இளங்குமரனார் தமிழ்வளம் 11 களவியற் காரிகை இரா. இளங்குமரன் வளவன் பதிப்பகம் சென்னை - 600 017. நூற் குறிப்பு நூற்பெயர் : இளங்குமரனார் தமிழ்வளம் - 11 பதிப்பாசிரியர் : இரா. இளங்குமரன் பதிப்பாளர் : இ. இனியன் பதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16+ 256 = 272 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 170/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை ஓவியம் : ஓவியர் மருது அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு வளவன் பதிப்பகம் எண் : 2 சிங்கார வேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொலைபேசி : 24339030 பதிப்புரை இலக்கிய இலக்கணச் செம்மல் முதுமுனைவர் அய்யா இளங்குமரனார் அவர்கள் எழுபத்தைந்து ஆண்டு நிறைவு எய்தியதைப் போற்றும் வகையில் தமிழ் இளையர்க்கென்று அவர் எழுதிய நூல்களையெல்லாம் சேர்த்து எழுபத்தைந்து நூல்கள் கடந்த 2005 - ஆம் ஆண்டு திருச்சித் திருநகரில் வெளியிட்டு எம் பதிப்புப் பணிக்குப் பெருமை சேர்த்துக் கொண்டோம். அந்த வகையில் 2010 - ஆம் ஆண்டு இப்பெருந் தமிழாசான் 81 - ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் தமிழ்மொழி - இன - நாட்டின் காப்பிற்காகவும், மீட்பிற்காகவும், மேன்மைக்காகவும் இவர் எழுதிய அனைத்து அறிவுச் செல்வங்களையும் தொகுத்துப் பொருள் வழிப் பிரித்து 20 தொகுதிகளாக வெளியிட்டுள்ளோம்.மதுரைத் தமிழ்ச் சங்கச் செந்தமிழ் இதழுக்கும், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நடத்திவரும் செந்தமிழ்ச் செல்வி, குறளியம் மற்றும் பிற இதழ்களுக்கும், மலர்களுக்கும் இவர் எழுதிய அறிவின் ஆக்கங்களைத் தொகுத்துத் தமிழ்கூறும் நல்லுலகிற்கு வழங்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளோம். இப்பெருமகன் வாழும் காலத்திலேயே இவர் எழுதிய எழுத்துக்கள், பேசிய பேச்சுக்கள் அனைத்தையும் தொகுத்து வெளியிடுவது என்பது தமிழ்நூல் பதிப்பு வரலாற்றில் போற்றி மகிழ்வதற்கான, அனைவரும் பின்பற்றுவதற்கான அரும்பெரும் தமிழ்ப் பணியாகும். இவர் தந்நலம் கருதாமல் தமிழ் நலம் காத்து வருபவர். தம்மைமுன்னிறுத்தாது தமிழை முன்னிறுத்தும் பெருந்தமிழறிஞர். தமக்கென வாழாது தமிழ்க்கென வாழ்பவர். ஒருநாளின் முழுப்பொழுதும் தமிழாகவே வாழும் தமிழ்ப் போராளி. சங்கச் சான்றோர் வரிசையில் வைத்து எண்ணத்தக்க அருந்தமிழறிஞர். தமிழ் இலக்கண - இலக்கிய மரபைக் காத்து வரும் மரபு வழி அறிஞர். ஆரவாரம் மிகுந்த இன்றைய சூழ்நிலையில் படாடோபம் இன்றியும், விளம்பரப் போலிமை இன்றியும், தமிழ் மொழியின் ஆழ அகலங்களை அகழ்ந்து காட்டும் தொல்தமிழறிஞர். மொழிநூல் கதிரவன் பாவாணரின் வேர்ச்சொல் ஆய்வில் அவர் காட்டிய வழியில் தம் தமிழாய்வைத் தொடர்பவர். இவர் எழுதிக் குவித்த தமிழ் அறிவுச் செல்வங்களை அவரிடமே வேண்டிப் பெற்று 20 தொகுதிகளாக இளங்குமரனார் தமிழ் வளம் எனும் தலைப்பில் பொருள்வழிப் பிரித்து வெளியிடுகிறோம். தமிழாய்வுக் களத்தில் தம் ஆய்வுப் பயணத்தைத் தொடங்கும் தமிழ் ஆய்வாளர்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும், மாணவச் செல்வங்களுக்கும் தங்கத் தட்டில் வைத்துப் பொற்குவியலாகத் தந்துள்ளோம். எம் தமிழ் நூல் பதிப்புப் பயணத்தில், தமிழ்த்தென்றல் திரு.வி.க.வையும், தனித்தமிழியக்கத் தந்தை மறைமலையடிகளையும், மொழி நூல் கதிரவன் பாவாணரையும், தமிழ்க் மொழிக் காவலர் இலக்குவனாரையும் வழிகாட்டியாகக் கொண்டு தமிழ் நூல் பரப்பின் எல்லையைக் கண்டு காட்டும் சங்கத்தமிழ்த் சான்றோராக விளங்கும் ஐயா இளங்குமரனார் வாழும் காலத்திலேயே அவர் நூல்களை வெளியிடுவதை யாம் பெற்ற பேறாகக் கருதுகிறோம். தமிழர் இல்லம்தோறும் இருக்கத்தக்க இவ்வருந்தமிழ்ச் செல்வங்களைத் தமிழ் இளம் தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் உன்முன் னேற்றம்! .......... ..... இதுதான்நீ செயத்தக்க எப்பணிக்கும் முதற்பணியாம் எழுக நன்றே. எனும் பாவேந்தரின் தமிழியக்க உணர்வுகளை நெஞ்சில் ஏந்தி வாழ முற்படுவோம். - பதிப்பாளர். பெறும் பேறு வளம் எங்கே இருக்கிறது? வளம் எங்கேயும் இருக்கிறது! அஃது இல்லாத இடமே இல்லை! வளம் எங்கும் இருப்பதை எப்படி அறியலாம்? வளத்தைத் தேடும் உளம் இருந்தால், வளம் எங்கேயும் இருப்பதை அறியலாம்? வளத்தின் அளவு என்ன? வளத்தின் அளவும் உளத்தின் அளவேயாம்! உளத்தில் வளம் இல்லையானால், உள்ள வளமும் உடையவனுக்கும் உதவாது ஊருக்கும் உலகுக்கும் உதவாது! வளத்தைத் தரும் உளத்தை ஒருவர் வாய்க்கப் பெற்றால் போதும்! அவ்வளம் குன்றியளவானால் என்ன? குன்றத்தனைய வளமானால் என்ன? தினை அளவானால் என்ன? பனை அளவானால் என்ன? வளம் வளமே! தேனீ வளம்? தினைத்தனை அளவுப் பூவில், தேனீ கொள்ளும் தேன் எவ்வளவு இருக்கும்? கோத்தும்பி கொணரும் தேன் வளம் எவ்வளவு இருக்கும்? கோத்தும்பி கொணர்வதே வளம், தேனீ கொணர்வது வளமில்லை என எவராவது கூறுவாரா? வளம் வளமே! அவரவர் உழைப்பு, அறிவுத்திறம், உண்மையறிவு, பட்டறிவு, கால-இட-சூழல் கொடை- ஆகியவற்றைப் பொறுத்தது அது. பொருள் மட்டுமா வளம்? புலமை வளமில்லையா? ஊக்குதல் உதவுதல் உறுதுணையாதல் ஒன்றுதல் ஆயவை - வளமில்லையா? எல்லாம் வளமே! மல்லல் வளனே என்பது தொல்காப்பியம். (உரி.7) உடலாலும் வளம்; உழைப்பாலும் வளம்; உணர்வாலும் வளம்; உரையாலும் வளம்; வளம் பட வாழ வேண்டாதார் எவர்? வளம் பெற வேண்டாதார் எவர்? வளந்தலை மயங்கிய வஞ்சி முற்றம் என்பது சிலம்பு! வளத்தின் அளவு, அளந்து கடை அறியாவளம் என்பது (25:33-34) நாடென்ப நாடா வளத்தன என்பது நாட்டின் இலக்கணம்! எளிமை, இனிமை, இறைமை, நிறைமை என மக்கள் வாழ்ந்த நாள் இலக்கணம்! இன்றோ, நானில வளங்களையும் நாடா நாடில்லை! எந்த நாடு ஏற்றுமதி செய்யவில்லை? எந்த நாடு இறக்குமதி செய்யவில்லை? பாலைவளத்தை நாடிச்சோலை நிற்றல் வெளிப்படை என்றால், சொல்வானேன்? நாடாவளத்தில் குப்பைக்கீரை சேராதா? குறுந்தூறு சேராதா? வளத்தை வழங்குதல் தான் பிறவிக் கடனே யன்றி அளவிடும் பொறுப்பு வழங்குவார்க்கு இல்லை! பெறுவார் பொறுப்பு. ஆனால், வளம் பெற்றுப் பெற்றுப் பெருகி வாழ்ந்தவர், அவ்வளத்தைத் தமக்கு வழங்கிய மண்ணுக்கு மறித்து வழங்கிப் பெற்ற கடனைத் தீர்க்காமல் போனால் கடன்காரராகவே போவது மட்டுமன்றி, பிறவி அடையாளமே இல்லாமலும் போய்விடுவார்! பெற்றவர் வழியாகக் கருவிலே பெற்ற திரு என்ன! கற்ற கல்வியால் பெற்ற வளம் என்ன! பட்டறிவால் - ஆழ்மன ஆய்வால் - தேடிக் கொண்ட வளங்கள் என்ன என்ன! பிஞ்சுப் பருவ முதல் பெரும் பிரிவு வரை பெற்றவற்றை, அந்நிலைப்பருவத்தர்க்குப் பருவமழை போலப் பலப்பல வகையாலும் வழங்குதல் வாழ்வார் வாழ்வுச் சீர்மையாதல் வேண்டும்! புரிவு தெரிந்த நாள் முதல் புலமை பெருகிவரும் அளவுக்குத் தகத்-தகத் தொல்காப்பியர் ஆணை வழி, ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் என்னும் நால்நெறிக் கடன்களையும் நிறைவேற்றல் வேண்டும்! கூற்றையும் ஆடல் கொள்ளும் கொள்கை இதுவென உணர்வார் ஓயார், ஒழியார்; சாயார்; சரிந்தும் போகார்! என் இளந்தைப் பருவமே, ஆசிரியப் பருவமாகிவிட்டது. அக்காலச் சூழல் அது. பிறந்தநாள் : 30.01.1930 ஆசிரியப் பணி ஏற்ற நாள்: 08.04.1946 கால் சட்டை போடும் மாணவப்பருவத்தில் வேட்டி கட்டும் ஆசிரியனாகி விட்டேன்! மூன்றாண்டு ஆசிரியப் பணி செய்தால் போதும்! புலவர் தேர்வைத் தனியாக எழுதலாம் என்னும் வாய்ப்பு! அவ்வாய்ப்பைச் சிக்கெனப் பற்றியமையால் 1949, 1950, 1951 ஆகிய மூவாண்டுகளில் தொடர்ந்து நுழைவுத் தேர்வு, புலவர் இடைநிலைத் தேர்வு, புலவர் நிறை நிலைத் தேர்வு எனச் சிறப்புற வெற்றி வாய்ப்பு எய்தியது. உயர்பள்ளி, மேல்பள்ளி என்பவற்றிலும் பல்கலைக் கழகத் தமிழியல் ஆய்வுக் களத்திலுமாக ஏறத்தாழ 43 ஆண்டுகள் தமிழ்வாழ்வாக வாழ வாய்த்தது. தமிழ்த்தொண்டும், தமிழ்நெறித் தொண்டும் என்றும் விடுதல் அறியா விருப்பொடு செய்து கொண்டிருத்தலே இயற்கையோடு இயைந்த வாழ்வாகி விட்டது! புலமைத் தேர்வுக்குரிய பாடத்தளவிலோ, நூல்களின் அளவிலோ என் கல்வி நின்றது இல்லை! தொல்காப்பியம் முதல் இற்றைநாள் நூல்கள் வரை இயன்ற அளவால் தமிழ்வளம் பெறுதலை நோன்பாகக் கொண்டு கற்கும் பேறுபெற்றேன். பேராசிரியர் சி.இலக்குவனார், மொழிஞாயிறு பாவாணர், நாவலர் ச.சோ.பாரதியார், வரலாற்றுச் செம்மல் அரசமாணிக்கனார், பைந்தமிழ்ப் பாவலர் m.கி.guªjhkdh®, உரைவேந்தர் ஔவை சு.துரைசாமியார், மூதறிஞர் செம்மல் வ,சுப.மாணிக்கனார், தாமரைச் செல்வர் வ,சுப்பையனார், ஈரோடு வேலா, குழித்தலை மீ.சு. இளமுருகு பொற்செல்வி, பதிப்புச் செம்மல் மெய்யப்பனார், பாரதி சோ.சாமிநாதனார், தமிழ்ப்போராளி இளவழகனார், தமிழ் மீட்புக்குத் தலைநின்ற ஆனாரூனா, பாவாணர் அறக்கட்டளையர் கோவலங்கண்ணனார், மலையக மாரியப்பனார் இன்னர் நெருக்கத் தொடர்புகள் வாய்த்தன. இளந்தைப் பருவத்திலேயே பாவேந்தர், ஓகி சுத்தானந்த பாரதியார், கவிமணியார், கவிராச பண்டித செகவீர பாண்டியனார், அறிஞர் மு.வ. ஆயோர் அரிய காட்சியும் சின்முறைச் சந்திப்புகளும் என்னுள் பசுமை நல்கின. தமிழ்ப் பொழிவுகளும், ஆய்வுக் கட்டுரைகளும், குடும்பச் சடங்குகளும் என் மீட்டெடுப்புப் பணிகள் ஆயின! எம் குடும்பக் கடமைகள் எம் பணியையோ தொண்டையோ கவர்ந்து கொள்ளா வகையில் இனிய துணையும் மக்களும் அமைந்தனர். அதனால், காலமெல்லாம் கற்கவும் கற்பிக்கவும் நூல் படைக்கவும் வாய்த்த வாய்ப்புப் பெரிதாயிற்று. அன்பும் அறிவும் என்னும் நூல் தொடங்கிச் செந்தமிழ்ச் சொற்பொருள் களஞ்சியம் எனத் தொடர்ந்து ஏறத்தாழ 400 நூல்கள் இயற்றவும் வெளியிடவும் வாய்த்தன. குழந்தை நூல்கள், நூலக நூல்கள், ஆய்வு நூல்கள், அகராதிகள், உரைநூல்கள், பதிப்பு நூல்கள், பா நூல்கள், காப்பியங்கள், கதைகள், கட்டுரைகள், தொகுப்புகள் இலக்கண நூல்கள் எனப் பலப்பல திறத்தனவாய்ப் பால் வாய்ப் பருவத்தர் முதல் பல்கலைக் கழக ஆய்வர் வரைக்கும் பயன் கொள்ளும் வகையில் அவை அமைந்தன. எதை எடுத்தாலும் பாடலாக்கல் ஒருகாலம்; கதையும் நாடகமும் ஆக்கல் ஒருகாலம்; பதிப்புப் பணியே ஒரு காலம்; உரை காணலே ஒரு காலம்; படிப்படியே சொல்லாய்வே வாழ்வென ஆகிவிட்ட காலம் என அமைந்தன. இக் கொடைகள் வழங்கியவை பாரதி பதிப்பகம், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், மணி பதிப்பகம், முருகன் பதிப்பகம், வேலா பதிப்பகம், மணிவாசகர் பதிப்பகம், வேமன் பதிப்பகம், மூவேந்தர் பதிப்பகம், பாவாணர் அறக்கட்டளை, சாகித்திய அகாதெமி, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்மண் பதிப்பகம், அமிழ்தம் பதிப்பகம், வளவன் பதிப்பகம், மாணவர் பதிப்பகம், அமிழ்தமணி பதிப்பகம், திருவள்ளுவர் தவச்சாலை அறக்கட்டளை வெளியீடுகள் என விரிந்தன. நூலுருப் பெற்று அச்சக வழியும் பதிப்பக வழியும் காணப்பெறாமலும் எதிர்பாரா மறைவுகளாலும் ஏறத்தாழச் சிறிதும் பெரிதுமாய் ஒழிந்தவை இருபதுக்கு மேல் ஆயின. செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, தமிழ்ப்பாவை, குறள் நெறி, குறளியம், மலர்கள், ஆய்வரங்கங்கள் எனக் கட்டுரைகள் பெருகின. அச்சுக்கு வாராதவையும் ஆகின! இவை என்றும் ஒருமுகமாய்க் கிடைக்க வாய்ப்பில்லை. எம் நூல்கள் எம்மிடமே முப்பதுக்குமேல் இல்லாமல் மறைந்தன. எழுதியன எல்லாவற்றையும் ஒருமுகமாகப் பெறப் பலர் அவாவினார். தவத்திரு ஆத்துமானந்த அடிகளார் (ஆருயிர்க்கு அன்பர்) அதில் தலைப்பட்டு நின்றார். ஆயர் ஆண்டகை சூசைமாணிக்கனார் சுடரேற்றினார். பாரதிதாசன் பல்கலைக்கழகம் மதிப்புறு முதுமுனைவர் பட்டம் வழங்கியது. அதற்கு மகிழ்வுற்ற வகையால் பாவாணர் தமிழியக்கம் முதலாம் அமைப்புகளும், முனைவர் திருமாறனார் முதலாம் ஆர்வலர்களும் விழா ஒன்று எடுத்தனர். அவ்விழாத் தலைமையைத் திருத்தகு துணைவேந்தர் பொன்னவைக்கோ ஏற்றார். தவத்திரு ஆத்துமானந்த அடிகளார் வாழ்த்துரைத்தார். பொறிஞர் தமிழறிஞர் பாலகங்காதரனார் என் நூல்கள் சிலவற்றை ஒளிப்படியாக்கி உயரட்டைக் கட்டில் வழங்கி அவற்றை முழுதுறப் பெற மீளச்சிடுதல் வேண்டும் என்றார். தமிழாக்கப் பதிப்பே வாழ்வாக ஒன்றிய இளவழகனார் முழுதுற அச்சிட ஒப்பினார். அடிகளார் வெளியீட்டுப் பொறுப்பு ஏற்பதாகக் கூறினார். கிடைக்கும் நூல்கள் தவிர்த்துப் பிறவற்றையெல்லாம் அச்சிடும் திட்டம் கொண்டு ஏறத்தாழ இருபது, இருபது தொகுதிகளாக வெளியிடுவது என உறுதிப்படுத்தப் பட்டது. அவ்வகையில் வாய்ப்பதே, இளங்குமரனார் தமிழ்வளம் என்னும் இத் தொகை நூல்களாம்! இத் தொகையில் விடுபடும் நூல்கள் கட்டுரைகள், பாடல்கள் பல்லபல. தொகுக்க வாய்க்கா வகையில் கிட்டாவகையில் மறப்பு வகையில் விடுபாடுடையவை உள. எனினும் தொண்ணுறு விழுக்காடேனும் ஒரு முகமாகப் பெறும் பேறு வாய்க்கின்றது என்பது மகிழ்வூட்டுவதாம்! மக்கள் வாழ்வு வளர்நிலையது! நூல்களும் வளர் நிலையவை! ஆதலால் ஒருவாழ்வுக் கொடை மட்டுமன்று ஈது; ஒருவாழ்வு பெறத் தக்க பல்பருவக் கொடையுமாம் எனல் சாலும்! இதன் அடிப்படையாம் எத்தேடலிலும் பெரிதும் தோயாமல் தமிழ்வளத் தேடலிலேயே காலமெல்லாம் சோம்பலைச் சுட்டெரித்து, இடுக்கணுக்கு இடுக்கண் ஆக்கி வாழ்ந்த வாழ்வுக் கொடையாம் இது! இவ்வளத்தை முழுதுற எண்ணின் ஒன்று உறுதியாக வெளிப்படும். நலவாழ்வு நல்வாழ்வு கருதாத - இயற்கை இறைமைப் பொதுமை கருதாத - எப்படைப்பும் எம்படைப்பில் இரா என்பதேயாம். இவற்றைப் பயில்வார் பெறும் பேறும் அதுவாக அமையின் அப்பேறே யாம் பெறும் பேறாம். இவ்வளம் வெளிவர விரும்பினோர் உழைத்தோர் உதவினோர் ஆய அனைவர்க்கும் நன்றிக் கடப்பாடுடையேன்! வாழிய நலனே! வாழிய நிலனே! நெல்லுக்கு உமியுண்டு நீருக்கு நுரையுண்டு புல்லிதழ் பூவுக்கும் உண்டு குறைகளைந்து நிறை பெய்து கற்றல், கற்போர் கடனெனல் முந்தையர் முறை இன்ப அன்புடன், இரா.இளங்குமரன் உள்ளடக்கம் பதிப்புரை iii பெறும் பேறு vi நூல் களவியற் காரிகை ஆராய்ச்சி முன்னுரை 1 நூற்பெயர் 1 நூற் பொருள் 6 பதிப்பு 9 களவியற் காரிகை 11 1. அகப்பொருள் 11 2. களவொழுக்கம் 21 3. தோழியாலாய கூட்டம் 58 4. கற்பொழுக்கம் 153 நூற்பா அகரவரிசை (எண்: நூற்பாவெண்) 197 மேற்கோள் செய்யுள் அகரவரிசை 198 களவியற் காரிகையில் அமைந்துள்ள 210 மேற்கோள் நூல்களும் பாடல் எண்களும் 210 மேற்கோள் நூற்குறிப்பு 214 களவியற் காரிகையில் சிதைவடைந்துள்ள முற்பகுதி 226 சிறப்புப் பெயர் அகரவரிசை 230 மூல நூல் அகப்படாத பாடல்களுக்குக் குறிப்புரை 239 களவியற் காரிகை ஆராய்ச்சி முன்னுரை நூற்பெயர் களவு என்பது பலபொருள் ஒருசொல். அச்சொல் ஈண்டுக் களவு, கற்பு என்னும் கைகோள் இரண்டனுள் களவினைக் குறிப்பதாம். கைகோள் எனினும் ஒழுக்கம் எனினும் ஒக்கும். உலகியலில் பொதுவாகக் கடிந்து கூறப்பெறுவது களவு. அது பொருட் களவாம். உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல் என்று நெஞ்சத்தால் நினைத்தலும் களவே என்று கூறிக் களவின் சிறுமையை வெளிப்படுத்துகிறது அறநூல் அக்களவு அவ்வாறாக இக்களவு எத்தகைத்தோ எனின் இறையனார் களவியல் சீரிய விளக்கம் தருகின்றது : களவு கொலை காமம் இணைவிழைச்சு என்பனவன்றோ சமயத்தாரானும் உலகத்தாரானும் கடியப்பட்டன. அவற்றுள் ஒன்றன்றாலோ இதுவெனின் அற்றன்று. களவு என்னுஞ் சொற்கேட்டுக் களவு தீதென்பதூஉம், காமம் என்னுஞ் சொற் கேட்டுக் காமம் தீதென்பதூஉம், அன்று. மற்று அவை நல்ல ஆமாறும் உண்டு. என்னை, ஒரு பெண்டாட்டி தமரொடு கலாய்த்து நஞ்சுண்டு சாவல் என்னும் உள்ளத்தளாய் நஞ்சு கூட்டி வைத்து, விலக்குவாரை இல்லாத போழ்து உண்பல் என்று நின்றவிடத்து, அருளுடையான் ஒருவன் அதனைக் கண்டு, இவள் இதனை உண்டு சாவாமற் கொண்டு போய் உகுப்பல் என்று, அவளைக் காணாமே கொண்டுபோய் உகுத்திட்டான்; அவளும் சனநீக்கத்துக்கண் நஞ்சுண்டு சாவான் சென்றாள்; அது காணாளாய்ச் சாக்காடு நீங்கினாள். அவன் அக்களவினான் அவளை உய்யக் கொண்டமையின் நல்லூழிற் செல்லும் என்பது. மற்றும் இதுபோல்வன களவாகா; நன்மை பயக்கும் என்பது. இனிக் காமம் நன்றாமாறும் உண்டு. சுவர்க்கத்தின்கண் சென்று போகந் துய்ப்பல் என்றும் உத்தர குருவின்கண் சென்று போகந் துய்ப்பல் என்றும் நன்ஞானங் கற்று வீடுபெறுவல் என்றும் தெய்வத்தை வழிபடுவல் என்றும் எழுந்த காமம் கண்டாயன்றே! மேன்மக்களாலும் புகழ்ப்பட்டு மறுமைக்கும் உறுதி பயக்கும் ஆதலின், இக்காமம் பெரிதும் உறுதியுடைத்து என்பது. இனி, உரையாசிரியர் இளம்பூரணவடிகள் தொல்காப்பியக் களவியல் உரைக்கண் இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின் களவியல் என்னும் பெயர்த்து. களவொழுக்கம் உணர்த்தினமையாற் பெற்ற பெயர். அஃதாதல் ஈண்டு உரைக்கின்றதனால் பயனின்றாம்; களவென்பது அறம் அன்மையின் எனில், அற்றன்று; களவு என்னும் சொற் கண்டுழியெல்லாம் அறப்பாற்படாது என்றல் அமையாது. களவாவது, பிறர்க்குரிய பொருள் மறையிற் கோடல். இன்னதன்றி ஒத்தார்க்கும் மிக்கார்க்கும் பொதுவாகிய கன்னியரைத் தமர் கொடுப்பக் கொள்ளாது கன்னியர் தம் இச்சையினால் தமரை மறைத்துப் புணர்ந்து பின்னும் அறநிலை வழாமல் நிற்றலால் இஃது அறமெனப்படும். என்று கூறுவதும், ஆசிரியர் நச்சினார்க்கினியர் அதே களவியல் உரைக்கண் இவ்வோத்துக் களவு கற்பு என்னும் கைகோள் இரண்டனுள் களவு உணர்த்தினமையிற் களவியல் என்னும் பெயர்த்தாயிற்று; பிறர்க்குரித்தென்று இருமுது குரவரால் கொடை எதிர்ந்த தலைவியை அவர் கொடுப்பக் கொள்ளாது, இருவருங் கரந்த உள்ளத்தொடு எதிர்ப்பட்டுப் புணர்ந்த களவதலின் இது பிறர்க்குரிய பொருளை மறையிற் கொள்ளுங் களவன்றாயிற்று. இது வேதத்தை மறை நூல் என்றாற் போலக் கொள்க என்று கூறுவதும் இக்கருத்தை வலியுறுத்துவனவாம். இம்மை இன்பங்காட்டி மறுமை இன்பங் கூட்டுவதாக வஞ்சித்துச் செல்வது கொண்டு களவியலாயிற்று என்று இறையனார் களவியல் உரையாசிரியர் காரணங் காட்டி விளக்குகின்றார் : கடுத் தின்னாதானைக் கட்டிபூசிக் கடுத்தீற்றியவாறு போலவும், கலங்கற் சின்னீர் தெருளாமையான் உண்பானை அறிவுடையான் ஒருவன் பேய்த்தேரைக் காட்டி உதுக்காணாய், நல்லாதொரு நீர் தோன்றுகின்றது, அந்நீர் பருகாய், இச்சேற்று நீர் பருகி என் செய்தி என்று கொண்டு போய் நன்னீர் காட்டி ஊட்டியது போலவும் தான் ஒழுகா நின்றதோர் இணை விழைச்சிணுள்ளே மிக்கதோர் ஒழுக்கங் காட்டினான். fh£lnt f©L, ‘ïJ bgWkhW v‹id bfhšnyh? என்னும்; எனவே, மக்கள் பாட்டினானும் வலியானும் வனப்பானும் பொருளானும் பெறலாவது அன்று ; தவஞ்செய்தால் பெறல் ஆம். என்னை, வேண்டிய வேண்டியாங் கெய்தலாற் செய்தவம் ஈண்டு முயலப் படும் என்பதாகலான் என்பது. அதுகேட்டு, இனி யானுந் தவஞ் செய்து இதனைப் பெறுவல் என்று அதன்மாட்டு வேட்கையால் தவஞ்செய்யும் ; செய்யா நின்றானைப், பாவீ, இதன் பரத்ததோ வீடுபேற்றின்பம்? என்று வீடுபேற்றின்பத்தை விரித்துரைக்கும். அதுதான் பிறப்புப் பிணி மூப்புச் சாக்காட்டு அவலக் கவலைக் கையாற்றின் நீக்கி மணியினது ஒளியும், மலரினது நாற்றமும், சந்தனத்தது தட்பமும் போல உள்நின்று எழுதரும் ஒரு பேரின்ப வெள்ளத்தது என்பது கேட்டு அதனை விட்டு வீடுபேற்றின் கண்ணே அவாவி நின்று, தவமும் ஞானமும் புரிந்து வீடு பெறுவானாம் என்பது. அவனை வஞ்சித்துக்கொண்டு சென்று நன்னெறிக்கண் நிறீஇனமையின் களவியல் என்னுங் குறி பெற்றது. இக்களவின் இலக்கணத்தை ஒன்றே வேறே என்றிருபால் வயின், ஒன்றி உயர்ந்த பால தாணையின், ஒத்த கிழவனும் கிழத்தியும் கண்டு கூடும் கூட்டமென்று ஆசிரியர் தொல் காப்பியனார் கூறுவர். இக்கருத்தைக் களவாவது பிணி, மூப்பு, இறப்புக்களின்றி எஞ்ஞான்றும் ஒருதன்மையராய் உருவும், திருவும், பருவமும், குலனும், குணனும் அன்பும், முதலியவற்றால் தம்முள் ஒப்புமையுடையராய தலைமகனும் தலைமகளும் பிறர் கொடுப்பவும் அடுப்பவுமின்றிப் பால் வகையால் தாமே எதிர்ப்பட்டுப் புணர்ந்து வருவது எனப் பரிமேலழகர் திருக்குறள் களவியலில் விரித்தெழுதுகின்றார். பாலது ஆணையால் (ஊழால்) இஃதியல்வதாகலின் தெய்வப் புணர்ச்சி, இயற்கைப் புணர்ச்சி முதலிய குறியீடுகளையும் களவுப் புணர்ச்சி பெறுவ தாயிற்று. ஆதலால், பழிப்புக் குரியதொன்றன்று இஃது என்பது போதரும். களவொழுக்கம் பற்றிக் கூறும் நூல் களவியல் ஆகும். இறையனார் அகப்பொருளுக்குக் களவியல் என்றும், இறையனார் களவியல் என்றும் பெயருண்மை அறிந்ததே. இனி, ஒரு நூலில் களவியல் இலக்கணம் கூறும் ஒரு பகுதியும் களவியல் எனப்பெயர் பெறும் என்பது தொல்காப்பியக் களவியலாலும், நம்பியகப்பொருட் களவியலாலும் தெளிவாம். களவொழுக்கத்திற்கு இலக்கியமாக அமைந்த ஓரிலக்கியப் பகுதியும் களவியல் என்று பெயர் பெறுவது திருக்குறட் களவியலால் விளங்கும். இவ் விடங்களில் எல்லாம் இயல் என்பது நூலின் உட்பிரிவாகிய ஓத்து என்னும் பொருளதாம். இதன் இலக்கணம், நேரின மணியை நிரல்பட வைத்தாங்கு ஓரினப் பொருளை ஒருவழி வைப்பது ஓத்தென மொழிப உயர்மொழிப் புலவர் என்னுந் தொல்காப்பிய நூற்பாவான் அறியக் கிடக்கிறது. களவியல் என்னும் பெயரே சாலுமாகவும் களவியற் காரிகை எனல் வேண்டுமோ எனின் வேண்டும் என்பதாம். இந் நூற்கு முன்னூலான இறையனார் அகப்பொருள் களவியல் எனப் பெயர் பெறும் ஆதலால், அப்பெயரையே அதன் பின்வரு நூற்குச் சூட்டுதல் மயக்கத்திற்கு இடனாம். ஆதலால், தெளிவு கருதிக் களவியற் காரிகை எனல் வேண்டும் என்பது. இனிக் காரிகை என்பதன் பொருள் யாதோ எனின் கூறுதும்: களவு போலவே காரிகை என்பதும் பலபொருள் ஒரு சொல்லாம். அவற்றுள் அழகு, பெண், கட்டளைக் கலித்துறை என்னும் மூன்று பொருள்கள் குறிப்பிடத் தக்கனவாம். இம்முப் பொருளும் ஒருங்கமையச் செய்யப் பெற்றது களவியற் காரிகை. திட்டமிட்ட அழகிய பகுப்பும், அந்தாதி அமைப்பும் உடையது 1பெண்ணை முன்னிலைப்படுத்துக் கூறுவது; கட்டளைக் கலித்துறை யாப்பில் அமைந்தது. மகடூஉ முன்னிலை யுடையதும், கட்டளைக் கலித்துறையால் அமைந்ததும் ஆகிய யாப்பிலக்கண நூல் யாப்பருங்கலக் காரிகை எனப் பெயர் பெற்றது போல இது களவியற் காரிகை எனப் பெயர் பெற்றது. காரிகை என்பதே அமையாதோ எனின், அப்பெயரைக் கூறியவாற்றால் கொள்ளப் பெறுவது 2யாப்பருங்கலக் காரிகையே ஆதலால், இப் பெயர் வேண்டும் என்பது. களவியற் காரிகை என்னும் நூற்பெயர்த் தகவினை அறிந்தோம். ஆயின், களவியலும், கற்பியலும் கூறும் நூற்குக் களவியல் எனக் குறியிட்டது தகுமோ எனின் தகும் என்பதாம். அது மிகுதியால் பெற்ற பெயராம். முதனூல் கருத்தன் எனத் தொடங்கும் நூற்பாவின் (நன். 49) உரைக்கண் மிகுதியால் பெயர் பெற்றது களவியல் என்று உரைகாரர் பலரும் உரைத்தமை அறியத் தக்கது. அறம் பொருள் இன்பம் என்னும் முப்பாலும் மொழியும் முப்பால், அறம் என ஆன்றோரால் வழங்கப் பெறுவதாலும், பிற மரங்களும் உளவேனும் புளியந்தோப்பு, மாந்தோப்பு என்று கூறும் வழக்குண்மையாலும் தெளிக. முற்பகுதியும் பிற்பகுதியும் இடைப் பகுதி சிலவும் சிதைந்து போன இந் நூற் பெயர் தானும் அறியக் கூடாது ஒழிந்தது. நூலாசிரியர் பெயரும் உரையாசிரியர் பெயரும் அறியக் கூடவில்லை. தொன்னூல் நிலையத்தில் இருந்த ஒரோவோர் கையெழுத்துப் படியைக் கொண்டு அரிதின் முயன்று முதற் பதிப்பை வெயியிட்ட பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை அவர்கள் சூட்டிய பெயரே களவியற் காரிகை என்பதாம். இவ்வரிய நூலுக்கு இப்போது கிடைத்துள்ளது ஒரு கையெழுத்துப் பிரதியேயாகும். இது சென்னை அரசாங்கத் தாரது தொன்னூல் நிலையத்திலுள்ளது. இப் பிரதியின் இறுதியில் எழுதப் பெற்றுள்ள ஆங்கிலக் குறிப்பினால் இஃது ஆழ்வார் திருநகரி மலையப்ப பிள்ளைக் கவிராயருக்குரிய ஏட்டுப் பிரதியினின்றும் நாதமுனிப் பிள்ளை என்பார் 12-6-1920 இல் பிரதி செய்ததென அறியக்கிடக்கின்றது. இப் பிரதி குறைப் பிரதியே; இதன்கண் நூலின் முதலும் இறுதியும் காணப்பட வில்லை. அன்றியும், வாசிப்போர் பயனடையக்கூடாத வண்ணம் பிழை பொதிந்தும் இதழ்கள் முறை பிறழ்ந்தும் பலவாறாகக் கேடுற்றிருக்கின்றது. இடையிடையே செய்யுள்களும் வாக்கியத் தொடர்களும் மறைந்து போய்விட்டன. எனவே, எத்துணை முயன்றாலும் முழுவதும் இதனைச் செப்பஞ் செய்தல் இயலாத தொன்றாம். ஆயினும், கிடைத்த அளவில் தானும் இந்நூற் பகுதி மிகவும் பயன்படக்கூடியதாய் இருத்தலின் ஒருவாறு செப்பஞ் செய்து இப்போது வெளியிடப் பெறுகின்றது... யாப்பருங்கலக் காரிகை யாப்புக்குரிய செய்திகளை யெல்லாம் கலித்துறைச் செய்யுளால் விளக்குவது போல இந்நூல் அகப்பொருட் செய்திகளை அந்தாதிச் தொடையில் அமைந்த கலித்துறைச் செய்யுள்களால் சுருங்க உரைக்கின்றது. இதன் உரை மிகவும் பாராட்டற்பாலது. இறையனார் களவியற் சூத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு பரந்துபட்ட அகப்பொருட் செய்திகட்கெல்லாம் அரிய மேற்கோள்கள் காட்டி விரிந்து செல்கின்றது. தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்கள் தவிரப் பிற நூல்களில் இருந்து மேற்கோள் தருமிடங்களில் அந் நூல்களின் பெயர்களையும் இவ்வுரை சுட்டி உணர்த்துகின்றது. இந் நூலின் பெயர் புலப்படவில்லை. தொன்னூல் நிலையக் கையெழுத்துப் பிரதியில், இறையனாரகப் பொருட்டுறை: சங்கச் செய்யுளாக உதாரணமெழுதியது எனக் காணப்படுகின்றது. இது நூல் இன்னதென உணர்வதற்கு அதன் புறத்தே எழுதி வைக்கும் தலைக்குறிப்பு எனவே கொள்ளற்பாலது. நூற் பெயரன்று என்பது திண்ணம். இப்போது கொடுக்கப் பெற்றுள்ள களவியற் காரிகை என்னும் பெயர் என்னாற் படைத்துக் கொள்ளப்பட்டதேயாகும் என்னும் முன்னுரைப் பகுதியால் நூலின் சிறப்பும் அதன் சிதைபாடும் நூற் குறியீட்டமைதியும் விளங்கும். நூற் பொருள் களவு கற்பு என்னும் அகப்பொருள் பகுதி இரண்டனுள் களவுப் பகுதியே அகப்பொருள் நூல்களில் விரிந்து கிடப்பது. அவ்வாறே களவியற் காரிகையிலும் களவுப் பகுதி விரிந்துளது எனலாம். புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் என்பன அன்பின் ஐந்திணை உரிப் பொருள்கள். இவற்றுள் களவியலில் புணர்தலும் புணர்தல் நிமித்தமுமே பெருவரவிற்று என்பது தெள்ளிதின் உணரக் கிடப்பதாம். களவிற் கூட்டம் முக்கட் கூட்டம் எனப் பெறும். முக்கட் கூட்டமாவது இயற்கையால் கூடும் கூட்டம் (இயற்கைப் புணர்ச்சி), தோழனால் கூடும் கூட்டம், தோழியால் கூடும் கூட்டம் என்பன. இக் கூட்டங்களின் விளைவாகத் தோன்றுவதே கற்பொழுக்கம். அதனால், முக்கட் கூட்டம் முதலா நான்கும் தொக்கியல் ஒழுக்கம் கற்பெனத் தோன்றும் (21) என்று தமிழ்நெறி விளக்கம் கூறிற்று. நான்கும் தொக்கிய ஒழுக்கமாவது அறத்தொடு நிலை, உடன் செலவு, சேயிடைப் பிரிவு, ஆயிடைப் பிரிவு என்பன. இவை கற்பொழுக்கத்தின் கூறுகளாம். இவற்றுள சேயிடைப் பிரிவு என்பது சேய்மைக் கண்ணே பிரிந்து செல்லுதல். அவை கல்விப் பிரிபு, காத்தற் பிரிவு, பகைதணிவினைப் பிரிவு, உற்றுழிப் பிரிவு, பொருள்வயிற் பிரிவு என்னும் ஐந்துமாம். ஆயிடைப் பிரிவு என்பது தன் ஊரும் சேரியும் நகரும் இடமாகப் பிரிவது ; அது பரத்தையிற் பிரிவு என்னும் ஒன்றுமேயாம். அ+இடை=ஆயிடை. சுட்டு செய்யுட்கண் நீண்டு வருதலை, நீட வருதல் செய்யுளுள் உரித்தே -தொல். எழுத்து. 206. என்னும் இலக்கணத்தானும், ஆயிடைத் தமிழ்கூறு நல்லுல கத்து என்றும், ஆயிரு திணையின் இசைக்குமன சொல்லே என்றும் வரும் எடுத்துச் காட்டுக்களானும் இனிதின் அறியலாம். ஆயிடை என்பது சேயிடைக்கு முரணாய் அண்மை சுட்டி நின்றது. களவிற் புணர்ச்சி கூட்டக் கூடுதல் இன்றித் தொடங்கும். அதனால், கூட்டக் கூடுதல் களவிற்கு இல்லை. ஆயின், அக்கூட்டம் யாங்ஙனம் நிகழ்ந்ததோ எனின், அதுவே, தானே அவளே தமியர் காணக் காமப் புணர்ச்சி இருவயின் ஒத்தல் - இறையனார் களவியல். 2 என்னும் நெறியால் கூட்டம் நிகழ்ந்ததாம். அதனால் அன்றோ முக்கட் கூட்டத்துள் முதற் கூட்டத்தை இயற்கைப் புணர்ச்சி என்றும் தெய்வப் புணர்ச்சி என்றும் ஆன்றோர் கூறினார். தெய்வம் என்பது ஊழ். பால்வரை தெய்வம் என்பதும் அது. தெய்வம், ஊழ் என்னும் பொருட்டாதலைத், தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் என்னும் குறளானும் (615) அதற்குப் பரிமேலழகர் வரைந்த உரையானும் அறிக. இயற்கைப் புணர்ச்சி இன்றித் தோழனிற் கூட்டமோ தோழியிற் கூட்டமோ நிகழா. களவியலில் தோழனின் பங்கு ஒரு சிறு பகுதியேயாம்; கற்பியலிலோ இதனினும் சுருங்கியதாம். ஆனால், தோழியின் பங்கு பெரும் பகுதியாம். பகற்குறி, இரவுக் குறி, உடன்போக்கு, வரைவு, இல்லறம் ஆகிய அனைத்து நிகழ்ச்சிகளிலும் அவள் பங்கே மிகுதி. அவள், வழி வழி உரிமையுடையளாகவும், செவிலியின் மகளாகவும், உடன் பிறந்து உடன் வளர்ந்து, நீர் உடன் ஆடிச் சீர் உடன் பெருகி, ஓல் உடன் ஆட்டப் பால் உடன் உண்டு, பல் உடன் எழுந்து சொல் உடன் கற்றுப், பழமையும் பயிற்றியும், பண்பும் நண்பும் விழுப்பமும் ஒழுக்கமும் உடையவள் ஆகவும் இருத்தலால் அவளுக்கு அத்துணைச் சிறப்புரிமை அகப்பொருளில் உண்டாயிற்றாம். அவள் அறிவுக் கூர்ப்பும் உரையாட்டுத் திறமும் செயற் சீர்மையும். அகப்பொருளுக்குப் பேரழகும் சுவையும் பெருவாழ்வும் ஊட்டுவனவாம். இனி இக்களவியற் காரிகையின் முற்பகுதியில் பத்துக் காரிகைகள் இல்லை. 22ஆம் காரிகை வரையிலான பகுதியும் பெரிதும் சிதைந்துபட்டன. அதன்மேல் 36 முதல் 42 வரையிலான காரிகை சிதைந்து படினும் 54 ஆம் காரிகை வரையிலான உரைப்பகுதி பெரும்பாலும் உளது. இடையிடை சிற்சில ஏடுகளே சிதைந்தன. 54ஆம் காரிகைக்கு மேற்பட்டவை. அறவே அழிந்துபட்டன. ஆயினும், கிடைத்த அளவில், பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய மாமலை பயந்த காமரு மணியும் தொடைபுணர்ந் தருவிலை நன்கலம் அமைந்தாற்போல அமைந்து பொலிவுடன் திகழ்கின்றது. களவியற் காரிகையில் காட்டப் பெற்றுள்ள மேற்கோள் பாடல்கள் அரியன; சுவை மிக்கன; தமிழின் பரப்பைக் காட்டுவன. வரலாற்றுக்கு வளமாக உதவுவன. நாம் இழந்து விட்ட நற்றமிழ்ச் செல்வங்கள் இவையெனக் காட்டி நலிவும் ஊட்டுவன. இறையனார் களவியல் உரையில் மிகுதியும் மேற்கோளாக ஆளப் பெற்றுள்ள கோவைப் பாடல்கள் பாண்டிக் கோவையைச் சேர்ந்தன என்பதை அறிவித்ததுடன், அந்நூலில் காணக் கிடைக்காத அரிய பல பாடல்களைத் தந்ததும் இக்களவியற் காரிகையேயாம். பாண்டிக்கோவைப் பதிப்பில் இன்னும் இடம் பெறாத சில பாடல்களும் இந்நூற்கண் உள சங்கத்தொகையில் காணாத சில பாடல்களையும் அத்தொகைப் பாடலாகக் காட்டியுள்ளது. இவற்றை ஆங்காங்குக் காட்டியுள்ளாம். பாண்டிக் கோவை போலவே அகத்திணை, அரையர்கோவை, இன்னிசை மாலை, கண்டனலங்காரம், கிளவித்தெளிவு, கிளவிமாலை, கிளவி விளக்கம், கோயிலந்தாதி, சிற்றெட்டகம், நறையூர் அந்தாதி, பல்சந்தமாலை, வங்கர் கோவை முதலிய நூல்களின் பெயர்களையும் சில பல பாடல்களையும் இலக்கிய உலகுக்கும் இலக்கிய வரலாற்று உலகுக்கும் வழங்கி,வரையாது வழங்கும் வள்ளலென வாகை சூடி நிற்பது இக் களவியல் காரிகையாம். பதிப்பு இனி, இப்பதிப்பில் மேற்கொள்ளப் பெற்ற செப்பங்கள் சில குறிப்பிடத் தக்கன. முதற்பதிப்பில் சிதைவுடன் காணப்பெற்ற பலமேற்கோள் பாடல்கள் பல்வேறு நூல்களின் துணையால் செப்பப்படுத்தவும் நிறைவு செய்யவும் பெற்றுள. காரிகையிலும் உரைநடையிலும் எழுத்து, அசை, சீர், முதலியனவும் தொடர், கிளவி விளக்கம் முதலியனவும் விடு பெற்றுள்ள பகுதிகள் தக்க வண்ணம் தேர்ந்து புதிததாக அமைக்கப் பெற்றுள. காரிகைக் கருத்தையும் கிளவிக் கருத்தையும் உட்கொண்டு களவியற் காரிகை உரையாசிரியர் நெறியில் உரிய இடங்களில் அவர் மேற்கொண்ட நூல்களின் இகவாமல் மேற்கோல் பாடல்கள் தேர்ந்து இணைக்கப் பெற்றள. இவ்வகையில் இணைக்கப் பெற்ற 1. களவியல் காரிகையில் சிதைந்துள்ள 16, 17-ஆம் மேற்கோள் நூற்பாக்களும் விடுபெற்ற பகுதியும் வீரசோழிய உரையில் பின்வருமாறு அறியக் கிடக்கின்றன. குடவரைக் குறிஞ்சியும் குணகடல் நெய்தலும் கடவ தாகும் களவிற் குரித்தே இரு திணைத் தொழிலும் இயன்று தம்முள் ஒரு திணைக் கோதல் ஒழிந்தன இயல்பே நன்னில மருதமும் தொன்னில முல்லையும் துன்னருங் கற்பொடு தோன்றும் தொடர்ந்தே இடைநிலைப் பாலை இருபாற்கு முரித்தே படர்கொடி முல்லையின் பாற்பாடு மியற்றே ஒருவயிற் றணத்தலும் பொருள்வயின் பிரிதலும் எருதிய களவிற் குண்மையான வீர சோ. 90-94 உரை. கிளவி விளக்கம் ஐம்பதும், மேற்கோட் பாடல்கள் நூற்று முப்பத்து நான்கும் ஆம். முதற் பதிப்பில் மேற்கோட் பாடல்கள் 416 இருந்தன. இப்பதிப்பில் 650 பாடல்கள் உள. இவற்றுள் பொன்னும் மணியும் என்னும் திருக்கோவைப் பாடல் (189) ஒன்றுமட்டும் உரையாசிரியரால் இருமுறை எடுத்தாளப் பெற்றுளது. பாடல், உரை ஆகியவற்றில் நிரப்பப் பெற்ற பகுதி பிறைக் குறிக்குள்ளும், கிளவி விளக்கம் மேற்கோள் பாடல் ஆகிய இணைப்புகள் இருதலைப் பகரக் குறிக்குள்ளும் அமைத்து ஆங்காங்குக் குறிப்பும் எழுதப் பெற்றுள. புதிய திருத்தங்களோ, மாற்றங்களோ, பாடவேறு பாடுகளோ காட்டப்பெற்றுள்ள இடங்களில் எல்லாம், முதற் பதிப்பில் இருந்தது இன்னது என்பது அடிக்குறிப்பாக அவ்வப் பக்கத்தில் மு.ப. என்னுங் குறிப்புடன் காட்டப் பெற்றுள்ளது. மேற்கோட் பாடல்கள் கிடைக்கும் அளவிலேனும் மூல நூல்களுடன் ஒப்பிட்டுப் பாடவேறுபாடும் காட்டப் பெற்றுள. மேற்கோட் பாடல்கள் அனைத்திற்கும் வரன்முறையே எண்கள் தந்தும், அவற்றுக்குக் குறிப்புரை எழுதிப் பின்னிணைப் பாகச் சேர்த்தும் பதிப்பிக்கப் பெற்றுள்ளது. இந் நூலின் முதற் பதிப்புக்குத் தம்மிடம் இருந்த ஒரோ ஒரு கையெழுத்துப் படியினை உதவிய தொன்னூல் நிலையத் தினர்க்கும், அதனை அரிதின் முயன்று பதிப்பித்து உதவிய அறிஞர் திரு. ச. itahòÇ¥ ãŸis, ã.V., ã.vš., அவர்கட்கும் நன்றியுடையேம். எத்துணை அரிய நூல்களைநாம்இழந்துவிட்டோம்என்பதைக்கணக்கிடவும்முடியவில்லை.......vŠá நிற்கும்நூல்களையேனும்போற்றி.....jÄœ மக்கள் என்னும் பெயர்க்குத் தகுதியுடையவராக நம்மைச் செய்து கொள்ளுதல் நமக்குரிய முதற் கடமையாகும் என்றுமுத‰பதிப்பாசிரிய®கூறியதற்Fஏற்ப¡கையிšகிட்டிaஅளவிலேனு«களிவய‰காரிfஅழிந்JபடாJகன்னி¤தமிழி‹கவி‹மிக்fஅணிகலமாக¤திகழ்வதற்Fஉறுதுணையு«தூண்டலுமாŒஅமைந்Jஇவ்விரண்டா«பதிப்பை¡கழfவழியாfவெளி¡கொணர்ந்jஆட்சியாளர்,தாமரை¢செல்வ®திருமிFவ. சுப்பையா பிள்ளை அவர்களுக்கு உள்ளார்ந்த நன்றியுடையேம். அருளகம், தமிழ்த் தொண்டன், 24-4-73 இரா. இளங்குமரன் களவியற் காரிகை 1. 1அகப்பொருள் (களவியற் காரிகையின் முதல் இருபத்திரண்டு சூத்திரங்கள் (நூற்பாக்கள்) சிதைவுற்றுள்ளன. அவற்றுள் முதற் பன்னிரண்டு நூற்பாக்களில் முதல், கரு, உரிப்பொருள்கள் ஐந்து திணைகளுக்கும் கூறப்பெற்றிருந்தன என்பது இடையிடையே 2சிதைவுடன் கிடைத்துள்ள பகுதிகளால் புலப்படுகின்றது. அப் பகுதிகளையும் மேலுள்ள பிற பகுதிகளையும் நோக்குங்கால் களவியற் காரிகை இறையனார் அகப்பொருட் கருத்தையும், உரையையும் பெரிதும் தழுவிச் செல்லுதல் வெளிப்படுகின்றது. ஆதலால், இறையனார் அகப்பொருளில் உள்ளவாறு முதல் கரு உரிப் பொருள்கள் இம்முதற் பகுதியில் உரைக்கப் பெறுகின்றன. களவியற் காரிகையில் கிடைத்துள்ள பாலைத்திணைக் கருப்பொருளுடன், இறையனார் அகப்பொருள் உரைக்கும் பாலைக் கருப் பொருளை ஒப்பிட்டுக் கண்டு இவ்விணைப்பின் பொருத்தம் அறிக. 3அகப்பொருள் கற்பார்க்கு முதல் கரு உரிப் பொருள்கள் அறிதலின் இன்றியமையாமையையும் உணர்க.) முதற் பொருள் முதல் இரண்டு வகைப்படும், நிலமும் 4பொழுதும் என. என்னை? (1) முதலெனப் படுவது Ãலம்பொழுâரண்டின் ïயல்பெனbமாழிபïயல்புணர்ந்nதாரே- தொல். அகத்திணையியல் 4. என்றாராகலின். குறிஞ்சிக்கு நிலம், மலையும் மலைசார்ந்த இடமும், பொழுது, கூதிரும் யாமமும் முன்பனியும். நெய்தற்கு நிலம், கடலும் கடல் சார்ந்த இடமும், பொழுது, எற்பாடு. பாலைக்கு நிலம் இல்லை. (2) நடுவண் ஐந்திணை நடுவண தொழியப் படுதிரை வையம் பாத்திய பண்பே - mகத்திணையியல்2.v‹wh® தொல்காப்பியனார் ஆகலின். பொழுது, நண்பகலும், வேனிலும், பின்பனியும், நிலம் இன்றிப் பொழுதினானே திணையாமோ எனின், 2குறிஞ்சியும் முல்லையும் அடுத்த நிலமே காலம் பற்றிப் பாலை நிலமாம் என்பது. முல்லைக்கு நிலம், காடும் காடு சார்ந்த இடமும். பொழுது, காரும் மாலையும். மருதத்திற்கு நிலம், பழனமும் பழனஞ் சார்ந்த இடமும். பொழுது, வைகறை யாமம். அஃது என்னை? பெறுமாறு எனின், (3) மாயோன் மேய காடுறை யுலகமும் சேயோன் மேய மைவரை யுலகமும் வேந்தன் மேய தீம்புன லுலகமும் வருணன் மேய பெருமண லுலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே (4) காரு மாலையு முல்லை (5) குறிஞ்சி கூதிர் யாமம் என்மனார் புலவர் (6) பனியெதிர் பருவமும் உரித்தென மொழிப (7) வைகுறு விடியல் மருதம் (8) ஏற்பாடு நெய்தல் ஆதல் மெய்பெறத் தோன்றும் (9) நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே (10) பின்பனி தானும் உரித்தென மொழிப - அகத்திணையியல் 5-12. மருதத்திற்கும் நெய்தற்கும் பெரும்பொழுது சொல்லிற்றின் மையின் அறுவகை 1இருதுவும் உரிய எனக் கொள்க. இவை முதல். கருப் பொருள் கரு என்பது தெய்வமும் உணாவும் மாவும் மரமும் புள்ளும் பறையும் 2செய்தியும் யாழும் முதலாக உடையது. என்னை? (11) தெய்வம் உணாவே மாமரம் புட்பறை செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ அவ்வகை பிறவுங் கருவென மொழிப - அகத்திணையில் 20. என்றாராகலின். அவை அம்முறையானே சொல்லுதும். குறிஞ்சிக்குத், தெய்வம் - முருகவேள். உணா -3ஐவன நெல்லும், தினையும். மா - புலியும், பன்றியும், யானையும். மரம் - அகிலும், 4ஆரமும், திமிசும், தேக்கும், வேங்கையும். புள் - கிளியும், மயிலும் பறை - வெறியாட்டுப் பறையும், தொண்டகப் பறையும், குரலைப் பறையும். செய்தி - தேன் அழித்தலும், கிழங்கு அகழ்தலும், குன்றம் ஆடுதலும், தினைக்கிளி கடிதலும். யாழ் - குறிஞ்சியாழ். பிறவும் என்றதனால், தலைமகன் பெயர் - சிலம்பன், வெற்பன், பொருப்பன். தலைமகள் பெயர் - கொடிச்சி, குறத்தி. நீர் - அருவிநீரும், சுனை நீரும். ஊர் - சிறுகுடியும், குறிச்சியும். பூ - குறிஞ்சியும், காந்தளும், வேங்ககையும், சுனைக்குவளையும். மக்கள் பெயர் - குறவர், இறவுளர், குன்றவர் எனப்படும். நெய்தற்குத், தெய்வம் - வருணன். உணா - மீன்விலைப் பொருளும், உப்புவிலைப் பொருளும். மா - சுறாவும், முதலையும் மரம் - புன்னையும், 1ஞாழலும், 2கண்டலும். புள் - அன்னமும், அன்றிலும், மகன்றிலும். பறை - மீன்கோட் பறையும், நாவாய்ப் பறையும். செய்தி - மீன் விற்றலும், உப்பு விற்றலும், 3அவை படுத்தலும். யாழ் - விளரியாழ். பிறவும் என்றதனால், தலைமகன் பெயர் - துறைவன், கொண்கன், சேர்ப்பன். தலைமகன் பெயர் - நுனைச்சி, பரத்தி. நீர் - மணற் கிணறும், உவர்க் கழியும். பூ - வெள்ளி தழ்க் 4கைதையும், நெய்தலும். ஊர் - கலமேறு பட்டினமும், சிறுகுடியும், பாக்கமும். மக்கள் பெயர் - பரதர், பரத்தியர், நுளையர், நுளைச்சியர் எனப்படும். தொல்காப்பியனார் பாலைக்கு நிலம் வேண்டிற்றிலர். வேண்டாமையின் தெய்வமும் வேண்டிற்றிலர். பிறர், 1பகவதியையும் ஆதித்தனையும் தெய்வம் என்று வேண்டுவர். உணா - ஆறலைத்தனவும், ஊரெறிந்தனவும். மா - வலியழிந்த யானையும், புலியும், செந்நாயும். மரம் - இருப்பையும், ஓமையும். புள் - கழுகும், பருந்தும், புறவும். பறை - பூசற்பறையும், ஊரெறிபறையும், நிரைகோட் பறையும். செய்தி - நிரை கோடலும், 2சாத்தெறிதலும், சூறை யாடலும். பண் - பஞ்சுரம். பிறவும் என்றதனால், தலைமகன் பெயர் - மீளி, விடலை, காளை. தலைமகன் பெயர் - எயிற்றி, பேதை. பூ - மராம்பூவும், குராம்பூவும், பாதிரிப்பூவும். நீர் - அறுநீர்க் 3கூவலும், அறுநீர்ச்சுனையும். ஊர் - கொல் குறும்பு. மக்கள் பெயர் -= எயினர், எயிற்றியர், மறவர், மறத்தியர் எனப்படும். முல்லைக்குத், தெய்வம் - 4வாசுதேவன். உணா - வரகும், சாமையும். மா - முயலும், சிறுமானும். மரம் - கொன்றையும், குருந்தும். புள் - கானங்கோழியும், மயிலும், சிவலும். பறை - ஏறுகோட் பறையும், முரசும். செய்தி - வரகுக்குக் களைகட்டலும், அவை அறுத்தலும், கடாவிடுதலும், நிரை மேய்த்தலும். பண் - முல்லை. பிறவும் என்றதனால், தலைமகன் பெயர் - குறும்பொறை நாடன். தலைமகன் பெயர் - கிழத்தி, மனைவி. பூ - முல்லையும், தோன்றியும். நீர் - கான்யாறு. ஊர் - பாடியும், சேரியும். மக்கள் பெயர் - இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர் எனப்படும். மருதத்துக்குத், தெய்வம் - இந்திரன். உணா - செந்நெல்லும், வெண்ணெல்லும். மா - எருமையும், நீர்நாயும். மரம் - வஞ்சியும், காஞ்சியும், மருதும். புள் - நீர்க் கோழியும், தாராவும். பறை - மணமுழவும், நெல்லரி கிணையும். செய்தி - நெல்லரிதலும், அவை கடாவிடுதலும், பயிர்க்குக் களை கட்டலும். யாழ் - மருதயாழ். பிறவும் என்றதனால், தலைமகன் பெயர் - ஊரன், மகிழ்நன். தலைமகள் பெயர் - கிழத்தி, மனைவி. பூ - தாமரைப் பூவும், செங்கழுநீர்ப் பூவும். நீர் - மனைக் கிணறும், பொய்கையும். மக்கள் பெயர் - கடையர், கடைசியர், உழவர் உழத்தியர். ஊர் - பேரூர் எனப்படும். உரிப்பொருள் இனி, உரிப்பொருள் ஆவது திணைக்கு உரிய பொருள் என்றவாறு. அவை யாவையோ எனின், புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல், அவற்றின் நிமித்தம் என இவை. என்னை? (12) புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் இவற்றி னிமித்த மென்றிவை தேருங் காலைத் திணைக்குரிப் பொருளே - அகத்திணையில் 16. என்றராகலின். அவற்றுள். புணர்தலும் புணர்தல் நிமித்தமும் குறிஞ்சி ; பிரிதலும் பிரிதல் நிமித்தமும் பாலை ; இருத்தலும் இருத்தல் நிமித்தமும் முல்லை ; இரங்கலும் இரங்கல் நிமித்தமும் நெய்தல் ; ஊடலும் ஊடல் நிமித்தமும் மருதம். புணர்தலே கொல்லோ குறிஞ்சி எனின், புணர்தலே அன்று. பிரிவச்சமும், 1வன்புறையும், தலைமகன் நீங்கினவும், பாங்கற்கு உரைத்தனவும், பாங்கன் கழறினவும், தலைமகன் எதிர்மறுத்தனவும், பாங்கன் எதிர்ந்தனவும், தலைமகளைக் கண்டனவும், ஆற்றானாயினவும், தலைமகன் சென்றனவும், தலைமகன் 2தலைப் பெய்தனவும் இத்தொடக்கத்தனவெல்லாம். தலைமகட்கும் தோழிக்கும் இவ்வகையானே நோக்கி 3விகற்பிக்க 4இறப்பவும் பலவாம். அவையெல்லாம் புணர்தலும் புணர்தல் நிமித்தமுமாய் அடங்கும். ஏனையவற்றிற்கும் இவ்வாறே கொள்க.) ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... (1-12) இவற்றுள், கரு மயங்கியும் வரப்பெறும். என்னை? (13) உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே - தொல்.அகத்திணையியல் 15. என்றார் ஆகலின் ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... (13) (14) காரே கூதிர் முன்பனி பின்பனி சீரிள வேனில் வேனில் என்றாங் கிருமூ வகைய பருவம் அவைதாம் ஆவணி முதலா விரண்டிரண் டாக மேவிய திங்கள் எண்ணினர் கொளலே - திவாகரம். தொகுதி. 1. என்னு மிலக்கணத்தால், ஆவணியும் புரட்டாசியும் கார் ; ஐப்பசியும் கார்த்திகையும் கூதிர் ; மார்கழியுந் தையும் முன்பனி ; மாசியும் பங்குனியும் பின்பனி ; சித்திரையும் வைகாசியும் இளவேனில் ; ஆனியும் ஆடியும் வேனில் ; என அறுவகைப்பட்ட வாறுங் கண்டு கொள்க. இனி மூவகைப்பட்ட நான்கு திங்கட் கூடியதொரு பருவமாக என்றவாறு. என்னை? (15) ஈரிரு திங்கட் பருவ மொன்றாக மூவகை யியற்றாய் மொழிகுவ ருளரே என்றாராகலின். அவை வருமாறு : ஆவணியும் புரட்டாசியும் ஐப்பசியும் கார்த்திகையும் கொண்டது கார்; மார்கழியும் தையும் மாசியும் பங்குனியும் கொண்டது பனி; சித்திரையும் வைகாசியும் ஆனியும் ஆடியுங் கொண்டது வேனில். இன்னு முன் சொன்ன நிலங்களைக் குறிஞ்சியும் நெய்தலுங் கள வென்றும் 1இவையிரு திணைகளையும் இயல்பென்றும் உரைப் பாரும் உளர். உடனிலைப் பாலை களவும் இயல்புமாம் என்னை? (16) குடவரை குறிஞ்சியும் குணகடல் நெய்தலும் . ஒருதனிக் காதல் ஒழிந்தன இயல்பே (17) உடனிலைப் பாலை இருவீற்று முரித்தே என்றாராகலின். ...