந்தியாவில் பரப்பப்பட்டு வருகிறது. குறிப்பு: இவ்வுலகிலுள்ள மதங்களாலே மக்களுக்குள் வேற்றுமையும் பகுத்தறிவின்மையும் உயிர்க்கொலைகளும் மலிந்து சகோதரத்துவம், சமத்துவம், சுதந்திரம் முதலிய உணர்ச்சிகளை வேருடன் பிடுங்கிவிட்டது என்றுகண்டு தம் மதங்களையொழித்து, மக்களை பகுத்தறிவுடையோர்களாய் விளங்கச்செய்ய அரும்பாடு பட்டுவரும் சுயமரியாதை இயக்கத்தினர், இந்து முலீம்களுக் குள்ளும் உயர்ஜாதி தாழ்த்தப்பட்ட ஜாதியார்களுக்குள்ளும் பெரும் கலகம் விளைத்து ஆயிரக்கணக்கான மக்கள் மாண்டுபோகச் செய்ததோடல்லாது மூடநம்பிக்கை, குருட்டு பழக்கவழக்கங்களை எல்லாம் பெருக்கி வருணாச்சிரம அல்லது தர்மத்தை வளர்த்து இந்தியாவின் விடுதலையை அண்மையில் காணவிடாதபடி செய்யும் காந்தீயத்தை அழிக்க முயற்சிக்காது இருத்தல் சாலுமா? எனவே பாழுங்காந்தியத்தை ஒழித்தல் சுயமரியாதை இயக்கம் தம் கடமை யில் ஒன்றென எண்ணி வேலை செய்து வருகிறது. தம் நோக்கில் வெற்றியுமடைந்து கொண்டே வருகிறது. பகுத்தறிவு பெருகப் பெருகப் பாழும் காந்தீயம் ஒழிந்தே தீரும். (காந்தீயத்தின் கொள்கை முழுவதையும் விரிவாய் விளக்கிக் காட்ட நம் அருமைக் குமரன் இதற்குமேல் இடந்தரான் என்று இத்துடன் நிறுத்திக் கொள்கின்றோம். சமயம் வாய்ப்பின் இனி காந்தீயத்தால் நாம் கண்ட பலன் என்று ஒரு கட்டுரை எழுதி அதில் மற்றவைகளைப் பற்றி விளக்குவோம்). - (குமரன், சதங்கை 10) சரவதி வெள்ளைக் கலையுடுத்தி வெள்ளைப் பணிபூண்டு வெள்ளைக் கமலத்தே வீற்றிருப்பள் - வெள்ளை அரியா சனத்தில் அரசரோ டெம்மைச் சரியா சனத்தில் வைத்த தாய் என்று ஒரு புலவர் பெருமானால், சரவதியின் உடை, பணி, ஆசனம் முதலியன எல்லாம் வெண்மையானது என்று சிறப்பித்துக் கூறப் பட்டிருக்கிறது. இப்பெண்மணிதான் கல்விக்கடல் என இந்திய நாட்டு மக்களால் போற்றப்பட்டு வருகிறாள் என்பதை யாவரும் நன்கறிவர். இச்சரவதி வெண்மையான தூய உடையின்மேல் அதிகப் பிரியங் கொள்வதினால்தான் எப்பொழுதும் வெள்ளை யாடைகள் புனையும் திருவாங்கூர் ராஜ்ஜியத்திலுள்ள பெண்டிர்கள் நாக்கினிலிருந்து கொண்டு நர்த்தனம் பண்ணுகின்றாள் போலும். மற்றைய நாட்டிலும் பல கிறிதுவ யுவதிகள் வெள்ளையுடை யணிவதால் அவர்களிடம் இவ்வம்மாள் நீங்காது குடி கொண்டிருக் கிறாள் என்றும் சொல்லலாம். கல்விக் கடவுளாகிய இக்கலைமகளை கலவிக் கடவுள் என்று சொல்லினும் பொருந்தும். இப்பெண் தெய்வத்தைப் பிரமதேவன் சிருஷ்டித்தவுடனே அவளின் அழகில் மயங்கி அவளோடு இணைய அதிக ஆவலுற்றார். கலைமகள் பிரமதேவனின் குறிப்பை அறிந்து 4 திசைகளிலும் போய் ஓடியொளிக்க, பிரமதேவன் திரும்பிப் பார்க்க இரண்டொரு வினாடி நேரம் வீணாய்ச் செல்லுமே என்றெண்ணி, உடனுக்குடன் 4 திசைகளுக்கும் நேராக 4 முகங்களை தோற்று வித்துக் கொண்டார். இச்சரவதி ஒளிக்க இடமகப்படாமல் பூலோகத்திற்கு வந்து மண்ணிற்குள் மறைந்து பின் வெளிவந்தும் விரைவாய் ஓடினாள். (இதைத்தான் வட இந்தியாவில் ஓடும் சரவதியாறு என்று அழைக்கப்படுகிறதாம்) கடைசியில் தன் மகளாகிய சரவதியைப் பிடித்து 100 தேவ வருடம் புணர்ந்து, பின் தன் மகனாகிய சுவாயம்புவனுக்குக் கொடுத்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. இது மெய்யோ பொய்யோ யாமறியோம்; என்றாலும் இவள் பல ஆண்மக்கள் நாவினில் வசித்து வருவதால் இவளை எப்படி கற்புடையவள் என்று கூறுவது? அழகுள்ள பெண்களைப் பலவந்தமாய் கற்பழிக்கும் கேகள் பல வரும் இந்நாளில் தனியே தன் பக்கத்திலிருக்கும் சரவதியம்மாளை எவ்வாறு சும்மா விடுவார்கள்? பலவந்தச் சேர்க்கை இந்தியாவில் அதிகம் என்பதை உணர்ந்து தான் பெண்டிர்க்குப் பெரிதும் மதிப்பீந்து அவர்களின் சம்மத்தையே எல்லாவற்றிற்கும் எதிர்பார்த்து நிற்கும் ஆண்கள் நிறைந்த ஐரோப்பா, அமெரிக்கா கண்டங்களுக்கு ஓடிப்போய் அதிகமாய் வாசஞ்செய்கின்றாள் என்று கூறலும் மிகையாகா. இச்சரவதியம்மாள் இத்தகைய விபசாரத்தனங்களில் எல்லாம் ஈடுபட்டிருந்தாலும் இவளை கற்புடையவள் என்றே கூறப்படுகிறது. ஐவருக்கும் தேவி அழியாத பத்தினியாம் என்பது நமது ஆரிய மக்கள் கண்ட நாகரீகம் அல்லவா? அதனால் தான் இவள் கற்பைப் பற்றிகுறைகூற வழியில்லை. மேலும் இவ்வம்மாள் செய்ததாகச் சொல்லப்படும் விபசாரங்கள் எல்லாம் காலாவதியாய்ப் போய்விட்டது. வெகுகாலமாய் எப்பொழுதும் பிரமதேவன் நாவில் தான் வசித்துக் கொண்டிருப்பதாய் முடிவு செய்துவிட்டதால், பிரமதேவன் கூட இவளுடன் எவ்வித இன்பமும் துய்க்க வழியற்று பார்வதியையும் அனுசூயை போன்ற பெண்களை இச்சித்துக் திரிந்து இருக்கிறான் என்று கூறும் பொழுது நமது சுயமரியாதைக்காரர் களுக்கு ஒரு ஐயம் தோன்றாமல் இராது. அது என்னவெனில் எப்பொழுதும் பிரமனுடைய நாவினில் வசிக்கும் இந்தப் பெண்மணி எங்கு மலஜலவிசர்ஜனம் செய்வாள் என்பதே. எத்தனையோ ஆபூர்வச் செயல்களை எல்லாம் செய்யும் பிரமன் தன்வாயின் ஒரு பக்கத்தில் ஒரு கக்கூ உண்டாக்கிக் கொள்வது எம் போன்றார்க்கு ஆச்சரியமாய் இருக்கவில்லை. இதுவரையும் உலகமெங்கணும் ஒரே சரவதிதான் இருக்கி றாள் என்று எண்ணிவந்தோம். ஆனால்இச்சரவதி ஐரோப்பாவில் ஒருவிதமாயும் ஆசியாவில் மற்றொரு விதமாயும் ஏனைய கண்டங் களில் வேறொரு விதமாயும் நடந்துவருகிறதால் உலகில் பல சரவதிகளிருக்க வேண்டும் என்று யூகிக்கிறார்கள். அதைப் பற்றி நாம் ஆராய்ந்தால் அன்னோர் கூற்றிலும் சிறிது உண்மை