பாவாணர் தமிழ்க்களஞ்சியம் 20 வேர்ச்சொற்கட்டுரைகள் - 4 ஙரூபுஹது ஸநிகுணுடகுழூர ஞா. தேவநேயப் பாவாணர் தமிழ்மண் அறக்கட்டளை ஸசுங்கூக்ஷ - 600 017 நூற் குறிப்பு நூற்பெயர் : பாவாணர் தமிழ்க் களஞ்சியம் - 20 ஆசிரியர் : மொழி ஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதல் பதிப்பு : 1944 மறுபதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 8 + 160 = 168 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 105/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு தமிழ்மண் அறக்கட்டளை பெரியார் குடில் பி.11 குல்மொகர் குடியிருப்பு, 35 செவாலிய சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in இணையதளம் : www.tamilmann.in பதிப்புரை தமிழுக்கும் தமிழருக்கும் வளமும் வலிமையும் சேர்க்கக் கூடிய பழந்தமிழ் நூல்களையெல்லாம் தேடியெடுத்துத் தமிழ் கூறும் உலகிற்கு வழங்கும் தொலைநோக்குப் பார்வையுடன் தமிழ்மண் பதிப்பகம் தொடங்கப்பட்டது. அதன் வாயிலாக மொழிஞாயிறு பாவாணரின் நூற்றாண்டு நினைவாக அவர் எழுதிய நூல்கள் அனைத்தையும் சேர்த்து அவருடைய மறைவுக்குப் பிறகு 2000-த்திலும், பல்வேறு இதழ்களிலும், மலர்களிலும் வெளிவந்து, நூல் வடிவம் பெறாத பாவாணரின் அரிய கட்டுரைகளை எல்லாம் தொகுத்து 2001- லும் ஒருசேர வெளியிட்டு உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு வழங்கினோம். பாவாணர் வழி நிலை அறிஞர்களான முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்களும், மருத்துவர் கு.பூங்காவனம் அவர்களும் இவ்வரிய கட்டுரைப் புதையல்கள் நூல் வடிவம் பெறுவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர். இப்பெருமக்களை நன்றியுணர்வுடன் நினைவுகூர்கிறேன். சொல்லாராய்ச்சித் துறையில் தேவநேயர் ஒப்பற்ற தனித் திறமையுடைவர் என்று மறைமலையடிகளும், நாவலந் தீவுக்கு நந்தமிழே தாயென்று பாவேந்தரும், தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் நற்றொண்டு ஆற்றியவர் பாவாணர் என்று பேரறிஞர் அண்ணா அவர்களும், வெட்ட வெட்டக் கிடைக்கும் தங்கச் சுரங்கம் போன்றவர் என்று தமிழிறிஞர் இராசமாணிக்கனாரும், தமிழகம் மொழித்துறையிலே பாவாணர் போன்ற ஒரு அறிஞரை இன்னும் பெற்றுத் தரவில்லை என்று பன்மொழிப் புலவர் அப்பாத்துரையரும், குறைமதியர் தேக்கிவைத்த கரையிருளை நீக்க வந்த மறைமலையார் வழிவந்த நிறைமலையார் பாவாணர் என்று மேனாள் பேரவைத்தலைவர் தமிழ்குடிமகன் அவர்களும், தமிழர் யார்? எதிரிகள் யார்? என்று ஆய்ந்து அறிந்து காட்டியவர் பாவாணர் என்று பேராசிரியர் இளவரசு அவர்களும், ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்தபின் வாராது போல வந்த மாமணி பாவாணர் என்று முதுமுனைவர் இளங்குமரனார் அவர்களும் குறிப்பிட்டுள்ள பெருமைகளுக்குரிய பேரறிஞரின் நூல்களை மீள்பதிப்பக வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். பாவாணர் நூல்கள் அத்தனையும் தமிழ்மொழிக்கு ஏற்றம் உரைப்பன. தமிழை ஆரிய இருளினின்று மீட்டுக் காப்பன. வீழ்ந்து பட்ட தமிழனுக்கு விழிப்பூட்ட வல்லன. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக்கிடக்கும் தமிழ்மொழியை மீட்கவல்லது என்று பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் கூற்றை இக் களஞ்சிய வெளியீட்டில் பதிவு செய்வது எமது கடமையாகும். பாவாணரைத் தூக்கிப் பிடித்தால்தான் தமிழினம் உருப் படமுடியும் - உயரமுடியும். பாவாணர் கொள்கைகள் தமிழர் உள்ளமெல்லாம் நிலைத்து நிற்பதற்கும், பாவாணர் நூல்கள் தமிழர் இல்லமெலாம் இடம் பெறுவதற்கும் முன் குறிப்பிட்ட 2000 - 2001 காலக்கட்டத்தில் வெளியிடப்பட்ட பாவாணரின் அறிவுக் கருவூலங்களையெல்லாம் ஒட்டு மொத்தமாக சேர்த்து ஒரே வீச்சில் பாவாணர் தமிழ்க் களஞ்சியம் எனும் தலைப்பில் எம் அறக்கட்டளை வெளியிடுகிறது. மறைக்கப்பெற்ற மாபெரும் வரலாற்றையும், சிதைக்கப் பெற்ற ஒப்புயர்வுயற்ற மொழியையும் கொண்ட தமிழினத்தின் முன்னேற்றம் கருதி இவ்வருந்தமிழ் புதையல்களை தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்க முன் வந்துள்ளோம். தமிழ் மொழியை மூச்சாகவும், பேச்சாகவும், செயலாகவும் கொண்டு ஒருநாளின் முழுப்பொழுதும் தமிழாகவே வாழ்ந்த செம்புலச்செம்மல், தனித்தமிழ்க் கதிரவன் மொழிஞாயிறு பாவாணர் நூல்களை வாங்கிப் பயன் கொள்வீர். இளமையிலேயே பொதுத்தொண்டிலும், தனித்தமிழ் இயக்கத் தொண்டிலும் நான் ஈடுபாடு கொள்வதற்குக் காரணமாக இருந்தவர்கள் பெரும்புலவர் நக்கீரன் அவர்களும், அவர்தம் இளவல் புலவர் சித்திரவேலன் அவர்களும் ஆவர். இவர்களை இவ்வெளியிட்டின் வாயிலாக நன்றியுணர்வோடு நினைவு கூறுகிறேன். தந்தை பெரியாரின் தன்மதிப்பு இயக்கக் கொள்கை களாலும், மொழிஞாயிறு பாவாணரின் தனித்தமிழ் இயக்கக் கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டவன். அத்தகு பின்புலத்தோடு பதிப்புப்பணியில் என் காலடிச் சுவடுகளைப் பதித்து வருகிறேன். கோ. இளவழகன், பதிப்பாளர். குறுக்க விளக்கம் அகம். - அகநானூறு அக. நி. - அகநானூறு நித்திலக் கோவை அரிசமய. - அரிசமய - அரிசமய தீபம் அரிச். பு. விவா. - அரிச்சந்திர புராணம், விவாக காண்டம். அருட்பா. நடராஜ - அருட்பா நடராஜபதி மாலை அழகர் கல. - அழகர் கலம்பகம் அறநெறி. - அறநெறிச்சாரம் ஆசாரக். - ஆசாரக்கோவை இரகு. - இரகு வமிசம் ... இராசவைத். - இராச வைத்திய மகுடம் இலக். வி. - இலக்கண விளக்கம் இறை. - இறையனார் அகப்பொருள் இறை. உரை - இறையனார் களவியலுரை ஈடு. - ஈடு முப்பத்தாறாயிரப்படி உபதேசகா. - உபதேசகாண்டம்... உரி. நி. - உரிச்சொல் நிகண்டு ஐங். - ஐங்குறுநூறு ஐந். ஐம். - ஐந்திணை ஐம்பது ஔவை. குறள். - ஔவைக்குறள் ஔவை. தனிப்பாடல் - ஔவையார் தனிப்பாடல் திரட்டு கந்தபு. - கந்தபுராணம் கலித். - கலித்தொகை கல்லா. - கல்லாடம் கம்பரா. - கம்பராமாயணம் காஞ்சிப்பு. - காஞ்சிப்புராணம் காரிகை. - யாப்பருங்கலக்காரிகை குமர. பிர. திருவாரு. - குமரகுருபர சுவாமிகள் பிரபந்தத் திரட்டு, திருவாரூர் நான்மணிமாலை குருபரம். - குருபரம்பரை குறள். - திருக்குறள் குறிஞ்சிப். - குறிஞ்சிப்பாட்டு குறுந். - குறுந்தொகை குற்றா. குற. - குற்றாலக் குறவஞ்சி குற்றா. தல. - குற்றாலத்தல புராணம் கூர்மபு. தக்கன்வே. - கூர்ம புராணம், தக்கன் வேள்விப் படலம் கூளப்ப. - கூளப்ப நாயக்கன் காதல் கொன்றைவே. - கொன்றைவேந்தன். கோயிற்பு. - கோயிற்புராணம், பாயிரம். சங்கர. உலா. - சங்கர சோழனுலா சி.சி. பரபக்கம் - சிவஞான சித்தியார் பரபக்கம் சிபோ. பா. - சிவஞானபோதபாடியம் சிலப். - சிலப்பதிகாரம் சிவஞா. - சிவஞானபோதம் சிவரக. - சிவரகசியம் சிறுபஞ். - சிறுபஞ்சமூலம் சிறுபாண். - சிறுபாணாற்றுப்படை சினேந். - சினேந்திரமாலை சீவக. - சீவக சிந்தாமணி சூடா. - சூடாமணி நிகண்டு சூத. - சூதசங்கிதை சூளா. - சூளாமணி சேதுபு. - சேதுபுராணம் செவ்வந்திப். - செவ்வந்திப் புராணம் சைவச. - சைவ சமயநெறி சௌந்தரி. - சௌந்தரியலகரி ஞானவா. - ஞானவாசிட்டம் ஞானா. - ஞானமிர்தம் தஞ்சைவா. - தஞ்சைவாணன் கோவை தணிகைப்பு. நாட்டு. - தணிகைப் புராணம், நாட்டுப் படலம் தண்டலை. சத. - தண்டலையார் சதகம் தண்டி. - தண்டியலங்காரம் தமிழ் நா. - தமிழ் நாவலர் சரிதை தனிப்பா. - தனிப்பாடல் திரட்டு தாயு. - தாயுமானவர் பாடல் திணைமாலை. - திணைமாலை நூற்றைம்பது திரிகடு. - திரிகடுகம் திருக்காளத். - திருக்காளத்திப் புராணம் திருக்கோ. - திருக்கோவையார் திருநூற். - திருநூற்றந்தாதி திருப்பு. - திருப்புகழ் திருமந். - திருமந்திரம் திருமுருகு. - திருமுருகாற்றுப் படை. திருவள்ளுவ. - திருவள்ளுவமாலை திருவாச. - திருவாசகம் திருவாத. - திருவாதவூரர் புராணம் திருவாலவா. - திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம். திருவிளை. - திருவிளையாடற்புராணம் திவா. - திவாகர நிகண்டு திவ். - திவ்வியபிரபந்தம் தேவா. - தேவாரம் தைலவ. தைல. - தைலவருக்கச் சுருக்கம்... தொல். - தொல்காப்பியம் தொல். எழுத்து - தொல்காப்பியம், எழுத்ததிகாரம் தொல். உரி. - தொல்காப்பியம், உவமவியல் தொல். சொல். nrdh.- தொல்காப்பியம், சொல்லதிகாரம், சேனாவரையர் உரை தொல். பொரு. - தொல்காப்பியம், பொருளதிகாரம். தொல். மர. - தொல்காப்பியம், மரபியல் தொல். மெய்ப்பாட். - தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல் நள. - நளவெண்பா நற். - நற்றிணை நன். - நன்னூல் நாலடி. - நாலடியார் நான்மணி. - நான்மணிக்கடிகை நீதிநெறி. - நீதிநெறி விளக்கம் நீதி வெண். - நீதிவெண்பா நெடுநல். - நெடுநல்வாடை நைடத. - நைடதம் பட்டினப். - பட்டினப்பாலை பணவிடு. - பணவிடுதூது பதினொ. திருவிடைமும் - பதினொ ராந் திருமுறை, திருவிடை மருதூர் மும்மணிக்கோவை பதிற்றுப். - பதிற்றுப்பத்து பரிபா. - பரிபாடல் பழ. - பழமொழி நானூறு பாக. - பாகவதம் பாரத. - பாரதம் பிங். - பிங்கல நிகண்டு பிரபுலிங். - பிரபுலிங்கலீலை பிரபோத. - பிரபோத சந்திரோதயம் பு.வெ. - புறப்பொருள் வெண்பா மாலை புறத். ஆசிரியமாலை - புறத்திரட்டு, ஆசிரியமாலை புறம். - புறநானூறு பெரியபு. - பெரியபுராணம் பெருங். - பெருங்கதை பெரும்பாண். - பெரும்பாணாற்றுப் படை பொருந. - பொருநராற்றுப்படை மணி. - மணிமேகலை மலை. - மலையகராதி மலைபடு. - மலைபடுகடாம் மாறன. - மாறனலங்காரம் மீனாட்சி. பிள்ளைத் - மீனாட்சி யம்மை பிள்ளைத் தமிழ் முல்லைப். - முல்லைப்பாட்டு யாப். காரிகை. - யாப்பருங்கலக்காரிகை யாப். வி. - யாப்பருங்கல விருத்தி யாழ். அக. - யாழ்ப்பாணத்து மானிப்பாயகராதி வள்ள. - வள்ளலார் சாத்திரம் விநாயகபு. - விநாயக புராணம் வி.சிந். - விவேக சிந்தாமணி விறலிவிடு. - விறலிவிடுதூது வெங்கைக்கோவை. - திருவெங்கைக் கோவை வெண்பாப். செய். - வெண்பாப் பாட்டியல், செய்யுளியல் S.I.I. Vol. - South Indian Inscriptions Volume உள்ளடக்கம் பக்கம் பதிப்புரை ..iii குறுக்க விளக்கம் ..v நூல் முல்1 (இளமைக் கருத்துவேர்) .1 முல்2 (முன்மைக் கருத்துவேர்) .9 முல்3 (மென்மைக் கருத்துவேர்) .19 முல்4 (பொருந்தற் கருத்துவேர்) 70 முல்5 (வளைதற்) கருத்து .37 முல்6 (துளைத்தற் கருத்துவேர்) .86 வல்1 (வளைவுக் கருத்துவேர்) .94 `வா'என்னும்வினைச்சொல்வரலாறு... 110 விள்1 (விரும்பற் கருத்துவேர்) 81 விள்2 (வெம்மை யொண்மை வெண்மை வெறுமைக் கருத்துவேர்) .128 விள்3 (பிளவுக் கருத்துவேர்) 142 பின்னிணைப்பு`அல்'(கருமைக்கருத்துவேர்)... 157 வேர்ச்சொற் கட்டுரைகள் - 4 (நான்காம் பகுதி) முல்1 முதல் முல்6 வரை லல்2 விள்1 முதல் விள்3 வரை முல்1 (இளமைக் கருத்துவேர்) இளமை என்பது ஓர் உயிரியின் பிறப்பிற்கும் முழு வளர்ச்சிக்கும் இடைப்பட்ட நிலைமை அல்லது காலம். அது பிறந்த நிலையினின்று தொடங்கி, புனிற்றிளமை, சிற்றிளமை, பேரிளமை என முந்நிலைப்பட்ட தாகும். பிறப்பெனினும் தோற்றமெனினும் ஒக்கும். இயற்கையான தோற்றம் அல்லது இயக்கமெல்லாம் முன்னோக்கியே நிகழ்தலால், தோற்றக் கருத்தில் முன்னோக்கல் அல்லது முகங்காட்டற் கருத்து இரண்டறக் கலந்துள்ளது. இனி, இளமைப் பருவத்திலேயே உருவச் சிறுமையும் உடல் மென்மையும் அழகு நிறைவும் மறவுணர்ச்சியும் வலிமை மிகுதியும் பொதுவாக அமைந்திருத்தலால், இளமைக் கருத்திற் சிறுமை மென்மை அழகு மறம் வலிமை முதலிய கருத்துகளும் தோன்றும். முல் - முன் - முனி = யானைக் கன்று. ``முனியுடைக் கவனம் போல்''(நற்.360). முன் - முன்னி = முல்லை நிலத்தில் இயற்கையாக விளைவும் ஒரு சிறு பயறு. ஒ.நோ: L.Min, small. இதனின்றே, minify, minim, minimum, minish, minor, minute முதலிய பல சொற்கள் திரிந்துள்ளதாகத் தெரிகின்றது. முல் - முள் - முளை = 1. வித்தினின்று முளைத்த சிறு வெளிப்பாடு. ``வித்திய வெண்முளை'' (ஐங்குறு. 29). 2. இளமை. ``முளையமை திங்கள்'' (கம்பரா. கும்பக. 10). 3. மரக்கன்று. ``அதன்றாள் வழியே முளையோங்குபு'' (சீவக 223). 4. சிறுபிள்ளை. 5. மகன். (பிங்.) ம. முள, து.முளெ, க.மொளெ, தெ. மொலக்க. முளைத்தல் = 1. முளை தோன்றுதல். ``ஒன்றாய் முளைத்தெழுந்து'' (திருவாச. 10 : 8). 2. கதிரவன் தோன்றுதல். ``காலை ஞாயிறு கதிர்விரித்து முளைப்ப'' (மணி. 8 : 18). ம. முளை, க.மொளெ, தெ. மொலத்சு. முளை - முளையான் = சிறுகுழந்தை. இந்த முளையான் பேச்சை யார் கேட்கிறது. (W.) முள் - முளு - முசு - மூசு = பிஞ்சு. பலாமுசு. (உ.வ.). ஒ.நோ: உளு - உசு. ள - ச. போலித்திரிபு. முள் - முட்டு. முட்டுக் குரும்பை = சிறு தென்னம் பிஞ்சு, அல்லது பனம் பிஞ்சு. முட்டு - மொட்டு = அரும்பு. ``மொட்டருமலர்'' (திருவாச.29 : 8) மொட்டு - மொட்டை = மணமாகாத இளைஞன் (W.) மொட்டைப் பையன் (உ.வ.) முளு - முழு - முகு - முகிழ். ஒ.நோ: தொழு - தொகு. முகிழ்த்தல் = (செ.கு.வி.) 1. அரும்புதல். ``அருமணி முகிழ்த்தவேபோ விளங்கதிர் முலையும்'' (சீவக. 551). 2. தோன்றுதல். ``மூவகை யுலகும் முகிழ்த்தன முறையே'' (ஐந்குறு. கடவுள்). கூம்பும் மலர்போற் குவிதல் அல்லது மூடுதல். ``மகவுகண் முகிழ்ப்ப'' (கல்லா.7). (செ.குன்றாவி.) 1. ஈனுதல். ``அமரராதியரை முகிழ்த்து'' (விநாயகபு. 8: 154). 2. தோற்றுவித்தல். ``அற்புத முகிழ்த்தார்'' (காஞ்சிப்பு. பன்னிரு. 163). க. முகுள் (g). முகிழ் = 1. அரும்பு. ``குறுமுகிழ வாயினுங் கள்ளிமேற் கைந் நீட்டார்'' (நாலடி. 262). 2. குமிழி. ``பெயறுளி முகிழென'' (கலித். 56) முகிழ் - முகிழம் = மலரும் பருவத்துப் பேரரும்பு. (சது.). ய. முகுல. முகிழ் - முகிழி, முகிழித்தல் = முகிழ்த்தல். முகிழி - முகிழிதம் = முகிழ்தம் = அரும்பல், அரும்பு. ``பொன்னின் முகிழிதம் விளைத்து'' (குற்றா. தல. நாட்டுச். 9). முகிழ் - முகிள். முகிழம் - முகிளம். முகிழிதம் - முகிளிதம். முகிள் - முகுள் - முகுளம் = 1. அரும்பு. ``பங்கய குமுளந் தன்னைக் கொங்கையாப் படைத்த'' (திவாலவா. 4 : 14). 2. ஒரு கையின் ஐந்து விரலும் நிமிர்ந்து நுளி பொருந்திக் கூம்பி நிற்கும் இணையா விணைக்கை வகை. (சிலப். 3 : 18), உரை.) வ. முகுல. முகுளம் - முகுடம் = மணிமுடி. ``முகுடமும் பெருஞ் சேனையும்'' (பாரத. குரு. 14). 2. முடியுறுப்பு ஐந்தனுள் ஒன்று. (திவா.). முகுடம் - வ. முக்குட்ட. முகுடம் - மகுடம் = 1. மணிமுடி. ``அரக்கன்றம் மகுடம்'' (கம்பரா. முதற்போ. 246). 2. தேர்க் குப்பம். 3. ஓலைச்சுவடியின் மணிமுடிச்சுக் கொண்டை. மகுடம் - வ. மக்குட்ட. பேரா. பரோ தம் `சமற்கிருத மொழி' என்னும் நூலின் இறுதியில், முகுடம் (மகுடம்) என்பது திரவிடச் சொல்லென்று குறித்திருத்தல் காண்க. முகிள் - முகுள் - முகுளி. முளித்தல் = குவிதல். ``முருளிக்கும்... அரவிந்தம்'' (தண்டி. 62). முகு - முகை = அரும்பு. ``முகை மொக்குளுள்ளது நாற்றம் போல்'' (குறள். 1274). முகைதல் = அரும்புதல். முகு - மொகு - மொக்கு = பூ மொட்டு. 2. மொட்டுப் போற் செய்யப்படும் ஓவிய வேலைப்பாடு. 3. நிலத்தின்மேல் இடும் பூக்கோலம். க. மொக்கு (gg.). தெ. மொக்க. (gg.) மொக்கு- மொக்குள் = 1. மலரும் பருவத்துப் பேரரும்பு. ``முகைமொக்கு ளுள்ளது நாற்றம் போல'' (குறள். 1274). 2. நீர்க்குமிழி. ``படுமழை மொக்குளின்'' (நாலடி. 27). க. முகுதல். (g). மொக்குள் - மொக்குளி. மொக்குளித்தல் = 1. குமிழியுண்டாதல். (w). 2. திரளுதல். (யாழ். அக.). க. முக்குளிசு முள் - முண் - முண. முணமுணத்தல் = வாய்க்குள் மெல்லப் பேசுதல். ``சுற்றிவந்து முணமுணென்று சொல்லும் மந்திரம் ஏதடா'' (சிவவாக. 58). முண - முணு. முணுமுணுத்தல் = வாய்க்குள் மெல்லப் பேசுதல். முணு - முணுக்கு. முணுக்கு முணுக்கெனல் = குழவி தாய்ப்பாலைச் சிறிது சிறிதாக உறிஞ்சிக் குடித்தல். முண் - மண் - மணி = சிறியது. மணிக்கயிறு, மணிக்காடை, மணிக்காக்கை, மணிக்குடல், மணிக்கை, மணிக்கோரை, மணித்தக்காளி, மணித்துத்தி, மணிப்புறா, மணிப்பயறு முதலிய கூட்டுச் சொற்களை நோக்குக. முணுக்கு - முடுக்கு = சிறுசந்து. முடுக்கு - முடுக்கர் = குறுந்தெரு. ``முடுக்கரும் வீதியும்'' (சிலப். 5 : 187) முடுக்கு - முக்கு = சந்து. ம. முக்கு. முது - முகம் = 1. தோற்றம். ``சுளிமுகக் களிறன்னான்'' (சீவக. 298). 2. முன்பு. ``ஈன்றாள் முகத்தேயு மின்னாதால்'' (குறள். 923). 3. தலையின் முன்புறம். ``முகத்தா னமர்ந்தினிது நோக்கி'' (குறள். 93). 4. நோக்கு. ``புதுமுகம் புரிதல்'' (தொல். மெய்ப். 13). 5. முகமன். ``முகம்பல பேசி யறியேன்'' (தேவா. 742 : 2). 6 வீட்டின் முன்புறம். 7. நாடகச்சந்தி ஐந்தனுள் முதலது. (சிலப். 3 : 13 உரை). 8. தொடக்கம். (w). 9. முகத்தில் முன் நீண்டுள்ள மூக்கு. முகஞ் செய்தல் = 1. தோன்றுதல். ``முகஞ்செய் காரிகை'' (பெருங். உஞ்சைக். 35 : 49). 2. முன்னாதல். ``தோற்றினாண் முகஞ்செய் கோலம்'' (சீவக. 675). 3. நோக்குத. ``முன்னினான் வடதிசை முகஞ்செய்து'' (சீவக. 1408). முகக் கொம்பு, முகதலை, முகமண்டபம், முகவாசல், முகவுரை; உரைமுகம், கழிமுகம், துறைமுகம், நூன்முகம், போர் முகம் என்னும் கூட்டுச் சொற்களில், முகம் என்னுஞ் சொல் முன்புறத்தையே குறித்தல் காண்க. முகமை = 1. முன்மை. 2. தலைமை. அவன் முகமையாயிருந்து கூட்டத்தை நடத்தி வைத்தான். (உ.வ.) முகம் - முகன் (போலி). முகம், முகன் - வ. முக (mukha). முகன் - முகனை = 1. முன்புறம். 2. தொடக்கம். 3. உரைநடைச் சொற்களின் அல்லது செய்யுட்சீர் அடிகளின் முதலெழுத்துகள் ஒத்து வருதல். 4. தலைமை. அவன் முகனை பண்ணுகிறான் (w). 5. அந்நொடியே, நான்வந்த முகனையிலே அவன் போய்விட்டான். (w.). 6. முன்சினம். உனக்கேன் இவ்வளவு முகனை? (உ.வ.) முகனைக்கல் = கோயில் முதலியவற்றில் வாசற்காலின் மேலுள்ள உத்தரக்கல். முகனைக்காரன் = முதலாளி. (w.) முகனை முடிவு = தொடக்க விறுதி. (w.) முகனை - மோனை = 1. முதன்மை. `மோனை மங்கலத் தியற்றுவ'' (உபதேசகா. சிவபுண். 63). 2. செய்ளடியிற் சீர்தொறும் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது. ``அடி தொறுந் தலையெழுத்தொப்பது மோனை''. (தொல். செய். 91). முகம் - முகர் = 1. முகம். 2. மூக்கு. முகர்தல் = மணமறிதல். முகர் - மோர் - மோ. மோத்தல் =மணிமறிதல். ``மோப்பக் குழையும் அளிச்சம்'' (குறள். 90). மோ - மோப்பு - மோப்பம் = பணமுகர்வு. முகர் - முகரி = 1. தொடக்கம். 2. முன்புறம். 3. தலைமை. 4. மூக்கின் அடி. முகரிமை = 1. தலைமை. ``முகரிமை யடைந்தவன் தோல் முகத்தவன்'' (கந்தபு. கயமுகனுற். 49). 2. பேரறிவு. (பிங்.) ``முகரிமைசால் நற்றவர்'' (சேதுபு. பலதீ. 30). முகர் - முகரை = 1. பழிக்கப்படும் முகம். அவன் முகரையைப் பார் எப்படி யிருக்கிறதென்று (உ.வ.). மூக்கினடி. ``முகவுரையா லுழுத தொய்யில்'' (திருக்காளத். பு. கண்ணப்ப. 3). மு. இந்த. முக்ரா (mukhra). முகரை - மோரை = 1. பழிக்கப்படும் முகம். 2. முகவாய்க்கட்டை தெ. மோர, க. மோரெ. முகவாய் - மோவாய் - முகத்தில் வாய்க்குக் கீழுள்ள நாடி. ``குச்சி னிரைத்த குரூஉமயிர் மோவாய்'' (புறம். 257). முகு - முக - முகப்பு = 1. முற்பகுதி. 2. வீட்டின் முன்புறக் கட்டிடம். ``முகத்தணிந்த முகப்பு'' (அரிச். பு. இந்திர. 20). 3. அணிகலங்களின் முன்புறப் பொருத்துவாய். 4. சேலையின் முகதலை. 5.முன்னிலை. ``இருந்திடா யெங்கள்கண் முகப்பே'' (திவ். திருவாய் 9 : 2 : 7). முள் - மள் - மள்ளன் = 1. இளைஞன். ``பொருவிறல் மள்ள'' (திருமுருகு. 262). 2. மறவன், படைமறவன். ``களம்புகு மள்ளர்'' (கலித். 106). 3. குறிஞ்சிநில வாணர். (சூடா.) மள் - மள - மழ = 1. இளமை. ``மழவும் குழவும் இளமைப் பொருள'' (தொல். உரி. 14). 2. குழந்தை. ``அழுமழப் போலும்'' (திருக்கோ. 147). மழ - மழவு = 1. இளமை. 2. குழந்தை. மழவு - மழவன் = 1. இளஞன். `மழவர்த மனையன மணவொலி'' (கம்பரா. நாட்டுப். 50). மழ - மழம் - மழல் - மழலை = 1. இளமை. ``பெருமழலை வெள்ளேற்றினர்'' (தேவா. 570 : 5). 2. குழந்தைகளின் இனிய, திருந்தாச் சொல். `தம் மக்கள் மழலைச் சொற் கேளாதவர்'' (குறள். 66). மழ - மழம் - மடம் = 1. இளமை. ``அஞ்சன் மடவனமே'' (நள. சுயம். 27). 2. இளமைக்குரிய மென்மை. ``தெளிநடை மடப்பிணை'' (புறம். 23). 3. இளமைக்குரிய அழகு. ``மடக்கணீர் சோரும்'' (சிலப். 17, உரைப்பாட்டு மடை). 4.இளமைக்குரிய அறியாமை. ``கொடை மடம் படுதலல்லது படைமடம் படான்'' (புறம். 142). 5. பெண்பாற் குணம் நான்கனுள் ஒன்றான (கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமையாகிய) பேதைமை. ``வாலிழை மடமங்கையர்'' (புறம். 11). மழ - மட - மடப்பு - மடப்பம் = 1. மென்மை. 2. இணக்கம். 3. பேதைமை. மடம் - மடவன் = அறிவிலான். ``மடவர் மெல்லியர் செல்லினும்' (புறம். 106). மடவள் = அறிவிலாள். ``மடவ ளம்மநீ யினிக்கொண் டோளே'' (ஐந்குறு. 67). மடவாள் = பெண். ``குழன் மடவாள் கூறுடையாளொரு பாகம்'' (திருவாச. 5 : 17). மடவி = பெண். ``மடவியரைச் சிந்தை விருப்பறா செய்வித்தல்'' (கொக்கோ. பாயி. 12). மடம் - மடந்தை = 1. பெண். ``இடைக்குல மடந்தை'' (சிலப். 16 : 2). 2. பதினான்கு முதல் பத்தொன்பது அகவை வரையப்பட்ட பெண். (பிங்.). தெ. மடத்தி, க. மடதி. மடம்வால் - மடவரல் = 1. மடப்பம். ``மடவர லுண்கண் வாணுதல் விறலி'' (புறம். 89). 2. பெண். ``மடவரனோக்கம்'' (குறள். 1085). மடமை - மடைமை = அறியாமை. மடையன் = அறிவிலி. மழ - மக = 1. இளமை. (யாழ். அக.)2. 2.பிள்ளை. ``மந்திம்மக'' (சீவக. 1897). 3. மகன் அல்லது மகள். ``மகமுறை தடுப்ப.'' (மலைபடு: 185). க. மக. (g). மழவு - மகவு = 1. குழந்தை. ``மகவுமுலை வருட'' (கம்பரா. தைல. 13). 2. மகன். `கொண்டதோர் மகவினாசை'' (அரிச். பு. மயான. 20). 3. மரத்தில் வாழும் விலங்கின் குட்டி. ``கோடுவாழ் குரங்கும் குட்டி கூறுப.'' (தொல். மர. 13). `மகவும் பிள்ளையும் பறழும் பார்ப்பும் அவையும் அன்ன அப்பா லான'' (மேற்படி. 14) க. மகவு (g). மக - மகன் = 1. குழந்தை. (w). 2. ஆண்பிள்ளை. ``செய்ந்நன்றி கொன்ற மகற்கு'' (குறள். 110). 3. புதல்வன். ``மகன்தா யுயர்பும்'' (தொல். கற். 33). 4. சிறந்தோன். ``நூல் கற்ற மகன்றுணையா நல்ல கொளல்'' (நாலடி. 136). 5. போர் மறவன். `வேந்தன் மனம்போல வந்த மகன்'' (பு.வெ. 2 : 5). 6. fzt‹.``Ãd¡»t‹ மகனாத் தோன்றியதூஉம்'' (மணி. 21 : 29). 7. விளையாடும் பருவத்துப் பெண் பெயரீறு. ``பெண்மை யடுத்த மகனென் கிளவியும்'' (தொல். பெய. 11) ``புறத்துப் போய் விளையாடும் பேதைப் பருவத்துப் பெண் மகளை, மாறோக்கத்தார் இக் காலத்தும் பெண்மகனென்று வழங்குப.'' (சேனா.உரை.). மாறோக்கம் என்பது கொற்கை சூழ்ந்த நாடு. க. மகம் (g.) ஒ.நோ: mac (mak). A. Gaelic word signifying so, and prefixed to many surnames, as Mac Donald, Mac Grigor, & c. It is synonymous with Son in tentonic origin.... and with mab or Map (shortened into Ab or Ap) in Webh names. It is allied to Goth. magus, a son fen, magaths (G. magd, a maid.). - The Imperial Dictionary of the English Language. மக - மகள் = 1. பெண். ``ஆயமகணீ யாயின்'' (கலித். 107). 2. புதல்வி. ``நல்கூர்ந்தாள் செல் மகள்'' (கலித். 56). 3. மனைவி. ``மனக்கினி. யார்க்கு நீ மகளாயதூஉம்'' 9மணி. 21 : 30). 4. பெண் தெய்வம். எ-டு: திருமகள். 5. தெய்வத்தாய். எ-டு: நிலமகள். ம.மகள், க. மகள் (g). மகள் - மகடு = 1. பெண். 2. மனைவி. (அகு.நி.). மகடு - மகடூஉ = 1. பெண். ``ளஃகான் ஒற்றே மகடூஉ அறிசொல்'' (தொல். கிளவி. 6). 2. மனைவி. ``இற்பொலி மகடூஉப் போல'' (புறம். 331). ஒ.நோ: வ. மஹிலா = பெண்டு, பெண் மஹீலா = பெண்டு மஹேலா = பெண்டு மஹேலிகா = பெண்டு. மகளிர் மன்றம் மஹில சங்க எனப்படுகின்றது. மகள் என்னும் சொல்லே மஹில என்று திரிந்திருத்தல் வேண்டும். மஹிலா என்னும் சொல்லிற்குக் காட்டப்படும் மூலம் மஹ் என்பதே. அம் மூலத்திற்கு மகிழ் அல்லது மிகு என்பது பொருளாகக் கூறப்படுகின்றது. அதுவே பொருளாயின், அதுவும் மஹிலா என்பது தமிழ்ச் சொற்றிபென்பதற்குச் சான்றாதல் காண்க. மகார் = 1. புதல்வர். ``அவுணர்கோன் மகார்'' (கந்தபு. மூவாயிர.58). 2. சிறுபிள்ளைகள். ``இளந்துணை மகாரின்'' (பதிற்றுப். 71 : 7). மகன் - மான் (ஆண்பாற் பெயரீறு) எ-டு: திருமகன் - திருமான், கருமகன் - கருமான், பெருமகன் - பெருமான், மருமகன் - மருமான், சேரமான், வெளிமான். மகள் - மாள் (பெண்பாற் பெயரீறு) எ-டு: பெருமகள் - பெருமாள் -பெருமா (கொச்சை); வேண்மாள். மகர் -மார் (பலர்பாற் பெயரீறு). எ-டு: அண்ணன்மார், ஆசிரியன்மார். மழலை - மதலை = 1. குழந்தை. 2. மகன். (பிங்.). ``மதலை யிற்றமை கேட்டலும்'' (சேதுபு. அக்கினி. 82). மதலைக் கிளி = இளங்கிளி. ``மதலைக் கிளியின் மழலைப் பாடலும்'' (பெருங். உஞ்சைக். 48 : 164). முள் - முரு - முருகு = 1. இளமை. (திவா. 2. அழகு. (பிங்.). 3. குறிஞ்சிநிலத் தெய்வமாகிய முருகன். ``அருங்கடி வேலன் முருகொடு வளைஇ'' (மதுரைக். 611). 4. தெய்வம். ``முருகு மெய்ப்பட்ட புலைத்திபோல'' (புறம். 259). 5. வேலன் வெறியாட்டு. ``முருகயர்ந்து வந்த முதுவாய் வேலன்'' (குறுந். 362). 6. திருவிழா. (திவா.) ``முருகயர் பாணியும்'' (சூளா. நாட். 7). 7. படையல் விருந்து. ``படையோர்க்கு முரகயா'' (மதுரைக். 38). 8. திருமுருகாற்றுப்படை. ``முருகு பொருநாறு'' (தனிப்பா.). முருகு - முருகன் = 1. கட்டிளைஞன். (திவா.). 2. குமரன் என்னும் குறிஞ்சிநிலத் தெய்வம். 3. வெறியாடும் வேலன். ``முதியாளோடு முரகனை முறையிற் கூவி'' (கந்தபு. வள்ளி. 155). 4. பாலைநிலத் தலைவன். (அரு. நி.). குறிஞ்சி நிலத் தேவனை இளைஞனென்று கருதியே, குறிஞ்சி நில மக்கள் முருகன் என்றனர். ஒ.நோ: குமரன் = இளைஞன், முருகன். ம. முருகன். க. முருக (ப.). முரு - முறு - முற் = 1. தளிர். ``முறிமேனி'' (குறள்.1113). 2. கொழுந்துல். ``இலையே முறியே தளிரே தோடே'' (தொல். மர. 88). 3. இலை (யாழ். அக.). முறிதல் = துளிர்த்தல். ``முறிந்த கோல முகிழாமுலையார்'' (சீவக. 2358). முறி - மறி = 1. குதிரை மான் முதலிய விலங்கின் இளமை. ``பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும்என் றொன்பதும் குழவியோ டிளமைப் பெயரே'' (தொல். மர. 1) ``யாடும் குதிரையும் நவ்வியும் உழையும் ஓடும் புல்வாய் உளப்பட மறியே'' (மேற்படி. 12) 2. அழுங்கின் குட்டி. (பிங்.). 3. மான்குட்டி. ``மறிகொள்கையன்'' (தேவா. 980 : 10). 4. செம்மறியாடு. ``மறியுடையாயர் மாதர்'' (கம்பரா. ஆற்று. 15). 5. மேழ ஓரை. (சூடா.). 6. ஆடு, குதிரை, கழுதை முதலியவற்றின் இளம்பெட்டை, பெண் விலங்கு. ஒ.நோ: நாகு = இளமை, சில விலங்கின் பெட்டை. (ikL) f., து. மரி. மண் - மாண் - மாணி = 1. இளமை. 2. அழகு. ``மாணிக்குறளுருவாய மாயன்'' (திவ். பெரியாழ். 5 : 2 : 5). அரும் 3. பள்ளிச் சிறுவன் ``கருமாணியா யிரந்த கள்வனே'' (திங். இயற். 2 : 61). 3. குறள் வடிவம். மண் - மாண் = 1. பள்ளிச் சிறுவன். ``மாணாகி வையமளந்ததுவும்'' (திவ். பெரியதி. 8 : 10 :8). 2. குறள் வடிவம் குறளன். ``குறுமா ணொருவன் தற்குறியாகக் கொண்டாடும் (தேவா. 164 : 5). மாண்மகன் = பள்ளிச்சிறுவன். ``பண்டு மாண் மகன்றன் செயல் பார்த்தவோ'' (தக்கயாகப். 672). மாண் - மாணவன் = 1. பள்ளிச் சிறுவன். ``மஞ்சனைக் குறுகியொரு மாணவப் படிவமொரு'' (உத்தரரா. அனுமப். 6). மாணவன் - வ. மாணவ. மாணவன் - மாணவகன் = 1. மாணி, மண்மாகா இளைஞன் ``பொச்ச மொழுகு மாணவகன்'' (பெரியபு.சண்டேச்சு. 40). 2. பள்ளிச் சிறுவன். ஓலைக் கணக்கன், மழபுலவன். ``ஆசான் முன்னே துயில மாணவகரை'' (திருமந். 2163). 3. எட்டுமுதல் பத்தாண்டிற்குட்பட்ட சிறுவன். (யாழ். அக.). மாணவன் - வ. மாணவக. மாணவகன் - மாணாக்கன் = கற்போன், பள்ளிச் சிறுவன் ``இவனோ ரிள மாணாக்கன்'' (குறுந். 33). முல்2 (முன்மைக் கருத்துவேர்) தோற்றக் கருத்தை அடிப்படையாகக் கொண்ட இளமைக்கருத்து வேர்ச்சொல்லின் உடனிலைக் கருத்துகள், சிறுமை மென்மை அழகு மறம் வலிமை என்பன என்பது, முந்திய கட்டுரையிற் குறிக்கப்பட்டது. தோற்றமும் இளமையும் ஓருயிரியின் வாழ்க்கையில் முற்பட்ட நிலைகளாதலாலும்,தோற்றமென்பது ஒன்று இன்னொன்றினின்று முன் வருதலாதலாலும், தோற்றக் கருத்தின் வழிநிலைக் கருத்து முன்மை யென்பது அறியப்படும். முன்மை யென்பது காலமுன் இடமுன் என இரு திறப்படும். கால முன்மை முதன்மையையும் முதுமையையும் குறிக்கும். முதுமை முதிர்ச்சியில் முற்றும். முல்-மூல்-மூலம் = 1. விதையினின்று முன்தோன்றும் முளை. 2. முளையின் மாற்றமாகிய வேர். 3. திரண்ட வேராகிய கிழங்கு (பிங்.). “Kâ®fÅ மூல முனிக்கண மறுப்ப (கல்லா. 38). 4. வேரை யொட்டிய அடிமரம். போதி மூலம் பொருந்தி (மணிமே. 26 : 47). 5. அடிப்படை. 6. முதல்(ஆதி). மூலவோலை மாட்சியிற் காட்ட (bgÇaò. தடுத். 56). 7. ஐம்பூத முதனிலை(மூலப் பிரகிருதி). மூலமுமறனும்........fdY«” (பரிபா. 13 : 24). 8. கரணியம்(காரணம்). “_y மாகிய மும்மலம் (திருவாச. 2 : 111). 9. அடிமல மாகிய ஆணவம். மூலநோய் தீர்க்கு முதல்வன் கண்டாய் (தேவா. 845 : 9). 10. அடிவாயாகிய அண்டி. 11. அண்டியில் முளைபோல் தோன்றும் நோய் (அக. நி.) மூலம் -வ. மூல. மூல்-மூலி = 1. மருந்தாக வுதவும் வேருடைய புல் பூண்டு செடி கொடி. பாதாள மூலி படருமே (நல்வழி, 23). 2. மருந்துவேர். 3. கரணிய முதல்வன். மூலி-வ. மூலின். மூலி-மூலிகை = மருந்துவேர் (W.). 2. மருந்து வேர்ச்செடி. மூலிகை-வ. மூலிகா. முல்-முன் = 1. முதல் (பிங்.). 2. காலமுன். “ã‹ù§» K‹bd>c« ngijna” (jÅ¥gh.), யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே (பழ.). 3. இடமுன். என்னைமுன் நில்லன்முன் தெவ்விர் (குறள். 771). முன்னே கடிவாளம் மூன்றுபேர் தொட்டிழுக்க (தனிப்பா.). 4. அண்ணன். அறுமுகேசன்முன் (âUthyth. காப்பு. 2). 5. பழமை. முன்சொல்(பிங்.) = பழமொழி. k., க. முண், தெ. முனு. முன்-முன்னம். நம்மினு முன்ன முணர்ந்த வளை (குறள். 1277). க. முன்னம். முன்னம்-முன்னர். வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை (குறள். 435). முன்-முன்னை = 1.gHik. முன்னைப் பழம் பொருட்கும் (திருவாச. 7 : 9). 2. அக்கை. என்ற னன்னை நும்முன்னை (கம்பரா. மிதிலைக். 124). 3. அண்ணன். (திவா.). K‹nd-k., க. முன்னெ. முன்னன் = அண்ணன். பெட்பொடு முன்னனைக் காணும் (இரகு. அவதாரநீங். 13). முன்னவன் = 1. தேவன். முன்னவன் போதியில் (மணிமே. 28 : 141). 2. சிவபிரான். முன்னவன் கூடல் (கல்லா. 32 : 10). 3. அண்ணன். “K‹dt‹ வினவ (கம்பரா. வேள். 4). முன்னவள் = அக்கை (பிங்.). 2. மூதேவி. முன்னவள் பதாகையோடு..... வற்துற்ற வாபோல் (கந்தபு. சிங்கமு. 443). முன்னோன் = 1. கடவுள். முன்னோன் காண்க (திருவாச. 3 : 29). 2. குல முன்னைத் தலைவன். தாதைக் கொன்பது வழிமுறை முன்னோன்'' (மணிமே. 28 : 123-4). 3. தந்தை. வாட்குடியின் முன்னோனது நிலை (பு.வெ. 3 : 13, கொளு). 4. அண்ணன். “j«K‹ndh® தந்தை தாய் (பு.வெ. 9 : 33). முன்னுதல் = 1. எதிர்ப்படுதல். கதிர்முலைக் கன்னி மார்ப முன்னினர் முயங்கி னல்லால் (சீவக. 483). 2. முற்படுதல். முன்னியாடு பின்யான் ....... உங்ஙனே வந்து தோன்றுவனே (திருக்கோ. 16). முன்தானை-முன்றானை = சேலைக் கடைமுனை. முன்றானையிலே முடிந்தாளலாம்படி (ஈடு, 1 : 10 : 11). முன்-முன்பு = (பெ.) 1. முன்னிடம். தோட்டியான் முன்பு துரந்து சமந்தாங்கவும் (புறம். 14). 2. முற்காலம். 3. பழமை (கு.வி.எ.). முன்-முனி = நுனி. முன்-முனை = 1. முன். அத்தி னகரம் அகரமுனை யில்லை (தொல். புண. 23). 2. நுனி. வெய்ய முனைத்தண்டு (சீவக. 1136, பாட வேறுபாடு). 3. கூர்மை. 4. கடலுட் செல்லும் நீண்டு கூரிய நிலப்பகுதி. 5. முகம் (ஈடு, 10 : 5 : 10). 6. தலைமை (அக. நி.). 1. முன்னிலையில். தலையில் வணங்கவு மாங்கொலோ தையலார் முன்பே (திவ். திருவாய். 5 : 3 : 7). 2. முன்காலத்தில். முன்புநின் றம்பி வந்து சரண்புக (கம்பரா. வாலிவதை. 117). முன்-முன்று-முன்றில் = வீட்டின் முன்னிடம். பலவின் சுளையுடை முன்றில் (e‰. 77). தெ. முங்கிலி. முன்றில் - முற்றில் - முற்றம்(முன்றகம் - முன்றம் - முற்றம்(?)) = 1. வீட்டு முற்றம். மணன்மலி முற்றம் புக்க சான்றோர் (புறம். 178). 2. ஊர் முற்றம். வஞ்சி முற்றம் வயக்கள னாக (புறம். 373). 3. பரப்பு. ஏந்து முலைமுற்றம் வீங்க (அகம். 51). முன்று - முந்து, முந்துதல் = 1. முற்படுதல். முதுவருள் முந்து கிளவாச் செறிவு. (குறள். 715). 2. எதிர்ப்படுதல். முந்தின னருமறைக் கிழவன் (கம்பரா. தாடகை. 28). 3. விரைதல். முந்தா நின்ற வேட்கை (ஞானவா. சுக்கி. 7). 4. மேலெழுதல். உந்தி முதலா முந்துவளி தோன்றி (தொல். எழுத்து. 83). 5. முதன்மையாதல். “mitÆ‹ முந்தி யிருப்பச் செயல் (குறள். 67). 6. சிறத்தல். 7. பழமையாதல். க. முந்து. முந்து = 1. முற்காலம். முந்துறை சனகனாதி (கந்தபு. மேரு. 10). 2. முன்பு. 3. தொடக்கம்(ஆதி). முந்து நடுவு முடிவு மாகிய (âUthr. 18 : 5). முந்து - முந்தன் = கடவுள். முந்தனை யான்மா வென்றும் (சி.சி. 4: 28). முந்துநூல் = முன்னூல். முந்துநூல் கண்டு முறைப்பட வெண்ணி (bjhš. சிறப்புப்.). முந்தி = (பெ.) 1. முன்னிடம். 2. முன்றானை. பொதுமாதர் முந்தியே தொடுமிடங்கள் (குற்றா. தல. மந்தமா. 21). 3. (கு. வி.எ.) முற்காலம். முந்திவா னோர்கள் வந்து (தேவா. 477 : 8). முந்து - முந்தை = (பெ.) 1. முற்காலம். முந்தைத்தான் கேட்ட வாறே (சீவக. 545). 2. பழைமை (பிங்.). 3. முன்னோன். “jªijahba‹ றிவர்க்கு... முந்தைவழி நின்று (பு.வெ. 9 : 33). 4.(F.É.v.) குவி வந்தடி பொருந்தி முந்தை நிற்பின் (புறம். 10). முந்தை-முத்தை = முன்னிடம். முத்தை வரூஉங் காலந் தோன்றின் (bjhš. எழுத்து. 164). க. முந்தெ. முந்திசினோர்-முன்னோர். இலங்குகதிர்த் திகிரி முந்திசி னோரே (gâ‰. 69 : 17). முந்தி + ஈயினோர் = முந்தியீயினோர்-முந்தீயினோர் - முந்தீசினோர் - முந்திசினோர். ஈதல் = இடுதல். ஈ' ஒரு துணைவினை. ஒ.நோ: வந்து + இடு = வந்திடு = வந்துவிடு. உரைத்து + இடு = உரைத்திடு. ஈ - ஈயினார்: (பலர்பால் இறந்தகால வினைமுற்றும் வினையாலணை யும் பெயரும்.) ஈயினவர்-ஈயினார் (வினையாலணையும் பெயர்)- ஈயினோர் = ஈந்தோர். ஒ.நோ: ஆயினார்-ஆயினோர், போயினார்-போயினோர். ஈதல் என்னும் வினை, இவ்வகையில் மூவிடத்தும் துணைவினையாக வரும். முன்னிலையிடத்திற்கு எடுத்துக்காட்டு இறந்துபட்டது. இவ் வாய்பாட்டு வினைமுற்று அல்லது வினையாலணையும் பெயர், தன்மையிலும் படர்க்கையிலும் ஈறு குன்றியும் வரும். ஈறு குன்றாது வருவது படர்க்கையிற் பெரும்பான்மை. தன்மையில் ஈறு குன்றாது வருவதற்கு இக்காலத் தெடுத்துக்காட்டில்லை. எ-டு: ஈறு குன்றா வினையாலணையும் பெயர் “áwªâándh®” (தொல். உயிர். 93) அறிந்திசி னோரே (குறுந். 18), படைத்திசி னோரே (புறம். 18). ஈறு குன்றிய வினைமுற்று தன்மை ``மெய்தெரி வளியிசை யளவுநுவன் றிசினே'' (தொல். எழுத்து. பிறப். 20): படர்க்கை. ``பாடல் சான்ற விறல்வேந்த னும்மே... துப்புறுவர் புறம்பெற் றிசினே'' (புறம்.11). நுவன்றீயினேன்-நுவன்றீசினேன்-நுவன்றிசினேன்-நுவன்றிசின். புறம்பெற்றீயினான்-புறம்பெற்றீசினான்-புறம்பெற்றிசினான்-புறம்பெற்றிசின். இன்னும் இதன் விரிவைத் தமிழ்நாடு அரசு செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியிற் காண்க. முந்திரி1 = 1/320 ஆகிய கீழ்வா யிலக்கம். ``முந்திரிமேற் காணி மிகுவதேல்'' (நாலடி. 346). முந்து+இரி = முந்திரி. இரிதல் = விலகுதல், பிளத்தல், கெடுதல், இரிசல் = பிளவு. ஒ.நோ; பின்னம் = 1. பிளவு. 2. கீழ்வா யிலக்கம். E. fraction, f L. frang, break. கீழ்வா யிலக்கங்களுள் முந்தியது முந்திரி யெனப்பட்டது. முந்திரி2 = அண்டிமா (cashew). முன்+துரி = முந்துரி-முந்திரி. துருத்தல் = முன் தள்ளுதல் (த. வி.). துருத்துதல் =முன்தள்ளுதல் (பி. வி.). முந்திரிக்கொட்டை பழத்திற்கு வெளியே முன் தள்ளிக்கொண்டிருத்தலால், அதன் பழமும் மரமும் முந்திரி யெனப்பட்டன. அண்டிமா என்பதும் இப் பொருளதே. அண்டியில் (அடியில்) கொட்டையுடைய பழமா அண்டிமா. தெ. முந்த மாமிடி. முந்தூழ் = பழவினை (W.). முந்து-முது-முதல் = 1. தொடக்கம் (ஆதி). ``முதலூழி யிறுதிக்கண்'' (சிலப். 8 : 1, உரை) 2. முதலிலிருப்பது. ``முதல்நீ டும்மே'' (தொல். எழுத்து. 458). 3. கரணியம் (காரணம்). ``nehŒKj னாடி'' (குறள். 948). 4. மூல கரணியனான கடவுள். ``மூவா முதலாய் நிள்ற முதல்வா" (திருவாச. 27 : 10). 5. முதலானவன். ``முதலாய நல்லா னருளல்லால்'' (திவ். இயற். 1 : 5). 6. தலைமை வரிசை. முதன் மாணாக்கன். 7. அடைகொளி (விசேடியம்) (சைவப்). 8. மூலவைப்பு. ``முதலிலார்க் கூதிய மில்லை'' (குறள். 449). 9. வேர். ``முதலி னூட்டுநீர்'' (அரிச். பு. மீட்சி. 17). 10. கிழங்கு. 11. அடிப்பாகம். ``வாடிய வள்ளி முதலரிந் தற்று'' (குறள். 1304). 12. அடிமரம். ``வேங்கையைக் கறுவுகொண் டதன்முதற் குத்திய மதயானை'' (கலித். 38). 13. இடம். ``சுரன்முதன் மராத்த வரிநிழல்'' (சிறுபாண். 8). 14. முதற்பொருள். ``முதலெனப் படுவது நிலம்பொழு திரண்டி னியல்பென மொழிப''. (தொல். அகத். 4). 15. பிண்டப் பொருள். ``முதலுஞ் சினையும்'' (தொல். வேற்றுமை. 6). 16. செலவுக்காகச் சேமிக்கும் பொருள். ``திருப்பூ மண்டபத்துக்கு முதலாக அளக்கவும்'' (S.I.I.III, 215 : 11). 17. இசைப்பாட்டு வகை (சிலப். 3 : 41-2, உரை). 18. வணிகப் பண்டக் கொள்விலை. 19. முதலெழுத்து, ``எழுத்தது முதல்சார் பெனவிரு வகைத்தே'' (நன். 58). (கு. பெ. எ. ) முதலான. முதலாயிரம். (கு. வி. எ. ) 1. முதலில். முதல்வந்தவன். 2. கூட. தண்ணீர் முதலாய் இங்கே கிடையாது (உ. வ. ) (இ. சொ.) 1. 5ஆம் வே. உருபு, அடிமுதல் முடிவரை (உ. வ.) 2. 7ஆம் வே. உருபு. ``குணமுதற் றோன்றிய... மதியின்'' (மதுரைக். 195). க. முதல். முதலுதல் = (செ. கு. வி.) 1. முதலாதல். ``முதலா வேன தம்பெயர் முதலும்'' (தொல். மொழி. 33. ) 2. தொடக்கமுடைய தாதல். ``மூவா முதலா வுலகம்'' (சீவக. 1). (செ. குன்றாவி.) முதலாகக் கொண்டிருத்தல். ``அகர முதல வெழுத்தெல்லாம்'' (குறள். 1.). முதல்வன் = 1. தலைவன். ``மூவர்க்கு முதல்வ ரானார்'' (தேவா. 453 : 2). 2. கடவுள். ``ஞாலமூன் றடித்தாய முதல்வன்'' (கலித். 124). 3. அரசன். (திவா.). 4. தந்தை. ``தன்முதல்வன் பெரும்பெயர்'' (கலித். 75). முதலவன் = குலமுதல்வன். ``முதலவன் முதலிய முந்தையோர்'' (கம்பரா. பள்ளிபடை. 50). முதலோன் = கடவுள். ``செஞ்சடை முதலோன்'' (கம்பரா. நிகும் பலை.142). முதலி = 1. தலைவன். ``எங்கள் முன்பெரு முதலி யல்லை யோவென'' (பெரியபு. கண்ணப். 177). 2. பெரியோன். ``மூவர் முதலிகளுந் தேவாரஞ் செய்த திருப்பாட்டும்'' (ஏகாம். உலா. 78). 3. ஒருசார் வெள்ளாளருக்கும் செங்குந்தருக்கும் ஒருசார் தஞ்சை மாவட்டச் சமணருக்கும் வழங்கும் குலப்பட்டப் பெயர். க. bkhjÈf(g). முதலியார்-மேற்குறித்த மூவகுப்பார்க்கும் வழங்கும் குலப்பட்டப் பெயர். முதலியோர் = முதலிய பிறர். கட்டாய இந்தியை எதிர்த்துத் தமிழைக் காத்தவர், மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார் முதலியோ ராவர். முதலியாண்டான் = 1. இராமானுசரின் மாணவரான ஒரு திருமாலடியார். 2. இராமனுசரின் திருவடி நிலை மகுடம். முதன்மை = தலைமை. கணித மாக்களை முடிவுற நோக்கியோர் முதன்மை கூறி (கம்பரா. மந்தரை. 1). முதலிமை = தலைமை (புதுக். கல்வெட்டு, 361). முதலாளி-1. மூலவைப்புள்ளவன். 2. பெருநிலக்கிழார். 3. தொழிற் சாலை அல்லது வணிகநிலைய உரிமையாளர். 4. தலைவன். முது-முதார்-முதாரி = முன்கை வளையல். முன்கை முதாரியு மொளிகால (முத்துக். பிள். 17). முந்து-முது-முதுமை = 1. பழமை (பிங்.). 2. மூப்பு. இளமை நாணி முதுமை யெய்தி (மணிமே. 4 : 107). 3. முதுமொழி (சூடா.). 4. முற்றின நிலை (பிங்.). 5. முதுகாஞ்சி. கழிந்தோ ரொழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும் (தொல். புறத். 24). முதுகண் = 1. முதன்மைக் களைகண். முற்றிழை மகளிர்க்கு முதுக ணாமென (பெருங். உஞ்சைக். 36 : 198). 2. பேரறிவுரைஞன். முதுகாடு = 1. பழங்காடு (திவா.). 2 சுடுகாடு. “KJfh£oil.......elkho” (தேவா. 773 : 1). முதுகுடி = குறிஞ்சியும் முல்லையும் இணைந்து வறளும் பாலை நிலத்தில் கற்றோன்றி மண்டோன்றாக் காலத்து வாளொடு முற்றோன்றி மூத்த மறவர் குலம். முதுக்குடி. முரசுகடிப் பிகூஉம் முதுக்குடிப் பிறந்தோன். (மணிமே. 1 : 31). முதுகுரவர் = தாய் தந்தையர். எம்முது குரவ ரென்னுற் றனர்கொல் (சிலப். 16 : 60). முதுசொம் = முன்னோர் தேட்டு (யாழ்ப்.). முதுசொல் = பழமொழி. தம்பானை சாய்ப்பற்றா ரென்னு முதுசொல்லும் (திருவிசை. வேணாட். 2). முதுபாலை = காட்டிற் கணவனை யிழந்த தலைவி தனிநின்று புலம்புவதைக் கூறும் புறத்துறை. நனிமிக சுரத்திடைக் கணவனை யிழந்து தனிமகள் புலம்பிய முதுபா லையும் (தொல். புறத். 24) முதுவெழுத்து = தேறின எழுத்து (W.). முதுவேனில் = கடுங்கோடை. முதுவர் = 1. மூத்தோர். தமராகிய முதுவர் (கந்தபு. வள்ளியம். 43). 2. அறிவாற்றல் மிக்கோர். முதுவருள் முந்து கிளவாச் செறிவு (குறள். 715). 3. மந்திரிமார். 4. புலவர். 5. ஒருசார் மலைவாணர். முதுவோர் = 1. அரசன், ஆசிரியன், தாய், தந்தை, அண்ணன் முதலிய பெரியோர். முதுவோர்க்கு முகிழ்த்த கையினை (áWgh©. 231). 2. மூத்தோர். 3. அமைச்சர். 4. அறிவான் மிக்கோர். 5. புலவர். முதியன் = மூத்தவன். இளையரு முதியருங் கிளையுடன்றுவன்றி (mf«. 30). முதியன் = 1. மூத்தவன். (கலித். 25). 2. அகவை முதிர்ந்தோன். 3. நான்முகன். தொடங்கற்கட் டோன்றிய முதியவன் முதலாக (fȤ. 2). முதியாள் = 1. மூத்தவள். 2. தேவராட்டி. தெய்வநிகழ் குறமுதியாள் சென்ற பின்பு (பெரியபு. கண்ணப்ப. 52). முதுவல் = பழைமையாற் பழுதானது. முது - முதார். முதார்மாடு = பால் முற்றிய ஆன். முதார் - முதாரி = 1. முதுமை. முதாரிப் பாண (புறம். 138). 2. பால் மறக்குங் f‹W(W.). 3. முதார் மாடு (சங். அக.). 4. முற்றியது. முதாரிக்காய். (சிலப். 16 : 24, அரும்.). முது = பேரறிவு. முதுவா யிரவல (சிறுபாண். 40). இளமையில் அறிவின்மையும் முதுமையில் அறிவுண்மையும், பட்டறிவின் மை யுண்மையால் ஏற்படும் இயற்கை நிலைமையென்பதை, மடம் மு து என்னுஞ் சொற்கள் உணர்த்துதல் காண்க. முது - முதுக்கு = அறிவு, தெருட்சி, பேரறிவு. முதுக்கு + உறை = முதுக்குறை. முதுக்குறைதல் = அறிவு மிகுதல். முகத்தின் முதுக்குறைந்த துண்டோ (குறள். 707). உறைதல் = தங்குதல். 2. பெண் பூப்படைதல் (தெருளுதல்). முதுக்குறைவு = 1. பேரறிவு. ஏதிலார் யாதும் புகல விறைமகன் கோதொரீஇக் கொள்கை முதுக்குறைவு (நீதிநெறி. 33). 2. பெண் தெருளுகை (பூப்படைவு). முதுக்குறை = பேரறிவு. முதுக்குறை நங்கை (சிலப். 15 : 202). முது + குறைவு = முதுக்குறைவு = பேதைமை (சூடா.). முது - முதிர். முதிர்தல் = 1. முதுமை மிகுதல். அகவை முதிர்ந்தவர். 2. விளைவு முற்றுதல். 3. கருநிரம்புதல். சூன் முதிர்பு (புறம். 161). 4. நிறைதல். உறைமுதிரா நீரால் (திணைமாலை. 103). 5. கடுமையாதல். முதிர்வேனில்(சங். அக.). 6. சொல் திருந்துதல். முதிராக் கிளவியள் (மணிமே. 22 : 181). க. முது, தெ. முதுரு. முதிர் - முதிர்ச்சி = 1. முற்றிய விளைவு. 2. முதுமை மிகுதி. 3. பழுத்த பருவம். 4. முதுக்குறைவு (திவா.). 5. வினை பயன்றரு நிலை. முதிர் - முதிரி - முதிரிமை = முதுமை (யாழ். அக.). L. maturare, F. maturer, M.E. maturus, ripe, E. mature. முது - முதை = பழங்கொல்லை. முதைச்சுவற் கலித்த முற்றா விளம்புல் (குறுந். 204). முதை - முதையல் = பழங்காடு (சூடா.). 2. கடுகு (சங். அக.). முது - (முத்து) - முற்று. முற்றுதல் = (செ.கு.வி.) 1. முதுமை யடைதல் (பி ங்.). 2. முதிர்தல். முற்றி யிருந்த கனியொழிய (நாலடி. 19). 3. முழு வளர்ச்சியுறுதல். ஓர் முற்றா வுருவாகி (திவ். திருவாய். 8 : 3 : 4). 4. தேர்ச்சி பெறுதல். புரவிப் போருங் கரப்பறக் கற்று முற்றி (சீவக. 1678). 5. மூண்டெழுதல். முற்றெரிபோற் பொங்கி (ò.bt. 8 : 16). 6. வயிரங் கொள்ளுதல் (சூடா.). 7. நிறைவேறுதல். இமையோர்க் குற்ற குறைமுற்ற (கம்பரா. கடல்காண். 11). 8. முடிதல். தங்கரும முற்றுந் துணை (நாலடி. 231). 9. இறத்தல். மாற்றமுந் தாரானா லின்று முற்றும் (திவ். பெரியாழ். 2 : 10 : 1). 10. கடுத்தல். 11. நிறைவேறுதல். (br. குன்றா வி.) 1. செய்து முடித்தல். வேள்வி முற்றி (புறம். 15). 2. அழித்தல். முற்றினன் முற்றின னென்று முன்பு வந்து (கம்பரா. கும்பகர். 311). ம. முத்துக. முற்றிழை = 1. வேலைப்பாடு திருந்திய அணிகலம். 2. அதை யணிந்த பெண். பெற்றிலேன் முற்றிழையை (திவ். பெரிய தி. 3 : 7 : 8). முற்றல் = 1. மூப்பு (சூடா.). 2. முதிர்ச்சி. 3. முற்றியது. முற்றன் மூங்கில் (திவ். திருச்சந். 52). 4. வயிரம். 5. முற்றிய பழக்காய். “K‰w‰ சிறுமந்தி......F‰¿¥ பறிக்கும் (நாலடி. 237). 6. நெற்று. 7. முடிகை (சூடா.). 8. திண்மை. முற்றல் யானை (â›. திருச்சந். 52). முற்ற = முடிய. முற்ற முடிய = முழுதும் முடியும்வரை. முற்றும் = முழுதும். முற்று முணர்ந்தவ ரில்லை முற்று-முற்றன் = முழு நிறைவன். முற்றிலா தானை முற்றனே யென்று மொழியினும் (தேவா. 648 : 9). முற்றிமை = முதிர்ந்த அறிவு. “முற்றிமை சொல்லின் (சீவக. 2511). முற்று - முற்றி. முற்றித்தல் = முடித்தல். கரும மாயினும் முடியும் வாயின் முற்றித்து (பெருங். மகத. 1 : 69). முது - மூது = முதுமை. மூதானவன் முன்னர் முடிந்திடும் (கம்பரா. பிராட்டி களங்காண். 18). க. மூதி. மூதறிதல் = 1. அறிவு முதிர்தல். 2. பழமையான செய்திகளை a¿jš. “_j¿í மம்மனைமார் சொல்லுவார் (திவ். இயற். சிறிய ம. 19 ). மூதா = கிழ ஆன். வளைதலை மூதா (பதிற். 13 : 5). மூதாய் = பாட்டி. மூதணங்கு = காளி (சூடா.). மூதிரி = 1. கிழமாடு. 2. கிழ எருமை. 3. எருமை (சது.). மூதிரி-மூரி = 1. பெருமை. மூரிக் கடற்றானை (பு.வெ. 3 : 3). 2. வலிமை. மூரி வெஞ்சிலை (கம்பரா. கும்பகருண. 26). 3. பழமை (W.). 4. கிழம். மூரி யெருத்தா லுழவு (இன். நாற். 21). 5. எருமை. ``nkh£os மூரி யுழக்க (கம்பரா. அகலிகை. 69). 6. எருது. ``நெறிபடு மருப்பி னிருங்கண் மூரியொடு'' (பதிற்றுப். 67 : 15). 7. விடையோரை (திவா). ம. மூரி. bj., f., து. முரி. மூதில் = 1. பழங்குடி. 2. பழமையான மறக்குடி. ``தமியன் வந்த மூதிலாள'' (புறம். 284). மூதுணர்தல் = நன்றாக வுணர்தல். ``மூதுணர்ந்தவ ரன்றி மொழிவாரோ'' (உபதேசகா. சிவபுண். 