(15) (பதினாறாம் நூற்பா முதல் இருபத்தொன்றாம் நூற்பா முடிய எண்வகை மணமும் அவற்றிற் குகாரணமும் அறிவித்தன என்பது விளக்கமாகின்றது. அவ்விலக்கணம் இறையனார் களவியல் உரையைத் தழுவிச் செய்யப்பெற்ற. செய்யுள் வடிவுடைய தென்பது சிதைவுடன் கிடைத்துள்ள பகுதியால் அறியக் கிடக்கின்றது. ஆதலால், இறையனார் அகப்பொருளில் கூறப்பெறும் எண்வகை மணம் பற்றிய செய்தி இவண் தரப்பெறுகின்றது.) பிரமம் என்பது 1நாற்பத் தெட்டியாண்டு பிரமசரியங் காத்தாற்குப் பன்னீராட்டைப் பிராயத்தாளை அணிகலன் அணிந்து கொடுப்பது. கொடாவிடின் ஓர் இருதுக் காட்சி ஒருவனைச் சாராது கழிந்த விடத்து ஒரு பார்ப்பனக் கொலையோடு ஒக்கும் என்பது. இதனை அறநிலை என்றுணர்வது. பிரசா பத்தியம் என்பது, மைத்துன கோத்திரத்தான் மகள் வேண்டிச் சென்றால் மறாது கொடுப்பது. இதனை ஒப்பு என்று உணர்வது. ஆரிடம் என்பது, ஆவும் ஆனேறும் பொற்கோட்டுப் பொற்குளம் பினவாகச் செய்து அவற்றிடை நீரிற் கொடுப்பது. இதனைப் பொருள்கோள் என உணர்வது. தெய்வம் என்பது வேள்வி ஆசிரியற்கு வேள்வித் தீமுன் வைத்துக் கொடுப்பது. இதனைத் தெய்வம் என்று வழிபடப்பட்டது. காந்தர்வம் என்பது, இருவர் ஒத்தார் தாமே கூடும் கூட்டம். இதனை யாழோர் கூட்டம் என்று உணர்வது. அசுரம் என்பது, கொல்லேறு கொண்டான் இவளை எய்தும், வில்லேற்றினான் இவளை எய்தும், 2திரிபன்றி எய்தான் இவளை எய்தும், மாலை சூட்டப்பட்டான் இவளை எய்தும் என இவ்வாறு சொல்லிக் கொடுப்பது. இஃது அரும்பொருள் வினை நிலை என்பது. இராக்கதம் என்பது, அவள் தன்னினுந் தமரினும் பெறாது 1வலிந்து கொள்வது. பைசாசம் என்பது, மூத்தாள் மாட்டும், துயின்றாள் மாட்டும், களித்தாள் மாட்டும், சார்வது. இது பேய்நிலை எனப்படும்.) (11-21) ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... (2இருபத்திரண்டாம் நூற்பாவுரை, களவு, கற்பு பற்றிய ஆராய்ச்சிக் குறிப்புகள் பலவற்றை மேற்கொண்டு தடைவிடைகளுடன் செல்கின்றது. (22) அகப்பொருள் முடிந்தது 2. களவொழுக்கம் களவொழுக்க வகை உங. தெய்வப் புணர்ச்சியும் பாங்கனிற் கூட்டஞ் செவிலிதரூந் தையற் புணர்ச்சிப் பகற்குறி தானு மிரவினிற்சார்ந் துய்தற் குறியும் வரைவு கடாவுடன் போக்குணர்வு மெய்யுற் றியல்பா லமையுங் களவொழுக் காமென்பரே. இச்சூத்திரம் என்னுதலிற்றோ எனின், 1தமிழ் நெறி விளக்கத்திற் பொருளியலுடையாருங் களவொழுக்கம் ஆறு வகைப்படும் என்றார். அவையறிவித்தலைக் கருதிற்று. அவையாவன: தெய்வப் புணர்ச்சியும். பாங்கற் கூட்டமும், தோழியாலாய கூட்டத்திற் பகற்குறியும், இரவுக்குறியும், வரைவுகடாதலும், உடன்போக்கு வலித்தலும் என அவற்றை அறிந்து கொள்க. (23) 1. அகப்புறம் உச. காட்சியொ டையந் தெளித லெனத்தனி கட்டுரைத்த வேட்கையின் மூன்று மொருதலைக் காம மென(மி)குந்தோர் மாட்சிமை தோன்று (மதியாற் சொன்னார்) கள் மதிநுதல்வேய்த் தோட்சிறு கோங்கரும் பாமென் முலைப்பூண் டுடியிடையே. இக்சூத்திரம் என்னுதலிற்றோ எனின், ஒருதலைக் காமமென்னும் அகப்புற முணர்த்துதல் நுதலிற்று. என்னை? (18) காட்சி முதலாக் கலவியின் ஒருதலை வேட்கையிற் றோன்றுதல் கைக்கிளை யதுதான் கேட்போ ரில்லாக் கிளவிய தாகும் என்றாராகலின். என்னை? காட்சி மையந் தெளிதலென. இவற்றுள் காட்சி என்பது : 1மால்வரை புரையு மாடக் கூடல் ஆல வாயிற் பால்புரை பசுங்கதிர்க் குழவித் திங்களைக் குறுங்கண்ணி யாகவுடைய அழலவிர் சோதி அருமறைக் கடவுளாற் செய்யப்பட்ட 2பொருளதிகாரத்தின் பொருட்டிறம் புரிந்தொழுகு மோங்கிய தலைமகன், தெய்வம் இரை நிற்கப் பான்மையால் உய்க்கப்பட்டுக் 3கற்கந்தும் 4எறிபோத்தும் கடுங்கண்யானையும் தறுகட் பன்றியும் கருவரையும் இருநிலனும் பெருவிசும்பும் அனையார் ஆளி மொய்ம்பினர் அரிமான் துப்பினர் பற்பல் நூறாயிரவர் கூர்வேல் இளையர் தற்சூழச் செல்வன். தலை மகளும், உடன்பிறந்து உடன் வளர்ந்து நீர் உடனாடிச் சீருடன் பெருகி 5ஓல் உடனாட்டப் பாலுடன் உண்டு, பல்லுடன் எழுந்து சொல்லுடன் கற்றுப் பழமையும் பயிற்றியும் பண்பும் நண்பும் விழுப்பமும் ஒழுக்கமும் மாட்சியும் உடையார் பற்பல் நூறா யிரவர் கண்ணும் மனமும் கவரும் ஒண்ணுதல் மகளிர் தற்சூழத் தாரகை நடவண் தண்மதிபோலச் செல்வாள். ஒருவர் ஒருவரின் முன்னர்த் தழைவிழைதக்கன தொடுத் தும் என்றும், கண்ணி தண்ணறு நாற்றத்தன செய்தும் என்றும், போது மேதக்கன கொய்தும் என்றும், மயிலொடு மாறாடுதும் என்றும், குயிலொடு மாறு கூவுதும் என்றும், அருவியாடி அஞ்சுனை குடைதும் என்றும், வாசமலர்க் கொடியில் ஊசலாடுதும் என்றும், அப்பாலுள்ளார் இப்பாலுள்ளாள் கொல்லோ என்றும், இப்பாலுள்ளார் அப்பாலுள்ளாள் கொல்லோ என்றும் இவ்வகை நினைத்துப் பிரிப. இவ்வகை அவளைத் தமியளாய்ப் பிரிபவோ எனின், எட்டியுஞ் சுட்டியுங் காட்டப்படுங் குலத்தள் அல்லளாகலானும், பான்மை அவ்வகைத்தாகலானும் பிறவாறு நினையார் பிரிப. ஆயின், இவ்வகைப்பட்ட ஆயத்திடை மேனாள் பிரிந்து பயின்றறியாதாள் தமியளாய் நிற்குமோ எனின் நிற்கும்; தான் பயின்ற இடம் தன் ஆயத்தினோடு ஒக்கும் ஆகலான். யாங்ஙனம் நிற்குமோ எனின், சந்தனமும் சண்பகமும் தேமாவும் தீம்பலவும் ஆசினியும் அசோகும் கோங்கும் வேங்கையும் குரவமும் விரிந்து, நாகமும் திலகமும் நறவும் நந்தியும் மாதவியும் மல்லிகையும் மௌவலொடு மணங்கமழ்ந்து, பாதிரியும் பாவை ஞாழலும் பைங் கொன்றையும் பிணியவிழ்ந்து, பொரிப்புன்கும் புன்னாகமும் முருக்கொடு முகைசிறந்து, வண்டறைந்து தேனார்ந்து வரிக்குயில்கள் இசைபாடத், தண்டென்ற லிடைவிராய்த் தனியவரை முனிவு செய்யும் பொழிலது நடுவணதோர் மாணிக்கச் செய்குன்றின்மேல் விசும்பு துடைத்துப் பசும் பொன் பூத்து, வண்டு துவைப்பத் தண்டேன் துளிப்பதோர் வெறியுறு நறுமலர் வேங்கை கண்டாள் ; கண்டு பெரிய தோர் காதற் களிகூர்ந்து தன் செம்மலர்ச் சீறடிமேற் சிலம்பு கிடந்து சிலம்பு புடைப்ப, அம்மணிக் கொம்பர் நடைகற்பதென நடந்து சென்று நாண்மலர் கொய்தாள் ; கொய்து மரகத விளிம்படுத்த மாணிக்கச் சுனை மருங்கினதோர் மாதவி வல்லி மண்டபத்துப் போதுறு கொழுநிழற்கீழ்க் கடிக் குருக்கத்திக் கொடிப்பிடித்துத் தகடுபடு பசும்பொற் சிகரங்களின் முகடு தொடுத்து நான்று வந்திழிதரும் அருவி, பொன் கொழித்து மணிவரன்றி மரகதத்தொடு வயிரமுந்தி, அணிகிளரும் ஆடகப் பாறை மேல் அதிர்குரல் முரசின்கண் இரட்ட வண்டுந் தேனும் யாழ்முரல வரிக் குயில்கள் இசைபாடத் தண்டாது தவிசுபடப் போர்த்ததோர் பளிக்குப்பாறை மணித்தலத்துமிசை நீல ஆலவட்டம் விரித்தாற்போலத் தன்கோலக் கலாவங் கொளவிரித்து முளை இளஞாயிறு இளவெயில் எறிப்ப ஓர் இளமயில் ஆடுவது நோக்கி நின்றாள். அப்பால், தலைமகனும் பற்பல் நூறாயிரவர் கூர்வேலிளை யரொடு குளிர்மலைச்சாரல் வேட்டம்போய் விளையாடு கின்றான், ஆண்டெழுந்ததோர் கடுமாவின் பின் ஓடிக் காவல் இளையரைக் கையகன்று நெடுமான் தேரோடு பாகனை நிலவுமணற் கானியாற்று நிற்கப்பணித்துத் தொடுகழல் அடியதிரச் சுருளிருங் குஞ்சி பொன் ஞாணிற் பிணித்துக் கடிகமழ் நறுங்கண்ணிமேல் கொண்டு வண்டு மணனயர அஞ்சாந்தின் நறுநாற்றம் அகன் பொழிலிடைப் பரந்து நாற அடுசிலையொடு கணையேந்தி வடிவு கொண்டகாமன்போலச் சென்று அவள் நின்ற இரும் பொழில் புகும். அஃதியாங்ஙனமோ எனின், வடகடலிட்ட ஒருநுகம் ஒருதுளை தென்கடலிட்ட ஒருகழி சென்று கோத்தாற் போலவும் வெங்கதிர்க் கனலியும் தண்கதிர் மதியமும் தம்கதி வழுவித் தலைப்பெய்தாற் போலவும் தலைப்பெய் தொருவர் ஒருவர் நிமித்தமாகத் தமியராய் எதிர்ப்படும். என்னை? (19) சுரும்பின பூம்பொழிற் சுடர்வேற் காளை கருந்தடங் கண்ணியைக் கண்டுமகிழ்ந் தன்று - வெண்பாமாலை 11,1. என்றாராகலின். அதற்குச் செய்யுள் : (20) திருவளர் தாமரை சீர்வளர் காவிக ளீசர்தில்லைக் குருவளர் பூங்குமிழ் கோங்குபைங் காந்தள்கொண் டோங்குதெய்வ மருவளர் மாலையொர் வல்லியி னொல்கி யனநடைவாய்ந் துருவளர் காமன்றன் வென்றிக் கொடிபோன் றொளிர்கின்றதே - திருக்கோவையார் 1. (21) பூமரு கண்ணிணை வண்டாப் புணர்மென் முலையரும்பாத் தேமரு செவ்வாய் தளிராச் செருச்செந் நிலத்தைவென்ற மாமரு தானையெங் கோன்வையை வார்பொழி *லேர்மணந்த காமரு பூங்கொடி கண்டே களித்தவெங் கண்ணிணையே - பாண்டிக் கோவை 1. ஐயம் - 1ஐயமாக வுள்ளது. தெளிதல் - தலைமகனைக் கண்ணிமைத்தன் முதலாகிய கருவிகளால் மானிடமெனத் தெளிதல். என்னை? (22) மாநிலத் தியலு மாத ராமெனத் தூய்மலர்க் கோதையைத் துணிவுரைத் தன்று - வெண்பாமாலை 11 : 3. என்றாராகலின். அதற்குச் செய்யுள் வருமாறு. (23) பாயும் விடையரன் றில்லையன் னாள்படைக் கண்ணிமைக்குந் தோயு நிலத்தடி தூமலர் வாடுந் துயரமெய்தி யாயு மனனே யணங்கல்ல ளம்மா முலைசுமந்து தேயு மருங்குற் பெரும்பணைத் தோளிச் சிறுநுதலே - திருக்கோவையார் 3. (24) தொடிவா னரமங்கை யன்றிமைக் குங்கண்கள் தோயுநிலத் தடிவா னரந்த மலரும் புலரும் அயன்தலையைத் தடிவா னரன் (செறி) தாழ்சடை யோன்றில்லை யூசல்வல்லிக் கொடிவா னரம்புரி யும்பொழில் வாய்வந்த கோல்வளையே - தில்லையந்தாதி. (25) பாவடி யானைப் பராங்குசன் பாழிப் பகைதணித்த தூவடி வேன்மன்னன் கன்னித் துறைச்சுரும் பார்குவளைப் பூவடி வாள்நெடுங் கண்ணு மிமைத்தன பூமிதன்மேற் சேவடி தோய்வகண் டேன்தெய்வ மல்லளிச் சேயிழையே - பாண்டிக்கோவை3. (26) திருநுதல் வேரரும்புந் தேங்கோதை வாடும் *இருநிலமுஞ் சேவடியுந் தோயும் - அரிபரந்த போகித முண்கண் இமைக்கும் ஆகு மற்றிவள் அகலிடத் தணங்கே - வெண்பாமாலை 11 : 3. (27) கண்ண் கருவிளை கார்முல்லை கூரெயிறு பொன்ன் பொறிசுணங்கு போழ்வா யிலவம்பூ மின்ன் நுழைமருங்குல் மேதகு சாயலாள் என்ன் பிறர் மகளா மாறு - பழம்பாட்டு. (28) அணங்கென்ன லாமோ அடியிரண்டு மண்மேல் இணங்குங் குழையுடனே ஏறிப்-பிணங்கிக் குவளை விழியிமைக்குங் கொய்மலர்த்தார் வாடும் இவளை மடநெஞ்சே யாம் - கிளவித் தெளிவு. (29) கைக்கிளை (மிக்க) பெருந்திணை என்றாங் கத்திணை யிரண்டும் அகத்திணைப் புறனே என்றமையால் 1இவை மூன்றும் அகப்புறமானபடி அறிக. (24) அகப்புறம் முடிந்தது 2. இயற்கைப் புணர்ச்சி 25. இடையா நயப்புப் பிரிவை யணர்த்தல் இடமணித்தென் றிடைமாறல் எய்தற் கருமை யுயிரே யெனவியத்தல் படையார் விழிப்பாங் கியையுணர் தல்பாங் கனைநினைதல் அடைவான வேழு வகையே புணர்ச்சியென் றாக்கினரே. என் - னின், உரைத்த முறையானே இயற்கைப் புணர்ச்சி எழுவகைப்பட்ட கிளவியாம் என்பது அறிவித்தலைக் கருதிற்று. என்னை? நயப்பும், பிரிவுணர்த்தலும், இடமணித் தென்றலும், எய்துதற் கருமையும், உயிரென வியத்தலும், பாங்கியை யுணர்தலும், பாங்கனை நினைதலும் என்றவாறு, அவையாவன: 1. நயப்பு என்பது, இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் தலைமகள் கேட்ப விருப்புரைத் தயர்வு நீக்குதல். என்னை? (30) அழிவுபட ரெவ்வங் கூர ஆயிழை பழிதீர் நன்னலம் பாராட் டின்று - வெண்பாமாலை 10 : 6. என்றாராகலின். அதற்குச் செய்யுள் வருமாறு : (31) கூம்பலங் கைத்தலத் தன்பரென் பூடுரு கக்குனிக்கும் பாம்பலங் காரப் பரன்றில்லை யம்பலம் பாடலரிற் றேம்பலஞ் சிற்றிடை யீங்கிவள் தீங்கனி வாய்கமழும் ஆம்பலம் போதுள வோவளி காணும் மகன்பணையே - திருக்கோவையார் 11. (32) வேறும் மெனநின் றிகல்மலைந் தார்விழி ஒத்து விண்போ யேறுந் திறங்கண்ட கோன்றென் பொதியி லிரும்பொழில்வாய்த் தேறுந் தகையவண் டேசொல்லு மெல்லியல் செந்துவர்வாய் நாறுந் தகைமைய வே*யரக் காம்பல் நறுமலரே - பாண்டிக்கோவை 4. (33) கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி காமஞ் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற் செறியெயிற் றரிவை கூந்தலின் நறியவு முளவோநீ யறியும் பூவே - குறந்தொகை 2. (34) கழுநீர்பூத் தோருருவக் காமருபூந் தொண்டை முழுநீர முத்த மரும்பி-யெழுநீர் இளம்பிறையுஞ் சூடி யெழிற்கமல முண்டேல் விளம்புவாய் நீவண்டே வேறு. - கிளவிமாலை. (35) உள்ள படியுரையும் வண்டினங்காள் ஓடைதொறுந் தெள்ளி நறவந் திசைபரக்கும்-வெள்ள வயல்கிடந்த தாமரைமேல் மையெழுதுஞ் செய்ய கயல் கிடந்த துண்டாகிற் கண்டு - கிளவித் தெளிவு. 2. பிரிவுணர்த்தல் என்பது தலைவியை நீங்க நின்ற தலைவன் நின்னிற் பிரியேன் பிரியினு மாற்றேன் என்பதுபடச் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு. (36) சிந்தா மணி1தென் கடலமு தந்தில்லை யானருளால் வந்தா லிகழப் படுமே மடமான் விழிமயிலே யந்தா மரையன்ன மேநின்னை யானகன் றாற்றுவனோ சிந்தா குலமுற்றென் னோவென்னை வாட்டந் திருத்துவதே - திருக்கோவையார் 12. (37) மின்னிற் பொலிந்தசெவ் வேல்வலத் தால்விழி யொத்தெதிர்ந்த மன்னற்கு வானங் கொடுத்தசெங் கோன்மன்னன் வஞ்சியன்னாய் நின்னிற் பிரியேன் பிரியினு மாற்றேன் நெடும்பணைத்தோள் பொன்னிற் 2பசந்துமெய் வாடவென் னாங்கொல் புலம்புவதே - பாண்டிக்கோவை 10. (38) இனையல் வாழி பிரிவொன் றிலனே நனைமலர் நறும்பூங் கோதை 3அமையே னின்னையா னகன்ற ஞான்றே - பொருளியல் 1. (39) குவளை நாறுங் குவையிருங் கூந்தல் ஆம்பல் நாறுந் தேம்பொதி துவர்வாய்க் குண்டுநீர்த் தாமரைக் கொங்கி னன்ன நுண்பஃ1றுத்தி மா அ யோயே நீயே, அஞ்ச லென்றவென் சொல்லஞ் சலையே யானே, குறுங்கா லன்னங் குவவுமணற் சேக்குங் கடல்சூழ் 2மண்டலம் பெறினும் விடல்சூ ழலனே நின்னுடை நட்பே - குறுந்தொகை 300. (40) நின்னிற் பிரிந்தியா னாற்றுவனோ நின்மேனி பொன்னிற் பசந்து புலம்புவதென்-தன்னின் மயிர்பிரிந்தா லென்னாகும் மானமா மாயும் உயிர்பிரிந்தா லென்னாம் உடம்பு - கிளவித் தெளிவு. 3. இடமணித் தென்றல் என்பது பிரிய நினைந்த தலைமகள் இடம் அணித்தென்றல். அதற்குச் செய்யுள் வருமாறு : (41) வருங்குன்ற மொன்றுரித் தோன்றில்லை யம்பல வன்மலயத் திருங்குன்ற வாணர் இளங்கொடி யேயிட ரெய்தலெம்மூர்ப் பருங்குன்ற மாளிகை நுண்கள பத்தொளி பாயநும்மூர்க் கருங்குன்றம் வெண்ணிறக் கஞ்சுக மேய்க்கும் கனங்குழையே - திருக்கோவையார் 15. (42) பாவணை 3யுந்தமிழ் வேந்தன் பராங்குசன் பாழிவென்ற வேவணை வெஞ்சிலை யான்வஞ்சி யன்னா யினையலெம்மூர்த் தூவண மாடச் சுடர்தோய் நெடுங்கொடி துன்னிநும்மூர் ஆவண வீதியெல் லாநிழல் பாயநின் றண்வருமே - பாண்டிக்கோவை 13. (43) நிலவென விளங்கிய நின்பாயொளி யாரத் திளமுலை பாராட்டி யிரங்குவ தெவனோ வறுமையொடு சென்றாற் கருள்முகங் காட்டி மறுப்பதை யறியா வெ(ரு) வற் கறத்தொடு புகழென வணியநம் மூரே 1- பொருளியல். (44) இனையல் வாழி யெம்மூர் மலர்ந்த பழனத் தாமரை கெழீஇய வண்டுநின் கண்ணென மலர்ந்த காமர் சுனைமலர் 2நண்ணி நாளு நலனுக ரும்மே - சிற்றெட்டகம். - (பொருளியல். மேற். 15) (45) நெடுவே றுடக்கியநீர் நீக்குமதி காதல் வடிவே றுடக்கியநீர் மாதோ-நெடுவேய்க் கணமா மழைக்குவட்டெங் கார்வரைப்பூஞ் சாரல் மணநாறு நும்வரைமேல் வந்து - அகத்திணை. (46) நின்னுடைய கூந்தல் நிறத்தால் நிரைவளையா யென்னுடைய வூரு மிருளாகு-நின்னுடைய முத்தனைய வெள்ளை முறுவலா லென்மலைய மத்தனையும் வெள்ளைநில வாம் - கிளவித் தெளிவு. 4. எய்துதற் கருமை யென்பது புணர்ந்து நீங்கிய தலைமகன், ஆய வெள்ளத்துட் கண்ட தலைமகளை அரியள் என்பது படச் சொல்லுதல். என்னை? (47) கொய்தழை அல்குல் கூட்டம் வேண்டி யெய்துதற் கருமையின் இறப்பப் புகழ்ந்தன்று - வெண்பாமாலை 11 : 7. என்றாராகலின். அதற்குச் செய்யுள் வருமாறு : (48) புணர்ப்போ னிலனும் விசும்பும் பொருப்புந்தன் பூங்கழலின் துணர்ப்போ தெனக்கணி யாக்குந்தொல் லோன்றில்லைச் சூழ்பொழில்வாய் இணர்ப்போ தணிகுழ லேழைதன் னீர்மையிந் நீர்மையென்றாற் புணர்ப்போ கனவோ பிறிதோ வறியேன் புகுந்ததுவே - திருக்கோவையார் 17. (49) இருநிலங் காரண மாக நறையாற் றிகன்1மலைந்த பொருநில வேந்தரைப் பொன்னுல காள்வித்த பூமுகவேற் பெருநிலங் காவலன் தென்புன னாடன்ன பெண்ணணங்கின் திருநலஞ் சேர்ந்ததெல் லாங்கன வேயென்று சிந்திப்பனே - பாண்டிக் கோவை 18. (50) கலைமதி வாய்மைக் கலுழ்பா வழிவருங் கற்பமைந்த தலைமைய ரேழ்பெருந் தேரங்க மும்பெற் 2(றநந்தமுறு) மலையன மாமதில் வச்சிர நாடன்ன வாணுதல்தன் முலையிணை தோய்ந்ததெல் லாங்கன வேயென்று முன்னு (வனே - பல்சந்தமாலை. (51) மனவே ரல்குன் மடந்தை கூட்டங் 3கனவோ தெரியின் யாவதும் நனவே 4யெனினு நண்ணலோ வரிதே - பொருளியல் 3. 5. உயிரென வியத்தல் என்பது தலைவியினிடத்து வைத்த ஆதரவின் மிகுதியாலே தனதுயிரென வியத்தல். அதற்குச் செய்யுள் வருமாறு: (52) நேயத்த தாய்நென்ன லென்னைப் புணர்ந்ததுநெஞ் சந்நெகப்போய் ஆயத்த 1தாயமு தாயணங் காயர னம்பலம்போற் றேயத்த 2தாயின்றென் சிந்தைய தாய்த்3தெரிந் தாற்பெரிது மாயத்த 4தாகிய தோவந்து நின்றதென் மன்னுயிரே - திருக்கோவையார் 39. (53) இன்னுயிர் கண்டறி வாரில்லை யென்ப ரிகன் மலைந்தார் மன்னுயிர் வான்சென் றடையக் கடையலுள் வென்றுவையந் தன்னுயிர் போனின்று தாங்குமெங் கோன்கொல்லித் தாழ்பொழில்வாய் என்னுயிர் ஆயத் திடையிது வோநின் றியங்குவதே - பாண்டிக் கோவை 21. (54) 5புல(ன)ன் றென்ப வின்னுயிர் 6அதுவே அலர்முலை 7யாகந் தாங்கி நிலவொளி மதியென நிலவுமென் னுயிரே - பொருளியல் 4. (55) கொன்னிலையோர் யாக்கைக்குக் கூடுயிரோ வொன் (றென்பர் என்னுயி ரோரிரண்டா யான்கண்டேன்-மின்னுகலைப் பைம்மலைத்த வல்குற்றுப் பாடகக்காற் றொன்றொன்று வெம்முலைத்து வேல்போல் விழித்து - அகத்திணை. (56) என்னுயிர் நான்கண் டிளமுலையும் வேய்த்தோளும் பொன்னிறமுங் கொண்டு புனமயில்போல்-மன்னி வயங்குகின்ற நெய்தல்வாய் வ(ன்னாட)ன் வெற்பில் இயங்குகின்ற தாயத் திடை - கிளவி விளக்கம். (57) கண்ணினாற் றம்முயிரைக் கண்டறிவா ரில்லென்பர் கண்ணினால் என்னுயிரைக் கண்டேனான்-கண்ணினால் மானொக்குஞ் சாயல் மயி(லொக்கும் நன்மொழியால் தேனொக்கும் என்றன் திரு) - கிளவித் தெளிவு. 6. பாங்கியை யுணர்த்தல் என்பது தலைமகளைத் தனதுயிரென (வியந்து பாராட்டி நின்ற தலைமகன், தலைமகள் தன் காதற்றோழியைப் பல்கால் கடைக் கண்ணால் பார்ப்பது) ணர்ந்து இவள்போலும் இவட்குச் சிறந்தா ளென(வும் இதுவும் எனக்கோர் சார்பா மெனவும் உளம்) வைத்து எனக் கெவ் விடத்தும் தோழி என் ஆருயிர் என்பது. அதற்குச் செய்யுள் வருமாறு: (58) உயிரொன் றுளமுமொன் றொன்றே சிறப்பிவட் கென்னொ1டென்பை பயில்கின்ற சென்று செவியுற நீள்படைக் கண்கள்விண்வாய்ச் செயிரொன்று முப்புரஞ் செற்றவன் றில்லைச்சிற் றம்பலத்துப் பயில்கின்ற கூத்த னருளென லாகும் 2பணிமொழியே - திருக்கோவையார் 18. 3*** *** *** *** (59) நோக்கினும் பிறர்முகம் நோக்காள் சாரினும் பூக்குழல் மடந்தை தோள்சா ரும்மே யன்ன தலையளி யுடைமையின் இன்னுயிர்த் 4தோழியிவ் வேந்திழை யிவட்கே - பொருளியல் 20. 7. பாங்கனை நினைதல் என்பது இவ்வகைப் பாங்கியை யுணர்ந்து ஆற்றானாகிய தலைவன் பாங்கனை நினைந்து ஆற்றுதல். அதற்குச் செய்யுள் வருமாறு: (60) பூங்கனை யார்புனற் றென்புலி யூர்புரிந் தம்பலத்து ளாங்கெனை யாண்டுகொண் டாடும்பி ரானடித் தாமரைக்கே பாங்கனை யானன்ன பண்பனைக் கண்டிப் பரிசுரைத்தா லீங்கெனை யார்தடுப் பார்மடப் பாவையை யெய்துதற்கே - திருக்கோவையார் 19. (61) கயலணி யார்கழற் காவல ரோடக் கடையல்வென்ற வயலணி வேலரி கேசரி யொ(ன்னா) ரென(வழுங்கே) னுயிரனை யான்றனைக் கண்டுரை செய்தா லொழிதலுண்டே குயின்மொழி யாடனைச் சென்றியா னின்னமுங் கூடுதலே - பாண்டிக் கோவை 23. (62) உடையை வாழி நெஞ்சே யிடைக்கொண் டழுங்க லோம்புமதி தழங்கொலி மிகுநீர் 1வழுத்தூர் காக்கும் புணையின் விழுத்துணை சான்ற மிகுபெருங் கிளையே - பொருளியல் 6. இவையெல்லாம், (63) அதுவே. தானே யவளே தமியர் காணக் காமப் புணர்ச்சி யிருவயி னொத்தல் - இறையனார் களவியல் 2. என்னும் இலக்கணத்துள் கண்டு கொள்க. (25) இயற்கைப் புணர்ச்சி முற்றும் 3. பாங்கனாலாய கூட்டம் (இடந்தலைப்பாடு) (கிளவித்தொகை 18) 26. ஆக்கிய சீருற் றதுவினா வாங்கவ னுற்றுதுரை வாக்கினி யான்முன் கழற லதனை யெதிர்மறுத்தல் தாக்கமர் பாங்கன் றனதுளந் தானே தனைவரைத்தல் வீக்கமழ் தாழ்பொழில் சூழிடந் தன்னை வினவுதலே. 27. வினவுந் தகைமை யிடத்தியல் கூறல் மிகவிளங்கச் சொனநன் குறிவழிச் சேற லிடங்கண்டு தான் துணிதல் (வினை)கொண் டிறைவனைத் தானே வியத்தல் எழில்சிறந்த வனிநின் றிடுநிலை கூறல் அவயவந் தேறுதலே. 28. தேறும் பொழில் தனைக் கண்டு வியத்தல் திருவேயெனல் மாறும் படியன்றி யாற்றான் கிளத்தல் மருங்கணைதல் ஊறும் புணர்ச்சி மகிழ்த லிருத்தலென் றொண்புலவோர் கூறுங் கிளவிகள் ஈரொன் பதுபாங்கன் கூட்டிடமே. இச் சூத்திரம் மூன்றும் என்னுதலிற்றோ வெனின், பாங்கற் கூட்டம் பதினெட்டு வகைப்பட்ட கிளவியாம் என்ப தறிவித் தலைக் கருதிற்று. என்னை? (1) உற்றதுவினாதலும், (2) உற்ற துறைத்தலும், (3) கழறலும், (4) கழற்றெதி ருரைத்தலும், (5) உளங்கவன் றுரைத்தலும், (6) இடம் வினாதலும், (7) இடத்தியல் புரைத்தலும், (8) குறிவழிச் சேறலும், (9) இடங்கண்டு துணிதலும், (10) இறைவனை வியத்தலும், (11) நிலை கூறு கிளவியும், (12) அவயவந் தேறலும், (13) பொழில் கண்டு வியத்தலும், (14) திருவென வுரைத்தலும், (15) ஆற்றான் கிளத்தலும், (16) மருங்கணைதலும், (17) புணர்ச்சி மகிழ்தலும், (18) இருத்தலும் என்றவாறு. 1. அவற்றுள், உற்றது வினாதல் என்பது பிரிந்த தலைமகள் வேறுபாடு கண்டு பாங்கன் வினாதல். அதற்குச் செய்யுள்: (64) சிறைவான் புனற்றில்லைச் சிற்றம்ப லத்துமென் சிந்தையுள்ளு முறைவா னுயர்மதிற் கூடலி னாய்ந்தவொண் டீந்தமிழின் துறைவாய் நுழைந்தனை யோவன்றி யேழிசைச் சூழல்புக்கோ இறைவா தடவரைத் தோட்கென்கொ லாம்புகுந் தெய்தியதே - திருக்கோவையார் 20. (65) 1(நீடிய பூந்தண் கழனிநெல் வேலி நிகர்மலைந்தார் ஓடிய வாறுகண் டொண்சுடர் வைவேல் உறைசெறித்த ஆடியல் யானை யரிகே சரிதெவ்வர் போலழுங்கி வாடிய காரண மென்னைகொல் லோவுள்ளம் வள்ளலுக்கே - பாண்டிக்கோவை. 24. (66) முன்னினை முடிப்பதொன் றுளதுகொல் மூவகை நுண்ணிய பனுவலின் நுழைந்துகொல் என்னைகொல் வாடிய தண்ணனின் எழிலே - பொருளியல் 7. 2. உற்றது உரைத்தல் என்பது உற்றது வினாவிய பாங்கனுக்குத் தலைவன் தான் உற்றது உரைத்தல். அதற்குச் செய்யுள் : (67) கோம்பிக் கொதுங்கிமே யாமஞ்ஞை குஞ்சரங் கோளிழைக்கும் பாம்பைப் பிடித்துப் படங்கிழித் தாங்கப் பணைமுலைக்கே தேம்பற் றுடியிடை மான்மட நோக்கிதில் லைச்சிவன்றாள் ஆம்பொற் றடமலர் சூடுமென் னாற்ற லகற்றியதே - திருக்கோவையார் 21. (68) அளையார் அரவின் குருளை அணங்க அறிவழிந்து துளையார் நெடுங்கைக் களிறு நடுங்கித் துயர்வதுபோல் வளையார் முளையெயிற் றார்மன்னன் மாறன்வண் கூடலன்ன இளையார் ஒருவர் அணங்கநைந் 2தாம்மெய் இளைக்கின்றதே - பாண்டிக் கோவை 27. (69) வளைவளர் தருதுறையே மணம்விரி தருபொழிலே தளையவிழ் நறமலரே தனியவள் திரியிடமே வளைவளர் இளநகையே முழுமதி புரைமுகமே இளையவள் இளமுலையே எனையிடர் செய்தவையே - சிலப்பதிகாரம்-கானல்வரி 16. (70) சிறுவெள் ளரவின் அவ்வரிக் குருளை கான யானை யணங்கி யாஅங் கிளையன் முளைவாய் எயிற்றள் வளையுடைக் கையளெம் மணங்கி யோளே - குறுந்தொகை 119. (71) எலுவ சிறாஅ ரேமுறு நண்ப 1புலவ தோழ கேளா யத்தை மாக்கடல் நடுவண் எண்ணாட் பக்கத்துப் பகுவெண் டிங்கள் தோன்றி யாங்குக் கதுப்பயல் விளங்குஞ் சிறுநுதல் புதுக்கோள் யானையிற் பிணித்தற்றா லெம்மே - குறுந்தொகை 129. 2... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... (72) அன்பு(ருவந் தாங்கி) அரிசிதறி நீளியவாய்க் கொன்பயிலும் வேல்போற் குழைபொருந்-தன்பெரிய மைக்கொண்ட காவி மலர்விழியா லென்னறிவைக் கைக்கொண்ட தோரிளமான் கன்று - கிளவித் தெளிவு. 3. கழறல் என்பது தலைவனுக் குற்றது கேட்ட பாங்கன் சொல்லுதல். அதற்குச் செய்யுள். (73) உளமாம் வகைநம்மை யுய்யவந் தாண்டுசென் றும்பருய்யக் களமாம் விடமமு தாக்கிய தில்லைத்தொல் லோன்கயிலை வளமாம் பொதும்பரின் வஞ்சித்து நின்றொர்வஞ் சிம்மருங்குல் இளமான் விழித்ததென் றோவின்றெம் மண்ண லிரங்கியதே - திருக்கோவையார் 22. (74) ஆய்கின்ற தீந்தமிழ் வேந்தன் அரிகே சரியணிவான் றோய்கின்ற முத்தக் குடைமன்னன் கொல்லியஞ் சூழ்பொழில்வாய் ஏய்கின்ற ஆயத் திடையொ ரிளங்கொடி கண்டெனுள்ளந் தேய்கின்ற தென்ப 1தழகிதன் றோவென் சிலம்பனுக்கே - பாண்டிக் கோவை 30. (75) பொருந்தா தம்ம புனையிழை 2யரிவை முருந்தேர் முறுவல் நோக்கின் வருந்தின னென்பது பெருந்தகை பெரிதே. - பொருளியல் 8. (76) தேனகு முல்லை சொரிய விடைநின்று மீனகு வாண்மதிபோல் வெண்கூதம்-தான்விரியும் கானக நாட கடனோ மடனோக்கி யான தினையு மெனல் - இன்னிசை மாலை. (77) தேயு மருங்குலாள் சேலனைய கண்கண்டு நீயு நெறிதளர்ந்து நிற்றியா-லாயு மறிவெங்கே யல்லா லருங்குணங்க ளான செறிவெங்கே திண்சிலம்பா செப்பு - கிளவித் தெளிவு. 4. கழற்றெதிர்மறை யென்பது பாங்கன் கழறத் தலைமகன் எதிர் மறுத்தல். அதற்குச் செய்யுள்: (78) சேணிற் பொலிசெம்பொன் மாளிகைத் தில்லைச்சிற் றம்பலத்து மாணிக்கக் கூத்தன் வடவான் கயிலை மயிலைமன்னும் பூணிற் பொலிகொங்கை யாவியை யோவியப் பொற்கொழுந்தைக் காணிற் 1கழறலை கண்டிலை மென்றோட் கரும்பினையே - திருக்கோவையார் 23. (79) மண்கொண்டு வாழ2 வலித்துவந் தார்தம் மதனழித்துப் புண்கொண்ட நீர்மூழ்கப் பூலந்தை வென்றான் புகாரனைய பண்கொண்ட சொல்லம் மடந்தை முகத்துப்பைம் பூங்குவளைக் கண்கண்ட பின்னை யுரையீ ருரைத்தவிக் கட்டுரையே - பாண்டிக்கோவை 34. (80) விண்டலங் கெஃகொடு வேணாட் டெதிர்நின்ற வேந்தவித்திம் மண்டலங் காக்கின்ற மான்றோர் வரோதயன் வஞ்சியன்னாள் குண்டலஞ் சேர்ந்த மதிவாண் முகத்த கொழுங்கயற்கண் கண்டிலிர் கண்டால் உரையீர் 3உரைத்தவிக் கட்டுரையே - பாண்டிக் கோவை 33. (81) நிணங்கொள் புலாலுணங்க னின்றுபுள் ளோப்புதல் தலைக்கீடாகக் கணங்கொள் வண்டார்த்துலாங் கன்னி நறுஞாழல் கையிலேந்தி மணங்கமழ் பூங்கானல் மன்னிமற் றாண்டோர் அணங்குறையும் என்ப தறியேன் அறிவேனேல் அடையேன் மன்னோ - சிலப்பதிகாரம், கானல்வரி 9. (82) அம்ம வாழி கேளிர் முன்னின்று கண்டனி ராயிற் கழறலிர் மன்னோ நுண்டாது பொதிந்த செங்காற் 1கொழுமுகை முண்டகங் கெழீஇய மோட்டுமண லடைகரைப் பேஎய்த்2தலைஇய பிணரரைத் தாழை யெயிறுடை நெடுந்தோடு காப்பப் பலவுடன் வயிறுடைப் போது வாலிதின் 3விரியப் புலவுப்பொரு தழித்த பூநாறு பரப்பின் இவர்திரை தந்த ஈர்ங்கதிர் முத்தம் 4கவர்நடைப் புரவிக் கால்வடுத் தபுக்கு நற்றேர் வழுதி கொற்கை முன்றுறை வண்டுவாய் திறந்த வாங்குகழி நெய்தற் போதுபுறங் கொடுத்த வுண்கண் மாதர் வாண்முகம் மதைஇய நோக்கே - நெடுந்தொகை 130. (83) இடிக்குங் கேளிர் நுங்குறை யாக நிறுக்க லாற்றினோ நன்றுமற் றில்லை ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற் கையி லூமன் கண்ணிற் காக்கும் வெண்ணெய் உணங்கல் போலப் பரந்தன் றிந்நோய் 5மொண்டுகொளற் கரிதே - குறுந்தொகை 58. (84) நயனு 6நன்று நாணுநன் குடைமையும் பயனும் பண்பும் பாடறிந் தொழுகலும் 7நும்மிலும் அறிவென் மன்னோ தம்மென வெதிர்த்த 8துத்தி யேரிள வனமுலை விதிர்த்துவிட் டன்ன அந்நுண் 9மருங்குல் ஐம்பால் வகுத்த கூந்தற் செம்பொற் 10றிருநுதல் பொறித்த தேம்பா யோதி முதுநீர் இலஞ்சி பூத்த குவளை யெதிர்மலர்ப் பிணையல் 11அன்னவள் அரிமதர் மழைக்கண் காணா வூங்கே - நற்றிணை 160. 1... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... (85) (காண்குவி ராயிற் கழறலிர் மன்னோ பூண்புனை வளரிள வனமுலை மாண்குழை மாதர் மடங்கெழு நோக்கே - பொருளியல். 9 5. உளங்கவன் றுரைத்தல் என்பது தலைமகன் தனது ஆற்றாமையின் கழற்றெதிர் மறுத்துரைப்பக் கேட்ட பாங்கன் கவன்றுரைத்தது. அதற்குச் செய்யுள் : (86) விலங்கலைக் கால்விண்டு மேல்மே லிடவிண்ணு மண்ணுமுந்நீர்க் கலங்கலைச் சென்றவன் றுங்கலங் காய்கமழ் கொன்றைதுன்றும் அலங்கலைச் சூழ்ந்தசிற் றம்பலத் தானரு ளில்லவர்போல் துலங்கலைச் சென்றிதென் னோவள்ள லுள்ளந் துயர்கின்றதே - திருக்கோவையார் 24. (87) வன்தாட் களிறு கடாஅயன்று வல்லது மன்னவியச் சென்றான் கருங்கயல் சூட்டிய சென்னிச்செம் பொன்வரைபோல் நின்றான் நிறையும் அறிவுங் கலங்கி நிலைதளரும் என்றால் தெருட்டவல் லாரினி யாரிவ் விருநிலத்தே - பாண்டிக் கோவை 35. (88) புலந்துறை போகிய நெஞ்சுநிறை யழிந்து கலங்குவ தாயின் மாதோ சிலம்பனை யாரோ தெளிக்குநர் பிறரே - பொருளியல் 10. 6. இடம் வினாதல் என்பது உளங்கவன்றுரைத்த பாங்கன் எவ்விடத்து? எத்தன்மைத்து? நின்னாற் காணப்பட்ட உரு? என்று தலைவனை வினாவுதல். அதற்குச் செய்யுள்: (89) நின்னுடை நீர்மையும் நீயுமிவ் வாறு நினைத்தெருட்டும் என்னுடை நீர்மையி தென்னென்ப தேதில்லை யேர்கொண்முக்கண் மன்னுடை மால்வரை யோமல ரோவிசும் போசிலம்பா என்னிடம் யாதியல் நின்னையின் னேசெய்த ஈர்ங்கொடிக்கே - திருக்கோவையார் 28. (90) வல்லிச் சிறுமருங் குற்பெருந் தோள்மட வார்வடிக்கண் புல்லிப் பிரிந்தறி யாதமந் தாரத்தெங் கோன்புனனாட்டு அல்லித் தடந்தா மரைமல ரோஅவன் தண்ணளியார் கொல்லித் குடவரை யோஅண்ணல் கண்டதக் கொம்பினையே - பாண்டிக் கோவை 36. (91) கரங்குவித்த கண்ணா (கனிந்துரையாய் தெவ்வர் வரங்குவித்த சொல்லி வழியொழுகி வீழ) அரங்குவித்த செவ்வேலா யஞ்சாத நின்னை இரங்குவித்த மாத ரிடம் - 1இன்னிசை மாலை. (92) 1வாழ்பதி யாவது கொல்லோ வான்புகழ்ச் சூழ்கழ லண்ண னெஞ்சம் ஆழ்துய ரெய்த வணங்கிய வணங்கே - பொருளியல் 11. (93) உம்பரோ நாகர் உலகோ இருங்கடல்சூ ழிம்பரோ யாதோ விடம்வடிவு-கொம்பரோ வண்ண மயிலோ கிளியோ மலைநாட (எண்ணங் கவர்ந்த எழில் - 2கிளவித் தெளிவு (26) 7. இடத்தியல் புரைத்தல் என்பது பாங்கற்குத் தலைமகன் கண்ட இடமும் வடிவும் உரைத்தல். அதற்குச் செய்யுள்: (94) விழியாற் பிணையாம் விளங்கிய லான்மயி லாமிழற்று மொழியாற் கிளியா முதுவா னவர்தம் முடித்தொகைகள் கழியாக் கழற்றில்லைக் கூத்தன் கொழியாத் திகழும் பொழிற்கெழி லாமெங் குலதெய்வமே - திருக்கோவையார் 29. (95) *** *** *** - 3கோயிலந்தாதி. (96) அடிவண்ணந் தாமரை யாடர வல்கு லரத்தமங்கை கொடிவண்ண நுண்ணிடை கொவ்வைச்செவ் வாய்கொங்கை கோங்கரும்பின் படிவண்ணஞ் செங்கோற் பராங்குசன் கொல்லிப் 1பனிவரைவாய் வடிவண்ண வேற்கண்ணி னாலென்னை வாட்டிய வாணுதற்கே - பாண்டிக் கோவை 38. (97) திருமா முகந்திங்கள் செங்கய லுண்கண்செம் பொற்சுணங்கேர் வரமா முலைமணிச் செப்பிணை வானவன் கானமுன்னக் குருமா நெடுமதிற் கோட்டாற் றரண்கொண்ட தென்னன்கன்னிப் பெருமான் வரோதயன் கொல்லியஞ் சாரலப் பெண்கொடிக்கே - பாண்டிக் கோவை 39. (98) குன்றக் குறவன் காதன் மடமகள் வரையர மகளிர்ப் புரையுஞ் சாயலள் ஐயள் அரும்பிய முலையள் செய்ய 2வாயள் மார்பினள் சுணங்கே - ஐங்குறுநூறு 255. (99) இன்னகைத் துவர்வாய்க் கிளவியு மாரணங்கே நன்மா மேனிச் சுணங்குமா ரணங்கே ஆடமைத் தோளி கூடலு மணங்கே அரிமதர் மழைக்கணு மணங்கே திருநுதற் பொறித்த திலதமு மணங்கே - காரிகைச் செய்யுள். (100) அம்ம் பவள்ள் வரிநெடுங்க ணாய்வஞ்சி கொம்ம் பவள்ள் கொடிமருங்குல் கோங்கின் அரும்ம் பவள்ள் முலையொக்குமே ஒக்கும் கரும்ம் பவள்ள்வாயிற் சொல் - பழம்பாட்டு. (101) காதுடனே காதுங் கயலிரண்டுஞ் செங்கமலப் போதுடனே நின்று புடைபெயரத்-தாதுடனே வண்டாடுஞ் சோலை மயில்போல் வரிப்பந்து கொண்டாட நான்கண்டேன் கொம்பு - கிளவித் தெளிவு. (102) கொங்கை அரும்பாக் குழலளகம் வண்டாக அங்கை தளிரா அலர்விழியாத்-திங்கள் குளிருந் தரளக் குடைக்கண்டன் கொல்லி ஒளிதருங் கொம்பொன் றுளது - கண்டனலங்காரம். (103) முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு - திருக்குறள் 1113. 8. குறிவழிச் சேறல் என்பது இடத்தியல் புரைப்பக் கேட்ட பாங்கன் அவ்விட நோக்கிச் சேறல். அதற்குச் செய்யுள் வருமாறு ; (104) குயிலைச் சிலம்படிக் கொம்பினைத் தில்லையெங் கூத்தப்பிரான் கயிலைச் சிலம்பிற்பைம் பூம்புனங் காக்குங் கருங்கட்செவ்வாய் மயிலைச் சிலம்பகண் டியான்போய் வருவன்வண் பூங்கொடிகள் பயிலச் சிலம்பெதிர் கூய்ப்பண்ணை நண்ணும் பளிக்கறையே - திருக்கோவையார் 30. (105) பொன்னங் கனைகழற் பூழியன் பூலந்தைப் போர்மலைந்த தென்னன் பொதியிற் செழும்புனங் காக்குஞ் சிலைநுதற்பூ ணன்னந் தனையா ரணங்கினை யாடமைத் தோளியையேழ் மன்னுங் கடலமு தந்தனைக் கண்டு வருகுவனே - பாண்டிக் கோவை 40. (106) தோகை மயிலைச் சுரும்பார் குழலணங்கைப் பாகை யனையமொழிப் பைந்தொடியை - யோகைமிகுஞ் சோலைக்கண் வெற்ப துடியிடையை யான்கண்டு மாலைக்கு முன்னே வர. - பழம்பாட்டு. 9. இடங்கண்டு துணிதல் என்பது தலைமகன் கூறின குறிவழிச் சென்ற பாங்கன் இடத்தெதிர்ப்பட்டுத் துணிதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (107) 1வடிக்கண் ணிவைவஞ்சி யஞ்சு மிடையிது வாய்பவளந் துடிக்கின்ற வாவெற்பன் சொற்பரி சேயான் றொடர்ந்துவிடா வடிச்சந்த மாமல ரண்ணல்விண் ணோர்வணங் கம்பலம்போற் படிச்சந் தமுமிது வேயிவ ளேயப் பணிமொழியே - திருக்கோவையார் 32. (108) தண்டா தலர்கண்ணி யண்ணறன் னுள்ளந் தளர்வுசெய்த வண்டார் குழலவ ளேயிவள் மானீர் மணற்றிமங்கை விண்டா ருடற்குன்ற மேறி விழிகட் 2கழுகுறங்கக் கண்டான் பொதியி லிதுவே யவன்சொன்ன கார்ப்புனமே - பாண்டிக் கோவை 42. (109) சினமும ழிந்து செருவிடைத் தோற்றதெவ் வேந்தர்கள்போய்க் கனவும் படிகடை யற்செற்ற வேந்தன் கருங்குழலார் மனமும் வடிக்கண்ணுந் தங்குமந் தாரத்தெம் மன்னன்கொல்லிப் புனமு 1மிதுவே யிவளே யவன்கண்ட பூங்கொடியே - பாண்டிக் கோவை. 43. (110) 2வேங்கை யொள்வீ காந்தளொடு கமழும் பூந்தண் சாரலு மிதுவே யேந்திலை அயில்வேல் அண்ணல் கூறிய மயிலேர் சாயல் வண்ணமு மிதுவே - பொருளியல் 13. (111) * * * * -3சிற்றெட்டகம். (112) * * * *-4 (?) 10. வியத்தல் என்பது குறியிடத்துச் சென்ற பாங்கன் தலைவனை வியத்தல். அதற்குச் செய்யுள் வருமாறு : (113) குவளைக் களத்தம் பலவன் குரைகழற் போற்கமலத் தவளைப் பயங்கர5 மாக்கிநின் றாண்ட வவயவத்தின் இவளைக்கண் டிங்குநின் றங்குவந் தத்துணை யும்பகர்ந்த கவளக் களிற்றண்ண லேதிண்ணி யானிக் கடலிடத்தே. - திருக்கோவையார் 33. (114) இருநெடுந் தோளண்ண லேபெரி யான்வல்லத் தேற்றதெவ்வர் வருநெடுந் தானையை வாட்டிய கோன்கொல்லி மால்வரைவாய்த் திருநெடும் பாவை யனையவள் செந்தா 1மரைமுகத்த கருநெடுங் கண்கண்டு மாற்றிவந் தாமெம்மைக் 2கண்ணுதற்கே. - பாண்டிக் கோவை 44. (115) 3நோதக வுடைத்தே நெஞ்ச மதிமிசை மாதர் குவளை மலர்மலர்ந் (தன்ன) கருந்தடங் கண்கண் டாற்றிய பெருந்தகை யண்ணலைக் கழறினன் பெரிதே - பொருளியல் 14. (116) கண்ணு முகமுங் கதிர்முலையுங் கண்டக்கால் (எண்ணந் தவறார் எவருளரோ)-வெண்ணுதிறற் செவ்வண்ண வேலினான் சித்தந் தளராதே யெவ்வண்ண மாற்றின னீங்கு - கிளவித் தெளிவு. 11. நிலைகூறு கிளவி என்பது பாங்கன் குறியிடத்துச் சென்று தலைமகள் நிலைமை கண்டு தலைமகற்குக் கூறுதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (117) பணந்தா ழரவரைச் சிற்றம் பலவர்பைம் பொற்கயிலைப் புணர்ந்தாங் ககன்ற பொருகரி யுன்னிப் புனத்தயலே மணந்தாழ் பொழிற்கண் வடிக்கண் பரப்பி மடப்பிடிவாய் நிணந்தாழ் சுடரிலை வேலகண் டேனொன்று நின்றதுவே - திருக்கோவையார் 34. (118) மின்னே ரொளிமுத்த வெண்மணன் மேன்விரை நாறுபுன்னைப் பொன்னேர் புதுமலர் தாய்ப்பொறி வண்டு முரன்றுபுல்லா மன்னே ரழிய மணற்றிவென் றான்கன்னி வார்துறைவாய்த் தன்னேரி லாத தகைத்தின் றியான்கண்ட தாழ்பொழிலே - பாண்டிக்கோவை 39. (119) மண்டலம் பண்டுண்ட திண்டேர் வரகுணன் தொண்டியின்வாய்க் கண்டலந் தண்டுறைக் கண்டதொன் றுண்டு கனமகரக் குண்டலங் கெண்டை யிரண்டொடு தொன்டையுங் கொண்டொர்திங்கள் மண்டலம் வண்டலம் பக்கொண்டல் தாழ வருகின்றதே - பழம்பாட்டு. (120) 1ஆய்தளிர் பொதுளிய வீததை (தண்சினைக்) காய்கதிர் நுழையாக் கடிபொழில் யாவயி னோரும் விழைவுறுந் தகைத்தே - பொருளியல் 15. (121) 2கோலக் கிளிவிளக்கிக் கொண்டல் நடையருளி நீல விழிபரப்பி நிற்குமால் - வேலனகண் அல்லித் திருமங்கை கோமான் அருட்கண்டன் கொல்லிப் புனத்தயலோர் கொம்பு - கண்டனலங்காரம். (122) செய்ய முலைமேல் வடந்திகழத் திக்கெல்லாம் வெய்ய குவளை விழிபரப்பிப்-பைய அளிவிளங்கு வல்லிபோ லங்கொருவர் (மின்னி) ஒளிவிளங்க நின்றா ருளர் -கிளவித் தெளிவு. 12. அவயவந் தேறுதல் என்பது குறிவழிச் சென்று மீண்ட பாங்கன் தலைவி நிலை கூறத் தலைமகன், (தலைமகள் அவயவங்களை நினைந்து அவள் என் உயிரே எனத் தேறுதல்). அதற்குச் செய்யுள் வருமாறு : (123) எயிற்குல மூன்றிருந் தீயெய்த வெய்தவன் தில்லையொத்துக் குயிற்குலங் 1கொண்டதொண் டைக்கனி வாய்க்குளிர் முத்தநிரைத் தயிற்குல வேல்கம லத்திற் கிடத்தி யனநடக்கு மயிற்குலங் கண்டதுண் டேலது வென்னுடை மன்னுயிரே - திருக்கோவையார் 36. (124) பொதியிலந் தேன்மலைப் பூழியன் பூலந்தை போர்மலைந்தான் பதிவளங் கொண்டு பவளத் திடைநித் திலம்பதித்து மதியிடந் தன்னிற் குவளை செலுத்தியோர் வஞ்சிநின்ற அதிசயங் கண்டனை யேயது வேயென தாருயிரே - பாண்டிக்கோவை 51. (125) வண்டே றியகுழலும் வாளைபாய் வள்ளையிளந் தண்டே றியகுழையுந் தாழ்வடமும்-கொண்டே யிளவேய் நிகரிருந்தோள் ஏந்திழையை மானிற் களவேய் விழியை அறி - பழம்பாட்டு. 13. பொழில் கண்டு வியத்தல் என்பது இவ்வகை அவயவந்தெளிந்த தலைமகன் றான்புகுந்த பொழி(ல் கண்டு வியத்தல்). அதற்குச் செய்யுள் வருமாறு : (126) காம்பிணை யாற்களி மாமயி லாற்கதிர் மாமணியால் வாம்பிணை யால்வல்லி யொல்குத லான்மன்னு மம்பலவன் பாம்பிணை யாக்குழை கொண்டோன் கயிலைப் பயில்புனமுந் தேம்பிணை வார்குழ லாளெனத் தோன்றுமென் சிந்தனைக்கே - திருக்கோவையார் 38. (127) துனிதா னகலமண் காத்துத் தொடுபொறி யாய1கொண்டற் பனிதாழ் 2பருவரை மேல்வைத்த பஞ்சவன் பாழிவென்ற குனிதாழ் சிலைமன்னன் கூடலன் னாளது கூடலைப்போ லினிதா யெனதுள்ள மெல்லாம் குளிர்வித்த தீர்ம்பொழிலே - பாண்டிக்கோவை 58. (128) தனிமை நெஞ்சத்து முனிவுகண் 3ணகற்றலின் விணைமாண் பாவை யன்ன புனையிழை மாதரும் போன்றதிப் பொழிலே - பொருளியல் 16. (129) குழைமுகத்தாற் கொங்கை மலையு மருங்கால் விழியரிய நாட்டத்தால் வேனற்-பொழிலெல்லாம் புல்லார் புறங்கண்ட கண்டன் புகாரனைய நல்லாளே யாகு நமக்கு - கண்டனலங்காரம். (130) முருக்கின் புதுமலரால் முல்லை நகையால் நெருக்கியெழுஞ் செவ்விள நீராற்-குருக்கொடியால் ஆன்ற குழைமுகத்தால் நானயந்த நன்னுதலைப் போன்ற துயர்பூம் பொழில் - கிளவித் தெளிவு. 14. திருவென உரைத்தல் என்பது பொழிலகத் தெதிர்ப்பட்ட தலைவன் தலைமகளைத் திருவென் றயிர்த்துச் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (131) காவிநின் றேர்தருரு கண்டர்வண் டில்லைக்கண் ணார்கமலத் தேவியென் றேயையஞ் சென்றதன் றேயறி யச்சிறிது மாவியன் றன்னமென் னோக்கிநின் வாய்திற வாவிடினென் னாவியன் றே1யமு தேயணங் 2கேகட் டழிகின்றதே - திருக்கோவையார் 41. (132) மேவியொன் னாரைவெண் மாத்துவென் 3றான்(திரு) மாறை(யின்) வாய்த் தேவியென் றேநின்னை யானினைக் கின்றது சேயரிதாய்க் காவிவென் றாயகண் ணாயல்லை யேயொன் றுகட்டுரையாய் ஆவிசென் றாற்பெயர்ப் பாரினி யாரிவ் வகலிடத்தே - பாண்டிக்கோவை 49. (133) தெய்வ மாக வையுறு நெஞ்சம் பொய்யா தாயினின் செவ்வாய் திறந்து கிளிபுரை கிளவியாம் பெறுக வொளியிழை மடந்தை யுயிர்பெயர்ப் பரிதே - பொருளியல் 17. (134) செய்ய மலரிற் றிருமகளே யென்றுன்னை யைய முறுகின்றதே னல்லையேல்-உய்ய உரைதந் தருளாய் உயிர்வருமோ போனால் விரைதந்த மேனியாய் மீண்டு - கிளவித் தெளிவு. 15. ஆற்றான் கிளத்தல் என்பது இவ்வகை சொல்லக் கேட்டு நாணினாற் கண் புதைத்தாளுக்குத் தலைமகன் கூறுதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (135) தாழச்செய் தார்முடி தன்னடிக் கீழ்வைத் தவரைவிண்ணோர் சூழச்செய் தானம் பலங்கை தொழாரினுள் ளந்துளங்கப் போழச்செய் யாமல்வை வேற்கண் புதைத்தபொன் னேயென்னைநீ வாழச்செய் தாய்சுற்று முற்றும் புதைநின்னை வாணுதலே - திருக்கோவையார் 43. (136) செய்தவம் பேசுதற் சீர்வல்ல கொல்லத் திருவரங்கன் கைதவம் பேசெய்யக் காய்ந்த பிரான்கதி ரோன்மகனை வைதவம் பேசிய வாலியு மாம1 (ரமுமுருவ) எய்தவம் பேயன்ன கண்மட வீர்புதைத் தென்பயனே - கோயிலந்தாதி. (137) அரும்புடைத் தொங்கற்செங் கோலரி கேசரி கூடலன்ன சுரும்புடைக் கோதைநல் 2லாயெமக் குத்துயர் செய்யுமென்றுன் பெரும்படைக் கண்புதைத் தாய்புதைத் தாய்க்குநின் பேரொளிசேர் கரும்புடைத் தோளுமன் றோவெனை யுள்ளங் கலக்கியதே - பாண்டிக்கோவை 53. (138) நாட்டம் புதைக்கின்ற தென்னீ மடந்தை நவகண்டமே லீட்டம் புகழ்வின்னன் மேவா ரெனவிங்ஙன் யான்வருந்த வாட்டம் பயின்றாங் ககிலின் குழம்பணிந் தாகமெங்கும் வேட்டந் தெரிகின்ற கொங்கைக ளென்னை மிகைசெய்தவே - பல்சந்த மாலை. (139) சொல்லிற் சொல்லெதிர் கொள்ளா யாழநின் றிருமுக 1மிறைஞ்சினை நாணுதி கதுமெனக் காமங் கைம்மிகிற் றாங்குத லெளிதோ 2கொடுங்கோ ழிரும்புறம் நடுங்கக் குத்திப் புலிவிளை யாடிய புலவுநாறு வேழத்தின் றலைமருப் பேய்ப்பக் கடைமணி சிவந்தநின் கண்ணே 3கதுவ வல்ல நண்ணார் ஆண்டலை 4மதில ராகவும் முரசுகொண் டோம்பரண் கடந்த அடுபோர்ச் செழியன் பெரும்பெயர்க் கூட லன்னநின் கரும்புடைத் தோளு முடையவா லணங்கே - நற்றிணை 39. (140) காவியங் கருங்கட் செவ்வாய்ப் பைந்தொடி 5பூவிரி சுரிமென் கூந்தலும் வேய்புரை தோளும் அணங்குமா லெம்மே - பொருளியல் 18. (141) கண்டு நிலைதளர்ந்தேன் காத்தருளும் கார்வரைமேற் புண்டரிகம் வைத்தான் புகாரனையீர்-வண்டின் கிளையலம்பு கார்நீழற் கெண்டைமேல் வைத்த வளையலம்பு செந்தா மரை - கண்டனலங்காரம். (142) வந்தென் னுடலி னுயிர்வாங்க வாணுதலாய் சந்த வனமுலையே சாலாதோ-பைந்தளிரால் நின்கண் புதைத்தனையே நின்வடிவ லாம்புதைய வென்கண் புதைத்தருளா யின்று - கிளவித் தெளிவு. 16. மருங்கணைதல் என்பது (நாணினாற் கண் புதைக்க) இவ்வகை சொல்லி ஆற்றானாய தலைமகன், தலைமகட்குக் குழலுங் கோதையுந் திருத்துவானாய்ச் சென்று அணைத(லைச் சொ)ல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (143) கோலத் தனிக்கொம்பர் உம்பர்புக் கஃதே குறைப்பவர்தம் சீலத் தனகொங்கை தேற்றகில் லேஞ்சிவன் றில்லையன்னாள் நூலொத்த நேரிடை நொய்ம்மையெண் ணாதுதண் டேனசையாற் சாலத் தகாதுகண் டீர்வண்டு காள்கொண்டை சார்வதுவே - திருக்கோவையார் 45. (144) நாமே யிடையுள்ள வாறறி வாமினி நாங்கள் சொல்ல லாமே மருதன் மருத வனத்தன்ன மன்னவரைப் பூமே லணிந்து பிழைக்கச்செய் தாரொரு பொட்டுமிட்டார் தாமே தளர்பவ ரைப்பார மேற்றுதல் தக்கதன்றே - திருவிடை மருதூர் மும்மணிக்கோவை 15. * * * * (145) 1தேந்தண் பொழிலணி சேவூர்த் திருந்தார் திறலழித்த வேந்தன் விசாரிதன் தெவ்வரைப் போன்மெலி விக்குமென்றுன் பூந்தடங் கண்புதைத் தாய்புதைத் தாய்க்குன் பொருவில்செங்கேழ்க் காந்தள் விரலுமன் றோவெம்மை யுள்ளங் கலக்கியதே - பாண்டிக்கோவை 54. 17. புணர்ச்சி மகிழ்தல் என்பது தலைவியை மெய் தொட்டுப் பயின்ற தலைவன் அவ்வின்பஞ் சொல்லி மகிழ்தல். அதற்குச் செய்யுள் வருமாறு : (146) நீங்கரும் பொற்கழற் சிற்றம் பலவர் நெடுவிசும்பும் வாங்கிருந் தெண்கடல் வையமு மெய்தினும் யான்மறவேன் தீங்கரும் பும்மமிழ் துஞ்செழுந் தேனும் பொதிந்துசெப்புங் கோங்கரும் புந்தொலைத் தென்னையு மாட்கொண்ட கொங்கைகளே - திருக்கோவையார் 46. (147) கையேர் சிலைமன்ன ரோடக் கடையற்றன் கண்சிவந்த நெய்யே ரயில்கொண்ட நேரியன் கொல்லி நெடும்பொழில்வாய் மையேர் தடங்கண் மடந்தைமெல் லாகம் புணர்ந்ததெல்லாம் பொய்யே யினிமெய்ம்மை யாயினு மில்லை புணர்திறமே - பாண்டிக்கோவை 20. (148) ஒடுங்கீரோதி ஒண்ணுதற் குறுமகள் நறுந்தண் நீரள் ஆரணங் கினளே இனையள் என்றவட் புனையளவறியேன் சிலமெல் லியவே கிளவி அணைமெல் லியல்யான் முயங்குங் காலே - குறுந்தொகை 70. 18. இருத்தல் என்பது புணர்ந்து நீங்கிய தலைவன் தலைவியை ஆய்த்துய்த்துப் பிரிவாற்றாது வருந்தியிருத்தல். அதற்குச் செய்யுள் வருமாறு : (149) பொய்யுடை யார்க்கரன் போலக லும்மகன் றாற்புணரின் மெய்யுடை யார்க்கவன் அம்பலம் போல மிகநணுகும் மையுடை வாட்கண் மணியுடைப் பூண்முலை வாணுதல்வான் பையுடை வாளர வத்தல்குல் காக்கும்பைம் பூம்புனமே - திருக்கோவையார் 48. (150) கோடல் எதிர்முகைப் பசுவீ முல்லை நாறிதழ்க் குவளையொ டிடைப்பட விரைஇ ஐதுதொடை மாண்ட கோதை போல நறிய நல்லோள் மேனி முறியினும் வாய்வது முயங்கற்கு மினிதே - குறுந்தொகை 62. (151) பெருமலர்ப் பிரிந்த திருமக ளம்மலர் அருங்கவி னெய்தச் சென்று சேர்ந்தாங் கிருங்கலத் தொன்மனை பொலியப் பெருந்தகைத் தோளி பெயர்ந்தனை சென்மே - பொருளியல் 19.) (152) சேயன ஆண்மைத் திருமுடித் தென்னன் ஆய்பொருட் சீரன் புடனரு டருமேல் இன்னுங் குறுகுவன் இரும்பொழி லிடமே - பழம் பாட்டு. 