இருக்கிறது என்பதை எவரும் மறுக்க முடியாது. நமது நாட்டில் வாழும் சரவதியம்மாளை நாம் மிக கண்ய மாக வைத்திருக்கிறோம். ஆண்டிற்கு ஒருமுறை சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, சுண்டல், கடலை, பொரி முதலியன படைத்து புதுஆடை கொடுத்து பெரிதும் போற்றுவதோடு சந்தர்ப்பங் கிடைக்கும் பொழுதெல்லாம் அவளைத் தொழுதும் வருகிறோம். அவளிருப்பதாய் கூறப்படும் ஏடு, கற்பலகை, புதகம் முதலிய வைகள் காலில் பட்டாலும் பொருக்கெனத் தொட்டு கண்ணில் ஒத்திக் கொள்கின்றோம்; என்றாலும் சரவதிக்கு எவ்வித உணவை யும் கொடாத மேனாட்டில் இவள் வசிக்கும் தாளை அலட்சியமாய் பூட்சையும் மலத்தையும் துடைக்க உபயோகித்தும் ஆண்டு பல்லோர் நாவிலிருந்து பலவித நூதன சாதிரங்களை எல்லாம் கற்பித்து வருவது ஏனோ என்று நம்மில் பலருக்கு ஓர் ஐயம் தோன்றுவ தியற்கை. ஆனால் முன்னாளில் நமது நாட்டுப் புலவர்பால் அதிகக் காதல் உற்றிருந்தாள் என்பதையும் அவர்களுக்கு வேண்டுவன புரிந்து அன்னாருடன் அடிக்கடி பேசிவந்திருக்கிறாள் என்பதையும் பழைய நூற்களில் காணலாம். ஒரு சமயம் ஒரு புலவரிடம் தன் உண்மை யான நிலையை யாதொரு ஐயமும் இன்றிக் கூறிவிட்டாள். அதை அப்புலவர் உலகிற்கு எடுத்தியம்பியும் அதை நாம் கவனியாது இருந்துவிட்டோம். அதாவது கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு என்று உற்ற கலைமகள் ஓதுகின்றாள் என்பதே. எனவே நமதுநாட்டுக் கலைமகளுக்கு அதிகமான கல்வியறிவு இல்லை என்பது பெறப்படுகின்றது. இந்த சரவதியம்மாளுக்கு சோறுசமைக்கவும் கறி வைக்கவும் சேலை தைக்கவும் நெல் குத்தவும் மாவு அரைக்கவும் கட்டில், நாற்காலி, பானை, மாட்டுவண்டி முதலியவைகள் உண்டாக்கத்தான் தெரியும். இதைத்தான் அவள் கற்றது கைமண் அளவு என்று கூறினாள். தமக்குத் தெரிந்ததை வஞ்சகமின்றி இந்தியர்களுக்கு கற்பித்துவிட்டாள். இஃதன்றி எந்திர உலகைப் பற்றி இந்திய சரவதி இம்மியளவும் அறியாள். அறிந்தால் இந்தியர்களுக்குக் கற்பித்திருப்பாள். கல்விக்கரசி பெண் சாதியாயிருந்தும் ஆண் சாதியார் நாவில் மானமின்றி வசித்துக் கொண்டு ஒருசிறிதும் சாதி அபிமானம் அற்று தன் சாதியராகிய சேலை கட்டிய மாதரை நம்பினால் தெருவில் நின்றுத்தயங்கித் தவிப்பரே என்று சொல்லும்படி செய்தது சரியா? என்று சிலர் வினவுகின்றனர். சரவதி அம்மாள் உடை, நடை, ஒழுக்கம் முதலிய பலவற்றாலும் இவளை ஒரு வெள்ளைமாது அல்லது வெள்ளை அம்மை என்று புலவர்கள் கூறுகின்றனர். எனவேதான் இந்தியர்களின் மேல் இயற்கையாகவே வெறுப்பு கொண்ட வெள்ளைக்காரர்களின் இனத்தை தான் சேர்ந்தவள் என நினைந்து அவர்களிடமே பெரும் அபிமானம் கொண்டு ஆண்டு அதிகமாய் வசித்திருப்பதோடு அமையாது அன்னோர் சேலை கட்டாததினால் சேலை கட்டும் இந்தியப் பெண்கள் நம்புவதற்கு தகுதியுடையோர்கள் அல்ல என்று காட்ட சேலை கட்டிய பெண்களை நம்பினால் தெருவில் நின்றுத் தயங்கித் தவிப்பரே என்று கூறச் செய்தாள் போலும். இந்திய நாட்டு யுவர்கள் பலர் தமக்கு வாய்க்கும் பெண்கள் சிவப்பு நிறமுடையவர்களாய் பாவாடை கட்டக் கூடியவர்களாய் இருக்க வேண்டும் என்று பெரிதும் விரும்பினர். பாவாடை கட்டிய சிவப்பு நிறமுடைய பெண்கள் நம்பிக்கைக்கு உரியவர்களாய் இருப்பதோடு கல்வியுடையவர்களாய் இருப்பார்கள் என்பது அவர் களுடைய நம்பிக்கை போலும். ஐரோப்பிய பெண்களைப் போல அத்துணை வெள்ளைநிறம் நமது நாட்டு பெண்களுக்கு இல்லை ஆகையால் வெள்ளைக்கார மாதர்களிடம்தான் இவ்வித இரு குணங் களும் பூர்ணமாய் குடிகொண்டிருக்கிறது. பரீஷிக்க விரும்புப வர்கள் வெள்ளைக்கரிகளை மணந்து பார்க்கட்டும். நம்மவர்கள் அதிகமாய் வெள்ளைக்காரிகளை மணந்தால் ஒரு சமயம் பல சரவதிகள் இருக்கின்றாள் என்று கூறுபவர்களின் கூற்றுப்படி ஐரோப்பிய சரவதி ஈண்டு வந்து நிலையாய் வசிக்க ஆரம்பித்து விடுவாள். அப்பொழுது இந்நாடு அறிவின் திறமை பொலியும் மேனாடு போன்று இயந்திர உலகமாய் மாறிவிடும். நமது நாட்டு சரவதியம்மாள் தம் மாமியாராகிய லஷ்மி அம்மாளுடன் எப்பொழுதும் பிணக்குற்று இருப்பதால் இலட்சுமி வசிக்கும் இடத்தில் சரவதி தங்குவதே கிடையாதாம். எனவேதான் சரவதி புலவர்களிடம் இருப்பதால் லஷ்மி புலவர்களைக் கவனிப்பதே கிடையாது. ஆகையால் இந்திய நாட்டில் புலவர்கள் தரித்திரர்களாய் இருக்கிறார்களாம். ஆனால் மேனாடுகளில் சரவதியும் லஷ்மியும் மிகவும் ஒற்றுமையாய் இருப்பதால் எங்கு சரவதி வசிப்பாளோ அங்குதான் லஷ்மி வசிப்பது என்று முடிவுகட்டி இருப்பதால் கற்றோர்கள் எல்லாம் ஐசுவரியவான்களாய்த் திகழ்கின்றார்கள் போலும். எனவே மேல்நாட்டிலும் கீழ்நாட்டிலும் வெவ்வேறு சுபாவம் உடைய சரவதிகளும் லஷ்மிகளும் வாழ்கிறார்கள் என்கிறார்கள். நமது நாட்டு வைதீகர்களின் மூளையில் இப்பொழுது ஒரு புதிய ஞானந்தோன்றி வருகிறது. அதாவது சரவதி கற்பில்லாதவள் ஆனதால் இந்தியர்கள் நாவில் வசித்து படித்த ஆண் மக்களில் கற்புடையவர்களைப் பார்ப்பதை அரிதாக்கிவிட்டாள். வெள்ளைக் காரப் பெண்கள் நாவில் அதிகமாய் சரவதி வசிப்பதால் அப் பெண்கள் கற்பு என்பதே இன்னதெனத் தெரியாதிருக்கும்படி செய்துவிட்டாள். எனவே நமது பெண்மணிகள் நாவிலும் சரவதி வசிக்க ஆரம்பித்தால் கற்பு என்பதே ஒன்றும் கிடையாது எனச் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள் - ஏன்? சொல்லியே விட்டனர் எனக்கூறி பெண்களுக்கு