229). மூதுரை = 1. பழமொழி. ``மூழையுப் பறியாத தென்னு மூதுரையு மிலளே'' (திவ். பெரியாழ். 3 : 7 : 4). 2. பிற்கால ஔவையார் இயற்றிய ஓர் அறநூல். மூதுவர் = முன்னோர். ``விண்ணாட்டவர் மூதுவர்'' (திருவிருத். 2). மூதை = (பெ.) 1. பழங்கொல்லை. 2. காளி. (W). (கு.பெ.எ.) முந்தை. ``முதைவினை கடைக்கூட்ட'' `(சிலப். 9) இறுதி வெண்பா.). முது - மூ. மூத்தல் = 1. அகவை யுயர்தல். ``மூத்தோன் வருக வென்னாது'' (புறம். 183). 2. முதுமை யுறுதல். ``தமியண் மூத்தற்று'' (குறள். 1007). 3. முடிதல். ``மூவா முதலா வுலகம்'' (சீவக. 1). 4. கெடுதல். ``மதிலெய்த மூசரச் சிலை முதல்வர்க்கு'' (தேவா. 936 : 4). மூ = மூப்பு. (யாழ். அக.) மூத்தண்ணன் = பெரியண்ணன். மூத்ததிகாரம் = தலைமை யதிகாரம் (T.A.S.). மூத்த திருப்பதிகம் =காரைக்காலம்மையார் இயற்றிய பதிகம் (பெரியபு. காரைக்கா. 63). மூத்தப்பன் = பாட்டன். ``எம்மு னெந்தை மூத்தப்பன் (தேவா. 1086 : 9) ம. முத்தப்பன். மூத்த பிள்ளை = திருவாங்கூர் அரசரால் நாஞ்சில் நாட்டு வெள்ளாளருக்குக் கொடுக்கப்பட்ட பட்டம். மூத்தவன் = 1. அகவையிற் பெரியவன். 2. அண்ணன் ``மூத்தவற் கரசுவேண்டிய முன்புதூதெழுந்தருளி'' (திங். பெரியதி. 4 : 6 : 7). 3. மேலோன். (W.) மூத்தார் = 1. மூத்தோர். ``மூத்தாரிளையார்'' (ஆசாரக். 35). 2. கணவனின் தமையனார். மூத்தவள், மூத்தாள் = 1. முதியவள். (பிங்.) 2. அக்கை 3. முதல் மனைவி. 4. மூதேவி. (யாழ். அக.). மூத்தோர் = 1. முதியவர். ``விருந்தினர் மூத்தோர்'' (ஆசாரக். 22.). 2. பண்டிதர். (திவா.) 3. மந்திரிமார். (âth.(. மூத்தோன் = 1. அகவை மேற்பட்டவன். 2. அண்ணன். (பிங்.) 3. முதியவன். 4. 48-ற்குமேல் 64 அகவைக் குட்பட்டவன். (W.) மூ - மூப்பு = 1. அகவை யுயர்வு. 2. முதுமை. ``முனிதக்க மூப்புள'' (நாலடி. 92). 3. தலைமை. (யாழ். அக.). 4. ஒட்டாரச் செருக்கு. தன் மூப்பு = முற்றதிகாரம். ம. _¥ò, bj., க. முப்பு. மூப்பன் = 1. சில குலத்தாரின் ஊர்த் தலைவன். 2. சில குலத்தாரின் பட்டப்பெயர். மூப்பான் = 1. அகவை மேற்பட்டவன். 2. ஆட்டத்தில் வென்றவன். 3. முதியவன். 4. சிவபிரான். ``மூப்பான் மழுவும்'' (தனிப்பா. i, 32 : 61). மூப்பர் = 1. பெரியோர். ``மூப்பரை யிகழ்ந்தோமாகில்'' (அரிச். பு. நகர்நீ. 151). 2. கிறித்தவக் குருமாருள் ஒருவகையார் (Deacons) - W. மூப்பி = 1. முதுமகள். ``மூப்பிமாராலே............... நீராட்டி'' (சீவக. 1892, உரை). 2. தலைவி. (W.). மூப்புக்கழிவு = 1. ஊர்த் தலைவனுக்குச் சேரவேண்டிய பொருள். (M.M.509). 2. வரித் தொகையிலிருந்து ஊர்த் தலைவனுக்குரியதைக் கொடுத்ததனாற் கழிக்கப்படும் பகுதி. மூப்பு முகனை = தலைமை பற்றிவரும் சொற் செல்வு (யாழ்ப்.). மூதேவி = 1. திருமகளுக்கு முந்திப் பிறந்தவளென்று சொல்லப்படும் வறுமைப் பெண் தெய்வம். 2. சோம்பல், பகல் தூக்கம். மூதேவியடைந்து முடங்கிக் கிடக்கிறாள். (உ.வ.). 3. ஆக்கங் கெட்ட சோம்பேறிப் பெண். 4. ஒருவகைச் சொல். முல்3 (மென்மைக் கருத்துவேர்) எல்லா உயிரினங்கட்கும், இளமையிற் பெரும்பாலும் உடல் மென்மையாயிருப்பது இயல்பே. மாந்தரினத்துள், ஆடவனினும் பெண்டு மெல்லுடம்பியாயினும், குழவிப் பருவத்தில் இருபாலும் ஒருநிகரான மென்மையாகவே யிருத்தல் காண்க. பச்சிளமையிலும் சிற்றிளமையிலும் உடம்பும் தன்மையும் மென்மையா யிருப்பதால், இளமைக் கருத்தினின்று மென்மைக் கருத்துத் தோன்றிற்று. மென்மை அதையுடைய பொருளுக்கேற்றவாறு பலதிறப்படும். முல்-மெல் = மெதுவான. ஆம்பல் மெல்லடை கிழிய (அகம். 56). மெல்-மென்மை = 1. மெதுவுத் தன்மை. கயவென் கிளவி மென்மையுஞ் செய்யும் (தொல். உரி. 24). 2. வலியின்மை. “nkt‰f மென்மை பகைவ ரகத்து (குறள். 877). 3. மெல்லெழுத்து. மேவு மென்மை மூக்கு (நன். 75). 4. அமைதி. “bkšÈa நல்லாருள் மென்மை (நாலடி. 188). 5. தாழ்வு. “bk‹brh லேனும்......ïfHh®” (கந்தபு. அவையட. 3). 6. சிறுமை, நுண்மை. மெல்ல = 1. மெதுவாக, சிற்றளவாக. தானோக்கி மெல்ல நகும். (குறள். 1094). 2. அமைதியாக, அடக்கமாக. மெல்ல வந்தென் நல்லடி பொருந்தி (புறம். 73). க. மெல்லெனெ, தெ. bkšyfh(g). மெல்லென = மெல்ல. மெல்லெனல் = 1. மெத்தெனற் குறிப்பு. மெல்லென் சீறடி (bjhš. கற்பு. 5). 2. குரல் தாழ்த்திப் பேசற் குறிப்பு. “bkšbyd¡ கிளந்தன மாக (பொருந. 122). 3. மந்தக்குறிப்பு (Nlh.). மெல்லன் = மெல்லிய தன்மையன். மெல்லடை = மெல்லிய அடை, அப்ப வகை (பிங்.). மெல்லணை = 1. மெத்தை. மெல்லணைமேல் முன்துயின்றாய் (â›. பெருமாள். 9 : 3). 2. சட்டை (சூடா.). மெல்லரி = உயர்ந்த சிறிய அரிசிவகை. உலைதந்த மெல்லரி (âUkª. 422). மெல்லம் புலம்பு = மணலால் மெல்லிய நெய்தல் நிலம் (âU¡nfh. 379, உரை). மெல்லி = மெல்லியலுடைய பெண். மெல்லி நல்லாள் தோள்சேர் (M¤âN.). மெல்லிக்கை = சிறியது, பருமனற்றது (W.). மெல்லிது = 1. மென்மையான பொருள். மலரினும் மெல்லிது காமம் (குறள். 1289). 2. ஒல்லியானது. 3. சிறியது. மெல்லிது - மெல்லிசு. மெல்லிதரம் - மெல்லிசரம். மெல்லிசை = மெதுவான ஓசை. மெல்லிசை வண்ணம் = மெல்லெழுத்து மிகுந்துவரும் செய்யு ளோசை. மெல்லிசை வண்ணம் மெல்லெழுத்து மிகுமே (bjhš. செய். 215). மெல்லியல் = 1. மென்மையான இயல்பு. மெல்லியற் குறுமகள் (FWª. 89). 2. பெண். மெல்லிய லாக்கை முற்று நடுங்கினள் (f«guh. மாயாசனக. 18). 3. இளங்கொம்பு (சூடா.). மெல்லியர் = 1. வலிமை யில்லாதவர். தேவர் மெல்லியர் (f«guh. யுத்த. மந்திரப். 32). 2. உடல் மெலிந்தவர் (W.). 3. எளியவர். எச்சத்தின் மெல்லியராகி (நாலடி. 299). 4. புல்லிய குணமுடையவர். மடவர் மெல்லியர் செல்லினும் (புறம். 106). 5. பெண்டிர் (W.). மெல்லியலாள் = பெண். மெல்லியலா ளொடும்பாடி (தேவா. 284: 8). மெல்லியன் = அறிவு குன்றியவன் (புறம். 184). மெல்லினம் = மெல்லொலியுடைய மெய்யெழுத்துகள். (நன். 69). மெல்லெழுத்து = மெல்லின மெய். மெல்லெழுத் தென்ப ஙஞண நமன. (தொல். நூன். 20). மெல்லொற்று = மெல்லின மெய். மெல்லொற்றுத் தொடர்மொழி (தொல். குற்றிய. 9). மெல்வினை = பணி(சரியை), பத்தி(கிரியை) என்னும் மதவினைகள். “vËjhdt‰iw மெல்வினையே யென்றது (திருக்களிற்றுப். 17). ஒ.நோ: மெல்: E. mellow, soft, OE. mela, melw, Gk. melakos, soft. L. mollis, soft; molluscus, soft-bodied animal; mollusca, sub-kingdom of soft-bodied animals. F. mollusque, E. mollusc. L. mollificare, make soft; F. mollifier, E. mollify. Rom. molliare, OF. mollier, moisten, E. moil. E. mild, gentle; OE. milde, OS. mildi, OHG. milt; ON. mildr; Goth. milds. மென்கண் = இரக்கம். மென்கண் பெருகி னறம்பெருகும் (eh‹kÂ. 92). மென்கணம் = மெல்லின மெய்கள் (நன். 158, உரை). மென்கால் = மென்காற்று, தென்றல். மென்கால் பூவளவிய தெய்த (கம்பரா. வனம்புகு. 2). மென்சொல் = 1. இனிய சொல் (நாமதீப. 668). 2. அன்பான சொல் (W.). மென்பறை = பறவைக் குஞ்சு. மென்பறை விளிக்குரல் (ஐங். 86) . மென்பால் = மருதநிலம். வளம்வீங் கிருக்கை...bk‹gh றோறும் (பதிற். 75 : 8). மென்பிணி = சிறுதுயில். மயக்கத்துப் பொழுது கொண்மரபின் மென்பிணி யவிழ (பதிற். 50 : 21). மென்புரட்டு = கைம்மாற்றிலே பணம் புரட்டுகை (யாழ். அக.). மென்புலம் = 1. நீர்வளத்தால் மெல்லிய மருதநிலம். மென்புல வைப்பி னன்னாட்டுப் பொருந (புறம். 42). 2. மணலால் மெல்லிய நெய்தல் நிலம். மென்புலக் கொண்கன் (ஐங். 119). மென்றொடர் = மெல்லின மெய்யை ஈற்றயலாகக் கொண்ட சொல். வன்றொடர் மென்றொடர் (தொல். குற்றிய. 1). மென்னகை = புன்சிரிப்பு. கவர்தலைச் சூலி மென்னகை விளைத்து (cgnjrfh. சிவவிரத. 163). மென்னடை = மெதுவான நடை. மென்னடை யன்னம் பரந்து விளையாடும் (திவ். நாய்ச். 5 : 5). 2. அன்னம் (பிங்.). மென்னிலை = நடன நளிநயக் கைவகை (W.). மென்மெல = மெல்ல மெல்ல. மென்மெல வியலி வீதி போந்து (bgU§. வத்தவ. 17 : 99). மெல்-மெல்கு. மெல்குதல் = 1. மெதுவாதல். காலின் மென்மைக்குத் தக்கபடி தானும் மெல்கிற்றிலள் (சிலப். 15 : 138, அரும்.). 2 நொய்யதாதல். மெல்கிடு கவள வல்குநிலை புகுதரும் (mf«. 56). 3. இளகுதல். ஒ.நோ: E. melt, become or make soft by liquifying by heat; OE. meltan, mieltan, ON. meta (digest). E. molten (melted). E. smelt (extract metal from ore by melting). MDu. or MLG. smelten. E. malt, OE. mealt, OS. malt, OHG. malz, ON. malt, cog. w. melt. மெல்(லு)தல் = 1. கடின அல்லது விழுங்க முடியாத உணவைப் பல்லால் அரைத்து மென்மையாக்குதல். மெல்லிலைப் பண்டியும் (Ótf. 62). 2. விடாது கடிந்து தொல்லைப்படுத்தல். இரவும் பகலும் என்னை மென்றுகொண்டிருக்கின்றான் (உ. வ. ). ஒ.நோ: Goth. mel, grind; malma, sand; ON. malmr, ore; E. malm, soft chalky rock; OE. mealm, cog. w. OS., OHG. melm, dust. E. meal, OE. mela, OS., OHG. melo, ON. mjol, cog. w. L. molere, grind, E.mill, building fitted with machinery for grinding corn. OE. mylen, OS. mulin, OHG. muli(n) f. LL. molinum, L. mila, mill f.mole, grind. E. molar, grinder (mammal’s back teeth serving to grind) f. molaris(mela, millstone). E. mull (Sc.), snuff box (var. of mill), box originally having a grinder. E. muller, tool used for grinding powders etc. on slab. ME. mol, mulour f. mul, grind. E. mullock(Austral.), refuse from which gold has been extracted, f. dial. mull, dust, rel. to OE. mgl, dust, MDu. mul, mol f. Gme root mul-, grind. E. multure, toll of grain or flour paid to muller. ME. or OF. milture f. med.L. molitura f. molere, grind. மெல்-மெள்-மெள்ள = மெல்ல. மெள்ள வெழுந்தரி யென்ற பேரரவம் (திவ். திருப்பா. 6). மெள்-மெள்ளென = மெல்லென. மெள்ளெனவே மொய்க்கு நெய்க்குடந் தன்னை யெறும்பு (திருவாச. 6 : 24). மெள்-மெள்ளம் = விரைவின்மை. மெள்ளமாய்ப் போ (உ.வ.). மெல்-மெலி. மெலிதல் = 1. வலி குறைதல். 2. உடல் இளைத்தல். “M¡ifia¥ போக்கப் பெற்று மெலிகின்ற என்னை (திருவாச. 6 : 10). 3. எளியராதல் (W.). 4. வருந்துதல். அளப்பினாள் மெலிகிற்பாள் (காசிக. மகளிர். 8). 5. கெடுதல். மெலியு நம்முடன் மேல்வினை யானவே (தேவா. 318 : 10). 6. வல்லெழுத்து இனமெல்லெழுத்தாக மாறுதல். குழைத்த வென்பது குழைந்தவென மெலிந்து நின்றது (புறம். 21, உரை). 7. முரலில்(சுரத்தில்) தாழ்தல். யாழ்மேற் பாலை யிடமுறை மெலிய(சிலப். 3 : 92). மெலிவு = 1. தளர்ச்சி. அணியிழை மெலிவின் (பு.வெ. 11, பெண்பாற். 5). 2. களைப்பு. மெலிவு தீர்தி (கம்பரா. திருவடி. 5). 3. பாடு. எங்களுக் குண்டான மெலிவுகளுங் சொல்லி (Insc. Pudu. 799). 4 துன்பம். 5. தோல்வி. மெலிவென்பது முணர்ந்தேன் (f«guh. முதற்போ. 181). 6. கொடுமை. வலியவர் மெலிவு செய்தால் (கம்பரா. வாலிவதை. 80). 7. சமனுக்குக் கீழ்ப்பட்ட ஓசை. வலிவும் மெலிவுஞ் சமனு மெல்லாம் (சிலப். 3 : 93). மெலித்தல் = செய்யுள் திரிபுகள் ஆறனுள், வல்லெழுத்து இனமெல்லெழுத்தாக மாறுதல் அல்லது மாற்றப்படுதல். (நன். 155). மெலிந்தோன் = 1. வலியற்றவன். 2. நோய்ந்தவன். 3. ஏழை. மெலிப்பு = 1. மெலித்தல், மெலியச் செய்தல். 2. மெல்லெழுத்து. “tšbyG¤J மிகுவழி மெலிப்பொடு தோன்றலும் (தொல். தொகை. 15). மெலியவன் = வலியற்றவன். மெலியவர் பால தேயோ வொழுக்கமும் விழுப்பந் தானும் (கம்பரா. வாலிவதை. 80). மெலியார் = வலியற்றவர். மெலியார்மேன் மேக பகை (குறள். 861). மெலிகோல் = கொடுங்கோல். மெலிகோல் செய்தே னாகுக (òw«. 71). மெல்-மெலு = எடைக் குறைவான காசு (W.). மெலு-மெலுக்கு = மென்மை (W.). மெலுக்கு-மெலுக்குவை = மென்மை (W.). தெ. மெலக்குவ. மெலு-மெது. ல-த, போலித்திரிபு. ஒ.நோ: சலங்கை-சதங்கை, கலம்பம்-கதம்பம். மெது = 1. மென்மை 2. வேகமின்மை 3. அமைதி (W.). 4. மந்தம். 5.kG¡f«. க. மெது. வ. ம்ருது. ஒ.நோ: E. smooth. OE. smooth(once usu. smethe, whence dial. smeeth). நாகம் என்னும் தமிழ்ச்சொல் snake என்று செருமானிய மொழிகளில் சகர முதன்மிகையொடு வழங்குவது போன்றே, மெது வென்னும் சொல்லும் வழங்குகின்ற தென்க. தமிழ்ச்சொற்களின் மகரவுறுப்பின்பின் ரகரத்தை இடைச் செருகுவது சமற்கிருத இயல்பே. எ-டு: அமுது(சோறு)-அம்ருத, மடி-மரி-ம்ரு, மிதி-ம்ருத். சென்னைப் ப.க. தமிழ் அகரமுதலியில், ம்ருது என்னும் சமற்கிருதச் சொல்லினின்று மெது என்னும் தென்சொல் திரிந்துள்ளதாகக் காட்டப்பட்டுள்ளது. மெது மெதுத்தல் = மெதுவாயிருத்தல் (W.). மெதுமெதுப்பு = மெதுத்தன்மை (W.). மெது-மெதுக்கு = சோறு (W.). தெ. மெதுக்கு. அரிசி அவிந்தபின் மெதுவாயிருத்தல் காண்க. மெதுக்கிடுதல் = மெதுவாயிருத்தல். மெதுகு = மென்மை. மெதுகரம் = நுண்ணிய வேலைப்பாட்டில் மெதுவாக அராவும் சன்ன அரம். மெதுகாணி (மெதுகு + ஆணி) = மெருகிடும் ஒரு கருவி. மெதுவடை = மெதுவாயிருக்கும் உழுந்து வடை. மெது-மெத்து-மெத்தென = மெதுவாக. மெத்தெனல் = 1. மென்மைக்குறிப்பு. மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி (திவ். திருப்பா. 19). 2. அமைதிக்குறிப்பு. 3. காலத் தாழ்ச்சிக் குறிப்பு. மெத்தென மாதைக் கொண்டு வருகுவல் (திருவாலவா. 62 : 7). 4. மந்தக் குறிப்பு (ஈடு, 1 : 10 : 11). க. மெத்தனெ. மெத்தெனவு = 1. அமைந்த குணம். 2. வளைந்து கொடுக்குந் தன்மை. 3. கவலையின்மை. மெத்தெனவு-மெத்தனவு = 1. காலத்தாழ்ப்பு. 2. கவலையின்மை. “bk¤jdɉ றுயிலுங்கால் (திருவாலவா. 27 : 70). மெத்தனவு-மெத்தனம் = 1. காலத்தாழ்ப்பு. 2. கவலையின்மை, பொருட்படுத்தாமை. மெத்து-மெத்தை = மெதுவான படுக்கை. ஒரு பாம்பை மெத்தையாக விரித்து (திவ். பெரியாழ். 5 : 1 : 7). கனகதண்டி மேலுக்குப் போட மெத்தையில்லை யென்பார்க்கும் (தனிப்பா.) 2. பஞ்சணை. 3. துயிலிடம் (திவா.). 4. சட்டை (பிங்.). 5. வேட்டையாடுவோர் தோளிலிடும் அணை. வலத்தோளிலே இட்ட மெத்தையும் (திவ். திருநெடுந். 21, வியா. ப. 170). k., தெ. மெத்த, க. மெத்தெ. மெத்தைக் கட்டில் = மெதுவணை பரப்பிய கட்டில். மெத்தைச் சட்டை = பஞ்சு உள்வைத்துத் தைத்த சட்டை. மெத்தைப் பாய் = மெத்தைமேல் விரிக்கும் பட்டுப் பாய். ம. மெத்தப் பாயி. மெதுகு-மெருகு. ஒ.நோ: விதை-விரை. மெருகு = மெதுவான பளபளப்பு. k., bj., f., து. bkUF(g). மெதுகரம்-மெருகரம் = மெருகு வேலையிற் பயன்படும் அரவகை. (C.G.). மெதுகாணி-மெருகாணி = மெருகுவளை யென்னும் தட்டார் கருவி. மெருகிடுதல் = பளபளப்பு உண்டாக்குதல் (W.). மெருகுக்கல் = மெருகிட உதவுங் கல் (C.E.M.). மெருகுச் சுண்ணாம்பு = சுவரிற் பூசும் சிப்பிச் சாந்து போன்ற நுண்ணிய சுண்ணச் சாந்து. மெருகு தேய்த்தல் = மெருகிடுதல். மெருகு போடுதல் = மெருகிடுதல். மெருகு மண் = தட்டார் மெருகிடுதற் குதவும் மண்வகை. மெருகு வளை = மெருகிட உதவும் தட்டார் கருவிவகை. மெருகெண்ணெய் = 1. பளபளப்பிற்காக மரப்பண்டங்களின் மேற் பூசும் எண்ணெய் (W.). 2. மினுக்கெண்ணெய் (யாழ். அக.). மெருகோடு = மேற்புறத்திற் பளபளப்புள்ள ஓடு (C.E.M.). மெல்கு-மெழுகு = 1. மெதுத்தன்மை. (அழகர்கல. 10). 2. இளகிய அல்லது களிப்பதமான மருந்து. 3. அரக்கு. மெழுகான் றூதுலைப் பெய்த பகுவாய்த் தெண்மணி (குறுந். 155). 4. ஆவின் சாணம். “JŒa மெழுகுடன் (திருமந். 1720). 5. சந்தனம். மெழுகு செய்தல் = மெதுவாக்குதல். புரவி கருவிகொ டுரிஞ்சிமிக மெழுகு செய்து (அழகர்கல. 10). மெழுகுதல் = 1. மேனியிற் சந்தனம் பூசுதல். முகிண்முலை மெழுகிய சாந்தின் (கம்பரா. பிணிவீ. 53). 2. நிலத்தைச் சாணமிட்டுத் துப்புரவு செய்தல். நின்றிருக் கோயி றூகேன் மெழுகேன் (âUthr. 5 : 14). 3. குற்றத்தை மறைத்துப் பேசிவிடுதல். மெழுகு-மெழுக்கு = 1. சாணத்தால் மெழுகுகை. புலர்வதன்முன் னலகிட்டு மெழுக்கு மிட்டு (தேவா. 727 : 3). 2. சாணம். “âUtyF« திருமெழுக்கும் தோண்டியுங் கொண்டு (பெரியபு. திருநாவுக். 68). 3. மேற் பூச்சுப் பொருள். வேரியின் மெழுக்கார்த்த மென்பூ நிலத்து (சீவக. 129). 4. அரக்கு. 5. பிசின். ம. மெழுக்கு. மெழுக்கு-மெழுக்கம் = சாணத்தால் மெழுகிய இடம். மலரணி மெழுக்க மேறி (பட்டினப். 248). மெழுக்குத்துணி = 1. மெழுகு பூசின துணி. 2. நீர்க்காப்புத்துணி. 3. நிலக்கரி நெய்யிட்ட ngh®it(Tarpaulin). மெழுக்கூட்டுதல் = மேற்பூச்சிடுதல். மெழுகிடுதல் = 1. நூலின்மேல் மெழுகு பூசுதல். 2. சாணமிட்டு நிலத்தை அல்லது திண்ணையைத் துப்புரவு செய்தல். 3. படிமை வார்க்க மெழுகினாற் கருக்கட்டுதல். மெழுகுக்களிம்பு = சிரங்கிற்கிடும் களிம்பு மருந்துவகை. மெழுகு கட்டுதல் = படிமை வார்க்க மெழுகினாற் கருக்கட்டுதல். மெழுகு கட்டி வார்த்தல் = மெழுகு கருவில் உருக்கின மாழைகளை (cnyhf§fis) வார்த்துப் படிமை யமைத்தல். மெழுகு சாணை = 1. மெழுகால் துடைத்த உரைகல். 2. மெழுகுங் கருமணலுங் கலந்து செய்த சாணைக் கல் (W.). மெழுகு சாத்துதல் = படிமை வார்க்க மெழுகினாற் கருக்கட்டுதல். “á‰g®fsh‹ மெழுகு சாத்தி (திருவாலவா. 45 : 2). மெழுகு சீலை = மெழுக்குத் துணி. மெழுகு சேர்வை = மெழுகுக் களிம்பு (W.). மெழுகுத்தண்டு = மெழுகுத் திரி (யாழ். அக.). மெழுகுத்திரி = மெழுகு திரி. மெழுகுத்துணி = மெழுக்குத் துணி. மெழுகு பதம் = காய்ச்சப்பட்ட மருந்தெல்லாம் சேர்ந்து மெழுகு போல் திரண்டுவரும் பதம். மெழுகு பனையன் = அம்மைநோய் வகை (யாழ். அக.). மெழுகு பாகல் = பாகல்வகை (மூ.அ.). மெழுகு பாளம் = மெழுகு தகடு. மெழுகு பீர்க்கு = பீர்க்குவகை (உ.வ.). மெழுகு பூச்சு = படிமைமேல் மெழுகு பூசியெடுக்கும் அச்சு. மெழுகு பொம்மை = 1. மெழுகினாற் செய்த விளையாட்டுப் படிமை. 2. மெய்வருத்தந் தாங்கமுடியாதவ-ன்-ள். க. மேனதுபொம்பெ (b.). மெழுகு போடுதல் = மரப்பண்டங்கட்குப் பளபளப்பேற்ற மெழுகைக் காய்ச்சிப் பூசுதல் (W.). மெழுகுமண் = கருக்கட்டும் பசைமண் (W.). மெழுகு முட்டம் = மெழுகு பாளம் (இடவழக்கு). மெழுகெண்ணெய் = மரப்பண்டங்கட்கு மெருகிட உதவும் மெழுகு சேர்த்த பூச்செண்ணெய் (இ.வ.). மெழுகெழுதுதல்=துணியில் அச்சடிக்க மெழுகால் உருவமெழுதுதல் (ï.t.). கவனிப்பு: ல ள ழ என்னும் மூன்று இனவொலிகளுள், முந்தியது லகரமே. ல திரண்டு ளகரமும், ள திரண்டு ழகரமும் ஆகும். எ-டு: கால்-காள்-காழ் (கருமை). லகரம் நேரடியாய் ழகரமாவது முண்டு. எ-டு: மால்-மழை. இனி, இத்தகைய சொற்றிரிவுகளில், இடைப்பட்ட ளகரச்சொல் இறந்துபட்ட தெனினுமாம். முல்4 (பொருந்தற் கருத்துவேர்) பொருந்தற் கருத்தினின்று ஒத்தல், முட்டுதல், சேர்தல், கூடுதல், மணத்தல், கலத்தல், பொருதல் முதலிய கருத்துகளும்; ஒத்தற் கருத்தினின்று, அளவிடுதல், மதித்தல், செருக்குதல் முதலிய கருத்துகளும்; முட்டுதற் கருத்தினின்று தடை, முடை, முடிவு முதலிய கருத்துகளும்; சேர்தற் கருத்தினின்று திரளுதல், பகுத்தல், விரிதல், மிகுதல், செழித்தல், அழகாதல் முதலிய கருத்துகளும்; பருத்தற் கருத்தினின்று மொத்தமாதல், வலுத்தல் முதலிய கருத்துகளும்; கலத்தற் கருத்தினின்று கலக்கம், மயக்கம் முதலிய கருத்துகளும்; மயக்கக் கருத்தினின்று இருட்சி, கருமை முதலிய கருத்துகளும் வழிநிலைக் கருத்துகளாகப் பிறக்கும். இவற்றினின்று மேற்கொண்டும் சில கிளைக் கருத்துகள் தோன்றும். முல்-முல்லை = குத்தகை (யாழ்ப்.). முல்லைக்காரன் = குத்தகைக்காரன் (யாழ்ப்.). ஒரு பொருள் முழுவதையும் குறித்த காலத்திற்குப் பயன்படுத்தச் செய்துகொள்ளும் ஒப்பந்தம் குத்தகை. முல்லை-மொல்லை = 1. மேழம் (பருத்த செம்மறியாட்டுக் கடா). 2. மேழவோரை (சூடா. உள். 9). மொல்லையிற் போடுதல் = குடும்பப் பொதுச் செலவிற்குக் கொடுத்தல். மொல்-மொலு. மொலு மொலு வெனல் = ஈக்கள் மொய்த்தற் குறிப்பு. மொல்-மொலோர். மொலோரெனல் = சிறுமீன் கூட்டம் நீர்மட்டத்தில் துள்ளிவரும் ஒலிக் குறிப்பு. ஒ.நோ: அர. முலாகாத் = சந்திப்பு. இந். மில்னா = சந்திக்கை, சந்திக்க; மில் = சந்தி(முதனிலை). முல்-மல் = 1. பருமை (யாழ்ப்.). 2. வளம். மற்றுன்று மாமலரிட்டு (âU¡nfh. 178). 3. வலிமை (பிங்.). 4. மற்போர். மல்லலைத் தெழுந்து வீங்கி (சீவக. 268). 5. மல்லன். மல்லொடு கஞ்சனுந் துஞ்ச வென்ற மணிவண்ணன் (திவ். பெரியதி. 11 : 2 : 3). 6. கண்ணபிரான் மல்லனாய் வாணாசுரனை வென்றாடிய கூத்து (ã§.). பல அணுக்கள் அல்லது உறுப்புகள் அல்லது பொருள்கள் பொருந்துவதால்(ஒன்றுசேர்வதால்) திரட்சி அல்லது பருமை உண்டாகும். ஒ.நோ: சேரே திரட்சி (தொல். உரி. 65). மிகுதியால் வளமும் பருமையால் வலிமையும் உண்டாகும். இருவர் அல்லது இரு படைகள் பொருந்தி அல்லது கூடிப் பொருவதே போர். பொரு(பொருந்து)-போர். கல-கலாம், கலகம். கைகலத்தல் என்னும் வழக்கையும் நோக்குக. மல்-மல்லல் = 1. மிகுதி. 2. வளம். மல்லல் வளனே (தொல். உரி. 7). 3. செல்வம். மல்லற்கேண் மன்னுக (பரிபா. 11 : 121). 4. வலிமை. மல்லன் மழவிடை யூர்ந்தாற்கு (சிலப். 17, கொளு. 3). 5. பொலிவு (சூடா.). 6. அழகு. மல்லற்றன் னிறமொன்றில் (âU¡nfh. 58, பேரா.). மல்-மலை. மலைதல் = 1. ஒத்தல். கவிகை மாமதிக் கடவுளை மலைய (கந்தபு. சூரனரசிருக். 9). 2. எதிர்த்தல் (சூடா.). 3. பகைத்து மாறுபடுதல். இகன்மலைந் தெழுந்த போதில் (சீவக. 747). 4. போராடுதல். தத்த மதங்களே யமைவதாக வரற்றி மலைந்தனர் (திருவாச. 4 : 53). க. மலெ. மலைத்தல் = 1. மாறுபடுதல். மடங்கலிற் சீறி மலைத்தெழுந்தார் (பு.வெ. 3 : 24). 2. பொருதல். வேந்தனோடு... மலைத்தனை யென்பது (புறம். 36). 3. வருத்துதல். மள்ளர் மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப (புறம். 10). மலை = 1. ஈட்டம், சொன்மலை (திருமுருகு. 263). 2. மிகுதி. 3.வளமுள்ள பெரிய இடம். வறப்பினும் வளந்தரும் வண்மையும் மலைக்கே (நன். பொதுப்பா. 28). மலையினும் மாணப் பெரிது (FwŸ. 124). 4. போர்த் தொழில். மலைத்தலை வந்த மரையான் கதழ்விடை (மலைபடு. 331). ம. மல, க. மலெ. மல்-மல்கு. மல்குதல் = 1. அதிகரித்தல், மிகுதல். மணநிரை மல்கிய மன்று (பு.வெ. 1 : 13). 2. நிறைதல். திசையாவு மல்கின்றே (1607). 3 செழித்தல். உயிரனைத்து மல்க மழைமுகி லானாய் (jÂif¥ò. இந்திர. 21). மல்கு-மல்கா-மல்லா. மல்லாத்தல் = 1. மலர்ந்தாற்போல் முகம் மேனோக்கிக் கிடத்தல். நரகத்தின் மல்லாக்கத் தள்ளி (திருமந். 199). 2. தோற்றுப்போதல் (உ.வ.). மல்கா-மல்காத்து (பி.வி.). மல்காத்துதல் = 1. கொடி முதலியவற்றைப் படரவிடுதல். 2. முகம் மேலாகக் கிடக்கச் செய்தல். மல்லா-மல்லார். மல்லார்தல் = 1. பரத்தல், விரிதல். 2. முகம் மேனோக்கிக் கிடத்தல். கை காலைப் பரப்பிக்கொண்டு மல்லார்ந்து கிடக்கிறான் (உ.வ.). மல்லார்-மல்லாரி = 1. பரந்த பறைவகை. 2. அகன்று பருத்தவள். மானங்கெட்ட மல்லாரி (உ.வ.). மல்லாரி - மல்லரி = பறைவகை (சங். அக.). மல்-மல்லாரி = சண்டைக்காரி (W.). மல்லார்-மலர். மலர்தல் = 1. மிகுதல். செழுமல ராவிநீங்கு மெல் லையில் (சீவக. 3079). 2. பரத்தல். வையக மலர்ந்த தொழின்முறை யொழியாது (பதிற். 88 : 1). 3. அகலித்தல். “kyu¤ திறந்த வாயில் (குறிஞ்சிப். 203). 4. மொட்டு விரிதல். “tiunk‰ காந்தள் மலராக்கால் (நாலடி. 283). 5. மனமகிழ்தல். வரன்கை தீண்ட மலர்குல மாதர்போல் (bgÇaò. தடுத்தாட். 161). 6. முகமலர்தல்.பூம்புன லூரன்புக......Kfky®ªj கோதை (திருக்கோ. 363, கொளு). மலர்த்தல் = 1. மொட்டு விரியச் செய்தல். 2. குப்புறக் கிடப்பவனை மல்லாக்கச் செய்தல். 3.மற்போரில் தோற்கடித்தல். 4. ஏமாற்றுதல். 5. வாங்கின கடனைக் கொடாமற்போதல். முகம் மலர் போன்றதென்பதும், முகம் மேனோக்கிக் கிடத்தல் மொட்டு விரிந்த நிலையையும் முகங் குப்புறக் கிடத்தல் மலர்ந்த பூக் குவிந்த நிலையையும் ஒக்குமென்பதும் கருத்து. மலர்-அலர். மல்-மல்லி = அகன்று தடித்தவள் (யாழ்ப்.). மல்-மல்லன் = 1. மற்போர்செய்வோன். மறத்தொடு மல்லர் மறங்கடந்த (பு.வெ. 9 : 4). 2. பெருமையிற் சிறந்தோன் (பிங்.). மல்லன்-வ. மல்ல. மல்-மல்லம் = 1. அகன்ற தட்டம் (அக. நி.). 2. கன்னம்(கதுப்பு) (ahœ. அக.). 3. மற்போர் (W.). 4. வலிமை. மல்லம். வ. மல்ல. மல்-மல்லை = 1. பெருமை. மல்லைச் செல்வ வடமொழி மறைவாணர் (திவ். திருவாய். 8 : 9 : 8). 2. வளம். மல்லைப் பழனத்து (பதினொ. ஆளுடை. திருவுலா. 8). மல்-மலி. மலிதல் = 1. விம்முதல், பருத்தல். முலை மலிந்து (பு.வெ. 11. பெண். 2). 2. மிகுதல். கனிப்பொறை மலிந்து நின்ற கற்பகப் பூங்கொம்பு (சீவக. 2541). 3. பரத்தல். மலைமலிந் தன்னமார்பும் (பு.வெ. 11, பெண். 2). 4. விரைதல். நீ மலிந்து செல்வாய் (பு.வெ. 11, பெண். 4). 5. நெருங்குதல். (தொல். சொல். 396, உரை). 6. நிறைதல். மலிகடற் றண் சேர்ப்ப (ehyo. 98). 7. விலை நயத்தல் (உ.வ.). 8. புணர்ச்சியின் மகிழ்தல். மலிதலு மூடலும் (தொல். பொருள். 41). 9. செருக்குதல். மகிழ்ந்தன்று மலிந்தன்று மதனினு மிலனே (புறம். 77) . 10. செருக்கிச் சொல்லுதல். உறுபுகழ் மலிந்தன்று (பு.வெ. 10 : 4, கொளு). மலி-மலிவு = 1.மிகுதி. 2. நிறைவு. மனைவேள்வி மலிவுரைத் தன்று (ò.bt. 9 : 27). 3. உயர்வு. இம்முப்பாலும், மாமலி வுடனே மற்ற மெலிவொடு சமனு மாமே (சூடா. 12 : 10). 4. நயவிலை. மலிவு குறைவது விசாரித்திடுவர் (அறப். சத. 83). 5. மகிழ்ச்சி. “kÈîil யுள்ளத்தான் (பரிபா. 19 : 88). 6. புணர்ச்சியின்ப மகிழ்ச்சி. மலிவும் புலவியும் (தொல். செய். 185). மலிவு-மலிபு = மிகுதி. வாடையது மலிபு (பு.வெ. 8 : 16). மலி-மலிர். மலிர்தல் = 1. பெருகுதல். ஓத மில்லிறந்து மலிர (நற். 117). 2. நீர் முதலியன ஒழுகுதல். பின்னு மலிரும் பிசிர்போல (gÇgh. 6 : 83). 3. பயிலுதல், அடிக்கடி வருதல். கனியின் மலரின் மலிர்கால் (பரிபா. 8 : 54). மல்-மால் = 1. பெருமை. சினமால் விடையுடையான் (திருவாச. 34 : 3). 2. பெருமையுடையவன். மாமஞ்ஞை யூர்ந்து நின்ற மால் (Ótf. 286). 3. வளமை (அக. நி.). 4. மலை (அக.நி.). மால்-மாள்-மாளிகை = 1. மாடமுள்ள பெருவீடு (பிங்.). “kiwat®¡F மாளிகைகள் பல சமைத்தார் (பெரியபு. கோச்செங். 16). 2. அரண்மனை (பிங்.). 3. கோயில். “c¤junfhrமங்கை.....khËifgho” (திருவாச. 16 : 3). மாளிகை-வ. மாளிகா. மாளிகைச் சாந்து = உயர்ந்த கலவைச் சந்தனம். இவள் ஆதரித்துச் சாத்தின மாளிகைச் சாந்தை (திவ். திருப்பல். 8, வியா.). மாள்-மாண். மாணுதல் = மிகுதல் = 1. மிகுதல், பருத்தல். “kiyÆD« மாணப் பெரிது. (குறள். 124). 2. நிறைதல். “khzh¥ பிறப்பு (குறள். 1002). 3. நன்றாதல். மாண்டற் கரிதாம் பயன் (குறள்.177). 4. சிறத்தல், மாட்சிமைப்படுதல். மாண்-மாண்பு = 1. பெருமை (யாழ். அக.). 2. kh£áik“ïšyt© மாண்பானால் (குறள். 53). 3. ந‹ik (அரு.நி.). 4. அழகு அரன்மிடற்றின் மாண்ப தன்றே (திருக்கோ. 323). மாண்-மாட்சி = 1. மகமை(மகிமை) எனைமாட்சித் தாகியக் கண்ணும் (குறள். 750). 2. தெளிவு, விளக்கம் மூலவோலை மாட்சியிற் காட்ட வைத்தேன் (பெரியபு. தடுத்தாட். 56). 3. அழகு நூலோர் புகழ்ந்தமாட்சிய......òuÉ” (பெரும்பாண். 487). 4. இயல்பு மரபுநிலை தெரியா மாட்சிய (தொல். மரபு. 94). மாட்சி = மாட்சிமை = மகமைத் தன்மை. மாட்சிமையுடையோர் கொடுக்கும் மரபுபோல (சிலப். 16 : 23, உரை). மாண்-மாட்சிமை. மாணெழில்.........njhshŒ” (கலித். 20 : 15). மாண்-மாணம் = 1. மாட்சிமை (அக. நி.). மாண்-மாணல் = 1. மாட்சிமை. 2. நன்மை (அரு. நி.). மாணம்-மாடம் = 1. வானளாவிய பன்னிலை மாளிகை. மஞ்சுதோய் மாடமணி உத்தரகோச மங்கை (திருவாச. 16 : 4). எழுநிலை மாடம் கால்சாய்ந் துக்கு (நறுந். 54). 2. மேட்டிடத்திற் கட்டிய பெருங்கோயில். எண்டோ ளீசற் கெழின்மாட மெழுபது செய்து (â›. பெரியதி. 5 : 6 : 8). 3.மேனிலை. ம. மாடம், க. மாட, தெ. khLF(g). மாடம்-மாடி = மேனிலையுள்ள வீடு. ஏழடுக்கு மாடி (உ.வ.). மாள்-மாழை = 1. திரட்சி (பிங்.). 2. கனியக்கட்டி. கனக மாழையால் (சீவக. 913). 3. மாதர் கூட்டம். (அக. நி.). மல்-மன். மன்னுதல் = (செ.கு.வி.) 1. பொருந்துதல். மன்னா சொகினம் (பு.வெ. 10 : 11). 2. மிகுதல். மன்னிய வேதந் தரும் (Mrhu¡. 96). 3. தங்குதல். உத்தரை வயிற்றின் மன்னிய குழவி (ghftj. 1, பரிட்சத்து வின்றோ. 1). 4. நிலைபெறுதல். “k‹d®¡F மன்னுதல் செங்கோன்மை (குறள். 556). 5. உறுதியாய் நிற்றல் (W.). (br. குன்றா வி.) அடுத்தல் (பிங்.). ஒ.நோ: L. manere, stay. L. remanere, E. remain. மன் (இடை.) = 1. மிகுதிக்குறிப்பு. சிறியோன் பெறினது சிறந்தன்று மன்னே (புறம். 75). 2. பெரும்பான்மைக் குறிப்பு. “frjg மிகும்வித வாதன மன்னே (நன். 165). 3. நிலைபேற்றுக் குறிப்பு. மன்னே....Ãiyng றாகும் (நன். 432). ஒ.நோ: OE. manig, OS., OHG. manag, Goth. manags, E. many. g = y. மன்-மன்று = 1. அவை, அம்பலம்.2. தில்லைப் பொன்னம்பலம். “bj‹¿šiy மன்றினு ளாடினை போற்றி (திருவாச. 4 : 92). 3. அறங் கூறவை. நெடுமன்றில் வளனுண்டு (கம்பரா. மூலபல. 145). 4. ஆன்கணம். மன்றாடி சொல்ல (திருவாலவா. 52 : 5, அடிக்குறிப்பு). 5. ஆன்தொழு. ஆன்கணம்.....k‹WÃiw புகுதர (F¿Šá¥. 218). 6. மரத்தடித் திண்ணைப் பொதுவிடம். மன்றும் பொதியிலும் (தஞ்சைவா. 34). 7. மக்கள் கூடும் நாற்சந்தி. “k‹¿ny தன்னுடைய வடிவழகை முற்றூட்டாக அனுபவிப்பிக்கு மவனை (ஈடு, 3 : 6 : 3). 8. மணம். மன்றலர் செழுந்துளவு (f«guh. திருவவ. 24). “ónthL சேர்ந்த நாரும் மணம் பெறும் என்பதற்கேற்ப. ஒன்றன் மணம் அதனொடு சேர்ந்த இன்னொன்றிற் கலத்தலால், மணம் மன்றெனப்பட்டது. மன்றுபடுதல் = அம்பலத்திற்கு வருதல், வெளிப்படுதல். ``காம மறையிறந்து மன்று படும்'' (குறள். 1138). மன்று-மன்றம் = 1. அவையம் (பிங்.). 2. அறங்கூறவையம். அறனவின் மன்றத் துள்ளோர் (திருவிளை. மாமனாக. 35). 3. பொன்னம்பல முள்ள தில்லை (பிங்.). 4. மரத்தடிப் பொதுவிடம். மன்றமும் பொதியிலும் (திருமுருகு. 226). 5. குதிரைகளைப் பயிற்றும் செண்டுவெளி. பேரிசை மூதூர் மன்றங் கண்டே (புறம். 220, உரை). 6. போர்க்களப் பரப்பின் நடுவிடம். செஞ்சுடர்க் கொண்ட குருதி மன்றத்து (பதிற். 35 : 8). 7. மக்கள் கூடும் வெளியிடம். மன்றம் போழும் மணியுடை நெடுந்தேர் (குறுந். 301). 8. ஆன்தொழு. புன்றலை மன்றம் (குறுந். 64). 9. பேய்கள் கூடுமிடம். காய்பசிக் கடும்பேய் கணங்கொண் டீண்டு மாலமர் பெருஞ்சினை வாகை மன்றமும். (மணிமே. 6 : 82-3) 10. பறவைகள் கூடுமிடம். புள்ளிறை கூரும் வெள்ளில் மன்றமும் (kÂnk. 6 : 85). 11. மக்கள் குடியிருக்கும் வீடு. வதியுஞ் சில மன்றமே (இரகு. நகரப். 71). 12. நெடுந்தெரு (சூடா.). 13. நோன்பிகள் கூடுமிடம். சுடலை நோன்பிக ளொடியா வுள்ளமொடு மடைதீ யுறுக்கும் வன்னி மன்றமும் (மணிமே. 6 : 86-7) 14. மணம் (பிங்.). `அம்' ஒரு பெருமைப்பொருட் பின்னொட்டாதலால், மன்றம் என்பது இலக்கண நெறிப்படி பெருமன்றைக் குறிக்கும். மன்று - மன்றகம் = அம்பலம். ``மன்றகத்தே நம்பி மாடமெடுத்தது'' (திருமந்.148) மன்று-மன்றல் = 1. தமிழத் திருமணம். 2. இருபாற் கூட்டம். “kiwnah® தேஎத்து மன்ற லெட்டனுள் (தொல். களவு. 1). 3. புணர்ச்சி. மன்றன் மாமயில் (சீவக. 2171). 4. நெடுந்தெரு. “k‹wš வருஞ்சேனை (குற்றா. குற. 73 : 2). மணம் (பிங்.). மன்று-மந்து = 1. ஆன்கணம். 2. ஆன்தொழு. 3. எருமைநிரை. 4. நீல மலைத் துடவர் குடியிருப்பு. எ-டு: ஒற்றைக்கல் kªJ(Ootacamund). துடவர்க்கு எருமைநிரை யோம்பலே பிழைப்புவழியாதலால், அவர் குடியிருப்பு மந்து எனப்பட்டது. ஆட்டுப் பட்டிகளும் மாட்டுப் பட்டிகளும் இருந்த வூர்கள், பட்டியென்றே பெயரீறு பெற்றிருத்தலை நோக்குக. ஒரே பெருங்கல் இருந்த மந்து ஒற்றைக்கல் மந்து எனப்பட்டது. தெலுங்கு நாட்டில் ஒரு பகுதி ஒரு கல் நாடு அல்லது ஓராங்கல் (Warangal) நாடு எனப் பெயர் பெற்றிருத்தலைக் காண்க. ஆங்கிலர் முதன்முதல் நீலமலையில் அடைந்த இடம் ஒற்றைக்கல் மந்து. அதனால் அது சிறப்புப் பெற்றது. அதன் பெயரின் ஆங்கில வடிவை யொட்டி, உதகமண்டலம் என்னும் பெயரை அமைத்துக் கொண்டனர் வடமொழி வெறியர். அதன் மரூஉவான உதகை என்பதற்குத் தலைமாறாக, ஒற்றகை என்று வழங்குவதே தமிழ்நெறிக் கேற்றதாம். மந்து-மந்தை = 1. கால்நடைக் கூட்டம். ஆடுமாடுகள் மந்தை மந்தையாய் மேய்கின்றன (உ.வ.). 2. ஊரின் பொது மேய்ச்சலிடம் , மந்தைவெளி (உ.வ.). 3. ஊரிடைப் பொது வெளியிடம். 4. ஆடுமாடு மேய்க்கும் குலத்தாருள் ஒரு பிரிவுப் பெயர். தெ. மந்து, க. மந்தெ. மன்-மனை = 1. பலர் கூடி அல்லது நிலைத்து வதியும் வீடு. சீர்கெழு வளமனை திளைத்து (சீவக. 828). 2. வீடு கட்டுதற்குரிய வெறுநிலம். ஒரு மனை 2400 சதுரஅடி. (உ.வ.). 3. அல்லும் பகலும் வீட்டில் வதியும் மனைவி. பிறன்மனை நோக்காத பேராண்மை (குறள். 148). 4. வீட்டில் வதியும் குடும்பம். 5. துறவுக்கு எதிரான இல்வாழ்க்கை. மனைத்தக்க மாண்புடைய ளாகி (குறள். 51). 6. சூதாட்டிற்கு அல்லது கணியத்திற்கு வரையும் அறை. ம. மன, க. மனெ. ஒ.நோ: E. manor, f. ME. f. AF. maner, OF. manoir, f. L. manere, remain. E. manse, f. ME. f. med.L. mansus, house (manere, mans, remain). E. mansion, large residence, f. ME. f. OF. f. L. mansionen, f. mansus, f. manere, mans, remain. மனை-மனைவி = 1. மனையிலுறையும் வாழ்க்கைத் துணைவி. இன்ப மருந்தினான் மனைவி யொத்தும் (சீவக. 1895). 2. முல்லை மருத நிலங்களின் தலைவி (திவா.). 3. மனையுடையாள். பூமுளரி மனைவி'' (cgnjrfh. சிவவிரத. 215). மன் + திரம் = மன்றிரம்-மந்திரம் = 1. வீடு. மந்திரம் பலகடந்து (f«guh. ஊர்தேடு. 138). 2. அரண்மனை (பிங்.). 3. தேவர் கோயில் (பிங்.). ஆதி தனது மந்தி ரத்து (கந்தபு. காமதகன. 67). 4. உறைவிடம். மான் மதங் கமழ்கொடி மந்தி ரந்தொறும் (ghuj. வேத்திர. 29). 5. மண்டபம். 6. குகை. அரிமந்திரம் புகுந்தா லானை மருப்பும் (நீதிவெண். 2). 7. குதிரைச் சாலை (ã§.). 8. குதிரைக் கூட்டம் (சூடா.). மந்திரம்-வ. மந்திர. மக்கள் உறைவிடத்தையும் அரிமாக் குகையையும் குதிரைக் கூடத்தையும் குறிக்கும் மந்திரம் என்னும் சொல் ஒன்றே. சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலி, குதிரைச் சாலையைக் குறிக்கும் மந்திரம் என்னும் சொல்லை வேறென மயங்கிப் பிரித்துக் கூறியது வழுவாகும். மக்கள் படுக்கை, விலங்கின் படுக்கை, பறவைக் கூடு ஆகிய மூன்றையும், சேக்கை யென்னும் ஒரே சொல் பொதுவாகக் குறித்தல் காண்க. சூழ்வினையைக் குறிக்கும் மந்திரம் என்னும் சொல் வேறு. அது அமைப்பில் ஒத்திருப்பினும், அதன் முதனிலையான மன் என்னும் சொல் முன் என்பதன் திரிபாகும். முன்னுதல் = கருதுதல், சூழ்தல். மன் + திரம்-மன்றிரம்-மந்திரம்-வ. மந்த்ர. மன் = மந்திரம். (ã§.). இது முதனிலைத் தொழிற்பெயரும் தொழிலாகு பெயருமாகும். மன்(பெ.) = 1. பெருமை. (யாழ். அக.). 2. பெரியோன், தலைவன். மன்னுயிர் நீத்த வேலின் (பு.வெ. 4 : 23, கொளு). 3. கணவன். மன்னொடுங்கூடி......thdf« பெற்றனர் (áy¥. 25 : 59). 4. அரசன். மன்னுடை வேலினாய் (சீவக. 1200). 5. அரசு. மன்பெறு மரபின் ஏனோர்க்கு முரிய (தொல். மரபு. 84). மன்-மன்னன் = 1. அரசன். மன்ன னுயிர்த்தே மலர்தலை யுலகம். (òw«. 186). 2. தலைவன். சேனை மன்னர்கள் (கந்தபு. சூர. இரண்டா. 47). 3.கடவுள் (பிங்.). 4. கணவன் மங்கை யுன்றன் மன்னன் (பிரமோத். 111). மன்-மன்னவன் = 1. அரசன். முறைசெய்து காப்பாற்று மன்னவன் (FwŸ. 388). 2. விண்ணுலக வேந்தன். மாலை வெண்குடை மன்னவன் கோயிலும் (சிலப். 5 : 173). மன்றுதல்1 = 1. மிகுதல். 2. உறுதியாதல். 3. தெளிவாதல். மன்ற(நி. கா. வி. எ.) = 1. மிக. மன்ற வவுணர் வருத்திட (fªjò. தேவ. போற். 6). 2. தேற்றமாக. சென்று நின்றோர்க்குந் தோன்று மன்ற (புறம். 114). மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல். இடை. 17). 3. தெளிவாக. “neh‰nwh® மன்றநின் பகைவர் (புறம். 26). மன்றுதல்2 = தண்டஞ் செய்தல். அடிகெட மன்றி விடல் (பழ. 288). இது அறமன்றின் செயல். மன்-மான். மானுதல் = ஒத்தல். மன்னர் சேனையை மானு மன்றே (f«guh. ஆற்று. 14). மான்-மான = போல (உவமை யுருபு). வினைபயன் மெய்யுரு என்ற நான்கே வகைபெற வந்த உவமத் தோற்றம் (தொல். உவம. 1) அன்ன ஆங்க மான இறப்ப என்ன வுறழத் தகைய நோக்கொடு கண்ணிய எட்டும் வினைப்பா லுவமம் (தொல். உவம. 12) மான் = ஒப்பு (பிங்.). மான்-மானம் = 1. ஒப்புமை. மான மில்லுயர் மணிவண்ணன் (Ótf. 2747). 2. அளவு. 3. பட்டணம் படியில் அரைப்படிக்குச் சற்று மிகுந்த முகத்தலளவு (ஆம்பூர் வழக்கு). 4. அவ்வளவு கருவி. 5. உரையாணி (திருக்கோ. 335, உரை). 6. கணிப்பு. சூரமானம். 7. அளவைக் கூறு. இருமானம், மும்மானம். 8. மதிப்பு, கண்ணியம். “e‹nwfh© மான முடையார் மதிப்பு (நாலடி. 294). 9. பெருமை புகழு மானமு மெடுத்துவற் புறுத்தலும் (தொல். அகத். 41). 10. வலிமை (சூடா.). 11. தன்மதிப்பு. இளிவரின் வாழாத மான முடையார் (குறள். 970), மறத்திடை மானமேற் கொண்டு (ò.bt. 5 : 6). 12. கற்பு. 13. பூட்கை, வஞ்சினம். அப்படியே செய்வேனென மானஞ் செய்து (இராமநா. அயோத். 7). 14. புலவி. மான மங்கையர் வாட்டமும் (சீவக. 2382). 15. மானக்கேட் டுணர்ச்சி. உயிர்நீப்பர் மானம் வரின். (குறள். 969), “khdª தலைவருவ செய்பவோ (நாலடி. 198). 16. வெட்கம். “tŠáia மீட்கிலே னென்னு மானமும் (கம்பரா. சடாயுவுயிர்நீ. 145). 17. பொருளளவு. எ-டு: வருமானம். (ïil.) 1. அளவு குறித்துவரும் தொழிற்பெயரீறு. எ-டு: பெறுமானம். 2. நிலை குறித்துவரும் தொழிற்பெயரீறு. எ-டு: கட்டுமானம். ஒ.நோ: “moon (A.Sax. mona, the moon(masc.); cog. O.Fris. mona, Goth. mena, Ice. mani, Dan. maane, D. maan, OHG. mane, (the Mod.G. mena, moon, is a derivative like E. month). Lith. menu, Gr. mene, Per. ma, Skt. mas, all meaning the moon; from a root ma, to measure; the moon was early adopted as a measure of time, hence the name.” - The Imperial Dictionary மான்-மானி. மானித்தல் = (செ.கு.வி.) 1. நாணுதல், மானவுணர்ச்சியால் வெட்குதல். கூற்றமும் மானித்தது (பு.வெ. 7 : 25, உரை). 2. செருக்குதல். நின்னைப் பணியாது மானித்து நின்ற அரசன் (நீல. 529, உரை). (br. குன்றாவி.) 1. அளவிடுதல். 2. மதித்தல், பெருமைப்படுத்து தல். நாணி மானித்தோமே நாமென்பார் (காளத். உலா. 243). ஒ.நோ: தீர்மானம்-தீர்மானி. மானம்-மானி = 1. மதிப்பு அல்லது கண்ணியமுள்ளவ-ன்-ள். 2. செருக்குள்ளவ-ன்-ள். களிமடி மானி (நன். 39). மான்-மா. மாத்தல் = அளத்தல். இவ் வினை இன்று வழக்கற்றது. ஆயின், மா என்னும் முதனிலைத் தொழிலாகுபெயர் 1/20 என்னும் கீழ்வா யிலக்கத்தைக் குறித்து வழங்குகின்றது. அதனால், நிலவளவையில் ஒரு வேலியின் 1/20 பாகம் மா எனப்படுகின்றது. மாநிறை வில்லதும் பன்னாட் காகும் (புறம். 184) என்பது, இதன் தொன்றுதொட்ட வழக்கை யுணர்த்தும். மா-மாத்திரம் = 1. அளவு. வௌவினன் முயங்கு மாத்திரம் (கலித். 47 : 22). அவன் எனக்கு எம் மாத்திரம்? (உ.வ.). வடார்க்காட்டு ஆம்பூரில், ஒரு பொருளின் விலையை வினவும் போது , “mj‹ விலை எம்மாத்தம்? என்பது இன்றும் உலக வழக்கு. எம்மாத்திரம் என்பது எம்மாத்தம் என்று சிதைந்துள்ளது. மா-மாத்திரம் = 1. அளவு. 2. மட்டும். வால் மாத்திரம் நுழையவில்லை (உ.வ.). 3. தனிமை (சங். அக.). மட்டும், தனிமை என்னும் இரு பொருட்கும் அடிப்படை அளவு என்னும் பொருளே. சென்னைப் பல்கலைக்கழக தமிழகரமுதலி அளவைக் குறிக்கும் மாத்திரம் என்னும் சொல்லை வேறாகப் பிரித்துக் கூறியுள்ளது. ஒ.நோ: மட்டு = அளவு; மட்டும் = மாத்திரம், தனிமையாய். மாத்திரம்-வ. மாத்ர. மாத்திரத்தில் = அளவில், உடனே. அதைக் கேட்ட மாத்திரத்திற் கொடுத்துவிட்டான் (உ. வ.). மாத்திரம்-மாத்திரை = 1. அளவு. மாத்திரை யின்றி நடக்குமேல் (ehyo. 242). 2. நொடிப்பொழுதான கால அளவு. கண்ணிமை நொடியென அவ்வே மாத்திரை (தொல். எழுத்து. 6). சக மூன்றுமொர் மாத்திரை பார்க்கு மெங்கள் கண்ணவனார் (âUü‰. 25). 3. செய்யுள் உறுப்புகளுள் ஒன்று(எழுத்தொலி யளவு). மாத்திரையெழுத்தியல்அசைவகைஎனாஅ....ešÈir¥புலவர்செய்யுளுறுப்பென.......tF¤Jiu¤ தனரே (தொல். செய். 1). 4. ஒரு மாத்திரை யொலிக்குங் குற்றெழுத்து (யாழ். அக.). 5. கால விரைவு (பிங்.). 6. மிகச் சுருக்கமான இடம் “miu மாத்திரையி லடங்குமடி (தேவா. 970 : 7). 7. அளவாகச் செய்யப்படும் மருந்துக் குளிகை (அரு. நி.). 8. முரல்(இசைச்சுரப்) பகுதி (திவா.). 9. காதணி வகை செம்பொன் மாத்திரை செரீஇய காதினர் (பெருங். மகத. 17 : 157). மாத்திரைக்கோல் = அளவுகோல். மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோ லொக்குமே (நல்வழி 4). 2. இறும்பர்(சித்தர்) கையிற் கொள்ளும் வரையிட்ட மந்திரக்கோல். விளங்கு செங்கையின் மாத்திரைக் கோலும் (திருவாலவா. 13 : 4). 3. kந்âu¡fhu‹ கைக்கோல் (W.). மாத்திரைச் சுருக்கம், மாத்திரைப் பெருக்கம் என்பன சொல்லணிவகைகள்.சுருக்கம், பெருக்கம் என்பவற்றைச் சுதகம், வருத்தனம் என்னும் tடசொல்லாற்Fறிப்பர்.K¤jÄÊy¡fzK« இறும்ப(சித்த) மருத்துவமும், ஆரியர் வருகைக்கு முற்பட்டன என்பதை அறிதல் வேண்டும். மாத்திரை-வ. மாத்ரா. பல பொருள்கள் ஒன்றுசேர்வதால், குழம்பலும் குழப்பமும் கலக்கமும் மயக்கமும் உண்டாகும். நீரும் மண்ணும் சேரின் கலங்கல் அல்லது கலுழி யெனப்படுவதும், நீரும் பிற பொருளும் சேர்ந்து திண்ணமாயின் குழம்பு அல்லது குழம்பல் எனப்படுவதும், பகலும் இரவும் மயங்கும்(கலக்கும்) வேளை மசங்கல்(மயங்கல்) எனப்படுவதும் காண்க. ஒ.நோ: கல-கலகு-கலங்கு-கலக்கு-கலக்கம். ஒரு கவர்த்த வழியைக் காணின் எது வழியென்று தெரியாது கலங்கவும், அறியாதார் பலர் கூடியிருக்கக் காணின் அவருட் காண வேண்டியவர் யாரென்று தெரியாது மயங்கவும் நேரும். இதனால், பொருட்கலக்கம் மனக்கலக்கத்திற்கும் ஏதுவாம். அமைதியான மனத்தில் கவலை அல்லது அச்சம் கலப்பின் மனக்கலக்கம் உண்டாகும். மனத்தெளிவு முற்றும் நீங்குவதே மயக்கம். அது தீய பொருள் உடம்பிற் கலப்பதாலும் உண்டாகும். மல்-மலை. மலைதல் = மயங்குதல். வேறு வேறு எடுத்துக் காட்டுதல் பற்றி மலையற்க (சி.போ.பா. 6 : 2, ப. 146). மலைத்தல் = மயங்குதல். சிறுவன் விடுதிப் பள்ளிக்கு வெளியூர் சென்றபோது, வீட்டை நினைத்து வழியில் மலைத்து மலைத்து நின்றான். மல்-மல-மலகு-மலங்கு. மலங்குதல் = 1. நீர் முதலியன குழம்புதல். “ky§»t‹ றிரைபெயர்ந்து (தேவா. 130 : 9). 2. கண் கலங்குதல். நெடுங்கண் புகுவன்கண் மலங்க (சீவக. 1067). 3. கண்ணீர் ததும்புதல். கண்ணினீர் மலங்கும் பொலந்தொடி (jŠirth. 243). ஒ.நோ: கலுழி = கண்ணீர். 4. மனங்கலங்குதல். “x‹gJ வாயிற் குடிலை மலங்க (திருவாச. 1 : 55). 5. கெடுதல். “fâ®nt‹ மலங்க (சீவக. 1613). மலங்கு-மலக்கு. மலக்குதல் = கலக்குதல். மலக்கு நாவுடையேற்கு'' (âUthŒ. 6 : 4 : 9). மலக்கு = மயக்கம். மலக்கு-மலக்கம் = 1. மாறு. நவரத்தினங்களாற்கட்டிஇடைநிலங்களை......bgh‰wf£lhny செறிய மலக்கமாகக் கட்டி (áy¥. 3 : 117, உரை). 2. மனக்கலக்கம். மலக்கமற்ற நம்மல்லமன் (பிரபுலிங். வசவண்ணர். 5). 3. துன்பம். உற்ற மலக்க முண்டா கினாக (கம்பரா. இராவணன்களங். 18). மலங்கு = பாம்பென்று மயங்குதற் கிடமான விலாங்குமீன். மலங்கு-மலாங்கு = விலாங்குமீன். மலங்கு-(மலாங்கு)-விலாங்கு. மல்-மால். மாலுதல் = 1. பொருந்துதல், ஒத்தல். 2. மயங்குதல். “kh‹W வேட் டெழுந்த செஞ்செவி யெருவை (அகம். 3). மால் = 1. மயக்கம். புரோம் பழகுடன் மாலங் குடைய மலிவன மறுகி (குறிஞ்சிப். 96). 2. மயக்கும் ஆசை. என்பேய் மனமால் கொண்டதே (திருநூற். 1). 3. ஆசை வகைகளுள் கடுமையான காமம். மடப்பிடி கண்டு tயக்கரிkலுற்று(பரிபா.10 : 42). 4. இடம் பொருள் தெரியா வண்ணம் கண்ணை மயக்கும் இருட்டு. 5 இருள் நிறமான கருமை. மால்கடல் (பெரும்பாண். 487). 6. கருநிறமான திருமால். நீர்செல நிமிர்ந்த மாஅல் போல (Kšiy¥. 3). 7. கருமுகில். சிலைமா லுருமு (தஞ்சை. 164). 8. ஆரிய முத்திருமேனிக் கொள்கைப்படி காவல் தொழிலால் திருமாலை யொத்தவனான மாலியச்சோழன் (பிங்.). ஒ.நோ: Gk. melas, black. இருளைக் குறிக்கும் dark என்னும் ஆங்கிலச் சொல், கருமை, அறியாமை என்னும் பொருள்களையுங் குறித்தல் காண்க. மால்-மாலை = 1. தொடுக்கப்பட்டது. வரிசையாகப் பொருந்தியது. 2. தொடுத்த பூந்தொடை. மாலைபோற் றூங்குஞ் சினை (கலித். 106 : 27). 3. மலர்மாலைபோல் தொடுத்த அல்லது கட்டிய மணிமாலை அல்லது முத்துமாலை. 4. பூமாலை போன்ற பாமாலை. எ-டு: திருவேகம்ப மாலை, திருவரங்கத்து மாலை. 5. வரிசை. மாலை வண்டினம் (சீவக. 2397). “khiy மாற்றே (யாப். வி. ப. 493). 6. முத்துமாலை போன்ற வடிவம். மாலை மாலையாகக் கண்ணீரை வடித்தாள் (c.t.). 7 . கயிறு. மாலையு மணியும் (பரிபா. 5 : 67). 8. மாலைபோன்ற பெண். (திருக்கோ. 1, உரை, ப.9). 9.பாண்குடிப் பெண்ணாகிய விறலி. பாணர் மாலையர் மாலை யெய்தி (âUthyth. 54 : 26). 10. மயக்கம், கலப்பு. 11. பகலும் இரவுங் கலக்கும் அந்திப் பொழுது. மாலை யுழக்குந் துயர் (குறள். 1135). 12. இரா. மாலையும் படா விழித்திரளது (தக்கயாகப் . 155). 13. இருள். மாலைமென் கேசம் (திருப்பு. 32). 14. குற்றம் (bjhš. சொல். 396, உரை). 15. பச்சைக்கற் குற்றம் (சிலப். 14 : 184, உரை). பூமாலையையும் பொழுதுமாலையையுங் குறிக்கும் மாலை யென்னுஞ் சொல் ஒன்றே. சென்னைப் ப.க.க.த. அகரமுதலியில், அவ்விரண்டையுங் குறிக்குஞ் சொல் வெவ்வேறென்று காட்டப்பட் டுள்ளது. இது பூமாலையைக் குறிக்குங் சொல்லை, வடசொல்லென்று காட்ட வகுத்த சூழ்ச்சியே. மாலை-வ. மாலா. மாலை-மாலிகை = சிறுமாலை. கை சிறுமைப்பொருட் பின்னொட்டு. ஒ.நோ: குடி = குடிகை(சிறு கோயில்). மாலிகை-வ. மாலிகா(மாலை). வடசொல் சிறுமைப் பொருளை இழந்து நிற்றல் காண்க. மால்-மான். மான்றல் = 1. ஐயுறுதல் (திவா.). 2. மயங்குதல் (Nlh.). மால்-மாலம் = 1. மயக்கு. 2. ஏமாற்று. 3. நடிப்பு. மால்-மான்-வான் = 1. கருமை. 2. நீலவானம். வானுயர் தோற்றம் (குறள். 272). 3. தேவருலகு. வான்பொரு நெடுவரை (áWgh©. 128). 4. வீட்டுலகம். வானேற வழிதந்த (திவ். திருவாய். 10 : 6 : 5). 5. மூலக் கருப்பொருள். வானின் றிழிந்து வரம்பிகந்த மாபூதத்தின் (கம்பரா. அயோத். மந்திர. 1). 6. கருமுகில். ஏறொடு வான்ஞெமிர்ந்து (மதுரைக். 243). 7. மழை. “thÅ‹ றுலகம் வழங்கி வருதலான் (குறள். 11). 8. அமுதம். வான் சொட்டச் சொட்ட நின்றட்டும் வளர்மதி (தேவா. 