1இவையெல்லாம், (153) ஆங்கனம் புணர்ந்த கிழவோன் தன்வயிற் பாங்க னேரிற் குறிதலைப் பெயலும் பாங்கிலன் தமியோ ளிடந்தலைப் படலுமென் றாங்க விரண்டே தலைப்பெயன் மரபே - இறையனார் அகப்பொருள் 3. என்னுஞ் சூத்திரத்துட் கண்டு கொள்க. பாங்கனாலாய கூட்டம் (கிளவித்தொகை 18) இடந்தலைப்பாடு முற்றும் 3. தோழியாலாய கூட்டம் அ. மதியுடம் படுத்தல் 29. இயற்றுஞ் செழுந்தழை யுங்கண்ணி யுங்கொண் டிகுளையிடத் தயற்பின் செலவைக் குறையுற லென்றுநல் லஞ்சனந்தோய் கயற்கண் களால்மதன் சக்கரங் காக்குங் கதிர்முகத்தாய் நயத்தண் டமிழ்ப்பொருட் பாவோர் நயந்தங் கிளம்பினரே. என் - எனின், இரந்து குறையுற்ற இடத்துக் குறையுறுதல் என்னுங் கிளவி ஒன்றாம். அது வருமாறு : குறையுறுதல் என்பது இடந்தலைப்பட்ட தலைமகன் தழையுங்கண்ணியும் கொண்டு தோழி பின்னிலை முனியாது இரந்து நிற்றல். என்னை? (154) அந்தழை அல்குல் அணிநலம் புணரா வெந்துயர் பெருக வெளிப்பட இரந்தன்று - வெண்பாமாலை 11 : 9. என்றாராகலின். அதற்குச் செய்யுள் வருமாறு : (155) தேமென் கிளவிதன் பங்கத் திறையுறை தில்லையன்னீர் பூமென் றழையுமம் போதுகொள் ளீர்தமி யேன்புலம்ப வாமென் றருங்கொடும் பாடுகள் செய்துநுங் கண்மலராங் காமன் கணைகொண் டலை 1செய்ய வோமுற்றக் கற்றதுவே - திருக்கோவையார் 90. (156) மண்ணகங் காலால் அளந்தவன் மாறன் மலர்ப்பொழில்சூழ் கண்ணகன் காவிரி நாடனை யீரிக் கமழ்நறவத் தண்ணறும் போதுந் தழையுங்கொள் ளீரென்னிற் றண்டியெம்மேல் எண்ணுமைங் காம சரம்படும் பட்டால் எளிவரவே - பாண்டிக்கோவை 52. (157) நகுதா மரைமலர் சூழ்வாவி சூழ்வச்ர நாடர்தங்கள் வகுதா புரியன்ன வாணுத லீர்மற்ற வார்தழையு மிகுநாண் மலர்களுங் கொண்மின்கள் கொள்ளா விடின்மதுவந் தொகுகாம னைங்கணை யாலெம தாவி துவக்குண்ணுமே - பல்சந்தமாலை. (158) கண்ணி தகைசிறந் தனவே தண்ணென் பூந்தழை செவ்விய போலும் வாங்கிருங் கூந்தலும் அல்குலும் பொலிய 1வேந்தினிர் கொண்மின்யாம் விழைகுவம் பெரிதே - பொருளியல் 22. இதற்கிலக்கணம், (159) புணர்ந்த பின்றை யாங்கன மொழுகாது பணிந்த மொழியாற் றோழி தேஎத்து இரந்து குறையுறுதலும் கிழவோன் மேற்றே - இறையனார் அகப்பொருள் 5. என்னுஞ் சூத்திரத்துட் கண்டு கொள்க. (மதியுடம் படுத்தல் கிளவித் தொகை - 5) 30. நயந்து குறையுற் றவன்வாழ் பதிவினா யாணர்மிக்க கயந்தங்கு வேழம் வினாதல் இனமான் கலைவினாதல் 1முயன்ற பரும வழிவினா வாயின் மொழிக்கிரங்கல் வயந்தந்த வஞ்சு மதியுடம் பாடென வைத்தனரே. என்-னின், மதியுடம் படுத்தல் ஐவகைப்பட்ட கிளவியாம் என்பதறிவித்தலைக் கருதிற்று. என்னை? (1) பதிவினாதலும், (2) வேழம் வினாதலும், (3) கலை வினாதலும், (4) வழி வினாதலும், (5) வாய்மொழிக் கிரங்கலும் என. 1. அவற்றுள், பதிவினாதல் என்பது, இரந்து குறையுற்ற தலைமகன் தோழியுடைய கவர்த்து நின்ற அறிவை ஒருவழிப் படுப்பான் (யான் வேண்டும் வழி கூறீர் ஆயினும் நும்பதி கூறுதல் பழியன்று அது கூறுவீராமின் என்று) சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு. (160) தாரென்ன வோங்குஞ் சடைமுடி மேற்றனித் திங்கள்வைத்த காரென்ன வாருங் கறைமிடற் றம்பல வன்கயிலை யூரென்ன வென்னவும் வாய்திற வீரொழி வீர்பழியேற் பேரென்ன வோவுரை யீர்விரை யீர்ங்குழற் பேதையரே - திருக்கோவையார் 56. (161) அறையார் கழல்மன்ன ராற்றுக் குடியமர் சாய்ந்தழியக் கறையார் அயில்கொண்ட கோன்2கன்னிக் கார்ப்புனங் காக்கின்றவான் பிறையார் சிறுநுதற் பெண்ணா ரமுதன்ன பெய்வளையீர் மறையா துரைமின் எமக்குநும் பேரொடு வாழ்பதியே - பாண்டிக்கோவை 62. (162) அருவி யார்க்கும் பெருவரை நண்ணிக் கன்றுகால் யாத்த மன்றப் பலவின் வேர்க்கொண்டு 3தூங்குஞ் சிறுசுளைப் பெரும்பழங் குழவிச் சேதா மாந்தி யயலது வேய்பயில் இறும்பின் ஆமறல் பருகும் பெருங்கல் வேலிச் சிறுகுடி யாதெனச் சொல்லவுஞ் சொல்லீ ராயிற் கல்லெனக் கருவி மாமழை வீழ்ந்தென எழுந்த செங்கேழ் ஆடிய செழுங்குரற் சிறுதினைக் கொய்புனங் காவலு நுமதோ கோடேந் தல்குல் நீடோ ளீரே - நற்றிணை 213. (163) செய்யவாய் நுண்மருங்குற் சிற்றிடைப் பேரமைத்தோட் பையர வல்குற் பணைத்தேந்தும்-வெய்யமுலைக் காரே துவர்வாய்க் கருங்கூந்தற் காரிகையீர் ஊரேது சொல்லீர் உமக்கு - கிளவித் தெளிவு. 2. வேழம் வினாதல் என்பது தலைமகளுந் தோழியும் ஓரிடத்திருப்பச் சென்று தன்குறை யறிவிப்பான் சில வேழம் போந்தனவுளவோ என்று சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (164) இருங்களி யாயின் றியானிறு மாப்பவின் பம்பணிவோர் மருங்களி யாவன லாடவல் லோன்றில்லை யான்மலையீங் கொருங்களி யார்ப்ப வுமிழ்மும் மதத்திரு கோட்டொருநீள் கருங்களி யார்மத யானையுண் டோவரக் கண்டதுவே - திருக்கோவையார் 52. (165) வருமால் புயல்வண்கை மான்றோர் வரோதயன் மண்ணளந்த 1திருமால் வளவஞ்சி யன்னவஞ் சீறடிச் சேயிழையீர் கருமால் வரையன்ன தோற்றக் கருங்கைவெண் 2கோட்டுப்பைங்கட் பொருமால் களிறொன்று போந்ததுண் டோநும் புனத்தயலே - பாண்டிக்கோவை 64. (166) செம்முக மானதர் செங்குங்கு மப்புயர் சீர்திறந்த மைம்மலி வாசப் பொழில்வாய் மதியன்ன வாணுதலீர் மும்மத மாரி பொழியப் பொழிமுகில் போல்முழங்கிக் கைம்மலை தான்வரக் கண்டதுண் டோநும் கடிபுனத்தே - பல்சந்தமாலை. (167) சீத விரைக்கனகச் செந்தா மரைப்பொகுட்டு மாதனையீ ரம்போடு வந்ததோ-சோதிப் பொருதாரை வேற்கண்டன் பூபால தீபன் கருதாரி னிங்கோர் களிறு - கண்டனலங்காரம். 3. கலைவினாதல் என்பது தலைமகளுந் தோழியும் இருந்த இடத்துச் சென்று சிலமான் போந்தன உளவோ எனச் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (168) கருங்கண் ணனையறி யாமைநின் றோன்றில்லைக் கார்ப்பொழில்வாய் வருங்கண் ணனையவண் டாடும் வளரிள வல்லியன்னீர் 1பொருங்கண் ணினைய கணைபொரு புண்புண ரிப்புனத்தின் மருங்கண் ணனையதுண் டோவந்த தீங்கொரு வான்கலையே - திருக்கோவையார் 53. (169) சிலைமாண் படைமன்னர் செந்நிலத் தோடச் செருவிளைத்த கொலைமா ணயின்மன்னன் றென்புன னாடன்ன கோல்வளையீர் இலைமாண் பகழியி 2னேவுண்டு தன்னினத் துட்பிரிந்தோர் கலைமான் புகுந்ததுண் டோவுரை யீருங்கள் கார்ப்புனத்தே - பாண்டிக்கோவை 24. (170) 1அம்பு முகங் கிழித்த வெம்புண் வாய கலைமான் போந்தன உளவோநும் மடமா னோக்க மரீஇயின படர்ந்தே - பொருளியல் 24. (171) 2நறைபரந்த சாந்த மறவெறிந்த நாளால் உறையெதிர்ந்து வித்தியவூ ழேனற்-பிறையெதிர்ந்த தாமரை போன்முகத்துத் தாழ்குழலீர் காணிரோ வேமரை போந்தன வீண்டு -3திணைமாலை நூற். (172) தத்திச் சிலைத்தெழுந்து தார்குருதி மெய்சோர இத்திக்கில் இந்தப் புனத்திடையே-தித்தித்தேன் போந்தனைய சோர்குழலீர் யானெய்த போதொருமான் போந்ததே இவ்வழியே புக்கு - பழம்பாட்டு. 4. வழி வினாதல் என்பது நும் ஊர்க்கு வழி சொல்லுமின் எனச் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (173) சிலம்பணி கொண்டசெஞ் சீறடி பங்கன்றன் சீரடியார் குலம்பணி கொள்ள வெனைக்கொடுத் தோன்கொண்டு தானணியுங் கலம்பணி கொண்டிட மம்பலங் கொண்டவன் கார்க்கயிலைச் சிலம்பணி கொண்டநுஞ் சீறூர்க் குரைமின்கள் சென்னெறியே - திருக்கோவையார் 54. (174) வெல்லுந் திறநினைந் தேற்றார் விழிஞத்து விண்படரக் கொல்லின் 1மலிந்தசெவ் வேல்கொண்ட கோன்கொல்லிச் சாரலின்றேன் புல்லும் பொழிலிள2 வேங்கையின் கீழ்நின்ற பூங்கொடியீர் செல்லு நெறியறி யேனுரை யீர்நுஞ் சிறுகுடிக்கே - பாண்டிக்கோவை 69. (175) உரைமின் நீர்மன் னெமக்கே வரையிடை யரும்படர்க் கவலை நீந்திப் 3பெருந்துய ரருப்பம் பெயர்தரு நெறியே - பொருளியல் 25. 5. வாய்மொழிக்கு இரங்கல் என்பது இவ்வகை பலவும் வினாவவுரைபெறாது நின்ற தலைமகன் வருந்தல். அதற்குச் செய்யுள் வருமாறு : (176) இரத முடைய நடமாட் டுடையவ 4ரெம்முடையர் வரத முடைய வணிதில்லை யன்னவ ரிப்புனத்தார் விரத முடையர் விருந்தொடு பேச்சின்மை மீட்டதன்றேற் சரத முடையர் மணிவாய் திறக்கிற் சலக்கென்பவே - திருக்கோவையார் 57. (177) தன்னும் புரையு மழையுரு மேறுந்தன் றானை5முன்னாத் துன்னுங் கொடிமிசை யேந்திய கோன்கொல்லிச் சூழ்பொழில்வாய் மின்னுங் கதிரொளி வாண்முகத் தீரென் வினாவுரைத்தால் மன்னுஞ் சுடர்மணி 1போந்துகு மோநுங்கள் வாயத்தே - பாண்டிக்கோவை 57. (178) விந்தா சனிகொண்கன் வேந்தரி லாண்பிள்ளை வென்றிவெற்பிற் கொந்தார் தினைப்புனங் காவனிற் பீர்வழி கூறுமென்று வந்தார் சிலர்க்கு வழியறி வாரொரு வார்த்தைசொன்னாற் சிந்தாது காளூணும் பவழச்செவ் வாயிற் றிருமுத்தமே - வங்கர் கோவை. இவ்வகை பிறவும் வந்தன வெல்லாம், (179) இரந்து குறையுறாது கிழவியுந் தோழியும் ஒருங்குதலைப் பெய்த செவ்வி நோக்கிப் பதியும் பெயரும் பிறவும் வினா அய்ப் புதுவோன் போலப் பொருந்துவ கிளந்து மதியுடம் படுத்தற்கு முரிய வென்ப - இறையனார் அகப்பொருள் 6. என்னுஞ் சூத்திரத்துட் கண்டு கொள்க. மதியுடன் படுத்தல் முற்றும் தோழியாலாய கூட்டக் கிளவித் தொகை (82) 31. உடன்படு தோழி யயிர்த்தன் றுரைத்தல் சுனையாட்டுதல் அடர்ந்தெதிர் நன்சுனை யின்வியப் பம்புலி யவ்வணங்கு நடம்பயி லுஞ்சுனை தன்னை மிகுத்தல் நடுங்கநாட்டம் குடங்கையை வென்ற விழியாய் குறையை யுறவுணர்வே. 32. உறவாய் இருவ ரிடத்து முரவோன் வரவுணர்தல் திறமார் வகைமைக் கரவுநாட் டஞ்சேட் படுத்தலந்த விறலா ரவனை மறையே லெனக்கூ றெனவிடுத்தல் அறலார் குழலை அறியேன் எனல்குறி யாள்கூறலே. 33. 1* * *** *** **** 34. மறுத்தாள் குறிப்பறிந் தேற்றல் மடற்றிறங் கூறுதல்பின் வெறுப்பார் மடலை வெளிப்படுத் தல்லம் மடல்விலக்கல் செறுப்பா லெழுதரி தேயென் றலச்சேட் படைக்கழிதல் ஒறுத்தா ளருளின் றுடையளா னாளென் றுரைத்ததுவே. 35. 2* * * * * * * * * * * 36-42. 3* * * * * * * * * * * 31-42. இச் சூத்திரங்கள் என் - னின், (1) தோழி அயிர்த் துரைத்தலும், (2) சுனையாட்டுரைத்தலும், (3) சுனைவியந் துரைத்தலும், (4) பிறைதொழு கென்றலும், (5) தகையணங் குறுத்தலும், (6) நடுங்க நாட்டமும், (7) குறையுணர்வும், (8) இருவருமுள்வழி அவன்வர வுணர்த்தலும், (9) கரவு நாட்டமும், (10) சேட்படையும், (11) மறையேன் எனலும், (12) கூறென விடுத்தலும், (13) அறியேன் எனலும், (14) குறியாள் கூறலும், (15) அரியளாம் எனலும், (16) குலமுறை கிளத்தலும், (17) நகைத் துறையாடலும், (18) தழைமறுத்தலும், (19) குறிப்பறிந் தேற்றலும், (20) மடற்றிறங் கூறலும், (21) மடல்வெளிப் படுத்தலும், (22) மடல் விலக்கலும், (23) எழுதரிது என்றலும், (24) சேட் படைக்கு அழிதலும், (25) அருளுடையள் என்றலும், (26) தழைகோடலும், (27) குறிப்பறிவுறுத்தலும், (28) வலிதாகச் சொல்லிக் குறை நயப்பித்தலும், (29) மெலிதாகச் சொல்லிக் குறைநயப்பித்தலும், (30) நாணொடு கூறலும், (31) முகம் புகுதலும், (32) நயந்தமை கூறலும், (33) பகற்குறியிடங் காட்டலும், (34) இடத்துய்த்தலும், (35) இடத்துய்த்து அகறலும், (36) எதிர்ப்படலும், (37) கோலஞ் செய்து உரைத்தலும், (38) உண்மகிழ்ந்து உரைத்தலும், (39) கொண்டு நீங்கலும், (40) வாய்விடு கிளவியும், (41) பொழுதுகண் டிரங்கலும், (42) படருறு கிளவியும், (43) வருந்துதல் கிளத்தலும், (44) இன்றறிந்தே னென்றலும், (45) குடித்திறங் கூறலும், (46) இற்செறி வுரைத்தலும், (47) சிறைப்புறக் கிளவியும் (48) வெளிப்பட உரைத்தலும், (49) கணியென உரைத்தலும், (50) நனைகெடச் செய்தில மென்றலும், (51) ஏறு விடுத்தலும், (52) சூளென நினைத்தலும், (53) புனங்கண் டழிதலும், (54) இரவிடங் காட்டலும் (55) வரவுணர்ந் துரைத்தலும், (56) தாய்துயி லறிதலும், (57) இரவுக்குறியுய்த்தலும், (58) குறியுய்த் தகறலும், (59) குறியெதிர்ப் படலும், (60) திங்கட்கு உரைத்தலும், (61) அன்னத்தொலியுணர்தலும், (62) கடலொலி கூறலும், (63) இரவுக்குறி கழிதலும், (64) கழிபடர் கிளவியும், (65) கையறு கிளவியும், (66) அச்சக் கிளவியும், (67) பகல்வரல் என்றலும், (68) இரவு வரல் என்றலும், (69) இரவும் பகலும் குறிவாரால் என்றலும், (70) தன்னுட் கையாறெய்திடு கிளவியும், (71) கடலொடு கவலலும், (72) ஆற்றாமை கூறலும், (73) வரைவு கிளத்தலும் (74) குறிப்புரைத்தலும், (75) இல்ல துரைத்தலும், (76) அலரறிவித்தலும், (77) அயன்மணம் உரைத்தலும், (78) மணமுர சறைதலும் (79) பரிசங் கிளத்தலும், (80) உடன்போக் குரைத்த லும், (81) செலவுடன் படுத்தலும், (82) செலவழுங்குவித்தலும், எனப்படும் என்றவாறு. ஆ. பகற்குறி 1. அவற்றுள் அயிர்த்தல் என்பது இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகள் கண்சிவப்பு வேறுபாடு கண்ட தோழி அயிர்த்துரைத்தல். அதற்குச் செய்யுள் வருமாறு: (180) நிருத்தம் பயின்றவன் சிற்றம் பலத்துநெற் றித்தனிக்கண் ஒருத்தன் பயிலும் கயிலை மலையி னுயர்குடுமித் திருத்தம் பயிலும் சுனைகுடைந் தாடிச் சிலம்பெதிர்கூய் வருத்தம் பயின்றுகொல் லோவல்லி மெல்லியல் வாடியதே - திருக்கோவையார் 62. (181) கந்தா ரடுகளி யானைக் கழல்நெடு மாறன்கன்னிக் கொந்தா டிரும்பொழில் வாய்ப்பண்ணை யாயத்துக் கோலமென்பூம் பந்தா டலினடி நொந்துகொல் 1பைங்கழ லெம்மன்னமேல் வந்தா டலினடி நொந்துகொல் வாணுதல் வாடியதே - பாண்டிக்கோவை 79. (182) புனையிழை யாயமொடு பூம்பந் தெறியவும் நுனைமலர் ஞாழல் ஒள்வீ கொய்யவும் வருந்தினள் கொல்லோ மடந்தை 2பரந்தன்று மாதோ பண்புகெழு நிறனே - பொருளியல் 21. (183) கண்ணுஞ் செவ்வரி பரந்தன்று நுதலும் நுண்வியர்ப் பொறித்து வண்டார்க் கும்மே வாங்கமை மென்றோண் மடந்தை யாங்கா யினள்கொல் என்னுமென் நெஞ்சே - 3சிற்றெட்டகம். (184) குன்றின் சுனையிற் குளித்தோ குளிர்காவில் ஒன்ற மலர்கொய்ய வோடியோ-வன்றாயின் மற்றின்றா துண்டோ மலர்வல்லி வாடியதின் றெற்றினா லாமா றிது - கிளவித் தெளிவு. (185) கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட்பேதைக்குப் பெண்ணிறைந்த நீர்மை பெரிது. - திருக்குறள் 1272. 2. சுனையாட்டுரைத்தல் என்பது நெருநல் நின்னை நீங்கி மேதக்க தோர் சுனையாடினேற்கு ஆயிற்றாகாதே இவ்வேறு பாடு எனத் தலைமகள் தோழிக்குச் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு: (186) மதிமர பாந்திரு மாமர பிற்றிகழ் மாறனெங்கோ னதிசெய பாண்டிய னாமரி கேசரி யானைதங்கும் பொதியிலி னாங்குனை நீங்கிய போதொரு பூஞ்சுனைவாய் விதியது தான்கொடு போய்ப்புன லாட்டு விளைவித்ததே - பாண்டிக்கோவை 85. 3. சுனைவியந்துரைத்தல் என்பது சுனையாடினார்க்கு இந்நீர்மை பெறலாம் எனின் யானுங் குடைவேன் எனச் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு: (187) செந்நிற மேனிவெண் ணீறணி வோன்றில்லை யம்பலம்போல் அந்நிற மேனிநின் கொங்கையி லங்கழி குங்குமமு மைந்நிற வார்குழல் மாலையுந் தாதும் வளாய்மதஞ்சே ரிந்நிற மும்பெறின் யானுங் குடைவன் இருஞ்சுனையே - திருக்கோவையார் 69. (188) தேர்மன்னு வாட்படை செந்நிலத் தோடச் செருவிளைத்த போர்1மன்னு தென்னன் பொதியிற் புனமா மயில்புரையும் ஏர்மன்னு காரிகை எய்தலுண் டாமெனின் யானுநின்போல் நீர்மன்னு நீல நெடுஞ்சுனை யாடுவன் நேரிழையே - பாண்டிக்கோவை 84. (189) பையுண் மாலைப் பழுமரம் படரிய நொவ்வுப்பறை வாவல் நோன்சிறை யொக்கு மடிசெவிக் குழவி தழீஇப் பையாந் திடுகவின் மடப்பிடி யெவ்வங் கூர வெந்திற லாளி வெரீஇச் சந்தின் பொரியரை மிளிரக் குத்தி வான்கேழ் உருவ வெண்கோ டுயக்கொண்டு கழியுங் கடுங்கண் யானைக் காலில வொற்றலிற் கோவா வாரம் வீழ்ந்தெனக் குளிர்கொண்டு பேஎ நாறுந் தாழ்நீர்ப் பனிச்சுனைக் கோனே ரெல்வளை தெளிர்ப்ப நின்போல் யானு மாடிக் காண்மோ தோழி வரைவயிறு கிழித்த நிழல்திகழ் நெடுவேல் திகழ்பூண் முருகன் தீம்புனல் அலைவாய்க் கமழ்பூம் புறவிற் கார்பெற்றுக் கலித்த வொண்பொறி மஞ்ஞை போல்வதொர் கண்கவர் காரிகை பெறுதலுண் டெனினே - 1நெடுந்தொகை. (190) ஆடுஞ் சுனையாதான் ஆடினீர் ஆகாதே கோடையிலு மந்நீர் குளிர்ந்திருக்கும்-நீடுபுகழ்க் கொற்றத் திருவார் குலவேந்தன் தென்குடந்தை வெற்பிற் குளிர்சுனை நீர் - (?) (191) 2**** ***** - (?) (192) அடியுறு பைங்காந்தள் செங்காந்தள் அங்கைக் கொடியிடையே யாமுங் குடைதும்-படிமுனையிற் சேந்தவேற் கண்டன் சிலம்பிற் பனிச்சுனைநீர் ஈந்தவேற் கண்டன் எழில் - கண்டனலங்காரம். (193) 1* * ***** - (?) 4. 2பிறைதொழுக என்றல் என்பது பிறையைக் காட்டித் தான் தொழுது நின்று நீயும் இதனைத் தொழுவாயாக வெனத் தோழி தலை மகளது புணர்ச்சி நினைவறியா நிற்றல். அதற்குச் செய்யுள் வருமாறு: (194) மைவார் கருங்கண்ணி செங்கரங் கூப்பு மறந்துமற்றப் பொய்வா னவரிற் புகாதுதன் பொற்கழற் கேயடியேன் உய்வான் புகவொளிர் தில்லைநின் றோன்சடை மேலதொத்துச் செவ்வா னடைந்த பசுங்கதிர் வெள்ளைச் சிறுபிறைக்கே - திருக்கோவையார் 67. (195) திருமால் அகலஞ்செஞ் சாந்தணிந் தன்னசெவ் வானகட்டுக் கருமா மலர்க்கண்ணி கைதொழுத் தோன்றிற்றுக் காண்வந்தொன்னார் செருமால் அரசுகச் செந்நிலத் தட்டதென் தீந்தமிழ்நர் பெருமான் தனது குலமுதல் ஆய பிறைக்கொழுந்தே - பாண்டிக்கோவை 87. (196) முன்னுந் தொழத்தோன்றி முள்ளெயிற்றாய் அத்திசையே இன்னுந் தொழத்தோன்றிற் றீதேகாண்-மன்னும் பொருகளிமால் யானைப் புகழ்க்கிள்ளி பூண்போற் பெருகொளியான் மிக்க பிறை - 3 (?) 5. தகையணங்குறுத்தல் என்பது தலைவியை வரையணங் காகச் சொல்லுதல். அதற்குச் செய்யுள்: (197) மண்தான் நிறைந்த பெரும்புகழ் மாறன்மந் தாரமென்னும் தண்தா ரவன்கொல்லித் தாழ்சுனை யாடிய தானகன்றாள் ஒண்தா மரைபோல் முகத்தவள் நின்னோ டுருவமொக்கும் வண்டார் குழலவள் வந்தால் இயங்கு வரையணங்கே - பாண்டிக்கோவை 88. (198) அம்ம வாழி வெம்முலை யணங்கே நிலனோ விசும்போ நீரோ வரையோ அலமருந் தளிக்கோ லஞ்சிறைச் சேவல் உளிவாய்ப் புட்கொடி இனியன் தொண்டித் தண்கயத் தலர்ந்த செந்தா மரையோ யாவ தாகநின் னுறைபதி தானே மாயிருஞ் சிலம்பின் மடமகள் மாவின் தண்டளிர் புரையு மேனி வண்டுகொளச் சொரிமது விழிந்த பின்னருங் கூழை நின்னே போலும் இன்னிசைத் தேமொழி யென்னிணைக் குறுமகட் பிரிந்தவென் இன்னல் நெஞ்சத் தொன்றுதெரி விலனே - 1(?) 6. நடுங்கநாட்டம் என்பது தலைவியை நடுங்கச் செய்து உண்மை அறிதல். அதற்கச் செய்யுள் வருமாறு : (199) ஆவா இருவர் அறியா அடிதில்லை அம்பலத்து மூவா யிரவர் வணங்கநின் றோனையுன் னாரின்முன்னித் தீவா யுழுவை கிழித்ததந் தோசிறி தேபிழைப்பித் தாவா மணிவேல் பணிகொண்ட வாறின்றொ ராண்டகையே - திருக்கோவையார் 72. (200) கலவா வயவர் களத்தூர் அவியக் 1கணையுதைத்த கொலையார் சிலைமன்னன் கோன்நெடு மாறன்தென் கூடலன்ன இலவார் துவர்வாய் மடந்தைநம் ஈர்ம்புனத் தின்றுகண்டேன் புலமார் குருதி அளைந்தவெண் கோட்டோர் பொருகளிறே - பாண்டிக்கோவை 90. (201) பண்டிப் புனத்துப் பகலிடத் தேனலுட் கண்டிக் களிற்றை அறிவன்மற்-றிண்டிக் கதிரன் பழையனூர்க் கார்நீலக் கண்ணாய் உதிர முடைத்திதன் கோடு - 2(?) 7. குறையுணர்வு என்பது தலைவன் இரந்து பின்னிற்றல் எற்றிற்கு என்று தோழி உணர்தல். அதற்குச் செய்யுள் வருமாறு. (202) மெய்யே இவற்கில்லை வேட்டையின் மேன்மன மீட்டிவளும் பொய்யே புனத்தினைக் காப்ப திறைபுலி யூரனையாள் மையேர் குவளைக்கண் வண்டினம் வாழுஞ்செந் தாமரைவாய் எய்யே மெனினும் குடைந்தின்பத் தேனுண் டெழில்தருமே - திருக்கோவையார் 66.) (203) விரையா டியகண்ணி வேந்தன் விசாரிதன் கொல்லிவிண்டோய் வரையா டியபுனங் காவலு மானின் வழிவரவும் நிரையா டியகுழ லாட்கு மிவற்கு நினைப்பினில்லை யுரையா டுபகண்ணி னாலுள்ளத் துள்ளது மொன்றுளதே - பாண்டிக்கோவை 81. (204) ஏனல் காவல் இவளும் அல்லள் மான்வழி 1வரு(வோ) னிவனு மல்லன் நரந்தங் கண்ணி யிவனோ டிவளிடைக் கரந்த வுள்ளமொடு கருதியது பிறிதே நம்முள் நாணினர் போலத் தம்முள் மதுமறைந் துண்டோர் மகிழ்ச்சி போல யுள்ளத் துள்ளே மகிழ்ப சொல்லு மாடுப கண்ணி னானே - 2நற்றிணை (?) (205) பூத்த வேங்கை வியன்சினை ஏறி மயிலின மகவு நாடன் நன்னுதற் கொடிச்சி மனத்தகத் தோனே - பொருளியல் 27. (206) பூண்ட குழையும் புனங்காக்கும் போல(ளவ்) வாண்டகையும் மான்றேடு வானல்லன்-பாண்டொடுத்த புள்ளோட்டுந் தார்க்கண்டன் பூம்புகார் அன்னார்க்கிங் குள்ளோட்டம் கண்களிலே யுண்டு - கண்டனலங்காரம். 8. இருவரும் உள்வழி அவன்வர வுணர்தல் என்பது தலைமகன் சொல்வேறுபாடு கண்ட தோழி துணிந்துணர்தல். அதற்குச் செய்யுள் வருமாறு: (207) பல்லில னாகப் பகலைவென் றோன்றில்லை பாடலர்போ 1லெல்லிய னாகத் தொடேனம் வினாவிவன் யாவன்கொலாம் வில்லில னாகத் தழைகையில் 2வேட்டங்கொண் டாட்டமெய்யோர் சொல்லில3 னாகத்த வாகட வானிச் சுனைப்புனமே - திருக்கோவையார் 60. (208) மழையும் புரைவண்கை வானவன் மாறன்மை தோய்பொதியில் வழையுங் கமழு மணிநெடுங் கோட்டுவண் சந்தனத்தின் தழையும் விழைதரு கண்ணியு மேந்தித்தண் பூம்புனத்தி னுழையும் 4பிரிய லுறானறி யேனிவ னுள்ளியதே - பாண்டிகோவை 82. (209) 5கையது செயலையந் தழையே வினாய தெய்புண் வாய மாவே கைவிட் டகலா னம்மவிவ் வகன்புனந் தகையோ னுள்ளிய தறியலம் பெரிதே - பொருளியல் 26. (210) வில்வேறு பட்ட படியே வினைவேறு சொல்வேறு பட்டபடி தோற்றுவிக்க-மல்வேறு போகாத தோளும் பொலிவழிய நம்புனம்விட் டேகாத தென்கொ லிவர் - கிளவித்தெளிவு 9. கரவுநாட்டம் என்பது தோழி தலைமகளையும் தலைமகனையும் நோக்கித் தன் மதியுடம் படுத்தல். அதற்குச் செய்யுள் வருமாறு: (211) காகத் திருகண்ணிற் கொன்றே மணிகலந் தாங்கிருவ ராகத்து ளோருயிர் கண்டனம் யாமின்றி யாவையுமா மேகத் தொருவன் இரும்பொழி லம்பல வன்மலையிற் றோகைக்குந் தோன்றற்கு 1மொன்றா யினவின்பத் துன்பங்களே - திருக்கோவையார் 71. (212) செறிந்தார் கருங்கழற் றென்னவன் செந்நிலத் துச்செருவில் மறிந்தார் புறங்கண்டு நாணிய கோன்கொல்லிச் சாரல்வந்த நெறிந்தார் கமழ்குஞ்சி யானோ டிவளிடை நின்றதெல்லா மறிந்தேன் பலநினைந் தென்னையொன் றேயிவ ராருயிரே - பாண்டிக்கோவை 70 (213) சீத மணமும் நறுமலரும் சேர்ந்ததுபோல் காதன் மிகவும் கலந்தனர்கள்-ஆதலினால் திண்டிறற்கை வில்லிக்குஞ் செந்தா மரைமுகத்திவ் வொண்டொடிக்கு மொன்றே யுயிர் - பழம்பாட்டு. இவையெல்லாம் முன்னுற வுணர்தல் (இறையனார் அகப்பொருள் 7) என்னு மிலக்கணத்துட் கண்டு கொள்க. 10. சேட்படுத்தல் என்பது இப்புனம் மிகவும் காவ லுடைத்து ; நீர் இயங்கன்மின் எனச் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (214) முனிதரு மன்னையு மென்னையர் சாலவு மூர்க்கரின்னே தனிவரு மிந்நிலத் தன்றைய குன்றமுந் தாழ்சடைமேற் பனிதரு திங்கள் அணியம் பலவர் பகைசெகுக்குங் குனிதரு திண்சிலைக் கோடுசென் றான்சுடர்க் கொற்றவனே - திருக்கோவையார் 98. (215) புல்லா வயலர் நறையாற் றழியப் பொருதழித்த வில்லான் விளங்குமுத் தக்குடை வேந்தன் வியனிலத்தோ ரெல்லாம் இறைஞ்சநின் றோன்கொல்லி மல்லஞ் சாரலிங்கு நில்லா தியங்குமின் காப்புடைத் தையவிந் நீள்புனமே - பாண்டிக்கோவை 117. (216) தண்ணுத லரிதே தண்ணென் 1சாரல் எண்ணிய குறையொன் றுளதெனின் நண்ணாது முடித்தி அண்ணல் நீயே - பொருளியல் 28. 11. மறையேன் என்பது தோழி தலைமகனை நின்குறை யென்னை மறையா தொழிதி எனச் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு. (217) பண்டா லியலு மிலைவளர் பாலகன் பார்கிழித்துத் தொண்டா லியலுஞ் சுடர்க்கழ லோன்றொல்லைத் தில்லையின்வாய் வண்டா லியலும் வளர்பூந் துறைவ மறைக்கினென்னைக் கண்டா லியலுங் கடனில்லை கொல்லோ கருதியதே - திருக்கோவையார் 105. (218) மின்னை மறைத்தசெவ் வேல்வலத் தால்விழி ஞத்துளொன்னார் மன்னை மறைத்தவெங் கோன்வையஞ் சூழ்பௌவ நீர்ப்புலவந் தன்னை மறைத்திள ஞாழல் கமழுந்தண் பூந்துறைவா வென்னை மறைத்த விடத்திய லாதுகொ லெண்ணியதே - பாண்டிக்கோவை 119. (219) கடிகமழ் கண்ணி நெடுவரை யாயத்து 1வடிவே லண்ணல்நீ மறைப்பின் முடியா தாகு முன்னிய வினையே - பொருளியல் 31. 12. கூறென விடுத்தல் என்பது தோழி தலைமகனை நின் குறை நீயே சென்றுரை எனச் சொல்லியது. அதற்குச் செய்யுள் : (220) அந்தியின் வாயெழி லம்பலத் தெம்பர னம்பொன்வெற்பிற் பந்தியின் வாய்ப்பல வின்சுளை பைந்தே னொடுங்கடுவன் மந்தியின் வாய்க்கொடுத் தோம்புஞ் சிலம்ப மனங்கனிய முந்தியின் வாய்மொழி நீயே 2மொழிசென்றெம் மொய்குழற்கே - திருக்கோவையார் 99. (221) சேயே எனநின்ற தென்னவன் செந்நிலத் தேற்றதெவ்வர் போயே விசும்பு புகச்செற்ற கோனந்தண் பூம்பொதியில் வேயே யனையமென் றோளிக்கு நின்கண் மெலிவுறுநோய் நீயே யுரையாய் விரையா ரலங்கல் நெடுந்தகையே - பாண்டிக்கோவை 121. (222) பொன்னியல் சுணங்கின் மென்முலை அரிவைக்கு மின்னிவ ரொளிவே லண்ணல் நின்னுறு விழுமங் கூறுமதி நீயே - பொருளியல் 36. 13. அறியேன் என்றல் என்பது தோழி தலைமகனை நீ சொல்லுகின்றவளை நானறியேனெனச் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு: (223) விண்ணிறந் தார்நிலம் விண்டவ ரென்றுமிக் காரிருவர் கண்ணிறந் தார்தில்லை யம்பலத் தார்கழுக் குன்றினின்று தண்ணறுந் தாதிவர் சந்தனச் சோலைப்பந் தாடுகின்றார் எண்ணிறந் 1தார்பலர் யார்கண்ண தோமன்ன நின்னருளே - திருக்கோவையார் 107. (224) பொறிகெழு கெண்டைபொன் மால்வரை மேல்வைத்திப் பூமியெல்லா நெறிகெழு செங்கோ னடாநெடு மாறனெல் வேலிவென்றான் வெறிகமழ் பூங்கன்னிக் கானல் விளையாட் டயரநின்ற செறிகுழ லார்பலர் யார்கண்ண தோவண்ணல் சிந்தனையே - பாண்டிக்கோவை 123. (225) 1(வாங்கிருஞ் சிலம்பில் வண்டல் அயரும் தேங்கமழ் கூந்தல் மகளிருள் யாங்கா கியதோ வேந்தநின் னருளே - பொருளியல் 29. 14. குறியாள் கூறல் என்பது தலைவன் கையுறை பாராட்டி நின்ற நிலைமைக்கண் அவற்றை ஏற்றுக் கொள்ளாது மற் றொன்று சொல்லி நீங்குவது. அதற்குச் செய்யுள் : (226) மன்னன் வரோதயன் வல்லத்தொன் னார்கட்கு வான்கொடுத்த தென்னன் திருமால் குமரியங் கானல் திரைதொகுத்த மின்னுஞ் சுடர்ப்பவ ளத்தரு கேவிரை நாறுபுன்னைப் பொன்னந் துகள்சிந்தி வானவிற் போன்றதிப் பூந்துறையே - பாண்டிக்கோவை 125. (227) தூய்மை சான்ற தொல்குடித் தோன்றிய வாய்மை நாவின் மதிதரன் போல உயர்தவ முனிவர் சாரப் பெயரா நிலையதிப் பிறங்குபெரு மலையே - பொருளியல் 31.) (228) நெறிநீ ரிருங்கழி நீலமுஞ் சூடாள் பொறிமாண் வரியலவன் ஆட்டலு மாட்டாள் சிறுநுதல் வேரரும்பச் சிந்தியா நின்றாட் கெறிநீர்த்தண் சேர்ப்பயான் என்சொல்லிச் செல்கோ - பழம்பாட்டு. (229) 1அலவ னாட்டலு மாட்டா ளாயமொடு மலர்பூங் கானல் வண்டலு மயராள் ஓவியப் பாவை ஒத்தனள் யாதுகொல் அண்ணல்யான் சொல்லு மாறே - பொருளியல் 34. 15. அரியளாம் எனல் (என்பது) தலைமகள் எமக்குப் பெரியள்; யாம் குற்றேவல் மகளிர்; ஆதலால், அவள் நமக்கு அரியள் எனச் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (230) 1புட்புலம் பும்புனற் பூலந்தைப் போரிடைப் பூழியர்கோன் உட்புலம் போடுசெல் லச்செற்ற வேந்தன் உறந்தையன்னாள் கட்புல 1மாச்செலுந் தெய்வங்கண் டாய்கமழ் பூஞ்சிலம்பா வட்கில னாகியெவ் வாறு மொழிவனிம் மாற்றங்களே - பாண்டிக்கோவை 130. (231) நெருநலு முன்னாள் எல்லையு மொருசிறைப் புதுமை யாதலிற் கிளத்தல் நாணி நேரிறை வளைத்தோளுன் தோழி செய்த ஆருயிர் வருத்தம் களையா யோவென எற்குறை யுறுதி ராயிற் சொற்குறை யெம்பதத் தெளியளோ மடந்தை யின்ப வாழ்க்கையள் இவள்மன் எமக்கே - பொருளியல். (?) 16. குலமுறை கிளத்தல் என்பது தலைமகனை நீர் உயர்ந்த குலத்துள்ளீர்; நும் குலத்துக்கு ஆகோம் எனத் தோழி சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (232) தெங்கம் பழங்கமு கின்குலை சாடிக் கதலிசெற்றுக் கொங்கம் பழனத் தொளிர்குளிர் நாட்டினை நீயுமைகூர் பங்கம் பலவன் பரங்குன்றிற் குன்றன்ன மாபதைப்பச் சிங்கந் திரிதரு சீறூர்ச் சிறுமி3யென் றேமொழியே - திருக்கோவையார் 100. (233) நடைமன்னு மென்றெமை நீர்வந்து 3நண்ணல்நன் னீர்வளநாட் டிடைமன்னு செல்வர் நுமரெமர் பாழி 4யிகல்விளைத்த படைமன்னன் தொல்குலமாமதி போற்பனி முத்திலங்கி குடைமன்னன் கோடுயர் கொல்லியஞ் சாரற் குறவர்களே. - பாண்டிக்கோவை 132. (234) இவளே, 1கானல் நண்ணிய காமர் சிறுகுடி நீர்நிறப் பெருங்கடல் கலங்க வுள்புக்கு மீனெறி பரதவர் மகளே; நீயே, நெடுங்கொடி நுடங்கு நியம மூதூர்க் கடுந்தேர்ச் செல்வர் காதன் மகனே; நிணச்சுறா வறுத்த வுணங்கல் வேண்டி யினப்புள் ளோப்பு மெமக்குநல னெவனோ புலவு நாறுதுஞ் செலநின் றீமோ பெருநீர் விளையுளெஞ் சிறுநல் வாழ்க்கை நும்மொடு புரைவதோ வன்றே யெம்ம னோரிற் செம்மலு முடைத்தே - நற்றிணை 45. (235) நிலையிருங் குட்டத்தின் நெடுந்திமில் இயக்கி வலையில் தந்த வாடுமீன் உணங்கல் விலையோ விலையென வேட்பக் கூறி நெல்லொடு பெயரும் நிரம்பா வாழ்க்கை வேட்டக் கிளையொடு வினவுதிர் எனினே பூட்டுவிற் புரையும் புருவவாண் முகத்துப் பிறைகிடந் தன்ன நுதலிவள் இறைவளைப் பணைத்தோள் எய்தலோ அரிதே - சிற்றெட்டகம். (236) திருந்தா வாழ்க்கைச் சிறுகுடி எமக்குப் பெருந்தகை அண்ண னின்னிடைப் பொருந்திய கேண்மையும் புரைவதோ வன்றே - பொருளியல் 39. (237) சேரி வலைஞர் திறைகொணர்ந்த மீனுணங்கல் மூரி வலையுணங்கு முன்றில்வாய்-நீரெங்கள் தேங்கோதை தோள்சேரச் சேருமோ சேர்ப்பரே பூங்கோதை யோடும் புலால் - (?) (238) புதிய நறுங்குவளைப் பூமுடிப்பார் கானல் முதியனவு முண்டகப்பூ மேவார்-அதிகன் தலைக்குலத்தீர் நீர்நாங்கள் தாழ்குலத் தோமுந் நிலைக்குலத்திற் கொவ்வமோ நேர் - (?) 17. நகைத்துரையாடல் என்பது 1குலமுறை கிளத்திய தலைமகனைத் தோழி நகையாடி மறுத்துரைத்தல். அதற்குச் செய்யுள் வருமாறு : (239) சிலையொன்று வாணுதல் பங்கன்சிற் றம்பல வன்கயிலை மலையொன்று மாமுகத் தெம்மையர் எய்கணை மண்குளிக்குங் கலையொன்று வெங்கணை யோடு கடுகிட்ட தென்னிற்கெட்டேன் கொலையொன்று திண்ணிய வாறையர் கையிற் கொடுஞ்சிலையே - திருக்கோவையார் 101.) (240) * * * * 2(வேழம் வினவி வெருவர லொன்றின்றி வீழும் ஒ(ருகணையா(ல்) வீடுவிப்பர்-கேழல் தசையுடைத்த அம்பினொடும் போந்ததே சால விசையுடைத்து நீர்பிடித்த வில் - பழம்பாட்டு. 18. தழைமறுத் துரைத்தல் என்பது தலைமகன் கையுறை கொணர்ந்த தழையை இவ்விடத் துள்ளதன் றெனச் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (241) எழில்வாய் இளவஞ்சி யும்விரும் பும்மற் றிறைகுறையுண் டழல்வாய் அவிரொளி அம்பலத் தாடு1மெஞ் சோதியந்தீங் குழல்வாய் மொழிமங்கை பங்கன்குற் றாலத்துக் கோலப்பிண்டிப் பொழில்வாய் தடவரை வாயல்ல தில்லையிப் பூந்தழையே - திருக்கோவையார் 94. (242) வேனக நீண்டகண் ணாளும் விரும்புஞ் சுரும்பரற்றுந் தேனக 2நீண்டவண் டார்கண்ணி யாய்சிறி துண்டுதெவ்வர் வானக மேறவல் லத்துவென் றான்கொல்லி மால்வரைவாய்க் கானக வாணருங் கண்டறி யாரிக் கமழ்தழையே - பாண்டிக்கோவை 137. (243) மாணெழி லண்ணல் 3வாங்குதும் யாமே சேணுயர் சிலம்பின் யாங்கணும் காணல மன்னோவிக் கமழ்பூந் தழையே - பொருளியல் 41. 19. குறிப்பறிந் தேற்றல் என்பது எம்பெருமாட்டி குறிப் பறிந்தல்லது இத்தழை கொள்ளேம் எனச் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (244) யாழார் மொழிமங்கை பங்கத் திறைவன் எறிதிரைநீர் ஏழாய் எழுபொழி லாயிருந் தோனின்ற தில்லையன்ன சூழார் 4குழலெழத் தொண்டைச்செவ் வாய்நவ்வி சொல்லறிந்தாற் றாழா தெதிர்வந்து கோடுஞ் சிலம்ப தருந்தழையே - திருக்கோவையார் 92. (245) துடியார் இடைவடி வேற்கண் மடைந்தைதன் சொல்லறிந்தாற் கடியார் கமழ்கண்ணி யாய்கொள்வல் யான்களத் தூரில்வென்ற 1வடியார் இலங்கிலை வேன்மன்னன் வானே றணிந்தவென்றிக் கொடியான் மழைவளர் கொல்லியஞ் 2சாரலிக் கொய்தழையே - பாண்டிக்கோவை 138. (246) மாமலைச் சிலம்ப மயிலேர் சாயல் தேமொழி நிலைமை தெரிந்தபின் பூமென் தண்டழை 3கொள்ளுவன் புரிந்தே - பொருளியல் 42. (இவையெல்லாம்), (247) குறையுறுங் கிழவனை யுணர்ந்த தோழி சிறையுறக் கிளந்து சேட்பட நிறுத்தலும் என்னை மறைத்தல் எவனா கியரென முன்னுறு புணர்ச்சி முறை முறை செப்பலும் மாயப்புணர்ச்சி அவனொடு நகாஅ நீயே சென்று கூறென விடுத்தலும் அறியாள் போறலும் குறியாள் கூறலும் படைத்துமொழி கிளவியும் குறிப்புவேறு கொளலும் அன்ன பிறவும் தலைப்பெயல் வேட்கை முன்னுறு புணர்ச்சிக் குரிய வென்ப - இறையனார் அகப்பொருள் 12. என்னுஞ் சூத்திரத்துள்ளும், (248) முன்னுற வுணரினும் அவன்குறை யுற்ற பின்ன ரல்லது கிளவி தோன்றாது - இறையனார் அகப்பொருள் 9. என்னுஞ் சூத்திரத்துள்ளும் கண்டுகொள்க. 20. மடற்றிறங் கூறல் என்பது தோழி தழை மறுப்பதற்கு ஆற்றானாகிய தலைமகன் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (249) காய்சின வேலன்ன மின்னியல் கண்ணின் வலைகலந்து வீசின போதுள்ள மீனிழந் தார்வியன் றென்புலியூ ரீசன சாந்து மெருக்கு மணிந்தோர் கிழிபிடித்துப் பாய்சின மாவென வேறுவர் சீறூர்ப் பனைமடலே - திருக்கோவையார் 74 (250) படலே றியமதில் மூன்றுடைப் பஞ்சவன் பாழிவென்ற அடலே றயில்மன்னன் தெம்முனை போல்மெலிந் தாடவர்கள் கடலே றியகழி காமம் பெருகிக் கரும்பனையின் மடலே றுவர்மற்றுஞ் செய்யா தனவில்லை மாநிலத்தே - பாண்டிக்கோவை 92. (251) மாவென மடலும் 1ஊர்ப் பூவெனக் குவிமுகிழ் எருக்கங் கண்ணியுஞ் சூடுப மறுகின் ஆர்க்கவும் படுப பிறிது மாகுப காமங்2காழ்க் கொளினே - குறுந்தொகை 17. (252) கொண்டதோர் காதற் குணமுடியாக் கொள்கைத்தேற் குண்டுநீர் வேலைக் குவலயத்தோர்-வண்டின் கணங்காட்டுங் கூந்தலாய் கையகத்துக் கொள்ளார் மணங்காட்டுங் காந்தள் மலர் - அகத்திணை. (253) மங்கையர்தங் கண்ணால் மயங்கினார் வெள்ளெலும்புந் துங்க வெருக்குந் தொடுத்தணிந்-தங்கமெலாம் வெந்தேறு சாம்பல் மிகவணிந்து வீதிதொறும் வந்தேறி யூர்வர் மடல் - கிளவித் தெளிவு. 21. மடல் வெளிப்படுத்தல் என்பது இவ்வகை யுலகினி1 (யல் கூறி ஆற்றானாகிய தலைவன் தான் மடலேறப் போதலை வெளிப்படுத்தல். அதற்குச் செய்யுள் வருமாறு : (254) கழிகின்ற வென்னையும் நின்றநின் கார்மயில் தன்னையும்யான் கிழியொன்ற நாடி யெழுதிக்கைக் கொண்டேன் பிறவிகெட்டின் றழிகின்ற தாக்கிய தாளம் பலவன் கயிலையந்தேன் பொழிகின்ற சாரனுஞ் சீறூர்த் தெருவிடைப் போதுவனே - திருக்கோவையார் 76. (255) பொருநெடுந் தானைப்புல் லார்தம்மைப் பூலந்தைப் போர்தொலைத்த செருநெடுஞ் செஞ்சுடர் வேல்நெடு மாறன்தென் னாடனையாய் அருநெடுங் காமம் பெருகுவ தாய்விடின் ஆடவர்கள் கருநெடும் பெண்ணைச்செங் கேழ்மட லூரக் கருதுவரே - பாண்டிக்கோவை 93. 22. மடல் விலக்கல் என்பது மடலேறல் வெளிப்படுத்த தலைவனைத் தோழி நும் அருளால் அது கூடாதென மறுத் துரைத்து விலக்குதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (256) நடனாம் வணங்குந்தொல் லோனெல்லை நான்முகன் மாலறியாக் கடனாம் உருவத் தரன்தில்லை மல்லற்கண் ணார்ந்தபெண்ணை உடனாம் பெடையொடொண் சேவலும் முட்டையுங் கட்டழித்து மடனாம் புனைதரின் யார்கண்ண தோமன்ன இன்னருளே - திருக்கோவையார் 77. (257) பலமன்னு 1புள்ளினம் பார்ப்புஞ் சினையும் அவையழிய உலமன்னு தோளண்ணல் ஊரக் கொளாய்கொல் ஒலிதிரைசூழ் நிலமன்னன் நேரியன் மாறன் நெடுங்களத் தட்டதிங்கட் குலமன்னன் கன்னிக் குலைவளர் பெண்ணைக் கொழுமடவே - பாண்டிக்கோவை 96. (258) வெள்ளாங் குருகின் பிள்ளையும் பலவே அவையினும் பலவே சிறுகருங் காக்கை அவையினும் அவையினும் பலவே குவிமடல் ஓங்கிரும் பெண்ணை மீமிசைத் தொடுத்த தூங்கணங் குரீஇக் கூட்டுள சினையே -1(?) (259) கொள்ளலி ரம்ம வருளினி ராதலிற் புள்ளின் பெருங்கிளை யலற வள்ளிதின் விரிந்த மாப்பனை மடலே - பொருளியல் 43. 23. எழுதரிது என்றல் என்பது தலைவியின் உருவத்தைக் கிழியில் எழுதுதல் அரிது எனத் தோழி தலைவனிடம் கூறுதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (260) யாழும் எழுதி எழின்முத் தெழுதி இருளின்மென்பூச் சூழும் எழுதியொர் தொண்டையுந் தீட்டியென் தொல்பிறவி ஏழும் எழுதா வகைசிதைத் தோன்புலி யூரிளமாம் போழும் எழுதிற்றொர் கொம்பருண் டேற்கொண்டு போதுகவே - திருக்கோவையார் 79. (261) விற்றான் எழுதிப் புருவக் கொடியென்றிர் தாமரையின் முற்றா முகைநீர் எழுதி முலையென்றிர் மொய்யமருட் செற்றார் படச்செந் நிலத்தைவென் றான்தென்னன் கூடலன்னாள் சொற்றான் எனக்கிள்ளை யோநீர் எழுதத் துணிகின்றதே - பாண்டிக்கோவை 99. (262) எளிதோ அம்ம ஒளியிழை மடந்தை கிளிபுரை கிளவியு நடையும் இளமென் சாயலும் எழுதுமா றுமக்கே - பொருளியல் 44. 24. சேட்படைக்கு அழிதல் என்பது தலைவன் கருதியதை மறுத்துத் தோழி அயலே விலக்குதற்கு வருந்துதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (263) குன்றக் குறவன் காதல் மடமகள் வண்டுபடு கூந்தல் தண்டழைக் கொடிச்சி வளையள் முளைவாள் எயிற்றள் இளையள் ஆயினும் ஆரணங் கினளே - ஐங்குறுநூறு 256. (264) நயனின் மையிற் பயனிது என்னாது பூம்பொறிப் பொலிந்த அழலுமிழ் அகன்பைப் பாம்புயிர் அணங்கி யாங்கும் ஈங்கிது தகாஅது வாழியோ குறுமகள் நகாஅது உரைமதி உடையுமென் உள்ளஞ் சாரல் கொடுவிற் கானவன் கோட்டுமா தொலைச்சிப் பச்சூன் பெய்த பகழி போலச் சேயரி பரந்த ஆயிழை மழைக்கண் உறாஅ நோக்க முற்றவென் பைதல் நெஞ்ச முய்யு மாறே - நற்றிணை 75. (265) தொடலைக் குறுமகள் தந்தாள் மடலொடு மாலை உழக்குந் துயர் - திருக்குறள் 1135. 25. அருளுடையாள் என்றல் என்பது நின்குறை முடித்துத் தருவேன் தலைவி அருளுடையாள் என்று தோழி கூறுதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (266) பைந்நா ணரவன் படுகடல் வாய்ப்படு நஞ்சமுதாம் மைந்நாண் மணிகண்டன் மன்னும் புலியூர் மணந்தபொன்னிம் மொய்ந்நாண் முதுதிரை வாயா னழுந்தினு மென்னின்முன்னும் இந்நா ளிதுமது வார்குழ லாட்கென்கண் இன்னருளே - திருக்கோவையார் 81. (267) ஓங்கும் பெரும்புகழ்ச் செங்கோல் உசிதன் உறுகலியை நீங்கும் படிவென்ற கோன்வையை வாய்நெடு நீரிடையான் தாங்கும் புணையொடு தாழுந்தண் பூம்புனல் வாயொழுகின் ஆங்கும் வருமன்ன தாலின்ன நாளவள் ஆரருளே - பாண்டிக்கோவை 100. (268) தலைப்புணைக் கொளினே தலைப்புணைக் கொள்ளும் கடைப்புணைக் கொளினே கடைப்புணைக் கொள்ளும் புணைகை விட்டுப் புனலோ டொழுகின் ஆண்டும் வருகுவள் போலும் மாண்ட மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகைச் செவ்வெரிந் உறழுங் கொழுங்கடை மழைக்கண் துளிதலைத் தலைஇய தளிரன் னோளே - குறுந்தொகை 222. 26. தழைகோடல் என்பது தலைவன் தந்த தழையைத் தோழி ஏற்றுக் கொள்ளுதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (269) தோலாக் கரிவென்ற தற்குந் துவள்விற்கு மில்லின் தொன்மைக் கேலாப் பரிசுள வேயன்றி யேலேம் இருஞ்சிலம்ப மாலார்க் கரிய மலர்க்கழ லம்பல வன்மலையிற் கோலாப் பிரசமன் னாட்கைய நீதந்த கொய்தழையே - திருக்கோவையார் 110. (270) 1கைந்நிலத் துச்சிலை யாற்கணை சிந்திக் கறுத்தெதிர்ந்தார் செந்நிலத் துப்படச் சீறிய கோன்செழுந் தண்பொதியில் இந்நிலத் திம்மலை மேலவொவ் வாவிருந் தண்சிலம்பா எந்நிலத் தெம்மலை மேலஇச் சந்தனத் தீர்ந்தழையே - பாண்டிக்கோவை 145. (271) அடுந்திறல் வேழம் அகற்றி யெம்வயிற் கடுந்துயர் ஒழித்தனை ஆதலின் மடந்தை கண்ணு மேனியும் புரையும் தண்ணறுங் குவளையொடு தழைதந் தீமே - பொருளியல் 46.) 27. குறிப்பறி வுறுத்தல் என்பது தானறிந்த படியைத் தலைமகட்குப் புலனாகாமை மறைத்துத் தலைமகளுழைச் சென்று சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (272) வரிசேர் தடங்கண்ணி மம்மர்கைம் மிக்கென்ன மாயங்கொலோ வெரிசேர் தளிரன்ன மேனிய னீர்ந்தழை யன்புலியூர்ப் புரிசேர் சடையோன் புதல்வன்கொல் பூங்கணை வேள்கொலென்னத் தெரியே முரையான் பிரியான் ஒருவனித் தேம்புனமே - திருக்கோவையார் 83. (273) கொடியார் நெடுமதிற் கோட்டாற் றரண்கொண்ட கோன்பொதியிற் கடியார் புனத்தயல் வைகலும் காண்பன் கருத்துரையான் அடியார் கழல னலங்கலங் கண்ணியன் மண்ணளந்த நெடியான் சிறுவன்கொ லோவறி யேனோர் நெடுந்தகையே - பாண்டிக்கோவை 103. (274) வண்டுளர் பூந்தார் வளங்கெழு செம்பூட்சேய் வடிவேபோலத் தண்டளிர்ப் பிண்டித் தழையேந்தி மாவினவித் தணந்தோன்யாரே தண்டளிர்ப் பிண்டித் தழையேந்தி வந்துநம் பண்டைப் பதிவினவிப் பாங்கு படமொழிந்து படர்ந்தோனன்றே - பழம்பாட்டு. (275) கைதை வேலிக் கழிவாய் வந்தெம் பொய்த லழித்துப் போனா ரொருவர் பொய்த லழித்துப் போனா ரவர்நம் மையல் மனம்விட்ட டகல்வா ரல்லர் (276) கானல் வேலிக் கழிவாய் வந்து நீநல் கென்றே நின்றா ரொருவர் நீநல் கென்றே நின்றா ரவர்நம் மானேர் நோக்கம் 1மறந்தார் அல்லர் (277) அன்னந் துணையோ டாடக் கண்டு 2நின்னேர் நோக்கி நின்றா ரொருவர் 3நின்றார் அவர்நம் நெடுங்கண் விட்டுப் 4பொன்னேர் சுணங்கிற் போவா ரல்லர் - சிலப்பதிகாரம், கானல்வரி 43, 44, 45. (278) செம்மல் ஒருவன் செறிபூந் தழையேந்தி மம்மர் பெருகி வனப்பழித்து - நம்முடைய நன்பூம் புனமகலான் நாமதற்குச் செய்வதுமற் றென்பூங் குழலாய் இயம்பு - கிளவித்தெளிவு. 28. வலிதாகச் சொல்லிக் குறை நயப்பித்தல் என்பது என்னையும் நோக்கி அலவனையும் நோக்கித் தம்முணர் வொழியப் போனார் ஒரு(வ)ரெனச் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு:- (279) நீகண் டனையெனின் வாழலை நேரிழை யம்பலத்தான் சேய்கண் டனையன்சென் றாங்கோ ரலவன்றன் சீர்ப்பெடையின் வாய்வண் டனையதொர் நாவற் கனிநனி நல்கக்கண்டு பேய்கண் டனையதொன் றாகிநின் றானப் பெருந்தகையே - திருக்கோவையார் 84. (280) பாடுஞ் சிறைவண் டறைபொழிற் பாழிப்பற் றாவரச ரோடுந் திறங்கண்ட கோன்1கொல்லிக் கான லுறுதுணையோ டாடு மலவற் புகழ்ந்தென்னை நோக்கி 2அறிவொழிய நீடு நினைந்துசென் றானென்ன லாங்கொர் நெடுந்தகையே - பாண்டிக்கோவை 110. (281) 3நெருந லிவ்வழிப் பெடைபுறந் தரூஉம் அலவன் றன்னையு மென்னையு நோக்கி நொந்தனன் பெயர்ந்த துறைவன் வந்திலன் மாதோ வருந்துமென் மனனே - பொருளியல் 49. 29. மெலிதாகச் சொல்லிக் குறைநயப்பித்தல் என்பது ஒரு பெரியோன் தன்குறை இன்னதென்று வெளிப்படச் சொல்லு வதுஞ் செய்கின்றிலன். இஃதென்ன மாயங்கொல்லோ; அறி கின்றிலேன் எனத் தோழி அதற்கு நொந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள் வருமாறு : (282) நண்ணிய போர்மன்னர் வான்புக நட்டாற் றமர்விளைத்த மண்ணிவர் செங்கோல் வரோதயன் வையைநன் னாடனையாய் கண்ணியன் தண்ணந் தழையன் கழலன் கடுஞ்சிலையன் எண்ணிய தியாதுகொல் லோவக லானிவ் விரும்புனமே - பாண்டிக்கோவை 104. (283) வளையணி முன்கை வாலெயிற் 2றமர்நகை யிளைய ராடுந் தளையவிழ் கானற் 3குறுந்துறை வினவி நின்ற 4நெடுந்தோ ளண்ணற் கண்டிகும் யாமே - ஐங்குறுநூறு 198. (284) பருவர னெஞ்சம் மேவல் தவிராது செருவேல் உதியன் சேண்விளங்கு முசிறிக் கருங்கழி காவியொடு கலாஅங் கருதிய பெருங்கண் மாயோளே நாங்கடி கொண்ட செந்தினை கவர்ந்த பைங்கண் வேழங் கருவரைப் பிரசங் கையின் வாங்கி ஈயினம் இரிய வீசி வயவுப் பிடியின் வாயுறக் கொடுத்த செவ்வி நோக்கி உருகு நெஞ்சமொடு நீடுநினைந் தருகுசென் ஞமலியும் என்னையு நோக்கிக் கழலொலி கரப்ப ஒதுங்கி நிழலென நிற்பன் ஒருநினை நினைந்தே - 1(?) (285) அன்னா யொருவரென் பொய்ம்மொழி நசைஇ இன்னு மிவ்வழி வருகுவர் என்னை யாமவர்க் கியம்புவ தினியே - இறையனார் அகப்பொருள் 10. இவையெல்லாம் (286) உள்ளத்துணர்ச்சி தெள்ளிதிற் கரந்து கிழவோள் தேஎத்துக் குறையுறூஉ முளவே குறிப்பறி வுறூஉங் காலை யான. - இறையனார் அகப்பொருள் 10. என்னுஞ் சூத்திரத்துட் கண்டு கொள்க. 30. நாணொடு 2கூறலென்பது (மெ)லிதாகச் சொல்லக் கேட்ட தலைமகள் தனதாற்றாமையிற் சொற்பிறவாது நிற்ப முன்னின்றாற்றாமை நீங்க நாணுவந்தடையத் தலைமகள் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (287) சங்கந் தருமுத்தி யாம்பெற வான்கழி தான்கெழுமிப் பொங்கும் புனற்கங்கை தாங்கிப் பொலிகலிப் பாறுலவு துங்க மலிதலை யேந்தலி னேந்திழை தொல்லைப்பன்மா வங்க மலிகலி நீர்தில்லை வானவ னேர்வருமே - திருக்கோவையார் 85. (288) கணிநிற வேங்கையுங் கொய்துங் கலாபம் பரப்பிநின்று மணிநிற மாமயி லாடலுங் 3கண்டும்வல் லத்துவென்ற துணிநிற வேல்மன்னன் தென்னர் பிரான்சுடர் தோய்பொதியில் அணிநிற மால்வரைத் தூநீர் அருவியும் ஆடுதுமே - பாண்டிக்கோவை 112. (289) காணாய் தோழிநம் மேனற் றண்புனம் 1பேணா மன்னர் பெயர்புறங் கொடுத்தென 2வல்வேற் றானை வவ்வலிற் செவ்வாய்ப் பாசினங் கவர்ந்துகொண் டனவே - பொருளியல் 48. (290) வெள்ளிய வள்ளத்து ளேந்தும் விரைச்சுண்ணத் துள்ளகத்தி னொண்பவளம் வைத்தாங்குத்-தெள்ளுநீர்க் கானலெல்லாம் பூக்குமே புன்னை களிவண்டு பானலெல்லாம் பாடுந் துறை - கிளவிமாலை. (291) வங்கமு மீனெறியு மாக்களு மீன்சுறவும் பொங்குந் திரையும் பொருகடலு-மிங்கிவை தேர்த்திரளுங் காலாளும் திண்களிறும் வெண்பரியும் போர்க்களமும் போலும் பொலிந்து - கிளவித்தெளிவு. இதனை அறியாள் போன்று குறியாள் கூறலென்று சொல்லுவாரு முளர். 