அதிகக்கல்வி வேண்டாம். அதாவது சரவதி அவர்கள் (பெண்) நாவில் அதிகம் வசித்தல் கூடாதென்றும் முற்றாய் மகளிர் கல்வி கற்பது கூடாதென்று சிலரும் சொல்லு கிறார்கள். சரவதி, லஷ்மியாகிய சீதை, பார்வதி முதலியவர்களை எல்லாம் கற்பில்லாதவர்கள் என்றும் சிவன், பிரமா, விஷ்ணு முதலிய வர்களை எல்லாம் அயோக்கியர்கள் என்றும் அவர்களை எல்லாம் ஒழித்துவிட வேண்டும் என்றும் சுயமரியாதைக்காரர்கள் சொல்லு வதால், சுயமரியாதைக்காரர்கள் இராக்ஷதர்கள் என்றும் அவர்களை அழித்துவிட வேண்டும் என்றும் வைதீகர்கள் பலர் பிரார்த்தனை களும் யாகங்களும் இயற்றி வருவதை அறிந்து ஒரு அவதார புருஷனை உலகிற்கு அனுப்பி சுயமரியாதையை ஒழித்துவிட சமீபத்தில் தேவர் களின் மாநாடு நடக்கப்போகிறதாம். அங்கு நாரதர் சுயமரியாதைக் காரர்களுக்காக பேசுவார் என்பதையும் சுயமரியாதைக்காரர் களின் நாவிலிருந்து பேசும்படி செய்கிறார் என்றும் அவதார புருடன் போய் சுயமரியாதையை ஒழிக்குமுன், அவர்கள் எல்லாக் கடவுளை யும் ஒழித்துவிட்டால் என் செய்வது எனப் பேசுவார் என்றும் தெரிகிறது. - (குமரன், சதங்கை 10) தமிழர்களின் கோயில் மயக்கம் பண்டைக்காலத்திலே தமிழ்நாட்டிலே கோயில் கட்டி விக்ரகங்களை உண்டுபண்ணி, பார்ப்பனர்களால் அவ்விக்ரகங் களுக்கு உயிர் கொடுக்கப்பட்டுத் தமிழ்நாட்டு மக்களால் வணங்கப் பட்டு வந்தது என்பதற்கு இன்றுவரைப் போதிய சான்றில்லை. ஆனால் தமிழர்கள் மரத்தடியிலே யாதொரு உருவமும் வையாது, பார்ப்பனர் உதவியின்றி இறைவழிபாடியற்றி வந்ததாக தமிழறி ஞர்கள் பலர் கூறுகின்றார்கள். பின்னர் ஆரியர்கள் தங்கள் குல வீரர்கள் இறந்துவிட்டால் அவர்கள் புதைக்கப்பட்ட இடங்களில் அவர்களைப் போன்று கற்சிலைகள் செய்து நட்டுவணங்கிவந்த ஆரிய நாகரிகமும், புத்தர்கள் சத்திய சீலராம் புத்தபெருமான் வீடான அரண்மனையை ஒரு புண்ணிய தலமாக நினைத்து ஆண்டுபோய் தரிசித்து அதற்குக் கோயில் (கோ+யில் அதாவது கோ=அரசன்; இல்=வீடு) என்று அழைத்து வந்ததும், பையப்பையத் தமிழ் நாட்டார் உள்ளத்தைக் கவர்ந்து வரவே அஃதுடன் பார்ப்பனப் புரோகிதர்களின் ஆலோசனையும் கூடி தமிழ்நாட்டிலே ஆங்காங்கே கோயிலும் உருவவழிபாடுமேற்பட்டு இப்பொழுது கோடிக்கணக் கான விக்ரகங்களும், லட்சக்கணக்கான கோயில்களும் ஏற்பட்டு தமிழ்மக்கள் கோடி கோடி பவுன்களைக் கோயில் கோயில் என்று கொட்டியதுடன் இன்னும் கொட்டிக்கொண்டும் வருகின்றார்கள். பாலபிஷேகம், நெய்யபிஷேகம், நெய்விளக்கு, நெய்த்தீவட்டி, தாசியாட்டம் முதலிய முட்டாள்தனமான செயல்களிலும் ஈடுபட்டு ஆண்டொன்றிற்கு கோடிக்கணக்கான ரூபாய்கள் பயனின்றி விரையமாக்கப்படுகின்றன. இத்தகைய செயலினால் தமிழர்களுக்கு எவ்வித நன்மையாவது உண்டா என்றால், யாண்டிருந்தும் சைபர் என்றே விடை வரும். நன்மைகிடையாவிடினும் போகட்டும்; தீமை யாவது உண்டாகாமலிருந்தால் போதுமென்று சிலர் கூறலாம். இக்கோயில்களினாலே தமிழ்நாட்டு அறிஞர்களான திருமூலர் முதலியோர் கூறிய ஒன்றேகுலமும் ஒருவனே தேவனும் என்ற கொள்கைகள் மாய்ந்து பலஜாதியும் பல தெய்வங்களும் தோன்றிய துடன் ஆலயங்களினாலே நாளுக்குநாள் ஜாதிவேற்றுமையும் பகைமையும் மலிந்து ஒற்றுமை குன்றி ஒருவருக்கொருவர் நாயும் பூனையும் போலவே வாழ்ந்துவருகின்றனர். அஃதுடன் நில்லாது கோயில்களெல்லாம் புரோகிதர்கள் மட்டுமல்லாது ஏனையோரும் தங்கள் காம இச்சைகளை நிறைவேற்றுமிடங்களாக மாறிவிட்டன. சமீபத்தில் ஸ்ரீரங்கத்தில் ஒரு பார்ப்பனப்புரோகிதன் கோயிலுக்குச் சென்ற ஒரு பெண்ணை பலவந்தமாகப்புணர முயன்றதாகச் சண்டமாருதத்தில் வெளிவந்ததுமட்டுமல்ல, சாத்தன்குளத்தில் சிலகாலத்திற்குமுன் கோயிலுக்குள் ஒரு சிறுமியை ஒரு அர்ச்சகப் பார்ப்பான் புணர முயன்றதும் இன்னும் பல ஆலயங்களில் புரோகிதர் தவிர மற்றையோரும் செய்யும் அட்டூழியங்களுக்கும் கோயிலே காரணமாய் மிளிர்கின்றன. எனவே தான் தோழர் காந்தியவர்களும் குச்சுக்காரிகள் (விபசாரிகள்) வீடுகளில் கடவுள் வசித்தாலும் இக் கோயில்களில் கடவுள் வசியார் என்னும் பொருள் படக் கூறி யுள்ளார்; ஆனால், அவர் தம்மைக் கன்யாகுமரி ஆலயத்திற்குள் அனுமதிக்கமறுத்ததற்கு முன்னர் இவைகளைக் கூறியிருப்பாராயின் அவர் வார்த்தைக்குப் பெருமதிப்புண்டாயிருக்கும். ஆனால் துரதிஷ்ட மாக அவர் தம்மைக் கோயிலினுள் அனுமதியாத கோபத்தால் இவ்வாறு கூறியிருக்கிறார் என்று சில வைதீகத் தேசீய வாதிகள் நினைப்பதற்கு அது ஏதுவாய்விட்டது. நமது நாட்டு மக்களுக்கு இத்தகைய கோயிற் காதல் பெருகக் காரணம் கோயிலில் கடவுள் வசிப்பதாகவும் கோயில் கட்டுவது ஒரு புண்ணியமான செயலென்றும் கோயில் கட்டினால் கட்டியவர் எளிதில் மோட்சமடைவர் என்றும் சிலர் பாடிவைத்த பாடல்களின் பேரிலுள்ள நம்பிக்கையுமே காரணமாகும். திருக்கோவிலில்லாத திருவில்ஊரும்..... அவையெல்லாம் அடவிகாடே என்னும் தேவாரச் செய்யுளும், புல்லினால் வருடங்கோடி புதுமண்ணாற் பத்துக்கோடி செல்லுமா ஞாலந்தன்னில் செங்கலால் நூறுகோடி அல்லியங் கோதைபாக ராலய மடாலயங்கள் கல்லினாலியற்றிவைத்தோர் கைலைவிட்டகலார்தாமே மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாற் றொடங்கினர்க்கே வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே என்பன போன்ற பாடல்கள் மக்கள் மனத்தில் பிரேமையை யுண்டாக்கிவிட்டன. எனவேதான் தற்பொழுது நம் தேசத்திலே பொருள் சம்பாதிப்பதில் ஊக்கமும் ஆக்கமும் கொண்ட