586 : 1). “th‹....jhdÄœj« என்றுணரற் பாற்று (குறள். 11). 9. நன்மை. வரியணி சுடர்வான் பொய்கை (பட்டினப். 38). 10. அழகு. வான்பொறி பரந்த புள்ளி வெள்ளையும் (கலித். 103). ம. வானு. மான்-மானம் = 1. கருமை. 2. நீலவானம். 3. கருமுகில். 4. மழை. 5. குற்ற அளவு, குற்ற நிலை ``மெய்நிலை மயக்க மான மில்லை'' (தொல். எழுத். மொழி.14) வானத்தை மானம் என்பதே கல்லா மாந்தர் உலக வழக்கு. கருமை என்னும் பொருளடிப்படையிலேயே, மானம் என்னும் சொல் குற்றப் பொருள் கொண்டதாகத் தெரிகின்றது. வான்-வானம் = 1. காயம் என்னும் நீலவானம். வானத் தரவின் வாய்க்கோட் பட்டு (கலித். 105). 2. தேவருலகு. வான மூன்றிய மதலை போல (பெரும்பாண். 346). 3. கருமுகில். ஒல்லாது வானம் பெயல் (குறள். 559). 4. மழை. வானம் வாய்க்க மண்வளம் பெருகுக (மணிமே. 19 : 149). தெ. வான, க. பான (b). மல்-மர்-மரு. மருவுதல் = 1. கலந்திருத்தல். மருவார் சாயல் (Ótf. 725). 2. தழுவுதல். மருவுமின் மாண்டா ரறம் (நாலடி. 36). 3 . பயிலுதல். பாத்தூண் மரீஇ யவனை (குறள். 227). 4. வழக்கப்படுதல். மரீஇய பண்பே (தொல். பொருள். 308). 5. புணர்தல். வெம்புலை மாதர்...kUî« வேட்கையான் (ãunkhj. 4 : 4). 6. ஊழ்குதல்(தியானித்தல்). கழல்களை மருவாதவர் மேல்மன்னும் பாவமே (தேவா. 501 : 1). ஊழ்குதல், மனத்தாற் பொருந்துதல். மரு-மருமம் = 1. தழுவும் மார்பு. மருமத்தி னெறிவேல் (f«guh. கையடை. 11). 2. உயிர்நாடியான உறுப்பு. எங்கு மருமத்திடைக் குளிப்ப (பு.வெ. 7 : 23). 3. மறைபொருள் (ïufáa«). (சங். அக.). 4. உடம்பு. மந்தர வலியின் மருமம் (Phd. 59 : 20). மரு-மார் = 1. நெஞ்சு, மார்பு. இப்பாதகன் மாரி னெய்வ னென்று (கம்பரா. இராவணன் வதை. 192). ஊரில் கலியாணம், மாரில் சந்தனம். (பழ.). 2. நான்கு முழமான நீட்டலளவை. க. மார். மார்க்கண்டம், மார்க்கவசம், மார்க்குழி, மார்க்கூடு, மார்வலி, மார்யாப்பு (மாராப்பு) முதலியன மரபு வழக்கான கூட்டுச்சொற்கள். மார்-மார்பு = 1. நெஞ்சு. கள்ளற்றே கள்வநின் மார்பு (குறள். 1288). 2. பெண் நெஞ்சு, முலை. மாரில் கைபோடுகிறான் (உ.வ.). 3. வடிம்பு. ஏணி யெய்தா நீணெடுமார்பின்....TL” (bgU«gh©. 245). 4. தடாகப் பரப்பு. மார்பின்மை படி....Fytiu” (பரிபா. 15 : 9). 5. அகலம்(சது.). 6. நான்முழ நீளம். ம. மார்பு. மார்பு-மார்பம் = நெஞ்சு, மார்பு. ``பொன்றுஞ்சு மார்பம்''. (áy¥.19:61). மார்பம்-மார்பகம். மரு-மருங்கு =1. (பொருந்தும்) பக்கம். கனையெரி யுரறிய மருங்கு நோக்கி (புறம். 23). 2. விலாப்பக்கம். கயிறு பிணிக்கொண்ட கவிழ்மணி மருங்கின் (புறம். 3). 3. இடைப்பக்கம், இடை (சூடா.). 4. எல்லை. மருங்கறி வாரா மலையினும் பெரிதே (கலித். 48). 5. இடம் (பிங்.). 6. சு‰w«. அவனின் மருங்குடையார் kநிலத்தில்.(FwŸ. 526). 7. குலம். சூர்மருங் கறுத்த மொய்ம்பின் மதவலி (திருமுருகு. 275). 8. செல்வம். “k©nkš மருங்குடையவர்க் கல்லால் (சீவக. 2924). 9. நூல். “ தொன்மருங் கறிஞர் (குறிஞ்சிப். 18). க. மக்கலு (gg). மருங்கு-மருங்குல் = 1. இடைப் பக்கமாகிய இடுப்பு. 2. இடை. “bfh«guh® மருங்கின் மங்கை கூற (திருவாச. 5 : 67). 3. வயிறு. “gágL மருங்குலை (புறம். 260). 4. யானை. மருங்கு லேய்க்கும் வண்டோட்டுத் தெங்கின் (பெரும்பாண். 352). மரு1 = மணமக்கள் பெண்வீட்டில் முதன் முறையாகக் கலந்துண்ணும் விருந்து. மரு - மருவு. மருவுதல் = சொற்சிதைவு இலக்கண வழக்கொடு பொருந்தி வழங்குதல். மருவு-மரூஉ = 1. நட்பு. மரூஉச்செய் தியார்மாட்டுத் தங்கு மனத்தாத் (நாலடி. 246). 2. இலக்கண வழக்கொடு பொருந்தி வழங்குஞ் சொற்சிதைவு. மருமகன் = 1. மகன்போலப் பொருந்தும் மகள் கணவன். 2. ஒருவனின் உடன்பிறந்தாள் மகன் அல்லது ஒருத்தியின் உடன்பிறந்தான் மகன். இவ் விருவரும் மருமகன் நிலைமைக்கு வரக்கூடியவர். மருமகள் = 1. மகள்போலப் பொருந்தும் மகன் மனைவி. 2. ஒருவ னின் உடன்பிறந்தாள் மகள் அல்லது ஒருத்தியின் உடன்பிறந்தான் மகள். இவ் விருவரும் மருமகள் நிலைமைக்கு வரக்கூடியவர். மருமகன்-மருமான் = 1. மருமகன் (மருகன்) (1) பார்க்க = மகன் போலப் பொருந்தும் மகள் கணவன். மருமான் றன்னை மகவென (கல்லா. 15). 2. மருமகன் (மருகன்) (2) பார்க்க = ஒருவரின் உடன் பிறந்தாள் மகன் அல்லது ஒருத்தியின் உடன் பிறந்தான் மகன். இமவானார் மருமானா ரிவரென்று (தேவா. 756 : 2). 3. வழித்தோன்றல். “Flòy§ காவலர் மருமான் (சிறுபாண். 47). மருமகன்-மருகன் = 1. மருமகன் (மருகன்) (1) பார்க்க = மகன் போலப் பொருந்தும் மகள் கணவன். மலைக்கு மருகனைப் பாடிப் பாடி (திருவாச. 9 : 6). 2. மருமகன் (மருகன்) (2) பார்க்க = ஒருவரின் உடன் பிறந்தாள் மகன் அல்லது ஒருத்தியின் உடன் பிறந்தான் மகன். வானவரைப் பணிகொண்ட மருகாவோ (கம்பரா. சூர்ப்பண. 111). 3. வழித்தோன்றல். சேரலர் மருக (பதிற் 63 : 16). மருகன்-மருகு = 1. மருமகன் (மருகன்) (1) பார்க்க = மகன் போலப் பொருந்தும் மகள் கணவன். (யாழ். அக.). “kUbf‹nw யவமதித்த தக்கன் (கந்தபு. காமத. 110). 2. மருமகன் (மருகன்) (2) பார்க்க = ஒருவரின் உடன் பிறந்தாள் மகன் அல்லது ஒருத்தியின் உடன் பிறந்தான் மகன். (யாழ். அக.). மருகன்-மருகி(பெ.பா.). மரு2 = 1. ஒன்றிலிருந்து இன்னொன்றொடு கலக்கும் மணம். “óbthL சேர்ந்த நாரும் மணம்பெறும் (பழ.). புத்தோடு தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு (நாலடி. 139) என்பவற்றை நோக்குக. ஒ.நோ: மணத்தல் = கலத்தல். மணம் = இருவகை நாற்றம். வெறுத்தல் = செறிதல். வெறு-வெறி = மணம். விரவுதல் = கலத்தல். விர-விரை = மணம். “kUth® கொன்றை (தேவா. 530 : 1). 2. நறுமணச் செடிவகை (kiy). 3. மருக்கொழுந்து. மருவுக்கு வாசனைபோல் வந்ததால் (வெங்கைக்கோ. 112). 4. இடம் (பிங்.). மரு-மருகு = தவனம் என்னும் நறுமணச்செடி. மரு-மருந்து = நோய் தீர்க்கும் பொருள். மருந்தாகும் வேரும் தழையும் பெரும்பாலும் மணம் மிக்கிருப்பதால், நோய் நீக்கும் பொருள் மருந்தெனப்பட்டது. மருந்தென வேண்டாவாம் (குறள். 942). 2. பரிகாரம். மருந்தின்று மன்னவன் சீறில் (கலித். 89). 3. சாவை நீக்கும் அமுதம். கடல்கலக்கி மருந்து கைக்கொண்டு (fšyh. 41 : 26). 4. பசிநோய் மருந்தான சோறும் நீரும். இருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன் (புறம். 70). 5. நீர். 6. இனிமை. மருந்தோவா நெஞ்சிற்கு (கலித். 81). 7. வெடிமருந்து. 8. வசிய மருந்து. 9. செய்வினை மருந்து. ம. மருன்னு, தெ. மந்து, க. மர்து. மருத்து-மருத்துவம்-மருத்துவன். மருந்து-மருந்தம் = (மருந்தாகப் பயன்படும்) நஞ்சு (W.). மரு-மருள். மருள்தல் = 1. ஒத்தல். அணைமரு ளின்றுயில் (கலித். 14). 2. வியத்தல். இவ்வே ழுலகு மருள (பரிபா. 5 : 35). 3. மயங்குதல். “kâkU©L” (குறள். 1229). 4. வெருவுதல். சிறார் மன்று மருண்டு நோக்கி (புறம். 46). க. மருள். மருள் = 1. மயக்கம். வெருவுறு மருளின் (சீவக. 2290). 2. திரிபுணர்ச்சி. மருடீர்ந்த மாசறு காட்சி யவர். (குறள். 199). 3. பிறப்பு முதல் அறிவின்றி மயங்கியிருக்கும் எச்சப் பிறவி. மாவும் மருளும் (புறம். 28). 4. வியப்பு. மருள் பரந்த வெண்ணிலவு (âizkhiy. 96). 5. கள் (யாழ். அக.). 6. கோட்டி (ig¤âa«) (யாழ். அக.). 7. குறிஞ்சி யாழ்த்திறம் எட்டனுள் ஒன்று (பிங்.). 8. மருளிந்தளப் பண். மாலின் வரவு சொல்லி மருள்பாடுதல் (திவ். நாய்ச். 9 : 8). 9. பேய். (பிங்.). 10. பேய் கொள்ளல். 11. புல்லுரு (W.). மருளன் = 1. அறிவு மயக்கன். பட்டப்பகற் பொழுதை யிருளென்ற மருளர் (தாயு. கருணாகரக். 4). 2. தெய்வமேறி. 3. மதவெறியன் . மருளாளி = 1. தேவராளன். 2. தெய்வமேறி. 3. பேயாடி. 4. மருள ஓர் உவமவுருபு. கடுப்ப ஏய்ப்ப மருளப் புரைய (தொல். உ வ. 15). மருளி = 1. மயக்கம். மருளிகொண் மடநோக்கம் (கலித். 14). 2.மதிமயங்கி. மருளிதான் மயங்கி (யசோதர. 2 : 42). மருட்கை = 1. மயக்கம். ஐயமு மருட்கையுஞ் செவ்விதி னீக்கி (bjhš. பொருள். 659). 2. எண்வகை மெய்பபாட்டுள் ஒன்றான வியப்பு. நகையே அழுகை இளிவரல் மருட்கை (தொல். மெய்ப். 3). மருட்பா = வெண்பாவும் ஆசிரியப்பாவும் கலந்துவரும் கலவைப்பா. (தொல். பொருள். 398). மருண்மா = மதம்படு யானை (திவா.). மருள்-மிரள். மிரளுதல் = மயங்கி யஞ்சுதல். மருட்டு-மிரட்டு. மருட்டி = மிரட்டி. மிரள்-மெரள். மெரளுதல் = மயங்கி அஞ்சுதல். மெரள்-மெருள். மெருளுதல் = மயங்கி அஞ்சுதல், அருளுதல். மெருள் = அச்சம். (நன். 101, மயிலை). மெருளி = மயங்கியஞ்சி, அச்சங்கொள்ளி. மெருள்-வெருள். வெருளுதல் = 1. மருளுதல். எனைக் கண்டார் வெருளா வண்ணம் மெய்யன்பை யுடையாய் பெறநான் வேண்டுமே (திருவாச. 32 : 3). 2. அஞ்சுதல். பெருங்குடி யாக்கம் பீடற வெருளி (பெருங். மகத. 24 : 84). 3. மாடு குதிரை முதலியன மிரண்டு கலைதல். வெருள் = 1. அஞ்சத் தக்கது. நின்புக ழிகழ்வார் வெருளே (âUthr. 6 : 17). 2. மனக்கலக்கம் (சூடா.). வெருளி = 1. மருட்சி. வெருளி மாடங்கள் (சீவக. 532). 2. வெருளச் செய்யும் புல்லுரு முதலியன. 3. வறியாரை வெருட்டும் செல்வச் செருக்கு. வெருளி மாந்தர் (சீவக. 73). வெருள்-வெரு = அச்சம். வெருவந்த செய்தொழுகும் வெங் கோலன் (குறள். 563). வெருவரு நோன்றாள்.... கரிகால் வளவன் (பொருந. 147). வெறியாட்டிடத்து வெருவின் கண்ணும் (bjhš. பொருள். 111). வெரு-வ. பிரு (b). ஒ.நோ: OE. foer, OS. var, OHG. fara, G. (ge) fahr, ON. far, E. fear. வெரு-வெருவு. வெருவுதல் = அஞ்சுதல். யானை வெரூஉம் புலிதாக் குறின். (குறள். 599). வெருவு = அச்சம். தெ. வெரப்பு. வெருவருதல் = 1. அஞ்சுதல். வெருவந்த செய்யாமை (குறள்.). 2. அச்சந்தருதல். வெருவரு தானைகொடு செருப்பல கடந்து (gâ‰. 70, பதி.). வெருவா-வெருவந்தம் = அச்சம் (W.). வெருவெருத்தல் = அஞ்சுதல். “cÆ® நடுங்கி.....btUbtU¤J நின்றனரால் (உபதேசகா. சூராதி. 49). வெருவு-வெருகு = அஞ்சத்தக்ககாட்டு¥பூனை. வெருக்கு விடை யன்ன (புறம். 324). க. பெர்கு-பெக்கு. வெருகு-வெருக்கு = அச்சம். வெருக்கு வெருக்கென் றிருக்கிறது. (c.t.). மரு-மறு-மறுகு = பண்டங்கள் செறிந்த பெருங்கடைத்தெரு. கூலமறுகு = எண்வகைக் கூலங்கள் செறிந்த மறுகு(சிலப். 8 : 73, அடியார். உரை). மால்-மார்-மாரி = 1. கருமுகில். மாரிமாட் டென்னாற்றுங் கொல்லோ வுலகு. (குறள். 211). 2. மழை. மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும் (புறம். 35). 3. மழைக்காலம். மாரி மலைமுழைஞ்சின் மன்னிக் கிடந்துறங்கும் (திவ். திருப்பா. 23). 4. நீர் (ã§.). k., து. மாரி. மால்-மழை = 1. கருமை. மழைதரு கண்டன் (திருவாச. 6 : 46). 2.நீருண்ட கருமுகில். மழைதிளைக்கு மாடமாய் (நாலடி. 361). 3.மழைக்கால். மழைவீழ்ந் தன்ன மாத்தாட் கமுகு (பெரும்பாண். 363). 4. முகில் பொழியும் நீர். கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை (குறள். 55). 5. குளிர்ச்சி. “bgUkiH¡ கண் (குறள். 1239). மழைத்தல் = 1. கருநிறமாதல். மழைத்திடு மெய்யுடை மாற்றலர் (fªjò. சூரன்வதை. 132). 2. மழை நிறைந்திருத்தல். மழைத்த வானமே (கம்பரா. கார்கால. 2). 3. குளிர்தல். மழைத்த மந்தமா ருதத்தினால் (பெரியபு. திருஞான. 150). மழை-ம மழ, க. மளெ. மல்-மறு = 1. கருப்பு. 2. களங்கம். மதிமறுச் செய்யோள் (gÇgh. 2 : 30). 3. குற்றம் (பிங்.). மறுவில் செய்தி மூவகைக் காலமும் (தொல். புறத். 20). 4. தீமை. நடுக்கடல் போனாலும் மறுப்படாமல் வரக்கடவீர் (உ.வ.). 5.அடையாளம். 6. பாலுண்ணி (W.). 7. தோல் மேலுள்ள fU«òŸË(mole). மச்சம். மறுவாயிரத்தெட் டணிந்து (சீவக. 2) மல் (மால்) = கருமை. ஒ.நோ: OE. mal, OHG. meil, Goth. mail, E. mole, spot, blemish, small lump on human skin. மருமம் = 1. தழுவும் மார்பு. 2. நெஞ்சு. 3. முலை. மருமம்-மம்மம்-அம்மம் = 1. முலை. 2. முலைப்பால். அம்ம முண்ணத் துயிலெழாயே (திவ். பெரியாழ். 2 : 2 : 1). 3. குழந்தையுணவு (குழந்தை வளர்ப்புச் சொல்). ம. அம்மிஞ்ஞி, க. அம்மி. ஒ.நோ: கருமம்-கம்மம்-கம் = செய்கை, தொழில், உழவு, கொல். இந். காம் = வேலை. பெருமான்-பெம்மான். k«k«-L. mamma, E. mamma, milk-secreting organ of female in mammals. E. mammal, one of the animals having mammale(pl.) for nourishment of young. E. mamilla(L. dim. of mamma), nipple of female breast. மருமம்-வ. மர்மன். வ. ம்ரு-மர் = சா (to die). மர்மன் = mortal spot, vulnerable point, any vital member or organ என்பது வடமொழியாளர் கூறும் பொருட்கரணியம். இதன் பொருத்தத்தை அறிஞர் கண்டுகொள்க. மருளல் = மயங்கல், வியத்தல். ஒ.நோ: E. marvel, ME. f. OF. mervveille f. LL. mirabilia, neut. pl. of L. mirablis (mirari, wonder at). E. mirror (looking-glass) f. ME. f. OF. f. Rom. mirare, look at, f. L. mirari, wonder at. மேலையர் முதன்முதல் முகக் கண்ணாடியைக் கண்டதும் வியந்ததாகத் தெரிகின்றது. அங்ஙனமே ஏனை நாட்டாரும் வியந்திருத்தல் வேண்டும். முல்-முள்-முள்கு. முள்குதல் = முயங்குதல். “ïsKiy முகிழ்செய் முள்கிய (கலித். 125). முள்-முளி = 1. உடல் மூட்டு. திகழ் முச்சா ணென்பு முளியற (j¤Jt¥. 133). 2. மரக்கணு (யாழ். அக.). 3. கணுக்கால் (W.). முளி-முழி = எலும்புப் பூட்டு, மூட்டு. ம. முளி, க. முடி. முழி-மொழி = 1. முழங்கை முழங்கால் முதலியவற்றின் பொருத்து. மொழி பிசகிவிட்டது(உ.வ.). 2. மரஞ்செடி கொடிகளின் கணு. “bkhÊíமினியீர்.......kJu¡ கழைகாள் (அழகர்கல. 67). 3. கரும்பின் இருகணுவிற் கிடைப்பட்ட பகுதி. 4. கரும்பின் மொழிபோற் சொற்றொடர்க் குறுப்பான சொல். ஓரெழுத் தொருமொழி ஈரெழுத் தொருமொழி இரண்டிறந் திசைக்குந் தொடர்மொழி யுளப்பட மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே. (தொல். மொழி. 12) 5. சொற்றொடரான பேச்சு (Articulate speech of, articulate = connected by joints). “bkhÊbga® தேஎத்த ராயினும். (குறுந்.11) முழி-முழம் = கைந்நடுப் பொருத்தினின்று அதன் நுனிவரையுள்ள நீட்டலளவு. உண்பது நாழி யுடுப்பது நான்கு முழம் (நல்வழி, 28). முழங்கை (முழம் + கை) = நடுப்பொருத்தினின்று நுனிவரைப்பட்ட mல்லதுKழுmளவானiக. முழம் போடுதல் = 1. முழங்கையால் அளத்தல். 2. ஆளின் தன்மையை ஆய்ந்து மதிப்பிடுதல். முழங்கால் (முழம்+ கால்) = நடுப்பொருத்தினின்று அடிவரைப்பட்ட அல்லது முழ அளவான கால். முழந்தாள் (முழம் + தாள்)-முழந்து = முழங்கால் (சூடா.). ம. முழம், து. முழம், க. மொழ, தெ. முர. முள்-முழு-முழுவு. முழுவுதல் = 1. பொருந்தித் தொடுதல். 2. முத்தமிடுதல். வந்தென் முலைமுழுவித் தழுவி (திருக்கோ. 227). 3. தழுவுதல். முழுவு-முழுவல் = விடாது தொடர்ந்த அன்பு. ``முழுவற் கடல் பெருத்தான்'' (தணிகைப்பு. நந்தியு. 6) முழுவல் - உழுவல் = அன்பு. பழுத்த வுழுவ லமரர் (விநாயகபு. 72 : 54). உழுவலன்பு = எழுமையுந் தொடர்ந்த அன்பு. (தொல். களவு. 34, உரை). முழுவு-முழுசு. முழுசுதல் = 1. முட்டுதல். பிள்ளைகள் முலைக்கீழ் முழுசினவாறே பால் சுரக்கும். (ஈடு, 5 : 3 : 3). 2. முத்துதல். “mGªj¤ தழுவாதே முழுசாதே (திவ். பெருமாள். 9 : 6). ஒ.நோ: பரவு-பரசு, விரவு-விரசு. முழுவல்-முழால் = தழுவுகை. சிறார்முலை முழாலிற் பில்கி (சீவக. 2541.). முழுவு-முழவு. முழவுதல் = நெருங்கிப் பழகுதல் (இ.வ.). முழவு-முழாவு. முழாவுதல் = நெருங்கிப் பழகுதல் (இ.வ.). முழுத்தல் = திரளுதல், பருத்தல், முழுத்த ஆண்பிள்ளை (உ.வ.). முழு ஆள்-முழாள் = வளர்ச்சியடைந்த பெரிய ஆள். முழு-முழா = 1. திரண்ட முரசு (பிங்.). 2. குடகுழா (சிலப். 141, உரை). முழா-முழவு = 1. முரசு. முழவின் முழக்கீண்டிய (சீவக. 2399). 2.குடமுழா (பிங்.). 3. தம்பட்டம் (பிங்.). ம. முழாவு. முழவுக்கனி = திரண்ட பலாப்பழம் (சங். அக.). முழவு-முழவம் = 1. பெருமுரசு. மண்கனை முழவம் விம்ம (சீவக. 628) 2. குடமுழா. தண்ணுமைப் பின்வழி நின்றது முழவே (சிலப். 3 : 141) ஒ.நோ: முரசு-முரசம். அம் பெருமைப்பொருட் பின்னொட்டு. முழா-முழ-முழங்கு. முழங்குதல் = 1. பெரிதொலித்தல். எழிலி முழங்குந் திசையெல்லாம் (நாலடி. 392). 2. பலருமறியச் சாற்றுதல். தொல்காப்பியந் திருவள்ளுவர் கோவையார் மூன்றினு முழங்கும் (இலக். கொத். 7). முழங்கு-முழக்கு-முழக்கம். முழா-முழாசு. முழாசுதல் = பெருநாவிட்டு எரிதல் (யாழ்ப்.). முழாசு = பெருந்தீநா (யாழ்ப்.). முழு = (கு.பெ.எ.) 1. பருத்த. முழுமுத றொலைந்த கோளி யாலத்து (புறம். 58). 2. மிகுந்த, மொத்த, நிறைவான, எல்லா. எ-டு: முழுமூடன், முழுத்தொகை, முழுமதி, முழுவுலகாளி (ïiwt‹). முழுக்க(கு.வி.எ.) = முழுதும். உயிரை முழுக்கச் சுடுதலின் (சீவக. 1966, உரை). முழுத்த = முதிர்ச்சிபெற்ற. முழுத்த வின்பக் கடல் (திருக்கரு. கலித். அந்.). முழு-முழுது = எல்லாம், எஞ்சாமை. முழுதென் கிளவி யெஞ்சாப் பொருட்டே (தொல். உரி. 28). முழுது-முழுசு. எல்லாப் பணியாரத்தையும் முழுசு முழுசாய்த் தின்றுவிட்டான் (உ.வ.). முழுது-முழுந்து = முழுமை. முழுந்து சுகவடிவாம் (ஞானவா. சனக. 14). முழு-முழுமன் = 1. முழுது. 2. அரைக்கும்போது சிதையாது விழும் முழுக் கூலமணி. முழுமன்-முழுவன் = முழுது. கடன் முழுவனும் தீர்த்துவிட்டான் (உ.வ.). முழு-முழுமை = 1. பருமை. துங்கமுழு வுடற்சமணச் சூழ்ந்து மகிழ்வார் (பெரியபு. திருநாவு. 39). 2. எல்லாம் (பிங்.). முழுவது-முழுது-முழுதோன் = கடவுள். முழுதோன் காண்க (âUthr. 3 : 29). முழா-மிழா = பருத்த ஆண்மான் (stag = male of red deer or of other large kinds of deer—C.O.D.). மிழா-மேழம் = செம்மறியாட்டுக் கடா மேழம்-மேடம் = 1. செம்மறியாட்டுக் கடா (பிங்.). 2. மேடவோரை (பிங்.). 3. மேடமதி (சித்திரை). மேடமாமதி (கம்பரா. திருவவதா. 110). மேடம்-வ. மேஷ. மேழம்-மேழகம் = செம்மறியாட்டுக் கடா. வெம்பரி மேழக மேற்றி (சீவக. 521). மேழகம்-ஏழகம் = செம்மறியாட்டுக் கடா. ஏழகம்-பிரா. ஏளக. ஒ.நோ: E. elk, large animal of the deer kind found in N. Europe and N. America. ME. elke, OE. elh, eolh. மேழகம்-மேடகம் = 1. செம்மறியாட்டுக் கடா. 2. மேடவோரை. மேடகம்-வ. மேடக. ஏழகம்-ஏடகம்-ஏடு-யாடு = செம்மறியாடு, வெள்ளாடு, ஆடு. “ahL§ குதிரையும் (தொல். மரபு. 12). ஒன்றிடை யார வுறினுங் குளகு சென்றுசென் றருந்தல் யாட்டின் சீரே என்னும் பழம் பொதுப்பாயிரச் செய்யுள், வெள்ளாட்டைக் குறித்தது. யாடு-ஆடு = 1. ஆட்டுப்பொது. 2. மேடவோரை. திண்ணிலை மருப்பி னாடுதலை யாக (நெடுநல். 160). ம. ஆடு, க. ஆடு, து. ஏடு. ஒ.நோ: ஏது-யாது, ஏவர்-யாவர்-யார்-ஆர். மானும் ஆடும் நெருங்கிய இனமாயிருத்தல் கவனிக்கத்தக்க து. ஆடு என்னுஞ் சொல். இற்றை நிலையில் இருவகை யாட்டிற்கும் பொதுவேனும், முதற்காலத்தில் செம்மறியாட்டையே சிறப்பாகக் குறித்தது. முழா-முடா-மிடா = பெரு மண்பானை. சோறு செப்பி னாயிரம் மிடா (சீவக. 692). 2. பானை (பிங்.). மிடாத்தவளை = பெருந்தவளை (M.M. 90). முழு-மொழு-மொழுக்கு-மொழுக்கன் = தடித்தவன் (யாழ். அக.). மொழுக்கு-மொழுக்கட்டை = தடித்த-வன்-வள் (இ.வ.). மொழு-மொழுப்பு = சேலை செறிந்த பைதிரம்(பிரதேசம்). மொழு-மொழியன் = பெரும் பேன் (யாழ். அக.). மொழு-மொகு-மொக்கு = 1. மரக்கணு (யாழ். அக.). 2. பருமன். மொக்கு-மொக்கன் = தடித்த-வன்-வள்-து (இ.வ.). மொக்கன்-மொங்கன் = தடித்த-வன்-வள்-து. மொங்கன் - மொங்கான் = பருத்துக் கனத்த பொருள் (உ.வ.). மொங்கான் தவளை = பருத்த பச்சைத்தவளை. மொக்கு - மொக்கை = 1. பருமன். 2. கூரின்மை. எழுதுகோல் மொக்கையாகி விட்டது (உ.வ.). 3. புணர்ச்சி. மொக்கை போடுதல் = புணர்தல். மொக்கைச்சோளம் = பருத்த அமெரிக்கச் சோளம். மொக்கைச் சோளம்-மக்கைச் சோளம்-மக்காச்சோளம். மொக்கையாளி-மக்கையாளி-மக்காளி = மிகப் பருத்தவன் (உ.வ.) . மொக்கை-மொக்கட்டை = மழுக்கமானது (இ.வ.). முல்-முது-முத்து. முத்துதல் = 1. சேர்தல். திருமுத்தாரம் (சீவக. 504). 2. ஒன்றையொன்று தொடுதல். 3. அன்பிற் கறிகுறியாக இருவர் முகங்கள் அல்லது உதடுகள் பொருந்தித் தொடுதல். புதல்வர் பூங்கண் முத்தி (புறம். 41). முத்து-முத்தம். 4. திரளுதல். முத்தங்கொள்ளுதல் = 1. தொடுதல், பொருந்துதல். சிலை முத்தங் கொள்ளுந் திண்டோள் (சீவக. 2312). 2. புல்லுதல், தழுவுதல். முலைமுத்தங் கொள்ள (சீவக. 2312). 3. முத்தமிடுதல். “jhŒthŒ முத்தங் கொள்ள (பெரியபு. கண்ணப்ப. 23). முத்து-முத்தி = முத்தம் (kiss). “kÂthÆš முத்தி தரவேணும் (âU¥ò. 183). முத்து = 1. ஆமணக்கு, வேம்பு, புளி முதலியவற்றின் உருண்டு திரண்ட விதை. முத்திருக்குங் கொம்பசைக்கும் (தனிப்பா. 1 : 3 : 2). 2. நெய்யுள்ள விதை. 3. உருண்டு திரண்ட கிளிஞ்சில் வெண்மணி. “Kšiy முகைமுறுவல் முத்தென்று (நாலடி. 45). 4. கிளிஞ்சில் முத்துப் போன்ற மாதுளை விதை. 5. வெண்மணி போன்ற கண்ணீர்த் துளி. பருமுத் துறையும் (சீவக. 1518). 6. வெண்முத்துப் போன்ற வெள்ளரிசி. 7. ஆட்டக் காய்களாகப் பயன்படும் புளிய முத்து. 8. 7/8 பணவெடை கொண்டதோர் பொன்னிறை. 9. வெண்முத்துப்போன்ற அம்மைக் கொப்புளம். பிள்ளைக்கு உடம்பு முழுதும் முத்துப் போட்டிருக்கிறது (உ.வ.). 10. வெண்முத்துப்போற் சிறந்த பொருள் அல்லது தன்மை. முதல் விலை முத்துவிலை (பழ.). முத்து-முத்தம் = பருமுத்து. சீர்மிகு முத்தந் தைஇய (பதிற். 39). 2. பேராமணக்குக் கொட்டை. 3. பச்சைக்கற் குற்றங்களு ளொன்று. (திருவிளை. மாணிக்கம். 67). ‘m«’ பெருமைப்பொருட் பின்னொட்டு. ஒ.நோ: விளக்கு - விளக்கம், மதி-மதியம், நிலை-நிலையம். முத்தம்-வ. முக்த. முத்து-முத்தை = 1. திரட்சி (சூடா.). 2. சோற்றுருண்டை (W.). தெ. முத்த (Mudda). குறுமுத்தம் பழம் = மிதுக்கம் பழம். மொலு-மொது. மொதுமொது வெனல் = திரளுதற் குறிப்பு. மொது மொதுவென்று மக்கள் (சனங்கள்) குவிந்தார்கள் (உ.வ.). 2. கொழுத்து வளர்தற் குறிப்பு. மொதுமொதுவெனல் - மொதுமொதெனல். மொது - மொத்து. மொத்துதல் = 1. உரக்க அல்லது வலுக்க அடித்தல். எல்லாருஞ் சேர்ந்து நன்றாய் மொத்திவிட்டார்கள் (c.t.). எதிர்மொத்தி நின்று (கம்பரா. முதற்போ. 66). தெ. மொத்து, க. மோது, து. முத்தெ. மொத்து = 1. வலுத்த அடி. “nkhJ திரையான் மொத்துண்டு (சிலப். 7, பாடல் 7). 2. வீங்குதல். அவனுக்கு முகம் மொத்தியிருக்கிறது (உ.வ.). மொத்து-மொத்தி = புடைப்பு (யாழ்ப்.). மொத்து = 1. தடித்த-வன்-வள்-து. 2. சுறுசுறுப்பில்லாத-வன்-வள்-து. 3. மூடத்தனமுள்ள-வன்-வள்-து. தெ. மொத்து (moddu), க. மொத்த (modda). மொத்துப் பிண்டம் = மொத்து 1, 2, 3. மொத்துக் கட்டை = மொத்து 1, 2, 3. மொத்தன் = (ஆ.பா.) 1. தடித்தவன். 2. சோம்பேறி. 3. மூடன். மொத்தன்-(பெ.பா.) மொத்தி, மொத்தை. க. மொத்தி (moddi). மொத்து-மொத்திகை-மத்திகை = குதிரையை அடிக்கும் சமட்டி. “k¤âif வளைஇய மறிந்து வீங்கு செறிவுடை (முல்லைப். 59). 2.தடிக்கம்பு, கழி. வேயின் மத்திகையர் (அரிசமய. குலசே. 54). Gk. mastix, mastigos = குதிரைச் சமட்டி. ஒ-அ, சொல்லாக்கத் திரிபு. ஒ.நோ: கொம்பு-கம்பு, ஒட்டு-அட்டு, தொண்டையார்பேட்டை-தண்டையார்பேட்டை. மொத்து - மொத்தம் = 1. gUk‹(W.)., திண்ணம். கட்டிற்கால் மொத்தமாயிருத்தல் வேண்டும் (உ.வ.). எலுமிச்சம்பழத்தோல் மொத்தமாயிருத்தல் கூடாது. 2. கூட்டுத்தொகை. தேர்வு எழுதினவர் எல்லாரும் மொத்தம் எத்தனை பேர்? (உ.வ.). 3. முழுமை. எல்லாக் காய்களையும் மொத்தமாய் விலை பேசி வாங்கிக்கொள் (உ.வ.). வரவு செலவுக் கணக்குப் பார்த்தால் மொத்தத்தில் இழப்பிராது. 4. பொது. எல்லாரையும் மொத்தமாய்த் திட்டிவிட்டான் (உ.வ.). 5. பெரும்பான்மை. மொத்தவிலை வணிகர் (உ.வ.). மொத்து-மொத்தளம் = (யாழ். அக.) 1. மொத்தம். 2. கூட்டம். மொத்தளம்-மத்தளம் = இருந்தடிக்கும் பெருமதங்கம் (மிருதங்கம்) அல்லது இருதலை முழா. மொத்து-மொத்தை = 1. பருமன் (யாழ். அக.). 2. உருண்டை, சோற்றுருண்டை. தெ. முத்த (mudda), க. முத்தெ (mudde) மொத்தையுரு = நெட்டுரு. மொத்தையுருப் போட்டுத் தேறிவிட்டான் (உ.வ.). மொத்தை-மொச்சை = தமிழ்நாட்டுப் பயற்று வகைகளுள் மிக மொத்தமானது; வீட்டவரைக்கு இனமான காட்டவரை. மொத்தை-மோத்தை = 1. செம்மறியாட்டுக் கடா. “nkh¤ijíª தகரும் உதரும் அப்பரும் (தொல். மரபு. 2). மேழவோரை (சூடா. உள். 9). 3. வாழை தாழை முதலியவற்றின் மடல் விரியாத பூ . நெடலை வக்கா முதலாயின.... தாழம்பூ மோத்தைபோ லிருப்பன (நற். 211, உரை). க. மோத்து. மொத்து-மொந்து-மொந்தன் = பெருவாழை; கதலிக்கு எதிரானது. தெ. பொந்த (bonta). மொந்து-மொந்தணி = 1. மரத்தின் கணு (யாழ்ப்.). 2. மூடப்பெண் (யாழ். அக.). மொந்தணி-மொந்தணியன் = 1. பருத்தது. 2. உருண்டு திரண்டது. மொத்தை-மொந்தை = 1. பருத்தது. 2. சோற்றுருண்டை. மொத்தையுரு-மொந்தையுரு. மொத்து-மத்து = 1. பருப்பு கீரை முதலியன கடையுங் கருவி. 2. தயிர் கடையுங் கருவி. ஆயர் மத்தெறி தயிரி னாயினார் (சீவக. 421). மத்து-வ. மந்த (mantha). கடைகருவி அடியில் மொத்தமாயிருப்பதனால் மத்தெனப்பட்டது. மத்து-மத்தி. மத்தித்தல் = மத்தினாற் கடைதல். பாற் சமுத்திரத்தை மத்தித்த திருமால் (கூர்மபு.). மத்தி-வ. மத் (math). மத்தி-மதி. மதித்தல் = 1. கடைதல். மந்த ரங்கொடு மதித்தநாள் (nrJò. சங்கர. 20). 2. மத்தினாற் கடைந்தாற்போல் கையினால் அல்லது கைவிரலால் அழுத்திக் களிப்பதமாக்கல். குழந்தைக்குச் சோற்றை நன்றாய் மதித்து ஊட்டு (உ.வ.). மதி-மசி. மசிதல் = களிப்பதமாகக் கடைபடுதல் அல்லது குழைதல். சோறு நன்றாய் வேகாததனால் மசியவில்லை (உ.வ.). 2. பிறர் விருப்பிற்கு இணங்குதல். ஆள் எளிதில் மசிய மாட்டான் (உ.வ.). மசி-வ. மஷ். மசித்தல் = 1. கடைந்து அல்லது பிசைந்து குழையச் செய்தல். 2. மைக்கட்டியை அல்லது களிம்பை நீரிற் குழைத்து எழுதுமை யுருவாக்குதல். மசித்து மையை விள்ள வெழுதி (பதினொ. திருவாலங். மூத். 2). மசி = எழுதுமை. மசிகலந் தெழுதப் பட்ட (சூளா. தூது. 83). 2. வண்டி மசகு. மசி-வ. மஷி. மசி-மசகு = வைக்கோற் கரியோடு விளக்கெண்ணெய் கலந்து வண்டி யச்சிற்கிடும் மை. தெ. மசக (masaka). மசிக்குப்பி = மசிக்கூடு. மசி-மயி-மை = 1. வண்டி மசகு. 2. கண்ணிற்கிடும் கரிய களிம்பு (mŠrd«). மைப்படிந்த கண்ணாளும் (தேவா. 1235 : 10). 3. எழுதும் அல்லது ஏட்டிற் பூசும் கரிக்குழம்பு. 4. மந்திர வினையிற் கையாளுங் கரும் பசை. 5. மையின் கருநிறம். மறவர் மைபடு திண்டோள் (அகம். 89). மைம்மீன் புகையினும் (புறம். 117). 6. இருள். மைபடு மருங்குல் (புறம். 50). 7. இருண்ட பசுமை. “ikÆU§ கானம் (அகம். 43). 8. கருமுகில். சேயோன் மேய மைவரை யுலகமும் (தொல். அகத். 5). 9. கரிய ஆடு (வெள்ளாடு). “ikô‹ மொசித்த வொக்கலொடு (புறம். 96), வாயின் மாடந்தொறும் மைவிடை வீழ்ப்ப (புறம். 33). 10. கரிய எருமை. “itFòy® விடியன் மைபுலம் பரப்ப (அகம். 41). 11. கருமைக்கு இனமான நீலநிற விண் (அரு. நி.). 12. கரிய களங்கம். “ikÔ®ª தன்று மதியு மன்று (கலித். 55). 13. அழுக்கு. மையில் செந்துகிர் (கலித். 85). 14. குற்றம். மையி லறிவினர் (புறம். 22 : 8). 15. கரிசு (பாவம்), தீவினை. மைதீர்த்தல் (சினேந். 457). 16. கருமுகில் நீர் (யாழ். அக.) அல்லது நீலக்கடல்நீர். மை-மைஞ்சு = கருமுகில், முகில் (நன். 122, மயிலை.). மைஞ்சு-மஞ்சு = 1. முகில். யாக்கை மலையாடு மஞ்சுபோற் றோன்றி (நாலடி. 28). 2. வெண்முகில். மஞ்சென நின்றுலவும் (சீவக. 2853). 3. பனி (ã§.). 4. மூடுபனி (இ.வ.). ஒ.நோ: ஐ - ஐந்து - அஞ்சு. மைத்தல் = 1. கருத்தல். மைத்திருள் கூர்ந்த (மணிமே. 12 : 85). 2. ஒளி மழுங்குதல். மைத்துன நீண்ட வாட்டடங் கண்ணர் (சீவக. 2333). மை-மைப்பு = கருப்பு. மைப்புறுத்தகண் ணரம்பைமார் (fhŠá¥ò. அரிசாப. 2). மைக்கூடு (கூண்டு) = 1. எழுதும் மைப்புட்டி. 2. கண்மைச் சிமிழ். முத்து-முட்டு. முட்டுதல் = 1. எதிர்ப்படுதல். வரையா நாளிடை வந்தோன் முட்டினும் (தொல். களவு. 21). 2. எதிர்த்தல். 3. மோதுதல். துள்ளித்தூண் முட்டுமாங் கீழ் (நாலடி. 64). விலங்குகள் கொம்பால் தாக்குதல், வாயில் நிலையால் தலை தாக்குண்ணுதல். 4. பொருதல். குலப்பகைஞன் முட்டினான் (f«guh. நட்புக். 50). 5. பொருந்தித்தொடுதல். 6. தாங்குதல். 7. பிடித்தல்.குழலாள்....ifÆid¡ கையாலவன் முட்டிடலும் (c¤juuh. திக்குவி. 16). 8. முடிதல். முட்டடி யின்றிக் குறைவுசீர்த் தாகியும் (தொல். செய். 122). 9. நிறைதல். தோய முட்டிய தோடவிழ் மலர்த்தடம் (காஞ்சிப்பு. கழுவாய். 79). 10. தடுத்தல். 11. தடைப்படுதல். வெண்ணெல்லி னரிசி முட்டாது பெறுகுவீர் (kiygL. 564). 12. குன்றுதல். முட்டா வின்பத்து முடிவுல கெய்தினர் (சிலப். 15 : 197). 13. இடர்ப்படுதல். 14. தீட்டுப்படுதல். 15. தேடுதல். நாடிநாங் கொணருது நளினத் தாளைவான் மூடிய வுலகினை முற்றுமுட் டியென்று (கம்பரா. சம்பாதி. 7) ம. முட்டுக, க. Kட்டு. மு£L = 1. முழங்கை முழங்கால் விரல்கள் ஆகியவற்றின் பொருத்து. 2. குவியல். பண்டங்கள் முட்டு முட்டாய்க் கிடக்கின்றன (உ.வ.). 3. பற்றுக்கோடு. விலங்குகள் கொம்பால் தாக்குகை. 4. தடை. “K£LtƉ கழறல். (தொல். மெய்ப். 23). 5. முட்டுப்பாடு. 6. கடத்தலருமை. முட்டுடை முடுக்கரும் (சீவக. 1216). 7. குறைவு. “_ntœ துறையு முட்டின்று போகிய (புறம். 166). 8. கண்டுமுட்டு கேட்டுமுட்டு முதலிய தீட்டுகள் (பெரியபு. திருஞான. 692). 9. மாதவிடாய் (W.). முட்டடி = அண்மை (W). முட்டுதல் = நெருங்குதல். முட்டத்தட்ட = கிட்டத்தட்ட. முட்டடித்தல் = கோலியாட்டில் தோற்றவனுடைய முட்டில் (Éu‰bghU¤âš) வென்றவன் கோலியா லடித்தல். முட்டடைப்பான் = வயிற்றை வீங்கச் செய்யும் மாட்டுநோய். (M. cm. D. I. 248). முட்ட = முடிய, முற்ற. முட்ட நித்தில நிரைத்த பந்தரின் (பாரத. கிருட். 103). முட்டத்தட்டுதல் = 1. மரத்திலுள்ள பழங்களெல்லாவற்றையும் பறித்தல். 2. முழுதும் இல்லாதிருத்தல் (உ.வ.). முட்ட முடிய = முற்றிலும் முடிவுவரை. முட்ட முடிபோக = இறுதிவரை. முட்டு - முட்டம் = மதி முட்டுப்பாடு (மதிக்குறைவு) ஆகிய மடமை. முட்டம்-முட்டன் = மூடன் (W.). முட்டத்தனம் = மூடத்தன்மை (W.). முட்டாட்டம் = (W.). 1. முட்டாள் தன்மை. 2. அறியாமையா லுண்டா குஞ் செருக்கு. அவன் முட்டாட்ட மாடுகிறான் (உ.வ.). முட்டாள்1 (முட்டு + ஆள்) = மூடன். முட்டா ளரக்கர் (திருப்பு. 141). ம. முட்டாள். முட்டாள்2 = முட்டும்(முட்டித் தாங்கும்) ஆள், தாங்கும் உருவம், அணிகத்தின்(வாகனத்தின்) கீழ் அதைத் தாங்குவதுபோல் வைக்கும் படிமை. க. முட்டாள். முட்டரிசி = நன்றாய் வேகாத (வேக்காடு குன்றிய) அரிசி (உ.வ.). முட்டம் = 1. பொருந்திய பக்கம், பக்கச்சரிவு. நளிமலை முட்டமும் (பெருங். வத்தவ. 2 : 43). 2. பலர் கூடி வாழும் ஊர் (Nlh.). `குரங்கணின் முட்டம் (சிவன் கோயில்). ஒ.நோ: முட்டா = 1. ஊர்க்கிழமை, குறுநில ஆட்சி. 2. சொத்து (W.). முட்டா-மிட்டா = 1. நாட்டுப் பகுதி, வட்டம். 2. ஊர்க்கிழமை, குறுநில ஆட்சி. 3. சொத்து. 4. உரிமை. மிட்டா-இந். மிட்டா (mittha). முட்டுதல் = கூடுதல், பொருந்துதல். ஒ.நோ: OE. mitan, OS. motian, ON. moeta, Goth. (ga) motjan, E. meet. OE. motian, E. moot, assembly. E. wikenagemot = Anglo-Saxon national council or parliament. OE. witena, wise mens. (ge) mot, meeting. முட்டாட்டம் = முட்டுகை. முட்டு-ஒ.நோ: E. butt, meet end to end. முட்டு = தாங்கல். ஒ.நோ: ME. buttress, OF. bouterez, mod.F. bouteret, f. bouter, E. buttress f. butt. OF. abutex (but, end), end on, E. abut, border upon, abutment, a lateral support. முட்டுக்கட்டுதல் = 1. கட்டை முதலியவற்றைத் தாங்கலாகக் கொடுத்தல். 2. முழங்காலைக் கைகளாற் கட்டுதல். முட்டுக் கட்டி உட்காராதே (உ.வ.). 3. எல்லை கட்டுதல் (யாழ்ப்.). 4. வழியடைத்தல் (W.). முட்டுக்கட்டியாடுதல் = பொய்க்காற் கட்டையில் நின்று நடத்தல். முட்டுக்கால், முட்டுக்கொடுத்தல், முட்டுச் சட்டம், முட்டுச் சுவர் முதலிய தொடர்ச்சொற்கள் தாங்கல் கொடுத்தலையும்; முட்டுக்கட்டை, முட்டுத்தொய்வு (மூச்சுவிட முடியாமை), முட்டுப் பாடு முதலிய தொடர்ச்சொற்கள் தடைபண்ணுதலையும்; முட்டுமுடுகு, முட்டிடை முதலிய தொடர்ச்சொற்கள் வழியிடுக்கத் தையும்; முட்டுச்சீலை, முட்டுப் பட்டினி, முட்டுப் பாந்தை முதலிய தொடர்ச்சொற்கள் தீட்டுப்பாட்டையும்; முட்டுக்கால் தட்டுதல், முட்டுக்குட்டு, முட்டுக் குத்துதல் (KH§fhšnkš நிற்றல்), முட்டுப்பிடிப்பு, முட்டுவலி, முட்டுவீக்கம் முதலிய தொடர்ச்சொற்கள் முழங்கால் வினையையும் உணர்த்தும். முட்டுதல் = நெருங்குதல், இடுகுதல். முட்டு - முட்டி = 1. விரற் பொருத்துத் தெரியும்படி முடக்கிய கை. 2. முட்டிக்கையாற் குத்துங் குத்து. முட்டிகள் படப்பட (பாரத. வேத்திர. 56). 3. நால் விரல்களை யிறுக முடக்கி அவற்றின்மீது கட்டை விரலை முறுகப் பிடிக்கும் இணையா வினைக்கை. (சிலப். 3 : 18, உரை). 4. கைப்பிடியளவு. முட்டி மாத்திர மேனும் (சேதுபு. இராமதீ. 3). 5. பிடியளவாக இடும் ஐயம் (பிச்சை). முட்டிபுகும் பார்ப்பார் (தனிப்பா.). 6. படைக்கலம் பிடிக்கும் வகை. துய்ய பாசுபதத் தொடையு முட்டியும் (பாரத. அருச்சுனன்றவ. 129). 7. ஒருவர் தம் கையுள் மறைத்ததை இன்னொருவர் தாமாக அறிந்து கூறுங் கலை: 8. திருவிழாவில் ஊரெல்லைத் தெய்வத்திற்கும் படைக்குஞ் சோறு. 9. முழங்காற் சிப்பி அல்லது பொருத்து. முட்டுதல் என்பது ஒரு பொருளின் தலை அல்லது கடை இன்னொரு பொருள்மேற் படுதலாதலால், முட்டும் பகுதியினின்று முடிவு அல்லது எல்லைப் பொருள் தோன்றிற்று. எல்லைக்கறுப்பன் (கருப்பன்), எல்லைப்பிடாரி, எல்லையம்மன் என்னும் பெயர்கள், சிற்றூர்வாணரின் எல்லைத்தெய்வ வணக்கத்தைக் குறிக்கும். முட்டி-வ. முஷ்டி. முட்டிக்கால் = 1. முழங்காற் சிப்பி அல்லது பொருத்து. 2. முட்டிக்காற் பின்னல். (W.). முட்டிக்கால் தட்டுதல் = முழங்காற் சிப்பிகள் ஒன்றோடொன்று உரசுதல். முட்டிக்காலன் = முட்டிகள் தட்டும்படி நடப்பவன் (W.). முட்டிக்காற் கழுதை = பின்னங்கால் முட்டிகள் தட்டும்படி நடக்குங் கழுதை. முட்டிச்சண்டை = முட்டிக்கைப்போர் (W.). முட்டிப்பிச்சை = பிடியரிசி யையம். முட்டியடித்தல் = 1. முட்டிச் சண்டையிடுதல். 2. முட்டிப் போர் செய்தல் போல் வருந்தித் திண்டாடுதல். வேலைக்கு முட்டியடிக்கிறான் (உ.வ.). முட்டிக்கால் என்பது போன்றே முட்டிக்கை என்பதும் பொருத்தையே சிறப்பாகக் குறிக்கும். முன்னது காற்பொருத்தும் பின்னது விரற்பொருத்தும் ஆகும். முள்-மூள். மூளுதல் = 1. பொருந்துதல். 2. தீப்பற்றுதல். 3. சினங்கிளம்புதல். 4. மிகுதல். 5. முனைதல். முதலற முடிக்க மூண்டான் (கம்பரா. மாயாசீ. 96). மூள்-மூட்டு (பி.வி.). மூட்டுதல் = 1. பொருத்துதல். 2. இணைத்தல், இசைத்தல். கால்கொடுத் தெலும்பு மூட்டி (தேவா. 631 : 3). 3. தைத்தல். இந்தக் கோணியை மூட்டு (உ.வ.). 4. தீப்பற்ற வைத்தல். மூட்டிய தீ (நாலடி. 224). 5. தீ மூட்டுவதுபோற் சினமூட்டுதல். 6. பகை மூட்டிச் சண்டைக்குத் தூண்டுதல். இருவருக்கும் நன்றாய் மூட்டிவிட்டு விட்டான் (உ.வ.). 7.ஒன்றைச் செலுத்துதல். “fLFò கதிர்மூட்டி (கலித். 8). ம. மூட்டுக, தெ. மூட்டிஞ்சு (Muttintsu). மூட்டு = 1. உடல், அணி முதலியவற்றின் பொருத்து. கவசத்தையு மூட்டறுத்தான் (கம்பரா. சடாயுவ. 113). 2. சந்திப்பு (யாழ். அக.). 3. தையல். 4. கட்டு. வன்றாண் மிசைப்பிணித்த வல்லிகளின் மூட்டறுத்து (கந்தபு. மீட்சிப். 8). 5. கட்டப்பட்டது (W.). 6. குதிரைக் கடிவாளம் (பிங்.). 7. மனவெழுச்சி. 8. வாழையிலைக் கற்றை. மூட்டுமூட்டாய்ப் பிரிந்துபோய் விட்டது (உ.வ.). 9. பொத்தகக் கட்டடப் பகுதி. k., தெ. மூட்டு, க. மூட்டை. மூட்டு-மூட்டை = 1. பொட்டணம். இந்தத் துணிகளையும் மூட்டையில் வைத்துக் கட்டு (உ.வ.). 2. பொதி. அரிசி மூட்டைகளை யெல்லாம் வண்டியிலேற்றிக் கொண்டுபோய்விட்டார்கள். 3. அறுபது பட்டணம்படி கொண்ட ஒரு கோணியளவு. 4. பெரும்பொய். அவன் மூட்டை யளக்கிறான். ம. மூட்ட, தெ. மூட்ட, து. மூட்டே. மூட்டை-மூடை = 1. பொதி. பொதிமூடைப் போரேறி (பட்டினப். 137). 2. மிகச் செறிந்த கூலக்கோட்டை. கடுந்தெற்று மூடை (òw«. 285). 3. கூலக்குதிர். கழுந்தெற்று _ilÆ‹”(bghUe. 245). மூட்டு-மாட்டு. மாட்டுதல் = 1. இணைத்தல். சிறுபொறி மாட்டிய பெருங்கல் லடாஅர் (நற். 19). 2. தொகுத்தல். அம்பினை மாட்டி யென்னே (கம்பரா. நிகும்பலை. 96). 3. செருகுதல். “mL¥ãÅ‹ மாட்டு மிலங்ககில் (காஞ்சிப்பு. நகர. 73). 4. மனத்திற் கொள்ளுதல். சொன்மாலை யீரைந்து மாட்டிய சிந்தை (திருவிசை. கருவூ. 8 : 10). 5. தீப்பற்றவைத்தல். “Éw»‰... செந்தீ மாட்டி (சிறுபாண். 156). 6. விளக்குக் கொளுத்துதல். நெய்பெய்து மாட்டிய சுடர் (குறுந். 398). 7. அடித்தல். வின்முறிய மாட்டானோ (தனிப்பா.). நன்றாய் மாட்டுமாட்டென்று மாட்டிவிட்டான் (உ.வ). 8. பயன்படுத்துதல். “tŸswh‹ வல்ல வெல்லா மாட்டினன் (சீவக. 1274). தெ. மாட்டு. மாட்டு = தொடர்புள்ள சொற்கள் ஒரு பாட்டில் அடுத்திருப்பினும் நெட்டிடையிட்டுக் கிடப்பினும், பொருந்தும் வகையிற் கொண்டுகூட்டிப் பொருள் கொள்ளுமுறை. அகன்றுபொருள் கிடப்பினும் அணுகிய நிலையினும் இயன்றுபொருள் முடியத் தந்தன ருணர்த்தல் மாட்டென மொழிப பாட்டியல் வழக்கின் (தொல். செய். 208) மூட்டு-மூட்டம் = 1. உலைமுகம் (யாழ். அக.). 2. சொக்கப்பனை (W.). 3. விறகு (யாழ். அக.). 4. கம்மக் கருவி வகை (யாழ். mf.). மூட்டு-மூட்டான்-முட்டான் = அணையாது வைக்கும் நெருப்பு மூட்டம். முள்-முய்-முய-முயகு-முயங்கு. முயங்குதல் = 1. பொருந்துதல். “Kiyí மார்பு முயங்கணி மயங்க (பரிபா. 6 : 20). 2. தழுவுதல். “Ka§» கைகளை யூக்க (குறள். 1238). 3. புணர்தல். அறனில்லான் பைய முயங்கியுழி (கலித். 144). 4. செய்தல். மணவினை முயங்க லில்லென்று (சூளா. தூது. 100). முயங்கிக் கொள்ளுதல் = கணவனும் மனைவியுமாக வாழ்தல் (W.). முயங்கு-முயக்கு = தழுவுகை. வளியிடை போழப் படாஅ முயக்கு (FwŸ. 1108). முன்பு மாதவப் பயத்தி னாலவண் முயக்கமர் வார் (jÂif¥ò. நாட்டுப். 48). முயக்கு-முயக்கம் = 1. தழுவுகை. பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் (குறள். 913). 2. புணர்ச்சி. முயக்கம் பெற்றவழி (I§. 93, உரை). 3. தொடர்பு. ஆணவத்தின் முயக்கமற்று (jÂif¥ò. நந்தி. 110). முயங்கு-மயங்கு. மயங்குதல் = 1. நெருங்குதல். 2. கலத்தல். 3. ஒத்தல். காரிருள் மயங்குமணி மேனியன் (பரிபா. 15 : 50). 4. கைகலத்தல். தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து (புறம். 19). 5. கலக்கமுறுதல். மயங்கின வாய்ப்புளும் (பு.வெ. 10, சிறப். 11). 6. அறிவு கெடுதல். புலான் மயங்கான் (ஏலா. 2). 7. மருளுதல். 8. வேற்றுவய மாதல். 9. வெறி கொள்ளுதல். தாமயங்கி யாக்கத்துட் டூங்கி... வாழ்நாளைப் போக்குவார் (நாலடி. 327). 10. மாறுபடுதல். மேனியு முள்ளமு மயங்காத் தேவர் (கல்லா. 82 : 30). 11. நிலையழிதல். ஆள்பவர் கலக்குற மயங்கிய நன்னாட்டு (kÂnk. 23 : 104). 12. வருந்துதல். முயங்கல் விடாஅ விவையென மயங்கி (அகம். 26). 13. தாக்குண்ணுதல். காலொடு மயங்கிய கலிழ்கட லென (பரிபா. 8 : 31). 14. ஐயுறுதல். 15. தயங்குதல். அவரைப் போய்ப் பார்ப்பதற்கு மயங்குகிறான் (உ.வ.). 16. உணர்ச்சி யிழத்தல். மயங்கிசைக் கொச்சகம் = உறுப்புக்கள் மயங்கியும் மிக்கும் குறைந்தும்வரும் கொச்சகக் கலி. முயக்கு-மயக்கு = 1. போர்செய்கை. இரும்புலி மயக்குற்ற (fȤ. 48). 2. கலக்கம். கனாமயக் குற்றேன் (மணிமே. 11 : 104). 3. மருளச்செய்யுஞ் செய்கை. மாய மயக்கு மயக்கே (திவ். திருவாய். 8 : 7 : 3). மயக்குதல் = 1. கலத்தல். பாற்பெய் புன்கந் தேனோடு மயக்கி (òw«. 34). 2. சேர்த்தல். உயிரெனுந் திரிமயக்கி (தேவா. 1189 : 4). 3. மனங் குழம்பச் செய்தல். குறளை பேசி மயக்கி விடினும் (ehyo. 189). 4. மருளச் செய்தல். மாய மயக்கு மயக்கா னென்னை வஞ்சித்து (திவ். திருவாய். 8 : 7 : 4). 5. வேற்றுவயப் படுத்துதல். (கம்பரா. இராவணன்கோ. 51). 6. நிலை கெடுத்தல். “tŸisahŒ கொடிமயக்கி (அகம். 6). 7. சிதைத்தல். எருமை கதிரொடு மயக்கும் (ஐங். 99). 8. உணர்ச்சி யிழக்கச் செய்தல். மதகரியை யுற்றரி நெரித்தென மயக்கி.... துகைத்தான் (கம்பரா. மகுட. 5). முயக்கம்-மயக்கம் = 1. கலப்பு. வடசொன் மயக்கமும் வருவன புணர்த்தி (கல்லா. 62 : 18). 2. ஒரு வேற்றுமை யுருபு மற்றொரு வேற்றுமைப் பொருளிற் கலத்தல். வேற்றுமை மயக்கம். (நன். 317, உரை). 3. எழுத்துப் புணர்ச்சி. உடனிலை மெய்ம்மயக்கம். வேற்றுநிலை மெய்ம்மயக்கம். மெய்ம்மயக் குடனிலை ரழவொழித் தீரெட் டாகுமிவ் விருபால் மயக்கும் (நன். 110) 4. இருபாற் கலப்பாகிய அலித்தன்மை (W.). 5. அறிவின் திரிபு. 6. அறியாமை. காம வெகுளி மயக்க மிவைமூன்ற னாமங் கெட (குறள். 360). 7. காமநோய் (அரு. நி.). 8. உணர்விழப்பு. மயங்கு-மசங்கு. மசங்குதல் = 1. மயங்குதல் (தேவா. 567 : 10). 2. ஒளி குறைதல். மேனியில் வன்னமு மசங்காதோ (இராமநா. அயோத். 11). முயகு-மயகு-மசகு. மசகுதல் = 1. சுணங்கி நிற்றல். 2. மனந் தடுமாறுதல். மசகு = நடுக்கடலில் திசை தெரியாது ஆழ்ந்தகன்ற இடம் (ahœ¥.). மசங்கு-மசங்கல் = 1. பகலும் இரவும் கலக்கும் அந்திப்பொழுது. 2. மயக்கம். மசங்கற்சமண் மண்டைக் கையர். (தேவா. 567 : 10). மசங்கு-மசக்கு. மசக்குதல் = 1. குழப்புதல். 2. மயங்கச் செய்தல். “äiyÆnyíw முறை மசக்கவும் (திருப்பு. 838). மசக்கு-மசக்கம் = 1. மயக்கம். 2. மந்தம். 3. மசக்கை. மசக்கல் = மசங்கல். மயக்கி-மசக்கி = அழகாலும் தளுக்காலும் மயக்குபவள். மசக்கை = சூலிக்கு உண்டாகும் மயக்கம். முய-மய. மயத்தல் = மயங்குதல். மயந்துளே னுலக வாழ்க்கையை (mU£gh. VI, அபயத்திறன். 14). மய-மயல் = 1. ஐயுறவு. மயலறு சீர்த்தி (பு.வெ. 9 : 7). 2. மயக்கம். மயலிலங்குந் தூயர் (தேவா. 121 : 2). 3. மந்தம் (ahœ. அக.). 4. ஆசை. தண்டா மயல்கொடு வண்டுபரந் தரற்ற (கல்லா. 20 : 6). 5. காம விழைவு. மாதர் மயலுறு வார்கண் மருள்கொண்ட சிந்தை (திருமந். 203). 6. கோட்டி(பைத்தியம்). மயற்பெருங் காதலென் பேதைக்கு (திவ். திருவாய். 4 : 4 : 10). 7. மாயை. மயலாரும் யானு மறியேம் (f«guh. நாகபா. 258). 8. அச்சம் (யாழ். அக.). 9. பேய் (ã§.). 10. செத்தை. வம்புண் கோதையர் மாற்றும் மயலரோ (Ótf. 128). ம. மய்யல், தெ. மயல, க. மயமு. மயல்-மயற்கை = 1. மயக்கம். மயற்கை யில்லவர் (சீவக. 1346). 2. செத்தை (சீவக. 1393, உரை). மயல்-மயர். மயர்தல் = 1. மயங்குதல். 2. திகைத்தல். வைது கொன்றன னோவென வானவர் மயர்ந்தார் (கம்பரா. கும்பக. 244). 3. சோர்தல். மயரு மன்னவன் (கம்பரா. இரணியன்வதை. 13). 4. உணர் வழிதல். விடந்தனை யயின்றன ரெனும்படி மயர்ந்து (fªjò. திருவி. 80). மயர் = மயக்கம். மயரறுக்குங் காமக் கடவுள் (பரிபா. 15 : 37). மயர்-மயர்வு = 1. சோர்வு. 2. அறிவுமயக்கம் (பிங்.). 3. அறியாமை (அஞ்ஞானம்). மயர்வற மதிநல மருளினன் (திவ். திருவாய். 1 : 1 : 1). மயர்-மயரி = 1. அறிவிலி. மயரிக ளல்லாதார் (இனி. நாற். 13). 2. காமுகன். மயரிகள் சொற்பொருள் கொண்டு (திருநூற். 53) . 3. பித்தன். நின்பால் வாங்கா நெஞ்சின் மயரியை (மணிமே. 22 : 75). மயல்-மையல் = 1. செல்வம் முதலியவற்றால் வருஞ் செருக்கு. “ikaš...k‹d‹” (சீவக. 589). 2. காம மயக்கம். மையல் செய்தென்னை மனங்கவர்ந் தானே யென்னும் (திவ். திருவாய். 7 : 2 : 6). 3. கோட்டி(பைத்தியம்). மைய லொருவன் களித்தற்றால் (FwŸ. 838). 4. யானை மதம். வேழ மையலுறுத்த (பெருங். உஞ்சைக். 37 : 232). 5. கருவூமத்தை (மலை.). மையலவர் = பித்தர். மையலவர் போல மனம்பிறந்த வகை சொன்னார் (சீவக. 2013). மையலார் = 1. பித்தர். 2. மாய வினைஞர். மண்மயக்கு மயக்குடை மையலார் (இரகு. யாகப். 35). மையலி = மாய வினையாட்டி (யாழ். அக.). மையனோக்கம் = துயரப் பார்வை. மைய னோக்கம் படவரு மிரக்கம் (தொல். மெய்ப். 13, உரை). மய-மையா. மையாத்தல் = 1. மயங்குதல். மலர்காணின் மையாத்தி நெஞ்சே (குறள். 1112). 2. ஒளி மழுங்குதல். விண்மே லொளியெல்லா மையாந் தொடுங்கி (பு.வெ. 9 : 13). 3. பொலிவழிதல். மாந்த ரென்பவ ரொருவரு மின்றி மையாந்த வந்நகர் (fhŠá¥ò. நகரேற். 101). முள்-மள்-மள்கு. மள்குதல் = 1. ஒளி குறைதல். 2. குறைதல். “kŸfÈš பெருங்கொடை (கம்பரா. கார்கால. 104). மள்கு-மழுகு. மழுகுதல் = ஒளி குறைதல். முத்துத் தொடை கலிழ்பு மழுக (பரிபா. 6 : 16). மழுகு-மழுங்கு. மழுங்குதல் = 1. ஒளி குறைதல். கதிர்கண் மழுங்கி மதியு மதிர்வதுபோல் (கலித். 146). 2. பொலிவழிதல் (திவா.). 3. கவனிப்பின்றி மறைந்துபோதல் (W.). 4. கெடுதல். மழுங்கு-மழுக்கு. மழுக்குதல் = ஒளி குறையச் செய்தல். மழுக்கு-மழுக்கம் = ஒளி குறைகை. மழுங்கு-மங்கு. மங்குதல் = 1. ஒளி குறைதல். 2. நிறங் குன்றுதல். 3. பெருமை குறைதல். 4. குறைதல். தாக மங்குத லின்மையால் (Éehafò. 80 : 94). 5. வாட்டமுறுதல் (W.). 6. கெடுதல். “ÔÉid¤ தெவ்வென்னும் பேர்மங்க (திருநூற். 19). 7. சாதல். “k§»í முற்பவித்து முழல்வல் லிடரில் (திருப்போ. சந். மட்டுவிருத். 7). க. k¡F(maggu). மங்கு-மங்கல் = 1. ஒளி மழுக்கம் (சங். அக.). 2. இருள் கலந்த நேரம். 3. கெடுகை. மங்குங் காலம் = வளங் குன்றுங்காலம். மங்குங் காலம் மா; பொங்குங் காலம் புளி (பழ.). மங்குநோய்முகன்(சனி) = வாழ்நாளில் முதலில் வந்து ஏழரையாண்டு தீங்கு செய்யும் நோய்முகன்(சனி). மங்கு = 1. கேடு. தெ. மங்கு, க. g§F(banku). 2. வங்கு. (W.). மங்கு-வங்கு = 1. மேனியில் மங்கல் நிறமாகப் படரும் ஒருவகைப் படைநோய். 2. குளித்தபின் துவர்த்தாத மேனியிற் காணும் படைபோன்ற தோற்றம். 3. நாய்ச்சொறி. மங்கு-மங்குல் = 1. ஒளிக் குறைவு. 2. கண்தெரியாவாறு ஒளி குறைந்த மூடுபனி. மங்குல் மனங்கவர (பு.வெ. 9 : 45). 3. இருட்சி. “k§Fš மாப்புகை (புறம். 103). 4. இரவு (திவா.). 5. இருண்ட முகில். மங்குறோய் மணிமாட..... நெடுவீதி (தேவா. 41 : 7). 6. கரிய வானம். மங்குல்வாய் விளக்கு மண்டலமே (திருக்கோ. 177). 7. வானவெளிப் பக்கமாகிய திசை. புயன் மங்குலி னறைபொங்க (கலித். 105 : 25). முள்-முய்-மய்-மை = கருப்பு, இருள். மைம்மை = கருமை, இருண்மை. மைம்மை-மைம்மைப்பு = கண்ணிருளல், கண் மங்கல், பார்வைக்குறை. மைம்மைப்பி னன்று குருடு (பழ. 298). மைம்மை-மைமை-மைமல் = மாலைநேரம் (யாழ். அக.). மைம்மை-மம்மல் = அந்தி நேரம். மம்மல்-மம்மர் = 1. மயக்கம். மம்மர்கொண் மாந்தர்க் கணங்காகும் (நாலடி. 