பாவாணர் தமிழ்க்களஞ்சியம் 6 தமிழ் வரலாறு - 2 ஙரூபுஹது ஸநிகுணுடகுழூர ஞா. தேவநேயப் பாவாணர் தமிழ்மண் அறக்கட்டளை ஸசுங்கூக்ஷ - 600 017 நூற் குறிப்பு நூற்பெயர் : பாவாணர் தமிழ்க் களஞ்சியம் - 6 ஆசிரியர் : மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதல் பதிப்பு : 1967 மறு பதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 8 + 144 = 152 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 95/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு தமிழ்மண் அறக்கட்டளை பெரியார் குடில் பி.11 குல்மொகர் குடியிருப்பு, 35 செவாலிய சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 மின்னஞ்சல் : tm_pathippagam@yahoo.co.in இணையதளம் : www.tamilmann.in பதிப்புரை தமிழுக்கும் தமிழருக்கும் வளமும் வலிமையும் சேர்க்கக் கூடிய பழந்தமிழ் நூல்களையெல்லாம் தேடியெடுத்துத் தமிழ் கூறும் உலகிற்கு வழங்கும் தொலைநோக்குப் பார்வையுடன் தமிழ்மண் பதிப்பகம் தொடங்கப்பட்டது. அதன் வாயிலாக மொழிஞாயிறு பாவாணரின் நூற்றாண்டு நினைவாக அவர் எழுதிய நூல்கள் அனைத்தையும் சேர்த்து அவருடைய மறைவுக்குப் பிறகு 2000-த்திலும், பல்வேறு இதழ்களிலும், மலர்களிலும் வெளிவந்து, நூல் வடிவம் பெறாத பாவாணரின் அரிய கட்டுரைகளை எல்லாம் தொகுத்து 2001- லும் ஒருசேர வெளியிட்டு உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு வழங்கினோம். பாவாணர் வழி நிலை அறிஞர்களான முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்களும், மருத்துவர் கு.பூங்காவனம் அவர்களும் இவ்வரிய கட்டுரைப் புதையல்கள் நூல் வடிவம் பெறுவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர். இப்பெருமக்களை நன்றியுணர்வுடன் நினைவுகூர்கிறேன். சொல்லாராய்ச்சித் துறையில் தேவநேயர் ஒப்பற்ற தனித் திறமையுடைவர் என்று மறைமலையடிகளும், நாவலந் தீவுக்கு நந்தமிழே தாயென்று பாவேந்தரும், தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் நற்றொண்டு ஆற்றியவர் பாவாணர் என்று பேரறிஞர் அண்ணா அவர்களும், வெட்ட வெட்டக் கிடைக்கும் தங்கச் சுரங்கம் போன்றவர் என்று தமிழிறிஞர் இராசமாணிக்கனாரும், தமிழகம் மொழித்துறையிலே பாவாணர் போன்ற ஒரு அறிஞரை இன்னும் பெற்றுத் தரவில்லை என்று பன்மொழிப் புலவர் அப்பாத்துரையரும், குறைமதியர் தேக்கிவைத்த கரையிருளை நீக்க வந்த மறைமலையார் வழிவந்த நிறைமலையார் பாவாணர் என்று மேனாள் பேரவைத்தலைவர் தமிழ்குடிமகன் அவர்களும், தமிழர் யார்? எதிரிகள் யார்? என்று ஆய்ந்து அறிந்து காட்டியவர் பாவாணர் என்று பேராசிரியர் இளவரசு அவர்களும், ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்தபின் வாராது போல வந்த மாமணி பாவாணர் என்று முதுமுனைவர் இளங்குமரனார் அவர்களும் குறிப்பிட்டுள்ள பெருமைகளுக்குரிய பேரறிஞரின் நூல்களை மீள்பதிப்பக வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். பாவாணர் நூல்கள் அத்தனையும் தமிழ்மொழிக்கு ஏற்றம் உரைப்பன. தமிழை ஆரிய இருளினின்று மீட்டுக் காப்பன. வீழ்ந்து பட்ட தமிழனுக்கு விழிப்பூட்ட வல்லன. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக்கிடக்கும் தமிழ்மொழியை மீட்கவல்லது என்று பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் கூற்றை இக் களஞ்சிய வெளியீட்டில் பதிவு செய்வது எமது கடமையாகும். பாவாணரைத் தூக்கிப் பிடித்தால்தான் தமிழினம் உருப் படமுடியும் - உயரமுடியும். பாவாணர் கொள்கைகள் தமிழர் உள்ளமெல்லாம் நிலைத்து நிற்பதற்கும், பாவாணர் நூல்கள் தமிழர் இல்லமெலாம் இடம் பெறுவதற்கும் முன் குறிப்பிட்ட 2000 - 2001 காலக்கட்டத்தில் வெளியிடப்பட்ட பாவாணரின் அறிவுக் கருவூலங்களையெல்லாம் ஒட்டு மொத்தமாக சேர்த்து ஒரே வீச்சில் பாவாணர் தமிழ்க் களஞ்சியம் எனும் தலைப்பில் எம் அறக்கட்டளை வெளியிடுகிறது. மறைக்கப்பெற்ற மாபெரும் வரலாற்றையும், சிதைக்கப் பெற்ற ஒப்புயர்வுயற்ற மொழியையும் கொண்ட தமிழினத்தின் முன்னேற்றம் கருதி இவ்வருந்தமிழ் புதையல்களை தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்க முன் வந்துள்ளோம். தமிழ் மொழியை மூச்சாகவும், பேச்சாகவும், செயலாகவும் கொண்டு ஒருநாளின் முழுப்பொழுதும் தமிழாகவே வாழ்ந்த செம்புலச்செம்மல், தனித்தமிழ்க் கதிரவன் மொழிஞாயிறு பாவாணர் நூல்களை வாங்கிப் பயன் கொள்வீர். இளமையிலேயே பொதுத்தொண்டிலும், தனித்தமிழ் இயக்கத் தொண்டிலும் நான் ஈடுபாடு கொள்வதற்குக் காரணமாக இருந்தவர்கள் பெரும்புலவர் நக்கீரன் அவர்களும், அவர்தம் இளவல் புலவர் சித்திரவேலன் அவர்களும் ஆவர். இவர்களை இவ்வெளியிட்டின் வாயிலாக நன்றியுணர்வோடு நினைவு கூறுகிறேன். தந்தை பெரியாரின் தன்மதிப்பு இயக்கக் கொள்கை களாலும், மொழிஞாயிறு பாவாணரின் தனித்தமிழ் இயக்கக் கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டவன். அத்தகு பின்புலத்தோடு பதிப்புப்பணியில் என் காலடிச் சுவடுகளைப் பதித்து வருகிறேன். கோ. இளவழகன், பதிப்பாளர். உள்ளடக்கம் பக்கம் பதிப்புரை iii இயனிலைப்படலம் (3) இடைச்சொல் 1. தமித்து வருவன .1 2. சொல்லிடத்து வருவன 7 (1) முன்னொட்டுக்கள் .8 (2) வரிசையிடைச் சொற்கள் .8 (3) இணைப்புச் சொற்கள் .8 (4) பல்பொருளிடைச் சொற்கள் 9 (6) வேற்றுமையுருபுகள் .26 (7) சாரியைகள் .33 (8) வினையீறுகள் .34 (4) உரிச்சொல் .56 (5) ஐவகைச் சொன்னிலை .57 (6) சொற்படை வளர்ச்சி .57 (7) பின்னமைப்பு .59 (8) சொற் பண்படுத்தம் .59 (9) சொற்றூய்மை .60 (10) சொல்வளம் 62 (11) மொழிச் bசம்மை...63 (12) மரபுவழக்கு .65 (13) சொற்றொடர் வகைகள் .66 iii. பொருள் .67 7. தலைக் கழகம் (தோரா. கி. மு. 10,000 -5,500)... 68 II. திரிநிலைப் படலம் (தோரா. கி. மு. 20,000-இன்றுவரை) 70 1. ஊர்ப் பெயர்கள் .70 2. குலப்பெயர்கள் .72 3. செந்தமிழும் கொடுந்தமிழும் 72 4. இடைக்கழகம் (தோரா. கி. மு. 4,000-2,000)... 74 5. கொடுந்தமிழும் திராவிடமும் .75 6. தெலுங்குத் திரிபு .76 7. பிராகுவீத் திரிபு .78 8. திசைமொழித் தெரிப்பு (Regional Dialectic Selection)... 80 9. குடியேற்றப் பாதுகாப்பு (Colonial Preservation) 81 10. நடுத்திரவிடம் .81 11. வடதிரவிடம் .84 12. வடதிரவிடமொழிகள் ஆரியமாய் மாறியமை 92 13. வடதிரவிட ஆரியக் கருநிலை 9314. மேலையாரியம் .95 15. சொன்மாற்றத் தொலைவுக்கணிப்பு (Glotto-telemetty) 97 III. சிதைநிலைப் படலம் (தோரா. கி. மு. 1,500-இன்றுவரை) .100 1. இடைக்கழக அழிவும் இடைக்காலமும் 100 2. வேத ஆரியர் நாவலம் வருகை (தோரா. கி. மு.2,000-1,500)... 100 3. வேதக்காலம் (தோரா. கி. மு. 1,500-1,000) .100 4. வேதத் தமிழ்ச்சொற்கள் 101 5. வேத ஆரியர் தென்னாடு வருகை (தோரா. கி. மு. 1,200) ... 102 6. சமற்கிருத வாக்கம் 103 7. சமற்கிருதத்தின் பின்மை 104 8. ஆரிய மொழிகளின் படிமுறைத்திரிபு 104 9. பாரதக்காலம் (தோரா. கி. மு. 1,000) .105 10. தொல்காப்பியம் (தோரா. கி. மு. 7-ஆம்நூற்.) . 106 11. கடைக்கழகம் (தோரா. கி. மு. 5-ஆம் ü‰.-கி. பி. 4-ஆம் நூற்.) 107 12. கடைக்கழகத்தின்பின் தமிழ் சிதைந்த வகைகள்... 108 IV. மறைநிலைப் படலம் (தோரா. கி.மு. 1,000-இன்றுவரை) .113 1. தமிழ் மறைப்பு .113 2. தமிழ் நாடு மறைப்பு .113 3. தமிழ் இனமறைப்பு .113 4. தமிழ் நாகரிக மறைப்பு .114 5. தமிழ்க் கலை மறைப்பு .114 6. தமிழ் முதனூல் மறைப்பு .114 7. தமிழ்த் தெய்வ மறைப்பு .115 8. தமிழர் சமய மறைப்பு .115 9. தேவார மறைப்பு .115 10. பொருளிலக்கண மறைப்பு .115 11. தமிழ்ச் சொன் மறைப்பு .115 12. தமிழ்ச்சொற்பொருள் மறைப்பு .116 13. தமிழ்க் கருதது மறைப்பு .116 14. தமிழ் எழுத்து மறைப்பு .116 15. முக்கழக மறைப்பு 116 16. தமிழ் வரலாறு மறைப்பு .116 V. கிளர்நிலைப் படலம் (கி. மு. 100-இன்றுவரை).. 117 1. திருவள்ளுவர். 2. நக்கீரர். 3. பரஞ்சோதி முனிவர். 4. சிவஞான முனிவர். 117 5. சுந்தரம் பிள்ளை. 6. பரிதிமாற் கலைஞன். 7. மாணிக்க நாயகர். 118 8. சீநிவாசையங்கார். 9. கிருட்டிணசாமி ஐயங்கார் (S): 10. சேச ஐயங்கார். 11. ஆபிரகாம் பண்டிதர். 12. கா. நமச்சிவாய முதலியார். 13. மு. சி. பூரணலிங்கம் பிள்ளை. 119 14. உ. வே. சாமிநாதையர். 15. பவானந்தம் பிள்ளை. 16. உமாமகேசுவரம் பிள்ளை. 17. மறைமலையடிகள். . 120 18. திருவரங்கநீலாம்பிகைம்மையார்.... 121 19. திரு. வி. கலியாணசுந்தர முதலியார். 121 20 கா.சுப்பிரமணியப் பிள்ளை. 21. சோமசுந்தரம் பிள்ளை. 121 22. வேங்கடசாமி நாட்டார். 23. திருவரங்கம் . 121 24. அண்ணாமலை யரசர். 25. கதிரேசன் செட்டியார் 26. மகிழ்நன் 27. சாமிவேலாயுதம் பிள்ளை. 28. இ. மு. சுப்பிரமணியப் பிள்ளை. 29. துடிசைகிழார். 30. சோமசுந்தர பாரதி. 31. இராமச்சந்திர தீட்சிதர். . 122 32. பாரதி தாசன் 33. இராமசாமிக் கவுண்டர்... 123 34. ஆ. வரகுணபாண்டியன் 35. இராமநாதன் செட்டியார். 36. குன்றக்குடி அடிகள். 124 37. சொக்கப்பா. 38. மெ. சுந்தரம். 39. சி. இலக்குவனார் 40. பெருஞ்சித்திரன். 41. வ. சுப்பையாப் பிள்ளை .125 VI. வருநிலைப் படலம் 126 1. தமிழுக்குத் தமிழ்நாட்டிற் செய்யவேண்டியவை .127 2. தமிழுக்கு வெளிநாட்டிற் செய்யவேண்டியவை 130 3. ãன்னிணைப்பு...131 4. அருச்சொல்பொருள்அகரவரிசை .134 3. கருவி நூற்பட்டி .135 4. பாவாணர் வாழ்க்கைச்சுவடுகள் 138 தமிழ் வரலாறு - 2 1 இயனிலைப் படலம் (3) இடைச்சொல் பெரும்பாலும் தமித்துவராது, பெயருக்கும் வினைக்கும் உறுப்பாக அவற்றினிடத்து வரும் சொற்கள் இடைச்சொல்லாம். இடை இடம். சிறுபான்மை தமித்தும் வருவதால் தமித்து வருவன, சொல்லிடத்து வருவன என இடைச்சொற்கள் இருபாற்படும். தமித்து வருவனவும், இயற்கையிடைச் சொல்லும் செயற்கை யிடைச்சொல்லும் ஆக இருதிறப்படும். இடைச்சொல்லாகவே தோன்றியவை இயற்கை; பெயரும் வினையும் பல்வேறு பொரு ளுணர்த்தி இடைச்சொல்லாகத் திரிந்தவை செயற்கை. 1. தமித்து வருவன Rட்டிடைச்சொற்கள்v-L: அந்தா, அதோ, அன்னா இந்தா, இதோ, இன்னா உவ, உது ஆ, அ, ஈ, இ, ஊ, உ என்பன அந்த, இந்த, உந்த என்று பொருள் தரும் சுட்டுக் குறிப்புப் பெயரெச்சங்களாயினும் (Demonstrative Adjectives) தமித்து வழங்காமையின், இடைச்சொல்லாகக் கொள்ளப் படும். வினாவிடைச்சொற்கள்: எ-டு: எந்தா, எதோ,vதாV, எ,யாஎன்பனஎந்தஎன்றுபொருள்படும்வினாக்குறிப்புப்பெயரெச்சங்களாயினும்(Interrogative Adjectives) jமித்துtழங்காiமயின்,ïடைச்சொல்லாகக்bகாள்ளப்படும்.ctk îUபுகள்: (1) சுட்டடி: எ-டு: அன்ன, ஆங்க (2) வினையடி: வெல்ல, வீழ எ-டு: போல், நிகர் - (முதனிலை) போன்று,செத்து- (இ.கா.வி.எ.) nபால,òரைய- (எ.கா.வி.எ)- (Infinitive Mood) போன்ற, ஒத்த - (இ.கா.பெ.எ.) போலும், ஒக்கும் - (எ.கா.பெ.எ.) போலும், ஒக்கும் - (எ.கா.வி.மு.) உடன்பாட்டிடைச்சொற்கள்: எ-டு: சரி, சரிசரி, ஆகட்டும். ஒத்துக்கோ Ëடைச்சொற்கள்:v-L: ஆம், நல்லது, மதி (புத்தி-வ.) ஆவலாதி யிடைச்சொற்கள்: எ-டு: பார்த்தையா பார்த்தையா, கேட்டையா கேட்டையா. ஆவலாதி- முறையீடு. அரற்ற லிடைச்சொற்கள்: எ-டு: கூகேகூ, குய்யோ முறையோ வேசாற் றிடைச்சொற்கள்: எ-டு: அக்கடா, சிவாசிவா. வேசாறல் - இளைப்பாறல். விளி யிடைச்சொற்கள்: எ-டு: இந்தா, ஏன்காணும் - உலக வழக்கு அம்ம - செய்யுள் வழக்கு ஏ, ஓய், வே என்பன இழிவழக்காம். உரைமுக இடைச்சொற்கள்: எ-டு: mந்த,ïந்த- cலகtழக்கு. ஆங்க - bசய்யுள்tழக்கு.bjhifKf இடைச்சொற்கள்: எ-டு: ஒரு, ஒருபத்து விழுக்காட் டிடைச்சொற்கள்: nபச்சில் இடையிட்டுத் திரும்பத்திரும்ப வரும் பொருளற்ற சொல் விழுக்காட்டுச் சொல்லாம். எ-L: வந்து, பின்னே தோல்வியாட் டிடைச்சொற்கள்: எ-டு: குழமணிதூரம், பொங்கத்தம் பொங்கோ, தோலே தோலே. அடைக்கலம் வேண்டிடைச் சொல்: ஓலம். இணைப்புச் சொற்கள் (Conjunctions) 1. அடுக்கிணைப்புச் சொற்கள் (Cumulative Conjunctions) எ-டு: என, எனவும், எனா, என்று, என்றும், என்றா. இவை சொற்களையும் சொற்றொடர்களையும் இணைக்கும். 2. மறுப்பிணைப்புச் சொற்கள் (Adversative Conjunctions) எ-டு: ஆனால், ஆனாலும், ஆயின், ஆயினும், இருந்தாலும், இருந்தபோதிலும், இருந்தாற்கூட, எனினும், என் றாலும். இவை சொற்றொடர்களையே இணைக்கும். 3. மறுநிலை யிணைப்புச் சொற்கள் (Alternative Conjunctions) எ-டு: அல்லது, எனினும், என்றாலும், என்றோ. இவற்றுள், அல்லது சொல்லையும் சொற்றொடரையும் ïணைக்கும்;bசால்லைÆணைப்பின்,xவ்வோர்ïருbசால்Èடையும்xவ்வொருKறைtரும்;Vனையbசாற்களைkட்டும்ïணைக்கும்.4. உய்த்துணர் விணைப்புச் சொற்கள் (Illative Conjunctions) எ-டு: ஆகையால், ஆகையினால், ஆதலால், ஆகவே, எனவே. இவை சொற்றொடர்களை இணைப்பன. தனிப் பொருளிடைச் சொற்கள் என இது கரணியம் (காரணம்), பொருட்டு, பெயரீடு, இணைப்பு, ஒலிக்குறிப்பு, விரைவுக் குறிப்பு, வண்ணக்குறிப்பு, காலக்குறிப்பு முதலிய பொருள்களில் வரும். இது என் என்னும் வினையின் அகரவீற்று எச்சமாகும். வெள்ளென வா-காலக்குறிப்பு வெள்ளென = கிழக்குவெளுக்கும்போது, விடிகாலையில்,குறித்jநேரத்திற்Fமுன்பே. என்று இது பெயரீடு, இணைப்பு, ஒலிக்குறிப்பு, விரைவுக் குறிப்பு, வண்ணக்குறிப்பு முதலிய பொருள்களில் வரும். இது என் என்னும் வினையின் இறந்தகால எச்சமாகும். உலக வழக்கில், நேர்கூற்றை (Direct Speech) முடிக்குஞ் சொல் லோடு இணைப்பது இஃதொன்றே. எ-டு: அவன் நாளை வருவான் என்று சொன்னான். முடிக்குஞ்சொல் என்றான் என்னும் வினைமுற்றாயின், இணைப்புச் சொல் வராது. எ-டு: அவன் நாளை வருவேன் என்றான். அடி அடி என்று அடித்தான், தின் தின் என்று தின்றான் என்பவற்றில், என்று என்னும் சொல் கூற்றைக் குறியாது வினை மிகுதியை அல்லது கடுமையை உணர்த்தும். மன்ற என்பது தேற்றமும், தஞ்சம் என்பது எளிமையும், எல்லே என்பது இரக்கமும் உணர்த்தும். எல்லே யிலக்கம். (தொல்.இடை. 21) என்னும் பாடம் தவறானதாகும். எல் என்பது ஒளியையும் பகலையும் கதிரவனையும் குறிக்கும் பெயர்ச்சொல்லாதலால், இடைச்சொல் லாகாது. ஏதிலேன் அரங்கற் கெல்லே என்று, நாலாயிரத் தெய்வப் பனுவலில் (திருமாலை. 26) எல்லே என்பது இரங்கற் பொருளில் வந்திருத்தல் காண்க. தாலாட் டிடைச்சொற்கள் எ-டு: லாலா, ரோரோ. இவை இலக்கிய நடையில் தாலா, ஓரோ என்றெழுதப் பெறும். புள்ளோப்ப லிடைச்சொல்: ஆலோலம். பிதற்றற்குறிப் பிடைச்சொற்கள் எ-டு: ஆலே பூலே, கன்னா பின்னா, கன்னாரை பின்னாரை, காமாசோமா. ஆளத்தி யிடைச்சொற்கள் எ-டு: தரனன்னா தன்னானா, தரனன தோம்நோம் வண்ணமெட் டிடைச்சொற்கள் எ-டு: தன்னனன்னே நானனன்னே நானனன்ன நானா வண்ணக்குழிப் பிடைச்சொற்கள் எ-டு: தான, தத்த, தந்த, தய்ய, தன்ன, தனன, தனதான தில்லானா இடைச்சொற்கள் எ-டு: தீம் தீம் உதரிதான தனதிரனா தீம் மகுட இடைச்சொற்கள் தாலாட்டுப் பாட்டு-தாலோ தாலேலோ கப்பற் பாட்டு-ஏல ஏலோ ஏல ஏலோ கூப்பீட் டிடைச்சொற்கள் (அஃறிணைபற்றியன): எ-டு: தோதோ (துவா துவா), பேபே (போ போ) நாயேவ லிடைச்சொற்கள் எ-டு: உசு, உரீசு இரக்கக்குறிப் பிடைச்சொற்களும் வியப்புக்குறிப்பிடைச் சொற்களும் : பிள்ளைகள் துன்புறுமிடத்தும் வியக்கத்தக்க பொருளைக் காணும்போதும், தம் பெற்றோரை விளிப்பது இயல்பாதலால், பெற்றோர் பெயர்களினின்று இரக்கக்குறிப் பிடைச்சொற்களும் வியப்புக்குறிப் பிடைச்சொற்களும் தோன்றியுள்ளன. இரக்கம் வியப்பு பெற்றோர்பெயர் இடைச்சொல் பெற்றோர்பெயர் இடைச்சொல் ஐயன் ஐயோ, ஐயவோ அப்பன் அப்ப, அப்பா ஐயகோ, ஐயே அன்னை அன்னோ அம்மை அம்ம, அம்மா அத்தன் அத்தோ,அந்தோ அச்சன் அச்சோ அந்தவோ அந்தகோ அச்சன் அச்சோ அக்கை அகோ அக்கை அக்கோ-அகோ ஆத்தை ஆத்தே உலகவழக்கில், வியப்புக்குறிப் பிடைச்சொற்கள் ஆண்பாற் பெயர்த்திரிபாயின் அடா(அடே) என்னும் சொல்லையும், பெண் பாற் பெயர்த்திரிபாயின் அடி (அடீ) என்னும் சொல்லையும்,முற் கொள்ளும். ஆஆ என்னும் உணர்ச்சி யொலியடுக்கு, ஆவா என்று புணர்ந்து இரக்கக்குறிப் பிடைச்சொல்லும், அதன்பின் ஆகா என்று திரிந்து வியப்புக்குறிப் பிடைச்சொல்லும் ஆகும். அட, அடா, அடடா என்பன வியப்பும் கழிவிரக்கமும் உணர்த்தும் இடைச்சொற்களாம். அளிது, கெட்டேன் என்னும் இரக்கச்சொற்களுள் முன்னது செய்யுள் வழக்காம். பல்குறிப் பிடைச்சொற்கள் எ-டு: சுவை: சுள், சள், சப்பு ஒளி: தகதக, நிகுநிகு, பட்டுப்பட்டு, பளபள ஊறு: தண்மை - குளுகுளு, சில்,சிலுசிலு வெம்மையும் தண்மையும் - குதுகுது வெம்மை - கணகண, கதகத, சுள், வெதுவெது வன்மை - கட்டுக்கட்டு, திட்டுத்திட்டு இழுமெனல் - வழுவழு, மொழுமொழு சருச்சரை - சொரசொர, சுரசுர ஒட்டுதல் - பிசுபிசு, வழவழ மேலுணர்ச்சி - நமநம, பரபர, பொசுபொசு குத்துதல் - சுள்சுள் நோதல் - கடுகடு, சிவ், விண்விண் வியர்வை யழுக்கு - கசகச பதநிலை - குருகுரு (உறைந்த நெய்), குழகுழ (குழைவு), தெடுதெடு (நீர்ப்பதம்), சகசக (சகதி), சொதசொத (சாந்து, சேறு, கரைகஞ்சி), நொளுநொளு (கூழ்),மொறு மொறு (அப்பளம்,முறுக்கு) ஓசை: உருட்டு உருட்டு, ஊசுஊசு, கசுகுசு, கடாமுடா, கடுபுடு, கதக்குக் கதக்கு, கிசுகிசு, கிண்கிண், குப்புக்குப்பு, குறட்டுக் குறட்டு, கொல், சக்குச்சக்கு, சடக்கு, சடார், சதக்கு, சலக்கு, சருக்குச் சருக்கு, சவக்குச்சவக்கு, சளப்புச்சளப்பு, சொத்துப் பொத்து, தங்குதிங்கு, தடதட, தரதர, திடுதிடு, திண்திண், துருட்டுத் துருட்டு, தொப்புத்திப்பு, நறநற, நைநை, நொட்டுநொட்டு, பக்குப்பக்கு, பட்டுப்பட்டு, படக்கு, படபட, பரபர, பளார், பளிச்சுப் பளிச்சு; பறட்டுப்பறட்டு, புளிச்சுப் புளிச்சு, பொடுபொடு, பொத்துப்பொத்து, மடமட, மடக்குமடக்கு, மடார், முணுக்குமுணுக்கு, மொட்டுமொட்டு, மொடுமொடு, விண், விர்விர், வீர்வீர்(வீரா, வீரா) நாற்றம் : கம், கமகம அச்சம் : திக்குத்திக்கு, வெருக்குவெருக்கு விரைவு : அவக்கவக்கு, கடகட, கிசுக்கு, குடுகுடு, குப்பு, குபுக்கு, சட்டு, சரசர, சரட்டு, திடுதிப்பு, படபட, பசக்கு, பரபர, பொருக்கு, மடமட, மழமழ, மொடுக்கு, விசுவிசு, விசுக்குவிசுக்கு, விருவிரு,, வேகுவேகு. சுறுசுறுப்பின்மை : பூனாம் பூனாம் அசைவு : கறங்கறம், கிடுகிடு, கிணுக்குக்கிணுக்கு,கிணுக்கட்டிக் கிணுக்கட்டி, கிறுகிறு, கொடுகொடு; தளதள; படக்குப் படக்கு; வடவட இயக்கம் (செலவு): சவக்குச்சவக்கு, தத்தக்கப் பித்தக்க, தொதுக்குப் பொதுக்கு, நெளுநெளு அமைதி: கம், நள் சிந்துகை: குபுகுபு, சொளுசொளு, பொலுபொலு குளநிறைவு: கெத்துக்கெத்து நனைவு: தொப்புத்தொப்பு உலர்வு: கலகல, வறவற செறிவு: கொசகொச, செளுசெளு, திமுதிமு, பொதபொத இறுக்கமின்மை: தொளதொள செழிம்பு: கறுகறு, கிளுகிளு, செழுசெழு, புசுப்புசு பருமை: பொந்துபொந்து, பொம். சுருங்குதல்: சிவுக்கு, புசுக்கு அயர்வு: வலவல விழித்தல்: திருதிரு, பசபச விடிதல்: பலார் சினத்தல்: கடுகடு, சள்சள், சுடுசுடு-சிடுசிடு, வெடுவெடு பேச்சு: கொணங்கொணம், சளசள, தொணதொண, வளவள. இச் சொற்களையெல்லாம் என்று என்னும் இடைச்சொல் வினைமுற்றோடு இணைக்கும். எ-டு: சுள் என்று வெயிலடிக்கிறது. 2. சொல்லிடத்து வருவன சொல்லிடத்து வரும் இடைச்சொற்கள், (1) முன்னொட்டுகள், (2) வரிசையிடைச்சொற்கள், (3) இணைப்புச்சொற்கள், (4) பல்பொரு ளிடைச் சொற்கள், (5) ஈறுகள், (6) இடைநிலைகள், (7) சாரியைகள், (8) வேற்றுமை யுருபுகள், என எண்வகைப்படும். (1) முன்னொட்டுகள் (Prefixes) எ-டு: அல் - அ: அவலம். அல்: அஃறிணை, அல்வழி, அன்மொழி. மிகு - மீ: மீக்கூற்று, மீச்செலவு, மீந்தோல். நல் - ந: நக்கீரன், நச்செள்ளை, நத்தத்தன், நப்பசலை. அகவலைப்படுத்துதல், இடைச்செருகல், உட்கோள், உடன் பிறப்பு, உழிதருதல், உழைச்செல்வான், ஊடுருவல், கடைத்தேறல், கீழ்ப்படிதல், தலைக்கூடல், நடுத்தீர்ப்பு, பிற்போக்கு, புறங்கூற்று, மறுமுள் பாய்தல், முன்னேற்றம், மேற்பார்வை, வழிமொழிதல், வெளியிடுதல் என்னும் சொற்களின் முதலிலுள்ள அகம் இடை, உள், உடன், உழி, உழை, ஊடு, கடை, கீழ், தலை, நடு, பின், புறம், மறு, முன், மேல், வழி, வெளி என்னும் முன்னொட்டுகளும், இடைச் சொல்லாக ஆளப்பெற்ற பிறசொற்களே. இவற்றின் நேர் ஆங்கில அல்லது ஆரியச்சொற்கள் பெரும்பாலும் தூய முன்னொட்டுகளா யிருத்தல் காண்க. ஆரியச்சொற்கள் திரிசொற்களாதலின், தோற்றம் மறைந்துள்ளன; தமிழ்ச்சொற்கள் எல்லாம் இயற்சொற்களாதலின், தோற்றந்தெளிவாயும் தமித்து வழங்குவனவாயு முள்ளன. இதுவே இவைதம்முள் வேற்றுமை. (2) வரிசை யிடைச்சொற்கள் ஆம் - ஒன்றாம், முதலாம், நூறாம். ஆவது - ஒன்றாவது, நூறாவது, ஆயிரத்தாவது. (3) இணைப்புச்சொற்கள் (Conjunctions) அடுக்கிணைப்புச்சொற்கள்: உம் - அறமும் பொருளும் இன்பமும் வீடும் என உறுதிப் பொருள் நான்கு. ஏ - எழுத்தே அசையே சீரே தளையே அடியே தொடையே எனச் செய்யுளுறுப்புகள் ஆறு. மறுநிலை யிணைப்புச்சொற்கள்: எ-டு: ஆயினும், ஆகிலும்- வீடாகிலும் மனையாகிலும் உடனே வாங்கியாகவேண்டும். ஆதல் - புலவர் சின்னாண்டாராதல் புலவர் கந்தாண்டாராதல் புகைவண்டி நிலையத்தில் உங்களோடு தலைக்கூடுவார். ஆவது - ஒருவனுக்குத் தன்மதியாவது சொன்மதியாவது இருத்தல்வேண்டும். எனினும் - செல்வரெனினும் வறியவரெனினும் இச்சத்திரத்தில் வந்து தங்கலாம். எனினும் - ஏனும் செந்தமிழ்ச் செல்விக்குக் கட்டுரையேனும் செய்யுளேனும் எழுதி விடுக்க. ஓ - இன்றோ நாளையோ மழை தப்பாது வரும். ஆயினும், ஆகிலும், ஆதல், ஆவது, ஏனும் என்னும் இணைப்புச் சொற்கள், யார், ஏது முதலிய வினாப்பெயரின்பின் வரின், ஒரே முறை அமையும். எ-டு: யாராகிலும் ஒருவர் வருக. ஏதேனும் ஒன்று கொடு. உடனுற விணைப்புச்சொற்கள் (Correlative Conjunctions): மட்டுமன்று.........c«.-vL: இக்காலத்தில் ஒருவர் ஏந்தாக (வச தியாக) வாழவேண்டுமெனின், தமிழை மட்டுமன்று, ஆங்கிலத்தையும் கற்கவேண்டும். ஆகஎன்னு«சொšநேரல்கூற்w (Indirect Speech) Ko¡Fஞ்சொல்லேhடுஇணைக்கு«. எ-டு:அவ‹நாsவருவதாக¢சொன்னான். (4) பல்பொரு ளிடைச்சொற்கள் M.- இது சுட்டு, வினா, எதிர்மறை, இரக்கம், வியப்பு, நோவு, விளி முதலிய பல பொருள்களை உணர்த்தும். உம். இது இணைப்பு, உயர்வு, இழிவு, எதிர்மறை, எச்சம், முற்று, உகப்பு (choice), இசைநிறை முதலிய பலபொருள்களை உணர்த்தும். உரைநடைக்கும் சிறுபான்மை இசைநிறை வேண்டப்பெறும். v-டு: bபரும்பாலும்,bgதுவுடைமைக்காரர்கlவுள்ந«பிக்கையிšலாதவரே.j‹kf‹ கலைத்தலைவன் தேர்வில் முதற்றரமாய்த் தேறினானென்று கேள்விப்பட்ட jய்,mவனைப்bபற்றbபாழுதினும்bபரிதும்kகிழ்ந்தாள்.V இது வினா, பிரிநிலை, தேற்றம், இணைப்பு, இசை நிறை, ஈற்றசை, விளி முதலிய பலபொருள்களை உணர்த்தும். ஏரோது அரசன் காலத்திலே, யூதேயா நாட்டிலே, பெத்த லகேம் என்னும் சிற்றூரிலே, ஒரு மாட்டுத் தொழுவத்திலே, இயேசு பெருமான் பிறந்தார். இதில் இசைநிறை வந்தமை காண்க. ஓ இரு வினா, எதிர்மறை, பிரிநிலை, மறுநிலை, ஐயம், இரக்கம், வியப்பு, இழிவு, ஒழியிசை, விளி முதலிய பல பொருள்களை உணர்த்தும். (5) பல்வகை இலக்கண வீறுகள் தன்மைப்பெய ரீறுகள் ஒருமை : ஒன்-ன் பன்மை : உம்-ம், ம்(உம்)+கள் முன்னிலைப்பெய ரீறுகள் ஒருமை: ஒன்-ன்,(நீன்-நீ) பன்மை: உம்-ம், ம்(உம்)+கள் (நீ+இர்=நீயிர்-நீவிர், நீர்) படர்க்கைப்பெய ரீறுகள் ஆண்பாலீறுகள்: ஆள் என்னும் உயர்திணைச்சொல், ஆள்கிறவன் என்னும் கருத்தில் ஆண்பாலையும், ஆளப்படுகிறவள் என்னும் கருத்தில் பெண்பாலையும் உணர்த்தும். ஆண்பாலை யுணர்த்தும் இடங்கள்: 1. ஆடவன் நல்லா ளிலாத குடி (குறள். 1030) 2. திறவோன். ஆளல்லான் செல்வக் குடியுட் பிறத்தலும் (திரிகடு. 7) 3. போர்மறவன் பிணம்பிறங்க ஆளெறிந்து (பு.வெ. 2:7) 4. காலாள். ஆள்வெள்ளம் போகவும் (பு.வெ. 7:13) 5. கணவன். ஆளில்லா மங்கைக் கழகு (வாக்குண்டாம்,3) ஆளன்= 1. ஆள்பவன் 2. கணவன். ஆளன் இல்லாத துக்கம் அழுதாலும் தீராது. பெண்டாளுதல் என்னும் வழக்காறு, மனைவி கணவனால் ஆளப் பெறுதலை உணர்த்தும். ஆள் என்னுஞ் சொல் பாற்பொதுமை நீங்கி ஆடவனைக் குறித்தற்கு, ஆண் என்று திரிந்தது. ஆண் என்னும் சொல்லே, ஆன் என்று திரிந்து ஆண்பாலீறானதாகத் தெரிகின்றது. ணகரம் வடதிரவிட மொழிகளிற் பொதுவாக னகரமாகத் திரிவதால், ஆண் என்னும் சொல் அங்கு ஆன் என்றுதான் இருக்கும். ஆனீறு பின்னர் அன் என்று குறுகிற்று. எ-டு: அவன், செல்வன். அன்னீறு பின்பு அல் எனத் திரிந்தது. னகர மெய்யீறு லகர மெய்யீறாகத் திரிதல் இயல்பே. v-L: âw«-âw‹-âwš, brŒbt‹-brŒt‹-brŒtš, Mš-M‹ (3M« nt.c.), மேல்-மேன். அண்ணல், இளவல், செம்மல், வள்ளல் முதலிய பெயர்களின் அல்லீறு ஆண்பாலீறே. குரிசில் என்பது குருசல் என்பதன் திரிபா யிருக்கலாம். ஒ.நோ: பரிசல்-பரிசில். ஆனீறு ஓன் என்றும் திரியும் எ-டு: முன்னான்-முன்னோன். மாந்தனையும் பிள்ளையையும் குறிக்கும் மக என்னும் சொல் அன்னீறுபெற்று மகன் என்றாகும். அதுவும் ஓர் ஆண்பாலீறாம். எ-டு: பெருமகன், திருமகன், துரைமகன். மகன் என்னும் ஈறு மான் என்று மருவும். எ-டு: பெருமகன் - பெருமான், திருமகன் - திருமான், மரு மகன் - மருமான். மான் ஈறு மன் என்று குறுகும். எ-டு: வடமன். அன்னீறு பெற்ற அப்பன், ஐயன், அண்ணன் என்னும் முறைப் பெயர்களும், அருமை குறித்த ஆண்பாலீறாக வழங்கும். எ-டு: கண்ணப்பன், பொன்னையன், கருப்பண்ணன். பால் தோன்றாத முதற்காலத்தில் இகரவீறு ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால் ஆகிய ஒருமைப்பால் மூன்றையும் உணர்த்தி வந்தது. அவ் வழக்கு இன்றுமுளது. எ-டு: தொழிலாளி, விறகுவெட்டி - ஆண்பால் கிழவி, கயற்கண்ணி - பெண்பால் மண்வெட்டி, காடைக்கண்ணி - ஒன்றன்பால் அன்னீறு பெற்ற ஆளன் என்னும் சொல்லும், இகரவீறு பெற்ற ஆளி என்னும் சொல்லும், ஆண் பாலீறு போன்றும் வழங்கும். எ-டு: வேளாளன், தாளாளன். முதலாளி, மலையாளி. இனி, உடைமையும் உரிமையும் உணர்த்தும் காரன் என்னும் சொல்லும் ஆண்பாலீறாம். எ-டு: வீட்டுக்காரன், வண்டிக்காரன். தையற்காரன், வேலைக்காரன், கூலிக்காரன் என்னும் சொற் களும், தையல் வேலைக்கும் வேலை செய்தற்கும் கூலித் தொழி லுக்கும் உரியவன் அல்லது அத் தொழில்களை உடையவன் என்றே பொருள் படும். கடுமை = மிகுதி, வலிமை. கடு - கடி - கரி - காரம் = கடுமை, மிகுதி, வலிமை, அதிகாரம், உரிமை. காரம் - காரன் = உரிமையாளன், உடையவன். வடமொழியிலுள்ள க்ரு என்னும் வினையடியாகப் பிறந்து, செய்பவனைக் குறிக்கும் கார என்னும் சொல்லினின்று காரன் என்னும் ஆண்பாலீறு திரிந்ததாக வடவர் கூறுவது பொருந்தாது. ஆட்டுக்காரன், கடைகாரன், கப்பற்காரன், காய்ச்சற்காரன், குடைகாரன், குருவிக்காரன், கோழிக்காரன், சொந்தக்காரன், தட்டுக்காரன், தோட்டக்காரன், நிலத்துக்காரன், பட்டக்காரன், பணக்காரன், பாளையக்காரன், பிள்ளை குட்டிக்காரன், புன்செய்க் காரன், புள்ளிக்காரன், பொறுமைக்காரன், பொறாமைக்காரன், மாட்டுக்காரன், முட்டைக்காரன் முதலிய எண் ணிறந்த பெயர்கட்கு, உரிமைப் பொருளன்றிச் செய்கைப்பொருள் சிறிதும் பொருந் தாமை காண்க. பெண்பாலீறுகள் ஆள் என்னும் சொல், ஆடவனுக்கு ஆட்படுகிறவள் என்னும் கருத்தில் பென்பாலீறாயிற்று. சேரநாட்டுத் தமிழின் திரிபாகிய மலையாளத்தில், ஆள் என்னுஞ் சொல் அந்நாட்டு வழக்கிற்கேற்ப ஓகார முதற்சொல்லாய்த் திரிந்து, மனைவியைக் குறிக்கின்றது. அது தெலுங்கில் ஆலு என்று திரிந்து பெண்ணைக் குறிக்கின்றது, கூமொழியிலும் இங்ஙனமே ஆதலால், பண்டைத் தமிழிலும் இவ் வழக்கு இருந்திருத்தல் வேண்டும். இன்றும், மனையாள் என்னும் முறைப் பெயரும் வந்தாள் என்னும் வினையாலணையும் பெயரும், மனையோள், வந்தோள் என மலையாளத்தை யொத்துத் தமிழிலும் திரிதல் காண்க. ஆள் ஈறு அள் என்று குறுகும். எ-டு: அவள், மகள். அள்ளீறு பெற்ற மகள் என்னும் பெயரும் மாள் என்று மருவிப் பெண்பாலீறாம். எ-டு: வேண்மகள் - வேண்மாள், பெருமகள் - பெருமாள். (பெருமால் - பெருமாள் = விட்டுணு) சில அன்னீற்று ஆண்பாற் பெயர்கள் பெண்பாலில் ஐ யீறாகத் திரியும். எ-டு: ஆசிரியன் - ஆசிரியை, ஐயன்-ஐயை, சிவன் - சிவை, பண்டிதன் - பண்டிதை, பரத்தன் - பரத்தை, பரன் - பரை, வலவன் -வலவை. பண்டையொருமை யீறாகிய இகரவீறும் பெண்பாலீறாதல் முன்னர்க் கூறப்பட்டது. எ-டு: செல்வன்-செல்வி, புலவன்-புலத்தி. கள்ளன்-கள்ளி, கிழவன்-கிழத்தி. சில ஆண்பால் அன்னீறு பெண்பாலில் இனி என்று திரியும். எ-டு: பாணன்-பாணினி-பாடினி. சில ஆண்பால் அனன் ஈறு பெண்பாலில் அனி என்று திரியும். எ-டு: பார்ப்பனன்-பார்ப்பனி. அன்னையைக் குறிக்கும் அம்மை, அச்சி என்னும் பெயர்கள் அருமைபற்றிப் பெண்பாலீறாம். எ-டு: கண்ணம்மை, தங்கைச்சி. அத்தி அச்சி என்னும் அன்னை பெயர்கள், குலமும் தொழிலும் பற்றிய பொண்பாலீறாய் வழங்கும். எ-டு: மறத்தி, மருத்துவச்சி. அத்தி, அச்சி என்பன இத்தி, இச்சி என்றுந் திரியும். எ-டு: வேட்டுவித்தி, கட்டுவிச்சி. சில பெண்பாற் பெயர்கள், ஆண்பாற்குரிய மறமும் ஆண்மையு முணர்த்த ஆண்பாலீறு கொள்ளும். எ-டு: அம்மை-அம்மன், பேடு-பேடன். அம்மை என்னுஞ் சொல்லை யொத்து, அக்கை என்னும் சொல்லும் அக்கன் என்று திரியும். ஆண்மை கொண்ட பெண்ணைப் பேடன் என்பது போல் பெண்மை(பெண்டன்மை) கொண்ட ஆணைப் பேடி என்பது மரபு. இவ் விரண்டிற்கும் பொதுவானது பேடு என்னுஞ் சொல். ஆணும் பெண்ணும் அல்லாதது அல்லது கலந்தது அலி. இப் பெயர்கள் வினை கொள்ளும்போது, பேடன் வந்தான், பேடி வந்தாள், பேடு வந்தது, அலி வந்தது என ஆட்டன்மையும் சொல்லீறும்பற்றி வரும். இது இலக்கண மரபு. உலக வழக்கில், பேடியைப் பெட்டையன் என்றும், ஆண்மை யற்றவனைப் பெண்ணையன் அல்லது அண்ணகன் என்றும், உருவம் பற்றிப் பேடி வந்தான், பெண்ணையன் வந்தான், அண்ணகன் வந்தான் என்றும், கூறுவதே மரபாம். அலியாயின், ஆணலியை வந்தான் என்றும், பெண்ணலியை வந்தாள் என்றும், உருவத்திற் கேற்பக் கூறுவர். ஆளன் என்னும் ஆண்பாலீறு, பெண்பாலில் ஆட்டி என்று திரியும். ஆள் + தி = ஆட்டி. தி என்பது அத்தி என்பதன் குறுக்கம். எ-டு: கண்ணாளன் - கண்ணாட்டி, திருவாளன் - திருவாட்டி, வெள்ளாளன் - வெள்ளாட்டி. காரன் என்னும் ஆண்பாலீறு, பென்பாலிற் காரி என்று திரியும். எ-டு: கெட்டிக்காரன் - கெட்டிக்காரி, பணக்காரன் - பணக்காரி. மானீற்று ஆண்பாற் பெயர்கட் கொத்த பெண்பாற் பெயர்கள், மாட்டி என்னும் ஈறு கொள்ளும். மகள் - மாள் + தி = மாட்டி. எ-டு: திருமான் - திருமாட்டி, பெருமான் - பெருமாட்டி. திரு என்னும் சொல் ஸ்ரீ என்றும், திருமான் என்னும் சொல் ஸ்ரீமத் என்றும், வடமொழியில் திரியும். ஸ்ரீமத் என்பதன் பெண்பால் ஸ்ரீமதீ-திருமதி சில பெண்பாற் பெயர்கள் வடமொழியிலும் தென்மொழி யிலும் வெவ்வேறு வகையில் அமைந்து, ஒன்றுபோல் தோன்றும். எ-டு: பதி-பத்நீ (வ.) = மனைவி. பத்தன்-பத்தினி(தெ.) = கணவனிடத்திற் பத்திபூண் டவள், கற்புடை மனைவி. சில பெண்பாற் பெயர்கள் இகர வீற்றுடன் இச்சி யீறுங் கொள்ளும். எ-டு: குருவிக்காரன் - குருவிக்காரிச்சி, வெள்ளைக்காரன் - வெள்ளைக்காரிச்சி. மாறோக்கம் என்னும் கொற்கை நாட்டார், பண்டை நாளில் சிறுமியைப் பெண்மகன் என்றனர்; இன்று வடார்க்காட்டார் பெட்டைப் பசன் என்பர். பையன்-பயன்-பசன். பலர்பாலீறுகள் ஆர்தல் = பொருந்துதல், கூடுதல், நிறைதல். ஆர் = பொருத்து, நிறைவு. பலர் கூடுதல் என்னும் கருத்தில் ஆர் என்னுஞ் சொல்லே பலர்பாலீறாயிற்று. எ-டு: தட்டார், பொல்லார். ஆரீறு அர் எனக் குறுகும். எ-டு: அவர், பலர், கொல்லர். ஆரீறு ஓர் என்றும் திரியும். எ-டு: பெரியார் - பெரியோர், முன்னார் - முன்னோர். ஆர் ஈறு பெற்ற மகார் என்னும் பெயரும் மார் என மருவிப் பலர் பாலீறாம். மக-மகார்-மார். எ-டு: அண்ணன்மார், தேவிமார். செய்யும் என்னும் எதிர்கால வினைமுற்றோடு ஆரீறு சேரும் போது, ஒரு மார் தோன்றும். அது வினையீறு. செய்யும் + ஆர் = செய்யுமார் - செய்மார் - செய்வார். உயர்திணைக்கு உரியதன்றென்று விலக்கப்பட்ட கள் ஈறு, சிறுபான்மை அத் திணைக்கும் வரும். எ-டு: மக்கள், கோக்கள், குருக்கள், திருக்கள், நாங்கள், நீங்கள், அவர்கள், தாங்கள், ஆள்கள், ஆண்கள், பெண்கள், பையன்கள். மக்கள் என்னும் பெயர் தொல் காப்பியத்திலும் உள்ளது. உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே. (484) மக்கள் தாமே ஆற்றி வுயிரே. (1532) மக + கள் = மக்கள். இது மரூஉப் புணர்ச்சி. ஒ.