பாவேந்தம் 22 கட்டுரை இலக்கியம் - 3 ஆசிரியர் பாரதிதாசன் பதிப்பாசிரியர்கள்: முதுமுனைவர் இரா. இளங்குமரன் முனைவர் இரா. இளவரசு முனைவர் கு. திருமாறன் முனைவர் பி. தமிழகன் இளங்கணி பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : பாவேந்தம் - 22 ஆசிரியர் : பாரதிதாசன் பதிப்பாளர் : இ. இனியன் பதிப்பு : 2009 தாள் : 16» வெள்ளைத்தாள் அளவு : தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 32 + 384 = 416 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) சாதாரண அட்டை : உருபா. 260/- கெட்டி அட்டை : உருபா. 310/- படிகள் : 1000 நூலாக்கம் : ர்மநிர் வ. மலர், நிழூட்குகஒகூஹி சி.இரா. சபாநாயகம் அட்டை வடிவமைப்பு : ர்மநிர் வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு வடபழனி, சென்னை - 26. நூல் கிடைக்குமிடம் : தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17.  : 044 2433 9030. பொங்கல் மாமழை தமிழர்க்கு வாய்த்த பொங்கல் மாமழை தமிழே! அத்தமிழால் தான் தமிழ்நாடும் தமிழ் இனமும் பெயர் கொண்டன! தொல்காப்பியம் உலகிலேயே ஒப்பிலாத பொங்கல் மாமழை! எழுத்து, சொல் என்பவற்றின் இலக்கணமே அன்றித் தமிழர்தம் அகவாழ்வு, புறவாழ்வு, அறிவியல் வாழ்வு, மெய்யியல் வாழ்வு என்பவற்றை எல்லாம் ஒப்பிலா வகையில் விளக்கும் நூல்! சங்க இலக்கியம் எனப்படும் பாட்டு, தொகை என்னும் பதி னெட்டு நூல்களும் மாப்பெரும் பொங்கல் மாமழை ஆயவை. அக் கருவூலம் போல எச் செம்மொழிக்கு வாய்த்தது? இன்றும் புதுப்புதுப் பொலிவுடன், வற்றா வளஞ் சுரக்கும் உயிராறாக, இன்றும் இருவகை வழக்குகளும் இலங்கிய அறிவியல் மொழியாய் - கணினி மொழியாய் - கலைமலி மொழியாய் - விளங்கும் புத்தம் புது மொழியாய் - எம்மொழி உலகில் உள்ளது? திருக்குறள் போலும் அளப்பரும் வளப்பெருநூலை - உலகுக்கு ஒரு நூலைப் - பொங்கல் மாமழையாய்ப் பெற்றது எந்த மொழி! இம் மூல நூல்களுக்குக் கிளர்ந்த உரை நூல்கள் - ஆய்வு நூல்கள் - வரலாற்று நூல்கள், கலைவகை நூல்கள், மொழியியல் நூல்கள் என்பவை எல்லாம் எத்தனை எத்தனை? தமிழ்மண்ணுக்கு வாய்த்த பொங்கல் மாமழையாம் இவற்றை எல்லாம் இத்தமிழ் மண்ணே அன்றி உலகத் தமிழர் வாழும் மண்ணுக் கெல்லாம் - தமிழாய்தலுடைய - தமிழ்ப் பற்றுடைய அறிஞர்களுக் கெல்லாம் பொங்கல் மாமழையாகப் பொழிவது எம்கடன் என்பதைத் தோன்றிய நாள் முதல் என்றும் என்றும் தொடர்ந்து நிலைநாட்டி வருவது தமிழ்மண் பதிப்பகம். மீளச்சுக்கு எவரும் கொண்டு வராத - முயன்றாலும் இழப்பை எண்ணிக் கைவைக்காத - இசைப்பேரறிஞர் ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரத்தை இரட்டைப் பக்கப் பாரிய அளவில் 1350 பக்கத்தில் கொண்டு வந்து பேரிழப்புக்கு ஆட்பட்டாலும், தமிழ் வளத்திற்கு வாய்த்த இசைப்பொங்கல் மாமழையாய் அமைத்த பேறு பெரிதல்லவா? அதன் இரண்டாம் தொகுதியும் பிறவுமாய் ஏழு தொகுதிகளை வெளிக் கொணரத் துணிகிறது தமிழ்மண் பதிப்பகம் என்றால், அதன் நோக்கம்தான் என்ன? ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகளாக ஒன்றாகவும் இரண்டாக வும் அவ்வப்போது பல்வேறு பதிப்பகங்கள் கொண்டுவந்த தொல் காப்பிய உரைவிளக்கப் பதிப்புகளையெல்லாம் ஒட்டுமொத்தமாக, ஒரே வேளையில் வெளிக்கொணர்ந்த அருமை எளியதா? எத்தகு பொங்கல் மாமழை? அறுபான் ஆண்டுகள் அயரா ஆய்வாளராய் - எழுத்தாளராய் - மொழி மீட்பராய்த் திகழ்ந்த மொழிஞாயிறு பாவாணர் நூல்கள் - கட்டுரைகள் , யார் யார் நூல்களாக வெளியிட்டவற்றையும், இதழில், மலரில் வாழ்த்தில் கட்டுரைகளாக வெளியிட்டவற்றையும் ஒருங்கே திரட்டி, ஒட்டுமொத்த வளத்தையும் ஒரு பொழுதில் வெளிப்படுத்தியது எத்தகு சீரிய பொங்கல் மாமழை? அவ்வாறே சங்க இலக்கியப் பதிப்புகள் அனைத்தையும், வாய்த்த வாய்த்த உரைகளொடும், செவ்விலக்கியக் கருவூலமாகக் கொண்டு வந்த அருமை எளிமையானதா? jÄœ¤bj‹wš âU.É.f., நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், ஈழத்தறிஞர் ந.சி.கந்தையா, வரலாற்றறிஞர்கள் வெ.சாமிநாத சர்மா, சாத்தன்குளம் அ.இராகவனார், பேரறிஞர் சதாசிவப் பண்டாரத்தார், பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார், இலக்கணக் கடல் தி.வே.கோபாலையர், புலவர் குழந்தையார், கவியரசர் முடியரசனார், உரைவேந்தர் ஔவை சு.துரைசாமி ஆயோர் நூல்களையும் மற்றும் தமிழக வரலாற்று நூல்களையும் முழுதுற முழுதுறப் பொழிந்த பொங்கல் மாமழை தமிழ்மண் வழங்கியவை தாமே! இப்பொழுது வாய்க்கும் கிடைத்தற்கரிய பொங்கல் மாமழை பாவேந்தம்! ஒரு தொகுதியா? இரு தொகுதிகளா? அவர் எழுதிய எழுத்துகளில் எட்டியவற்றையெல்லாம் ஒருசேரத் துறைவாரியாக 25 தொகுதிகள் வெளிப்படுகின்றனவே! திரு. பெ. தூரனார் தொகுத்தளித்த பாரதி தமிழைப் பார்த்த போது பாரதிதாசனார் எழுத்துக்கு இப்படி ஓர் அடைவு வருமா? என எண்ணினேன்! அரிய பெரிய உழைப்பாளர், பாரதியார்க்கே முழுதுற ஒப்படைத்த தோன்றல் சீனி.விசுவநாதனாரின் பாரதி அடங்கல்களைப் பார்க்கும் போதெல்லாம் பாவேந்தருக்கு இப்படி ஓர் அடங்கல் வருமா? என ஏங்கினேன்! காலம் ஒருவகையாகத் தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் தமிழ்ப்போராளி தமிழுக்கு ஆக்கமானவற்றையெல்லாம் பிறவி நோக்காகக் கொண்ட தோன்றல் இளவழகனார் அவர்கள் மூலமாக என் ஆவலை நிறைவேற்றியது. வாழும் பாவேந்தராய்ப் பாவேந்தம் அனைத்தும் உள் வாங்கிக் கொண்டு முழுதுற வெளியிடும் நினைவுத் தோன்றலாய் பாவேந்தப் பணிக்கே தம்மை ஒப்படைத்த தனித்தமிழ் அரிமா முனைவர் இளவரசர் ஒழுங்குறுத்தவுமாகிய பணியை ஒப்படைத்தார்! அவ்வொப்படைப்பு மேலுமொரு நலம் சேர்த்தது. முனைவர் இளவரசு அவர்களிடம் யான் செய்த பாவேந்தத் தொகுப்பை வழங்கி, மேலும் சேர்ப்பன சேர்க்கவும் இயைவன இயைக்கவும் ஒழுங்குறுத்தவுமாகிய பணியை ஒப்படைத்தார். அவ்வொப்படைப்பு மேலுமொரு நலம் சேர்த்தது. முனைவர் இளவரசு அவர்கள் தம் உள்ளம் உணர்வு உரிமைப்பாடு ஆகிய எல்லாவற்றிலும் ஒத்தியலும் இரட்டைக் கண்மணிகளாம் முனைவர் கு. திருமாறனார், முனைவர் பி.தமிழகனார் ஆகியவர்களின் ஊன்றிய ஒத்துழைப்புடன் தொகைப்படுத்தினார். இது இளவழகனார்க்கு வாய்த்த இனிய பேறு; இளவரசர் இணைவால் வாய்த்த இணையிலாப்பேறு. இதனொடு மற்றொரு பேறு, தம்பொருள் என்ப தம்மக்கள் என்னும் உலகப் பேராசான் வள்ளுவர் வாக்குப்படி, வாய்த்த மகனார், கலைத்தோன்றல், பண்புச் செல்வர், வளரும் தமிழ்ப் பெருந்தொண்டர், செல்வர் இனியனார் தம் இளங்கணிப் பதிப்பக வெளியீடாக இப் பாவேந்தத்தைக் கொண்டு வந்தது! பாவேந்தம் உருவாக்கப் பேறு தொகுப்புப் பணியொடு முடிந்து விடுமா? கணினிப்படுத்த - மெய்ப்புப் பார்க்க - ஒழுங்குறுத்தி அச்சிட்டு நூலாக்க உழைத்த பெருமக்கள் எத்தனை எத்தனை பேர்! அவர்கள் தொண்டு சிறக்க, மேலும் மேலும் இத்தகு தொண்டில் ஊன்றிச் சிறக்க; வளமும் வாழ்வும் பெறுக என வாழ்த்துவதும் எம் கடமையாம். பிறர் ஆயிரம் வகையாகச் சொன்னாலும் வாழ்நாளெல்லாம் பாரதிதாசனாராகவே இருந்தவர், கனகசுப்புரத்தினம்! பாவேந்தர், புரட்சிக் கவிஞர் - எவர் என்ன சொன்னாலும், அவர் பாரதிதாசனாகவே இருந்தார்! பாரதியாரால் பாரதிதாசனார் பெற்ற பேறு உண்டு! பாரதிதாசனா ரால் பாரதியார் பெற்ற பேறும் உண்டு! வரலாற்றுண்மை அறிவாரே அறிவார்! தாய் எட்டடி என்றால் குட்டி பதினாறடி என்பதை நாடு கண்டதும் உண்டு! பாரதியார் பெற்ற பேறுகளுள் தலையாய பேறு, பாரதிதாசனைப் பெற்ற பேறு! ghuâjhr‹ bg‰w ngW ‘ghntªj¤ bjhFâfis xU nru¥ gâ¥ã¡f¥ bg‰w ngW! அப்பதிப்பைக் காண அவரில்லை என்றாலும், அறிவறிந்த மகனார், மன்னர் மன்னரும் குடும்பத்தவர் களும் உள்ளனர் அல்லரோ! தா தா கோடிக்கு ஒருவர் என்ற ஔவையாரை நினைத்தும், அதற்குத் தக வாழ்ந்த தந்தையை நினைத்தும் பூரிக்கலாமே! வாழிய நலனே! வாழிய நிலனே! திருவள்ளுவர் தவச்சாலை, இன்ப அன்புடன் அல்லூர், திருச்சிராப்பள்ளி. - இரா. இளங்குமரன்  நுழையுமுன் ... இருபதாம் நூற்றாண்டின் இணையிலாப் பெரும் பாவலர்களாக விளங்கியவர்கள் இந்திய தேசியப் பாவலர் பாரதியாரும், தமிழ்த் தேசியப் பாவலர் பாவேந்தர் பாரதிதாசனும் ஆவர். இவ்விரு பெரும் பாவலர்களும் தமிழ்க் கவிதைப் போக்கில் புதுநெறி படைத்த புதுமைப் பாவலர்கள்; புரட்சிப் பாவலர்கள். பாரதியாரைப் போலவே பன்முக ஆளுமை கொண்டவர் பாவேந்தர். பாரதியார் எவ்வாறு கவிதை, கட்டுரை, படைப்பிலக்கியம், இதழியல் முதலிய பல்துறைக் கொடை ஞரோ அதேபோலப் பாரதிதாசனும் கவிதைச் செல்வர், கட்டுரை வன்மையர், நாடக ஆக்கர், சிறுகதைஞர், புதினர், இதழாளர், வீறுசான்ற பொழிஞர் எனப் பல்திறம் சான்ற மாபெரும் படைப்பாளி. புரட்சிக் கவிஞரைப் பாவேந்தர் என்று அறிந்த அளவிற்கு அவரின் பிற துறைத் தமிழ்க் கொடைகளைப் பற்றித் தமிழ்மக்கள் ஏன்? தமிழறிஞர்கள்கூட அறிந்துகொள்ளவில்லை. அதற்குக் காரணம் அவருடைய பல்துறைப் படைப்புகள் அனைத்தும், முழுமையாகத் திரட்டியும் தொகுத்தும் வெளியிடப்பெறவில்லை. பன்னெடுங்காலமாக இருந்துவந்த இப் பெருங் குறையை நீக்கும்வண்ணம் எம் தமிழ்மண் பதிப்பகத்தின் வழிகாட்டுதலோடு இளங்கணி பதிப்பகம் பாவேந்தரின் அனைத்துப் படைப்புகளையும் தொகுத்தும், பகுத்தும் பாவேந்தம் எனும் சீரிய தலைப்பில் இருபத்தைந்து தொகுதிகளாக வெளியிடுகிறது. இதற்கு முன்னரே பாவேந்தர் கவிதைகள் அவர் காலத்திலேயே தொகுப்புகளாகவும், தனி நூல்களாகவும், வெளியிடப்பெற்றன. அவர் மறைவுக்குப் பின்னர் தொகுப்பாளர் சிலரும் பதிப்பாளர் சிலரும் பாவேந்தரின் பாடல்கள், கட்டுரைகள், கதைகள், நாடகங்கள் முதலிய வற்றைத் தொகுத்துப் பதிப்பித்துள்ளனர். எனினும் அத் தொகுப்புகளில் பாவேந்தர் படைப்புகள் அனைத்தும் இடம்பெறவில்லை. புதுவை முரசு, குயில் முதலிய இதழ்களில் இடம்பெற்ற படைப்புகள் பல விடு பட்டுள்ளன. தொகுப்புகளில் இடம்பெற்ற படைப்புகள் தொகுப்பாளர் அல்லது பதிப்பாளரின் விருப்பு வெறுப்புக்கேற்ப படைப்புகளின் சேர்க்கையும், விடுபாடும் அமைந்தன. தனித்தனித் தொகுப்பாளர்கள் தொகுத்ததால் ஒரே படைப்பு ஒன்றுக்கு மேற்பட்ட தொகுப்புகளில் இடம்பெற்றது. இப் படைப்புகளில் ஒரு பதிப்பிற்கும் இன்னொரு பதிப்பிற்கும் தலைப்பு, பாடல் அடிகள், சொற்கள் ஆகியவற்றில் சில பிழைகளும், முரண்களும் காணப்படுகின்றன. இதனால், எளிய படிப்பாளிகள் மட்டுமன்றி ஆய்வாளர்களும்கூடக் குழப்பமடைய நேர்ந்தது. இத்தகையக் குறைபாடுகளைத் தவிர்க்கும் நோக்கிலும் பாவேந்தரின் எல்லாப் படைப்புகளையும் திரட்டித் தரவேண்டும் என்ற சீரிய எண்ணத்தின் அடிப்படையில் பாவேந்தம் தொகுதிகளைத் இளங்கணி பதிப்பகம் வெளியிடுகிறது. இளங்கணி வெளியிடும் இப் பதிப்பில் இதுவரை வெளியிடப் பெற்றுள்ள பாவேந்தர் நூல்கள் அனைத்திலும் உள்ள படைப்புகள் விடுபாடின்றி முழுமையாக இடம்பெற்றுள்ளன. மேலும், முன்னை நூல்களில் இடம்பெறாத, பதிப்பாளர்க்கு கிடைத்த சில படைப்புகளும் புதிதாக இடம் பெற்றுள்ளன. பாரதிதாசனின் படைப்புகள் அனைத்தும் பொருள் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பதிப்பாளர்க்கு கிடைத்த பாரதிதாசன் படைப்புகளில் முதல் பதிப்பில் உள்ளவாறே பாடல்கள் வெளியிடப்படுகின்றன. முதற்பதிப்பு கிடைக்காத நிலையில் உள்ள பாடல்கள் இரண்டாம் அல்லது மூன்றாம் பதிப்பில் உள்ளவாறு வெளியிடப்படுகின்றன. மேலும், பாடல்கள் இடம்பெற்ற புதுவை முரசு, குயில், பொன்னி, குடிஅரசு முதலிய இதழ்களும் பார்வையிடப் பெற்று அவற்றில் உள்ளவாறும் செம்மையாக்கம் செய்து வெளியிடப் பெறுகின்றன. பாடல்கள் அனைத்தும் அப் பாடலின் யாப்பமைதி சிதை யாமல் வெளியிடும் முயற்சி இப்பதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இயன்றாங்கு பாவகை, இனம் முதலியன சுட்டப்பெற்றுள்ளன. கட்டுரைகள் அவை இடம்பெற்ற இதழ்களில் வெளியிடப் பெற்றவாறு விடுபாடின்றியும், மாற்றமின்றியும் வெளியிடப்பெறுகின்றன. நாடகங்கள் முதலிய படைப்புகளும் இயன்ற வகையில் முதற்பதிப்பில் உள்ளவாறே அச்சிடப்பெறுகின்றன. இளங்கணி வெளியிடும் பாவேந்தம் தொகுதிகள் பாவேந்தர் படைப்புகள் அனைத்தையும் முழுமையாக உள்ளடக்கியவை. எனினும், இவ்வளவு முயற்சிக்குப் பின்னும் முன்னை இதழ்களில் இடம்பெற்ற மடல்கள், வாழ்த்துகள் முதலியவற்றில் இடம்பெற்ற சில கையெழுத்துப் படிகள் பதிப்பாளர்க்குக் கிட்டாமையாமல் விடு பட்டிருக்கலாம். அத்தகைய படைப்புகள் எவரிடமேனும் இருந்தாலோ எதிர்காலத்தில் எவர்க்காவது கிடைத்தாலோ அவற்றைப் பதிப்பகத் தார்க்கு வழங்கினால் மிகுந்த நன்றியுணர்வோடு வழங்குநர் பெயரை யும் சுட்டி அடுத்த பதிப்புகளில் உரிய இடத்தில் வெளியிடப்பெறும். பாவேந்தர் வாழ்ந்த காலநிலைகளுக்கேற்ப அவர் கருத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் அவரின் படைப்புகளிலும் வெளிப்படுகின்றன. இப்பதிப்பு பொருள் அடிப்படையில் பெரும்பாலும் காலவரிசையில் தொகுக்கப்பெற்றுள்ளன. எனினும் படைப்புகள் வெளிவந்த - மூலம் கிட்டிய இடத்து வெளிவந்த நாள் சுட்டப்பெற்றுள்ளது. இப்பதிப்பு, பாவேந்தரை முழுமையாகப் படித்தறிய விரும்பும் படிப்பாளிகளுக்குச் சிறிது கூழ் தேடுங்கால் பானையாரக் கனத்திருந்த வெண்சோறு காண்பது போன்ற இன்பமும் பயனும் நல்குவது. எளிய படிப்பாளிக்கு மட்டுமல்லாமல் பாவேந்தர் ஆய்வாளர்களுக்கும் பெருந்துணை செய்யும் ஒரு பெரும் தமிழ்ப் பண்டாரம். பாவேந்தரின் பன்முக ஆற்றலையும், கொள்கை மாற்றங்களையும் கொண்ட கொள்கையையும், அதில் அசையாது நின்ற பற்றுறுதியையும் அறிந்துகொள்ளப் பெருந் துணையாக அமைவது இப்பதிப்பு. நீண்ட நெடிய முயற்சி, தொடர்ந்த கடுமையான உழைப்பு, பாவேந்தர் ஆய்வாளர்களின் உதவி ஆகிய வற்றின் சீரிய விளைச்சலாய்த் தமிழ் உலகிற்குத் தரப்பெறும் இப் பதிப்பு மேலும் செம்மையாக்கத்திற்கு உரியது என்பதையும் சுட்டவேண்டியது எம் கடன். - இரா. இளவரசு  வலுவூட்டும் வரலாறு பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் படிப்பும் அதிகாரமும் பதவி வாய்ப்பும் 1908-க்கு முன்பு பார்ப்பனர்களின் பிடியிலிருந்த காலம்! 1912-இல் சி.நடேசனாரால் திராவிடர் சங்கம் அரும்பியது. முப்பெரும் தலைவர்களாக விளங்கிய சி.நடேசனார், சர்.பிட்டி தியாகராயர், டி.எம்.நாயர் ஆகிய பெரு மக்களால் 1916இல் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் மலர்ந்தது. 26.12.1926 இல் தந்தை பெரியார் அவர்களால் சுயமரியாதை இயக்கம் உருக்கொண்டது. 27.8.1944இல் திராவிடர் கழகம் உருவம் பெற்றது. தமிழர்கள் அரசியல் உணர்ச்சி, விடுதலை உணர்ச்சி பெறுவதற்கும், கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் குமுகாய வாழ்விலும் முன்னேற்றம் காண்பதற்கும் தமிழர் என்னும் இன எழுச்சியை ஊட்டுவதற்கும் தோன்றிய இயக்கம்தான் பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் எனும் திராவிடர் இயக்கம் ஆகும். தனித்தமிழ் இயக்கம் 20ஆம் நூற்றாண்டின் தொடக்க காலம் தமிழர்களின் நெஞ்சில் வடமொழி நஞ்சு படிந்திருந்த காலம். வடமொழி (சமற்கிருதம்) வல்லாண்மையின் ஊடுருவலை எதிர்த்துத் தமிழ் மொழியின் தொன்மையையும், அதன் தனித்தன்மையையும் - கலை இலக்கியப் பண்பாட்டுக் கூறுகளையும் காப்பதற்காக 19.11.1908இல் விருதை சிவஞான யோகியால் திருவிடர் கழகமும், 1916இல் மறைமலை அடிகளால் தனித்தமிழ் இயக்கமும் தோற்றுவிக்கப்பட்டன. தூய தமிழியக்கத்திற்கு விதையூன்றியவர் விருதைச் சிவஞான யோகியார்; செடியாக வளர்த்தவர் மறைமலை அடிகளார்; மரமாக தழைக்கச் செய்தவர் பாவாணர்; உரமும், நீரும் வழங்கி காத்தப் பெருமை பாவலரேறு பெருஞ்சித்திரனார் உள்ளிட்டப் பெருமக்கள் பலருக்கும் உண்டு. தமிழர் நாகரிகத்தின் உயர்வை எடுத்துச் சொல்வதற்காகவும் - ஆரிய மாயையில் சிக்கிய தமிழினம் மேலெழுந்து நிற்பதற்காகவும் - வடமொழி வல்லாண்மையிலிருந்து தமிழ்மொழியை மீட்டெடுப்பதற் காகவும் தோன்றிய இயக்கம் தனித்தமிழ் இயக்கம்! தமிழ் காப்பின் கூர்முனையாக வெளிப்பட்டது மொழிப்போர் வரலாறு! முதல் இந்தி எதிர்ப்புப் போர்: 1937 - 1938 சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த சி.இராசகோபாலாச் சாரியார் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார். இதனை எதிர்த்து தந்தை பெரியார், நாவலர் ச.சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகளார் முதலியோர் தலைமையில் பல்லாயிரவர் (ஆண், பெண், குழந்தைகள் உட்பட) சிறை புகுந்தனர். பெரியாருக்கு ஈழத்து அடிகள், பாவேந்தர் பாரதிதாசன், கா.சு.பிள்ளை, கி.ஆ.பெ.விசுவநாதம் முதலிய தமிழ் அறிஞர்கள் துணை நின்றனர். தாளமுத்து - நடராசன் போன்ற தமிழ் மறவர்கள் சிறையில் மாண்டனர். அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி தலைமையில் தமிழர் பெரும்படை திருச்சியிலிருந்து சென்னை நோக்கி போர்ப்பரணி பாடிக்கொண்டு நடைப்பயணமாக வந்தனர். இவ் வழிநடைப் பயணத்தில்தான் அஞ்சாநெஞ்சன் அழகிரியின் வேண்டுகோளுக்கிணங்க பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் எழுதப் பட்ட எப்பக்கம் வந்து புகுந்துவிடும் இந்தி... எத்தனைப் பட்டாளம் கூட்டிவரும் என்ற உணர்ச்சிமிகுந்த இந்தி எதிர்ப்புப் பாடல் பிறந்தது. தமிழர் படையினருக்கு இப் பாடலே போர்ப்பரணி பாடல் ஆனது. 21.2.1940 ஆம் நாள் கட்டாய இந்தித் திணிப்பு அரசால் கைவிடப்பட்டது. இரண்டாவது இந்தி எதிர்ப்புப் போர்: 1948 - 1949 இந்தியா அரசியல் விடுதலைப் பெற்றபின் நடுவணரசு மீண்டும் இந்தியை பள்ளிகள் உட்பட எல்லாத் துறைகளிலும் திணிக்க முற் பட்டது. ïjid v⮤J¥ bgÇah® jiyikÆš kiwkiy mofŸ, âU.É.f., அறிஞர் அண்ணா உள்ளிட்ட அரும்பெரும் சான்றோர்கள் போர்க் களம் புகுந்தனர். இதன் விளைவாக தமிழ்நாட்டுப் பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடமாக ஆக்கப்படுவதும், அரசுத் துறைகளில் நடைமுறைப் படுத்தப்படுவதும் நிறுத்தப்பட்டது. மூன்றாவது இந்தி எதிர்ப்புப் போர்: 1952 தமிழ்நாட்டில் உள்ள தொடர்வண்டி நிலையங்களின் பெயர்ப் பலகைகளில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தைத் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் நடத்தின. தமிழ் உணர்வுக்கனல் அணையாமல் காக்கும் முயற்சி தொடர்ந்தது. நான்காவது இந்தி எதிர்ப்புப் போர்: 1965 நடுவணரசு எல்லாத் துறைகளிலும் இந்தி மட்டுமே ஆட்சி மொழி என நடைமுறைப்படுத்த முயன்றது. இதனை எதிர்த்துத் தமிழ் மாணவர்கள் தமிழ் நாட்டின் ஊர்ப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் ஐம்பது நாள்களுக்கு மேல் கடும் போர் நடத்தினர். அரசின் அடக்கு முறைக்கு 500க்கு மேற்பட்டோர் உயிரை இழந்தனர். தமிழகம் போர்க் கோலம் பூண்டது, இதனைக் கண்டு மைய அரசும் - மாநில அரசும் பணிந்தன. இந்தி ஆட்சி மொழியாவது ஒத்தி வைக்கப்பட்டது. மொழி காக்க தமிழ் மாணவர்கள் நடத்திய இந்தப் போராட்டம்தான் தமிழ் நாட்டின் மொழிப்போர் வரலாற்றில் வியந்து பேசப்படும் வீரப்போர் ஆகும். வியட்நாம் விடுதலைக்காகப் புத்த துறவியர் தீக்குளித்து இறந்த செய்தி அறிந்த கீழப் பழுவூர் சின்னச்சாமி திருச்சி தொடர்வண்டி நிலையத்தில் தமிழுக்காகத் தன் உடலின்மீது தீ மூட்டிக் கொண்டு மாண்டார். அவரைத் தொடர்ந்து தமிழ் மான மறவர்கள் அடுத்தடுத்து ஒன்பது பேருக்கு மேல் மாண்டனர். அதனால் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புக்கான உணர்ச்சி வேகம் பீரிட்டுக் கிளம்பியது. இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க சுவடுகள் அவை. 1965 இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்துக்கு மாணவர் தலைவர்கள் மூளையாக இருந்து செயல்பட்டனர். இப் போராட்டம் கிளர்ந்தெழுவதற்கு திராவிடர் இயக்கத்தின் பங்கும், தனித்தமிழ் இயக்கத்தின் பங்கும் பேரளவாகும். அதன் விளைவுதான் இன்றுவரை பேராய (காங்கிரசு)க்கட்சி தமிழ்நாட்டு ஆட்சிக் கட்டிலில் அமர முடியாத நிலை! திராவிட இயக்கம் தொடர்ந்து தமிழ் மண்ணில் ஆட்சிக்கட்டிலில் அரசோச்சும் நிலை! இன்றைய இளம் தலைமுறையினர் தமிழ்-தமிழர் மறுமலர்ச்சி இயக்கங்களின் கடந்தகால வரலாற்றை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டவேண்டும். அந்தப் பார்வையை ஆழப் படுத்துவதற்கும் வலுப் படுத்துவதற்கும் பாவேந்தம் (25 தொகுதிகள்) பயன்படும். - கோ. இளவழகன் நிறுவனர், தமிழ்மண் பதிப்பகம்.  பதிப்பின் மதிப்பு தமிழுக்கும் - தமிழர்க்கும் - தமிழ்நாட்டிற்கும் நிலைத்த பயன் தரக் கூடிய நூல்களை எழுதி வைத்துச் சென்ற பெருந்தமிழ் அறிஞர்களின் அறிவுக் கருவூலங்களையெல்லாம் தமிழ்மண் பதிப்பகம் குலை குலையாக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருவதை உலகெங்கும் வாழும் தமிழர்கள் அறிவர். தமிழ்மண் பதிப் பகத்தின் பதிப்புச் சுவடுகளை பின்பற்றி தமிழ்த் தேசிய இனத்தின் தனிப் பெரும் பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய அனைத்து நூல்களையும் ஒருசேரத் தொகுத்து, பொருள்வழிப் பிரித்து இயன்றவரை கால வரிசைப் படுத்தி, இளங்கணிப் பதிப்பத்தின் வாயிலாக பாவேந்தம் எனும் தலைப்பில் 25 தொகுதிகளை தமிழ்கூறும் நல்லுலகம் பயன்பெறும் வகையில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். பாரதிதாசன் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், தமிழினத்தின் நீண்ட நெடிய வரலாற்றில், சங்க காலப் புலவர்களுக்குப் பிறகு மண்மணம் கமழும் படைப்புகளால் மானுட மேன்மைக்கு வளம் சேர்த்தவர். மக்களோடு மக்களாக வாழ்ந்து மக்கள் மொழியில் மக்களுக்காக எழுதியவர்; தமிழ்த் தேசிய எழுச்சிக்கு அடித்தளம் அமைத்து புரட்சிப்பண் பாடியவர். பெரியாரின் கொள்கை மாளிகையில் இலக்கிய வைரமாய் ஒளிவீசியவர். தமிழ்மொழியைக் கல்வி மொழியாக, வழிபாட்டு மொழியாக, இசை மொழியாக, அலுவல் மொழியாக, சட்டமன்ற மொழியாக, வணிக மொழியாகக் கொண்டு வருவதற்கு தம் வாழ்வின் இறுதிவரைப் போராடியவர். தமக்கென வாழாது தமிழ்க்கென வாழ்ந்தவர்; தம்மை முன்னிலைப்படுத்தாது தமிழை முன்னிலைப்படுத்தியவர்; தம் நலம் பாராது தமிழர் நலம் காத்தவர்; தமிழர் தன்மான உணர்வு பெற உழைத்தவர். மாந்த வாழ்வை முன்னிலைப்படுத்தி மக்களுக்கு அறிவெழுச்சி ஊட்டியவர். உறங்கிக் கிடந்த தமிழினத்தை தட்டி எழுப்பி உயிரூட்டியவர். முடக்குவாத குப்பைகளையும், மூடப்பழக்க வழக்கங்களையும் தமிழ்மண்ணில் இருந்து அகற்றிட அருந்தொண்டாற்றியவர். சாதிக் கொடுமைக்கு ஆளான தாழ்த்தப்பட்டோரின் பக்கம் நின்று தாழ்த்தப் பட்டார் சமத்துவப் பாட்டு எனும் தனி நூலைப் படைத்தவர். இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு பற்றி பாவேந்தத் தொகுப்புகளின் பதிப்பாசிரியர்களுள் ஒருவரும், என் வணக்கத்திற்குரியவருமான பேராசிரியர் முனைவர் இரா.இளவரசு அவர்கள் எழுதிய இந்திய விடுதலைப் இயக்கத்தில் பாரதிதாசன் என்னும் நூலினை தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. காண்க. பாவேந்தர் பாரதிதாசன் நூல்களைத் தமிழகத்திலுள்ள பல்வேறு பதிப்பகத்தார் தனித்தனி நூல்களாக பல்வேறு காலக்கட்டங்களில் வெளியிட்டுத் தமிழ் உலகிற்கு வழங்கி உள்ளனர். அவர்களை இவ் வேளையில் நன்றி உணர்வோடு நினைவு கூர்கிறோம். அரசோ, பல்கலைக் கழகங்களோ, அற நிறுவனங்களோ, பெரும் செல்வர்களோ செய்யவேண்டிய இப் பெருந் தமிழ்ப் பணியை பெரும் பொருளியல் நெருக்கடிகளுக்கிடையில் வணிக நோக்கமின்றி தூக்கிச் சுமக்க முன்வந்துள்ளோம். எம் தமிழ்ப் பணிக்கு ஆக்கமும், ஊக்கமும் தருவீர்கள் என்ற நம்பிக்கையில் இத் தொகுப்புகளை வெளிக் கொணர்ந் துள்ளோம். திராவிடர் இயக்க - தனித் தமிழ் இயக்க வேர்களுக்கு வலுவூட்டும் அறிஞர்கள் முதுமுனைவர் இரா. இளங்குமரனார், முனைவர் இரா. இளவரசு, முனைவர் கு. திருமாறன், முனைவர் பி. தமிழகன் முதலிய பெருமக்கள் பாவேந்தத் தொகுப்புகள் செப்பமாக வெளிவருவதற்குப் பல்லாற்றானும் துணைநின்று நெறிப்படுத்தி உதவினர். சொற்களால் எப்படி நன்றி உரைப்பது! அவர்களை நெஞ்சால் நினைந்து வணங்கி மகிழ்கிறோம். தமிழினம் தன்மான உணர்வுபெற்று உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்பதற்கு இப் பாவேந்தத் தொகுப்புகள் படைக் கருவிகளாகத் திகழும் என்ற நம்பிக்கையோடு உங்கள் கைகளில் தவழவிடுகின்றோம். தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை! தனக்கென வாழ்வது சாவுக்கொப்பாகும் தமிழுக்கு வாழ்வதே வாழ்வதாகும் இமையேனும் ஓயாது தமிழுக்கு உழைப்பாய்! எனும் பாவேந்தர் வரிகளை இளந்தமிழர்கள் நெஞ்சில் நிறுத்தி, தமிழுக்கும் -தமிழருக்கும்-தமிழ்நாட்டுக்கும் தம்மாலான பங்களிப்பைச் செய்ய முன்வரவேண்டும் எனும் தொலைநோக்குப் பார்வையோடு இப் பாவேந்தத் தொகுப்புகள் வெளிவருகின்றன. - பதிப்பாளர்  இலக்கியப் பெரியார் பாவேந்தர்! பஞ்சிலிருந்து திரியையும் உருவாக்கலாம்; திரையையும் உருவாக்கலாம்! விளக்கின் வெளிச்சத்தைக் கூடுதலாக்கத் திரி உதவும்; வெளிச்சத்தை மறைக்கத் திரை உதவும். படைப்பாற்றலும் அறிவும் பஞ்சு போன்றவை. அவை எந்த நோக்கத்திற்குப் பயன்படுகின்றன என்பதைப் பொறுத்தே திரியா, திரையா என்னும் தெளிவு கிடைக்கும். சிந்திக்கவும் ஏற்றத் தாழ்வைச் சீர்படுத்தவும் உதவும் எழுத்து வாசிப்போர் மனத்தை வெளிச்சமாக்கும், அது திரி! மூடத்தனத்தைச் சுமந்துவரும் எழுத்து, வாசிக்கும் மனத்தை இருட்டாக்கிவிடும், அது திரை! இத்தகைய எழுத்தாளர்களிடமிருந்து விலகி நிற்கவேண்டும் என்று எச்சரிப்பார் பாவேந்தர் பாரதிதாசன். பழமை வாதத்தைத் தாங்குவோர் அவருக்குப் பழிகாரராகவே தெரிவார். அழியாத மூடத் தனத்தை - மிக அழகாய் வரைந்திடும் பழிகாரர் தம்மை முழுதாய்ந்த பாவலர் என்பார் - இவர் முதல்எழுத்(து) ஓதினும் மதிஇருட் டாகும் (பக். 7) வழக்கம் என்பதற்காக எதையும் அப்படியே ஏற்றுக்கொள்வதை ஏற்றுக்கொள்ளாதவர் பாவேந்தர். வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல் கழுத்து போயினும் கைக்கொள்ள வேண்டாம் (பக். 92) புதிய சிந்தனைகளால் மாந்த மனத்தை மேம்படுத்த விரும்புவோருக்கு எத்தனையோ இடையூறுகள் முளைத்தபடி இருக்கும். பழமைவாதம் குறுக்கே பாயும். பணப் பெட்டிகள் ஆசை காட்டும். அடக்குமுறை அச்சுறுத்தும். முற்போக்குச் சிந்தனை யோடு எழுந்தோர், தொடர்ந்து தடுமாறாமல் நடைபோடுவது கடினம்! குறிக்கோளில் உறுதியும் தெளிவும் இருப்போரிடம் மட்டுமே, நிலையான கொள்கைப் பயணம் தொடர்ந்தபடி இருக்கும். அஞ்சியோ பிறர்பால் ஆவது கருதியோ வயிறு தன்னை வளர்க்க எண்ணியோ பெற்றதன் கொள்கையைப் பிறர்கை மாற்றுவோன் உற்றது உரைக்கும் ஒழுக்கம் தீர்ந்தவன் கொள்கையை விலைக்குக் கொடுக்கும் மனிதன் மனிதருள் வாய்ந்த மனித விலங்கு. (தொகுதி 15; பக். 337) மனிதர், மனித விலங்கு - இருபிரிவும் நம்மைச் சுற்றி உண்டு. உருவத்தால் எல்லோரும் மாந்தரே. உள்ளத்தாலும் செயலாலும் மாந்தர் களாவதற்குத் தடுமாறாத குமுகாயச் சிந்தனை வேண்டுமென்கிறார் பாவேந்தர் எழுதும் முறைக்கும் அவர் வழிகாட்டுவார். சிறிதளவே எழுதி னாலும் நிறையப் படிக்கவேண்டும் என்பார். பிறரை நகலெடுப்பது அறிவு வறுமையின் அடையாளமாம்! புதிய அறிவையும் புதிய மனத்தை யும் பெறத் தொடர்ந்து உழைக்கவேண்டும் என்று அறிவுறுத்துவார். சிறிதெழுதத் தேடி நிறையப் படிப்பாய்! பிறர்அடி பார்த்துப் பிழைப்போன் - வறியன்! கருவி விருப்பாய் அறிவுநிலம் கல்லி வருவி புதிய மனம். (பக். 334) புதிய மனம் பெற்றிருந்த பாவேந்தர் நீண்ட வாழ்நாளையும் பெற்றிருந்தார். குமுக மாற்றத்திற்கான எல்லாத் துறைகளையும் சிந்தித்தார். அவற்றை எழுத்தாக்கினார். தமக்குப் பின் பெரிய எழுத்தாளர் படையை பாவேந்தர் பரம்பரை எனத் திரளச் செய்தார். கடவுள் சிந்தனையோடு எழுந்து, காந்தியச் சிந்தனையால் வளர்ந்து, பெரியாரியச் சிந்தனையாளராக மலர்ந்தார். கடவுளை மதங்களைக் காப்பவர் என்போர் கருணை யிலாநிலம் பொருள்நனி கொண்டோர் உடைமை பறித்தஇக் கொடியரில் கொடியர் ஒழிந்தபின் பேநலம் உறுவர்இவ் வுலகோர் முதுகில் அமர்ந்த முதலாளி மூளையில் அமர்ந்த மதவாதி (பக். 347) இரு தரப்பையும் துடைத்தெறிவதன் மூலமாக உலகம் நலமடை யும் என்பதை இவ்வரிகளால் பாரதிதாசன் தெளிவுபடுத்துகிறார். மக்கள் வாழ்வைப் பின்னோக்கி இழுக்கும் ஒவ்வொன்றையும் பாரதிதாசன் கேள்விக்கு உள்ளாக்கினார். கைத்திறனும் வாய்த்திறனும் கொண்ட பேர்கள் கண்மூடி மக்களது நிலத்தை யெல்லாம் கொத்திக்கொண் டேப்பமிட்டு வந்த தாலே கூலிமக்கள் அதிகரித்தார் ... (பக். 14) என்று உழைப்போரின் வறுமைக்குக் காரணம் கூறினார். பாதிக்கு nதபசிvன்றுரைத்jல்செய்தgவத்தைக்fரணம்fட்டுவார்- kதtதத்தைcம்மிடம்Úட்டுவார்- gதில்Xதிநின்wல்படைTட்டுவார்(பக்.73) தலையெழுத்தையும் பாவத்தையும் காரணமாகக் காட்டி, வறுமையைச் சுமக்கச் சொல்லும் மதவாத ஏமாற்றைத் தோலுரித்தார். நன்றிக்கு வாழ்ந்திட வேண்டும் - உரம் வேண்டும் - திறம் வேண்டும் - உன் நாட்டிற்கே நீவாழ வேண்டும் - நம் ஞாலப் பெரியார் செல்லும் பாதை யினை விடாதே விடுதலைப் பெரும்பயன் ஈண்டும்! (தொ. 18; பக். 47) காரணம் கேட்டுக் கடைபிடிக்கச் சொல்லும் பெரியாரின் பகுத்தறிவுப் பாதையில் அணிவகுக்குமாறு வலியுறுத்தினார். வீழ்ந்தவர் பின்னர் விழிப்பதற் கேஅடை யாளம் - வாய் விட்டிசைப் பீர்கள்சுயமரி யாதைஎக் காளம். (பக். 160) தன்மான இயக்கத்தின்கீழ் தமிழர்களை ஒன்றுகூடச் சொன்ன பாரதிதாசன், தாமும் ஒருவராய் நின்று வாழ்நாள் இறுதிவரை பணி யாற்றினார். பகுத்தறிவுத் துலாக்கோலில் பழந்தமிழ் இலக்கியங்களையும் எடைபோட்டுக் காட்டியது பாவேந்தர் செய்த புதுமை! திருமூலர் பாடியவை 3000 பாடல்கள் எனச் சேக்கிழார் பாடி யுள்ளார். திருமந்திரத்தில் இப்போது 47 பாடல்கள் கூடுதலாக உள்ளன. அவை இடைச் செருகல்தானே என்று அவர் வினா எழுப்பினார். ‘மூவா யிரம்சொன்னார் மூலன்என்றார் சேக்கிழார் பாவேது மேல்நாற்பே னேழ்? (பக். 176) திருமந்திரத்தின் முதற்பாடல் ஒன்றவன்தானே எனத் தொடங்கும் என்கிறார் சேக்கிழார்! ஐந்து கரத்தனை என இப்போதுள்ள முதற் பாடல் இடைச்செருகல் அல்லவா! திருமூலர் காலத்தில் விநாயகர் வணக்கம் ஏது? இலக்கிய உலகிற்குப் பாவேந்தர் புதுக் குருதி பாய்ச்சினார். ஒன்றவன் தானே எனல்என்று சேக்கிழார் நன்று நவின்றாரன் றோ? ஐந்து கரத்தனை ஆனதொரு செய்யுள்செய்து முந்தவைத்தார் மூலன்நூ லில் (பக். 176) எல்லோரையும் படைத்தவர் கடவுள் என்றால், கோவிலுள் நுழையும் வலிமையும் எல்லோருக்கும் உண்டு! நாயும் காக்கையும் நுழையும் கோவிலில் தாழ்த்தப்பட்டோர் நுழைவதைத் தடுக்கிறார் களே! நாயை விடவா அவர்கள் கேவலம்? என பாவேந்தர் கேட்டார். குக்கலும் காகமும் கோயிலிற் போவதிற் கொஞ்சமும் தீட்டிலையோ - நாட்டு மக்களிலே சிலர் மாத்திரம் அந்த வகையிலும் கூட்டிலையோ? (பக். 139) தாழ்த்தப்பட்டோர் சமத்துவப்பாட்டு எனத் தனிநூலே படைத்தார். அச்சமும் மடமையும் இல்லாத பெண்கள் அழகிய தமிழ்நாட்டின் கண்கள் (பக். 83) பெண்களைப் புதுமைப் பெண்களாக்க விரும்பினார் பாவேந்தர். தொழிலாளர், பெண்கள், தாழ்த்தப்பட்டோர் என எந்தப் பிரிவினர் ஒடுக்கப்பட்டாலும் பாவேந்தர் பாடல் உரிமைக் கனல் கக்கியது. ஒடுக்குமுறை உலகத்தின் எந்த மூலையில் எழுந்தாலும் பாவேந்தர் எதிர்ப்புக் குரல் பாட்டாய்க் கனன்றது. வியத்நாமில் அமெரிக்கா நடத்திய அட்டூழியமும், பாவேந்தரின் எதிர்ப்புக்குத் தப்பவில்லை. அமெரிக்கக் காலடியில் வியத்நாம் மக்கள் ஆயிரம்ஆண் டானாலும் பணிவ தில்லை (பக். 313) இந்தியாவில் அடைக்கலம் புகுந்த தலாய்லாமா - பாவேந்தருக்கு வேடனாகத் தெரிந்தார். திபேத்து வேடனார் இந்தியா வந்தார் (பக். 380) என்று குருவிகளை எச்சரித்தார். உண்மையை உணர்த்துவதும் பரப்புவதும் கடினம் என்பதை உணர்ந்த அவர், போகும் போக்கில் கூறினார். பொய்க்குக் காலில்லை சிறகுகள் உண்டு (பக். 308) காலால் நடக்கும் உண்மையைவிட, சிறகாய் பறக்கும் பொய் விரைவாய்ப் போய்ச் சேர்ந்துவிடும்! உண்மையைச் சார்ந்து நிற்போருக்கு, உழைக்கும் நெருக்கடி கடுமையாய் இருப்பது இயற்கை! சமுதாயம் சார்ந்த ஒடுக்குமுறைகளை மாற்ற முனையும் வேகத்துடன் வெளிப்பட்டவை பாவேந்தர் பாடல்கள்! அதற்காக அவர் ஏற்ற எதிர்ப்பும் இழப்பும் ஏராளம். அவற்றை இத் தொகுப்பில் ஒன்றுதிரட்டி பார்ப்பது இதுவரை கிடைக்காத வாய்ப்பு. தமிழ்மண் பதிப்பகம் திரு. கோ. இளவழகன் அவர்களின் மகன் இனியன் பாவேந்தரின் படைப்புகள் அனைத்தையும் பாவேந்தம் என 25 தொகுப்புகளாக இளங்கணி பதிப்பகம் வழி வழங்க முன்வந் திருப்பது தமிழுலகம் பெற்ற பேறு! சமுதாயம் சார்ந்த பாவேந்தரின் பாடல்கள் அடங்கிய இத் தொகுப்பு புதிய உலகை உருவாக்கும் சிந்தனையைப் படிப்போர் மனத்தில் உருவாக்கும்! - செந்தலை ந. கவுதமன்  பாவேந்தம் (பொருள்வழிப் பிரித்து இயன்றவரைக் காலவரிசையில் தொகுக்கப்பட்டுள்ளது.) தொகுதி - 1: இறைமை இலக்கியம் நாட்டுப் பாடல் இலக்கியம் 1. மயிலம் ஸ்ரீ ஷண்முகம் வண்ணப்பாட்டு 2. மயிலம் ஸ்ரீ சிவசண்முகக் கடவுள் பஞ்சரத்நம் 3. மயிலம் சுப்பிரமணியர் துதியமுது 4. கதர் இராட்டினப் பாட்டு 5. சிறுவர் சிறுமியர் தேசிய கீதம் 6. தொண்டர்படைப் பாட்டு தொகுதி -2 : காப்பிய இலக்கியம் - 1 1. எதிர்பாராத முத்தம் 2. பாண்டியன் பரிசு தொகுதி - 3 : காப்பிய இலக்கியம் - 2 1. குடும்ப விளக்கு முதற் பகுதி (ஸ்மக்குஞ் னீகிஞீயூரூ) இரண்டாம் பகுதி (றீமஷீபிந்குக்ஷிகீஙூ) மூன்றாம் பகுதி (ர்மநிடிக்ஷி) நான்காம் பகுதி (நிமீகிய்பிகீர) ஐந்தாம் பகுதி (ஓர்பிஹகுது கிகுந்ஙூ) 2. இருண்ட வீடு தொகுதி - 4 : காப்பிய இலக்கியம் - 3 1. காதலா? கடமையா? 2. தமிழச்சியின் கத்தி தொகுதி - 5 : காப்பிய இலக்கியம் - 4 குறிஞ்சித்திட்டு தொகுதி - 6 : காப்பிய இலக்கியம் - 5 1. கண்ணகிப் புரட்சிக் காப்பியம் 2. மணிமேகலை வெண்பா தொகுதி - 7 : கதை, கவிதை, நாடக இலக்கியம் (சிறு காப்பியம்) கதைப் பாடல்கள் 1. சஞ்சீவி பர்வதத்தின் சாரல் 2. புரட்சிக் கவி 3. பெண்கள் விடுதலை 4. எது பழிப்பு? 5. வெப்பத்திற்கு மருந்து 6. கடவுளைக் கண்டீர் 7. உரிமைக் கொண்டாட்டமா? 8. வீட்டுக் கோழியும் காட்டுக் கோழியும் 9. கற்புக் காப்பியம் 10. நீலவண்ணன் புறப்பாடு 11. இறைப்பது எளிது பொறுக்குவது அரிது! 12. பச்சைக்கிளி 13. திருவாரூர்த் தேர்! கவிதை நாடகங்கள் 1. வீரத்தாய் 2. கடல்மேற் குமிழிகள் 3. நல்லமுத்துக் கதை 4. அகத்தியன் விட்ட புதுக்கரடி 5. போர் மறவன் 6. ஒன்பது சுவை 7. அமிழ்து எது? தொகுதி - 8 : உரைநடை நாடக இலக்கியம் - 1 1. இரணியன் அல்லது இணையற்ற வீரன் 2. நல்ல தீர்ப்பு 3. கற்கண்டு 4. பொறுமை கடலினும் பெரிது 5. அமைதி 6. சௌமியன் தொகுதி - 9 : உரைநடை நாடக இலக்கியம் - 2 1. படித்த பெண்கள் 2. சேரதாண்டவம் 3. இன்பக்கடல் 4. சத்திமுத்தப் புலவர் 5. கழைக் கூத்தியின் காதல் தொகுதி - 10: உரைநடை நாடக இலக்கியம் - 3 1. பிசிராந்தையார் 2. தலைமலை கண்ட தேவர் 3. குடும்ப விளக்கும் குண்டுக்கல்லும் 4. ஆரிய பத்தினி மாரிஷை 5. ரபுடீன் 6. அம்மைச்சி 7. வஞ்சவிழா (ன்கீகுபீணூ) 8. விகடக் கோர்ட் 9. கோயில் இருகோணங்கள் 10. சமணமும் சைவமும் 11. குலத்தில் குரங்கு 12. மருத்துவர் வீட்டில் அமைச்சசர் 13. குழந்தை நாடகம் (ஓமூஒயி கூகீஹங்) 14. மேனி கொப்பளித்ததோ? (ஸ்ம கிகுய்ரூ ரூர க்குநூகிக்ஷி) 15. நிமிஷ நாடகம் தொகுதி - 11 : உரைநடை நாடக இலக்கியம் - 4 1. குமரகுருபரர் I & II 2. இசைக்கலை 3. பறவைக் கூடு 4. மக்கள் சொத்து 5. ஐயர் வாக்குப் பலித்தது 6. திருக்குறள் சினிமா: 1. ஙமீகிக்ஷி, 2. ன்றீகூக்ஷ 7. கொய்யாக் கனிகள் (கிறீகூந் க்குநூகிக்ஷி) தொகுதி - 12 : உரைநடை நாடக இலக்கியம் - 5 1. போர்க்காதல் 2. படித்த பெண்கள் 3. ஆனந்த சாகரம் 4. புரட்சிக்கவி 5. சிந்தாமணி 6. லதா க்ருகம் 7. பாரதப் பாசறை 8. கருஞ்சிறுத்தை 9. ஏழை உழவன் 10. தமிழச்சியின் கத்தி! 11. பாண்டியன் பரிசு தொகுதி - 13 : கதை இலக்கியம் 1. கடவுள் மகத்துவம் 2. பண்டிதர்க்குப் பாடம் 3. முட்டாள் பணம் அம்மையின் பெட்டியில் 4. வைத்தால் குடுமி 5. தாசி வீட்டில் ஆசீர்வாதம் 6. முதலாளி - காரியக்காரன் (கிநூழீஞ் றீஜீஹமூர்ஙூ குமீக்ஷீயுகூந்) 7. ஆற்றங்கரை ஆவேசம் 8. சேற்றில் இறைந்த மாணிக்கங்கள் 9. கண்ணுக்குத் தெரியாத சுமை (ஸசுஙிபீகுளிட்கி ஹகுமூர்கூயு) 10. பகுத்தறிவுக்குத் தடை 11. தேரை விட்டுக் கீழே குதித்தான் சல்லியராசன் மோரை விட்டுக் கூழைக் கரைத்தான் 12. சுயமரியாதைக்காரருக்கு அமெரிக்கரின்கடிதம் 13. வேல் பாய்ந்த இருதயம் (றீந்கூபீகிஞ் ஒஹது) 14. திருந்திய ராமாயணம்! (கீகுட் கிகுதீநூக்ஷி-ஸநூணீபிகீகுங் கீநூட்க்ஷி) 15. இதயம் எப்படியிருக்கிறது? (யகூஏகிஞ் ரூபுமீக்ஷீஹிகுதுகிஞ்) 16. காதலும் சாதலும் 17. தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது 18. புதைந்த மணி 19. ரமணிப் பாப்பா 20. மனச்சாட்சி 21. காதல் வாழ்வு 22. தேசியப் பத்திரிகைகள் 23. உனக்கு ஆசைதான்! சாமிக்கு? 24. அடி நொறுக்கிவிடு 25. அதிகார நரி (நிகுங்கிணூங் ஸ்ஙீரகூநி கிதீக ப்ஙுரூ றுஹிஷீந்ஒ) 26. காகத்தை என்செயப் படைத்தாய்? 27. வீடு நிறைய அவர்கள் 28. அவர்கள் அயலார் 29. பழம் நழுவிப் பாலில் விழுந்தது 30. படம் இயக்கி (Director)Æ‹ தங்கை 31. புலவர் முண்டைக்கண்ணி ஆம்படையான் 32. பெறத்தக்க ஒன்று பெற்றுவிட்டேன் (ப்பீநக்ஷி க்குஈக்ஷி) 33. முயற்சியே வாழ்வு, சோம்பலே சாவு 34. மனத்துன்பத்துக்கு மருந்து 35. அனைவரும் அவர்களே! 36. அஞ்சிய உள்ளத்தில்... 37. வைகறைத் துயிலெழு! 38. தமிழ்ப் பற்று! 39. அன்னை 40. விஞ்ஞானி 41. பக்த ஜெயதேவர் 42. ஆத்ம சக்தி 43. ஏழை உழவன் (அல்லது) முகுந்த சந்திரிகை 44. அனைவரும் உறவினர் 45. ஆலஞ்சாலையும் வேலஞ்சேரியும் 46. வாரி வயலார் வரலாறு அல்லது கெடுவான் கேடு நினைப்பான் தொகுதி - 14 : திரை இலக்கியம் 1. திரை இசைப் பாடல்கள் 2. திரைக்கதை - வசனங்கள் 1. காளமேகம் 2. ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி 3. பொன்முடி 4. வளையாபதி 5. பாண்டியன் பரிசு 6. முட்டாள் முத்தப்பா 7. மகாகவி பாரதியார் வரலாறு 8. சுபத்ரா 9. சுலோசனா தொகுதி - 15 : பாட்டு இலக்கியம் 1. தமிழ் 2. தமிழர் 3. தமிழ்நாடு 4. திராவிடன் 5. இந்தி எதிர்ப்புப் பாட்டு தொகுதி - 16 : பாட்டு இலக்கியம் 1. காதல் 2. இயற்கை தொகுதி - 17: பாட்டு இலக்கியம் சமுதாயம் தொகுதி - 18: பாட்டு இலக்கியம் 1. சான்றோர் 2. இளையோர் 3. வாழ்த்துகள் தொகுதி - 19 : மடல் இலக்கியம் பாரதிதாசன் கடிதங்கள் தொகுதி - 20: கட்டுரை இலக்கியம் - 1 வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? தொகுதி -2 21 : கட்டுரை இலக்கியம் - 2 1. வள்ளுவர் உள்ளம் 2. பாட்டுக்கு இலக்கணம் 3. கேட்டலும் கிளத்தலும் தொகுதி - 22 : கட்டுரை இலக்கியம் - 3 புதுவைமுரசு கட்டுரைகள் தொகுதி - 23 : கட்டுரை இலக்கியம் - 4 குயில் கட்டுரைகள் தொகுதி - 24 : கட்டுரை இலக்கியம் - 5 1. குயில் கட்டுரைகள் 2. பிற இதழ்க் கட்டுரைகள் 3. பாரதியாரோடு பத்தாண்டுகள் தொகுதி - 25 : கட்டுரை இலக்கியம் - 6 1. சொற்பொழிவுகள் 2. பயன் கிண்டல்கள் 3. ஐயாயிர வருடத்து மனிதன் (ஸக்கயீகிகூந்) 4. தனிப் பாடல்களுக்கு விளக்கம் 5. இதுவரை அச்சில் வெளிவராதப் பாடல்கள்  நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர்: முது முனைவர் இரா. இளங்குமரன் முனைவர் இரா. இளவரசு முனைவர் பி. தமிழகன் பிழை திருத்த உதவியோர்: பா. மன்னர் மன்னன் (பாவேந்தர் மகன்), முதுமுனைவர் இரா. இளங்குமரன், முனைவர் இரா. இளவரசு, முனைவர் கு.திருமாறன், முனைவர் பி. தமிழகன், புலவர் செந்தலை ந. கவுதமன், புலவர் கருப்பையா, புலவர் ஆறுமுகம், இராமநாதன், நாக. சொக்கலிங்கம், செல்வி அ.கோகிலா, திருமதி வசந்தகுமாரி, திருமதி அரு. அபிராமி நூல் உருவாக்கம் நூல் வடிவமைப்பு: திருமதி வ.மலர், மயிலாடுதுறை சி.இரா. சபாநாயகம் மேலட்டை வடிவமைப்பு: திருமதி வ.மலர் அச்சுக் கோப்பு: திருமதி வ. மலர், திருமதி கீதா நல்லதம்பி, திருமதி குட்வில் செல்வி, திருமதி அனுராதா, திரு விஜயகுமார் உதவி: அரங்க. குமரேசன், வே. தனசேகரன், மு.ந. இராமசுப்பிரமணிய ராசா, இல. தர்மராசு தாள் வழங்கியோர்: சிவா தாள் மண்டி, சென்னை. எதிர்மம் (Negative): பிராசசு இந்தியா சென்னை. அச்சு மற்றும் நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு பல்லாற்றானும் இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் .. பொருளடக்கம் பொங்கல் மாமழை iii நுழையுமுன்... vii வலுவூட்டும் வரலாறு x பதிப்பின் மதிப்பு xiii இதழாசிரியர் xv புதுவைமுரசு கட்டுரைகள் 1. புதுவை முரசு 3 2. பெண்கள் சமத்வம் 6 3. வராஜ்யம் 15 4. புதுவை - கெப்ளே தியேட்டரில் சுப்பையா பாகவதர் நாடகம் 18 6. நேர் வழி 25 7. கிறீஸ்தவர் கோயிலில் நடுக் கூடப் பிரேமை 27 8. சுயமரியாதைத் தொண்டர் மகாநாடு 30 9. கடவுளைத் திட்டவில்லை; கடவுள் பேரால் நடக்கும் ஆபாசங்களையே வெறுக்கின்றோம் 32 10. தென்னாப்பிரிக்கா லக்ஷப்பிரபு! 36 11. நமது விண்ணப்பம் 39 12. சைவர்களும் வைஷ்ணவர்களும் 41 13. ஜாதி ஆபத்து - எம்டன் கப்பல் வரவு 44 14. குழந்தை இந்தியா 46 15. அடே! எருமைமாடே! சாமி விளையாட்டா? 48 16. விஷயங்களைப் புதிப்பியுங்கள்! 52 17. சாதிரிகள் பிரசங்கம் 55 18. புதுவைச் சித்தன் குடிசையில் குருபூசையாம் 56 19. மேற்கோள் பண்டிதர்க்கு 59 20. ஒண்டவந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டுவதா? 60 21. இனியாவது புத்தி வருமா? 61 22. பொருக்கு மணிகள் 62 23. சவுண்டிப் பாப்பானின் குறும்பு 65 24. முஸ்லீம் வைதிகர்களுக்குச் சரியான சவுக்கடி 67 25. வெண்ணெய் வாழைதான் ஆனால் குலை தள்ள வேண்டும் 69 26. சனியனை வணங்குவது சரியா? 72 27. ஊழ் 75 28 . கடவுளும், கற்பும் 76 29. மோதிலால் நேரு மரணம் 81 30. வேதமா? பேரமா? 82 31. பல்லாவரத்தில் பண்டிதர்கள் 84 32. முருகனது பிறப்பு 86 33. உற்சவ மறியல் 88 34. சீர்திருத்தக்காரர்களின் கஷ்டம் 91 35. பிரேதக்குழி ஜெபம் 94 36. டாக்டர்களுமா சுயமரியாதையை எதிர்க்க வேண்டும்? 96 37. ஓர் குருப்ரசாதியின் அதிகப்ரசங்கம் 101 38. திரும்பிப்பார்! முன்னேறு! 103 39. துக்கடா - பக்கடா 106 40. சுயமரியாதைக்காரர்களே தொலைந்து போய்விடுங்கள்! 109 41. தக்ளியும் ராட்டினமும் 111 42. சுயமரியாதை எங்கள் அப்பன்வீட்டுச் சொத்தல்ல 114 43. இன்னுமா அஞ்ஞானத்தில் மூழ்கி இருக்கவேண்டும் 117 44. தூத்துக்குடி காரைக்குடி மகா eடுகள் 119 45. இந்து முஸ்லீம் ஒற்றுமை 122 46. குறுகிய பார்வை 124 47. என்ன அற்ப புத்தி! 126 48. சொல்வதென்ன? நடப்பதென்ன? 128 49. அறிஞர் வீராஸ் மறைந்தார் 131 50. ஹிந்திப் புரட்டு 133 51. மானிடம் போற்று! 137 52. புதுவையில் பெருங்காற்று! 140 53. கடவுள் உண்டா? 142 54. விருதுநகரில் நாம் செய்யவேண்டியதென்ன? 145 55. சென்னையிலுங்கூட முட்டாள்கள் உண்டு 147 56. கிறீதவர் கருமாதி 151 57. திரு. ராமநாதனுக்கு ஜே! 155 58. கடவுள் வேண்டியதில்லை 158 59. ஆதிகமே அறிவைக் கெடுத்தது 160 60. வராஜ்யம் வேண்டும் 163 61. கடவுளின்மைக் கொள்கை கற்பிப்பது என்ன? 166 62. காந்தியார் கக்கும் விஷம் 169 63. தமிழரசில் வெறிநாய்கள் 173 64. அன்னியம் என்பது எது? 177 65. வக்கீல் கடையா? கள்ளுக் கடையா? 181 66. இது மெய்தானா! 182 67. சோம்பேறித் தனந்தான் கடவுளோ? 183 68. மனிதன் மனிதனுக்குச் சொன்னவை 185 69. வாழ்வு, சமத்வம், சகோதரத்வம் சுதந்தரம் 186 70. மனிதரா? சாமியாரா? 192 71. ஙங்ஙஃ 195 72. பரமண்டலத்திலிருக்கும் பரமசிவனுக்கோர் பகிரங்கக் கடிதம் 198 73. லௌகிகத்தின் துஷ்டப்பிள்ளை வைதிகம் 212 74. ஹிந்து ஆசிரியரின் தேசபக்தி 221 75. மறந்து விடாதீர்கள் 222 76. ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தில்! 224 77. தமிழரசின் தறுதலைத்தனம் 227 78. கோவில்களை ïடிக்கலாமா? 229 79. கதரா? தூக்குக் கயிறா? 232 80. லிங்கங்கட்டி விகடச்சக்கரம் 234 81. தமிழரசில் குடியர்கள் 236 82. பால்ய விவாகக் கொடுமை 238 83. காந்தியின்மேல் நம்பிக்கையில்லை 243 84. தமிழுக்கு ஆபத்து 247 85. வட்டமேஜையில் காடைக் கூடுகள் 250 86. மூளை வைத்யம் 253 87. தண்டபாணியா? பிள்ளையா? 259 88. ஸ்ரீ பாலவிநோத சபா 260 89. கடவுள் ருஷ்டியா? 262 90. சுந்தரவிநாயகர் கண்ட்ராக்டர் 265 91. ஆதி திராவிடர்கட்குச் சோதனைக் காலம் 268 92. கோவை அய்யாமுத்துக் கவுண்டனுக்கு அறிவிப்பு 272 93. கனம் ரொபேர் கெப்ளே வழக்கு 278 94. காந்தி பிரயாணமும், ராமசாமி பிரயாணமும், தோலும் சுளையும் 281 95. சக்கரவர்த்தியின் சாகசம் 285 96. சென்னைக் கோட்டையில் வெடிகுண்டு 289 97. தண்டொட்டி போடலாமா? 294 98. காந்திக்கு ஏற்படுத்திய சிறையில் வெள்ளைக்காரனின் காதைப்பிடித்துத் தூக்கிப் போடலாம் 296 99. சர்க்கார் சமூகத்திற்கு 300 100. சர்க்கார் சமூகத்திற்கு 302 101. நமது கடமை யென்ன? 304 102. தமிழரசின் மித்திரபேதம் 310 103. நமது வால்போஸ்ட் ஆக்ஷேபம்! 312 104. தடுத்தாட் கொள்வோம் 313 105. தோழர் காந்தி கடவுள் அவதாரமா? 315 106. இந்துமதத்தில் பெண் கல்வியின் பரிதாபநிலை 318 107. பெண் உலகத்திற்கு ஜே! 320 108. அகில மலாயா தமிழர் மகாநாடு 325 109. விதவைகள் துயரம் 328 110. ஆசிரியர்களே விழித்தெழுங்கள் 332 111. ஆசிரியர்களே விழித்துக்கொள்ளுங்கள் 334 112. குழந்தையும் தெய்வமும் கொண்டாடுமிடத்தில் 335 113. திக்கற்றவர்கட்குத் துணை 338 114. இனி என்ன செய்யப்போகிறீர்கள்? 342 115. அறிவிருக்கிறதா? 345 116. மிஸ். மேயோவும் தமிழ்நாடும் 346 117. வாத்தியார் ஒற்றுமைச் சங்க யோக்யதை 349 118. திரு. உமாமகேவரம் பிள்ளை உள்ளக் கிளர்ச்சி! 351 119. நூற்றைக் கெடுக்கும் குறுணி 354 120. சேசுநாதர் வருகை 356 121. எங்கும் பணக்கஷ்டம் 359 122. திருவிழாக்களும் தேரோட்டமும் 361 123. பாதிரிமார்களின் பயமுறுத்தல் 363 124. சுயமரியாதை இயக்கமும் விவாகரத்தும் 367 125. பிரஞ்சிந்திய தமிழ்ப் பண்டிதர்களுக்கு முக்கிய வேண்டுகோள் 371 126. எம்.சி. ராஜா எதிர்ப்பு 372  புதுவைமுரசு கட்டுரைகள் 1. புதுவை முரசு புதுவை - புதுச்சேரி. இது பாரத நாட்டில் பிரஞ்சுக் குடியரசாட்சியை யுடைய ஐந்து ஊர்களில் ஒன்று. மற்றவை காரைக்கால், சந்திரநாகூர், மாஹி, ஏனாம் என்பனவாம். இவற்றில் தலைநகர் இப் புதுவையே. முரசு-இது முரைசு, முரசம் என்றும் வழங்கும். முரசு ஒலிபெருக்கும் கருவி. அது பண்டைத் தமிழ்ப் பெருமக்கள் உடைமை; இன்றும் உண்டு. சந்தர்ப்பத்தால் முரசை மூன்றுவிதமாக மொழியப்படும். அவை மணமுரசு, போர் முரசு, வெற்றி முரசு என்பனவாம். பண்டைத் தமிழர் திருமணத்தில் முரசு முழக்கினர்; இன்னும் உண்டு; இது மணமுரசு. மன்னர், போருக்கு ஆயத்தப்படுங்கால் முரசு ஒலிப்பர்; இது போர் முரசு; அவர் போரில் வெற்றி பெற்றது குறித்து முரசு அறைவர்; இது வெற்றி முரசு. இனி, முரசு என்பது அரசர்க்குரிய பத்து உறுப்புக்களின் ஒன்று பத்தாவன; ஊர், யானை, கொடி, செங்கோல், காடு, குதிரை, மலை, மாலை, ஆறு, முரசு. இவைகளையே தசாங்கம் என்பர் வடநூலார். மன்னர் வாழும் அரண்மனையில் முரசுக்குத் தனியிடம் உண்டு. புதுவை முரசு என்பதற்குப் புதுவையிலுள்ள மக்களில் ஒரு தொகுதியினரின் முழக்கம் என்பது தேர்ந்த பொருள். அம் முழக்கத்தை யுடையது புதுவை முரசுப் பத்திரிகை என்க. òJitÆYŸs xU bjhFâÆd® Mth® aht®?- அவர்தாம் சுயமரியாதைக் கொள்கை யுடைய கூட்டத்தார் என்று பட்டவர்த்தனமாய் அறிக. சுயமரியாதை என்பதற்குத் தன்மானம் என்பது பொருளா தலின் தேசமக்கள் எவரும் தம் மரியாதையைக் காத்தல் வேண்டும் என்பதே சுயமரியாதைக் கொள்கையாம். தேட்டம் மரியாதை காணும் மகி தலத்தீர் என்னும், ஔவை மொழிந்ததாய் வழங்கும் இம்முதுமொழியும் காண்க. உலகத்தி லுள்ளவர்களே நீங்கள் ஒவ்வொருவரும் தேடத்தக்கது சுயமரியாதை என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள் என்பது அம்முதுமொழியின் கருத்தாகும். சுயமரியாதைக் கொள்கை ஓர் மதமன்று; மக்களின் முன்னேற்றத் துக்குத் தடை செய்வனவற்றை நீக்குவதாலும்; அரண் செய்வனவற்றை ஆக்குவதாலும், தேசமக்கள்பால் சுயமரியாதைக் கொள்கை உதிக்கும். ஆதலின் சுயமரியாதைக் கொள்கையைத் தேசத்தில் இயக்குவதோர் இயக்கம் எனவேண்டும். சுயமரியாதைக் கொள்கை இயக்கம், சுயமரியாதை இயக்கம், சு.ம. இயக்கம் இவையனைத்தும், விரிவாகவும் சுருக்கமாகவும் ஒரு பொருள் குறிப்பன. இனி இவ்வியக்கம் கண்டார் திருமிகு ஈ.வே. ராமசாமி என்க. அவர் எத்தன்மை வாய்ந்தார் எனின், தேச மக்கள்பால் அன்னையன்பு உடையவர்; அம்மக்களின் நலங்கருதி யுழைப்பதில் எவ்வகை எதிர்ப்புக்கள் நேரினும், அவற்றை எட்டுணையும் பொருட்படுத்தாத அஞ்சா நெஞ்சு படைத்தவர்; முதுமையில் இளமைத் தன்மை வாய்ந்தவர்; சுயநலம் வேண்டாதவர்; அறிவர்; ஆதலிற் பெரியார். இனி - இச்சுயமரியாதைக் கொள்கை மக்களால் ஏற்றுக் கொள்ளப் பெறுகின்றதோ என்று வினவுவர். விடை கூறப்படும்; மலை யுச்சியின் ஓர் முடுக்கை ஊற்றிடமாகக் கொண்டதொரு நதி- பெருக் கெடுத்துத் தடைகளைச் சாடி - முழக்கஞ்செய்து ஓடிக் - கிளைத்து - ஏரி, வாய்க்கால், குளம், வயல் முதல் எங்கணும் பாய்ந்து சென்ற இடத்தெல்லாம் சிறந்து விளங்குதல் போலப்-பெரியார் இயக்கிய இவ்வியக்கம் தான்செல்லாத தமிழகம் உலகில் இல்லாதது. என்னும்படி பரந்து சிறப்புறுகின்றது. கைம் மேற் பலன் காட்டும் அக்கதியே போல், இவ்வியக்கமும் மெய்ம்மைப் பலன் தந்து மிளிர்கின்றது. இதைச் சுயநலத்தால் சிலர் எதிர்ப்பார் போன்று விளக்கமுறச் செய்வதாலும், இதை ஒப்புக்கொள்வோம் என்று வாயளவிலும் எழுத்தளவிலும் உரைப்போர் தம்மையும் அறியாது அகத்தில் சுயமரியாதை ஒளிபெற்றுச் செய்கையால் அவ்வொளி விளக்கலாலும், வானில் எறிந்த கல் நிலத்தில் விழும் என்ற உண்மை போல் மக்களின் ஈடேற்றும் சுயமரியாதை யியக்கத்தால் தான் உண்டு என்னும் உண்மையும் நிலைநிறுத்தப் பெறுகின்றது. சுய நலத்தால் மறியல் போடுவோர்களும் சுயமரியாதைக் கொள்கைக்கு நலன் இழைப்பார் ஆயினர் எனில், மற்றவர்களது சுயமரியாதைக் கொள்கையும் - வரனும் ஒளியும் என்க. இச்சுயமரியாதை பற்றி இரண்டாம் முறையாக ஈரோட்டில் பெருமக்கள் கூடித் தீர்மானித்த தீர்மானங்களை வேறுபக்கம் காண்க. அத்திட்டங்களில் பிரஞ்சிந்திய மக்கள் நிலைக்கு ஒவ்வாதன போன்றவை சில காணப்பட்டால் அவைகளின் திருத்தம் சகிதம் அச் சுயமரியாதைக் கொள்கைகளைப் பிராஞ்சிந்திய மக்கள்பால் பரவச் செய்து அவர்கட்குக் கிடைத்துள்ள சுதந்தரம்- சமத்வம்- சகோதரத்வம் என்னும் மூன்றின் உண்மை நலன்களை அவர்கள் அநுபவிக்கும் வகையில் பிரஞ்சுக் குடியரசு வாழ்க. என முழங்குவது நம் புதுவை முரசின் கடனாம். இதுவன்றிப். பொதுவில் இமயமுதல் குமரியீறாக உள்ள பாரதப் பெருமக்களும், மற்றும் ஜல ப்ரதேசங்களில் வாழும் பாரத மக்களும், பிரஸ்தாபக் கொள்கையில் ஈடுபட்டு இன்பம் அநுபவிக்குமாறு புதுவை முரசு உழைத்துவரும். பெரும்பாலும் ஆங்கில அரசாட்சிக் குட்பட்ட தென்னாட்டில் இச்சுயமரியாதை இயக்கத்திற்கு அடிக்கடி எதிர்ப்புக்களும், பயமுறுத்தல்களும், தோன்றி மறைகின்றன ஆதலால் அவற்றிற்குத் காரணராய் இருக்கும் எதிர்ப்பவரும், பயமுறுத்துபவரும், எவராயி ருப்பினும் அவர்களின் செல்வாக்கிற்கோ, பதவிக்கோ நாம் அஞ்சி நமது முழக்கத்தினளவைக் குறைக்கவோ, மறைக்கவோ வேண்டிய தில்லை என்பதை இங்கு அறிவிக்க விரும்புகிறோம். புதுவை முரசின்பால் அன்புகூர்ந்து அது வெளித்தோன்றுமாறு ஆதரவு காட்டியவர்கட்கும் உள்நாடு வெளிநாடுகளிலிருந்து கவிகள் கட்டுரைகள் வரைந்தனுப்ப ஒத்துக்கொண்டுள்ள கவிஞர்கட்கும், அறிஞர்கட்கும் நாம் நன்றி செலுத்துகிறோம். இனிப் புதுவை முரசின் முன்னேற்றங்கருதியும் நாட்டின் நலன் கருதியும் உள்நாடு வெளிநாடுகளில் உள்ள தமிழ்ப் பெருமக்கள் அனைவரும் இதன் சந்தாதாரர்களாய்ச் சேர்ந்து உதவிசெய்ய வேண்டுகிறோம். புதுவை முரசு என்ற பெயரோடு இப்பத்திரிகையை நாம் தோற்றுவிக்க அனுமதி தந்துதவிய நம் பிரஞ்சிந்திய சர்க்காருக்கு நமது மனமார்ந்த வந்தனத்தைச் செலுத்துகிறோம். - புதுவை முரசு, 10.11.1930, ப.10-12 2. பெண்கள் சமத்வம் நம் நாட்டில் பெண்கள் நிலைமையானது மிக்க கவலைக் கிடமானது - வேர் தொடங்கி உச்சிக் கிளைவரை - முழுதும் திருத்தம் செய்ய வேண்டும். பெண்களின் கேவல நிலைமைக்கு நம் நாட்டு மூடப் பழக்க வழக்கங்களே காரணம் என்று சொல்ல வேண்டும். பெண்கள் திருத்தம் அடைவதைப் பொறுத்தது. நாடு திருந்துவது. பெண்கள் ஆடவர்களினும் தாழ்ந்தவர்கள் என்ற கொள்கை பழமையானது. இந்தப் பழஞ்சாதம் முன்னேற்றங் கருதும் எவர்க்கும் ஒத்துக் கொள்ளாது; தள்ளிப்போட வேண்டும். ராமன் ஆட்சி நடத்திய காலத்து அந்நாட்டு மக்கள் சந்தோஷ மாக இருந்தார்கள் என்று சொல்ல வந்த ஓர் கவி (ஒட்டக்கூத்தர்) ஆ யிழையார்கள் எல்லாம் ஆண்மகப் பெறுகின்றார். என்றான். பெண்டிர் அனைவரும் ஆண்பிள்ளைகளே பெறுகின்றார்கள் என்று இதற்கு அர்த்தம். நம்மவர் பெண்பிள்ளை பெறுதலினும் ஆண்பிள்ளை பெறுதலே சிறப்பு என்று நினைப்பதால் அந்தக்கவி அவ்வாறு சொன்னான். ஒருவன் செத்துப் போனதும் அவனைக் குறித்து அவன் மகன் காலமெல்லாம் ஏதேதோ கிரியைகள் செய்ய வேண்டும் என்றும், அக்கிரியைகள் செய்யப் பெண்கள் ஏற்றவர்களல்ல என்றும், நம்மில் இருக்கும் ஒரு கொள்கையால் ஆண்பிள்ளை, பெண்களினும் சிறந்தவர் என்று மதிப்பது வழக்கம். செத்துப்போனவனைக் குறித்து மகன் எதுசெய்தும் பயனில்லை என்றும், பயன் உண்டு என்றால் மகன் செய்வதை மகள் செய்தாலும் குற்றமில்லை என்றும் நம்மவர் எண்ணும் வரைக்கும் ஆடவர் - பெண்கள் சமத்வம் உண்டாகாது. மகன்தான் சொத்துக்குரியவன்; மேலும் தந்தைக்குப் பின் உள்ள கிழவிகளைக் காப்பாற்றத் தக்கவன் என்னும் இக் கொள்கையோ வெனில் பழங்காலத்தில் பெண்களுக்குக் கல்வியில்லாமல் அவர்களை மரக்கட்டைகளாக்கி வந்ததின் பயனாய் ஏற்பட்டது. மகள் சொத்துக் குரியவள் ஆகும் நிலையை நாம் உண்டாக்க வேண்டும். இதனால் கிழவிகள் கௌரவமாகக் காப்பாற்றப்படுவார்கள். எந்தப் பெற்றோரும் மகனுக்குக் கல்வி தேடும் அத்தனை அக்கரையை மகளுக்குக் கல்வி தேடுவதில் செலுத்துகிறதில்லை. மகன் கல்வி கற்றால் பணம் சம்பாதிப்பான் என்று மாத்திரம் நினைக்கிறார்கள். மகள் கல்வி கற்றும் சம்பாதிக்க முடியும். அன்றியும் கல்வி கற்பது பணம் சம்பாதிக்க மட்டுமா? அறிவு பெறுவதற்கே கல்வி கற்பது. பெண்கள் கல்வி கற்றால் அறிவு பெற்றுத் திகழ்வார்கள்; வாழ்க்கைத் துணையாவார்கள். மேலும் அறிவுடையவள், அறிவுடைய பிள்ளையைப் பெறுவாள்; பண்படுத்தாத நிலத்தில் விழல்தான் முளையும், கோரைதான். ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமை என்றும் எண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்; வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார். - பாரதியார். ஆண்களைப் பெற்றால் தன் பேரைச் சொல்லுவான் என்று தந்தை சொல்லுவது வழக்கம். அதாவது மகனைக் கண்டு தான் இவன் இன்னார் குமாரன் அல்லவா என்று பிறர் நினைப்பார்களாம்! இது - மகள் ஒருவனுக்கு மனைவி ஆனபின் அவள் அவனுக்கு அடிமைப் பட்டு வீட்டில் அடைபட்டுக் கிடக்க வேண்டும்; அவள் பிறரைப் பார்த்தலும் பிறரோடு பேசுதலும் குற்றம் என்று நினைத்துக் கொண்டு வந்ததிலிருந்து உண்டாயிற்று. பெண்டிர்களிடம் ஆடவர் நம்பிக்கை வைத்தல் வேண்டும். வைத்தல் ஆடவரை நம்பிய பெண்களை அவ்வாடவர் மோசம் செய்து திரியும் அவ்வளவு, பெண்கள் தம்மை நம்பிய புருஷர்களை மோசம் செய்ய மாட்டார்கள். ஏனெனில் வாழ்க்கையில் ஆடவர்களை விடப் பெண்களுக்கே பொறுப்பும் நல்லெண்ணமும் அதிகம். M«!ஆம்! பெண்கள்தான் படித்து அங்கவதிரம் போட்டுக் கொண்டு வெளியிற் சென்று புரட்டிவிடப் போகிறார்களா என்று அடிக்கடி நம் நாட்டவர் கேட்பதுண்டு. நாமும் ஆம், ஆம் ஆடவர் மாத்திரம் படித்து அங்கவதிரம் போட்டுக் கொண்டு வெளியிற் போய்ப் புரட்டியதன் பயனாய் அதுவும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய்ப் புரட்டியதன் பயனாய் இன்று இந்தியர் என்றால் காறியுமிழாத பிற நாட்டினர் உண்டா என்று கேட்கிறோம். மற்றும் சமர்த்தில்லாத ஒருவனைப் பெண்ணுக்கு ஒப்பிட்டுச் சொல்வதை இந்தியாவில் மாத்திரந்தான் கேட்க முடியும். மற்ற நாட்டினர் பெண்களும் சமர்த்துள்ளவர்கள் என்பதைக் கண்டு கொண்டிருக்கிறார்கள். ‘g£l§fŸ MŸtJ« r£l§fŸ brŒtJ« ghÇʼn bg©fŸ el¤j tªnjh«; v£L« m¿ÉÅš MQ¡F ï§nf bg© ïis¥ãšiy fh©! என்று கும்மியடி என்னும் பாரதி வாக்கு இங்கு நினைப்பு வருகிறது. வாழ்க்கைக்கு, இன்றியமையாத விடாமுயற்சி அன்பு முதலிய குணங்களை ஆடவர்களிலும் பெண்களிடமே அதிகரித்திருக்கக் காணலாம். நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்று நான்கு குணங்களும் பெண்கள் உடையவர்கள் என்றும், உடையவர்களாய் இருந்துதான் ஆக வேண்டும் என்றும் நம் சாத்திரம் கூறும். அதாவது - பெண்கள் வெட்கப்படுகிறவர்கள். வெட்கப்பட்டே தீர வேண்டுமாம். பெண்கள் அறிவில்லாதவர்கள்; அறிவிருந்தாலும் இல்லாதவர்களாகவே நடந்து கொள்ள வேண்டுமாம். பெண்கள் அச்சம் உடையவர்கள்; அச்சம் இல்லாத இடத்தும் அஞ்ச வேண்டுமாம் பெண்கள் (பயிர்ப்பு) அசுத்த முடையவர்கள், அசுத்தமற்றபோதும் அசுத்தமுடையவர்களாய்ப் பாவித்து அவர்கள் நடந்து கொள்ள வேண்டுமாம். இப்படிச் சொல்லும் நமது பழஞ்சாத்திரங்கள் சமூகத்திற்கு இரண்டுவிதத் தீமைகள் புரிகின்றன. தற்காலம் முன்னேற்றமுறாத பெண்களைக் கிணற்றில் தள்ளிச் சௌக்யப்படுத்தச் சொல்லுகின்றன. தற்காலம் அரிதில் கவிகளாகவும் நீதிபதிகளாகவும் ஞாயவாதிகளாக வும் வெளிவந்துள்ள பெண்மணிகளையும் பின்னே தள்ளி அவர்களின் பதவிகளைப் பறிமுதல் செய்ய சொல்லுகின்றன. மாட்டையடித்து வசக்கித் தொழுவினில் மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே, வீட்டினில் எம்மிடம் காட்ட வந்தார் - அதை வெட்டி விட்டோம் என்று கும்மியடி (பாரதி) சமூகம் முன்னேற முயல்வது இயற்கை; சாத்திரங்கள் பின்னே இழுக்கின்றன. இதை நினைக்கையில் ராமராஜ்யம் ஆண் பிள்ளைகளையே பெற்றது, உண்மையாயிருந்து தொலைந்திருந்தால் அதன் பயனாய் பெண்களே இல்லாமற் போக, அதன் பயனாய் இந்தச் சமூகமே மண்ணுக்குள் மறைந்து போயிருக்கும். தொல்லையற்ற பாடு! பெண்கள் துணையின்றி வாழ முடியாத ஆடவர்கள் சொல் வதையும் கவனிப்போம். அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்றால், ஆடவர் துணையின்றிப் பெண்கள் வாழ முடியாதாம். இன்னும், மாதப் பூப்பு - கருப்பச் சுமை முதலிய அசந்தர்ப்பங்கள் பெண்கட்கு இருப்பதால் அவர்கள் ஆண்களோடு சமமாவது எப்படி என்று கேட்கலாம். அப்படிக் கேட்க இங்கு நாம் பெண்களே ஆண்கள் என்று சொல்லவில்லையே. அச்சுக் கூடத்தின் எழுத்துப் பெட்டிகளில் ஓர் ஒன்றும் (1) மற்றோர் ஒன்றும் (1) சேர்த்து பதினொன்று (11) என்பதை உண்டாக்கு கின்றன. மற்ற நேரங்களில் இந்த இரண்டு ஒன்றுகளும் வேறு வேலைக்கு உபயோகப்படக் கூடாதா? இரண்டு ஒன்றும் இவ்வாறு உபயோகப்படுவதில் சமம்தானே? அது போலவே ஒருவனும் ஒருத்தியும் சேர்ந்து பிள்ளைகளைப் பெறுகிறார்கள். மற்ற நேரங்களில் உலக காரியங்களில் சமமாகி உழைக்கட்டும், உழைக்க முடியும் என்கிறோம்; ஆணே பெண் என்று சொல்ல வரவேயில்லை. பழஞ்சாத்திரங்கள் சமூக முற்போக்கிற்குத் தடையாய் இருக்கின்றன. ஆதலால் அவைகளை வழிகூட்டியனுப்பிப் புதியன தேடிக் கொள்வோம் என்றால் முடியாது என்பர். சாத்திரப்படி நடவாதவரும் நடந்து தான் ஆகவேண்டும் என்பதுண்டு. சாத்திரம் என்பது முக்காலே மூன்று வீசம் ஒழிந்தது. மிகுதிவீசமும் ஒழிந்து தானே ஆக வேண்டும். சீக்கிரம் தள்ளித் தொலைத்தால் காலம் மிச்சமாகுமே என்றால் அதுவும் முடியாது. ஆனால் சிறைக்குள் இருப்பவனுக்குத் தகப்பனுடைய திவசம் ஞாபகம் வந்ததுபோல் நிர்ப்பந்த காலத்தில் சாத்திரம் அடியோடு பறக்கும் என்பது மெய். நாணம், மடம், அச்சம், பயிர்ப்புகளைப் பெண்கள் தலையில் முதன் முதல் ஏற்றிய ஒருவனை யும் அக்காலத்து அரசன் கழுவில் போட்டிருந்தால் இன்றைக்கு அந்த நான்கும் கடவுள் சொன்ன வேதக் கருத்தாக இரா. ஒத்துவராத சாத்திரங்களை அடியோடு தள்ளப் பெரியதொரு நிர்ப்பந்தமும் ஏற்பட்டிருக்கிறது. பின்னென்ன நாம் இப்போது கிடுகிடுவென்று வாழ்கின்றோமோ? நாம் சிறையில் கிடக்கின்றோம். அதிலும் சாகக் கூடிய நிலை. பெண்கட்கு இந்திய சமூகம் சமத்வ நிலையை உண்டாக்க வேண்டுமானால் சமூகத்தின் கண்ணும் கருத்தும் அந்த வேலை முடியுமட்டும் மற்றொன்றில் செல்லக்கூடாது. இச்சமூகமானது இந்நாள் மட்டும் தனது கண்ணையும் கருத்தையும் வைகுண்டத்திலும் கைலாயத்திலும் செலுத்திப் பரமசிவனையும், மகா விஷ்ணுவையும் பக்தரை ரக்ஷிசிக்கப் பூலோகத்தில் அடிக்கடி அழைத்ததன் பயனாகக் கொழும்புத் துறைமுகம் நிறைய இந்திய மக்கள் நின்றுகொண்டு அக் கரையில் சாப்பாட்டை நோக்குகின்றனர். பெண்களின் சமத்துவத்தில் சமுகம் முழுதும் கவனம் செலுத்தித்தான் பார்க்கட்டுமே. ஆனால் வாயளவில் மாத்திரம் கோட்டை கட்டக் கூடாது. பெண்கட்குச் சமத்வம் தேடுவது கஷ்டசாத்யந்தான். அதன் பயன் தெரிந்தால் நடந்துவிடக் கூடியது; பெண்களை ஒன்றுமில்லாமல் ஆக்குவது மாத்திரம் மிக்க எளிது. நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்ற நாலு சுவர்களையுடைய, சிறைக்குள் அவர்களைத் தள்ளி விட்டால் போதும். பெண்களைப் பெற்றோர் அப்பெண்கள் ஒருவனுக்கு வாழ்க்கைப் படும் வரைக்கும் தங்களுக்கு அடிமை என்கிறார்கள். தாங்கள் போடும் சாப்பாட்டைத்தான் அப்பெண்கள் சாப்பிட வேண்டும். தாங்கள் தரும் உடைகளைத்தான் அப்பெண்கள் கட்டிக் கொள்ள வேண்டும். அதிகம் கேட்கக் கூடாது. இவ்விஷயத்தில் அடிமைகள் அல்லவென்று சொல்ல வில்லை. அப்பெண்களின் ஜீவிய காலம் வரைக்கும் உதவியா யிருக்கும் மாப்பிள்ளை தேடுவதிலும் பெற்றோர் மாத்திரமே அதிகாரம் உடையவர்கள் என்பது சரியன்று. அதுவும் தங்களின் ஏகபோக இஷ்டம் என்று அவர்கள் நினைப்பதால் தான் தங்கள் பெண்களை மூன்று நான்கு வயதிலேயே தங்களுக்குச் சரியென்று சொல்லக்கூடிய நொண்டிக்கோ நொள்ளைக்கோ கிழவனுக்கோ விற்றுவிடுகிறார்கள். அல்லது இனாமாகக் கொடுத்து விடுகிறார்கள். இதனால்தான் அந்தக் கணவன் அப் பெண்மணியைத் தனக்கு அடிமை யென்று சொல்லச் சாத்தியப் படுகிறது. புல் ஆனாலும் புருஷன்; கல் ஆனாலும் கணவன் என்பது பழமொழியாம். அறிவுடைய பெண் தன் புருஷன் அடிமுட்டாள் எனினும் அவன் சொல்லுகிறபடியே அவள் கேட்க வேண்டும். மறுத்துப் பேசினால் உலகம் நகைக்குமாம். பால்யமணம் மிக்க நல்லது என்று சொல்லுபவர்களைப் பற்றி நாம் ஒன்றும் பேச முடியாது. அவர்கள் மிக்க பெரியோர்கள்; தாங்கள் பெற்ற பெண்களிடத்தும் பற்று அற்ற பரம யோகிகள். பருவ மணம் செய்யும் இயல்புள்ள பெற்றோர்கள் தங்கள் பெண்ணுக்கு நல்ல ஆதி தேடுவதிலும், பணக்கார மாப்பிள்ளை தேடுவதிலும் செலுத்தும் கவனத்தை அவள் ஊமையாகாதிருக்கச் செலுத்தினால் நலமாகும். பருவமடையும் தருணத்தும் அடைந்த பிறகும் பெண் தாய் தந்தையாரிடம் தனது உள்ளக் கிடக்கைகளை வெளியிட்டுச் சொல்லும்படி சிறுவயது முதலே பழக்கிவர வேண்டும். இதுவே பெண்ணுக்குப் பெற்றோர் செய்ய வேண்டியவைகளிற் ப்ரதானம் ஆகும். எந்தப் பெண் பெற்றோரிடம் தன் ஆசைகளைத் தெரிவிக்க வில்லையோ அவள் தன் வாழ்நாளில் துன்பத்தையே அனுபவிக்க நேரும். உள்ளக் கருத்தைத் தானே வெளியிடாத பெண்ணைப் பெற்றோரும் முனைந்து அவள் உள்ளத்தைத் தடவ வேண்டும். இப்படிச் செய்தால் மாத்திரம் போதாது. பெற்றோர்கள் தங்கள் பெண்களைச் செவிடுகளாகவும், குருடுகளாகவும் ஆக்கக் கூடாது. பருவப் பெண்கள் வெளியில் உலாவவும் எல்லாரோடும் கலந்து பேசவும் சந்தர்ப்பம் அளிக்க வேண்டும். இதனால் அபாயம் ஏற்பட்டு விடும் என்பவர்கள் உள்ளே அடைத்து வைப்பதால் அபாயம் ஏற்படுவதில்லையா என்பதையும் மற்றும் அதிலுள்ள கஷ்டங்களை யும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். பருவ மாதர்கள் வெளியிற் போகும் வழக்கம் கிராமங்களில் இன்றைக்கும் உண்டு. அதனால் அங்கு முழுகிப் போனது ஒன்றுமில்லை. ஏறக்குறைய பதினான்கு வயதில் ஒரு பெண் பருவமடைவதாய் வைத்தாலும் அதற்குள் அப்பெண் படிக்கும் படிப்பு அறிவு விருத்திக்குப் போதுமா? பெண்களை மறைத்து வைப்பவர்கள் அப் பெண்கள் விஷயத்தில் வெளியாரைக் கவனிக்கக் கூப்பிடுகிறவர்களா கவே ஆகிறார்கள். அடைபட்டுக் கிடக்கும் பருவப் பெண்தான் அடைபட்டுக் கிடப்பதற்குக் காரணம் தேடுவதன் மூலமாகக் கேட்டுக்குரிய எண்ணங்களை அடையவும் கூடும். மகன் விவாகம் ஆகியும் படிப்பதுண்டு; அது போல் மகளும் பருவமடைந்த பின்னும் விவாகமான பின்னும் படிக்க ஏன் இடங் கொடுக்கக் கூடாது? குழந்தைக் கலியாணம் தீர்ந்து பருவப் பெண்கள் படிப்பிலும் வெளியிற் சஞ்சரிப்பதிலும் ஆண் பிள்ளைகள் போலவே நடந்து கொள்ளும் நிலையேற்பட்டால் பெண் ஒருத்தி தானே தனக்குப் பிடித்த ஒருவனைக் குறிப்பிடும் நிலைமையும் உண்டாகும். உருப்படாத ஆசாமிகளை மாப்பிள்ளைகளாக்கப், பெற் றோர்கட்கு அப்போது மனமும் வராது. இந்தப் பொறுப்பும் பெற்றோரை விடும். அவள் தான் தேடிக்கொண்ட கணவன் சகிதம் குடும்பத்தைப் பொறுப்புடன் நடத்துவாள்; அவள் காலமெல்லாம் தன் பெற்றோர் தகாதவனைத் தனக்குத் தேடினார்கள் என்று பழிக்கவும் இடமிராது. நடப்பது இப்படி அன்று; அறிவற்ற பெண் அவள். பருவமடைந் ததும் வீடு அவளுக்கு அசல் சிறைச்சாலை. தன் நினைப்பை எவரிடத் தும் சொல்லுவதில்லை. காதற் கனவுகள் தோன்றிய நெஞ்சிலேயே மறைய வேண்டும். இந்த நிலையில் பெற்றோர்கள் அவளுக்கு நகை போடுவதாலும் பலகாரம் செய்து கொடுப்பதாலும் அவள் திருப்தி அடைந்துவிட்டதாக முட்டாள்தனமாக நினைக்கிறார்கள். அப்போதும் அவள் சின்னஞ்சிறு பெண் என்றுதான் அவர்கள் நினைக்கிறார்கள். அந்தப் பருவத்தின் மனோநிலை பெண்ணின் தாய் அறிந்திருந்தும் அவள் அறியாதது போல் இருந்து வருவதுண்டு. கன்னிகை ஒருத்தி சிற்றின்பம் வேம்பு என்னினும் கைக் கொள்வள் பக்குவத்தே என்பதையும் மெய் என்று நினைப்ப தில்லை. பிறகு மாப்பிள்ளை வீட்டுக்காரர் வீடு தேடி வந்தால் கலியாணப் பேச்சு நடக்கும். பெண்ணின் தகப்பனுக்குள்ள சந்தர்ப்பத் திற்குத் தகுந்த மாப்பிள்ளை அமைவது மெய். அழகற்றவனை அழகன் என்றும், அறிவற்றவனை அறிவுடையவன் என்றும் தீயவனை நல்லவன் என்றும் பெற்றோர் சந்தர்ப்பமானது நிச்சயிக்க வைப்பதுண்டு. கலியாண அத்தியாயத்தில் பெண்ணிடம் மாப்பிள் ளையைக்காட்டுவ தென்பதே கிடையாது. நாகரிகம் பழுத்தவர் களாய்த் தம்மை நினைத் திருப்பவர்கள் மாப்பிள்ளை ஒருவனை ஜாடையாகப் பெண்ணுக்குக் காட்டி, எந்த மாப்பிள்ளை தேவை? c‹ ïZl« v¥go? என்று கேட்பதும் உண்டு. பெண்ணிடம் காட்டப்பட்டவன் ஒருவன் தானே! அதில் அவள் பொறுக்கி எடுப்பது எப்படியோ! எல்லாக் கஷ்டத்தை யும் அவள் விழுங்கிக்கொண்டு அவள் நாணி நகைப்பாள். பிறகு கூலி பார்ப்பனன் கலியாணம் முடிப்பான். குடும்பம் நடக்க ஆரம்பிக்கும். ஒன்று ஒருபுறம் நடக்கும்; மற்றொன்று முலை வாரும். சில சமயங்களில் பெண்ணுக்குத் தக்க பிரியமுள்ள மாப்பிள்ளையும் அமைவதுண்டு. மாப்பிள்ளையின் தந்தை காசு மாலை போடாத காரணத்தால் அந்த மாப்பிள்ளை தவறி விடவும் கூடும். பின் காசு மாலை போடும் முட்டாளுக்குப் பெண் முடியும். தான் பெற்றெடுத்த பெண்ணை - தன் வண்டியை இழுக்கும் மாட்டுக்கோ தன்னைச் சுமக்கும் குதிரைக்கோ மனிதன் போல் இருப்பதால் ஓர் குரங்கிற்கோ தகப்பன் கலியாணம் செய்து கொடுத்ததில்லையே! தவிர பொருந்தா மணம் திருந்தாத நாட்டில் நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது. இந்நிலையை கவனிக்கும்போது பெண்களுக்கு இந்நாடு புண்ணிய பூமி என்பதில் தடையில்லை. பின்னென்ன? ஒரு பெண்ணை எவனிடம் ஒப்பித்தாலும் அவனிடம் அவள் அடங்கிச் சீக்கிரம் ப்ராணத்தியாகம் செய்கிறாள். அது புண்ணியந்தானே. இனி ஆறு மனைவியிடம் இன்பம் அனுபவித்த ஒரு புருஷன், அந்த ஆறாவது மனைவியை இழந்து ஏழாவது கலியாணத்திற்குப் பெண் தேடுவான்; அவனுக்கு ஒரு கணவனிடம் இன்பம் அனுபவித்த பெண்ணையோ அதுவும் அனுபவியாத பால்ய விதவையையோ மணம் செய்து கொடுக்க இச்சமூகச் சட்டம் இடங்கொடுக்கவில்லை. சாகுமட்டும் மனிதனுக்குப் பெண்ணின்பம் வேண்டும். பருவ மடைந்ததும் புருஷனை இழந்த புதுப் பெண்ணுக்கோ புருஷ இன்பம் தேவையிராதா? இந்த பாரத தேசத்தில் தான தருமம் நான்கு பாதத்தில் நடந்துகொண்டேயிருக்கிறது. கணவனை இழந்த பெண்ணை மறுமணம் செய்து கொடுக்கக் கண்ணாரக் கண்டு களிக்கும் பெற்றோர்கள் வாழும் தேசத்தில் பெண்கள் எல்லாரும் விபச்சாரிகள் என்பது வாழத் தெரியாத இந்தியன் கருத்து. எத்தனை பேர்.... எத்தனைபேர் பற்றி இழுத்த இதழ் என்னும் இவ்வரிகள் பட்டினத்தடிகள் என்பவர் சொல்லியது. இதைக் கொண்டாடுகிறவர்கள் இப்பாட்டின் கருத்தின்படி உலகப் பெண்கள் அனைவரும் பல ஜனங்களில் பல பேரை மணந்த விதவைகள் தாம் என்பதை ஒப்புக் கொள்ளுகிறார்கள். இவர்கள் அந்த விதவைகட்கு ஒருவனை மணம் முடித்து - அவன் இறந்தால் இன்னொருவனை மணம் முடிக்க ஏன் மறுக்க வேண்டும்? யுத்த காலத்தில் ஒரே முறையில் பல லக்ஷம் யுத்த வீரர்களைப் பறி கொடுத்த நாடுகள் பல உண்டு. அந்நாடுகள் எல்லாம் கணவன் இறந்தபின் அவள் வேறு ஒருவனை மணக்கக் கூடாது என்ற உன்னதக் கொள்கையை ஒப்புக்கொண்டிருந்தால் வேடிக்கையாக இருந் திருக்கும். அடுத்த யுத்தத்திற்கு அந் நாடுகள் புதுவைக் குசப்பாளை யத்து மண் பொம்மைகளைத் தான் யுத்த வீரர்களாக அமைக்க வேண்டும். இனி, இக்காலத்தே சுயமரியாதை ஒளி பெற்ற ஆடவர் சிலர் கலப்பு மணம்புரிந்து கொள்ளத் தாமே முன்வருவது போல் தம்மின் வேறாகிய சாதிக்காரனையும் அவன் விவேகத்தைக் கருதி அவனை மணந்து கொள்ளப் பெண்களும் தாமாக முன்வர வேண்டும். இவ் விஷயத்தில் சமூகம் ஆதரவுகாட்ட வேண்டும். ஒரு கலப்பு மணத்தால் இரண்டு குடும்பம் தம் மூடத்தனமாகிய ஜாதிக் கொள்கையினின்று விடுபடுகின்றன. நாட்டின் சமத்துவத்திற்கும் ஆடவர் பெண்டிர் சமத்துவத்திற்கும் கலப்புமணம் ஏற்ற வழியாகும். மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்து வோம் வைய வாழ்வு தன்னிலெந்த வகையிலும் நமக்குளே; தாதரென்ற நிலை மாறி ஆண்களோடு பெண்களும்; சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே (பாரதி). - புதுவை முரசு, 17.11.1930, ப.5-10 3. வராஜ்யம் பேத விரோதபந்தங்கள் அற்று மக்கள் ஒற்றுமையடைந்த நிலையில்தான் வராஜ்யம் ஒருவர் கொடுப்பதல்ல என்ற உணர்ச்சி உண்டாகுமேயன்றிச், சமத்துவம் சகோதரத்துவம் சுதந்தரம் என்ற மூன்று கொள்கைக்கும் இடமேயில்லாத மக்களிடை நாம் அவ்வித உணர்ச்சியைக் காணமுடியாது. சுதந்தர உணர்ச்சியுள்ள சிற்சிலர் தமக்குள்ள செல்வாக்கைக் கொண்டு தேச மக்களைத் தம் இலக்ஷியம் நோக்கி இழுத்துச் செல்ல நினைப்பதால் எதிர்பார்க்கும் பலன் கிடைக்காது. வல்லவன் பத்துமைல் நடப்பான்; அஃதில்லாதவர் இரண்டு மைலில் உட்கார்ந்து விடுவார். நம்நாட்டு மக்களிடையே காணப்படும் மதபேதம் ஜாதிபேதம் மூடப் பழக்க வழக்கங்களைக் கவனிக்கும் எந்த அறிவாளிக்கும் 33 கோடி மக்களில் ஒருவன் மற்றொருவனைக் கலக்காதபடி இடையிடையே திரை போட்டிருப்பது புலனாகாமற் போகாது. இந்த நிலையில் இவர்களை, ஒன்றுபட்ட மக்கள் அடையத் தகும் பதவிக்கு எப்படி அழைத்துச் செல்ல முடியும்? சுதந்தரம் அடைந்தபின் இந்த ஜாதி பேதம் மத பேதம் மூட வழக்கங்கள் அனைத்தையும் நீக்கிக்கொள்ளலாம் என்பர் சிலர். சக்கரமில்லாத வண்டியில் ஏறிச்சென்று காரியத்தை முடித்துக் கொண்டு பிறகு சக்கரம் போட்டுக் கொள்ளலாம் என்பது சரியாகுமா என்பதுதான் நமது கேள்வி. திரு காந்தியால் இரண்டாவதாகத் தோன்றிய இத்தேசீயக் கிளர்ச்சியின் பயனாகத் திரு காந்தி உட்படப் பல்லாயிர மக்கள் சிறை சென்றனர். எதிர்ப் பக்கத்தாருக்கும் ஒரு நெருக்கடி உண்டாயிற்று எனினும் அயல்நாட்டுப் பத்திரிகைப் பிரதிநிதியொருவரிடம் சிறையி லிருந்த திரு காந்தி வெளிப்படுத்திய மனோபாவமானது தேச மக்களைத் தாம் குறிப்பிட்ட இடம் வரைக்கும் இழுத்துச் செல்ல முடியாது என்று திரு காந்தி நினைத்ததையே காட்டுகிறது. இங்கிலாந்துக்காரர் வட்டமேஜை மகாநாடு கூட்ட நிச்சயித்த பின் திரு ஜயக்கர் மத்யதம் கிளம்பிற்று; இதில் இங்கிலாந்துக் காரரோடு கலந்துகொண்டு திரு வைசிராய் வெளியிட்ட திட்டத்தோடு தம் திட்டத்தையும் திரு காந்தி வெளிப்படுத்தியதிலும் விஷயம் புலனாயிற்று. திரு வைசிராய் திட்டத்தைத் திரு காந்தி ஏற்க மறுத்தார். அப்போது வைசிராய் மூலம் ஒரு தரம் வெளிப்பட்ட திட்டத்தை எதிரே நடக்க இருக்கும் வட்டமேஜைக் கூட்டத்தில் இங்கிலாந்துக் காரர் கொடுக்கவே கூடும் என்று கருதியே திரு காந்தி அதை மறுத்தாரே யன்றி நாட்டினரைக் கொண்டு இந்த நிலையில் சுயராஜ்யத்தையே அடைந்துவிடலாம் என்று நம்பி மறுத்தவரன்று. அதன்பிறகு வட்டமேஜை மகாநாடு இந்தியப் பிரதிநிதிகளைக் கொண்டு நடைபெற ஆரம்பித்தது. இந்தியப் பிரதிநிதிகளாக இங்கிலாந்து சென்றவர்கள் பிற்போக்காளர்கள் என்று காந்தி கோஷ்டி சொல்லிற்று. காந்தி கோஷ்டியினர் தாம் தலைமை வகிப்பதாய்ச் சொல்லும் இந்தியாவை முற்போக்குள்ள இந்தியாவாக்க முடியாமற் போனதால் இங்கிலாந்து செல்ல முற்போக்காளர் அகப்படுவது துர்லாபந்தானே! ஆனால் கவி ரவீந்த்ரநாத் டாக்கூர், திரு காந்தி வட்டமேஜை மகாநாடு சென்றிருந்தால் தம் செல்வாக்கினாலும் திறமையாலும் இங்கிலாந்தின் மனோ பாவத்தைப் புரட்டியடித்துவிடலாம் என்று சொல்லுகிறார். ஜாதி மத பேதங்களும் எளியாரை வலியார் வாட்டும் கொடுமைகளும் இந்தியாவில் உண்டு என்று இப்போது சொன்ன அந்த இங்கிலாந்து, திரு காந்தி சென்றிருந்தாலும் சொல்லியிருக்கும். அதற்குத் திரு காந்தி இல்லவேயில்லையென்று சொல்ல முடியாது. திரு காந்தி அத்தனை மனச்சான்று அற்றவர் என்று கவிஞர் நினைப்பது சரியன்று. பார்ப்பனர் வானத்திலிருந்து குதித்தவர்கள் உயர்ந்தவர்கள் என்பது போய்விட்டால் உயிர்வாழ முடியாது என்று நம்புகிறார்கள். வேளாளர் கைலாச பரம்பரையாம். நாயடு மந்திரியாய் வருவதானால் மற்றொரு நாயடு தம் கக்ஷிக் கொள்கையையும் விட்டுவிடத் தயார். மகம்மதியர் இந்துக்கள் பரபரம் விஷம். சர்க்கார் வேதக்கார ராயினும் நாங்கள் சிறுபான்மையர் என்று கிறிதவர் தடுமாற்றம் கொள்கின்றனர். சாத்திரப் பெயரால் கடவுள் பெயரால் காலமெல்லாம் கொண்ட கேவல எண்ணத்தால் துருப்பிடித்த நெஞ்சினர்! கடவுள் சொன்னதாகச் சொல்லி உயர்ந்தவர் எனப்படும் முட்டாள்களால் ஒடுக்கப்பட்டு நசுக்கப்பட்டு வரும் ஆதி திராவிடர்! ஆகிய இந்த மூடக் கொள்கையான எட்டிமரத்தில் காய்ப்பவை - திரு காந்தியானாலும் சரி மற்றவராயினும் சரி - கொடி முந்திரிப் பழங்கள் ஆகிவிடப் போவ தில்லை. இதனால்தான் எங்கள் தலைவர் இயக்கிய சுயமரியாதை இயக்கம் இந்த ஆபாசங்களை வேரோடு களைந்து இந்திய மனிதரை மனிதராக்க முயலுகின்றது. - புதுவை முரசு, 24.11.1930, ப.10-11 4. புதுவை - கெப்ளே தியேட்டரில் சுப்பையா பாகவதர் நாடகம் 19. 11. 30தில் கெப்ளே தியேட்டரில் நடைபெற்ற வள்ளி நாடகத்தில் சுப்பைய பாகவதர் சுப்பிரமணியாக நடித்தார். அதற்கு ஏராளமான ஜனங்கள் சென்றிருந்தனர். டிக்கட்டுகளின் விலை இதுவரைக்கும் இல்லாத அளவு அதிகப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், புதுவையிற் சில நண்பர்களின் கோரிக்கைப்படி ஓர் பிரபல வியாபாரி சிலநாள் முன் நாடகக்காரரை நேரிற்சென்று அழைத்தபோது புதுவை வாசிகள் ஞானமில்லாதவர்கள்; போக்கிரிப் பசங்கள் இருக்கும் ஊர் என்று இழித்துக் கூறி, வர மறுத்துவிட்டாராம். புதுவை அப்படிப்பட்ட ஊர் என்று எப்போது - எப்படி - அறிந்தாரோ! வள்ளி நாடகத்தின் இரவு நாடக ஞானமும், சங்கீத ஞானமும் உள்ளவர்களாகப் பார்த்து நான் விசாரித்தவரைக்கும், நானும் பார்த்த வரைக்கும், சுப்பைய பாகவதர் நாடகத்திற்கு யோக்கியதையுடையவர் என்று தோன்றவில்லை. வீடு வீடாகச் சென்று பாட்டுப் பாடிப் பணம் சம்பாதிக்கவே அவர் தகுந்தவர் என்றுதான் தோன்றுகிறது. அதனால் தான் வள்ளி நாடகம் நடந்த மறுநாள் திரு லூய்ஞான ஆரோக்கியசாமி முதலியார் வீட்டில் பாட்டுப்பாடிக் கூலியும் பெற்றார். நாடகம் எதற்கு? மக்களை வாழ்க்கை முறையில் திருந்த வைப்பதற்காகவே ஏற்பட்டது. நாடகம் சங்கீதம் ஒன்றை மாத்திரம் உடையதல்ல. சங்கீதம் நாடகத்தின் அநேக அங்கங்களில் ஒன்று. சுப்பையா பாகவதர் சங்கீதம் ஒன்று மாத்திரம் தெரிந்தவர். வள்ளி நாடகத்தில் இவர் முருகனாக நடித்ததில் - உடை, பேச்சு, நடை, பார்வை பிற சைகைகள் ஒன்றும் பொருத்தமில்லை. சுப்பிரமணியர் தியாகராஜ கீர்த்தனை பாடியதும் பிற பாட்டுப் பாடியதும் ஆபாசம். நாடகம் பார்ப்பவர் தாம் நாடகம் பார்க்கும் நினைப்பின்றி உண்மை நிகழ்ச் சியைப் பார்ப்பதான மனோபாவத்தை ஏற்படுத்துவதே ஒழுங்கான நாடகம். சிலநாள் முன் புதுவை - விவேகாநந்த சபையார் நடித்த நாடகத் திலும் இத்தகைய ஒழுங்கை நாம் பார்த்துள்ளோம். காலஞ்சென்ற தி. நாராயணசாமிப்பிள்ளை நாடகத்தில் அநேகம் இவ்வாறு பரவசப் படுத்துவதுண்டு. அன்றியும், சங்கீதமாவது நாடகத்தில் எவ்வளவு தேவை யிருக்கும் என்பதையும் கவனிக்கவேண்டும். நாடக மேடையில் சரளியா? அறிவுடையார் காறியுமிழ்வர். மேலும், சங்கீத ஞானமிருந்தால் - பாடிவிட்டால் - சரளி சொல்லி விட்டால் - போதாது. உருப்படிகளை அநாயாசமாக உதிர்க்க வேண்டும். சாரீரம் மேல்நோக்கிச் செல்லவேண்டும். பிடிகளை வெறிநாய் கௌவுதல்போல் கஷ்ட சாத்தியமாய்க் கௌவுதல் கூடாது. லலிதமான போக்கு வேண்டும். ஒலிப்பிழம்பில் நெளிவு வேண்டும். தடிப்பாக வெளிப்படுதல் கூடாது. பாகவதர் ப்ராம்மண திருமேனி. சாதி வெறிபிடித்த பார்ப்பனர் களிடம் சென்னையில் இரண்டு தினசரிப் பத்திரிகைகள் உண்டு. அவைகட்கு, பாகவதர் போன்ற பிழைப்பற்றவர்களைக் கொட்டை யெழுத்தால் பிராமாதமாகப் புகழ்ந்து புகழ்ந்து எழுதி - அவர்கட்கு ஓர் உயர்வை உண்டாக்கிவைப்பது தொழில். பாகவதர் போன்றவர் களுடைய திறமையையோ ஊரில் உள்ள பார்ப்பனர்கள் அனைவரும் கூடி வானத்திலேற்றிப் பேசிவிடுவது பிறவிக் குணம். புதுவையில் ஞானமில்லாதவர் போக்கிரிப் பயல்கள் இருக்கும் ஊர் - இதை எப்போது எப்படி அறிந்தார்? பொதுவாக - நாடகத்திற்கே லாயக்கில்லாத சில குடிகாரப் பார்ப்பனப் பசங்களைப் - பாட்டு ஒன்றை உத்தேசித்து - முதல் முறையாக - 2000 ரூபாயைக் கொடுத் தனுப்பக்கூடியது புதுவை என்று இப்படிச் சொன்னாரா? அப்படி யானால் போக்கிரிப்பயல்கள் உள்ள ஊர் என்று சொன்னதன் காரணம் என்ன? நம்மூர்ப் பிள்ளைகள் நாடகம் நடந்து முடிந்ததும் அண்டையில் உள்ள பிராந்தி ஷாப்பில் குடித்துக் கிடக்கும் வழக்கம் உடையவர்கள் அல்லவே? - புதுவை முரசு, 24.11.1930, ப.17-18 5. எமன் (òâa எமன் vGâaJ) சமனாபதி என்னும் பட்டணத்தில் எமன் இருக்கிறான். அவன் கையில் தண்டம் வைத்திருப்பான். அவன் மனைவி சாமளை. அவன் வாகனம் எருமைக் கடா. உடம்பினின்று உயிரைப் பிரிப்பது அவன் தொழில். அவனுக்கு மந்த்ரிகள் பிரதானிகள் உண்டு. எமன் கடவுள் கூட்டத்தில் ஒருவன். எமன் என்ற பெயர் சமன்; எல்லாரிடத்தும் சமமாக நடந்து கொள்ளுபவன் என்ற அர்த்தம் தருகிறது. இவனுக்குக் கூற்றுவன் என்பது மற்றொருபெயர். இதற்கு உடம்பையும் உயிரையும் கூறுபடுத்து வோன் அதாவது வேறுபடுத்துவோன் என்று பொருள். காலன் என்றும் பெயர் உண்டு. காலம் அறிந்து உயிரை வாங்குபவன் என்பது அதன் பொருள். எமன் கூற்றுவன் காலன் என்பவைகளில் உள்ள ஆண்பால் குறிக்கும் கடைசியை எடுத்துவிட்டால் எமம் அதாவது சமம்; கூற்று அதாவது பிரிவு; காலம், இந்த மூன்றைக் கொண்டு பார்த்தால் சாவதென்பது சமமாக எல்லார்க்கும் உண்டு என்றும், உயிரும் உடலும் பிரிவதுதான் சாவு என்பதும் அப்படிப் பிரிந்த சமயந்தான் வாழ்க்கையின் கடைசிக் காலம் என்பதும் ஆகிய சாதாரண விஷயந் தவிர வேறொன்றுமில்லை. பூமியைப் பூமிதேவி என்றும் கங்கையைக் கங்கா தேவி என்றும் வாயுவை வாயுபகவான் என்றும் சொல்லி வைத்தது போல் உடலி னின்று உயிர்போவதை இவ்வாறு சொல்லி வைத்தனர் என்று மாத்திரம் நாம் கொள்ளவேண்டும். வாயு என்பதனோடு பகவான் என்பதைச் சேர்ப்பதால் வாயுவுக்கு இல்லாத தன்மை முளைக்கப் போவதில்லை. வாயு பகவான் என்பதை வாயு என்று சொன்னாலும் வாயுவுக்குள்ள விசேஷம் குறையப் போவதில்லை. அதுபோலவே உயிர் போவதைக் கூற்றுவன் காலன் எமன் என்றாலும் அதே பொருள் அன்றி வேறு இல்லை. கூற்றவன் என்பதைச் சாவுதல் என்றால் குடிமுழுகப் போவதில்லை. ஆனால், சாவு என்பதை ஆணாக்கியும், அவனுக்கு ஆயுதம் சேனை முதலியவை கற்பனை செய்தும் ஓர் பெரும் பயங்கர ஏற்பாடு செய்துள்ளார்கள். மேலும் இந்த எமன் ஒருவன் சாக வேண்டிய காலத்தைக் கணக்குப் பார்த்துத் தெரிந்து கொண்டு அவனுடைய உயிரை உடலினின்று பிரித்துப் போகக் கரும்பெரும் எருமைக் கடாவின்மேல் கன்னங் கறேலென்று பெருத்த சரீரத்தோடு விழிகளை உருட்டிக்கொண்டு கோபத்துடன் நீண்ட பற்கள் வெளியில் தெரியும்படி தண்டமும் பாசக் கயிறும் ஏந்தி - ஆனால் ஒருவர் கண்ணுக்கும் புலப்படாமல் வருவான் என்று அனைவரும் நினைக்கும் படி எழுதி வைத்துள்ளார்கள். தான் கவர்ந்த உயிரைப் பாசத்தால் கட்டிப் பிடித்துக் கொண்டுதான் போவானாம். தக்க பேர்வழியானால் தானே வருவானாம். இல்லாவிட்டால் தூதுவர்களை அனுப்புவானாம். இக்கருத்துக்கள் தோன்றப் புராணங்கள் எண்ணற்றவை மக்களிடைப் பரப்பப் பட்டதன் பயனாய் எமபயம் பரவிற்று. குற்றுயிராய்க் கிடக்கும் ஒருவனிடம் அவன் மனைவி அணுகப் பயப்படுவதும் அப்போது காணப்படும் இருட்டும் எமனாகத் தோன்றுவதும் எமன் வருவதாகக் கனவு காணுவதும் நோயாளி அப்போது இருக்கும் வருத்தமேயில்லாமல் எமன் - எமன் என்று அலறுவதும் சகஜமாயிற்று. பழய கவிஞரும் புராணிகளும் சேர்ந்து எமன் கண்ணுக்குத் தெரியமாட்டான் என்றதானது எமனைக்காட்டு என்று எவரும் கேட்கா திருக்கும் பொருட்டே ஆயினும் அவர்கள் மாத்திரம் நேரில் பார்த்தது போல் எமனுடைய அங்க அடையாளங்கள் முதல் எருமைக் கடாவில் குளம்பின் பருமன் வரைக்கும் சொல்லியிருக்கிறார்கள். இவ்வாறு அரும்பாடுபட்டுப் புலவர்கள் உண்டாக்கிய அந்தப் பயங்கர எமனானவன் ஒருவன் தன் வாழ்நாட்களில் பாவம் செய் திருந்தால் அவனைக் கட்டிக்கொண்டுபோய் நரகத்தில் தள்ளிப் படாத பாடு படுத்துவான் என்றும், அவன் புண்ணியம் செய்திருந்தால் அவனைத் தட்டிக் கொடுத்துச் சௌக்யத்தையே அனுபவிக்க இருக்கும் சுவர்க்கத்துக்கு அனுப்புதல் முதலிய உதவிகள் செய்வான் என்றும் சாத்திரங்கள் உண்டு. அந்தச் சாத்திரத்திலேயே ஒருவன் சாகுமட்டும் பாவமே செய்திருந்தாலும் அவன் இஷ்டப்பட்டால் சாகப்போம்போது அவைகளைத் தீர்த்துக்கொள்ள வழிசொல்லப்பட்டுமிருக்கிறது. அதாவது அவன் சாகும்போது ஒரு நல்லகாரியம் செய்து விட வேண்டும். அந்த நல்லகாரியமானது அதிக நல்ல காரியமாக இருக்கவேண்டியது. அதுதான் எது என்றால் பிராமணர்களை அழைத்து வந்து மாடு பூமி வஸ்திரம் முதலியவைகளைக் கொடுக்க வேண்டியது. இதுமாத்திரமன்று. ஒருவன் தன் ஜீவியகாலம் வரைக்கும் புண்ணியத்தைச் செய்திருந்தாலும் அவன் சாகும்போது ஒரு கெட்ட காரியம் செய்துவிட்டால் புண்ணியமெல்லாம் பாவந்தான், அவன் போவது நரகந்தான். அந்தக் கெட்டகாரியம் என்பது மிகவும் கெட்ட காரியம் என்று ஒவ்வொருவரும் நினைக்கக் கடவர். அதுதான் சாகும் போது பிராமணரை மறந்து விடுவது. இல்லாதவனாய் இருந்தால் இயன்ற அளவு பிராமணருக்குக் கொடுக்கவேண்டும். உள்ளவர்களாயிருந்தால் வாங்கமாட்டேன். என்று மாத்திரம் பிராமணர் சொல்ல மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் ஜனங்களிடத்து அருளுள்ளவர்கள். ஒருவன் காலமுற்றும் புண்ணியச் செயலே செய்து கடைசியில் முனிசிப்பாலிட்டிப் பிரேதம் என்ற நிலையை அடைந்தால் என்ன செய்வது? அந்தோ அதற்கென்ன செய்வது, அவன் இடுப்பிலிருந்து காலணாப் பொடிப் பட்டையாவது பிராமணனுக்குக் கிடைத்தாலும் எமவாதை பறக்கும். அதுவுமில்லாவிட்டால் எமன் எப்படியிருப்பான் தெரியுமல்லவா? ஒருபிள்ளைபிறந்தது! பிறந்தபாவத்தைத் தீர்த்துக்கொள்ள வேண்டும் எமன்! எமன்! ஜாக்கிரதை! எடுகாசை! அவ்விளங் குழந்தைக்குப் பேர் வைக்கவேண்டும் பாவத்தைப் போக்கு! அதற்குள் அப்பிள்ளைக்குப் பாவம் எங்கிருந்தையா வந்துவிட்டது? ஜன்மமே பாவ ஜன்மந்தானே தொலைக்கவேண்டும் எமன்! எமன்! இப்படிச் சாகுமட்டும் எமன்! சாகுமட்டும் பிராம்மணர் பாவம் தீர்த்தபடி எம வாதையினின்று தப்ப வைத்தபடி மக்களுக்குழைப்பது சொல்லமுடியாது. பாழாகப்போக இந்தஎமன் இல்லாவிட்டால் பிராமணர்க்கு ஒரு தொல்லையும் இருந்திராது. ஆனால் பிராமணர் களும் எமவாதை தீர்ப்பதற்குப் பணம் பணம் என்று திரிவதால் எமன் கதை கட்டிவிட்டவர்கள் யாராய் இருக்கலாம் என்றுதான் தோன்ற வில்லை. எமவாதைதீர்க்கும் பிராமணர்கள் கொடுப்போர் இருந்தால் இந்த உலகத்தையே தானமாகப் பெற யோக்கியதை யுடையவர்கள் என்று சாத்திரம் சொல்லுவதால் எமன்கதை கட்டியவர்கள் பிராமணர் களாயிருக்க மாட்டார்கள் என்று நமக்குத் தோன்றுகிறது. இனிச் சிலர் - மக்கள் அறிவற்று மனச்சான்று இல்லாது கிடந்த காலத்தில் அவர்கள் கெட்டகாரியம் செய்யாதிருக்கவும் நல்ல காரியத்தைச் செய்யவும் எமன் கதைகட்டி மக்களைப் பயப்படுத்த வேண்டியிருந்தது. புராதன ஏற்பாடுகள் எல்லாம் காரணத்தோடுதான் ஏற்பட்டிருக்கின்றன என்றும் சொல்லுவதுண்டு. அறிவற்ற காலத்தில் அறிவு தருவதன் மூலமாக அவர்களை நல்ல காரியங்களைச் செய்யத் தூண்டியிருந்தால் நலமாக இருந்திருக்கும். சிறிது மாத்திரமே அறிவுடைய மக்களிடை இல்லாததையெல்லாம் புனைந்து சொல்லுவதால் அந்தச் சிறிது அறிவும் மழுங்கி மேலுமொரு முட்டாள் தனமல்லவா பெருகும்? இந்த எமன் என்னும் பொய்க் கதையால் மக்களுக்கு நேர்ந்திருக்கும் தீமைகளைச் சொல்ல முடியாது. அன்றியும் அக் காலத்திற்குக் கட்டியதாகச் சொல்லும் கதை இக்காலத்திற்கு வேண்டாம் என்றால் தானம் வாங்குபவரும் அவர் கூட்டாளிகளும் ஒத்துக் கொள்ளலாமே; ஏன் கோபிக்கி றார்கள்? அந்தப் பொய் எமன் நல்ல வேளையாக ஒருநாளைக்கு மெய்யாகவே மக்களிடை ஒடிவந்து பயங்காட்டி விட்டு மறைந்து போனால்போதும். நரகம் என்றும் சொர்க்கம் என்றும் நாங்கள் விசேஷப் பொய்கள் சொல்லவேண்டிய அவசிய மில்லையே என்றுதான் தானம் வாங்குவோர் தவங்கிடக்கிறார்கள். ஒருவன் சாகவேண்டிய நேரத்தை அதற்கு முன்னய பிறப்பி லேயே கணக்கிட்டுக் குறித்தாய் விட்டதென்றும் அந்தக் கெடுவின் படி தான் எமன் உயிர் கொண்டுபோகிறான் என்றும் மக்களை நம்ப வைத்திருப்பதால் கோயிலில் விழுந்த ஒருவன் கவனமாகச் சிகிச்சை செய்துகொண்டால் நோய் நீங்கும் என்ற நம்பிக்கையும் அற்றுச் சாகிறான். மற்றும் அவன் மருண்டவன் கண்ணில் இருண்ட தெல்லாம் பேய் என்பதுபோல் எமன் நினைவுகொண்டு பயந்து அதனாலேயே சாவையும் அடைத்தலுண்டு. சுகாதாரத்திலும் நம்பிக்கை குறைகிறது. ஒவ்வொருவரும் தங்கள் பெற்றார் சம்பந்த மான வியாதியாலும், தான் தேடிக்கொண்ட வியாதியாலும் தொல்லை யடையும்போது அதைச் சிரத்தையோடு சிகிச்சை செய்து தீர்த்துக் கொள்ளலாம் என்றும் ஒருவன்தானே தன்னை வளர்க்கிறான். தானே தன்னை மாய்த்துக் கொள்கிறான் என்றும் நம்பவேண்டிய உண்மையை எமன் கதை எவ்வளவு பாதிக்கிறது என்பதை உற்று நோக்குக. கரவினில் வந்துமே உயிர் தனைக்கவர்ந்திடும்காலன் நடு நடுங்க விழிப்போம் என்ற பாரதி வாக்கும், இக்கருத்துப் பற்றிய தாகும். - புதுவை முரசு, 1. 12. 1930, ப. 6 - 9 6. நேர் வழி இங்கிலீஷ்காரர் இந்தியாவுக்கு வந்தது முதற்கொண்டே இந்தியா வானது ஸ்வராஜ்யத்திற்குப் பாடுபட்டு வந்திருக்கிறது. அம் முயற்சி திரு திலகர் காலந்தொட்டு இன்றைய திரு காந்தியவர்கள் காலம் வரைக்கும், உருப்பாடான முறையில் நடந்து வருவதாய்ச் சொல்லப்படுகிறது. எனினும் பூர்வாங்கமான விஷயங்களைக் கவனிக்காமல் மேற் பூச்சாகக் காரியம் நடந்துவந்ததுதான் இன்றைய வரைக்கும் எதிர்பார்த்த பலன் ஏற்படாததற்குக் காரணமாகும். இந்நாள் மட்டும் இந்தியா இரண்டடி முன்னேறியிருக்குமானால் அது கயராச்சியக் கிளர்ச்சிக்காரரால் ஏற்பட்டதென ஒரு வரும் சொல்லமுடியாது. சாதாரணமாய் நாளடைவில் பரவிவந்த சீர்திருத்தமே இந்நாட்டில் சிறிதுகாலம் செய்திருக்குமேயன்றி வெறுங்கிளர்ச்சி தோன்றிய நிலையிலேயே அழிந்துதான் போயிற்று. கிளர்ச்சிக்காரர் சீர்திருத்தத்தையும் வற்புறுத்தியே வந்தனர் என்றும் ஒத்துழையாமைத் திட்டத்தில் சீர்திருத்த முறையும் சேர்ந்தே யிருந்ததென்றும் சொல்லுவர் சிலர். எனினும் இச்சீர்திருத்தமுறை என்று சொல்லும் சாதாரணச் சில திட்டங்களும், இம்மியளவும் நடைபெறவில்லை என்பதும் அதற்கு எதிர்ப் பிரச்சாரமே தேசீயத்தின் பேரால் நடத்தப்பட்டதென்பதும் மறுக்க முடியாத உண்மை. இத்தேசத்தில் பல பல மதங்கள், பல பல பற்பல சாதிப்பிரிவுகள், மக்களை மக்கள் தொடக்கூடாது பார்க்கக்கூடாது என்ற தன்மைகள், எளியவரை வலியார் வாட்டும் கொடுமைகள், கண்திறந்து தமது லக்ஷியம் இன்னதென்று பார்க்கவும், யோசிக்கவும் முடியாதபடி நெஞ்சில் வேரூன்றிக் கிடக்கும் மூடப்பழக்க வழக்கங்கள் ஆகிய இவைகளால் ஏற்படும் ஒற்றுமையின்மையை இவைகளை ஒழிப்பதன் மூலமாகத்தான் அகற்றி ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்று சொல்லும் சுயமரியாதையியக்கம் போன்றதோர் இயக்கம் அன்றே ஏற்பட்டிருக்குமாயின் அதன் பயனாக, சுயராச்சியத்தையும் அன்றே பெற்றிருக்கலாம். இன்று இங்கிலாந்தில் இருக்கும் வட்ட மேஜைக்காரர்களாகிய இந்தியர் நெஞ்சிலும் அதையே எதிர்பார்த்து இங்கிருந்து ஏங்கும் இந்தியர் நெஞ்சிலும் நாம் கைவைத்துப் பார்த்தால் மதப்பித்து, சாதிப்பித்து, மக்களை மக்கள் ஒதுக்கும்பித்து, இவைகட்காக அவர்கள் வருந்துவது தெரியும். மேலும் இங்கிலீஷ்காரர் இன்றைய நிலையிலும் தைரியத்துடன் 33 கோடி மக்களை அலக்ஷியம் செய்து வருவதற்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்தாலும் நம்மிடம் அவர்கள் பார்க்கும் பேதம், விரோதம், மூடப் பழக்கங்களே என்பது தெரியும். ஆதலின் இன்று முதலாவது தேசமக்கள் தேச விடுதலைக்கு நேர்வழியாகிய சுயமரியாதைக் கொள்கையில் ஈடுபட்டுழைக்க முன்வருவார்களா? ஆயினும் சுயமரியாதைக் கொள்கையானது தேசத்தின் ஜீவாதாரமான நலன் அளிப்பது என்ற உண்மை நமது தென்னாட்டுத் தலைவர்கள் எனப்படுவோர்க்குத் தெரிந்திருந்தும் அவ்வியக்கம் தம்மைப் போல் தம்முடனிருந்த ஒருவரால் உண்டு பண்ணப்பட்ட தென்றும் ஆதலால் அதில் தாம் சேர்ந்துழைப்பதன் மூலம் இயக்கம் உண்டாக்கியவருக்கு அத்தனை உயர்வை உண்டாக்குவதா என்றும் நினைக்கும் அற்ப புத்தியும் அயோக்கியத்தனமும் நாட்டைத் திருடி வயிறு வளர்க்கும் போக்கும் இனிமேலாகிலும் அவர்களை விட்டு நீங்கும் என்று நாம் எண்ணவில்லை. - புதுவை முரசு, 1.12.1930, ப.10 - 11 7. கிறீஸ்தவர் கோயிலில் நடுக் கூடப் பிரேமை கடந்த 1908ம் ஆண்டுக்குமுன் புதுவைக் கிறீஸ்தவர் மேற்றிரா சனக் கோயிலில் கிறீஸ்தவர் எனப்படும் எல்லா மக்களும் சமமாக நடத்தப்பட்டுவந்தனர். ஆண்டின் தொடக்கத்தில் புதுவையின் தெற்குப் பக்கத்தில் மற்றோர் ஆலயம் கட்டப்பட்டது. அதன் பெயர் இருதய ஆண்டவர் கோயில். இது கட்டியபோது உயர்ஜாதிக் கிறீஸ்தவர் என்போர் முனைந்து தாழ்த்தப்பட்டவர் என்பவர் கோயிலில் சமத்வம் பாராட்டுவதை மறுத்தனர். கலகங்கள் நிகழ்ந்தன. இதன்பயனாய்ச் சர்க்கார் இருதய ஆண்டார் ஆலயத்தை மூடிப்போட உத்தரவிட்டனர். பழய அதிமேற்றிராசன ஆலயத்தில் ஆதித் திராவிடக் கிறீஸ்தவர் முன்னய வழக்கப்படி உட்சென்ற போதும் மறுப்பு ஏற்பட்டது, பெருத்த கலகம் நிகழ்ந்தது. இதில் அநேக ஆதித் திராவிடக் கிறீஸ்தவர்கள் சிறை செல்லவும் நேர்ந்தது. அக்காலை அநேக ஆதித் திராவிடக் கிறீஸ்தவர்கள் தமது கிறீஸ்தவ மதத்தை விட்டுப் புராட்டஸ் டாண்டு மதத்தையும் பின்பற்றினார்கள். பெரும்பான்மை யோர் கோயில் என்பதையே வெறுத்தொதுக்கு கின்றனர். பின் அதிமேற்றி ராசன ஆலயமும் சர்க்காரால் மூடப்பட்டது. இங்ஙனம் இரு பிரதான ஆலயங்களும் 6 மாதங்களாய்ப் பூட்டப்பட்டுக் கிடந்தன இதன் பின்னர் ஓர் விசாரணைப் பாதிரியால் ஆதித் திராவிடர்கள் இன்ன இடத்தில் மாத்திரம் வரலாம் என்ற ஒர் நிபந்தனையின் பேரில் கோயில் திறக்கப் பட்டது. சில ஆதித் திராவிடர் தாம் மோக்ஷத்தைப் யெற்று விட்டால் போதும் என்றும், சுயமரியாதை தொலைந்தால் பாதக மில்லை என்றும் நினைத்து அக்குறிப்பிட்ட இடத்தில் இருந்துதொழும் பொருட்டுக் கோயிலுக்குப் போனதைத் தவிரப் பெரும்பான்மையோர் தம்மை இழிவுபடுத்தும் கோயிலைச் சிக்கறத் தொலைத்துத் தமது நன்மை தீமைகட்குத் தம் வீட்டுப் பெரியோர்களைக் கொண்டே சடங்குகள் நிறைவேற்றி வந்தனர் அப்போதும் அவர்கள் துண்டுப் பிரசுரங்களை ஏராளமாய் வழங்கி - அநியாயக்காரர்கட்கு மூளை வைத்தியம் செய்தபடி இருந்தார்கள். ஆயினும் கிறீஸ்தவ மக்களைப் பிரித்துப் போடுவதொன்றாலேயே கோயிலுக்குப் பொருள் வருவாய் இருப்பதையறிந்த பாதிரிகள் தமது தூக்கங் கலையவில்லை. ஆனால் நாட்டின் சுயமரியாதைக் கிளர்ச்சி தோன்றிற்று. பாதிரிகள் வாரிச்சுருட்டி எழுந்தனர். இது மாத்திரமன்று, ஈரோட்டில் ஆதித் திராவிடர் ஆலய ப்ரவேசம் செய்ததையும், அது குற்றமல்ல வென்று சர்க்கார் தீர்ப்புச் செய்ததையும் பத்திரிகைகளில் பார்த்தனர். பாதிரிகட்கு இந்துக்களை விட நாம் முந்திக் கொண்டால் நல்லது என்று தோன்றிற்று. இதனால் தான் அவர்களின் இருதயத்தில் தாழ்த்தப்பட்டார் மேல் அன்பு, இன்று கங்கை நதிபோல் பெருகிற்று. அது பொங்கிற்று. மேலும் வழியத் தொடங்கிற்று. அதன் பயனாகத்தான் முதல் முதல் புதுவைப் பிரபல வியாபாரி திரு. பிரான்சின் (ஆதித் திராவிடக் கனவான்) வீட்டுக் கலியாணம் அதிமேற்றிராசன ஆலயநடுக் கூட்டத்தில் (மாதா கோயில்) நடைபெறும்படி பாதிரியார் அநுமதித்தார்கள். இந்த அநுமதிக்காகப் பிரத்தியேகத் தொகையும் கனவான் கொடுத்தார். மணம் நடுக் கூடத்தில் நடந்தது. அந்தமட்டும் சந்தோஷம்! இங்ஙனம் ஆதித் திராவிடரை நடுக் கூடத்தில் பாதிரியார் அநுமதித்த குற்றத்திற்காக உயர் சாதிக் கிறீஸ்தவர் என்று சொல்லிக் கொள்பவர் பாதிரிகளைச் சீறினர். இதற்காகப் பாதிரியார் உயர் வகுப்பினரை அழைத்தது முதலிய விஷயங்களை. திரு. A.L. அவர்கள் குறித்திருக்கிறார்கள் இதை வேறோரிடத்தில் பிரகரித்திருக்கிறோம். அன்பர்கள் கவனிக்க. திரு. கோம்பு பாதிரியார் தாம் அழைத்த உயர் வகுப்பினர் களுக்குச் சமாதானம் சொல்லுகையில், உயர் வகுப்பினர் ஜோலியில்லா திருக்கும் மற்ற நேரங்களில் தாழ்த்தப்பட்டவர்கட்கு - நடுக்கூடத்தில் திருமணம் நடத்துவிப்பதால் உயர்வகுப்பினரும் ஒன்றும் முழுகி விடாது என்று குறிப்பிடுகிறார். உயர் வகுப்பினருடன் தாழ்த்தப் பட்டாரைச் சமத்வமாகவேவைப்பதால்தான் என்ன பாதகம் நேர்ந்து விடும் என்பதுதான் நமது கேள்வி. ஆயினும் திரு. கோம்பு அவர்கள் பணக்காரர்களாகிய உயர் வகுப்பினரைப் பார்த்து நீங்கள் எனது அதிகாரத்தில் தலையிடக் கூடாது என்று சொல்லியதை நாம் பாராட்டுகிறோம். ஆயினும் திரு. கோம்பு தம் அதிகாரத்தை நேரியமுறையில், சமத்வ முறையில் செலுத்துகிறதாக இன்னும் காட்டிக்கொள்ளவில்லையே! இன்னும் உயர்வகுப்பு ஒன்றும் தாழ்ந்த வகுப்பொன்றும் உண்டு என்ற மயக்கத்தோடு இருப்பதாகத் தானே ஏற்படுகிறது? எனினும் இந்த மயக்கம் உயர்வகுப்பினரின் ஆத்திரத்தைத் தற்காலம். மழுப்பும் பொருட்டுக் காட்டிக் கொண்டதாகவுமிருக்கலாம் எங்ஙனமாயினும் அதிமேற்றிராசனர் திரு. கோலாஸ் அவர்களும் திரு. கோம்பு அவர்களும் இன்று நடுக்கூடத்தைத் தாழ்த்தப்பட்ட மக்கட்கு அநுமதித்ததைத் தொடர்ந்தே மக்கள் அனைவரும் எல்லாவற்றிலும் சமம் என்னும் இலக்ஷியத்தையடையுமட்டும் பிரயாசை எடுக்கும்படி நாம் அவர்களைக் கேட்டுக்கொள்ளுகிறோம். இனி தாழ்த்தப்பட்ட சகோதரர்க்கு நாம் சில கூறுவோம். அவர்கள் கோயிலின் நடுக் கூடத்தைப் பெற்றதோடு அவர்கள் கோரிக்கை அனைத்தும் நிறை வேறிவிடவில்லை. ஒருவன் தன் வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருக்கையில் வழியில் அவனுக்கு பல்லைக்காட்டி இளித்த ஒரு நாயினிடம் ஜோலி தீர்ந்துபோனால் அவன் வீடுபோய்ச் சேர்ந்தவனாய் விடமாட்டான். மக்களின் பகுத்தறிவைப் பாழ்படுத்தி வரும் இக்கோயில்கள் தொலையவேண்டும் என்பதே தற்கால அறிவுடைய இந்தியன் கோரிக்கை. சுயமரியாதைக் கொள்கைகளை மக்கள் ஒப்புக்கொள்ளும் நிலையே மக்கள் சமத்வ நிலையும் சகோதரத்வ நிலையும், சுதந்தர, நிலையுமாகும். தாழ்த்தப்பட்டவரும் உயர்த்தப்பட்டவரும் ஆகிய பேதம் ஒழிந்து அனைவரும் ஒன்றுபட்டு மூடப்பழக்க வழக்கங்களையும் உதறித்தள்ளும் நிலையை எதிர் பார்த்தபடி அதற்குழைப்பதே நமது ஆதித் திராவிட மக்களின் முக்கிய கடன் ஆகும். - புதுவை முரசு, 8.12.1930, ப. 10 - 11 8. சுயமரியாதைத் தொண்டர் மகாநாடு கோவையில் 01.12.1930 திரு.