நாட்டுக் கோட்டைச் செட்டிமார்களுக்கு கோயிற் பற்றும் மிகுந்ததினாலே பட்டிக்காட்டிலே பாழடைந்த கோவிலெல்லாம் கோடிக்கணக்கான பொருட்செலவில் கருங்கல்லால் கட்டப்பட்டு வருகிறது. கோயி லில்லா ஊரெல்லாம் கோவில்கள் தோன்றிவருகின்றன. பிழைக்க வழியற்ற சோம்பேறிகள் பலரும் நாட்டுக்கோட்டை நகரத்தார் களிடம் போய் கோயில் கட்ட வேண்டுமென்று கூறிப் பொருள் பறிக்கலாம் என்று அறிந்து அனுபவத்தில் ஏராளமாய் கொள்ளை யடித்து வருகின்றார்கள். நாட்டுக்கோட்டை நகரத்தார் கொண்ட கோயிற் பித்தம் தெளிந்து தம் பொருட்களை மக்களுக்குப் பயன்படும் கல்லூரி, நூல் நிலையம், கைத்தொழிற்சாலை, திக்கற்றோர் நிலையம், ஊமை, செவிடர், குருடர் முதலியோர்களுக்குரிய கல்விச்சாலை, மருத்துவ நிலையம் போன்ற தாபனங்களை நிறுவுவார்களாயின் நம் நாடு எவ்வளவோ முன்னேற்றமடையும். விக்ரகங்களுக்குச் செலவிடும் தங்க நகைகளும் வைர நகைகளும் மாத்திரம் கோடிக் கணக்காய் விடுகிறது. நிலச்சொத்தோ கணக்கிலடங்கா. சொத்தின் வரும்படியோ ஒரு ஜாதியார் தின்று கொழுக்க ஏற்பட்டிருக்கிறதே யொழிய, பார்ப்பனரல்லாத ஏழை மக்களுக்கு ஒரு பருக்கையும் கிடைக்க வழியில்லை. எனவே தான் சுயமரியாதையுணர்ச்சியுள்ள மக்கள் கோயிலையொழிக்க வேண்டுமென்று கூறுகின்றார்கள். ரஷியா முதலிய நாடுகளிலே இக்கோவில்களெல்லாம் பாடசாலை களாகவும் சத்திரங்கள் ஆகவும் மாற்றப்பட்டன. அவ்வாறு மாற்றப்பட்டால்தான் நம் நாடும் முன்னேற்றமடையும். அஃதன்றிப் பிரசங்கங்களினாலும் பத்திரிகைகளில் எழுதுவதினாலும் துண்டுப் பிரசுரங்களினாலும் மக்கள் கொண்ட கோயில் பித்தமும் மோட்ச நரகமாயைகளும் எளிதில் போய்விடா. இக்கோயில்களினாலே ஆண்டுகள் தோறும் இந்து முலிம் வேற்றுமைகள் பெருகிக் கலகம் விளைந்து எத்தனை சகோதரர்கள் உயிரிழக்கின்றனர்! எத்தனயோ யுவர்கள் திருவிழாக்கள் காலங்களிலே வரும் நோய் கொண்ட வேசையர் மயக்கில் வீழ்ந்து மேகம், அரையாப்பு முதலிய நோயால் தங்கள் உயிர்நிலைக்கு ஊறுவிளைத்து வருகின்றார்கள். பல சகோதரிகள் தங்களுக்குப் பிள்ளையில்லையென்று கவலை யெய்தி, திருவிழாக்கள் காலங்களில் கணவருடன் சென்று கூட்டத் தின் மிகுதியால் சுகாதாரக் குறைவினால் கால்ரா, வைசூரி முதலிய கொடிய நோயினால் பிள்ளைவரம் கேட்கப் போய்ப் புருடனைப் பறிகொடுத்து வருகின்றார்கள். பலர் தம் சிறு குழந்தைகளை தவற விட்டு வருகிறார்கள். பலர் திருடர்களால் தம் நகைகளையிழந்து வருகிறார்கள். கூட்டத்திலே யௌவனப் பெண்களை வேண்டு மென்றே காமவெறி கொண்ட யுவர்கள் கட்டித் தழுவிக் கொள்கி றார்கள். இன்னும் எவ்வளவோ ஆபாசமான செயல்களெல்லாம் நடைபெற்று வருகின்றன. ஆண்டொன்றிற்கு கோடிக்கணக்கான ரூபாய் ரெயில்வேக்காரனால் விழுங்கப்பட்டு அந்நிய நாடுபோகிறது. கற்பூரத்தினால் ஒவ்வொரு வருடமும் எவ்வளவோ ரூபாய் ஜப்பான் தேசத்திற்குப் போகிறது. இவைகளால் பெற்ற பயனோ ஒன்று மில்லை. எல்லாம் நம் நாட்டு தேசாபிமானிகள் கண்ணிற்பட வில்லை போலும். இனியாவது இத்தகைய துறையில் தேசாபி மானிகள் தொண்டாற்றுவார்களென்று நம்புகிறேன். ஒரு சமயம் இத்துறையில் இறங்கினால் கடவுள் கோபித்துக் கொள்வார் என்ற பயமிருக்கலாம். ஆனால் தேசீயத் தலைவர்கள் எல்லாம் போற்றும் பாரதியார், செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் சேர்ந்திடலாமென்றே யெண்ணியிருப்பார் பித்தமனிதரவர் சொலுஞ் சாத்திரம் பேயுரையா மென்றிங் கூதேடா சங்கம் இத்தரை மீதினி லேயிந்த நாளினில் இப்பொழுதே முக்தி சேர்ந்திட நாடிச் சுத்தஅறிவு நிலையிற் களிப்பவர் தூயவரா மென்றிங் கூதேடா சங்கம் என்றும் ஆயிரந் தெய்வங்களுண்டென்று தேடி அலையு மறிவிலிகாள்! - பல வாயிரம் வேதமறிவோன்றே தெய்வ முண் டாமெனல் கேளீரோ! சுத்த அறிவே சிவமென்று கூறுஞ் சுருதிகள் கேளீரோ? - பல பித்தமதங்களிலே தடுமாறிப் பெருமையழிவீரோ? என்றும் சுத்த வறிவே சிவமென்றுரைத்தார் மேலோர்; சுத்த மண்ணும் சிவமென்றே யுரைக்கும் வேதம், வித்தகனாம் குரு சிவமென்றுரைத்தார் மேலோர். வித்தை யிலாப் புலையனுமஃதென்னும் வேதம். பித்தரே அனைத்துயிருங் கடவுளென்று பேசுவது மெய்யானாற் பெண்டிரென்றும் நித்தநும தருகினிலே குழந்தை யென்றும் நிற்பனவுந் தெய்வமன்றோ நிகழ்த்துவீரே? உயிர்களெலாந் தெய்வமன்றிப் பிறவொன்றில்லை. ஊர்வனவும் பறப்பனவு நேரே தெய்வம்! பயிலு முயிர் வகைமட்டுமன்றி யிங்கு பார்க்கின்ற பொருளெல்லாந் தெய்வங்கண்டீர். வெயிலளிக்கு மிரவி, மதி, விண், மீன், மேகம் மேலுமிங்கு பல பலவாந் தோற்றங்கொண்டே இயலுகின்ற ஜடப்பொருள்க ளனைத்துந் தெய்வம் எழுது கோல் தெய்வமிந்த எழுத்துந் தெய்வம். என்று பண்புபெறப் பாடியுள்ளார். பாரதியாரைப் போற்றும் பாரத தேசீயத் தொண்டர்களுக்கும் தலைவர்களுக்கும் இப்பாக்கள் தெரிவதில்லை. அதன் உள்ளுறைப் பொருளையுணர்வதற்குச் சந்தர்ப்பமும் கிடைப்பதில்லை. பாரதியார் மோட்சம், நரகம் முதலிய மூட எண்ணங்களை கண்டித்தும் அறிவே கடவுள் என்றும் உயிர்களுக்குப் பணியாற்றலே இறைவன் தொண்டென்றும் இறைவன் வாழுங்கோயில்கள் பிராணிகளின் உடலேயென்றுங் கண்ட உண்மைகளெல்லாம் பாரதியாரால் புதிதாய்க் கண்டு பிடிக்கப் பட்டதன்று. தமிழ் நாட்டிலே வாழ்ந்த சைவத் தலைவர்களாலும் சித்தர்களாலும் நன்கு வெளிப்படுத்தப்பட்ட உண்மைகளாகும். இத்தகைய உண்மைகளெல்லாம் அக்காலத்திய மக்களால் பகிரங்கப்படுத்தப்பட்டு