நோ: அக + களிப்பு = அக்களிப்பு. மக்களை இழிந்தோர், ஒத்தோர், உயர்ந்தோர் என முத்திறத்தா ராக வகுத்து, அவரை முறையே நீ, நீர், நீங்கள்; அவன், (அவள்), அவர், அவர்கள் என்னும் சொற்களாற் குறிப்பது தூய உலகவழக்கம். பன்மையிலக்கணமெல்லாம் செய்யுள் நடைக்கே எழுதப்பெற்றதி னால் இவ் வழக்கு அதில் இடம்பெறவில்லை. அடிகள் என்பது திருவடி நோக்கிக் கடவுளைக் குறிக்கும். அது துறவினால் தெய்வத்தன்மை பெற்ற பெரியோரைக் குறிக்கும் போது இருபாற்பொதுவாம். எ-டு: இளங்கோவடிகள், கவுந்தியடிகள். ஆரீறும் கள்ளீறும் உயர்வுபற்றி ஒருமைக்கும் வரும். எ-டு: மகனார், நக்கீரனார், அடிகளார், வள்ளலார், நீங்கள், அவர்கள், தாங்கள், குருக்கள். செய்யுள்நடை, உரைநடை என இலக்கிய நடை இருவகைப் படும். செய்யுள்நடைக்கு விலக்கப்பட்ட உலகவழக்கு உரைநடைக்கு வரும் என அறிக. உலகவழக்கென்பது உயர்ந்தோர் வழக்கேயன்றி இழிந்தோர் வழக்கன்று. ஒன்றன்பாலீறுகள் திணைபால் தோன்றாத முதுபண்டைக் காலத்தில், ஒன்று என்று பொருள்படும் ஒன் என்னுஞ் சொல் ஒருமையுணர்த்திற்று. அது புணர்ச்சியில் தொக்கு ன் அளவாயும் நிற்கும். எ-டு: நான், நீன், தான். ஒன்னீறு அன்னீறாகவும் திரியும். அன்னீறு ஆனீறாம். எ-டு: நெடுங்கழுத்தன் (ஒட்டகம்), சொறியன் (தவளை), கடுவன்; உள்ளான், கரிப்பான், கத்தரிப்பான். ஆண்பால் அன்னீறுபோல், பண்டை யொருமை அன்னீறும் அல் எனத் திரியும். எ-டு: உள்ளான் - உள்ளல், நெடுங்கழுத்தன் - நெடுங்கழுத்தல். சுட்டெழுத்துகளும் முதற்காலத்தில் ஈறாயிருந்து ஒருமை யுணர்த்தினதாகத் தெரிகின்றது. அவற்றுள் இகரமே இன்று வழக் கிலுள்ளது. இ = இது. எ-டு: குதிரைவாலி, பனையேறி (மீன்). அல்லி, பல்லி, புலி (புல்லி), கிளி (கிள்ளி) முதலியனவும், குன்னி, நன்னி முதலியனவும், இகரவீற்றுப் பெயர்களே. ஐம்பாலீறு தோன்றியபோது, அது, இது, உது என்னும் சுட்டுப்பெயர்கள் ஒன்றன்பா லீறாயின. அ-அம்-அன்-அல்-அது; இ-இம்-இன்-இல்-இது; உ-உம்-உன்-உல்-உது. எ-டு: (கிழது)-கிழடு, கரிது-கரிசு, ஏருது-எருது. சிறிது பெரிது எளிது வலிது என்னும் சொற்களின் ஈறு, இது என்னும் சுட்டுப்பெயரே. வலத்தை, கருத்தை, சிறுத்தை, வெந்தை என்னும் சொற்கள், முறையே, வலத்தது, சிறுத்தது, வெந்தது என்று பொருள்படுவதை யும், ஐகாரவீற்றுச் சொற்கள் பல முதலில் அகர வீற்றவாயிருந் ததையும், நோக்கும்போது, அகரமும் அது என்னும் சுட்டடி யீறுபோற் பயன்பட்டிருக்கலாம் என்று கருத இடமேற்படுகின்றது. பலவின்பாலீறுகள் முதற்காலத்திலிருந்த பன்மையீறு, கூடுதல் என்னும் பொருள் கொண்ட உம் என்னும் சொல்லென்பது, முன்னர்க் கூறப்பட்டது. அறமும் பொருளும் என்னுந் தொடரில், உம் என்பது கூடுதற் பொருளைக் குறித்தல் காண்க. அச் சொல் இன்று அப் பொருளில் வழக்கற்றுப் போயினும், அதன் அடிப்பிறந்த கும் என்னுஞ் சொல் அப் பொருளில் வழங்குதலை நோக்குக. கும்முதல் கூடுதல், கும்-கும்மிங், கும்-கும்பு - கும்பல் உம்மீற்றின்பின் தோன்றிய பன்மையீறு கள் என்பதே. அதுவும் கூடுதல் என்னும் பொருளதே. கள்ளுதல் = கூடுதல், கலத்தல், பொருந்துதல், ஒத்தல். கள் - களம் = கூட்டம், கூடுமிடம். அவைக்களம், ஏர்க்களம், போர்க்களம், திணைக்களம் முதலிய சொற்களை நோக்குக. களம் - களன் - களம் -களர் - களரி. களம் - (களகு) - கழகு - கழகம். கள்ள என்பது ஓர் உவமவுருபு. கள்ள மதிப்ப வெல்ல வீழ (தொல். 1285) கள்ள=பொருந்த, ஒக்க. பலபொருள்கள் கூடுதல் என்னுங் கருத்தில், கள் என்னுஞ் சொல் பன்மையீறாயிற்று. மரங்கள் = மரக்கூட்டம். ஐம்பாலீறு தோன்றியபோது, அகரச்சுட்டும் அதனடிப் பிறந்த அவை என்னும் சொல்லின் வையீறும் பலவின்பாலீறாக வரை யறுக்கப் பெற்றன. அ-அம்-அவ்-(அவ)-அவை. இ-இம்-இவ்-(இவ)-இவை. உ-உம்-உவ்-(உவ)-உவை. எ-டு: பல, நல்லவை. பால்பகா அஃறிணைப்பெயர் ஒருமையீறும் பன்மையீறும் பெறாது இயல்பாக இருக்கும் அஃறிணைப் பெயர்களெல்லாம், ஒருமைக்கும் பன்மைக்கும் பொதுவாம். அவற்றின் எண், அவற்றின் வினைமுற்றாலும் முன்பின் வரும் சொல்லாலும் அறியப்படும். இது வழாநிலையாம். எ-டு: மரம் வளர்கிறது. குதிரை ஓடுகிறது. ஒருமை ஒரு காய் என்னவிலை? மரம் வளர்கின்றன. குதிரை ஓடுகின்றன. பன்மை நூறுகாய் வாங்கினேன். உயர்திணையிலும், ஆண்பாலீறும் பெண்பாலீறும் பெறாது அவ் விரண்டிற்கும் பொதுவாயிருக்கும் ஒருசில பெயர்கள் இம் முடிபு கொள்ளும். இது வழுவமைதியாம். எ-டு: பேருக்கு ஐந்துவரும். - ஒருமை ஆயிரம்பேரைக் கொன்றவன் அரை மருத்துவன். - பன்மை பெற்றதாயைப் பேணாத மூடர் என்பதில், தாய் என ஒருமையில் வந்தது வகுப்பொருமை யெனப்படும். தாயர் என்று பன்மையில் வரின், ஒவ்வொருவர்க்கும் நற்றாயர் பலர் என்று பொருள்படுதலும் அங்ஙனம் கூடாமையும் காண்க. பண்புப்பெயரீறுகள் பண்புப்பெயரீறுகள் சுட்டடிச்சொல், சினைப்பெயர், இடப்பெய ர், நீர்ப்பெயர் என்னும் நால்வகையில் தோன்றியுள்ளன. சுட்டடிச்சொல் அ-ஐ எ-டு: தொல்லை, பச்சை அ-அம் நலம், சினம், ஆழம், தனம்(தன்மை) அம்-அன் திறம்-திறன் அன்-அல் திறன்-திறல் அல் இயல் அந்து+ஐ அரந்தை அது-து சேது (சிவப்பு) து-று நன்று அது-அதி-தி மறதி, அமைதி தி-றி நன்றி தி-சி மாட்சி, வறட்சி அல்-அள் மஞ்சல்-மஞ்சள் அள்-அண் முரண் அல்-அர் மயல்-மயர் அர் நன்னர் அம்-அவ்-அவு மழவு அவு-அவி-வி மறவி அவு-அபு-பு மாண்பு, பண்பு, அன்பு பு+அம் நுண்-நுட்பு-நுட்பம், இன்-இன்பம் அல்+பு இயல்பு அவு-அகு குழவு-குழகு அகு-கு நன்கு, அழகு இங்ஙனமே ஏனை யிருசுட்டிற்கும் ஒட்டிக்கொள்க. எ-டு : இ - வெகுளி, இல்-எழில் (அழகு), இதம் - பெருமிதம். சினைப்பெயர் எ-டு: தறுகண் (அஞ்சாமை). இடப்பெயர் எ-டு: அகம்-வஞ்சகம், தலை-உறுதலை, கண்-இடுக்கண். நீர்ப்பெயர் நீர் - நெடுநீர் (மறவி), மை-தன்மை, நன்மை. குணங்கள் பெரும்பாலும் வினைவாயிலாய் வெளிப்படுவ தால் குணப்பெயர்களும் பெரும்பாலும் வினையடிப் பெயர் களாகவேயுள்ளன. இனிப்பு புளிப்பு முதலியன சொல்லால் தொழிற்பெயரா யினும், பொருளாற் பண்புப்பெயராம். அஞ்சாமையும் மறமும் கண்ணால் வெளிப்படுதலின், அக் குணத்தைக் குறிக்கக் கண் என்னும் சொல் ஈறாயிற்று. கடுங்கண் மறவர் என்னும் வழக்கை நோக்குக. கண் கால் கை தலை முதலிய சினைப்பெயர்கள், இடப் பெயராகவும் இருவகை வழக்கிலும் ஆளப்பெறும். தமிழ்நாடு வெப்பநாடாதலின், குளிர்ச்சியைத் தரும் நீரின் பெயரும் மழையின் பெயரும் இனிய தன்மையைக் குறிக்கலாயின. பின்னர் அவை தன்மை என்னும் பொதுப்பொருளில் ஆளப்பெற்றன. கக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் அன்னநீ ரார்க்கே யுள. (527) சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில நீர்மை யுடையார் சொலின். (195) நெடுங்கடலுந் தன்னீர்மை குன்றும் தடிந்தெழிலி தானல்கா தாகி விடின்.  (17) என்னும் குறள்களை நோக்குக. நீர் = நீரின் குளிர்ந்த தன்மை, தன்மை. நீர்மை = சிறந்த தன்மை - தன்மை. மை = கருமுகில், மழைநீர், நீர். நீர், மை என்னும் இருசொல்லும் பண்புப்பெயரீறானபின், நீர் என்னும் சொல்லும் தன்மை யென்னும் பொதுப்பண்புப் பெயர் போல் மையீறு பெற்றதென்க. தொழிற்பெய ரீறுகள் தொழிற்பெயர் வகைகள் (1) முதனிலைத் தொழிற்பெயர். எ-டு: அடி, கட்டு. (2) முதனிலை நீண்ட தொழிற்பெயர். எ-டு: உண் - ஊண், புறப்படு - புறப்பாடு, கூப்பிடு - கூப்பீடு - கூப்பாடு. (3) முதனிலை வலித்த தொழிற்பெயர். எ-டு: விரும்பு - விருப்பு, நீந்து - நீத்து. (4) முதனிலை வலியிரட்டித்த தொழிற்பெயர். எ-டு: கருது, கருத்து, பேசு-பேச்சு. (5) முதனிலை ஈறுபெற்ற தொழிற்பெயர். எ-டு: செய்கை, படிப்பு. (6) முதனிலை நீண்டு ஈறுபெற்ற தொழிற்பெயர். எ-டு: நடி- நாடகம், படி-பாடம். (7) முதனிலை வலியிரட்டித்து ஈறுபெற்ற தொழிற்பெயர். எ-டு: ஆடு-ஆட்டம், ஆகு-ஆக்கம். ஆட்டம், ஆக்கம் என்பன ஆடுதல், ஆகுதல் என்று பொருள் படுங்கால், தன்வினையடிப் பிறந்தவையே. (8) முதனிலை வலித்து ஈறுபெற்ற தொழிற்பெயர். எ-டு: அஞ்சு-அச்சு-அச்சம், விரும்பு-விருப்பு-விருப்பம். (9) ஈறு திரிந்த தொழிற்பெயர். எ-டு: வெல்-வென், வேள்-வேண். (10) பலவீற்றுத் தொழிற்பெயர். எ-டு: கல-கலப்பு, கலப்படம், யா-யாப்பு-யாப்புறவு. தொழிற்பெயரீறு வகைகள் (1) சினைப்பெயர்கள், (2) இடப்பெயர்கள், (3) சுட்டடிகள், (4) அளவுகுறித்த சொற்கள், (5) பண்புப்பெயரீறு. (6) வினைமுற்றீறு. (1) சினைப்பெயர்கள் கை என்பது ஆகுபெயராய்க் கையினாற் செய்யும் தொழிலை யுங் குறிக்கும். இது கருவியாகுபெயர். இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது கைசெய்தூண் மாலை யவர் (1035) என்னுங் குறளிலுள்ள `கைசெய்து' என்னுந் தொடருக்கு, கையினாற் செய்து என்று உரை கூறுவதினும், சிறந்த தொழிலாகிய உழவைச் செய்து கூறுவது பொருத்தமாம். தொழிலைக் குறிக்கும் கை என்னும் சொல் தொழிற் பெயரீறாவது பொருத்தமே. எ-டு: செய்-செய்கை, கல்-கற்கை, நம்பு-நம்பிக்கை. கை என்னும் சினைப்பெயரும் செய் என்னும் வினையினின்று திரிந்ததே . செய்-(கெய்)-கை. தொழிற்பெய ரீறான மற்றொரு கைப்பெயர் பாணி என்பதாம். எ-டு: சிரி-சிரிப்பாணி=சிரிக்கை (சிரிப்பு). இது நெல்லை வட்டார வழக்கு. பாணி கை. பண்ணுவது பாணி. கையினாற் செய்யும் இசைக் காலவறுப்பும் பாணி யெனப்படும். (2) இடப்பெயர்கள் அகம்-நம்பகம், வஞ்சகம், தாண்டவம்-தாண்டகம். தலை-விடுதலை. சுட்டடிச்சொற்கும் இடப்பெயர்க்கும் வேறுபாடறிதல் வேண்டும். அகம் என்பது சுட்டடிச் சொல்லாயின் அகு+அம் என்று பிரியும்; இடப் பெயராயின் பிரியாது. எ.டு: கழகு-கழகம், உலகு-உலகம். நம்பு-நம்பகம், வஞ்சி-வஞ்சகம், நடி-நாடகம். (3) சுட்டடியசைகள் எ-டு: அம்-மணம், கணியம், ஓட்டம்; சம்-கணிசம்; தம்-கணிதம். அல்-பாடல், நீட்டல்; கல்-கொடுக்கல்; சல்-வளைசல்; தல்-வாழ்தல், கேட்டல், காண்டல், கற்றல், தின்றல்; வல்(வு+அல்)-பார்வல். இ-போற்றி; சி-நீட்சி, காட்சி, வீழ்ச்சி; தி-மறதி, குளிர்த்தி, கொண்டி; வி-அளவி, கேள்வி. (உ)-கு-கணக்கு; சு-(தொடுசு)- தொடிசு, முடிச்சு; து-வரத்து; பு-நடப்பு, படிப்பு, கொடுப்பு, நட்பு; வு-களவு, இழிவு, உழவு, சோர்வு. ஆ-உணா (ஆ-)ஐ-கொள்ளை, கொலை, நடை, குவை, தடை; தை-நடத்தை, வை(வு+ஐ)அளவை, இழுவை, பார்வை. ஆம்-குழாம். ஆல்-எழால். சுட்டடியீறுகள் உயிரெழுத்துப்பற்றி ஒரு வகையான ஒழுங்கு படுத்தப்பட்டிருப்பினும், அவற்றிற்கொல்லாம் மூலம் முற்கூறிய வாறே என்று அறிந்து கொள்க. எ-டு: அ-அவ்-அவு-அகு-கு. அகு-அக்கு-கு. சில ஈறுகள் போலி முறையில் வேறீறாகவும் திரியும் எ-டு: கடையல்-கடைசல்-கடைதல் கணியம்-கணிசம்-கணிதம் அடைவு-அடவு-அடகு. உழவு-உழப்பு (உழப்பெருது=உழவெருது சில வினைமுதனிலைகள் பல்வடிவு கொண்டு வடிவிற்கேற்ப ஈறேற்கும். எ-டு: போ-போதல், போகு-போக்கு (வலியிரட்டல்), போது-போதுகை. இங்ஙனமிருப்பினும், கை.தல், என்னும் ஈரீறுகள் எல்லா வினை முதனிலையும் அவற்றின் பல் வடிவுகளும் ஏற்கும். சில வினைமுதனிலைகள் தொழிற்பெயராகும்போது சிறிதும் பெரிதும் திரியும். எ-டு: நம்பு-நம்பிக்கை, குதி-கூத்து. சில ஈறுகள் இரண்டும் பலவும் சேர்ந்து கூட்டீறாம். எ-டு: அல்+அம்=அலம். எ-டு: பொட்டலம். அலம் ஈறு பின்வருமாறு திரியும். அலம்-அளம்-அணம்-அடம். அலம்-அனம்-அனை-ஆனை. அலம்-அதம்-அரம்-அரவு. அதம்-அசம். எ-டு: தப்பளம், கட்டணம், கட்டடம். வஞ்சனம், வஞ்சனை, வாரானை. விளம்பரம். தேற்றரவு, உப்பசம். அகர முதலீறுகள் ஒத்த இகர உகர முதலீறுகளும் உள. இல்-எழில்(எழுச்சி), இதம்-தப்பிதம், இம்-(உரிம்)-(உரிந்)-உரிஞ்+உராய்தல். உம்-பொரும்-பொருந்=பொருந்துதல். (4) அளவு குறித்த சொற்கள் மானம்=அளவு. வருமானம்=வரும் அளவு. பெறுமானம்= பெறுமதிப்பு. காடு=மிகுதி. கடுத்தல் மிகுதல். கடு-காடு. வெள்ளக்காடு, பிள்ளைக்காடு என்னும் வழக்குகளை நோக்குக. மானம்-தீர்மானம். காடு-வேக்காடு. விதைப்பு என்று பொருள் படும் விதைப்பாடு என்னும் சொல், அகப்பாடு, அடிப்பாடு, அருளிப்பாடு, கடப்பாடு, குறைபாடு, வெளிப்பாடு என்னும் சொற்கள்போல், படு என்னும் துணைவினை நீண்ட தொழிற் பெயரே. சாப்பாடு கூப்பாடு என்பவை, சாப்பீடு கூப்பீடு என்பவற்றின் திரிபாம். (5) பண்புப் பெயரீறு எ-டு: மை-வந்தமை, வருகின்றமை, வராமை. (6) வினைமுற்றீறு அது-து-வந்தது, வருகின்றது, வருவது, வராதது. இதுவும் சுட்டடிச் சொல்லாயினும், வினைமுற் றீறாயிருத்தல் பற்றி வேறு கூறப்பெற்றது. வந்தது=வந்த அது. வராதது-வராத அது. தொழிற்பெயரீறுகளின் சிறப்புப் பொருள் ஒரு வினைமுதனிலை பல ஈறுகள் பெற்றுப் பல்வேறு தொழிற் பெயரும் பண்புப் பெயரும் தொழிலாகு பெயரும் ஆகலாம். முதனிலை ஒன்றேனும் ஈறு வேறுபடப் பொருள் வேறுபடும். எ-டு: நம்பு-நம்பிக்கை = உண்மையாகக் கொள்ளுதல் (belief) நம்பகம் (faith) = விசுவாசம் (வ.) நம்பு (முதனிலைத் தொ. பொ.) = நம்பாசை (hope) நம்பும் மேவும் நசையா கும்மே. (தொல்.உரி.31) கல்-கற்றல் = கற்குஞ் செயல் கற்கை = படிப்பு (learning) கல்வி = நாட்டுப்படிப்பு முறை (education) கலை = கல்வித்துறை அல்லது பயிற்சிக்கல்வி. கற்பு = தனிக் காதலொழுக்கம். நட-நடத்தல் = நடக்குஞ் செயல். நடக்கை = நாட்டு வழக்கு, ஒழுகும் முறை. நடத்தை = ஒழுக்கம். நடப்பு = நிகழ்காலத்தது (That which is current) நடை = மொழிப்போக்கு (style), வாசலுக்கு அடுத்த உட்பக்கம் (threshold) நடவை = வழி, மொழிவழங்குமிடம். நடவு = ஆட்சி வினையாலனையும் பெயரீறுகள் (1) வினைமுற்றீறுகள் தன்மை ஒருமை: ஏன் எ-டு: வந்தேன் தன்மைப் பன்மை: ஏம், ஓம் வந்தேம், வந்தோம் முன்னிலை ஒருமை: ஆய்(ஈ-ஏ-ஐ-ஆய்) வந்தாய் முன்னிலைப்பன்மை: ஈம், ஈர் வந்தீம், வந்தீர் ஈர், ஈங்கள், ஈர்கள் '' வந்தீங்கள், வந்தீர்கள் படர்க்கை: ஆ.பா:ஆன் வந்தான் பெ.பா: ஆள் வந்தாள்,, ப.பா: ஆர் வந்தார், வந்தார்கள் ஒ.பா: அது வந்தது பல.பா: அவை, அன வந்தவை, வந்தன (2) சுட்டுப் பெயர்கள் செய்தவன், செய்தவள், செய்தவர் (செய்தவர்கள்), செய்தது, செய்தவை. செய்தவன் = செய்த அவன். இங்ஙனமே ஏனையவும். இவ் வடிவம் படர்க்கைக்கே யுரியது. (3) ஆ ஓஆன ஈறுகள் எ-டு : வந்தோன், வந்தோள், வந்தோர் (வந்தோர்கள்) இவ் வடிவம் உயர்திணைப் படர்க்கைக்கே உரியதாம். பல்வகை வினைமுதலீறுகள் (1) செய்வானீறுகள் இ. இது மூவிட வொருமைப்பாலிலும் எண்ணிலும் வரும். எ-டு: மரமேறி, கல்லுப்பொறுக்கி, தொட்டாற்சிணுங்கி, கொல்லி, வெட்டி முதலிய பெயர்கள் அடையில்லாது வரின், மூவிட வொருமைப்பாற்கும் எண்ணிற்கும் பொதுவாம். ஆன். இது பெண்பாலொழிந்த மூவிட வொருமைப்பாற்கும் எண்ணிற்கும் பொதுவாய் வரும். எ-டு: ஓதுவான், காற்றடிப்பான் (air-pump). உயர்திணை ஆனீறும் அஃறிணை ஆனீறும் வெவ்வேறா யினும், வடிவொருமைபற்றி ஒன்றாய்க் கூறப்பட்டன. (2) உடையானீறுகள் அன்-ஆன்: இவை பெண்பாலொழிந்த படர்க்கையொ ருமைப் பால்களில் வரும். எ-டு: கரிகாலன், வேலான்; அரைவயிறன் (அரை விளைச்சல் நென்மணி), களையான் (வானம்பாடி). இ. இது ஆண்பாலொழிந்த மூவிட வொருமைப்பால்களில் வரும். எ-டு: தடங்கண்ணி, நீர்முள்ளி (3) இல்லானீறுகள் இலி, அறை. இவை மூவிட வொருமைப்பாலிலும் எண்ணி லும்வரும். எ-டு: அறிவிலி=அறிவில்லாத நான், நீ. அறிவில்லாதவன்-வள்-து. காதறை=காதில்லாத நான், நீ. காதில்லாதவன்-வள்-து. (4) கொண்டானீறு கொள்ளி கொளி. இவை மூவிட வொருமைப்பாற்கும் எண்ணிற்கும் பொதுவாம். எ-டு: பித்துக்கொளி=பித்துக்கொண்ட நான், நீ. பித்துக்கொண்டவன்-வள்-து. அடைகொளி=அடைகொண்டது. (5) செயப்படுபொருள் ஈறு அம்-ம். எ-டு:தொல்காப்பியன் தொல்காப்பியம் = தொல் காப்பியனால் இயற்றப்பட்டது. சேனாவரையன்-சேனாவரையம்=சேனாவரையனால் உரைக்கப் பெற்றது. (6) இடப்பெயர் மரூஉ ஈறுகள் எ-டு: அந்தை-உறந்தை, கரந்தை, களந்தை, குடந்தை. ஐ -அளகை, உஞ்சை, தஞ்சை, தருமை, கருவை, மழவை, முகவை, நெல்லை, ஆறை, சென்னை. சை - இளசை, துறைசை, பனசை. வை - கோவை, புதுவை. காஞ்சி-திருச்சி முதலியவை ஈறு கருதாத குறுக்கங்கள். (4) வேற்றுமை யுருபுகள் மொழி பொதுமக்கள் அமைப்பாதலின், அதன் இன்றியமை யாத கூறுகளான வேற்றுமையுருபுகளும் அவர்கள் அமைத்தனவே. வேற்றுமைகளை ஏழென்றும் எட்டென்றும் வரையறுத்தும், அவற்றை வரிசைப்படுத்தியதும், அவற்றிற்குப் பெயரிட்டதும், கருவி வேற்றுமையையும் உடனிகழ்ச்சி வேற்றுமையையும் ஒன்றுசேர்த்து ஒரு வேற்றுமை யாக்கியதுமே, முதனூலாசிரியனும் வழிநூலாசிரியனுமான இலக்கணியர் செய்த வினைகளாம். இவற்றின் விளக்கத்தை என் `தொல்காப்பிய விளக்கம்' என்னும் நூலிற் காண்க. வேற்றுமை யெட்டும் அல்லது ஒன்பதும், இலக்கணநூலார் வகுத்த வரிசையொழுங்கில் தோன்றியிருக்க முடியாது. அவ்வவ் வேற்றுமைக் கருத்துத் தோன்றியபோது அவ்வவ் வேற்றுமையுருபு தோன்றியிருத்தல்வேண்டும். ஒருவன் முதலில் தானே வினைமுதலாயிருந்து ஒன்று செய்வதே இயல்பாதலாலும், ஒருவன் வரலாற்றை ஓரூரில் ஒருவன் இருந்தான்' என்று தொடங்குவதே மரபாதலாலும், முதலாவது எழுவாய்க் கருத்துத் தோன்றியிருத்தல் வேண்டும். அதற்கு உருபு தேவையில்லை; இயல்பான பெயரே போதும். திரிமொழிகளிலேயே எழுவாய் வேற்றுமைக்கும் உருபு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் இயன்மொழி யென்பதற்கு, அதில் எழுவாயுருபின்மையும் ஒரு சான்றாம். ஒருவன் ஒருத்தியுடன் அல்லது இன்னொருவனுடன் பேசு முன், அவைர விளிக்காது இருக்கமுடியாது. இது மொழிதோன்றாத நிலையிலும் நிகழும். ஒருவன் ஒரு வினை செய்யினும் ஒன்றும் செய்யாது சும்மா விருப்பினும், அவன் இருக்க ஓர் இடம்வேண்டும். ஆதலால், இடக் கருத்து அடுத்துத் தோன்றியிருக்கலாம். மலைக்குகையில் வதிந்த அநாகரிக மாந்தனுக்கும் நிலையான தனியிடம் வேண்டியிருந்ததினால், உடைமைக் கருத்துத் தோன்றி யிருக்கும். மாந்தன் வினைகளுள், சிலவற்றிற்கு ஒன்றும் தேவையில்லை; சிலவற்றிற்கு ஏதேனும் வேண்டும். எழுதலும் நடத்தலும் தாமாக நிகழும். ஆயின் பறித்தலும் உண்டலும் காய்கனிபோன்றவையின்றி நிகழா. உண்ணுதல் உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையாத வினை. ஒன்றும் புதிதாய்ச் செய்யாத அநாகரிகக் காலத்திலும் மாந்தன் இயற்கையுணவை உண்டுவந்தான். அதனால், செய்பொருட் கருத்துத் தோன்றியிருக்கும். கிழங்கைத் தோண்டுவதற்கும் விலங்கு பறவைகளைக் கொல்வதற்கும், கல்லும் கோலும் போன்ற கருவிகள் தேவைப்பட்ட போது, கருவிக் கருத்துத் தோன்றியிருக்கும். பறித்தும் அகழ்ந்தும் வேட்டையாடியும் கொண்டு வந்த பொருள்களை, மனைவிமக்கட்கும் உற்றார் உறவினர்க்கும் கொடுத்தபோது, கொடைக்கருத்துத் தோன்றியிருக்கும். மரமேறிக் கனிபறித்தவனும் மலையேறித் தேனெடுத்தவனும், கீழிறங்கியபோது அல்லது தவறி விழுந்தபோது, அல்லது காய்கனி மரத்தினின்று கீழே விழுந்தபோது, நீக்கக் கருத்துத் தோன்றி யிருக்கும். மாந்தன் கூடிவாழும் உயிரியாதலால், ஓரிடத்திலிருப்பினும், ஒன்றைச் செய்யினும், ஓரிடம் செல்லினும், பெற்றோருடன் அல்லது மனைவியுடன் அல்லது மக்களுடன் அல்லது நாயுடன் (அல்லது கருவியுடன்) இருக்கவும் செய்யவும் செல்லவும் நேர்ந்தபோது, உடனிகழ்ச்சிக் கருத்துத் தோன்றியிருக்கும். இங்ஙனம் எண் அல்லது தொண்வேற்றுமைகளும், குறிஞ்சி வாழ்க்கை நிலையிலேயே முந்துதமிழர் மொழியில் தோன்றியிருத்தல் வேண்டும். வேற்றுமையுருபுகளின் வரலாறு உருத்தல் தோன்றுதல். உரு=தோற்றம், வடிவம், உடம்பு, தனிப்பொருள். உரு-உருவு-உருவம். உருவு-உருபு=வேற்றுமை வடிவ மான சொல் அல்லது அசை. 2ஆம் வேற்றுமையுருபு (செய்பொருள்) ஐ. ஆய்-ஐ. பெட்டியாய்ச் செய்தான் = பெட்டியைச் செய்தான். 3ஆம் வேற்றுமையுருபு ஆல்-ஆன் (கருவி) இல் என்னும் (7ஆம் வேற்றுமை) இடப்பொருளுருபு கருவிப் பொருளிலும் ஆளப் பெறும். எ-டு: மையில் எழுது = மையால் எழுது. செருப்பிலடித்தான் = செருப்பாலடித்தான் (மேலை வடார்க் காட்டு வழக்கு). ல-ன். ஒ.நோ: மேல-மேன. இல்-ஆல்-ஆன். உடன்-ஒடு-ஓடு (உடனிகழ்ச்சி) உல்லுதல்=பொருந்துதல், கூடுதல். உல்-உள்-உடு-உடன். 4ஆம் வேற்றுமையுருபு (கொடை) கு. ஒக்க என்னும் சொல் கு என்று திரிந்திருக்கலாம். அவனொக்கக் கொடுத்தான்-அவனுக்குக் கொடுத்தான். 5ஆம் வேற்றுமையுருபு (நீக்கம்) இன். இது இடப்பொருளுருபான இல் என்பதன் திரிபே. இலிருந்து (இல்+இருந்து) அல்லது இனின்று (இல்+நின்று) என்னும் உலகவழக்குக் கூட்டுச்சொல்லுருபே, செய்யுள்வழக்கில் இல் என தனிச் சொல்லுருபாய்க் குறுகித் திரிந்தது. இனின்று என்னும் புணர்ச்சியும் இதற்குப் பெரிதும் உதவிற்று. மரத்திலிருந்து, மரத்தினின்று என்னும் உலக வழக்கே, இயற்கையாகவும் பொருள்நிரம்பியும் மூலத்தைத் தெளிவாய்க் காட்டுவதாகவும் இருத்தல் காண்க. இறங்கும் அல்லது விழும்நிலை, இருத்தல் நிற்றல் ஆகிய இரண்டில் ஒன்றாகவே யிருக்கும். 6ஆம் வேற்றுமையுருபு (உடைமை) அது-ஆது (ஒருமை); அ (பன்மை). இவை உடைமைப் பொருணர்த்தும் குறிப்பு வினைமுற்று களின் முறைமாற்றாம். ஆதலால், இவை யிரண்டும் எண் காட்டும். குறிப்பு வினைமுற்று ஆறாம் வேற்றுமைப் பெயர் எடு: கை எனது (ஒருமை) எனது கை கைகள் என (பன்மை) என கைகள் உடைய என்பது ஈரெண்ணிற்கும் பொதுவான வுருபாம். அன், இன் என்பனவும் உடைமை வேற்றுமை யுருபாக வரும். எ-டு: இதன் பொருள், நீரின் தண்மை. 7ஆம் வேற்றுமையுருபு (இடம்) இடைச்சொல்லாக நின்று இடப்பொருளுணர்த்தும் எல்லாச் சொற்களும் 7ஆம் வேற்றுமையுருபாம். வேற்றுமை யென்றது பொருள்பற்றியே யன்றிச் சொற்பற்றியன்று. ஆயின், ஆரியம் போன்ற திரிமொழிகளில் வேற்றுமை சொல்லையே தழுவிநிற்கும். இடப்பொருளுருபுகளுள், சிறப்பாகக் கொள்ளப்பெறுவது உலகவழக்கில் இல்; செய்யுள் வழக்கில் கண். இடம், பக்கம், ஓரம், நடு, உள், வெளி, கீழ். மேல், முன், பின் ஆகிய எல்லாவகை யிடப்பொருளிலும் 7ஆம் வேற்றுமை யுருபுகள் வரும். இடம் என்னும் சொல்லும் இல்லுருபேற்ப துண்டு. எ-டு: என்னிடம், என்னிடத்தில். 8ஆம் வேற்றுமையுருபு (விளி) பெயர்கள் விளிக்கப்படும் நிலையில் அடையும் வடிவே 8ஆம் வேற்றுமையுருபாம். அவ் வடிவு பெயர்களின் ஈற்றைப் பொறுத்தது. விளியேற்ற பெயர்கள் பெரும்பாலும் திரியும், சிறுபான்மை திரியா. திரியும் பெயர்கள் சேய்மைச் சுட்டாயின், அளபெடுக்கும்; திரியாப் பெயர்கள் சேய்மைச் சுட்டாயின், அவற்றிற்கு முன் அளபெடுத்த ஏ அல்லது ஓ என்னும் விளியொலி சேர்க்கப்பெறும்; அப் பெயர்களின் ஈறும் சிறுபான்மை அளபெடுக்கும். திரியும் பெயர்க்கு முன்னும் ஏ அல்லது ஓ சேர்க்கப்பெறுவதுமுண்டு. எ-டு: இயல்புவிளி: பேரின்பம், நம்பிக்கை. திரிபுவிளி : ஈறு மிகுதல் - தெய்வமே, மகனே ஈறு கெடுதல் - ஐய, இளஞ்செழிய ஈறு திரிதல் - தம்பீ, பிள்ளாய் ஈற்றயல் ஈறு திரிதல் - மாணவீர், நம்பிமீர் ஈறு கெட்டு அயல்ஈறு திரிதல் - அழகா, நண்பா ஈறு கெட்டு அயல் திரிந்து ஈறு மிகுதல்-ஐயாவோ, அம்மேயோ சேய்மை விளி: கண்ணா அஅஅஅ ஏஎஎ அண்ணா அஅஅஅ ஓஒஒ ஐயா அஅஅஅ ஏஎஎ பேரின்பம் ஏஎஎ மதுரம்ம்ம்ம் எல்ல என்னும் விளிச்சொல் விளியொலிகளுள், எல்ல என்பது தொன்றுதொட்டு வருவதும், இருவகை வழக்கிலும் வழங்குவதும், இலக்கணத்தில் இடம்பெற்றதும் தமிழின் முன்மையையும் பிறமொழிகளின் பின்மையையும் உணர்த்து வதும், ஆங்கிலத்திற்கும் தமிழுக்குமுள்ள அணுக்கத்தைக் காட்டுவதும் ஆகும். எல்ல என்பது, முதற்காலத்தில். கணவனும் மனைவியும் ஒரு வரையொருவர் விளிக்கும் பொதுவொலியா யிருந்தது. இதையே, முறைப்பெயர் மருங்கின் கெழுதகைப் பொதுச்சொல் நிலைக்குரி மரபின் இருவீற்றும் உரித்தே (1166) என்று தொல்காப்பியம் கூறும். இது எல்லா என்று ஈறு நீண்டு எல்லே என்றும் திரிந்தது. நில்லாங்கு நில்லாங் கிவர்தரல் எல்லாநீ (30) என்னும் மருதக்கலியில், எல்லா என்பது தலைவி தலைவனை விளித்தது. எல்லா விஃதொத்தன் என்பெறான் கேட்டைக்காண் (25) என்னும் குறிஞ்சிக்கலியில் எல்லா என்பது தோழி தலைவியை விளித்தது. “všny!-JobfhËil மடத்தோழீ (5:3:5) என்னுந் திருவாய்மொழி யடியில் , எல்லே என்பனது தலைவி தோழியை விளித்தது. எல்லா என்பது பின்பு ஏலா என்று முதல் நீண்டது. குறவன் மகளாணை கூறலோ கூறேல் (8:69) என்னும் பரிபாடலடியில் ஏலா என்பது தோழி தலைவனை விளித்தது. கரூர்ப்பக்கத்தில், கணவன் மனைவியை ஏலா என்று விளிப்பது, இன்றும் கல்லா மக்களிடை வழக்கமாயிருக்கின்றது. நெல்லை நாட்டார், சிறுவரையும் கீழோரான ஆடவரையும் இன்று ஏல, ஏலே என்று விளிக்கின்றனர். கணவன் மனைவியை ஏழா என்று விளிப்பது அந் நாட்டுக் கீழோர் வழக்கம். ஏல-ஏழ-ஏழா. ஏழ என்பது பின்பு ஏட என்று திரிந்தது. ஏடா அழியல் எழுந்திது கொள்ளாய் (14:12) என்னும் மணிமேகலையடியில், ஏடா என்பது சிந்தாதேவி ஆபுத்திரனைவிளித்தது. ஏட-ஏடா இவை ஆடூஉ (ஆண்பால்)விளி. ஏடி, ஏடீ என்பன மகடூஉ (பெண்பால்) விளி. ஏட என்பது பின்பு அட-அடா-அடே எனத் திரிந்தது. இத் திரிபுகளும் ஆடூஉ விளியாம். அடி-அடீ என்பன மகடூஉ விளியாம். நில்ல டீஇயெனக் கடுகினன் பெண்ணென நினைந்தான் (கம்பரா. ஆரணி. 93) என்பதில் அடீ என்பது இலக்குமணன் குர்ப்பணகையை விளித்தது. அட, அடா என்னும் சொற்கள் கழிவிரக்கக் குறிப்பாகவும் வழங்கும். அடா என்பது தெலுங்கில் அரா-ரா என்றும், அடே என்பது வடமொழியில் அரே-ரே என்றும் திரிந்து வழங்குகின்றன. இந்தியில் அடே என்பது அரே-ரே என்றும், அடட என்பது அரர என்றும் வழங்குகின்றன. ட-ர. போலித்திரிபு. ஒ.நோ: குடம்பை-குரம்பை, படவர்-பரவர். எல்ல என்னும் விளியிடைச்சொல்லிலிருந்து, சில பெயர்ச் சொற்களும் பிறந்துள்ளன. எல்ல-எலுவன் = தோழன். எலுவன் - எலுவல். எலுவை = தோழி. ஏட-ஏடன்=அடியான். எல்லா என்னும் தமிழ்ச்சொல்லும், hallo என்னும் ஆங்கிலச் சொல்லும், ஒலியும் பொருளும் ஒத்திருப்பது கவனிக்கத்தக்கது. இவ் வொப்புகைக்குக் கரணியும் அடுத்த படலத்தில் விளக்கப்பெறும். முதற்காலத்தில், வேளும் வேளினியுமாகிய தலைவனும் தலைவியும் ஒருவரையொருவர் மதிப்பாக விளித்த எல்லா என்னும் சொல் ஏல, எழ, ஏட, அட, அடா, அடே, அடீ எனப் படிப்படியாய் வடிவுதிரிந்தும் மதிப்புக்குன்றியும் பால்பிரிந்தும், நாளடைவில் இழி மக்களை விளிக்கும் சொல்லாயிற்று. சில வேற்றுமை மரபுகள் உடனிகழ்ச்சியை ஒரு தனி வேற்றுமையாக்கின், வேற்றுமை மொத்தம் ஒன்பதாம். ஒவ்வொரு வேற்றுமையும், ஒவ்வொரு அல்லது ஒருசில இடைச்சொல்லால் உணர்த்தப்பெறும் பல்வேறு கருத்துகளின் தொகுதியேயன்றி ஒரு தனிப்பட்ட கருத்தன்று. இரண்டாம் வேற்றுமைப் பொருளாக இருபத்தெண் கருத்துகளை எடுத்துக் கூறினார் தொல்காப்பியர். ஆயினும், அவற்றுள் எல்லாம் அடங்கவில்லை. செயப்படுபொருள் குன்றாவினை என இலக் கணியர் வகுத்த வினைச் சொல்வகைக்கு, ஏற்ற கருத்துகளெல்லாம் இரண்டாம் வேற்றுமைப் பொருளே அல்லது செய்பொருள் வகையே. இங்ஙனமே ஏனை வேற்றுமைகளும் கருத்துத்தொகுதி களே என அறிக. அசையுருபு சொல்லுருபு என வேற்றுமையுருபு இருவகைப் படும். சில கருத்துகளைச் சொல்லுருபாற் குறி ருப்பதே உலக வழக்கிற் பெருவழக்காம். சொல்லுருபு ஏதேனுமோ ரசையுருபொடு கூடி வருவதே பெரும்பான்மை. வேற்றுமை பொருள் சொல்லுருபு எடுத்துக்காட்டு 3ஆவது துணைக்கருவி கொண்டு எழுத்தாணி கொண்டு ஐ + கொண்டு கல்லைக்கொண்டு இட்டு உளியிட்டு 5ஆவது உறழ்பொருள் ஐ+விட அதைவிட ஐ+காட்டிலும் அதைக்காட்டிலும் 6ஆவது உடைமை உடைய கண்ணனுடைய உடைமைக் கருத்தை வேற்றுமைத்தொகையாற் குறிப்பதே உலக வழக்கிற் பெரும்பான்மையாம். மூவிடப் பகரப்பெயர்கள் இவ் வழக்கில் நெடுமுதல் குறுகும். எ-டு: மறைமலையடிகள் மாளிகை, என் மகள். அசையுருபாற் பொருள் நிரம்பாதபோது ஒரு சொல்லும் அதனுடன் சேர்க்கப்பெறும். எ-டு: அவன் எனக்காக இங்கு வந்தான். ஒரே பொருள், சொல்வான் கருத்துப்பற்றியும் முடிபுச் சொல் பற்றியும், வெவ்வேறு வேற்றுமையால் குறிக்கப்பெறும். எ-டு: அஞ்சியின் மகன் பொருட்டெழினி (உடைமை) அஞ்சிக்கு மகன் பொருட்டெழினி (உறவுமுறை) திருவள்ளுவரை நிகர்ப்பார் யார்? (வினைமுடிபு) திருவள்ளுவரை நிகர் யார்? (பெயர்முடிபு) ஒரு வேற்றுமை வேறொரு வேற்றுமையையுந் துணைக் கொள்ளும். எ-டு: அறைக்குள் என்பதில் 7ஆவது 4ஆவதைத் துணைக் கொண்டமை காண்க. (5) சாரியைகள் தாமாகச் சேராத சொல்லுறுப்புகளையும் சொற்களையும் சார்ந்து இயைக்கும் அசைகளும் சொற்களும், சாரியை எனப்படும். இயைத்தல் இசைத்தல். தாமாக ஒலிக்காத எழுத்துகளை ஒலித்தற்கும், ஒலிக்கும் எழுத்துகளை எளிதாய் ஒலித்தற்கும், அவற்றைச் சார்ந்துவரும் ஒலிகளும் சாரியை எனப்படும். ஆகவே. எழுத்துச் சாரியை, சொற்சாரியை எனச் சாரியை இருவகையாம். எழுத்துச்சாரியை உயிரெழுத்துகளுள் குறிலுக்குக் கரமும் நெடிலுக்குக் காரமும் சாரியையாம். நெடில்களுள் ஐ, ஔ என்னும் இரண்டிற்கும் கான் என்பது சிறப்புச்சாரியை. ஆய்தத்திற்குச் சாரியை ஏனம் என்பதாம். அது சேரும்போது ஆய்தத்திற்கு முன் அகரமும் பின் ககரமெய்யும் சேர்ந்து அஃகேனம் என்றாகும். மெய்யெழுத்திற்கு அ' சாரியை. அது மெய்க்குப்பின் வரும். க என்பது சாரியை யேற்ற மெய்யெழுத்திற்கும் க என்னும் குறிலுக்கும் பொதுவாயிருப்பதால், மெய்யெழுத்தை விதந்து குறிக்கும்போது ககரமெய் என்பது மரபு. உயிர்மெய்யெழுத்துகளுள், குறிலுக்குக் கரம் சாரியை; நெடிலுக்குத் தனிச்சாரியை இல்லை. அதனால் மெய்யையும் நெடிலையும் பிரித்துக் ககர ஆகாரம் (கா), ககர ஈகாரம் (கீ) என்ற முறையிற் சொல்லப்பெறும். சொற்சாரியை அ, அத்து, அம், அற்று, அன், ஆம், இற்று, இன், உ, ஐ முதலியன சொற்சாரியை. எ-டு: தட்டாரப்பாட்டம், எனக்கு, பட்டினத்தான், குளத்துப் பாய்ச்சல், புளியம்பழம், அவற்றை, அதனை, கல்லாங் கொள்ளி, பதிற்றுப்பத்து, பதினொன்று, வேரினை, அவனுக்கு, பண்டைக் காலம். இவற்றுள், அற்றுச்சாரியைப் புணர்ச்சியும் இற்றுச்சாரியைப் புணர்ச்சியும் இன்று உலக வழக்கற்றன. அவைகள் என்பது மிகை படக்கூறும் வழூஉச் சொல்லும், அதுகள் என்பது இழிவழக்கும் ஆகும். ஆதலால், அவற்றை இவற்றை எவற்றை என்றே குமரி நாட்டுப் பொதுமக்கள் வழங்கியிருத்தல் வேண்டும். சாரியைகளும் சுட்டடியினவே. வினையீறுகள் தன்மைவினை யீறுகள் (1) தன்மையொருமைப் பெயரினின்று தோன்றியவை ஏன்-என்- அன்-அல் அன், அல் எதிர்காலத்தில் மட்டும் வரும். (2) செய்து என்னும் வாய்பாட்டு இறந்தகால வினையினின்று தோன்றியவை செய்+அது = (செய்தது) - செய்து-து. து-டு, து-று. (3) எதிர்கால வினைமுற்றினின்று தோன்றியது. செய்யும்+ஏன் = (செய்யுமேன்) - செய்யுவேன் - செய்வேன்- செய்கேன் - செய்கு - கு. வ-க, போலி. ஒ. நோ: ஆவா-ஆகா, சிவப்பு-சிகப்பு. (4) உகரச்சுட்டடியாய்ப் பிறந்தது (எதிர்காலம்) உது. எ-டு: செய்யுது, கூறுது, வருது. உது ஈறு துவ்வளவாகக் குறுகி, அடிநீண்ட லகர ளகரவீற்று வினைமுதனிலைகளோடு கூடும்போது, றுகர டுகரமாகத் திரியும். எ-டு: செல்-சேல்+து = சேறு. கொள்-கோள்+து = கோடு. ஒ.