ஜே. எஸ். கண்ணப்பர், திரு ஐயாமுத்து, திரு. என். பொன்னம்பலம் முதலிய சிற்சிலர் முயற்சியால் சுய மரியாதைத் தொண்டர் மகாநாடு என்ற பெயரோடு ஓர் கூட்டம் கூட்டப்பட்டது. அதிற்சில தீர்மானங்கள் நிறைவேறியுள்ளன. அத் தீர்மானங்களில் நூதனமான அம்ஸம் என்னவெனில் சுயமரியாதை இயக்கத்தினர், தற்காலம் நாட்டில் நடைபெற்று வரும் திரு. காந்தி சட்ட மறுப்பு இயக்கத்தில் ஈடுபடவேண்டும் என்பதே. பிரஸ்தாபச் சிலர் திடீரென்று சட்டமறுப்புக் காதல் கொண்டுவிட்டனர் என்பதே இங்குக் கருதத்தக்கது. சுயமரியாதை இயக்கம் சட்டமறுப்பிலாவது அதுபோன்ற மற்றவற்றி லாவது கவனித்தல் கூடாது என்பது நம் கருத்து. சுயமரியாதை இயக்கம் உலக மக்கட்கு ஏற்பட்டதோர் பாடசாலை இன்றுவரைக்கும் அப்பாட சாலையில் சேர்ந்துள்ள அனைவரும். தலைமை ஆசிரியரும் உதவி யாசிரியருமே ஆவார், அவ்வாசிரியர்கள் அகில மாணவர்களை எதிர் பார்க்கின்றனர். இப் பாடசாலைப் பாடங்கள் அடிமையுற்ற நாட்டினர்க் கும் விடுதலை நாட்டினர்க்கும் இன்றியமையாதவை. இக் கருத்தை இன்றைய உலகம் அறிந்தே வருகின்றது. மேலும் அப் பாடங்கள் மனிதர் என்று சொல்லிக்கொள்வோரை மனிதராக்கத்தக்கவை. இந்நிலையில் இதன் ஆசிரியர் எவரும் இப்பாடசாலையின் பாடத்தையே அறியாத - வெறுக்கின்ற கூட்டத்தாரால் நடத்தப்படும் சட்டமறுப்பில் - அப்படிப்பட்டவரைக் கொண்டே நடைபெற வேண்டிய சட்டமறுப்பில் சேர்ந்து - ஈடுபடுவதென்பது எவ்வாறு பொருந்தும்? அன்றியும் இப் பாடசாலையையே அக் காரியத்தில் ஈடுபடச் சொல்வது இம்மியாவது சரியாகுமா? இனிப்-பிரஸ்தாபச் சிலர் சுயமரியாதை இயக்கத்தினரைச் சட்ட மறுப்பில் இறங்கச் சொல்வதைவிடச் சட்டமறுப்புக்காரரைப் பாட சாலையிற் சேரச் சொல்வதே பொருத்தம். இது முடியாதது எனில் முடியும் என்பவர்களின் வரிசையிலிருந்து தம் பேரை நீக்கிக் கொள்ள வேண்டும். இதைவிட்டு விளக்கிற்கு அதன்புறத்தே வைத்ததால் தீவிரம் போதிப்பது கேலி. நமது தலைவர் ஈ.வே.ரா அவர்கள், கண்ணப்பர் முதலியவர்கள் வேண்டுமானால் தனிப்பட்ட முறையில் சட்ட மறுப்புச் செய்து கொள்ளட்டும் என்றும், சுயமரியாதையியக்கத்திற்கு அச்செயல் கூடா தென்றும், இன்றைய நிலையில் சட்ட மறுப்பியக்கமே தோதில்லை யென்றும் - கூறியிருப்பதையும் சட்டமறுப்பில் இறங்கும் சுய மரியாதைக்காரரை நமது திரு. குமரன் ஆசிரியரும், திரு என். இராமநாதனவர்களும் கண்டித்திருப்பதையும் நாம் பார்த்தோம். நாமும், கண்ணப்பர் முதலியவர் விரைவில் சென்று இங்கிலீஷ்காரரை எதிர்த்து - அந்தப் பப்பர்மெண்ட் மிட்டாய்களை அநாயாசமாய் விழுங்கிவிட்டு வருவதை ஆக்ஷேபிக்க வில்லை யாயினும் சுயமரியாதை இயக்கப் பேரால் அம்முயற்சி நடத்துவதைப் பலமாகக் கண்டிக்கின்றோம். மேலும் கோவைச் சுயமரியாதைக் தொண்டர் மகாநாட்டில் நிறை வேறிய தீர்மானங்களில், சட்டமறுப்பு உருவமுள்ள வார்த்தைகள், சுய மரியாதை இயக்கக் கொள்கைகட்கு விரோதமானவை என்பதையும் பொதுமக்கட்கு எடுத்துக்காட்டி எச்சரிக்க விரும்புகிறோம். - புதுவை முரசு, 15.12.1930, ப. 10 - 11 9. கடவுளைத் திட்டவில்லை; கடவுள் பேரால் நடக்கும் ஆபாசங்களையே வெறுக்கின்றோம் பார்ப்பனர் உயர்ந்தவர்கள் - இந்தக் கடிவாயிலிருந்து தான் இந்திய சமூக முழுதும் விஷம் பரவிற்று. அதன் பயனாகத் தான் இன்றைய தவிப்புநிலையேற்பட்டது. மக்கள் அனைவரும் சமம் என்ற நிலையை உண்டாக்க முயலும் போது பார்ப்பனன் உயர்ந்தவன் என்ற ஆபாசக் கூச்சல் கிளம்பாமலிருக்கட்டும் என்று பார்ப்பனனிடம் சொன்னால் அவன் ஓஹோ பார்ப்பனன் உயர்ந்தவன் என்பது கடவுள் கருத்தல்லவா என்று கூறுகிறான். இது கடவுள் கருத்தாக இருக்குமா? இப்படி ஒரு கடவுள் கருதியிருப்பாரா? கருதியிருப்பார் எனில் நாங்கள் அப்படிப்பட்ட கடவுளை வெறுக்கிறோம். இல்லை, இல்லை. பார்ப்பனன் தன் சுயநலத்திற்காகப் புளுகி - அதைக் கடவுளின் தலைமேல் வைத்து விட்டான் என்றால் அந்த நல்ல கடவுளுக்குச் சுயமரியாதைக்காரர் ஆயிரம் நமகாரம் அனுப்பு கிறார்கள் தரகர் தக்ஷணை கேட்காதிருந்தால். இந்தியர் வறுமைப் பிணிக்குக் காரணம் என்ன? சொந்த ஆட்சி இல்லை. ஏன்? ஒற்றுமை இழுப்பு. ஒற்றுமை ஏற்படுத்த என்ன தடை? ஒன்றுமில்லை? பாதம் வைத்த நாமம்தான் உயர்ந்தது என்று இந்த நாட்டாரெல்லாம் ஒப்புக்கொண்டால் ஒத்துப் போகலாம் என்று பாத நாமக்காரன் சொல்லுகிறான். மொட்டை நாமக்காரனுக்கு உலகத்துக்கு மொட்டை நாமம் சாத்த யோசனை. அன்பே சிவம். ஆகையால் உலகத்திற்குச் சிவமே கடவுளாக இருக்க முடியும் என்று சைவன் பல்லைக் கடிக்கிறான். அர்த்தம் நாதி, கிருகம் நாதி என்று வேதாந்தி துவக்கி விடுகிறான். கிறீது வேதம் சத்ய வேதம் என்று கிறீதவர்கள் மற்றவர்களைக் கூப்பிடுகிறார்கள். மகம்மதியர் மற்றவர்களெல்லாம் காபீர்களாக இருக்கிறார்கள் என்று அவர்களை மீட்க முயலுகிறார்கள். புத்த மதத்தவரும் ஒரு பக்கம் கோணிக் கொள்ளுகிறார்கள். இன்னும் எத்தனையோ கூட்டம்! இதில் ஒருவனுக் குள்ள அறிவு ஆண்மைகளை மற்றவன் ஒப்புக் கொள்ளுவதில்லை. ஓயாத சண்டை! ஓயாத வழக்கு! ஓயாத தர்க்கம்! எல்லாவற்றையும் நீக்கிப் போட்டு அனைவரும் ஒரு வழிப் படலாகாதா என்றால் தங்கள் தங்கள் மதங்களின் பெருமை சொல்லி அளக்க வருகிறார்கள். அதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டுமே என்றால், ஓ! கூடாது. அவை கடவுள் அவதார புருஷராகவும் தூதராகவும் பூலோகத்தில் வந்து சொன்னதல்லவா என்கிறார்கள். சமூகம் ஒற்றுமைப் படாதபடியும் சண்டையிட்டுத் தொல்லை அனுபவிக்கும் படியுமா கடவுள் சொல்லியிருப்பார் என்பது சுயமரியாதைக்காரர் கேள்வி. சொல்லித்தான் இருப்பார் என்றால் அவர் கடவுளா? அப்படிப் பட்ட கடவுளைச் சுயமரியாதைக்காரர் வெறுக்கிறார்கள். இல்லை, இல்லை. அந்தக் காலத்தில் மக்களின் அறிவுக்குத் தக்கபடி கடவுள் மதம் போதித்தார். இக்காலத்திலும் அவற்றிற்காக அவர் சண்டையிட்டுக் கொள்ளச் சொல்லவில்லையென்றால் அந்த நல்ல கடவுளுக்குச் சுயமரியாதைக்காரர் நமகாரம் சொல்லுகிறார்கள் வீட்டிலிருந்தபடியே. ஆரூரில் பிறந்தால் முத்தி, அம்பலத்தில் காண முத்தி, காசியில் இறக்க முத்தி, திருவண்ணாமலையை நினைக்க முத்தி - இவ்விதம் தருவதாக அவ்வவ் விடங்களில் உட்கார்ந்து கொண்டு ஜனங்களை அழைக்கிறார் சிவபெருமான். இந்த இடமட்டுமல்ல. லக்ஷக்கணக்கான இடங்களில் அச் சிவபெருமான் பலபல உருவங்களோடு பலபல பேர்க ளோடு பலபல விளம்பரங்கள் மூலம் அழைக்கிறார். அவருடைய பெண்டாட்டிகளும் அப்படியே. பலபல இடங்களில் பலபல நாமத்துடன் அடியார்களை எதிர்பார்க்கிறார்கள். பிள்ளைகளும் அப்படியே. அப்பன் பிள்ளைகள் தவிர, இவர்களின் வைப்பாட்டிகளும் அப்படியே. இவர்களுடைய அடியார்கள் நாயன்மார்களும் கடவுள் என்ற நிலையை அடைந்து அன்பர்களை அழைத்தபடி ஆலயங் களில் அமர்ந்துள்ளார்கள். இவையெல்லாம் நாம் கற்பனையாகச் சொன்னதன்று. ஒவ்வொன்றிற்கும் சாத்திரம், ஆதாரங்கள் உண்டு. பக்த கோடிகளின் தினசரி அநுஷ்டானங்கள் கண்ணெதிரில் உண்டு. இதுவரையில் சிவபெருமான் வகையார்கள் விஷயம் தீர்ந்தது. இரண்டாவது விஷ்ணுமூர்த்தி வகையாரும் அப்படியே. இவ்விரு வகையார் கோயில்களிலும் சமயக் குரவர் ஆழ்வாராதியாரால் பாடல் பெற்றவை உயர்வு. பாடல் பெறாத கோயில்கள் சில அடிகள் சில அங்குலம் தாழ்வு. இன்னும் காளி, மாரி, வீரி, காத்தான், ஐயனார், காட்டேரி, வீரன், மாடன் சங்கிலி கறுப்பன், கன்னி, முனி, பாவாடை காத்தவராயன், நொண்டி, துலுக்கன், புட்ளாயி, இரிசன், வேம்படியான், மாவடியான், காமன், முத்தால் ராவுத்தன், மதுரைவீரன் இவர்கள் கோயில்கள், பலபல. இனிக்கிறீதவர் கோயில்கள், மாதாக் கோயில்கள், சேசுநாதர் கோயில்கள், இருதய ஆண்டவர் கோயில்கள், அந்தோனியார் கோயில்கள், ஐந்து காயவரம் பெற்ற பிரான்ஸீ கோயில்கள், சூசையப்பர் கோயில்கள், சவேரியார் கோயில்கள், முகம்மதியர் பள்ளி வாசல்கள் பெரும்பான்மை மக்களின் மதக் கோயில்களைக் குறிப்பிட்டேன். சிறுபான்மை மக்களின் மதக் கோயில் களும் உண்டு. ஒவ்வொரு கோயிலில் உள்ள விக்ரஹங்களும் சிலைகளும் ஜோதிகளும் அபார சக்தியுடையவையென்று சொல்லப் படுகிறது. பல்லாண்டாக இவைகள் இந்திய மக்களால் போற்றப் படுகின்றன. இச்சாமிகளிலோ முத்திகொடுப்பவை உண்டு. சக்தி கொடுப்பவை உண்டு. பாபம் தீர்ப்பவையுண்டு. எதிரிகளை அழிப்பவை யுண்டு. கனவில் வந்து போவன உண்டு. எதிரில் வந்து பேசுவன உண்டு. கல்லைப் பொன் னாக்கியவையுண்டு. சூரியனைக் கண்டித்தவை யுண்டு. சந்திரனைப் பல் உடைத்தவையுண்டு. உலகத்தை யுண்டாக்கி யவையுண்டு. காத்து வருபவை உண்டு. விழுங்குபவை யுண்டு. வேல் பிடித்தவையுண்டு. தண்டாயுதம் பிடித்தவையுண்டு. இச்சாமிகட் கெல்லாம் இந்நாள் மட்டும் இந்தியர் செய்துவந்த பூசனைகட்குக் குறைவா? திருவிழாக்களில் குறைவா? பிள்ளைக்குப் பால் வாங்கிக் கொடுப்பதில் தவறினாலும் இந்தக் கடவுள்கட்குப் பானைப் பாலால் அபிஷேகம் செய்யாமல் இருந்ததில்லை. இப்படி யெல்லாம் இந்தியர் நடத்தி வந்திருக்க இந்தியர் மாத்திரம் இன்றைக்கு இக்கதிக்கு உள்ளா வானேன்? மற்ற நாடுகளில் எல்லாம் சுதந்தரத்துவம் பறக்க நம் நாட்டில் மாத்திரம் அடிமைப் பள்ளம் இருப்பானேன்? மற்ற நாடுகள் எல்லாம் மார்பை உயர்த்தி நடக்க நாம் மாத்திரம் கூனிக் கிடப்பானேன்? மற்றவர்கள் இன்புற்றிருக்க நாம் மாத்திரம் துன்புற்றிருப்பானேன்? நாம் ஒற்றுமை யற்றிருப்பானேன்? நாம் காலமெல்லாம் நெல்லிக்காய் மூட்டை யாவானேன்? நாம் சிந்தனா சக்தியின்றிச் சொந்த உழைப்பில் நம்பிக்கையின்றிப் பிற நாட்டினர்களால் காறியுமிழப்படுவானேன்? நமது கோயிற் கடவுள்கள் இப்படிச் செய்யுமா? செய்யும் என்றால் அவை கடவுள்களா? அப்படிப் பட்ட கடவுள்களைச் சுயமரியாதைக் காரர்கள் வெறுக்கிறார்கள். இல்லை, இல்லை. கடவுள் ஒன்று. அது மனிதரின் முட்டாள் தனத்திற்கெல்லாம் பொறுப்பாளியல்ல. அந்த ஒரு கடவுள் இப்படி யெல்லாம் மனிதரிடம் காசையெதிர் பார்த்துக் காசுக்காகக் கருணை விற்கக் கோயிலில் கடை போடவில்லை என்று சொன்னால் அந்த ஒரு கடவுளைச் சுய மரியாதைக் காரர்கள் ஏத்துகிறார்கள் ஒழிந்த நேரத்தில். இதனால் சுயமரியாதைக்காரர்கள் கடவுளைத் திட்டவில்லை என்பதையும், கடவுள் பேரால் நடைபெறும் ஆபாசங் களையே ஒழிக்க எண்ணுகிறார்கள் என்பதையும் கடவுளைக் காப்பாற்றும் பெரியார் களிடம் வணக்கமாய்த் தெரிவித்துக் கொள்ளுகிறோம். ஆனால் அப்பெரியோர்களைச் சில சந்தேகம் கேட்க எண்ணுகிறோம். யாராவது அந்த அசல் கடவுளையே திட்டினாலும் நீங்கள் அதற்காக அவர்கள் மேல் வருந்தலாமா? வருந்துவோம் எனில் எதற்காக? சர்வ ஜீவர்களை யும் அவர் காத்து ரக்ஷிப்பதால் அப்படியானால் சகலரிடமும் உமக்கு அன்பு உண்டு போலும். உம் கண் எதிரே உம்மைப் போல் மனிதன் - உம் அண்டையிலுள்ள மனிதன் கட்டத் துணியின்றி மானமிழந்து நடக்கும்போது உங்கள்மேல் வேஷ்டியைக் கொடுப்பதில் இத்தனை வேகத்தை காணோமே. அவ்விடத்தில் உங்கள் ரோசத்தைக் காணோமே. ஏ, கடவுளுக்குப் பரிந்து பேசும் மூடர்களே! நீங்கள் காணாத கடவுளுக்காகக் காட்டும் பரிவின் வேகத்தைக் கண்ணெதிரில் காணும் உங்களைப் போன்ற எளிய மக்களிடத்தில் காட்டாமலிருக்கிறீர்களே - உங்கட்கு மானமில்லை; வெட்கமில்லை அறிவில்லை. - புதுவை முரசு, 22.12.1930, ப.3 - 5 10. தென்னாப்பிரிக்கா லக்ஷப்பிரபு! பயனுள்ள தருமம் நடமாடக் கோயில்கள்பால் அன்பு தென்னாப்பிரிக்காவில் பிரபல வயிர வியாபாரியாகிய லக்ஷாதிகாரி சர் ஆட்டோபீட் அவர்கள் லண்டனில் தமது 65ஆவது வயதில் காலமானார். அவர் வாழ் நாட்களில் வைத்தியத்திற்காகவும் ஏராளமான நன்கொடைகள் அளித்துள்ளார். கடைசியாக (அவர் சாகும் தருணத்தில்) செய்துள்ள தர்மங்களைக் கவனிக்க. எட்வார்ட் ஆபத்திரிக்கு 50000 (ஐம்பதினாயிரம்) பவுன் தந்துதவினார். வைத்திய ஆராய்ச்சிக்கான பீட் ஞாபகச் சின்ன நிதிக்கு 165000 (லக்ஷத்து அறுபத்தையாயிரம்) பவுன் அளித்து உதவினார். இதனோடு கீழ்வரும் செய்யுளையும் கவனிக்க! பட மாடக் கோயில் பரமர்க்கு ஒன்று ஈயில் நட மாடக் கோயில் நம்பர்க்கு அஃது ஆகா! நட மாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில் பட மாடக் கோயில் பரமர்க்கு அஃது ஆமே! இச் செய்யுளின் கருத்தாவது: கொடியசைகின்ற கோயில்களின் கடவுள்கட்கு ஒன்று நாம் கொடுத்தால் நடமாடுகின்ற கோயில்களாகிய ஏழை மக்கட்கு அதனால் பயனேற்படாது. ஆனால் ஏழை மக்கட்கு ஏதாவதோர் உதவி செய்தால் அஃது கோயில் கடவுளுக்கும் செய்ததேயாகிறது. இச் செய்யுள் நாம் சொன்னதன்று. திருமூலர் தமது திருமந்திரம் என்னும் நூலில் சொன்னதேயாகும். மக்களைக் கோயில் கட்டச் சொல்லி அதன்மூலம் பிழைக்க எண்ணிய பிராமணோத்தமர்களும், மற்றும் சோம்பேறிப் பண்டாரங் களும் இதுபோன்ற செய்யுள்களை மக்கள் கவனத்தில் வராதபடி மறைத்தும், திருக்கோயில் இல்லாத ஊர் திரு இல்லாத ஊராகும் ஆகையால் திருக்கோயிலைக் கட்டியழுங்கள் என்று சொல்லும் செய்யுட்களை மக்களிடம் அச்சடித்துப் பரப்பியும் வந்திருக்கின்றனர். இதனால் சத்துள்ள செயல்களை நம்மவர் மறந்து வீணில் தாம் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த திரவியங்களையெல்லாம் கோயில் திருப்பணி, விழா, திருவாபரணம், தீர்த்த யாத்திரை முதலியவைகளில் செலவிட்டு நாட்டைக் கெடுத்துழலுகின்றனர் ஆயினும் சமூக முன்னேற்றம் கருதும் மேல் நாட்டார்கள் தங்கள் பணத்தை மக்களின் நன்மைக்காக உதவித் தம் சமூகத்தை உந்நத நிலைக்குக் கொண்டு வருவதிலேயே கண்ணும் கருத்துமாய் இருப்பதற்கு சர் ஆட்டோபீட் தருமமானது ஓர் உதாரணமாகும். புதுவையின் கர்ப்பக்கிருகம் என்று எண்ணத் தக்கவிதம் அழகிய மாளிகைகள் நிறைந்த கோமுட்டி வீதிகளில் இருந்த செல்வச் சீமான்களின் பெரும் பெரும் ஆதினங்கள் இன்று என்ன நிலையில் இருக்கின்றன? பாழடைந்துவிட்டன என்றே சொல்லலாம். அக் கோமுட்டிச் செட்டிமார்கள் அனைவரும், பிராமணர்கள் தம்முடன் சகஜமாய் இருப்பதில் மிக்க ஆசை கொண்டு அப் பிராமணர்கட்குத் தினம் தினம் அள்ளிக்கொடுத்த நிதிக்கு அளவிராது. அப்படி வாரிக்கொடுத்த பொருளுக்குத் தானம் என்றும் தருமம் என்றும் பெயர். மேலும் அவர்கள் கோயிலைக் கட்டியழுதபடி அக் கோயிலின் பேரால் இரைத்து வந்த பொருள்களின் தொகை எண்ணில் அடங்காது. மேலும் காசி யாத்திரைகள் ராமேவர யாத்திரைகள் செய்துவந்ததை இன்று யோசித்தால் அவர்களின் முட்டாள்தனம் விளங்கும். தினம் தினம் அன்னதானம் என்பதன் பேரால் ஊரில் சோம்பேறிகளை உண்டுபண்ணிச் சந்தோஷப்பட்டு வந்தார்கள். ஒருதரம் ராமா என்றால் மோக்ஷம் கிடைத்துவிடக்கூடிய பிரசங்கங்களும் ஒருதரம் சிவ என்றால் பரமசிவன் ரிஷப வாகன ரூபராய் வந்து கைலாசத்திற்குத் தூக்கிக்கொண்டு போவார் என்று சத்காலக்ஷேபங்களும் தினம் தினம் ஏற்பாடு செய்து - அந்த அடி முட்டாள் பாகவதர்களும கூழைமட்டைப் பிரசங்கிகளும் சொல்லும் வார்த்தைகளை எதிரில் உட்கார்ந்துகொண்டு - வெல்லந் தின்னும் குழந்தைகள் கடைவாயில் எச்சல் ஒழுகவிட்டுச் சந்தோஷிப்பது போல் வாயைத் திறந்தபடி கேட்டு மகிழ்ந்து வந்தார்கள். நேற்றொரு செட்டி ஸ்ரீநிவாச பாகவதருக்கு 5000 ரூபாய் கொடுத்தான் ஆதலால்தான் லக்ஷுமணாச்சாரிக்கு 12 ஆயிரம் கொடுத்தேன் என்று போட்டி போட்டுக்கொண்டு பணத்தைக் கொடுப்பார்கள். ஆகக்கூடி இன்றையமட்டும் அக்கோமுட்டிச் செட்டிகள் அடைந்த பலன் என்ன என்றால் அத் தெருவில் அநேக குடும்பங்களில் மாலையில் விளக்கேற்ற எண்ணெய்க்குத் தகராறு. தெருநிறைய பால்ய விதவைகள். அவர்களின் மேம்பாடு, அவர்களின் வியாபாரக் கீர்த்தி - அவர்களின் கம்பீரம் அனைத்தும் மறைந்தன. அவர்கள் தேடிய புண்ணியங்கள் அவர்கட்குத்தான் பிரயோ ஜனப் பட்டதா என்று பார்த்தால் அவர்கள் செய்தது புண்ணியச் செயல்கள் அல்ல ஆதலால் அவர்களும் சௌக்யப் படவில்லை. பிறருக்கும் உண்மைப் பயன் ஏற்படவில்லை. அவர்கள் தருமம் என்று நினைத்துச் செய்தவை அனைத்தும் தருமமே அன்று. ஆயினும் அவர்களில் உயர் திருவாளர் கலவை - க்ருஷ்ணசாமி செட்டியார் செய்துவைத்த கல்வே காலேஜ் ஒன்றே மேலான தருமம் ஆகும். அதுவே அன்னார் - நடமாடும் கோயில்கள் பால் அன்பு பாராட்டியதை விளக்கும். மற்றும் இவ்விதமே அநேகர் வீண் செலவு - செய்து தமது முட்டாள் தனத்தை வெளிப்படுத்திக் கொள்வதை விட்டுச் சமீபத்தில் நமது உயர் திருவாளர் - நன்னைய பாகவதர் அவர்கள் ஏழைப் பிள்ளைகட்கென்று - ப்ராக்ரே சீத் சொசையட்டியின் மூலமாக - ஓர் கல்விச் சாலைக்கு நன்கொடை கொடுத்ததுபோல் - நடமாடும் கோயில்கள்பால் அன்பு பாராட்டிச் சமூகத்தை உயர்வுசெய்ய அனைவருக்கும் ஞாபகப்படுத்துகிறோம். - புதுவை முரசு, 15. 12. 1930, ப. 12 - 13 11. நமது விண்ணப்பம் சென்ற ஆண்டில் கூடிய நம் பிரஞ்சிந்திய சட்டசபை அக்கிராசனருக்கு, திரு. லெப்ரியானவர்கள் முதலிய பல பிரதான குடிகள் கையொப்பமிட்டு, பிரஞ்சு இந்திய மக்கள் தங்கள் பெயரோடு ஜாதிவால்களையும் சேர்த்துச் சர்க்கார் பத்திரங்களில் குறிக்கும் வழக்கத்தை நீக்கவேண்டும் என்ற கருத்தடங்கிய விண்ணப்ப மொன்று அனுப்பப்பட்டது. அதுபற்றிச் சட்டசபையில் விவாதிக்கப் பட்டபோது அதற்குப் பெரும்பான்மை அங்கத்தினர் சாதகமாக இருந்தார்கள். அவ்வாறிருந்தும் இந்நாள் மட்டும் அது நடவடிக்கையில் வராத நிலையில் பிரஞ்சிந்திய துரைத்தனத்தாரும் சட்டசபைத் தலைவரும் அந்நாளில் கவனம் செலுத்தாதிருந்ததற்குப் - பொது மக்கள் அது பற்றி அதிக கவலை கொள்ளவில்லை என்று அவர்கள் நினைத்ததே காரணமா யிருக்கலாம். இது உண்மையானால், பிரஞ் சிந்திய மக்களின் நன்மைக்கான எக்காரியத்தையும் அவர்கள், முழு நம்பிக்கை வைத்துள்ள பிரதிநிதிகளே கண்டுபிடித்து இந்நாள் வரை ஏற்பாடு செய்ததன்றித், தாமே நேராகச் சட்டசபையின் மூலமாகவோ துரைத்தனத்தார் மூலமாகவோ போராடிப் பெற்றதுமில்லை பெறக் கற்றதுமில்லை என்பதை துரைத்தனத்தாருக்கும் சட்டசபை யினர்க்கும் நாம் ஞாபகப் படுத்துகிறோம். மக்கள் சமத்வத்திற்கு ஜாதிக் கொள்கையானது பெருந் தடை யாகும். ஜாதிக்கொள்கையை வற்புறுத்தி நிற்பன ஜாதி வால்களாகும், சமத்வத்தின்மேல் கட்டப்பட்ட மேன்மை தங்கிய குடியரசு, தன் மக்கள்பால் பேதத் தன்மையை வளர்க்கும் இந்த ஜாதியால் என்ற ஆபாசத்தை நீக்குவதில் தாமதிக்கலாகாது. இதுவன்றி - உலகில், முதலில் குடியரசு என்ற மகத்வ நிலையை அடைந்து ஏனைய நாடுகளுக்கு வழிகாட்டிய பிரஞ்சுதேசத்தைப் போலவே ஏனைய இந்தியர்க்கு எல்லாவகையிலும் வழிகாட்டியாக இப்பிரஞ்சு இந்தியர் விளங்க வேண்டியதிருக்கப் - பிரஞ்சு இந்தியர் சீர்திருத்தத் துறையிலேயே, அடுத்துள்ள ஆங்கில இந்தியர்க்குப் பிற்பட்டுக் கிடக்கின்றனர் என்று சொல்ல இடந்தரலாகாது. ஆங்கில இந்தியர்கள் தமக்கான சீர்திருத்தக் கொள்கைகளில் முனைந்து வேலைசெய்வதும், அதன் பயனாகத் தமக்குள் ஜாதிக்கொள்கை, சமயக் கொள்கைகளை விஷம்போல் வெறுத்தொதுக்கி வருவதும், இதற்கு ஆங்கில அரசாங்கத்தினரும் ஒருபுடை ஒத்துப்போவதும் கண்கூடு. ஆங்கில இந்தியர்களின் சீர்திருத்தத் தலைவர்களில் ஒருவரான திருவாளர் S. குருசாமி குஞ்சிதம் அவர்கள் தமது ஆங்கில இந்தியருக் கென விடுத்திருக்கும் எச்சரிக்கை வேறுபக்கம் சிறப்பு வகையில் கோடிட்டுக் குறித்திருக்கிறோம். அதன்படி சமீபத்தில் ஜனக்கணக்கு எடுக்கும்போது சாதி - மதம் இவைகளைக் - கணக்கெடுப்போர் கேட்காதிருக்கும்படி ஆங்கில அரசினரை அவர்கள் கேட்டதும் அரசினர் ஒப்புக்கொண்டதும் புலனாகும். நமது மேன்மை தங்கிய துரந்தார் அவர்களையும் ஜனங்கள்பால் அன்பு மிக்க சட்டசபைத் தலைவர் - அங்கத்தினர்களையும் நாம் கேட்டுக்கொள்வ தென்ன வெனில் நமது பிரஞ்சிந்தியாவிலும் ஜனகணிதம் எடுக்கும்போது பிரமாவைத் தொழுபவர் (Bramaniquo) கிறீஸ்துவைத் தொழுபவர் (Chretin) மகம்மதுவைத் தொழுபவர் (ஆரளரடஅய) என்ற மதப் பட்டத்தையும், பலவிதமாகிய ஜாதிப் பட்டத்தையும், கணக்கெடுப் போர் ஜனங்களைக் கேளாதிருக்கச் சட்டம் பிறப்பிப்பதோடு, அதைப் பொது மக்களுக்கும் முன்னதாகவே அறிவிக்கும்வண்ணம் விண்ணப் பித்துக் கொள்ளுகின்றோம். அதுவுமன்றி ஜாதிமதப் பட்டங்களைச் சர்க்கார் எந்தத் தஸ்தாவேஜிலும் குறிக்கும் வழக்கத்தை விலக்க ஏற்பாடு செய்யவும் வேண்டுகிறோம். ஆங்கில இந்தியர்கள் இவ் விஷயங்களில் முன்னேறும் போதும் சுதந்தரம் சமத்வம் சகோதரத்வம் உள்ள பிரஞ்சிந்தியர் இவ் விஷயங்களில் பிற்போக்கில் இருப்பது அவமானமாகும். - புதுவை முரசு, 22.12.1930, ப. 10 - 11 12. சைவர்களும் வைஷ்ணவர்களும் சைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் கூட்டத்தார் சிவனுடைய மதத்தைச் சார்ந்தவர்கள். சிவன் என்பவர் ஒரு ஜாதியிலும் சேராதவர். அதை நிரூபிப்பதற்காகப் பறையனாக வந்து பார்ப்பான் செய்த யாகத்தில் நுழைந்து பார்ப்பானும் பறையனும் ஒன்று என்று காண்பித் திருக்கிறார். மிருகத்தையும் ஓரே கருணையோடு பார்த்து வருவதை நிரூபிக்க, பன்றியாக வந்து குட்டிகளுக்குப் பால் கொடுத்திருக்கிறார். அது மாத்திரமா? சைவ மதத்தைச் சேர்ந்த அடியார்களெல்லாம் ஜாதி வித்தியாசம் சிறிது கூடப் பாராட்டுவது கிடையாது என்பதற்குத் திருஷ்டாந் தமாகப் பார்ப்பானும் அது அல்லாதவனுமாகச் சமபந்தி போஜனம் செய்ததுமுதல் இரண்டு ஜாதியாருக்கும் கலப்புமணம் முதலியான கூட நடந்திருப்பதற்குச் சைவப்புராணங்கள் அத்தாட்சியாக இருக்கின்றன. அன்பே உருவாயிருக்கின்ற. சைவ மதத்தில் ஜாதியே கிடையாது என்பதற்கு, சாமி வேதாசலம் முதல் - மணி, திருநாவுக்காசு வரையி லுள்ள சைவப் பெரியார்களெல்லாம் பேசியிருக்கும் பேச்சுக்களும், எழுதி யிருக்கும் எழுத்துக்களும் அச்சு ரூபமாகவே இன்னும் இருக்கின்றன. அவர்களுக்கு மூல ஆதாரமாயிருக்கின்ற பெரிய புராணத்தில் பறையன் முதல் பார்ப்பான் வரையில் ஜாதி வித்தியாசமில்லாமல் எல்லோரையும் சிவபெருமான் காளைமாட்டின் மேல் தூக்கி வைத்துக் கொண்டு போய் மோட்சத்தி லிறக்கி விட்டதாகச் சொல்லப்பட்டிருக் கிறது. சைவக் குரவர்களில் சிறந்தவராகச் சொல்லப்படும் திருநாவுக் கரசர் பாடிய அங்கமெலாம் குறைந்தொழுகும் தொழுநோயராய் ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் அவர் கண்டீர் யாம் வணங்கும் கடவுளாரே என்ற பாட்டானது ஒவ்வொரு சைவக் குழந்தையாலும் இராகம்போட்டுப் பாடப்பட்டு வருகிறது. இன்னும் சைவத்தின் சமாச்சாரம் என்ற புத்தகமும் அதன் ஆசிரியரும் சைவக் கூட்டத்தில் முதன்மைபெற்று விளங்குகிறார்கள் “Cast and its Evil” (சாதியின் கொடுமை) என்ற புத்தகம் எழுதிய மறைமலையடிகளும் சைவக் கூட்டத்தில் தலை சிறந்தவர் என்பதில் சந்தேகமில்லை. ஜாதிகாற்றமோ மத நாற்றமோ வீசாமல் எழுதப்பட்ட திருக்குறளினுடைய ஆசிரியரை, விபூதி, ருத்திராட்சம் போட்டுப் படம் எழுதிய மகா பாதகத்தைச் செய்த போதிலும் சைவர்கள் அக்குறளை, தமிழ்மறை என்றே கருதுகிறார்கள். ஆரியர் இந்தியாவுக்கு வரு முன்னர் ஜாதியே கிடையாது, என்று சைவ அறிஞர்களால் எழுதப் பட்ட புஸ்தகங்களும், பத்திரிகைகளும் நல்ல பைண்ட் ரூபமாக இன்றும் சைவ அலமாரிகளை அலங்கரித்துக் கொண்டுதானிருக்கின்றன. ஆகவே, உண்மைச் சைவத்தில் ஜாதி கிடையாது என்பதற்கு எழுத்து ரூபமாகவோ பேச்சு ரூபமாகவோ எவ்வளவு திருஷ்டாந்தம் வேண்டுமானாலும் சொல்லலாம். இனி வைஷ்ணவ மதக்காரர்களைப் பற்றிக் கவனிப்போம். விஷ்ணு வினுடைய பக்தர்கள் வைஷ்ணவர்கள் ஆவார்கள். விஷ்ணுவோ ஜாதியில்லாதவர். இடையனாகப் பிறந்திருக்கிறார். மீன், ஆமை, பன்றியாகக் கூடப் பிறந்திருக்கிறார். அவருடைய பக்தர்களில் முக்கியமானவர்களோ பறையன்முதல் பார்ப்பனன் வரையில் உண்டு. அவர்களில் மிகவும் சிரேஷ்டமான சீர்திருத்தக்காராகிய இராமா னுஜரோ இப்போதிருக்கும் கிருஸ்துமதப் பாதிரிகள் பாப்பாரக் கிருஸ்துவன் பறக்கிருஸ்துவன் என உண்டாக்கியிருப்பதுமாதிரி, பாப்பார ஐயங்கார், முதலி ஐயங்கார், செட்டி ஐயங்கார், அம்பட்ட ஐயங்கார், பற ஐயங்கார், முதலிய ஜாதி ஐயங்கார்களை உண்டாக்கி ஜாதிகளை ஒன்றுபடுத்த முயற்சித்திருக்கிறார். (இல்லாவிடில், தென் கலை அய்யங்கார்களிடத்தில் இப்போதிருக்கும் திரை வழக்கத் திற்குக் காரணம் யாராவது சொல்லட்டும்.) இன்னும் வைஷ்ணவத்தின் சமரசத்தைக் காண்பிப்பதற்கு நாலாயிர திவ்ய பிரபந்தம் ஒன்றே போதும் என்று வைஷ்ணவர்கள் குதிக்கிறார்கள். சைவத்தின் சமரசத்தை நிரூபிக்க நந்தனார் சிலை ஒன்றே போதாதா? என்று சைவன் கத்தினால், வைஷ்ணவத்தின் சமரசத்தை நிரூபிக்கத் திருப்பாணாழ்வார் சிலை ஒன்றே போதுமே என்று வைஷ்ணவன் கத்துகிறான். ஆகவே இந்த இரண்டு கூட்டத்தார்களும் தங்கள் தங்கள் மதத்தில் ஜாதி வித்தியாசம் இல்லை யென்று உறுதியாக நம்பிக் கொண்டிருப்பதோடு, அதே தங்கள் தங்கள் மதத்தின் பெருமை யென்றும், அந்தக் காரணத்தாலேயே அது பரவுக உலகமெல்லாம் என்று பாட்டுப்பாடிக் கொண்டும் இருக்கிறார்கள். இந்த உண்மையை நடை முறையில் போஜனம், திருமணம் முதலிய வழிகளால் காண்பித்த சைவனோ, வைஷ்ணவனோ இருக்கிறானா என்றால், அவன் (சுயமரியாதை) பகுத்தறிவு இயக்கத்தில் சேர்ந்தவன் தவிர வேறு ஒருவனும் இருக்கமுடியாது. இது வரையில் எப்படியோ ஏமாற்றி வந்ததெல்லாம் போகட்டும். உண்மைச் சைவத்திலும் உண்மை வைஷ்ணவத்திலும் ஜாதி கிடையாது என்று கூறும் மதக்காரர்களெல்லாம் யோக்கியர்களா, அல்லவா என்பதை அறிய நமது மக்களுக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. உண்மையாகவே ஜாதி இல்லையென்று இவ்விரண்டு மதங்களிலும் இருப்பதும் உண்மையாயிருந்து அம் மதங்களினுடைய பக்தர்கள் அதன்படி நடக்கும் யோக்கியர்கள் என்பதும் உண்மையா யிருக்குமே யானால், வரப்போகும் ஜன கணிதத்தில் ஜாதி இல்லையென்று கொடுக்கவேண்டும். இல்லையேல், இம்மதக்காரர்களைப் பொய்யர்கள், அயோக்கியர்கள், மோசக்காரர்கள் மதத்துரோகிகள், சொன்னபடி நடக்காதவர்கள், ஏமாற்றுபவர்கள், நம்பிக்கைத் துரோகிகள் என்று சொல்வதைத் தவிர நாம் வேறு என்ன சொல்வோம்? அவ்வாறு செய்யாத மதத்தலைவர்களையும், பிரசங்கிகளையும், பண்டிதர்களையும், ஆசிரியர்களையும் மதத்தின் பேரால் இனிப்பொதுக் கூட்டங்களில் வாய் திறவாவண்ணம் செய்யவேண்டியது பகுத்தறிவைப் பின்பற்றிய உண்மையான பொது மக்களின் கடமை என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம். - புதுவை முரசு, 29.12.1930, ப. 10 - 11 13. ஜாதி ஆபத்து - எம்டன் கப்பல் வரவு மகாயுத்த ஆரம்ப காலத்தில் புதுவைத் துறைமுகத்தில் எம்டன் என்னும் செர்மனிக் கப்பல் வந்ததற்காகப் புதுவை வாசிகளில் ஏழைகளும் பணக்காரருமாகப் பல பேர்கள் குடும்ப சகிதம் மேற்கில் பத்துப் பதினைந்து மைல் தூரமுள்ள கிராமங்களுக்குப் போய் விட்டார்கள். அதிலொரு கிராமம் கூனிச்சம்பட்டு. கூனிச்சம்பட்டுக் கிராமத்தார் தங்களூரை நோக்கி அஞ்சி ஓடிவரும் புதுவைவாசிகளை வரவேற்று, அவர்கள் தங்கிச் சமையல் செய்து கொள்ளத் தாங்கள் வசிக்கும் வீடுகளிலேயே இடம் கொடுத்தனர். கூனிச்சம்பட்டுக் கிராமத்தார் தம்மை நாடி வந்தவர்கள் அனைவரும் மொத்தத்தில் பட்டணவாசிகள் என்று கருதினார்களேயன்றி அவர்களில் இவர் இன்ன ஜாதி என்பதை நினைக்கவில்லை. பட்டணவாசிகளும் தங்களுக்குத் தங்க இடம் கொடுத்தவர்களும் இன்னவர் இன்ன ஜாதி என்பதை அலசிப் பார்த்துத் தத்தமக்கு ஏற்ற ஜாதிக்காரர் வீட்டில் தங்கினதாகவும் சொல்ல முடியாது. எனவே கூனிச்சம்பட்டில் புதுவை வாசிகள் தங்கியிருந்தவரைக்கும் தமது ஜாதிப் பைத்தியத்தினின்று நீங்கிச் சமத்வ வாழ்வு வாழ்ந்தனர். வாசகர்கட்கு நன்றாய் ஞாபக மிருக்கட்டும்; புதுவைவாசிகள் இரண்டொரு நாள் கூனிச்சம்பட்டில் சமத்வமாயிருக்க ஜெர்மனிக் கப்பல் புதுவைத் துறைமுகத்துக்கு வரவேண்டியிருந்தது! அக்கப்பல் மறுநாள் போய்விட்டது! போய்விட்ட செய்தி கூனிச்சம்பட்டிலிருந்த புதுவைவாசிகளுக்கு நிச்சயப்பட்டது. கூனிச்சம் பட்டிலும், அதன் அண்டைக் கிராமங்களிலும் சத்த வண்டிகள் தயாராயின. ஒரு ரெட்டிமார் வீதி. அவ்வீதியில் புதுவைக் குடும்பம் பத்துக்கு மேல் தங்கியிருந்தன. அக்குடும்பங்களில் ஒரு குடும்பம் மிக்க தாழ்ந்த சாதி. பக்கத்து வீட்டில் இறங்கியிருந்த குடும்பம் உயர்ந்த ஜாதி. அதன் பக்கத்தில் நடுத்தரம். எதிர்த்த வீட்டில் தங்கியதோ கொஞ்சம் சுமார். புதுச்சேரி வேளாளர்க் கிழவி ஒருத்தி - ஜெர்மனி யான் கப்பல் வந்தாலும் வந்தது! இந்த இடத்தில் கீழ்ச் சாதி - மேல் ஜாதி என்று இல்லாமல் எல்லாரோடும் சரிசமானமாய் இருக்க நேரிட்டது என்று சொன்னாள். பக்கத்து வீட்டில் நின்றிருந்த கீழ்ச்சாதி புதுவைப் பெண்ணின் காதில் இது விழுந்தது; அப்பெண், ஏன் முதலியார் வீட்டம்மா! அந்தக் கீழ்ச்சாதி நேற்று உங்களுக்கு நினைப்பில்லாமல் போனதென்ன? இன்றைக்குத்தான் நினைப்பு வந்தது என்றால் உங்கள் மேல் ஜாதிப் பெருமையைச் சொல்லிக் கொள்ளாதிருந்தால் முழுகிப் போவது ஒன்று மில்லையே என்றாள். இதுதான் சொன்னாள். கிழவிக்கு வந்தது கோபம். தாழ்ந்த ஜாதியின் வர்ணனை ஆரம்பிக்கப்பட்டது. அந்த ஜாதிக்கே உரிமையென்று பல செயல்கள் வெளிவந்தன. தாழ்ந்த ஜாதிப் பெண் திகைத்தாள். அவளுக்குத் திட்டத் தெரியாது. நாணமும் பொறுக்க முடியவில்லை. கண்ணீர்விட்டாள். ஆனால் அவள் புருஷன் புதுவைக்கு போகச் சத்தவண்டியோடு வந்துவிட்டான். இதைக் கேள்விப்பட்டான். நன்றாகக் கிழவியை திட்டினான். கிழவியின் மருகரான முதலியார் உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் காதில் கேட்டது. அவரும் வந்து தாழ்ந்த ஜாதி ஆண்பிள்ளையை எதிர்த்தார். அந்தண்டையில் அவரின் காரியக்காரனும் முதலியாருக்கு உதவி செய்தான். மேலும் தாழ்ந்த ஜாதிப் பாடல்கள் நடந்து கொண்டிருந்தன. தடிகள் உபயோகிக்கப்பட்டன. விஷயம் பரவிற்று. உள்ளூர்த் தாழ்ந்த ஜாதிக்காரர்களும் அங்கு நெருங்கினார்கள். மேல் ஜாதியாரும் நெருங்கினார்கள். இரண்டு நிமிஷத்தில் இரு பக்கத்திலும் பத்துப் பேர்கள் வீதம் நின்று ஆயுதங்களைச் சுழற்றினார்கள். அடுத்த இரண்டாவது நிமிஷம் நூறு பேர் வீதம் இரு தரப்பிலும் சேர்ந்தார்கள். அதற்குமேல் உயர் ஜாதிக்காரருக்குக் கூட்டம் சேரவில்லை. எதிரிகளின் தொகை அதிகப்பட்டுக் கொண்டே வந்தது. முடிவு: இருபது பேருக்கு ஆபத்தான காயம். ஒருவன் இறந்தான்; 15 பேருக்குக் கைமுறிவு, கால்முறி! அ. கூனிச்சம்பட்டில் ஆபத்திரியேது? புதுவை ஆபத்திரியை நோக்கி வண்டிகள் வரிசையாக நோயாளிகளையும், சொந்தக்காரர்களையும் ஏற்றிப் போய்க்கொண்டிருந்தன. வழியில் என்ன விஷயம் என்று கேட்பவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வெட்கமாயிருந்தது. வெட்கக் கேடு. ஜெர்மனியின் அக்ரமமான சண்டைக் கப்பலுக்குத் தப்பித்துக் கொள்ளுவது சாத்தியம். ஆனால், மனு வகுத்த ஜாதி என்னும் அக்ரமத்திற்குத் தப்பி உயிர் பிழைப்பது முடியவில்லை. - புதுவை முரசு, 12.01.1931, ப. 3 - 5 14. குழந்தை இந்தியா பிரஞ்சு - இந்திய சர்க்கார் பாடசாலைகளில் ஒரு பாடசாலை, விளையாட்டு மணி அடித்தது. பிள்ளைகள் அனைவரும் விளை யாடும் இடத்தையடைந்தார்கள். ஒவ்வொரு வகுப்புப் பிள்ளைகளும் ஒவ்வொருவித விளையாட்டு. ஆரம்ப வகுப்புகளுக்கு ஏறினது ஏழு வயது. அவர்களில் பெண்களும் ஆண்களும் கலந்திருந்தனர். அவர்கள் தமது விளையாட்டு நேரத்தில் மணல் வீடுகட்ட ஆரம்பித்தார்கள். அதற்குள் ஒருவன் சொல்லுகிறான்: வாத்தியார் சற்று நேரத்திற்கு முன் நமக்கு இந்தியா படம் எழுதிக் காட்டினாரே! அதில் ஊர்கள் எழுதினாரே! ஊர்களில் தெருக்கள் அமைத்தாரே! தெருக்களில் வீடுகள் கட்டினாரே! அதுபோல் போட்டு அதற்குள் நாம் விளையாடலாம். பெரியதாய் ஓர் இந்தியா கிழிக்க வேண்டும். (மணலில் எழுத வேண்டும்.) இதற்கு எல்லாரும் ஒத்துக்கொண்டார்கள். கோடுகள் கிழித்தார்கள். குழந்தை இந்தியா நிர்மாணிக்கப்பட்டது. எல்லாரும் குழந்தை இந்தியாவில் குடியேறினார்கள். அதில் அவர்கள் குடியேறு முன் அவர்கட்கு அசல் இந்தியர் என்றல்லவா பெயர்? அந்த அசல் இந்தியர் நாற்பது பேராவார்கள். அவர்களில் பிராமணர், வேளாளர், நாயகர், நாயுடுகார், பறையர் முதலிய ஜாதிப் பிள்ளைகளும், கிறீதவர், முகம்மதியர் முதலிய பிள்ளைகளும் கலப்பு. அசல் இந்தியாவின் குறிப்பில் கண்ட பெயர்களே இவை. குழந்தை இந்தியாவில் குடிபோன குழந்தைகளின் அகத்திலும் புறத்திலும் இந்தக் குளறுபடி ஒன்று மில்லை. குழந்தை இந்தியர் உள்ளம் அனைத்தும் ஒன்றே ஒன்று. பேதமில்லை. கபடமில்லை. குடியேறிய குழந்தைகள் தங்கள் நாட்டில் பாடசாலை ஏற்படுத்தி னார்கள். ஆசிரியர் நியமித்தார்கள். தான்யம் விளைவித்தார்கள். வியாபாரம் நடத்துவித்தார்கள். குடும்பம் நடந்தன. ஒருவன் சொல்லுகிறான்: எல்லாம் ஆயின. போலீ ஏற்படுத்தவில்லையே! அதற்குப் பதில் : போலீ ஏற்படுத்த வேண்டாம். போலீ ஏற்படுத்தினால் திருடன் ஏற்பட வேண்டியதாயிருக்கும். போலீ ஏற்பாடு நின்று விட்டது. குழந்தை இந்திய சமுதாயம் அழகுபெற நடந்து கொண்டிருந்தது. மணியடிக்கும் சமயம். குழந்தை இந்தியர், அசல் இந்தியாவில் நுழையும் சமயம். ஏ, அசல் இந்தியாவின் உயர்ந்தவர்களே! சீக்கிரம் வாருங்கள்! இதோ பாருங்கள் உங்கள் குழந்தைகளை! அவர்கள் தாழ்ந்தவர் என்று நீங்கள் சொல்லுகின்ற பிள்ளைகளிடம் சேர்ந்து விளையாடுகின்றனர். இந்து மதத்தவரே! கிறீது மதத்தவரே! மகம்மது மதத்தவரே! உங்கள் குரோதப் புத்தி, அற்பத்தனம், மதவெறி ஒன்றையும் குழந்தைகளிடம் நீங்கள் பார்க்க முடியவில்லை. ஏ, விஷ்ணுவே! நீதான் உன் தொண்டர் பெற்ற பிள்ளைகளின் உள்ளத்தைத் தீண்டி அவர்களைப் பேதப்படுத்த முடியுமா? சிவ பெருமானே, கிறீத நாதரே, முகம்மது நபியே, பிள்ளைகளின் நெஞ்சைப் பேதப்படுத்த உம்மால் முடியுமா? பரிசுத்த உள்ளம்! இன்ப வாழ்வு. அசல் இந்தியாவே! நீ வாழ்வு அடைய ஜாதி மனிதர், மத மனிதர், கடவுள் மனிதர், உயர் மனிதர், தாழ் மனிதர் வேண்டுமோ? அசல் மனிதர் வேண்டுமோ! அசல் இந்தியரே நீங்கள் இன்ப வாழ்வு பெற அசல் மனிதராய் விடுங்கள்! அதற்குத்தான் உமக்கு இந்தக் குழந்தைகளின் உள்ளம் வேண்டும். - புதுவை முரசு, 19. 1. 1931, ப. 6 - 7 15. அடே! எருமைமாடே! சாமி விளையாட்டா? நமது சின்னஞ் சிறுகுழந்தைகள் சாமி வைத்து விளையாடு வதைப் பார்த்திருக்கிறோம். சிறு கற்களை இரண்டு வரிசையாக அடுக்கி அதன்மேல் குச்சிகளைப் பரப்பி, அதற்குமேல் துணி, இலை, காகிதம் முதலியவைகளைப் போட்டு மூடி, ஓர் அறை மாதிரியாகச் செய்வார்கள். அதன்பிறகு சிறு ஓடுகளை முக்கோணமாகத் தேய்த்தோ அல்லது பொம்மைகளையோ அவ்வறைகளுக்குள் சாமிகளாக வைத்து, ஒரு குழந்தை அர்ச்சகராகவும், மற்றக் குழந்தைகள் பக்தர்க ளாகவும், நடிப்பதுண்டு. இதுதான் குழந்தை களினுடைய கோயில்கள் இவைகளுக்குத் திருவிழாக்களும் உண்டு. சிறுகாய்களில் துடைப்பக் குச்சிகளைக் கோத்துத் தேர்மாதிரி செய்து அடியில் குச்சிகளைப் பரப்பி அதன்மேல் முக்கோணமாய்த் தேய்க்கப்பட்ட ஒட்டுத்துண்டை வைத்து, இழுத்துக்கொண்டு போவது உண்டு. அந்தக் கூட்டத்தில் மிகவும் சிறு குழந்தையாய் இருப்பவர்கள் ஓட்டைத் தகரங்களை மேளமாக உபயோகப்படுத்துவார்கள். இந்துக்கள் என்றும், சைவர்கள், வைஷ்ணவர்கள் என்றும் சொல்லிக் கொள்ளும் எல்லாருடைய வீட்டிலும் பெரும்பாலும் குழந்தைகள் இவ்வாறு விளையாடுவது உண்டு. ஆனால் இப்போது பட்டணங்களி லுள்ள இந்துக் குழந்தைகள் இவ்வாறான விளையாட்டு விளை யாடுவது கிடையாது. அவர்கள் பட்டண வாழ்க்கையில் அதிகமாய்க் காணப் படும் மோட்டார், இரயில் முதலியவைகள் மாதிரி வைத்து விளையாடு கிறார்கள். ஏனெனில் கிராமத்துக் குழந்தைகளுக்குக் கடவுளின் மேலிருக்கும் அவ்வளவு பக்தி பட்டணத்துக் குழந்தைகளுக்கு இருக்கச் சந்தர்ப்பம் கிடையாதல்லவா? சாமி வைத்து விளையாடும் குழந்தைகள், பெரியோர்களாகிய நாம் செய்வதைப் பார்த்துத்தான் செய்கின்றன. ஆனாலும் அக் குழந்தைகள் விளையாடுவதை ஓரளவுதான் நாம் பொறுத்துக் கொண்டிருக்கிறோம். பொறுத்துக் கொள்ளவும் முடிகிறது. உதாரண மாக, மிகவும் செல்லப் பிள்ளையாய் வளரும் ஒரு குழந்தையை 6 முதல் 8 அல்லது 10-வது வயது வரை சாமிவைத்து விளையாடு வதைப் பொறுத்துக் கொண்டிருப்போம். சாதாரணமாக 3 வயது முதல் 6 வயது வரையில் தான் இவ்வித விளையாட்டுகளுக்கு மதிப்பும் இருக்கும். அதுவும்கூட ஓர் அளவு வரையில்தான். 7 வயதுக் குழந்தை சாமி விளையாடுவதற்காக, பள்ளிச் சம்பளத்துக்கு வைத்திருக்கும் பணத்தை எடுத்துக் கற்பூரமும் கலர்க் காகிதமும் வாங்கினால் கன்னத்தில் ஒர் அறை கொடுத்துக் காதைப்பிடித்து இழுத்து அப்புறம் விடுவதைப் பார்த்திருக்கிறோம். அல்லது 13 வயதுப் பையன் சாமி விளையாட ஆரம்பிப்பதைக் கண்டோமானால், அடே, எருமை மாடே வயது குட்டிச்சுவர் மாதிரியாகியும் சாமி வைத்து விளையாட வெட்கமில்லையா? என்று கடுத்த முகத்தோடு கேட்கிறோம். அதையும் மீறி அக்குழந்தை செய்யுமாகில், சிற்சில சமயங்களில் சிறு சிறைச்சாலை வாழ்க்கையைக்கூட அநுபவிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிடுகிறது. இச்சிறு அநுபவம் எல்லாருக்கும் தெரிந்ததுதான். ஆனால், மேலே சொன்ன எல்லா விஷயங்களையும் அக்குழந்தைகளே நம்மைத் திருப்பிக் கேட்குமாகில், நாம் என்ன சொல்வோம்? அடே அதிகப் பிரசங்கி என்பது தவிர, உண்மையான பதில் ஏதாவது சொல்ல முடியுமா என்பதை யோசித்துப் பாருங்கள், வருஷா வருஷம் நமது நாட்டில் நூற்றுக் கணக்கான கோயில் களும், தேர்களும் கட்டப்பட்டு, ஆயிரக் கணக்கான உத்ஸவங்களும் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு திருவிழாவுக்கும் இலட்சக் கணக்கான ஜனங்கள் போய்க்கொண்டிருக்கிறார்கள். இதே விதத்தில் கோவில்களும் உத்ஸவங்களும் பெருகிக்கொண்டே போகுமானால், இன்னும் சில வருஷங்களில் இந்தியாவினுடைய செவ்வமெல்லாம் குட்டிச்சுவர்களிலும், குழவிக் கற்களிலும் குடை பீதாம்பரங்களிலும் தான் இருக்குமேயொழிய ஜனங்களுக்குப் பிரயோசனப் படக்கூடிய முறையில் ஒரு தம்படிகூட இருக்காது என்பது திண்ணம். இன்னும், மதுரை, திருநெல்வேலி, திருவாரூர், சீரங்கம், திருச்செந்தூர், திருவானைக் காவல் முதலிய ஊர்களில் ஜனங்களுக்கு வீடு கட்டிக்கொள்ளக்கூட இடமில்லாதபடி சரிபாதி ஊரைக் கோயில் அடைத்துக் கொண்டிருக் கிறது. உயிரில்லாச்சாமி ஒன்றுக்கும், உயிருள்ள சாமிகள் தோசை, வடை, புளியோதரையை விழுங்கிவிட்டு ஜட்கா வண்டிக் குதிரை புரளுவது மாதிரி நெளிந்துகொண்டு, ஏப்பம்விட்டு மல்லாந்து கிடப்பதற்கு மாத்திரம் ஊரில் பாதியை அடைத்துக் கோவில் கட்டினால் நமது புத்திசாலித்தனத்தைக் கண்டு மேல் நாட்டுப் பெண்மணிகள் புஸ்தகம் எழுதாமல் வேறு என்ன செய்வார்கள்? நமக்கும் குட்டிச்சுவர் மாதிரி வயது ஆயிற்றேயொழிய, சாமி விளையாட்டு மாத்திரம் போகவே இல்லை. திருப்பதி போகலாமா, திருச்செந்தூர் போகலாமா என்பதும், காசி போய்விட்டு ராமேஸ்வரம் போகலாமா, அல்லது ராமேஸ்வரம் போய் விட்டுக் காசி போகலாமா வென்பதும், அநுமார் வாகனத்திற்குத் தங்க முலாம் பூசலாமா அல்லது தங்கத் தகட்டினாலேயே செய்துவிடலாமா என்பதும், ஜம்புகேஸ்வர ருக்குப் பூச்சக்கரக் குடை செய்வதற்குப் பட்டு விசேஷமா, வெல்வட் விசேஷமா என்பதும் மாரியம்மனுக்கு வெள்ளியில் கண்கவசம் செய்யலாமா தங்கத்தில் செய்யலாமா என்பதுமே பெரிய ஆராய்ச்சியா யிருக்கிறதே தவிர, நமது நித்திய வாழ்க்கைக்குச் சௌகரியமான ஏற்பாடுகளையும் செய்வதில் நமது புத்தியானது சிறு பிள்ளைகளை விட ஆயிர மடங்கு கீழாகவேதான் இருக்கிறது. பள்ளிக்கூடத்துச் சம்பளத்தையெடுத்துக் கற்பூரம் வாங்கி, தன் சாமிக்குக் கொளுத்தும் பிள்ளையாண்டானுக்கும், ஆபத்திரி, கல்விச்சாலை, சுகாதாரம் முதலியவைகளுக்குப் பணமே இல்லா மலிருக்கும்போது, பெரிய தொகையைச் செலவுசெய்து சாமி விளையாட்டு விளையாடும் பெரியோர்களுக்கும்-புத்தி சம்பந்தப் பட்டமட்டில், ஏதேனும் வித்தியாசமிருக்கிறதா என்பதை வாசகர்களே யோசித்துப் பார்க்கட்டும். இவ்வுலக வாழ்விற்கு அவசியமான கல்வியையும், அதன்பிறகு தெரியவேண்டிய பல விஷயங்களையும் கற்றுக் கொள்ள வேண்டிய வயதில் சாமி வைத்து விளையாடுவதும், அதுவும் வீட்டுப் பணத்தைச் செலவழிப்பதும் அறிவீனமென்றும், அதைத் தடுக்கா விட்டால் பிள்ளையாண்டான் கெட்டுப்போவதோடு குடும்பத்துக்கும் கெடுதியுண்டாகும் என்றும் பெற்றோர்கள் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறார்கள். அது போலவே, நமது உலக முன்னேற்றத்தில் ஈடுபடவும், நமது வாழ்க்கையைச் சீர்ப்படுத்திக்கொள்ளவும், அதற்கு வேண்டிய முயற்சிகளைப் பல துறைகளிலும் செய்யவும் வேண்டிய காலத்தில், நமது பெரியோர்கள் சாமி வைத்து விளையாடுவதும், அதற்காகக் கோடிக்கணக்கான ரூபாய்களைச் செலவழிப்பதும் நமது மக்களைச் சோம்பேறிகளாக்கி விடுவதோடு, நமது நாட்டையும் பாழ் படுத்திவிடும் என்ற கவலையால்தான் நாமும் நமது பெரியோர் களுக்குப் புத்தி கூறவேண்டியது கடமையாகின்றது. பெற்றோருக்கு அடங்காப்பிள்ளை சாமி விளையாடிக் கொண்டே யிருந்து வீணாய்ப் போவதுண்டு. ஆனால் தைரியமுள்ள பெற்றோர் நமது பிள்ளையைக் கெடுக்க விரும்புவதில்லை. அறைக்குள் கட்டிப் போட்டாவது புத்தி புகட்டுவது வழக்கம். அவ்வாறே அறிவு இயக்கத்தார் களாகிய சுயமரியாதை இயக்கத்தவர்களுக்கும் சந்தர்ப்பமும், சௌகரியமும் கிடைக்குமானால் மேற்கண்ட முறையைக் கையாண்டாவது நமது பக்தர்களுக்குப் புத்தி புகட்டாமல் இருக்கப் போவதில்லை. ஆனால் அதற்குள்ளாக, நமது பெரியோர்களும் பக்தர்களும் நல்ல பிள்ளைகளாக ஆகிவிட வேண்டும் என்பதே நமது கோரிக்கை. - புதுவை முரசு, 26.1.1931, ப. 10 - 12 16. விஷயங்களைப் புதிப்பியுங்கள்! பல்லாவரத்தில் கூடப்போகும் பண்டிதர்கட்கு யோசனை அநேக விஷயங்கள் பழைமையாய்ப் போயின. மக்களுக்கு குஷால் கெட்டுப்போயிற்று. ஆஸ்திகம் தொலைந்தால் உமக்கெல்லாம் கஷ்டம். ஆதிகத்திற்குப் புத்துயிர் கொடுக்கவேண்டும் வயிறு ஒன்று இருக்கிறது! ஆதலால் பல்லாவரத்தில் கூடப்போகும் ஆஸ்திகப் பண்டிதர்களே உங்கள் புராணம் இதிகாஸம் முதலியவைகளிலும் கோயில் முதலிய ஸ்தாபனங்களிலும் திருத்தம் ஏற்படுத்துங்கள். அப்போது தான் ஜனங்களை மடக்கிப் போடலாம். கேளுங்கள்! பார்ப்பானுக்கும் பரதேசிக்கும் இட்டழுதால் பொன்னுலகம் சித்திக்கும் என்று புராணம் கூறுகிறது. பொன் இப்போது நயத்து விட்டது. அதனால் இனி ரேடியம் உலகம் சித்திக்கும் என்று புராணத் திருத்தம் செய்யுங்கள், இப்படிச் சொன்னால் ஜனங்கள் சந்தோஷப் படுவார்கள். இந்திரலோக வர்ணனையையும் மாற்றுங்கள். அங்கு அமுதம் கிடைக்கும் என்றால் அர்த்தமாகவில்லை. ஐஸ்க்ரீம் கிடைக்கும் என்று திருத்திப் பாருங்கள். அங்குப் பாரிஜாத முதலிய புஷ்பவாசம் உண்டு என்று இருப்பதைப் பிராஞ்சு செண்டுகள் என்று திருத்துங்கள். இன்னும் பேசும் சினிமாப் படங்களும் நாடகங்களும் இனாமாகத் தேவ லோகத்தில் காட்டப்படும் என்று இரண்டுவார்த்தை சேருங்கள். அதுவு மல்லாமல் தேவர்களையும், கடவுள்களையும் பற்றிய வர்ணனைகள் இப்போது பழைமையாய் விட்டதால் சிவன் கிராப் வைத்திருப்பாரென்றும் கண்ணுக்குக் கூலிங் கிளாஸ் போட்டிருப்பார் என்றும் சொல்லி வையுங்கள். நீங்கள் சிவனுக்குத் தாடியை எடுத்து விடுங்கள் அவருக்குப் பூட்ஸ் போடுங்கள். கிருஷ்ணனை நீங்கள் புதிய முறையில் வர்ணியுங்கள். இப்போதைய மைனர்களை நீங்கள் கண்டதில்லையா? பார்வதி, லக்ஷ்மி, சரஸ்வதிகள் இப்போதைய முறையில் கையில் ரெஸ்ட் வாட்சும், காலில் ஜாலர் பட்டடையும், கூந்தலில் கனகாம்பரமும் அணிந்து கராச்சி சரிகைப் புடவை கட்டி இருப்பார்கள் என்று சொல்லுங்கள். அவர்கள் முகத்தைச் சந்திரன் போலிருக்கும் என்பது தமாஷாக இல்லை; பெட்ரோமாக்ஸ் என்று சொல்லுங்கள். கோயில் விஷயத்திலும் வெறுப்பு ஏற்பட்டு வருவதால் பழய தாசிகள் மாத்திரம் போதாது. கோயிலில் கட்டில்களையும் போட்டு வையுங்கள். ஐரோப்பிய லேடிகளையும் கொண்டு வாருங்கள். நான் அதிகமாய்ச் சொல்லவேண்டியதில்லை. நடராஜா முதலிய விக்ரஹங்கள் ஆடுவது போலவும் நடப்பது போலவும் மின்சார சக்தியால் ஏன் செய்யக்கூடாது. தேன் பால் அபிஷேகத்தோடு சோடா ஷர்பத் அபிஷேகமும் சேர்த்துக் கொள்ளவேண்டும். வாழைப்பழம் முதலியவைகள் பழயமாதிரி! பிஸ்கட்டுகள், ஆபிள்கள், ஆரஞ்சி இவைகள் நல்லவை. விக்ரஹங்கள் ஜோடிப்பதோடு சமயோசிதமாக, கலர் சர்ச் லைட்டுகளை அதன் மேல் காட்டினால் பக்தர்கள் பரவசப் படுவார்கள், திருநீற்றுக்குப் பதில் பேஸ் பவுடரை ஏன் வைத்துக் கொள்ளக் கூடாது? திருநாமத்தைப்போல் ரப்பர் ஸ்டாம்பும் ஏற்பட வேண்டும். ஐயர்மார் வீட்டிலிருந்தே டெலிபோன் மூலம் அர்ச்சனை செய்யட்டும். தினம் புஷ்பம் வாங்கவேண்டுமா? தாளில் செய்து வைத்துக் கொள்ளக்கூடாதா? இன்னும் சுவாமிக்கு ரயில் வாகனம் ஐரோப்ளேன் வாகனங்கள் ஏற்படாதது பெருங்குறை. இஞ்சின் இருக்கையில் தேர்களை மனிதர் இழுக்கிறார்கள். கோயிலுக்குள் போகக் காசு வாங்குகையில் அங்குப் புதிய சாமான்களுக்குத் தீர்வை ஏன் போடக்கூடாது. கோயிலுக்குள் வகுப்புகள் ஏற்படுத்தி டிக்கட்டுகள் ஏன் வைக்கக் கூடாது? ஓதுவாருக்குப் பதிலாய் கிராமா போன் வைக்கக்கூடாதா என்றுதான் கேட்கிறேன். நடராஜா ஆடுகையில் நந்தி மத்தளம் அடித்தார். இதைத் தபேலா என்று திருத்தலாம். கேளுங்கள் பண்டிதரே! நமது பஜனை கோஷ்டியார் பாடிக் கொண்டு நாட்டுப்புறத்தான் மாதிரி ஆடுகிறார்கள் அவர்கள் நடராஜ ஆச்சாரிகள்போல் ஆடும்படி தீர்மானிக்கவேண்டும்; எல்லாம் ஒரு பிரியந்தானே? ருத்ராஷ மாலையைவிடப் பனங்காய் மாலை நல்லது; எடுப்பாகத் தெரியும் பாருங்கள்! இராம ராவண யுத்தம், பாண்டவ கௌரவ யுத்தத்தில் ஆயுதங்கள் மாற்றப்படவேண்டும், பீரங்கி, துப்பாக்கி, ரிவால்வார் முதலிய ப்ரசித்தமுள்ளவை. வேலை யுடையவன் வேலன் என்று சொல்லிக் கும்பிடுகிறார்கள். அதே பெயர் வழிக்கு ரிவால்வாரை உடையவன் ரிவால்வாரன் என்று திருத்தினால் தமாஷ்தானே! ப்ரம்ம க்ஷத்ரிய வைஸ்ய சூத்ர பஞ்சமர்கள்தான் இலக்கியத்தில் பிரம்மாவின் முகம் முதலிய அங்கங்களில் உண்டானதாயிருக்கிறது. ஆங்கிலோ இண்டியருக்கும் எதையாவது சொல்லித் தொலையுங்கள். சிறு தெய்வங்களுக்குக் கள்ளும் -கருவாடும் - சுருட்டும் வைப்பதை விட்டு, பிராண்டியும், சார்டினும், சிகரேட்டும் வைக்க ஏற்பாடு செய்யலாகாதா? ஏதோ என் சிற்றறிவுக்கு எட்டியவாறு கூறினேன். கூறாதவற்றை யும் நினைத்துப் பார்த்து முடிவு செய்யவும். கடைசியாக ஒன்று; அதாவது ஒருவன் கடவுளிடம் இரண்டறக் கலக்க - சாஸ்திரங்கள் வழி சொல்லுகின்றன. அவை என்ன சொன்ன போதிலும் வர வர அதில் ஜனங்களுக்குப் பிரியப்படவில்லை. ஏனென்றால் செத்துப் போனபின் தானே கலக்கவேண்டும் என்கிறார்கள். இனி, நீங்கள் இந்த உடம் போடும், துணிமணியோடும் கூடுமானால் ஏறியுள்ள மோட்டார் காரோடு சிவசாயுச்சியத்தை யடைந்து விடலாம் என்று திருத்தினால் நல்ல பலன் ஏற்படும் அந்த முறையில் பின்பு உங்களால் எழுதப்படும் புஸ்தகங்களும் நன்றாய் விற்பனையாகும். பண்டிதர் நலம் விரும்பி - புதுவை முரசு, 26. 1. 1931, ப. 14 - 15 17. சாதிரிகள் பிரசங்கம் கோயாங்குப்பம் என்னும் குக்கிராமத்துச் சாதிரிகள் அங்குள்ள ஆர்ய ஜனங்களுக்குச் சொன்னதாவது: ஆர்ய ஜனங்களே, நமது ஆர்ய ஜனங்களால் வெளியிடப்படும் சுதேசமித்திரன் என்னும் பத்திரிகை என்பதாக ஒன்றைப் பட்டணம் போனபோதுதான் பார்த்தேன். அதிலொரு நூதனம்! தென்னிந்திய ரெயில்வே கம்பெனி லிமிடெட் இங்கிலாந்தில் இணைக்கப்பட்டது. இதன் அர்த்தத்தைக் கவனியுங்கள். தென்னிந்தியாவில் ஓடும் எல்லா ரயில்களின் கம்பி முனை (கம்பெனி) களும் லிமிட்டட் என்ற சத்தத்தோடு இங்கிலாந்து ரயிலின் கம்பி முனையில் இணைக்கப் பட்டதென்றால் என்ன நூதனம்! அதற்கும் இதற்கும் உள்ள இணைப்பு நமது கண்ணுக்கே தெரியாத படியும் செய்துள்ளார்கள். அந்த வெள்ளைக்காரருக்கு இவ்வளவு யுத்தி சொல்லிக் கொடுத்தது யார் தெரியுமா? நமது போகர்! நமது போகர்! அங்கிருந்த சுயமரியாதைக்காரர் எழுந்து - சாதிரிகளே! ஆம்! ஆம்! அந்தக் காலத்தில் நமது போகர் வெள்ளைக்காரர் களுக்குச் சொல்லிக் கொடுத்தார். இந்தக் காலத்தில் அதை இவ்வளவு அழகாகக் கண்டறியும்படியான சாதிரிகளை ஏற்படுத்தியதற்கு நாம் சந்தோஷப்படவேண்டாமா? (K.S.) - புதுவை முரசு, 9. 2. 1931, ப. 6 18. புதுவைச் சித்தன் குடிசையில் குருபூசையாம் புதுவை வீரப்பசெட்டி குளத்தைச்சார்ந்த ஒரு தோப்புக்குச் சித்தன் குடிசை என்று பெயர் போலும்! அங்குக் கதிர்வேற்சுவாமி என்னும் பெயருடைய ஒருவர் 20 வருடத்தின் முன்பு சமாதியடைந் திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அச் சமாதிஸ்தலம் சீரணித்திருந்ததாக இப்போது சிலர் அறிந்து அதைப் புதிப்பித்ததோடு 01.02.31-இல் தைப்பூசத்தன்று வெகு ஆடம்பரமாகக் குருபூசையும் நடத்துவித்தனர். அன்று சுமார் 1000 பேருக்கு அன்னமும் அளிக்கப்பட்டது. மாலைப் போது திரு. சென்னை. கோ. வடிவேலு செட்டியார் தலைமையில் திரு. புதுவை ஜெகந்நாதநாயகி அவர்களும், பிரஞ்சு இந்திய அரசாங்க அமைச்சு. திரு. A.V. முத்தையா அவர்களும் சொற்பொழிவு ஆற்றினர். செட்டியாரின் தலைமைப் பிரசங்கம் இக்காலத்திற்கும் அதிகப் பிரசங்கம் என்பதோடு நிறுத்தவேண்டியதே. நாயுடு அவர்களின் மோனை யெழுத்துப் பிரசங்கத்தைப் பற்றி, நாம் அழகாயிருந்த தென்றாவது ஆலோசனை அற்றதென்றாவது விவரிக்கப் போவதில்லை. முத்தையா அவர்களின் பொன்மொழிகளில் மாத்திரம் சிலவற்றை இவ் வியாசத்தின் கடைசியில் குறிப்பிடப்படும். குருபூஜை ஒருவர் காலமானபின் அவர் சீடர்களால் அப்போதோ-பிறகோ குருபூசை ஆரம்பிக்கப்படுவதுதான் குருபூஜை என்றதின் அர்த்தத் திற்கும், அனுபவத்திற்கும் ஒத்ததாகும். சமாதி அடைந்திருப்பதாய்ச் சொல்லப்படும் கதிர்வேற் சாமிக்கு அப்போது சீடர் இருந்ததாகத் தோன்றவில்லை. ஆராய்ந்து பார்த்ததில் மிகவும் பாராட்டத்தகுந்த மனிதராகவும் தோன்றவில்லை. பிரஸ்தாபச் சமாதி அவருடையதுதான் என்றும் நிச்சயமாய்ச் சொல்லக்கூடவில்லை. அவர் யாழ்ப்பாணத்தார் என்றும் 20 ஆண்டுகளின் முன் இருந்தவர் என்றும் நடக்கும்போதே பின் நோக்கி நடப்பார் என்றும் சொல்லப்படுவதால் அப்படிப்பட்ட ஒரு மனிதர் சந்நியாசிக் கோலத்தோடு கம்பீரத் தோற்றத்தோடு இருந்தது ஒத்துக் கொள்ளப்படுகிறது. ஆயினும் அவரும், பெண்மயக்கம் மிகவும் உடையவர் என்றும் வீரப்பசெட்டிகுளத்துப் பக்கத்தில் அதே காரணத்தால் அடிபட்டும் அவமானமடைந்தும் பிறகு செத்துப் போனது மாத்திரம் நன்றாய் ஞாபகமிருக்கிறதென்றும் செங்குந்தர் தென் னண்டைவாசிகளில் அவர்காலமுதல் இன்றுவரை இருக்கின்ற பெரியவர்கள் சொல்லுகிறார்கள். எனினும் அவர் எவராயினும் சரி அப்போது சமாதி பெற்றிருந்தது மெய்யானாலும் சரி, அவர் மகானா யினும் சரி, அவருக்குக் குருபூசை ஏற்படுத்தியது எவ்வாற்றாலும் பொருத்தமற்றதேயாகும். பொதுவான குருவா? ஒரு மகானிறந்தால் அவர் எல்லா மக்களுக்கும் குருமூர்த்தி தான் என்றும் எப்போது வேண்டுமானாலும் குருபூசை ஆடம்பரம் செய்யலாம் என்றும் சொல்லச் சிலர் முன் வரலாம். இப்படிச் சொன்னால் இக் குருபூசையை முன்னின்று - பணம்தண்டி - நடத்திய கிறீஸ்தவ அன்பர். மனப் பூர்த்தியாக - எவரும் ஆக்ஷேபிக்காத முறையில் ஒப்புக்கொள்வாரா? பிற கிறீஸ்தவர்கள் ஒப்புக்கொள்வாரா? ஒப்புக் கொண்டாலும் அவர்கள் எப்போதும் அதிற் கலந்து கொள்வதை முன்னின்று நடத்தியவரில் ப்ரதானராகிய ஓர் இந்து குரோத புத்தியை விட்டு அங்கீகரிப்பாரா? அங்கீரிக்க முடியுமா? நடப்பதென்ன? நடைபெற்ற குருபூசைப் பந்தி போஜனத்தின்போதே ஜாதி மதபேத உணர்ச்சியால் முணுமுணுப்பு உண்டாகிவிட்ட தென்றும் அதன்பிறகு சித்தன் குடிசையைப்பற்றிய ஏற்பாடுகள் மாற்றப் படுகின்றன என்றும் மூலச்சிலை செய்ய ஏற்பாடு பண்ணப்படுகிற தென்றும் தெரிகிறது. மூலவர் வந்ததும் கிறீஸ்தவர் விலக வேண்டியதும், பார்ப்பனர் வரவேண்டியதும் உண்மை. இந்நிலை இப்போதே ஏற்படா விட்டாலும் சில மாதங்களுக்குப் பின்பாவது ஏற்படாமல் போகாது. சொன்னபடி செய்தால்! சித்தன் குடிசைச் சமாதி விஷயம் ஆரம்பித்தபோது ஆரம்பித்த இந்துநண்பர், பல பேர்களைக் கலந்தாலோசிக்கையில் ஒருவர் சொன்னதாவது; மண்ணுக்குள் இருப்பதாக எண்ணும் மனிதர் மகான் என்று தோன்றினால் நீங்கள் பல காரணத்தால் ஏராளமாய்ச் சேர்ந்து கொண்டு வருகிறதாகச் சொல்லும் பணத்தைக்கொண்டு ஜாதிமதச் சச்சரவையும் மூடப் பழக்க வழக்கத்தையும் உறுதி செய்யும் மார்க்கத்தில் செலவு செய்யவேண்டாம். கதிர்வேலர் பேரை வெளிக் கிழுக்க வேண்டுமானால் அவரைப் பற்றிய குறிப்பு வரைந்த கல்லை அவருடைய சமாதிமேல் நட்டுவிடலாம். பணம் கொடுத்தவர் பல மதத்தினரும் பல ஜாதியினரும் ஆதலால் அப் பலர்க்கும் பொதுவாக வும் அறிவு விருத்திக்கு ஏற்றதாகவும் கடைத் தெருவில் வியாபாரி களுக்கு இடையில் நல்லதொரு வாசக சாலையை ஏற்படுத்தி. அதில் வர்த்தகம், தொழில், மற்றும் அறிவு வளர்ச்சிக்கான புத்தகங்கள், சமாசாரப் பத்திரிகைகள் இவைகளை எவரும்படிக்க ஏற்பாடு செய்யலாம் அவ் வாசகசாலைக்குப் புதுவையில் கீர்த்தி பெற்றவரின் பெயரை முன்னே சேர்த்தாலும் மிக்க நலம். பொதுமக்கள், அக் கீர்த்தி பெற்றவர்பால் அன்பு காட்டுவதாகவும் இருக்கும். எனவே, கதிர்வேற் சுவாமிகள் ஞாபகார்த்தமாக ஏற்படுத்தப்பட்ட வாசகசாலை என்று முடியும் அல்லது இதே முறையில் ஏழையர் இலவசக் கல்விச் சாலையோ ஏழையர் சிகிச்சைச் சாலையோ ஏற்படுத்துவதும் மிக்க நலன் உண்டாக்கும். இவ்வகை ஆலோசனையைக் கேட்டவர் அவ் வார்த்தையைச் சில சந்தர்ப்பங்களில் மேலுக்குச் சொல்லிக்கொண்டது தவிர -நடந்ததென்ன : திருநள்ளாற்று மேளக் கச்சேரி - படங்கள் - பொம்மை - அதிர்வெடி - பகலில்கூட வாணவேடிக்கை - வயிற்றுக் கில்லாதவர் கட்கு மறுநாள் நன்றாய்ப் பசியெடுக்க ஒருவேளைச் சாப்பாடு ஆகியவைகளே. சமரசவாதி - புதுவை முரசு, 9.2.1931, ப. 8 - 9 19. மேற்கோள் பண்டிதர்க்கு வைதீகர்களே! சைவப் பழங்களே! வைஷ்ணவக் கொழுந்து களே! புராணப் பித்தர்களே! மதம் கொண்ட மக்களே! கிறுக்கன் பொருக்கிய, பொருக்கு மணிகள் என்பவைகளை வேறோரிடத்தில் பிரசுரித்திருக்கிறோம். அவைகளை ஊன்றிப் படியுங்கள். சுய மரியாதை இயக்கத்தைத் தூற்றும் வீணர்களுக்கும் எதற்கும் மேற்கோள் காட்டி அலையும் பழம் பண்டித சிகாமணி களுக்கும் நல்ல புத்தி வருவதற்காக நமது கிறுக்கன் சில மேற்கோள்களைப் பொருக்கி வெளியிட்டிருக்கிறார். எவ்வளவோ காலத்திற்கு முந்தி, பல பெரியோர்களால் சொல்லப்பட்டவை - அவைகளில் அநேகம் இருக்கின்றன. சுயமரியாதை இயக்கம் சொன்னால்தானே சூடுபோட்ட மாடுபோல் குதிக்கிறீர்கள்! பெரி யோர்கள், அறிவாளர்கள் என்று நீங்களே கருதிக் கொண்டிருக்கும் பேர்வழிகளில் சிலர் அங்கங்கே இண்டு இடுக்குகளில் பயத்தோடு துணித்து வைத்திருக்கும் சில மணிகளைத் தேடியெடுத்து நமது கிறுக்கன் வெளியிட்டிருக்கிறார். ஜாதிக் கர்வம் பிடித்த பார்ப்பனர்களே! மதப்பித்துப் பிடித்தலையும் சைவ வைஷ்ணவக் குழாங்களே! உங்களது கண்களை மூடியிருக்கும் மதக் கொழுப்பை அகற்றி, பரிசுத்தக் கண்களோடு படித்துப் பாருங்கள். படித்தபிறகு சரியா, பிழையா என்று யோசித்துப் பாருங்கள். கோபம் வேண்டாம்! புத்தி வந்தால் போதும்! - புதுவை முரசு, 9. 2. 1931, ப. 12 20. ஒண்டவந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டுவதா? கோயமுத்தூர் ஜில்லா சிங்கநல்லூர்க் கிராமத்துப் பார்ப்பான் ஒருவர் அவ்வூர் ஆதி திராவிடர்கள்மீது வழக்குத் தொடுத்திருக்கும் விவரத்தின் சுருக்கத்தைப் பிறிதோரிடத்தில் பிரசுரித்திருக்கிறோம். அதில் அவர் கண்டிருப்பதாவது: - 700 வருஷங்கட்கு முன் கரிகாற் சோழன் அந்தக் கிராமத்தை, பிராம்மணர்களுக்கு மான்யமாக விட்டாராம். அப்படியானால் அதற்கு முன்பு சுமார் 2500 வருஷங் ளுக்கு முந்தி இப் பார்ப்பானின் முன்னோர்கள் மத்திய ஆசியாவி லிருந்து இந்தியாவில் வந்து புதிதாய்க் குடியேறினார்கள் என்பதை நிரூபித்தால், இவரும் இவர் இனமும் இந்தியாவைவிட்டுத் தொலைந்து போகத் தயாராயிருக்கிறார்களா? அந்த அரசன் இந்தப் பார்ப்பாரச் சோணகிரிகளுக்கு எந்தக் காரணத்திற்காகச் சர்வ மானியம் கொடுத்தாரோ? வீரத்தனமாய்ச் சண்டை போட்டதற்கா? சோழராஜ்யம் என்றென்றும் அழியாதிருக்கத் தபசு பண்ணினதற்கா? அல்லது அந்தப்புரத்து திரீகள் தொகையை அதிகப்படுத்தித் தந்ததற்காகவா? இந்தப் பாழும் பார்ப்பார்கள் பண்ணிய பூஜையும் தபசும் சேர்ந்துதான் சோழன் இருந்த இடம்கூடத் தெரியாமல் செய்துவிட்டன! சர்வமான்ய மும், சம்பாவனமும் வாங்கி வாங்கி, சிவாஜியை ஒருவாறு ஒழித்தது மன்றி, சோழன், நாயக்கர் முதலிய ராஜாக்களையும் ஓட்டாண்டி யாக்கினார்கள். இவ்வளவும் போதாமல், பிச்சை வாங்கின இடத்தில் ஊர்ச் சொந்தக்காரன் போகக்கூடாது என்று சொல்ல வந்து விட்டார்கள். இந்த மான்யங்களையும், அக்கிரகாரத்து இனாம் வீடுகளையும் பிடுங்கிக்கொண்டு, ஒவ்வொரு சவுண்டிப்பார்ப்பான் கையிலும் ஒவ்வொரு மண்வெட்டியைக் கொடுத்து வேலை செய்யும் படி விரட்டும் காலம் எப்போது வருமோ, அப்போதுதான், சுய மரியாதை இயக்கம் சிறிது வேலையாவது செய்ததாகச் சந்தோஷப்பட இட முண்டு. இந்த மாதிரி முயற்சியில் சுயமரியாதைக்காரர்கள் தங்கள் உயிரை இழக்கவேண்டி வந்தாலுங்கூட, வெகு சந்தோஷத்துடன் வரவேற்போம். - புதுவை முரசு, 9. 2. 1931, ப. 12 21. இனியாவது புத்தி வருமா? பெண்களாகிய எங்கள் சார்பாகப் பேசுவதற்கு ஆண்க ளாகிய உங்களுக்கு உரிமையில்லை, என்று முலீம் பெண்கள் தங்களுடைய ஆண் இனத்தைச் சேர்ந்த வைதீகர்களுக்கு சவுக்கடி கொடுத்திருப்பதை மற்றோரிடத்தில் காண்க. குரான், பைபில், இந்து மத சாதிரங்கள் இவைகளெல்லாம் பெண்களால் எழுதப்பட்டிருந் தால் அப்போது தெரியும் ஆண்களாகிய நமது வண்டவாள மெல்லாம், மதம், வேத நூல் என்கிற பூச்சாண்டிகளைக் காட்டி பெண்களை ஏமாற்றிவந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. ஆயிரக்கணக்கான பெண்கள் படிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இனி, அவர்களுக்காக நாம் பரிந்து பேசுவதுபோல் பாசாங்கு செய்து, அவர்களுடைய உலக வாழ்க்கைக்குக் கெடுதியான விஷயங்களை ஆதரிப்போமானால் நமது மானங்கெட்டுச் சிரிப்புக்கிடமாவது உண்மை. இனி நமது நாட்டு முலீம் சகோதரிகள் துருக்கியிலுள்ள தங்கள் சகோதரிகள் மாதிரி ராணுவப் பயிற்சியில் தேர்ச்சி பெறுவார்களேயானால், அப்போது ஆண்களின் மிரட்டல் உருட்டல்களுக்குச் சிறிதும் பயப்படவேண்டிய அவசியமே இராது. முலீம் வைதீகர்களுக்கு இனிமேலாவது புத்தி வருமா? - புதுவை முரசு, 9. 2. 1931, ப. 12 - 13 22. பொருக்கு மணிகள் (»W¡f‹ bghU¡»aJ) சைவ சமயம் தொன்மையிற் சிறந்து விளங்குதலைக் கொண்டு அதனைப் போற்ற வேண்டுமென்று வலியுறுத்துவது அறி வுடைமையாகாது. மேன் மக்கள் தொன்மையைக் கருதி ஒன்றைக் கொள்ளவும் மாட்டார்கள்; புதுமை கருதி ஒன்றைத் தள்ளவும் மாட்டார்கள். அவர்கள் ஒன்றை அறிவால் அளந்து ஆராய்ந்து அதன் உண்மை காணவே முயல்வார்கள். ஆராய்ச்சிக் கருகதை யாக நிற்பது தொன்மையதாயினுமாக; புதுமையதாயினுமாக. வேண்டற்பாலது ஒன்றே. அது பொருளுண்மை. - திரு வி. கலியாணசுந்தரன். *** புராணங்கள் என்பன இறைவன்றன் வரம்பிலாற்றலையுந் தன்னை நினைத்துருகும் அடியாரைக் காத்தற்கு அவன் செய்த அருட்டிறங்களையும் உயர்ந்த அறிவு இல்லாப் பொதுமக்கட்கு உணர்த்தல் வேண்டி இரக்கமுள்ள சான்றோராற் கட்டி வைக்கப்பட்ட பழைய கதைகளையுடையனவாகும். - சுவாமி வேதாசலம் *** இந்து மதத்தில் குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் எதுவும் கிடையாது. நீ இந்துவாக இருந்துகொண்டே, நாதிகனாகக் கூட இருக்கலாம். ஒரு ஹிந்து எந்தக் கொள்கையையும் பின்பற்றலாம். - சத்யேந்திரநாத் டர்கூர், I.C.S. *** தென்னிந்தியாவிலுள்ள ஒவ்வொருவனுடைய பேரவா வெல்லாம், தன்னை ஒரு பிராமணனாக, அல்லது பிராமணனைப் போலிருப்பவனாகப் பிறர் மதிக்கவேண்டும் என்பதேயாகும். - 1911ஆவது ஆண்டின் ஜனசங்கியை ரிப்போட். *** வேண்டாதனவும், விலக்கக்கூடியனவும், தாங்களாகவே ஏற்படுத்திக்கொண்டனவுமான பல்வேறு சுயங்கிருதா அநர்த்தங்களால், ஹிந்துக்கள் கஷ்டப்படுவதுபோல, இப் பேருலகில், வேறு யாருமே கஷ்டப்படவில்லை. - ராஜா சர்.டி. மாதவராவ் *** ஹிந்துக்களின் தற்கால நிலைமையைக் கவனித்துப் பார்த்தால் தாறுமாறாகச் சீர்குலைந்து அலங்கோலப்பட்டு, இடிந்து பாழாகக் கிடக்கும் ஹிந்து மதம் என்னும் பழங்கோட்டையை, அங்கே சிறிது இங்கே சிறிதாக எவ்வாறு ஒழுங்குபடுத்தி, முட்டுக்கொடுத்துப் பழுது பார்த்தாலும் பயன்படாதென்பதும்; நாம் முன்னுக்கு வரவேண்டு மானால், ஹிந்து மதத்தின் புராதன அதிவாரங்களை மூடிக் கொண்டிருக்கும் யாவற்றையுமே, தயவு தாட்சண்யமின்றி வெட்டித் தள்ளி ஒதுக்கிவிட்டு; நமது தற்கால அவசியத்திற்கும் உபயோகத்துக்கும் ஏற்றதாக, சாதாரணமான புதுக் கட்டடம் ஒன்று கட்டுவதே உத்தமம் என்றும் தோன்றுகிறது. - Dr. சர். S. சுப்பிரமணிய அய்யர் *** விளக்கும் நிரூபணத்தோடு இயேசு வந்தபொழுது ... என்று குர் - ஆன் 42, - (59)இல் காணப்படுகிறது. இயேசுநாதரை அனுப்பியவரும் கடவுளாயின், அவர் ஏன் பிறகு குர்-ஆனை பைபிலுக்கு மாறான நூலை - அருளவேண்டும்? பைபிலும், குர்ஆனும் ஒன்றுக்கொன்று எதிரான கொள்கைகளையுடையதா யிருப்பதால் இரண்டும் தெய்வநூல்களாகா - சுவாமி தயானந்த சரவதி *** இந்துக்களில் பெரும்பான்மையோர் வைதீகர்கள்; சமய சமூக ஆசாரங்களெல்லாம் வைதீகர்கள் அபிப்பிராயத்தைத் தழுவியே உருப் பெற்றிருக்கின்றன. ஆகவே, இந்தியாவில் காணப்படும் சமய சமூக ஊழல்களுக்கெல்லாம் இந்து மதமே மூல காரணமாகும். - மி. மேயோ *** நீங்கள் பன்றிகளையும், நாய்களையும் உங்கள் வீட்டில் கட்டி வளர்க்கிறீர்கள். பாப விமோசனத்திற்காகப் பசு மூத்திரமும் சாணமும் கலந்த பஞ்ச கவ்வியம் குடிக்கின்றீர்கள்; ஆனால் ஒரு ஆதி திராவிடனைத் தொடுவதற்குப் பயப்படுகிறீர்கள். - ராவ்பகதூர் எம்.ஸி. ராஜா *** இந்தத் துரதிர்ஷ்ட நாட்டிலே எல்லா சமுதாய ஊழல்களுக்கும் மதம் ஆதரவளிக்கிறது. - ஸ்ரீமதி. டாக்டர் முத்துலட்சுமி *** இந்திய விடுதலைக்கு முக்கியமான தேவை யென்ன? முதலாவதாக நமது குறைபாடுகளை நாம் சரிவர உணர்ந்து விசால மனதுடன் ஒப்புக்கொள்ளப் பழகவேண்டும்; இரண்டாவதாக அவைகளை நீக்க நமக்கு உண்மையான ஆத்திரம் உண்டாக வேண்டும்; நமது குறைபாடுகளை மறைத்து வைப்பதால் தீங்கேயொழிய நன்மை கிடையாது. - ஜே. கிருஷ்ணமூர்த்தி *** பைபில் தேவ வாக்காயிருக்க முடியாது; ஏனெனில், அதில் முன்னுக்குப் பின் முரணான விஷயங்களும், பகுத்தறிவுக்கு விரோதமான விஷயங்களும், பூகோளம், விஞ்ஞான சாதிரம், இயற்கைப் பொருள் சாதிரம், பொருள் நூல் சாதிரம், மனோ தத்துவ சாதிரம் முதலிய பல சாதிரங்களின் உண்மைக்கு மாறு பட்டதும், ஒவ்வாததுமான விஷயங்கள் காணப்படுகின்றன. - ராபர்ட் ஜி. இங்கர்சால் - புதுவை முரசு, 9. 2. 1931, ப. 15 - 16 23. சவுண்டிப் பாப்பானின் குறும்பு ஆதித் திராவிடர்மீது வழக்கா? (கோயமுத்தூர்) சிங்கநல்லூர் அக்கிரகாரம். அந்த அக்கிரகார வாசிகளுக்கே சொந்தமென்றும், எனவே, ஆதித் திராவிடர்கள் அந்த அக்கிரகாரத்திலே நடைபாதை கூட வைத்துக்கொள்ளக் கூடாதென உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்றும் சிங்கநல்லூர் திரு. செல்லப் பையர் ஒரு வழக்குத் தொடுத்திருக்கிறார். அன்றியும் வழக்கு முடியும் வரை தற்காலீக உத்தரவு ஒன்று பிறப்பிக்கும்படி முனிசீபு கோர்ட்டில் ஒரு மனுக் கொடுத்திருக்கிறார். இம் மனுவின்பேரில் ஆதித் திராவிடர்களுக்கு, கோர்ட்டார் நோட்டீஸ் பிறப்பித்திருக்கிறார்கள். இது சம்பந்தமாக மனுதார் தாக்கல் செய்திருக்கும் பிராதில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டி ருக்கிறார்:- சுமார் 700 வருஷங்களுக்கு முன் கரிகாற்சோழன் உறையூரை ஆட்சி செய்து வந்தபோது, அவர் இந்தச்சிங்கநல்லூர்க் கிராமத்தைச் சர்வமானியமாக பிராமணர்களுக்குவிட்டார். தற்போது இந்த அக்கிரகாரத்தில் வசிப்பவர்கள்தான் அந்தக் காலத்து பிராமணர்களின் வாரீஸ்தார்களாவார்கள். இந்த இனாம்தார்கள் நிலங்களையும், வீடுகளையும் அனுபவித்துக்கொண்டு குயிட்ரென்ட் கொடுத்துக் கொண்டு வந்தனர். அக்கிராகாரத்தின் கிழ மேலில் 5 வரிசை வீடுகளும் தென் வடவில் இரண்டு வரிசை வீடுகளும், ஒரு ஆஞ்சநேயர் கோவிலும் ஒரு கிருஷ்ணன் கோவிலுமிருக்கின்றன. இந்தத் தெருக்களைச் சுத்தம் செய்வதும் விளக்குகளேற்றுவதும் உயர்ந்த ஜாதி இந்துக்கள்தான். சுமார் 20 வருஷங்களுக்கு முன் தாலுக்கா போர்டார் ஒரு பள்ளிக்கூடம் ஏற்படுத்தினார்கள். இப் பள்ளிக்கூடத்தில் கொஞ்ச காலமாகத்தான் உயர்ந்த ஜாதி இந்துப் பிள்ளைகள் படித்து வருகிறார்கள். ஆதித் திராவிடர்களுக்கெனத் தனிப் பள்ளிக்கூடம், கோவில், கிணறு முதலியன விருக்கின்றன. சுமார் 10 வருஷங்களுக்கு முன் ஒரு பெண் பள்ளிக்கூடம் ஏற்பட்டது. இதில் உயர்ந்த ஜாதி இந்துப் பிள்ளைகள் மட்டும் படித்து வந்தனர். 1830-ம் வருஷ ஆரம்பத்தில் ஆதித் திராவிடப் பிள்ளைகளையும் ஆண் பள்ளிக்கூடத்தில் சேர்த்துக் கொண்டனர். இது வரை அக்கிரகார வாசிகளை ஆதித் திராவிடர்கள் மதித்து அவர்களுடைய சமூதாய மதச் சடங்குகளைக் கௌரவித்து வந்தார்கள். சில சமுதாயத் தொண்டர்களின் ஏவுதலின் பேரில் இந்த ஆதித் திராவிடர்கள் அக்கிரகாரத்தில் தங்களுக்கும் நடை பாதை யுரிமையுண்டு என்று ஸ்தாபிக்கத் தலைப்பட்டனர். இது காரணமாகக் கோவிலில் நடைபெற்றுவந்த உற்சவங்களும் நின்று போயிருக்கின்றன. ஆகவே, ஆதித் திராவிடர்களுக்கு மேற்படி அக்கிரகாரத்தில் நடை பாதை யுரிமை கூடக் கிடையாதென உத்தரவு பிறப்பிக்க வேண்டுகிறேன். - புதுவை முரசு, 9. 2. 1931, ப. 17 24. முஸ்லீம் வைதிகர்களுக்குச் சரியான சவுக்கடி முஸ்லீம் பெண்களின் ஆத்திரம் பல கௌரவமும் செல்வாக்குமுள்ள முஸ்லீம் பெண்கள் கீழ்க் கண்டவாறு சாரதா சட்டத்தை எதிர்ப்போரைக் கண்டித்து ஒரு மகஜரை வைஸ்ராய்க்கு அனுப்பியிருக்கிறார்கள். கற்ற இந்தியப் பெண்களாகிய நாங்கள் கீழ்க்கண்டவாறு சமூகத்திற்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம். சர்க்கார் சாரதா சட்டம் முஸ்லீம்களைப் பாதிக்காத வாறு ஒரு திருத்தத்திற்குத் தாங்கள் அனுமதியளிக்கவும் கூடுமெனக் கேள்வியுற்று மிகவும் ஆச்சரியமும் துன்பமுமடைகிறோம். நாங்கள் முஸ்லீம் பெண்கள் சார்பாக ஒன்று கூற விரும்புகிறோம். முஸ்லீம் ஆண்களில் ஒரு சிறு பகுதியினரே இச் சட்டத்திற்கு விரோதமாகக் கிளர்ச்சி செய்கிறார்கள். இச் சட்டத்தினால் பெண்களே பெரிதும் பாதிக்கப்படுகிறவர்கள் எனவே, ஆண்களுக்கு இதை ஆட்சேபிப் பதற்கு எவ்வித உரிமையுமில்லை. நிற்க, ஷரீயத் சட்டத்தை நீக்கக்கூடாதெனக் கூக்குரலிட்ட எங்களில் சிலரே, தாம் பாதிக்கப்படும்போது, அது நீங்கினால் நல்லது எனக் கருதியதும் உண்டு. மேலும் வாரிசுச் சட்டம் நடைமுறையில் ஒழிந்து போகிறது. அங்ஙனமே ஷரீயத் சட்டமும் நடைமுறையில் ஒழிந்து போகிறது. மற்றபடி களவு, கொலை முதலிய குற்றங்கள் சம்பந்தப்பட்டவரை ஷரீயத் சட்டங்கள் மாற்றப்பட்டபோது ஒரு முஸ்லீ மாவது தடை கூறவில்லை. அரசியல் காரணம் பற்றியே நெறி தவறிய சிலமுஸ்லீம்கள், தங்களுக்கு மனுச்செய்து கொள்ளுகிறார்கள். பெண்களான எங்களைக் கலந்து பேசாத யாரும் எங்கள் சார்பாகப் பேச உரிமை உடையவர்களல்ல. தங்கள் ஆட்சிக் காலத்தில் நிறை வேற்றப்பட்ட இந்த சாரதா சட்டம் பிரிட்டிஷ் அரசு இந்நாட்டில் ஏற்பட்டது முதல் நிறைவேறிய சட்டங்களுள் தலைசிறந்ததெனக் கூறுதல் பொருத்தமுடையதாம். லார்டு பென்டிங் சர்க்கார் காலத்தில் உடன்கட்டையேறும் வழக்கத்தை யொழித்த சட்டத்தை விட இச் சட்டம் மிகவும் அவசியமானது. அச்சட்டம் ஒரு குறிப்பிட்ட வகுப்பாருக்குமட்டும் நன்மையளித்தது. ஆனால் இச்சட்டம் ஒவ்வொரு பெண்ணுக்கும் நன்மையளிக்கிறது. எனவே, எங்கள் சார்பாகப் பேச உரிமையில்லாத ஒரு கூட்டத்தார் கூக்குரலுக்குக் காதுகொடுக்கக் கூடாதெனக் கோருகிறோம். - புதுவை முரசு, 9. 2. 1931, ப. 17- 18 25. வெண்ணெய் வாழைதான் ஆனால் குலை தள்ள வேண்டும் சட்டாம் பிள்ளைச் சண்முகம் எனது பாடசாலை நண்பர். நான் ஒரு நாள் அவர் வீட்டுக்குப் போனேன். அப்போது அவர் தமது வீட்டுக்குப் புறத்திலிருந்த தோட்டத்தில் இருந்தார். நான் வந்தது அவருக்குத் தெரிந்தது. என்னை அவர் தோட்டத்திற்கு அழைத்துப் போனார். மரம், செடி, கொடிகள் தோட்டத்தில் அடர்ந்திருந்தன. நான் அவைகளைச் சுற்றிப் பார்த்து வரும்போது நண்பர் என்னை ஓர் இடத்தில் நிறுத்திக் கீழ்வருமாறு சொன்னார்:- பழம் ஒன்று முக்கால் முழநீளமிருக்கும்; பச்சை நாடானை ஒத்த நிறம், வாட்டம். அதை வாழைப்பழமென்றே சொல்வதற்கில்லை. அதன் தோலை உரித்துக் கீழே போட்டபின் கையில் வெண்ணெய் தான் மீதி யிருக்கும். அந்த உரித்த பழத்தைச் சுடு சோற்றில் போட்டால் உருகி விடும். இனிப்பில் தேன்; ஒருவித நறுமணம்! பழுத்திருப்பதை நண்பர் அடுக்குப் பானையிலிருந்து எடுத்து வரப்போகிறார் என்றுதான் நான் நினைத்தேன். அவர் அந்த மரந்தான் இது, என்று தரையைக் காட்டினார். நான் தரையை குனிந்து பார்த்தேன். அகலத்தில் மாவிலையையும் நீளத்தில் பலா இலையையும் ஒத்த ஐந்தாறு வாழையிலைகள் தரையோடு தரையாய் ஒட்டிக் கொண்டிருந்தன. இதுதானா வெண்ணெய் வாழைமரம்! என்ன நண்பரே! இதுதானா குலை தள்ளிற்று? அதுவும் பழுத்ததா? நீரும் தின்றீரா? என்று கேட்டேன். சண்முகம் சிரித்தார். வாழையைப் பற்றி நான் சொன்னதில் ஒன்றும் பொய்யில்லை; ஆனால் வளர வேண்டும் பழம் தரவேண்டும் என்று கேலி பேசினார். அந்த வெண்ணெய் வாழையைச் சண்முகம் சுண்ணாம்புக் கற்க ளுள்ள தரையில் நட்டிருந்தார். அதனால் அதை நட்டு ஒரு வருஷம் ஆகியும் அது வளரவில்லை. அதை நட்டபோது வேறிடத்தில் நட்ட வாழைகள் நல்ல பலன் அளித்தன. வெண்ணெய் வாழை வளர்ச்சி யடைந்து நல்ல பலன் கொடுக்கவேண்டுமானால் அதைப் பெயர்த்து வேறு நல்ல இடத்தில் வைக்க வேண்டும். பல்லாவரத்தில் கூடியிருக்கும் பண்டிதர்களே, தமிழ் இனிமை யானது, ஆக்ஷேபமில்லை. ஆனால் அது வளர்ச்சியடையவில்லை. குலை தள்ளவில்லை. மக்கட்கு நலன் அளிக்கவில்லை. அதை நீங்கள் நட்டிருக்கும் இடம் தீயது. ஜாதி மதம் மூடப் பழக்க வழக்கங்கள் ஆகிய சுண்ணாம்புக் கற்கள் உள்ள தரையில் நட்டிருக்கிறீர்கள். அவ்விடத்தி னின்று அதைப் பெயர்த்தெடுங்கள். வேறு பொது இடத்தில் நடுங்கள்! அப்போது தமிழ் தரையோடு தரையாய் ஒட்டிக் கொண்டிராமல் வளர்ச்சியடையும். குலை தள்ளும். பழம் தரும். மக்கள் நலன் அடைவார்கள். தமிழ் தற்கால நிலையில் இனிக்கிறதென்று நீங்கள் சொல்லுகிறீர் களா? வளர்ச்சியடையாமல் கல்லுப் பிள்ளையார் போலிருக்கும் தமிழ் வளர்ச்சியடைந்து வரும் மக்களுக்கு இனிமை தருவதெப்படி? சொல்லுங்கள்! தமிழ் இனிக்கவில்லை யாதலால் தான் நீங்கள் அதை இனியது இனியது இனியது என்று எப்போது பார்த்தாலும் வேலை யற்றுப் போய் உளறிய வண்ணமிருக்கிறீர்கள். அது வளர்ச்சி யடையாததால் தான், நீங்கள் பழைய விஷயத்தையே பணம் சம்பாதிக்கத் திரும்பத் திரும்பச் சொல்லுகிறீர்கள். அது குலை தள்ளாத தால் தான் நீங்கள் படித்ததாய்ச் சொல்லிக் கொண்டாலும் ஒன்றுமறியாத முட்டாள்கள் என்று பிற பாஷைச் சிறுவர்களால் இகழப் படுகிறீர்கள். நீங்கள் தமிழின் அதிகாரிகளாக ஆசைப்படுகிறீர்கள். சைவப் பெரியாராகவும் பிரியப்படுகிறீர்கள். சைவத்தோடு தமிழை ஓட்டி விடுகிறீர்கள். அதனால் சைவரல்லாத பிற மதத்தவர் உங்கள் சைவத்தை ஓச்சும் கோடாலி தமிழின் கிளைகளையும் குறைக்கின்றது. வைஷ்ணவத்துடன் தமிழ் ஒட்டப்பட்டிருக்கிறது. அதனால் வைஷ்ண வத்தை நோக்கிப்பிற மதத்தினர் கொட்டும் நெருப்பானது தமிழின் வேரிலும் படுகிறது. புத்த மதத்தை அறுக்கப்போகும்போது அதனோடு ஒட்டிய தமிழ் அறுபடுகிறது. மதங்களுக்கு அப்பால் தமிழ் இல்லாதபடி செய்த - செய்கின்ற தமிழ்ப் பண்டிதர்களே! தமிழுக்கு நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய வேலைகளில் ஒன்றாவது செய்ததுண்டா! மத நூல்களைப் புகைப்படம் பிடிப்பதுண்டு; வெளியிடுவதுண்டு. மதத்தின் அப்புறத்தில்தான் விசால எண்ணங்கள், விரிந்த தத்துவங்கள், அறிவு வளர்ச்சிக்குரிய திட்டங்கள், போகப் பொருள் களை விளைக்கும் நுட்பங்கள் உண்டு என்பதை நீங்கள் அறிய வில்லையானால், உங்களை என்னவென்று சொல்லுவது? தமிழை அரிக்க வந்த பண்டிதச் செல்லுப் பூச்சிகளே! இந்தியனாகிய மகம்மதி யனும், இந்தியனாகிய கிறீதவனும் தமிழை வெறுக்க வைத்தது எது தெரியுமா? அதனோடு சம்பந்தப்படுத்தி வைத்திருந்த மதம். மதக் காரர்கள் மூலபலஞ் சண்டையிடுகிறவர்கள். அதற்குள்ளே சிக்கலாகிக் கிடக்கும் தமிழும் அழிந்து போகிறது. வளர்ச்சி அடைவது எப்படி? புது இலக்கணம், புது இலக்கியங்கள், புதிய நிகண்டுகள், அகராதிகள், தமிழின் நடையில் ஓர் புதுத்திறன்! இவ்வரிசையில் எதிலாகிலும் உங்கள் கவனம் சென்றதுண்டா? இன்னும் யோசியுங்கள். - புதுவை முரசு, 16. 2. 1931, ப. 3-4 26. சனியனை வணங்குவது சரியா? சனியன் என்பவர் யார்? அவருடைய டூட்டி என்ன? என்பதை முதலில் விசாரிப்போம். சனியன் என்பவர் இந்து மதத்திலுள்ள கடவுளர்களில் ஒருவரென்றும் அவருடைய வேலைகள் மக்களைக் கஷ்ட நஷ்டங்களில் ஈடுபடும்படி செய்வதென்றும், அவர் பிடியாத ஆணோ பெண்ணோ உலகில் - ஏன்! கடவுளர்களில் கூட ஒருவரு மிலர் என்றும் ஆத்திகப் பேர்வழிகளும் அநேக புராணங்களும் சொல்லுகிறார்கள் - சொல்லுகின்றன. அந்தச் சனியனைப் பற்றி அநேக சமாச்சாரங்கள் கூறப்பட்டிருக்கின்றன. எல்லா விஷயங்களையும் விரிவாகக் கூறவேண்டுவது அவசியம் என்று நான் நினைக்கவில்லை. எனவே இரண்டொரு விஷயங்களைப் பற்றி மட்டும் சொல்லுதல் சாலும். (ஓ! சாலும்) என்ற மொழி தெலுங்கு மொழி; அதைக் கூறியதற்குத் தமிழ் மொழிப் பண்டிதர்கள் சண்டைக்கு வந்துவிடலாம். எனவே வாப பெற்றுக்கொள்ளுகிறேன்! அரிச்சந்திரன் என்பவரை முன்னொரு காலத்தில் கனம் சனியன் (லேசானவரல்ல) பிடித்து ராஜ்ஜியம், மனைவி, பிள்ளை முதலியவர்களை எல்லாம் இழக்கும்படி செய்து, கிட்டி மாட்டவும், புலையனுக்கு அடிமையாக இருந்து சுடலை காக்கவும், தன் பிள்ளையைப் பாம்பு தீண்டி இறக்கவும், தன் மனைவியைத் தன் கரத்தால் வெட்டவும், தன் மனைவியை விற்கவும் இன்னும் பல துன்பங்களை அனுபவிக்கவுமாக அந்த சனீவரன் திருக்கருணை பாலித்தாராம். ஹிகோலி என (கோலி நோ என்று நண்பர்கள் தப்பாக எண்ணி விடாதீர்கள்!) ஸ்ரீஇராமன் அவர்களைக் காட்டில் பதினான்கு வருட காலம் வனவாசம் செய்யும்படி ஆக்ஞாபித்ததும், அவருடைய மனைவியாகிய - சே! அப்படிச் சொல்லக் கூடாது. லோக மாதாவாகிய ஜானகியை இராவணன் என்ற ராட்சதன் அடித்துக் கொண்டு செல்லும்படி செய்ததும் அந்தச் சனியன் தானாம்! அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் நிறைந்திருக்கும் ஈவரனைப் பிச்சையெடுத்துப் புசிக்கும்படி செய்ததும், செருப்படி கல்லடி, மலரடி, வில்லடி முதலிய பூசைகளைப் பெறும்படி செய்ததும், நஞ்சைப் புசிக்கும்படி செய்ததும் அந்தக் கருங்கடவுளாகிய சனியன் தானாம்! இந்திரனுக்கு ஆயிரம் யோனிகள் உண்டாகும்படி செய்தது சனியன்தானாம்! ஆறுமுகக் கடவுளை வேங்கை மரமாகச் செய்ததும் சனியன்தானாம்! இன்னும் சனியன் செய்த திருவிளையாடல்களைப் பற்றிய செய்திகள் புராணங்களில் எவ்வளவோ மிளிர்கின்றன. நான் ஏற்கனவே கூறியபடி அதிகம் கூறல் அநாவசியம் என விட்டுவிட்டு மேற்செல்கிறேன். இந்தக் கொடுமையை எங்கே சொல்லி முறையிடுவதடி, தங்கச்சி! எனச் சில பெண்கள் கூறிக் கொள்வதுண்டு. அதைப் போல நானும் சொல்ல வாயெடுத்தேன்... எடுத்தேனா! ஆம். வாயெடுத்துக் கூறுவதற்குள் சே! சே!! அப்படிச் சொல்லிக்கொள்வது பெண்க ளல்லவா! என்ற எண்ணம் உண்டாகிக் கூற விடாமல் பிரேக் போட்டு விட்டது. என்ன வேடிக்கை பாருங்கள். சனியன் ஒரு கடவுளாம்! அவர் கடவுளர்களைக் கூடத் துன்புறுத்துவாராம்!. அதிலும் தன்னைப் படைத்த பெரிய கடவுளைக்கூட அல்லல் அனுபவிக்கும்படி செய்வாராம். எனக்கு நினைக்க நினைக்க சிரிப்புதான் பொங்குகிறது! ஆ! ஆ!! ஆ!!! ஹீ! ஹீ!! ஹீ!!! எதைப் பற்றியோ கூறவந்தவன் எங்கெங்கெல்லாமோ சுற்றி விட்டேன்! அதற்காக நண்பர்கள் வருந்தினாலும் சரி, மகிழ்ந்தாலும் சரி, இனி எடுத்துக்கொண்ட இல்லை - இல்லை! சொல்ல வந்த, அட, இழவே! எழுத வந்த - சீ! சீ!! சனியனே!... ஆம்! ஆம்!! ‘rÅaid tz§FtJ rÇah? என்பதைப் பற்றி உங்கள் பார்வைக்கு - அதுவுமில்லாவிட்டால் செவிக்கு என் கருத்தைத் தருகிறேன்! சனி யீவரன் தொழில் மக்களைக் கெடுப்பதாகும் என்று ஆத்திக அன்பர்கள் திருவாய் மலர்ந்தருளுகிறார்கள். அப்படி யிருந்தால் சனியனை வணங்குவது என்பது கசாபுக் கடைக் காரனிடத்தில் ஆடு தன்னை ஒப்புக் கொடுப்பதைப் போலவும், திருடன் தலையாரி வீட்டில் ஒளிந்துகொள்ள முயல்வதைப் போலவுமே யாகின்றதல்லவா? குழந்தையும் சாமியும் கொண்டாடுமிடத்தில் என்பது ஒரு பழமொழி. சாமியை மக்கள் விரும்பிக் கொண்டாடினால் தான் அந்த மக்களிடத்தில் இருப்பார் என்று சொல்லப்படுகிறது. எனவே சனியனை விரும்பிக் கொண்டாடினால்தான் அவர் மக்களைக் கெடுக்க வருவார். அவரை மதியாமலும் வணங்காமலும் விட்டு விட்டால் அவர் வரமாட்டாரல்லவா? மக்களைத் துன்புறுத்தும் சனியனை வணங்குவது மடமையும் பகுத்தறிவற்ற தன்மையுமே யாகும். ஆகவே சனியனைக் கண்ட கண்ட இடத்திலெல்லாம் சாணி கரைத்த அபிஷேகத்தாலும் ஆயிரக் காலியாலும் விரட்டி விரட்டி - மூச்சுத் திணறத் திணற அடிப்பதன் மூலமாக சனியன் கடாட்சத்தி னின்று விடுபடலாம். அதை உணர்ந்து நடவாமல் எண்ணெயையும் எள்ளையுங்கொண்டு அவரைப் பூசித்துக்கொண்டு திரிவது அவரை வலிய வீட்டுக்கு அழைப்பதையாகுமன்றோ? (ஒரு சிறு சந்தேகம் எண்ணெய் என்றால் எள்-நெய் என்பதே பொருள் என்று பண்டிதர்கள் கூறுவார்கள். அப்படியானால் என்னையும் - சனியீவரனுக்குப் படைப்பது தப்பாகாதா?) ஆகவே, என் அப்பிராயம் இப்படியிருக்கும்போது சனியன் என்னைப் பிடிக்க முடியுமா? என நான் கடாவுகிறேன். சனியன் என ஒரு கடவுள் இல்லை என்பதே கிறுக்கனின் பிரத்தியேக நம்பிக்கை. ஒருக்கால் சனியன் இருந்தாலும், நான் சனியனைப் போற்றுபவ னல்லனாதலால், சனியன் என்னிடத்தில் வாலாட்ட முடியாது! சனியன் மட்டுமல்ல, சிவன், விஷ்ணு, ஆறுமுகன், யானைமுகன், சோணையன், கறுப்பன், இருளன், ஆண்டவன், அல்லா என்று கூறப்படுகின்ற எந்தக் கடவுளையும் நான் ஒரு சிறிதும் மதிப்பவ னல்லன். எனவே எந்தச் சாமியும் என்னிடத்தில் பல்லை யிளித்துக் கொண்டு நெருங்கவோ, யோகக்ஷேமம் விசாரிக்கவோ வர முடியாது, முடியாது, முடியாது என்று இதன் மூலமாகப் பறையறைந்து முடிக்கிறேன். ஆ! ஆ!! ஆ!!! கிறுக்கன் கூறுவது - புதுவை முரசு, 16. 2. 1931, ப. 5 - 6 27. ஊழ் சில சமயங்களில் எளியவனை வலியவன் நலிவு செய்யும் போது அந்த எளியவன் ஒன்றும் பேசாதிருக்க ஆக்கினையிடுவதாக அடே! ஊழ், ஆழ் என்றால் உதைப்பேன் என்பதுண்டு. இதனால் ஊழ் என்ற வார்த்தை நம்மவர் அதிகமாய்ச் சொல்லி வருவது விளங்கும். எடுத்ததற்கெல்லாம் ஊழ் என்பது நம்மவரின் பல நாள் வழக்கம் போலும்! அன்றியும் ஊழ் என்ற வார்த்தை பழந்தமிழ் நூற்களிலும் காணப்படுகிறது. நூற்களில் வழங்கிய ஊழ் வழக்கிலும் உண்டு. ஊழ் என்பது முன்ஜென்மத்தில் செய்த வினைப்பயன் என்ற பொருளில் வழங்குவது. ஆனால் இப்படிப் பொருள்படுவது இடையில் சிலரால் பொருத்தப்பட்டதே. ஊழ் என்பதன் சொந்த அர்த்தம் கடைசி என்பதேயாகும். ஊழ்-ஊழி-ஊழிக்காலம் என்பவற்றில் கடைசி யென்பதே பெறப் படுவது காண்க. - புதுவை முரசு, 16.02.1931, ப. 18 28 . கடவுளும், கற்பும் கற்பு என்னும் பதமானது கடவுள் என்ற வார்த்தையைப் போலவே, சிறிதும் அர்த்தமில்லாததும், பகுத்தறிவிற்கு முரண் பட்டதும், மனிதனுடைய பயத்தினால் ஏற்பட்டதுமாகிய ஓர் உணர்ச்சி யென்றே கூறலாம். கடவுள் என்பது எப்படி வெவ்வேறு தேசங்களில் வெவ்வேறு மக்களிடையே வெவ்வேறு அர்த்தத்தோடும், எண்ணத் தோடும் கொள்ளப்படுகிறதோ அம்மாதிரியேதான் கற்பு என்பதும் தேசம், மக்கள், காலம் முதலிய வேறுபாடுகளால் வித்தியாசமான விஷயங்களைக் குறிக்க உபயோகப்பட்டு வருகிறது. ஆனால் இரண்டிற்குமுள்ள வித்தியாசம் என்னவென்றால், கடவுள் என்ற நம்பிக்கை எல்லா மக்களுக்கும் பொதுவாக ஏற்படுத்தப்பட்டிருக்க, கற்பு என்பது மாத்திரம் மனிதசமூகத்தில் ஒரு பகுதியான பெண்மக்களுக்கு மாத்திரம் ஏற்படுத்தப் பட்டிருக் கிறது. இதற்குக் காரணம் என்னவென்பதைச் சற்று யோசித்துப் பார்ப்போம். தன்னம்பிக்கையற்று, மனச்சோர்வு அடைந்து, பலஹீனமுற்ற காலத்திலும், மனித அறிவிற்குச் சாத்தியமில்லாததுபோல் தோன்றிய காலத்திலும் ஆண், பெண் ஆகிய இருபாலாருக்கும் கடவுள் என்ற ஒன்று இருப்பதாகவும், அதன் ஆக்கினையின் படியேதான் இவ்வுலகம் நடந்து வரவேண்டுமென்ற ஒரு யூகத்தின் பேரிலும் இக்கொள்கை (கடவுள் நம்பிக்கை) ஏற்பட்டிருக்கிறது. ஆனால் கற்பு என்பதோ ஆண்மக்கள் உணவு சம்பாதிக்கும் நிமித்தம் நாள் முழுதும் வெளியே போய்த் திரியவேண்டிய அவசியம் ஏற்பட்ட காலத்தில், வீட்டி லிருக்கும் பெண் மக்கள் மீது அநாவசியமான சந்தேகங்கள் ஏற்பட்டு அவரவர்களுக்குத் தோன்றியபடி அப் பெண்களுக்கு ஏற்படுத்தப் பட்ட கட்டுப்பாடுகள் ஆகும். ஒவ்வொரு தேசத்துக் கடவுளுக்கு ஒவ்வொரு விஷயம் சரி யென்று படுகிறது. கடவுள் ஒன்றே என்று வாய்ப் பேச்சில் எல்லா மக்களும் சொன்னபோதிலும்கூட, ஒரு தேசத்துக் கடவுளுக்குப் பிடித்தது மற்றொரு தேசத்துக் கடவுளுக்குப் பிடிக்காததாகத்தான் இருக்கிறதைப் பார்க்கிறோம். உதாரணமாக, சில கடவுள்கள் மெழுகு வர்த்தி ஒன்றினா லொழிய மரக்கட்டையிலும் செம்புத் தகட்டிலும் கடவுள் தன்மை வருவதற்கு மறுத்து விடுகின்றன. இன்னுஞ் சில கடவுள் எவ்வளவு விலை யுயர்ந்த பண்டங்கள் இருந்தாலும், தெர்ப்பைப் புல் இல்லாவிட்டால் கட்டை, கல் முதலிய உருவங்களில் கடவுள் தன்மை ஏறுகிற தில்லை வேறு சில கடவுள்களுக்கு வேதபுஸ்தகத்திலுள்ள வார்த்தைகளைச் சொன்னாலன்றி வேறு என்ன செய்தாலும் பயன்படுகிற தில்லை. ஒரு கடவுளுக்கு ஒரு கன்னத்திலறைந்தால் மற்றொரு கன்னத்தையும் காட்டவேண்டுமென்பதே, புண்ணியம் என்று படுகிறது. மற்றொரு கடவுளுக்குத் தன்பெயரைச் சொல்லிப் பிற மதத்தினரைக் கொலை செய்தாவது தன் மதத்தைக் காப்பாற்ற வேண்டியதுதான் புண்ணிய கர்மம் என்று தோன்றுகிறது. இன்னுஞ் சில கடவுள்கள் மேற்சொன்ன கடவுள்களின் பக்தர்களை மிலேச்சர் கள் என்று வெறுக்கின்றன. ஒரு கடவுளுக்கு ஆடு, கோழி தான் விருப்பம். மற்றொன்றுக்கு இதெல்லாம் பாவச் செயலாகிறது. ஒரு கடவுள் தன் பெயரைச் சொல்லி மதுபானம் அருந்தலாமென்கிறது. மற்றொன்று மதுபானம் பஞ்சமா பாதகங்களில் ஒன்று என்று கூறுகிறது. இவ்வாறே கடவுள் தன்மையிலும் புண்ணிய பாவங்களிலும் ஒவ்வொரு நாட்டிற்கும் வித்தியாசம் இருந்து வருவதைக் காண்கிறோம் இன்னும், காலத்திற்கேற்றவாறு கூட, கடவுள்தன்மை மாறுபட்டுக் கொண்டு வருகிறது. உதாரணமாக, கால் நடையாகவே காசி க்ஷேத்திரம் போனால் தான் புண்ணிய மென்று இருந்த கொள்கை யானது காலவேறுபாட்டினால் மாறுபட்டு, மோட்டார், இரயில் மூலமும் போகாலாமென்று ஏற்பட்டுவிட்டது. விளக்கெண்ணெய் விளக்கி லேயே பிரகாசித்துக் கொண்டிருந்த கடவுள்களெல்லாம் மிலேச்சர் களால் செய்யப்பட்ட பெட்ரொ மாக்ஸ்லைட், மின்சாரவிளக்குகள் வேண்டுமென்கின்றன. ஆகவே கடவுள் லட்சணம் இயற்கை அன்னையாக இல்லாமல் செயற்கை அப்பனாகப் போய்க் கொண்டிருப்பதேதான் கண்முன்னே காண்கின்றோம். இம்மாதிரியேதான் கற்பு என்பதும் இருந்து வருகிறது. சைனா தேசத்து ஆண்கள் தங்களுடைய பெண்களுக்குப் பிறந்தது முதற்கொண்டே இரும்புப் பூட்சுகளைப்போட்டுக் கால்களை நெறுக்கிக் கட்டிவைத்து அவர்கள் எளிதில் நடமாடவும் கூட முடியாமல் செய்து அதே அப்பெண்களின் கற்பு என்று ஏற்படுத்தி யிருக்கிறார்கள். அந்தக் கற்பு இப்போது அப்பெண்களால் மீறப்பட்டு விட்டது. இங்கிலாந்து, பிரான்ஸ் முதலியமேல் நாடுகளில் குதிகால் பக்கம் உயரமான பூட்சுகளைப் போட்டு, அதே நாகரீகம், பெண்கள் கற்பு என்று ஏற்படுத்தி அவர்கள் ஆண்களைப் போல் ஓடவும் வேகமாய் நடக்கவும் முடியாமல் செய்துவைத்தார்கள். ஆனால், இப்போது அவ் வழக்கமும் ஒழிந்துவருவதோடு ஆண்களைப் போலவே கால்சட்டை, ஷர்ட், கோட், ஹாட் முதலியனவும் அணிய தலைப்பட்டு விட்டார்கள். துருக்கி, ஆப்கானிதானம், ஈஜிப்ட், அரேபியா முதலிய இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த தேசங்களில் பெண்களுக்கு மிகவும் கஷ்டமான அதிக நீளம் அகலமுள்ள உடைகளைக் கொடுத்து, அவர்கள் மனித உருவங்களா, அல்லது துணி மூட்டைகளா, என்பதே தெரியாமல் செய்து, அதுவும் போதாமல், முகத்தை எப்போதும் மூடிக் கொண்டே இருக்க வேண்டுமென்பதே அவர்களுடைய கற்பு என்று ஏற்படுத்தி, அவர்கள் வெளியே போகவோ, சூரிய வெளிச்சத்தைப் பார்க்கவோ, உலக அதிசயங்களைக் காணவோ முடியாதபடி ஏற்படுத் தினார்கள். இதுவே அப்பெண்களின் கற்பு என்பதை மதத்திலும் புகுத்தி அவர்களுக்கு ஒருவித சுயேச்சையும் கொடாமல் பெண்கள் உனது ஆடைகள், அவைகளை உனது இஷ்டம் போல் செய்யலாம் என்று வேதப் புத்தகத்திலும் எழுதி அடிமைப்படுத்தி வைத்தார்கள். ஆனால் இப்போது துருக்கிப் பெண்கள் முக மூடியைக் கிழித்தெறிந்த தோடு நில்லாமல், ஆங்கிலப் பெண்களைப் போல உடல் நலத்திற்கேற்ற இலகுவான உடை தரிப்பதோடு, ஐரோப்பா முதலிய மேல் நாடுகளுக்குச் சென்று யுத்தவீரர்களாகவும் ஆகிவிட்டார்கள். ஆகவே அவர்களுடைய கற்பு நிலையிலும் பெரிய மாறுதல் ஏற்பட்டு விட்டது. நமது நாட்டில் மேற்படி முகமூடிப் பழக்கத்தோடு இன்னும் அநேக விசித்திரமான கற்பு நிலைகளும் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. பெண்ணைக் காப்பாற்றுவதற்காகவே ஏற்பட்டதென்று வைதீகர்கள் தத்துவார்த்தம் சொல்லும்படியான காப்புகளை வெள்ளியில் கனமாக அடித்துக் கால்களில் மாட்டினார்கள். நமது நாட்டுச் சீதோஷ்ண நிலைமைக்கு ஒவ்வாத 16 முழம் துணியை ஆடையாக ஏற்படுத்தி னார்கள். நடந்தால் சப்தம் கேட்கும்படியாக, கால்விரல்களிலும் கழுத்து, கைகளிலும், மோதிரங்களையும் போட்டார்கள். தங்கள் பணத்தைச் செலவழித்தாவது பெண்களுக்கு அதிகவிலையில் சப்தமானதும் கனமானதுமான ஆபரணங்கள் செய்வதில் ஆண்கள் சற்றேனும் தயங்குவதில்லை. ஏனெனில், பெண்கள் எப்போதும் வீட்டிலிருப்பவர்களாதலால் ஒரு நல்ல பணப்பெட்டியாக நினைத்து, அந்தக் காலத்து சேவிங்ஸ் பாங்குகளாகத் தங்களுக்கு ஏற்படுத்திக் கொண்டார்கள். பெண்கள் கம்பீரமாய் நடப்பது கற்பிற்குப் பழுது என்று கற்பித்தார்கள். கற்புக் கரசியான சீதைக்குத் தனது மைத்துனனான லட்சுமணனின் கால் கட்டைவிரல் தவிர வேறு ஓர் முகமுமே தெரியாதாம். ஏனெனில் கற்பு உடைய பெண் எப்போதும் தலைகுனிந்தபடியே இருக்க வேண்டுமாம். அதற்கு உதாரணம் சீதையாம். இன்னும் கற்பெனப் படுவது (தனது கணவனுடைய) சொற்றி ரம்பாமை என்று எழுதி வைக்கப்பட்டது. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கழகு என்றும் பேதமை என்பது மாதர்க்கணிகலம் என்றும், பெண்கள் சிறு வயதில் பெற்றோர் களுக்கும், பருவமானதும் கணவனுக்கும், அவனிறந்த பின் பிள்ளைக்குமாக எப்போதும் ஓர் ஆணிடத்தில் அடங்கியே இருக்க வேண்டுமென்றும் இப்படி ஆண் மக்களுக்குப் பெண்கள் அடிமையா யிருப்பதற்கு என்னென்ன கட்டுப்பாடுகள் வேண்டுமோ அவ்வளவை யும் ஏற்படுத்தியிருக்கிறார்கள். இன்னும் பெண்ணினுடைய கணவன் இறந்த பின் அவன் உயிரும் உடனே போகுமாகில், அது முதல் தரமான கற்பு என்றும், கொஞ்ச நாள் கழித்து உடல் இளைத்து உயிர் போகுமாறு செய்தால் அது இரண்டாந்தரமான கற்பு என்றும் அதுவு மில்லாமலிருந்தால் அது கடையானது என்றும் எழுதி வைத்திருக் கிறார்கள். இன்னும் புருஷன் இச்சித்த இன்னொரு பெண்ணிற்காக மனைவியானவள் தனது நகையை விற்றாவது கொடுத்துப் புருஷனைத் திருப்திபடுத்தினால் தான் கற்பு என்று ஏற்படுத்தி, அதற்கு உதாரணமாகக் கற்புக் கடவுளாகிய கண்ணகியின் சரித்திரத்தை எழுதி வைத்தார்கள். இவ்வாறு ஆண்கள் பெண்களை அடிமைப்படுத்திய இந்து புராண வரலாறுகளையும், சமூக வழக்கங் களையும் ஆயிரக் கணக்காய் எழுதிக் கொண்டே போகலாம். ஆகவே நமது நாட்டிலும் கற்பு என்பது எவ்விதம் இடம் பெற்றது என்பதையும் குறிப்பிட்டோம். நமது நாட்டு கற்பும் இதர நாட்டுக் கற்பைப்போலவே, கால வர்த்தமானங்களை யொட்டி மாறு பட்டுக்கொண்டே வருகின்றது. முகமூடி போட்ட பெண்கள் உப்புக் காய்ச்சி ஜெயிலுக்குப் போகவும், விதவைகள் கணவனோடு இறந்து விடாமல் கல் போலிருக்கவும், ஆண்களோடு போட்டி போடும்படி கல்வி கற்கவும், எல்லாப் பெண் களும் கீழே குனிந்துபோய் இடறி விழாமல் மேலேபார்த்து நடக்கவும் - இம் மாதிரி பல வழிகளிலும் நமது பெண்களின் கற்பும் வரவர மாறிக் கொண்டே வருகிறது. இனி கற்பு என்கிற வார்த்தைக்கே கடவுள் என்பதைப்போல சூன்யம் பூஜ்ஜியம் என்று அர்த்தமில்லாத சொல் என்று தீர்மானிக்க வேண்டிய அவசியத்திற்கு நாம் வந்து விட்டோம். ஆகவே, பெண்கள் தமது முன்னேற்றத்திற்கும், இயற்கை உணர்ச்சிக்கும், அறிவிற்கும், அநுபவத்திற்கும் அநுகூலமான எத்தகைய முயற்சியிலும் கற்பு என்னும் விஷயமோ, அல்லது அதற்குச் சரியான வேறு அர்த்தமில்லாத கட்டுப்பாடுகளோ தலை யிடுமானால், அவைகளெல்லாம், பொறாமை பேராசை, அற்ப சந்தேகம் முதலிய எண்ணங்களால் மனிதன் தனது சுய பலத்தின் பேரில் கட்டிவைத்த அநாகரீகத் தடைகள் என்பதையறிந்து அவற்றை உடைத்தெறிவதில் சிறிதும் தயவு, தாட்சணியம், பயம் இருக்கக் கூடாது என்பதே நமது விருப்பம். இதை நமது சகோதரிகள் நன்குணரவேண்டு மென்பதற்காகவே இத்தலையங்கத்தை எழுதினோம். கடவுளும் கற்பும் கட்டுப்பாடே. - புதுவை முரசு, 23. 2. 