தமிழ்ப் பேரவைச் செம்மல் வெள்ளைவாரணனார் நூல் வரிசை - 14 தொல்காப்பியம் பொருளதிகாரம் - களவியல் ஆசிரியர் பேராசிரியர் க.வெள்ளைவாரணனார் நூற்குறிப்பு நூற்பெயர் : வெள்ளைவாரணனார் நூல் வரிசை : 14 தொல்காப்பியம் பொருளதிகாரம் - களவியல் ஆசிரியர் : பேராசிரியர் க.வெள்ளைவாரணனார் பதிப்பாளர் : இ. தமிழமுது மறு பதிப்பு : 2014 தாள் : 16.0 கி. மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி பக்கம் : 8 + 288 = 296 படிகள் : 1000 விலை : உரு. 280/- நூலாக்கம் : டெலிபாய்ண்ட் சென்னை -5. அட்டை வடிவமைப்பு : வி. சித்ரா அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) வெளியீடு : மாணவர் பதிப்பகம் பி-11, குல்மோகர் அடுக்ககம், 35, செவாலியே சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை -600 017 தொ.பே: 2433 9030 üš »il¡F« ïl« : தமிழ்மண் பதிப்பகம் தொ.பே. : 044 2435 3580. பதிப்புரை 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கப்பகுதியும் தமிழ்ப்புலமையும் தமிழாய்வும் மேலோங்கி வளர்ந்த பொற்காலமாகும். இப் பொற்காலப் பகுதியில்தான் தமிழ்ப்பேரவைச் செம்மல் பெருந்தமிழறிஞர் க. வெள்ளைவாரணனார் தோன்றி வளர்ந்து வாழ்ந்து தாய்மொழித் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்தார். இப்பெரும் பேரறிஞர் எழுதிய நூல்கள் அனைத்தையும் வெளியிட முடிவுசெய்து க.வெள்ளைவாரணனார் நூல் வரிசை எனும் தலைப்பில் 21 தொகுதிகள் முதல் கட்டமாக வெளியிட்டுள்ளோம். கைக்குக் கிடைக்கப் பெறாத நூல்களைத் தேடியெடுத்து இனிவரும் காலங்களில் வெளியிட முயல்வோம். தமிழ் இசை, தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம், சைவ சித்தாந்தம் ஆகிய நால்வகைத் துறைகளை மையமாகக் கொண்டு இவர் எழுதிய நூல்கள் தமிழுக்கும் தமிழருக்கும் பெரும் பயன்தரக் கூடிய அறிவுச் செல்வங்களாகும். ஆழ்ந்த சமயப்பற்றாளர், பதவிக்கும் புகழுக்கும் காசுக்கும் தம்மை ஆட்படுத்திக் கொள்ளாது தமிழ்ப்பணி ஒன்றையே தம் வாழ்வின் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர், நடுவணரசு தமிழகத்தில் கலவைமொழியாம் இந்தியைக் (1938) கட்டாயப் பாடமாகத் தமிழ்நாட்டுக் கல்வி நிறுவனங்களில் புகுத்தியபோது அதனை எதிர்த்துப் போர்ப்பரணி பாடிய தமிழ்ச் சான்றோர்களில் இவரும் ஒருவர். காக்கை விடுதூது எனும் இந்தி எதிர்ப்பு நூலை எழுதி அன்று தமிழ்நாட்டு ஆட்சிக் கட்டிலில் முதல்வராக அமர்ந்திருந்த இராசாசிக்கு அனுப்பித் தம் எதிர்ப்பைப் பதிவு செய்தவர். தம்முடைய தமிழாய்வுப்பணி மூலம் தமிழ் வரலாற்றில் நிலைத்து நிற்பவர், தமிழையும் சைவத்தையும் இரு கண்களெனக் கொண்டவர். தமிழிலக்கணத் தொன்னூலாம் தொல்காப்பியத்தை யும், பின்னூலாம் நன்னூலையும் ஆழ்ந்தகன்று கற்று ஒப்பாய்வு செய்தவர், தம் கருத்துகளும் வாழ்க்கை முறையும் முரண்படாமல் எண்ணியதைச் சொல்லி, சொல்லியபடி நடைமுறையில் வாழ்ந்து காட்டிய பெருந்தமிழறிஞர். தொல்காப்பியன் என்ற பெயர் இயற்பெயரே என்று நிறுவியவர், தொல்காப்பியர் காலத்தில் வடக்கே வேங்கடமலைத்தொடரும், தெற்கே குமரியாறும் தமிழக எல்லைகளாக அமைந்திருந்தனவென்றும், கடல்கோளுக்குப் பிறகு குமரிக்கடல் தென் எல்லை ஆனது என்பதையும், தொல்காப்பியர் இடைச்சங்கக் காலத்தவர், தொல்காப்பியம் இடைச்சங்கக் காலத்தில் இயற்றப்பட்டது என்பதையும், முச்சங்க வரலாற்றை முதன்முதலில் கூறியது இறையனார் களவியல் உரைதான் என்பதையும், தொல்காப்பியம், சங்கச் செய்யுளுக்கும் திருக்குறளுக்கும் நெடுங்காலத்திற்கு முன்னரே இயற்றப்பட்டது என்பதையும், திருமூலர் தம் திருமந்திரமே சித்தாந்த சாத்திரம் பதினான்கிற்கும் முதல் நூலாக திகழ்வது என்பதையும், திருமுறை கண்ட சோழன் முதலாம் இராசராசன் அல்ல முதலாம் ஆதித்தனே திருமுறை கண்ட சோழன் என்பதையும், வள்ளலாரின் திருவருட்பா தமிழின் சொல்வளமும், பொருள் நுட்பமும், ஒப்பற்றப் பேரருளின் இன்பமும் நிறைந்தது என்பதையும், சைவ சமயம் ஆரியர்க்கு முற்பட்டது என்பதையும், பழந்தமிழ் நாகரிகத்தின் ஊற்றுக்கண் தமிழும் சைவமும் என்பதையும் தம் நூல்களின் வழி உறுதி செய்தவர். தம் ஆய்வுப் புலமையால் பல புதிய செய்திகளையும் தமிழ் உலகுக்கு அளித்தவர். இவர் எழுதிய நூல்கள் தமிழ்உலகிற்குப் பெருமை சேர்ப்பன. தமிழ் இலக்கிய வரலாற்றிற்கு கூடுதல் வரவாக அமைவன. இவருடைய அறிவுச் செல்வங்கள னைத்தையும் ஆவணப்படுத்தும் நோக்குடன் தொகுத்து தமிழ் உலகிற்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இதனை வெளிக்கொணர எமக்குத் துணையாயிருந்த எம் பதிப்பகப் பணியாளர்கள், நூல்கள் கொடுத்து உதவியவர்கள், கணினி, மெய்ப்பு, அச்சு, நூல் கட்டமைப்பு செய்து இந்நூல்வரிசை செப்பமுடன் வெளிவரத் துணைநின்ற அனைவருக்கும் நன்றி. எம் தமிழ்க் காப்புப் பணிக்கு துணை நிற்க வேண்டுகிறோம். 2010 பதிப்பகத்தார் தமிழ்ப்பதிப்பு முன்னோடிகளை வணங்குவோம்! தமிழாராய்ச்சியின் வளர்ச்சியில் புதிய போக்குகளை உண்டாக்கிய பெருமைக்குரியவர்கள் பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்த அறிஞர் களேயாவர். ஏட்டுச் சுவடிகளில் இருந்த இலக்கிய, இலக்கணப்பெருஞ் செல்வங்களை அனைவரும் அறியுமாறு செய்து புதிய ஆய்விற்குத் தடம் பதித்தவர்கள் இவர்களே ஆவர். மேலை நாட்டார் வருகையினால் தோன்றிய அச்சியந்திர வசதிகளும், கல்வி மறுமலர்ச்சியும் புதிய நூலாக்கங்களுக்கு வழி வகுத்தன. ஆறுமுக நாவலர் (1822-1879) சி.வை. தாமோதரம் பிள்ளை (1832-1901), உ.வே. சாமிநாதையர் (1855-1942) ஆகியோர் தமிழ்ப்பதிப்பு முன்னோடிகளாய் விளங்கித் தமிழுக்கு வளம் சேர்த்தனர் என்று தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர், இ. சுந்தரமூர்த்தி தனது பதிப்பியல் சிந்தனைகள் எனும் நூலில் பதிவு செய்துள்ளார். இந்நூல் தொகுதிகளை வெளியிடுவதன் மூலம் தமிழ்ப்பதிப்பு முன்னோடிகளை வணங்குவோம். சுருக்க விளக்கம் அகம். --- அகநானூறு இறை. --- இறையனார் அகப்பொருள் ஐங்குறு. --- ஐங்குறுநூறு ஐந். எழு. --- ஐந்திணை எழுபது கம்ப. --- கம்பராமாயணம் கலித். --- கலித்தொகை குறள். --- திருக்குறள் குறுந். --- குறுந்தொகை சிலப். --- சிலப்பதிகாரம் திணை. ஐம். --- திணைமொழி ஐம்பது திணை. நூற். --- திணைமாலை நூற்றைம்பது தொல். --- தொல்காப்பியம் நற். --- நற்றிணை பா.வே. --- பாட வேறுபாடு புற. வெ. மா. --- புறப்பொருள் வெண்பா மாலை புறம். --- புறநானூறு பெருங். --- பெருங்கதை தொல்காப்பியம் பொருளதிகாரம் - களவியல் தொல்காப்பியம் பொருளதிகாரம் களவியல் இளம்பூரணம் : இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின் களவியல் என்னும் பெயர்த்து.1 களவொழுக்கம் உணர்த்தினமையாற் பெற்றபெயர். அஃதாதல் ஈண்டு உரைக்கின்றதனால் பயன் இன்றாம்; களவென்பது அறம் அன்மையின் (எனில்),2 அற்றன்று; களவு என்னும் சொற்கண்டுழியெல்லாம் அறப்பாற்படாதென்றல் அமையாது.3 களவாவது, பிறர்க்குரிய பொருள் மறையிற் கோடல். இன்னதன்றி,4 ஒத்தார்க்கும் மிக்கார்க்கும் பொதுவாகிய கன்னி யரைத் தமர் கொடுப்பக் கொள்ளாது, கன்னியர் தம் இச்சையினால் தமரை மறைத்துப் புணர்ந்து பின்னும் அறநிலை வழாம னிற்றலால் இஃது அறமெனப்படும்.5 அன்னதாதல் இச்சூத்திரத்தானும் விளங்கும். அஃதற்றாக, மேலை ஓத்தினோடு இவ்வோத்திற்கு இயைபு என்னையெனின், மேல் கைக்கிளை முதற் பெருந்திணை இறு வாயாக எழுதிணை ஓதி, அவற்றின் புறத்து நிகழுத் திணைகளும் ஒதிப்போந்தார். அவ்வெழுதிணையினும் ஒருதலை வேட்கை1 யாகிய கைக்கிளையும், ஒப்பில்கூட்டமாகிய பெருந்திணையும்2 ஒழித்து இருவ ரன்பும் ஒத்த நிலைமையாகிய நடுவண் ஐந்திணைக் கண்ணும் புணர்ப்பும் பிரிதலும் இருத்தலும் இரங்கலும் ஊடலுமாகிய உரிப்பொருள் களவு, கற்பு என்னும் இருவகைக் கைகோளினும் நிகழுமாதலின், அவ்விருவகைக் கைகோளினுங் களவாகிய கைகோள் இவ்வோத்தினுள் உணர்த்துதலான் அவற்றின் பின் கூறப்பட்டது. இது நடுவணைந்திணைக்கண் நிகழும் பொருட்பாகுபாடாயின், அகத்திணையியலின் பின் வைக்கற்பாலது எனின், ஆண்டு வைக்கக் கருதின், வெட்சி தானே குறிஞ்சியது புறனே (புறத்திணை-59) என்னும் மாட்டேறு பெறாதாம், அதனிடைக் களவியலும் கற்பியலும் கிடத்தலான் என்க.3 மற்றும் அஃது யாங்ஙனம் உணர்த்தினாரோ எனின், காமப் புணர்ச்சியும் இடந்தலைப் படலும்4 பாங்கொடு தழாஅலுந் தோழியிற் புணர்வுமென்று ஆங்கநால் வகையினும் அடைந்த சார்வொடு5 மறையென மொழிதன் மறையோர் ஆறே. (செய்யுளியல்-178) என்பதனான் இந்நால்வகையும் இதனுள் உரைக்கப்படுகின்றதென்று கொள்ளப்படும். காமப்புணர்ச்சியெனினும், இயற்கைப்புணர்ச்சி யெனினும், முன்னுறு புணர்ச்சி யெனினும், தெய்வப் புணர்ச்சி யெனினும் ஒக்கும். இவையெல்லாம் காரணப்பெயர். அஃதாவது1 ஒத்தார் இருவர் தாமே கூடுங் கூட்டம். இடந்தலைப்பாடாவது, இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் பிற்றைஞான்றும் அவ்விடத்துச்சென்று