அனுஷ்டானத்திற்குக் கொண்டுவர பழைய காலத்திய தமிழரசர்களின் சமயவெறியும் மக்களின் மனப் பான்மையும் போதிய இடமளிக்கவில்லை. சமயத்திற்கு விரோதமாய் ஒருவன் செயவதாய் அரசன் கருதினால் உடனே அவனைக் கழுவி லேற்றிக் கொல்லவோ, சித்திரவதை செய்யவோ அரசர்கள் எதேச் சதிகாரம் பெற்றிருந்தார்கள். ஜனங்களோ மூடநம்பிக்கையால் வெறி கொண்டிருந்தார்கள். எடுத்துக்காட்டாக சித்தாந்த சிகாமணி என்னும் நூலில், கண்டனனாயின் முக்கட் கடவுளை நிந்திப்போனை தண்டனைபுரிந்து கொல்க அரிதெனிற் சமிக்கநின்றி மண்டனில் வலியனென்றேல் வான் செவித்துளைகள் பொத்திக் கொண்டவன் அகன்று செல்க குலைகுலைந்த மலபத்தன் என்று கூறியிருப்பதே அக்கால மக்களின் மனப்பான்மையை எடுத்துக் காட்டப்போதிய சான்றாம். மேலும் அக்காலத்திய மக்களிற் சிறந்த அறிவாளிகள் தாம்கண்ட உண்மையை எவருக்கும் அஞ்சாது உயிரைத் துரும்பாய் மதித்து பிரசாரம் பண்ணியவர்கள் எவராவது இருந்ததாகத்தெரியவில்லை. இக்காலத்தில் கூட தோழர் இராமசாமியார் முன் வராவிட்டால் கடவுள், மதம், வேதம், புராணம், கோயில், தீர்த்தம்,மூடப்பழக்கம் முதலிய கொள்கையைத் தைரியமாய்க் கண்டித்துப்பேச எவரும் முன்வரார். திருநெல்வேலிக்கு சைவத்தூணாய் நின்றிலங்கும் தோழர் கா. சுப்பிரமணியப்பிள்ளை எம். ஏ. எம். எல். அவர்கள் நமது சமயத்திலே அளவிறந்த பணம் ஆலயங்கள் பொருட்டுச் செலவாகின்றன. அஃது அறிவை வளர்ப் பதற்குப் பயன்படாது மூடநம்பிக்கையை மிகுதிப்படுத்தவே பயன் படுகிறது. கடவுளுடைய திருமேனிக்கு (இல்லை கல்லுருவிற்கு) அபிஷேகக் கட்டளை செய்வதை சுவாமிக்குச் செய்யும் வழி பாடென்று நம்மவருட் பலர் கருதுகின்றனர். சுவாமியின் பெயரால் பிற உயிர்களுக்கு நன்மை செய்தலும் சிறந்த வழிபாடென்று பெரியோர் கருதுவர் என்றும் திரு. வி. கல்யாணசுந்தர முதலியா ரவர்கள், ஆலயமும் உயிர்களும் முறையே படமாடுங் கோயில், நடமாடுங் கோயில் எனப்படும். இவ்விரண்டினுள் நடமாடுங் கோயில் வழிபாடே சிறப்புடையது என்றும் கூறியுள்ளார். ஆனால் இத்தகைய கொள்கைகளை சமயத்திற்குத் தகுந்த முறையில் பேசிக் கொள்கிறார்களே யொழிய தன் மதிப்பியக்கத்தார் போன்று தமது கருத்தை வற்புறுத்திக் கூறித் தங்கள் அனுஷ்டானத்தில் செய்து காட்டி பிற மக்களையும் அவ்வாறே செய்யும்படி அழைப்பதாய்க் காணோம்; ஆனால் சுயமரியாதைக்காரர்களோ சாமி, சமயம் வேதம் முதலியவற்றின் புரட்டுகளையும் கோயிலின் கெடுதிகளையும் கோயில் செல்வதினால் மக்களுக்கேற்படும் நஷ்டங்களையும் அதில் கொண்ட மூடநம்பிக்கைகளையும் பாடசாலைச் சிறுவர்களும் அறிந்து கொள்ளத்தக்க எளிய தமிழில் நாடெங்கும் பிரசங்க வாயிலாயும் பத்திரிகை வாயிலாயும் துண்டுப்பிரசுர வாயிலாயும் பிரசாரம் செய்து வருகின்றார்கள். ஆனால் எதிர்பார்க்கும் அளவு மக்கள் பல்லாண்டாய் பற்றியிருக்கும் கோயில் மாயையினின்று எளிதில் விடுபடுவதாகக் காணோம். எனவே தமிழ் நாட்டறநிலையக் கழகமே எதிர்பார்த்த பயனைக் கொடாது போய் நிற்கும் இஞ்ஞான்று நம் தமிழ்நாட்டுப் பல்வேறு சீர்திருத்தக் கட்சிப் பிரமுகர்களும் கூடி ஆலயத்தில் மக்கள் கொண்ட மயக்கத்தையும் ஆலயப்பணியினால் எளிதில் கைலாசத்தையடைந்து விடலாமென்று மக்கள் கொண்ட பிரேமையையும் சினிமா, நாடகம் போன்ற பல்வேறுவழிகளில் விளக்குவதுடன் துண்டு நோட்டீ, சுவரொட்டி விளம்பரங்கள், வேடிக்கைப்படங்கள் மூலமாகவும் மக்கள் மனதில் கோவிற் பற்றை யொழிக்கச் செய்வதுடன் அரசாங்கத்தின் மூலமாய் இனி கோயிலுக் கென்று ஒரு பைசாவும் செலவழியாதிருக்க முயற்சி செய்ய வேண்டி யது சீர்திருத்த வேட்கை மிகுந்த அனைவர்களின் கடப்பாடாகும். - (குமரன், சதங்கை 10) பேதமை மாதர்க்கணிகலமா? பேதமை என்பது மாதர்க்கு இயற்கையில் வாய்ந்த அருங் குணம் என்பது நம்நாட்டு வைதீகர்களின் கொள்கை. அவர்கட்காதர வாக பண்டைக்கால வண்டமிழ் புலவர்கள் பலப்பல பாக்களைப் பாடிவைத்திருக்கின்றனர். வேதங்களும் கீதங்களும் சாதிரங்களும் தோத்திரங்களும் புராணங்களும் இதிகாசங்களும் பெண்கள் பேதமைக்குணம் வாய்ந்தவர்களென்பதற்குச் சான்று பகர்கின்றன. உலகிலே யாண்டும் பெரும்பாலான ஆடவர்கள் தங்கள் தன் னலத்தைப் பெருக்கி, திரீகளை அடிமையாக்க எங்கும் மங்கையர் பேதமைக் குணம் தாங்கியுள்ளார் என ஓங்கியுரைக்கின்றனர். அவர் களுக்கு பேதை யென்றொரு பெயரும் அமைந்திருத்தலினால் தங் கொள்கையே சரியெனச் சாற்றுகின்றனர். உலகம் அதை ஒருவாறு ஒத்துக் கொண்டது. எனவே எங்கும் மங்கையர் உரிமையும் பெருமை யும் சுதந்திரமும் மததந்திரத்தினாலே பறிக்கப்பட்டு அன்னார் ஆண்மக்கள் காமவின்பந் துய்க்கத் தோன்றிய ஒரு பொம்மையென நம்மனோரால் எண்ணப்பட்டுப் போயினர். பொதுவாக உலக முற்றி லும் சிறப்பாக இந்தியாவிலும் மெல்லியலார்மிருகங்களைவிடக் கேவலமான நிலையிலேயே நடத்தப்பட்டு வருகின்றார்கள். நம் தேயத்திலே எத்தனையோ சமூக சீர்திருத்தக்கழகங்கள் தோன்றியும் நம் வனிதாரத் தினங்களின் நிலை இன்றுவரை ஒரு சிறிதும் உயர்த்தப்படவில்லை. பலப்பல சீவகாருண்ய சங்கங்களிருந்தும் மாதர்களிடத்தில் கொஞ்சமும் காருண்யம் காட்ட முன்வரவில்லை. காரணம் உள்ளத்தில் உண்மையான அன்பும் வைதீகர்களின் எதிர்ப்புக்கு அஞ்சாத்தைரியமுமில்லாததே. பாரினிலே மிகப் பெரிய கப்பற்படையையும் பீரங்கிப்படையையும் ஆகாய கப்பற் படையை யும் அபூர்வமான இயந்திரங்களையும் விஷப்புகைகளையுமுடைய