நோ: செல்-சேல்+தல் = சேறல் (தொழிற்பெயர்) கொள்-கோள்+தல் = கோடல் (தொழிற்பெயர்). தன்மைப்பன்மை யீறுகள் (1) தன்மைப் பன்மைப் பெயர்களினின்று தோன்றியவை. ஏ-எம், (நாம்) - ஆம்-அம், ஆம்-ஓம். (2) செய்து என்னும் வாய்பாட்டு இறந்தகால வினையினின்று தோன்றியவை. து+உம் (பன்மையீறு)=தும். தும் - டும். தும் - றும் (3) எதிர்கால வினைமுற்றினின்று தோன்றியது. கு+உம் (பன்மையீறு)=கும். (4) உகர்ந்தாய் பிறந்தது (எதிர்காலம்), எ-டு: செய்யுதும், கூறுதும், வருதும். து-று. சேறு+உம் (பன்மையீறு)=சேறும். து-டு. கோடு+உம்(பன்மையீறு)=கோடும். (5) செய்யும் என்னும் முற்றினின்று தோன்றியது. செய்யும்-உம். முன்னிலைவினை யீறுகள் முக்கால நிகழ்ச்சிவினை யீறுகள் முன்னிலைப் பெயர்களினின்று தோன்றியவை. ஒருமை (நீ)-ஈ-இ. ஈ - ஏ - ஐ - ஆய். எ-டு : வந்தீ - வந்தே - வந்தை - வந்தாய். ஒ.நோ: சீ-சே-சை(இகழ்ச்சிக்குறிப்பு). உரை - உராய், குழை-குழாய். பன்மை: (நீம்) - ஈம். ஈம்+கள் = ஈங்கள். (நீர்) - ஈர்-இர் ஈர்+கள் = ஈர்கள். நீம் செய்தீம் என்பது இன்றும் தென்னாட்டு வழக்கு. எப்போது வந்தீங்கள் என்னும் வழக்கையும் நோக்குக. ஏவல்வினை யீறுகள் ஒருமை: (1) ஈறற்றது. எ-டு: செய். (2) எதிர்கால வினைமுற்றினின்று தோன்றியது. செய்+உது+ஈ=செய்யுதீ-செய்தி. வழிபடுவோரை வல்லறிதீயே (10:1) என்னும் புறப்பாட்டில் வரும் அறிதீ என்பதற்கு, அறிவை என்று பழையவுரை பொருள் கூறியிருப்பதையும், அறிதீ-அறிதி = அறிவாய் என்று சாமிநாதையர் அருஞ்சொற்குறிப்பு வரைந்திருப்பதையும், ஊன்றி நோக்குக. சென்றீ (சென்று+ஈ) என்பது சென்றுதவுக என்று பொருள் படும் உதவிவினை. நின்மே (நில்லும்+ஏ) என்பது நில்லுங்களேன் என்று பொருள்படும் ஆர்வவினை. நில்லும் என்பது உகரந்தொகின் நின்ம் என்றாகும். ஒ-நோ: போலும்-போன்ம். ஏன் என்பது எனக் குறைந்து நின்றது. உலகவழக்கிலும் வரட்டே என வழங்குதல் காண்க. நின்+மே என்னும் தவறான பகுப்பு, அதை ஒருமையெனக் கொள்ளச் செய்திருக்கின்றது. இதையறியாது, முன்னிலை முன்னர் ஈயும் ஏயும் அந்நிலை மரபின் மெய்யூர்ந்து வருமே (934) என நூற்பா யாத்தார் தொல்காப்பியர். அதைப் பின்பற்றினார் பவணந்தியார். (3) செய்யாய் என்னும் முன்னிலை யொருமைவினை குரல் வேறுபாட்டால், செய் என்று பொருள்படும். ஆய் என்பது ஏவ லொருமை யீறென்றே கூறாது, செய்யாய் என்னும் முன்னிலை வினைச்சொல் செய்யென் கிளவி ஆகிடன் உடைத்தே (933) என்றே தொல்காப்பியர் கூறுவதால், அதன் அருகிய வழக்குப் புலனாகும். ஆய் என்பது முன்னிலை யொருமை யீறேயாயினும், ஏவலொருமை வினை அதை ஏற்கவேண்டுமென்றும் யாப்புற வில்லை, என அறிக. பன்மை (1) முன்னிலைப் பன்மைப் பெயரினின்று தோன்றியவை (ஊம்) - உம். எ-டு : செய்யும் உம்+கள். எ-டு : செய்யுங்கள் உம்+(நீம்+ஈம்-இம்)-இன். எ-டு : செய்யுமின்-செய்ம்மின் மின்+கள் எ-டு : செய்ம்மின்கள் மின் என்னும் ஈற்றின் மகரம் நெறி (விதி) முதல் என அறிக. கள் என்பது படர்க்கை யீறேனும் இரட்டைப் பன்மை குறித்து மூவிடத்தும் வரும். எ-டு: நாங்கள், நீங்கள், அவர்கள். செய்யுமின் என்பதிலுள்ள உம்மின் (உம்+இன்) என்னும் இரட்டைப்பன்மையை, செய்யுங்கள் என்பதிலுள்ள உங்கள் (உம்+கள்) என்பதுபோலக் கொள்க. செய்ம்மின் என்பதன் இரட்டைப்பன்மைப் பொருள் மறைந்தபின், கள்ளீறு பிறவற் றொடு சேர்ந்ததுபோல் அதனோடும் சேர்ந்தது. இம் முக்கைப் பன்மையைப் பெண் பெண்டாட்டி எனப்துபோன்ற மீமிசைச் சொல்லாகக் கொள்க. (2) எதிர்கால வினைமுற்றினின்று தோன்றியது. செய்+உது+ஈர் = செய்யுதீர்-செய்யுதிர்செய்திர். (3) செய்யாய் என்பதற்கொத்து சொல்லும் வடிவம். வியங்கோள்வினை யீறுகள் வியங்கோள்வினை யீறுகள் மூவகையில் தோன்றும். (1) தொழிற்பெய ரீறுகள் அல். எ-டு:செயல். ஒல்லும் வகையால் அறவினை யோவாதே செல்லும் வாயெல்லாம் செயல். (குறள்.33) தல். எ-டு: செய்தல். இயற்கைப் பொருளை இற்றெனக் கிளத்தல். (தொல்.502) (2) அகரவீற்று வினையெச்ச ஈறு செய்ய-அ. எ-டு: வரப்புயர! நடக்க-க. எ-டு; வாழ்க! (3) `செயல்' வாய்பாட்டு ஈயல் என்னும் துணைவினைத் தொழிற்பெயர். ஈயல்-ஈயர்-இயர்-இய-இ. நிலீஇயர் அத்தை நீயே யொன்றே (புறம்.375) நடுக்கின்றி நிலியரோ அத்தை யடுக்கத்து (புறம்.2) உள்ளேன் வாழியர் யானெனப் பன்மாண் (புறம்.365) எங்கோ வாழிய குடுமி தங்கோ (புறம்.9) தென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலப்.11:22) (4)அகரவீற்று வினையெச்சம்+உம் எ-டு: இக் கடிதம் கண்டவுடன் புறப்பட்டு வரவும். - (திருமுக வழக்கு) இன்னும் ஒரு கிழமைக்குள் சரக்குகளை அனுப்பி வைக்கவும். (வணிக வழக்கு) இவ் வழக்கு இலக்கிய நடைக்கு ஏற்காது. வியங்கோள்வினை ஏவல், வாழ்த்து, சாவிப்பு, வஞ்சினம் என்னும் நாற்பொருள்பற்றி வரும். ஏவல் என்றது வேண்டுகோள் அல்லது மதிப் பேவல். பிறனா யினன்கொல் இறீஇயர்என் னுயிரென (புறம். 210) என்பது சாவிப்பு. அவர்ப்புறங் காணே னாயிற் சிறந்த பேரம ருண்க னிவளினும் பிரிக (புறம். 71) என்பது வஞ்சினம் . வியங்கோள்வினை மூவிட ஐம்பாலீரெண்ணிற்கும் பொது வாம்; ஆயின், ஏவலும் வாழ்த்தும்பற்றித் தன்மையிடத்தில் வராது. பிறவினை யீறுகள் தன்வினை பிறவினையாகும் வகைகள் (1) முதனிலை வலித்தல் எ-டு: நீங்கு-நீக்கு, பொருந்து-பொருத்து (2) இடைநிலை வலித்தல் எ-டு: தேய்ந்தது-தேய்த்தது, தீர்ந்தான்-தீர்த்தான். (3) முதனிலை வலியிரட்டல் எ-டு: போகு-போக்கு, தேறு-தேற்று. (4) ஈறுபெறுதல் ஈ-வீ-வி-பி. செய்ய+ஈ = செய்யவீ-செய்வீ-செய்வி. நடப்ப+ஈ = நடப்பவீ-நடப்பீ-நடப்பி. செய்யவீத்தான் = செய்யவுதவினான், செய்யவிட்டான், செய்யச் செய்தான். ஈத்துவக்கும் இன்பம் (குறள். 228) எமக்கீத் தனையே (புறம். 911) என ஈதல்வினை வலித்தும் இறந்தகாலங் காட்டுதல் காண்க. வி, பி, பிறவினை யீறுகளானபின், வினைகள் அவற்றை ஏற்ற பெற்றி ஒன்றும் பலவும் ஏற்றன. செய்விப்பி, நடத்துவி-இருமடிப் பிறவினை. செய்விப்பிப்பி,நடத்து விப்ப-மும்மடிப் பிறவினை. இவை செய்விப்பித்தான், செய்விப்பிப்பித்தான் என நிகழ்ச்சி வினையாம். எல்லா வினைகளும் முதனிலையளவில் ஏவல்வடிவா யிருத்தலின், பிறவினை முதனிலைகளை ஏவல்வினையென்று விதந்துகூற வேண்டியதில்லை. ஒத்து-அத்து-து. ஒத்து-ஒட்டு-அட்டு. ஒத்துதல்=பொருந்துதல், ஒற்றுதல், இசைதல். ஒ-அ. ஒ-நோ; கொம்பு-கம்பு. மொண்டை-மண்டை, மொத்திகை - மத்திகை. வாழ+அத்து = (வாழத்து)-வாழ்த்து-வழுத்து. தாழ+அத்து = (தாழத்து)-தாழ்த்து. ஒட்டு-அட்டு. வர+அட்டு = வரட்டு. அத்து என்னும் துணைவினை துவ்வீறாகக் குறைந்தபின், அதன் திரிபாகக் சு டு று ஈறுகள் தோன்றின. எ-டு: பாய்+து = பாய்த்து-பாய்ச்சு. நீள்+து = நீட்டு, காண்+து = காட்டு. நால்+து = நாற்று, தின்+து = தீற்று. ஒருசில வினைகள் உவுஈறு பெற்றுப் பிறவினையாகின்றன. எ-டு: எழு-எழுவு, கொள்-கொளுவு. எழுவுதல்=எழச்செய்தல், ஓசையெழுப்புதல். கொளுவுதல்= கொள்ளச் செய்தல். இவ் உவு ஈறு ஒவ்வு என்னும் துணைவினையின் சிதைவாகும். ஒவ்வுதல்=ஒத்தல், பொருந்துதல், இசைதல். எழ+ஒவ்வு=எழுவு, கொள+ஒவ்வு+கொளுவு, உகரத்தின் முன் அகரம் தொக்கது. (5) துணைவினை பெறுதல் எ-டு: ஊறவை, காயப்போடு, நிற்பாட்டு, மறக்கடி, எழச்செய், வரப்பண்ணு. (6) அளபெடுத்தல் இக்காலத்தில் கட்டு, மண்டு முதலிய குற்றுகரவீற்று வினைச் சொற்கள் கட்டி, மண்டி என இகரவீறேற்று இறந்தகால வினை யெச்சமாவது போல், முதற்காலத்தில் இரு, உடு முதலிய முற்றுகர வீற்று வினைச்சொற்களும் இகரவீறேற்று இரி, உடி என இறந்த காலவினை யெச்சமாகி யிருக்கலாம். இவ் வடிவங்களை அள பெடைப்படுத்திப் பிறவினையாக்கி யிருக்கலாம். இரி-இரீஇ=இருத்தி, உடி-உடீஇ=உடுத்தி, கொளி-கொளீஇ= கொளுத்தி. கொளி(கொள்ளி) என்பதை அள்ளி, எள்ளி, தள்ளி, துள்ளி என்பனபோற் கொள்க. (7) இயல்பாயிருத்தல் எ-டு: கதவு திறந்தது-கதவைத் திறந்தான், விறகு பிளந்தது- விறகைப் பிளந்தான். செயப்பாட்டு வினையீறுகள் செயப்பாட்டுவினை வடிவங்கள் (1) அகரவீற்று வினையெச்சம்+துணைவினை எ-டு: எழுதப்படு, எழுதப்பட்டது. வாழ்த்தப்பெறு, வாழ்த்தப்பெற்றான். பெறு என்பது பெரும்பாலும் பேறுபற்றியும், படு என்பது பெரும் பாலும் பாடுபற்றியும், வரும். பாடு=கேடு, செயயப்படுகை. எ-டு: பரிசளிக்கப் பெற்றான், உயர்த்தப்பெற்றான், கொல்லப் பட்டான், தள்ளப்பட்டான், உண்ணப்பட்டது. (2) தொழிற்பெயர்+துணைவினை எ-டு: கொலையுண்டான், கொலைப்பட்டான், குத்துப்பட்டுச் செத்தான். (3) வினைமுதனிலை+துணைவினை எ-டு: கொல்லுண்டான், வெட்டுண்டான். இவற்றின் வினைமுதனிலையை முதனிலைத் தொழிற் பெய ராகவுங் கொள்ளலாம். தமிழிற் செயப்பாட்டுவினை பெருவழக்கன்று. பெரும் பாலும், செயப்பாட்டு வினைப்பொருளைச் செய்வினைவடிவிற் கூறுவதே தமிழர் வழக்கம். எ-டு: புலியடித்துச் செத்தான். மறைமலையடிகள் எழுதிய நூல். தச்சன் செய்த பெட்டி. பெயரெச்ச வீறுகள் தெரிநிலைப் பெயரெச்சம்: அ - இ. கா. ஈறு. எ-டு: செய்த ( செய்து+அ) அ - நி. கா. ஈறு. எ-டு: செய்கின்ற (செய்கின்று+அ)-செய்கிற. உம் - எ. கா. ஈறு. எ-டு: செய்யும் (செய்+உம்). உ - உம் (முன்மைச் சுட்டடிச்சொல்) குறிப்புப் பெயரெச்சம் அ (முக்காலப்பொது), எ டு: நல்ல. இறந்தகால நிகழ்காலக் குறிப்புப்பெயரெச்ச வீறாகிய அ அந்த என்று பொருள்படும் சேய்மைச்சுட்டாகும். செய்து, செய்கின்று, நல் என்பன முற்காலத்தில் முற்றுச்சொற்களாயும் இருதிணையைம்பால் மூவிடப் பொதுவாயும் இருந்ததினால், வினையாலணையும் பெயராகி செய்த என்பது, செய்தேனாகிய அந்த, செய்தேமாகிய அந்த, செய்தாயாகிய அந்த, செய்தீராகிய அந்த, செய்தானாகிய அந்த, செய்தாளாகிய அந்த, செய்தாராகிய அந்த, செய்ததாகிய அந்த, செய்தனவாகிய அந்த என்று பொருள்பட்டிருக்கும். இங்ஙனமே ஏனை யிருசொற்கட்கும் ஒட்டுக. செய்யும் என்னும் பெயரெச்சம், 6ஆம் வேற்றுமைப் பெயர் போல முன்பின்னாக மாறிய செய்யுள் என்னும் எதிர்கால வினை முற்றாயிருக்கலாம். எ-டு: முற்று எச்சம் நான் செய்யும் செய்யும் நான் நாம் நாம் நீ நீ நீர் நீர் அவன் அவன் அவள் அவள் அவர் அவர் அது அது அவை அவை செய்யும் என்னும் முற்று முதற்காலத்தில், மலையாளத்திற் போன்றே முந்நாட்டுத் தமிழிலும் இருதிணை யைம்பால் மூவிடப் பொதுவாயிருந்த தென்பதை நினைவில் இருத்துதல் வேண்டும். வினையெச்ச வீறுகள் தெரிநிலைவினையெச்சம் இறந்தகால ஈறுகள்: அது-து எ-டு : செய்து து+என எ-டு : செய்தென (செ.வ.) பு எ-டு : செய்பு (செ.வ.) ஆ எ-டு : செய்யா (செ.வ.) ஊ எ-டு : செய்யூ (செ.வ.) இ எ-டு : ஓடி இ-ய் எ-டு : போய் டு, று என்பன துவ்வீற்றின் புணர்ச்சித் திரிபென்பது முன்னரே கூறப்பட்டது. செய்தென = செய்தானென்று சொல்லும்படி, செய்தபின், செய்ததினால். இப் பொருளை ஏனைப் பாலெண் ணிடங்கட்கும் ஒட்டுக. இ என்பது இகரச்சுட்டு. அது அண்மை குறியாது சுட்டள வாய் நின்றது. வலது, பெரிது என்பவற்றில் அது, இது என்பன சேய்மை யண்மை குறியாது நிற்றல் காண்க. அது, இ என்பன முதற்காலத்தில் வினைமுத லீறாய் இருந் திருக்கலாம். ஒ-நோ: இ.கா.வி.எ. வினைமுதற்பெயர் ஓடி ஓடி = ஒடினவன் எச்சம் வினைமுதற் பெயர் நன்று = நன்றாய் நன்று = நல்லது. பு, ஆ, ஊ என்பவற்றின் மூலமும் பொருளும் விளங்கவில்லை. இவை செய்து, ஓடி என்பவற்றிற்குப் பிற்பட்டவையாகும். ஆ என்பது வடதிரவிட வழிப்பட்ட இந்தியில், இறந்தகால வினைமுற்றீறாகவும் வினையெச்சவீறாகவும் வழங்குகின்றது. செய்து என்பது முதற்காலத்தில் வினைமுற்றாகவும் இருந்ததினால், ஆவீறும் தமிழில் அங்ஙனம் இருந்திருக்கலாம். நிகழ்கால வினையெச்ச வீறு செய்ய என்னும் வாய்பாட்டுச் சொல்லே, நிகழ்கால வினை யெச்சமாகப் பண்டைத் தமிழிலக்கண நூல்க ளெல்லாவற்றிலும் தவறாகக் குறிக்கப்பட்டுள்ளது. அது ஆங்கிலத்தில் Infinitive Mood என்று சொல்லப்பெறும் எதிர்காலவினையெச்சமேயன்றி வேறன்று. உரையும் இலக்கணமும் உட்பட, பண்டைத் தமிழிலக்கிய மெல்லாம், பொதுவாயினும் சிறப்பாயினும், செய்யுள்வடிவிலேயே இருந்தன. அதனால், பண்டைத் தமிழிலக்கணங்களும் செய்யுள் நடைக்கே எழுதப்பெற்றன. பல சொற்களும் சொல்வடிவுகளும் செய்யுள் நடையில் இடம்பெறுவதில்லை. முன்னூல் நடையையே பின்னூல்களும் மரபாகப் போற்றிவந்தன. ஆரியர் தென்னாடு வந்து தமிழ் கற்றுத் தமிழிலக்கண நூலாசிரியருமானதினால், தம் அறியா மையால் கால்டுவெலாரைப்போன்றே பல தவறுகள் செய்துள்ளனர். கின்று என்னும் நிகழ்கால வினைவடிவம், எங்ஙனமோ இடைக் கழகத்திற்குப்பின் செய்யுளில் இடம்பெறாது போயிற்று. அதனால், செய்யும் என்னும் எதிர்கால வினையையே நிகழ்காலத்திற்கும் புலவர் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். ஆயினும், பண்டை நிகழ் கால வினையின் எஞ்சுகுறிகள், இலக்கியத்திலும் இலக்கணத் திலும் தொடர்ந்து இருந்தே வந்திருக்கின்றன. கின்று இடைநிலைகொண்ட வினையாலணையும் பெயரின் மரூஉக்கள், தொல்காப்பியத்தில் ஆங்காங்குத் தனிப்பட வருவது டன், ஒரே நூற்பாவிற் பல ஒருங்குகூடியும் வருகின்றன. எ-டு: புணரியல் நிலையிடைப் பொருணிலைக் குதநவும் வினைசெயல் மருங்கிற் காலமொடு வருநவும் வேற்றுமைப் பொருள்வயின் உருபா குநவும் அசைநிலைக் கிளவி யாகி வருநவும் இசைநிறைக் கிளவி யாகி வருநவும் தத்தம் குறிப்பிற் பொருள்செய் குநவும் ஒப்பில் வழியாற் பொருள்செய் குநவும் (தொல். 735) உதந என்பது உதவுந என்பதன் தொகுத்தல். உதவுகின்ற-உதவுகுன்ன-உதவுகுந-உதவுந. செய்கின்ற-செய்குன்ன-செய்குந. உதவுகின்ற=உதவுகின்றவை. பொருகின்றான்-பொருகுன்னான்-பொருன்னான்-பொருநன். செய்யின் அல்லது செய்தால் என்னும் வாய்பாட்டெச்சம் நிலைப்பாட்டு வினையெச்சமாதலின் (Subjunctive or Conditional Mood), சரியான எதிர்கால வினையெச்சமாகாது. இலக்கண முறைப்பட்ட முக்கால வினையெச்ச வாய்பாடு கீழ்க்காணும் முறையிலேயே இருத்தல் கூடும். இ.கா. நி.கா. எ.கா. செய்து செய்துகொண்டு செய்ய (Past Participle) (Present Participle) (Futute Participle or Infinitive Mood) செய்துகொண்டு என்று தமிழிலும். சேசிக்கொனி என்று தெலுங்கிலும், நிகழ்கால வினையெச்சம் உலகவழக்கில் தொன்று தொட்டு வழங்கிவருகின்றது. செய்துகொண்டு என்னும் சொல்லே யன்றி, செய்ய என்னும் சொல் நிகழ்காலத்தை உணர்த்தாது. செய்துகொண்டு இருக்கிறான், செய்ய இருக்கிறான் என்னும் இரு தொடரின் பொருனையும் ஓப்புநோக்கி உண்மை தெளிக. செய்ய என்னும் சொல் இயல்பாக எதிர்காலத்திற்கே உரியதேனும், முன்னிகழ்ச்சி, ஒருங்கு நிகழ்ச்சி, பின்னிகழ்ச்சி என்னும் முக்கால நிலையையும் உணர்த்துமாறு ஆளப்பெறும். எ-டு: மழைபெய்யக் குளம் நிறைந்தது - முன்னிகழ்ச்சி மணியடிக்கக் கழுதை கத்திற்று - ஒருங்கு நிகழ்ச்சி பயிர்விளைய மழைபெய்தது - பின்னிகழ்ச்சி (எ.கா.) இவற்றுள், முன்னிகழ்ச்சி பின்வருந் தொடராலும், ஒருங்கு நிகழ்ச்சி ஆட்சியினாலுமே அறியப்படும். செய்து என்னும் சொற் போல், செய்ய என்னும் சொல் தனிநின்று இறந்தகாலத்தை யுணர்த் தாது. அங்ஙனமே, செய்துகொண்டு என்னும் சொற்போல், அது தனி நின்று நிகழ்காலத்தை யுணர்த்தாது. மேலும், நிகழ்கால நிகழ்ச்சி வேறு; ஒருங்கு நிகழ்ச்சி வேறு. ஆயினும், நீரில் ஆழ்பவன் சிறு கோலையும் பற்றுவதுபோல், இலக்கணியர் ஒருங்கு நிகழ்ச்சியைப் பற்றுக்கோடாகக் கொண்டு, செய்ய என்னும் சொல்லை நிகழ்கால வினையெச்சமாகக் காட்டியுள்ளனர். ஆயின், அதற்கு நிகழ்கால முணர்த்தும் ஆற்றலின்மையின், முவகைத் தொடர்ச்சிக்காலத்தை யும் (Continuous Tenses), முறையே, 7ஆம் வேற்றுமைத் தொழிற்பெயரா லும் இறந்தகால வினையெச்சத்தாலும் முற்றெச்சத்தாலுமே உணர்த்திவந்திருக்கின்றனர். எ-டு: தட்டுப்புடைக்கண் வந்தான் (தொல்.சொல்.77, இளம். உரை) - இ.கா.தொடர்ச்சி கண்கவ ரோவியங் கண்டுநிற் குநரும் (மணிமே. 3:131) - நி.கா.தொடர்ச்சி நீர்வார்த்துக் கால்கழுவா நின்று (நள. 232) ஆடினிர் பாடினிர் செலினே (புறம்.109) - எ.கா.தொடர்ச்சி செய்துகொண்டு என்னும் நிகழ்கால வினையெச்சம் (Present Participle) உலகவழக்கில் இருக்கவும், அதைப் பயன்படுத்தாது இங்ஙனம் இடர்ப்படுவது, கனியிருக்கப் பூம்பிஞ்சைக் கவர்வ தொப்பதே. பண்டை யிலக்கியத்தில் இல்லாத சொல்லெல்லாம் பிற்காலத் தவை யெனக் கொள்வது பெருந்தவறாம். பண்டை நூல்கள் இற்றை அகரமுதலிகளல்ல. பொதுமக்கள் பழஞ்சொற்றொகுதி தலைக் கழகக் காலத்தினின்று சற்றும் மாறாது இருந்துவந்திருக்கின்றது. ஆரிய வருகைக்கு முந்திய தமிழ்நூல் அனைத்தும் இறந்துபோயின. செய்துகொண்டு என்னும் சொல், தமிழின் அடிப்படைச் சொற்களுள் ஒன்றாயும், நாட்டுப்புற மக்கள் பேச்சில் ஆழ வேரூன்றிய தாயும், தமிழ்நாடெங்கணும் இன்றும் செய்துகிட்டு, செய்துகிண்டு, செய்துகினு எனப் பல்வேறு கொச்சைவடிவில் வழங்குவதாயும், தமிழினின்று நீக்கமுடியாததாயும் உள்ளது. காடைக்கண்ணி, குதிரைவாலி என்னும் சிறு தவசங்கள் தொன்று தொட்டுப் பாண்டிநாட்டில் விளைந்துவரினும், அவை இன்றுள்ள பண்டை யிலக்கியத்தில் இடம்பெறவே யில்லை. இங்ஙனமே செய்து கொண்டு என்னும் நிகழ்கால வினையெச்சமும் என்க. ஆங்கில நிகழ்கால வினையெச்சத்தின் ஈறாகிய ing என்பதன் தொல்வடிவாகச் சொல்லப்பெறும் inde என்பதும், செய்திண்டு என்னும் கொச்சைவடிவீற்றை ஒத்திருப்பது பெரிதும் கவனிக்கத் தக்கதாம் . செய்ய என்னும் வாய்பாட்டெச்சம் நிகழ்காலச் சொல்லன் மயா லேயே, அகரவீற்று வினையெச்சம் என இந் நூலில் இதுகாறும் குறிக் கப்பட்டது. இனி எதிர்கால வினையெச்சம் என்றே தெளி வாய்க் குறிக்கப்பெறும். எதிர்கால வினையெச்ச ஈறு: அ. எ-டு: செய்ய, கொடுக்க, இறப்ப. செய்ய என்பது செய்யல் என்னும் அல்லீற்றுத் தொழிற் பெயரின் ஈறு கேடாம். செய்யல் (செயல்) வேண்டும் = செய்யவேண்டும். கொடுக்கல் வேண்டும் = கொடுக்கவேண்டும். ஒல்வழி ஒற்றிடை மிகுதல் வேண்டும் (114) ஈறா ககரமுனைக் கெடுதல் வேண்டும் (115) வேற்றுமை மருங்கிற் போற்றல் வேண்டும். (156) மெய்ந்நிலைப் பொதுச்சொல் கிளத்தல் வேண்டும் (725) என்னும் தொல்காப்பிய அடிகளிலெல்லாம் அல் அல்லது தல்லீற்றுத் தொழிற்பெயர் செய்ய என்னும் நிகழ்கால வினையெச்சப் பொருள் படுதல் காண்க. தொழிற்பெயரீறுகள் பற்பலவேனும், அல்லீற்றுத் தொழிற்பெயரே ஈறுகெட்டு அகரவீற்றைக் கொண் டிருக்கும். ஆதலால், அதனின்றே v.fh.É.v.ஈW பிறந்ததாகும். செய்தல் என்பது தல்லீற்றது; அல்லீற்றதன்று. இறக்க, சிறக்க, விழிக்க, கழிக்க முதலியவற்றை உயர்நடை யாளர் இன்னோசை கருதி இறப்ப, சிறப்ப, விழிப்ப, கழிப்ப எனத் திரிப்பர். செய்ய என்பது நோக்கங்குறித்த சொல்லாதலின், செய்யுமாறு, செய்யும்படி, செய்தற்கு, செய்தற்காக, செய்தற்கென்று, செய்ய வேண்டுமென்று, செய்தற்பொருட்டு, செய்யவேண்டி. செய்வான் வேண்டி, செய்யும்நோக்கத்துடன் என்று இத் தொடக்கத்துச் சொற்றொடர்களும் எதிர்கால வினையெச்சப் பொருளில் வரும். இயர் எ-டு: செய்யியர் இயர்-இய. எ-டு: செய்யிய அல்+கு எ-டு: செயற்கு (செயல்+கு) தல்+கு எ-டு: செய்தற்கு (செய்தல்+கு) உம்+என. எ-டு: செய்யும்+என=செய்யுமென- செய்ம்மென-செய்ம்மன - வான். எ-டு: செய்வான் (வி.மு.)-செய்வான் (வி.எ.) - பான். எ-டு: உண்பான் (வி.மு.)-உண்பான் (வி.எ.) - மான். எ-டு: செய்மான் (வி.மு.)-செய்மான் (வி.எ.) - மார். எ-டு: செய்மார் (வி.மு.)-செய்மார் (வி.எ.) - பாக்கு எ-டு: செய்பாக்கு, உண்பாக்கு (வி.எ.) செய்ம்மன என்பதைச் செய்தென என்பதனொடு ஒப்பு நோக்குக. செய்ம்மன = செய்யும் என்று சொல்லும்படி. ஈ என்பது ஒரு துணைவினை. ஈயல்=ஈதல், ஈயல்வேண்டும்-ஈயவேண்டும். ஈயல்-ஈயர். ல-ர, போலி. ஈயர்-இயர்-இய. இது உதவி வினையீறு; பின்னர்ப் பொதுவினை யீறாயிற்று. வான், பான், மான், மார் என்பன முற்றெச்ச வீறுகளே. இவற்றுள் முதலிரண்டுமட்டும் இருதிணை ஐம்பால் மூவிடப் பொதுவாக்கப் பட்டன. பாக்கு = பகுதி. பகு-பாகு-பாக்கு-பாக்கம். செய்பாக்கு = செய்யும் பகுதியில், செய்யுமாறு. வந்தால் என்பதை வரும்பக்கத்தில் (வரும் பட்சத்தில்) என்று கூறும் வழக்கை இதனொடு ஒப்பிடுக. பகு-பக்கம். நிலைப்பாட்டு வினையெச்ச ஈறுகள் ஆல் எ-டு: செய்தால் (செய்து+ஆல்). இல் எ-டு: வரில். இல்-இன் எ-டு: செய்யின்-செயின். கால் எ-டு: செய்தக்கால். இல் என்பது இடப்பொருள் அல்லது கருவிப்பொருளுருபு. வரில் என்பது வருகையில் அல்லது வருகையினால் என்று பொருள் படுவது. ஆதலால், அது வினைமுதனிலையெல்லாம் தொழிற் பெயராய் ஆளப்பட்ட காலத்துத் தோன்றியதாகும். வருகையில் = வருகையின் பேரில். ல்-ன். வரில்-வரின். ஆல் என்பது இல் என்பதன் திரிபு. காலத்திலே என்பதைக் காலத்தாலே என்று கூறும் வழக்கை நோக்குக. வந்தது என்னும் வினைவடிவு தொழிற்பெயராயும் வழங்குவது போல், செய்து என்னும் பண்டை வினைமுற்று வடிவும் தொழிற் பெயராயும் வழங்கியிருத்தல் கூடும். வந்தால்=வந்ததினால், வருகை யால். ஓடியால்-ஓடினால்=ஓடினதினால். போயியால்-போயினால் = போனதினால். கால் என்பது காலத்தைக் குறிக்கும் சொல்லே; ஆயின், வலிமிக்குப் புணரும். செய்தகால்=செய்த காலம். செய்தக்கால்= செய்தால். கண், கடை என்பனவும் எதிர்கால வினையெச்ச வீறாய் வரும். எ-டு: செய்தக்கண், செய்தக்கடை. கண், கடை என்பன இடப்பெயர்கள். துவ்வீறு புணர்ச்சியில் டுறு வாகத் திரியுமாதலால், செய்து என்பது உண்டு, சென்று என்பவற்றையும்; செய்தென என்பது உண்டென, சென்றென என்பவற்றையும்; செய்தால் என்பது உண்டால், சென்றால் என்பவற்றையும்; செய்தக்கால் என்பது உண்டக்கால், சென்றக்கால் என்பவற்றையும் தழுவும். குறிப்பு வினையெச்ச வீறுகள்: அ எ-டு : வலிய, மெல்ல. து எ-டு : சிறிது, பெரிது. து-று எ-டு : நன்று. ஆய் எ-டு : அழகாய். ஆக எ-டு : விரைவாக. எதிர்மறை யிடையிலைகளும் ஈறுகளும் எதிர்மறை வினைமுற்று: இ. கா. நி. கா. எ. கா. செய்திலன் செய்கின்றிலன் செய்கிலன்-இல் (இடைநிலை) செய்ததில்(லை) செய்கின்றதில்(லை) செய்வதில்(லை)- இல் (லை) (ஈறு) செய்யவில்லை செய்யவில்லை செய்யவில்லை- இல்லை (ஈறு) இல், இல்லை என்னும் இரண்டும், இயல்பாக எதிர்மறைப் பொருள் கொண்ட துணைவினைகளே. இவற்றை ஏனைப் பாலிடங்கட்கும் ஒட்டுக. இல், இல்லை என்பன ஈறாய் வரின், இருதிணை ஐம்பால் மூவிடப் பொதுவாம். செய்யவில்லை என்னும் எதிர்மறை முற்றும் இங்ஙனம் பொதுவாம். எதிர்கால வினைமுற்று எதிர்மறை யிடைநிலையும் ஈறும் பெறாது, பாலீற்றின் அடி நீட்சியினாலேயே எதிர்மறை குறிப்பது முண்டு. எ-டு: தன்மை முன்னிலை படர்க்கை செய்யேன் செய்யாய் செய்யான் செய்யேம் செய்யீர் செய்யாள் செய்யார் செய்யாது செய்யா பிற தன்மைப் பன்மை யெதிர்மறை வினைகள் செய்யாம், செய்யோம் என்பன. மாட்டு என்னும் துணைவினையும் இங்ஙனமே புடை பெயரும். இவற்றிற் கால விடைநிலை யின்மை, வினையின்மையையும் அதனால் எ திர்மறையையும் காட்டுவதாகக் கருதுவர் கால்டு வெலார். எதிர்மறை ஏவல்வினை யீறுகள்: ஒருமை: அல் எ-டு : செய்யல், செயல். அல்-ஆல் எ-டு : அழால். ஆல்-ஏல் எ-டு : செய்யேல். அரிது-ஆது+இ எ-டு : செய்யாதி. அரிது-ஆது+ஏ எ-டு : செய்யாதே. பன்மை: அல்+மின் எ-டு : செய்யன்மின் ஆது+இர் எ-டு : செய்யாதிர் ஆது+ஈர் எ-டு : செய்யாதீர். ஆது+ஈர்+கள் எ-டு : செய்யாதீர்கள். ஆது+ஏ+உம் எ-டு : செய்யாதேயும். ஆது+ஏ+உம்+கள் எ-டு : செய்யாதேயுங்கள். அல் என்னும் ஈறு அன்மைகுறிக்கும் அல் என்னுஞ் சொல்லே. அரிது என்னும் குறிப்புவினை, அருமைப்பொருளிலும் இயலாமைப் பொருளிலும் வரும். எ-டு: fhnuhâk¤ij¡ fh©gJ mÇJ.-mUik khªj‹ gw¥gJ mÇJ.-ïayhik இயலாமைப் பொருளுணர்த்தும் கூடாது என்னுஞ் சொல், விலக்குப் பொருளில் வருவதுபோன்றே, அரிது என்னும் சொல்லும் வரும். அரிது என்பது மலையாளத்தில் அருது எனத் திரியும். மழையத்துப் போகருதெ, வெயிலத்துப் போகருதெ என்பன, மழையிற் போகாதே, வெயிலிற் போகாதே என்று பொருள்படும் மலையாள(சேர) நாட்டு வழக்காம். ஆர்க்கானும் கொடுக்கும்போழ் அருதென்று விலக்கருது என்னும் மலையாளப் பழமொழியில், அருதென்று விலக்கருது என்னும் தொடர், கூடாதென்று தடுக்கக் கூடாது என்று பொருள் படுதல் காண்க. கூடாது என்னும் சொற்போன்றே. அருது என்பதும் மலையா ளத்தில் தனிவினையாக வரும். எ-டு: ஈ ஆள்க்கு வேறே பணி அருது = இந்த ஆளுக்கு வேறு வேலை கூடாது. போகருதெ என்னும் மலையாள வினையொடு போகாதே என்னும் தமிழ்வினையை ஒப்புநோக்கும்போது, அருது என்பது ஆது என்று மருவினதாகத் தெரிகின்றது. இதினின்று, செய்யரியேன், செய்யரியேம், செய்யரியாய், செய்யரியீர், செய்யரியான், செய்யரி யாள், செய்யரியார், செய்யரிது, செய்யரிய என்னும் வடிவங்களே, முறையே செய்யேன், செய்யேம், செய்யாய், செய்யீர், செய்யான், செய்யாள். செய்யார், செய்யாது, செய்யா எனத் தொக்கன என எண்ண இடம் ஏற்படுகின்றது. அரிது என்பதன் மூவமான அருமைச்சொற்கு இன்மைப் பொருளுண்மையும், இயலாமைப் பொருளுணர்த்த வேண்டிய செய்யக்கூடாது என்னும் சொல் செய்யாதே என்று பொருள்படுவதும், இவ் வெண்ணத்தை வலியுறுத்துகின்றன. படர்க்கை யெதிர்மறை யேவற் பன்மை யீறு அல்+மார் எ-டு: செய்யன்மார். பாடின் மன்னரைப் பாடன்மார் எமரே. (புறம்.375) நோய்மலி வருத்தங் காணன்மார் எமரே. (நற். 64) மார் என்பது செய்மார் என்னும் பலர்பால் எதிர்கால வினை முற்றீறாம். எதிர்மறை வியங்கோள்வினை யீறு அல். எ-டு: எனல்=என்னற்க. பயனில்சொற் பாராட்டு வானை மகனெனல் (குறள்.196) அல்+க. எ-டு: செய்யற்க. எதிர்மறைப் பெயரெச்ச வீறு தெரிநிலை: ஆது+அ. எ-டு: செய்யாத செய்யாத-செய்யா (ஈறுகெட்ட எதிர்மறைப் பெ.எ.) குறிப்பு:ஆது+அ. எ-டு: அல்லாத, இல்லாத. அல்லா, இல்லா, என்பன ஈறுகெட்ட எதிர்மறைப் பெ.