31. முகம்புகு கிளவி என்பது தோழி தலைமகளது உடன் பாட்டாள் முகங்கண்டு உள்புக் குரைத்தல். அதற்குச் செய்யுள் வருமாறு : (292) தவளத்த நீறணி யுந்தடந் தோளண்ணல் தன்னொருபால் அவளத்த னாமக னாந்தில்லை யானன் றுரித்ததன்ன கவளத்த யானை கடிந்தார் கரத்தகண் ணார்தழையுந் துவளத் தகுவன வோசுரும் பார்குழற் றூமொழியே - திருக்கோவையார் 112. (293) பன்னிய தீந்தமிழ் வேந்தன் பராங்குசன் பாழிவென்ற மன்னிய சீர்மன்னன் கொல்லிநம் வார்புனம் கட்டழித்துத் தின்னிய வந்த களிறு கடிந்த சிலம்பன்றந்த பொன்னியல் 1பூண்மணங் கைவர வோமற்றிப் பூந்தழையே - பாண்டிக்கோவை 105. (294) சிலம்பில் மேய்ந்த சிறுகோட்டுச் சேதா வலங்குகுலைக் காந்தள் தீண்டித் தாதுகக் கன்றுதாய் மருளுங் குன்ற நாடன் உடுக்குந் தழைதந் தனனே 2யாமஃ துடுப்பின் யாயஞ் சுதுமே கொடுப்பிற் 3கேளுடைக் கேடஞ் சுதுமே யாயிடை 4வாடுப கொல்லோ தாமே யவன்மலைப் போருடை வருடையும் பாயாச் சூருடை அடுக்கத்த கொயற்கருந் தழையே. - நற்றிணை 359. (295) 5(தந்தோன்) மேனாள் வெந்திறற் களிற்றின் உறுதுய 6ரொழித்துய்த் தோனே நிறனழிந்து வாடுப கொல்லோ மடந்தை கோடுயர் அடுக்கத்த கொயற்கருந் தழையே - பொருளியல் 51. (296) வாடத் தகுமோ மதுவுண்டு வண்டினமும் ஆடற் சிறுசுரும்பு மல்லனவுங்-கூடப் பொருகின்ற வார்குழையாய் (பொற்புறக்) கட்டித் தருகின்றேன் பைம்பூந் தழை - கிளவித் தெளிவு. 32. நயந்தமை கூறல் என்பது தலைமகட்குத் தழைகொடுத்த தோழி பெயர்த்துத் தலைமகற்குச் சொல்லுதல் அதற்குச் செய்யுள் : (297) பாசத் தளையறுத் தாண்டுகொண் டோன்றில்லை யம்பலஞ்சூழ் தேசத் தனசெம்மல் நீதந் தனசென்றி யான்கொடுத்தேன் பேசிற் பெருகுஞ் சுருங்கு மருங்குல் பெயர்ந்தரைத்துப் பூசிற் றிலளன்றிச் செய்யா தனவில்லை பூந்தழையே - திருக்கோவையார் 115. (298) சிலைமிசை வைத்த புலியும் கயலுஞ்சென் றோங்குசெம்பொன் மலைமிசை வைத்த பெருமான் வரோதயன் வஞ்சியன்னாள் முலைமிசை வைத்துமென் றோண்மேட் கிடாயுமொய் பூங்குழல்சேர் தலைமிசை வைத்துக்கொண் டாளண்ணல் நீதந்த தண்டழையே - பாண்டிக்கோவை 114. (299) செங்கையில் வாங்கித் திருமுடி சேர்த்தி விழியிலொற்றிக் கொங்கையின் மேல்வைத்துக் கொண்டுநின் றாள்கும ரித்துறையுங் கங்கையு மாடுங் கடகளிற் றான்வங்கர் காவலவன் பொங்கெயில் சூழ்தடந் தைப்பொருப் பாதந்த பூந்தழையே - வங்கர்கோவை. (300) தந்துநீ யளித்த தண்டழை காண்டலும் வந்தன ளெதிர்ந்த மடந்தை நெஞ்சம் மண்மிசை விளங்கிய வழுத்தூர் மதிதரன் 1நுண்ணிய தமிழின் நுழைபொருள் துளித்த வாய்மொழி யமிழ்த மடுத்தவர் மனமென யானிலை பெற்றன் றியானறிந் திலனே - பொருளியல் 52. (301) சேர்க்கு முலைமேற் சிறியோர் பெரும்பொருள்போல் பார்க்கு மறைக்கும் பலகாலும் - கார்க்கொடையால் வன்கைக் கலிகடந்த வன்னாட னெய்தல்வாய் நின்கைத் தழைவாங்கி நின்று - கிளவி விளக்கம். (302) வட்ட முலையில் மலர்க்கண்ணில் வார்குழலில் பட்ட படியைப் பகர்வதோ-மட்டுவிரி கந்தநறுங் கூந்தற் கனங்குழைக்குக் காவலநீ தந்தநறுஞ் சாரற் றழை - கிளவித் தெளிவு இவையெல்லாம், (303) தன்னுட் குறிப்பினை யருகுந் தோழிக்கு முன்னுறு புணர்ச்சியின் அருகலு முண்டே - இறையனார் அகப்பொருள் 11. என்னுஞ் சூத்திரத்திற் கண்டு கொள்க. 33. இடங்காட்டல் என்பது நயந்தமை கூறிய தோழி தலைமகற்குக் குறிப்பினாற் பகற்குறி இடங்காட்டுதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (304) வானுழை வாளம் பலத்தரன் குன்றென்று வட்கிவெய்யோன் றானுழை யாவிரு ளாய்ப்புற நாப்பண்வண் டாரகைபோற் றேனுழை நாக மலர்ந்து திகழ்பளிங் கான்மதியோன் கானுழை வாழ்வுபெற் றாங்கெழில் காட்டுமொர் கார்பொழிலே - திருக்கோவையார் 116. (305) மருள்போற் சிறைவண்டு பாட நிலவன்ன வார்மணல்மேல் இருள்போற் கொழுநிழற் பாயறிந் தார்கட்கின் றீர்ந்தமிழின் பொருள்போல் இனிதாய்ப் புகழ்மன்னன் மாறன் 1பொதியிலர்கோ னருள்போற் 2குளிர்ந்தன்ன முந்துன்னு நீர்த்தெங்க ளாடிடமே - பாண்டிக்கோவை 162. (306) ஊர்க்கு மணித்தே பொய்கை பொய்கைக்குச் சேய்த்து மன்றே சிறுகான் யாறே இரைதேர் வெண்குரு கல்லதி யாவதுந் 1துன்னலோ வின்றே பொழிலே யாமெங் 2கூழைக் கெருமண் கொணர்கம் சேறும் ஆண்டும் வருகுவள் பெரும்பே தையே - குறுந்தொகை 113. (307) 3தழைகெழு சினைய பன்மரந் துவன்றிய மழைதவழ் பூம்பொழில் யாவரும் விழைதகைத் 4தம்ம வியன்புன மருங்கே - பொருளியல் 53. (308) தாது விரிபொழிலும் தண்டுறையும் புண்டரிகப் போது விரிகழுநீர்ப் பொய்கைகளு-மீது நெருக்குங் குருகினழு நெஞ்சுருக நம்மை யுருக்குந் தனியிடமொன் றுண்டு - கிளவித் தெளிவு. (309) குருகு பெடையென்று கோலப் பணிலத் தருகணையும் பூங்காவிற் றாகு-முருகவிழும் பூந்தண்டார்க் கண்டன் புனனாட் டுயர்செல்வ யாந்தண்டா வாழு மிடம் - கண்டனலங்காரம். 34. இடத்துய்த்தல் என்பது தலைமகற்குத் தோழி யிடங்காட்டி மீண்டுந் தோழி தலைமகளுழைச் சென்று அவளைத் தலைமகன் நின்றவிடத்துச் செலவிடுத்தல். அதற்குச் செய்யுள் வருமாறு : (310) புயல்வளர் ஊசன்முன் னாடிப்பொன் னேபின்னைப் போய்ப்பொலியும் அயல்வளர் குன்றினின் றேற்று மருவி திருவுருவிற் கயல்வளர் வாட்கண்ணி போதரு காதரந் தீர்த்தருளுந் 5தையல்வளர் மேனியன் அம்பலத் தான்மலைத் தண்புனத்தே - திருக்கோவையார் 117. (311) ஏனலுங் காத்துச் சிலம்பெதிர் கூவி யிளமரப்பூங் கானமுங் காணுதும் போதரு நீதண் கமழ்மதத்த கானகஞ் சேர்களி வேழப் படைகங்கை மங்கைவென்ற மீனவன் கோலப் பொழில்சூழ் பொதியிலெம் வெற் (பிடத்தே - பாண்டிக்கோவை 94. (312) வண்டறை பூங்கா மயிலாட லுஞ்சிறந்த வெண்டுவலை வாளருவி வீழ்தலுங்-கண்டருள மாந்தளிரின் சீர்மலைந்த வண்சீ றடிமடவாய் போந்தருள்க நம்பைம் புனத்து - பழம்பாட்டு. 35. இடத்துய்த் தகறல் என்பது தலைமகளைத் தோழி யிடத்துய்த்துத் தலைமகனை யெதிர்ப்படுவள் என்னும் இடத்துத் தான் நீங்குதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (313) நரல்வே யினநின தோட்குடைந் துக்கநன் முத்தஞ்சிந்திப் பரல்வே யறையுறைக் கும்பஞ் சடிப்பரன் றில்லையன்னாய் வரல்வேய் தருவனிங் கேநிலுங் கேசென்றுன் வார்குழற்கீர்ங் குரல்வேய் அளிமுரல் கொங்கார் தடமலர் கொண்டுவந்தே - திருக்கோவையார் 119. (314) அஞ்சிறை வண்டறை காந்தளம் போதுசென் றியான்தருவன் பஞ்சுறை சேரல்கு லாய்வரற் பாற்றன்று பாழியொன்னார் நெஞ்சுறை யாச்1செற்ற வேன்மன்னன் 2சாரல் நெடுவரைவாய் மஞ்சுறை சோலை வளாய்த்தெய்வ மேவு வரையகமே - பாண்டிக்கோவை 164. (315) முல்லை மலர்நின் முடிமலராக் கொண்டியான் ஒல்லை வருவன் ஒருபொருப்பன்-றில்லைநக ராரணங்கே யிங்கேநில் அங்கே வரின்மன்னுஞ் சூரணங்கே செய்யுந் தொடர்ந்து - கிளவித் தெளிவு. 36. எதிர்ப்படுதல் என்பது தலைமகளைப் பகற்குறியிடத்து நிறுத்தித் தோழி நீங்கத் தமியளாய் நின்ற தலைமகளைத் தலைமகன் எதிர்ப்படுதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (316) படமா சுணப்பள்ளி யிக்குவ 1டாக்கிய பங்கயக்கண் நெடுமா லெனவென்னை நீநினைந் தோநெஞ்சத் தாமரையே யிடமா யிருக்கலுற் றோதில்லை நின்றவ னீர்ங்கயிலை வடமார் முலைமட வாய்வந்து வைகிற்றிவ் வார்பொழிற்கே - திருக்கோவையார் 120. (317) பங்கய நாண்மலர் தான்வறி தாகப் படித்தலமே லிங்கிரு பாதங்க ணோவ நடந்துவந் திப்பொழில்வாய்த் தங்கிய காரண மென்னீ நினைந்து தடவரைவாய்ச் செங்கயல் தாம்வைத்த தென்னவ னாட்டன்ன சேயிழையே - பாண்டிக்கோவை 72. (318) நடந்த தெங்குநின் றெங்கின நடப்பது நம்மையோ கமலத்து மடந்தை யென்பது வந்தது வரவொரு வாசகந் தந்தாலோ கடந்த ருங்களிற் றண்ணல்சீ வலவன் களவழி நன்னாட்டில் தொடர்ந்து வண்டினம் பின்வர முன்வரும் துடியிடை மடவீரே - பழம்பாட்டு. 37. கோலஞ்செய்து உரைத்தல் என்பது எதிர்ப்பட்டுப் புணர்ந்த தலைமகன் தலைமகளைக் குழலுங் கோதையுந் திருத்த ஆற்றாளாகிய தலைமகட்குத் தலைவன் உரைத்தல். அதற்குச் செய்யுள் வருமாறு : (319) அளிநீ டளகத்தி னட்டிய தாது மணியணியு மொளிநீர் சுரிகுழற் சூழ்ந்தவொண் மாலையுந் தண்ணறவுண் களிநீ யெனச்செய் தவன்கடற் றில்லையன் னாய்கலங்கல் தெளிநீ யனையபொன் 1னேபன்னு கோலந் திருநுதலே - திருக்கோவையார் 122. (320) கொடியார் நுணுகிடை தான்புனை கோல மெனக்குலவும் படிநான் புனைந்தனன் பாவாய் வருந்தல் பறந்தலைவாய் வடிவா ரிலங்கையில் மன்னரை வென்ற வழுதிசெம்பொன் அடிநாண் மலரிணை சூடா மடந்தையர் போலயர்ந்தே - பாண்டிக்கோவை 73. (321) பேதுறல் வாழிநின் காதற் றோழி கைபுனை 2கோலமென மெய்பெற் றென்றே ஐயம் யாவதும் இன்றிப் பெய்பூங் கோதை பெருங்கவின் கொளவே - பொருளியல் 54. 38. உண்மகிழ்ந் துரைத்தல் என்பது இவ்வகை கோலஞ் செய்தற்கு ஆற்றளாகிய தலைமகளை ஆற்றுவித்துத் தலைவன் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (322) செழுநீர் மதிக்கண்ணிச் சிற்றம் பலவன் திருக்கழலே கெழுநீர் மையிற்சென்று கிண்கிணி வாய்க்கொள்ளும் கள்ளகத்த கழுநீர் மலரிவள் யானதன் கண்மரு விப்பிரியாக் கொழுநீர் நறப்பரு கும்பெரு நீர்மை யளிகுலமே - திருக்கோவையார் 123. (323) பூவார் கணியும் புரவியும் திங்களும் வெங்கடுவும் தேவா தியவிவை தம்முடன் சேரப் பிறந்தெழுந்த மூவா மருந்திவ ளாங்கது தன்னை முகந்துமுன்னா ளோவா தருந்து மவர்களே யானென்ன உன்னுவனே - பழம்பாட்டு. (324) மணிநீர்ப் பொய்கை யணிபெற நிவந்த தாமரை யனையளித் தூமலர்க் கண்ணி 1ஞாயிற் றனையன் யானே யாவதும் வெஞ்சொல் யான்வியந் துரைப்பவும் மெஞ்சாக் கவினிவ ணெய்த லானே - பொருளியல் 55. 39. கொண்டு நீங்கல் என்பது இவ்வகை யுணர்த்துந் தலைமகன் நீங்கின விடத்துத் தோழி தலைமகளைக் கொண்டு நீங்குதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (325) பொன்னனை யான்றில்லைப் பொங்கர வம்புன் சடைமிடைந்த மின்னனை யானருள் மேவலர் போன்மெல் விரல்வருந்த மென்னனை யாய்மறி யேபறி யேல்வெறி யார்மலர்கள் இன்னன யான்கொணர்ந் தேன்மணந் தாழ்குழற் கேய்வனவே - திருக்கோவையார் 125. (326) வில்வளர் தானை விறன்மிகும் வேணாட் டரசர்வெம்மைக் கல்வளர் கானம் புகச்செற்ற கைதவன் கார்ப்பொழில்வாய் மெல்விரல் நோவ மலர்பறி யாதொழி நீவிரைத்தேன் அல்வளர் கூந்தற்கி யான்கொணர்ந் தேன்மலர் ஆயிழையே - பாண்டிக்கோவை 75. (327) நறும்பூங் கண்ணியும் பெருந்தண் கோதையும் நகைவாய்ப் பிணையலும் முகைவாய்ச் சூட்டும் புனைந்தனை யருளல் வேண்டும் சினங்கெழு கானவன் செழுமட மகளே - பொருளியல் 56. 40. வாய்விடு கிளவி என்பது இவ்வகை செல்லாநின்ற காலத்துப் பகற்குறி வந்தொழுகா நின்ற தலைமகனைக் காணும் பொழுதிற் காணாப் பொழுது பெரிதாகலின் ஆற்றாளாகிய தலைமகள் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (328) ஏர்ப்பின்னை தோண்முன் மணந்தவ னேத்த வெழிறிகழுஞ் சீர்ப்பொன்னை வென்ற செறிகழ லோன்றில்லைச் சூழ்பொழில்வாய்க் கார்ப்புன்னை பொன்னவிழ் முத்த மணலிற் கலந்தகன்றார் தேர்ப்பின்னைச் சென்றவென் னெஞ்சென் கொலாமின்று செய்கின்றதே - திருக்கோவையார் 273. (329) பொருமா 1மணிமுடிப் பூலந்தை மன்னரைப் பூவழித்த குருமா மணிவண்ணன் கோநெடு மாறன் குமரி2முன்னீ ரருமா மணிதிகழ் கானலின் வாய்வந் தகன்றகொண்கன் றிருமா மணிநெடுந் தேரொடுஞ் சென்றதென் சிந்தனையே - பாண்டிக்கோவை 166. (330) 1வருவது கொல்லோ தானே வாரா தவணுறை யேவ லிசைவது கொல்லோ புனவர் கொல்லையிற் புகவரு மஞ்ஞை பொன்னிணர் வேங்கை மிசைவண் டாலக் கவைமிசை யிருந்து குருவி வருந்துறப் பந்தாடு மகளிரிற் றோன்றுங் குன்றுகெழு நாடனொடு சென்றவென் னெஞ்சே - ஐங்குறுநூறு 295. (331) குறுநிலைக் குரவின் 2சிறுசுனை நறுவீ வண்டுதரு நாற்றம் வளிகலந் தீயக் கண்களி பெறூஉம் கவின்பெறு காலை யெல்வளை நெகிழ்த்தோர்க் கல்ல 3லுறீஇச் 4சென்றவெ னெஞ்சஞ் செய்வினைக் 5கசாவாத வொருங்கு வர6னசைஇ வருந்துங் கொல்லோ அருளா ராகலின் அழிந்திவண் வந்து தொன்னல மிழந்தவென் பொன்னிறம் நோக்கி யேதி லாட்டி யிவளெனப் போயின்று கொல்லோ நோய்தலை மணந்தே - நற்றிணை 56. (332) அடும்பின் மென்கொடி துமியக் கடும்பகற் 7கொடுங்கழி மருங்கின்வந் தகன்ற நெடுந்தே ரண்ணல்பின் சென்றதென் னெஞ்சே - பொருளியல் 57. (333) எவ்விடத் தென்செய்த தென்றறியேன் இப்போதைக் கிவ்விடத்தி லென்னுழைவந் தெய்தாதே-வெவ்வினையேன் இன்னலே கூர இனிதளித்தார் தேரின்பின் நென்னலே போனவென் நெஞ்சு - கிளவித் தெளிவு. 41. பொழுதினுக்கு இரங்கல் என்பது இவ்வகை சொல்லி ஆற்றாளாகிய தலைமகள் அந்திப் பொழுது கண்டு இரங்கல். அதற்குச் செய்யுள் வருமாறு : (334) பகலோன் கரந்தனன் காப்பவர் சேயர்பற் றற்றவர்க்குப் புகலோன் புகுநர்க்குப் போக்கரி யோனெவ ரும்புகலத் தகலோன் பயில்தில்லைப் பைம்பொழிற் சேக்கைகள் நோக்கினவா மகலோங் கிருங்கழி வாய்க்கொழு மீனுண்ட அன்னங்களே - திருக்கோவையார் 188. (335) வெய்யவன் போயினன் மேவிப் புணர்ந்தவர் விட்டகன்றார் உய்யநெஞ் செவ்வகை யொன்றையுங் காண்ப னொலிகடல்சூழ் வையகங் காவலன் மாறன் குமரியின் வாயிரைதேர் நொய்யவண் டோகைவண் டானமுஞ் சேக்கைக ணோக்கினவே - பாண்டிக்கோவை 76. (336) போகக் கடவன புள்ளென் றிருந்திலம் போந்துதுணை யாகக் கடவன வென்றிருந் தேமகி லாண்டமெல்லாந் தியாகக் கொடிகொண்ட கண்டன் புகாரிற்றஞ் சேக்கைதொறு மேகத் தொடங்கின வேயந்தி வாயெம்மை யிட்டுவைத்தே - பழம்பாட்டு. (337) பொழுதுகண் டாய்புகு கின்றது போதநம் பொய்யற்கெம்மைத் தொழுதுகொண் டாளென்று சொல்லுகண் டாய்தொல்லை நூல்வரம்பை முழுதுகண் டான்முனிந் தார்தம தென்னைமுன் னிக்குறும்பிற் பழுதுகண் டானந்தி மல்லையங் கானற் பனிக்குருகே - நந்திக் கலம்பகம் 4. (338) ஆய்கதிர்ச் செல்வன் ஆத்தஞ் சேர்ந்தென நோய்கூர் 1நெஞ்சின ளுழப்பப் போயின மாதோ புள்ளினம் பிரிந்தே - பொருளியல் 59. 42. படருறுகிளவி என்பது இவ்வகை சொல்லி ஆற்றாளாகிய தலைமகள் தனது உள்ளக் கவலை கண்டு தோழி சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (339) பொன்னு மணியும் பவழமும் போன்று பொலிந்திலங்கி மின்னுஞ் சடையோன் புலியூர் விரவா தவரினுண்ணோய் இன்னு மறிகில வாலென்னை பாவ மிருங்கழிவாய் மன்னும் பகலே மகிழ்ந்திரை தேரும்வண் டானங்களே - திருக்கோவையார் 189. (340) அன்னம் புரையு நடையாள் புலம்பெய்த வத்தமென்னும் பொன்னஞ் சிலம்பு கதிரோன் மறைத்தலும் போயினவாற் றென்னன் திருமால் கழனெடு மாறன் றிருந்துசெங்கோல் மன்னன் குமரிக் கருங்கழி மேய்ந்தவண் டானங்களே - பாண்டிக்கோவை 167. (341) மாலை மணந்து காலைப் பிரியுங் காதல ருடையையோக 2றைநீங்கு மதியம் யிரவே யாயி னல்லை பகலே மெல்லியற் கொடிச்சி நுதலினும் புல்லென் றனையால் நோகோ யானே - பொருளியல் 60. 43. வருந்துதல் கிளத்தல் என்பது நீர்வரையா தொழியின் எம்பெருமாட்டி வருந்துவள்; வரைவுணர்த்து மிடத்து நீர் வருந்துதிர்; ஆதலால், இரண்டானும் எனக்கே மிக வருத்தமுடைத் தெனத் தோழி சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (342) மன்னுந் திருவருந் தும்வரை யாவிடி னீர்வரைவென் றுன்னு மதற்குத் தளர்ந்தொளி வாடுதி ரும்பரெல்லாம் பன்னும் புகழ்ப்பர மன்பரஞ் சோதிசிற் றம்பலத்தான் பொன்னங் கழல்வழுத் தார்புல னென்னப் புலம்புவனே - திருக்கோவையார் 131. (343) வரையா விடின்மதி வாணுதல் வாடும் வரைவுரைத்தால் விரையா டியகண்ணி வேந்தநீ வாடுதி விண்டெதிர்ந்த நிரைதா ரரைசரை நெல்வேலி வென்ற நெடுந்தகைசீர் உரையா தவரென யானே புலம்புத லுற்றனனே - பாண்டிக்கோவை 77. 44. இன்றறிந்தேன் என்பது இதற்குமுன் னல்லது கடவுளாக வல்லது நினையேன் எனச் சொல்லுதல். இவளை மக்களுள் ஒருமகள் என்பது இன்றறிந்தேன் எனச் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (344) மாடஞ்செய் பொன்னக 1ருந்நிக ரில்லையிம் மாதர்க்கென்னப் பீடஞ்செய் தாமரை யோன்பெற்ற பிள்ளையை யுள்ளலரைக் கீடஞ்செய் தென்பிறப் புக்கெடத் தில்லைநின் றோன்கயிலைக் கூடஞ்செய் சாரற் கொடிச்சியென் றோநின்று கூறுவதே - திருக்கோவையார் 129. (345) சுடர்திரி வானிடம் போதா வகைதொல் லுலகில்வந்த கடவுளர் தாமென யானினைந் தேனெழு காசினிகாத் தடல்புரி தானை யரிகே சரிவட கொல்லியின்வாய் மடமக ளாவதை யின்றறிந் தேன்மதி வாணுதலே - பாண்டிக்கோவை 74. (346) 1இதற்கொண் டினியாந் தெளிது மேனாள் மதிக்கோ டுரிஞ்சு மால்வரை வாழ்க்கைக் கடவு ளாக வல்லது மடவரன் மாதரை மதித்தன்றோ விலமே - பொருளியல் 85. 45. குடித்திறங் கூறல் என்பது இவ்வகை சொல்லக்கேட்ட தோழி எமது தந்தையுந் தாயரும் மலைக் கானவர் ; ஏனல் எங்காவல் ; எனச் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (347) வேய்தந்த வெண்முத்தஞ் சிந்துபைங் கார்வரை மீன்பரப்பிச் சேய்தந்த வானக மானுஞ் சிலம்பதன் சேவடிக்கே யாய்தந்த வன்புதந் தாட்கொண்ட வம்பல வன்2மலையத் தாய்தந்தை கானவ ரேனலெங் காவலித் தாழ்வரையே - திருக்கோவையார் 130 (348) வானவர் நாதன் மணிமுடி மேற்பொன் வளையெறிந்த கோனவன் ஆரம் புனைந்தவன் சூழ்பொழிற் கொல்லியின்வாய் ஏனலெங் 3காவலாம் யாய்தந்தை யிந்தப் பெரும்புனத்துக் கானவ 1ராலிது வென்னீ யுரைப்பது காவலனே - பாண்டிக்கோவை 134. (349) வரைதல் வேட்டனி 2ராயிற் பதிவயி 3னெதிர்கொள் செவ்விய ரெமரே யிவ்வயின் னறுநுதற் பெருந்தோட் பேதையுஞ் சிறுகுடிக் கானவன் பெருமட மகளே - பொருளியல் 84. 46. இற்செறி வுரைத்தல் என்பது இவ்வகைச் செல்லா நின்ற காலத்துப் பகற்குறிவந் தொழுகாநின்ற தலைமகற்குக் குறிப்பினாற் றமது இற்செறி வுரைத்தல். அதற்குச் செய்யுள் வருமாறு : (350) ஈவிளை யாட 4நறவளை வோர்ந்தெமர் மால்பியற்று வேய்விளை யாடும்வெற் பாவுற்று நோக்கியெம் மெல்லியலைப் போய்விளை யாடெலென் றாளன்னை யம்பலத் தான்புரத்துத் தீவினை யாடநின் றேவிளை யாடி திருமலைக்கே - திருக்கோவையார் 133. (351) நீர்வண்ண வெண்டிரை மேனின்ற வேந்தனெல் வேலியொன்னார் போர்வண்ணம் வாட்டிய பூழியன் பூந்தண் குருந்தொசித்த கார்வண்ணன் போல்வண்ணன் காவிரி நாடன்ன காரிகையாள் ஏர்வண்ணம் நோக்கிநின் றென்னையு நோக்கின ளெம்மனையே - பாண்டிக்கோவை 170. (352) நாகைக் குலமுகில் 5மம்மத்தன் பூவைக்கணாண் மலர்மேற் றோகைக் குரியவன் சோனக் குரியவன் றுங்கவெற்பா பாகைத் தருசொல்லி மென்முலைப் பாரமும் பார்த்திடையென் னாகைக் கிருந்ததென் றாளெம்மை நோக்கிநின் றம்மனையே - பழம்பாட்டு. (353) அன்னை வாழி நெருநன் மாதர் மென்முலை யரும்பிய ஆகமும் என்னும் பன்முறை நோக்கினள் 1இனிதே - பொருளியல் 61. (354) அன்னை நெருநல் அணியிழையாள் கொங்கையையும் என்னையும் நோக்கி யிருவரையும்-புன்னை வளையாடு கானல்வாய் மானனையீ ரின்று விளையாடு மென்றாள் விரைந்து - கிளவித் தெளிவு 47. சிறைப்புறக்கிளவி என்பது இவ்வகைக் குறிப் பினால் இற்செறிவுரைத்த தோழி முன்னிலைப் புறமொழியாக வேங்கைக் குரைப்பாளாய்த் தலைமகன் கேட்பச் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (355) கணியார் கருத்தின்று 2முற்றின் றியாஞ்சென்றுங் கார்ப்புனமே மணியார் பொழில்காள் மறத்திர்கண் டீர்மன்னு மம்பலத்தோன் அணியார் கயிலை மயில்காள் அயில்வே லொருவர்வந்தாற் றுணியா தனதுணிந் தாரென்னு நீர்மைகள் சொல்லுமினே - திருக்கோவையார் 145. (356) 3உலம்புனை தோண்மன்ன ரோடவல் லத்தட் டவருரிமை 4நலம்புனை கோதையர்க் கல்லல்கண் டான்கொல்லிச் சாரனண்ணி 1வலம்புனை வில்லோ டிருவிப் புனங்கண்டு வாடிநின்றாற் 2சிலம்பனை நையற்க வென்னுங்கொல் வேங்கை செறிபொழிலே - பாண்டிக்கோவை 177. (357) திரையார் குருதிப் புனல்மூழ்கச் செந்நிலத் தன்றுவென்ற வுரையார் வெரும்புகழ்ச் செங்கோ லுசிதனொண் பூம்பொதியில் வரையார் தினைப்புனங் கால்கொய்ய நன்னாள் வரைந்துநின்ற விரையார் மலரிள வேங்காய் நினக்கு விடையில்லையே - பாண்டிக்கோவை 174. (358) பாங்கின ராகித் தீங்குதலைத் 3தருநரின் ஈங்குப் பிரிவு 4சூழ்ந்தன் றியாங்கன மொழிகோ வேங்கையது 5வினையே - பொருளியல் 62. 48. வெளிப்பட உரைத்தல் என்பது யாம் இப்புனங் காவேம்; நீர் பலகால் வாரன்மின் எனத் தோழி தலைமகன் முன்னின்று சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (359) வடிவார் வயற்றில்லை யோன்மல யத்துநின் றும்6வருந்தேன் கடிவார் களிவண்டு நின்றலர் தூற்றப் பெருங்கணியார் நொடிவார் நமக்கினி நோதக யானுமக் கென்னுரைக்கேன் றடிவார் தினையெமர் காவேம் பெருமவித் தண்புனமே - திருக்கோவையார் 139. (360) செயன்மன்னு மாவது சொல்லாய் சிலம்பதென் பாழிவென்ற கயன்மன்னு வெல்1கொடிக் காவலன் மாறன் கடிமுனைமேல் அயன்மன்னர் போற்கொய்து மாள்கின்ற தாலணி வானுரிஞ்சும் புயல்மன்னு கோட்ட மணி2வளர் சாரலெம் பூம்புனமே - பாண்டிக்கோவை 172. (361) ஊசல் தொழிலிழக்கும ஒப்பு மயிலிழக்கும் வாசஞ் சுனையிழக்கும் வள்ளலே-தேசு பொழிலிழக்கும் நாளையே பூங்குழலி நீங்க எழிலிழக்கும் அந்தோ இதண் - கண்டனலங்காரம். (362) பண்சிலம்ப வண்டாடும் பைந்தார்ச் சனநாதன் வண்சிலம்பிற் கூடல் வளைந்தாலும் - தண்சிலம்ப மான்பாயும் வேங்கையிலும் மாறா தலைத்திடுமித் தேன்பாயும் வேங்கை சிவந்து - கண்டனலங்காரம். 49. கணியென உரைத்தல் என்பது வேங்கைபூத்துப் பருவமாகத்தினை கொய்யக் கண்ட தோழி தலைமகட்குச் சொல்லியது. அதற்குச் செய்யுள் வருமாறு : (363) மாதிடம் கொண்டம் பலத்துநின் றோன்வட வான்கயிலைப் போதிடங் 3கொண்டபொன் வேங்கைத் தினைப்புனங் கொய்கவென்று தாதிடங் கொண்டுபொன் வீசித்தன் கள்வாய் சொரியநின்று சோதிடங் கொண்டிதெம் மைக்கெடு வித்தது தூமொழியே - திருக்கோவையார் 138. (364) மொய்வார் மலர்முடி மன்னவர் சாய 4முசிறிவென்ற மெய்வான் வரோதயன் கொல்லியில் வேங்கை கணிமைசொல்லச் செய்வாய் விளைந்த செழுங்குரற் செந்தினைப் போகமெல்லாங் கொய்வான் றொடங்கின ரெம்மையர் தாநிரை கோல்வளையே - பாண்டிக்கோவை 95. (365) இயவன ராசன் கலுபதி தாமுத லெண்ணவந்தோர் அயன்மிகு தானையர் அஞ்சுவன் னத்தவ ரஞ்சலென்னாக் கயவர்கள் வாழ்பதி போலத் தினைப்புனங் காய்கொய்துபோம் பயன்விளை வாம்படி பூத்தது வேங்கை பணிமொழியே - பல்சந்தமாலை. 50. நனைகெடச் செய்திலம் என்பது வேங்கை அரும்பிய காலத்து அரும்பாகக் கொய்திலம் எனத் தோழி சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (366) கனைகடற் செய்தநஞ் சுண்டுகண் டார்க்கம் பலத்தமுதாய் வினைகெடச் செய்தவன் விண்டோய் கயிலை 1மயிலனையாய் நனைகெடச் செய்தன மாயி னமைக்கெடச் செய்திடுவான் தினைகெடச் செய்திடு மாறுமுண் டோவித் திருக்கணியே - திருக்கோவையார் 141. (367) நன்றுசெய் தாமல்ல நன்னுத லாய்நறை யாற்றுவெம்போர் நின்றுசெய் 2தாரை வருந்த நெடுங்கைக் களிற்றுடலாற் குன்றுசெய் தான்கொல்லி வேங்கையை மெல்லரும் பாகக்கொய்தல் அன்றுசெய் தாமெனி னிற்பதன் 1றேநம் மகன்புனமே - பாண்டிக்கோவை 176. (368) கரும்பனைய மென்மொழியாய் கண்ணறைவாய் வேங்கை யரும்பினைமுன் கொய்தனமே யாகிற்-பெரும்புனத்திற் செந்தினைநன் போகஞ் சிதைப்பரோ சீர்சிறந்த சந்தனவண் டோளையர் தாம் - பழம்பாட்டு. 51. ஏறுவிடுத்தல் என்பது எமரும் எம்மையரும் வதுவை நோக்கித் துணிந்து ஏறுவிட்டாரென்று சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (369) படையார் கருங்கண்ணி வண்ணப் பயோதரப் பாரமுநுண் ணிடையார் மெலிவுங்கண் டண்டர்க ளீர்முல்லை வேலியெம்மூர் விடையார் மருப்புத் திருத்திவிட் டார்வியன் றென்புலியூ ருடையார் கடவி வருவது போலும் உருவினதே - திருக்கோவையார் 136. (370) கூற்றென வேவரும் வேந்தரைக் கோட்டாற் றழித்தவர்மேற் பாற்றின மேவிடக் கண்டவன் கூடற் பதியதன்வாய் ஏற்றிரு கோடு திருத்திவிட் டாரினி யேறுதழூஉ மாற்றலி னார்மணஞ் செய்வா னமைந்தன ரண்டர்களே - பாண்டிக்கோவை 178. (371) விடையிரு கோடு திருத்திவிட் டனராற் பெடைமயி லன்ன பேதை யிடை நயந்த வாயர் ஏற்றெழுந் தனரே - (?) 52. 1சூளென நினைதல் என்பது ஏறுவிடுத்தலை அறிந்த தலைமகன் இன்னநாள் வரைவல் அத்துணையும் இவளை ஆற்றிக்கொண்டிரு நினக்கு அடைக்கலம் எனக் கைப்பற்ற அதனைச் சூளென நினைந்து தோழி கூறுதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (372) நெய்யொன்று வேல்நெடு மாறன்தென் னாடன்ன நேரிழையிம் மையொன்று வாட்கண் மடந்தை திறத்திட் டறந்திரிந்து பொய்யொன்று நின்கண் நிகழுமென் றாற்பின்னைப் பூஞ்சிலம்பா மெய்யொன்றும் இன்றி ஒழியுங் கொல்லோவிவ் வியலிடமே - பாண்டிக்கோவை 181. (373) அம்மென் சாயல் ஆயிழை திறத்துப் பொய்ம்மை நின்வாய் உளதெனின் மெய்ம்மை யாரோ விளம்புநர் பிறரே - பொருளியல் 64. (374) வெள்ளி விழுத்தொடி மென்கருப் புலக்கை வள்ளி நுண்ணிடை வயின்வயின் நுடங்க மீன்சினை அன்ன வெண்மணற் குவைஇக் காஞ்சி நீழல் தமர்வளம் பாடி ஊர்க்குறு மகளிர் குறுவழி இறந்த 2ஆரல் அருந்திய சிறுசிரல் மருதின் தாழ்சினை உறங்கும் தண்துறை ஊர விழையா வுள்ளம் 3விழைவ தாயினும் என்றும், கேட்டவை தோட்டி யாக மீட்டாங் கறனும் பொருளும் வழாஅமை நாடித் தற்றக வுடைமை நோக்கி மற்றதன் பின்னா கும்மே முன்னியது முடித்தல் அனைய பெரியோர் ஒழுக்கம் அதனால் அரிய பெரியோர்த் 1தேருங் காலை நும்மோர் அன்னோர் மாட்டும் இன்ன பொய்யோடு மிடைந்தவை தோன்றின் மெய்யாண் டுளதோஇவ் வுலகத் தானே - நெடுந்தொகை 286. 53. புனங்கண் டழிதல் என்பது தலைமகனும் தோழியும் புனங்காவலேறிப் போகா நிற்பத் தலைமகன் புனங்கண்டு வருந்துதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (375) பொதுவினிற் றீர்த்தென்னை யாண்டோன் புலியூ ரரன்பொருப்பே இதுவெனி லென்னின் றிருக்கின்ற வாறெம் மிரும்பொழிலே எதுநமக் கெய்திய தென்னுற் றனிரறை யீண்டருவி மதுவினிற் கைப்புவைத் தாலொத்த வாமற்றிவ் வான்புனமே - திருக்கோவையார் 146. (376) கள்ளாவி நாறுங் கமழ்கூந்தற் காரிகையென் உள்ளாவி சென்ற வுழியறியேன்-தள்ளாத மல்லல் அருவி மலைநாடி வாய்திறந்து சொல்லல் புரியாய் துணிந்து - (?) 2பகற்குறி முற்றும் இ. இரவுக்குறி 54. இரவிடங் காட்டல் என்பது இவ்வகை வறும்புனங் கண்டு வருந்திய தலைவன் தோழியை யெதிர்ப்பட்டு இரவுக்குறி வேண்டியவிடத்து அவள் இடங் காட்டுதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (377) பனைவளர் கைம்மாப் படாத்தம் பலத்தரன் பாதம்விண்ணோர் புனைவளர் சாரற் பொதியின் மலைப்பொலி 1சாந்தணிந்து சுனைவளர் காவிகள் சூடிப்பைந் தோகை துயில்பயிலும் சினைவளர் வேங்கைகள் யாங்கணின் றாடுஞ் செழும்பொழிலே - திருக்கோவையார் 154. (378) 2வந்தணங் காமன்னர் தேயமுன் னாள்மழை 3யேறுயர்த்த கந்தணங் காமத யானைக் கழல்மன்னன் கார்ப்பொதியிற் சந்தனஞ் 4சேர்ந்துதண் காந்தளம் பூத்தழல் போல்விரியும் கொந்தணங் கீர்ம்பிண்டி 5யாங்கணின் றாடுங் குளிர்பொழிலே - பாண்டிக்கோவை 183. (379) நறைகமழ் சாந்தமெஞ் சாந்தே பூவும் பொறைமலி காந்தளம் பூவே யாடிடஞ் சிறைவண் டார்க்குஞ் செயலையம் பொழிலே - பொருளியல் 69. (380) கள்ளவிழுங் காவி முடித்துக் கமழ்பசுஞ்சாந் தள்ளி முடிமேல் அழகெழுதிப்-புள்ளுறங்கும் வேங்கை மரநிழற்கீழ் நிற்பேம் வியன்சிலம்பா நாங்கள் விளையாடி நன்கு - கிளவித்தெளிவு. 55. வரவு உணர்ந்து உரைத்தல் என்பது தலைமகற்குக் குறியிடங்காட்டிய தோழி தலைமகளுழைச் சென்று எய்திய விடத்து அவன் வரவறிந்தமை தோழி சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (381) முன்னு மொருவர் இரும்பொழில் மூன்றற்கு முற்றுமிற்றாற் பின்னு மொருவர்சிற் றம்பலத் தார்தரும் பேரருள்போற் றுன்னுமொ ரின்பமென் றோகைதன் றோகைக்கு சொல்லுவபோன் மன்னு மரவத்த வாய்த்துயில் பேரு மயிலினமே - திருக்கோவையார் 160. (382) அணிநிற 1மாப்பக டுந்திவந் தார்வல்லத் தன்றவியத் துணிநிற வேல்கொண்ட கோன்கொல்லிச் சாரலிற் சூழ்பொழில்வாய் மணிநிற மாமயி லென்னைகொல் பொன்னேர் மலர்ததைந்த கணிநிற வேங்கையின் மேற்றுயி லாது கலங்கினவே - பாண்டிக்கோவை 185. (383) பாக்கத் திரவின்கட் பட்டதொன் றுண்டுபைங் கானலெங்கும் சேக்கைத் துணைத்தலை யோடொன்றுஞ் சேர்ந்தில சேர்ந்துசெங்கை தாக்கச் சிவந்த தடந்தோள் தயாபரன் தஞ்சையன்னாய் பூக்கட் கழித்தலைக் கெண்டைமுள் ளோடுண்ட புள்ளினமே - அரையர் கோவை. (384) புள்ளுந் துயிற்புடை பெயர்ந்தன புனலுள் வெள்ளிதழ்க் கைதை மணிக்காய் 1வீழும் வந்தனன் கொல்லோ தானே வெந்திற லண்ண னினைந்தனன் விரைந்தே - பொருளியல் 72. (385) புட்சிலம்பு கின்றமையால் தீங்கனிகள்) பூம்புனலி னுட்சிலம்ப வீழ்கின்ற ஓசையால்-கட்சிலம்பு கொந்தார் நறும்பொழிலி னுள்ள குறியிடத்து வந்தான்கொல் கள்வ மகன் - கிளவித்தெளிவு. 56. தாய்துயில் அறிதல் என்பது தலைமகள் குறியிடத்து வந்தமையுணர்ந்த தோழி தாய்துயில் அறிதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (386) கூடார் அரணெரி கூடக் கொடுஞ்சிலை கொண்டவண்டன் சேடான் 2மதிமலர் தில்லையன் னாய்சிறு கட்பெருவெண் கோடார் கரிகுரு மாமணி யூசலைக் கோப்பழித்துத் தோடார் மதுமலர் நாகத்தை நூக்குநஞ் சூழ்பொழிற்கே - திருக்கோவையார் 161. (387) கதஞ்சார் தரும்படைக் கைதவன் காவிரி நாட்டரசன் பதம்பாழ் படுத்திய பஞ்சவன் கூடற் பதியனையாய் மதம்பாய் கரவொண்கண் மாமலை யொன்றுநம் வார்புனத்து ளிதண்கால் பறிந்திறத் தாளா லுதையு மிரும்பொழிற்கே - பாண்டிக்கோவை 141. (388) 1அன்னாய் அன்னாய் காணென் றிருமுறை தன்யான் எடுப்பவுந் துயின்மடிந் தனளே இலங்கிலை நெடுவேல் அண்ணலும் புலம்புதுய ரகலக் குறிவந் தோனே - பொருளியல் 73. 57. இரவுக்குறி யுய்த்தல் என்பது இவ்வகைத் தாய் துயிலறிந்த தோழி தலைமகளையுடன் கொண்டு தாழிக்குவளை மலர்ந்தவேற் காண்பாம், முல்லை மலர்ந்தவேற் காண்பாம் எனச் சொல்லிக் குறியிடத்துச் சேறல். அதற்குச் செய்யுள் வருமாறு : (389) விண்ணுக்கு மேல்வியன் பாதலக் கீழ்விரி நீருடுத்த மண்ணுக்கு நாப்ப ணயந்துதென் றில்லைநின் றோன்மிடற்றின் வண்ணக் குவளை மலர்கின் றனசின வாண்மிளிர்நின் கண்ணொக்கு மேற்கண்டு காண்வண்டு வாழுங் கருங்குழலே - திருக்கோவையார் 162. (390) ஆழிக் 2கடல்வையந் தாங்கிய கோனரி கேசரிதென் பாழிப் பகைவென்ற பஞ்சவன் 3பைம்பூம் புறவணிந்த பூழிப் 4புனமஞ்ஞை யன்னநல் லாய்கொள்கம் 5போதினியே தாழிக் குவளைநின் கண்போன் 6மலருந் தடமலரே - பாண்டிக்கோவை 187. (391) விளைக்கின்ற பல்புகழ் வேந்தன் விசாரிதன் விண்டெதிர்ந்து திளைக்கின்ற மன்னரைச் சேவூ ரழித்தவன் றீந்தமிழ்போல் வளைக்கொன்று கைம்மங்கை யாய்சென்று காண்டுநின் 1வாயுவந்து முளைக்கின்ற வெள்ளேயிற் றேர்கொண் 2டலர்ந்தன முல்லைகளே - பாண்டிக்கோவை. 188. (392) கள்ளவிழ் கோதைநின் கண்போற் குவளையு முள்ளெயிற் றரும்பு முல்லையுங் கொள்குவம் போதுநங் குளிர்பொழி லிடத்தே - பொருளியல் 74. 58. நீங்குதல் உரைத்தல் என்பது குறியிடத் துய்த்த தலைமகளைத் தலைமகன் எதிர்ப்படு மென்னும் நிலைமைக்கண் தான் நீங்குதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (393) நந்தீ வரமென்னும் நாரண னாண்மலர்க் 3கண்ணுக்கெஃகந் தந்தீ வரன்புலி யூரனை யாய்தடங் கண்கடந்த இந்தீ வரமிவை காணின் னிருள்சேர் குழற்கெழில்சேர் சந்தீ வரமுறி யும்வெறி வீயுந் தருகுவனே - திருக்கோவையார் 163. (394) ஆய்போ லருளுங் கொடையரி கேசரி யம்பொதியில் வேய்போ லியவிரு தோண்மட வாய்விரைத் தேன்கமழ்நின் வாய்போன் மலருங் குமுதங்கள் கொய்து வருமளவும் நீபோ திவைகொய்து நிற்பது சால நெறியுடைத்தே - பாண்டிக்கோவை. 142. (395) நின்னிணை விழியி னிறம்புரை நீல மென்னிரு கரங்கொடு கொய்தியான் கொணர்வன் அன்னிலை மடவாய் நீவர லரிதே - பழம்பாட்டு. 59. குறியெதிர்ப் படுதல் என்பது இவ்வகைக் குறி யிடத்து நிறுத்தித் தோழி நீங்கிய விடத்துத் தமியளாய் நின்ற தலைமகளைத் தலைமகன் எதிர்ப்படுதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (395) காமரை வென்றகண் ணோன்றில்லைப் பல்கதி ரோனடைத்த தாமரை யில்லின் இதழ்க்கத வந்திறந் தோதமியே பாமரை மேகலை பற்றிச் சிலம்பொதுக் கிப்பையவே நாமரை யாமத்தென் னோவந்து வைகி நயந்ததுவே - திருக்கோவையார் 164. (397) வெவ்வினை யார்படை வேந்தர்கள் வெண்மாத் திடைப்படவென் றவ்வவர் வாழ்பதி கொண்டவன் கூடல் அகன்பொழில்வாய்ச் செவ்விரை நாண்மலர்ப் பாதஞ் சிவக்கச் சிலம்பொதுக்கி யிவ்விருள் வாய்வர வென்னீ நினைந்தனை யேந்திழையே - பாண்டிக்கோவை 148. (398) மொய்யிருளில் நீரே முளரி யகந்திறந்து செய்ய வடியிற் சிலம்பொதுக்கிப்-பையவொரு மின்வந்த தென்ன வெறுந்தனியே வந்தவா வென்வந்து சொல்லீர் எமக்கு - கிளவித்தெளிவு. (399) அருக்கன் வருவதன்முன் அம்புயப்பூங் கோயிற் றிருக்கதவம் யாரோ திறந்தார்-மருக்கமழ்தார் வன்னாட னெய்தல்வாய் வல்லியிவ் வல்லிருளில் என்னாட னீவருவா னீங்கு - கிளவித்தெளிவு. 60. திங்கட் குரைத்தல் என்பது 1இவ்வாறெல்லாம் இரவுக்குறி வந்தொழுகா நின்றநாள் அவனாற் செய்யப்படும் குறியன்றி அல்ல குறிப்பிட்டு இற்செறிந்த விடத்துத் தோழி அவன்வர வுணர்ந்து அவனறியச் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (400) நாகந் தொழவெழி லம்பல நண்ணி நடநவில்வோ னாகம் மிதுமதி யேமதி யேநவில் வேற்கையெங்க ணாகம் வரவெதிர் நாங்கொள்ளு நள்ளிருள் வாய்நறவார் நாக மலிபொழில் வாயெழில் வாய்த்தநின் னாயகமே - திருக்கோவையார் 171. (401) தாளிணை யாமலர் சூடா வரைசரைச் சங்கமங்கை வாளினத் தால்வென்ற மாறன் றிருக்குல மாமதியெங் கேளினர் தாம்வரும் போதின் எழாதாய்க் குறாலியரோ நாளினு நீகுறை யாதே விளங்க நலிவின்றியே - பாண்டிக்கோவை 151. (402) வாள்வரி வேங்கை வழக்குஞ் சிறுநெறியெங் கேள்வரும் போதின் எழால்வாழி வெண்டிங்காள் கேள்வரும் போதின் எழாதாய்க் குறாலியரோ நீள்வரி நாகத தெயிறேவாழி வெண்டிங்காள் - பழம்பாட்டு. 61. அன்னத்தொலி யுரைத்தல் என்பது இவ்வகைத்தாம் அல்ல குறிப்பிட்ட படியைத் திங்கண் மேலிட்டுணர்த்திய தோழி அன்னத்தொலியுரைத்தல். அதற்குச் செய்யுள் வருமாறு: (403) மின்னங் கலருஞ் சடைமுடி யோன்வியன் றில்லையன்னா யென்னங் கலம்வர லெய்தியதோ வெழின் முத்தந்தொத்திப் பொன்னங் கலர்புன்னைச் சேக்கையின் வாய்ப்புலம் புற்றுமுற்று மன்னம் புலரு மளவுந் துயிலா தழுங்கினவே - திருக்கோவையர் 172. (404) அறைவா 1யதிர்கழல் 2வேந்துக வல்லத் தமரழித்த கறைவா யிலங்கிலை வேன்மன்னன் கன்னியங் 3கானலன்ன இறைவா யணிவளை யாயென்கொ லாமிவ் விரவினெல்லாந் துறைவா யிளம்புன்னை மேலன்ன மொன்றுந் துயின்றிலவே - பாண்டிக்கோவை 158. (405) வணர்சுரி யைம்பால் வாணுத லரிவை 4அணைதிற மறியலன் யாவதும் புணர்துயில் மறந்தன புள்ளினம் 5பெரிதே - பொருளியல் 76. 62. கடலொலி உரைத்தல் என்பது இன்று விடிவளவுங் கடலொலி யடங்கிய தில்லையெனச் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (406) சோத்துன் னடியமென் றோரைக் குழுமித்தொல் வானவர்சூழ்ந் தேத்தும் படிநிற் பவன்றில்லை யன்னா ளிவடுவள வார்த்துன் னமுதுந் திருவு மதியு மிழந்தவநீ பேர்த்து மிரைப்பொழி யாய்பழி நோக்காய் பெருங்கடலே - திருக்கோவையார் 173. (407) அறம்புரி செங்கோல் அரிகே சரிதிருத் தாளடையார் பறந்தலை வாய்ப்பட வென்றவன் கூடற் பதியனையா ணிறந்தவ வாட நிறமுந் திருவு முடனழிந்து கறங்குவ தென்று மொழியாய் கழியார் கருங்கடலே - பாண்டிக்கோவை 143. (408) புன்னை நனைப்பினும் பூஞ்சினை தோயினும் பின்னிருங் கூந்தலெந் தோழி நடையொக்கு மன்ன நனையாதி வாழி கடலோதம் - பழம்பாட்டு. (409) புன்னை மலர்தூய்ப் புனத்துப் பலிக்கிடந்த வன்னந் துயிலழித்தார் ஆர்கொலோ-மன்னன் மதுரா கனதொண்டி மாக்கடலே சொல்லாய் முதிரா முலைபயந்த மூன்று - பழம்பாட்டு. 63. இரவுக்குறி கழிதல் என்பது அல்ல குறிப்பட்டு மீண்ட தலைமகன் வருந்துதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (410) மாற்றே னெனவந்த காலனை யோல மிடவடர்த்த கோற்றேன் குளிர்தில்லைக் கூத்தன் கொடுங்குன்றி னீள்குடுமி மேற்றேன் விரும்பு முடவனைப் போல மெலியுநெஞ்சே யாற்றே னரிய வரிவைக்கு நீவைத்த வன்பினுக்கே - திருக்கோவையார் 159. (411) ஏரார் குழல்மட வாளை யெளியளென் 1றெண்ணிவந்து தீரா விழுமந்தத் தாய்தென்னன் சேவூர்ச் செருவடர்த்த காரார் களிற்றுக் கழனெடு மாறன் கழல்பணிந்து சேரா வரசரிற் றேய்வா யளியவென் சிந்தனையே - பாண்டிக்கோவை 161. (412) இல்லோன் இன்பங் காமுற் றாஅங் கரிதுவேட் டனையால் நெஞ்சே காதலி நல்ல ளாகுத லறிந்தாங் கரிய ளாகுதல் அறியா தோயே - குறுந்தொகை 120. (413) குணகடற் றிரையது பறைதபு நாரை 2திண்டேர்ப் பொறையன் தொண்டி முன்றுறை யயிரை யாரிரைக் கணவந் தாங்குச் சேயள் அரியோட் படர்தி நோயை நெஞ்சே நோய்ப்பா லோயே - குறுந்தொகை 123. (414) வரிவளைப் பணைத்தோள் மடந்தையை யுள்ளி 3அரியது நசைஇய நெஞ்சம் பெரிது மெவ்வம் பெறற்பா லோயே - பொருளியல் 77. (415) அன்னநடைப் பேதை அருமை அறியாதே யென்னை வருத்துகின்ற தென்கொலோ-துன்னிருட்கண் வஞ்சமே யன்ன மலர்விழியால் ஈடழியும் நெஞ்சமே கட்டுரையாய் நீ - கிளவித்தெளிவு. (416) குறியெனப் படுவ திரவினும் பகலினும் அறியக் கிடந்த விடமென மொழிப - இறையனார் அகப்பொருள் 18. என்னு 1மொழிமாற்றுச் சூத்திரத்துள் இவையெல்லாங் கண்டு கொள்க. இரவுக்குறி முற்றும். ஈ. வரைதல் வேட்கை 64. கழிபடர்கிளவி என்பது இவ்வகை வந்து ஒழுகாநின்ற தலைமகனைக் காணும் பொழுதிற் காணாப் பொழுது பெரிதாகலின் ஆற்றாளாய தலைமகள் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (417) மாதுற்ற மேனி வரையுற்ற வில்லிதில் லைநகர்சூழ் போதுற்ற பூம்பொழில் காள்கழி காள்எழிற் புள்ளினங்காள் ஏதுற் றழுதியென் னீர்மன்னு மீர்ந்துறை வற்கிவளோர் தீதுற்ற தென்னுக்கென் னீரிது வோநன்மை செப்புமினே - திருக்கோவையார் 174. (418) தாதலர் நீண்முடித் தார்மன்னன் மாறன்றண் ணங்குமரிப் போதலர் கானற் புணர்குறி வாய்த்தாள் புலம்பிநைய 2ஏதிலர் நோய்செய்வ தோநின் பெருமை யெனநெருங்கிக் காதலர் தம்மைக் கழறியென் னூனங் கருங்கடலே - பாண்டிக்கோவை 237. (419) மடலே சொரிதொங்கல் வங்கர் குலோத்தமன் வண்கடந்தை யடலே புரியு மரும்பனி வாடையை யஞ்சும்வஞ்சி யுடலேயு மன்றி யுயிருங் கிடந்ததென் றோரொருகாற் கடலே கருங்கழி யேயுரை யீரெங்கள் காதலர்க்கே - வங்கர்கோவை. (420) 1புள்ளியன்மான் தேராழி போன வழியெல்லாம் தெள்ளிநீ ரோதஞ் சிதைத்தாய்மற் றென்செய்கோ தெள்ளிநீ ரோதஞ் சிதைத்தாய்மற் றெம்மோடிங் குள்ளாரோ டுள்ளா யுணரார்மற் றென்செய்கோ - சிலப்பதிகாரம், கானல்வரி 34. (421) ஒண்டூவி நாராய்நின் சேவலு நீயுமாய் வண்டூதும் கானல் வைகலும் சேறிராற் பெண்டூது வந்தே மெனவுரைத்துக் காதலரைக் கண்டீர் கழறியக்காற் காதலர் கடிபவோ - பழம்பாட்டு. 65. கையறுகிளவி என்பது தாய் துஞ்சாமை, நாய் துஞ்சாமை, ஊர் துஞ்சாமை, காவலர் கடுகுதல், நிலவு வெளிப் படுதல் என இவை முதலாகிய காப்பு மிகுதி சொல்லி வரவு விலக்குதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (422) இன்னற வார்பொழிற் றில்லை நகரிறை சீர்விழவிற் பன்னிற மாலைத் தொகைபக லாம்பல் விளக்கிருளின் துன்னற வுய்க்குமில் லோருந் துயிலிற் றுறைவர்மிக்க கொன்னிற வேலொடு வந்திடின் ஞாளி குரைதருமே - திருக்கோவையார் 175. (423) வாருந்து பைங்கழற் செங்கோல் வரோதயன் வஞ்சியன்னாள் சேருந் திறமென்னை தேந்தண் சிலம்பனைத் திங்கள்கல்சேர்ந் தூருந் துயின்றிடங் காவல ரோடன்னை யுள்ளுறுத்தெல் லாருந் துயிலினுந் துஞ்சா ஞமலி யரையிருளே - பாண்டிக்கோவை 240 (424) ஆயுந் தமிழ்மன்னன் செங்கோ லரிகே சரிமுனைபோற் றேயு நினைவொடு துஞ்சா மடந்தையிச் சேயிழையாள் தாயுந் துயிலலு றாளின்ன தாற்றனித் தாணெடுந்தேர்க் காயுங் 1கதிர்கான் மலைபோய் மறைந்த கனையிருளே - பாண்டிக்கோவை 239. (425) மாவுங் களிறு மணிநெடுந் தேரும்வல் லத்துப்புல்லாக் கோவுந் துமியவை வேல்கொண்ட கோனந்தண் 2கூடலென்னப் பூவும் புகையும் விரையும் கமழ்ந்துபொன் னாருலகு மேவும் விழைவொடு துஞ்சா திரவும் வியனகரே - பாண்டிக்கோவை 241. (426) நறைக்கண் மலிகொன்றை யோனின்று நாடக மாடுதில்லைச் சிறைக்கண் மலிபுனற் சீர்நகர் காக்குஞ்செவ் வேலிளைஞர் பறைக்கண் படும்படுந் தோறும் படாமுலைப் பைந்தொடியாள் கறைக்கண் மலிகதிர் வேற்கண் படாது கலங்கினவே - திருக்கோவையார் 253. (427) அடிக்கண் ணதிருங் கழலரி கேசரி 1தெவ்வழியக் கொடிக்கண் ணிடியுரு மேந்திய கோன்றமிழ்க் 2கூடலன்னாய் வடிக்கண் ணிரண்டும் வளநகர் காக்கும்வை வேலிளைஞர் துடிக்கண் ணிரண்டுங்கங் குற்றலை யொன்றுந் துயின்றிலவே - பாண்டிக்கோவை 242. (428) சென்று செருமலைந் தார்செந்நீர் மூழ்கச் செருநிலத்தை வென்று களங்கொண்ட கோன்றமிழ் நாடன்ன மெல்லியலாய் இன்றிவ் 3விருள்தா னிடங்கொண்ட தெவ்விடஞ் சென்றுகொல்லோ நின்று விசும்பிற் பகல்போல் விரியு நிலாமதியே - பாண்டிக்கோவை 243. இவையெல்லாம் வந்த செய்யுள் வருமாறு : (429) இரும்பிழி 4மகாஅரிவ் வழுங்கல் மூதூர் விழவின் றாயினும் துஞ்சா தாகும் மல்லல் ஆவண மறுகுடன் மடியின் வல்லுரைக் கடுஞ்சொல் அன்னை துஞ்சாள் பிணிகொ ளருஞ்சிறை யன்னை துஞ்சிற் றுஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர் இலங்குவே லிளையர் துஞ்சின் வையெயிற்று வலஞ்சுரித் தோகை ஞாளி 1மகிழும் அரவவாய் ஞமலி 2குரையாது கடியிற் பகலுரு வுறழு நிலவுகான்று விசும்பி னகல்வாய் மண்டில நின்றுவிரி யும்மே திங்கள் கல்சேர்பு கனையிருள் 3மறையி னில்லெலி வல்சி வல்வாய்க் கூகை கழுதுவழங் கியாமத் தழிதகக் குழறும் வளைக்கட் சேவல் வளர்துயின் மடியின் மனைச்செறி கோழி மாண்குர லியம்பும் எல்லா மடிந்த காலை யொருநாள் நில்லா நெஞ்சத் தவர்வா ரலரே அதனால், அரிபெய் புட்டி லார்ப்பப் பரிசிறந் தாதி போகிய பாய்பரி நன்மான் நொச்சி வேலித் தித்த னுறந்தைக் கன்முதிர் புறங்காட் டன்ன பன்முட் டின்றாற் றோழிநங் களவே - நெடுங்தொகை 121. (430) யாயே துயின்மறந் தனளே யாயினு நாயு மூரு நனிதுஞ் சலவே 4காவல ரதனினுந் துயிலார் துயிலினு மாய்கதிர் மதியநின் றலரும் யாவ தாங்கொல் ஏந்திழை நினைவே - பொருளியல் 79. (431) ஊர்துயிலின் நாய்துயிலா வொண்டொடி யூர்காக்கும் பேர்துயிலு மாறொருகாற் பெற்றாலும்-நேர்துயிலாள் அன்னை நெடுநிலா அல்லும் பகலாகும் என்னை வருவதுநீ இங்கு - கிளவித்தெளிவு. 66. ஆறு பார்த்துற்ற அச்சக் கிளவி என்பது தலைமகன் வரும் வழியினுள்ள அச்சத்தைச் சொல்லி வரவு விலக்குதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (432) தாருறை கொன்றையன் தில்லைச் சடைமுடி யோன்கயிலை நீருறை கான்யாற் றளவில நீந்திவந் தானினது போருறை வேல்வயப் பொங்குரு மஞ்சுக மஞ்சிவருஞ் சூருறை சோலையின் வாய்வரற் பாற்றன்று தூங்கிருளே - திருக்கோவையார் 176. (433) பிறவா ரணங்கு 1மணிக்குரை யார்கழல் பேணினரென் றறைவா ரணங்க ளரற்று மரங்க ரருளிலர்போன் மறவா ரணங்கள் மடங்கலுக் கோடும் வழிபழிவந் துறவா ரணங்கின் பொருட்டுர வோய்வர லோங்கிருளே - கோயிலந்தாதி. (434) அன்பெதிர்ந் தாலும் வருதல்பொல் லாதைய வாரமருள் முன்பெதி ரார்படச் சேவைவென் றான்முகி றோய்பொதியிற் பொன்பிதிர்ந் தாலன்ன மின்மினி சூழ்புற்றின் முற்றியசோற் றின்பிதிர் வாங்கியெண் கேறு கிளைத்துண்ணு மீண்டிருளே - பாண்டிக்கோவை 245. (435) பிறையார் நறுநுதற் பேதைதன் காரணத் தாற்பெரும மறைநா ளிரவில் வருவது நீயொழி வச்சிரநாட் டிறையா கியகலு பாமுத லானவர் யானைகணின் றறைவாரும் விஞ்சத் தடவிகள் சூழு மணிவரையே - பல்சந்தமாலை. (436) கரைபொரு கான்யாற்றங் கல்லத ரெம்முள்ளி வருவிராயின் அரையிருள் யாமத் தடுபுலி யேறஞ்சி யகன்றுபோக நரையுரு மேறுநுங்கை வேலஞ்சு நும்மை வரையர மங்கையர் வௌவுத லஞ்சுதும் வாரலையோ - பழம்பாட்டு. (437) சூரல் பம்பிய சிறுகான் யாறே சூரர மகளிர் ஆரணங் கினரே வாரல் எனினே யானஞ் சுவனே சார னாடநீவர லாறே - பழம்பாட்டு. (438) வாரா தீமோ சார னாட வுறுபுலி கொன்ற தறுகண் யானை யாறுகடி கொள்ளு மருஞ்சுரம் ஊறுபெரி துடைய தமியை நீயே - 1சிற்றெட்டகம். (439) நெடுவரை நன்னாட நீள்வேல் துணையாக் 2கடுவிசைப் பாயருவி நீந்தி-நடுவிருளி னின்னா தரவரலி னென்கோதை மாதராள் என்னாவ ளென்னுமென் னெஞ்சு - ஐந்திணை. (440) கல்லதருங் கான்யாறு நீந்திக் கரடிகளும் கொல்கரியுஞ் செய்யுங் கொலைபிழைத்து-வல்லிருளிற் சாரன் மலைநாட தன்னந் தனிவந்து சேரல் சிறியாள் திறத்து - கிளவித்தெளிவு. 