எதிர்ப்படுதல். பாங்கற் கூட்டமாவது இப்புணர்ச்சி பாங்கற்கு உரைத்து. நீயெமக்குத் துணையாக வேண்டுமென்ற2 அவன் குறிவழிச் சென்று தலைமகள் நின்ற நிலையை யுணர்த்தச் சென்று கூடுதுல். தோழியிற் கூட்டமாவது, இவற்றின் பின்னர் இக்கூட்டம் நீடச்சேறல் வேண்டித் தோழியை இரந்து பின்னின்று அவள் வாயிலாகக் கூடுதல். இவை நான்கும் இம்முறையே நிகழும் என்றுகொள்க. இனிஇம்முறைநிகழாது இடையீடுபட்டு (ம்) வரும். அஃதாமாறு, தலைமகள் எதிர்ப்பட்டுழி அன்புடையார் எல்லார்க்கும் இயற்கைப் புணர்ச்சிமுட்டின்றிக் கூடுதல் உலகியல் அன்மையான் தலைமகளை யாதானும் ஓரிடத்து எதிர்ப்பட்ட தலைமகன் அவள் காதற்குறிப்புணர்ந்துநின்று, கூட்டத்திற்கு இடையீடு உண்டாயுழியும் ஆண்டுச்சென்ற வேட்கைதணியாது நின்று, முன்னை ஞான்று கண்டாற்போலப் பிற்றைஞான்றும் காணலாகுமோ என ஆண்டுச்சேறலும், தலைமகளும் அவ்வாறே வேட்கையான் அடர்ப்புண்டு ஆண்டு வருதலும் ஆகியவழிப் புணர்ச்சி நிகழும். ஆண்டு ஆயத் தாரானாதல் பிறரானாதல் இடையீடுபட்டுழித் தன்வருத்தத்தினைப் பாங்கற்கு உணர்த்தி அவன் தலைமகள் நின்றுழி யறிந்து கூற, ஆண்டுச்சென்று புணரும். அவ்விடத்தும் இடையீடுபட்டுழித் தோழி வாயிலாக முயன்றெய்தும். இவ்வாறும், ஒரோவொன்று இடையீடுபட்டு வருதலும் உளவாம். அவ்வாறாயின், இயற்கைப் புணர்ச்சி இடையீடுபட்டுழிவரைந்தெய்தல்தக்கதன்றோஎனின், வரைந்தெய்துந் திறம் நீட்டிக்குமாயின் வேட்கை நிறுத்தலாற்றாதார் புணர்ச்சி கருதி முயல்ப. இவ்வாறு சான்றோர் செய்யுள் வந்தனவும் உளவோ எனின், சான்றோர் செய்யுட்களும் இவ்வாறுபொருள் கொள்ள ஏற்பன உள. அவையாவன:--- மருந்திற் றீரா மண்ணின் ஆகாது அருந்தவ முயற்சியின் அகற்றலும் அரிதே தான்செய் நோய்க்குத் தான்மருந் தாகிய தேனிமிர் நறவின் தேறல் போல நீதர வந்த நிறையருந் துயரம்நின் ஆடுகொடி மருங்கின் அருளின் அல்லது பிறிதிற் றீரா தென்பது பின்நின்று அறியக் கூறுதும் எழுமோ நெஞ்சே நாடுவளங் கொண்டுபுகழ் நடுதல் வேண்டித்தன் ஆடுமழைத் தடக்கை அறுத்துமுறை செய்த பொற்கை நறுந்தார்ப் புனைதேர்ப் பாண்டியன் கொற்கையம் பெருந்துறை குனிதிரை தொகுத்த விளங்குமுத் துறைக்கும் வெண்பல் பன்மாண் சாயல் பரதவர் மகட்கே. இதனுள், ஆடுகொடி மருங்கின் அருளின் அல்லது1 பிறிதில் தீராது என்பதனான் இயற்கைப் புணர்ச்சி இடையீடுபட்டுப் புணர்ச்சி கருதிக் கூறியவாறு காண்க. மயில்கொல் மடவாள்கொல் மாநீர்த் திரையுள் பயில்வதோர் தெய்வங்கொல் கேளிர்---குயில்பயிரும் கன்னி இளஞாழல் பூம்பொழில் நோக்கிய கண்ணின் வருந்துமென் னெஞ்சு. (திணைமொழி-49) இதனுள் ஐயநிலையைப் பாங்கற்கு உரைத்தலின் புணர்ச்சி இன்றாயிற்று. கொண்டல் மாமழை குடக்கேர்பு குழைத்த சிறுகோல் இணர பெருந்தண் சாந்தம் வகைசேர் ஐம்பால் தகைபெற வாரிப் புலர்விடத் துதிர்த்த துகள்படு கூழைப் பெருங்கண் ஆயம் உவப்பத் தந்தை நெடுந்தேர் வழங்கும் நிலவுமணல் முற்றத்துப் பந்தொடு பெயரும் பரிவி லாட்டி அருளினும் அருளா ளாயினும் பெரிதழிந்து பின்னிலை முனியன்மா நெஞ்சே என்னதூஉம் அருந்துயர் அவலந் தீர்க்கும் மருந்து பிறிதில்லையா னுற்ற நோய்க்கே. (நற்றிணை-140) இதனுள், அருளினும் அருளாளாயினும் என்றமையால் கூட்ட மின்மையும், பின்னிலை முனியல் என்றமையால் இரந்து பின்னிற்பானாகத் துணிந்தமையும்,1 தோழியிற் கூட்டத்து இயற்கைப் புணர்ச்சிக்கு ஒருப்பட்டமையும் உணர்க. நறவுக்கமழ் அலரி நறவு வாய்விரித்து இறங்கிதழ் கமழும் இசைவாய் நெய்தற் கண்ணித் தலையர் கருங்கைப் பரதவர் நின்னையர் அல்லரோ நெறிதாழ் ஓதி ஒண்சுணங் கிளமுலை ஒருஞான்று புணரின் நுண்கயிற் றுறுவலை நுமரொடு வாங்கிக் கைதை வேலி இவ்வூர்ச் செய்தூட் டேனோ சிறுகுடி யானே. பெரியீரெனச் சேட்படுத்தவழிக் கூறியது. கூறுவங் கொல்லோ கூறலங் கொல்லெனக் கரந்த காமம் கைந்நிறுக் கல்லாது நயந்துநாம் விட்ட நன்மொழி நம்பி அரைநாள் யாமத்து விழுமழை கரந்து கார்மலர் கமழுங் கூந்தற் றூவினை நுண்ணூல் ஆகம் பொருந்தினள் வெற்பின் இளமழை சூழ்ந்த மடமயில் போல வண்டுவழிப் படரத் தண்மலர் வேய்ந்து வில்வகுப் புற்ற நல்வாங்கு குடச்சூல் அஞ்சிலம் பொடுக்கி அஞ்சினள் வந்து துஞ்சூர் யாமத்து முயங்கினள் பெயர்வோள் ஆன்ற கற்பிற் சான்ற பேரியல் அம்மா அரிவையோ அல்லள் தெனாஅது ஆஅய் நன்னாட்டு அணங்குடைச் சிலம்பிற் கவிரம் பெயரிய வுருகெழு கவாஅன் நேர்மலை நிறைசுனை யுறையுஞ் சூர்மகள் கொல்லெனத் துணியுமென் னெஞ்சே. (அகம்-198) இது தோழியிற் கூடிய தலைமகன் கூற்று. அவரை பொருந்திய பைங்குரல் ஏனல் கவரி மடமா கதூஉம் படர்சாரல் கானக நாட மறவல் வயங்கிழைக் கியானிடை நின்ற புணை. (ஐந்திணையெழு-1) இதனானே முந்துற்ற கூட்டமின்மை யுணர்க. இனி ஒரு கூட்டமும் நிகழாது ஆண்டு வந்தடைவேட்கை இருவர்க்கும் தணியாது நின்று வரைந்தெய்தலும் ஒன்று. இவ்வகையினான் இக்களவொழுக்கம் மூவகைப்படும்.1 1. இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கிற் காமக் கூட்டங் காணுங் காலை மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள் துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே. என்பது சூத்திரம். இனி, இதன் தலைச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், காமப் புணர்ச்சிக்கு இலக்கண வகையாற் குறியிடுதலை உணர்த்து தல் நுதலிற்று. (இதன் . . இன்பமும் .fhQ§ கஎன்பது---இன்பமும்பொருளும் . என்று சொல்லப் பட்டு, அன்பொடு புணர்ந்த நடுவண் ஐந்திணையிடத்து நிகழும் காமக் கூட்டத்தினை ஆராயுங்காலத்து என்றவாறு. அன்பொடு புணர்ந்த ஐந்திணை என்றதனால் கைக்கிளை பெருந்திணையை ஒழித்து நின்ற முல்லை குறிஞ்சி பாலை மருதம் நெய்தல் எனக் கொள்ளப்படும். அவை அன்பொடு புணர்ந்தவாறு என்னை யெனின், கைக்கிளை பெருந்திணையைப் போலாமை, ஒத்த அன்பினராகிப் புணர்தலும்பிரிதலும் இருத்தலும் ஊடலும் இரங்கலும் நிகழ்த்துப ஆகலானும், அவை நிகழுங்கால் அத்திணைக்கு உறுப்பாகிய இடமும் காலமும் கருப்பொருளும் துணையாகி நிகழுமாகலானும், இவை அன்பொடு புணர்ந்தனஎன்க. அஃதேல், ஐந்திணைப் புறத்தவாகிய வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை என்பனவும் அன்பொடு புணர்ந்தனவாம் எனின், அவை(யும்) அன்புடையார் பலர் கூடி நிகழ்த்துபவையாகலின், அன்பொடு புணர்ந்தனவாம். அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை (குறள்-74) என்பதனானும் கொள்க. இனி, இவ்வைந்திணையும் இன்பமும் பொருளும் அறமும் ஆயினவாறு என்னையெனின், புணர்தல் முதலாகிய ஐந்து பொருளும் இன்பந்தருதலின் இன்பமாயின. முல்லை முதலாகிய ஐந்திணைக்கும் உறுப்பாகிய நிலமும் காலமும் கருப்பொருளும் இவற்றின் புறத்தாகிய வெட்சி வஞ்சி உழிஞை தும்பை என்பனவும் வாகையுள் ஒரு கூறும் பொருளாகலானும், புணர்தன் முதலாகிய உரிப்பொருளான் வருவதோர் கேடின்மையானும், பொருளாயின. இவ்வொழுக்கங்கள் அறத்தின்வழி நிகழ்தலானும், பாலையாகிய வாகைப்படலத்துள் அறநிலை கூறுதலானும், இவை அறமாயின. அஃதேல், கைக்கிளை பெருந்திணையும் இவற்றின் புறமாகிய பாடாண்பாட்டும் காஞ்சியும் அறமுதலாகிய மூன்றுமன்றி அன்பொடு புணர்தல் வேண்டுமெனின், காஞ்சி அன்பொடு புணராமையும் பாடாண்பாட்டு அன்பொடு புணர்தல் ஒரு தலை யன்மையும் அவ்வோத்தினுள் கண்டுகொள்க. ஏனையிரண்டும் அன்பொடு புணராமை மேற்சொல்லப்பட்டன. இனி அவை அறனும் பொருளுமாய் இன்பமாகா : அஃதேல். அறனும் பொருளும் ஆகா மையும் வேண்டுமெனின், குலுனும் குணனுங் கல்வியும் உடையராகிய அந்தணர் என விசேடித்தவழி, ஏனை யோர்க்கு இம்முன்று பொருளும் இயைதல் வேண்டுமென்னும் நியமம் இன்மையின் ஏற்றவழிக் கொள்ளப்படும். இனி, ஐந்திணைமருங்கிற் காமக்கூட்டம் என்பது புணர்தல் முதலாகிய உரிப்பொருளும், அந்நிலமும் காலமும் கருப் பொருளும், களவினும் கற்பினும் வருதலின், அவை ஒரோவொன்று இருவகைப்படும். அவற்றுள், புணர்ச்சியாகிய இருவகையினும் களவாகிய காமக் கூட்டம் எனக் கொள்க. இன்னும் அன்பொடு புணர்ந்த ஐந்திணைமருங்கிற் காமக் கூட்டம் என்றதனால் எல்லா நிலத்தினும் காமக்கூட்டம் நிகழப் பெறும் என்று கொள்க. அவ்வாறாதல் சான்றோர் செய்யுளகத்துக் காண்க.1 மறையோர் தேஎத்...nahÇašng என்பது---மறையோரிடத் தோதப் பட்ட மணம் எட்டனுள்ளும் துறையமை நல்யாழினை யுடையராகிய துணைமையோர்2 நெறி என்றவாறு. மறையோர் என்றது அந்தணரை. தேஎம் என்றது அவரதாகிய நூலை. மணம் எட்டாவன: பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்திருவம், அசுரம், இராக்கதம், பைசாசம் என்பன. பிரமமாவது, கன்னியை அணிகலன் அணிந்து பிரமசாரியா யிருப்பானொருவனுக்குத்தானமாகக் கொடுப்பது. பிரசாபத்திய மாவது. மகட்கோடற்குரிய கோத்திரத்தார் மகள் வேண்டியவழி இருமுது குரவரும் இயைந்து கொடுப்பது. ஆரிடமாவது, ஒன்றானும் இரண்டானும் ஆவும்ஆனேறும் வாங்கிக்கொடுப்பது.1 தெய்வமாவது, வேள்விக்கு