1931, ப. 10 - 13 29. மோதிலால் நேரு மரணம் பண்டிதர் மோதிலால் நேரு இறந்ததைக் கேட்ட நமது நாடு துக்கத்திலாழ்ந்திருக்கிறது. நம் நாடு ஒரு தியாகியை இழந்தது. காங்கிரஸ் ஓர் அநுபவ ஞானியை இழந்தது. நாமோ, ஒரு சீர்திருத்த வாதியை இழந்தோம். மோதிலால் நேரு சமூகசீர்திருத்தத் துறையில் அதிக தீவிரமாய் உழைக்காவிடினும், தென்னாட்டுப் பார்ப்பனரைப் போல் அவர் வைதீகப் பித்துப் பிடித்தவர் அல்லவென்பது மாத்திரம் உறுதி. உதாரணமாக, சென்ற வருஷத்தில் லாகூரில் கூடிய ஜாதி ஒழிப்பு மகாநாட்டில் அவர் பேசியிருக்கும் வார்த்தைகள் இன்னும் நமது காதில் ஒலித்துக்கொண்டே யிருக்கின்றன. எனக்கு இப்போது வயது 69 ஆனபோதிலும், நான் 26 ஆண்டு களுக்கு முன்னேயே ஜாதி விலங்குகளை உடைத்தெறிந்துவிட்டேன். இந்தியாவிலுள்ள சகலவிதமான அடிமைத்தனங்களும் ஒழிய வேண்டு மானால், அதற்கு ஒரே ஒரு மார்க்கம்தான் உண்டு. அதுதான் கலப்பு மணம். ஆகவே, இம்மாதிரி விவாகங்கள் பெருக வேண்டுமென்பதே எனது மனப்பூர்வமான விருப்பமாகும் என்று பேசியிருக்கிறார். இத்தகைய முற்போக்கான நோக்கம் கொண்ட இந்தியத் தலைவர்களில் ஒருவராகிய மோதிலால் இறந்தது நமக்கு ஒரு குறையாகவே இருக்கிறது. சாதியால், செல்வத்தால், சார்பதவியால் செருக்குச் சாராத மோதிலால் இறந்ததைக் குறித்துச் சமூக சீர்திருத்த வாதிகளும் கவலைப்படுகின்றன ரென்பது ஆச்சரியமல்ல. ஆயினும் அவரைவிடப் பன்மடங்கு முன்னேற்றக் கொள்கைகளையுடைய மைந்தன் திரு. ஜவகர்லாலை நம்நாட்டுக்குத் தந்து சென்றமைக்காக நாம் திருப்திப்படுவதோடு, அன்னாருக்கு நமது அநுதாபத்தையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம். - புதுவை முரசு, 23. 2. 1931, ப. 13 30. வேதமா? பேரமா? 1931-ம் ஆண்டு பிப்ரவரி 24ம் நாள் புதுவை பிரபல வியாபாரி கனம் ஆரோக்கியநாதன் பிரான்ஸீன் ஒன்று, மேற்படியூர்க்குடி, காலஞ்சென்ற சேசுநாதர் வார்சுதாராகிய சம்பாகோயில் (கிறீஸ்தவர் மாதாகோயில்) பாதிரியார் இரண்டு ஆகிய இருவருக்கும் நடைபெற்ற பிரேத ஒப்பீஸ் வியாபார ஒப்பந்தமாவது: மேற்படி தேதியில் பிரான்ஸீன் தாயார் பூரணத்தம்மாள் இறந்து போனதால் அப் பிரேதத்திற்கு ஒப்பீஸ் என்னும் பிரேத மந்திரத்தை நடத்துவதற்கு பாதிரியிடம் கொடுத்த ரூபாய் 100. இந்த ரூபாய் நூறையும் பாதிரியார் பெற்றுக்கொண்டதற்கு அவர் ஒப்பீஸ் சடங்கை முறைப்படி நடத்தி முடிக்கவேண்டியது. அவர் முடித்தாலும் முடிக்காவிட்டாலும் கிரமத் தவறாக முடித்தாலும் எந்தக் கோர்ட்டிலும் மேற்படி பிரான்ஸீன் தொடருவதில்லை என்றும், இதற்குச் சாட்சி யில்லை என்றும், பாதிரியார் முறை தவறாகச் செய்தால் மேற்படி பிரான்ஸீன் அவர்கள் வாயில் விரலை வைத்துக்கொள்ள வேண்டியது தான் என்றும் பாதிரியார் தாமே மனம் திரும்பினால் தான் நியாயம் நடக்கும் என்றும் சம்மதித்து எழுதிமுடிந்த ஒப்பீஸ் வியாபார ஒப்பந்தச் சீட்டு இதுபோல் இரண்டு பிரதிகள் எழுதியதில்லை, யார் தலையிலும் கட்டிக்கொள்ளவுமில்லை, கையெழுத்துமில்லை. காலெழுத்துமில்லை. இந்த ஒப்பந்தத்திற் கண்டதற்கு மாறாக மேற்படி பாதிரியார் பிரேதம் பெட்டியோடு கோயிலில் ஒருபுறமிருக்கும் தீர்த்தக் குழியண்டை வைக்கப்பட்டிருந்தது. பிரேதத்திற்கு உடையவர் தந்த 100 ரூபாய் மதிப்புடையதுதான் என்றாலும் பிரேதம் ஆதித் திராவிட வகுப்பு என்ற காரணத்தால் இப்படி அவமானத்துக்குரிய வகையில் நடந்ததை அறிந்த உடையவர் பாதிரியாரைக் கண்டு சுவாமிக்கெதிரில் வைப்பதை விட்டு இப்படிச் செய்துவிட்டீர்களே என்றதற்கு ஒசியார் அதுதான் முறை என்றதாகப் பிரதிவாதியாகிய பாதிரி சொன்னார். ஒசியாரை முதல் சாட்சியாக விசாரித்ததில் சாமியார் சம்மதந்தானே யொழிய நான் சொல்லவில்லை என்றார். அதன் பிறகு வாதி 100 ரூபாயைக் கேட்டார். உடனே ஆதித் திராவிடப் பிரேதம் தக்க இடத்தை அடைய வேண்டும் என்று தீர்ப்பு ஆயிற்று. ஆதித் திராவிடர்க்கு ஒர் இடம் மற்றவர்க்கு ஒர் இடம். இது கடவுளின் ஏற்பாடா? 100 ரூபாயைக் கேட்டால் எல்லாருக்கும் சமம், இது கடவுளின் ஏற்பாடா? ஆம் என்றால் இப்படி ஒர் கடவுள் உண்டா? உண்டு என்றால் அந்தக் கடவுளை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறோம். இதனால் எம்மை நாஸ்திகர் என்று சொன்னால் அப்படிச் சொல்லுபவர்க்குப் பெயர் என்ன என்றுதான் கேட்கிறோம். உள்ளதைச் சொன்னால் இதோ புதுவை முரசை நிறுத்தி விடுகிறோம் என்கிறார்கள். புதுவை முரசு இப்போதிருப்பதைவிட 10 மடங்கு நல்ல நிலையடைய வேண்டுமானால் பிரேதத்தை மந்திரிக்க நாமும் 100 x 10 = 1000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று சிபாரிசு செய்யவேண்டும். அல்லது பாதிரிகள் வியாபாரத்திற்கு முரசு விளம்பர ஏடாக இருக்கவேண்டும். புதுவை முரசைப் படிக்க லாகாது என்று ஸ்வாமிகள் பிரசங்கம் செய்யவும் கிளம்பியிருக்கிறார்கள். மக்களைக் காசுக்குப் பரலோகம் அனுப்பும் சுவாமிகள் புதுவை முரசை நரகலோகம் அனுப்புவதைவிட்டுப் பிரசங்கம் செய்வது பயனற்ற வேலை. அப்படியே புதுவை புரசை நிறுத்திவிட்டாலும் மற்ற முரசுகள் உண்டு, பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா? மேலும் இது 1931-ம் ஆண்டு என்பதை மறக்கலாகாது. இனி பேரம் பலிக்காது, பரலோகச் சிபாரிசு என்று பாதிரிகள் சீட்டு விற்ற காலமும் ஒன்று இருந்தது. அது ஒழிந்துதானே போயிற்று. எத்தனை நாள் மக்களை ஏமாற்றுவது? சுவாமிகளே யோசியுங்கள். - புதுவை முரசு, 2. 3. 1931, ப. 4 - 5 31. பல்லாவரத்தில் பண்டிதர்கள் பல்லாவரத்தில் கூடப்போவதாக அறிவிக்கப்பட்ட பண்டிதர்கள் கூட்டமானது நடைபெற்றுவிட்டதாக அறிகிறோம். அதில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதாய்த் தெரிகிறது. அவற்றுள் சமயசமூகச் சீர்திருத்தம் சம்பந்தமாகவும் சில முக்கிய தீர்மானங்கள் காணப்படுகின்றன. அதாவது கோவிலுக்குள் எல்லா ஜாதியார்களுக்கும் போக உரிமை இருக்கவேண்டுமென்றும், தேவதாசி முறை கூடா தென்றும், அனாவசியமானதும் அதிகச் செலவானதும் சமயக் கொள்கைக்கும் அறிவுக்கும் பொருத்தமில்லாததுமான உற்சவங்களை நிறுத்தி விட வேண்டுமென்றும், சாரதா சட்டத்தை உடனே அமுலுக்குக் கொண்டு வரவேண்டுமென்றும், பெண்களுக்கு ஆண்களைப் போலவே சொத்துரிமை வழங்க வேண்டுமென்றும், சாதி வித்தியாசம் பாராமல் கலப்புமணம் செய்துகொள்ளலாமென்றும், விதவா விவாகம் செய்யப்பட வேண்டுமென்றும், தீர்மானித்திருப்பதோடு, மற்றக் காரியங்களிலும் அறிவுக்கும் ஒழுக்கத்திற்கும் ஒத்து வராத எதுவாயினும் அது முதல் நூலாக இருந்தாலும் அதை ஒப்புக் கொள்ளமுடியாது என்றும் தீர்மானித்திருப்பதாகத் தெரிகிறது. தொல்காப்பியர் காலத்திற்குத் திரும்பவேண்டும், என்றும் காவி வேஷ்டி கட்டிச் சாம்பலைப் பூசினவனுக்கு, தன் பெண்டாட்டியுட்பட எதை வேண்டுமானாலும் கொடுப்பதே மதக் கட்டளையென்றும் சொல்லிக் கொண்டிருந்த கூட்டத்தார்களுக்கு ஏதோ இவ்வளவாவது அறிவு உதயமானது விசேஷந்தான்; ஆனால் எவ்வளவு தூரம் நடைமுறையில் செய்யப் போகிறார்கள் என்பதுதான் விளங்கவில்லை. குடி அரசும் இத் தீர்மானங்களை நம்பி, அவர்களையும் அவர்களது அறிவு விலாசத்திற்குக் காரணமாயிருந்த மறைமலையடிகளையும் புகழ்ந்தும், பாராட்டியும் தலையங்கமும் எழுதிவிட்டது. இதே கருத்துக்களைக்கொண்டு பிரசாரம் செய்துவரும் சுய மரியாதை இயக்கத்தை தூஷித்து வந்த கூட்டத்தார் தைரியமாகத் தீர்மானங் களாவது நிறைவேற்றினார்களே என்பதை நினைக்கும் போது, நமக்கு ஆச்சரியமும் சந்தோஷமும் ஒருபுறம் இருந்தாலும்கூட, சைவத்தில் ஜாதியில்லையென்பதற்குப் பெரிய புராணத்தையும், கோவிலிலுள்ள நந்தனார் கல்லையும் காண்பித்து இதுவரை ஏமாற்றி வந்ததுபோல், இனி மேல் இந்தத் தீர்மானங்களையும் உபயோகப்படுத்திக் கொள்ளப் போகின்றார்களா என்பது சற்றே சந்தேகமாகத்தானிருக்கிறது. சைவக் கூட்டத்தில் அதிகச் சீர்திருந்தவாதியாகிய மறைமலை யடிகள், திரு. வி. கலியாண சுந்தரமுதலியார், திரு. சச்சிதானந்தம் பிள்ளை, திரு. வெங்கிடசாமி நாட்டார் ஆகிய முக்கியமானவர் களெல்லாம் இதர சைவர்களால் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை நாம் நன்கு அறிவதோடு பல இடங்களில் நேரிலும் கண்டிருக்கிறோம். சைவ தீட்சை பெற்ற இவர்களை, ஒரே இடத்தில் ஒரே ஜாதியாரால், ஒரே பாகமாய்ச் செய்யப்பட்ட சாப்பாட்டைக் கூட, சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட அனுமதிக்காத செட்டியார், பிள்ளை, முதலியார் சைவர்களெல்லாம் ஆதிக்கம் செலுத்துகின்ற நாம் பல தடவைகளில் நேரில் கண்டிருக்கிறோம். அப்பேர்ப்பட்ட சைவர்களுக்கு, மேற்கண்ட தீர்மானங்கள் கசப்பாயிருக்கலாம். அதனால் சைவர்களுக்குள் பிளவு ஏற்பட்டாலும் ஏற்படலாம். ஆகவே, இவ்வளவு எதிர்ப்புக்களையும் எதிர்பார்த்தே இத்தீர்மானங்கள் போடப்பட்டிருந்தாலும் இருக்கலாம். இல்லை, இத்தீர்மானங்களுக்குத் தத்துவார்த்தம் உண்டு என்று விபூதி, ருத்திராட்சத்திற்குச் சொல்வதுபோல் சொன்னாலும் சொல்லலாம். எது எப்படியிருந்தாலும் சுயமரியாதை இயக்கத்தின் கிளர்ச்சி யின் பயனாலும், முக்கியமாக குடி அரசில் திரு. கைவல்யம் அவர்கள் 4-5 வாரம் விடாமல் பண்டிதர்களின் வாயையும் மூக்கையும் சேர்த்துப் பிடித்ததாலும், ஒருவாறு மூச்சுத் திணறி இத்தீர்மானங்கள் வெடித்திருக் கின்றன என்பதைப் பொது ஜனங்கள் மறுக்கமுடியாது என்பது மாத்திரம் உறுதி. இனி, சைவப்பண்டிதர்கள், தங்கள் செய்கையில் எப்படி இருக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம். நமது நிரூபர் - புதுவை முரசு, 2. 3. 1931, ப. 10 - 11 32. முருகனது பிறப்பு முருகன் பிறப்பைப் பற்றிக் கூறுபவையெல்லாம் பலமாதிரி கூறா நிற்கின்றன என்பதை நம் வாசகர் அறிவர். அவற்றில் ஒன்றைப் பற்றி நான் இங்கு எழுத ஆசைப்படுகின்றேன். அந்த வரலாறு உமையோடு சிவன் நீண்ட காலமாகப் புணர்ச்சி செய்து கொண்டிருக்க இந்திரன் வந்து தவிர்ப்பாயென்று கூற, சிவன் இந்திரியத்தைப் பல கண்டமாகத் துணித்தான். சப்த ரிஷிகள் அருந்ததியொழிந்த தம் மனைவியர் களுக்குக் கொடுக்க, அவர்கள் கர்ப்பமாகி, சரவணப் பொய்கையில் பயந்தனர் என்பதாம். அது கீழ்க்காணும் வரிகளில் அடங்கி யிருக்கின்றது. அது வருமாறு:- ... ... ... ... ... வேள்வி பாக முண்ட பைங்கட் பார்ப்பா னுமையொடு புணர்ந்த காம வதுமையு ளமையாப் புணர்ச்சி யமைய நெற்றி யிமையா நாட்டத் தொருவரங் கொண்டு விலங்கெனவிண்ணோர் வேள்விமுதல்வன் விரிகதிர் மணிப்பூ ணவற்குத்தா னீத்த தரிதென மாற்றான் வாய்மைய னாதலி னெரிகனன்றானக் குடாரிகொண்டவனுருவு திரித்திட் டோனிவ் வுலகேழு மருளக், கருப்பெற்றுக் கொண்டோர் கழிந்தசே யாக்கை நொசிப்பி னேழுறு முனிவர் நனியுணர்ந்து வசித்ததைக் கண்ட மாக மாதவர் மனைவியர் நிறைவயின் வசிதடி சமைப்பிற் சாலார் தானே தரிக்கென வவவி யுடன்பெய் தோரே யழல்வேட் டவ்வவித் தடவு நிமிர்முத்தீப் பேணிய மன்னெச்சில் வடவயின் விளங்கா லுறையெழு மகளிருட் கடவு ளொருமீன் சாலினி யொழிய வறுவர் மற்றையோரு மன்னிலை யயின்றனர் மறுவறு கற்பின் மாதவர் மனைவியர் நிறைவயின் வழாஅது நிற்சூ லினரே நிவந்தோங்கி மயத்து நீலப் பைஞ்சுனைப் பயந்தோ ரென்பது மத்துப் பாயுற் பெரும்பெயர் முருகநிற் பயந்த ஞான்றே. சகோதரர்களே! இதனைச் சொன்னது சுயமரியாதைக்காரர்களல்ல. ஓங்கு பரிபாடல் எனப் பெயர் பெற்ற பரிபாடலிலுள்ள ஓர் கவியே யாகும். இதனைக் கடுவனினவெயினனார் இயற்றினார். சாமிநாதய்யர் புத்தகமாகச் சேர்த்து அச்சிட்டு உள்ளார். இந்தக் கதையைத் திருமுருகாற்றுப் படையில் 58,255 ஆம் அடிகளில் விசேடவுரையில் கூறியிருப்பதாகவும் ஐயர் கூறுகின்றார். ஆதலால் இக்கதை பிரசித்தம் என்பது திண்ணம். பண்டிதர்களே! காஞ்சிப் புராணத்திலிருக்கும் முருகன் பிறப்பை பிராமணன் இயற்றியது என்று சாக்குப் போக்குக் கூறுகின்றீர்களே! இதற்கு என்ன கூறுகின்றீர்கள்?. உங்கட்கு மானமும் வெட்கமும் உண்டாயின் இதைப் பார்த்தவுடனே புராணங்களைச் சுட்டுச் சுயமரியாதை ஜோதியில் கலப்பீராக. - புதுவை முரசு, 9.3.1931, ப. 8 - 9 33. உற்சவ மறியல் இந்துமதக் கடவுள்களுக்கு நடைபெறும் உற்சவங்கள் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டு போகின்றனவேயொழியச் சுருங்கின பாடில்லை. பெரிய க்ஷேத்திரங்கள் என்பவைகளில் சில வருஷங் களாகக் கூட்டம் மாத்திரம் குறைந்துகொண்டு வருவதாகத் திருப்பதி மகந்து முதலிய மதத் தலைவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கை களிலிருந்து தெரியக் கிடக்கிறது. இந்த அற்ப பலனைக் கொண்டு நமது சுயமரியாதை இயக்கமானது திருப்திப்பட்டுவிட முடியாது. ஏழை நாடு, ஏழை நாடு என்று பொய்க் கூச்சல் போடும் தேசபக்தர்களுக்கு நமது நாட்டு உற்சவங்களைப் பார்ப்பதற்குக் கண் இல்லை. படித்த கூட்டத்தார்களும், பணக்காரர்களும், மேல் ஜாதிக் காரர் தேசீயத்தின் பேரால் தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றனர். நமது பாமர மக்களோ, வெள்ளைக் காகம் மல்லாந்து பறக்கிறது என்றால் கழுத்தொடிய அண்ணாந்து பார்க்கும் நிலைமையில் இருக்கிறார்கள். சென்ஸ பகிஷ்காரத்திலும், கொடி தூக்கிப் போவதிலும் செல்லும் யோசனையெல்லாம் இந்த முக்கியமான விஷயத்தில் ஓர் அணுவளவுகூடச் செல்வது கிடையாதென்பது நாமறிந்ததேயாகும். இந்து மதத்தைக் காப்பாற்றுவதற்காக ஆயிரக் கணக்கான மடங்களும், பல்லாயிரக் கணக்கான கோயில்களும், அவைகளுக்குக் கோடிக் கணக்கில் சொத்தும் இருந்தும் இவ்வளவு வருஷங்களாக இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் அடைந்திருக்கும் பலன் என்ன வென்பதைச் சற்று யோசித்துப் பார்ப்போம். நமது மக்கள் தங்களுடைய ஜாதி வித்தியாசத்தையும், பிறப்பினால் ஏற்படும் உயர்வு தாழ்வையும் நீக்கிக் கொள்வதற்காகவும், சமமான உரிமைகளை அனுபவிப்பதற்காகவும் பிற மதங்களில் தினந்தோறும் நூற்றுக் கணக்காய்ச் சேர்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை நமது கண்முன் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதில் நமக்குச் சிறிதும் வருத்தமோ, கஷ்டமோ கிடையாது. ஏனெனில் பிற மதங்களுக்குச் சென்றாவது தங்களுடைய உலக வாழ்க்கைக்கு வேண்டிய சௌகரியங்களைத் தேடிக்கொள் கிறார்கள் என்பதில் நமக்கு அளவிலாத சந்தோஷந்தான். பின் இதை ஏன் குறிப்பிடுகிறோமென்றால், இவ்வளவு ஆயிரக்கணக்கான வருஷங் களாக, இந்து மதத்திற்காகச் செலவழித்த பணமெல்லாம், மடாதிபதி களின் லீலைகளுக்கும், சோம்பேறிச் சந்நியாசிகளுக்கும், வாண வேடிக்கை, அலங்காரம் முதலியவைகளுக்கும் தொலைக்கப் பட்டு வருகின்றனவேயொழிய மனித சமூகத்திற்கு ஓர் குண்டூசி முனை யவ்வளவுகூடப் பயன்படவில்லையென்பதேயாம். இப்படி மக்கள் ஒரு புறம் வயிற்றுக்கில்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க, மற்றொருபுறம் வருஷந்தோறும் கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவில் உற்சவங்கள் நடந்து கொண்டே வருவதென்றால் நம் மனம் துடிக்கிறது. இன்றல்ல; நேற்றல்ல; நாமும் பல யுகங்களாய், பல ஆயிர வருஷங்களாய்ப் பொறுத்தோம். மதத்தின் பேரால் நமது முதுகில் சுமத்தப்பட்ட பாரங்களையெல்லாம் சுமந்தோம்: புராதன இந்து மதம், அநாதியான இந்துமதம், என்று சொல்லி மார்தட்டி நின்றோம். நான் ஹிந்து என்று சொல்லிப் பெருமை பாராட்டிக் கொண்டாலும், இன்றைய தினம் இருக்கும் கல்வி நிலைக்கும், நாகரீகத்திற்கும், வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கும் பிற மதமான கிறீது மதமே தான் காரணம் என்பதை லோக குரு பட்டம் பெற்ற சங்கராச்சாரிகூட ஒப்புக்கொண்டு தான் தீரவேண்டும். இந்த நிலையில் நமது மதம் என்று சொல்லப்படும் இந்துமதம் ஏன் உயிருடன் இருக்கவேண்டு மென்பது விளங்கவில்லை. அது உயிருடன் இருப்பதாகச் சொல்லிக் கொள்வதற்குக்கூட என்ன யோக்கியதை இருக்கிறது என்பதும் தெரியவில்லை. ஆகவே, இந்த சூன்ய மதத்திற்காகச் செலவிடப் படும் ஏராளமான பொருள்களைப் பற்றி இனி கவனிக்கவேண்டிய பொறுப்பு நமக்கு ஏற்பட்டுவிட்டது. உற்சவம் அநாவசியமென்றால், நீங்கள் வராமல் இருந்து விடுவதுதானே, என்று நமது விரோதிகள் கேட்கலாம். ஆம், வராமல் தான் இருக்கிறோம். ஆனால், எல்லா மக்களுக்கும் சுயமரியாதை யுணர்ச்சி தோன்றி உற்சவங்களையே அடியோடு பகிஷ்காரம் செய்து விடுவதாக வைத்துக்கொண்டாலும் அதனால் லாபம் அடைபவர்கள் யார்? கோவிலை அண்டிப் பிழைக்கும் பார்ப்பானும், கல்லைக் கழுவி வயிறு வளர்க்கும் தரகனும், தன் இஷ்டம்போல் கொள்ளையடிக்க நல்ல சந்தர்ப்பம் கிடைத்துவிடுமே தவிர, ஏழை மக்களுக்கு ஒரு தம்பிடி பலன்கூட, கிடைக்கப் போவதில்லை. ஆகவே, சமூகச் சீர்திருத்தத்திற்கு முக்கியமான முதல் வேலையை இனித் தொடங்குவதே சரியென்று தோன்றுகிறது. கடவுள் விஷயத்திலும் மத விஷயத்திலும் செலவிடப்படும் தொகை யெல்லாம் மக்களது சுகாதாரம், கல்வி, கைத்தொழில் முதலிய வற்றிற்குத் திருப்பப்படவேண்டும் என்றால், உற்சவங்களை மறியல் செய்ய வேண்டிய முதல் வேலையைத் துவக்க வேண்டியதுதான். நமது (இந்து) மதத்தைச் சேர்ந்த உற்சவங்களை மறியல் செய்யவும், அதன் மூலம் மக்களுக்கு, நமது கொள்கைகளை எடுத்துச் சொல்லவும், ஏழை மக்க ளுடைய பொருள் உற்சவங்களுக்குப் போவதிலும் க்ஷேத்திர யாத்திரையிலும் வீணாகி வருவதைத் தடுக்கவும் வேண்டிய ஏற்பாடுகளைச் செய்வதற்கு ஆரம்பிப்பதே இனி நாம் செய்ய வேண்டிய வேலையாகும். ஓர் உற்சவத்தில் சுயமரியாதைத் தலைவர் பேசினாரானால், அவரைச் சின்னா பின்னமாகக் கிழித்தெறியும்படி செய்து விடுவேன் என்று பேச்சிலும், எழுத்திலும் சபதம் கூறிய சைவப் பெரியாரின் திறமையையும் நாம் இனிப் பார்த்துவிட வேண்டியது தான். இதனால் ஏற்படக்கூடிய நன்மை தீமைகளையும், அநுபவிக்கத் தயாராய் இருக்கிறோம் என்பதையும் உறுதிப் படுத்திக்கொண்டு இனி இந்த முக்கியமான வேலையில் சீர்திருத்தத் தலைவர்களும் தொண்டர் களும் ஈடுபடவேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகிறோம். ஆகவே, இனி ஒவ்வோரிடத்திலும் நடைபெறும் உற்சவங் களை மறியல் செய்யத் துவக்கவேண்டும். அதற்கு அடிப்படையாக, முதன்முதல் நமது லட்சியத்தை உற்சவ சமயங்களில் கூடும் மக்களுக்கு எடுத்துச் சொல்லி, நமது போருக்குப் படை திரட்டல் வேண்டும். இதற்கு வேண்டிய ஏற்பாடுகளை இப்போதே செய்ய முயல்வதோடு, இதற்கு வேண்டிய திட்டங்களையும் விருதுநகரில் கூடப்போகும் மாநாட்டில் ஏற்படுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகிறோம். இது சம்மந்தமாகச் சுயமரியாதை அன்பர்க ளுடைய அபிப்பிராயங்களை யும் அறிய விரும்புகிறோம். - புதுவை முரசு, 9. 3. 1931, ப. 10 - 11 34. சீர்திருத்தக்காரர்களின் கஷ்டம் உலகின் சீர்திருத்தத்தையொட்டியே உலக முன்னேற்றம் ஏற்படும். சீர்திருத்த முயற்சி இல்லாவிடினும் உலகம் ஒவ்வொரு நிமிஷமும் சீர்திருத்த மடைந்துகொண்டு தான் போகும். உலகில் ஒரு மூலை நன்னிலையில் இருப்பதை மற்றோர் மூலையிலுள்ள மக்கள் கண்டு தாமும் நன்னிலை அடையவேண்டும் என்று எண்ணு மிடத்துச் சீர்திருத்தம் வேண்டப்படுகிறது. அப்படி வேண்டப்படும் சீர்திருத்த மானது முயற்சியற்ற நிலையில் தானே நடக்கும் என்று சும்மாவிருப்பதில்லை. சிலர் முயன்று சீர்திருத்தத் துறை நோக்கி மக்களை விரைவு படுத்துவார்கள். இவர்கட்குச் சீர்திருத்தக்காரர்கள் என்றுபெயர். இன்றைய உலகில் சீர்திருத்த உணர்ச்சி மக்களுக்கு ஏற்பட்டிருக் கும் அளவு இதற்குமுன் ஒரு நாளும் இருந்ததில்லை. எங்கணும் சீர்திருத்த முயற்சியே தலை தூக்கியுள்ளது. உலக மக்களின் இன்ப வாழ்வுக்குச் சீர்திருத்தமே அடிப்படை என்பதை அனைவரும் கண்டு கொண்டது குறிப்பிடத்தக்கது. ஆயினும் சீர்திருத்தவாதிகட்கு ஏற்படும் கஷ்டங்களில் ஆயிரத்தில் ஒரு பங்குகூட, மற்ற துறைகளில் உழைப்பவர்க்கு ஏற்படுவதில்லை. இங்கு நுணுகி ஆராய வேண்டியது என்னவென்றால் பழய வழக்கத்திற்குக் கட்டுப்பட்ட மனிதன் அந்தப் பழக்க வழக்கத்திற்கு அப்புறப்பட்ட எவ்வகை இனிய முறைகளையும் ஒப்புக்கொள்ள மறுக்கிறான் என்பதே. பிரான், இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா, துருக்கி, ஆப்கானிதானம், இத்தாலி முதலிய எல்லாத் தேசங்களிலும் இந்நாள் ஏற்பட்டிருக்கும் சீர்திருத்த இயக்கம் எல்லாவற்றிலும் இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் சுயமரியாதை இயக்கம் ஒன்றே இன்றைய இந்தியாவின் நிலைமைக்குப் பொருத்தமானது என்பது இந்தியாவின் நிலையை உள்ளூர அறிந்த அகில அறிஞர் களின் அபிப்பிராயம். ஆயினும் மற்ற தேசங்களில் ஏற்பட்டிருக்கும் சீர்திருத்த இயக்கங்கட்கு அவ்வவ்விடங்களில் பொதுமக்களால் ஏற்படும் எதிர்ப்பைவிட இந்தியாவில் ஏற்பட்டுள்ள சீர்திருத்த இயக்கத்திற்கு இந்தியாவிலுள்ள எதிர்ப்புக்கள் மிக்க அதிகம். இந்தியர்களின் குருட்டுப் பிடிவாத இயல்பே இதற்குக் காரணமாகும். இதனால் தேச முற்போக்குத் தடைப்படுவதில் கொஞ்சமும் கவலை செலுத்துவதில்லை. இந்தமுரட்டுப் பிடிவாதத்தால் தேச முற்போக்கை நாடியுழைக்கும் தலைவர்கட்கு ஏற்படும் சிரமமும் கொஞ்சமன்று. அவர்கள் அதை வெளிக்காட்டிக் கொண்டால் மூட ஜனங்கள் தம்மை ஆதரிக்காமற் போய்விடுவார்கள் என்று சும்மா இருந்துவிடுவார்கள். பழய பழக்க வழக்கங்களைக் கொண்டு ஜீவிக்க இருக்கும் சுயநலக் காரருக்கோ இதனால் குஷால் ஏற்பட்டுவிடுகிறது. சீர்திருத்தக் கொள்கைகளைப் பற்றியும் சீர்திருத்தவாதிகளைப் பற்றியும் கரடிவிடத் துவக்கி விடுகிறார்கள். அந்தக் கரடிகளை ஆதரிக்கவோ கபடமற்ற மக்கள் தாராளமாய் முன்வந்து விடுகிறார்கள். சுயமரியாதை இயக்கம் நன்று என்று ஒருவன் சொன்னால் சொன்னவனின் தகப்பனிடம் போய் என்ன உங்கள் பிள்ளை பறையனாய்ப் போய்விட்டானா என்று சொல்லி விடுவது எதிரிகள் வேலைப்பாடு. நீ சீர்திருத்தம் சொல்லுவ தாவது - நான் கேட்பதாவது என்பது இன்னும் சிலருடைய கேள்வி. எல்லாம் சரிதான்! கடவுள் இல்லை என்கிறார்கள். அதற்காகத்தான் சுயமரியாதைக் கொள்கை வேண்டாம் என்கிறேன் என்பது மற்றொருவகை ஏற்பாடு. சுயமரியாதையானது பெண்களை யெல்லாம் விபசாரிகளாகச் சொல்லுகிறது என்பது இன்னொருவரின் பிரசாரம். உம்! சுயமரியாதை, சில பார்ப்பனர்களிடம் ஏற்பட்ட விரோதத்தால் சிலரால் ஏற்படுத்தப்பட்டது என்பது வேறு சிலரின் குதர்க்கம். சுயமரியாதைக்காரர்கள் ஆராய்ச்சியில்லாதவர்கள் என்பது மற்றும் சிலரின் நிந்தை. புராதீன காலத்தவர்க்குத் தெரியாமல் இவர்கட்குத் தானா தெரிந்துவிட்டது என்பது வேறுசிலரின் சாபம். சுயமரியாதைக் காரர் நாதிகர்கள் என்பது இன்னும் சிலரின் கரடி. ஏதோ அநர்த்தகாலம் சம்பவித்துவிட்டது. அதனால்தான் சுய மரியாதைக்காரர் தோன்றி யிருக்கிறார்கள் என்பது பின்னும் சிலரின் தப்பட்டி. நானும் ஒரு சுயமரியாதைக்காரன்தான். ஆனால் சுய மரியாதைக்கு நாடு இன்னும் பக்குவப்படவில்லை என்பது இன்னும் சிலரின் உடான். சுயமரியாதைக் கொள்கைகள் இன்னவன் சொல்லுவ தால் அதில் உண்மையிருக்க முடியாது என்பது இன்னும் சிலரின் கூச்சல். ஆகக்கூடி இன்னதை இன்ன மாதிரி சொன்னால் கெடுத்துத் தொலைக்கலாம் என்பதற்குத் திட்டம் போடுவது தவிர தேசத்தின் நிலைமையையோ முன்னேற்றத் தையோ ஒரு சிறிதும் எண்ணுவ தில்லை. ஆயினும் நேற்றுச் சுயமரியாதைக் கொள்கைகளை எதிர்த்தவர்கள் இன்று ஆதரிப்பவ ராகிறார்கள் என்பது பொய்யா? இது பொய்யானால் இன்று இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் சுயமரியாதைக்காரர்களாக மாறியதும் பொய்யாக இருக்க வேண்டும். அறிவு இயக்கத்தின் முன் மூடப் பழக்க வழக்கம் நிற்கும் என்று நினைப்பவன் மோசம் போவான். யோசிக் காமல் இன்று சுயமரியாதைக் கொள்கையைத் தூஷிப்பவன் மறுநாளே தன் குற்றத்தை உணர்ந்து விடுவான். ஒன்றைத் தூஷிக்குமுன் யோசிக்க வேண்டும். - K.S. புதுவை முரசு, 9. 3. 1931, ப. 16 - 17 35. பிரேதக்குழி ஜெபம் 24.02.31 மாலை 6.00 மணிக்குத் தேங்காய்த்திட்டை நோக்கி ஓர் பிரேதம் அடக்கம் செய்வதற்காகப் போகையில் புதுவைப் பிரமுகர் அநேகர் உடன்வந்தனர். மூன்று குருப்ரசாதிகள் கறுப்பாடையணிந்து வந்தனர். அவர்கள் பிரேதத்திற்கு முன்னால் லத்தீன் பாஷையில் பாடிக்கொண்டு வந்தார்கள். ஒதியஞ்சாலை சென்றதும், மூவரும் காணப்படவில்லை. இதுபற்றி விசாரித்ததில் ஒருவர் சொன்னதாவது: கிறீஸ்தவ குடும்பத்தில் ஒருவர் இறந்துவிட்டால் கோயில் குருக்களிடம் தெரிவிப்பார்கள். குருக்கள் வரவேண்டுமென்பதில்லை. பணங்கொடுத்தால் வருவார்கள். பணத்திற்குத் தக்கவாறு மணி யடிக்கப்படும் குருக்கள் வருவார்கள். 14 ரூபாய் கொடுத்தால் இரண்டு மணி அடித்து ஒரு குருவானவர் வருவர். 25 ரூபாய் கொடுத்தால் மூன்று மணியும், இரண்டு குருக்களும், 35 ரூபாய் கொடுத்தால் நான்கு மணி; மூன்று குருக்கள். 100 ரூபாய் கொடுத்தால் நான்கு மணி; பிரேதத்தைக் கோயிலுக்கும் கொண்டு போவார்கள். இன்னும் அதிகப் பணத்திற்குப் பெரிய குருவானவர் வருவார்; பிரேதச்சடங்கு செய்வார். முன்பெல்லாம் குருமார் பிரேதத்தின் குழிவரைக்கும் வருவதுண்டு. இப்போது ஒதியஞ் சாலை வரைக்குந்தான். ஆனால் ஒரு குருமாத்திரம் கடைசி வரைக்கும் இருந்து பிரேதத்தை மந்திரித்துக் குழியையும் மந்திரித்து அடக்கஞ் செய்து திரும்பவேண்டும். பிறகு பிரேதம். அடக்கஞ் செய்யவேண்டிய இடத்திற்குப் பிரேத மும் நாங்களும் சென்றோம். ஒரு குருமாத்திரம் அங்கு இருந்தார். பிரேதத்தைத் தனியிடத்தில் வைத்து லத்தீன் பாஷையில் மந்திரித்தார். இதற்குள் வேறு பிரேதம் ஒன்றும் வந்து விட்டது. பாபம்! குருவானவர் எந்தப் பிரேத்தைப் பார்ப்பது? முன்னைய பிரேதத்திற்குக் குழிமந்திரம் செய்யாமலே பின்னைய பிரேதத்தை நோக்கிப் போய்விட்டார். ஆனால் குழிக்குச் செய்யும் மந்திரத்தைப் பிரேதத்திற்கே செய்து விட்டார் போலும். இப்படி அவசரமாய்க் குருவானவர் வேறு பிரேதத்தை நாடிச் சென்றுவிட்டாரே பணம் வாங்கவில்லையா? ஏன் குழிமந்திரத்தை முடிக்காமல் போய்விட்டார்? என்று உபதேசியாரைக் கேட்டார்கள். அதற்கவர் நீங்கள் குருவானவரையல்லவா கேட்கவேண்டும் என்று சொன்னார். நன்றாய்ச் சொன்னார். குருவானவரைக் காரணம் கேட்க இன்னும் மக்களுக்கு அறிவு உண்டாகவில்லையே?. மக்கள் முன்னேற்றம் அடையவேண்டுமானால் நம் வீட்டில் நடக்கும் நன்மைக்கும், தீமைக்கும் கோயிலையும், குருக்களையும் கட்டியழும் மூடத்தனம் தொலையவேண்டும். இவ்விதக் கோயிற் செலவுகளால் குருக்களின் செலவுகளால் வரப்பட்ட லாபம் என்ன வென்றுதான் கேட்கிறேன். அந்தோ! குழிக்கு மந்திரிக்கும் மனிதரை விட, குழிதோண்டிய ஏழைச் சகோதரன் விஷயத்தில் அன்பிருக்க லாகா? - புதுவை முரசு, 9. 3. 1931, ப. 17 36. டாக்டர்களுமா சுயமரியாதையை எதிர்க்க வேண்டும்? கால் வீங்கி விட்டால் அந்தக் கால்போல் வெள்ளியால் செய்து, கடவுளுக்குச் செலுத்துகிறேன் என்பார்கள். கடவுளின் பெயரால் அந்த வெள்ளிக்காலை அபகரிக்கும் சிலர் சுயமரியாதையை எதிர்ப்பது சரி. கடவுள் மேல் பாரத்தைப் போட்டு நாளைக் கழித்ததால், கால் வீக்கம் அதிகரிக்க, குற்றுயிரும் குறைப்பிணமுமாய்த் தங்களிடம் வந்து உயிர்ப் பிச்சை கேட்பதை அறிந்துள்ள டாக்டர்களுமா சுய மரியாதையை எதிர்க்க வேண்டும்? சுயமரியாதை மூடநம்பிக்கை வேண்டாம் என்று தானே சொல்லுகிறது? காது செவிடாயிருந்தால் சமாதியைச் சுற்றிவந்து காணிக்கை செலுத்தினால் தீர்ந்துவிடும் என்பார்கள். சமாதிக் குருவின் பேரால் மக்களிடைக் காசைப் பறிக்கும் சிலர் சுயமரியாதையை எதிர்ப்பது சரி. காது மத்திமத்திற்கு உடனே செய்ய வேண்டிய சிகிச்சையை யறிந்துள்ள டாக்டர்களுமா சுயமரியாதையை எதிர்க்க வேண்டும்? சுயமரியாதை, செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் சேர்ந்திடலாமென எண்ணியிருப்பார் - பித்தமனிதர் அவர் சொல்லும் சாத்திரம் பேயுரையாம் என்று இங்கு ஊதேடா சங்கம் (பாரதி) என்றும், செத்துப் போன மனிதனால் உயிரோடிருக்கும் மனிதனுக்கு ஆவதொன்று மில்லை என்றுந்தானே சொல்லுகிறது? பெண்களுக்கு ஏகதேசம் ஏற்படும் மயக்கத்தைப் பேய் பிடித்ததாய் எண்ணி மந்திரவாதி என்பவனை அழைப்பதுண்டு. அவன் அப் பெண்மணியைப் படாதபாடுபடுத்திப் பாராங் கல்லையும் சுமக்க வைத்துச் சித்திரவதை செய்வதுண்டு. மந்திரத்தின் பேரால் வயிறு வளர்க்கும் சிலர் சுயமரியாதையை எதிர்ப்பது சரி. பெண்களின் மயக்கம் சிகிச்சைக்கு உட்பட்டதென்று அறிந்துள்ள டாக்டர்களுமா சுயமரியாதையை எதிர்க்க வேண்டும்? சுயமரியாதை மந்திரத்தாலே எங்கும் கிளியே மாங்கனி வீழ்வதுண்டோ? (பாரதி) என்றும், பகுத்தறிவை விருத்தி செய் (பாரதி) என்றுந்தானே சொல்லுகிறது? பெருவியாதி பூர்வ ஜென்மத்தில் செய்த பாவத்தால் வருவது என்றும் அது தீராது என்றும் சொல்வதுண்டு. முன் பிறப்பு, மறு பிறப்பு என்னும் இவைகளைக் கற்பித்து இவற்றின் மூலம் தானம் வாங்கிப் பிழைக்கும் சிலர் சுயமரியாதையை எதிர்ப்பது சரி. பெருவியாதிக்குப் பாதரின் முறையைக் கையாண்டு பயன் கண்டுவரும் டாக்டர்களுமா சுயமரியாதையை எதிர்க்க வேண்டும்? முன்ஜென்மம் என்பது முடிச்சுமாறிகள் பேச்சு என்றுதானே சுயமரியாதை சொல்லுகிறது? பல நாளாய் வியாதியனுபவிப்பவன் பிறகாவது டாக்டரை நம்பாமல் தலைவிதியென்று சொல்லிச் சாகுமட்டும் சிகிச்சை செய்து கொள்ளுவதில்லை. தலைவிதி என்பதைக் கட்டி விட்டு அதற்குச் சாந்திகள் செய்வதன் மூலம்வயிறு வளர்க்கும் சிலர் சுயமரியாதையை எதிர்ப்பது சரி. வியாதியைத் தீர்ப்பதில் நம்பிக்கையுள்ள டாக்டர்களுமா சுயமரியாதையை எதிர்க்க வேண்டும்? தனது நன்மைக்கும் தீமைக்கும் தானே காரணமின்றித் தலைவிதி யென்பது ஒன்றுமில்லை என்றுதானே சுயமரியாதை சொல்லுகிறது? பிள்ளை இல்லாதவள் தன் நாயகனோடு காசி யாத்திரை ராமேவர யாத்திரை முதலியவைகட்குக் கடன் வாங்கியாவது செல்வதுண்டு. புராணங்களைச் சொல்லி மக்கள் பணத்தைப் பிடுங்குவதோடு அவர்களின் சிந்தனா சக்தியையும் கெடுக்கும் சிலர் சுயமரியாதையை எதிர்ப்பது சரி. பிள்ளையில்லாமலிருப்பதற்குக் கருவிகள் பலஹீனப் பட்டிருப்பதும் கருதானம் அசுத்தமா இருப்பதுமே காரணம் என்று அறிந்து அதற்கான சிகிச்சையிலும் நம்பிக்கை கொண்டுள்ள டாக்டர்களுமா சுயமரியாதையை எதிர்க்க வேண்டும்? புராணங்கள் பகுத்தறிவுக்கு ஒவ்வாதவை என்றுதானே சுயமரியாதை சொல்லுகிறது? பெண்களைச் சிறுவயதில் மணம் செய்து கொடுக்கிறார்கள். அதனால் பெண்களின் அங்கங்கள் வளர்ச்சியடையுமுன் கர்ப்பந் தரித்து விடுகிறது. குழந்தை வெளியாவது முடியாமல் நேரும் கஷ்டம் கொஞ்சமல்ல. பால்யப் பெண்ணின் வயிற்றில் துடைப்பக்குச்சிக் குழந்தைகளே பிறக்க முடியும். மேலும் புஷ்பவாதியாகுமுன் புணர்ச்சி செய்தும் நாயகன் ஆபத்தை உண்டாக்குகிறான். பால்யத்தில் மணம் செய்வது மதக் கட்டளை என்று மதத்தின் பேரால் வயிறு வளர்க்கும் சிலர் சுயமரியாதையை எதிர்ப்பது சரி. பால்ய மணத்தால் ஏற்படும் தீமையை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் அறிந்துள்ள டாக்டர்களுமா சுயமரியாதையை எதிர்க்கவேண்டும்? பால்ய மணம் கூடாது என்றுதானே சுயமரியாதை சொல்லுகிறது? பெண்ணொருத்தி கணவனை இழந்தால் மறுமணம் செய்து கொள்வதை மதம் மறுக்கிறது என்கிறார்கள். 90 வயதுடைய கிழவனும் 6 பெண்டாட்டிகளை மணந்து மணந்து இழந்தும் சமயலுக்கென்று காரணம் சொல்லி 7வது பெண்டாட்டிக்கும் அச்சாரம் போடுகையில் ஒரு கணவனை இழந்த 12 வயதுடைய பெண்ணுக்கும் புருஷ இச்சை கூடாது என்று சொல்லும் மனச்சாட்சியில்லாதவர்கள் சுயமரியாதையை எதிர்ப்பது சரி. மனித இயற்கை உலக இன்பத்தை அநுபவிப்பதென்றும், அதற்குத் தடை ஏற்படுத்துவதே சுகாதாரக் கேடு என்றும், பெண்ணுக்குப் புருஷ இன்பம் இருந்து பின்பு இல்லாமற்போவதால் அபாயம் என்றும், இதனால் அநேக பெண்கள் துர்வழியில் நடந்து கருப்பத்தையழித்தும் சிசுவைக் கொலைசெய்தும் விடுவதோடு தாமும் மானத்தையெண்ணி மாள்வதுண்டு என்றும் மக்களுக்குத் தந்தையும் தாயுமாயிருந்து நேரில் அறிந்துள்ள டாக்டர்களுமா சுயமரியாதையை எதிர்க்கவேண்டும். விதவா விவாகம் தேவையென்றுதானே சுயமரியாதை சொல்லுகிறது? எங்கள் மதமே உத்தரவு கொடுத்திருக்கிறதென்றும் பாவாடை ராயனும், காத்தவராயனுமாகிய கடவுள்களே சாராயத்தையும், கள்ளையும் குடிக்கின்றன என்றும் உலக பந்தத்திலிருந்து (உலக பந்தங்களிலிருந்து) நீங்கி மனம் கலக்க மற்றிருக்கக் கஞ்சா, அபின் முக்கியமென்றும் சொல்லி அவைகளால் சாகிறதுண்டு. மக்களின் பகுத்தறிவைத் தொலைத்துத் தாங்கள் சொல்லுவதையே கண்ணை மூடிக் கொண்டு நம்பவைக்கும் சுயநலமுள்ள சிலர் சுயமரியாதையை எதிர்ப்பது சரி; லாகிரி வதுக்கள் மனிதரை வதைப்பவை என்பதை ஆராய்ந்தறிந்துள்ள டாக்டர்களுமா சுயமரியாதையை எதிர்க்க வேண்டும்? மதுவை விலக்கு என்றுதானே சுயமரியாதை சொல்லுகிறது? வைசூரி என்னும் கொடிய நோயை அம்மை (மாரியம்மை) என்னும் ஒரு கடவுள் என்றும் விஷபேதி என்னும் மகா கொடிய நோயைக் காளியாயி கோபத்தால் கொடுக்கும் ஒரு கரண்டி விளக்கெண்ணெய் என்றும் சொல்லி இதற்காகக் கும்பம் வைத்து இரவெல்லாம் அண்டை அயலி லிருப்பவர்களையும் தூங்கவிடாமல் தாமும் துங்காமல் கூட்டம் கூடிச் சத்தமிட்டு ஜீரணமாகாத நேரமாகிய 12 மணிக்குக் கடலைச் சுண்டலை யும் வினியோகம் பண்ணி 100க்கு 5 வீதம் தாக்கிய காலராவை 100க்கு 100 ஆக உயர்த்தியும் அம்மை வார்த்த வீட்டார் அடுத்த வீட்டாருக்கும் அம்மையைத் தொத்தவைக்க மாவு கொடுத்து விருத்தி செய்தும் வருவதுண்டு. காலராவுக்கும் வைசூரிக்கும் சர்க்கார் மருந்து மருந் தென்று வீடு வீடாய் போய்க் கொடுக்கும் போதும் அம்மை வைப்பவர் அம்மை வைத்துக் கொள்ளுங்கள் என்ற போதும் அதிலிருக்கும் நன்மையறியாமல் கொலைகாரனைக் காணுவது போல் அலறி நடுங்குவதுண்டு. எங்கள் குடும்பத்தில் அம்மை வைத்துக்கொள்ளும் வழக்கம் கிடையாது என்பதுண்டு. பழமை பழமை என்று பழமையின் பேரால் புதிய காசைப் பறிக்கும் சிலர் சுயமரியாதையை எதிர்ப்பது சரி. காலராவும் அம்மை யும் தொத்துநோய் என்றும் கொடிய நோய் என்றும், அசுத்தத்தை நீக்குவதன் மூலம் அவைகளை வராமல் தடுக்கலாம் என்றும் அறிந்துள்ள டாக்டர்களுமா சுயமரியாதையை எதிர்க்க வேண்டும்? பழமையின் பேரால் அநுஷ்டித்துவரும் ஆபாசங்கள் ஒழிய வேண்டும் என்றுதானே சுயமரியாதை சொல்லுகிறது? கிறீதவனுடைய அறிவு ஆற்றல்களை இந்து ஒப்புக் கொள்ளான். இந்துவைக் கிறீதவன் அஞ்ஞானி என்கிறான். மகம் மதியன் வேறு எவனையும் ஒப்புக்கொள்ளுவதில்லை. அவனையும் எவனும் ஒப்புக்கொள்வதில்லை. ஜாதிகள் ஒரு பக்கம், தீண்டாதவன், தொடாதவன், பொதுமக்களின் மலத்தைத் தின்னும் பன்றிபோல் ஆபாச வேலை செய்தாலும் உயர்ந்த ஜாதி மற்றொரு பக்கம். இப்படியெல்லாம் மக்களை ஒன்றுக்கும் ஆகாதடித்து நெல்லிக்காய் மூட்டையாய்ச் செய்து மதமென்றால் என் உயிரையும் விடுவேன் என்று வெறிபிடிக்க வைத்து இதற்காக வம்பும் வழக்கும் தொடுக்கவிட்டு மதத்தின் போர்க்களத்திற்குக் கைகாட்டி மரங்கள்போல் செச்சையையும் சிலுவையையும் சாம்பலையும் மண்ணையும் அணிய வைத்ததோடு சிலரை மொட்டை யடித்து அங்கங்களையும் அறுக்க விட்டுக் கடவுள்கள் வேடிக்கை பார்க்கின்றன என்று நம்பு கிறார்கள். கழுதை களின் வாலில் சீனா படா கட்டுக்களைக் கட்டிக் கொளுத்திவிட்டு அந்தக் கழுதைகளைத் தன் கண்ணாடித் தொழிற்சாலையின் உள்ளே யும் விட்டதுபோல் அமைதியோடு வாழவேண்டிய உலகத்தில் மதம், ஜாதி முதலியவை களைக் கடவுள் விட்டு வெருட்டுவாரா? அப்படி வெருட்டுவது கடவுள் வேலையாயிருக்குமா என்றால் அடடே நாதிகனே என்று சொல்லி விடும் படுபாமர மக்களை மரக்கட்டைக ளாக்கி அதன் மூலம் அவர்கள் உழைத்துச் சம்பாதித்த பணத்தில் வயிறு வளர்க்க நினைக்கும் சிலர் சுயமரியாதையை எதிர்ப்பது சரி. மகம்மதியனுக்கும் கிறீதவனுக்கும் இந்துவுக்கும் தாழ்த்தப்பட்டவ னுக்கும் உயர்சாதிக்காரனுக்கும் ரத்தத்திலும் மற்ற உள் - வெளி உறுப்புகளிலும் மூளையிலும் ஒருவித வித்தியாசமும் இல்லையென்று மனித சரீரத்தை உள்ளும் புறமும் ஆராய்ந்த டாக்டர்களுமா சுயமரியாதையை எதிர்க்க வேண்டும்? மதம் வேண்டாம், ஜாதி வேண்டாம். இவைகளின் அடை யாளங்கள் வேண்டாம் என்று தானே சுயமரியாதை சொல்லுகிறது? பெற்றோர் என்பவர் தமது பிள்ளைகட்கு தாய் தந்தையர்கள்; ஆடவரும் பெண்டிருமாகிய டாக்டர்களோ அச்சமூகத்திற்கே தாய் தந்தையாவார். அங்ஙனமிருக்க அநுதினமும் சுயமரியாதைக் கொள்கைகளை நடவடிக்கைகளை அறிந்து அநுசரித்து வரும் டாக்டர்களுமா எதிர்க்க வேண்டும்? நவீன முறையில் வைத்தியம் பயின்றவர்கள் அந்தப் பயிற்சிப் புத்தகத்தில் சுயமரியாதைக்கு விரோதமான வரிகள் ஒன்றையும் காட்ட முடியாது. சுயமரியாதைக்கு விரோதமாக ஒரு டாக்டர் தமது சுகாதார போதனையை மக்களுக்குச் சொல்லுவதென்றால் அது ஆபத்திரி களையெல்லாம் இடித்துப் போடுங்கள் என்ற வார்த்தையாகத்தான் இருக்க முடியும். இதைக் கவனித்தால் சுயமரியாதை வாத்தியார்க ளாகிய டாக்டர்கள் சுயமரியாதையை எதிர்ப்பது மேலுக்கே. - புதுவை முரசு, 23. 3. 1931, ப. 3 - 5 37. ஓர் குருப்ரசாதியின் அதிகப்ரசங்கம் (நமது நிரூபர்) 15. 3. 31 ஞாயிறு காலை, புதுவை மாதாகோயிலில் ஒரு சுதேச குருவானவர் பிரசங்கம் செய்கையில், புதுவையில் உலாவும் புதுவைமுரசு என்பது மக்களைக் கெடுக்கக் கிளம்பியிருப்பதாகவும், அது பத்திரிகையல்ல; சாத்தானே பத்திரிகை ரூபத்தோடு வந்திருப்பதாகவும் சாபமிட்டு அதை ஒருவரும் படிக்கக் கூடாது என்று ஒரு மறியலையும் போட்டு அரிய விஷயங் களைத் தாங்கியும் நம்மைப் பற்றியெல்லாம் குறை கூறுவதற்கு மறுப்பு எழுதியும் வெளிவருகிற கோயில் பத்திரிகை யாகிய சர்வ வியாபியை வாங்கி வாசியுங்கள் என்று ஓர் விளம்பரத்தையும் வெளியிட்டு ஏதோ தமக்குத் தெரிந்த அளவு பிரசங்கத்தைக் கத்திமுடித்தார். மனிதத் தன்மை வாழ்க! சாத்தான் புதுவை முரசாக வந்திருக்கிறது ஓ! இருக்கலாம். இப்படிச் சொல்லுகிறவர் சாக்ஷாத் கடவுளாக இருக்க லாகாதோ? ஓ! இருக்கலாம். இதனோடு ஆதித் தாயை ஏமாற்றியதாய்ச் சொல்லும் சர்ப்பமாகிய சாத்தான் பூலோகத்தில் நீண்ட அங்கிபோட்டுக் கொண்டு பரலோகம் அனுப்பவும், நரகலோகம் அனுப்பவும், சபிக்கவும் எங்களிடம் அதிகாரம் இருக்கிறதென்று சொல்லும் சாத்தான்கள் யார்? பிரசங்கியாரைக் கேட்கிறேன். தானியேல் 7ஆம் அதிகாரத்தில் சொல்லியிருக்கும் நாலாவது மிருகத்தின் சிரசில் 10 கொம்புகளின் இடையிலே வேறொரு சின்ன கொம்பு எழும்பிற்று. அந்தக் கொம்பு யார் என்றும் அதற்கு என்னென்ன அதிகாரங்கள் உண்டு என்றும் அதில் என்ன விசேஷம் அடங்கியிருக்கிறதென்றும் பிரசங்கியார் அறிக. அப்போதாவது நாங்கள் கிறீதுவினுடைய பின்னடியார்கள் என்றும் எங்களுக்குத் தான் சகல அதிகாரமும் கொடுத்துப் போனார் என்றும் சொல்லிக் கொள்ள இவர் முன்வருக. புதுவை முரசுக்குச் சாபமிட்ட இந்தப் பிரசங்கியாருக்குள்ள அறிவே அறிவு! இதைவிட பத்திரிகை நிர்வாகதர்களையும் அதை ஆதரிப்பவர் களையும் இவர் சபித்திருந்தால் ஒரே விநாடியில் பூலோகத்திலிருந்து நரகத்திற்குப் பார்ஸல் மூலம் போயிருப்பார்களே! இப்படிச் செய்து இவர் வல்லமையைக் காட்டாத காரணம் என்ன? பயனின்றிக் கத்துவதில் லாபம் என்ன என்றுதான் கேட்கிறேன். ஊழல் வெளிப்படத் துவக்கிவிட்டது. இதை மறிக்கப் பிரசங்கியார் பெரிய பட்டா எடுத்து விளையாட வந்துவிட்டார் போலும்! நோக்கம் பலியாது பிரசங்கியாரே! - புதுவை முரசு, 23. 3. 1931, ப. 17 38. திரும்பிப்பார்! முன்னேறு! திருந்திய வயற்புறத்தில் திருந்தாத காட்டு நிலத்தைக் காணுகிறோம். அந்தக் காட்டு நிலம்போல் ஒரு காலத்தில் இத்தனை பெரிய உலகமும் இருந்தது. அப்போது ஒரு குடும்பம் மற்றொரு குடும்பத்தைச் சம்பந்திக்கவும் வசதியில்லை. இதனால் ஒருவன் தனக்குள்ள அறிவானது வளர்ச்சியடையாத நிலையில் இருந்தான். அதன்பின் ஒரு வீதியினர் மற்றொரு வீதியினரைக் கலந்து கொள்ளும் படி, பாதைகள் ஏற்பட்டன. பாதைகள் சீர்திருந்தச் சீர்திருந்தக் கிராம மக்கள் மற்றொரு கிராமத்து மக்களிடம் சம்பந்தம் அடைந்தனர். இந்த நிலையில் மக்களோடு மக்கள் சம்பந்தம் பெருகப் பெருக மக்களறிவு பெருகிற்று. ஒரு கிராமம் மற்றொரு கிராமத்தை மாத்திரம் அறிய முடிந்த அந்நாளில் பொதுமக்கள் அறிவு எவ்வாறு இருந்தது? ஒரு மாகாண பெருமக்கள் மற்றொரு மாகாணப் பெரு மக்களிடம் சம்பந்தமடைந்த நடுக்காலத்தில் பொதுமக்கள் அறிவு எவ்வாறு இருந்தது? தேசப் பெருமக்கள் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் என்ற நிலையில் வந்த இந்நாளில் தேசப் பெருமக்களின் அறிவு விசாலமுடையதேயாகும். பண்டைக்காலத்தில் ஓரிடத்தில் வாழ்ந்த ஒரு நூறு மக்கள் கல்லைக் கல்லோடு மோதிக் கல்லுடைத்துக் கல்லின் கூரான பாகத்தால் கிழங்கு தோண்டியுண்டும், மற்றோரிடத்து மற்றொரு நூற்றுவர் கரும்பைக் கையாலுடைத்துப் பல்லால் சாறு பிழிந்துண்டும் வந்தனர். இதில் முதல் நூற்றுவர் மற்ற நூற்றுவரின் சம்பந்தம் பெறாத வரை செயலில் முன்னேற்றம் அடைய வழி இல்லை. அறிவுபெற வழி யில்லை. இருவகையினரும் சம்பந்தம் பெற்ற பின்னரே கல்லுருளை யால் கரும்பு பிழிந்து சாறுண்ணும் நிலை ஏற்பட்டிருக்கும். ஒருவன் மற்றொருவனிடம் சம்பந்தம் பெறுவ தென்றால், அறிவு, குணம், செயல், வாழ்க்கை முறைகளில் ஒன்று படுவதேயாகும். ஒரு சார்பு மக்களிடை மூடத்தனமே இருக்கும் என்றாவது, மற்றொருசார் மக்களிடை அறிவுடைமையே இருக்கும் என்றாவது எப்போதும் எங்கும் யாராலும் சொல்ல முடியாது. இப்படி எண்ணிப் பண்டை நாள் முதல் இந்நாள் வரை தனித்தனி வாழ எண்ணியிருப்பாரா? இருப்பினும் அவ் வெண்ணம் வீழ்ச்சி பெற்றதாலேயே இன்றைக்குள்ள இத்தனை அறிவாவது தேச மக்களுக்கு ஏற்பட்டது. கிராம சம்பந்தமான விதைத்தல், அறுத்தல், மாடு மேய்த்தல் முதலிய கிராமீயமும், நகரச் சம்பந்தமான நாடு காத்தல், கல்வி வளர்த்தல், பொதுமை ஓம்பல் முதலிய நாகரீகமும் சம்பந்தப்பட்டதான சம்பதியே (சம்பத்து) இந்நாள் நாம் அடையும் சம்பதி என்பதும் பொய்யல்ல. இந்நாட்டில் நாம் நடைந்துள்ள சம்பத்து அதிகமில்லை என்று வருந்துகிறவர்கள் இந்நாட்டுப் பெருமக்கள் அனைவரும் தங்கள் குணம், செயல், அறிவு, வாழ்க்கை முறைகளில் தக்கபடி சம்பந்தம் கொள்ளவில்லையென்று வருந்தவேண்டும். நகரமும் நகர சம்பந்தமான நாகரீகமும்; கிராமமும் கிராம சம்பந்தமான கிராமியமும் சம்பந்தப்படுவதுதான் சம்பத்து என்பதன்று. குறிஞ்சி, நெய்தல், மருதம், முல்லை, பாலை முதலிய ஐவகை நிலத்து மக்களும் குளிர்நில மக்கள் சுடுநில மக்கள், என்ற இருநில மக்களும் உயர்நிலை மக்கள், தாழ்நிலை மக்கள், நடுநிலை மக்கள் என்ற பலவகை மக்களும் மதமக்கள், சாதிமக்கள், குல மக்கள், குரு மக்கள், சீடமக்கள், ஆளுமக்கள், அடிமை மக்கள் ஆகிய அனைத்து மக்களும் சம்பந்தம், சம்பந்தம் அடைவதே சம்பந்தம். தேசமக்கள் சம்பந்தம் தேச சம்பத்து, உலக மக்கள், சம்பந்தம் அடையும்போது உலக சம்பத்து உண்டாகும். உலகத்தின் லக்ஷியம் உலக சம்பத்தையடைவதே. தேச சம்பத்தானது உலக சம்பத்தை லக்ஷியமாக உடையது. இதனால்தான் நான், ஒரு மனிதன் இந்த நிலையிலிருந்து கொண்டு அறிவு, ஆற்றல், வாழ்க்கை முறைகளில் முன்னேறு வதற்கான விதத்தை அறிய வேண்டுமானால் அவனை இந்த நிலைக்கு அனுப்பிய பழைய நிலையைத் திரும்பிப் பார்த்தாலே போதும் என்று சொல்லுகிறேன். திரும்பிப் பார்த்தால் என்ன தோன்றும்? அதோ முதற் காலத்தில் ஒருவனுக்கும் மற்றொருவனுக்கும் சம்பந்தம்! ஓரிடத்து மக்களுக்கும் மற்றோரிடத்து மக்களுக்கும் சம்பந்தம்! ஆரம்ப முதல் நீண்ட காலம் பெருமக்கள் சம்பந்தம் அடைந்து அறிவு, ஆற்றல், வாழ்க்கை முறைகளில் உயர்வு பெற்றதற்குரிய அடையாளங்கள் தெரிகின்றன. அதோ பார் இடைக் காலத்தின் காட்சி! அறிவு குணம், செயல், வாழ்க்கை முறைகளில் மக்கள் அனைவரும் பேதமின்றித் தமது தோளோடு தோள் கோத்து ஆட நினைப்பதற்கிடையில் மதத்தடை சாதித் தடைகள் குறுக்கிட்டு மறியல் செய்வது தெரிகிறது. மக்கள் தமது லக்ஷியமாகிய சம்பத்து இவைகளையடைய முடியாமல் தவிப்பது தெரியவில்லையா? அதோ மற்றொரு சந்தர்ப்பம்! அதோ அத் தடைகள் முறிபடுகின்றன. மக்கள் பரபரம் சம்பந்தப்படுகின்றனர். ஆயினும் மூடப் பழக்க வழக்கங்கள் தடிப்புப் பெற்று வருகின்றன. பார்! எனினும் இன்றைய நிலையை நீ எத்தனை தடைகளை உடைத்துக் கொண்டு வந்தடைந்தாய்! இனி முன்னேற எந்த முறையை அனுசரிக்க உத்தேசம்? தடைகளை இடறு! கடவுள் பெயராலும் மதத்தின் பெயராலும் சாதியின் பெயராலும் முட்டாள் தனத்தாலும் பேதப்படாதே! உலக மக்களிடம் சம்பந்தம் செய். சம்பந்தத்தையடை! வாழ்ந்து போ. - புதுவை முரசு, 30. 3. 1931, ப. 3 - 4 39. துக்கடா - பக்கடா டில்லியில், காந்தி - இர்வின் சம்பாஷணை நடந்து கொண்டிருந்த காலத்தில் ஒரு பொதுக் கூட்டத்தில் கடவுளைப் பற்றி நமது காந்தி அவர்கள் ஓர் புதிய மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறார். அதாவது சூரியன் இருப்பது எப்படி உண்மையோ, கடவுள் இருப்பது (?) காந்தியும் - கடவுளும் எப்படி உண்மையோ அதைப்போல் டாஷ் டாஷ் டாஷ் என்று கூறியிருப்பதாகப் பத்திரிகைகளில் நான் படித்தேன். கடவுள் இருப்பது எப்படி உண்மையோ அதைப்போல என்று அவர் கூறிவிட்டுப் பிறகு அவர் என்னென்னவோ இயம்பியிருந்தார். அதன் பிறகு அவர் என்ன சொல்லியிருந்தாலும் இருக்கட்டும். அதைப்பற்றி நான் இங்கு விதரிக்கவோ குறிப்பிடவோ விரும்பவில்லை. கடவுளுக்கும் ஆரியனுக்கும் ஒற்றுமை காட்டி அவர் பேசியிருப்பதை மட்டில் நான் இங்கு எடுத்துக்கொள்கிறேன். சூரியன் இருப்பது எப்படி உண்மையோ, அதைப்போல கடவுளும் இருக்கிறார் என அவர் குறிப் பிட்டிருப்பதை எண்ண எனக்குச் சிரிப்பும் காந்திஜியின் அறிவுக்கு அநுதாபம் ஏற்படுகின்றன. சூரியன் இருப்பதை எவரும் மறுப்பதற் கில்லை. ஏனென்றால் அது காணக் கிடக்கும் பொருள். ஆனால் கடவுள் இருக்கிறார் என்பதிலும் அப்படியா? கண்ணுக்குப் புலனாகக் காணோம்; மனதுக்கும் எட்டக் காணோம். இப்படியல்லவா ஓர் கடவுள் இருக்கிறது? இது சாமானியருக்குக் கூடவா விளங்கும்? இப்படி யிருக்கும்போது சூரியனோடு கடவுளைப் பிணைத்துக் கூற நமது மகாத்மாவுக்கு எப்படித்தான் மனந்துணிந்ததோ தெரியவில்லை. இதற்கு முன்னர் பல தடவைகளில் காந்திஜி நான் இன்னும் கடவுளைக் காணவில்லை. ஆனால் காண்பதற்கு முயன்று வருகிறேன் என்று கூறி யிருக்கிறார். ஆனால் டில்லியில் காந்திஜி சூரியனையும் கடவுளையும் ஒற்றுமைப்படுத்திப் பேசியிருப்பது ஒருக்கால் முதுமையின் கோளாறாக இருக்கலாமா? என்று நினைக்கிறேன். கடவுள் நம்பிக்கையுடையவர்கள் எல்லாரும் பொதுவாகக் கடவுளுக்குப் பல திறத்தான பிரார்த்தனைகள் செய்து கொள்கிறார்கள். முக்கியமாக இறவாமல் நெடுங்காலத்திற்கு வாழவும், பிணியின்றி இருக்கவும் அவாக்கொண்டு அதற்குப் பெரிய பெரிய வேண்டுதல் களையும் பிறவற்றையும் செய்து கொள்கிறார்கள். மிகவும் முக்கியமாக வியாதி வாய்ப்பட்டிருக்கும்போது வியாதியினின்று விடுபட வேண்டு மெனக் கோரிப் பலத்த பிரார்த்தனைகளைச் செய்கிறார்கள். ஆண்டவரே! நாயகனே! அப்பனே! என் அப்பா பிழைக்கும்படி நீ செய்யவேண்டும். அவர் இறவாமலிருக்க வியாதியை நீக்கிவிட வேண்டும். பிரார்த்தனை அப்படி நீ செய்துவிடுவாயானால் நான் இரட்டைக் கடா வெட்டிப் பொங்கலிட்டு மாவிளக்கேற்றி, அது படைத்து இது செய்து உன் பசியை நிவர்த்திப்பேன். வெள்ளிதோறும் உன் சந்நிதிக்கு வருவேன் என்றும் இன்னும் பலவாறாகவும் ஒருவர், தம் தந்தை பிணிவாய்ப்பட்டிருக்கும்போது பிரார்த்தித்துக் கொள்ளுதல் நம் நாட்டில் சர்வ சாதாரணமாக எல்லோரும் கண்ட விஷயம். சிலர் கடவுளுக்கு அறிக்கைகளும் விண்ணப்பங்களும் வேண்டுகோள் களும் விடுவார்கள். இப்படிப் பிரார்த்தனை செய்வது சரியா? இப்படிப் பிரார்த்தித்துக் கொண்ட பிரார்த்தனைகள் கடவுளால் நிறைவேற்றி வைக்கப்பட்டிருக் கின்றனவா? என்பதுபற்றி இரண்டொன்று இயம்ப இச்சிக்கின்றேன். முதலாவதாக ஓர் முக்கிய விஷயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். அதாவது ஜீவப் பிராணிகள் செய்த கர்மத்தின் படியே பலனையடைந்து வருகின்றன - வருகின்றனர் என்று சாதிரங் கூறுவதாக நான் எப்பொழுதோ படித்த ஞாபகம். அது உண்மையானால் (ஆதிகர்கள் தடையில்லாமல் அதை ஒப்புக்கொள்ளவேவேண்டும்) கடவுளிடம் பிராத்திக்க முயல்வது தப்பென்றே ஏற்படுகிறது. ஒவ்வொருவருடைய பிறப்பிலிருந்து இறப்புவரை இன்னவிதமாக இருப்பார் எனக் கடவுளே தலையில் எழுதிவிடுகிறார். அப்படி இருக்கும்போது (நான் நம்பவில்லை. ஆதிகர்கள் நம்பித்தானாகவேண்டும்) கடவுளிடம் பிரார்த்திக்கப் புகுவது கர்மத்தை நம்பாததையும் கடவுள் கருத்தை உணர்ந்து நடவாததையுமன்றோ மெய்ப்பிக்கின்றன. எனவே என் போன்றவர்களை நாதிகர் என்று கூறும் இந்த அறிவாளிகளே பிரத்தியக்ஷமான நாதிகர்களாக இருக்கிறார்கள் என்பதை நண்பர்கள் கூர்ந்து கவனிக்கவேண்டும். (என் போன்றவர்களை நாதிகர் என்று அவர்கள் கூறுவதைப் பற்றி எனக்கு வருத்தம் கிருத்தங் கிடையாது. ஆனால் அளவிறந்த ஆநந்தமே அடைகிறேன். ஆனால் அவர்கள் சூத்திரர்களாக நடந்துகொண்டு என் போன்றவர் களை நாதிகர்கள் என்று கூறலே சரியாகும் என்பது என் கருத்து). அது நிற்க. இறவாமலிருக்கக் கோரி அவர்கள் பிரார்த்திக்கிறார்களே அவை பலித்திருக்கிறனவா என்பதைப் பற்றி இனிக் கவனிப்போம். லண்டன் சர்வ கக்ஷி மகாநாட்டுக்குச் சென்றிருந்த மௌலானா முகமதலி பிணிவாய்ப்பட்டிருந்தபோது இந்தியாவில் உள்ளவர்களில் அநேகர் மௌலானா முகமதலி பிணியினின்று நீங்கும்படி திருக்கருணை பாலிக்கவேண்டும் எனக் கோரி, செய்துகொண்ட பிரார்த்தனைகளும் மந்திரங்களும் படைப்புகளும் அநேகம். அவ்வண்ணமாக எவ்வளவோ தயவாகக் கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தும் அந்தக் கருணாநிதியாகிய கடவுள் முகமதலியைப் பிணியின்று நீங்கும்படியோ பிழைத்துக் கொள்ளும்படியோ செய்யாமல் தனது! ïU¥ãl¤â‰nf miH¤J¡ bfh©lh®! அதன் பிறகு பண்டித மோதிலால் நேரு வியாதியாயிருந்த போதும் அதே மாதிரி! ஏன், அதைவிட மேலாகவே பலராலும் பிரார்த்தித்துக் கொள்ளப்பட்டது. அதுவாவது கடவுளால் கவனிக்கப்பட்டதா? இல்லை என்பது உங்கள் எல்லோருக்கும் தெரிந்ததே. இவை பத்திரிகை உலகில் வெளி வந்தவை. ஆனால் பத்திரிகை உலகிற்குத் தெரியாமல் நடந்திருக்கும் - நடந்துவரும் பிரார்த்தனைகள் கணக்கற்றவை. அவைகளும் விசாரித்துப் பார்ப்பின் கடவுளால் நிராகரிக்கப்பட்டிருப்பதாகவே தெரியலாம். இரண்டொருவர் பிழைத்திருந்தால், அது பிரார்த்தனையின் பயனாக இராது. ஆனால் அதன் காரணம் அநேகமாக டாக்டராகவே இருப்பார். ஆகக்கூடி நான் விரும்புவதெல்லாம் கடவுளிடம் பிரார்த்திப்பதை விட வைத்தியரிடத்தில் பிரார்த்தித்துக் கொண்டால் பெரிதும் நன்மையை அடையலாம் என்பதுதான். கடவுளை நம்பு கிறவர்கள் கடவுளைப் பிரார்த்திப்பது பெரிய முட்டாள்தனமாகும். ஏனென்றால் கடவுளுடைய அநுமதிப்படியும் விருப்பத்தின் படியுமே ஒருவருக்குப் பிணி உண்டாகிறது என்று ஆதிகச் சட்டம் அறைவதால்தான். ஆனால், கடவுளை நம்புவதை ஒழித்தவர்கள் வைத்தியத்தின் மூலம் பிணியை நீக்க விரும்பின் அது சரியே! - புதுவை முரசு, 30. 3. 1931, ப. 8 - 9 40. சுயமரியாதைக்காரர்களே தொலைந்து போய்விடுங்கள்! இந்துக்கள் சொல்லும் கடவுளும், கிறீதவர்கள் சொல்லும் கடவுளும், மகம்மதியர்கள் சொல்லும் கடவுளும் அதோ பாருங்கள் வானத்தில் குதி போடுகிறார்கள்! இதோ, உலகத்தில் பாருங்கள். அம்மூன்று கட்சிக்காரர்களும் சண்டை போடுகிறார்கள். ஆட்டி வைத்தால் ஆரொருவர் ஆடாதாரே என்பது போல் கடவுள்களின் செய்கைபோல உலக மக்களின் செய்கைகள் இருப்பதில் ஆச்சரியம் என்ன? மதம் வேண்டாமென்று சொல்ல முடியுமா. அதோ பாருங்கள்! வானத்தில் மூன்று கடவுள்களின் யுத்த கூடாரங்கள்! இதோ பாருங்கள்! பூமியில் மூன்று கட்சிக்காரர்களின் கோயில்கள்! கோயில்கள் வேண்டா மென்பது பொருந்துமா? அதோ பாருங்கள், வானத்தில் மூன்று கடவுள்களின் சேனைத் தலைவர்கள்! பூமியில் குருக்கள், பாதிரிகள், முல்லாக்கள்! இவர்களைக் குற்றம் சொல்லுவது எப்படி? அதோ பாருங்கள் வானத்தில் மூன்று கடவுள்களின் சேனாதிபதிகளின் ஆயுதங்கள்! இதோ பாருங்கள் பூமியில் மூன்று கட்சிகளின் வேத புத்தகங்கள், வைதிக சாதிரங்கள் வேத ப்ரமாணங்களை அசட்டை செய்யலாமா? அதோ பாருங்கள் வானத்தில் மூன்று கடவுள்களின் சேனைகளும் மாறி மாறித் தங்கள் எதிரிகளின் ஊர்களை நாசமாக்குகின்றன! இதோ பாருங்கள் பூமியில் மூன்று கட்சிகளும் எதிரிகளிடம் போய்ப் பிரசாரம் செய்கிறார்கள்! மதப் பிரசாரத்தை எப்படி எதிர்க்கலாம்? அதோ பாருங்கள் வானத்தில் மூவர் களின் யுத்தத்தால் ஏழைக உண்டாகிச் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் தவிக்கிறார்கள்! இதோ பாருங்கள்! பூமியில் ஏழைகள் அதிகப்பட்டு, தோட்டக் கூலிகளாகக் கப்பலேறக் கங்காணிகளைத் தேடுகிறார்கள்! ஏழைகள் அதிகப்படுகிறார்கள் என்று வருந்துவது பொருந்து மா? அதோ பாருங்கள் வானத்தில் ஏழைகள் எல்லாரும் தங்கள் தங்கள் முதலாளிகளாகிய கடவுள்களைச் சண்டை போடாதீர்கள் என்று வற்புறுத்துகிறார்கள்! இதோ பாருங்கள் பூமியில், மதச் சண்டையை நிறுத்துங்கள் என்கிறார்கள்... சுயமரியாதைக்காரர்கள் சொல்லுகிறார்கள்: அதோ பாருங்கள் வானத்தில் கடவுள்களும் ஏழை கட்டிக் கிரங்கிச் சண்டையை நிறுத்த மறுக்கிறார்கள்! இதோ பாருங்கள் பூமியில் மதத் தலைவர்கள் தமது போக்கிரித்தனத்தையும் நிறுத்த மறுக்கிறார்கள்! அதோ பாருங்கள் வானத்தில் சண்டையிடும் கடவுள்களை ஏழைகள் கண்டனம் செய்யக் கிளம்புகிறார்கள்! இதோ பாருங்கள் மதக்காரர்களாகிய குருக்கள் பாதிரிகள் முல்லாக்கள் ஆகியோரைக் கண்டிக்கக் கிளம்பிவிட்டார்கள். ஆதிகப் பெருச்சாளிகளே! இனி உங்கள் ஆதிகப் போர்வை கிழிந்து உள்ளே புகுந்துள்ள உங்கள் உண்மையான யோக்கியதை வெட்டவெளிச்சம். ஆதிகர் சொல்கிறார்கள் - K.S. புதுவை முரசு, 6. 4. 1931, ப. 9 41. தக்ளியும் ராட்டினமும் சில மாதங்களாக நமது நாட்டில் நடந்து வரும் தேசீயத் திரு விளையாடல்களில் முக்கியமானவைகள் தக்ளியும் ராட்டினமுமாகும். சில வருடங்களாக ராட்டினம் சுற்றவேண்டிய அவசியத்தைப் பற்றி ஊர் ஊராய்ப் பறையடிக்கப்பட்டு வந்தது. பிறகு காங்கிரசில் பார்ப்பன வாசனை அதிகமாய் ஏற்பட ஆரம்பித்ததும் ராட்டினத்தைவிட மிகவும் வேகமான ஒரு முறையை, திரு. காந்தியும் அவரது சிஷ்ய கோடிகளும் கண்டுபிடித்தார்கள். அதுதான் தக்ளியில் நூல் நூற்பதாகும். தமது தேசத்தலைவர்கள் என்று சொல்லப்படுபவர் களுக்கு, புத்தியும் அநுபவமும் அதிகரித்துக்கொண்டு வருகிறது என்பதற்கு. தக்ளி ஒரு சிறந்த உதாரணமாகும். நமது நாட்டில் கடவுள் என்ற பெயரைச் சொல்லிவிட்டுப் பொது மக்களை ஒருவன் என்ன செய்யச் சொன்னாலும் அவர்கள் செய்வதற்குச் சிறிதுகூடத் தயங்குவது கிடையாது. அதேமாதிரி திரு. காந்தியின் பெயரைச் சொல்லிவிட்டு நமது மக்களிடமிருந்து என்ன காரியம் வேண்டுமானாலும் சாதித்துக்கொள்ளலாம் என்கிற நிலைமையில் நமது நாடானது இப்போது இருக்கிறது. கடவுளுக்கும் மக்களுக்கும் மத்தியில் புராணங்கள், வேதங்கள் முதலியன இருப்பது போல காந்திக்கும் மக்களுக்கும் மத்தியில் காங்கிரஸ் என்று சொல்லப் படும் ஸ்தாபனமானது இருந்து வருகிறது. வேதபுராணங்கள் முதலியன அறிவுக்குப் பொருத்தமில்லாதவை என்று சொன்னால் கடவுள் சொன்னது என்று சொல்லிப் பயமுறுத்திவிடலாம். அதே போல் காங்கிரஸ் ஒரு பெரும்புரட்டு என்று சொன்னால், காந்தி பெயரைச் சொல்லி அடக்கிவிடலாம். இதுதான் நமது நாட்டில் இப்போது இருந்து வரும் நிலைமையாகும். ஆகவே ராட்டினமும், அதைவிட அறிவீனமானதுமான தக்ளியும் பைத்தியக்காரத்தனம் என்று நாம் சொல்லப் புகுந்தால் நமது ஜனங்கள் காங்கிரசையும், காந்தியையும் சொல்லி நம்மை மிரட்டு கிறார்கள். ஆனால், அறிவு இயக்கத்தின் பீடத்திலிருந்து உண்மை யென்னும் ஆயுதத்தைத் துணையாகக்கொண்டு மக்களது நன்மை என்னும் கொள்கையையே லட்சியமாகக் கொண்டு நடந்துவரும் நமது சுயமரியாதை இயக்கமானது இனி இத்தகைய அரசியல் புரட்டுகளுக்கும் தேசீயப் பூச்சாண்டிகளுக்கும் பயந்து கொண்டு உண்மையை மறைக்க முயலுவோமேயானால் அதுவும் சீக்கிரம் அழிந்து படவேண்டு மென்பதே எமது கருத்து. உலகமெல்லாம் இயந்திரப் போட்டியில் முன்னேறுகின்ற இக் காலத்தில் நாம் நமது முன்னோர் காலத்து ராட்டினத்திற்கும் தக்ளிக்கும் போகவேண்டுமென்பது, யந்திரத்தினாலுண்டான பேப்பர்களையும், புத்தகங்களையும் பகிஷ்கரித்து நமது முன்னோர் காலத்து ஏடு எழுத் தாணியைக் கைக்கொள்ளவேண்டும் என்பதுபோலிருக்கிறது. இதுவும் திரு. காந்தியின் மூளையில் திடீரெனத் தோன்றிவிடுமானால், உடனே நமது பாமர மக்கள் (படித்த மக்கள் பிறரை ஏமாற்றுவதற்காகவே பின்பற்றுகிறார் களாதலால்) ஆளுக்கொரு பனை ஓலையையும் எழுத்தாணியையும் எடுத்துக்கொண்டு பேப்பர் கடைகளுக்குச் சென்று மறியல் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். இதில் ஒருவரும் ஆச்சரியப் பட வேண்டிய தில்லை. ஏனெனில், உலகில் துணிக்குப் பிறகு அவசியமான பொருள் காகிதம் என்பது நிச்சயமாகிவிட்டது. இன்னும் சொல்லப் போனால், துணியினால் செய்யக்கூடிய அநேக காரியங்களுக்கு ஜப்பான் போன்ற நாடுகளில் பேப்பர்களையே உபயோகித்து வருகிறார்கள். வீடுகள் முதற் கொண்டு பேப்பர்களால் செய்யப்படுகின்றன. மேஜை, நாற்காலி, கட்டில் முதலிய பலவிதச் சாமான்களும் பேப்பர்களால் செய்யப்படுகின்றன. ஜன்னல் திரைகள், உடுப்புகள் முதலியவைகளும் பேப்பரால் செய்யப் பட்டு வருகின்றன. ஆகவே பேப்பரானது இயந்திரத்தினால் செய்யப் படுவதால் ஏழைகள் வயிறு பிழைக்க முடியவில்லையென்கிற ஒரு சிறந்த உண்மையானது நமது வயதிற் சிறந்த காந்தியின் மூளைக்குள் திடீரென்று நுழைந்து விடுமேயானால், அவரும் அவரது சிஷ்ய கோடிகளும் புஸ்தக தகனம் செய்து, பேப்பர்க்கடை மறியல் ஆரம்பித்து, ஓலை எழுத்தாணிகளுடன் வீதிக்கு வீதி புறப்பட்டு விடுவார்கள் என்று நாம் சொல்வதில் ஒன்றும் ஆச்சரியப்படக் கூடியதில்லை. தக்ளியினால் முன்னேறிய நாடுகள் உலகத்தில் எத்தனை யென்பதை நமது தேசபக்தர்களும் காந்தியும் சொல்லட்டும். ராட்டினத் தினால் முன்னேற்றமடைந்த நாடுகள் உலகில் எவ்வளவு என்பதையும் யோசித்துப் பார்க்கட்டும். மணிக்கு 50 மைல் போகக் கூடிய மோட்டார் வண்டியை வெறுத்து நமது இளைஞர்கள் மணிக்கு 200 மைல் போகக் கூடிய ஆகாய விமானப்பயிற்சி செய்துகொண்டு வரும்போது, திரு. காந்தியவர்கள் இரட்டை மாட்டு வண்டியின் ஆத்ம தத்துவத்தைப் பற்றிப் போதித்துக் கொண்டிருப்பதென்றால், நமது நாட்டிலுள்ளவர்கள் தான் ஒருவேளை தேசபக்தியில் ஈடுபட்டுச் சும்மா இருந்துவிட்டாலும் அறிவுள்ள நிமிஷத்திற்கு 10,000 கஜம் நூல் நூற்கும் யந்திரங்களும், அவைகளிலிருந்து கஜம் 0-2-0 அணாவுக்கு விற்கக்கூடிய துணிகளும் ஏற்பட்டிருக்கின்ற இக்காலத்தில் நாள் ஒன்றுக்கு 8000 கஜம் நூல் நூற்று அதனால் உண்டாகும் துணியை, கஜம் 0-8-6 அணாவுக்கு விற்று நமது நாட்டைக் காப்பாற்றவேண்டுமென்றால், இதை எவர்தான் ஏற்றுக் கொள்ளமுடியும் என்று கேட்கின்றோம். நம் நாட்டிலேயே பண மெல்லாம் சுற்றிக் கொண்டிருக்குமே! என்று சொல்லலாம். காகிதத் திற்குப் பதிலாக ஏடு எழுத்தாணியும், நெருப்புப் பெட்டிக்குப் பதிலாக, சக்கி முக்கிக் கல்லும், பவுண்டன் பேனாவுக்குப் பதிலாக இறகு பேனாவும் சைகில் மோட்டாருக்குப் பதிலாகக் கட்டை வண்டியும், டெலிபோனுக்குப் பதிலாகப் பரிகசப் பறவையும் இருந்தால் இன்னும் அதிகமான பொருள் நமது நாட்டிலேயே தங்க மார்க்கமுண்டு. ஆனால் அதற்காக மனித சமூகத்தின் முதுகெலும்பு வளைந்து குன்றிப் போய் விடுமே யென்று யோசிக்க வேண்டாமா? ஆனால் மாகவிஷ்ணுவின் அவதார புருஷரான காந்தி சொல்லுகிறார் என்று மக்கள் நினைத்துக் கொண்டிருக்கும் வரையில் யோசனைக்கு இடமேது? ஆகவே நமது நாட்டிற்கு ஏதாவது முன்னேற்ற உணர்ச்சி தோன்ற வேண்டுமானால், நமது மக்கள் நல்லறிவு பெறவேண்டுமனால், முதலாவதாக, தக்கிளியும், ராட்டினமும், அறவே ஒழியவேண்டும். இவைகளுக்கு ஆதரவாயிருக்கும் திரு. காந்தியின் பழமைத் தன்மையும் அடியோடு ஒழியவேண்டும். யந்திர ஸ்தாபனம் நாடு முழுதும், முக்கிய மாக விவசாயத்திலும் ஏற்படவேண்டும். ஜனப் பெருக்கைத் தடை செய்து நிறுத்தவேண்டும். சொத்துக்களெல்லாம் பொதுவாக்கப்படல் வேண்டும். இவைகளை தானாகவே நடத்தக்கூடிய ஓர் அரசியல் முறையும் ஏற்படவேண்டும் என்கிறோம். - புதுவை முரசு, 6. 4. 1931, ப. 10 - 11 42. சுயமரியாதை எங்கள் அப்பன்வீட்டுச் சொத்தல்ல யுகங்கள் கழிந்தன. ஆண்டுகள் கழிந்தன! மாதங்கள் கழிந்தன. உலகம் துவங்கி எத்தனை ஆண்டுகளிருக்கும்? அத்தனை ஆண்டுகளும் நடைமுறையில் இல்லை; கழிந்து போயின. இறந்த காலங்கள் நிகழ்காலங்களாகத் திரும்பி வரப்போவதில்லை. நிகழ்காலமும் நிற்கப் போவதில்லை எதிர்காலமும் நிகழ்காலமாகவும் பிறகு இறந்தகாலமாகவும் ஆகக்கூடும். நிச்சயம்! பஞ்சாங்கம் அல்லது காலண்டர் என்பவை காலத்தைக் குறிக்க ஏற்பட்டவை. அவை இறந்த காலத்தைக் குறித்துக் காட்டி விட்டுப் பழமையடைந்துபோய் ஒருவர் வீட்டுப் பெட்டியில் இருக்கக்கூடும், சென்ற ஆண்டுகளில் காலண்டர்கள் இந்த ஆண்டில் இருப்பது சகஜம் ஆனால் காலம் மாறக் கூடியது என்றால், இல்லை, இல்லை! இதோபார் இறந்தகாலப் பழம் பஞ்சாங்கம்; ஆகையால் காலம் மாறவில்லை யென்று யாராவது சொல்லுவார்களா? காட்டிய பழம் பஞ்சாங்கத்தையும் காணடிக்கும் எதிர்காலமும் வரும். காலச் சக்கரம் சுழலும்; நில்லாது; இது இயற்கை முறை. இனி, காலத்தோடியைந்த எண்ணங்கள் வாழ்க்கை முறைகள் மாத்திரம் மாறாமல் இருக்குமோ? மாறும். இதுவும் இயற்கை முறை. இவை இரண்டையும் கூட்டிக் காலமும் காலத்தின் அடையாளங்களும் மாறுகின்றன. மாறும், இது இயற்கை முறை என்று மொத்தமாய்ச் சொல்லலாம். காலமும் அடையாளங்களும் மாறுகின்றன. புதிய காலமும், அதாவது எதிர்காலமும் அடையாளங்களும், அதாவது எதிர்கால எண்ணம் வாழ்க்கை முறைகளும் எப்படியிருக்கும்? இயற்கையை அநுசரித்ததாகத்தான் இருக்கும். இயற்கையை அநுசரித்ததாக இருக்கும் என்றால் இன்னபடி என்று விளங்காமல் இருக்கலாம், எதிர்கால எண்ணங்கள், வாழ்க்கை முறைகள், சுயமரியாதை எண்ணம், சுயமரியாதை வாழ்க்கையாகவே இருக்கும். சுயமரியாதை வாழ்வு இயற்கை முறையில் அமைந்தனவா? - இக்கேள்வியை ஆச்சரியமாய் அதட்டிக் கேட்க நினைப்பவரை உங்கள் ஆதிக வாழ்வு இயற்கை முறையில் அமைந்ததா? என்று கேட்டால் அதட்டுவது கொஞ்சம் தணியும். அவர்கள் நெஞ்சம் நிதானம் அடையும். சுயமரியாதைக் கொள்கைகளின் பிரதான அம்ஸம், அசல் மனிதரை மத மனிதராக்க வேண்டாம்; அசல் மனிதராகவே இருக்கட்டும் என்பதும், அசல் கடவுளைக் கோயிற் கடவுளாகவும் மனிதக் கடவுள் களாகவும் ஆக்க வேண்டாம் என்பதும், ஒருவனுடைய சிந்தனை, நடை, வாழ்க்கை முறைகளில் பிறவியிலே ஏற்பட்டிருக்கும் அசல் சுதந்தரத்தை மனிதன் இன்னொரு மனிதனுக்கு வழங்கும் சுதந்திரமாக ஆக்காதே என்பதும் பிறவும் ஆகும். இயற்கை முறைக்கு ஒத்துவரவில்லையா? இப்படிப் பொதுவாகச் சொல்லுவதை விட்டுச் சிறப்பு வகையில் பார்ப்போம். மலைக்கற்களை மலைக்கற்களாகக் கொள்வது இயற்கை யாகும். அதைக் கடவுளாகக் கொள்வது இயற்கையா? பிறந்தபின் அவன் நெற்றியில் சாம்பலையோ மண்ணையோ பூசி இவை மனிதனுக்கு இன்றியமையாதவை என்பது இயற்கையா? மனிதன் தீண்டத்தகாதபடி பிறந்தான் என்பது இயற்கையா? மனிதன் திருவாரூர்த் தேர் போல் உயர்வாகவே பிறந்தான் என்பது இயற்கையா? பெண்கள் தாழ்வு என்பது இயற்கையா? சுயமரியாதைத் திட்டங்களையும், அவைகட்கு ஒத்த ஆதிகம் என்பதில் உள்ள திட்டங்களையும் எடுத்து ஒவ்வொன்றையும் பற்றி இம்முறையில் சிந்திப்பவர் நமது முடிவுக்கு வரக்கூடும் என்பதோடு இதற்கு அனுசரணையாக ஒரே ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு இதை முடிப்போம். காலம் ஓடுகிறது, நிற்காது. அது சுயமரியாதை வாழ்க்கையை நோக்கி ஓடுகிறது. இதுதான் இயற்கை முறை என்கிறோம். தேசீயம் என்பதென்ன தேச சம்பந்தமான எண்ணங்கள் செயல்கள் முதலியவை, இவைகள் இந்நாட்டில் சுய மரியாதைக் கொள்கை யாகிக் கொண்டு வருவதையுமா நாம் அறியாமல் இருக்கிறோம். இறந்த கால ஆதிகத் திட்டங்கள் என்ன கட்டுமானத்தோடு இருந்தன! இப்போது அவை நிலை தவறிப்போவானேன்? ப்ரம்ம க்ஷத்ரிய வைசிய சூத்திரதர்மம் இரும்புக் குண்டுகள்போல் உட்கார்ந் திருக்கின்றனவோ? அந்நிய நாட்டுக்குக் கருவாடு ஏற்றுமதி செய்கிறாயா என்று கேட்டால் நான் என்று சைவர் ஓடும் ஓட்டம், சென்னை ரிக்ஷாச் சகோதாரர்கள் ஓடுவார்களா? ஒரு வீட்டுக்காரன், ஒரு தெருவார், பல கிராமத்தார், பல நகரத்தார், ஒரு மாகாணத்தார் என்ற வளர்ச்சி முறையைச் சுயமரியாதைக் கட்சியடைந்தது கொண்டும், தமது மனோவாக்குக் காயங்கட்குப் பல்லைக் கடித்துக்கொண்டு மறைப்புப் போட்டிருந்தவர்களையும் ஏமாற்றிவிட்டுச் சுயமரியாதை இயற்கை முறையில் (சுயமரியாதை எண்ணம், சுயமரியாதை வார்த்தை, சுயமரியாதைச் செய்கையாக) வெளிப்பட்டுக் கொண்டும் வருவது தெரியவில்லையா? தென்னாட்டுச் சுயமரியாதையைத் தந்தி கொடுத்துத் தெரிவித்த பின்பா வடநாட்டான் நெஞ்சில் சுயமரியாதை உணர்ச்சி எழுந்தது? மதம் வேண்டாம்; ஜாதி வேண்டாம் என்று தென்னாட்டான் போய் முகவாய்க் கட்டையைப் பிடித்துக் கொள்ளும்முன்பே - காந்தி கோஷ்டி சுயமரியாதை முழங்கவில்லையா? சுபாஷ் சந்திரபோ மதம் வேண்டாம் ஜாதி வேண்டாம் என்றதாக ஆதிக அன்பர் அழுவதால் பயனில்லை; தேச சேவையில் ஆவேசத்தின் இயற்கை சுயமரியாதையே! ஆகையால்தான் சுயமரியாதைக் கொள்கை எங்கள் அப்பன் வீட்டுச் சொத்தல்ல; எல்லாருடைய சொத்து; பின் சந்ததிக்கும் அழியாத சொத்து; சேரவாரும் செகத்தீரே என்கிறோம்! - புதுவை முரசு, 13. 4. 1931, ப. 10 - 12 43. இன்னுமா அஞ்ஞானத்தில் மூழ்கி இருக்கவேண்டும் சில காலமாக, சர்வ வியாபி யென்னும், உணர்தர தமிழ்ப் பத்திரிகை ஓர் உயர்தர வேலை தொடங்கியிருப்பதாகக் கண்ணுற்ற நாம் அதைப் புகழாமலிருக்கக் கூடுமாயில்லை அந்த வேலையாவது: தன் வேதத்தைப் பற்றி அவமானமாய்ப் பேசுவோரிடம் எதிர்த்துப் போராடி வருவதே. இதைக் கொண்டு அது சந்தேகமின்றி வேத சாக்ஷியாகுமென்று தெரிகிறது. அதின் ஆசிரியர் சிறந்த அறிவும் சர்வ ஞானமும் வாய்ந்தவர் போலவே விளங்குகிறார். எனினும், சர்வ வியாபி அஞ்ஞானத்தை விட்டு இன்னும் கிளம்பவில்லையென்றே சொல்லவேண்டும்! அழகிய பெயரைக் கொண்டிருந்து பயன் என்ன? எல்லா மனிதனும் தன் ஜீவியத்தில் பிறருக்கு என்ன உதவி செய்கிறான் என்று அறியக் கடமைப்பட்டுள்ளான். அதைப்போல, சர்வ வியாபியும் தன் சகோதரர்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளைத் தலையில் வரைந்து கொண்டு, அவைகளைச் செய்து முடிக்க ஏன் கவலைகொள்ளாமல் போகிறது? உதாரணமாக: பாகுத் திருவிழாவுக்கென்று நம்மூர்ப் பெரிய அதிமேற்றிராசனத்துக்கெதிரில் பலவிதக் கடைகளமைக்கப்படுகின்றனவல்லவா? ஞானி என்று வெளிவரும் சர்வ வியாபி, அந்தக் கடைகள் திருவிழாவுக்கு அவசியமாவென்று யோசனை செய்யத்தக்க ஞானம் அதற்கு இல்லாம லிருக்கிறது ஏன்? அந்த மிட்டாய்க் கடைகள், வெற்றிலை பாக்கு, சிகரெட்டுக் கடைகள், கடைசியாய்ச் சூது கடைகள் பிரயோசனத்தைச் சற்றுக் கவனிப்போம்! காலத்தின் மதிக்கக் கூடாத பெருமையை அறிந்திருந்தும் சிறுவர்கள், பாடசாலைக்கு முதலாய்ச் செல்லாமல் கடைகளைச் சுற்றிக் கொண்டிருப்பது ஒருபுறமென்றால், நஷ்டப்படும் தங்கள் தாய் தந்தையரிடத்திலும் சண்டை செய்து பணத்தை வாங்கி நியாயமின்றிச் சூது கடைக்காரரிடம் கொட்டுகிறார்கள். உருவ வழிக்கும்மானம் உயர்வழிக்கும் வண்மைத், திரு வழிக்கும் செல்வம் சிதைக்கும் - மருவும், ஒருவரோ டன்பழிக்கும் ஒன்றல்ல சூது, பொருவரோ தக்கோர் புரிந்து எனும் முதுமொழிகளைச் சர்வ வியாபி அறியாதோ? சேசுவின் பாடுகளின் ஞாபமாகய்ச் செய்யப்படும் கதி நிறைந்த சுற்றுப் பிரகாரம் வரும்போதும் இளைஞர்கள், சிறிதும் விவேகமின்றி, அறிவை ஓர் புறம் ஒதுக்கிவிட்டுப் பலகாரக் கடைகளில் பலகாரங்கள் வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டும், தாங்கள் சந்தோஷமாய்ப் பாவிக்கும் சூது கடைகளில் இன்பமுடன் விளையாடிக் கொண்டும் கடவுளுக்கு வருவிக்கும் அவமானம் கொஞ்சமா? கடை அமைத்திருப் பவர்கள் தங்கள் சாமான்கள் விலையாகும்படி கூவுகிறார்கள். சூது கடைக்காரர்களோ மணிகளைக் கொண்டு கோஷஞ்செய்து, தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காகக் கடவுளையும் மதியாமலிருக்கிறார்கள். இத்தகைய மதியீனச் செயல்களைப் பார்ப்பதுதானா சர்வ வியாபியின் பிரியம்? தன் கண்ணிலிருந்க்கும் தூணை விட்டுவிட்டு, பிறர் கண்ணிலிருக்கும் துரும்பை எடுக்கப் பிரயாசைப் படுவதினால் அது கண்ணிருந்தும் குருடனாகவில்லையா? ... ... உண்மை உரைப்போன் - புதுவை முரசு, 13. 4. 1931, ப. 13 44. தூத்துக்குடி காரைக்குடி மகா நாடுகள் திருநெல்வேலி ஜில்லா சுயமரியாதை மகாநாடு 4-ம் தேதியன்று தூத்துக்குடியில் திரு. S ராமநாதன் அவர்கள் தலைமையிலும், செட்டிமார் நாட்டுச் சுயமரியாதை மகாநாடு 7-ம் தேதியன்று காரைக்குடியில் திரு, R.K. ஷண்முகம் அவர்கள் தலைமையிலும் நடைபெற்ற விவரம் வாசகர்கள் அறிவார்கள். இவ்விரு மகாநாடு களிலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வெவ்றோரிடத்தில் பிரகரித்திருக்கிறோம். தனி மூலதனம் இல்லாத இயக்கமாகிய சுயமரியாதை இயக்கத்தில் ஒரு மகாநாடு நடத்துவதென்றால் எளிதல்ல. ஏதோ கொள்கை களின் பலத்தினாலும், நமது இயக்கத்தைச் சார்ந்தவர்கள் இதுவரையில் இருக்கும் உறுதிப்பாட்டினாலுந்தான் சுயமரியாதை இயக்கம் நாட்டில் செல்வாக்குப் பெற்றுக்கொண்டிருக்கிறதேயொழிய அதற்கு வேறு எவ்விதமான பண வலிமையோ, அரசாங்க ஆதரவோ கிடையாது என்பது. இந்த 5 - 6 வருஷத்து நடவடிக்கைகளைப் பார்த்தவர்களுக்கு விளங்காமற் போகாது. ஆகவே, மேற்கண்ட இரண்டு மகாநாடுகளும் எவ்வளவோ எதிர்ப்புகளுக்கிடையில் வெற்றிகரமாய் நடைபெற்றன என்றே சொல்லவேண்டும். தலைவர் திரு. ராமநாதன் அவர்கள் பேச்சில், குறிப்பிடக் கூடிய சில விஷயங்களை மாத்திரம் வாசகர்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறோம். மதச்சண்டைகளுக்குக் காரணம் பாமரமக்களல்ல; அவர்களைப் பிடித்திருக்கும் மதமென்னும் பித்துத்தான் காரணம். ..தன் வாக்கிலிருந்துகிளம்பும் ஒவ்வொரு வாக்கியத்திலும் கடவுள் நாமதேயத்த ஓரிடத்திலாவது அமைத்து உச்சரிக்கவேண்டுமென்று கங்கணங் கட்டிக் கொண்டிருக்கும் காந்திதான்காரணம்... கடவுள் என்பது ஒரு பெரிய விளையாட்டுச் சாமான். சுவர்க்கம் என்பது தின்பண்டங்கள். நரகம் என்பது ஒரு பூச்சாண்டி... எல்லா மதங்களும் ஒருங்கே அழிந்து போனால் மாத்திரம் மனித சமூகம் முன்னேறு மென்பது எமது துணிபு யந்திரங்களை அடக்கியாளு வதற்குப் பதிலாக யந்திரங்களே கூடாதென்று பகிஷ்கரித்து நமது முன்னோர்களைப் போல் கைராட்டினத்தையும் கைக் கதரையும்n பாற்ற ஆரம்பித்தோமனால் நம் நளடைவில் கட்டுமிராண்டிகளாகி மிருகப் பிராயத்தை அடைய வேண்டியதுதான்.” *** காந்தி சிஷ்ய கோடிகளுக்கு, திரு. இராமனாதன் அவர்களின் வார்த்தைகள் கசப்பாயிருக்கலாம். கட்டாயம் கசப்பாயிருக்கும் என்பது நமக்குத் தெரியும். ஆனால் யோசனை செய்து பார்ப்பவர்களுக்கு, திரு. இராமனாதன் அவர்கள் சொல்லியிருப்பது கூடச் சந்தர்ப்பத்தை யொட்டி மிக அழுத்தமாகச் சொல்லப்படவில்லையேயென்று சந்தேகிக்கவேண்டி யிருக்கும். ஆகவே நாம் அடிக்கடி எழுதிவந்தபடி சுயமரியாதைக்காரர்கள் திரு. காந்திக்கோ காங்கிரசுக்கோ பயந்து உண்மையை வெளிப்படுத்தப் பின்வாங்குவார்களேயானால் அவர்கள் பயங்காளிகள் என்று நிச்சயிக்கப்பட வேண்டியது தவிர வேறு மார்க்க மில்லை. தூத்துக்குடி மகாநாட்டுத் தீர்மானங்களில் திரு. காந்தியின் மேல் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது பற்றி நமக்கு ஒன்றும் ஆச்சரியமில்லை. அவருடைய வருணாசிரமக் கொள்கைக்காக அவர்மேல் கண்டனத் தீர்மானம் நாடு முழுதும் நிறைவேற்றப்பட்டாலும்கூட அது போதாது என்றுதான் சொல்வோம். *** இனி, காரைக்குடி மகாநாட்டுத் தலைவர் திரு. R.K. ஷண்முகம் அவர்கள் உரையிலும் சில முக்கிய விஷயங்கள் காணப்படுகின்றன. அவைகளில் மத சம்பந்தமான நூல்கள் யாவும் மனிதனுடைய சுயமரியாதை உணர்ச்சிக்கு முரணானவைகளாம் ஜாதி இருக்கும் வரையிலும் ஜனநாயக ஆட்சியென்பது வெறும் பகற்கனவேயாகும் மத நடுநிலைமையிருக்கின்ற ஒரு சுயராஜ்யம் கிடைத்தாலும், கிடைக்கா விட்டாலும், இரண்டும் ஒன்றுதான்... ஆகிய வாக்கியங்கள் குறிப்பிடக் கூடியனவாகும். திரு. ஆர்.கே. ஷண்முகம் அவர்கள் திடீரென்று முன்பின் யோசியாமல் ஒரு விஷயத்தைச் சொல்பவரல்ல. தாம் சொல்லும் விஷயத்தில் பூரண ஆராய்ச்சி செய்து ஒரு முடிவிற்கு வந்தாலொழிய ஒன்றைச் சொல்ல மாட்டார். ஆகவே அவரது உபந்யாசத்தில் கண்டுள்ள விஷயங்கள் அனைத்தும் தீர்ந்த அநுபவத்தின் பயனாய் ஏற்பட்டனவாகுமே யொழிய ஏதோ பக்தி நம்பிக்கையென்ற காரணத்தினாலல்ல வென்பதை வாசகர்கள் உணரவேண்டியது அவசியமாகும். *** இவ்விரு மகாநாடுகளிலிருந்து தெரிந்துகொள்ளவேண்டிய முக்கிய விஷயம் ஒன்றுண்டு. சைவக்கோட்டையென்று சொல்லப் பட்டுவந்த திருநெல்வேலி ஜில்லாவுக்கு 4 மகாநாடுகள் ஆகிவிட்டன வாதலால் சைவத்தின் நெருக்கடியான நிலைமை என்று சுவாமி வேதாசலம் எழுதி வெளிவந்த சுயமரியாதைப் புதகத்தின் அவசிய மும் நமக்குத் தெரிகிறது. அதுவும் இந்த வருஷம் கிறீஸ்தவர்கள் நிறைந்துள்ள தூத்துக்குடியில் நடைபெற்றிருப்பதால், சர்வவியாபி யின் மதத்துக்கும் ஆபத்து வந்துவிட்டது என்பது தானாகவே விளங்குகிறது. இனி, காரைக்குடி மகா நாட்டிலிருந்து தெரிந்துகொள்வ தென்னவென்றால், சைவத்திற்குப் பணப் பெட்டியாக இருந்த செட்டிமார் நாடும் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட ஆரம்பித்து விட்டது என்பதும், இனி, சைவர்கள் வெளிப்படையாகவே நமது கொள்கைகளை ஒப்புக்கொண்டே தீரவேண்டுமென்பதும் ஆகும். ஆகவே இவ்விரு மகாநாடுகளும் பார்ப்பனச் சூழ்ச்சி, பணக்கார ஆட்சி, புரோகிதப் பூச்சி, பழக்க வழக்கப் பூச்சாண்டி ஆகிய எல்லா எதிர்ப்புகளுக்கிடையேயும் வெற்றியாகவும் திருப்திகர மாகவும் நடைபெற்றிருக்கின்றனவென்றே சொல்லவேண்டும். *** சர்வவியாபி மதமே! சைவ மதமே! வைஷ்ணவ மதமே! இனி உங்கள் மதம் மனிதர்களைப் பயமுறுத்த முடியாது என்பதைக் கண்டிப்பாய் உணருங்கள். சுயமாரியாதைத் தலைவர்கள் அழியலாம்; தொண்டர்கள் அழியலாம்; பத்திரிகைகள் அழியலாம். உணர்ச்சியை அழிக்க முடியாது. உலகிலுள்ள எல்லா மதங்களும் அழிகின்றவரையில் சுயமரியாதை இயக்கமும் உயிரோடு இருந்தேதான் தீரும். - புதுவை முரசு, 20.04.1931, ப. 10 - 11 45. இந்து முஸ்லீம் ஒற்றுமை இந்து முஸ்லீம் ஒற்றுமையானது இப்போது மிகவும் நெருக்கடி யான பிரச்சினையாக இருந்துவருகிறது. இந்தியத் தலைவர்களென்று சொல்லப்படுபவர்களெல்லாம், இரு சமூகத்தையும் தூண்டி விடுகிறவர் களாகவாவது அல்லது மேற்பூச்சுப் பூசுகிறவர்களாக வாவது தான் இருக்கிறார்களேயொழிய உண்மையாய் இந்துமுஸ்லீம் வேற்றுமைக்கு அடிப்படையாயுள்ள காரணம் என்னவென்று யோசித்துப் பார்க்கக் கூடியவர்களாயில்லாமலிருப்பது வருந்தத்தக்க தாகும். இரண்டொரு தலைவர்கள் யோசித்துப் பார்த்தாலும் அவர்கட்கு உண்மை விளங்கு வது கிடையாது. அப்படியே ஏதோ ஒருவருக்கு உண்மை விளங்கி னாலும் அதை வெளியில் எடுத்துச் சொல்வதற்குத் தைரியம் இல்லாமற் போய்விடுகிறது. இந்த நிலைமையில் இந்து மூஸ்லீம் ஒற்றுமை இந்து முஸ்லீம் ஒற்றுமையென்று படாடோபம் செய்வதாலும் சர்வ கட்சி மகாநாடுகள் கூடுவதாலும் ஏதாவது பலன் உண்டாக முடியுமா வென்பதை வாசகர்களே யோசித்துப் பார்க்கட்டும். இந்திய சரித்திரத்தில் சுயமரியாதைச் சக்கிரவர்த்தியாய் விளங்கிய அக்பர் சக்ரவர்த்தியின் சரித்திரத்தைப் படித்தபின்கூட நமது இந்தியத் தலைவர்களுக்கு இந்து முஸ்லீம் ஒற்றுமையை உண்டாக்கக் கூடிய வழி தோன்றாமலிருப்பது வியப்பாகவேயிருக்கிறது. அக்பர் எப்படி இந்துமுஸ்லீம் வேற்றுமையை ஒழித்தார்? சர்வகட்சி மகாநாடு கூட்டினரா? இல்லை. அல்லது இலண்டனுக்குச் சென்றாரா? இல்லை, அல்லது நமது தலைவர்களில் சிலர் செய்வதுபோல் விரதம் இருந்தாரா? அதுவும் இல்லை. பின் என்ன செய்தார் என்றால் தமது மதமாகிய இஸ்லாம் மதத்தைத் தளர்த்திக்கொண்டார். அதேமாதிரி தமது பிரஜைகளின் இந்துமதத்தையும் தளர்த்தினார். இந்துப் பெண்களையே விவாகம் செய்துகொண்டார். ஐயோ! மதம் போச்சே! என்று முல்லாக்கள் கத்தினார்கள் போகட்டும்; பரவாயில்லை. மதத்தைவிட ஜனங்களே முக்கியம் என்றார். அதுமாத்திரமா? முகம்மது என்ற பெயர்கூட வைக்கக்கூடாதென்று உத்தரவிட்டார். தானே கடவுள் என்ற தன் முயற்சிக் கொள்கையைப் பரப்பினார். இந்துக்களிடமிருந்த மதச் சமூகக் கொடுமைகளைத் தைரியமாய் எதிர்த்து அழித்தார். இவர் இந்து இஸ்லாம் ஆகிய இரு மதங் களிலும் நம்பிக்கை கொள்ளா ததைப் பார்த்து ரோமன் காத்லிக் பாதிரிகள் அவரிடம் சென்று அவரைத் தங்கள் மதத்தில் சேர்க்க அரும்பாடுபட்டார்கள். உனக்கும் பே! பே! உங்கப்பனுக்கும் பே! பே! என்றார், கடைசியில் மதம் கொள்ளாத ஒரு சுத்தமான மனிதனாக விளங்கினார். மகாபெரியவர் (Great) என்ற பட்டத்தைச் சரித்திரத்தில் தம் பெயரோடு நமக்கு அளித்துவிட்டுப் போனார். இந்தியத் தலைவர்களே! தாங்களெல்லோரும் சிறுவயதில் படித்து மறந்துபோன அக்பர் சக்ரவர்த்தியின் கதையை முழு விவரமாக மற்றொருதரம் படித்துப் பாருங்கள்! உங்களுக்கு நேரமில்லையானால் படித்த மாணவர்களிடமிருந்து கேட்டாவது தெரிந்து கொள்ளுங்கள், அப்போதுதான் இந்து முலீம் வேற்றுமைக்கு உள்ள அடிப்படை யான காரணம் உங்களுக்கு விளங்கும். அக்பர் வெட்டிப் பதனிட்ட பாதையை விட்டுவிட்டு ஏன் கண்களைக் கட்டிக்கொண்டு முள்ளிலும் கல்லிலும் தடுமாறுகிறீர்கள்! கடைசியாக இந்திய மக்களுக்கு ஒரு வார்த்தை. நமது நாட்டிற்குத் தற்போது வேண்டியவர் மதமில்லாத அக்பர் சக்ர வர்த்தியா? மதம் பெரிது என்று சொல்வதால் வேற்றுமையை அதிகப்படுத்தும் (மகாத்மா) காந்தியா? - புதுவை முரசு, 27. 4. 1931, ப. 10 - 11 46. குறுகிய பார்வை நீ கடலின் ஓரத்திலே அதன் அலைகளை மாத்திரம் நட்டுக் கொண்டு பார்க்கிறாய்; மகனே! பிழை உன்னுடையது. நீ நட்டுக் கொண்டு கரையில் அலைமோதுகின்றதைப் பார்க்கின்றாய்; அலைகள் அமைதியற்றுச் சீறுவதைக் கவனிக்கிறாய், உன்னுடைய பார்வையை அலையடிக்கும் குறுகிய இடம் கவர்ந்து கொண்டது. கலங்கிய அலைகள் மட்டும் உன் கண்ணுக்குத் தெரிகிறது. நீ ஒரு பகுதியை மாத்திரம் பார்க்கிறாய்; அப்பகுதி அமைதியற்றிருப்பதைப் பார்க்கிறாய். கலங்கிய நீரைப் பார்க்கிறாய் ஆழமில்லாத நீரைப் பார்க்கிறாய். மகனே பிழை உன்னுடையது. நிலை குலைந்து கலங்கிய-ஆழமொன்றுமில்லாத கடலின் அலைகளை நீ கடல் என்றே நினைப்பது எவர் பிழை? உன் பிழை. நிமிர்ந்துபார்! உன் பார்வையை விசாலப்படுத்து! கொண்ட மட்டும் பார்வையைச் செலுத்து! எத்தனை பெரிய நீர்ப்பரப்பு! ஓகோகோகோ எவ்வளவு நீளம்! எவ்வளவு அகலம்! எவ்வளவு ஆழம்! இவை அனைத்தும் அல்லவா கடல்! ஆழ்ந்த தன்மை, விசாலத் தன்மை, இடையீடில்லாத ஒற்றுமைத் தன்மை, விடுதலைத் தன்மை, அனைத்தையும் உடைய அத்தனை பெரிய கடல், தன் ஆரவார அலைக்கூட்டத்தால் உன் கருத்தை யிழுக்கும் நோக்கமுடையது! உன் பார்வை ஆரவார அலைக் கூட்டத்தில் ஆரம்பிக்கட்டும். நிறுத்தாதே! உன் பார்வையைக் கடலத்தனையாக்கு. உன் பார்வையை அலையளவாய்க் குறுக்காதே! அதைக் கடலள வாய் விசாலப்படுத்து. அப்போதுதான் நீ பெரிய மனிதன் என்று அழைக்கப்படுவாய். வயதிலன்று; அறிவில். உனக்குப் பார்க்கத் தெரிந்தால், குறுகிய ஒரு திட்டான இடத்தை மாத்திரமன்றி - உனக்குப் பார்க்கத் தெரிந்தால் - உன் கையிற் கிடைத்த ஏட்டின் முதல்வரியை மாத்திரமின்றிக் கடைசி வரைக்கும் பார்க்கத் தெரிந்தால், அதாவது நீ ஒர் குறுகிய பார்வையுடையவனாயில்லாமல் பரந்த நோக்கமுடையவனாயிருந்தால் உன்னிடம் அற்ப புத்தி நீங்கும்; நீ அறிவாளியென்று மதிக்கப்படுவாய். குறுகிய நோக்கமுடை யவர்களால் நீ ஒருக்கால் தூற்றப்படலாம். அறிவுடையவர்களால் நீ அறிஞன் என்று கருதப்படுவாய். இந்த வார்த்தையைப் பார் - உயர்ந்தோர் என்று உளறும் திமிர் பிடித்த மனிதர் இது வசைமொழி - மக்களில் வித்தியாசங் காட்டும் மூடர்கள், பெண் குலத்தை ஈடழிக்கும் பேய்கள், பகுத்தறிவைப் பாழ்படுத்தும் பாம்புகள், கடவுளின் சம்பந்தம் பெற்றதாய்ச் சொல்லிக் கொள்ளும் கழுதைகள் இவைகள் வசைமொழிகள். இவைகள் கடலின் ஆரவார அலைக்கூட்டம். அலைக்கூட்டத்தைக் கடல் என்பது உன் பிழை. நட்டுப் பார்ப்பதை விட்டு நிமிர்ந்து நோக்கு! கடல் தெரியும். அது எத்தனை பெரிது; எத்தனை ஆழமுடையது; எத்தனை தெளிவுள்ளது; சமத்துவமுடையது! விடுதலையுடையது! சுயமரியாதைக் கடல் - மற்றொரு முறை கூறுகின்றேன் - அது பெருநோக்கமுடையது; ஆழ்ந்த கருத்துக்களுள்ளது; சமத்துவமும் விடுதலையுமுடையது. அதன் ஓரத்தில் விளம்பர ஆரவார அலையைக் கண்டு - அதுதான் சுயமரியாதைக் கொள்கைகள் என்று சொல்லுவது யாருடைய பிழை? உன் பிழை. சுயமரியாதைக் கொள்கையின் அளவு உன் கருத்தைப் பரப்பு. நீ அறிஞரால் அறிஞன் என்று கருதப்படுவாய். அப்போது நீ ஓர் குள்ளமனிதனாய் இருக்க வழியில்லை. நீ பேரறிஞன். - புதுவை முரசு, 27. 4. 1931, ப. 16 - 17 47. என்ன அற்ப புத்தி! அறிவிலே தெளிவும், நெஞ்சிலே உறுதியும் அகத்திலே அன்பினோர் வெள்ளமும். உடையவர்க்கேயன்றிச் சுயமரியாதைக் கொள்கைகள் பாமர மக்கட்குப் பிடிக்கமாட்டா என்பது உண்மை. பாமர மக்களை அதே நிலையில் வைத்திருக்கவேண்டும் என்பது சுயமரியாதைக்காரர் அபிப்பிராயமல்ல; ஆதலால்தான் அவர்கள் எவ்வகைச் சிரமத்தையும் பாராது சுமார் 6 ஆண்டாக உழைத்து வருகிறார்கள். அவ்வுழைப்பினின்றும் இனியும் அவர்கள் பின்னிடப் போவதுமில்லை. மேலும் சுயமரியாதைக்காரர் பாமர மக்களிடம் தமது கொள்கைகளை எடுத்துச் சொல்லி வந்ததில் இந்நாள் மட்டும் தக்க பலன் கிடைத்திருப்பதோடு விரைவில் முழு வெற்றியும் கிடைக்கும் என்பது உறுதி. ஆனால் சுயமரியாதைப் பிரசாரம் இந்நாள் மட்டும் செய்து வந்தவர்க்கு ஒரு விஷயம் அநுபவபூர்வம், விளங்கிவிட்டது. அதாவது பாமர மக்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர் சுயமரியாதைக் கொள்கைளின் உண்மையை அறிந்தவுடன் கள்ளங் கபடமின்றிச் செய்கையில் காட்டத் தொடங்கிவிடுகிறார்கள். அறிவுடையார் என்று தம்மைக் கருதியிருப்பார்கள் அவ்வாறில்லை. மேலும், சுயமரியாதை கொள்கையின் உண்மையைக் கண்டறியும் திறத்தில் அறிவுடையார் என்பவர்கள் பாமர மக்கள் வரிசையில் வந்து சேர்வதும் ஓர் ஆச்சரியம். ஓர் பாமரன் சுயமரியாதைக் கொள்கையை அறியா திருப்பதனால் கேடொன்றுமில்லை. ஆனால் அறிவுடையார் என்பவர் அதைக் கண்டறியும் திறனிழந்து விடுவதால் நாட்டுக்கு மிக்க தீமை உண்டாகிறது. அறிவு மிக்கவர் என்றும் தேசபக்தி நிறைந்தவர் என்றும் கருதி நாட்டினர் போற்றி வந்த மக்கள், தேசம் தேசம் என்று கூச்சலிட்டும், என் தேசம் என் உயிர் என்று பகட்டிக்கொண்டும் என் நாட்டின் உயர்வுக்காக நான் உடல் பொருள் ஆவி மூன்றையும் தத்தம் பண்ணி யிருக்கிறேன் என்று முழக்கியும் கிடந்து ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தமக்குள்ள மதகுருக்கள் என்பவரையோ தமக்குள்ள மதத்தையோ யாராவது குறை கூறிவிட்டால் தேசபக்தி பறக்கிறது. அறிவுடைமை அறிவின்மையாக மாறுகிறது. இது என்ன அற்ப புத்தி என்பது? தேசம் பிரதானமா? மதம் பிரதானமா? என்ற கேள்விகட்கு மதம் பிரதானம் என்று சொல்லும் பெரியோரால் ஒருபோதும் இந்நாடு முற் போக்கடையாது. தேசத்தை நன்னிலைக்கு கொண்டு வர எத்தனையோ உயர் குணங்கள் வேண்டும். ஆயினும் மதவெறி என்னும் ஒரே தீக்குணத்தால் தேசத்தைக் கருதிச் செய்த காரியம் அனைத்தும் கெடும். நமது சுயமரியாதைக் கொள்கைகள் தென்னாட்டிலும் மற்றும் தமிழர் வாழும் நிலங்களிலும் இவ்வாறு பரவி இருப்பதற்கு நான் ஒரே காரணம் சொல்லுகிறேன். அறிவுத் தெளிவும், நெஞ்சுறுதியும், அன்புள்ளமும் உள்ள தேசபக்தப் பெரியார்கள் அநேகர் சுயமரியாதை யின் உண்மை நலன்களை அறிந்து அதுபற்றி மக்களிடம் முழக்கஞ் செய்ய முன்வந்ததேயாகும். ஒரு மனிதன் ஜனத்தலைவனாகவோ, பொதுமக்களுக்கு உழைப்பவனாகவோ, தன்னை ஆக்கிக் கொள்ளக் காரணமா யிருந்தவை அவனுடைய கல்வியும், அறிவும், விடாமுயற்சியும், சமத்வ புத்தியும் பிறவுமாம். ஆனால் ஒரு பாதிரியோ அல்லது ஒரு திவசம் கொடுக்க வீட்டுக்கு வரும் ஐயரோ, மற்றும் மதத் தலைவரோ ஒரு மனிதனைக் கீர்த்தியுள்ளவனாக்கவில்லை. எந்த வழியில் ஒரு மனிதனுக்குக் கீர்த்தி ஏற்பட்டதோ அதைவிட்டு அக்கீர்த்தியை அறிவற்ற விதமாய், மதம், மதகுருக்கள் என்ற அற்ப காரணத்துக்காக உபயோகிக்க நினைப்பது விவேகமாகாது. பொது மக்கள்பால் நன்றி செலுத்தியதாகாது, பெருந்தன்மையாகாது. நடப்பதைக் கவனியுங்கள். திரு, காந்தியவர்களின் போராட்டத்தில் மிக்க கவலையோடு உழைத்து வந்த ஜோஸப் முதலியவர்களும் புதுவையில் கத்தோலிக்கர் சிலரும் தம் தம் தேசக் கொள்கையைவிட மதக் கொள்கை பிரதானமென்று கருதி நடந்து வருகிறார்கள். - புதுவை முரசு, 4. 5. 1931, ப. 3 48. சொல்வதென்ன? நடப்பதென்ன? ஏசுவானவர் பாவிகளை ரக்ஷிக்கும் பொருட்டு தனது உயிரைத் தியாகம் செய்தார் என்று கிறீஸ்துவப் பாதிரிமார்கள் உபந்யாசம் செய்கிறார்கள். ஏழைகளைக் காப்பாற்றும்பொருட்டு தனது ரத்தத்தைச் சிந்தினார் என்று பிரசங்கம் செய்கிறார்கள். நமது ஜனங்களும் அதை நம்புகிறார்கள். எப்படியோ 60 லட்சம் கிறீஸ்துவர்களும் இந்தியாவில் சேர்ந்துவிட்டார்கள். அதைப்பற்றி நமக்கு எள்ளளவும் கவலை கிடையாது. ஏனெனில், இந்த 60 லட்சம் பேர்களும் இந்துமதத்தில் இருந்து சாதித்ததைவிட அதிகமாகவோ குறைவாகவோ கிறீஸ்து மதத்திலும் சாதித்துவிடப் போவதில்லையென்பதே நமது அபிப்பிராயம். வேண்டுமானால் இந்துமதத்தில் இருந்ததைவிட சற்று மதவெறி அதிகம் பிடிக்கும்; பதில் சொல்லமுடியாவிட்டால் எதற் கெடுத்தாலும் சகித்தான் என்று சொல்லிவிடலாம். இதைத் தவிர வேறு பகுத்தறிவோ அநுபவ முதிற்சியோ கிறீஸ்து மதத்தில் அதிக மாய்க் கிடைத்துவிடும் என்று நாம் சிறிதுகூட சந்தேகிக்கவில்லை. ஆகவே கிறீஸ்து மதத்திற்கு இருக்கும் பணக்கொழுப்பும் அரசாங்க ஆதரவும் இருக்கும் வரையில் அது அவ்வளவு பயமில்லாமல் இருக்கலாம். இருந்துவிட்டுப் போகட்டும் ஒன்றும் முழுகிப் போகாது. ஆனால் நாம் கேட்பதெல்லாம் ஒரு விஷயந்தான். கிறீஸ்துவர்கள் சொல்லுகிறபடி நடக்கிறார்களா? உனது ஒரு கன்னத்தில் அறைகிற வனுக்கு மற்றொரு கன்னத்தையும் காட்டு என்று வேதநூல் கதறுகிறது உனது மேலங்கியை எடுத்துக் கொண்டவனுக்கு உனது கோட்டை யும் கொடுக்கத் தயங்காதே என்று கூறுகிறது. ஆனால் என்ன நடக்கிறது? எவனாவது பாதிரிமார்கள் புரட்டை எடுத்து சொன்னால் அவன்மீது மான நஷ்ட வழக்குத் தொடரலாமா அவனது ஆயுதத்தைப் பிடுங்காலாமா? அவனைக் கஷ்டப் படுத்தலாமா என்று யோசனை போகிறதே, தவிர, யோக்கியமாய், நாணயமாய், மனுஷத் தன்மையோடு, சுய அறிவோடு பதில் சொல்லும் தைரியம் இருக்கிறதா? இது மாத்திரமா? திரு. காந்தியவர்கள் கிறீஸ்துவப் பாதிரிகளைப் பற்றி ஒரு வார்த்தை சொன்னது தான்தாமதம்! பாருங்கள் கிறீஸ்துவத் தலைவர்கள் படுகின்ற பாட்டை. காந்தியைத் தூக்கி விழுங்கி விடலாம் என்று கூட யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்! மிஸ். மேயோ இந்து மதத்தைப்பற்றி இடித்துக் கூறியபோது இந்துமதப் பித்தர்கள் எப்படித் தலைகால் தெரியாமல் காய்ச்சின எண்ணெயில் போட்ட எள்ளுப் பொட்டணம் மாதிரி துள்ளினார்களோ அதைப்போலவேதான் நமது கிறீஸ்துவ சகோதரர்களும் குதித்கிறார்கள். சக்கரைகளுக்கும், ஜோசப்புகளுக்கும், செல்வங்களுக்கும், அற்புத ஆரோக்கிய சாமிகளுக்கும் ஆவேசம் வந்து விட்டது. ஒருமதத்திலும் சேராத நம்மைப் போன்றவர்களுக்கே, எங்கே 2-வது ஏசு கிறிஸ்து திடீரென்று வந்து எல்லோரையும் அழித்து விடுவாரோ என்று பயமாயிருக்கிறது! பாவம்! ஏழை காந்தி கிறீஸ்து நாதர்கோபத்துக்கு ஆளானால் என்னவாகும்? நோவாவெள்ளம் மாதிரி ஏதாவது ஒன்று நடந்தாலும் நடக்கும். அப்போது இந்தச் சக்கரை ஜோசப் கம்பெனிகள் மாத்திரம் ஜாக்கிரதையாகக் காப்பாற்றப்படும்! ஆஹா! என்ன வேடிக்கை! பல நூறு வருஷங்களாக பரம்பரை யாய் கிறீஸ்துவர்களாக இருந்த தேசங்களும் மக்களும் கிறீஸ்து மதத்தைப் புறக்கணித்து விட்டுச் சும்மாயிருக்கும்போது, நேற்றுச் செட்டியாராயிருந்தவர்களும், 2 நாளைக்கு முந்தி உடையார்களாய் இருந்தவர்களும் இன்றும்கூட அந்த அநாகரீகப் பட்டங்களை தங்கள் புனித மார்க்கத்தைச் சேர்ந்த பெயர்களோடு கட்டித் தொங்கவிட்டுக் கொண்டிருக்கிறவர்களும் ஏதோ உலகத்திற்கே அபாயம் வந்து விட்டதுபோல் காந்தியின்மேல் சீறி விழுவதும், தலைவரி கோலமாய் ஆடுவதும் ஒரு வெட்ககரமான காரியமாகவே இருக்கிறது! கிறீஸ்துவத் தலைவர்களே! பாதிரியார்களே! ஏன் இத்தனை ஆத்திரம்! உங்கள் மதத்தில் சிறிதுகூட அப்பு அழுக்கு இல்லை யென்றால், எந்தக் காலத்திற்கும் எல்லா மக்களுக்கும் உபயோகப் படக்கூடியது என்றால், எல்லா உண்மைகளும் உடையது என்றால், புனிதமான மார்க்கமென்றால், கடவுள் அருள் பெற்றவர்களாலேயே ஸ்தாபிக்கப் பட்டது என்றால் இந்தக் காந்தியோ இந்தச் சுயமரியாதை இயக்கமோ இந்தப் பகுத்தறிவு இயக்கமோ, இந்த ரஷியாவோ இன்னும் எவ்வளவு பேர் வந்தாலும் அதை ஒரு அங்குலமாவது நகர்த்த முடியுமா? அப்படியிருக்க உங்களுக்கென்ன ஆவேசம்? அன்று மோஸசைப் போல் ஒரு ஆள் கடவுளுக்குத் தூது போகக் கிடைக்க மாட்டானா? அன்றி கிறீஸ்துவக் கடவுள் கொஞ்சம் கண் திறந்து பார்த்தால் (இப்போது கண்ணைமூடிக் கொண்டிருக்கிறார் என்று சொல்லவில்லை) போதாதா? இந்த காந்தி, அறிவு இயக்கத்தார் எல்லாம் அழிந்துவிட மாட்டார்களா? அப்படியிருக்க நமது நாடார்முதலி, வாண்டையார் உடையார் கிறீஸ்துவர்களுக்கு மாத்திரம் ஏன் இத்தனை ஆத்திரம் வரவேண்டுமென்பது நமக்கு விளங்கவில்லை கிறீஸ்து மதமே உண்மையான கொள்கைகளையுடைய மதமென்றால் தானாகவே நிலை பெற்று விடுமல்லவா? ஓ! ஒருவேளை இப்படியிருக்கலாம்! கடவுளில் பத்துக் கட்டளை களுள், நான் ஒரு பொறுமையான கடவுள்: மற்றொரு கடவுளை மனிதர் வணங்குவதைப் பொறுக்கமாட்டேன். ஒருவன் இவ்வாறு செய்தால் அவனுடைய மூன்றாவது நான்காவது தலைமுறைவரையில் துன்பப் படுத்துவேன் என்று கிறீஸ்துக் கடவுள் சொல்லி யிருக்கிறா ரல்லவா? அதனால் தான் கிறீஸ்துப் பாதிரிகளும் தலைவர்களும் பதறுகிறார்கள். மதம் ஒழிந்த மனிதனே மனித சமூகத்திற்குப் பயன்படுவான். - புதுவை முரசு, 11. 5. 1931, ப. 10 - 11 49. அறிஞர் வீராஸ் மறைந்தார் பிரஞ்சு இந்தியா உண்டானதிலிருந்து இன்றுவரை - இந்தக் கறுப்பு மனித சமூகமானது - எங்களிடையில் குறிப்பிடத்தக்க பேரறிஞர்கள் இருந்தார்கள் என்று பெருமை பேசிக்கொள்ள இந்நாள் மட்டும் தோன்றிய பேரறிஞர்களில், பிரதான மனிதராகிய திரு. வீராசாமி இன்று (08.05.31) மரணமானது கேட்டு நாம் வருந்தினோம். திரு. வீராஸ் சுமார் 50 ஆண்டில் உயிர் நீத்திருக்கிறார். அதனால் பிரஞ்சிந் திய மக்கள் ஒர் சட்ட ஞானியை (வக்கீல்) இழந்தார்கள். ஏழை மக்கள் ஓர் கொடை நண்பனை இழந்தார்கள். புதிய வக்கீல்கள் தங்கள் ஆசிரியனை இழந்தார்கள். ஜெயிக்காது என்று தெரிந்த வழக்குடைய வர்கள் தங்கள் காப்பாளனை இழந்துபோனார்கள். கறுப்பர்கள் தம்மில் வேறானவர்கள் என்ற அகம்பாவமுடைய வெள்ளையரை, ஜாக்ரதை என்று பாயும் சிங்கத்தைக் கறுப்புச் சமுகத்திற் பரிவுகாட்டும் சமூக அன்பர்கள் இழந்து போனார்கள். பாஷை நடையை விரும்பும் சில நண்பர்கள் ஓர் இனிய வீணையை இழந்து போனார்கள். கிண்டற் பேச்சை விரும்பும் அன்பர்கள் ஓர் பிரஞ்சு விதூஷகனை இழந்தார்கள். சுயமரியாதை உலகம் ஒப்பு - உவமையற்ற சுயமரியாதைக்காரரை இழந்து வருந்துகிறது. நாம் நமது ஆயத்த வாளாயுதத்தை இழந்து போனோம். சட்டதிட்டம், ராஜீயம், பொருளாதாரம், தொழில் முதலிய பல துறையிலும் திரு. வீராஸ் அறிவுடையவர் என்பது சிற்சிலர் அறியாம லிருப்பார்கள். இவர் பிரஞ்சு தேசத்தில் உயர் உத்தியோகம் பார்த்திருக் கிறார். பிரஞ்சுகாலனியில் நீதிபதி உத்தியோகம் வகித்துள்ளார். பிரஞ்சிந்தியாவிலும் அப்படியே கடைசியில் பல்லாண்டு வக்கீலாக இருந்துவந்தார். தமது வக்கீல் தொழிலில் பிற வக்கீல்களே வியக்கத் தக்கபடி, வழக்குகள் பலவற்றை நுட்பமான வகையில் ஜெயித்துள்ளார். லௌகீக ஞானமிக்கவர். அறிஞர் வீராஸ் தமது நல்லறிவைத் தமது தீப்பழக்கம் ஒன்றுக்குப் பலியிட்டதை நாம் மறைக்க முடியவில்லை. அத் தீப் பழக்கம் என்பதுதான், மது வருந்துதல். உலக மக்கள் பொன்னுடையரேனும், புகழ் உடையரேனும், மற்று என் உடையரேனும், மதுவருந்தும் தீப்பழக்கம் உடையவரானால் அவர்களிடமுள்ள எல்லா நலன்களும் இல்லாது ஒழியும் என்ற உண்மையை, இந்த உலகத்திற்கு எடுத்துக்காட்ட ஸ்ரீ வீராசாமி தம் முயிரைத் தியாகம் பண்ணிக் காட்டப் பிறந்தாரோ என்று நாம் நினைக்கின்றோம். அந்தோ வீராஸ் மது வருந்துவது மிகக் கொடியது என்ற உண்மையை உமது நாடகத்தால் உலகம் அறிந்துவிட்டது; இனி நீவிர் உயிர்பெற்றுத் திரும்புவீரா? இல்லை. திரு வீராஸ் பிரிவால் வருந்தும் அவர் மனைவி, ஈரிள மைந்தர்கள், உற்றார் நண்பர்கட்கு நாம் நமது அநுதாபத்தைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம். எவரும் மது வருந்தாதிருங்கள்! மது வருந்துவோர் அப்பழக்கத்திற்கு அடிமையாகாதிறான். - புதுவை முரசு, 11. 