எ. எதிர்மறை வினையெச்ச வீறுகள் தெரிநிலை: ஆது எ-டு : செய்யாது. (ஆ, இடைநிலை) ஆ+மை எ-டு : செய்யாமை. ,, மை-மே எ-டு : செய்யாமே. ,, மை-மல் எ-டு : செய்யாமல். ,, ஆ என்பது, அருமை என்னும் பண்புப்பெயரின் முதனிலையான அரு என்னும் சொல்லின் திரிபாயிருக்கலாம். அரிது என்னும் சொற்கும் அரு என்பதே மூலம். மை என்பது பண்புப்பெயரீறு. குறிப்பு: அது. எ-டு : அல்லது ஆது. எ-டு : அல்லாது, இல்லாது ஆது+ஏ. எ-டு : அல்லாதே, இல்லாதே. அது-து-று எ-டு : அன்று, இன்று. து-று-றி. எ-டு : அன்றி, இன்றி. மை, எ-டு : அல்லாமை, இல்லாமை மை-மே. எ-டு : அல்லாமே, இல்லாமே. மை-மல். எ-டு : அல்லாமல், இல்லாமல். ஆல். எ-டு : அல்லால். கால். எ-டு : அல்லாக்கால். கடை. எ-டு : அல்லாக்கடை. அது, ஆது என்பன சுட்டடிச்சொற்கள். ஏ என்பது இசை நீட்டம். அ ன்று, அன்றி என்பவற்றை நன்று, நன்றி என்பவை போலக் கொள்க. அல்லா என்பது ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். மை பண்புப் பெயரீறு. அல்லால் என்பது அல்லாமல் என்பதன் தொகுத்தலா யிருக்கலாம். கால் காலப்பெயர். கடை இடப்பெயர். கட-கடை= கடந்து செல்லும் இடம், இடம். அல், இல் என்னும் எதிர்மறைச் சொற்களின் வரலாறு அல், இல் என்னும் இருசொல்லும் ஒலியிலும் பொருளிலும் பேரளவு ஒத்திருப்பினும், ஒரே வேரினின்று தோன்றியவை யல்ல. அன்மை வேறு; இன்மை வேறு. அல்லுதல்=பொருந்துதல், முடைதல், பின்னுதல். ஒல்லுதல் பொருந்துதல். ஒல்-அல். அல்-அள்=செறிவு. அள்-அள்ளல் = நெருக்கம். அள்ளுதல் = செறிதல். அள்-அண்-அண்மை = நெருக்கம். அண்-அடு. அடுத்தல் = அண்மையாதல், நெருங்குதல். அடுத்த = அண்மையான, இன்னொரு. அடுத்தவன் = நெருங்கியவன், நெருங்கிய இன்னொருவன், இன் னொருவன். அல் என்னுஞ் சொல்லும் இங்ஙனமே அண்மைக் கருத்தி னின்று மறுபொருண்மைக் கருத்தைப் பெறும். அல்லது=அண்ணியது, அண்ணிய இன்னொன்று, இன்னொன்று. இம் மறுபொருண்மைக் கருத்தினின்றே, தெரிப்புக்கருத்தும் அன்மைக்கருத்தும் தோன்றியுள்ளன. எ-டு: திருக்குறள் அல்லது நாலடியார் - தெரிப்பு (Alternative தமிழ் அல்லது பிறமொழி choice) தமிழ் அல்லது பிறமொழி தமிழ் அல்லாதது பிறமொழி - அன்மை. தமிழ் இன்னொன்று பிறமொழி என்னும் கருத்தினின்று, தமிழினின்று வேறானது பிறமொழி என்னும் கருத்துத் தோன்றி யுள்ளமை காண்க. அன்மைப்பொருட்கு ஆகார விடைநிலை வேண்டாவிடினும், அல்லது என்னும் சொல் சொல்லாது, பொல்லாது, சொல்லாதது, பொல்லாதது, சொல்லாமை, பொல்லாமை முதலிய சொற்களோ டொப்புமைகொண்டு ஈற்றடி நீளப்பெற்றது. அதனால், பொருளும் தெளிவுற்றது. சொல்லாது என்னும் தெரிநிலை வினைச்சொல் வடிவம் முற்றாயும் எச்சமாயும் இருப்பதுபோன்றே, அல்லது என்னுங் குறிப்பு வினைச்சொல் வடிவும் முற்றாயும் எச்சமாயு மிருக்கமுடியும். அன்மைப்பொருட் சொற்றொடரில் வரும் இரு வினை முதலையும் அன்மைப்பொருள் சார்தலின் சொற்றெடர் தலைமாறி னும் பொருள் மாறாது. எ-டு: இளம்பூரணர் உரையாசிரியரல்லர். உரையாசிரியர் இளம்பூரணரல்லர். இளம்பூரணரல்லர் உரையாசிரியர். உரையாசிரியரல்லர் இளம்பூரணர். அல் என்னுஞ் சொல்லடியாய், அஃறிணை, அல்வழி, அன்மொழித்தொகை, அல்லகுறி என்னும் இலக்கணக் குறியீடுகள் தோன்றியுள்ளன. இல் என்னும் சொல், அடிப்படையில் சிறுமை அல்லது குன்றற் பொருளது. குன்றற் கருத்தினின்று இன்மைக்கருத்தும் தோன்றும். ஒ,நோ: செயப்படுபொருள் குன்றியவினை= செயப் படுபொருள் இல்லாவினை. Less=of smaller quantity, senseless ness=absence of sense. இல் என்பது ஒரு சிறுமைப்பொருள் பின்னொட்டு. எ-டு தொட்டி-தொட்டில், முற்றம்-முற்றில்-முச்சில். இல் என்பது திண்மையிற் சிறிய இலைவகை. இலவு என்பது நொய்ய பஞ்சு. இல்லி சிறுதுளை. இறை என்பது சிறிது என்னும் பொருள்படுவது. இடுகியது இடை. இட்டிகை சிறு செங்கல். இட்டேறி இது வரப் பிடைப்பட்ட சிறுபாதை. உல்லி, ஒல்லி என்பன ஒடுக்கங்குறிப் பதால், உல் என்பதினின்று இல் என்னுஞ் சொல் தோன்றியிருக் கலாம். சிறுமையுணர்த்தும் இவ் இல்லென்னுஞ் சொல்லே, இன்மை யுணர்த்தும் குறிப்புவினையா யிருக்கலாம். அல் என்னும் சொற்போன்றே, இல் என்பதும் ஒப்புமை யமைப்பால் இல்லா, இல்லாது, இல்லாதவன், இல்லாமை என்னும் வடிவுகளைப் பெற்றுள்ளது. இல், இல்லை என்னும் இருவடிவும், இருதிணை யைம்பால் மூவிடப் பொதுவான குறிப்பு வினைமுற்றுகளாம். இல் என்பது பாலீறு பெற்றுத் திணைபால் எண்ணிட வேறுபாடு காட்டும். அல் என்பது இல் என்பதுபோல் தனித்து நின்று பயனிலை யாகாது என்றும் பாலீறு பெற்றே வரும். இல்-இலம் = இன்மை, வறுமை. இலம்படு-இலம்பாடு = வறுமை. அல், இல் இரண்டும் ஆரியமொழிகளிலும் சென்று வழங்கு கின்றன. The Primary Classical Language of the World என்னும் நூலைக் காண்க. எதிர்மறைத் தொழிற்பெய ரீறுகள் ஆ+மை. எ-டு: செய்யாமை. ஆது+அ+(அ)து எ-டு: செய்யாதது=செய்யாத அது. ஆ என்பது எதிர்மறை யிடைநிலை; அரு என்பதன் திரிபு. பிற முற்கூறப்பட்டவையே. எதிர்மறை வினையாலணையும்பெய ரீறுகள் தெரிநிலை: (1) இயல்பு வினைமுற்றீறு எ-டு: செய்திலன், செய்கின்றிலன், செய்யான். (2) சுட்டுப்பெயர் எ-டு: செய்யாதவன்-செய்யாதான். செய்யாதவன்=செய்யாத அவன். (3) ஆ ஓவான ஈறு. எ-டு: செய்திலான்-செய்திலோன். செய்யாதான்-செய்யாதோன். குறிப்பு: (1) இயல்பீறு எ-டு: அல்லான், இல்லான். (2) சுட்டுப்பெயர் எ-டு: அல்லாதவன்-அல்லாதான். அல்லாதவன்=அல்லாதஅவன். (3) ஆ ஓவான ஈறு. எ-டு: இல்லான்-இல்லோன். இசின் என்னும் இடைநிலை இசின் என்பது ஓர் இறந்தகால இடைநிலை என்று சங்கர நமச்சிவாயரும் (நன். 145, உரை), ஓர் அசைநிலையென்று நச்சினார்க் கினியரும் (தொல்.சொல். 296) உரைத்தனர். இசின் என்பது வினையுறுப்பாக வரும் இடமெல்லாம், அது இறந்த கால வினையெச்சத்தோடு சேர்ந்தே யிருக்கின்றது. இசின் என்பதைக் கொண்ட வினைகளெல்லாம் இறந்தகால முற்றாகவே யிருப்பினும், படர்க்கை வினைமுற்றுகளே பெரும்பாலும் பாலீறு கொண்டனவாகவும், ஏனை யீரிட முற்றுகளும் பாலீறற்றனவாக வுமே யிருக்கின்றன. இறந்தகால விடைநிலைகளெல்லாம் இறந்தகால வினை யெச்சத்துள்ளேயே அடங்கிநிற்றலின். அதனொடு சேர்ந்துள்ள இசின் என்பது ஒரு துணைவினையாகவே யிருத்தல்வேண்டும். அது ஈ என்பதே. அது உதவி வினையீறுகளுள் ஒன்றென்பது முன்னர்க் கூறப்பட்டது. ஆயினோர், போயினோர், மேயினோர், தாயினோர் என்பன போன்று, ஈயினோர் என்பதும் படர்க்கைப் பலர்பால் இறந்தகால வினையாலணையும் பெயராம். யகர சகரப் போலியில் அது ஈசினோர் என்றாகி இசினோர் என்று குறுகும். பின்பு அது இறந்தகால வினையெச்சத்துடன் துணைவினையாகச் சேர்ந்து, சிறந்திசினோர் (தொல்.295) உணர்ந்திசினோர் (தொல்.601) அறிந்திசினோர் (தொல்.643) முதலிய சொற்களைப் பிறப்பிக்கும். தொல்காப்பியர் இவ் வினையின் அமைப்பை முற்றும் அறியா திருந்ததினால், இசின் என்பதை அசைநிலையாகக்கொண்டு. அதையும் சின் என்று தவறாகப் பிரித்து, மியாஇக மோமதி இகும்சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல். (759) அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை யிடத்தொடுந் தகுநிலை யுடைய என்மனார் புலவர் (760) என்று வழுப்பட நூற்பா யாத்து, மெய்தெரி வளியிசை அளவுநுவன் றிசினே (102) எனத் தன்மையொருமை யிறந்தகால வினைமுற்றை எண்ணீறின் றியும் அமைத்துவிட்டார். அதனால், பிறகாலப் புலவர், வழிபடல் சூழ்ந்திசின் அவருடை நாட்டே. (குறுந். 11) கேட்டிசின் வாழி தோழி (குறுந். 30) எனத் தன்மை முன்னிலை வினைமுற்றுகளைமட்டுமன்றி, வேந்தனும்மே............òw«bg‰ றிசினே, பாடினியும்மே............ïiHbg‰ றிசி பாண்மகனும்மே..........ó¥bg‰ றிசினே. (புறம். 11) எனப் படர்க்கை வினைமுற்றுகளையும், எண்ணீறும் பாலீறும் அற்றனவாக அமைத்துவிட்டனர். இது பெரிதும் மயக்கத்தை விளைத்துவிட்டது. அதனால், தொல்காப்பியர்க்குப் பதினெண் நூற்றாண்டு பிந்திய பவணந்தியாரும், .............á‹...........mirbkhÊ.” (நன். 441) எd மயங்கிவிட்டனர். சின் என்பது அசைநிலையாயின், அது நீங்கியபின், நுவன்றி சினே என்னும் தன்மையொருமை வினைமுற்று நுவன்றியே என்றும்; புறம்பெற் றிசினே என்னும் படர்க்கை ஆண்பால் வினைமுற்றும் அறிந்திசினோரே (தொல். 643) என்னும் படர்க்கைப் பலர்பால் வினைமுற்றும், முறையே, புறம்பெற்றியே, அறிந்தியோரே என்றும் நிற்கும். அவை ஆசிரியர் குறித்த சொல்லாகாமை கண்டுகொள்க. தன்மையொருமை : ஈயினேன்-ஈசினேன்-இசினேன் முன்னிலையொருமை : ஈயினை-ஈசினை-இசினை படர்க்கையொருமை : ஈயினன்-ஈசினன்-இசினன் ஈயினள்-ஈசினள்-இசினள் (4) உரிச்சொல் உரிச்சொல் என்பது இலக்கணவகைச் சொல் அன்றென் பதும், அது ஆரியர்க்கு விளங்குமாறு பொருள்கூறப்பட்ட சொற்களும் சொல் வடிவு களுமாகிய அருஞ்சொற்றொகுதியே என்பதும் முன்னர்க் கூறப்பட்டன. அவற்றை, உரிச்சொற் கிளவி விரிக்குங் காலை .............................................................. பெயரினும் வினையினும் மெய்தடு மாறி ................................................................... பயிலா தவற்றைப் பயின்றவை சார்த்தித் தத்தம் மரபிற் சென்றுநிலை மருங்கின் எச்சொல் லாயினும் பொருள்வேறு கிளத்தல் (782) என்னும் தொல்காப்பிய உரிச்சொல் இயல்விளக்க நூற்பாவும், தொல்காப்பியர் உரிச்சொற்கட்கு அகரமுதலி முறையிற் பொருளே கூறிச் செல்வதும், உரிச்சொற்குத் தனியிலக்கணவகைத் தன்மை யின்மையும், பல்வகைப் பண்பும் பகர்பெய ராகி ஒருகுணம் பலகுணம் தழுவிப் பெயர்வினை ஒருவா செய்யுட் குரியன வுரிச்சொல். (442) இன்ன தின்னுழி யின்னணம் இயலும் என்றிசை நூலுட் குணகுணிப் பெயர்கள் சொல்லாம் பரத்தலிற் பிங்கல முதலாம் நல்லோர் உரிச்சொலில் நயந்தனர் கொளலே (460) என்னும் நன்னூல் நூற்பாக்களும் வலியுறுத்தும். இன்னும் இதன் விரிவை, என் தொல்காப்பிய விளக்கம்' என்னும் நூலிற் காண்க. (5) ஐவகைச் சொன்னிலை 1. அசைநிலை (Isolating or Monosyllabic Stage) எ-டு: இல், ஆள். 2. புணர்நிலை (Compounding Stage) எ-டு: இல்-ஆள். 3. பகுசொன்னிலை அல்லது ஈறுபேற்ற நிலை (Inflexional Stage) எ-டு: இல்லாள். 4. கொளுவுநிலை (Agglutinative Stage) எ-டு: செய்விப்பி. 5. தொகைநிலை (Synthetic Stage) எ-டு: மக+கள்=மக்கள், தம்+ஆய்=தாய், ஆதன்+தா=ஆந்தா-ஆந்தை. (6) சொற்படை வளர்ச்சி நிலம் ஒன்றன்மே லொன்றாய் அடுக்கப்பட்டிருக்கும் பல படை களாய் அமைந்திருப்பதுபோல், சொற்களும் ஒன்றன்மே லொன்றாய் வளர்ந்துள்ள எழுத்துகளும் அசைகளுமாகிய பலபடைகளைக் கொண்டுள்ளன. எ-டு: 1. சொன்னீட்சி அ-அல்-அது-அந்து-அந்த-அந்தா உ-உம்-உம்பு-உம்பர்-உம்பரம் உ-உம்-அம்-அம்பு-அம்பல்-அம்பலம் உ-உல்-உள்-உடு-உடல்-உடன்-உடம்பு உ-இ-எ-ஏ-ஏண்-யாண்-யாணம்-யாணர் உ-உல்-உள்-சுள்-சுண்-சுண்ணம்-சுண்ணம்பு- சுண்ணாம்பு உ-உல்-முல்-மல்-மன-மன்று-மந்து-மந்தை 2. தொழிற்பெயர் முதனிலையாதல் நகு-நகை (தொ. bg.)-eif¥ò கள்-களி (தொ. bg.)-fË¥ò வள்-வளை (தொ. bg.)-tisî குள்-கொள்-கொளும்-(தொ. bg.)-bfhSK- கொளுமூ-கொண்மூ 3. இயலொலிச்சொல் திரியொலிச்சொற் பொருள் தரல் பள்-பண்டு. பள்-பழ-பழமை அர்-அரங்கு. அர்-அறு-அறை 4. இயற்சொல் திரிசொற்பொருள் தரல் தில்-திள்-திண்-திண்ணை. திள்-திர்-திரள்-திரளை- திரணை வல்-வள்-வண்-வண்ணம்-வண்ணகம். வள்-வர்-வரி- வரணம். வளைத்தல் = வளைத்தெழுதல், எழுதுதல். உருவப் பல்பூ வொருகொடி வளைஇ (நெடுநல். 113) வரி = வளைகோடு, எழுத்து. வரிதல் = 1. எழுதுதல் (பிங்.) 2. சித்திரமெழுதுதல். வல்லோன் றைஇய வரிவனப் புற்ற, வல்லிப்பாவை(புறம்.33) வரித்தல் = 1. எழுதுதல். வள்ளுகிர் வரித்த சாந்தின் வனமுலை (சீவக . 2532) 2. சித்திரமெழுதுதல். திரணை என்னும் சொற்பொருளைத் திண்ணை என்னும் சொல்லே குறித்தல்போல், வரணம் என்னும் சொற்பொருளை வண்ணம் என்னும் சொல்லே குறிக்கும் என அறிக. வள்ளுதல்=வளைதல், வளைத்தெழுதுதல். 5. வினைவளர்ச்சி செய்-செய்கின்று-செய்கின்றான்-செய்கின்றனன். 6. வினைமுதனிலை வளர்ச்சி கல்-கற்பி-கற்பிப்பி-கற்பிப்பிப்பி நட-நடத்து-நடத்துவி-நடத்துவிப்பி-நடத்துவிப்பிப்பி 7. பெயர் வளர்ச்சி நடத்துவிப்பிக்கின்றவனிடத்தில் (7ஆம் வே.) (7) பின்னமைப்பு (Back formation) ஒரு திரிசொல்லின் முதலை அல்லது ஈற்றை நீக்கி மற்றொரு சொல்லை அமைத்துக்கொள்வது பின்னமைப்பாம். எ-டு: முழுத்தல் = திரளுதல், பருத்தல். முழு-முழா = திரண்டமுரசு. முழா-மிழா = பருத்த மான்வகை (stag). மிழா-மேழம்- மேழகம்-ஏழகம்-ஏடகம்-ஏடு-யாடு-ஆடு. மேழம் = பருத்த செம்மறியாட்டுக் கடா. மேழகம் = செம்மறிக்கடா. வெம்பரி மேழக மேற்றி (சீவக.521) ஏழகம் = செம்மறிக்கடா, செம்மறி, வெள்ளாடு. யாடு = ஆட்டின்பொது (தொல்: பொருள்.567) மேழகம் என்னும் சொல்லின் திரிபினின்று ஆடு என்னும் சொல்லை அமைத்துக்கொண்டது பின்னமைப்பாம். வேந்தன் என்னும் சொல்லினின்று வேந்து என்னும் வடிவை அமைத்ததும் பின்னமைப்பே. வேய்ந்தோன் = முடியணிந்தோன். வேய்ந்தோன்-வேந்தன் = முடியணிந்த சேர சோழ பாண்டியருள் ஒருவன். வேந்தன்-வேந்து. (8) சொற்பண்படுத்தம் 1.மொழிமுதலாகா முதலெழுத்தை மொழிமுதலெழுத்தாக்கல். எ-டு: லாலாட்டு-ராராட்டு-ரோராட்டு. என்பது பண்படாத உலகவழக்கு. ரோரோ என்று ஆட்டுவது ரோராட்டு. தாலாட்டு, ஓலாட்டு-ஓராட்டு என்பன பண்பட்ட தமிழ் வழக்கு. ல-த, போலி. ஒ.நோ: சலங்கை-சதங்கை. லொளுலொளு என்பதை நொளுநொளு என்பதும், லொள்லொள் என்று குலைக்கும் நாயை ஞெள்ளை என்பதும், அஃதே. டகரமுதல் தகரமுதலாக எழுதப்படும். எ-டு: டவண்டை-தவண்டை (ஒருவகைப் பறை). அவரை, துவரை, பனை, மலை முதலிய சொற்களின் ஐகாரவீறு, அகரவீற்றின் பண்படுத்தத் திரிபாயிருக்கலாம். 2. சொற்களைப் பொருட்கேற்ப வேறுபடுத்தல். எ-டு: தலையன், தலைவன், தலைச்சன், தலையாரி, தலைகாரன். கடிய, கடக்க; கடிதல், கடித்தல்; கடிந்தான், கடித்தான். கடிதல்=நீக்குதல். கடித்தல்=பல்லால் வெட்டுதல். வெள்கு-வெட்கு, வெள்கு-வெஃகு. வெட்குதல்=நாணுதல்,வெஃகுதல்=பிறர்பொருளை விரும்புதல். நீர்நிலையைக் குறிக்கும் ஆறு என்னும் சொல்லை வேற் றுமைப் புணர்ச்சியில் வலியிரட்டித்தலும், எண்ணைக் குறிக்கும் ஆறு என்னும் சொல்லை அங்ஙனம் இரட்டிக்காமையும், பண் படுத்தத்தின் பாற்பட்டதே. திரிபு புணர்ச்சியால் மகன்மை குறித்தல் கீரன்+கொற்றன்=கீரங்கொற்றன் (கீரன் மகனாகிய கொற்றன்) கண்ணன்+சேந்தனார்=கண்ணஞ்சேந்தனார் (கண்ணன் மகனாகிய சேந்தனார்) பிட்டன்+தத்தன்=பிட்டந்தத்தன் (பிட்டன் மகனாகிய தத்தன்) இவற்றில், நிலைமொழியீற்று னகரமெய், வருமொழிமுதல் வல்லின மெய்க்கு இனமெல்லினமாய்த் திரிதல் காண்க. வடுகஞ் சாத்தன் என்பது வடுகச்சாத்தன் என்று வலிப்பின், வடுகன் மகனாகிய சாத்தன் என்று பொருள்படாது, வடுகன் (தெலுங்கன்) ஆகிய சாத்தன் என்றே பொருள்படும். (9) சொற்றூய்மை தமிழ் தானே தோன்றிய பெருவளத் தாய்மொழியாதலின், சொற்றூய்மை அதன் சிறந்த பண்புகளுள் ஒன்றாம். அதனால், பண்டைத் தமிழர் அதைக் கண்ணுங்கருத்துமாய்ப் பேணி, அயல் நாட்டிலிருந்து வந்த பொருள்கட்கெல்லாம் உடனுடன் தூய தமிழ்ச்சொற் பெயர்களையே புனைந்திட்டிருக்கின்றனர். எ-டு: பொருள் தோன்றிய இடம் பொருட்பெயர் அரபி குதிரை, பேரீந்து சீனம் கரும்பு அமெரிக்கா, பாரசீகம் புகையிலை அமெரிக்கா உருளைக்கிழங்கு மேலையிந்தியத் தீவுகள் அண்டிமா, KªâÇ(Cashew) துருக்கி வான்கோழி தென்னமெரிக்கா, செந்தாழை (Pine apple) மேலையிந்தியத் தீவுகள் இங்கிலாந்து புகைவண்டி மிதிவண்டி (cycle) கஃடு, கஃது, கஃபு என்னும் சொற்களின் பொருள் யாவையென்றே தெரியாது முற்றும் மறைந்துவிட்டன. இடா, ஒருஞார், ஒரு துவலி என்பன எவ்வகை அளவென்று தெரியவில்லை. ஒட்டகமும் குதிரைபோல் அரபிநாட்டினின்று வந்ததே. தொல்காப்பிய மரபியலில் ஒட்டகம் குறிக்கப்படுகின்றது. தமிழ்நாடு அரபிநாட்டொடு தொன்றுதொட்டு வணிகம் செய்துவந்ததினால், ஒட்டகம் தமிழ்நாட்டிற்கு வந்ததொடு அதன் பெயரும் இலக்கியத் தில் மட்டுமன்றி இலக்கணத்திலும் இடம்பெறலாயிற்று. அதன் அரபிப் பெயர் சமல் (Jamal) என்பதாம். ஆகவே, ஒட்டகம் என்பது அக்கால மரபுப்படி தமிழ்ச்சொல்லாகவே யிருத்தல் வேண்டும். ஒரு மாதம்வரை பட்டினியிருக்கும் திறம் ஒட்டகத்தின் சிறப்பியல்பாம். ஒட்டப் போடுதல் = பட்டினியிருத்தல். ஆதலால், அத் திறம்பற்றி அதற்கு அப் பெயர் இடப்பட்டிருக்கலாம். சமற்கிருதத்தில் அரை உஷ்ட்ரக்க என்று திரித்து, அதினின்று ஒட்டகம் என்னும் சொல் வந்ததாகக் கூறுவர். செந்தமிழைச் சீர்குலைக்கும் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகரமுதலியிலும், இங்ஙனமே குறிக்கப்பட் டுளது. எரிதல் வினை யைக் குறிக்கும் உஷ் என்னும் அடியினின்று உஷ்ட்ரக்க என்னும் பெயர் தோன்றியதாகக் கூறுவர் வடவர். இது பொருந்தப் பொய்த்தல் என்னும் உத்தியே. ஆரியர் இந்தியாவிற்குட் புகுமுன்னரே ஒட்டகம் தமிழகத்திற்குட் புகுந்து விட்டது. மேலும், உஷ் என்னும் வடசொல்லும் உள் (ஒள்) என்னும் தென்சொல்லின் திரியே. ஒட்டகத்திற்கு நெடுங்கழுத்தன்-நெடுங்கழுத்தல், நெடுங் கோணி என்றும் பெயருண்டு. ஆரியச் சார்பினால், தமிழ் கெட்டதுமன்றித் தமிழர் தம் தாய்மொழி யுணர்ச்சியையும் இழந்தனர். அதனால் அவரும் தாழ்வுற்றனர். அவர் மீண்டும் தழைக்கவேண்டின், தம் முன்னோ ரைப்போல் தமிழைப் போற்றல்வேண்டும். ஆகவே, மோட்டார் என்பதை இயங்கி என்றும், காப்பி என்பதைக் குளம்பி என்றும், தேநீர் என்பதைக் கொழுந்துநீர் என்றும், சொல்வதே தக்கதாம். பிறமொழிச் சொல்லைக் கடன்கொள்வதால் தமிழ் வளரும் என்பார், தமிழறியாதவரும் தமிழ்ப்பகைவரும் தமிழைக் காட்டிக் கொடுப்பவருமே யாவர். (10) சொல்வளம் தமிழ் மிகுந்த சொல்வளமுடையதென்பதை, நால்வகை யிலைப் பெயராலும், ஐவகைப் பூநிலைப் பெயராலும், முக்கனி களின் பிஞ்சு நிலைப் பெயராலும், வெவ்வேறு சிறப்புப் பொருளிற் சொல்லுதலைக் குறிக்கும் அறை, இயம்பு, இசை, உரை, என், ஓது, கிள, கிளத்து, கூறு, சாற்று, செப்பு, சொல், நவில், நுதல், நுவல், நொடி, பகர், பறை, பன்னு, பனுவு, புகல், புலம்பு, பேசு, மாறு, மிழற்று, மொழி, விளத்து, விளம்பு முதலிய சொற்களாலும், எழுநிலைப் பெண்ணிளமைப் பெயர்களாலும், பிறவற்றாலும் அறியலாம். வெளிநாட்டினின்று வந்த குதிரையினத்தைக்கூட, எண்வகை யாகவும் தமிழர் வகுத்து, அவற்றிற்கேற்பப் பெயரிட்டிருக்கின்றனர். மூவேந்தர் குதிரைகளும் குறுநிலமன்னர் குதிரையும் வெவ் வேறினத்தைச் சேர்ந்தவை, பாண்டியன் குதிரை கனவட்டம்; சோழன் குதிரை கோரம். இவை எண்வகையுள் அடங்காதவை. இவற்றின் விளக்கத்தை என் பண்டைத்தமிழ் நாகரிகமும் பண்பாடும் என்னும் நூலிற் காண்க. கொடைவேண்டல் பற்றிய சொற்கள் ஈ என்பது இழிந்தோன் ஆளும் சொல் தா என்பது ஒத்தோன் ,, ,, கொடு என்பது உயர்ந்தோன் ,, ,, தவசமணிபற்றிய சொற்கள் முற்ற விளைந்தது மணி; அரைவிளைச்சலானது அரை வயிறன்; உள்ளீடற்றது பொக்கு அல்லது பதர். சொத்தைத் தேங்காய்பற்றிய சொற்கள் கோட்டான் உட்கார்ந்தது கோட்டான்காய் அல்லது கூகைக் காய்; தேரை அமர்ந்தது தேரைக்காய்; ஒற்றையாள் தென்னை மரத்தடியில் இளநீர் குடித்ததால் ஏற்பட்டது ஒல்லித்தேங்காய்; முற்கூறிய இருவகையும் அல்லித்தேங்காய். ஓற்றையாள் குடித்தால் ஒல்லிபடும் என்பது சொலவடை. இது, பக்கத்திலிருப்பவரையும் குடிப்பியாது தனியாய்க் குடித்தல் கூடாதென்னும் தமிழப் பண்பாட்டை உணர்த்துவதாகும். ஓணான் வகைபற்றிய சொற்கள் சில்லான், ஓணான், கரட்டை, கோம்பி (பச்சோந்தி). பிணம்பற்றிய சொற்கள் செத்தணிமையானது சவம்; இறந்து ஒரு நாட்கு மேற்பட்டுக் கட்டுவிட்டது பிணம்; பன்னாளாகி அழுகிப்போனது அழன். இங்ஙனம் சொல்லிக்கொண்டே போகின் ஒரு பெருநூலாய் விரியுமாதலின், இம்மட்டில் இங்கு நிறுத்தலாயிற்று. இற்றை நிலையிலேயே ஒருபொருட் பலசொற்கள் தமிழில் ஏராளமா யுள்ளன. பண்டை யிலக்கியமெல்லாம் செய்யுளிலிருந்ததினால், மோனை யெதுகைக் குதவுமாறு ஒரே உயிரிக்குப் பல பெயர்களை அமைத் திருக்கின்றனர். எ-டு: யானை-ஆம்பல், உம்பல், உவா, எறும்பி, ஓங்கல், கடமா, கடிவை, கம்பமா, கரி, கவளமா, களிறு, கறையடி, குஞ்சரம், கும்பி, கைப்புலி, கைம்மலை, கைம்மா, சிந்துரம், தும்பி, தூங்கல், தோல், நால்வாய், பகடு, பிணிமுகம், புகர்முகம், புழைக்கை-பூட்கை, பெருமா, பொங்கடி, மதமா, மதங்கம், மதாவளம், மருண்மா, மொய், வழுவை, வாரணம், வேழம். இங்ஙனம் வேறெம் மொழியிலும் காண்டற்கரிது . வடமொழி யிலிருப்பவை, பெரும்பாலும் தமிழிலிருந்து கடன்கொண்டனவும் தமிழ்ச்சொற்களின் மொழிபெயர்ப்புமே. ஈராயிரங் கல் தெற்கு நீண்டிருந்த பழம்பாண்டிநாட் டுலகவழக்குச் சொற்களும், முதலிரு கழகத்துப் பல்லாயிரம் தனித்தமிழ் நூல்களின் இலக்கியச்சொற்களும், இன்றிருந்திருப்பின், தமிழ்ச் சொல்வளம் எத்துணைப் பரந்துபட்டிருக்கும் என்பதை உய்த் துணர்ந்து கொள்க. (11) மொழிச்செம்மை ஆரியர் தமிழ்நாட்டிற்கு வந்தபின், அறியாமையாலும் சோம்பலாலும் தாழ்வுணர்ச்சியாலும் தமிழ்ப்பற்றின்மையாலும் ஏற்பட்ட கொச்சைவழக்கு, நீண்டகாலமாக இருந்துதான் வந்திருக்கின்றது. ஆயினும், ஏடெடுத் தெழுதும்போதும் மேடை யேறிப் பேசும்போதும் திருந்திய நடையையே கையாளவேண்டு மென்று, தொன்னூலாசிரியர் ஓர் அழியா வரம்பிட்டுவிட்டனர். அவ் வரம்பே, புரவலரும் புலவரும் இல்லாக்காலத்தும், பகைவரும் கொண்டான்மாரும் பல்கியபோதும், பைந்தமிழை வேலியாகக் காத்து வந்திருக்கின்றது. இவ் வரம்பு ஏனை மொழிகட்கில்லை. அதனால், அவை மக்கள் வாய்க்கு வந்த வகை யெல்லாம் வழங்கி, அவற்றின் பல ஒழுங்கின்றியும் உருத்தெரியாதும் போயின. தமிழுக்கு எது வழுநிலையோ அது பிறமொழிகட்கு வழாநிலையாயிற்று. செருப்பு, திருப்பு, நெருப்பு, பருப்பு என்பன, முறையே செப்பு, திப்பு, நிப்பு, பப்பு எனத் தமிழில் வழங்கின் வழுநிலையாம்; தெலுங்கில் வழங்கின் வழாநிலையாம். இகர ஐகாரவீற்றுப் பெயர்கள் 4ஆம் வேற்றுமையேற்கும் போது, குவ்வுருபு கிய்யாகத் திரிவது தமிழுக்கு வழுநிலையாம்; தெலுங்கு முதலிய பிறமொழிகட்கு வழாநிலையாம். எ-டு: கிளிக்கி, மலைக்கி - தமிழ் (வழுநிலை) புலிக்கி, அக்கடிக்கி - தெலுங்கு (வழாநிலை) அம்மை, கரை, குடை, பனை, மழை முதலிய ஐகாரவீற்றுச் சொற்களை அகரவீறாக ஒலிப்பதும், செய்யவேண்டும் என்பதைச் செய்யேணம் என்று சொல்வதும், தமிழுக்கு வழுநிலையாம்; மலையாளத்திற்கு வழாநிலையாம். சொற்களின் ஈற்றில் வரும் மெல்லின மெய்கள், முயற்சியொடு பலுக்கப்பெறாது மூக்கொலியளவாய் நின்றுவிடின், தமிழுக்கு வழுநிலையாம்; மராத்தி, இந்தி முதலிய மொழிகட்கு வழாநிலை யாம். ழகரத்தை லகரமாகவும், ஆகாரத்தை ஈகார ஏகாரங்கட் கிடைப்பட்ட ஒலியாகவும், ஒலிப்பது தமிழுக்கு வழுநிலையாம்; ஆங்கிலத்திற்கு வழாநிலையாம். சொற்கள் தம் சிறப்புப்பொரு ளிழந்தும் வடிவு சிதைந்தும் வழங்குவது, தமிழுக்கு வழுநிலையாம்; பிற மொழிகட்கெல்லாம் வழா நிலையாம். பாண்டிநாட்டுத் தமிழைச் செந்தமிழ் என்றும், பிறநாட்டுத் தமி ழைக் கொடுந்தமிழ் என்றும், பண்டைக்காலத்தில் பிரித்து வழங்கியது, அவற்றிற்குச் செம்மையென்னும் பண்பு உண்மை யின்மைபற்றியே. இக்காலத்துச் சில கொண்டான்மார் தலைமைத் தமிழ்ப் பேராசிரியப் பதவி பெற்று, மேனாட்டாரைப் பின்பற்றி, பொதுமக்கள் பேசுவதே மொழியென்று, பிறமொழிகளின் வழுநிலையைத் தமிழிற் புகுத்தி, அதன் செம்மையரணைத் தகர்க்கப் பார்க்கின்றனர். நக்கீரன்மார் அவரைக் கடுத்துத் திருத்துதல் வண்டும். உலக மொழிகள் எல்லாவற்றுள்ளும், செம்மை என்னும் வரம்புள்ளது தமிழ் ஒன்றே. (12) மரபுவழக்கு மரபாவது இளமைப்பெயர், ஆண்பாற்பெயர், பெண்பாற் பெயர், நிலைத்திணைச் சினைப்பெயர், விலங்குக் காவலர் பெயர், அஃறிணை யுயிரிகளின் கத்தல்வினைகள், ஊண்வினைகள் முதலியனபற்றி, உயர்ந்தோர் தொன்றுதொட்டு எச் சொற்களை வழங்கினார்களோ அச் சொற்களையே வழங்குதல். பொதுவாகப் பறவைகளின் இளமையைக் குஞ்சு என்றும், விலங்குகளின் இளமையைக் குட்டி என்றும் சொல்லவேண்டும். ஊருயிரிகளின் இளமைப்பெயர் இவ் விரண்டில் ஒன்றாயிருக்கும். நண்டுக்குஞ்சு என்றும் எலிக்குட்டி என்றும் கூறுவது மரபு. ஆயினும், எலிக்குட்டியை எலிக்குஞ்சு என்னும் வழக்குமுண்டு. ஆயின், நண்டுக்குஞ்சை நண்டுக்குட்டியென்னும் வழக்கம் இல்லவே யில்லை. மக்கள் இளமையை மகவு, குழவி, பிள்ளை என்று சொல்வதே மரபாயினும், கடைசிப்பிள்ளையைக் கடைக்குட்டி என்னும் வழக்குண்டு. பிள்ளை என்னும் இளமைப்பெயர் ஏறத்தாழ எல்லா வுயிரினத்திலும் சென்று வழங்கும். இருக்கும் பிள்ளை மூன்று, ஓடும் பிள்ளை மூன்று, பறக்கும்பிள்ளை மூன்று என ஒரு சொலவடையுண்டு. ஆயின், இவ் வரம்பிறந்து பிள்ளைச்சொல் வழங்குவது தவறாம். கிழவன் என்னும் சொல் பெண்பாலிற் கிழத்தி என்றாவது போல் புலவன் என்னும் சொல் புலத்தி என்றாகும். இங்ஙனம் அமைக்காத பெண்பாற்புலவர் என்பது வழுவாம். தன் சொல்லைத் தவறாய் வழங்குவதுபோன்றே, அயற் சொல்லை ஆள்வதும் மரபுவழுவாம். வாலிபன், வாலிபப்பெண் என்பவற்றிற்குப் பகரமாக, இளைஞன், இளைஞை என்னும் தென்சொற்களையே வழங்கவேண்டும். வெங்காயப்பல், பலாச்சுளை, பனைநுங்கு, வாழைப்பழச் சதை, கற்றாழஞ்சோறு என்று கூறுவது மரபாம். ஆட்டிடையன், பன்றிமேய்ப்பன், குதிரைவாதுவன், யானைப் பாகன் என்றே கூறுதல்வேண்டும். காகம் கரைகிறது, குயில் கூவுகிறது, மயில் அகவுகிறது, ஆந்தை கிளை கூட்டுகிறது, கூகை குழறுகிறது, தவளை பறையடிக் கிறது, பல்லி முற்கந்தெறிக்கிறது. குதிரை கனைக்கிறது, யானை பிளிறுகிறது, புலி உறுமுகிறது, அரிமா உரறுகிறது என்பன கத்தல் வினை மரபாகும். சோறு சாப்பிடுதல், குளம்பி(காப்பி) குடித்தல், பலகாரம் தின்னு தல் என்பதே மரபு. குளம்பி சாப்பிடுதல் என்பது மரபு வழுவாம். இப் பொலி ஒரு கோட்டை காணும், இம் மருந்து காது வலியைக் கேட்கும், என் வண்டி பழுதுபட்டு நூறுருபாவைக் கேட்டுவிட்டது, புதுவீடு ஒரு பெரிய உருபாவை விழுங்கிவிட்டது. இவை போன்றனவும் மரபுவழக்கே. (13) சொற்றொடர் வகைகள் பண்டைச் தமிழிலக்கிய மெல்லாம் செய்யுள் நடையிலிருந்த மையாலும், இலக்கணமெல்லாம் செய்யுள்மொழிக்கே எழுதப் பட்ட மையாலும், உரைநடைக்குச் சிறப்பான இலக்கணக் கூறுகளைப் பழந்தமிழிலக்கண நுல்கள் எடுத்துக்கூறவில்லை. சொற்றொடர்வகையிற் பண்டைத் தமிழிலக்கணங்கள் கூறியவெல்லாம், அறுவகைத் தொகைநிலைத்தொடரும் எண் வகைத் தொகாநிலைத் தொடருமே. அவற்றுள், எழுவாய்த் தொடரும் விளித் தொடரும் வினைமுற்றுத்தொடரும் தொடரியம் அல்லது முற்றுச் சொற்றொடராகும். ஆயின், அவை இருசொற் றொடரான தனித் தொடரியமே. உரைநடைக்கு இலக்கணம் எழுதப்படாவிடினும், சொற் றொடரமைப்பு இன்றுபோன்றே அன்றும் உலகவழக்கு மொழியில் இருந்தது. அதனால், தனித் தொடரியம் (simple sentence,) கூட்டுத் தொடரியம் (compound sentence), கலப்புத் தொடரியம் (complex sentence), கலவை அல்லது கதம்பத் தொடரியம் (mixed sentence) என்னும் தொடரிய வகை நான்கும்; நேர் கூற்று (direct speech) நேரல்கூற்று (indirect Speech) என்னும் கூற்றுவகை யிரண்டும்; இலக்கியந் தோன்றுமுன்னரே தமிழில் அமைந்திருத்தல் வேண்டும். ஆங்கிலத்திற்கும் தமிழிற்கும் பலவகையில் ஒப்புமை யிருப்பதால், இதுவரை அறியப்படாத சில தமிழ் உரைநடை யிலக்கணக் கூறுகளை ஆங்கிலத்தினின்றே அறிய முடிகின்றது. (1) செய்ய என்னும் வாய்பாட்டு வினையெச்சம் இவ் வினையெச்சம் அல்லீற்றுத் தொழிற்பெயரினின்றே தோன்றியிருப்பதால், ஆங்கிலத்திற்போல் தமிழிலும் எழுவாய் (Noun Infinitive) ஆதல் கூடும். எ-டு: எனக்குப் பாடத்தெரியும் = எனக்குப் பாடல் (பாடும் வினை) தெரியும். இதிற் பாட்டு என்னும் பெயர் தொக்குநின்றதாகக் கொள்ள முடியாது. எனக்குப் பாட்டுப்பாடத் தெரியும் என்று இத் தொடரி யத்தை விரிப்பின், எனக்கு வரத்தெரியும் என்பது, வரவுவரத் தெரியும் என்று விரித்தற் கிடந்தராமை காண்க. (2) செய்து என்னும் வாய்பாட்டு வினையெச்சம் கோழி கூவிப் பொழுது விடிந்தது. இதிற் கூவி என்பதைக் கூவ எனத் திரிப்பர் தமிழ் இலக் கணியர். ஆங்கிலத்திற்போல் தனிநிலை யமைப்பைத் (Absolute construction) தமிழுக்குங் கொள்ளின், இங்ஙனந் திரிக்கத் தேவையே யில்லை. இத்தகைய அமைப்பு தமிழில் அருகிவராது பெருவழக்கா யிருத்தல் கவனிக்கத்தக்கது. எ-டு: கூட்டம் முடிந்து, எல்லாரும் போய்விட்டார்கள். (3) முக்கால நந்நால்வகை இது முன்னரே வினைச்சொற் பகுதியிற் கூறப்பட்டுவிட்டது. ஆண்டுக் காண்க. iii பொருள் தமிழ் இலக்கணத்தின் மூன்றாம் பகுதி பொருள் என்பதாகும். சொல்லிற்கே பொருளுண்மையாலும், பண்டையிலக்கியமெல்லாம் செய்யுள் வடிவி லிருந்தமையாலும், செய்யுட்குத் தொடரியமன்றி எழுத்து அசை சீர் தளை அடி தொடை என்பனவே உறுப்பாகை யாலும், சொல்லிற்கடுத்த மொழியுறுப்பை அல்லது இலக்கணப் பகுதியைப் பொருள் என்றே கொண்டனர், முதனூலாசிரியனும் வழிநூலாசிரி யருமான முன்னூலாசிரியர். இலக்கியமெல்லாம் அல்லது எழுதப்பெற்றனவெல்லாம் செய்யுளா யிருந்தமையால், பொருளில் யாப்பும் அடங்கிற்று. வல்லோர் அணிபெறச் செய்வனவே செய்யுளாதலால், யாப்பில் அணியும் அடங்கிற்று. பொருளை அகம், புறம் என இருபாலாய் வகுத்து அவ் விரு பாற்குள்ளும் எல்லாப் பொருள்களையும் தம் நுண்மாண் நுழை புலத்தால் வியக்கத்தக்க முறையில் அடக்கியிருக்கின்றனர். இப் பொரு ளிலக்கணமே, பண்டைப் புலவரையும் புலமைமிக்க இறைவனடி யாரையும் இன்பக்கடலுள் ஆழ்த்தியது. குமரிக் கண்டப் பொதுமக்கள் மொழியமைப்பில் தம் நுண்ணுணர்வைப் புலப்படுத்தியிருப்பது போன்றே, புலமக்களும் பொருளிலக் கணத்தில் தம் நுண்மதியைச் சிறப்பக் காட்டியுள்ளனர். ஆயின், இதை இக்காலப் புலவர் காதற்சிறப்பையும் போர்த்திறத்தையுமே விளக்குவதாகப் பிறழ வுணர்ந்துள்ளனர். இதன் விரிவான விளக் கத்தை என் தொல்காப்பிய விளக்கம் என்னும் நூலிற் காண்க. வெண்பா, ஆரிசியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் தலைசிறந்த செய்யுள் வகைகளைக் கண்டு, யாப்பிலும் தமிழை ஒப்புயர்வற்ற தாக்கியுள்ளனர் பண்டைத் தமிழ்ப்புலவர். மாத்திரை, எழுத்து, அசை, சீர், அடி, யாப்பு, மரபு, தூக்கு, தொடை, நோக்கு, பா, அளவு, திணை, கைகோள், கூற்று, கேட்போர், களன், காலம், பயன், மெய்ப்பாடு, எச்சம், முன்னம், பொருள், துறை, மாட்டு, வண்ணம் என்னும் இருபத்தாறு றுப்புகளைக்கொண்டு; பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் (பழமொழி) என்னும் எழுநிலத்தெழுந்த நால்வகைச் செய்யுள்களாலான; அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என்னும் எண்வகை வனப்புகளை (காவியங்களை), கி.மு. 10,000 ஆண்டுகட்கு முன்னரே, முதன்முதலாக உலகில் இயற்றியவர் குமரிக்கண்டத் தமிழ்ப்புலவர். அவர் செய்யுளிற் பேச்சுவன்மையும் பெற்றிருந்தனர். அறிவிலும் ஆற்றலிலும் அவரையொத்தவர் இக்காலத் தொருவருமில்லை. இந்நாளைத் தலைசிறந்த பாவலரும், பண்டை நல்லிசைப் புலவரை நோக்க, பாணரும் புல்லிசைப் புலவருமே (Bards and Poetasters) - இற்றைத் தமிழ்ப் புலவரோ குமரிக்கண்டப் பொதுமக்கட்கும் ஈடாகார். செய்யுள் சிறந்த கலமாகவும் அதன் பொருள் சிறந்த அமுதாகவும் கருதப்பெற்றதினால், வேறெம்மொழியிலு மில்லாத பொருளிலக்கணம், தமிழிலக்கணத்தின் கொடுமுடியும் முடி மணியும் முதிர் விளைவும் உயிர்நாடியும் தமிழனின் தனிப்பெரும் பெருமையும், ஆகக் கொள்ளப்பெற்றது. 7. தலைக்கழகம் (தோரா- கி.மு. 10,000-5500) தமிழ் மக்கள் மொழித்துறையிலும் இலக்கியத்துறையிலும் மிக வுயரிய நிலையடைந்திருந்ததனாலும், தமிழ்வாயிலாய்க் கல்வியைப் பரப்புவது அரசன் கடமையாதலாலும், பாண்டிய வேந்தர் சிலரும் நல்லிசைப் புலவராயிருந்ததினாலும், காய்சின வழுதி என்னும் பாண்டியன், பஃறுளியாற்றங்கரையிலிருந்த மதுரை என்னும் தன் தலைநகரில், தலைமைப் புலவரையெல்லாம் கூட்டி ஒரு தமிழ்க்கழகம் நிறுவினான். அக் கழகப்புலவர், பழைய இலக்கி யத்தை ஆராய்வதும் புதிய நூல்களையும் வனப்புகளையும் பாடல்களையும் இயற்றுவதும், தம் தொழிலாகக் கொண்டிருந் தனர். புதிய இயற்றல்களெல்லாம் பாண்டியன் முன்னிலையில் அரங்கேற்றப்பெற்றே ஆட்சிக்கு வந்தன. அற்றைத் தமிழகத்தில் ஆரியருமில்லை; ஆரியச் சொல்லோ கருத்தோ கலந்த நூலுமில்லை. இன்னிசைக்கலையும் நாடகக்கலையும் நல்வளர்ச்சி யடைந்திருந்தமையால், மொழியொடு இசைக்கும் நடிப்பிற்குமுள்ள நெருங்கிய தொடர்பு கருதியும், இசைப்பாட்டுகளெல்லாம் செய்யுள் வகையாயிருத்தல் பற்றியும், இசையும் நாடகமும் மொழியொடு சேர்க்கப்பெற்று, இயலிசை நாடகமெனத் தமிழ் முத்தமிழாய் வழங்கிவரலாயிற்று. இயற்றமிழை மட்டும் கூறும் இலக்கணம் பிண்டம் என்றும், முத்தமிழையும் கூறும் இலக்கணம் மாபிண்டம் என்றும் பெயர்பெற்றன. 2 திரிநிலைப் படலம் (கி.மு. 