ஆசிரியராய் நின்றார் பலருள்ளும் ஒருவற்கு வேள்வித்தீ முன்னர்க் கொடுப்பது. காந்திருவமாவது ஒத்த இருவர் தாமே கூடுங்கூட்டம். அசுரமாவது, வில்லேற்றினானாதல் திரிபன்றி யெய்தானாதல் கோடற்குரியனெனக் கூறியவழி அது செய்தாற்குக் கொடுத்தல். இராக்கதமாவது, தலை மகள்தன்னினும் தமரினும் பெறாதுவலிதிற் கொள்வது. பைசாசமாவது, களித்தார் மாட்டுந் துயின்றார்மாட்டுங் கூடுதல். அறனிலை ஒப்பே பொருள்கோள் தெய்வம் யாழோர் கூட்டம் அரும்பொருள் வினையே இராக்கதம் பேய்நிலை என்றிக் கூறிய மறையோர் மன்றல் எட்டவை அவற்றுள் துறையமை நல்யாழ்த் துணைமையோர் புணர்ப்பினதன் பொருண்மை என்மனார் புலமை யோரே என்பதனாலுங்கொள்க. துறையமை நல்யாழ்த் துணைமையோரா வார் கந்திருவர். அவர் இருவராகித் திரிதலின் துணைமையோர் என்றார். துணையன்பாவது2 அவர் ஒழுகலாறோடொத்து மக்கண்மாட்டு நிகழ்வது. ஈண்டுக் காமக்கூட்டமென ஓதப்பட்டது மணவிகற்பமாகிய எட்டனுள்ளுங் கந்திருவமென்றவாறு. மாலை சூட்டல் யாதனுள் அடங்குமெனின், அதுவும் ஒத்த அன்பினராய் நிகழ்தலிற் கந்திருவப்பாற்படும். அறனும் பொருளும் இன்பமும் என்னாது, இன்பமும் பொருளும் அறனும் என்றது என்னை எனின், பலவகை உயிர் கட்கும் வரும் இன்பம் இருவகைப்படும். அவையாவன : போகம் நுகர்தலும் வீடுபெறுதலும் என. அவற்றுள் வீடுபேறு துறவறத்தில் நின்றார்க்கல்லது எய்தல் அரிதாயிற்று. போகநுதர்தல் மனை யறத்தர்க் கெய்துவது. அவரெய்தும் இன்பமும் அவ்வின்பத்திற்குக் காரணமாகிய பொருளும் அப்பொருட்குக் காரணமாகிய அறனும் எனக் காரிய காரணம் நோக்கிவைத்தார் என்க. இதனாற்சொல்லியது ஈண்டுக் களவென்றோதப்படுகின்ற ஒழுக்கம் அறம்பயவாத புறநெறியன்று; வேதவிதியாகிய தந்திரம் என விகற்பமாகிய நெறி கூறியவாறு.1 நச்சினார்க்கினியம் : இவ்வோத்துக் களவு கற்பென்னுங் கைகோள் இரண்டனுள் களவு உணர்த்தினமையிற் களவியலென்னும் பெயர்த்தாற்று; பிறர்க்குரித்தென்று இருமுதுகுரவரால் கொடையெதிர்ந்த தலைவியை அவர் கொடுப்பக் கொள்ளாது இருவருங்கரந்த உள்ளத்தோடு எதிர்ப் பட்டுப் புணர்ந்த களவாதலின் இது பிறர்க்குரிய பொருளை மறையிற் கொள்ளுங் களவன்றாயிற்று. இது வேதத்தை மறைநூல் என்றாற் போலக் கொள்க2 களவெனப் படுவது யாதென வினவின் வளைகெழு முன்கை வளங்கெழு கூந்தல் முளையெயிற் றமர்நகை மடநல் லோளொடு தளையவிழ் தண்டார்க் காமன் அன்னோன் விளையாட்டிடமென வேறுமலைச் சாரல் மானினங் குருவியொடு கடிந்து விளையாடும் ஆயமுந் தோழியும் மருவிநன் கறியா மாயப் புணர்ச்சி என்மனார் புலவர். இக் களவைக் காமப்புணர்ச்சியும் (தொல். பொ. செய். 187) என்னுஞ் செய்யுளியற் சூத்திரத்திற் கூறிய நான்கு வகையானும் மேற்கூறுமாறு உணர்க. இன்பத்திற்குப் பொதுவிலக்கணம் அகத்திணை யியலுட் கூறி அதற்கினமாகிய பொருளும் அறனுங் கூறும் புறத்திணையை, அதன் புறத்து நிகழ்தலிற், புறத்திணையியலுட்கூறி யீண்டு அவ்வின் பத்தினை விரித்துச் சிறப்பிலக்கணங் கூறுதலின் இஃது அகத்திணை யியலோடு இயைபுடைத்தாயிற்று. *வழக்கு...... நாடி என்றலின் இஃது உலகிய லெனப்படும்; உலகத்து மன்றலாவது குரவர் கொடுப் பதற்கு முன்னர் ஒருவற்கும் ஒருத்திக்குங் கண்ணும் மனமுந் தம்முள் இயைவதேயென வேதமுங் கூறிற்றாதலின். இச் சூத்திரங் களவெனப்பட்ட ஒழுக்கம் உலகத்துப் பொருள் பலவற்றுள்ளும் இன்பம்பற்றித் தோன்றுமெனவும் அஃது இன்னதா மெனவுங் கூறுகின்றது. (இதன் bghUŸ): இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு இன்பமும் பொருளும் அறனுமென்று முற்கூறிய மூவகைப்பொருள் களுள்; அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின் - ஒருவனோடு ஒருத்தியிடைத் தோன்றிய அன்போடு கூடிய இன்பத்தின் பகுதியாகிய புணர்தன் முதலிய ஐவகை ஒழுக்கத்தினுள் ; காமக் கூட்டங் காணுங் காலை புணர்தலும், புணர்தனிமித்தமு மெனப்பட்ட காமப்புணர்ச்சியை ஆராயுங்காலத்து; மறைஓர் தேஎத்து மன்றல் எட்டனுள் வேதம் ஓரிடத்துக் கூறிய மணமெட்டனள்;1 துறை அமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பு-துறை அமைந்த நல் யாழினையுடைய பிரிவின்மையோரது2 தன்மை (என்றவாறு). அன்பாவது, அடுமரந் துஞ்சுதோள் ஆடவரும் ஆய்ந்த படுமணிப் பைம்பூ ணவருந்--தடுமாறிக் கண்ணெதிர் நோக்கொத்த காரிகையிற் கைகலந்து உண்ணெகிழச் சேர்வதா மன்பு. மன்றல் எட்டாவன: பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தருவம், ஆசுரம், இராக்கதம், பைசாசம் என்பன. அவற்றுட் பிரமமாவது: ஒத்த கோத்திரத்தானாய் நாற்பத் தெட்டியாண்டு பிரமசரியங் காத்தவனுக்குப் பன்னீராட்டைப் பருவத்தாளாய்ப் பூப்பு எய்தியவளைப் பெயர்த்து இரண்டாம் பூப்பு எய்தாமை அணிகலன் அணிந்து தானமாகக் கொடுப்பது. கயலே ரமருண்கண் கன்னிபூப் பெய்தி அயல்பே ரணிகலன்கள் சேர்த்தி---இயலின் நிரலொத்த அந்தணற்கு நீரிற் கொடுத்தல் பிரமமண மென்னும் பெயர்த்து. பிரசாபத்தியமாவது: மகட்கோடற்கு உரிய கோத்திரத்தார் கொடுத்த பரிசத்து இரட்டித் தம்மகட்கு ஈந்து கொடுப்பது. அரிமத ருண்கண் ஆயிழை யெய்துதற் குரியவன் கொடுத்த வொண்பொரு ளிரட்டி திருவின் தந்தை திண்ணிதிற் சேர்த்தி அரியதன் கிளையோ டமைவரக் கொடுத்தல் பிரித லில்லாப் பிரசா பத்தியம். ஆரிடமாவது; தக்கான் ஒருவற்கு ஆவும் ஆனேறும் பொற் கோட்டுப், பொற்குளம்பினவாகச் செய்து அவற்றிடை நிறீஇப் பொன் அணிந்து நீரும் இவைபோற் பொலிந்து வாழ்வீரென நீரிற்கொடுப்பது. தனக்கொத்த வொண்பொருள் தன்மகளைச் சேர்த்தி மனைக்கொத்த மாண்புடையாற் பேணி---இனக்கொத்த ஈரிடத் தாவை நிறீஇயிடை ஈவதே ஆரிடத்தார் கண்டமண மாம். தெய்வமாவது: பெருவேள்வி வேட்பிக்கின்றார் பலருள் ஒத்த ஒருவற்கு அவ் வேள்வித்தீ முன்னர்க் தக்கிணையாகக்1 கொடுப்பது, நீளி நெடுநகர் நெய்பெய்து பாரித்த வேள்வி விளங்கழன் முன்நிறீஇக்---கேள்வியாற் கைவைத்தாம் பூணாளைக் காமுற்றாற் கீவதே தெய்வ மணத்தார் திறம். ஆசுரமாவது ; கோல்லேறு கொடல், திரிபன்றியெய்தல், வில்லேற்றுதல் முதலியன செய்து கோடல். முகையவிழ் கோதையை முள்ளெயிற் றரிவையைத் தகைநலங் கருதுந் தருக்கின ருளரெனின் இவையிவை செய்தாற் கெளியள் மற் றிவளெனத் தொகைநிலை யுரைத்த பின்றைப் பகைவலித் தன்னவை யாற்றிய அளவையிற்றயங்க றொன்னிலை அசுரந் துணிந்த வாறே. இராக்கதமாவது : தலைமக டன்னிலுந் தமரிலும் பெறாது வலிதிற் கொள்வது. மலிபொற்பைம் பூணாளை மாலுற்ற மைந்தர் வலிதிற்கொண் டாள்வதே என்ப---வலிதிற் பராக்கதஞ் செய்துழலும் பாழி நிமிர்தோள் இராக்கதத்தார் மன்ற லியல்பு. பைசாசமாவது : மூத்தோர் களித்தோர் துயின்றோர் புணர்ச்சியும் இழிந்தோளை மணஞ்செய்தலும் ஆடைமாறுதலும்1 பிறவுமாம், எச்சார்க் கெளியர் இயைந்த காவலர் பொச்சாப் பெய்திய பொழுதுகொள் அமையத்து மெய்ச்சார் பெய்திய மிகுபுகழ் நண்பின் உசாவார்க் குதவாக் கேண்மைப் பிசாசர் பேணிய பெருமைசால் இயல்பே. இடைமயக்கஞ் செய்யா இயல்பின னீங்கி உடைமயக்கி உட்கறுத்தல் என்ப உடைய துசாவார்க் குதவாத ஊனிலா யாக்கைப் பசாசத்தார் கண்டமணப் பேறு. இனிக் கந்தருவமாவது : கந்தருவ குமாரருங் கன்னியருந் தம்முள் எதிர்பட்டுக் கண்டு இயைந்ததுபோலத் தலைவனுந் தலை வியும் எதிர்ப்பட்டுப் புணர்வது. அதிர்ப்பில்பைம் பூணாரும் ஆடவரும் தம்முள் எதிர்ப்பட்டுக் கண்டியைதல் என்ப---கதிர்ப்பொன்யாழ் முந்திருவர் கண்ட முனிவறு தண்காட்சிக் கந்திருவர் கண்ட கலப்பு என இவற்றானுணர்க. களவொழுக்கம் பொதுவாகலின் நான்கு வருணத்தார்க்கும் ஆயர் முதலியோர்க்கும் உரித்து. மாலைசூட்டுதலும் இதன்பாற்படும்.1 வில்லேற்றுதன் முதலியன பெரும்பான்மை அரசர்க்குரித்து. அவற்றுள் ஏறுதழுவுதல் ஆயர்க்கே சிறந்தது. இராக்கதம் அந்தணரொழிந்தோர்க்கு உரித்து; வலிதிற் பற்றிப் புணர்தலின். அரசர்க்கு இது பெருவரவிற்றன்று. பேய் இழிந்தோர்க்கே உரித்து. கந்தருவரின் மக்கள் சிறிது திரிபுடைமையிற் சேட்படை முதலியன உளவாமென்றுணர்க. அறத்தினாற் பொருளாக்கி அப் பொருளான் இன்பநுகர்தற் சிறப்பானும் அதனான் இல்லறங் கூறலானும் இன்பம் முற் கூறினார். அறனும் இன்பமும் பொருளாற் பெறப்படுதலின் அதனை இடை வைத்தார். போகமும் வீடுமென் இரண்டுஞ் சிறத்தலிற் போகம் ஈண்டுக் கூறி வீடுபெறுதற்குக் காரணம் முற்கூறினார்.2 ஒழிந்த மணங் கைக்கிளையும் பெருந்திணையுமாய் அடங்குதலின் இதனை அன்பொடு என்றார். பொருளாற் கொள்ளும் மணமும் இருவர் சுற்றமும் இயைந்துழிக் தாமும் இயைதலிற் கந்தருவப்பாற்படும். ஐந்திணைப் புறத்தவாகிய வெட்சி முதலியவற்றிற்கும் அன் பொடு புணர்தலுங் கொள்ளப்படும்.3 அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை (குறள் 79) என்றலின் கந்தருவர்க்குக் கற்பின்றி அமையவும் பெறும். ஈண்டுக் கற்பின்றிக் களவே அமையாதென்றற்குத் துறையமை என்றார்.1 ஆய்வுரை : தமிழ் மக்களது அன்பின் ஐந்திணையொழுகலாறாகிய களவொழுக்கம் உணர்த்தினமையால் இது களவியல் என்னும் பெயர்த்தாயிற்று. களவாவது அன்பு, அருள், அறிவு, அழகு, குடிப்பிறப்பு