பிரிட்ஷ் அரசாங்கத்தை, சத்யாக்ரஹம் என்னும் மருட்டில் ஒழித்து விட முன்வந்து பணிபுரியும் அணிமாசித்தி யை யுடையேம் என நவிலும் காங்கிர மஹாசபையும் கூட வைதீகர்களின் செல்வாக்கின் முன்னிற்க அஞ்சி மௌனியாயிருந்து கொண்டு, பெண் மக்களின் முன்னேற்றத்தில் ஒரு சிறிதுங் கொள்ளாத ஓர் இயக்கம் போல நடித்துவருகின்றது. ஆனால் காங்கிர மாதர்களின் விடுதலைக் குரிய ஒரு திட்டமுமில்லாதிருந்தும் அவ்வியக்கத்தில் பலப்பல மட நல்லார் சேர்ந்துழைத்தலும் அவ்வியக்கக் கொள்கைகளுக்கு மாறு பட்ட கருத்துக்கொண்ட மாண்புடைய ஆண்களை அவமானப் படுத்தக் கருதி அவர்களுக்கு வளையல் வழங்குவதும் அன்னியநாட்டு ஜவுளிக்கடை, கள்ளுக்கடை போன்றவைகளின் முன்னர் மறியல் செய்யச் செல்வதும் 144ஐ மீறி நடக்க செல்வதும் உப்புசத்யாக்ரஹம் செய்யப்புகுவதும் பற்பல அரசாங்க உத்யோகதர்களை துப்பாக்கி யால் சுட்டுக்கொல்வதும் உண்மையில் இவர்களுக்கு சுயராஜ்ஜியம் என்றால் என்ன என்பதை அறிந்து தேசீய உணர்ச்சி பொங்கியதி னாலா? இல்லவே இல்லை. சுயராஜ்ஜியமென்றால் இன்னதென இப் பெண்மணிகளறியார். வருங்கால சுயராஜ்ஜியத்திலே பெண்கள் அந்தது எவ்வித மிருக்கும் என்பதை அணுவளவும் தெரியார். சுயராஜ்ஜியம் பெற்றால் பெண்கள் உரிமைகள் முழுவதும் அளிக்கப் படுமா என்பதைப்பற்றித் தேசீயத் தலைவர்களிடம் உசாவியும் அறியார். இத்தகைய பெண்மணிகள் தான் இப்பொழுது காங்கிர ஸில் சேர்ந்து காங்கி தலைவர்கள் அந்தரங்கத்தில் காட்டும் ஆதரவையும் ஊட்டும் உணர்ச்சியையும் கொண்டு சட்டெனக் கொலைபுரியவும் பலரை அவமானப்படுத்தவும் மறியல் எனும் மடச்செயல் புரியவும் சத்யாக்ரஹம் எனும் சண்டித்தனம் செய்யவும் ஆலோசனை செய்யாது சென்று விடுகின்றார்கள். ïitfis¡ f©Q‰whš ‘bg©fS¡F¥ ngjik¡Fz« ïa‰ifahfnt í©nlh? என்ற ஐயம் சீர்திருத்த வேட்கையுள்ளோர் உள்ளத்தி லும்கூடஉதிப்பதுண்டு. அவ்வாறு உதிப்பதில் ஆச்சரியமொன்று மில்லை. இயற்கையில் யாவர் மனத்திலும் தோன்றக் கூடியதே. உலகிலே மகிமை பொருந்திய அன்னைமார்களே கீர்த்தி வாய்ந்த குழந்தைகளைப் பெற்றுள்ளார்களென்று சரித்திரம் நமக்கறிவிக்கிறது. ஆதலில் இந்நாட்டு மக்கள் சுதந்தர புருடர்களா யிருக்க வேண்டுமானால், தாய்மார்களுக்கு (பெண்களுக்கு) முதலில் சுதந்தரமளிக்க வேண்டும். இந்தியாவைத் தாய்நாடு என்று கூறி நீங்கள் போற்றுகிறீர்கள். அஃது உண்மையானால் இந்தியத் தாய்மார் களுக்கு (பெண்களுக்கு) நீங்கள் மரியாதை செய்ய வேண்டும். அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அன்றேல் நாங்கள் தனியாக நின்று எவர் துணையும் எதிர்பாராது எங்கள் உரிமைக்காகப் போராடுவோம் என்று கூறிய சகோதரி ருக்மணி அருண்டேல் அவர்களின் அறிவும் ஆண்மையும் நிறைந்த அமிர்த மொழிகளைக் கடைப்பிடித்தொழுகாமல் தங்கள் ஜாதியாரின் முன்னேற்றத்திற்கும் விடுதலைக்குமுரிய ஒருகொள்கையுமில்லா தற்காலத் தேசீய இயக்கத்திற் கலந்து பெண்கள் உரிமைகளைக் கல்லும் மதம், புராணம், வேதம் முதலியவைகளை முற்றாய் நம்பும் சுயராஜ்ஜிய புல்லுருவிகளாகிய வைதீக தேசீயத் தலைவர்களை நம்பி மாதர்கள் அடியும் மிடியும் மிதியும் பெற்று அவமானமுற்று கற்பிழந்து கணவனையிழந்து தாலியிழந்து மக்களையிழந்து மாதா பிதாக்களையிழந்து பொருளிழந்து அருளிழந்து தம் குலம் (பெண்கள்) விடுதலை பெறவேண்டும், உரிமையெய்தல் வேண்டும், சுதந்தரமுறல் வேண்டும் என்ற எண்ணம் எள்ளளவுங் கொள்ளாது பெண்களிருந்தால் பெண்கள் பேதமைக்குணம் உடையார் என்று எவரும் எண்ணுவதில் தவறுண்டோ? பெண்கள் ஆண்களோடு எத்துறையிலும் நேரியமுறையில் போட்டிபோட்டுத் தம் திறமையைக் காட்ட முன்வரவேண்டும். அவர்கள் துப்பாக்கி எடுப்பதையும் தேசத்திற்காகவோ, பெண் உரிமையை தாபிப்பதற்காகவோ எவ்வித தியாகஞ் செய்வதையும் யான் வரவேற்கின்றேன். தம் தியாகம் தம் மினத்தார்க்குத் தீமை விளைக்குமா? அல்லது நன்மை பயக்குமாவென்பதை ஆய்ந்து, பின் தங்கள் சுதந்திரத்தை எதிர்ப்பவர்களை ஒழித்துவிடவோ வளையல் வழங்கவோ முயற்சிக்கும் எச்செயலையும் யான் பூரணமாய் ஆதரிக்கிறேன். ஆனால் உண்மையாய்த் தங்களுடைய உரிமையைப் பறிக்கும் தன்னலவெறிகொண்ட இந்து சமயப் புல்லுருவிகளான வைதீகர்களை விட்டு விட்டு பெண்களுக்குப் பெரிதும் உரிமை நல்கிய, நல்கும் ஆங்கிலேயர்களை ஈங்கில்லாது தொலைத்து விடவேண்டுமென்று கூறும் சில போலித் தேசாபிமானிகள் கோலிய காலிக்குழுவில் கலந்து, அன்னோர் மாயவலையிற் சிக்கியலைந்து தம் பகுத்தறிவிழந்து ஆங்கில அதிகாரிகளை சுட்டதும், சுடமுயற்சிப்பதும் பெண்கள் பேதமைக்குணம் உடையவர்கள் என்பதை நன்கு நிரூபிப்ப தாயிருக்கிறது. உலகிலுள்ள சகல உயிர்ப்பிராணிகளிலும் இந்து சமயப் பெண்மணிகளே அதிகத் துன்புறுகின்றார்கள். மனு தர்ம நூலைத் தழுவி அமைக்கப்பட்ட இந்துலாவில் கண்ட பால்ய விவாகச் சட்டம், விதவா விவாஹமின்மை (இந்தச் சட்டம் திருத்தப்பட்டு போயிற்று) சொத்துரிமையின்மை, விவாஹரத்து இன்மை முதலிய கொடுங்கோன்மையான வைதீகச் சட்டங்களைக் கொண்டு பெண் ணுலகு இளமையில் விண்ணுலகாள (உயிர் துறக்க)ப் பெரும் பெரும் தொல்லைகளுக் காட்படுத்தி வருகின்றார்கள். இத்துன்பங்களின்று பெண்ணுலகை மீட்க அரும்பாடுபட்டுவரும் சீர்திருத்தவாதிகளுக்கு வைதீகப் பேய்க் கூட்டங்கள் தங்களாலியன்ற துன்பங்களை நாடோறும் தவறாது நல்கி வருகின்றார்கள். அரசாங்க மூலமாய் பழைய வைதீக இந்து மதச்சட்டங்களைத் தகர்த்தெரிந்து ஆணுக்கும் பெண்ணுக்கும் வேற்றுமையில்லாத சமதர்மச் சட்ட திட்டங்களைக் கோலி பெண்ணுலகிற்கு போதிய உரிமை நல்கலா மென்றாலோ அங்கும் பழமை விரும்பிகள் மதம் போச்சு! பழைய ஆசாரம் போச்சு! கற்புப் போச்சு! என்று யாண்டும் கூவி பாமர சட்டசபை அங்கத்தினர்களைச் சேர்த்துக் கொண்டு முட்டுக்கட்டை போடு கின்றார்கள். எடுத்துக்காட்டாக இளமை மணத்தடுப்பு மசோதா ஒன்றை இந்திய சட்டசபையில் தோழர் ராய் பஹதூர் ஹரிவிலா சாரதா அவர்கள் நம் நாட்டுச் சிறுமிகள் பால் கொண்ட சீவகாருண் யத்தால் கொண்டுவந்து பெரிதும் முயன்று வைதீக குழுவினரின் தலைவரான எம்.