20,000-இன்றுவரை) குமரிக்கண்ட மாந்தர், தமிழின் ஐவகைச் சொன்னிலைக் காலத்திலும், மக்கட்பெருக்கம், இயற்கை விளைவுக்குறைவு, பஞ்சம், கொள்ளை, போர், பகை, வேற்றிடவிருப்பு, துணிசெயல் வேட்கை, வணிகம், கடல்கோள் முதலிய பல்வேறு கரணியங்களால், கிழக்கும் வடகிழக்கும் வடக்கும் வடமேற்கும் மேற்குமாகக் கூட்டங் கூட்டமாய்ப் பிரிந்துபோயினர். வடகிழக்குச் சென்ற துரேனியர் (சித்தியர்) அசைநிலைக் காலத்திலும் புணர்நிலைக் காலத்திலும், வடமேற்கிற் சென்ற ஆரியர் பகுசொன்னிலைக் காலத்திலும் பிரிந்துபோனதாகத் தெரிகின்றது. நேர் வடக்குச் சென்றவர் தமிழின் முன்னிலைக் காலத்திலும் பின்னிலைக் காலத்திலும் பிரிந்தவராத லின், அவர் சென்ற விடமெல்லாம், பல வூர்ப்பெயர்கள் இன்றும் தமிழ்ச்சொல்லாயும் அவற்றின் திரிபாயுமிருப்பதுடன், அவர் மொழிகளும் தமிழொடு சிறிதும் பெரிதும் தொடர்புடையன வாயிருக்கின்றன. 1. ஊர்ப்பெயர்கள் தெலுங்கநாடு: சிற்றூர்(சித்தூர்), நெல்லூர், குண்டூர், ஒருகல் அல்லது ஓராங்கல் (Warangal). ஒட்டரம் (ஒரிசா): கடகம் (Cuttack)=tisªj மதில், மதில் சூழ்ந்த நகரம். பம்பாய்: வேளூர், வேளூரகம் (Ellora), வேளாபுரம் (Velapur), வேளகம், ntŸ(»uhk«)-(Belgaum), வேள்பட்டி (Belhutti). வேளா என்பது பலவூர்களின் பொதுப்பெயராயுள்ளது. சளுக்கியர் ஆண்ட பம்பாய் மண்டலப்பகுதி வேள் புலம் எனப்பட்டது. குச்சரம்: துவாரகை (Dwaraka). இது எருமையூர் (மைசூர்) நாட்டி லுள்ள துவரையின்(துவாரசமுத்திரம்) பெயரால் அமைந்த நகர். துவர் = சிவப்பு, செம்பு. துவர்- துவரை = செப்புக் கோட்டையுள்ள நகர். செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை யுவரா வீகைத் துவரை யாண்டு (புறம். 201) அகத்தியர் துவராபதிப் போந்து நிலங்கடந்த நெடுமுடி யண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும், பதினெண் வேளி ருள்ளிட்டாரையும் அருவாளரையுங் கொண்டு போந்து என்னும் நச்சினார்க்கினியர் கூற்று, துவாரகை, வேள்புலம், அருவாநாடு ஆகியவற்றின் அண்மையை நோக்கும்போது நன்றாய் விளங்கும். உத்தரமண்டலம்: மதுரை (Muttra). இது தலைக்கழக மதுரையின் பெயர் கொண்டது. இவ் வடமதுரையிற் பிறந்த கண்ணன் (கிருட்டிணன்) என்னும் அரசன் இடையர் குலத்திற் பிறந்து தமிழ் இடையர் போல் ஏறுதழுவி மணந்த ஒரு திரவிட மன்னனே. கிருஷ்ண (கருப்பன், கரியன்) என்னும் பெயரின் க்ருஷ் என்னும் முதனிலையும், கருள் என்னும் தென்சொல் திரிபே. கள்-கரு-கருள். கருளுதல் கருத்தல். மதுபுர என்பது மதுரா எனத் திரிந்ததென்பது பொருந்தாது. பீகார்: பாடலிபுரம் (Patna). இது பாதிரிப்புலியூர் என்னும் தமிழ்ப்பெயரின் வடமொழிப்பெயர்ப்பு. இது பாடலி புத்திரம் என்றும் வழங்கும். முதலில், தென்னார்க்காட்டு மாவட்டத்தைச் சேர்ந்த திருப்பாதிரிப்புலியூர் பாடலி புத்திரம் எனப்பட்டது. அதன்பின் அது வடநாட்டு நகரப் பெயராய் அமைந்தது. பாதிரி என்னும் பூப்பெயர் வட மொழியிற் பாடலி எனத் திரியும். ஒண்ணிறப் பாதிரிப்பூர்ச் சேர்தலால் (நாலடி. 139) வங்காளம்: fhË¡nfh£l«(Calcutta). இது காளிகோயிலாற் பெற்ற பெயர். காளி முதலிற் பாலைநிலத் தெய்வமாயிருந்து, பின்னர்ப் போரில் வெற்றிதருபவள் (கொற்றவை) என்றும், அம்மைநோயை உண்டாக்கு பவளும் நீக்குபவளும் என்றும், நம்பப்பட்டதினால் ஏனை நிலங்களின் தெய்வமாயும், தமிழ்நாட்டில் முதன்முதலாக வணங்கப்பட்டவள். கோயிலைக் கோட்டம் என்பது பழந்தமிழ் மரபு. வேதக்கால ஆரியத்தெய்வங்களுள் காளி இல்லை. வங்கஞ் சென்ற பின்னரே ஆரியர் காளி வணக்கத்தை மேற்கொண்டனர்; காளி என்னும் பெயர் கருப்பி என்று பொருள்படும் தூய தென் சொல்; கள்-காள்-காளம்-காளி. முமுமுதற் கடவுட் கொள்கையும் உருவவணக்கமும் கோயில் வழிபாடும் வேத ஆரியர்க்கில்லை. தம்லுக். இது தமிழகம் என்பதன் திரிபாயிருக்கலாம். வங்கஞ் சென்று குடியேறிய பண்டைத் தமிழ வணிகர் இப் பெயரை இட்டனர் போலும்! ஊர், புரம், புரி முதலிய தமிழிடப்பெய ரீறுகள், திரிந்தும் திரியாதும் இன்றும் வடநாட்டிற் பல இடங்களில் வழங்குகின்றன. முதலில், புரம் என்பது கோபுரமுள்ள நகரையும், புரி என்பது மதில் சூழ்ந்த நகரையும் குறித்தன. 2. குலப்பெயர்கள் பம்பாய் மண்டலத்தின் தென்பகுதியில் வாழ்ந்தவர் வேளிர் என்னும் தமிழ வகுப்பார் என்பது மேற்கூறப்பட்டது. வாணியன் (வாணிகன்) என்னும் குடிப்பெயர் பனியா என்றும், செட்டி என்னும் குடிப்பெயர் சேட்(டு) என்றும், வடநாட்டில் வழங்கு கின்றன. எட்டு-எட்டி-செட்டி. எட்டுதல்= உயர்தல். எட்டம்=உயரம். எட்டி=உயர்ந்தோன். சிரேஷ்ட என்பது சிரேயஸ் என்பதன் உச்சத்தரம் (Superlative Degree). பாண்டவ கவுரவரின் முன்னோர் திங்கள் மரபினராதலின் பாண்டி யர் வழியினரும், தசரதனின் முன்னோர் கதிரவன் மரபி னராதலின் சோழன் வழியினருமாவர், முச்சுடரையும் முதலாகக் கொண்ட மூவரச மரபுகளும் தொன்றுதொட்டுத் தென்னாட் டிலேயே இருந்து வந்த மையும், முன்பு பாண்டியரும் பின்பு சேரசோழரும் வடநாட்டையும் துணையரசரைக்கொண்டு ஆண்டமையும், சிபி வடநாட்டுக் கதிரவ மரபிற்கும் தென்னாட்டுக் கதிரவ மரபிற்கும் பொது முன்னோனாகக் கூறப்படுதலும், அதனால் சோழன் செம்பியன் என்று பெயர் பெற்றமையும் நோக்குக. 3. செந்தமிழும் கொடுந்தமிழும் தமிழர் வடக்கே செல்லச்செல்ல. தட்பவெப்பநிலை மாற்றம், சோம்பல், புலவரின்மை, தமிழ்ப் புரவலரின்மை, புதிய சுற்றுச்சார்பு, தாய்நாட்டொடு தொடர்பின்மை முதலிய கரணியங்களால், தமிழ் திரிந்து கொடுந்தமிழ் எனப்பட்டது. திரியாத தென்னிலத் தமிழ் செந்தமிழ் எனப் பெற்றது. சிலர் கொடுந்தமிழ் திருந்திச் செந்தமிழாயிற் றென்பர். அவர் அறியார். தமிழ் வளர்ச்சியில் முற்பட்ட திருந்தாத நிலைகளெல்லாம் குமரிக்கண்டத்தின் தென்பாகத்திலேயே தீர்ந்து விட்டன. கொடுந்தமிழ்ச் சொற்கள் பொதுவாய்ப், பொருள் திரிந்த சொல், வடிவுதிரிந்த சொல், ஒலிதிரிந்த சொல், செந்தமிழில் வழக் கற்ற சொல், புதுச்சொல் என ஐவகைப்படும். எ-டு: தமிழ் தெலுங்கு செப்பு = விடைசொல் செப்பு(சொல்)-பொருள் திரிந்த சொல் போயினான் போயினாடு-வடிவுதிரிந்த சொல் செய், கும்பு cey, gumpu-xÈâǪj சொல் வெதிர் வெதுரு-செந்தமிழில் வழக்கற்ற சொல் சதுவு, வெள்ளு-புதுச்சொல். புதுச்சொல்லை, வேர் மறையாச் சொல், வேர் மறைந்த சொல் என இருவகைப்படுத்தலாம். எ-டு: அள் (காது) - அடுகு-வேர்மறையாச் சொல் அம்மு (to sell) - வேர்மறைந்த சொல் இனி, இற்றைத் தமிழில் வழக்கற்றுத் தெலுங்கிற் புதுச்சொற் போல் தோன்றுவனவற்றிற் கெல்லாம் வேர்ச்சொல் குமரிநாட்டில் வழங்கின என்று கொள்ளவும் இடமுண்டு. தலைக்கழக அழிவும் இடையீடும் தோரா. கி. மு. 4500 போல், பாண்டியன் கடுங்கோன் காலத்தில், அரபிக்கட லுள்ளவிடத்து நிலப்பகுதியும், நாவலந் தீவின் தென் பகுதியான குமரிக்கண்டமும் கடலுள் மூழ்கின. வங்காளக் குடாக் கடலினும் அரபிக்கடல் முந்தியதாகும். அதனாலேயே, கடல் தெய்வமாகிய வாரணனை மேற்றிசைத் தலைவன் என்றும், வங்காளக் குடாக்கடலைத் தொடுகடல் என்றும் கூறினர். குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும் (புறம்.6) தலைக்கழகத்தைப் புரந்த பாண்டியர் எண்பத்தொன்பதின்மர் என்றும், அக் கழகத்தின் இறுதிக்காலப் புலவர் ஐந்நூற்று நாற்பத் தொன்பதின்மர் என்றும் இறையனார் அகப்பொருளுரை கூறும். பெரு(முது)நாரை, பெருங்(முது)குருகு, களரியாவிரை முதலிய நூல்கள் தலைக்கழகத்தால் இயற்றப்பெற்றனவாகச் சொல்லப் பெறும். 4. இடைக்கழகம் (தோரா. கி. மு. 4000-1500) தலைக்கழகம் அழிந்து ஏறத்தாழ 500 ஆண்டுகட்குப்பின், குமரியாறு கடலொடு கலந்த இடத்தில், அலைவாய் என்றோ கயவாய் என்றோ, கதவம் என்றோ புதவம் என்றோ பெயர் பெற் றிருந்த துறை நகரில், வெண்டேர்ச்செழியன் என்னும் பாண்டியன் இடைக்கழகத்தை நிறுவினான். அன்றும் ஆரியருமில்லை; ஆரியக் கலப்புள்ள நூலு மில்லை. இடைக்கழக இருக்கையைக் கபாடபுரம் என்று வடமொழி யிலக்கியம் கூறும். மதுரையை மதுராபுரி என்று விரித்தல்போல், கபாடத்தையும் கபாடபுரம் என்று விரித்திருக்கலாம். கதவம் என்பது பெயராயின், கபாட என்பது இலக்கணப்போலித் திரிபாம்; அலைவாய் அல்லது கயவாய் என்பது பெயராயின், கபாட என்பது அரைப்பெயர் மொழிபெயர்ப்பாம்; புதவம் என்பது பெயராயின், அது முழுப்பெயர் மொழிபெயர்ப்பாம். காவிரிப்பூம்பட்டினம் புகார் (ஆறு கடலிற் புகுமிடம்) என்று பெயர்பெற்றிருந்தமையும், கெடிலம் கடலொடு கூடுமிடம் கூடலூர் என்று பெயர் பெற்றுள்ள மையும் நோக்குக. 5. கொடுந்தமிழும் திரவிடமும் ஒருகாலத்தில் கொடுந்தமிழ் என்றிருந்த திசைமொழிகள் (Regional Dialects), பிற்காலத்தில் திரவிடம் என்னும் கிளைமொழி களாய்த் திரிந்துவிட்டன. தமிழர் அறிய, முதலாவது திரிந்த கிளை மொழி தெலுங்கே. அது திரிந்த காலம் ஏறத்தாழக் கி.மு. 1500. தெலுங்கு நாட்டிற்குத் தெற்கே நீண்ட காலமாய்த் தமிழொன்றே வழங்கி வந்தது. வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து என்று தொல்காப்பியர் காலப் பனம்பாரனார் கூறியது போன்றே, நெடியோன் குன்றமுந் தொடியோள் பௌவமுந் தமிழ்வரம் பறுத்த தண்புனல் நன்னாட்டு (சிலப். 8:1,2) என்று இளங்கோவடிகளும், கடைக்கழகக் காலம்வரை வேங்கடத் திற்குத் தெற்கில் தமிழ்தவிர வேறெம்மொழியும் வழங்காதிருந் தமையைக் குறித்தல் காண்க. இனி, திரவிடமும், (1) வடதிரவிடம், (2) நடுத்திரவிடம், (3) தென்திரவிடம் என முத்திறப்படும். இவற்றை முன்திரவிடம், இடைத்திரவிடம், பின்திரவிடம் என்றும் அழைக்கலாம். முதற்காலத்தில் நெடில்களே தமிழில் வழங்கின. பின்பு அவற்றின் குறில்கள் தோன்றின. ஏகார ஓகாரங்கள் பிந்தித் தோன் றிய நெடில்களாதலின், அவற்றின் குறில்களும் பிந்தியே தோன்றி யுள்ளன. எகர ஒகரக் குறில்வரிகட்கு மிகைக்குறி யிருப்பதே இதற்குப் போதிய சான்றாம். இவ்விரு குறில்களும் தோன்று முன்னரே, ஒருசார்த் தமிழர் விந்தியமலையடுத்தும் அதற்கப்பாலும் குடியேறி யிருந்திருக்கின்றனர். அவர் மொழியே பின்பு சூரசேனி, மாகதி, மகாராட்டிரம் முதலிய பிராகிருதங்களாகப் பிரிந்துபோயிருக் கின்றது. அப் பிராகிருதங்களின் திரிபே இந்தி, வங்கம், மராத்தி, குசராத்தி முதலிய இற்றை மொழிகள். இவற்றில் எகர ஒகரக் குறில்கள் இல்லை. ஆயின், இவற்றின் அடிப்படைச் சொற்கள் தமிழா யிருப்பதுடன், தொடரமைப்பிலும் இவை தமிழையே முற்றும் ஒத்திருக்கின்றன. இவற்றிலுள்ள எண்களும் ஒருமை பன்மை யென்னும் இரண்டே. இந்தியில் ஆண் பெண் என்னும் இரு போலே உள. இம் மொழிகளில் வழங்கும் மரபுத்தொடர் களையும் பழமொழிகளையும் நோக்கின், இவற்றைப் பேசும் மக்களின் முன்னோர் திரவிடரா யிருந்திருத்தல் வேண்டும் என்னும் முடிபிற்கே வரமுடியும். மராத்தியும் குசராத்தியும் ஒருகாலத்தில் திரவிட மொழி களாய்க் கொள்ளப்பெற்று, பஞ்சதிரவிடத்தின் இரு கூறுகளாய்க் குறிக்கப் பட்டன. மராத்தியை அடுத்துத் தெற்கே வழங்குவது தெலுங்கு. விந்தியமலைக்கு வடக்கிலுள்ள இந்தி, வங்கம் முதலிய மொழிகளை வடதிரவிடம் அல்லது முன்திரவிடம் என்றும், அம் மலையை யடுத்த மராத்தி, குசராத்தி முதலிய மொழிகளை நடுத் திரவிடம் அல்லது இடைத்திரவிடம் என்றும், அவற்றிற்குத் தெற் கிலுள்ள தெலுங்கு, கன்னடம் முதலிய மொழிகளைத் தென் திர விடம் அல்லது பின்திரவிடம் என்றும் கொள்ளினும் பொருந்தும். இற்றை நிலையில் இந்தி வங்க முதலியவற்றை வடநாவலம் என்றும், மராத்தி குசராத்தியை நடுநாவலம் என்றும், கொள்வதும் பொருத்தமாம். தமிழ் வடக்கே சென்று திரவிடமாய்த் திரிந்ததென்பதற்குச் சான்றாக, முதற்கண் தென்திரவிடத்தில் தென்கோடி மொழிகளுள் ஒன்றான தெலுங்கினின்றும் வடகோடி மொழிகளுள் ஒன்றான பிராகுவீயினின்றும், சில சொற்கள் ஈண்டு எடுத்துக்காட்டப் பெறும். 6. தெலுங்குத் திரிவு மூவிடப்பெயர்கள் தமிழ் தெலுங்கு தன்மை - ஒருமை : நான் நேனு பன்மை : நாம் மேமு முன்னிலை - ஒருமை : நீ(ன்) நீவு பன்மை : நீம் மீரு படர்க்கை - ஆ.பா. : அவன் வாடு பெ.பா. .: அவள் ஆமெ(?) ப.பா. : அவர் வாரு ஒ.பா. : அது அதி பல-பா. : அவை அவி குறிப்பு: (1) ஏன், ஏம் என்பனவே தன்மைப் பெயரின் மூல வடிவங்களாதலால், யேன், யேம் என்னும் வடிவங் களே நேனு, மேமு என்று திரிந்திருக்குமென்று சிலர் கருதலாம் அவ்வாறாயின், மேமு என்பது நேம் என்பதன் திரிபா யிருத்தல்வேண்டும். (2) தெலுங்கில் அதி என்பது பெண்பாலையும் ஒன்றன் பாலையும் உணர்த்தலால், ஆமெ என்பது ஆ அம்ம என்பதன் தொகுத்தலாகவு மிருக்கலாம். (3) வடதிரவிடத்திலும் ஆரியத்திலும், தன்மைப் பெயர மகரமாயிருத்தற்குத் தோற்றுவாய் செய்தது தெலுங்குப் பன்மைச் சொல்லே. ஆகு என்னும் வினை சொல்வகை தமிழ் தெலுங்கு முதனிலை ஆ,ஆகு அவு ஏவல் ஒருமை ஆ,ஆகு கா பன்மை ஆகும், ஆகுங்கள் கம்மு, கண்டி இ.கா.ஆ.பா. வினைமுற்று ஆயினான் ஆயினாடு இ.கா.பெயரெச்சம் ஆன அயின, ஐன வினையெச்சம் ஆய், ஆகி அயி, ஐ எ. கா. ஆக கா, அவ நிலைப்பாட்டு ஆயிற்றேல் அயித்தே எ.கா: வினைமுற்று ஆகும், ஆம் அவுனு மறுப்பிணைப்புச்சொல் ஆனால் கானி, அயினனு ஒத்துக்கொள்விடைச்சொல் ஆம் அவுனு எதிர்மறை வினைமுற்று ஆகாது காது தொழிற்பெயர் ஆதல், ஆகுதல் அவுட்ட, காவடமு (முதலியன) (முதலியன) கூட்டுவினை ஆகவேண்டும் காவலெனு மாற்றமாடு என்னும் வினை மாற்றம்=சொல். ஆடு என்பது ஒரு துணைவினை மாற்றமாடு=சொல்லாடு, உரையாடு, பேசு. மாற்றம்-மாட்ட(தெ.). மாற்றமாடு-மாட்டாடு(தெ.) மாத்தாடு (க.) கள் என்னும் பன்மையீறு தெலுங்கில் கலு-லு என்று திரியும். மாட்டலு (மாற்றங்கள்)+ஆடு=மாட்டலாடு-மாட்லாடு சில தெலுங்குச் சொற்கள் அடிப்படை யெழுத்துகளுள் ஒன்று தொக்கு வழங்குகின்றன. எ-டு: அழுத்து-அத்து, இலுப்பை-இப்பு, உருக்கு-உக்கு, கொழுப்பு கொவ்வு, செருப்பு-செப்பு, திருத்து-தித்து, சுருட்டு-சுட்டு, நெருப்பு-நிப்பு, பருப்பு-பப்பு, பெருத்த-பெத்த, மருந்து மந்து, விருந்து-விந்து. உருண்டை, ஒருத்தன் என்னுஞ் சொற்கள் உண்டை, ஒத்தன் என்று தமிழிலும் திரிந்திருப்பினும், அவற்றின் திருந்திய வடிவுகளும் வழக்கில் உள. தெலுங்கில் அங்ஙனமன்று. சில தெலுங்குச் சொற்களின் முதலிலுள்ள உயிர்மெய்யிடை ரகரஞ் செருகப்படும். எ-டு: bghGJ-¥buh¤J (bj.), மண்டு-ம்ரண்டு (தெ.). மண்டுதல் எரிதல். ï› tH¡nf, jÄœ-¤uÄs (t.), go-¥uâ (t.), gâf«-¥uÔf (t.), kj§f«-«Uj§f (t.), மெது-ம்ருது (வ.) என வடசொற் றிரிவுகட்கு வழிவகுத்தது. பல மென்றொடர்ச்சொற்கள் தெலுங்கில் வல்லோசை பெறும். எ-டு: F«ò-F«¥ò(bj.), என்றார்-அண்ட்டாரு(தெ.). கும்ப்பு, அண்ட்டாரு என்று எழுதுவது தமிழ் மரபன்று. வடக்கே செல்லச்செல்ல, மொழியொலிகள் இங்ஙனம் வலித்துக் கொண்டே போகும். இதற்குத் தொடக்கம் தெலுங்கும் முடிவு சமற்கிருதமும் ஆகும். தெலுங்கு வடமொழிபோல் வல்லோசை பெற்றிருப்பதுடன், வடதிசையாற் பெயர்பெற்றிருப் பதும் கவனிக்கத் தக்கது. தமிழொலிகள் முதற்கண் வடமொழியிற் போல் கடுவொலிகளும் (surds) பொலிவொலிகளுமாய் (sonants) இருந்த பின்னர்க் கடுமையும் பொலிவும் நீங்கினவென்பது, வன்காய் மீண்டும் மென் பிஞ்சாயிற்றென்று கூறுவதுபோன்றதே. ங்க்க, ஞ்ச்ச, ண்ட்ட, ந்த்த, ம்ப்ப என்னும் வன்கூட்டொலிகள் தெலுங்கிற் பெருவழக்காய் வரும்; தமிழில் மருந்திற்குங் காணக் கிடையா. முதன் முதல் வடதிசையால் வடகு என்று பெயர் பெற்றதும், உண்மையில் வடமொழிக்கு அடிப்படையும் தெலுங்கே. 7. பிராகுவீத் திரிவு தமிழ் வேங்கடத்திற்கு வடக்கே சென்று திரவிடமாய்த் திரிந்ததுடன், திரவிடமொழிகளும் வடக்கே செல்லச்செல்ல மேன் மேலும் திரிந்தும், சிறுத்தும், சிதைந்தும், சிதறியும், இலக்கியமற்றும், ஆரியமாக மாறியும் போயின. வடமேற்கோடித் திரவிட மொழியான பிராகுவீச் சொற்கள் வருமாறு: மூவிடப்பெயர்கள் தமிழ் பிராகுவீ தன்மையொருமை : ஏன் (யான்) ஈ தன்மைப்பன்மை : நாம் நன் முன்னிலையொருமை : நீ நீ முன்னிலைப்பன்மை : நூம் நும் படர்க்கை ஒன்றன்பால் : அது ஓ, ஓது படர்க்கைத் தற்சுட்டொருமை : தான் தேன் எண்ணுப்பெயர்கள் ஒன்று-அசித், இரண்டு-இரத், மூன்று-முசித். ஏனை யெண்ணுப் பெயர்களெல்லாம் இந்தியிலுள்ளனவே. பிற சொற்கள் தமிழ் பிராகுவீ தமிழ் பிராகுவீ அப்பா பாவா அரம் அர அம்மா அம்மா,லும்மா ஆய் ஆயி இரு அர் பூசை(பூனை) பிஷீ உம் (and) ஓ மகன் மார் உறை (வீடு) உரா முகன் மொன் எந்து (என்னது) அந்த் முன்னே மொனீ சா கா, கஹ் மூளை மிலீ தின் ஹின், குன் யார் தேர் நீர் தீர் சில பிராகுவீச் சொற்களில் வகரம் பகரமாகத் திரிகின்றது. எ-டு: வர் (வரு)-பர், வாய்-பா, வில்-பில். சில பிராகுவீச் சொற்களின் இறுதியில் தகரமெய் மிகுகின்றது. எ-டு: பால்-பால்த், தேள்-தெல்த். சில பிராகுவீச்சொற்களில் சகரம் ககரமாகத் திரிகின்றது எ-டு: செய்-கெ, செவி-கவ். பல பிராகுவீச் சொன்முதலில் மூச்சொலி சேர்கின்றது. எ-டு: அறு-ஹரே, ஆடு-ஹேட், ஆம்-ஹோ. f©-khan, fš-khal, brÉ-khaf, ghš-phalt, கள் என்னும் பன்மையீறு பிராகுவீயில் க் எனச் சிதைந்து குறைகின்றது. எ-டு: அவர்கள்-ஓவ்க், வாய்கள்-பாக். வேற்றுமைப்பாடு (Declension) தமிழ் பிராகுவீ தமிழ் பிராகுவீ முதல் வேற்றுமை அது ஓ, ஓது கல் கல் 2ஆம் வேற்றுமை அதை ஓதெ கல்லை கல்-எ 3ஆம் வேற்றுமை அதிட்டு ஓது-அட் கல்லிட்டு கல்-அட் 4ஆம் வேற்றுமை அதற்கு ஓதெ கல்லிற்கு கல்-எ 5ஆம் வேற்றுமை அதின் ஓது-அன் கல்லின் கல்-ஆன் 6ஆம் வேற்றுமை அதன் ஓனா கல்லின் கல்-னா 7ஆம் வேற்றுமை அதனிடை ஓ கல்லிடை கல்-ட்டீ (தெ)ட்டீ இட்டு என்பது ஒரு 3ஆம் வேற்றுமைச் சொல்லுருபு. எதிட்டு = எதைக்கொண்டு, எதினால். சில பிராகுவீத் தொடரியங்கள் ஈ அரேட் = நான் இருக்கிறேன். நீ காச = நீ போகிறாய். நாபின் தேர் ஏ? = உன் பெயர் என்ன? கனா பாவ ஹமே சுன் உராட்டீ தூலிக் = என் அப்பனார் அந்தச் சின்ன உறையில் (வீட்டில்) குடியிருக்கிறார். kh, gh முதலிய சில மூச்சொலி யெழுத்துகளும், சார் (char), தந்தம் முதலிய இந்தி வடமொழிச்சொற்களும், பிராகுவீயிற் கலந்து வழங்குகின்றன. தமிழின் குமரிக்கண்டத் தோற்றத்தை யறியாதும், தமிழின் இயல்பையும் திரவிடத்தின் திரிபையும் நோக்காதும், பெரும்பால் மேலை மொழிநூலறிஞர், அநாகரிக நிலை நாகரிக நிலைக்கு முந்திய தென்னும் நெறிமுறையைக் குருட்டுத்தனமாய்ப் பின்பற்றி, திரவிடம் திருந்தித் தமிழானதென்றும், பிராகுவீ முந்துநிலை மொழியென் றும், தமிழர் வடமேற்கினின்று பெலுச்சித்தான வழியாய்த் தெற்கு வந்தா ரென்றும், வந்தவழியில் பெலுச்சித்தானம் இருப்பதால் அங்கத்து மொழி அநாகரிக நிலையில் உள்ளதென்றும், தெற்கு வந்தபின் தம் மொழியை வளர்த்துக்கொண்டா ரென்றும், உண்மைக்கு முற்றும் மாறாகக் கூறியுள்ளனர். ஒரு மொழியின் சொற்கள், முந்துநிலை, சிதைநிலை ஆகிய இரு நிலையிலும் குறுவடிவு கொண்டு நிற்கும். பிராகுவீச்சொற்கள் குறு வடிவுகொண்டிருப்பது, சிதைநிலையேயன்றி முந்துநிலை யன்று. வாய்கள் என்னும் ஒரு சொல்லின் சிதைவை நோக்கினும் இவ் வுண்மை விளங்கிவிடும். வழி-(வயி)-வாய்=உணவு புகும் வழி. கள்ளுதல் கலத்தல் அல்லது கூடுதல். பன்மை ஒரு பொருளின் கூட்டமாதலால், கள் என்னும் சொல் பன்மையீறாயிற்று. வாய்-பா (பி.) fŸ-¡ (ã.), வாய்கள்-பாக் (பி.) இங்ஙனமே பிறவும். 8. திசைமொழித் தெரிப்பு (Regional Dialectic Selection) தமிழில் மிகுந்த சொல்வள முண்டு. ஒரு செல்வத்தாய் வீட்டினின்று, ஒருவகைப்பட்ட பல பொருள்களுள் ஒவ்வொன்றை ஒவ்வொரு புதல்வியும் எடுத்துச் செல்வதுபோல், தமிழிலுள்ள ஒரு பொருட் பல சொற்களுள் ஒவ்வொன்றை ஒவ்வொரு திசைமொழி யும் கையாண்டுள்ளது. v-L: ïš (bj.), kid (f.), வீடு (ம.). 9. குடியேற்றப் பாதுகாப்பு (Colonial Preservation) ஆயிரக்கணக்கான உலகவழக்குச் சொற்களைக் கொண்ட குமரிக்கண்டம் முழுகிப் போனமையாலும், பல்லாயிரக்கணக்கான குறியீடுகளையும் செய்யுட் சொற்களையும் கொண்ட முதலிரு கழக விலக்கியம் முற்றும் அழிக்கப்பட்டுவிட்டமையாலும், இன்று ஒருசில பழஞ்சொற்களின் முந்துவடிவைச் சில திசைமொழிகளே தாங்கி நிற்கின்றன. எ-டு: செய்-கை. chey (bj.)=if mš-m‹W mšÈ (f.)=m§F அரிது-ஆது (எதிர்மறை யிடைநிலையும் ஈறும்). அருது(ம) நீங்கள்-நிங்கள்-நிங்ஙள் (ம.) நீன்-நின், நீம், நிம், நீங்கள்-நிங்கள் (வேற்றுமையடி) 10. நடுத்திரவிடம் மராத்திச் சொற்கள் தமிழ் மராத்தி தமிழ் மராத்தி அக்கை அக்கா கவுதாரி கவடா அச்சன் ஆஜா காயம் காயம் அம்மை அம்மா கால் காலீ(கருமை) அரக்கு லாக் கிடுமுடி கடமட அரத்தம் ரத்த கிண்ணம் கிண்ண ஆய் ஆயீ குடும்பு குடும்ப் இக்கடை இக்கடே குண்டா குண்டா இராத்திரம் ராத்ரீ குப்பம் (காடு) கும்ப்ப உண்ணம் உஷ்ண குயில் கோயீல உதடு ஓட் கொட்டாரம் கோட்டார ஊற்று ஓத்து கோ காய் (ஆவு) கட்டில் காட் கோரம் கோடா (குதிரை) கட்டு கட்டா கோலி கோலீ (குழந்தை) கடிகையாரம்- சற்று ஜரா கடிகாரம் கடியால் சாட்டி ஜாட்டீ கண்டம் காண்ட்டா சாலும் சாலேல் (முள்) சாலை சாலா கம் (எனல்) கப் சுணை சுணசுண செடி ஜாடு மயிலை பைல் (காளை) செவ்வை சாவ் மனம் மன் சோடு ஜோடா மாத மாசிக் தகை, தாகம் தாஹன் மீசை மிசா தட்டு தாட் முகர் மோகர் தண் தண்ட் முட்டி மூட் தயிர் தஹீன் முள்ளங்கி முளா, முளி தா தே முளை மூல் தாடி தாடீ மூக்கு நாக் தாதை தாதா மோடு(வயிறு) போட் திரு சிரீ மோடு-மோட்டு மோட்டா தீவம் தீவா (விளக்கு) வட்டி(கிண்ணம்) வாட்டி நாடி நாடீ வரம் (மேல்) வர் நாரத்தங்காய் நாரிங்க வழுதுணங்காய் வாங்கே பழம் பள் வளை (திரும்பு) வளா பண்ணு பனவ் வாசி வாச் பிண்டி பீட் (மாவு) வேளை வேள் பித்தளை பீத்தல் நிறைப்பெயர் புகல் போல் பலம் பலால் பெட்டி பேட்டி சேர் சேர் போதும் புரே வீசை வீசா மணிக்கட்டு மண்கட் மணங்கு மண் மயில் மோர் கண்டி கண்டில் மூவிடப்பெயர்கள் தமிழ் மராத்தி தன்மையொருமை: நான் மீ தன்மைப்பன்மை : நாம் ஆம்ஹீ முன்னிலையொருமை: நூன்(நீ) நூன் முன்னிலைப்பன்மை: நூம்(நீர்) தும்ஹீ படர்க்கை ஆ. பா: அதனு(தெ.) தோ படர்ப்கைப்பெ.பா: அதி(தெ.) தீ படர்க்கைப் ப.பா: ? தே, த்யா, தீன் படர்க்கை ஒ.பா: அது தேன் சில தமிழ் வினைச்சொற்கள் மராத்தியின் உருத்தெரியாமல் திரிந்துள்ளன. எ-டு : தமிழ் மராத்தி தமிழ் மராத்தி ஏ (கு) (யா)-ஜா இடு டேவ் படி (கீழிரு) பஸ் இரு ரஹ் யகரம் ஆரியமொழிகளிலும்ஆரியத்தன்மையடைந்தமொழிகளிலும்ஜகரமாகத்âரியும்.ïJ bதலுங்கிலேயேbதாடங்Fவதுftனிக்கத்த¡கது. எ-L: யமன் (வ.) ஜமுடு (தெ.) யுவன் (வ.) ஜவான் (இ.) யௌவனம் (வ.) juvenilis (L.) மராத்திச் சொற்றொடரமைதி சொற்றொடர்ச் சொன்முறை தமிழிற்போன்றே மராட் டியிலும் அமைந்துள்ளது. எ-டு: மீ த்யாலா ஏக் ருப்பயா திலா ஆஹே. நான் அவனுக்கு ஓர் உருபா கொடுத்து இருக்கிறேன். ஹேங் பத்ர மாஜ்யா டேப்லாலர் டேவ். இந்த முடங்கலை என் நிலைமேடைமேல் வை. நிலைமேடை = மேசை. ஆகு என்னும் வினைச்சொல், புணர்ப்புச் சொல்லாகத் (copula) தமிழிற் கருவுற்று, மலையாளத்தில் உருப்பெற்று, மராத்தியில் திரிவுற் றிருப்பது கவனிக்கத்தக்கது. இதனொடு, பெயர்ப்பயனிலை புணர்ப்புச் சொற்கொண்டே முடியும் ஆரியச் சொற்றொடரமைதி தோன்றி யிருப்பதும் கவனிக்கத்தக்கதாம். எ-டு: அது மரம் (தமிழ்) அது மரம் ஆகுன்னு (மலையாளம்)=அது மரமாயிருக் கிறது. தேன் ஜாட் ஆஹே (மராத்தி). It is a tree (Eng.). பெயர்ப் பயனிலை புணர்ப்புச்சொல் லின்றி முடியும் தமிழ்ச் சொற்றொடரமைதி, தமிழின் இயல்பையும் முன்மையையும் தெளி வாய்க்காட்டும். ii வடதிரவிடம் ஆரியர் வருமுன் நாவலம்பொழில் (இந்தியா) முழுதும், பஃறுளிமுதல் வேங்கடம்வரை தமிழும் வேங்கடம் முதல் பனிமலை வரை திரவிடமுமாக, தென்மொழியே பரவியிருந்த தென்பதற்குச் சான்றாக, வடநாட்டு மொழிகளுள் ஒன்றான இந்தியினின்று பல அடிப்படைச் சொற்களும் இலக்கண அமைதிகளும் இங்குக் காட்டப் பெறும். இந்திச்சொற்களும் இலக்கண அமைதிகளும் தமிழ் இந்தி தமிழ் இந்தி அடே அரே கால், காலம் கால் அரங்கம் ரங்க் காள் காலா(கருப்பு) அலை(வி.) ஹில் கிழான் கிஸான் அலை(பெ.) ஹிலோல் குதி கூத் ஆகு ஹோ குயில் கோயல் ஆம் ஹாம் கூலி(யாள்) கூலீ இத்தனை இத்னா கொச்சு குச் இதோள் ஹிதர் கொட்டறை கொட்ரீ இட்டிகை ஈண்ட்டா கோ காய் (ஆவு) (உத்தனை) உத்னா கோட்டை கோட் உதடு ஓண்ட் கோரம் கோடா உதோள் உதர் கோலி கோலீ உம்பர் உப்பர் சப்பட்டை சப்ட்டா உலகு லோக் சமையம் சமய உழுந்து உடத்சவை(வி.)சபா எதோள் ஜிதர் சற்று ruh(z) ஏ (கு) யா-ஜா சாயுங்காலம் சாயம் ஐயோ ஹாய் சாலை சாலா ஓரம் ஓர் சிட்டு டா(ஆண்குருவி) கட்டில் காட் சிட்டு (சிற்று) சோட்டா கட்டை காட் சில் (ஈரம்) சீல் கடி காட் சிறுத்தை சீத்தா, சீட்டா கடு கடா(கடுமையாய்) சீட்டு சீட்டு கடு கடுவா (கசப்பாய்) சீரகம் ஜீரா கடு கட்டா(புளித்த) சுக்கு சூக் கலை கலா சுண்டி சோண்ட்(சுக்கு) கழுதை கதா சும்மா சுப் களம் கலா(தொண்டை) சூலம் சூல் fன்னல் fன்னா(கரும்பு)(சல்)-செல்rல் ககம் கௌவா செப்புலு(தெ.) சப்பல் செவ்வை சாவ் பூ பூல் சோடி ஜோடி பூதம் பூத் சோடி(வி.) ஜோட் பெட்டி பேட்டக சோம்பு சோ (தூங்கு) மடி மரி-மர் சோளி, ஜோல்னா மந்தி(பெண் பந்தர் சோளிகை குரங்கு) (குரங்கு) தடி சடீ மந்திரம் மந்திர் தண் தண்டா மயில் மோர் தண்டம் தண்ட மயிலை பைல் jண்டனைjண்டனkனம்k‹த¤ij தோத்தா மாதம் மாஸ் தயிர் தஹீ மாலை மாலா தா தேவ் மாறு(அடி) மார் தாதை தாதா மிளகு மிர்ச் தாள், தாழ் தாலீ (திறவு மீசை முஞ்ச் கோல்) முகம் மூ துவை(வி.) தோமுகuமுக்ரh தேவு, தேவன் தேவ் முட்டி முட்டீ நாடகம் நாட்டக்முடî(வி.) மோடு (வளை) நாடி நாடீ முண்டனம் முண்டன நாரங்கம் நாரங்கீ முண்டா மோண்டா நாவாய் நாவ் (தோள்) நீல், நீலம் நீல் முண்டு முண்ட (stump) நேரம் தேர் முண்டேறி மூண்டேரா நோக்கு தேக் முத்து மோத்தீ பக்கம் பகம் முரசு முரஜ பக்கல் பகல் முரப்பு முரபா பட்டி பட்டீ முள் (கு) மில்(வி.) பட்டினம் gட்டனKŸளங்கி மூä ப£il பட்டா _க்குehக் படி (கீழிரு)iபட்njள்jhgo பட் (வாசி) bமல்Kலாயம் படு (தல்) பட் மோடு,மோட்டு மோட்டா படு படா (பெரிய) மோடு போட்-பேட் பண் (வி.) பன் (வயிறு) பதம் பாத் (சோறு) மோய்(உம் + ஆய்) மாய் (தா) பழம் பல் வலம் பல பறை பர் (செட்டை) வா ஆ பித்தளை பீத்தல் வாஙகு(வளை) பாங்க் பிள்ளை பில்லா (குட்டி) வாலுகம் பாலூக் பிற்று பீட் (முதுகு) விட்டி டிட்டீ பீர் பீலா(மஞ்சள்) விடை-விடாய் படாய் புகர் புரா விதை பீஜ் புகல் போல் (b) வெண்டை பிண்டீ புருவம் பௌம் வேம்பு நீம்பு இவற்றுட் பல சொற்கள் மராத்தி வடிவிலேயே இருத்தலை நோக்குக. முறைப்பெயர்கள் தமிழ் திரவிடம் இந்தி m¤j‹ (jªij) m¢r‹(k.), ஆஜா (பாட்டன்) ஆஞா (தந்தை) அஜ்ஜெ (து.) அம்மை, அம்மா அம்மா, மாம், மா அப்பன், அப்பா அப்பா, பாப் அன்னை அன்னா, அன்னீ (செவிலி) தாத்தா, தாதை தாதா பிள்ளை பிட்ட(தெ.) பேட்டா(மகன்) பேட்டீ (மகள்) மாமன், மாமா மாமh மாமி மாமீ சில தென்சொற்கள் திரவிடத்தினின்று இந்தியிற் புகுந்துள்ளன. எ-டு: தமிழ் திரவிடம் இந்தி ஆகு(உண்டாகு) ஆகு(ஆயிரு) ஹோ களி(மகிழ்) களி(விளையாடு) nகல்bfL செடு ஸடு கூராக்கு(கறிவகை) குராக்(உணவு) செடி செட்டு(மரம்) ஜாடு செருப்புகள் செப்புலு சப்பல் (பிள்ளை) பில்லி(பூனை) பில்லீ மூவிடப்பெயர்கள் தமிழ் இந்தி தன்மையொருமை : நான் மைன் தன்மைப்பன்மை : நாம் ஹம் முன்னிலையொருமை: நூன் தூ முன்னிலைப்பன்மை : நூம்(நும்) தும் நூன்(நீ), நூம்(நீர்) என்பன நீன், நீம் என்பவற்றின் மூலமா யிருந்து வழக்கற்றுப்போன தமிழ் முன்னிலைப்பெயர்கள். நுன், நும் என்பன அவற்றின் வேற்றுமையடிகள் (oblique bases). இவையே மராட்டி, இந்தி முதலிய மொழிகளில் து, தும் எனத் திரிந்து, எழுவாய் வேற்றுமைப் பெயர்களாக வழங்கிவருகின்றன. தொல் காப்பியர் இருவகை வழக்கிற்கும மாறாக, நெடுமுதல் குறுகிய நும் என்னும் திரிவேற்றுமையடியை எழுவாய் வேற்றுமைப் பெயராகக் கூறியிருத்த லால் (தொல். 325, 326, 628), அவர் காலத்தில் (கி.மு. 6ஆம் அல்லது 7ஆம் நூற்றாண்டு)மராட்டி திராவிட மொழியாகக் கருதப்பட்டிருக்கலாமென்றும்,அதில் நும் என்னும் வடிவம் முன்னிலைப் பன்மை முதல் வேற்றுமைப் பெயராக வழங்கி யிருக்கலாமென்றும் கருத இடமுண்டு. நகரம் தகரமாகத் திரிவது இயல்பே. எ-டு: Ú®-Ô® (ã.), நேரம்-தேரம் (கொச்சைத்தமிழ்), neu«-nj® (ï.), neh¡F-nj¡ (ï.),âUkh‹ -ஸ்ரீமத்(வ.) படர்க்கைப் பெயர்கள் ஒருமை பன்மை அண்மை: யஹ்(இவன்,இவள்,இது) யே (இவர்கள்,இவை) சேய்மை: வஹ்(அவன்,அவள்,அது) வே (அவர்கள்,அவை) வோ என்னும் சேய்மை ஈரெண்ணிற்கும் பொது. யஹ் என்பது ஏ என்றும், வஹ் என்பது ஓ என்றும் உலக வழக்கில் வழங்குகின்றன. திரிவேற்றுமை யடிகள் யஹ்-இஸ் யே-இன் வஹ்-உஸ் வே-உன் இவ் வமைதியினாலும், ஹிதர் உதர் என்னும் சுட்டுப்பெயர் களாலும், இந்தியில் அண்மைச் சுட்டுச்சொற்கள் இகரவடியினின் றும் சேய்மைச் சுட்டுச்சொற்கள் உகரவடியினின்றும், பிறந் திருப்பதைக் காணலாம். முன்மை குறுஞ்சேய்மையாதலின், உகரச்சுட்டு வடநாவலம் என்னும் முது வடதிரவிடத்தினின்று திரிந்த மொழிகளில், சேய்மைச் சுட்டாக வழங்குகின்றது. குறிப்புச்சொற்கள் தமிழ் இந்தி குறிப்புப்பொருள் ஆ ஆ வியப்பு ஏ ஏ வியப்பு ஆகா ஆஹா வியப்பு தமிழ் இந்தி குறிப்புப்பொருள் ஓ கோ(கழிவறிவு) ஓ ஹோ இரக்கம் ஏ ஹே விளி ஓ ஹோ விளி ஐயோ ஹாய் இரக்கம், அச்சம் முதலியன ஐயையோ ஹாய் ஹாய் இரக்கம், கலக்கம் முதலியன சீச்சீ சீச்சீ வெறுப்பு வழக்கற்ற வினைச்சொற்கள் சில வினைச்சொற்கள் தென்னாட்டில் வழக்கற்று வடநாட் டில் வாங்கியிருக்கின்றன. தமிழ் இந்தி எ-டு: (கத்து-தல்) காட்-னா(வெட்டுதல்) (பட்டு-தல்) பீட்-னா(அடித்தல்) கத்து-கத்தி = வெட்டுங்கருவி, பட்டறை (பட்டு+அறை) = கொல்லர் தட்டும் அறை அல்லது கூடம். சில இந்திச்சொற்கள் தமிழ்ச்சொற்களின் கொச்சை வடிவா யிருக்கும். எ-டு: இப்ப-அப் (இப்போது) அப்ப-தப் (அப்போது) எப்ப-ஜப்,கப் (எப்போது) வேற்றுமை யுருபுகள் 4ஆம் வேற்றுமையுருபு: F (j.)-nfh (இ.) எ-டு: ராம்கோ = இராமனுக்கு 7ஆம் வேற்றுமை யுருபுகள்: புரம்(த.) = மேல். புரம்-பரம்-பர்(இ.) எ-டு: மேஸ்பர் = நிலைமேடையின்மேல் உம்பர்(த.) ஊப்பர் (இ.) உம்பர் = மேல் எ-டு: மந்திர்கே ஊப்பர் = கோயிலுக்கு மேல். Xu«(j.)