முதலியவற்றால் ஒத்துவிளங்கும் தலைவனும் தலைவியும் நல்லூழின் ஆணையால் தமியராய் ஓரிடத்து எதிர்ப் பட்டு உலகத்தார் அறியாது மறைந்தொழுகுதல். ஐம்பெருந்தீமைகளுள் ஒன்றாகக் குறிக்கப்படும் களவு என்பது, பிறர்க்குரிய பொருளை வஞ்சனையாற் கவர்ந்து கோடலாகிய குற்றமாகும். இஃது அத்தன்மையதன்றி ஒத்த அன்புடைய கன்னியை அவள்தன் இசைவறிந்து சுற்றத்தார் அறியாது காதலால் உளங் கலந்து பழகும் பெருங்கேண்மையாதலால், மக்களது வாழ்க்கைக்கு அரண் செய்யும் சிறப்புடைய அறமாகவே கொள்ளப்படும். ஒத்த அன்புடைய ஒருவனும் ஒருத்தியுமாகிய காதலர் இருவரும் தமது நெஞ்சக்கலப்பினைப் பிறர் அறியாதவாறு உலகத்தார் முன் மறைந்தொழுகினராதலின் கரந்த உள்ளத்தராகிய அவ்விருவரது ஒழுகலாறு களவு என்ற சொல்லால் வழங்கப்படுவதாயிற்று. இக் களவினை மறைந்தவொழுக்கம், மறை, அருமறை என்ற சொற்களால் வழங்குவர் தொல்காப்பியர். மேல் கைக்கிளை முதற் பெருந்திணையிறுதியாக அகத்திணை ஏழின் பொதுவியல்பினை அகத்திணையியலில் எடுத்துக்கூறி அவற்றின் புறத்துநிகழும் வெட்சி முதற் பாடாண் ஈறாகவுள்ள புறத் திணைகள் ஏழின் இயல்பினையும் புறத்திணையியலுட் கூறி, கைக் கிளை முதலாப் பொருந்திணையிறுவாய் மேற் குறித்த அகத்திணை ஏழனுள்ளும் நடுவண் ஐந்திணை எனச் சிறப்பிக்கப்பெறும் அன்பின் ஐந்திணையொழுகலாற்றைக் களவு, கற்பு என இருவகைக்கை கோளாகப் பகுத்து, அவ்விரண்டிலுள்ளும் களவாகிய ஒழுகலாற்றின் சிறப்பியல்பினை இவ்வியலில் விரித்துரைக்கின்றாராதலின் இஃது அகத்திணையியலோடு இயைபுடையதாயிற்று. அன்பின் ஐந்திணையாகிய இக்களவொழுக்கத்தினைக் காமப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கொடுதழாஅல், தோழியிற் கூட்டம் என நால்வகையாகப் பகுத்துரைப்பர், அன்புடையார் இருவர் முற்பிறப்பிற் செய்த நல்வினையின் பயனாகத் தனிமையில் எதிர்ப்பட்டு ஒருவரையொருவர் இன்றியமையாதவராய் அன்பினால் உளம் ஒத்தலாகிய நெஞ்சக் கலப்பே காமப்புணர்ச்சியாகும். இருவரது உள்ளக் குறிப்பும் முயற்சியுமின்றி நல்வினைப் பயனாகத் தன்னியல்பில் நிகழும் இவ்வுறவினை இயற்கைப் புணர்ச்சி, தெய்வப் புணர்ச்சியென்ற பெயர்களால் வழங்குவர் தமிழ் முன்னோர். இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் அடுத்த நாளும் அவ்விடத்திற் சென்று தலைவியை எதிர்ப்படுதல் இடந்தலைப்பாடு எனப்படும். தலைமகளுடன் தனக்கு ஏற்பட்ட உறவினைத் தன் உயிர்த்தோழனாகிய பாங்கனுக்குச் சொல்லி நீ எனக்குத் துணையாக வேண்டும் எனத் தலைவன் வேண்ட, அவன் குறித்தவழியே பாங்கன் சென்று தலைமகள் நின்ற நிலைமையுணர்ந்து வந்து தலைவனுக்கு உணர்த்தியபின் தலைவன் சென்று தலைமகளை யடைதல் பாங்கற் கூட்டம் எனப்படும். இக் களவொழுக்கம் நீண்ட நாட்கள் தொடர்ந்து நிகழவேண்டும் என விரும்பிய தலைவன், தலைவிக்குச் சிறந்தாளாகிய தோழியை இரந்து பின்னின்று அவள் வாயிலாகத் தலைவியைக் கண்டு அளவளாவுதல் தோழியிற் கூட்ட மாகும். இவை நான்கும் இம்முறையே நிகழ்தல் இயல்பு. இனி, இவ்வொழுகலாறு இம்முறை நிகழாது இடையீடுபட்டு வருதலும் உண்டு. தலைவன் தலைமகளை எதிர்ப்பட்ட முதற் காட்சியில் அன்புடையார் எல்லார்க்கும் மெய்யுறு புணர்ச்சி தடையின்றி நிகழும் என்பதற்கில்லை. தலைமகளை ஏதேனும் ஓரிடத்தில் எதிர்ப்பட்ட தலைமகன், அவள் காதற் குறிப்பு உணர்ந்த நிலையிலும் கூட்டத்திற்கு இடையீடு உண்டாய வழி அங்கே சென்ற வேட்கை தணியாது வந்து, தலைமகளை நேற்றுக் கண்டாற் போன்று இன்றுங் காணலாகுமோ என எண்ணி அவ்விடத்தே பிற்றை நாளுஞ் செல்லுதலும், தலைமகளும் அவ்வாறே வேட்கையால் அடர்ப்புண்டு அங்கே வருதலும் ஆகியவழிப் புணர்ச்சி நிகழும். அங்கே ஆயத்தாராலோ பிறராலோ இடையீடு உண்டாயவழி தலைவன் தன்வருத்தத்தினைத் தன்னை வினவிய பாங்கனுக்கு உணர்த்தி, அவன் தலைமகள் நிலையறிந்து வந்து கூற அங்கே சென்றும் கூடுவன். அவ்விடத்தும் இடையீடுபடின் தலைமகளது குறிப்புணர்ந்து தோழி வாயிலாக முயன்று எய்துவன். இனி ஒரு கூட்டமும் நிகழாது முதற் காட்சியில் இருவர்க்கும் உண்டாகிய வேட்கை தணியாது நின்று தலை மகளை மணஞ் செய்தபின்னர்க் கூடுதலும் உரியன். இவ்வகையினால் இக்களவொழுக்கம் மூவகைப்படும் என்பர் இளம்பூரணர். களவியலின் முதற்சூத்திரம் இயற்கைப்புணர்ச்சியாவது இதுவென வுணர்த்துகின்றது. (இதன் பொருள்) எல்லாவுயிர்க்கும் உரிய இன்பவுணர்வும், அவ் வின்பத்திற்குக் காரணமாகிய பொருளும், அப்பொருளினை யீட்டுதற்குரிய வரம்பாகிய அறமும் எனச் சொல்லப்பட்டு அன்பென்னும் உயிர்ப்பண்புடன் பொருந்தி நிகழும் காமக் கூட்டத்தினைக் கருதி நோக்குங்கால், மறையோரிடத்து ஓதப்பட்ட எண்வகை மணத்தினுள்ளும் இசைத்துறையமைந்த நல்லயாழினை யேந்தி யிருவராய்ப் பிரிவின்றியொழுகுவோராகிய கந்தருவரது ஒழுகலாற்றினை ஒத்த இயல்பினையுடையதாகும். எ - று. தொல்காப்பியனார் காலத்தே வடவர் நாகரிகம் தமிழகத்தில் மெல்ல மெல்லப் பரவத் தலைப்பட்டமையால் மறையோர் தேஎத்து மண முறைக்கும் தென்றழிழ் நாட்டு மணமுறைக்கும் இடையே யமைந்த ஒற்றுமை வேற்றுமைகளை விளங்க உணர்த்துதல் அவரது கடனாயிற்று. ஒருவன் ஒருத்தியாகிய இருபாலாரிடையே யுண்டாகும் கூட்டுறவை ஒருதலைக் கேண்மையாகிய கைக்கிளை, ஒத்த கேண்மையாகிய அன்பின் ஐந்திணை, ஒவ்வாக் கேண்மையாகிய பெருந்திணை யென மூவகையாகப் பகுத்துரைத்தல் தமிழ் மரபு. பிரமம், பிரசா பத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தருவம், அசுரம், இராக்கதம், பைசாசம் என எட்டு வகையாகப் பகுத்துரைத்தல் வடநூல் மரபாகும். மறையோர்க்குரியவாகச் சொல்லப்பட்ட எண்வகை மணத்தினுள்ளும் அசுரம், இராக்கதம், பைசாசம் ஆகிய மூன்றும் தமிழ்ப் பொருளிலக்கண மரபின்படி கைக்கிளை பாற்படும் எனவும், பிரமம், பிரசா பத்தியம், ஆரிடம், தெய்வம் என்ற நான்கும் பெருந்திணையாய் அடங்கும் எனவும், கந்தருவம் என்னும் ஒன்றும் அன்பின் ஐந்திணைப் பாற்படும் எனவும் இளம் பூரணரும் நச்சினார்க்கினியரும் வகுத்துக் கூறியுள்ளார்கள், அன்பொடு புணர்ந்த ஐந்திணைமருங்கிற் காமக் கூட்டம், மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள் துறையமை நல்யாழ்த் துணைமையோராகிய கந்தருவரது இயல்பினையுடைய தெனவே, கந்தருவகுமரரும் கன்னியரும் தம்முள் எதிர்ப்பட்டுக் கண்டு இயைந்தாற்போலத் தலைவனும் தலைவியும் தம்முள் எதிர்ப்பட்டுப் புணர்வது காமக்கூட்டமெனப்படும் இக்களவொழுக்கமாகும் என மறையோர் தேஎத்து மன்றலாகிய கந்தருவத்திற்கும் தமிழியல் வழக்கமாகிய இக்களவொழுக்கத்திற்கும் இடையேயமைந்த ஒற்றுமையினை உவமைவாயிலாக ஆசிரியர் தொல்காப்பியனார் உணர்த்திய திறம் உளங்கொளத்தகுவதாகும். ஒருவனும் ஒருத்தியும் ஆகத் தமியராய் எதிர்ப்பட்டார் இருவர், புனலோடும்வழிப் புற்சாய்ந்தாற்போலத் தம் நாணமும் நிறையும் இழந்து மெய்யுறு புணர்ச்சியிற் கூடி மகிழும் இயல்பே கந்தருவ மணமாகும். இங்ஙனம் கூடிய இருவரும், தம் வாழ்நாள் முழுவதும் கூடி வாழ்வர் என்னும் நியதியில்லை. எதிர்ப்பட்ட அளவில் வேட்கை மிகுதியாற் கூடிப் பின் அன்பின்றிப் பிரிந்து மாறும் வரம்பற்ற தன்மையும் கந்தருவத்திற்கு உண்டு. தமிழியல் வழக்கமாகிய களவொழுக்கம் என்பது ஒருவன் ஒருத்தியென்னும் இருவருள்ளத்தும் உள்நின்று சுரந்த அன்பின் பெருக்கினால், தான் -அவள் என்னும் வேற்றுமையின்றி இருவரும் ஒருவராய் ஒழுகும் உள்ளப் புணர்ச்சியேயாகும். இத்தகைய உள்ளப் புணர்ச்சி நிகழ்ந்த பின்னர் உயிரோரன்ன செயிர்தீர் நட்பே சாந்துணையும் நிலைபெற்று வளர்வதாகும். உள்ளப் புணர்ச்சி நிகழ்ந்தபின் ஒருவரையொருவர் பிரிவின்றி யொழுகும் அன்பின் தூண்டுதலால் உலகறிய மணந்து வாழும் கற்பென்னுந்திண்மையே தமிழரது ஒழுகலாறாகிய களவொழுக்கத்தின் முடிந்த பயனாகும். உலகியலில் உளவாகும் பலவகை இடையூறுகளாற் காதலர் இருவரும் உலகறிய மணந்து மனையறம் நடத்தற்கு இயலாத நிலையில் உள்ளப் புணர்ச்சியளவே நிலைபெற்று வாழ்ந்து இறந்த காதலரும் இத்தமிழகத்திலிருந்தனர். மணிமேகலைக் காப்பியத்திற் கூறப்படும் தருமதத்தன் விசாகை என்னும் இருவரும், யாழோர் மணமாகிய கந்தருவ முறையிற் பொருந்தியவர்கள் இவர்கள் எனத் தம்மைக் குறித்து ஊரவர் கூறிய பழிமொழியைவிலக்கித்தம் வாழ்நாள் முழுவதும் மெய்யுறு புணர்ச்சியை விரும்பாது உள்ளப் புணர்ச்சி யளவேயமைந்து உயிர் துறந்த வரலாறு இங்கு நினைத்தற்குரியதாகும். கந்தருவ வழக்கில் மெய்யுறு புணர்ச்சி முதற்கண் தோற்றுவது. அதன் பயிற்சியால் உள்ளப் புணர்ச்சி நிலைபெற்றுச் சாமளவும் கூடிவாழ்தலும் உண்டு; உள்ளப் புணர்ச்சி தோன்றாது தம்மெதிர்ப் பட்டாரைக் கூடி மாறுதலும் உண்டு. இங்ஙனம் மாறாது என்றும் பிரியா நிலையில் நிறைகடவாது அன்பினாற் கூடும் உள்ளப் புணர்ச்சியே களவொழுக்கத்தின் சிறப்பியல்பாகும். இதுவே தமிழியல் வழக்கமாகிய களவுக்கும் மறையோர்தேஎத்து மன்றலாகிய கந்தருவத்திற்கும் இடையேயுள்ள உயிர்நிலையாகிய வேறுபாடாகும். அன்பொடு புணர்ந்த