கே. ஆச்சாரியாலும் அவர் தம் தோழர்களாலும் எதிர்க்கப்பட்டும் சாரதாவை இந்திய நாட்டு மக்களிற் பெரும் பாலோர் என்றும் போற்ற தீர்மானம் வெற்றியுடன் நிறைவேற்றப் பட்டு அரசாங்க அங்கீகாரமும் பெற்று சட்டமாக்கப்பட்டும் மற்றொரு வர்ணாச்சிரம தர்மப் பேய் கொண்ட ராஜாபஹதூர் கிருஷ்ணமாச்சாரி போன்ற மாச்சரியம் பூண்ட மகான்களால் இப்பொழுது அப்புனிதச் சட்டத்தை அநீதமாய் ஒழிக்க முயற்சிக்கப் பட்டுவருவதை யான் மட்டுமல்ல பெண்களுலகமே நன்கறிந்திருக் கிறது. சமீபத்தில் தோழர் சாரதா அவர்களால் விதவைப் பெண் களுக்குச் சொத்துரிமை கொடுக்கப்படவேண்டுமென்று ஒரு மசோதா கொண்டுவந்து அதைத்தனிக்கமிட்டிப் பரிசீலனைக் கனுப்ப வேண்டுமென்று பிரேரேபணை கொண்டு வரப்பட்டுப் பெரும்பாலான இந்திய சட்டசபை அங்கத்தினரால் தோற்கடிக்கப் பட்டுப்போனதை எந்த இந்தியப் பெண்தான் மறக்கமுடியும்; மறுக்கமுடியும். பின்னும் இந்து மதத்தைச் சார்ந்தவர்களுக்கு விவாகரத்துச் செய்து கொள்ள உரிமை வேண்டும் என்ற ஒரு மசோதா தோழர் ஹரிசிங்கோர் அவர்களால் கொண்டுவரப்பெற்று, தற்காலச் சட்டம் காலஹரணமாய் விட்டது. அதற்குப் புத்துயி ரளிப்பதே இந்த மசோதாவின் நோக்கம். ஹிந்துலாப்படி பெண் களின் ஜீவாதார உரிமைகளைப் பாதுகாப்பதும் இம்மசோதாவின் தலைமையான நோக்கமாகும். இந்த மசோதா முன்னுரையில் விளக்கப்பட்டிருக்கும் காரணங்களை முன்னிட்டு விவாஹ விடுதலை செய்துகொள்ள இந்த சபையார் சம்மதமளிக்க வேண்டும். பழைய சட்டங்களும் பழக்க வழக்கங்களும் மிக்கக் கொடியனவாகி விட்டன. சீவகாருண்யத்தை முன்னிட்டாவது இந்த சபையார் எனது மசோதாவை ஆதரிக்க வேண்டும் எனக் கெஞ்சிக் கேட்டுக் கொண்ட அமிர்தமொழிகள் பண்டிதசென் போன்ற கருங்கல் லொத்த மனப்பான்மையுடைய மாக்களால் ஹிந்துக்கள் விவாஹம் விடுதலை செய்யக்கூடியதல்ல என்பதற்கு வேதங்களிலும் சாதிரங் களிலுமிருந்து பல மேற்கோள் காட்டி கடைசியாய் ஒத்திவைக்கப் பட்டு விட்டது. (இத்தகைய வேதங்களையும் சாதிரங்களையும் சுட்டெரிக்க வேண்டுமென்று சுயமரியாதை இயக்கம் சொல்கிறது. ஆனால் இதற்கு சீர்திருத்த விருப்பம் கொண்ட பெண்கள் என்ன சொல்லப் போகின்றார்களென அறிய உலகம் அவாவுறுகின்றது) இம் மசோதாவும் இதைப்போன்று வரும் பெண்ணுரிமை பேணும் எத்தகைய மசோதாவும் வைதீகர்களும் அவர்கள் செல்வாக்கிற் கஞ்சித் தலையசைக்கும் தம்பிரான்களும் நிறைந்த இந்தியா சட்டசபையில் நிச்சயமாய் தோற்கடிக்கப்படும் என்பது யாவரும் அறிந்த உண்மையே. ஆனால் இந்தியமாதர்கள் காங்கிரகாரர் சொல்லைக் கேட்டுத் தம் பகுத்தறிவினால் ஆராயாது தவறான வழியிற்சென்று பெண்கள் பேதமைக்குணம் படைத்தவர்கள் என்று அறுதியிட்டு உறுதிகூற இடங்கொடாது தங்கள் சத்தியை கள்ளுக்கடை மறியல், ஜவுளிக்கடை மறியல் போன்ற அனாவசியமானவைகளில் செல வழியாது உண்மையாக மகளிரின் ஜீவாதாரமான உரிமைக்கு ஊறு செய்யும் இந்திய சட்டசபை உறுப்பினர்களான வைதீகர்களுக்கோ, வர்ணாச்ரம (அ) தர்மிகளுக்கோ மறியல் மூலமாயோ அல்லது வளையல் வழங்குவதன் மூலமாயோ அல்லது தங்களுக்கு யுக்தமான வேறு எவ்விதமான வழிகளாலேயோ சரியான புத்தி கற்பிக்க முன் வருவாராயின் கூடிய சீக்கிரம் தற்சமயமுள்ள பிரிட்டிஷ் அரசாங் கத்தின் மூலமாகவே பெண்கள் ஆண்களோடு சமத்துவம் அடைய வேண்டுவதற்குரிய எல்லாச் சட்டங்களையும் நிறுவி பெண்ணுலகம் பெருநலமெய்தி வாழமுடியும். இந்திய சட்டசபையிலாயினும் வேறு எவ்விடத்திலாயினும் பெண்ணுரிமைக்கு விரோதமாக எவனும் வாயைத்திறக்க அஞ்சுவான் என்பது திண்ணம். இத்தகைய எமது யோசனையை பெண்ணுலகு ஆராய்ந்து பின்பற்றினால் பிரிட்டிஷ் அரசாட்சிக்குள் சுதந்தரமுள்ள சுயராஜ்யத்தை பெண்ணுலகு அன்றே காணும். தேசீயக் கொள்கைக்குத் தனித்தொகுதி வழங்கல் விரோதமா யிருக்கிறது என்பதை நன்கறிந்தும் தைரியமும் ஒற்றுமையுமுள்ள முலீம்களுக்கும் அவர்களைப் போன்ற சீக்கியர்களுக்கும் சாத்வீகப்போரின் தளகர்த்தரும் சர்வாதிகாரியுமான தோழர் எம். கே. காந்தி அவர்கள் தனித்தொகுதி வழங்க இசைந்ததும் ஒற்றுமையும் தைரியமும் கட்டுப்பாடுமற்ற தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதியீய அவர் மறுத்ததும் எற்றுக்கென மாதருலகம் சிறிது நேரம் சிந்தித்துப்பார்க்கட்டும். சுமார் பதினேழு கோடி ஜனத் தொகையுள்ள இந்தியப் பெண்ணுலகை எத்துணை நாட்களுக்கு அடக்கி யொடுக்கி ஹிம்சித்து அன்னோர் சுதந்திரத்திற்கும் உரிமைக் கும் விரோதமாய் நடந்து கொண்டிருக்க முடியும். பெண்கள் விழிப்புற்று ஒற்றுமையுடனும் தைரியத்துடனும் பகுத்தறிவுடனும் தங்கள் உரிமையை தாபிக்க முன்வருவாராயின் பெண்ணுலகத்தை கல்லும் வைதீக மக்களுக்கோ அல்லது