-X® (இ.) எ-டு: கர்கே ஓர் = வீட்டோரம். பால்-பாஸ் (இ.) கம்லாகே பாய் = கமலாவினிடத்தில். பிற்றே-பீச்சே (இ.) பீச்சே தேக்கோ = பின்னால் பார். பாலீறுகள் பெண்பாலீறுகள்: இ = ஈ எ-டு : பேட்டீ அன்னி-அனி = அனீ எ-டு : தேவரானீ அனீ-னீ எ-டு : மோர்னீ அனி-இனி = இனீ எ-டு : ஸ்வாமினீ முதற்காலத்தில் நெடில்களே வழங்கிவந்தமையை, வட நாவலப் பெண்பாலீறு ஒருவாறு உணர்த்தும். பலர்பாலீறு உலகு-உலகம் = மாநிலம், மக்கட்டொகுதி, மக்கள். உலகம்-லோக் (இ.) உலகம் என்னும் சொல் மக்கள் என்னும் பொருளிற் பலர் பாலீறாய் வரும்போது, இந்தியில் log என்று எடுப்பொலி கொள்ளும். எ-டு: ஹம் லோக் = நாங்கள், தும் லோக் = நீங்கள். இலக்கண அமைதிகள் இறந்தகால வினைமுற்றும் எச்சமும் தமிழிற் செய்யா என்னும் வாய்பாட்டுஆவீற்று வினைச் சொல், இறந்தகால வினையெச்சமாகும். இந்தியில் இவ் வாய்பாட்டுச் சொல் இறந்தகால முற்றும் எச்சமுமாகும். எ-டு: முதனிலை இ.கா. முற்றும் எச்சமும் ஆ = வா ஆயா = வந்தான், வந்து. போல் = சொல் போலா = சொன்னான், சொல்லி. செய்து என்னும் வாய்பாட்டுச் சொல், தமிழில் ஒரு காலத்தில் முற்றாகவும் இருந்ததுபோன்றே, செய்யா என்னும் வாய்பாடும் இருந்திருக்கலாம். ஜாத்தா ஹை, போல்த்தா ஹை முதலிய நிகழ்கால இந்தி வினை முற்றுகள், போத்தாடு, செப்புத்தாடு முதலிய தெலுங்கு நிகழ் கால வினைமுற்றுகளை ஒருமருங்கு ஒத்தமைந்திருந்ததல் காண்க. முன்னிலை வினை இய என்னும் தமிழ் வியங்கோளீறு, இந்தியில் இயே என்னும் மதிப்பு ஏவலீறாகத் திரிந்துள்ளது. எ-டு: போலியே=சொல்லுங்கள், சொல்லுக. கூடாது என்று பொருள்படும் ஒல்லாது என்னும் தமிழ் எதிர்மறை வினைச்சொல், தெலுங்கில் ஒத்து-வத்து எனத் திரியும். அது பின் இந்தி யில் மத் எனத் திரிந்துள்ளது. எ-டு: போகவத்து = போக வேண்டாம் (தெலுங்கு) ஜமாத் = போக வேண்டாம் (இந்தி) தொழிற்பெயரும் நிகழ்கால வினையெச்சமும் தமிழில் அல் ஈற்றுத் தொழிற்பெயர் வியங்கோள் என்னும் ஏவல் வகையாகவும் பயன்படுவதுபோல், இந்தியில் னா' ஈற்றுத் தொழிற் பெயர் ஏவலாகவும் ஆளப்பெறுகின்றது. எ-டு: கர்னா= 1.செயல் (செய்கை)-தொழிற்பெயர். 2.செய், செய்யுங்கள்-ஏவல். இனி, கர்னா அல்லது அதன் திரிபான கர்னே' வாய்பாடு எதிர்கால வினையெச்சமாகவும் (infinitive mood) இந்தியில் வழங்குவது, செய்யவேண்டும் என்னும் பொருளில் செய்யல் வேண்டும் அல்லது செயல்வேண்டும் என்பது தமிழில் வழங்குவதை ஒருபுடை ஒத்ததே. செயப்படுபொருள் குன்றாவினை முதனிலைகள் இந்தியில். செயப்படுபொருள் குன்றாவினை முதனிலைகள், ஆவ் (வா), ஜாவ் (போ) என்னும் ஏவலொருமையுடன் கூடி. இறந்த கால வினையெச்சப் பொருள்படும். இதில் கர் என்னும் இறந்தகால நிறைவு வினையெச்ச வீறு தொக்கதாகக் கொள்ளப்பெறும். எ-டு: ஸுன் = கேள். ஸுன்ஜாவ் = கேட்டுவிட்டுப்போ. தேக் = பார். தேக்ஆவோ = பார்த்துவிட்டு வாரும். தமிழில் எல்லா வினைமுதனிலைகளும் வா போ என்னும் ஏவலொருமையுடன் கூடி நிகழ்கால வினையெச்சப் பொருள்படும். எ-டு: செய்வா=செய்யவா, பார்போ=பார்க்கப்போ. இருவா=இருக்கவா, விழுபோ=விழப்போ. மாறு என்னும் இடைச்சொல் மாறு என்னும் இடைச்சொல், ஏகார ஈறேற்றுக் கழகச் செய்யுள்களில் ஏதுப்பொருளில் வழங்குகின்றது (புறம். 4, 20, 22, 92, 93, 271, 380, நற்.231) அனையை யாகன் மாறே. (புறம்.4) இதற்குப் பழைய வுரையாசிரியர் `அத்தன்மையை யாதலால்' என்று பொருளுரைத்து, மாறென்பது ஏதுப்பொருள் படுவதோர் இடைச்சொல்' என்று இலக்கணக்குறிப்பும் வரைந்துள்ளார். சேனாவரையர் மூன்றாம் வேற்றுமைப்பொருட்கண் வரும் மாறு என்றும், நச்சினார்ககினியர் மாறென்னும் இடைச்சொல் வினையை அடுத்துக் காரணப்பொருள் உணர்த்திநிற்றலின் என்றும், இலக்கண விளக்க வுரையாசிரியர் மூன்றாவதன் பொருளவாய் வரும் மாறு என்றும் உரைத்துள்ளனர். இந்தியில், கே' என்னும் உருபொடு சேர்ந்து வரும் மாரே' என்னுஞ் சொல், ஏதுப்பொரு ளிடைச்சொல்லாகவே வழங்கு கின்றது. எ-டு: உஸ் ஆத்மீகே மாரே = அந்த மாந்தனாலே. இஸ் பத்பூகே மாரதே = தீநாற்றத்தினால். சொற்றொடர் அமைதிகள் அடுக்குத்தொடர்: கர் கர் = வீடுவீடாய். படேபடே = பெரியபெரிய. ஜப்ஜப்......j¥j¥ = எப்போதெப்போது.... அப்போதப்போது. காத்தே காத்தே = சாப்பிட்டுச்சாப்பிட்டு. சொன்முறை எழுவாய்-செயப்படுபொருள்-பயனிலை என்னும் முறையிலேயே இந்திச் சொற்றொடர்களும் அமைந்துள. எ-டு: ராம் பாத் காத்தா ஹை = இராமன் சோறு உண்கிறான். மரபுத்தொடர் தாந்த் கட்டே கர்தோ=பல்லைக் பிடுங்கிவிடு, செருக்கடக்கு. ஜான் லேக்கர் பாக்=உயிரைக் கையிலேந்திக் கொண்டு ஓடு. பழமொழிகள் தமிழ் இந்தி ஆடமாட்டாத தேவடியாள் eச்சைe Mவேmங்கணவேnடட். கூடங் கோணல் என்றாளாம். ஆண்டிகள் கூடி மடங்கட்டினாற் பகுத்ஸே ஜோகி மட் உஜாட். போல். ஒருகை தட்டினால் ஓசை ஏக் ஹாத்ஸே தாலீ நஹீன் பஜ்தீ. கேட்குமா? தமிழ் இந்தி ஓர் உறையில் இரு கத்தியா? ஏக் மியான்மே தோ தல்வார் நஹீன். கழுதை குதிரையாகுமா? நஹீன்கதாபீ கோடாபன்சக்தாஹை காரியம் முடியும்மட்டும் கழுதை. ஸரூரத்கே வக்த் கதேகோ பீ கையையும் காலைப்பிடிக்க பாப் பனானா பட்தா ஹை. வேண்டும். குத்துவிளக்கிற்கும் குண்டிக்குக்கீழ் சிராக் தலே அந்தேரா. இருட்டு. சேதாவை (பசுவை)க்கொன்று காய் மார்க்கர் ஜூத்தா தான். செருப்பைத் தானம்செய்ததுபோல். அறத்திற்கு (புண்ணியத்திற்கு)க் தான்கீ பச்சியா கா தாந்த் நஹீன் கொடுத்த மாட்டைப் பல்லைப் தேக்கா ஜாத்தா. பிடித்துப் (பதம்)பார்க்கிறதா? விளக்கைப் பிடித்துக்கொண்டு ஜான் பூஜ்கர் குவேம்மே கிர்னா. கிணற்றில் விழலாமா? இதுகாறும் காட்டியவற்றால், இந்தியின் மூலமொழி வட திரவிடமாகவே யிருந்திருத்தல் வேண்டுமென்றும், சேய்மையினா லும் காலக்கடப்பினாலும் அது நாளடைவில் ஆரிய வண்ணமாய் மாறிவிட்டதென் றும், உய்த்துணர்ந்து கொள்க. 12. வடதிரவிட மொழிகள் ஆரியமாய் மாறியமை 1906ஆம் ஆண்டு இந்திய மொழியாய்வுக் கணக்கு (Linguistic Survey of India) எடுத்த கிரையர்சன் துரைமகனார், அரைத்திரவிட eilbkhÊfŸ(Semi Dravidian Dialects) என்னும் தலைப்பின்கீழ்ப் பின்வருமாறு வரைந்திருப்பது, திரவிடருக்கும் தமிழருக்கும் ஓர் எச்சரிக்கையாயுள்ளது. வட இந்தியாவிலுள்ள பல திரவிட மரபினர் தத்தம் இன மொழியை விட்டுவிட்டு ஏதேனுமோர் ஆரிய நடை மொழியைப் பேசிவருகின்றனர் என்னும் உண்மை, ஏற்கெ னவே எடுத்துரைகக்கப்பட்டது. ஹலபீ எனப்படும் மொழி இதற்கொரு நல்ல எடுத்துக்காட்டு. அது இவ்வாய்வுக் கணக்கில் மராத்தியொடு சேர்த்துக் கூறப்படும் அது மராத்தியினாலும் சத்தீசகடியினாலும் மிகுதியும் தழுவப் பட்ட கலவை மொழி. இங்கு அதுபோன்ற நடைமொழிகளுள் இரண்டைத் திரவிடக் குடும்பத்திற்குப் பிற்சேர்க்கையாகக் குறிப்போம். இதனால், அத்தகைய மொழிகளில் ஆரியத்தின் தாக்குறைவு எத்துணை நிறைவாகவுள்ள தென்பதை, மாணவன் அறிந்து கொள்ள முடியும். அவ் விரு நடைமொழிகளும், அமரவோத் தியைச் சேர்ந்த லதாடி அல்லது ரத்தாடி எனப்படுவதும், நரசிங்கபுரத்திலும் சிந்துவாரத்திலும் பேசப் படும் பரியா எனப்படுவதும் ஆகும். இவ்வாய்வுக் கணக்கிற்காகத் தொகுக் கப்பெற்ற குறிப்பின்படி, அவற்றைப் பேசுவோர் தொகை வருமாறு: yjho(Ladhadi) 2,122 பரியா (Bharia) 330 மொத்தம் 2,452 இவ் விரு நடைமொழிகளும் முன்பு கோண்டியோடு (Gondi) சேர்க்கப்பட்டிருந்தன. எனினும், இன்று அவை முற்றும் ஆரிய வண்ணமாய்விட்டன. வடதிரவிடத்தின் ஆரியக் கருநிலை இந்திச் சொற்களும் சொற்றொடரமைதிகளும் வட திரவிட மூலமொழி இன்றின்மையால், அதன் நெடுஞ் சேய்மைக் கான்முளைகளுள் ஒன்றான இந்தி இங்குக் காட்டப் பெறுகின்றதென அறிக. (1) சில சொற்கள் மூவிடப்பெயர்கள்: தமிழ் இந்தி மேலையாரியம் தன்மை யொருமை நான் மைன் OS. mi, me, E. me, my, முஜ், மே(வே.அடி) Skt. mam, mama. முன்னிலை bahUik: eh‹ ö OS., OE., ON., Goth. thu, L. tu, E. thou, Skt. tvam, சுட்டுச்சொல்: அண்மை: இதோள் ஹிதர் OE. hider,ON. hethra, இதோளி Goth. hidre, E. hither, L. citra, Skt. atra சேய்மை: அதோள் உதர் OE. thider theader, இதோளி E. thither,Skt. tatra வினாச்சொல்: எதோள்- ஜிதர், கிதர் OE. hwider, E. whither, எதோளி ` Skt. katra. பொதுச்சொல்: உம்பர் உப்பர் E. upper. over,OE. ofer, OS. obar, OHG. ubar, ON. yfir, Goth. ufar, L. super, Gk.huper, Skt. upari V-VF ah-#h OS., OE, gan, OHG. gan, gen,Skt. gam, gac களம் கலா L. gula, OF. gole, E. gullet (தொண்டை, fG¤J) (dim), Skt. kantha. குத்து-கத்து காட் ME. cuthe, kitte, kette, (-கத்தி) Sw. kata, kuta, E. cut சுக்கு சூக் L-siccare (to dry) தாதா-தாதைதாதா E. dada, daddy, dad, da, Skt. tata நரந்தம்-நாரந்தம்- நாரத்தை நாரங்கீ Ar. naranj, OF., ME., E. orange. òf® òuh OS., OHG., OE brun, ON. brunn, E. brown மடி மரி-மர் L. mori (to die), OE. morthor, E. murder (n.), Goth. maurthr. கத்து என்பது சுத்து என்பதுபோல் ஒரு வழக்கிறந்த வினை. சுத்து சுத்தி-சுத்தியல். (2) புணர்ப்பு வினை (Copula) இரு (be) என்னும் வினை எழுவாயையும் பயனிலையையும் இணைக்கும் புணர்ப்புவினையாம். இது என்றே குதிர யாணு (ம.). ஆகுன்னு-ஆணு. ஆ மாஜா கோடா ஆஹே (மரா.) யஜ் மேரா கோடா ஹ். (இ.). This is my horse (E.) தமிழிற் புணர்ப்பு வினை வராது. எ-டு: இது என் குதிரை. (3) பெயரெச்சம் பாலீறு பெறல் எ-டு: அச்சா (ஆ.பா), அச்சி (பெ. பா.). அச்சே (ப.பா.) இம் மூவடிவும் நல்ல என்று பொருள்படும் குறிப்புப் பெய ரெச்சம். (4) பெயர்ச்சொற்கள் ஈறுபற்றிப் பாலுணர்த்தல் எ-டு: கர் (வீடு), பாணீ (நீர்)-ஆண்பால். காடி (வண்டி), புஸ்தக் (பொத்தகம்)-பெண்பால். (5) வினாச்சொற்கள் ககர முதலவாதல் எவ்-வெ-கெ. கித்னா=எத்துணை (எவ்வளவு), கஹான்=எங்கே L.quid (what), quout (how many); Skt. kim (what), kat (which). இக் ககரமுதல் மராத்தியிலேயே தொடங்கிவிடுகின்றது. (6) எதிர்மறைத் துணைவினை தலைமைவினைக்கு முன்வரல் எ-டு: கபீ மத் ஜானா. வஹ் நஹீன் ஆத்தா ஹை. (7) நேரல்கூற் றிணைப்புச்சொல் கூற்றிற்கு முன்வரல் எ-டு: உஸ்னே கஹாகி மைன் கல் ஆவூம். 17. மேலையாரியம் வட திரவிடத்தைப் பேசிய வடநாவல மக்கள், வடமேற்காகச் சென்று மேலையாசியாவிற் சுமேரிய நாகரிக்த்தைப் பரப்பியும் நண் ணிலக் கடற்கரை நாடுகளில் வாழ்ந்து ஆரிய நாகரிகத்திற்கு அடி கோலியும், பல்வேறு நாட்டினங்களாய்ப் பிரிந்துபோயினர் என்பது, மொகெஞ்சோதரோ-அரப்பா நாகரிகத்திற்கும் சுமேரிய நாகரிகத் திற்கு முள்ள ஒற்றுமையாலும், நண்ணிலக் கடற்கரைநாட்டு மக்களின் பழக்கவழக்கங்கட்கும் தமிழர் பழக்கவழக்கங்கட்கு முள்ள ஒப்புமை யாலும், மேலையாசிய மொழிகளிலும் வடஆப்பி ரிக்க மொழிகளிலும் ஐரோப்பிய மொழிகளிலும் வழங்கும் தமிழ்ச்சொற்களாலும், அறியப்படும். வடமேலை யாப்பிரிக்காவைச் சேர்ந்த கானாமொழியிலும், வா, போ, தூக்கு முதலிய தமிழ்ச்சொற்கள் அடிப்படைச் சொற் களாய் அமைந்திருப்பது. மிகக் கவனிக்கத்தக்கதாம். மொகெஞ்சோதரோ முத்திரையெழுத்துகள் தமிழெழுத்துக் களின் மூலவடிவைக் காட்டுகின்றனவெனின்,அது அவை தமிழெ ழுத்து கள் வளர்ச்சியடையாத நிலையில் வடக்கே சென்ற தமிழர் கையாண்ட எழுத்துமுறை என்பதை யல்லது, தமிழர் வடக்கினின்று தெற்கே வந்தார் என்று உணர்த்தாது. மேனாடுகளிற் செய்யப்பெறும் புதுப்புனைவுகளின் (Inventions) பழைய அமைப்புகள் இந்தியாவில் வழங்கிவருவதும், அது இந்தியரே அவற்றைக் கண்டுபிடித்தார் என்று காட்டாமையும், காண்க. ஆரியக் குடும்பத்தைச் சேர்ந்த ஐரோப்பிய மொழிகளுள், வடமேற் கோடியில் வழங்கிவரும் தியூத்தானிய (Teutonic) மொழிகள் சிறப்பாக ஆங்கில சாகசனியம் (Anglo-Saxon), தமிழுக்கு மிக நெருங்கி யிருக்கின் றன. அந் நெருக்கத்தைக் காட்டும் சான்றுகள் வருமாறு: (1) விழுத்தம் பெரும்பாலும் முதலசைவில் விழுதல். (2) தனிக்குறிலை யடுத்த மெய் உயிரொடு புணரின் இரட்டல். (3) இருமையெண் இன்மை. (4) வினைகள் துவ்வீறொத்த ஈற்றால் இறந்நதகாலங் காட்டல். எ-டு: walked, told, burnt (5) திய்யொத்த முன்னிலை யொருமையீறு பண்டையாங்கில வழக்கிலிருந்தமை. எ-டு; நீ ÆU¤â-Thou art (6) சில அடிப்படைச் சொற்கள் ஆங்கிலத்திற்கும் தமிழுக்கும் பொதுவாயிருத்தல். (7) ஆரியத்திலுள்ள தமிழ்சொற்களைப் பொதுவாக ஆங்கிலமே தமிழுக்கு நெருங்கிய வடிவிற்காட்டல். தியூத்தானியத் தமிழ்ச்சொற்கள் எ-டு: கூ, Tî-coo , fiu-cry, crow, CŸ-Cis-howl, fid-neigh, ãËW-blare, cuW-roar všy-všyh-hallow இதோ - to அதோள்- thider, ïnjhŸ-hider, vnjhŸ-whider, ஆன் (அங்கு) yon, M©L-yond, yonder. r¥ò-sup, sip, â‹-dine, É¡F-hiccup, J¥ò-spit, ïU-are, is, <‹-can, yean, ãwªij-birth, JU¤J-thrust, ehL-OE. neod, E. need. m«kh-ma, mamma, m¥gh-pa, papa, jh-da, jhjh-jhij-dada, daddy, dad, kf‹-magus (Gael.) mac (E) குரு-கரு (FHÉ)-gor(LG), குருளை- gurle (ME), girl (E), F£o-kid, kiddy, FHªij-cild (OE), child (E) áW¡f‹-á¡f‹-cicen (OE), chicken(E) iga‹-ME. Boi, E. boy. yhyh-yhyh£L-jhyh£L-lull-lullaby (E), lulla (Sw), lullan (Du). cjŸ-E. wether, OS. withar, OHG. widar, ON. vethr, Goth. withrus. òšy«-bull, óir-puss, pussy, bfh¤â (f.)-cat, VHf«-elk, elke, களவன் (fl¥gh‹)-OE. crabba, E. crab, MDu; MLG. krabbe, ON. krabbi, Rwî-shark, ehf«-E. snake, OE. snaca, MLG. snake, ON snakr snokr. všyh«-OE. eall, all, E. all, V®-AS. ear (to plough), தாங்கல் (VÇ)--tank, gh®(f«ã)-bar, bkJ-OE. smoth, E. smooth, òif-OE. smoca, E. smoke, ikªJ-OE. miht, OS., OHG. maht, Goth. mahts. படி (cl«ò)-OE. bodig, E. body, Fuš-ME. crawe, E. craw, MDu, craghe, MLG. krage (neck, throat),òjš (mU«ò)-ME budde, boddle E. bud. அல்-அன் (எதிர்மறை முன்னொட்டும் ïilÃiyí«)-un, இல் (மனை, 7ஆம் வே. c.)-inn, in. இல் (எதிர்மறை முன்னொட்டும் ïilÃiyí«)-in, அண் (nkš)-on, c«g®-up, upper, over, JUt-through. m~F-ock (dim, suf.), ï£L-et, ete, ette (dim.suf.) V®-er (comp.suf) v£L-est (sup.suf.) 15. சொன்மாற்றத் தொலைவுக்கணிப்பு (Glotto-telemetry) ஆரியத்திற்கும் தமிழுக்கும் (திரவிடத்திற்கும்) சில சொற்கள் தாம் பொதுவாயிருக்கின்றன வென்றும், அவ் விரு குடும்பமொழி கட்கும் வேறு யாதொரு தொடர்புமில்லை யென்றும். பலர் கருது கின்றனர். பல திரவிடச்சொற்கள் ஆரியத்தாற் கடன்மட்டும் கொள் ளப்பட்டனவேயன்றி, திரவிடக் கூறுகள் ஆரிய மொழியமைப் பிற்குட் புகவில்லையென்று, பேரா. பரோ தம் சமற்கிருத மொழி' (The Sanskrit Language) என்னும் நூலிற் கூறியுள்ளார். இது தென்மொழி வடமொழித் தொடர்பைத் தலைகீழாக வைத்து ஆய்ந்ததன் விளைவாகும். ஒரு பெருந் தாய்மொழி இயற்கையாகப் பரவும்போது, ஆயிரங்கல் தொலைவிற்கொருமுறை அதன் பழஞ்சொற் றொகுதியில் ஏறத்தாழ மூன்றிலொரு பங்கை இழக்கின்றது. அதோடு புதுச்சொற்களும் புதிய சொல்லமைதியிலக்கண வமைதிக ளும் புகுகின்றன. இவ் வுண்மையை அடிப்படையாக வைத்து, ஒரு மொழி தன் மூலமொழியினின்று எவ்வளவு தொலைவு விலகியுள்ள தென்றோ, எத்துணைத் திரிந்துள்ளதென்றோ கணிக்கவியலும். இதுவே சொன்மாற்றத் தொலைவுக் கணிப்பாம். ஐரோப்பிய ஆரியமொழிகள் தமிழினின்று பேரளவு திரிந்துள்ள தற்கு அவை விலகிச் சென்றுள்ள சேய்மை அளவே கரணியமாம். ஆயினும், இன்றும் அவற்றின் முன்னொட்டுகளும் பின்னொட்டுகளும் பெரும்பாலும் தமிழ்ச் சொற்களாகவே யுள்ளன. எ-டு: F«-F«kš-L. cmumulus, F«-L . cum. இக் கும் என்னும் சொல்லே, com, con, col, cor, co என்று ஆங்கிலத்திலும், sym, syn, syl என்று கிரேக்கத்திலும், ஸம் என்று வடமொழியிலும் திரிந்து ஆயிரக்கணக்கான சொற்களைத் தோற்று வித்துள்ளது. தமிழ்க்கூறு ஆரியச் சொல்லமைப்பிற் கலந்துள்ள தென்பதற்கு, இஃதொன்றே போதிய சான்றாம். தமிழைத் தலைகீழாய் வைத்தாய்ந்த கால்டுவெலாரும், ஆரியத் திற்கும் திரவிடத்திற்குமுள்ள தொடர்பை அல்லது ஒப்புமையை பின்வருமாறு குறித்துள்ளார் : (1) கிரேக்கமொழியிலும் திரவிடத்திலும் னகரம் உடம்படு மெய்யாக வருகின்றது. (2) ஈரின மொழிகளிலும் படர்க்கைப் பகரப் பெயர்களும் வினைகளும் பாலீறேற்கின்றன. (3) படர்க்கை யொருமைச் சுட்டுப்பெயர் அல்லது ஒன்றன் பாற்பெயர், ஈரினத்திலும் jfuåW(d or t) கொண்டுள்ளது. (4) இலத்தீனிற் போன்று தமிழிற் பலவின்பா லீறு அகரமாகும். (5) ஈரினத்திலும் அகரம் சேய்மையையும் இகரம் அண்மை யையும் சுட்டும். (6) பாரசீகத்திலும் திரவிடத்திலும் தகர இடைநிலை இறந்த காலங் காட்டும். (7) முதனிலைமெய் இரட்டித்து இறந்தகாலங் காட்டுவது ஈரினத்திலு முண்டு. (8) ஈரினத்திலும் பல வினைகள் முதனிலை நீண்டு தொழிற் பெயராகின்றன. இற்றைத் திரவிடமொழிகள் தமிழினின்று திரிந்துள்ள திரவிடமொழிகள், பின்வருமாறு பன்னிரண்டெனச் சென்ற நூற்றாண்டிற் குறித்தார் கால்டுவெல். திருந்திய மொழிகள் திருந்தாத மொழிகள் 1. மலையாளம் 1. துடவம் 2. தெலுங்கு 2. கோத்தம் 3. கன்னடம் 3. கோண்டி 4. துளு (துளுவம்) 4. கொண்டா அல்லது கூ 5. குடகு( குடகம்) 5. ஓராஒன் 6. இராசமகால் அல்லது மாலெர் 7. பிராகுவீ இந் நூற்றாண்டில், பேரா. பரோவும் பேரா. எமனோவும் இற்றைத் திரவிட மொழிகள் மலையாளம், கோத்தம், துடவம், குட கம், துளுவம், கன்னடம், தெலுங்கு, கோலாமி, நாய்க்கீ. பரிசி (பர்ஜி), கடபம், கோண்டீ. கொண்டா, கூய், குவீ, குருக்கு, மாலத்தோ, பிராகுவீ எனப் பதினெட்டாகக் கணக்கிட்டுள்ளனர். திரவிடமொழிகள், பொதுவாக, வடக்கே செல்லச்செல்லத் திரிந் தும் சிதைந்தும் குன்றியும், தெற்கே வரவரத் திருந்தியும் விரிந்தும் இலக்கியங்கொண்டும் இருக்கும். மலையாளம் தென்னாட்டுமொழியும் பழஞ் சேரநாட்டுத் தமிழின் திரிபுமாயினும், துஞ்சத்து எழுத்தச்சனின் அடிமைத் தனத்தால், பிற திரவிடமொழிகளினும் மிகுதியாகவும் அளவிறந்தும் ஆரிய வண்ணமாக்கப்பட்டது. 3 சிதைநிலைப் படலம் (தோரா. கி. மு. 1500-இன்றுவரை) 1. இடைக்கழக அழிவும் இடைநிலைக்காலமும் (தோரா. கி.மு. 1500-600) சில்லாயிரம் ஆண்டுகளிருந்தபின், இடைக்கழக இருக்கை யாகிய கதவபுரமும் (?) கடலுள் மூழ்கியது. இடைக்கழகத்தைப் புரந்த பாண்டியரும், அக் கழகத்திறுதியி லிருந்த புலவரும் ஐம்பத்தொன்பதின்மர் என இறையனார் அகப் பொருளுரை கூறும். இசைநுணுக்கம், கலி, வியாழமாலை யகவல், வெண்டாளி முதலிய நூல்கள் இடைக்கழகத்தால் இயற்றப்பெற்றன வாகச் சொல்லப்பெறும். இடைக்கழகத்திருந்த நூல்கள் எண்ணாயிரத்தெச்சமென்று, ஒரு செவிமரபுச் செய்தி வழங்கிவருகின்றது. 2. வேத ஆரியர் நாவலம் (இந்தியா) வருகை (தோரா. கி.மு. 2000 - 1500) வடநாவலத்தினின்று படிப்படியாக வடமேற்கிற் சென்று, மேலையாசியா வழியாகவும் வடஆப்பிரிக்கா வழியாகவும் ஐரோப்பா விற்குட் புகுந்து, காண்டினேவியத்தை முட்டித் திரும்பிக் கிரேக்கநாடு வரை பரவி ஆரியராக மாறின இனத்தின் ஒரு கிளை, கிரேக்கத்திற்கும் பழம்பாரசீகத்திற்கும் இடைப்பட்ட ஒரு மொழியைப் பேசிக்கொண்டு முல்லை நாகரிக நிலையில், இடைக் கழக அழிவையடுத்து இந்தியாவிற் குட் புகுந்தது. அக்கிளையினர்க்கு அன்று எழுத்துமில்லை; இலக்கியமு மில்லை. அவர் பல்வேறு சிறுதெய்வ வழிபாட்டினராயும் வேள்விமதத் தினராயும் பல்லூனுண் ணிகளாயும் இருந்தனர். 3. வேதக்காலம் (தோரா. 1500-1000) இந்திய ஆரியர் சிந்துவெளியிற் பரவியபின், பல்வேறு சிறு தெய்வ வழுத்துத் திரட்டாகிய இருக்குவேதம் இயற்றப்பெற்றது. எகர ஒகரக் குறில் இல்லாததும் தென்சொல் விரவியதுமான வேதமொழி, வேத ஆரிய ரின் சிறுபான்மையையும், முன்னோர் மொழி மறப்பையும், பிராகிருதம் என்னும் வடதிரவிட மொழிகளின் செல்வாக்கையும், ஒருங்கே உணர்த்தும். 4. வேதத் தமிழ்ச்சொற்கள் பெயர்ச்சொற்கள் தமிழ் வேதமொழி தமிழ் வேதமொழி அதர் அத்வன் தீவு த்வீப அப்பம் அபூப தும்பரம் உதும்பர அம் (நீர்) அப் துவள் த்வர் அம்பு (நீர்) அம்பு தூண்-தூணம் ஸ்தூண அரவம் ரவ தூணி தூணி அன்னை நநா தூணி த்ரோண ஆணி ஆணி தூதன் தூத ஆம் (நீர்) ஆப் தோள் தோச் ஆயிரம் ஸகஸ்ர நால்-நாலா நாநா இலக்கு லக்ஷ் நாவல் நாவல் உதவி ஊத்தா நாளம் நால உரு-உருவு- ரூப்ப நீல்-நீலம் நீல உருவம் பக்கம் பக்ஷ உலகம் லோக்க படி ப்ரதி கடு-கடுகு- படிமை ப்ரதிமா கடுகம் கட்டுக்க பதம் பத கருமம் கர்மம் பரம் பர கருள் க்ருஷ் பழம் பல கலுழன் கருட பாகம் பாக (bh) கலை கலா பாதை பாத கன்னி கநீ பிண்டம் பிண்ட கால்-காலம் கால மண்டலம் மண்டல குடல் குத மத்து மந்த கும்பம் கும்ப மது, மட்டு மது (dh) குமரன் குமார மந்திரம் மந்த்ர குமுதம் குமுத மயிர் ச்மச்ரு கொட்டம் கோஷ்ட மயில் மயூர கொப்பம் கூப்ப மா (அளவு) மா சமம்-சமர்- சமர மாகம் நாக்க சமரம் மாதம் மாஸ், மாஸ சாமை ச்யாமா மாயை மாயா சாயுங்காலம் ஸாயம் முகம் முக (kh) சாலை சாலா முத்து-முத்தம் முக்தா சுவணம் சுபர்ண மேழம் மேஷ சுள் க்ஷுள்ள மேழகம் மேஷக்கா சூர் ஸூர மோட்டிரம்- சொலவம் ச்லோக்க மோத்திரம் மூத்ர தண்டம் தண்ட வட்டம் வ்ருத்த தயிர் ததி வல, வளை வல தாயம் தாய விரல் வ்ரிஸ் திடம் த்ருட விதை வீஜ-பீஜ திரு ச்ரீ வித்து விந்து திறம் ஸ்திர விந்து பிந்து வினைச்சொற்கள் அகவு ஹ்வே து து (வலுவுறு) அடு, அடை அச் துந்து துத் அரி ஹ்ரு துர தூர் அருந்து அத், அஸ் நடி ந்ருத் அலப்பு லப் நள் ந இய்-இயல் அய் நுந்து நுத் (d) உது உக்ஷ் நை நஸ் உய் ஊஹ் பகு பஜ் (bh) உரு (முளை) ருஹ் படர் பத் (செல்) உள் (ஒள்) உஷ் படு பத் (விழு) ஊர் (ஏறு) ரோஹ் பற பத் கல்-கன் கன் (மா) பிசை பிச் காய் காச் (ஒளிவீசு) பிடு பித் (bh) குரு(சின) க்ருத்(னா) புகு (உண்) புஜ் (bh) சலசல ஜலஜல புரி(விரும்பு) ப்ரி சல்-செல் சல்(உ) பூ (தோன்று) பூ (bh) சாய் சீ பெரு ப்ருஹ் (bh) சார் ச்ரி பொறு ப்ரு, பர் (bh) சாவி சாப் மகிழ் மஹ் சிதை சித் (உ) மசக்கு மிக்ஷ் சுள் சுஷ் மத மத் (களி) செவியுறு ச்ரு மதி மத் சேமம் க்ஷேம மாய் மீ சொலி ஜ்வல் மிதி ம்ரித் (d) தகு தஹ்(ன) விது (நடுங்கு) விஜ் தாவு தாவ் (னா) வியல் வியச் தீ-தீய் தீ (விளங்கு) 5. வேத ஆரியர் தென்னாடு வருகை (தோரா. கி.மு. 1200) ஆரியர்க்கு, பழங்குடி மக்களாகிய திரவிடரை அடிப்படுத்தி என்றும் தாம் உயர்வா யிருக்கவேண்டுமென்று பெருவிருப்ப மிருந்தமையாலும், திரவிடர் தென்னாட்டில் நாகரிகத்திலும் பண்பாட்டிலும் கல்வியிலும் செல்வத்திலும் தலைசிறந்திருந்த மையைச் கேள்வியுற்றதினாலும், வேதஆரியருட் சிலர் தென்னாடு வந்து, தம் வெண்ணிறத்தையும் தம் வேதமொழியின் பொலிவொலி யையும், தமிழரின் ஏமாறுந் தன்மையையும் மதப்பித்தையும், முற்றும் பயன்படுத்திகொண்டு, தம்மை நிலத்தேவர் (பூசுரர்) என்றும், தம் வேதமொழியைத் தேவமொழியென்றும், மூவேந்தரும் நம்புமாறு செய்துவிட்டனர். அக்காலத்தில் அரசன் இட்டது சட்டமாயிருந்ததினாலும், பொதுமக்களின் பழங்குடிப் பேதை மையாலும், தமிழர் உள்ளத்தில் ஆரிய ஏமாற்று எளிதாய்ப் பதிந்து வேரூன்றிவிட்டது. 6. சமற்கிருதவாக்கம் தாம் என்றும் உயர்வாயிருக்கவேண்டுமெனின், இந்திய நாகரிகம் தமதெனக் காட்டுதற்குத் தமக்கென ஓர் இலக்கியம் இருத்தல் வேண்டுமென வுணர்ந்த ஆரியர், தமிழிலக்கியத்தை மொழிபெயர்த்தற்கு, வழக்கற்ற வேதமொழியொடு அக்கால வட்டாரமொழிகளாகிய பிராகிருதங்களையும் தமிழையும் சேர்த்து, சமற்கிருதம் என்னும் அரைச்செயற்கையான இலக்கிய நடைமொழியை அமைத்துக் கொண்டனர். இவ் வமைப்புமுறை என் வடமொழி வரலாறு என்னும் நூலில் விரிவாக விளக்கப் பெறும். சமற்கிருத இலக்கியத் தோற்றமும் வளர்ச்சியும் சமற்கிருதத்தை அமைத்துக்கொண்டபின், தமிழ் ஏட்டெழுத் தைப் பின்பற்றிக் கிரந்த அட்சரம் என்று சொல்லப்படும் நூலெழுத் தையும் அமைத்துக்கொண்டு, முன்பு எழுத்தும் சொல்லும்பற்றிய இலக்கணத்தையும் பின்பு பல்துறை யிலக்கியத்தையும் மொழி பெயர்க்கலாயினர் ஆரியர். வேதத்தின் கிளைகள்போன்ற சாகைகட்குத் தோன்றிய பிராதி சாக்கியங்கட்குப்பின், முதலாவதெழுந்த சமற்கிருத விலக்கணம் ஐந்திர வியாகரணம் ஆகும். இத தமிழகத்திலேயே தோன்றித் தமிழ கத்திலேயே அழிந்தது. இதை இயற்றினவன் இந்திரன் என்பான். அப் பெயர் இயற்பெயராகவும் இருந்திருக்கலாம்; புனைபெயராகவு மிருந்திருக்கலாம். சமற்கிருதம் தேவமொழி என்னும் ஏமாற்றிற் கேற்ப, தேவரரசன் பெயரை வேண்டுமென்றே அந் நூலாசிரியன் பெயராகப் பொருத்தியிருக்கலாம். விண்ணவர் கோமான் விழு நூல் என்று இளங்கோவடிகளும் குறித்தல் காண்க. அகத்தியர் மருத்துவ நூலையும் நாரதர் இசைநூலையும் வட மொழியில் மொழிபெயர்த்ததாகத் தெரிகின்றது. இவ் விருவரும் முறையே அகத்தியம் என்னும் முத்தமிழிலக்கணத்தையும், பஞ்ச பாரதீயம் என்னும் இசைத்தமிழிலக்கணத்தையும், தமிழில் இயற்றினர். இங்ஙனம் ஆரியர் தமிழ்நூ லியற்றியது, ஆரியக் கருத்தைத் தமிழ் நூல்களிற் சிறிதுசிறிதாய்ப் புகுத்தற்கேயன்றி, தமிழை வளர்த்தற்கன்று. பரதம் என்னும் தமிழ் நாடகநூல், பிற்காலத்தில் வட மொழியில் அதே பெயருடன் மொழிபெயர்க்கப்பட்டது. கணியம், ஏரணம் முதலிய பிற அறிவியல்களும் கலைகளும் ஒவ்வொன்றாய் மொழிபெயர்க்கப்பட்டன. இதற்கெல்லாம் சென்ற செலவு தமிழரதே. ஆரியர் தேவர் என்னும் நம்பிக்கையினால், அவரை விருப்பம்போற் செய்யுமாறு விட்டுவிட்டனர் மூவேந்தரும். அகத்தியர் இடைக்கழகத்திற்கும் பாரதக்காலத்திற்கும் இடைப் பட்டவர். அவர் ஒரு கழகத்திலும் இருந்ததில்லை. தொல்காப்பியர் பாரதக்காலத்திற்குப் பிற்பட்டவர். ஆதலால், அகத்தியரும் தொல் காப்பியரும் முறையே தலைக்கழகத்திலும் இடைக்கழகத்திலும் இருந்தனரென்பதும், பின்னவர் முன்னவரின் மாணவர் என்பதும், கட்டுக்கதைகளே. 7. சமற்கிருதத்தின் பின்மை வேதமொழியும் சமற்கிருதமும் ஒன்றேயென்றும், மேலை யாரிய மொழிகட்கெல்லாம் சமற்கிருதமே தாய் அல்லது தாய்க் கடுத்த நிலையென்றும், இரு தவறான கருத்துகள் மேனாட் டறிஞரிடை யிருந்து வருகின்றன. ஐரோப்பிய ஆரியமொழிக் குடும்பங்கட்குள், வடமேற் கோடி யிலுள்ள தியூத்தானியம் மிக முந்தியதாயும், இலத்தீனம் அதற்குப் பிந்தியதாயும், கிரேக்கம் இலத்தீனுக்குப் பிந்தியதாயும் சமற்கிருதம் கிரேக்கத்திற்கும் பிந்தியதாயு முண்மையை, அவற்றின் சொற்றிரிபே காட்டுகின்றது. 8. ஆரியமொழிகளின் படிமுறைத் திரிபு தமிழ் தியூத்தானியம் இலத்தீனம் கிரேக்கம் சமற்கிருதம் அதோள் திதெர் - - தத்ர அம்மை அம்மா,மம்மா - - அம்பா அல்-அன் அன் - அன் ந (எதிர்மறை முன்னொட்டு) இதோள் ஹிதெர் கித்ர - அத்ர இரு ஆர், இஸ் எஸ் எஸ் அஸ் இரும்பு இரன்,ஐயெர்ன் ஈரிஸ் - அயஸ் இல் (உள்) இன் இன் என் இந்த்தெர் - அந்த்தர் (உ.த.) தமிழ் தியூத்தானியம் இலத்தீனம் கிரேக்கம் சமற்கிருதம் இலகு- இலக்கம் லைற்(று) லக்ஸ் லியூக்கோஸ் ருச்(சு) உகை அ(க்)க mnfh(g) mnfh(g) அஜ் (செலுத்து) எதோள் வ்ஹிதெர் - - கத்ர எல்லா ஹல்லோ - - அரே, ரே ஏர் ஏர் அர் - - கணு க்னீ bfD(g) bfhD(g) ஜானு கத்து-(கத்தி) கத் - - க்ருத் காண் கான்,(க்)னா, (¡)ndh(g) க்னோ (g) ஜ்ஞா க்(னோ) கிழ (ம்) - - bfuh‹(g) ஜரா ஜெரான் குந்து ஸ்குவாத் செத் - ஷத் கும் - கும் ஸிம் ஸம் துளை(வாசல்) தோர் - துர த்வார் துருத்து த்ரஸ்ற்(று) த்ருதோ - தூத் துருவு த்ரு த்ரான்ஸ் - தீர் நாவாய் - நாவிஸ் நௌஸ் நௌ நூன்-நூ-நீ து,தௌ து தூ த்வம் பார் - பரெ - பஸ் பிறங்கு ப்ரைற்(று) - - ப்ரஜ் (bh) பொள் போர் (b) பொர் (f) பரொஸ் - (உழு) பொறு bg®,ng®(b) பெர் (f) பெர் (ph) பர் (bh) மடி மொர்த்(சாவு) மொரி - ம்ரு மாது-மாதர் மொதொர் மாதெர் மெதர் மாத்ரு (பெண்) (தாய்) (தாய்) (தாய்) (தாய்) முழுகு - bk®F(g) - மஜ்ஜ் முன்(கருது) முன் - - மன் மெது ஸ்மூத் - - ம்ருது வலி - வலி - - வலம் - வேலர் - பல (b) விடலை வெலெ வித்துல இத்தலொஸ் வத்ஸ விழி(அறி) வித் விதெ - வித் வெஃகு - பேக்கு(க) bg¡(g) - - பிக்ஷ் 9. பாரதக்காலம் (தோரா. கி.மு. 1000) இந்திய வரலாற்றிலும் தமிழ்வரலாற்றிலும் பாரதக்காலம் ஓர் எல்லைக்குறியாகும். ஐம்பாண்டவருள் ஒருவனான அருச்சுனன் திரு நீராட்டிற்காகத் தென்னாடுவந்து (சித்திராங்கத) பாண்டியன் மகளை மணந்தான் என்றும், அன்று பாண்டியன் தலைநகராயிருந்தது மணலூர் என்றும், பாரதம் கூறும். இதனால், பாண்டியர் குடியின் தொன்மை முன்மையும் வைகை மதுரையின் பின்மையும் அறியப் படும். பாரதக்காலத்தவரான வியாசர் ஆரியவேதத்தை நாலாக வகுத் தார் என்னும் செய்தியும், தொல்காப்பியத்திலுள்ள பனைக்கொடிக் குறிப்பும், தொல்காப்பியர் காலத்தை அறியப் பெரிதும் துணை செய்கின்றன. பாரதப் போரிற் சோழபாண்டியர் பாண்டவர்க்குத் துணை நின்று பொருததும், உதியஞ்சேரலாதன் என்னும் சேரவேந்தன் நடுநிலை தாங்கி, இருபடைகட்கும் பதினெண் நாளும் சோறு வழங்கிப் பெருஞ்சோற்று என்னும் சிறப்படைமொழி பெற்றதும், மூவேந்தர்க்கும் சிறந்த வரலாற்றுக் குறிப்பாவதுடன், தமிழரின் போர்மறத்தையும் நாகரிகப் பண்பாட்டையும் விளக்குவனவாகவும் உள்ளன. 10. தொல்காப்பியம் (தோரா. கி.மு. 7ஆம் நூற்றாண்டு) பாரதக் காலத்திற்குப் பிற்பட்டவரும் ஐந்திர விலக்கணத்தை நன்கு கற்றவரும் பாணினிக்கு முற்பட்டவருமான தொல்காப்பியர், கி.மு. 7ஆம் நூற்றாண்டுபோல், சேரநாட்டின் தென்கோடியில் வாழ்ந்திருந்து, தமிழிலக்கண விலக்கியங்களைக் கற்றபின், பண்டாரகர் உ. வே. சாமிநாதையர்போற் பல செந்தமிழ் முந்துநூல் கண்டு முறையாக ஆய்ந்து, தம் பெயரால் தொல்காப்பியம் என ஒரு பிண்டநூலைத் தொகுத்து, நிலந்தரு திருவின் பாண்டியன் அவைக் களத்தில், (அக்காலத்துக் கழகமின்மையால்) திருவதங்கோட்டில் நான்மறையில் முற்றத் துறைபோயிருந்த ஓர் ஆரியத் தமிழ்ப்புலவர் தலைமையில், அரங்கேற்றினார். தொல்காப்பியத்திற் பின்வருமாறு சில குறைபாடுகள் உள்ளன. (1) வேண்டாத ஆரியச் சொல்லாட்சி (2) தமிழுக்கு மாறான ஆரியக் கருத்துகளைப் புகுத்தல். (3) தென்சொற்களை வழுப்படப் புணர்த்தல். (4) சில இலக்கண அமைதிகளைச் செவ்வையாய் விளக்காமை. (5) தென்சொல் வளத்தை அறியாமை. (6) சில தென்சொற்களை வடமொழிவடிவில் ஆளுதல். (7) எளிய சொற்களையும் அருஞ்சொல்லாகக் காட்டுதல். இவற்றின் விரிவையும் விளக்கத்தையும் என் தொல்காப்பிய விளக்கம் என்னும் நூலிற் காண்க. பாரதக் காலத்திற்கும் தொல்காப்பியர் காலத்திற்கும் இடைப் பட்டே மாபுராணம், பூதபுராணம் முதலிய தமிழ் இலக்கண நூல்கள் இயற்றப்பட்டிருத்தல் வேண்டும். பாணினீயம் (கி. மு. 5ஆம் நூற்.) ஐந்திரம் என்னும் வடமொழி யிலக்கணத்தையும் தொல் காப்பியம் என்னும் தமிழிலக்கணத்தையும் பெரிதும் துணைக் கொண்டு, கி.மு. 