ஐந்திணைமருங்கிற் காமக் கூட்டம் எனத் தொல்காப்பியனாரும், அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே (குறுந் தொகை--90) எனப் பிற சான்றோரும் உள்ளப்புணர்ச்சி ஒன்றையே களவுக்குரிய சிறப்பியல்பாகக் குறித்துள்ளமை காணலாம். ஆரிய மணமாகிய கந்தருவத்திற்கும் தமிழர் ஒழுகலாறாகிய களவிற்கும் உள்ள இவ்வேறுபாட்டினையும் தமிழிலக்கணம் கூறும் களவொழுக்கத்தின் தூய்மையினையும் ஆரிய அரசன் பிரகத்துனுக்கு அறிவுறுத்தும் நோக்குடன் கபிலர் பாடிய குறிஞ்சிப்பாட்டு, கந்தருவத்திற்கும் களவிற்கும் உள்ள வேற்றுமையினை இனிது விளக்குவதாகும். கந்தருவர்க்குக் கற்பின்றியமையவும் பெறும், ஈண்டுக் கற்பின்றிக் களவே அமையாது என்றற்குத் துறையமை என்றார் (களவியல்-1) என இவ்விரண்டற்கும் இடையேயுள்ள வேறுபாட்டினை நச்சினார்க் கினியர் விளக்கிய திறம் இங்கு நினைக்கத்தகுவதாகும். ஆடவரும் மகளிரும் உணர்வினால் ஒத்து வாழ்வதற்குரிய இவ்வுலகியல் வாழ்வில், மகளிரை அஃறிணைப் பொருள்களாகிய உடைமைபோலக் கருதி ஆடவர்கள் அவர்களைப் பெற்றோர் முதலிய சுற்றத்தார்பாற் கேட்டுப் பெறுதலும் அன்னோர் கொடாராயின் அவர்கட்குத் தெரிந்தேர் தெரியாமலோ வலிதிற் கவர்ந்து செல்லுதலுமாகிய இச் செயல்களை மணமெனக் கூறும் வழக்கம் தமிழியல் மரபுக்கு ஒவ்வாததாகும். ஆகவே இத்தகைய பொருந்தா மணமுறைகளுக்குத் தமிழில் இலக்கியங் காணுதலரிது. அன்பொடு புணர்ந்த ஐந்திணை யெனவே அதன் முன்னும் பின்னும் கூறப்பட்ட ஒரு தலைக் காமமாகிய கைக்கிளையிலும் ஒவ்வாக் காமமாகிய பெருந்திணையிலும் இருவர்பாலும் ஒத்த அன்பினைக் காணுதலரிதென்பது பெறப்படும். இத்தகைய பொருத்தமில்லாத கூட்டுறவுகள் எந்நாட்டிலும் எக்காலத்தும் காணப்படுவனவே. உயர்ந்த ஒழுக்கத்திற்கு ஒவ்வாத செயல்களைக் குறிப்பாகச் சுட்டி விலக்கியும் ஒழுக்கத்தால் மேன் மேல் உயர் தற்குரிய பண்புடைய நன்னிகழ்ச்சிகளைச் சிறப்பாக வெளிப்படக் கூறி விளக்கியும் மக்கட்குலத்தாரை நன்னெறிப்படுத்துவதே உயர்ந்த நூன்மரபாகும். இம்மரபினை உளத்துட் கொண்டு கைக்கிளை பெருந்திணைகளைக் குறிப்பாகவும் அன்பின் ஐந்திணையை விரிவாகவும் கூறுவர் தொல்காப்பியர். 2. ஒன்றே வேறே என்றிரு பால்வயின் ஒன்றி உயர்ந்த பால தாணையின் ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப மிக்கோ னாயினுங் கடிவரை இன்றே இளம்பூரணம் : என் - எனின், இது காமக்கூட்டத்தின்கண் தலைமகனும் தலை மகளும் எதிர்ப்படுந்திறனும் அதற்குக் காரணமும் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) ஒன்றே வேறே என்றிரு பால்வயின் என்பது - ஒருவனும் ஒருத்தியுமாக இல்லறஞ் செய்துழி, அவ்விருவரையும் மறு பிறப்பினும் ஒன்றுவித்தலும் வேறாக்குதலுமாகிய இருவகை ஊழினும் என்றவாறு.1 ஒன்றி உயர்ந்த பாலதாணையின் என்றது --இருவருள்ளமும் பிறப்புத் தோறும் ஒன்றி நல்வினைக்கண்ணே நிகழ்ந்த ஊழினது ஆணையின் என்றவாறு.2 உயர்ந்ததன்மேற்செல்லும் மனநிகழ்ச்சி உயர்ந்த பாலாயிற்று. காம நிகழ்ச்சியின்கண் ஒத்த அன்பினராய்க் கூடுதல் நல்வினையான் அல்லது வாராதென்பது கருத்து. ஒத்த கிழவனும் கிழத்தியுங் காண்ப என்பது--- ஒப்பு பத்துவகைப்படும். அவை, பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோடு உருவு நிறுத்த காம வாயில் நிறையே அருளே உணர்வொடு திருவென முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே (மெய்ப். 25) என்னும் மெய்ப்பாட்டியற் சூத்திரத்துள் கூறிய பத்துமாம். அவற்றுள் பிறப்பாவது, அந்தணர், அரசர், வணிகர், வேளாளர், ஆயர், வேட்டுவர், குறவர், நுளையர் என்றாற்போல வருங் குலம். குடிமையாவது அக்குலத்தினுள்ளார் எல்லாருஞ் சிறப்பாக ஒவ்வாமையின் அச்சிறப்பாகிய ஒழுக்கம் பற்றிய (குடிவரவு) குடிவரவைக் குடிமை என்றார். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் (குறள். 972) எனப் பிறரும் குலத்தின்கண்ணே சிறப்பென்பது ஒன்றுண்டென்று கூறினாராகலின். ஆண்மையாவது, ஆண்மைத் தன்மை. அஃதாவது, ஆள்வினையுடைமையும் வலி பெயராமையுமாம். மொழியா ததனை முட்டின்று முடித்தல்1 (மரபியல். 110) என்பதனால் தலைமகள்மாட்டுப் பெண்மையும் கொள்ளப்படும். அது பெண்டிர்க்கு இயல்பாகிய நாணம் முதலாயினவும் பெண்ணீர்மையும். ஆண்டென்பது, ஒருவரினொருவர் முதியரன்றி ஒத்த பருவத்தராதல்; அது குழவிப்பருவங் கழித்து பதினாறு பிராயத்தானும் பன்னிரண்டு பிராயத்தாளும் ஆதல், உருவு என்பது வனப்பு. நிறுத்த காமவாயில் என்பது நிலைநிறுத்தப்பட்ட புணர்ச்சிக்கு வாயில். அஃதாவது, ஒருவர்மாட்டு ஒருவர்க்கு நிகழும் அன்பு. நிறை என்பது அடக்கம். அருள் என்பது பிறர் வருத்தத்திற்குப் பரியும் கருணை, உணர்வென்பது அறிவு. திரு என்பது செல்வம். இப் பத்துவகையும் ஒத்தகிழவனும் கிழத்தியும் எதிர்ப்படுவர் எனக் கொள்க. .ï‹ ற என்பது--- இக்குணங்களால் தலைமகன் மிக்கானாயினுங் கடியப்படாது என்றவாறு. எனவே, இவற்றுள் யாதானும் ஒன்றினாயினும் தலைமகள் மிக்காளாயின் ஐந்திணையிற் கடியப்படும் என்றவாறாம்.பாலதாணையின்...fh©g என்பது---ஒருவரை யொருவர் கண்டுழியெல்லாம் புணர்ச்சிவேட்கை தோற்றாமையிற் பாலதாணை யான்1 ஒருவரை யொருவர் புணர்தற் குறிப்பொடு காண்ப என்றவாறு. மிக்கோனாயினும் என்ற உம்மை இறந்தது தழீஇய எச்சவும்மை. எற்றுக்கு எதிர்மறையாக்கி இழிந்தோனாயினும் கடியப்படாது என்றாற் குற்றமென்னையெனின், செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி வருகின்ற பெருமை யாதலின், இழிந்தானொடு உயர்ந்தாட் குளதாகிய கூட்டமின்மை பெருவழக்காதலின் அது பொருளாகக் கொள்ளப்படும் என்பது. ஈண்டுக் கிழவனும் கிழத்தியும் என ஒருவனும் ஒருத்தியும்போலக் கூறினாராயினும், ஒருபாற் கிளவி யேனைப்பாற் கண்ணும் வருவகை தானே வழக்கென மொழிப (பொருளியல்.26) என்பதனானும், இந்நூல் உலக வழக்கே நோக்குதலானும் அவர் பலவகைப்படுவர். அஃதாமாறு அந்தணர் அரசர் வணிகர் வினைஞர் என்னும் நால்வரொடும் அநுலோமர் அறுவரையும் கூட்டப் பதின்மராவர். இவரை நால்வகை நிலத்தோடு உறழ நாற்பதின்மராவர். இவரையும் அவ்வந்நிலத்திற்குரிய ஆயர் வேட்டுவர் குறவர் பரதவர் என்னுந் தொடக்கத்தாரோடு கூட்டப் பலராவர். அவரையும் உயிர்ப் பன்மையான் நோக்க வரம்பில ராவர். (2) நச்சினார்க்கினியம் இது, முற்கூறிய காமக்கூட்டத்திற்கு உரிய கிழவனுங் கிழத்தியும் எதிர்ப்படும் நிலனும் அவ்வெதிர்ப்பாட்டிற்குக் காரணமும் அங்ஙனம் எதிர்ப்படுதற்கு உரியோர் பெற்றியுங் கூறுகின்றது. (இ - ள்) ஒன்றே வேறே என்று இரு பால்வயின்---இருவர்க்கும் ஓரிடமும் வேற்றிடமும் என்று கூறப்பட்ட இருவகை நிலத்தின் கண்ணும் ; ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின் - உம்மைக் காலத்து எல்லாப் பிறப்பினும் இன்றியமையாது உயிரொன்றி ஒருகாலைக் கொருகால் அன்பு முதலியன சிறத்தற்கு ஏதுவாகிய பால்வரை தெய்வத்தின் ஆணையாலே; 1ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப-பிறப்பு முதலியன பத்தும் ஒத்த தலைவனுந் தலைவியும் எதிர்ப் படுப; மிக்கோன் ஆயினும் கடிவரை இன்றே - அங்ஙனம் எவ்வாற்றானும் ஒவ்வாது தலைவன் உயர்ந்தோனாயினுங் கடியப்படா (எ - று). என்றிரு பால்வயிற் காண்ப எனப் பால் வன்பால் மென் பால் போல நின்றது. உயர்ந்த பாலை நோய் தீர்ந்த மருந்து போற் கொள்க. ஒரு நிலம் ஆதலை முற்கூறினார், இவ்வொழுக்கத்திற்கு ஓதியது குறிஞ்சிநிலமொன்றுமே ஆதற்சிறப்பு நோக்கி. வேறு நிலம் ஆதலைப் பிற்கூறினார், குறிஞ்சி தன்னுள்ளும் இருவர்க்கும் மலையும் ஊரும் வேறாதலுமன்றித் திணை மயக்கத்தான் மருதம் நெய்தலென்னும் நிலப் பகுதியுள் ஒருத்தி அரிதின் நீங்கி வந்து எதிர்ப்படுதல் உளவாதலுமென வேறுபட்ட பகுதி பலவும் உடன் கோடற்கு ஒருநிலத்துக் காமப் புணர்ச்சிப் பருவத்தாளா யினாளை ஆயத்தின் நீங்கித் தனித்து ஓரிடத்து எளிதிற் காண்டல் அரி தென்றற்குப் பாலதாணையிற் காண்ப என்றார். எனவே, வேற்று நிலத்திற்காயின் வேட்டை மேலிட்டுத் திரிவான் அங்ஙனந் தனித்துக் காணுங் காட்சி அருமையாற் பாலதாணை வேண்டுமாயிற்று. இவனிவ ளைம்பால் பற்றவும் இவளிவன் புன்தலை ஓரி வாங்குநள் பரியவும் காதற் செவிலியர் தவிர்ப்பவுந் தவிரா தேதில் சிறுசெரு உறுப மன்னோ நல்லைமன் றம்ம பாலே மெல்லியல் துணைமலர்ப் பிணையல் அன்னவிவர் மணமகி ழியற்கை காட்டி யோயே. (குறுந். 229) இஃது ஓரூர் என்றதாம். காமஞ் செப்பாது கண்டது மொழிமோ (குறுந். 2) என்றது என் நிலத்து வண்டாதலின் எனக்காகக் கூறாதே சொல் என்றலிற் குறிஞ்சிநிலம் ஒன்றாயிற்று. இலங்கும் அருவித்தே இலங்கும் அருவித்தே வானின்று இலங்கும் அருவித்தே தானுற்ற சூள்பேணான் பொய்த்தான் மலை என்புழிப் பொய்த்தவன் மலையும் இலங்கும் அருவித்தென வியந்து கூறித் தமது மலைக்கு நன்றி இயல்பென்றலிற் குறிஞ்சியுள்ளும் மலை வேறாயிற்று. செவ்விரல் சிவப்பூரச் சேட்சென்றா யென்றவன் பௌவநீர்ச் சாய்க்கொழுதிப் பாவைதந் தனைத்தற்கோ கெளவைநோய் உற்றவர் காணாது கடுத்தசொல் ஒவ்வாவென் றுணராய்நீ யொருநிலையே யுரைத்ததை (கலி. 