5. 1931, ப. 17 - 18 50. ஹிந்திப் புரட்டு ஓர் ஊரில் ஒரு தொம்பன் தனது குடிசைக்குள்ளிருந்தபடியே ஐயையோ! கெங்காதரா! மாண்டாயே! கெங்காதரா, மாண்டாயே என்று அலறி யழுது கொண்டிருந்தான். திடீரென்று அழுகைக் குரலைக் கேட்ட அவனது சுற்றத்தார்கள் மிகவும் திடுக்கிட்டுக் குடிசையில் நுழைந்து அவன் அலங்கோலமாய் அழுவதைக் கண்டு அவனைக் கட்டிக்கொண்டு இவர்களும் ஐயையோ, கங்காதரா மாண்டாயா! என்று 2 மணிநேரம் வரையில் அழுதார்கள். பிறகு ஒருவாறு அழுகை ஓய்ந்து, வந்த ஜனங்களெல்லாம் அவனை நோக்கி, அடே! என்னப்பா நேர்ந்துவிட்டது? உனது குழந்தை சௌக்கியந்தானே? என்று கேட்டார்கள். அதற்கு அவன் ஒன்றும் பதில் சொல்லாமல் அவர்களை அழைத்துக் கொண்டுபோய், குடிசையின் ஒரு மூலையில் பனை ஓலையினால் மூடி வைக்கப்பட்ட ஒரு இறந்த பன்றிக்குட்டியைக் காட்டி, அடே, என் கங்காதார! மாண்டாயே என்று கத்தினான். வந்திருந்தவர்களெல்லாம் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தார்கள் சே! என்ன வெட்கக்கேடு! இந்தப் பன்றிக்குட்டி இறந்ததற்காகவா இந்தக் கூக்குரல் போட்டான்! ஐயோ! நாமும் முதலிலேயே என்ன விஷயம் என்று கேட்காமல் இத்தனை நேரம் அழுதோமே, என்று பேசிக் கொண்டு வெட்கிப் போய் வெளியே சென்றார்கள். இச்சம்பவம் உண்மையாய் நடந்ததா இல்லையா என்று பலர் சந்தேகிக்கலாம். சந்தேகம் வேண்டாம். இதைவிட மூடத்தனமான விஷயங்கள் பல நமது கண்முன் இப்போதே நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. ஹிந்தியே நமது தேசீய பாஷை - அதைப் படிக்காதவர் களெல்லாம் தேசத் துரோகிகள் என்று ஒருவர் சொல்லிவிட்டார். சொன்னதுதான் தாமதம்! நமது தென்னாட்டுத் தேசபக்தர்கள் தலைகால் தெரியாமல் குதிக்கிறார்கள். ஹிந்தி படியுங்கள் என்று திரு காந்தி சொன்னார். உடனே எல்லாத் தேசபக்தர்களும் ஹிந்தி படியுங்கள், ஹிந்தி படியுங்கள் என்று தாங்களும் கத்தவேண்டியது கடமை என்று நினைத்துக் கத்தத் தொடங்கிவிட்டார்கள். யாராவது தட்டிச் சொன்னால் தேசத் துரோகி என்று பூச்சாண்டி காட்டுகிறார்கள். ஹிந்தியைக் கற்க வேண்டியதற்கு அவசியமென்னவென்பதைப் பொது ஜனங்கள் சற்று நிதான புத்தியுடன் யோசித்துப் பார்க்குமாறு கேட்டுக் கொள்ளுகிறோம். ஹிந்தி பாஷையில் சிறந்த நூல்கள் இருக்கின்றன என்பதாலா? இன்றைக்கு ஒருவன் ஹிந்தியைப் படிக்கத் தெரிந்துகொண்டதாக வைத்துக் கொள்வோம். அவன் படிக்கக்கூடிய புஸ்தகம் எது என்றால், உடனே கபீர்தாஸ் ராமாயணம் என்பார்கள். அதற்கு அடுத்தபடியாக ஏதாவது சொல்லவேண்டுமானால் பகவத் கீதை மொழி பெயர்ப்பைக் கையில் எடுக்கவேண்டியது தவிர, அறிவை விசாலப் படுத்தக்கூடிய நூல்கள், எல்லா மக்களும் படித்தறிய வேண்டிய நூல்கள் ஏதேனும் ஒன்றாவது உண்டா என்று கேட்கிறோம். அல்லது இலக்கியச் சுவை ஹிந்தியில் மாத்திரம் இதர பாஷைகளைவிட அதிகம் ததும்புகிறது என்பதற்காக அதைப் படிக்க வேண்டுமா? இல்லவே இல்லை. ஹிந்தியைவிட இலக்கியச் சுவை அதிகம் நிறைந் துள்ள பாஷைகள் இந்தியாவிலேயே எத்தனையோ இருக்கின்றன. இன்னும் உலகிலுள்ள இதர பாஷைகளில் அநேகம் ஹிந்தியைவிட, பல வழிகளிலும் சிறந்ததாக இருக்கின்றன. இப்படியிருக்க ஹிந்தியை நமது மக்கள் கற்றுக்கொள்ள வேண்டுமென்று வற்புறுத்துவதானது எந்தக் காரணத்தைக்கொண்டு என்று கேட்டால், இந்தியாவின் பெரும் பாலோர் ஹிந்தியே பேசுவதால்; அதைப் பாக்கியுள்ள கொஞ்சத் தொகையினரும் கற்றுக்கொள்வது இலகுவாயிருக்கும் என்கிறார்கள். அதிகம்பேர் ஒரு காரியத்தைச் செய்கிறார்கள் என்பதற்காக, பாக்கி யுள்ளவர்களும் கண்மூடித் தனமாக அதைப் பின்பற்றவேண்டு மென்பது வடிகட்டின முட்டாள்தனம் தவிர வேறொன்று மில்லை. மனிதன் அதிகமாகச் சுவாசித்தால் அவனுடைய ஆயுள் குறை வடைகிறது என்பதை உடற்கூற்று நூலில் வல்லுநர்களெல்லாம் ஆராய்ச்சி செய்து முடிவுகட்டியிருக்கிறார்கள். ஹிந்தி பாஷையோ சமஸ்கிருதம் தெலுங்கு முதலிய பாஷைகளைப்போல் வார்த்தைகளை உச்சரிப்பதற்கு மூலாதாரத்திலிருது சப்தத்தைக் கிளப்பி அநாவசியமாக மனிதம் சர்க்கஸ் செய்துகொண்டே பேசவேண்டிய பாஷையாயிருக் கிறது. மக்களினுடைய வாழ்வில் சாதாரணமாய்ப் பேசுதற்கு மாத்திரம் இவ்வளவு சுவாசத்தை அநாவசியமாகச் செலவழிப்பதானது அறிவுக்குப் பொருத்தமாக இல்லை. தமிழ், மலையாளம், இங்கிலீஷ் போன்ற மொழிகள் மிகவும் இலகுவாகவும் குறைந்த சுவாசச் செலவிலும் பேசப் படக் கூடியதாய் இருக்க, அடி வயிற்றிலிருந்து கிளப்பும் பாஷைகளில் ஒன்றாகிய ஹிந்தியை மக்கள் கற்றுக் கொள்ளவேண்டுமென்று சொல்வது மிகவும் அக்கிரமம் என்றே சொல்லுவோம். அது மாத்திரமல்ல, ஹிந்தியை ராஜீய பாஷையாக ஆக்கி விட்டால் வருங்கால சுயராஜ்யத்தில் கஷ்டமிருக்காது என்று தேச பக்தர்கள் சொல்கிறார்கள். ஆம், மிக்க உண்மைதான். நமது ஜனங்கள் எப்போதும் இராட்டினத்திலும் தக்ளியிலுமே நூல் நூற்று உடை தரித்துக் கொள்வதென்றிருந்தால் ஹிந்தி பாஷையே போதும். எப்படி யென்றால், ராம பஜனையைச் சொல்லிக் கொண்டு தக்ளி நூற்றுக் கொண்டிருப்பதும், ஒழிந்த நேரங்களில் துளசிதாஸ் இராமாயணத்தை வைத்துக்கொண்டு சீதையின் கஷ்டத்தைப் பாடிப்பாடி அழுது கொண்டுமிருப்பதுமே இந்தியாவின் கடமையென்று நிர்ணயிக்கும் திரு. காந்தி போன்றவர்களுக்கு ஹிந்தியே போதும். அப்படியின்றி வெளிநாடுகளோடு வியாபாரப் போட்டியில் ஈடுபட்டு, வெளிநாட்டுக் கல்விகளைக் கற்று, இதர தேசங்களோடு அறிவு ஆராய்ச்சியில் போட்டி போடவேண்டுமென்றிருந்தால் அப்போது, திரு. காந்தி, ஜவகர்லால், ராஜகோபாலாச்சாரி, மாளவியா முதலியவர்களை அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான், ஆஸ்திரேலியா முதலிய தேசங்களுக்கு அனுப்பி ஹிந்திப் பிரசாரம் செய்யச் சொல்ல வேண்டியது தவிர வேறு மார்க்க மில்லை. மேல் உலகத்தில் போவதற்கும், அதற்கான புஸ்தகங்களைப் படிப்பதற்கும், திரு காந்தி கட்டியழும் ராமனை எல்லோரும் கட்டி யழுவதற்கும், பார்ப்பன சாஸ்திரங்களும், வேதங்களும், புராணங்களும் எப்போதும் நிலைபெற்றிருப்பதற்கும், பார்ப்பான் இதுவரை செய்த புரட்டுகள் போதாமல் இனியும் ஹிந்தியை ஆயுதமாக வைத்துக் கொண்டு பாமர மக்களை மிரட்டுவதற்கும் செய்யப்பட்ட சூழ்ச்சியே தவிர, ஹிந்தி பிரசாரத்தில் வேறொன்றுமே யில்லையென்பதை நாளடைவில் மக்கள் தாமாகவே உணர்ந்து கொள்வார்களென்பதை உறுதியாய்க் கூறுகிறோம். இன்னும் நமது தமிழ் நாடு சம்பந்தப்பட்டவரையில் ஹிந்திப் பிரசாரம் செய்வதானது நமது தமிழ் மொழியை அழிப்பதற்கு அரசியல் பார்ப்பார்கள் செய்யும் சூழ்ச்சியேயாகும். இந்தியாவிற்குப் பொதுவான ஒரு பாஷை வேண்டுமென்றால், அது உலகத்திற்கே பொதுவானதாக இருக்கும் இங்கிலீஷ் போன்ற பாஷைகளாக இருக்க வேண்டுமே தவிர, சபர்மதி ஆசிரமமும் இராம பஜனையுமே உலகம் என்று நினைத்திருக்கும் தேசீயத் தலைவர்கள் சொல்லும் ஹிந்தி பாஷையாயிருக்க முடியாது! இருக்கக் கூடாது என்பதை வலியுறுத் துகிறோம். ஆகவே இந்தத் தருணத்தில் நமது தென்னிந்தியா வாசிகள் ஏமாந்து போகாமல், ஹிந்தியை நம்மிடம் புகுத்தாமல் தடுப்பதற்கு வேண்டிய கிளர்ச்சிகள் செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்ளு கிறோம். முக்கியமாக, தமிழ்ப் பண்டிதர்களும், சைவ சித்தாந்திகளும் இந்தச் சமயத்தில் சற்று விழிப்பாகவே இருக்கவேண்டுமென்று எச்சரிக்கை செய்கிறோம். இன்னும் சுயமரியாதைக்காரர்களும் இது விஷயத்தில் கவனமாயிருக்க வேண்டியதோடு, ஹிந்திப் பிரசாரத்தைக் கண்டித்துப் பிரசாரம் செய்ய வேண்டுவதும் அவசியம் என தெரிவித்துக் கொள்ளுகிறோம். - புதுவை முரசு, 18. 5. 1931, ப. 10 - 12 51. மானிடம் போற்று! உன் தாய் தந்தையரின் சேர்க்கையால் ஏற்பட்ட கரு வளர்ந்தது. நீ உன் தாய் வயிற்றில் உருவடைந்தாய். மருத்துவச்சி, பிற பெண்டிர்கள், உதவியால் நீ குழந்தையாக வெளிப்பட்டாய், தாய் காத்துவந்தாள். தந்தை காத்து வந்தார். பிள்ளைப் பருவத்தில் நோய்கள் அடைந்தாய். வைத்தியர் சிகிச்சை செய்தனர், 6 வயது அடைந்தாய். கல்விச்சாலை சென்றாய். ஆசிரியர் பேருதவி பெற்றாய். நீ சுறுசுறுப்போடு வேலை செய்தாய். சகபாடிகள், ஆசிரியர்களிடம் தக்கபடி நடந்து கொண்டாய். அவர்களால் பெறத்தக்கன பெற்றாய். பரீக்ஷையில் தேர்ச்சியடைந்தாய். பிறகு உன் அறிவையும். முயற்சியையும் நன்கு உபயோகித்தாய். ஒவ்வொரு நிமிஷத்திலும் இவ்வுலகியலோடு உன்னை ஒத்திட்டுப் பார்த்துப் பார்த்து வெகு ஜாக்ரதையாக நடந்து கொண்டாய், நினைத்துப்பார். நீ உன் தாய் தந்தையராலும் ஆசிரியராலும், வைத்தியராலும், பிற மனிதர்களாலும் அடைந்த நலன்களை விடாது யோசி. நீயும் ஓயாதுழைத்ததையும், உனக்கு அவ்வப்போது தீமை செய்யக் காத்திருந்த மனிதர்களிடம் - காட்டு முட்களிடம் பட்டுக்கொள்ளாமல் முன்னுக்கு வந்ததையும் வரிசையாய் எண்ணிப்பார். சுருக்கமாய்க் கூறுவதைக் கேள்: மனிதர்கள் பிறவி யடைந்தாய், மனிதனாகப் பிறந்தாய். மனிதரால் சகாயம் பெற்றாய். மனித அறிவு பெற்றாய். ஓர் அழகிய மனிதனாய் விளங்குகிறாய். செல்வமுள்ள மனிதனாய் விளங்குகிறாய். மனிதன் வேண்டிநிற்கும் மனிதத் தன்மையை அடைந்து விளங்குகின்றாய். இன்னும் சுருக்கமாய்க் கூறுகிறேன்: உனது இன்றைய பேஷான நிலைக்குப் பிற மனிதர் காரணம். நீ காரணம், நீயும் மனிதன் என்பதை மறக்காதே! இன்னும் சுருக்கமாய்க் கூறுகிறேன். நீயும் பிறரும் ஆகிய மனிதர் உனது இன்றைய மனிதத் தன்மைக்குக் காரணம். இதைத்தான் மானிடத் தன்மை. மனிதத் தன்மை உயர்வடைகிறது என்று சொல்வது. நண்பா! உன்னில் வேறாகாத மானிடத் தன்மையில் உனக்கு எவ்வளவு பொறுப்பு இருக்கவேண்டும்? உன்னுடையதான மானுஷீகத் தன்மையில் அதாவது உலக மனிதர்களிடம் நீ எவ்வளவு மதிப்பு வைக்கவேண்டும்! உலக மக்களுக்கு நீ ஞாயமாக உயர்வு தந்து அதனால் நீ உயர்வு பெற வேண்டும். எது நீயோ அதை மதிப்பதிலும், எது நீயோ அதை உயர்வுபடுத்துவதிலும் அதன்பால் நீங்காத பற்றுக் கொள்வதிலும் நீ பின் வாங்கலாமா? மானிடம் போற்று! அதனிடம் நீ நன்றி செலுத்து. இதை விட்டு நீ ஒவ்வொரு சமயம் பிழையாக நினைக்கிறாய். மானுஷீகத்தை இகழ்கின்றாய். அது செய்த நன்றியை மறக்கின்றாய். அந்தோ உனது - உலக - மானுஷீகத்தை நீ கொலை செய்கின்றாய். எடுத்துக் காட்டுகின்றேன், நீ ஒவ்வொரு சமயத்தில் உனது இன்றைய உயர் நிலைமையைக் கடவுள் செயல் என்றும், முன்பிறப்பில் நான் செய்த புண்ணியம் ஓடிவந்து, என்னை அறியாமல் இந்த உயர் நிலையை உண்டாக்கிற்று என்றும் கூறுவதுண்டு. நீ உன் தாய் வயிற்றில் உதித்தாய். பிறந்தாய், வளர்ந்தாய், உழைத்தாய், வருந்தினாய், கற்றாய், நினைத்துப்பார். உனது அவ்வப் போதைய நிலைமைக்குக் கடவுளா? முன் பிறப்பா காரணம்? நீயும் பிறரும் காரணம் என்பதை அறியவில்லையா? மனித உயர்வுக்கு மனிதர்களே காரணம் என்பதை மறுப்பது ஞாயமாகுமா? எந்த இடத்தில் எவ்வித நன்மைக்குக் கடவுள் காரணமா யிருந்தார் என்பதை நீ விளக்கிக் காட்ட முடியுமா? மனிதரால் வந்தாய், மனிதரால் வளர்ந்தாய். மனிதரால் பற்பல உதவி பெற்றாய். மேலும் உனது மனிதத் தன்மையை நீ நன்றாய் உபயோகித்து நலன் எய்தினாய். கண்ணை மூடிக்கொண்டு, உன் உயர்நிலைக்கும் தாழ்நிலைக்கு கடவுள் காரணம் என்றால் மானுஷீகம் பொய் என்கிறாயா? உன் கண்ணில் உன் அநுபவத்தில் உன் அறிவில் தெரியும் மானுஷீகம் பொய்யா? உன் கண்ணில், உன் அநுபவத்தில், உன் அறிவில் தெரியாத கடவுள்தானா அனைத்துக்கும் காரணம்? என்ன வேடிக்கை? அதையாகிலும் நிச்சயமாய் நம்புகிறாயா? தெரியாத கடவுளை அனைத்துக்கும் காரணம் என்று நீ சொல்லுகிறாய். நம்புகிறாயா? அப்படியானால் அனைத்துக்கும் காரணம் கடவுள் என்று நீ சும்மா இருப்பதில்லை. மாலைச் சாப்பாட்டுக்கு அரிசியில்லை யென்று தெரிந்தால் உன்னை, உன்னிடமுள்ள மானுஷீகத்தை, என்ன துரிதமாய் அரிசி பெறும் வகையிற் செலுத்துகிறாய்? சும்மா இருக்கவில்லை அந்த நிலையில் நீ, கடவுள் எல்லாவற்றிற்கும் காரணம் என்பதை நம்பாதது சரியே! சந்தேகம் வேண்டாம். அது போலவே எந்த இடத்திலும் நம்பு. மனிதரை நம்பு! மனிதரை மதி! மனிதக் கூட்டத்துக்கு நன்றி செலுத்து. நீ பார்க்கும் எந்த மக்கட் சமூகத்திலாவது மேன்மை இருப்பதை நீ கண்டால் அதே சமூகத்தில் மானிடம் போற்றும் குணம் இருந்தே தீரும். விளங்கும்படி கேள்: உன் பொத்தானின் வளையம் வீழ்ந்து போனாலும் நீ நாலணா அதிகம் சம்பாதித்தாலும் அதாவது லாபத்திலும் நஷ்டத்திலும் கடவுளையே இழுத்துப்போட்டு யோசனை செய்யும்படி உன்னை ஆக்கியவர்கள் யார்? அது போலவே உன் பெற்றோரை, உன் பாட்டன்மார்களை ஆக்கியவர்கள் யார்? கடவுளின் தரகர், பாபத்தைப் போக்குவதாய்ச் சொல்லும் திருடர், நயவஞ்சகர் அவர்களை நீ ஊன்றி நோக்கு. அவர்கள் சோம்பேறிகள். நீ வருந்தியுழைத்ததைப் பிடுங்க நினைப்பவர்கள் வார்த்தையை நம்பாதே. பிறர் தாக்ஷண்யத்திற்காக அன்றிச் சுதந்தர புருஷனாக யோசி. உன் யோசனையிற்பட்டதைத் தைரியத்துடன் காரியத்தில் கொண்டு வா. அப்போது உன் செயல் எப்படி இருக்கும் தெரியுமா? நீ மனிதரை உயர்வு செய்யும் மனிதனாவாய். மானுஷீகத்தை உயர்வு படுத்தி அதன்பால் நன்றி செலுத்தும் மேன்மகனாக விளங்குவாய். - புதுவை முரசு, 18. 5. 1931, ப. 13 - 14 52. புதுவையில் பெருங்காற்று! 13.05.1931 இரவு 11 மணி சுமாருக்கு வாயு பகவானுக்குக் கோபம் துவக்கிற்று. இதுபோலவே சென்ற ஆண்டிலும் ஒருமுறை கோபித் தான். 1916இல் பெருங்கோபம். அது மகா பெரியது. அதை நோக்க நேற்றடித்த காற்றின் வேகத்தை, வாயுபகவான் முதல் முறை குடித்த குடியன் பல்லை நறநறவென்று கடித்தான் என்று சொல்லத்தகும். 1916-ம் சரி, சென்ற ஆண்டிலும் சரி, நேற்றும் சரி, வாயுபகவான் கோபித்த செய்தி வாயுபகவான் அன்பர்கட்கு முன்னதாகத் தெரிவிக்க வில்லை. வாயுபகவான் அருள் பெற்றவர்கள், தாமாகவே முன்னரே அறிந்துகொள்ளவும் கூடுமாயில்லை. மேலும் இந்த வாயு பகவானைத் தொடர்ந்து தோன்றிய வருண பகவானாவது முன்னெச்சரிக்கை செய்ததுண்டா? இந்த வருண பகவான் வருவதற்கு முன் இந்திரன் ரதம் செலுத்தியதால் ஏற்பட்ட இடி முழக்கமும் மற்றும் மின்னலும் உண்டாகுமென்று இந்திரன் தனது அன்பர்கட்குத் தெரிவித்ததுண்டா? இந்திரன்தான் சொல்லவில்லை. அன்பர்களாவது முன்னறிந்து சொன்னதுண்டா? அவ்வளவு வர்மமா? வாயு பகவான், வருண பகவான், இந்திரன், இவர்கள் இந்து மதத்தவர்கள் பால் பெற்று வரும் பூசனை கொஞ்சமா? வேதம் என்னும் மகோந்நத நூலின் உச்சியிலிருந்து கொண்டு இந்துக்களின் வாழ்வு தமக்காக என்று சொல்லுகிறார்கள் அல்லவா, இக்கடவுளர்கள்! நிகழப்போகும் உற்பாதத்தை முன்னே உணர்த்த இக்கடவுளர்கட்கு எண்ணமில்லையானால், மக்களிடம் பூசனை பெறுவதில் அக்கடவுள் களுக்கு வெட்க மில்லையென்றுதான் சொல்லவேண்டும். நாம் பூசனை புரிகிறோம். மேற்படி கடவுள்கள் பூசனை பெற்றுக் கொண்டதாய்க் கேள்விப்படுகிறோம். இவைகள் கடவுள்கள் என்பதற்கு நாம் அடையாளம் கண்டதில்லை. மேலும் பூசனை பெற்றதாயுள்ள கடவுள் உற்பாதத்தை நமக்குத் தெரிவிப்பதன் மூலம் அவை நம்மிடம் நன்றி செலுத்தும்; அருள் கொள்ளும்; ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. நிற்க. இந்திரன், வருணன், வாயு ஆகிய தேவர்களின் பேரால் மக்களிடம் பணம் தண்டுவதோடு, இத்தேவர்களைச் சொல்லியே தம்மை உயர்வுபடுத்திக்கொண்டு வந்த வேதியர், மற்றும் மக்கட்கு ஏற்படும் தீமைகளைக் கடவுளிடம் விண்ணப்பத்தின் மூலம் தெரிவித்து நன்மை வாங்கித் தரும் மற்ற குருக்கள், அர்ச்சகர், அடியார்கள் அனைவரும் மேற்படி இந்திராதியரால் பெருங்காற்று, பெருமழை, பேரிடி, முதலிய உற்பாதத்தை முன்னறைந்து - சொல்லலாகாதா? சொன்னால் போதாது. உற்பாதம் உண்டாக்கும். இந்திராதியரை வேண்டாம் என்று தடுக்கலாகாதா? பகுத்தறிவுக்காரர்கள் இயற்கையால் உண்டாகும் நன்மை, தீமைகள் கடவுளால் உண்டாவதாய்ச் சொன்னால் நம்பக்கூடாது என்கிறார்கள். நம்புவதாயினும் காசைப் பறிகொடுக்காதே என்கிறார்கள். நேற்றுக் காற்றடித்தது. மக்களை அச்சுறுத்தியது. சிறிது சேதம் உண்டாக்கிற்று. மழையடித்தது. இடி இடித்தது. சேதமில்லை. மழையால் நன்மைதான். கடவுள் செய்தி இதில் ஒன்றுமில்லை என்று தோன்றுகிறது. ஆயினும், வெள்ளைக்காரன் செய்து வைத்துள்ள யந்திரங்கள், இவைகள் நிகழப் போவதை முன்னால் அறிவிப்பதுண்டு. கடவுள் அடியார்கள் அறிவிப்பதில்லை. அவர்கட்குச் சங்கதி புரிவதேயில்லை. ஆனால், ஒன்று! ஆதிகர் மாத்திரம் மழையையும், வருட பலாபலன்களையும் தெரிவிப்பதாய்ச் சொல்லும் பஞ்சாங்கத்தை வாங்கி அதில் நிறைய மஞ்சளை அறைத்துப் பூசி வரட்டும். நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. கிண்டற்காரன் - புதுவை முரசு, 18. 5. 1931, ப. 18 53. கடவுள் உண்டா? சுமார் 30-வருடத்திற்கு முன்பு புதுவையில் ஒரு வதந்தி கிளம்பிற்று. நாய் மனிதன்போல் பாடுகிறது, நாய் மனிதன்போல் பாடுகிறது என்று பல பக்கங்களிலும் பேசிக்கொண்டார்கள். என் காதிலும் விழுந்தது. மிகுந்த ஆச்சரியம். அதைப் பற்றியே அனைவரையும் விசாரித்தேன். என்னிடம் புதிதாகக் கேள்விப்பட்ட அந்த மனிதர்களும் அதுபற்றி அதிகம் தெரிந்ததுபோல் எடுத்துக் காட்டிப் புளுகியதுண்டு. பிறகு சில மனிதர், நாய் பாடவில்லை; ஒரு பெட்டி பாடுகிறது என்று சொன்னார்கள். நாய் பாடும் என்பதை நீ நம்பாதே என்றும் கூறினார்கள். அப்படியானால் பெட்டி மாத்திரம் எப்படிப் பாடமுடியும் என்று எனக்குள் ஒரு கேள்வி பிறந்தது. பதில்தான் தெரியவில்லை. நாய் பாடட்டும் அல்லது பெட்டி பாடட்டும்; பாட்டுகளை நான் கேட்பது எப்போது? வண்மை அறிவது எப்போது? பாட்டு எங்கிருந்து துவக்கப்படும்? குரலினிமை எத்தகையது? பெட்டி பாடுவதானால் பெட்டிக்குள் மனிதன் இருக்கக் கூடுமா? நாய் பாடுவது மெய்யானால் பாட்டானது நாய் குலைப்பதுபோல் இருக்குமா? அசல் பாட்டாகவே இருக்குமா? எங்குச் சென்றால் இதன் உண்மைதெரியும்? நூதனமான விஷயங்களுக்கெல்லாம் பேர்போனது சென்னப்பட்டணம் என்கிறார் களே. வீட்டில் யாருக்கும் தெரியாமல் 10 ரூபாயைக் கிளப்பிக்கொண்டு, சென்னப்பட்டணம் போய்ப் பெட்டி பாடுவதை நேரில் கேட்டுவரலாமா? அப்படிச் செய்தால் திரும்பி வீடு வந்து, பணம் திருடியதற்குத் தண்டனையநுபவிக்க வேண்டுமே, என்று பலவாறு சிந்தித்தேன். பெட்டி பாடுவதன் உண்மையறிய எனக்கிருந்த பிரேமையை அளவிட்டுச் சொல்ல முடியாது. தெருவில் யாராவது நூதனமான பெட்டி ஒன்றைத் தூக்கிப் போவதைக் கண்டால், பாடுகிற பெட்டியா என்று கேட்காமலிருக்க என் மனம் சம்மதிப்பதில்லை. அநேக தடவைகளில் என் தாயார் என்னை, என்னடா குழந்தாய்! இரவில் நீ பெட்டி பாடுகிறது பெட்டி பாடுகிறது - என்று வாய் பிதற்றினாயே என்று கேட்டதுண்டு. இது மாத்திரமல்ல. பாடசாலைப் பிள்ளைகளிடம் நான் பேசுவதெல்லாம் பெட்டி பாடுவது பற்றித்தான். இவ்வண்ணம் ஒருவருடம் கழிந்தது. ஒரு நாள் வீதியில் கொட்டு முழக்கோடு நோட்டீ கொடுத்துக் கொண்டு போனார்கள். நோட்டீசை வாங்கிப் பார்த்தேன். ஒரே ஆச்சரியம்! நோட்டீஸின் தலைப்பில், ஒரு பெட்டி; அப்பெட்டியிலிருந்து மேல் நோக்கி வாய் விரிந்துள்ள ஒரு புனல்; அந்தப் புனலின் வாயண்டை உட்கார்ந்து கவனித்திருக்கும் ஒரு நாய் ஆகிய படம் காணப்பட்டது. கிராமபோன் பாடப் போகிறது என்றும், அதைக் கேட்க 2 அணா முதல் 8 அணா வரைக்கும் கட்டணம் என்றும் குறித்திருந்தது. சந்தோஷம் எனக்குப் பொங்கிவிட்டது. ஆனால் ஓர் அதிருப்தி; காலைநேரம் எப்போது நீங்கும்? கற்கண்டுபோல் மாலை 6 மணி எப்போது வரும்? பெட்டி பாடிற்று. அப்பாட்டுப் புனலின் வழியாய் இனிமையாக வெளிப்பட்டது. மனிதக் குரல்! மிக்க இனிமை! பெட்டியைக் கண்ணால் பார்த்தேன். இனிய பாட்டைக் காதால் கேட்டேன். என் பிரேமை தீர்ந்த பாடில்லை. பெட்டியின் உள்ளிருந்து மனிதக் குரல் எப்படி உண்டாகிறது. இதைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதில் நீங்காத ஆசையுண்டாயிற்று. இந்த விருப்பமும் நானும் தவிரச் சாப்பாடுகூட இடையில் பிரதாபமில்லை. ஆனால் சில நாளில் எனக்கு கிராம போன் காட்டப்பட்டது. அதுபற்றிய விஷயம் அனைத்தும் தெளிவு படுத்தப்பட்டது. அவ்வளவுதான். அதே நிமிஷத்தில் கிராமபோன் விஷயத்தில் எனக்கு இருந்த பிரேமை என்னைவிட்டுத் தொலைந்தது. ஒரு விநாடியையும் நான் இப்போது கிராமபோன் நினைப்பில் செலவிடவில்லை. இதனால் நான் சொல்ல வந்தது என்னவெனில், ஒரு விஷயத்தைப் பற்றிய பிரதாபம் அதிகமாய் இருப்பதாயும், அந்த விஷயத்தைப் பற்றிய உண்மையை நாம் சிறிதும் அறியவில்லை என்றும் வைத்துக்கொள்வோம். அந்த நிலையில் அவ்விஷயத்தில் நமக்குப் பிரேமை அதிகம் இருக்கும். அவ் விஷயத்தைப்பற்றிய உண்மையை நாம் அறிந்துகொண்ட பின்போவெனில் அவ் விஷயத்தைப் பற்றிய பிரதாபம் தீர்ந்து விடுகிறது என்பதாம். தற்காலம் மனிதர்களிடம் அதிக பிரதாபத்தில் இருக்கும் விஷயம் எது? அதுதான் கடவுள். இக் கடவுட் பிரதாபம் எவ்வளவு காலமாயிருந்து வருகிறது. எவ்வளவு பேரால் பிரதாபிக்கப்படுகிறது என்பதை யோசித்தால் கடவுளைப் பற்றிய உண்மை இன்று வரைக்கும் ஒருவரும் அறிந்ததில்லை என்பது புலனாகிறது. இக்கடவுள் பிரதாபம் நீங்கி மனிதர்கள் நல்ல நிலைமை அடைய வேண்டுமானால் கடவுள் உண்மையை அறிந்தாக வேண்டும். கிராமபோன் விஷயத்தைத் தெரிந்துகொள்ளும் அத்தனை சுலபமாகக் கடவுள் உண்மையை அறிய முடிந்தால் வெகுநாளைக்கு முன்பே அதை அறிந்திருக்கலாம். ஒரு சந்தேகம். கடவுளைக் கண்டவர்கள் போய் பேசும் சிலர் எப்போது பார்த்தாலும் கடவுளைப் பற்றியே பிரதாபித்துக் கொண் டிருப்பது எதற்காக? கடவுளைக் கண்டவர்கள் போல் பலர் கடவுளைப் பற்றி கதைகளையே சதா கேட்டவண்ணமாயிருப்பது எதற்கு? இன்று வரைக்கும் கடவுளைப் பற்றிக் கூறிக்கொண்டுவந்த மாதிரிகள் அனைத்தும் கடவுளுக்குப் பொருத்தமானவையாக இருந் திருந்தால் கடவுள் உண்மை தெரிந்துபோயிருக்கும். கடவுளுண்மை இன்றுவரைக்கும் தெரியாமலிருப்பதால் மாதிரிகள் அனைத்தும் பிதற்றல்கள் என்றும் மனிதரை ஏமாற்றல் என்றும் முடிந்தது. ஐயோ பாபம், கொலை, களவு, கள், காமம், வியபிசாரம் முதலியவைகள் அனைத்தும் ராஜாங்கமாக நடைபெறக் காரணமா யிருக்கும் கடவுள் பிரதாபம் நீங்க வேண்டும். அக்கடவுளாவது மனிதர் முன் ஓடிவந்து நான் தான் கடவுள்! என்னைப் பற்றிய பிர தாபத்தின் மூலம் உங்கள் வாழ்க்கையில் குளறுபடி இல்லாமல் ஒழுங்கு படுங்கள் என்று சொல்லியிருக்கலாகாதா? இப்படிச் சொல்லாமலும் நம்மால் அறிய முடியாமலும் இருக்கும் கடவுளைப் பற்றி நாமாவது கவலை கொள்ளாதிருக்கலாகாதா? என் பிரேமை - என் பைத்தியம், நீங்கியதற்குக் கிராமபோன் விஷயத்தை நான் அறிந்து கொண்டதுதான் காரணம். கடவுள் பேரைச் சதா மக்கள் சொல்லிக் கொண்டிருக்கக் காரணம் என்ன? கடவுள் கிராமபோன் அல்ல என்பதுதான். - புதுவை முரசு, 25. 5. 1931, ப. 4 - 6 54. விருதுநகரில் நாம் செய்யவேண்டியதென்ன? மூன்றாவது சுயமரியாதை மாகாண மகாநாடு விருதுநகரில் ஜூன் 6, 7ஆம் தேதிகளில் சர். ஹரிசிங்கவர் அவர்கள் தலைமையில் நடைபெறுவதாக நிச்சயிக்கப்பட்டுவிட்டது. சுமார் 6 வருஷங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட சுய மரியாதை இயக்கம் எவ்வளவோ எதிர்ப்புகளுக்கும் இடைஞ்சல் களுக்கும் இடையில் எப்படியோ தத்திக் குதித்துத் தலையெடுத்து வந்துவிட்டது. சுயமரியாதை இயக்கத்தையே அடியோடு அழித்து விடக் கங்கணங்கட்டிக் கொண்டிருந்தவர்களெல்லாம், இன்றைக்கு எந்த நிலைமையில் இருக்கிறார்களென்றால், என் மதத்தில் சுயமரியாதை இருக்கிறது. அதைப் பரவச் செய்யலாமே என்று ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் மதத்தைச் சுயமரியாதையின் பேரால் அரண் செய்தால் போதுமென்றாகிவிட்டது. நாதிக இயக்கமாகிய சுயமரியாதை இயக்கத்தை அழிப்பதற்கென்றே சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட ஆதிக சங்கம் என்பதானது செவ்வாய் தாலி கட்டிப் புதன் அறுபட்ட கதையாகவே முடிந்தது. இன்னும் சைவக் கூட்டங்களில் எனது ஞானசம்பந்தனைக் குற்றஞ் சொல்லும் கூட்டத்தை அழிக்கவேண்டாமா வென்று ஆவேசத்தோடு அலறிய சைவ சித்தாந்திகளெல்லாம் இன்று இருக்குமிடம் தெரியாமலும், சுயமரியாதை இயக்கத்தை மறைமுகமாகவேனும் ஒப்புக்கொள்ள வேண்டிய நிலைமையிலும் இருக்கிறார்கள். இது ஒருபுறமிருக்க, முதல் மகாநாடு செங்கற்பட்டிலும், இரண்டாம் மகாநாடு ஈரோட்டிலும், நடைபெற்றன. இப்போது விருதுநகரில் நடைபெறப் போகும் மகாநாட்டில் நாம் செய்யவேண்டியதென்ன வென்பதை இப்போதே முடிவு செய்துகொள்ள வேண்டியது நம் கடமை யல்லவா? தேர், திருவிழாக்களில் கூடுவதுபோல் கூடிவிட்டு வருவதால் மாத்திரம் எல்லாம் சாதித்துவிட்டதாய்ச் சொல்ல முடியாது. நமது இயக்கத்தை, தற்கால இயக்க கர்த்தாக்கள், தலைவர்கள், முதலானவர்களுக்குப் பின்னும் உயிரோடு வைத்திருக்க வேண்டுமானால், அவ்வித எண்ணம் கடுகளவாவது சுயமரியாதைக்காரர்களுக்கு இருக்குமானால், - இயக்கம் என்றும் பலமாக இருக்கவேண்டுமென்ற நல்லெண்ணம் மகாநாட்டில் கூடும் எவரேனும் ஒருவருக்காவது இருக்குமேயானால் - மக்களினுடைய சுயமரியாதையைக் காக்க வந்திருக்கும் இயக்கமே தனது சுயமரியாதையுடன் எப்போதும் வாழவேண்டுமானால், - மகாநாட்டிற்குப் போகிறவர்கள் செய்யவேண்டிய வேலைகள் அநேகம் உண்டு. அவைகளில் முக்கியமானவைகள்:- 1. இயக்கத்திற்கு மூலதனம் சேர்ப்பதற்காகப் பணவசூல் செய்து அதை ஒரு தக்க கமிட்டியின் வசம் ஒப்புவித்தல் வேண்டும். 2. இயக்கத்தை நன்கு பரவச் செய்வதற்கு இன்றியமையாததான ஒரு தமிழ்த் தினசரியை உடனே ஆரம்பிக்க ஏற்பாடு செய்யவேண்டும். 3. தமிழ்நாட்டில் மாத்திரம் பரவியிருக்கும் இயக்கம் உலகமெங்கும் பரவவேண்டும் என்ற எண்ணம் ஒருவேளை யாருக்காவது இருந்தால், அதற்காக, ஓர் ஆங்கில வாரப் பத்திரிகையை உடனே ஆரம்பிக்கவேண்டும் என்பதற்கு முயற்சிக்க வேண்டும். 4. ஐக்கிய நாணய சங்க (Co-operative Society) முறையில் சுமார் 500 பேர்கள் வேலை செய்யக்கூடிய ஒரு தொழிற்சாலையை ஏற்படுத்தவேண்டும். 5. நமது தமிழ்நாட்டுக்குச் சம்பளத்தோடு வேலை செய்யக்கூடிய ஆண் பெண் தொண்டர்களை ஏற்படுத்தவேண்டும். அதே மாதிரி தெலுங்கு, மலையாளம் முதலிய பாகங்களுக்கும் சம்பளம் கொடுத்துச் சில பிரசாரகர்களை நியமித்தல் வேண்டும். ஆகவே இதுபோன்ற காரியங்கள் நடைபெறவேண்டுமானால் தலைவர் திரு. சௌந்திரபாண்டியனவர்கள் மகாநாட்டிற்கு முன்பு செய்யவேண்டிய காரியம் ஒன்றுண்டு. அதுதான் சுயமரியாதைச் சங்கத்தை ரிஜிடர் செய்யவேண்டியதாகும். இந்தக் கடமையைத் தலைவரவர்கள் மாநாட்டிற்கு முந்தியே செய்வார்களா? - புதுவை முரசு, 25. 5. 1931, ப. 10 - 11 55. சென்னையிலுங்கூட முட்டாள்கள் உண்டு பிரிட்டிஷ் இந்தியாவில் சென்னை நகரானது ராஜதானிக்கே தலைநகராகும். ஆகவே, இதர இடங்களைவிட அதிகமான நாகரீகமும், இயந்திர சாதனங்களும் படிப்பு வசதிகளும் சென்னையில் இருக்க வசதியுண்டு என்பதைப் பலர் அறிவார்கள். ஆனால் வெளியூர் ஜனங்கள் சென்னை நகர் என்றால் அதிலுள்ள எல்லா ஜனங்களும் அறிவாளிகள் என்றும், பெண்களெல்லாம் படிப்பும் நாகரீகமும் மிகுந்தவர்களாகவே காணப்படுவார்கள் என்றும் இன்றுவரை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். *** சென்னை நகரில் படித்தவர்களுடய புத்தியானது பள்ளிக் கூடத்தோடும் புதகங்களோடும் சரி. தினசரி வாழ்க்கையில் அப் புத்தியானது பெரும்பாலும் மழுங்கிப் போய், 100க்கு 99க்குமேல் படிக்காதவர்களைவிட மோசமாகவும் அநாகரீக மாகவும், முட்டாள் தனமாகவுமே இருக்கிறார்கள். ஆனால் படிப்பில்லாத ஜனங்கள் மேல்நாட்டு நாகரீகம் முதலியவற்றைப் பார்த்தாவது சற்றுப் பகுத்தறிவோடு நடக்கிறார்களா என்றால், அதுவும் 1000க்கு ஒன்றுகூடத் தேராத வழியில்தான் இருக்கிறது. எப்படியெனில், *** மூன்றாம் பிறைச் சந்திரன் காணக்கூடிய தினம் வந்துவிட்டால் போதும். வீட்டு மேல் மாடிகளிலும் சந்து பொந்துகளிலும் கடைவீதி பெருவீதி முதலிய இடங்களிலும், கடற்கரை ஓரங்களிலும் நமது புத்திசாலிகள் கூட்டங் கூட்டமாய் நின்றுகொண்டு, கழுத்தொடிய அண்ணாந்துகொண்டு அதோபார்! அரோஹரா! இதோபார்! அரோஹரா! என்று கன்னத்தில் போட்டுக் கொள்வார்கள். இக் கூட்டத்தில் படித்த மேதாவிகளும் உண்டு. ஆகாயக் கப்பலைக் கூட ஒரு தடவை புதிதாய்க் கண்டதோடு இவர்களுடைய ஆச்சரியம் நின்றுவிட்டது. ஆனால் மாதாமாதம் வரும் மூன்றாம் பிறைச் சந்திரனானது, மனிதனுடைய புத்தியினால் செய்யப்பட்டு ஆகாயத்தில் பறக்கும் விமானத்தைவிட இவர்கள் புத்திக்கு அதிசயமாகப் படுவதானது அறிவுள்ள உலகத்திற்கு ஓர் அதிசயமான விஷயமாகும் ... இதில் இன்னொரு வேடிக்கை. மூன்றாம் பிறைச் சந்திரனைப் பற்றிப் பாழாய்ப்போன புராணக் கதையில் சொல்லியிருக்கும் விசேஷத்தைக் கொண்டாவது இப்படிச் செய்கிறார்களாவென்றால், அதுவுமல்ல. ஏனெனில் சென்னை நகர் வாசிகளில் படித்தவர்கள் உட்பட 1000க்கு 999 பேருக்கு அந்தப் புராணக் குப்பைகூடத் தெரியாது. பின்னை ஏன் கும்பிடுகிறார்க ளென்றால், டார்வின் கண்டுபிடித்த உண்மையை நிரூபிக்க வேண்டாமா? அதற்காகத்தான். *** சென்னை நகரில் மாட்டு மூத்திரத்திற்குக் கிராக்கி அதிகம். ஏனென்றால் அங்குப் படித்தவர்கள் உத்தியோகதர்கள் உள்பட அநேக ஜனங்கள் மாட்டின் மூத்திரத்தைச் சும்மா விடுவதில்லை. ஆபீசுகளுக்குப் போகும்போது வழியில் ஏதேனுமொரு பசுமாடு மூத்திரம் பெய்துகொண்டிருப்பதைக் கண்டுவிட்டால் போதும். உடனே ஒரு கை பிடித்துத் தலைப்பாகையின்மேல் தெளித்துக் கொண்டுதான் போவார்கள். சிற்சில சமயங்களில் மாடு இயற்கையாக நீர் விடும் வரையில்கூட பொறுக்கமுடியாமல் செயற்கையான முறையில் வெளி வரும்படிசெய்து தலையில் தெளித்துத் திருப்தியடைவதுமுண்டு. இம்மாதிரி செய்யும் மேதாவிகள் யாரென்றால் எல்லாம் நமது பார்ப்பன ரல்லாத சகோதரர்கள்தான். பார்ப்பனர்கள் இப்படிச் செய்வதே கிடையாது. ஆனால் பார்ப்பனரல்லாத படிப்பாளிகள் செய்வதைப் பார்த்து மனதுக்குள் பரிகாசமாகச் சிரித்துவிட்டு, பிறகு வெளியில் பேசும்போது மாட்டு மூத்திரத்தில் கிருமிகளைப் போக்கக் கூடிய குணம் இருக்கிறது. அதனால்தான் நமது முன்னோர்கள் இவ்விதம் ஏற்பாடு செய்துவைத்தார்கள் என்று சொல்வார்கள். அப்படியானால் நீ மாத்திரம் ஏனடா மூத்திரத்தைத் தலையில் தெளித்துக்கொள்வ தில்லை? என்று கேட்பதற்கு நமது புத்திசாலிகளுக்குத் தெரிவ தில்லை. *** இன்னும் வேறு எந்த ஊர்களிலும் பார்க்கமுடியாத சில விசேஷ அதிசயங்களைச் சென்னையில் காணலாம். சாதாரணமாய் வெளியூர்களிலும் இன்னும் படிப்பில்லாதவர்கள் அதிகமாய் இருக்கின்ற சிறு கிராமங்களிலும்கூட சாமி (சிலை) யென்பது கோவில்களிலும் தனிமையான மடங்களிலும்தான் இருப்பது வழக்கம். ஆனால் சென்னையில் பல வீடுகளில் வீட்டுத் திண்ணையில்கூட சாமிகள் காலைப் பரப்பி உட்கார்ந்து கொண்டிருப்பதைப் பார்க்கலாம். அந்தச் சாமிகள் எப்படியிருக்கு மென்றால், இடுப்பில் அழுக்குப்பிடித்த பாவாடை, மிக பயங்கரமான முகம், கழுத்தில் பித்தளைத் தாலி இவை சகிதம் காணப்படும். இவ்வளவு அவலட்சணத்தோடு கூடிய ஒரு விக்கிரகத்தை நடுத் திண்ணையில் வைத்திருப்பார்கள். குழந்தைகள் கண்டுவிட்டால் அலறி விழும்படியான இந்த அவலட்சண சாமியை வீட்டுத் திண்ணையில் வைத்து வணங்கும இவ் வழக்கம், சென்னை நகர் தவிர வேறு எங்கேயாவது உண்டா? நாகரீகம் வேறு, புத்தி வேறு என்பதை உலகிற்குக் காட்டுவதற்காக இவ்விதம் செய்கிறார்களோ என்னவோ! *** சந்திர கிரகணம் சூரிய கிரகணம் முதலிய நிகழ்ச்சிகள் நடைபெறும் காலத்தில் கடற்கரையில், கிரகண நேரம் எந் நேரமாயிருப்பினும் சரி அந்நேரத்தில் ஆயிரக்கணக்கான ஜனங்கள் கூடி நானம் செய்வார்கள். கிரகங்கள் சுற்றுவதினாலும் அதனால் சூரிய சந்திரர் சில சந்தர்ப்பங்களில் மறைக்கப் படுகிற படியாலும், கிரகணம் ஏற்படுகிறது என்ற இந்தப் பூகோள சாதிர உண்மை சிறு பையன்களும் பெண்களும் 5ஆவது வகுப்பில் படித்த ஒரு விஷயமாகும். ஆனால் சென்னை நகர வாசிகள் அதிகம் படித்தவர்களல்லவா? அதனால்தான் சிறு வயதில் படித்ததுகூட மறந்துபோய்ச் சூரிய சந்திரரைப் பாம்பு விழுங்குகிறது என்ற குருட்டு நம்பிக்கையைக் குரங்குப் பிடியாய்ப் பிடித்துக் கொண்டு அதனால் ஏற்படக்கூடிய தீண்டலைப் போக்குவதற்காக நானம் செய்கிறார்கள். இக் கூட்டத்தில் பள்ளிக்கூடத்தில் கிரகண காரணம் போதித்துச் சம்பளம் வாங்கும் உபாத்தியாயர்களும் உண்டு. அறிவை உபயோகப்படுத்தி, உண்மையைப் பொய்யாகவும் பொய்யை உண்மையாகவும் செய்து வயிற்றைக் கழுவும் வக்கீல்களுமுண்டு. *** புதிய வீடுகள் கட்டப்படும்போது பெரிய பூசணிக்காய்களோ, அல்லது அவலக்ஷணமான உருவங்களோ கட்டப்படுவது சென்னை யில் மிக அதிகம். இவைகளை எதற்காகக் கட்டுவதென்றால் புதிதாய்க் கட்டப்படும் கட்டடம் திருஷ்டி பட்டு இடிந்து போகாமல் இருப்பதற்காக என்று புத்திசாலிகள் சொல்லுகிறார்கள். அவர்கள் கண் முன்பே பெரிய ஹை கோட்டும், பாங்கி கட்டடங்களும், லைப்ரெரிகளும், காலேஜ் களும் சர்க்காரால் கட்டப்படுகின்றன. ஆனால் அவைகளுக்குப் பூசணிக்காய் முதலான திருஷ்டியைத் தடுக்கும் சாதனங்களே கிடையாது. அப்படியிருந்தும் அவைகளில் ஒரு கல்கூட இடிந்து விழுவதில்லை. சென்னைப் புத்திசாலிகள் எல்லாரும் சேர்ந்து வேண்டு மென்றே கண் திருஷ்டி வைத்தாலும் Y.M.C.A. கட்டிடத்தின் ஒரு கல் துளியைக்கூட உதிர்க்க முடியாது. புத்தியெல்லாம் பூசணிக்காயிலும் அதின்மேல் வைக்கப்படும் கருப்புப் புள்ளியிலும் போனால் நல்ல சிமிண்டையும் கருங் கல்லையும் வைத்துப் பலமான அதிவாரம் போட வேண்டுமென்ற விஷயத்தில் எப்படிப் போகமுடியும்? *** இதைப் போல் ஆயிரக்கணக்கான உதாரணங்கள் எழுதலாம். மாதிரிக்குச் சிலவற்றை மாத்திரம் குறிப்பிட்டோம். ஆகவே இதெல்லாம் என்ன தெரிவிக்கிறது? படிப்பு வேறு, சுயபுத்தி வேறு; நாகரீகம் வேறு, பகுத்தறிவு வேறு - நாகரீகமும் ப;டிப்பும் உள்ளவர்க ளெல்லாம் சுயபுத்தி உடையவர்களாக இருப்பார்களென்று நினைப்பது தவறு. - புதுவை முரசு, 1. 6. 1931, ப. 10 - 12 56. கிறீதவர் கருமாதி புதுவையிலுள்ள கிறீதவர்களில் ஒரு சாரார் தங்கள் ஜீவகாலமெல்லாம் நம்பியிருப்பது இறந்தபின் மோட்சம் போக வேணுமென்கிற ஆவலான நோக்கமே, ஒவ்வொருவரும், திருச்சபைக் கட்டளைகளைத் தம் தம் மூச்சுப் பிடித்தே நிறைவேற்றி வருகிறார்கள். பிறந்ததும் ஞானநானம், பிறகு உறுதிப்பூசுதல் முதலியதும் செய்வதோடு காலை, மாலை, பூசை காண்பதும், சனிக்கிழமை, பாவ சங்கீர்த்தனம் செய்து ஞாயிற்றுக் கிழமை நன்மை (அப்பம்) எடுப்பதும் வாரந்தோறும் செய்யாதவர்கள் வருடத்திற்கு ஒரு தடவையாகிலும் நல்ல பாவசங்கீர்த்தனம் பண்ணி, திவ்விய நற்கருணை பெற்றுக் கொள்ளுவதும் நடைபெறுகிறது. இது தானும் செய்யாமலிருக்கிற வாலிபர்களோ, அல்லது வயோதிகர்களோ முறையே தங்கள் விவாகத்தின்போதோ, அன்று மரணத் தறுவாயிலோ, மேற்படி சடங்குகளை நிறைவேற்றிக் கொள்வது வழக்கம். சிலர் ஒன்றுமே இல்லாமல் மாண்டு போவதுமுண்டு. எப்படியிருந்தபோதிலும் இறந்தபின், குருக்களைக் கொண்டு சவத்தை மந்திர உச்சாடணம் பண்ணி, கோவிலுக்குக் கொண்டுபோய், ஜெபித்துக் குழிக் கரைக்குக் கொண்டுபோய் அங்கும், சில உருவேற்றிப் பின் அடக்கம் செய்வது வழக்கம், இதில், பணக்காரனாயிருந்தால் கோவிலில் பணங்கொடுத்து மணியடிப்பதும், ஒப்பீ போடுவதும் நடக்கும். இதற்குப் பணம் எவ்வளவு செலுத்துகின்றோமோ அவ்வளவு இடைதான் சடங்குகள் நடக்கும். ஒரு சுவாமியார் முதல் மூன்று சுவாமியார் வரையில், பணத்திற்கு அளவுண்டு, இதன்னியில், பிணம் விழுந்த நேரமுதல், அடக்கம் செய்து திரும்பி வீடு வந்து சேர்ந்து கூட்டம் கலையுமட்டும் உபதேசி என்பாருக்கு வேலையுண்டு. இவர், பயிர் பணம் கொடுக்குமட்டும் மந்திரம் படித்துக் கொண்டேயிருப்பார், இவர் வாசிப்பது அநேக விசுவாசிகளின் நாமத்தையே! சூழ்ந்திருப்பவர்கள் (அவர்கள் மேல் தியானத்தோடு) எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் என்று ஜெபிப்பார்கள், உதாரணமாய்: உப - அர்ச்சீட்ட, ராயப்பரே. ஜனங் - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். உப - அர்ச்சீட்ட, சின்னப்பரே ஜன - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். உப - அர்ச்சீட்ட, அந்தோனியாரே, ஜன - எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் என்று, இப்படியாக, அவரே! இவரே! என்று அநேகரை இறைஞ்சி யழைப்பால் இவர் கூறும் சப்த அலங்காரத்திற்கிசைய ஜனங்களும் ஓசையிடுவார்கள், இறுதியில், மரித்துப்போன ... இன்னாருடைய ஆத்துமா? நித்திய மோட்சப் பேரின்பத்தை யடைய ... வென்று முடிப்பார் இதுமேற்கூறிய உபதேசியார் கடமையும் திருவேலையு மாகும், இவருக்கு மேற்படி மந்திரத்திற்கு தடவை ஒன்றுக்கு இவ்வளவு கூலியென்று ஏற்பாடுமுண்டு. எப்படியோ பணமிருந்தால் பலதும் செய்து அடக்கம் செய்வது முண்டு, பணமில்லாது ஏழைகளாயிருந்தால் மேற்கூறிய இரண்டொரு சடங்கொடு கூடி அடக்கம் செய்வதுமுண்டு ... தீர்ந்ததா? இல்லை! இல்லை. பிணத்தை அடக்கம் செய்தபின் கும்புகள் அனைவரும் துக்க வீட்டுக்கு வருவார்கள், அங்கு விளக்கில் விழிக்க வேண்டுமாம். மூன்றாம் நாள் மாண்டோர்க்காய் தலை முழுக வேண்டுமாம், பணமிருந்தால் பூசையும் (குருக்களைக் கொண்டு) செய்யலாம், என்றாலும், பதினாறாம் நாளையிலோ அன்று வேறு ஒரு நாளையிலோ தலைக்கட்டு என்று ஒரு சடங்கு நடக்கிறது. இதற்குத்தான் கருமாதி என்று - சொல்லவேண்டியது, பந்து மித்ரர்களுக்கு வரவேற்புக் கடிதமோ - வாய்ச்சொல் சேர நடக்கும், எல்லோரும், குறிக்கப்பட்ட நேரத்தில் தேவாலயத்திற்குப் போய்ப் பூசை காண்பார்கள். (இதைத் தான் மோட்சவிளக்கென்றும் கூறுவது, இதற்கும், இரண்டு ரூபாய் முதல் நூறு ரூபாய் வரையில் சக்தி வாய்ந்த பூசைகள் செய்ய ஏற்பாடும் உண்டு. பூசை முடிந்ததும், எல்லோரும் வீட்டிற்கு வருவார்கள். உபதேசியார், சில மந்திரங்களைச் சொல்வார். முடிந்ததும், தலைக்கட்டு நடக்கும். அதாவது சம்பந்தம் கலந்தவர்கள், புதிய வேட்டியோ அங்க வதிரங்களோ, முண்டுபோல் கட்டி - உபதேசியார்; கட்டியவர் பேரைச் சொல்லி தன்னுடைய தட்சணையை வாங்கிக்கொண்டு இறந்தவர் பங்காளியின் தலையில் மேற்படி முண்டை மாட்டி, வாயில் தாம்பூலத்தை மடித்து வைப்பார். உடனே மேற்படி தலைக் கட்டிக் கொண்டவர், அறை வீட்டுக்குள் அக்கோலத்தோடு சென்று அங்கு எரியும் விளக்கையோ, திரிகையையோ தரிசிக்கவேண்டுமாம், இக் கோலத்தைக் கண்டதும் பெண்களில் சிலர் (உரிமையுள்ளவர்கள்) ஓ வென்று புலம்புவார்கள். இதேவண்ணம், கணவனை இழந்த மங்கைக்குக் கறுப்புப் புடவை போடப்படும். இச் சடங்கு முடிந்ததும், வந்த ஜனங்களுக்குப் பழம், ரொட்டி, காப்பி, தாம்பூலம் முதலிய உபசரணை நடக்கும், பின்பு கூட்டத்தோர் விடைபெற்றுக்கொண்டு செல்வார்கள். இதுதான் கிறீதவர் கருமாதியென்பது, இந்துக்கள் பதினாறாம் நாள் இறந்தவர்க்காய் என்ன சடங்கு செய்கின்றனரோ அவைகளில் ஒன்றும் குறைவின்றி நடக்கின்றன, ஆனால் இந்துக்களைப் போல் கிறீதவர்கள் செய்யாமல், நாகரீக முறையில் செய்கின்றனர். மேற்கண்டவிதமாய், இறந்தவர்க்காய் கிறீதவர்கள் சடங்கு செய்துவருவது வழக்கமாயினும், இவைகளைப் பற்றி அவர்கள் திரு வேதத்தில் கிறீது பெருமான் ஏதாகிலும் சொல்லியிருக்கிறாரா வென்று ஆராய்ந்தால் ஒரு வார்த்தை கூடக் கிடைக்கவில்லை. தலைகட்டும் வழக்கம் எங்கிருந்து ஏற்பட்டது. இதை ஏன் இவர்கள் கையாடி வரவேண்டுமென்று மதத் தலைவர்கள்தான் விசாரித்ததுண்டா, தடுத்ததுண்டா, சிந்தித்ததுண்டா வென்றால் ஒன்றுமே கிடையாது. ஏழைகளானால் கொஞ்சம் பணம் கொடுத்தாலும், தான மிகுந்தவரானால் அதிகப் பணம் கொடுத்தாலும் பூசை என்னமோ ஒரே விதமாய்த்தான் நடப்பதைக் காண்கிறோம். இப்படி நடத்துவதினால், இறந்தவர்கள் மோட்சம் போய்ச் சேர்ந்தார்களாவென்றால் அதுவும் சந்தேகம். ஒரு தடவைதான் பூசை வைத்தால் இறந்தவர் மோட்சம் போய்விடுவார்களே! திரும்பத் திரும்ப வருடந்தோறும் ஏன் பூசை வைக்க வேணும்? கொஞ்சம் பணத்திற்கு பூசை பெற்ற ஆத்மாவும், அதிகப் பணத்திற்கு ஆடம்பரத்துடன் பூசை பெற்ற ஆத்மாவும் மோட்ச லோகத்தில் ஒரே தானத்திலிருப்பார்களா? அல்லது அந்தத் திற்கு தகுந்தவண்ணமிருப்பார்களா? பூசை பெற்றவர்களெல்லாம் உண்மை யாகவே மோட்சம் போய் சேர்கிறார்களா? இதுவிஷயத்தில் யாராவது சிந்தித்து கேள்விகள் நடத்தியதுண்டா? என்னும் இப்படிப் பட்ட கேள்விகள் என் மனத்தை வாதித்து வருகிறது. என்ன செய்யலாம். கடன்பட்டாகிலும் இறந்தவர்களுக்குப் பூசை வைக்க வேண்டுமென்ற நோக்கந்தான் கிறீதவர்கள் மனத்தில் பாசியாய்ப் படிந்து வேரூன்றி இருக்கிறது. இது விஷயத்தில் ஆராய்ச்சியற்ற குருட்டு நம்பிக்கையே மிகுந்திருப்பதால், ஏனையாருடைய கேள்விக்கும் அறிவை செலுத்தாமல் ஆக்ரோஷம் கொள்ளு கின்றனர். மேலும் பணங் கொடுத்துப் பூசை வைத்தால்தான் மோட்சம் போகலாம். பணம் இல்லாத ஏழைகள் கதி என்னவாகிறது. அன்றியும் இறந்துபோன குருக்களுக்கோ கன்னியாதிரிக ளுக்கோ, தலைக்கட்டு நடக்கவில்லையே, இதற்குக் காரணமென்ன? பூசையினால் மோட்சம் போய்ச் சேர்ந்தவர்கள் இன்னார், இத்தனைபேர் இன்ன இன்ன ஜாதியார்கள் என்று அறிந்ததுண்டா? (கி - க - வெறுப்பன்) இதந்தரும் சம நோக்கம் இல்லா நிலத்தில், நல்ல சுதந்தரம் உண்டாகுமோ - சகியே, சுதந்தரம் உண்டாகுமோ? - தாழ்த்தப்பட்டார் பாட்டு - புதுவை முரசு, 1. 6. 1931, ப. 17 - 18 57. திரு. ராமநாதனுக்கு ஜே! உண்மையைச் சொல்கிறவனுக்கு என்றும் ஆபத்து உண்டு. பூமி உருண்டை என்று சொன்னவனைப் பயித்தியக்கார ஆஸ்பத்திரியில் அடைத்தார்கள். கதர் கதர் என்று கதர்ப் பித்துப் பிடித்துத் திரியும் இந்தக் காலத்தில் கதர்ப் புரட்டை, வெளியாக்கிய திரு இராமநாதன் அவர்களைப்பற்றி என்ன சொல்வதென்பதே விளங்கவில்லை. நெற்றியில் சாம்பலோ, மண்ணையோ பூசுகிறவர்களைக் கடவுள் பக்தர் என்று சொல்கிற மாதிரியாலேயே கதரும் தேசபக்த நாடகத்திற்கு ஒரு வேஷமாய் இருந்து வருகிறதென்பதே நமது அபிப்பிராயம். முன் காலத்தில் ஏற்பட்டது, பெரியவர்கள் சொன்னது என்பதற்காக நாமும் நமது இயக்கத் தலைவர்களும், இயக்கத்திலுள்ள பிற அன்பர்களும் எப்படிச் சிலகாலம்விபூதி, திருமண் பூசிவந்தோமோ, அதைப்போலவே உலக சிரேஷ்டராகிய காந்தி - அதுவும் மகாத்மா... சொன்னது என்பதற்காகப் பகுத்தறிவை உபயோகிக்காமல் நாங்களும் தேச பக்தர்களாக இருந்த காலமும் உண்டு, ஒருவருஷம் இரண்டு வருஷமல்ல; 10, 12 வருஷம் தேசபக்தர்களாகவே இருந்து கதர்கட்டி, தமிழ்நாட்டிலேயே கதர் பரவுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்க ளாகிய நமது தலைவர்கள் திரு. ராமனாதனும் திரு. ராமசாமியும் இன்னும், பிறரும் இப்போது கதரைக் கண்டித்து லால்குடிச் சுயமரியாதை மகாநாட்டில் பேசியிருக்கிறார்களென்றால், அது, பல வருஷங்கள் அநுபவித்துப் பார்த்தவர்கள் சொல்லும் உண்மையாகும் என்பதை நமது நவீன - தேசபக்த சிகாமணிகள் உணரவேண்டும். புதிதாய் ஒரு மதத்தைச் சேர்ந்தவர்கள் ஏற்கனவே அம் மதத்திலிருப் பவர்களைக் காட்டிலும் சற்று அதிக பக்தியாகவும் கெடுபிடியாகவும் நடந்துகொள்வது இயற்கை, உதாரணமாக, பரம்பரையாய், 500, 600 வருஷங்களாய்க் கிறீஸ்து மதத்திலிருந்த வர்கள் எல்லாம், இன்றைக்கு சர்ச்சுக்குப் போவதையே நிறுத்தி விட்டும். கிறீஸ்து மதமே ஒரு அபத்தம் என்று புஸ்தகங்கள் எழுதியும் பத்திரிகை வழியாகப் பிரசாரம் செய்தும் வருகிறார்கள். இதற்கு உதாரணம் வேண்டுமானால், கிறீஸ்து மதத்திலேயே பல ஆண்டு களாகப் புரண்டுகொண்டிருந்த ரஷியாவில் கிறீஸ்து மதம் அழிந்து விட்டது. இங்கிலாந்தில் அறிவு இயக்கத் தார்கள் தாராள நோக்குடையவர்கள் முதலானவர்கள் துரிதமான பிரசாரம் செய்து வருகிறார்கள். அமெரிக்காவில் உண்மை நாடுவோர்கள், நாஸ்திக சங்கத்தார்கள் முதலானவர்கள் கிறீஸ்து மதத்தின் ஆபாசங்களை மக்களுக்கு எடுத்துப்பரப்பிவருகின்றார்கள், இன்னும் ரோம் நகரிலுள்ள கிறீஸ்து மத சங்கராச்சாரியாகிய போப் பிற்கே ஆபத்து வந்துகொண்டிருக்கிறது... இதெல்லாம் இப்படியிருக்க, நமது இந்தியாவில் நேற்று, முந்தாநாள் கிறீஸ்துவராக மாறின ஜோசப்புகளும் சக்கரைகளும் 4 நாளைக்கு முந்தி நாடார், பிள்ளை, முதலியார் உடையாராயிருந்து இன்றும் அவைகளைக் கட்டி அழுது கொண்டிருக்கிற கிறீஸ்துகளெல்லாம், ஏசுகிறீஸ்து நாதரைக் காப்பாற்றத் தோன்றினவர்கள் போல், பைபிள் படியே நடக்கிற யோக்கியர்கள் போல், தலை கால் தெரியாமல் குதிக்கிறார்கள். மற்றோர் உதாரணம் வேண்டுமானால், இஸ்லாம் மதத்திற்குப் பீடமாகிய துருக்கியில் குரான் வார்த்தைகளை அழித்துவிட உத்திர விட்டிருப்பதும், பெண்கள் மூகமுடியைக் கிழித்தெறிந்து பட்டாளத்தில் பழகியிருப்பதும், இன்னும் இம்மாதிரியான முன்னேற்றமடைந்திருக்க, நம் இந்தியாவில் 10 நாளைக்கு முந்தி முனியனாகவும், கருப்பனாகவும் இருந்து இஸ்லாம் மதத்தில் சேர்ந்தவர்களெல்லாம். ஏதோ குரான் படியே நடக்கும் யோக்கியர்கள் போல் பிரமாதப்படுத்துகிறார்கள். இவர்களைப் பற்றிக் கமால்பாஷா கேள்விப்பட்டால் என்ன நினைப்பார் என்பதை வாசகர்களே யோசித்துப் பார்க்கட்டும். இதைப் போலவேதான் நமது நவீன தேசபக்தர்கள் கதையும் இருக்கிறது. யங் இந்தியாவுக்குச் சில காலம் ஆசிரியராய் இருந்த வரும் எவ்வளவோ நாள் தேசபக்தியே உருவமாய் இருந்தவரும் திரு. காந்தியோடு சரிசமானமாய் நெருங்கிப் பழகினவருமான திரு. ஜார்ஜ் ஜோசப் அவர்கள் காங்கிரஸ் ஒரு பார்ப்பனக் கொள்ளைக் கூட்டம் என்பதைத் தமது சொந்த அநுபவத்தில் தெரிந்து கொண்டார். கதரே பூஷணமாகக் கொண்டிருந்த அவர், அதுவும் விபூதியைப் போலவே என்பதையும் கண்டு கொண்டார். இவரைப் போலவே, திரு. கரேந்திரநாத் ஆரியா போன்றவர்களும் இன்னும் பலரும் காங்கிரஸ், கதர் இவ்விரண்டின் புரட்டுகளையும் நேரில் கண்டவர்களானாலும், வெளியில் சொல்லத் தைரியமில்லாமல் பதுங்கிக் கொண்டிருக் கிறார்கள் என்பதைத் தவிர வேறு ஒரு குற்றமும் சொல்லமுடியாது. திரு. S. ராமனாதன் அவர்கள் இராட்டினத்தில் நூல் நூற்றவர்கள் பஞ்சு அடித்தவர்கள், ஊர் ஊராய்க் கதர்ப் பிரசாரம் செய்தவர்கள் கதர் இலாகாவிற்கே காரியதரிசியாகவும் இருந்தவர்கள். இதே மாதிரி, திரு. ஈ.வெ. இராமசாமியவர்களுக்கும் கதரைப் பரப்பிய பங்கு சற்று அதிக மாகவே உண்டு. சுருக்கமாகக் கூறவேண்டுமானால் இன்றைக்குச் தென்இந்தியாவில் முக்கியமாகத் தமிழ்நாட்டில் கதர்கட்டிக்கொண்டு இருப்பவர்களில் 100க்கு 60 பேராவது திரு. ஈ. வெ. இராமசாமி யவர்களால் கதர் கட்டியவர்களாவார்கள் என்பது அவரவர்கள் மனதில் கைவைத்துப் பார்த்தால் தெரியும். அப்படியிருக்க, லால்குடி மகாநாட்டில் கதரைக் கண்டித்து மேற்கண்ட இருவரும் பேசும்போது, யாரோ இரண்டொரு கதர் பக்தர்கள் கூட்டத்தைவிட்டு வெளியே போய் சுயமரியாதைத் தேசியக் கட்சி யென்று ஒன்று ஸ்தாபித்ததாகப் பத்திரிகைகள் கூறுகின்றன. இவ்விஷயம் உண்மையாயிருக்குமானால், அந்த தேசபக்தர்களோடு நாம் சிறிது நேரமாவது (தேச பக்தர்களா யிருந்த நாம் புதிய தேசபக்தர் ஒருவரைப் பார்ப்பதென்றால் விசேஷ மல்லவா?) முதலில் கதரைப்பற்றி இந்த நவீன தேசபக்தர்களுக்கு என்னென்ன தெரியுமென்பதைக் கேட்டுத் தெரியவேண்டுமென்பது அவசிய மல்லவா? பைபிளையே கரைத்துக் குடித்த அறிவு இயக்கத் தார்கள், நமது நாடார், உடையார் கிறீஸ்துவர்கள் பைபிளை ஆதரித்துப் பேசுவதென்றால் இந்த நவீன கிறீஸ்துவர்களின் முகத்தைச் சற்றுப் பார்க்கவேண்டுமென்று அவர்கள் ஆசைப்படுவது சகஜந்தானே! இந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு விஷயம். கிறீஸ்து மதத்தைப் பரவச் செய்த பாவத்திற்காக ஜீன் மெஸ்லியர் என்பவர் மன்னிப்புக் கேட்டது போல, கதரைப் பரவச்செய்த பாவத்திற்காக நமது தலைவர்களும் நாமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறோம். எதையும் கண் மூடித்தனமாய்ப் பின் பற்றாதே! உன் புத்திக்கு வேலை கொடு - புதுவை முரசு, 8. 6. 1931, ப. 10 - 11 58. கடவுள் வேண்டியதில்லை பிள்ளை பிறந்தது; ஜாதகம் கணிக்க வேண்டும். ஐயருக்கு தக்ஷணை கொடுக்க வேண்டும். பிறகு பிள்ளை பிறந்த தீட்டுப் போக வேண்டும். கூப்பிடு யானை! வை தக்ஷணை! பிள்ளைக்கு ஐந்து வயதாயிற்று; கூப்பிடு ஐயரை! கொடு பணத்தை! பையனுக்குக் கல்யாணம் - அழை ஐயரை! கொடு பணத்தை! சாந்தி முகூர்த்தம்; ! : பெண்டாட்டி ஏழு மாத கர்ப்பவதி; ! ! பிள்ளை செத்தது; அல்லது பெண்சாதி செத்தாள். உடையவர் செத்தார்; சாகும் தறுவாயில் பாபம் போக கோ தானம் கொடுக்க அழை ஐயரை! செத்தபின்னும் அழை! கொடு! இதற்கிடையில் செத்துப் போனவரை நோக்கி இருப்பவர் திவசம் கொடுக்க வேண்டும். , அமாவாசை, தருப்பணம், இவையன்றி விதை நட, வீடு கட்ட, குடிபோக, பிற, பிற அழை ஐயரை! கொட்டு பணத்தை! இவையெல்லாம் நாமே அழைக்கும் பகுதி. அழையா வீட்டில் நுழையா சம்பந்தியாக கிரகண தோஷத்திற்குத், தர்ப்பைப் புல் வேண்டும். கரிநாள் தேடி எலுமிச்சம் பழங் கொண்டும், சங்கராச்சாரிய சுவாமிகள் கட்டணமென்று ரசீது கொண்டும் ஐயர் தாமே வீடு தேடி விஜயம் செய்வதுண்டு. தூங்கியவன் துடையில் திரித்த வரைக்கும் இலாபம். இதைப் பற்றிச் சொல்லவில்லை. ஏமாந்தவன் இருக்கு மட்டும், அடித்துக் கொண்டு போக ஆள் உண்டு. இது பற்றிச் சொல்ல வரவில்லை. மனச் சான்று சிறிதும் இல்லாதவர்கள் காரணமின்றி மக்கள் பணத்தை ஒப்புக் கொள்வார்கள். இதுபற்றிச் சொல்ல வரவில்லை. உங்கள் வீட்டு முட்டுக் கட்டை முன்தானையில் 5 பணம் முடிந்திருக்குமா என்ற கதைபோல் வலிய அழைத்து ஐயருக்குக் கொடுக்கப்படுகிறது. இதுபற்றி நாம் இங்குக் கூற வரவில்லை. ஐயரை அழைப்பதும், தக்ஷணை கொடுப்பதுமான சந்தர்ப்பம் மனித வாழ்க்கையில் சதா சந்தர்ப்பமாக இருக்கிறதே, இதனால் பாபம் நீங்குகிறது; புண்ணியம் சுரக்கிறதுமாக இருக்கிறது. ஆனால் ஐயரை அழைப்பதையும் பணம் கொடுப்பதையும் நிறுத்தவும் கூடாது என்று தெரிகிறதே! இது மெய்தானா என்று உன்னைக் கேட்கிறேன். ஆம். மெய்தான். இதனால் பணக்காரர்களுக்கு மாத்திரந்தானே அடிக்கடி பார்ப்பானை அழைக்க முடியும்; ஏழைக்கு முடியாது; இந்தியாவில் பணக்காரர் மட்டு; ஏழைகள் அதிகம் ஆதலால் ஐயோ, பாவம்! பெரும்பான்மையோர் பார்ப்பானுக்குக் கொடுக்க முடியாமையால் பாவிகளாக இருக்கிறார், பணக்காரரான சில புண்ணியசாலிகள் பார்ப்பானுக்குக் கொடுப்பதால்! நான் சொல்லியது சரிதானா! சரிதான். ஐயோ பாவம்! பெரும்பான்மையோர் ஏழைப் பாவிகள்! இவர்களையும் பணக்காரப் புண்ணியவான்களாக்க என்ன செய்வது? எனக்குத் தெரியாது. இதற்குச் சுயமரியாதைக்காரர் ஒரு வழி சொல்லுகிறார்கள். ஏழைகட்கு மகராஜர்களே அநேக அசந்தர்ப்பங்களை உண்டு பண்ணியிருக்கிறார்கள். அசந்தர்ப்பங்களை நீக்கினால் ஏழைகள் பணக்காரர்களாக்க முடியும்... ஆம்! ஆம்! அனைவரும் பணக்காரர்க ளாகிவிட்டால் எல்லாரும் பார்ப்பனர்க்குப் பணம் கொடுத்துப் புண்ணியவான்கள் ஆகிவிடலாம். போடா போடா பைத்தியக்காரா! எல்லாப் பணக்காரரும் ஐயருக்கு வாரிக் கொடுத்தால் ஐயர் வீட்டில் எல்லா பணமும் போய்விடும். நான் சொல்லுவதைக் கேள். எல்லாப் பணக்காரர்களும் சேர்ந்து பார்ப்பானுக்குப் பணம் கொடுப்பதையே நிறுத்திவிட வேண்டும். அதனால் பார்ப்பானும் தீவிரமாக உழைத்து எல்லாரோடும் சமநிலையை அடைவான். அதன்பிறகு இந்தியாவில் ஒரே பணக்காரர் மயம்... புண்ணியம் தேட வேண்டுமே! அந்த லோகத்திற்குப் போனால் கடவுள் எங்கே புண்ணியம் என்பாரே! அப்படிக் கடவுள் கேட்டால் ஐயா! கடவுளே! எங்கள் தேசத்தில் தானம் வாங்க பார்ப்பானில்லை. அதனால் புண்ணியம் தேட முடியாமல் போயிற்று. நாங்கள் எல்லோரும் பணக்காரர்கள். ஆதலால் பாவமும் நாங்கள் கட்டிக் கொண்டதில்லை. விசயம் இதுவாகையால், எங்கள் பாவ புண்ணியத்தை அளந்து கட்ட நீங்களும் அநாவசியம் என்று சொல்லிவிடாலம் இது சுயமரியாதைக்காரர் வழி! கிண்டற்காரன் - புதுவை முரசு, 8. 6. 1931, ப. 13 - 14 59. ஆதிகமே அறிவைக் கெடுத்தது நாவிதர் என்றும் வண்ணார் என்றும் இப்போது சொல்லப் படுவோர் முன்னாளில், வைத்ய சாதிரிகளாக இருந்தவர்கள். அந்நாள் முதல் இந்நாள் வரைக்கும் அவர்கட்குப் பண்டிதர்கள் என்றே பெயர். அந்நாளில் அவர்கள் சத்திரம் வைத்தல் என்னும் ஆப்ரேஷன் முறையிலும் வல்லவராயிருந்தார்கள். இவர்கட்கு அக்காலத்தில் அரசர்கள் விசேஷ மான்யங்கள் விட்டு ஆதரித்து வந்தார்கள். அரச சமூகத்தில் இப் பண்டிதர்கட்கு நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் அதிகமிருந்தது. இடைக்காலத்தில், ஆரியர்கள் தமிழரசர்களிடம் செல்வாக் கடைய அநுசரித்த தந்திரச் செயல்களில் முதன்மையானது இப் பண்டிதர்களை அவ்வரசர்களிடமிருந்து அறுத்துவிட்டதேயாகும். தமிழ் வைத்திய முறைகளைத் தமிழர்களாகிய இவர்களிடமே தெரிந்து கொண்டு, தெரிந்துகொண்டதையெல்லாம் தமது வேதத்தில் புகுத்தி, அதற்கு ஆயுர்வேதம் என்று பெயர் சொல்லி மேன்மைப்படுத்தினர். இவ் வகையில் நாளடைவில் தமிழ் வைத்தியர் தொழிலில் நெருக்கடி ஏற்பட்டதோடு, சத்திரம் இடுவதில் ஒரு பகுதியாகிய க்ஷவரத் தொழிலையும், துணிகளைச் சுத்தம் செய்யும் தொழிலையு மாத்திரம் உபயோகிக்கும் நிலைமை ஏற்பட்டது. என்றைக்கு வைத்திய சாதிர மானது கடவுள் சொன்னதாகச் சொல்லப்படும் வேதத்தில் இடம் பெற்று விட்டதோ, அன்று முதலே அது விருத்தியடையாத நிலையை அடைந்துவிட்டது. கடவுள் சொன்ன முறையை மீறி அதன்மேல் மனிதனுடைய ஆராய்ச்சியையும் செலுத்த எவருக்கும் துணிவு ஏற்பட ஞாயமில்லை. இதனால் வைத்திய ஞானத்தை ஆதிகச் செயல் அமிழ்த்தியதென்றால் அது மறுக்க முடியாததேயாகும். பண்டைக் காலத்தில் சிற்பத் தொழிலானது இந்தியாவில் மிக நல்ல நிலையில் இருந்தது. சிற்ப சாதிரிகட்கு அரச சமூகங்களில் மிக்க செல்வாக்கிருந்தது. அரசர்களே நல்லபடி ஆதரித்து வந்தார்கள். அக்காலத்தில் அரசர்கள் ஆதிக புத்திமீறிக் கண்ட விஷயத்தை யெல்லாம் கடவுள் சம்பந்தத்திலே நுழைத்தார்கள். சிற்பிகள் கோயிற் பணிசெய்து கிடக்கும் சந்தர்ப்பம் தங்கள் அறிவை விசாலப்படுத்தச் சந்தர்ப்பமிருந்ததில்லை. இதுவுமன்றி அவர்கள் தங்கள் சாமர்த் தியத்தைக் கடவுள் உருவம் அமைப்பதன் மூலமாகவே அரசரை மகிழ்விக்கமுடியும் என்று நம்பினார்கள். அந்நம்பிக்கை பொருத்தமான தென்பதோடு சிற்பிகட்கு அளவற்ற மதிப்பு ஏற்பட்டது. காலமோ, அரசர்கள், தரையில் மாத்திரம் இன்றி மலை கண்ட இடத்தில் கோயில் கட்டி நிரப்பும் காலமாயிருந்தது. இச் சமயத்தில் ஆரியர்கள் சிற்பிகளின் பெருங் கௌரவத்தைக் கிள்ளிப்போட எண்ணி, வேதத்தில் ஒரு பகுதியை ஏற்பாடு பண்ணினார்கள். அதன்படி சிற்பிகள் கடவுட் சிலைகள் செய்தால் மட்டும் பயனில்லை; வேத மந்திரத்தால் தாங்கள் அவைகட்கு உயிர் கொடுக்கவேண்டும் என்று சொல்லி விட்டார்கள். சித்திரக்காரருக்கும் இதே கதி நேர்ந்துவிட்டது. சிற்பத்தைப் பற்றியும் சித்திரத்தைப் பற்றியும் வேதத்தில் சில முறைகளைப் பின்னர் ஆரியர் சேர்த்தார்கள். அம்முறைகளையே பிற்பட்ட காலத்தில் சிற்பத்துக்கும் சித்திரத்துக்கும் ஆதாரமாக்கப் பட்டது. இம்முறைகளின்படி பார்த்தால் சிற்பிகள் - சித்திரர்களின் அறிவானது தடைப்பட்டதோடு கோயில் விக்ரகங்களின் மட்டமாக நின்று போயிற்று. உலக முன்னேற்றத்திற்கு ஒரு லக்ஷம் வகைகளில் உபயோகப்பட வேண்டிய சிற்ப சித்திரங்கள் கோயிலுக்குள் மாத்திரம் புகுந்துகொண்டது. அந்நாள் முதல் இந்நாள் வரைக்கும் சிற்ப சித்திரங்கள் வளர்ச்சி முறையில் இருந்திருந்தால் இன்றைய உலகில் கலைகளில் இந்தியா முதன்மையாயிருக்கும். இடையில் துண்டித்தது ஆதிகமே. சிற்ப சாத்திரிகளையும், சித்திரிகர்களையும் நாளடைவில் வாளறுத்துத் தொழிலாளர் வர்க்கத்தில் சேர்த்துவிட்டதும், தொழிலாளர் அனைவரும் தாழ்ந்தவர்கள் என்று ஆக்கியதும் ஆதிகரே. எந்தத் தொழிலாளர்களை மேன்மைப்படுத்தி மேன்மைப்படுத்தி அவர்களால் தேசத்தை உந்நதப்படுத்த வேண்டுமோ அந்தத் தொழிலாளர்களைத் தாழ்மைப்படுத்தித் தாழ்மைப்படுத்தி ஊருக்குப் புறம்பாகவும் வாழச்சொல்லித் தொழிலுலகைப் புராதன ஆதிக இந்தியா தாழ்ந்த நிலையையே அடைந்து வந்தது. பொருளுண்மை அறியும் அறிவும், பொதுமக்கள்பால் விசேஷ அன்பும் உடைய தமிழர்களுக்கு அக்கால ஆதிகமானது செய்துள்ள கெடுதிகள் சொல்லி முடியாது. இக்காலத்தின் விஞ்ஞானப் புலமையின் சாயல் அக்காலத்துச் சித்தர்களிடம் இருந்ததென்றால் அறிவுடையோர் அதை மறுக்க முடியாது. பொதுமக்களின் நன்மைக்கானபடி வது விவேகம் கொண்ட பெரியாரை அக்காலத்தில் சித்தர் என்று அழைத்து வந்தார்கள். அக்கால ஆதிகர்களை - அவர்களின் பிடிவாதத்தை - கோணற்புத்தியை அவ்வப்போது பகிரங்கமாய்க் கண்டித்து வந்த சித்தர்களுக்குக் கிடைத்தது அஞ்ஞாதவாசம். அவர்கள் காடு கண்ட விடம் வாசம் செய்தபோதும் பொதுமக்கட்குப் பல உண்மைகளைச் சொல்லி வந்தார்கள். உருவ வணக்கம் வெறும் சடங்குகள் இவைகளுக்கு மாறாக அவர்கள் நல்லநெறிகளைச் சொல்லி வந்த ஒரே காரணத்தால் அவர்களின் நுட்ப அறிவின் பெரும் பயன்களை அக்கால ஆதிக இந்தியா இழந்துவிட்டது. சுயமரியாதைக்காரர்கள் தலையில் இந்நாளைய ஆதிகர்கள் போடும் நாதிகக் கம்பளிப் பூச்சியைத்தான் அக்கால சித்தர்கள் தலையில் போட்டு மருட்டினார்கள். ஆனால் அவர்கள் மருண்டதில்லை; அஞ்சியதில்லை. ஆதிகர்களை அந்நாளில் அவர்கள் மூடர்கள் என்றும் அயோக்கியர்கள் என்றும் திட்டினார்கள். அரசன் ஆக்கினைக்கும் அவர்கள் பயப்படுவதில்லை. அவர்களுக்குக் காட்டிலும் சுகமாய் வாழத் தெரியும். முற்கால ஆதிகர்களின் அறிவு கொழுந்துவிட்டுக் கொண்டே இருந்ததாகச் சொல்லப்படினும், பொருள்களின் தன்மையை உட்புகுந்து பார்ப்பதையே ஆதாரமாக உடைய விஞ்ஞானப் புலமையின் பக்கமே அவ்வறிவு செல்லாமல் இருந்தது. செல்லவும் முடியாது. காற்று: அது வாயுபகவானாய்விட்டது. பகவானைப் பிளந்து அதன் உட்புறத்தின் அமைப்பைப் பார்க்க எவன் துணிவான். நெருப்பு: அது அக்னி பகவான். தண்ணீர்: அது வருண பகவான்; பூமி: அது பூமிதேவி. ஆகாயம்: அது ஆகாயவாணி. வணங்கத்தக்க பகவான் களின் தேவிகளின் - அடிமடியைச் சோதிக்க மனம் போவதெப்படி? வேதமோ இந்நாள் வெள்ளைக்காரர்களுக்குக் கூலி வேலை செய்யும் பஞ்ச பூதங்களுக்குப் பரத்வம் கற்பித்துப் பாடுகிறது. இவை முதலான பல வகைகளிலும் அறிவுக்குத் தடை போட்ட ஆதிகத்தின் தன்மையை அறிஞர்கள் எண்ணிப் பார்த்தால் ஆதிகத்தின் சொந்த உருவம் விளங்காமற் போகாது. விரல் நகங்களைக் கிள்ளிப் போடும் ஆலசியமும் வேண்டாம். அறிவைக் கெடுக்கும் ஆதிகத்தைத் தூவென்று காறியுமிழ்ந்து விடலாம். - புதுவை முரசு, 20. 7. 1931, ப. 10 - 11 60. வராஜ்யம் வேண்டும் ஐயா, இங்கிலீஷ்காரர்களே! இந்தியப் பெண்மணிகளும் ஆடவர்களும் வராஜ்யத்திற்குத் தகுதியுடையவர்களாகவே இருக்கிறபோது, நீங்கள் ஏன் உங்கள் கையில் வைத்திருக்கிற வராஜ்யத்தை எங்கள் திருவோட்டில் போடக்கூடாது? நாங்கள் வராஜ்யத்திற்குத் தகுதியுடையவர்கள் என்பதற்குச் சில திருஷ்டாந்தங்களைத் தெரிந்தெடுத்து, பெண்டிர்கள் அவை களிலும் பொறுக் கானவைகளாக இங்குக் கூறுகிறேன். எங்கள் இந்திய மாதர்கள் கோலம் போடுவார்கள். அந்தக் கோலமும் அரிசி மாவால் எறும்புக்கு உபயோகமாகும்படி இருக்கிறது. இந்தக் கோலங்களின் இடையில் சித்திரக் கலைகள் திகழும் கிளிகள், மயில்கள், தாமரைப் பூக்கள். இவைகள் எல்லாம் அசல் கிளி, அசல் மயில், அசல் தாமரைப் பூக்களையே திருத்துவதாக இருக்கும். எங்கள் பெண்கள் சாதிரம் பார்ப்பதில் சமர்த்தர்கள். ஒரு படியில் ஒரு பேனைப் போட்டு அதன்மேல் நெல்லை நிரப்புவார்கள். நிரப்பிய நெல்லின்மேல் கரி ஒரு பக்கமும், மஞ்சள் ஒரு பக்கமும் வைப்பார்கள். பேன் மேலே வந்து சேரும்வரைக்கும் பெண்கள் வெகு கவலையோடு நட்டுக் கவனித்துக்கொண்டேயிருப்பார்கள். கரியின் மேல் ஏறினால் நினைத்த காரியம் பலியாது. மஞ்சள் மேல் ஏறினால் காரியம் கைகூடும். வேறொரு முறை : பச்சிலையைக் கொண்டு ஒரு நீளக் கோடும் அந்தக் கோட்டில் குறுக்காக அநேக கோடுகளையும் கிழிப்பார்கள். ராமர், லக்ஷுமணர், சீதை என்று கோடுகளை எண்ணிக்கொண்டு வருவார்கள். ராமர் என்று முடிந்தால் காரியமும் ராமர்தான். சீதை யென்று முடிந்தால் வனவாசம். லக்ஷுமணர் மத்திமம். இதிலொரு விசேஷம் என்னவென்றால் தற்செயலாய்ச் சீதையென்று முடிந்தால் இன்னோரிடம் பல கோடுகள் போட்டுப் பழயபடி ஆரம்பிப்பார்கள். ராமர் என்று முடியும்வரை விடமாட்டார்கள். எங்கள் பெண்கள் கணக்கில் நிபுணர்கள். முறம் வாங்கும் போது அந்த முறத்தின் கட்டுகளைத் தொட்டு, கொள்ள, கொடுக்க என்று எண்ணிக்கொண்டே போவார்கள். கொள்ள என்று முடிந்தால் கொள்ளுவார்கள். முறம் பொத்தலாயிருந்தாலும் கவலை இல்லை. இன்னும் மோர், தயிர், தோசை இவைகள் தினம் தினம் வாங்கி யதற்குச் சாணியால் வெள்ளைச் சுவர்களில் அழகாகப் புள்ளி போடு வார்கள் இரண்டு மாதத்தில் சுவர்கள் எல்லாம் கணக்கு மயம் ஆகும். எங்கள் பெண்கள் தெய்வ நம்பிக்கையுடையவர்கள். குங்குமம் பூசி வேப்பிலை எடுத்து வரும் அனைவரும் சாபம் கொடுக்கும் சாமிதான்-அடுக்குப் பானை அரிசி சாமிக்குச் சொந்தம். குடுகுடுப்பைக் காரன் அம்மா உனக்கு ஆண்பிள்ளை தங்கம்போல் பிறக்கும் என்றால், பிறந்து விட்டதாகவே ஒரு நம்பிக்கையேற்பட்டு துணிகள் சம்மானம் நடக்கும். குறி சொல்லுகிறவர்கள் வந்துவிட்டால், அவர்களிடம் தங்கள் வாக்குமூலத்தைச் சொல்லி. அதையே அவர்கள் திருவாக்கால் கேட்டுப் பணம் கொடுப்பார்கள். மாரியாத்தாளை உத்தரவு கேட்க மாரியாத்தாள் தலையில் பூவைச் சுருட்டி வைத்து அதன்மேல் ஓர் எலுமிச்சம் பழத்தை வைப்பார்கள். அமிழ்த்தி வைத்த பூவானது விரிந்து எலுமிச்சம்பழம் கீழே விழுந்தால் அம்மன் உத்தரவு கொடுத்தாக எண்ணித் திருப்பதிக்குப் பிரயாணம் வைப்பார்கள். பூவாடைக்காரி கனவில் பிரத்யக்ஷம். இருட்டில் பேய்கள் முனீவரர்கள் எங்கள் பெண்கள் கண்களுக்கு மாத்திரம் தெரியும்படி நாய் போலவும், பன்றி போலவும் ஓடுவதுண்டு. ஒருவர் சாகுமுன் செத்துப் போவதற்கான அடையாளங்கள் எங்கள் பெண்களுக்குத் தெரியும். இதை அவர்கள் சாக வேண்டியவர்கள் செத்துப்போன பின்புதான் சொல்லுவார்கள். சிங்கப்பூரிலிருக்கும் நாயகனுக்கு நடுவீட்டுப் படத்திலுள்ள சுப்பிரமணியரைப் பக்கத் துணையாயிருக்கும்படி கட்டளை யிடுவார்கள். உடனே அந்தச் சுப்பிரமணியர் தமது சொந்தச் செலவில் கப்பலேறிப் போய் இந்தப் பெண்ணின் நாயகனுக்குப் பக்கத் துணையாய் உட்கார்ந்து கொள்ளுவார். நாயகன் வருவதையோ விருந்தாளி வருவதையோ எங்கள் பெண்களிடம் முன்னதாகவே காக்கையும் பல்லியும் சொல்லிவிடும். வரவேண்டியவர் வந்தபின் பெண்கள் தங்களிடம் காகமும் பல்லியும் சொன்னதாகச் சொல்லுவார்கள். பிள்ளைகளை வளர்ப்பதிலோ, தம்மைக் காத்துக் கொள்வதிலோ சொந்த முயற்சியும் சொந்த அறிவும் பயனில்லையென்று கருதிக் கடவுள் தலையில் பாரத்தைப் போட்டுவிடுவார்கள். எங்கள் பெண்கள் கேள்வி ஞானம் மிகவும் உடையவர்கள். சொந்தப் படிப்பு இல்லாவிட்டாலும் யாரையாவது கூப்பிட்டு அல்லி அரசாணி மாலை, புலந்திரன் தூது, பவளக்கொடி மாலை முதலிய அறிவுப் புதையல் நூற்களை வாசிக்கச் சொல்லிக் கிஷ்கிந்தை வாசிகள்போல் கும்பலாய்க் கூடிக் கேட்டுக்கொண்டிருப்பார்கள். எங்கள் பெண்கள் நாகரீகமான உடை உடுத்துவார்கள். பட்டுச் சேலையாயிருந்துவிட்டால் 18 முழத்தோடு 36 முழமாக இருந்தாலும் சுமக்கத் தயார். உரலானது வெள்ளியாயிருந்தால் அதையும் கால் காப்பாக மாட்டிக்கொள்ளப் பின்னிடைய மாட்டார்கள். எந்தப் பொருளும் கூட வராதென்றும் பச்சைக் குத்திக் கொள்வதுதான், செத்தபின் கூட வருகிறதென்றும் எண்ணிக் கைநிறையக் கால்நிறைய குத்திக்கொள்வ தோடு நெற்றியில் ஜாடியும் அதில் செடியும் இருப்பது போல் குத்திக் கொள்வதும் உண்டு. மணமுள்ள பூக்களைப் புல்சுமைக்குப் பதிலாகத் தலையில் சுமந்து கொள்வார்கள். சாகப்போகும் பெண்டிர்களும் திருவிழாவின் பேர் சொன்ன மாத்திரத்தில் தமது அரை டஜன் பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு கிளம்புவார்கள். கணவனே தெய்வமென்றும் அவன் வார்த்தைகளே தேவாக்ஞை யென்றும் எண்ணிக் கணவர்களிடம் தங்களை எரு முட்டைகளாக்கித் தம்மையே தியாகம் பண்ணிக் கொள்வார்கள். மற்றொரு விஷயம்: எங்கள் நாட்டுப் பெண்களிடம் சங்கீதம் பிறந்தது. இங்கிருந்துதான் சங்கீதமென்பதே வெளிக்குத் தெரிந்தது. நடனமும் இப்படியே. சாவு வீட்டில் எங்கள் பெண் மக்கள் ஒப்பனை வைத்து அழுவதையும், அழுதுகொண்டே எழுந்து நின்று சுற்றிவந்து மார்பில் அடித்துக் கொள்வதையும் பார்த்தாலே இவ்விஷயம் தெரியும். சீதை, துரோபதை, நளாயினி, அருந்ததி, வெள்ளி, சனி, பூரணி, பொற்கிளை, நல்லதங்கை இவர்களின் சந்ததியில் வந்தவர்களே எங்கள் பெண்கள் என்பதை ஓ! இங்கிலீஷ்காரர்களே! நீங்கள் நினைத்துப் பாருங்கள். அப்போதுதான் சுயராஜ்யக் கொடியை இந்தா என்று கொடுத்து, உங்கள் இங்கிலாந்துக்குப் போக நீங்கள் நினைப்பீர்கள். இந்திய நாட்டு ஆண் சிங்கங்களைப்பற்றி அடுத்த வாரம் எழுதுகிறேன். கிண்டற்காரன் - புதுவை முரசு, 20. 7. 1931, ப. 18 61. கடவுளின்மைக் கொள்கை கற்பிப்பது என்ன? உலகில் மக்கள் அறிவீனத்தை யொழித்துச் சுயஅறிவு பெற்று நாகரீகம் அடைந்து வாழ்வது முதல், இன்றும் என்றும் கணக்கிட்டறிய முடியாத, காணவியலாத, ஐம் புலன்களுக் கெட்டாத ஒர் வஸ்துவை - கடவுளை - பலர் பலப்பல பகர்வதாயினர். அதில் ஒரு சாரர் கடவுள் உண்டென்றும், பிறிதொரு சாரர் கடவுள் இல்லையென்றும் கூறலானார்கள்; கூறவும் செய்வார்கள். முன்னையோருக்கு ஆஸ்திகர் என்றும் பிள்ளையோருக்கு நாஸ்திகர் என்றும் கூறலானார்கள் முன்னையோராவது ஏக பரம் பொருளை, ஏசு நாதனை, விஸ்வனை, பிரமத்தை, கண்டோ மென்றாவது, அகக் கண்களில் பார்த்தோமென்றாவது இதுவரை கூறினவர் ஒருவருமில்லை. பின்னையோ ரென்றால் ஏக பொருளை, ஏக நாதனை, ஏழைப் பங்காளனை, விவனை, ஆபத் பாந்தவனை, முத்தொழிலோனை, முழுமுதற் கடவுளே எங்கும் இருக்கும் ஏகபார சக்தியை, இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு அவசியம் அன்றுஎனக் கூறுகிறார்கள். எல்லாம் அவனால் என்றால், வெட்டுவதும் கொலை செய்வதும் திருடுவதும், பொய் சொல்லுவதும் சூதாடுதலும், கன்னமிடுவதும், தீவைப்பதும் இன்னும் பிறகாரியங்கள் செய்வதும் யாரால்? என நாஸ்திகர்கள் கூறுகிறார்கள் இதற்கு முன்னையோராகிய ஆஸ்திகர்கள் பதிலிறுக்கப் பதறுகிறார்கள், வசைக் கவி பாடுகிறார்கள். இதில் ஆஸ்திகர்கள், எல்லாம் தெய்வந்தான் செய்கிறது நம்மால் ஆவதென்ன, கடவுளைத் துதிசெய்து பூஜித்தால் போதுமெனப் புகல்கின்றார்கள். ஆனால் கடவுளின்மைக் கொள்கையோர்களாகிய நாஸ்திகர்கள் நாம் தாமே நெற்றி வியர்வை நிலத்தில் விழக் கையில் பணம் வாங்கி ஜீவியம் செய்யவேண்டும்; மற்றோரை ஏய்த்து, மதிமோசம் செய்து, நாங்கள் தான் கடவுளின் பிரதிநிதிகள், மற்றொரு வருமிலர் என்று பொய் சொல்லி ஏமாற்றாதீர்கள். எல்லாம் அவனால் என்றால் ஒருவன் கடைத் தெருவிலோ, காட்டிலே உட்கார்ந்து கடவுளை ஜெபிப்பானாகில் சோறுபோடுமா? போடாதே என்றுரைக் கிறான். அவ்வாறு சொல்வதினால் சோம்பேறிக் குழாங்கள் - சோம்பேறித் தடியன்கள் - சாமியார்கள் பெருகி விடுகின்றனர் என அலறுகிறான், மனமுருகுகிறான். இது ஆஸ்திகர்களுக்குப் பிடிக்கவில்லை! என் செய்வது! கடவுளைத் தரிசிக்கத் தரகர் அவசியமெனக் கதறுகிறார்கள். ஆனால் நாஸ்திகர்கள், எல்லோரும் அவர்கள் சொல்லும் கடவுளைத் தொழத் தரகர் அவசியமில்லை என அறைகிறார்கள். ஏனென்றால் கடவுள் சன்னிதானத்தில் எல்லோரும் சமம் என்கிறார்கள். மதச்சார்பு, சமயச் சார்பு மிகமிகத் தேவையென்று வைதீகக் குடுக்கைகளாகிய ஆஸ்திகர்கள் அறைகின்றனர். ஆனால் நாஸ்திகர் வேதச்சார்பு, மதச்சார்பு, சமயச்சார்பு மிகமிகக் கெடுதலென் கிறார்கள். ஏனென்றால் அறிவுக்கும் யுக்திக்கும் ஒவ்வாத காரியங்கள் பல உள. அவைகள் புத்தியை மழுங்கச் செய்கின்றன என்பதேயாம். இதனின்று சமயச் சார்புடைமை புத்தியை மழுங்கச் செய்கிறது. ஆனால் சமயச்சார்பின்மை அறிவை ஊட்டுகின்றது. தனியொருவனுக்கு எதையும் ஊடுருவிப் பார்க்கும்போது தடுப்பவைகளை மீறிச் செல்லும் ஓர் திறனும், ஊக்கமும், ஆக்கமும் வேண்டுமென்கிறது கடவுளின்மைக் கொள்கை. ஆனால் கடவுளுண்மைக் கொள்கை வேதம், புராணம், சாஸ்திரங்கள் சொன்னது தான் வாக்கு! மற்றவைகள் அல்ல. அதையே நம்பவேண்டும் என்று கூறுகிறது. கடவுளின்மைக் கொள்கையோர் சாதியில்லை என்றும் எல்லோரும் சகோதரர் என்றும் கூறுகிறார்கள். ஆனால் கடவுளுண்மைக் கொள்கை யோர் சாதி நான்கென்றும் அது கடவுளால் உண்டாக்கப்பட்டதென்றும், இல்லையென்று சொல்வது தப்பென்றும் சொல்லுகிறார்கள். பள்ளனுக் குள்ளதுதானே மேல் சாதி என்று சொல்லப்பட்டவர்களுக்கும் தசை நார் எலும்பாலாகிய கூடுதானே என்றவுடன் விழிக்கின்றனர். சில பேர்வழிகள் நாஸ்திகர்களுக்கேன் நன்மை தின்மை என நாமழுப்புடன் நவில்கின்றனர். இவர்கள் நாஸ்திகர்களின் உண்மைக் கொள்கையை அறியாது தவிக்கின்றனர். இவர்கள் வேண்டுவது மக்களின் நலத்திற்கே. நாஸ்திகர்கள் என்ன நன்மையென்கிறார்கள். மக்களை நல் வழியில் நாடவேண்டு மென்கிறார்கள். பார்த்தீர்களா! அவர்களும் வெளிக்கு வேஷம் போடுகிறார். மோக்ஷத்தை விரும்புகிறார்கள் என, தப்பபிப்ராயமடைகின்றார்கள். அவர்களுக்கு நான் கூறுவதொன்று; ஒருவன் அவ்வாறு கூறினால் பிற்காலத்தில் கடவுள் மோக்ஷமீவா ரென்று, அல்ல ஆனால் அத்தகைய நல்வழி அதனைக் கையாடு வோனுக்கும் அவனைச் சுற்றிலுமுள்ளவர்களுக்கும் நன்மையை விளைவிக்கும் என்ற கருத்தோடும்தான். ஆஸ்திகர்கள் எண்ணி முடியாத, ஏட்டிலடங்காத, சொல்லித் தொலையாத 33 கோடி தெய்வங்களைப் பூசிக்க வற்புறுத்துகின்றனர். ஆனால் நாஸ்திகர்கள் பூஜித்தால், வழிபட்டால், தொழுதால் பலப்பல முறைகளைக் கையாளாமல் ஒரே நிலையில் முயற்சியுடன் நின்று தொழச் சொல்கின்றனர். கடவுளின் தரகர்கள், (ஆஸ்திகர்கள்) வெளிப்பகட்டுப் பகட்டும் வைதீகக்குறிகளாகிய நாமத்தையும் திருநீற்றையும் பூசினாற்றான் புண்ணியஞ், செய்தவர்களாவோம். இல்லையெனில் பாவம் செய்தவர்களாவோம் என்றும் மோக்ஷம் கிடைக்கும் சூஷுமம் அதுவே என்கிறார்கள் ஆனால் நாஸ்திகர்கள் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். ஏனெனில் கடவுள் பக்தியைக் காட்ட வெளிவேஷம் வேண்டாமென்றும், நாமத்தையோ, திருநீற்றையோ பூசுவது இந்த இருபதாம் நூற்றாண்டில் - நாகரீகமான இக்காலத்தில் செல்வாக்காகா தெனவும், நம்மைக் கண்டு அயல் நாட்டார்கள் சிரிப்பார்களெனவும் கூறுகிறார்கள். இது மத வித்தியாசம் காட்டுவதால் அதனின்றும் மத - வகுப்புக் கலவரங்கள் உண்டாகிக் கொலைக்குக் காரணமாகிற தென்றும், அக்குறியையணிகிறதினால் கடவுள் நம்பட்சம் இருப்பார் என்று கூறுவது அசம்பாவிதம் என்றும் கூறுகிறார்கள். அவ் விதமாயின் கொலைசெய்த ஒருவன் நாமத்தைப் போடுவானாகில் அவன் செய்த குற்றம் நீங்கிவிடுமா? அங்ஙனம் தப்பினவர் காணோமே! நாமத்திற்கும் திருநீற்றுக்கும் - கடவுளுக்கும் என்ன சொந்தம் இருக்கிறது என்றும் கூறுகிறார்கள். அப்படி இருக்கிறதென்று ரூபித்தால் ஏற்றுக்கொள்ளத் தயார் என்றும் கூறுகிறார்கள். அவ்விதம் பதிலிறுக்க முன்வருவார்களா? அது பார்ப்பனர் தங்கள் சூழ்ச்சி யென்றும் கூறுகிறார்கள். கடவுள் பக்தி காட்டுவதற்காகவென்றால் ஒவ்வொருவரின் உள்ளத்தை அறிய அவர்க்கு ஆற்றலில்லையா? உண்டு எனில் பின் ஏன் வெளிவேஷமா? வைத்தியன் வரைவது - புதுவை முரசு, 27. 7. 1931, ப. 9 - 11 62. காந்தியார் கக்கும் விஷம் திரு காந்தியவர்கள் மறுபடியும் வருணாசிராமப் பிரசாரம் செய்ய ஆரம்பித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான யங் இந்தியாவில் அவர் எழுதியிருப்பதாவது;- சமத்துவம் ஆத்துமாவுக்கே யன்றிச் சரீரத்துக்கல்ல..... பரம்பரைத் தொழில்களை அடிப்படையாகக் கொண்ட வருணாச் சிரமத்தில் நான் நம்பிக்கையுள்ளவன், என்பதாகும். திரு காந்தியவர்கள் 1927-ம் ஆண்டில் தமிழ்நாடு சுற்றுப் பிரயாணம் செய்தபோதும் இதே விஷத்தைக் கக்கிவிட்டுப் போனார். அவர் கக்கிய விஷமானது உடனே பார்ப்பனர்களால் எடுத்துப் பார்ப்பனரல்லாதாருக்கு வினியோகிக்கப்பட்டது. பார்ப்பனரல்லா தாருடைய இரத்தத்திற்கு இவ்விஷம் ஒத்ததல்லவென்றும், ஆரியர் இந்தியாவுக்கு வருமுன்னர் இல்லாத இவ்விஷம் பார்ப்பனரல்லாதார் சமூகத்தை ஒடுக்கிக் கொல்லுகிறதென்றும் அந்தச் சமயத்தில் நாம் எல்லோரும் ஏகோபித்துக் கதறினோம். ஆனால் பார்ப்பனர்களோ, மகாபாவம்; தடுத்துச் சொல்லாதீர்கள்; மகாத்மாவே இவ்விஷம் உடம்புக்கு நல்லது என்று சொல்லிப் போயிருக்கிறார். தாராளமாய்ச் சாப்பிடுங்கள், என்று இதே காந்திபேரால் அவ்விஷத்தைப் பார்ப்பனரல்லாத மக்கள் இரத்தத்தில் ஏற்றினார்கள். அதன் பயனாய் வருஷத்தில் 10-20 சனாதன தர்ம மகாநாடுகளும் பிராம்மண மகாநாடுகளும் ஊர் ஊராய்க் கூடின. இவைகளின் உட்கருத்தையும், சுயநலங் கொண்ட ஜாதிச் செருக்கையும் எதிர்த்து இந்த 3-4 வருஷங்களாய் நமது சுயமரியாதை இயக்கம் அரும்பாடுபட்டு வேலைசெய்தது. ஆகவே, திரு. காந்தி தம்முடைய அரசியல் சூதாட்டத்தில் இந்தச் சனியனை ஒருவாறு மறந்திருந்தார் என்று நினைத்திருந்தோம். வேதாளம் மறுபடியும் முருக்க மரத்தில் போய் ஏறிக்கொண்டது போல் தம்முடைய பழய பல்லவியைத் திரும்பவும் பாட ஆரம்பித்துவிட்டார். வழவழ வென்று, வெண்டைக்காயும், சேமக்கிழங்கும் சேர்த்துக் கலந்தது போல் எழுதும், சாமர்த்தியம் திரு காந்திக்கு இருப்பதுபோல் அநேகருக்கு இருக்க முடியாது என்பதை அவருடன் சேர்ந்து நெருங்கிப் பழகிய அன்பர்கள் நன்கறிவார்கள். இந்த வழவழத்த தன்மைக்கு அவருடைய செய்கை, பேச்சுகளில் இலட்சக் கணக்கான உதாரணங்கள் சொல்லலாம். ஜாதி வித்தியாசம் ஒழியவேண்டுமென்பார்; ஆனால் வருணாசிரமம் இருக்க வேண்டுமென்பார். வருணாசிரமம் என்றால் இப்போது இருக்கும் வருணாசிரமம் அல்ல; ஆனால் என்னுடைய வருணாசிரமம் வேறு என்பார். கலப்பு மணம், சமபந்தி போஜனம் செய்யலாம் என்பார்: ஆனால் ஜாதியை ஒழிப்பதற்கு இரண்டும் அவசியமில்லை என்பார். இராமாயணம் ஒரு கட்டுக்கதை யென்பார்; ஆனால் என்னுடைய இராமன் வேறு என்பார். தீண்டாமையை ஒழித்தா லொழியச் சுயராஜ்யம் ஒரு தம்பிடிக்குக்கூடப் பிரயோஜனமில்லையென்பார்; ஆனால் அது வரையில் சுயாராஜ்யத்தைத் தள்ளிவைக்கக் கூடாது, சுயராஜ்யம் பெற்றுக்கொண்டு தீண்டாமையை ஒழித்து விடலாமென்பார். இந்து முஸ்லீம் ஒற்றுமையாயிருக்க வேண்டுமென்பார்; ஆனால் இரண்டு மதக்காரர்களும் அவரவர்கள் மதத்தைக் காப்பாற்ற வேண்டுமென்பார். இந்து முஸ்லீம் ஒற்றுமை யேற்பட்டாலொழிய இலண்டன் மகாநாட்டிற்குப் போகமாட்டேனென்பார்; இருந்தாலும் என்பேரில் உலகம் பழிசொல்லக்கூடாது, நான் போய் வருகிறேன் என்பார். எல்லோரும் தக்ளினாலும், இராட்டினத்தினாலும் நூல் நூற்று ஆடையணிய வேண்டுமென்பார்; ஆனால் கொஞ்ச நேரத்தில் அதிக நூல் நூற்கக்கூடிய ஒரு மிஷின் ராட்டினம் தான் தேவை என்பார் இயந்திரத்தினால் ஏழைகள் பிழைப்புக் கெட்டுப்போகிற படியால் ஏழைகளை நசுக்க வந்ததே இயந்திரம் என்பார்; ஆனால் ரிக்ஷா வண்டியில் ஏறினால் பாவம் என்று மோட்டாரில் செல்லுவார். இவ்விதமாக, பாலுக்குங் காவல் பூனைக்குந் தோழனாயிருப் பவர் காந்தியை விட ஒருவர் இருக்க முடியுமா என்பதே சந்தேகமாயிருக்கிறது. ஆனால் எல்லா விஷயங்களிலும் இவ்விதம் இருக்கிறாரா வென்றால் அதுவுமில்லை. தாம் எதைக் கண்மூடித்தனமாய் நம்புகிறாரோ, அதை எந்தவிதத்திலும் மாற்றிக் கொள்ள இசைவதே கிடையாது. அது என் நம்பிக்கை; உன் எண்ணத்தின்படி செய்வதில் எனக்கு ஆட்சேபணை இல்லையென்று, வெகு சுலபமாய் எதையும் முடித்துவிடக்கூடிய வல்லமை அவருக்குத் தான் உண்டு. இவை ஒரு புறமிருக்க, நடைமுறையில் இல்லாத ஒரு வருணாச்சிரமத்தைக் குரங்குப் பிடியாய்ப் பிடித்துக் கொண்டு, எனது வருணாசிரமம் வேறு என்று சொன்னால் நமக்கு நகைப்பு உண்டாகிறதே தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை. திரு காந்தியின் வருணாசிரமம் எந்த உலகத்தி லிருக்கிறது? எந்த ஜனங்களிடத்திலிருக்கிறது? எப்போது இருந்தது என்பதையெல்லாம் அவராவது அவரது சிஷ்ய கோடிகளாவது சற்றுத் தெரிவிக்கட்டும். தூக்கத்திலிருந்து விழித்தவன் தான் கண்ட கனவைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பதைப்போல, பழைய பசலியைச் சேர்ந்தவராகிய திரு காந்தி தன்னுடைய பழமை என்னும் தூக்கத்தில் கண்ட கனவைப்பற்றி நவீன உலகில் விழுந்து நடமாடிக் கொண்டிருக்கும் ஜனங்களின் முன் கூறுவதென்றால் சிரிப்பு வராமல் வேறு என்னதான் வரும்? இவர் பேசும் காந்தி ஆசிரம தர்மம் அல்லது சபர்மதி ஆசிரம தர்மம் இவருடைய கனவே தவிர, நடைமுறையில் இருந்தது மில்லை; இருக்கிறதுமில்லை; இருக்கப்போவதுமில்லை. திரு. காந்தி அறியாமையினாலோ, அறிந்தோ, வேண்டு மென்றோ, விளையாட்டாகவோ கக்கும் இந்த வருணாசிரம விஷம் பார்ப்பனரல்லாத சமூகத்தை என்ன பாடுபடுத்துகிற தென்பதை, திரு காந்தி கடுகளவாவது தெரிந்திருந்தால் இவ்வாறு பொறுப்பற்ற விதமாய் எழுதத் துணிய மாட்டார். ஆனால், பாவம்! திரு. காந்தியோ, நமது ஜமீன்தார்கள், இராஜாக்கள், மிட்டாதார்கள், செட்டியார் முதலியோர் தங்களது மூளைகளைப் பார்ப்பார பாடிகார்டுகளுக்கு விற்று வெறும் மண்டையர்களாய் இருபது போல, காந்தியும் தன்முனையைப் பார்ப்பன துவாரபாலகர் களிடம் ஒப்படைத்திருப்பதால் பெரும்பாலான சமூகமாகிய திராவிட சமூகம் இருக்கும் நிலையைச் சற்றும்கூட, கவனிப்பதேயில்லை. இனி நம் நாட்டுப் பார்ப்பாரக் கோஷ்டிகள் காந்தியின் பெயரால் வருணாசிரமத்தைத் தீவிரமாகப் பிரசாரம் செய்ய ஆரம்பித்து விடுவார்களென்பது திண்ணம். குயவனுக்குப் பலநாள் வேலை, தடியனுக்கு ஒரு நாள் வேலை, யென்பதுபோல் நாம் இந்த 5, 6 ஆண்டுகளாகச் செய்துவந்த வேளையையெல்லாம் திரு. காந்தி ஒரே வார்த்தையில் உடைத்துவிட்டார் என்றே சொல்லுவோம். அதன் பலனை நாம்தான் அநுபவிக்கவேண்டி வந்துவிட்டது. சுமார் 2000 வருஷங்களுக்கு முன்பு, பார்ப்பானைப் பற்றிச் சொல்லப்பட்டுள்ள ஒரு பாட்டில், கபிலர் என்பவர், நால்வகைச் சாதியிந் நாட்டில் நீர் நாட்டினீர் என்று வயிறெரிந்து அலறியது இன்னும் தமிழர்கள் காதில் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. திரு. காந்தியை நினைக்கும்போது கபிலருக்கு எரிந்ததைவிட ஆயிரம் மடங்கு நம் வயிறு எரிகிறது! உடம்பு ஆடுகிறது! இரத்தம் கொதிக்கிறது! பாவி! காந்தி, சமரசமான எங்கள் வள்ளுவர் குறளைப் படிக்காமல் பகவத் கீதையைப்படித்த பலன் நாட்டைப் பாழ்படுத்துகிறது. பார்ப்பன ரல்லாத நெஞ்சம் குமுறுகிறது. ஆனால் பார்ப்பன நெஞ்சமோ குதிக்கிறது. பகுத்தறிவு வளர்ச்சிக்கும் ஒடுக்கப்பட்ட ஜன சமூகத்திற்கும் கோடரிக்காம்பாய் வந்தாரே, நமது காந்தி! காந்தியார் கக்கும் விஷம் பரவுதே! சமரசப் பாலெல்லாம் நீல நிறமாய் விட்டதே! வருணாசிரமமா! ஐயையோ! போதாதா இது வரையில் பட்டதுன்பம்! காணக்கண் கூசுதே! கையெடுக்க நாணுதே! மாணொக்க வாய்திறக்க மாட்டாதே - வீணுக்கென், என்பெல்லாம் பற்றி எரிகின்றதையையோ, இக்காந்தியாரிட்ட விஷம். - புதுவை முரசு, 27. 7. 1931, ப. 12 - 14 63. தமிழரசில் வெறிநாய்கள் தமிழரசு மலர் 2. இதழ் 25. பக்கம் 5 இல் வெற்றுரை வீரர் இராமசாமியார் - தூற்றியும் ஏமாற்றியும் தலைமை வகித்தது போதும் - என்று தலைப்புக் கொடுத்து ஓர் வியாசம் காணப்படுகிறது. அதன் கையொப்பம் எவன் எழுதினாலென்ன என்பதாகும். திரு. இராமசாமியார் வெற்றுரை வீரர் என்னும் இவராயினும், இவர் கூட்டத்தார் என எவராவது இருப்பின் அவர்களாயினும், தமிழர சாயினும் பயனுரை பகர்ந்ததென்ன? இவர்கள் அகராதியில் கூலிக்கு மாரடிப்பதும், எச்சிலை கிடைத்தாலொழியச் சுருண்டு கிடக்கும் நாய்கள்போல் வாழ்ந்து, நல்லது செய்வாரைக் கண்டாற் குரைத்துத் திரிவதும் பயனுள்ள செயல்போதும்; பயனுரை போலும். உலகில் பல வேடிக்கைக்காரர்கள் இருக்கிறார்கள் அவர்கள் வேடம் பூண்பது வயிற்றுக் கொடுமையால் என்பதை மக்கள் உணர்ந்தே சிறிது பொருள் கொடுக்கின்றார்கள். ஆனால் சுயமரியாதை இயக்கத்தின் தலைவரென வேடம்பூண்டு பாமர மக்களை ஏமாற்றிப் பகற்கொள்ளை யடிப்பது வேஷத்திலும் மோசமான வேஷம் என்று எவன் எழுதினாலென்ன என்ற யோக்கியர் எழுதுகிறார். தேசீயம் என்ற பேரால் பொதுப் பணத்தைக் கொள்ளையடித்து உடன் திரியும் கூலிகட்கும் காலிகட்கும் சிறிது கொடுத்து மீதியை வாயிற் போட்டுக்கொள்ளும் அயோக்கியர்கள் போல் எமது ராமசாமியும் செய்ய வேண்டுமென்றும் அப்படிச் செய்தால் நாங்கள் ஜாலியாய் வயிறு வளர்ப்போம் என்றும் சில கூலிகள் ராமசாமியை நத்தியதுண்டு. இதைச் சிறிதும் ஒப்பாத இராமசாமி பகற் கொள்ளைக்காரனால் கூலிக்கு நத்திய மடயர்களின் பெயர் தியாகிகள் போலும். வீண்கலாட்டா இராமசாமி என்றும் வெற்றுரை வீரர் என்றும் தமிழ் மக்கள் கருதலானார் என எவன் எழுதினாலென்ன எழுதுகிறார். திரு ராமசாமியவர்களின் பிரசாரத்தால் திருந்தி வருந் தமிழர்கள் போகத் திருந்தாத தமிழர்களும், திருந்தியும், வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது போல் பாயும் சில முட்டாள்களுமே இராமசாமியை அவ்வாறு கருதுகிறார்கள். வியாசம் எழுதவந்த எவன் எழுதினாலென்ன என்பவரும் அதைப் பிரசுரிக்கும் உமிழரசான தமிழரசும் மேற்சொல்லிய மூவகையாரில் எக்கூட்டத்தைச் சேர்ந்தவர் என்று கேட்கிறோம். கடந்த ஆறு ஆண்டுகளாகத் திரு. நாயக்கர், தமிழ்நாட்டில் புரட்டிய புரட்டெல்லாம், பணக்காரர்கள் தனக்குப் பணத்தைக் கொட்டியதையும் போகுமிடமெல்லாம் பதவி வேட்டைக்காரர்கள் படையல் போட்டதையும், வாய்ப்பேச்சு வீரர்கள் கூட்டம் போட்டதை யும் அன்னக்காவடித் தொண்டர்கள் பெட்டி தூக்கியதையும் ஏமாந்த சோணகிரிகள் மாலைபோட்டதையும் தவிரவேறு என்ன நடந்தது? என்று எவன் எழுதினாலென்ன எழுதுகிறார். இன்னது நடந்தது என்பது இவருக்குத் தெரியாது போலும். சுயமரியாதை இயக்கம் செய்தன வற்றில் எவன் எழுதினாலென்ன என்பவருக்கு விளங்கக் கூடிய சிலவற்றை மாத்திரம் எடுத்துக் காட்டுவோம். சுயமரியாதைத் தலைவரின் காலடி பற்றியாவது பிழைப்போம் என்று வெளிவந்த தமிழரசு தோன்றும் நிலை சுயமரியாதையியக்கம் செய்தது. பிறகு வேறுவழியில் காசு கிடைப்பதறிந்து காசு கொடுப்போர் கருத்துப்படி சுயமரியாதையியக்கத்தை எதிர்த்த அதே தமிழரசு சுயமரியாதை கொண்ட தனது சந்தாதாரர்கள் செருப்பாலடிப்பார்கள் என்று கருதிச் சுயமரியாதைக் கூட்டத்தில் உள்ள சம்பளக்காரர்களை மெதுவாக இச்சகம் பேசி இழுத்துச் சீர்திருத்தம் பேசும் நிலையை யடைந்திருப்பதுகொண்டு ராமசாமி இயக்கம் செய்த வேலையால் முட்டாள்களின் மூளைகட்கு வேலைகிடைக்க வில்லையா? மூடத்தனங்கொண்ட தமிழரசு தன்னிடம் கூலி பெறும் சில அயோக்கியர்களின் அளவு தெரியாமல் அவர்களைப் பெரிதாக மதித்துச் சுயமரியாதைத் தலைவர்மேல் கெட்ட எண்ணம் உண்டாக்கத் தக்க வியாசத்தைப் பெற்றுப் பிரசுரித்துத் தானும் உளறி எப்படியாவது நாட்டைப் பழய மூடப்புராணக்காரர்கட்கு இலக்காக்குவதன் மூலம் தானும் பிழைக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறது எனினும், பொது மக்கள் தமிழரசை உமிழரசாக்கும் நிலையைச் சுயமரியாதை யியக்கமும் அதன் தலைவரும் செய்து வருவதும் கண்கூடு. பொறாமைக்காரனுக்குப் புத்தி மட்டு. அண்டைவீட்டுக்காரன் கெட்டுப்போக ஆறுமாசம் பட்டினி கிடக்கும் வழக்கம் நீங்கி அனைவரும் மக்கள், அனைவரும் சோதரர் என்ற கொள்கைக்கு இடையூறாய்க் கிடக்கும், சாதி, மதம் மூட வழக்கங்கள் அகன்று கடைத்தேறும் வகையில் உழைத்துவரும் எமது இராமசாமியால் தமிழரசுக்கும், அதன் கூட்டத்துக்குப் பயன் ஏற்படவில்லை எனில் அதுவும் பொருந்தாது; ஏன்? இவர்கள் திருந்தியது மெய், திருத்த மில்லாத முறையில் குரைப்பது அதன் குற்றம், அக்கூட்டத்தின் குற்றம். எவன் எழுதினாலென்ன என்னும் அறிவாளி மேற்படி வரிகளில் இந்நாள் மட்டும் இராமசாமிக்கு உதவியாயிருந்தவர்களும், மாலையிட்டு உயர்வு படுத்தியவர்களும், அன்னக்காவடிகள் ஏமாந்த சோணகிரிகள் என்று குறிக்கிறார். இராமசாமி ஆபீஸில் வேலை கிடைத்தாலும் கிடைத்தது அங்குக் கொள்ளையடிக்கப் பணம் கிடைத்தாலும் கிடைத்தது. மாலைச் சிற்றுண்டிக்கு 3 ரூபாய் வீதம் செலவு செய்த சில திருட்டுப் பசங்கள் தம்மை அவ்வாறு விட்டுவைத்த இராமசாமியை அளவுக்கு மிஞ்சிப் பாராட்டி இச்சகம் பேசிப் பெட்டியும், தூக்கிய துண்டு. இதில் பெட்டி தூக்கியதன் காரணம் தமக்குக் கொள்ளை கிடைத்ததேயாகும். இவர்கள் தவிர மற்றவர்கள் பெட்டி தூக்கி யிருந்தால் அவர்கள் அன்னக் காவடிகள் அல்லர். அன்பர்கள், மாலை போட்டார் மனோபாவம் அன்பேயாகும். எவன் எழுதினாலென்ன என்பவரின் பெண்டு பிள்ளைகளும் தாமும் ராமசாமியின் உடல் நலம் கருதி மாலை போட்டிருந்தால் மாலை போட்டவரின் மனோபாவம் இன்ன தென்பது எவன் எழுதினாலென்ன என்பவர்க்குப் புரிந்திருக்கக் கூடும் அதுபற்றி மாலை சூட்டியவர்களைத் திட்டுவதில் ஆருக்கும் ஆக்ஷேபமிருக்க வழியில்லை. இதை யெழுதும் நாமும் இராமசாமிக்குப் பெட்டி தூக்கியதுண்டு. மாலைபோட்ட துண்டு. நாம் அன்னக் காவடியன்று, ஏமாந்த சோணகிரி அன்று. நம் மனோபாவத்தை உணராது உளறிய பேடிப்பயல் தலையில் அணியும் செறுப்புத் தெய்வத்தை நாம் காலில் அணிந்துள்ளோம் என்பதை எவன் எழுதினாலென்ன அறியட்டும். துவக்கிய விஷயத்தை விரிவஞ்சி விடுத்தோம். இனிப் புறனடையாய்ச் சொல்வதென்னவெனில், சுயமரியாதைக் கொள்கை என்பதாக ஒன்றை இராமசாமி வெளிக்காட்டினார். நாளடைவில் அதன் மேன்மை கருதி மக்கள் ஆதரித்தார்கள். ஆதரித்த மக்கள் தொகை அதிகரிக்கவும் செய்தது. மகாநாடுகள் பல்லாயிரக் கணக்கில் கூடின. அறையில் கூடியதில்லை. அம்பலத்தில்தான் நடந்தன. சுயமரியாதைக்காரர்கள் பொதுநலங்கருதி ஒருவரைக் கண்டிப்பதும், ஒருவரைப் பாராட்டுவதும் செய்ததுண்டு. ஆதிமுதல் இன்றுவரையில் சுயமரியாதைக் கூட்டங்களில் எவர் வாய்க்கும் பூட்டுப் போட எவருக்கும் உரிமை கிடைத்ததில்லை. அடக்குவோருக்கு அடங்கி நடக்கவும் சட்டமிருந்ததில்லை. சுய மரியாதைக்காரர்களில் ஒருவர் பெரியவர் மற்றவர் மட்டம் என்று குறித்ததுமில்லை. இவ்விதமிருக்க, சுயமரியாதைக்காரர்களுக்குள் ஒருவர்க்கொருவர் தனிப்பட்ட அபிப்பிராய பேதமிருந்தால் சுய மரியாதைக் கொள்கையின் பொதுமை பாதகமடையு முறையில் திட்டுவதற்காக எதிர்க் கட்சியில் சேர்வது பேடித்தனம். சுயமரியாதை இயக்க சம்பந்தமாகக், குறைசொல்லும் ஒரு சுயமரியாதைக்காரர், அச் சுயமரியாதைக் கூட்டத்தில் சேர்ந்திருந்தவரைக்கும் சொல்லாம லிருந்ததற்குக் காரணம் என்ன? அதைச் சொல்லுவதற்காக இயக்கத் தின் மூலத்தையே எதிர்ப்பதென்பது அறிவுள்ள செயலாகுமா? விஷயம் தெரிந்த சிங்கங்கள் தம் கருத்தை மக்களிடை விளக்கித் தமது அபிப்பிராயத்துக்கு மக்களை கோளாறுகளைத் திருத்துவதன்றோ நியாயம்? உள்ளிருந்தவரைக்கும் ஊமை வேஷம் போட்ட ஒருவன் தெருவில் ஒடிப்போய் திட்டுவானேயானால் அவன்தான் உள் ளிருக்கும் ஒரு மனிதனுக்கு அஞ்சுவதாக அர்த்தம். அந்த அச்ச மனிதன் உள்ளிருக்கும் பிறமனிதர்க்குப் புத்திசொல்ல நினைப்பது முட்டாள்தனமும் அயோக்கியத்தனமும் ஆகாதா? நாம் எழுதினாலென்ன? - புதுவை முரசு, 27. 7. 1931, ப. 16 - 18 64. அன்னியம் என்பது எது? சில வருஷங்களாக நமது இந்தியா அன்னியம் என்னும் வார்த்தையானது எங்குப் பார்த்தாலும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. தேசீயத்தலைவர்கள் என்பவர்களும் தேசபக்தர்கள் என்பவர்களும் பிரிட்டிஷ் இந்தியாவில் செய்யும் கிளர்ச்சியில் இது சம்பந்தமான வார்த்தைகள் அடிக்கடி பிரயோகப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் நமது பிரஞ்சு இந்தியா சம்பந்தப்பட்ட மட்டில் இத்தகைய வித்தியாசமும் துவேஷமுமான உணர்ச்சியோ, காரியமோ எந்தச் சந்தர்ப்பத்திலும் இருந்ததாகச் சொல்லவேமுடியாது. அன்னியம் என்கிற ஒரு துவேஷ உணர்ச்சியை அடியோடு ஒழிப்பதற்கு ஏதேனும் ஒரு தேசமோ, ஒரு ஜனசமூகமோ இருக்கிற தென்றால், அதுதான் பிரான்சும், பிரஞ்சுக்காரர்களும் ஆகும். தற்கால சமரச இரஷியாவும் பிரஞ்சுக்காரர்களிடமிருந்தே இச்சமத்துவ உணர்ச்சியைக் கற்றுக் கொண்டது என்று சொல்வது மிகையாகாது. நாகரீக தேசம் என்று வாய்ப்பந்தல் போடும் அமெரிக்கர்கள் எந்த நீக்ரோவர்களை மிருகத்திலும் கேடாக நடத்துகிறார்களோ, அதே நீக்ரோவர்களுக்குப் பிரதம மந்திரி பதவியை அளித்திருப்பது நம் தாய் நாடாகிய பிரான்சு என்றால், நமது நாட்டைக்கண்டு அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் வெட்கித் தலைகுனிய வேண்டாமா என்று கேட்கிறோம். ஆகவே, பிரஞ்சு இந்தியாவில் இந்த அன்னியம் என்ற வார்த்தைக்கு அபத்தம் ஆபாசம் என்ற அர்த்தம் தவிர வேறு ஒன்றும் கிடையாது. ஆனால் இந்தியாவில் மிகவும் பெரும்பாகமான விஸ் தீரணத்தைக் கொண்ட பிரிட்டிஷ் இந்தியாவில் இந்தவார்த்தை அடிக்கடி உபயோகப்படுத்தப்பட்டு வருவதால், அதைப்பற்றி ஆராயவே இக் கட்டுரை எழுதுகிறோம். நம் பிரஞ்சுக்காரர்களைப் போலில்லாமல் ஆங்கிலேயர் நிற வித்தியாசத்தைப்பல வழிகளிலும் காட்டிவருவதால்தான் இத்தகைய உணர்ச்சி நம்மிலும் பிரிட்டிஷ் இந்தியக்குடி ஜனங்களுக்கு அதிகமாக இருக்கிறது என்பதை நாம் தக்க ஆதாரங்களோடு நிரூபிக்க முடியும். ஆனால் பிரிட்டிஷ் குடிஜனங்கள் சொல்லிவரும் அன்னியம் என்பதைக் கவனிப்போமானால், அது ஒரு சாராருடைய சூழ்ச்சிப் பிரசாரம் என்பது தெளிவாய் விளங்கும். அதை மற்றொரு சமயம் ஆராய்வோம். இனி, சிறிது காலமாய்ப் பிரிட்டிஷ் இந்தியாவில் நடைபெற்று வரும் காங்கிரஸ் கூச்சலில் அன்னிய நாடு, அன்னியர்கள், அன்னியபாஷை, அன்னிய ஆடை, அன்னியச் சாமான் முதலிய சொற்கள் அடிக்கடி சொல்லப்பட்டு வருவதை நாம் கேட்டு வருகிறோம். அன்னிய நாடு என்றால் பொதுவாக எல்லா நாடுகளை யும், சிறப்பாக இங்கிலாந்தையும் குறிப்பிடுகிறார்கள் அன்னியர் களுடைய இராஜ்யத்தை ஒழிக்க வேண்டாமா? என்கிற போது ஆங்கிலேயர் களைக் குறிப்பிடுகிறார்கள். அன்னிய பாஷையைப் படித்து அடிமையாகாதீர்கள்; தேசபாஷையாகிய ஹிந்தியைப் படியுங்கள் என்று சொல்லும் போது இங்கிலீஷ் பாஷையைக் குறிப்பிடுகிறார்கள். அன்னிய ஆடையை பகிஷ்கரித்து, கதர் ஆடையை உடுத்துங்கள், என்னும்போது, குறிப்பாக இங்கிலாந்தில் செய்யப்பட்ட ஆடையைக் குறிப்பிடு கிறார்கள். இதேமாதிரி அன்னியம் என்ற அடைமொழியை ஒவ்வொன்றிற்கும் சேர்த்தே தற்கால தேசீயவாதிகள் பிரசாரம் செய்து வருகிறார்கள். நமது ஜனங்களோ ஆயிரக்கணக்கான வருஷங்களாகத் தங்கள் புத்தியைப் பழக்கப்பட்டவர்களாகையால், எதையும் பிறர் கக்கிய படியே தங்கள் வாயிலெடுத்துப் போட்டு விழுங்கி விடுவதில் சாமர்த்தியம் பெற்றவர்கள். இதற்குச் சிறந்த உதாரணம் வேண்டு மானால் இந்த அன்னியம் என்ற கூச்சல் ஒன்றே போதும். வேறு தேசத்திலிருந்து. இந்தியாவுக்கு வந்திருப்பதால், ஆங்கிலேயர்களை அன்னியர்கள் என்று நம் தேசபக்த சிகரமணிகள் கூறுகிறார்கள் அப்படியானால், பார்ப்பனர்கள் என்பவர்கள் யார்? அவர்கள் இந்தத் தேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்கு ஏதேனும் ஓர் அத்தாட்சியாவது உண்டா? அவர்களையும் நம் தேசத்தைவிட்டு விரட்டியடிக்க வேண்டுவது நம் கடமையல்லவா? அவர்களது ஆட்சியில் இன்று நமது சமூகம் கட்டுப்பட்டுத் துன்பப்படுகிறதெல்லாம் கண்ணுக்குத் தெரியவில்லையா? - என்ற கேள்வியைக் கேட்பதற்குப் பழைய தேசபக்தர்களாகிலும் நவீன தேசபக்தர்களாகிலும் முன்னுக்கு வராத காரணம் என்ன? ஆங்கிலேயர் 500 வருஷங்களுக்குள் வந்த அன்னியர்கள். பார்ப்பனர்களோ 2000 வருஷங்களுக்கு முன் வந்த அன்னியர்கள். யாரை முதலில் விரட்ட வேண்டும்? யாருடைய ஆட்சியிலிருந்து முதலில் விடுபடவேண்டும்? இனி, இரண்டாவதாக அன்னிய பாஷை விஷயத்தை எடுத்துக் கொள்வோம். இங்கிலீஷ் அன்னிய பாஷையாம்! மிகவும் சரி! ஹிந்தி என்ன பாஷை? அதற்கும் இந்தியாவிற்கும் என்ன சம்பந்தம்? 2000 வருஷங்களுக்குமுன் ஹிந்தியில் எழுதப்பட்ட புஸ்தகம் ஒன்றைக் காட்டமுடியுமா? ஹிந்தியும் அதன் காலஞ்சென்ற தாயாகிய சமஸ் கிருத மும் இந்தியாவிலுள்ள 100க்கு 99 பேர்களடங்கிய மக்களுக்கு அன்னிய பாஷையல்லவா? இதை ஒழிப்பதல்லவா இன்னும் அவசியம்? கடைசியாக அன்னிய நாட்டுச் சாமான்களையும் துணியையும் எடுத்துக்கொள்வோம். அன்னிய நாட்டுச் சாமான்களை பகிஷ்கரிக்க வேண்டியது நம் கடமையாம்! அப்படியானால், ஹிந்துமதம் எந்த அப்பன் வீட்டுச் சொத்து? தேசபக்தர்கள் இந்திய சரித்திரம் படித்திருக் கிறார்களா? இல்லை; அவர்கள் மூளையில் களிமண் அடைத் திருக்கிறதா? ஹிந்து மதம் என்றால் பார்ப்பனீய மதம் என்று எல்லா இடங்களிலும் எழுதியிருப்பதையும் சரித்திரம் முறையிடுவதையும் கவனிக்க நேரமில்லையா? அல்லது புத்தியில்லையா? ஹிந்து என்றால் திருடன் என்று பொருள்படப் பிறதேசத்தார் இட்ட பெயர் என்பதை அவர்களுக்கு அறியும் சக்தியில்லையா? ஹிந்து வென்ற அர்த்தமற்ற அகராதிப் பெயரை வைத்துக்கொள்ள தேச பக்தர்களுக்கு வெட்கம், மானமில்லையா? அன்னியராகிய பார்ப்பனரை விரட்டி, அன்னிய பாஷையாகிய ஹிந்தி, சமஸ்கிருதத்தை வேரோடு அழித்து, அன்னியச் சரக்காகிய ஹிந்து மதத்தை அடியோடு தொலைத்து முழுகி, சுயேச்சை பெற்ற பிறகல்லவா சமீபத்தில் வந்த அன்னியத்தை யெல்லாம் தொலைக்க முடியும்? இதெல்லாம் காங்கிரசுக்கு அதாவது, பார்ப்பாரக் கூட்டத்திற்குத் தெரிந்ததுதான். அதனால்தான் இவ்விஷயங்களில் அதன் வா யடைத்துப் போய்விட்டது. ஆனால் நமது பார்ப்பனரல்லாத தேசபக்த விபீஷணர்களுக்கும் சுக்ரீவர்களுக்கும் இந்தவிஷயம் புலப்படாமல், கதரை எதிர்ப்பவர் மேல் பாயலாமா, சுயமரியாதையைத் திட்டி இப்பந்திப் பத்திரிகைகளில் குப்பையும் கூளமுமாய்க் கொட்டியழலாமா என்று திரிவதைக் கவனிக்கும்போது அவர்கள் அறியாமைக்கும் ஏமாந்த தன்மைக்கும் இரங்க வேண்டியதாகவே இருக்கிறது. இனிமேலாவது அன்னியம் என்கிற பதத்தைக் காங்கிரஸ் காரர்கள் பிரயோகித்தால் சுயமரியாதையன்பர்கள் அவர்களுக்குப் புத்தி கற்பிப்பார்களென நம்புகிறோம். பத்திராதிபர் குறிப்பு - புதுவை முரசு, 27. 