67. பகல்வரல் என்பது இவ்வகை இரவுக்குறி வந்தொழுகுந் தலைமகனை இரவினது ஏதங்காட்டிப் பகல்வாவென்று சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (441) கழிகட் டலைமலை வோன்புலி யூர்கரு தாதவர்போற் குழிகட் களிறு வெரீஇயரி யாளி குழீஇவழங்காக் கழிகட் டிரவின் வரல்கழல் கைதொழு தேயிரந்தேன் பொழிகட் புயலின் மயிலிற் றுவளு மிவள்பொருட்டே - திருக்கோவையார் 255. (442) அடிமே லகலிட மெல்லாம் 1வணங்க வமரர்தங்கோன் முடிமேல் வளையுடைத் தானெடு மாறன்முன் னாளுயர்த்த கொடிமே லுருமதிர் கூரிருள் வாரன்மி னீர்மகிழும் படிமேற் பகல்வம்மின் வந்தால் விரும்புமென் பல்வளையே - பாண்டிக்கோவை 254. (443) நிரைதா 2ரண்ண னெடுங்கழை யுகுத்த விரிகதிர் நித்திலம் 3பரத்தலின் இரவும் 4பகல்போன் றிலங்குமா லிவணே - பொருளியல் 67. 68. இரவு வரலென்பது இவ்வகை இரவுக்குறி விலக்கிப் பகல்வரவுரைத்த தோழி பகல்வருவானை இரவு வரலுரைத்தல். அதற்குச் செய்யுள் வருமாறு : (444) இறவரை யும்பர்க் கடவுட் பராய்நின் றெழிலியுன்னிக் குறவரை யார்க்குங் குளிர்வரை நாட கொழும்பவள நிறவரை மேனியன் சிற்றம் பல5நினை யாதவர்போல் உறவுரை மேகலை யாட்கல ராம்பக லுன்னருளே - திருக்கோவையார் 260. (445) அஞ்சா தமர்மலைந் தார்1அள நாட்டுட னே2யவிய நஞ்சா ரிலங்கிலை வேல்கொண்ட தென்னவ னாடனைய பஞ்சா ரகலல்கு லாட்குப் பகல்நீ வரிற்பழியா மஞ்சார் சிலம்ப வரவென்ன வூன மயங்கிருளே - பாண்டிக்கோவை 255. (446) வரிவளைத் 3தோளி யொருதனி யொழியப் பிரிது மென்றி யாயிற் பெரிதழிந்து 4பரியல் வாழியோ நெஞ்சே இருளிடை 5யேகலு மெய்துமா னமக்கே - பொருளியல் 66. 69. இரவும் பகலும் குறிவாரல் (வரவொழி) என்பது தலைமகன் வரைவு விரைதல் காரணமாக இரவின் கண்ணும் பகலின் கண்ணும் வரவொழியெனத் தோழி சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (447) சுழியா வரும்பெரு நீர்சென்னி வைத்தென்னைத் தன்தொழும்பிற் கழியா வகைவைத்த சிற்றம் பலவன் கரந்தருமான் விழியா வருள்புரி மென்குழ லாடிறத் தையமெய்யே பழியாம் பகல்வரி னீயிர வேதும் பயனில்லையே - திருக்கோவையார் 261. (448) ஓதங் கடைந்தமு தாக்கி யமரர்க் குணக்கொடுத்துப் பூதம் பணிகொண்ட பூழியன் மாறன் பொதியிலின்வாய் ஏதம் பழியினோ டெய்துத லானிர வும்பகலும் மாதங் 1கடைந்தமென் னோக்கி திறத்தைய வாரன்மினே - பாண்டிக்கோவை 256. (449) கறங்கு வெள்ளருவி பிறங்குமலைக் கவாஅற் றேங்கம ழிணர வேங்கை சூடித் தொண்டகப் பறைச்சீர்ப் பெண்டிரொடு 2தொகை மறுகிற் றூங்குஞ் சிறுகுடிப் பாக்கத் தியன்முரு 3கொப்பினை வயநாய் பிற்படப் பகல்வரிற் கவ்வை யஞ்சுது மிகல்கொள இரும்பிடி கன்றொடு 4விரைஇக் கயவாய்ப் பெருங்கை யானை கோட்பிழைத் 5தொரீஇ அடுபுலி வழங்கு மாரிருள் நடுநாள் தனியை வருதல் அதனினும் அஞ்சுதும் என்னா குவள்கொல் தானே பன்னாட் புணர்குறி வாய்த்த 6புரவுக்குர லேனற் கிளிகடி பாடலும் ஒழிந்தனள் அளியள் 7தானேநின் னளியல திலளே - நெடுந்தொகை 117. (450) முருகற் செவ்வியொடு பகல்வரி னவ்வழி யிரவியற் கவ்வை யஞ்சுதும் இரவரின் அதனினும் பெரிதஞ் சுதுமே - பொருளியல் 31. (451) வாரல் இருபொழுதும் வந்தால் மலைநாட வேரல் புனைதிருத்தோள் மெல்லியலாள்-சூரல் வழியிடையூ றஞ்சு மிரவெலா மன்ன பழியிடையூ றஞ்சும் பகல் - கிளவித் தெளிவு. 70. தன்னுட் கையாறெய்திடு கிளவி என்பது தலைமகள் தனது ஆற்றாமையை எம்போல்வார் உளரோ எனத் திங்கள் மேலும் அன்னத்தின்மேலும் கடலின்மேலும் வைத்துச் சொல்லுதல். அவற்றுள் திங்கண்மேல் வைத்துச் சொல்லுதற்குச் செய்யுள் வருமாறு : (452) விண்டலை யாவர்க்கும் வேந்தர்வண் டில்லைமெல் லங்கழிசூழ் கண்டலை யேகரி யாக்கன்னிப் புன்னைக் கலந்தகள்வர் கண்டிலை யேவரக் கங்குலெல் லாமங்குல் வாய்விளக்கும் மண்டல மேபணி யாய்தமி யேற்கொரு வாசகமே - திருக்கோவையார் 177. அன்னத்தின்மேல் வைத்துச் சொல்லுதற்குச் செய்யுள் வருமாறு : (453) மின்கண் படாவடி வேனெடு மாறன்விண் டார்முனைமேல் மன்கண் படாத மயங்கிரு ணாண்மலி நீர்த்துறைவர்க் கென்கண் படாத நிலைமைசொல் 1லாயிளஞ் சேவறழீஇத் தன்கண் படாநின்ற வன்னத்த 2தேயித் தகவின்மையே - பாண்டிக்கோவை 238. (454) பறைவா யொலியோதம் பந்த ருகளுந் துறைசேர் சிறுகுடியார் துஞ்சினும் துஞ்சாய் இறையின் மருண்மாலை யெம்மோபோ னீத்த துறைவ னுடையையோ நீவாழி நாராய் - பழம்பாட்டு. 71. கடலொடு கவலல் என்பது முன்னர்த் திங்கள் மேலும் அன்னத்தின் மேலும் வைத்துச் சொல்லினளாய்ப் பின்பு கடன்மேல் வைத்து சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (455) பூங்கணை வேளைப் பொடியாய் விழவிழித் தோன்புலியூ ரோங்கணை மேவிப் புரண்டு விழுந்தெழுந் தோலமிட்டுத் தீங்கணைந் தோரல்லுந் தேறாய் கலங்கிச் செறிகடலே யாங்கணைந் 1தோர்நின் னையுமுள ரோசென் றகன்றவரே - திருக்கோவையார் 179. (456) தன்போற் சினத்துரு மேந்திய கோன்கன்னித் 2தாதுறையும் பொன்போன் மலர்புன்னைக் கானலு நோக்கிப் புலம்புகொண்ட வென்போ லிரவினெல் லாந்துயி லாதுநின் றேங்குதியால் அன்போ டொருவற் கறிவழிந் தாயோ அலைகடலே - பாண்டிக்கோவை 257. (457) ஆரணங் குற்றனை கடலே பூழியர் சிறுதலை வெள்ளைத் தோடுபரந் தன்ன மீனார் குருகின் கானலம் பெருந்துறை வெள்விரி தாழைக் கைதலை நள்ளென் கங்குலுங் கேட்குநங் குரலே - 3குறுந்தொகை (458) உன்னையு நீத்தகன்றா ருண்டோ உடல்கருகிப் புன்னை கமழும் பொருகடலே-யென்னைப்போல் நெஞ்சா குலம்பெருகி நீயும் இரவெல்லாந் துஞ்சாத தென்கொலோ சொல்லு - கிளவித் தெளிவு. 72. ஆற்றாமை கூறல் என்பது தலைமகள் தனது ஆற்றாமை தலைமகற்குச் சொல்லி வரைவு கடாதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (459) வளருங் கறியறி யாமந்தி தின்றுமம் மர்க்கிடமாய்த் தளருந் தடவரைத் தண்சிலம் பாதன தங்கமெங்கும் விளரும் விழுமெழும் விம்மும் மெலியும்வெண் மாமதிநின் றொளிருஞ் சடைமுடி யோன்புலி யூரன்ன வொண்ணுதலே - திருக்கோவையார் 193. (460) ஐய வாழியோ வைவாய் ஏனப் புன்றலை மடப்பிடி புலியென வெரூஉம் பொன்மருள் வேங்கை யெம்மூர் போல ஆடவர்ப் பிரிந்தோர்க் கலைக்கும் வாடையு முளதோநின் பெருங்கன் னாட்டே - சிற்றெட்டகம். (461) உள்ளத் தவலம் பெருக வொளிவேலோய் எள்ளத் துணிந்த விருண்மாலை-வெள்ளத்துத் தண்டா ரகலம் தழூஉப்புணையா நீநல்கி னுண்டாமென் றோழிக் குயிர் - வெண்பாமாலை 328. (462) பந்தி இளமிளகு பாராதே தின்றிளைய மந்தி தளரு மலைநாட - முந்தருவி சோர வரிநெடுகண் சுற்றும் பனிவாடை யீர மெலிவாள் இவள் - கிளவித்தெளிவு. 73. வரைவது கிளத்தல் என்பது இரவுக்குறி வந்தொழுகுந் தலைமகற்குத் தலைமகளுந் தோழியு மாற்றாத் தன்மையராய் வரைவு பயக்கச் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (463) பற்றொன்றில் லார்பற்றுந் தில்லைப் பரன்பரங் குன்றினின்ற புற்றொன் றரவன் புதல்வன் எனநீ புகுந்துநின்றால் மற்றுன்று மாமல ரிட்டுன்னை வாழ்த்திவந் தித்தலன்றி மற்றொன்று சிந்திப்ப ரேல்வல்ல ளோமங்கை வாழ்வகையே - திருக்கோவையார் 178. (464) நெய்ந்நின்ற வேனெடு மாறனெங் கோனந்த ணேரியென்னு மைந்நின்ற குன்றச் சிறுகுடி நீரைய வந்துநின்றாற் கைந்நின்று கூப்பி வரையுறை தெய்வமென் னாதுகண்டார் மெய்ந்நின் றுணர்வ ரெனினுய்யு மோ1மற்றிவ் வேந்திழையே - பாண்டிக்கோவை 259. (465) கந்தன் எனநீ கதிர்வேல் வலனேந்தி செந்தினைசூழ் குன்றச் சிறுகுடிவாய்-வந்தருளி நின்றா லிறவுளர்கள் மெய்யுணரி னேரிழைக்கு நன்றாத லுண்டோ நவில் - பழம்பாட்டு. 74. குறிப்புரை யென்பது இரவுக்குறிக்கட்டலைமகன் சிநைப்புறத் தானாவதுணர்ந்து அன்னை என்னைக் குறித்து நோக்கினாள் எனப் படைத்துத், தோழி தலைமகட்குச் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (466) விண்ணுஞ் செல்வறி யாவெறி யார்கழல் வீழ்சடைத்தீ வண்ணன் சிவன்றில்லை மல்லெழிற் கான லரையிரவி லண்ணன் மணிநெடுந் தேர்வந்த துண்டா மெனச்சிறிது கண்ணுஞ் சிவந்தன்னை யென்னையு நோக்கினள் கார்மயிலே - திருக்கோவையார் 256. (467) அன்னாய் நெருநல் நிகழ்ந்தது கேளயல் வேந்திறைஞ்சும் பொன்னார் கழனெடு மாறன் குமரியம் பூந்துறைவாய் மின்னார் மணிநெடுந் தேர்கங்குல் வந்தொன்று மீண்டதுண்டே லென்னா முகஞ்சிவந் தென்னையு நோக்கின ளெம்மனையே - பாண்டிக்கோவை 260. 75. இல்லதுரைத்தல் என்பது இவ்வகை வந்தொழுகுந் தலைமகற்குத் தோழி இல்லது மொழிந்து வரைவு கடாதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (468) வான்றோய் பொழிலெழின் மாங்கனி மந்தியின் வாய்க்கடுவன் தேன்றோய்த் தருத்தி மகிழ்வகண் டாடிரு நீண்முடிமேல் மீன்றோய் புனற்பெண்ணை வைத்துடை யாளையு மேனிவைத்தான் வான்றோய் மதிற்றில்லை மாநகர் போலும் வரிவளையே - திருக்கோவையார் 257. (469) பண்ணிவர் சொல்லிகண் டாள்1நென்னற் பாழிப் பகைதணித்த மண்ணிவர் சீர்மன்னன் வாணெடு மாறன் மலையமென்னும் விண்ணிவர் குன்றத் தருவிசென் றாடியொர் வேங்கையின்கீழ்க் கண்ணிவர் காதற் பிடியொடு நின்ற கருங்களிறே - பாண்டிக்கோவை 261. (470) கழைகெழு சிலம்பி னருவி யாடு 2மழைமதக் களிறொடு பிடிகண் டுழைகெழு நோக்கி யுள்ளினள் பெரிதே - பொருளியல் 83. இவையெல்லாம், (471) காம மிக்க கழிபடர் கிளவியும் காப்புச் சிறைமிக்க கையறு கிளவியும் ஆறுபார்த் துற்ற அச்சக் கிளவியும் இரவினும் பகலினும் நீவரு கென்றலும் கிழவோன் தன்னை வாரல் என்றலும் தன்னுட் கையா றெய்திடு கிளவியும் அன்ன மரபிற் பிறவுந் தொகைஇத் தன்னை யழிந்த கிளவி யெல்லாம் வரைதல் வேட்கைப் பொருள வென்ப - இறையனார் அகப்பொருள் 30. என்னுஞ் சூத்திரத்துட் கண்டுகொள்க. வரைதல் வேட்கை முடிந்தது உ. உடன்போக்கு வலித்தல் 76. அலர் அறிவுறுத்தல் என்பது தலைமகளது ஆற்றாமை அலராயிற்றெனத் தோழி உரைத்தல். அதற்குச் செய்யுள் வருமாறு : (472) அலரா யிரந்தந்து வந்தித்து மாலா யிரங்கரத்தால் அலரார் கழல்வழி பாடுசெய் தாற்கள வில்லொளிகள் அலரா விருக்கும் படைகொடுத் தோன்றில்லை யானருள்போன் றலராய் விளைகின்ற தம்பல்கைம் மிக்கைய மெய்யருளே - திருக்கோவையார் 180. (473) பலரா வெதிர்சென்று பாழிப்பட் டார்தங்கள் 1பையநிணம் புலரா வசும்புடை வேன்மன்னன் வேம்பொடு போந்தணிந்த மலரார் மணிமுடி மான்றேர் வரோதயன் வஞ்சியன்னாட் கலராய் விளைகின்ற தாலண்ண 2லார்செய்த வாரருளே - பாண்டிக்கோவை 189. (474) அறிந்தோர் அறனிலர் 1என்றலர் சிறந்த இன்னுயிர்க் கழியினு நனியின் னாதே புன்னையங் கானற் புணர்குறி வாய்த்த 2மின்னே ரோதியென் றோழிக் கன்னோ படுமணி யானைப் பசும்பூட் சோழர் கொடிநுடங்கு மறுகின் ஆர்க்காட் டாங்கட் கள்ளுடைத் தடவிற் புள்ளொலித் தோவாத் தேர்வழங்கு தெருவின் அன்ன கவ்வை யாகின்ற தையநின் னருளே - நற்றிணை 227. (475) நிலவோ ரன்ன வெண்மணற் பாக்கத்து மலரேர் கூந்தல் மடந்தைக் கலரா3கின்ற தையநின் னருளே - பொருளியல் 86. (476) அம்பல் பெருகி அலரான தல்லிதொறுந் தும்பி முரலுஞ் சுரிகூந்தற்-கொம்பனைய பண்ணறா மென்சொல்லி பால்வந்து பல்காலும் அண்ணறான் செய்யும் அருள் - கிளவித்தெளிவு. 77. அயன்மணம் உரைத்தல் என்பது தலைமகற்குத் தோழி படைத்து மொழிந்து பிறருங் காப்பணியக் கருதுவர் என்னும். அதற்குச் செய்யுள் : (477) மணியக் கணியு மரனஞ்ச மஞ்சி மறுகிவிண்ணோர் பணியக் கருணை தரும்பரன் றில்லையன் னாடிறத்துத் துணியக் கருதுவ தின்றே துணிதுறை வாநிறைபொன் அணியக் கருதுகின் றார்பலர் மேன்மேல் அயலவரே - திருக்கோவையார் 195. (478) நீரணி வேலி நெடுங்களத் தொன்னார் நிணமளைந்த போரணி வேன்மன்னன் கன்னியன் னாடன்னைப் பொன்னணிவான் காரணி வார்முர சார்ப்பப் பிறருங் கருதிவந்தார் வாரணி பூங்கழல் அண்ணலென் னோநீ வலிக்கின்றதே - பாண்டிக்கோவை 191. (479) அணிகொணர்ந் தனரே அயலோர் அண்ணல் துணிவுறு செய்தி யாதுகொல் மணிபுரை கூந்தல் மடந்தைதன் வயினே - பொருளியல் 87. (480) பொன்னிதழிற் பைந்தாதும் போதும் புறம்புதைத்த வின்னறல்போல் ஏழை யிருங்கூந்தல்-பொன்னணியுந் தேன்சூழுந் தார்க்கண்டன் றெவ்விற் றிகைத்தன்ப யான்சூழ வுண்டோ வினி - கண்டன் அலங்காரம். 78. மணமுரசு அறைதல் என்பது இவ்வகை படைத்து மொழிந்த தோழி நாளை மணமுரசறையுமெனச் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (481) பாப்பணி 1வோன்றில்லைப் பல்பூ மருவுசில் லோதியைநற் காப்பணிந் தார்பொன் னணிவா ரினிக்கமழ் பூந்துறைவ கோப்பணி வான்றோய் கொடிமுன் றினின்றிவை யேர்குழுமி மாப்பணி லங்கள் முழங்கத் தழங்கு மணமுரசே - திருக்கோவையார் 196. (482) வேலைத் 2தொல்லைத்தகண் ணேழை திறத்தின்று 3விண்ணுரிஞ்சு சோலைச் சிலம்ப 4துணியொன்று மின்போற் சுடருமுத்த மாலைக் குடைமன்னன் வாணெடு மாறன்வண் கூடலின்வாய்க் காலைத் திருமண முற்றத் தியம்புங் கடிமுரசே - பாண்டிக்கோவை 192. (483) அணிவர் அயலார்பொன் னாங்கதனுக் கீங்குத் துணிவதனை யின்றே துணிநீ-பணிகொள் அரவறையு மல்குலாட் கையனே நாளை முரசறையு நங்கடைவாய் முன் - பழம்பாட்டு 79. பரிசங்கிளத்தல் என்பது இவ்வகை மொழிந்த பாங்கிக்குத் தலைமகன் என் செயற்பால தென்னும்; அதற்குத் தோழி சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (484) எலும்பா வணியிறை யம்பலத் தோனெல்லை செல்குறுவோர் நலம்பா வியமுற்று நல்கினுங் கல்வரை நாடரம்ம சிலம்பா வடிக்கண்ணி சிற்றிடைக் கே1நமர் செப்பவொட்டார் கலம்பா வியமுலை யின்விலை யென்னீ கருதுவதே - திருக்கோவையார் 197. (485) நல்லளந் 2தாளு மமுதளந் 3தாளு நகைக்குநல்ல வில்லளந் தாணுதற் கும்விலை கேட்கில் விரிதமிழின் சொல்வளந் தானொரு பாவலர்க் காய்த்துறை யூர்நறையூர் நெல்வளந் தானளந் தானெடு நாட்டிற்கு நேர்நிற்குமே - நறையூரந்தாதி. (486) என்னா லிதுசெய்கென் றென்சொல்ல லாமிகற் பாழிவென்ற மின்னா ரயிற்படைச் செங்கோல் விசாரிதன் வீங்கொலிநீர்த் தென்னா டெனினும்கொள் ளார்விலை யாத்தமர் சீர்செய்வண்டு முன்னாள் மலரென் றணையுங்க ணேழை முகிழ்முலைக்கே - பாண்டிக்கோவை 197. (487) யானெவ னறிகோ அண்ணல் வானொடு நானில 1முழுதும் பெறினும் பேணா ரம்ம இவள்பூண் முலைக்கே - பொருளியல் 89. (488) பூஞ்சுணங்கின் மென்முலைக்குப் பொன்னுலகோ போதாது நாஞ்சில சொல்லி னனியொல்லா-தீஞ்சொற் பிறைநுத லுண்ணாட் டமரோ பெரியார் குறைவிலதாங் கொள்ளார் பிற - கிளவிமாலை. (489) கொங்கைக்குந் தூய குவளைசேர் கோகனகச் செங்கைக்கு மென்னவிலை செப்புவோம்-மங்கை தெரியா மருங்குலுக்குத் தேசம்விலை யென்னத் தரியார் மலைவாணர் தாம் - கிளவித்தெளிவு. 80. உடன் போக்குரைத்தல் என்பது இவ்வகைப் பரிசங்கேட்ட தலைமகன் உடன்கொண்டு போவது துணிந்தே னெனினும் நிழலு நீருமில்லாத அழல்வெங் கான மாற்ற கில்லாள் கொல்லோ வென்னுந் தலைமகற்குத் தோழி சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (490) பிணையுங் கலையும்வன் பேய்த்தே ரினைப்பெரு நீர்நசையால் அணையு முரம்பு நிரம்பிய அத்தமு மையமெய்யே யிணையு மளவுமில் லாவிறை யோனுறை தில்லைத்தண்பூம் பணையுந் தடமுமன் 1றோநின்னோ டேகினம் பைந்தொடிக்கே - திருக்கோவையார் 202. (491) மால்புரை யானை மணிமுடி மாறன்மண் பாய்நிழற்றும் பால்புரை வெண்குடைத் தென்னன் பறந்தலைக் கோடிவென்ற வேல்புரை வெம்மைய கான மெனினுமவ் வேந்தன்செய்ய கோல்புரை தண்மைய 2வாநின்னோ டேகினக் கொம்பினுக்கே - பாண்டிக்கோவை 198. (492) தீயினும் வெம்மைய என்குவை யாயின் யாவதும் இனிய கானம் சேயுயர் 3சிலம்ப நின்னொடு செலினே - பொருளியல் 90. (493) மன்னொடு வேலினாய் மாழை மடநோக்கி நின்னொடு செல்ல நெடுங்கானங்-கொன்னுனைய வேலன்ன வெம்மைய வாயினும் வேந்தர்செங் கோலன்ன வாகுங் குளிர்ந்து - கிளவிமாலை. (494) தீய பெருவனமும் செந்தறையும் நந்தறையுந் தூய பெருவனமும் சோலையுமா-மாய கலம்பா முலைமகட்குக் காமருபூங் கண்ணிச் சிலம்பாநின் பின்னர்ச் செலின் - கிளவித்தெளிவு. 81. செலவுடன் படுத்தல் என்பது இவ்வகையுடன்போக்கு நயப்பித்த தோழி தலைமகளுழைச் சென்றுணர்த்தத் தலைமகன் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (495) மற்பாய் விடையோன் மகிழ்புலி யூரென் னொடும்வளர்ந்த பொற்பார் திருநாண் பொருப்பர் விருப்புப் புகுந்துநுந்தக் கற்பார் 1நெடுங்கால் கலக்கிப் பறித்தெறி யக்கழிக இற்பாற் பிறவற்க வேழையர் வாழி யெழுமையுமே - திருக்கோவையார் 208. (496) ஏணு மிகலு மழிந்துதெவ் வேந்தரெல் லாமிறைஞ்சிக் காணுங் கழனெடு மாறனெங் கோனின்று காக்குமண்மேற் 2சேணுமென் னோடக லாதுட னாய்த்திரி வின்றிவந்த நாணு 3மளியத் தகுகற்பு மேற்பட நைகின்றதே - பாண்டிக்கோவை 200. (497) அளிதோ தானே நாணே நம்மொடு நனிநீ டுழந்தன்று 4மன்னோ வினியே வான்பூங் 5கொம்பி னோங்குமணற் சிறுசிறை தீம்புன னெரிதர 6வீய்ந்துக் 7காங்குத் தாங்கு மளவைத் தாங்கிக் காம நெரிதரக் கைந்நில் லாதே - குறுந்தொகை 149. (498) சிலரும் பலருங் 8கட்க ணோக்கி மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி மறுகிற் பெண்டிர் அம்பல் தூற்றச் சிறுகோல் 9வலத்தள் அன்னை அலைப்ப அலந்தனென் வாழி தோழி கானற் புதுமலர் தீண்டிய பூநாறு குரூஉச்சுவற் 10கடுமா பூண்ட 11கதழ்பரி கடைஇ நடுநாள் வரூஉ மியல்தேர்க் கொண்கனொடு செலவயர்ந் திசினால் யானே அலர்சுமந் தொழிகவிவ் வழுங்க லூரே - நற்றிணை 149. (499) ஊருஞ் சேரியு மலரெழ யாயுந் தானே யிருக்க 1தன்மனை யானே திருந்துவேல் விடலையொடு கெழீஇ யருஞ்சுரஞ் சேறல் புரிந்தன னினியே - பொருளியல் 92. 82. செலவழுங்குவித்தல் என்பது இவ்வகை யுடன்செலவுற்ற நிலைமை கண்ட செவிலித்தாய் முதலாயினார்க்கு உரைத்ததற் பின் இவர் நீரிலாரிடைப் போய் வருந்துங் குறையென்னெனத் தோழி தலைமகற்குச் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு: (500) பாயப் புரவி கடாயன்று பாழிப் பகைமலைந்தார் தேயச் சிலை 2கொண்ட தென்னவன் 3றன்றென் பொதியிலின்வாய் வேயொத்த 4தோளிணை நும்மொடு சேறல் 5விருப்புறுந்தன் ஆயத் தவரை நினைந்துண்க ணீர்கொண் டலம்வந்தவே - பாண்டிக்கோவை 201. (501) விளம்பழங் கமழும் கமஞ்சூற் குழிசிப் பாசந் தின்ற தேய்கான் மத்தம் 6நெய்தேர் இயக்கம் வெளின்முதன் முழங்கும் வைகுபுலர் விடியன் மெய்கரந்து தன்கால் அரியமை சிலம்பு 7கழீஇ நன்மாண் வரிப்புனை பந்தொடு வைஇய செல்வோள் இவைகாண் டோறு நோவர் மாதோ அளியரோ அளியரென் னாயத் தோரென நும்மொடு 8வரவியா னயரவும் 9என்வரைத் தன்றியுங் கலுழ்ந்தன கண்ணே - நற்றிணை 12. (502) எழினுத னும்முட னேகுதல் விரும்பு மழிவுறு மாயத் தவர்களை நினைந்து 1விழைவுறு மெண்ணந் தான்மிகத் தருமே - பழம்பாட்டு. இவையெல்லாம், அம்பலும் அலருங் களவு - (26-42) என்னுஞ் சூத்திரத்துட் கண்டு கொள்க. (உடன்போக்கு வலித்தல் முடிந்தது) தோழியாலாய கூட்ட முடிந்தது 2களவொழுக்கம் முடிந்தது 4. கற்பொழுக்கம் கற்பொழுக்கவகை 1. வெளிப்படை நிலை 43. வெளிப்படை முதலா விதும்பல் ஈறாக் களிப்பென உரைப்பது கற்பெனப் படுமே. என்பது என்னுதலிற்றோ எனின் அறத்தொடு நிலை முதலாகப் புணர்ச்சி விதும்பல் ஈறாகக் கற்பெனப்படும் என்றவாறு. (503) முக்கட் கூட்ட முதலா நான்குந் தொக்கிய வொழுக்கங் கற்பெனத் தோன்றும் - பொருளியல் 21. என்பது (1) அறத்தொடு நிலையும், (2) உடன் செலவும், (3) இடைப்பிரிவும், (4) ஆயிடைப் பிரிவும் என வகைப்பட்ட நான்குந் தொக்கவொழுக்கம் 1முக்கட் கூட்டமுடைய கற்பென்று சிறப்பிக்கப்படுமென்று, பொருளியலுடையாரும், அறத்தொடு நிலை கற்புக்கு முதலென்று சொன்னாரென்க. 44. அடைவாம் வெளிப்படை யாங்கே வரையும் பொருட்கேகுத லுடையா துடனிலைச் செல்லுதல் கல்விப் பிரிவுணர்த்தல் படையார் விழிக்காண காவலிற் போகும் படியுணர்த்தல் நடையார் பகைதணித் தல்லறக் கற்பி னவிற்றுவதே. 45. நவில்தரும் வேந்தருக் குற்றுழிப் போதல் நலம்பயின்ற புவிமிசை நாமப் பொருள்வயிற் போதல் புடைவளரும் குவிமுலை யாயப் பரத்தையிற் போதல் எனநாற்குலக் கவிஞர்கள் தாமொன் பதுவகை யாமெழிற் கற்பென்பரே. இச்சூத்திர மிரண்டும் என்னுதலிற்றோ வெனின், கற்பொழுக்கம் ஒன்பது வகைப்படும் என்பதை அறிவித்தலைக் கருதிற்று. என்னை? வெளிப்படை நிலையும், வரைபொருட் கேகலும், உடனிலைச் செலவும், கல்விப் பிரிவுணர்த்தலும், காவலிற் பிரிவுணர்த்தலும், பகைதணி வினைப் பிரிவுணர்த்தலும், வேந்தர்க் குற்றுழிப் பிரிவுணர்த்தலும் பொருள் வயிற் பிரிதலும் பரத்தையிற் பிரிதலும் என ஒன்பது வகைப்பட்டவாறு கண்டு கொள்க. (இங்குச்) சொல்லப்பட்ட கற்பொழுக்கம் ஒன்பது வகையினுள்ளும் வெளிப்படைநிலை பத்தொன்பது வகைப் பட்ட கிளவியாம். அவை வருமாறு : 46. கற்பமர் பூத்தான் தருமப் புணர்ச்சியுங் காதலிக்குப் பொற்பமர் தண்புனல் தான்தரு நீதிப் புணர்ச்சியும்போ ரற்புத மாருங் களிறு தருமப் புணர்ச்சியுமாங் கிற்பயில் கட்டுவிக் கேட்டல் எழிற்கட் டுவிகூறலே. 47. கூறப் படும்வெறிதா னங்கெடுத் தல்கூ றுமவ்வெறிக் கீறற் றழிதல் அறிவுறக் கூறல் எழிற்றலைவி வேறற் றவளுக் கறத்தொடு நிற்றல் வெறிவிலக்கல் ஊறற் றுயிரெலா முய்க்கு முருகற் குரைகடிதே. 48. கடியார் செவிலித்தாய் நற்றாய்க் கறத்தொடு நிற்றலவள் வெடியார் இயலைக் கறத்தொடு நிற்றல் மிகு வேறலைப் படிவார் வரைவை மறுத்தல் பரிச மொடுவருதல் வடிவார் வரைவு மலிதல் வரைவை யுடன்படலே. 49. வரைவார் முரசுக் கிரங்கல் மணமுர சம்வினாவென் றுரையார் கிளவிகள் ஈரஞ்சொ டொன்பது மோங்குந்திரைக் கரையார் கருங்கடல் சூழல கத்திற் கலைத்தமிழோர் விரையார் குழலாய் வெளிப்படை யென்று விளம்பினரே. இச்சூத்திரம் நான்கும் என்னுதலிற்றோவெனின் முன் சொன்ன வெளிப்படை நிலை பத்தொன்பது வகைப்பட்ட கிளவியாம் என்றார். அவை யறிவித்தலைக் கருதிற்று. என்னை? (1) பூத்தரு புணர்ச்சியும், (2) புனறரு புணர்ச்சியும், (3) களிறு தரு புணர்ச்சியும், (4) கட்டுவிக் கேட்டலும், (5) கட்டுவி கூறலும், (6) வெறியெடுத்தலும், (7) வெறியினுக் கழிதலும், (8) அறிவுறக் கிளத்தலும், (9) தலைமகள் தோழிக் கறத்தொடு நிற்றலும், (10) வெறிவிலக்கலும், (11) முருகற் குரைத்தலும், (12) செவிலி நற்றாய்க் கறத்தொடு நிற்றலும், (13) நற்றாய் தன் ஐயன்மார்க் கறத்தொடு நிற்றலும். (14) வரைவு மறுத்தலும், (15) பரிசமொடு வருதலும், (16) வரைவு மலிவுரைத்தலும், (17) வரைவுடன் படுத்தலும், (18) முரசினுக்கிரங்கலும், (19) முரசு வினாதலும் எனப்படும் என்றவாறு. வெளிப்படை எனினும், அறத்தொடு நிலை எனினும் அமையும். 1. அவற்றுள், பூத்தரு புணர்ச்சி என்பது என்மகட்க இவ் வேறுபாடு எற்றினான் ஆயிற்று என்ற செவிலிக்கு அறத்தொடு சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (504) ஆளரிக் கும்மரி தாய்த்தில்லை யாவருக் கும்மெளிதாந் தாளரிக் குன்றிற்றன் பாவைக்கு மேவித் தழல்திகழ்வேற் கோளரிக் குந்நிக ரன்னா ரொருவர் குருமலர்த்தார் வாளரிக் கண்ணிகொண் டாள்வண்ட லாயத்தெம் வாணுதலே -திருக்கோவையார் 225. (505) கந்தார் களிறு கடாய்ச்செந் நிலத்தைக் 1கறுத்தெதிராய் வந்தார் அவியவை வேல்கொண்ட 2கோன்கொல்லி வார்துறைவாய்ப் பந்தார் விரலிதன் பாவைக்கு வேண்டப்பைம் போதொருவர் தந்தார் தரவவை கொண்டணிந் தாளித் தடங்கண்ணியே -பாண்டிக்கோவை 146. (506) உள்ளஞ்செய் பாவைக்குன் கைப்போ தருளென்னக் கொள்ளென் றொருவன் கொடுத்ததற்பின்-கள்ளுண்டு வண்டினந்தாழ் கின்ற மலர்க்குவளைப் போதிரண்டு கொண்டணிந்தாள் நீபயந்த கொம்பு -பழம் பாட்டு. 2. புனல்தரு புணர்ச்சி என்பது நின்மகன் சுனையாடப் புகுந்த விடத்து அழுந்ததுபடக் கண்டு ஒரு தோன்றல் கரை யேற்றினான் எனச் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு: (507) ஓங்கிய வெண்குடைப் பைங்கழற் செங்கோல் உசிதன்வைகை வீங்கிய தண்புன லாடி விளையாட் டயர்பொழுதிற் றேங்கிய தெண்டிரை வாங்க வொழுகிநின் சேயிழையாள் நீங்கிய போதருள் செய்தனன் வந்தோர் நெடுந்தகையே - பாண்டிக்கோவை 152. (508) காமர் கடும்புனல் கலந்தெம்மோ டாடுவாள் தாமரைக்கண் புதைத்தஞ்சித் தளர்ந்ததனோ டொழுகலான் நீணாக 3நறும்பபைந்தார் தயங்கப்பாய்ந் தருளினாற் பூணாக முறத்தழீஇப் 4போதந்தா னகனகலம் வருமுலை புணர்ந்தன வென்பதனால் என்றோழி அருமழை தரல்வேண்டிற் றருகிற்கும் பெருமையளே - கலித்தொகை 39. (509) 1கயஞ்சால் மறுசுழி யழுந்தின மாக முயங்கினள் எழுந்த அண்ணலை வயங்கிணர்க் கோதை மறவலள் பெரிதே - பொருளியல் 106. 3. களிறு தருபுணர்ச்சி என்பது நீ புனங்காக்கச் சொல்ல யாங்கள் போய்த் தினைக்கிளி கடியுங்கால் வந்த யானையை அருளுடையான் ஒருவன் கடிந்து உயிர்தந்து போயினான் எனச் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு: (510) மனக்களி யாய்இன் றியான்மகிழ் தூங்கத்தன் வார்கழல்கள் எனக்களி யாநிற்கும் அம்பலத் தோன்இருந் தண்கயிலைச் சினக்களி யானை கடிந்தா ரொருவர்செவ் வாய்ப்பசிய புனக்கிளி யாங்கடி யும்வரைச் சாரற் பொருப்பிடத்தே - திருக்கோவையார் 293. (511) உறுகற் புடைமையின் உள்ளுமிப் பேதை உசிதனொன்னார் மறுகத் திறலுரும் ஏந்திய கோன்கொல்லி மால்வரைவாய்த் துறுகற் புனமும் சிதைத்தெங்கள் தம்மையும் துன்னவந்த சிறுகட் களிறு கடிந்திடர் தீர்த்த சிலம்பனையே - பாண்டிக்கோவை 149. (512) சுள்ளி சுனைநீலஞ் சோபா லிகைசெயலை யள்ளி யளகத்தின் மேலாய்ந்து-தெள்ளி யிதணாற் கடியொடுங்கா வீர்ங்கடா யானை யுதணாற் கடிந்தா னுளன் - திணைமாலை நூற்றைம்பது 2. 4. கட்டுவிக் கேட்டல் என்பது தலைமகள் மெலிவுகண்ட செவிலி இவளுற்ற நோயைத் தெரிய வறிந்து சொல்லுமின் எனக் கட்டுவித்தியிடம் கேட்டல். அதற்குச் செய்யுள் வருமாறு: (513) சுணங்குற்ற கொங்கைகள் சூதுற் றிலசொல் தெளிவுற்றில குணங்குற்றங் கொள்ளும் பருவமு றாள்குறு காவசுரர் நிணங்குற்ற வேற்சிவன் சிற்றம் பலநெஞ் சுறாதவர்போல் அணங்குற்ற நோயறி வுற்றுரை யாடுமின் அன்னையரே -திருக்கோவையார் 283. 5. கட்டுவி கூறல் என்பது கட்டுவியிடந் தலைவி மெலிவு பற்றிக் கேட்ட விடத்து இவளுக்கு முருகணங் கொழியப் பிறிதொன்றுமில்லை என அவள் கூறுதல். (514) குயிலிதன் றேயென்ன லாஞ்சொல்லி கூறன்சிற் றம்பலத்தான் இயலிதன் றேயென்ன லாகா இறைவிறற் சேய்கடவும் மயிலிதன் றேகொடி வாரணங் காண்கவன் சூர்தடிந்த அயிலிதன் றேயிதன் றேநெல்லிற் றோன்று மவன்வடிவே -திருக்கோவையார் 285.) (515) எய்யா வுள்ளமொ டினையல் வாழியெம் 1மைதபு கழங்கிற் பட்டது முளதே, யதுதான் மையில் காட்சியின் வயங்குயிர் மயங்கிய தெய்வ வாணுரு வாகுதல் தெளிவே -பொருளியல் 97. 6. வெறியெடுத்தல் என்பது கட்டுவிக் கேட்ட செவிலித் தாய் வெறியெடுப்பித்தல். அதற்குச் செய்யுள் வருமாறு : (516) வேலன் புகுந்து வெறியா டுகவெண் மறியறுக்க காலன் புகுந்தவி யக்கழல் வைத்தெழிற் றில்லைநின்ற மேலன் புகுந்தென்க ணின்றான் இருந்தவெண் காடனைய பாலன் புகுந்திப் பரிசினி னிற்பித்த பண்பினுக்கே -திருக்கோவையார் 286. (517) வெறியா டுகதிறல் வேலன் புகுந்து வியந்துவெள்ளை மறியே யறுக்க மலர்ப்பலி தூவுக வண்டமிழ்நூல் குறிவா னிகந்தசெங் கோலரி கேசரி கூடலன்ன சிறியா ளிவடன்னை யிப்படி யாக்கிய தீங்கினுக்கே -பாண்டிக்கோவை 154. (518) மறியறுத்த செங்குருதி தன்னால் மனைமுன் வெறியெடுக்க வெண்பலிதூய் வேலன்-வெறியறுத்த மான்கொண்ட கண்ணி மதிகொண்ட வாணுதலாள் தான்கொண்ட விந்நோய் தனக்கு -பழம்பாட்டு. 7. வெறியினுக்கு அழிதல் என்பது செவிலித்தாய் வெறியெடுப்பக் கண்டு ஆற்றாமல் தன்னுள்) தலைமகள் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு: (519) அயர்ந்தும் வெறிமறி யாவி செகுத்தும் விளர்ப்பயலார் பெயர்ந்து மொழியா விடினென்னை பேசுவ பேர்ந்திருவர் உயர்ந்தும் பணிந்தும் உணரான தம்பலம் உன்னலரிற் றுயர்ந்தும் பிறிதி னொழியினென் னாதுந் துறைவனுக்கே -திருக்கோவையார் 287. (520) 1வீயா மரபின் ஒருதிறம் நாடி ஆவயி னுரைப்பின் எவனோ தோழி நாம முந்நீர் போலக் காம வெந்நோய் கையி)கந் தன்றே - பொருளியல் 99. 8. 1அறிவுக் கிளத்தல் என்பது நாண்துறந்தும் வெறிவிலக்கு விப்பன் எனத் தலைமகள் தோழியைக் கொண்டு வெறிவிலக்கு விக்க நினைத்தல். அதற்குச் செய்யுள் வருமாறு : (521) சென்றார் திருத்திய செல்லல்நின் றார்கள் சிதைப்பரென்றால் நன்றா வழகிதன் றேயிறை தில்லை தொழாரின்நைந்தும் ஒன்றா மிவட்கு மொழிதற்கில் லேன்மொழி யாதுசெய்யேன் குன்றார் துறைவர்க் குறுவேன் உரைப்பனிக் கூர்மறையே -திருக்கோவையார் 288. 9. தலைமகள் அறத்தொடு நிற்றல் என்பது யாய்க்கு அறிவிக்க வேண்டுந் தோழிக்குத் தலைமகள் அறத்தொடு நிற்றல். அதற்குச் செய்யுள் வருமாறு : (522) வண்டலுற் றேமெங்கண் வந்தொரு தோன்றல் வரிவளையீ ருண்டலுற் றேமென்று நின்றதொர் 2போதுடை யான்புலியூர்க் கொண்டலுற் றேறுங் கடல்வர வெம்முயிர் கொண்டுதந்து கண்டலுற் றேநின்ற சேரிச்சென் றானோர் கழலவனே - திருக்கோவையார் 290. (523) சிற்றிலின் வந்தொரு தோன்றல் சிறுசோ றிடுமெனநின் றுற்றுரை யாடு மளவி லுசித னுலகளந்த கொற்றவன் மாறன் முசிறியைச் சூழ்ந்த குணகடல்வந் தெற்றுநல் வாயெம் உயிரளித் தேகின னேந்திழையே 1-பாண்டிக்கோவை. ? (524) தோழி வாழி மேனா ளொருவ னாழ்கய மருங்கி னழுந்தத் தாழ்பெருந் தடக்கையின் வாங்கினன் தகைத்தே -பொருளியல் 94. 10. வெறிவிலக்கு என்பது இவ்வகை சொல்லக் கேட்ட தோழி வெறி விலக்குதல். அதற்குச் செய்யுள் வருமாறு: (525) விதியுடை யாருண்க வேரி விலக்கல மம்பலத்துப் பதியுடை யான்பரங் குன்றினிற் பாய்புனல் யாமொழுகக் கதியுடை யான்கதிர்த் தோணிற்க வேறு கருதினின்னின் மதியுடை யார்தெய்வ மேயில்லை 2வேறினி வையகத்தே -திருக்கோவையார் 292. (526) சேர்ந்தசங் கத்த சிறுநுதற் காகச்செவ் வேன்முருகற் கீர்ந்தசங் கத்தையிட் டாலென் பயன்கட் டிலங்கைச்செந்தீக் கூர்ந்தசங் கத்துவிற் கோலிய கொற்றவன் வெற்றிச்செங்கை யார்ந்தசங் கத்தரங் கன்றிருத் தார்கொண் டணிமின்களே -கோயிலந்தாதி (527) வண்டார் இரும்பொழில் வல்லத்துத் தென்னற்க மாறெதிர்ந்து விண்டா ருடலின் மறியறுத் 1தூட்டி வெறியயர்ந்து தண்டார் முருகற் றருகின்ற வேலநற் றண்சிலம்பன் ஒண்டார் அகலமு முண்ணுங் கொலோநின் னுறுபலியே - பாண்டிக்கோவை 155. (528) 2தண்ணென் சாயலிவ ளுண்ணோய் தணிய எண்ணினை கொடுத்தி யாயின் அண்ணல் ஆகமு முண்ணுமோ பலியே -பொருளியல் 104. (529) நீலக் கருந்தடங்கண் ணித்தில வெண்ணகைக்குக் கோலத் தளிர்வண்ணங் கூட்டுமே-வேல வெறியாருந் தார்க்கண்டன் மேவாரில் வாட மறியாடு கொல்லும் வழக்கு -கண்டனலங்காரம். (530) கோல மறியின் குருதியாற் கொய்ம்மலரால் வேல னயரும் வெறியாட்டுச்-சால மடவார் மயின்முருக னன்றியே யண்ணல் தடமார்பு முண்ணுமோ தான் -கிளவித்தெளிவு. 11. முருகற் குரைத்தல் என்பது இவ்வகைப்பட்ட வெறியை விலக்கி வைத்து முருகற்கு உரைப்பாளாய் அயலார் கேட்பச் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு: (531) பொன்னணங் கீர்ம்புனற் பூலந்தை யொன்னார் புலாலளைந்த மின்னணங் கீரிலை 3வேல்மன்னர் கோன்விய னாட்டவர்முன் றன்னணங் கன்மை யறிந்தும் வெறியின்கட் டாழ்ந்தமையால் மன்னணங் காயினு மாகவிச் செவ்வேள் மடவியனே -பாண்டிக்கோவை 157. (532) கடவுட் கற்சுனை 1யடையிழந் தவிழ்ந்த பறியாக் குவளை மலரொடு காந்தட் குருதிர யொண்பூ வுருகெழக் கட்டிப் பெருவரை யடுக்கம் பொற்பச் சூர்மகள் அருவி இன்னியத் தாடு நாடன் மார்புதர வந்த படர்மலி யருநோய் நின்னணங் கன்மை யறிந்து மண்ணாந்து கார்நறுங் கடம்பின் கண்ணி சூடி வேலன் வேண்ட 2வெறியிடை வந்தோய் கடவு ளாயினு மாக மடவை மன்ற வாழிய முருகே -நற்றிணை 34. (533) பேதை வாழிய முருகே யாவது மேதில னென்பதை யுணர்ந்து வாராநோய் தணிய வருத லானே -3பொருளியல் (?) 12. செவிலி அறத்தொடு நிற்றல் என்பது தோழி அறத்தொடு நிற்றல் கேட்ட செவிலி நற்றாய்க்குக் கூறுதல். அதற்குச் செய்யுள் வருமாறு: (534) இளையாள் இவளையென் சொல்லிப் பரவுது மீரெயிறு முளையா வளவின் முதுக்குறைந் தாண்முடி சாய்த்திமையோர் வளையா வழுத்தா திவருருச் சிற்றம் பலத்துமன்னன் றிளையா வருமரு விக்கயி லைப்பயில் செல்வியையே -திருக்கோவையார் 294. *(535) முருந்தார் கலிதரு முத்தங் கடுக்கு முறுவலிரண் டரும்பா வளவி லறிவையுண் டாயின ளாங்கரச ரொருங்கா ரணியம் புகச்செற்ற தென்ன னுசிதனெங்கோன் சுரும்பார் கழனிகள் சூழ்கன்னி நாடன்ன காரிகையே -1பாண்டிக்கோவை (?) (536) முதுக்குறைந் தனளே முதுக்குறைந் தனளே மலையன் ஒள்வேற் கண்ணி 2முலையும் வாராள் முதுக்குறைந் தனளே -சிற்றெட்டகம். (537) 3முளையெயிறு நிரம்பா இளமைப் பருவத் தொளிதிகழ் ஒருவன் நீட்டிய தழையவிழ் கண்ணி தாங்கின ளுவந்தே -பொருளியல் 105. (538) தன்னெயிறு தோன்றா தனமு மடிவரையா நன்னுதலி (தோற்ற) மறையாத-மின்னனைய அல்லாங் குழலாள் அறிவுடைமைக் கன்னைநா மெல்லாந் தொழவேண்டு மின்று -கிளிவித்தெளிவு. 13. நற்றாய் தன் ஐயன்மார்க்கு அறத்தொடு நிற்றல் என்பது செவிலி அறத்தொடு நிற்ப, நற்றாய் தந்தை முதலாயினார்க்குக் கூறுதல். அதற்குச் செய்யுள் வருமாறு : (539) சான்றோர் வரவும் விடுத்தவர் தந்தக வுந்நுமது வான்றோய் குடிமையு நோக்கினல் லாற்பொரு ளேகருதித் தேன்றோய் கமழ்கண்ணிச் செம்பியன் மாறன்செங் கோன்மணந்த மீன்றோய் கடலிடந் தானும் 1விலையன்றெம் மெல்லியற்கே -பாண்டிக்கோவை 235. (540) சான்றோர் வருந்திய வருத்தமு நுமது வான்றோய் வன்ன குடிமையு நோக்கித் திருமணி வரன்றுங் குன்றங் கொண்டிவள் வருமுலை யாகம் வழங்கினோ நன்றே யஃதான்று, அடைபொருள் கருதுவி ராயிற் குடையொடு கழுமலந் தந்த நற்றேர்ச் செம்பியன் பங்குனி விழவின் உறந்தையொ டுள்ளி விழவின் வஞ்சியுஞ் சிறிதே - 2நற்றிணை (?) (541) கலந்தாங் கிளமுலைக் கற்புடை மடந்தையைக் குலஞ்சா லொழுக்க நோக்கி நலஞ்சா லண்ணற்கு நேர்வது நடையே -பொருளியல் 111. 14. வரைவு மறுத்தல் என்பது தலைவியின் சுற்றத்தார் தலைவற்கு வரைவு மறுத்து உரைத்தல். அதற்குச் செய்யுள் வருமாறு : (542) குன்றக் குறவன் காதன் மடமகள் அணிமயி லன்ன வசைநடைக் கொடிச்சியைப் பெருவரை நாடன் வரையு மாயிற் கொடுத்தனெ மாயினோ நன்றே இன்னு மானாது நன்னுதல் துயரே -ஐங்குறுநூறு 258. (543) அம்ம வாழி தோழி நம்மூர்ப் பிரிந்தோர்ப் 4புணர்ப்பவர் இருந்தனர் கொல்லோ தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர் நன்றுநன் றென்னுமாக் களொடு இன்றுபெரி தென்னு மாங்கண தவையே -குறுந்தொகை 146. (544) கன்னவில் தோளான் கடிநாள் விலக்குதற் கென்னை பொருணினைந்தா ரேந்திழாய்-பின்னர் எமரேற்றுக் கொள்ளுமென் றஞ்சினே னஞ்சார் நமரேற்றுக் கொள்ளாத ஞான்று -1 (?) (545) இளையள் அம்ம தானே கிளையும் வளைபயில் பொருதிரைக் கடல்கண் டனைத்தே புள்ளும் நாளும் பிறவும் தெள்ளிதின் உணர்தல் பெரியோர்க்குக் கடனே -பொருளியல் 108. 15. பரிசமொடு வருதல் என்பது தலைமகள் தமர் வேண்டியபடி நிதியுடன் தலைமகன் தமர் வருதல். அதற்குச் செய்யுள் வருமாறு: (546) என்கடைக் கண்ணினும் யான்பிற வேத்தா வகையிரங்கித் தன்கடைக் கண்வைத்த தண்தில்லைச் சங்கரன் தாழ்கயிலைக் கொன்கடைக் கண்தரும் யானை கடிந்தார் கொணர்ந்திறுத்தார் முன்கடைக் கண்ணிது காண்வந்து தோன்றும் முழுமதியே -திருக்கோவையார் 298. 16. வரைவு மலிவுரைத்தல் என்பது தோழி தமர் வரைவு எதிர்ந்தமை தலைமகட்கு உரைத்தல். அதற்குச் செய்யுள் வருமாறு : (547) அம்ம வாழி தோழி நம்மொடு சிறுதினைக் காவலன் ஆகிப் பெரிதுநின் மென்றோண் ஞெகிழவும் திருநுதல் பசப்பவும் பொன்போல் விறற்கவின் றொலைத்த குன்ற நாடற் கயர்வர்நன் மணனே -ஐங்குறநூறு 230. (548) இலையடர் தண்குளவி யேய்ந்த பொதும்பிற் குலையுடைக் காந்தன் இனவண் டிமிரும் வரையக நாடனும் வந்தான்மற் றன்னை யலையு மலைபோயிற் றின்று -ஐந்திணை எழுபது 3.) (549) வந்தார் தமரும் வகைவளஞ் சொன்னபடி தந்தார் நமருந் தரவிசைந்தார்-நந்தாத பண்ணீர் மொழிமடவாய் பார்வருந்த வார்முலைமேற் கண்ணீர் சொரியல் கலுழ் -கிளவித்தெளிவு. 17. வரைவுடன் படுத்தல் என்பது தலைமகனது மேம்பாடுந் தலைமகளது சிறப்புடைமையுந் தோழி யுணர்த்தல். அதற்குச் செய்யுள் வருமாறு: (550) குறைவிற்குங் கல்விக்குங் செல்விற்கு நின்குலத் திற்கும்வந்தோர் நிறைவிற்கு மேதகு நீதிக்கு மேற்பினல் லானினையின் இறைவிற்கு லாவரை யேந்திவண் 1டில்லையின் ஏழ்பொழிலு முறைவிற்கு லாநுத லாள்விலை யோமெய்ம்மை 2யோதினர்க்கே -திருக்கோவையார் 266. (551) விரவும் பெருமைக் குலனுந் தகவுமிக் கீர்நுமது வரவு கருதித் தருதுமன் றாய்விடின் மண்வணங்கிப் பரவுங் கழனெடு மாறன் பகைநறை யாற்றவென்றான் உரவுங் கடல்வையந் தானும் விலையன்றெம் ஒண்ணுதற்கே -3பாண்டிக்கோவை ? (552) வான்றோய் தொல்குடி மரபு 1மவ்வழிச் 2சான்றீ ருமது வரவு நோக்கி நேர்ந்தன மல்லதிவ் வுலக மூன்றுடன் பெறினும் முடிவதோ வன்றே -பொருளியல் 112. (553) தூய நினதறிவுங் கல்வியுந் தொன்முனிவ ராய வவர்வரவு மன்றாயின்-மேயசீ ரோலார்பூ வட்ட முறையிடவும் போதாது வேலா முலைக்கு விலை -கிளவித்தெளிவு. 18. முரசினுக்கு இரங்கல் என்பது இவ்வகை சொல்லக் கேட்ட தலைமகன் வினைமுற்றி நிதியொடு நீணகர் புகுந்த பின்னர் முரசறைதல் கேட்ட தலைமகள் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு: (554) அடற்களி யாவர்க்கு மன்பர்க் களிப்பவன் றுன்பவின்பம் படக்களி யாவண் டறைபொழிற் றில்லைப் பரமன்வெற்பிற் கடக்களி யானை 3கடந்தவர்க் கோவன்றி நின்றவர்க்கோ விடக்களி யாகம் விழுநக ரார்க்கும் வியன்முரசே -திருக்கோவையார் 297. (555) செம்மையில் லாததெவ் வேந்தரைச் சேவூர்ச் செருக்கழித்த வம்மிகு தானை யடலரி கேசரி யம்பொதியில் வெம்முக யானை கடிந்தவர்க் கோவன்றி வேறெவர்க்கோ நம்மலை வாசலில் நம்முர சந்தான் நரலுவதே -4பாண்டிக்கோவை (?) (556) முன்னாள் யானை நம்மை முனிவழித்த அன்னார் தமக்கோ பிறர்க்கோ இந்நா ணங்கடை யிரங்கிய முரசே -பழம்பாட்டு. 19. முரசு வினாதல் என்பது இவ்வகை சொல்லக்கேட்ட தோழி தந்தை முதலாயினார் கேட்கச் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு: (557) அந்தணர்க் காகி யகத்தியன் றானுரை செய்தமும்மைச் செந்தமிழ்க் காவலன் றென்னம் பொருப்பிற் செழும்பொழில்சூழ் பைந்தடத் தாழ்கயந் தாழ்வது கண்டிப் பணிமொழியை வந்தெடுத் தார்க்கன்றி யாவருக் காமிம் மணமுரசே -1பாண்டிக்கோவை ? (558) செருமலை தானவர் முப்புரந் தீயெழத் தேவர்கட்கும் வருமலை தீர்த்தவன் மாமழ பாடியில் வந்தெதிர்ந்த கருமலை வீட்டிய செம்மலை யன்றிக் கறங்குவதிம் மருமலை கூந்தலை யார்கொள்ள வேண்டி மணமுரசே -மழவை யெழுபது. (559) தேனை யனைய மொழியாள்மேற் சென்றெதிர்ந்த யானைகடிந் தார்க்கோ வவர்க்கன்றி-யேனையரா வின்றிங்கு நின்றவர்க்கோ யாவர்க்கோ வென்றி முன்றின்கண் ஆர்க்கு முரசு -பழம்பாட்டு. இவையெல்லாம், (560) வெளிப்படை தானே விரிக்குங் காலைத் தந்தை தாயே தன்னைய ரென்றாங் கன்னவ ரறியப் பண்பா கும்மே -இறையனார் அகப்பொருள் 26. என்னுமிலக்கணத்துட் கண்டுகொள்க. (46-49) வெளிப்படைநிலை முடிந்தது 2. வரைபொருட் கேகல் கிளவித்தொகை (3) ரு0. விளம்பு மியல்பைப் பழித்தல் இயற்பட வேவிளம்பல் உளங்கொள் தணப்பிடர் தன்னை யொழித்த லெனவுரைக்கும் வளங்கொள் கிளவிகள் மூன்றும் வரைபொருட் கேகலெனக் குளங்கொண்ட நன்மொழிக் கொம்பே தமிழினுட் கோப்புற்றதே. இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், வரைபொருட் ககறல் மூன்று வகைப்பட்ட கிளவியாம் என்ப தறிவித்தலைக் கருதிற்று. என்னை? இயற்பழித்தல், இயற்படமொழிதல், தணப்பிடரொழித்தல் என. அவற்றுள், 1இயற்பழித்லென்பது இவ்வகை வெளிப்பட்ட பின்றையும் வரையாது நெட்டிடை கழிந்து பொருள்வயிற் பிரிந்த விடத்து ஆற்றாளாய தலைமகளைக் கண்ட தோழி சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு: (561) பொன்னு மணியும் பவழமும் போன்று பொலிந்திலங்கி மின்னுஞ் சடையோன் புலியூர் விரவா தவரினுண்ணோ யின்னு மறிகில வாலென்னை பாவ மிருங்கழிவாய் மன்னும் பகலே மகிழ்ந்திரை தேரும்வண் டானங்களே -திருக்கோவையார் 189. (562) இகலே புரிந்தெதிர் நின்றதெவ் வேந்தர் இருஞ்சிறைவான் புகலே புரியவென் றான்கன்னி யன்னாள் புலம்புறுநோய் மிகலே புரிகின் றதுகண்டு மின்றிவ் வியன்கழிவாய்ப் பகலே புரிந்திரை தேர்கின்ற நாணாப் பறவைகளே -பாண்டிக்கோவை 233. (563) வானது நாணக் கொடையால் உலகை வளர்த்தருளும் சோனகர் வாழும் செழும்பொழில் 1சூழ்ந்தது பாரனையாள் தானணி வாணுதல் கண்டும் பகலே தனித்தனியே மானமி லாதிரை தேரும் பறவைக 2டாமகிழ்ந்தே -பல்சந்தமாலை. 2. இயற்பட மொழிதல் என்பது இவ்வகை சொல்லி யியற்பழித்த தோழிக்குத் தலைமகள் இயற்பட மொழிதல். அதற்குச் செய்யுள் வருமாறு: (564) மின்றா னனைய விளங்கொளி வேலொடு வெண்டிரைமேல் நின்றான் நிலமன்ன னேரியன் மாற னிகள்முனைபோற் கொன்றா றலைக்குஞ் சுர3மவர் நீங்கவென் கோல்வளைகள் சென்றா லதுபிறி தாகவிவ் 4வூரவர் சிந்திப்பரே -பாண்டிக்கோவை 232. (565) தொல்கவின் 1தொலைந்து தொன்னலஞ் சாஅய் நல்கார் நீத்தன ராயினு நல்குவர் நட்டனர் வாழி தோழி குட்டுவன் அகப்பா வழிய 2நூறி யருமிளைப் பகற்றீ வேட்ட ஞாட்பினு மிகப்பெரி தலரெழச் சென்றன ராயினு மலர்கவிந்து மாமட லவிழ்ந்த காந்தளஞ் 3சோலை 4யினஞ்செல் வயக்களிறு பாந்தட் பட்டெனத் துஞ்சாத் துயரத் தஞ்சுபிடிப் பூசல் நெடுவரை விடரகத் தியம்புங் கடுமான் 5புல்லியங் காடிறந் தோரே -நற்றிணை 14. (566) வஞ்சியிடை மடவாய் வல்வினையேன் உண்கண்ணும் நெஞ்சு மகலாது நிற்றலால்-செஞ்சுரும்பு பண்ணளிக்குந் தண்டார்ப் பருவரைசூழ் நன்னாடன் தண்ணளிக்கு முண்டோ தவறு -கிளவிற்தெளிவு. 3. தணப்பிடர் ஒழித்தல் என்பது ஒருவழித் தணத்தற்கு ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி ஆற்றுவித்தல். அதற்குச் செய்யுள் வருமாறு: (567) கானமர் குன்றர் செவியுற வாங்கு கணைதுணையா மானமர் நோக்கியர் நோக்கென மானற் றொடைமடக்கும் வானமர் வெற்பர்வண் டில்லையின் மன்னை வணங்கலர்போற் றேனமர் சொல்லிசெல் லார்செல்லல் செல்ல றிருநுதலே -திருக்கோவையார் 274. (568) அடுமலை போற்களி யானை யரிகே சரியுலகின் வடுமலை யாதசெங் கோல்மன்னன் வஞ்சியன் னாய்மகிழ்ந்து படுமலை போல்வண்டு பாடுசெங் காந்தட்பைந் தேன்பருகு நெடுமலை நாடனை நீங்குமென் றோநீ நினைக்கின்றதே -பாண்டிக்கோவை 234. (569) குழலிசைய வண்டினங்கள் கோழிலைய செங்காந்தட் குலைமேற்பாய அழலெரியின் மூழ்கினவா லந்தோ அளியவென் றயல்வாழ் மந்தி கலுழ்வனபோல் நெஞ்சகைந்து கல்லருவி தூவு நிழல்வரை நன்னாட னீப்பனோ வல்லன் -பழம்பாட்டு. இவையெல்லாம், (570) பட்ட பின்றை வரையாது கிழவோன் நெட்டிடைக் கழிந்து பொருள்வயிற் பிரிதலும் பொருள்வயிற் பிரியா தொருவழித் தணத்தலும் புரைவ தென்ப கற்பா லான -இறையனார் அகப்பொருள் 25. என்னுஞ் சூத்திரத்துட் கண்டுகொள்க. (50) வரைபொருட் கேகல் முடிந்தது 3. உடனிலைச் செலவு கிளவித்தொகை (27) ருக. உற்ற நெறிகை யடைசுரத் துய்த்தல் சுரத்துழையோர் பற்றி விருந்து விலக்கல் பதியின் அளவுரைத்தல் சிற்றிடைத் தோழிதன் னைவினா விச்சே விலியிரங்கல் நற்றரு வேயனை யாண்மென்மை கூறனற் றாய்க்குரைப்பே. ருஉ. நற்றா யிரங்கனற் செஞ்சுடர் தன்னைப் பாவனண்ணிப் பெற்றாள் கருமா மகளுக் குரைத்தல்பின் சேறல்சுரத் துற்றா ளிரங்கல் புறவோ டுரைத்த லடிச்சுவட்டைச் சுற்றா லுரைத்தல் சுரத்து வினாதல் துடியிடையே. ருங. துடியா ரிடையாட்கை யங்கிளத் தல்சேர் விடஞ்சொல்லுதல் தொடியார் செவிலியை யாற்றல் துடரகந் தான்றணித்தல் வடியார் வரவது முந்துறுப் பேய்ந்த கிளைமகிழ்ச்சி யடியான வேலன் றனைவினா வீன்றாட் புகழ்வதுவே. ருச. வேட்டான் மணங்கண் டுரைத்தலக் கற்பு நிலைவிளம்பல் வாட்டாழ் விழிதன் மகணிலை கூறல் எனவகுத்த பாட்டார் கிளவி இருபத் துடனே ழெனத்தெளிந்தோர் தேட்டார் உடனிலை என்னத் திறத்தோ டுரைத்தனரே. இச்சூத்திரங்கள் என்னுதலிற்றோவெனின் உடனிலைச் செலவு இத்துணைக் கிளவியாம் என்ப தறிவித்தலைக் கருதிற்று. என்னை? (1) கையடையும், (2) சுரத்துய்த்தலும், (3) விருந்து விலக்கலும், (4) பதியள வுரைத்தலும், (5) தோழியை வினாதலும், (6) செவிலி யிரங்கலும், (7) மென்மை கூறலும், (8) நற்றாய்க் குரைத்தலும், (9) நற்றாயிரங்கலும், (10) செஞ்சுடர்ப் பரவலும், (11) கருமகட் குரைத்தலும், (12) பின்செல வலித்தலும், (13) சுரத் திரங்கலும், (14) புறவொடுரைத்தலும், (15) அடிச் சுவடுரைத் தலும், (16) சுரத்திறம் வினாதலும், (17) ஐயமுரைத்தலும், (18) சேர்விட முரைத்தலும், (19) செவிலியை யாற்றலும், (20) துடரகந் தணித்தலும், (21) வரவுமுந் துறுத்தலும், (22) கிளையது மகிழ்ச்சியும், (23) சேலனை வினாதலும், (24) ஈன்றாட் புகழ்தலும், (25) மணங்கண்டுரைத்தலும், (26) கற்பு நிலை விளம்பலும், (27) மகணிலை கூறலும் என. 1. அவற்றுட் கையடை என்பது உடன்போக விரைந்த பின்றைத் தலைமகளைக் காட்டிக் கொடுத்துத் தோழி தலை மகனுக்கு ஒம்படை சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு: (571) பறந்திருந் தும்பர் பதைப்பப் படரும் புரங்கரப்பச் சிறந்தெரி யாடிதென் றில்லையன் னாடிறத் துச்சிலம்பா 1வறந்திரி தந்துன் னருளும் வறிதாய் வருமறையின் றிறந்திரிந் தார்கலி யும்முற்றும் வற்றுமிச் சேணிலத்தே -திருக்கோவையார் 213. (572) மென்முலை வீழினும் கூந்தல் நரைப்பினும் விண்ணுரிஞ்சு நன்மலை நாட விகழல்கண் டாய்நறை 2யாற்றுவென்ற வின்மலி தானை நெடுந்தேர் விசாரிதன் வேந்தர்பெம்மான் கொன்மலி வேனெடுங் கண்ணிணைப் பேதைக் கொடியினையே -பாண்டிக்கோவை 203. 