76) இது, மருதத்துத் தலைவி களவொழுக்கங் கூறுவாள் பௌவ நீர்ச் சாய்ப்பாவை தந்தான் ஒருவனென் நெய்தனிலத்து எதிர்ப் பட்டமை கூறியது. ஆணை-விதி, கைகோளின் முதற்கட் கூறுதலிற் கற்பின்காறும் ஒன்றும் வேறுஞ் செல்லும் பாலது. ஆணையும் அவ்வாறாம்.1 மிகுதலாவது: குலங் கல்வி பிராயம் முதலியவற்றான் மிகுதல். எனவே, அந்தணர், அரசர் முதலிய வருணத்துப் பெண்கோடற்கண் உயர்தலும், அரசர் முதலியோரும் அம்முறை உயர்தலுங் கொள்க. இதனானே அந்தணர் முதலியோர் அங்ஙனம் பெண்கோடற்கட் பிறந்தோர்க்கும் இவ்வொழுக்கம் உரித்தென்றுகொள்க. கடி, மிகுதி.2 அவர் அங்ஙனம் கோடற்கண் ஒத்த மகளிர் பெற்ற புதல்வரோடு ஒழிந்த மகளிர் பெற்ற புதல்வர் ஒவ்வாரென்பது உணர்த்தற்குப் பெரிதும் வரையப்படாதென்றார். பதினாறுதொடங்கி இருபத்து நான்கு ஈறாகக் கிடந்த யாண்டொன்பதும் ஒரு பெண்கோடற்கு மூன்றுயாண்டாக அந்தணன் உயருங் கந்தருவமணத்து; ஒழிந் தோராயின் அத்துணை உயரார். இருபத்து நான்கிரட்டி நாற்பத்தெட்டாதல் பிரம முதலியவற்றான் உணர்க. வல்லெழுத்து மிகுதல் என்றாற் போல மிகுதலைக் கொள்ளவே பிராயம் இரட்டியாயிற்று. கிழத்தி மிகுதல் அறக்கழிவாம். கிழவன் கிழத்தி எனவே பலபிறப்பினும் ஒருவர்க்கு ஒருவர் உரிமை எய்திற்று. இங்ஙனம் ஒருமை கூறிற்றேனும் ஒருபாற்கிளவி (தொல்-பொ-222) என்னுஞ் சூத்திரத்தான் நால்வகை நிலத்து நான்கு வருணத்தோர் கண்ணும்1 ஆயர் வேட்டுவர் முதலியோர் கண்ணுங் கொள்க. இச்சூத்திரம் முன்னைய நான்கும் (தொல். பொ. 52) எனக் கூறிய காட்சிக்கு இலக்கணங் கூறிற்றென்றுணர்க.2 எ.டு: கருந்தடங்கண் ... ... ... கண்ணே (பு.வெ. கைக். 1) இக் காட்சிக்கண் தலைவனைப்போல் தலைவி வியந்து கூறுதல் புலனெறி வழக்கன்மை உணர்க. (2) ஆய்வுரை இயற்கைப் புணர்ச்சிக்கண் ஒத்த அன்பினராய ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்பட்டுக் காணுமாறு கூறுகின்றது. (இ-ள்) (ஒருவனும் ஒருத்தியும் கூடிவாழும் மனையறத்தின் பயனாக அவ்விருவரையும் பிறப்புத்தோறும்) சேர்த்து வைப்பதும் பிரித்து விலக்குவதுமாகிய இருவகை ஊழினும், இருவருள்ளமும் எக்காலத்தும் ஒன்றி வாழ்தற்கேற்ற நல்லூழின் ஆணையால், ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் தம்முள் எதிர்ப்பட்டுக் காண்பர். தலைவன் உரு திரு முதலியவற்றால் மிக்கவனாயினும் குற்றமில்லை எ-று. ஒன்றுவித்தலைச் செய்யும் நல்லூழினை ஒன்று எனவும், வேறுபடுத்தலைச் செய்யும் போகூழினை வேறு எனவும் கூறினார் ஆசிரியர். இவ்வாறு ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்படும் முதற்காட்சிக்கு நல்லூழின் ஆணையே காரணமென்பார், உயர்ந்தபாலது ஆணையின் என்றும், அவ்வூழின் ஆணைக்குக் காரணமாவது, அவ்விருவரும் பண்டைப்பிறப்புக்களிற் பயிலியது கெழீஇய நட்பென்பார், ஒன்றியுயர்ந்த பாலது ஆணை யென்றும், பல பிறவிகளிலும் பழகிய அன்பின் தொடர்ச்சியே ஒருவரையொருவர் இன்றியமையாதவராகக் காணுதற்குரிய காதற் கிழமையை வழங்கியதென்பார், ஒத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப என்றும் கூறினார். பாலது ஆணையாவது, வினைசெய்த உயிர்கள் நுகர்தற்குரிய இருவினைப் பயன்கள் ஏனையுயிர்கள்பாற் செல்லாது வினைகளைச் செய்த உயிர்களே நுகரும்வண்ணம் முறைசெய்து நுகர்விப்பதாகிய இறைவனது ஆற்றல். இதனைப் பால்வரை தெய்வம் (தொல்-கிளவியாக்கம்-58) என்ற தொடராலும் ஆசிரியர் குறித்துள்ளமை காணலாம். தலைவனுக்கும் தலைவிக்கும் அமைந்த ஒத்த பண்புகளாவன: பிறப்பு, குடிமை, ஆண்மை, ஆண்டு, அழகு, அன்பு, நிறை, அருள், உணர்வு, திரு என்னும் இப்பத்துமாகும். காணுதலென்றது, தனக்குச் சிறந்தாராகக் கருதுதலை. 3. சிறந்துழி1 ஐயஞ் சிறந்த தென்ப இழிந்துழி2 இழிவே சுட்ட லான. இளம்பூரணம் என்---எனின், ஐயம் நிகழும் இடம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) ஒருவன் ஒருத்தியைக் கண்ணுற்றுழி அவ்விரு வகையும் உயர்வுடையராயின், அவ்விடத்து ஐயம் சிறந்தது என்று சொல்லுவர்; அவர் இழிபுடையராயின், அவ்விடத்து அவள் இழிபினையே சுட்டி யுணர்தலான் என்றவாறு. சிறப்பு என்பது மிகுதி. ஐயமிகுதலாவது மக்களுள்ளாள் அல்லள் தெய்வமோ என மேலாயினாரோடே ஐயுறுதல், சிறந்துழி என்பதற்குத் தலை மகள்தான் சிறந்துழியும் கொள்ளப்படும்; அவளைக் கண்ட இடம் ஐயப்படுதற்குச் சிறந்துழியும் கொள்ளப்படும். உருவ மிகுதி யுடையளாதலின் ஆயத்தாரிடைக் காணினும் தெய்வம் என்று ஐயுறுதல். இதனாற் சொல்லியது உலகத்துத் தலைமகனும் தலைமகளுமாக நம்மால் வேண்டப்பட்டார் அந்தணர் முதலாகிய நான்கு வருணத்தினும் ஆயர் வேட்டுவர் குறவர் பரதவர் என்னும் தொடக்கத்தினும் அக்குலத்தாராகிய குறுநில மன்னர்மாட்டும் உளராவரன்றே; அவரெல்லாரினும் செல்வத்தானும் குலத்தானும் வடிவானும் உயர்ந்த தலைமகனும் தலைமகளமாயினோர் மாட்டே ஐயம் நிகழ்வது. அல்லாதார் மாட்டும்2 அவ் விழிமரபினையே சுட்டியுணரா நிற்குமாதலான் (எ-று). காராரப் பெய்த என்னும் முல்லைக் கலியுள் (கலித். 109) பண்ணித் தமர்தந் தொருபுறந் தைஇய கண்ணி எடுக்கல்லாக் கோடேந் தகலல்குல் புண்ணிலார் புண்ணாக நோக்கு முழுமெய்யுங் கண்ணளோ ஆய மகள் என ஐயமின்றிச் சுட்டியுணர்ந்தவாறு காண்க. இனி உயர்புள்வழி ஐயம் நிகழுமாறு: உயர்மொழித் கிளவி உறழுங் கிளவி ஐயக் கிளவி ஆடூஉவிற்கு உரித்தே (பொருளியல். 42) என்றாராகலின், ஐயப்படுவான் தலைமகன் என்று கொள்க. தலைமகள் ஐயப்படாதது என்னையெனின், அவள் ஐயப்படுங்கால் தெய்வமோ வென்று ஐயுறல் வேண்டும். அவ்வாறு ஐயுற்றால் அச்சம் வரும். அஃது ஏதுவாகக் காம நிகழ்ச்சி யுண்டாகாது. (3) நச்சினார்க்கினியம் இஃது எய்தாத தெய்துவித்து எய்தியது விலக்கிற்று, முன்னைய நான்கும் (தொல்-பொ-52) என்றதனாற் கூறிய ஐயந்தலைவன் கண்ணதே எனவுந் தலைவிக்கு நிகழுமோ என்னும் ஐயத்தை விலக்குதலுங் கூறலின். (இ - ள்) சிறந்துழி ஐயம் சிறந்தது என்ப-அங்ஙனம் எதிர்ப் பாட்டின் இருவருள்ளுஞ் சிறந்த தலைவன் கண்ணே ஐயம் நிகழ்தல் சிறந்ததென்று கூறுவார் ஆசிரியர்; இழிந்துழி இழிபே சுட்டலான-அத் தலைவனின் இழிந்த தலைவிக்கண் ஐயம் நிகழுமாயின் இன்பத்திற்கு இழிவே அவள் கருதும் ஆதலான் (எ - று).1 தலைவற்குத் தெய்வமோ அல்லளோவென நிகழ்ந்த ஐயம். நூன் முதலியவற்றால் நீக்கித் தெய்வமன்மை உணர்தற்கு அறிவுடை யனாதலுந், தலைவிக்கு, முருகனோ இயக்கனோ மகனோவென ஐயம் நிகழின் அதனை நீக்கி உணர்தற்குக் கருவியிலள் ஆகலானும் இங்ஙனம் கூறினார். தலைவிக்கு, ஐயம் நிகழின் அச்சமேயன்றிக் காமக்குறிப்பு நிகழாதாம். மகடூஉவின் ஆடூஉச் சிறத்தல் பற்றிச் சிறந்துழி என்றார். எ-டு: அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலுமென் னெஞ்சு (குறள். 1081) என வரும். (3) ஆய்வுரை இஃது ஐயம் தோன்றுமிடம் இதுவெனக் கூறுகின்றது. (இ-ள்) தலைவி ஒத்த நலங்களாற் சிறந்து தோன்றிய வழி (தலைவனது உள்ளத்தே) ஐயந்தோன்றுதல் சிறந்தது என்பர்; சிறப்பின்றித் தாழ்ந்த நிலையில் அவ்விழிபே இன்ன தன்மையள் எனத் தெளிவிக்கு மாதலின் (இந்நிலையில் ஐயம் தோன்றுதற்கு இடமில்லை) எ-று. தமியராய் எதிர்ப்பட்டாரிருவருள் தலைவி தன்னினும் உணர்ந்த தலைவனை நோக்கி இவன் தேவருள் ஒருவனோ மகனோ என ஐயுறுவாளாயின் அவளுள்ளத்தில் அச்சந்தோன்று மேயன்றிக் காதலுணர்வு தோன்றாது. ஆகவே இங்ஙனம் ஐயந் தோன்றுதல் தலைமகனுக்கன்றித் தலைமகளுக்கில்லையென்பர் இளம்பூரணர். 4. வண்டே இழையே வள்ளி பூவே கண்ணே அலமரல் இமைப்பே அச்சமென்று அன்னவை பிறவும் ஆங்கண் நிகழ நின்றவை களையுங் கருவி என்ப. இளம்பூரணம் என்---எனின், ஐயப்பட்டான் துணிதற்குக் கருவி உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) எண்ணப்பட்ட வண்டு முதலாகிய எட்டும் பிறவுமாகி அவ்விடத்து நிகழாநின்ற ஐயம் களையும் கருவி என்றவாறு. ஐயமென்பது அதிகாரத்தான் வந்தது. நிகழாநின்றவை என்பது குறுகிநின்றது.1 வண்டாவது மயிரின் அணிந்த பூவைச் சூழும் வண்டு. அது1பயின்றதன் மேலல்லது செல்லாமையின் அதுவும் மக்களுள்ளா ளென்றறிதற்குக் கருவியாயிற்று. இழை யென்பது அணிகலன். அது செய்யப்பட்டதெனத் தோற்று தலானும், தெய்வப்பூண் செய்யா அணியாதலானும் அதுவும் அறி தற்குக் கருவியாயிற்று. வள்ளி என்பது முலையினும் தோளினும் எழுதிய கொடி. அதுவும் உலகின் உள்ளதாகித் தோன்றுதலின் (அதுவும்) கருவியாயிற்று. அலமரல் என்பது தடுமாறுதல். தெய்லமாயின் நின்றவழி நிற்கும். அவ்வாறன்றி, நின்றுழி நிற்கின்றிலள் என்று சுழற்சியும் அறிதற்குக் கருவியாயிற்று. இமைப்பென்பது கண்ணிமைத்தல். தெய்வத்திற்குக் கண் இமையாமையின் அதுவும் அறிதற்குச் கருவியாயிற்று. அச்சமென்பது அண்மக்களைக் கண்டு அஞ்சுதல். அது தெய்வத்திற்கு இன்மையான் அதுவும் அறிதற்குக் கருவியாயிற்று. அன்னவை பிறவும் என்றதனான் கால் நிலந் தோய்தல், வியர்த்தல், நிழலாடுதல் கொள்க. இவை கருவியாகத் துணியப்படும் என்றவாறு. காட்சி முதலாகிய இத்துணையும் கைக்கிளைக் குறிப்பாம்.2 செய்யுள் வந்தவழிக்காண்க. இனிக் குறிப்பறிதல் கூறுகின்றராகலின் அக்குறிப்பு நிகழும்வழி இவையெல்லாம் அகமாம்.3 என்னை? இருவ, மாட்டு மொத்த நிகழ்ச்சி யாதலான். இவை தலைமகள் மாட்டுப் புலப்படநிகழாது. ஆண்டுக் குறிப்பினாற் சிறிது நிகழு மென்று கொள்க. அவை வருமாறு:--- உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல் கண்டார் மகிழ்செய்தல் இன்று (குறள். 