மகாத்மாக்களுக்கோ, ஆச்சாரிகளுக்கோ இந்திய நாட்டிலே இடமில்லாதபடி செய்து விடலாம் என்பது என்போன்ற சீர்திருத்த விருப்பங் கொண்டயுவர் களின் எண்ணம்; எனவே எல்லாவற்றையும் தம் அறிவால் ஆய்ந்து தெரியும் பொருள் கொண்டு மாதர்கள் தம் உரிமையை நிலைநிறுத்த முன்வரும் நாள் எந்நாளோ? நம்மிந்திய சோதரிகள் தம் உரிமையை மறுக்கும் வைதீகருடன் தொடுக்கும் அறப்போருக்கு இலட்சக்கணக்கான வாலிபத் தொண்டர்களைக் கொண்ட சுயமரியாதை இயக்கம் முழு ஆதரவு செய்ய காத்துக்கொண்டிருக்கிறது. அவ்வியக்கத்தின் பிரதான மான கொள்கைகள் சிசுமணத்தைத் தடுத்தல், விதவா விவாஹத்தை ஆதரித்தல், விவாஹரத்தை ஒப்புக்கொள்ளல், பெண்கட்கு சொத் துரிமை நல்கல், கலப்பு மணத்தைப் போற்றல் முதலிய கொள்கை களோடு ஆண்களோடு பெண்கள் சமத்துவமடையச் செய்யும் எல்லா முறைகளையும் பூரணமாய் ஆதரிக்கிறது. பெண்களின் சுதந்திரத்திற்கு விரோதமாயிருக்கும் மதமோ, கடவுளோ, வேதமோ, சாதிரங்களோ, புராணங்களோ அன்றி வேறு எதாக விருப்பினும் அவைகளை யெல்லாம் நிர்மூலமாக்க முன்வந்திருக்கிறது. பெண் ணுரிமைக்கு விரோதமான கொள்கைகளை மறைமுகமாய் ஆதரித்து இருப்பதனாலே இந்திய தேசீய காங்கிரஸை ஒழித்துவிடத் தைரிய மாய் முன்வந்து மார்தட்டி பிரசாரம் புரிந்து தமிழ்நாட்டில் அதன் கொட்டத்தை அடக்கி யாண்டும் வெற்றி முரசொலித்துக் கொண் டிருக்கிறது. பெண்களின் விடுதலையே இந்தியாவின் விடுதலை யென்று அவ்வியக்கத் தலைவர் கர்ஜனை புரிகின்றார்கள் பெண் ணுரிமை பேணாத ஒரு நாடு தன்னுரிமையடைய முயல்வது வெட்க கரமானதும் வேடிக்கையான செயலுமன்றோ? தன்னிடத்தே உதித்து தன்னிடையே வளர்ந்து தனக்கே பெரும் ஆதரவாய் தன் நலன்களுக்கே ஓர் அரணாய் இலங்கும் பெண் சமூகத்தை பல விதத்திலும் அடிமைப் படுகுழியிலே ஆழ்த்தி அவதிப்படவைத்து அது பற்றிய கவலை கடுகளவுமின்றி தான் விடுதலைத் தாகங் கொண்டு போர் தொடங்கும் ஒரு நாட்டை நாகரிக நாடு என்று நம்மால் நவில முடியுமா? நவின்றாலும் நாகரிக உலகம் ஏற்குமா?......... இந்திய நாட்டுப் பெண்களின் நிலையோ நினைக்க நினைக்க நெஞ்சம் கொதிக்கின்றது. யாதொரு உரிமையுமின்றி அடிமைப் படுத்தப்பட்டு கொடுமைப் படுத்தப்பட்டு கண்ணீருங் கம்பலையு மாய் தவித்து நிற்பது பற்றி இன்றையத் தேசீயத் தலைவர்கள் கனவிலுங் கருதக்காணோம். ஆனால் ஆண்கள் தான் அவ்விதமென் றால் கற்றறிந்தவர்கள், அறிவிற் சிறந்தவர்கள் என்று புகழப்படும் சில பெண்மணிகளும் தம்மினத்தைப்பற்றிய சிந்தனையின்றி தம் சமூக விடுதலையை மறந்து பிறிதோர் துறையில் இறங்கியதானது உண்மை யிலேயே ஒரு பெரும் குற்றமும் வருந்தத்தக்கதுமான செயலுமென் பதே எனது துணிந்த அபிப்பிராயம். தேச விடுதலை வேட்கை கொண்டு போர்களத்தில் இறங்கியதுபோல் தம் சமூக விடுதலையில் ஆர்வங்கொண்டு சமத்வப்போர் தொடங்கியிருப்பின் எவ்வளவு நலமாயிருக்கும். ஆண்கள் எப்பொழுதும் பெண்களின் முன்னேற்றத்தை எதிர்த்தே வந்திருக்கின்றார்கள் என்று கூறிய சகோதரி மிஸ ரஜாவுல்லா அவர்களின் மொழியைப் பொய்யாக்க சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த ஆடவர்கள் பல்வேறு இடையூறுகளுக் கிடையே பெண்கள் கேட்கும் எல்லா உரிமைகளும் கொடுத்துவிட வேண்டும் என்று நாடெங்கும் அரும்பணி யாற்றிவருகின்றார்கள். அவ்வியக்கத்தைப் பார்க்கிலும் தாராளமாய் பெண்ணுரிமை வழங்கச் சம்மதிக்கும் வேறு இயக்கம் நம் நாட்டில் அல்ல உலகத் திலே உண்டென்று எவராலும் கூற முடியா. அவ்வியக்கத்தின் பால் பெண்ணுலகு பேராதரவு நல்குமாக. தங்களுக்கு வேண்டும் எவ் வுதவியையும் தாராளமாய்த் தயங்காமல் கேட்குமாக. இனியாவது மாதருலகு பேதமை நிறைந்த வழியிற்சென்று தம் சக்தியை வீணாக் காமல் தம் உரிமையை நிலைநிறுத்த இடையூறியற்றும் வைதீகப் புலவர்களுக்குப் போதிய புத்தி கற்பித்து தேசீயத் தலைவர்களின் பேச்சுமயக்கில் மருளாது எக்காலும் பெண்களுக்குப் பேதமைக் குணம் இயற்கையில் கிடையாது என்பதை நிரூபிக்க முன் வருவாராக. வேண்டுமானால் தேசீயக் கூட்டத்தில் பெண்கள் உரிமையை ஒப்புகொள்ள ஒரு தீர்மானம் கொண்டுவந்து அவ்வியக்கம் அதை ஒப்புக்கொள்கிறதா என்பதை நம் சகோதரிகள் சோதித்துப்பார்க் கட்டும். ஒரு பொழுதும் பெண்ணுரிமை முழுவதையும் ஒப்புக் கொள்ளாது. அப்பொழுதுதான் சுயமரியாதை இயக்கத்தின் மேன்மையும் அதன் பரந்த நோக்கமும் ஜீவகாருண்யக் கொள்கை யும் உலகிற்கு தோன்றும், சகோதரிகள் தம் உரிமையால் காங்கிரஸை சோதிக்க முன்வருவார்களா? தேசீய சுயமரியாதைக்காரன் மதுரையில், ஒரு காங்கிர மகாநாடுநடைபெற்றது. அதே வேளையில் தஞ்சாவூரில் சுயமரியாதைக்காரர்கள் ஒரு மகாநாட்டை கூட்டினார்கள். இங்ஙனம் இருமகாநாடுகள் இருபக்கங்களில் ஏக காலத்தில் நடைபெறுவதைக் கண்ட சோழவந்தான் சுப்பிரமணியன் என்பவர் என்ன செய்வதென்று தெரியாது தன் மனைவியிடம் காதலி! நான் ஓர் தேசீய சுயமரியாதைக்காரன். அதாவது தேசீய இயக்கத்திற்கும் சுயமரியாதை இயக்கத்திற்குமிடைப்பட்டவன். இப்போது மதுரையில் தேசீய இயக்க மகாநாடும், தஞ்சையில் சுயமரியாதை இயக்க மகாநாடும் நடை பெறுகின்றன. நான் எங்கு செல்வேன்? அவன் மனைவி:- நல்லது. இரண்டுக்குமிடைப்பட்ட வராகை யினாலே மகாநாடுகள் முடிவது வரையிலும் மதுரைக்கும் தஞ்சைக்கு மிடையிலுள்ள திருச்சியில் தங்கிவிடுங்கள். அப்போது இரண்டுமகாநாட்டுக்கு மிடைப்பட்டவராகி விடுவீர்கள். - (குமரன், சதங்கை 10) 