2. 3சுரத்துய்த்தல் என்பது (தலைமகளை வழியில் மெல்லெனத் தலைவன் கொண்டு செல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு: (573) ஈண்டொல்லை ஆயமும் ஔவையும் நீங்கவிவ் வூர்க்கவ்வைதீர்த் தாண்டொல்லை கண்டிடக் கூடுக நும்மைஎம் மைப்பிடித்தின் றாண்டெல்லை தீர்இன்பந் தந்தவன் சிற்றம் பலம்நிலவு சேண்டில்லை மாநகர் வாய்ச்சென்று சேர்க திருத்தகவே -திருக்கோவையார் 214. (574) பண்டான் அனையசொல் லாய்பைய ஏகு பறந்தலைவாய் விண்டார் படச்செற்ற கோன்வையை சூழ்வியன் நாட்டகம்போல் வண்டார் பொழிலும் மணியறல் யாறும் மருங்கணைந்து கண்டார் மகிழும் தகைமைய தியாஞ்செல்லும் கானகமே -1பாண்டிக்கோவை 340) (575) 2அழிவிலர் முயலு மார்வ மாக்கள் வழிபடு தெய்வம் கட்கண் டாஅங் கலமரல் வருத்தந் தீர யாழநின் னலமென் பணைத்தோ ளெய்தின மாகலிற் பொரிப்பூம் புன்கி னெழிற்றகை யொண்முறி சுணங்கணி வனமுலை யணங்குகொளத் திமிரி நிழல்காண் டோறு நெடிய வைகி மணல்காண் டோறும் வண்டல் தைஇ வருந்தா தேகுமதி வாலெயிற் றோயே மாநனை கொழுதி மகிழ்குயி லாலும் நறுந்தன் பொழில் கானங் குறும்பல் லூரயாஞ் செல்லு மாறே -நற்றிணை 9. (576) மெல்ல மெல்லநின் நல்லடி யாற்றி 1வருந்தா தேகுமதி மடவோய் யிருந்தண் பொழிலயாஞ் செல்லு மாறே -பொருளியல் 114. (577) அன்ன நடைமடவா யாற்றி யமைவரர் சொன்ன வரிய சுரங்கடந்தோ-முன்னமரர் தங்களூர் போலத் தனியே வடகொங்கிற் றிங்களூர் தோன்றுஞ் சிறந்து -கிளவித்தெளிவு. 3. விருந்து விலக்க என்பது புணர்ந்துடன் போக்கின்கண் இடைச் சுரத்துக் கண்டார் தலைமகனை விலக்குதல். அதற்குச் செய்யுள் வருமாறு: (578) விடலையுற் றாரில்லை வெம்முனை வேடர் தமியைமென்பூ மடலையுற் றார்குழல் வாடினள் மன்னுசிற் றம்பலவற் கடலையற் றாரி னெறிப்பொழிந் தாங்கருக் கன்சுருக்கிக் கடலையுற் றான்கடப் பாரில்லை யின்றிக் கடுஞ்சுரமே -திருக்கோவையார் 218. (579) அலைமன்னு பைங்கழற் செங்கோ லரிகே சரியளியார் இலைமன்னு முத்தக் குடையுடை யானிகல் வேந்தரைப்போல் மலைமன்னும் வெய்யோன் மறைந்தனன் 2மாதரும் வாடிநைந்தாள் சிலைமன்னு தோளண்ணல் சேந்தனை செல்லெஞ் சிறுகுடிக்கே -பாண்டிக்கோவை 206. (580) எம்மூ ரல்ல தூர்நணி யில்லை வெம்முரட் செல்வன் கதிரு மூழ்த்தனன் சேந்தனை சென்மோ பூந்தார் மார்ப இளையள் மெல்லியள் மடந்தை அரிய சேய பெருங்கல் லாறே -சிற்றெட்டகம். (581) நல்லோள் மெல்லடி நடையு மாற்றல வெம்முரட் செல்வன் கதிரு மூழ்த்தனன் அணித்தாய்த் தோன்றுவ தெம்மூர் மணித்தார் மார்ப சேந்தனை சென்மோ -1பொருளியல் (?) (582) செங்கதிர்ச் செல்வனும் அத்தஞ் சேர்ந்தனன் கொங்கிவர் 2கோதையோ டிவ்வழித் தங்கினை சென்மோ தகைவெய் யோனே -பொருளியல் 117. (583) எங்களூ ரிவ்வூ ரிதுவொழிந்தால் வில்வேடர் தங்களூர் வேறில்லை தாமுமூர்-திங்களூர் நானு மொருதுணையா நாளைப்போ தும்மிந்த மானும் நடைமெலிந்தாள் வந்து -கிளவித்தெளிவு. (584) வெஞ்சுரமும் போக்கரிது வெய்யோன் மலைமறைந்தான் குஞ்சரங்கள் நின்றதிருங் குன்றமது-பஞ்சநெதி வங்கியே யன்ன மடமாது நீருமினித் தங்கியே போகை தரம் -பழம்பாட்டு. (585) நாளை வரகுணர்கோ னாங்கையிலே தங்கலாம் மீளு மமரும் விடிந்துபோ-நீளமுமோர் அம்பிட் டெயுந்தூர மிவ்வூர் அயில்வேல கொம்புக்குங் காலாறக் கொண்டு -பழம்பாட்டு. 4. பதியளவுரைத்தல் என்பது இவ்வகைச் சொல்லி விருந்து விலக்கிய இடைச்சுரத்தார் தலைமகள் ஊரளவு சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு: (586) மின்றங் கிடையொடு நீவியன் றில்லைச்சிற் றம்பலவர் குன்றங் கடந்துசென் றானின்று தோன்றுங் குரூஉக்கமலந் 1துன்றுங் கிடங்குந் துறைதுறை வள்ளைவெள் ளைநகையார் சென்றங் கடைதட மும்புடை சூழ்தரு சேணகரே -திருக்கோவையார் 221. (587) நீயு மிவளுமின் றேசென்று சேர்திர்நெல் வேலியொன்னார் தேயும் படிசெற்ற தென்னவன் றென்புன னாட்2டினையோர் வாயு முகமு மலர்ந்த கமல மணித்தடத்துப் பாயுங் கயலவர் கண்போற் பிறழும் பழனங்களே -பாண்டிக்கோவை 208. (588) வில்லார் நுதலியும் நீயுமின் றேசென்று மேவுதிர்சூ தெல்லா முணர்ந்தவ ரேழ்பெருந் தாங்கத் தியவனர்க ளல்லா வெனவந்து 3சந்தியு நந்தா வகைதொழுஞ்சீர் நல்லார் பயிலும் பழனங்கள் சூழ்தரு நாட்டகமே ........ gல்சந்தமாலை.5. தோழியை வினாதல் என்பது தலைமகளை ஆடிடத்துக் காணாத செவிலித்தாய் வருந்திச் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு: (589) மயிலெனப் பேர்ந்திள வல்லியின் ஒல்கிமென் மான்விழித்துக் குயிலெனப் பேசுமெங் குட்டனெங் Fற்றதென்bனஞ்சகத்தே gயிலெனப்nபர்ந்தறிaதவன் ¿ல்லைப்பல்óங்குழலாய் mயிலெனப்nபருங்கண்zயென்கொ yமின்wயர்கின்றதே-âU¡nfhitah® 224. 1....... ........ ........... .......... (590) 2ஒண்முத்த வார்கழற் கைதந்தென் ஊறா வறுமுலையின் கண்முத்தங் கொண்டு முயங்கிற்றெல் லாங்கரு வெங்கழைபோய் விண்முத்த நீள்சுரஞ்செல்லிய வோவிழி ஞத்துவென்ற தண்முத்த வெண்குடை யான்றமிழ் நாடன்ன தாழ்குழலே -பாண்டிக்கோவை 209. (591) பெயர்த்தனென் முயங்கயான் வியர்த்தனென் என்றனள் இனியறிந் தேனது துனியா குதலே கழல்தொடி யாஅய் மழைதவழ் பொதியின் வேங்கையும் காந்தளும் நாறி ஆம்பல் மலரினும் தான்தண் ணியளே -குறுந்தொகை 84. (592) வலியை மன்ற நீயே பொலிவளை காதற் றோழி கையகன் றொழியவும் பேதுற லிலையால் உயிரொடும் புணர்ந்தே -பொருளியல் 120. 6. செவிலி இரங்கல் என்பது தலைவியின் உடன்போக்கைத் தோழியின் வழியாக அறிந்து கொண்ட செவிலி தலைவியின் கற்பு நிலைக்கு வருந்தியுரைத்தல். (593) வடுத்தான் வகிர்மலர் கண்ணிக்குத் தக்கின்று தக்கன்முத்தீக் கெடுத்தான் கெடலில்தொல் லோன்றில்லைப் பன்மலர் கேழ்கிளர மடுத்தான் குடைந்தன் றழுங்க அழுங்கித் தழீஇமகிழ்வுற் றெடுத்தாற் கினியன வேயினி யாவன எம்மனைக்கே -திருக்கோவையார் 226. (594) வேடகம் சேர்ந்தவெங் கானம் விடலைபின் மெல்லடிமேற் பாடகம் தாங்கி நடந்த தெவ்வாறுகொல் பாழிவென்ற கோடக நீள்முடிக் கோன்நெடு மாறன்தென் கூடலின்வாய் ஆடக மாடங் கடந்தறி யாதவென் ஆரணங்கே -பாண்டிக்கோவை 210. (595) அத்த நீளிடை அவனொடு போகிய முத்தேர் வெண்பல் முகிழ்நகை மடவரல் தாய ரென்னும் பெயரே வல்லா றெடுத்தேன் மன்ற யானே கொடுத்தோர் மன்றவவ ளாயத் தோரே -ஐங்குறுநூறு 380. (596) வண்டார் கோதை வரிவளைத் தோளியைப் பண்டா டிடங்களுட் காணா தின்னும் நில்லா வுடம்பொடு கெழீஇ நின்றனை கொல்லோ வாழிய நெஞ்சே -பொருளியல் 119. 7. மென்மை கூறல் என்பது தலைவியின் மெல்லியற் றன்மையைக் கூறிச் சுரஞ் சென்றமைக்குச் செவிலி வருந்துதல். அதற்குச் செய்யுள் வருமாறு: (597) தாமே தமக்கொப்பு மற்றில் லவர்தில்லைத் தண்ணனிச்சப் பூமேல் மிதிக்கிற் பதைத்தடி பொங்குநங் காய்எரியுந் தீமேல் அயில்போற் செறிபரற் கானிற் சிலம்படிபாய் ஆமே நடக்க அருவினை யேன்பெற்ற அம்மனைக்கே -திருக்கோவையார் 228. (598) நளிமுத்த வெண்மணல் மேலும் பனிப்பன நண்பன்பின்போய் முளியுற்ற கானம் இறந்தன போல்மொய்ந் நிறந்திகழும் ஒளிமுத்த வெண்குடைச் செங்கோல் உசிதன் உறந்தையன்ன தெளிமுத்த வாண்முறு வற்சிறி யாள்தன் சிலம்படியே -பாண்டிக்கோவை 211. 8. நற்றாய்க் குரைத்தல் என்பது மென்மை நினைந்திரங்கிய செவிலி தலைவி உடன்போனமை ஆற்றாது நற்றாய்க்கு உரைத்தல். அதற்குச் செய்யுள் வருமாறு: (599) தழுவின கையிறை சோரின் தமியமென் றேதளர்வுற் றழுவினை செய்யுநை யாவஞ்சொற் பேதை யறிவுவிண்ணோர் குழுவினை உய்யநஞ் சுண்டம் பலத்துக் குனிக்கும்பிரான் செழுவின தாள்பணி யார்பிணி யாலுற்றுத் தேய்வித்ததே -திருக்கோவையார் 229. (600) பறைபடப் பணில மார்ப்ப விறைகொள்பு தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய 1நாலூர்க் கோசர் நன்மொழி போல வாயா கின்றே தோழி ஆய்கழற் சேயிலை வெள்வேல் விடலையொடு 2தொகுவளை முன்கை மடந்தையொடு நட்பே -குறுந்தொகை 15. 9. நற்றாய் இரங்கல் என்பது செவிலி வழியாகத் தலைவி உடன் போக்கறிந்த நற்றாய் வருந்தி யுரைத்தல். அதற்குச் செய்யுள் வருமாறு: (601) யாழியன் மென்மொழி வன்மனப் பேதையோ ரேதிலன்பின் தோழியை நீத்தென்னை முன்னே துறந்துதுன் னார்கண்முன்னே வாழியிம் மூதூர் மறுகச்சென் றாளன்று மால்வணங்க ஆழிதந் தானம் பலம்பணி யாரின் அருஞ்சுரமே -திருக்கோவையார் 230. (602) தன்னம ராயமொடு நன்மண நுகர்ச்சியின் இனிதாங் கொல்லோ தனக்கே பனிவரை யினக்களிறு வழங்குஞ் சோலை வயக்குறு வெள்வே லவற்புணர்ந்து செலவே -ஐங்குறுநூறு 379. (603) ஒருமக ளுடையேன் மன்னே யவளுஞ் செருமிகு மொய்ம்பிற் கூர்வேற் காளையொடு பெருமலை அருஞ்சுரம் நெருநற் சென்றனள் இனியே, தாங்குநின் னவலம் என்றீர் அதுமற் றியாங்ஙன மொல்லுமோ அறிவுடை யீரே உள்ளின் உள்ளம் வேமே உண்கண் மணிவாழ் பாவை நடைகற் றன்னவென் அணியியற் குறுமகள் ஆடிய மணியேர் நொச்சியுந் தெற்றியுங் கண்டே - நற்றிணை 184. (604) சூன்முதிர் கொண்மூ மின்னுபு பொழியக் கானங் கடுமை நீங்குக மானுண் கண்ணி போகிய சுரனே -பொருளியல் 121. 10. செஞ்சுடர்ப் பரவல் என்பது தலைவியை நினைந்து வருந்திய நற்றாய் நின் கதிர்களான் வாட்டாது தாமரை மலர்போல மலர்த்து வாயாக எனச் செங்கதிரை இரந்து கூறுதல். அதற்குச் செய்யுள் வருமாறு: (605) பெற்றே னொடுங்கிள்ளைவாட முதுக்குறை பெற்றிமிக்கு நற்றேன் மொழியழற் கான்நடந் தாள்முகம் நானணுகப் பெற்றேன் பிறவி பெறாமற்செய் தோன்றில்லைத் தேன்பிறங்கு மற்றேன் மலரின் மலர்த்திரந் தேன்சுடர் வானவனே -திருக்கோவையார் 232. 11. கருமகட் குரைத்தல் என்பது செஞ்சுடர்ப் பரவிய நற்றாய் இளம்பருவம் நீங்காத் தலைவியை நினைந்து வருந்தியுரைத்தல். அதற்குச் செய்யுள் வருமாறு: (606) வைம்மலர் வாட்படை யூரற்குச் செய்யுங்குற் றேவல்மற்றென் மைம்மலர் வாட்கண்ணி வல்லன்கொல் லாந்தில்லை யான்மலைவாய் மொய்ம்மலர்க் காந்தளைப் பாந்தளென் றெண்ணித்துண் ணென்றொளித்துக் கைம்மல ராற்கண் புதைத்துப் பதைக்குமெங் கார்மயிலே -திருக்கோவையார் 233. (607) பல்லூழ் நினைப்பினு நல்லென் றூழ மீளி முன்பிற் காளை காப்ப முடியகம் புகாஅக் கூந்தலள் கடுவனு மறியாக் காடிறந் தோளே -ஐங்குறுநூறு 374. (608) கேளாய் வாழியோ மகளைநின் றோழி திருநகர் வரைப்பகம் புலம்ப அவனொடு பெருமலை இறந்தது 1நோவ னோவல் கடுங்கண் யானை நெடுங்கை சேர்த்தி முடங்குதா ளுகைத்த 2பொலங்கெழு பூழி பெரும்புலர் விடியல் விரிந்துவெயி லெறிப்பக் கருந்தார் மிடற்ற செம்பூழ்ச் சேவல் சிறுபுன் பெடையொடு குடையு மாங்கண் அஞ்சுவரத் தகுந கானம் நீந்திக் கன்றுகா ணாதுபுன் கண்ணசெவி சாய்த்து மன்றுநிறை பைதல் கூரப் பலவுடன் கறவை தந்த 3கடுங்கண் மறவர் கல்லென் சீறூர் 4எல்லியின் அசைஇ முதுவாய்ப் பெண்டின் செதுகாற் குரம்பை மடமயி லன்னவென் 5னடைமெலி பேதை தோட்டுணை யாகத் துயிற்றத் துஞ்சாள் வேட்டக் கள்வர் விசியுறு கடுங்கட் சேக்கோ ளறையுந் தண்ணுமை கேட்குநள் கொல்லெனக் கலுழுமென் நெஞ்சே -நெடுந்தொகை 63. 12. பின்செல வலித்தல் என்பது தலைமகளின் இளமை நினைந்து வருந்திய தாய்க்கு நீ கவன்று மெலிய வேண்டா. யான் அவள் புக்க விடம் புக்குத் தேடுவேன் எனச் செவிலி பின் செல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு: (609) வேயின தோளி மெலியல்விண் ணோர்தக்கன் வேள்வியின்வாய்ப் பாயின சீர்த்தியன் அம்பலத் தானைப் பழித்துமும்மைத் தீயின தாற்றல் சிரங்கண் ணிழந்து திசைதிசைதாம் போயின எல்லையெல் லாம்புக்கு நாடுவன் பொன்னினையே -திருக்கோவையார் 234. (610) நிலந்தொட்டுப் புகாஅர் வானம் ஏறார் இலங்கிரு முந்நீர் காலிற் செல்லார் நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின் குடிமுறை குடிமுறை 1தெரியிற் கெடுநரு முளரோ நங்காத லோரே -குறுந்தொகை 130. 13. சுரத்து இரங்கல் என்பது தலைமகள் சென்ற சுரத்திற் கண்ட பொருள்களுடன் வருந்திக் கூறுதல். அதற்குச் செய்யுள் வருமாறு: (611) பாயும் விடையோன் புலியூ ரனையவென் பாவைமுன்னே காயுங் கடத்திடை யாடிக் கடப்பவுங் கண்டுநின்று வாயுந் திறவாய் குழையெழில் வீசுவண் டோலுறுத்த நீயும்நின் பாவையும் நின்று நிலாவிடும் நீள்குரவே -திருக்கோவையார் 241. (612) மழைகெழு கார்வண்கை வானவன் மாறன்வண் கூடலன்ன இழைகெழு கொங்கையென் பேதையொர் ஏதில னோடியைந்திக் கழைகெழு குன்றங் கடப்பவும் நீகண்டு நின்றனையே தழைகெழு பாவை பலவும் வளர்க்கின்ற தண்குரவே -பாண்டிக்கோவை 212. (613) வெய்யோன் சாபத் தெய்கணை குளிப்ப வீழ்ந்தது மன்றவிக் களிறே தாழ்ந்த இடுமுத் தணிவடஞ் சுடரத் தொடியோள் ஒதுங்கிய சூழன்மன் னிதுவே -பொருளியல் 122. (614) காய்ந்திலை மறவை மன்னோ வேந்திழை அழல்கெழு வெஞ்சுரஞ் செலவும் எழில்கெழு பாவை ஏந்திய குரவே -பொருளியல் 123. (615) தான்றாயாக் கோங்கம் தளர்ந்து முலைகொடுப்ப வீன்றாய்நீ பாவை யிருங்குரவே-யீன்றாண் மொழிகாட்டா யாயினு முள்ளெயிற்றாள் சென்ற வழிகாட்டாய் ஈதென்று வந்து -திணைமாலை நூற்றைம்பது 65. 14. புறவொடுரைத்தல் என்பது தலைவியைத் தேடிச் செல்லும் செவிலி ஆங்குக் கண்ட புறாவினிடம் ஆற்றாமை உரைத்தல். அதற்குச் செய்யுள் வருமாறு: (616) புயலன் றலர்சடை ஏற்றவன் தில்லைப் பொருப்பரசி பயலன் றனைப்பணி யாதவர் போல்மிகு பாவஞ்செய்தேற் கயலன் தமியன்அஞ் சொற்றுணை வெஞ்சுரம் மாதர்சென்றால் இயலன் றெனக்கிற் றிலைமற்று வாழி எழிற்புறவே -திருக்கோவையார் 240. 15. அடிச்சுவடு உரைத்தல் என்பது குரவையும், புறவையும் கண்டு வருந்திச் செல்லும் செவிலி தலைவியின் அடிச்சுவடு நிலத்திற் பதிந்திருக்கக் கண்டு வருந்திக் கூறுதல். அதற்குச் செய்யுள் வருமாறு: (617) தெள்வன் புனற்சென்னி யோன்அம் பலஞ்சிந்தி யாரினஞ்சேர் முள்வன் பரல்முரம் பத்தின்முன் செய்வினை யேனெடுத்த ஒள்வன் படைக்கண்ணி சீறடி யிங்கிவை யுங்குவையக் கள்வன் பகட்டுர வோனடி யென்று கருதுவனே (618) பாலொத்த சிற்றம் பலவன் கழல்பணி யார்பிணிவாய்க் கோலத் தவிசின் மிதிக்கிற் பதைத்தடி கொப்புள்கொள்ளும் வேலொத்த வெம்பரற் கானத்தின் இன்றோர் விடலைபின்போங் காலொத் தனவினை யேன்பெற்ற மாணிழை கால்மலரே -திருக்கோவையார் 237, 238. 16. சுரத்திறம் வினாதல் என்பது சுரத்தின்கண் வருவாரிடம் வினாவுதல். அதற்குச் செய்யுள் வருமாறு: (619) சுத்திய பொக்கணத் தென்பணி கட்டங்கஞ் சூழ்சடைவெண் பொத்திய கோலத்தி னீர்புலி யூரம் பலவர்க்குற்ற பத்தியர் போலப் பணைத்திறு மாந்த பயோதரத்தோர் பித்திதற் பின்வர முன்வரு மோவொர் பெருந்தகையே -திருக்கோவையார் 242. (620) நிழலார் குடையொடு தண்ணீர்க் கரகம் நெறிப்படக்கொண் டழலார் அருஞ்சுரத் தூடு வருகின்ற அந்தணிர்காள் கழலான் ஒருவன்பின் செங்கோற் கலிமத னன்பகைபோற் குழலாள் ஒருத்திசென் றாளோ உரைமின்இக் குன்றிடத்தே -பாண்டிக்கோவை 216. 17. ஐயம் உரைத்தல் என்பது சுரத்திடைச் செல்லுந் தலைமகனையும் தலைமளையும் கண்டு எதிர் வருகின்றார் யார்கொல் இவ்வாறு போந்தார் என ஐயுற்றுரைத்தது. அதற்குச் செய்யுள் வருமாறு: (621) வில்லான் விறலடி மேலன பொற்கழல் வெண்முத்தன்ன பல்லாள் இணையடி மேலன பாடகம் பஞ்சவற்கு நெல்லார் கழனி நெடுங்களத் தன்று நிகர்மலைந்த புல்லா தவரென யார்கொல் அருஞ்சுரம் போந்தவரே -பாண்டிக்கோவை 215. (622) வில்லோன் காலன கழலே தொடியோள் மெல்லடி 1மேலவுஞ் சிலம்பே நல்லோர் யார்கொல் அளியர் தாமே ஆரியர் கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி வாகை வெண்ணெற் றொலிக்கும் வேய்பயில் 2அழுவம் முன்னி யோரே -குறுந்தொகை 7. 18. சேர்விட முரைத்தல் என்பது கண்டோரிடை வினாவிய செவிலிக்குத் தலைவன் தலைவியர் போய்ச் சேர்ந்த இடத்தை அவர் உரைத்தல். அதற்குச் செய்யுள் வருமாறு: (623) மீள்வது செல்வதன் றன்னையிவ் வெங்கடத் தக்கடமாக் கீள்வது செய்த கிழவோ னொடுங்கிளர் கெண்டையன்ன நீள்வது செய்தகண் ணாளிந் நெடுஞ்சுரம் நீந்தியெம்மை ஆள்வது செய்தவன் தில்லையி னெல்லை யணுகுவரே -திருக்கோவையார் 247. (624) ஆளையுஞ் சீறுங் களிற்றரி கேசரி தெவ்வரைப்போல் காளையுங் காரிகை யுங்கடஞ் சென்றின்று காண்பர்வெங்கேழ் வாளையுஞ் செங்கண் வராலும் மடலிளந் தெங்குகுத்த பாளையுந் தேறல் பருகிக் களிக்கும் பழனங்களே -பாண்டிக்கோவை 220. (625) நகுவா யனபல பேய்துள்ள 1நட்டாற் றருவரைபோன் றுகுவாய் மதக்களி றுந்திவென் றான்மனம் போன்றுயர்ந்த தொகுவா யனசுனை சேர்குன்றம் நீங்கலும் துன்னுவர்போய்ப் பகுவா யனபல வாளைகள் பாயும் பழனங்களே -பாண்டிக்கோவை 221. 19. செவிலியை ஆற்றல் என்பது வழியிடைக் கண்டோர் ஆற்றாது செல்லும் செவிலியை ஆற்றுதல். அதற்குச் செய்யுள் வருமாறு: (626) சுரும்பிவர் சந்தும் தொடுகடல் முத்தும்வெண் சங்குமெங்கும் விரும்பினர் பாற்சென்று மெய்க்கணி யாம்வியன் கங்கையென்னும் பெரும்புனல் சூடும் பிரான்சிவன் சிற்றம் பலமனைய கரும்பன மென்மொழி யாருமந் நீர்மையர் காணுநர்க்கே -திருக்கோவையர் 248. (627) கடவரை காதல னோடு கடந்த கயல்நெடுங்கண் படவர வல்குலும் பாவைக் கிரங்கன்மின் பண்டுகெண்டை வடவரை மேல்வைத்த வானவன் மாறன் மலயமென்னுந் தடவரை தானே அணிந்தறி யாதுதண் சந்தனமே (628) வெந்நீர் அருஞ்சுரம் காளைபின் சென்றநும் மெல்லியன்மாட்டு இந்நீர் மையினிரங் கன்மின் நறையாற் றிகலரசர் தந்நீர் அழிவித்த சத்ரு துரந்தரன் தண்குமரி முந்நீர் பயந்தார் அணிவார் பிறரென்ப முத்தங்களே (629) நெருங்கடல் வேல்நெடு மாறன் நெடுங்களத் தன்றுவென்றான் பெருங்கடல் ஞாலத்துப் பெண்பிறந் தார்தம்பெற் றார்க்குதவார் இருங்கடல் போல்துயர் எய்தன்மின் ஈன்றன வென்றுமுந்நீர்க் கருங்கடல் வெண்சங் கணிந்தறி யாதண் கதிர்முத்தமே -பாண்டிக்கோவை 622, 223, 224. (630) மடவரல் மாதர்க்கு வருந்தா தீமோ கடல்வயிறு பயந்த நித்திலம் உடையோர்க் காதல் உலகியல் வழக்கே -பொருளியல் 125. 20. துடரகந் தணித்தல் என்பது ஆற்றவும் ஆற்றாது நின்ற செவிலியைத் தலைவன் தலைவியர் சேரிடம் உரைத்து மீட்டுக் கொண்டு போதல். அதற்குச் செய்யுள் வருமாறு: (631) ஆண்டில் எடுத்தவ ராமிவர் தாமவர் அல்குவர்போய்த் தீண்டி லெடுத்தவர் தீவினை தீர்ப்பவன் தில்லையின்வாய்த் தூண்டி லெடுத்தவ ரால்தெங்கொ டெற்றப் பழம்விழுந்து பாண்டி லெடுத்தபஃ றாமரை கீழும் பழனங்களே -திருக்கோவையார் 249. (632) என்னுமுள்ளினள் கொல்லோ தன்னை நெஞ்சுணத் தேற்றிய வஞ்சினக் காளையொ 1டழுங்கன் மூதூரர் அலரெழச் செழும்பல் குன்றம் இறந்தவென் மகளே -ஐங்குறுநூறு 372. 21. வரவு முந்துறுத்தல் என்பது தமரால் பெயர்ந்து வாராநின்ற தலைவி சுரத்திடை முன்னுறச் செல்வாரை என் ஆயத்தார்க்கு எம் வரவினைச் சொல்லுமின் என்று சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு: (633) செம்மைத் தனிக்கோல் திறல்மன்னன் சேவூர்ச் செருமலைந்தார் தம்மைப் புறங்கண்ட சத்ரு துரந்தரன் தன்முனைபோல் வெம்மைச் சுரம்வரு கின்றனள் என்று விரைந்துசெல்வீர் அம்மைத் தடங்கணென் னாயத் தவருக் கறிமின்களே -பாண்டிக்கோவை 225. (634) கோடரில் நீள்மதிற் கோட்டாற் றரண்விட்டுக் குன்றகஞ்சேர் காடரில் வேந்தர் செலச்செற்ற மன்னன்கை வேலின்வெய்ய வேடரில் வெஞ்சுரம் மீண்டனள் என்று விரைந்துசெல்வீர் ஓடரி வாட்கணென் ஆயத் தவருக் குரைமின்களே -பாண்டிக்கோவை 226. (635) கவிழ்மயிர் எருத்திற் செந்நாய் ஏற்றை குருளைப் பன்றி கொள்ளாது கழியும் சுரநனி வாரா நின்றனள் என்பது 1முன்னுற விரைந்தனிர் உரைமின் இன்னகை முறுவலென் ஆயத் தோர்க்கே -ஐங்குறுநூறு 397. (636) வளங்கெழு கானம் வருகுவ ரின்றென விளம்புமின் விரைந்தனிர் செலினே உளங்கெழு காதல் உயிரன் னோர்க்கே -பொருளியல் 131. 22. கிளையது மகிழ்ச்சி என்பது தலைமகள் பெயர்ந்து வருதலை முன்னர் அறிந்த கிளைகள் அடைந்த மகிழ்ச்சியைச் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு: (637) மானதர் மயங்கிய மலைமுதற் சிறுநெறி தான்வரு மென்ப தடமென் றோளி அஞ்சினள் அஞ்சினள் ஒதுங்கிப் பஞ்சி மெல்லடி பரல்வடுக் கொளவே -பொருளியல் 132. 23. வேலனை வினாதல் என்பது மகள் வருகின்றாள் எனக்கேட்ட தாய், நம் நெடு நகர்க்கே கொண்டு வருமோ தன் கடிமனைக்கே கொண்டு போமோ என அவன் குறிப்பறிதற்கு வேலனை வினாவுதல். அதற்குச் செய்யுள் வருமாறு: (638) அங்கண் மலர்த்தார் அரிகே சரிதென்னர் கோனயில்2வேல் வெங்கண் நெடுஞ்சுரம் மீண்ட விடலை கெடலருஞ்சீர் நங்கள் மனைக்கே வரநல்கு மோசொல்லு வேலநல்கு தங்கள் மனைக்கே செலவுய்க்கு மோமற்றென் தையலையே (639) உருமினை நீள்கொடி மேற்கொண்ட செங்கோல் உசிதனெங்கோன் செருமுனை போற்சுர மீண்ட விடலையெந் தீதில்செல்வத் 1தருமனைக் கேவர நல்குங்கொல் அன்றாய் விடிற்றமர்கள் பெருமனைக் கேயுய்க்கு மோவுரை யாய்மற்றென் பேதையையே -பாண்டிக்கோவை 227, 228. (640) முதுவாய் வேல மொழிந்திசின் எமக்கே மதுவார் கூந்தல் மடந்தையைக் கதிர்வே லண்ணல் கருதிய திறனே -பொருளியல். 133. (641) வேறாக நின்னை வினவுவேன் தெய்வத்தாற் கூறாயோ கூறும் குணத்தினனாய்-வேறாக என்மனைக் கேறக் கொணருமோ வெள்வளையைத் தன்மனைக்கே யுய்க்குமோ தான் -திணைமாலை நூற்றைம்பது 90. 24. ஈன்றாட் புகழ்தல் என்பது ஈன்றதாயின் பேரன்புத்திறங் கூறிச் செவிலி புகழ்தல். அதற்குச் செய்யுள் வருமாறு: (642) துறந்ததற் கொண்டுந் துயரடச் சாஅய் அறம்புலந்து பழிக்கும் 2அருநவை யாட்டி எவ்வ நெஞ்சிற் கேம மாக வந்தன ளோநின் மகளே வெந்திறல் வென்வேல் விடலைமுந் துறவே -ஐங்குறுநூறு 393. 25. மணங் கண்டுரைத்தல் என்பது தலைவன் தன்மனைக் கண் வரைந்து கொண்டான் என்பதறிந்து நற்றாய் கூறுதல். அதற்குச் செய்யுள் வருமாறு: (643) தாளை வணங்கா தவர்படச் சங்கமங் கைத்தனது வாளை வலங்கொண்ட மாறனிவ் வையத் தவர்மகிழ நாளைநம் இல்லுள் வதுவை அயர்தர நல்குங்கொல்லோ காளையை ஈன்ற கடனறி நன்னெஞ்சிற் காரிகையே (644) புல்லா வயமன்னர் பூலந்தை வானபுகப் பூட்டழித்த வில்லான் விசாரிதன் கூடல் விழவினைப் போலுமில்லுள் நல்லார் மகிழ்வெய்த நாளை மணஞ்செய்ய நல்குங்கொல்லோ கல்லார் திரள்தோள் விடலையை ஈன்ற கணங்குழையே -பாண்டிக்கோவை 229, 230. (645) நும்மனைச் சிலம்பு கழீஇ யயரினும் எம்மனை வதுவை நன்மணங் 1கழிகெனச் சொல்லின் எவனோ மற்றே வென்வேல் மையற 2விளங்கிய கழலடிப் பொய்வல் காளையை ஈன்ற தாய்க்கே -ஐங்குறுநூறு 399. 26. கற்புநிலை விளம்பல் என்பது தலைமகள் கடிமனை சென்று மீண்ட செவிலி அவர்கள் கற்பு நிலையை நற்றாய்க்குக் கூறுதல். அதற்குச் செய்யுள் வருமாறு: (646) தெய்வம் பணிகழ லோன்றில்லைச் சிற்றம் பலமனையாள் தெய்வம் பணிந்தறி யாளென்று நின்று திறைவழங்காத் தெவ்வம் பணியச் சென்றாலுமன் வந்தன்றிச் சேர்ந்தறியான் பௌவம் பணிமணி யன்னார் பரிசின்ன பான்மைகளே -திருக்கோவையார் 304. (647) திருநெடுங் கோதையுந் தெய்வந் தொழாள்தெவ்வர் மேற்செலினும் பெருநெடுந் தோளண்ணல் பேர்த்தன்றித் தங்கான் பிறழ்விற்செங்கோல் அருநெடுந் தானை அரிகே சரியந்தண் கூடலன்ன கருநெடுங் கண்மட வாயன்ன தாவலர் காதன்மையே -பாண்டிக்கோவை 334. (648) 1கானங் கோழிக் கவர்குரற் சேவல் ஒண்பொறி யெருத்திற் றண்சிதர் உறைப்பப் புதனீர் வாரும் பூநாறு புறவிற் சீறூ ரோளே மடந்தை வேறூர் வேந்துவிடு தொழிலொடு செலினுஞ் 2சேந்துவர லறியாது செம்மல் தேரே -குறுந்தொகை 242. 27. மகள்நிலை கூறல் என்பது இருவர் கற்பு நிலையையுங் கூறிய செவிலி தலைமகள் வாழ்வுநிலையை உரைத்தல். அதற்குச் செய்யுள் வருமாறு: (649) தொண்டின மேவுஞ் சுடர்க்கழ லோன்தில்லைத் தொன்னகரிற் கண்டின மேவுமில் நீயவள் நின்கொழு நன்செழுமென் தண்டின மேவுதிண் தோளவன் யானவள் தற்பணிவோள் வண்டின மேவுங் குழலா ளயல்மன்னும் இவ்வயலே -திருக்கோவையார் 302. (650) முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல் கழுவுறு கலிங்கம் கழாஅ துடீஇக் குவளை யுண்கண் குய்ப்புகை 3கமழத் தான்துழந் தட்ட தீம்புளிப் பாகர் இனிதெனக் கணவன் உண்டலின் நுண்ணிதின் மகிழ்ந்தன் றெண்ணுதல் முகனே -குறுந்தொகை 167. 4உடனிலைச் செலவு முடிந்தது (51-54) நூற்பா அகரவரிசை (எண்: நூற்பாவெண்) அடைவாம் 44 ஆக்கிய சீருற் 21 இடையா நயப் 25 இயற்றுஞ் செழுந் 29 உடன்படுதோழி 31 உற்ற நெறிகை 51 உறவா யிருவ 32 கடியார் செவி 48 கற்பமர் 46 காட்சி யொடையம் 24 கூறப்படும் வெறி 47 துடியா ரிடை 53 தெய்வப் புணர்ச்சி 23 தேறும் பொழில் 28 நயந்து குறை 30 நவில் தரும் 45 நற்றாயிரங்க 52 மறுத்தாள் 94 வரைவார் முரசு 49 விளம்பு மியல்பை 50 வினவுந் தகைமை 27 வெளிப்படை 43 வேட்டான்மணங் 54 மேற்கோள் செய்யுள் அகரவரிசை (எண்: பாடல் எண்) அ அங்கண் மலர் 638 அஞ்சாதமர் 445 அஞ்சிறைவான் 315 அடற்களி 554 அடிக்கண் 427 அடிமேலகலிட 442 அடியுறு 192 அடிவண்ணம் 96 அடுந்திறல் 271 அடும்பின் 332 அணங்கென்ன 28 அணிகொணர்ந் 476 அணிநிறமால் 382 அணிவர்அய 483 அதுவேதானே 63 அத்தநீளிடை 595 அந்தழை 154 அந்தணர்க்காகி 557 அந்தியின் 220 அம்பல்பெருகி 476 அம்புமுகம் 170 அம்மென்சாயல் 373 அம்ம் பவள்ள் 100 அம்மவாழி...nfË® 82 அம்மவாழி தோழி 543 அம்மவாழி...e« 547 அம்மவாழி...bt« 198 அயர்ந்தும் 519 அருக்கன் 399 அரும்புடைத் 137 அருமலை 568 அருவியார்க்கும் 162 அரையார் கழல் 161 அலராயிரம் 472 அலவன் ஆட்டலும் 229 அலைமன்னு 579 அழிவிலர் 575 அழிவுபடர் 30 அளிதோதானே 447 அளிநீடகை 319 அளையார் mரவு68mw«òÇ 407 அறிந்தோர் 474 அறைவாயதிர் 404 அன்புருவம் 72 அன்பெதிர்ந்து 434 அன்னந்துணை 277 அன்னநடைப் பேதை 415 அன்னநடைமட... 577 அன்னம் புரை 339 அன்னாய் அன்னாய் 388 அன்னாய் ஒரு 285 அன்னாய் நெருநல் 467 அன்னை நெருநல் 354 அன்னை வாழி 353 ஆ ஆங்ஙனம் 153 ஆடுஞ்சுனை 190 ஆண்டில் 631 ஆயுந்தமிழ் 424 ஆய்கதிர் 338 ஆய்கின்ற 74 ஆய்தளிர் 120 ஆய்போலருள் 394 ஆரணங்குற்றனை 457 ஆவா இருவர் 199 ஆழிக்கடல் 390 ஆளரிக்கும் 504 ஆளையுஞ் சீறும் 624 இ இகலே புரி 562 இடிக்குங் கேளிர் 83 இதற்கொண் 346 இயவனராசன் 365 இரதமுடைய 176 இரந்துகுறை 179 இருங்களி 164 இருநிலனும் 49 இருநெடுந்தோள் 114 இரும்பிழி 429 இலையடர் 548 இல்லோன் 412 இவளே காவல் 234 இளையள் அம்ம 545 இளையாள் இவளை 534 இறவரையும் 444 இனையல் வாழிபிரி 38 இனையல் வாழியெம் 44 இன்னகை 99 இன்னறவார் 422 இன்னுயிர் 53 ஈ ஈண்டொல்லை 573 ஈரிருதிங்கள் 15 ஈவிளையாட 350 உ உடனிலைப்பாலை 17 உடையை வாழி 62 உம்பரோ 93 உயிரொன் 58 உரிப்பொருள் 13 உருமினை 639 உரைமின் நீர் 175 உலம்புரிதோள் 356 உளமாம் வகை 73 உள்ளஞ்செய் 506 உள்ளத்தவலம் 461 உள்ளத்துணர்சி 286 உள்ளபடி 35 உறுகற்புடை 511 உன்னையு நீத் 458 ஊ ஊசல் தொழில் 361 ஊர்க்கு 306 ஊர்துயிலின் 431 ஊருஞ் சேரியும் 499 எ எங்களூர் 583 எம்மூரல்ல 580 எயிற்குலம் 124 எய்யாவுள்ள 515 எலும்பாவணி 483 எலுவசிறாஅ 71 எவாடட 111 எவ்விடத்தென் 333 எழில்வாய் 241 எழினுதனும் 502 எளிதோவம்ம 262 எற்பாடு 8 என்கடைக்கண் 546 என்றுமுள்ளி 632 என்னாலிது 486 என்னுயிர் 56 ஏ ஏணுமிகலு 496 ஏர்ப்பின்னை 328 ஏரார் குழல் 411 ஏனல் காவல் 204 ஏனலுங் காத்து 311 ஐ ஐயவாழியோ 460 ஒ ஒண்டூவி 421 ஒண்முத்த 590 ஒடுங்கீரோதி 148 ஒத்த மயிற் 95 ஒரு மகளுடை 603 ஓ ஓங்கிய 507 ஓங்கும் பெரும் 267 ஓடி யொளித்து 193 ஓதங்கடைந் 448 க கடவரை காதலி 627 கடவுட் கற்சுனை 532 கடிகமழ் 219 கணிநிற 288 கணியார் 355 கண்டுநிலை 141 கண்ணிதகை 158 கண்ணிறைந்த 185 கண்ணினாற் 57 கண்ணுஞ் செவ் 183 கண்ணு முகமும் 116 கண்ண் கருவிளை 27 கதஞ்சார் 387 கந்தன் என 465 கந்தார் களிறு 505 கந்தாரடு 181 கயஞ்சால் 509 கயலணியார் 61 கரங்குவித்த 91 கருங்கண் 168 கரும்பனைய 368 கரைபொரு 436 கலந்தாங் 541 கலவா வயவர் 200 கலைமதி 50 கல்ல தரும் 440 கவிழ்மயிர் 635 கழிகட்டலை 441 கழிகின்ற 254 கழுநீர்பூத் 34 கழைகெழு 470 கள்ளவிழ் 392 கள்ளவிழும் 380 கள்ளாவி 376 கறங்குவெள் 449 கனைகடற் 366 கன்னவில் தோளா 544 கா காகத்திரு 211 காட்சி முதலா 18 காணாய்தோழி 289 காண்குவிராயிற் 85 காதுடனே 101 காமமிக்க 471 காமர் கடும் 508 காமரை வென்ற 396 காம்பிணை 126 காய்சின வேற் 249 காய்ந்திலை 615 காருமாலையு 4 காரேகூதிர் 14 காவிநின்றேர் 131 காவியங் கருங் 140 கானங்கோழி 648 கானமர் 567 கானல்வேலி 276 கு குடவரை 16 குணகடற் 413 குயிலிதன் 514 குயிலைச் சிலம் 104 குருகுபெடை 309 குவளைக்கள 113 குவளை நாறும் 39 குழலிசைய 569 குழைமுகத்தாற் 129 குறிஞ்சி கூதிர் 5 குறியெனப் 416 குறுநிலக் 331 குறையுறும் 247 குறைவிற்குங் 550 குன்றக்குறவன் அணி 542 குன்றக்குறவன் வண்டு 263 குன்றக்குறவன்...tiu 98 குன்றின் சுனை 184 கூ கூடார் அரணெரி 386 கூம்பலால் 31 கூற்றெனவே 370 கே கேளாய் வாழி 608 கை கைக்கிளை 29 கைதைவேலி 275 கைந்நிலத்து 270 கையது செயலை 209 கைபோல் 147 கொ கொங்குதேர் 33 கொங்கைக்கு 489 கொங்கை யரும்பா 102 கொடியார் நுணு 320 கொடியார் நெடு 273 கொண்டதோர் 252 கொய்தழை 47 கொள்ளலிரம்ம 259 கொன்னிலையோ 55 கோ கோடரில் 634 கோடல் எதிர் 150 கோம்பிக்கு 67 கோலக்கிளி 121 கோலத்தண் 143 கோலமறி 530 ச சங்கந்தரு 287 சத்திய மொக்கு 619 சா சான்றோர் வர 539 சான்றோர் வருத் 540 சி சிந்தாமணி 36 சிலம்பணி 173áy«ãš 294 சிலரும் பலரும் 498 சிலைமாண 169 சிலைமிசை 298 சிலையொன்று 239 சிறுவெள்ளரவின் 70 சிறைவான் 64 சிற்றிலின் 523 சினமுமழிந்து 109 சீ சீதமணமு 214 சீதவிரை 167 சு சுடர் திரி 345 சுணங்குற்ற 513 சுரும்பிவர் 626 சுரும்பினபூம் 19 சுழியாவரும் 447 சுள்ளிசுனை 512 சூ சூரல் பம்பிய 437 சூன்முதிர் 604 செ செங்கதி 582 செங்கையில் 299 செந்நிற 187 செம்மல் 278 செம்முக 166 செம்மைத்தனி 613 செம்மையில்லா 555 செயல்மன்னு 360 செய்ய 122 செய்ய மலரிற் 134 செய்யவாய் 163 செய்தவம்பே 136 செருமலை 588 செழுநீர் 322 செறிந்தார் 212 சென்றார் 521 சென்றுசெரு 428 சே சேணிற்பொலி 78 சேயன 152 சேயேயென 221 சேர்க்கு 301 சேரிவலை 237 சொ சொல்லிற்சொல் 139 சோ சோத்துள் 406 ட ...ligªjlK 112 தண்டாதலர் 108 தண்ணென் 528 தத்திச்சிலை 172 தந்துநீ 300 தந்தோன் 295 தலைப்புணை 268 தவளத்த 292 தழுவினகை 579 தழைகெழு 307 தனிமைநெஞ் 128 தன்போற் 456 தன்னமராய 602 தன்னுட்குறிப் 303 தன்னும்புரை 177 தன்னெயிறு 538 தா தாதலர்நீண் 418 தவாதுவிரி 308 தாமேதமக் 597 தாருறை 432 தாரென்ன 160 தாழச்செய் 135 தாளிணையா 401 தாளைவணங்கா 643 தான்தாயா 613 தி திருந்தா 236 திருநுதல் 26 திருநெடுங் 647 திருமாமுகம் 97 திருமால் 195 திருவளர் 20 திரையார் 357 தீ தீயபெரு 494 தீயினும் 492 து துடியாரிடை 245Jwªjj‰ 642 துனிதானகல 127 தூ தூயநின 553 தூய்மைசான்ற 227 தெ தெங்கின்பழம் 232 தெய்வம்பணி 646 தெய்வமாக 133 தெய்வமுணா 11 தெள்வன் 617 தே தேந்தண் 145 தேமென் 155 தேயுமருங்குல் 77 தேர்ந்தசங் 526 தேனகுமுல்லை 76 தேனையனைய 559 தொ தொடலைக்குறு 265 தொடிவானர 24 தொண்டின 649 தொல்கவின் 565 தோ தோகைமயிலை 106 தோலாக்கரி 269 தோழிவாழி 524 ந நகுதாமரை 157 நகுவாயன 625 நடந்ததெங்கு 318 நடனாம் 256 நடுவண் 2 நடுவுநிலைத் 9 நடைமன்னு 233 நண்ணிய 282 நண்ணாத 216 நந்தீவரம் 393 நயனின்மை 264 நயனுநன்று 84 நரல்வேயின 313 நல்லளந்தானு 485 நல்லோன் 581 நளிமுத்த 598 நறும்பூங் 327 நறைக்கண் 426 நறைகமழ் 379 நறைபரந்த 171 நன்றுசெய் 367 நா நாகந்தொழ 400 நாகைக்குல 352 நாட்டம்புதை 138 நாமேயிடை 144 நாளைவரகுணர் 585 நி நிணங்கொள் 81 நிருத்தம் 180 நிரைதார் 443 நிலந்தொட்டு 610 நிலவென 43 நிலவோரன்ன 475 நிலையிருங் 235 நிழலார்குடை 620 நின்னிணைவிழி 39 நின்னிற்பிரி 40 நின்னுடைய 46 நின்னுடைநீர் 89 நீ நீகண்டனை 279 நீங்கரும் 146 நீடியபூந் 65 நீயுமிவளும் 587 நீரணிவேலி 478 நீர்வண்ண 351 நீலக்கருங் 529 நு நும்மனைச் 645 நெ நெடுவரை 439 நெடுவேறுடக்கி 45 நெய்ந்நின்ற 464 நெய்யொன்று 372 நெருங்கடல் 629 நெருநலிங் 281 நெருநலு 231 நெறிநீரிருங் 228 நே நேயத்தாய் 52 நோ நோக்கினும் 59 நோதக 115 ப பகலோன் 334 பங்கயநாண் 317 படமாசுணம் 316 படலேறிய 250 படையார் 369 பட்டபின்றை 570 பணந்தாழரவு 117 பண்சிலம்ப 362 பண்டாண் 574 பண்டாலியலு 217 பண்டிப்புனத்து 201 பண்ணிவர்சொல் 469 பந்தியிள 462 பருவரனெஞ் 284 பலமன்னு 257 பலராவெதிர் 473 பல்லியனாகப் 207 பல்லூழ் 607 பறந்திருள் 571 பறைபடப் 600 பறைவாயொலி 454 பற்றொன்றில் 463 பனியெதிர் 6 பனைவளர் 377 பன்னியதின் 293 பா பாக்கத் 383 பாங்கினராகி 358 பாசத்தளை 297 பாடுஞ்சிறை 280 பாப்பணி 481 பாயப்புரவி 500 பாயும்விடையரன் 23 பாயும்விடையோன் 611 பாலொத்த 618 பாவடி 25 பாவணையுந் 42 பி பிணையுமில்லை 490 பிறவாரணங்க 433 பிறையார்நறு 435 பின்பனி 10 பு புட்சிலம்பு 385 புட்புலம்பும் 230 புணர்தல் 12 புணர்ந்த 159 புணர்ப்போன் 48 புதலைநறுங் 238 புயல்வளர் 310 புயலன்றவர் 616 புலந்துறை 88 புலனன்றென்ப 54 புல்லாவய 644 புல்லாவயவர் 215 புள்ளியன்மான் 420 புள்ளுந்துயில் 380 புனையிழை 182 புன்னை நனை 408 புன்னை மலர் 409 பூ பூங்கணை 455 பூஞ்சுணங்கின் 488 பூஞ்சுனை 60 பூண்டகுழை 206 பூத்தவேங்கை 205 பூமருகண் 21 பூவார்கணி 323 பெ பெயர்ந்தனன் 591 பெருமலர் 151 பெற்றேனொடுங் 605 பே பேதுறல்வாழி 321 பேதைவாழிய 537 பைந்நாணர 266 பைம்மருள் 606 பையுள்மாலை 189 பொ பொதியிலம் 124 பொதுவினிற் 375 பொய்யயுடையார் 149 பொருந்தா 75 பொருநெடுந் 255 பொருமாமணி 329 பொழுதுகண் 337 பொறிகெழு 224 பொன்னங்களை 105 பொன்னலார் 531 பொன்னனை 325 பொன்னிதழிற் 480 பொன்னியல் 222 பொன்னுமணியும் 339, 561 போ போகக்கடவன 336 ம மங்கையர்தம் 253 மடலேசொரி 419 மடவரல் 630 மணிநீர்ப் 324 மணியக்கணியு 477 மண்கொண்டு 79 மண்டலம் 119 மண்டாள்நிறை 197 மண்ணகங் 156 மதிமரபாம் 186 மயிலென 589 மருள்போல் 305 மழைகெழுகார் 612 மழையும்புரை 208 மறியறுத்த 518 மற்பாய்விடை 495 மனக்களியாய் 510 மனவேரல்குன் 51 மன்னன் 226 மன்னுந்திரு 342 மா மாடஞ்செய் 344 மாணெழிலண்ணல் 243 மாதிடங்கொண்ட 363 மாதுற்ற 417 மாநிலத்தியலு 22 மாமலைச்சிலம்ப 246 மாயோன்மேய 3 மாலைமணந்து 341 மால்புரை 491 மாவுங்களிறு 425 மாவென 251 மாற்றேனென 410 மானதர்மயங் 637 மி மின்கண்டா 453 மின்றங்கிடை 586 மின்றானனைய 564 மின்னங் 403 மின்னிற்பொலி 57 மின்னேர் 118 மின்னை 218 மீ மீளாதுசெல் 623 மு முக்கட்கூட்டம் 503 முதலெனப் 1 முதுக்குறைந் 536 முதுவாய் 640 முருக்கின் 130 முருகற்செவ்வி 450 முருந்தார் 535 முல்லைமலர் 315 முளிதயிர் 650 முளையெயிறு 537 முறிமேனி 103 முனிதரு 214 முன்னாள் 556 முன்னினை 66 முன்னுந் 196 முன்னுமொரு 381 முன்னுற 248 மெ மெய்யே 202 மெல்ல 576 மென்முலை 574 மே மேவியொன் 132 மை மைவார் கருங் 194 மொ மொய்யிருளில் 398 மொய்வார்மலர் 364 யா யாயே துயில் 430 யாழார் 244 யாழியன் 601 யாழுமெழுதி 244 யானெவனறிகோ 487 வ வங்கமும் 291 வஞ்சியிடை 566 வடிக்கண் 107 வடிவார் 359 வடுத்தான் 593 வட்டமுலை 302 வணர்சுரி 405 வண்டலுற்றே 522 வண்டழை 312 வண்டார் 527 வண்டார் கோதை 596 வண்டுளர் 275 வண்டேறிய 125 வந்தணங்கா 378 வந்தார் 549 வந்தென்னுட 142 வரிசேர் 272 வரிவளைத் 446 வரிவளைப் 414 வருங்குறை 41 வருமால் 165 வருவது 330 வரைதல் 349 வரையா 343 வலியை 592 வல்லிச்சிறு 90 வளங்கெழு 636 வளருங்கறி 459 வளையணி 283 வளையார் 69 வன்தாட் 87 வாங்கிருஞ் 225 வாடத்தகுமோ 296 வாரல் 451 வாராதீமோ 438 வாருந்து 423 வாழ்வது 92 வாள்வரி 402 வானது 563 வானவர் 348 வானுழை 304 வான்றோய்தொல் 552 வான்றோய் பொழில் 468 வி விடலையுற் 578 விடையிரு 371 விண்டலங் 80 விண்டலை 452 விண்ணிறந் 223 விண்ணுக்கு 389 விண்ணுஞ் 466 விதியுடையா 525 விந்தாசனி 178 விரவும் 557 விரையாடிய 203 விலங்கலை 86 வில்லார் 588 வில்லான் 621 வில்லோன் 622 வில்வளர் 326 வில்வேறு 210 விழியாற் 94 விளம்பழம் 501 விளைக்கின்ற 391 விற்றான் 261 வீ வீயாமரபின் 520 வெ வெஞ்சுரமும் 584 வெத்ததன 191 வெந்நீர் 628 வெய்யவன் 335 வெய்யோன் 614 வெல்லுந் 174 வெவ்வினை 397 வெளிப்படை 560 வெள்ளாங் குருகு 258 வெள்ளியலர் 290 வெள்ளிவிழுத் 374 வெறியாடுக 517 வே வேகை நீண்ட 242 வேங்கை 110 வேடகம் 594 வேயனதோளி 609 வேய்தந்த 347 வேலன் புகுந்து 516 வேலைத் தொலைத்த 482 வேழம் வினவி 240 வேறாக நின்னை 641 வேறும்மென 32 வை வைகுறு 7 களவியற் காரிகையில் அமைந்துள்ள மேற்கோள் நூல்களும் பாடல் எண்களும் 1. அகத்திணை 3 45, 55, 252, 2. அரையர் கோவை 1 383. 3. இறையனார் அகப்பொருள் 12 63, 153, 159, 179, 247, 248, 286, 303, 416, 471, 560,570. 4. இன்னிசை மாலை 2 76, 91. 5. ஐங்குறுநூறு 13 98, 263, 283, 330, 542, 547, 595, 602, 607, 632, 635, 642, 645. 6. ஐந்திணை 1 439. 7. ஐந்திணை எழுபது 1 548. 8. கண்டனலங்காரம் 12 102, 121, 129, 141, 167, 192, 206, 309, 361, 362, 480, 529. 9. கலித்தொகை 1 508. 10. காரிகைச் செய்யுள் 1 99. 11. கிளவித் தெளிவு 46 28, 35, 40, 46, 57, 72, 77, 93, 101, 116, 122, 130, 134, 142, 163, 184, 210, 253, 278, 291, 296, 302, 308, 315, 333, 354, 380, 385, 398, 399, 415, 431, 440, 451, 458, 462, 476, 489, 494, 530, 538, 549, 553, 566, 577, 583. 12. கிளவிமாலை 4 34, 290, 488, 493. 13. கிளவி விளக்கம் 2 56, 301. 14. குறுந்தொகை 20 33, 39, 70, 71, 83, 148, 150, 251, 268, 306, 412, 413, 497, 543, 591, 600, 610, 622, 648, 650. 15. கோயில் அந்தாதி 4 95, 136, 433, 526. 16. சிலப்பதிகாரம் 6 69, 81, 275, 276, 277, 420. 17. சிற்றெட்டகம் 7 111, 181, 235, 438, 460, 536, 580. 18. திணைமாலை நூற்றைம்பது 3 512, 613, 641, 19. திணைமொழி 1 171. 20. திருக்குறள் 3 103, 185, 265. 21. திருக்கோவையார் 145 20, 23, 31, 36, 41, 48, 52, 58, 60, 64, 67, 73, 78, 86, 89, 94, 104, 107, 113, 117, 123, 126, 131, 135, 143, 146, 149, 155, 160, 164, 168, 173, 176, 180, 187, 194, 199, 202, 207, 211, 214, 217, 220, 223, 232, 239, 241, 244, 249, 254, 256, 260, 266, 269, 272, 279, 287, 292, 297, 304, 310, 313, 316, 319, 322, 325, 328, 334, 339, 342, 344, 347, 350, 355, 359, 363, 366, 369, 375, 377, 381, 386, 389, 393, 396, 400, 403, 406, 410, 417, 422, 426, 432, 441, 444, 447, 452, 455, 459, 463, 466, 468, 472, 477, 481, 484, 490, 495, 504, 510, 513, 514, 516, 519, 521, 522, 525, 534, 546, 550, 554, 561, 567, 571, 573, 578, 586, 589, 593, 597, 599, 601, 605, 606, 609, 611, 616, 617, 618, 619, 623, 626, 631, 646, 649. 22. திருவிடைமருதூர் மும்மணிக்கோவை 1 144. 23. தில்லை அந்தாதி 1 24. 24. திவாகரம் 1 14. 25. தொல்காப்பியம் 13 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13. 26. நந்திக் கலம்பகம் 1 337. 27. நற்றிணை 14 84, 139, 162, 234, 264, 294, 331, 474, 498, 501, 532, 565, 575, 603. 28. நறையூர் அந்தாதி 1 485. 29. நெடுந்தொகை 6 82, 189, 374, 429, 449, 608. 30. பல்சந்தமாலை 8 50, 138, 157, 166, 365, 435, 563, 588. 31. பழம்பாட்டு 35 27, 100, 106, 119, 125, 152, 172, 213, 228, 240, 274, 312, 318, 323, 336, 352, 368, 395, 402, 408, 409, 421, 436, 437, 454, 465, 483, 502, 506, 518, 556, 559, 569, 584, 585. 32. பாண்டிக்கோவை 154 21, 25, 32, 37, 42, 49, 53, 61, 65, 68, 74, 79, 80, 87, 90, 96, 97, 105, 108, 109, 114, 118, 124, 127, 132, 137,145, 147, 156, 161, 165, 169, 174, 177, 181, 186, 188, 195, 197, 200, 203, 208, 212, 215, 218, 221, 224, 226, 230, 233, 242, 245, 250, 255, 257, 261, 267, 270, 273, 280, 282, 288, 293, 298, 305, 311, 314, 317, 320, 326, 329, 335, 340, 343, 345, 348, 351, 356, 357, 360, 364, 367, 370, 372, 378, 382, 387, 390, 391, 394, 397, 401, 404, 407, 411, 418, 423, 424, 425, 427, 428, 434, 442, 445, 448, 453, 456, 464, 467, 469, 473, 478, 482, 486, 491, 496, 500, 505, 507, 511, 517, 523, 527, 531, 535, 539, 551, 555, 557, 562, 564, 568, 572, 574, 579, 587, 590, 594, 598, 612, 620, 621, 624, 625, 627, 628, 629, 633, 634, 638, 639, 643, 644, 647. 33. பொருளியல் 91 38, 43, 44, 51, 54, 59, 62, 66, 75, 85, 88, 92, 110, 115, 120, 128, 133, 140, 151, 158, 170, 175, 182, 205, 209, 216, 219, 222, 225, 227, 229, 236, 243, 246, 259, 262, 271, 281, 285, 289, 295, 300, 307, 321, 324, 327, 332, 338, 341, 346, 349, 353, 358, 373, 379, 384, 388, 392, 405, 414, 430, 443, 446, 450, 470, 475, 479, 487, 492, 499, 503, 509, 515, 520, 524, 528, 537, 541, 545, 552, 576, 582, 592, 596, 604, 614, 615, 630, 636, 637, 640. 34. மழவை எழுபது 1 558. 35. மூலம் விளங்காதன 25 15, 16, 17, 18, 29, 112, 190, 191, 193, 196, 198, 201, 204, 231, 237, 238, 258, 284, 371, 376, 457, 533, 540, 544, 581. 36. வங்கர் கோவை 3 178, 299, 419. 37. வெண்பாமாலை (புறப்பொருள் வெண்பாமாலை) 19, 22, 26, 30, 47, 154, 461. *மேற்கோள் நூற்குறிப்பு 1. அகத்திணை அகப்பொருள் பற்றிக் கூறும் நூல்களுள் இஃதொன்று. இதன் மூன்று பாடல்கள் களவியற் காரிகையில் மேற்கோளாக ஆளப்பெற்றுள. அவற்றுள் நெடுவேல் துடக்கிய என்னும் பாடல் (45) நம்பியகப் பொருளிலும் மேற்கோளாக ஆளப் பெற்றுள்ளது. தொல்காப்பியத்தில் அகப்பொருள் பற்றிய பொது இலக்கணங்களைக் கூறும் அகத்திணை இயலுள்ளது. அவ்வகப் பொருளை விரித்தும் சுருக்கியும் செய்யப்பெற்ற நூல் அகத் திணைபோலும். ஒவ்வொரு பொருள் பற்றியும் தனித்தனி நூல் யாத்தல் வேண்டும் என்னும் காட்டத்தால் பல நூல்கள் தோன்றின. அவற்றுள் அகத்திணையும் ஒன்றாகலாம். களவியற் காரிகையால் அகத்திணையில் இருந்து அறிந்து கொண்ட பாடல்கள் மூன்றும் வெண்பாக்களாக இருத்தலால் வெண்பாவால் அமைந்த நூலாகலாம். அவ்வகையில் எழுந்த நூல் புறப்பொருள் வெண்பாமாலை யாதல் அறிக. இனி, அகத்திணை என்னும் இலக்கண நூலுக்கு மேற்கோளாக ஆளப்பெற்ற இலக்கிய வெண்பாக்களாகவும் இவை இருத்தல் கூடும். 2. அரையர் கோவை களவியற் காரிகையால் அறியப்பெறும் கோவை நூல்களுள் அரையர் கோவை என்பதுவும் ஒன்று. இக் கோவையில் இருந்து வரவுணர்ந்துரைத்தல் என்னும் கிளவிக்கு மேற்கோளாகக் கட்டளைக் கலித்துறைப் பாடல் ஒன்றைக் காட்டியுள்ளார். இப் பாடலில் தயாபரன் என்றோர் அரசன் குறிக்கப் பெறுகின்றான். அவனுக்குரியதாகத் தஞ்சை குறிக்கப் பெறுகின்றது. தஞ்சை வாணன் கோவையின் பாட்டுடைத் தலைவனாகிய வாணனின் பாண்டி நாட்டுத் தஞ்சாக்கூர் இப் பாடலால் குறிக்கப்பெறுகின்றதா? சோணாட்டுத் தஞ்சை குறிக்கப் பெறுகின்றதா? என்பது அறியக்கூடவில்லை. அரையர் என்பது அரசர் என்பதாம். முத்தரையர் என்பார் வள்ளல்களாய்த் திகழ்ந்தனர் என்பதை நாலடியார் நவில் கின்றது. அரையர் என ஒரு குடியினர் இருந்தனர்போலும். அவருள் வந்து ஆட்சிபுரிந்து ஒருவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டெழுந்த நூல் அரையர் கோவை யாதல் வேண்டும். 