1090) எனவரும். பிறவும் அன்ன. (4) நச்சினார்க்கினியம் இஃது ஐயுற்றுத் தெளியுங்கால் இடையது ஆராய்ச்சியாதலின் ஆராயும் கருவி கூறுகின்றது. வண்டு முதலியன வானகத்தனவன்றி மண்ணகத்தனவாதல் நூற்கேள்வியானும் உய்த்துணர்ச்சியானும் தலைமக்கள் உணர்ப. (இ-ள்) வண்டே-பயின்றதன் மேலல்லது செல்லாத தாது ஊதும் வண்டு; இழையே-ஒருவரால் இழைக்கப்பட்ட அணிகலன்கள்; வள்ளி-முலையினுந் தோளினும் எழுதுந் தொய்யிற்கொடி; பூவே கைக்கொண்டு மோந்து உயிர்க்கும் கழுநீர்ப்பூ; கண்ணே - வான் கண்ணல்லாத ஊன் கண்; அலமரல் - கண்டறியாத வடிவுகண்ட அச்சத்தாற் பிறந்த தடுமாற்றம்; இமைப்பே -அக் கண்ணின் இதழ் இமைத்தல்; அச்சம்-ஆண்மகனைக் கண்டுழி மனத்திற் பிறக்கும் அச்சம்; என்று அன்னவை பிறவும் - என்று அவ்வெண்வகைப் பொருளும் அவைபோல்வன பிறவும்; அவண் நிகழ நின்றவை-அவ்வெதிர்ப் பாட்டின்கண் முன்பு கண்ட வரையரமகள் முதலிய பிழம்புகளாய் ஈண்டுத் தன் மனத்து நிகழ நின்ற அப் பிழம்புகளை ஆங்குக் களையும் கருவி என்ப - முந்துநூற்கண்ணே அவ் வையம் நீக்குங் கருவியாமென்று கூறுவர் ஆசிரியர் (எ - று)1 எனவே, எனக்கும் அது கருத்தென்றார் இவையெல்லாம் மக்கட்குரியனவாய் நிகழவே தெய்வப் பகுதிமேற் சென்ற ஐயம் நீங்கித் துணியும் உள்ளம் பிறத்தலின் துணிவும் உடன் கூறிற்றே யாயிற்று.2 இனி, அன்னபிற ஆவன கால் நிலந்தோய்தலும் நிழலீடும் வியர்த்தலும் முதலியன. திருநுதல் வேரரும்புந் தேங்கோதை வாடும் இருநிலஞ் சேவடியுந் தோயும்-அரிபரந்த போகிதழ் உண்கணு மிமைக்கும் ஆகு மற்றிவள் அகலிடத் தணங்கே (புற. வெ. மாலை. கைக். 3) என வரும். இக் காட்சி முதலிய நான்கும் அகனைந்திணைக்குச் சிறப் புடைமையும் இவை கைக்கிளையாமாறும் முன்னைய நான்கும், (தொல்-பொ-52) என்புழிக் கூறினாம். இங்ஙனம் ஐயந்தீர்ந்துழித் தலைவியை வியந்து கூறுதலுங் கொள்க. (4) ஆய்வுரை இது, தலைமகனுள்ளத்து ஐயம் நீங்கித் துணிதற்குரிய கருவி கூறுகின்றது. (இ-ள்) தலைமகள் கூந்தலில் அணிந்த மாலையில் மொய்த்த வண்டுகளும், அவளணிந்த அணிகலன்களும், மேனியிற் கோலம் செய்யப்பெற்ற வள்ளிக் கொடியும், நறுமலரும், கண்ணிமைத்தலும், தடுமாற்றமும், அச்சமும் அத்தன்மைய பிறவும் (தலைமகனுள்ளத்தே தோன்றிய) ஐயத்தினைக் களைதற்குரிய கருவியாகும் எ-று. 5. 1நாட்டம் இரண்டும் அறிவுடம் படுத்தற்குக் கூட்டி உரைக்குங் குறிப்புரை யாகும். இளம்பூரணம் என்-எனின் மேல் தலைமகளை இத்தன்மையள் எனத் துணிந்த தலைமகன் குறிப்பறியாது சாரலுறின் பெருந்திணைப்பாற்படு மாகலானும் இக் கந்திருவநெறிக்கு ஒத்த உள்ளத்தாராதல் வேண்டு மாதலானும், ஆண்டு ஒருவரோடொருவர் சொல்லாடுதல் மர பன்மை யானும், அவருள்ளக் கருத்தறிதல் வேண்டுதலின், அதற்குக் கருவியாய உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்) நாட்டம் இரண்டும் என்பது---தலைமகள் கண்ணும் தலைமகள் கண்ணும் என்றவாறு.1 அறிவுடம்படுத்தற்கு என்பது---ஒருவர் வேட்கைபோல இரு வர்க்கும் வேட்கை உளதாகுங் கொல்லோ எனக் கவர்த்து நின்ற1 இருவரது அறிவினையும் ஒருப்படுத்தற்கு என்றவாறு. கூட்டியுரைக்குங் குறிப்புரையாகும்2 என்பது-தமதுவேட்கை யொடு கூட்டி ஒருவர் ஒருவருக்கு உரைக்குங் காமக்குறிப்புரையாம் என்றவாறு. இதன் பொழிப்பு:---இருவர்க்குங் கவர்த்து நின்ற அறிவை ஒருப்படுத்தற் பொருட்டு வேட்கையொடுகூட்டிக் கூறுங் காமக் குறிப்புச் சொல் இருவரது நாட்டமாகும் என்றவாறு.. ஆகும் என்பதனை நாட்டம் என்பதனொடு கூட்டியுரைக்க. இதற்குச் செய்யுள்:--- பானலந் தண்கழிப் படறிந்து தன்னைமார் நூல்நல நுண்வலையாற் கொண்டெடுத்த---கானற் படுபுலால் காப்பாள் படைநெடுங்கண் நோக்கம் கடிபொல்லா என்னையே காப்பு. (திணை மாலை நூற். 32) கண்ணினான் அறிப என்றவாறு. (5) நச்சினார்க்கினியம் இஃது அங்ஙனம் மக்களுள்ளாளெனத் துணிந்து நின்ற தலைவன் பின்னர்ப் புணர்ச்சி வேட்கை நிகழ்ந்துழித் தலைவியைக் கூடற்குக் கருதி உரை நிகழ்த்துங்காற் கூற்று மொழியான் அன்றிக் கண்ணான் உரை நிகழ்த்துமென்பதூஉம் அதுகண்டு தலைவியும் அக்கண்ணானே தனது வேட்கை புலப்படுத்திக் கூறுமென்பதூஉங் கூறுகின்றது; எனவே இது புணர்ச்சி நிமித்தமாகிய வழிநிலைக் காட்சி1 கூறுகின்றதாயிற்று. (இ-ள்) அறிவு-தலைவன் அங்ஙனம் மக்களுள்ளாளென்று அறிந்த அறிவானே; உடம்படுத்தற்கு - தலைவியைக் கூட்டத்திற்கு உடம்படுத்தற்கு; நாட்டம் இரண்டும் கூட்டி உரைக்கும்-தன்னுடைய நோக்கம் இரண்டானுங் கூட்டி வார்த்தை சொல்லும்; குறிப்புரை நாட்டம் இரண்டும் ஆகும்-அவ் வேட்கை கண்டு தலைவி தனது வேட்கை புலப்படுத்திக் கூறுங் கூற்றுந் தன்னுடைய நோக்கம் இரண்டானுமாம் (எ-று). நாட்டம் இரண்டிடத்துங் கூட்டுக. உம்மை விரக்க.2 இங்ஙனம் இதற்குப் பொருள்கூறல் ஆசிரியர்க்குக் கருத்தாதல் புகுமுகம் புரிதல் (தொல். பொ. 261) என்னும் மெய்ப்பாட்டியற் சூத்திரத்தானுணர்க. அதற்குப் பேராசிரியர் கூறிய உரையானுமுணர்க. ஒன்று ஒன்றை ஊன்றி நோக்குதலின் நாட்டமென்றார். நாட்டுதலும் நாட்டமும் ஒக்கும். உ-ம்: நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக்கொண் டன்ன துடைத்து (குறள். 1082) என வரும். இது புகுமுகம் புரிதல் என்னும் மெய்ப்பாடு கூறியது. (5) ஆய்வுரை மேற்குறித்த அடையாளங்களைக் கொண்டு ஐயம் நீங்கித் தலைமகளை இத்தன்மையள் எனத் துணிந்த தலைமகன், அவளது கருத்தறியாது அவளை அணுகுவனாயின் அச்செயல் பொருந்தா-வொழுக்கமாகிய பெருந்திணையாய் முடியும். ஒத்த அன்பினால் நிகழ்தற்குரிய இக்களவொழுக்கத்திற்குத் தலைமகளது உள்ளக் கருத்தினைத் தலைமகன் உணர்ந்து கொள்ளுதல் முதற்கண் வேண்டப்படுதலின், தலைமகளது உள்ளக் கருத்தினைக் தலைமகன் குறிப்பாலுணர்தற்குரிய கருவி கூறுகின்றது. (இ-ள்.) காதலர் இருவர் கண்களும் அவ்விருவரது அறிவினையும் ஒருப்படுத்தற்கு ஒருவர் ஒருவர்க்குத் தம் வேட்கையுடன் சேர்ந்து நோக்கும் காமக் குறிப்புரையாகும். எ-று. 6. குறிப்பே1 குறித்தது2 கொள்ளு மாயின்3 ஆங்கவை4 நிகழும் என்மனார் புலவர். இளம்பூரணம் என்---எனின், மேலதற்கொரு புறனடை யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஒருவர் குறிப்பு ஒருவர் குறித்ததனைக் கொள்ளு மாயின், அவ்விடத்துக் கண்ணிணான் வருங் குறிப்புரை நிகழும் என்றவாறு. எனவே, குறிப்பைக் கொள்ளாதவழி அக்குறிப்புரை நிகழாது என்றவாறாம். இதனாற் சொல்லியது கண்ட காலத்தே வேட்கை முந்துற்றவழியே இக்கண்ணினான் வருங் குறிப்பு நிகழ்வது; அல்லாதவழி நிகழாது என்றவாறு. இனிக் குறிப்பு நிகழுமாறும் அதன் வேறுபாடும் மெய்ப்பாட்டியலுள் கூறுப. ஈண்டும் சில உதாரணம் காட்டுவம். நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள் யாப்பினுள் அட்டிய நீர் (குறள். 1093) எனவும், அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப் பசையினள் பைய நகும் (குறள். 1098) எனவும் வரும். பிறவும் அன்ன. தலைமகன் குறிப்புத் தலைமகள் அறிந்த வழியும் கூற்று நிகழாது, பெண்மையான். (9) நச்சினார்க்கினியம் இது புணர்ச்சியமைதி கூறுகின்றது. (இ-ள்.) குறித்தது - தலைவன் குறித்த புணர்ச்சி வேட்கையையே; குறிப்புக்கொள்ளுமாயின் - தலைவி கருத்துத் திரிவுபடாமற் கொள்ளவற்றாயின்; ஆங்கு - அக் குறிப்பைக் கொண்ட காலத்து; அவை நிகழும் என்மனார் புலவர் - புகுமுகம் புரிதன் முதலாய் இருகையுமெடுத்தல் ஈறாகக் கிடந்த மெய்ப்பாடு பன்னிரண்டனுட் (162-263) பொறிநுதல் வியர்த்தல் முதலிய பதினொன்றும் முறையே நிகழுமென்று கூறுவர் புலவர் (எ - று). அங்கவை 1யும் பாடம். பன்னிரண்டாம் மெய்ப்பாடாகிய இருகையுமெடுத்தல் கூறவே முயக்கமும் உய்த்துணரக் கூறியவாறு காண்க. அம் மெய்ப்பாட்டியலுட் கூறிய மூன்று சூத்திரத்தையும் ஈண்டுக் கூறியுணர்க. உரையிற் கோடலான் மொழிகேட்க விரும்புதலுங் கூட்டிய தெய்வத்தை வியந்து கூறுதலும் வந்துழிக் காண்க. (6) ஆய்வுரை இது, மேற்குறித்தவாறு காதலர் இருவருள் ஒருவர் குறிப் பினை மற்றவர் குறிப்பு ஏற்றுக் கொண்ட பின்னர் நிகழ்வதே அன்பின் ஐந்திணைக் களவொழுக்கமாம் என்பது உணர்த்துகின்றது. (இ-ள்.) ஒருவரது கண்ணின் குறிப்பு மற்றவரது கண்ணினாற் குறிக்கப்பட்ட உள்ளக் குறிப்பினை உள்ளவாறு ஏற்றுணரவல்ல தாயின் பின் கூறப்படுவன நிகழும் என்று கூறுவர் உள நூலாசிரியர் எ - று. ஆங்கவை என்றது, வேட்கை முதலாகச் சாக்காடு ஈறாகப் பின்னர்க் கூறப்படும் உணர்வு நிலைகளை. 