14). 2. காமம் (W.). 3. கல்லாமை. “fhzh¡ குருடராச் செய்வது மம்மர் (நான்மணி. 24). 4. துயரம் (பிங்.). மம்ம ரறுக்கு மருந்து கண்டாய் (தேவா. 845 : 8) . மய-மயப்பு-மப்பு = 1. மயக்கம். 2. மட்டித்தனம். 3. செருக்கு. அவனுடைய மப்பை அடக்க வேண்டும் (உ.வ.). 4. முகில் மூட்டம். 5. செரியாமை. bj., க. மப்பு (mabbu). மள்கு-மட்கு. மட்குதல் = 1. மயங்குதல். மட்கிய சிந்தை (f«guh. தைல. 5). 2. ஒளி மங்குதல். நாகத்தின் வஞ்ச வாயின் மதியென மட்குவான் (கம்பரா. அயோத். 12). 3. அழுக்கடைதல். 4. வலி குன்றுதல். தரியலர் முனைமட்க (பாரத. மீட்சி. 176). ஒ.நோ: வெள்-வெள்கு-வெட்கு. மட்கு-மக்கு. மக்குதல் = 1. ஒளி மழுங்குதல். 2. அழுக்கேறுதல் (W.). bj., க. k¡F(maggu). 3. கருத்துப்போதல். வெள்ளி மக்கிவிட்டது. 4. மந்தமாதல். மக்கிய ஞானத் தீயால் (கைவல். தத். 90). 4. கெட்டுப்போதல் (W.). 5. அழிதல் (W.). மக்கு = 1. மந்தன். அவன் கணக்கில் மக்கு (உ.வ.). 2. அறிவிலி. 3. சுவர் வெடிப்பில் அடைக்கும் அடைமண். 4. மரவேலையிற் சந்து தெரியாமல் அடைக்கும் தூள். மக்கு-மக்கன் = மந்தன். மக்கு-மக்கல் = 1. கருத்துப்போன வெள்ளி. 2. கெட்டுப்போன அரிசி. குறிப்பு: ஒரு கருத்து ஒரு அல்லது பல வழிகளில் தோன்றலாம். மள்கு-மாள்கு-மாழ்கு. மாழ்குதல் = 1. கலத்தல் (W.). 2. மயங்குதல். குழறி மாழ்கி (கம்பரா. மாரீசன் வதை. 237). 3. சோம்புதல் (திவா.). 4. மங்குதல், கெடுதல். ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்குஞ் செய்வினை (குறள். 653). ப. க. khœF(g). மாழ்கு-மாழா. மாழாத்தல் = 1. ஒளி மழுங்குதல். “eh©kâna..... மாழாந்து தேம்புதியால் (திவ். திருவாய். 2 : 1 : 6). 2. மயங்குதல். மனங்கவல் பின்றி மாழாந் தெழுந்து (bghUe. 95). மாழா-மாழாம்பலம் = தூக்கம் (அக. நி.). மாள்கு-மாள். மாளுதல் = 1. கெடுதல். 2. கழிதல். மாளா வின்ப வெள்ளம் (திவ். திருவாய். 4: 7: 2). 3. அழிதல். ``அனுபவித்தாலும் மாளாதபடியான பாபங்கள்'' (ஈடு, 4: 7: 3). 4, சாதல். வஞ்ச முண்மையேன் மாண்டிலேன் (திருவாச. 5:93). 5. முடிதல், 6. செய்ய முடிதல், இயலுதல். அது என்னால் மாளாது (உ.வ.). மாள்-மாய். ஒ.நோ: நோள்-நோய். நோளையுடம்பு = நோயுண்டவுடம்பு. மாய்தல் = 1. ஒளி மழுங்குதல். ``பகன்மாய'' (கலித். 143). 2. கவலை மிகுதியால் வருந்துதல். 3. அறப்பாடுபடுதல். அந்த வேலையில் மாய்ந்து கொண்டிருக்கிறேன் (உ.வ.) 4. ``மறத்தல். ``மாயா வுள்ளமொடு பரிசிறுன்னி'' (புறநா. 139). 5. மறைதல். ``களிறுமாய் செருந்தியொடு'' (மதுரைக். 172). 6. அழிதல் “FobahL.. மாய்வர் நிலத்து'' (குறள்.898). 7. இறத்தல். தம்மொடு தம்பெயர் கொண்டனர் மாய்ந்தோர் மலைபடு. 553). k., bj., f., து. மாய். மாய்த்தல் = 1. மறைத்தல். ``களிறு மாய்க்குங் கதிர்க்கழனி'' (மதுரைக் 247). 2. வருத்துதல் (உ.வ.) 3. கொல்லுதல். மாய்த்த லெண்ணி வாய்முலை தந்த (திவ். திருவாய். 4: 3: 4). 4. அழித்தல். ``குரம்பையிது மாய்க்க. மாட்டேன் (திருவாச. 5: 54). மாய்-மாய்கை = 1. மயக்கம். 2. பொய்த் தோற்றம். மாய்-மாய்ச்சல் = 1. வருத்தம் (W.). 2. மறைவு (சது.). 3. சாவு (ahœ. அக.). மாய்-மாய்ப்பு = 1. மறைவு (W.). 2. சாவு (W). மாய்-மாய்வு = 1. மறைவு (சூடா.). 2. சாவு. மாய்வு நிச்சயம் வந்துழி (கம்பரா. இராவணன் வதை. 182). மாய்-மாயம் = 1. கருமை (கறுப்பு)(சூடா.). 2. மயக்கம், வியப்பு, ``மாயவன் சேற்றள்ளற் பொய்ந்நிலத்தே (திருவிருத். 100, உரை). 3. கனவு. ``மாயங் கொல்லோ வல்வினை கொல்லோ (சிலப். 16:61 ). 4. நிலையின்மை. என்மாய யாக்கை யிதனுட் புக்கு (திவ். திருவாய். 1073). 5. பொய். வந்த கிழவனை மாயஞ் செப்பி (bjhš. களவு. 22). 6. அறியாமை (அஞ்ஞானம்). மாய நீங்கிய சிந்தனை (கம்பரா. சித்திர. 51). 7. வஞ்சனை. மாய மகளிர் முயக்கு (குறள். 918). 8. மாயை. வருந்திட மாயஞ் செய்து நிகும்பலை மருங்கு புக்கான் (கம்பரா. மாயா சீதை. 96). மாயமாலம் = 1, பாசாங்கு. 2. மோசடி. 3. வஞ்சனையுள்ள பேய். (W.). மாயமாலம்-மாய்மாலம். மாயம்-மாயன் = 1. கரியன். வண்ணமு மாய னவனிவன் சேயன் (bjhš. உவம. 30, உரை). 2. திருமால். மாயனாய் ..... மலரவ னாகி (தேவா. 1050: 6). 3. வஞ்சகன் (பிங்.). மாயன்-மாயவன் = திருமால். பெரியவனை மாயவனை (சிலப். 17, படர்க்கைப் பரவல்). மாயவள் = 1. கரிய நிறமுடையவள். மாயவண் மேனிபோல் (fȤ. 35). 2. காளி, மாயவ ளாடிய மரக்கா லாடலும் (சிலப். 6 59). மாயன்-மாயோன் = 1. கருநிறமுடையோன் (பரிபா. 3: 1, உரை). 2. திருமால். மாயோன் மேய காடுறை யுலகமும் (தொல். அகத். 5). மாயோள் = 1. கருநிறமுடையவள். மாயோள் முன்கை யாய்தொடி (பொருந. 14). 2. மாமை நிறமுடைவள். “khnahŸ பசலை நீக்கினன் (ஐங். 145). 3. வஞ்சகி (W.). 4. காளி. மாய்-மாயை. ஒ.நோ: சாய்-சாயை. மாயை = 1. காளி (பிங்.). 2. மறைப் பாற்றல் (திரோதான சக்தி) - (நாமதீப. 753.) 3. பொய்த் தோற்றம். 4. பொய்த் தோற்றவுரு. 5. மாயக்கலை (khaɤij). மாயையி னொளித்த மணிமே கலைதனை (மணிமே. 18 155). 6. வஞ்சகம் (சூடா.). 7. மூல முதனிலை (பிரகிருதி) பூதலய மாகின்ற மாயை முதலென்பர் சிலர் (தாயு. பரிபூரணா. 6). மாயை-வ. மாயா. ஒ. நோ: சாயை-வ. சாயா (chaya). சாய்தல் = நிழல் விழுதல். சாயை = நிழல். மாள்-மாட்டு(பி.வி.). ஒ.நோ: நீள் - நீட்டு. மாளுதல்=முடிதல். செய்ய முடிதல். மாட்டுதல் = முடித்தல், செய்து முடித்தல். நான் இதைச் செய்ய மாட்டுவேன் = என்னால் இதைச் செய்ய முடியும். நான் இதைச் செய்ய மாட்டேன் = 1. என்னால் இதைச் செய்ய முடியாது(முன்னைப் பொருள்). 2. நான் இதைச் செய்ய விரும்பேன் (ï‰iw¥ பொருள்). இங்ஙனமே, கூடுதல் முடிதல் ஆகிய துணைவினைகளும், உடன்பாட்டில் இயலுதற் பொருளையும், எதிர்மறையில் அல்லது அஃதின்றி அதனொடு விருப்பின்மை அல்லது விலக்குப் பொருளையும் உணர்த்தும். எ-டு: நான் வரக்கூடாது (விலக்கு). நான் சொல்ல முடியாது (இயலாமையும் விருப்பின்மையும்). இப் பொருள்களின் நேர்ச்சி இடத்தையும் காலங் குறித்த சொல்லையும் பொறுத்திருக்கும். எ-டு: நீ சொல்ல முடியாது (இயலாமை மட்டும்). நாளைக்கு நான் இதைச் செய்யமாட்டேன் (விருப்பின்மையும் இயலாமையும்). தமிழிற் பெரும்பாலும் துணைவினையாக வழங்கும் மாட்டுதல் என்னும் சொல் கன்னடத்தில், செய்தல் என்னும் பொருளில் தலைமை வினையாகவே வழங்குகின்றது. எ-டு: நானு ஈ கெலச மாடுவெனு = நான் இவ் வேலையைச் செய்வேன். மள்-மண்-மண. மணத்தல் = 1. பொருந்துதல், ``மத்தகத் தருவியின் மணந்த வோடைய'' (சீவக. 2211). 2. வந்து கூடுதல். ``நிரை மணந்த காலையே'' (சீவக. 418.). கலத்தல். ``அறையும் பொறையு மணந்த தலைய'' (புறம். 118). 4. நேர்தல். ``மருவுற மணந்த நட்பு'' (கலித். 46). 5. கமழ்தல். மணந்த சோலையும் (அரிச்.பு. விவாக. 98). 6. அணைத்தல். ``திருந்திழை மென்றோள் மணந்தவன்'' (கலித் 131). 7. புணர்தல் (பிங்.) ``மாசில்வண் சேக்கை மணந்த புணர்ச்சியுள்'' (கலித். 24). 8. மணம்புரிதல் ``மணந்தார் பிரிவுள்ளி'' (நாலடி. 397). 9. கூடியிருத்தல். மணக்குங்கான் மலரன்ன தகைய வாய். (கலித். 25.) மண-மணம் = 1. கூடுகை. ஏதிலார் மணந்தனில் மனம்போக்கும் (fháf. மகளிர். 10). 2. அன்பினைந்திணை, கைக்கிளை, பெருந்திணை என்னும் மணவகை. 3. நறுநாற்றம். மணநாறு படப்பை (பெரும்பாண். 354). 4. நறுமணப் பொருள் மணங்கமழ் நாற்றம் (மதுரைக். 447). 5. மதிப்பு. பணமுள்ள வனுக்கே மணமுண்டு (பழ.) 6. நன்னிலை. மக்கி மணங் குலைந்து (ïuhkeh. உயுத். 81). மணமலி = மருக்கொழுந்து (மலை.) மள்-மறு. ஒ.நோ: வெள்-வெறு, வெள்ளிலை-வெற்றிலை. மறு - மறை. மறைதல் = 1. இருட்குட் புகுதல். 2. ஒளிந்துகொள்ளுதல். புதன்மறைந்து வேட்டுவன் புட்சிமிழ்த் தற்று (குறள். 274). 3. தோன்றா தொழிதல். ஞாயிறு குடமலை மறைய (நற். 239). மறைத்தல் = 1. ஒளித்தல். மறைப்பேன்மற் காமத்தை (குறள். 1253). 2 . மூடுதல். அற்ற மறைத்தலோ புல்லறிவு (குறள். 846). 3. தீது வாராமற் காத்தல். குடும்பத்தைக் குற்ற மறைப்பா னுடம்பு (குறள். 1029). மறை = 1. மறைகை. 2. மறைவுச் செய்திகள். நிறையெனப் படுவது மறைபிற ரறியாமை (கலித். 133). 3. மறைக்கை. வெயின்மறைக் கொண்ட (புறம். 60). 4. கேடகம் (அக.நி.). 5. பெண்குறி. “moÆ லிருந்த மறை மாண்பை (அருட்பா, 1, இங்கித. 94). 6. களவுப் புணர்ச்சி மறையல ராகி மன்றத் தஃதே (குறுந். 97). 7. உருக்கரந்த கோலம். மறைவல்லன் (சீவக. 2027). 8. மறைவிடம் (சங்.அக.). 9. புகலிடம். வாசவன்.......kiwòfhJ” (குற்றா. தல. தக்கன் வேள்வி, 44). 10. சிறைக்கூடம். “kiwÆil வந்து (கந்தபு. வீரவாகு சயந் 22). 11. வஞ்சனை. “kiwƉw‹ யாழ்கேட்ட மானை யருளாது (கலித். 143). 12. மறைபொருள் (இரகசியம்). புறப்படுத்தா னாகு மறை (குறள். 596). 13. மறைவாகச் செய்யும் மந்திரச் சூழ்வினை. இராம னருமறைக்கு (அகம் 70). 14. பொதுமக்கட்குத் தெரியாத மறை பொருள் கொண்ட மதவியல் அறிவுநூல். மறைமொழி தானே மந்திர மென்ப (தொல். செய். 176). 15. ஆரிய வேதம். அளபிற் கோட லந்தணர் மறைத்தே (தொல். பிறப். 20) 16. ஆரிய மெய்ப்பொருள் நூல் (உபநிடதம்). வேதத்து மறைநீ (பரிபா. 3: 66). 17. ஆரியத் தொழன்மறை (ஆகமம்). மறைமுறை யறிந்த வறிவினை கிழவரும் (ஞான. 35). 18. அறிவியல் நூல். நரம்பின் மறைய வென்மனார் புலவர் (தொல். நூன். 33). ஒ.நோ: கள்-கர்-கரு-கருமை, கள்-களவு, கள்-கர்-கர-கரவு. முட்டு-முட்டி-முடி. மாந்தரும் அஃறிணைப் பொருள்களும் மாந்தரை அல்லது அஃறிணைப் பொருள்களை முட்டுவது தலையாலேயே யாதலால், தலையும் தலைபோன்ற உச்சிப் பகுதியும் தலையிலுள்ள உறுப்பும் அணிகலமும் முடியெனப் பெயர் பெறும். முடி = 1. தலை. அதுவே சிவன் முடிமேற் றான்கண்டு (திவ். திருவாய். 2 : 8 : 6). 2. ஆடவர் உச்சிக் குடுமி (பிங்). 3. பெண்டிர் கொண்டை போடும் ஐம்பாலுள் உச்சியில் முடிக்கும் kயிர்க்கட்டுtகை(âவா.)4.jiykÆ®. Kடிக் காணிக்கை (உ. வ.) 5. மயிர். பன்றிமுடி (உ.வ.) 6.தலையிலணியும் மகுடம். ஞாயிற்றணிவனப்பமைந்த......òidKo” (பரிபா. 13 : 2). 7. மலையுச்சி. முடியை மோயின னின்றுழி (கம்பரா. மீட்சி. 186). 8. தேங்காய்க் குடுமி (ahœ¥.). விலங்கு மயிரையும் முடியென்றது, மயிர் என்பது இடக்கர்ச் சொல்லாகி மயிரை முடியென்னும் இடக்கரடக்கல் வழக்கெழுந்த பிற்காலத்ததாகும். நாற்றுமுடி, மூட்டைமுடிச்சு முதலிய கூட்டுச்சொற்களிலுள்ள முடி யென்னும் சொல் வளைத்தல் அல்லது சுற்றுதல் என்பதை வேர்ப் பொருளாகக் கொண்ட வேறொரு சொல்லினின்று தோன்றியதாகும். நட்டமாக நிற்கும் பொருள்களின் உச்சிப்பகுதி அவற்றிற்கு முடிபோன் றிருத்தலால் அது முடியெனப்பட்டது. மலையுச்சி வான முகட்டை முட்டிக்கொண்டிருப்பதாகப் பாடவும் சொல்லவும் படுதல் காண்க. மலை முடிகளுள் உயர்ந்தது கொடுமுடி. முடி யென்னுஞ் சொல் ஒரு பொருளின் முடிவான இறுதிப் பகுதியைக் குறித்தலால், ஒரு வினை முடிதலைக் குறிக்கும் வினைச் சொல்லாகவும் அஃது ஆளப்பட்டது. “bfh©l குடுமித்தித் தண்பணை நாடே என்னும் 32ஆம் புறப்பாட்டடியில், உச்சிக் குடுமியைக் குறிக்குஞ் சொல்லே, சோழன் நலங்கிள்ளி கருத்திற் கொண்ட முடிபையுங் குறித்தல் காண்க. முடிதல் = 1. இறுதியாதல். கூட்டம் முடிந்தவுடன் தலைவர் போய் விட்டார் (உ.வ.) 2. முற்றுப்பெறுதல். இவ் விதழுடன் செந்தமிழ்ச் செல்வியின் 50 ஆம் சிலம்பு முடிகின்றது. 3. நிறைவேறுதல். ``முட்டின்றி மூன்றும் முடியுமேல்'' (நாலடி. 250). 4. செய்ய முடிதல், இயலுதல். குறுகிய காலத்தில் என்னால் அதைச் செய்ய முடியாது (உ.வ.). 5. வாழ்நாள் முடிந்து இறத்தல். கயலேர் கண்ணி கணவனொடு முடிய (பு. வெ. 10, சிறப்பிற். 9, கொளு). 6. அழிதல். மூவேந்தர் குலமும் 16ஆம் நூற்றாண்டொடு முடிந்து விட்டது. ஒ.நோ: மாளுதல் = இறத்தல், செய்ய முடிதல்; இயலுதல். ம. Kof., க. முடி. முடித்தல் = 1. முற்றுவித்தல். நூல் முழுவதையும் மும்மாதத்திற்குள் எழுதி முடித்துவிட்டார் (உ.வ.). நின்னன்னை சாபமு முடித்தென் னெஞ்சத் திடர்முடித்தான் (கம்பரா.மிதிலை.88) 2. நிறைவேற்றுதல். ``அருந்தொழில் முடியரோ திருந்துவேற் கொற்றன்'' (புறம். 171). 3. அழித்தல். சேனையை....Ko¡Ft‹” (f«guh. மிதிலை. 98). முடி-மடி. மடிதல் = 1. சாதல். ``வல்லது மடிதலே யென்னின் மாறுதிர்'' (f«guh. அதிகா. 6). 2. அழிதல். ``குடிமடிந்து குற்றம் பெருகும்'' (FwŸ. 604). மடித்தல் = அழித்தல். ``முரனெலா மடிப்ப'' (கம்பரா. தாடகை. 35). முட்டு - மட்டு = 1. அளவு. ``மட்டுப்படாக் கொங்கை மானார்'' (கம்பர்). 2. நில அளவுவகை. 3. எல்லை. வடிவுக்கோர் மட்டுண் டாமோ (Phdth.njth. 1) 4. குத்து மதிப்பு. 5. அடக்கம். 6. சிக்கன அளவு. மட்டாய்ச் செலவடு (W.). 7. ஒப்பு. 8. சிறுமை. 9. தாழ்வு. 10. குறைவு. ஒன்றோடொன்று முட்டுகிற நிலையிலேயே, ஒன்றன் நீள அளவு தெரிதல் காண்க. k., bj., க. மட்டு. மட்டு - மட்டம் = 1. அளவு. 2. சமநிலை. 3. அளவுகோல். 4. எல்லை (W). 5. குத்துமதிப்பு (உத்தேசம்) (W). 6. ஒப்பு, சமவெண் (W). 7. சிறுமை. மட்டப் பூ (S. I. I. II, 184). 8. தாழ்வு, குறைவு. 9 அடக்கம். 10. செட்டு. 11. நடுத்தர நிலை. 12 சிறுதரக் குதிரை. 13 ஆணானைக் குட்டி (யாழ்ப்.). 14. ஒரே உயரமுள்ள நிலை. 15. வாழை, கரும்பு முதலியவற்றின் கன்று (W.). 16. மூன்றொத்துடைய தாளம் (சிலப். 3:151, உரை). 17. கேடகம். 18. பொன் மணியின் உறுப்புவகை (W.). க. மட்ட. மட்டக்கோல், மட்டங் கட்டுதல், மட்டச் சுவர், மட்டஞ் செய்தல், மட்டத்தரம், மட்டந் தட்டுதல், மட்டநூல், மட்டப்பலகை, மட்டப்பா (மொட்டை மாடி), மட்டப்பொன், மட்டம் பார்த்தல், மட்டம் பிடித்தல், மட்டம் போடுதல், மட்ட வேலைக்காரன், மட்ட விழைப்புளி, மட்டவேலை முதலிய வழக்குச் சொற்களை நோக்குக. இளமட்டம் = 1. குறுமட்டக் குதிரை. 2. இளம்பருவத்தோன். இளமட்டம்-இளவட்டம் = இளைஞன். மட்டு-மட்டி = 1. (தாழ்ந்த மதிநிலையுள்ள) மூடன் “m¿ahj..... மூடமட்டி (திருப்பு. 195). 2. பரும்படி. 3. மட்டிக்காரை. 4. மக்கு. 5. ஒழுங் கின்மை. 6. மட்டி வாழை (ehŠ.). மட்டித்தாள், மட்டித்தையல், மட்டிப்புடைவை, மட்டிவேலை முதலிய வழக்குகளை நோக்குக. bj., க. k£o(maddi). மட்டு-மட்டை = 1. பயனற்ற-வன்-வள்-து. ``இந்த மட்டைக் கிறுத்த தெல்லாம் போதும்'' (விறலிவிடு. 889). 2. மட்டமான நெல். 3. மட்டமான அரிசி. மட்டுக் கட்டுதல், மட்டுக்கு மிஞ்சுதல், மட்டுக் கோணம், மட்டுக்கோல், மட்டுத் தப்புதல், மட்டுத் திட்டம், மட்டுப்படுதல், மட்டுப் பிடித்தல், மட்டு மதிப்பு (மட்டு மரியாதை), மட்டு மதியம், மட்டு மருங்கு முதலிய வழக்குகளை நோக்குக. முத்துதல் (முட்டுதல்) = பொருந்துதல், ஒத்தல். முத்து(முட்டு)-மத்து (k£L) = அளவு. மத்து-மத்தி. மத்தித்தல் = அளவிடுதல். மத்தி-மதி. மதித்தல் = 1. அளவிடுதல். மண் விழைந்து வாழ்நாள் மதியாமை (திரிகடு. 29). 2. கருதுதல். ஆடலை மதித்தான் (fªjò. திருவிளை.1) 3. பொருட்படுத்துதல். மண்ணாள்வான் மதித்துமிரேன் (திருவாச 5:12). 4. ஊழ்குதல் (தியானித்தல்). “eªâa§ குரவனை மதிப்பாம் (விநாயகபு. கடவுள். 13). 5. துணிதல். தேர்மணிக் குரலென விவண்மதிக்குமன் (கலித். 126:7). மதி-வ. மதி, மிதி. OE., OS metan., OHG. mezzan, ON meta, Goth. metan, E. mete, to measure. மதி = 1. மதிப்பு. நீண்மதிக் குலிசம் (இரகு. யாகப் 92). 2. இயற்கை யறிவு. மதிநுட்ப நூலோ டுடையார்க்கு (குறள். 636). 3. பகுத்தறிவு. மதியிலி மடநெஞ்சே (திருவாச. 5 33). 4. அறியும் புலன் (intellect). 5. அறிவுடைமை. ``மதிமை சாலா மருட்கை நான்கே'' (தொல். மெய்ப். 7). மதி-மதம் = 1. மதித்தறிந்து கையாளும் நூல் நெறிமுறை. எழுவகை மதமே உடன்படல் மறுத்தல் பிறர்தம் மதமேற் கொண்டு களைவே தாஅ னாட்டித் தனாது நிறுப்பே இருவர் மாறுகோள் ஒருதலை துணிவே பிறர்நூற் குற்றங் காட்டல் ஏனைப் பிறிதொடு படாஅன் தன்மதங் கொளலே. (நன். பொதுப். 11) 2. அம்மை யிம்மை யும்மை(மறுமை) நிலைகளை மதித்தறிந்து கடைப்பிடிக்குங் கொள்கை. எ-டு: சிவமதம், திருமால் மதம், கடவுண் மதம். முத்துதல் = பொருந்துதல், கலத்தல். முத்து-மத்து = கலப்பு, கலக்கம், மயக்கம், மயக்கஞ் செய்யும் பித்தம், மயக்கந் தரும் கள், தீங்கள்ளாகிய தேன், பித்த முண்டாக்கும் ஊமத்தை. மத்து-மட்டு = 1. கள். வெப்புடைய மட்டுண்டு (புறம். 24). 2. தேன். மட்டுவா யவிழந்த தண்டார் (சீவக. 1145). மட்டுவார் குழலம்மை = மலைமகளின் பெயர்களுள் ஒன்று. 3. இன்சாறு. “fU¥òk£L வாய் மடுத்து (திருவாச. 5 : 80). 4. காமக் குடிப்பு. மட்டுடை மணமகள் (சீவக. 98). 5. மட்டு வைக்குஞ் சாடி. மட்டுவாய் திறப்பவும் (புறம். 113). 6 (தேனிற் குந் தீங்கள்ளிற்கு முரிய) நறுமணம். மட்டு நீறொடும் (இரகு. இரகுவுற். 23). மத்து-மத்தம் = 1. மயக்கம். மத்தமாம் பிணிநோய்க்கு (njth. 426 : 3). 2.வெறி, களிப்பு. மத்தக் கரியுரியோன் (âU¡nfh. 388). 3. யானை மதம் (திருக்கோ. 388, உரை). 4. செருக்கு (உரி. நி.) 5 கோட்டி (பைத்தியம்). மத்த மனத்தொடு மாலிவ னென்ன (திருவாச. 5: 3). 6. கருவூமத்தை. மத்தநன் மாமலரும் மதியும் வளர் (தேவா. 923 : 8). மத்தம்-வ. மத்த. மத்து-மது = 1. கள், மதுமறைந் துண்டோர் மகிழ்ச்சி போல (bjhš. பொருள். 114, ப. 495). 2. தேன். மதுவின் குடங்களும் (áy¥. 25:38). 3. இலுப்பைப்பூ முதலியவற்றினினறு காய்ச்சி யிறக்கும் வெறிநீர் (சங். அக.). 4. அமுதம் (சங். அக.). 5. இனிமை (அக.). 6. பராசம் (மகரந்தம்) (சங். அக.) 7.mâkJu« (மலை.). வ. மது (madhu), OE. meodu, MLG. mede. OHG. metu, ON. mjathr, E mead, alcoholic liquor of fermented honey and water. Gk methu, wine. L mel, honey. மத்தம்-மத்தன். 1. மதிமயக்க மடைந்தவன். இறந்தனர் போல வீழ்ந்த மத்தரை (பாரத. நிரை. 102). 2. பித்தன். மத்தனேன் பெறுமாய மலமாய (தாயு. பொன்னை. 35.). 3. பேரூக்க முள்ளவன். பித்தரின் மயங்கி மத்தரின் மதித்து (திருவாச. 153). 4. கொழுப்புள்ளவன். மத்தனி ராவணன் கொதித்தான் (ïuhkeh. உயுத். 44). மத்தன் - வ. மத்த மத்து-மத்தி-மதி = மயக்கஞ் செய்யும் திங்கள். இப் பொருள் வடமொழியில் இல்லை. ஒ.நோ: L. luna, moon. L. lunaticus-E. lunatic, insane person. E. lunacy, insanity. பண்டைக் காலத்தில், நிலவொளியாற் கோட்டியுண்டாவதாக ஒரு கருத்து உலக முழுதும் பரவியிருந்தது. மது-மதம் = 1. கள்(மது). 2. மதுக்களிப்பு (மலைபடு. 173, உரை). 3. nj‹....``kj§fkœ கோதை (சீவக. 2584). 4.வெறி (சங். அக.) 5. மகிழ்ச்சி. காதலி சொல்லிற் பிறக்கு முயர்மதம் (நான்மணி. 7). 6. செருக்கு. போரெதிர்ந் தேற்றார் மதுகை மதந்தப (gÇgh. 18 1). 7. வலிமை. படிமதஞ் சாம்ப வொதுங்கி (பரிபா. 4:18). 8. காம வேட்கைமிகுதி (திருக்கோ. 69,உரை). 9. யானைக்கடம், மதநீர் (சீவக. 2485). 10. நிலவளம் (W.) 11. காசறை (கஸ்தூரி) நறுமை. மாலையுஞ் சாந்து மதமு மிழைகளும் (gÇgh. 10 92). 12. கன்மதம். (தைலவ. தைல, 125). 13. வீரியம் (ahœ. அக.) 14. மிகுதி (யாழ் அக.). 15. பெருமை (யாழ். அக.). மது-மதுகை=1. வலிமை. ``அனைமதுகையர் கொல்'' (குறுந். 290). 2.அறிவு. ``வானுயர் மதுகை வாட்டும்'' (சீவக. 664). மது-மதுங்கு. மதுங்குதல் = இனிமையாதல். ``மதுங்கிய வார்கனி''. (திருமந். 2914) மதம் - மதன் = 1. கலக்கம் (யாழ். அக.). 2. மடமை. மதனுடை நோன்றாள் (திருமுருகு. 7, உரை). 3. செருக்கு மதனுடை நோன்றாள் (பட்டினப் 278). 4. வலிமை, மதனுடை முழவுத்தோள் (òw«. 50). 5. மன வெழுச்சி. மதனுடை நோன்றாள் (புறம். 75). 6. அழகு (பிங்.) 7. மாட்சிமை (பிங்.) 8. மிகுதி (யாழ். அக.). மதன்-மதனம் = 1. தேனீ (யாழ். அக.). 2. தேன்மெழுகு (யாழ். அக.). 3. மருக்காரை (மலை.). 4. பெருமிதம் (யாழ். அக.). 5. காமம் (பிங்.). 6. புணர்ச்சி விருப்பம் (பிங்.). 7. இளவேனில் (யாழ். அக.). 8. ஒரு சாம்பல் நிறக் கடல்மீன். 9. ஒரு வெண்ணிறக் கடல்மீன். மதம் - மதர். மதர்த்தல் = 1. களித்தல். ``மதுப்பருகிப் பருவாளை நின்று மதர்க்கு மருங்கெலாம்'' (கம்பரா. நாட்டுப். 24.) 2. மதங்கொள்ளுதல். ``மதர் விடையிற் சீறி'' (பு. வெ. 714). 3. செருக்குதல் (W.) 4. மரஞ்செடிகள் மட்டிற்கு மிஞ்சிக் கொழுத்தல். 5. செழித்தல். 6. மிகுதல். ``மதரரி மழைக்கண்'' (சீவக. 2803). மதர் = 1. யானை மதநீர் (நாமதீப. 207). 2. செருக்கு. ``அரிமதர் மழைக் கண்ணீர்'' (கலித். 77.). 3. மகிழ்ச்சி (திவா.). 4. மிகுதி (பிங்.). 5. வீரம் (அரு.நி.) மதர் - மதர்வு. 1. ஆசைப் பெருக்கம் (யாழ். அக.). 2. உள்ளக்களிப்பு (பிங்.). 3. இறுமாப்பு. 4. வலிமை (சூடா.). 5. செழிப்பு. 6. அழகு (சூடா.). 7. மிகுதி (திவா.). மதர் - மதர்வை = 1. மயக்கம். மதர்வை வெங்கதிர் பரப்பு கிடந்தென (சீவக. 322). 2. களிப்பு (பிங்.). 3. செருக்கு. மதர்வை நோக்கமும் (கந்தபு. தெய்வயா. 64.). 4. செழிப்பு. மதர்வைக் கொம்பு (சூளா. நகர. 25). மதர்வு - மதவு = வலிமை. மதவுநடை நல்லான் (அகம். 14). மதவு - மத. மதத்தல் = 1. மயங்குதல் (W.). 2. களித்தல். 3. செருக்குதல். 4. கொழுத்தல். 5. காம மிகுதல். 6. மதங்கொள்ளுதல். மிகவும் மதத்து மதம் பொழிந்து (ஞானவா. திருவா. 47). மத - வ. மத. மத = 1. மிகுதி. 2. வலிமை. 3. அழகு. 4. மடமை. மதவே மடனும் வலியு மாகும் (தொல். உரி. 79). மதவு - மதகு - மதங்கு - மதக்கு - மதக்கம். ஒ.நோ: மயங்கு -மயக்கு - மயக்கம். மதக்கம் = பேருண்டி, குடி, கஞ்சா முதலியவற்றா லுண்டாகும் மயக்கம். ஆறு மதக்கத்தினா லல்லவா எங்களை விழுங்காமல் விட்டிட்டது (அவிவே. கதை). 2 களைப்பு (யாழ். அக.). மதமதப்பு = 1. செழிப்பு (திருவிருத். 9, வியா. ப. 71). 2. திமிர் (W.). 3. உணர்ச்சியின்மை (W.). முல்5 (வளைதற்) கருத்து சாய்தல், கோணுதல், வளைதல், நெளிதல், மடங்குதல், திருகுதல், வட்டமாதல், முடிதல், சுற்றுதல், சுழலுதல், புரளுதல், உருளுதல், உருண்டையாதல், திரிதல், திரும்புதல், சூழ்தல் முதலிய பலவும் வளைதற் கருத்தொடு தொடர்புள்ளவையாம். முல்-வில் = வளைந்த வேட்டைக் கருவி. ஒ.நோ: முடுக்கு-விடுக்கு = (ஒரு சிறு மடக்குநீர்). வில்-விலா = வளைந்த நெஞ்செலும்பு அல்லது நெஞ்சக் கூடு. ம. வில், தெ. வில்லு, க. பில். முல்-முன்-முனி = வில் (திவா.) முனிநாண் கோத்து (உபதேசகா. பஞ்சாக். 96). முல்-மூல்-மூலை = 1. கோணம். ``மூலை முடுக்குகளும்'' (இராமநா. சுந். 3.) 2. மூலைத்திசை (W). 3. அறைமூலை. ``இருட்டறை மூலையிலிருந்த குமரி'' (திருமந். 1514). ம. மூல, தெ. மூல, க. மூலெ. மூலைக்குத்து = 1. முற்றத்து மூலைக்கு எதிராக வீட்டுத் தலைவாயில் நிலை அமைந்திருக்கை. 2. மூலைப் பார்வை. மூலைத்திசை = பெருந்திசைகட்கு நடுவேயுள்ள கோணத்திசை. மூலைப்பார்வை = 1. கோணத்திசையை நோக்கிய வீட்டுநிலை. 2. சாகுந்தறுவாயில் விழி ஒருபுறமாகச் செருகி நிலைக்குத்திடுகை. மூலைமட்டம் = 1. நேர்கோணம். 2. மூலை மட்டப்பலகை (கட்டட. நாமா) மூலை முடங்கி (மூலை முடக்கு) = வளைந்து செல்லும் சிறு வழி (W.). மூலையரம் = முப்பட்டையரம் (W.). மூலையோடு = முகட்டுச்சியில் வேயும் ஓட்டுவகை. மூலைவாசல் = தெருவிற்கு நேராகவன்றி ஒதுக்கமாயமைந்த வாயில். மூலைவாட்டு (மூலைவாட்டம்) = மூலை வாக்கு. மூலைவிட்டம் = நாற்கோணத்தின் எதிர்மூலைகளைச் சேர்க்குங் கோடு. முல்-முர்-முரு-முருகு = பிறைபோல் வளைந்த காதணி வச்ர முருகையெந்தக் கோனான்றன் கையிற் கொடுத்தானோ (ÉwÈÉL. 703). முரு-மரு-மரை = 1. திருகுவகை. 2. விளக்குத் திரியை ஏற்றியிறக்கும் திருகுக்காய். மரையாணி = திருகாணி. தெ. மர, க. மரெ. முரு-முரி. முரிதல் = 1. வளைதல். முரிந்து கடைநெரிய வரிந்த சிலைப்புருவமும் (மணிமே. 18:161). 2. வளைந்து ஒடிதல் (சூடா.) (fU«ò கம்பு முதலியவற்றை ஒடித்தற்கு அவற்றை வளைத்தல் காண்க.) 3.கெடுதல். இடைக்கண் முரிந்தார் பலர் (குறள். 473). 4.njhšÉíWjš. முற்றிய வமரர் சேனை முரிந்தன( விநாயகபு.34 :15). 5.ájWjš. பஞ்சினம் புகைமுரிந் தெழுந்தென விண்ணத் தலமர (கல்லா.7). 6. தளர்தல். முரிந்தநடை மடந்தையர்த முழங்கொலியும் வழங்கொலியும் (திருவிசை. கருவூ. 5:10). 7.தவறுதல். முரியுங் காலைத் தெரிய மற்றதிற் றட்டினள் (பெருங். வத்தவ. 12:99). 8. நீங்குதல். 9. நிலைகெடுதல். இடை முரிந்து வேந்தனும் வேந்து கெடும் (குறள். 899). 10. குணங்கெடுதல். ஒழுகுபால் கதிர்வெயிற் படமுரிந்து (âU¢brª. பிள்ளைத். செங்கீரை. 1). முரி = முரிதல் = வளைதலைச் செய்தல். ``புருவமும் முரி முரிந்தவே'' (Ótf. 2310). k., க. முரி. முரித்தல் = 1. வளைத்து ஒடித்தல். நன்சிலை முரித்திட் டம்பை வாடினன் பிடித்து நின்றான் (சீவக.2185). 2.தோற்கச் செய்தல் (ahœ. அக.). 3. அழித்தல். மதிலொடு வடவாயிலை முரித்து (âUthyth. 24:4). 4. திறை மையாக நடாத்துதல் (W.). வெட்டி முறித்தல் என்னும் வழக்கை நோக்குக. ம. முரிக்க, தெ. முரியு. முரி = 1. வளைவு. ``முரியா ரளகத் தடாதகை'' (திருவிளை.பயகர. 8). 2. துண்டு, 3. நொய்யரிசி. குத்திய வரிசி யெல்லா முரியறக் கொழிக்க வாரீர் (தக்கயாகப். 736). 4. முழுதிற் குறைவானது. மக்கண் முரியே (கலித். 94). 5.சிதைவு. (áy¥.25:146,mU«.). 6. எழுதிய ஓலைநறுக்கு. 7. இசைப்பாவில் இறுதிப்பகுதி (சிலப். 6:35, உரை). 8. நாடகக் தமிழின் இறுதியில் வருஞ் சுரிதகம் (தொல். பொருள். 444, உரை). k., bj., f., து. முரி. முரிவு = 1. மடிப்பு (யாழ். அக.). 2. வளைந்துஓடிகை. (யாழ். அக.). 3. சுருக்குகை. புருவ முரிவுகண் டஞ்சி (முத்தொள். களம்). 4. நீங்குகை. இளையர் மார்ப முரிவில ரெழுதி வாழும் (சீவக. 372). 5.tU¤j«. பாவைமார் முரிவுற் றார்களின் மூர்ச்சனை செய்பவால் (சீவக. 1627). 6. சோம்பு (அரு. நி.). முரு-முறு-முறுகு. முறுகுதல் = (செ.கு.வி.) 1. திருகுதல் (பிங்). 2. விரைதல். முறுகிய விசையிற் றாகி (சீவக. 796). 3. முதிர்தல். ``கனிமுறுகி விண்டென (சூளா.சீய. 7). 4. மிகுதல். “nt£ifÆ‹ முறுகி யூர்தர (சீவக. 1183). 5. கடுமையாதல். “btÆ‹ முறுக (நாலடி.171). 6.காந்திப்போதல். 7.செருக்குதல். “tiubaL¡f லுற்று முறுகினான் (தேவா. 289 : 10). (செ. குன்றாவி.) மீறுதல் (பிங்.). ம. முறுகு. முறுகு-முறுகல் = 1. திருகல். திருகல் முறுகல், பிரண்டைபோலத் திருகல் முறுகலானது (உ.வ.). 2. மிகுதியாக வெந்தது. தோசை யொன்று முறுகலாகப் போடு (உ.வ.). முறுகு-முறுக்கு. முறுக்குதல் = (செ. குன்றாவி.) 1. கயிறு முதலியன திரித்தல். ``வாய்மடித் திரண்டு கையு முறுக்கி'' (கம்பரா. மருத்து. 10). 2. முறுக்காணியைத் திருகுதல். 3. மிகைபட முறுக்கியொடித்தல். ``பிடிபடி முறுக்கிய பெருமரப் பூசல் (அகம். 8). 4. சுழற்றுதல். ``முறுக்கிவிட்ட குயமகன் றிகிரிபோல'' (சீவக.786). 5. வெற்றிலை சுருட்டி யுண்ணுதல். (நாஞ்.). 6. கை கால்களைப் பிசைந்து தேய்த்தல் (W.) (br. கு. வி.). 1. செருக்குதல். 2. மாறுபடுதல். 3. சினத்தல் (யாழ். அக.). k., க. முருக்கு, தெ. முரக்கட்டு. முறுக்கு = 1. திரிக்கை. 2. திருகாணிச் சுற்று. 3. முறுக்கிச் சுட்ட பலகாரம். அடைமுறுக்கு (விநாயகபு. 39 : 39). 4. இதழ் முறுக்குள்ள அரும்பு. ``முறுக்கு டைந்தலர் மலர்களும் (காஞ்சிப்பு. திருக்கண். 180). 5. நூலுருண்டை. 6. வலிப்பு (இலக். அக). 7. நெறிப்பு (W). 8 கடுமை (இலக். அக). 9. மாறுபாடு (W). 10. செருக்கு. 11. மிடுக்கு. கிழமாய் நரைத்து முகந்திரைந்து மிந்த முறுக்கேன் (தனிப்பா. I, 88 : 173). முறுக்கு-முறுக்கம் = 1. திருகல். 2. முடுக்கு. 3. கடுமை. முறுக்கு-முறுக்கி = முறுக்குங் கருவி. வில்லை முறுக்கி = ஒரு கருவி (spanner). முறுக்கவரை, முறுக்காணி, முறுக்குமீசை, முறுக்கு வட்டம், முறுக்கு விரியன் முதலிய கூட்டுச் சொற்கள் முறுக்கவியல் பற்றியன. முறுக்கு-முறுக்கான் = 1. முறுக்கிய புகையிலை. 2. புகையிலையுடன் போட்டுக்கொள்ளும் தாம்பூலம் (நாஞ்.). ம. முறுக்கான். முறு-முற்று. முற்றுதல் = 1. சூழ்தல். பாண்முற் றுகநின் னாண்மகி ழிருக்கை (புறம். 29). 2. கோட்டையைச் சூழ்ந்து பொருதல். “K‰¿a வகத்தோன் வீழ்ந்த நொச்சியும் (தொல். புறத். 13). க. முத்து. முற்று = முற்றுகை. ``முற்றியார் முற்றுவிட'' (பு. வெ. 6 25). முற்றுகை = 1. சூழ்கை. 2. கோட்டையைப் பகைவர் படை வளைக்கை. 3. நெருக்கடி (W.). முற்றுகை-முற்றிக்கை = 1. கோட்டையைப் பகைவர் படை வளைக்கை. 2. நெருக்கடி நிலைமை. சாப்பாட்டிற்கு மெத்த முற் றிக்கையாயிருக்கிறது (இ.வ.). தெ. முத்ததி, க. முத்திகெ (g). முற்றிக்கை-முற்றிகை = கோட்டையைப் பகைவர் படை வளைக்கை. முறுகு-மறுகு. மறுகுதல் = 1. சுழலுதல். மறுகக் கடல்கடைந்தான் (â›. இயற். 2 68). 2. பலகாலுந் திரிதல். மலிவன மறுகி (F¿Šá¥. 97). 3. மனங்கலங்குதல். நெஞ்சின் மறுகல் நீ (சீவக. 946). 4. வருந்துதல். கிடந்துயிர் மறுகுவ தாயினும் (அகம். 29). 5. சிதைதல். குடன் மறுகிட (கம்பரா. இந்திரசித். 19). 6. அரைபடுதல் நறுஞ் சாந்து மறுக (மதுரைக். 553). மறுகு-மறுக்கு மறுக்குதல் = 1. மனத்தைக் கலக்குதல். ``மறுக்கி வல்வலைப் படுத்தி'' (திவ். திருவாய். 4 : 9 : 6). 2. எண்ணெய் முதலியவற்றால் தொண்டை கரகரத்தல் (இ.வ.). மறுக்கு = மனக்கலக்கம். மறுக்கினோ டிரியல் போயுற (``கம்பரா. பள்ளிபடை. 109). மறுக்க-மறுக்கம்=1. சுழற்சி. 2. மனக்கலக்கம் மன்பதை மறுக்கத் துன்பங் களைவோன் (பரிபா. 15 52). 3. துன்பம். திறைகொடா மன்னவரை மறுக்கஞ் செய்யும் பெருமையார் (தேவா. 17 : 4). மறுகு-மறுகல் = 1. சுழற்சி. 2. கலங்குகை. ``பேதையேன் நெஞ்சம் மறுகல் செய்யும்'' (திவ். திருவாய். 9 4 4). 3. நோய் திரும்புகை (W.). மறுகல்-மறுகலி. மறுகலித்தல் = நோய் திரும்புதல் (யாழ். அக.). முறு-முறி. முறிதல் = 1. வளைந்து ஒடிதல். ``அச்சு முறிந்ததென் றுந்தீபற'' (திருவாச. 14 : 2). 2. தோற்றல். 3. நிலைகெடுதல். ``அரக்க னெடுத்து முறிந்து (பெரியபு. திருஞா. 77). 4. அழிதல். ``வீரமுறிந்த நெஞ்சினர்'' (விநாயகபு. 79 : 66). 5. தன்மை கெடுதல். பால் முறிந்து போயிற்று (உ.வ.). 6. பதந் தப்புதல். நெய் முறியக் காய்ந்ததனாற் கசக்கின்றது (உ.வ.). 7. பயனறுதல். இரசம் முறிய மருந்து சாப்பிடுகிறது (W.). 8. குலைதல். 9. அருள் மாறுதல். ம. முரிக, தெ. முரிக்கொனு. க. முரி.. முறித்தல் = 1. ஒடித்தல். ``பொருசிலை முறித்த வீரன் ``பாரத கிருட்டிண. 141). 2. கிழித்தல். வேட்டியை இரண்டாக முறி (உ.வ.). 3. நிறுத்தி விடுதல். ஏலச்சீட்டை முறித்துவிட்டான் (உ.வ.). 4. தன்மை மாற்றுதல். ``ஆசைப்பிணி பறித்தவனை யாவர் முறிப்பவர் (f«guh. அங்கத. 18). 5.நெசவுத்தறியில் உண்டை மறித்தல். 6. பெருவினைகளைச் செய்து முடித்தல். நீ பலவற்றை வெட்டி முறித்து விட்டையோ? (உ.வ.). முறி = 1. துண்டு. ``கீண்ட வளையின் முறியொன்று கிடப்ப ``ஞானவா. சிகித். 107). 2. உடைத்த தேங்காயிற் பாதி. தேங்காய் முறி. 3 பாதி. 4. ஆவணம். ``மோகவாசை முறியிட்ட பெட்டியை'' (தாயு. சிற்ப. 1). 5. ஓலைப் பற்றுமுறி. 6. துணி. ``கொள்ளிமுறிப் பாதியேது'' (அரிச் பு. மயான 41). 7. நகர்ப்பகுதி, சேரி (பிங்.). 8. அறை (நாஞ்.). 9. உயர்ந்த வெண்கலம். முறி - மறி. மறிதல் = 1. மடங்குதல். 2. முறுக்குண்ணுதல். திரிந்து மறிந்துவீழ் தாடி (கலித். 15). 3. கீழ்மேலாதல். மலைபுரை யானை மறிந்து (பு. வெ. 7:9). 4. திரும்புதல், மீளுதல். மறிதிரை (fȤ. 121). 5. முதுகிடுதல். மைந்தர் மறிய மறங்கடத்து (பு. வெ. 6:14). 6. சாய்தல். எரிமறித் தன்ன நாவின் (சிறுபாண். 196). 7. விழுதல் நிழன்மணிப் பன்றி யற்று மறியுமோ (சீவக. 2201). 8. பலகாலுந் திரிதல். நயனாடி நட்பாக்கும் வினைவர்போன் மறிதரும் (கலித். 46). 9. நிலைகுலைதல். ஆம்பன் முகவரக்கன் கிளையொடு மறிய (கல்லா. கணபதி வாழ். 10. அறுபடுதல். ``உன் காது மறியும் (திவ்.பெரியாழ் 2 3 6, அரும்.). 11. தடைப்படுதல். 12. சாதல். மறிந்த மகன்றனைச்சுட (அரிச். பு. மயான. 38). மறித்தல = 1. திருப்புதல். 2. திரும்பச் செய்தல். 3. கீழ் மேலாக்குதல் (W.) 4. தடுத்தல். ``மறுபிறப் போட மறித்திடுமே (âUthr. 36:2). 5. கிடை யமர்த்தல். நன்செய்க்கு மூன்று கிடை மறிக்க வேண்டும் (உ.வ.). 6. தடுத்தற் குறியாகக் கையசைத்தல். “kh‰wU§ கரதல மறிக்கு மாறு (கம்பரா. உண்டாட். 21). மறி = மறியல். மறிகால் = மறுகால். மறிசல் = அணை. மறித்து = திரும்ப. மறித்தாங் கிழிந்து (மணிமே.10:88). மறித்தும் = திரும்பவும், மீண்டும் வேலானை மறித்துங் காண்க (Ótf. 1225). மறிதரல் = மீளுகை. (பிங்.). மறிந்து - மீண்டும். மறிந்து வந்தனரே மாற்றோர் (பெருங். மகத. 19 : 80). மறிப்பு = மறியல். மறிபடுதல் = 1. தடுக்கப்படுதல். 2. இடையூறுபடுதல். (nfhÆbyh. 13). மறியல் = 1. வணிகம், தொழில், கல்வி, போக்குவரத்து முதலியன நடைபெறா வண்ணம் தடுத்தல். 2. சிறைக்கூடம். மறிவு = 1. திரும்புகை. ``மறிவிலாச் சிவகதி'' (அருட்பா, ப, செவி a¿.6)nfL. (ஐங். அரும்.). முறு - முறை = 1. வளைவு. 2. வேலையாள் திருப்பம் (turn).”பணிமுறை மாற முந்துவர் (கம்பரா. ஊர்தேடு. 49). இன்று குழாய்த் தண்ணீர் பிடிக்க வேண்டியது யார் முறை? (உ.வ.) 3. தடவை. எழுமுறை யிறைஞ்சி (சீவக. 3052). 4. அடைவு. “KiwKiw...fÊíÄ› வுலகத்து (புறம்.29). 5. ஒழுங்கு. ``முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணி'' (தொல். சி. பாயி.). 6. ஊழ். “MUÆ® முறைவழிப் படூஉம்'' (புறம். 192). 7. ஒழுக்கம். “KiwÆ லோயைத் தென்புலத் துய்ப்பன் (கம்பரா. வாலிவதை. 177). 8. கற்பு. முகிழ்மயங்கு முல்லை முறைநிகழ்வு காட்ட (பரிபா. 15:39). 9. உறவு. பொருட்டுமுறை யாதியின் (நன். 298). 10. மணஞ்செய் யுறவு. முறை மாப்பிள்ளை. முறைப்பெண், முறைகாரன்.11. உறவுமுறைப் பெயர். பெரியாரை யென்று முறைகொண்டு கூறார்'' (ஆசாரக். 91). 12. நேர்மை, முறைகேடு. 13. செங்கோல் நெறி. முறைகோடி மன்னவன் செய்யின் (குறள். 559). 14. நெறிமுறை. காக்கைப் பனம் பழமுறை (காக தாலீய நியாயம்). 15. நூல் வகுப்பு. பன்னிரு திருமுறை. 16. கட்டளை நிறைவேற்றுகை. முறைசெய்வோர்.17. தன்மை. முத்தீப் பேணும் முறையெனக் கில்லென (மணிமே. 22:48). 18. உரிமை. முறைமை யென்பதொன் றுண்டு (கம்பரா. நகர்நீங்கு. 5). ம. முர, க. முரெ, தெ. மொர. முறைவன்=1. இறைவன். நான்மறை முக்கண் முறைவ னுக்கே (gâbdh. பொன்வண். 52). 2. பாகன். ``மேலியன் முறைவர் நூலிய லோசை (பெருங். உஞ்சைக். 44 : 79). முறை-மிறை=வளைவு. மிறைக்கொளி திருத்தினானே (சீவக. 284). மிறைக்கொளி திருத்துதல் = படைக்கலத்தின் வளைவு நீக்குதல். ``மிறைக் கொளி திருத்துவார்'' (சீவக. 2293). மிறைக்கொளுவுதல் = படைக்கல வளைவு. நீக்குதல். ``எஃக மிறைக் கொளீஇ'' (பு. வெ. 8 21). ஒ. நோ: முண்டு-மிண்டு, முடுக்கு-மிடுக்கு. முறு-மறு. மறுத்தல் = செ.குன்றாவி.) 1. திருப்புதல். 2. திரும்பச் செய்தல். 3. மாற்றுதல். 4. தடுத்தல். ``மறுத்து மறுத்து மைந்தர் சார'' (கலித். 104). 5. தடை கூறுதல் (ஆட்சேபித்தல்). உடன்படல் மறுத்தல். (நன்.11). 6. நீக்குதல். கொல்லான் புலாலை மறுத்தானை (குறள். 260). 7. இல்லை யென்னுதல். ``அவர்மறுத் தகறல் காணா'' (கம்பரா. மிதிலைக். 125). (செ. கு. வி.) இல்லாமற்போதல். ``இப்பேறுதான் ஒருநாளுண்டாய் மற்றை நாள் மறுக்கையன்றிக்கே.'' (ஈடு, 2: 7: 7). மறு - மறுப்பு = 1. மறுக்கை.2. எதிர்க்கை. 3. கண்டனம். 4. மறுவுழவு. (ahœ¥.). 5. முன்னுழுத சாலுக்குக் குறுக்காக வுழுகை (நாஞ்.). மறுப்ப = ஓர் உவம வுருபு மாற்ற மறுப்ப ஆங்கவை யெனாஅ (bjhš. உவ. 11). மறுத்தருதல் = திருப்பல், மீட்டல். மையற்ற படிவத்தான் மறுத்தர லொல்வதோ (கலித். 15). மறுத்தரவு = திருப்புகை, மீட்கை. யாதொன்று மென்கண் மறுத்தர வில்லாயின் (கலித். 81). மறுத்தரவு - மறுதரவு = மீட்கை. மறுதர வில்லாளை யேத்திநாம் பாட (சிலப். 24, பாட்டுமடை, இறுதி). மறுக்க = திரும்பவும். மறுக்க நீ வரக்கூடாது (உ.வ.). மறுத்து = 1. திரும்ப, மீள. மறுத்தின்னா செய்யாமை மாசற்றார் கோள் (குறள். 312). 2. மறுபடியும் மறுத்துக் கேள்வி கொள்ள வேண்டாதபடி (ஈடு, 1 3 3). 3. திரும்பவும், மேலும். மறுத்து மின்னுமொன் றுரைத்திடக்கேள் (அரிச். பு. சூழ்வி. 128). மறுத்துரைத்தல் = தடை கூறுதல், எதிர்த் துரைத்தல். மறுத்துரைப் பதுபோ னெஞ்சொடு புணர்த்தும் (தொல். பொரு. 2). மறுத்துப் போதல் = 1. ஆவு கறவை நின்று போதல் (W). 2.ku« காய்ப்பு நின்று போதல் (W). மறு - மறை = 1. மறுப்பு. 2. எதிர்மறை. தொழாநிர் என்பது மறையின்றித் தொழுது என்று பொருள் தருமேனும் உணர்க. (மலைபடு. 231, உரை). 3. விலக்குகை. பொய்ம்மை புலாற்கண் மறையுடைமை (ஏலாதி.6). எதிர்மறு - எதிர்மறை. மறுக்களித்தல் = 1.மறுத்தல். 2. நோய் திரும்புதல். மறுக்களித்துப் பேசுதல் = தான் சொன்னதை மறுத்துப் பேசுதல் (உ.வ.) மறுதலை = 1. எதிர்க் கட்சி. தன்னை மறுதலை பழித்த காலையும் (e‹. 53). 2. எதிரியின் கொள்கை. மறுதலைக் கடாஅ (தொல். மரபு. 105). 3. எதிர்ப்பொருள். இன்மை யன்மை மறுதலை யென்னும் முப்பொருள் (சி. போ. சிற்.2 1, ப.34). 4. பகைவர். மறுதலை சுற்ற மதித்தோம்பு வானேல் (ஏலாதி,16). 5. நிகர். “mÇkhɉF மறுதலை போல்வா ரொருவர் (திருக்கோ. 225), உரை). 6. இரண்டாமுறை. மறுதலை இங்கு வராதே (உ.வ.). மறுதலைத்தல் = (செ. கு. வி.) எதிரிட்டுத் தோன்றுதல். நாணமுத னான்கு மண்டி யொருசார் மறுதலைப்ப (திருவிளை. வளையல். 23). (br. குன்றாவி.) மறுத்தல். மறுதலைத் துரைக்கு மெல்லை (mÇ¢. பு. நகர்நீ.146). மறுதலைக்காய் = பருவ விளைச்சற்குப் பின் காய்க்கும் காய்கறி முத லியன. மறுதலைப் பெண் = மறுமனைவி. ``அரவ மறுதலைப் பெண் கூட்டுவிக்கும்'' (சினேந். 267). மறுதாய் = மாற்றாந்தாய். மறுநாள் = அடுத்த நாள். ம.மறுநாள், தெ. மறுநாடு. மறுபடி = 1. திரும்ப. 2. மற்றொரு படி (copy). 3. விடை (நாஞ்.) மறுமாடி = மாடிக்கு மேல்மாடி. வீட்டிற்கு மறுமாடி வைத்துக் கட்டியிருக்கிறான். மறுமாலை சூடுதல் = கணவனின் அறுபான் விழாவில் நடைபெறும் மாலை மாற்றுச் சடங்கு. மறுமாற்றம் = மறுமொழி. மறுமாற்ற மற்றொருவர் கொடுப்பாரின்றி (பெரியபு. திருஞான. 474). தெ. மருமாட்ட, க. மருமாத்து. மறு - மறுவல் = திரும்ப. மறுவலும் = திரும்பவும். மறுவலும் புல்லிக் கொண்டு (சீவக. 1052). மறுவலிடுதல் = 1. திரும்புதல். ``பின்னை மறுவவிடாதிறே'' (ஈடு, 2: 10:8). 2. சிறிது எஞ்சி நிற்றல். மல்லிகை....... கமழ்தென்றல் மறுவலிடுகையாலே (ஈடு, 10: 3: 5). மறு-மற்று = (கு. வி. எ) 1. மறுபடியும் (W.). 2. பின். 3.வேறு. 4. மற்றப்படி. (ïil¢brhš) 1. வினைமாற்றுக் குறிப்பு. 2. பிறிதுப்பொருட் குறிப்பு. 3. அசைநிலை. மற்றென் கிளவி வினைமாற் றசைநிலை (தொல். இடை. 14) வினைமாற் றசைநிலை பிறிதெனு மற்றே (நன். 433) ஒ. நோ: Gk. meta, after, occasionally with sense ‘change.’ மற்று-மற்ற = பிற, வேறு. மற்று-மற்றும் = 1. மேலும். 2. மீண்டும். ``உடைமை மயலாகும் மற்றும் பெயர்த்து (குறள். 344). மற்று-மற்றையது = மற்றது. “k‰iwa தென்பது சுட்டிய தற்கினம் (e‹.434). மறு-மாறு. மாறுதல் = (செ.கு.வி.) 1. வேறுபடுதல். மாறா மனங் கொண்டு (திருநூற்.47). 2. பின்வாங்குதல். சூன்மகள் மாறா மறம்பூண் வாழ்க்கை (பெரும்பாண். 136). 3. குறைதல். நோய் கொஞ்சம் மாறியிருக்கிறது (உ.வ.). 4. இடம் வேறுபடுதல். 5. நீங்குதல். “cw¡f« மாறினான் (கம்பரா. ஆறுசெ.7). 6. முதுகிடுதல். “khwh மைந்தின் (மலைபடு. 332). 7. கூத்தாடுதல் (பிங்.) 8. இறத்தல். இவ்வான்மாக்கள் மாறிப் பிறந்துவரும் (சி.போ.சிற். 2 3,g.47). 9. இல்லையாதல். பரப்பு மாறப் பூத்துக் குளிர்ந்த புனலை (ஈடு, 2 : 8 : 2). 10. பொய்படுதல். நாவிற் புனைந்த நன்கவிதை மாறாமை (பரிபா. 6 :8). (br.F‹whÉ). 1. விற்றல். நாண்மோர் மாறும் (பெரும்பாண். 160). 2. பணி செய்தல். முன்னின பணிமுறை மாற KªJth®”(f«guh. ஊர்தேடு. 49). 3. பிறனுக்குதவுதல். பனவனுக்காப் பாமாறி யார்க்கு (குமர.பிர. மீனாட். இரட். 5). 4. கழித்தல் “”khW மென்மலரும் (பரிபா. 6: 46). 5. கைவிடுதல். புரிபுநீ புறமாறி (கலித். 15). 6. மறுத்தல் (யாழ்ப்.). 7. எண் பெருக்குதல். ஐம்பாலும் பொதுவுமான ஆறானும் மாற நூற்றெட்டாம் (நன். 269, மயிலை). 8.அடித்தல் (இ.வ.). க. மாறு. மாறு = 1. வேறுபாடு. மாறிலாத மாக்கருணை வெள்ளமே “(âUthr. 5:91). 2. எதிர். அவன் எதற்கும் மாறாயிருக்கிறான். 3. பகை. மாற்றிரு வேந்தர் (புறம். 42). 4. ஒவ்வாதது. ``மாறல்ல துய்க்க'' (குறள். 944). 5. ஒப்பு. மாறன்மையின்........ïisaiuík எறியான் (சீவக 2261). 6. மாற்றுருப்படி. மாறு சாத்தி யென்பிழை பொறுப்பீர் (பெரியபு. அமர்நீதி. 24). 7. எதிர்நன்றி (ãuâígfhu«). வழக்கொடு மாறுகொளன்று (திவ். இயற். பெரிய திருவந். 13). 8. மறுமொழி. மாறெதிர் கூறி மயக்குப் படுகுவாய்'' (கலித் 116:15). 9. இம்மை நீங்கும் இறப்பு. “”efhmbyd வந்த மாறே (புறம். 253). 10. இறப்பின் பின் பிறப்பு. மாற்றிடைச் சுழலும் நீரார்'' (மேருமந். 136). 11. குப்பை கூளம் நீக்கும் துடைப்பம். சல்லிகளை மாறெடுத்துத் தூர்த்தும்'' (gzÉL. 285). 12. துடைப்பம்போ லுதவும் பருத்தித்தூறு. 13. தூறுபோன்ற வளாறு. (W.). 14 வளாறு போன்ற பிரம்பு. “kh‰w லாற்றுப் புடையுண்டும்'' (சீவக. 2794). 15. மாறுதல் நேரும் வகை. ``விளங்கக் கேட்ட மாறுசொல்'' (புறம்.50). (ïil¢brhš). 1. ஏதுப் bபாருளிடைச்bசால்.midia யாகன் மாறே (òw«. 4.). 2. தொறுப்பொருளிடைச் சொல். பகல் மாறு வருகி றான் = பகல்தொறும் வருகிறான். மாறு - மாறன் = 1. வலிய பாண்டியன். ``பூந்தார் மாற'' (புறம்.55) 2. சடத்திற்கு மாறான நம்மாழ்வார் (சடகோபன்). ``சடகோபன் மாறன்'' திவ். திருவாய். 2:6:11). 3. மாற்றான். ``வல்வினைக்கோர் மாறன்'' (திருவரங்கத்தந். காப்.5). மாறு-மாறல் = ஏது, கரணியம் (முகாந்தரம்) (W). மாறு - மாற்று = 1.வேறுபடுத்துகை. 2. ஒழிக்கை. ``மாற்றே மாற்ற லிலையே'' (பரிபா. 4:53). 3. மாற்று மருந்து. 4. பண்டமாற்று. 5. விலை (யாழ். அக). 6. மாற்றுடை. 7. மங்கல அமங்கல நாள்களிற் பந்தற்குக் கட்டும் வண்ணான் துணிகள். 8. பொன்வெள்ளி உரைமாற்று. ``மாற்றள வற்ற பொன்னுடுத்தாய்'' (அட்டப் அழகரந். 2). 9. உரைமாற்று நிறம். (ஈடு,4. 3. 7 ஜீ). 10. எதிர் (யாழ். அக.). 11. ஒப்புமை. ``மாற்றிரி யாடிப் பாவையோடு'' (ஞானா. 6:20). 12. வலிமை. ``மாற்றாரை மாற்றழிக்க வல்லாளை'' (திவ். திருப்பா.15). 13. ஓரேர் மாடு ஒருநாளில் உழக்கூடிய நிலம் (W.). மாற்று - மாற்றம் = 1. மாறுபட்டநிலை. மாற்றமாம் வையகத்தின் (âUthr. 1:81). 2. வஞ்சின மொழி. மாற்ற மாறான் மறலிய சினத்தன் (புறம். 341). 3. பகை. மாறுகொ ளுழுவையு மாற்றந் தீர்ந்தவே (நைடத. கான்புகு. 3). 4. கடிவு (பரிகாரம்). 5. மாறிச் சொல்லும் விடை. மறுதலைக் கடாஅ மாற்றமும் (bjhš. மரபு.105). 6. சொல். விடுமாற்றம் வேந்தர்க் குரைப்பான் (குறள்.689.).மாற்றம்.....brhšny” (நன். 458). 7. பேச்சு. மாற்ற முரைக்கும் வினை நலம் (நான்மணி. 45). தெ. மாட்ட, க.மாத்து, மாத்தனு, பட. மாந்த். ஒ.நோ: It. motto, word, F. mot (mo), word, saying. முல் - முள் - முண் - முண - முணவு - முணகு - முணங்கு. முணங்குதல் = 1.உள்வளைதல். உள்ளடங்குதல். 2. அடங்குதல் (W.). 3. குரலையடக்கிப் பேசுதல். முணங்கு = 1. சோம்பலால் ஏற்படும் உடம்பு வளைபு, முடக்கம், சோம்பு (இலக். அக.). 2. அடக்கம் (சூடா.). முணங்கு நிமிர்தல் = உடம்பை நீட்டிச் சோம்பல் முறித்தல். முணங்குநிமிர் வயமான் (புறம். 52), முணங்குநிமிர்ந் தளைச்செறி யுழுவை யிரைக்குவந் தன்ன (புறம். 78). முணங்கு - முணக்கு முணக்குதல் = உள் வளைத்தல். வள்ளுகிர் முணக்கவும் (நற். 114). முரி = வளைவு. முரி-மூரி = சோம்பல் முறித்தல். _ரிநிமிர்தல் = உடம்பை நீட்டிச் சோம்பல் முறித்தல். முzF-KdF. முனகுதல்=குரலையடக்கிப் பேசுதல். முணகு-முனங்கு. முனங்குதல் = 1. குரலையடக்கிப் பேசுதல். முணுமுணுத்தல். 2. புலம்புதல். 3. முறுமுறுத்தல். ஒ.நோ. OE moen, obs. mean, E. moan, to make a long low murmur of physical or mental suffering, to complain, to lament misfortune, to lament for dead person. முண் - மண் - மாண் = மடங்கு. பன்மாண் (பரிபா. 13:62). ஒ.நோ: E. fold = மடி. மடங்கு. மண் - மணி1 = (வட்ட வடிவான பொருள்கள்) 1. நாழிகை வட்டில். 2.xU நாழிகை நேரம். 3. கோபுர நாழிகை மணி. 4. நாழிமணி. 5. கைம்மணி. 6. பெருவட்ட மணிப் பலகை (gong). 7. சிறுவட்ட மணிப் பலகை (சேகண்டி). 8. அறுபது நிமைய நேரம் (ï¡.). 9. கடிகாரம் (இக்.). 10. மணிக்கூண்டு. மணி2 = (உருண்டை வடிவான பொருள்கள்) 1. கண்மணி. ``கருமணியிற் பாவாய்'' (குறள். 1123). 2.பொன்மணி. ``மணியிரு தலையுஞ் சேர்த்தி'' (சீவக. 977). 3. பாசிமணி. 4. கூலமணி. 5. உருத்திராக்கமணி. ``மாசிலாத மணிதிகழ்மேனி'' (பெரியபு. திருக்கூட்ட. 6). 6. சிறுமணியரிசி. 7. பெருமணியரிசி. 8. வலையோரத்திற் கட்டிய குண்டு. ``இனமணி விளிம்புறக் கோத்து'' (திருவாலவா. 22: 13). 9.Û‹tiy முடிச்சு. மணிவலை. 10. நண்டு, தேள் முதலியவற்றின் கொடுக்குமணி. முள்-முட்டு-முட்டை = 1. உருண்டையான பறவை முட்டை. ``புலவுநாறு K£ilia.....கிH§bfhL பெறூஉம்'' (புறம். 176). 2. உலகக் கோளம். ``திசைமுகன் செய்த முட்டை கீண்டிலது'' (கம்பரா. திருவடி. 66). 3. சாணியுருண்டையை வட்டமாகத் தட்டிக் காயவைத்த வறட்டி. ``நெருப்புக்கு முட்டையும்'' (அருட்பா, 1. திருவருள். 105). 4. வட்டச் சிறுகறண்டி. ``ஒரு முட்டை நெய்'' (பதினொ. கோடித். 16). ம. K£il., க. K£bl., முட்டைக்கண், முட்டைக் கண்ணீர், முட்டைக் கத்தரி, முட்டைக் காளான், முட்டைக் கோசு முதலிய காட்டுச் சொற்கள் உருண்டை வடிவான பொருள்களைக் குறிப்பன. முட்டு-முட்டான் = 1. மஞ்சட்கிழங்கு. 2. திருநீறு நீற்றுவதற்குரிய சாணவுருண்டை. திருநீற்றிற்கு முட்டான் போடு (உ.வ). முட்டு-முட்டி = பேய்க் கொம்மட்டி. முள்-முண்டு = உருண்டகட்டை, முண்டும் முடிச்சும். முண்டு-முண்டான் = மஞ்சட்கிழங்கு. முண்டு-முண்டை= 1. முட்டை. முண்டை விளைபழம் (பதிற். .60:6). 2. கருவிழி. முண்டை-மிண்டை = கருவிழி. ``விழித்திருக்க மிண்டையைக் கொள்வான் (fȤ. 108, உரை). முட்டு - முத்து = உருண்டையான விதை. குருக்குமுத்து. குறுமுத்தம் பழம் = நீளுருண்டை வடிவான மிதுக்கம்பழம். முண்-முணம்-முடம் = 1. வளைவு. முடத்தொடு துறந்த வாழா வன்பகடு (புறம்.307) 2. வளைந்தது. முடத்தாழை(கலித். 