5ஆம் நூற்றாண்டில், பாணினி என்னும் வடமொழி யிலக்கணியர், எழுத்தும் சொல்லும்பற்றிய அஷ்டாத்யாயீ என்னும் எண்ணதிகார வடமொழி யிலக்கணத்தை, குன்றக்கூறல் மயங்க வைத்தல் என்னும் இருவகைக் குற்றங்கள் நிரம்ப, அளவிறந்து சுருங்கக் கூறி யியற்றி, தம் நூலைப் பெருமைப்படுத்துவதற்குச் சில வலக்காரங்களையும் கையாண்டார். 11. கடைக்கழகம் (கி.மு. 5ஆம் நூற். முதல் கி.பி. 4ஆம் நூற். வரை) கி. மு. 5ஆம் நூற்றாண்டில், வைகைக்கரை மதுரையில், கடைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது. அதைப் புரந்த பாண்டியரும் அதன் இறுதியிலிருந்த புலவரும் நாற்பத்தொன்பதின்மர் என்று, இறையனார் அகப்பொருளுரை கூறும். ஆரியம் வர வர ஆழ வேரூன்றி, மூவேந்தரும் ஆரியப் பித்தராக மாறி ஆரிய வேள்விகளை இயற்றத் தலைப்பட்டுவிட்டதனால், பல்வேள்விச்சாலை முது குடுமிப் பெருவழுதி காலத்திலேயே கழகத்தைக் கலைக்க அடி கோலப்பட்டு, அடுத்த தலைமுறைப் பாண்டியனாகிய உக்கிரப் பெருவழுதி காலத்தில் ஆரியச்சூழ்ச்சி நிறைவேறிவிட்டது. கடைக்கழக இலக்கியம் சிற்றிசை, பேரிசை, மதிவாணனார் நாடகத் தமிழ்நூல், மணிமேகலை முதலிய தனிநூல்களும், பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும் ஆகிய தொகைநூல்களும், கடைக்கழகத்தார் இயற்றின வாகும். திருக்குறள் கடைக்கழக உறுப்பினரல்லாத திருவள்ளுவரால் இயற்றப்பெற்றது. அது ஆரிய ஏமாற்றைக் கண்டித்தலின், கடைக் கழக ஒப்பம் பெற்றிலது. திருக்குறளொழிந்த பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள், களவழி நாற்பது ஒன்றே கடைக்கழகக் காலத்ததாகத் தெரிகின்றது; ஏனைய வெல்லாம் பிந்தியவே. 12. கடைக்கழகத்தின்பின் தமிழ் சிதைந்த வகைகள் i. மொழிச் சிதைவு (1) வேண்டா வடசொற் கலப்பு. (2) சேரநாட்டுத் தமிழ் படிப்படியாய்த் திரிந்து வேறு மொழியாய்ப் பிரிந்து போனமை. (3) தமிழ் தலைமையிழந்து ஒரு கிளைமொழிபோற் கருதப்பட்டமை. (4) தமிழ் கோயில் வழிபாட்டிற்குத் தகாத மொழியென்று தள்ளப் பட்டமை. (5) தமிழ் தமிழராலும் தாழ்த்தவும் வெறுக்கவும்பட்டமை. இன்று பெரும்பாலார் தமிழ்ப்பெயரை விரும்பாமையும், சோறு என்று சொல்ல நாணுதலும் காண்க. (6) தமிழர்க்குத் தாய்மொழி யுணர்ச்சி அற்றமை. (7) நீண்டகாலமாகத் தமிழுக்கு மேல்வளர்ச்சியின்மை. (8) வடசொற் கலந்த தமிழ்க் கல்வெட்டும் தனி வடமொழிக் கல் வெட்டும் தோன்றியமை. (9) தமிழ் உரைநடை மணிப்பவழ நடையாக மாறியமை. (10) பல்வகை வழுக்களும் மலிந்த தமிழ்நடை கல்வெட்டுகளிலும் ஆவணங்களிலும் ஆளப்பெற்றமை. ii. கலைச்சிதைவு இசை, நாடகம், கணியம், மருத்துவம் முதலிய தமிழ்க் கலை களின் சிறந்த முறைகள் அழியுண்டுபோயின. iii. நூலழிவு முக்கழகத்திற்கும் முந்திய நூல்களும், முதலிரு கழகநூல் களும் கடைக்கழக நூல்களிற் பெரும்பாலனவும் இறந்துபட்டன. இவை பல்லாயிரக்கணக்கின. ஏரணம் உருவம் யோகம் இசைகணக் கிரதம் சாலம் தாரணம் மறமே சந்தம் தம்பநீர் நிலமும் லோகம் மாரணம் பொருள்என் றின்ன மானநூல் யாவும் வாரி வாரணம் கொண்ட தந்தோ வழிவழிப் பெயரும் மாள. கணக்கற்ற தமிழ்நூல்கள் கற்பாரும் காப்பாருமின்றி, காவிரிப் பதினெட்டாம் பெருக்கில் கடந்த ஆயிரம் ஆண்டுக்காலமாக, ஆண்டு தோறும் எறியப்பட்டு வந்திருக்கின்றன. இந் நூற்றாண்டுத் தொடக்கத்தில், பாலவநத்தம் வேள் பாண்டித்துரைத் தேவர் தொகுத்துவைத்திருந்த ஆயிரக்கணக்கான பண்டையேட்டுச் சுவடிகளும், மதுரைத் தமிழ்க்கழகக் கட்டடத்தில் தீக்கிரையாயின. iv. நூலிழிபு கலையும் அறிவியலும் பற்றாது குலமும் புகழும் காமமுமே பற்றிய நூல்கள் பிற்காலத்தெழுந்தன. v. செய்யுளிழிபு (1) நேர்பு நிரைபு என்னும் உரியசைகள் வழக்கற்றமை. (2) பாவகை குன்றிப் பாவினம் பயின்றமை. (3) வடசொற் றொகை வரவர மிக்கமை. (4) பொருட்சிறப்பினும் சொற்சிறப்பே சிறந்தமை. (5) சிறப்புப்பொருட் சொற்கள் மோனையெதுகைபற்றிப் பொதுப் பொருளில் ஆளப்பெற்றமை. (6) இயற்கையையும் உண்மையையும் கற்பனை மேற்கொண் டமை. செய்யுளில் உயர்வுப்பன்மை புக்கதும் இழிபே. vi. இலக்கணக் கேடு (1) முத்தமிழாயிருந்த இலக்கணம் இயல் என்னும் ஒரு தமிழாகக்குன்றல். (2) பிண்டமாயிருந்த இயற்றமிழிலக்கணமும் எழுத்தும் சொல்லுமாகக் குன்றல். (3) வடமொழியிலக்கணத்தை வலிந்தும் நலிந்தும் தமிழுக்குப் பொருத்தி வீரசோழியம், பிரயோகவிவேகம் முதலிய புன்னூல்கள் எழுந்தமை. (4) எழுத்துகட்கும் பாக்கட்கும் தெய்வமும் குலமும் வகுக்கப் பட்டமை. பன்னீ ருயிரெழுத்துகளையும் நான்முகன் (பிரமன்) படைத் தான், பதினெண் மெய்யெழுத்துகளையும் சிவன், திருமால், முருகன், வேந்தன் (இந்திரன்), கதிரவன், திங்கள், குபேரன், கூற்றவன், வருணன் ஆகிய ஒன்பதின்மரும் முறையே இவ்விரண்டாகப் படைத்தனர். நான்முகன், சிவன், திருமால், முருகன் ஆகிய நால்வரும் படைத்த எழுத்துகள் பிராமணருக்குரியவை; வேந்தனும் கதிரவனும் திங்களும் படைத்தவை அரசர்க்குரியவை; குபேரனும் வருணனும் படைத்தவை வணிகர்க்குரியவை; கூற்றுவன் படைத்த இரண்டும் சூத்திரர் என்னும் வேளாளர்க்குரியவை. அந்தணர் என்னும் பிராமணரை வெண்பாவிலும், அரசரை ஆசிரியப்பாவிலும், வணிகரைக் கலிப்பாவிலும், வேளாளரை வஞ்சிப்பாவிலும் பாடவேண்டும். இவை பாட்டிய லிலக்கணம். (5) குலத்திற்கேற்பக் கலம்பகச்செய்யுள் தொகையும், ஓலை நறுக்களவும், நாடகச்சுவையும் நாற்பொருளும் வகுக்கப் பட்டமை. கலம்பகம் என்னும் பனுவலைப் பாடும்போது, தேவர்க்கு 100 செய்யுளும், பிராமணருக்கு 95 செய்யுளும், அரசருக்கு 90 செய் யுளும், அமைச்சருக்கு 70 செய்யுளும், வணிகர்க்கு 50 செய்யுளும், வேளாளர்க்கு 30 செய்யுளும் அமைத்துப் பாடுதல் வேண்டும். பாட்டெழுதும் ஓலைநறுக்கின் அளவு, பிராமணருக்க 24 விரல், அரசருக்கு 20 விரல், வணிகருக்கு 16 விரல், வேளாளருக்கு 12 விரல். நாடகத்தலைவன் குலத்திற்கேற்ப நாடகப்பொருளும் சுவையும் பின்வருமாறு அமைதல்வேண்டும். தலைவன் பொருள் சுவை பிராமணன் அறம்பொருளின்பம்வீடு ஒன்பான் சுவை அரசன் அறம்பொருளின்பம் இளிவரலும் சமநிலை யும் ஒழிந்தவை வணிகன் அறம்பொருள் சமநிலை ஒழிந்தவை வேளாளன் அறம் பெருமிதமும் சம நிலையும் ஒழிந்தவை இங்ஙனம், இடைக்காலத்தெழுந்த பாட்டியல் நூல்களும் நாடக நூல்களும் வரையறுக்கின்றன. (6) செய்யுள்நிலத்தை ஏழாகவும் அவற்றுள் ஒன்றான பாட்டை எண்வனப்பாகவும் வகுத்த பண்டைத் தமிழ் முறை போய், பெருங் காப்பியம் சிறுகாப்பியம் என்றும் தொண்ணூற்றாறு வகைப் பனுவல் என்றும் ஒருமருங்கு வடநூல் தழுவிய பாகுபாடே வழங்கி வருகின்றமை. (7) தொல்காப்பியத்திற் கூறப்பட்ட இருபத்தாறு செய்யு ளுறுப்புகள் ஆறாகக் குறைந்தமை. (8) தமிழில் இல்லாததும் அதற்கு ஏற்காததுமான இடுகுறிப் பெயரை, வடநூன்முறை தழுவித் தமிழுக்கும் வகுத்தமை. (9) பல இலக்கணக் குறியீடுகளும் செய்யுட்பெயர்களும் பனுவற்பெயர்களும் வடசொற்களாய் வழங்கத் தலைப் பட்டமை. இலக்கணக் குறியீடுகள் முதனிலை-பகுதி, ஈறு-விகுதி, புணர்ச்சி-சந்தி, திரிபு-விகாரம், கிளவி-பதம், பெயர்-நாமம், வினைமுதல் (எழுவாய்)-கர்த்தா, மடக்கு-யமகம். செய்யுட்பெயர்கள் பா (செய்யுள்)-கவி, பாட்டு-காதை, மணடிலம்-விருத்தம், இதழ்குவி பா-ஓட்டியம், இதழகல் பா-நிரோட்டியம், ஈறுதொடங்கி-அந்தாதி. பனுவற்பெயர்கள் பனுவல்-பிரபந்தம், வனப்பு-காவியம், ஐந்து-பஞ்சும், நூறு (பதிற்றுப்பத்து)-சதகம். கடுமை, இனிமை, மிறை, அகலம்-ஆசு, மதுரம், சித்திரம், வித்தார ம். மதுரம் சித்திரம் என்பன கடன்கொண்ட தென்சொல்லெ. (10) அன்றோ என்னும் ஒன்றன்பாற் சொல்லும், அல்ல, அல்லவா என்னும் பலவின்பாற் சொற்களும், மூவிட ஐம்பாற் பொதுவாய் வழங்கிவருகை. vii சொற்சிதைவு (1) சொல்லிறப்பு இறந்துபட்ட சொற்கள் பல்லாயிரக் கணக்கின. (2) சொல்வழக்கழிவு அறம் (தருமம்), ஆவு (பசு), இசிவு (ஜன்னி), ஈளை (காசம்), உகிர் (நகம்), ஊர்தி (வாகனம்), ஐயம் (சந்தேகம்), ஓதிமம் (அன்னம்), கலங்கரை விளக்கம் (Light-house), கழுவாய் (பிராயச் சித்தம்), கூற்றுவன்(யமன்), சுடலை (மயானம்), திருச்சுற்று (பிராகாரம்), திரையல்(பீடா), நீகான் (மாலுமி), பலகணி (ஜன்னல்), பொழுது வணங்கி (சூரியகாந்தி), மறை (வேதம்), முதுசொம் (பிதிரார்ஜிதம்), வலக்காரம்(தந்திரம்), வாய்நேர்தல்(வாக்களித்தல்) முதலிய நூற்றுக்கணக்கான சொற்கள் வழக்கிறந்துள்ளன. (3) சொற்பொருளிழப்பு எ-டு: உயிர்மெய் (பிராணி), தோள் (புஜம்) (4) சொல்லிழிபு எ-டு: சோறு, தண்ணீர், பருப்புக்குழம்பு, மிளகுநீர். இவற்றைத் தமிழ்ப்புலவரும் சொல்ல நாணி, சாதம், ஜலம், சாம்பார், ரசம் என்னும் சொற்களையே ஆளுதல் காண்க. (5) சொற்றிரிபு எ-டு: செவ்வந்தி-செவந்தி-சாமந்தி-ஜாமந்தி. viii. எழுத்துத்திரிபு ஒலிமாற்றமும் வரிமாற்றமும். ix. தமிழ்க் கல்விக்குறைவு x. தமிழ்ப்புலவர்க்குப் பிழைப்பின்மை xi. தமிழொழிப்புத் திட்டங்கள் மும்மொழிக் கல்வித்திட்டமும் வண்ணனை மொழிநூற் கொள்கையும். 4 மறைநிலைப் படலம் (தோரா. கி. மு. 1000-இன்றுவரை) குழையும் குச்சும் ஒடிக்கப்பட்டும், கிளையும் கொம்பும் கவையும் அடியும் வெட்டுண்டும், மீண்டும் வேரினின்றும் தூரினின்றும் தளிர்த்துத் தழைத்தோங்கும் மரம்போன்று இருக்கும் தமிழை, அடிவரை சிதைத்த பின்பும் அரை அடியோடு மறைத் தற்குப் பல்வேறு வழிகளைக் கையாண்டு வருகின்றனர் தமிழின் பிறவிப் பகைவரான ஆரியர். (1) தமிழ்மறைப்பு பேரன் பாட்டனைப் பெற்றான் என்னும் முறையில், சமற் கிருதத்தினின்று பிராகிருதமும், பிராகிருதத்தினின்று தமிழும் வந்ததாகக் கூறப்படுகின்றது. ஒருசார் வடமொழியாசிரியர் தமிழை ஒரு பிராகிருதமாகவும் குறித்திலர். 12ஆம் நூற்றாண்டிற் பொய்யாமொழிப் புலவர் மதுரை சென்று தமிழ்க்கழகத்தைப் புதுப்பிக்க முயன்றும், பயன்பட வில்லை. எழுத்தாலத்தி (அக்கராலத்தி) என்னும் வழிபாட்டுவகையில், தமிழுக்கேற்ப 30 விளக்கேற்றப்பெறாது, வடமொழிக்கேற்ப 51 விளக்கேற்றப்படுகின்றன. (2) தமிழ்நாடு மறைப்பு நாவலம் பொழிலைச் சம்புத்தீவம், பரதகண்டம், இந்துதேசம் என் றும், திரவிடமாநிலத்தைப் பரதகண்டத்தின் தென்கோடி மண்டலம் என்றும், சேரநாட்டைப் பரசுராமச்சேத்திரம் என்றும் கூறித் தமிழ்நாடு முற்றும் மறைக்கப்பட்டுள்ளது. குமரிநாட்டில் மக்களிருந்ததில்லை யென்பதும் தமிழ்நாடு மறைப்பே. (3) தமிழ் இனமறைப்பு வேதவொழுக்கத்தைக் கைக்கொள்ளாமையால் விலக்கப் பட்ட சத்திரிய வகுப்புகளுள் ஒன்றாக, திரவிட இனத்தைக் குறித் துள்ளார் மனுதரும நூலாசிரியர் (10: 43: 44). தமிழ வேந்தரைச் சத்திரியர் என்று கூறி, வேதவேள்வி இயற்றுவித்ததும், வர்மன் என்னும் பெயரீறு கொள்ளவைத்ததும் ஓர் ஆரிய ஏமாற்றே. தமிழ வணிகரை வைசியர் என்று கூறிப் பூணூல் அணிவித்ததும், குப்தன் என்னும் பெயரீறு கொள்ளவைத்ததும், இத்தகையதே. ஆத்திரேலியப் போலியர், நீகரோப் போலியர், நண்ணிலக் கடற்கரையர், காண்டினேவியர் முதலிய அறுவகையினம் சேர்ந்த கலவையினத்தார் தமிழரென்று, ஒரு தென்னிந்திய வரலாற்று நூல் கூறுகின்றது. (4) தமிழ்நாகரிக மறைப்பு தொன்னூல்களான தென்னூல்களெல்லாம் வடமொழியில் மொழிபெயர்க்கப்பட்டபின், அழிந்தும் அழிக்கப்பட்டும் போயின. அதனால், இந்திய நாகரிகம் பெரும்பாலும் ஆரியரதென்றும், அதன் ஒரு சிறுகூறே தமிழரது அல்லது திரவிடரது என்றும் சொல்லப் படுகின்றது. (5) தமிழ்க்கலை மறைப்பு இந்தியாவில் முதன்முதல் தோன்றியது சாமவேத இசைக் கோவை என்பதும், தமிழிசையைக் கருநாடக சங்கீதம் என்றும் தமிழ் நடனத்தைப் பரதநாட்டியம் என்றும் கூறுவதும், கலை மறைப்பாம். (6) தமிழ் முதனூல் மறைப்பு அகத்தியத்தைத் தமிழ் முதனூல் என்பதும், பிராதி சாக்கியங் களிலும் பாணினீயத்திலும் தமிழிலக்கண முன்னூல்கள் குறிக்கப் பெறாமையும், தமிழ் முதனூல் மறைப்பாம். முப்பால் என்பது திரிவர்க்கம் என்பதன் மொழிபெயர்ப் பென்றும், அறம்பொருளின்பம் வீடென்பது தர்மார்த்த காம மோட்சம் என்பதன் மொழிபெயர்ப்பென்றும், திருக்குறளின் அறத்துப்பால் தரும சாத்திரத்தையும் பொருட்பால் அருத்த சாத்திரத்தையும் காமத்துப்பால் காம சூத்திரத்தையும் தழுவினவை யென்றும், கூறுவதும் முதனூல் மறைப்பே. இனி, பெரியபுராணம் உபமன்யு பக்தவிலாஸத்தையும், திரு விளையாடற்புராணம் ஆலாஸ்ய மான்மியத்தையும், சிவஞான போதம் என்னும் மெய்கண்டான் நூல் ரௌரவாகமத்தின் ஈற்றிலுள்ள மொழி பெயர்ப்பையும், முதனூலாகக் கொண்டவை யென்று கூறுவது, நெஞ்சழுத்தமும் துணிச்சலும் மிக்க முதனூல் மறைப்பென வறிக. மெய்கண்டான் நூலின் முதன்மையைப்பற்றி, ஏற்கெனவே மறைமலையடிகளும், கா. சுப்பிரமணியப் பிள்ளையும் வரைந் துள்ள குறிப்புகளைத் தழுவி, ம. பாலசுப்பிரமணிய முதலியார் இயற்றியுள்ள சிவஞான போதம் முழுமுதனூலே என்னும் தலை சிறந்த மறுப்பு நூலைப் பார்க்க. இனி, ஸ்ரீவல்லப என்னும் ஆரியரே திருவள்ளுவர் என்பது, முதனூலாசிரியன் மறைப்பாம். (7) தமிழ்த்தெய்வ மறைப்பு முருகன், மாயோன் (திருமால்), காளி, வேந்தன், வாரணன், சாத்தன் என்னும் தமிழ்த்தெய்வங்கள், சுப்பிரமணியன், விஷ்ணு (கதிரவன்), துர்க்கை, இந்திரன், வருணன், சாத்தா என்னும் ஆரியத் தெய்வங்களே என்பது, தமிழ்த் தெய்வமறைப்பாம். (8) தமிழர் சமய மறைப்பு இருவேறு தமிழச் சமயங்களாயிருந்த சிவநெறியையும் திருமால் நெறியையும் ஆரிய மதமாகிய பிரமநெறியோ டிணைத்து இந்து (ஹிந்து) மதம் எனப் பெயர் கொடுத்தும்; பிரமன், திருமால் (விஷ்ணு), சிவன் ஆகிய மூவரும் முறையே முத்தொழிலைச் செய்யும் முத்திருமேனியர் (திரிமூர்த்திகள்) என்று கூறியும்; முழுமுதற் கடவுள் யார் என்னும் வினாபற்றிச் சிவனெறியாரையும் திருமால் நெறி யாரையும் முட்டவைத்தது தமிழர் சமயமறைப்பாம். (9) தேவாரா மறைப்பு சுந்தர மூர்த்தி நாயனார் காலத்திற்குப்பின், மூவர் தேவாரத்தை யும் தொகுத்து அவை வழங்காதபடி தில்லையம்பலத்தில் ஓர் அறைக்குட் பூட்டிவைத்துச் சிதல் அரிக்கவிட்டதும், எஞ்சிய ஏடுகளையும் எவரும் எடுக்காதபடி இயன்றவரை தடுத்ததும், திருமுறைகண்ட புராணத்தால் தெரிந்துகொள்க. (10) பொருளிலக்கண மறைப்பு பொருளிலக்கணம் பாட்டியலே என்றும், அது பிறமொழி களிலும் உள்ளதே என்றும், கூறுவது பொருளிலக்கண மறைப்பாம். (11) தமிழ்ச்சொன் மறைப்பு சென்னை பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலியில், ஆயிரக் கணக்கான தென்சொற்கள் விடப்பட்டிருப்பதும், தமிழின் அடிப் படைச் சொற்களையெல்லாம் வடசொல்லென்று காட்டியிருப் பதும், தமிழ்ச்சொன் மறைப்பாம். குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும் (புறம். 33) என்னும் பாடத்தைப் பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும் என்றும், முட்டிபுகும் பார்ப்பார் (கம்பர் தனிப்பாடல்) என்னும் பாடத்தை இட்டமுடன் பார்ப்பார் என்றும் மாற்றியதும் சொன்மறைப்பே. (12) தமிழ்ச் சொற்பொருள் மறைப்பு சிவம் என்பது மங்கலம் என்று பொருள்படுவதென்றும், முருகன் என்பது சேவற்கொடியோன் என்று பொருள்படுவ தென்றும்,கூறுவது சொற்பொருள் மறைப்பாம். (13) தமிழ்க் கருத்து மறைப்பு இயல்புடைய மூவர் என்பார் பிரமசரியம், வானப்பிரத்தம், சந்நியாசம் என்னும் முந்நிலைப்பட்டவர் என்றும், பிதிரராவார் (தென்புலத்தார்) படைப்புக்காலத்துப் பிரமனாற் படைக்கப்பட்ட ஒரு தேவ வகுப்பார் என்றும், பரிமேலழகர் கூறுவது தமிழ்க் கருத்து மறைப்பாம். (14) தமிழ் எழுத்து மறைப்பு தமிழ் ஏட்டெழுத்து பிராமியெழுத்தினின்று திரிந்ததென்றும், கிரந்தவெழுத்தினின்று தோன்றியதென்றும், கூறுவது தமிழ் எழுத்து மறைப்பாம். (15) முக்கழக மறைப்பு தலையிடைகடையாகிய முக்கழகமும் பாண்டிநாட்டிலிருந்த தில்லையென்றும், தமிழ்நாட்டிலிருந்த கழகமெல்லாம் கி.பி. 9ஆம் நூற்றாண்டில் மதுரையில் தோன்றிய சமண சங்கமேயென்றும், கூறுவது முக்கழக மறைப்பாம். (16) தமிழ் வரலாற்று மறைப்பு தமிழர் கிரேக்க நாட்டினின்று வந்தவரென்றும், அவர் தமிழ் நாட்டு வரலாறு கி.மு. 3ஆம் நூற்றண்டினின்றே தொடங்குவ தென்றும், இந்திய வரலாற்றிற்கெல்லாம் அடிப்படை ஆரிய வேதமேயென்றும், கூறுவது தமிழ் வரலாற்று மறைப்பாம். 5 கிளர்நிலைப் படலம் (கி.மு. 100-இன்றுவரை) (1) திருவள்ளுவர் (கி.மு. முதல் நூற்.) திருவள்ளுவர், ஆரியப் பல்சிறு தெய்வ வழிபாட்டை நீக்கிக் கடவுள் வழிபாட்டை நிறுவியும், அருள்நிறைந்த துறவியரே அந்தணர் என்று வரையறுத்தும், குலத்திற்கேற்பத் தண்டனை கூறும் ஆரியமுறையை அகற்றி நடுநிலை நயன்மை நாட்டியும், தமிழ் பண்பாட்டைக் கிளர்வித்தார். (2) நக்கீரர் (கி.பி.2ஆம் நூற்.) நக்கீரர், ஆரியம் நன்று, தமிழ்தீது என வுரைத்த குயக் கொண்டானை அங்கதம் பாடிச் சாவித்து, பின்பு பிறர் வேண்டு கோட்கிணங்கி அவனை உயிர்ப்பித்து, தமிழின் உயர்வை மெய்ப் பித்துக் காட்டினார். (3) பரஞ்சோதி முனிவர் (16ஆம் நூற்.) பரஞ்சோதி முனிவர், தம் திருவிளையாடற் புராணத்தில், கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமி ழேனை மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணி டைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ என்று பாடித் தமிழிலக்கண வுயர்வை எடுத்துக்கூறினார். (4) சிவஞான முனிவர் (18ஆம் நூற்.) வடமொழி உயர்வென்றும் தமிழ் தாழ்வென்றும் கருதப்பட்ட காலத்திலும் இடத்திலும் இருந்துகொண்டு, தம் ஆழ்ந்த தென் மொழி வடமொழிப் புலமையாலும், அரிய இலக்கணவாராய்ச் சியாலும், செய்யுள் வன்மையாலும், தருக்க வாற்றலாலும், தமிழ் வடமொழிக்கு எள்ளளவும் இளைத்ததன்றென நிறுவியர் மாதவச் சிவனான முனிவராவர். (5) சுந்தரம்பிள்ளை (19ஆம் நூற்.) சுந்தரம்பிள்ளை தம் மனோன்மணீயத்திற் பின்வருமாறு தமிழை ஆரியத்தோடுறழ்ந்து, ஆரியச்செருக்கை அடக்கினார். தமிழ்த் தெய்வ வணக்கம் தரவு - 2 பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் னிருந்தபடி யிருப்பதுபோல் கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமுந்துளுவும் உன்னுதரத் துதித்தெழுந்தே யொன்றுபல வாயிடினும் ஆரியம்போ லுலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே. தாழிசை-3 சதுர்முறையா ரியம்வருமுன் சகமுழுது நினதாயின் முதுமொழி நீ யனாதியென மொழிகுவதும் வியப்பாமே. தாழிசை-10 பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையே. தாழிசை-11 வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள் உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக் கொருநீதி. தாழிசை - 12 மனங்கரைத்து மலங்கெடுக்கும் வாசகத்தில் மாண்டோர்கள் கனஞ்சடையென் றுருவேற்றிக் கண்மூடிக் கதறுவரோ. (6) பரிதிமாற் கலைஞன் (20ஆம் நூற்.) சூரிய நாராயண சாத்திரியார் தம் பெயரைப் பரிதிமாற் கலைஞ ன் என்று மாற்றி, தனித்தமிழுக்கு வித்தூன்றினார். (7) பா.வே. மாணிக்க நாயகர் தம் நுண்மாண் நுழைபுலத்தாலும் பன்மாண் பொறிவினைப் பயிற்சியாலும், தமிழ் நெடுங்கணக்கை ஆழ்ந்தாய்ந்து தமிழே உலக முதன் மொழியென முதன்முதற் கண்டவரும், அதை அஞ்சாது எங்கும் எடுத்து விளக்கிய தண்டமிழ்த்தறுகண்ணாளரும் பா.வே. மாணிக்க நாயகரே. (8) சீநிவாசையங்கார் (P.T.) தமிழர் தென்னாட்டுப் பழங்குடி மக்களே என்று மறுக் கொணாத சான்று காட்டி, ஆங்கிலத்திற் சிறுநூலும் பெருநூலும் முதன் முதலாக வரைந்தவர், சென்னைப் பல்கலைக்கழக முன்னை வரலாற்றுத் துணைப்பேராசிரியர் பி.தி.சீநிவாசையங்கார் ஆவர். (9) கிருட்டிணசாமி ஐயங்கார் (S.) அயலாரும் தமிழ்ப்பகைவரும் வையாபுரிப்பிள்ளை போன்ற கொண்டான்மாரும் கழகம் என்பதே இருந்ததில்லை யென்று உரத்துக் கூறிய காலத்தில், கடைக்கழக வுண்மையைக் கடை வள்ளல் காலம் என்னும் அரிய ஆராய்ச்சி நூலால் ஆணித்தரமான சான்று காட்டி நிறுவியவர், சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியரா யிருந்த கிருட்டிணசாமி ஐயங்காரே. (10) சேயைங்கார் (T.) தமிழரின் தென்னாட்டுப் பழங்குடிமையையும், தமிழின் பெருமையையும், தக்க சான்று காட்டி விளக்கியவர், பச்சையப்பன் கல்லூரி வரலாற்றுத்துறைத் தலைவராயிருந்த சேசையங்கார் ஆவர். (11) ஆபிரகாம் பண்டிதர் சிலப்பதிகார இசைத்தமிழ்ப் பகுதிகளைச் செவ்வையாக ஆராய்ந்து,பெருந்தொகையைச் செலவிட்டடு, ஆயப்பாலை வட்டப் பாலைப் பண்திரிவு முறைகளையும் வீணையியல்பையும், தம் கருணாமிர்த சாகரத்தின் வாயிலாக விளக்கிக்காட்டி, தமிழிசையின் முன்மையையும் தாய்மையையும் நிறுவியவர், தஞ்சை ஆபிரகாம் பண்டிதரே. (12) கா. நமச்சிவாய முதலியார் தமிழர் பலர் தமிழாசிரியத் தகுதிபெற இயலாவாறு, வடமொழிப் பயிற்சியோ டிணைக்கப்பட்டிருந்த சென்னைப் பல்கலைக்கழகப் புலவன் (வித்துவான்) தேர்வுப் பாடத்திட்டத்தைக் கவனித்து, அதன் தீங்கைக் கண்டு, தனித்தமிழ்ப் பிரிவு (7D) ஏற்படுத் திய பெருமை, அப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைவ ராயிருந்த நமச்சிவாய முதலியாரதே. (13) மு. சி. பூரணலிங்கம் பிள்ளை தமிழ்நாகரிக வரலாற்றையும் தமிழ் இலக்கிய வரலாற்றையும் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டு, தமிழின் பெருமையை அயல் நாட்டார் அறியச்செய்த அருந்தமிழ்த் தொண்டர், ஆங்கிலப் பேராசிரியர் பூரணலிங்கம் பிள்ளையாவர். (14) பர். உ. வே. சாமிநாதையர் காவிரி வாய்ப்படவும் கறையான் வாய்ப்படவு மிருந்த கடைக்கழக நூல் ஏட்டுச்சுவடிகளை, ஊரூராகவும் தெருத்தெரு வாகவும் வீடுவீடாகவும் திரிந்து தேடியும், விறகுதலையன்போல் தலையிற் சுமந்து கொணர்ந்தும், அல்லும் பகலும் கண்பார்வை கெடக் கூர்ந்து நோக்கிப் படித்தும், அரிய ஆராய்ச்சிக்குறிப்புகளும் ஒப்புமைப் பகுதிகளும் வரைந்தும், ஆராய்ச்சியாளர்க்குப் பேருதவியாகவும் பிறர்க்குப் பெரும்பயன்படவும் வெளியிட்டவர், தென்கலைச் செல்வர் பெரும்பேராசிரியர், பண்டாரகர் உ.வே. சாமிநாதையரே. (15) பவானந்தம் பிள்ளை தொல்காப்பியம், இறையனார் அகப்பொருளுரை, யாப்பருங் கல விருத்தி முதலிய நூல்களை வெளியிட்டும், தம் பெயரால் ஒரு தமிழ்க் கலைமன்றம் நிறுவியும், ஆங்கில முகவுரை வாயிலாய்த் தமிழின் தனிப்பெருமையை எடுத்துக்காட்டியும், தமிர்த் தொண் டாற்றியவர் சென்னை ஊர்காவல் துறை உதவி ஆள்வினைஞரா யிருந்த ச.பவானந்தம் பிள்ளையாவர். (16) த. வே. உமாமகேசுவரம் பிள்ளை கரந்தைத்தமிழ்க் கழகத்தையும் இலவச நடுநிலைப் பள்ளியையும் தனித்தமிழ்க் கல்லூரியையும் நிறுவி, தமிழையும் தமிழ் மாணவரையும் புரந்தவர், தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளையாவர். (17) மறைமலையடிகள் தமிழ்ப்பேராசிரியரும் மாபெருந் தமிழ்ப்புலவரும் தமிழுக்கும் வடமொழிக்கும் வேறுபாடு தெரியாது, நூற்றிற்கெண்பது விழுக் காடு வடசொற்களைக் கலந்து தமிழைப் பேசியும் எழுதியும் பாடி யும் வந்த காலத்தில், தமிழ்ப்பயிர் அயற்சொற்களைகளால் நெருக் குண்டு அடியோடு அழிந்துபோகவிருந்த நிலையில், வட சொற்களை அறவே களைந்து தூய தீந்தமிழில். உரைநடையும் செய்யுளுமாகிய இருவடிவிலும் அறிவியல், சமயம், வரலாறு, ஆராய்ச்சி, திருமுகம், உரை, மொழிபெயர்ப்பு முதலிய பலதுறை யிலும், ஏறத்தாழ ஐம்பது நூல்களை வெளியிட்டு, தமிழில் எந்நூலையும் இயற்றவும் மொழி பெயர்க்கவும் இயலும் என்பதைக் காட்டி, மறுமலர்ச்சித் தனித்தமிழ் ஊழியைத் தொடங்கிவைத்த வரும், தம் மும்மொழிப் புலமையால் இந்தியை இலக்கிய முறையில் எதிர்த்தவரும், ஒப்புயர்வற்ற மறை மலையடிகள் ஆவர். மறைமலை யென்னும் மறையா மலையின் நிறைநிலை வாரத்தே நிற்க - இறையும் தமிழன் வடமொழியால் தாழ்வின்றி வாழ இமிழுங் கடல்சூழ் இகம். (18) திருவரங்க நீலாம்பிகை அம்மையார் தனித்தமிழ்த் தந்தையை அடியொற்றிப் பின்பற்றி, எளிய இனிய தூயநடையில் உரைநடை நூல்கள் எழுதியவரும், முதன் முதல் தனித்தமிழ்ச் சிற்றகரமுதல் தொகுத்தவரும், மறைமலை யடிகள் மூத்த மகளார் நீலாம்பிகையம்மையார் ஆவர். (19) திரு. வி. கலியாணசுந்தர முதலியார் தமிழ்த்திருமணம் நடத்திவைத்தும், சமயத்துறையில் சமநிலை யுணர்ச்சியைப் பரப்பியும், காதல்மணத்தை ஊக்கியும், பெண் ணுரிமையைப் பேணியும், தொழிலளாரை முன்னேற்றியும், நாட்டிற் குத் தொண்டுசெய்தவர் திரு.வி.க. (20) கா. சுப்பிரமணியப் பிள்ளை திருநான்மறை விளக்கம், தொல்காப்பிய எழுத்ததிகார முன்னுரை, தமிழிலக்கிய வரலாறு முதலிய அரிய ஆராய்ச்சி நூல்களியற்றித் தமிழணர்ச்சியைப் பரப்பியவரும், இந்தியை எதிர்த்துத் தமிழைக் காத்தவரும், பேரா.கா.சுப்பிரமணியப் பிள்ளை யாவர். (21) சோமசுந்தரம் பிள்ளை சுப்பிரமணிய சாத்திரியாரின் தொல்காப்பியச் சொல் லதிகாரக் குறிப்பை மறுத்து, சூறாவளிபோற் சுழற்றி யெறிந்தவர் மன்னர்குடிச் சோமசுந்தரம் பிள்ளையே. (22) நாவலர் மு. வேங்கடசாமி நாட்டார் மு. இராகவையங்காரின் வேளிர் வரலாற்றை ஆராய்ச்சியால் வீசியெறிந்தவர் நாவலர் மு.வேங்கடசாமி நாட்டாராவர். (23) வ. திருவரங்கம் பிள்ளை மறைமலையடிகள் அச்சகத்திற்கும் நூல்வெளியீட்டிற்கும் பணந்தொகுத்துதவியும், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தை நிறுவியும், இந்தியை எதிர்த்தும், அருந்தமிழ்த் தொண்டாற்றியவர் திருவரங்கம் பிள்ளையாவர். (24) அண்ணாமலையரசர் தமிழிசைக் கிளர்ச்சிசெய்து இசையரங்கைப் பெரும்பாலும் தமிழ் வண்ணமாக்கிய தனித்தொண்டு, அரசவயவர் அண்ணா மலைச் செட்டியாரதே. (25) மு.கதிரேசச் செட்டியார் அண்ணாமலையரசரின் தமிழிசைக் கிளர்ச்சிக்கு உறு துணையா யிருந்தவர், பண்டிதமணி கதிரேசச் செட்டியாராவர். (26) க. ப. மகிழ்நன் தூய தமிழில் உரைநடைப் பாடப்பொத்தகங்களும் ஆராய்ச் சிக் கட்டுரைகளும் வரைந்தும், ஆங்கிலக் குறியீடுகளை அழகாக மொழி பெயர்த்தும், நற்றமிழ்த் தொண்டாற்றியவர் க.ப. மகிழ்நனார் (சந்தோஷம்) ஆவர். (27) சாமி வேலாயுதம் பிள்ளை தமிழிற் கலைச்சொல்லாக்கத்தைத் தொடங்கிவைத்த இருவருள் ஒருவர், சாமிவேலாயுதம் பிள்ளையாவர். (28) இ. மு. சுப்பிரமணியப் பிள்ளை தமிழிற் கலைச்சொல்லாக்கத்தைத் தொடங்கிவைத்த இரு வருள் ஒருவரும், சென்னை மாநில ஆட்சிச்சொல் அகரவரிசையைத் தொகுத்தவரும், கணியர் இ.மு. சுப்பிரமணியப் பிள்ளையாவர். (29) துடிசைகிழார் நெஞ்சத்துடிப்பெல்லாம் தமிழ்த் துடிப்பாக வுள்ளவரும், தொல் காப்பிய நூற்பாக்கட்குத் தக்க பாடவேறுபாடு கண்டவரும், உருத்திராக்க விளக்கம், சேரர் வரலாறு முதலிய பல அரிய நூல்களின் ஆசிரியரும், துடிசைகிழார் அ. சிதம்பரனார் ஆவர். (30) சோமசுந்தர பாரதி இந்தியை வன்மையாய் எதிர்த்தவரும், எவருக்கும் அஞ்சாது தமிழைத் தாங்கியவரும், நாவலர் சோமசுந்தர பாரதியார் ஆவர். (31) இராமச்சந்திர தீட்சிதர் (V.R.) தமிழர் தென்னாட்டுப் பழங்குடி மக்களே யென்றும், தமிழரே மேலையாசிய நாடுகட்கும் நண்ணிலக் கடற்கரை நாடுகட்கும் சென்று தமிழ நாகரிகத்தைப் பரப்பின ரென்றும், உண்மையான வரலாற்றைச் சீநிவாச ஐயங்காருக்குப்பின் விரிவாக வெளியிட் டவர்,சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைப் பேராசிரிய ராயிருந்த இராமச்சந்திர தீட்சிதரே. (32) பாரதிதாசன் ஆரியத்தையும் இந்தியையும் வன்மையாய் எதிர்த்தும், குடும்பவாழ்க்கையைச் சீர்திருத்தியும், எளிய இனிய செந்தமிழ்ப் பாடல்களால் தமிழ்ப் பாதுகாப்பிற்கும் தமிழர் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டவர் புரட்சிப் பாவலர் பாரதிதாசனார் ஆவர். (33) சேலம் இராமசாமிக் கவுண்டர் எத்தனைய ரோதமிழர் இந்நாட்டிற் கல்லூரி ஒத்த முதல்வரா யுற்றிருந்தும் - முத்தமிழ்ப் பற்றா லெனையமர்த்ததிப் பண்பா டிராமசாமி கற்றான் ஒருவனே காண். உயர்நிலைப் பள்ளிகளில் ஓவா துழந்தே அயர்நிலை என்னை அழைத்தன் - றுயர்வளித்தான் சேலங்கல் லூரிச் சிறந்த தமிழ்த்தலைமை மேலன் இராமசா மி. தொல்காப் பியமும் துணையாம் திருக்குறளும் பல்காற் பயின்று பயன்கண்ட - ஒல்காப் பெருந்தமிழ வாழ்வு பெயர்பெற வாழ்ந்தான் விருந்திராம சாமி விழைந்து. வீட்டிற்கும் தான்பிறந்த வெள்ளாண் குடியினுக்கும் நாட்டிற்கும் செந்தமிழ் நல்லறிஞர்- கூட்டிற்கும் சேலங்கல் லூரிக்கும் சீரார் இராமசாமி சாலுங் கவுண்டனெனச் சாற்று. மூவுலகும் ஆளும் முதல்வனே வந்திடினும் பாவுலவும் பைந்தமிழ்ப் பண்டிதன் - மேவுவதை இம்மியதும் தள்ளா இராமசா மிக்கவுண்டன் செம்மனிதர் வேறியார் செப்பு. இந்நூலும் ஏனை எழில்மொழி யாராய்ச்சி நன்னூலும் நன்கிருந்து நான்செய்தேன் - எந்நாளும் ஏராள ஓய்வும் இணங்கும் இராமசாமி தாராளந் தந்ததினால் தான். சேலங்கல் லூரி சிறந்திராம சாமியின்றேல் ஞாலம் பரவுதமி ழாராய்ச்சி - நூலியற்றும் தேவநேயன் எங்கே தென்மொழித் தொண்டெங்கே பாவுதமிழ் மீட்பெங்கே பார். வள்ளுவன் மன்றமொன்று வைத்தும் உரைநடைநூல் தெள்ளு தமிழ்வரைந்தும் சொற்பொழிந்தும் - ஒள்ளிய ஆங்கிலச் சொற்பெயர்த்தும் ஆராய்ந் திராமசாமி தாங்கினன் செந்தமிழைத் தான். வேலை யினிதியல வேண்டு முதவிசெய்து மாலையுங் கூடி மகிர்ந்துலவி - மேலுந்தான் இன்னுரை யாடியெனக் கின்ப வுணவளித்தான் மன்னே இராமசா மி. இராமசா மிக்கவுண்டன் இன்புகழ் வாழி பராவி கனகம்மை வாழி - விராவி அவர்நன்னான் மக்களும் வாழி வழியும் இவரின்னார் என்ன இனிது. (34) ஆ. வரகுணபாண்டியன் வீணை ஆரிய இசைக்கருவி யென்பார் வெட்கித் தலைகவிழுமாறு, செங்கோட்டியாழே வீணையொன்று, அதன் உறுப்புகளை யெல்லாம் தனித்தனியாக வண்ண ஓவிய வடிவிலும் வண்ணனை ஓவிய வடிவிலும் வரைந்துகாட்டி, வீணை தூய தமிழிசைக் கருவியென்று, மறுக்கொணாத கடைக்கழக நூற்சான்றுகளுடன், பாணர் கைவழி என்னும் நூலில் நாட்டியவர் ஆபிரகாம் பாண்டிதரின் மகனார் வரகுணபாண்டியனார் ஆவர். (35) இராமநாதன் செட்டியார் தமிழிசைக் கிளர்ச்சிக்குத் துணையாயிருந்தவரும், தமிழைப் பாதுகாக்க இயன்றவரை தொண்டாற்றி வருபவரும், பேரா.லெ. பெ.கரு. இராமநாதன் செட்டியார் ஆவர். (36) குன்றக்குடி அடிகள் அருள்நெறித் திருக்கூட்டம் அமைத்தும், இந்தியை எதிர்த்துத் தமிழைப் பாதுகாத்தும், தமிழ்நாடு முழுதும் இடைவிடாது சொற்பொழி வாற்றியும், தமிழரின் இருமை நலத்திற் கும் அருந்தொண்டாற்றி வருபவர் தவத்திருக் குன்றக்குடி அடி களார் ஆவர். (37) சொக்கப்பா ஆரியத்தை எதிர்த்தும், தனித்தமிழ்ப் புலவரை ஊக்கியும் தமிழ் நாகரிகச் சிறப்புப்பற்றி வரலாற்று நூல்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் வரைந்தும், தமிழைப் போற்றிவருபவர் பேரா.சொக் கப்பா ஆவர். (38) மெ.சுந்தரனார் மறைமலையடிகட்குப்பின், தந்நலமின்றித் தமிழைப் பேணு பவரும், தமிழின் உயர்வைத் தெளிவாய் உணர்ந்தவரும், தனித் தமிழாளரை அழுக்காறின்றிப் போற்றுபவரும், தமிழக்கு ஆக்கந்தரும் நூல்கள் வெளிவர வழிவகுப்பவரும், பண்டாரகர் மெ.