7. 1931, ப. 20 - 21 65. வக்கீல் கடையா? கள்ளுக் கடையா? காந்தி சிஷ்யர்களும் தேச பக்தர்களும் சில மாதங்களாய்க் கள்ளுக்கடை மறியல் செய்து வருகிறார்களென்பது வாசகர் களுக்குத் தெரியும். பாமர ஜனங்களும் ஏழைகளும் குடித்துக் கெட்டுப் போகிறார்கள், வறுமையில் ஆழ்ந்து துன்பப்படுகிறார்கள் என்ற காரணத்திற்காக, கள்ளுக்கடை மறியல் செய்யப்படுவதாகச் சொல்லப் படுகிறது. ஆனால் நாம் ஒன்று கேட்கிறோம். கள்ளுக் கடையில் போகும் பணமோ மிகச் சொற்பம். தினம் ஆளுக்கு 2, 3 அணாவுக்கு மேலாகாது. ஆனால் கள்ளுக் கடையைவிட ஆபாசமான, கொடுமை யான, பகற்கொள்ளையான கடையாகிய வக்கீல் கடையில் தினந் தோறும் நடக்கும் கொடுமைகளை எப்படித் தொலைப்பது என்பது ஏன் ஒருவர் புத்திக்கும் புலப்படவில்லை? ஜமீன்தார்கள் ஓட்டாண்டி யாவதும், மிராசுதார்கள் கடன்காரர்க ளாவதும் வக்கீல்களின் கொள்ளையா லல்லவா? மாதம் 500 முதல் 10000 வரையில் சென்னையில் சம்பாதிக்கும் வக்கீல்களைவிட அந்நியத் துணி வியாபாரிகள் எந்த விதத்தில் கெட்டவர்கள் என்று கேட்கிறோம். அந்நியத் துணி வியாபாரி அந்நிய நாட்டுத் துணியை விற்றுப் பிழைக்கிறார்கள். வக்கீல்கள் அந்நிய நாட்டுப் பாஷையைக் கற்று, லா காலேஜில், நெட்டுருப் போட்ட சட்டங்களைக் கோர்ட்டில் வாயிலெடுத்துப் பிழைக்கிறார்கள். அந்நியத் துணி வியாபாரி செய்வது தேசத் துரோகமென்றால், அந்நிய பாஷை வியாபாரியாகிய வக்கீல்கள் செய்வது என்னென்று சொல்வது? நமது தேசபக்த சோணகிரிகளுக்கு இந்த விஷயத்தில் ஏன் கண் தெரிய வில்லை? ஒருவேளை காங்கிரசில் தலைகளாக இருப்பதெல்லாம் இந்த வக்கீல் ஜாதியைச் சேர்ந்ததால் மௌனமாயிருக்கிறார்களா? ஓ! கள்ளுக் கடைக்காரர்களே! அந்நியத் துணி வியாபாரிகளே! நீங்களெல்லோரும் மைலாப்பூரிலும், திருவல்லிக்கேணியிலும் மறியல் ஆரம்பிப்பீர்களா? - புதுவை முரசு, 27.7.1931, ப. 22 66. இது மெய்தானா! மக்கள் மேற்கொண்ட அனுதாபத்தால் அன்புத்தொண்டாற்றும் சுயமரியாதையியக்கத் தொண்டர்களே! சுயமரியாதை யியக்கத்தார் காமவெறியரும், பொருளாசைக் காரரும், சிற்றின்பப் பிரியருமாகி நாட்டின் நிலைமையை யெண்ணாதே போயினர் என்று என்காதுகள் கேட்க முழங்கும் முழக்கத்தைக் கேட்டபோது எனக்குள் அனந்தம் எண்ணங்களும் அடங்காத் துயரமும் பெருகினது. ஆனால் நாட்டின் நிலைமையை உள்ளபடியே அறிந்து தொண்டாற்றும் உத்தம சுயமரியாதைத் தொண்டர்கள் இத்தகைய சீர்கேட்டுக் குட்படமாட்டார் களென்பதே எனது துணிபு. அன்பின் தொண்டர்களே! மேற்படி விஷயம் மெய்தானா? இதுமெய்யாயிருக்குமானால் நாம் நம் நாட்டில் எப்படிப்பட்ட சீர்திருத்தஞ் செய்யப்போகிறோம்! இது அபிப்பிராய பேதத்தா லுண்டான பொய் வதந்தியென்றால் இது விஷயத்தில் மௌனமா யிருக்கவேண்டாம். பத்திரிகை வாயிலாக விளக்கிக் காட்டி மக்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய முன்வாருங்கள். மக்களுக்குள் அபிப்பிராய பேதத்தையுண்டாக்குவதால் நாம் அவர்களுக்குப் பகைவர்களாய்ப் போனபின் அவர்களுக்குள் நாம் எந்த நல்ல காரியத்தைச் செய்யமுடியும்! எச்சரிக்கையாயிருப்போமாக. மதங் கொண்ட யானை தன் தலைக்கே மண்ணள்ளிப் போட்டு கொள்வது போல் நாமே நம்மைப் பாழ்ப்படுத்துவது மன்றி நாடும் பாழாகக் காரணதர்களாகலாமா? எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவ மென்ப திழுக்கு - புதுவை முரசு, 3. 8. 1931, ப. 5 67. சோம்பேறித் தனந்தான் கடவுளோ? அல்லையீது அல்லையீது என மறைகளும் அண்மைச் சொல்லினால் துதித் திளைக்கும் என்று கடவுளுக்கு அடைமொழி கூற வேண்டிய நெருக்கடி ஆஸ்திகர்கட்கும் ஏற்பட்டதுண்டு. தெரிந்த பொருளாகிய இன்னதுவா கடவுள்? அதுவுமன்று. மற்றின்னதுவா கடவுள்? அதுவுமன்று, மற்றின்னதுவா கடவுள்? அதுவுமன்று என்று எதிர்மறைச் சொல்லாலே துதித்து (அப்படித் துதித்துப் பயனொன்று மில்லாததால்) இளைக்கும் (மக்கள் இளைக்கும்) கடவுள் என்பது மேற்படி வரிகளின் கருத்தாகும். ஆஸ்திகர்கள் கோயிற் சிலைகளிலும், மக்களின் பிரத்தியக்ஷத்திலும் கடவுளை அறிந்துவிடலாம் என்று எளிதாகச் சொன்னதற்கு மாறாகக் காணமுடியாத கடவுள் என்றும் அறியமுடியாத கடவுள் என்றும் சொல்ல வேண்டியதிருந்ததெனில், கடவுளைப் பற்றிக் கவலை வேண்டாம் என்பவர்க்கும் ஆஸ்திகர்க்கும் கொள்கையில் வித்தியாசம் என்ன? கடவுளைப் பற்றிக் கவலை வேண்டாம் என்பவர்கள் மனிதரின் முன்னேற்றத்துக்குரிய காரியங்களை மனிதரே முனைந்து செய்தாக வேண்டும் என்கிறார்கள். ஆஸ்திகர்கள் இதை மறுப்பதெப்படி? செய்யுளின் அடியின்படியே பார்த்தாலும், கடவுள் அறியமுடியாத வஸ்து என்று ஆஸ்திகர் சொல்லுவதன் மூலம் இதை அங்கீகரிப்பவர் களாகிறார்கள். நம்மால் அறியமுடியாத ஒன்று நமக்கு ஆனவற்றைச் செய்துதரும் என்பதை எப்படி ஆஸ்திகர்கள் அறிந்திருக்க முடியும்? மனித ப்ரயத்தனத்தால் அனைத்தும் ஆக்கலாம் என்பதை நமது நீதி நூற்களும், சிற்பமும், வைத்தியமும் வலியுறுத்தவில்லையா? தன் கையே தனக்குதவி என்ற சாதாரண மொழியின் பொருளுக்குத் தான் என்ன அர்த்தம். தெய்வத்தால் ஆவது எனினும் முயற்சி தன் மெய் வருந்தக் கூலி தரும் என்பதையும் ஊன்றிக் கவனிக்க. கடவுளால் எல்லாம் ஆவது என்று சாதாரண மனிதர் சொன்னாலும் தன் முயற்சி யானது உடம்பை வருத்தி உழைக்கும் வீதத்தில் பயன் கொடுக்கும் என்பது இதன் கருத்தாகும். இவைகளால் அறியவேண்டியது என்னவெனில் மக்கள் முன்னேற்றத்திற்கு மக்களே முயலவேண்டும் என்பதும் இம் முயற்சிக்கிடையில் கடவுளை அழைப்பது சோம்பேறித்தனம் என்பதும் ஆகும். சுய மரியாதைக்காரரைக் கடவுள் வந்து விரோதித்துக் கொண்டதுமில்லை. அதனால்கடவுளிடம் அவர்கள் பகைமை பாராட்டித் திட்டவுமில்லை. கடவுள் இல்லைஎன்று, சுயமரியாதை சொல்லுகிறதென்றும், கடவுளைத் திட்டுவது சுயமரியாதை இயக்கத்தின் கொள்கையென்றும் சில மூடர்களும், கடவுள்பேரால் பிழைக்க நினைக்கும் சுயநலக்கூத்தாடிகளும் சொல்லுவதைப் பொது மக்கள் கேட்டு நம்பிவிடாமல் எதையும் சிறிதேனும் ஆலோசித்து முடிவுகட்டக் கோருகிறோம். ஆனால் ஒன்று. கடவுளின்பேரால் மக்களில் பலர் நடந்து கொள்ளும் மாதிரியைப் பார்த்துவரும் எந்த அறிவாளிகளும் சோம்பேறித் தனத்தையே கடவுள் பேரால் அழைக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளமுடியும். பழய ஆஸ்திகன் - புதுவை முரசு, 3.8.1931, ப. 18 68. மனிதன் மனிதனுக்குச் சொன்னவை (ghuâjh[‹) இந்தியாவில் 3000 கடவுள்கள் இருப்பதாகச் சொல்லுகிறார்கள். ஏற்கெனவே அதிகமாய் இருக்கின்ற இந்திய கடவுள் மார்க்கட்டில் கிறீதுவ மிஷனரிகள் 3001ஆவது கடவுளையும் சேர்த்து விட்டார்கள். - பிரீதின்கள் மதத்திற்கும் நல்லொழுக்கத்திற்கும் ஏதும் சம்பந்தமில்லை. 1913ஆம் வருஷம் இங்கிலாந்து உள்நாட்டுச் சர்க்கார் சபையில் எடுக்கப்பட்ட மத கணிதத்தின்படி 18225 கைதிகளுக்குள் 101 பேர்கள் மதத்தில் நம்பிக்கையில்லாதவர்களாகும். - H.B. போனர் 30 வருஷமாக நான் கத்தோலிக் பாதிரி என்ற ஹோதாவில் ஜனங்களுக்குச் சிறிதும் பிரயோஜனப் படாததும் என் அறிவுக்கும் முரண்பட்டதுமான கத்தோலிக் மதத்தைப் போதித்ததற்காக நான் மிகவும் வருந்துகிறேன். - ஜீன் மெலியர் கிறீதுவ மதத்தின் முழுத் தத்துவமும் பழிக்குப்பழி என்னும் கொள்கைமீது கட்டப்பட்டிருக்கிறது. அது நீங்கிவிட்டால் கிறீது மதம் தானாகவே விழுந்துவிடும். - ப்ராட்லா அறியமுடியாததை அவசியமாக மனிதனுள் புகுத்தப் பட்டிருப் பதற்கும் அதை அவன் அறிய வேண்டுமென்பதற்கும் காரணம் பயமேயாகும். எப்பொழுது மனிதன் பயப்பட ஆரம்பிக்கிறானோ அப்போதே அவனுடைய பகுத்தறிவை இழக்கிறான். - S. குருசாமி B.A., - புதுவை முரசு, 3. 8. 1931, ப. 22 69. வாழ்வு, சமத்வம், சகோதரத்வம் சுதந்தரம் வாழ்வு என்பது உயிர் வாழ்தல். அது பிறப்பு இறப்பு இந்த இரண்டின் இடையில் உள்ளது. வாழ்வின் பயன் என்பது இன்ப வாழ்வு வாழ்தல். இதன் மற்றொரு முனை துன்ப வாழ்வு. உயிர்கள் இயல்பாக விரும்புவது இன்ப வாழ்க்கையே. துன்ப வாழ்க்கை உயிர்களுக்கு எட்டிக்காய். இன்ப வாழ்வையடைய வழி எது? இது உலக மக்களிற் பெரும்பான்மையோரின் கேள்வி, சமத்வம், சகோதரத்வம், சுதந்தரம் ததும்பும் உள்ளம் வேண்டும். அதன் பிறகு வெற்றி. அதன் பிறகு இன்ப வாழ்வு. இன்னொரு முனை நமக்குத் தெரிந்ததுதான். பேதம் - விரோதம் - பந்தம் இவை உள்ளத்தில் இடம்பெற்ற நிமிஷத்தில் எட்டிக்காய் வாழ்வு வந்துசேரும். அரசு, அன்றி ஓர் ஏழைக்குடி; இருவரும் மனிதர். மக்களின் சந்தர்ப்ப பேதத்தால் ஏற்படும் நிலையை நீக்கிப் போட்டு அனைவரும் மக்கள் என்று கொள்ளும் தன்மை ஒப்பு எனப்படும். சமத்வம் - ஒப்பு இரண்டுக்கும் ஒரே அர்த்தம். உலகம் ஒரு தாய், உலக இன்பம் தாயின் திருமுலைப்பால். பாலுண்ணத் தாவும் மக்களின் மாறுபடாத மனோபாவம் - உடற்பிறப்பு எனப்படும். சகோதரத்வம் - உடற்பிறப்பு இரண்டுக்கும் ஒரே அர்த்தம். உலகம் பொது. உலக இன்பம் பொது. மக்கள் தமக்குரிய இன்பத்தை அடைய தடங்கலின்றி விடுபட்ட தன்மை விடுதலை - சுதந்தரம். ஒப்பு - உடற்பிறப்பு- விடுதலை! நினைத்துப் பாருங்கள் - இந்நிலை யடைந்த மக்கள் இன்ப வாழ்க்கையின் எல்லை காண்பவர். ஒரு தன்மை வாய்ந்த மக்கள்பால் உயர்வு தாழ்வு பாராட்டுவது மாறு. மாறு என்பது பேதம், தனக்குண்டு பிறருக்கில்லை இது பகை. பகை - விரோதம். மனிதன் மனிதனுக்குக் கட்டுப்படல் கட்டு; கட்டு - பந்தம். மாறு - பகை - கட்டு இவைகளில் அகப்பட்ட மக்களின் நிலை துன்ப வாழ்வு; அது சாக்காட்டின் ஒட்டு. மக்களுக்கு ஏழ்மை ஒரு சந்தர்ப்பம். செம்மை ஒரு சந்தர்ப்பம், எழுச்சி ஒரு சந்தர்ப்பம், சோர்வு மற்றொரு சந்தர்ப்பம். அறிவு மலர்ச்சி, அறிவு மழுக்கம் ஒவ்வொரு சந்தர்ப்பங்கள்! மக்களின் ஏழ்மை செம்மையாதல் உண்டு. சோர்வுற்ற உள்ளம் எழுச்சியடைதல் உண்டு. மழுங்கிய அறிவு ஒளிபெறுவதுண்டு. ஏழைகள் தமக்கேற்பட்ட ஏழ்மை நிலையை அவர்கள் உதறித் தள்ளச் சந்தர்ப்பம் இன்றிச் செம்மையுடையவர் தடைசெய்யலாகாது. தடைசெய்து மக்களைத் துன்புறுத்தலாகாது. துன்புறுத்திச் சாகடிக்க லாகாது. சாகடித்துச் சமூகத்தை இல்லாமற் பண்ணலாகாது. அப்படிச் செய்து தாமும் மண்ணாகிப் போவதற்கா, திட்டம் போடுவது? ஏழைகள் மரக்கட்டைகள் அல்லர். பண்டைப் பிராஞ்சு தேசம் - அவள் தன் முக்காலே மூன்று வீசம் பங்கு மக்களைக் கட்டிக்கொண்டு கண்ணீர்விட்டு அழுது கொண்டிருந்தாள். பிரபுக்கள், அரசச் செல்வாக்குடையவர்கள், எதேச்சாதிகாரிகள், ஏழை மக்கள் மேல் ஆழ உட்கார்ந்துகொண்டனர். பேதம் - விரோதம் - பந்தம் தலைவிரித்தாடின. சமூகம் செத்துப் போக விட்டாலும் சாக்காட்டுக்கு ஒரு நூல் இடைவெளிதான் பாக்கி. செத்துத்தான் போவதா? சாவதற்கு முன் அவர்கள் தமக்குள் இக் கேள்வியைக் கேட்டுக்கொண்டார்கள். பேதம் விரோதம் இவைகளை விலக்கி ஒன்றுபடுவதா? இதற்குப் பிராஞ்சு மக்கள் எல்லோரும் ஒத்துக் கொண்டனர். கட்டை விலக்க எழுவதா? உடனே ஆம் என்றனர். ஏழை மக்கள் அனைவரும், அதிகாரச் செருக் குடையவர்களுக்கு ஓர் இறுதிக் கடிதம் தயாரித்தனர். இதை அவர்களின் புழுங்கிய உள்ளம் கொண்டு போயிற்று. ஏழைகளின் இவ் வெண்ணத்தை அதிகாரங் கொண்டவர்கள் கவனிக்கவேயில்லை. எமக்குள் பேதம் தீர்ந்தது! ஒப்புடையவர்களாய்விட்டோம். விரோதம் தீர்ந்தது. நாங்கள் அனைவரும் சகோதரர். விடுதலை - யடைந்தோம். இதற்குக் குறுக்கில் படுக்கும் கிறுக்கர்களே திருந்துங்கள்! உம்மைக் காத்துக் கொள்ளுங்கள். எழுச்சியுற்ற உள்ளம் இந்த நிலைக்கு ஏறியது - இந்த ஸந்நத்த நிலையை ஆளுந் திமிர் பிடித்தவர்கள் புறக்கணிக்கலாமா? அவர்கள் மதம்பிடித்த நித்திரையிற் கிடந்தனர். நடந்ததென்ன தெரியுமா? ஏழையர் எழுச்சியடைந்தனர்; வீராவேசம் ஆயினர். அவர்கள் தமது நிலையிலிருந்து மறுமுனைக்கே ஒரே அடியாய்க் குறி வைத்தனர். இடையில் நின்ற - முடி - பணம் - செறுக்கு - அட்டகாசம் தூள் தூளாய்ப் பறந்தன. பிராஞ்சு மக்கள் இன்ப வாழ்வில் குதித்தனர். மக்களின் உள்ளம் - சமத்வ நிலை - சகோதரத்வ நிலை -சுதந்தர நிலையடையவேண்டும். வெற்றி கிடைக்கும். இன்ப வாழ்வடையலாம். பிராஞ்சு தேசத்து மக்கள் தங்கள் விழி பிதுங்கும் நேரம் - ஏது மற்ற மண்ணாகப் போகும் நேரம் - அதிகாரக் கிறுக்கர்கள் தலையில் ஏறி அழுத்தும் நேரம்! - இப்படிப்பட்ட நிலையிலா அவர்கள் சமத்வ, சகோதரத்துவ, சுதந்தர, நிலையை அடைந்தனர்? நம்ப முடியுமா? ஆம். அந்த அந்ததே - இம்மூன்றும் முளைத்துச் செழிப்புற ஏற்றது. அந்த நிலைமையில்தான் இம்மூன்று பிராஞ்சியர் உள்ளத்தில் சொலித்தன. அதனால்தான் வெற்றி; அதனால்தான் இன்பம். வேறு பேச்சில்லை. நீயும் உன் உள்ளத்தும், வெளியிலும் பேதத்தை ஒழி, சமத்துவத்தை ஆக்கு, விரோதத்தை அகற்று. சகோதரத்வத்தைக் கொள்! பந்தத்தை நீக்கு. விடுதலை கொள்! இம் மூன்று நிலையும் நீ கையை நீட்டிப் பெறத்தக்க பொருள்கள் என்றுகூட நினைத்திருக்கக் கூடும். மக்கள் உள்ளம் இம் மூன்று வகையான - நல்ல நிலையை அடைந்தால் இன்பம் அடைவார்கள் என்பதைப் பிராஞ்சியர் பழஞ் சரித்திரம் நன்றாக விளக்கிக் காட்டுகிறது. மேலும் அவர்கள் இன்று நமக்கு அநுபவபூர்வமாகச் சொல்லு கிறார்கள். நாம் எல்லோரும் சமம் - சகோதரர்; நம்மில் ஒருவனுடைய உரிமையை மற்றொருவன் மறுப்பதில்லை இந்தக் கோட்பாட்டின்படி அவர்கள் நடக்கிறார்கள். அவர்களின் சந்தர்ப்ப பேதத்தை எடுத்துக் கொண்டு அது அவர்களின் கோட்பாட்டின் குற்றம் என்று சொல்ல வரலாம்; ஆனால் சமூகத் திட்டமே அங்கு ஆட்சி முறை. பிராஞ்சு நாடு - நட்பு முறையில் தன்னை யண்டிய ஏனைய சமூகத்துக்கும் - இந்த மூன்றையும் உங்கள் நெஞ்சில் ஏற்றுங்கள்; அனைவரும் சமம்; அனைவரும் சோதரர்; நீங்கள் உரிமை யுடையவர்கள்; வாழ்ந்து போங்கள் என்றுதான் சொல்லுகிறது. இதை - உலகம் தொடங்காத முன்னமே வாழத் தெரிந்து கொண்டதாகச் சொல்லிக்கொள்ளும் பிராஞ்சிந்திய சமூகத்துக்கும் சொன்னது - சொல்லி வருகிறது. நாயைப் போல் கடித்துக்கொள்கிறார்கள் இந்த வரியில் முத லெழுத்தைச் சொல்லுமுன் கோபித்துக் கொள்ளும் பிராஞ்சிந்தியர்கள் இன்னும் உருப்பட்ட பாடில்லை. செம்மை வாழ்வு எங்கிருந் துண்டாகும்? பிராஞ்சு குடியரசாட்சியில் - பிராஞ்சிந்தியக் குடிகள் அங்கம் வகிக்கிறார்கள். தலைநாடு அங்கும் இந்தியா இங்குமாக இருக்கின்றன எனினும், நல்ல எண்ணத்தோடு பிராஞ்சு மக்கள் சகோதர இந்தியர்களே; நீங்கள் எங்களைப் போலவே ஒன்றுகூடி ஏற்படுத்திக் கொள்ளும் திட்டங்களே உங்கள் ஆட்சி முறையின் சட்டங்கள் - சட்டங்களாகட்டும் என்றனர். பிராஞ்சு குடியரசு வாழ்க! பிராஞ்சிந்தியர்க்குப் பிராஞ்சு குடியரசு காட்டத்தக்க தயை அனைத்தும் காட்டியிருக்கிறது. பிராஞ்சிந்தியர் அதைத் தக்கபடி வரவேற்க முடியவில்லை. ஏன்? அவர்களிடம் அளவு கடந்த பேதங்கள்! அளவு கடந்த விரோதங்கள்! அளவு கடந்த பந்தங்கள்! கண் விழிக்க முடியாத அவதையில், அடிமை நிலையில் சலுகையுமற்றிருந்த பண்டைப் பிராஞ்சியர்க்கு இன்ப வாழ்வையளித்த சுதந்தரம் சமத்வம் சகோதரத்வங்கள் ஓர் வல்லரசின் தயையுடைய - சலுகையுடைய - இந்தியர்க்குப் பயன்தராத நிலையில் இருக்கின்றன. பேதங்கள் விரோதங்கள் பந்தங்கள் இவ்விந்தியர் நெஞ்சில் ஆழ வேரூன்றிக் கிடக்கின்றன. ஆதலின் பிராஞ்சிந்தியர் நெஞ்சில் அந்தச் சமத்வாதி முக்கொள்கைகளும் தாராளமாக இடம் பெற வேண்டும் அவற்றிற்கு நேர்மாறான பேத விரோத பந்தங்கள் அகல வேண்டும். பிராஞ்சிந்தியர்களே! மற்றும் இந்தியர்களே! உலகு தொடங்கிய நாள் முதல் இன்றுவரைக்கும் - உருவமோ - அருவமோ, உருவருவமோ உண்மையோ இன்மையோ அன்றிச் சட்ட வடிவமோ இன்னபடியென்று சதகோடியில் ஒரு பகுதியேனும் - ஓரிடத்தும், ஒருவனாலும் கண்டறிந்தில்லாததைக் கடவுள் என்று சொல்லி - இதில் இரண்டு இலக்ஷம் ஆக்ஷேப சமாதானம் கிளப்பி - பாரமார்த்திகப் பேரால் பிள்ளைகள் பெண்டுகள் உறவினர் தேசத்தாரின் நிலையை யும் கவனிக்காமல் நெஞ்சை உழலவிட்டு- மற்றும் அக்கடவுளுக்கு - ஆயிரம் திருநாமம் சூட்டி அதற்குக் கல்யாண குண கணங்கள் கற்பித்து இந்நாள் மட்டும் தகவலில்லாத பொருளுக்குக் கோடிக் கணக்கான பொருளைச் செலவிட்டுக் கோயில் கட்டிப், பார்த்துச் செய்ததுபோல் உருவச் சிலைகள் உண்டாக்கி - அதற்கும் உமக்கும் தரகர்களை நியமித்துத் தரகர் மூலம் படையலிட்டுத் தரகுக் கூலியுடன் சொத்தைப் பறிகொடுத்து உடல் - உயிர்களையும் அதற்கே தத்தம் என்று சொல்லிச் சொந்தநாட்டின் முன்னேற்றத்தில் கருத்தன்றிக் கிடக்கின்றீர்கள். அதுவன்றி - அந்தக் கடவுள் நேரில் வந்து வேதம் எழுதியதாகவும் - பிறகு அவரே பல படியாய் அவதாரம் செய்து வேதாந்தம் உபநிஷத்துக்கள் - இதிகாசம் - புராணம் எழுதியதாகவும் சொல்லுகிறீர்கள். மேலும் அக்கடவுள் மக்களுக்கு ஏற்பாடு செய்த இத்தொல்லைகள் போதாவென்று பலபல மதங்களை ஏற்படுத்தின தாகவும் நினைக்கின்றீர்கள். இதனால் மக்களின் அறிவு விருத்திக்குப் பாடுபட வேண்டிய பண்டிதர்கள் உம்மிடம் மிகுந்த பொருளையும் பறித்துக்கொண்டு மேலும் மேலும் இத்தகைய - கடவுள் பேரால் - நூல் எழுதும் நிலையை உண்டாக்குகின்றீர்கள். நீங்கள் மாத்திரமின்றி ஆரியருடன் கலப்பற்று வாழ்ந்து வந்த பச்சைத்தமிழர் காலம் சிறிது போக மற்றையதான - இத்தனை நீண்டகாலமாய் நாட்டில் பிறந்து இறந்த உங்கள் மூதாதையர்களும், இவ்வாறே நம்பி நம்பிச் சமூகத்தை ஏதுமற்ற நிலைக்குக் கொண்டுவந்தனர் - நீங்கள் இந்நாளில் கண்ணுக் கெதிரில் உம் பழக்கவழக்கத்தின் பயனைக் கண்டு உணர்ந்தும் அதை நீக்கவேண்டும் என்பார்க்கு உமது மூதாதைகள் அவ்வாறு நடந்து வந்ததால் சுகமாயிருந்ததாகவும் சொல்லிவிடுகின்றீர். லௌகிகம் ஒழுங்குபடாத நிலையில் உங்களைச் செல்லரித்த துரும்புகள்போல் நீங்கள் ஆக்கி வருவதை உணராமல் வேத சம்பந்தமான வைதிகப் பேரால் இரவு பகலாய் மெலிந்து போகின்றீர். தேச மக்கள் சம்பந்தமான பொதுப்பணியில் சிறிதும் கவனம் செலுத்தும் விசால புத்தியை அடைய உமக்குச் சிறிதும் அவகாசம் இல்லாத நிலையை நீங்களே உண்டாக்கிக் கொள்கின்றீர்கள். மேலும், இங்குக் கூறிய கடவுள் விஷயங்களே - இனிக் கூறப் போகும் பேதம், விரோதம், கட்டு என்ற துன்பவாழ்வை நிலைப்படுத்திக் கொண்டு - அதிலிருந்து உம்மை விடுபடாதபடி செய்து வருகின்றீர்கள். மதம் என்ற பொய்விஷயத்தால் இறுகக் கட்டுப்பட்டிருக் கிறீர்கள். அதனால் சமூக விரோதம் உண்டாக்குகின்றீர்கள். பேதம் வளர்க்கின்றீர்கள். சாதியென்னும் பொய் விஷயத்தால் கட்டுப்பட்டிருக் கின்றீர்கள். அதனால் விரோதப்படுகின்றீர்கள். பேதப்படுகின்றீர்கள். மனித சமூகத்தில் சேராத மனிதர் என்று சிலரைக் கண் மூடித் தனமாய்ச் சொல்லுகின்றீர்கள். மனிதரே தொடத்தகாத மனிதர் உண்டென்று அறிவற்ற விதமாய்ப் பேசுகின்றீர்கள். பார்ப்பனன் உயர்வு என்கின்றீர்கள். க்ஷத்திரியன் இரண்டாம் எண் என்கின்றீர்கள். வைசியன் அதன் அண்டைப்படி என்கின்றீர்கள். சூத்திரன் கடைசி என்கின்றீர்கள். பஞ்சமன் என்கின்றீர்கள். இன்றைக்கு மாத்திரமன்றி இவைகளை உண்டாக்கியதாய்ச் சொல்லும் பிரமா ஒருவன் இருந்தால் அவன் காலத்திலேயே இவை சுத்தப் பொய் என்பதைச் சிந்திக்க மறுக்கின்றீர்கள். இந்த நிலையில் சுதந்தரம் சமத்வம் சகோதரத்வம் இவைகள் உமது இதயத்தில் இடம்பெறுவதெப்படி? அந்தோ பேதங்களே! விரோதங்களே! பந்தங்களே! நீங்கள் பிராஞ்சியர் சலுகையும் பெற்ற - இந்தியர்களையோ - ஏனை இந்தியர்களையோ உம் எதிர்முனைக்கு - இன்ப வாழ்வுக்கு - அனுப்புவீர்களா? நீங்கள் வீழ்க! சமத்வ சகோதரத்வ சுதந்தரம் வாழ்க! குடியரசு வாழ்க! - புதுவை முரசு, விசேஷஅநுபந்தம், 8. 8. 1931, ப. 1 - 4 70. மனிதரா? சாமியாரா? இதென்னையா! இந்த மனிதர் மகாயுத்த காலத்தில் பிராஞ்சு தேசத்தில் என்னோடு பட்டாளத்திற் சேவித்தார். என்னைப்போல்தான் உடையுடுத்திருந்தார்! என்னைப் போல்தான் சுருட்டுக் குடித்தார்! என்னைப்போல் துப்பாக்கி சுமந்தார்! என்னைப்போல் எஜமான் ஹால்த்லா என்றால் லடாக்கென்று உஷார் அடைந்தார். இதென்னையா! என்னைப் போல்தான் என்னுடன் யுத்த முடிந்ததும் பிரஞ்சிந்தியாவுக்கு வந்தார்! என்னைப் போல்தான் பிரஞ்சு இந்தியா எலக்ஷன் என்று கேள்விப்பட்டதும் ஒரு கட்சியை ஆதரித்தார்! என்னைப் போல்தான் இந்த கட்சிதான் ஜெயிக்க வேண்டும் என்று கச்சை கட்டினார்! என்னைப் போல்தான் தம்மை முதல் லீடு என்று பகட்டிக் கொண்டார்! (முதல் லீடு என்பது வெள்ளைக்காரருக்கும், வெள்ளைக்காரர் சட்டத்தை அனுசரிப்பதாய்ப் பதிவு செய்துகொண்டவர்க்கும் ஒரு தொகுதியும், மற்ற இந்தியர்க்கு மற்றொரு தொகுதியும் பிரஞ்சு இந்தியாவில் ஏற்பட்டிருக்கிறது. சிறுபான்மையோருக்கும் இந்தியராகிய மிகப் பெரும்பான்மை யோருக்கும் ஏற்பட்டிருக்கும் பிரதிநிதி தானங்கள் மட்டில் சரிபாதிதான். இதனால் வெள்ளைக்காரர் லீடுக்குப் பிராஞ்சு இந்தியாவில் மதிப்பு அதிகம்.) என்னைப்போல் ஒரு கட்சிக்குத்தான் தமது வாக்குச் சீட்டைப் போட்டார்! என்னைப் போலத்தான் வாக்குச் சீட்டையடைந்த கட்சிக்காரர்களால் லாபம் அடைந்தார். இதென்ன ஐயா, பெரிய நூதனமாக இருக்கிறது! பிறகு திடீரென்று இவரைக் கோயிலில் பார்த்தேன்! அப்போது இவர் சாமியா ராகி விட்டார்! பாபத்தைப் போக்குகிறவராகிவிட்டார்! மோக்ஷத்திற்கு மக்களை அனுப்புகிறவராகிவிட்டார்! இதற்காக மனிதர்களிடத்தில் பணந்தண்டுகிறவர்களாகிவிட்டார்! தேவத் திரவியத்தைச் சட்டைச் சாக்கில் வைத்திருப்பவராகிவிட்டார்! மக்களைச் சபிப்பவராகி விட்டார். கடவுளின் பிரதிநிதியாகிவிட்டார்! குஞ்சுகளையெல்லாம் கோழியானது தனது இறக்கைக்குள் வைத்துக் காப்பதுபோல் மக்களையெல்லாம் நலம் அடையும்படி கண்ணுங்கருத்துமாய்க் காப்பாற்றுகிறவராகி விட்டார்! மனிதன் செத்துப்போனபின் அவர்களை இங்கிருந்தபடி நல்ல லோகத்தில் போய்ச் சேரும்படி விசையை முடுக்கிவிடுகிறவராகி விட்டார்! இதென்னையா! என்னைப் போலிருந்தவர் திடீரென்று சாமியாகி மனிதன் செய்ய முடியாத வேலைகள் எல்லாம் செய்கிறாரே என்று நினைத்து அவருக்கு எதிரிற் போய் நின்று சலீட் மிடர் என்றால் நீ ஓர் அஞ்ஞானியா என்கிறார் பின்னென்ன சொல்வது என்று கேட்டால் தமிழில் சாமி என்றும் இங்கிலீஷில் பாதர் என்றும் பிரஞ்சில் பேர் என்றும் சொல்லச் சொல்கிறார். சாமி! ஏன் பாடுபட்டுப் பணம் சேர்க்கிறீர்கள் என்றால் உங்களை நல்வழிப்படுத்த என்கிறார். கோயிலுக்கு எதிரில் பந்திபந்தியாக உட்கார்ந்து வருவார் போவாரை முகம்தூக்கிக் கெஞ்சும் ஏழைகட்குப் பணம் கொடுத்துக் காப்பாற்ற லாகாதா என்றால் அவர்கள் சம்பாதித்துக் கொள்ளட்டும் என்கிறார். நாட்டில் ஏழ்மையும் நோயும் அதிகரிக்கிறதே என்றால் நானென்ன செய்கிறது என்கிறார்! பணக்காரர் சிலர் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் வீட்டில் இறந்துபோனால் பிணத்தை மந்திரிக்க 100 ரூபாய் முள்ளங்கிப் பத்தைபோல் வந்துவிடும் என்கிறார். படித்த பிள்ளைகள் வேலையில்லாமல் கஷ்டப்படுகிறார்களே உங்கள் தெய்வ வல்லமை யால் வேலை ஏற்பாடு செய்து கொடுக்கலாகாதா என்றால் முடியாது என்கிறார். நம்மை அறிந்த பிள்ளைகள் பெரிய பெரிய உத்தியோகத் தில் இருக்கிறார்கள் என்றால் அப்படியானால் நமக்குச் சாய்கால் பண்ணச்சொல் என்கிறார். தேச விஷயத்தைச் சிறிது சீர்ப்பண்ணலா காதா என்றால் முடியாது என்கிறார். தேசம் சீர்பட்டுப் போனால் நல்லதுதானா என்றால் நமக்கு வருமானமும் செல்வாக்கும் குறையா திருந்தால் நல்லது என்கிறார். சில இடத்தில் சில வெள்ளைக்காரரால் மக்கள் அநீதியடைகி றார்கள் என்றால் கறுப்பர்களுக்கு அத்தனை திமிரா என்கிறார். கறுப்பர்கள் நல்ல நிலைக்கு வருகிறார்கள் என்றால் நாங்கள் தான் அதற்குக் காரணம் என்கிறார். பிரஞ்சிந்தியாவில் இரண்டு லீடை மூன்றாக்க லாமா என்றால் அதுதான் சரி என்கிறார். நீங்கள் அதற்கு வேலை செய்யுங்கள் என்றால் கறுப்பர்கள் எங்கள் மேல்வருந்து வார்கள் என்கிறார். கறுப்பர்கள் சந்தோஷப்படவும் சுகப்படவும் வெள்ளைக்காரருக்கும், கறுப்பர்கட்கும் ஒரே லீடு ஏற்பாடு செய்ய லாகாதா என்றால் புலி போல் சீறி ஆ! நாங்கள் வெள்ளைக்காரரல்லவா என்கிறார். பொது ஜனங்களுக்குத் தந்தை போலிருந்து அவர்களைக் காப்பாற்றும் சாமியார் என்கிறீரே என்றால் நீ வேத விரோதி என்கிறார். வேதம் ஒன்றிருக்க நீங்கள் ஒன்று செய்கிறீர்களே நீங்கள் வேத விரோதி அல்லவா என்றால் அதெல்லாம் எங்கள் திருச்சபைக் கட்டளை என்கிறார். அப்படியானால் அது அறிவுக்கும் அநுபவத்துக்கும் ஒத்ததாய் இருக்கவில்லையே என்றால் என்ன செய்யமுடியும் என்கிறார். சீர்த்திருத்தக்காரரைக் கூப்பிட்டு வந்து பிரசங்கம் செய்யச் சொல்லுகிறோம் என்றால் எங்கள் வேதம் கற்கோட்டை என்கிறார். நீங்கள் திகில் கொண்ட நேரத்தில் அதைக் கற்கோட்டை என்கிறீர்கள் என்றால் உலகாளும் மன்னரெல்லாம் எங்கள் மதம் என்கிறார். மன்னர்கள்தானே மதத்தை அழிக்கப் புறப்பட்டிருக்கிறார்கள் என்றால் ஜனங்கள் எல்லாம் எங்கள் கட்சி என்கிறார். நீங்கள் பணம் வசூலிப்பதால் ஜனங்கட்கும் உங்கள்மேல் வெறுப்புத்தான் என்றால் மதங்களின் மேல் மக்களுக்கு வெறுப்பு ஏற்படாது என்கிறார். பொதுவாக மதங்கள் அனைத்தும் உங்களைப் போன்றவர்களாலேயே அழிந்துபோகும் என்றால் எங்கள் மத மாத்திரம் அழியவே அழியாது என்கிறார். அதற்குக் காரணம் என்ன வென்றால் சேசுநாதர் அப்படிப் பட்ட வல்லமை உடையவர் என்கிறார். மற்ற மதத்துக்குடைய மகமம்துவும் பிரம விஷ்ணு சிவன்களும் மாத்திரம் கையாலாகாதவரா என்றால் ஆம் என்கிறார். சேசுநாதர் முதல் எல்லாக் கடவுள்களையும் குதிக்கு விட்டுப் பார்த்தீரோ என்றால் போ போ அதிகம் பேசாதே என்கிறார். நான் வீட்டுக்கு வந்து யோசித்துப் பார்த்தேன். என்ன ஐயா இது! இந்தச் சாமியார் பிள்ளைகள் பாரியடிக்கும் போது பாயும் ஒருவனை எந்தப்பக்கமும் போகவிடாமல் கட்டுகின் றவனைப் போல்மனிதனை மனிதனாக வளைக்கிறார். மனிதனில் முதல் லீடில் முதல் லீடாக வந்து வளைக்கிறார். கறுப்பர்களை வெள்ளைக்காரர்களாக வந்து வளைக்கிறார். கோவில் பக்கம் திரும்பினாலோ திடீரென்று சாமியாராக வந்து வளைக்கிறார். இன்னொரு பக்கம் நுழைந்தாலே சாயகால்காரராக வந்து எதிர்க்கிறார். என்ன ஐயா இது! பல பக்கத்திலும் பல ரூபமாய் வந்து எதிர்ப்பதால் பல வகையிலும் கஷ்டப்பட்டு வேலை செய்து சம்பாதித்த பணந்தானே நமக்கு நஷ்டம் இவர்களால் கடலொட்டு மைதானத்தில் விளையாடும் பந்தாட்டத்தில் அந்தப் பந்தை ஜெயம் கிடைக்கும் வகையில் புரட்டக்கூட முடியவில்லை. என்ன ஐயா இது! இவரைப் பற்றி என்ன சொன்னாலும் கடவுளைச் சொல்லிவிட்டதாகச் சண்டைக்கு வந்து விடுகிறீர்களே? - புதுவை முரசு, விசேஷஅநுபந்தம், 8.8.1931, ப. 31 - 33 71. ஙங்ஙஃ ஙிங்கலந்தன ஙேதிஙேவலல் ஙங்கலந்தன ஙாஙிஙாவரம் ஙுங்கலந்தன ஙூஙெளஙோரிது ஙெங்கலந்தன n‡Ç†¤jny” அன்பார்ந்த சகோதரி, சகோதரர்களே! ஆச்சரியப்படாதீர்கள்! அல்லது சிரிக்காதீர்கள்! அல்லது குழப்பமடையாதீர்கள்! மேலே காட்டப் பட்டுள்ளது என்னவென்பது உங்களுக்குத் தெரியாம லிருந்தால், அதற்கு நீங்களே காரணமாவீர்கள்! ஏன் அதையெல்லாம் பாட சாலையில் படிக்காமல் இருந்தீர்கள்? ஆசிரியர் சொல்லிக் கொடுக்காமலிருந்தால் எங்களுக்குத் தெரியவில்லை என்றால், ஆசிரியரிடம் தொந்தரவு செய்து ஏன் கேட்டுத் தெரியாம லிருந்தீர்கள்? பாவம்! உங்களுடைய பரிதாபகரமான தற்போதைய நிலைக்கு நான் இரங்குகிறேன். *** நான் கூறினாலன்றி இரத்தக் குசுகுசுவினாலும் அதைத் தெரிந்துகொள்ளப் போவதில்லை. இப்போது கவனித்துப் பாருங்கள்! கிறுக்கனுக்கு நிகரானவரோ, சமமானவரோ இந்த உலகத்தில் ஒருவருமில்லையல்லவா? ஹா! ஹா!! ஹா!!! மேலே கூறப்பட்டிருப்பது இன்னது என்பதை எவர் அறிவித்தாலுஞ் சரி, அவருக்கு ஆயிரம் கோடி பரிசளிக்கத் தயார். *** பாவம்! இன்னும் உங்களைக் குழப்ப நிலையில் வைக்க விரும்பவில்லை. எனவே அது இன்னது என்பதை விளக்கி வைக்கிறேன். கவனியுங்கள்! ஙங்ஙஃ என்றால் பாடல் என்பது நான் கண்டுபிடித்த பொருளாகும். ஆகவே, அதன்கீழ் கூறப்பட்டிருப்பது ஒரு புதிய பாடலாகும். அதன் பொருளை வரிசையாகக் கூறுகிறேன். பதவுரை ஙிங்கலந்தன... கடவுளைப்பற்றி ஙேதி... கவலைப்படுகிறவர்கள் ஙேவலல்... கடைந்தெடுத்த ஙங்கலந்தன... முட்டாள்களேயாவர் ஙாஙி... நீ ஙாவரம்... முன்னேற ஙுங்கலந்தன... விரும்பினால் ஙூஙௌ... சுயமரியாதை ஙோரிது... இயக்கத்தில் ஙெங்கலந்தd... சேர்ந்து ஙேÇ... அதை (முன்னேற்றத்தை) ஙீத்தலே... அடைவாயாக என்பதே அந்தப் புதிய பாடலின் பொருளாகும். கருத்துரை யாதெனில் கடவுளைப் பற்றி கவலைப்படுகிறவர்கள் கடைந்தெடுத்த முட்டாள்களாவார்; நீ முன்னேற்றமடைய விழைந்தால் சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்து அதைப் பெறுவாயாக என்பதேயாகும். இதென்ன ஐயா! புதுமையாயிருக்கிறது! இப்படியும் ஒரு பாட்டு உண்டா? ங வரிசையில் பெரும்பாலான எழுத்துக்களுக்குத் தமிழ் மொழியில் அர்த்தமில்லாமல் இருக்கின்றனவே! அப்படியிருக்கும் போது நீர் என்னென்னவோ கூறுகிறீரே? என்பதாகப் பலரும் ஐயுறக் கூடும். நான் முதலியேயே குறிப்பிட்டு இருக்கிறேனே, இது புதிய பாடல் என்பதாக. ங, வரிசையில் பல எழுத்துக்கள் அநாவசியமாக Éடப்பட்டிருப்பதைÃவர்த்திbrய்துஅt‰றிற்கும்உயி®கெhடுக்கவே©டும்என்gதற்காகவேநா‹இன்Wகச்iசயைவரிªதுகொண்டுமுதÈல்ஒரு பாlல்பேhட்டேன்.இj முறையைத் தமிழ்ப் பண்டிதர்களும் கைப்பற்றி நடப்பார்களானால், அநாவசியமாக விடப் பட்டிருக்கும் எழுத்துக்கள் mவசியமானவைகளாகச்bசய்துவிடலாம்.*** இன்னொரு முக்கியமான விஷயத்தையும் குறிப்பிட்டுக் கொள்ள விரும்புகிறேன். அதாவது நான் மேலே ஆக்கியுள்ள பாடலும் பாடல்தான். ஏனென்றால், ஆதியில் என்னைப் போலவே முதலில் எழுத்துக்களையும் வாக்கியங்களையும் உண்டாக்கினார்கள். எனவே அவர்களும் மனிதர்தாம்; நானும் மனிதர்தான். ஆகவே நான் புதுமுறையில் பாடல் போட்டிருப்பது தவறாகுமா? இதே பாடல் மக்களிடம் சில ஆண்டுகள் வரை வழங்கிவரின் இதுவும் kற்றவையும்xன்றாகிÉடாதாvன்பதுfவனத்திற்குcரியது.vdnt புதுமை என்ப தைக் கொண்டு வெறுப்பதோ, அதிசயிப்பதோ அறிவீன மாகும். என்ன நேயர்களே! எல்லாம் விளங்கி விட்டதா? *** இந்தப் பாட்டுக்கு அர்த்தம் கூறுகிறவர்களுக்கு ஆயிரம் கோடி பவுன் பரிசளிப்பதாக நான் முதலில் சொல்லியிருந்ததற்கு, நானே பொருள் கூறிவிட்டேனாதலால் அந்தப் பரிசும் எனக்கே உரியதாகும் என்பதுடன் அமர்கிறேன். ஆ! ஆ!! ஆ!!! - புதுவை முரசு, விசேஷஅநுபந்தம், 8. 8. 1931, ப. 71 - 72 72. பரமண்டலத்திலிருக்கும் பரமசிவனுக்கோர் பகிரங்கக் கடிதம் மூவுலகங்களையும், அவற்றிலுள்ள பிராணி வர்க்கங்களையும் தாவரங்களையும், மலைகளையும், கடல்களையும் மற்றுமுள்ள ஏனைய சகலவற்றையும் படைத்த, சர்வ வல்லமையுள்ள எல்லாஞ் செய்யவல்ல, எங்கும் நிறைந்துள்ள, உருவமற்ற யானைமுகப் பிள்ளையின் அப்பனான, ஆறுமுகப் பிள்ளையின் தந்தையான, கங்கையை முடியில் வைத்துள்ள, பார்வதியின் பர்த்தாவான, பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படிபட்ட ஆண்டி உருவமான, மன்மதன் மாமனான, ரதியின் தந்தையான, நெற்றியில் எக்ட்ரா கண்ணை உடையவரான, விஷ்ணுவின் மைத்துனரான, பாம்புகளை மாலையாக அணிந்துள்ளவ ரான, புலித்தோலை ஆசனமாகக் கொண்டுள்ளவரான, இராவணனுக்கு பார்வதியைக் கூட்டிக் கொடுத்தவரான, மோகினி (விஷ்ணு)வைப் புணர்ந்தவரான, அர்ச்சுனன் வில்லால் அடிபட்டவரான சாக்கிய முனிவரிடம் கல்லடி பட்ட, மனிதப் புலாலை விரும்பியவரான, கோவணத்தை இழந்து பரிதபித்தவரான, கஞ்சிக்கு லாட்டரி அடித்துக்கொண்டு நாயன் மார் வீடுகளில் பிச்சை எடுத்தவரான, விஷத்தை உண்டவரான, மானைக் கரத்தில் வைத்திருப்பவரான, வெள்ளி யம்பலத்தில் கூத்தாடியவரான, மீனாட்சி அம்மனுக்கு ஆற்றாமல் ஓட்டம் எடுத்தவரான, மயிருக்காசைப்பட்டவரான, டாபர் வேலை பார்த்தவரான, மாட்டில் ஏறித் திரிபவரான, விருப்பு, வெறுப்பு அற்றவரான, மாடுச் சாணிச் சாம்பலில் அதிகம் அவா உடையவரான இன்னும் பல சிறப்புகளையும், கீர்த்திகளையும் உடைய, தேவாதி தேவ, கடவுளாதி கடவுளான, வீராதி வீர, வில்லாதி வில்லரான வெயிலடிச்ச பொச்சரான (சை! தப்பாக எழுதிவிட்டேன். இதைப் படிக்க வேண்டாம்) ஜெய கம்பீர கோலாகல மகா--ஸ்ரீ மண்டை யிலே பிளாதிரி (அட இழவே! இதையும் அழித்து விடவும். கைபிசகாக எழுதி விட்டேன்.) திரு திரு, திரு திரு திருமிகு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ, ஸ்ரீமத், ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீமான் ஸ்ரீமான் ஆகிய மகா, மகா, மகா, மகா, மகா, கனமும் மகா மகா மகா மகா மேன்மையும் தாங்கிய மாபெருங் கனம் பரமசிவக் கடவுள் அவர்கள், அவர்கள் அவர்களின் திவ்ய பரிசுத்தமான, சிறந்த மேன்மையான பொற்கமல மலர்த்திருப்பாதங்களில்; மண்ணுலகத்திலுள்ள ஆசியாக் கண்டத்தைச் சேர்ந்த இந்தியா என்ற தேசத்திலுள்ள சென்னை மாகாணத்தைச் சேர்ந்த மதுரை ஜில்லா என்ற நகரிலுள்ள அழகரடி என்ற தெருவிலுள்ள கிறுக்கன் என்ற புனைப்பெயருடைய சிறியேனாகிய நான் தாங்களிருக்கும் வானுலகத்தை அண்ணாந்து பார்த்து மிகமிகமிக வணக்கமாக எழுதிய கடிதம், என்னவென்றால்: பக்தர்களின் பரமபிதாவே! இந்த உலகத்தில் இருந்து தங்களுக்கு முதலில் நிருபம் எழுதும் பாக்கியம் பெற்ற மனிதன் நான் என்று எண்ணும்போது உண்மையில் எனக்கு அளவற்ற ஆனந்தமும் தற்பெருமையும் ஏற்படுகின்றன என்பதைத் தாங்கள் அறிந்தேயிருக்க வேண்டும் என்று நம்புகிறேன். இதுவரை எவராலும் துணிந்து செய்யப் படாத இந்த வேலையில் நான் இறங்கி இருப்பதைப் பற்றி மற்றவர் என்ன எண்ணிக் கொண்டாலும் தாங்கள் என்னை ஆசீர்வதிப்பீர்க ளென்றே எதிர்பார்க்கிறேன். உண்மையில் நான் தங்களுடைய மெய்யான பக்தனாக இல்லாதவனாக இருந்தும், தங்களுக்குக் கடிதம் எழுதியதற்கு தாங்கள் என்னைப் போற்றியே ஆகவேண்டும். மனிதர்களுக்குக் கடிதம் எழுதுவதிலேயே எனக்குக் கொஞ்சம் பழக்கம் உண்டு. ஆனால் கனம் கடவுளாகிய தங்களுக்குக் கடிதம் எழுதும் தோரணை எனக்குத் தெரியாதாதலால் ஏதோ தங்கள் பக்தர்கள் போற்றும் சில விஷயங்களையே ஆதாரமாக வைத்து மேலே வக்கணை செய்து எழுதியிருக்கிறேன். அதில் பிழைகள் இருந்தால் அதற்கு நான் பொறுப்பாளனல்லன். ஏனென்றால் தங்கள் பக்தர்கள் கூறியதையே நான் கூறியிருக்கிறேன். மேலும் தாங்கள் மக்கள் முதலிய ஜீவர்கள் செய்யும் சகல நடவடிக்கைகளையும் தாங்களே உள்ளிருந்துகொண்டு இயக்கி வருவதாகவும் கேள்விப் பட்டிருக்கிறேன். எனவே, ஏதேனும் தப்புத் தவறு இருந்தால் அதற்குத் தாங்கள் ஜவாப்தாரி என்பதை முதலில் சொல்லி விடுகிறேன். தங்களுடைய தந்தையின் பெயர் எனக்குத் தெரியாது. ஆதலால் பரமசிவன் அவர்கள் என்பதற்கு முன் 0 (சைபர்) போட்டிருக் கிறேன். தாங்கள் கடவுளாதலால் இந்தக் கடிதத்திற்கு டாம்பு ஒட்டாமல் கடிதம் போட்டிருக்கிறேன். ஒரு வேளை வானுலகத்தில் தபாற் பில்லைகள் இருந்தால் அனுப்பி வைக்கவும். இந்தக் கடிதத்தை நான் டாம்பு ஒட்டாமல் போட்டிருப்பதற்காக இங்குள்ள தபா லதிகாரிகள் நாட் பெயிட் போட்டுத் தங்களிடம் சார்ஜ் வசூலிக்க மாட்டார்களென்றே நினைக்கிறேன். ஒருகால் அப்படி கேட்கப்பட்டால் தாங்கள் தக்க நடவடிக்கை எடுத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளுகிறேன். முதலில் சொல்ல வேண்டியவற்றைச் சொல்லி விட்டே னாதலால் இனி நான் இந்த கடிதம் எழுதப் புகுந்ததின் காரணம் என்ன என்பது பற்றி விவரமாக எழுதப் புகுகிறேன். தங்களைப் பற்றியும், தங்கள் பிள்ளை குட்டிகளைப் பற்றியும் இங்குள்ள புராணங்கள் வாயிலாகவும், நடத்தப்படும் நாடகம், சினிமா, பிரசங்கங்கள் முதலியன மூலமாகவும் அதிகமாகக் கேட்டும் படித்தும் பார்த்துமிருக்கிறேன். ஆனால் தங்களாலும், தங்கள் குடும்பத்தினர் களாலும் செய்யப்பட்டதாகக் கூறப்படும் திருவரலாறுகளைச் சிறியேன் நம்புவதற்கு இயலாத புத்தியுடையவனாயிருக்கிறேன். ஏனென்றால் ஒன்றுக்கு, மற்றொன்று முரண்பாடானதாகவும், நம்பத்தகாததாகவும் அறிவுக்கோ - ஆராய்ச்சிக்கோ - நேர் நோக்குக்கோ - யுக்திக்கோ ஒப்புக்கொள்ளத் தகாததாகவுமான திருவிளையாடல்களைத் தாங்கள் செய்திருப்பதாகவே எனக்குச் சந்தேகமுண்டாகின்றது. நான், ஐயங் கொள்வது சரியா அல்லவா என்பதைத் தங்கள் மூலமாகவே கேட்டுத் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டே முக்கியமாக இந்தக் கடிதத்தை எழுதினேன். நான் இவ்வாறு சந்தேகப் பேர்வழியாயிருப்பதைப் பற்றித் தாங்கள் வருந்தினால் அல்லது இரங்கினால் - அதுவுமில்லாவிடில் - கோபித்துக்கொண்டால், அதற்கு நான் ஜவாப்தாரியாக முடியவே முடியாது என்பதை மீண்டும் வலியுறுத்திக் குறிப்பிட்டுக் கொள்ளவே செய்வேன். நான் சந்தேகப் பேர்வழியாக இருப்பதற்குக் காரணம் என்னைப் படைத்தவரும், இயக்கிவருபவருமான தங்களுடைய செயலே காரணம் என எல்லாந் தெரிந்தவராகிய தங்களுக்குக் கூடவா கூறவேண்டும்? அதுவுமில்லாமல் தாங்கள் மக்களின் மாபெரும் பிதாவாகிறீர்களாதலால் தங்கள் குழந்தைகளின் ஒருவராகிய நான் தெரிந்தோ தெரியாமல் பிழைசெய்துவிட்டாலும் அதைத் தாங்கள் பொருட்படுத்தவுங்கூடாது. சந்தேகங்களை நிவர்த்திக்க வேண்டிய பொறுப்பும் தங்களுக்குண்டு. என்னுடையவும் இதர ஜீவர்களுடைய வும் நலத்தைக் கோரியே தாங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிற படியால் தாங்கள் என் வேண்டுகோளை நிராகரிக்க முடியாது. இவ்வளவு ஏன்? தாங்களே எனக்குள்ளிருந்து இந்த மாதிரி எழுதும்படி செய்துவிட்டிருக்கிறீர்களாதலால், எனது ஐயப்பாட்டை அகற்றி வைப்பீர்களென்றே நினைக்கிறேன். கீழே நான் குறிப்பிடப்போகும் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் இந்தக் கடிதம் பார்த்தவுடன் அர்ஜண்டாகப் பதில் எழுதும்படி மேலும் ஓர் கும்பிடு போட்டுக் கேட்டுக் கொள்ளுகிறேன். முதலில் நான் கேட்க விரும்புவது என்னவென்றால், தங்க ளுக்குச் சர்வ வல்லமை உண்டு எனச் சொல்லப்படுவது உண்மையா? அல்லவா என்பதேயாகும். தங்களுக்குச் சர்வ வல்லமையுண்டு என்று கூறப்படுவதை என்னால் நம்ப முடியவில்லை. நான் இப்படி நம்புவதற்குப் பல காரணங்கள் காட்ட முடியுமானாலும் சுருக்கமாக இரண்டொன்றை மட்டும் குறிப்பிடுகிறேன். சர்வ வல்லமை தங்களுக்கு இருந்திருந்தால் - என்னை சந்தேகப் பேர்வழியாகப் படைத் திருப்பீர்களா? அருச்சுனன் கை அம்பால் அடிபட்டிருப் பீர்களா? தங்கள் பெண்சாதியை ஓர் சமயம் இராவணனுக்குக் கூட்டிக் கொடுத்திருப்பீர்களா? தங்களை எதிர்க்கும் கடவுள் களையும், மக்களையும் மதங்களையும் படைக்கவோ படைத்தோ இருக்க விட்டிருப்பீர்களா? மக்களை பல்வேறு தோற்றங்களை உடையவர்களாகவும், குணஞ் செயல்களை உடையவராகவும் படைத்து அவர்களின் அதிர்ப்திக்கு ஆளாவீர்களா? இல்லை! கடவுளாவீர்களா! தங்களை நம்பாத மக்களைத் தாங்களே தங்களை நம்பும்படி செய்யாமல் ஆத்திகர்களைக் கொண்டும், புராணங்களைக் கொண்டும் நாயனார்களைக் கொண்டும் நம்பும்படிச் செய்வீர்களா? தங்களின் சர்வ வல்லமையைப் பிறர் மூலமாக விளம்பரம் செய்ய விடுவீர்களா? சுருக்கமாக ஒரே வார்த்தையில் கூறிவிடுவ தெனில், தங்கள் விருப்பம் எப்படியோ அப்படியே உலகம் இயங்கும்படி செய்துவிட்டிருப்பீர்கள் பலவாறான குளறுபாடுகளும் கொலாம் புலாம் என இருக்கும்படியும் செய்திருக்க மாட்டீர்கள். இன்னும் பலவுளவாயினும் எல்லாம் தெரிந்தவராகிய தங்களுக்கு மேலும் விளக்க வேண்டுமா? வேண்டாம்; வேண்டாம்; வேண்டாம். இப்படிப் பட்ட காரணங்கள் இருப்பதாலேயே தங்களுக்குச் சர்வ வல்லமை யில்லை என நான் நினைக்கிறேன். என்னுடைய சந்தேகங்கள் தவறானதாக இருந்தால் தயை கூர்ந்து அதற்குரிய காரணங்கள் மறந்து விடாமல் எழுதும்படி கேட்டுக்கொள்ளுகிறேன். தாங்கள் உண்டாக்கிய மதம் சைவமதம் என்பதாக இங்குள்ள சிலர் கூறிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயமும் எனக்கு மிகுந்த குழப்பத்தையும், வியப்பையும், தடுமாற்றத்தையும் அளித்துக் கொண்டிருக்கிறது. ஏன்? தங்களுடையது சைவ மதம் என்பது உண்மையானால் - மேலானதாயிருந்தால் வேறு 1007 (சமீபத்தில் ஓர் பத்திரிகையில் 1008 சமயங்களிருப்பதாக வெளியாகியிருந்தது). மதங்கள் உண்டாகி இருக்கக் காரணம் என்ன? சைவ மதம் நல்ல மதமாகவும் தங்களால் உண்டாக்கப்பட்டதாகவும் இருப்பதை எல்லாரும் அறிந்து அந்த மதத்திலேயே இருக்கும்படி செய்யாமல் எதிர் மதங்களைப் படைத்துக்கொள்ளும்படியும் சைவமதத்தை எதிர்க்கும்படியும் தாங்கள் விட்டுக்கொண்டிருப்பதன் தத்துவம் என்ன? உலகத்திலே - ஓர் தேசத்திலே - ஒரு சில மக்களே - தற்போது சைவ மதத்தை அநுஷ்டித்து வருகிறார்கள் என்பது தங்களுக்குத் தெரியாமலிருக்காது. பெரும்பாலான மக்கள் பௌத்தம், கிறீதவம், இலாம் என்ற மதங்களிலேயே இருக்கிறார்கள் என்பதும் தங்களுக்குத் தெரியும். இவ்வாறு தங்களையும், தங்கள் சைவ மதத்தை யும் ஏற்றுக் கொள்ளாமல் வேறு மதங்களில் இருப்பதன் காரணம் என்ன என்பதைப் பற்றியும் எனக்கு விதாரமாக எழுதும்படி மண்டிப்போட்டு வணங்கிக் கேட்டுக் கொள்ளுகிறேன். உலகத்திலுள்ள - ஏன்? மூவுலகங்களிலுமுள்ள எல்லாக் கடவுளர்களையும்விட தாங்களே பெரிய படே - படே கடவுள் என்று இந்தியாவிலுள்ள சிலர் கூறுகிறார்கள். இதையும் என்னால் ஒப்புக் கொள்ள இயலவில்லை. தாங்கள் பெரிய கடவுளாக இருப்பது மெய் யானால் சிறிய கடவுள்களும் தங்களுக்குப் பயப்படாத, எதிர்க்கும் - மதிக்காத எதிர்க் கடவுளர்களும் இருப்பதின் பிரமேயம் யாது? என்பதைப் பற்றியும் எழுதுங்கள். தங்களுடைய அறுபத்து மூன்று நாயனார்களைப் பற்றி எனக்கு அநேக சந்தேகங்களிருக்கின்றன. தற்போது சில குறிப்பிட்ட விஷயங்களை மட்டும் கேட்க விரும்புகிறேன். தங்களுடைய மெய்யான பக்தர்கள் எனச் சொல்லப்படும் நாயனார்கள் அடைந்த கஷ்ட நஷ்டங்களையும் துன்பங்களையும், பிறவற்றையும் பற்றிச் சில சந்தேகங்கள் இருக்கின்றன. தங்களுடைய அரிய பக்தர்களாகிய நாயன்மார்களிற் சிலர் தங்களை நம்பிப் போற்றியதற்காகச் சிறையிடப் படும்படி தாங்கள் விட்டுக் கொண்டிருந்ததின் காரணம் என்ன? ஓர் நாயனாரைக் கல்லுடன் கட்டிச் சமுத்திரத்திலோ, கடலிலோ, ஆற்றிலோ, குளத்திலோ, தண்ணீரிலோ, வெந்நீரிலோ போட்டார் களாம்! அவர் தங்களுடைய பாடிகார்ட் போன்றவராம். அப்படிப் பட்டவரை இம்சிக்கும்படி நீங்கள் பார்த்துக் கொண்டிருந்ததன் காரணம் என்ன? சில நாயனார்கள் சகித்தற்கியலாத வறுமையில் உழலும்படி தாங்கள் செய்ததின் காரணம் என்ன? நாயனார்களைப் பற்றி விரிவாக எழுத இங்கு எனக்கு விருப்பமில்லை. மேலும் தாங்கள் எல்லாம் தெரிந்தவர் ஆதலால், நான் குறிப்பிட்டுக் கேட்க விரும்புவதெல்லாம் என்ன வென்றால் தங்களுடைய அரிய பெரிய பக்தர்கள் எதிரிக ளாலும், வறுமையாலும் தங்கள் சோதனையாலும் துன்புறும்படியும் இறந்து போகும்படியும் தாங்கள் விட்டுக் கொண்டிருந்ததின் - செய்ததின் காரணங்கள் யாவை? நாயனார்கள் தங்களைப் பற்றி இந்த உலகத்தில் அரிய பிரசாரம் செய்ததாகத் தெரிகிறபடியால் அவர்கள் எக்காலமும் இங்கேயே இருந்து தொண்டு செய்யும்படி செய்யாமல் தாங்கள் ரிஷபா ரூடராய்த் தோன்றி அழைத்துக் கொண்டு போய்விட்டதின் காரணம் என்ன? அறுபத்து மூன்று நாயனாருடன் பெரிய புராணம் சாந்தி ஆகிவிட்டத்தின் காரணம் என்ன? இவற்றைப் பற்றி நன்றாக விளக்கி - விரித்து - விதாரமாகப் புரியும்படி - தெரியும்படி - தோணும்படி - எழுதும்படி கேட்டுக் கொள்ளுகிறேன். தங்களுடைய மெய்யான பக்தர்கள் என்பதாக சொல்லப் படும் நாயனார்களைத் தாங்கள் பலவாறாகப் பரிசோதித்துப் பார்த்தீர்களாம். அந்த விவரங்கள் பெரியபுராணம் என்ற புத்தகத்தில் விரிவாகக் கூறப் பட்டிருக்கிறது. ஒரு நாயனாரிடம் அவருடைய பெண்ணின் தலை மயிரைக் கேட்டு வாங்கினீர்களாம்; வேறொரு நாயனாரிடம் அவர் குழந்தையின் மாமிசத்தை வறுவல் போட்டுத் தரும்படி கேட்டீர்களாம். மற்றொரு நாயனாரை மனைவியை கொடுக்கும்படி கேட்டீர்களாம். இன்னொரு நாயனாரிடம் தங்கள் கோவணத்தைக் கொடுத்து பரிசோதித்தீர்களாம். இன்னும் பல திரு விளையாடல்களைத் தாங்கள் நாயன்மார்களிடத்தில் நிகழ்த்தித் தாங்கள் என்றும், அழியாத புகழ் பெற்றுவிட்டதாக இங்குள்ள பக்தர்கள் பரவசமடைகிறார்கள். இவற்றை யெல்லாம் என்னால் நம்பவோ ஒப்புக்கொள்ளவோ இயல வில்லை. முற்றிலும் ஹம்பக் ஆகவேயிருக்கும் என்பதே என்னுடைய தீர்மானம். விருப்பு, வெறுப்பற்ற வெற்றிவீரராகிய தாங்கள் அப்படிச் செய்திருப் பீர்களா? கேவலம் மயிரையும் மாட்டுச் சாணிச் சாம்பலையும் தாங்கள் விரும்புவதாக இங்குள்ளவர்கள் கூறுவதைத் தாங்கள் இது வரையில் மறுக்காமல் பரமண்டலத்தில் மௌன சாமியாகக் குந்திக் கொண் டிருப்பதுதான் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தையும், வருத்தத்தை யும் கொடுக்கின்றன. இன்னொரு பெரிய சந்தேகமும் உண்டாகிறது. அதாவது தாங்கள் பரமண்டலத்திலோ அல்லது வேறு எங்கும் இல்லையோ, எல்லாம் வெறும் கட்டுக் கதைகள்தானோ என்பதேயாகும். அப்படி யிருக்கும் பட்சத்தில் எனக்குப் பதில் கடிதம் வராததால் தாங்கள் எங்கும் இல்லை என்பதும் தெரிந்து கொள்வேன். எனவே, எனக்கு தாங்கள் விரைவில் பதில் எழுதா விட்டால், தாங்கள் (பரமசிவன் என ஒரு கடவுள்) இல்லை என நான் தம்பட்டமடிக்க புறப்பட்டுவிடுவேன் அண்டர்டாண்ட்? ஆம்! எச்சரிக்கை! எச்சரிக்கை!! எச்சரிக்கை!!! தாங்கள் எவ்வுயிர்க்கும் அன்பாயிருக்கும் இறைவன் என்று சில சைவர்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இதையும் என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால் தாங்கள் சதா காலமும் சவாரி செய்வது மாடு என்று சொல்லப்படுகிறது. மேலும் குழந்தைப் புலால் மீதும் மான்கறி மீதும் தங்களுக்கு அபாரமான ஆவல் உண் டென்றும் தெரிகிறது. இவைமட்டுமல்ல, எத்தனையோ அரக்கர் களையும் இராட்சதர்களையும் வேறு பலரையும் தாங்கள் சம்ஹாரம் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இவை யெல்லாம் உண்மையாய் இருக்கவேண்டும் என்றே ஊகிப்பதற்கும் இட மில்லாமற் போக வில்லை. ஏனென்றால் இவை பொய்க் கூற்றுகளாக யிருக்குமானால், தாங்கள் அவற்றை மறுக்காமலோ அல்லது அசரீரி யாகவேனும் அறிவிக்காமலோ கைலாசத்தில் குந்திக்கொண்டு கஞ்சா அடித்துக் கொண்டிருப்பீர்களா? இருந் தாலும் இப்போதுதான் என்ன; எனக்குப் பதில் எழுதினால் எல்லாம் தெரிந்துவிடுமன்றோ! எனவே அவசரமாக எனக்கு எல்லா உண்மைகளையும் எழுதி அனுப்புங்கள். தங்களுடைய பக்தர்களாகிய நாயன்மார்களையெல்லாம் தாங்கள் தங்களிருப்பிடத்திற்கே அழைத்துக்கொண்டு விட்டீர்களாம். இதையும் என்னால் அங்கீகரிக்க முடியவில்லை. ஏனென்றால் தங்கள் பக்தர்களாகிய நாயனார்கள் இந்த உலகத்தில் எப்போதும் இருக்கும்படி தாங்கள் விட்டிருந்தால் அது புத்திசாலித்தனமாக இருக்கும். அவர்கள் இங்கே தற்போது இருந்தால் பெண் பனையை ஆண் பனையாக ஆக்கியும், சமணர்களையும், சுயமரியாதைக் கட்சிக்காரர்களாகிய என் சகாக்களையும் கழுவேற்றித் தங்கள் கீர்த்தியையும் தங்கள் இருப்பை யும் பிரசித்தப்படுத்திக் கொண்டிருப்பார்கள். கடவுள் இல்லை; சைவம் இழிந்த மதம் என்று கூறுகிறவர்களை எங்கும் உண்டாகவிடாமல் செய்துகொண்டிப் பார்கள். இறந்தவர்களை உயிர்ப்பித்து, அதன் மூலமாக சைவ மதத்தைப் பரப்பிக்கொண்டிருப்பார்கள். வேறு மதங்கள் உண்டாக விடாமல் செய்து கொண்டிருப்பார்கள். தங்களுக்கும், தங்கள் மதத்திற்கும் பக்கத் துணையாகவும் பாடிகார்ட்களாகவு மிருந்து பெரும் தொண்டு செய்து கொண்டிருப்பார்கள். இவற்றை யெல்லாம் தாங்கள் கவனித்துப் பாராமல் ரிக்ஷிபாரூட பார்வதி - பாம்பு - எலும்பு சமேதரராய்க் காட்சி கொடுத்து நாயன்மார்களையும் அழைத்துக் கொண்டு போய்விட்டது எவ்வளவு பெரிய தப்பு பாருங்கள்... ஓகோ! ஒருவேளை இதில் ஏதேனும் தத்துவார்த்தம் - உள்நோக்கம் இருந்தாலும் இருக்கலாம்! அப்படி ஏதேனும் இருந்தால் அதைப் பற்றியும் கடிதத்தில் தெரிவியுங்கள். இன்னொரு பெரிய சந்தேகமும் எனக்கேற்பட்டிருக்கிறது. அதாவது, அறுபத்து மூவருடன் பெரியபுராணம் சம்பூர்ணமாகி விட்டது தான். அறுபான் மூவருக்குப் பின்பு ஒரு சிறு நாயனார்கூடத் தோன்றாம லிருக்கும்படி தாங்கள் ஏன் செய்து விட்டீர்கள் என்பது விளங்க வில்லை. ஒருகால் அந்த அறுபத்து மூன்று பேருடன் சைவ மதமும் பூர்த்தியடைந்துவிட்டதா என்பதாகவும் நான் நினைக்கிறேன். தற்போது சைவ மதத்தில் அநேக பெரியார்களிருப்பதாகக் கூறிக் கொள்ளப்படுகிறது. நடுநிலைமையிலிருந்து கவனித்துப் பார்த்தால் முன்பிருந்த அறுபத்து மூன்று நாயனார்களைக் காட்டிலும் பக்தியிலும், நடத்தை யிலும் சிறந்தவர்களாகயிருப்பதாகக் கூறலாம். இப்படி யிருக்கும்போது, இந்தப் பெரியவர்களையும் நாயனார் ஜாப்தாவில் தாங்கள் சேர்க்கும் படி செய்யாமல் அல்லது தாங்களே சேர்த்துக் கொள்ளாமல் வாளா (கத்தியல்ல என்று குறிப்பிட்டுக் கொள்கிறேன்) விருப்பது எனக்குப் பெருத்த வியப்பையூட்டுகிறது. எனவே இதைப் பற்றியும் எழுதவும். ஒரு காலத்தில் (சரியான வருடம் மாதம் தேதி தெரியவில்லை) இலங்கையையாண்டவர் என்று சொல்லப்படும் இராவணன் என்பவர் தங்களை நோக்கிக் கடுந் தவஞ்செய்து அதன் மூலமாகத் தங்களிடம் பெரிய பெரிய வரங்களைப் பெற்றுக்கொண்டதுடன் தங்கள் சீமாட்டி யாகிய பார்வதி தேவியையும் பெற்றுச் சென்றதாகவும் சொல்லப் படுகிறது. இது உண்மையானால் தங்களைப் போன்ற கடைந்தெடுத்த மடையர் - ஏமாளி வேறு ஒருவரும் இரார் என்றேதான் சொல்லுவேன். எனவே அப்படி செய்திருக்கமாட்டீர்கள் என்பதே என் பூரண நம்பிக்கையாதலால் அவ்வாறு தைரியமாக எழுதினேன். இருந்தாலும் அதைத் தங்கள் கரத்தாலேயே எனக்கு எழுதிச் சந்தேகத்தைப் போக்குங்கள். அத்துடன் தங்கள் ஒய்ப் (wife) இப்போது எத்தனை குழந்தைகள் பெற்றிருக்கிறார்? ஆண் எத்தனை? பெண் எத்தனை? நாய்த் தலை, கழுதைத் தலை, பன்றித் தலைப், பிள்ளைகளையும் பெற்றிருக்கிறார்களா என்பனவற்றையும் சவிதாரமாக எனக்கு எழுதுங்கள். அவற்றை மக்களுக்கு விளம்பரஞ் செய்யத் தயாராக இருக்கிறேன். நான் ஏன் அப்படிக் கேட்கிறேனென்றால் தங்களுக்கிருக்கும் புத்திரர்களில் ஒருவருக்கு ஆறுமுகங்களிருப்பதாயும், வேறு ஒருவருக்கு யானைத் தலையிருப்பதாகவும் உங்கள் சைவர்கள் உரைப்பதனாலேயேயாகும். உரைக்கும் அளவில் நிற்கவில்லை. அதைப்போன்ற உருவங்கள் செய்து பூசித்துக் கொண்டுமிருக் கிறார்கள். இவை உண்மையா - பொய்யா? என்பது எனக்குப் புலப்பட வில்லையானாலும், அதைப்பற்றி ஆட்சேபஞ் செய்யாமலிருப்பதி லிருந்து அநேகமாக அப்படிப்பட்ட தலைகளுடைய மக்கள் தங்களுக்கு இருக்கலாமென்றே சந்தேகிக்க இடமேற்படுகின்றது. இருந்தாலும் எனக்குச் சந்தேகம் என்னவோ அபாரந்தான். ஏனென்றால் ஓர் தலை யுடைய உங்களுக்கு ஆறுமுகப் பிள்ளையும் - யானைத் தலை உள்ள பிள்ளையும் பிறக்குமா - என்பதுதான். ஒரு வேளை இங்குள்ளவர்கள் தங்கள்மீது செய்திருக்கிற பிழைகள் தங்கள் கண்ணுக்குத் தென் படாமலோ - காதுக்குக் கேட்காமலோ போயிருக் கலாம் என்றும் நினைக்கிறேன். ஏனென்றால் தாங்கள் இருப்பது வெகு தூரம் அல்லவா? ஆம்! கடவுளே! அதை உத்தேசித்துத்தான் இந்தக் கடிதத்தில் விஷயங்களை நன்றாகவும் பன்னிப் பன்னியும் எழுதி யிருக்கிறேன். எனவே இவை பொய்யாக இருந்தால் அதை எனக்கு எழுதுவதுடன் தாங்கள் இனியும் கஞ்சா குடித்துக் காலவிரயஞ் செய்யாமல் உடனே எருது வாகனமீதேறி வந்து தக்க நடவடிக்கை களை எடுத்துக் கொள்ளுங்கள்! தாங்கள் வருவதற்குச் சௌகர்யப் படாவிட்டால் பூத கணங்களையாவது, அல்லது ஆறு முகனையாவது, யானைமுகனை யாவது அனுப்பி வைக்க வேண்டியது என்று யோசனை கூறுகிறேன். தங்களுக்கென இங்கு அநேக கோயில்கள் கட்டியிருக் கிறார்கள். தாங்கள் அவற்றில் வசிப்பதாகக் கூறிக் கொள்ளுகிறார்கள். இது எனக்குப் பெரிய குழப்பத்தையும், ஆச்சரியத்தையும் கொடுக் கின்றன. ஏனென்றால் தாங்கள் இல்லாத இடம் ஒன்றும் இல்லை என அவர்கள் சொல்லிக் கொண்டு அதற்கு மாறாகக் கோயில்கள் கட்டி யிருப்பது முன்னுக்குப்பின் முரணாகவன்றோ இருக்கிறது? தாங்கள் கோயில் களில் இல்லை என்பதைத் தாங்களும் அறிந்தே யிருப்பீர்கள். கோயில்களில் தாங்கள் இருந்தால் அங்கு நடக்கும் அநியாயங்களை யும் கொடுமைகளையும் சகித்துக் கொண்டோ, அநுமதித்துக் கொண்டோ இருக்க மாட்டீர்கள் என்பதை நான் உணர்வேன். கோயில் களில் பட்டர்கள், பூசாரிகள், தரகர்கள் என்பவர்கள் செய்துவருகிற குறும்புத் தனங்களைத் தாங்கள் இது வரையில் தெரியாமலிருந் திருக்கலாம் என்றே நினைக்கிறேன். எனவே தாங்கள் சிறிதும் ஆலசியம் செய்யாமல் தக்க நடவடிக் கைகளை எடுத்துக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளுகிறேன். பாலாபிஷேகம், கும்பாபிஷேகம், ஆறு கால பூஜை, திருவிழா என்பவற்றின் பேரால் பொருள்களையும் நேரத்தையும் வீணாக்கி அவற்றில் விருப்பமிருப்பதாகவும் கற்பித்துக் கொண்டு கோமாளித் தனமாகச் செய்துவருவதை இனியும் தாங்கள் விட்டுக்கொண்டிருந் தால் கூடிய விரைவில் தங்களுக்கே பெரிய ஆபத்தாக வந்து முடிந்தாலும் முடிந்துவிடலாம். தங்கள் பேரால் சில பெண்களைத் தேவதாசிகள் என்ற பெயரிட்டு, அவர்களைத் தாங்கள் விரும்புவ தாகப் பிறர் எண்ணும்படி செய்து, அந்த அறியாப் பெண்களை அந்தக் கோயில்களில் உள்ளவர்களும், வேறு சிலரும் பெண்டாண்டு வருகிறார்கள். இது எத்தகைய மானக்கேடு பாருங்கள். இன்னும் அந்தப் படுபாவித் தரகர்கள் செய்துவரும் குறும்புத்தனமான நடவடிக்கைகள் கொஞ்சமா? தாங்கள் பார்வதியோடு படுத்திருப்பது போலும், காலைத் தூக்கிக்கொண்டு ஆடுவது போலும், இன்னும் பல வெறுக்கத்தக்க விதமாகவும் தங்க உருவஞ் செய்து வைத்திருக் கிறார்கள். தாங்கள் செய்ததாகக் கூறப்படுகிற பல அந்தரங்க விஷயங் களையெல்லாம் இங்குத் திருவிழா என்பதின் பேரால் வெளியாக்கி மனிதர்களை அறிவிலிகளாக ஆக்கி வருகிறார்கள். தாங்கள் நடத்திய அசாத்தியமான செயல்களைத் திருவிளையாடல் என்று கூறிக் கொண்டு விளம்பரம் செய்துவருகிறார்கள். அவற்றைப் பிற மதத்தார் கேட்டுத் தங்களையும் தங்கள் மதத்தையும் நையாண்டி செய்து வருவதுடன், இப்படியும் ஒரு கடவுள் இருப்பாரா? என்றும் கேட்கிறார்கள். இவற்றையெல்லாம் கேட்கும்போது கயிறு கொண்டு செத்துப் போகலாமா? என நானே எண்ணிக் கொள்வதுண்டு. எனவே தங்களுக்கு எப்படியிருக்காது? என நான் கேட்கிறேன். அந்தக் கோவில்களுக்குள் ஆதித் திராவிடர் என்று சொல்லப்படுகிற மக்களை நுழையவும் தங்களை வணங்கவும் விடமாட்டே னென்கிறார்கள். எல்லா மக்களும் தங்களுடைய மக்கள் என்று அந்த அறிவாளிகளே கூறிவிட்டு, ஆதித் திராவிடர் என்பவரை மட்டும் உள்ளேவிட மறுப்பதன் கருத்து என்ன என்பது விளங்கவில்லை. அநேகமாக, தாங்கள் இதைக் கேட்டவுடன் திடுக்கிட்டுப் போவீர்கள் என்றே என் புத்தியில் படுகிறது. அப்படியிருந்தால் தாங்கள் இந்த அநியாயத்தை அகற்றிவைக்க உடனே சட்டதிட்டங்களை ஏற்படுத்தும்படி இதன் மூலமாக இறைஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். இதற்கு ரிப்ளை அட் ஒன். எதை எழுதுவது? எதை எழுதாமல் விடுவது? என்பது எனக்குத் தெரியவில்லை! அவ்வளவு சங்கதிகளிருக்கின்றன. தாங்கள், கேவலம் ஒரு பிடி பிட்டுக்காக வைகையில் மண்சுமந்து பாண்டிய அரசர்களில் ஒருவரால் பிரம்படிபட்டீர்களாம்! என்ன! தேவண்டா! இப்படியும் இருக்குமா? தாங்கள் சாப்பாடு கிடைக்காமல் எங்கெங்கெல்லாமோ சென்று பிச்சை எடுத்துப் புசித்தீர்களாம்! தங்களுக்குப் பசி முதலிய இயல்புகள் இல்லையென்று சொல்லப் படுகிறபோது அப்படியெல்லாம் ஓட்டைக் கையில் எடுத்துக் கொண்டு தாயே! ã¢ir nghL! என்று அலைந்திருப்பீர்களா? என நான் கேட்கிறேன். தாங்கள் நிரம்பவும் ஆவலாக விரும்புவது ஆடன் சாம்பிராணித்தானாம்! இந்தக் கொடுமையும் உண்டா எம்பிரானே? தாங்கள் ஒரு காலத்தில் பார்வதி பிராட்டியாரை அறுபதினாயிரம் ஆண்டுகள் வரையில் அன்னந் தண்ணீரில்லாமல் அநுபவித்தீர்களாம்! அப்போது உங்களிருவருக்கும் அருகில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்த புண்ணியவான் யாரோ தெரிய வில்லை! இது உண்மையாக இருக்காதென்றே நான் நம்புகிறே னானாலும் தங்கள் மூலமாக அறிந்துகொள்வது விசேஷம் என்று நான் ஆசைப்படுகிறேன். எனவே இதன் விவரத்தையும் மறந்து போகாமல் எழுதுங்கள். தங்களுக்கு காளைமாடுதான் வாகனமாம். ஐயோ! மனிதர்கூட அந்த வாகனத்தில் ஏறுவதற்கு வெட்கப் படுகிறார்கள் அதுதானா தங்களுக்குக் கிடைத்தது? தங்களுக்கு நூதனமான ஒரு கண் இருக்கிறதாம். அந்தக் கண்ணைத் தாங்கள் திறந்தால் உலகமே சாம்பலாகிவிடுமாம்! அந்தக் கண்ணைத் திறந்து தங்கள் மருமகனாகிய மன்மதனை எரித்து விட்டீர்களாம்! இது அபாண்டமான பொய்யாகவே இருக்கும் என்றுதான் நினைக்கிறேன். ஏனென்றால் அப்படிப்பட்ட நெருப்புக் கண் தங்களுக்கிருந்தால் தாங்களே உயிருடன் இருக்கமுடியா தல்லவா? எப்படியிருந்தாலும் மருமகனை எரிக்க விரும்புவீர்களா? இதைப் பற்றியும் எனக்கு எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன். தங்களுடைய இளைய குமாரனாகிய குமரன் மனிதப் பெண்ணாகிய ஒரு மாதைத் திருட்டுத்தனமாகக் கவர்ந்து சென்று கலியாணம் செய்துகொண்டாராம்! இதை நான் எப்படி நம்புவது? மனிதப் பெண்ணைத் தங்கள் மகன் கலியாணஞ் செய்ய ஆசைப்படுவாரா? அப்படியே ஆசைப்பட்டாலும் திருடிக்கொண்டு போக நினைப்பாரா? மனிதப் பெண்களை கலியாணஞ் செய்ய விரும்பினால் அதைச் சம்பந்தப்பட்ட பெற்றோரிடத்தில் ஒரு வார்த்தை கூறினால் கூத்தாடிக் கொண்டு கலியாணஞ் செய்துகொடுக்க முன்வருவார்களே! இந்த விஷயத்தையும் எனக்கு எழுதுங்கள்! தங்கள் மூத்த புத்திரராகிய விநாயகருக்கு இன்னும் மணமாகவில்லை யாம். ïJ c©ik jhdh?, ஒருவேளை விநாயகருக்கு யானை முகம் இருப்பதால் எவரும் பெண்கொடுக்க முன்வரவில்லையா? மனிதக்கறி மீது தங்களுக்கு அதிக விருப்பமுண்டாம்! என்ன கொடுமையாய் இருக்கிறது. மனிதக் கறிக்கு தாங்கள் அப்படியா வீங்கிப்போய் இருக்கிறீர்கள்? ஒருகால் கைலாசத்தில் ஆடு, மாடு முதலியவற்றின் புலால் கிடைக்கவில்லையா என்றும் சந்தேகமாய் இருக்கிறது. எனவே இதையும் தெரியப்படுத்தவும். தாங்கள் ஒருவரிடம் கல் லடியும், மற்றொருவரிடம் வில்லடியும் இன்னொருவரிடம் செறுப் படியும் பெற்றிருக்கிறீர்களாம்! அப்படியானால் தாங்கள் அடி வாங்குவதில் வீரரா? சேச்சே! அப்படியிருக்காது. இருந்தாலும் இதைப் பற்றிய உண்மையையும் எழுதுங்கள்! சுடுகாட்டிலிருக்கத் தங்களுக்கு மிக மிக விருப்பமுண்டாம். செத்த பிணங்களைத் தின்பதற்கா? என்பது தெரிய வில்லை. தாங்கள் பிச்சை எடுக்கும் பாத்திரம் மண்டை ஓடுதானாம். இது என்ன படுமோசமாயிருக்கிறது. எல்லாமிருக்குது பெட்டியிலே; இலைக்கறி கடையச் சட்டி யில்லை என்று இங்கு ஒரு பழமொழி வழங்குகிறது. அதைப் போலல்லவா இருக்கிறது தங்கள் செயல்! மண் பாத்திரங்கூட கைலாசத்தில் கிடையாதா? ஆண்டவனே! அப்படி யிருக்குமானால் நான் மோட்சத்திற்கு வர ஒருபோதும் விரும்ப மாட்டேன். தாங்கள் கண்ணப்ப நாயனார் கொடுத்த பன்றிக் கறியை, அவக் அவக் கென்று தின்றீர்களாம்! எவ்வுயிர்க்கும் அன்பாயிரு என்ற தாங்கள் சைவசமயத்தின் கடவுளும் இப்படிச் செய்யலாமா? இது பொய்யா யிருந்தால் இருந்தும் அதைப் பற்றியும் எனக்கு எழுதும்படி கேட்டுக் கொள்கிறேன். தங்கள் மகன் ஆறுமுகக் கடவுளுக்கு மயில்தான் வாகனமாம். இதென்ன வேடிக்கையா யிருக்கிறது! ஒரு தலை உள்ள மனிதரை தாங்கக் கூடாத மயில் ஆறு தலையுள்ள மனிதனை எப்படித் தூக்கிச் செல்லும் என்பது புலப்பட வில்லை! எல்லா வற்றையும் எழுதும்படி பணிவாய்க் கேட்டுக் கொள்கிறேன். மற்றொரு குமாரனாகிய யானைத் தலையும் பானை வயிறுமுடைய கணபதிக்குப் பெருச்சாளி வாகனமாம்! ‘j¤, j¤! இதென்ன வேடிக்கையாய் இருக்கிறது! யானைத் தலை உடையவரைப் பெருச்சாளி தாங்குமா? அவர் ஏறினால் பெருச்சாளி சட்னியாகி விடுமே! தாங்கள் உடுப்பது பெரிதும் புலித்தோலாம்! பாவம், தங்கள் தரித்திர நிலைக்காக நான் இரங்குகிறேன்! அத்துடன் தங்களுக்கு ஆடைகள் தேவையாயிருந்தாலும் நான் பார்சல் செய்யத் தடை யில்லை. எனவே உடனே பதில் எழுதுங்கள்! தங்களுக்கு வைப் பாட்டி கூட இருக்கிறாராம். பிறர் மனைவி விரும்பாதே - என்று கூறும் தங்களுக்கு இது அடுத்த செயலாகுமா! அநேகமாய் இது வெறும் பொய்யாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். எப்படி யிருந்தாலும் இதற்குப் பதில் எழுதவும். ஒரு பெண்ணை பரிசோதிக்க விரும்பி, தாங்களும் பிர்ம்மா, விஷ்ணு ஆகியவர்களும், அந்தப் பெண்ணை நிர்வாணமாக இருந்து உணவு படைக்கும்படி கேட்பீர்களாம். இது எப்படிப்பட்ட அருமையான பரீட்சை! தாங்கள் அடிக்கடி ஆட்டம் போடுவீர்களாம்! அப்படியானால் தாங்கள் கூத்தாடி கூட்டத்தைச் சேர்ந்தவரா! தாங்கள் குளிப்பதே இல்லையாம்! அப்படியானால் கைலாசத்தில் நீர் கிடையாதா? தங்கள் ஆபரணங்கள் எலும்புகளும், பாம்புகளும்தானாம்! அப்படியானால் தங்களுக்குக் கைவசத்தில் பொன், வெள்ளி, ரத்தினம் கிடைக்க வில்லையா! தாங்கள் நாள் தவறி னாலும் கஞ்சாக் குடிக்க தவற மாட்டீர்களாம்! போதை சாப்பிட்டால் நரகத்திற்குப் போவாய் என்பதாகச் சைவ சமயம் சாற்றுகிறதே! அப்படியானால் முதலில் தாங்களல்லவோ நரகத்திலிருக்க வேண்டிய ஆசாமியாய், இல்லை! இல்லை! சாமியாய்த் தெரிகிறது. ஒரு சமயம் விஷ்ணு (மோகினி அவதாரம்)வைப் புணர்ந்தீர்களாம்! ஆகா! எத்தகைய அரிய திருவிளையாடல்! தாங்கள் ரிஷி போன்றவராம்! அப்படியானால் கனம் விநாயகர், ஆறுமுகன், வீரபத்திரன் முதலியவர்களெல் லாரையும் பார்வதி எவருக்குப் பெற்றார்? இன்னும் இவை போன்ற பல சமாச் சாரங்கள் சொல்லப்படுகின்றன. எனக்கு அவை ஒன்றிலும் நம்பிக்கை கிடையாது. என்றாலும் தங்கள் மூலமாகவே - எழுத்து வாயிலாக அறிந்து என் சந்தேகங்களை நிவர்த்தித்துக்கொள்ள விரும்பி இந்தக் கடிதத்தைத் தங்களுக்கு எழுதினேன். இதன் பிரதியொன்றை புதுவை முரசுவின் விசேஷ அநுபந்தத்திலும் வெளியிட அனுப்புவதற்குத் தங்கள் அனுமதியைக் கோருகிறேன் என்பதாக ஒரு கடிதம் எழுதலாமா என நினைத்துக் கொண்டிருக் கிறேன். ஹீ! ஹீ!! ஹீ!!! -புதுவை முரசு, விசேஷஅநுபந்தம், 8. 8. 1931, ப. 83 - 92 73. லௌகிகத்தின் துஷ்டப்பிள்ளை வைதிகம் லௌகிகம் என்பது லோக சம்பந்தமானது, அதாவது இந்த உலகத்திற்கும் மனிதனுக்கும் உள்ள சம்பந்தம் பற்றியது. பாரமார்த் திகம் என்பது பெரிய பொருள் சம்பந்தமானது. அதாவது இவ் வுலகத்திற்கு அதிதமாக உள்ளது. பெரிய பொருள் அல்லது கடவுள்; அக் கடவுளுக் கும் மனிதனுக்கும் உள்ள சம்பந்தம் பற்றியது. ஒற்றைக் கண்ணன் ஒரு பக்கமாகப் பார்ப்பதுபோல் சிலர் பாரமார்த்திகம் என்பதை மனித லக்ஷியம் என்றும், லௌகிகம் ஒன்றுக்கும் உதவாத விஷயம் என்றும் சொல்வதுண்டு. இவ்விடத்தில் நன்றாய் ஊன்றி யோசிக்க வேண்டும். மனிதர் உலகில் பிறந்தனர். அவர்கட்குப் பசி உண்டு. தாக முண்டு. இவைகட்கு வழிதேட வேண்டும். உடைவேண்டும். இப்படிப் பட்ட பிற தேவைகள் உண்டு. இவை பூர்த்தி செய்யப்படவேண்டும். இவைகட்கு ஆதரவாக ஆட்சி வேண்டும். ஆட்சி முறை வேண்டும். இவையன்றி இயல்பாக மக்கட்கு இன்பத்தில் நாட்டமுண்டு; பூர்த்தி பெறவேண்டும். இதற்கிடையில் மக்கட்கு எப்படிப்பட்ட உயர் குணங்கள் வேண்டும் அவர்கட்கு மானம் உண்டு. அபிலாஷைகள் உண்டு. இவை பறிபோகக்கூடாது. ஒரு மனிதன் மனித கோடி களுக்கும் தனக்குமுள்ள சம்பந்தத்தையறிவதான நிலையடைய வேண்டும். அவன் அறிவு முதிர்ச்சி பெற்றவண்ணமிருத்தல் வேண்டும். இவையும், இவை போன்ற பிறவும் லௌகிகம். இப்படிப் பட்ட லோக சம்பந்த விஷயத்தில் மனிதனுக்கு எவ்வளவு கவலை வேண்டியிருக்கிறது? மனித லக்ஷியம் என்பது இந்த உலகத்தோடு மாத்திரம் முடிந்து விடாமல் அப்புறத்தேயும் சென்று முடிவதாக வைத்துக் கொண்டாலும். எந்த அறிவாளியாவது மேற் சொன்ன லௌகிகத்தில் மனிதனைக் கவலை கொள்ளாமலடித்துத் தள்ள நினைக்கலாமா? பாரமார்த்திகம்! பாரமார்த்திகம், பாரமார்த்திகம்! மற்றவை திரணம். இது பாரமார்த்திகரின் போதனை. பாரமார்த்திகப் போதனை செய்வோர் லௌகிகர்களைப் போலவே உண்டு, உடுத்தி, உறங்கி, இன்பமனுபவித்து, இந்த உலகத்தையே கற்கண்டாக்கித் தின்று விடவும் திட்டம் போடுவதுண்டு. உலகுக்கு வேண்டிய உழைப்பை உழைத்துத் தனக்கு வேண்டிய உலக போகத்தையடைய எண்ணும் சுபாவம் மனிதனிடம் போய், பாரமார்த்திகம், பாரமார்த்திகம், பாரமார்த்திகம் என்று ஜெபிப்பார்கள். bgU«gh‹ik k¡f£F ghukh®¤âf« nghâ¤J mjdhš mt®fŸ cyf nghf¤ij milahkš brŒJ -m¥gFâiaí« ckJ tƉW¡FŸ jŸË¥ bgÇanjh® V¥gÄl c¤njá¡»Ö®fsh? என்று பாரமார்த்திகர்களைக் கேட்டால், பார மார்த்திகள் கண்டதே காட்சி - கொண்டதே கோலம் என்று நினைக்கிறீர்களே என்று உழைப்பாளிகளைக் கேட்பார்கள். இந்த வார்த்தையால் ஏழை மக்கள், தெரியாத்தனமாக நாணிச் சும்மா இருந்து விடுவது உண்டு. பாரமார்த்திகத்தில் நுழைய ஆரம்பிப்பது உண்டு. ஏழை மக்களே, உழைப்பாளிகளே, பாரமார்த்திகம் பேசும் கூட்டத்தாரை நீங்கள் பரிசோதனை செய்ய வெளிப்படையான ஒரு வழி யுண்டு. உலக சம்பந்தமே உதவாது எண்ணும் அவர்களையெல்லாம், ஒன்றாக நிறுத்தி நோக்குங்கள். அந்த வரிசையில் எவனாவது உங்களைவிட உலக சம்பந்தம் அற்றவன் இருக்கிறானா என்பதைக் கவனியுங்கள். உங்கள் கருத்தை மறைத்து உங்களுடைய சொத்தை யெல்லாம் பறித்து ஏராளமாக உண்டதன் பயனாக அவர்கள் ஆனைகள் போல் கொழுத்து இருப்பார்கள்! உங்கள் சாப்பாட்டைத் திரட்டி அதன் சாரத்தை இறக்கிச் சாப்பிட்ட அவர்கள், அச் சாப்பாட்டுக்கு ஜீரணம் ஆக வேண்டிக் குண்டுக் கழுதைகள் திண்ணைகளில் புரளுவதைக் கண்டதில்லையா? “ghukh®¤âf«!”, கடவுள் விஷயம்! வாழுகிற வீட்டின் கூரையில் சாக்குருவி கத்துகிறது! இந்த உலகம் பொய், இந்த உலகம் கனவு, பெண்கள் மாயை, வாழ்வு பொய், இளமை நீரில் குமிழி, அனைத்தும் ஒருவிதத் தோற்றம்; தமது உடற் தசையின் சன்னங்களை வயலுக்கு எருவாக இட்டு உழைத்துத் தேயும் ஏழைகளிடம் இதை சொன்னால் அவர்கள் உத்சாகம் அடைவார்கள் அல்லவா? பாரமார்த்திகர்களே, உங்கள் பாரமார்த்திகம் எவ்வளவு உயர்ந்தது? எண்ணிப் பார்த்தீர்களா? அதன் பிள்ளை மீசையைச் சிரைத்துக் கொண்டு, ரவிக்கை போட்டுக் கொண்டு, சேலை உடுத்திக் கொண்டு கூத்தாண்டவர்க்குத் தாலிகட்டி, கட்டிய அன்றே அதை அறுத்துப் போட்டு ஒப்பனை வைத்து அழுகிறார்களே. அந்தத் தொண்டு பாரமார்த் திகமா? அது பேடிப் பசங்கள் வழக்கமேயன்றிப் பாரமார்த்திகம் அல்ல என்பீர்களானால், அந்தப் பேடி வழக்கத்திற்குக் காரணர் யார்? ஆட்டின் ஈரலை வாயிற் கடித்துக் கொண்டு கோரா வேஷத்துடன் மனிதன் அங்காளம்மனுக்குச் செய்யும் தொண்டு பாரமார்த் திகமா? இல்லையென்றால் இந்த ஏற்பாட்டுக்குக் காரணர் யார்? பாமர மக்களைப் பாரமார்த்திகம் செய்துள்ளதும், பார மார்த்திகத்தால், பாமர மக்கள் இந்நாள் மட்டும் அடைந்ததும் நிற்க, படித்தவர் எனப்படுவோரும் மதத் தலைவர் எனப்படுவோரும் அனுசரிக்கும் பாரமார்த்திகமானது சாக்கடையில் ஓடும் பெருச்சாளி யின் வாயிலிருந்து அதன் முதுகில் ஓடி அங்கிருக்கும் விநாயகர் அவர் தம்பி மற்றும் சொந்தக்காரர்களிடம் சென்று பிறகு ஆகாச வாணம் போல் மேல் நோக்கிக் கிளம்புகிறது! ஆரம்பத்திலாவது திடீரென்று மேலே கிளம்பலாகாதா? அல்லது பச்சை மட்டை, புதுமுறம், பொரி, ஏழு புட்கள், 2 கழிகள், நெருப்புச் சட்டி சகிதம் வடக்கு நோக்கியாவது சென்றுவிடலாகாதா? சென்றால், உலக மக்களின் பணம், கோயிலுக்கென்றும், கோயில் தரகர்கட்கென்றும் கோடிக் கணக்கில் அநுதினம் செலவழியாதே! கோயில், மற்றும் மத கர்த்தர்களின் ஏற்பாடுகள் எல்லாம் பாரமார்த்திகமானால் ஆடறுத்தல், கோழி யறுத்தல், சாராயக்கடைத் தெய்வத்துக்கு மனிதன் குடிப்பதன் மூலம் பக்தி செலுத்துதல், இவைகள் எல்லாம் பாரமார்த்திகமானால், மீதியாக லௌகிகம் எது? இந்நாள் மட்டும் லௌகிகர்கள் ஏமாந்து கிடந்ததால், பொய், வஞ்சம், கொலை களவு, முதலியவைகளும் பாரமார்த்திக வேஷம் போட்டுத் தம் வேலையை நடத்தி வந்தது; நடத்தி வருகிறது! இவ்விடத்தில் பாரமார்த்திகம் உதவி செய்யும் மாதிரியைக் கவனித்தால், பகுத்தறிவும், பகுத்தறிவால் விருத்தியாகும் நற்குணங்கள் பலவுந் தவிர - மற்ற ஆபாசங்களெல்லாம் பாரமார்த்திகம் என்பது நன்றாய் விளங்கும். பாரமார்த்திகம் இருக்கிறதே? - ஆம் இருக்கிறது. அது மகத்தான விஷயம் - ஓகோ அப்படியா? மேலும் அது மனித அறிவுக்கு அப்பாலான விஷயத்தோடு சம்பந்தப்பட்டது - அடடா! மனித அறிவுக்கு எட்டாததை வானம்பாடியா கொண்டுவந்து கொடுத்தது? மேலும் கேளுங்கள் அற்ப அறிவுடையவர்களே! பாரமார்த்திகர்களை வணங்கி இவ்வுலகத்தினின்று மீட்சியடையுங்கள் - அப்படியே ஆகட்டும்; இவ் வுலகத்தினின்று நாங்கள் மீட்சியடையுமுன்னும் மீட்சியடைந்த பின்னும் மரணாவதைச் சடங்குகளும், மரணச் சடங்குகளும், செய்வதன்மூலம் உலக போகத்தை அள்ளிக்கொள்ள நீங்கள் மாத்திரம் ஆயத்தமாயிருங்கள். அம்பட்டன், வண்ணான் முதலியவர்கட்குச் சாவுகொடுத்த வீட்டில் கொடுக்கும் கூலி எங்களுக்கு அர்த்தமாகிற அளவு, அவர்களின் ஒருவனாக நின்று பாரமார்த்திகன் அடித்துக் கொண்டு போகும் பொருள், எதற்கென்றுதான் விளங்கவில்லை. மனித அறிவுக்கு எட்டாத விஷயம் இப்படித்தா னிருக்கும்போலும்! இந்த உலகம் சம்பந்தப்பட்ட மட்டில் தூங்கியவன் துடையில் கயிறு திரிக்கும் விஷயம் போக மற்றும் இப்பிரபஞ்சத்திற்குக் கர்த்தா யார்? அவனுக்கும் மனிதனுக்கும் என்ன சம்பந்தம்? இப் பிரபஞ்சத்தின் முடிவு என்ன? இப்படிப்பட்ட விஷயங்கள் பாரமார்த்திக விஷயம் என்றும் இவைகளை ஞானிகளும், ரிஷிகளும், மதத் தலைவர்களும் கடவுளின் கிருபையால் கண்டறிந்தார்கள் என்றும் இதைப்பற்றி இவர்கள் சொல்லியிருப்பதால், இவர்கள் சொல்வதையெல்லாம் கண்களை மூடிக்கொண்டு எக்காலத்திலும் அனுசரித்து நடந்து வர வேண்டும் என்று பாரமார்த்திகப் பூச்சுகள் சொல்வதுண்டு. வான லோகம் உண்டு! நரகலோகம் உண்டு! ஆனால் இப்போது, அவை நம் கண்களுக்குத் தெரியமாட்டார் என்று பாரமாத்திகர் சொல்லிக் கண்ணுக்குத் தெரியக்கூடிய பணத்தை மக்களிடமிருந்து பிடுங்கிக் கொள்வதுண்டு. இவைகளைக் கேட்ட கிண்டற்காரன் சொல்வதென்ன வென்றால், இப் பிரபஞ்சத்திற்கு அதீதமான விஷயத்தை ஒருவன் கண்டறிந்தது மாத்திரமல்லாமல், மக்களிடம் செல்வாக்கடைய விரும்பிய மதத் தலைவர்கள் அனேகர் சொல்லி யிருக்கிறார்கள். ஒருவர் சொல்லியிருப்பதோடு மற்றொருவர் சொல்லி யிருப்பது முரண்படுவதால், முரண்படுவதாகிய இரு கக்ஷி வாதத்தை யும் நீக்கிப் பார்த்தால் மீதியிருப்பது லௌகிகந்தான்! இருட்டில் தடவும் கைகள் எல்லாம், பாரமார்த்திகர்களின் கைகளேயாகும்! பாரமார்த்திகம் பாரமார்த்திகம் என்று ஒருவகைக் கூச்சலைப் பிற்காலத்தில் ஒரு கூட்டம் இந்த உலகத்தில் பலமாகக் கிளம்பிக் காலங் கழிக்க எண்ணியே, அவர்களுடைய சாதிரங்களிலும் பாரமார்த் திகம் பேசும்போது கண்களைக் கெட்டியாய் மூடிக்கொள்ள வேண்டும் என்று சொல்லுவதற்குப் பதிலாய், பிரத்தியக்ஷ ப்ரமாணம் என்பது உதவி யற்றது என்றும், கருத்துப் பிரமாணமும் நூற்பிரமாணமும் கொள்ளத் தக்கவை என்றும் நூற்கள் வழியாய்ப் பிரசாரம் செய்துவருகிறது. சிவலோகத்தில், சிபெருமான் இருக்கிறார் என்கிறீரே; அதை எப்படி நம்புவது என்றால், அது பிரத்தியக்ஷ பிரமாணத்தால் அறியத் தக்கதல்ல என்று, ஒரேயடியாய் அடித்துப் போடுவதுண்டு. ஒன்றை நம்புவதற்குக் கண்ணால் பார்ப்பதுதானே பிரதானம் என்று கேட்டால், உன் தகப்பன் ஒருவன் இருந்தான் என்பதை எதைக்கொண்டு நம்புகிறாய் என்று, நிரம்ப புத்திசாலித்தனமாய்க் கேட்பார்கள்! இப்படிக் கேட்கும் மேதாவிகளை நோக்கி, ஐயா, எனக்கொரு தகப்பன் உண்டு என்பதற்கும் ஆதாரம், பிரத்தியக்ஷ பிரமாணந்தான் காரணம் என்றால் ஒப்பாமலிருப்பார்கள். எனக்கொரு தகப்பன் உண்டு. ஏன் எனில், என்போல் மனிதர்கள், என் தகப்பன் போன்ற மனிதர் வயிற்றில் பிறப்பதை நான் பிரத்தியக்ஷத்தில் பார்த்திருக்கிறேன். எந்த மனிதனும் ஓர் குரங்கையோ, மாட்டையோ பெற்றதை நான் பார்க்கவில்லை. எந்த மனிதனை நான் கண்டாலும், அந்த மனிதன் வேறொரு மனிதர் வயிற்றில் பிறந்ததாக எண்ணுவதற்கு, எனக்குள்ள பிரத்தியக்ஷ பிரமாணமே உபயோகப்படுகிறது. இதனால் இருந்த மனிதன் (நான்), இன்னொரு மனிதனால் வந்தவன் என்பதை நம்புகிறேன். ஆனால் இதற்கு விரோதமாக நான் பிறந்தபோதே காட்டில் விடப்படட்டும். அங்கு நான் மனிதர் முகம் காணாமல் வளர்க்கப்படட்டும். எனக்கு வினவுவந்ததும் என்னை நோக்கி, ‘நீ உண்டாவதற்குக் காரணம் என்ன? என்று கேட்டால் நான் சொல்ல முடியாது. ஏனெனில் மனிதன் மனிதனால் மாத்திரம் உண்டாகவேண்டும் என்பதைப், பிரத்தியக்ஷத் தினால் நான் அறிய வில்லை யல்லவா? பிரத்தியக்ஷம் என்றதொரு தத்துவ மில்லாமல் கருத்து - நூல் என்பவை ஒரு துளியுமில்லை. பிரத்தியக்ஷ பவத்தா லன்றி எந்த மனிதனும் பெரிய பொருள்பற்றிச் சொல்வதை வெளி யிட்டிருக்க முடியாது. பிரத்தியக்ஷமென்பதன் உயர்வும், உண்மையும் இந்நாட்டில் தான் பிரதாபமற்றுக் கிடக்கிறது. மக்களின் அறிவைச் சில சுயநலக் காரர் இருட்டாக்கிப் போட்டார்கள் என்றால், அது பிரத்தி யக்ஷத்தின் மேன்மையை அமிழ்த்திப் போட்டார்கள் என்றுதான் அர்த்தம். இன்னும் கேளுங்கள், ஒன்றுமில்லாமையிலிருந்து இவ் வுலகத்தைக் கடவுள் உண்டாக்கினார் என்று ஒரு மதக்காரர் சொன்னார். இவ்வித முடிவுக்கு இவர் எப்படி வந்தார்? ஒன்றுமில்லாமை என்ற நிலையைக் கனவு கண்டதுமில்லை. பயாகோப்பில் பார்த்ததுமில்லை. மேலும், இது சொன்னவர் கடவுளுமில்லை! நிற்க, கடவுள் ஒன்றிலிருந்து ஒன்றாக அடுக்குச் சோடுதவலைபோல் இந்த ஜகத்தை உண்டு பண்ணினார்; அதுபோலவே ஒடுக்குவார்; விழுங்குவார் என்று ஒரு மதக்காரர் வரைகிறார். இவ்வித முடிவுக்கு இவர் எப்படி வந்தார். கடவுளல்ல; மனிதர்; இவர் மனிதர். இவர் இந்த ஜகத்தை கடவுள் கக்கும்போது பார்த்தாரா? நிற்க, இந்தப் பிரபஞ்சம் ஒன்றுமில்லை; வெள்ளி ஒன்றுமில்லை; அதன்மேல் அரச உருவம் பொய்; வெள்ளி ரூபாய் எடை, 6 அணா என்பது பொய்; அதன்மேல் அரச ரூபம் ஏறினால் 16 அணாவாகி உருவம் விடுவது பொய்; அது பாமர மக்களிடம் இருப்பதென்பது பொய்; அதைப் பாரமார்த்திகத்தின்பேரால் பறிக்கும்போது அது ஒன்றுமில்லாத துரும்பாக மதிக்கப்படுவது பொய்; பாரமார்த்திகர் கையில் வந்தபின்; அவர் மனைவி பிரசவத்திற்காகப் பிராந்தி பாட்டில் வாங்கக்கூடிய மதிப்படைவது பொய்; மனிதன் பொய்; அனைத்தும் சாயை; பேய்த் தேர்! இப்படி ஒருவர் சொல்லுகிறார். இந்த முடிவு எதைக்கொண்டு? எல்லாம் நானாக இருக்கிறேன். நானே பிரமம் இப்படி ஒரு மதக்காரர் - எதைக்கொண்டு? இவையும், இவைபோன்ற பாரமார்த்திகக் கொள்கைகளும் எப்படியுண்டாயின? இவையனைத்தும் உண்மையா என்பது பிறகு, ஆகட்டும். வெளிவந்த வரைக்கும் உள்ள இவைகட்கு ஆதாரம் என்ன? பிரத்தியக்ஷப் பிரமாணந்தான் மூலாதாரம். எப்படி என்று கேளுங்கள். எப்படி? - உனக்கு உன்னைப் பற்றிய உணர்ச்சியுண்டு. அடுத்தபடியாக மற்றும் மனிதர் உண்டு. மனிதர்களின் இயற்கை விசேஷங்கள் பார்க்கிறாய்; பிறவும் உண்டு; பார்க்கிறாய்: இவ் வுலகத்தைப் பார்க்கிறாய்; மற்றும் சூரியன், நிலவு, நக்ஷத்திரங்கள் உண்டு, பார்க்கிறாய்; பஞ்ச பூதங்கள் உண்டு, பார்க்கிறாய்; கோளங் களின் அசைவு பார்க்கிறாய்; இவைகளை நீ பார்ப்பதோடு ஜலம் என்னும் ஒரே பொருளை நீ பிரித்துப் பார்க்கிறாய்; அதனுள் பல பொருள்களை நீ பார்க்கிறாய்; மற்றும், ஒவ்வொரு பொருளிலும் பல பிரிவான பொருளைப் பார்க்கிறாய்; மேலும் ஒவ்வொரு பொருளும் மற்றொரு பொருளை எதிர்பார்த்திருப்பதை நீ பார்க்கிறாய்; ஒன்றுக் கொண்டு இடைவெளி கொண்டிருப்பதைப் பார்க்கிறாய்; ஆயினும் அவைகள் மற்றொரு வகையில் பிணைபட்டு இருப்பதையும் நீ பார்க்கிறாய்; இன்னும் பல பார்க்கிறாய். இத்தனையும் நீ பிரத்தி யக்ஷத்தில் பார்த்துவிட்டு இதனோடு இரண்டொரு வார்த்தை உன் சொந்தத்தில் கலந்து, உலகம் ஒன்றிலிருந்து ஒன்றாக வெண்காயம் போல் கடவுள் உண்டாக்கினார் என்றும், நம்பாமற் போகக் கூடுமென்று எண்ணி அந்தக் கடவுளும் நான்தான் என்றும், அதையும் நம்புவதற்குப் பத்துப்பேரைக் கொண்டு புத்தகம் போட வைத்துவிட்டால், நீ பிரத்தியக்ஷத்தில் கண்டதோடு கூட்டிக் கொண்டதான வார்த்தைகளையும் நம்புவதா என்று நான் கேட்டால் ஆம் நம்பத்தான் வேண்டுமென்றும், அதெப்படியடா என்றால் இதெல்லாம் பாரமார்த்திகம் என்றும், கண்ணுக்கெதிரில் எண்பித்துக் காட்டு என்றால் கண்டதே காக்ஷி கொண்டதே கோலம் என்பது பாமரத் தன்மையென்றும் சொல்லி விட்டால், நானென்ன செலுலாயிட் பொம்மையா; நீ கண்டறிந்த மகா உண்மைக்கு கண்டதே காட்சி என்பதுதானே ஆதாரம்? சுண்ணாம்பைப் பார்த்தாய், வெற்றிலையைப் பார்த்தாய், பாக்கைப் பார்த்தாய் இவை மூன்றும் சேர்ந்து சிவப்பானதைப் பார்த்தாய். சுண்ணாம்பின் தன்மையுடைய ஒரு பொருளும், வெற்றிலைத் தன்மையுடைய ஒரு பொருளும், பாக்குத் தன்மையுடைய ஒரு வதும் சேர்ந்தால் சிவப்பு நிறம் ஆகும் என்று நீ சொன்னால், நீ அதை எண்பிக்க முடியும். நீயும் அதைச் சரியாகச் சொன்னதாகவே ஆகும். மூன்றும் ஆகாயத்தி லிருந்து குதித்தன; குதிக்கும்போது அவைகட்கு இறக்கைகள் இருந்தன; முதலில் என்னிடம் பேசின; அதனால் என்னை உலகத்தார் நம்ப வேண்டும் என்று அடையாளம் காட்ட அவை சிவப்பு நிறமாக மாறின என்பவை போன்ற மூட்டைகளைத் தள்ளினால், நம்பவேண்டும் என்ற ஒப்பந்தமா? இதைக் கண்ணில் காட்டி எண்பி என்றால், பாரமார்த்திக விஷயம் அறிவுக்கும், கண்ணுக்கும், மூக்குக்கும் அப்பாலானது என்றால், உனது பற்களுக்குக் கடைசிக் காலமா என்று நான் கேட்கக் கூடாதா? மேலும் இந்த அசம்பாவிதங்களை நம்ப வைப்பதன்மூலம் உலகில் பெரியதோர் குளறுபடி ஏற்படுத்தியவன் - ஏற்படுத்துகிறவன் - ஏற்படுத்த நினைப்பவன், எப்படிப்பட்டவனா யிருப்பான்? நான் முடிவாகச் சொல்வதென்னவென்று கேளுங்கள். என்ன? - லௌகிகம் நல்ல நிலையடையப் பார்க்கவேண்டும். பிறந்தது முதல் இறப்பது வரைக்கும் மக்கள் சௌக்கியமாயிருக்கக் கண்ணும் கருத்துமாக வேலைசெய்ய வேண்டும். இவ்வேலைதான் உலகப் பொதுநலவேலை. இந்த லௌகிகத்தில் பாரமார்த்திகம் என்பதைக் கொண்டுவந்து குழப்பலாகாது. பாரமார்த்திகம் என்பது அதைப்பற்றிச் சொல்லப்படும் அளவு கௌரவமும், அவசியமும் உள்ளதல்ல மேலும், பகுத்தறிவுக்கு ஒத்து வருவதல்ல மக்களின் பொது வாழ்க்கைக்கு ஏற்றதல்ல. இதை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் அனுபவபூர்வம் அறிந்துதான். ஏதோ லௌகிகம் நல்ல நிலையில் இருந்தபோது மனித வாழ்க்கைக்கு அவசியமில்லா ததும், ஆனால் தன்னைப் பகட்டிக்கொள்ள உபயோகப்படக் கூடியதுமான கடவுள் விஷயங்களைச் சிலர் யோசித்து ஏதேதோ முடிவுக்கு வந்திருக்கலாம். அப்படியானால் லௌகிகம் பெற்ற பல பிள்ளைகளில், கடவுளாராய்ச்சி என்ற பாரமர்த்திகம் என்பதும் ஒரு பிள்ளையாகிறது. இந்தப் பாரமர்த்திகப் பிள்ளைக்குக் கொடுக்கக் கூடிய செல்வாக்கை மாத்திரம் கொடாமல், மக்கள் வாழ்க்கையில் நான் மிக்க அவசியமானவன் என்று சொல்லக்கூடிய நிலையை ஏற்படுத்தியிருப்பதால், வெள்ளைக் கழுத்துப் பருந்தைக் கண்டால் மனிதன் ஜெம்னாடிக் செய்ய வேண்டியதாகவும், பிரேதத்தைக் கோயிலில் கொண்டுபோய் வைத்து - பிரேதம் ஆதித் திராவிட னானால் 200 ரூபாய் கொடுத்து - அந்தப் பிரேதத்துக்கு இறக்கையை அரை நிமிஷத்தில் உண்டுபண்ணி - பிரேதத்தை ஆகாயத்தில் பறக்கவிட்டு - குருக்களை இங்கிருந்து மோக்ஷ வழி காட்டச்செய்து அந்தப் பிரேதத்தை அந்த மோக்ஷத்தில் இறங்கும்படி செய்தாக வேண்டியதிருக்கிறது! பாரமார்த்திகக் குழந்தையை வாலையடக்கி வைத்தால், செத்தவுடன், புதைத்தோம், மேல் நடக்கவேண்டிய காரியங்களைக் கவனித்தோம் என்ற நிலை ஏற்படுமல்லவா? பெரிய பொருள் விஷயம் உனக்கு விளங்குகிறதா? ஓடிப் போய் அந்தப் பெரிய பொருளோடு கலந்துகொள்! நாங்கள் மேலே மண்ணைத் தள்ளுகிறோம், அழுகிறோம் தொலையட்டும்! அதைவிட்டுப் பெரிய பொருள் விஷயத்தை - அந்த மிளகாய்த் தூளை பொதுமக்கள் கண்ணில் தூவித்தான் ஆகவேண்டும் என்றால், முதுகெலும்பு முறிந்துதான் ஆகவேண்டும் என்பார்கள்! நாமே பேசிக்கொள்வோம். நன்றாய் யோசி. பிறப்பு, மடிப்பு, சுகாதாரம். இன்பம், பேறு, முடிவு இதற்கிடையில் ஒரு மனிதன் பெரிய பொருள் சம்பந்தமான விஷயத்தில் மனதைச் செலுத்த வேண்டு மானால் அவன் மட்டில் இருக்கட்டும். இல்லை இல்லை நீங்கள் எல்லாரும் கைலாசத்துக்குத்தான் போகவேண்டும்; இப்போதே போக வேண்டும்; அதற்கு இன்னது செய்யவேண்டும்; கோயில்கட்ட வேண்டும்; மனிதனைப் பிரிக்கவேண்டும்; பார்ப்பானை உண்டாக்க வேண்டும்; அர்ச்சனையை உண்டாக்கவேண்டும்; தக்ஷினையை உண்டாக்கவேண்டும்; என்று பலவிதக் கட்டாயம் பண்ணினால் எப்படி ஞாயம் என்பது. ஓய்! ஏன்காணும், சர்க்ககாரன் மாதிரி மிருகங்கள் சகிதம் திரிகிறாய்; சர்க்ககாரனா என்றால் உலக குரு என்கிறாய்? ஓய் ஏன்காணும் மண்டையில் ரவுண்டாக மயிரைச் சிரைத்துக் கொண்டு வேஷம் போடுகிறாய்? ஓய் ஏன்காணும், ஓய் ஏன்காணும் நீங்கள் எல்லாம் சாதாரண மனிதர்போல் இல்லாமல் வேஷங்கள் போட்டுக்கொண்டு திரிகிறீர்கள். உங்கட்கு வேறு வேலையில்லையா? பாரமார்த்திகம் பழுத்துவிட்டது. பிறகு உங்களிஷ்டம். -புதுவை முரசு, விசேஷ அனுபந்தம், 8. 8. 1931, ப. 114 - 119 74. ஹிந்து ஆசிரியரின் தேசபக்தி ஹிந்து ஆசிரியர் திரு.எ. ரெங்கசாமி அய்யங்கார் அவர்கள் பழுத்த தேசபக்தர் தஞ்சாவூர் ஜில்லாவில் அவருக்கு மிகுந்த மரியாதை உண்டு அவர் திரு. காந்தியினிடம் விடைபெற்றுக்கொண்டு வட்டமேஜை மகாநாட்டிற்குப் போவதற்காகக் கப்பலேறிவிட்டாராம். அய்யங்காரின் தேசபக்தியே பக்தி! தன்னைக் காங்கிரகாரர் என்று சொல்லிக்கொண்டு ஜனங்களை ஏமாற்றி ஒரு பக்கம் சிம்லாவிற்கும் சென்னைக்கும் முழங்காலில் விளக்கெண்ணை போட்டுக்கொண்டு ஓடுவதும், பிறகு பெரிய தாபனம் கிடைத்ததும் காங்கிரசையே நிராகரித்துவிட்டு தன் சுயநலத்தைக் கருதி கப்பலேறுவதும் எவ்வளவு அயோக்கியத்தனமான செய்கையென்பதை நமது மக்கள் இப்போதாவது உணர்ந்துகொண்டார்களானால் நலமாகும். இத்தகைய தேசீய வீரரைப் பற்றி காங்கிர பார்ப்பனப் பத்திரிகைகள் ஊமையன் கண்ட கனவுபோல் வாயடைத்திருக்கின்றன. இனி, இவர் வட்டமேசை மகாநாட்டிலிருந்து திரும்பும்போது இவருக்கு வேண்டிய மரியாதை யுடன் வரவேற்பு நடத்தவேண்டியது உண்மைத் தேசீய வீரர்களின் கடமையாகும். என்ன நடக்கிறதென்பதைப் பார்ப்போம். - புதுவை முரசு, 24. 8. 1931, ப. 13 75. மறந்து விடாதீர்கள் இப்போதுதானே தீர்மானம் ஆயிற்று. சுயமரியாதைச் சங்கத்தைப் பதிவு செய்தலை இன்னும் சிறிது காலம் பொறுத்துப் பார்த்துக் கொள்ளலாம் என்று! சும்மா இருக்க வேண்டாம்; தலைவர் கட்குச் சொல்லுகிறேன்; உடனே வேலையைத் துவக்குங்கள், மூன்றாண்டுக்கு முன்னரே செய்திருக்க வேண்டிய வேலையை இன்று செய்வதில் தாமதம் இருக்கலாகாது. சுயமரியாதைச் சங்கத்தைப் பதிவு செய்யாத ஒவ்வொரு நிமிஷத்திலும் சுயமரியாதைக் கட்சி தனது முற் போக்கை இழந்து கொண்டு வருகிறது. மானமுள்ள தலைவர்கள் தம்மை விட்டுப் பிரிந்த ஆடையை அவசரமாக இழுத்துப் போர்த்தும் அளவு சங்கத்தைப் பதிவு செய்தலிலும் சுறுசுறுப்புக் கொள்ளவேண்டும். அதற்கான சட்டங்கள் எழுதியாயிற்றா? அமைப்பு முறைகளில் உங்கள் எண்ணம் ஓடுகிறதா? அதைவிட வேறு பிரதான விஷயம் இருப்பதாக நினைக்கிறீர்களா? பிரதான விஷயம் என்பதெல்லாம் சங்கத்தைப் பதிவு செய்தலில்தான் சித்தியாக முடியும். சிறிய நாய்கள் நம்மைப் பார்த்துக் குரைக்கின்றன என்றாலும் அச்சிறிய நாய்களும் குறைக்காமல் இருக்க வழி செய்தால் நல்லதுதானே, சுயமரியாதைக்கு உழைத்த இளவீரர்கள் களைப்படைந்து கொட்டாவி விடுவதை நீக்கி அவர்களைச் சுறுக்கிட்டு எழும்படி செய்ய நாம் இயல்பாகச் செய்ய வேண்டிய காரியத்தைச் செய்யாதிருக்கிறோம். அதுசங்கத்தைப் பதிவு செய்யாதிருத்தலேயாகும் இத்தனை நாள் சுயமரியாதை வீரர்கள் மலையை உடைத்துப் பொடியாக்கினார்கள். அதனால் ஏற்பட்ட சம பூமியை அளந்துகட்டி, அவர்களுக்குச் சிறு சிறு பூமியை அளந்து கட்டி, அவர்களுக்குச் சிறு சிறு பூமியை ஒதுக்கிச் சீர் பண்ணும் பொறுப்பை அவரவர்களிடம் கொடுப்பதில் நமக்கென்ன ஆக்ஷேபமிருக்க முடியும்? சுயமரியாதை பரவிய ஒவ்வோரிடத்திலும் கிளைச் சங்கம் உண்டாக்கு வதால் அவ்வவ்விடத்தில் பொறுப்புள்ள தலைவர்களை நாம் ஏற்படுத்தலாம். போட்டியோடு காரியம் நடைபெறும். வீட்டுக்கடங்காத பிள்ளையிடம் குடித்தனப் பொறுப்பைச் சுமத்தி அடங்கப்பண்ணும் அறிவுள்ள தந்தைபோல் அவ்வவ்விடத்தில் சங்க நிர்வாகத்தைக் கட்டிக் காக்க வைப்பதன் மூலம் சுயமரியாதை வீரர்களை ஒற்றுமைப்படுத்த முடியும். கோடிட்ட இடத்தில் அஸ்திவாரமிடுவதற்கும் அங்குக் கோட்டை கட்டுவதற்கும் வீரரைச் சேர்ப்பதற்கும் தாமதிக்கும் அரசர்களை நாம் என்ன வென்று சொல்லுவது? தலைவர்களே, ஓடுங்கள், பதிவு செய்ய ஓடுங்கள்! உலகு பெயர்ந்து வரினும் தனிநின்று எதிர்த்துப் போராடத்தக்க ஒரு இராமசாமியையும், கொந்தளிப் புலகையும் கையமர்த்தத்தக்க தகைமையும், ஆற்றலும் அமைந்த ஓர் ஷண்முகத்தையும் அறிவிலே தெளிவும் நெஞ்சிலேயுறுதியும், அகத்திலே அன்பினோர் வெள்ளமும் உடைய ஓர் இராமநாத இளஞ்சிங்கத்தையும், சுயமரியாதை யொன்றாலேயே நாடு முன்னேற்றம் அடையும் என்று அல்லும் பகலும் நினைந்துழைக்கும் ஒரு சௌந்தரபாண்டியனையும், தலைதூக்கும் ஆஸ்திகப் பேய்கட்கு உலை மூட்டும் ஒரு கைவல்யத்தையும் உரைநடை வீரனாம் ஓர் குருசாமித் தோன்றலையும், இதம்பல்க எழுதும் ஒர் சிதம்பரனாரையும், மின்னும்சொன்மழைப் பொன்னம்பலனாரையும் அடடா இன்னோரன்ன பன்னூறு பெரியார்களையும், ஆசிரியர்களை யும், வீரப் பெண்மக்களையும் கொண்டிருக்கப் பெற்ற சுயமரியாதை இயக்கமானது தனக்கோர் ஒழுங்கு முறையையும் ஏற்படுத்திக் கொள்ள வில்லை யென்றால் பெருச்சாளியைக் கும்பிடும் ஆஸ்திகப் பையன் நம்மைக் கேலி பண்ண மாட்டானா என்று தான் கேட்கிறேன். இரண்டொரு பத்திரிகைகள் நமது இயக்கத்துக்கு இருந்தால் போதுமாம். நமது இயக்க சம்பந்தமாகப் பிரசுரங்கள் அதிகம் வேண்டாமாம். இது ஒரு பணத் தொண்டாரடிப் பொடியாழ்வார் கருத்து. ஒர் உதாரணமாக இந்த ஆபாசத்தை வெளியிட்டேன். இப்படிப்பட்ட குறுகிய புத்திகள் எல்லாம் தீர்ந்து உயர்ந்த எண்ணங்கள், பிறரை உயர்வுபடுத்தித் தானும் உயர்ந்து இயக்கத்தையும் வளர்க்கும் சிரத்தை ஆகிய நலன்கள் எல்லாம் உண்டாக வேண்டுமானால், சங்கம் பதிவாகவேண்டும். நல்ல சட்டங்கள் தேவை, ஒழுங்கு முறை உயிரினும் முக்கியம். சு.ம. வீரன் - புதுவை முரசு, 24. 8. 1931, ப. 17 - 18 76. ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தில்! ஓர் பிரசுரம் கிடைத்தது. அதன்தலைப்பு பகவான் அரவிந்தர் என்பது. பிறகு ஸ்ரீ சுத்தாநந்த பாரதியார் பாடியது என்று இருந்தது. அதன்பிறகு பத்து அடிகள் கொண்ட ஓர் பாட்டு, அதன் பின் நாலைந்து வரிகள் கொண்ட குறிப்புரை. கையொப்பமும் அச்சுக்கூடப் பெயரும் காணப்படவில்லை. ஸ்ரீ சுத்தாநந்தபாரதி ஸ்ரீ அரவிந்தாஸ்ரமத்தில் இருந்து வருகிறார். கையொப்பக்காரரே சுத்தாநந்த பாரதியாயின் அவர் தாமே தம்மை ஸ்ரீ சுத்தாநந்த பாரதியார் என்று உயர்வுசெய்து கொண்டார். எவ்விதமேனும் ஆகுக! இங்கு, ஸ்ரீ அரவிந்தரைப் பகவான் அரவிந்தர் என்று குறித்தது பற்றித்தான் பேச்சு, இது சுத்தாநந்த பாரதியின் கருத்துப் போலும். இது மாத்திரமல்ல; அவர் அரவிந்தரைப் பாடிய பத்து அடிகளால் அரவிந்தரைக் கடவுள் என்றே குறிக்கிறார். இதை அரவிந்தர் ஒப்பமாட்டார். தம்மைச் சுத்தாநந்த பாரதி பகவான் என்று குறித்ததிலிருந்து தம்மீது சுத்தாநந்த பாரதி அளவு கடந்த பக்தி செலுத்துவதாயும் அரவிந்தர் கருதமாட்டார். இதைக், கோஷ் அவர்களிடம் அநேக ஆண்டுகள் சகவாஸம் பண்ணியதிலிருந்தே நான் கூறுகிறேன். கோஷ் மனிதத் தன்மை மிகுத்த மனிதர். மனிதர்க்கு மனிதத் தன்மையை உண்டு பண்ணவே அவர் தம்மிடமுள்ள மனிதத் தன்மையை விருத்தி செய்து காட்டியவர். மனிதத் தன்மை என்பதி லுள்ள அறிவு உண்மை தியாக புத்தி முதலியவைகளை இந்நாட்டு மனிதர் அடைய வேண்டும் என்பதில் அவர் அநவரதம் சிரத்தை யுடையவர். இப்படிப்பட்ட ஒருவர், அறிவு ஆற்றல் தியாக புத்தி முதலிய மனிதத் தன்மையைப் பகவானிடம் தான் எதிர்பார்க்க முடியும் என்ற கருத் தோடு, அறிஞர் அரவிந்தரைப் பகவான் அரவிந்தர் என்ற சுத்தாந்த பாரதி யின் வார்த்தையை ஒப்புவாரா? சகிப்பாரா? ஆனால் இப்போது சுமார் 10 ஆண்டுகளாகத் தம்மை மறைத்துக் கொண்ட புதிய அரவிந்தர் இதை ஒப்புகிறார் என்றால் அந்த விஷயம் எனக்குத் தெரியாது. அறிஞர் அரவிந்தரைப் பகவான் அரவிந்தர் என்றதால் பொது மக்களுக்குத் தான் ஏதேனும் நன்மையுண்டா? பொதுமக்களின் பகுத்தறிவு மண்ணாக்கப்படுவதுதான் கண்ட பலன். மனிதனை மனிதனென்றே கூறுவது யோக்கியமாகும். மனிதனிடமுள்ள அறிவு ஆண்மை அனைத்தையும் மனிதத் தன்மை என்று கூறுவதில் உண்மை யுண்டு. அப்படிக் கூறுவதால் மனிதர்க்கு மனிதத் தன்மையை உண்டாகிக் கொள்ளலாம் என்பதில் ஒர் நம்பிக்கை ஏற்படும். ஆர்வங் கிளம்பும் அன்றியும் மனிதத்தன்மை மிக்க ஓர் மனிதனைப் போய், மனிதர் சாதியிற் சேராத விவாதத்துக்குரிய பகவான் என்பதால் அந்த மனிதத்தன்மை மிகுந்த மனிதனைத் தந்த மனிதச் சாதியிடம் நன்றி பாராட்டியதாகுமா? நல்லது செய்த தொழிலாளியை முதலாளி யென்று உயர்த்துச் சொல்லுவதால் தொழிலுலகம் வருந்தாதே? ஆகக்கூடி மனிதனைக் கடவுள் என்பது கலப்பற்ற பொய்தானே? மனிதனிடம் அறிவு ஆண்மைகளைக் கண்டவுடன் அந்த மனிதனை, மனிதனுக்கு மேலே இருப்பதாகக் கருதும் கடவுளாகச் சொல்லும் ஒருவன், அம் மனிதன் தவறு இழைத்தபோது கடவுளையும் மனிதனளவு, குள்ளனாக்குகின்றான். சுத்தாநந்த பாரதியின் அபிப்பிராயப்படி அறிவு ஆற்றல்களில் மிக்கவர் பகவானாய் விடுவதாகவே வைத்துக் கொள்ளுவோம். ஏழை மக்கள் சாதாரணமாகப் பகவானிடம் எதிர்பார்க்கும் பெரும் பயன்களை அரவிந்தரிடம் எதிர்பார்த்துக் கிடைக்காமல் ஏமாந்து போவார்களே! அந்தோ! ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்றபடி ஞானத்தை ஒப்பியதன்றித் தமது சொந்த உழைப்பில் நம்பிக்கை வைக்காததாலன்றோ நாடு இன்றைய கேவல நிலையை அடைந்தது. உயர்குணம், உயர்நடை, உயர் அறிவு அமைந்த ஓர்மனிதனை உயர்வு படுத்துவதில் பொதுமக்களுக்கு நலமே ஏற்படும்! உண்மையே! உயர்வுபடுத்துகையில் உண்மையை ஆதாரமாகக் கொண்டே அவ்வாறு செய்தல் வேண்டும். நம்மவர்களிடம் இந்த அரிய குணம் இல்லாதது வருந்தத்தக்கது. சோலை, தடாகம், மயில், குயில், மலை, ஆறுவானம், பக்ஷிகள் மிருகங்கள், இவைகளை உயர்வுபடுத்த எண்ணி, கடவுட்சோலை, அல்லது தெய்விகத் தடாகம், என்றும், அது போல மனிதனை உயர்வுபடுத்த எண்ணிப் பகவான், கடவுள் என்றும் சொல்லிவிடுவதால் கவிதையுலகமே குறுகிவிடுகிறது. இப்படிக் கூறுவதால் பொது மக்களுக்குத் தான் என்ன பயன் ஏற்படும்? யோசிக்க! உண்மையில் சுத்தாநந்த பாரதி நினைக்கும் அசல் பகவான் நடுத் தெருவில் வந்து நின்றாலும், அந்த ஸக்தியுள்ள பகவானையும் மனித னென்றே மக்களிடம் காட்டுவதாலாவது மனிதன் தனது மனித ஸக்தியில் நம்பிக்கை கொள்வான். அன்றி, அரவிந்தர் தம்மைக் கடவுள் என்று புரட்டுப் பேசத் தென்னாட்டுப் பார்ப்பனரை விசேஷ அழைப்புக் கடிதத்தின் மூலம் அழைத்துள்ளாரா? அவ்வாறாயின் சுத்தாநந்த பாரதி யின் பகவான் அரவிந்தரைப் பற்றிய ஆராய்ச்சியை நான் விரிவுபடுத்துவது அநாவசியம். இனியும் தென்னாட்டுப் பார்ப்பனர் கட்டப் போகும் கதையில் அரவிந்தர், பகவான் அரவிந்தர், கோவில் அரவிந்தர், வினை தீர்க்கும் அரவிந்தர், மக்களிடம் அர்ச்சனை கேட்கும் அரவிந்தர், பார்ப்பனத் தரகரையுடைய அரவிந்தர், இவ்வரிசையில் நீளச்சென்று முடியும் இந்த அத்தியாயம் நமக்குத் தெரிந்ததுதான். பழய அரவிந்தர் அன்பன் - புதுவை முரசு, 31. 8. 1931, ப. 18 - 19 77. தமிழரசின் தறுதலைத்தனம் தமிழரசின் சொந்தக் கொள்கை இன்னதென்றே புரிவதில்லை. ஒருவனை உன் தகப்பன் பேர் என்னவென்று கேட்டால் அவனுக்குப் பல தகப்பன் இருந்த காரணத்தால் அவன் உளறிக் கொட்டக்கூடும். அந்த உளறுதலிலும் ஒருவாறு இன்னான்தான் தகப்பன் என்றாவது நிச்சயிக்க முடியும். தமிழரசினிடம் அதுவும் முடியாது. தமிழரசுக்குக் கொள்கை என்ன? ஒன்றல்ல; பல என்றுதான் அது பதில் கூறக்கூடும். பல துளிப் பத்திரிகையே தமிழரசு போலும். தான் ஆசிரியர் சுயமரியாதைக்காரர் என்று அதுசொல்லும். அதில் எழுதும் மற்றும் சில காலிகளும் அப்படியே சொல்லிக் கொள்வ துண்டு. வீணாய் வருவார் போவாரைப் பேதமின்றிக் காலைக் கடிக்கும் வெறி நாய் போல் அது சுயமரியாதையைத் திட்டுவது வழக்கம். சு. ம. தலைவரைத் திட்டுவது வழக்கம். இதுவுமன்றித் தேசீயம் என்றும் காங்கிரஸ் என்றும் தேசீயத்தையும் சுயமரியாதையையும் ஆதரிப்ப தாகவும் சொல்லும். தமிழரசு என்று பேர் வைத்துக் கொள்ளும். தமிழிற்கு ஏதாவது மிச்சமீதி அழகு இருந்தால் அதையும் வசைப் பாட்டின் மூலம் குலைக்கும். எதையும் ஆதரிப்பது போலவும் தோன்றும். எதையும் அவதூறு செய்யவும் பின்னிடையாது. ஆனால் உற்று நோக்கினால், எவரெவர் சந்தர்ப்பா சந்தர்ப்பத்தை யும் கருதாது பிச்சைக்காரன் வயிற்றைப் பிசைந்துகொண்டு லச்சை கொடுப்பதுபோல எவ்வெவ்வியக்கத்தினரிடமும் தனது நலத்தை லாயக்கென்பது சிறிதேனுமில்லாவிட்டாலும் - தனது நலத்தை - எண்ணி எண்ணி இடர்ப்பட்டு - இல்லை என்பாரிடம் பொறாமைப் பட்டுப் பெரியதொரு பாறாங்கல்லில் முட்டிக்கொள்ளும். தனது புத்தி, போக்கிரித்தனம் இவைகளுக்கு ஒத்துவரும் ஆசாமிகள் எந்த மூலையில் இருந்தாலும் அவர்கள் அடியில் வீழ்ந்து அவர்களால் தனது புத்திப் போக்குக்கு ஆதரவு தேடும். எப்படி எப்படியோ பார்க்கிறது தமிழ் நாட்டைப் படுகுழியில் தள்ளுவதற்கு இசைவுதான் ஒட்டவில்லை. ஈ.