136). ``அல்லோர்க் களிக்கு மது முடத் தெங்கே (நன்.35). 3. கைகால் வளைவு. 4. ஆடல் பாடல் முதலியவற்றின் குற்றம். பண்ணே பாணி தூக்கே முடமே (சிலப். 3 : 46). முடம் - முடவன் = 1. நொண்டி. காலான் முடவன் (தொல். சொல். 73, இளம்பூ.). 2. அருணன் (அக. நி.). 3. காரி (பிங்.). முடம் - முடவு. முடவுதல் = நொண்டுதல் (யாழ்ப்.). முடவாண்டி (முடம் + ஆண்டி) = கொங்க வெள்ளாளர் குலத்திற் பிறக்கும் பிறவி முடக்குழந்தைகளை எடுத்து வளர்க்கும் இரப்போர் வகையினர். முடம்-முடல்-முடலை = 1. உருண்டை (பிங்.) .2. முறுக்கு, திருகல். “Kliy விறகின் (மணிமே. 16:26) . 3. முருடு. (âth.,) 4. கழலை. (அக. நி.). 5. மனவன்மை. நன்றுணராய முடலை முழுமக்கள் (gH.25). 6. பெருங் குறடு (அக.நி.). முடங்கொன்றான் - முடக்கொற்றான் = முடச் சூலையைப் போக்கும் கொடிவகை. முடம் - முடந்தை = 1. முடம். 2. வளைந்தது. முடந்தை நெல்லின் கழையமல் கழனி (பதிற் . 32 : 13). 3. விடாய்க் கட்டுநோய் (M. L.). முடம் - முடங்கு. முடங்குதல் = 1. வளைதல். அடங்கினன் முடங்கி யலம்வந்து (உத்தரரா. வரையெடுத்த. 72). 2.cl«ig வளைத்துப் படுத்துக் கொள்ளுதல். பசியட முடங்கிய பைங்கட் செந்நாய் (நற். 103) 3. தங்குதல். அறுகாற் பறவை முடங்கிய செஞ்சடை முக்கண னார்க்கு (பதினொ. பொன்வண். 64). 4. சுருங்குதல். இடங்குறை வாயிலின் முடங்கி யிருந்துழி (பதினொ. திருவிடை. மும். 22). 5. கைகால் வழங்காமற்போதல். ``கைகால் முடங்கு பொறியிலி' (பிரபுலிங். துதி. 1). 6. தடைப்படுதல், வேலை முடங்கிவிட்டது .7. கெடுதல். “áWik பொருந்திப் பெருமை முடங்கி (திருப்பு. 372). தெ. முடுகு (g), க. முடுகு. முடங்கு = 1. முடக்குச் சூலைநோய். 2. தெருவளைவு. 3.bjU¢rªJ. முடங்கல் = 1. மடங்குகை (சூடா.) 2. சுருளோலைக் கடிதம் மண்ணுடை முடங்கல் (சிலப். 13; 90) 3. முடக்குச் சூலை (சூடா.). 4. முடத்தாழை (பிங்.). 5. பணம் முடங்கிக் கிடக்கை. 6. தடைப்படுகை. முயலு நோன்பு முடங்கலிலான் (சேதுபு. முத்தீர். 6). 7. சிறுமை. முடங்கன் மனாலையமே யினிதாயிற்று (திருநூற். 30). முடங்கர் = ஈன்றணிமையில் உண்டாகும் சோர்வு. “FUis மூன்றுட னீன்ற முடங்கர் நிழத்த (அகம். 147). முடங்கி = 1. நோயாற்கிடையாய்க் கிடப்ப-வன்-வள். 2 .நிலத்தின் மூலை நீட்டம். முடங்கு - முடக்கு = 1. வளைவு. `பாடகம் ஒரு கம்பியாய்ப் பல முடக்காலே போக்கும் வரவும் உண்டானாற் போல' சீவக. 510, உரை). 2. தெருவின் கோணம். 3. முடக்குமோதிரம், நெளி (நெடுநல். 143-4, உரை), 4. மறைந்து அம்பெய்யும் முடக்கறை (பு. வெ. 5 : 1, கொளு). 5. முடங்கும் நாக்கு. அண்ண மூடெழ முடக்கினை யழுத்தி (தணிகைப்பு. அகத்தியனருள். 280). 6. முடக்குநோய். 7. தடை. 8. காலத்தாழ்ப்பு. 9. வேலையின்மை. க முடுக்கு. Kl¡F - Kl¡f‹ = jhiH.(r§. அக.). முடங்கு - மடங்கு. மடங்குதல் = 1. வளைதல். படைபோன் முடங்கி மடங்கி (கலித். 94 : 9). 2. மடக்குதல் (திவா.). 3. கோணுதல். 4. வளைந்து செல்லுதல். 5. மீளுதல் (பிங்.). 6. சொல் திரும்ப வருதல். 7. திருகுருதல் 8. நெளிதல். 9. சுருங்குதல். 10. ஒடுங்குதல் 11. குறைதல். மடங்கா விளையுள் வயலூர் (சிலப். 23 : 119). 12. கீழ்ப்படுதல். “fhbuhÈ மடங்க.....fs¤â னார்த்த பேரொலி (கம்பரா நா கபாச. 291). 13. தாழ்தல். 14. செயலறுதல். உழவினார் கைம்மடங்கின் (குறள். 1036). 15. சினமடங்குதல்.16. நிறுத்தப்படுதல் “k©lk ரின்றொடு மடங்கும் (கம்பரா.கும்ப. 267). 17. தடையுண்ணுதல். 18. வாயடங்குதல். 19. ஒருவன் சொத்து இன்னொருவன்பாற் சென்றடைதல். மடங்கு = மடி, அளவு. இருமடங் காக வெய்தும் (சூளா கல்யா. 165). மடங்கு - மடக்கு. மடக்குதல் = 1. வளைத்தல். 2 .மடித்தல். “thšÉir¤ தெடுத்து வன்றாண் மடக்கி (கம்பரா. கடறாவு. 17). 3. மடித்து உடுத்துதல். மடக்கினார் புலியின் றோலை (தேவா. 955:1). 4. திருப்புதல். செய்யுளில் எழுத்துஞ் சொல்லும் அடுத்தடுத்துத் திரும்பத்திரும்ப வருமாறமைத்தல். 5. மாறிமாறிச் செய்தல். 6. வென்று கீழ்ப்படுத்துதல். 7. வாயடக்குதல். 8. கால்நடைகளை விளைநிலத்தில் உரத்திற்காக இராவேளையில் ஒருசேர அடக்கி வைத்தல். 9. பொருள்களைத் தன்வயப்படுததுதல்.10. பணிவாக்குதல் 11. தடுத்தல். 12. அழித்தல். மடக்குவா யுயிரை யென்னா (கம்பரா. கும்பக. 188). மடக்கு = 1. வளைவு. 2. மூலைமுடுக்கு. 3. திருப்பு. 4. மடிப்பு. 5. மடக்குக்கத்தி. 6 மாறிமாறி வருகை. 7, செய்யுளில் எழுத்து கொல்சீர் முதலியன அடுத்தடுத்து மீண்டும் மீண்டும் பொருள் வேறுபட்டு வருவதாகிய சொல்லணிவகை. 8. தடுப்பு. 9. தடை. மடக்கு - மடக்கம் = 1. வளைவு 2. வணக்கம் 3. பணிவு 4. மனவடக்கம் 5. நோய் திரும்புகை. மடங்கு - மடங்கல் = 1. வளைகை (திவா.) 2. கோணம்.3.தாழை (mf. நி.) 4. முற்றிவளைந்து சாய்ந்து கதிர். 5. முன்னும் பின்னும் திரும்பி நோக்கிச் செல்வதாகச் சொல்லப்படும் அரிமா. மடங்கலிற் சீறி மலைத்தெழுந்தார் (பு. வெ.324). 6. அடக்கம். 7. ஒடுக்கம் மைந்துடை யொருவனு மடங்கலுநீ (பரிபா. 144). 8. `உயிர்களைக் கவருங் கூற்றுவன்' மடங்கல்போற் சினைஇ (கலித். 2. )9. உலகொடுங்கும் ஊழிக்காலம். மடங்கற் காலை (கலித்.120). 10. உலகழிக்கும் வடவைத்தீ.மடங்கல் வண்ணங் கொண்ட கடுந்திறல் (பதிற். 62. 8). 11. ஊழி முடிவு. முண்டு - மண்டு - மண்டி = காலை முடக்கி முழங்காலால் நிற்கை. ``ஒருகால்மண்டியாக.....ko¤Jit¤J'' (புறம். 80, உரை). மண்டிபோடுதல், மண்டியிடுதல் என்னும் வழக்குகளை நோக்குக. முட்டு - மட்டு - மட்டி. மட்டித்தல் = (செ. கு.வி.) மண்டலித்தல், வட்டமாதல். (செ. குன்றாவி.) வட்டமாக்குதல். திரடோள்கண் k£o¤jhl” (njth. 12:3). மண்டு - மண்டலம் = 1. t£l« (ã§.), சுடர்மண்டலம் (திருநூற். 80). 2. வட்டவடிவம் (திவா.) 3. கதிரவனையுந் திங்ளையுஞ் சுற்றித் தோன்றும் கோட்டை (பரிவேடம்). 4. கதிரவன் பரிப்பு (கிராந்தி வீதி). 5. பாம்பின் சுற்று. ``மண்டலம் பயிலுரகர்'' (பாரத. குருகுல.3). 6. வட்டவடிவான அல்லது சக்கரவடிவான படையமைப்பு (குறள். 767 உரை). 7. நh£o‹ பெரும்பகுதி. சோழமண்டல மீதே (திருப்பு. 94). 8. வானவெளிப் gகுதி.K»š மண்டலம் 9. நாட்டின் சிறுபகுதி. ஊர் (பிங்.). 10. மந்திரச் சக்கரம் 11. மண்டில நிலை (பிங்.). 12. நh‰gJ அல்லது நாற்பத்தைந்து நாள் கொண்ட மருத்துவக் காலவட்டம். 13. குதிரைச்செலவு வகை. ``பண்ணிய வீதிபற்றி மண்டலம் பயிற்றி னானே (சீவக.795). 14. நடுவிரல் நுனியும் பெருவிரல் நுனியுங் கூடி வளைந்திருக்க, மற்ற விரல்களும் ஒக்க வளைந்து நிற்கும் இணையாவினைக்கை. (சிலப். 3,18, உரை). 15. வில்லோர் நிலையுளொன்று (சூடா.). 16. மேலுலகம், பரமண்டலம். மண்டலம் - வ. மண்டல. மண்டலம் - மண்டலி. மண்டலித்தல் - 1. வளைத்தல் 2. பாம்பு முதலியன வட்டமாகச் சுற்றியிருத்தல். 3. வில்லாளி காலை வளைத்து வட்டமாக்குதல். 4. இறுதியடியின் அல்லது இறுதிப் பாட்டின் இறுதி எழுத்து அசை சீர் என்பவற்றுள் ஒன்று, முதலடியின் அல்லது முதற்பாட்டின் முதல் எழுத்து அசை சீர் என்பவற்றுள்ஒன்றாய் வருமாறு, செய்யுளிசைத்தல். மண்டலி - மடலி. மடலித்தல் = மடங்கித் திரும்புதல் (யாழ். அக.). மண்டலம் - மண்டிலம் = 1. வட்டம். 2. வட்ட வடிவம். 3. வட்டக் கண்ணாடி. மையறு மண்டிலம் போலக் காட்ட (மணிமே. 25:137). 4. கதிரவன். பகல்செய் மண்டிலம் பாரித் தாங்கு (பெரும்பாண். 442) 5. திங்கள். செய்வுறு மண்டிலம் (கலித். 7). 6. ஞாலம். கடல்சூழ் மண்டிலம் (குறுந். 300). 7. கதிரவனையுந் திங்களையுஞ் சுற்றிடப்படும் கோட்டை (பிங்.). 8. வட்டமாயோடுகை. “brybthL மண்டிலஞ் சென்று (பு. வெ. 12, வென்றிப். 14.) 9. குதிரைச் செலவுவகை (நாமதீப. 732). 10. வானவட்டம் (பிங்.). 11. நாட்டின் பெரும்பகுதி மண்டிலத் தருமையும் (தொல். அகத். 41) 12. நாட்டின் சிறு பகுதி, ஊர் (பிங்.). 13. கூத்தின்வகை. மண்டிலயாப்பு = நாற்சீரடிச் செய்யுள். ஒத்தா ழிசையும் மண்டில யாப்பும் குட்டமு நேரடிக் கொட்டின வென்ப. (தொல். செய். 114.) ``மண்டிலங் குட்ட மென்றிவை யிரண்டும் செந்தூக் கியல வென்மனார் புலவர். (தொல். செய். 116.) இங்ஙனம் மண்டில யாப்புத் தொல்காப்பியத்திலேயே சொல்லப் பட்டிருத்தலையும் என்மனார் புலவர் என்னும் முன்னூல் பலவற்றைக் குறிக்குந் தொடரையும் ஊன்றி நோக்குக; நிலைமண்டில வாசிரியப்பா, அடிமறிமண்டில வாசிரியப்பா என்னும் அகவற்பா வகைகள், தொன்றுதொட்டு வழங்கி வருவன. தமிழ் யாப்பு முறை முற்றும் ஆரியச் சார்பற்றது. மண்டில மாக்கள் = நாட்டின் பகுதியை ஆளும் அதிகாரிகள். பழஞ் சோழநாட்டின் பிரிவான தொண்டை மண்டலமும், பழஞ் சேர நாட்டின் பிரிவான கொங்கு மண்டலமும் போன்ற பல மண்டலங்கள், முதற்காலத்தில் மண்டில மாக்கள் அல்லது மண்டலிகர் என்னும் அதிகாரிகளாலேயே ஆளப்பட்டு வந்திருத்தல் வேண்டும். அவர்கள் அரச குடும்பத்தினராகவோ, உழுவித்துண்ணும் வேளாண் தலைவராகவோ, குறுநில மன்னராகவோ, தண்டத் தலைவராகவோ இருந்திருக்கலாம். எண்ணூற்றுக் காவத அளவு முழுகிப்போன பழம் பாண்டிநாடான செந்தமிழ் வழக்கொடு சிவணிய நிலமும் பனிமலைவரை பரவியிருந்த பழஞ் சேர சோழ நாடுகளும், இருந்த முதுபழங்காலத்தில், முத்தமிழ் வழங்கிய முந்து தமிழகம் எத்துணையோ மண்டலங்களாகப் பகுக்கப்பட்டு மண்டலிகரால் ஆளப்பட்டு வந்திருத்தல் வேண்டும். பாண்டியன் குடிப்பெயர்களுள் ஒன்றான பஞ்சவன் என்னுஞ் சொல், முதலிரு கழகக்கால அல்லது தலைக் கழகக்காலப் பாண்டியர், துணையரையர் (அல்லது மண்டலிகர்) ஐவரைக் கொண்டு நாடாண்ட மையை யுணர்த்தும். ``பஞ்சவ னீடு கூனும்'' என்று 15ஆம் நூற்றாண்டு அருணகிரிநாதர் பாடியதுபோன்றே, பழியொடு படராப் பஞ்சவ வாழி என்று 2ஆம் நூற்றாண்டு இளங்கோவடிகளும் பாடியிருத்தல் வேண்டும். அஞ்சவன் என்னுஞ் சொல்லே, பிற்காலத்தில் வடமொழியிலும் தென்மொழியிலும்பஞ்சவன் என்று திரிந்ததாகத் தெரிகின்றது. (if-I-IaJ-IJ-IªJ-Iªjt‹-IŠrt‹-mŠrt‹-gŠrt‹.) ஒ. நோ: அப்பளம்-தெ. அப்படமு, க. பப்பள-ம. பப்படம்-வ. பர்ப்பட்ட. அப்பளக்கட்டையால் மாவை அப்பளித்தமைப்பது அப்பளம். முண்டு, மண்டு, மண்டி, மண்டலம் மண்டலிகன், மண்டலித்தல், மண்டிலம் முதலிய சொற்கள் மேலையாரிய மொழிகளில் இல்லை. Mandalin (Dim.Mandolinde) என்னும் இத்தாலிய நரப்பிசைக் கருவிப் பெயரும், மண்டலியாழ் என்னும் தென்சொல்லின் திரிபாய் இருத்தல் வேண்டும். தமிழின் தென்மை, தொன்மை, முன்மை முதலிய தன்மைகளை நடுநிலையாக ஆராய்ந்தறிந்தவர்க்கு, மேற்கூறியவையெல்லாம் வெள்ளிடை மலையாம். முண்டு-முண்டி-முடி. முடிதல்=வளைத்து அல்லது சுற்றிக் கட்டுதல். முடித்தல் = 1. கூந்தலைக் கட்டுதல். பாஞ்சாலி கூந்தன் முடிக்க (திவ். பெரியதி. 6 : 7 : 8) 2. பூமாலை கொண்டையிற் கட்டி யணிதல். கைபுனை கண்ணி முடித்தான் (கலித் 107 : 15). முடி = 1. பறவை பிடிக்குங் கண்ணி (noose). 2. கட்டு. மொட்டைத் தலைக்கும் முழங்காற்கும் முடிபோடுதல் (உ.வ). 3. முடிச்சு (knot). “bfhŸis சாற்றிய கொடுமுடி வலைஞர் (மதுரைக் 256). 4. உச்சியில் முடிக்கும் மயிர்க்கட்டு வகை (திவா.). 5. நாற்றுமுடி. வழிமுடி நடுநரும் கல்லா. (45:14) முடி-முடிச்சு = 1. கட்டு. முடிச்சவிழ்த்தல். 2. மயிர்முடி 3. சிறுமூட்டை மூட்டை முடிச்சு. 4. உள்நார் சுருண்ட கட்டை. முண்டும் முடிச்சுமாயிருக்கிறது. முடி- முடிப்பு = கிழி, பணமுடிப்பு. முடி-மடி. மடித்தல் = மடக்குதல். சேலையை மடித்தல். மடி = 1. மடிப்பு. மடித்த சேலை. 2. மடங்கு. இருமடியாகு பெயர். 3. மடித்த அரையாடைப் பை (lap). 4. ஆவின் பான்முலை. 5. முடங்கித் தூங்கும் சோம்பல். மடியென்னும் மாசூர (குறள். 601). 6. கட்டுக்கிடைச் சரக்கு, மடியரிசி. 7. கட்டுக்கிடைச் சரக்கு வீச்சம், மடிநாற்றம். 8. தூய்மையின்மை. மடியாயிருக்கிறேன். மடி - மடிப்பு = 1. வளைப்பு. 2. திரைப்பு முல்6 - (துளைத்தற் கருத்து வேர்) முல்-மூல்-மூலம் = துளைவழி. வழி, வாயில். காவிரிநீர் குழாய் மூலமாகக் கொண்டுவரப்படும், பொத்தகம் அஞ்சல் மூலம் அனுப்பப்படும், வருமான வரியைக் கணக்கர் மூலம் செலுத்தினேன். மூலம் - மூலியம் = வாயில். யார் மூலியமாய்ச் செய்தி தெரிவித்தாய்? (c.t.). முல்-முள்-முள்கு. முள்குதல் = உட்செல்லுதல். ``அமர்க்க ணாமா னருநிற முள்காது'' (நற். 165). முள்-முண்-மண். மண்ணுதல் = 1. முழுகுதல். பனிக்கய மண்ணி (òw«. 79). 2. நீராடுதல். குடுமி கொண்ட மண்ணுமங் கலமும்'' (bjhš. புறத். 13). 3. கழுவுதல் மண்ணி மாசற்றநின் கூழையுள் (fȤ. 107). மண்ணுறுத்தல் = 1. மஞ்சன மாட்டுதல். வார்க்கோல மாலை முலையார் மண்ணுறுப்ப வாடி (சீவக. 2352). 2. கழுவுதல். (திருமுருகு. 25, உரை). முள்-மூள்-மூளி = 1. துளையுள்ளது. 2. துளையறுந்தது. 3. உறுப்பறை. 4. உறுப்புக் குறை. சூர்ப்பணகையை மூளியாக்க (இராமநா. உயுத். 26). 5. உறுப்புக் குறையுள்ள பொருள். எல்லாம் மூளியும் காளியுமாய்க் கிடக்கிறது (உ. வ.). 6. குறைவுள்ள கருமம். அவன் வராமையால் அந்தக் கருமம் மூளியாய்ப் போயிற்று. 7. காதணி யில்லாதவள். 8. பெண்ணைக் குறித்த ஒருவகைச் சொல். 9. பெண்ணைக் குறிக்கும் பொதுச்சொல். ஒரு நாழியாலும் வரும், ஒரு மூளியாலும் (மூழியாலும்) வரும் (பழ.) = ஒரு வீட்டிற்கு ஆக்கம் அளக்கும் நாழியாலும் வரும்; வந்த மருமகளாலும் வரும். மூளிக்காது = 1. அணியில்லாக் காது. 2. அறுபட்ட காது. மூளிக்காதி = காதணியில்லாதவள், ஒரு வசைச்சொல், ஆயின், கிழவியரைத் தாக்காது. மூளிக்குடம் = ஒரு மருங்கு வாயுடைந்த குடம். மூளி நாய் = காதறுபட்ட நாய். மூளியுதடு = பிளந்த வுதடு. மூளியோடு = சிதைந்த ஓடு. மூளி-மூழி = 1. உட்குழிந்த அகப்பை (திவா.). 2. நீர்க்கலம். மயிற் பீலியோடு மூழிநீர் கையிற் பற்றி (பெரியபு. திருஞான. 601). 3. நீர்நிலை (பிங்.). 4. துழாவிக் கடையும் மத்து (W.). மூழிவாய்-பூக்கூடை. “_ÊthŒ முல்லை மாலை (சீவக. 833). மூள்-மூளை = 1. எலும்பின் உள்ளீடு. 2. மண்டையின் உள்ளீடு. “_isah® சிரத்து (திவ். பெரியதி 4 : 2 : 8). 3. மதி. அவனுக்குச் கொஞ்சங்கூட மூளையில்லை (உ.வ.). ம, மூள. ஒ.நோ; வ. மஜ்ஜா. OE. mearg, OS., OHG. marg, ON. mergr, E. marrow. முள்-முழ-முழுகு. முழுகுதல் = 1. குளித்தல். 2. அமிழ்ந்துபோதல். கப்பல் முழுகிவிட்டது. 3. வினைமுயற்சியில் அழுந்தி யிருத்தல். 4. தீர்க்க முடியா அளவு கடன் மிகுதல். அவன் கடனில் முழுகிவிட்டான். ம. முழுகுக, க. முழு, முழுகு, தெ. முனுகு (g). முழுகு-முழுசு. முழுசுதல் = உட்புகுதல். முழுசி வண்டாடிய தண்டுழாயின் (திவ். பெரியதி. 2 : 8 : 7). முழுசு-முழுது-முழுத்து. முழுத்துதல் =அமிழ்த்துதல். துதிக்கை முழுத்திற்று (c« ngijna” (jÅ¥gh.), யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே (பழ.). 3. இடமுன். என்னைமுன் நில்லன்முன் தெவ்விர் (குறள். 771). முன்னே கடிவாளம் மூன்றுபேர் தொட்டிழுக்க (தனிப்பா.). 4. அண்ணன். அறுமுகேசன்முன் (âUthyth. காப்பு. 2). 5. பழமை. முன்சொல்(பிங்.) = பழமொழி. k., க. முண், தெ. முனு. முன்-முன்னம். நம்மினு முன்ன முணர்ந்த வளை (குறள். 1277). க. முன்னம். முன்னம்-முன்னர். வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை (குறள். 435). முன்-முன்னை = 1. பழமை. முன்னைப் பழம் பொருட்கும் (திருவாச. 7 : 9). 2. அக்கை. என்ற னன்னை நும்முன்னை (கம்பரா. மிதிலைக். 124). 3. அண்ணன். (திவா.). K‹nd-k., க. முன்னெ. முன்னன் = அண்ணன். பெட்பொடு முன்னனைக் காணும் (இரகு. அவதாரநீங். 13). முன்னவன் = 1. தேவன். முன்னவன் போதியில் (மணிமே. 28 : 141). 2. சிவபிரான். முன்னவன் கூடல் (கல்லா. 32 : 10). 3. அண்ணன். “K‹dt‹ வினவ (கம்பரா. வேள். 4). முன்னவள் = அக்கை (பிங்.). 2. மூதேவி. முன்னவள் பதாகையோடு..... வற்துற்ற வாபோல் (கந்தபு. சிங்கமு. 443). முன்னோன் = 1. கடவுள். முன்னோன் காண்க (திருவாச. 3 : 29). 2. குல முன்னைத் தலைவன். தாதைக் கொன்பது வழிமுறை முன்னோன்'' (மணிமே. 28 : 123-4). 3. தந்தை. வாட்குடியின் முன்னோனது நிலை (பு.வெ. 3 : 13, கொளு). 4. அண்ணன். “j«K‹ndh® தந்தை தாய் (பு.வெ. 9 : 33). முன்னுதல் = 1. எதிர்ப்படுதல். கதிர்முலைக் கன்னி மார்ப முன்னினர் முயங்கி னல்லால் (சீவக. 483). 2. முற்படுதல். முன்னியாடு பின்யான் ....... உங்ஙனே வந்து தோன்றுவனே (திருக்கோ. 16). முன்தானை-முன்றானை = சேலைக் கடைமுனை. முன்றானையிலே முடிந்தாளலாம்படி (ஈடு, 1 : 10 : 11). முன்-முன்பு = (பெ.) 1. முன்னிடம். தோட்டியான் முன்பு துரந்து சமந்தாங்கவும் (புறம். 14). 2. முற்காலம். 3. பழமை (கு.வி.எ.). முன்-முனி = நுனி. முன்-முனை = 1. முன். அத்தி னகரம் அகரமுனை யில்லை (தொல். புண. 23). 2. நுனி. வெய்ய முனைத்தண்டு (சீவக. 1136, பாட வேறுபாடு). 3. கூர்மை. 4. கடலுட் செல்லும் நீண்டு கூரிய நிலப்பகுதி. 5. முகம் (ஈடு, 10 : 5 : 10). 6. தலைமை (அக. நி.). 1. முன்னிலையில். தலையில் வணங்கவு மாங்கொலோ தையலார் முன்பே (திவ். திருவாய். 5 : 3 : 7). 2. முன்காலத்தில். முன்புநின் றம்பி வந்து சரண்புக (கம்பரா. வாலிவதை. 117). முன்-முன்று-முன்றில் = வீட்டின் முன்னிடம். பலவின் சுளையுடை முன்றில் (e‰. 77). தெ. முங்கிலி. முன்றில் - முற்றில் - முற்றம்(முன்றகம் - முன்றம் - முற்றம்(?)) = 1. வீட்டு முற்றம். மணன்மலி முற்றம் புக்க சான்றோர் (புறம். 178). 2. ஊர் முற்றம். வஞ்சி முற்றம் வயக்கள னாக (புறம். 373). 3. பரப்பு. ஏந்து முலைமுற்றம் வீங்க (அகம். 51). முன்று - முந்து, முந்துதல் = 1. முற்படுதல். முதுவருள் முந்து கிளவாச் செறிவு. (குறள். 715). 2. எதிர்ப்படுதல். முந்தின னருமறைக் கிழவன் (கம்பரா. தாடகை. 28). 3. விரைதல். முந்தா நின்ற வேட்கை (ஞானவா. சுக்கி. 7). 4. மேலெழுதல். உந்தி முதலா முந்துவளி தோன்றி (தொல். எழுத்து. 83). 5. முதன்மையாதல். “mitÆ‹ முந்தி யிருப்பச் செயல் (குறள். 67). 6. சிறத்தல். 7. பழமையாதல். க. முந்து. முந்து = 1. முற்காலம். முந்துறை சனகனாதி (கந்தபு. மேரு. 10). 2. முன்பு. 3. தொடக்கம்(ஆதி). முந்து நடுவு முடிவு மாகிய (âUthr. 18 : 5). முந்து - முந்தன் = கடவுள். முந்தனை யான்மா வென்றும் (சி.சி. 4: 28). முந்துநூல் = முன்னூல். முந்துநூல் கண்டு முறைப்பட வெண்ணி (bjhš. சிறப்புப்.). முந்தி = (பெ.) 1. முன்னிடம். 2. முன்றானை. பொதுமாதர் முந்தியே தொடுமிடங்கள் (குற்றா. தல. மந்தமா. 21). 3. (கு. வி.எ.) முற்காலம். முந்திவா னோர்கள் வந்து (தேவா. 477 : 8). முந்து - முந்தை = (பெ.) 1. முற்காலம். முந்தைத்தான் கேட்ட வாறே (சீவக. 545). 2. பழைமை (பிங்.). 3. முன்னோன். “jªijahba‹ றிவர்க்கு... முந்தைவழி நின்று (பு.வெ. 9 : 33). 4.(F.É.v.) குவி வந்தடி பொருந்தி முந்தை நிற்பின் (புறம். 10). முந்தை-முத்தை = முன்னிடம். முத்தை வரூஉங் காலந் தோன்றின் (bjhš. எழுத்து. 164). க. முந்தெ. முந்திசினோர்-முன்னோர். இலங்குகதிர்த் திகிரி முந்திசி னோரே (gâ‰. 69 : 17). முந்தி + ஈயினோர் = முந்தியீயினோர்-முந்தீயினோர் - முந்தீசினோர் - முந்திசினோர். ஈதல் = இடுதல். ஈ' ஒரு துணைவினை. ஒ.நோ: வந்து + இடு = வந்திடு = வந்துவிடு. உரைத்து + இடு = உரைத்திடு. ஈ - ஈயினார்: (பலர்பால் இறந்தகால வினைமுற்றும் வினையாலணை யும் பெயரும்.) ஈயினவர்-ஈயினார் (வினையாலணையும் பெயர்)- ஈயினோர் = ஈந்தோர். ஒ.நோ: ஆயினார்-ஆயினோர், போயினார்-போயினோர். ஈதல் என்னும் வினை, இவ்வகையில் மூவிடத்தும் துணைவினையாக வரும். முன்னிலையிடத்திற்கு எடுத்துக்காட்டு இறந்துபட்டது. இவ் வாய்பாட்டு வினைமுற்று அல்லது வினையாலணையும் பெயர், தன்மையிலும் படர்க்கையிலும் ஈறு குன்றியும் வரும். ஈறு குன்றாது வருவது படர்க்கையிற் பெரும்பான்மை. தன்மையில் ஈறு குன்றாது வருவதற்கு இக்காலத் தெடுத்துக்காட்டில்லை. எ-டு: ஈறு குன்றா வினையாலணையும் பெயர் “áwªâándh®” (தொல். உயிர். 93) அறிந்திசி னோரே (குறுந். 18), படைத்திசி னோரே (புறம். 18). ஈறு குன்றிய வினைமுற்று தன்மை ``மெய்தெரி வளியிசை யளவுநுவன் றிசினே'' (தொல். எழுத்து. பிறப். 20): படர்க்கை. ``பாடல் சான்ற விறல்வேந்த னும்மே... துப்புறுவர் புறம்பெற் றிசினே'' (புறம்.11). நுவன்றீயினேன்-நுவன்றீசினேன்-நுவன்றிசினேன்-நுவன்றிசின். புறம்பெற்றீயினான்-புறம்பெற்றீசினான்-புறம்பெற்றிசினான்-புறம்பெற்றிசின். இன்னும் இதன் விரிவைத் தமிழ்நாடு அரசு செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியிற் காண்க. முந்திரி1 = 1/320 ஆகிய கீழ்வா யிலக்கம். ``முந்திரிமேற் காணி மிகுவதேல்'' (நாலடி. 346). முந்து+இரி = முந்திரி. இரிதல் = விலகுதல், பிளத்தல், கெடுதல், இரிசல் = பிளவு. ஒ.நோ; பின்னம் = 1. பிளவு. 2. கீழ்வா யிலக்கம். E. fraction, f L. frang, break. கீழ்வா யிலக்கங்களுள் முந்தியது முந்திரி யெனப்பட்டது. முந்திரி2 = அண்டிமா (cashew). முன்+துரி = முந்துரி-முந்திரி. துருத்தல் = முன் தள்ளுதல் (த. வி.). துருத்துதல் =முன்தள்ளுதல் (பி. வி.). முந்திரிக்கொட்டை பழத்திற்கு வெளியே முன் தள்ளிக்கொண்டிருத்தலால், அதன் பழமும் மரமும் முந்திரி யெனப்பட்டன. அண்டிமா என்பதும் இப் பொருளதே. அண்டியில் (அடியில்) கொட்டையுடைய பழமா அண்டிமா. தெ. முந்த மாமிடி. முந்தூழ் = பழவினை (W.). முந்து-முது-முதல் = 1. தொடக்கம் (ஆதி). ``முதலூழி யிறுதிக்கண்'' (சிலப். 8 : 1, உரை) 2. முதலிலிருப்பது. ``முதல்நீ டும்மே'' (தொல். எழுத்து. 458). 3. கரணியம் (காரணம்). ``nehŒKj னாடி'' (குறள். 948). 4. மூல கரணியனான கடவுள். ``மூவா முதலாய் நிள்ற முதல்வா" (திருவாச. 27 : 10). 5. முதலானவன். ``முதலாய நல்லா னருளல்லால்'' (திவ். இயற். 1 : 5). 6. தலைமை வரிசை. முதன் மாணாக்கன். 7. அடைகொளி (விசேடியம்) (சைவப்). 8. மூலவைப்பு. ``முதலிலார்க் கூதிய மில்லை'' (குறள். 449). 9. வேர். ``முதலி னூட்டுநீர்'' (அரிச். பு. மீட்சி. 17). 10. கிழங்கு. 11. அடிப்பாகம். ``வாடிய வள்ளி முதலரிந் தற்று'' (குறள். 1304). 12. அடிமரம். ``வேங்கையைக் கறுவுகொண் டதன்முதற் குத்திய மதயானை'' (கலித். 38). 13. இடம். ``சுரன்முதன் மராத்த வரிநிழல்'' (சிறுபாண். 8). 14. முதற்பொருள். ``முதலெனப் படுவது நிலம்பொழு திரண்டி னியல்பென மொழிப''. (தொல். அகத். 4). 15. பிண்டப் பொருள். ``முதலுஞ் சினையும்'' (தொல். வேற்றுமை. 6). 16. செலவுக்காகச் சேமிக்கும் பொருள். ``திருப்பூ மண்டபத்துக்கு முதலாக அளக்கவும்'' (S.I.I.III, 215 : 11). 17. இசைப்பாட்டு வகை (சிலப். 3 : 41-2, உரை). 18. வணிகப் பண்டக் கொள்விலை. 19. முதலெழுத்து, ``எழுத்தது முதல்சார் பெனவிரு வகைத்தே'' (நன். 58). (கு. பெ. எ. ) முதலான. முதலாயிரம். (கு. வி. எ. ) 1. முதலில். முதல்வந்தவன். 2. கூட. தண்ணீர் முதலாய் இங்கே கிடையாது (உ. வ. ) (இ. சொ.) 1. 5ஆம் வே. உருபு, அடிமுதல் முடிவரை (உ. வ.) 2. 7ஆம் வே. உருபு. ``குணமுதற் றோன்றிய... மதியின்'' (மதுரைக். 195). க. முதல். முதலுதல் = (செ. கு. வி.) 1. முதலாதல். ``முதலா வேன தம்பெயர் முதலும்'' (தொல். மொழி. 33. ) 2. தொடக்கமுடைய தாதல். ``மூவா முதலா வுலகம்'' (சீவக. 1). (செ. குன்றாவி.) முதலாகக் கொண்டிருத்தல். ``அகர முதல வெழுத்தெல்லாம்'' (குறள். 1.). முதல்வன் = 1. தலைவன். ``மூவர்க்கு முதல்வ ரானார்'' (தேவா. 453 : 2). 2. கடவுள். ``ஞாலமூன் றடித்தாய முதல்வன்'' (கலித். 124). 3. அரசன். (திவா.). 4. தந்தை. ``தன்முதல்வன் பெரும்பெயர்'' (கலித். 75). முதலவன் = குலமுதல்வன். ``முதலவன் முதலிய முந்தையோர்'' (கம்பரா. பள்ளிபடை. 50). முதலோன் = கடவுள். ``செஞ்சடை முதலோன்'' (கம்பரா. நிகும் பலை.142). முதலி = 1. தலைவன். ``எங்கள் முன்பெரு முதலி யல்லை யோவென'' (பெரியபு. கண்ணப். 177). 2. பெரியோன். ``மூவர் முதலிகளுந் தேவாரஞ் செய்த திருப்பாட்டும்'' (ஏகாம். உலா. 78). 3. ஒருசார் வெள்ளாளருக்கும் செங்குந்தருக்கும் ஒருசார் தஞ்சை மாவட்டச் சமணருக்கும் வழங்கும் குலப்பட்டப் பெயர். க. bkhjÈf(g). முதலியார்-மேற்குறித்த மூவகுப்பார்க்கும் வழங்கும் குலப்பட்டப் பெயர். முதலியோர் = முதலிய பிறர். கட்டாய இந்தியை எதிர்த்துத் தமிழைக் காத்தவர், மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார் முதலியோ ராவர். முதலியாண்டான் = 1. இராமானுசரின் மாணவரான ஒரு திருமாலடியார். 2. இராமனுசரின் திருவடி நிலை மகுடம். முதன்மை = தலைமை. கணித மாக்களை முடிவுற நோக்கியோர் முதன்மை கூறி (கம்பரா. மந்தரை. 1). முதலிமை = தலைமை (புதுக். கல்வெட்டு, 361). முதலாளி-1. மூலவைப்புள்ளவன். 2. பெருநிலக்கிழார். 3. தொழிற் சாலை அல்லது வணிகநிலைய உரிமையாளர். 4. தலைவன். முது-முதார்-முதாரி = முன்கை வளையல். முன்கை முதாரியு மொளிகால (முத்துக். பிள். 17). முந்து-முது-முதுமை = 1. பழமை (பிங்.). 2. மூப்பு. இளமை நாணி முதுமை யெய்தி (மணிமே. 4 : 107). 3. முதுமொழி (சூடா.). 4. முற்றின நிலை (பிங்.). 5. முதுகாஞ்சி. கழிந்தோ ரொழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும் (தொல். புறத். 24). முதுகண் = 1. முதன்மைக் களைகண். முற்றிழை மகளிர்க்கு முதுக ணாமென (பெருங். உஞ்சைக். 36 : 198). 2. பேரறிவுரைஞன். முதுகாடு = 1. பழங்காடு (திவா.). 2 சுடுகாடு. “KJfh£oil.......elkho” (தேவா. 773 : 1). முதுகுடி = குறிஞ்சியும் முல்லையும் இணைந்து வறளும் பாலை நிலத்தில் கற்றோன்றி மண்டோன்றாக் காலத்து வாளொடு முற்றோன்றி மூத்த மறவர் குலம். முதுக்குடி. முரசுகடிப் பிகூஉம் முதுக்குடிப் பிறந்தோன். (மணிமே. 1 : 31). முதுகுரவர் = தாய் தந்தையர். எம்முது குரவ ரென்னுற் றனர்கொல் (சிலப். 16 : 60). முதுசொம் = முன்னோர் தேட்டு (யாழ்ப்.). முதுசொல் = பழமொழி. தம்பானை சாய்ப்பற்றா ரென்னு முதுசொல்லும் (திருவிசை. வேணாட். 2). முதுபாலை = காட்டிற் கணவனை யிழந்த தலைவி தனிநின்று புலம்புவதைக் கூறும் புறத்துறை. நனிமிக சுரத்திடைக் கணவனை யிழந்து தனிமகள் புலம்பிய முதுபா லையும் (தொல். புறத். 24) முதுவெழுத்து = தேறின எழுத்து (W.). முதுவேனில் = கடுங்கோடை. முதுவர் = 1. மூத்தோர். தமராகிய முதுவர் (கந்தபு. வள்ளியம். 43). 2. அறிவாற்றல் மிக்கோர். முதுவருள் முந்து கிளவாச் செறிவு (குறள். 715). 3. மந்திரிமார். 4. புலவர். 5. ஒருசார் மலைவாணர். முதுவோர் = 1. அரசன், ஆசிரியன், தாய், தந்தை, அண்ணன் முதலிய பெரியோர். முதுவோர்க்கு முகிழ்த்த கையினை (áWgh©. 231). 2. மூத்தோர். 3. அமைச்சர். 4. அறிவான் மிக்கோர். 5. புலவர். முதியன் = மூத்தவன். இளையரு முதியருங் கிளையுடன்றுவன்றி (mf«. 30). முதியன் = 1. மூத்தவன். (கலித். 25). 2. அகவை முதிர்ந்தோன். 3. நான்முகன். தொடங்கற்கட் டோன்றிய முதியவன் முதலாக (fȤ. 2). முதியாள் = 1. மூத்தவள். 2. தேவராட்டி. தெய்வநிகழ் குறமுதியாள் சென்ற பின்பு (பெரியபு. கண்ணப்ப. 52). முதுவல் = பழைமையாற் பழுதானது. முது - முதார். முதார்மாடு = பால் முற்றிய ஆன். முதார் - முதாரி = 1. முதுமை. முதாரிப் பாண (புறம். 138). 2. பால் மறக்குங் f‹W(W.). 3. முதார் மாடு (சங். அக.). 4. முற்றியது. முதாரிக்காய். (சிலப். 16 : 24, அரும்.). முது = பேரறிவு. முதுவா யிரவல (சிறுபாண். 40). இளமையில் அறிவின்மையும் முதுமையில் அறிவுண்மையும், பட்டறிவின் மை யுண்மையால் ஏற்படும் இயற்கை நிலைமையென்பதை, மடம் மு து என்னுஞ் சொற்கள் உணர்த்துதல் காண்க. முது - முதுக்கு = அறிவு, தெருட்சி, பேரறிவு. முதுக்கு + உறை = முதுக்குறை. முதுக்குறைதல் = அறிவு மிகுதல். முகத்தின் முதுக்குறைந்த துண்டோ (குறள். 707). உறைதல் = தங்குதல். 2. பெண் பூப்படைதல் (தெருளுதல்). முதுக்குறைவு = 1. பேரறிவு. ஏதிலார் யாதும் புகல விறைமகன் கோதொரீஇக் கொள்கை முதுக்குறைவு (நீதிநெறி. 33). 2. பெண் தெருளுகை (பூப்படைவு). முதுக்குறை = பேரறிவு. முதுக்குறை நங்கை (சிலப். 15 : 202). முது + குறைவு = முதுக்குறைவு = பேதைமை (சூடா.). முது - முதிர். முதிர்தல் = 1. முதுமை மிகுதல். அகவை முதிர்ந்தவர். 2. விளைவு முற்றுதல். 3. கருநிரம்புதல். சூன் முதிர்பு (புறம். 161). 4. நிறைதல். உறைமுதிரா நீரால் (திணைமாலை. 103). 5. கடுமையாதல். முதிர்வேனில்(சங். அக.). 6. சொல் திருந்துதல். முதிராக் கிளவியள் (மணிமே. 22 : 181). க. முது, தெ. முதுரு. முதிர் - முதிர்ச்சி = 1. முற்றிய விளைவு. 2. முதுமை மிகுதி. 3. பழுத்த பருவம். 4. முதுக்குறைவு (திவா.). 5. வினை பயன்றரு நிலை. முதிர் - முதிரி - முதிரிமை = முதுமை (யாழ். அக.). L. maturare, F. maturer, M.E. maturus, ripe, E. mature. முது - முதை = பழங்கொல்லை. முதைச்சுவற் கலித்த முற்றா விளம்புல் (குறுந். 204). முதை - முதையல் = பழங்காடு (சூடா.). 2. கடுகு (சங். அக.). முது - (முத்து) - முற்று. முற்றுதல் = (செ.கு.வி.) 1. முதுமை யடைதல் (பி ங்.). 2. முதிர்தல். முற்றி யிருந்த கனியொழிய (நாலடி. 19). 3. முழு வளர்ச்சியுறுதல். ஓர் முற்றா வுருவாகி (திவ். திருவாய். 8 : 3 : 4). 4. தேர்ச்சி பெறுதல். புரவிப் போருங் கரப்பறக் கற்று முற்றி (சீவக. 1678). 5. மூண்டெழுதல். முற்றெரிபோற் பொங்கி (ò.bt. 8 : 16). 6. வயிரங் கொள்ளுதல் (சூடா.). 7. நிறைவேறுதல். இமையோர்க் குற்ற குறைமுற்ற (கம்பரா. கடல்காண். 11). 8. முடிதல். தங்கரும முற்றுந் துணை (நாலடி. 231). 9. இறத்தல். மாற்றமுந் தாரானா லின்று முற்றும் (திவ். பெரியாழ். 2 : 10 : 1). 10. கடுத்தல். 11. நிறைவேறுதல். (br. குன்றா வி.) 1. செய்து முடித்தல். வேள்வி முற்றி (புறம். 15). 2. அழித்தல். முற்றினன் முற்றின னென்று முன்பு வந்து (கம்பரா. கும்பகர். 311). ம. முத்துக. முற்றிழை = 1. வேலைப்பாடு திருந்திய அணிகலம். 2. அதை யணிந்த பெண். பெற்றிலேன் முற்றிழையை (திவ். பெரிய தி. 3 : 7 : 8). முற்றல் = 1. மூப்பு (சூடா.). 2. முதிர்ச்சி. 3. முற்றியது. முற்றன் மூங்கில் (திவ். திருச்சந். 52). 4. வயிரம். 5. முற்றிய பழக்காய். “K‰w‰சிறுமந்தி......F‰¿¥ பறிக்கும் (நாலடி. 237). 6. நெற்று. 7. முடிகை (சூடா.). 8. திண்மை. முற்றல் யானை (â›. திருச்சந். 52). முற்ற =முடிய. முற்ற முடிய = முழுதும் முடியும்வரை. முற்றும் = முழுதும். முற்று முணர்ந்தவ ரில்லை முற்று-முற்றன் = முழு நிறைவன். முற்றிலா தானை முற்றனே யென்று மொழியினும் (தேவா. 648 : 9). முற்றிமை = முதிர்ந்த அறிவு. முற்றிமை சொல்லின் (சீவக. 2511). Kற்று - முற்றி. மு‰¿¤jš = முடித்தல். கரும மாயினும் முடியும் வாயின் முற்றித்து (பெருங். மகத. 1 : 69). முது - _து= Kதுமை.மூjhdt‹ முன்னர் முடிந்திடும் (கம்பரா. பிராட்டி களங்காண். 18). க. மூதி. மூதறிதல் = 1. அறிவு முதிர்தல். 2. பழமையான செய்திகளை a¿jš. “_j¿í மம்மனைமார் சொல்லுவார் (திவ். இயற். சிறிய ம. 19 ). மூதா = கிழ ஆன். வளைதலை மூதா (பதிற். 13 : 5). மூதாய் = பாட்டி. மூதணங்கு = காளி (சூடா.). மூதிரி = 1. கிழமாடு. 2. கிழ எருமை. 3. எருமை (சது.). மூதிரி-மூரி = 1. பெருமை. மூரிக் கடற்றானை (பு.வெ. 3 : 3). 2. வலிமை. மூரி வெஞ்சிலை (கம்பரா. கும்பகருண. 26). 3. பழமை (W.). 4. கிழம். மூரி யெருத்தா லுழவு (இன். நாற். 21). 5. எருமை. ``nkh£os மூரி யுழக்க (கம்பரா. அகலிகை. 69). 6. எருது. ``நெறிபடு மருப்பி னிருங்கண் மூரியொடு'' (பதிற்றுப். 67 : 15). 7. விடையோரை (திவா). ம. மூரி. bj., f., து. முரி. மூதில் = 1. பழங்குடி. 2. பழமையான மறக்குடி. ``தமியன் வந்த மூதிலாள'' (புறம். 284). மூதுணர்தல் = நன்றாக வுணர்தல். ``மூதுணர்ந்தவ ரன்றி மொழிவாரோ'' (உபதேசகா. சிவபுண். 229). மூதுரை = 1. பழமொழி. ``மூழையுப் பறியாத தென்னு மூதுரையு மிலளே'' (திவ். பெரியாழ். 3 : 7 : 4). 2. பிற்கால ஔவையார் இயற்றிய ஓர் அறநூல். மூதுவர் = முன்னோர். ``விண்ணாட்டவர் மூதுவர்'' (திருவிருத். 2). மூதை = (பெ.) 1. பழங்கொல்லை. 2. காளி. (W). (கு.பெ.எ.) முந்தை. ``முதைவினை கடைக்கூட்ட'' `(சிலப். 9) இறுதி வெண்பா.). முது - மூ. மூத்தல் = 1. அகவை யுயர்தல். ``மூத்தோன் வருக வென்னாது'' (புறம். 183). 2. முதுமை யுறுதல். ``தமியண் மூத்தற்று'' (குறள். 1007). 3. முடிதல். ``மூவா முதலா வுலகம்'' (சீவக. 1). 4. கெடுதல். ``மதிலெய்த மூசரச் சிலை முதல்வர்க்கு'' (தேவா. 936 : 4). மூ = மூப்பு. (யாழ். அக.) மூத்தண்ணன் = பெரியண்ணன். மூத்ததிகாரம் = தலைமை யதிகாரம் (T.A.S.). மூத்த திருப்பதிகம் =காரைக்காலம்மையார் இயற்றிய பதிகம் (பெரியபு. காரைக்கா. 63). மூத்தப்பன் = பாட்டன். ``எம்மு னெந்தை மூத்தப்பன் (தேவா. 1086 : 9) ம. முத்தப்பன். மூத்த பிள்ளை = திருவாங்கூர் அரசரால் நாஞ்சில் நாட்டு வெள்ளாளருக்குக் கொடுக்கப்பட்ட பட்டம். மூத்தவன் = 1. அகவையிற் பெரியவன். 2. அண்ணன் ``மூத்தவற் கரசுவேண்டிய முன்புதூதெழுந்தருளி'' (திங். பெரியதி. 4 : 6 : 7). 3. மேலோன். (W.) மூத்தார் = 1. மூத்தோர். ``மூத்தாரிளையார்'' (ஆசாரக். 35). 2. கணவனின் தமையனார். மூத்தவள், மூத்தாள் = 1. முதியவள். (பிங்.) 2. அக்கை 3. முதல் மனைவி. 4. மூதேவி. (யாழ். அக.). மூத்தோர் = 1. முதியவர். ``விருந்தினர் மூத்தோர்'' (ஆசாரக். 22.). 2. பண்டிதர். (திவா.) 3. மந்திரிமார். (âth.(. மூத்தோன் = 1. அகவை மேற்பட்டவன். 2. அண்ணன். (பிங்.) 3. முதியவன். 4. 48-ற்குமேல் 64 அகவைக் குட்பட்டவன். (W.) மூ - மூப்பு = 1. அகவை யுயர்வு. 2. முதுமை. ``முனிதக்க மூப்புள'' (நாலடி. 92). 3. தலைமை. (யாழ். அக.). 4. ஒட்டாரச் செருக்கு. தன் மூப்பு = முற்றதிகாரம். ம. _¥ò, bj., க. முப்பு. மூப்பன் = 1. சில குலத்தாரின் ஊர்த் தலைவன். 2. சில குலத்தாரின் பட்டப்பெயர். மூப்பான் = 1. அகவை மேற்பட்டவன். 2. ஆட்டத்தில் வென்றவன். 3. முதியவன். 4. சிவபிரான். ``மூப்பான் மழுவும்'' (தனிப்பா. i, 32 : 61). மூப்பர் = 1. பெரியோர். ``மூப்பரை யிகழ்ந்தோமாகில்'' (அரிச். பு. நகர்நீ. 151). 2. கிறித்தவக் குருமாருள் ஒருவகையார் (Deacons) - W. மூப்பி = 1. முதுமகள். ``மூப்பிமாராலே............... நீராட்டி'' (சீவக. 1892, உரை). 2. தலைவி. (W.). மூப்புக்கழிவு = 1. ஊர்த் தலைவனுக்குச் சேரவேண்டிய பொருள். (M.M.509). 2. வரித் தொகையிலிருந்து ஊர்த் தலைவனுக்குரியதைக் கொடுத்ததனாற் கழிக்கப்படும் பகுதி. மூப்பு முகனை = தலைமை பற்றிவரும் சொற் செல்வு (யாழ்ப்.). மூதேவி = 1. திருமகளுக்கு முந்திப் பிறந்தவளென்று சொல்லப்படும் வறுமைப் பெண் தெய்வம். 2. சோம்பல், பகல் தூக்கம். மூதேவியடைந்து முடங்கிக் கிடக்கிறாள். (உ.வ.). 3. ஆக்கங் கெட்ட சோம்பேறிப் பெண். 4. ஒருவகைச் சொல். முல்3 (மென்மைக் கருத்துவேர்) எல்லா உயிரினங்கட்கும், இளமையிற் பெரும்பாலும் உடல் மென்மையாயிருப்பது இயல்பே. மாந்தரினத்துள், ஆடவனினும் பெண்டு மெல்லுடம்பியாயினும், குழவிப் பருவத்தில் இருபாலும் ஒருநிகரான மென்மையாகவே யிருத்தல் காண்க. பச்சிளமையிலும் சிற்றிளமையிலும் உடம்பும் தன்மையும் மென்மையா யிருப்பதால், இளமைக் கருத்தினின்று மென்மைக் கருத்துத் தோன்றிற்று. மென்மை அதையுடைய பொருளுக்கேற்றவாறு பலதிறப்படும். முல்-மெல் = மெதுவான. ஆம்பல் மெல்லடை கிழிய (அகம். 56). மெல்-மென்மை = 1. மெதுவுத் தன்மை. கயவென் கிளவி மென்மையுஞ் செய்யும் (தொல். உரி. 24). 2. வலியின்மை. “nkt‰f மென்மை பகைவ ரகத்து (குறள். 877). 3. மெல்லெழுத்து. மேவு மென்மை மூக்கு (நன். 75). 4. அமைதி. “bkšÈa நல்லாருள் மென்மை (நாலடி. 188). 5. தாழ்வு. “bk‹brhலேனும்......ïfHh®” (கந்தபு. அவையட. 3). 6. சிறுமை, நுண்மை. மெல்ல = 1. மெதுவாக, சிற்றளவாக. தானோக்கி மெல்ல நகும். (குறள். 1094). 2. அமைதியாக, அடக்கமாக. மெல்ல வந்தென் நல்லடி பொருந்தி (புறம். 73). க. மெல்லெனெ, தெ. bkšyfh(g). மெல்லென = மெல்ல. மெல்லெனல் = 1. மெத்தெனற் குறிப்பு. மெல்லென் சீறடி (bjhš. கற்பு. 5). 2. குரல் தாழ்த்திப் பேசற் Fறிப்பு.“bkšbyd¡ கிளந்தன மாக (பொருந. 122). 3. மந்தக்குறிப்பு (Nlh.). மெல்லன் = மெல்லிய தன்மையன். மெல்லடை = மெல்லிய அடை, mப்பtகை(பிங்.).bkšyiz = 1. மெத்தை. மெல்லணைமேல் முன்துயின்றாய் (â›. பெருமாள். 9 : 3). 2. சட்டை (சூடா.). மெல்லரி = உயர்ந்த சிறிய அரிசிவகை. உலைதந்த மெல்லரி (âUkª. 422). மெல்லம் புலம்பு = மணலால் மெல்லிய நெய்தல் நிலம் (âU¡nfh. 379, உரை). மெல்லி = மெல்லியலுடைய பெண். மெல்லி நல்லாள் தோள்சேர் (M¤âN.). மெல்லிக்கை = சிறியது, பருமனற்றது (W.). மெல்லிது = 1. மென்மையான பொருள். மலரினும் மெல்லிது காமம் (குறள். 1289). 2. ஒல்லியானது. 3. சிறியது. மெல்லிது - மெல்லிசு. மெல்லிதரம் - மெல்லிசரம். மெல்லிசை = மெதுவான ஓசை. மெல்லிசை வண்ணம் = மெல்லெழுத்து மிகுந்துவரும் செய்யு ளோசை. மெல்லிசை வண்ணம் மெல்லெழுத்து மிகுமே (bjhš. செய். 215). மெல்லியல் = 1. மென்மையான இயல்பு. மெல்லியற் குறுமகள் (FWª. 89). 2. பெண். மெல்லிய லாக்கை முற்று நடுங்கினள் (f«guh. மாயாசனக. 18). 3. இளங்கொம்பு (சூடா.). மெல்லியர் = 1. வலிமை யில்லாதவர். தேவர் மெல்லியர் (f«guh. யுத்த. மந்திரப். 32). 2. உடல் மெலிந்தவர் (W.). 3. எளியவர். எச்சத்தின் மெல்லியராகி (நாலடி. 299). 4. புல்லிய குணமுடையவர். மடவர் மெல்லியர் செல்லினும் (புறம். 106). 5. பெண்டிர் (W.). மெல்லியலாள் = பெண். மெல்லியலா ளொடும்பாடி (தேவா. 284: 8). மெல்லியன் = அறிவு குன்றியவன் (புறம். 184). மெல்லினம் = மெல்லொலியுடைய மெய்யெழுத்துகள். (நன். 69). மெல்லெழுத்து = மெல்லின மெய். மெல்லெழுத் தென்ப ஙஞண நமன. (தொல். நூன். 20). மெல்லொற்று = மெல்லின மெய். மெல்லொற்றுத் தொடர்மொழி (தொல். குற்றிய. 9). மெல்வினை = பணி(சரியை), பத்தி(கிரியை) என்னும் மதவினைகள். “vËjhdt‰iw மெல்வினையே யென்றது (திருக்களிற்றுப். 17). ஒ.நோ: மெல்: E. mellow, soft, OE. mela, melw, Gk. melakos, soft. L. mollis, soft; molluscus, soft-bodied animal; mollusca, sub-kingdom of soft-bodied animals. F. mollusque, E. mollusc. L. mollificare, make soft; F. mollifier, E. mollify. Rom. molliare, OF. mollier, moisten, E. moil. E. mild, gentle; OE. milde, OS. mildi, OHG. milt; ON. mildr; Goth. milds. மென்கண் = இரக்கம். மென்கண் பெருகி னறம்பெருகும் (eh‹kÂ. 92). மென்கணம் = மெல்லின மெய்கள் (நன். 158, உரை). மென்கால் = மென்காற்று, தென்றல். மென்கால் பூவளவிய தெய்த (கம்பரா. வனம்புகு. 2). மென்சொல் = 1. இனிய சொல் (நாமதீப. 668). 2. அன்பான சொல் (W.). மென்பறை = பறவைக் குஞ்சு. மென்பறை விளிக்குரல் (ஐங். 86) . மென்பால் = மருதநிலம். வளம்வீங் கிருக்கை...bk‹gh றோறும் (பதிற். 75 : 8). மென்பிணி = சிறுதுயில். மயக்கத்துப் பொழுது கொண்மரபின் மென்பிணி யவிழ (பதிற். 50 : 21). மென்புரட்டு = கைம்மாற்றிலே பணம் புரட்டுகை (யாழ். அக.). மென்புலம் = 1. நீர்வளத்தால் மெல்லிய மருதநிலம். மென்புல வைப்பி னன்னாட்டுப் பொருந (புறம். 42). 2. மணலால் மெல்லிய நெய்தல் நிலம். மென்புலக் கொண்கன் (ஐங். 119). மென்றொடர் = மெல்லின மெய்யை ஈற்றயலாகக் கொண்ட சொல். வன்றொடர் மென்றொடர் (தொல். குற்றிய. 1). மென்னகை = òன்சிரிப்பு.ft®jiy¢ Nலிbமன்னகைÉளைத்து(உபதேசகா.átÉuj. 163). மென்னடை = மெதுவான நடை. மென்னடை யன்னம் பரந்து விளையாடும் (திவ். நாய்ச். 5 : 5). 2. அன்னம் (பிங்.). மென்னிலை = நடன நளிநயக் கைவகை (W.). மென்மெல = மெல்ல மெல்ல. மென்மெல வியலி வீதி போந்து (bgU§. வத்தவ. 17 : 99). மெல்-மெல்கு. மெல்குதல் = 1. மெதுவாதல். காலின் மென்மைக்குத் தக்கபடி தானும் மெல்கிற்றிலள் (சிலப். 15 : 138, அரும்.). 2 நொய்யதாதல். மெல்கிடு கவள வல்குநிலை புகுதரும் (mf«. 56). 3. இளகுதல். ஒ.நோ: E. melt, become or make soft by liquifying by heat; OE. meltan, mieltan, ON. meta (digest). E. molten (melted). E. smelt (extract metal from ore by melting). MDu. or MLG. smelten. E. malt, OE. mealt, OS. malt, OHG. malz, ON. malt, cog. w. melt. மெல்(லு)தல் = 1. கடின அல்லது விழுங்க முடியாத உணவைப் பல்லால் அரைத்து மென்மையாக்குதல். மெல்லிலைப் பண்டியும் (Ótf. 62). 2. விடாது கடிந்து தொல்லைப்படுத்தல். இரவும் பகலும் என்னை மென்றுகொண்டிருக்கின்றான் (உ. வ. ). ஒ.நோ: Goth. mel, grind; malma, sand; ON. malmr, ore; E. malm, soft chalky rock; OE. mealm, cog. w. OS., OHG. melm, dust. E. meal, OE. mela, OS., OHG. melo, ON. mjol, cog. w. L. molere, grind, E.mill, building fitted with machinery for grinding corn. OE. mylen, OS. mulin, OHG. muli(n) f. LL. molinum, L. mila, mill f.mole, grind. E. molar, grinder (mammal’s back teeth serving to grind) f. molaris(mela, millstone). E. mull (Sc.), snuff box (var. of mill), box originally having a grinder. E. muller, tool used for grinding powders etc. on slab. ME. mol, mulour f. mul, grind. E. mullock(Austral.), refuse from which gold has been extracted, f. dial. mull, dust, rel. to OE. mgl, dust, MDu. mul, mol f. Gme root mul-, grind. E. multure, toll of grain or flour paid to muller. ME. or OF. milture f. med.L. molitura f. molere, grind. மெல்-மெள்-மெள்ள = மெல்ல. மெள்ள வெழுந்தரி யென்ற பேரரவம் (திவ். திருப்பா. 6). மெள்-மெள்ளென = மெல்லென. மெள்ளெனவே மொய்க்கு நெய்க்குடந் jன்னைbயறும்பு(திருவாச.6 : 24). மெள்-மெள்ளம் = விரைவின்மை. மெள்ளமாய்ப் போ (உ.வ.). மெல்-மெலி. மெலிதல் = 1. வலி குறைதல். 2. உடல் இளைத்தல். “M¡ifia¥ போக்கப் பெற்று மெலிகின்ற என்னை (திருவாச. 6 : 10). 3. எளியராதல் (W.). 4. வருந்துதல். அளப்பினாள் மெலிகிற்பாள் (காசிக. மகளிர். 8). 5. கெடுதல். மெலியு நம்முடன் மேல்வினை யானவே (தேவா. 318 : 10). 6. வல்லெழுத்து இனமெல்லெழுத்தாக மாறுதல். குழைத்த வென்பது குழைந்தவென மெலிந்து நின்றது (புறம். 21, உரை). 7. முரலில்(சுரத்தில்) தாழ்தல். யாழ்மேற் பாலை யிடமுறை மெலிய(சிலப். 3 : 92). மெலிவு = 1. தளர்ச்சி. அணியிழை மெலிவின் (பு.வெ. 11, பெண்பாற். 5). 2. களைப்பு. மெலிவு தீர்தி (கம்பரா. திருவடி. 5). 3. பாடு. எங்களுக் குண்டான மெலிவுகளுங் சொல்லி (Insc. Pudu. 799). 4 துன்பம். 5. தோல்வி. மெலிவென்பது முணர்ந்தேன் (f«guh. முதற்போ. 181). 6. கொடுமை. வலியவர் மெலிவு செய்தால் (கம்பரா. வாலிவதை. 80). 7. சமனுக்குக் கீழ்ப்பட்ட ஓசை. வலிவும் மெலிவுஞ் சமனு மெல்லாம் (சிலப். 3 : 93). மெலித்தல் = செய்யுள் திரிபுகள் ஆறனுள், வல்லெழுத்து இனமெல்லெழுத்தாக மாறுதல் அல்லது மாற்றப்படுதல். (நன். 155). மெலிந்தோன் = 1. வலியற்றவன். 2. நோய்ந்தவன். 3. ஏழை. மெலிப்பு = 1. மெலித்தல், மெலியச் செய்தல். 2. மெல்லெழுத்து. “tšbyG¤J மிகுவழி மெலிப்பொடு தோன்றலும் (தொல். தொகை. 15). மெலியவன் = வலியற்றவன். மெலியவர் பால தேயோ வொழுக்கமும் விழுப்பந் தானும் (கம்பரா. வாலிவதை. 80). மெலியார் = வலியற்றவர். மெலியார்மேன் மேக பகை (குறள். 861). மெலிகோல் = கொடுங்கோல். மெலிகோல் செய்தே னாகுக (òw«. 71). மெல்-மெலு = எடைக் குறைவான காசு (W.). மெலு-மெலுக்கு = மென்மை (W.). மெலுக்கு-மெலுக்குவை = மென்மை (W.). தெ. மெலக்குவ. மெலு-மெது. ல-த, போலித்திரிபு. ஒ.நோ: சலங்கை-சதங்கை, கலம்பம்-கதம்பம். மெது = 1. மென்மை 2. வேகமின்மை 3. அமைதி (W.). 4. மந்தம். 5.kG¡f«. க. மெது. வ. ம்ருது. ஒ.நோ: E. smooth. OE. smooth(once usu. smethe, whence dial. smeeth). நாகம் என்னும் தமிழ்ச்சொல் snake என்று செருமானிய மொழிகளில் சகர முதன்மிகையொடு வழங்குவது போன்றே, மெது வென்னும் சொல்லும் வழங்குகின்ற தென்க. தமிழ்ச்சொற்களின் மகரவுறுப்பின்பின் ரகரத்தை இடைச் செருகுவது சமற்கிருத இயல்பே. எ-டு: அமுது(சோறு)-அம்ருத, மடி-மரி-ம்ரு, மிதி-ம்ருத். சென்னைப் ப.க. தமிழ் அகரமுதலியில், ம்ருது என்னும் சமற்கிருதச் சொல்லினின்று மெது என்னும் தென்சொல் திரிந்துள்ளதாகக் காட்டப்பட்டுள்ளது. மெது மெதுத்தல் = மெதுவாயிருத்தல் (W.). மெதுமெதுப்பு = மெதுத்தன்மை (W.). மெது-மெதுக்கு = சோறு (W.). தெ. மெதுக்கு. அரிசி அவிந்தபின் மெதுவாயிருத்தல் காண்க. மெதுக்கிடுதல் = மெதுவாயிருத்தல். மெதுகு = மென்மை. மெதுகரம் = நுண்ணிய வேலைப்பாட்டில் மெதுவாக அராவும் சன்ன அரம். மெதுகாணி (மெதுகு + ஆணி) = மெருகிடும் ஒரு கருவி. மெதுவடை = மெதுவாயிருக்கும் உழுந்து வடை. மெது-மெத்து-மெத்தென = மெதுவாக. மெத்தெனல் = 1. மென்மைக்குறிப்பு. மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி (திவ். திருப்பா. 19). 2. அமைதிக்குறிப்பு. 3. காலத் தாழ்ச்சிக் குறிப்பு. மெத்தென மாதைக் கொண்டு வருகுவல் (திருவாலவா. 62 : 7). 4. மந்தக் குறிப்பு (ஈடு, 1 : 10 : 11). க. மெத்தனெ. மெத்தெனவு = 1. அமைந்த குணம். 2. வளைந்து கொடுக்குந் தன்மை. 3. கவலையின்மை. மெத்தெனவு-மெத்தனவு = 1. காலத்தாழ்ப்பு. 2. கவலையின்மை. “bk¤jdɉ றுயிலுங்கால் (திருவாலவா. 27 : 70). மெத்தனவு-மெத்தனம் = 1. காலத்தாழ்ப்பு. 2. கவலையின்மை, பொருட்படுத்தாமை. மெத்து-மெத்தை = மெதுவான படுக்கை. ஒரு பாம்பை மெத்தையாக விரித்து (திவ். பெரியாழ். 5 : 1 : 7). கனகதண்டி மேலுக்குப் போட மெத்தையில்லை யென்பார்க்கும் (தனிப்பா.) 2. பஞ்சணை. 3. துயிலிடம் (திவா.). 4. சட்டை (பிங்.). 5. வேட்டையாடுவோர் தோளிலிடும் அணை. வலத்தோளிலே இட்ட மெத்தையும் (திவ். திருநெடுந். 21, வியா. ப. 170). k., தெ. மெத்த, க. மெத்தெ. மெத்தைக் கட்டில் = மெதுவணை பரப்பிய கட்டில். மெத்தைச் சட்டை = பஞ்சு உள்வைத்துத் தைத்த சட்டை. மெத்தைப் பாய் = மெத்தைமேல் விரிக்கும் பட்டுப் பாய். ம. மெத்தப் பாயி. மெதுகு-மெருகு. ஒ.