3. இன்னிசை மாலை அகப்பொருள் பற்றி வெண்பா யாப்பில் அமைந்த ஒரு நூல் இவ்வின்னிசை மாலையாகும். குறிஞ்சி நாட்டு வேந்தன் ஒருவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு எழுந்த நூல் இது. இந் நூலில் இருந்து கழறல், இடம் வினாதல் என்னும் இரண்டு துறைகட்கும் இரண்டு வெண்பாக்கள் காட்டப் பெற்றுள. (76, 91) அவற்றுள் இரண்டாம் பாடல் சிதை வடைந்துள்ளது. இஃது இசைத்தமிழ் பற்றிய நூலோ என்ற ஐயம் உண்டாகும். ஆனால் இஃது இசைத்தமிழ் நூல் அன்று. அகப்பொருள் கூறும் நூல். இன்னிசை என்பதற்கு ஈண்டு இனிய புகழ் என்று பொருள் கொள்ள வேண்டும். கொடை, வீரம் முதலியவற்றில் இசைபெற்ற ஒருவன்மீது அகப்பொருள் துறைகள் அமையப் பாடப்பெற்ற நூல் இது என்பது தெரிகிறது. செட்டியார்களின் புகழைக் கூறும் நூல் ஒன்று இருந்தது. அதனை இயற்றியவர் செயங்கொண்டார் என்னும் புலவர். செட்டிமார்களின் புகழைக் கூறும் அந் நூலுக்கு இசையாயிரம் என்று பெயர் சூட்டப்பட்டது. அதுபோன்ற இன்னிசை மாலை என்னும் நூலும் ஒருவருடைய புகழைக் கூறுவதாக இருத்தல் வேண்டும் என்று அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் கூறுகிறார்கள். (மறைந்துபோன தமிழ் நூல்கள்) இனி, இன்னிசை என்பது வெண்பா யாப்பினுள் ஒன்று என்பது எவரும் அறிந்ததே. இன்னிசை வெண்பா யாப்பான் அமைந்த நூல் இன்னிசை மாலையெனப் பெயர் பெற்றது என்றுமாம். பெரும் புலவர் அரசஞ் சண்முகனார் இன்னிசை வெண்பாவால் யாத்த ஒரு நூல் இன்னிசை இருநூறு ஆகும். mt® ah¤j k‰bwhU üš ‘tŸSt® neÇir’ v‹gjhF«., அது நேரிசை வெண்பாவான் அமைந்தது. இவ்வாறே இன்னிசை வெண்பாவால் யாக்கப்பெற்ற நூலாக இருக்கக்கூடும் என்னும் எண்ணத்தைக் கிடைத்துள்ள இரண்டு வெண்பாக்களும் குறிப்பால் அறியச் செய்கின்றன. 4. ஐந்திணை குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலையாகிய ஐந்திணை ஒழுக்கத்தைப் பற்றிக் கூறும் ஒரு நூல் ஐந்திணை ஆகும். ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணை மாலை நூற்றைம்பது என்பன போன்றதொரு நூலாகலாம். இவ் வைந்திணை நூல்களைப் போலவே இந் நூலும் வெண்பாவான் இயன்றதென்பது கிடைத்துள்ள ஒரு பாடலும் வெண்பாவாக இருத்தல் கொண்டு அறியலாம். கிடைத்துள்ள வெண்பா ஆறுபார்த்துற்ற அச்சக் கிளவிக்கு எடுத்துக்காட்டாம். 5. கண்டன் அலங்காரம் கண்டனலங்காரம் என்னும் நூலில் இருந்து களவியற் காரிகையால் 12 பாடல்கள் அறியக் கிடக்கின்றன. அவை வெண்பா, கட்டளைக் கலித்துறை ஆகிய பாவகையால் அமைந்தவை. அலங்காரம் என்னும் பெயர்கொண்டு, அணி இலக்கணம் கூறிய நூலோவென ஐயுறுதற்கு இல்லை. இதுவும் அகப் பொருள் பற்றிய தொரு நூலே. இதன் பாட்டுடைத் தலைவன் கண்டன் என்பது நூற் பெயராலும், பாடல்களாலும் நன்கனம் அறியக் கிடக்கின்றது. இக்கண்டன் குடைவேந்தன் என்பதும் (102) கொல்லிக்கு உரியவன் என்பதும் (121) பகை வென்றவன் என்பதும் (129) வரைமேல் புலி பொறித்தான் புகார்க்கு உரியவன் என்பதும் (141, 206) அரசருள் சிறந்தோன் என்பதும் (167) புனல் நாடன் என்பதும் (309) தியாகக் கொடியுடையவன் என்பதும் (*336) சீரிய தார் அணிந்தவன் என்பதும் (480, 529) சனநாதன் என்னும் பட்டம் உடையவன் என்பதும் (362) இப்பாடல்களால் அறிய வருகின்றன. ஆசிரியர் நச்சினார்க்கினியர் புறத்திணை இயலில் (91) அறநீர்மை தாங்கி அளப்பரிதாய் வானப் புறநீர்போன் முற்றும் பொதியும்-பிறரொவ்வா மூவேந்த ருள்ளும் முதல்வேந்தன் முத்தமிழ்க்குக் கோவேந்தன் கண்டன் குடை என்னும் பாடலொன்றை மேற்கோள் காட்டுகின்றார். அது கண்டன் அலங்காரத்தைச் சேர்ந்த தாகலாம். இக் கண்டன் மூவேந்தருள் ஒருவன் என்பதும், அவருள் முதல்வன் என்பதும் இப்பாடலால் அறியப் பெறும் செய்தியாம். மூவேந்தருள் ஒருவராகிய சோழருள் இராசராசன், வீரராசேந்திரன் என்னும் இருவரும் கண்டன் என்னும் பெயருடன் விளங்கினர் என்பது இராசராச சோழன் உலாவாலும், தக்கயாகப் பரணியாலும், வீரசோழிய உரையாலும் அறியக் கிடக்கின்றது. கண்ணன் கனகளபன் கண்டன் கதிரோனும் தண்ணென் கவிகைச் சனநாதன் (38) புகார்மாத் திருக்குலத்துக் கண்டன் (257) வயிரா கரமெறிந்த மானதன் கண்டன் (260) ஒருமகன் கண்டன் (317) கண்டனை மேதினியாள் காந்தனை (359) என்று இராச ராசனை உலா பாராட்டுகின்றது. மலைகொன்று பொன்னிக்கு வழிகண்ட கண்டன் வர ராச ராசன் எனப் புகழ்கின்றது தக்கயாகப் பரணி. அதன் உரை, கண்டன் என்பது சிறப்புப் பெயர். இதனை இயற்பெயர் என்று மயங்காது ஒழிக. இராசராசன் என்பது இயற்பெயர் என்று குறிக்கின்றது (549). கண்டனைப் பற்றி ஒட்டக்கூத்தர் பாடியனவாகச் சில மேற் கொள் பாடல்களை இதன் குறிப்புரையில் டாக்டர் ஐயரவர்கள் குறித்துள்ளார்கள். யாப்பருங்கல விருந்தியுள்ளும் (22) வீரசோழியத்துள்ளும் (119) கண்டனைப் பற்றிய மேற்கோட் பாடல்கள் உள. இவற்றைத் தொகுத்துக் காணுங்கால் இக் கண்டன் இராசராசன் என்ற முடிவுக்கே வருதல் கூடும். வீர ராசேந்திரனைப் பற்றிக் கண்டன் என்று கூறும் வழக்கு அத்துணை வலுவாக இல்லை. மேலும் உலாவில் இராசராசன் சனநாதன் என்று கூறப்பெறுவது போலவே கண்டனலங் காரத்திலும் கூறப்பெற்றுள்ளமை மேலும் வலுவூட்டுகின்றது. களவியற் காரிகையில் போகக் கடவன புள்ளென் றிருந்திலம் (336) எனவரும் கட்டளைக் கலித்துறைப் பாடல் கண்டனலங்காரப் பாடல் ஆகலாம். ஆனால், காரிகை பழம்பாட்டு என்று குறிக்கின்றது. இவ்விராச ராசன் இரண்டாம் குலோத்துங்கன் மைந்தனா கிய இரண்டாம் இராசராசன் ஆவான். இவன் அரியணை ஏறியது கி. பி. 1146 ஆதலால் இந் நூற் காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டாம். 6. கிளவித் தெளிவு கிளவி என்பது சொல் என்னும் பொருள் தருவதொரு சொல். எனினும், அஃது அகப்பொருள் துறை என்பதையும் குறிக்கும். அகப்பொருள் தலைவர் பாட்டுடைத் தலைவர் என்றும், கிளவித் தலைவர் என்றும் இருவகைப் படுவர். அவருள் கிளவித் தலைவராவார் துறைத் தலைவர். ஆகலின், கிளவி என்பது அகத்துறையைக் குறிக்கும் என்பது தெளிவாம். இவ்வகையில் அகத்துறையைத் தெள்ளிதின் விளக்கும் ஓர் இலக்கிய நூல் கிளவித் தெளிவு என்க. இந் நூலில் இருந்து நாற்பத்தைந்து பாடல்களைக் களவியற் காரிகை மேற்கோளாகக் காட்டுகின்றது. அனைத்தும் நேரிசை வெண்பாக்களே. இது பெரிதும் வெண்பாவினாலும் ஆசிரியப்பாவினாலும் அமைந்த நூல் என்று மறைந்துபோன தமிழ் நூல்கள் என்னும் நூல் கூறுகின்றது. ஆனால், கிளவித் தெளிவினைச் சேர்ந்ததாகக் களவியற் காரிகை காட்டும் பாடல்களுள் ஒன்றும் அகவற் பாவாக இல்லை. தமிழ்நெறி விளக்கப் பொருளியற் பாக்களையும் கிளவித் தெளிவெனக் காட்டியுள்ளமையால் ஆசிரியப்பா வினையும் சுட்ட வேண்டிய தாயிற்று என்க. கிளவித் தெளிவு தெளிந்த நடையும், இனிய பொருளமைதியும் ஒருங்கே அமைந்த நூல் என்பதை மேற்போக்காக நோக்குவாரும் உணரக் கூடும். அதன்கண் தில்லை நகர் ஒரு பாடலில் (315 குறிக்கப் பெறுகின்றது. திங்களூர் இரண்டு பாடல்களில் (577 583) குறிக்கப் பெறுகின்றது. திங்களூர் வடகொங்கு நாட்டைச் சேர்ந்தது என்பதையும் வெளிப்படுத்துகின்றது (577). கிளவித் தலைவனே தலைவனாக அமைந்த நூல் இஃது என்பது வெளிப்படுகின்றது. 7. கிளவி மாலை கிளவித் தெளிவு போன்றதொரு நூலே கிளவி மாலையுமாம். இதுவும் கிளவித் தலைவனே தலைவனாக அமைந்த நூலாகலாம். களவியற் காரிகை இந்நூற்பாக்களாக நான்கினைக் காட்டுகின்றது. நான்கும் நேரிசை வெண்பாக்களே. நான்கு இடங்களிலும் கிளவித் தெளிவுப் பாடலுடன் இணைந்தே வந்துள. கிளவி மாலைக்கு முன்மை தந்தே உரையாசிரியர் அமைத்துள்ளார். மன்னெடு வேலினாய் மாழை மடநோக்கி நின்னொடு செல்ல நெடுங்கானம் கொன்னுனைய வேலன்ன வெம்மைய வாயினும் வேந்தர்செங் கோலென்ன வாகும் குளிர்ந்து என்னம் கிளவிமாலை வெண்ப, வேலினும் வெய்ய கானமவன் கோலினும் தண்ணிய தடமென் தோளே (300-1) என்னும் பட்டினப் பாலையினை நினைவூட்டுதல் அறிக. 8. கிளவி விளக்கம் இதுவும் கிளவித் தெளிவு, கிளவிமாலை போன்றதொரு நூலாகும். களவியற் காரிகையால் இந்நூலின் மூன்று பாடல்கள் அறியப் பெறுகின்றன. அவையனைத்தும் நேரிசை வெண்பாக் களேயாம். இந் நூலின் பாட்டுடைத் தலைவன் வன்னாடன் என்பான்; அவன் ஊர் நெய்தல் வாய் என்பது. அவன் நாட்டின் பெயர் வன்னாடு. இக் குறிப்புகள் மூன்ற பாடல்களிலுமே இடம் பெற்றுள்ளன. வன்னாடன் பெருங் கொடையாளன் என்பது, கார்க் கொடையால், வன்கைக் கலிகடந்த வன்னாடன் என்பதனால் புலப்படுகின்றது. (301) 9. கோயில் அந்தாதி சைவ உலகில் கோயில் என்பது சிதம்பரத்தையும், வைணவ உலகில் கோயில் என்பது திருவரங்கத்தையும் குறிக்கும். இவற்றுள் திருவரங்கத் திருக்கோயிலில் எழுந்தருளிய அரங்க நாதர் மேல் அகப்பொருள் துறைகள் அமையப் பாடப்பெற்ற அந்தாதி நூல் கோயில் அந்தாதி ஆகும். இது கட்டளைக் கலித் துறையான் அமைந்ததாகலாம் என்பது கிடைத்துள்ள நான்கு செய்யுள்களாலும் புலப்படுகின்றது. களவியற் காரிகை உரையாசிரியர் திருக்கோவையார் பாடல்களை அடுத்துக் கோயிலந்தாதிப் பாடல்களை நான்கு இடங்களிலும் அடைவு செய்துள்ளார். தலைவியின் கண்ணை, வாலியின் மார்பையும் மரா மரத்தையும் துளைத்த இராமன் அம்புக்கு ஒப்பாக ஒரு பாடல் (136) கூறுகின்றது. இராமன் இலங்கையை அழித்த செய்தியை ஒரு பாடல் (526) கூறுகின்றது. 10. சிற்றெட்டகம் இப் பெயருடையதொரு நூல் களவியற் காரிகையிற் குறிக்கப் பெறுகின்றது. இதன் பாடல்கள் எட்டனைக் காட்டிச் சிற்றெட்டகம் என்றே அது குறிக்கின்றது. இறையனார் அகப்பொருள் உரை, இளம் பூரணர் உரை, நச்சினார்க்கினியர் உரை, யாப்பருங்கலக் காரிகை உரை, யாப்பருங்கல விருத்தியுரை, நம்பியகப் பொருள் உரை, தமிழ் நெறி விளக்கவுரை ஆகியவற்றிலும் இந் நூற் பாடல்கள் மேற்கோளாக ஆளப்பெற்றுள்ளன. ஆங்கெல்லாம் சிற்றட்டகம் என்றே குறிக்கப் பெறுகின்றது. சிற்றடக்கம் என்றும் பாடவேறுபாடு உண்டு. நூற் பெயரையும் பிறவற்றையும் மேலும் ஆராய்ந்து முடிவு செய்யவேண்டிய தாகவே உள. களவியற் காரிகை முதற் பதிப்பாசிரியர் திரு. வையாபுரிப் பிள்ளை அவர்கள் உரைக்கும் இந் நூற் செய்திகள், மேலும் ஆராய்வார்க்குத் துணையாம் எனக் கருதிப் பொறிக்கப் பெறுகின்றது. இவ்வரிய உரையுள் மேற்கோளாக வந்துள்ள நூல்களுள் ஒன்று இதுகாறும் மயக்கத்திற்கு ஏதுவாய்க் கிடந்த நூற் பெயரொன்றினைத் தெளிய உணர்த்துகின்றது. சிற்றெட்டகம் என்ற நூலின் பெயரைச் சிற்றடக்கம் எனவும் பலவாறாகக் கொண்டு தமிழறிஞர் எழுதி வருகின்றனர். உதாரணமாக மதுரைத் தமிழ்ச் சங்கத்தினின்றும் வெளியிட்டுள்ள நம்பியகப் பொருள் விளக்கவுரையில் (அகத்திணையியல், சூத்திரம் 6) பத்துப் பாட்டும் கலித்தொகையும் ஐங்குறுநூறும் கீழ்க் கணக்கும் சிற்றட்டகமும் முதலாகிய சான்றோர் செய்யுள் களெல்லாம் வேண்டிய முறையானே வைத்தலானும் எனக் காணப்படுகின்றது. இதனடிக்குறிப்பில் சிற்றடக்கம் என்று பிரதிபேதமாகக் காட்டப்பட்டுள்ளது. களவியற் காரிகை சிற்றெட்டகம் எனவே நூற்பெயரை யாண்டும் வழங்குகின்றது. இதுவே நூற் பெயராதல் வேண்டுமென்பது பெயரை நோக்கிய அளவானே உணர்தல் கூடும். ஐந்திணைகளுள் ஒவ்வொரு திணைக்கும் எட்டுச் செய்யுள்களாக நாற்பது செய்யுள்கள் கொண்ட சிறியதொரு நூலென்று இதனைக் கோடல் தகும். மேலே காட்டிய அகப்பொருள் விளக்கத்தின் உரை வாக்கியம் கொண்டும், அந்நூலின் ஒழிபியலில் (சூத்திரம் 251) சிற்றட்டகத்துப் பாலைப் பாட்டு என்று வரும் குறிப்புகள் கொண்டும் இந் நூல் ஐந்திணையையும் குறித்தவொரு முறையை மேற்கொண்டு விளக்குவதென்பது பெறப்படும். ஐங்குறுநூற்றின் அச்சுப் பிரதி இறுதியிற் காணப்படுகின்ற 6 செய்யுள்களும் சிற்றெட்டகத்தைச் சார்ந்தவை என்று அதன் பதிப்பாசிரியராகிய ஸ்ரீ ஐயரவர்கள் ஒரு முறை எனக்குத் தெரிவித்தார்கள். அவ்வாறனுன் ஒன்றாய் எம்மூரல்ல தூர்நணித்தில்லை என்று வருவதனைச் சிற் றெட்டகச் செய்யுளாகவே களவியற் காரிகை யுரையுங் காட்டியிருப்பது கண்டு மகிழத்தக்கது. இந்நூலின் செய்யுள்கள் பல தொல்காப்பிய உரைகளிற் பலவிடத்தும் மேற்கோளாகக் காட்டப்பெற்றுள்ளன. சிற்றெட்டகச் செய்யுள்கள் அகவல் என்றே கிடைத்துள்ள வற்றால் அறுதியிடலாம். நிலைமண்டிலம், நேரிசை ஆகிய இருவகை அகவற் பாக்களும் இடம்பெற்றுள. தலைமகள் புருவத்தைப் பூட்டு வில்லுக்கு ஒப்பிடுகின்றது ஒரு பாட்டு (235). தலைவியின் கண்ணை மலையன் ஒள்வேலுக்கு ஒப்பாக உரைக்கின்றது மற்றொரு பாட்டு (536). பிற நூல்களில் காட்டப் பெற்றுள்ள சிற்றெட்டகப் பாடல்களுள் ஒன்றில். இலவம் ஏறிய மஞ்ஞை எரிபுகு மகளிர் ஏய்க்கும் -தொல். பொருள். 111. நச். என்றும், மற்றொன்றில், ஈயல், கோல்பிடி குருடர் ஏய்க்கும் -தொல். பொருள். 111 நச். என்றும் கூறப்பெற்றுள்ளது. இல்லிருந்து மகிழ்வோர்க் கில்லையால் புகழ் என ஒரு பாட்டுக் கூறுகின்றது. (தொல். அகத். 24 இளம்; நம்பி. ஒழிபு. 42) 11. தில்லை அந்தாதி தில்லையம் பெருமானைப் பொருளாகப் கொண்டு எழுந்த அந்தாதி நூல் இது. களவியற் காரிகை உரையாசிரியர் இந்நூற் பாடலொன்றைத் தெளிதல் என்னும் கிளவிக்கு மேற்கோளாக எடுத்தாண்டுள்ளார் (24). அப்பாடல், அயன் தலையைத் தடிவான்; அரன்; தாழ் சடையோன்; தில்லை எனத் தில்லை நகரைக் குறித்துள்ளது. 12. நறையூர் அந்தாதி இது துறையூரைச் சேர்ந்த நறையூரில் வாழ்ந்த ஒரு வள்ளல்மீது அந்தாதி யாப்பில் பாடப் பெற்ற ஒரு நூலாகும். இந் நூலில் இருந்து ஒரு செய்யுளைக் களவியற் காரிகை மேற் கோளாகக் காட்டுகின்றது (485). விரிதமிழின், சொல் அளந்தான் ஒரு பாவலர்க் காய்த் துறையூர் நறையூர் நெல் அளந்தான் அளந்தான் நெடுநாடு எனப் பாட்டுடைத் தலைவனை நயமுறப் பாடுகின்றது. கொடைச் சிறப்பால் அளந்தான் எனப் பாட்டுடைத் தலைவன் பெயர் பெற்றான் போலும்! 13. பல்சந்த மாலை சொன்ன கலம்பக உறுப்புவகை நீக்கி மன்னிய பத்து முதல்நூ றளவா வந்த மரபின் வரூஉஞ் செய்யுள் முதலா வந்தது பல்சந்த மாலை யாகும் எனப் பன்னிரு பாட்டியலும், பத்து முதலாப் பப்பத் தீறா வைத்த வண்ண வகைபத் தாகப் பல்சந்த மாலை பகரப் படுமே என இலக்கண விளக்கப் பாட்டியலும் பல்சந்த மாலையின் இலக்கணத்தைக் கூறுகின்றன. பேரைக் கூறுமாற்றானே பலவகை வண்ணங்களை (சந்தங்களை) உடையதொரு நூல் என்பது போதரும். எனினும், இந் நூலில் இருந்து எட்டுச் செய்யுள்களே கிட்டியுள்ளமையாலும், அவையனைத்தும் கட்டளைக் கலித்துறையாகவே இருத்தலானும் பல வகை வண்ணங்களால் இந் நூல் அமைந்ததென்பதை அறுதி யிட்டுரைக்க வாய்ப்பு இல்லாது போயிற்று. இந்நூல் வச்சிரநாட்டு வகுதாபுரியில் அரசு செய்துவந்த அஞ்சு வன்னம் என்னும் மரபைச் சேர்ந்த ஒரு முகமதிய மன்னனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு எழுந்த நூல் என்பது நன்கு புலப்படுகின்றது. கலுழ்பா வழிவரும் தலைமையர் (50) என்றும், வின்னன் என்னும் பெயரினன் (138) என்றும், வச்சிரநாட்டு வகுதா புரியினர் (157) என்றும், செம்முகமானதர் (166) என்றும், இயவனர் (365, 588) என்றும், சோனகர் (563) என்றும், அஞ்சு வன்னத்தவர் (365) என்றும், விஞ்சத்து அடவி வரை அவர் நாடியிருந்தது (435) என்றும், கலுபா கலுபதி (365, 435) என்று அழைக்கப் பெற்றனர் என்றும் பல்சந்த மாலைப் பாடல்கள் உணர்த்துகின்றன. அல்லா வெனவந்து தொழுஞ்சீர் நல்லார் என்றும் ஒருபாடல் (588 குறிக்கின்றது. வகுதாபுரிக்கு அந்து பார் என ஒரு பெயரும் இருத்தல் வேண்டும் என்பது ஒரு செய்யுளால் புலப்படுகின்றது என்று முதற் பதிப்பாசிரியர் குறித்துள்ளார். வகுதாபுரி இந்நாளில் காயற்பட்டினம் என்று வழங்கப் பெறுகிறது. 14. பழம்பாட்டு களவியற் காரிகை சில பாடல்களைப் பழம்பாட்டு என்று குறிக்கின்றது. அவற்றுள் பலவும் பல்வேறு உரைகளிலும் ஆளப் பெற்றுள. அப் பாடல்களுள் வரகுணன் என்னும் வேந்தனையும் அவனது தொண்டி, ஆங்கை என்னும் ஊர்களையும் இரண்டு பாடல்கள் (119, 587) குறிக்கின்றன. சீவலன் என்னும் வேந்தனையும் அவனது களவழி நன்னாட்டையும் ஒரு பாட்டு (318)க் குறிக்கின்றது. கண்டன் என்னம் வேந்தனையும் அவன் புகாரையும் ஒரு பாட்டு (336)க் குறிக்கின்றது. மன்னன் மதுராகனன் என்பவனையும் அவனது தொண்டிமாக்கடலையும் ஒரு பாட்டு (409)க் குறிக்கின்றது. நாகைவள்ளல் ஒருவனை ஒரு பாட்டு (352)ச் சுட்டுகின்றது. தலைவனைச் செம்பூட்சேய்க்கு ஒப்பிட்டு ஒரு பாடல் பாடு கின்றது (274) பஞ்சநெதி ஒரு பாடலில் சுட்டப் பெறுகின்றது (584). 240ஆம் பாடல் எள்ளற்சுவை மிக்கு விளங்குகின்றது. பழம்பாட்டு எனக் காட்டப்பெற்றவை வெண்பா, அகவல், கட்டளைக் கலித்துறை முதலிய பல்வேறு பாவகைகளைச் சேர்ந்தவை. 15. மழவை எழுபது மழவையானது மழபாடி. மழபாடியில் கோயில் கொண்ட சிவ பெருமான் மேல் அகப்பொருட்டுறை யமைந்த எழுபது பாடல்களால் ஆகிய நூல் மழவை எழுபது என்பது பெயரால் வெளிப்படுகின்றது. களவியற் காரிகை, மழவை எழுபதில் இருந்து ஒரு பாடலை முரசுவினாதல் என்னும் துறைக்கு மேற்கோளாகக் காட்டி யுள்ளது. அப் பாடல் மழவையை, மாமழபாடி என்று கூறு கின்றது. சொற்சுவை, பொருட்சுவை கெழும அமைந்த நூல் மழவை எழுபது என்பது கிடைத்துள்ள ஒரு பாடலாலும் நன்கு விளங்குகின்றது. 16. மூலம் விளங்காதன களவியற் காரிகை உரை ஆசிரியரால் பழம்பாட்டு என்று குறிக்கப் பெற்றவை ஒழிய மூலம் விளங்காத பாடல்கள் சில மேற்கோளாக வந்துள. அவற்றுள் 190, 191ஆம் பாடல்கள் குடந்தையைக் குறிக்கின்றன. 196ஆம் பாடல் கிள்ளியைக் குறிக்கின்றது. 201ஆம் பாடல் பழைய னூரைக் குறிக்கின்றது. 238ஆம் பாடல் அதியன் தலைக்குலத்தையும், 457ஆம் பாடல் பூழியரையும் குறிக்கின்றன. 533ஆம் பாடல் கழுமலம் தந்த செம்பியன் பங்குனி விழாவையும், உறந்தை உள்ளி விழாவையும் குறிக்கின்றது. மூலம் விளங்காதவற்றுள் இலக்கண மேற்கோள்களும், இலக்கிய மேற்கோள்களும் உள. பல்வேறு பாவகைகளும் உள. 17. வங்கர் கோவை களவியற் காரிகை மேற்கோள் காட்டும் கோவை நூல்களுள் வங்கர் கோவை என்பதுவும் ஒன்றாகும். இந் நூல் வங்கர் குலம் என்னும் ஒரு குலத்து வந்த வேந்தன் ஒருவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயற்றப்பெற்ற நூல். இப் பாட்டுடைத் தலைவன், விந்தாசனி கொண்கன்; வேந்தரில் ஆண்பிள்ளை (178) என்றும், குமரித்துறையும் கங்கையும் ஆடும் கடகளிற்றான் வங்கர் காவலவன் (299) என்றும், வங்கர் குலோத்தமன் (419) என்றும் பாராட்டப் பெறுகின்றான். இவன் ஊர் கடந்தை என்பது (419). இதனைத் தடந்தை என்றும் ஒரு பாடல் (299) குறிக்கின்றது. இந் நூலின் கிடைத்துள்ள மூன்று பாடல்களும் கட்டளைக் கலித் துறைகளே. களவியற் காரிகையில் சிதைவடைந்துள்ள முற்பகுதி உரிய வேணுவ னத்தேநெல் வேலியி னூடு தோன்றி யுலகமெ லாம்போற்றுங் கரிய மாணிக்க மல்லாத வேய்முத்தாங் கையி னாலும் தொடோமுறு கண்ணதாய் விரியு மோட்டுமுத் தென்குற மான்முலை விலைக்கு ளரொகு மொரணப னேவிடை வரிய ராகலின் மடிக்கீழ்க் கிடந்தபொன் மாணிக் கந்தரில் வாங்குவ ராளையே. 11. ................................................................................ ............................................................................. ...................................kw¤âa ரந்நில மக்கடம்பேர் துணிவன வீங்கிவை யாவும் கருவென்று சொல்லினவே. இச்சூ............btÅ‹, பாலைக்குக் கரு வறிவித்தலைக் கருதிற்று. வரலாறு : தெய்வம் பகவதியும் ஆதித்தனும் ; மாவலியழிந்தசெந்நாயும்வலியழிந்தயானையும்;மரம்இருப்பையும்ஓமை...................gUªJ« புறாவும் ; பறை பூசற் பறையும் ஊரெறி பறையும் ; செய்கை ÃiunfhlY«...................ம் ; யாழ்பாலையாழ்; பண்பஞ்சுரம்; jலைமகன்nபர்ÛளிÉடலைfளை;jiykfŸ................ம் gதிரிப்óவும்; Úர்mறுநீர்க்Tவலும்mறுÚர்ச்Rனையும்; mந்நிலத்துkக்கட்nபர்.............கU. (11) 12. சால்லான் மிகும்பரற் பாலைக் குரிப்பொருள் சொல்லின்மினிநீ.................................................................................................................................všyh முணர்ந்தவர் தாமுரைத் தார்க ளிளையவரைக் கொல்லா வகைமுலைக் கச்............................................................. ..............................ȉnwh வெனின் பாலைக்குரிப் பொருள் அறிவித்தலைக் கருதிற்று. என்னை? பிரிதலும் பிரிதனிமித்...............v‹id? வெம்பரலத்தம்வேனில்பின்பனிச் செம்பகறகருப்பணஞ்சேணிடைப்பிரிதல் மி..........................................................................Ä ரெயின ரெறிபறை யணி (? ) கோள் கொல்குறு (ம்) பறுநீர் நெல்லியம் பசுங்காய் உரமில் செந்தெககு கொற்றொடி பஞ்சுரம் பிறவும் திருந்திய பாலைத் திணையது வகையே நடுவு(நிலைத் திணையே நண்பகல் வேனிலொ)டு முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே -தொல். அகத். 11. பின்பனி தானு முரித்தென மொழிப -தொல். அகத். 12. (12) 13. ..................................................................................................................எ................................................................fU மயங்கியும் வரப்பெறும். என்னை? உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே -தொல். அகத். 15. (13) 14. v...(fhnu கூதிர்) முன்பனி பின்பனி சீரிள வேனில் வேனி லென்றாங் கிருமூ வகைய பருவ மென்(ப) (அவைதாம், ஆவணி முதலா விரண்டிரண் டாக மேவிய திங்கள் எண்ணினர் கொளலே. -திவாகரம். என்னு மிலக்கணத்தால், ஆவணியும் புரட்டாசியும் (கார்) ; (ஐப்பசி) யுங் கார்த்திகையும் கூதிர் ; மார்கழியுந் தையும் முன்பனி; மாசியும் பங்குனியும் பின்பனி ; சி(த்திரையும் வைகாசியும்) இளவேனில்; ஆனியும் ஆடியும் வேனில் என்று அறுவகைப் பட்டவாறுங் கண்டு கொள்க. இனி மூவகைப்ப...............eh‹F திங்கட் கூடியதொரு பருவமாக வென்றவாறு. என்னை? ஈரிரு திங்கட்பருவமொன்றாகமூவகையி................anu’ என்றாராகலின். அவை வருமாறு: ஆவணியும் புரட்டாசியும் அற்பசியும் காத்திகையும் கொண்டது கார் ; மார்கழியும் தையும் மாசியும் பங்குனியும் கொண்டது பனி ; சித்திரையும் வைகாசியும் ஆவணியும் (? ஆனியும் ஆடியும்) (கொண்டது வேனில்). (14) 15. ............................................................................................................................... இன்னுமுன்சொன்னநிலங்களைக்குறிஞ்சியும்நெய்தலுங்களவென்றும்இவையிருதி...ghUKs®. என்னை? குடவரை குறிஞ்சியுங் குணகடல் நெய்தலுங்கடவத........................................................................ .....................................................................Jj«Ä லொருதனி ககுகாத லொழிந்தன வியல்பே நன்னிலை மருதமுந் தென்னிலை முல்லையும் .....................................................................Jwªnj’ உடனிலைப் பாலை யிருவீற்று முர்த்தே என்றாராகலின். மற்றும் வரும் வழிக் கண்டு... (15) 16... ... .... .... ... ... ...........jW« என்ப தென்னுதலிற்றோ வெனின் எட்டு மணமு மவற்றிற் குதாரணமு மறிவித்தலைக் கருதிற்று....................... (பிர) சாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தருவம், அசுரம், இராக்கதம், பசாசம் என்ற வாறு. 17. ïUg..................ண் டெழிற்பிர மங்காத்தவற் கொருபதின் மேலிரன் டாண்டின டன்னை யுவந்தளித் தருள்tதறநிலைய...................................ajid¥ பெருமறை யோன்கொலை யொன்றோடொப் பாமென்று பேசி(னரே என்ப தென்னுதலிற்றோ... ..... ...(17) 18. .......................................................................................... 19. .......................................................................................... 20. ......................................................................................... 21. ........................................................................................... 22. ........................................................................................ --- --- --- --- ---- --- ---- --- --- --- --- கூடிய கூட்ட மாகலானும் கூட்டக் கூடல் களவிற் கில்லை யென்னு மிலக்கணத்தாலும்உளமாண்பொத்தகிழ..................jfkh¥ புணர்ச்சி யென்னு மிலக்கணத்தாலும் களவெனப் படாது. களவெனப் படாதாதலா லவ்வியல் bg‹DŠ..................கிšiy யென்ற அருத்தாபத்தியாற் களவாகாதோ வென்றாற்கு அற்றன்று. இக் கூட்டங்கள் கற்புக் கெண்ணப்பட்ட கூட்டங்கள் ஆதலால் கற்பெனவும் படாது. அன்றியும் களவுங் கற்புங் கைகோளாகவளÉலன்ãனகமென¥படுமே’என்Dமிலக்கணத்தாற்.....................v‹wikah லிக்களவுக்குக் குற்ற மற்றிருப்பதோ ருறுப்பின்மையால் அகமெனவும் படாது. அகப்புற மெனில், அகமாகிய கற்பு அகப்புறமாகிய களவு பின்னுமாகக் களவுமென் றெண்ணாமையி லகப்புற மெனவும் படாது. என்னை? முற்படப் புணர(த சொல்லி) ன்மையிற் கற்பெனப் படுவது களவின் வழித்தே -இறை. 15. எனவும், ஐந்திணை தழுவி யத்த(? யக) மெனப் படுவது கந்திருவ முறைமையிற் களவொடு கற்பே என்றாராகலின். v‹wikahÈ..........ப் பாற்படுமோ என்பது கடா. அதற்கு விடை பொருளதிகாரத்திற் கண்டு கொள்க. (22) சிறப்புப் பெயர் அகரவரிசை (எண் - மேற்கோள் பாடலெண், நூ - நூற்பா எண்) அ அகத்திணைப் புறன் 29 அகத்தியன் 557 அகப்பா 565 அகப்புறம்-நூ 24 அஞ்சுவன்னத்தர் 365 அடுபோர்ச் செழியன் அண்டர் 370 அதிகன் தலைக்குலம் 238 அதிசெய பாண்டியன் 186 அத்தன் 292 அந்தணர் 620mku®nfh‹ 442 அமரர் 448 அம்பலத்துக் குனிக்கும்பரன் 599 அயன்தலைதடிவான் 24 அரங்கன் 433, 526 அரன் அம்பலம் 52 அரன்குன்று 304 அரிகேசரி 61, 65, 74, 186, 345, 390, 394, 427, 555, 568, 579, 624, 638, 647 அரிகேசரி கூடல் 137, 517 அருப்பம் 175 அலைவாய் 189 அல்லா 588 அவிரொளி அம்பலம் 241 அளநாடு 445 அறம்புரை செங்கோல் 407 அறுவகைச் சமயம் 14 ஆ ஆஅய் 591 ஆங்கை 585 ஆடகமாடம் 594 ஆண்பிள்ளை 178 ஆயர் 371 ஆயுந்தமிழ் 424 ஆரம்புனைந்தவன் 348 ஆய்தீந்தமிழ் 74 ஆவணமறுகு 429 ஆவணவீதி 42 ஆற்றுக்குடி 161 இ இடிக்கொடி 442 இயல்பும் களவும் 16, 17 இயற்கைப்புணர்ச்சி 18 இயற்கைப்புணர்ச்சி - கிளவி- நூ. 25 இயவனர் 588 இயவனராசன் 365 இரந்து குறையுறுதல் 159 இரவுக்குறி 416 இருவயின் ஒத்தல் 63 இருவர் உணரான் 199, 519 இலங்கை 320, 526 இலஞ்சி 84 இலைவளர் பாலன் 217 இறவுளர் 465 உ உசிதன் 267, 357, 507, 511, 523, 535, 598, 639 உடனிலைச் செலவு-நூ. 51-54 உரிப்பொருள் 12 உருமேந்தியகோன் 427, 456, 639 உலகளந்த கொற்றவன் 523 உள்ளிவிழா 540 உறந்தை 230, 429, 540, 598 எ எண்வகை மணம்-நூ 16-21 ஏ ஏழிசைச் சூழல் 64 ஏழ்பொழில் 244, 550 ஐ ஐங்கணை 156, 157 ஐந்திணைமுறை 3 ஐம்பால் 84 ஐயம் 18 ஒ ஒருதலைக் காமம்-நூ. 24 ஓ ஓதங்கடைந்தோன் 448 க கங்கை 287, 299, 626 கங்கை மங்கை 311 கஞ்சுகம் 41 கடந்தை 419 கடல்தில்லை 319 கடையல் 53, 61, 147 கணிமை 364 கண்டன் 102, 121, 127, 192, 206, 236, 309, 480, 529 கண்டன் கொல்லி 102, 121 கண்டன் சிலம்பு 192 கண்டன்புகார் 127, 206, 236 கண்டன்புனனாடு 309 கண்ணறைவாய் 368 கந்தன் 465 கயல்கொடி 360 கயிலை 73, 78, 104, 160 கருப்பொருள் வகை 11 கருமால் வரை 165 கலுபதி 365 கலுள்பா 50 கழித்தலை 383 கழுக்குன்று 223 கழுமலம் 540 களத்தூர் 200, 245 களவொழுக்கம்-நூ. 21 கறைமிடற்றம்பலவன் 160 கற்பு-நூ. 43 கற்பொழுக்க வகை-நூ. 44, 45 கன்னி 25, 97, 118, 161, 224, 404, 478, 535, 562 கன்னித்துறை 25, 118 கன்னிநாடு 535 கன்னியங்கானல் 404 கா காகத்திருகண் 211 காட்சி 18, 19 காமன்கணை 155 கார்வண்ணன் 351 காலன் 516 காலனைக் கடந்தோன் 410 காவிரிநாடு 158, 351, 387 கி கிளவிதோன்றா இடம் 248 கு குட்டுவன் 565 குணகடல் 523 குமரிக்கருங்கழி 340 குமரித்துறை 299, 467 குமரிமுந்நீர் 329, 628 குமரியங்கானல் 227 குருந்தொசித்தான் 351 குழல் வாய்மொழி 241 குறிஞ்சிக்குப் பொழுது 5, 6 குறுந்துறை 284 குற்றாலம் 241 கூ கூடல் 54, 127, 370, 387, 397, 425, 612, 647, 649 கூடல்விழா 649 கூடற்பதி 370, 387, 407 கூடற்பொழில் 397 கூத்தன் 58, 104 கெ கெண்டை வரைமேல் வைத்தவன் 224, 627 கை கைக்கிளை 18 கைதவன் 326, 387 கையில் ஊமன் 83 கொ கொடிமுன்றில் 481 கொல்லி 53, 74, 90, 97, 104, 109, 174, 177, 197, 203, 212, 233, 242, 245,348, 364, 367, 505, 511 கொல்லிச்சாரல் 174, 212, 233, 245, 356, 382 கொல்லிச்சுனை 197 கொல்லித்துறை 505 கொல்லிப்புனம் 109 கொல்லிப்பொழில் 177 கொல்லிவரை 203, 242, 511, கொற்கை முன்னுறை 82 கொன்றையோன் 426 கோ கோகனகம் 489 கோடக நீண்முடி 594 கோட்டாறு 97, 273, 370, 634 கோட்டுமா 264 கோம்பி 67 கோலின் தன்மை 491, 493 ச சங்கம் 526 சங்கமங்கை 401, 643 சடைமுடியோன் 459 சத்துருதுரந்தரன் 628, 633 சனநாதன் 362 சி சிந்தாமணி 36 சிலம்புகழிவிழா 645 சிவன் சிற்றம்பலம் 513 சிவன்றில்லை 466 சிறியோன் பொருள் 301 சிறுகுடி 162, 174 சீ சீவலவன் 318 சு சுடர்க்கொற்றவன் 215 செ செந்நிலம் 169, 188, 261, 357, 505 செம்பியன் 540 செம்பியன் மாறன் 539 செம்பொன்வரை 274 செம்பொன்வரை 87, 298 சே சேவூர் 147, 391, 411, 434, 555, 633 சேவைவென்றான் 434 ஞ ஞமலி 423, 429 ஞா ஞாழி 422, 429 த தக்கன் 593 தக்கன் வேள்வி 609 தஞ்சை 382 தண்டமிழ்ப் பொருட்பா-நூ. 29 தண்ணங்குமரி 418 தமிழ்க்கூடல் 427 தமிழ்நர்பெருமான் 195 தமிழ்நாடு 428 தமிழ்நெறி விளக்கம்-நூ 23 தமிழின் நுழைபொருள் 300 தயாபரன் 383 தலைப்பெயன் மரபு 158 தாமரையோன் 344 தாழ்வடம் 125 தி திங்கட்குலம் 257 திங்களூர் 577, 583 திண்டிக்கதிரன் 201 திண்டேர்ப்பொறையன் 413 தித்தன் 429 தியாகக்கொடி 336 திருந்தா வாழ்க்கை 236 திருமால் 227 திருமுடித் தென்னவன் 132 திருவரங்கன் 136 திரைமேனின்ற வேந்தன் 351 தில்லை 168, 297, 315, 417, 422, 429, 468, 490, 546, 573, 623 தில்லைச் சங்கரன் 546 தில்லைச்சீர்விழா 422 தில்லைப் பூம்பணை 490 தில்லைப்பொழில் 168, 334 தில்லை மாநகர் 315, 417, 468, 573 தில்லை மூவாயிரவர் 199 தில்லைம்பலம் 297 தில்லையின் எல்லை 623 தீ தீந்தமிழ்த்துறை 64 தீந்தமிழ்போல் மங்கை 391 தீவண்ணன் 646 து துத்தி 84 துறையூர் 485 தூ தூங்கணங்குரீஇ 258 தெ தெளிதல் 18, 22 தென்குடந்தை 190 தென்கூடல் 200, 261, 594 தென்பாழி 360 தென்புலியூர் 249, 269 தென்பொதியில் 500 தென்னம்பொருப்பு 559 தென்னர்க்குமாறு 527 தென்னன் 97, 105, 500, 535, 587 தென்னன் செந்நிலம் 212, 221 தென்னன் திருமால் 340 தென்னன் நாடு 316, 405 தென்னன் பறந்தலை 491 தென்னன் பொதியில் 188 தென்னாடு 372 தே தேன்விரும்பு முடவன் 411 தை தையல்வளர்மேனி 310 தொ தொண்டி 119 தொண்டித் தண்கயம் 198 தொண்டிமாக்கடல் 409 தொண்டி முன்னுறை 413 ந நஞ்சுண்டகண்டன் 366 நட்டாறு 283, 625 நரந்தங் கண்ணி 204 நலம் பாராட்டல் 30 நவகண்டம் 138 நறையாறு 49, 367, 551, 572, 625 நறையூர் 485 நா நாகை 352 நாரணன் 393 நாலூர்க்கோசர் 600 நான்முகன் 256 நி நிரம்பா வாழ்க்கை 235 நீ நீர்வளநாடு 233 நு நுண்ணிய பனுவல் 66 நூ நூல்வரம்பு கண்டான் 337 நெ நெடுங்களம் 257, 478, 621, 629 நெடுமால் 316 நெடுமாறன் 181, 200, 224, 225, 329, 340, 372, 411, 442, 453, 467, 469, 551, 594, 629 நெடுமாறன் கூடல் 482 நெய்தற்குப் பொழுது 8 நெல்லளந்தான் 485 நெல்வேலி 65, 343, 351, 587 நெல்வேலி வென்றான் 224 நெற்றிக்கண் ஒருவன் 80 நே நேரிமலை 464 நேரியன் 257, 564 நேரியன் கொல்லி 147 நேரியன் மாறன் 564 நொ நொச்சிவேலி 429 ப பகற்குறி 416 பங்குனி விழா 540 பஞ்சநெதி 584 பஞ்சவர் 621 பஞ்சவன் 387, 390 பஞ்சவன் பாழி 127, 250 படிச்சந்தம் 107 பந்தார் விரலி 505 பரங்குன்று 232, 463, 525 பரஞ்சோதி 342 பரதவர் 234 பராங்குசன் 25, 42, 96, 293 பழையன் 201 பளிக்கறை 104 பறைதபுநாரை 413 பனிவரை 96 பா பாங்கற் கூட்டம்-நூ 26-28 பாடகம் 55 பாதலம் 389 பாலைத்திணை 2 பாலைப்பொழுது 9, 10 பாழி 25, 42, 233, 293, 314, 594 பாழிப்பகை 469, 500 பாழிவெற்றி 486 பி பிணையல் 84 பின்னை 328 பு புகழ்க்கிள்ளி 196 புகார் 79 புட்கொடி 198 புரிசடையோன் 272 புலியூர் 60, 202, 266, 339, 399, 441, 455, 522, 561, 611 புலியூரரன் 375 புல்லியங்காடு 565 புற்றொன் றரவன் 463 புனனாடு 49, 90, 169, 587 பூ பூங்கணைவேள் 272, 455 பூதம்பணி கொண்டவன் 448 பூபால தீபன் 167 பூலந்தை 79, 105, 124, 230, 255, 531, 644 பூழியர்கோன் 230 பூழியன் 105, 124, 351, 457 பெ பெண்தூது 421 பெரியோர் ஒழுக்கம் 374 பெருங்கணி 359 பே பேய்கண்டனையது 279 பொ பொதியில் 32, 105, 208, 221, 270, 288, 377, 378, 591, பொய்தல் 275 பொருளதிகாரம் 8 பொருளியல்-நூ 23 பொன்னகர் 344 பொன்னுலகு 425, 488 ம மணற்றி 108, 118 மணிகண்டன் 266 மணிமுடிமாறன் 491 மணிவாழ்பாவை 603 மண்ணளந்தமால் 156, 165 மதன் சக்கரம்-நூ 29 மதிக்கண்ணி 322 மதிதரன் 300 மதிமரபு 186 மதியுடம்பாடு-நூ 30 மதில் மூன்று 250 மந்தாரம் 197 மருதத்திற்குப் பொழுது 7 மருத வனம் 144 மலையம் 46, 347, 359, 469 மலையன் 536 மலைவாணர் 489 மல்லையங் கானல் 337 மழபாடி 558 மழைதரு பெருமை 508 மா மாரிப் பித்திகம் 268 மால் 256, 269, 472 மாறன் 186, 257, 360, 523 மாறன்குமரி 335 மாறன் கூடல் 68 மாறன் திருக்குலம் 401 மாறன் பொதியில் 305, 448 மாறன் மலையம் 627 மாறை 132 மானதர் 166 மீ மீனவன் 311 மு முக்கட் கூட்டம் 503 முசிறி 364, 523 முதலும் கருவும் மயங்கல் 13 முதற்பொருள் 1 முந்நீர் 86 முப்புரம் 58, 558 முரசறை கடைவாய் 483 முருகன் 189, 590 முருகு 532, 533 முல்லைக்குப் பொழுது 4 முல்லை வேலி 369 முன்னுறு புணர்ச்சி 303 மூ மூதாலத்துப் பொதியில் 600 மூவகைப் பருவம் 15 மூவா மருந்து 323 மூவுலகம் 552 மொ மொழி மாற்று 416 யா யாழார் மொழிமங்கை 244 வ வகுதாபுரி 157 வங்கர் காவலன் 299 வங்கர் குலோத்தமன் 419 வச்சி ரநாடு 50, 57, 435 வஞ்சி 37, 42, 165, 540 வடகொங்கு 577 வடகொல்லி 345 வடவான் கயிலை 368 வண்டு வினாவல் 34, 35 வதுவை மணம் 645 வரகுணர் கோன் 585 வரகுணன் 119 வருடை 294 வரைதல் வேட்கை 471 வரைபொருட் ககறல்-நூ 50 வரைமேல் புலிவைத்தல் 141 வரோதயன் 80, 97, 165, 227, 283, 298, 364, 473 வல்சி 429 வல்லம் 87, 114, 227, 242, 288, 382, 404, 425, 524 வலைஞர்திறை 237 வழுத்தூர் 62, 300 வழுதி 320 வளை எறிந்தவன் 348 வன்னாடன் 56, 301, 397 வா வாலி 136 வானவர் நாதன் 348 வானவன் மாறன் 208, 612 வான்கழி 226, 287 வி விசாரி 145, 203, 391, 486, 572, 644 விஞ்சத் தடவி 435 விடையோன் 495 விந்தாசனி கொண்கன் 178 வியன்தில்லை 403 வியனாடு 531 விழிஞம் 37, 174, 218 வின்னன் 138 வெ வெண்காடு 516 வெண்மா 132, 397 வெள்ளாங் குருகு 258 வெள்ளைமறி 517 வெளிப்படைநிலை-நூ 46-49 வே வேட்டக்கிளை 235 வேடகம் 594 வேணாடு 79, 326 வேம்பொடு போந்தை 473 வேல்முருகன் 526 வேல்கண்டன் 167 வேல்புரை வெம்மை 491 வேலன் 516, 517, 518 வை வையை 21, 267, 283 வையைநாடு 574 மூல நூல் அகப்படாத பாடல்களுக்குக் குறிப்புரை அகத்திணை கோயில் அந்தாதி அரையர் கோவை சிற்றெட்டகம் இன்னிசைமாலை தில்லையந்தாதி ஐந்திணை நறையூர் அந்தாதி கண்டனலங்காரம் பல்சந்தமாலை காரிகைச் செய்யுள் பழம்பாட்டு கிளவித் தெளிவு மழவை எழுபது கிளிவிமாலை மூலம் விளங்காதன கிளவி விளக்கம் வங்கர் கோவை அகத்திணை (3) 45. காதல் வடிவேல் துடக்கிய நீர், நெடுவேறு உடக்கிய நீர் நீக்குமதி - காதல் என்னும் கூரிய வேலால் எம்மைப் பிணைத்த நீவிர் நெடுந்துயர்ப்படுதலை நீங்குவீராக. வேய்க்கணம் - மூங்கிற்காடு. குவடு - மலை. சாரல் மணம் நும்வரைமேன் நாறும் என இடமணித் துரைத்தவாறு. 55. கொன் - பெருமை. கலை - மேகலை. பைமலைத்த - பாம்பின் படத்தை வென்ற. பின்னிரண்டடிகள் தெளிதற்குரியன. 252. குண்டுநீர் - ஆழ்ந்தநீர். வேலை - கடல். குவலயம் - உலகம். கணம் - தொகுதி. கருவண்டுத் தொகுதிபோன்ற கூந்தல் என்க. காதல் நிறைவேறாவிடின் காந்தன்மலர் கைக் கொள்ளார் ; எருக்குக் கொள்வர் என்பது உட்கிடையாம். அரையர்கோவை (1) 383. பாக்கம்-நெய்தல் நிலத்தூர்; மருதநிலத்தூருமாம். பட்டது-நிகழ்ந்தது. கானல் - கடற்கரைப்பகுதி. சேக்கை - கூடு; தயாபரன் - அருளாளன். பூக்கட் கழித்தலை - பூக்கள் நிரம்பிய கழிவாய் இடத்து. புள்ளினம் சேர்ந்தில என்க. பூக்கட் கழித்தலை என்றதால் தலைவன் வந்து நின்ற இடங் குறித்தாளாம். இன்னிசைமாலை (2) 76. தேனகு முல்லை - தேன் வழியும் முல்லை மலர். மீனகு வாண் மதி - விண்மீன்களை ஒளியால் இகழும் ஒளிமிக்க மதியம். முல்லையிடையே கூதாள மலர்விரிதல் விண்மீன் இடையே மதியொளிவிடல் போன்றதாம். கடன் - முறைமை. இனையும் எனல் - வருந்தும் என்பது. இனையு மெனல் கடனோ என்க. கூதாளம் - ஒருவகைச் செடி; 91. அரங்குவித்த - அழித்த. இரங்குவித்த - வருந்தச் செய்த. பாடலின் முன்னிரண்டடிகளும் சிதைவுற்றன. ஐந்திணை (1) 439. அருவி நீந்துங்கால் அல்லல் ஏதேனும் நினக்கு நிகழ்ந்து விடுமாயின் என்கோதை என்னாவாள் என்பதாம். நெஞ்சு என்னாவள் என்னும் என்பது பேசாதன பேசுவது போலக் கூறும் கூற்று. வழியின் அச்சங் கூறி வரைதலை வலியுறுத்தியது. கண்டனலங்காரம் (12) 102. திங்கள் குளிரும் - திங்களைப்போல் தண்மைசெய்யும். தரளக்குடை - முத்துக்குடை. தலைவியைப் பூங்கொடியாக உரைத்தது. 121. அல்லித் திருமங்கை - செந்தாமரை மலர்மேல் அமர்ந்த திருமகள். மன்னனை மாலாகச் சொல்வது மரபாகலின் கூறினார். 129. குழைமுகம், கொங்கை, மருங்கு, நாட்டம் (பார்வை) ஆயவற்றான் நல்லாளாம் என்க. புல்லார் - பகைவர் ; அவராவார் பொருந்தாதவர். 141. புண்டரிகம் - புலி. வண்டின் கிளையலம்புதல் - தேனுண்டு ஒலித்தல். கார்நீழல் - கூந்தல். கெண்டை, கண்கள். செந்தாமரை, முகம். 167. விரை - மணம். மாது - திருமகள். கருதார் - பகைவர் ; கண்டன்வீரங் கருதாதார் போன்ற களிறு வந்ததோ? அடியுறு - நடையிடும். 192. குடைதும் - நீராடுதும். படிமுனை - போர்க்களம். சேந்த - சிவந்த. கண் + தன் + எழில் - கண்டன் எழில். கண்டன் பனிச்சுனைநீர் கண் தன் எழில் ஈந்தவேல் யாமுங் குடைதும். 206. குழை - குழையணிந்த தலைவி ; போலாள் - போல்வாளல்லள். பாண் - இசை. புள் - தேனீ, வண்டு. வண்டுகள் இசை பாடிக் கொண்டு (ஒலித்துக்கொண்டு) வரும் தாரை அணிந்தவன் கண்டன். அதனை ஓட்டுவான் என்றது வேறு பகையிலன் என்றவாறு. பண்சிலம்ப வண்டாடும் பைந்தார் என்றார் பின்னரும். (362) 309. குருகு - அன்னம். பெடை - அன்னப்பெட்டை. கோலப் பணிலம் - அழகிய சங்கு, முருகு - மணம். புனனாடு - சோணாடு. தண்டா - அகலாமல். செல்வ, யாம் வாழுமிடம் பூங்காவிற்றாகும். 361. இதண் - பரண் ; தினை காத்தற்குக் கட்டி வைக்கப்பெற்றது. காவற்கடமை நிறைந்ததை உரைத்தலால் வரை கடாயது. தேசு - ஒளி. 362. சிலம்புதல் - ஒலித்தல். சனநாதன் - மக்கள் தலைவன். தலைவன் வருகையை அறியக் கண்களை மூடிக்கொண்டு மணலில் விரலால் கோடிடுதல் கூடலிழைத்தல் எனப் பெறும். வட்டம் இணைந்தால் தலைவன் வருவான் என்று கொள்வர். மான் பாயும் வேங்கையிலும் - மான்மேல் பாயும் வேங்கைப் புலியினும். அலைத்திடும் - துன் புறுத்தும். தேன் பாயும் வேங்கை - தேன் ஒழுகும் மலர்களைக் கொண்ட வேங்கைமரம். வேங்கைபூத்தலால் காவல் ஒழிந்து துயருறுவேம் என்றது. 480. கூந்தல், இதழ் தாது போது புதைத்த அறல் போன்ற தென்க. தேன் - வண்டு. தெவ்வில் - பகைவரைப்போல். சூழ - நிலையின்றிச் சுழல, பலவற்றை எண்ண. வேற்றுவரைவு நேரும் என்றது. 529. நித்திலம் - முத்து. நகை - பல். ஏலவெறி - ஏலத்தின் நறுமணம். மேலார் - பகைவர். மறியாடு கொல்லல் வெறியெடுத்தற்கு. வெறியெடுத்தலால் இவள்நிலை மாறாது என்பதாம். இதனால் வெறிவிலக்கு ஆயிற்று. காரிகைச் செய்யுள் (1) 29. நகை - பல். துவர் - பழம். ஆர்அணங்கே - மிகத் துயரூட்டுவதே. சுணங்கு - தேமல். ஆடமை - வளைந்தாடும் மூங்கில். அரி - செவ்வரி. மழைக்கண் - தண்ணிய கண். தலைவியின் உறுப்புக்கள் அனைத்துமே உறுதுயர் ஊட்டுவன என்றது. கிளவித் தெளிவு (46) 28. குழை - காதணி. பிணங்கி - மாறுகொண்டு. இவளை அணங்கென்னலாமோ என்பது தெளிவு. அடி மண்ணில் படலும், கண்ணிமைத்தலும், மலர்வாடலும் மகளேயாம் என்பதைத் தெளிவுறத்தும். 35. நறவம் - தேன். வெள்ளவயல் - நீர்ப்பெருக்குடைய வயல். தாமரை முகத்திற்கும் கயல் கண்ணிற்கும் உவமை. மையெழுத்தும் கயல் என்றது இல்பொருள் உவமை. 40. மயிர் நீப்பின் வாழாக் கவரிமா என்னும் குறளின் கருத்தை உள்ளடக்கியது இவ்வெண்பா. மானமா - மானம் மிக்க கவரிமான். உயிர் - தலைவி ; உடல் - தலைவன். உயிரைப் பிரிந்து உடலிராது என்க. 46. கூந்தலின் கருமை ஊரை இருளாக்கும் ; பல்லின் ஒளி மலையை ஒளியாக்கும் என்றது அணிமை கூறியவாறு. உயர்வு நவிற்சியணி. 57. தலைவியைத் தன் உயிர் என்றமையால், கண்ணால் காணற்கியலாதது எனக் கூறும் உயிரைக் கண்டேன் என்றான். கண்ணினால் மான் ; சாயலால் மயில் ; மொழியால் தேன். 72. அரி - செவ்வரி. கொன் பயிலும் வேல் - அச்சந் தங்கிய வேல், கொற்றிறமை வாய்ந்த வேலுமாம். மைக்கொண்ட காவி - மை தீட்டப்பெற்ற காவி (குவளை). மையெழுதுஞ் செய்ய கயல் என்றார் முன்னரும் (35). இளமான் கன்று (இளமான் குட்டி) என்றது தலைவியை. 77. மருங்குல் - இடை. சேல் - கெண்டை மீன். நீயும் என்றது அறிவறிந்த நீயும் என்றவாறு. ஆய்தல் அறிவுக்கும் குணம் செறிவுக்கும் அமைந்த செவ்விய அடைமொழிகள். 93. உம்பர் - வானம். இம்பர் - இவ்வுலகம். இடமும் வடிவும் உரைத்தவாறு. 101. காதுங், கயலும் போதும் கொண்ட மயில் வரிப்பந்து கொண்டு ஆட நான் கண்டேன் என்க. வரிப்பந்து, நூலால் வரிதலையுடைய பந்து-பெரும்பாண். 333 நச். 116. கண்டக்கால் எண்ணந்தவறார் எவரோ? இவன் எவ்வண்ணம் தளராது ஆற்றினான் எனத் தலைவன் வன்மையை வியந்தது. 122. அளி விளங்கு வல்லி என்றது வண்டுகள் திகழும் பூங்கொடியாகக் கருதிக் கூறியது. 130. தலைவியைப் பொழிலுடன் ஒப்பிட்டுரைத்தது. குருக்கொடி - ஒளியுடைய கொடி ; மின்னற் கொடி. 134. விரை - மணம். போனால் வராது உயிர். உயிர் போகாதிருக்க உரையாடுக என்றானாம். 142. வாள் - ஒளி. சந்தம் - மணம். வனம் - அழகு. புதைத்தல் - மூடுதல் ; கையால் பொத்துதல். நின் கண்களை மூடுதலால் பயனில்லை ; என் கண்ணை நின் கையால் மூடுக என்றானாம். 163. அமை - மூங்கில். பை அரவு - பாம்பின் படம். பணை - திரட்சி. துவர் - பவழம். 184. இன் தாது - இனிய தேன். வல்லி - கொடி. எற்றினால் - எதனால். 210. வில் வேறுபடுல் - வில்லில் இருந்து வெளிப்படும் கணை நேரிது ஆயினும் செயலால் கொடிது போலாதல். கணை கொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன வினைபடு பாலால் கொளல் என்னுங் குறளின் கருத்தை அறிக. மல் வேறு தோள் - மல்லில் வெற்றியன்றி வேறறியாத தோள். 253. துங்க எருக்கு - உயர்ந்த எருக்கு. சூடுதற்கு ஆகாமை கருதி உயர்ந்த என்று கூறினார். இனி, இறைவன் சூடுதலாலும் ஆம். மடல் - பனை மடலால் செய்யப்பட்ட மடல்மா. 278. மம்மர் - மயக்கம். புனம் - தினைக்கொல்லை. 291. வங்கம் - மிதவை. மீனெறிமாக்கள் - பரதவர். வங்கம், தேர்; மாக்கள், காலாள் ; மீன்சுறா, களிறு ; திரை, பரி ; கடல், களம் என இயைக்க. நிரல் நிறைபணி. 296. சுரும்பு - வண்டில் ஓரினம். வண்டுஞ் சுரும்பும் பிறவும் கூடக் கட்டித் தருகின்றேன். தழை வாடத் தகுமோ? பூட்டுவிற் பொருள் கோள். 302. நீ தந்த தழை பட்ட படியைப் பகர்வதோ என இயைக்க. மட்டு - தேன். 308. புண்டரிகம் - தாமரை. கழுநீர் - குவளை. குருகு - நாரை. 315. ஒல்லை - விரைந்து. பொருப்பு - மலை. பொருப்பன் தில்லை நகர் - சிவபெருமான் கோவில் கொண்ட தில்லை நகர். சூர் அணங்கு செய்யும் - தெய்வப் பெண் துன்புறுத்தும். 333. என்னுழை - என்னிடத்து. இன்னலே கூர - துன்பம் மிக. நென்னல் - நேற்று. நெஞ்சு எவ்விடத்து என்செய்ததென்ற றியேன் என இயைக்க. 354. வளை - சங்கு. இன்று விளையாடும் என்றமையால் நாளை விளையாட்டில்லை என்று இற்செறிவுரைத்தாள். 380. கள் - தேன். காவி - செங்குவளை. புள் - வண்டு ; பறவை யுமாம். வியன் - அகன்ற. 385. சிலம்புதல் - ஒலித்தல். கட்சிலம்பு கொந்தார் - தேன் ஒழுகும் பூங்கொத்துக்கள் நிறைந்த. 398. மொய்யிருள் - கப்பிக்கொண்டுள்ள இருள். முளரி - தாமரை. சிலம்பு ஒதுக்குதல் ஒலியிடாமைப் பொருட்டு. 399. அருக்கன் - கதிரோன். அம்புயம் - தாமரை. மரு - மணம். வன்னாடன் - வன்னாடு என்னும் நாட்டின் தலைவன். வல்லி - கொடி. 415. துன்னிருள் - செறிந்த இருள். அருமை - வருதலருமை. வஞ்சமே யன்ன துன்னிருட்கண் என இயைக்க. ஈடு அழியும்-வலிமையழியும். 