சுந்தரனார் ஒருவரே. (39) சி. இலக்குவானார் தமிழ்ப் பாதுகாப்புக் கழகம் அமைத்தும், மாணவர்க்குத் தமிழுணர்ச்சி யூட்டியும், குறள்நெறி என்னும் இருகிழமை யிதழ் நடத்தியும், இந்தியை யெதிர்த்தும், அதனாற் பதவியை இழந்தும் சிறைசென்றும், தமிழால் இடர்ப்பட்டு வருபவர் பர்.சி. இலக்கு வனார் ஆவர். (40) பெருஞ்சித்திரன் தென்மொழி என்னும் ஒரே தனித்தமிழ்த் திங்களிதழ் வாயிலாய், தமிழுக்குத் தாய்மொழியுணர்ச்சி யூட்டி வருபவர் பெருஞ்சித்திரனார் ஆவர். (41) வ. சுப்பையாப் பிள்ளை தமக்கு இயற்கையாகவுள்ள உண்மைத் தமிழ்ப்பற்றினாலும், அச்சீடும் கட்டடமும்பற்றிய கவின்கலைச் சிறப்புணர்வினாலும், வணிக மதிநுட்பத்தாலும், கிடைக்காத நூல்கள் கிடைக்குமாறும் விளங்காத நூல்கள் விளங்குமாறும், ஆயிரத்திற்கு மேற்பட்ட அருந்தமிழ் நூல்களை உரையுடனும் அச்சிட்டு, உலகமுழுதும் பரப்பித் தமிழ்நூல் வெளியீட்டுத் துறையில் வாகைசூடியும்; தமையனார்போல் தமிழ்க்காப்புத் துறையில் ஈடுபட்டும்; சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகப் பணித்துறையை முன்னினும் பன் மடங்கு விரிவுபடுத்தியும்; தலைமைத் தமிழ்ப் புலவரையெல்லாம் கழக நூற்பணியில் தொடர்புகொள்ளச் செய்தும்; ஓய்வுபெற்ற தமிழ்ப்புலவர்க்கு வேலையளித்துதவியும்; சென்னைவாணர்க்குச் சிறப்பாகப் பயன்படும் மறைமலையடிகள் நூல்நிலையத்தை நிறுவியும்; பல்கலைக்கழகங்கள் செய்யாத பொதுநலத் தொண்டை இடைவிடாது செய்துவருபவர், திரு. வ. சுப்பையாப் பிள்ளையாவர். 6 வருநிலைப் படலம் முற்காலத்தில் தமிழைக் கெடுத்தவர் பல்வேள்விச் சாலை முதுகுடுமிப் பெருவழுதியும், சோழன் அரசவேள்வி வேட்ட பெருநற்கிள்ளியும், சேரமான் பல்யானைச் செல்கெழு குட்டுவனும் போலும் மூவேந்தர்; இக்காலத்தில் தமிழைக் கெடுப்பவர் முத்தலைமைத் தமிழ்ப் பேராசிரியர். தமிழைக் கெடுக்கும் தமிழ்ப்புலவர், வாள்போற் பகைவரும் கேள்போற் பகைவரும் ஆக இருசாரார். இவர் தமிழ் வரலாற்றையும் தமிழ்ச்சொல் வளத்தையும் அறியாததனால், அவற்றை அறிந்தவர் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலிச் சீர்திருத்தமும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் தொகுப்பும் செய்யவிடாது தடுக்க, ஒரு கெடுதலைச் சூழ்ச்சிக் கூட்டாகக் கூடியுள்ளார். இவ்விரு சாராருள், முன்னவர் வடமொழியடிப் படையில் தமிழ் கற்று வண்ணனை மொழிநூலைக் கையாள்பவர்; பின்னவர் அவருடன் ஒத்துழைப்போரும் அங்குமிங்கு மிருப் போருமாக மூவகையர். செந்தமிழைக் காக்கவேண்டுமெனின், இவ் விருசார்த் தமிழ்ப் பகைவரையும் புறக்கணித்தல் வேண்டும். வடமொழி தமிழைத் தாழ்த்தித் தொன்றுதொட்டு அதற்குரிய அரியணையில் தான் இருந்துவருவதால், அதனைத் தாக்காது தமிழைக் காக்க முடியாது. வடமொழியைத் தாக்காதே தமிழை வளர்க்கவேண்டுமென்பார் வரலாற்றை அறவே அறியாதார். வடமொழிக்கும் தமிழுக்கும் இடைப்பட்ட உறவுநிலை, வழக் காடிக்கும் எதிர்வழக்காடிக்கும் அல்லது தாக்குவோனுக்கும் தற்காப்போனுக்கும் இடைப்பட்டதாகும். எங்ஙனம் ஒரு வழக்காடி தன் எதிர்வழக்காடியைத் தாக்காது தன் வழக்கில் வெல்ல முடியாதோ, அங்ஙனமே தமிழையும் வடமொழியை விலக்காது அல்லது அதன் உயர்வொழிக்காது வளர்க்க முடியாது. தமிழை ஆரியத்தினின்று மீட்டற்கும் காத்தற்கும் வளர்த் தற்கும் செய்யவேண்டிய பணிகள், உள்நாட்டிற் செய்வனவும் வெளிநாட்டிற் செய்வனவுமாக இருதிறப்படும். 1. தமிழுக்குத் தமிழ்நாட்டிற் செய்யவேண்டியவை (1) சென்னை மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயரிட்டு, மொழியியற் கலைநாகரிகத் தன்னாட்சி (Linguistic and Cultural Autonomy) அமைத்தல். (2) தனித்தமிழ்ப் பற்றும் தமிழிலக்கிய வறிவும் உள்ள ஆசிரி யரையே கல்வியமைச்சராக அமர்த்துதல். (3) தனித்தமிழ்ப் பற்றும் தமிழறிவும் உள்ளவராய் ஓய்வு பெற் றுள்ள, கல்வித்துறை யியக்குநர், பெருங்கல்லூரி முதல்வர், தலைமைப் பேராசிரியர் ஆகியோரையே, தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களின் துணைக் கண்காணகராக (Vice-Chancellors) அமர்த்துதல். (4) இருவகை வழக்குத் தமிழ்ச்சொற்களையும் அறிந்தவரும் வண்ணனை மொழியியலையன்றி வரன்முறை மொழி நூலையே கடைப்பிடிப்பவரும், வடமொழியிந்தித் தாக்கு தலினின்று தமிழைக் காப்பவரும், உண்மையையுரைக்கும் திண்மையுள்ளவருமான தமிழ்ப் பேராசிரியரையே, சென்னை அண்ணாமலை மதுரையாகிய முப்பல்கலைக் கழகங்களிலும் தமிழ்த்துறைத் தலைவராக அமர்த்துதல். (5) தமிழுக்கு மாறாக வேலைசெய்யும் தமிழாசிரியர், தலைமை யாசிரியர், முதல்வர், துணைக் கண்காணகர் ஆகியோரைப் பதவியினின்று நீக்குதல். (6) இந்தியால் தமிழ் கெடுவது திண்ணமாதலால், தமிழ் ஆங்கிலம் ஆகிய இருமொழித் திட்டத்தையே கல்வி, ஆள் வினை (Administration), வழக்குத்தீர்ப்பு ஆகிய முத்துறையி லும் எல்லா மட்டத்திலும் கையாளுதல். (7) தமிழ்ப்பற்றற்ற பிராமணத் தமிழ்ப்பண்டிதர் கொண்டான் மாரைத் துணைக்கொண்டு தொகுத்த சென்னைப் பல்கலைக் கழகத் தமிழகராதி என்னும் கலவைமொழி அகரமுதலியை உடனே திருத்துதல். (8) தமிழ்நாட்டு உண்மை வரலாற்றை எழுதுவித்துப் பாடமாக் கலும், தமிழ்ப்பகைவரால் எழுதப்பட்ட பொய் வரலாற் றைப் புறக்கணித்தலும். (9) செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியை முழுநிறை வாக உருவாக்குதல். (10) செம்மையான ஆங்கிலத் தமிழகரமுதலி யொன்று தொகுப் பித்தலும், கலையறிவியல் கம்மியக் குறியீடுகளைத் தூய தமிழில் மொழிபெயர்த்தலும். (11) பேராயக்கட்சியாளர் தொகுத்த கலைக்களஞ்சிய நடையை யும், அதிலுள்ள தமிழைப்பற்றிய தவறான கருத்துகளை யும் திருத்துதல். (12) அச்சிற்கு வராத தமிழ்ச்சொற்களையும் தமிழ் ஏட்டுப் பொத் தகங்களையும் தக்க அறிஞரைக்கொண்டு தொகுப் பித்தல். (13) கல்வெட்டுத் தொகுப்பும் வெளியீடும் தக்க தமிழறிஞரைக் கொண்டு செய்வித்தல். (14) பாடப்பொத்தகங்களைத் தூய தமிழில் எழுதுவித்தலும், தூய தமிழ் நூல்களை வெளியிடும் கழகங்களை ஊக்கு தலும். (15) தூய தமிழிற் பேசும் மாணவர்க்கும் தூய தமிழிற் சிறந்த நூலியற்றும் அறிஞர்க்கும் பரிசளித்தல். (16) ஆட்பெயர், இடப்பெயர், பொருட்பெயர், பட்டப்பெயர், சிறப்புப்பெயர் ஆகிய எல்லாப் பெயரையும் தூய தமிழாக்கல். (17) இலக்கணம், இசை, நாடகம், கணியம், மருத்துவம் முதலிய பழந்தமிழ் அறிவியல்களையும் கலைகளையும் முன்போல் தூய்மைப்படுத்துதல். (18) அரசினர் அறிவிப்புகளும் விளம்பரங்களும் எழுத்துப் பிழையும் இலக்கணப் பிழையுமின்றி வெளிவரச் செய்தல். (19) தமிழையும் பதினெண் திரவிட மொழிகளையும் ஒருங்கே கற்பிக்கும் ஒரு கல்லூரி நிறுவுதல். (20) தமிழ்ப்பற்றுள்ளவரையே, சட்டசவை பாராளுமன்ற வேட் பாளராகத் தெரிந்தெடுக்கவும் தேர்ந்தெடுக்கவும் செய்தல். (21) வண்ணனை அடிப்படையிலன்றி வரலாற்றடிப் படையி லேயே மொழி நூலை வளர்த்தல். (22) கோயில்வழிபாடும், இருவகைச் சடங்குகளும் தமிழில் நடைபெறச் செய்தல். (23) தமிழுக்காக உயிரிழந்தோர் குடும்பத்திற்கு வாழ்க்கை நடைப்பொருள் அளித்தல். (24) தமிழ்ப்பற்றாற் பதவியிழந்தோரைப் பின்னோக்கிய வலிமை யொடு (Retrospective effect) மீண்டும் பதவியில் இருத்துதல். (25) வருவாயற்ற பெருந்தமிழ்ப் புலவர்க்கு உதவிச் சம்பளம் அளித்தல். (26) தமிழுணர்ச்சியைப் பரப்பிப் பொதுமக்கட்குத் தமிழறிவு புகட்டும் தனித்தமிழ் இதழ்கட்குப் பொருளுதவி செய்தல். (27) மேனாட்டாரைத் துணைக்கொண்டு, தென்மாவாரியில் ஆழ மூழ்கிப் பழம்பொரு ளெடுத்தாராய ஏற்பாடு செய்தல். (28) அலுக்கிற்கும் அளபெடைக்கும் போதிய இடைவெளி விட்டு, இம்மியும் பிசகாது தியாகராசையத் கீர்த்தனைகள் போன்றே இன்பமாய்ப் பாடக்கூடிய உயரிய மெட்டுப் பாடல்களை அறிவும் ஒழுக்கமும் தழுவிய பொதுப் பொருள்கள்பற்றி, இயற்றித்தரும் இசைவாணர்க்கும் பாவலர்க்கும் சிறந்த பரிசளித்தல். (29) ஊர்காவலர் படைத்துறையினர் உடற்பயிற்சியும் மெய்க் காட்டும் (parade), தமிழ் ஏவற் சொற்களைக்கொண்டு நடப் பித்தல். (30) கூட்டங்களிலும் மாநாடுகளிலும் இறுதியில் உலக வாழ்த்துப் பாட்டுத் தமிழிற் பாடல். (31) மறைமலையடிகள், (P.T.) சீநிவாசையங்கார், (V.R.) இராமச் சந்திர தீட்சிதர் ஆகிய மூவர்க்கும் சென்னையில் படிமை நிறுவுதலும், அம் மூவர் முழுவுருவப் படங்களையும் முதன் மையான அரசியல் அலுவலகங்களிலும் பொதுக் கூடங் களிலும் மாட்டி வைத்தலும். (32) செய்யுட்கே சிறப்பாக வுரிய இலக்கணக் கூறுகளை நீக்கி விட்டு, உரைநடை யிலக்கணத்தைமட்டும் விரிவாகவும் விளக்கமாகவும் எழுதிப் பொதுத்தமிழ் மாணவர்க்குப் பாடமாக வைத்தல். (33) இகரத்தின் நெடிலைக் குறித்தற்கு, இடைக்காலத்தில் ஆரியராற் புகுத்தப்பட்ட. வாயிற்கால்போன்ற கிரந்த வரிவடிவை நீக்கிவிட்டு, இறுதியிற் சுழிகொண்ட பழைய இகர வடிவையே கையாளுதல். (34) இங்கிலாந்தில் 1875ஆம் ஆண்டிற் செய்தவாறு, தமிழ் நாட்டில் இலவசக் கட்டாயத் துவக்கக் கல்வியைச் சட்ட வாயிலாய்ப் புகுத்துதல். (35) அண்ணாமலை பல்கலைக்கழக மொழியியல் துறைத் தொடக்கவிழாத் தலைவர் பர். சட்டர்சியின் அச்சிட்ட (தமிழுக்கு மாறான) தலைமையுரையை, அக் கழகத்தி னின்று அகற்றுதல். (36) பர் சட்டர்சியும் பர்.கத்திரேயும் இந்திய ஞாலநூலியல் வரலாறு-முதன்மடலத்தில் (Gazetteer of India-Vol.I) தமிழைப் பற்றி வரைந்துள்ள தவறான கருத்துகளைத் திருத்துதல். 2. தமிழுக்கு வெளிநாட்டிற் செய்யவேண்டியவை (1) உண்மையான தமிழ் வரலாற்றை ஆங்கிலத்தில் வெளி யிட்டு உலக முழுதும் பரப்புதல். (2) வெளிநாடுகளிலுள்ள தமிழ்ச்சொற்கள், நூல்கள், கலைகள், பழக்கவழக்கங்கள், வழிபாட்டு முறைகள் முதலியவற்றை ஆராயுமாறு, தக்க ஆராய்ச்சியாளரைக் கானா, எகிபது, பிரனீசு, மலைநாடு, மெகசிக்கோ (Mexico), காம்போதியா, சையாம், மலேயா, சாலித்தீவு முதலிய நாடுகட்கு அனுப்பு தல். (3) வெளிநாடுகளுடன் போன்றே, இந்திய நடுவணரசோடும் பிற இந்திய மாநிலங்களோடும், எழுத்துப் போக்குவரத்து ஆங்கிலத்திலேயே நடத்துதல். (4) ஒவ்வொரு பெருநாட்டிலும் ஒரு தமிழ்ப்பேராசிரியர் பதவி ஏற்படச்செய்தல். (5) தமிழ்மொழி நாகரிகப் பண்பாட்டை எடுத்துரைக்கும் ஒரு விடைமுகவர் குழுவை (Delegation), உலகஞ் சுற்றிவரச் செய்தல். (6) தமிழர் பெருந்தொகையினராயுள்ள இலங்கைபோன்ற வெளிநாடுகளில், இந்தியத் தூதாண்மைக் குழுவில், தமிழ்ப் பற்றும் தமிழறிவுமுள்ள தூய தமிழர் ஒருவரும் இருக்கச் செய்தல். (7) ஆக்கசுப்போர்டு (Oxford) ஆங்கில அகரமுதலியிலும் பிரித்தானியக் கலைக்களஞ்சியத்திலும் (Encyclopaedia Britanic) தமிழைப் பற்றிய தவறான குறிப்புகளையும் கூற்றுகளையும் உடனே திருத்தச்செய்தல். பின்னிணைப்பு-1 முப்பெருங் குடும்ப மொழிகளில் முதுகுரவர் தமிழ்ப்பெயர் சித்தியம், ஆரியம், சேமியம் என்னும் முப்பெருங் குடும்ப மொழி களிலும் இருமுது குரவர் பெயர் தென்சொல்லின் திரிபாயிருப்பது, தென்மொழியின் தொன்மையையும் முன்மையை யும் தாய்மையையும் தலைமையையும் உணர்த்தப் போதிய சான்றாம். 1. தந்தை பெயர்கள் த.அப்பன், ம.அப்பன், க.அப்ப, தெ.அப்ப, து.அப்ப, கு.அப்பெ, கோண்.ஆப்போ. து.அப்பெ (தாய்). மரா. பாப், குச.பாப், இ.பாப், வ.பாப், பாபா. மெ.அப்ப, போ.அப, சி.அப்பா. எ.ஆப், அ.ஆப், கல.அப்பா, சீ.ஆபோ, அர.அப்பா. அபி.ஆப்பாத் இலத்.பப்பா, பி.பப்பா, ஆ.பப்பா. ஓசி.ஊப், ஓப்(மாமன), பின்.அப்பி(மாமன்), அங்.இப். இப்ப, அப் பொஸ் (மாமன்). த.தம்+அப்பன்=தமப்பன்-தகப்பன். த.அத்தன், பிரா.அத்தா. துரு.அத்த, அங். அத்ய, பின்.ஆத்த, செர்.ஆத்யா, மா. அத்தை, ஓ.அத்த, இலாப். அத்ஜெ (பாட்டன்). கோதி.அத்தன், இலத்.அத்த, கி.அத்த. த.அத்தன்-அச்சன், ம.அச்சன். க.அஜ்ஜ (பாட்டன்), து.அஜ்ஜெ (பாட்டன்), கு.அஜ்ஜெ (பாட்டன்), குரு.அஜ்ஜொஸ் (பாட்டன்), கூ.அக்கெ (பாட்டன்). பிரா.அஜ்ஜ, மரா.ஆஜா (பாட்டன்), இ.ஆஜா (பாட்டன்). இலாப்.ஐஜ, அத்ஜ (பாட்டன்). த.ஐயன் (தந்தை, தமையன், பெரியோன், ஆசிரியன், குரு. முனிவன்), ம.அய்யன், க. அய்ய, அய; தெ.அய்ய, அய; து. அய்யெ (ஆசிரியன்), கு.அய்யெ (தந்தையுடன் பிறந்தான்), துட, இன், எயி; கோல். அய்யா(பாட்டன்), ப.அய்ய. போ.ஐயொ (ஆசிரியன்). த. தந்தை, க. தந்தெ, தெ. தண்ட்ரி. 2.தாய் பெயர்கள் த. அம்மை (தாய்), அம்மன் (காளி, பெண்தெய்வம்). ம.அம்ம, உம்ம; க.அம்ம, தெ.அம்ம, கோ.அம்ன் (தெய்வம்), கு.அம்மெ, து.அம்ம, கோல். அம்ம, நா.அம்ம, குயி. அம (அத்தை), குவி. அம்ம (அத்தை), பி. அம்மா, து. அம்மெ (தந்தை). குச.மா, இ.மாம், வ.மா. தி.ம, மொ (பெ. பா. பெயரீறு), மலாய். அம. சமா. அம்ம, செனெ.அம்ம, அம்; எசு. எம்ம, பின்.எமா, அங். எமெ, சிந்.அமா. எ.ஏம், அ.உம், சீ.ஆமோ. ஐ.அம்ம (பாட்டி), ப. செ.அம்ம, செ.அம்மெ (செவிலி), ஆசு. அம்ம, ஆ.மம்ம, மம்மெ, மம்; பிரெ. மமன், இசு.மம, செ.மம, மம்ம, கி.மம்ம, மம்மெ; ச.அம்மா, அம்பா. த.அம்மை-அவ்வை (தாய், பாட்டி). க.அவ்வ, அவ்வெ (தாய், பாட்டி, கிழவி); தெ. அவ்வ, து.அப்பெ (ஆயா), கு.அவ்வெ, கோ.அவ், துட.அவ், ப. அவ்வ (பாட்டி), கோண். அவ்வல், கூ.அவெ. இலத். அவுஸ் (பாட்டன்). ஆவிய (பாட்டி), அவ்-உங்குளுஸ் (அம்மான்). த.அம்மை-அன்னை. இ.அன்னி (செவிலி). துரு.அன்ன, அன; ஓ. அனெ, மா, அனை, அங். அன்ய, பின்.அன்ய. அபி.இன்னத். ஓ.இன (பெண், மனைவி). த.அத்தி-ஆத்தி, ஆத்தை. ம.ஆத்தோள். சி.அத்தா (அம்மாய்). பின்.ஐத்தி. கோதி.ஐத்தீன், ச.அத்தா (தாய், அக்கை, பெரியதாய்), அத்தி (அக்கை). த.அத்தி-அச்சி-ஆச்சி. அச்சி=தாய். அக்கை. ம.அச்சி, க.அச்சி, (தாய்), அஜ்ஜி (பாட்டி), து. அஜ்ஜி (பாட்டி), குரு. அஜ்ஜீ (பாட்டி), ம. ஆச்சி (தாய், செவிலி). த.அக்கை (தாய், தமக்கை). அக்கை-அக்கன். க.அக்க, தெ.அக்க, து.அக்க, அக்கெ; கோ.அக்ன், துட. ஓக்ன், கு.அக்கெ. மரா. அக்கா. இலத். அக்கா (தாய்). ச.அக்கா (தாய்). மங்.அக்கு (அண்ணன்), துங்.அக்கி (அண்ணன்), உயிகுர் அச்ச (அண்ணன்). த.ஆய் மரா. ஆயி. போ.ஐய (செவிலி). ஆ.ஆயா (செவிலி). த.தாய் ம.தாய், க.தாய், தெ.தாயி. த.தள்ளை ம.தள்ள, தெ.தல்லி. ப.தல், குயி.தடி, குவி.தல்லி. அருஞ்சொல் அகரமுதல் வரிசை (எண் பக்கத்தைக் குறிக்கும்) அசைநிலை 57 ஆவலாதி 2 இணைப்புச்சொல் 2 கொளுவுநிலை 57 ஞாலநூலியல் வரலாறு 130 தனிநிலையமைப்பு 67 தியூத்தானியம் 96 துணைக் கண்காணகர் 127 தூதாண்மை 130 தொகைநிலை 66 நேர்கூற்று 66 நேரல்கூற்று 9 பகுசொன்னிலை 57 பண்டாரகர் 120 பாணினீயம் 107 பெயர் 18 பிண்டம் 69 பிராதிசாக்கியம் 103 பின்னோக்கிய வலிமை 129 புணர்நிலை 57 புணர்ப்பு வினை 94 புதுப்புனைவு 95 மாபிண்டம் 69 முத்திருமேனியர் 115 தன்னாட்சி 127 விடைமுகவர் 130 விழுக்காட்டிடைச்சொல் 2 வேசாற்றிடைச்சொல் 2 (முற்றும்) மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் வாழ்க்கைச் சுவடுகள் தி.பி. 1933 (1902) : திருநெல்வேலி மாவட்டம், சங்கரநயினார் கோயிலில் சுறவம் - 26ஆம் நாள் (7.2.1902) பிறந்தார். தந்தை : ஞானமுத்து தாய் : பரிபூரணம் தி.பி. 1938 (1907) : வடார்க்காடு மாவட்டம், ஆம்பூர் மிசௌரி தொடக்கக்கல்வி : நல்லஞ்சல் உலுத்தரின் விடையூழிய நடுநிலைப் பள்ளி. உயர்நிலைக்கல்வி: திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, திருச்சபை விடையூழிய உயர்நிலைப் பள்ளி (9,10,11 - வகுப்பு) தி.பி. 1950-52(1919-21) : முகவை மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டம், சீயோன் மலையிலுள்ள சீயோன் நடுநிலைப் பள்ளியில்முதற்படிவ ஆசிரியப் பணியிற் சேர்ந்தார். தி.பி. 1952-53(1921-22) : வடார்க்காடு மாவட்டம், ஆம்பூர் நடுநிலைப் பள்ளியில் (தாம் பயின்ற பள்ளி) உதவி ஆசிரியராய்ப் பணியாற்றினார். தி.பி. 1955 (1924) : மதிப்பு மிக்கதாகக் கருதப்பட்ட மதுரைத் தமிழ்ச் சங்கம்நடத்திய பண்டிதத் தேர்வில் வெற்றி பெற்றார்.(ï› வாண்டில் பாவாணரைத் தவிர வேறொருவரும்வெற்றி பெறவில்லை). கிறித்தவக் கீர்த்தனம் - நூல் வெளியீடு. உதவித்தமிழாசிரியர், சென்னை, திருவல்லிக் கேணிக் கெல்லற்று உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். தி.பி. 1956 (1925) : தமிழாசிரியர், சென்னைக் கிறித்தவக் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். சிறுவர் பாடல் திரட்டு நூல் வெளியீடு. தி.பி. 1957 (1926) : திருநெல்வேலித் தென்னிந்தியத் தமிழ்ச் சங்கம் நடத்திய தனித்தமிழ்ப் புலவர் தேர்வில் இவர் ஒருவரே வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தி.பி. 1959 (1928) : தலைமைத் தமிழாசிரியர், மன்னார்குடி பின்லே கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். முதல் மனைவி எசுத்தர் அம்மையார் மறைவு. தி.பி. 1961 (1930) : நேசமணி அம்மையாரை மணந்தார். தி.பி. 1964 (1934) : தலைமைத் தமிழாசிரியர், பிசப்பு ஈபர் உயர்நிலைப் பள்ளி, புத்தூர், திருச்சிராப்பள்ளியில் பணியாற்றி னார். தி.பி. 1968 (1937) : முதல் இந்தி எதிர்ப்புப் போரை மையமாகக் கொண்டு - செந்தமிழ்க்காஞ்சி நூல் வெளி யீடு. இந்தி எதிர்ப்புக் கிழமை கொண்டாடினார். ``கட்டுரைக் கசடறை'' என்னும் வியாச விளக்கம் நூல் வெளியீடு. தி.பி. 1971 (1940) : ஒப்பியன் மொழிநூல் முதற்பாகம் இயற்றமிழ்இலக்கணம்ஆகிய நூல்கள் வெளியீடு. கட்டுரை வரைவியல் என்னும் உரைநடை இலக்கண நூல் வெளியீடு. தி.பி. 1972 (1941) : ``தமிழர் சரித்திரச் சுருக்கம்'' வெளியீடு : தமிழக இளைஞர் மன்றம், திருச்சிராப்பள்ளி. ``தமிழன் எப்படிக் கெட்டான்'' ஆகிய நூல்கள் வெளியிடல். தி.பி. 1973 (1942) : தலைமைத் தமிழாசிரியர், சென்னை முத்தியாலுப் பேட்டை உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றினார். கீழைக்கலைத் (B.O.L.) தேர்வில் வெற்றி பெற்றார். தி.பி. 1974 (1943) : சுட்டு விளக்கம் - நூல் வெளியீடு. - பண்டிதமணி கதிரேசனார் தலைமையில் நடை பெற்ற முதலாம் தமிழ் உணர்ச்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார். தி.பி. 1975 (1944) : சென்னைப்பல்கலைக்கழகத்தில் கலைமுதுவர் (M.A.) பட்டம் பெற்றார். - தமிழ்த்துறைத் தலைவராகச் சேலம் நகராண்மைக் கல்லூரியில் பணியாற்றினார். - திரவிடத்தாய் - நூல் வெளியீடு. தி.பி. 1980 (1949) : சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் - நூல் வெளியீடு. பாவாணர்க்குத் தவத்திரு மறைமலையடிகளார் சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்தார். பெருஞ்சித்திரனார் அவர்கள் கி.பி. 1949ஆம் ஆண்டு பாவாணரின் தலைமாணாக்கராகச் சேலம் கல்லூரி யில் பயின்றார் என்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. தி.பி. 1981 (1950) : உயர்தரக் கட்டுரை இலக்கணம் (மு.பா.) - நூல் வெளியீடு. தி.பி. 1982 (1951) : உயர்தரக்கட்டுரை இலக்கணம் (இ.பா.) - நூல் வெளியீடு. தி.பி. 1983 (1952) : பழந்தமிழாட்சி - நூல் வெளியீடு. தி.பி. 1984 (1953) : முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம் - நூல் வெளியீடு. தி.பி. 1985 (1954) : தமிழ்நாட்டு விளையாட்டுகள் - நூல் வெளியீடு. தி.பி. 1986 (1955) : பெரியார் ஈ.வே.ரா. தலைமையில் நடைபெற்ற சேலம் தமிழ்ப் பேரவை இவரின் தொண்டைப் பாராட்டித் `திராவிட மொழிநூல் ஞாயிறு' எனும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. `A Critical Survey of Madras University Lexicon' என்னும் ஆங்கில நூல் வெளியிடப் பெற்றது. தி.பி. 1987 (1956) : தமிழர் திருமணம் - நூல் வெளியீடு. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விரிவுரை யாளராகப் பணியிற் சேர்ந்தார். தி.பி. 1988 (1957) : திசம்பர் 27, 28, 29-ல் தில்லியில் நடைபெற்ற அனைத்திந்தியக் கீழைக்கலை மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்பித்தார். தி.பி.1990 (1959) : மொழிஞாயிறு பாவாணர் அவர்களால் பெயர் சூட்டப்பட்ட `தென்மொழி' இதழ் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களால் தொடங்கப் பெற்றது. தனித்தமிழியக்க வளர்ச்சிக்கு இவ் விதழ் இன்றளவும் பெரும் பங்காற்றி வருகிறது. தி.பி. 1991 (1960) : தமிழ்நாட்டு அரசின் ஆட்சித் துறையில் கலைச் சொல்லாக்கத்தொகுப்பில் பங்கேற்றுச் சிறப்பித் தமைக்காகத் தமிழ்நாட்டரசு சார்பில் தமிழ்நாட்டு ஆளுநரால் அவருக்குச் செப்புப் பட்டயம் வழங்கப் பட்டது. தி.பி. 1992 (1961) : சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் அகராதியின் சீர்கேடு - நூல் வெளியீடு. - அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட சிக்கலால் எனக்கு வறுமையும் உண்டு, மனைவியும், மக்களும் உண்டு - அதோடு எனக்கு மானமும் உண்டு - என்று கூறிவிட்டுப் பல்கலைக்கழகப் பணியிலிருந்து வெளியேறினார். என்னோடு தமிழும் வெளியேறியது என்று கூறினார். தி.பி. 1994 (1963) : துணைவியார் நேசமணி அம்மையார் மறைவு. தி.பி. 1995 (1964) : முனைவர் சி.இலக்குவனார் தலைமையிலான மதுரைத் தமிழ்க் காப்புக் கழகம் - தமிழ்ப் பெருங் காவலர் என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. ``என் அண்ணாமலைநகர் வாழ்க்கை'' என்னும் கட்டுரைத் தொடர் தென்மொழியில் வெளிவந்தது. தி.பி. 1997 (1966) : இசைத்தமிழ்க் கலம்பகம் பண்டைத்தமிழ நாகரிகமும் பண்பாடும் ``The Primary Classical Language of the World'' என்னும் நூல்கள் வெளியீடு. தி.பி. 1998 (1967) : தமிழ் வரலாறு வடமொழி வரலாறு “The Language Problem of Tamilnadu and Its Logical Solution” ஆகிய நூல்கள் வெளியீடு. தி.பி. 1999 (1968) : மதுரைத் தமிழ் எழுத்தாளர் மன்றம் இவரின் மணிவிழாவைக் கொண்டாடி மொழிநூல் மூதறிஞர் எனும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. 06-10-1968-ல் இவரைத் தலைவராகக் கொண்டு உலகத் தமிழ்க் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்? வண்ணனை மொழிநூலின் வழுவியல் - ``Is Hindi the logical solution of India'' ஆகிய நூல்கள் வெளியீடு. தி.பி. 2000 (1969) : பறம்புக்குடியில் உலகத் தமிழ்க் கழக முதல் மாநாடு. இம் மாநாட்டில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் முனைவர் சி. இலக்குவனார், முனைவர் வ. சுப. மாணிக்கனார், புலவர் குழந்தை உள்ளிட்ட தமிழ்ச் சான்றோர் பங்கேற்றுச் சிறப்பித்தமை குறிப்பிடத் தக்கது. இம் மாநாட்டில் - திருக்குறள் தமிழ் மரபுரை இசையரங்கு இன்னிசைக் கோவை “jÄœ fl‹bfh©L jiH¡Fkh?'' - ஆகிய நூல்கள் வெளியீடு. தி.பி. 2002 (1971) : பறம்புமலையில்தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில் நடைபெற்றபாரி விழாவில்பாவாணர் செந்தமிழ்ஞாயிறு என்று பாராட்டிச் சிறப்பிக்கப் பெற்றார். பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களால் தென்மொழியில் அறிவிக்கப்பட்ட `செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டம்' வகுக்கப் பெற்றது. இத் திட்டத்தைப் பின்னர்த் தமிழக அரசே ஏற்று 1974ஆம் ஆண்டில் தனி இயக்ககமாக உருவாக்கியது. தி.பி. 2003 (1972) : தஞ்சையில் இவர் தலைமையில் உலகத் தமிழ்க்கழக மாநாடு - தமிழன் பிறந்தகத் தீர்மானிப்பு மாநாடாக நடந்தது. - தமிழர் வரலாறு, தமிழர் மதம் ஆகிய நூல்கள் வெளியீடு. தி.பி. 2004 (1973) : வேர்ச்சொற் கட்டுரைகள் நூல் வெளியீடு. தி.பி. 2005 (1974) : 8.5.1974-ல் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராகத் தமிழ்நாட் டரசால் அன்றைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் அமர்த்தப்பட்டார். செந்தமிழ் சொற் பிறப்பியல் பேரகர முதலியின் முதல் மடல முதற் பகுதி அவரின் மறைவிற்குப் பிறகு 1985-ல் வெளியிடப்பட்டது. தி.பி. 2009 (1978) : மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை - நூல் வெளியீடு. தி.பி. 2010 (1979) : தமிழ் இலக்கிய வரலாறு - நூல் வெளியீடு. வாழ்நாள் முழுவதும் தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ் ஆராய்ச்சிக்கும் ஒதுக்கிய இப் பெருமகனுக்குத் தமிழக முதல்வர் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களால் `செந்தமிழ்ச் செல்வர்' என்னும் சீரிய விருது வழங்கப்பட்டது. சென்னையில் உலகத் தமிழ்க் கழக நான்காவது மாநாடு பாவாணர் முன்னிலையில் நடைபெற்றது. மாநாட்டிற்குப் பதிப்பாசிரியர் புலவர் அ.நக்கீரனார் தலைமை தாங்கினார். தி.பி. 2011 (1980) : `Lemurian Language and Its Ramifications - An Epitome' எனும் ஆங்கில நூல் மதுரையில் நடைபெறவிருந்த ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டு அயல்நாட்டு பேராளர்களுக்காக (52 பக்க அளவில்) உருவாக்கப்பட்டது. தி.பி. 2012 (1981) : மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டில் பங்கேற்று மாந்தன் தோற்றமும், தமிழர் மரபும் என்னும் தலைப்பில் தமிழர்தம் வரலாற்றுப் பெருமையை நிலைநாட்டிப் பேசினார். சுறவம் 2ஆம் நாள் சனவரி 15-ல் இரவு 12.30-க்கு இவ்வுலக வாழ்விலிருந்து மறைந்தார். பாவாணர் பொன்மொழிகள் மாந்தனெனக் குமரிமலை மருவியவன் தமிழனே! மாண்புடைய நாகரிகம் மலர்ந்தவனும் தமிழனே! மொழிவளர்ச்சி முதன்முதலாய் முற்றியவன் தமிழனே! மோனையுடன் சிறந்தசெய்யுள் பேசியவன் தமிழனே! துறைநகரால் கடல்வணிகம் தோற்றியவன் தமிழனே! பிறநிலத்து வணிகரையும் பேணியவன் தமிழனே! தொன்மையொடு முன்மை; தொன்மையொடு நன்மை; தாய்மையொடு தூய்மை; தழுவிளமை வளமை. பகுத்தறிவே மானமுடன் படைத்தவனும் தமிழனே! பகுத்தறிவால் திணைவகுத்த பண்புடையான் தமிழனே! பனிமலையை முதன்முதற்கைப் பற்றியவன் தமிழனே! பலமுறைமீன் புலிவில்அதிற் பதித்தவனும் தமிழனே! பலகலையும் பலநூலும் பயிற்றியவன் தமிழனே! பலபொறியும் மதிலரணிற் பதித்தவனும் தமிழனே! இருதிணைக்கும் ஈந்துவக்கும் இன்பமுற்றான் தமிழனே! ஈதலிசை யாவிடத்தே இறந்தவனும் தமிழனே! கடல்நடுவே கலஞ்செலுத்திக் கரைகண்டவன் தமிழனே! கலப்படையால் குணத்தீவைக் காத்தவனும் தமிழனே! பகுத்தறிவைச் சற்றும் பயன்படுத்தார் கல்வி மிகுத்ததனால் உண்டோ பயன்? தமிழயரத் தாழ்ந்தான் தமிழன் அவனே தமிழுயரத் தானுயர்வான் தான். தமிழா உன்றன் முன்னவனே தலையாய் வாழ்ந்த தென்னவனே அமிழ்தாம் மாரி அன்னவனே அழகாய் முதனூல் சொன்னவனே. கருவி நூற்பட்டி (Bibliography) தமிழ் : தொல்காப்பியம் புறநானூறு கலித்தொகை இறையனார் அகப்பொருளுரை சிலப்பதிகாரம் - அடியார்க்கு நல்லார் உரை மணிமேகலை கருணாமிர்த சாகரம் மலையாளம் : A. Progressive Grammar of the Malayalam Language, by Frohnmeyer. A Malayalam and English Dictionary, by Dr. Gundert. கன்னடம் : Kanarese Grammarï by Harold Spencer. A kanarese - English Dictionary, by Rev. F. Kittel. துளு : A Grammar of the tulu Language, by Brigenl. தெலுங்கு : A Progressive Grammar of the Telugu Language, by the Rev. A.H. Arden. A Telugu-English Dictionary, by C.P. Brown. கோண்டி : A. Grammar of the Gondi Language, by P. Setumadhave Rao. பர்சி: The Parji Language, by T. Burrow and S. Bhattacharya. ஒல்லாரி : Ollari, by Sudhibhushan Bhattacharya. குயி : A Grammar of the Kui Language, by Rev. W.W. Winfidel. A vocabulary of the Kui Language, by Do. திரவிடம் : A. Comparative Grammar of the Dravidian or South Indian Family of Language, by Dr. Caldwell. A Dravidian Etymological Dictionary, by Barrow and Emeneau. இந்தி : Hindi Grammarï by S. R. Sastri and Balachandra Apte. Standard Illustrated Dictionary of the Hindi Language (Hindi-English), by Bhargava. வேதமொழி : Sama Veda-text and Translation, by Sivananda Yathindira. Krishna Yajur Veda-Text and Translation, by --Do-- A Vedic Grammar for Students, by A.A. Macdonell. A Vedic reader for Students, by --Do-- சமற்கிருதம் : Laghu Kaumudi with English Commentary,by Ballantyne. The sanskrit Language, by Burrow. A Sanskrit-English Dictionary, by Monier Williams. ஆங்கிலம் : English Grammar Past and Present, by J.C. Nesfield. Historical Outlines of English Accidence, by Richard Morris. Etymological Dictionary of the English Language, by Skeat. Etymological Dictionary of the English Language, by Chambers. The Imperial Dictionary of the English Language, by John Ogilvie. The Concise Oxford Dictionary of Current English. இலத்தீன் : The Student's Latin Grammar,by W.M. Smith. Cassell's Latin Dictionary. கிரேக்கம் : Elementary Greek Grammar, by John Thompson. A Complete Greek and English Lexicon for the Poems of Homer. மொழிநூல் : Tamil Studies, by M. Srinivasa Aiyengar. Linguistic Survey of India (Vol. IV), by Grierson. Lectures on the Science of Language (2 Vols), by Max Muller. Three Lectures on the Science of Language, by Do. Dravidian Origins and the West, by Lahovary. The story of Language, by Charles Barber. வரலாறு : Stone Age in India, by P. T. Srinivasa Aiyengar. Pre-Aryan Tamil Culture, by Do. History of the Tamils, by Do. Pre-Historic South India, by V. R. Ramachandra Dikshitar. Origin and Spread of the Tamils, by Do. Tamil India, by Puranalingam Pillai. The History of Babylonia, by George Smith. பழம்பொருள் நூல் (Archaeology): The Funeral Tent of an Egyptian Queen, by Villiers Staurt. மாந்தனூல் (Anthropology): Anthropology, by Tylor. Anthropology, by P. Topinard. History of Creation (Vol. II), by Haeckel. Out of the Valley of the Forgotten (2 Vols), by Bawman. வரணவியல் (Ethnology) Castes and Tribes of Southern India (7 Vols), by Edgar Thurston. Report on the Socio-Economic Conditions of the Aboriginal Tribes of the Province of Madras, by A. Aiyappan. சமயநூல் The Holy Bible (Old Testament). An Account of the Vedas-C. L. S., Madras. The Brahmanas of the Vedas- Do. *******