நோ: விதை-விரை. மெருகு = மெதுவான பளபளப்பு. k., bj., f., து. bkUF(g). மெதுகரம்-மெருகரம் = மெருகு வேலையிற் பயன்படும் அரவகை. (C.G.). மெதுகாணி-மெருகாணி = மெருகுவளை யென்னும் தட்டார் கருவி. மெருகிடுதல் = பளபளப்பு உண்டாக்குதல் (W.). மெருகுக்கல் = மெருகிட உதவுங் கல் (C.E.M.). மெருகுச் சுண்ணாம்பு = சுவரிற் பூசும் சிப்பிச் சாந்து போன்ற நுண்ணிய சுண்ணச் சாந்து. மெருகு தேய்த்தல் = மெருகிடுதல். மெருகு போடுதல் = மெருகிடுதல். மெருகு மண் = தட்டார் மெருகிடுதற் குதவும் மண்வகை. மெருகு வளை = மெருகிட உதவும் தட்டார் கருவிவகை. மெருகெண்ணெய் = 1. பளபளப்பிற்காக மரப்பண்டங்களின் மேற் பூசும் எண்ணெய் (W.). 2. மினுக்கெண்ணெய் (யாழ். அக.). மெருகோடு = மேற்புறத்திற் பளபளப்புள்ள ஓடு (C.E.M.). மெல்கு-மெழுகு = 1. மெதுத்தன்மை. (அழகர்கல. 10). 2. இளகிய அல்லது களிப்பதமான மருந்து. 3. அரக்கு. மெழுகான் றூதுலைப் பெய்த பகுவாய்த் தெண்மணி (குறுந். 155). 4. ஆவின் சாணம். “JŒa மெழுகுடன் (திருமந். 1720). 5. சந்தனம். மெழுகு செய்தல் = மெதுவாக்குதல். புரவி கருவிகொ டுரிஞ்சிமிக மெழுகு செய்து (அழகர்கல. 10). மெழுகுதல் = 1. மேனியிற் சந்தனம் பூசுதல். முகிண்முலை மெழுகிய சாந்தின் (கம்பரா. பிணிவீ. 53). 2. நிலத்தைச் சாணமிட்டுத் துப்புரவு செய்தல். நின்றிருக் கோயி றூகேன் மெழுகேன் (âUthr. 5 : 14). 3. குற்றத்தை மறைத்துப் பேசிவிடுதல். மெழுகு-மெழுக்கு = 1. சாணத்தால் மெழுகுகை. புலர்வதன்முன் னலகிட்டு மெழுக்கு மிட்டு (தேவா. 727 : 3). 2. சாணம். “âUtyF« திருமெழுக்கும் தோண்டியுங் கொண்டு (பெரியபு. திருநாவுக். 68). 3. மேற் பூச்சுப் பொருள். வேரியின் மெழுக்கார்த்த மென்பூ நிலத்து (சீவக. 129). 4. அரக்கு. 5. பிசின். ம. மெழுக்கு. மெழுக்கு-மெழுக்கம் = சாணத்தால் மெழுகிய இடம். மலரணி மெழுக்க மேறி (பட்டினப். 248). மெழுக்குத்துணி = 1. மெழுகு பூசின துணி. 2. நீர்க்காப்புத்துணி. 3. நிலக்கரி நெய்யிட்ட ngh®it(Tarpaulin). மெழுக்கூட்டுதல் = மேற்பூச்சிடுதல். மெழுகிடுதல் = 1. நூலின்மேல் மெழுகு பூசுதல். 2. சாணமிட்டு நிலத்தை அல்லது திண்ணையைத் துப்புரவு செய்தல். 3. படிமை வார்க்க மெழுகினாற் கருக்கட்டுதல். மெழுகுக்களிம்பு = சிரங்கிற்கிடும் களிம்பு மருந்துவகை. மெழுகு கட்டுதல் = படிமை வார்க்க மெழுகினாற் கருக்கட்டுதல். மெழுகு கட்டி வார்த்தல் = மெழுகு கருவில் உருக்கின மாழைகளை (cnyhf§fis) வார்த்துப் படிமை யமைத்தல். மெழுகு சாணை = 1. மெழுகால் துடைத்த உரைகல். 2. மெழுகுங் கருமணலுங் கலந்து செய்த சாணைக் கல் (W.). மெழுகு சாத்துதல் = படிமை வார்க்க மெழுகினாற் கருக்கட்டுதல். “á‰g®fsh‹ மெழுகு சாத்தி (திருவாலவா. 45 : 2). மெழுகு சீலை = மெழுக்குத் துணி. மெழுகு சேர்வை = மெழுகுக் களிம்பு (W.). மெழுகுத்தண்டு = மெழுகுத் திரி (யாழ். அக.). மெழுகுத்திரி = மெழுகு திரி. மெழுகுத்துணி = மெழுக்குத் துணி. மெழுகு பதம் = காய்ச்சப்பட்ட மருந்தெல்லாம் சேர்ந்து மெழுகு போல் திரண்டுவரும் பதம். மெழுகு பனையன் = அம்மைநோய் வகை (யாழ். அக.). மெழுகு பாகல் = பாகல்வகை (மூ.அ.). மெழுகு பாளம் = மெழுகு தகடு. மெழுகு பீர்க்கு = பீர்க்குவகை (உ.வ.). மெழுகு பூச்சு = படிமைமேல் மெழுகு பூசியெடுக்கும் அச்சு. மெழுகு பொம்மை = 1. மெழுகினாற் செய்த விளையாட்டுப் படிமை. 2. மெய்வருத்தந் தாங்கமுடியாதவ-ன்-ள். க. மேனதுபொம்பெ (b.). மெழுகு போடுதல் = மரப்பண்டங்கட்குப் பளபளப்பேற்ற மெழுகைக் காய்ச்சிப் பூசுதல் (W.). மெழுகுமண் = கருக்கட்டும் பசைமண் (W.). மெழுகு முட்டம் = மெழுகு பாளம் (இடவழக்கு). மெழுகெண்ணெய் = மரப்பண்டங்கட்கு மெருகிட உதவும் மெழுகு சேர்த்த பூச்செண்ணெய் (இ.வ.). மெழுகெழுதுதல்=துணியில் அச்சடிக்க மெழுகால் உருவமெழுதுதல் (ï.t.). கவனிப்பு: ல ள ழ என்னும் மூன்று இனவொலிகளுள், முந்தியது லகரமே. ல திரண்டு ளகரமும், ள திரண்டு ழகரமும் ஆகும். எ-டு: கால்-காள்-காழ் (கருமை). லகரம் நேரடியாய் ழகரமாவது முண்டு. எ-டு: மால்-மழை. இனி, இத்தகைய சொற்றிரிவுகளில், இடைப்பட்ட ளகரச்சொல் இறந்துபட்ட தெனினுமாம். முல்4 (பொருந்தற் கருத்துவேர்) பொருந்தற் கருத்தினின்று ஒத்தல், முட்டுதல், சேர்தல், கூடுதல், மணத்தல், கலத்தல், பொருதல் முதலிய கருத்துகளும்; ஒத்தற் கருத்தினின்று, அளவிடுதல், மதித்தல், செருக்குதல் முதலிய கருத்துகளும்; முட்டுதற் கருத்தினின்று தடை, முடை, முடிவு முதலிய கருத்துகளும்; சேர்தற் கருத்தினின்று திரளுதல், பகுத்தல், விரிதல், மிகுதல், செழித்தல், அழகாதல் முதலிய கருத்துகளும்; பருத்தற் கருத்தினின்று மொத்தமாதல், வலுத்தல் முதலிய கருத்துகளும்; கலத்தற் கருத்தினின்று கலக்கம், மயக்கம் முதலிய கருத்துகளும்; மயக்கக் கருத்தினின்று இருட்சி, கருமை முதலிய கருத்துகளும் வழிநிலைக் கருத்துகளாகப் பிறக்கும். இவற்றினின்று மேற்கொண்டும் சில கிளைக் கருத்துகள் தோன்றும். முல்-முல்லை = குத்தகை (யாழ்ப்.). முல்லைக்காரன் = குத்தகைக்காரன் (யாழ்ப்.). ஒரு பொருள் முழுவதையும் குறித்த காலத்திற்குப் பயன்படுத்தச் செய்துகொள்ளும் ஒப்பந்தம் குத்தகை. முல்லை-மொல்லை = 1. மேழம் (பருத்த செம்மறியாட்டுக் கடா). 2. மேழவோரை (சூடா. உள். 9). மொல்லையிற் போடுதல் = குடும்பப் பொதுச் செலவிற்குக் கொடுத்தல். மொல்-மொலு. மொலு மொலு வெனல் = ஈக்கள் மொய்த்தற் குறிப்பு. மொல்-மொலோர். மொலோரெனல் = சிறுமீன் கூட்டம் நீர்மட்டத்தில் துள்ளிவரும் ஒலிக் குறிப்பு. ஒ.நோ: அர. முலாகாத் = சந்திப்பு. இந். மில்னா = சந்திக்கை, சந்திக்க; மில் = சந்தி(முதனிலை). முல்-மல் = 1. பருமை (யாழ்ப்.). 2. வளம். மற்றுன்று மாமலரிட்டு (âU¡nfh. 178). 3. வலிமை (பிங்.). 4. மற்போர். மல்லலைத் தெழுந்து வீங்கி (சீவக. 268). 5. மல்லன். மல்லொடு கஞ்சனுந் துஞ்ச வென்ற மணிவண்ணன் (திவ். பெரியதி. 11 : 2 : 3). 6. கண்ணபிரான் மல்லனாய் வாணாசுரனை வென்றாடிய கூத்து (ã§.). பல அணுக்கள் அல்லது உறுப்புகள் அல்லது பொருள்கள் பொருந்துவதால்(ஒன்றுசேர்வதால்) திரட்சி அல்லது பருமை உண்டாகும். ஒ.நோ: சேரே திரட்சி (தொல். உரி. 65). மிகுதியால் வளமும் பருமையால் வலிமையும் உண்டாகும். இருவர் அல்லது இரு படைகள் பொருந்தி அல்லது கூடிப் பொருவதே போர். பொரு(பொருந்து)-போர். கல-கலாம், கலகம். கைகலத்தல் என்னும் வழக்கையும் நோக்குக. மல்-மல்லல் = 1. மிகுதி. 2. வளம். மல்லல் வளனே (தொல். உரி. 7). 3. செல்வம். மல்லற்கேண் மன்னுக (பரிபா. 11 : 121). 4. வலிமை. மல்லன் மழவிடை யூர்ந்தாற்கு (சிலப். 17, கொளு. 3). 5. பொலிவு (சூடா.). 6. அழகு. மல்லற்றன் னிறமொன்றில் (âU¡nfh. 58, பேரா.). மல்-மலை. மலைதல் = 1. ஒத்தல். கவிகை மாமதிக் கடவுளை மலைய (கந்தபு. சூரனரசிருக். 9). 2. எதிர்த்தல் (சூடா.). 3. பகைத்து மாறுபடுதல். இகன்மலைந் தெழுந்த போதில் (சீவக. 747). 4. போராடுதல். தத்த மதங்களே யமைவதாக வரற்றி மலைந்தனர் (திருவாச. 4 : 53). க. மலெ. மலைத்தல் = 1. மாறுபடுதல். மடங்கலிற் சீறி மலைத்தெழுந்தார் (பு.வெ. 3 : 24). 2. பொருதல். வேந்தனோடு... மலைத்தனை யென்பது (புறம். 36). 3. வருத்துதல். மள்ளர் மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப (புறம். 10). மலை = 1. ஈட்டம், சொன்மலை (திருமுருகு. 263). 2. மிகுதி. 3.வளமுள்ள பெரிய இடம். வறப்பினும் வளந்தரும் வண்மையும் மலைக்கே (நன். பொதுப்பா. 28). மலையினும் மாணப் பெரிது (FwŸ. 124). 4. போர்த் தொழில். மலைத்தலை வந்த மரையான் கதழ்விடை (மலைபடு. 331). ம. மல, க. மலெ. மல்-மல்கு. மல்குதல் = 1. அதிகரித்தல், மிகுதல். மணநிரை மல்கிய மன்று (பு.வெ. 1 : 13). 2. நிறைதல். திசையாவு மல்கின்றே (1607). 3 செழித்தல். உயிரனைத்து மல்க மழைமுகி லானாய் (jÂif¥ò. இந்திர. 21). மல்கு-மல்கா-மல்லா. மல்லாத்தல் = 1. மலர்ந்தாற்போல் முகம் மேனோக்கிக் கிடத்தல். நரகத்தின் மல்லாக்கத் தள்ளி (திருமந். 199). 2. தோற்றுப்போதல் (உ.வ.). மல்கா-மல்காத்து (பி.வி.). மல்காத்துதல் = 1. கொடி முதலியவற்றைப் படரவிடுதல். 2. முகம் மேலாகக் கிடக்கச் செய்தல். மல்லா-மல்லார். மல்லார்தல் = 1. பரத்தல், விரிதல். 2. முகம் மேனோக்கிக் கிடத்தல். கை காலைப் பரப்பிக்கொண்டு மல்லார்ந்து கிடக்கிறான் (உ.வ.). மல்லார்-மல்லாரி = 1. பரந்த பறைவகை. 2. அகன்று பருத்தவள். மானங்கெட்ட மல்லாரி (உ.வ.). மல்லாரி - மல்லரி = பறைவகை (சங். அக.). மல்-மல்லாரி = சண்டைக்காரி (W.). மல்லார்-மலர். மலர்தல் = 1. மிகுதல். செழுமல ராவிநீங்கு மெல் லையில் (சீவக. 3079). 2. பரத்தல். வையக மலர்ந்த தொழின்முறை யொழியாது (பதிற். 88 : 1). 3. அகலித்தல். “kyu¤ திறந்த வாயில் (குறிஞ்சிப். 203). 4. மொட்டு விரிதல். “tiunk‰ காந்தள் மலராக்கால் (நாலடி. 283). 5. மனமகிழ்தல். வரன்கை தீண்ட மலர்குல மாதர்போல் (bgÇaò. தடுத்தாட். 161). 6. முகமலர்தல். பூம்புன லூரன்புக......Kfky®ªj கோதை (திருக்கோ. 363, கொளு). மலர்த்தல் = 1. மொட்டு விரியச் செய்தல். 2. குப்புறக் கிடப்பவனை மல்லாக்கச் செய்தல். 3.மற்போரில் தோற்கடித்தல். 4. ஏமாற்றுதல். 5. வாங்கின கடனைக் கொடாமற்போதல். முகம் மலர் போன்றதென்பதும், முகம் மேனோக்கிக் கிடத்தல் மொட்டு விரிந்த நிலையையும் முகங் குப்புறக் கிடத்தல் மலர்ந்த பூக் குவிந்த நிலையையும் ஒக்குமென்பதும் கருத்து. மலர்-அலர். மல்-மல்லி = அகன்று தடித்தவள் (யாழ்ப்.). மல்-மல்லன் = 1. மற்போர்செய்வோன். மறத்தொடு மல்லர் மறங்கடந்த (பு.வெ. 9 : 4). 2. பெருமையிற் சிறந்தோன் (பிங்.). மல்லன்-வ. மல்ல. மல்-மல்லம் = 1. அகன்ற தட்டம் (அக. நி.). 2. கன்னம்(கதுப்பு) (ahœ. அக.). 3. மற்போர் (W.). 4. வலிமை. மல்லம். வ. மல்ல. மல்-மல்லை = 1. பெருமை. மல்லைச் செல்வ வடமொழி மறைவாணர் (திவ். திருவாய். 8 : 9 : 8). 2. வளம். மல்லைப் பழனத்து (பதினொ. ஆளுடை. திருவுலா. 8). மல்-மலி. மலிதல் = 1. விம்முதல், பருத்தல். முலை மலிந்து (பு.வெ. 11. பெண். 2). 2. மிகுதல். கனிப்பொறை மலிந்து நின்ற கற்பகப் பூங்கொம்பு (சீவக. 2541). 3. பரத்தல். மலைமலிந் தன்னமார்பும் (பு.வெ. 11, பெண். 2). 4. விரைதல். நீ மலிந்து செல்வாய் (பு.வெ. 11, பெண். 4). 5. நெருங்குதல். (தொல். சொல். 396, உரை). 6. நிறைதல். மலிகடற் றண் சேர்ப்ப (ehyo. 98). 7. விலை நயத்தல் (உ.வ.). 8. புணர்ச்சியின் மகிழ்தல். மலிதலு மூடலும் (தொல். பொருள். 41). 9. செருக்குதல். மகிழ்ந்தன்று மலிந்தன்று மதனினு மிலனே (புறம். 77) . 10. செருக்கிச் சொல்லுதல். உறுபுகழ் மலிந்தன்று (பு.வெ. 10 : 4, கொளு). மலி-மலிவு = 1.மிகுதி. 2. நிறைவு. மனைவேள்வி மலிவுரைத் தன்று (ò.bt. 9 : 27). 3. உயர்வு. இம்முப்பாலும், மாமலி வுடனே மற்ற மெலிவொடு சமனு மாமே (சூடா. 12 : 10). 4. நயவிலை. மலிவு குறைவது விசாரித்திடுவர் (அறப். சத. 83). 5. மகிழ்ச்சி. “kÈîil யுள்ளத்தான் (பரிபா. 19 : 88). 6. புணர்ச்சியின்ப மகிழ்ச்சி. மலிவும் புலவியும் (தொல். செய். 185). மலிவு-மலிபு = மிகுதி. வாடையது மலிபு (பு.வெ. 8 : 16). மலி-மலிர். மலிர்தல் = 1. பெருகுதல். ஓத மில்லிறந்து மலிர (நற். 117). 2. நீர் முதலியன ஒழுகுதல். பின்னு மலிரும் பிசிர்போல (gÇgh. 6 : 83). 3. பயிலுதல், அடிக்கடி வருதல். கனியின் மலரின் மலிர்கால் (பரிபா. 8 : 54). மல்-மால் = 1. பெருமை. சினமால் விடையுடையான் (திருவாச. 34 : 3). 2. பெருமையுடையவன். மாமஞ்ஞை யூர்ந்து நின்ற மால் (Ótf. 286). 3. வளமை (அக. நி.). 4. மலை (அக.நி.). மால்-மாள்-மாளிகை = 1. மாடமுள்ள பெருவீடு (பிங்.). “kiwat®¡F மாளிகைகள் பல சமைத்தார் (பெரியபு. கோச்செங். 16). 2. அரண்மனை (பிங்.). 3. கோயில். “c¤junfhrமங்கை.....khËifgho” (திருவாச. 16 : 3). மாளிகை-வ. மாளிகா. மாளிகைச் சாந்து = உயர்ந்த கலவைச் சந்தனம். இவள் ஆதரித்துச் சாத்தின மாளிகைச் சாந்தை (திவ். திருப்பல். 8, வியா.). மாள்-மாண். மாணுதல் = மிகுதல் = 1. மிகுதல், பருத்தல். “kiyÆD« மாணப் பெரிது. (குறள். 124). 2. நிறைதல். “khzh¥ பிறப்பு (குறள். 1002). 3. நன்றாதல். மாண்டற் கரிதாம் பயன் (குறள். 177). 4. சிறத்தல், மாட்சிமைப்படுதல். kண்-மாண்பு = 1. பருமை (யாழ். அக.). 2. kh£áik“ïšyt© மாண்பானால் (குறள். 53). 3. நன்மை (அரு.நி.). 4. அழகு அரன்மிடற்றின் மாண்ப தன்றே (திருக்கோ. 323). மாண்-மாட்சி = 1. மகமை(மகிமை) எனைமாட்சித் தாகியக் கண்ணும் (குறள். 750). 2. தெளிவு, விளக்கம் மூலவோலை மாட்சியிற் காட்ட வைத்தேன் (பெரியபு. தடுத்தாட். 56). 3. அழகு நூலோர் புகழ்ந்த மாட்சிய......òuÉ” (பெரும்பாண். 487). 4. இயல்பு மரபுநிலை தெரியா மாட்சிய (தொல். மரபு. 94). மாட்சி = மாட்சிமை = மகமைத் தன்மை. மாட்சிமையுடையோர் கொடுக்கும் மரபுபோல (சிலப். 16 : 23, உரை). மாண்-மாட்சிமை. மாணெழில்.........njhshŒ” (கலித். 20 : 15). மாண்-மாணம் = 1. மாட்சிமை (அக. நி.). மாண்-மாணல் = 1. மாட்சிமை. 2. நன்மை (அரு. நி.). மாணம்-மாடம் = 1. வானளாவிய பன்னிலை மாளிகை. மஞ்சுதோய் மாடமணி உத்தரகோச மங்கை (திருவாச. 16 : 4). எழுநிலை மாடம் கால்சாய்ந் துக்கு (நறுந். 54). 2. மேட்டிடத்திற் கட்டிய பெருங்கோயில். எண்டோ ளீசற் கெழின்மாட மெழுபது செய்து (â›. பெரியதி. 5 : 6 : 8). 3.மேனிலை. ம. மாடம், க. மாட, தெ. khLF(g). மாடம்-மாடி = மேனிலையுள்ள வீடு. ஏழடுக்கு மாடி (உ.வ.). மாள்-மாழை = 1. திரட்சி (பிங்.). 2. கனியக்கட்டி. கனக மாழையால் (சீவக. 913). 3. மாதர் கூட்டம். (அக. நி.). மல்-மன். மன்னுதல் = (செ.கு.வி.) 1. பொருந்துதல். மன்னா சொகினம் (பு.வெ. 10 : 11). 2. மிகுதல். மன்னிய வேதந் தரும் (Mrhu¡. 96). 3. தங்குதல். உத்தரை வயிற்றின் மன்னிய குழவி (ghftj. 1, பரிட்சத்து வின்றோ. 1). 4. நிலைபெறுதல். “k‹d®¡F மன்னுதல் செங்கோன்மை (குறள். 556). 5. உறுதியாய் நிற்றல் (W.). (br. குன்றா வி.) அடுத்தல் (பிங்.). ஒ.நோ: L. manere, stay. L. remanere, E. remain. மன் (இடை.) = 1. மிகுதிக்குறிப்பு. சிறியோன் பெறினது சிறந்தன்று மன்னே (புறம். 75). 2. பெரும்பான்மைக் குறிப்பு. “frjg மிகும்வித வாதன மன்னே (நன். 165). 3. நிலைபேற்றுக் குறிப்பு.மன்னே....Ãiyng றாகும் (நன். 432). ஒ.நோ: OE. manig, OS., OHG. manag, Goth. manags, E. many. g = y. மன்-மன்று =1. அவை, அம்பலம். 2. தில்லைப் பொன்னம்பலம். “bj‹¿šiy மன்றினு ளாடினை போற்றி (திருவாச. 4 : 92). 3. அறங் கூறவை. நெடுமன்றில் வளனுண்டு (கம்பரா. மூலபல. 145). 4. ஆன்கணம். மன்றாடி சொல்ல (திருவாலவா. 52 : 5, அடிக்குறிப்பு). 5. ஆன்தொழு. ஆன்கணம்.....k‹WÃiw புகுதர (F¿Šá¥. 218). 6. மரத்தடித் திண்ணைப் பொதுவிடம். மன்றும் பொதியிலும் (தஞ்சைவா. 34). 7. மக்கள் கூடும் நாற்சந்தி. “k‹¿ny தன்னுடைய வடிவழகை முற்றூட்டாக அனுபவிப்பிக்கு மவனை (ஈடு, 3 : 6 : 3). 8. மணம். மன்றலர் செழுந்துளவு (f«guh. திருவவ. 24). “ónthL சேர்ந்த நாரும் மணம் பெறும் என்பதற்கேற்ப. ஒன்றன் மணம் அதனொடு சேர்ந்த இன்னொன்றிற் கலத்தலால், மணம் மன்றெனப்பட்டது. மன்றுபடுதல் = அம்பலத்திற்கு வருதல், வெளிப்படுதல். ``காம மறையிறந்து மன்று படும்'' (குறள். 1138). மன்று-மன்றம் = 1. அவையம் (பிங்.). 2. அறங்கூறவையம். அறனவின் மன்றத் துள்ளோர் (திருவிளை. மாமனாக. 35). 3. பொன்னம்பல முள்ள தில்லை (பிங்.). 4. மரத்தடிப் பொதுவிடம். மன்றமும் பொதியிலும் (திருமுருகு. 226). 5. குதிரைகளைப் பயிற்றும் செண்டுவெளி. பேரிசை மூதூர் மன்றங் கண்டே (புறம். 220, உரை). 6. போர்க்களப் பரப்பின் நடுவிடம். செஞ்சுடர்க் கொண்ட குருதி மன்றத்து (பதிற். 35 : 8). 7. மக்கள் கூடும் வெளியிடம். மன்றம் போழும் மணியுடை நெடுந்தேர் (குறுந். 301). 8. ஆன்தொழு. புன்றலை மன்றம் (குறுந். 64). 9. பேய்கள் கூடுமிடம். காய்பசிக் கடும்பேய் கணங்கொண் டீண்டு மாலமர் பெருஞ்சினை வாகை மன்றமும். (மணிமே. 6 : 82-3) 10. பறவைகள் கூடுமிடம். புள்ளிறை கூரும் வெள்ளில் மன்றமும் (kÂnk. 6 : 85). 11. மக்கள் குடியிருக்கும் வீடு. வதியுஞ் சில மன்றமே (இரகு. நகரப். 71). 12. நெடுந்தெரு (சூடா.). 13. நோன்பிகள் கூடுமிடம். சுடலை நோன்பிக ளொடியா வுள்ளமொடு மடைதீ யுறுக்கும் வன்னி மன்றமும் (மணிமே. 6 : 86-7) 14. மணம் (பிங்.). `அம்' ஒரு பெருமைப்பொருட் பின்னொட்டாதலால், மன்றம் என்பது இலக்கண நெறிப்படி பெருமன்றைக் குறிக்கும். மன்று - மன்றகம் = அம்பலம். ``மன்றகத்தே நம்பி மாடமெடுத்தது'' (திருமந்.148) மன்று-மன்றல் = 1. தமிழத் திருமணம். 2. இருபாற் கூட்டம். “kiwnah® தேஎத்து மன்ற லெட்டனுள் (தொல். களவு. 1). 3. புணர்ச்சி. மன்றன் மாமயில் (சீவக. 2171). 4. நெடுந்தெரு. “k‹wš வருஞ்சேனை (குற்றா. குற. 73 : 2). மணம் (பிங்.). மன்று-மந்து = 1. ஆன்கணம். 2. ஆன்தொழு. 3. எருமைநிரை. 4. நீல மலைத் துடவர் குடியிருப்பு. எ-டு: ஒற்றைக்கல் kªJ(Ootacamund). துடவர்க்கு எருமைநிரை யோம்பலே பிழைப்புவழியாதலால், அவர் குடியிருப்பு மந்து எனப்பட்டது. ஆட்டுப் பட்டிகளும் மாட்டுப் பட்டிகளும் இருந்த வூர்கள், பட்டியென்றே பெயரீறு பெற்றிருத்தலை நோக்குக. ஒரே பெருங்கல் இருந்த மந்து ஒற்றைக்கல் மந்து எனப்பட்டது. தெலுங்கு நாட்டில் ஒரு பகுதி ஒரு கல் நாடு அல்லது ஓராங்கல் (Warangal) நாடு எனப் பெயர் பெற்றிருத்தலைக் காண்க. ஆங்கிலர் முதன்முதல் நீலமலையில் அடைந்த இடம் ஒற்றைக்கல் மந்து. அதனால் அது சிறப்புப் பெற்றது. அதன் பெயரின் ஆங்கில வடிவை யொட்டி, உதகமண்டலம் என்னும் பெயரை அமைத்துக் கொண்டனர் வடமொழி வெறியர். அதன் மரூஉவான உதகை என்பதற்குத் தலைமாறாக, ஒற்றகை என்று வழங்குவதே தமிழ்நெறிக் கேற்றதாம். மந்து-மந்தை = 1. கால்நடைக் கூட்டம். ஆடுமாடுகள் மந்தை மந்தையாய் மேய்கின்றன (உ.வ.). 2. ஊரின் பொது மேய்ச்சலிடம் , மந்தைவெளி (உ.வ.). 3. ஊரிடைப் பொது வெளியிடம். 4. ஆடுமாடு மேய்க்கும் குலத்தாருள் ஒரு பிரிவுப் பெயர். தெ. மந்து, க. மந்தெ. மன்-மனை = 1. பலர் கூடி அல்லது நிலைத்து வதியும் வீடு. சீர்கெழு வளமனை திளைத்து (சீவக. 828). 2. வீடு கட்டுதற்குரிய வெறுநிலம். ஒரு மனை 2400 சதுரஅடி. (உ.வ.). 3. அல்லும் பகலும் வீட்டில் வதியும் மனைவி. பிறன்மனை நோக்காத பேராண்மை (குறள். 148). 4. வீட்டில் வதியும் குடும்பம். 5. துறவுக்கு எதிரான இல்வாழ்க்கை. மனைத்தக்க மாண்புடைய ளாகி (குறள். 51). 6. சூதாட்டிற்கு அல்லது கணியத்திற்கு வரையும் அறை. ம. மன, க. மனெ. ஒ.நோ: E. manor, f. ME. f. AF. maner, OF. manoir, f. L. manere, remain. E. manse, f. ME. f. med.L. mansus, house (manere, mans, remain). E. mansion, large residence, f. ME. f. OF. f. L. mansionen, f. mansus, f. manere, mans, remain. மனை-மனைவி = 1. மனையிலுறையும் வாழ்க்கைத் துணைவி. இன்ப மருந்தினான் மனைவி யொத்தும் (சீவக. 1895). 2. முல்லை மருத நிலங்களின் தலைவி (திவா.). 3. மனையுடையாள். பூமுளரி மனைவி'' (cgnjrfh. சிவவிரத. 215). மன் + திரம் = மன்றிரம்-மந்திரம் = 1. வீடு. மந்திரம் பலகடந்து (f«guh. ஊர்தேடு. 138). 2. அரண்மனை (பிங்.). 3. தேவர் கோயில் (பிங்.). ஆதி தனது மந்தி ரத்து (கந்தபு. காமதகன. 67). 4. உறைவிடம். மான் மதங் கமழ்கொடி மந்தி ரந்தொறும் (ghuj. வேத்திர. 29). 5. மண்டபம். 6. குகை. அரிமந்திரம் புகுந்தா லானை மருப்பும் (நீதிவெண். 2). 7. குதிரைச் சாலை (ã§.). 8. குதிரைக் கூட்டம் (சூடா.). மந்திரம்-வ. மந்திர. மக்கள் உறைவிடத்தையும் அரிமாக் குகையையும் குதிரைக் கூடத்தையும் குறிக்கும் மந்திரம் என்னும் சொல் ஒன்றே. சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலி, குதிரைச் சாலையைக் குறிக்கும் மந்திரம் என்னும் சொல்லை வேறென மயங்கிப் பிரித்துக் கூறியது வழுவாகும். மக்கள் படுக்கை, விலங்கின் படுக்கை, பறவைக் கூடு ஆகிய மூன்றையும், சேக்கை யென்னும் ஒரே சொல் பொதுவாகக் குறித்தல் காண்க. சூழ்வினையைக் குறிக்கும் மந்திரம் என்னும் சொல் வேறு. அது அமைப்பில் ஒத்திருப்பினும், அதன் முதனிலையான மன் என்னும் சொல் முன் என்பதன் திரிபாகும். முன்னுதல் = கருதுதல், சூழ்தல். மன் + திரம்-மன்றிரம்-மந்திரம்-வ. மந்த்ர. மன் = மந்திரம். (ã§.). இது முதனிலைத் தொழிற்பெயரும் தொழிலாகு பெயருமாகும். மன்(பெ.) = 1. பெருமை. (யாழ். அக.). 2. பெரியோன், தலைவன். மன்னுயிர் நீத்த வேலின் (பு.வெ. 4 : 23, கொளு). 3. கணவன்.மன்னொடுங்கூடி......thdf« பெற்றனர் (áy¥. 25 : 59). 4. அரசன். மன்னுடை வேலினாய் (சீவக. 1200). 5. அரசு. மன்பெறு மரபின் ஏனோர்க்கு முரிய (தொல். மரபு. 84). மன்-மன்னன் = 1. அரசன். மன்ன னுயிர்த்தே மலர்தலை யுலகம். (òw«. 186). 2. தலைவன். சேனை மன்னர்கள் (கந்தபு. சூர. இரண்டா. 47). 3.கடவுள் (பிங்.). 4. கணவன் மங்கை யுன்றன் மன்னன் (பிரமோத். 111). மன்-மன்னவன் = 1. அரசன். முறைசெய்து காப்பாற்று மன்னவன் (FwŸ. 388). 2. விண்ணுலக வேந்தன். மாலை வெண்குடை மன்னவன் கோயிலும் (சிலப். 5 : 173). மன்றுதல்1 = 1. மிகுதல். 2. உறுதியாதல். 3. தெளிவாதல். மன்ற(நி. கா. É.v.) = 1. மிக. மன்ற வவுணர் வருத்திட (fªjò. தேவ. போற். 6). 2. தேற்றமாக. சென்று நின்றோர்க்குந் தோன்று மன்ற (புறம். 114). மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல். இடை. 17). 3. தெளிவாக. “neh‰nwh® மன்றநின் பகைவர் (புறம். 26). மன்றுதல்2 = தண்டஞ் செய்தல். அடிகெட மன்றி விடல் (பழ. 288). இது அறமன்றின் செயல். மன்-மான். மானுதல் = ஒத்தல். மன்னர் சேனையை மானு மன்றே (f«guh. ஆற்று. 14). மான்-மான = போல (உவமை யுருபு). வினைபயன் மெய்யுரு என்ற நான்கே வகைபெற வந்த உவமத் தோற்றம் (தொல். உவம. 1) அன்ன ஆங்க மான இறப்ப என்ன வுறழத் தகைய நோக்கொடு கண்ணிய எட்டும் வினைப்பா லுவமம் (தொல். உவம. 12) மான் = ஒப்பு (பிங்.). மான்-மானம் = 1. ஒப்புமை. மான மில்லுயர் மணிவண்ணன் (Ótf. 2747). 2. அளவு. 3. பட்டணம் படியில் அரைப்படிக்குச் சற்று மிகுந்த முகத்தலளவு (ஆம்பூர் வழக்கு). 4. அவ்வளவு கருவி. 5. உரையாணி (திருக்கோ. 335, உரை). 6. கணிப்பு. சூரமானம். 7. அளவைக் கூறு. இருமானம், மும்மானம். 8. மதிப்பு, கண்ணியம். “e‹nwfh© மான முடையார் மதிப்பு (நாலடி. 294). 9. பெருமை புகழு மானமு மெடுத்துவற் புறுத்தலும் (தொல். அகத். 41). 10. வலிமை (சூடா.). 11. தன்மதிப்பு. இளிவரின் வாழாத மான முடையார் (குறள். 970), மறத்திடை மானமேற் கொண்டு (ò.bt. 5 : 6). 12. கற்பு. 13. பூட்கை, வஞ்சினம். அப்படியே செய்வேனென மானஞ் செய்து (இராமநா. அயோத். 7). 14. புலவி. மான மங்கையர் வாட்டமும் (சீவக. 2382). 15. மானக்கேட் டுணர்ச்சி. உயிர்நீப்பர் மானம் வரின். (குறள். 969), “khdª தலைவருவ செய்பவோ (நாலடி. 198). 16. வெட்கம். “tŠáia மீட்கிலே னென்னு மானமும் (கம்பரா. சடாயுவுயிர்நீ. 145). 17. பொருளளவு. எ-டு: வருமானம். (ïil.) 1. அளவு குறித்துவரும் தொழிற்பெயரீறு. எ-டு: பெறுமானம். 2. நிலை குறித்துவரும் தொழிற்பெயரீறு. எ-டு: கட்டுமானம். ஒ.நோ: “moon (A.Sax. mona, the moon(masc.); cog. O.Fris. mona, Goth. mena, Ice. mani, Dan. maane, D. maan, OHG. mane, (the Mod.G. mena, moon, is a derivative like E. month). Lith. menu, Gr. mene, Per. ma, Skt. mas, all meaning the moon; from a root ma, to measure; the moon was early adopted as a measure of time, hence the name.” - The Imperial Dictionary மான்-மானி. மானித்தல் = (செ.கு.வி.) 1. நாணுதல், மானவுணர்ச்சியால் வெட்குதல். கூற்றமும் மானித்தது (பு.வெ. 7 : 25, உரை). 2. செருக்குதல். நின்னைப் பணியாது மானித்து நின்ற அரசன் (நீல. 529, உரை). (br. குன்றாவி.) 1. அளவிடுதல். 2. மதித்தல், பெருமைப்படுத்து தல். நாணி மானித்தோமே நாமென்பார் (காளத். உலா. 243). ஒ.நோ: தீர்மானம்-தீர்மானி. மானம்-மானி = 1. மதிப்பு அல்லது கண்ணியமுள்ளவ-ன்-ள். 2. செருக்குள்ளவ-ன்-ள். களிமடி மானி (நன். 39). மான்-மா. மாத்தல் = அளத்தல். இவ் வினை இன்று வழக்கற்றது. ஆயின், மா என்னும் முதனிலைத் தொழிலாகுபெயர் 1/20 என்னும் கீழ்வா யிலக்கத்தைக் குறித்து வழங்குகின்றது. அதனால், நிலவளவையில் ஒரு வேலியின் 1/20 பாகம் மா எனப்படுகின்றது. மாநிறை வில்லதும் பன்னாட் காகும் (புறம். 184) என்பது, இதன் தொன்றுதொட்ட வழக்கை யுணர்த்தும். மா-மாத்திரம் = 1. அளவு. வௌவினன் முயங்கு மாத்திரம் (கலித். 47 : 22). அவன் எனக்கு எம் மாத்திரம்? (உ.வ.). வடார்க்காட்டு ஆம்பூரில், ஒரு பொருளின் விலையை வினவும் போது , “mj‹ விலை எம்மாத்தம்? என்பது இன்றும் உலக வழக்கு. எம்மாத்திரம் என்பது எம்மாத்தம் என்று சிதைந்துள்ளது. மா-மாத்திரம் = 1. அளவு. 2. மட்டும். வால் மாத்திரம் நுழையவில்லை (உ.வ.). 3. தனிமை (சங். அக.). மட்டும், தனிமை என்னும் இரு பொருட்கும் அடிப்படை அளவு என்னும் பொருளே. சென்னைப் பல்கலைக்கழக தமிழகரமுதலி அளவைக் குறிக்கும் மாத்திரம் என்னும் சொல்லை வேறாகப் பிரித்துக் கூறியுள்ளது. ஒ.நோ: மட்டு = அளவு; மட்டும் = மாத்திரம், தனிமையாய். மாத்திரம்-வ. மாத்ர. மாத்திரத்தில் = அளவில், உடனே. அதைக் கேட்ட மாத்திரத்திற் கொடுத்துவிட்டான் (உ. வ.). மாத்திரம்-மாத்திரை = 1. அளவு. மாத்திரை யின்றி நடக்குமேல் (ehyo. 242). 2. நொடிப்பொழுதான கால அளவு. கண்ணிமை நொடியென அவ்வே மாத்திரை (தொல். எழுத்து. 6). சக மூன்றுமொர் மாத்திரை பார்க்கு மெங்கள் கண்ணவனார் (âUü‰. 25). 3. செய்யுள் உறுப்புகளுள் ஒன்று(எழுத்தொலி யளவு). மாத்திரை யெழுத்தியல்அசைவகைஎனாஅ....ešÈir¥புலவர்செய்யுளுறுப்பென.......tF¤Jiu¤ தனரே (தொல். செய். 1). 4. ஒரு மாத்திரை யொலிக்குங் குற்றெழுத்து (யாழ். அக.). 5. கால விரைவு (பிங்.). 6. மிகச் சுருக்கமான இடம் “miu மாத்திரையி லடங்குமடி (தேவா. 970 :7). 7. அளவாகச் செய்யப்படும் மருந்துக் குளிகை (அரு. நி.). 8. முரல்(இசைச்சுரப்) பகுதி (திவா.). 9. காதணி வகை செம்பொன் மாத்திரை செரீஇய காதினர் (பெருங். மகத. 17 : 157). மாத்திரைக்கோல் = அளவுகோல். மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோ லொக்குமே (நல்வழி 4). 2. இறும்பர்(சித்தர்) கையிற் கொள்ளும் வரையிட்ட மந்திரக்கோல். விளங்கு செங்கையின் மாத்திரைக் கோலும் (திருவாலவா. 13 : 4). 3. மந்திரக்காரன் கைக்கோல் (W.). மாத்திரைச் சுருக்கம், மாத்திரைப் பெருக்கம் என்பன சொல்லணி வகைகள். சுருக்கம், பெருக்கம் என்பவற்றைச் சுதகம், வருத்தனம் என்னும் வடசொல்லாற் குறிப்பர். முத்தமிழிலக்கணமும் இறும்ப(சித்த) மருத்துவமும், ஆரியர் வருகைக்கு முற்பட்டன என்பதை அறிதல் வேண்டும். மாத்திரை-வ. மாத்ரா. பல பொருள்கள்ஒன்றுசேர்வதால்,குழம்பலும்குழப்பமும் கலக்கமும்மயக்கமும்உண்டாகும்.நீரும் மண்ணும் சேரின் கலங்கல் அல்லது கலுழி யெனப்படுவதும், நீரும் பிற பொருளும் சேர்ந்து திண்ணமாயின் குழம்பு அல்லது குழம்பல் எனப்படுவதும், பகலும் இரவும் மயங்கும்(கலக்கும்) வேளை மசங்கல்(மயங்கல்) vனப்படுவதும்fண்க.x.neh: கல-கலகு-கலங்கு-கலக்கு-கலக்கம். ஒரு கவர்த்த வழியைக் காணின் எது வழியென்று தெரியாது கலங்கவும், அறியாதார் பலர் கூடியிருக்கக் காணின் அவருட் காண வேண்டியவர் யாரென்று தெரியாது மயங்கவும் நேரும். இதனால், பொருட்கலக்கம் மனக்கலக்கத்திற்கும் ஏதுவாம். அமைதியான மனத்தில் கவலை அல்லது அச்சம் கலப்பின் மனக்கலக்கம் உண்டாகும். மனத்தெளிவு முற்றும் நீங்குவதே மயக்கம். அது தீய பொருள் cடம்பிற்fy¥பதாலும்உண்lகும். மல்-kiy. மலைதல் = மயங்குதல். வேறு வேறு எடுத்துக் காட்டுதல் பற்றி மலையற்க (சி.போ.பா. 6 : 2, ப. 146). மலைத்தல் = மயங்குதல். சிறுவன் விடுதிப் பள்ளிக்கு வெளியூர் சென்றபோது, வீட்டை நினைத்து வழியில் மலைத்து மலைத்து நின்றான். மல்-மல-மலகு-மலங்கு. மலங்குதல் = 1. நீர் முதலியன குழம்புதல். “ky§»t‹ றிரைபெயர்ந்து (தேவா. 130 : 9). 2. கண் கலங்குதல். நெடுங்கண் புகுவன்கண் மலங்க (சீவக. 1067). 3. கண்ணீர் ததும்புதல். கண்ணினீர் மலங்கும் பொலந்தொடி (jŠirth. 243). ஒ.நோ: கலுழி = கண்ணீர். 4. மனங்கலங்குதல். “x‹gJ வாயிற் குடிலை மலங்க (திருவாச. 1 : 55). 5. கெடுதல். “fâ®nt‹ மலங்க (சீவக. 1613). மலங்கு-மலக்கு. மலக்குதல் = கலக்குதல். மலக்கு நாவுடையேற்கு'' (âUthŒ. 6 : 4 : 9). மலக்கு = மயக்கம். மலக்கு-மலக்கம் = 1. மாறு.நவரத்தினங்களாற்கட்டிஇடைநிலங்களை......bgh‰wf£lhny செறிய மலக்கமாகக் கட்டி (áy¥. 3 : 117, உரை). 2. மனக்கலக்கம். மலக்கமற்ற நம்மல்லமன் (பிரபுலிங். வசவண்ணர். 5). 3. துன்பம். உற்ற மலக்க முண்டா கினாக (கம்பரா. இராவணன்களங். 18). மலங்கு = பாம்பென்று மயங்குதற் கிடமான விலாங்குமீன். மலங்கு-மலாங்கு = விலாங்குமீன். மலங்கு-(மலாங்கு)-விலாங்கு. மல்-மால். மாலுதல் = 1. பொருந்துதல், ஒத்தல். 2. மயங்குதல். “kh‹W வேட் டெழுந்த செஞ்செவி யெருவை (அகம். 3). மால் = 1. மயக்கம். “புரோம் பழகுடன் மாலங் குடைய மலிவன மறுகி (குறிஞ்சிப். 96). 2. மயக்கும் ஆசை. என்பேய் மனமால் கொண்டதே (திருநூற். 1). 3. Mசை வகைகளுள் கடுமையான காமம். மடப்பிடி கண்டு tயக்கரிkலுற்று(பரிபா.10 : 42). 4. இடம் பொருள் தெரியா வண்ணம் கண்ணை மயக்கும் இருட்டு. 5 இருள் நிறமான கருமை. மால்கடல் (பெரும்பாண். 487). 6. கருநிறமான திருமால். நீர்செல நிமிர்ந்த மாஅல் போல (Kšiy¥. 3). 7. கருமுகில். சிலைமா லுருமு (தஞ்சை. 164). 8. ஆரிய முத்திருமேனிக் கொள்கைப்படி காவல் தொழிலால் திருமாலை யொத்தவனான மாலியச்சோழன் (பிங்.). ஒ.நோ: Gk. melas, black. இருளைக் குறிக்கும் dark என்னும் ஆங்கிலச் சொல், கருமை, அறியாமை என்னும் பொருள்களையுங் குறித்தல் காண்க. மால்-மாலை = 1. தொடுக்கப்பட்டது. வரிசையாகப் பொருந்தியது. 2. தொடுத்த பூந்தொடை. மாலைபோற் றூங்குஞ் சினை (கலித். 106 : 27). 3. மலர்மாலைபோல் தொடுத்த அல்லது கட்டிய மணிமாலை அல்லது முத்துமாலை. 4. பூமாலை போன்ற பாமாலை. எ-டு: திருவேகம்ப மாலை, திருவரங்கத்து மாலை. 5. வரிசை. மாலை வண்டினம் (சீவக. 2397). “khiy மாற்றே (யாப். வி. ப. 493). 6. முத்துமாலை போன்ற வடிவம். மாலை மாலையாகக் கண்ணீரை வடித்தாள் (c.t.). 7 . கயிறு. மாலையு மணியும் (பரிபா. 5 : 67). 8. மாலைபோன்ற பெண். (திருக்கோ. 1, உரை, ப.9). 9.பாண்குடிப் பெண்ணாகிய விறலி. பாணர் மாலையர் மாலை யெய்தி (âUthyth. 54 : 26). 10. மயக்கம், கலப்பு. 11. பகலும் இரவுங் கலக்கும் அந்திப் பொழுது. மாலை யுழக்குந் துயர் (குறள். 1135). 12. இரா. மாலையும் படா விழித்திரளது (தக்கயாகப் . 155). 13. இருள். மாலைமென் கேசம் (திருப்பு. 32). 14. குற்றம் (bjhš. சொல். 396, உரை). 15. பச்சைக்கற் குற்றம் (சிலப். 14 : 184, உரை). பூமாலையையும் பொழுதுமாலையையுங் குறிக்கும் மாலை யென்னுஞ் சொல் ஒன்றே. சென்னைப் ப.க.க.த. அகரமுதலியில், அவ்விரண்டையுங் குறிக்குஞ் சொல் வெவ்வேறென்று காட்டப்பட் டுள்ளது. இது பூமாலையைக் குறிக்குங் சொல்லை, வடசொல்லென்று காட்ட வகுத்த சூழ்ச்சியே. மாலை-வ. மாலா. மாலை-மாலிகை = சிறுமாலை. கை சிறுமைப்பொருட் பின்னொட்டு. ஒ.நோ: குடி = குடிகை(சிறு கோயில்). மாலிகை-வ. மாலிகா(மாலை). வடசொல் சிறுமைப் பொருளை இழந்து நிற்றல் காண்க. மால்-மான். மான்றல் = 1. ஐயுறுதல் (திவா.). 2. மயங்குதல் (Nlh.). மால்-மாலம் = 1. மயக்கு. 2. ஏமாற்று. 3. நடிப்பு. மால்-மான்-வான் = 1. கருமை. 2. நீலவானம். வானுயர் தோற்றம் (குறள். 272). 3. தேவருலகு. வான்பொரு நெடுவரை (áWgh©. 128). 4. வீட்டுலகம். வானேற வழிதந்த (திவ். திருவாய். 10 : 6 : 5). 5. மூலக் கருப்பொருள். வானின் றிழிந்து வரம்பிகந்த மாபூதத்தின் (கம்பரா. அயோத். மந்திர. 1). 6. கருமுகில். ஏறொடு வான்ஞெமிர்ந்து (மதுரைக். 243). 7. மழை. “thÅ‹ றுலகம் வழங்கி வருதலான் (குறள். 11). 8. அமுதம். வான் சொட்டச் சொட்ட நின்றட்டும் வளர்மதி (தேவா. 586 : 1). “th‹....jhdÄœj« என்றுணரற் பாற்று (குறள். 11). 9. நன்மை. வரியணி சுடர்வான் பொய்கை (பட்டினப். 38). 10. அழகு. வான்பொறி பரந்த புள்ளி வெள்ளையும் (கலித். 103). ம. வானு. மான்-மானம் = 1. கருமை. 2. நீலவானம். 3. கருமுகில். 4. மழை. 5. குற்ற அளவு, குற்ற நிலை ``மெய்நிலை மயக்க மான மில்லை'' (தொல். எழுத். மொழி.14) வானத்தை மானம் என்பதே கல்லா மாந்தர் உலக வழக்கு. கருமை என்னும் பொருளடிப்படையிலேயே, மானம் என்னும் சொல் குற்றப் பொருள் கொண்டதாகத் தெரிகின்றது. வான்-வானம் = 1. காயம் என்னும் நீலவானம். வானத் தரவின் வாய்க்கோட் பட்டு (கலித். 105). 2. தேவருலகு. வான மூன்றிய மதலை போல (பெரும்பாண். 346). 3. கருமுகில். ஒல்லாது வானம் பெயல் (குறள். 559). 4. மழை. வானம் வாய்க்க மண்வளம் பெருகுக (மணிமே. 19 : 149). தெ. வான, க. பான (b). மல்-மர்-மரு. மருவுதல் = 1. கலந்திருத்தல். மருவார் சாயல் (Ótf. 725). 2. தழுவுதல். மருவுமின் மாண்டா ரறம் (நாலடி. 36). 3 . பயிலுதல். பாத்தூண் மரீஇ யவனை (குறள். 227). 4. வழக்கப்படுதல். மரீஇய பண்பே (தொல். பொருள். 308). 5. புணர்தல். வெம்புலைமாதர்...kUî« வேட்கையான் (ãunkhj. 4 : 4). 6. ஊழ்குதல்(தியானித்தல்). கழல்களை மருவாதவர் மேல்மன்னும் பாவமே (தேவா. 501 : 1). ஊழ்குதல், மனத்தாற் பொருந்துதல். மரு-மருமம் = 1. தழுவும் மார்பு. மருமத்தி னெறிவேல் (f«guh. கையடை. 11). 2. உயிர்நாடியான உறுப்பு. எங்கு மருமத்திடைக்குளிப்ப (பு.வெ.7 : 23).3.kwbghUŸ (ïufáa«). (சங். அக.). 4. உடம்பு. மந்தர வலியின் மருமம் (Phd. 59 : 20). மரு-மார் = 1. நெஞ்சு, மார்பு. இப்பாதகன் மாரி னெய்வ னென்று (கம்பரா. இராவணன் வதை. 192). ஊரில் கலியாணம், மாரில் சந்தனம். (பழ.). 2. நான்கு முழமான நீட்டலளவை. க. மார். மார்க்கண்டம், மார்க்கவசம், மார்க்குழி, மார்க்கூடு, மார்வலி, மார்யாப்பு (மாராப்பு) முதலியன மரபு வழக்கான கூட்டுச்சொற்கள். மார்-மார்பு = 1. நெஞ்சு. கள்ளற்றே கள்வநின் மார்பு (குறள். 1288). 2. பெண் நெஞ்சு, முலை. மாரில் கைபோடுகிறான் (உ.வ.). 3. வடிம்பு. ஏணி யெய்தாநீணெடுமார்பின்....TL” (bgU«gh©. 245). 4. தடாகப் பரப்பு. மார்பின்மைபடி....Fytiu” (பரிபா. 15 : 9). 5. அகலம் (சது.). 6. நான்முழ நீளம். ம. மார்பு. மார்பு-மார்பம் = நெஞ்சு, மார்பு. ``பொன்றுஞ்சு மார்பம்''. (áy¥.19:61). மார்பம்-மார்பகம். மரு-மருங்கு = 1. (பொருந்தும்) பக்கம். கனையெரி யுரறிய மருங்குநோக்கி”(புறம். 23). 2. விலாப்பக்கம். கயிறு பிணிக்கொண்ட கவிழ்மணி மருங்கின் (புறம். 3). 3. இடைப்பக்கம், இடை (சூடா.). 4. எல்லை. மருங்கறி வாரா மலையினும் பெரிதே (கலித். 48). 5. இடம் (பிங்.). 6. சுற்றம். அவனின் மருங்குடையார் மாநிலத்தில். (குறள். 526). 7. குலம். சூர்மருங் கறுத்த மொய்ம்பின் மதவலி (திருமுருகு. 275). 8. செல்வம். “k©nkš மருங்குடையவர்க் கல்லால் (சீவக. 2924). 9. நூல். “ தொன்மருங் கறிஞர் (குறிஞ்சிப். 18). க. மக்கலு (gg). மருங்கு-மருங்குல் = 1. இடைப் பக்கமாகிய இடுப்பு. 2. இடை. “bfh«guh® மருங்கின் மங்கை கூற (திருவாச. 5 : 67). 3. வயிறு. “gágL மருங்குலை (புறம். 260). 4. யானை. மருங்கு லேய்க்கும் வண்டோட்டுத் தெங்கின் (பெரும்பாண். 352). மரு1 = மணமக்கள் பெண்வீட்டில் முதன் முறையாகக் கலந்துண்ணும் விருந்து. மரு - மருவு. மருவுதல் = சொற்சிதைவு இலக்கண வழக்கொடு பொருந்தி வழங்குதல். மருவு-மரூஉ = 1. நட்பு. மரூஉச்செய் தியார்மாட்டுத் தங்கு மனத்தாத் (நாலடி. 246). 2. இலக்கண வழக்கொடு பொருந்தி வழங்குஞ் சொற்சிதைவு. மருமகன் = 1.kf‹nghy¥ bபாருந்தும்kகள்fணவன்.2. ஒருவனின் உடன்பிறந்தாள் மகன் அல்லது ஒருத்தியின் உடன்பிறந்தான் மகன். இவ் விருவரும் மருமகன் நிலைமைக்கு வரக்கூடியவர். மருமகள் = 1. மகள்போலப் பொருந்தும் மகன் மனைவி. 2. ஒருவ னின் உடன்பிறந்தாள் மகள் அல்லது ஒருத்தியின் உடன்பிறந்தான் மகள். இவ் விருவரும் மருமகள் நிலைமைக்கு வரக்கூடியவர். மருமகன்-மருமான் = 1. மருமகன் (மருகன்) (1) பார்க்க = மகன் போலப் பொருந்தும் மகள் கணவன். மருமான் றன்னை மகவென (கல்லா. 15). 2. மருமகன் (மருகன்) (2) பார்க்க = ஒருவரின் உடன் பிறந்தாள் மகன் அல்லது ஒருத்தியின் உடன் பிறந்தான் மகன். இமவானார் மருமானா ரிவரென்று (தேவா. 756 : 2). 3. வழித்தோன்றல். “Flòy§ காவலர் kருமான்(சிறுபாண்.47). மருமகன்-மருகன் = 1. மருமகன் (மருகன்) (1) பார்க்க = மகன் போலப் பொருந்தும் மகள் கணவன். மலைக்கு மருகனைப் பாடிப் பாடி (திருவாச. 9 : 6). 2. மருமகன் (மருகன்) (2) பார்க்க = ஒருவரின் உடன் பிறந்தாள் மகன் அல்லது ஒருத்தியின் உடன் பிறந்தான் மகன். வானவரைப் பணிகொண்ட மருகாவோ (கம்பரா. சூர்ப்பண. 111). 3. வழித்தோன்றல். சேரலர் மருக (பதிற் 63 : 16). மருகன்-மருகு = 1. மருமகன் (மருகன்) (1) பார்க்க = மகன் போலப் பொருந்தும் மகள் கணவன். (யாழ். அக.). “kUbf‹nw யவமதித்த தக்கன் (கந்தபு. காமத. 110). 2. மருமகன் (மருகன்) (2) பார்க்க = ஒருவரின் உடன் பிறந்தாள் மகன் அல்லது ஒருத்தியின் உடன் பிறந்தான் மகன். (யாழ். அக.). மருகன்-மருகி(பெ.பா.). மரு2 = 1. ஒன்றிலிருந்து இன்னொன்றொடு கலக்கும் மணம். “óbthL சேர்ந்த நாரும் மணம்பெறும் (பழ.). புத்தோடு தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு (நாலடி. 139) என்பவற்றை நோக்குக. ஒ.நோ: மணத்தல் = கலத்தல். மணம் = இருவகை நாற்றம். வெறுத்தல் = செறிதல். வெறு-வெறி = மணம். விரவுதல் = கலத்தல். விர-விரை = மணம். “kUth® கொன்றை (தேவா. 530 : 1). 2. நறுமணச் செடிவகை (kiy). 3. மருக்கொழுந்து. மருவுக்கு வாசனைபோல் வந்ததால் (வெங்கைக்கோ. 112). 4. இடம் (பிங்.). மரு-மருகு = தவனம் என்னும் நறுமணச்செடி. மரு-மருந்து = நோய் தீர்க்கும் பொருள். மருந்தாகும் வேரும் தழையும் பெரும்பாலும் மணம் மிக்கிருப்பதால், நோய் நீக்கும் பொருள் மருந்தெனப்பட்டது. மருந்தென வேண்டாவாம் (குறள். 942). 2. பரிகாரம். மருந்தின்று மன்னவன் சீறில் (கலித். 89). 3. சாவை நீக்கும் அமுதம். கடல்கலக்கி மருந்து கைக்கொண்டு (fšyh. 41 : 26). 4. பசிநோய் மருந்தான சோறும் நீரும். இருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன் (புறம். 70). 5. நீர். 6. இனிமை. மருந்தோவா நெஞ்சிற்கு (கலித். 81). 7. வெடிமருந்து. 8. வசிய மருந்து. 9. செய்வினை மருந்து. ம. மருன்னு, தெ. மந்து, க. மர்து. மருத்து-மருத்துவம்-மருத்துவன். மருந்து-மருந்தம் = (மருந்தாகப் பயன்படும்) நஞ்சு (W.). மரு-மருள். மருள்தல் = 1. ஒத்தல். அணைமரு ளின்றுயில் (கலித். 14). 2. வியத்தல். இவ்வே ழுலகு மருள (பரிபா. 5 : 35). 3. மயங்குதல். “kâkU©L” (குறள். 1229). 4. வெருவுதல். சிறார் மன்று மருண்டு நோக்கி (புறம். 46). க. மருள். மருள் = 1. மயக்கம். வெருவுறு மருளின் (சீவக. 2290). 2. திரிபுணர்ச்சி. மருடீர்ந்த மாசறு காட்சி யவர். (குறள். 199). 3. பிறப்பு முதல் அறிவின்றி மயங்கியிருக்கும் எச்சப் பிறவி. மாவும் மருளும் (புறம். 28). 4. வியப்பு. மருள் பரந்த வெண்ணிலவு (âizkhiy. 96). 5. கள் (யாழ். அக.). 6. கோட்டி (ig¤âa«) (யாழ். அக.). 7. குறிஞ்சி யாழ்த்திறம் எட்டனுள் ஒன்று (பிங்.). 8. மருளிந்தளப் பண். மாலின் வரவு சொல்லி மருள்பாடுதல் (திவ். நாய்ச். 9 : 8). 9. பேய். (பிங்.). 10. பேய் கொள்ளல். 11. புல்லுரு (W.). மருளன் = 1. அறிவு மயக்கன். பட்டப்பகற் பொழுதை யிருளென்ற மருளர் (தாயு. கருணாகரக். 4). 2. தெய்வமேறி. 3. மதவெறியன் . மருளாளி = 1. தேவராளன். 2. தெய்வமேறி. 3. பேயாடி. 4. மருள ஓர் உவமவுருபு. கடுப்ப ஏய்ப்ப மருளப் புரைய (தொல். உ வ. 15). மருளி = 1. மயக்கம். மருளிகொண் மடநோக்கம் (கலித். 14). 2.மதிமயங்கி. மருளிதான் மயங்கி (யசோதர. 2 : 42). மருட்கை = 1. மயக்கம். ஐயமு மருட்கையுஞ் செவ்விதி னீக்கி (bjhš. பொருள். 659). 2. எண்வகை மெய்பபாட்டுள் ஒன்றான வியப்பு. நகையே அழுகை இளிவரல் மருட்கை (தொல். மெய்ப். 3). மருட்பா = வெண்பாவும் ஆசிரியப்பாவும் கலந்துவரும் கலவைப்பா. (தொல். பொருள். 398). மருண்மா = மதம்படு யானை (திவா.). மருள்-மிரள். மிரளுதல் = மயங்கி யஞ்சுதல். மருட்டு-மிரட்டு. மருட்டி = மிரட்டி. மிரள்-மெரள். மெரளுதல் = மயங்கி அஞ்சுதல். மெரள்-மெருள். மெருளுதல் = மயங்கி அஞ்சுதல், அருளுதல். மெருள் = அச்சம். (நன். 101, மயிலை). மெருளி = மயங்கியஞ்சி, அச்சங்கொள்ளி. மெருள்-வெருள். வெருளுதல் = 1. மருளுதல். எனைக் கண்டார் வெருளா வண்ணம் மெய்யன்பை யுடையாய் பெறநான் வேண்டுமே (திருவாச. 32 : 3). 2. அஞ்சுதல். பெருங்குடி யாக்கம் பீடற வெருளி (பெருங். மகத. 24 : 84). 3. மாடு குதிரை முதலியன மிரண்டு கலைதல். வெருள் = 1. அஞ்சத் தக்கது. நின்புக ழிகழ்வார் வெருளே (âUthr. 6 : 17). 2. மனக்கலக்கம் (சூடா.). வெருளி = 1. மருட்சி. வெருளி மாடங்கள் (சீவக. 532). 2. வெருளச் செய்யும் புல்லுரு முதலியன. 3. வறியாரை வெருட்டும் செல்வச் செருக்கு. வெருளி மாந்தர் (சீவக. 73). வெருள்-வெரு = அச்சம். வெருவந்த செய்தொழுகும் வெங் கோலன் (குறள். 563). வெருவரு நோன்றாள்.... கரிகால் வளவன் (பொருந. 147). வெறியாட்டிடத்து வெருவின் கண்ணும் (bjhš. பொருள். 111). வெரு-வ. பிரு (b). ஒ.நோ: OE. foer, OS. var, OHG. fara, G. (ge) fahr, ON. far, E. fear. வெரு-வெருவு. வெருவுதல் = அஞ்சுதல். யானை வெரூஉம் புலிதாக் குறின். (குறள். 599). வெருவு = அச்சம். தெ. வெரப்பு. வெருவருதல் = 1. அஞ்சுதல். வெருவந்த செய்யாமை (குறள்.). 2. அச்சந்தருதல். வெருவரு தானைகொடு செருப்பல கடந்து (gâ‰. 70, பதி.). வெருவா-வெருவந்தம் = அச்சம் (W.). வெருவெருத்தல் = அஞ்சுதல். “cÆ® நடுங்கி.....btUbtU¤J நின்றனரால் (உபதேசகா. சூராதி. 49). வெருவு-வெருகு = அஞ்சத்தக்க காட்டுப் பூனை. வெருக்கு விடை யன்ன (புறம். 324). க. பெர்கு-பெக்கு. வெருகு-வெருக்கு = அச்சம். வெருக்கு வெருக்கென் றிருக்கிறது. (c.t.). மரு-மறு-மறுகு = பண்டங்கள் செறிந்த பெருங்கடைத்தெரு. கூலமறுகு = எண்வகைக் கூலங்கள் செறிந்த மறுகு(சிலப். 8 : 73, அடியார். உரை). மால்-மார்-மாரி = 1. கருமுகில். மாரிமாட் டென்னாற்றுங் கொல்லோ வுலகு. (குறள். 211). 2. மழை. மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும் (புறம். 35). 3. மழைக்காலம். மாரி மலைமுழைஞ்சின் மன்னிக் கிடந்துறங்கும் (திவ். திருப்பா. 23). 4. நீர் (ã§.). k., து. மாரி. மால்-மழை = 1. கருமை. மழைதரு கண்டன் (திருவாச. 6 : 46). 2.நீருண்ட கருமுகில். மழைதிளைக்கு மாடமாய் (நாலடி. 361). 3.மழைக்கால். மழைவீழ்ந் தன்ன மாத்தாட் கமுகு (பெரும்பாண். 363). 4. முகில் பொழியும் நீர். கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை (குறள். 55). 5. குளிர்ச்சி. “bgUkiH¡ கண் (குறள். 1239). மழைத்தல் = 1. கருநிறமாதல். மழைத்திடு மெய்யுடை மாற்றலர் (fªjò. சூரன்வதை. 132). 2. மழை நிறைந்திருத்தல். மழைத்த வானமே (கம்பரா. கார்கால. 2). 3. குளிர்தல். மழைத்த மந்தமா ருதத்தினால் (பெரியபு. திருஞான. 150). மழை-ம மழ, க. மளெ. மல்-மறு = 1. கருப்பு. 2. களங்கம். மதிமறுச் செய்யோள் (gÇgh. 2 : 30). 3. குற்றம் (பிங்.). மறுவில் செய்தி மூவகைக் காலமும் (தொல். புறத். 20). 4. தீமை. நடுக்கடல் போனாலும் மறுப்படாமல் வரக்கடவீர் (உ.வ.). 5.அடையாளம். 6. பாலுண்ணி (W.). 7. தோல் மேலுள்ள fU«òŸË(mole). மச்சம். மறுவாயிரத்தெட் டணிந்து (சீவக. 2) மல் (மால்) = கருமை. ஒ.நோ: OE. mal, OHG. meil, Goth. mail, E. mole, spot, blemish, small lump on human skin. மருமம் = 1. தழுவும் மார்பு. 2. நெஞ்சு. 3. முலை. மருமம்-மம்மம்-அம்மம் = 1. முலை. 2. முலைப்பால். அம்ம முண்ணத் துயிலெழாயே (திவ். பெரியாழ். 2 : 2 : 1). 3. குழந்தையுணவு (குழந்தை வளர்ப்புச் சொல்). ம. அம்மிஞ்ஞி, க. அம்மி. ஒ.நோ: கருமம்-கம்மம்-கம் = செய்கை, தொழில், உழவு, கொல். இந். காம் = வேலை. பெருமான்-பெம்மான். k«k«-L. mamma, E. mamma, milk-secreting organ of female in mammals. E. mammal, one of the animals having mammale(pl.) for nourishment of young. E. mamilla(L. dim. of mamma), nipple of female breast. மருமம்-வ. மர்மன். வ. ம்ரு-மர் = சா (to die). மர்மன் = mortal spot, vulnerable point, any vital member or organ என்பது வடமொழியாளர் கூறும் பொருட்கரணியம். இதன் பொருத்தத்தை அறிஞர் கண்டுகொள்க. மருளல் = மயங்கல், வியத்தல். ஒ.நோ: E. marvel, ME. f. OF. mervveille f. LL. mirabilia, neut. pl. of L. mirablis (mirari, wonder at). E. mirror (looking-glass) f. ME. f. OF. f. Rom. mirare, look at, f. L. mirari, wonder at. மேலையர் முதன்முதல் முகக் கண்ணாடியைக் கண்டதும் வியந்ததாகத் தெரிகின்றது. அங்ஙனமே ஏனை நாட்டாரும் வியந்திருத்தல் வேண்டும். முல்-முள்-முள்கு. முள்குதல் = முயங்குதல். “ïsKiy முகிழ்செய் முள்கிய (கலித். 125). முள்-முளி = 1. உடல் மூட்டு. திகழ் முச்சா ணென்பு முளியற (j¤Jt¥. 133). 2. மரக்கணு (யாழ். அக.). 3. கணுக்கால் (W.). முளி-முழி = எலும்புப் பூட்டு, மூட்டு. ம. முளி, க. முடி. முழி-மொழி = 1. முழங்கை முழங்கால் முதலியவற்றின் பொருத்து. மொழி பிசகிவிட்டது(உ.வ.). 2. மரஞ்செடி கொடிகளின் கணு. “bkhÊí மினியீர்.......kJu¡ கழைகாள் (அழகர்கல. 67). 3. கரும்பின் இருகணுவிற் கிடைப்பட்ட பகுதி. 4. கரும்பின் மொழிபோற் சொற்றொடர்க் குறுப்பான சொல். ஓரெழுத் தொருமொழி ஈரெழுத் தொருமொழி இரண்டிறந் திசைக்குந் தொடர்மொழி யுளப்பட மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே. (தொல். மொழி. 12) 5. சொற்றொடரான பேச்சு (Articulate speech of, articulate = connected by joints). “bkhÊbga® தேஎத்த ராயினும். (குறுந்.11) முழி-முழம் = கைந்நடுப் பொருத்தினின்று அதன் நுனிவரையுள்ள நீட்டலளவு. உண்பது நாழி யுடுப்பது நான்கு முழம் (நல்வழி, 28). முழங்கை (முழம் + கை) = நடுப்பொருத்தினின்று நுனிவரைப்பட்ட அல்லது முழு அளவான கை. முழம் போடுதல் = 1. முழங்கையால் அளத்தல். 2. ஆளின் தன்மையை ஆய்ந்து மதிப்பிடுதல். முழங்கால் (முழம்+ கால்) = eடுப்பொருத்தினின்றுmடிவரைப்பட்டmல்லதுKழmளவானfல்.KHªjhŸ (முழம் + தாள்)-முழந்து = முழங்கால் (சூடா.). ம. முழம், து. முழம், க. மொழ, தெ. முர. முள்-முழு-முழுவு. முழுவுதல் = 1. பொருந்தித் தொடுதல். 2. முத்தமிடுதல். வந்தென் முலைமுழுவித் தழுவி (திருக்கோ. 227). 