431. ஊர் காக்கும் பேர் - ஊர் காவலர். ஊர், நாய், காவலர், அன்னை துயிலாமை ஒன்றின் ஒன்று தடையில் உயர் நிலையாம். மேலும் தடை, நிலா இரவைப் பகலாக்கல் என்க. 440. அதர் - வழி. சேரல் - சேராதே. 451. வாரல் - வாராதே. வேரல் - மூங்கில். சூரல் - பிரம்பு, நாணல். இரவில் வரின் வழி யச்சம் ; பகலில் வரின் பழியச்சம். 458. பொருகடல் - அலை மோதும் கடல். ஆகுலம் - கவலை. 462. பந்தி - ஒழுங்கு, வரிசை. மந்தி அறியாது செய்த தவற்றால் தளருதல் உன் நாட்டின் இயல்பு எனல் தலைவி நிலைக்குக் குறிப்பு. 476. அம்பல் என்பது சொல் நிகழாதே முகிழ்முகிழ்த்துச் சொல்லுவதாயிற்று. இன்னதன் கண்ணது என்பது அறியலாகாதது என்பது. அலர் என்பது இன்னானோடு இன்னாளிடை இதுபோலும் பட்டதென விளங்கச் சொல்லி நிற்பது-இறைய. 22. தும்பி - வண்டு. பண்ணறா - பண்ணிசையின் நீங்காத. 489. கோகனகம் - செந்தாமரை. மருங்குல் - இடை. தேயமே மருங்குலுக்கு விலையாகத் தரினும் மலைவாணர் ஏற்க மாட்டார் என்க. தூயகுலவளை - உயர்ந்த தூய வெண்ணிறச் சங்கு வளையல். 494. நின் பின்னர்ச் செலின் தீயபெருவனமும்...nrhiyíkh« என்க. செந்தறை - நிழலற்ற பாறை. நந்தறை - துன்புறுத்தும் முரம்பு. ஆய கலம் பா - ஆராய்ந்த அணிகலங்கள்நிரம்பிய. 530. கோலம் - அழகு. மறி - ஆட்டுக் குட்டி. அயரும் - செய்யும், மேற்கொள்ளும். சாலமடவார் - மிக அறிவிலார் ; வெறியெடுப்பாரை யுரைத்தது. அண்ணல் தடமார்பு உண்ணாது என்பதால் வெறிவிலக்கினாள். 538. மடிவரையா - மடிந்து வீழா. மின் நொடி யளவில் மறைதலால் மறையாத மின் என்றாள். அல் - இருள். 549. தமர் - தலைவன் உறவினர். நமர் - நம் உறவினர். நந்தாத - குறையாத. பண்ணீர் மொழி - பண்ணின் தன்மையமைந்த சொல். கலுழ் கண்ணீர் சொரியல் என இயைக்க. 553. முனிவர் - Jறவோர்.xš ஆர் பூவட்டம் - ஆரவாரம் அமைந்த உலகம். முறை இடவும் - ஈடாகத் தரவும். விலை போதாது என்க. 566. வஞ்சி - கொடி. உண்கண் - ஒளியுடைய கண் ; மையுண்ட கண்ணுமாம் ; கண்டாரை உண்ணுங் கண் என்பதுவுமாம். தண்ணளி - mருள்.577. அமைவரர் - அமைந்தோர், சான்றோர். சுரம் - பாலைவழி. அமரர் தங்களூர் nபான்றâங்களூர்vன்க.bfh§F - கொங்கு நாடு. 583. தாமுமூர் - தம்முடைய ஊர். நடை மெலிந்தாள் நாளைப் போதும் என்க. கிளவிமாலை (4) 34. கழுநீர் - குவளை, காமர் - அழகிய. தொண்டை - கொவ்வை. முழுநீர முத்தம் - நன்கு முதிர்வடைந்த முத்து. எழுநீர் - வளருந்தன்மை. வண்டே வேறுஎழில் கமல முண்டேல் கூறு. 290. வள்ளம் - கிண்ணம். விரைச் சுண்ணம் - மணப் பொடி. உள்ளகத்தின் - உள்ளிடத்தே. ஆங்கு - உவமை உருபு. பானல் - கருங்குவளை. 488. பூஞ்சுணங்கு - அழகிய தேமல். ஒல்லா - தகா. தமரோ பெரியர் ; குறைவிலர் ; ஆதலால் பிற கொள்ளார். 493. மன்நெடு வேல் - புகழ்மிக்க நெடிய வேல். மாழை - mழகு,ïளமை.bfh‹Dida வேல் - கொல்லுலையில் கூராக்கப் பெற்ற வேல். வேலினும் வெய்ய கானமவன் கோலினும் தண்ணிய தடமென் தோளே பட்டினப். (300 - 1) கிளவி விளக்கம் (2) 56. வேய் - மூங்கில். மன்னி - நிலைபெற்று. வயங்குதல் - விளங்குதல். ஆயம் - தோழியர் கூட்டம். என்னுயிர் ஆயத்திடை இயங்குகின்றதென இயைக்க. 301. சிறியோர் பெரும் பொருள் பெறின் வியப்பால் பல்கால் பார்த்தலும், அச்சத்தால் மறைத்தலும் உண்மையால் சிறியோர்... பலகாலும் என்றார். கார்க் கொடை - மழை போன்ற கொடை. வறுமை கொடுமையான தாகலின் வன்கைக் கலி என்றார். தழை வாங்கிப் பார்க்கும் மறைக்கும் என இயைக்க. கோயில் அந்தாதி (4) 95. வாணகை - ஒளியுடைய பல். இயல் பார்க்கில் மயில் குலம். பாடல் சிதைந்துளது. 136. கொல்லத் திருவரங்கர் - அழகிய சிற்பமாக வடிக்கத்தக்க எழில் வாய்ந்த திருவரங்கர். கைத வம்பே செய்ய-வெறுக்கத்தக்க சிறுமை செய்ய. காய்ந்த - சினந்தழித்த. கதிரோன் மகன் - சுக்கிரீவன். வைது அவம் பேசிய வாலியும் பெரிய மரா மரமும் உருவித் துளைக்க எய்த அம்பு போன்ற கண் என்க. 433. அணங்கு மணிக்குரையார் கழல் - அழகிய மணிகள் இடப்பெற்ற ஒலிக்கும் கழல். கழல் பேணினர் பிறவார். அறை வாரணங்கள் - ஒலி முழக்கும் கடல்கள். மற வாரணங்கள் - வலிய யானைகள் ; கொடிய யானை களுமாம். மடங்கல்-அரிமா. பழிவந்து உற ஆர் அணங்கின் பொருட்டு வாரணங்கள் மடங்கலுக்கு ஓடும் வழி வாரல் என்றியைக்க. 526. சங்கத்த - அழகுடைய. சிறுநுதல் - சிறிய நெற்றியை யுடையாள். ஈர்ந்த சங்கம் - அறுத்த சங்கு வளையல். தீக்கூர்ந்த - தீப்பற்றி எரிந்த. செங்கை ஆர்ந்த சங்கம் - சிவந்த கைகளையுடைய கூட்டத்தார். தார் கொண்டணிமின்; ஈர்ந்த சங்கத்தை இட்டால் என்பயன் என்க. சிற்றெட்டகம் (7) 111. இப்பாடல் உருக்காண வொண்ணா வண்ணம் சிதைந்துளது. வயின் - இடம். வயின் என்பது வையின் என வந்துள்ளது. 183. பரந்தன்று - பரந்தது. வியர் பொறித்தல் - வியர்வை பொடித்து நிற்றல். வாங்கமை மென்தோள் - வளையும் மூங்கில் போன்ற மெல்லிய தோள். 235. நிலையிருங் குட்டம் - நிலைத்த பெரிய கடல். திமில் - மிதவை. வாடுமீன் உணங்கல் - உலர்ந்த மீன் ஆகிய கருவாடு. நிரம்பா வாழ்க்கை - நாளும் நாளும் தேடி அதனால் வாழும் வாழ்க்கை, இனி நிரம்பிய வாழ்க்கையுமாம். புரையும் - போன்ற. இறைவளை - பூட்டுவாய் அமைந்த வளையல். பணை - மூங்கில். வினவுதிர் எனினே எய்தலோ அரிதே 438. வாரா தீமோ - வாரா திருக்க. தறுகண் - அஞ்சாமை. ஆறு கடி கொள்ளும் - வழியைக் காவல் கொள்ளும். சுரம் - காட்டு வழி. ஊறு - இடையூறு, தமியை தனியை. சுரம் ஊறு பெரிதுடைமையின் தமியை வாராதீமோ. 460. வைவாய் - கூரிய வாய். ஏனம் - பன்றி. புன்றலை மடப்பிடி - மெல்லிய தலையை யுடைய இளைய பெண்பன்றி. வெரூஉம் - அஞ்சும். வேங்கை மரங் கண்டு, புலியென வெரூஉம். அலைக்கும் - துன்புறுத்தும் ; அலைக்கழிக்கும். கன்னாடு - மாலை நாடு. நின்னாட்டுளதாயின் அறியக் கூடுமே என்று ஆற்றாமை கூறியது. 536. முதுக்குறைவு - சிறு பருவத்திலேயே பேரறிவுடைமை. முலையும் வாராள் என்றது இளமைக் குறிப்பு. சிறுமுதுக் குறைவி என்று கண்ணகியைக் குறித்தார் இளங்கோவடிகள். 580. நணியில்லை - அருகில் இல்லை. நணித்தில்லை என்பதும் பாடம். வெம்முரட் செல்வன் - கதிரோன் ; கொடிய வெம்மையால் வருத்துவோன். கதிரும் ஊழ்த்தனன் - கதிர்களை விரித்தனன். ஊழ்த்தல் - விரித்தல். இணர் ஊழ்த்தும் நாறா மலர் என்றார் திருவள்ளுவர். சேந்தனை - தங்கி. இவளோ இளையள், மெல்லியள் ; ஆறோ, அரிய, சேய ; ஆகலின் தங்கினை சென்மோ என்க. தில்லை யந்தாதி (1) 24. தொடி - வளையல். வான் அர மங்கை - தெய்வப் பெண். கண்ணிமைத்தல், அடி நிலந் தோய்தல் மலர் வாடல் ஆயவற்றால் அரமகள் அல்லள் மானிட மகள் என்று தெளிந்தானாம். அயன் நான்முகன். தடிதல் - அறத்தல். வானரம் வல்லிக்கொடி ஊசல் எனப் புரியும் தில்லைப் பொழில் என்க. கோல் - அழகு ; திரட்சியுமாம். நறையூ ரந்தாதி (1) 485. நல் - நன்மை. நகைத்தல் - நோக்கி மகிழ்தல். நுதல் - நெற்றி. வில் இவண் புருவத்தைக் குறித்தது. சொல் அளந்தான் - சொல்லை ஆய்ந்து கணக்கிட்டுத் தெளிந்தவன். துறையூர் நறையூர் - துறையூரை அடுத்த நறையூர். சொல் லளந்தானுக்கு நெல்லளந்தான் நறையூர் என்க. நுதற்கு விலை நறையூர் நாட்டிற்கு நேர் நிற்கும் என இயைக்க. நல்லளந்தாள், அமுதளந்தாள் என்பன உமையையும் திரு மகளையும் சுட்டுவது போலும். பல்சந்த மாலை (8) 50. கலைமதி - கலைகள் அனைத்தும் நிரம்பிய முழுமதி. கலைமதி யன்ன வாய்மை. தேரங்கமும் - தேர் முதலிய அரச உறுப்புக்களும். அந்நிதமுறு - வானத்தொடு பொருந்திய, மேகந் தழுவிய. வாள் நுதல் - ஒளியமைந்த நெற்றியை யுடையாள். முன்னுவன் - நினைப்பேன். 138. நாட்டம் - கண். நவகண்டம் மேல் ஈட்டு அம்புகழ் - ஒன்பது கண்டங்களிலும் திரண்ட சிறந்த புகழாளன். ஒன்பது கண்டமாவன: கீழ் விதேகம், மேல் விதேகம், வட விதேகம், தென் விதேகம், வட விரேபதம், தென்னிரேபதம், வடபரதம், தென்பரதம் மத்திம கண்டம். (சூடாமணி நிகண்டு 12 : 99) வின்னன் - பாட்டுடைத் தலைவன் பெயர். மேவார் - பகைவர். ஆகம் - உடல். வேட்டம் -வேட்டை. மிகை செய்தல் - ஆற்றாமைக்கு ஆளாக்கல். 157. நகு தாமரை - மலர்ந்த தாமரை ; பொலிவுடைய தாமரை ; வகுதாபுரி - பாட்டுடைத்தலைவன் ஊர். நாண்மலர் - புது மலர் ; அன்று மலர்ந்த மலர். மதுவந்தொகு - வலிமையனைத்தும் திரண்டுள்ள. காமன் ஐங்கணை - தாமரை, மாம்பூ, அசோகம், முல்லை, நீலோற்பலம் (கருங்குவளை). ஆவி துவக் குண்ணல் - உயிர் கட்டுண்ணல். அஃதாவது உயிர் ஒடுங்குதல். 166. மானதர் - மனிதர். குங்குமப் புயர் - மணக்கலவை பூசிய தோளையுடையவர். பாட்டுடைத் தலைவரைக் குறித்தவாறு. மைம்மலி - மேகம் தழுவி நிற்கும். மும்மத மாரி - மும்மதம் ஆகிய மழை. மும்மதம் - யானையின் கன்னமதம், கைம்மதம், கோசமதம். கைம்மலை - யானை. கடி - காவல். 365. இயவனராசன், கலுபதி முதலிய வேந்தர் அயனாட்டினர். அவர்கள் அஞ்சுவன்னத்தவர் ; அடைக்கலம் என்னாதவர் வாழ்பதி அழிவு தினைப்புனங் கொய்துபட்டது போல்வ தென்க. வேங்கைபூத்தல் கணிபோல்வதாயிற்று. கணி, நாளுங்கோளுங் கணித்து நடக்க இருப்பதைக் குறிப்பவன். 435. மறை நாள் - மதியம் மறைந்த இருள் நாள். விஞ்சத்தடவி - விந்தியமலைக் காடு. வச்சிர நாட்டு இறையாகிய கலுபா - பாட்டுடைத் தலைவன் நாடும் பெயரும். 563. வான் - மழை. மழைநாணக் கொடுத்தல், அதனினும் மிகக் கொடுத்தல். சோனகர் - யவனர். இவண் துருக்கரைக் குறித்தது. இரைதேரும் - இரைதேடி யுண்ணும். நுதல்கண்டும் மானமிலாது பறவை இரைகவரும் 588. இயவனர் - ஓரரசர். இயவனராசன் என்றார் முன்னரும் (365). இவர்கள் ஏழு பெரும்பிரிவினராக இருந்தனர் போலும். ஏழ்பெருந்தாங்கத்து இயவனர் என்றார். சந்தியும் என்ற உம்மையால் அந்தியும் கொள்க. நந்தாவகை - குறையாவகை. பழனம் - சோலை, வயல். பழம்பாட்டு (35) 27. கருவிளை - கருங்குவளை. எயிறு - பல். பொறி சுணங்கு - புள்ளியா யமைந்த தேமல், அழகிய தேமலுமாம். போழ்வாய் - இருகூறாய் அமைந்த வாய். நுழை மருங்குல் - நுண்ணிய இடை. பிறர்மகள் அல்லள் மானிடமகளே என்க. 100. நெடுங்கண் அம்பு ; மருங்குல் வஞ்சி ; முலை கோங்கு ; சொல் கரும்பு. ஒக்குமே என்பதை முன்னிரண்டிடத்தும் கூட்டுக. 106. கரும்பு - வண்டு. ஒகை - மகிழ்ச்சி, உவகை. துடியிடை - துடி (உடுக்கை) போலும் இடையுடையாள். 119. மண்டலம் - மண். மண்ணுண்ட கண்ணனை உட்கொண்டு மன்னனை மாலாகக் கூறியது. கண்டல் - தாழை. மகரக் குண்டலம் - மீன் வடிவில் செய்யப்பெற்ற குண்டலம். தொண்டை - கொவ்வை. கெண்டை, கண். தொண்டை, இதழ் ; திங்கள் மண்டலம், முகம். கொண்டல், கூந்தல். மெல்லொலி இசை மேதக வியைந்துள்ளது. 125. வாளைபாய் வள்ளை என்றது வாளைமீன் பாய்ந்து செல்லுவது போன்ற வடிவில் செய்யப்பெற்ற காதணி பூண்ட வள்ளை போன்ற காது. தாழ்வடம் - ஓர் அணிவடம். வேய் நிகர் இரும் தோள் - மூங்கில் போன்ற சிறந்த தோள். 152. சேய் - முருகன். அருள் தருமேல் பொழிலிடம் இன்னுங் குறுகுவன். குறுகுதல் - வருதல். 172. சிலைத்து - முழக்கவிட்டு. தார்குருதி - இடையீடின்றி ஒழுகும் குருதி. தித்தித்தேன் போந்தனைய - இனிய தேனே வந்தாற் போன்ற. போந்ததே - வந்ததோ? 213. மணமும் மலரும் சேர்ந்ததுபோல் வில்லியும் தொடியும் இணைந்தனர். ஆதலால் ஒன்றே உயிர் என்க. 228. நெறிநீர் - பெருகி நிற்கும் நீர். பொறி - புள்ளி, அலவன் - நண்டு. அலவன் ஆட்டல் ஒரு விளையாட்டு. எறிநீர் - அலை வீசும் நீர். சேர்ப்பன் - நெய்தல் நிலத் தலைவன். செல்கோ - செல்வேனோ. 240. வெருவரல் - அஞ்சுதல் ; வீழும் - விரும்பும். வீடுவித்தல் - கொல்லல். கேழல் - பன்றி. அம்பினொடும் போந்தது என்றமையால் வீழ்த்த வியலாமை கூறி நகைத்தது. யானையை வீழ்த்துவார் உளராகக் கேழலையும் வீழ்த்த முடியாமையால் நீர்பிடித்த வில்சால விசையுடைத்து என்றாள். 274. வண்டுளர் - வண்டு கோதுதல். செம்பூட்சேய் - ஒரு வேந்தன். பிண்டி - அசோகு. மா வினவி - தன்னால் தாக்குண்டு வரப் பெற்ற விலங்கை வினவி. தணந்தோன் - கூட்டத்தின் நீங்கித் தனித்து வந்தோன். பாங்குபட - கருத்துக்கு ஏற்ப. படர்ந்தோன் - சென்றோன். 312. துவலை - துளி. வாள் அருவி - ஒளியுடைய அருவி. மாந்தளிரின் சீர்மலைந்த - மென்மையால் மாந்தளிரின் தன்மையைப் போட்டியிட்டு வென்ற. சீறடி - சிறிய அடி. 318. இன நடப்பது - இன்னும் நடப்பது. வாசகம் - மொழி. சீவலன் - சீவலமாறன், பாண்டிவேந்தன். மடலீர் நடந்த தெங்கு ? எங்கனம் நடப்பது? 323. மூவாமருந்து - அமுது. பாற்கடல் கடைந்த காலையில் கிடைத்தனவாகக் கூறப்பெறும் கதையை யுள்ளடக்கியது பூவார்..................ãwªJ” என்பது. ஓவாது - இடையீடு இன்றி, ஒழியாது. அவர்கள் - தேவர்கள். 336. புள் - பறவை. பறவையேனும் துணையாம் என இருந்தேம். தியாகக் கொடி கொண்ட - கொடையையே கொடியாகக் கொண்ட. சேக்கை - கூடு. கண்டனலங்காரத்தைச் சேர்ந்த செய்யுளாக இஃதிருக்கலாம். 352. நாள்மலர் - புதுமலர். நாகை - நாகப்பட்டினம். துங்க வெற்பா - சிறந்த மலைநாடனே. அம்மனை முலைப்பாரம் பார்த்து இடை என்னாகைக்கு என்றாள். 368. கண்ணறைவாய் வேங்கை - வன் கொடுமையைத் தன்னகத்துக் கொண்ட வேங்கை மரம். அது பூத்த காலையில் தினைகாவல் நின்று விடுதலால் தலைவனைக் காண இயலாமையால் தம் துயரை ஏற்றிக் கூறினாள். ஐயர் - தம் தந்தை, உடன் பிறந்தார் முதலியோர். 395. புரை - போன்ற. அல்+நிலை - அன்னிலை. இரவில் அந்நீர் நிலைக்கு நீ வருதல் அரிது என நிறுத்தினாள். 402. வாள்வரி வேங்கை - கொடிய வரிகளையுடைய புலி. கேள் - உறவு (தலைவன்). எழால் - எழாதே (வெளிப்படாதே). எழாதாய்க்கு - எழாத உனக்கு. நாகத்து எயிறு உறா லியரோ-பாம்பின் பல் உறாது இருப்பதாக. பாம்பு நிலவைப் பற்றுதல் என்னும் செய்தியை உள்ளிட்டுக் கூறியது. 408. ஓதம் - அலைப்பெருக்கு. கடல் ஓதம் நீ புன்னையை நனைத்தாலும், பூங்கிளைகளை நனைத்தாலும் அன்னத்தை நனையாதே. 409. பலிக்கிடந்த - நோன்பு கிடந்த. இறுதியடி ஆராயத் தக்கது. 421. தூவி - இறகு. வைகலும் - நாள்தோறும். கடிபவோ - விலக்குவரோ. 436. கல்லதர் - கல் பரவிக் கிடக்கும் வழி. அடுபுலி ஏறு அஞ்சி - கொல்லும் புலியின் முழக்கத்திற்கு அஞ்சி. நரையுரும் ஏறு - வெண்ணிறமுடைய காளை. வரையர மங்கையர் - காட்டு வழியில் வருவாரை வருத்தும் தெய்வ மகளிர். 437. சூரல் பம்பிய - நாணல் செறிந்த. சூர் அர மகள் - அஞ்சச் செய்யும் தெய்வப் பெண். ஆரணங்கினர் - அரிதில் வாட்டுவர். வாரல் எனில் - வரவில்லை என்றால். ஆறு -வழி. 454. சிறுகுடி கடலை யண்மிய தென்பதை ஓதம் பந்தர் உகளும் என்றார். ஓதம் - கடற்பெருக்கு நீர். இறை - சிறுமை. மருள் - மயக்கம். நாராய், சிறு குடியார் துஞ் சினும் துஞ்சாய், எம்மேபோல் நீத்தார் உடையையோ. 465. வலன் ஏந்தி - வலக்கையில் ஏந்தி ; வெற்றியோடேந்தி. என்றுமாம். இறவுளர் - குறிஞ்சி நில மக்கள். 483. பணி - பாம்பு. அர வறையு - அரவெனச் சொல்லும். துணி - எண்ணி முடிவு செய். நாளை முரசறையும்; இன்றே துணி. 502. எழினுதல் - அழகிய நெற்றியையுடைய தலைவி. அழி வுறும் - மனம் வருந்தும். விழைவுறும் - விரும்பும். 506. உள்ளஞ் செய்பாவை - தன் உள்ளத்துக் கருதியவாறு செய்யப் பெற்ற பாவை. தாழ்தல் - மொய்த்தல். கொம்பு - பூங்கொடி போல்வார். 518. எண்பவி தூய் - உயர்ந்த படையற் பொருள்களை வைத்து. கண்ணி நோய்க்கு வேலன் வெறியெடுக்க. மறி - ஆடு, மான். 556. யானை முனிவு - யானை கொண்ட சீற்றம். இந்நாள் நம் கடை(வாயில்) இரங்கிய முரசு யானை முனிவழித்த அவர்க்கோ பிறர்க்கோ? என்க. இரங்குதல் - ஒலித்தல். 559. முன்றின்கண் ஆர்க்கும் முரசு, யானை கடிந்தார்க்கோ, ஏனையராய் நின்றவர்க்கோ? 569. கோழிலைய - வளமான இலைகளையுடைய. கலுழ்வன - கண்ணீர் வடிப்பன. அகைந்து - வருந்தி. காந்தள்மேல் வண்டு பாய எரியில் மூழ்கியதாக எண்ணி மந்தி வருந்திய தென்க. வழகிதழ்க் காந்தள்மேல் வண்டிருப்ப ஒன்தீ முழுகியதென் றஞ்சிமுது மந்தி-பழகி எழுந்தெழுந்து கைந்நெரிக்கும் ஈங்கோயே திங்கட் கொழுந்தெழுந்த செஞ்சடையான் குன்று என்னும் ஈங்கோய் எழுபதின் பாடல் கருதத் தக்கது. 584. போக்கரிது - போதல் அரிது. வெய்யோன் - கதிரோன். குஞ்சரம் - யானை. பஞ்சநெதி, நதி, நெதியாக எழுதப் பெற்றது போலும் ; திருவையாறு. வங்கி - வேலி. தரம் - தக்க செயல். 585. ஆங்கை - ஓர் ஊர். ஆங்கூர் என்றோர் ஊர் இரட்டையர் வாக்கில் இடம் பெற்றுளது. ஆங்கூர்ச் சிவனே என்பது அது. கூப்பிடுதூரம் என்பது போல் அம்பு போகும் தூரம் என்பதும் வழக்கென்க. அயில்வேல - கூரிய வேலையுடைய தலைவனே. மழவை எழுபது (1) 558. செருமலை தானவர் - போரிட்ட அசுரர். முப்புரம் - தங்கம் வெள்ளி இரும்பு என்னும் பெயருடைய மூன்று ஊர்கள். வரும் அலை தீர்த்தவன் - வந்த துயரை நீக்கியவன். மாமழ பாடி - திருமழ பாடி; அதன் மரூஉ மழவை என்பது. கருமலை - யானை. வீட்டிய - அழித்த. செம்மலை - சிவந்த மலைபோன்ற சிவபெருமான். கறங்குவது - ஒலிப்பது. மருமலை கூந்தல் - மணம் கெழுமிய கூந்தலை யுடைய தலைவி. மூலம் விளங்காதன 15. ஈரிருதிங்கள் பருவ மொன்றாக மூவகை - நான்கு திங்கள் ஒரு பருவமாக மூன்று பருவம். 16. குடவரை - மேற்கு மலை. குணகடல் - கீழ்கடல். 17. உடனிலைப் பாலை. உடன் போக்கு எனப்பெறும் பாலை. இரு வீற்றும் - களவு, இயல்பு என்னும் இரு பகுதியினவும். 18. கலவி - புணர்ச்சி. ஒருதலை - ஒருபால். கேட்போர் இல்லாக் கிளவி - கேட்போர் இல்லாமல் தானே கூறும் சொல். 19. அகத்திணைப் புறம் - அகப்புறம். அகத்தொடும் சேராதது; புறத்தொடும் பொருந்தாதது. 112. தலைவி நின்ற இடம் பனித்தடம் என்னம் இப்பாடல் சிதை வடைந்ததுள்ளது. கொந்து - கொத்து. 190. யாதான் - யாதுதான். குடந்தைச் சுனைநீர் குளிர்ந் திருக்கும் ; யாதான் ஆடினீர் 191. குடந்தை - திருக்குடந்தை ; கும்பகோணம். 193. பாடல் சிதைந்து போயிற்று. 196. பொருகளிமால் யானை - போர் வல்லதும் களிப் புடையதும் பெரியதும் ஆகிய யானை. கிள்ளி - சோழன். 198. அலமரும் - துயரால் சுழலும். சிறை - சிறகு. மாயிரும் சிலம்பு - மிகப்பெரிய மலை. மதுவழிந்த - தேன் வழிகின்ற. கூழை - கூந்தல். 201. கதிரன் பாட்டுடைத் தலைவன் போலும். அவனூர் பழையனூர் என்க. பழையனூர்க் காரி என்பது ஔவையார் வாக்கு. கோடு - யானைத் தந்தம். 204. நரந்தம் - கத்தூரி ; நரந்தம் ஒருவகைப் புல்லுமாம். நரந்தம் நாறும் தன்கையால் என அதியமானைப் பாடினார் ஔவையார். மது மறைந்து உண்டோர் மகிழ்ச்சி போல இவரும் தம்முள் மகிழ்ப; கண்ணால் சொல்லும் ஆடுப 231. எல்லை - அளவை. ஒரு சிறை - ஒரு பக்கம். எற்குறையுறுதிர் - என்னிடம் குறையுற்று நிற்கின்றீர். சொற்குறை எம்பதம் - சொற்குறை யுடைய என் அளவில். 237. திறை - அரசிறை. தலைவன் ஆகலின் வலைஞர் திறையாகத் தந்த உணங்கல் என்க. மூரி-வலிய. உணங்குமுன்றில் - காய வைத்த முற்றம். சேர்ப்பர் - கடற்கரைத் தலைவர். சேரப் புலால் சேருமோ? என இயைக்க. 238. முண்டகம் - கடல் முள்ளி. அதிகன் குலம் என்றது மேம் பட்ட அரசர் குலம் எனக் குறித்தது. குவளை முடிப்பார், கடல் முள்ளிப் பூவை முடியார் என்றமையால் தம் குலத் தாழ்வை உரைத்தாளாம். 258. குருகு - நாரை. வெள்ளாங்குருகு என்பது நாரையுள் ஒரு வகை. வெள்ளாங் குருகுப் பத்து (ஐங்குறு: 16). பெண்ணை - பனை. மீமிசை - ஒரு பொருட் பன்மொழி. குரீஇ - குருவி. சினை - முட்டை. அருளுண்மையால் இவையனைத்தும் சிதைந் தழியச் செய்து மடலைக் கொய்து மாவேறார் என்க. 284. பருவரல் - துன்பம். உதியன் - சேரன். கலாம் - போர் கடி - காவல். பிரசம் - தேன். வயவு - சூல்நோவு. செவ்வி - பருவம், காலம். ஞமலி - நாய். செவ்விநோக்கி ஒருநினை நினைந்து நிற்பன் 371. விடை - காளை. கோடு - கொம்பு. திருத்திவிடல் - கூரிதாகச் சீவிவிடல். ஆயர் கொல்வேறு தழுவுதற்கு எழுந்தனர். ஏறு தழுவினாற்கே இவள் உரியள் என்று தமர் உறுதி கொண்டமை கூறி வரைவு கடாவினாள். 378. உழி - இடம். மல்லல் - வளமை. தள்ளாத - குறையாத. ஆவி என்றது தலைவியை. சொல்லல் புரியாய் - சொல்லாய். 457. பூழியர் - பாண்டியர். வெள்ளைத்தோடு - வெள்ளை யாட்டின் தொகுதி. மீனார் - மீன் அருந்தும். கைதலை - இடம். கங்குல் - இரவு. 538. ஏதிலன் - அயலான். யாவதும் ஏதிலன் - யாதும் அறியான். வாரா நோய் தணிய வருதலால் பேதை என்றாள். 540. வான்றோய் வன்ன - மிக உயர்ந்த. வரன்றும் - வாரும் அரிக்கும். அஃதான்று - அவ்வாறு வழங்குதலன்றி. கழுமலம் - ஒரு போர்க்களம் ; களவழி நாற்பது குறிக்கும் போர்க்களம். உறந்தையின் பங்குனி விழாவும், வஞ்சியின் உள்ளி விழாவும் சிறப்புடையன. அவ்விழாக்கள் மல்கிய ஊர்களைத் தரினும் இவட்குச் சிறிதே. 544. கல்நவில் - கல்லென்று உரைக்குமாறு அமைந்த. கடிநாள் - மணநாள். ஞாயிறு - பொழுது. பிறர் வரவைத் தமர் ஏற்று விடுவரோ என அஞ்சினம் என்பதால் தமர் வரைவை முடுக்கினளாம். 581. ஒப்பு நோக்குக. பாடல்: 580. வங்கர் கோவை (3) 178. கொண்கன் - கணவன். வழிசொன்னால் வாய் முத்தம் உதிராது 299. தடந்தை - பாட்டுடைத் தலைவன் இடம். குமரியும் கங்கையும் ஆடும் என்றது அவன் ஆணை செலுத்தம் இடம் குறித்தது. 419. கடந்தை என்பதும் வங்கர் காவலன் இடம்போலும். தடந்தையைக் குறித்தார் முன்னரும். அடல் - போரிட்டு அழித்தல். பனிவாடைத் துயர் குறித்தது.  மதிநுதல் வேய்த்தோட் சிறு கோங் கரும்பாமென் முலைப்பூண் துடியிடையே (24) அஞ்சனந்தோய் கயற்கண்களால் மதன் சக்கரங்காக்கும் கதிர்முகத்தாய் (29) குடங்கை வென்ற விழியாய் (31) புடை வளரும் குவிமுலையாய் (45) விரையார் குழலாய் (49) குளங் கொண்ட நன்மொழிக் கொம்பே (50) துடியிடையே (52). 2. கந்தமடிவில்..................jhœFHny” என்பதுகாரிகை.............fhÇif யாப்பிற்றாய்.................எனவும் இந்நூல் யாவராற் செய்யப்பட்டதோவெனின் ஆரியம் என்னும் பாரிரும் பௌவத்தைக் காரிகை யாக்கித் தமிழ்ப்படுத்தியஅருந்தவத்து¥பெருந்தன்kஅமிதசாகர®என்னு«ஆசிரியரா‰செய்யப்பட்டது”எனவு«குணசாகர®கூறுவதாலு«(யா.கா.1)இ¡காரிfஇயற்றியதற்கு¥புலவ®முற்றூட்டாக¡காரிகை¡குளத்தூ®என்Wபெயரிட்Lஓரூரைaவழங்கியதாக¡கல்வெட்டாšஅறிய¥பெறுதலாலு«காரிfஎன்பJகட்டளை¡கலித்துறையையும்,யாப்பிலக்கண«கூறு«இவ்வொUநூலையு«குறித்தšபுலப்படும். வீரசோழியம் காரிகை யாப்பில் அமைந்ததாயினும் காரிகை என்ற அளவில் அதனைச் சுட்டாமல் வீரசோழியக் காரிகை என்றே கூறவேண்டி யுள்ளமையும் கருதத்தக்கது. 1. களவியற் காரிகையால் மிகுதியும் பாராட்டப் பெறும் தமிழ்நெறி விளக்கப் பொருளியலில் முதல், கரு, உரிப் பொருள்களைக் கூறும் பகுதி அகப்பொருள் எனக் குறிக்கப் பெற்றுள்ளமையால் இப்பகுதிக்கு இப்பெயர் சூட்டப்பெற்றது. 2. சிதைவடைந்துள்ள பகுதிகளைப் பின்னிணைப்பிற் காண்க. 3. முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே நுவலுங் காலை முறைசிறந் jனவேgடலுட்gயின்றவைeடுங்fhலை - jல்.அf¤âiz. 3. என்னும் நூற்பாவையும் அதன் உரையையும் காண்க. 4. பொழுது இரண்டு வகைப்படும். அவை பெரும்பொழுதும் சிறுபொழுதும். பெரும்பொழுது எவை என்பதையும், அவற்றுக்குரிய மாதங்களையும் 14ஆம் மேற்கோள் நூற்பாவிற் காண்க. சிறுபொழுது மாலை, யாமம், வைகறை, விடியல், எற்பாடு, நண்பகல் என்பன. (தொல்.அகத்திணை. 6-9) ஐவகைச் சிறுபொழுதென்பார் நாற்கவிராச நம்பி. மாலை யாமம், வைகறை, எற்படு காலை, வெங்கதிர் காயுநண் பகலெனக் கைவகைச் சிறுபொழு தைவகைத் தாகும் - நம்பியகப்பொருள் 12. 2. முல்லையுங் குறிஞ்சியு முறைமையிற் றிரிந்து நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப் பாலை யென்பதோர் படிவங் கொள்ளும் - சிலப்பதிகாரம் 11 : 64-66. 1. இருது - இரண்டு திங்கள் கொண்ட ஒரு பருவம். வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிவோர் இருதுவின் கண்ணுடைத் தென்மனார் புலவர் - நம்பியகப் பொருள் 41. 2. செய்தி - தொழில். 3. ஐவன நெல் - மலைநெல். ஐவனம் வித்தி மையுறக் கவினி - புறநானூறு 159. 4. ஆரம் - சந்தனம். குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி ஆரம் ஆதலின் நறும்புகை யயலது - புறநானூறு 103. 1. புலிநகக் கொன்றை. 2. தாழை. 3. மீன்பிடித்தலும், உப்பு எடுத்தலும். 4. தாழை. 1. களவியற் காரிகை தரும் பாலைக் கருப்பொருள் : இச்சூ..............btÅ‹ பாலைக்குக் கருவறிவித்தலைக் கருதிற்று. வரலாறு: தெய்வம் பகவதியும்ஆதித்தனும்;மாவலியழிந்தசெந்நாயும்வலியழிந்தயானையும்;மரம்இருப்பையும்ஓமை............gUªJ« புறாவும்;பறைபூசற்பறையும்ஊரெறிபறையும்;செய்கைநிரைnfhlY«..........ம்; யாழ்பாலையாழ்;பண்பஞ்சுரம்;தலைமகன்பேர்மீளி-விடலைகாளை;jiykfŸ...........ம் பாதிரிப்பூவும்;நீர்அறுநீர்க்கூவலும்அறுநீர்ச்சுனையும்;அந்நிலத்துமக்கட்பேர்.............fU. (கக) 2. வணிகர் கூட்டத்தை அலைத்துக் கவர்தல். 3. கிணறு. 4. கண்ணன். 1. வற்புறுத்தல். 2. ஒன்றாய்க் கூடுதல் 3. வேறுவேறாக விரித்துக்காட்ட. 4. மிகவும். 1. முல்லையும் மருதமும். 1. களவியற் காரிகையார் குறிப்பும் இஃதாதலை, “ïUg...ண் டெழிற்பிர மங்காத்தவற் கொருபதின் மேலிரண் டாண்டின டன்னை யுவந்தளித் தருள்வ தறநிலைய... யதனைப் பெருமறை யோன்கொலை யொன்றோடொப் பாமென்று பேசினரே என்னும் சிதைவுற்றுள்ள நூற்பாவானறிக. 2. ஆசுரமாவது, கொல்லேறு கோடல், திரிபன்றி எய்தல், வில்லேற்றுதல் முதலியன செய்து கோடல் - தொல். களவு. 1. நச். அருந் திரிபன்றி எய்த அருமகன் - சீவக. 2177. திரிபன்றி யாவது ஒரு பொறி. 1. இதனை வலிநிலை என்பார் பொருளியலுடையார். (தமிழ்நெறி விளக்கம். 14) 2. இப் பகுதியைப் பின்னிணைப்பு 1 இல் காண்க. 1. களவொழுக்கம் தெய்வப் புணர்ச்சியும், பாங்கற் கூட்டமும், தோழியிற் கூட்டத்துப் பகற்குறியும், இரவுக் குறியும், வரைவு கடாதலும், உடன்போக்கு வலித்தலுமென ஆறாம். பொருளியல். 14. 1. இறையனார் அகப்பொருள் : 1. ஆக்கியயோன் பெயர். 2. பொருளதிகாரம் என்றது இறையனார் அகப்பொருளை. 3. இறையனார் அகப்பொருள் : 2. காட்சி. கற்கந்து-கற்றூண். 4. கொல்புலி. 5. ஒலி. கறங்கு வெள்ளருவி ஓலின் துஞ்சம் - கலி. 42 : 3. (பா. வே) *லேர்கலந்த. 1. ஐயத்திற்கு எடுத்துக் காட்டுத் தரப்பெறவில்லை. எடுத்துக் காட்டு வருமாறு: போதோ விசும்போ புனலோ பணிக ளதுபதியோ யாதோ வறிகுவ தேது மாதிரி யமன்விடுத்த தூதோ வனங்கன் துணையோ விணையிலி தொல்லைத்தில்லை மாதோ மடமயி லோவென நின்றவர் வாழ்பதியே - திருக்கோவையார் 2. உரையுறை தீந்தமிழ் வேந்தன் உசிதன்தென் னாட்டொளிசேர் விரையுறை பூம்பொழில் மேலுறை தெய்வங்கொல் அன்றி (விண்டோய் வரையுறை தெய்வங்கொல் வானுறை தெய்வங்கொல் நீர்மணந்த திரையுறை தெய்வங்கொல் ஐயந் தருமித் திருநுதலே - பாண்டிக்கோவை 2 * (பா. வே) *இருநிலஞ். 1. காட்சி, ஐயம், தெளிதல். * (பா. வே) *யணி யாம்பல். 1. தெண். 2. பசந்தொளி. (பா.வே) 3. முதற் பதிப்பு :அமைவெனு...eh னகன்றஞான்றே. 1. றித்தி. 2. மண்டிலம். 3. யின்றமிழ். (பா.வே) 1. கிடைத்துள்ள பொருளியற் பகுதியில் இப்பாடல் இடம் பெற்றிலது. 2. நறுங்கண்ணி. 1. மலைந்தார். 2. மு.ப: ற ந ந த ச ச. 3. கனவே தேரின். 4. யாயினு. 1. தாயமிழ். 2. தாயென்றன். 3. தெரியிற் பெரிதும். 4. தாகி யிதோவந்து. 5. மு.ப: புல... ன்றென்ப. 6. இதுவே. 7. மு. ப: யாயத் தாங்க, 1. டென்னப். 2. பணி மொழிக்கே. 3. பாண்டிக் கோவையைச் சேர்ந்ததாய் இவ்விடத்தில் சிதைவுடன் காணப்பெறும் செய்யுள்: .........fh£LŠbr..........bghÊšNœ கோழியும்வானவன்.......................óÊa‹ மாறழை காரனை யாள்படைப் போர் விழியே 4. தோழி யேந்திழை. 1. மு. ப: வழுத்தூர் காக்கு மாபுணை விழுத்துணைக் கான்ற Äகுபெருங்கிளையே.1. 65 முதல் 68 முடியவுள்ள எடுத்துக் காட்டுப் பாடல்களும் உற்றதுரைத்தல் என்னும் கிளவி விளக்கமும் புதியனவாய் இணைக்கப் பெற்றன. 2. தால்யா னினைகின்றதே. 1. புலவர். 2. இவ்விடத்தில் ஒரு பாடல் சிதைவடைந்துள்ளது. ......dT¤j............................................ னரும்பக் குரும்பைமுலை அன்னத்தை யின்சொற் கரும்பைப் பெரும்புனத்தே கண்டு-தெரிந்துமுப்ப 1. தழகிய தொன்றோ. 2. மடந்தை. 1. கழறிலை 2. வலித்துடன் றார்தம். 3. கழறியவிக். 1. குறுமுகை. 2. தலைய. 3. விரீஇப். 4. கவர்பரிப். 5. நோன்றகொளற். 6. நண்பு. 7. நும்மினும் உடையேன் மன்னே. 8. தித்தி. 9. சுணங்கின். 10. திரிநுதற் பொலிந்த. 11. அன்ன விவள். 1. 85 முதல் 90 முடியவுள்ள எடுத்துக் காட்டுக்களும், உளங்கவன்றுரைத்தல் இடம் வினாதல் என்னும் கிளவி விளக்கங்களும் புதியனவாக இணைக்கப் பெற்றன. 1. இவ்விடத் தமைந்துள்ள இன்னிசைமாலைப் பாடல் சிதைந்துள்ளது: கரங்குவித்தகண்ணாகாநன்ணுதல்..... .....................................................................mu§Fɤj செவ்வேலா யஞ்சாத நின்னை இரங்குவித்த மாத ரிடம் 1. மு. ப: ....................................................... ..................H வண்ணல் நெஞ்ச மாழ்துய ரெய்த வணங்கிய வணங்கே - பொருளியல். 2. கிளவித் தெளிவுப் பாடல்ஒன்Wசிதைந்துள்ளJ :............................................................. ழிம்பரோ யாதோ விடம்வடிவு-கொம்பரோ வண்ண மயிலோ கிளியோ மலைநாட ................................................................ 3. கோயிலந்தாதிப் பாடல் ஒன்று சிதைந்துள்ளது : ஒத்த மயிற்குலமு மெழிற்றோளி வாணகைக்கு முத்தமயிற்கிலமுல்லைகொலோ.................‰சூythˉ கொய்த வரங்கர் குன்றிற் சுத்த மயிற்குல மாமியல் பார்க்கிலத் தூய்நகைக்கே 1. பைம்பூம் பொழில்வாய். 2. வாயினள். 1. வடுக்க ணிவைவஞ்சி, 2. கழுதுறங்கப் 1. மிதுவிவ ளேயவன் தான் கண்ட பூங்கொடியே. 2. மு.ப; வேங்கை யொள்வீ காந்தள் கமழும் óந்தண்rரலுÄதுவேnயந்திலை யயில்வேல....aš வ்ண்ணமு மிதுவே சிற்றெட்டகப் பாடல் ஒன்றும், பிறிதொன்றும் சிதைந்துள. எ....thll.......aË› வாட்ட மவ்வாட்டந் nj®th£L..........ட்L மிங்கிவன் றானிங் கிவளு மிவ்வையி னின்றவனற ளுண்மைக் களவு - சிற்றெட்டகம். 4. ........ligªதடமுமிப்பனித்தடமேகொந்தரும்பு.....fÄtnsகளிவண்டுமேவும்சுரிகூ......................................... - ........................ 5. மாகநின். 1. மரைமுகத்துக். 2. கண்ணுற்றதே. 3. மு. ப: நோதக வுடைத்தே நெஞ்ச மதிமிசை மாதர் குவளை மலர்ந்தஅருந்தகை¡கண்க©டாற்றிaபெருந்தfயண்ணலை¡கழறின‹பெரிதே” 1. மு. ப: ஆய்தளிர் பொதுளிய வீததை............. 2. மு. ப: கோலவிளக்கிளிகறகொண்டா...yyUË. 1. கொண்டு தொண். 1. கெண்டை. 2. வடவரை. 3. டகற்றலின். 1. யமிழ். 2. கேயின் றழிகின்றதே. 3. றான் கன்னி விழ்பொழிவ்வாய் மு.ப.றான். 1. மு. ப: மாமாமுரு. 2. லாயிவற். 1. மிறைஞ்சி. 2. கொடுங்கே. 3. கதவ. 4. மதில ராக. 5. மு. ப: பூவிரிந் தன்ன கூந்தலும். 1. 145 முதல் 151 முடியவுள்ள எடுத்துக் காட்டுக்களும், புணர்ச்சி மகிழ்தல், இருத்தல் ஆகிய கிளவி விளக்கங்களும் புதியனவாக இணைக்கப் பெற்றன. 1. மு. ப: இடந்தலைப்பாடு முற்றும். இவையெல்லாம், 1. கொள்ள. 1. மு. ப: வேந்தினி (ரணி) மின்யாம் விழைகுவம் பெரிதே. 1. மு. ப: முயன்றன பரும. 2. கொல்லிக் கார்ப்புனங் காப்புநின்றவான். 3. தூங்குங் கொழுஞ்சுனை. 1. திருமா லவன்வஞ்சி. 2. கோட்டசெங்கட், பெருமால். 1. இருங்கண் ணனைய. 2. னேறுண்டு. 1. மு.ப. அம்புமுகங் கிழித்த புண்வாய்க் கலைமான் போந்தன உளவோ வுரையீர் மாமட நோக்க மரீஇயின படர்ந்தே - பொருளியல் 2. நறைபடர். 3. மு. ப: திணைமொழி. 1. மலைந்த. 2. குழலீர். 3. மு. ப: bgUªJa.......ர் தரு நெறியே. 4. ரெம்முடைய. 5. முன்னால். 1. போதரு மோவுங்கள். மு. ப: .......................................................................................................................ifíiw பறைசீர் மாறுந் தகைத்தா நகைத்துரை பாடல் தகை(ழை) (மறுப்பே) 2. மு. ப: உரைக்கத் தருந்தழை கோடல்குறிப்பை அறிவுறுத்தல் விரைப்பொற் குழலை வலிதாக் குறைநயப்பித்தல்மிக்க வரைக்குற்றகொங்கை..................................... .................................................................................. 3. மு. ப: ........................................................... 1. பைங்குழல் வெண்மணல் மேல். 2. மு. ப: பிரிந்தன்று. 3. தொல். பொருள். களவியல்.24. மேற். இளம். 1. மன்னன். 1. இப்பாடல் நெடுந்தொகைப் பதிப்பில் இடம் பெற்றிலது. 2. மு. ப: வெதததன யோமிக் குடந்தை தொண்ணூறுக... 1. மு. ப:ஓடியொளித்து....................... .............................É©nlhŒ’ 2. 194 முதல் 202 முடியவுள்ள மேற்கோள்களும், பிறைதொழுக என்றல், தகையணங்குறுத்தல், நடுங்க நாட்டம், குறையுணர்வு ஆகிய கிளவி விளக்கங்களும் புதியனவாக இணைக்கப் பெற்றன. 3. தொல். களவியல். 23. நச். மேற்கோள். 1. நம்பியகப் பொருள். 139. மேற்கோள். 1. கணையுகைத்த ; கணைபுதைத்த, குலைவார். 2. இறையனார் அகப்பொருள். 6. மேற். நம்பியகப்பொருள். 139. மேற். 1. மு. ப: வருகு னிவனு. 2. இப்பாடல் நற்றிணைப் பதிப்பில் இடம்பெற்றிலது. நற்றிணை, ஒன்பதடிச் சிற்றெல்லையுடையதாகலின் இது நற்றிணைச் செய்யுள் ஆகா தென்க. 1. எல்லில. 2. வேட்டை. 3. னாகற்ற. 4. பிரியலு றானறி யேனிவ. 5. மு. ப: கையது செம்மலந் தழையே வினாவது தெய்ய புண்வாய் மாவே கைவிட் டகலா னம்மவிவ் வகன்புனந் தகையோ னுள்ளிய தறியோம் பெரிதே. 1.. மொன்றாய் வருமின்பத். 1. மு. ப: புனத்துள். 1. மு. ப: வடிவே லண்ணல் என்னை மறைப்பின் முடியா தாகுநீ முன்னிய வினையே. 2. மொழி சென்றம். 1 தாரவர், தாரிவர். 2. 225 முதல் 227 முடியவுள்ள மேற்கோள்களும் குறியாள் கூறல் என்னும் கிளவி விளக்கமும் புதிதாய் ïணைக்கப்bபற்றன.1. மு. ப: அலவனோ டாடலு மாடாண் மாடு. 2. னாச் செல்லுந் 1..ï¢brŒíŸ பொருளியற் பதிப்பில் இடம் பெற்றிலது. 2. யெந்தேமொழியே. 3. நண்ணன்மின். 4. யிகலழித்த. 1.. கான நண்ணிய. 1 நகைத்துரையாடšகிளÉவிளக்கமு«239ஆ«மேற்கோŸபாடலு«இணைக¥பெற்றன. 2. மு. ப: .............................................................................. ருகணையா........ வீடுவிப்பர் - கேழல் தசையுடைத்த வம்பினொடும் போந்ததே சால விசையுடைத்து நீர்பிடித்த வில். - பொருளியல். 1. மஞ்சோதி 2.É©lt©. 3. மு. ப: வாங்கலம் யாமெஞ். 4. குழலெழிற் றொண்டை. 1. வடிவார். 2. சாரலிற். 3. மு. ப: கொள்குவன். 1. மு. ப : ஊருப. 2. காழ் கொளினே. 1. மடல் வெளிப்படுத்தல் முதல் தழைகோடல் ஈறாக உள்ள கிளவி விளக்கங்களும் 254 முதல் 271 முடியவுள்ள மேற்கோள் பாடல்களும் புதிதாக இணைக்கப்பெற்றன. 1. புள்ளீனும்; இறையனார் அகப்பொருள் 9. மேற். 1. கைந்நிலத் துக்கணை யால்சிலை உந்தி. 1. மறப்பார். 2. நென்னல் நோக்கி. 3. நென்னல் நோக்கிநின்றார் அவர்நம். 4. பொன்றாழ். 1. கன்னிக். 2. அறிவழிய. 3. 281 முதல் 285 முடியவுள்ள மேற்கோள் பாடல்களும், மெலிதாகச் சொல்லிக் குறை நயப்பித்தல் கிளவி விளக்கமும் புதிதாக இணைக்கப் பெற்றன. 1. றின்னகை. 2. விருந்தென. 3. நெடுந்தே ரண்ணல். 1. நம்பியகப் பொருள். 148. மேற்கோள். 2. மு. ப. சூடி. 3. காண்டும். 1. மு. ப: பேணா மனன போய்ப் புறங்கொடுத்தென. 2. வல்வேற்றானை வெள்வரிச். 1. பூண்மங்கை வாடுப. 2. அவையாம், உடுப்பின். 3. கேளிடைக். 4. வாடல. 5. மு.ப : ............nkdhŸ. 6. ரதுவொழித். 1. நுண்ணியிற் பனுவ னுழைபொருள் நுனித்த. 1. பொதியிலின்கோ. 2. சுரந்தன்ன. 1. துன்னல்போகின்றாற். 2. மு. ப: கூழைக்கெருமணŠசோறும். 3. மு. ப. கழைகெழு திண்சினைப். 4. தம்மவெம். 5. தயல்வளர். 1. சென்ற. 2. நேரி. 1. டாக்கியப் 1. னேமன்னு. 2. கால. 1. ஞாயி. 1. மணிமுடி மன்னரைப் பூலந்தை. 2. முந்நீ. 1. ஐங்குறு üற்றில்ïச்செய்யுள்mமைந்துள்ளவாறு: வருவது கொல்லோ தானே வாரா தவணுறை மேவலி னமைவது கொல்லோ புனவர் கொள்ளியிற் புகல்வரு மஞ்ஞை இருவி யிருந்த Fருவிtருந்துறப்gந்தாடுkகளிரிற்gடர்தரும்Fன்றுகெழுeடனொடுbசன்றவென்bனஞ்சே.2. சிறுநனை. 3. லுறீஇயர். 4. சென்ற. 5. குசாவா. 6. னசையொடு. 7. மு. ப: கொடுங்கழி மருங்கின் வந்தருள். 1. மு. ப: நெஞ்சி னுழைப்பப். 2. மு. ப: கறையியங்கு மதியே. 1. பொன்னக ரில்லையிம் மாதருக் கென்ன மன்னும். 1. மு. ப: இதற்கொண் டினியான் றெளிந்து மேனாண் மதிக்கொடு துஞ்சு மால்வரை வாழ்க்கைக் கடவுள ராக வல்லது மடவரன் மாதரை மதித்தன்று மிலமே. 2. மலையில். 3. காவலர். 1. ரான இதுவென்னீ. 2. மு. ப: ராதலிற். 3. னெதிர்கோள். 4. நறவினை யோர்ந்தெமர். 5. மு. ப: மயமததன பூவகை கக. 1. மு. ப: பெரிதே. 2. முற்றிற். 3. உலம்புரி. 4. நலம்புரி. 1. வலம்புரி. 2. புலம்புரி. 3. மு. ப: தருநர். 4. மு. ப: சூழ்ந்தனர், யாங்கன. 5. மு. ப: நிலையே. 6. வருதேன். 1. மு. ப: மலையனையாய். 2. தாருந்தி வந்த 1. றோநம். 1. சூளென நினைதல் புனங்கண்டழிதல் என்னுங் கிளவி விளக்கங்களும் 372 முதல் 375 முடியவுள்ள மேற்கொள் பாடல்களும் புதிதாக இணைக்கப் பெற்றன. 2. இறாஅல். 3. விழையு மாயினும். 1. தெரியுங். 2. மு. ப: அகத்திணைப் பகற்குறி முற்றும். 1. சந்தணிந்து. 2. வந்திணங். 3. யேஅயர்த்த. 4. சாந்துசெங். 5. யாம்விளை யாடுங். 1. மால்பக. 1. மு. ப: ததும்ப. 2. மதின்மல்லற். 1. மு. ப: அன்னாய் காணென்றிருமுறைதன்னையெடுப்பவுந்துயின்மடிந்திலளே............. இலங்கிலை நெடுவே லண்ணலும் புலம்புதுய ரகலக் கருதிவந் தோனே 2. கடல்வையங் காக்கின்ற. 3. வஞ்சிப்பைம் பூம்புறவிற். 4. புறமஞ்ஞை. 5. போதுதியேல். 6. விரியுந். 1. வாயுள்வந்து 2. டரும்பின. 3. கண்ணிற் கெஃகந். 1. மு. ப: இவையெல்லாம். 1. மு. ப: யெதிர்கழல். 2. வேந்திக லாற்றுக் குடியழித்த. 3. கானலின்வாய். 4. மு. ப: யவடிற மறிதல் யாவது. 5. மு. ப: பெயர்ந்தே. 1. றுன்னி வந்து. 2. திண்டோட் 3. மு. ப: யரிதின். 1. மொழிமாற்று விளக்கம்: இரவினும் பகலினும் என்றார் ஆயினும் மொழிமாற்றிப் பகலின் கண்ணும் இரவின் கண்ணும் எனக் கொள்க. என்னை? பகற்குறி நிகழ்ந்த பின்னை இரவுக்குறி நிகழற் பாலதாகலான். அவ்வொழுக்கம் நிகழ்ந்த முறையான் நோக்கி மொழிமாற்றுச் சூத்திரமாகப் பொருளுரைக்கப்படும். - இறையனார் அகப்பொருள் 18 உரை. 2. ஏதலர். 1. புள்ளிமான் றேர். 1. கதிரோன். 2. கூடலன்னாய். 1. தெவ்வனுங்கக். 2. கூடலன்னார். 3. விரவி னிருள்சென்றிடங்கொண்ட தெங்குக் கொல்லோ. 4. மாரி. 1. மருளும். 2. மகிழாது மடியின். 3. மடியி. 4. காவ லாள ரதனினுந் துயிலார். 1. மு. ப : மணிக்குகை. 1. தமிழ்நெறி விளக்கம் 19. மேற். 2. மு. ப: கடுவிசைப்பாளாரருவி. 1. வணக்கிய. 2. மு. ப: ரன்ன. 3. மு. ப: விரித்தலின். 4. மு. ப: பகல்போ லிலங்குமா. 5. நெஞ் சுறாதவர்போல். 1. மு. ப: வள. 2. மடிய. 3. மு. ப: தோழி. 4. மு. ப: அலமரல் வாழியைய. 5. மு. ப: யெத்தலு. 1. மு. ப: களைந்துமென். 2. விரைஇ. 3. மு. பா: கொப்பின். 4. விரைஇய. 5. திரீஇய. 6. புலர்குரல். 7. தானின். 1. லாதிளஞ். 2. தேயால். 1. தார். 2. தாழ்துறைவாய்ப். 3. இப்பாடல் குறுந்தொகைப் பதிப்பில் இடம் பெற்றிலது. 1. மற்றிம் மெல்லியலே. 1. தென்னன். 2. மழைமத யானையொடு. 1. மு. ப: பைந்நிணம் வாய். 2. னீசெய்த. 1. மு. ப: என்றல். 2. பின்னீரோதி. 3. கின்றா லண்ணாநின். 1. யோன். 2. துளைத்த. 3. விண்ணுரிஞ் சுஞ். 4. துணிவொன்று. 1. விலைசெப்பலொட்டார். 2. மு. ப: தானு. 3. மு. ப: தானு. 1. மு. ப: முழுவதும். 1. றேநின்னோ. 2. வாநும்மோ. 3. சிலம்பு. 1. கடுங்கால். 2. சேணு மகலா துடனென்னோ டாடித் திரிந்துவந்த. 3. மழியத். 4. மன்னே. 5. கரும்பி. 6. வீழ்ந்துக். 7. காஅங்கு. 8. கடைக்க. 9. வலந்தனள். 10. மு. ப: கடுமான் பரியகழ். 11. நெடுந்தேர். 1. மு. ப: நன்மனை. 2. தொட்ட 3. றேந்தண். 4. தோளிநும் மோடு வரவு. 5. விரும்ப வுந்தன். 6. நெய் தெரியியக்கம். 7. கழீஇப் பன்மாண். 8. வரவுதா. 9. தன்வரைத். 1. மு. ப: விழையினை. 2. களவொழுக்க முடிந்தது என்னுங் குறிப்பால் இப்பகுதிக்குக் களவொழுக்கம் எனப் பெயர்சூட்டப் பெற்றது. 1. இயற்கைப் புணர்ச்சி, பாங்கனாலாய கூட்டம், தோழியாலாய கூட்டம் ஆகிய மூவழிக் கூட்டம் முக்கட் கூட்டமாம். கண்-கணு-பிரிவு. அறத்தொடு நிலையும், உடன்செலவும், சேயிடைப் பிரிவும், ஆயிடைப் பிரிவும் எனப்பட்ட நான்கும் தொக்க ஒழுக்கமும் முக்கட் கூட்டமுடைய கற்பென்று சிறப்பிக்கப்படும் - பொருளியல் 21. 1. கறுத்தெரிர்ந்து 2. கோன்கன்னி. 3. நறுந்தண்டார். 4. போத்தந்தான். 1. 509 முதல் 514 முடியவுள்ள மேற்கோள் பாடல்களும், களிறு தருபுணர்ச்சி, கட்டுவிக் கேட்டல், கட்டுவி கூறல் என்னுங் களவி விளக்கங்களும் இணைத்துக் கொள்ளப் பெற்றன. 1. மு. ப:மைதபுகழங்கிற்பட்டதுமுளதே மையில் காட்சியின்மயங்கிமையதெனுரு...thFjšதெளிவே” 1. மு. ப:.............................................. .......................................................... ......................................fªj‹nw. - பொருளியல். 1. அறிவுறக் கிளத்தல் கிளவி விளக்கமும் மேற்கோளும் இணைக்கப் பெற்றன. 2. போழ்திடை, போழ்துடை. 1. இப்பாடல்பாண்டிக்கோவை¤தொகுப்பிšஇடம்பெற்றிலது. 2. கொல்லினி. 1. துண்டி. 2. மு. ப தண்ணென் சாயல் இவள்நோய் தணிய எண்ணின ராயின் மன்னோ அண்ணல் ஆகமு முண்ணுமோ பலியே. 3. வேற்றென்னர். 1. யடையிறந். 2. வெறிமனை. 3. இப்பாடல் பொருளியற் பதிப்பில் இடம்பெற்றிலது. 1. இப்பாடல் பாண்டிக்கோவைத் தொகுப்பில் இடம்பெற்றிலது. 2. முலையினம். 3. மு. ப: முளையெயிறு நிரம்பா இளமைப் பருவத்தள் அளியன் ஒருவன் தளையவிழ் கண்ணி முலையும் வாராள் முதுக்குறைந் தனளே 1. மு. ப: விலையன்ற மெல்லியற்கே. 2. இப்பாடல் நற்றிணைத் தொகையில் இடம்பெற்றிலது. 3. வரைவு மறுத்தல், பரிசமொடு வருதல், வரைவு மலிவுரைத்தல் ஆகிய கிளவி விளக்கங்களும் 542 முதல் 548 முடியவுள்ள மேற்கோள் பாடல்களும் இணைக்கப் பெற்றன. 4. புணர்ப்போர். 1. தொல்.களவியல். 22.நச்.மேற்கோள். 1. டில்லையன். 2. யோதுநர்க்கே 3. இப்பாடல் பாண்டிக்கோவைத் தொகுப்பில் இடம் பெற்றிலது. 1. மு.ப : மிவ்வழிச். 1. மு.ப : சான்றோர் தமது. 3. கடிந்தவர்க். 4. ïப்பாடல்கள் பாண்டிக்கோவைத் தொகுப்பில் இடம் பெற்றில. 1. இப்பாடல்கள் பாண்டிக்கோவைத் தொகுப்பில் இடம் பெற்றில. 1. மு.ப : சூழ்ந்து. 2. மு.ப : டாம(ழக)ழிந்தே. 3. மன்பர். 4. மு.ப : ஊர்வரச். 1. வறந்திருந் துன்னரு ளும்பிறி தாயி னருமறையின். 2. யாற்றில் வென்ற. 2. சுரத்துய்த்தல் என்னும் கிளவி விளக்கமும் 573, 574 ஆம் மேற்கோள் பாடல்களும் இணைக்கப் பெற்றன. 1. இப்பாடல் இறையனார் அகப்பொருளில் விதலையாப்புக்கு மேற்கோளாகக் காட்டப் பெற்றுள்ளது. அதிலுள்ள பாடம் வருமாறு : பண்தான் அனையசொல் லாய்பரி விட்டுப் பறந்தலைவாய் விண்டார் படச்செற்ற கோன்கொல்லிப் பாங்கர் விரைமணந்த வண்டார் கொடிநின் நுடங்கிடை போல வணங்குவன கண்டாற் கடக்கிற்ப ரோகட வாரன்பர் கானகமே 2. அழிவில. 1. மு.ப : வருந்தா தேகுமதி வாலெயிற் றோயே. 2. மாதுமெய். 1. இப்பாடல் பொருளியல் பதிப்பில் இடம்பெற்றிலது. 2. குழலோ. 1. துன்றங். 2. இளையர் 3. மு.ப : சத்தியு நந தாரவகை. 4. பதியள வுரைத்தற்குரிய எடுத்துக்காட்டுள் ஒன்றோ பலவோ விடுபெற்றுள. 1. படி இதனோடு முடிகின்றது. 2. இதற்கு மேல்வரும் மேற்கோள்களும் கிளவி விளக்கங்களும் 51 முதல் 54 முடியவுள்ள நூற்பாக்களில் சொல்லப் பெற்ற கிளவிகளை உட்கொண்டு புதிதாக இணைக்கப்பெற்றன. 1. நல்லூர்க். 2. தொடுவளை முன்கைநம். 1. நோவே. 2. புலங்கெழு. 3. கடுங்கால். 4. எல்லினசைஇ. 5. நடைமலி. 1. தேரிற். 1. மேலன. 2. பழுவம். 1. டழுங்கின். 1. முன்னுறச் செல்வீர். (பா-ம்.) 2. போல். 1. திருமனைக்கே நல்குங் கொல்லோ வதுவை செயத்தனது. திருமனைக்கே வர நல்குங் கொலன்றாய் விடிற்றனது. 2. அங்கணாட்டி. 1. கழிக, என்று நாம் சொல்லின் எவனோ தோறி. 2. விளங்குங். 1. கானக். 2. சேர்ந்துவர. 3. கழுமத். 4. கற்பொழுககத்தின் பிரிவுகளாகிய அறத்தொடுநிலை, உடனிலைச் செலவு ஆகிய இரண்டற்கும் ஆசிரியர் வகுத்துள்ள கிளவிகள் இன்னவை என அறியக் கிடத்தலால் அவற்றுக்கு விளக்கமும் மேற்கோளும் இணைக்கப் பெற்றன. எஞ்சிய இடைப்பிரிவு ஆயிடைப் பிரிவுகட்கு வகுத்த கிளவிகள் அழிந்தமையான் கிளவி விளக்கமும் மேற்கோளும் இணைக்கப் பெற்றில. * இக் குறிப்பில் மறைந்துபோன நூல்களைப் பற்றிய குறிப்புகளே இடம் பெற்றுள. * இது பழம்பாடல் எனக் குறிக்கப் பெற்றுள்ளது. 1. பொறிக். 2. வரைச். 3. மு. ப: கொண்டு பொன். 4. மு. ப: மூசிரி.