வெ. இராமசாமி ஒழிந்தால் தமிழ் நாட்டில் தலை நீட்டலாம் என்று கடைசியாய் ஒரு திட்டம் போட்டிருப்பதாய்த் தெரிகிறது. அதுதான் இன்னும் நடக்கவில்லை. அயோக்கியர் கொட்டம் தமிழ் நாட்டில் அடங்கும் வரைக்கும் தோழர் இராமசாமி செத்துப்போவார் என்றும் அதற்குப் புலப்படவில்லை. அவர் உயிரோடு இருப்பதால் அவருக்குள்ள கீர்த்தியையாவது தொலைக்க வாய்திறந்து கொட்டாவி விடுகிறது. ஐயோ பாவம்! முட்டாள் பத்திரிகைக்கு நான் என்ன எடுத்துரைக்க முடியும்? தமிழரசே! நீ எவ்வளவு? யாரையாவது எவ்வியக்கத்தையாவது நீ நிலையாகப் பற்றிக்கொள். கடைத்தேறு! குரைப்பதை விடு! உருப்படச் சொல்லுகிறேன். நாய் குலைத்து நத்தம் பாழாகிவிடுமா? அல்லது வீணாக ஒருவரைத் திட்ட எண்ணும் உன்னைப் பதிலுக்குத் திட்டினால் உனக்குத் தெரியுமா? சுருதியோடு கலந்து அழவாவது. சுயமரியாதைக்காரன் - புதுவை முரசு, 14. 9. 1931, ப. 8 78. கோவில்களை இடிக்கலாமா? ரஷியா தேசத்தில் தலைநகராகிய மாஸ்கோ நகரிலே வெகு நாளா யிருந்து வரும் ஒரு பெரிய மாதாகோவிலை மண்ணோடு மண்ணாக இடித்துத் தகர்த்துவிடச் சோவியத் சர்க்கார் உத்தரவு பிறப்பித் திருக்கிறார்கள். அதற்குப் பதிலாக அந்த இடத்தில் சர்க்கார் காரியா லயத்தைக் கட்டவேண்டுமென்றும் முடிவு செய்திருக்கிறார்கள் என்று லண்டன் டைம்ஸ் பத்திரிகையில் அதன் நிருபர் எழுதியிருக்கிறார். ரஷியாவில் இதே மாதிரியான பல நிகழ்ச்சிகள் அடிக்கடி நடந்து வருவதைப் பத்திரிகைகள் மூலம் நாம் பார்த்துவருவதோடு, நேரில் போய்வந்தவர்களும் சொல்லக் கேட்டுக்கொண்டிருக்கிறோம். மதம் மக்களுக்கு அபின் என்ற கொள்கையை அடிப் படையாகக் கொண்ட ரஷியர்கள், தங்கள் லட்சியத்தை எந்தெந்த முறைகளில் நிறைவேற்றி வருகிறார்கள் என்பதை வாசகர்கள் அறிய வேண்டியது அவசியமாகும். சிறு பிள்ளைகளுக்கு 100க்கு 5 பேருக்குமேல் மதக்கல்வி கற்றுக் கொடுக்கக் கூடாதென்று சட்டம் செய்திருக்கிறார்கள். மதச் சின்ன மாகிய சிலுவையை எடுத்தெறிந்துவிட்டார்கள். மதத்திலுள்ள பொய் புரட்டு முதலியவைகளைச் சிறுவயதிலிருந்தே மக்களுக்குப் போதித்து வருகிறார்கள். இன்னும் மதசம்பந்தமான உற்சவம் முதலிய விழாக்களைச் சட்டமூலமாய்த் தடுத்துவிட்டார்கள். வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் ஓய்வு நாளாயிருப்பது மதத்தை ஒட்டியேற்படுத்தப் பட்டிருப் பதால், வாரத்தில் ஒவ்வொரு நாள் முறையே விடுமுறை நாளாக விதித் திருக்கிறார்கள், இன்னும் படக் காட்சிகள் மூலமாகவும், நாடகங்கள் மூலமாகவும், விளையாட்டுகள் மூலமாகவும், பத்திரிகைகள் மூலமாகவும், பிரசங்கங்கள் மூலமாகவும் மதத்தை ஒழிக்கவேண்டிய அவசியத்தை வற்புறுத்தியும், மதத்திலுள்ள ஆபாசங்களை மக்களுக்கு வெளிப்படுத்தியும் பிரசாரம் செய்து வருகிறார்கள். இத்துடன் மதக்கோவில்களை (சர்ச்சுகளை) பள்ளிக்கூடங் களாகவும், தொழிற் சாலைகளாகவும் செய்துவிட்டார்கள். இவை யிரண்டுக்கும் பயன்படாமலிருக்கும் கோவில்களைத் தானியம் கொட்டி வைப்பதற்காக உபயோகப்படுத்தி வருகிறார்கள். ஆனால் சமீபத்தில் கிடைத்திருக்கும் மேற்கண்ட செய்திப்படி ஒரு கோவிலை இடித்து விடப்போவதாகவும் அறிகிறோம். ரஷியர்கள் இதைப் போன்ற இன்னும் பல வழிகளில் மதமொழிப்புப் பிரசாரம் செய்துவரும் விஷயமானது, எவ்வளவோ தடைகளுக்கிடையில் கொஞ்சம் கொஞ்சமாகவாவது நமது காதுகளுக்கு எட்டிக் கொண்டேயிருக்கிறது. இனி ரஷியர்கள் இவ்வாறு மதவிரோதிகளாயிருப்பதற்குக் காரணமென்ன வென்பதைப்பற்றிச் சிறிது கவனிப்போம். அவர்களுக்கு ஏதாவது வெறியா? அல்லது ரஷியர்கள் எல்லோரும் மூடர்களா? என்று வைதீகர்கள் சந்தேகப்படுவார்கள். அவர்கள் இவ்விரண்டு மல்ல வென்பதற்கு, அவர்கள் பெயரை உச்சரிப்பதற்கே சர்வ தேச சங்கங்களும் பயந்து நடுங்குவதைப் பார்த்தால் விளங்கும். இனி அவர்கள் ஏன் இப்படிப் பிடிவாதமான மத விரோதிகளாக இருக்கவேண்டுமென்றால் கிறீஸ்துமதத்தின் பேரால் கத்தோலிக்கர் என்றும் ப்ராட்டஸ்டெண்டு என்றும் சொல்லிக் கொண்டு உயிரை விட்டவர்கள் பல்லாயிரவர் என்பதை நன்குணர்ந்தார்கள், ஐரோப்பிய தேசத்தில் நடந்த யுத்தங்களில் 100க்கு 90 மதவெறியினாலேயே நடந் திருக்கிறதென்பதையும் உணர்ந்தவர்கள். அதனால்தான் இத்தகைய ஒரு மதம் அழிந்து மண்ணோடு மண்ணாய்ப் போனாலொழிய, மக்கள் ஒற்றுமையுடனும் சந்தோஷத்துடனும் வாழமுடியாது என்ற உண்மையைக் கண்டுபிடித்தார்கள். அதை நடைமுறையிலும் கொண்டுவந்து விட்டார்கள். இனி, கடவுள் நம்பிக்கைப் பற்றி ரஷியா தேசமானது பெரும் பாலும் நாஸ்திக மயமாகவே இருக்கவேண்டிய அவசியம் என்ன வென்று சிலர் கேட்கலாம். கடவுள் என்பது ஒரு காற்றாடி; மதம் என்பதுதான் அக் காற்றாடியில் பிணைந்திருக்கும் கயிறு. கயிற்றை அறுத்ததும் காற்றாடி யின் கதி அதோ கதிதான். ஆகவே மதத்தை அழிக்க ஆரம்பித்ததும் அதனுடைய முடிவாகிய கடவுளும் தானே அழிய ஆரம்பித்து விடுகிறது. அதுமாத்திரமல்ல. கடவுள் நம்பிக்கையானது தன்னம் பிக்கையையும், தன் முயற்சிகளையும் தடைப்படுத்துகிறது. ஒன்றும் செய்யமுடியாதவன் தலைவிதி என்று சொல்லி விடுகிறான். அல்லது கடவுள் செயல் என்று சொல்லிவிடுகிறான் ஆகவே பலஹீனனுக்கும், தைரியமற்றவனுக்கும், தன்னம்பிக்கை யற்றவனுக்கும் இக் கடவுள் என்ற ஒரு அர்த்தமற்ற சொல்லானது ஒரு தக்க ஊன்றுகோலாகிவிடுகிறது. இக் கருத்தைக்கொண்டுதான் இரஷியர்கள் கடவுள் நம்பிக் கையையும் எதிர்த்துப் போராடுகிறார்கள். அதாவது தங்களை முழுநாஸ்திகர்கள் என்றே சொல்லிக் கொள்ளுகிறார்கள். ஆகவே தமிழ்நாட்டில் தோன்றியிருக்கும் நமது சுயமரியாதை இயக்கமும் இதே கொள்கைகளைக் கொண்டதுதான். ஆனால் மதத்தைவிட ஆபாசமான சமூக விஷயங்களும், வழக்கங்களும் நம் நாட்டில் மிகவும் அதிகமாயிருப்பதால்தான் மதத்தை அழிக்க வேண்டிய முயற்சியில் நமது இயக்கம் இன்னும் போதிய முயற்சி எடுத்துக்கொள்ளவில்லை. ஒருபுறம் வைதீகக் கூட்டத்தாரோடும், ஒருபுறம் படித்த முட்டாள்களோடும், ஒருபுறம் தேசபக்தப் புரட்டர் களோடும் இப்படிப் பல சில்லரை விஷயங்களில் நமது கவனம் செலுத்தப் படவேண்டிய அவசியத்தால்தான் மதங்களைச் சீக்கிரம் அழிக்க வேண்டிய முயற்சியில் நாம் தீவிரமாய் ஈடுபட முடியாம லிருக்கிறது. ஆனாலும் நமது இலட்சியம் மாத்திரம் இதுவரையில் இரசசிய மாக வைக்கப்படவில்லை. சுருக்கமாகக் கூற வேண்டுமானால் ரஷியாவைப்போலவே நம்நாட்டிலும் உள்ள ஹிந்துக்கோவில்கள், மகம்மதிய மசூதிகள், கிறீஸ்துவ சர்ச்சுகள் முதலான எல்லா மதக் கட்டடங்களும் தொழிற் சாலைகளாகவாவது, ஆஸ்பத்திரிகளாக வாவது ஆக்கப்பட வேண்டும். எல்லாவித மதப் புத்தகங்களையும் சட்டங்கள் மூலமாய்த் தடுக்கவேண்டும். அதுவரையில் இலட்சம் மகாத்மாக்கள் தோன்றினாலும் சரி, ஆயிரம் சீர்திருத்தங்கள் வந்தாலும் சரி, நம் நாடோ உலகமோ ஒற்றுமைப்பட முடியவே முடியாது என்பதை முக்காலும் சொல்லு வோம். - புதுவை முரசு, 14. 9. 1931, ப. 12 - 13 79. கதரா? தூக்குக் கயிறா? காங்கிர பிரசங்கி சொல்லுகிறார்: இந்திய க்களான உங்கள் பேரால் அளவற்ற கோடி ரூபாய்கள் கடன் வாங்கப்படுகிறது. வரி வகையிலோ நீங்கள் மிகத்தொல்லை அடைந்து வருகிறீர்கள். நீங்களோ எல்லா விஷயத்திற்கும் அந்நியநாட்டான் கையையே எதிர்பார்க்கும் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறீர்கள். அமெரிக்கர் இங்கிலாந்துக்காரர் முதலியவர்களின் நாள் வரும்படி 2 ரூபாயாக இருக்க, நீங்கள் சராசரி நாள் ஒன்றுக்கு 2 அணா அடைகிறீர்கள். இவை முதலிய ஆயிரங்கோடிக் காரணங்களால் நமக்குச் சுயராச்சியம் அவசியமாகும். சுயராச்சியம் வந்துவிட்டால்! வந்துவிட்டால் என்பதென்ன? இதோ வந்துவிடப்போகிறது. அதன்பின், அதாவது உடனே நீங்கள் மிக்க சந்தோஷ வாழ்க்கை நடத்த முடியும். அதாவது ராமராஜ்யத்தில் மக்கள் எவ்வளவு அனுபவித்தார்களோ அதுபோல நீங்கள் சுகமாக இருப்பீர்கள். காங்கிர திட்டத்தை நீங்கள் நிறை வேற்றி வைக்கவேண்டும். நீங்கள் கதர்நூல் நூற்க வேண்டும். கதர் உடை உடுத்தவேண்டும். காங்கிர பிரசங்கம் கேட்ட ஏழை மக்கள் நினைக் கிறார்கள். நன்றாய்த் தெரிகிறது. காந்தி நமக்காகத்தான் மிக்க பாடுபடுகிறார். எப்படியாவது சுயராஜ்யம் வாங்கிக் கொடுப்பார். அடடா என்ன சந்தோஷமாகக் காலம் கழிக்கலாம். அப்படியானால் இனிமேல் காலையில் நமக்கு முட்டை ஊற்றிய ஆப்பந்தான்! குறைந்தது எக்கேடு கெட்டாலும் குண்டு சட்டி நிறையவாவது பணம் மிச்சமிருக்கும். காலையில் எழுந்தால் வயிற்றுக்கு வழிதேட வேண்டுமே என்ற ஏக்கம் தொலைந்தது! தீர்ந்தது தொல்லை. காங்கிர பிரசங்கியை ஒருவன் எழுந்து கேள்வி கேட்கிறான்:- ஆம் ஐயா! கதர் நூல் நூற்கும்படி அனைவர்க்கும் கட்டளை யிடுகிறீர்கள். அது பணக்காரருக்கு ஏற்ற வேலையாய் இருக்கலாம். அவர்கட்குச் சந்தர்ப்பம் இடம் கொடுக்கும். ஏழைகட்குக் கதர் நூற்பதால் அற்ப வருவாய்தானே கிடைக்கும். அதற்குக் காங்கிரவாலா பதில் சொல்லுகிறார்: மிகவும் கஷ்டப்படும் நமது பாரத ஏழை மக்களுக்குத் தினம் தினம் கதர்நூல் நூற்பதன் மூலம் 2 அணா கிடைத்தால் நலமல்லவா? இதைக்கேட்டு ஏழை மக்கள் சொல்லுகிறார்கள்: அட, காமாட்டிப் பையா! இரண்டணாத்தானா? சுயராஜ்யம் வரும் வரைக்கும் நீ அந்த இரண்டணாவுக்கு நூல் நூற்றுக் கொண்டிரு! அதுவரைக்கும் நாங்கள், உன் போன்றோர் பங்களாவில் உட்கார்ந்து கொண்டு காலையில் தட்டுத் தட்டாய்ப் பலகாரம், செம்பு செம்பாய்க் காப்பி. 10 மணி நாத்தா. 12 மணிச் சாப்பாடு. 4 மணி நாத்தா. 8 மணிச் சாப்பாடு முதலியவைகள் அனுபவிக்கிறோமே! நாங்கள் காலை முதல் நூல் நூற்று 2 அணாச் சம்பாதிக்க உடன்பட்டால் நீ சுயராஜ்யம் வாங்கி வருகிறாயோ! நீ சீமைக்குப் போய் படித்துவிட்டு வந்துவிடுகிறாய். சர்க்காருக்கு மனுப்போடுகிறாய். சர்க்கார் 200 ரூபாய் சம்பளம் கொடுப்பதாய்ச் சொல்லுகிறார்கள் 700 ரூபாய்க்குக் குறைந்தால் வேண்டாம் என்று சர்க்காரிடம் கோபித்துக் கதர்ப்பிரசாரம் ஆரம்பித்து விடுகிறாய். அந்தப் பிரசாரத்தில் எங்களை 2 அணாச் சம்பாதிக்க நட்டதலை நட்டபடி நாளெல்லாம் நூல் நூற்கச் சொல்லுகிறாயே! என்ன யோக்கியம்! எம்மைக் கதர் நூல் நூற்கச் சொல்லுகிறாயா! தூக்குக்குத் தாம்பு திரிக்கச் சொல்லுகிறாயா? கிண்டற்காரன், - புதுவை முரசு, 21. 9. 1931, ப. 3 80. லிங்கங்கட்டி விகடச்சக்கரம் விகடச் சக்கரம் என்ற வயிற்றுப் பிழைப்பு நோட்டீசை வெளி யிட்டு வரும் ஓய் வீர சைவ ஆசிரியரே! நீர் சுயமரியாதை இயக்கத்தைத் தூற்றி அதனால் கொஞ்சம் உமது நோட்டீசுகளை விற்று வயிறு கழுவுவதில் எனக்குச் சந்தோஷந்தான்! ஆனால் சுயமரியாதைக் கொள்கைகளைக் கண்டிப்பதை விட்டு விட்டு, ஏதேதோ வசை மொழி கூறித் திரிகிறீரே, அதுதான் உமது புத்தி சூன்யத்தைக் காண்பிக்கிறது. விகடம் என்றால் கண்டதெல்லாம் செய்யலாம், எழுதலாம் என்று நினைப்பது மதியீனமாகும். விகடத்திலும் அறிவோடு கூடிய விகடம் என்று ஒன்று இருப்பதே உமக்குத் தெரியாது போல் தோன்றுகிறது. விகடத்திற்காகவும் பிறருக்குச் சிரிப்பு உண்டாக்குவதற்காகவும் நீர் உமது பரமசிவத்தைப்போல் தெருவில் போனால் பிறர் கல்லால் எறிவார்கள். வாய்நீரை உம்மீது அபிஷேகம் செய்வார்கள். அதே போல் விகடத்திற்காக நீர் மனிதர் சாப்பிடாத ஒன்றைச் சாப்பிட்டால் அது உமது மதியீனத்தைத்தான் குறிக்குமேயொழிய உமது விகட சாதுர்யத்தைக் குறிக்காது, முரசு என்ற பெயர் இருப்பதற்காக அதன் ஆசிரியரைப் பறையனென்று அழைக்கிறீர். அதில் அப்பத்திரிகைக்கோ அதன் ஆசிரியருக்கோ, எவ்வித அவமானமும் கிடையாது. அது ஒரு யோக்கியமான தொழில் என்றே அதன் ஆசிரியர் கருதியிருக்கிறார். ஆனால் உம் கழுத்தில் தொங்கவிட்டிருக்கும் லிங்கம் என்ன வென்பது உமக்குத் தெரியாதே! மி மேயோ புத்தகத்தைப் புரட்டிப் பாரும். இல்லாட்டால் சிசுனதேவர் என்றால் என்ன அர்த்தம் என்பதை அகராதியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளும். அதிலும் விளங்காவிட்டால் லிங்க புராணத்தைப் புரட்டிப் பாரும். இவ்வளவு ஆபாசமான ஒரு சாமானைக் கழுத்தில் கட்டிக்கொண்டு வெட்க மின்றித் திரியும் உமக்கு விகடம் வேறு வேண்டியிருக்கிறது! மி மேயோ புத்தகம் எழுதுவதற்கு முந்தி உம்மைப் பார்த்திருந்தால் அவருடைய புத்தகத்தில் உமது போட்டோ படமாவது வந்திருக்கும், அந்தப் பாக்கியத்தையும் இழந்துவிட்டீர். வௌவால் ஜாதியாகிய நீர் சுயமரியாதை இயக்கத்தைப் பழிப்பது, நீரே மல்லாந்து படுத்து கொண்டு எச்சிலைத் துப்புவது போலிருக்கிறது. மரியாதையாக, உம் கழுத்தில் கட்டியிருக்கும் ஆண் குறியும் பெண்குறியும் கலந்த சின்னத்தை எடுத்துவிட்டு உமது நோட்டீசை வெளியிட்டுக் கொண்டிரும், இனி அடுத்தவாரம் முதல் உமது ஜாதியின் விருத்தாந்தம், அது ஏற்பட்ட விதம், நீர் கழுத்தில் கட்டி யிருக்கும் நரம்புக் கயிறு, அதில் தொங்கவிட்டிருக்கும் லிங்கம் முதலியவைகளின் விவரத்தை ஆராய்கிறேன். அதையும் படித்துப் பாரும் ஆசிரியரே! வணக்கம்! அடுத்த வாரம் சந்திப்போம். அடுத்த வீட்டுக்காரன் - புதுவை முரசு, 28. 9. 1931, ப. 16 81. தமிழரசில் குடியர்கள் தமிழரசில் திரு. ஈ.வெ. இராமசாமியவர்களைப் பற்றிப் பல வாறாகப் பொய்க் கூற்றுகளும் அவதூறு மொழிகளும் வெளிவந்து கொண்டிருப்பதை வெகுநாளாய்ப் பார்த்துக்கொண்டு வருகிறேன். அந்த இயக்கத்திலுள்ள கொள்கைகளைக் கண்டிக்காமல் தனிப்பட்ட நபரையே, அதுவும் திரு. இராமசாமியையே அவதூறாக எழுதப் பட்டிருக்கிறது. தனிப்பட்ட நபர்களில் யாருக்கும் சில தவறுதல்கள் இருக்கலாம். அதைப்பற்றிப் பத்திரிகையில் எழுதிக் கொண்டிருப்பதால் பொது ஜனங்களுக்கு எந்தப் பலனும் ஏற்படாது. உதாரணமாக, நாம் தமிழரசின் கர்த்தா ஒரு போலி டாக்டர் (இமிடேஷன் டாக்டர்) என்றாவது ஒரு இமிடேஷன் முதலியார் என்றாவது, ஒரு குடிகாரர் என்றாவது எழுதுகிறோமா? அல்லது அதன் ஆசிரியராவது அபின் சாப்பிடுகிறார், குடிக்கிறார் என்று எழுதுகிறோமா? அதெல்லாம் எழுதுவது பிழையென்றுதானே கருதியிருக்கிறோம். அப்படியிருக்க திரு. மே. மாசிலாமணியும் அவருடைய பக்க வாத்தியக்காரரான அநாதி நடராஜனும் எப்போதும் திரு. இராமசாமி யின் முழங்காலிலேயே முட்டிக் கொள்வதின் கருத்தென்ன? ஒருவேளை மே. மா. வின் பணக் கொழுப்பாயிருந்தால், அதையடக்குவதென்பது எங்களுக்குக் கஷ்டமா? எங்களைப் பார்த்தும் எங்கள் தலைவரைப் பார்த்தும் குரைத்த நாய்கள் பல, அவைகள் பெயர்கூட ஞாபகமில்லாத படி அழிந்துவிட்டன, ஆகவே, தமிழரசும் நாயும் குரைத்துத் தீரட்டும். அதன் ஆசையும் தீர்ந்து போகட்டும். ஆனால் கடைசியாக, தமிழரசில் எழுதும் குடியர்களுக்கு ஓர் எச்சரிக்கை, நீங்களெல்லாம் எழுத்தில் வீசும் வீச்சு சுயமரியாதைக் காரனைக் கண்டதும் செத்த நாய் செருப்பைக் கடித்தது மாதிரிக் கிடக்கிறீர்களே! அது ஏன்? திரு. அய்யாமுத்துவே! பொறுமைக்கும் ஓர் அளவு உண்டு என்பதை இனியாவது உணர். இல்லையேல், குரைத்த வாய்க்கு எலும்புத்துண்டு போடக்கூட நாதியில்லாமல் போவாய் என்பதை அறிந்துகொள் ஏ! ராவணதாசே! நீ பிடித்திருக்கும் துரும்பை விட்டுப் புத்தியாய்ப் பிழை ஏ! மே, மா. வே! நீதான் புத்தியோடு எழுது. காலை வேளையில் உன் பேனாவைப்பிடி. ஏ! அநாதி நடராஜரே! உன் பழய வாழ்க்கையைக் கொஞ்சம் நிதான புத்தியோடு நினைத்துப்பார் உனக்கு ஞாபகமில்லாவிட்டால் நான் அடுத்தவாரத்தில் எழுதப்போகும் உனது வரலாற்றைப் படித்துப்பார். மறியல்காரன், - புதுவை முரசு, 28. 9. 1931, ப. 16 - 17 82. பால்ய விவாகக் கொடுமை பெற்றோர் தாம் அரிதிற் பெற்ற சிசுவைத் தீயிற் போட்டு வதைப்பதற்கு ஏதுவாக உள்ள மனோபாவமே, தமது வினவறியாப் பெண்ணை மற்றொருவனுக்கு விவாகம் செய்து கொடுக்க ஏதுவாகிறது. ஒரு தனி மனிதனுக்கு ஏகதேசம் ஏற்பட்டுவிடும் தீமைக்காகச் சமூகச் கட்டுப்பாடுகளையே திருத்தியமைக்க முயல்வதை நாம் அனுதினம் காண்கின்றோம். உதாரணம்: மோட்டார் கார் ஒரு மனிதன் மேல் ஏறிவிடுகிறது. அதன்பின் மோட்டார் விடுகின்ற முறை திருத்தப் படுகிறது. ஆனால், சிறு பெண்களை விவாகம் செய்து கொடுத்த காரணத்தால் பெரும் பெரும் தீமைகள் இன்றுவரை கணக்கற்ற விதமாக நடந்து வருவதைக் கண்டும் அக்கொடுமையினின்றும் மனித சமூகம் தப்பித்துக் கொள்ள வகை தேடாதிருப்பது ஆச்சரியமாகும். கதியற்றவர், கதி கதியென்று பிறரை அடைக்கலம் புகுவ தென்பது வினவறியாப் பிள்ளைகள் தமது பெற்றோரே கதியென்று கிடப்பதுதான். அடைக்கலமாக வந்தவர்களை அவர்களின் எதிரிகளிடம் காட்டிக் கொடுப்பதென்பது வினவறியாத பெண்களை வினவறிந்த காளையர்க்குக் கலியாணம் செய்து கொடுப்பதுதான். பசி மிகுந்தவனுக்கெதிரிலோ, அன்றிப் பசியே இல்லாதவன் எதிரிலோ வேகாத சாதத்தைப் படைப்பது போல் பெண்ணின்ப வேட்கை யுடையவனுக்கோ அன்றி, அந்த ருசி என்பதே வேண்டாத வனுக்கோ வயது வராத குழந்தைகளைக் கலியாணம் செய்து கொடுப்பது எதற்கு? எட்டு வயதிலும், பத்து வயதிலும் கலியாணம் செய்துகொண்ட தாய்மார்களையும், நமது தகப்பன்மார்களையும் அழைத்து எதிர் நிறுத்தி, நீங்கள் உண்மைக் கலியாணம் புரிந்த தேதி எது என்று கேட்டால், அவர்கள் பருவம் வந்தபின் முதல் முதல் கருத்தொருமித்து மஞ்சத்தையடைந்த தேதியைத்தான் கலியாண தேதியென்று குறிப்பிடக்கூடும். சிறு குழந்தைகட்குக் கலியாணம் செய்யவேண்டும் என்பதற்குக் காரணம் காட்ட வரும் சுயநலமுடையவர்கள் தமது உணவுக்குப் பொதுமக்களின் ஈரலைத் தின்னுவதற்கும் காரணம் காட்டக்கூடும். பால்யர்கட்கு ஐயர் மணச்சடங்கு முடிந்து அரிசி பருப்பு வாங்கிப் போவது நேற்று: மணவாளர் மணத்தின் பயனை அடைவது இன்னும் நாலாண்டுக்குப் பின் என்றால் ஐயர் அவசரத்துக்காகவே பால்ய மணமா? ஒரு பால்யை கணவனை இழந்தால், மறுமணம் செய்யும் நிலை இயற்கையாகி விட்டால் பெண் பிறந்த தினத்தலிருந்து தினந்தினம் அக்குழந்தைக்குக் கலியாண விளையாட்டு விளையாடுவதை யாரும் தடுக்கப் போவதில்லை. பணத்திமிர் என்று அதை நினைப்பதோடு சரி. ஓர் எலிக் குஞ்சுக்கு மனோதிடன் அதிகமிருக்கட்டும்; ஆயினும் அது தன்னினும் கம்பீரமான உருவமுடைய மற்றொன்றை ஜோலிக் கிழுக்க முடியாது. கம்பீரச் செயல்களை, கம்பீர எண்ணங்களை அரோக திடகாத்திரமுள்ள மக்களிடமே எதிர்பார்க்க முடியும். அத்தனை பிள்ளைகள் நமது தேசத்திற்கு அவசியம். சிறு பெண்கள் வயிற்றில் கொத்தவரைப் பிஞ்சுகள் தோன்றக் கூடும். பால்ய மணம் தேவை என்பவர்க்கு நமது தேசத்திற்றான் சாதிரிகள் என்றும் பெயர் கிடைக்கிறது. அவர்கட்கு நாகரீக தேசங்களில் தொட்டிலில்தான் இடம் கொடுப்பார்கள். பிரமசாரி ஆரமம் கடந்து, கிருகதாரமத்தில் நுழையும் பால்ய வதூவரர்களுக்கு ஏற்பட்ட சாதிரங்களில் அந்த இளங் குழந்தைகட்கு இன்ன பொம்மை வாங்கிக் கொடுப்பதென்று சொல்லவில்லையே. ஒரு பெட்டை நாய்க்குக் கசாய்க்கடையே சொந்தமாகி விடுவதா யிருந்தாலும் தனது குட்டியை பிரியாது. உயிர் வருக்கத்தில் சிரேஷ்ட மாகிய மனிதர்களில், சிலர் மட்டும், வினவறியாத தமது குழந்தையைக் காசுக்கு மற்றவரிடம் விற்றுவிடச் சம்மதிக்கிறார்கள். மக்களுக்கு ஏற்படும் இடையூறுகட்கும் சாதிர சம்மதம் என்று சாக்குபோக்கு சொல்லும் துன்மார்க்கன் தனது சாதிரத்திற்கே கெட்ட பெயர் உண்டாக்குகிறான். பால்ய மணம் சமூகத்திற்கு ஏற்பட்ட இடையூறு. பெற்றோருலகமானது பிள்ளையுலகத்திற்கு ஆன மட்டும் உதவி செய்து பிறகு பால்ய விவாகம் செய்து முடிப்பதானது தீனி போட்டுத் தலைவெட்டும் ஆட்டுக்குடையவன் செயலாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்று வந்த நாட்டுத் தீமைகளில் பால்ய விவாகம் என்பது சிறந்த தீமையாகும். ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக அத் தீமை நடப்பதென்ற காரணத்தாலேயே அதை நிலைநிறுத்த வேண்டும் என்பவர், தம்மை அறிவாளி என்றும் நினைக்கிறார்கள். தெரியாத்தனத்தால் பால்ய விவாகத்தை நாம் இத்தனை ஆண்டுகள்விட்டு வைத்தோம். அதன் தீமை தெரிந்துவிட்டதால்தான் இனி ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக அதைப் பாதுகாக்க வேண்டும் என்பது சிலர் கருத்து. ஒரு சிறுமியும், அவளுடைய விளையாட்டுப் புத்தி, சித்திரம், தையல், பக்ஷணம் முதலியவற்றின்மேல் அவளுக்கு ஏற்படும் அபிலாஷைகளும், ஆறும் அதன் நீரோட்டமுமாகும். அதே சிறுமியும், அச்சிறுமியைப் பற்றிய கலியாணப் பேச்சு, பரியம், பணக்காரனை இழுத்தல் முதலிய சூழ்ச்சிகளுமோவெனில் ஆறும் அதனுட்புறமுள்ள சூழல்களும், பாறைகளுமாகும். - 28.09.1931 (முன்தொடர்ச்சி ...) ஒரு குழந்தை தன் புருஷனை இழந்தபின் அழவில்லை என்பது மெய்தான். ஒரு மனிதன் செத்துப் போனபின் தான் செத்து விட்டதற்காக அழவில்லை என்பதும் மெய்தான். இதையெல்லாம் நினைத்து இளம் பெண் புருஷனை இழப்பதிலும் மனிதன் உயிரிழப்ப திலும் அவர்கட்குச் சம்மதம் என்று இச்சமூகம் முடிவு கட்டியதோ என்னவோ? வயது வந்தபின் கலியாணம் செய்வதென்பது மத விரோதம். மதத்துக்காக நாங்கள் உயிரை விடுவோம் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். செத்தபின், மதத்தால் தமக்குள்ள சவுகரியங்களை அநுபவிக்க மீண்டும் உயிர்பெற்றெழ முடியமானால், அந்தோ பாவம்! இந்நேரம் அவர்கள் உயிர்விட்டுத்தான் இருப்பார்கள். ஒன்றை உறுதியாகப் பிடிக்க எண்ணுவது நல்லதுதான். எண்ணுவதைவிட எண்ணியதுபோல் தமது பத்துவிரல் நகங்களும் ஆழப்பதியும்படி பிடிப்பது மிக்க நல்லதுதான். எப்படிப்பட்ட இடையூறுகட்கும் அஞ்சாமல் பிடிப்பது அசல் வீரத்தனந்தான். இயற்கை முறையில் மலராத அரும்பை மணக்கோலம் செய்யலாகாது என்ற சாதாரண அறிவையும் உண்டு பண்ணாத - ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னும் உண்டுபண்ணாத - மதத்தைப் பிடியாகப் பிடிப்பதில் தானா இத்தனைக் குரங்குத்தனம்? ஒருவன் வீட்டுப் பெண்ணை வயதறியுமுன் இன்னொருவன் மணப்பதில் அப்பெண்ணின் கற்பு விஷயத்தில் சந்தேகம் ஏற்படாது என்பவரைப் பார்த்து நான் சில கேள்விகள் கேட்கிறேன். ஏன் காணும், குழந்தையை மணக்க வந்த மாப்பிள்ளையே! அந்தக் குழந்தையை நீர் மணந்தபின் நீர் அக்குழந்தையைப் பலாத் காரம் செய்யமாட்டீர் என்பதற்கும், நீர் ஓர் பேடியல்ல என்பதற்கும் உத்தரவாதம் யார்? சாத்திரமா உத்தரவாதம்? உமது தந்தை தாய், பெண்ணின் தந்தை தாய்மார்களா உத்தரவாதம்? இரண்டு வருடத்தில் கிழிந்து போகக்கூடிய சேலையொன்றை மனைவி கேட்டபோது புருஷன் அது உன்னிஷ்டத்தைச் சேர்ந்தது; நீயே போய்ப் பார்த்து எடு; அல்லது உன்னிடம் பலரகம் காட்டுகிறேன்; தெரிந்து கொள் என்று தன் பாரத்தைக் கழித்துக் கொண்டு மனைவிக்குச் சுதந்தரம் கொடுக்கும் ஒருவன், தனது பெண் தன் வாழ்க்கைத் துணையைத் தேடுவதில் தந்தை தலை யிடாதிருக்க வேண்டும் என்ற மனச்சாட்சி ஏற்படுவதில்லை. இந்நாட்டின் பழம் பெருமையில் இது பிரதான அம்ஸம்! ஒரு வயதுடைய பெண்ணுக்கும், 4½ வயதுடைய பையனுக்கும் விவாகம் ஆனதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், இந்த ஆபாசம் வராஜ்யம் வந்தபின் இல்லாமற் செய்துவிடலாம். எப்படி? வயிற்றிலிருக்கும் குழந்தைகட்கே பரிசுத்த மணம் செய்துவிடலாம். ஏனெனில் மதம், வருணாச்ரமங்கட்குச் செல்வாக்கும் அவைகளை யுடையவர்கட்குக் கையில் வெட்டுக் கத்தியும் அப்போது இருக்கும். பால்ய மணம் என்பது தெய்வ மணம் என்று நேற்றுக் கேள்விப்பட்டேன். பொதுவாகத் தெய்வம் என்பது ஏதோ என்று நினைத்தேன். நேற்றுக் கேள்விப்பட்டபடி தெய்வமென்பது சில மனிதரின் முட்டாள்தனத்தின் பெயராகிறது. சிறு வயதிலேயே விவாகம் செய்துவிட வேண்டும்; அதனால் சிறு பெண்ணின் அங்கங்கள் வளர்ச்சியடையாத முன்பே அவள் குழந்தை பெறும்படி செய்ய வேண்டும் என்று தயவுசெய்து சாதிரி களும் பிராம்மணோத்தமர்களும் உலகில் தக்கபடி பிரசாரம் செய்தால் உலக சமாதானத்திற்காக உள்ள நோபல் வெகுமதியைப் பற்றலாம். தென்னாட்டில், பிராம்மணர்கள், கோமுட்டிகள் என்பவர்கள் பால்ய சதிபதிகளிடம் உற்பத்தியானவர்கள், அப்படியானால் இத்தேசமானது இவ்வளவு தாராள உழைப்பாளிகளையும், இவ்வளவு தைரியதர்களையும் கேட்கவில்லை. வயது வந்த மணவாளர் பெற்றெடுத்த சாதாரண வயல் வேலைக்காரர் போன்ற அங்க அமைப்பு குணம், செயல்களுடைய மக்களே இந்நாட்டுக்குத் தற்காலம் போதும். வயது வந்த பெண் தன் சம்மதப்படி ஒரு மணாளனைத் தெரிந்து கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்பவரின் மூளையும், குழந்தை மணந்தான் நல்லது என்பவர்களின் மூளையும் மொத்தத்தில் முதல் நெம்பர் மூளைகள்தான். ஆனால் புத்திசாலித்தனத்திலோ முட்டாள்தனத்திலோ அதுபற்றிப் பேச்சில்லை. எந்தத் தேசத்தானாவது எங்களூர்ச் சாதிரிகளைக் கேலி செய்தால் நான் சும்மாவிடப் போவதில்லை. தக்ஷணை ஒரு ரூபா யென்று சொல்லி 14 அணா கொடுத்தால் மீதி 2 அணாவையும் பெற்றுக்கொள்ளுகிற விஷயத்தில் எங்கள் சாதிரிகளுக்குத் தங்கள் பகுத்தறிவை நன்றாக உபயோகிக்கத் தெரியும். தாய்ப்பாலுண்ணாத சிசுவுக்குச் கருப்பங் கழியைக் கொடுப்பது போல் சிறு குழந்தைக்குச் சாதிரிகள் கலியாணம் செய்வதை அத்தனை பெரிதாய் எடுத்துக் கொள்ளக்கூடாது. மகம்மதியர் ஆண்ட காலத்தில் அவர்கள் இந்துப் பெண்களைக் கற்பழித்தார்கள் என்றும், கலியாணமான பெண்ணை அவர்கள் கற்பழிக்க எண்ணுவதில்லை யாதலால் குழந்தைப் பருவத்திலேயே மணம் செய்ய ஆரம்பித்ததே இன்றுவரை பால்ய மணத்திற்குக் காரணம் என்றும் சொல்லுகிறார்கள். இப்படிப்பட்ட இந்தியர்கள் இன்று, பெற்ற பிள்ளைகளைப் பூச்சிக்காரன் பிடிக்கிறான் என்று தெரிந்தால், இனி, 1000 வருடத்திற்கு யாரும் பிள்ளையே பெறமாட்டார்கள். கிண்டற்காரன், - புதுவை முரசு, 28. 9. 1931, ப. 11 - 15 83. காந்தியின்மேல் நம்பிக்கையில்லை காந்தி பார்ப்பனத் தலைவரே! ஆதித் திராவிட மகாஜன மத்திய சபையின் தலைவர் ராவ்சாகிப் எம்.சி. மதுரைப்பிள்ளை பின்வருமாறு எழுதுகிறார்:- ஆதித் திராவிடர்களுக்கு விசேஷப் பிரதிநிதித்துவமோ அல்லது பாதுகாப்போ வேண்டாமென்றும், காங்கிரசே அவர்கள் நலன்களைக் கவனித்துக்கொள்ளுமென்றும் காந்திஜி வட்டமேஜை மகாநாட்டில் தெரிவித்ததாகச் செய்தி கிடைத்திருக்கிறது. காந்திஜி இவ் விதமாகத் தெரிவித்திருக்க வேண்டிய அவசியமில்லா திருப்பதுடன் அது தப்பான அபிப்பிராயத்தை உண்டுபண்ணக் கூடியதாகவும் இருக்கிறது. ஆதித் திராவிட வகுப்பினருக்குக் காங்கிரஸ்மீதோ அல்லது காந்திமீதோ நம்பிக்கையில்லை. ஆதலால் எங்கள் சங்கத்தார் வட்டமேஜை மகா நாட்டின் ஆதித் திராவிடர் பிரதிநிதியாகிய டாக்டர் அம்பேட்காருக்குக் கீழ்க்கண்ட தந்திச் செய்தியை அனுப்பியிருக் கின்றனர்:- மாகாண சட்டசபைகளிலும் மத்திய சட்டசபைகளிலும் ஆதித் திராவிடர்களுக்குத் தனிப் பிரதிநிதித்துவமும், பாதுகாப்பும் ஏற்படுத்தும் படி முயற்சிசெய்ய வேண்டுமென்று சென்னை ஆதித் திராவிட மகாஜன மத்திய சபையார் தங்களை வேண்டிக் கொள்கின்றனர். மேற்கண்ட விஷயத்தை காங்கிரஸ்காரர்கள் அலட்சியம் என்று தள்ளிவிட்டாலும் நாம் தள்ளுவதற்கில்லை. திரு. காந்தியவர்கள் தன்னைப் பொருத்தவரையில் ஒடுக்கப் பட்டவர்கள் விஷயத்தின் அநுதாபம் உடையவர் என்பதையோ, தீண்டாமை அடியோடு ஒழியவேண்டுமென்ற அபிப்பிராயத்தை யுடையவர் என்பதையோ நாம் மறுக்க முன்வரவில்லை. ஏனெனில், அவருடைய சொந்த வாழ்க்கைச் சம்பந்தப்பட்டவரையில் தீண்டாமையைக் கண்டித்து எவ்வளவோ சந்தர்ப்பங்களில் பேசியும் எழுதியு மிருப்பதோடு, அதே வகுப்பிலிருந்து ஒரு பெண்ணை எடுத்து வளர்த்து வருவதையும்கூட எல்லோரும் அறிவார்கள். *** ஆனால் தற்சமயம் திரு. காந்தியவர்கள் இவ்விஷயத்தில் எப்படியிருக்கிறார் என்பதைக் கவனிப்போம். *** தீண்டாமையை ஒழிக்காமல் கிடைக்கும் சுயராஜ்யமோ அரசியல் சீர்திருத்தமோ எவ்வித பலனையும் அளிக்க முடியாது, என்றும் தீண்டாதாருக்கு சம உரிமை அளிக்கப்படாத எந்த சுயேச்சையையும் நான் விரும்பமாட்டேன் என்றும் அடிக்கடி, நிமிஷத்திற்கு நிமிஷம் சொல்லிவந்த திரு. காந்தியவர்கள் தற்போது என்ன சொல்கிறார்? திரு காந்தியவர்கள் உப்புக் காய்ச்சப் புறப்படு முன்பு கூட ஒடுக்கப்பட்ட ஜாதியார்கள் அவரை மறித்துக்கொண்டு தீண்டாமை விஷயத்தைக் கவனிக்காமல் எந்தக் காரியமும் செய்யக் கூடாது என்று தடுத்தார்கள் என்ற செய்தியை எல்லோரும் படித்திருப் பீர்கள். அப்போது திரு. காந்தி என்ன செய்தார்? இந்திய மக்களாகிய அவ்வேழைகளின் வேண்டுகோளைப் புறக் கணித்தார். ஐயோ! காந்தி ஒருவராவது நமக்காக உண்மையாய் உழைப்பார் என்று நம்பி யிருந்தோமே! அவரும் நம் வாயில் மண்ணைப் போட்டு விட்டாரே! என்று 6 கோடி ஜனங்களும் அலறினார்கள். பிறகு ஒருவாறு தைரியப் பட்டுக் கொண்டு உப்புப் போரை நடத்தி விட்டாவது நமக்காக ஏதாவது செய்யமாட்டாரா என்று தாய் முகம் பார்த்திருக்கும் குழந்தை போல் காத்திருந்தார்கள். உப்புப்போரும் நடந்தது. அப்போதாவது திரு. காந்தி இவர்களை ஏறிட்டுப் பார்த்தாரா? சர்க்கார் கடிதங்களோடு கூடிய மூட்டை முடிச்சுகளோடு லார்ட் இர்வின் அரண்மனைக்கும் தான் தங்கியிருக்குமிடத்திற்குமாக ஓடிக் கொண்டிருந்தார். பாவம்! ஆசை வெட்கமறியுமா? ஒரு வேளை காந்திக்கும் இர்வினுக்கும் சமரசம் ஏற்பட்டு திரு. காந்தியவர்கள் வட்டமேஜை மகாநாட்டில் கலந்து கொள்ள ஒப்புக்கொண்டால், அப்போதாவது நம் விஷயத்தைக் கவனிப்பார் என்று நினைத்து 12 கோடிக் கண்களும் திரு. காந்தியை நோக்கின வண்ணமாகவே இருந்தன. இவ்வுலகத்திலே ஆசை என்ற ஒரு விஷயம்தான் மக்களின் வாழ்வைச் சற்று சந்தோஷமாக வைத்துக் கொண்டிருக்கிறது. இந்த ஆசையென்பது என்று அழிகிறதோ அன்றே மனிதன் தன் வாழ்க்கையைக் வெறுத்து விடுவான். உண்டிக்கும் உடைக்கும் பிச்சையெடுக்க வேண்டிய நிலையிலிருப் பவன் கூட ஆசை என்ற ஒன்றினால்தான் தன் வாழ்க்கையைக் கடத்திக்கொண்டிருக்கிறான். பரம ஏழைமுதல் பெரிய பிரபுவரையில் இந்த ஆசை என்பதால் ஏழைகளாகிய, நசுக்கப்பட்டவர்களாகிய ஆதித் திராவிடர்கள் ஆசையால் கட்டுண்டது தவறாகுமா? திரு. காந்தியவர்களும் வட்டமேஜை மகாநாட்டிற்குப் போவதாக ஒத்துக்கொண்டார். பிறகு மகாநாட்டிலும் கலந்து கொண்டார். ஆதித் திராவிடர்கள் கண்கள் இலண்டனிலிருக்கும் காந்தியையே கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தன. நம்மைப் பற்றி எப்போது பேச ஆரம்பிப்பார் என்று ஏழை மக்கள் ஏங்கிக் கொண்டிருந்தார்கள். தனது அருமை வாயைத் திறந்தார். ஆதித் திராவிடர்களுக்குத் தனித்தொகுதி வேண்டாம் என்று சொல்லிவிட்டார். *** ஐயோ! திரு. காந்தி கூட நம் தலையில் கை வைத்து விட்டாரே! என்று ஆதித் திராவிட மக்கள் அலறுகிறார்கள். திரு. காந்தியவர்கள் என்று வருணாசிரமத்தை ஆதரிக்கத் துணிந்தாரோ, அன்றே அவர் பார்ப்பனர்களுக்குத் தலைவரான மற்றொரு சங்கராச்சாரியார் ஆகிவிட்டார் என்றே பார்ப்பனரல்லாத மக்கள் முடிவுகட்டிவிட்டனர். ஆனால் இப்போதோ, அதைவிடக் கேவலமாக ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கே உலைவைக்க ஆரம்பித்து விட்டார். மேற்கண்ட தனது அபிப்பிராயத்திற்குத் திரு. காந்தியவர்கள் எந்தச் சமாதானம் வேண்டுமானாலும் கற்பித்துச் சொல்ல முடியும். ஆனால், அவருக்கு ஒரு உண்மையை மாத்திரம் தெரிவிக்க விரும்புகிறோம். அன்னிய நாட்டுச் சாமான்களின் போட்டியிலிருந்து சுதேசிச் சாமான்களைக் காப்பாற்றுவதற்காகத் தற்காலமாகவேனும் வரி விதிப்பு மூலம் ஒரு விசேஷ உரிமை கொடுக்கவேண்டு மென்பது எப்படிப் பொருளாதார சாஸ்திரத்தின் சிறந்த உண்மையோ, அதைப்போலவே, இதர மேம்பட்ட சமூகங்களின் ஆதிக்கத்திலிருந்து ஒடுக்கப்பட்ட சமூகத்தைக் காப்பாற்றுவதன் பொருட்டு அதற்கு ஒரு விசேஷ உரிமை கொடுக்க வேண்டுமென்ற ஒரு சிறியவிஷயம் திரு. காந்தியவர்களுக்கு எட்டாமற் போனதுபற்றி நாம் வருந்துகிறோம். *** ஆகவே திரு. காந்தியவர்கள் பேரில் நம்பிக்கையில்லை என்று ஆதித் திராவிடர்கள் தந்தியடித்திருப்பதைப் பற்றி நாம் ஆச்சரியப்பட வில்லை இனி, நாசிக் சுயமரியாதை மகாநாட்டுத் தலைவர் திரு. அம்பெட்கார் போன்றவர்களால் ஏதாவது பலன் ஏற்பட்டால் ஏற்பட லாமேயொழிய, திரு. காந்தியவர்களால் ஆதித் திராவிட சமூகத்திற்கோ கல்வியில் பிற்போக்கான பார்ப்பனரல்லாத சமூகத்திற்கோ அல்லது ஆண் கொடுமையால் அவதிப்படும் பெண் சமூகத்திற்கோ எள்ளளவு பயனும் ஏற்படாது என்பதை நிச்சயமாய்க் கூறுவோம். இனி, பெண்கள் விஷயத்தில் திரு. காந்தியவர்களின் அபிப்பிராயம் என்னவென்பதை மற்றொரு சமயம் விளக்குவோம். - புதுவை முரசு, 5. 10. 1931, ப. 12 - 14 84. தமிழுக்கு ஆபத்து சென்னை ஹிந்தி வித்யாலயத்தில் எவரோ காந்தியின் தோழராம். அவர் பெயர் காகாகலெல்கார் என்பதாம். அவர் சொல்லுகிறார்: ஹிந்தி பாஷையே இந்தியாவில் தேசீய பாஷையாக இருக்க முடியும் என்கிறார். ஏன்? இந்தி, உமக்கும் காந்திக்கும் நடுவீட்டுக் காமாட்சியம்மன் விளக்காக இருக்கலாம். எங்களுக்கு வியர்க்கிறதோ? இந்தி கற்றுக்கொள்ளச் சொல்வதாலேயே அந்தந்த மாகாண பாஷைகளைப் புறக்கணிக்க வேண்டும் என்று நாம் சொல்வதாகக் கொள்ளலாகாது என்கிறார். இந்தியாவின் ஆதி மொழியாகிய தமிழ் மொழியை அழிக்க வேண்டும் என்பது காந்தியடிகளின் கருத்து. வடநாட்டாருக்கு இயற்கையில் தென்னாட்டு நாகரீகத்தின் வேரையே கல்ல வேண்டும் என்பதற்கு அவர்கள் இன்று வரைக்கும் தமிழரை ராக்ஷசகர்கள் என்று சொல்லி வருவதொன்றே ஓர் அத்தாக்ஷியாகும். சுயராஜ்யம் என்ற குப்பைக்குள் ளிருக்கும் ஆபாசச் சூழ்ச்சியில் இதுவும் ஒன்று என்றால் அது பிறகு தெரியும். தமிழ் முதலிய பாஷைகளில் இலக்கியங்கள் அதிகமிருப்பது கண்டு சந்தோஷப்படுகிறோம் என்கிறார். அதிகமிருக்கும் காரணத்தா லேயேதான் அதை வேர் கல்ல உமக்கு எண்ணம். பல பாஷைகள் ஒரு பாஷைக்காரரிடம் இருப்பது தீமையல்ல என்கிறார். தமிழையே படிக்காதிருக்க வகை தேடபட்டிருக்கும் தமிழரிடம் ஆபாசக் களஞ்சியமான இந்தியொன்று வந்து சேருவது மகா கெடுதி. இந்தி, மற்ற பாஷைகட்கு விரோதமாகப் புறப்பட்டிருக்கிறது என்போர் இந்திய தேசீயத்துக்கும் ஒற்றுமைக்கும் விரோதியா வார் என்கிறார். உமது இந்திய தேசீயமும், உமது ஒற்றுமைச் செயலும், அவற்றிற்கு நேர்மாறான பயனை விருத்தி செய்வன என்று சொல்லுபவர்க்கு இந்திப் பிரசாரம் முழுப்புரட்டு ஆகும். ஆங்கிலத்தால் நன்மை ஏற்படவில்லையென்று நான் சொல்ல வரவில்லை என்கிறார். நீங்கள் மகாத்மாவின் நண்பராயிற்றே, சொன்னால் என்ன? சும்மா சொல்லுங்க சாமி! இங்கிலீஷ்மேல் நமக்குத் துவேஷமில்லை என்கிறார். யார் அப்படிச் சொன்னது? ï¥nghnj 炙äZ m¿thš fhªâahÇ‹ (njhH® FUrhÄ (ã.V.,) சொல்வது போல்) அபின் பிரசாரத்தையும், மற்றும் வைதிகரின் தர்பார்களையும் பொதுமக்கள் ஆக்ஷேபிக் கிறார்கள். இங்கிலீஷ் பொதுப் பாஷை ஆக்கப்படுவதன் மூலம் அதிக பிரசாரம் செய்யப்பட்டால் ஏழை மக்களிடம் தக்ளியைத் தூக்கிக் கொடுப்பதை முழுதும் வெறுப்பார்கள் என்றுதான் இங்கிலீஷ்மேல் கோபம். துவேஷமென்று யார் சொன்னது? இங்கிலீஷ் பொது பாஷையாயாக்கச் சௌகரியப்படாது என்கிறார். அது எப்படிச் சௌகரியப்படும்? துளசிதா ராமா யணத்தைக் காட்டி இந்தியைப் பரப்ப மாத்திரம் சௌகரியம் உண்டு. வருணாசிரமம் என்பதில்லாத இங்கிலீஷை எப்படிப் பரப்ப முடியும்? இங்கிலீஷிலேயே நமது கவனம் செல்லக்கூடாதே என்பதுதான் எனது கவலை என்கிறார். இங்கிலீஷைப் பொது பாஷையாக்கினால் அதிலேயே நமது கவனம் சென்றுவிடும். சொந்த பாஷையைப் பறக்க விடக்கூடும் என்கிற யோக்கியமான யோசனை, இந்தியைப் பரப்பினாலும் மாகாண பாஷைகள் மறைந்துவிடும் என்பதில் இல்லாமல் போயிற்று ஐயாவுக்கு. தென்னிந்தியாவிலுள்ள பிராம்மணர் பிராமணரல்லாதார் பேதம் வடநாட்டாரிடம் கலப்பதால்தான் நீங்கும். ஆதலால் வடநாட்டு இந்தியைக் கற்க வேண்டும் என்கிறார். தென்னாட்டுப் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதாரை ஏமாற்றப் பல சூழ்ச்சி செய்துவந்து, செல்லாமையறிந்து வடநாட்டாரின் துணை கொண்டாவது குல்லாய் தைக்கலாம் என்று நினைப்பதும், இது விஷயத்தில் இராஜகோபாலாச்சாரி எடுக்கும் முயற்சியும் எமக்குத் தெரியும். உமது சங்கேதப் பசப்பு எமக்குத் தெரியும். ஹிந்தியை, இந்திய மக்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்கிறார். காசில்லாக் கஷ்டம் தமிழ்நாட்டில் அதிகம். இந்தச் சமயம் கைவேலையாயிருக்கிறது இன்னொரு வீடு பார்த்துக் கொள்ளுங்கள். காகாகலெல்காரருக்கு இரண்டு கேள்வி: தேசம் உருப்பட வேண்டுமென்பதில் உமக்குப் பூரணமான கவலையுண்டா? அல்லது வருணாசிரம தர்மம், புரோகிதம், மதப்புரட்டு, கடவுட் புரட்டு, முட்டாள் வழக்கம், முதலாளிக்காதரவு இவைகளில் கவலையுண்டா? முன்னதில் கவலையுண்டு என்றால் சுயமரியாதை இயக்கத்தால் உமது மூளையையெல்லாம் நன்றாய்க் கழுவிக்கொள்ள வேண்டும். இல்லையானால், நீங்கள் தொட்டதெல்லாம் துலங்காது. வைத்த தெல்லாம் வளராது அவ்வளவுதான். கிண்டற்காரன் - புதுவை முரசு, 5.10.1931, ப. 18 85. வட்டமேஜையில் காடைக் கூடுகள் அடிமைத்தனம் நீங்கவேண்டுமனால் விடுதலை யுணர்ச்சி சுடர் கொண்டெழுதல் வேண்டும். அச்சுடரும் மனிதனின் உள்ளத்திலிருந்து தோன்றவேண்டும்! வெளியிலிருந்தன்று. உள்ளத்தே விடுதலைப் பேறு பெறாதவன் புறத்தே விடுதலை முழக்கம் செய்கையில் அது வெற்றொலி என்றே கருதப்படும். இதில் ஆக்ஷேப மிருக்கமுடியாது. விடுதலை என்பது என்னவெனில் விடுபடுத்தன்மை; அதாவது உலகக் கட்டுப்பாடுகளிற் சம்பந்தப்படாதிருத்தலேயாகும். சாதி யமைப்பு, சமயச்சட்டம், வருணாஸ்ரமத் திட்டம், சடங்குமுறைகள் கடவுட் கொள்கை அனைத்தும் உலகக் கட்டுப்பாடுகளே, கட்டுப்பாடுகளில் அகப்பட்டுக் கொண்டிருப்பது அடிமையுள்ளமேயல்லாது விடுதலை யுள்ளமாகாது. இவற்றைத் தகர்த்தெறியாத உள்ளத்தையுடையவன் புறத்திலே விடுதலையின் பேர் சொல்லுவதென்பதும் முடியாது. இன்றுவரைக்கும், சாதி சமயப்பற்றும், மூட நம்பிக்கைகளும் உள்ள எந்த மனிதனாவது தனது தேசத்தை நல்ல நிலைக்குக் கொண்டு வந்திருப்பானா எனில், இல்லையென்றே கூறலாம், சாதி சமய வழக்கப் படுகுழியிலிருந்து நீங்கியவனே தனது மக்களையும் அப் படுகுழியி லிருந்து நீக்கித் தேசத்தை நன்னிலைக்குக் கொண்டு வந்திருப்பான். எந்தத் தேசத்து மக்களாவது மக்களைப் பிரிவு படுத்தும் தத்துவத்தையே கொண்ட சாதி, சமயாதிகளை வைத்துக் கொண்டு, ஒன்று படுவதன் மூலமே ஏற்படுவதான தேசீய லக்ஷியத்தை யடைந்திருப்பார்களா? அப்படி அடைந்திருப்பதாக ஒரு தேசத்தைக் காட்ட முடியுமானால், தேசீய லக்ஷியத்தைப் பெற்றதாகச் சொல்லி மறுநாளே தனது பழய அலங்கோலத்தில் முடிந்த தேசத்தைத்தான் காட்டக்கூடும். ஆனால் சாதி, சமயம் முதலிய கட்டுப்பாடுகளை வைத்துக் கொண்டிருந்தால் ஆயிரக்கணக்கான ஆண்டுகட்குப் பின்னும் உருப்படமுடியாது என்பதற்கு உதாரணமாக நாம் ஒரு தேசத்தைக் குறிப்பிடமுடியும். அதுதான் நமது அடிமை இந்தியா. மிதமிஞ்சிய கடவுட் கொள்கையை வளர்த்து, மதக் கொள்கையை வளர்த்து, சாதிக் கொள்கை வருணாசிரமக் கொள்கையை வளர்த்து, மூடநம்பிக்கைகளை வளர்த்து வந்ததன் பயனாக ஏற்பட்ட இன்றைய தவிப்பு நிலைமையை, முறையே அவற்றை அழிப்பதன் மூலமாகவே நீக்கவேண்டும் என்றால், இதை யார் என்னகாரணம் சொல்லி மறுக்கமுடியும்? இப்படிச் சொல்லுகிறவர்களைவிட, மறுக்கிறவர்க ளாவது எந்தவிதத்தில் உயர்ந்தவராகவோ துறவுள்ளம் உடையவாராக வோ இருக்க முடியும்? என்பதுதான் நமக்கு விளங்கவில்லை. சைவக் கூட்டிலும், வைணவக் கூட்டிலும் பௌத்தக் கூட்டிலும், சீக்கியக் கூட்டிலும், மகமதியக் கூட்டிலும், தொகுதி தொகுதியாக அடைபட்டுக் கிடக்கும் பக்ஷிகள் அவ்வக்கூடுகளில் மூடப் பழக்கம், சாதிக்கொள்கை உயர்வு, தாழ்வு, வருணாசிரமம் முதலிய மயக்கமும் அடைந்துள்ளன. அந்தந்தக் கூட்டில் அந்தந்தத் தொகுதிப் பக்ஷிகள் மயக்கம் பிடித்தபடி இருக்கவும் வேண்டும். சுதந்தர பூமியை அடையவும் வேண்டும் என்பதில் கெம்பீரத் தன்மை, புத்திசாலித்தனம் ஏதாவதிருக்க முடியுமா என்று நாம் கேட்கிறோம். காடைக் கூடுகள் இங்கிலாந்து வட்டமேசைக்குக் கொண்டு போகப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு கூட்டிலுள்ள பக்ஷிகளும் தங்கள் தங்கள் கூடுகளில் இருந்தபடியே தமக்கு விடுதலை கேட்கின்றன. நன்றாக ஞாபகமிருக்கட்டும், காடைகள் தம் தம் கூடுகளிலிருந்து வெளிவரவேண்டிய அவசியமில்லாத முறையில் அனுபவிக்கத்தக்க விடுதலையை அவை கேட்கின்றன என்றால், இவை கோரும் விடுதலை தமக்கா (காடைகட்கா) காடைக் கூடுகட்கா என்பதை நன்றாக யோசித்துப் பார்க்கவேண்டும். விடுதலை என ஒன்று கிடைக்குமானால் அதன்படி அந்தந்தக் காடைக் கூட்டம் அந்தந்தக் கூடுகளில் உலவ முடியும். விடுதலைக்குமுன் இருந்த நிலையே விடுதலைக்குப் பின்னும் என்பது தவிர இதில் நூதனமென்ன? இப்படிப்பட்ட விடுதலை பெறத்தானா அவைகள் அங்குச் சென்றும் முரண்படுகின்றன என்று சிலர் ஆச்சரியப்படலாம். மதக்கூடுகளில் அடைபட்டுச் சாதி உயர்வு தாழ்வு முதலிய மயக்கத்தையுமுடைய பக்ஷிகட்கு அது சகஜம் என்று நாம் கூறுகிறோம். இந்த நிலையில் சுயமரியாதை இயக்கம் சொல்லுவதைக் கவனிப்போம். கடவுட் புரட்டு, மதப்புரட்டு, சாதிப்புரட்டு, மூட நம்பிக்கைகள் இவைகளைத் தகர்த்தெறியுங்கள். அந்தக் கூடுகளிலிருந்து வெளிவாருங்கள். கூடுகளின் வாய் திறந்தே இருக்கின்றன. வெளி வருவதென்பதும் உங்களிடமே இருக்கிறது. நீங்களே உங்களை அடைத்துக் கொள்ளுகிறீர்களா? வெளியேறுங்கள். வெளியேறிய நிலையே உள்ளும் புறமும் விடுதலையாகும் என்கிறது. இதில் என்ன பிழையிருக்கிறது? ஆதியில் நம்மைக் கடவுட் கொள்கை விழுங்கிய போது அதிலிருந்து மீளுங்கள் என்று அக்காலப் பெரியோரும் கூறினர். சமயப்புரட்டு விழுங்கியபோதும் எச்சரிக்கை கிடைத்தது. வருணா சிரமம் தோன்றிய போதும் அந்த வழியில் போகாதிருக்கும்படி சிவப்பு விளக்குக்காட்டினார்கள். மூடவழக்கங்கள் பெருகிய நிலையில் அவ்விஷத்தால் மாயாதபடி கூச்சலிட்டனர். மக்கள் கேட்கவில்லை! கேட்கத் தக்கபடி அக்காலத்து மக்கள், அறிவு படைத்திருக்கவில்லை. இந்த அறிவுள்ள காலத்தில், வட்டமேஜைக் காடைக்கூடுகள் இந்தியாவுக்குத் திரும்பிய பின்பாவது, அக்கூடுகளில் கிடக்கும் காடைகள் சுயமரியாதையின் மேன்மையை உணரக்கூடுமா என்பது தான் கேள்வி. - புதுவை முரசு, 12. 10. 1931, ப. 12 - 13 86. மூளை வைத்யம் நோயாளி: ஐயா வைத்யரே, சாதி மதங்கள் கடவுட் பைத்தியம் இவைகள் மனித வாழ்க்கைக்கு அநாவசியமென்று சொல்லி அவைகளைக் கடந்து மக்கள் நல்ல நிலையடையப் பாடுபடும் சுயமரியாதைக் காரர்கள் சாதி சமயங்களை அடிப்படையாக உடைய தனித் தொகுதியை ஆதரிப்பது தகுதியல்ல என்னும் நோய் என் மூளையைப் பீடித்திருக்கிறது. மருந்து தேவை. வைத்யர்: மாலுமியானவன் பிரயாணிகளை ஏற்றிக்கொண்டு சிங்கப்பூர்த் துறைமுகத்தையடையும் நோக்கத்தோடு சுப்பலைச் செலுத்து கிறான். வழிநடுவில் கடலிற் குதிப்பது அவன் நோக்கமல்ல. ஆயினும் அவன் இடையில் ஆபத்துண்டாவதை எண்ணி, சிறு தோணிகள், ரப்பர் மிதவைகள் இவைகளைக் கையோடு கொண்டு போவதானது அவன் தனது பிராயாணிகளின் நன்மை யில் பொறுப் புள்ளவன் என்பதையும், முன் ஜாக்ரதை யுடையவன் என்பதையும் காட்டும். சாதிமதம் சாகுமட்டும் சிறுபான்மையோர் நம்மை பெரும் பான்மையோரால் பறிக்கப்படலாமா? அதனால் தனித் தொகுதி கேட்பது சரி. இந்த மருந்தை மூன்றுவேளைச் சாப்பிடு. இதைத் தொடர்ந்து வேறு வியாதியும் உனக்கு உண்டாகலாம். குடியரசு, புதுவை முரசு முதலியவைகளை இப்போதிருந்தே அனுசரித்து வா. வியாதியஸ்தன்: எந்தக் கோயில் கூடாது என்கிறார்களோ அதே கோயிலில் தாழ்த்தப்பட்டவர்களை நுழையப் பண்ண வேண்டும் என்பது சரியாகாது என்ற நோய்க்குப் பரிகாரம் என்ன? வைத்யர்: இது ஓர் தொத்து வியாதி. எவனிடமிருந்து உனக்குத் தொத்திக் கொண்டதோ தெரியாது. தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளே போனால் கோயில் என்பதன் பிரதான தத்துவம் போய்விடுகிறதாகக் கோயிலுடையார் நினைப்பது உண்மை. கோயிலை ஒழிக்க வேண்டு மென்பவர்கள் தாழ்த்தப்பட்டவர்களைக் கோயிலில் நுழைவிப்பதன் மூலம் சுலபமார்க்கமாகக் கோயில் தத்துவத்தின் பிரதான அம்ஸத்தை ஒழித்துவிட எண்ணுகிறார்கள், கோயில் வேண்டாம் என்ற ஒரு நிலையை நோக்கிச் செல்லுபவர்கள் வழியில் அந்தக் கோயிலை ஓர் இடறு இடறிவிட்டுச் சென்றால் அழிந்தவரைக்கும் அழியட்டுமே. மேலும் எலிப்பறியில் பக்ஷணத்தை வைப்பது எலியைப் போஷிப்பதற்காக அன்றி, அதைப் பிடித்துக் கொல்லுவதற்காகவே என்பது போல், கோயிலை ஒழிக்கவே கோயிலுக்குப் போங்கள் என்று சு.ம. காரர் சொல்லுகிறார்கள். இந்த மருந்தை உட்கொள். ஆஸ்திகப் பற்றை மாத்திரம் நீக்குவதுதான் பத்தியம். நோயாளி: தோழர்கள் காந்தியும், இரவீந்திரரும் கல்வி யறிவு மிக்கவர்களாக இருந்ததாலேதான் அவர்கள் இயக்கம் இவ்வளவு பிரசித்தி யடைந்திருக்கிறதென்றும், ஈ.வே.ரா. தாம் ஈரோடு பாடசாலைப் பிரசங்கத்தில் கூறியபடி கல்வி அதிக மில்லாதவராக இருத்தலாலே தான் அவரியக்கம் பிரபல மடையவில்லை என்றும், எனக்கு ஒரு மூளைநோய் உண்டு. மருந்துண்டா? வைத்யன்: ஆஹா! உண்டு. பத்தியந்தான் கடுமையாக இருக்கும். குறுகிய நோக்கத்தை நீக்கவேண்டும். விசால நோக்கத்தை தினம் தினம் 2 டம்ளர் சாப்பிடவேண்டும். சம்மதமானால் இந்த மருந்து:- தோழர் காந்தியும் படித்தவர்; தோழர் ரவீந்திரரும் படித்தவர். ஆயினும் தேசத்தை விடுவிப்பதற்குள்ள முறைகளில் இருவ ருடைய கருத்தும் பேதப்படுவதற்குக் காரணம் என்ன? காந்தி வருணாஸ்ரம நெறி யிலேயே சுயராச்சியம் தேடவேண்டு மென்று சொல்லிவருகிறார். ரவீந்திரர் சாதி, மதம், மூடநம்பிக்கை முதலியவை ஒழியவேண்டும் என்கிறார். சுயராஜ்யம் தேடு முறையில் இரண்டு அறிஞர்கள் இரண்டுவித அபிப்பிராயம் உடையவராயிருப்பதற்குத் தக்கவாறேதான் சுயராஜ்ய முயற்சிக்குப் பயன் கிடைக்கும் என்பது மறுக்கக் கூடியதாகாது. இது கொண்டே இச் சுயராஜ்ய முயற்சி மிக்க பிரபல்யமுடையது என்பதில் உண்மையிருக்கமுடியாது. இரவீந்தர் ஆக்ஷேபிக்கு முறையில் காந்தி காரியம் நடத்துகிறார் என்பதை மனதில் வைத்துக்கொண்டு இப்போது சுயராஜ்யம் பெறுகின்ற வட்டமேஜை முயற்சி என்ன நிலையிலிருக்கிறது என்று பார்ப்போமானால் எதிர்பார்த்தபடி இல்லை என்று தெரியும்; தெரிந்தும் விட்டது. இதனால், காந்தியின் கல்வியும் அவர் கண்ட முறையும் பயனில்லை என்பது வெட்டவெளிச்சம். ரவீந்திரர் முறை பயன்படுமா என்றால் செய்து பார்க்கவேண்டும். அவ்வாறு அவர் நினைக்கும் மாதிரியே காரியம்செய்ய அவர்க்கு உணர்ச்சி உண்டாகவில்லை. எண்ணமே செயலன்று. ஆனால் காந்தியிடமும், ரவீந்திரர் இடமும், உள்ள கல்வியிலும் உணர்ச்சியிலும், இல்லாத ஒன்று ஈ.வே.ரா. அவர்களிடம் உண்டு. அதுதான் பகுத்தறிவின் பெரு லெளியில் நின்று செயலாற்றும் துணிவும் செயலும். இச்செயல் பிரபல்ய மடையவில்லை எனில், பிரபல்ய மடைவிக்கும் துணிவு உண்டு. பயன்படுமா எனில் பகுத்தறிவுச் செயல் பயன்படாதென்று சொல்வது கேவல புத்தி. ரவீந்திரர் வாக்கு இதற்குச் சாக்ஷி. இதனால், காந்தீயம் உண்மையில் பிரபல்யமுடையதல்ல என்பதும், பகுத்தறிவுக்கும், கல்விக்கும் சம்பந்தமில்லை என்பதும், பிரபல்யமடையத் தக்கதும், பயன்தரத்தக்கதும் பகுத்தறிவுச் செயல்தான் என்பதும், இதற்கு ரவீந்திரர் மொழியே சாக்ஷி என்பதும், ஈ.வே.ரா. பகுத்தறிவு கொண்டு தொண்டாற்றும் வீரர் என்பதும் விளங்கும், இந்த நல்ல ஔஷதத்தைப் பயன்படுத்திக்கொள். ஞாபகமிருக் கட்டும் அவபத்தியம் செய்யாதே. விசால நோக்கத்தை அநுசரி. கிண்டற்காரன் - புதுவை முரசு, 12. 10. 1931, ப. 19 - 20 (முன் தொடர்ச்சி ...) நோயாளி: ஜாதிப்பூசல், சமயப் பூசல்களைத் தூக்கி விடுகிறவர்கள் தற்கால ஆட்சிக்காரர்களேயாகும். இவ்வாட்சியைத் தகர்த்து விட்டபின் இப் பூசல்களை ஒழுங்குபடுத்துவது சுலபம் என்பதாக ஒரு நோய் சிலகாலமாக என் மூளையைப் பீடித்திருக்கிறது. பரிகாரம் என்ன? வைத்யர்: ஆளுவோர் ஜாதிப் பூசல்களைச் சமயப்பூசல்களை உண்டாக்குவதாக வைத்துக்கொள்வோம். இதன் பயனாகப் பூசலிடும் மக்கள் எவருக்கும் ஆளுவோரிடம் விசேஷச் சம்பந்தம் ஒன்று மில்லையே. அவர்கள் அனைவரும் நம் நாட்டு மக்கள்தானே? இங்ஙன மிருக்க, அயலான் கிண்டி விடுவதைக் கேட்டு அதன்படியாடுகின்ற அவ்வளவு சாதாரண மக்களைக் கொண்டு சுயராஜ்யம் அடைய முயற்சி செய்வது எப்படி? இடியை ஒருவன் தன்மீது விழும்படி இடி இழுக்கும் ஊசியைத் தன்மீது நாட்டிக்கொண்டது போல் கிளறிவிடுவதற்கனுகூலமான ஜாதி, சமயப் பித்தத்தை நாம் சுமந்திருப்பதற்கு அவசியம் என்ன? சுயராஜ்யத்திற்குப் பின்னர் மழுப்பிவிடலாம் என்னும் அடிவயிற்றுக் கழலையை இப்போதே அடியோடு சாஸ்திர முறையால் அகற்றிக்கொள்வதே நல்லது. இம் மருந்து உன் வியாதிக்கு ஏற்றதாகும். நோயாளி: காந்தியார் ராமராஜ்யம் என்று சொல்வதால் தசரதச் சக்கர வர்த்தி அறுபதினாயிரம் பெண்டாட்டிகளோடு வரப்போகிறார் என்பதல்ல அர்த்தம், நல்ல இராஜ்யம், அழகான ராஜ்யம் என்ற அர்த்தத்திலேயே அவர் சொல்லுகிறார் என்று குடியரசு ஏன் நினைக்க லாகாது? இந்த மூளைக்கடுப்புக்கு என்ன பரிகாரம்? வைத்தியர்: இப்படிக் குடியரசு சில முட்டாள்கள் நினைக்கிறபடி நினைப்ப தற்குக் காந்தியார் அவ்வித வியாக்கியானம் செய்திருக்கிறார்? அவரிடம் பத்திரிகை யிருக்கிறது. இராமராஜ்யம் வருணாச்சிரம ராஜ்யம் என்று நினைக்காமலிருக்கக் காரணந்தான் எது? வறுத்துப் பொடிபண்ணி உன் மூளையில் ஒத்து. நோயாளி: எட்டுக்கோடி முஸ்லீம்களும், சீக்கியர்களும், கிறீஸ்தவர் களும், பௌத்தர்களும், சைவர்களும், சுயமரியாதைக் காரர்களும், சமதர்ம வீரர்களும், நிறைந்திருக்கும் இந்த நாட்டில் வெள்ளையர் போனபின்னர். சில வெண்டைக்காய் வைஷ்ணவர் கள் ராமராஜ்யம் ஸ்தாபித்து நடத்திவிடமுடியுமா? என்ற வியாதிக்கு மருந்து கொடுங்கள். வைத்தியர்: இது வெகு சாதாரண நோயாயினும் உன் மூளை இயற்கை யில் வலிவற்றிருப்பதால் இந்நோய் உன்னை இவ்வாறு குடுமியைப் பிடித்துக் கீழே அறைகிறது. இன்றைக்கு ராம ராஜ்யத்தையும் இராமனையும் துதிப்பவர்கள் வைஷ்ணவர்கள் மாத்திரமா? இராமாயணம் செய்தவனே வைஷ்ணவன் அல்ல என்பாரும் உண்டு. கவிச் சுவைக்காக ராமனையும், ராம ராஜ்யத்தையும் புகழும் சைவனைக் கண்டதில்லையா? சூத்திரன் தவத்தை வெறுத்தும் அதேராமனை அதே சூத்திரர் மெச்சவில்லையா. வருணாச்சிரம வெறிபிடித்த ஒரு மனிதனை மகாத்மாவாக்கி, அவர் சொல்லும் இராமராஜ்யப் பாட்டுக்கு இப்போது எந்தத் தொகுதிக்காரன் பக்கமேளம் வாசிக்காம லிருக்கிறான்? சுயமரியாதைக்காரர் ராமராஜ்யம் முட்டாள் தனத்தை அடிப்படையாகக் கொண்டது. அது வேண்டாம். வேண்டும் என்பவர்கள் விரிவிலா அறிவினர் என்று பிரசாரம் பண்ணி வருவதால் என்ன கெடுதி. பின்பு ஸ்தாபிக்க முடியாத ராமராஜ்யத்தை இப்போதே வேண்டாம் என்று சொல்வதால் என்ன பிழை? இந்த மருந்தை மண்டையில் பூசிச் சுயமரியாதைத் தணலில் காய்ச்சினால் உன் மூளை வியாதி பறக்கும். வியாதிக்காரன்: சமதர்ம ஆட்சி நடத்தச் சம்மதிப்பார்களா? என்று சு.ம. காரர் கேட்கிறார்கள், யார் சம்மதிக்க வேண்டும்? அரசாட்சியை யார் நடத்தப்போகிறார்கள்? வெள்ளைக்காரனுடைய இருப்புக் கையை உடைத்து விட்டபின் மநுதர்மத்தை எந்தக்கை பற்றப் போகிறது? தேர்தலில் நின்று வெற்றி பெற்றுக் குடியரசின் கூட்டத்தார் அரசாங்கத்தை ஏன் நடத்தக்கூடாது? என்பதாக ஒரு நோய் உண்டு. வைத்தியர்: பகுத்தறிவுக்குத் தடைபோட்டு வருணாஸ்ரமப் பித்த நோயை மக்கட்கு மேலும் மேலும் வளர்த்துக்கொண்டு போனால் பிறகு சமதர்ம ஆட்சி நடத்த அவர்கள் சம்மதிப்பார்களா? இந்தக் கேள்வியில் என்ன பிழை? நாகரிக தேசத்தான் நடுவில் புகுந் திருக்கும்போதே மகாத்மா பட்டமும், அவதாரப் பட்டங்களும், குதிக்கின்றன தம்பி. மேற்படி பட்டத்துக்குடையவர்கள் ஆட்சியில் பழைய பரமசிவங்களும் திருப்பாற்கடலில் பள்ளிகொண்டவரும் வருணாசிரமத்தைக் காக்கப் பூலோகத்தில் காளைமாட்டின் மேலும் கருட வாகனத்தின் மீதும் ஒடிவந்து விடுவார்கள் தம்பி. இந்த வெள்ளைக்காரன் போன பின் வேறு வெள்ளைக்காரன் மஞ்சள்காரன் வந்துவிட்டால் சாதி யுயர்வைக் காப்பாற்ற வேண்டியவர் இரண்டாவதொருமுறையும் சரிதையை விற்கவேண்டும் தம்பி! குடியரசு நாட்டை ஆளும் என்ற எண்ணத்தில்தான் தம்பி பல லக்ஷக்கணக்கான மக்கள் குடியரசின் கொள்கையை மேற்கொள்ளுகிறார்கள் தம்பி! அதற்குள் சுயநலத்திற்கு வழியில் பல என்று நினைத்துத்தான் சிலர் அதைவிட்டு ஒடி, இப்போதே வேலையை முடித்து விடுவோம் என்பவர்க்கு அடைப்பம் தூக்கி வருகிறார்கள் தம்பி! இந்த மருந்து சிறிது காரமானது. ஆயினும் வியாதிக்குத் தக்கது. கிண்டற்காரன் - புதுவை முரசு, 19. 10. 1931, 17 - 18 87. தண்டபாணியா? பிள்ளையா? N. தண்டபாணி (ஒருகாலத்தில் கோக்லே ஹால் வீரர்) மனித சமுகத்தைச் சேர்ந்தவர்தான். அவர் பிள்ளையா? அல்லது கண்ணாடி பீரோவா? வென்று தமிழ்நாட்டார் இதுவரையில் சந்தேகித்ததில்லை. செங்கல்பட்டு மகாநாட்டில் ஜாதிப்பட்டத்தைத் தாமும் விட்டுவிட்டதாக ஒலிபெருக்குக் கருவியில் உரக்கச் சத்தம் போட்டார். அவரது கம்பெனியையும் அந்தச் சமயத்தில் விளம்பரப்படுத்தினார். அதற்குப் பிறகு சிலகாலம் அதையே பின்பற்றி வந்ததுபோல் பாசாங்கு செய்தார். ஆனால் அதேசமயத்தில் காங்கிரஸ் கூட்டம், சுயமரியாதைக்கூட்டம், சைவக்கூட்டம், முதலிய எல்லாக் கூட்டங்களிலும் பஞ்சாமிர்தமாய் விளங்கினார். இப்போது தேசபக்தன் என்று ஒரு பத்திரிகையும் ஆரம்பித்திருக்கிறார். அதில் ஆசிரியர் பெயர் தண்டபாணி பிள்ளை என்று போட்டிருக்கிறார். இதுவரையில் காங்கிரஸ்காரர்கள் எல்லாம் அவருடைய அயோக்கியத் தனத்தை நன்குணர்ந்து விட்டார்கள். ஆனால் இரண்டொரு சுயமரியாதைக்காரர்கள் அவரை யோக்கியர் என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கும் இவருடைய புரட்டுக்கள் வெளியாகிவிட்டன. தமிழ்நாடு பத்திரிகையில் சுயமரியாதைச் சரித்திரம் எழுதின தண்டபாணிபிள்ளையின் தேசீய நாடகம், பொருள் சேகரித்த விதம் முதலிய சரித்திரங்களை முரசு வழியாய் அடுத்த வாரம் முதல் எழுதுகிறேன். அடுத்த வீட்டுக்காரன் - புதுவை முரசு, 26. 10. 1931, ப. 8 88. ஸ்ரீ பாலவிநோத சபா பொதுவாகத் தற்காலம் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டுவரும் நாடகமுறை திருத்தப்படவேண்டியதுதான். ஆயினும் பாலவினோத சபையினரால் நடைபெறும் நாடகத்தைப் பற்றி நாம் இன்றைய நிலையி லிருந்து கொண்டே நமது அபிப்பிராயம் தெரிவிக்கவேண்டுமாயின் அது கீழ்வருமாறு: பாலவினோதசபை தோழர் ச. சு. சங்கரலிங்கம் அவர்களை ஆசிரியராக உடையது. இவர்கள் உடுமலை முத்துசாமிக் கவிராயர் அவர்களின் சீடராவர். தோழர் சங்கரலிங்கம் தற்கால ரீதியில் நல்ல வர்ண மெட்டுக்கள் அமைந்த பாடல்கள் இயற்றுகிறார்கள். மிகச் சிறு வயதுள்ள பிள்ளைகளையும் நடை நொடி பாவனையிலும், பாடுதலிலும் வகுக்குவதில் அபாரத் திறமையுடையவர். இவர் தம்மையடுத்த பால்ய நடிகர்கட்கு நாடகத் திறமையை உண்டாக்குவதே யன்றி இயன்றவரை முயன்று அவர்கட்குக் கல்வியும் அளித்து வருவதை நாம் அறிந்து மகிழ்ச்சி யடைகின்றோம். இரண்டொரு நாடகங்கள் பார்க்க நமக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. இச் சபாவில் கதாநாயகியாக நடிப்பதற்கென்று இரண்டு இளஞ் சகோதரிகள் அமைந்துள்ளார்கள். சகோதரி தனுசம்மா ஸ்ருங்காரம், சோகம் முதலியர சங்கள் திகழும் வண்ணம், பொருத்த மான நடை நொடிகளுடன் நடிக்கும் திறமையுடையவர்கள். இனிய குரல், போதிய பாடுந்திறமை இவைகள் தனுசம்மாவிடம் அமைந் துள்ளன. தனுசம்மா கதாநாயகனாகவும் (ஆண் வேடம்) நடிக்கும் திறமையுடையவர். இளஞ் சகோதரி ரங்கநாயகி இயற்கை அழகு வாய்ந்தவர். கண்களில் பெருந்தன்மையும், சந்தர்ப்பத்தை விளக்கிக் காட்டும் திறனும் அமைந்திருக்கின்றன. சகோதரி சோகமுறும் பாவனை காட்டிப் பாடும்போது பார்ப்போர் மனதைக் கவர்ந்துவிடுகிறார். இனிய குரல், பாடும் திறன் நடைநொடித் திறன் அமைந்துள்ளன. மேடையில் நடிக்கும்போது, சொந்த ஹோதாவில் நாடகம் பார்க்க வந்துள்ள கனவான்களைப் பார்ப்பது முதலிய ஆபாச வழக்கமுள்ள அநேகப் பெண் நடிகர் இவ்விருவரிடமுள்ள பெருந்தன்மையுள்ள பார்வை, அடக்கம் முதலியவைகளைக் கண்டு திருந்தவேண்டும் கதா நாயகனாக நடித்து வரும் நம் இளஞ் சகோதரர் ராஜப்பா தமது கெம்பீரமான நடை, பார்வை, அநாயாசமாகப் பாடும் பாட்டுகள், தமக்கு இயல்பாய் அமைந்துகிடக்கும் அழகு ஒழுகும் முகம், புன்முறுவல் இவற்றால் பார்ப்போர் உள்ளத்தைப் பறித்துக் கொள்ளுகிறார். நடை நொடிகள் சந்தர்ப்பத்துக்கு ஒத்தனவாயும் அமைப்புடையவராயும் இருக்கின்றனர். வெறும் பாட்டை மாத்திரம் கற்றுக்கொண்டு வெட்கமில்லாமல் மேடையில் ஆடம்பர ராஜபார்ட்டென்று பகட்டிக் கொள்ளும் இக்கால சுப்பையாக்கள் ராஜப்பாவின் நடிகத் திறனைக் கண்டு கண்டு வீட்டிற் போய் நிலைக்கண்ணாடிக்கெதிரில் நடந்தும், பாவனை காட்டியும் பழகியாகவேண்டும். வசனம் பேசுவதற்கு மாத்திரம் நேரில் இராஜப்பாவிடம் பிச்சை கேட்டுத்தான் தீரவேண்டும். மற்றும் தோழர்கள் V. கோவிந்தன், சாமியப்பன் முதலியவர் களும் நல்ல நடிகரே. 7 வயதுள்ள இராமச்சந்திரன் பேச்சிலும், பாட்டிலும், நடை நொடிகளிலும் காட்டும் திறமை வியப்பை உண்டாக்குகிறது. ஆசிரியரை நாம் கேட்டுக்கொள்வது ஒன்று. சாமர்த்தியம் கல்வி, திறமையுள்ள மாணவர்கள் இருந்தும், நடைபெறுவிக்கும் நாடகங்கள் மாத்திரம் பொது மக்கட்கு நல்ல எண்ணங்களையும், பகுத்தறிவையும் உண்டுபண்ணத் தக்கவைகளாக இல்லை. ஆதலால், மூடப்பழக்க வழக்கங்களை ஆதாரமாய்க் கொண்ட பழஞ் சரித்திரங்களினின்று, விரைவில், பகுத்தறிவுக் கொத்தவைகளாக புதிய கதைகளில் இறங்கினால் நாட்டுக்கு நன்மையாயிருக்கும் தங்களுடைய பழஞ்சாதங்கள் (பழஞ் சரித்திரங்கள்) எத்தனை நாளைக்குப் புசிக்க உதவும்? நமது பிரதிநிதி - புதுவை முரசு, 2. 11. 1931, ப. 20 - 21 89. கடவுள் ருஷ்டியா? கடவுள் சிருஷ்டிக்கிறார்; எல்லாவற்றையும் எல்லாம் எப்போதும் கடவுளால் சிருஷ்டிக்கப்படுகின்றன. நண்பா! உன் வீட்டில் நேற்றுப் பிறந்த குழந்தையும் அவர் தான் கிருஷ்டித்தார். எவை உன் கண் காது முதலியவற்றிற்குப் புலனாகிவிட்டனவோ அவைகளின் பக்கத்தில் கடவுள் ருஷ்டி என்பதைக் கண்ணை மூடிக்கொண்டு எழுதி விடலாம். ஆனால், நீ ஒரு விஷயத்தில் தவறிவிடாதே! ஒன்று தோன்றிய பின்புதான் அது கடவுள் சிருஷ்டி! தோன்றாத முன்பு அது தோன்றுதற்கு முன்னறிவிப்பு, கடவுள் சிருஷ்டியில் இல்லை. தோற்று விக்குமுன் தெரிவிக்க வேண்டியது கடவுள் பொறுப்பாயிருந்தால் அதைத் தோற்றுவிக்கக் காரணத்தைச் சொல்ல வேண்டிய பொறுப்பும் கடவுளுக்கு ஏற்படும். அதன் பிறகு கடவுள் ஏற்பாட்டின் குட்டே வெளி வந்துவிடக் கூடுமல்லவா? உன் வீட்டிற் பிறந்த குழந்தை கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட தென்று மேலே சொன்னேனல்லவா? நீயும் ஆம் என்று நம்பினாய்? ஒரு பரீக்ஷகர் உன்னைக் கேட்ட கேள்விகட்குப் பதில் எழுதிவிட்டு அதை மாத்திரம் நான் தான் எழுதினேன் என்று கட்டாயம் சொல். அப்படியில்லாவிட்டால் நாளைக்கு நீ எதிர்பார்க்கும் உத்தியோகம். சம்பாதனை முதலியவைகட்கு முட்டு ஏற்படும் அல்லவா? நீ எழுதியது உனக்கு நன்றாய்த் தெரியுமாதலாலும் அதைக் கடவுள் எழுதினார் என்று சொல்ல மாட்டாய். மெய்யாகவே உன் வீட்டில் பிரசவ அறையில் கடவுளால் ஒரு குழந்தை ருஷ்டிக்கப்பட்டதல்லவா? முதன்முதல் உன் வீட்டில் பிரசவ அறையில் உன் குழந்தையைக் கண்டாய். அதை உன் மனைவியின் அண்டையில்தான் பார்த்தாய். அப்பிள்ளையை ஈன்றவள் யார் என்பதை நீயறிவாய். அவள் அதை ஈன்றெடுக்க உனது சம்பந்தம் இருந்தது என்பதையும் நன்றாய் அறிவாய்! ஆயினும், அக்குழந்தையை உண்டாக்கியவர் மாத்திரம் கடவுள் என்பதுதான் உனது நம்பிக்கை. சந்தோஷந்தான்! உன்னுடைய இந்த நம்பிக்கை எந்தச் சந்தர்ப்பத்திலும் கிறுங்காதிருக்கவேண்டும். ஆனால், அதே பிரசவ அறையில் இன்னொருநாள் தகவலில்லாமல் இன்னொரு பிள்ளையை நீ கண்டாயானால், அது மற்றொருவன் பெற்றதென்றும், வளர்க்க முடியாமையால் அவன் என் தலையில் கட்ட நினைத் திருக்கிறான் என்றும், நான் இதைப் பெறவில்லை யென்றும் நீ சொல்லுவாய் என்பதிற் சந்தேகம் இல்லை. இது மாத்திரமா? கடவுள் என்பதாக ஒன்று வந்து உன் காதில் அந்தப் பிள்ளை நமது சிருஷ்டி ஆகையால், அதை நீ ஒப்புக்கொள் என்று சொன்னாலும் முடியாது முடியாது அது நான் பெற்றதல்ல. நான் பெற்றது எனக்கிருக்கிறது என்றுதான் சொல்லுவாய் என நம்புகிறேன். ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தில் நீ அப்படிச் சொல்லுவது சரியாக இருக்கலாம். ஏனென்றால், உன்னால் ஏற்பட்ட பிள்ளைக்கு உன் சொத்துச் சேர வேண்டியதும் உன் பிள்ளைக்காக உழைப்பதில் நீ குஷால் அடைவதும் ஞாயம். ஆனால் ஒன்று! நீயும், உன் மனைவி யும் உண்டாக்கிய உனது பிள்ளை, கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டது என்று நீ முன், நம்பியதானது இவ்விடத்தில் ஆட்டங் கொடுக்க வில்லையா? ஆனால், உன் சொத்து வாதீனம் ஆகிய நன்மையைப் பாதிக்காத முறையில் மேலோடு உன் பிள்ளையைக் கடவுள் சிருஷ்டி என்று நீ சொல்வதில் உனக்கு ஒன்றும் ஆக்ஷே பனையில்லை. நீயும், உன் மனைவியும் உண்டாக்கிய பிள்ளையைக் கடவுள் உண்டாக்கியது என்று நீ தங்கு தடையின்றிக் கூறுவதற்குப் பிரதான காரணம் மற்றொன்று உண்டு. நீ தந்த பிள்ளையை இன்னொருவன் தந்தான் என்று இன்னோர் அறிந்த மனிதனைக் குறிக்கும்போது உனக்குக் கோபம் பொங்குவதும், அதை நீ மறுக்க முற்படுவதும் ஞாயம்! ஆனால் கடவுள் தந்தார் இந்தப் பிள்ளையை, என்று அறியாததான ஒரு கடவுளைப் பற்றிக் கூறுவதால் கோபமில்லை; நீ அதை மறுக்க முற்படவேண்டுவதில்லை. ஏன்! கடவுள் என்பது க-ட-வு-ள் என்பது மாத்திரமே என்பது உனக்குத் தெரியும். ஒரே ஒரு கடைசி வார்த்தை! எதையும் படைத்த கடவுள், மக்களைப் படைத்த கடவுள், உன் பிள்ளையைப் படைத்த கடவுள், சொன்னாலும், சொல்லாவிட்டாலும் சகலத்தையும் சிருஷ்டித்துக் கொண்டேயிருக்கும் கடவுள் இருக்கிறாரல்லவா? அவர் நீயும், உனது மனைவியும் சம்பந்த மற்றிருக்கும் காலத்திற்கிடையில் உன் வீட்டுப் பிரசவ அறையில் ஒரு பிள்ளையைச் சிருஷ்டித்துப் போட்டு விடுவாரேயானால், அதே நேரத்தில் என்னைக் கூப்பிடு; அப்போது தான் கடவுள் ருஷ்டியா என்ற தொடர் மொழிக்கு அர்த்தம். கடவுள் மனிதரின் ருஷ்டியா? மனிதர் கடவுளின் ருஷ்டியா - என்ற இரண்டிலொன்றை நான் நிச்சயித்துவிட உத்தேசம். - புதுவை முரசு, 16. 11. 1931, ப. 9 - 10 90. சுந்தரவிநாயகர் கண்ட்ராக்டர் 13.11.31இல் சுந்தர விநாயகர் கண்டிராக்டர் எனக் கையொப்ப மிட்டு வெளிவந்த நோட்டீஸின்படி அன்றிரவு சென்னை பால விநோத நாடக சபையார் பார்ஸி லலிதாங்கி நாடகம் நடத்தினார்கள். அதில் பிரதான ஆக்டர் என்று முன்னதாகவே தனி நோட்டீஸால் படாடோபம் செய்யப்பட்ட பபூன் ஷண்முகம் அன்றிரவு நடைபெற்ற நாடகத்தில் இரண்டொருமுறை பாட்டுப் பாடிவிட்டு, மேலும் பாடாமலிருந்து விடுவதற்காக ஏதேதோ சில அசந்தர்ப்பத்தைத் தெரிவித்தாராம். அது அடுத்தநாளும் தனது பாட்டைக் கேட்க வருவதற்கான தந்திர வார்த்தையாகும் என்பது கண்கூடு. அவர் அன்றிரவு பூதம், நட்டுவன், திருடன் ஆகிய மூன்று வேடந் தரித்தாராம். இவ் வேடத்தால் எதிர்பார்ப்பது எப்படிப் பட்ட பாட்டு, எப்படிப்பட்ட வசனம் என்பதை சில தற்கால ஆபாச நாடகம் பார்த்துள்ள நண்பர்கள் அறிவார்கள். இந்த ஷண்முகம் பாட்டைக் கேட்பதற்காகவே அன்று அதிக ஜனம் வந்திருந்தார்கள். அதற்குமுன் சபையார் ஷண்முகமில்லாமல் நடத்தியபோது ஜனம் போகவேயில்லை. இந்த அழகில், இந்த ஷண்முகம் இரண்டு ஒன்று பாடிவிட்டு, அடுத்தநாளைக்கும் தன் பொருட்டுப் பணத்தை எடுத்துக்கொண்டு நாடகம் பார்க்க வரட்டும் என்று நினைக்கிறார். ஷண்முகத்தின்மேல் குற்றமொன்றுமில்லை. திருந்தாத ஜனங்கள் மனோநிலை முட்டாளுக்கும், அயோக்கி யனுக்கும் வசப்படுவது சகஜமானால் ஷண்முகத்தின் இத் தந்திரம் பலிக்கும் என்பதற்குக் கேட்கவேண்டுமா? ஆனால் இந்த ஆபாச முறை புதிதல்ல. தூங்கியவன் துடையில் உணர்ச்சி வரும்வரைக்கும் கயிறு திரிக்கப்பட்டே வரும். இதில் நூதனமென்னவென்றால் காசுக்கடை சுந்தரவிநாயகர் தனக்குக் கோயில் பெரிதாகக் கட்டிக்கொள்ள புகையிலைக்கடை குத்தகை எடுக்கச் சொல்லிக் கீழ்க் குத்தகை விடும்படி ஏற்பாடு செய்தும், போலீசுக்கு அண்டையில் கூட்டம் வைத்து அநேகருக்குப் பலவிதமாகச் சொல்வித்துப் பணத்திற்குக் கையொப்பம் வாங்கும்படி செய்தும், சாமியின் பேர் சொல்லி மக்களைக் கொடுமைக் குள்ளாக்கா திருக்கச் செய்யும் சுயமரியாதைக் கூட்டம் நடவாதிருக்கும்படி குவர்னருக்கு விண்ணப்பம் எழுதச் சொல்லியும், அவ்விண்ணப்பம் குப்பையில் தள்ளப்பட்டதற்கு மானம் ஈனமின்றி முணுமுணுக்கச் செய்தும், வந்ததெல்லாம் ஒருபக்கம் இருக்க, சுந்தரவிநாயகர், தமக்குள்ள கௌரவங்கட்கு அடுக்காத விதமாக டிராமா கண்டிராக்ட் எடுக்கிறார். அந்தக் கண்டிராக்டில் பணம் சம்பாதிக்க முடியாமல், பபூன் ஷண்முகத்தை - அடடா என்ன யோக்யதை அதிலும் பபூன் ஷண்முகத்தை - அழைத்துவந்து அந்தப் பபூன் ஷண்முகம் பாட்டினால் மக்கள் திருந்துவதுமல்லாமல் பணமும் சேரட்டும் என்று நினைக்கிறார். 17.11.31 இலும் பபூன் ஷண்முகம் நாடகந்தான் அவர் நடத்த இருக்கிறார். இதனால் வாசகர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன வெனில், விநாயக புராணம், விநாயக பராக்ரமம் முதலிய நூற்களிலும், காணாபத்யம் என்ற கணபதியேயாம் என்ற பெருநூலிலும் விநாயகர் என்பதாகவும், அப்படி இப்படி என்பதாகவும் எழுதியவனும் மனிதன்தான். அக்காலம், அந்த மனிதன் யோக்யதைக்குத் தக்கபடி அப்போது விநாயகரைப்பற்றி அவ்வாறு சொல்லிவைத்தான். இப்போது பபூன் ஷண்முகத்தைக் கொண்டுவந்து நடத்துவிக்கும் டிராமா கண்ட்ராக்டராக விநாயகரை எழுதியவனும் மனிதன்தான். இந்த மனிதனுக்குள்ள யோக்யதை, அளவு, எண்ணம் இவற்றின்படி தானே இப்போது எழுத முடியும். இவ்வாறு மனிதனின் நலத்துக்கு மனிதனின் யோக்யதையின்படி கடவுள் பெயர் எடுத்தாளப்படுவ தன்றி, இரும்புக் கடை பிள்ளை யாருக்குப் போட்டியாக அடுத்த வீதியில் காசுக்கடைச் சுந்தர விநாயகர் கோயில் இருக்கத்தான் வேண்டும் என்று கடவுள் எண்ணி அங்கு வந்து உட்கார்ந்துகொண்டு, காசுக்கடைப் பெரிய மனிதரைப் போலீ பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்குமா என்பதை அறிஞர்கள் யோசிக்க வேண்டுகிறோம். நாம் அறிஞர்களை யோசிக்கும்படி வேண்டுகிறோமே ஒழிய பாட்டர்களிடம் பங்கு வாங்கும் தொண்டர்களுக்காவது, முட்டாள்களுக் காவது நாம் கூற வரவில்லை. நிற்க, தீபாவளியன்று (9. 11. 31) மணிவாசகன் என்ற நாடகம், உள்ளூர்ப் பிள்ளைகளால் (வாசகசாலை ஏற்படுத்தும்பொருட்டு) நடைபெறும் என்பதாகத் துண்டு நோட்டீசுகளும், வால்போடர் களும், காணப் பட்டன. அன்றைக்கு அது நடைபெறாதபடியும், சுந்தர விநாயகர் கண்ட்ராக்ட் நடைபெறும்படியும் விஷயத்திற்குக் காரணம் பெரியடைப் போலீதான் என்று வதந்தி. ஏற்கெனவே, பெரிய கடைப் போலீ சித்தங் குடிசை விஷயமாக வியாபாரிகளிடமும், மற்றவர்களிடமும் பகிரங்கமாய்ப் பணந் தண்டியதும், சித்தங் குடிசையார்ப்பாட்டம் பண்ணியதும் அனைவருக்கும் தெரியுடம். சித்தங்குடிசை விஷயத்தில் மக்கள் பணம் தண்டப்பட்டு, மக்களை மோக்ஷத்திற்கு அனுப்பிய அடுத்த நிமிஷத்திலிருந்தே சுந்தர விநாயகர் கைங்கரியம் கவனிக்கத் துவக்கப்பட்டிருக்கிறது. சர்க்கார் முளையிலேயே கிள்ளியது போதாதென்று நாம் நினைக்கிறோம். இன்னும் துளிர்க்கிறது. புதுவையின் தரித்திர நிலைக்குப் பரிவுகாட்ட வேண்டிய பொறுப்புச் சர்க்காருக்கு இல்லாவிட்டாலும், கடைத்தெரு கடவுள்பேரால் கொள்ளையடிக்கப்படுகிறதென்றே நாம் கூறுவோம். ஏதோ நாமும் ஊர் நிலையில் பொறுப்புடன்தான் குட்டாகச் சொல்ல முன்வந்தோம். புதுவை முரசு விஷயமாக எவரிடம் சிபார்சு செய்யப்படுகிறதோ அவரிடமிருந்தே ஆதரவுகளின் காப்பிகள் நமக்குக் கிடைத்துள்ளன; கிடைக்கும்; இதன் பொறுப்பாளி திருந்தவேண்டும்; பசப்பில் இந்தக் காலத்துப் பெரிய மனிதர் முழுதும் மயங்கிவிடமாட்டார்கள். - புதுவை முரசு, 16.11.1931, ப. 20 - 21 91. ஆதி திராவிடர்கட்குச் சோதனைக் காலம் பத்தாண்டுக்கு ஒருமுறை சீர்திருத்தம் வழங்குவதென்ற தமது உத்தேசத்தின்படிதான் இங்கிலீஷ்காரர் இப்போது இந்தியாவுக்கு ஏதோ சீர்திருத்தம் வழங்க முடிவு கட்டியிருக்கிறார்கள். காந்தி கோஷ்டியார் என்னும் ஏமாந்த கூட்டமும், அக்கூட்டத்தை நடத்தும், பணக்காரர், வருணாரமக்காரர், ஏழை மக்களின் சுதந்தரத்தைக் கொள்ளையடித்து இன்னும் அதை நிலைநிறுத்தக் கொட்டாவி விடும் தலைவர்களும், காங்கிரஸின்பேரால் இத்தனை நாள் போட்ட கூச்சல்கள், இங்கிலீஷ் காரருக்கு எவ்வளவு தூரந்தான் நெருக்கடியை உண்டாக்கின வென்றால், அவைகளால் இங்கிலீஷ் காரருக்கு ஐந்தாறு தந்திர வார்த்தைகள் செலவாயின என்றுதான் சொல்லவேண்டும். விஷயம் இப்படித்தான் முடியும் என்பதைத் தோழர் காந்தி தமது இயக்கத்தை இரண்டாவது முறையாகத் துவக்கிய சில நாட்களுக்குள் தெரிந்துகொண்டார். நாட்டில் ஒவ்வொரு மனிதனும் தன் குடுமியில் கட்டிய கயிற்றின் மறு முனையை மதம், ஜாதி, கடவுள் என்ற குட்டிச் சுவர்களில் ஆணியடித்து முடிந்துகொண்டு அவைகள் ஆட்டும்படி ஆடும் நிலையிலுள்ள மனிதர்களைக் கொண்டு, அனைவரும் மன மொழி மெய்களால் ஒன்றுபடுவதன் மூலமே பெறத்தக்க சுதந்தரத்தை யடைய முடியாது என்பதைத் தோழர் காந்தி கண்டுகொண்டபின்னும், தமது ஓட்டைக் காங்கிரசை முன்னோக்கித் தள்ள நினைத்ததற்குக் காரணம் நாட்டின் கேவல நிலைதான் என்று நாம் கூறுவோம். இந் நாட்டில்தான் கொள்கையென்பது ஒன்றுமே யின்றி எடுத்தார் கைப் பாலகர்போல் கூத்தாடும் ஐயாமுத்துக்களும், மாசிலாமணிகளும், கண்ணப்பர்களும், தண்டபாணிகளும், சரச விலைக்குக் கிடைக்க முடியும். இந்த வருணாரமதாபகரான காந்தியின் ஜாலம் இந்த இருபதாம் நூற்றாண்டில் இத்தனை பெரிய உலகத்தில் இந்தியா தவிர பிறநாட்டில் எங்கும் செல்லாது. அதிலும், சுதந்தரத் துவசம் பறக்கும், நாகரிக தேசங்களிலோ எனில், இவருடைய வருணாசிரம மயக்கத்திற்கு மாப்ளா மூடுவண்டி கதிதான் கிடைக்கும். பம்பாய் வியாபாரிகளும், ஏது இனிமேல் தாங்கள் அந்நிய ஆடையைத் தருவிக்காதிருக்கமுடியாது என்ற நிலையை யடைந்தார்கள். தொழிலாளிகள், வியாபாரிகள் அனைவரும் இனிமேல் காந்தீயம் நீடித்தால் மீதியிருக்கும் உயிரும் நஷ்டம் என்று கூச்சலிட்டார்கள். இந்தச் சமயத்தில் வட்டமேஜைப் பிரச்சினை பிறந்தது. அந்த வட்டமேஜைப் பிரச்னையில் குறிப்பிடத் தக்க விஷயம் என்னவெனில், இங்கிலீஷ்காரர் தாம் கொடுக்க இருக்கும் சீர்திருத்தத்தைக் கொடுக்கும் கையோடு கையாய்க் காந்தியார் காங்கிர யோக்யதையை உலகத்திற்கு விளக்கிக் காட்டிவிட அவர்கள் நினைத்ததேயாகும். அதனால், தோழர் காந்தியை வட்ட மேஜைக்குக் கொண்டுபோகவேண்டும் என்ற கருத்தை அவர்கள் வெளிக்காட்டிக் கொண்டார்கள். அதே சமயத்தில் காங்கிர பொம்மை வைத்து விளையாடும் கேலிக் காந்தியைப் பார்க்க நினைத்த சில வெள்ளைக்காரரும், பகுத்தறிவுக்கு விரோதம் கடவுள் பூச்சாண்டி என்பவைகளில் தம்மைப் போன்றவர் என்ற ஒற்றுமை கருதிய சில பாதிரிகளும், காந்தி இங்கிலந்து வரட்டும் வரட்டும் என்று கூச்ச லிட்டனர். அவ்வளவுதான் தாமதம், காங்கிர கூலிப் பத்திரிகைகள், காலணாக்கள், அனைத்தும் ஒன்று திரண்டன. இங்கிலீஷ்காரன் திண்டாடுகிறான். இப்போது மகாத்மாவை அவன் சரிப்படுத்தியாக வேண்டும், இங்கிலாந்தும், உலகமும், மகாத்மாவை ஆதரிக்கின்றன. மகாத்மா ராமராஜ்யம் தாபிக்கப் போகிறார். அதில் ராமன் தனது மனைவியைத் தேடுவதற்கு நாங்கள் எல்லாம் வாலைச் சுருட்டிக் கொண்டு எட்டுத் திசையும் ஓடுவோம் என்று கத்தின. சுயமரியாதைக் கட்சியிலிருந்தவரிற்சிலர்கூட இந்தச் சமயத்தில் நாம் நல்ல லாபத்தை இழந்துவிடக்கூடாதென்று, லால்குடியில் கூட்டம்போட்டு, மகாத்மா காந்தி எங்கள் கண்ணுக்கு அந்தக் காலத்து மகரிஷியாகவே தோன்றுகிறார் என்று சொல்ல முன்வந்தார்கள். தோழர் காந்திக்கு எழுந்தது மகிழ்ச்சி! ராமராஜ்யத் திற்கு ஒரு முனயாகிய அநுமார்வால் கைக்கு எட்டிவிட்டதாகவே நினைத்துவிட்டார். இதைப் பரீக்ஷிக்க எண்ணி இங்கிலீஷ்காரர் அப்படிச் செய்யவேண்டும் இப்படிச் செய்யவேண்டும் என்றார். நிலைமை கொடிமுறுக்கு ஏறி அறுந்து விட்டதைப் பார்த்தார். வட்டமேஜைக்குப் போக மறுக்க நினைத்தார். நாட்டின் நிலை கை தாங்காது என்பதும் தெரிந்தது. பழியை வட்ட மேஜையின்மேல் போட்டுவிடலாம் என்றும், இங்கிலாந்தில் தமக்கு நடக்கவிருக்கும் மரியாதைகளைக் காட்டி முலீம்களையும், தாழ்த்தப்பட்டவர்களை யும் கையிற் போட்டுக்கொண்டு வந்துவிடலாம் என்றும், அதனாற் பிறகு தமது எதிர்காலம் ஒழுங்குபடும் என்பதை உத்தேசித்தும் வட்டமேசைக்கு எழுந்தருளினார். அங்கு இவருக்குச் சிறிது நேரம் கிடைத்த உபாத்திமைத் தனத்தில் இவர், வலுத்தவனுக்கு 10 மார்க்கும், இளைத்தவனுக்கு ஸைபரும் கொடுத்த பெருந்தன்மை உலகத்துக்கு வெட்டவெளிச்சமாயிற்று. சமரசம் பேசினார். அந்த வலையில் முசல்மான்களும், சீக்கியரும் விழுந்தார்கள். அதுபோது தாழ்த்தப்பட்டவர்கள் பிரதிநிதியாகிய தோழர் அம்பேட்கார் அஞ்சவேண்டிய நிலையிலிருந்தார். ஆயினும், அவர் தற்போது இந்தியாவை ஆளுவோர், சங்கரன் சார்பாக நின்று புத்தரைப் படுகொலை செய்தவர்கள் என்றாவது, சம்பந்தன் சார்பில் நின்று க்ஷமணரைத் தூக்கியவர்கள் என்றாவது நினைக்காததால், காந்தியார் காட்டிய பயத்துக்கும் பயப்படாமல் தனித் தொகுதி என்ற கோட்டுக்கு ஒருநூல்கூட நகராமல் திடச் சித்தத்தோடு நின்றார். இப்போது வட்ட மேஜையால் காங்கிர எதிர்பார்த்தது விளக்கெண்ணெயும், கற்றாழை மடலுமாய் விட்டதைக் காங்கிர தொண்டரடிப் பொடியாழ்வார்கள் தெரிந்து அவசரம் அவசரமாக ஓர் முறையைக் கையாளத் துவக்கி யிருக்கிறார்கள். அந்த முறையால் ஆதித் திராவிடர்களைத் தட்டிக் கொடுத்து கையிற் போட்டுக்கொண்டு, இங்கிலீஷ்காரனிடம், சட்ட மறுப்புச்செய்து அதிகப்படியான சுதந்தரம் பெற்றுப் பிறகு ஆதித் திராவிடர்களை ஆதித் திராவிடர்களாகவும், பார்ப்பனர்களையும், முதலாளிகளையும் அந்தந்த நிலையிலும் வைப்பதற்கென்றே உபயோகிக்க ஆரம்பிக்கி றார்கள். அந்தமுறை துவக்கியாய்விட்டது. இனி, எங்குப் பார்த் தாலும், ஆதித் திராவிடர்க்கு ஆதரவு ஆதரவு என்று காங்கிர காரர்கள் கத்துவார்கள். இந்தக் கத்தல்கள் அனைத்தும், வருணாரமக்காரர்க் கூட்டம் என்ற ஆற்றின் மேற் பரப்பே என்றும், இந்த ஆற்றின் உள்ளோட்டம் தங்களைப் பழி வாங்குவதே என்றும், ஆதித்திராவிடர் - தாழ்த்தப்பட்ட தோழர்கள் உண்மையறிந்து தமக்கேற்பட்டிருக்கும் இப்பரீக்ஷையில் தேர்ச்சி யடைவதைப் பொறுத்தே அவர்களின் முன்னேற்றம் உண்டாகும் என்பது நம் கருத்தாகும். ஜாதி ஒழியவேண்டும். அதை ஒழியாது மேல் நின்று காத்துவரும் மதம் ஒழியவேண்டும். அந்த மதத்தைச் சொன்னதாகக் கூறும் கடவுட் கொள்கை நிர்த்தூளியாகவேண்டும். இந்த நிலை ஏற்பட்டால்தான் இந்நாட்டில், ஒரு மனிதன் பிறப்பால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று சொல்வது ஒழியுமேயல்லாது கரும்புப் பாட்டால் காப்பிக்குச் சர்க்கரை கிட்டுமா என்பதை யோசிக்கவேண்டுகிறோம். - புதுவை முரசு, 7. 12. 1931, ப. 14 - 16 92. கோவை அய்யாமுத்துக் கவுண்டனுக்கு அறிவிப்பு (bkŒahŒ¥ பவுண்டன் vGâaJ) அன்பனே! யான் உனது தேச பக்தியையும், சுயமரியாதை உணர்ச்சியையும் பல்லாண்டாய் உன்னுடன் பழகி வந்த பழைய சினேகிதனானதினால் நன்கறிவேன். அவைகளை ஈண்டு விவரிக்க வேண்டிய அவசியம் இப்பொழுதில்லை. சமயம் வாய்ப்பின் தெளிவாய்த் தெரிவிப்பேன். ஆனால் கடந்த சில மாதங்களாய் தேசீய வெறிகொண்ட ... போல் நடித்து நீ பலகாலும் போற்றிப் புகழ்ந்து வந்த தோழர் ஈ.வெ. இராமசாமியைத் திட்டிக் கொண்டு சுயமரியாதைக் கொள்கையைப் போற்றுவதுபோல் காட்டினாய். இப்பொழுதோ தேசீய சுயமரியாதை மஹாநாடு என்ற ஓர் கூட்டங் கூட்டி அதில், பூனை தன் கண்ணைமூடிப் பாலைக் குடிக்கும்பொழுது உலகெலாம் இருட்டாய் இருக்கிறது என்று எண்ணியதுபோல் நீ உளறிக்கொட்டிவிட்டாய். நீ சுயமரியாதை இயக்கத் தொண்டனாய் நடித்த காலத்தில் தேச பக்தர் உன்னிடம் காங்கிர இயக்கம் நாட்டிற்கு இப்பொழுது அவசியமா? அல்லது சுயரியாதை இயக்கம் இப்பொழுது அவசியமா? என்று வினவியபொழுது நீ அவர்களுக்குப் பத்திரிகைகள் மூலமாயும் நூல்களின் மூலமாயும் நம் நாட்டிற்குச் சுயமரியாதை இயக்கம்தான் சுயராஜ்யத்தைக் கொண்டுவரும் என்று தகுந்த ஆதாரம் காட்டி பதிலிறுத்தாய். இப்பொழுது உனக்கு ஏற்பட்ட சுயநலம் என்னும் கொடிய வியாதியால் பழைய ஞானம் மங்கி உன்னிடம் தேச பக்தர்கள் கேட்ட அதே கேள்வியை விதரித்து லாலுகுடி மக்கள் கூட்டத்தில் உளறிக் கொட்டி விட்டதாகப் பத்திரிகை மூலமாய் அறிகின்றேன். தோழர் ஈ.வெ. இராமசாமியோ இதர சுயமரியாதைத் தொண்டர்களோ, வேறு அன்பர்களோ உன் கூச்சலைக் கண்டு அஞ்சுவார்களென்றோ உன் கூப்பாட்டினால் சுயமரியாதை இயக்கத்திற்கு எவ்வித மாசும் வந்தெய்தும் என்றோ எவரும் கருதார். சூரியனைப் பார்த்துச் சுணங்கன் குரைத்தால் சூரியனுக்கு ஏதாவது குறைவுண்டாகுமோ? உண்டாகாது. இதற்குமுன் சுயமரியாதை இயக்கத்தை ஒழித்துவிட முன்வந்த பாவலர், முதலியார், அடிகள், செட்டியார், நாயுடு, பிள்ளை முதலியோர் இப்பொழுது எங்குள்ளார்? அவர்களின் ஆதிகச் சங்கமும் சைவக் கழகமும், பத்திரிகைகளும் எங்கு எவ்வாறிருக்கிறது என்பதை நன்கறிந்தவர்கள் உன் போலிக் கூச்சலைக் கண்டஞ்சுவார் களோ? பனங்காட்டு நரி வீண் சிலுசிலுப்பிற்கஞ்சுமோ? அஞ்சாது என்றாலும் பொது ஜனங்கள் நீ முன்னர் எழுதிய கட்டுரையின் தன்மையையும் இப்பொழுது நீ பேசும் தன்மையையுமுணர்ந்து இப்பொழுது நீ போடும் கூச்சல் தேசபக்தியின் காரணமானதா? அல்லது சுயநலத்தின் காரணமானதா? சுயமரியாதை இயக்கத்தைத் திட்டி உன் பெயரை அதிகமாய் விளம்பரஞ் செய்துகொள்ளலாம் என்ற எண்ணமா? என்பதை ஆராய்ந்தறிந்துகொள்ளும்படி உன் வார்த்தைகள் சிலவற்றை ஈண்டு தருகிறேன். நீயும் ஒருமுறை ஆராய்ந்துபார். ஆராய்ந்து உன் தவறுகளைக் கண்டு வருந்தி நீ அறிவீனமாயும், அயோக்கியத்தனமாயும் மனத்துட்கொண்ட சுயநலத்தால் சுயமரியாதை இயக்கத்தையும் தோழர் ஈ.வெ. இராமசாமி யையும் தமிழரசு எனும் போலிப் பு.ம. பத்திரிகையில் எழுதிய நிந்தனையான, கட்டுக் கதைகளான கட்டுரைகளுக்காகவும், லாலு குடியர் கூட்டத்தில் கோவைப் போக்கிரியாகிய நீ கடைசியாய் முடிப் புரையில் என் புன்மொழிகட்கு நீங்கள் செவி சாய்த்திருந்ததற் காகப் பின்னரும் வந்தனம் செலுத்துகிறேன் என்று கூறியபடி உன் புன் மொழிகட்காக சுயமரியாதைத் தோழர்களிடம் பகிரங்கமாய் மன்னிப்புக் கேட்பாயேல் உன்னை ஒரு மனிதன் என இனி மக்கள் மதிப்பர். அன்றேல் உன்னையொரு ... ய் என்று மதிக்கும் என்பது திண்ணம். தோழர் அய்யாமுத்துக் கவுண்டனின் முன்பின் முரணான கூற்றுக்கள் மனிதரிலே அபூர்வ மனிதர்களுமிருக்கிறார்கள். உல கெல்லாம் புகழ்ந்தாலும் டம்பம் ஒரு சிறிதுமின்றி உண்டியுடையாகிய வற்றைச் சுருக்கிச் செல்வத்தையும், சுகபோகத்தையும் துறந்து பிற மனிதருக் குழைப்பதே தங்கள் வாழ்க்கையின் நோக்கமாகக் கொள்வர் ... இத்தகைய ஒரு ரிஷியை நாம் நமது வாழ்நாளில் கொண்டிருக்கிறோம். அவரே மகாத்மா காந்தி. காந்தியை வேஷதாரியென்றும் மக்கள் வாழ்வைப் பாழ்படுத்த வந்த காதகன் என்றும் சுயமரியாதை ராமசாமி ஒருவரே காய்கிறார். ஸ்ரீ ராமசாமியின் கண்களுக்குக் காந்தியார் ஒரு கபட புருஷனாகக் காணப்படுகிறார். இத்தகைய மனோபாவமுடைய ஒருவர் இந்நாட்டின் சுயமரியாதைக்கு வெட்கப்படுகிறாராம். வெட்கம் வெட்கம் (அய்யாமுத்துவின் லாலுகுடி பிரசங்கம், தமிழ்நாடு. 27.10.31). தீண்டாமை தீண்டாமை என்று ஓலமிடும் காந்தியடிகள் தீண்டாமை நீங்குவதற்காகக் காரியத்தில் எதைச் சாதித்துவிட்டார்? என்று அறிய ஆசைப்படுகிறேன். அவர் தமது சபர்மதி ஆசிரமத்தில் உயர்ந்த சாதிப் பையன்களையும், பெண்களையும் சேர்த்துக் கொள்ளாமல் தீண்டாத வகுப்புப் பிள்ளைகளில் நூறு பேரையாவது கூட்டித் திரட்டி அவர்களுக்குக் கல்வி ஒழுக்கம், கைத்தொழில் ஆகியவற்றைப் பயிற்றுவித்திருப்பாராயின் அவர் உண்மையாகவே மகாத்மாவாயிருப்பார் என்பதில் ஐயமில்லை. ஆனால் அவர் வாயால் தீண்டாமை விலக்கை ஓதிக் கொண்டும், வயிற்றில் வர்ணாசிரமக் குரங்கைக் கட்டிக்கொண்டு மிருப்பதால் காந்தியைப் போன்ற பைத்தியக்காரர் வேறொருவருமில்லையென வரப்போகும் சந்ததியார் எள்ளி நகையாடுவர் என்பதில் ஐயமில்லை. (ஐயாமுத்து எழுதிய மேயோ கூற்று மெய்யா, பொய்யா? பக்கம் 73) எல்லா நாடுகளிலும் வர்ணப் பூசலும் வகுப்புப் பூசலும் உயர்வு தாழ்வு என்ற கொடுமையும் மதப் பிரிவுகளும் துவேஷங்களும், போர்களும் சடங்குகளும் மற்றும் பல தொல்லைகளுமிருந்து வந்திருக் கின்றன. அப்படியிருந்த எல்லா நாடுகளும் தன் அரசு செலுத்தி இன்புற்று வாழ, இந்தியா என்ற நீர் வளமும் நிலவளமும் மற்றெல்லா இயற்கை வளமுமுள்ள தேசத்தில் பிறந்த முப்பத்தாறு கோடி மக்கள் இன்று அந்நியவாதிக்கத்தின் அவதிப்பாட்டால் அடிமையுற்று வறுமை யுற்று, வலிமையற்று, அவமரியாதையுற்றுக் கிடக்க நாம் சகித்துக் கொண்டிருக்க வேண்டுமென்று சு.ம. ராமசாமி கூறுவது எனக்குப் புலனாகவில்லை. நமது மூடத் தனங்களும் அடிமை வாழ்வும் நமது உணர்ச்சியை இன்று பெருக்கிவிட்டன. (அய்யாமுத்துவின் லாலுகுடி பிரசங்கம்). நமது சொந்த நாட்டிலே நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்க ளாகவும் எதிரிகளாகவும் நமக்குள் அன்பின்றி ஒற்றுமையின்றி சகோதர பாவனையின்றி வாழச் செய்யும் மத சம்பிரதாயங்களும் சாதிக்கட்டுகளும் மூடப் பழக்கவழக்கங்களும் இருக்கும் வரையில் நாம் பிற நாட்டாரைப் போன்று தலை தூக்கப் போவதில்லை என்பது திண்ணம். சுயராஜ்யம் நமது பிறப்புரிமை என்பதை யாரும் மறுக்க வில்லை. ஆனால் சுயராஜ்யத்தைப் பற்றி நாம் சிந்திக்கவும் யோக்கியதையற்றவர்களென்பதை சரித்திரம் நிரூபித்துவிட்டது. (அய்யாமுத்து எழுதிய மேயோ கூற்று மெய்யா பொய்யா? என்னும் நூலின் 82ஆம் பக்கம் பார்க்க) ... நீங்கள் சுயராஜ்யம் எங்கள் பிறப்புரிமை என்றும் சமூக ஊழல்களுக்கு ராஜீயப் பூச்சுப் பூசுவது போக்கிரித் தனம் என்றும் சுயராஜ்யம் வந்தபின் எல்லாம் சரிப்படுத்திக் கொள்ளுவோம் என்றும் பைத்தியம் தீர்ந்தபின் கல்யாணம் செய்வதா? கல்யாணம் செய்தபின் பைத்தியம் தீருவதா? என்று நீங்கள் பிதற்றித் திரிவதால் சுயராஜ்யம் வந்துவிடாது. (மேயோ கூற்று மெய்யா பொய்யா? பக்கம் 85). அடிமை நிலையிலிருந்துகொண்டு அறிவை வளர்த்த முடியாத அந்நியவாதிக்கத்தை யொழிக்க நம்முள் ஒற்றுமை யுணர்ச்சி ஏற்பட வேண்டும். அறியாமை விலகி அறிவு வளர்ச்சி ஏற்பட்டபின்னரே ஒற்றுமையுணர்ச்சி ஏற்படுமென்று சுயமரியாதை இயக்கத்தார் கூறுகிறார்கள். இதை அநுபவம் பொய்ப்பித்துவிட்டது. மற்றும் நாம் அறிவு வளர்ச்சி பெறும் வரையிலும், அந்நிய வாதிக்கத்தின்கீழ் அவதிப்பட்டு நாசமுற்றும் போகவேண்டுமென்பது அறிவுடையோர் செயலன்று. (அய்யாமுத்துவின் லாலுகுடி பிரசங்கம்). நீங்கள் பார்ப்பனீயத்துக்கு இடம்கொடுத்து, தாழ்மைப்பட்டு அவதிப்பட்டு அடிமைப்பட்டு மூடநம்பிக்கைகளாலும், மத வெறியாலும் வீண் சடங்குகளாலும் நாசமுற்றுச் சேதமுற்று அதனால் வேற்றுமைப்பட்டு அந்நிய ஆதிக்கத்தால் பிடிபட்டுக் கிடப்பதால் - இப் பார்ப்பனீயத்தை என்றையத் தினம் ஒழிக்கின்றீர்களோ அன்றைய தினமே உங்கள் கர்மபலன் உங்களை விட்டகன்று, அன்றையதினமே நீங்கள் மனிதத் தன்மை வாய்ந்து உங்கள் சகோதர சகோதரிகளோடு சரிநிகர் சமானமாக வாழ்வீர்கள்; அன்றைய தினமே ஆங்கிலவாட்சி தானாகவே இந்தியாவினின்று விலகிக் கொள்ளும். (அய்யாமுத்து எழுதிய மேயோ கூற்று மெய்யா பொய்யா? என்னும் நூல் 86, 87 ஆம் பக்கம் பார்க்க.) பார்ப்பனிய ஆட்சி நம்மை சொந்த நாட்டிலேயே அந்நியர்க ளாகவும் பகைவர்களாகவும் செய்துவிட்டது. நம்மில் உயர்வு தாழ்வு கற்பித்து நம்மைப் பல சாதிகளாகப் பிரித்து நம்பிக்கையின்மை ஆவேஷம் ஆகிய சுழல் காற்றில் சிக்குறச் செய்துள்ளது. நாம் இக் காற்றால் சுழலச் சுழல ஒருவருக்கொருவர் மோதி மிதித்துக் கொண்டிருக்கிறோம். நம் ராஜீய விடுதலையைப் பற்றி நினைக்கு முன் இப்பார்ப்பனக் கொடுமையினின்றும் விடுதலை பெறல் வேண்டும், நமக்கு எதிரிடையாய் நிற்பது நாம் கடவுளிடத்திலும் மதத்தினிடத்திலும் சாத்திரத்தினிடத்திலும் வைத்துள்ள மூட நம்பிக்கையேயாகும். இதைத் தகர்த்தெறிவோமாகில் பார்ப்பனீயம் தானாகவே தொலையும். (மேயோ கூற்று மெய்யா - பொய்யா? பாகம் 54, 55) சுயமரியாதைக் கட்சியினர் நமது மக்களின் அறிவீனத்தையும் குற்றங் குறைகளையுமே சதா பேசிக் குறைத்துக் கொண்டிருக் கின்றார்கள். (அய்யாமுத்துவின் லாலுகுடி பிரசங்கம்) என்னை ஓர் சபையின் முன்னிலையில் ஒருவர் அவமதிக்கும் பொருட்டு நீ முழுக்குடியன் என்று கூறி அவமதித்தால் அவருடைய நோக்கத்தையும் மற்றதையும் கவனிக்காமல் என்னிடமிருக்கும் குடிக்கும் தன்மையை, அது முழுக் குடியாயினும் அரைக் குடியா யினும், அளவில் சண்டை போட்டுக் காலத்தை வீணாக்காமல் உடனே அகற்றிக்கொள்ள வேண்டுவது எனது முதற்கடமையாகும். இந்தியா சுதந்திரம் பெற்றபின்னர், சுயாட்சியடைந்த பின்னர் மக்கள் தம்முள்ள பேதா பேதங்களை வேரறக் களைய நாம் வீரத்துடன் போராட சக்தி பெறுவோம். (அய்யாமுத்துவின் லாலுகுடிப் பிரசங்கம்). மதம் என்ற கட்டுப்பாட்டில் யார் இருக்கிறார்களோ அவர்கள் ஓரளவு தங்கள் அறிவையும் சுதந்தரத்தையும் அடகு வைத்தவர்க ளாகவே இருப்பார்கள் (காந்தி மதக் கட்டுப்பாட்டினின்று இன்னும் விடுபடவில்லை என்பதை அய்யாமுத்து உணர்க). இவ் வடிமைத் தனத்தை நீக்கவே எங்கள் நாட்டில் சுயமரியாதை இயக்கம் தோன்றி யிருக்கிறது. இவ் வியக்கத்தின் நோக்கங்களும் உம் நாடான மேல் நாட்டையும் எதிர்காலத்தில் எட்டிப் பார்க்கும். மதத்தின் அழிவால் மக்கள் விடுதலையும், மக்கள் விடுதலையால் தேசவிடுதலையும் சித்திக்கும். அதுவே எங்கள் சுயராஜ்யம். (மேயோ கூற்று மெய்யா - பொய்யா? பக்கம் 45, 46) குறிப்பு: இன்று அய்யாமுத்துக் கவுண்டனின் தற்போதைய அற்பத்தனமான பேச்சுக்களும் முன் எழுதிய கட்டுரைகளும் முன்பின் முரணாக பலவிடங்களில் காணக் கிடக்கின்றன. அவைகளெல்லா வற்றையும் வெளியிட முரசு இடந்தராதன நினைத்து இத்துடன் நிறுத்திக்கொள்ளப்படுகிறது. - புதுவை முரசு, 7.12.1931, ப. 19 - 21 93. கனம் ரொபேர் கெப்ளே வழக்கு கடந்த ஜூன் 2 சில படகுக்காரர்கள் கனம் ரொபேர் கெப்ளே அவர்கள் வீட்டில் கல் எறிந்ததாகவும், இவர்களை அவர் இரட்டைக் குழாய்த் துப்பாக்கியால் சுட்டதாகவும் நவம்பர் 25க்கு முதல் கோர்ட்டில் வழக்கு நடந்தது. கனம் ரொபேர் கெப்ளே அவர்கட்கு திருவாளர்கள் ஞானு தியாகு, தேரொஸாரியோ, சாம்பசிவம் அவர்களும், படகுக் காரர்களுக்குத் திருவாளர், ஜோசேப் டேவிடு, ஞானு அம்புரோ அவர்களும் லாயர்கள். பிரதிவாதிகளின் குறைகளைக் கேட்டபின்பு திருவாளர் டேவிட் லாயர் பேசிய சாரமாவது: இதுவரையிலும் ஓர் ஐரோப்பியர் வீட்டில் தமிழர்கள் கல் எறிந்ததே கிடையாது. இவர்கள் கல் எறியவோ தூஷணமாகப் பேசவோ பயப்படுவது சகஜம். இவ் விஷயம் குற்றவாளியாகிய இவருக்குத் தெரியும். இவர் ஐரோப்பிய ராயினும் புதுவையில் பிறந்தவர்; வளர்ந்தவர்; வாசித்தவர்; பொலிட் டீக் தலைவர். இவர் வீட்டுக்குப் பிரபல வியாபாரி, A.கிUZzuh#& அவர்கள் வந்திருந்தபோது, அன்னவரைத் தாக்கத்தான் படகுக் காரர்கள் கும்பல் கல் எறிந்தார்கள். குற்றவாளி வீட்டுக்கும், சென்ட்ரல் போலீஸுக்கும் 200 கஜ தூரம் இருப்பதால் இவர் வீட்டி லிருந்துகொண்டே டெலி போனில் பேசிப் போலீ உதவியைக் கொண்டு ஜனங்களைத் துரத்தி இருக்கலாம் அல்லது இவர் வீட்டுப் பிரதான கதவைப் பூட்டிக்கொண்டு உள்ளே இருந்துவிட்டும் இருக்கலாம். இப்படிச் செய்திருந்தால் ஜனங்கள் கலைந்தும் போய் இருப்பார்கள். அதற்கு விரோதமாய்க் கும்பலை இவரே எழுப்பி இவர்மீது பாயச் செய்து துப்பாக்கியால் சுட்டது இவர்மேல் அதிகக் குற்றம். காயம் பட்டவர்களில் ஒருவருக்கு ரூ.1000 இன்னொருவ ருக்கு ரூ.150ம் நஷ்டம் கொடுக்கவேண்டும் என்று சொல்லி முடித்தார். லாயர், அம்புரோ பேசியதாவது: ரொபேர் கெப்ளே சுட்டது தப்பிதம். அவரைத் தாக்க வந்திருந்தால் அவர் தற்காப்பின் பொருட்டு சுட்டிருக்கலாம். அதற்கு விரோதமாய்க் கும்பல் கிருஷ்ணராஜுவைத் தாக்க வந்தபடியால் குற்றவாளி தற்காப்புக்காகச் சுட்டேன் என்று சொல்ல சட்டம் தடுக்கிறது. இவருக்குக் கடின அபராதம் போட வேண்டும் என்று முடித்தார். பப்ளிக் பிராஸிக்யூடர்: Procureur de Ia Republique பேசியதாவது: படகுக்காரர்கள் ரொபேர் கெப்ளே வீட்டின்மேல் கல் எறிந்தது உண்மை. அது தப்பென்று எனது உள்ளமே சொல்லுகிறது. ஆனால் அந்தக் குற்றத்திற்குத் துப்பாக்கியால் சுட்டு மூவரைக் காயப்படுத்தினது அதிகக் குற்றம். ஆனபடியால், அன்னவருக்கு (Condamnation avec surei) கேட்கிறேன் என்றார். லாயர் ஞானுதியாகு பேசியதாவது: ரொபேர் கெப்ளே யிடத்தில் அன்றைய தினம் நான் இருக்க ஆசித்திருக்க மாட்டேன். பிரஞ்சிந்திய மக்கள் ஐரோப்பியர்களுக்குப் பயப்படுவது வழக்கம் என்பதை என் காதில் ஓர் இந்திய லாயரால் சொல்லப்படுவதைக் கேட்டு விசனிக் கிறேன். நமது குடியரசில் ஐரோப்பியர்களுக்கும், இந்தியர்களுக்கும் ஒரே சட்டம் இருப்பதால் ஒருவருக்கொருவர் ஏன் பயப்படவேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. ரொபேர் கெப்ளே வீட்டுக்கும், சென்ட்ரல் போலீஸுக்கும் 200 கஜ தூரந்தானே, இவ்வளவு அருகிலுள்ள ஓர் வீட்டின் மேல் 200 படகுக் காரர்கள் கல்லெறிந்து கொண்டும், தூஷணையாய்ப் பேசிக் கொண்டிருப்பதும் போலீஸுக்குத் தெரியாதென்றால் 500 கஜம் தூரத்திலிருக்கும் வீட்டுக் காரனைக் கொலைசெய்து போட்டால் இந்தப் போலீ என்ன செய்யப் போகிறது. ஜூன் மாதம் 2ஆம் தேதிக்கு அதாவது இந்தக் கலகம் நடக்கும் முந்தின நாள் சென்ட்ரல் போலீ எதிர் கடலோரத்தில் சில நூறு ஆட்களும், சர்க்கார் மைதானத்திலும், அதையடுத்த வீதிகளி லும் இருபது முப்பது ஆட்களும் கோபக் குறியுடன் நின்றிருந்தார்கள். இவர்கள் என்ன முகாந்தரத்திற்கு நிற்கிறார்களென்று உங்கள் நீதி கேட்டதா? அல்லது போலீ ஆபீஸர்கள் கேட்டார்களா? இல்லை. கூடக் காரணம் யார் என்று தேடியிருப்பார்களா? இல்லை. வீட்டின்மீது கல் எறிந்து கொண்டும், தூஷணையாய்ப் பேசிக் கொண்டும் நிற்பார்களாம். வீட்டுக்காரன் கதவை பூட்டிக்கொண்டு வீட்டில் இருந் திருக்கலாமாம்? இதென்ன! இவ்விஷயத்திலுள்ளவர்கள் ஒருவரும் ஒப்புக்கொள்ளக் கூடியதா? கிருஷ்ணராஜுவைத் தாக்க வந்தார்களாம்; அதற்காக ரொபேர் கெப்ளே வீட்டில் கல் போட வேண்டுமாம்! தனது துப்பாக்கியை எடுத்துக்கொண்டு ஜனங்களை விரட்ட முதல் ஆகாயத்தில் ஓர் வெத்து வேட்டு அதுவும் கடல் பக்கம் எடுத்தார். ஆகாயத்தில் வெள்ளைத் தாள்கள் பரவி விழுந்தனவென்று இப்போது உங்கள் முன்னிலையில் சொன்னார்கள். உடனே என்ன நேர்ந்தது? இதுவும் காயம்பட்டவர்களே சொன்னதுதான், நம்மைக் காகம் என்று நினைத்துப் பூச்சாண்டி காட்ட ஆகாயத்தில் சுட்டான் ஏறுங்கடா என்றதும் பரவியிருந்த கும்பல் ஒருங்கு சேர்ந்து இன்னமும் கல்லெறிந்துகொண்டு எதிர்நோக்கி ஓடிவந்தது; அந்த நேரம் ரொபேர் கெப்ளே சுடாமலிருந்தால் அவருக்கும், அவருடைய பெண்டு பிள்ளைகளுக்கும் என்ன நேர்ந்திருக்கு மெனவும், எத்தனை உயிர் போயிருக்கும், எவ்வளவு இரத்தம் சிந்தப்பட்டிருக்கும் என்று யாரால் சொல்ல முடியும் பிரசிடெண்டே? இதுதான் பிரதான கேள்வியும், பெரிய கேள்வியுமாகும். இதை நிவர்த்திசெய்யத்தான் ரொபேர் கெப்ளே சுட்டார். ஆகையால், அவர் தற்காப்புக்காகத்தான் சுட்டார் என்று சொல்லவும் வேண்டுமா? இதைப்போன்ற அநேக வாதங்கள் செய்தபின்பு ரொபேர் கெப்ளே அவர்கட்கு விடுதலை கேட்டார். லாயர்கள் தே ரொசாரியாவும், சாம்பசிவமும் இதே சார்பான சில கேள்விகளைப் போட்டு விடுதலை கேட்டார்கள். மாஜிட்ரேட் இன்றைய எட்டாம் நாள் தீர்ப்பு சொல்லுவதாக கோர்ட்டைக் கலைத்தார். வழக்கின் தீர்ப்பு: பிறகு டிசம்பர் 2இல் வழக்கு ஆரம்ப மாயிற்று. மாஜிட்ரேட் கனம் ரொபேர் கெப்ளேவிற்கு 2 மாதம் வெறுங் காவலும், 200 பிரான் அபராதமும், 1100 ரூபாய் காயம் பட்டவர்களுக்குக் கொடுக்கும்படியும் தீர்ப்புக் கூறினார். (ந. நி.) - புதுவை முரசு, 14. 12. 