3. தழுவுதல். முழுவு-முழுவல் = விடாது தொடர்ந்த அன்பு. ``முழுவற் கடல் பெருத்தான்'' (தணிகைப்பு. நந்தியு. 6) முழுவல் - உழுவல் = அன்பு. பழுத்த வுழுவ லமரர் (விநாயகபு. 72 : 54). உழுவலன்பு = எழுமையுந் தொடர்ந்த அன்பு. (தொல். களவு. 34, உரை). முழுவு-முழுசு. முழுசுதல் = 1. முட்டுதல். பிள்ளைகள் முலைக்கீழ் முழுசினவாறே பால் சுரக்கும். (ஈடு, 5 : 3 : 3). 2. முத்துதல். “mGªj¤ தழுவாதே முழுசாதே (திவ். பெருமாள். 9 : 6). ஒ.நோ: பரவு-பரசு, விரவு-விரசு. முழுவல்-முழால் = தழுவுகை. சிறார்முலை முழாலிற் பில்கி (சீவக. 2541.). முழுவு-முழவு. முழவுதல் = நெருங்கிப் பழகுதல் (இ.வ.). முழவு-முழாவு. முழாவுதல் = நெருங்கிப் பழகுதல் (இ.வ.). முழுத்தல் = திரளுதல், பருத்தல், முழுத்த ஆண்பிள்ளை (உ.வ.). முழு ஆள்-முழாள் = வளர்ச்சியடைந்த பெரிய ஆள். முழு-முழா = 1. திரண்ட முரசு (பிங்.). 2. குடகுழா (சிலப். 141, உரை). முழா-முழவு = 1. முரசு. முழவின் முழக்கீண்டிய (சீவக. 2399). 2.குடமுழா (பிங்.). 3. தம்பட்டம் (பிங்.). ம. முழாவு. முழவுக்கனி = திரண்ட பலாப்பழம் (சங். அக.). முழவு-முழவம் = 1. பெருமுரசு. மண்கனை முழவம் விம்ம (சீவக. 628) 2. குடமுழா. தண்ணுமைப் பின்வழி நின்றது முழவே (சிலப். 3 : 141) ஒ.நோ: முரசு-முரசம். அம் பெருமைப்பொருட் பின்னொட்டு. முழா-முழ-முழங்கு. முழங்குதல் = 1. பெரிதொலித்தல். எழிலி முழங்குந் திசையெல்லாம் (நாலடி. 392). 2. பலருமறியச் சாற்றுதல். தொல்காப்பியந் திருவள்ளுவர் கோவையார் மூன்றினு முழங்கும் (இலக். கொத். 7). முழங்கு-முழக்கு-முழக்கம். முழா-முழாசு. முழாசுதல் = பெருநாவிட்டு எரிதல் (யாழ்ப்.). முழாசு = பெருந்தீநா (யாழ்ப்.). முழு = (கு.பெ.எ.) 1. பருத்த. முழுமுத றொலைந்த கோளி யாலத்து (புறம். 58). 2. மிகுந்த, மொத்த, நிறைவான, எல்லா. எ-டு: முழுமூடன், முழுத்தொகை, முழுமதி, முழுவுலகாளி (ïiwt‹). முழுக்க(கு.வி.எ.) = முழுதும். உயிரை முழுக்கச் சுடுதலின் (சீவக. 1966, உரை). முழுத்த = முதிர்ச்சிபெற்ற. முழுத்த வின்பக் கடல் (திருக்கரு. கலித். அந்.). முழு-முழுது = எல்லாம், எஞ்சாமை. முழுதென் கிளவி யெஞ்சாப் பொருட்டே (தொல். உரி. 28). முழுது-முழுசு. எல்லாப் பணியாரத்தையும் முழுசு முழுசாய்த் தின்றுவிட்டான் (உ.வ.). முழுது-முழுந்து = முழுமை. முழுந்து சுகவடிவாம் (ஞானவா. சனக. 14). முழு-முழுமன் = 1. முழுது. 2. அரைக்கும்போது சிதையாது விழும் முழுக் கூலமணி. முழுமன்-முழுவன் = முழுது. கடன் முழுவனும் தீர்த்துவிட்டான் (உ.வ.). முழு-முழுமை = 1. பருமை. துங்கமுழு வுடற்சமணச் சூழ்ந்து மகிழ்வார் (பெரியபு. திருநாவு. 39). 2. எல்லாம் (பிங்.). முழுவது-முழுது-முழுதோன் = கடவுள். முழுதோன் காண்க (âUthr. 3 : 29). முழா-மிழா = பருத்த ஆண்மான் (stag = male of red deer or of other large kinds of deer—C.O.D.). மிழா-மேழம் = செம்மறியாட்டுக் கடா மேழம்-மேடம் = 1. செம்மறியாட்டுக் கடா (பிங்.). 2. மேடவோரை (பிங்.). 3. மேடமதி (சித்திரை). மேடமாமதி (கம்பரா. திருவவதா. 110). மேடம்-வ. மேஷ. மேழம்-மேழகம் = செம்மறியாட்டுக் கடா. வெம்பரி மேழக மேற்றி (சீவக. 521). மேழகம்-ஏழகம் = செம்மறியாட்டுக் கடா. ஏழகம்-பிரா. ஏளக. ஒ.நோ: E. elk, large animal of the deer kind found in N. Europe and N. America. ME. elke, OE. elh, eolh. மேழகம்-மேடகம் = 1. செம்மறியாட்டுக் கடா. 2. மேடவோரை. மேடகம்-வ. மேடக. ஏழகம்-ஏடகம்-ஏடு-யாடு = செம்மறியாடு, வெள்ளாடு, ஆடு. “ahL§ குதிரையும் (தொல். மரபு. 12). ஒன்றிடை யார வுறினுங் குளகு சென்றுசென் றருந்தல் யாட்டின் சீரே என்னும் பழம் பொதுப்பாயிரச் செய்யுள், வெள்ளாட்டைக் குறித்தது. யாடு-ஆடு = 1. ஆட்டுப்பொது. 2. மேடவோரை. திண்ணிலை மருப்பி னாடுதலை யாக (நெடுநல். 160). ம. ஆடு, க. ஆடு, து. ஏடு. ஒ.நோ: ஏது-யாது, ஏவர்-யாவர்-யார்-ஆர். மானும் ஆடும் நெருங்கிய இனமாயிருத்தல் கவனிக்கத்தக்க து. ஆடு என்னுஞ் சொல். இற்றை நிலையில் இருவகை யாட்டிற்கும் பொதுவேனும், முதற்காலத்தில் செம்மறியாட்டையே சிறப்பாகக் குறித்தது. முழா-முடா-மிடா = பெரு மண்பானை. சோறு செப்பி னாயிரம் மிடா (சீவக. 692). 2. பானை (பிங்.). மிடாத்தவளை = பெருந்தவளை (M.M. 90). முழு-மொழு-மொழுக்கு-மொழுக்கன் = தடித்தவன் (யாழ். அக.). மொழுக்கு-மொழுக்கட்டை = தடித்த-வன்-வள் (இ.வ.). மொழு-மொழுப்பு = சேலை செறிந்த பைதிரம்(பிரதேசம்). மொழு-மொழியன் = பெரும் பேன் (யாழ். அக.). மொழு-மொகு-மொக்கு = 1. மரக்கணு (யாழ். அக.). 2. பருமன். மொக்கு-மொக்கன் = தடித்த-வன்-வள்-து (இ.வ.). மொக்கன்-மொங்கன் = தடித்த-வன்-வள்-து. மொங்கன் - மொங்கான் = பருத்துக் கனத்த பொருள் (உ.வ.). மொங்கான் தவளை = பருத்த பச்சைத்தவளை. மொக்கு - மொக்கை = 1. பருமன். 2. கூரின்மை. எழுதுகோல் மொக்கையாகி விட்டது (உ.வ.). 3. புணர்ச்சி. மொக்கை போடுதல் = புணர்தல். மொக்கைச்சோளம் = பருத்த அமெரிக்கச் சோளம். மொக்கைச் சோளம்-மக்கைச் சோளம்-மக்காச்சோளம். மொக்கையாளி-மக்கையாளி-மக்காளி = மிகப் பருத்தவன் (உ.வ.) . மொக்கை-மொக்கட்டை = மழுக்கமானது (இ.வ.). முல்-முது-முத்து. முத்துதல் = 1. சேர்தல். திருமுத்தாரம் (சீவக. 504). 2. ஒன்றையொன்று தொடுதல். 3. அன்பிற் கறிகுறியாக இருவர் முகங்கள் அல்லது உதடுகள் பொருந்தித் தொடுதல். புதல்வர் பூங்கண் முத்தி (புறம். 41). முத்து-முத்தம். 4. திரளுதல். முத்தங்கொள்ளுதல் = 1. தொடுதல், பொருந்துதல். சிலை முத்தங் கொள்ளுந் திண்டோள் (சீவக. 2312). 2. புல்லுதல், தழுவுதல். முலைமுத்தங் கொள்ள (சீவக. 2312). 3. முத்தமிடுதல். “jhŒthŒ முத்தங் கொள்ள (பெரியபு. கண்ணப்ப. 23). முத்து-முத்தி = முத்தம் (kiss). “kÂthÆš முத்தி தரவேணும் (âU¥ò. 183). முத்து = 1. ஆமணக்கு, வேம்பு, புளி முதலியவற்றின் உருண்டு திரண்ட விதை. முத்திருக்குங் கொம்பசைக்கும் (தனிப்பா. 1 : 3 : 2). 2. நெய்யுள்ள விதை. 3. உருண்டு திரண்ட கிளிஞ்சில் வெண்மணி. “Kšiy முகைமுறுவல் முத்தென்று (நாலடி. 45). 4. கிளிஞ்சில் முத்துப் போன்ற மாதுளை விதை. 5. வெண்மணி போன்ற கண்ணீர்த் துளி. பருமுத் துறையும் (சீவக. 1518). 6. வெண்முத்துப் போன்ற வெள்ளரிசி. 7. ஆட்டக் காய்களாகப் பயன்படும் புளிய முத்து. 8. 7/8 பணவெடை கொண்டதோர் பொன்னிறை. 9. வெண்முத்துப்போன்ற அம்மைக் கொப்புளம். பிள்ளைக்கு உடம்பு முழுதும் முத்துப் போட்டிருக்கிறது (உ.வ.). 10. வெண்முத்துப்போற் சிறந்த பொருள் அல்லது தன்மை. முதல் விலை முத்துவிலை (பழ.). முத்து-முத்தம் = பருமுத்து. சீர்மிகு முத்தந் தைஇய (பதிற். 39). 2. பேராமணக்குக் கொட்டை. 3. பச்சைக்கற் குற்றங்களு ளொன்று. (திருவிளை. மாணிக்கம். 67). ‘m«’ பெருமைப்பொருட் பின்னொட்டு. ஒ.நோ: விளக்கு - விளக்கம், மதி-மதியம், நிலை-நிலையம். முத்தம்-வ. முக்த. முத்து-முத்தை = 1. திரட்சி (சூடா.). 2. சோற்றுருண்டை (W.). தெ. முத்த (Mudda). குறுமுத்தம் பழம் = மிதுக்கம் பழம். மொலு-மொது. மொதுமொது வெனல் = திரளுதற் குறிப்பு. மொது மொதுவென்று மக்கள் (சனங்கள்) குவிந்தார்கள் (உ.வ.). 2. கொழுத்து வளர்தற் குறிப்பு. மொதுமொதுவெனல் - மொதுமொதெனல். மொது - மொத்து. மொத்துதல் = 1. உரக்க அல்லது வலுக்க அடித்தல். எல்லாருஞ் சேர்ந்து நன்றாய் மொத்திவிட்டார்கள் (c.t.). எதிர்மொத்தி நின்று (கம்பரா. முதற்போ. 66). தெ. மொத்து, க. மோது, து. முத்தெ. மொத்து = 1. வலுத்த அடி. “nkhJ திரையான் மொத்துண்டு (சிலப். 7, பாடல் 7). 2. வீங்குதல். அவனுக்கு முகம் மொத்தியிருக்கிறது (உ.வ.). மொத்து-மொத்தி = புடைப்பு (யாழ்ப்.). மொத்து = 1. தடித்த-வன்-வள்-து. 2. சுறுசுறுப்பில்லாத-வன்-வள்-து. 3. மூடத்தனமுள்ள-வன்-வள்-து. தெ. மொத்து (moddu), க. மொத்த (modda). மொத்துப் பிண்டம் = மொத்து 1, 2, 3. மொத்துக் கட்டை = மொத்து 1, 2, 3. மொத்தன் = (ஆ.பா.) 1. தடித்தவன். 2. சோம்பேறி. 3. மூடன். மொத்தன்-(பெ.பா.) மொத்தி, மொத்தை. க. மொத்தி (moddi). மொத்து-மொத்திகை-மத்திகை = குதிரையை அடிக்கும் சமட்டி. “k¤âif வளைஇய மறிந்து வீங்கு செறிவுடை (முல்லைப். 59). 2.தடிக்கம்பு, கழி. வேயின் மத்திகையர் (அரிசமய. குலசே. 54). Gk. mastix, mastigos = குதிரைச் சமட்டி. ஒ-அ, சொல்லாக்கத் திரிபு. ஒ.நோ: கொம்பு-கம்பு, ஒட்டு-அட்டு, தொண்டையார்பேட்டை-தண்டையார்பேட்டை. மொத்து - மொத்தம் = 1. gUk‹(W.)., திண்ணம். கட்டிற்கால் மொத்தமாயிருத்தல் வேண்டும் (உ.வ.). எலுமிச்சம்பழத்தோல் மொத்தமாயிருத்தல் கூடாது. 2. கூட்டுத்தொகை. தேர்வு எழுதினவர் எல்லாரும் மொத்தம் எத்தனை பேர்? (உ.வ.). 3. முழுமை. எல்லாக் காய்களையும் மொத்தமாய் விலை பேசி வாங்கிக்கொள் (உ.வ.). வரவு செலவுக் கணக்குப் பார்த்தால் மொத்தத்தில் இழப்பிராது. 4. பொது. எல்லாரையும் மொத்தமாய்த் திட்டிவிட்டான் (உ.வ.). 5. பெரும்பான்மை. மொத்தவிலை வணிகர் (உ.வ.). மொத்து-மொத்தளம் = (யாழ். அக.) 1. மொத்தம். 2. கூட்டம். மொத்தளம்-மத்தளம் = இருந்தடிக்கும் பெருமதங்கம் (மிருதங்கம்) அல்லது இருதலை முழா. மொத்து-மொத்தை = 1. பருமன் (யாழ். அக.). 2. உருண்டை, சோற்றுருண்டை. தெ. முத்த (mudda), க. முத்தெ (mudde) மொத்தையுரு = நெட்டுரு. மொத்தையுருப் போட்டுத் தேறிவிட்டான் (உ.வ.). மொத்தை-மொச்சை = தமிழ்நாட்டுப் பயற்று வகைகளுள் மிக மொத்தமானது; வீட்டவரைக்கு இனமான காட்டவரை. மொத்தை-மோத்தை = 1. செம்மறியாட்டுக் கடா. “nkh¤ijíª தகரும் உதரும் அப்பரும் (தொல். மரபு. 2). மேழவோரை (சூடா. உள். 9). 3. வாழை தாழை முதலியவற்றின் மடல் விரியாத பூ . நெடலை வக்கா முதலாயின.... தாழம்பூ மோத்தைபோ லிருப்பன (நற். 211, உரை). க. மோத்து. மொத்து-மொந்து-மொந்தன் = பெருவாழை; கதலிக்கு எதிரானது. தெ. பொந்த (bonta). மொந்து-மொந்தணி = 1. மரத்தின் கணு (யாழ்ப்.). 2. மூடப்பெண் (யாழ். அக.). மொந்தணி-மொந்தணியன் = 1. பருத்தது. 2. உருண்டு திரண்டது. மொத்தை-மொந்தை = 1. பருத்தது. 2. சோற்றுருண்டை. மொத்தையுரு-மொந்தையுரு. மொத்து-மத்து = 1. பருப்பு கீரை முதலியன கடையுங் கருவி. 2. தயிர் கடையுங் கருவி. ஆயர் மத்தெறி தயிரி னாயினார் (சீவக. 421). மத்து-வ. மந்த (mantha). கடைகருவி அடியில் மொத்தமாயிருப்பதனால் மத்தெனப்பட்டது. மத்து-மத்தி. மத்தித்தல் = மத்தினாற் கடைதல். பாற் சமுத்திரத்தை மத்தித்த திருமால் (கூர்மபு.). மத்தி-வ. மத் (math). மத்தி-மதி. மதித்தல் = 1. கடைதல். மந்த ரங்கொடு மதித்தநாள் (nrJò. சங்கர. 20). 2. மத்தினாற் கடைந்தாற்போல் கையினால் அல்லது கைவிரலால் அழுத்திக் களிப்பதமாக்கல். குழந்தைக்குச் சோற்றை நன்றாய் மதித்து ஊட்டு (உ.வ.). மதி-மசி. மசிதல் = களிப்பதமாகக் கடைபடுதல் அல்லது குழைதல். சோறு நன்றாய் வேகாததனால் மசியவில்லை (உ.வ.). 2. பிறர் விருப்பிற்கு இணங்குதல். ஆள் எளிதில் மசிய மாட்டான் (உ.வ.). மசி-வ. மஷ். மசித்தல் = 1. கடைந்து அல்லது பிசைந்து குழையச் செய்தல். 2. மைக்கட்டியை அல்லது களிம்பை நீரிற் குழைத்து எழுதுமை யுருவாக்குதல். மசித்து மையை விள்ள வெழுதி (பதினொ. திருவாலங். மூத். 2). மசி = எழுதுமை. மசிகலந் தெழுதப் பட்ட (சூளா. தூது. 83). 2. வண்டி மசகு. மசி-வ. மஷி. மசி-மசகு = வைக்கோற் கரியோடு விளக்கெண்ணெய் கலந்து வண்டி யச்சிற்கிடும் மை. தெ. மசக (masaka). மசிக்குப்பி = மசிக்கூடு. மசி-மயி-மை = 1. வண்டி மசகு. 2. கண்ணிற்கிடும் கரிய களிம்பு (mŠrd«). மைப்படிந்த கண்ணாளும் (தேவா. 1235 : 10). 3. எழுதும் அல்லது ஏட்டிற் பூசும் கரிக்குழம்பு. 4. மந்திர வினையிற் கையாளுங் கரும் பசை. 5. மையின் கருநிறம். மறவர் மைபடு திண்டோள் (அகம். 89). மைம்மீன் புகையினும் (புறம். 117). 6. இருள். மைபடு மருங்குல் (புறம். 50). 7. இருண்ட பசுமை. “ikÆU§ கானம் (அகம். 43). 8. கருமுகில். சேயோன் மேய மைவரை யுலகமும் (தொல். அகத். 5). 9. கரிய ஆடு (வெள்ளாடு). “ikô‹ மொசித்த வொக்கலொடு (புறம். 96), வாயின் மாடந்தொறும் மைவிடை வீழ்ப்ப (புறம். 33). 10. கரிய எருமை. “itFòy® விடியன் மைபுலம் பரப்ப (அகம். 41). 11. கருமைக்கு இனமான நீலநிற விண் (அரு. நி.). 12. கரிய களங்கம். “ikÔ®ª தன்று மதியு மன்று (கலித். 55). 13. அழுக்கு. மையில் செந்துகிர் (கலித். 85). 14. குற்றம். மையி லறிவினர் (புறம். 22 : 8). 15. கரிசு (பாவம்), தீவினை. மைதீர்த்தல் (சினேந். 457). 16. கருமுகில் நீர் (யாழ். அக.) அல்லது நீலக்கடல்நீர். மை-மைஞ்சு = கருமுகில், முகில் (நன். 122, மயிலை.). மைஞ்சு-மஞ்சு = 1. முகில். யாக்கை மலையாடு மஞ்சுபோற் றோன்றி (நாலடி. 28). 2. வெண்முகில். மஞ்சென நின்றுலவும் (சீவக. 2853). 3. பனி (ã§.). 4. மூடுபனி (இ.வ.). ஒ.நோ: ஐ - ஐந்து - அஞ்சு. மைத்தல் = 1. கருத்தல். மைத்திருள் கூர்ந்த (மணிமே. 12 : 85). 2. ஒளி மழுங்குதல். மைத்துன நீண்ட வாட்டடங் கண்ணர் (சீவக. 2333). மை-மைப்பு = கருப்பு. மைப்புறுத்தகண் ணரம்பைமார் (fhŠá¥ò. அரிசாப. 2). மைக்கூடு (கூண்டு) = 1. எழுதும் மைப்புட்டி. 2. கண்மைச் சிமிழ். முத்து-முட்டு. முட்டுதல் = 1. எதிர்ப்படுதல். வரையா நாளிடை வந்தோன் முட்டினும் (தொல். களவு. 21). 2. எதிர்த்தல். 3. மோதுதல். துள்ளித்தூண் முட்டுமாங் கீழ் (நாலடி. 64). விலங்குகள் கொம்பால் தாக்குதல், வாயில் நிலையால் தலை தாக்குண்ணுதல். 4. பொருதல். குலப்பகைஞன் முட்டினான் (f«guh. நட்புக். 50). 5. பொருந்தித்தொடுதல். 6. தாங்குதல். 7. பிடித்தல். குழலாள்....ifÆid¡ கையாலவன் Kட்டிடலும்(உத்தரரா.â¡FÉ. 16). 8. முடிதல். முட்டடி யின்றிக் குறைவுசீர்த் தாகியும் (தொல். செய். 122). 9. நிறைதல். தோய முட்டிய தோடவிழ் மலர்த்தடம் (காஞ்சிப்பு. கழுவாய். 79). 10. தடுத்தல். 11. தடைப்படுதல். வெண்ணெல்லி னரிசி முட்டாது பெறுகுவீர் (kiygL. 564). 12. குன்றுதல். முட்டா வின்பத்து முடிவுல கெய்தினர் (சிலப். 15 : 197). 13. இடர்ப்படுதல். 14. தீட்டுப்படுதல். 15. தேடுதல். நாடிநாங் கொணருது நளினத் தாளைவான் மூடிய வுலகினை முற்றுமுட் டியென்று (கம்பரா. சம்பாதி. 7) ம. முட்டுக, க. முட்டு. முட்டு = 1. முழங்கை முழங்கால் விரல்கள் ஆகியவற்றின் பொருத்து. 2. குவியல். பண்டங்கள் முட்டு முட்டாய்க் கிடக்கின்றன (உ.வ.). 3. பற்றுக்கோடு. விலங்குகள் கொம்பால் தாக்குகை. 4. தடை. “K£LtƉ கழறல். (தொல். மெய்ப். 23). 5. முட்டுப்பாடு. 6. கடத்தலருமை. முட்டுடை முடுக்கரும் (சீவக. 1216). 7. குறைவு. “_ntœ துறையு முட்டின்று போகிய (புறம். 166). 8. கண்டுமுட்டு கேட்டுமுட்டு முதலிய தீட்டுகள் (பெரியபு. திருஞான. 692). 9. மாதவிடாய் (W.). முட்டடி = அண்மை (W). முட்டுதல் = நெருங்குதல். முட்டத்தட்ட = கிட்டத்தட்ட. முட்டடித்தல் = கோலியாட்டில் தோற்றவனுடைய முட்டில் (Éu‰bghU¤âš) வென்றவன் கோலியா லடித்தல். முட்டடைப்பான் = வயிற்றை வீங்கச் செய்யும் மாட்டுநோய். (M. cm. D. I. 248). முட்ட = முடிய, முற்ற. முட்ட நித்தில நிரைத்த பந்தரின் (பாரத. கிருட். 103). முட்டத்தட்டுதல் = 1. மரத்திலுள்ள பழங்களெல்லாவற்றையும் பறித்தல். 2. முழுதும் இல்லாதிருத்தல் (உ.வ.). முட்ட முடிய = முற்றிலும் முடிவுவரை. முட்ட முடிபோக = இறுதிவரை. முட்டு - முட்டம் = மதி முட்டுப்பாடு (மதிக்குறைவு) ஆகிய மடமை. முட்டம்-முட்டன் = மூடன் (W.). முட்டத்தனம் = மூடத்தன்மை (W.). முட்டாட்டம் = (W.). 1. முட்டாள் தன்மை. 2. அறியாமையா லுண்டா குஞ் செருக்கு. அவன் முட்டாட்ட மாடுகிறான் (உ.வ.). முட்டாள்1 (முட்டு + ஆள்) = மூடன். முட்டா ளரக்கர் (திருப்பு. 141). ம. முட்டாள். முட்டாள்2 = முட்டும்(முட்டித் தாங்கும்) ஆள், தாங்கும் உருவம், அணிகத்தின்(வாகனத்தின்) கீழ் அதைத் தாங்குவதுபோல் வைக்கும் படிமை. க. முட்டாள். முட்டரிசி = நன்றாய் வேகாத (வேக்காடு குன்றிய) அரிசி (உ.வ.). முட்டம் = 1. பொருந்திய பக்கம், பக்கச்சரிவு. நளிமலை முட்டமும் (பெருங். வத்தவ. 2 : 43). 2. பலர் கூடி வாழும் ஊர் (Nlh.). `குரங்கணின் முட்டம் (சிவன் கோயில்). ஒ.நோ: முட்டா = 1. ஊர்க்கிழமை, குறுநில ஆட்சி. 2. சொத்து (W.). முட்டா-மிட்டா = 1. நாட்டுப் பகுதி, வட்டம். 2. ஊர்க்கிழமை, குறுநில ஆட்சி. 3. சொத்து. 4. உரிமை. மிட்டா-இந். மிட்டா (mittha). முட்டுதல் = கூடுதல், பொருந்துதல். ஒ.நோ: OE. mitan, OS. motian, ON. moeta, Goth. (ga) motjan, E. meet. OE. motian, E. moot, assembly. E. wikenagemot = Anglo-Saxon national council or parliament. OE. witena, wise mens. (ge) mot, meeting. முட்டாட்டம் = முட்டுகை. முட்டு-ஒ.நோ: E. butt, meet end to end. முட்டு = தாங்கல். ஒ.நோ: ME. buttress, OF. bouterez, mod.F. bouteret, f. bouter, E. buttress f. butt. OF. abutex (but, end), end on, E. abut, border upon, abutment, a lateral support. முட்டுக்கட்டுதல் = 1. கட்டை முதலியவற்றைத் தாங்கலாகக் கொடுத்தல். 2. முழங்காலைக் கைகளாற் கட்டுதல். முட்டுக் கட்டி உட்காராதே (உ.வ.). 3. எல்லை கட்டுதல் (யாழ்ப்.). 4. வழியடைத்தல் (W.). முட்டுக்கட்டியாடுதல் = பொய்க்காற் கட்டையில் நின்று நடத்தல். முட்டுக்கால், முட்டுக்கொடுத்தல், முட்டுச் சட்டம், முட்டுச் சுவர் முதலிய தொடர்ச்சொற்கள் தாங்கல் கொடுத்தலையும்; முட்டுக்கட்டை, முட்டுத்தொய்வு (மூச்சுவிட முடியாமை), முட்டுப் பாடு முதலிய தொடர்ச்சொற்கள் தடைபண்ணுதலையும்; முட்டுமுடுகு, முட்டிடை முதலிய தொடர்ச்சொற்கள் வழியிடுக்கத் தையும்; முட்டுச்சீலை, முட்டுப் பட்டினி, முட்டுப் பாந்தை முதலிய தொடர்ச்சொற்கள் தீட்டுப்பாட்டையும்; முட்டுக்கால் தட்டுதல், முட்டுக்குட்டு, முட்டுக் குத்துதல் (KH§fhšnkš நிற்றல்), முட்டுப்பிடிப்பு, முட்டுவலி, முட்டுவீக்கம் முதலிய தொடர்ச்சொற்கள் முழங்கால் வினையையும் உணர்த்தும். முட்டுதல் = நெருங்குதல், இடுகுதல். முட்டு - முட்டி = 1. விரற் பொருத்துத் தெரியும்படி முடக்கிய கை. 2. முட்டிக்கையாற் குத்துங் குத்து. முட்டிகள் படப்பட (பாரத. வேத்திர. 56). 3. நால் விரல்களை யிறுக முடக்கி அவற்றின்மீது கட்டை விரலை முறுகப் பிடிக்கும் இணையா வினைக்கை. (சிலப். 3 : 18, உரை). 4. கைப்பிடியளவு. முட்டி மாத்திர மேனும் (சேதுபு. இராமதீ. 3). 5. பிடியளவாக இடும் ஐயம் (பிச்சை). முட்டிபுகும் பார்ப்பார் (தனிப்பா.). 6. படைக்கலம் பிடிக்கும் வகை. துய்ய பாசுபதத் தொடையு முட்டியும் (பாரத. அருச்சுனன்றவ. 129). 7. ஒருவர் தம் கையுள் மறைத்ததை இன்னொருவர் தாமாக அறிந்து கூறுங் கலை: 8. திருவிழாவில் ஊரெல்லைத் தெய்வத்திற்கும் படைக்குஞ் சோறு. 9. முழங்காற் சிப்பி அல்லது பொருத்து. முட்டுதல் என்பது ஒரு பொருளின் தலை அல்லது கடை இன்னொரு பொருள்மேற் படுதலாதலால், முட்டும் பகுதியினின்று முடிவு அல்லது எல்லைப் பொருள் தோன்றிற்று. எல்லைக்கறுப்பன் (கருப்பன்), எல்லைப்பிடாரி, எல்லையம்மன் என்னும் பெயர்கள், சிற்றூர்வாணரின் எல்லைத்தெய்வ வணக்கத்தைக் குறிக்கும். முட்டி-வ. முஷ்டி. முட்டிக்கால் = 1. முழங்காற் சிப்பி அல்லது பொருத்து. 2. முட்டிக்காற் பின்னல். (W.). முட்டிக்கால் தட்டுதல் = முழங்காற் சிப்பிகள் ஒன்றோடொன்று உரசுதல். முட்டிக்காலன் = முட்டிகள் தட்டும்படி நடப்பவன் (W.). முட்டிக்காற் கழுதை = பின்னங்கால் முட்டிகள் தட்டும்படி நடக்குங் கழுதை. முட்டிச்சண்டை = முட்டிக்கைப்போர் (W.). முட்டிப்பிச்சை = பிடியரிசி யையம். முட்டியடித்தல் = 1. முட்டிச் சண்டையிடுதல். 2. முட்டிப் போர் செய்தல் போல் வருந்தித் திண்டாடுதல். வேலைக்கு முட்டியடிக்கிறான் (உ.வ.). முட்டிக்கால் என்பது போன்றே முட்டிக்கை என்பதும் பொருத்தையே சிறப்பாகக் குறிக்கும். முன்னது காற்பொருத்தும் பின்னது விரற்பொருத்தும் ஆகும். முள்-மூள். மூளுதல் = 1. பொருந்துதல். 2. தீப்பற்றுதல். 3. சினங்கிளம்புதல். 4. மிகுதல். 5. முனைதல். முதலற முடிக்க மூண்டான் (கம்பரா. மாயாசீ. 96). மூள்-மூட்டு (பி.வி.). மூட்டுதல் = 1. பொருத்துதல். 2. இணைத்தல், இசைத்தல். கால்கொடுத் தெலும்பு மூட்டி (தேவா. 631 : 3). 3. தைத்தல். இந்தக் கோணியை மூட்டு (உ.வ.). 4. தீப்பற்ற வைத்தல். மூட்டிய தீ (நாலடி. 224). 5. தீ மூட்டுவதுபோற் சினமூட்டுதல். 6. பகை மூட்டிச் சண்டைக்குத் தூண்டுதல். இருவருக்கும் நன்றாய் மூட்டிவிட்டு விட்டான் (உ.வ.). 7.ஒன்றைச் செலுத்துதல். “fLFò கதிர்மூட்டி (கலித். 8). ம. மூட்டுக, தெ. மூட்டிஞ்சு (Muttintsu). மூட்டு = 1. உடல், அணி முதலியவற்றின் பொருத்து. கவசத்தையு மூட்டறுத்தான் (கம்பரா. சடாயுவ. 113). 2. சந்திப்பு (யாழ். அக.). 3. தையல். 4. கட்டு. வன்றாண் மிசைப்பிணித்த வல்லிகளின் மூட்டறுத்து (கந்தபு. மீட்சிப். 8). 5. கட்டப்பட்டது (W.). 6. குதிரைக் கடிவாளம் (பிங்.). 7. மனவெழுச்சி. 8. வாழையிலைக் கற்றை. மூட்டுமூட்டாய்ப் பிரிந்துபோய் விட்டது (உ.வ.). 9. பொத்தகக் கட்டடப் பகுதி. k., தெ. மூட்டு, க. மூட்டை. மூட்டு-மூட்டை = 1. பொட்டணம். இந்தத் துணிகளையும் மூட்டையில் வைத்துக் கட்டு (உ.வ.). 2. பொதி. அரிசி மூட்டைகளை யெல்லாம் வண்டியிலேற்றிக் கொண்டுபோய்விட்டார்கள். 3. அறுபது பட்டணம்படி கொண்ட ஒரு கோணியளவு. 4. பெரும்பொய். அவன் மூட்டை யளக்கிறான். ம. மூட்ட, தெ. மூட்ட, து. மூட்டே. மூட்டை-மூடை = 1. பொதி. பொதிமூடைப் போரேறி (பட்டினப். 137). 2. மிகச் செறிந்த கூலக்கோட்டை. கடுந்தெற்று மூடை (òw«. 285). 3. கூலக்குதிர். கழுந்தெற்று _ilÆ‹”(bghUe. 245). மூட்டு-மாட்டு. மாட்டுதல் = 1. இணைத்தல். சிறுபொறி மாட்டிய பெருங்கல் லடாஅர் (நற். 19). 2. தொகுத்தல். அம்பினை மாட்டி யென்னே (கம்பரா. நிகும்பலை. 96). 3. செருகுதல். “mL¥ãÅ‹ மாட்டு மிலங்ககில் (காஞ்சிப்பு. நகர. 73). 4. மனத்திற் கொள்ளுதல். சொன்மாலை யீரைந்து மாட்டிய சிந்தை (திருவிசை. கருவூ. 8 : 10). 5. தீப்பற்றவைத்தல். “Éw»‰... செந்தீ மாட்டி (சிறுபாண். 156). 6. விளக்குக் கொளுத்துதல். நெய்பெய்து மாட்டிய சுடர் (குறுந். 398). 7. அடித்தல். வின்முறிய மாட்டானோ (தனிப்பா.). நன்றாய் மாட்டுமாட்டென்று மாட்டிவிட்டான் (உ.வ). 8. பயன்படுத்துதல். “tŸswh‹ வல்ல வெல்லா மாட்டினன் (சீவக. 1274). தெ. மாட்டு. மாட்டு = தொடர்புள்ள சொற்கள் ஒரு பாட்டில் அடுத்திருப்பினும் நெட்டிடையிட்டுக் கிடப்பினும், பொருந்தும் வகையிற் கொண்டுகூட்டிப் பொருள் கொள்ளுமுறை. அகன்றுபொருள் கிடப்பினும் அணுகிய நிலையினும் இயன்றுபொருள் முடியத் தந்தன ருணர்த்தல் மாட்டென மொழிப பாட்டியல் வழக்கின் (தொல். செய். 208) மூட்டு-மூட்டம் = 1. உலைமுகம் (யாழ். அக.). 2. சொக்கப்பனை (W.). 3. விறகு (யாழ். அக.). 4. கம்மக் கருவி வகை (யாழ். mf.). மூட்டு-மூட்டான்-முட்டான் = அணையாது வைக்கும் நெருப்பு மூட்டம். முள்-முய்-முய-முயகு-முயங்கு. முயங்குதல் = 1. பொருந்துதல். “Kiyí மார்பு முயங்கணி மயங்க (பரிபா. 6 : 20). 2. தழுவுதல். “Ka§» கைகளை யூக்க (குறள். 1238). 3. புணர்தல். அறனில்லான் பைய முயங்கியுழி (கலித். 144). 4. செய்தல். மணவினை முயங்க லில்லென்று (சூளா. தூது. 100). முயங்கிக் கொள்ளுதல் = கணவனும் மனைவியுமாக வாழ்தல் (W.). முயங்கு-முயக்கு = தழுவுகை. வளியிடை போழப் படாஅ முயக்கு (FwŸ. 1108). முன்பு மாதவப் பயத்தி னாலவண் முயக்கமர் வார் (jÂif¥ò. நாட்டுப். 48). முயக்கு-முயக்கம் = 1. தழுவுகை. பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் (குறள். 913). 2. புணர்ச்சி. முயக்கம் பெற்றவழி (I§. 93, உரை). 3. தொடர்பு. ஆணவத்தின் முயக்கமற்று (jÂif¥ò. நந்தி. 110). முயங்கு-மயங்கு. மயங்குதல் = 1. நெருங்குதல். 2. கலத்தல். 3. ஒத்தல். காரிருள் மயங்குமணி மேனியன் (பரிபா. 15 : 50). 4. கைகலத்தல். தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து (புறம். 19). 5. கலக்கமுறுதல். மயங்கின வாய்ப்புளும் (பு.வெ. 10, சிறப். 11). 6. அறிவு கெடுதல். புலான் மயங்கான் (ஏலா. 2). 7. மருளுதல். 8. வேற்றுவய மாதல். 9. வெறி கொள்ளுதல். தாமயங்கி யாக்கத்துட் டூங்கி... வாழ்நாளைப் போக்குவார் (நாலடி. 327). 10. மாறுபடுதல். மேனியு முள்ளமு மயங்காத் தேவர் (கல்லா. 82 : 30). 11. நிலையழிதல். ஆள்பவர் கலக்குற மயங்கிய நன்னாட்டு (kÂnk. 23 : 104). 12. வருந்துதல். முயங்கல் விடாஅ விவையென மயங்கி (அகம். 26). 13. தாக்குண்ணுதல். காலொடு மயங்கிய கலிழ்கட லென (பரிபா. 8 : 31). 14. ஐயுறுதல். 15. தயங்குதல். அவரைப் போய்ப் பார்ப்பதற்கு மயங்குகிறான் (உ.வ.). 16. உணர்ச்சி யிழத்தல். மயங்கிசைக் கொச்சகம் = உறுப்புக்கள் மயங்கியும் மிக்கும் குறைந்தும்வரும் கொச்சகக் கலி. முயக்கு-மயக்கு = 1. போர்செய்கை. இரும்புலி மயக்குற்ற (fȤ. 48). 2. கலக்கம். கனாமயக் குற்றேன் (மணிமே. 11 : 104). 3. மருளச்செய்யுஞ் செய்கை. மாய மயக்கு மயக்கே (திவ். திருவாய். 8 : 7 : 3). மயக்குதல் = 1. கலத்தல். பாற்பெய் புன்கந் தேனோடு மயக்கி (òw«. 34). 2. சேர்த்தல். உயிரெனுந் திரிமயக்கி (தேவா. 1189 : 4). 3. மனங் குழம்பச் செய்தல். குறளை பேசி மயக்கி விடினும் (ehyo. 189). 4. மருளச் செய்தல். மாய மயக்கு மயக்கா னென்னை வஞ்சித்து (திவ். திருவாய். 8 : 7 : 4). 5. வேற்றுவயப் படுத்துதல். (கம்பரா. இராவணன்கோ. 51). 6. நிலை கெடுத்தல். “tŸisahŒ கொடிமயக்கி (அகம். 6). 7. சிதைத்தல். எருமை கதிரொடு மயக்கும் (ஐங். 99). 8. உணர்ச்சி யிழக்கச் செய்தல். மதகரியை யுற்றரி நெரித்தென மயக்கி.... துகைத்தான் (கம்பரா. மகுட. 5). முயக்கம்-மயக்கம் = 1. கலப்பு. வடசொன் மயக்கமும் வருவன புணர்த்தி (கல்லா. 62 : 18). 2. ஒரு வேற்றுமை யுருபு மற்றொரு வேற்றுமைப் பொருளிற் கலத்தல். வேற்றுமை மயக்கம். (நன். 317, உரை). 3. எழுத்துப் புணர்ச்சி. உடனிலை மெய்ம்மயக்கம். வேற்றுநிலை மெய்ம்மயக்கம். மெய்ம்மயக் குடனிலை ரழவொழித் தீரெட் டாகுமிவ் விருபால் மயக்கும் (நன். 110) 4. இருபாற் கலப்பாகிய அலித்தன்மை (W.). 5. அறிவின் திரிபு. 6. அறியாமை. காம வெகுளி மயக்க மிவைமூன்ற னாமங் கெட (குறள். 360). 7. காமநோய் (அரு. நி.). 8. உணர்விழப்பு. மயங்கு-மசங்கு. மசங்குதல் = 1. மயங்குதல் (தேவா. 567 : 10). 2. ஒளி குறைதல். மேனியில் வன்னமு மசங்காதோ (இராமநா. அயோத். 11). முயகு-மயகு-மசகு. மசகுதல் = 1. சுணங்கி நிற்றல். 2. மனந் தடுமாறுதல். மசகு = நடுக்கடலில் திசை தெரியாது ஆழ்ந்தகன்ற இடம் (ahœ¥.). மசங்கு-மசங்கல் = 1. பகலும் இரவும் கலக்கும் அந்திப்பொழுது. 2. மயக்கம். மசங்கற்சமண் மண்டைக் கையர். (தேவா. 567 : 10). மசங்கு-மசக்கு. மசக்குதல் = 1. குழப்புதல். 2. மயங்கச் செய்தல். “äiyÆnyíw முறை மசக்கவும் (திருப்பு. 838). மசக்கு-மசக்கம் = 1. மயக்கம். 2. மந்தம். 3. மசக்கை. மசக்கல் = மசங்கல். மயக்கி-மசக்கி = அழகாலும் தளுக்காலும் மயக்குபவள். மசக்கை = சூலிக்கு உண்டாகும் மயக்கம். முய-மய. மயத்தல் = மயங்குதல். மயந்துளே னுலக வாழ்க்கையை (mU£gh. VI, அபயத்திறன். 14). மய-மயல் = 1. ஐயுறவு. மயலறு சீர்த்தி (பு.வெ. 9 : 7). 2. மயக்கம். மயலிலங்குந் தூயர் (தேவா. 121 : 2). 3. மந்தம் (ahœ. அக.). 4. ஆசை. தண்டா மயல்கொடு வண்டுபரந் தரற்ற (கல்லா. 20 : 6). 5. காம விழைவு. மாதர் மயலுறு வார்கண் மருள்கொண்ட சிந்தை (திருமந். 203). 6. கோட்டி(பைத்தியம்). மயற்பெருங் காதலென் பேதைக்கு (திவ். திருவாய். 4 : 4 : 10). 7. மாயை. மயலாரும் யானு மறியேம் (f«guh. நாகபா. 258). 8. அச்சம் (யாழ். அக.). 9. பேய் (ã§.). 10. செத்தை. வம்புண் கோதையர் மாற்றும் மயலரோ (Ótf. 128). ம. மய்யல், தெ. மயல, க. மயமு. மயல்-மயற்கை = 1. மயக்கம். மயற்கை யில்லவர் (சீவக. 1346). 2. செத்தை (சீவக. 1393, உரை). மயல்-மயர். மயர்தல் = 1. மயங்குதல். 2. திகைத்தல். வைது கொன்றன னோவென வானவர் மயர்ந்தார் (கம்பரா. கும்பக. 244). 3. சோர்தல். மயரு மன்னவன் (கம்பரா. இரணியன்வதை. 13). 4. உணர் வழிதல். விடந்தனை யயின்றன ரெனும்படி மயர்ந்து (fªjò. திருவி. 80). மயர் = மயக்கம். மயரறுக்குங் காமக் கடவுள் (பரிபா. 15 : 37). மயர்-மயர்வு = 1. சோர்வு. 2. அறிவுமயக்கம் (பிங்.). 3. அறியாமை (அஞ்ஞானம்). மயர்வற மதிநல மருளினன் (திவ். திருவாய். 1 : 1 : 1). மயர்-மயரி = 1. அறிவிலி. மயரிக ளல்லாதார் (இனி. நாற். 13). 2. காமுகன். மயரிகள் சொற்பொருள் கொண்டு (திருநூற். 53) . 3. பித்தன். நின்பால் வாங்கா நெஞ்சின் மயரியை (மணிமே. 22 : 75). மயல்-மையல் = 1. செல்வம் முதலியவற்றால் வருஞ் செருக்கு. “ikaš...k‹d‹” (சீவக. 589). 2. காம மயக்கம். மையல் செய்தென்னை மனங்கவர்ந் தானே யென்னும் (திவ். திருவாய். 7 : 2 : 6). 3. கோட்டி(பைத்தியம்). மைய லொருவன் களித்தற்றால் (FwŸ. 838). 4. யானை மதம். வேழ மையலுறுத்த (பெருங். உஞ்சைக். 37 : 232). 5. கருவூமத்தை (மலை.). மையலவர் = பித்தர். மையலவர் போல மனம்பிறந்த வகை சொன்னார் (சீவக. 2013). மையலார் = 1. பித்தர். 2. மாய வினைஞர். மண்மயக்கு மயக்குடை மையலார் (இரகு. யாகப். 35). மையலி = மாய வினையாட்டி (யாழ். அக.). மையனோக்கம் = துயரப் பார்வை. மைய னோக்கம் படவரு மிரக்கம் (தொல். மெய்ப். 13, உரை). மய-மையா. மையாத்தல் = 1. மயங்குதல். மலர்காணின் மையாத்தி நெஞ்சே (குறள். 1112). 2. ஒளி மழுங்குதல். விண்மே லொளியெல்லா மையாந் தொடுங்கி (பு.வெ. 9 : 13). 3. பொலிவழிதல். மாந்த ரென்பவ ரொருவரு மின்றி மையாந்த வந்நகர் (fhŠá¥ò. நகரேற். 101). முள்-மள்-மள்கு. மள்குதல் = 1. ஒளி குறைதல். 2. குறைதல். “kŸfÈš பெருங்கொடை (கம்பரா. கார்கால. 104). மள்கு-மழுகு. மழுகுதல் = ஒளி குறைதல். முத்துத் தொடை கலிழ்பு மழுக (பரிபா. 6 : 16). மழுகு-மழுங்கு. மழுங்குதல் = 1. ஒளி குறைதல். கதிர்கண் மழுங்கி மதியு மதிர்வதுபோல் (கலித். 146). 2. பொலிவழிதல் (திவா.). 3. கவனிப்பின்றி மறைந்துபோதல் (W.). 4. கெடுதல். மழுங்கு-மழுக்கு. மழுக்குதல் = ஒளி குறையச் செய்தல். மழுக்கு-மழுக்கம் = ஒளி குறைகை. மழுங்கு-மங்கு. மங்குதல் = 1. ஒளி குறைதல். 2. நிறங் குன்றுதல். 3. பெருமை குறைதல். 4. குறைதல். தாக மங்குத லின்மையால் (Éehafò. 80 : 94). 5. வாட்டமுறுதல் (W.). 6. கெடுதல். “ÔÉid¤ தெவ்வென்னும் பேர்மங்க (திருநூற். 19). 7. சாதல். “k§»í முற்பவித்து முழல்வல் லிடரில் (திருப்போ. சந். மட்டுவிருத். 7). க. k¡F(maggu). மங்கு-மங்கல் = 1. ஒளி மழுக்கம் (சங். அக.). 2. இருள் கலந்த நேரம். 3. கெடுகை. மங்குங் காலம் = வளங் குன்றுங்காலம். மங்குங் காலம் மா; பொங்குங் காலம் புளி (பழ.). மங்குநோய்முகன்(சனி) = வாழ்நாளில் முதலில் வந்து ஏழரையாண்டு தீங்கு செய்யும் நோய்முகன்(சனி). மங்கு = 1. கேடு. தெ. மங்கு, க. g§F(banku). 2. வங்கு. (W.). மங்கு-வங்கு = 1. மேனியில் மங்கல் நிறமாகப் படரும் ஒருவகைப் படைநோய். 2. குளித்தபின் துவர்த்தாத மேனியிற் காணும் படைபோன்ற தோற்றம். 3. நாய்ச்சொறி. மங்கு-மங்குல் = 1. ஒளிக் குறைவு. 2. கண்தெரியாவாறு ஒளி குறைந்த மூடுபனி. மங்குல் மனங்கவர (பு.வெ. 9 : 45). 3. இருட்சி. “k§Fš மாப்புகை (புறம். 103). 4. இரவு (திவா.). 5. இருண்ட முகில். மங்குறோய் மணிமாட..... நெடுவீதி (தேவா. 41 : 7). 6. கரிய வானம். மங்குல்வாய் விளக்கு மண்டலமே (திருக்கோ. 177). 7. வானவெளிப் பக்கமாகிய திசை. புயன் மங்குலி னறைபொங்க (கலித். 105 : 25). முள்-முய்-மய்-மை = கருப்பு, இருள். மைம்மை = கருமை, இருண்மை. மைம்மை-மைம்மைப்பு = கண்ணிருளல், கண் மங்கல், பார்வைக்குறை. மைம்மைப்பி னன்று குருடு (பழ. 298). மைம்மை-மைமை-மைமல் = மாலைநேரம் (யாழ். அக.). மைம்மை-மம்மல் = அந்தி நேரம். மம்மல்-மம்மர் = 1. மயக்கம். மம்மர்கொண் மாந்தர்க் கணங்காகும் (நாலடி. 14). 2. காமம் (W.). 3. கல்லாமை. “fhzh¡ குருடராச் செய்வது மம்மர் (நான்மணி. 24). 4. துயரம் (பிங்.). மம்ம ரறுக்கு மருந்து கண்டாய் (தேவா. 845 : 8) . மய-மயப்பு-மப்பு = 1. மயக்கம். 2. மட்டித்தனம். 3. செருக்கு. அவனுடைய மப்பை அடக்க வேண்டும் (உ.வ.). 4. முகில் மூட்டம். 5. செரியாமை. bj., க. மப்பு (mabbu). மள்கு-மட்கு. மட்குதல் = 1. மயங்குதல். மட்கிய சிந்தை (f«guh. தைல. 5). 2. ஒளி மங்குதல். நாகத்தின் வஞ்ச வாயின் மதியென மட்குவான் (கம்பரா. அயோத். 12). 3. அழுக்கடைதல். 4. வலி குன்றுதல். தரியலர் முனைமட்க (பாரத. மீட்சி. 176). ஒ.நோ: வெள்-வெள்கு-வெட்கு. மட்கு-மக்கு. மக்குதல் = 1. ஒளி மழுங்குதல். 2. அழுக்கேறுதல் (W.). bj., க. k¡F(maggu). 3. கருத்துப்போதல். வெள்ளி மக்கிவிட்டது. 4. மந்தமாதல். மக்கிய ஞானத் தீயால் (கைவல். தத். 90). 4. கெட்டுப்போதல் (W.). 5. அழிதல் (W.). மக்கு = 1. மந்தன். அவன் கணக்கில் மக்கு (உ.வ.). 2. அறிவிலி. 3. சுவர் வெடிப்பில் அடைக்கும் அடைமண். 4. மரவேலையிற் சந்து தெரியாமல் அடைக்கும் தூள். மக்கு-மக்கன் = மந்தன். மக்கு-மக்கல் = 1. கருத்துப்போன வெள்ளி. 2. கெட்டுப்போன அரிசி. குறிப்பு: ஒரு கருத்து ஒரு அல்லது பல வழிகளில் தோன்றலாம். மள்கு-மாள்கு-மாழ்கு. மாழ்குதல் = 1. கலத்தல் (W.). 2. மயங்குதல். குழறி மாழ்கி (கம்பரா. மாரீசன் வதை. 237). 3. சோம்புதல் (திவா.). 4. மங்குதல், கெடுதல். ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்குஞ் செய்வினை (குறள். 653). ப. க. khœF(g). மாழ்கு-மாழா. மாழாத்தல் = 1. ஒளி மழுங்குதல். “eh©kâna..... மாழாந்து தேம்புதியால் (திவ். திருவாய். 2 : 1 : 6). 2. மயங்குதல். மனங்கவல் பின்றி மாழாந் தெழுந்து (bghUe. 95). மாழா-மாழாம்பலம் = தூக்கம் (அக. நி.). மாள்கு-மாள். மாளுதல் = 1. கெடுதல். 2. கழிதல். மாளா வின்ப வெள்ளம் (திவ். திருவாய். 4: 7: 2). 3. அழிதல். ``அனுபவித்தாலும் மாளாதபடியான பாபங்கள்'' (ஈடு, 4: 7: 3). 4, சாதல். வஞ்ச முண்மையேன் மாண்டிலேன் (திருவாச. 5:93). 5. முடிதல், 6. செய்ய முடிதல், இயலுதல். அது என்னால் மாளாது (உ.வ.). மாள்-மாய். ஒ.நோ: நோள்-நோய். நோளையுடம்பு = நோயுண்டவுடம்பு. மாய்தல் = 1. ஒளி மழுங்குதல். ``பகன்மாய'' (கலித். 143). 2. கவலை மிகுதியால் வருந்துதல். 3. அறப்பாடுபடுதல். அந்த வேலையில் மாய்ந்து கொண்டிருக்கிறேன் (உ.வ.) 4. ``மறத்தல். ``மாயா வுள்ளமொடு பரிசிறுன்னி'' (புறநா. 139). 5. மறைதல். ``களிறுமாய் செருந்தியொடு'' (மதுரைக். 172). 6. அழிதல் “FobahL.. மாய்வர் நிலத்து'' (குறள்.898). 7. இறத்தல். தம்மொடு தம்பெயர் கொண்டனர் மாய்ந்தோர் மலைபடு. 553). k., bj., f., து. மாய். மாய்த்தல் = 1. மறைத்தல். ``களிறு மாய்க்குங் கதிர்க்கழனி'' (மதுரைக் 247). 2. வருத்துதல் (உ.வ.) 3. கொல்லுதல். மாய்த்த லெண்ணி வாய்முலை தந்த (திவ். திருவாய். 4: 3: 4). 4. அழித்தல். ``குரம்பையிது மாய்க்க. மாட்டேன் (திருவாச. 5: 54). மாய்-மாய்கை = 1. மயக்கம். 2. பொய்த் தோற்றம். மாய்-மாய்ச்சல் = 1. வருத்தம் (W.). 2. மறைவு (சது.). 3. சாவு (ahœ. அக.). மாய்-மாய்ப்பு = 1. மறைவு (W.). 2. சாவு (W). மாய்-மாய்வு = 1. மறைவு (சூடா.). 2. சாவு. மாய்வு நிச்சயம் வந்துழி (கம்பரா. இராவணன் வதை. 182). மாய்-மாயம் = 1. கருமை (கறுப்பு)(சூடா.). 2. மயக்கம், வியப்பு, ``மாயவன் சேற்றள்ளற் பொய்ந்நிலத்தே (திருவிருத். 100, உரை). 3. கனவு. ``மாயங் கொல்லோ வல்வினை கொல்லோ (சிலப். 16:61 ). 4. நிலையின்மை. என்மாய யாக்கை யிதனுட் புக்கு (திவ். திருவாய். 1073). 5. பொய். வந்த கிழவனை மாயஞ் செப்பி (bjhš. களவு. 22). 6. அறியாமை (அஞ்ஞானம்). மாய நீங்கிய சிந்தனை (கம்பரா. சித்திர. 51). 7. வஞ்சனை. மாய மகளிர் முயக்கு (குறள். 918). 8. மாயை. வருந்திட மாயஞ் செய்து நிகும்பலை மருங்கு புக்கான் (கம்பரா. மாயா சீதை. 96). மாயமாலம் = 1, பாசாங்கு. 2. மோசடி. 3. வஞ்சனையுள்ள பேய். (W.). மாயமாலம்-மாய்மாலம். மாயம்-மாயன் = 1. கரியன். வண்ணமு மாய னவனிவன் சேயன் (bjhš. உவம. 30, உரை). 2. திருமால். மாயனாய் ..... மலரவ னாகி (தேவா. 1050: 6). 3. வஞ்சகன் (பிங்.). மாயன்-மாயவன் = திருமால். பெரியவனை மாயவனை (சிலப். 17, படர்க்கைப் பரவல்). மாயவள் = 1. கரிய நிறமுடையவள். மாயவண் மேனிபோல் (fȤ. 35). 2. காளி, மாயவ ளாடிய மரக்கா லாடலும் (சிலப். 6 59). மாயன்-மாயோன் = 1. கருநிறமுடையோன் (பரிபா. 3: 1, உரை). 2. திருமால். மாயோன் மேய காடுறை யுலகமும் (தொல். அகத். 5). மாயோள் = 1. கருநிறமுடையவள். மாயோள் முன்கை யாய்தொடி (பொருந. 14). 2. மாமை நிறமுடைவள். “khnahŸ பசலை நீக்கினன் (ஐங். 145). 3. வஞ்சகி (W.). 4. காளி. மாய்-மாயை. ஒ.நோ: சாய்-சாயை. மாயை = 1. காளி (பிங்.). 2. மறைப் பாற்றல் (திரோதான சக்தி) - (நாமதீப. 753.) 3. பொய்த் தோற்றம். 4. பொய்த் தோற்றவுரு. 5. மாயக்கலை (khaɤij). மாயையி னொளித்த மணிமே கலைதனை (மணிமே. 18 155). 6. வஞ்சகம் (சூடா.). 7. மூல முதனிலை (பிரகிருதி) பூதலய மாகின்ற மாயை முதலென்பர் சிலர் (தாயு. பரிபூரணா. 6). மாயை-வ. மாயா. ஒ. நோ: சாயை-வ. சாயா (chaya). சாய்தல் = நிழல் விழுதல். சாயை = நிழல். மாள்-மாட்டு(பி.வி.). ஒ.நோ: நீள் - நீட்டு. மாளுதல்=முடிதல். செய்ய முடிதல். மாட்டுதல் = முடித்தல், செய்து முடித்தல். நான் இதைச் செய்ய மாட்டுவேன் = என்னால் இதைச் செய்ய முடியும். நான் இதைச் செய்ய மாட்டேன் = 1. என்னால் இதைச் செய்ய முடியாது(முன்னைப் பொருள்). 2. நான் இதைச் செய்ய விரும்பேன் (ï‰iw¥ பொருள்). இங்ஙனமே, கூடுதல் முடிதல் ஆகிய துணைவினைகளும், உடன்பாட்டில் இயலுதற் பொருளையும், எதிர்மறையில் அல்லது அஃதின்றி அதனொடு விருப்பின்மை அல்லது விலக்குப் பொருளையும் உணர்த்தும். எ-டு: நான் வரக்கூடாது (விலக்கு). நான் சொல்ல முடியாது (இயலாமையும் விருப்பின்மையும்). இப் பொருள்களின் நேர்ச்சி இடத்தையும் காலங் குறித்த சொல்லையும் பொறுத்திருக்கும். எ-டு: நீ சொல்ல முடியாது (இயலாமை மட்டும்). நாளைக்கு நான் இதைச் செய்யமாட்டேன் (விருப்பின்மையும் இயலாமையும்). தமிழிற் பெரும்பாலும் துணைவினையாக வழங்கும் மாட்டுதல் என்னும் சொல் கன்னடத்தில், செய்தல் என்னும் பொருளில் தலைமை வினையாகவே வழங்குகின்றது. எ-டு: நானு ஈ கெலச மாடுவெனு = நான் இவ் வேலையைச் செய்வேன். மள்-மண்-மண. மணத்தல் = 1. பொருந்துதல், ``மத்தகத் தருவியின் மணந்த வோடைய'' (சீவக. 2211). 2. வந்து கூடுதல். ``நிரை மணந்த காலையே'' (சீவக. 418.). கலத்தல். ``அறையும் பொறையு மணந்த தலைய'' (புறம். 118). 4. நேர்தல். ``மருவுற மணந்த நட்பு'' (கலித். 46). 5. கமழ்தல். மணந்த சோலையும் (அரிச்.பு. விவாக. 98). 6. அணைத்தல். ``திருந்திழை மென்றோள் மணந்தவன்'' (கலித் 131). 7. புணர்தல் (பிங்.) ``மாசில்வண் சேக்கை மணந்த புணர்ச்சியுள்'' (கலித். 24). 8. மணம்புரிதல் ``மணந்தார் பிரிவுள்ளி'' (நாலடி. 397). 9. கூடியிருத்தல். மணக்குங்கான் மலரன்ன தகைய வாய். (கலித். 25.) மண-மணம் = 1. கூடுகை. ஏதிலார் மணந்தனில் மனம்போக்கும் (fháf. மகளிர். 10). 2. அன்பினைந்திணை, கைக்கிளை, பெருந்திணை என்னும் மணவகை. 3. நறுநாற்றம். மணநாறு படப்பை (பெரும்பாண். 354). 4. நறுமணப் பொருள் மணங்கமழ் நாற்றம் (மதுரைக். 447). 5. மதிப்பு. பணமுள்ள வனுக்கே மணமுண்டு (பழ.) 6. நன்னிலை. மக்கி மணங் குலைந்து (ïuhkeh. உயுத். 81). மணமலி = மருக்கொழுந்து (மலை.) மள்-மறு. ஒ.நோ: வெள்-வெறு, வெள்ளிலை-வெற்றிலை. மறு - மறை. மறைதல் = 1. இருட்குட் புகுதல். 2. ஒளிந்துகொள்ளுதல். புதன்மறைந்து வேட்டுவன் புட்சிமிழ்த் தற்று (குறள். 274). 3. தோன்றா தொழிதல். ஞாயிறு குடமலை மறைய (நற். 239). மறைத்தல் = 1. ஒளித்தல். மறைப்பேன்மற் காமத்தை (குறள். 1253). 2 . மூடுதல். அற்ற மறைத்தலோ புல்லறிவு (குறள். 846). 3. தீது வாராமற் காத்தல். குடும்பத்தைக் குற்ற மறைப்பா னுடம்பு (குறள். 1029). மறை = 1. மறைகை. 2. மறைவுச் செய்திகள். நிறையெனப் படுவது மறைபிற ரறியாமை (கலித். 133). 3. மறைக்கை. வெயின்மறைக் கொண்ட (புறம். 60). 4. கேடகம் (அக.நி.). 5. பெண்குறி. “moÆ லிருந்த மறை மாண்பை (அருட்பா, 1, இங்கித. 94). 6. களவுப் புணர்ச்சி மறையல ராகி மன்றத் தஃதே (குறுந். 97). 7. உருக்கரந்த கோலம். மறைவல்லன் (சீவக. 2027). 8. மறைவிடம் (சங்.அக.). 9. புகலிடம். வாசவன்.......kiwòfhJ” (குற்றா. தல. தக்கன் வேள்வி, 44). 10. சிறைக்கூடம். “kiwÆil வந்து(கந்தபு. வீரவாகு சயந் 22). 11. வஞ்சனை. “kiwƉw‹ யாழ்கேட்ட மானை யருளாது (கலித். 143). 12. மறைபொருள் (இரகசியம்). புறப்படுத்தா னாகு மறை (குறள். 596). 13. மறைவாகச் செய்யும் மந்திரச் சூழ்வினை. இராம னருமறைக்கு (அகம் 70). 14. பொதுமக்கட்குத் தெரியாத மறை பொருள் கொண்ட மதவியல் அறிவுநூல். மறைமொழி தானே மந்திர மென்ப (தொல். செய். 176). 15. ஆரிய வேதம். அளபிற் கோட லந்தணர் மறைத்தே (தொல். பிறப். 20) 16. ஆரிய மெய்ப்பொருள் நூல் (உபநிடதம்). வேதத்து மறைநீ (பரிபா. 3: 66). 17. ஆரியத் தொழன்மறை (ஆகமம்). மறைமுறை யறிந்த வறிவினை கிழவரும் (ஞான. 35). 18. அறிவியல் நூல். நரம்பின் மறைய வென்மனார் புலவர் (தொல். நூன். 33). ஒ.நோ: கள்-கர்-கரு-கருமை, கள்-களவு, கள்-கர்-கர-கரவு. முட்டு-முட்டி-முடி. மாந்தரும் அஃறிணைப் பொருள்களும் மாந்தரை அல்லது அஃறிணைப் பொருள்களை முட்டுவது தலையாலேயே யாதலால், தலையும் தலைபோன்ற உச்சிப் பகுதியும் தலையிலுள்ள உறுப்பும் அணிகலமும் முடியெனப் பெயர் பெறும். முடி = 1. தலை. அதுவே சிவன் முடிமேற் றான்கண்டு (திவ். திருவாய். 2 : 8 : 6). 2. ஆடவர் உச்சிக் குடுமி (பிங்). 3. பெண்டிர் கொண்டை போடும் ஐம்பாலுள் உச்சியில் முடிக்கும் மயிர்க்கட்டு வகை (திவா.) 4.தலைமயிர். முடிக் காணிக்கை (உ. வ.) 5. மயிர். பன்றிமுடி (உ.வ.) 6.தலையிலணியும் மகுடம். ஞாயிற்றணிவனப்பமைந்த......òidKo” (பரிபா. 13 :2). 7. மலையுச்சி. முடியை மோயின னின்றுழி (கம்பரா. மீட்சி. 186). 8. தேங்காய்க் குடுமி (ahœ¥.). விலங்கு மயிரையும் முடியென்றது, மயிர் என்பது இடக்கர்ச் சொல்லாகி மயிரை முடியென்னும் இடக்கரடக்கல் வழக்கெழுந்த பிற்காலத்ததாகும். நாற்றுமுடி, மூட்டைமுடிச்சு முதலிய கூட்டுச்சொற்களிலுள்ள முடி யென்னும் சொல் வளைத்தல் அல்லது சுற்றுதல் என்பதை வேர்ப் பொருளாகக் கொண்ட வேறொரு சொல்லினின்று தோன்றியதாகும். நட்டமாக நிற்கும் பொருள்களின் உச்சிப்பகுதி அவற்றிற்கு முடிபோன் றிருத்தலால் அது முடியெனப்பட்டது. மலையுச்சி வான முகட்டை முட்டிக்கொண்டிருப்பதாகப் பாடவும் சொல்லவும் படுதல் காண்க. மலை முடிகளுள் உயர்ந்தது கொடுமுடி. முடி யென்னுஞ் சொல் ஒரு பொருளின் முடிவான இறுதிப் பகுதியைக் குறித்தலால், ஒரு வினை முடிதலைக் குறிக்கும் வினைச் சொல்லாகவும் அஃது ஆளப்பட்டது. “bfh©l குடுமித்தித் தண்பணை நாடே என்னும் 32ஆம் புறப்பாட்டடியில், உச்சிக் குடுமியைக் குறிக்குஞ் சொல்லே, சோழன் நலங்கிள்ளி fருத்திற்bகாண்டKடிபையுங்Fறித்தல்fண்க.Kojš = 1. இறுதியாதல். கூட்டம் முடிந்தவுடன் தலைவர் போய் விட்டார் (உ.வ.) 2. முற்றுப்பெறுதல். இவ் விதழுடன் செந்தமிழ்ச் செல்வியின் 50 ஆம் சிலம்பு முடிகின்றது. 3. நிறைவேறுதல். ``முட்டின்றி மூன்றும் முடியுமேல்'' (நாலடி. 250). 4. செய்ய முடிதல், இயலுதல். குறுகிய காலத்தில் என்னால் அதைச் செய்ய முடியாது (உ.வ.). 5. வாழ்நாள் முடிந்து இறத்தல். கயலேர் கண்ணி கணவனொடு முடிய (பு. வெ. 10, சிறப்பிற். 9, கொளு). 6. அழிதல். மூவேந்தர் குலமும் 16ஆம் நூற்றாண்டொடு முடிந்து விட்டது. ஒ.நோ: மாளுதல் = இறத்தல், செய்ய முடிதல்; இயலுதல். ம. Kof., க. முடி. முடித்தல் = 1. முற்றுவித்தல். நூல் முழுவதையும் மும்மாதத்திற்குள் எழுதி முடித்துவிட்டார் (உ.வ.). நின்னன்னை சாபமு முடித்தென் னெஞ்சத் திடர்முடித்தான் (கம்பரா.மிதிலை.88) 2. நிறைவேற்றுதல். ``அருந்தொழில் முடியரோ திருந்துவேற் கொற்றன்'' (புறம். 171). 3. அழித்தல். சேனையை....Ko¡Ft‹” (f«guh. மிதிலை. 98). முடி-மடி. மடிதல் = 1. சாதல். ``வல்லது மடிதலே யென்னின் மாறுதிர்'' (f«guh. அதிகா. 6). 2. அழிதல். ``குடிமடிந்து குற்றம் பெருகும்'' (FwŸ. 604). மடித்தல் = அழித்தல். ``முரனெலா மடிப்ப'' (கம்பரா. தாடகை. 35). முட்டு - மட்டு = 1. அளவு. ``மட்டுப்படாக் கொங்கை மானார்'' (கம்பர்). 2. நில அளவுவகை. 3. எல்லை. வடிவுக்கோர் மட்டுண் டாமோ (Phdth.njth. 1) 4. குத்து மதிப்பு. 5. அடக்கம். 6. சிக்கன அளவு. மட்டாய்ச் செலவடு (W.). 7. ஒப்பு. 8. சிறுமை. 9. தாழ்வு. 10. குறைவு. ஒன்றோடொன்று முட்டுகிற நிலையிலேயே, ஒன்றன் நீள அளவு தெரிதல் காண்க. k., bj., க. மட்டு. மட்டு - மட்டம் = 1. அளவு. 2. சமநிலை. 3. அளவுகோல். 4. எல்லை (W). 5. குத்துமதிப்பு (உத்தேசம்) (W). 6. ஒப்பு, சமவெண் (W). 7. சிறுமை. மட்டப் பூ (S. I. I. II, 184). 8. தாழ்வு, குறைவு. 9 அடக்கம். 10. செட்டு. 11. நடுத்தர நிலை. 12 சிறுதரக் குதிரை. 13 ஆணானைக் குட்டி (யாழ்ப்.). 14. ஒரே உயரமுள்ள நிலை. 15. வாழை, கரும்பு முதலியவற்றின் கன்று (W.). 16. மூன்றொத்துடைய தாளம் (சிலப். 3:151, உரை). 17. கேடகம். 18. பொன் மணியின் உறுப்புவகை (W.). க. மட்ட. மட்டக்கோல், மட்டங் கட்டுதல், மட்டச் சுவர், மட்டஞ் செய்தல், மட்டத்தரம், மட்டந் தட்டுதல், மட்டநூல், மட்டப்பலகை, மட்டப்பா (மொட்டை மாடி), மட்டப்பொன், மட்டம் பார்த்தல், மட்டம் பிடித்தல், மட்டம் போடுதல், மட்ட வேலைக்காரன், மட்ட விழைப்புளி, மட்டவேலை முதலிய வழக்குச் சொற்களை நோக்குக. இளமட்டம் = 1. குறுமட்டக் குதிரை. 2. இளம்பருவத்தோன். இளமட்டம்-இளவட்டம் = இளைஞன். மட்டு-மட்டி = 1. (தாழ்ந்த மதிநிலையுள்ள) மூடன் “m¿ahj..... மூடமட்டி (திருப்பு. 195). 2. பரும்படி. 3. மட்டிக்காரை. 4. மக்கு. 5. ஒழுங் கின்மை. 6. மட்டி வாழை (ehŠ.). மட்டித்தாள், மட்டித்தையல், மட்டிப்புடைவை, மட்டிவேலை முதலிய வழக்குகளை நோக்குக. bj., க. k£o(maddi). மட்டு-மட்டை = 1. பயனற்ற-வன்-வள்-து. ``இந்த மட்டைக் கிறுத்த தெல்லாம் போதும்'' (விறலிவிடு. 889). 2. மட்டமான நெல். 3. மட்டமான அரிசி. மட்டுக் கட்டுதல், மட்டுக்கு மிஞ்சுதல், மட்டுக் கோணம், மட்டுக்கோல், மட்டுத் தப்புதல், மட்டுத் திட்டம், மட்டுப்படுதல், மட்டுப் பிடித்தல், மட்டு மதிப்பு (மட்டு மரியாதை), மட்டு மதியம், மட்டு மருங்கு முதலிய வழக்குகளை நோக்குக. முத்துதல் (முட்டுதல்) = பொருந்துதல், ஒத்தல். முத்து(முட்டு)-மத்து (k£L) = அளவு. மத்து-மத்தி. மத்தித்தல் = அளவிடுதல். மத்தி-மதி. மதித்தல் = 1. அளவிடுதல். மண் விழைந்து வாழ்நாள் மதியாமை (திரிகடு. 