1931, ப. 22 - 23 94. காந்தி பிரயாணமும், ராமசாமி பிரயாணமும், தோலும் சுளையும் சென்னை முதலிய நகரங்களில் கிச்சிலிப்பழங்கள் விற்பனைக் கென்று அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டிருக்கலாம். அப் பழங்கள் விலையாகவேண்டும் என்ற நோக்கமுடைய வியாபாரிகள் ஜனங்களின் பார்வையை அப் பழங்களிடம் இருக்க வேண்டியதையே ஆரம்ப வேலையாகக் கொள்வார்கள். அவ்வியாபாரிகட்கு, அந்த முதல் வேலைக்கு, அதுகூலமாயிருப்பது அப்பழங்களின் அழகிய -வர்ணமுள்ள - தோலே! ஆயினும், வாங்குவோர் தோலுக்காக வாங்கவில்லை; அதன் உள்ளே இருக்கும் - பயனை - சுளையை - கருதியே வாங்குகிறார்கள். தாய்நாடு கிச்சிலிப் பழம் கேட்கிறது; தாய்நாடு இன்ப வாழ்வைக் கோருகிறது; சமத்துவ வாழ்வு கேட்கிறது; சகோதரத்வ வாழ்வு கேட்கிறது; சுதந்தர வாழ்வு கேட்கிறது. யோசித்துப் பாருங்கள்! ஆரம்பத்திலிருந்து, இன்று வரைக்கும் - நடைமுறைகளைச் சமத்வ நிலையிலிருந்து வரிசையாக யோசி யுங்கள், தாய்நாடு கிச்சிலிப் பழங் கேட்கையில், வருணாஸ்ரமம், ஆத்ம சக்தி, கடவுள் விட்டவழி, குடைக் கம்பித் தக்ளி, சத்யாக்ரகம் என்னும் மேற் பகட்டையுடைய காந்தி வட்டமேஜைப் பிரயாணக் காகிதமானது மக்கள் முன் பரிமாற்றப்பட்டிருக்கிறது. சுளையில்லை; தோலுமில்லை; கலர் காகிதம் தீர்ந்துவிட்டது. இனிக் காங்கிரஸ் நடத்தவிருக்கும் சட்டமறுப்பால், அந்தக் கலர் காகிதம் கிச்சிலிப் பழத்தின் அசல் தோலாகவும் ஆக முடியாது. இந்த நிலையில், மக்கள் எதிர்பார்க்கும் பலனாகிய சுளைக்கும், காங்கிரஸ் புரட்டலுக்கும் ஏதாவது சம்பந்தமிருக்குமா? இருக்கத்தான் முடியுமா? என்பதை நினைக்கும்போதுதான் நமக்கு நகைப்பு வருகிறது. பகுத்தறிவையும், தன்னம்பிக்கையையும், சமத்வ புத்தியையும் அடிப்படையாகக் கொண்டு அடையவேண்டிய ஒன்றை, மூட நம்பிக்கையாலும், தன்னம்பிக்கையில்லாத் தன்மையாலும் பேத புத்தியாலும் பெற முடியாது என்பது, என்றும், எங்கும் உண்மை. ஓய் மயக்கங்கொண்ட காங்கிரஸ்காரா! பசிகொண்டிருக்கும் தேச மக்களிடம் நீ வர்ணக் காகிதத்தைக் குவித்துக் கொண்டிரு, உன் முயற்சி காகிதமாகவே முடியுமேயன்றி பயன் தேடுவதில், சுளை தேடுவதில் போகப் போவதில்லை. சுயமரியாதைக் கட்சியானது தேசம் விரும்புவது எங்கு, எதனால் ஏற்படும் என்று கண்டு, அது தேசம் கேட்பதுதானா என்று மேலும் ஆராய்ந்து, ஆம் என்று உறுதிகொண்டு, அல்ல என்பவர்க்கு உரித்துக் காட்டிப், - பசிகொண்ட மக்களை ஒரே பந்தியாய் உட்கார வைத்துப் பரிமாறும் முறையை அறிந்து - போதாக் குறைக்குப் போய்வருகிறேன் ஐரோப்பாவுக்கென்று அம்புவாஸ் கப்பலில் இரண்டு இராமன்களும், புதுவைத் துறைமுகத்தை விட்டுப் புறப்பட்டிருக்கிறார்கள். காங்கிரஸ் சுயமரியாதைக் கட்சியை நோக்கி வருகிறது; ஆனால், நான் நெருங்கி வருகிறேன் என்று சொல்லாமலே அந்த வேலையைச் செய்துவரக் காரணம்; வெட்கம். மானம் ஈனமிருந்தால், காந்தீயம் துவக்கியபின் ஒரு கோடி முறை தீண்டாதார் என்னும் மக்களை, மக்களாகப் பாவிக்கும்படி செய்வதையே ஆரம்பமாகக்கொண்டு பொதுப் பணியைத் தொடங்க வேண்டும் என்று, சுயமரியாதைக் கட்சி சொல்லியதை அக்காங்கிரஸ் கேட்டிருக்கும், இந்தியாவின் ஒற்றைப் பிரதிநிதி கேட்டிருப்பார். சமூகத்துறையில்-தீண்டாமை ஒழி என்ற ஆரம்ப பாடத்தை அறிந்துகொள்ள இங்கிலாண்டு செல்ல வேண்டியதிருந்ததா? உலகம் காறியுமிழ வேண்டிய திருந்ததா? இப்போது காங்கிரஸ்காரர்கள், ஆதித் திராவிடருக்கு ஆதரவு என்ற கூச்சல்போடலாம்! அதனால், காங்கிரஸ் சபை என்பது, சுய மரியாதைக் கட்சி என்பதன் காலடியை நக்கலாம். ஆயினும், காங்கிரஸ் தனது, கடவுள், மதம், வருணாஸ்ரமம் என்ற விஷத்தை மாத்திரம் கக்கித்தானாக வேண்டும். இல்லாவிட்டால், அறிவியக்கம் காறியுமிழ்ந்து கடக்கப் போகச்சொல்லும்! அல்லது, மேலுக்கு எப்படியாவது வேஷம் போடட்டும்; எழைமக்களை ஏமாற்றட்டும்; கபடற்ற மக்களைச் சட்டமறுப்பின் மூலம்; சிறைச்சாலையில் தள்ளட்டும். ஐரோப்பா சென்றிருக்கும் திரு. E.V. ராமசாமியும், திரு. S. ராமநாதனும், திரும்பி இந்தியாவின் துறைமுகத்தைக்-காலால் மிதிப்பதற்கும், காங்கிரஸ் நாடி நின்று, சுயமரியாதை வீரர் வாழ்க! என்று அதன் பயன் தெரிந்து வரவேற்பதற்கும் ஒத்துப்போகும் என்பது தான் நமது அபிப்பிராயம். ராமசாமிக்கு உடல்நிலை சரியில்லை; அவர் சென்னை ஆஸ்பத்திரியில் இருந்தார். வெளி வந்தபோது அன்பரே பிழைத்தீரா நீர், செத்துப் போயிருந்தால் சென்னைப் பார்ப்பனப் பிசாசுகள், புதுச்சேரிக் கோழிக்காசுக்கும் எங்களை மதிக்கமாட்டா! என்று எதிர் கொண்டு அளவளாவியவர்களில் தோழர் தமிழ்நாடு ஆசிரியர் - வரதராஜன் ஒருவர். அவர் ராமசாமிக்கு அப்போது விருந்தொன்றும் வைத்தார். சென்னையிலுள்ள அநேக ப்ராமணரல்லாதார்கட்கும், தோழர் வரதாராஜனுக்கும் உள்ள வித்தியாசம் வரதராஜன் அவர்கட்குத் தமது உள்ளத்தில் உதித்தெழும் உத்ஸாகத்தைப் பிறர்போல் - காரணார்த்தமாக - மறைத்து வைக்க முடிவதில்லை. தோழர் வரதர் - நம் தலைவர் ஐரோப்பா யாத்திரையைப் பற்றிக் குடியரசு கூறிய காரணமானது விநோதமாக இருக்கிறது என்று தமது தமிழ்நாடு பத்திரிகையில் கூறியுள்ளார். இதனால், ராமசாமியின் பிரயாணத்துக்கு வேறு காரணமிருக்கலாம் என்று அவர் நினைக்கிறார். ஆனால், நமது தேசபக்தன் பத்திராசிரியர் தண்டபாணி ஸ்வாமிகளோவெனில், ராமசாமியும் ராமநாதனும், நாலாம் வகுப்பில் - பிரயாணம் செய்வது தமக்கு நேரில் தெரியும் என்பதைக் கொண்டு - பிரயான விஷயமாக ஏதோ அபிப்பிராயப்படுகிறார். ஜப்பானைத் துணைக்கிழுத்து இங்கிலீஷ்காரனைத் துரத்த முயன்றதாகக் கருதப் பட்ட வரதராஜனும், கிளர்க் தண்டபாணியும் தமது பரிபக்குவத்திற்கு ஏற்ற முறையில் அபிப்பிராயத்தை வெளியிடுகிறார்கள் என்பதில் நமக்கு ஆக்ஷேபம் ஒன்றுமில்லை. ஆயினும், வரதராஜனவர்களும், தோழர் தண்டபாணி யவர்களும், நினைப்பதையே ராமசாமியும், நினைத்துப் பிரயாணத்தை ஆரம்பித்திருந்தால் ராமசாமி, சுயமரியாதைத் தலைவராக இருக்க முடியாதே! உடல் நலமில்லை; ஆயினும், ராமசாமியும், ராமநாதனும், ஆக இருவரும் ஐரோப்பா கிளம்பிவிட்டார்கள், காரணம் என்ன? இராமசாமிக்கு உடல் நலம் இல்லை! இல்லை!! இவ்வளவு தூர பிரயாணமா? அவ்வளவு அவசியம் என்ன? உடல் தாங்குமா? கிழவ ராயிற்றே! இதென்ன ஒன்றும் புரியவில்லையே! சரி தீர்ந்தது, ஒரு விதத்தில் - சிலர்க்கு லாபந்தான்! இருந்தாலும்! காரணம் என்ன? உட் கருந்து என்ன? உடல்நிலை சரியில்லை என்றதே பொய்யோ! அப்படி யுமில்லையே! இதென்ன அந்தக் கிழவன் சங்கதியெல்லாம் ஒருவித மாயிருக்கிறதே.! செத்துப்போகட்டுமே! செத்துப்போக அவர் நினைத்திருந்தால், தேசமக்களுக்கு மூளை வைத்தியம் செய்தாய் விட்டது என்று அவர் கருதியதாக அர்த்தம். நாம் அவர் வருத்த முறையில் வேலைசெய்ய முற்படவேண்டும். பிழைத்து வருவாரானால் அவர் வகுத்த நெறி நின்றதால் நாம் நிலையுயர்ந்து பயன் நுகர்வதைக் காணவந்தார் என்று வரவேற்போம்! வெளியிலிருந்து மூளைமேல் ஏறித் தத்தமக்குத் தெரிந்தவழியில் ஒட்டி இடர்ப்படுவதில் ஞாயமொன்றுமில்லை. நாங்கள் இராமசாமி வகுத்த நெறிநின்று, தொண்டு செய்வதில் சலியாமல்-சுயமரியாதையின் உந்நத நிலைக்கு உழைப்போம். - புதுவை முரசு, 21. 12. 1931, ப. 14 - 16 95. சக்கரவர்த்தியின் சாகசம் குள்ளநரி; சோட்டாக்காந்தி என்ற அரிய பெயர்கள் பெற்றுள்ள சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரியாரைப் பற்றித் தமிழ்நாட்டார் நன்கறிந்திருப்பார்கள். பார்ப்பனர்களில் மிகவும் தந்திரசாலி; பாமர மக்களை ஏமாற்றுவதில் மிகுதியும் தேர்ச்சியுடையவர். இவர் சமயத்திற் குகந்தாற்போலப் பாமர மக்களை மயக்குவிப்பதில் தீரர். அவர் உடம்பு முழுதும் ஒரே விஷம்; அவர் முகத்தை நோக்கியவுடன் சுயநலம் என்பதை அங்கலட்சண நிபுணர் கண்டுவிடுவர். சூழ்ச்சி, மோசம், காக்காய் பிடித்தல் முதலிய கலைகளில் அவருக்கு நிகரானவரோ, மேலானவரோ நானறிந்த வரையில் எவ்வளவோ கூறலாம். இருந்தாலும் கட்டுரை விரிவஞ்சி நிறுத்திக்கொண்டு அவரது திருவிளையாடல்களைப் பற்றிக் கூறப் புகுகின்றேன். சமீபத்தில் நமது சக்கரவர்த்தியார் ஒரு சிறு சுற்றுப்பிரயாணம் செய்ததை நேயர்கள் அறிந்திருக்கக்கூடும். அவர் சென்ற ஒவ்வோர் ஊர்களிலும் நிகழ்ந்த, கூட்டங்களில் சுயமரியாதை இயக்கத்தாரால் தீண்டாமை, ஆலயப்பிரவேசம் முதலியனபற்றிக் கேள்வி கேட்கப் பட்டார் கேள்விகளுக்கு அவர் சரியான பதில் கூறாமல் கன்னா பின்னாவென என்னென்னவோ கூறி மழுப்பியிருப்பதாகத் தெரிகிறது. ஓர் ஊரில் (நாகை என ஞாபகம்) தீண்டாமையைப் பற்றிக் கேட்கப் பட்டதற்கு அவர் கூறியதாகப் பத்திரிகைகளில் கீழ்வருமாறு காணப்பட்டது:- காங்கிரஸ் பெரிய ஸ்தாபனம். அது தீண்டாதார்களுக்குப் பெரும் பணியாற்றியிருக்கிறது. இப்போதுள்ள சிறு சிறு கட்சிகள் தோன்றுவதற்கு முன்பிருந்தே காங்கிரஸ் பாடுபட்டு வந்திருக்கிறது. தீண்டாதார் இப்போது விரிவடைந்திருப்பதற்கு முக்கிய காரணம் காங்கிரஸ்தான். நான் மெலிந்தவனாக இருப்பதால் என்னை அடித்து விடலாமென நினைத்துவிடவேண்டாம்! எனக்கும் அடிக்கத் தெரியும்! மேலும் கள்ளுக்கடை மறியலிலேயே தீண்டாதாரும் விடுதலை அடைந்துவிடுவார்கள். ஆதலால்தான் நான் மறியலில் தற்போது அதிகமாக கவனஞ் செலுத்திவருகிறேன் ... ... என்று கூறினாராம். இது உண்மையாக இருக்குமானால் இதைப்போன்ற புளுகு - போக்கிரித் தனம் - ஏமாற்றம் வேறொன்றுமில்லை. இந்தியாவிலுள்ள சகல கட்சிகளையும்விட, வயதிலும், ஆள்பெருக்கத்திலும் காங்கிரசே பெரியது என்பதை ஒருவிதத்தில் நான் ஒப்புக்கொள்ளத் தடையில்லை. ஆனால், காங்கிரஸால்தான் தீண்டாதார் விழிப்பை யடைந்திருக்கிறார்கள் என்று கூறுவதை ஒருபோதும் ஒப்புக் கொள்ளவே முடியாது. காங்கிரஸ் தோன்றி 45 ஆண்டுகள் ஆகி யிருந்தும் தற்போது சில வருடங்களாகத்தான் தீண்டாதார் விழிப்படைந்திருக்கிறார்கள். காரணம் யாதென்றால், ஜஸ்டிஸ் கக்ஷி, சுயமரியாதை இயக்கம் உண்டானதின் பின்பிருந்தே அவர்கள் விழிப்படைந்திருக்கிறார்கள். ஒளிக்காமல் கூறுமிடத்து சுய மரியாதை இயக்கம் தோன்றியதிலிருந்து தாழ்த்தப்பட்டவர்கள் விழிப்பைப் பெற்றிருக்கிறார்கள் என்பது மிகைபடக் கூறுவதாகாது என்பதே எனது அபிப்பிராயம். சுமார் 35 ஆண்டுகள் வரையில் தீண்டாதார் விழிப்படையாமல் அதற்கு மேற் பட்ட பின்னரே அவர்கள் விழிப்பை அடைந்திருப்பதிலிருந்து அந்த விழிப்பு காங்கிரசால் உண்டானதல்லவென்பதும் பின்னால் உண்டான இயக்கத்தாலேயே ஏற்பட்டிருக்கிறதென்பதும் வெகு நன்றாகப் புலப் படவில்லையா? காங்கிரசால் தீண்டார் விழிப்பை அடைந்தார்கள் என்பது மெய்யானால், காங்கிரஸ் உண்டான போதிருந்தே அந்த விழிப்பு ஏற்பட்டிருக்க வேண்டுமே? அவ்வாறு உண்டாகாம லிருந்ததிலிருந்து காங்கிரஸுக்கும் தீண்டாதார் விழிப்புக்கும் எப்போதும் சம்பந்தமேயில்லை என்பது விளங்க வில்லையா? ஆகவே, இதை அறிந்திருந்தும் வேண்டுமென்றே சக்கரவர்த்தி ஆச்சாரியார் கூறியிருக்கவேண்டும். அல்லது அறியும் திறமை யின்றி வீண் கர்வத்தால் கூறியிருக்கவேண்டும். அகிம்சாவீரர் அடுத்தாற்போல கூறியிருப்பதாகக் காணப்படுவது ஆச்சர்யம் எனக்கும் அடிக்கத் தெரியும் நான் மெலிந்தவனென்று நினைத்து விடாதீர்கள் என அவர் கூறினராம். இதைப்பற்றி விரிவாக எதுவும் கூறவேண்டாம். உயிர் போனாலும் பலாத்காரத்தில் இறங்க வேண்டாம் என்று கூறும் படேல் காந்தியின் கொள்கையை இந்தச் சோட்டா காந்தி காற்றில் பறக்கவிட்டுவிட்டார் போலும்! மேலும் கூட்டத்தில் சிலர் கேள்விகள் கேட்டால் அதற்குப் பதில் சொல்வதற்குப் பதிலாக வீண்பயமும், சந்தேகமுங்கொண்டு நீங்கள் என்னை அடிக்க வந்திருக்கிறீர்கள் என்று கூறுவதா? என யான் கேட்கிறேன். கேள்வி கேட்க வருவோர்களை காலிகள், போக்கிரிகள் எனப் பிறர் நினைத்துக் கொள்ளவே இவ்வாறு சக்கரவர்த்தி ஆச்சாரி கூறியிருக்கவேண்டும். இது யோக்கியமா? சந்தேகிகளுக்குச் சந்தேகங்களை நிவர்த்தி செய்வதே கடன். இதை அறியாமலோ அறிந்திருந்தும் பதில் சொல்ல இயலாமல் இப்படிக்கூறி மழுப்பியும் ஏமாற்றியும் பேசியிருக்கிறார். இப்படிக் கூறினால் தம்மை ஆதரிப்பவர்கள், கேள்வி கேட்க வந்தவர்களுக்கு பாடம் கற்பித்து அனுப்பிவைக்கலாம் என்ற உன்கருத்தைக் கொண்டும் அவர் பேசியிருக்கலாம். மது மறியல் நிறைவேறினால், தீண்டாதார்க்கும் விடுதலை கிடைத்து விடும் என அவர் கூறுவது வெறும் பேச்சேயன்றி வேறல்ல. இதற்கு அநேக நண்பர்கள் பதில் கூறிவிட்டார்களாதலால் நான் மேலும் கூறவேண்டியது அநாவசியம், நான் வேறொரு முக்கியமான இரகசியத்தை இங்குக் கூற விரும்புகிறேன். நமது சக்கரவர்த்தி இராஜ கோபாலாச்சாரியார் நிரம்பவும் தந்திரமானவர் என்பதை முதலிலேயே குறிப்பிட்டிருக்கிறேன். உதாரணமாக காந்தியைப் போல இவரும் புகழ்பெறத்தான் திட்டம் போட்டிருக் கிறார். காந்தி கதரினால் எவ்வாறு பேர் வாங்கினாரோ, அதைப்போல இவர் மதுவின் பேரால் பேர் பெற எண்ணி யிருக்கிறார். அதனாலேயே இவர் மதுவிலக்கைப் பற்றி நிரம்பவும் கூப்பாடு போட்டுக் கொண்டு திரிகிறார். அமெரிக்காவில் பூனைக் கால் ஜான்சன் எப்படிப் பேர் வாங்கினாரோ, அதைப்போலே இவர் இந்தியாவில் மதுசக்கர வர்த்தி எனப் புகழ் வாங்கவேண்டும் என்ற நோக்கத்திலிருக்கிறார். மதுவிலக்கு என்று நான் சொல்ல வரவில்லை. அகற்றுவதன் மூலம் அதாவது ஒரு பேர் வாங்கவேண்டும் என்பதற்காக மதுவிலக்கில் ஈடுபடுவதை நான் வெறுக்கிறேன். காங்கிரஸிலுள்ள தலைவர்களில் காந்தியுட்பட வெறும் புகழுக்காகவே பாடுபட்டு வருகிறார்கள். நிற்க, நமது சக்கரவர்த்தி ஆச்சாரியால் பொதுக்கூட்டங்களில் அடிக்கடி - ஏன் எப்போதும் - கையாளப்படும் சூழ்ச்சியொன்றுண்டு. அதாவது இந்தக் கூட்டத்திலுள்ளவர்களில் மதுவிலக்கை ஆதரிப் பவர்களெல்லாம் கை தூக்குங்கள்! என்பார் பக்காக் குடிகாரரா யிருந்தாலும் ஒரு கூட்டத்தில் மதுவிலக்கு வேண்டாம் என்று ஒரு போதும் கூறமாட்டான் என்பது நமது ஆச்சாரிக்குத் தெரியும். அதனாலேயே அவர் இவ்வாறு கூட்டங்களில் கைதூக்கும் சீன் உண்டாக்கி, அதன் மூலமாக அரசாங்கத்தாரை ஏமாற்றுகிறார். இவ்வாறு விளம்பரஞ் செய்ய அவர் வெட்கப்படாமலிருப்பது தான் ஆச்சரியம். இன்னும் இந்தக் குள்ளநரிப் பேர்வழி செய்துவரும் திருவிளையாடல்கள் அநேகமிருக்கின்றன. அவற்றையெல்லாம் சந்தர்ப்பம் கிடைத்தபோது கூறுகிறேன். விடாக்கண்டன் - புதுவை முரசு, 4. 1. 1932, ப. 6 - 7 96. சென்னைக் கோட்டையில் வெடிகுண்டு சென்னை இராஜதானிக்குச் சென்னை நகர் தலைநகராகும். சென்னை இராஜதானியின் ஆயிரக்கணக்கான நகரங்களும், இலக்ஷக் கணக்கான கிராமங்களும், தலைநகரான சென்னை நகரத்தையே எதிர் பார்த்தாக வேண்டும். எடுத்ததற்கெல்லாம் குடும்பத் தலைவனைப், பிள்ளைகள் எதிர்பர்ப்பதுபோல் இராஜதானி மக்கள் சென்னையி லுள்ள நீதி மன்றங்கள், வியாபார சாலைகள், தொழிற் சாலைகள், முதலியவைகளை எதிர்பார்த்து, அவைகளில் பெரியதனம் வகிக்கும் உத்தியோகஸ்தர்கள், வக்கீல்கள், முதலாளிகள் ஆகியவர்களிடம் மடிந்தாகவேண்டும். பத்திரிகைகளும், சென்னை நகரில் தான் அதிகம். அப் பத்திரிகையின் ஆசிரியர்களும், வக்கீல்களாகவோ, அல்லது உயர் உத்தியோகஸ்தர் களிடம் செல்வாக்குடையவர்களாகவோ முதலாளிகளாகவோதான் இருப்பார்கள்; இருந்து வருகிறார்கள் என்பதும் கண்கூடு. இதனால், சென்னையிலுள்ள வக்கீல்களும், உயர் உத்தி யோகஸ்தர்களும், பத்திராதிபர்களும், முதலாளிகளும் ஒத்துக் கொண்ட எந்த விஷயமும், இராஜதானி மக்கள் அனைவரிடமும் பிரசாரம் ஆய்விடக்கூடும் என்பது ஒருபுறமிருக்க, சென்னையிலுள்ள விரோத மானவை எவைகளாயிருந்தாலும், அவை தோன்றிய இடத்திலேயே மறைந்து போகவேண்டியதுதான் என்பதும் மறுக்க முடியாத உண்மை. இதில் இன்னெரு விஷயம்! நாம் நினைப்பூட்ட வேண்டிய தில்லை! அதாவது, உயர் உத்தியோகஸ்தர்கள், வக்கீல்கள், பத்திரா திபர்கள், ஆகியோர் பெரும்பாலும், பார்ப்பனரும், பார்ப்பன ஆதிக்கத்திற்கு உட்பட்டவருமாகவே இருக்கிறார்கள். எனவே சென்னை நகரில் உள்ள பார்ப்பனர் எண்ணம், அபிலாஷைகளுக்குச் சென்னை இராஜதானி மக்கள் அனைவரும் தயார் என்பது விளங்கும், சென்னைப் பார்ப்பனர் ஆட்டுகிறபடி சென்னை ராஜதானி ஆடிவந்த கோலத்தை இந்நாள்மட்டும் பார்த்தே வந்திருக்கிறோம். சென்னைப் பார்ப்பனர் வெகுநல்லவர்களாக இருக்கட்டும்; வெகு படித்தவராக இருக்கட்டும்; அவர்கள் இவையனைத்தையும் தம் போன்ற பார்ப்பனர் முன்னுக்கு வரவேண்டியதற்காகவும் வருணாஸ்ரமம் நிலைபெற வேண்டியதற்காகவும், செலவிடக் கூடியவர்கள் என்பது தவிர, பார்ப்பனரல்லாதவர்கட்கு அவர்கள் விஷப்பாம்புதான் என்பதில் யாருக்காவது சந்தேகந் தோன்ற முடியாது. அன்னி பெஜண்டம்மை தம் தேசத்திலிருந்து இந்தியாவுக்கு வருவார். இந்தியாவின் நிலையை அறிவார். பார்ப்பன அட்டூழி யத்தைப் பார்ப்பார். ஜாதி ஒழியவேண்டும் என்று வாய் திறப்பார். ஒரு காரியமும் முடியாது தமது கூச்சல் தமது வாயிலிருந்து வெளி வந்து தமது காதில்தான் நுழையமுடியும். பிறகு பார்ப்பனரைப் பிடிப்பார். பார்ப்பனர் அபிப்பிராயப்படி நடப்பதாகச் சம்மதிப்பார். அவ்வளவுதான் பாக்கி. ஓம்ரூல் இயக்கம் இராஜதானி முழுதும் சுடர்விட்டு எரியும். தோழர் காந்தி தென்னாப்ரிக்காவிலிருந்து சென்னைக்கு வந்து சிலநாள் தங்கினார். சென்னையாவது பார்ப்பனப் பேயின் ஆலமரம் என்பது அவருக்குத் தெரிந்தது. அடேயப்பா என்று படுத்தார் கீழே; வருணாச்ரமம் தவிர மற்றவை பொய் என்று எடுத்தார் குரலை; அவ்வளவுதான்; உடனே பார்த்துக்கொள்ளுங்கள் காந்திக்கு மகாத்மா பட்டம்; இராஜதானி மக்கள் ஒவ்வொரு வரும் சொல்லும் படி செய்தனர். பார்ப்பனர் அதன்பின், 1919-ம் ஆண்டு காந்தி சத்யாக்ரஹக் கூச்சலுக்குப் பார்ப்பனர் கூறிய ததாஸ்தும், ஞாபகமிருக்கும். சமீபத்தில், உப்புப்போர் - உப்புப்போர் - உப்புப்போர் என்று நமது சென்னைப் பார்ப்பனரிடம் காந்தி மூன்றுதரம் சொல்ல ஆரம்பித்தார். ஒருதரம் சொன்னால் போதாதா பருப்பில்லாமலா கலியாணம். எங்கள் காந்தியே! நாங்கள் தயார்! என்று கூச்சலிட ஆரம்பித்தார்கள் பார்ப்பனர்கள்; அதன் பிறகு காங்கிரஸ் கால்ரா இராஜதானியில் எந்த மனிதனையாவது விட்டுவிட்டதா? யோசியுங்கள். இங்குக் கூறியவற்றால், சென்னை நகரின் உபயோகமும், சென்னைப் பார்ப்பனரின் ஆதிக்கமும் நன்கு விளங்கும் என்று நினைக்கிறோம். ஆனால்; சுயமரியாதை இயக்கமானது, மக்களின் எண்ணத்தை எதிர்க்குமுறையில் பிரசாரம் செய்யத்தக்கதும், இராஜதானியின் உச்சி மயிரைப் பிடித்திருக்கும். வக்கீல்கள், பத்திராதிபர்கள் முதலிய பார்ப்பனர்களுக்கும் பார்ப்பனரைக் கும்பிடும், தமிழர்களுக்கும் நேர் விரோதமானதாகும். மேலும், ஏதோ ஒர் செல்வாக்கைக் காட்டி ஒப்புக் கொள்ளச் சொல்லவைக்கத் தகுந்ததும், சுயமரியாதைக் கொள்கை யல்ல. அறிவுத் துறையில் தீபம் ஏற்றுவதன் மூலமே சுயமரியாதை யியக்கம் பிரசாரம் அடையக்கூடியது. ஆதலின், சுயமரியாதை இயக்கமானது சென்னையினின்று தொடங்குவதும், ஈரோட்டி லிருந்து தொடங்குவதுமாகிய அனைத்தும் ஒன்றே ஈரோட்டிலிருந்து தோழர் இராமசாமியால் தொடங்கப்பட்ட சுயமரியாதை இயக்கமானது தென்னாட்டில் பல இடத்தும் பரப்பப்பட்டு வந்தது. இதன் பயனாக இன்னும் கோடிக்கணக்கான மக்கள் சுயமரியாதைக்காராக விளங்கு வதும் தெரிந்தவிஷயம். சென்னைப் பத்திராதிபர்கள், உத்தியோகஸ்தர் கள், வக்கீல்கள் முதலாளிகள், ஆகியவர்களைத் துணை கொள்ளா மலே, அதாவது சென்னையின் உதவியை நாடாமலே சுயமரியாதைக் கொள்கை இத்தனை தூரம் பரவியிருப்பதுகொண்டே, சுயமரியாதை இயக்கம், தனது நோக்கப்படியே, ஒவ்வொருவர் பகுத்தறிவுக்கும் புலப்பட்ட பின் ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்துள்ளது என்பது விளங்கும். ஆனால், காங்கிரஸ் கொள்கை என்ற கால்ரா நோயின் பிறப்பிட மாகிய சென்னை நகரவாசிகளை இதுவரைச் சுயமரியாதை டாக்டர்கள் நெருங்கச் சந்தர்ப்பமில்லாது போயிற்று. ஆயினும் பலர், சுய மரியாதைத் தலைவர்களிடம், சென்னையை விட்டுவிட்டுப் பிற இடங்களில் பிரசாரம் செய்வதில் அதிகப் பிரயாசை ஏற்படும் என்றும் சொல்லி வந்தனர். அதற்குத் தலைவர்கள், உண்மையையும், அறிவை யும் ஆதாரமாக உடைய சுயமரியாதைப் பிரசாரத்திற்குச் சென்னை யும் பிற இடமும் ஒன்றே என்று பதில் சொல்லி வந்தனர். பின் தோழர் இராமசாமி உடல்நலமில்லாமை காரணமாகச் சென்னைச் சிகிச்சைச் சாலையில் சிலநாள் தங்கினார்கள். அச்சந்தர்ப்பந்தான் சென்னை யானது, காந்தியின் வட்டமேஜைப் பிரயாணம், காந்தியின் வெற்றி என்ற கால்ராவில் விழுந்து நாதியற்றுக் காசிழந்து, தொழிலிழந்து, மானமிழந்து கொண்டிருந்தது. அச்சமயம் ஆஸ்பத்ரியில் சிகிச்சைக் கட்டிலில் படுத்திருந்த இராமசாமிக்கும், அவருக்கு உதவியாக இருந்த சுயமரியாதை வீரர் பொன்னம்பலனாருக்கும் கீழ்வரும் சிறிய சம்பாஷனை நடைபெற்றது. இப்போது ** கண்டிப்பதாக ஒர் தீர்மானத்தைப் பிரேரபித்து தோழர், அழகர்சாமி அரைமணி நேரம் முழக்கிய முழக்கத்தையும், அதை ஆதரித்துத் தோழர், எஸ்.வி. லிங்கம் எழுப்பிய இடிமுழக்கத்தையும், அறிஞர் லக்ஷ்மிகாஸு உரைத்த நன்மொழிகளையும், தோழியர், இந்திராணி பாலசுப்பிர மணியம், கிரிஜாதேவி முதலியவர்கள் கிளப்பிய இன்னுரைகளையும், இவை மாத்திரமன்றி, தோழர்கள், திருச்சி விஸ்வநாதம், முருகப்பர், முதலிய அநேக சொற்பொழிவாளர்கள் இடையிடையே, வந்தவர் அனைவர்க்கும் சுயமரியாதைக் கொள்கைகள் அனைத்தும் வாழ்க்கை முறைக்கு இன்றியமையாதவையென்ற உண்மையை அறிந்து கொள்ளும்படி ஆற்றிய அரிய சொற்பொழிவுகளையும், அங்கு விஜயஞ் செய்த ஆயிரக் கணக்கான ஆடவர் பெண்டிர்கள் கேட்டு மகிழ்ந்து தீர்மானங்களை எழுந்து நின்று ஆதரித்த மாதிரியையும், பிரசங்கங்களின் ஒவ்வோர் வார்த்தையையும் பாராட்டிய மாதிரியை யும், மகாநாட்டின் இரண்டு நாள் நடவடிக்கைகளிலும் கேட்டது தவிர, மகாநாடு தீர்ந்தபின் இன்னும் இதுசம்பந்தமான உயர் கருத்துக்களை அறிந்து கொள்ள, சுயமரியாதைப் பிரசுரம், புத்தகங்கள், பத்திரிகைகள் எங்கே கிடைக்கும் என்று மக்கள் பறந்த மாதிரியையும், பார்த்தவர்கள், சென்னைநகர் சுயமரியாதைக் கொள்கைக்கு எவ்வளவு பக்குவப் பட்டிருக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடியும் என்போம். சென்னையிலுள்ள தமிழர் நன்மையும், சிறப்பாக ஏழை மக்கள் நன்மையும், பறிபோகாதவாறு அவர்கள் முன்னேறிச் செல்லும் பாதையில், போடப்பட்டிருந்த காங்கிரஸ் வருணாஸ்ரமம் என்ற முள்வேலியை அழிக்கத் தொடங்கிய நாளாகிய 26, 27 தேதிகளில் - சென்னைச் சுயமரியாதை மகாநாடு நடைபெறும் சமயம், சென்னை யிலே இருந்துகொண்டிருந்த பார்ப்பனரல்லாத மக்களின் தலைவர்கள், மகாநாட்டில் வந்து கலந்துகொள்ளாத குற்றத்திற்கும், ஏற்கனவே சென்னையில் சுயமரியாதைக் கட்சிக்கு எதிராகக் கூட்டங்களும், பத்திரிகைகளும் நடத்தியவர்கள் பச்சையப்பன் கல்லூரிக் கட்டிடத்து மகாநாட்டில் வந்து சுயமரியாதைத் தொண்டர்களிடம் மன்னிப்புக் கேட்காமல் வீட்டிலேயே புகுந்து கொண்டிருந்த குற்றத்திற்கும் தக்க பலனைச் சீக்கிரம் அடைவார்கள் என்பதை நாம் இப்போதே சொல்லிவைக்க விரும்புகிறோம். இது தவிரவும், சென்னை மக்களுக்குச் சுயமரியாதைக் கொள்கை இன்னதென்றே விளங்காத நேரத்தைத் தமக்கு அநுகூல மாக்கிக்கொண்டு, சுயமரியாதை இயக்கத்தின் மேல் குற்றஞ் சுமத்தியது போலின்றிச் சுயமரியாதைக் கொள்கைகளைப் பற்றிச் சுயமரியாதை வீரர்கள் சென்னையில் முரசறையத் துவக்கியிருக்கும் இச்சமயத்தில், அச் சுயமரியாதைப் பொதுக்கூட்டத்திற்கு எதிரில் வந்து நின்று அதை மறுத்துப் பேசவோ, தம் கொள்கை மேலானதென்று நிர்த்தாரணம் பண்ணவோ தைரியம் இருந்தால் வெளியில் வரலாம் என்பதைச் சுயமரியாதை இயக்கத்தைக் குறை கூறும் பார்ப்பனர்கட்கும், அவர்களின் வாலைப் பிடித்துத் திரியும் பிறருக்கும் தெரிவிக்கிறோம். சென்னை மக்கள் சுயமரியாதையற்ற எல்லா வகைகளிலும் ஈடுபட்டு ஈடுபட்டு அதன் பயனாகத் துன்பத்தை மட்டும் அனுபவித்து அலுத்துள்ளார்கள். அதனால் சுயமரியாதை என்னும் நன்னெறி பற்றும் நிலையையடைந்துள்ளார்கள் என்பது பிரஸ்தாப மகாநாட்டின் முடிவால் விளங்கிவிட்டது. இனிச் சென்னையில் ஒவ்வொரு தனி மனிதனுடைய காதிலும் சுயமரியாதை ஒலி கேட்கும்படி சுயமரியாதை வீரர்கள் கங்கணங் கட்டியுள்ளார்கள். இது பார்ப்பனக் கோட்டையான சென்னையில் பார்ப்பனர் காது பொறுக்காத வெடிகுண்டுதான் என்பதுண்மை. ஆயினும் பொது மக்களின் இலட்சியம் இதுதவிர வேறொன்றுமில்லை. - புதுவை முரசு, 4. 1. 1932, ப. 14 - 17 97. தண்டொட்டி போடலாமா? தமிழ்நாட்டுத் தாய்மார்களே! தமக்கைமார்களே! தங்கை மார்களே! உங்கள் அனைவருக்கும் அடியேன் வணக்கம் உரியதாகுக! நீங்கள், நான் கூறப்போவதைக் கவனமாகக் கேட்டு உங்கள் விருப்பப்படியே செய்வீர்களாக! கேளுங்கள் தாய்மார்களே! நம் தென்னிந்தியாவில் தமிழ் ஜில்லாக்களில் எங்குப் பார்த்தாலும் காதுகளை வளர்த்து தண்டொட்டி, சவுடி, பாம்படம் என்ற பெயர்களால் தங்க நகைகள் செய்து காதுகளில் கொத்துக் கொத்தாகத் தொங்கவிட்டு வருவது எல்லாரும் நன்கறிந்ததே. இந்தக் காது நகைகள் எப்போது உண்டாயிற்று? என்ன காரணத்திற்காக உண்டாக்கப்பட்டது? என்பன வற்றை ஆராய்ந்து பார்த்ததில் ஒரு பெரிய இரகசியம் அதில் இருப்பதை நான் கண்டுபிடித்தேன். பெண்ணினத்தை ஆணினம் நம்பாததாலேயே மேற்கண்ட நகைகள் உண்டாக்கப்பட்டன என நான் உணர்கிறேன். பெண்கள் வீட்டைவிட்டு ஓடிப் போகாமலும், ஓடினால் ஓடவிடாமல் தடைசெய்வதற்காகவும், எளிதில் பிடித்து விடுவதற்காக வுமே, மேற்கூறப்பட்ட நகைகளை ஆண்கள் சிருஷ்டித்துப் பெண்களை அடக்கிவைக்க எண்ணிச் செய்யப்பட்டிருக்கலாம் என்பதில் நான் முழு நம்பிக்கையையுடையேனாக இருக்கிறேன். பெண்கள் தமக்கு இஷ்டப் பட்ட காதலர்களுடன் ஓடிப் போகாதிருப்பதற்காகவே அப்படிச் செய்யப்பட்டிருக்கவேண்டும். ஓடமுடியாது; ஓடினால் காதிலுள்ள நகைகள் ஆட்டம் போட்டுக் காதை அறுத்துவிடும்படி செய்யும். எனவே ஆணின் சந்தேகமும், குறுகிய புத்தியும், பயமும் ஒன்று கூடிப் பெண்களுக்குக் காலணிகளையும், தண்டை, சிலம்பு, மிஞ்சி முதலிய காதணிகளையும் உண்டாக்கியிருக்க வேண்டும் என நான் கூறுவதில் சந்தேகம் உண்டா? எனவே, சகோதரிகள் நான் கூறுவதை நன்கு பரிசீலனை செய்து தங்கள் சுயமரியாதையையும், சுதந்தரத்தையும் காத்துக்கொள்ள முன்வருமாறு கேட்டுக் கொள்கிறேன். அதைப்போலவே, விவாக காலங்களில் மாப்பிள்ளை, பெண் களுக்கு அதிக நகை போடுவதும், முக்கியமாக ஆண் பெண்களுக்கு மிஞ்சி போடுவதும் காரணமாகவிருக்கக் கூடும். மாப்பிள்ளை தம் மகளைவிட்டு ஓடிப்போகாமலிருக்க விரும்பி, பெண் வீட்டார் மாப்பிள்ளைகளுக்கு மிஞ்சி போடுகிறார்கள் என நான் ஊகிக்கிறேன். கால் விரலில் கனத்த வெள்ளிக் குண்டுகளால் மிஞ்சி போட்டால் - அது ஒருவிதமான விலங்கு. மாப்பிள்ளை ஓடமாட்டார் என்ற உத்தேசத்தின் பேரிலேயே அவ்வாறு முன்னிருந்த மூத்தண்ணார்கள் செய்திருக் கலாம். அதன் தத்துவத்தை உணர்ந்து கொள்ளாமல், பழக்க வழக்கம் என்ற உடும்புப் பிடியை இப்போதும் கைவிடாமல் பலவிடங்களிலும் அனுஷ்டித்து வரலாம். தண்டை, கொலுசு, சிலம்பு முதலிய காலணிகளும் இதே கருத்தைக் கொண்டே பெண்களுக்குப் போட்டு வரக்கூடும் என்று நான் நினைக்க இடமிருக்கிறதன்றோ? எனவே எல்லாரும் நன்கு யோசித்து எனது பிரேரேபணையை அங்கீ கரிப்பதற்கறிகுறியாக இன்றுமுதல் நகைகள் அணியும் மானங்கெட்ட செயலை அகற்றுவீர்களாக. நகைகள் அணியப்படுவதன் தத்துவம் இஃதன்று என சில தத்துவ சாதிரிகள் விளக்க முன்வரின், அவர்கள் கூற்றுக்கு ஆதாரமில்லை என்பதை இன்னும் விரிவாக நான் செல்லத் தயாராகவேயிருக்கிறேன். தாய்மார்களே! தமக்கைமார்களே! தங்கைமார்களே! விழியுங்கள்! எழுங்கள்! நீங்கள் ஆறறிவுடை யவர்கள் என்பதை உணருங்கள். ஆம்! இதைவிட இனி நான் வேறென்ன சொல்ல முடியும்! கிறுக்கன் - புதுவை முரசு, 11. 1. 1932, ப. 6 98. காந்திக்கு ஏற்படுத்திய சிறையில் வெள்ளைக்காரனின் காதைப்பிடித்துத் தூக்கிப் போடலாம் நூற்றுக்கணக்கான மதங்கள், ஆயிரக்கணக்கான வாழ்க்கை முறைகள், லக்ஷக் கணக்கான ஜாதிகள், கோடிக்கணக்கான மூடப் பழக்க வழக்கங்கள், ஆகியவற்றைச் சிந்தாமல் சிதையாமல் காத்து வரும் கடவுள் நம்பிக்கை, இவைகள் நமது நாட்டு மக்களிடம், குடி கொண்டிருப்பதால், உள்ளத்தில் எழுச்சியென்பதே அற்றுப் போயிற்று. தன் நம்பிக்கை அற்றுப்போயிற்று. எல்லையற்றதான உணர்ச்சியானது கடுகளவாகக் குன்றிவிட்டது. முற்போக்குக்குரிய செயல்களை அவர்கள் காணும் போதும், முற்போக்குக்குரிய விஷயங்களை அவர்கள் கேட்கும்போதும், அவை கனவில் கண்ட செயல்களாகவும், கனவில் கேட்ட விஷயங்களாகவும் எண்ணி, அவைகளுக்கும் தமது வாழ்க்கைக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்று நினைத்தவர்கள் போல் சும்மாவிருந்து விடுகிறார்கள். தோழர் காந்தி ஒருவர் மட்டுமன்று; ஆயிரம் காந்திகள் இந்நாட்டிடை வேலை செய்யட்டும்; கூட்டங்கள் போடட்டும்; உலகம் போற்றுபவராக ஆகட்டும். அவைகள் அனைத்தும் காந்திகளோடு சரி; மக்களுக்கும் அவைகளுக்கும் உள்ளூர்ந்த சம்பந்தம் ஏற்படுத்த முடியாது. இன்றைய நேற்றைய அநுபவத்தைக் கொண்டு நாம் சொல்வதாக எவரும் நினைக்கவேண்டாம். அநுபவம் ஒன்றைக் கொண்டே சொல்லிவிட்டதாகவும் நினைக்கவேண்டாம். பொது மக்களின் உள்ள நிலையில் மூழ்கிய அறிஞர் எவரும் நாம் கூறும் இவ்வித முடிவுக்கே வந்தாக வேண்டும் என்பது நிச்சயம். தோழர் காந்தி செயல் முதலிலேயே கோணல் ஆதலினால் அது முற்றுங் கோணலாகவே முடிந்தது. இந்தியாவின் இன்றைய - கடவுள் - மதம் - ஜாதி - மூடப் பழக்க வழக்கங்கள் - இருந்த நிலையில் இருக்கும்படியே, அதாவது ஒன்றையும் திருத்தாமலே தோழர் காந்தி, சுயராஜ்யம் பெற்றுவிடத் திட்டம் போட்டார். காந்தி திட்டம் போட்ட காரணம் இவ்வாறிருக்க அவர் சகாக்கள் காந்தி திட்டத்தை நம்பியதற்குக் காரணமென்னவெனில், காந்தியை மகாத்மாவென்றும், அவதார புருஷரென்றும் சொல்லுவதால், மக்கள் மலைத்து இழுத்த இழுப்பிற் கெல்லாம் வருவார்கள் என்றும், அதனால் சுயராஜ்யம் பெற்றுவிடலாம் என்றும் நினைத்ததேயாகும். இவர்கள் நினைத்தபடி, உயர்வுபடுத்திச் சொல்லியதால், மக்கள் ஒத்துக்கொள்ள முன்வந்தார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் காந்தியை இன்று சிறைச்சாலையில் பிடித்து வைத்துவிட்டதால் அதே மக்கள், அதே மனோபாவத்தோடு தான், அவரைச் சிறையிலடைத்தது கேட்டுப் பதறவில்லை. அநுமார் மலையைத் தூக்கினார் என்று கதை கேட்ட மக்கள் தமது வாழ்க்கை முறையில் திருந்தியதென்ன? அவரே நாக பாசத்தால் கட்டுப்பட்டபோதுதான், மனம் வேறுபட்டதென்ன? காந்தி மகாத்மா என்று கேட்டபோதும், அவர் சாவடியில் அடைபட்டார் என்றபோதும் மக்கள் மனோபாவம் வேறுபட்டதே கிடையாது. ஆனால் உள்ள நம்பிக்கையும் போய், உண்மை புலனானது லாபம். மகாத்மா - அவதார - புருஷர் - சாவடியில் அடைபடுவாரா? எடுத்ததும் மக்களைப் பார்த்து, மதத்தைத் தொலையுங்கள், ஜாதியைத் தொலையுங்கள், மூடப் பழக்க வழக்கங்களைத் தொலையுங்கள், கடவுள் நம்பிக்கையை நீக்குங்கள் என்று ஒருவன் சொல்லுவதால், ஏற்கெனவே அவற்றில் நம்பிக்கை வைத்துள்ள மக்களால் அவன், மகாத்மா அல்ல, அவதார புருஷனல்ல என்று நினைக்கப்படுவான் என்பது மெய்யே. இதனால் குற்றமென்ன? மனிதன் மனிதன்தானே! மகாத்மா, அவதார புருஷன் என்ற வார்த்தைகள் பொய்தானே! கடவுள், மதம், அவைகளின் பரிவாரங் களின் மூலம் இந்தியாவில் உள்ள 35 கோடி மக்களைத் திருப்திப் படுத்துவதால், உலகத்தில் எந்த முடுக்கிலுமுள்ள பொறுக்கியெடுத்த முண்டங்களாகிய - சில புரோகிதர்கள், அத்தை பாட்டி கதாசிரியர்கள் - இங்கிலீஷ்காரனுக்கு நெருக்கடியை உண்டாக்க எண்ணும் ராஜதந்திரிகள், ஆகியவர்களின் மனத்தையும் திருப்தி பண்ணிவிடலாம். பயனென்ன? மகாத்மா சிறையில் போனார். அது கேட்ட மக்கள் வீட்டில் நுழைந்து தாளிட்டுக் கொண்டார். பொறுக்கி யெடுத்த முண்டங்கள் புகழ்ந்து எழுதிய கையால் இகழ்ந்து எழுதுவதில் பின்வாங்கப் போவதில்லை. இந்தியா, தன்னிலையி லிருந்து இம்மி நகருமா? அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்ற பக்திப் பாடலைத்தான் பாடிக் கொண்டிருக்கும்! கடவுள் என்பது பொய், மதம் என்பது பொய், வருணாரமம் என்பது பொய், மூடப் பழக்கவழக்கங்கள் என்பவை பொய். இந்தப் பொய்களை ஆதரவாகக் கொண்டு, இந்தப் பொய்க் கதைகளைக் காப்பாற்ற நினைத்த காந்தி செயல் பொய், காந்திக்கு ஜெயம் கிடைக்கும் என்றது பொய், காந்தி சுயராஜ்ய முயற்சி 35 கோடி மக்கட்குப் பொருந்தியதாகும் என்று சொல்லிக் கொண்டிருந்தது பொய். இந்தப் பொய் இயக்க சம்பந்தமாய்ப் பொதுமக்கள் அடைந்த துன்பங்கள் மாத்திரம் மெய். தெரியாத்தனத்தால் காந்தி இந்தப் பொய் முறையில் இயக்கத்தை ஆரம்பிக்கவில்லை. மதத்தைவிடு, கடவுள் நம்பிக்கையை விடு, ஜாதியைத் தொலை, மூடத் தனங்களை ஒழி என்பதான விடுதலை முரசு உலகத்தில் முழங்குகையிலும், இந்தியாவில் சுயமரியாதை முரசு முழங்குகையிலும், அவைகளின் பக்கம் திரும்பாமல் காந்தி தமது காரியத்தைத் தொடர்ந்தார். அதன் பயனாகப் பொதுமக்களை அல்லற்படுத்தினார். சிறை சென்றார். தேச மக்கள் தமது பழய வாழ்க்கை முறையைக் கவனிக்கிறார்கள்; நூதனமொன்றுமில்லை. காந்தி சிறையில் அடைபடவில்லை. அவர் தவச்சாலையில் தவங்கிடக்கிறார் என்று இனிக் காலணாப் பத்திரிகைகள் காரியம் தொடங்கும். வேறு வழியென்ன? பத்திரிகைகள் நடக்கவேண்டுமே! பார்ப்பன அடியார்களும், அவர் வழிபற்றி நிற்கும் அடியார்க்கடியார் களும் இப்படித்தான் இனி ஆரம்பிப்பார்கள். வேறு வழி என்ன? கொழுப்பேறிய பார்ப்பனரல்லாத மக்கள் கெடவேண்டுமே! அவர்களின் காசைப் பிடுங்கித் தின்னவேண்டுமே!! இன்ப வாழ்க்கை நடத்துவதற்காகக் கட்டிய ஒரு வீட்டில் அசுத்தத்தை ஒதுக்கவும் ஓர் ஒதுக்கிடம் அமைப்பதுபோல, மானிடம் என்ற பெருங் கோட்டையில், - சமத்வக் கோட்டையில் - சகோதரத்வக் கோட்டை யில் - சுதந்தரக் கோட்டையில் - ஒரு மூலையில் கடவுள் நம்பிக்கை, மதம், ஜாதி முதலியவை சம்பந்தமான ஏடுகளுக்கும் இடம் கிடைத்து விட்டது தவிர - இந்த ஏடுகளே மானிடக் கோட்டை என்று நினைப்பது தொலைந்துவிட்டால் அதே நிமிஷத்தில் தேசமக்கள் அனைவரும் சுயமரியாதைக்காரர்களாவார்கள். சுயராஜ்யப் போர் தொடங்குவதென்பதும், முடிப்பதென்பதுவும், அப்போது இல்லாமற் போகும். சுயமரியாதை வாழ்வே சுயராஜ்ய வாழ்வு என்பது தெளி வாகும். ஏன் தாமதம்? உச்சிக் குடுமிகளைத் தொலையுங்கள்; நெற்றிக் குறிகளைக் கலையுங்கள். மொட்டைத் தலையரா யிராதேயுங்கள்! தாடியை எடுங்கள். தோல் தண்ணீரையும், சிலுவைப் பதக்கங்களை யும் நீக்குங்கள்; கோயில்கள், மசூதிகள், குறிப்பிடங்கள் அனைத்தை யும் தொழிற்சாலைகளாக்குங்கள், தெய்வங்களை, சாமிகளை, கடவுள்களையெல்லாம் மரத்தோடு மரமாகவும், செம்போடு செம்பாகவும், கல்லோடு கல்லாகவும், அட்டையோடு அட்டையாக வும் சேர்த்துத் தள்ளுங்கள்! அப்போதுதான் குமரி முதல் இமயம் வரைக்கும் உள்ள 36 கோடி மக்கள் ஒரு தாய் வயிற்றில் பிறந்த பிள்ளைகளா வார்கள். அப்போதுதான் ஒருவன் தாழ்வு, மற்றொருவன் உயர்வு என்ற முடைநாற்றம் ஒழியும். - அப்போது வேண்டுமானால் - அவசியம் ஏற்பட்டால் - இப்போது நம்மில் ஒருவராகிய காந்திக்குச் சிருஷ்டித்த அதே சிறைச்சாலையில், வெள்ளைக்காரனைக் காதைப் பிடித்துத் தூக்கிப்போட முடியும். - புதுவை முரசு, 11. 1. 1932, ப. 14 - 16 99. சர்க்கார் சமூகத்திற்கு (மீண்டும் ஆரம்ப ஆசிரியருக்குச் சிறைச்சாலையா?) திரு. வேங்கடகிருஷ்ணசாமி விளையாடுகிறாரா? பொதுவாக ஆரம்ப ஆசிரியர்களிடம் தமது வாலை அவிழ்த்து விட்டு அவர்களிடம் வேங்கடகிருஷ்ணசாமி எதிர்பார்ப்பதை அடைந்துவிடத் திட்டம் போட்டுவிட்டார். அவர் போட்ட திட்டத்திற்குச், சர்க்கார் தெரிந்தோ தெரியாமலோ இன்று வரைக்கும் துணை செய்து விட்டது. துணை செய்துவிட்ட சர்க்காருக்கு எடுத்துக் காட்ட வேண்டிய வற்றை ஞாயமாகவும், சுயநலமின்றியும், பொறுப் புடனும், நாம் எடுத்துக் காட்டுவதாகச் சர்க்காருக்குத் தோன்றினால் இனியாவது திரு. வேங்கடகிருஷ்ணசாமி விஷயத்தில் கருத்தைச் செலுத்தட்டும். இல்லையானால், இவ்விஷயத்தில் சர்க்காருடைய இரு கண்களும் திறக்கும்வரைக்கும் நாம் எடுத்துக்காட்டவேண்டிய விஷயங்களும் வேண்டியவரைக்கும் உண்டு. நமது பிரஞ்சிந்திய சர்க்காருக்குக் கீழ்வரும் சில ஐய வினாக்களை விடுக்கிறோம்:- திரு. வேங்கடகிருஷ்ணசாமி ஆரம்ப ஆசிரியர்க்கிடையில் ஓர் சர்வாதிகாரி என்று காட்டிக்கொள்ளும்படி அவரை விட்டு வைக்கலாமா? - என்பது ஒருபுறமிருக்க, அவர் புதுச்சேரித் தலைமைப் பாடசாலையின் தலைமை ஆசிரியராக நியமிக்கத் தக்கவர் என்பதை நிரூபிக்கும் ததாவேஜிகள் ஏதாவதுண்டா? அல்லது இன்று வரைக்கும், பிரஞ்சிந்திய மாணவர்களின் முன்னேற்றத்தில் வேங்கட கிருஷ்ணசாமி கவலையும், பொறுப்பும் உடையவரா என்பதையேனும், - தனிமுறையிலாவது, செர்வீ வகையிலாவது தெரிந்துகொள்ளப் பட்டதா? அல்லது தடபுடல் தோரோதுரை, தமது பொலித்தீக் காரண மாகவோ, அல்லது தமது தடபுடல் காரணமாகவோ வேங்கடகிருஷ்ண சாமியை ஆதரித்தார் என்ற காரணம் ஒன்றைக் கொண்டே திரு. வேங்கடகிருஷ்ணசாமி இப்போது சர்க்கார் செல்லப் பிள்ளையாக விளையாடவிடப் பட்டிருக்கிறாரா? திரு. வேங்கடகிருஷ்ணசாமி சாதாரண வாத்தியாராக மிசியம் வீதிப் பாடசாலையில் போடப்படுவதற்குமுன், அவர் அநேக கிராமப் பாடசாலைகட்குத் தலைவராய் இருந்திருக்கிறார். அங்கெல்லாம் அவர் நடந்துகொண்ட மாதிரிகளை விளக்கும் ததாவேஜிகள் சர்க்கார் பெட்டியில் இருக்கும் என்று நாம் நினைக்கிறோம்! அவை களைப் பார்த்துத்தான் இப்போது அவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப் பட்டதென்றால், ததாவேஜிகள் என்பவைகளே பயனற்றவையாய்ப் போயினவோ என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது. இவர் திருநள்ளாற்றுப் பாடசாலைத் தலைமை ஆசிரியராக இருந்தபோது இவரின்கீழ் ஆசிரியராக இருந்த ஒருவர் இங்கிலீஷ் காரர் கேள்வியின்மேல், மோசக் குற்றத்திற்கு ஆளாகி, வேலையின் மேலிருந்து நீக்கப்பட்டார். வேங்கடகிருஷ்ணசாமிக்கும், அந்தக் கேசுக்கும் உள்ள சம்பந்தத்தை எவரும் மறந்திருக்கமாட்டார்கள். வழக்கு இவரை ஒன்றும் பண்ணிவிடவில்லை என்பது மெய்தான். இது மாத்திரமின்றிப் பிரதாப வழக்கில் வேங்கடகிருஷ்ணசாமி சாக்ஷி யாக எடுத்துக்கொள்ளப்பட்டார். இவர் சாக்ஷியத்தின்பின் கல்வி இலாக்காவின் பெயரானது அந்தக் காரைக்கால் நியாய சபையில் பரிகசிக்கப்பட்டது. சர்க்கார் பெயரால் அதே திரு நள்ளாற்றுப் பாட சாலையில் இவர் ஓர் நாடகம் வைத்தார். அதனால் தமிழ் என்பது வெறியன் பேச்சு என்று சர்க்காரே சொன்னதாக ஆனதோடு, அந்த நாடகத்தில் வசூலான பணத்திற்குக் கணக்குக் காட்டிய முறையால், இன்றுவரைக்கும் பண வசூலுக்குரிய எவையும் நடுக்கத்துக்குரியவை என்று ஆசிரியர்கள் நினைக்கும் நிலைமை உண்டாயிற்று. ஆனால், இன்றுவரைக்கும் வேங்கட கிருஷ்ண சாமி வசூல் செய்யும் காரியத்தை விட்டதாகத் தெரியவில்லை. சென்ற தீபாவளியின்பேரால் தமது பாடசாலையில் சுமார் 40 ரூபாயும், இந்தப் புது வருஷத்தின்பேரால் எழுபது ரூபாயும் பிள்ளை களிடம் வசூலித்ததாகக் கேள்வி. இனிப் பாடசாலை துவக்கியதும், பிள்ளையார் சதுர்த்தி வராமலிருந்தால் நல்ல தென்றுதான் பிள்ளை களின் சொந்தக்காரர்கள் தவங் கிடக்கிறார்கள். பிரஞ்சிந்திய சர்க்கார் பாடசாலைகட்குத் தரும பாடசாலை என்று பெயர். நமது வேங்கடகிருஷ்ணசாமியைப் பொறுத்தமட்டில் தர்மப் பாட சாலைகள் அதர்மப் பாடசாலைகள் ஆக்கப்படுகிறது. திருநள்ளாற்றிலிருந்து நமது வேங்கடகிருஷ்ணசாமி வெளி யேறிய விந்தையையும் சொல்லிவிடுகிறோம். அவர் சாதாரணமாக மற்றவர்கள்போல் வெளியேறவில்லை. திருநள்ளாற்றுப் பாடசாலை யில் இவருக்கு ஊன்றியிருந்த வேரைப் பறிக்க அப்போதும் இப் போதும் ஜனத் தலைமை வகிப்பவர்கள் மண்வெட்டி எடுக்கவேண்டிய திருந்ததோடு, கனம் ழெர்பினீ கவர்னரே திருநள்ளாற்றுக்குப் போய் இவர் செய்த குற்றங்களைப் பற்றி விளக்கம் செய்து இவரை வெளியேற்ற வேண்டியிருந்தது. இனி மகாராஜமான்யராஜேதிரி, வேங்கடகிருஷ்ணசாமி சிலநாள் ரெட்டியார் பாளயம் பாடசாலையில் இருந்தார். இவர் தலைமையில் நிகழ்ந்த பாட்டின் பிளேட்டை நமது புதுவை முரசு என்னும் கிராமபோனில் வைத்துச் சாவிகொடுத்தால் கொலையோ கொலை என்று பல்லவி பிடிக்கிறது. - புதுவை முரசு, 11. 1. 1932, ப. 17 - 18 100. சர்க்கார் சமூகத்திற்கு ((மீண்டும் ஆரம்ப ஆசிரியருக்குச் சிறைச்சாலையா?) திரு. வேங்கடகிருஷ்ணசாமி விளையாடுகிறாரா? திரு. வேங்கடகிருஷ்ணசாமி தமது பிள்ளைகளைக் கல்வியில் திருப்தியான நிலைக்குக் கொண்டுவரவில்லை. பிள்ளைகளைப் பாட சாலையில் கொண்டுவந்து விடவரும் பெற்றோரின் மனதில், இந்தத் தலைமை ஆசிரியர் தமது பிள்ளைகளையே உந்நத நிலைக்குக் கொண்டுவர முடியவில்லை என்ற உணர்ச்சி ஏற்படு மானால் தமது பிள்ளைகளை அவர் தலைமையில் ஒப்புவிக்கத் தயங்குவது சகஜம். இதுவரைக்கும் நாம் கூறியவற்றால், திரு. வேங்கடகிருஷ்ண சாமி புதுவையின் தலைமைப் பாடசாலைக்குத் தலைமை ஆசிரியராக நியமிக்கப்படலாமா? கூடாதா? - என்ற விஷயம் விளங்கி யிருக்கும். திரு. வேங்கடகிருஷ்ணசாமி இப்போதிருக்கும் பாட சாலை யில் உதவித் தலைவராக இருந்தார். இப்படிப்பட்ட பாடசாலைகளின் உதவித் தலைமை என்பது பொறுப்புள்ள பதவி அன்று. திடீரென்று பாடசாலையின் தலைவர் வெளிநாடு சென்றுவிட்டார். உடனே கையோடு கையாக வேங்கடகிருஷ்ணசாமி தற்காலிகமாக அதன் தலைமைப் பதவியையும் பார்த்துக்கொள்ள விடப்பட்டார். ஆயினும், சர்க்கார் தலைமைக்குட்பட்ட முத்தால்பேட்டை, காலாப்பேட்டு, பாடசாலைகளை வேறொரு தலைவரிடம் ஒப்படைத் தார்கள். இது மாத்திர மல்லாமல் ஒரு தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டிய பொறுப்புகளையும் ஒப்படைக்க மறுத்தார்கள். சர்க்கார் திரு. வேங்கட கிருஷ்ணசாமியிடம் அப்போது இவ்வாறு நடந்து கொண்டதற்கு எப்படிப்பட்ட மனோநிலை காரணமாக இருந்ததோ? அதே மனோநிலை இப்போது மாறுபட்டு, திரு. வேங்கடகிருஷ்ண சாமிக்குத் தலைமைப் பதவியின் முழுப் பொறுப்பு ஏற்படுத்த வேண்டியதற்கு என்ன காரணம் என்றுதான் தோன்றவில்லை. இடையில் இரண்டொரு மாதத்தில் திரு. வேங்கடகிருஷ்ணசாமியின் நிலை திடீரென்று உயர்ந்துவிட்ட தென்று யாராவது சொல்ல முன் வந்தால், அவர்கள், பிரஞ்சிந்தியக் கல்வியின் அபிவிருத்தியில் அநுதாபமற்றவராகவே இருக்க முடியும். - புதுவை முரசு, 25. 1. 1932, ப. 32 - 34 101. நமது கடமை யென்ன? (காந்தியா? சுயமரியாதையா?) காந்தியையோ சிறையில் அடைத்துவிட்டார்கள். இதர தேசீயத் தலைவர்களோ ஒவ்வொன்றாய் சிறை வாயில்களில் புகுந்து கொண் டிருக்கிறார்கள். தொண்டர்களோ ரத்தம் கக்குகிறார்கள். அடிபடு வதோ கணக்கிலடங்காது. காங்கிர தாபனங்களோ கைப்பற்றப் படுகின்றன. காங்கிர பணமோ சூறாவளிக் காற்றில் அகப்பட்டுத் தவிக்கிறது. அடுத்த சீர்திருத்தமோ நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சுயமரியாதைக்காரர்கள் என்ன செய்வதென்பது விளங்கவில்லை. சுயமரியாதைத் தோழர்களில் முக்கிய 2 பேர்களோ ஐரோப்பா சென்றுவிட்டார்கள். ஜடி கட்சிக்காரர்களோ, அயர்ந்த நித்திரையி லிருக்கிறார்கள். அவர்களை எழுப்புவதென்றாலோ அறைக்குள் போகவே முடியாது. சத்தம் போட்டு எழுப்பலாமென் றாலோ காவற்காரன் அடிக்கிறான். தெரியாமல் தூங்குகிறவர் மேல் ஜன்னல் வழியாய்க் கல்லைப் போட்டாலாவது எழுப்பலா மென்றாலோ, தூக்க வெறியில் எழுந்து திட்டுவார்களோ என்று பயமாயிருக்கிறது. ‘இந்த நிலைமையில் பெரும்பாலான சமூகங்களாகிய பார்ப்பன ரல்லாத மக்கள் செய்யவேண்டிய கடமை என்ன? என்பதே இப்போது தமிழ்நாட்டில் பெரும்பாலாகிய கேள்விகளா யிருக்கின்றனவென்பதை நாம் உணர்ந்தபடியால்தான் இத் தலையங்கம் எழுத நேர்ந்தது. வாசகர்கள் சற்று ஊன்றிப் படிக்கக் கோருகிறோம். காங்கிர என்ற தாபனத்திற்கும் நமது சுயமரியாதை இயக்கத்திற்கும் உள்ள சம்பந்தங்களை அடிக்கடி வெளியிட்டிருக்கிறோம். சுருக்கமாக மறு முறையும் கூறவேண்டுமானால் காங்கிர என்பது ஒரு பார்ப்பனீய, இந்துமதப்பிரசார தாபனம் என்பது வெளிப்படையான உண்மை. காங்கிரசை 7 3/4 (ஏழே முக்கால்) கோடி முலீம்கள் ஒப்புக் கொள்வ தில்லை. (கடலில் பெருங்காயம் கரைத்த மாதிரி இரண்டொன்று உண்டு.) 7 கோடி ஆதி திராவிடர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. (இதில் அந்தப் பெருங்காயம்கூட இல்லை.) ஆங்கிலோ இந்தியர்கள் ஒப்புக்கொள்வதில்லை. 60 லட்சம் கிருதுவர்கள் ஒப்புக்கொள்வதில்லை. 32 லட்சம் சீக்கியர்கள் ஒப்புக் கொள்வதில்லை. பெரும்பாலான தொகையினராகிய 17 கோடி பெண் மக்களுக்கு அதைப்பற்றிய கவலையேயில்லை. (இதிலும் சில படித்த சுய விளம்பரப் பெண்கள் உண்டு) 57 லட்சம் சமதானப் பிரஜைகள் ஒப்புக்கொள்வதில்லை. ஆனால் காங்கிரசை அப்படியே கட்டிக் கொண்டு சுயராஜ்ய அமிர்தத்தை அப்படியே அள்ளி உண்ணு வதற்குச் சதா வாய்திறந்து கொண் டிருப்பவர்கள் யாரென்றால், அவர்கள்தான் பார்ப்பனர்களாகும். உத்தியோகப் பார்ப்பனன்கள் எல்லாப் பசங்களும் காங்கிரசை ஆதரிக்கிறார்கள்; காபி ஹோட்டல் பார்ப்பான் ஆதரிக்கிறான்; பூசாரிப்பார்ப்பான் ஆதரிக்கிறான்; தரகு போகும் பார்ப்பான் ஆதரிக்கிறான்; விவசாயப் பார்ப்பான் ஆதரிக் கிறான்; வக்கீல் பார்ப்பான் ஆதரிக்கிறான்; செருப்புக் கடைப் பார்ப்பான் ஆதரிக்கிறான்; சட்டசபைப் பார்ப்பான் ஆதரிக்கிறான்; பத்திரிகை நடத்தும் பார்ப்பான் ஆதரிக்கிறான்; வருணாச்சிரமப் பார்ப்பான் ஆதரிக்கிறான்; சீர்திருத்தப் பார்ப்பான் ஆதரிக்கிறான். ஆகவே காங்கிரசை பார்ப்பனர் எல்லோரும் ஏகமனதாய் ஆதரிப்பதின் ரகசியமென்னவென்பதை வாசகர்களே யோசித்துப் பார்க்கட்டும். இந்தியாவிலுள்ள மேற்கண்ட தொகையினர்போக மிச்ச முள்ள பார்ப்பனரும் சில பார்ப்பனக் கூலிகளும் பின்பற்றிக் கொண்டு பத்திரிகை வழியாக அநாவசிய விளம்பரப்படுத்தப்படும் ஒரு தாபனம் இந்தியா முழுமைக்குமே பொது தாபனம் என்று சொல்வதில் எவ்வளவு புரட்டிருக்கிறது என்பதை யோசித்துப் பாருங்கள். இன்னும் காங்கிரசில் முக்கிய பங்கெடுத்துக் கொள்பவர்க ளெல்லாம் எத்தன்மை வாய்ந்தவர்களென்பதை சற்றுச் சிந்தியுங்கள். காங்கிரசின் ஏகப் பிரதிநிதி என்று சொல்லப்படுபவராகிய திரு. காந்தியோ வருணாசிரம தர்மத்தை நிலைநாட்டுபவர். சமீபத்தில் கும்ப கோணத்தில் நடைடெபற்ற வருணாசிரம மகாநாட்டில் பேசிய நடேசய்யர் என்பவர்கூட மகாத்மா காந்தி இருக்கும்வரை வருணா சிரம தர்மத்திற்கு எந்த ஆபத்துமில்லை யென்று பேசியிருக்கின்றா ரென்றால் காந்தியாருடைய வருணாசிரம விஷம் எவ்வளவு கொடியது என்பதை நாம் சொல்லவேண்டியதில்லை. அவர் விவேகானந்தரைப் போல ஒரு ஹிந்துமதப் பிரசாரகராவார். நான் ஒரு ஹிந்து என்பதை என்றும் மறக்கமாட்டேன் என்று பல இடங்களில் சொல்லியிருக்கிறார். இன்றும் சொல்கிறார். ஹிந்துமதம் என்பது பார்ப்பனீயம் என்பதைச் சரித்திரம் சொல்கிறது. நாமும் அநுபவித்துக் கொண்டிருக்கிறோம். காந்தியார் வருணாசிரம ராஜ்யமாகிய ராம ராஜ்யம் வேண்டுமென்பவர். ஆகவே அவர் பார்ப்பனீயத்தைப் புனர் உத்தாரணம் செய்கிறவர் என்பது புலனாகும். அடுத்த தலைவர் பண்டித மாளவியா, அவருடைய சாயம் தமிழ்நாட்டில் அதிகமாய் வெளுத்துவிட்டது. தீண்டாதாருக்குத் தனிக் கோயில் வேண்டுமென்றார். அவர் ஹிந்து மகாசபைத்தலைவர், தன்னுடைய பிராமணத் தன்மையை இங்கிலாந்திலும் நிலைநாட்ட வேண்டுமென்று கையோடு கங்கா ஜலமும், களிமண்ணும் பார்ப்பன மடையனும் கொண்டுபோனவர். ஜாதியிலும் ஒரு வைதீகப் பார்ப்பனர். ஆகவே இவரும் பார்ப்ப னீயத்திற்காகவே பாடுபடுகிறார் என்பது தெளிவாகும். இனி குட்டிகாந்தி ராஜகோபாலாச்சாரியாரை எடுத்துக் கொள்வோம். இவர் ஒரு குறும்புத்தனமான பார்ப்பனர். தனக்குப் பல விஷயங்களில் நம்பிக்கையில்லாவிட்டாலும் ஜாதி அபிமானத் தையும், ஏமாற்றும் கருத்தையும் நினைத்துப் பல அக்கிரமங்களுக்கு மனதார உட்படுவார். குருகுலத்தின்போது பார்ப்பனரல்லாத மக்களையும் பார்ப்பன மக்களையும் சமமாகப் பாவிக்க வேண்டுமென்று தீர்மானித் ததற்காக கமிட்டியிலிருந்து ராஜினாமா செய்தவர். வேதாரண்யம் உப்புச் சத்தியாக்கிரகத்திற்குப் புறப்படு முன் ஸ்ரீரங்கம்போய் சுவாமி தெரிசனம் செய்யச் சொன்னவர். தீபாவளியின்போது நரகாசுரன் என்ற ஒரு பொய்ப் புராணக் கதையை தேசீய வேஷத்தோடு பிரசாரம் செய்து பார்ப்பனீயத்தை நிலைநாட்டினவர். சுயராஜ்யத்தில் பார்ப்பனரல்லா தார் நிலைமை என்னவென்பதை தனது நிர்வாகத்திலிருக்கும் கதர் போர்டிலேயே உதாரணமாகக் காட்டி வருபவர். அடுத்த தேசீயத் தலைவர் வல்லபாய் பட்டேல். அவர் தமிழ் நாட்டிற்கு வந்தபோது பேசியதை நாம் மறக்கவில்லை. ஆரிய தர்மத்தை நிலைநாட்டவேண்டுமென்றும், சமூக சீர்திருத்தக் காரர்கள் ஆரிய தர்மத்தை அழிக்கக் கூடாதென்றும், பார்ப்பனரல்லாதார் கிளர்ச்சியையும் சுயமரியாதை உணர்ச்சியையும் தூஷித்தும் கண்டித்தும் பேசிப்போன பார்ப்பனர். இவர்தான் மற்றொரு தேசீயத் தலைவர். பார்ப்பனீயத்தை நிலைநிறுத்த அல்லும் பகலும் பாடு படுபவர். அடுத்த தலைவர் ஜவகர்லால் நேரு. அவர் தனது தகப்பன் இறந்துபோய் மோட்சத்தையடையவேண்டுமென்பதற்காக கங்கையில் எலும்பைப் போட்டவர். இந்த செய்கைக்குக் காரணம் அவரது ஹிந்துமத நம்பிக்கையேயாகும். ஆகவே இவரும் பார்ப்பனீயத்தை ஆதரிக்கிறவரென்பதில் சிறிதும் சந்தேகமில்லை. இனி தமிழ்நாட்டுத் தலைவர் சத்தியமூர்த்தியை எடுத்துக் கொண்டாலோ, அவர் நாடறிந்த பார்ப்பனர். நாலுகாசு கிடைத்தால் தாசி அவசியம் என்பார்; வேசிகூட அவசியம் என்பார். பூணூலும் உச்சுக் குடுமியும் இந்தியாவில் நிலைப்பதற்காகவும் தான் மந்திரியாக வந்து பார்ப்பனரல்லாதாரைப் பழிக்குப் பழி வாங்கவேண்டுமென்பதற் காகவும், 1000 இடத்தில் கல்லடி பட்டாலும் படுவார், 10 தடவை ஜெயிலுக்குப் போவதாயிருந்தாலும் போவார். ஆகவே இவரும் பார்ப்பனீய சுயராஜ்யம் வருவதை ஆவலோடு எதிர்பார்த்திருப்பவ ராகும். இன்னும் இம் மாதிரியான உதாரணங்களைப் பெருக்கிக் கொண்டே போகலாமாயினும் மாதிரிக்காக மட்டும் சிலவற்றைக் குறிப்பிட்டோம். ஆகவே இப்போது பேசப்படும் சுயராஜ்யமென்பது ராமராஜ்ய மாகிய பார்ப்பனீய ராஜ்யமென்பதை வெளிப்படையாக உணர்ந்து கொண்டோம். வருகிற சுயராஜ்யத்தில் (ஒருவேளை வந்தால்) குறைந்த பட்சம் 4 ஜாதிகளாவது இருந்தே தீரவேண்டுமாம். சுதேசி அரசர்கள் இருப்பார்களாம். சங்கராச்சாரிகள், மகந்துக்கள், பாதிரிகள், முல்லாக்கள், பண்டார சந்நிதிகள், பிட்சுக்கள் முதலானவர்கள் காப்பாற்றப்படுவார்களாம். எல்லா மதங்களும் பத்திரமாகக் காப்பாற்றப் படுமாம். ஏழைகளாயிருப்பவர்கள் தக்ளியில் நூல் நூற்றுத் தினம் இரண்டு தம்பிடியும், ராட்டினத்தில் நூல் நூற்றுத் தினம் 0-1-3 அணாவும் சம்பாதித்துத் திருப்திப் படவேண்டுமாம். பெரிய ஜாதிக்காரன் பெரிய ஜாதிக்காரனாகவும், பணக்காரன் பணக்காரனாகவும், மதத் தலைவன் மதத்தலைவனாகவுமே இருப்பதற்கு ஒரு சுயராஜ்யம் வேண்டு மென்றால், அதைவிட இப்போதிருக்கும் ராஜ்யம் எவ்வளவோ மடங்கு நல்லது என்றுதான் சுயமரியாதை இயக்கத்தார் சொல்லுகிறார்கள். ஆகவே இவ்விஷயத்தை நிதானமாய் யோசித்து அறிந்தவர்கள் சுயராஜ்யக் கூச்சலிலோ, சட்டமறுப்புக் கூச்சலிலோ மயங்கிவிட மாட்டார்களென்பது திண்ணம். இச் சமயத்தில் நமது கடமையென்ன? நமது கொள்கைகளுக்கு நேர் முரணான கொள்கைகளையுடைய காங்கிர அடக்கப் படுகிறது. அதைச் சார்ந்தவர்கள் சிறையில் அடைக்கப் படுகிறார்கள். இதில் சுய மரியாதை இயக்கத்திற்கு நேர்ந்த தீமை என்ன என்றே கேட்கிறோம். இப்போதுதான் காங்கிரசின் புரட்டை எடுத்து மக்களுக்குப் பரப்ப வேண்டும். அவர்கள் சொல்லும் சுயராஜ்யம் எத்தன்மையது என்பதை பொதுமக்களுக்கு விளக்கவேண்டும். தடியடிகளைப் பார்த்தோ, அடக்குமுறைகளைப் பார்த்தோ மனத்தைச் சிதறவிடக்கூடாது. நாக்கில் வேல் குத்திக்கொண்டும், அரிவாளை நட்டுவைத்து அதன் மேல் ஆடிக்கொண்டும் இருக்கிறவர் களைப் பார்த்து நாம் அநுதாபப்படுகிறோமா? அவர்கள் செய்வது இரங்கக்கூடியதாயிருக்கலாம். ஆனால் அவர்கள் எண்ணம் என்ன? பிறரை ஏமாற்றுவதல்லவா? இதைப்போலவே தான் தடியடியும். தடியடி படுவது இரங்கக்கூடியதுதான். ஆனால் அவர்கள் எதற்காக அடிபடுகிறார்கள்? ராமராஜ்யத்தை - பார்ப்பன ராஜ்யத்தை - தாபிப்பதற்காகும். ஆகவே இம்மாதிரியான கிளர்ச்சிகளில் சாமி ஆடு கிறவனைப் போல ஆவேசங்கொண்டு, சுயமரியாதைக் காரர்களும் இறங்கி விடாமல் தைரியமாகவும், திட புத்தியோடும் நமது இயக்கக் கொள்கைகளை கிராமங்கள்தோறும் பரப்ப வேண்டுகிறோம். இனி கடைசியாக சிறைவாசத்தைப் பற்றிச் சில வார்த்தைகள் சொல்லவேண்டியிருக்கிறது. சிறைவாசம் செய்வதென்பது ஒரு பெரும் தியாகம் என்ற உணர்ச்சி பொதுமக்களைவிட்டு அடியோடு போகவேண்டும். காந்தியார் சிறைப்பட்டார் என்று சுயமரியாதைக் காரர்கள் கவலைப்படுவதில் ஒரு சிறிதும் அர்த்தமில்லையென்பதே நமது அபிப்பிராயம். சங்கராச்சாரியார் சிறைப்படுவதில் சுய மரியாதைக்காரர்கள் அநுதாபப்பட்டால் அதற்கு எவ்வளவு பொருள் உண்டோ அதேமாதிரிதான் காந்தியார் சிறைப்படுவதிலும், ராமன் கதை ஒரு கட்டுக்கதை என்று அறியாத ஒரு சின்னக் குழந்தை - படித்த குழந்தை - உலக சிரேஷ்டரான குழந்தை - ஜெயிலில் இருந்தாலென்ன என்பதுதான் நமக்கு விளங்கவில்லை. ஆகவே சாரதா சட்டத்தை மீறி சிறு குழந்தைக்குக் கல்யாணம் செய்து ஜெயிலுக்குப் போகும் ஒரு வைதீகப் பார்ப்பானுக்கும், பார்ப்பன ராஜ்யத்தை தாபிப்பதற்காக அரசாங்க சட்டத்தை மீறி ஜெயிலுக்குப் போன காந்தியாருக்கும் என்ன வித்தியாசம் என்பதை வாசகர்கள் யோசனைக்கே விட்டுவிடுகிறோம். - புதுவை முரசு, 18. 1. 1932, ப. 14 - 17 102. தமிழரசின் மித்திரபேதம் (beU¥ò¡F¢á vGJ»wJ) தமிழரசு ஆசிரியர் லேகிய டப்பா மாசிலாமணியானது சுய மரியாதை இயக்கத்தை மூன்றே நாளில் அழித்துவிடுவதாக சபதம் கூறிற்று. அது திறந்தவாய் மூடுவதற்குள் அந்த லேகிய டப்பாவின் ஊராகிய சென்னையிலேயே ஒரு பெருத்த மகாநாடு நடந்தது. அந்த மகாநாட்டில் காலி மாசிலாமணியோ, கூலி அய்யா முத்துவோ, வாலி நடராஜனோ ஒன்றும் எட்டிப் பார்க்கவில்லை. சொந்தத் தாடியிலேயே நெருப்புப் பிடிப்பதுபோல் சென்னையிலேயே சுயமரியாதைத் தீப்பிடித்து தமிழரசு ஆபீசைச் சுற்றி புகைந்து கொண்டிருப்பதைக் கண்ட மாசிலாமணிக்குப் புதிய யோசனை தோன்றியிருக்கிறது. அதாவது, சுயமரியாதைக்காரர்களுக்குள் சிலர் நடத்தை பிடிக்காமல் ஏதோ சிலர் விலகிக்கொள்ளப் போவதாக எந்த முண்டமோ இந்த மாசிலாமணி முண்டத்திடத்தில் சொன்னதாக நடராஜ முண்டம் தமிழரசு முண்டத்தில் வெளியிட்டிருக்கிறது. இது பார்ப்பனனுடைய கடைசி சூழ்ச்சிமுறையாகிய மித்திரபேதமாகும். இதற்கு நாம் கூறும் பதில் என்னவென்றால், சுயமரியாதைக் காரர்களுக்குள் சொந்த விஷயங்களிலோ, கொடுக்கல் வாங்கலிலோ பல வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் எங்களைத் தனியே பிரிப்ப தென்பது முடியாத காரியம். அப்படி ஒருவேளை பிரித்தாலும் அய்யா முத்துவைச் செய்ததுபோல் காலுக்காகாத செருப்பென்று சொல்லி கழற்றி எறிந்துவிடுவோமேயொழிய அதை எங்கள் கூட்டத்தில் சேர்ப்பதில்லை. ஆகையால் எங்களைத் தனித் தனியாகப் பிரித்தாலும் தனித்தனி நெருப்புக் குச்சியாக தமிழரசில் தீவைப்பதற்கு என்றும் காத்திருக்கிறோம். இவ்வித சூழ்ச்சிகள் செய்து பிழைப்பதைவிட, மாசிலாமணி யும் நடராஜனும் சேர்ந்து கண்யமாக ஒரு க்ஷவரக்கடை வைத்தால் சுயமரியாதைக்காரர்கள் அங்கு வந்து க்ஷவரஞ் செய்துகொண்டு இருவர் வயிற்றுப் பிழைப்பையும் நடத்தித் தரக் காத்திருக்கிறோம். (குறிப்பு: அதிக தூஷணைகளாக இருந்த பல வார்த்தைகளை இதிலிருந்து எடுத்துவிட்டோம். நமது பத்திரிகைக்கு எழுதுபவர்கள் இனி அதிக தூஷணைகளான வார்த்தைகளை உபயோகப்படுத்தா திருக்குமாறு கேட்டுக்கொள்ளுகிறோம். ப-ர்.) - புதுவை முரசு, 18.1.1932, ப. 22 103. நமது வால்போஸ்ட் ஆக்ஷேபம்! புதுவைமுரசு வால்போஸ்டை நமது கும்பகோணம் ஏஜண்டு வழக்கப்படி 12. 1. 32இல் வைக்கவேண்டிய இடத்தில் வைத்தார். அந்த வால்போஸ்டில் அநேக தலைப்புக்களில், காந்திக்கு ஏற்படுத்திய சிறையில் வெள்ளைக்காரன் காதைப் பிடித்துத் தூக்கிப் போடலாம் என்ற தலைப்பும் ஒன்றாகும். இத்தலைப்பைப்பற்றி அங்குள்ள போலிஸ் அதிகாரிகள் வருந்தினார்கள் என்றும், வால் போஸ்டுகளையும், புதுவைமுரசு பிரதிகளையும் எடுத்துப் போனார்கள் என்றும், அதன்மேல், நமது ஏஜண்டு தோழர் E.N.K. பாக்ஷா அவர்களையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து, இவ்விதப் பத்திரிகைகளை விற்கலாகாது, இவ்வித வால்போஸ்ட் ஒட்டலாகாது என்று எச்சரித்ததாயும் இனியும் இது சம்மந்தமாக ஏஜண்டை அழைப்பதாய்ச் சொல்லியிருப்பதாயும் நாம் கேள்விப்படுகிறோம். எச்சரிக்கை செய்த போலீஸ் அதிகாரிகட்கு நாம் தெரிவித்துக் கொள்ள விரும்புவதாவது. இந்த உலக மக்கள் அனைவரும் இன்னவிதமாக நடந்து கொண்டால் இந்த உலகத்தையே பொடியாக்கி ஆகாயத்திற் பறக்க விடலாம் என்று நாங்கள் பொதுவாகச் சொன்னால் எப்படி போலீஸாருக்குக் குற்றமாகாதோ அதுபோலத்தான், காந்திக்கு ஏற்படுத்திய சிறையில் வெள்ளைக்காரனைக் காதைப் பிடித்துத் தூக்கி போடலாம் என்றதும் குற்றமாகாது என்று கருதுகிறோம். தற்கால சந்தர்ப்பமானது காந்தி என்றதாலும், ஏகதேசம் பொதுவாக வெள்ளைக் காரன் என்றதாலும் போலீசாரை வருந்தவைக்குமானால் இன்றைய கிளர்ச்சி ஏற்படாத முன்பு தொடங்கி சமூகச் சீர்திருத்தத்தை நோக்க மாகக் கொண்ட சுயமரியாதை இயக்கப் பத்திரிகை நடுங்கிவிடக் காரணமில்லை இச் சந்தர்ப்பத்தில் இங்கிலீஷ் சர்க்கார் போலீஸ் அதிகாரிகட்கு அதிகப் பொறுப்பைக் கொடுத்திருப்பதை நாம் அறிந்துள்ளோமாதலால், அப்படிப்பட்ட பொறுப்புடன் கூடிய பார்வை யின் வேகத்தில் நமது வால்போஸ்ட்டின் சில எழுத்துக்கள் எதிர்த்து நின்றதுபோல் அவர்கள் நினைத்ததால் ஏற்பட்ட கோபவார்த்தைக்கு நாமும் கஷ்டப்பட்டுக்கொள்ள எண்ணவில்லை. - புதுவை முரசு, 25. 1. 1932, ப. 7 104. தடுத்தாட் கொள்வோம் கைலாசத்தில் உள்ள தேவர்களில் ஒரு பணிப்பெண்ணும், சிலபெருமான் சாயையான சுந்தரனும் மனமொத்துப் போனதை யறிந்த சிவபெருமான், இந்தச் சுயமரியாதைக் கலியாணத்தின் தண்டனையாகச் சுந்தரனையும், பெண்ணையும் பூலோகத்தில் போய்ப் பிறந்து இன்பம் அனுபவிக்கும்படி தீர்மானித்தார். இந்தத் தீர்ப்பை மறுத்துச் சுந்தரன் புனர் விசாரனை செய்ய மனுப்போட்டான். அந்த அநியாய புரத்தில் புனர் விசாரனை சிவபெருமானாலேயே தீர்க்கப்பட வேண்டியதிருந்தது. அதன்படி சாபம்போட்ட சிவனும், அதைப் பெறவேண்டிய சுந்தரனும் ஒர்வித இராஜி ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதாவது, சுந்தரன் சிவபெருமான் சாயையேயாயினும், அவன் பூலோகத்தில் பிறந்தால் பிராமணர் காஸ்மா பாலிட்டன் கிளப்பில் புகுந்தபின் மீள மனம் வராதது போல் சம்ஸார சாகரத்தில் வீழ்ந்து திருவருளைச் சிவபெருமான் சமயத்தில் வந்து சுந்தரனைத் தடுத்தாட்கொள்ளவேண்டும். அதுபோலவே சுந்தரன் தடுத்தாட் கொள்ளப்பட்டதாகவும் கதை. சுயமரியாதைக்காரரும் காங்கிரஸ் கொள்கையென்னும், கடவுள், மதம், ஜாதி, மூடப்பழக்கங்கள் ஆகிய பந்தங்களில் மாட்டிக்கொள்ளா திருக்கவேண்டும். இதை ஆங்காங்குள்ள சுயமரியாதைக் காரர்களுக்கு நாம் ஞாபகப்படுத்துகிறோம். சுயமரியாதைக்காரர்கள் அவ்வாறு காங்கிரஸ் பந்தத்தில் மாட்டிக்கொள்ளாமல் தடுத்தாட்கொள்ள அவர்கட்குக் கைலாசமோ, பழய பரமசிவமோ இல்லை. ஆனால் பகுத்தறிவுடையவர்கள் சுயமரியாதைக்காரர்கள். உண்மையில் ஒர் சிவபெருமானிருந்தாலும் அந்தத் திருவருள் சுயமரியாதைக் கலியாணத்தைத் தடுக்கத்தான் உதவியாகும். சில இடங்களில் காங்கிரஸ்காரர்கள் உதைபடும்பேது அதற்காகப் பரிந்துகொண்டு சுயமரியாதைக்காரர் போகிறார்கள். ஒரு காங்கிரஸ்காரனுக்கு நாம் பரிந்து போவதால் நாட்டிற் பெரும்பான்மை ஏழை மக்களுக்கும், 5 கோடி தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், இழைக்கப்படும் துன்பங்களை ஆதரித்தவராகிறோம். மேலும் காங்கிரஸ்காரருக்கு ஆத்மசக்தி உண்டு. அது அடிவிழும் இடத்தில் அடிவிழாதமுன்பே மோர் பைன் இஞ்சக்ஷன் செய்துவிடக்கூடியது, சிறைச்சாலை என்பதும் காங்கிரஸ்காரருக்குத் தவச்சாலைதான். போதாக்குறைக்கு வீராதி வீரர்களான கண்ணப்ப ஆழ்வார் முதலியவர்களின் தற்கால வெள்ளைத் தலையங்கங்களும், காங்கிரஸ் தொண்டர்களுக்கு வழி சொல்லும், சுருக்கமாகச் சொல்லுமிடத்து தேசத்தைக் குட்டிச் சுவராக்கி வரும் ஆஸ்திக ஆதிக்கத்தை ஒழிக்கச் சேகரித்துள்ள ஒவ்வொரு சுயமரியாதைக்காரனுடைய செல்வாக்கும், தோள் வலியும், நாஸ்திக ஏழை மக்கட்குச் சொந்தமாகும். இதனால், மேலாடைபோட மறுக்கப் பட்ட ஓர் தாழ்த்தப்பட்ட சகோதரியின் உத்தரவின்றிச் சுயமரியாதைக் காரன் இம்மியளவும் இன்றைய காங்கிரஸுக்கு உதவி செய்ய ஞாயமில்லை. ஆயினும், பைத்தியக்காரனுக்குப் பைஸிக்கல் தரவேண்டாம் என்று கூறுகிறோமேயொழிய அவனுக்கு மூளை வைத்தியம் செய்வதில் சிறிதும் பின்னிடவேண்டாம் என்றுதான் சுயமரியாதைக்காரர்கட்குக் கூறுகிறோம். ஆஸ்திகரின் மூளை வைத்தியத்திற்காகத் தள்ளாத கிழவன் ஐரோப்பா பிரயாணம் செய்கையில், சுயமரியாதை வாலிபர்கள் அதன்பொருட்டு உயிரையும் இழக்கத் தயாராய் இருக்க வேண்டும் என்பதை நாம் கொள்ளத் தேவையில்லை. மேலும் காங்கிரஸ் காரரின் கதிதானென்ன? அவர்கள் காங்கிரஸ் கொள்கையென்னும் பந்தத்தில் விழாமல் அவர்களைத் தடுத்தாட்கொள்ளப் பரமசிவன் இல்லை; அறிவியக்கக் காரராகிய சுயமரியாதைக்காரர்கள்தான் அந்த வேலையைச் செய்ய வேண்டும். நெஞ்சுறுதியும் அறிவிலே தெளிவு மில்லாதவர்கட்கு இது நேரக்கூடிய சம்பவமாக இராமலிருக்கலாம். தேசமுன்னேற்றம் சுயமரியாதைக் கொள்கையில் மட்டும் உண்டாகும். என்பது நமது நம்பிக்கை. சுயமரியாதைக்காரர்கள் தற்கால காங்கிரஸ் பைத்தியக்காரர் தங்கள் வழிபற்றிச் செல்லுவதில் உதவி செய்வதின் மூலம் அவர்கட்குக் கெடுதி செய்யவேண்டாம் என்பதும் மக்களைக் காங்கிரஸிலிருந்து தடுத்தாட்கொள்ளவேண்டும் என்பதும் நாம் கூறவிரும்பும் யோசனை யாகும். - புதுவை முரசு, 25. 1. 1932, ப. 9 - 10 105. தோழர் காந்தி கடவுள் அவதாரமா? தோழர் காந்தியவர்களை நம் தென்னாட்டுப் பார்ப்பனர்களும் தேசபக்தர்களும் கூடிக்கொண்டு கடவுள் அவதாரமென்றும், கடவுளே யென்றும் கூற ஆரம்பித்து அதற்கான வேலைகளை முறையே செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். காந்திக்கு ஜே என்று ஆரம்பிக்கப்பட்ட தேச பக்தி இன்று காந்தியவர்களைக் கடவுள் அவதாரமென்று ஆராதனை செய்யும்வரை வந்து முடிந்துவிட்டது. காந்தியின் பிறந்த தினத்தைக் கொண்டாட ஆரம்பிக்கப்பட்ட பொழுதும், அவர் சிறைப்பட்ட நாளைக் கொண்டாட ஆரம்பிக்கப்பட்ட பொழுதும், மற்றும் அவர் சாப்பிடு வதைப் பற்றியும், உடுப்பதைப் பற்றியும், உண்ணாவிரதமிருப்பதைப் பற்றியும், பேசுவதைப் பற்றியும், பிரார்த்தனை செய்வதைப் பற்றியும், சிரிப்பதைப் பற்றியும், உறங்குவதைப் பற்றியும், விழிப்பதைப் பற்றியும், செருப்புத் தைப்பதைப் பற்றியும், ராட்டு நூற்பதைப் பற்றியும், வெள்ளாட்டுப் பால் வேர்க்கடலை, பழச்சாறு சாப்பிடுவது பற்றியும், குழந்தைகளோடு விளையாடுவதைப்பற்றியும், பகவத்கீதை படிப்பதைப்பற்றியும், ராமபஜனை பாடுவதைப்பற்றியும், தினம் தினம் புகழ்ந்து பாராட்டி எழுதி, படம்போட்டுக் காட்டி உலக சிரேஷ்டர் என்று தேசீய பத்திரிகைகள் விளம்பரம் செய்தபோதே நாம் ஒரு முடிவிற்கு வந்துவிட்டோம். தோழர் காந்தியவர்கள் இனி, தென்னாட்டுப் பார்ப்பனர் வலையி லிருந்து மீள முடியாதென்று கண்டுகொண்டோம். அதன் படியே தோழர் காந்தியவர்கள் பார்ப்பனீயத்திற்கு பாதுகாப்பும் பண்டைய வர்ணாசிரமத்திற்குச் சிறப்பும் கூற ஆரம்பித்துவிட்டார். அதோடு மட்டுமின்றி, தான் ஒரு சனாதன ஹிந்து வென்றும் பட்ட வர்த்தனமாகக் கூறிக்கொண்டார். வர்ணாச்ரமத்தை நம்புவதாகவும், அதன்படி எவன் ஒருவன் பிராமணனாகப் பிறக்க வேண்டு மானாலும், அவன் பல பிறவிகளிலும் பிறந்து பூர்வ கர்மத்தில் செய்த நல்வினைக் கேற்பவே பிராமணனாகப் பிறக்க முடியும் என்றும் கூறினார். தீண்டாதவன் (பஞ்சமன்) திடீரென்று பிராமணனாக முடியா தென்று தத்துவங் கூறித் தம் பிரசங்கங்களில் பார்ப்பன மதத்திற்கு ஆதரவு கொடுக்கவும் அதை நிலைநாட்டவும் தலைப்பட்டார். இத்தகைய விரிந்த கொள்கைகளோடுதான் இந்தியாவிற்குச் சுய ராஜ்யம் வாங்கிக் கொடுத்துவிடப் பல வகையில் முயன்றார். லண்டனுக்கும் போனார். வட்டமேஜை மகாநாட்டிலும் மாளவியா, சரோஜினியோடு தனித்தொகுதியை எதிர்த்தார். தயங்கி நின்றார். கைவிட்டார். எல்லாம் கடவுள் செயலென்று உணர்ந்தார். இறுதியாகக் கடவுளைப்பற்றிக் கொலம்பியா பிளேட்டில் ஒரு பிரசங்கமும் கொடுத்தார். அவனது விற்பனை லாபத்தில் பாதி காங்கிரஸிற்கென்று ஒப்பந்தம் பேசினார். இந்தியா பயணமாகி வந்தார். மீண்டும் போர் என்றார். ஆம் சிறைக்குள் வாருங்க ளென்றார்கள். போய்ச் சேர்ந்தார். அடக்குமுறை காரணமாகத் தேசபக்தர்களும் ஆங்காங்கே சிறைப் பட்டார்கள். இன்று காங்கிர தாபனங்களோ, மறியலோ, உண்டியலோ, பிரசங்கமோ, கொடி வணக்கமோ யாவும் மறைந்தன. மற்றும் சிறைபோக முடியாத தேசபக்தர்கள் வயோதிகப் பார்ப்பனர்கள், வர்ணாச்ரமப் பார்ப்பனர்கள், உத்தியோகப் பார்ப்பனர்கள், புரோகிதப் பார்ப்பனர்கள், ஹோட்டல் பார்ப்பனர்கள் யாவரும் கூடி காந்தியோ தெய்வ அவதாரம். அவர் ஒன்றும் செய்யவேண்டாம். ஆங்கி லேயர்கள் காந்தி பாதத்தில்வந்து சரண்புகப் போகிறார்கள். அதாவது காந்தியார் ஆன்மசக்தி ஜப்பானிலும் அமெரிக்காவிலும் இத்தாலி யிலும் கூடச் சென்று ஒளி வீசுகின்றது. அவரது பிறப்போ மனிதப் பிறப்பன்று. தெய்வப் பிறப்பு! அவரது போராட்டமோ ஸ்ரீ கிருஷ்ண பகவானின் தர்ம யுத்தத்தைப் போலாகும். அதர்மம் ஒழியும், தர்மம் நிலைக்கும் (எந்தத் தர்மம்? பார்ப்பன தர்மம்) என்றெல்லாம் கூறிப் பிரசாரம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். பலவிடங்களில் புகழ்மாலை பாடி தீப தூப நைவேத்திய ஆராதனையோடுகூடிய வழிபாடு செய்யவும் ஆரம்பித்து விட்டார்கள். இந்த அலங்கோலமெல்லாம் அவர் உயிருடன் சிறையிலிருக்கின்றாரென்ற செய்தி எல்லோருக்கும் தெரிந்தே நடைபெறுகின்றது. ஆனால் இதைக் கண்டு நாம் ஒன்றும் ஆச்சரியப்படவில்லை. கல்லையும், செம்பையும், குயவன் பதுமையயும், ரவிவர்மா படத்தை யும், நதியையும், மலையையும், திறந்த வெளியையும், பாம்பையும், கருடனையும், குரங்கையும், சாணியையும், கடவுள் என்று வழிபாடு செய்வதிலும் உற்சவங்கள் கொண்டாடுவதிலும் தினம் பல்லாயிரக் கணக்கான ரூபாய்களைச் செலவாக்கி பக்தியென்றும், முக்தியென்றும், மதிமயங்கிப் பகுத்தறிவற்றுப் பார்ப்பான் காலடியிலும், அவனது சூழ்ச்சியிலும் சிக்கி மானங்கெட்டு வாழும் மனிதத் தன்மையும் தன்மதிப்பு மற்றவர்களிடம் காந்தி தெய்வ அவதாரம் என்று பிரசாரம் செய்வதிலோ அதைப் பாமர மக்கள் நம்புவதிலோ நமக்கு ஒன்றும் அதிக ஆச்சரியமில்லை. பின் எதற்காக எழுதினோமென்றால் நமது மக்களின் அறியாமையையும், பார்ப்பனர்களின் பார்ப்பனீய மதப் பிரசாரத்தின் போக்கையும் எடுத்துக்காட்டுவதற்காகவேதான் எழுதினோம். கடவுள் உணர்ச்சியே மனிதனை அடிமை வாழ்வில் நீடிக்கச் செய்திருக்கிற தென்று கண்டு நாம் அந்த உணர்ச்சியையே போக்கப் பிரசாரம் செய்து வருகிறோம். அதே சமயத்தில் இதற்குமுன் இறந்த பல மனிதர்களைத் தெய்வமாக்கிய பார்ப்பனக் கூட்டம் உயிரோடுள்ள நம் தோழர் காந்தி அவர்களையே கடவுள் அவதாரம் என்று பிரசாரம் செய்கிறது. தோழர் காந்தி கடவுள் அவதாரமா? என்பதை இனியேனும் பகுத்தறிவுடன் யோசிக்குமாறு வேண்டுவ தோடு, தேசீயத்தின் பெயரால் மதப் பிரசாரமும் காந்தியின் பெயரால் கடவுள் பிரசாரமும் செய்யப்படுவது பார்ப்பனர்களின் மறைமுகச் சூழ்ச்சிப் பிரசாரமாகும் என்பதை மட்டும் மறந்துவிடக்கூடாது. - புதுவை முரசு, 25. 1. 1932, ப. 12 - 13 106. இந்துமதத்தில் பெண் கல்வியின் பரிதாபநிலை படிக்க விரும்பிய சிறுமி நாடு கடத்தப்பட்டாள் முத்துராமலிங்கபுரம் 22.01.32ல் இவ்வூர் திரு. இராமனாசாரி யென்பவரது குமாரத்தி சுமார் 15 வயதுள்ள திருச்செல்வி தாயம்மாள் என்பவள் உள்ளூர்ப் பாடசாலையில் 5-ம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும்போது புஸ்பவதியாகிவிட்டபடியால், வைதீகக் குடுக்கைகளான தாய் தந்தையர்கள் கலியாணமாகும்வரை வெளியே வரக்கூடாதென்று தாயம்மாளை வீட்டில் போட்டு அடைத்து விட்டார்கள். அப்பெண்மணி அவர்களது மூடக் கட்டுப்பாட்டுக் கடங்காது நான் எப்படியாகிலும் எட்டாவது வகுப்புவரை படித்தே தீருவேனென்று ஒரே பிடியாய்ப் பிடிக்க, பெற்றோர்கள் இடங் கொடுக்காமையினால் ஒரு ரெட்டி வாலிபரைத் துணைக்கு அழைத்துக் கொண்டு ஒரே அடியாய் மோட்டாரில் கிளம்பி அருப்புக்கோட்டை கட்டங்குடி வழியாய்ச் சென்று கடைசியில் ரெட்டியப்பட்டி போர்டு பாடசாலை ஹெட்மாஸ்டர் ஜான் ரெட்டியாரவர்களிடம் அடைக்கலம் புகவே, பெற்றோர்களும், மற்றோர்களும் பின்தொடர்ந்து சென்று தாயம்மாளை விட்டுவிடும்படி கேட்க, அதற்கு அவர் குழந்தை வந்தால் கூட்டிக்கொண்டு போங்கள் என்று சொல்லிவிட, குழந்தை ஒருக்காலும், நான் என் பெற்றோர்களிடம் போகவே மாட்டேன்; நான் கட்டாயம் படிக்க வேண்டும்; படிக்காமல் திரும்பவே மாட்டேன் என்று சாதித்துவிடவே, அதற்குத் தாய் தந்தையர்களும், மற்றுஞ் சில சூழ்ச்சிக் காரர்களும் சேர்ந்து ஜான் ரெட்டியாரிடம் குழந்தையை வீட்டுக் கனுப்புங்கள், நாங்கள் கட்டாயம் படிக்க அனுப்பிவிடுகிறோம் மென்று சத்தியமும் செய்துகொடுத்துவிட்டு, வம்படியாகக் குழந்தையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்துவிட்டார்கள். பிறகு, ஒருநாளிரவில் பெற்றோர்களும் சில சூழ்ச்சிக்காரர்களும் சேர்ந்து தாயம்மாளை ஒரே தூக்காகத் தூக்கிக்கொண்டுபோய் கல்லூரணியில் ஒரு வீட்டில் அடைத்து வைத்திருந்து சாத்தூரிலுள்ள தாயம்மாளின் பாட்டியார் வீட்டிற்கு வம்பாகப் பிடித்து இழுத்துக் கொண்டுபோய் வைத்திருக்கிறார்கள். தற்பொழுது தாயம்மாள் அங்குதான் சிறைவாசம் பண்ணிக் கொண்டிருக்கிறாள். அங்கிருந்து எப்படியாவது வெளியேறிப் படிக்கவேண்டு மென்று தாயம்மாள் முயற்சித்துக் கொண்டிருப்பதாகவும் அது வெளியேறிப் போய்விடாமல் பாட்டியாரும், சிறிய தாயாரும் கட்டும் காவலும் புரிந்து அதிக நிர்ப்பந்தம் செய்துவருவதாகவும் குழந்தை மிகவும் வருந்திக்கொண்டிருப்பதாகவும், கேள்வியாகிறது. எப்படி யாவது ஒரு முண்டத்துக்கு ஒரு முடிச்சுப் போட்டுவிட்டால் தாயம்மாள் அடங்கிவிடுவாளென்று பெற்றோர்கள் தீவிர முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். முடிச்சுப் போடத் தாயம்மாள் சம்மதிக்கவில்லை. எப்படியாவது தாயம்மாள் கூடிய சீக்கிரம் படிப்புக்குக் கிளம்பியே தீருவாள் என்றும், அப்படி முடியாத பக்ஷத்தில் பிராணத் தியாகம் பண்ணிக்கொள்ள நிச்சயித்திருக்கிறாளென்றும் தெரிகிறது. குழந்தை படித்துக் குலப்பழிக்காளாவதைப் பார்க்கிலும் செத்துப் போவதே மானமும் மரியாதையும் ஆகுமென்றும் வைதீகக் குடுக்கைகளான தாய் தந்தையர்களும், மற்றவர்களும் தீர்மானித்திருக்கிறார்களாம். அந்தோ இந்துமதமே! உன் கதி இப்படியா ஓடுகிறது. பகுத்தறிவு வெளிச்சத்தின் முன்பு பிடிவாத முழு இருள் நிலைத்து நிற்குமா? அந்தோ இந்துமதமே! ஒன்றுக்கும் உதவாத உன்னைக் காப்பாற்ற வேண்டுமென்று தோழர் காந்தி சிறைவாசம் பண்ணுகிறாரே. ஆனால் உன்னைத் துலைக்க வேண்டுமென்று கங்கணங் கட்டிக்கொண்டு ஒரு சின்னஞ் சிறுமி சிறைவாசம் செய்கின்றாளே. இதற்கு நீ என்ன சொல்லுகிறாய்? காந்தியின் தவம் பலிக்குமா? தாயம்மாளின் தவம் பலிக்குமா? எனப் பார்ப்போம். தாயம்மாள் சாத்தூர் மூக்கஞ்செட்டித் தெரு கொல்லப்பட்டி லெக்ஷிமியம்மாள் வீட்டில் சிறைவாசம் பண்ணுகிறாள். உண்மைவிளம்பி - புதுவை முரசு, 1. 2. 1932, ப. 7 - 8 107. பெண் உலகத்திற்கு ஜே! இந்திய சர்க்காரின் முற்போக்கான யோசனை சுயமரியாதைக்கு வெற்றி! பெண்களை போலீஸ் உத்தியோகத்தில் சேர்க்க உத்தேசித்திருக் கிறோம், குடியிருப்பு வசதியும் போலீஸ் உடையும் இனாமாக அளிக்கப் படும். முக்கியமாகப் பெண்களிடத்திலேயே இப்பெண் போலீஸ் காரர்கள் அதிகாரம் செலுத்தவேண்டியிருக்கும். இஷ்டமுள்ளவர்கள் உடனே மனுச்செய்து கொள்ளலாம் என்று டில்லி தலைமை போலீஸ் சூப்ரெண்டண்டு அவர்கள் விளம்பரப்படுத்தியிருப்பதாக ஜனவரி 20ந் தேதி அசோசியேடெட் ப்ரெஸ் செய்தி கூறுகிறது. இச்செய்தியைக் கண்ணுற்றதும் அளவிலாக் குதூகல மடைந்தோம். ஏனெனில் இச்செய்தி சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளுக்கு முழு ஆதரவு அளிப்பதால்தான். பெண்கள் நிலைமை சீர்பெற்று ஆணோடு பெண்ணும் எல்லாத் துறைகளிலும் சமத்துவமாக வாழவேண்டுமானால் பெண் களுக்கும் போலீஸ் மாஜிஸ்ட்ரேட், ஜட்ஜ், முனிசீப் முதலிய பெரும் அதிகாரங்களைக் கொண்ட உத்தியோகங்களைக் கொடுக்க வேண்டும். என்று விருதுநகர் பெண்கள் மகாநாட்டில் சகோதரி இந்திராணி பால சுப்பிரமண்யம் அவர்கள் தலைமையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது வாசகர்களுக்கு ஞாபகமிருக்கலாம். அதற்கு முன்னும் பல சுயமரியாதை மகாநாடுகளிலும் இதே தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டதையும் வாசகர்கள் வாசகர்கள் மறந்திருக்க மாட்டார்களென்றே நினைக்கிறோம். நமது எண்ணங்களெல்லாம் எப்படி நாளுக்குநாள் பலவழிகளிலும் நிறைவேறிக் கொண்டிருக் கின்றன என்பதை நினைக்க நினைக்க நம்மையறியாமலே நமது இயக்கத்தின்மேல் அதிக உணர்ச்சியும் ஆர்வமும், உறுதியும் ஏற்படுகிறதென்பதை நம்மால் மறைக்க முடியவில்லை. பெண்களுக்குப் போலீஸ் உத்தியோகம் கொடுக்க வேண்டு மென்று நாம் வாதாடி வந்த காலத்தில் வைதீகர்களும், சைவப் பெரியார் களும், பண்டிதர்களும், பார்ப்பனர்களும் நம்மீது சீறினார்கள். பெண் தெய்வமானது இயற்கை அன்னை யல்லவா? என்றார் ஒரு பெரியார். பெண்களுக்கு அணிகலம் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய நான்குமல்லவா? என்றார்கள் சில சிறியார்கள். பெண் இனமானது என்றும் அடுப்படியிலேயே இருக்கவேண்டும் என்ற கருத்துக்களைக் கொண்ட கட்டுரைகளை மேல்நாட்டு மூடர்களிட மிருந்து மேற் கோளாக எடுத்துப் பிரசுரித்தார் நமது நவசக்திப் பெரியார். இன்னும். விபூதியடித்த லிங்கங்கட்டிய சிசுன தேவர்களும் பற்பல விதங் களாக நம்மை ஏளனஞ் செய்தார்கள். நமது இயக்கத்தைத் தூற்றி னார்கள். நமது பெண்களின் கற்பு கெட்டுப்போய்விடும் என்று கதறி னார்கள் சில கற்புக்கரசர்கள். இப்பொழுது இந்தப்பரிவாரங்கள் கொக்கரித்துக் கொண்டுதானிருக்கின்றன. ஆனால் இவைகளை நாம் என்றும் பொருட்படுத்தியதுமில்லை. இன்றும் பொருட்படுத்தவில்லை இனியும் அப்படித்தான். ஆனால் இனி நமது பெண்களின் கடமை யென்ன வென்பதைச் சொல்ல விரும்புகிறோம். பெண்கள் எல்லோரும் படிக்க வேண்டும் என்பது ஒருபுறமிருக்க, படித்த பெண்கள்கூட தங்கள் அறிவை நல்ல வழியில் செலுத்தாதது பற்றி நாம் வருந்துகிறோம். உதாரணமாக காலேஜில் படிக்கும் பெண்கள்கூட தங்கள் காலேஜுக்கு பிசாசு வந்து போவதாகச் சொல்லுகிறார்கள். இவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கும் உபாத்தினிமார்களோ சீமை போய்ப் படித்துவிட்டு வந்துங்கூட இந்திரசித்தன் காலத்திலே (ராமாயணம்) ஆகாய விமானம் (Aeroplane) இருந்ததாகச் சொல்லிக் கொடுக்கிறார்கள். இப்பேர்ப்பட்ட குறுகிய கல்வியும், புராணச் சேறும் படிந்த புத்தியையுடைய உபாத்தினிகளிடம் கல்விகற்கும் மாணவிகள் நிலைமை மேற்சொன்னபடி இருப்பதால் ஆச்சரியமொன்றுமில்லை. இனி, பெண்கள் போலீஸ் உத்தியோகம், மாஜிஸ்ட்ரேட் உத்தி யோகம் போன்ற முரட்டு உத்தியோகங்களை ஏற்பதால் அவர்கள் கற்பு கெட்டுப் போய்விடுமா என்ற விஷயம் வேறு. கற்பு என்றால் என்ன என்பதை முதலில் முடிவுசெய்து கொண்டு தான் அப்படிச் சொல்லப்படும் கற்பு கெட்டுப் போகிறதா? அப்படிக் கெட்டால் தானென்ன? என்பவைகளுக்குப் பதில்கூறமுடியும். உதாரணமாக, பெண்கள் முக்காடு போட்டு காற்று, வெளிச்சம் முதலியவை படாமல் வீட்டிற்குள்ளேயே இருந்து மடிய வேண்டுவது தான் கற்பு என்று முஸ்லீம்கள் சொல்லுகிறார்கள். 5 வயதுப் பெண்ணை 60 வயது ஒட்டகத்திற்குக் கல்யாணஞ் செய்துகொடுத்து, மறுவருஷமே அப்பெண்ணின் தலைமயிரை மழுங்கச் சிரைத்து, வெள்ளைத் துணியால் முக்காடுபோட்டு ஒரு ஆட்டுக் கல்லும் ஒரு மூட்டை உளுந்தும் வாங்கிப்போட்டு ஆயுள் முழுதும் தோசை சுட்டுத் தின்று சாகவேண்டியதுதான் கற்பு என்று பிர்ம்மத்தை அறிந்து, வேதங்களைத் தலைகீழாய்ப் படித்த பிராம்மணோத்தமர்கள் சொல்லு கிறார்கள். பெண் B.A., L.T., படித்தாலும்சரி, M.A. படித்தாலும்சரி. ஒழுங்காகக் குங்குமப்பொட்டு இட்டுக்கொண்டு, தான்படித்த படிப்பை யெல்லாம் பள்ளிக்கூடத்துக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு திருஞானசம்பந்தரின் தேவார விசேஷத்தையும், நடராஜரது நர்த்தன மகிமையையும் பற்றி வியாசங்கள் எழுதி, வீட்டிலேயே அடக்க ஒடுக்கமாக இருந்து தன் கணவனைத் தினந்தோறும் புஷ்பம் போட்டு பூஜித்து வர வேண்டியதே கற்பு என்று ஒரு கூட்டத்தார் சொல்லுகிறார்கள். இன்னுஞ் சிலர், பெண்கள் விராட்டி தட்டுவதையும், அடுப்பு ஊதுவதையும், ஒப்பாரி சொல்வதையும் விட்டுப் படிப்பதே கற்புக்கு விரோதம் என்று சொல்லுகிறார்கள். வேறுசிலர் பெண்கள் குடை பிடிப்பதும் செருப்புப் போடுவதும் கற்புக்கு விரோதம் என்கிறார்கள். இன்னுஞ்சிலர் பெண்கள் குனிந்தே நடக்க வேண்டியது தான் (சென்னைபோன்ற நகரங்களில் மேலே மோட்டார் ஏறிவிடும்) கற்பு என்கிறார்கள். அப்படித்தான் சீதை இருந்தாளாம். இன்னுஞ் சிலர் பிறரோடு கைகுலுக்குவதே கற்புக்கு விரோதம் என்கிறார்கள். சிலர் பெண்கள் ஆண்களோடு பேசுவதே கற்புக்கு விரோதம் என்கிறார்கள். சிலர் ருதுவான பெண்கள் வீட்டைவிட்டு வெளியே எட்டிப்பார்த்தாலே கற்புக்குப் பங்கம் ஏற்பட்டுவிடும் என்கிறார்கள். சிலர் பெண்கள் டிராமா சினிமா பார்த்தால் கற்புக் கெட்டுவிடும் என்கிறார்கள். சிலர் ஆண்களுக்குக் கடிதம் எழுதினால் கற்பு போய்விடும் என்கிறார்கள். சிலர் பெண்கள் கோணவாவு எடுத்தாலே கற்புக்கு விரோதம் என்கிறார்கள். சிலர் பெண்கள் பாட்டுப் பாடினால் கற்பு கெட்டு விடுவதாகக் கூறுகிறார்கள். பிரசங்கம் செய்தால் கற்பு போய்விடும், என்கிறார்கள். எதிர்த்துப் பேசினால் கற்புக் கெட்டவள் என்கிறார்கள். இப்படியாக இன்னும் இலட்சம் லட்சமான கற்பு சாம்பிள்கள் (மாதிரிகள்) சொல்லிக் கொண்டே போகமுடியும். ஆதலால் கற்பு என்பது என்ன? ஆண் மக்களால் பெண்மக்கள் மீது சுமத்தப் பட்டிருக்கும் அடிமைப் பாறாங்கல் என்பதே நமது அபிப்பிராயம். ஆகவே எதற்கெடுத்தாலும் கற்புக்கு விரோதம் என்று சொல்பவர் களிடம் கற்பு என்றால் என்ன? என்பதைத் திடீரெனக்கேட்டு விடுங்கள். இனி போலீஸ் உத்தியோகத்திற்குப் பெண்கள் போகும் விஷயத்தைப்பற்றி சில வார்த்தைகள் கூற விரும்புகிறோம். போலீஸ் உத்தியோகத்திற்கு மிகுந்த தேகபலம் வேண்டுமென்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் சிறிதுகூட உண்மையில்லை என்பது அநுபவசாலிகளுக்கு நன்கு தெரியும். மனோதைரியம் வேண்டு மென்று சொல்லலாம். ஆம் வேண்டியதுதான். ஆனால் இப்போ திருக்கும் போலீஸ்காரர்களுக்கு நமது பெண்கள் எவ்வகையிலும் மனோதைரியத்தில் குறைந்தவர்களல்ல வென்பதை நாம் ருசுப்படுத்த முடியும். உதாரணமாக, இப்போது சென்னை இராஜதானியில் போலீஸ் நிர்வாகத்தில் பெரிய உத்தியோகம் வகிப்பவர்களெல்லாம் பெரும் பாலும் பார்ப்பனர்களே யாவார்கள். பார்ப்பாருக்கு மனோ தைரியமும், தேகபலமும் எவ்வளவு உண்டு என்பதை உலகமேயறியும். அவரவர் கள் வீட்டுப் பெண்டாட்டிகளைக் கேட்டாலே தெரியும். இன்னும் கீழ்த்தரக் கடைசி உத்தியோகஸ்தர்களை எடுத்துக்கொண்டால் அவர் களுக்கு ஒவ்வொருவருக்கும் மாதம் 18 ரூபாய்தான் சம்பளம். இந்த 18 ரூபாயில் ஒரு மனைவி, 4-5 குழந்தைகள், முதலியவைகளோடு ஒவ்வொரு போலீஸ் சேவகரும் வயிறாரக் கஞ்சியாவது சாப்பிட முடியுமா? என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். அதனால்தான் ஒவ்வொரு சேவகரும் வத்தலும் தொத்தலுமாய்க் கருவாடு மாதிரி யிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பெரும் கூட்டங்களையும் எதிர்த்து விடுகிறார்களேயென்றால், அவர்கள் உடுப்பிற்கு இருக்கும் பயமும், அவர்களிடமிருக்கும் அதிகாரமும், அவர்கள் கையில் இருக்கும் தடி, துப்பாக்கிபோன்ற ஆயுதங்களுமே காரணமாகும். ஆகையால் அவைகளையே நமது பெண்களுக்கும் கொடுத்தால் என்ன காரியம் தான் அவர்களால் செய்யமுடியாது என்று கேட்கிறோம். இன்னும் மேற்கோள்கள் வேண்டுமானால் சீனாவில் பெண் சேவகர்கள் இருக்கிறார்கள். துருக்கியில் பெண் தளகர்த்தர்கள் இருக்கிறார்கள். ருஷியாவில் பெண்கள் போலீஸ் படைக்கே தலைவர்களாகவும் இருக்கிறார்கள் இன்னும் சரித்திரத்திலும் கூட Joan of Are (ஜோன் ஆப் ஆர்க்) என்ற பிரஞ்சு வீர மாது படைத் தலைமை ஏற்று ஆங்கி லேயரைப் புறங்காட்டி ஓடும்படி செய்தார் என்றதைப் படித்திருக் கிறோம். ஆகையால் பெண்கள் போலீஸ் உத்தியோகத் திற்கு இலாயக் கில்லை என்று சொல்வதில் கடுகளவுகூட உண்மை யில்லை யென்பது ஏற்படவில்லையா? கடைசியாக, பெண்களிடம் துப்பாக்கியையும் குண்டாந் தடியை யும் கொடுத்துவிட்டால் ஆண்களில் சிலவீண் தடியர்கள் பெண்களை முறைத்துப் பார்க்கும் கெட்ட வழக்கமும் தன்னந்தனியே போகும் பெண்களைக் கண்டு பரிகசிக்கும் பாமரத்தன்மையும் ஒழிந்து போகும். உதாரணமாக ஆங்கிலமாதர்களை நமது ஆண்கள் இவ்வித மெல்லாம் செய்வதுகிடையாது. ஏனெனில், அவர்கள் காலில் இருக்கும் பூட்ஸின் அடிப்பாகம் அதிக உறுதியாக இருக்கிறது என்பது நமது காட்டு மிராண்டி ஆண்களுக்குத் தெரியும். அதைப்போலவே தன்னந் தனியே போகும் ஒரு போலீஸ் பெண்ணைப் பார்த்து ஒரு ஆண்மகன் பரிகசித்தானானால், உடனே இடுப்பில் செருகியுள்ள ரிவால்வர் முனையை எடுத்து அவ்வாண்மகனின் மார்பின்மேல் வைத்துக் காண்பிப்பார்கள். ரொம்பவும் நெருக்கடியாயிருந்தாலும்கூட ஒன்றும் முழுகிப்போகாது. பல ஆண்கள் ஜாக்கிரதையாகி விடுவார்கள். ஆகையால் பெண்மக்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை இழந்து விடாமல் உடனே பெருந்திரளாக போலீசில் சேரவேண்டுமென்று விரும்புகிறோம். பெண்கள் தங்கள் சுயமரியாதையைக் காக்க வேண்டுமானால், போலீசு, மாஜிஸ்டிரேட் முதலிய உத்தியோகங்களைக் கைப்பற்றவேண்டும். இறுதியாக இந்திய சர்க்கார் பெண்கள் விஷயத்தில் முன்னேற்ற மான ஏற்பாடு செய்தமைக்கு மிகவும் பாராட்டுகிறோம். - புதுவை முரசு, 1. 2. 1932, ப. 12 - 15 108. அகில மலாயா தமிழர் மகாநாடு அகில மலாயா தமிழர் இரண்டாவது மகாநாடு பினாங்கு டவுன் ஹாலில் 16, 17.01.32ம் தேதிகளில் மிகவும் விமரிசையாக நடை பெற்றிருக் கிறது. மகாநாட்டிற்குப் பல சுற்றுப் பகுதிகளிலிருந்தும் பெருந் திரளான பிரதிநிதிகள் விஜயம் செய்திருந்திருக்கின்றார்கள் மகாநாட்டுத் தலைவர்களின் பிரசங்கமும் கொடியேற்று விழாவாற்றிய தோழரின் பிரசங்கமும் நமது சீர்திருத்தக் கொள்கைகளை அடிப்படை யாகக் கொண்டு பேசப்பட்டிருக்கும் ஒவ்வொரு கருத்துக்களும் போற்றத் தக்கதாகும். அவர்கள் பிரசங்கத்தை அப்படியே பிரசுரிக்கயிட மின்மையால் மகாநாட்டு நடவடிக்கைகளை மட்டும் சுருக்கமாக அடுத்த பக்கத்தில் வெளியிட்டுள்ளோம். இம் மகாநாட்டுடன் அகில மலேயா தமிழர் வாலிபர் மகாநாடு ஒன்று பெரும் ஆரவாரத்தோடு நடைபெற்றிருக்கிறது. வாலிபர் மகாநாட்டு வரவேற்புக் கமிட்டித் தலைவருரையிலும் நமது சுயமரியாதை இயக்கக் கொள்கைகளை நன்கு எடுத்து விளக்கியிருக்கிறார்கள். மதக்கொடுமையாலும், சாதி வேற்றுமையாலும், மதச் சடங்குகளாலும் மக்கள் படும் கஷ்டத்தைப்பற்றி விளக்கிக் கூறி அவைகளைப் போக்க வேண்டுவது அறிஞர்கள் கடமையாகுமென்று வலியுறுத்தப்பட்டிருப் பது பெரிதும் பாராட்டத்தக்கதாகும். மற்றும் பெண்ணுரிமை; கல்யாணம், விதவா விவாகம், விவாகரத்து, பிள்ளைப்பேறு, க்ஷேத்திரயாத்திரை, பிரார்த்தனை, கடவுட் செலவு, கருமாதிச்செலவு, கண்மூடிச் செலவு ஆகியவைகளைப் பற்றியும் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். மகாநாட்டு ஆரம்ப தினத்தில் நமது சுயமரியாதை இயக்கத்தின் முக்கியஸ்தர்களில் இருவரான தோழர்கள் S. இராமநாதன் M.A. B.L., கைவல்யம், ஆகியவர்களின் உருவப் படத்தைத் திறந்துவைத்த தோழர்கள் நமது இயக்கத்தின் உயரிய கொள்கைகளைப் பாராட்டியும், அக்கொள்கைக்காகப் பாடுபடும் தோழர்களின் உயரிய கருத்துக்களை மதித்துப் பின்பற்றவேண்டிய அவசியத்தையும் எடுத்துக் கூறி அதன் ஞாபகமாகவே தாங்கள் நமது தோழர்களின் படத்தைத் திறந்து வைப்பதாகவும் பேசியிருக்கின்றர்கள். இரு மகாநாடுகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களும் நமது சீர்திருத்தக் கொள்கைகளுக்கேற்ப மக்களால் பின்பற்றப்படும் மூடச் சடங்குகளை விலக்க வேண்டுவதைப் பற்றியும், ஜாதிமத வேற்றுமைகளையொழிக்கவேண்டுவதைப் பற்றியும், கலப்புமணம், விதவைமணம் பெருக வேண்டுவதைப் பற்றியும், பெண்ணுரிமை, விவாகரத்து, கல்வி, மதுவிலக்கு முதலியவைகளைப் பற்றியும் பல தீர்மானங்கள் செய்வித்துச் செயலில் கொண்டுவரத்தக்க பிரசாரம் செய்யவேண்டுமென்று முடிவு செய்திருப்பது எல்லோராலும் போற்றத் தக்கதாகும். எனவே இம்மகாநாடு பெயரளவில் தமிழர் மகாநாடு என்றிருந் தாலும் அங்கு நடைபெற்றுள்ள தீர்மானங்களும், தலைவர் களுரையும், பிறதோழர்கள் பிரசங்கங்களும் நமது சுயமரியாதை இயக்கத்தின் இடிமுழக்கமாகவேயிருந்திருக்கின்றதென்பதை எவரும் மறுக்க முடியாது. இந்த இரண்டாவது மகாநாட்டிற்கு முன் நடந்த முதல் மகாநாட்டின் போதுதான், நமது இயக்கத்தலைவர் தோழர், ஈ.வெ. இராமசாமி அவர்களும், அவர் தம் தோழர்களும் சென்று ஈப்போ மகா நாட்டில் நமது இயக்க விதையை விதைத்தார்கள். அன்று விதைத்த பயிரை இன்று இந்நிலைக்குக் கொண்டுவந்த பெருமை தோழர்கள்:- அற்புதானந்தா, கோ. சாரங்கபாணி, ஆர். அய்யாரு, தாமோதரம், ஓ. ராமசாமி, த.சுமு. பெருமாள் ஆகியவர்கட்கும், மற்றும் அவர்கட்கு ஒத்த துணையாக நின்று ஒத்துழைத்த உண்மைத் தோழர்கட்குமே உரிய தாகும். அங்கு நமதியக்கம் பரவிவரும் வேகத்தைப் பார்க்கும் போது நமக்கு அளவிலா மகிழ்ச்சி ஏற்படுகின்றது. அங்கு நமது இயக்கத் திற்கென ஈப்போவிலிருந்து தோழர், அற்புதானந்தா அவர்களை ஆசிரியராகக்கொண்டு, தமிழன் என்ற தினசரியும், சிங்கப்பூரி லிருந்து தோழர், கோ. சாரங்கபாணி அவர்களை ஆசிரியராகக் கொண்டு முன்னேற்றம் என்ற வாரப் பதிப்பும் தம் கடனாற்றி வருவதை யாவரும் அறிவர். நாம் இறுதியாக ஒன்றுமட்டும் கூறுவோம். அதாவது எங்கு வேண்டுமானாலும் எந்தப் பெயரோடு வேண்டுமானாலும் மகாநாடுகள் நடைபெறலாம். அதிலீடுபடும் மக்களுக்குப் பகுத்தறிவுணர்ச்சியும் சுயமரியாதை எழுச்சியுமட்டுமிருந்துவிட்டால் அந்த மகாநாடும் தீர்மானங்களும் மக்களுக்கு எவ்வித பயனையளிக்குமென்பதைப் பற்றி நாம் கூறத்தேவையில்லை. நமது இயக்கம் மலேயா நாடு முழுதும் பரவுவது மட்டுமல்ல. உலக முழுதும் பரவி உலக இயக்கமாகப் போற்றப்படுமென்றும் உறுதி கூறுகின்றோம். எங்கும் மதவீழ்ச்சி! புரோகிதர்கள் ஓட்டம்! பாதிரியார்கள் பரிதவிப்பு! கோயில் சொத்துக்கள் பறிமுதல்! என்ற கிளர்ச்சியும், புரட்சியும், பரவிவருகின்றது. இவைகளெல்லாம் மத வெறியர்கட்கும், சாதி வெறியர்கட்கும், புரோகிதக் கூட்டத்தார் களுக்கும், கடவுள் தரகர்கட்கும், வைதீக வர்ணாச்ரம மதக்காரர்கட்கும், புராணப்பிரசங்கிகட்கும், தெரியாமலிருக்கலாம். அவர்களும் விரைவில் தெரிந்துகொள்ளப் போகிறார்கள். அல்லது அதிக விரைவில் மறைந்துவிடப் போகிறார்களென்பது மட்டும் உறுதியாகும். இது சமயம் நமது இயக்க அன்பர்கள் ஸ்பெயின் தேசத்து மதக் கிளர்ச்சியைப் பின்பற்றி நம் தமிழ்நாட்டிலும் ஆங்காங்கு பல மகாநாடுகளும், பிற கிளர்ச்சிகளும், புரட்சிகளும் தோற்றும்படி செய்விக்கவேண்டுவது நம் வாலிபர்களின் கடமையாகும். - புதுவை முரசு, 8. 2. 1932, ப. 12 - 13 109. விதவைகள் துயரம் நமது நாட்டில் விதவைகளென்று தூற்றப்படும் புருஷனை இழந்த பெண்மக்களின் துயரம் சொல்லிமுடியாததாகும். புருஷனை இழந்த பெண்கள் நமது நாட்டு வைதீக மதவெறியர்களால் படுத்தப்படும் கஷ்டங்களை எழுதிமுடியாது. வைதீகர்கள் கூற்றுப்படி விதவைப் பட்டத்தை ஒப்புக்கொண்டு வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கும் பெண்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது. அவர்கள் படும் துயரத்தை விளக்கிக் கூறுவதென்றால், எந்த மனிதரும் கேட்டுச் சகித்துக் கொண்டிருக்க முடியாது. திருமணம் என்றால் என்ன? என்பதே தெரியாத இளமைப் பருவத்தில் அதாவது ஐந்து வயதில் ஒரு பெண்ணுக்குத் திருமணம் என்ற பெயரால் முப்பது வயது நாற்பது வயதுள்ள ஆடவரைக் கூட்டிப் பொம்மைக் கல்யாணம் செய்துவைப்பதும், அப் பெண்ணின் புருஷன் உயிர் துறந்தால் அப்பெண்ணை விதவை யென்றும் கைம்பெண் என்றும் தூற்றி இழிவுபடுத்தி அடக்கி ஒடுக்கி வீட்டுக்குள் அடைத்து வைப்பதென்பதும் அறிவுடைய எந்த மனிதராலும் சகிக்க முடியாத கொடுமையாகும். புருஷனை இழந்த மனைவி மிக்க பதிவிரதை யானால் புருஷன் இறந்தவுடனே உடன் கட்டை ஏறல் அதாவது புருஷனுடன் வைத்தே மனைவியையும் தீ வைத்துக் கொளுத்துவ தென்ற பழக்கமும், மனைவி தீயில் பாய்தல் என்ற வழக்கமும் மதவெறியர்களால் கட்டாயப்படுத்தப் பட்டுப் புருஷனுடன் இறந்து போக விருப்ப மில்லாத பெண்ணையும் பலவந்தப்படுத்தி உயிர்வதை செய்வது (கொலை செய்வது) என்ற கொடிய பழக்கமும் மதத்தின் பெயரால், சாஸ்திரத்தின் பெயரால், கற்பின்பெயரால், பதிவிரதை என்ற பெயரால் நமது மக்களிடை வலியுறுத்தப்பட்டு வந்திருக்கிறது. இக் கொடுமை சகிக்கமுடியாததென்று கண்ட தோழர், இராஜா ராம் மோகன்ராய் அவர்களால் இன்றுள்ள அரசாங்க சட்டசபையில் ஒரு தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றி, அத் தீர்மானத்திற்கு எதிரிடையாக இருப்பவர்களைக் குற்றஞ்சாட்டித் தண்டிக்கப்பட வேண்டு மென்று சட்டஞ் செய்யப்பட்ட பின்னர்தான், இறந்த புருஷனுடன் மனைவியையும் வைத்துத் தீ மூட்டுவதென்ற சமூக வைதீகச்சட்டம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது. இன்று இறந்து போகும் எந்தப் புருஷனோடும் எந்தப் பதிவிரதையுடைய பெண்களும் உடன்கட்டை ஏறி உயிர் துறப்பது இந்து தர்மம் என்றோ, மதசாஸ்திர விதி என்றோ, வைதீகநெறி என்றோ, பின்பற்றுவதில்லை. எவரேனும் ஒரு பெண்ணை உடன்கட்டை ஏறும்படிக் கட்டாயப் படுத்தினால் அந்த மனிதன் தூக்கு மேடைக்குச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை. இறந்துபோன புருஷனுடன் மனைவியையும் உடன்வைத்துத் தீ மூட்டுவது என்ற மதக்கொள்கை, சட்ட விரோதமான தென்று சட்டத்தின் மூலம் தடுக்கப் பட்டபின்னர், எந்த வைதீக மதவெறியனும் தம் மதக் கொள்கைக்காக உயிர் விட்டுவிட வில்லை; சட்டத்தை எதிர்க்கவுமில்லை. எனவே புருஷனை இழந்த பெண்கள் உடன்கட்டை ஏறல் வேண்டும் என்ற பழக்கம் தடைபடுத்தப்பட்டதென்றாலும் அவர்கள் கஷ்டங்கள் முற்றும் நீங்கிவிடவில்லை, உடன்கட்டை ஏறுவதைவிட இன்று மிகக் கஷ்டப்படுகிறார்களென்பதை எவரும் மறைக்க முடியாது. உடன் ஏறலென்பதாவது, புருஷன் இறந்த அப்பொழுதே மனைவிகளைக் கட்டாயப்படுத்திக் கொலைசெய்து விடுவதென்பது சில நிமிஷத்தோடு அக்கஷ்டம் ஒழிந்துபோவதாகும். ஆனால், விதவையென்று கூறி ஒரு பெண்ணை உயிரோடு வைத்துப் படுத்தும் கஷ்டம் எவராலும் பார்க்கச் சகிக்கமுடியாததாகும். விதவை என்று கூறும் காரணத்திற்காக ஒரு புருஷனை இழந்த மனைவியென்ற இளம் பருவப் பெண்ணை வீணாகத் தூற்றி வீட்டிற்குள் அடைத்து வைத்து வெள்ளைச் சேலை கொடுத்து, மயிரை மொட்டையடித்து, மானபங்கப்படுத்தி வருவதும், பட்டினி கிடக்கச் செய்வதும், மாட்டுச் சாணி தட்டி வீட்டு வேலை பார்க்க வேண்டுமென்று கட்டாயப் படுத்துவதும், அவர்கள் இச்சையைத் தடைப்படுத்தி எவ்வித உரிமையுமின்றி மிருகத்திலும் கேவலமாக நடத்திவரும் மனிதத் தன்மையற்ற கொடூரச் செயலாகும். புருஷனை இழந்த மனைவிக்கு மறுமணம் செய்து கொள்ளவோ, மனோ விருப்பின்படி நடந்து கொள்ளவோ, தனது இச்சையை வெளிப் படையாகத் தெரிவித்துக் கொள்ளவோ, சுதந்தரமோ, சொத்துரிமையோ பெற்று இன்பமாக வாழ்வு நடாத்தவோ வழியில்லை. ஆனால், அதே மாதிரி மனைவியை இழந்த புருஷன் விதவை கட்குக் கூறும் விதிகளைப் பின்பற்றுவதில்லை. மனைவியிறந்த மூன்றாம் நாளே மறுமணம் செய்துகொள்ளப் பெண்ணை விலை பேசுகின்றான். எத்தனை மனைவி இறந்தாலும், எத்தனை தாரம் வேண்டுமானாலும் பெண் பேசித் திருமணம் செய்துகொள்ளு கின்றான். மனைவி வீட்டிலிருக்கும்போதே வேசையர் வீட்டை நாடி அலை கின்றான். வேண்டும் சுதந்தரத்தைத் தங்குதடையின்றி நுகர்கின்றான். ஆடம்பர டாம்பீகத்தில் ஆயுள்முழுதும் இருக்க ஆசைப்படுகின்றான். எவ்வளவு வயது தளர்ந்த வயோதிகனாக இருந்தாலும் தன்னை அலங்கரித்துக்கொண்டு அழகுள்ள மங்கை யர்களைத் தேடி அலைகின்றான். தனது இச்சையின் பொருட்டு, எதையும் செய்ய முற்படுகின்றான். மற்றும் விதவைகளைப் பழித்து - இழித்துக் கூறும் ஆண்மகன் விதவை களோடு கூடி இரகசியமாக உறவாடுகிறான். விதவையின் கூட்டுறவில் கர்ப்பம் தோன்றினால் கள்ளத்தனமாக உறவாடிய காதலன் ஓடி மறை கின்றான். இறுதியில் கர்ப்பம் தாங்கிய விதவைப்பெண் தனது கர்ப்பத்தைக் குலைப்பதும், கள்ளத்தனமாகப் பெற்ற பிள்ளையைக் குப்பை மேட்டிலும், கிணற்றிலும், நதிக் கரையிலும், சாக்கடைக் குள்ளும், செடிமறைவிலும் போட்டுவிட்டுத் தப்புவதும், எவருக் காவது உண்மை வெளிப்பட்டால் அதற்காகத் தற்கொலை செய்து கொள்ளுவதும் இன்னும் நடைபெற்றுவரும் நிகழ்ச்சிகளாகும். இவ்வளவு அட்டூழியங்களையும் கண்டு சகிக்காமல்தான் நமது சுயமரியாதை இயக்கம் பெண்கல்வி, பெண் உத்தியோகம், பெண் ணுரிமை, பெண்களுக்குச் சொத்துரிமை, விதவைகட்கு மறுமண வுரிமை விவாகரத்துரிமை ருது மணவுரிமை ஆகிய கொள்கைகளை வலியுறுத்தி, தீர்மானங்கள் செய்து அதனைச் செயலில் கொண்டுவர வேண்டுமென்று பிரசாரம் செய்து வருகின்றது. நமது பிரசாரத்தின் பலனால் பல விதவை மணங்களும், பல கலப்பு மணங்களும் பல சீர்திருத்த மணங்களும் நடைபெற்று வந்திருக்கின்றதென்பதை மிக மகிழ்ச்சியுடன் அறிவித்துக் கொள்கின்றோம். நமது கொள்கையையொட்டிய தீர்மானங்களை அரசாங் கத்தாரும் சட்டத்தின்மூலம் அமுலில் கொண்டுவர வேண்டுமென்று நாம் எடுத்துக் கூறியிருக்கிறோம். நமது சீர்திருத்தத் தோழர்களால் அடிக்கடி சட்டசபைகளில் கொண்டுவரும் பல சீர்திருத்தத் தீர்மானங்கள், சட்டசபையிலுள்ள ஆச்சாரிகளாலும், சாஸ்திரிகளாலும், மதவெறியர் களாலும், உயர் ஜாதிக்காரர்களாலும், எதிர்க்கப்பட்டு வருவதையும் எடுத்தவற்றிற்கெல்லாம் மதம் போச்சு, கடவுள் போச்சு சாஸ்திர விரோதம், சமயவிரோதம், பழக்கவழக்கம், பொதுஜன அபிப்ராயம், என்று கூச்சல்போட்டுவருவதை நாம் அழுத்தமாய்க் கண்டித்திருக் கிறோம். அரசாங்கத்தார் நாங்கள் மதத்தில் தலையிட மாட்டோம் என்று கூறி அவசியமான தீர்மானங்கள் சட்டசபையில் வரும்போது அலட்சியமாக தீர்மானத்தை நழுவவிட்டு வருவதையும் நாம் பலமாகக் கண்டித்து எச்சரிக்க வேண்டியவர்களாக யிருக்கிறோம். சமீபத்தில் நடைபெற்ற இந்திய சட்டசபைக் கூட்டத்தில் வந்த திவான்பகதூர் ஹரிவிலாஸ் சாரதா அவர்களின் விதவைகட்குச் சொத்துரிமைத் தீர்மானம் வைதீக ஆச்சாரியாரால் எதிர்க்கப்பட்டு எப்படியோ அத்தீர்மானத்தைக் கைகழுவ விட்டுவிட்டார்கள். இந்திய சட்டசபையில் இத் தீர்மானம் தோற்றுப் போனதற்காகத் திவான் பகதூர், ஹரிவிலாஸ் சாரதா அவர்கள் கவலைப்பட்டிருக்கமாட்டார். அவரது சீர்திருத்த வேட்கையை ஆச்சாரியாரின் எதிர்ப்பு எதுவும் செய்துவிட முடியாது. விதவைகள் துயரத்தையுணரமுடியாத ஆச்சாரிகள் போன்ற மதவெறியர்கள் இந்திய சட்டசபையில் இடம்பெற்றுள்ளவரைக்கும், அரசாங்கத்தார் மதத்தில் தலையிடுவதில்லையென்று நொண்டிச் சமாதானம் கூறிக்கொண்டிருக்கும்வரைக்கும், எத்தகைய சீர் திருத்தத் தீர்மானங்களும் நிறைவேற்றமுடியாதுதான். நிறைவேற்றினாலும் அமுலில் வருவது அதிலும் கஷ்டந்தான். ஆகையினால்தான் நாமும், நமதியக்கமும், சீர்திருத்தத்திற்கு முட்டுக்கட்டை போடும் மதமும், மதத் தலைவர்களும், மதப் புத்தக வழக்கமென்ற கொடிய சட்ட திட்டங் களும், அதனைத் தாங்கி நிற்கும் எந்த அரசாங்கமும் அடியோடு ஒழிய வேண்டுமென்று கூறுகின்றோம். விதவைகள் துயரம், விதவைகள் எல்லா உரிமைகளும் பெற்று ஆச்சாரியாரோடு இந்திய சட்ட சபையிலும், பிற ஸ்தாபனங்களிலும் இடம்பெற்றுத் தங்கள் கஷ்டத்தை எடுத்துக்கூறித் தங்கள் சுதந்தரத்தை நாடும்போதுதான் ஆச்சாரிக்கும், அரசாங்கத்திற்கும் மதம் என்றால் என்ன? விதவைகள் துயரம் என்றால் என்ன? என்பது நன்கு விளங்கப் போகின்றது. அக்காலமும் அதிகத் தூரத்திலில்லை. - புதுவை முரசு, 15. 2. 1932, ப. 12 - 14 110. ஆசிரியர்களே விழித்தெழுங்கள் பிரஞ்சிந்திய ஆரம்ப ஆசிரியர்களே, உங்கள்பேரால் நடந்து வரும் சேந்திக்கா (ஒற்றுமைச்சங்கம்)வை நீங்கள் அறிவீர்களா? சிலருக்குக் தெரிந்திருந்தால் அது என்ன முறையில் நடக்கிறது என்பதை அறிவீர்களா? அதை நீங்கள் நம்புகிறீர்களா? அதை முன்னின்று நடத்தும் திரு. வேங்கடகிருஷ்ணசாமி, திரு. மலைக் கண்ணு திரு. நாராயணசாமி. திரு. கலியாணசாமி இவர்களை நம்புகிறீர்களா? நிர்வாகசபையை நம்புகிறீர்களா? திரு. வேங்கடகிருஷ்ணசாமி கனம் தோரோ காலத்தில் முதல் வகுப்பு வாத்தியாராக உயர்த்தப்பட்டார். ஆயினும் அவர், அவருக்கு முன் அவ் வகுப்புக்கு வரவேண்டிய சிலரைத் தள்ளி விட்டு முதல் வகுப்புக்கு உயர்த்தப்பட்டார். இது தெரியுமா? சேந்திக்கா இவ் விஷயத்தில் வேங்கட கிருஷ்ணசாமிக்கு உபயோகப்பட்டது. கனம், தோரோவிடம் தம்மைக் காட்டிக் கொள்ள உபயோகப்பட்டது. ஆனால், அந்தச் சேந்திக்கா வரிசைக் கிரமமாக முதல் வகுப்புக்கு வர வேண்டியவர்கட்கு உபயோகப்பட்டதா என்பதை யோசித்தீர்களா? சர்க்காரால் புறக்கணிக்கப்பட்டவர்கட்கே சேந்திக்கா பயன்பட வேண்டும் என்பதில் சந்தேகம் உண்டா? புதுவை மாதாகோயில் ஆண்பாடசாலையின் தலைமை ஆசிரியர் இடம்காலியாயிற்று. ஞாயமாக யார் அதற்கு வர வேண்டியவர் என்பதை யோசித்துச் சர்க்காரிடம் போராடச் சேந்திக்கா உபயோகப்பட்டதா? பிரஞ்சிந்தியாவிலுள்ள ஆசிரியர்கள் ஒவ்வொரு வரும் அநீதி அநீதி என்று கதறும்படி அந்த இடம் நிரப்பப்பட்டதைக் கவனித்தீர்களா? வேங்கட கிருஷ்ணசாமி கனம், ராம்போனிடம் தம்மைக் காட்டிக்கொள்ளவும், அவரைத் திருப்திப்படுத்தவும், அதனால் தலைமை ஆசிரியர் இடத்தை அடையவுமே சேந்திக்கா உபயோகப்பட்டது என்பதை யோசித்தீர்களா? கொலேழ் கொலோனி யால் தலைவர் என்ற முறையில் கனம் ராம்போன் துரைக்கு அங்குள்ள கனம், ஒபேர்த்தி முதலியவர்கள் புதுவருடச் சிறப்புச் செய்தார்கள். அதே கனம், இராம்போன் கல்வி இலாக்காவுக்கும், தமது நன்மைக்கும் தலைவர் என்ற காரணத்தை உத்தேசித்து வேங்கட கிருஷ்ணசாமி, வழக்க விரோதமாக ஆரம்ப ஆசிரியர் பணத்தையும் பிடுங்கித் தந்து கலந்துகொண்டார். ஆரம்ப ஆசிரியர் பலரும், பணம் இல்லை யென்றால் வேங்கடகிருஷ்ணசாமி வத்திவைக்கக் கூடும் என்பதை எண்ணிப் பணமும் கொடுத்தார்கள். இப்படியெல்லாம் தனி முறையில், அதிகாரியைப் பிடிக்க வேங்கடகிருஷ்ணசாமிக்குச் சேந்திக்கா உபயோகப்படுகிறது தவிர, ஞாயத்திற்கு உபயோகப்பட முடிகிறதா என்பதை யோசித்தீர்களா? சேந்திக்காவின் பிரபலஸ்தர் செல்வாக் கடைவதும், அதிகாரி களை வசப்படுத்தி வைப்பதும். பொதுவாக நல்லதுதானே என்று நீங்கள் நினைக்கக்கூடும் நீங்கள் உங்களுக்குக் காப்பாளராக ஏற்படுத்தியவர் கைக்கு ஓர் கூராயுதம் கிடைப்பது பொதுவாக நல்லதுதானே என்று நினைக்கக்கூடும். ஆயினும் அந்தக் கூராயுதம் உங்களிற் சிலருடைய முதுகெலும்பால்தான் ஆக்கப்பட்டிருக்கிறது என்பதை யோசிக்க வேண்டாமா? வேங்கடகிருஷ்ணசாமி இஷ்டப்படித் தம்முடன் தம் கீழ் உத்தியோகம் பார்க்கும் திரு. சுந்தரேசன், திரு. நாராயணசாமி, ஆகிய மூவரையும் போதனாமுறைப் பரீட்சைக்குப் பரீட்சகராக ஏற்பாடு செய்து கொண்டதில், மற்றும் பிற ஆசிரியர்களை மட்டந் தட்டியதாகத் தானே முடிகிறது; யோசித்தீர்களா? திரு. நாராயணசாமி கொலேழ் கல்வே பண்டிதராகி விடுவதில் எண்ணமானால், அந்த எண்ணத்தைப் பூர்த்திசெய்ய அவர் நிர்வாக அங்கத்தினராய்ச் சேர்ந்துள்ள சேந்திக்கா மூல்யமாக வேலை செய்ய முன் வரவேண்டும். அப்போதுதான் அவர் தமது சேந்திக்காவின் கௌரவத்தில் நம்பிக்கை வைத்தவராவார். அப்போதுதான், தாம் அந்த இடத்திற்கு லாயக்குடையவர் என்பதைத் தாமே நம்புவதாக எண்ண இடமுண்டு. அதைவிட்டுத் தனிமுறையில் பெரிய மனிதரைக் கொண்டு அந்த வேலையை முடிக்க முயலுவாரானால் அதில் எத்தனை சூழ்ச்சிகள் இருக்கவேண்டும் என்பதை யோசியுங்கள். - புதுவை முரசு, 15. 2. 1932, ப. 22 111. ஆசிரியர்களே விழித்துக்கொள்ளுங்கள் ஒரு சட்டத்தைக் காட்டி அந்தச் சட்டத்தின்படி நடப்போம் என்று சொல்லி அதற்காக நீங்களும் பொது அங்கத்தினராயிருக்கப் பணம் கொடுங்கள் என்று உங்களைப் பணம் கேட்டார்கள். நீங்கள் கொடுத்தீர்கள். எந்தச் சட்டத்தை உங்களுக்குக் காட்டியிருக்கிறார்களோ அந்தச் சட்ட மானது சர்க்கார் அங்கீகரித்தது. அந்தப் பூர்வாங்கச் சட்டம் சேந்திக் காவால் மரியாதையாகப் பாதுகாக்கப் படவேண்டும். மனிதர்களில் மடையர்களும்; இருப்பார்கள்; அயோக்கியரும் இருப்பார்கள்; மான மற்றவர்களும் இருப்பார்கள்; நாணய மற்றவர்களும் இருப்பார்கள் என்பதைச் சர்க்கார் கருதித்தான் ஓ மகாஜனங்களே! நீங்கள் சங்கங்கள் கூட்டுங்கள்! ஆயினும் அதற்கும் பொதுவான எல்லை, சுற்றுக்கோடு, அதாவது புறச்சட்டம் என்பதை மாத்திரம் எங்களிடம் காட்டி உத்தரவு பெறுங்கள். அந்த எல்லையிலிருந்து நீங்கள் விலகாதிருக்க வேண்டியே நாங்கள் இப்படிக் கேட்கிறோம் என்று சொல்லுகிறார்கள். ஒரு சங்கத்தின் புறச்சட்டம் என்னும் தத்துவத்தில் இத்தனையும் உண்டு. இது மாத்திரமல்லாமல் அயோக்கியத்தனத்தாலோ, பேடித்தனத் தாலோ, மமதையாலோ அந்தப் புறச்சட்டம் அவமதிக்கப்படுமானால், அதைக் கண்காணிக்கவும், தண்டிக்கவும் சர்க்கார் முற்படும். அதிலும் ஏதோ தெரியாத மனிதர் என்றே தம்மைச் சொல்லிக் கொள்பவர்க்கு வேண்டுமானால் கொஞ்சம் தயவு காட்டும். நாங்கள் தெரிந்தவர்கள், உலக அறிஞர்களையே நாங்கள்தான் நேற்றுப் புதுச்சேரிக் கோமுட்டித் தெருவிலிருந்து சிருஷ்டித்தோம் என்று தம்மைச் சொல்லிக் கொள்பவரைச் சர்க்கார் விடாது. இந்த வார்த்தையைக் கேளுங்கள்! உங்கள் சங்கம், (சேந்திக்கா) தனது சட்டத்தை, எல்லையை, ஒழுங்கைத் தாண்டிற்று என்றும் அதை மதிக்கவே இல்லை என்றும் நான் சொன்னால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்? அதை எண்பித்தால்? - புதுவை முரசு, 22. 2. 1932, ப. 21 112. குழந்தையும் தெய்வமும் கொண்டாடுமிடத்தில் குழந்தையும் தெய்வமும் கொண்டாடுமிடத்தில் என்ற பழ மொழியை நான் கண்டுபிடித்துச் சொல்லவில்லை; அல்லது எனது சுய மரியாதைத் தோழர்களும் சொன்னதல்ல. இதைக் கூறியவர்கள் காலஞ் சென்ற நமது மூதாதையர்களாவர். ஆகவே இதை ஆத்திகர்களும், வைதீகப் பெரியார்களும், பழைமையைப் போற்றும் அன்பர்களும் கவனிக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும். இந்தப் பழமொழியை ஆராய்வோம்: குழந்தையும், தெய்வமும் கொண்டாடுகிறவர்களிடத்திலேயே நெருங்கும் என இந்தப் பழமொழி பகர்கிறது. அப்படியானால், குழந்தையையும், சாமியையும் நாம் கொண்டாடாமல் இருந்துவிட்டால், அவை நம்மிடம் அணுகாதென மறைமுகமாகத் தெரிவிக்கிறதல்லவா? ஆம்! இஃது முற்றிலும் உண்மையாகும். இப்போது ஒரு குழந்தையை எடுத்துக்கொள்ளுங்கள்! அந்தக் குழந்தையை அன்பாக விளித்து இன்பமாகப் பேசி இப்படிவா தங்கம்! மிட்டாய் வாங்கித் தருகிறேன்; பொம்மை வாங்கித் தருகிறேன். ரயில் வண்டி வாங்கித் தருகிறேன். கோபால் கடைக்கு அழைத்துப் போகிறேன். மோட்டாரில் ஏறிப்போகலாம். ஓடிவா! என் தேனே! என் கண்மணியல்லவா நீ! எங்கே இப்படி வருவாயாம்! உன்னை நான் தூக்கிக் கொண்டு கடைக்குப் போவேனாம்!... என்பதைப் போன்ற வார்த்தைகளைச் சதாகாலமும் குழந்தைகளிடம் பிரயோகித்து அவர்களைக் கொண்டாடினால், அந்தக் குழந்தைகள் பலாப் பழத்தில் ஈ ஒட்டிக்கொள்வது போலத் தம்மைக் கொண்டாடுகிறவர்களிடம் ஒட்டிக் கொள்கிறார்கள். இது அநுபவம். குழந்தைகளைக் கண்டால் சின் என விழுந்து, சீ, நாயே! என்கிட்ட வராதே! அடிப்பேன்! உதைப்பேன்! கடிப்பேன் எனப் பேசினால் அதைக் கேட்கும் குழந்தை எப்படிப்பட்ட கல்லுளி மங்கனாயிருந்தாலும் நெருங்கவே நெருங்காது. அப்படிக்கில்லாமல், குழந்தைகளிடம் பட்சமாகப் பேசாமல், சும்மா விருக்கின்றவர்களிடத்திலும், அதாவது குழந்தையைக் கொண்டா டாமலும் அல்லது கவனிக்காமலும் சும்மாவிருந்தாலும் குழந்தைகள் நெருங்கா. ணெகாண்டாடுகிறவர்களிடத்தில் மட்டுமே அவை அணுகுவது சகஜமாயிருக்கிறது. இதெல்லாம் உங்களுக்குத் தெரியா தென்று நினைத்து நான் சொல்லவரவில்லை. ஒருவேளை தெரியாதவர்கள் ஒருவர் இருவர் இருக்கலாமோ என்ற சந்தேகத்தின் பேரில் இவ்வளவு தூரம் சொல்லவந்தேன். எல்லாரும் தெரிந்திருப் பவர்களாயிருந்தால் அது பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாயிற்று. எப்படியெனில் நான் கூறுவது சரி அல்லது சரியல்ல என்பது பட்டப் பகல் போல் தெரிந்து கொள்வீர்களல்லவா? ஊம்! அதனால்தான் நான் கூறினேன்! குழந்தைகளும் எப்படியோ அப்படியே சாமிகளும் என்றார் மண்டை பெருத்த பெரியார். மாரியாயி, காளியாயி, கருப்பண்ணசாமி, சனீவரன் முதலிய சாமிகள் தானாகட்டும்; மற்று எந்தப் பெரிய கடவுள்கள்தானாகட்டும், அவர்களை ஒருவரும் கொண்டாடாமல் இருந்தால் - போற்றாம லிருந்தால் - மதிக்காம லிருந்தால் அவர்களும் ஒருவரையும் மதிக்கமாட்டார்கள். நெருங்க மாட்டார்கள் என்றே பழமொழி விளக்குகிறது. எடுத்துக்காட்டாக இந்து மதத்தை சேராத மற்ற மதங்களில் இருப்பவர்களை எடுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் மாரியாத்தாளையோ, காளியம்மாளையோ, மற்ற இந்துக் கடவுளர் களையோ பழிப்பதுமில்லை; கொண்டாடுவதுமில்லை. அதேபோல் அந்த மதவாதிகளிடத்தில் சாமிகள் ஓட்டுவதில்லை. ஏன்? அவர்கள் தங்களைக் கொண்டாடாமல் இருப்பதால்தான். இதிலிருந்து நாம் அவசியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்றுண்டு. அதாவது இதர மதக்காரர்களைப் போல, இந்து மதக்காரர்களும், தெய்வங்களைக் கொண்டாடாமல் விட்டு விட்டால் கடவுளர்களும் அணுகாமல் விலகிவிடுவார்கள் என்பது சூரியனைப் போல் தெரிகிறதல்லவா? ஏன் இந்து மதக்காரர்களும் அப்படி நடக்கக்கூடாது? அப்படி நடந்து கொள்வதனால் நன்மை தான் ஏற்படுகிறதே அன்றித்தீமை விளையாது கடவுளர்களால் இதுவரை யாருக்கு என்ன நன்மை உண்டாகிவிட்டது? நன்மைக்குப் பதில் தீமைதான் உண்டாகியிருக்கிறது என நான் கூறக்கூடும். எந்தக் கடவுள்மீதும் எளியேன் நம்பிக்கையற்றவன் என்பதை நண்பர்கள் அறிந்திராவிடின் அதற்கு நான் ஜவாப்தாரியாக முடியாது. ஒரு கடவுள்மீது உறுதி கொள்ளாத நான் சாமி களைக் கொண்டாடாம லிருந்தால் அவர்களும் நெருங்க மாட்டார்கள் எனக் கூறியதைப் பற்றி ஐயுற வேண்டாம். உண்மை என்னவென்றால் சாமிகள்மீது நம்பிக்கை யுடையவர் களுக்காகவே கூற வந்தேனேயன்றி, என் போன்ற நாத்திகர் களுக்குக் கூறவில்லை என்பதை மனத்தில் பதித்துக்கொள்வீர் களாக! சாமிகளைக் கொண்டாடாமல் விட்டுவிட்டால் அநேக நன்மைகள் உண்டாகும். முதலாவது, கண் திறக்கப்பட்டு விடுவார்கள். இரண்டாவது, பொருள் செலவு மீதியாகும். மூன்றாவது, நேரம் மீதி யாகும். நான்காவது பிற மதக்காரர்களால் காபீர் அஞ்ஞானி, மூடர் எனக் கேலி செய்யப்படுவதி லிருந்து விடலாம். இவை மட்டுமா! கடவுளர்களைக் காட்டிலும் மனிதரே பல விதங்களில் உயரியவர் என்பதை அறியும் பாக்கியத்தையடையலாம். உண்மையா பொய்யா என்பதை அறியச் செயலில் காட்டிப் பாருங்கள்! கிறுக்கன் - புதுவை முரசு, 22. 2. 1932, ப. 10 - 11 113. திக்கற்றவர்கட்குத் துணை திக்கற்றவர்கட்குத் தெய்வந்துணை என்றொரு பழமொழி நமது நாட்டுமக்களால் வழங்குவதுண்டு. அது முற்றும்பொய்யென்றே நாம் கூறுவோம். திக்கற்ற தெய்வங்கட்கு மனிதன் துணை என்று மாற்றிக் கூற வேண்டுவதுதான் உண்மையாகும். தெய்வம் மனிதனைக் காப்பாற்றியதாகக் கேள்விப்பட்டதேயில்லை. ஆனால் தெய்வம் என்ற சிலையை (பொம்மையை) மனிதன் காப்பாற்றித் துணைபுரிவதை இன்னும் நம் கண்முன் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். மனிதன் தன்னைப் போலவே, தெய்வத்திற்கு உருவம் கற்பித்துப் பெண்டு பிள்ளை ஏற்படுத்தி, அவைகட்குத் திருப்பணிகளமைத்து மானியங்கள் விட்டுத் தினம் நீராட்டி, ஆடைகட்டி, உணவூட்டி, பாராட்டி, புகழ்ந்துபாடி, மண்ணிட்டு, மெழுகிட்டு, தீபமிட்டு, அலங்கரித்து, அர்ச்சித்து, உற்சவங் கொண்டாடி, பக்தி செலுத்துவதைப் பார்க்கிறோம். ஒருமுறை திருக் கல்யாணம் செய்து கொண்ட தெய்வத்திற்கு (கடவுளுக்கு) ஒவ்வொரு வருடமும் தவறாமல் திருக் கல்யாணம் என்ற பெயரால் ஆண், பெண் என்ற பொம்மை சிலைகட்குத் திருப்பூட்டுதல் (தாலிகட்டுதல்) உற்சவம் நடைபெற்றுக்கொண்டு வருவதைப் பார்க்கிறோம். ஒவ்வொரு நாளும் கொட்டுமேளத்துடன் பக்தர்கள் கூடி ஆண், பெண், என்ற பொம்மை விக்ரஹத்தைப் பள்ளியறையில் கொண்டுபோய் படுக்கவைத்தும், கொசுவலை கட்டிப் பால் பழம் வைத்தும், தாம்பூலம் மடித்துவைத்தும், வாசனைத் திரவியங்கள், வைத்தும், பட்டுத் தலையணை மெத்தைகள் வைத்தும், கைகால் கழுவ வெள்ளிப் பாத்திரத்தில் வெந்நீர் தயாரித்து வைத்தும், வெண்சாமரம் வீசி, தாசிமார்களைக் கொண்டு நலங்கு ராகம் பாடியும், உறங்க வைக்கின்ற அலங்கோலத்தை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோவிலிலும் நடைபெற்றுவருவதைப் பார்த்து வருகின்றோம். எனவே மக்கள் கடவுள் என்ற பொம்மையுருவங் களைக் காப்பாற்றும் கடமையில் தலைசிறந்து விளங்குகிறார்கள் கடவுள் என்ற பொம்மையை மனிதன்தான் காப்பாற்றியாக வேண்டுமென்று அறிந்தோ அறியாமலோ மக்கள் வீணே கஷ்டப்படுவதைப் பார்க்கின் திக்கற்றதெய்வங்கட்கு மனிதன் துணை என்று நாம் கூறுவது பொய்யாகாது. திக்கற்ற மக்கட்குத் தெய்வமென்ற ஒன்று இதுவரை என்ன துணை செய்திருக்கின்றதென்று தெரிய நாம் ஆசைப்படுகிறோம். இந்நாட்டில் திக்கற்றவர்கள் நிலையை நாம் எழுதிமுடியாது. உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, படுக்கப்பாயின்றி, இருக்க இடமின்றி, படிக்கப் பள்ளியின்றி, நடக்க உரிமையன்றி, குடிக்கத் தண்ணீர் வசதியின்றி, பேசும் உரிமையன்றி, பிற சுதந்திரங்கள் எதுவுமின்றி நடைப்பிணங்களாக - எலும்புக் கூடுகளாயுள்ள திக்கற்ற மக்களின் துயரத்தை இங்கு எழுதிமுடியுமா? வறுமையால் பீடிக்கப்பட்ட எத்தனை கோடி மக்கள் பிச்சைக்காரர்களாக வீதியில் அலைகிறார்கள். தொழிலின்றி, தக்க கூலியின்றி எத்தனை கோடிமக்கள் இந்நாட்டை விட்டுப் பெண்டு பிள்ளைகளுடன் கவலையோடு கப்பலேறுகிறார்கள். பசி நோயால் எத்தனை கோடி மக்கள் எச்சிலையை எதிர்பார்த்து நாயுடன் சண்டையிட்டுக் கொண்டு எச்சில் சோற்றை எடுத்துப் புசிக்கிறார்கள். மாட்டையும், நாயையும் அடித்துத்தின்று உயிர்வாழும் மக்கள் தொகை எவ்வளவு? விதவைகளென்று வீட்டிலடைக்கப்பட்டுத் துன்புறும் பெண்கள் தொகை எவ்வளவு? விபசாரிகளென்றும், விலை மகளீரென்றும் தங்களைக் கூறிக்கொண்டு வீட்டுவாசல் முன் நின்று வீதியில் போகும் ஆடவர்களை விரும்பி எதிர்பார்த்து ஏங்கி நிற்கும் வேசியர்கள் தொகை எவ்வளவு? அநாதைகளென்று கூறி அங்காடி விற்றும், ஆப்பம் சுட்டும், விறகு விற்றும், மண்வெட்டியும், கல் லுடைத்தும், கயிறுதிரித்தும், தினம் கஷ்டப்பட்டு வறுமையால் பீடித்து உயிர்மடியும் திக்கற்றவர்கள் எந்தத் தெய்வத்தின் துணையை இதுவரை பெற்று இன்புற்றார்கள்; இன்புறப் போகிறார்கள் என்று கேட்கிறோம். இப்படி நாம் கூறுவது தெய்வ நம்பிக்கையுடையவர் கட்குப் பெரிதும் கஷ்டமாகயிருக்கலாம். நமக்குத் தெரிந்தவரை தெய்வங்களுக்குக் கோடிக்கணக்காகக் கொட்டியழுத அரசர்களும் பணக்காரர்களும், பக்தர்களும், நகரத்தார்களும் இன்று தங்கள் வாழ்க்கையை நடத்த வழியின்றிப் பரிதவிப்பதையும், வாரிசின்றி மறைந்து போனதையும், கேட்டும் பார்த்தும் வருகிறோம். கோவிலை யும், உற்சவத்தையும், கடவுள் ஆராதனையையும், குருக்கள்மார்கள் வியாபாரமாகக் கருதிப் பொருள் திரட்டி வருகிறார்கள். மதக் கொள்ளைக்காரர்களும் புரோகிதக் கொள்ளைக்காரர்களும் மக்களை ஏமாற்றிப் பொருள் பறிப்பதற்குக் கடவுள் என்ற சொல்லை ஒரு ஆயுதமாக உபயோகப்படுத்தி மக்களை வஞ்சித்து ஏமாற்றி வயிறு பிழைக்கவே முயல்கிறார்கள். திக்கற்றவர்களும், பணக்காரர்களும், பக்திமான்களும் தங்கள் பொருளைச் செலவு செய்து எப்படியாவது கடவுளைக் காப்பாற்றவே கவலைப்படுகிறார்கள். கொள்ளை யடிப்பவனும். கொலை செய்பவனும், பிறரை வஞ்சிப்பவனும், விபசாரம் செய்பவனும், உழையாமல் ஏமாற்றிப் பிழைப்பவனும் எல்லோரும் தங்கள் செயலில் வெற்றி பெறவேண்டி கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுகிறார்கள் பிரார்த்தனையும் செலுத்தி விடுகிறார்கள். இதனால் எப்படி தெய்வம் துணை செய்கிறதென்பது நமக்கு விளங்கவில்லை. மக்கள் கடவுள் என்ற உருவத்தினிடம் கொண்டுள்ள மயக்கம் பால்குடிக்கும் இளமைப் பருவத்திலேயே கற்றுக்கொண்ட பகுத்தறிவற்ற போதனையாகும். இளமையில் கற்ற போதனையைப் பகுத்தறிய முடியாதவாறு மக்களைக் கட்டுப்படுத்திப் பயமுறுத்தி பணக்காரர் முதல் பாமரர்வரை எல்லா மக்களுடைய பொருளும் வஞ்சிக்கப்படுகிறது. மக்கள் சமூகத்திற்கு அவசியமான தேவைக்கு வேண்டிய உதவியைச் செய்து மக்களை மேன்மையுறச் செய்வதற்குப் பணக் காரர்களும், ஜமீன்தாரர்களும் மடாதிபதிகளும் முன்வர வேண்டும் என்று நாம் பலசமயங்களில் கூறியிருக்கிறோம். இன்னும் அதைத்தான் கூறி யிருக்கிறோம். இன்னும் அதைத்தான் கூறிவரு கின்றோம். உயிரற்ற கல்லுக்கும், செப்புக்கும், கட்டைக்கும், பொம்மைக்கும் செலவு செய்து அது பயன்தரும் என்று நம்புவதை விட உயிருள்ள மக்கட்கும், வசதியில்லாத மக்கட்கும் உணவு கொடுத்து உடை கொடுத்து இடம்கொடுத்துக் கல்வி கொடுத்து ஆதரிப்பது பேருபகாரமாகும் என்றே சுயமரியாதை இயக்கம் கூறுகின்றன. நமது கொள்கைக்கேற்ப திக்கற்ற ஏழை தீண்டப்படாத மாணவர் கட்கு ஆதரவு செய்யுமுகத்தான் கானாடுகாத்தான் தோழர். சபா ரெத்தினம் அவர்கள் பத்தாயிரம் ரூபாய் நன்கொடை உதவி யிருப்பதையறிந்து அளவிலா மகிழ்ச்சியடைகின்றோம். தோழர். சபா ரெத்தினம் அவர்கள் லால்குடி போர்டு ஹைஸ்கூலில் படிக்கும் ஏழை தீண்டப்படாதார்களெனக் கூறும் திக்கற்ற மாணவர்கட்கு நடுப்பகல் உணவை இலவசமாகக் கொடுத்துப் பசிபோக்கி, உணர்ச்சி யூட்டி ஆதரவு கொடுக்க முன் வந்த கருணையை நாம் முழுமனதுடன் பாராட்டி வாழ்த்துகின்றோம். இம்முயற்சிக்குப் பெரும் தூண்டுதலாக நின்று பேருதவிபுரிந்த பெருங் கருணையாளர்களும், என்றும், இத்தகையபல நலன்களை நாடியுழைப்பவர்களுமான நமது திரிச்சி ஜில்லா போர்டு தலைவர். தோழர். T.M. நாராயணசாமி M.L.C. அவர்களும், இலால்குடி தாலூகா போர்டு தலைவர் தோழர். P. கிருஷ்ணசாமி அவர்களும், இலால்குடி தாலுகா போர்டு உதவி தலைவர். L.N. பரமசிவம் அவர்களும் திருச்சி ஜில்லா கலெக்டர் தோழர். S. ரெங்கநாதன் அவர்களும், ஸ்ரீரெங்கம் முனிசிபல் சேர்மன் தோழர். A. அனந்த சுப்பிரமணியம் அவர்களும், திக்கற்ற தீண்டப்படாத எழை மாணவர் கட்கு ஆதரவு புரிய முன்வந்த பெருமை எல்லோராலும் பாராட்டத் தக்கதாகும். இத்தகைய முயற்சிகளில் ஒவ்வொரு ஜில்லாவிலுள்ள பணக்காரர்களும் பங்குகொண்டு மக்கள் பணியில் முன்நின்றால் இந் நாட்டில் பல அரும்பெரும் காரியங்கள் செய்யக்கூடும். பணக்காரர்கள் தங்கள் பொருளைப் பல ஆடம்பரத்தில் அநியாயமாகச் செல விடுவதைக் குறைத்தால் எத்தனையோ பல துறைகட்கு, அவசியமான செலவிற்கு உதவி மக்கட்கு ஆதரவு புரியலாம். திக்கற்றவர்கட்கு எவர்துணை? தோழர் சபாரெத்தினம் அவர்களும், அவர்தம் தோழர்களுமே தான் துணை. எனவே மனிதருக்கு மனிதர்தான் துணையாகயிருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். - புதுவை முரசு, 22. 2. 1932, ப. 12 - 14 114. இனி என்ன செய்யப்போகிறீர்கள்? ஒரு குடும்பத்தின் லாப நஷ்டத்தில் பொறுப்பேற்றுக் கொள்ளும், அந்தக் குடும்பத்தினரின் மனோபாவமே தேசகாரியத்தில் பொறுப்பேற்க வேண்டிய தேசமக்களுக்கும் தேவை குடும்பத்தினர்கட்குத் தங்கள் குடும்ப நிலையில் எவ்வளவு விவேகந் தேவையோ, தேசநிலையில் தேச மக்கட்கு அத்தனை விவேகம் வேண்டும். ஒற்றுமையற்ற குடும்பம் ஒருமிக்கக் கெடும் என்றபடி குடும்ப நன்மைக்குக் குடும்பத்தினரின் ஒற்றுமை எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு ஒற்றுமை தேச நன்மை யின் பொருட்டுத் தேசமக்களுக்கு இருத்தல் வேண்டும். குடும்பத் தலைவனாலேயோ, மற்றவர்களாலேயோ பேதப்படுத்தப்பட்ட குடும்பமானது முன்னேற்ற மடையாமல் இடர்ப்படுவது போலவே பேதபுத்தியுள்ள தேச மக்களால் தேசமுன்னேற்றந் தடைப்படும் என்பதோடு மிகுதியும் இடர்ப்பட்டே தீரும். இன்றைய நிலையில் நம் தேசமக்கள்பால் தேசம் தங்க ளுடையது; தேச நன்மை தீமையில் தமக்குப் பங்குண்டு என்ற மனோ பாவமானது சுடர்விட்டு எழுகின்றதா? இவ்விஷயத்திற்கு அடிப்படை யாக இருக்கவேண்டிய கல்வி தேடப்பட்டிருக்கிறதா? தேச மக்களுக்கும் தேசத்திற்கும் உள்ள சம்பந்தா சம்பந்தங்களில் விவேகம் ஏற்பட்டிருக் கிறதா? தேசமக்களின் ஒற்றுமை எந்த நிலையில் உள்ளது? எத்தனை பேதங்கள்! வாழ்க்கை முறையில் எவ்வளவு கோணங்கள்! இவைகளைச் சிந்திக்கும் அறிஞர் கண்ணீர் விட்டுக் கதறாமல் இருக்கமுடியுமா? பொறுப்பு, விவேகம் ஒற்றுமை முதலியவைகளையுடைய குடும்பத்தினர் முன், குடும்பத்தைச் சேராத பிறன் தலையிட முடியாதது போலத்தான் ஒப்பு, உடற்பிறப்பு, விடுதலை முதலிய குண ஆவேச முடைய தேசத்தில் பிறன் தலையிடமுடியாது. அத்தகைய குடும்பத் தில் தலையிட்ட பிறன் தாக்குப்பிடிக்க முடியாததுபோலத்தான் ஒற்றுமையும் சமத்வமாதி குணங்களின் ஆவேசமும் உள்ள தேசத்தில் தலையிட்ட பிறனும் தாக்குப்பிடிக்க முடியாது. உணவைவிடக் கல்வி ப்ரதானம் என்று நினைத்துச் செய்கை யில் காட்டிவரும் இன்றைய உலகில் பொதுக்கல்வியைப் பற்றிக் கவலை கொண்டதுமில்லை சுயராஜ்யம் என்ற கூச்சல் 35 கோடி மக்களின் காதிலும் அர்த்தமற்ற முறையில் குருட்டுப் பாடமாகப் புகுத்த முயலும் ஒருசிலரின் அபார சக்தியைக் கல்வியின் தேவைக்கு எப்போதாவது எங்காவது இந்நாட்டில் உபயோகிக்கப் பட்டதா என்ற விஷயத்தை உற்று நோக்கினால் மனம் திடுக்கிடுகிறது. ஓய் தலைவனே! நீ உன் சட்டைச் சாக்கிலிருந்து தரத்தக்க சமூகச் சீர்திருத்தத்தை இப்படிப்போடு என்று ஓர் திருத்தத்தை வேண்டுகின்ற ஏழைச் சகோதரன் கேட்டால் அந்தத் தலைவன் இன்னொரு பலசாலியைப் பொறுத்த பிரச்சனையைத் தீர்த்துக்கொண்டு அதன் பிறகு ஆகட்டும் என்று கூறுகிறான். பலசாலிப் பிரச்சனையானது மேற்படி தலைவனும் ஏழைச் சகோதரனும் ஒன்றுபடுவதன் மூலமே தீரக்கூடும் என்பதை அவன் சிந்திக்க மறுக்கிறான். குடும்பத்தலைவன் தன் உறவினர்களின் நெஞ்சை மிதித்தபடி குடும்ப விரோதியை உறவினர் சகிதம் எதிர்ப்ப தென்பதுதான் எப்படி முடியும் என்றுதோன்றவில்லை. சுயமரியாதை இயக்கம் சொல்வதென்ன? தேசவிடுதலை ஒன்றே மற்றெல்லாவற்றிலும் ப்ரதானம் என்கிறது. அத்தேச விடுதலைக்கு இன்றியமையாததான ஒற்றுமை ப்ரதானம் என்கிறது. ஒற்றுமையே ப்ரதானம் என்று சொல்வதோடல்லாமல் ஒற்றுமையைத் தடைப்படுத்தும் எவைகளையும், தேசவிடுதலைக்காகத் தகர்த்துப் போடுவோம் என்று கூறுகிறது. சுயமரியாதை இயக்கம் கூறுவது இதுவானால், அதைக் குறை கூறுகிறவர்கள் எதை ஆதாரமாகக் கொள்ளுகிறார்கள் என்பது யோசிக்க வேண்டிய விஷயம். சுயநலத்தை ஆதாரமாகக் கொள்வதன்றி வேறொன்றுமிருக்க முடியாது என்பது கண்கூடு. இந்தியாவில் தனி ஒரு மனிதன் இன்னொரு மனிதனோடு குணம் செயல்களில் ஒன்றுபட்டிருக்க முடியாத வகையில் மூடப் பழக்க வழக்கங்கள், சாதிப் பூசல்கள், மதக் கூச்சல்கள், கடவுள் கிறுக்குகள் உள்ளன என்பது மறுக்கமுடியாத விஷயம். எடுத்ததற் கெல்லாம் கடவுள் பெயரை இழுப்பதும், மதத்திற்காகவே மக்கள் என்று குறுகிய எண்ணமும், மனிதரில் தீண்டத்தகாத மனிதன் உண்டு என்ற இருட்டும் மூன்று வயதில் தாலியிழந்தால் முடிவுவரைக்கும் உயிர்ப் பிணமாயிருக்க வேண்டும் என்ற விஷயம் ஆதிமுதல் பெரியார்களால் பேசப்பட்டேவந்தன. சுயமரியாதைக் காரர்கள். அவைகள் செயற் படும்படி பிரசாரம் செய்கிறார்கள். இப்பிரசாரமானது இன்றைய இந்திய மக்களுக்கு மிக இன்றியமையாதது என்பது அவர்கள் சுயமரியாதைக் கொள்கையில் குதூகலத்தோடு பாய்ந்து அதை ஆதரிப்பதிலிருந் தேயும் தெரிந்து விட்டது. இந்தியாவில் அநுதாபமுடைய பிறநாட்டாரும், பொதுவாக மக்கள் முன்னேற்றத்திற்கு வழிகோலும் பேரறிஞரும் உலக முன்னேற்றத்திற்கு இந்தியப் பெருங்குடி மக்களின் முன்னேற்றம் அவசியமென்று நம்பும் அநேக நிபுணர்களும், இந்நாட்டில் இலக்ஷக் கணக்கான பெரியாரும் இந்தியாவைப்பற்றிய பூர்வாங்கமான குறை பாடுகள் இன்னின்னவை என்று குறித்துள்ளார்கள். அவற்றோடு சுய மரியாதைக்காரர் சொல்லுவதையும் ஒத்திட்டுப் பார்த்தால் இம்மியும் மாறுபடவில்லை என்பதும் ஒருதலை. ஏதோ காங்கிரஸ் என்பதன் பேரால், சுயராஜ்யம் என்னும் குறிநோக்கி மக்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அதற்கிடையில் ஏற்பட்ட தொல்லைகளை அறிந்தாய்விட்டது. தொல்லை அடையும் சமயத்தில் இயல்பாக அந்தத்தொல்லைகட்குக் காரணம் என்ன என்று தேடப்படும். அவ்வாறே கூர்ந்து கவனித்த வகையில் சுயமரியாதைக் காரர் கூறும் தேசக்குறைபாடுகளே காரணம் என்பதும் புலனாயிற்று. தேசமக்கள் இது முதல் சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்து தேச விடுதலை பெற என்னதடை? - புதுவை முரசு, 22. 2. 1932, ப. 16 115. அறிவிருக்கிறதா? தூத்துக்குடியிலிருக்கும் ஓர் அயோக்கியன், எமக்குக் கீழ்வரும் கருத்து அமைய ஓர் கடிதமெழுதியிருக்கிறான்: 25.01.32ல் பாதிரியாரின் காமவெறி என்று தலைப்பிட்டுத் தூஷணையுடன் கூடியதொரு கட்டுரையையும், அதற்குக் குறிப்புரை ஒன்றும் புதுவைமுரசில் வெளிவந்திருக்கிறது. புதுவைமுரசு தனது போக்கிரித்தனத்தை எவரிடம் காட்டுகிறோம். என்பதை யோசியாமல் எழுதியிருப்பது சுத்தமுட்டாள் தனமும், அயோக்கியத்தனமும் ஆகும். என்று எழுதிவிட்டு, பாதிரியின் விஷயத்தைப் புதுவை முரசு திராவிடனிலிருந்து எடுத்துப் போட்டது என்றும், திராவிடன் இதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டதென்றும், ஏனெனில், பாதிரியால் கற்பழிக்கப்பட்ட பெண் தான் வழக்கை வாபஸ் வாங்கிக்கொண்டதால் என்றும், இதுபோல் புதுவைமுரசும் மன்னிப்புக் கேட்டுக்கொள்ளுமா என்றும், மன்னிப்புக் கேட்பது நல்லதுதான் என்றும் எழுதியுள்ளான். மக்களிடம் சாமியென்றும், கடவுள் என்றும் சொல்லி வயிறு வளர்க்கும் இந்த அயோக்யன், எமக்குச் சொல்லியுள்ள அறிவு கெட்ட வார்த்தைகளைப் பத்திரிகைச் சட்டம், நடைமுறை இவைகளில் அநுபவமுள்ளவரைக் கேட்டுப் பதில் தெரிந்துகொள்ளவேண்டும். ஏழைப் பெண்ணைக் கற்பைக் கெடுத்தது பத்திரிகையில் வந்தது. அதைப் புதுவை முரசு எடுத்துப்போட்டது. பிறகு அந்தப் பெண் அது சம்பந்தமாகத் தொடுத்த வழக்கை வாபஸ் வாங்கிக் கொண்டதாகச் சொன்னால், நடந்த தவறு பொய்யா? அல்லது அந்தப் பெண் பிறகு சாமியாருக்குச் சம்மதித்து விட்டாளா? இதுதானே கேள்வி. இதை யெல்லாந் தெரியாமல் பிரஞ்சிந்திய பத்திரிகை மன்னிப்புக் கேட்குமா? - புதுவை முரசு, 22. 2. 1932, ப. 18 116. மிஸ். மேயோவும் தமிழ்நாடும் மிஸ். மேயோ அவர்களைப் பற்றியும், அவர்களால் எழுதப் பெற்ற இந்திய மாதா கடவுளின் அடிமைகள் என்ற மதிப்பு வாய்ந்த நூலைப் பற்றியும் நமது வாசகர்கட்கு அதிகம் கூறத் தேவையில்லை. மிஸ். மேயோ அவர்கள் எழுதிய புத்தகத்தைப் படித்தவர்களும், படித்தவாறே ஒவ்வொரு நிகழ்ச்சியும் நாட்டிடை இன்றும் கண்முன் நடைபெற்று வருவதைப் பார்த்தவர்களும் மிஸ். மேயோ அவர்களைக் குறை கூறவோ, வாய்க்கு வந்தபடி பிதற்றவோ வெளிவரமாட்டார்க ளென்பது மட்டும் உண்மை யாகும். மிஸ். மேயோ அவர்களால் எழுதிய புத்தகங்களில் இந்நாட்டில் நடை பெற்றுவரும் பழக்க வழக்கங்களைப்பற்றியும், ஒழுக்க முறைகளைப் பற்றியும், சீர்கேடுகளைப்பற்றியும் மிக்க விரிவாகவும், வணக்கமாகவும், அழகாகவும், புள்ளி விவரங்களோடும் எடுத்து எழுதியிருக்கிறார். அவர்கள் எழுதியிருப்பதைப் படிக்கும் எந்த உண்மை விரும்பியும், சீர்திருத்தவாதியும் ஆத்திரப்படவோ, கோபம் கொள்ளவோ, பொய்யென்று மறுக்கவோ முன்வர முடியாது. மிஸ். மேயோ அவர்கள் எழுதியிருப்பதை விட இன்னும் எத்தனையோ கோடி நிகழ்ச்சிகள் நமது நாட்டிடை இன்றும் நடைபெற்று வருவதை எவரும் இல்லையென்று மறுக்கமுடியாது. மிஸ். மேயோ அவர்கட்குத் தெரியாத விஷயங்களும் அவர்கள் புத்தகத்தில் எழுதப்படாத பகுதிகளும் இன்னும் பலவுண்டு. மிஸ். மேயோ அவர்கள் எழுதிய புத்தகத்தைப் பார்த்துவிட்டு ஆத்திரப்பட்டுக் குப்பைக்காரி மேயோவென்றும் நாடோடி மேயோ வென்றும் பிதற்றியும் தூற்றியும், இழித்தும், பழித்தும் பரிகசித்தார்கள். மற்றும் பல தேசபக்தர்கள் மிஸ். மேயோவுக்குச் சவுக்கடி என்ற மறுப்பு நூலும் எழுதி வியாபாரம் செய்யப் புறப்பட்டார்கள். வீண் பெருமை பேசி வெறும் கூச்சலிட்டார்கள். வைதீக வர்ணாச்ரமக் காரர்கள் முதல் தோழர், காந்தி அவர்கள் வரை எடுத்துக் கண்டித்துப் பேசியும் எழுதியும் வந்தார்கள். மிஸ். மேயோ அவர்கள் எழுதிய புத்தகத்தை மறுக்கும் முறையில் தோழர், காந்தி அவர்கள் கூறி யிருப்பதாவது:- மிஸ். மேயோ அவர்கள் இந்தியாவில் உள்ள பல சாக்கடை களையும், குப்பைத் தொட்டிகளையுந்தான் பார்த்து எழுதி யிருக்கிறார்களே யொழிய, இங்குள்ள பல சிங்காரத் தோட்டங் களையும், பூந் தோட்டங்களையும் மிஸ். மேயோ அவர்கள் பார்க்கவுமில்லை; எழுத வுமில்லை. ஆதலால், நம்மை இழிவுபடுத்த வேண்டுமென்றே சுதந்தரத்திற்குத் தகுதியற்றவர்க ளென்று குறிப்பிடவே மிஸ். மேயோ அவர்களால் இந்தியாவைப் பற்றிப் புத்தகம் எழுதப்பட்டு வருவதாகும். என்று குறிப்பிட்டு எழுதியும், பேசியுமிருக்கிறார். ஆனால், எங்குச் சிங்காரத் தோட்டங்களும், பூந்தோட்டங்களும் இருக்கின்றன என்பதைத் தோழர், காந்தி அவர்கள் குறிப்பிடவில்லை. இந்தியா விலுள்ள சிங்காரத் தோட்டங்களும், பூந்தோட்டங்களும் தோழர், காந்தி அவர்கள் கண்ணுக்குத் தெரிவதுபோல் எல்லாருடைய கண்ணுக்கும் தெரிய வேண்டுமானால் பூந்தோட்டத்தையும், சிங்காரத் தோட்டத்தை யும் மறைத்துக் கொண்டிருக்கிற பல சாக்கடைகளையும், குப்பைத் தொட்டிகளையும் அப்புறப்படுத்திவிடவேண்டியது அவசியம்தான் என்று புலப்படாமல் போனதும் நமது கஷ்டகாலம்தான். ஒருக்கால் தோழர், காந்தியவர்கட்குப் புலப்பட்டு நமது நாட்டுச் சாக்கடைகளையும், குப்பைத் தொட்டிகளையும் அப்புறப்படுத்த முயன்றால், குப்பைத் தொட்டிக்கும், சாக்கடைக்கும் சொந்தக்காரர் களான மத வெறியர்களும், வைதீக வர்ணாச்ரமக்காரர்களும், புராணப் பிரசங்கிகளும், புரோகிதக் கூட்டங்களும், உயர்சாதிக்காரர்களும், பார்ப்பனக் கொள்ளைக் கூட்டத்தார்க்கும் எதிர்க்கவும், தாக்கவும் வருவார்கள். தோழர், காந்தி யவர்கள் முயலவுமில்லை. எந்த வைதீக வர்ணாச்ரமப் புரோகிதக் கூட்டமும் அதற்காகக் காந்திமீது தங்கள் போராட்டத்தை ஆரம்பிக்கவு மில்லை. ஆனால், சுயமரியாதைக்காரர்கள் மிஸ். மேயோவின் கூற்றை அப்படியே ஒப்புக் கொள்ளுகிறார்கள். அதைப் பொய்யென்று தூற்றாது மெய்யென்றே கண்டு அதனைப் போக்கப் பணியாற்றி வருகிறார்கள். மிஸ்.மேயோவில் சீர்திருத்த ஆசையைச் சுயமரியாதைக்காரர்கள் தங்கள் கொள்கையாக மதித்துப் பிரசாரம் செய்து வருவதால் மிஸ். மேயோவை எதிர்த்த வைதீக வர்ணாச்ரம தேசீயப் பார்ப்பனப் புலிகள் நம்மையும் எதிர்க்கப் பார்க்கிறது. எதிர்த்துப் பேசுவதாலும், எழுதுவதாலும் பயன் என்ன? என்பதை அறிவுடைய மக்கள் நன்கு ஆலோசித்துப் பார்க்கவேண்டும். சிறப்பாக நமது தமிழ்நாட்டில் நடைபெறும் அர்த்தமற்ற உற்சவங்களைப் பற்றி மட்டும் எழுதுவதானால் மிஸ். மேயோவின் புத்தகத்தைப்போல் எத்தனை புத்தகங்கள் வேண்டுமானாலும் எழுதலாம். குறிப்பாகக் கூற வேண்டுமானால், மாசிமாதம் பங்குனி மாதங்களில் நடைபெறும் மாரியம்மை, காளியம்மை உற்சவங்களும், பால்காவடி, தீகுதி, தீமிதி, வேல்குத்தல், ஆட்டுக்குட்டி இரத்தம் குடித்தல், அரிவாள் மேலேறி யாடுதல், தீச்சட்டி தூக்கியாடல், பேய் ஒட்டல், பிசாசு ஆடல், பிள்ளைவரம் பெறல் போன்ற பல அர்த்தமற்ற அநாகரீகச் செயல்களுடைய பிரார்த்தனை களுமே உதாரணமாகும். இச்செயல்களுக்காகச் செலவாகும் ரூபாய் எவ்வளவு? கூடும் ஜனங்கள் எவ்வளவு? கஷ்ட நஷ்டங்கள் எவ்வளவு? என்பதையும் யோசியாது பகுத்தறிவற்றுப் பழக்கவழக்க மென்ற பெயரால் காட்டு மிராண்டித் தனமான உற்சவங்களையும், பிரார்த் தனைகளையும் செய்து சண்டையிட்டுக் கொண்டு மண்டையை உடைத்துக் கொள்ளும் மக்களிடையில் எத்தனை மிஸ் - மோயோக்கள் தோன்றினாலும் அறிவியக்கங்கள் தோன்றினாலும் வரவேற்று நாட்டிடைப் பரப்பி மக்கட்கு நல்வழி காட்டி அவ்வழி நிற்கச் செய்யவேண்டுவது நம் தமிழ் நாட்டார் கடமையும், பிறநாட்டார்கள் கடமையுமாகும். - புதுவை முரசு, 29.2.1932, ப. 12 - 13 117. வாத்தியார் ஒற்றுமைச் சங்க யோக்யதை சர்க்கார் கவனிக்குமா? ஒரு தந்திரக்காரச் செட்டி கோயிற் சாமியைப் பார்த்துத் தன் குறை தீர்ந்துபோனால் முத்துத்தேர் செய்து வைப்பதாகப் பிரார்த்தனை செய்தான். குறை நீங்கிற்று. தந்திரக்காரன் கோயிலின் முன் நின்று ஆகாயத்தில் தேர் உருக்கோடு அமைய வாய்முத்தம் கொறித்தான். சாமி கற்சாமியாதலால் அது தந்திரக்காரனை ஒன்றும் செய்யவில்லை. அதனால் ஏதாவது செய்ய முடிந்தால் இந்த முட்டாளின் தந்திரமும் பலிக்கப்போவதில்லை. இது கதை. ஆனால், திரு. வேங்கடகிருஷ்ணசாமி, திரு மலைக்கண்ணு, திரு நாராயணசாமி சகிதம், சேந்திக்கா என்பதாக ஒன்று வாய்ச் சொல்லால் நிர்மாணித்துள்ளார். இந்த வாய்ச்சொல் சேந்திக்காவைக் கற்சாமிக்கு எதிரில் நிர்மாணிக்கவில்லை. பிராஞ்சிந்திய சர்க்கார்முன்தான் இந்தத் தந்திரம் நடைபெறுகிறது. அறிவுள்ள சர்க்கார் இந்த ஏமாற்றுதலை அறியாத தோடு அந்தச் சேந்திக்காவின் பேரால் வரும் விண்ணப்பங்களையும் ஓர் அசல் சேந்திக்கா எழுதியதாக எண்ணி இதுவரைக்கும் காரியம் நடத்தியும் வந்துள்ளது. செட்டியாவது வாய்முத்தத்தால் பரிசுத்த ஆகாயத்தில் தேர் சோடித்தான். வேங்கடகிருஷ்ணசாமிகள், பொது ஆசிரியர்களை ஏமாற்றுதல், மமதை, சுயநலம் ஆகிய ஆபாசக் குப்பை மேட்டின் மேல் சேந்திக்காவை வாயால் ஜோடித்துள்ளார்கள். ஆசிரியர் என்ற தத்துவமானது சர்க்காரோடு சம்பந்தப்பட்டது. அப்படிப்பட்ட ஆசிரியர் ஏற்படுத்திக்கொண்டிருப்பதாகச் சொல்லப் படும் சேந்திக்கா என்பது கல்விச் சங்கம், ஜாதீய சங்கம் போலல்லாமல் சர்க்காரோடு மிகுதியும் சம்பந்தமுடையது. இப்படிப்பட்ட சங்கமானது தனது சட்டமுறையில் தவறும்போது சங்க ஆசிரியர்களின் பிரதிநிதித்வத்தை அது இழந்து விடுவதோடு சர்க்காரிடம் பெருங் குற்றமிழைத்ததாகவும், சர்க்காரை ஏமாற்றிய தாகவும் முடியும். ஆசிரியர் சங்கத்தின் இன்றைய நிலையைச் சர்க்கார் அறிய ஆவல்கொள்ள வேண்டுமென்று நாம் கோருகிறோம். அதன்நிலை என்னவென்பதைச் சர்க்கார் சிறிதும் தெரிந்து கொள்ள முயலாததுபற்றிப் பொதுவாக ஆசிரியர்கள், சர்க்காரும் இந்த ஆபாச நிலைக்குச் சாய்கால் கொடுத்து வருவதாகவும் எண்ணிக் கொண்டு நியாயத்திற்கும் பரிந்துபேசப் பின்னடை கிறார்கள். ஆசிரியர்களிடம் இப்படிப்பட்ட கோணல்களை வளரவிடக்கூடாது. சமீபத்தில் சேந்திக்காவின் பொதுக்கூட்டம் நடைபெறப் போவதாகக் கேள்விப்படுகிறோம். அப்போது சர்க்கார் தனது பிரதிநிதி ஒருவரை அனுப்பி நிலைமையை அறிந்துகொள்ளட்டும். அல்லது சென்ற புது வருஷப் பிறப்பில் கனம் ஒபேர்த்தி துரையுடன் செர்வீ நேரத்தில், கல்வி இலாக்காத் தலைவரின் மோட்டாரில் ஏற்றிக் கொண்டு யோக்யமுள்ள வேங்கடகிருஷ்ணசாமியை உல்லாசமாக உலவ விட்டதுபோல் இனியும் விடட்டும். - புதுவை முரசு, 29. 2. 1932, ப. 18 118. திரு. உமாமகேவரம் பிள்ளை உள்ளக் கிளர்ச்சி! அண்ணாமலை சர்வ கலாசாலைத் தமிழ்ப் பேரவையின் ஆண்டு விழாவானது சமீபத்தில் சர்வகலாசாலைக் கட்டிடத்தில் திரு.டி.சிவராம சேதுப்பிள்ளை தலைமையில் நடைபெற்றதாம். கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. உமாமகேவரம்பிள்ளை தமிழும் சர்வகலா சாலைகளும் என்பது பற்றிப் பேசினார்களாம். அப் பிரசங்கத்தின் சாராம் ஸத்தைத் தமிழ்நாடு (7. 3. 1932) வெளியிட்டுள்ளது. உமாமகேவரம் பிள்ளை உரைத்தவற்றில் சிறுபகுதி வருமாறு:- இச் சர்வகலா சாலைக்குப் பொருள் உண்டு; இடம் உண்டு; மற்றியாவு முண்டு. ஆனால் எந்த உண்மை நோக்கோடு சர்வகலாசாலை துவக்கப் பட்டதோ அதைத் தான் காணோம் கரந்தைப் புலவர் நன்று கூறினார்கள்! தமிழ் நாட்டில், தமிழர் நலத்திற்குத் தமிழர் பணத்தினால், தமிழ் வளர்ப்பதன் மூலமாகத் தமிழரைப் பல்கலை வல்லுநர் ஆக்கவே அண்ணாமலை பல்கலைக் கழகம் ஏற்பட்டிருக்க வேண்டும். நோக்கம் வேறொன்றாதல் இல்லை. ஆயினும், தமிழ் நாட்டில், தமிழர் பணத்தினால் பல்கலைக் கழகம் கண்டதின் மூலமாகத் தமிழை மறைத்து விடவே காரியம் நடைபெறுகிறது. ஐயம் ஒன்றும் இன்று. என் செய்வது! கரந்தைப் புலவர் மேலும் கூறி வருந்துவது வருமாறு:- சர்வகலாசாலையாரால் தயாரிக்கப்பட்டிருக்கும் வருஷாந்தர அறிக்கையில் மற்ற இலாக்காக்களின் வேலைகள் வெகுசெழிப்புடன் மிளிர, இந்தத் தமிழ் (எதற்காக, எந்த நோக்கத்துடன் சர்வகலாசாலை தோற்றுவிக்கப்பட்டதோ அந்தத் தமிழ்) இலாக்காவின் வேலைகளைப் பற்றியோ, ஆராய்ச்சியைப் பற்றியோ, குறிப்புகளின்றி மௌனம் சாதிக்கப்பட்டு விட்டது!! தோழர் மிகவும் வருந்துகிறார்கள். தமிழ்மாட்டுக் காட்டப்படும் வஞ்சம், பொறாமை, தமிழர் மாட்டுக் காட்டப் பெறும் கொடுமையுள்ளம் ஆகியவற்றை எண்ணுந்தோறும் தமிழறிஞர் வருந்தாது இருக்க முடியாது. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்க் கலையை அடியோடு அழிப்பதற்கு உதவியான ஒருகலை கண்டறியப்பட்டிருக் கிறது என்பதும், அதுதான் தமிழைப் பற்றி வருஷ அறிக்கையில் பிரதாபியாமல் இருப்பது என்பதும் எனக்குப் புலனாகிறது. ஆனால், தோழர் உமாமகேவரம் அவர்களை நான் ஒரு விஷயம் கேட்க விரும்புகிறேன். சில நாளாக இந்த பிரசாரக் கூச்சல் கிளப்பப்பட்டதன் நோக்கமென்ன? தமிழ் அன்னைக்குத் தார் சூடவா? தமிழ்த்தருவின் வேருக்கு வெந்நீர் ஊற்றவா? சுயராஜ்யச் சொக்குப் பொடியால் ஹிந்தி பாஷைக்கு வேண்டிய ஆதரவு தேடப்பட்டபோதே நான் அறிவேன் தமிழ் தலைகவிழ்க்கப்படும் என்பதை. இங்கிலீஷ், சங்கீதத் தெலுங்கு, சம்கிருதம், இந்தி முதலியவைகள் இனியும் பொன்னே போற் போற்றப்படும். ஏன்? தமிழை ஒழிப்பதற்காக. இதற்கு அண்ணாமலை என் செய்வார்? பல்கலைக் கழகம் என்ன செய்யும்? நிர்வாகம் யார் வசத்திலிருக்கிறது என்பதையும். நிர்வாகதர் கொள்கை என்னவென்பதையும், அக்கொள்கைக்கு எந்தெந்த வகையில் ஆதரவு தேடப்படுகிறது என்பதையும், அறிந்தால் ஆச்சரியப்படத் தக்கது ஒன்றுமிராது. தமிழ் என்னும் எருது அதன் பகையென்னும் சிங்கத்தின் வசம் ஒப்புவிக்கப்பட்டிருக்கிறது. அச்சிங்கத்தின் பிடரி பற்றி மோத வேண்டியதே தமிழர் கடன். தோழர், உமாமகேவரம் கீழ்வருமாறு முடிவு கட்டியிருக்கிறார்:- தமிழர்கள் தங்கள் தாயாகிய தமிழ்த் தெய்வத்தைக் கவனியா விட்டால் தாயைக் கொன்ற பாபமல்லவோ சம்பவிக்கும். கரந்தைப் புலவர் மேற்படி தமது பிரசங்க வாயிலாகத் தமிழ் மொழியானது அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் கவனிக்கப் படாதது பற்றி மிகவும் ஆத்திரப்பட்ட உள்ளத்தோடு பேசியுள்ளார்கள். இயற்கை முறையில் அவ்வாத்திரத்தின் முடிவு தோன்றாதது பற்றி நான் வருந்துகிறேன். தமிழ்த் தெய்வத்தை கவனியாவிட்டால் தாயைக் கொன்ற பாபம் சம்பவிக்கும் என்று மட்டும் முடித்துக் கொண்டார்கள். பணம் பறிகொடுத்தோன் அதை மீண்டும் பெறத்தக்க முயற்சி செய்தலே இயற்கை முறை. பணத்தைப் போக்கடித்தால் பாபம் உண்டாகும் என்று மாத்திரம் முடிவு கட்டுதல் இயற்கைக்கு முரண். தோழர் உமாமகேவரத்தைப்போல் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கணக்கற்றவர்கள் தமிழுக்காக ஆத்திரம் அடைந்த துண்டு. அவர்கள் எல்லாரும் உமாமகேவரத்தைப் போலவே தாயைக் கொன்ற பாவம் என்று சொல்லியதோடு நின்றதால்தான் தமிழ் வளர்ச்சி பிரதாபம் அற்றதாகி வருகிறது. தமிழைப் பகை என்பவன் எவன்? ஏன் அவ்வாறு நினைக் கிறான்? அவனுக்கென்ன அத்தனை பலம்? eh« ‘jÄH®fshƉnw! பகைவர்களுக்கு நற்புத்தி கற்பிப்போம். தமிழைக் காப்போம் என்று உமா மகேவரம் இறங்கட்டும் சமர்க்களத்தில்! உமாமகேவரம் சமர்க்களத்தில் இறங்கட்டும். அவர்கள் உடலில் தமிழரத்தம் பாய்கிறது! தமிழாவேசம் நெஞ்சில் அலையடிக் கிறது! மேலும் சுயமரியாதை இயக்கத் துணை அவர்கட்குக் காத்திருக் கிறது! இதையெல்லாம் விட்டுத் தமிழைத் தெய்வம் என்று சொல்லி அதைப் பிறர் கொல்ல விட்டுவிடாதீர்கள் என்று சொல்லிவிடுவதால் என்ன பயன் இப்படிச் சொல்வதால் தமிழ்த் தெய்வத்தை அழிக்கும் அண்ணாமலை சர்வகலாசாலை நிர்வாகதர் அத்தமிழ்த் தெய்வத் தின் தண்டனையை ஏற்கட்டும் என்று நினைத்துத் திருப்தி அடைவ தாயும் நான் நினைக்க இடமேற்படுகிறது. நிர்வாகதர்கள் நமது தமிழைத் தெய்வமெனறு நினைக்க வில்லை. தமிழ் தமிழரின் உயிர் என்றே அந்தப் பகைவர் அறிந் துள்ளனார்கள். தமிழைத் தமிழர் விழி என்பதும் அவர்கட்குத் தெரியும்; தமிழ் தமிழர்க்கு வெற்றி என்பதும் அவர்கட்குத் தெரியும். அதனால் தான் தமிழை அழிப்பது தமிழரை அழிப்பதாகும் என்ற முடிவுக்கு அவர்கள் வந்தார். ஆனால் உமாமகேவரம் அவர்களை மட்டும் தமிழ் என்பது தெய்வம் என்று நினைக்கும்படி செய்துள்ளார்கள். அந்தத் தெய்வத்தை வணங்கிக்கொண்டு காலங் கழிக்கட்டும் என்ற ஏற்பாட்டையும் செய்துள்ளார்கள். நம்மிடம் அறிவுப் புரட்சியையுண்டு பண்ணி அவர்கள் காரியத்தைச் செப்பனிட்டுக் கொள்ளுகிறார்கள். தோழர் உமாமகேவரம் உணரவில்லைபோலும். தமிழரைத் தமிழ் என்ற மாத்திரம் நினைத்து அதை அழிக்கும் நாத்திகரை - தமிழைத் தெய்வம் என்று நினைக்கும் ஆத்திகத்தால் எதிர்க்க வழியில்லை. தமிழ் எங்கள் பொருள் என்றும் கூறுகின்ற நாத்திகச் சுயமரியாதை இயக்கத்தின் மூலம் எதிர்ப்பதே நேர்வழியாகும். - புதுவை முரசு, 14. 3. 1932, ப. 17 - 19 119. நூற்றைக் கெடுக்கும் குறுணி சர்க்கார் சமூகத்திற்கு தலைமை ஆசிரியர் வேங்கடகிருஷ்ணசாமி, இங்கு நாம் குறிப்பிடத்தகாத காரணத்தால் தமது பாடசாலைத் தோட்டக்காரரை விலக்கினார். வேறு தோட்டக்காரனைத் தேடினார். தமது உத்தேசப்படி ஆள் கிடைப்பது அருமையாயிற்று. பிறகு, கல்வே காலேஜ் கோன்சி யேழ் கனம், ஷண்முகம் வழியில் கிடைத்த தகவலைக் கொண்டு வேங்கடகிருஷ்ணசாமி வேட்டவலத்தில் உள்ள ஒரு குடும்பத்திற்குக் கடிதம் எழுதினார். அதன்படி ஒரு வயதுசென்ற மனிதர், அவருடைய இள வயதுள்ள மனைவி, பிள்ளைகள் சகிதம் பாடசாலைத் தோட்ட வேலைக்கு வந்து சேர்ந்தார்கள். வேட்டவலத்துப் பெரியவர் இரண்டு மாத காலம் தமது மனைவி சகிதம் எலும்புதேய - உடற்சதை நலியப் பாடசாலைக்கும், தனிமையில் வேங்கடகிருஷ்ணசாமிக்கும் உழைத்தார்கள். இவ்வுழைப்பின் விவரத்தை அறிந்தால், எந்தக் குடும்பத் தலைவனும் கண்ணீர்விட்டுக் கதறாமல் இருக்கமுடியாது. இதற்கிடையில் பெரியவரின் மனைவியை வேங்கடகிருஷ்ண சாமி வீட்டு வேலைக்கும் அழைத்ததாகவும், அந்த ஏழைப் பெண் தன்னை அழைக்கும் உத்தேசத்தில் சம்சயப்பட்டு மறுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதன்பிறகு தோட்டக்காரர் குடும்ப சகிதம், பிறகு சேர்த்துக் கொள்ளுகிறேன் என்று சொல்லி நீக்கப்பட்டார் என்று கேள்வி. அன்றியும், கல்வே காலேஜ் கோன்சியேழுக்கு ரெப்ரிமாந்து என்னும் ஆரம்ப தண்டனை ஏற்பட்டதற்கும், சரித்திரத்துக்கும் சம்பந்தம் உண்டு என்றும் கேள்வி, கோன்சியேழ், கனம் குத்தேரோன் என்னும் உத்தம டைரக்டரால் நன்கு மதிக்கப்பட்டவர் என்பதும் நாமறிந்துள்ள விஷயமாகும். விலக்கப்பட்ட வேட்டவலத்துப் பெரியவர் பசியால் நலிந்து ஊருக்குப் போகவும் பணமின்றித் தெருவில் நின்று கதறியதாகவும், இதையறிந்த புதுவை யாதவ சங்கத்தார் ( ஆள் யாதவ வகுப்பினர்) நடவடிக்கை எடுத்துக் கொள்ளப்போவதாகவும், பிரிட்டிஷ் கௌன்சில் மூலமும், பிரஞ்சிந்திய குவர்னேர் மூலமும் கிளர்ச்சி செய்யப் போவதாகவும் ஒரு தகவலும் கிடைத்துள்ளது. வேங்கடகிருஷ்ணசாமி தமக்கு நம்பிக்கையில்லாத ஒரு தோட்டக்காரரை விலக்கவும், மற்றவரை வைத்துக் கொள்ளவும் அதிகாரமுடையவர் என்பது நாம் அறிந்ததுதான். எனினும், அவ்வாறு விலக்கியதன் காரணம் சுயநலமற்றதாகவும், சர்க்கார் பேர் கெடாதவகையிலும் இருக்கவேண்டும் என்பது மாத்திரம் உறுதி. சுமார் 50 மைல் தூரத்திலிருந்து தோட்டக்காரர் சம்பாதிக்க முயன்றது வேங்கடகிருஷ்ணசாமியிடம்தான் பார்க்கமுடிந்தது. வேங்கடகிருஷ்ணசாமி தலைமை ஆசிரியர் பதவிபெற்றபின் எத்தனை தோட்டக்காரர் நீக்கப்பட்டார் என்பதும் கருதத் தக்கது. இதையெல்லாம் சர்க்கார் நேரில் அறிந்து ஒழுங்கு முறையை நிலைநாட்டவேண்டுகிறோம். - புதுவை முரசு, 14. 3. 1932, ப. 20 120. சேசுநாதர் வருகை வெகுநேரமாக வேலை நடந்து கொண்டிருந்தது போலும், விஷயம் பிறகு புரிந்தது. உடம்பில் விளையாடிய மூட்டைப் பூச்சிகள் காதில் காலடி வைக்காமலே இருந்திருந்தால் நான் தூங்கியபடி யிருப்பேன். மூட்டை கடித்தபடி இருக்கலாம். நான் விழித்துக் கொள்ளும்போது இரவு 2 மணி இருக்கும். அதன் பிறகு தூக்கத்தையழைத்துப் பார்த்தேன். வரவேயில்லை. விளக்கைப் பெரிதுபடுத்தினேன். அதன்பின் நான் அழைக்காமலே தலைமாட்டில் இருந்த சிகரேட் வாயிற் புகைந்தது. தலைமாட்டில் பின்னும் தடவினேன். ஒரு தினசரிப் பத்திரிகை கிடைத்தது. நான் மல்லாந்து படுத்தபடி பத்திரிகைகளைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன். மேற்படி சிகரேட் என் உதடுகளின் இடையில் புகைந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் என் கண்களில் தோன்றிய விஷயம் கீழ்வருமாறு:- ஜெர்மன் தலைவர் தேர்தல்: ... ரைன்லாண்டில் உள்ள கத்தோலிக்கர் அனைவரும் கத்தோலித்கரான ஹிட்லரை ஆதரிக்காமல் ப்ராட்டடாண்டான ஹிண்டன்பர்க்கு வெற்றியடையப் பிரார்த்தனை செய்தார்கள்... இந்த வரிகளின் அர்த்தத்தை என் உள்ளம் விழுங்கியவுடன் இருட்டும் வெளிச்சமும் இல்லாத வழியாக நான் ஆகாயத்தில் தூக்கப்பட்டேன்; சிந்தனையுலகில் இறக்கி விடப்பட்டேன். அந்தச் சிந்தனை உலகில் என் கண் எதிரில் அழகிய ஜர்மனி தோன்றியது. அதில் நாலா பக்கத்திலும் உலவிக் கடைசியில் பரந்த மைதானம் ஒன்றை அடைந்தேன். அந்த மைதானத்தில் இரண்டு பட்டாளங்கள் எதிர் எதிர் அணிவகுத்து நிற்பது பார்த்தேன். ஒன்று கத்தோலிக் பட்டாளம்: மற்றொன்றுப் பிராட்டடாண்ட் பட்டாளம். பிராட்டடண்டு பட்டாளம் கீழ்வருமாறு தமது ஆரம்ப ஆயுதப் பிரயோகம் செய்தது. எங்கள் ஹிண்டன்பர்க்கு வெற்றியடைய நீங்கள் எதற்காகப் பிரார்த்தனை செய்தீர்கள்? எங்கள் ஹிண்டன்பர்க்குக்கு வெற்றி நிச்சயம் என்று தெரிந்தபின் அவரை வளைப்பதற்காக இந்த ஏற்பாடோ? கத்தோலிக்கரான ஹிட்லர் வெற்றியடைய அல்லவோ நீங்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும். அவர் தோல்வியடைவது நிச்சயம் என்று தெரிந்ததும் அவரை புறக்கணித்தீரோ? கத்தோலிக்கர்: எங்கள் ஹிட்லர் வெற்றியடையக்கூடும் என்று நீங்கள் முன்னரே அறிந்தாலும் உங்கள் பிராட்டடாண்டு ஹிண்டன் பர்க்கைப் புறக்கணித்து ஹிட்லரைத்தான் ஆதரித்து பிரார்த்தனை செய்வீர்கள் என்றார்கள். இதற்கிடையில் மூடர்களே, மூடர்களே என்ற இனிய வார்த்தைகள் இரு பட்டாளத்தின் நடுவிலிருந்து கிளம்பின. ஓர் வாலிபத் திருமேனி அங்குத் தோன்றிற்று! திருமேனி பின்னும் சொல்லுகிறது: நான் தான் சேசுநாதர் என்றே நம்புங்கள்! (ரக்ஷகரே, ரக்ஷகரே என்று இரு தரத்தாரும் வணங்கினார்கள்) நான்தான் அறிவற்ற காலத்தில் மதம் போதித்தேன் என்று நம்புங்கள். (ரக்ஷகரே... ரக்ஷகரே... என்று வணங்கினார்கள்) மக்கள் அறிவற்றிருந்த காலத்தில் ஏதேதோ விஷயங்களைச் சொல்லி அவைகளை நம்பச் சொன்னேன். ஆதலால் அப்போது மதம் என்ற ஓர் பலத்தின்கீழ் மனிதர் அடிமைப்பட்டதன் மூலம் முன்னேற்ற மடைந்தனர். அறிவு பெருகிய இக்காலத்தில் மனித பலத்தின்கீழ் எம்மதமும் ஒழிவதன் மூலமே அறிவு பெருக வேண்டும். முன்னேற்ற மடைய வேண்டும். மதஞ் சொன்ன காலத்திய முன்னேற்றமானது ஒரு தனிப்பட்ட சமூக முன்னேற்றமாகும். இப்போது எதிர்பார்க்கும் முன்னேற்றமென்பது உலகமுன்னேற்ற மாகும். (ரக்ஷகரே, ரக்ஷகரே என்று வணங்கினார்கள்) ஆகையால் மதங்களை மனதிலிருந்து ஒழியுங்கள். மத தாபனங்களை ஒழியுங்கள். மதச் சின்னங்களையெல்லாம் ஒழி யுங்கள். மதங்களுக்குரிய அடையாளங்களையெல்லாம் ஒழியுங்கள். மதத்தை ஆதாரமாக உள்ள எந்த தாபனங்கட்குள்ள பணத்தையெல்லாம் திரட்டி உலக மக்கட்குப் பொதுவாக்குங்கள். கத்தோலிக்கரில் ஒருவன்:- ரக்ஷகரே, கத்தோலிக்க தா பனங்களின் பணத்தையெல்லாம் கத்தோலிக்கர்கட்குத்தானே பங்கிட வேண்டும். ரக்ஷகர்;- வடிகட்டிய முட்டாளே, மதப் பிரச்சினை தீர்ந்தபின் மக்கள் சமந்தானே! பிராட்டடண்டுகளில் ஒருவன்:- ரக்ஷகரே, எங்கள் சக்கர வர்த்தி பிராட்டடாண்டான படியாலும், நீங்கள் பிராட்டடாண்டு களுக்கு அதிக அநுகூலரானதாலும் உங்கள் கிருபையால் தானே அவர் அந்தப் பதவியடைந்தார். அவரால் ஆன நன்மைகளை நாங்கள் தானே அடையவேண்டும்! ரக்ஷகர்:- அட, திப்பியைப் பற்றும் பன்னாடையே, அவன் பிராட்டடாண்டு என்ற காரணத்தால் நான் அருள் புரிந்தது மில்லை. சமதர்ம விரோதமாக நான் எந்தக் கூட்டத்திற்கும் எந்தக் காரணத்தாலும் கிருபை செய்வதில்லை. மதம் ஒழிந்தபின் உங்கள் சக்ரவர்த்தி என்பதற்கு அர்த்தமேயில்லை. முற்காலத்தில் இறந்து போனதாகச் சொல்லப்படும் சேசுநாதர் தான் இவர் என்று ஒரு பொய் சொல்ல வாயெடுத்தேன். உதடு சுரீர் என்று பற்றியது. வாயிலிருந்து சிகரேட் எரிந்து வந்து உதட்டைப் பொசுக்கியது. சிந்தனையுலகிலிருந்து தள்ளப்பட்டேன். நான் மல்லாந்து படுத் திருப்பதையும், கையில் தினசரி வைத்திருப்பதையும், பெண்டு பிள்ளைகள் பக்கத்தில் மூட்டைப் பூச்சியால் நெளிவதையும் அறிந்தேன். கோழியும் கூவிற்று. - புதுவை முரசு, 21. 3. 1932, ப. 20 - 21 121. எங்கும் பணக்கஷ்டம் இதுபோது எங்கும் பணக்கஷ்டத்தைப் பற்றிய பேச்சாகவே யிருக்கின்றது. பணக்காரர்களும் பணமுடையால் கஷ்டப்படு கின்றார்கள். வியாபாரிகளும் விவசாயிகளும் கைத்தொழிலாளர்களும் பணமுடையால் படும் கஷ்டம் இங்கு எழுதும் தரமன்று? லட்சக் கணக்கில் வரவு செலவு செய்பவர்கள் நிலை, இன்று 100க்கும் 1000க்கும் நாணயம் காற்றாய்ப் பறக்கிறது. வியாபார மந்தத்தாலும், வறுமையின் காரணத்தாலும் இன்று இந்நாட்டிலும் வெளிநாட்டிலும் பலவிடங்களில் களவும், கொள்ளையும் குழப்பமும் ஏற்படுகின்றன. மற்றும் சிலவிடங் களில் பஞ்சத்தாலும் பசிக் கொடுமையாலும் மக்கள் மடிகின்றார்கள். இக் கொடுமை இன்னும் நீண்ட நாட்களுக்கு மக்களை வாட்டினால் மக்கள் வாழ்க்கை என்னவாகு மென்பதைப்பற்றி விளக்க வேண்டுவ தில்லை. மக்கள் பசிக் கொடுமையால் பிச்சை யெடுக்கமுயல்கின்றனர். பிச்சை கிடையாதபொழுது எச்சில் இலைச் சோற்றுக்கும் அலை கின்றனர். அங்கும் நாயுடன் போட்டியிட்டுக் கிடைப்பதை யெடுத்துப் புகிக்கின்றனர். மற்றும் சிலவிடங்களில் நாயையும் அடித்துத் தின்று மக்கள் பசிக் கொடுமை போக்கிக் கொள்கிறார்கள் என்று செய்திகள் வெளி வருகின்றது. ïªeh£L k¡fËš bgU«ghnyh® ï¢ bfhLikfis bašyh« gh®¤J¡ bfh©L “všyh« mt‹ braš” Éâia btšy ahuhš Koí«? அவரவர்கள் பூர்வ கர்மத்தின் பலன் என்ற வாய் வேதாந்தம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இவ் வாய் வேதாந்தத்தால் வறுமையைப் போக்கமுடியுமா? வறுமையைப் பெருக்க முடியுமா? என்பதை யோசிக்க வேண்டுகிறோம். ஒருவன் பெருமையோடு வாழவும், மற்றொருவன் சிறுமையோடும் வறுமை யோடும் வாழவும் செய்வது எவன் செயல்? எல்லாம் அவன் செயல் என்றால் அவன் என்பவன் எவன்? அந்த மனிதனுக்கும் வறுமை யாலும் சிறுமையாலும் கஷ்டப் படுகிறவனுக்கு முள்ள தொடர்பென்ன? அவரவர்கள் பாவ புண்ணியத்தையும் கர்ம பலத்தையும் எந்த மனிதன் கணக்கு எழுதி வைத்துக்கொண்டிருக்கின்றான்? அந்த மனிதன் பெயர் என்ன? எங்கிருந்து எப்படித் தலையில் விதி எழுது கின்றான்? என்பவைகளைப்பற்றிப் பகுத்தறிந்து பார்த்தால் எல்லாம் சுயநலச் சூழ்ச்சிக்காரர்களின் மிரட்டலுரைகளென்றே யேற்படும். மதத்தின் பெயராலும், சமயத்தின் பெயராலும், கோவில் கடவுள் களின் பெயராலும், தர்மச் சத்திரங்கள் பெயராலும், மூலதனமாக எழுதி வைக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான பொருள்களை மதகுரு என்பவர்களும், சங்கராச்சாரி என்பவர்களும், தம்பிரான் என்பவர் களும், புரோகிதர் என்பவர்களும், அர்ச்சகர் என்பவர்களும், ஏனைய பார்ப்பனர்களும் கூடி ஏகபோகமாக ஆண்டு அனுபவித்துக்கொண்டு இன்புற்று வருகிறார்கள். எவ்வித உழைப்புமின்றி இருந்தயிடத்தி லிருந்து கொண்டு ஏழை மக்களின் உழைப்பை - அதன் ஊதியத்தைப் பல வழிகளாலும் ஏமாற்றி கைப்பற்றி இன்றும் இன்புற்று வாழ்கிறார்கள். அந்தச் சொத்துக்கள் முழுதும் உழைத்த ஏழைமக்களுடைய வஞ்சிக்கப்பட்ட ஏமாற்றப்பட்ட பொதுச் சொத்தாகும். அப் பொதுச் சொத்திற்குச் சொந்தக்காரர்களான பொதுவுடைமைக் காரர்கள் தங்களை அன்றும் இன்றும் மதத்தின் பெயராலும், கடவுள் பெயராலும், பாவபுண்ணியத்தின் பெயராலும், தலைவிதியின் பெயராலும், கர்ம பலத்தின் பெயராலும் ஏமாற்றி வந்திருக்கிறார்கள் வருகிறார்கள் என்ற உண்மை யுணர்ச்சி பெற்றால், இன்றுள்ள கஷ்டமும் மானக்கேடும் வறுமையும் சிறுமையும் ஒழிந்து ஏகபோக உரிமைக்காரர்களுடன் சமுத்துவமாக சமவுரிமை பெற்று வறுமை நீங்கி இன்புடன் வாழக்கூடும். இறுதியாக நாம் ஒன்றுமட்டும் கூற ஆசைப்படுகிறோம். மக்கள் நித்திய வாழ்க்கைக்கும், வயிற்றுச் சோற்றுக்கும், பிற அவசிய செலவிற்கும், பெரும் கஷ்டமுறும் இவ்வேளையில், வீணாக அர்த்த மற்ற சடங்குகட்கும், அனாவசியடாம்பீகச் செலவுகட்கும் அறிவற்ற பிடிவாதச் செயல்களுக்கும், கண்மூடித்தனமாகப் பழக்கவழக்கமென்ற குருட்டு நம்பிக்கை கொண்டு உழைக்கும் பொருளையும், கையிலுள்ள பொருள்களையும் மத ஏகபோக உரிமைக்காரர்களிடம் கொடுத்து ஏமாறாமலிருக்க வேண்டுகிறோம். - புதுவை முரசு, 21.3.1932, ப. 12 - 13 122. திருவிழாக்களும் தேரோட்டமும் இந்நாட்டிலுள்ள கோவில்களைக் கணக்கிடமுடியாது, கணக் கிட்டாலும் அங்குள்ள விக்ரகங்களை எண்ணிவிட முடியாது. எண்ண முடியாத அத்தனைகோடி விக்கிரகங்கட்கெல்லாம் தினம் தினம் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றுக்கொண்டு வருகின்றன. நித்திய பூசையொருபுறமிருக்க திருவிழாக்கள் நடத்துவது மூலம் எத்தனை கோடி ரூபாய் வீணாக்குகிறார்களென்பது கவனிக்கத்தக்கதாகும். தமிழ்நாடு முழுவதுமுள்ள கோவில்களை விபரமாக எழுதி ஒவ்வொரு கோவிலுக்குமுள்ள பொதுச் சொத்துக்களையும் குறிப்பிட்டு, அதன் வருஷ வருமானத்தையும் கண்டு, அது செலவு செய்யப்படும் விபரங்களையும் பற்றித் தெரிந்துகொண்டால் நமது நாட்டை வறுமை நாடு என்று எவரும் கூறிவிடமுடியாது. மக்களுடைய வயிற்றுப் பிழைப்பிற்கும் கல்வி, கைத்தொழில் வளர்ச்சிக்கும் பிறஅவசிய செலவுகட்கும்தான் பொருள்கஷ்டம்! பணமுடை! வியாபார மந்தம்! என்ற காரணங்கள் கூறப்படுகின்றது. ஆனால் வாய் பேசாததும் உணர்ச்சியில்லாததுமான பொம்மை விக்கிரகங்கட்குச் சோறுபோட்டு, கோவில்கட்டி மானியங்கள்விட்டுத் திருக்கல்யாணம் செய்வித்து, திருவிழாக்கள் கொண்டாடுகின்றார்கள். மனிதர்கள் கடவுளைக் காப்பாற்றும் முயற்சியில் தலைசிறந்து நிற்கிறார்கள். மனிதனைக் கடவுள் காப்பாற்றுவார் என்று கூறுவதற்கு வகையில்லை. மக்கள் வாழ்க்கையில் எவ்வித சுகமுமின்றி வருந்தி னாலும் கடவுளுக்கும் திருவிழாவிற்கும் கைக்காசை செலவுசெய்து கஷ்டப்படுவது சிறிதும் குறைவதில்லை. கடவுளுக்காகவாவது மதத்திற்காகவாவது தர்மத்திற்காகவாவது எந்தப் பார்ப்பானாவது பொருள் எழுதி வைத்துச் செலவுசெய்து கொண்டிருக்கின்றானா? எந்த ஊரில் திருவிழாக்கள் நடந்தாலும், எந்தச் சத்திரத்தில் இலவசச் சாப்பாடுகிடைத்தாலும், எந்தக் கோவில்களில் பட்டைச் சாதங்கள் கிடைத்தாலும் இரயில் டிக்கட்டுக்கு உள்பட பணம் பெற்றுக் கொண்டு தானே பார்ப்பான் பயணமாகி வருகிறான். கடவுள் என்ற பொம்மையைத் தூக்கி அதோடு குழுக்களையும் சேர்த்துத் தூக்கி வீதி யெல்லாம் ஆடுவது யார்? வேதம் ஓதுவதாகக் கூறி வயிறு வெடிக்கத் தின்றுவிட்டு வறட்டுத் தவளை மாதிரி கையைக் கோர்த்துக்கொண்டு புலம்பி வருவது யார்? என்பதை யோசித்துப் பாருங்கள். எங்குப் பார்த்தாலும் திருவிழாக்கள்! எங்கு நோக்கினும் வேதபாராயணம்! எங்குப் பார்க்கினும் பிராமண போஜனம்! எங்குத் திரும்பினும் தர்மச் சத்திரங்கள். இவையெல்லாம் யாருக்காக? இதற்கெல்லாம் செலவு செய்வது எவருடைய பொருள்கள்? இச்செலவுகள் மிக அவசியம் தானா? இதனாலாய பயன்தானென்ன? என்பதைப்பற்றி யோசிப்பா ரில்லை. திருவாரூரில் தேரோட்டம், லால்குடியில் தேரோட்டம், மதுரையில் தேரோட்டம், மற்றும் எல்லாவூர்களிலும் தேரோட்டம். எத்தனை நாட்களில் ஓடுகிறது. 6 மாதத்திற்கும், 3 மாதத்திற்கும் இரண்டு மாதத்திற்கும் ஒரு மாதத்திற்கும் ஓடுகின்றது. இத் தேரையோட்டி நிறுத்த எத்தனைப் பார்ப்பான் வடம்பிடிக்க வருகின்றான்? கடவுளையும் கோவிலையும் காட்டிப்பணம் பறிக்கும் பார்ப்பானுக்கு இல்லாத கவலை மற்றவர்கட்கு மட்டும் ஏன் என்பதே நமக்கு விளங்கவில்லை. ஒரு முழு உயரமுள்ள பொம்மை உருவத்திற்கு எத்தனை ஆயிரம் டன் எடையுள்ள தேர் வேண்டியிருக்கிறது. அந்தத் தேரை இழுக்க எத்தனை ஆயிரம் மக்கள் தங்கள் பொருளையும் காலத்தை யும் செலவுசெய்து கஷ்ட நஷ்டமடைய வேண்டியிருக்கிறது. இவ் விதக் கஷ்ட நஷ்டத்துடன் எத்தனை வருடங்களாகத் திருவிழாக் களும் தேரோட்டமும் நடத்தி வருகின்றார்கள். அதனாலிதுவரை யடைந்த லாபமோ, முன்னேற்றமோ என்னவென்று கேட்கின்றோம். - புதுவை முரசு, 11. 4. 1932, ப. 12 - 13 123. பாதிரிமார்களின் பயமுறுத்தல் கிறீஸ்துவ மதத்தின் பெயரால் நடைபெற்றுவரும் கொடுமை களைப்பற்றியும், பாதிரிமார்களின் அட்டூழியங்களைப் பற்றியும் பாவமன்னிப்பு, பரமண்டலம், திருச்சபை, உபதேசம், தேவன்வாக்கு, ஆகியவைகளைப் பற்றியும் அவ்வப்போது நம் புதுவை முரசில் கட்டுரைகளாகவும், செய்திகளாகவும் பல தோழர்களால் வெளியிடப் பட்டு வந்திருப்பதை வாசகர்களறிவர். அவ்விதம் நமது புதுவை முரசிற்குக் கட்டுரை எழுதி அனுப்பி வந்தவர்களும், இன்றும் எழுதி அனுப்பி வருகிறவர்களும் யார்? என்றால் கிறீஸ்துவ மதத்தைச் சார்ந்து அங்கும் பல ஆபாசங்களையும் அர்த்தமற்ற கொள்கைகளையும், பாதிரிமார்களின் படாடோப அட்டூழியங்களையும், பாவமன்னிப்பு, பரமண்டலப் புரட்டு, சாதிவேற்றுமை, உயர்வு தாழ்வு ஆகிய பல கொடுமைகளையும் கண்டு சகியாத அறிவியல்வாதிகளான பல கிறீஸ்துவ தோழர்களேயாகும். அறிவிற்குப் பொருத்தமற்ற கொள்கைகளைக் கண்மூடித் தனமாகப் பின்பற்ற முடியாதவர்கள், தங்கட்குப் பகுத்தறிவு உண்டு அதன்படி எதையும் பகுத்தறிந்தே பின்பற்றுவோம் என்ற பகுத்தறி வுடையவர்கள் தங்கள் அபிப்பிராயங்களைக் கிறீஸ்துவ மதத்தின் பெயரால் பாதிரிமார்கள் செய்யும் அக்கிரமங்களையும் எப்படிப் பிறருக்கு அறிவிக்காமலிருக்க முடியும்? மதக் கற்பனைகளையும், பாதிரிமார்கள் நாடகத்தையும் மக்கள் பகுத்தறிவற்று நம்பும்வரை பாதிரிமார்கள் மத ஆட்சி செலுத்தலாம். மக்கள் பகுத்தறிவு பெற்று மதம் என்றால் என்ன? பரமண்டலத்திற்கும் பாதிரியாருக்குமென்ன தொடர்பு? பாவத்தை மன்னிக்கப் பாதிரியாருக்கு என்ன அதிகாரம்? பாதிரியார் செய்யும் பாவத்தை மன்னிப்பது யார்? தன்னைப்போல் பிறரை நேசி என்ற உயரிய கொள்கையை மறந்து, சாதிக்கொரு நீதியும், பணத்திற்கொரு நீதியும் பரமபிதாவின் முன்னிலையில் பாதிரியாரே கையாளுவது தர்மமா? பிறப்பதற்கும், இருப்பதற்கும், இறப்பதற்கும் மத குருக்களிடம் காணிக்கை கொடுத்து மணியடித்தல் முதலியவை நடத்துவது அவசியமா? தேவனின் பத்துக் கட்டளையைப் பாதிரியாரே பின்பற்றமுடியாதபோது பிறரைப் பின்பற்ற உபதேசிப்பது ஒழுங்கா? திருச்சபைக்கும், பாதிரியாருக்கும் மத்தியில் குட்டிச்சுவர் களாலும் மூங்கில் தட்டிகளாலும் தடுத்துத் தேவனின் பிள்ளைகளில் ஒருவனைப் பக்கத்திலும் மற்றொருவனை விலக்கித் (தீண்டாதவன் என்று) தடுப்புகளுக்கு அப்புறமும் நிற்கும்படி செய்து அவமதிப்பது மதகுருக்கள் அறிவின் குறையா? மடமையும் மதியீனமுமா? என்பவைகளைப் பற்றி யெல்லாம் மக்கள் ஆராய்ந்து ஒரு முடிவிற்கு வந்துவிட்டால், மதகுருக்களும், பாதிரிமார்களும் ஓட்டம் பிடிக்க வேண்டியதுதான். ஸ்பெயினிலும், ருஷ்யாவிலும் பாதிரிமார்கள் உயிர் தப்பியோடிய செய்தி கேட்டிருக்கலாம். பத்திரிகைகளில் படித்திருக் கலாம். பல விடங்களில் பாதிரிமார்களின் கொடுமையும், அக்கிரமமும் சகியாதவர்கள் பாதிரிமார்களையே சுட்டுக்கொன்றதாகவும் பத்திரிகை களில் படித்திருக்கிறோம். மக்களின் அறிவு வளர்ச்சியையும் ஆங்காங்கு நடைபெறும் மதக் கிளர்ச்சிகளையும் பார்த்தும் படித்தும் பகுத்தறிவுடன் நடந்து கொள்ள வேண்டிய பாதிரிமார்கள் இனியும் மக்களைப் பயமுறுத்தியே மத ஆட்சி செலுத்தலாமென்று மனப்பால் குடித்து வருகின்றார்களென் பதை விளக்குவதற்காகவே இத் தலையங்கம் எழுத நேர்ந்தது. புதுச்சேரியிலுள்ள பாதிரிமார்கள் புதுவைமுரசைக் கையால் தொடுவதும் கண்ணால் பார்ப்பதும் பாவம் என்று தமது திருச்சபைப் பிரசங்கத்திலேயே சேர்த்துப் பிரசங்கம் செய்து வருகிறார்களாம். திருமயம் பகுதிகளிலுள்ள பாதிரியார் புதுவைமுரசிற்குக் கட்டுரை எழுதியவர்களை மன்னிப்புக் கேட்டுக்கொள்ளவேண்டுமென்றும், இல்லாவிடில் கோர்ட்டில் நடவடிக்கை நடத்துவோம், சமூகத்தை விட்டு நீக்கச்செய்வோம், இனி மத சம்பந்தமாகவும் ஒன்றும் பத்திரிகைகளில் எழுதமாட்டேன் என்று உறுதிமொழி ரசீது எழுதிக் கையொப்பம் போட்டுக் கொடுக்கவேண்டு மென்றும், இதற்கு முன்யெழுதிய கட்டுரைகளுக்காக அபராதமாக ஏதாகிலும் ரூபாய்கள் செலுத்த வேண்டுமென்றும், பயமுறுத்தல் பிரசாரம் செய்கின்றாராம். தபாலா பீஸில் போய்த் தபால் சேவகரை இப்பகுதிக்கு யார் யாருக்குப் புதுவை முரசு வருகின்றதென்று விவரம் கேட்கின்றாராம். ஈரோடு, பெருவளச் சேரி, வேம்பாறு, கோட்டாறு, கொன்னக்குடி முதலியவிடங்களிலும் இதே மாதிரியான பிரசாரங்கள் பாதிரிமார்கள் செய்து வருகின்றார்கள் என்று நமக்கு ஆங்காங்கிருந்து கடிதமும் கட்டுரைகளும் வந்து கொண்டிருக் கின்றன. மற்றும் தீண்டப்படாத கிறீஸ்தவர்கள் தங்கள் முன்னேற்றத் திற்காக மகாநாடு கூட்டிப் பேசுவதும், தீர்மானங்கள் செய்வதும், அங்கும் பாதிரிமார்களின் அட்டூழியங்களையும் வண்ட வாளங்களையும், எடுத்துக்காட்டிப் பேசுவதும், அவ் விஷயங்கள் பத்திரிகைகளில் வெளிவருவதும் தங்கட்கு மானக்கேடாக இருப்பதற்கு மானநஷ்ட வழக்குத் தொடரப் போவதாகப் பயமுறுத்தி இனி எங்கும் மகாநாடுகள் கூட்டவோ எவரும் அதில் கலந்து கொள்ளவோ கூடாதென்றும் எச்சரிக்கின்றார்களாம். இவ்வாறு பாதிரிமார்கள் பயமுறுத்துவதைக் கண்டு நாம் ஒன்றும் ஆச்சர்யப்படவில்லை. சுயமரியாதை இயக்கம் பார்ப்பனீயக் கொடுமையையும் ஹிந்துமத ஆபாசங்களையும் பற்றி மக்கட்கு விளக்கிக் கூறிவந்த போது இதே பாதிரிமார்கள் புதுவை முரசை கிறீஸ்துவர்கள் எல்லோரும் படிக்கும் படி பிரசாரம் செய்து தாங்களும் புதுவை முரசை வேதமாக மதித்துச் சட்டைப்பையில் மிக்க பந்தோபஸ்தாக வைத்துக்கொண்டு, பாராட்டிப் பேசிக்கொண்டு மகிழ் வடைந்து வந்ததையும், நமது ஆபீஸிற்குப் புதுவை முரசைப் பாராட்டி மதிப்புரை எழுதியனுப்பப்பட்ட கடிதங்களையும் நாம் இதற்குள் மறந்து விடவில்லை. இந்துமத ஆபாசங்களையும் புராண வரலாற்றையும் மதக் குருக்களின் ஏமாற்றங்களையும் கடவுள்களின் யோக்கியதைகளையும் பற்றி எழுதப்பட்டபோது எவ்விதம் பகுத்தறிவுடன் படித்து நமது பிரசாரத்தைப் பாராட்டினார்களோ அதே அறிவுடன் தங்கள் கிறீஸ்துவ மதத்தின் பெயராலும் நடைபெறும் ஆபாசங்களையும் புரட்டுக்களை யும் பாதிரிமார்களின் அட்டூழியங்களையும் பற்றி எழுதப்படும் பொழுதும் நடு நிலைமையுடனும் பகுத்தறிவுடனும் ஏற்றுக்கொண்டு மக்கள் அறிவிற்குப் பொருத்தமற்ற ஆபாச நடவடிக்கைகளையும் பாதிரிமார்களின் படாடோபத்தையும் பாவமன்னிப்பு பரமண்டலப் புரட்டையும் திருத்தியமைத்துக்கொள்ள ஆசைப்படவேண்டும். அதுதான் அறிவுடமையும் ஒழுங்கும் கடமையுமாகும். அதனை விட்டுப் புதுவை முரசைப்பற்றி தவறான பிரசாரங்கள் செய்வதும் மதக்கொடுமைகளும் பாதிரிமார்கள் அட்டூழியமும் சகியாது கட்டுரை எழுதும் தோழர்களைப் பயமுறுத்தி வீண் மிரட்டல்கள் செய்வதும் பயனற்றவேலையாகும். பாதிரிமார்களுக்கு ஆட்சேபணை யுண்டானபோது மறுப்பு எழுதலாம். அறிவுடமையுடன் எழுதப்படும் மறுப்புகளை வெளியிடத் தயாராகயிருக்கின்றோம். அதனை விட்டுத் தூத்துக்குடியிலிருந்து ஒருவரைக் கொண்டு தூற்றி எழுதச் செய்வதும், கொழும்பிலிருந்து ஒருவரை ஊர் பெயரில்லாமல் வசைமொழிக் கடிதங்கள் எழுதச் செய்வதும் போன்ற செயல்களால் மட்டும் மதக்கொடுமையையும் பாதிரிமார்கள் அட்டூழியச் செயல்களையும் மறைத்து வைத்து மக்களை என்றும் அடிமையாக நடத்திக்கொண்டு வரமுடியாது என்று எச்சரிப்பதுடன், இதுபோன்ற பயமுறுத்தல்களுக்கும் வீண் மிரட்டல் களுக்கும் பயந்து பாதிரிமார்கட்கு, அடிமையாகி விடுவதானால் நாங்கள் சுயமரியாதை இயக்கத்தையும், அதன் வேலைத் திட்டங் களையும் என்றே நிறுத்தி மறைந்து போயிருப்போம். பாதிரிமார்களின் படாடோபத்தாலும் பயமுறுத்தும் எதிர்ப் பிரசாரங்களாலும் புதுவை முரசு சந்தா குறைந்துவிடாது. பத்திரிகையும் மறைந்து விடாது. அப்படிக் குறைந்தாலும், மறைந்தாலும் எவருக்கும் கவலை யில்லை. மதமும் பாதிரிகளும் நிலைப்பதற்கு மக்களை முட்டாள் களாக்கியே வைக்க வேண்டுமென்ற கவலை புதுவைமுரசிற்கும் குடியரசிற்கும் சுயமரியாதை இயக்கத்திற்குமில்லை. அக் கவலை சர்வவியாபிக்கும், அதில் ஆவேசமடையும் D.M. என்ற இரு எழுத்துக்களுக்குமிருக் கலாம். அவருக்கும் அதற்கேற்ற கூவியும் கிடைக்கலாம். பாதிரிமார்க ளுக்கும் பக்கபலமாகவுமிருக் கலாம். ஆனால் மக்கள் அறிவின் வளர்ச்சியால் எங்கும் தோன்றும் மதக் கிளர்ச்சியை, பாதிரிமார்கள் உயிர் தப்பி ஓடும் அலங்கோலத்தை, மதக்கொடுமையால் பாதிரீகள் அட்டூழியத்தால் ஆவேசமடையும் மக்களின் அதி தீவிர உணர்ச்சியை எவரும் பயமுறுத்தி அடக்கிவிட முடியாது, எனவே பாதிரிமார்களின் பயமுறுத்தல் பிரசாரத்தைக் கண்டு எவரும் பயந்துவிடமாட்டார்கள் என்று உறுதியாய்க் கூறுவோம். - புதுவை முரசு, 18. 4. 1932, ப. 12 - 14 124. சுயமரியாதை இயக்கமும் விவாகரத்தும் சுயமரியாதை இயக்கமானது விவாகரத்து (Divorce) விஷயமாக எவ்வித அபிப்பிராயத்தைக் கொண்டிருக்கிறதென்பதை நம் வாசகர்கள் பல சந்தர்ப்பங்களில் அறிந்திருக்கிறார்கள். ஆயினும் விவாகரத்து என்றால் என்ன என்பதைப்பற்றி சிலருக்கு விளக்கமாய்த் தெரியாமலிருப்பதோடு, நமக்குத் தெரிந்தவரையில் தங்களை அறிவாளிகள் என்று நினைத்துக் கொண்டிருக்கிற பத்திரிகாசிரியர் களுக்குக் கூட இவ் விஷயம் விளங்காமல் தத்தளித்துக் கொண்டிருக் கிற படியால் இத் தலையங்கத்தின் மூலம் அதை விளக்க எண்ணி யுள்ளோம். விவாகரத்து என்பது மனித சமூகம் அநாகரீக நிலைமை யிலிருந்த காலத்திலிருந்தே பல தேசமக்களிடத்தில் பல விதங்களாக இருந்துவந்த ஒரு விஷயமாகும். உதாரணமாக, இட்டாலி தேசத்திலும், கிரீஸ்தேசத்திலும், இந்தியாவிலும் சுமார் 2500 வருஷங்கட்கு முன்னரே இவ்வழக்கம் இருந்து வந்திருக்கிறது என்பதற்குத் தகுந்த அத் தாட்சிகள் இருக்கின்றன. ஆனால் அக்காலத்தில் பெரும்பாலும் ஆண்களே பெண்களை விலக்கியிருப்பதாகத் தெரிகிறதேயொழிய, பெண்களுக்கு அவ்வளவு சுதந்திரம் இருந்ததாகத் தெரியவில்லை. ஆண்கள் தங்களுக்கு இயற்கையாக அமைந்துள்ள ஒரு தேக அமைப்பின் பலத்தைக் கொண்டு, பெண்களை அடக்கி வந்ததாகவும், தங்களுக்குப் பிடிக்காத போது பெண்களை விலக்கி விட்டதாகவும் சரித்திரம் கூறுகிறது. இதே பழக்கந்தான் இன்றுவரை ஆணுக்கு அதிக சுதந்திரத்தைக் கொடுப்பதற்குக் காரணமாயிருந்தது. ஆனால் இந்த விவாகரத்து விஷயமானது இப்போது வெவ்வேறு தேசங்களில் வெவ்வேறு விதமாக இருந்துவருகிறது. அமெரிக்கா, ஜர்மனி, ஆஸ்டிரியா, இங்கிலாந்து, ஸ்விட்ஸர்லாண்டு, ஹாலண்டு, டென்மார்க் முதலிய தேசங்களில் விவாகரத்து அமுலில் இருந்து வருவதோடு, தேசத்திற்குத் தக்கபடி விவாகரத்தின் காரணங்கள் முதலியவைகளில் சிற்சில வித்தியாசங்களும் இருக்கின்றன. ஆனால் எல்லா தேசங்களும் விவாகரத்து அவசியம் என்பதை ஒப்புக் கொண்டிருப்பதோடு, பல தேசங்களில் அதற்குப் பிரத்தியேகமான கோர்ட்டுகளும் இருக்கின்றன. கிறீஸ்துமதம் பரவியுள்ள நாடுகளில் கல்யாணம் என்பது தெய்வீகமானது என்ற நம்பிக்கையிருந்து, அதற்குப் பாதிரிகளும் போப்புகளும் ஆசீர்வதித்து வந்ததெல்லாம் நாளடைவில் தானாகவே மறைந்துபோய், பாதிரிகளும், மாதாக்கோவில்களும் இல்லாமல் ரிஜிஸ்டர் (பதிவு) கல்யாணங்களாகவே செய்யப்பட்டு வருகின்றன. ஆகவே நாகரீகமும் அறிவும் மிகுந்த நாடுகளிலெல்லாம் கல்யாணம் என்பது ஏதோ ஆத்மா சம்பந்தப்பட்டதென்றும் தெய்வத்தன்மை பொருந்தியதென்றும் கருதிவந்த காலமெல்லாம் போய்விட்டது. கல்யாணம் என்பது ஒரு வியாபாரத்தைப் போல் இரு சாராரும் இஷ்டப்பட்ட ஒரு ஒப்பந்தம் என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. ஆனால் நமது நாட்டில்மாத்திரம் மிக அற்பமான காரியங்களி லெல்லாம் ஒரு தெய்வத்தன்மை இருப்பதாக மக்கள் கருதியிருப்பது போல், கல்யாணத்திலும் அவ்விதமே இருப்பதாக நம்பிக் கொண்டி ருக்கிறார்கள். இங்கிலாந்தில் 15வது நூற்றாண்டில்கூட எட்டாவது ஹென்றி (Henry VIII) என்ற அரசர் ஒவ்வொன்றாக எட்டுப் பெண்களைக் கல்யாணம் செய்திருந்தார். ஒவ்வொன்றாக விவாகரத்துச் செய்தார். அதன்பொருட்டுப் பெரிய மன்னர்களின் விரோதத்தையும், - ஏன்? மதகுருவாகிய போப், கார்டினல் முதலியவர்களின் விரோதத்தையும் கூட சம்பாதித்துக் கொண்டார். இதிலிருந்து அவர் மதக்கட்டளை மதகுரு இவைகளைவிட தன் சந்தோஷத்தையும் சௌகரித்தையுமே பெரிதாக மதித்தார் என்பது விளங்குகிறதல்லவா? இது நிற்க, சமீபத்தில் கூட சினிமா நடிகர் சார்லி சாப்ளினுடைய மனைவியார் விவாகரத்து சம்பந்தமாக பெருத்ததொகை தனக்குக் கிடைக்க வேண்டுமென்று வழக்காடியது வாசகர்களுக்கு ஞாபகமிருக்கலாம். இன்னும் நம்நாட்டில் கூட பகிரங்கமாக விவாகரத்துச் செய்யா விட்டாலும் எவ்வளவோ குடும்பங்களில் முதல் மனைவியைத் தள்ளி வைத்துவிட்டு வேறு பெண்ணைக் கல்யாணம் செய்துகொள்வதைக் கண்டிருக்கிறோம். ஆனால் இச் சுதந்திரம் நம் நாட்டில் பெண்களுக்குச் சிறிதுகூட இல்லாமல் இருக்கிறது. அதற்குக் காரணம் பெண்களுக்குச் சொத்துரிமை இல்லாததேயாகும். பெண்கள் தங்களுடைய கணவன் செய்கை மனதுக்குப் பிடித்தமில்லாவிட்டால் அக்கணவனை நீக்கி விட்டு மறு கணவனைத் தேடிக்கொள்வதற்குத் தைரியம் வரவேண்டு மானால், அல்லது வெறுமனே இருக்கவேண்டுமென்று விரும்பினாலும் சரி, தானாக யோக்கியமாக சம்பாதித்துக் கொள்ளும் வழி அப் பெண்ணிற்கு இருக்கவேண்டும். அல்லது வாழ்வதற்குப் போதுமான சொத்தாவது இருக்கவேண்டும். அதுவரையில் பெண்களுக்கு இவ் விஷயத்தில் உரிமை கிடைப்பது சற்றுத் துர்லபம்தான். இறுதியாக, எந்தெந்த காரணங்களைக் கொண்டு கணவனோ மனைவியோ விவாகரத்துச் செய்து கொள்ளலாமென்றால், விபசாரம், கொடுமையான நம்பிக்கைத் துரோகம், அவமானப்படக்கூடிய சிறை வாழ்க்கை, மீளாத தொத்து நோய்கள், தீராத பைத்தியம், கொடுமைப் படுத்துதல், கொலை செய்ய முயற்சித்தல், மூன்றாவது மனிதரிடத்தில் காதல் கொண்டிருத்தல், பேடித்தன்மை, கொடிய கெட்டபழக்கங்கள், காரணமில்லா வெறுப்பு, மிதமிஞ்சிய குடி, சம்போகத்திற்கு மறுத்தல் (2 வருஷம் வரையில்), ஆயுள் தண்டனை, மதம் மாறுதல்-ஆகிய காரணங்களைக் கொண்டு விவாகரத்துச் செய்து கொள்ளலாம் என்று எல்லா நாடுகளிலும் ஏற்பட்டிருக்கிறது. கத்தோலிக்கர்களும், மத கர்த்தாக்களும் விவாகரத்துக்கு விரோதமாக எவ்வளவோ பிரசாரம் செய்தும் பயன்படாமல் போய்விட்டது. நாகரீகத்திலும், சீர்திருத்தத்திலும் மிகவும் பிற்போக்கான நமது இந்தியாவில் கூட சில சுதேச சமஸ்தானங்கள் விவாகரத்தை அமுலில் கொண்டு வந்திருக்கின்றனவென்றால் இதன் அவசியத்தைப் பற்றி அதிகம் எழுதத் தேவையில்லை. கடைசியாக, சமீபத்தில் ஜெர்மனியில் இச் சட்டத்திற்கு ஒரு திருத்தம் கொண்டுவந்து எதுவும் காரணம் சொல்லாமல் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து கொள்ளலாம் என்று கூட ஏற்பாடாகியிருக்கிறது. ஏனெனில், காரணம் மேற்கண்டவைகளுள் ஒன்றேனும் இருந்தாக வேண்டுமென்பது நிர்ப்பந்தமாய் இருந்தால் ஒருவர்மேல் மற்றொருவர் பொய்யான காரணங்களைக் கற்பிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். உண்மைக் காரணத்தைச் சொல்ல மறுக்கிறார்கள். உதாரணமாக, நமது நண்பர்களில் ஒருவருடைய முதல் மனைவி கல்வி, நாகரீகம், நடையுடை முதலிய அற்ப விஷயங்களில் தனக்கு ஒத்து வரவில்லை யென்பதற்காக, அந்த அம்மாள் வியாதியஸ்தர் என்ற அபாண்ட பழியைச் சுமத்தி அவர்களை நீக்கிவிட்டுத் தன் குணத்திற் கேற்றபடி ஒரு பெண்ணை மணந்து கொண்டார். ஆகவே, விவாகரத்து விஷயத்தில் எந்தக் காரணத்தைக் கொண்டு பிரிந்துகொள்கிறோம் என்பதைப் பகிரங்கப்படுத்துவது அவசியமேயில்லை. அப்படி அதையறிய விரும்பவர்கள் ஏதேனும் கெட்ட எண்ண முடையவர்களாகவோ அல்லது மேல்நாட்டு முறை களையறியாத சூன்யங்களாகவோ, அல்லது அதைச் சுயநலத்திற்கு உபயோகப்படுத்திக் கொள்ள எண்ணும் அயோக்கியர்களாகவோ தான் இருக்க வேண்டும் என்பது பல அநுபவசாலிகளின் முடிவாகும். பிரிந்த இருவர் ஒருவரை யொருவர் மறுபடி சந்திக்கும் போது, எந்த விதமான விரோதமும் இல்லாமல் சாதாரண நண்பர்கள் போலவே பழகுவதும் நடந்துகொள்வதும் தான் அறிவுடையவர்கள் செயலாகும். அதை விட்டு ஜென்ம விரோதியாகக் கருதுவதோ, பழைய ஞாபகத்தை வைத்துக்கொண்டு மனங்கோணும்படி நடந்து கொள்வதோ மனிதத் தன்மையாகாது. நிற்க, சுயமரியாதை இயக்கமானது இவ்விதமான விவாகரத்துக்களால் எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என்பதோ, இது சம்பந்தமாய் ஏதேனும் சட்டதிட்டங்களோ, கொள்கைகளோ இருக்க வேண்டுமென்று விரும்பு கிறவர்கள், நமது இயக்கத்தை நன்கு அறிந்துகொள்ளமுடியாமல் ஏதோ திடும் பிரவேசமாய் உட்புகுந்துவிட்டு ஆப்புப் பிடுங்கிய குரங்கைப் போல் அகப்பட்டுத் தவிக்கும் நண்பர்களாகத்தான் இருக்கவேண்டு மென்று அபிப்பிராயப்படுகிறோம். நமது இயக்கம் வெகு விரிவான கருத்துக்களைக் கொண்டதாகையால், அதிலுள்ள சகல நுட்பங்களும் எல்லா மக்களுக்கும் எளிதில் விளங்கிவிடும் என்று சொல்லமுடியாது. ஆகையால் முழுதும் வெளிவர அறிந்து கொள்ள முடியாதவர்கள் பொறுமையோடு தங்களைவிட இயக்கத்தை நன்குணர்ந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும் என்று தெரிவித்துக் கொண்டு இதை முடிக்கிறோம். - புதுவை முரசு, 25. 4. 1932, ப. 12 - 14 125. பிரஞ்சிந்திய தமிழ்ப் பண்டிதர்களுக்கு முக்கிய வேண்டுகோள் மத ஆசாரங்களினாலும், சமூகக் கட்டுப்பாடுகளினாலும் சிறுமையில் ஆழ்த்தப்பட்டுக் கிடக்கும் பிரஞ்சிந்திய மக்களின் விடுதலைக்காக உழைக்கவும், சிறப்பாகத் தீண்டாமை ஒழித்தல், ஜாதி பேதக் கட்டுப்பாட்டைத் தகர்த்தல், மக்களுக்குப் பகுத்தறிவை வளர்த்தல் ஆகிய சீர்திருத்த வேலைகளைப் பற்றி வியாசங்கள், கட்டுரைகள், பாடல்கள் எழுதியனுப்புவதற்கும், பிரஞ்சிந்தியாவி லுள்ள கிராமங்கள், சேரிகளெங்கும் சென்று இந்தக் கொள்கைகளை மும்முரமாகப் பிரசாரம் செய்வதற்கும் தமிழ்ப் பண்டிதர்கள் தேவை. பிரஞ்சிந்தியா நாகரீகம் பெற்ற நாடென்று வெளிக்குப் பெயர் பெற்றிருந்தாலும், உண்மையில் அதற்கு முற்றும் மாறாகவே காரியங்கள் நடந்து வருகின்றன. சுதந்தரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற உயரிய கொள்கைகளை ஒரு நூற்றாண்டுக்கு முன்னே உலகத்தாருக்கு வெளியிட்டு அதனால் பெரும் புகழ் படைத்தது நமது பிரான் தேசமேயாகும். ஆனால் பிரஞ்சிந்தியாவிலோ அம் மாபெருங் கொள்கைகள் இன்று பகிரங்கமாய் அழிக்கப்படுவதைக் காண்கிறோம். பிரஞ்சிந்தியாவிலோ சமத்துவ சகோதரத்துவ நாகரீகம் குன்றி மதச் சடங்குகள், நிறவேற்றுமைகள், புரோகித ஆட்சியின் அமுல்கள் முதலிய சிறுமை நிலைகள் தலை விரித்தாடுகின்றன. நாட்டு நிலைமை நாளுக்குநாள் அதிக கேவல மடைந்து வருகின்றது. எனவே, இந்தச் சிறுமை நிலைமைகளை வேரறக் களைந்து, மக்களின் உரிமைகளை யும் சுயமரியாதையையும் நிலைநாட்டி, பிரஞ்சிந்திய நாட்டை மேம்பா டடையச் செய்வது இன்றி யமையாத தென்பதை எவரும் மறுக்க முடியாது. அதற்காகவே இவ்விதப் பிரசாரத்தை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளோம். இதற்குப் பிரஞ்சிந்தியாவிலுள்ள தமிழ்ப் பண்டிதர்கள் அனைவரும் ஆதரவு அளிப்பார்களென்று நம்பிக்கை யுடன் எதிர்பார்க்கிறோம். இந்தப் பிரசாரத்தில் பங்கெடுத்துக் கொள்ளு கிற பண்டிதர்களுக்குத் தக்க சம்பாவனை கொடுக்கப்படும். மற்ற விவரங்கள் அடியிற்கண்ட விலாசத்திற்கு எழுதித் தெரிந்துகொள்க. M. Noaile, 4, Lally Tollandal St., Pondicherry. - புதுவை முரசு, 25.4.1932, ப. 18 126. எம்.சி. ராஜா எதிர்ப்பு சென்னைப் பகுதியிலிருந்து தோழர் சீனிவாசனை வட்ட மேஜை மகாநாட்டுக்கு அனுப்பினார்கள். தோழர் எம். சி. ராஜாவை அனுப்பி யிருந்தால் ஒரு தொல்லையுமில்லை. அனுப்பாததால் இப்போது எம்.சி. ராஜா எவ்வளவு தொல்லையுறுகிறார் பார்த்தீர்களா? எம்.சி. ராஜா வட்டமேஜைக்குப்போக முற்கூட்டியே வெகு பிரயாசையுடன் முயற்சிசெய்தார். அந்த முயற்சியை அவர் தளர விடாமல் வட்டமேஜைக்குப் பிரதிநிதியை நியமித்து அதன் பக்கத்தில் ஒரு முற்றுப்புள்ளி வைத்தானபின்னும் நடத்திக் கொண்டிருந்தார். யானைக்கும் அடிவழுக்கும். எம். சி. ராஜா தோல்வியுற்றார். எம்.சி.ராஜா தோல்வியுறவே எடுத்தார் நீளக் கத்தியை! திரும்பினார் தம்மவர் பக்கம். நீங்கள் மண்ணாய்ப் போனாலும் எனக்குப் பாதகமில்லை என்று கூட்டுத்தொகுதிக் கொலைக்களத்தில் இறங்கினார். நாமும் இவர் செய்கைக்கு அப்போதே இரங்கினோம். இந்த இழவில் எம்.சி. ராஜா தமக்குச் செல்வாக்கும் இருப்பதாக நினைத்துக் கூத்தடிக்கிறார். யார் இல்லை என்கிறார்கள்? பார்ப்பன முதலாளிகள் தற்காலம் எம்.சி. இராஜாவை ஆதரிப்பது போல் பாசாங்கு புரியலாம். யோகப்படுத்திக் கொள்ளலாம். அடுத்தநாள் பிள்ளை யாண்டானைக் குப்பையில் புரட்டிக், குப்பன் என்று நாமகரணம் சூட்டுவது நிச்சயம். தோழர்கள், வரதராஜலு, கல்யாணசுந்தரர், கண்ணப்பர் முதலியவர்களின் நிலையைக் கண்டுவருகிறோம். ஐந்தாறு பார்ப்பனர்க்கேயன்றி சூத்திரப் பசங்கட்கு இடமே தரலாகாது என்று மனப்பான்மை கொண்ட அயோக்ய நாய்களால் எம்.சி.ராஜா பெயர், கொட்டை எழுத்தால் பிரசுரிக்கப்படுவது கொண்டு எம். சி. ராஜா சிரித்தாருக்கு வழித்துக்காட்ட முற்படலாகாது. இந்த ஒழுங்கில் எம். சி. ராஜா ஞாயம் பேசவும், வாதம் புரியவும் முற்படுகிறது வெட்கம்! எம். சி. ராஜாவைப் பார்த்து நீர் ஒரு பக்கம் விழுந்து கிடக்கமாட்டீரா என்று கேட்க விரும்புகிறோம். தனித்தொகுதி தேவை இந்த அபிப்பிராயம் நாட்டின் இன்றைய நிலை தெரிந்தவர்கள் நாளை முன்னேற்றங் கருதி வெளி யிட்டதாகும். சுயநலம் கருதியவர்கள் இதுபற்றிச் சிந்திக்க மறுப்பது சகஜம். வீடு உண்டு மாடு உண்டு நிலம் உண்டு தோட்டங்கள் உண்டு, இந்த ஆஸ்திக்கு ஒரே பிள்ளைதான் உண்டு. அந்தப்பிள்ளை ஒரு வயது மைனர் என்று வைத்துக்கொள்வோம். அந்தப் பிள்ளை நாளைக்குத் தனது சொத்துரிமை கொள்ளவேண்டுமானால், இன்றைக்கு அப் பிள்ளைக்கு ஒரு தொட்டிலும் வளர்ப்புத் தாயும் ஏற்பாடு செய்ய வேண்டுமென்பது தான் தனித் தொகுதி வேண்டுவோர் கோரிக்கை. இன்று பிள்ளைக்குத் தொட்டில் ஏற்பாடு செய்தால் எப்போதும் பிள்ளையும் தொட்டிலுமாகவே போய்விடும் என்றும், இன்றைக்கே சொத்துரிமை தந்துவிடவேண்டும் என்றும் கூறுவதுதான் கூட்டுக் கோரிக்கை. எம். சி. ராஜா அவர்களே, நீர் விலகி நில்லும்! உமக்குக் நெடுமொழி கூறிய முட்டாள்களைச் சில கேள்வி கேட்கிறோம் முட்டாள்களே, பிள்ளைக்கு இன்று ஒரு தொட்டில் செப்பனிட்ட காரணத்தால் அப்பிள்ளை வளராமல் தொட்டிலளவாகவே யிருந்துவிடுமா? அப்பிள்ளை வளர்ந்த பின் தொட்டில் பயனின்றி மறைவது கண்டதில்லையா? தாழ்த்தப்பட்ட மக்கட்கு இன்றுவரை ஏற்படுத்தப்பட்டிருக்கும் பரம்பரை நெருக்கடியால் அவர்கட்குத் தனித் தொகுதி வேண்டாமா? இன்று தனித்தொகுதி ஏற்பட்டால் நாளை செம்மை நிலை யடைந்த பின்னும் அவர்கள் தனியாகவே நின்றுவிடுவார் என்பது அறியாமையல்லவா? எம். சி. ராஜா அவர்களே, கலகம் பண்ணுகிறீரே. தாழ்த்தப்பட்ட மக்களைப் பிரிக்கிறீரே? என்ன பயன் உண்டாகும்? நீர் ஒரு பெரிய மனிதராயிருக்க விரும்பினால் தாழ்த்தப்பட்ட வரை ஒற்றுமைப் படுத்துவதான ஒன்றில் அல்லவோ உமது கவனம் செல்லவேண்டும்? விபரீத வியாசம் எழுதிக் குவிக்கிறீரே! குதிக்கிறீரே! தாழ்த்தப்பட்ட மக்களின் நிலைமையைப் பற்றிய உண்மை அபிப்பிராயத்தில் தென்னாடும் வடநாடும். ஒன்றுபடும் நிலையை உண்டு பண்ணிய தோழர் சீனிவாசனவர்கள், தோழர் அம்பேட் காரவர்கள் ஆகிய வரிசையில் நீரும் நிற்க விரும்பாமல் அழுக்காறு கொண்டு இழுக்காறு தேடுதல் அழகா? கூட்டுத் தொகுதி கேட்போர் பார்ப்பனரால், பார்ப்பன அடியார் களால் தூண்டப்பட்டவர்களேயன்றித்-தனித் தொகுதி அபிப்பி ராயத்தைச் சிதைக்கவேண்டும் என்பது அவர்கள் எண்ண மல்லவே. எம்.சி. ராஜா! நீர் புரியும் குற்றத்திற்கு விமோசனமாக 1000 உருக்கள், தனித் தொகுதி இன்றியமையாதது என்று கெம்பீர சத்தத்துடன் ஜெபிக்கும்படிக் கோருகிறோம். - புதுவை முரசு, 2. 5. 1932, ப. 12 - 13  பாரதிதாசன் பாடல்கள் - காலவரிசை வ.எண் நூற்பெயர் முதற்பதிப்பு 1. மயிலம் ஸ்ரீ ஷண்முகன் வண்ணப்பாட்டு 1920 2. மயிலம் ஸ்ரீ சிவசண்முகக் கடவுள் பஞ்சரத்நம் 1925 3. மயிலம் சுப்பிரமணியர் துதியமுது 1926 4. கதர் இராட்டினப்பாட்டு 1930 5. சிறுவர் சிறுமியர் தேசியகீதம் 1930 6. தொண்டர்படைப்பாட்டு 1930 7. தாழ்த்தப்பட்டார் சமத்துவப்பாட்டு 1930 8. சஞ்சீவி பர்வதத்தின் சாரல் 1930 9. சுயமரியாதைச் சுடர் 1931 10. புரட்சிக்கவி 1937 11. பாரதிதாசன் கவிதைகள் 1938 12. எதிர்பாராத முத்தம் 1941 13. குடும்ப விளக்கு 1942 14. இசையமுது 1942 15. இருண்ட வீடு 1944 16. அழகின் சிரிப்பு 1944 17. காதல் நினைவுகள் 1944 18. குடும்ப விளக்கு இரண்டாம் பகுதி - விருந்தோம்பல் 1944 19. பாண்டியன் பரிசு 1944 20. தமிழியக்கம் 1945 21. முல்லைக்காடு 1948 22. காதலா? கடமையா? 1948 23. இந்தி எதிர்ப்புப் பாட்டு 1948 24. கடல் மேற் குமிழிகள் 1948 25. குடும்ப விளக்கு மூன்றாம் பிரிவு, திருமணம் 1948 26. அகத்தியன் விட்டபுதுக்கரடி 27. நல்லமுத்துக்கதை (ஒரே தொகுப்பில்) 1948 28. திராவிடர் திருப்பாடல் 1948 29. ஏற்றப்பாட்டு 1949 30. பாரதிதாசன் கவிதைகள், இரண்டாம் பகுதி 1949 31. தமிழச்சியின் கத்தி 1949 32. பாரதிதாசன் ஆத்திசூடி 1949 33. திராவிடர் புரட்சித் திருமணத் திட்டம் 1949 34. குடும்பவிளக்கு நான்காம் பிரிவு - மக்கட்பேறு 1949 35. குடும்ப விளக்கு ஐந்தாம் பிரிவு - முதியோர் காதல் 1950 36. அமிழ்து எது? 1951 37. பாரதிதாசன் கவிதைகள் - இரண்டாம் தொகுதி (இரண்டாம் பதிப்பு) 1952 38. இசையமுது - இரண்டாம் பகுதி 1952 39. பொங்கல் வாழ்த்துக் குவியல் 1954 40. பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் தொகுதி 1955 41. தேனருவி 1956 42. இளைஞர் இலக்கியம் 1958 43. குறிஞ்சித்திட்டு 1959 44. கண்ணகி புரட்சிக் காப்பியம் 1962 45. மணிமேகலை வெண்பா 1962 46. பாரதிதாசன் பன்மணித்திரள் 1964 47. காதல் பாடல்கள் 1977 48. குயில் பாடல்கள் 1977 49. பாரதிதாசன் கவிதைகள், நான்காம் தொகுதி 1977 50. தேனருவி (+ 38 பாடல்கள்) 1978 51. ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது 1978 52. தமிழுக்கு அமுதென்று பேர் 1978 53. புகழ் மலர்கள் 1978 54. நாள் மலர்கள் 1978 55. வேங்கையே எழுக 1978 56. பாரதிதாசன் ஆத்திசூடி (+ பொங்கல் வாழ்த்துக் குவியல், இளையார் ஆத்திசூடி) 1980 57. பாரதிதாசன் கவிதைகள் (நான்கு தொகுதிகள் + புதிய பாடல்கள் 17) 1982 பாடு பொருள் அடிப்படையில் பூம்புகார் பதிப்பகம் பகுத்தும், தொகுத்தும் வெளியிட்டவை: 1. பாரதிதாசன் கவிதைகள் - உயர்ந்தோர் (+ ஒரு புதிய பாடல்) 1992 2. இயற்கை 1992 3. தமிழ் (+ ஒரு புதிய பாடல்) 1992 4. சிறுகாப்பியங்கள் 1992 5. இளைஞர் இலக்கியம் 1 1992 6. சமுதாயம் (+ இரண்டு புதிய பாடல்கள்) 1992 7. இளைஞர் இலக்கியம் 2 1994 8. பொங்கல் வாழ்த்து இலக்கியம் 1994 (+ ஆறு புதிய பாடல்கள்) 9. காதல் (+ இரண்டு புதிய பாடல்கள்) 1994 குறிப்பிடத்தக்க பிற தொகுப்புகள் 1. பாரதிதாசன் கவிதைகள் (பாவேந்தர் பாடல்களின் முழுத்தொகுப்பு), ஆ. திருவாசகன், சுரதா கல்லாடன் (தொ. ஆ.) 1993 2. உலகம் உன் உயிர் (தலையங்கக் கவிதைகள்) (+நான்Fபுதிaகவிதைகள்),ச.சு. இளங்கோ (ப.ஆ.) 1994 3. பாரதிதாசன் வண்ணப்பாடல்கள் (+நான்கு புதிய பாடல்கள்) ய. மணிகண்டன், (தொ. ப.)1995 4. பாரதிதாசன் திரைப்பாடல்கள், வாமனன்(தொ.ஆ.)2000 பிறர்படைப்புகளுடன் பாரதிதாசன் கவிதைகளும் சேர்க்கப்பட்டு வெளிவந்த நூல்கள் 1. இந்தி எதிர்ப்பு பாடல்கள் 1937 2. எது இசை? 1945 3. தன்மானத் தாலாட்டு 1946 4. மகாகவி பாரதியார் 1948 இவற்றில் இடம்பெற்ற பாரதிதாசன் பாடல்கள் வேறு கவிதைத் தொகுப்புகளில் சேர்க்கப்பெற்றுள்ளன. முன்னர் வேறு நூல்களில் இடம்பெற்ற பாடல்களே தெரிவுசெய்து தொகுக்கப்பட்டு வேறு பெயரில் வெளிவந்த நூல்கள் 1. காதற்பாட்டு 1942 2. தாயின்மேல் ஆணை 1958 3. தமிழ் உணர்ச்சி 1993 இத்தகைய தொகுப்பு நூல்கள் பல வெளிவந்துள்ளன. பாரதிதாசனின் நாடகங்கள் - காலவரிசை I.üš வடிவில் வெளிவந்தவை 1. இரணியன் அல்லது இணையற்ற வீரன் 1939 2. நல்ல தீர்ப்பு 1944 3. கற்கண்டு 4. பொறுமை கடலினும் பெரிது (ஒரே தொகுப்பில்) 1944 5. அமைதி 1946 6. சௌமியன் 1947 7. படித்த பெண்கள் 1948 8. சேரதாண்டவம் 1949 9. இன்பக்கடல் 10. சத்திமுத்தப்புலவர் (ஒரே தொகுப்பில்) 1950 11. கழைக்கூத்தியின் காதல் 1951 12. பாரதிதாசனின் நாடகங்கள் 1959 அ. கற்கண்டு ஆ. பொறுமை கடலினும் பெரிது இ. இன்பக்கடல் ஈ. சத்திமுத்தப் புலவர் 13. பிசிராந்தையார் 1967 14. தலைமலைகண்ட தேவர் 1978 அ. தலைமலைகண்ட தேவர் ஆ. கழைக்கூத்தியின் காதல் (1951) இ. குடும்ப விளக்கும் குண்டுக்கல்லும் ஈ. ஆரிய பத்தினி மாரிஷை உ. ரபுடீன் ஊ.அம்மைச்சி எ. வஞ்சவிழா ஏ. விகடக் கோர்ட் 15. கோயில் இருகோணங்கள் 1980 அ. கோயில் இருகோணங்கள் ஆ. சமணமும் சைவமும் இ. மூளை வைத்தியம் ஈ. குலத்தில் குரங்கு உ. மருத்துவர் வீட்டில் அமைச்சர் ஊ. ஆரிய பத்தினி மாரிஷை (தலைமலைகண்ட தேவர் நூலிலும்) எ. முத்துப்பையன் (குழந்தை நாடகம்) ஏ. மேனி கொப்பளித்ததோ? 16. குமரகுருபரர் நாடகம் (1944 - திரைப்படத்திற்காக எழுதியது) 1992 17. பாரதிதாசனின் புதிய நாடகங்கள் 1994 1. அச்சு வடிவம் பெறாமலிருந்த நாடகங்கள் அ. இசைக்கலை (யசோதர காவியம்) ஆ. பறவைக்கூடு I & II (சைகோன். பின்னணி) இ. மக்கள் சொத்து (கதை வடிவினது) 2. நூல் வடிவம் பெறாமலிருந்த நாடகங்கள் அ. ஐயர் வாக்குப் பலித்தது ஆ. கொய்யாக்கனிகள் (கவிதை நாடகம் முற்றுப்பெறாதது) இ. சங்கீத வித்வானோடு ஈ. ஆக்கம் உ. தீவினை II.ehlf¥ பாங்கின (காவியம், சிறுகாப்பியம் எனும் தலைப்புகளில் கவிதைத் தொகுதி களில் இடம் பெற்றவை) 18. புரட்சிக்கவி (1944 - சிறு மாற்றங்களுடன் 1937 நாடகமாக நடத்தப்பெற்றது) 19. வீரத்தாய் (1935 - நெட்டப்பாக்கம் பள்ளி (ஆண்டு விழாவில் மாணவர்கள் நடிப்பதற்கு முதலில் நாடகமாக எழுதப்பட்டது. பாவேந்தரின் மூத்த மகள் வீரத்தாயாகவும் மகன் சுதர்மனாகவும் நடிக்கநடத்தப்பெற்றது.) 1938 20. ஒன்பது சுவை 1949 21. போர் மறவன் 1949 22. காதல் வாழ்வு 1949 III. நாடகமாக நடிக்கப்பெற்றுக் கிடைக்காதவை 1. சிந்தாமணி 1931 2. பாரதப்பாசறை (கற்கண்டு, நாடகப் பகுதியையும் 1963 சீன எதிர்ப்பையும் இணைத்து எழுதப்பட்டது.) IV. நாடகமாக எழுதப்பெற்று ஒத்திகை நடத்தப்பெற்றும் அரங்கேறாதவை, முழுமையாகக் கிடைக்காததும் நூலாகாததும் 1. லதாக்ருகம் 1932 2. நடுநாட்டின் வர்த்தகன் அல்லது நட்பின் இலக்கணம் 1935 (சேக்சுப்பியரின் வெனிசு வாணிகன் நாடகத்தின் தமிழ்வடிவம்) V. பெயரளவில் நாடகம் எனக் குறிக்கப்பெற்றவை - நாடக வடிவில் நூல்களாக வெளிவராதவை 1. தமிழச்சியின் கத்தி 1937 2. பாண்டியன் பரிசு 1940 3. கருஞ்சிறுத்தை 1949 பாரதிதாசனின் பிற உரைநடை ஆக்கங்கள் I.f£LiufŸ 1. வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? 1980 (சொல்லாய்வுகள்) 2. பாட்டுக்கு இலக்கணம் 1980 3. மானுடம் போற்று 1983 4. பாரதியாரோடு பத்தாண்டுகள் (+ பொழிவுகள், கவிதைகள்) 1992 5. உலகுக்கோர் ஐந்தொழுக்கம் (தலையங்கக் கட்டுரைகள்) 1994 6. இலக்கியக் கோலங்கள் (பாடல் விளக்கக்குறிப்புகள், செய்திகள்) 1996 II.ciu 1. பாரதிதாசன் திருக்குறள் உரை: டாக்டர் ச.சு. இளங்கோ (ஆ.ப.) 1992 2. பாவேந்தர் பார்வையில் வள்ளுவம் - திருக்குறள் உரை: முனைவர் நா. செங்கமலத்தாயார் (தொ. ஆ.) 1994 III.òidfijfŸ 1. பாரதிதாசன் கதைகள் (+ கட்டுரைகள், கிண்டல் துணுக்குகள்) 1955 2. ஏழைகள் சிரிக்கிறார்கள் (நீக்கம் + புதிய கதைகள்) 1980 ச.சு. இளங்கோ. (தொ. ஆ.) 3. பாரதிதாசன் சிறுகதைகள் (நீக்கம் + புதிய கதைகள்) 1994 மு. சாயபுமரைக்காயர் (தொ.ஆ.) 4. பாரதிதாசன் புதினங்கள் 1994 ஆ. அன்னை ஆ. விஞ்ஞானி இ. அனைவரும் உறவினர் ஈ. பக்த ஜெயதேவர் உ. குமரகுருபரர் ஊ. எதிர்பாராத முத்தம் எ. ஆத்மசக்தி ஏ. ஏழை உழவன் (அல்லது) முகுந்த சந்திரிகை ஐ. ஆலஞ்சாலையும் வேலஞ்சேரியும் IV. கிண்டல் துணுக்குகள் சிரிக்கும் சிந்தனைகள் 1981 V. வினா விடைகள் கேட்டலும் கிளத்தலும் 1981 VI.âiu¡fij உரையாடல்கள் 1. காளமேகம் 1940 2. சுபத்ரா 1946 3. சுலோசனா 1947 4. ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி 1947 5. பொன்முடி 1950 6. வளையாபதி 1952 7. மகாகவி பாரதியார் வரலாறு 1964 VII.brh‰bghÊîfŸ 1. கவிஞர் பேசுகிறார் 1947 2. முத்தமிழ் (+ பிறர் பொழிவுகள்) 1950 தமிழ் இன்பம் 1954 3. பாரதிதாசன் பேசுகிறார் (+ புதிய பொழிவுகள்) 1980 (நூல்: பாவேந்தரின் உலகநோக்கு, பாரதிதாசன் உயராய்வு மையம், பாரதிதாசன் பல்கலைக் கழகம், திருச்சி, 2002) 