29). 2. கருதுதல். ஆடலை மதித்தான் (fªjò. திருவிளை.1) 3. பொருட்படுத்துதல். மண்ணாள்வான் மதித்துமிரேன் (திருவாச 5:12). 4. ஊழ்குதல் (தியானித்தல்). “eªâa§ குரவனை மதிப்பாம் (விநாயகபு. கடவுள். 13). 5. துணிதல். தேர்மணிக் குரலென விவண்மதிக்குமன் (கலித். 126:7). மதி-வ. மதி, மிதி. OE., OS metan., OHG. mezzan, ON meta, Goth. metan, E. mete, to measure. மதி = 1. மதிப்பு. நீண்மதிக் குலிசம் (இரகு. யாகப் 92). 2. இயற்கை யறிவு. மதிநுட்ப நூலோ டுடையார்க்கு (குறள். 636). 3. பகுத்தறிவு. மதியிலி மடநெஞ்சே (திருவாச. 5 33). 4. அறியும் புலன் (intellect). 5. அறிவுடைமை. ``மதிமை சாலா மருட்கை நான்கே'' (தொல். மெய்ப். 7). மதி-மதம் = 1. மதித்தறிந்து கையாளும் நூல் நெறிமுறை. எழுவகை மதமே உடன்படல் மறுத்தல் பிறர்தம் மதமேற் கொண்டு களைவே தாஅ னாட்டித் தனாது நிறுப்பே இருவர் மாறுகோள் ஒருதலை துணிவே பிறர்நூற் குற்றங் காட்டல் ஏனைப் பிறிதொடு படாஅன் தன்மதங் கொளலே. (நன். பொதுப். 11) 2. அம்மை யிம்மை யும்மை(மறுமை) நிலைகளை மதித்தறிந்து கடைப்பிடிக்குங் கொள்கை. எ-டு: சிவமதம், திருமால் மதம், கடவுண் மதம். முத்துதல் = பொருந்துதல், கலத்தல். முத்து-மத்து = கலப்பு, கலக்கம், மயக்கம், மயக்கஞ் செய்யும் பித்தம், மயக்கந் தரும் கள், தீங்கள்ளாகிய தேன், பித்த முண்டாக்கும் ஊமத்தை. மத்து-மட்டு = 1. கள். வெப்புடைய மட்டுண்டு (புறம். 24). 2. தேன். மட்டுவா யவிழந்த தண்டார் (சீவக. 1145). மட்டுவார் குழலம்மை = மலைமகளின் பெயர்களுள் ஒன்று. 3. இன்சாறு. “fU¥òk£L வாய் மடுத்து (திருவாச. 5 : 80). 4. காமக் குடிப்பு. மட்டுடை மணமகள் (சீவக. 98). 5. மட்டு வைக்குஞ் சாடி. மட்டுவாய் திறப்பவும் (புறம். 113). 6 (தேனிற் குந் தீங்கள்ளிற்கு முரிய) நறுமணம். மட்டு நீறொடும் (இரகு. இரகுவுற். 23). மத்து-மத்தம் = 1. மயக்கம். மத்தமாம் பிணிநோய்க்கு (njth. 426 : 3). 2.வெறி, களிப்பு. மத்தக் கரியுரியோன் (âU¡nfh. 388). 3. யானை மதம் (திருக்கோ. 388, உரை). 4. செருக்கு (உரி. நி.) 5 கோட்டி (பைத்தியம்). மத்த மனத்தொடு மாலிவ னென்ன (திருவாச. 5: 3). 6. கருவூமத்தை. மத்தநன் மாமலரும் மதியும் வளர் (தேவா. 923 : 8). மத்தம்-வ. மத்த. மத்து-மது = 1. கள், மதுமறைந் துண்டோர் மகிழ்ச்சி போல (bjhš. பொருள். 114, ப. 495). 2. தேன். மதுவின் குடங்களும் (áy¥. 25:38). 3. இலுப்பைப்பூ முதலியவற்றினினறு காய்ச்சி யிறக்கும் வெறிநீர் (சங். அக.). 4. அமுதம் (சங். அக.). 5. இனிமை (அக.). 6. பராசம் (மகரந்தம்) (சங். அக.) 7.mâkJu« (மலை.). வ. மது (madhu), OE. meodu, MLG. mede. OHG. metu, ON. mjathr, E mead, alcoholic liquor of fermented honey and water. Gk methu, wine. L mel, honey. மத்தம்-மத்தன். 1. மதிமயக்க மடைந்தவன். இறந்தனர் போல வீழ்ந்த மத்தரை (பாரத. நிரை. 102). 2. பித்தன். மத்தனேன் பெறுமாய மலமாய (தாயு. பொன்னை. 35.). 3. பேரூக்க முள்ளவன். பித்தரின் மயங்கி மத்தரின் மதித்து (திருவாச. 153). 4. கொழுப்புள்ளவன். மத்தனி ராவணன் கொதித்தான் (ïuhkeh. உயுத். 44). மத்தன் - வ. மத்த மத்து-மத்தி-மதி = மயக்கஞ் செய்யும் திங்கள். இப் பொருள் வடமொழியில் இல்லை. ஒ.நோ: L. luna, moon. L. lunaticus-E. lunatic, insane person. E. lunacy, insanity. பண்டைக் காலத்தில், நிலவொளியாற் கோட்டியுண்டாவதாக ஒரு கருத்து உலக முழுதும் பரவியிருந்தது. மது-மதம் = 1. கள்(மது). 2. மதுக்களிப்பு (மலைபடு. 173, உரை). 3. nj‹....``kj§fkœ கோதை (சீவக. 2584). 4.வெறி (சங். அக.) 5. மகிழ்ச்சி. காதலி சொல்லிற் பிறக்கு முயர்மதம் (நான்மணி. 7). 6. செருக்கு. போரெதிர்ந் தேற்றார் மதுகை மதந்தப (gÇgh. 18 1). 7. வலிமை. படிமதஞ் சாம்ப வொதுங்கி (பரிபா. 4:18). 8. காம வேட்கைமிகுதி (திருக்கோ. 69,உரை). 9. யானைக்கடம், மதநீர் (சீவக. 2485). 10. நிலவளம் (W.) 11. காசறை (கஸ்தூரி) நறுமை. மாலையுஞ் சாந்து மதமு மிழைகளும் (gÇgh. 10 92). 12. கன்மதம். (தைலவ. தைல, 125). 13. வீரியம் (ahœ. அக.) 14. மிகுதி (யாழ் அக.). 15. பெருமை (யாழ். அக.). மது-மதுகை=1. வலிமை. ``அனைமதுகையர் கொல்'' (குறுந். 290). 2.அறிவு. ``வானுயர் மதுகை வாட்டும்'' (சீவக. 664). மது-மதுங்கு. மதுங்குதல் = இனிமையாதல். ``மதுங்கிய வார்கனி''. (திருமந். 2914) மதம் - மதன் = 1. கலக்கம் (யாழ். அக.). 2. மடமை. மதனுடை நோன்றாள் (திருமுருகு. 7, உரை). 3. செருக்கு மதனுடை நோன்றாள் (பட்டினப் 278). 4. வலிமை, மதனுடை முழவுத்தோள் (òw«. 50). 5. மன வெழுச்சி. மதனுடை நோன்றாள் (புறம். 75). 6. அழகு (பிங்.) 7. மாட்சிமை (பிங்.) 8. மிகுதி (யாழ். அக.). மதன்-மதனம் = 1. தேனீ (யாழ். அக.). 2. தேன்மெழுகு (யாழ். அக.). 3. மருக்காரை (மலை.). 4. பெருமிதம் (யாழ். அக.). 5. காமம் (பிங்.). 6. புணர்ச்சி விருப்பம் (பிங்.). 7. இளவேனில் (யாழ். அக.). 8. ஒரு சாம்பல் நிறக் கடல்மீன். 9. ஒரு வெண்ணிறக் கடல்மீன். மதம் - மதர். மதர்த்தல் = 1. களித்தல். ``மதுப்பருகிப் பருவாளை நின்று மதர்க்கு மருங்கெலாம்'' (கம்பரா. நாட்டுப். 24.) 2. மதங்கொள்ளுதல். ``மதர் விடையிற் சீறி'' (பு. வெ. 714). 3. செருக்குதல் (W.) 4. மரஞ்செடிகள் மட்டிற்கு மிஞ்சிக் கொழுத்தல். 5. செழித்தல். 6. மிகுதல். ``மதரரி மழைக்கண்'' (சீவக. 2803). மதர் = 1. யானை மதநீர் (நாமதீப. 207). 2. செருக்கு. ``அரிமதர் மழைக் கண்ணீர்'' (கலித். 77.). 3. மகிழ்ச்சி (திவா.). 4. மிகுதி (பிங்.). 5. வீரம் (அரு.நி.) மதர் - மதர்வு. 1. ஆசைப் பெருக்கம் (யாழ். அக.). 2. உள்ளக்களிப்பு (பிங்.). 3. இறுமாப்பு. 4. வலிமை (சூடா.). 5. செழிப்பு. 6. அழகு (சூடா.). 7. மிகுதி (திவா.). மதர் - மதர்வை = 1. மயக்கம். மதர்வை வெங்கதிர் பரப்பு கிடந்தென (சீவக. 322). 2. களிப்பு (பிங்.). 3. செருக்கு. மதர்வை நோக்கமும் (கந்தபு. தெய்வயா. 64.). 4. செழிப்பு. மதர்வைக் கொம்பு (சூளா. நகர. 25). மதர்வு - மதவு = வலிமை. மதவுநடை நல்லான் (அகம். 14). மதவு - மத. மதத்தல் = 1. மயங்குதல் (W.). 2. களித்தல். 3. செருக்குதல். 4. கொழுத்தல். 5. காம மிகுதல். 6. மதங்கொள்ளுதல். மிகவும் மதத்து மதம் பொழிந்து (ஞானவா. திருவா. 47). மத - வ. மத. மத = 1. மிகுதி. 2. வலிமை. 3. அழகு. 4. மடமை. மதவே மடனும் வலியு மாகும் (தொல். உரி. 79). மதவு - மதகு - மதங்கு - மதக்கு - மதக்கம். ஒ.நோ: மயங்கு -மயக்கு - மயக்கம். மதக்கம் = பேருண்டி, குடி, கஞ்சா முதலியவற்றா லுண்டாகும் மயக்கம். ஆறு மதக்கத்தினா லல்லவா எங்களை விழுங்காமல் விட்டிட்டது (அவிவே. கதை). 2 களைப்பு (யாழ். அக.). மதமதப்பு = 1. செழிப்பு (திருவிருத். 9, வியா. ப. 71). 2. திமிர் (W.). 3. உணர்ச்சியின்மை (W.). முல்5 (வளைதற்) கருத்து சாய்தல், கோணுதல், வளைதல், நெளிதல், மடங்குதல், திருகுதல், வட்டமாதல், முடிதல், சுற்றுதல், சுழலுதல், புரளுதல், உருளுதல், உருண்டையாதல், திரிதல், திரும்புதல், சூழ்தல் முதலிய பலவும் வளைதற் கருத்தொடு தொடர்புள்ளவையாம். முல்-வில் = வளைந்த வேட்டைக் கருவி. ஒ.நோ: முடுக்கு-விடுக்கு = (ஒரு சிறு மடக்குநீர்). வில்-விலா = வளைந்த நெஞ்செலும்பு அல்லது நெஞ்சக் கூடு. ம. வில், தெ. வில்லு, க. பில். முல்-முன்-முனி = வில் (திவா.) முனிநாண் கோத்து (உபதேசகா. பஞ்சாக். 96). முல்-மூல்-மூலை = 1. கோணம். ``மூலை முடுக்குகளும்'' (இராமநா. சுந். 3.) 2. மூலைத்திசை (W). 3. அறைமூலை. ``இருட்டறை மூலையிலிருந்த குமரி'' (திருமந். 1514). ம. மூல, தெ. மூல, க. மூலெ. மூலைக்குத்து = 1. முற்றத்து மூலைக்கு எதிராக வீட்டுத் தலைவாயில் நிலை அமைந்திருக்கை. 2. மூலைப் பார்வை. மூலைத்திசை = பெருந்திசைகட்கு நடுவேயுள்ள கோணத்திசை. மூலைப்பார்வை = 1. கோணத்திசையை நோக்கிய வீட்டுநிலை. 2. சாகுந்தறுவாயில் விழி ஒருபுறமாகச் செருகி நிலைக்குத்திடுகை. மூலைமட்டம் = 1. நேர்கோணம். 2. மூலை மட்டப்பலகை (கட்டட. நாமா) மூலை முடங்கி (மூலை முடக்கு) = வளைந்து செல்லும் சிறு வழி (W.). மூலையரம் = முப்பட்டையரம் (W.). மூலையோடு = முகட்டுச்சியில் வேயும் ஓட்டுவகை. மூலைவாசல் = தெருவிற்கு நேராகவன்றி ஒதுக்கமாயமைந்த வாயில். மூலைவாட்டு (மூலைவாட்டம்) = மூலை வாக்கு. மூலைவிட்டம் = நாற்கோணத்தின் எதிர்மூலைகளைச் சேர்க்குங் கோடு. முல்-முர்-முரு-முருகு = பிறைபோல் வளைந்த காதணி வச்ர முருகையெந்தக் கோனான்றன் கையிற் கொடுத்தானோ (ÉwÈÉL. 703). முரு-மரு-மரை = 1. திருகுவகை. 2. விளக்குத் திரியை ஏற்றியிறக்கும் திருகுக்காய். மரையாணி = திருகாணி. தெ. மர, க. மரெ. முரு-முரி. முரிதல் = 1. வளைதல். முரிந்து கடைநெரிய வரிந்த சிலைப்புருவமும் (மணிமே. 18:161). 2. வளைந்து ஒடிதல் (சூடா.) (fU«ò கம்பு முதலியவற்றை ஒடித்தற்கு அவற்றை வளைத்தல் காண்க.) 3.கெடுதல். இடைக்கண் முரிந்தார் பலர் (குறள். 473). 4.njhšÉíWjš. முற்றிய வமரர் சேனை முரிந்தன( விநாயகபு.34 :15). 5.ájWjš. பஞ்சினம் புகைமுரிந் தெழுந்தென விண்ணத் தலமர (கல்லா.7). 6. தளர்தல். முரிந்தநடை மடந்தையர்த முழங்கொலியும் வழங்கொலியும் (திருவிசை. கருவூ. 5:10). 7.தவறுதல். முரியுங் காலைத் தெரிய மற்றதிற் றட்டினள் (பெருங். வத்தவ. 12:99). 8. நீங்குதல். 9. நிலைகெடுதல். இடை முரிந்து வேந்தனும் வேந்து கெடும் (குறள். 899). 10. குணங்கெடுதல். ஒழுகுபால் கதிர்வெயிற் படமுரிந்து (âU¢brª. பிள்ளைத். செங்கீரை. 1). முரி = முரிதல் = வளைதலைச் செய்தல். ``புருவமும் முரி முரிந்தவே'' (Ótf. 2310). k., க. முரி. முரித்தல் = 1. வளைத்து ஒடித்தல். நன்சிலை முரித்திட் டம்பை வாடினன் பிடித்து நின்றான் (சீவக.2185). 2.தோற்கச் செய்தல் (ahœ. அக.). 3. அழித்தல். மதிலொடு வடவாயிலை முரித்து (âUthyth. 24:4). 4. திறை மையாக நடாத்துதல் (W.). வெட்டி முறித்தல் என்னும் வழக்கை நோக்குக. ம. முரிக்க, தெ. முரியு. முரி = 1. வளைவு. ``முரியா ரளகத் தடாதகை'' (திருவிளை.பயகர. 8). 2. துண்டு, 3. நொய்யரிசி. குத்திய வரிசி யெல்லா முரியறக் கொழிக்க வாரீர் (தக்கயாகப். 736). 4. முழுதிற் குறைவானது. மக்கண் முரியே (கலித். 94). 5.சிதைவு. (áy¥.25:146,mU«.). 6. எழுதிய ஓலைநறுக்கு. 7. இசைப்பாவில் இறுதிப்பகுதி (சிலப். 6:35, உரை). 8. நாடகக் தமிழின் இறுதியில் வருஞ் சுரிதகம் (தொல். பொருள். 444, உரை). k., bj., f., து. முரி. முரிவு = 1. மடிப்பு (யாழ். அக.). 2. வளைந்துஓடிகை. (யாழ். அக.). 3. சுருக்குகை. புருவ முரிவுகண் டஞ்சி (முத்தொள். களம்). 4. நீங்குகை. இளையர் மார்ப முரிவில ரெழுதி வாழும் (சீவக. 372). 5.tU¤j«. பாவைமார் முரிவுற் றார்களின் மூர்ச்சனை செய்பவால் (சீவக. 1627). 6. சோம்பு (அரு. நி.). முரு-முறு-முறுகு. முறுகுதல் = (செ.கு.வி.) 1. திருகுதல் (பிங்). 2. விரைதல். முறுகிய விசையிற் றாகி (சீவக. 796). 3. முதிர்தல். ``கனிமுறுகி விண்டென (சூளா.சீய. 7). 4. மிகுதல். “nt£ifÆ‹ முறுகி யூர்தர (சீவக. 1183). 5. கடுமையாதல். “btÆ‹ முறுக (நாலடி.171). 6.காந்திப்போதல். 7.செருக்குதல். “tiubaL¡f லுற்று முறுகினான் (தேவா. 289 : 10). (செ. குன்றாவி.) மீறுதல் (பிங்.). ம. முறுகு. முறுகு-முறுகல் = 1. திருகல். திருகல் முறுகல், பிரண்டைபோலத் திருகல் முறுகலானது (உ.வ.). 2. மிகுதியாக வெந்தது. தோசை யொன்று முறுகலாகப் போடு (உ.வ.). முறுகு-முறுக்கு. முறுக்குதல் = (செ. குன்றாவி.) 1. கயிறு முதலியன திரித்தல். ``வாய்மடித் திரண்டு கையு முறுக்கி'' (கம்பரா. மருத்து. 10). 2. முறுக்காணியைத் திருகுதல். 3. மிகைபட முறுக்கியொடித்தல். ``பிடிபடி முறுக்கிய பெருமரப் பூசல் (அகம். 8). 4. சுழற்றுதல். ``முறுக்கிவிட்ட குயமகன் றிகிரிபோல'' (சீவக.786). 5. வெற்றிலை சுருட்டி யுண்ணுதல். (நாஞ்.). 6. கை கால்களைப் பிசைந்து தேய்த்தல் (W.) (br. கு. வி.). 1. செருக்குதல். 2. மாறுபடுதல். 3. சினத்தல் (யாழ். அக.). k., க. முருக்கு, தெ. முரக்கட்டு. முறுக்கு = 1. திரிக்கை. 2. திருகாணிச் சுற்று. 3. முறுக்கிச் சுட்ட பலகாரம். அடைமுறுக்கு (விநாயகபு. 39 : 39). 4. இதழ் முறுக்குள்ள அரும்பு. ``முறுக்கு டைந்தலர் மலர்களும் (காஞ்சிப்பு. திருக்கண். 180). 5. நூலுருண்டை. 6. வலிப்பு (இலக். அக). 7. நெறிப்பு (W). 8 கடுமை (இலக். அக). 9. மாறுபாடு (W). 10. செருக்கு. 11. மிடுக்கு. கிழமாய் நரைத்து முகந்திரைந்து மிந்த முறுக்கேன் (தனிப்பா. I, 88 : 173). முறுக்கு-முறுக்கம் = 1. திருகல். 2. முடுக்கு. 3. கடுமை. முறுக்கு-முறுக்கி = முறுக்குங் கருவி. வில்லை முறுக்கி = ஒரு கருவி (spanner). முறுக்கவரை, முறுக்காணி, முறுக்குமீசை, முறுக்கு வட்டம், முறுக்கு விரியன் முதலிய கூட்டுச் சொற்கள் முறுக்கவியல் பற்றியன. முறுக்கு-முறுக்கான் = 1. முறுக்கிய புகையிலை. 2. புகையிலையுடன் போட்டுக்கொள்ளும் தாம்பூலம் (நாஞ்.). ம. முறுக்கான். முறு-முற்று. முற்றுதல் = 1. சூழ்தல். பாண்முற் றுகநின் னாண்மகி ழிருக்கை (புறம். 29). 2. கோட்டையைச் சூழ்ந்து பொருதல். “K‰¿a வகத்தோன் வீழ்ந்த நொச்சியும் (தொல். புறத். 13). க. முத்து. முற்று = முற்றுகை. ``முற்றியார் முற்றுவிட'' (பு. வெ. 6 25). முற்றுகை = 1. சூழ்கை. 2. கோட்டையைப் பகைவர் படை வளைக்கை. 3. நெருக்கடி (W.). முற்றுகை-முற்றிக்கை = 1. கோட்டையைப் பகைவர் படை வளைக்கை. 2. நெருக்கடி நிலைமை. சாப்பாட்டிற்கு மெத்த முற் றிக்கையாயிருக்கிறது (இ.வ.). தெ. முத்ததி, க. முத்திகெ (g). முற்றிக்கை-முற்றிகை = கோட்டையைப் பகைவர் படை வளைக்கை. முறுகு-மறுகு. மறுகுதல் = 1. சுழலுதல். மறுகக் கடல்கடைந்தான் (â›. இயற். 2 68). 2. பலகாலுந் திரிதல். மலிவன மறுகி (F¿Šá¥. 97). 3. மனங்கலங்குதல். நெஞ்சின் மறுகல் நீ (சீவக. 946). 4. வருந்துதல். கிடந்துயிர் மறுகுவ தாயினும் (அகம். 29). 5. சிதைதல். குடன் மறுகிட (கம்பரா. இந்திரசித். 19). 6. அரைபடுதல் நறுஞ் சாந்து மறுக (மதுரைக். 553). மறுகு-மறுக்கு மறுக்குதல் = 1. மனத்தைக் கலக்குதல். ``மறுக்கி வல்வலைப் படுத்தி'' (திவ். திருவாய். 4 : 9 : 6). 2. எண்ணெய் முதலியவற்றால் தொண்டை கரகரத்தல் (இ.வ.). மறுக்கு = மனக்கலக்கம். மறுக்கினோ டிரியல் போயுற (``கம்பரா. பள்ளிபடை. 109). மறுக்க-மறுக்கம்=1. சுழற்சி. 2. மனக்கலக்கம் மன்பதை மறுக்கத் துன்பங் களைவோன் (பரிபா. 15 52). 3. துன்பம். திறைகொடா மன்னவரை மறுக்கஞ் செய்யும் பெருமையார் (தேவா. 17 : 4). மறுகு-மறுகல் = 1. சுழற்சி. 2. கலங்குகை. ``பேதையேன் நெஞ்சம் மறுகல் செய்யும்'' (திவ். திருவாய். 9 4 4). 3. நோய் திரும்புகை (W.). மறுகல்-மறுகலி. மறுகலித்தல் = நோய் திரும்புதல் (யாழ். அக.). முறு-முறி. முறிதல் = 1. வளைந்து ஒடிதல். ``அச்சு முறிந்ததென் றுந்தீபற'' (திருவாச. 14 : 2). 2. தோற்றல். 3. நிலைகெடுதல். ``அரக்க னெடுத்து முறிந்து (பெரியபு. திருஞா. 77). 4. அழிதல். ``வீரமுறிந்த நெஞ்சினர்'' (விநாயகபு. 79 : 66). 5. தன்மை கெடுதல். பால் முறிந்து போயிற்று (உ.வ.). 6. பதந் தப்புதல். நெய் முறியக் காய்ந்ததனாற் கசக்கின்றது (உ.வ.). 7. பயனறுதல். இரசம் முறிய மருந்து சாப்பிடுகிறது (W.). 8. குலைதல். 9. அருள் மாறுதல். ம. முரிக, தெ. முரிக்கொனு. க. முரி.. முறித்தல் = 1. ஒடித்தல். ``பொருசிலை முறித்த வீரன் ``பாரத கிருட்டிண. 141). 2. கிழித்தல். வேட்டியை இரண்டாக முறி (உ.வ.). 3. நிறுத்தி விடுதல். ஏலச்சீட்டை முறித்துவிட்டான் (உ.வ.). 4. தன்மை மாற்றுதல். ``ஆசைப்பிணி பறித்தவனை யாவர் முறிப்பவர் (f«guh. அங்கத. 18). 5.நெசவுத்தறியில் உண்டை மறித்தல். 6. பெருவினைகளைச் செய்து முடித்தல். நீ பலவற்றை வெட்டி முறித்து விட்டையோ? (உ.வ.). முறி = 1. துண்டு. ``கீண்ட வளையின் முறியொன்று கிடப்ப ``ஞானவா. சிகித். 107). 2. உடைத்த தேங்காயிற் பாதி. தேங்காய் முறி. 3 பாதி. 4. ஆவணம். ``மோகவாசை முறியிட்ட பெட்டியை'' (தாயு. சிற்ப. 1). 5. ஓலைப் பற்றுமுறி. 6. துணி. ``கொள்ளிமுறிப் பாதியேது'' (அரிச் பு. மயான 41). 7. நகர்ப்பகுதி, சேரி (பிங்.). 8. அறை (நாஞ்.). 9. உயர்ந்த வெண்கலம். முறி - மறி. மறிதல் = 1. மடங்குதல். 2. முறுக்குண்ணுதல். திரிந்து மறிந்துவீழ் தாடி (கலித். 15). 3. கீழ்மேலாதல். மலைபுரை யானை மறிந்து (பு. வெ. 7:9). 4. திரும்புதல், மீளுதல். மறிதிரை (fȤ. 121). 5. முதுகிடுதல். மைந்தர் மறிய மறங்கடத்து (பு. வெ. 6:14). 6. சாய்தல். எரிமறித் தன்ன நாவின் (சிறுபாண். 196). 7. விழுதல் நிழன்மணிப் பன்றி யற்று மறியுமோ (சீவக. 2201). 8. பலகாலுந் திரிதல். நயனாடி நட்பாக்கும் வினைவர்போன் மறிதரும் (கலித். 46). 9. நிலைகுலைதல். ஆம்பன் முகவரக்கன் கிளையொடு மறிய (கல்லா. கணபதி வாழ். 10. அறுபடுதல். ``உன் காது மறியும் (திவ்.பெரியாழ் 2 3 6, அரும்.). 11. தடைப்படுதல். 12. சாதல். மறிந்த மகன்றனைச்சுட (அரிச். பு. மயான. 38). மறித்தல = 1. திருப்புதல். 2. திரும்பச் செய்தல். 3. கீழ் மேலாக்குதல் (W.) 4. தடுத்தல். ``மறுபிறப் போட மறித்திடுமே (âUthr. 36:2). 5. கிடை யமர்த்தல். நன்செய்க்கு மூன்று கிடை மறிக்க வேண்டும் (உ.வ.). 6. தடுத்தற் குறியாகக் கையசைத்தல். “kh‰wU§ கரதல மறிக்கு மாறு (கம்பரா. உண்டாட். 21). மறி = மறியல். மறிகால் = மறுகால். மறிசல் = அணை. மறித்து = திரும்ப. மறித்தாங் கிழிந்து (மணிமே.10:88). மறித்தும் = திரும்பவும், மீண்டும் வேலானை மறித்துங் காண்க (Ótf. 1225). மறிதரல் = மீளுகை. (பிங்.). மறிந்து - மீண்டும். மறிந்து வந்தனரே மாற்றோர் (பெருங். மகத. 19 : 80). மறிப்பு = மறியல். மறிபடுதல் = 1. தடுக்கப்படுதல். 2. இடையூறுபடுதல். (nfhÆbyh. 13). மறியல் = 1. வணிகம், தொழில், கல்வி, போக்குவரத்து முதலியன நடைபெறா வண்ணம் தடுத்தல். 2. சிறைக்கூடம். மறிவு = 1. திரும்புகை. ``மறிவிலாச் சிவகதி'' (அருட்பா, ப, செவி a¿.6)nfL. (ஐங். அரும்.). முறு - முறை = 1. வளைவு. 2. வேலையாள் திருப்பம் (turn).”பணிமுறை மாற முந்துவர் (கம்பரா. ஊர்தேடு. 49). இன்று குழாய்த் தண்ணீர் பிடிக்க வேண்டியது யார் முறை? (உ.வ.) 3. தடவை. எழுமுறை யிறைஞ்சி (சீவக. 3052). 4. அடைவு. “KiwKiw...fÊíÄ› வுலகத்து (புறம்.29). 5. ஒழுங்கு. ``முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணி'' (தொல். சி. பாயி.). 6. ஊழ். “MUÆ® முறைவழிப் படூஉம்'' (புறம். 192). 7. ஒழுக்கம். “KiwÆ லோயைத் தென்புலத் துய்ப்பன் (கம்பரா. வாலிவதை. 177). 8. கற்பு. முகிழ்மயங்கு முல்லை முறைநிகழ்வு காட்ட (பரிபா. 15:39). 9. உறவு. பொருட்டுமுறை யாதியின் (நன். 298). 10. மணஞ்செய் யுறவு. முறை மாப்பிள்ளை. முறைப்பெண், முறைகாரன்.11. உறவுமுறைப் பெயர். பெரியாரை யென்று முறைகொண்டு கூறார்'' (ஆசாரக். 91). 12. நேர்மை, முறைகேடு. 13. செங்கோல் நெறி. முறைகோடி மன்னவன் செய்யின் (குறள். 559). 14. நெறிமுறை. காக்கைப் பனம் பழமுறை (காக தாலீய நியாயம்). 15. நூல் வகுப்பு. பன்னிரு திருமுறை. 16. கட்டளை நிறைவேற்றுகை. முறைசெய்வோர்.17. தன்மை. முத்தீப் பேணும் முறையெனக் கில்லென (மணிமே. 22:48). 18. உரிமை. முறைமை யென்பதொன் றுண்டு (கம்பரா. நகர்நீங்கு. 5). ம. முர, க. முரெ, தெ. மொர. முறைவன்=1. இறைவன். நான்மறை முக்கண் முறைவ னுக்கே (gâbdh. பொன்வண். 52). 2. பாகன். ``மேலியன் முறைவர் நூலிய லோசை (பெருங். உஞ்சைக். 44 : 79). முறை-மிறை=வளைவு. மிறைக்கொளி திருத்தினானே (சீவக. 284). மிறைக்கொளி திருத்துதல் = படைக்கலத்தின் வளைவு நீக்குதல். ``மிறைக் கொளி திருத்துவார்'' (சீவக. 2293). மிறைக்கொளுவுதல் = படைக்கல வளைவு. நீக்குதல். ``எஃக மிறைக் கொளீஇ'' (பு. வெ. 8 21). ஒ. நோ: முண்டு-மிண்டு, முடுக்கு-மிடுக்கு. முறு-மறு. மறுத்தல் = செ.குன்றாவி.) 1. திருப்புதல். 2. திரும்பச் செய்தல். 3. மாற்றுதல். 4. தடுத்தல். ``மறுத்து மறுத்து மைந்தர் சார'' (கலித். 104). 5. தடை கூறுதல் (ஆட்சேபித்தல்). உடன்படல் மறுத்தல். (நன்.11). 6. நீக்குதல். கொல்லான் புலாலை மறுத்தானை (குறள். 260). 7. இல்லை யென்னுதல். ``அவர்மறுத் தகறல் காணா'' (கம்பரா. மிதிலைக். 125). (செ. கு. வி.) இல்லாமற்போதல். ``இப்பேறுதான் ஒருநாளுண்டாய் மற்றை நாள் மறுக்கையன்றிக்கே.'' (ஈடு, 2: 7: 7). மறு - மறுப்பு = 1. மறுக்கை.2. எதிர்க்கை. 3. கண்டனம். 4. மறுவுழவு. (ahœ¥.). 5. முன்னுழுத சாலுக்குக் குறுக்காக வுழுகை (நாஞ்.). மறுப்ப = ஓர் உவம வுருபு மாற்ற மறுப்ப ஆங்கவை யெனாஅ (bjhš. உவ. 11). மறுத்தருதல் = திருப்பல், மீட்டல். மையற்ற படிவத்தான் மறுத்தர லொல்வதோ (கலித். 15). மறுத்தரவு = திருப்புகை, மீட்கை. யாதொன்று மென்கண் மறுத்தர வில்லாயின் (கலித். 81). மறுத்தரவு - மறுதரவு = மீட்கை. மறுதர வில்லாளை யேத்திநாம் பாட (சிலப். 24, பாட்டுமடை, இறுதி). மறுக்க = திரும்பவும். மறுக்க நீ வரக்கூடாது (உ.வ.). மறுத்து = 1. திரும்ப, மீள. மறுத்தின்னா செய்யாமை மாசற்றார் கோள் (குறள். 312). 2. மறுபடியும் மறுத்துக் கேள்வி கொள்ள வேண்டாதபடி (ஈடு, 1 3 3). 3. திரும்பவும், மேலும். மறுத்து மின்னுமொன் றுரைத்திடக்கேள் (அரிச். பு. சூழ்வி. 128). மறுத்துரைத்தல் = தடை கூறுதல், எதிர்த் துரைத்தல். மறுத்துரைப் பதுபோ னெஞ்சொடு புணர்த்தும் (தொல். பொரு. 2). மறுத்துப் போதல் = 1. ஆவு கறவை நின்று போதல் (W). 2.ku« காய்ப்பு நின்று போதல் (W). மறு - மறை = 1. மறுப்பு. 2. எதிர்மறை. தொழாநிர் என்பது மறையின்றித் தொழுது என்று பொருள் தருமேனும் உணர்க. (மலைபடு. 231, உரை). 3. விலக்குகை. பொய்ம்மை புலாற்கண் மறையுடைமை (ஏலாதி.6). எதிர்மறு - எதிர்மறை. மறுக்களித்தல் = 1.மறுத்தல். 2. நோய் திரும்புதல். மறுக்களித்துப் பேசுதல் = தான் சொன்னதை மறுத்துப் பேசுதல் (உ.வ.) மறுதலை = 1. எதிர்க் கட்சி. தன்னை மறுதலை பழித்த காலையும் (e‹. 53). 2. எதிரியின் கொள்கை. மறுதலைக் கடாஅ (தொல். மரபு. 105). 3. எதிர்ப்பொருள். இன்மை யன்மை மறுதலை யென்னும் முப்பொருள் (சி. போ. சிற்.2 1, ப.34). 4. பகைவர். மறுதலை சுற்ற மதித்தோம்பு வானேல் (ஏலாதி,16). 5. நிகர். “mÇkhɉF மறுதலை போல்வா ரொருவர் (திருக்கோ. 225), உரை). 6. இரண்டாமுறை. மறுதலை இங்கு வராதே (உ.வ.). மறுதலைத்தல் = (செ. கு. வி.) எதிரிட்டுத் தோன்றுதல். நாணமுத னான்கு மண்டி யொருசார் மறுதலைப்ப (திருவிளை. வளையல். 23). (br. குன்றாவி.) மறுத்தல். மறுதலைத் துரைக்கு மெல்லை (mÇ¢. பு. நகர்நீ.146). மறுதலைக்காய் = பருவ விளைச்சற்குப் பின் காய்க்கும் காய்கறி முத லியன. மறுதலைப் பெண் = மறுமனைவி. ``அரவ மறுதலைப் பெண் கூட்டுவிக்கும்'' (சினேந். 267). மறுதாய் = மாற்றாந்தாய். மறுநாள் = அடுத்த நாள். ம.மறுநாள், தெ. மறுநாடு. மறுபடி = 1. திரும்ப. 2. மற்றொரு படி (copy). 3. விடை (நாஞ்.) மறுமாடி = மாடிக்கு மேல்மாடி. வீட்டிற்கு மறுமாடி வைத்துக் கட்டியிருக்கிறான். மறுமாலை சூடுதல் = கணவனின் அறுபான் விழாவில் நடைபெறும் மாலை மாற்றுச் சடங்கு. மறுமாற்றம் = மறுமொழி. மறுமாற்ற மற்றொருவர் கொடுப்பாரின்றி (பெரியபு. திருஞான. 474). தெ. மருமாட்ட, க. மருமாத்து. மறு - மறுவல் = திரும்ப. மறுவலும் = திரும்பவும். மறுவலும் புல்லிக் கொண்டு (சீவக. 1052). மறுவலிடுதல் = 1. திரும்புதல். ``பின்னை மறுவவிடாதிறே'' (ஈடு, 2: 10:8). 2. சிறிது எஞ்சி நிற்றல். மல்லிகை....... கமழ்தென்றல் மறுவலிடுகையாலே (ஈடு, 10: 3: 5). மறு-மற்று = (கு. வி. எ) 1. மறுபடியும் (W.). 2. பின். 3.வேறு. 4. மற்றப்படி. (ïil¢brhš) 1. வினைமாற்றுக் குறிப்பு. 2. பிறிதுப்பொருட் குறிப்பு. 3. அசைநிலை. மற்றென் கிளவி வினைமாற் றசைநிலை (தொல். இடை. 14) வினைமாற் றசைநிலை பிறிதெனு மற்றே (நன். 433) ஒ. நோ: Gk. meta, after, occasionally with sense ‘change.’ மற்று-மற்ற = பிற, வேறு. மற்று-மற்றும் = 1. மேலும். 2. மீண்டும். ``உடைமை மயலாகும் மற்றும் பெயர்த்து (குறள். 344). மற்று-மற்றையது = மற்றது. “k‰iwa தென்பது சுட்டிய தற்கினம் (e‹.434). மறு-மாறு. மாறுதல் = (செ.கு.வி.) 1. வேறுபடுதல். மாறா மனங் கொண்டு (திருநூற்.47). 2. பின்வாங்குதல். சூன்மகள் மாறா மறம்பூண் வாழ்க்கை (பெரும்பாண். 136). 3. குறைதல். நோய் கொஞ்சம் மாறியிருக்கிறது (உ.வ.). 4. இடம் வேறுபடுதல். 5. நீங்குதல். “cw¡f« மாறினான் (கம்பரா. ஆறுசெ.7). 6. முதுகிடுதல். “khwh மைந்தின் (மலைபடு. 332). 7. கூத்தாடுதல் (பிங்.) 8. இறத்தல். இவ்வான்மாக்கள் மாறிப் பிறந்துவரும் (சி.போ.சிற். 2 3,g.47). 9. இல்லையாதல். பரப்பு மாறப் பூத்துக் குளிர்ந்த புனலை (ஈடு, 2 : 8 : 2). 10. பொய்படுதல். நாவிற் புனைந்த நன்கவிதை மாறாமை (பரிபா. 6 :8). (br.F‹whÉ). 1. விற்றல். நாண்மோர் மாறும் (பெரும்பாண். 160). 2. பணி செய்தல். முன்னின பணிமுறை மாற KªJth®”(f«guh. ஊர்தேடு. 49). 3. பிறனுக்குதவுதல். பனவனுக்காப் பாமாறி யார்க்கு (குமர.பிர. மீனாட். இரட். 5). 4. கழித்தல் “”khW மென்மலரும் (பரிபா. 6: 46). 5. கைவிடுதல். புரிபுநீ புறமாறி (கலித். 15). 6. மறுத்தல் (யாழ்ப்.). 7. எண் பெருக்குதல். ஐம்பாலும் பொதுவுமான ஆறானும் மாற நூற்றெட்டாம் (நன். 269, மயிலை). 8.அடித்தல் (இ.வ.). க. மாறு. மாறு = 1. வேறுபாடு. மாறிலாத மாக்கருணை வெள்ளமே “(âUthr. 5:91). 2. எதிர். அவன் எதற்கும் மாறாயிருக்கிறான். 3. பகை. மாற்றிரு வேந்தர் (புறம். 42). 4. ஒவ்வாதது. ``மாறல்ல துய்க்க'' (குறள். 944). 5. ஒப்பு. மாறன்மையின்........ïisaiuík எறியான் (சீவக 2261). 6. மாற்றுருப்படி. மாறு சாத்தி யென்பிழை பொறுப்பீர் (பெரியபு. அமர்நீதி. 24). 7.எதிர்நன்¿ (ãuâígfhu«). வழக்கொடு மாறுகொளன்று (திவ். இயற். பெரிய திருவந். 13). 8. மறுமொழி. மாறெதிர் கூறி மயக்குப் படுகுவாய்'' (கலித் 116:15). 9. இம்மை நீங்கும் இறப்பு. “”efhmbyd வந்த மாறே (புறம். 253). 10. இறப்பின் பின் பிறப்பு. மாற்றிடைச் சுழலும் நீரார்'' (மேருமந். 136). 11. குப்பை கூளம் நீக்கும் துடைப்பம். சல்லிகளை மாறெடுத்துத் தூர்த்தும்'' (gzÉL. 285). 12. துடைப்பம்போ லுதவும் பருத்தித்தூறு. 13. தூறுபோன்ற வளாறு. (W.). 14 வளாறு போன்ற பிரம்பு. “kh‰w லாற்றுப் புடையுண்டும்'' (சீவக. 2794). 15. kறுதல் நேரும் வகை. ``És§f¡ கேட்ட மாறுசொல்'' (புறம்.50). (ïil¢brhš). 1. ஏJ¥ பொருளிடைச் சொல். அனையை யாகன் மாறே (òw«. 4.). 2. தொறுப்பொருளிடைச் சொல். பகல் மாறு வருகி றான் = பகல்தொறும் வருகிறான். மாறு - மாறன் = 1. வலிய பாண்டியன். ``பூந்தார் மாற'' (புறம்.55)2.rl¤â‰F மாறான நம்மாழ்வார் (சடகோபன்). ``சடகோபன் மாறன்'' திவ். திருவாய். 2:6:11). 3. மாற்றான். ``வல்வினைக்கோர் மாறன்'' (திருவரங்கத்தந். காப்.5). மாறு-மாறல் = ஏது, கரணியம் (முகாந்தரம்) (W). மாறு - மாற்று = 1.வேறுபடுத்துகை. 2. ஒழிக்கை. ``மாற்றே மாற்ற லிலையே'' (பரிபா. 4:53). 3. மாற்று மருந்து. 4. பண்டமாற்று. 5. விலை (யாழ். அக). 6. மாற்றுடை. 7. மங்கல அமங்கல நாள்களிற் பந்தற்குக் கட்டும் வண்ணான் துணிகள். 8. பொன்வெள்ளி உரைமாற்று. ``மாற்றள வற்ற பொன்னுடுத்தாய்'' (அட்டப் அழகரந். 2). 9. உரைமாற்று நிறம். (ஈடு,4. 3. 7 ஜீ). 10. எதிர் (யாழ். அக.). 11. ஒப்புமை. ``மாற்றிரி யாடிப் பாவையோடு'' (ஞானா. 6:20). 12. வலிமை. ``மாற்றாரை மாற்றழிக்க வல்லாளை'' (திவ். திருப்பா.15). 13. ஓரேர் மாடு ஒருநாளில் உழக்கூடிய நிலம் (W.). மாற்று - மாற்றம் = 1. மாறுபட்டநிலை. மாற்றமாம் வையகத்தின் (âUthr. 1:81). 2. வஞ்சின மொழி. மாற்ற மாறான் மறலிய சினத்தன் (புறம். 341). 3. பகை. மாறுகொ ளுழுவையு மாற்றந் தீர்ந்தவே (நைடத. கான்புகு. 3). 4. கடிவு (பரிகாரம்). 5. மாறிச் சொல்லும் விடை. மறுதலைக் கடாஅ மாற்றமும் (bjhš. மரபு.105). 6. சொல். விடுமாற்றம் வேந்தர்க் குரைப்பான் (குறள்.689.). மாற்றம்.....brhšny” (நன். 458). 7. பேச்சு. மாற்ற முரைக்கும் வினை நலம் (நான்மணி. 45). தெ. மாட்ட, க.மாத்து, மாத்தனு, பட. மாந்த். ஒ.நோ: It. motto, word, F. mot (mo), word, saying. முல் - முள் - முண் - முண - முணவு - முணகு - முணங்கு. முணங்குதல் = 1.உள்வளைதல். உள்ளடங்குதல். 2. அடங்குதல் (W.). 3. குரலையடக்கிப் பேசுதல். முணங்கு = 1. சோம்பலால் ஏற்படும் உடம்பு வளைபு, முடக்கம், சோம்பு (இலக். அக.). 2. அடக்கம் (சூடா.). முணங்கு நிமிர்தல் = உடம்பை நீட்டிச் சோம்பல் முறித்தல். முணங்குநிமிர் வயமான் (புறம். 52), முணங்குநிமிர்ந் தளைச்செறி யுழுவை யிரைக்குவந் தன்ன (புறம். 78). முணங்கு - முணக்கு முணக்குதல் = உள் வளைத்தல். வள்ளுகிர் முணக்கவும் (நற். 114). முரி = வளைவு. முரி-மூரி = சோம்பல் முறித்தல். மூரிநிமிர்தல் = உடம்பை நீட்டிச் சோம்பல் முறித்தல். முணகு-முனகு. முனகுதல்=குரலையடக்கிப் பேசுதல். முணகு-முனங்கு. முனங்குதல் = 1. குரலையடக்கிப் பேசுதல். முணுமுணுத்தல். 2. புலம்புதல். 3. முறுமுறுத்தல். ஒ.நோ. OE moen, obs. mean, E. moan, to make a long low murmur of physical or mental suffering, to complain, to lament misfortune, to lament for dead person. முண் - மண் - மாண் = மடங்கு. பன்மாண் (பரிபா. 13:62). ஒ.நோ: E. fold = மடி. மடங்கு. மண் - மணி1 = (வட்ட வடிவான பொருள்கள்) 1. நாழிகை வட்டில். 2.xU நாழிகை நேரம். 3. கோபுர நாழிகை மணி. 4. நாழிமணி. 5. கைம்மணி. 6. பெருவட்ட மணிப் பலகை (gong). 7. சிறுவட்ட மணிப் பலகை (சேகண்டி). 8. அறுபது நிமைய நேரம் (ï¡.). 9. கடிகாரம் (இக்.). 10. மணிக்கூண்டு. மணி2 = (உருண்டை வடிவான பொருள்கள்) 1. கண்மணி. ``கருமணியிற் பாவாய்'' (குறள். 1123). 2.பொன்மணி. ``மணியிரு தலையுஞ் சேர்த்தி'' (சீவக. 977). 3. பாசிமணி. 4. கூலமணி. 5. உருத்திராக்கமணி. ``மாசிலாத மணிதிகழ்மேனி'' (பெரியபு. திருக்கூட்ட. 6). 6. சிறுமணியரிசி. 7. பெருமணியரிசி. 8. வலையோரத்திற் கட்டிய குண்டு. ``இனமணி விளிம்புறக் கோத்து'' (திருவாலவா. 22: 13). 9.Û‹tiy முடிச்சு. மணிவலை. 10. நண்டு, தேள் முதலியவற்றின் கொடுக்குமணி. முள்-முட்டு-முட்டை = 1. உருண்டையான பறவை முட்டை. ``புலவுநாறு K£ilia.....கிH§bfhL பெறூஉம்'' (புறம். 176). 2. உலகக் கோளம். ``திசைமுகன் செய்த முட்டை கீண்டிலது'' (கம்பரா. திருவடி. 66). 3. சாணியுருண்டையை வட்டமாகத் தட்டிக் காயவைத்த வறட்டி. ``நெருப்புக்கு முட்டையும்'' (அருட்பா, 1. திருவருள். 105). 4. வட்டச் சிறுகறண்டி. ``ஒரு முட்டை நெய்'' (பதினொ. கோடித். 16). ம. K£il., க. K£bl., முட்டைக்கண், முட்டைக் கண்ணீர், முட்டைக் கத்தரி, முட்டைக் காளான், முட்டைக் கோசு முதலிய காட்டுச் சொற்கள் உருண்டை வடிவான பொருள்களைக் குறிப்பன. முட்டு-முட்டான் = 1. மஞ்சட்கிழங்கு. 2. திருநீறு நீற்றுவதற்குரிய சாணவுருண்டை. திருநீற்றிற்கு முட்டான் போடு (உ.வ). முட்டு-முட்டி = பேய்க் கொம்மட்டி. முள்-முண்டு = உருண்டகட்டை, முண்டும் முடிச்சும். முண்டு-முண்டான் = மஞ்சட்கிழங்கு. முண்டு-முண்டை= 1. முட்டை. முண்டை விளைபழம் (பதிற். .60:6). 2. கருவிழி. முண்டை-மிண்டை = கருவிழி. ``விழித்திருக்க மிண்டையைக் கொள்வான் (fȤ. 108, உரை). முட்டு - முத்து = உருண்டையான விதை. குருக்குமுத்து. குறுமுத்தம் பழம் = நீளுருண்டை வடிவான மிதுக்கம்பழம். முண்-முணம்-முடம் = 1. வளைவு. முடத்தொடு துறந்த வாழா வன்பகடு (புறம்.307) 2. வளைந்தது. முடத்தாழை(கலித். 136). ``அல்லோர்க் களிக்கு மது முடத் தெங்கே (நன்.35). 3. கைகால் வளைவு. 4. ஆடல் பாடல் முதலியவற்றின் குற்றம். பண்ணே பாணி தூக்கே முடமே (சிலப். 3 : 46). முடம் - முடவன் = 1. நொண்டி. காலான் முடவன் (தொல். சொல். 73, இளம்பூ.). 2. அருணன் (அக. நி.). 3. காரி (பிங்.). முடம் - முடவு. முடவுதல் = நொண்டுதல் (யாழ்ப்.). முடவாண்டி (முடம் + ஆண்டி) = கொங்க வெள்ளாளர் குலத்திற் பிறக்கும் பிறவி முடக்குழந்தைகளை எடுத்து வளர்க்கும் இரப்போர் வகையினர். முடம்-முடல்-முடலை = 1. உருண்டை (பிங்.) .2. முறுக்கு, திருகல். “Kliy விறகின் (மணிமே. 16:26) . 3. முருடு. (âth.,) 4. கழலை. (அக. நி.). 5. மனவன்மை. நன்றுணராய முடலை முழுமக்கள் (gH.25). 6. பெருங் குறடு (அக.நி.). முடங்கொன்றான் - முடக்கொற்றான் = முடச் சூலையைப் போக்கும் கொடிவகை. முடம் - முடந்தை = 1. முடம். 2. வளைந்தது. முடந்தை நெல்லின் கழையமல் கழனி (பதிற் . 32 : 13). 3. விடாய்க் கட்டுநோய் (M. L.). முடம் - முடங்கு. முடங்குதல் = 1. வளைதல். அடங்கினன் முடங்கி யலம்வந்து (உத்தரரா. வரையெடுத்த. 72). 2.cl«ig வளைத்துப் படுத்துக் கொள்ளுதல். பசியட முடங்கிய பைங்கட் செந்நாய் (நற். 103) 3. தங்குதல். அறுகாற் பறவை முடங்கிய செஞ்சடை முக்கண னார்க்கு (பதினொ. பொன்வண். 64). 4. சுருங்குதல். இடங்குறை வாயிலின் முடங்கி யிருந்துழி (பதினொ. திருவிடை. மும். 22). 5. கைகால் வழங்காமற்போதல். ``கைகால் முடங்கு பொறியிலி' (பிரபுலிங். துதி. 1). 6. தடைப்படுதல், வேலை முடங்கிவிட்டது .7. கெடுதல். “áWik பொருந்திப் பெருமை முடங்கி (திருப்பு. 372). தெ. முடுகு (g), க. முடுகு. முடங்கு = 1. முடக்குச் சூலைநோய். 2. தெருவளைவு. 3.bjU¢rªJ. முடங்கல் = 1. மடங்குகை (சூடா.) 2. சுருளோலைக் கடிதம் மண்ணுடை முடங்கல் (சிலப். 13; 90) 3. முடக்குச் சூலை (சூடா.). 4. முடத்தாழை (பிங்.). 5. பணம் முடங்கிக் கிடக்கை. 6. தடைப்படுகை. முயலு நோன்பு முடங்கலிலான் (சேதுபு. முத்தீர். 6). 7. சிறுமை. முடங்கன் மனாலையமே யினிதாயிற்று (திருநூற். 30). முடங்கர் = ஈன்றணிமையில் உண்டாகும் சோர்வு. “FUis மூன்றுட னீன்ற முடங்கர் நிழத்த (அகம். 147). முடங்கி = 1. நோயாற்கிடையாய்க் கிடப்ப-வன்-வள். 2 .நிலத்தின் மூலை நீட்டம். முடங்கு - முடக்கு = 1. வளைவு. `பாடகம் ஒரு கம்பியாய்ப் பல முடக்காலே போக்கும் வரவும் உண்டானாற் போல' சீவக. 510, உரை). 2. தெருவின் கோணம். 3. முடக்குமோதிரம், நெளி (நெடுநல். 143-4, உரை), 4. மறைந்து அம்பெய்யும் முடக்கறை (பு. வெ. 5 : 1, கொளு). 5. முடங்கும் நாக்கு. அண்ண மூடெழ முடக்கினை யழுத்தி (தணிகைப்பு. அகத்தியனருள். 280). 6. முடக்குநோய். 7. தடை. 8. காலத்தாழ்ப்பு. 9. வேலையின்மை. க முடுக்கு. Kl¡F - Kl¡f‹ = jhiH.(r§. அக.). முடங்கு - மடங்கு. மடங்குதல் = 1. வளைதல். படைபோன் முடங்கி மடங்கி (கலித். 94 : 9). 2. மடக்குதல் (திவா.). 3. கோணுதல். 4. வளைந்து செல்லுதல். 5. மீளுதல் (பிங்.). 6. சொல் திரும்ப வருதல். 7. திருகுருதல் 8. நெளிதல். 9. சுருங்குதல். 10. ஒடுங்குதல் 11. குறைதல். மடங்கா விளையுள் வயலூர் (சிலப். 23 : 119). 12. கீழ்ப்படுதல். “fhbuhÈ மடங்க.....fs¤â னார்த்த பேரொலி (கம்பரா நா கபாச. 291). 13. தாழ்தல். 14. செயலறுதல். உழவினார் கைம்மடங்கின் (குறள். 1036). 15. சினமடங்குதல்.16. நிறுத்தப்படுதல் “k©lk ரின்றொடு மடங்கும் (கம்பரா.கும்ப. 267). 17. தடையுண்ணுதல். 18. வாயடங்குதல். 19. ஒருவன் சொத்து இன்னொருவன்பாற் சென்றடைதல். மடங்கு = மடி, அளவு. இருமடங் காக வெய்தும் (சூளா கல்யா. 165). மடங்கு - மடக்கு. மடக்குதல் = 1. வளைத்தல். 2 .மடித்தல். “thšÉir¤ தெடுத்து வன்றாண் மடக்கி (கம்பரா. கடறாவு. 17). 3. மடித்து உடுத்துதல். மடக்கினார் புலியின் றோலை (தேவா. 955:1). 4. திருப்புதல். செய்யுளில் vழுத்துஞ்bசால்லும்mடுத்தடுத்துத்âரும்பத்திரும்பtருமாறமைத்தல்.5. மாறிமாறிச் செய்தல். 6. வென்று கீழ்ப்படுத்துதல். 7. வாயடக்குதல். 8. கால்நடைகளை விளைநிலத்தில் உரத்திற்காக இராவேளையில் ஒருசேர அடக்கி வைத்தல். 9. பொருள்களைத் தன்வயப்படுததுதல்.10. பணிவாக்குதல் 11. தடுத்தல். 12. அழித்தல். மடக்குவா யுயிரை யென்னா (கம்பரா. கும்பக. 188). மடக்கு = 1. வளைவு. 2. மூலைமுடுக்கு. 3. திருப்பு. 4. மடிப்பு. 5. மடக்குக்கத்தி. 6 மாறிமாறி வருகை. 7, செய்யுளில் எழுத்து கொல்சீர் முதலியன அடுத்தடுத்து மீண்டும் மீண்டும் பொருள் வேறுபட்டு வருவதாகிய சொல்லணிவகை. 8. தடுப்பு. 9. தடை. மடக்கு - மடக்கம் = 1. வளைவு 2. வணக்கம் 3. பணிவு 4. மனவடக்கம் 5. நோய் திரும்புகை. மடங்கு - மடங்கல் = 1. வளைகை (திவா.) 2. கோணம்.3.தாழை (mf. நி.) 4. முற்றிவளைந்து சாய்ந்து கதிர். 5. முன்னும் பின்னும் திரும்பி நோக்கிச் செல்வதாகச் சொல்லப்படும் அரிமா. மடங்கலிற் சீறி மலைத்தெழுந்தார் (பு. வெ.324). 6. அடக்கம். 7. ஒடுக்கம் மைந்துடை யொருவனு மடங்கலுநீ (பரிபா. 144). 8. `உயிர்களைக் கவருங் கூற்றுவன்' மடங்கல்போற் சினைஇ (கலித். 2. )9. உலகொடுங்கும் ஊழிக்காலம். மடங்கற் காலை (கலித்.120). 10. உலகழிக்கும் வடவைத்தீ.மடங்கல் வண்ணங் கொண்ட கடுந்திறல் (பதிற். 62. 8). 11. ஊழி முடிவு. முண்டு - மண்டு - மண்டி = காலை முடக்கி முழங்காலால் நிற்கை. ``ஒருகால் மண்டியாக.....ko¤Jit¤J'' (புறம். 80, உரை). மண்டிபோடுதல், மண்டியிடுதல் என்னும் வழக்குகளை நோக்குக. முட்டு - மட்டு - மட்டி. மட்டித்தல் = (செ. கு.வி.) மண்டலித்தல், வட்டமாதல். (செ. குன்றாவி.) வட்டமாக்குதல். திரடோள்கண் k£o¤jhl” (njth. 12:3). மண்டு - மண்டலம் = 1. t£l« (ã§.), சுடர்மண்டலம் (திருநூற். 80). 2. வட்டவடிவம் (திவா.) 3. கதிரவனையுந் திங்ளையுஞ் சுற்றித் தோன்றும் கோட்டை (பரிவேடம்). 4. கதிரவன் பரிப்பு (கிராந்தி வீதி). 5. பாம்பின் சுற்று. ``மண்டலம் பயிலுரகர்'' (பாரத. FUFல.3). 6. வட்டவடிவான அல்லது சக்கரவடிவான படையமைப்பு (குறள். 767 உரை). 7. நாட்டின் பெரும்பகுதி. சோழமண்டல மீதே (திருப்பு. 94). 8. வானவெளிப் பகுதி. முகில் மண்டலம் 9. நாட்டின் சிறுபகுதி. ஊர் (பிங்.). 10. மந்திரச் சக்கரம் 11. மண்டில நிலை (பிங்.). 12. நாற்பது அல்லது நாற்பத்தைந்து நாள் கொண்ட மருத்துவக் காலவட்டம். 13. குதிரைச்செலவு வகை. ``பண்ணிய வீதிபற்றி மண்டலம் பயிற்றி னானே (சீவக.795). 14. நடுவிரல் நுனியும் பெருவிரல் நுனியுங் கூடி வளைந்திருக்க, மற்ற விரல்களும் ஒக்க வளைந்து நிற்கும் இணையாவினைக்கை. (சிலப். 3,18, உரை). 15. வில்லோர் நிலையுளொன்று (சூடா.). 16. மேலுலகம், பரமண்டலம். மண்டலம் - வ. மண்டல. மண்டலம் - மண்டலி. மண்டலித்தல் - 1. வளைத்தல் 2. பாம்பு முதலியன வட்டமாகச் சுற்றியிருத்தல். 3. வில்லாளி காலை வளைத்து வட்டமாக்குதல். 4. இறுதியடியின் அல்லது இறுதிப் பாட்டின் இறுதி எழுத்து அசை சீர் என்பவற்றுள் ஒன்று, முதலடியின் அல்லது முதற்பாட்டின் முதல் எழுத்து அசை சீர் என்பவற்றுள்ஒன்றாய் வருமாறு, செய்யுளிசைத்தல். மண்டலி - மடலி. மடலித்தல் = மடங்கித் திரும்புதல் (யாழ். அக.). மண்டலம் - மண்டிலம் = 1. வட்டம். 2. வட்ட வடிவம். 3. வட்டக் கண்ணாடி. மையறு மண்டிலம் போலக் காட்ட (மணிமே. 25:137). 4. கதிரவன். பகல்செய் மண்டிலம் பாரித் தாங்கு (பெரும்பாண். 442) 5. திங்கள். செய்வுறு மண்டிலம் (கலித். 7). 6. ஞாலம். கடல்சூழ் மண்டிலம் (குறுந். 300). 7. கதிரவனையுந் திங்களையுஞ் சுற்றிடப்படும் கோட்டை (பிங்.). 8. வட்டமாயோடுகை. “brybthL மண்டிலஞ் சென்று (பு. வெ. 12, வென்றிப். 14.) 9. குதிரைச் செலவுவகை (நாமதீப. 732). 10. வானவட்டம் (பிங்.). 11. நாட்டின் பெரும்பகுதி மண்டிலத் தருமையும் (தொல். அகத். 41) 12. நாட்டின் சிறு பகுதி, ஊர் (பிங்.). 13. கூத்தின்வகை. மண்டிலயாப்பு = நாற்சீரடிச் செய்யுள். ஒத்தா ழிசையும் மண்டில யாப்பும் குட்டமு நேரடிக் கொட்டின வென்ப. (தொல். செய். 114.) ``மண்டிலங் குட்ட மென்றிவை யிரண்டும் செந்தூக் கியல வென்மனார் புலவர். (தொல். செய். 116.) இங்ஙனம் மண்டில யாப்புத் தொல்காப்பியத்திலேயே சொல்லப் பட்டிருத்தலையும் என்மனார் புலவர் என்னும் முன்னூல் பலவற்றைக் குறிக்குந் தொடரையும் ஊன்றி நோக்குக; நிலைமண்டில வாசிரியப்பா, அடிமறிமண்டில வாசிரியப்பா என்னும் அகவற்பா வகைகள், தொன்றுதொட்டு வழங்கி வருவன. தமிழ் யாப்பு முறை முற்றும் ஆரியச் சார்பற்றது. மண்டில மாக்கள் = நாட்டின் பகுதியை ஆளும் அதிகாரிகள். பழஞ் சோழநாட்டின் பிரிவான தொண்டை மண்டலமும், பழஞ் சேர நாட்டின் பிரிவான கொங்கு மண்டலமும் போன்ற பல மண்டலங்கள், முதற்காலத்தில் மண்டில மாக்கள் அல்லது மண்டலிகர் என்னும் அதிகாரிகளாலேயே ஆளப்பட்டு வந்திருத்தல் வேண்டும். அவர்கள் அரச குடும்பத்தினராகவோ, உழுவித்துண்ணும் வேளாண் தலைவராகவோ, குறுநில மன்னராகவோ, தண்டத் தலைவராகவோ இருந்திருக்கலாம். எண்ணூற்றுக் காவத அளவு முழுகிப்போன பழம் பாண்டிநாடான செந்தமிழ் வழக்கொடு சிவணிய நிலமும் பனிமலைவரை பரவியிருந்த பழஞ் சேர சோழ நாடுகளும், இருந்த முதுபழங்காலத்தில், முத்தமிழ் வழங்கிய முந்து தமிழகம் எத்துணையோ மண்டலங்களாகப் பகுக்கப்பட்டு மண்டலிகரால் ஆளப்பட்டு வந்திருத்தல் வேண்டும். பாண்டியன் குடிப்பெயர்களுள் ஒன்றான பஞ்சவன் என்னுஞ் சொல், முதலிரு கழகக்கால அல்லது தலைக் கழகக்காலப் பாண்டியர், துணையரையர் (அல்லது மண்டலிகர்) ஐவரைக் கொண்டு நாடாண்ட மையை யுணர்த்தும். ``பஞ்சவ னீடு கூனும்'' என்று 15ஆம் நூற்றாண்டு அருணகிரிநாதர் பாடியதுபோன்றே, பழியொடு படராப் பஞ்சவ வாழி என்று 2ஆம் நூற்றாண்டு இளங்கோவடிகளும் பாடியிருத்தல் வேண்டும். அஞ்சவன் என்னுஞ் சொல்லே, பிற்காலத்தில் வடமொழியிலும் தென்மொழியிலும்பஞ்சவன் என்று திரிந்ததாகத் தெரிகின்றது. (if-I-IaJ-IJ-IªJ-Iªjt‹-IŠrt‹-mŠrt‹-gŠrt‹.) ஒ. நோ: அப்பளம்-தெ. அப்படமு, க. பப்பள-ம. பப்படம்-வ. பர்ப்பட்ட. அப்பளக்கட்டையால் மாவை அப்பளித்தமைப்பது அப்பளம். முண்டு, மண்டு, மண்டி, மண்டலம் மண்டலிகன், மண்டலித்தல், மண்டிலம் முதலிய சொற்கள் மேலையாரிய மொழிகளில் இல்லை. Mandalin (Dim.Mandolinde) என்னும் இத்தாலிய நரப்பிசைக் கருவிப் பெயரும், மண்டலியாழ் என்னும் தென்சொல்லின் திரிபாய் இருத்தல் வேண்டும். தமிழின் தென்மை, தொன்மை, முன்மை முதலிய தன்மைகளை நடுநிலையாக ஆராய்ந்தறிந்தவர்க்கு, மேற்கூறியவையெல்லாம் வெள்ளிடை மலையாம். முண்டு-முண்டி-முடி. முடிதல்=வளைத்து அல்லது சுற்றிக் கட்டுதல். முடித்தல் = 1. கூந்தலைக் கட்டுதல். பாஞ்சாலி கூந்தன் முடிக்க (திவ். பெரியதி. 6 : 7 : 8) 2. பூமாலை கொண்டையிற் கட்டி யணிதல். கைபுனை கண்ணி முடித்தான் (கலித் 107 : 15). முடி = 1. பறவை பிடிக்குங் கண்ணி (noose). 2. கட்டு. மொட்டைத் தலைக்கும் முழங்காற்கும் முடிபோடுதல் (உ.வ). 3. முடிச்சு (knot). “bfhŸis சாற்றிய கொடுமுடி வலைஞர் (மதுரைக் 256). 4. உச்சியில் முடிக்கும் மயிர்க்கட்டு வகை (திவா.). 5. நாற்றுமுடி. வழிமுடி நடுநரும் கல்லா. (45:14) முடி-முடிச்சு = 1. கட்டு. முடிச்சவிழ்த்தல். 2. மயிர்முடி 3. சிறுமூட்டை மூட்டை முடிச்சு. 4. உள்நார் சுருண்ட கட்டை. முண்டும் முடிச்சுமாயிருக்கிறது. முடி- முடிப்பு = கிழி, பணமுடிப்பு. முடி-மடி. மடித்தல் = மடக்குதல். சேலையை மடித்தல். மடி = 1. மடிப்பு. மடித்த சேலை. 2. மடங்கு. இருமடியாகு பெயர். 3. மடித்த அரையாடைப் பை (lap). 4. ஆவின் பான்முலை. 5. முடங்கித் தூங்கும் சோம்பல். மடியென்னும் மாசூர (குறள். 601). 6. கட்டுக்கிடைச் சரக்கு, மடியரிசி. 7. கட்டுக்கிடைச் சரக்கு வீச்சம், மடிநாற்றம். 8. தூய்மையின்மை. மடியாயிருக்கிறேன். மடி - மடிப்பு = 1. வளைப்பு. 2. திரைப்பு முல்6 - (துளைத்தற் கருத்து வேர்) முல்-மூல்-மூலம் = துளைவழி. வழி, வாயில். காவிரிநீர் குழாய் மூலமாகக் கொண்டுவரப்படும், பொத்தகம் அஞ்சல் மூலம் அனுப்பப்படும், வருமான வரியைக் கணக்கர் மூலம் செலுத்தினேன். மூலம் - மூலியம் = வாயில். யார் மூலியமாய்ச் செய்தி தெரிவித்தாய்? (c.t.). முல்-முள்-முள்கு. முள்குதல் = உட்செல்லுதல். ``அமர்க்க ணாமா னருநிற முள்காது'' (நற். 165). முள்-முண்-மண். மண்ணுதல் = 1. முழுகுதல். பனிக்கய மண்ணி (òw«. 79). 2. நீராடுதல். குடுமி கொண்ட மண்ணுமங் கலமும்'' (bjhš. புறத். 13). 3. கழுவுதல் மண்ணி மாசற்றநின் கூழையுள் (fȤ. 107). மண்ணுறுத்தல் = 1. மஞ்சன மாட்டுதல். வார்க்கோல மாலை முலையார் மண்ணுறுப்ப வாடி (சீவக. 2352). 2. கழுவுதல். (திருமுருகு. 25, உரை). முள்-மூள்-மூளி = 1. துளையுள்ளது. 2. துளையறுந்தது. 3. உறுப்பறை. 4. உறுப்புக் குறை. சூர்ப்பணகையை மூளியாக்க (இராமநா. உயுத். 26). 5. உறுப்புக் குறையுள்ள பொருள். எல்லாம் மூளியும் காளியுமாய்க் கிடக்கிறது (உ. வ.). 6. குறைவுள்ள கருமம். அவன் வராமையால் அந்தக் கருமம் மூளியாய்ப் போயிற்று. 7. காதணி யில்லாதவள். 8. பெண்ணைக் குறித்த ஒருவகைச் சொல். 9. பெண்ணைக் குறிக்கும் பொதுச்சொல். ஒரு நாழியாலும் வரும், ஒரு மூளியாலும் (மூழியாலும்) வரும் (பழ.) = ஒரு வீட்டிற்கு ஆக்கம் அளக்கும் நாழியாலும் வரும்; வந்த மருமகளாலும் வரும். மூளிக்காது = 1. அணியில்லாக் காது. 2. அறுபட்ட காது. மூளிக்காதி = காதணியில்லாதவள், ஒரு வசைச்சொல், ஆயின், கிழவியரைத் தாக்காது. மூளிக்குடம் = ஒரு மருங்கு வாயுடைந்த குடம். மூளி நாய் = காதறுபட்ட நாய். மூளியுதடு = பிளந்த வுதடு. மூளியோடு = சிதைந்த ஓடு. மூளி-மூழி = 1. உட்குழிந்த அகப்பை (திவா.). 2. நீர்க்கலம். மயிற் பீலியோடு மூழிநீர் கையிற் பற்றி (பெரியபு. திருஞான. 601). 3. நீர்நிலை (பிங்.). 4. துழாவிக் கடையும் மத்து (W.). மூழிவாய்-பூக்கூடை. “_ÊthŒ முல்லை மாலை (சீவக. 833). மூள்-மூளை = 1. எலும்பின் உள்ளீடு. 2. மண்டையின் உள்ளீடு. “_isah® சிரத்து (திவ். பெரியதி 4 : 2 : 8). 3. மதி. அவனுக்குச் கொஞ்சங்கூட மூளையில்லை (உ.வ.). ம, மூள. ஒ.நோ; வ. மஜ்ஜா. OE. mearg, OS., OHG. marg, ON. mergr, E. marrow. முள்-முழ-முழுகு. முழுகுதல் = 1. குளித்தல். 2. அமிழ்ந்துபோதல். கப்பல் முழுகிவிட்டது. 3. வினைமுயற்சியில் அழுந்தி யிருத்தல். 4. தீர்க்க முடியா அளவு கடன் மிகுதல். அவன் கடனில் முழுகிவிட்டான். ம. முழுகுக, க. முழு, முழுகு, தெ. முனுகு (g). முழுகு-முழுசு. முழுசுதல் = உட்புகுதல். முழுசி வண்டாடிய தண்டுழாயின் (திவ். பெரியதி. 2 : 8 : 7). முழுசு-முழுது-முழுத்து. முழுத்துதல் =அமிழ்த்துதல். துதிக்கை முழுத்திற்று (