7. பெருமையும் உரனும் ஆடூஉ மேன. இளம்பூரணர் என்--எனின், இது தலைமகற்கு உரியதோர் இலக்கண முணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) பெருமை யாவது--பழியும் பாவமும் அஞ்சுதல். உரன் என்பது---அறிவு. இவை யிரண்டும் ஆண்மகனுக்கு இயல்பு என்றவாறு.1 இதனானே மேற்சொல்லப்பட்ட தலைமகளது வேட்கைக் குறிப்புக் கண்ட தலைமகன், அந்நிலையே புணர்ச்சியை நினை யாது. வரைந்து எய்தும் என்பது பெறுதும். சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்ப தறிவு (குறள். 422) என்பவாகலின். தலைமகன் இவ்வாறு கூறியதற்குச் செய்யுள் :--- வேயெனத் திரண்டதோள் (கலித். 57) உறுகழி மருங்கின் (அகம். 230) இவை உள்ளப்புணர்ச்சியான் வரைதல் வேண்டிப் பாங்கற்கு உரைத்தன. (7) நச்சினார்க்கினியம் இத்துணை மெய்யுறு புணர்ச்சிக்கு உரியனவே கூறி2 இனி உள்ளப்புணர்ச்சியே நிகழ்ந்துவிடும் பக்கமும் உண்டென்பதூஉம் இவ்விருவகைப் புணர்ச்சிப் பின்னர்க் களவின்றி வரைந்து கோடல் கடிதில் நிகழ்தலுண்டென்பதூஉம் உணர்த்துகின்றது. (இ-ள்.) பெருமையும் - அறிவும் ஆற்றலும் புகழும் கொடையும் ஆராய்தலும் பண்பும் நண்பும் பழிபாவம் அஞ்சுதலும் முதலியனவாய் மேற்படும் பெருமைப் பகுதியும்; உரனும் - கடைப்-பிடியும் நிறையுங் கலங்காது துணிதலும் முதலிய வலியின் பகுதியும்; ஆடூஉ மேன-தலைவன் கண்ணது (எ-று). இதனாலே உள்ளப் புணர்ச்சியே நிகழ்ந்து வரைந்து கொள்ளும் உலக வழக்கும் மெய்யுறுபுணர்ச்சி நிகழ்ந்துழியுங் களவு நீட்டியாது வரைந்துகோடலும் உள்ளஞ் சென்றுழியெல்லாம் நெகிழ்ந்தோடாது ஆராய்ந்து ஒன்று செய்தலும் மெலிந்த உள்ளத்தானாயுந் தோன்றாமன் மறைத்தலுந் தீவினையாற்றிய பகுதியிற்சென்ற உள்ளம் மீட்டலுந் தலைவற்கு உரியவென்று கொள்க. சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்ப தறிவு (குறள். 422) என வரும். பெருமை நிமித்தமாக உரன் பிறக்கும்; அவ் வுரனான் மெய்யுறுபுணர்ச்சி இலனாதலும் உரியனென இதுவும் ஒரு விதி கூறிற்று. தலைவிக்கு மெய்யுறுபுணர்ச்சி நடக்கும் வேட்கை நிகழா மைக்குக் காரணம் மேற் கூறுப.1 இனி இயற்கைப்புணர்ச்சி இடையீடு பட்டுழி இடந்தலைப்பாட்டின்கண் வேட்கை தணியாது நின்று கூடுபவென்றும், ஆண்டு இடையீடுபட்டுழிப் பாங்கனாற் கூடுபவென்றும், உரைப்போரும் உளர்2; அவர் அறியாராயினார்; என்னை? அவ்விரண்டிடத்தும் இயற்கைப் புணர்ச்சிக்கு உரிய மெய்ப்பாடுகள் நிகழ்ந்தே கூடவேண்டுதலின் அவற்றையும் இயற்கைப் புணர்ச்சி யெனப் பெயர் கூறலன்றிக் காமப் புணர்ச்சியும் இடந்தலைப்பாடும் பாங்கொடு தழாஅலும் என ஆசிரியர் வேறு வேறு பெயர் கூறாரென்றுணர்க. ஆய்வுரை இது, தலைமகற்குரியதோர் இலக்கணம் கூறுகின்றது. (இ-ள்.) தன்னைத்தான் கட்டுப்படுத்தியொழுகும் பெருமையும் சென்ற விடங்களில் மனத்தைச் செல்லவிடாது தீமையினின்றும் நீக்கி நன்றின்பாற் செலுத்தும் அறிவுத் திண்மையும் தலைமகளிடத்தன எ-று. 8. அச்சமும் நாணும் மடனும் முந்தூறுதல்3 நிச்சமும்4 பெண்பாற் குரிய என்ப. இளம்பூரணம் என்---எனின், இது தலைமகட்கு உரியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அச்சமும் நாணும் பேதைமையும் இம்மூன்றும் நாடோறு முந்துறுதல் பெண்டிர்க்கு இயல்பு என்றவாறு. எனவே, வேட்கையுற்றுழியும் அச்சத்தானாதல் நாணானாதல் மடத்தானாதல் புணர்ச்சிக்கு இசையாது நின்று வரைந்தெய்தல் வேண்டுமென்பது போந்தது. இவ்வாறு இருவரும் உள்ளப்புணர்ச்சி-யால் நின்று வரைந்தெய்தி மெய்யுறும். இதற்குச் செய்யுள் : தீம்பால் கறந்த கலமாற்றிக் கன்றெல்லாந் தாம்பிற் பிணித்து மனைநிறீஇ யாய்தந்த பூங்கரை நீலம் புடைதாழ மெய்யசைஇப் பாங்கரு முல்லையுந் தாய பாட்டங்கால் தோழிநம் புல்லினத் தாயர் மகளிரோ டெல்லாம் ஒருங்கு விளையாட அவ்வழி வந்த குருந்தம்பூங் கண்ணிப் பொதுவன்மற் றென்னை முற்றிழை ஏஎர் மடநல்லாய் நீயாடுஞ் சிற்றில் புனைகோ சிறிதென்றான் எல்லாநீ பெற்றேம்யா மென்று பிறர்செய்த இல்லிருப்பாய் கற்ற திலைமன்ற காண்என்றேன் முற்றிழாய் தாதுசூழ் கூந்தல் தகைபெயத் தைஇய கோதை புனைகோ நினக்கென்றான் எல்லாநீ ஏதிலார் தந்தபூக் கொள்வாய் நனிமிகப் பேதையை மன்ற பெரிதென்றேன் மாதராய் ஐய பிதிர்ந்த சுணங்கணி மென்முலைமேல் தொய்யி லெழுதுகோ மற்றென்றான் யாம்பிறர் செய்புறம் நோக்கி இருத்துமோ நீபெரிதும் மையலை மாதோ விடுகென்றேன் தையலாய் சொல்லிய வாறெல்லாம் மாறுமாறு யான்பெயர்ப்ப அல்லாந்தான் போலப் பெயர்ந்தான் அவனைநீ ஆயர் மகளிர் இயல்புரைத் தெந்தையும் யாயும் அறிய உரைத்தீயின் யானுற்ற நோயுங் களைகுவை மன். (கலித். 111) இது தலைமகள் உள்ளப்புணர்ச்சியின் உரிமை பூண்டிருந்த வாறும். வரைந்தெய்தக் கூறலுற்றவாறும் காண்க. நச்சினார்க்கினியம் இது, மேலதே போல்வதொரு விதியை உள்ளப்புணர்ச்சி பற்றித் தலைவிக்குக் கூறுகின்றது. (இ-ள்.) அச்சமும் - அன்பு காரணத்திற்றோன்றிய உட்கும் ; நாணும்-காமக்குறிப்பு நிகழ்ந்தவழிப்படுவதோர் உள்ளவொடுக்கமும்; மடனும் - செவிலியர் கொளுத்தக்கொண்டு கொண்டதுவிடா மையும்; முந்துறுத்த1-இம்மூன்றும் முதலியன; நிச்சமும்2 பெண்பாற்கு உரிய என்ப - எஞ்ஞான்றும் பெண்பாலார்க்கு உரியவென்று கூறுவர் ஆசிரியர் (எ-று). முந்துறுத்த என்றதனாற் கண்டறியாதன கண்டுழி மனங் கொள்ளாத பயிர்ப்பும், செயத்தகுவது அறியாத பேதைமையும், நிறுப்பதற்கு நெஞ்சுண்டாம் நிறையுங் கொள்க. மடன் குடிப் பிறந்தோர் செய்கையாதலின் அச்சமும் நாணும்போல மெய்யுறு புணர்ச்சியை விலக்குவதாம். தலைவி உடையளெனவே தலைவன் பெருமையும் உரனும் உடையனாய் வேட்கைமீதூரவும் பெறு மாயிற்று. இவை இவட்கு என்றும் உரியவாயின் இயற்கைப் புணர்ச்சிக்கு உரியளல்லளாமாயினும் இவ்விலக்கணத்தில் திரியாது நின்றேயும் புணர்ச்சிக்கு உரியளாமென்றற்குப் பன்னிரண்டு மெய்ப்பாடுங் கூறினார். இவற்றானே, புணர்ச்சி பின்னர்ப் பெறுதுமெனத் தலைவனைப்போல ஆற்றுவாளாயிற்று. இருவர் கண்ணுற்றுக் காதல் கூர்ந்த வழியெல்லாங் கந்தருவமென்பது வேத முடிபாதலின் இவ்வுள்ளப்புணர்ச்சியுங் கந்தருவமாம். ஆதலான் அதற்கு ஏதுவாகிய பெருமையும் உரனும் அச்சமும் நாணும் போல்வன கூறினார். இச்சூத்திரம் இரண்டும் நாடக வழக்கன்றிப் பெரும்பான்மை உலகியல் வழக்கே கூறலின் இக்கந்தருவம்3 இக் களவியற்குச் சிறப்பின்று, இனிக் கூறுவன மெய்யுறுபுணர்ச்சி பற்றிய களவொழுக்கமாதலின். (8) ஆய்வுரை இது, தலைமகட்குரியதோர் இலக்கணம் கூறுகின்றது. (இ-ள்.) தனது நிறைகாவலுக்கு இடர் நேருமோவென்னும் அச்சமும் பெண்ணியல்பாகிய நாணமும், தான் மேற்கொண்ட கொள்கையை நெகிழ விடாமையாகிய மடனும் முற்பட்டுத் தோன்றுதல் எக்காலத்தும் பெண்டிர்க்குரிய இயல்பாகும் என்பர் ஆசிரியர் எ-று. எனவே, இயற்கைப் புணர்ச்சியில் எதிர்ப்பட்ட தலைமகனும் தலைமகளும் தம்மைக் காவாது வேட்கை மீதூர்ந்த நிலையிற் புனலோடும் வழிப்புற் சாய்ந்தாற்போலத் தமக்குரிய இப்பண்பு களை நெகிழ விடுதல் கூடாமையின், தாம் எதிர்ப்பட்ட முதற் காட்சியிலே மெய்யுறு புணர்ச்சிக்கு உடன்படாது உள்ளப் புணர்ச்சியளவே யொழுகி மணந்து கொண்ட பின்னரே கூடுதல் முறையாகும் என்பது இளம்பூரணர் கருத்தாகும். முந்துறுதல்-முற்பட்டுத் தோன்றுதல்; நிச்சமும்-நித்-தமும்; நாள்தோறும். 9. வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல் ஆக்கஞ் செப்பல் நாணுவரை இறத்தல் நோக்குவ எல்லாம் அவையே போறல் மறத்தல் மயக்கஞ் சாக்காடு என்றிச் சிறப்புடை மரபினவை களவென மொழிப. இளம்பூரணம் என்---எனின், மெய்யுறுபுணர்ச்சி நிகழுங்காலம் உணர்த்துதல் நுதலிற்று. மேல், பெருமையும் உரனும் ஆடூஉ மேன எனவும், அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல் நிச்சமும் பெண்பாற் குரிய என்ப (தொல். கள. 8) எனவும் ஓதியவதனான் உள்ளஞ் சென்றவழியும் மெய்யுறுபுணர்ச்சி வரைந்தெய்தி நிகழ்ப என்றாராம். அவ்வழிச் சாக்காடெல்லை யாகிய மெய்ப்பாடு வரின் மெய்யுற்றுப் புணரப்பெறு மென்பது உணர்த்திற்று. (இ - ள்.) வேட்கை முதலாகச் சாக்காடு ஈறாக ஓதப்பட்ட காமச் சிறப்புடையனவாற்றாற் களவு ஆமென்று சொல்லுவர் எ-று. ஆனும் ஆமும் எஞ்சி நின்றன. இவற்றை அவத்தை1 யென்ப. அஃதேல், அவை பத்துளவன்றே; ஈண்டுரைத்தன ஒன்பதாலெனின், காட்சி விகற்பமுங் கூறினார். அஃது உட்படப் பத்தாம். காட்சி விகற்பமாகிய ஐயமுந் துணிவும் முதலது; வேட்கை இரண்டாவது, என்று கொள்க. வேட்கையாவது---பெறல்வேண்டு மென்னும் உள்ள நிகழ்ச்சி. ஒருதலையுள்ளுதலாவது---இடைவிடாது நினைத்தல் மெலிதலாவது---உண்ணாமையான் வருவது. ஆக்கஞ்செப்பலாவது---உறங்காமையும் உறுவ ஓதலும் முதலாயின கூறுதல். நாணுவரையிறத்தலாவது---நாண் நீங்குதல். நோக்குவ எல்லாம் அவையே போற லாவது---தன்னாற் காணப்பட்டன எல்லாம் தான் கண்ட உறுப்புபோலுதல். மறத்தல்---பித்தாதல் மயக்கமாவது---மோகித்தல். சாக்காடு--சாதல். இவற்றுள் சாதல் பத்தாம் அவத்தையாதலால், ஒழிந்த எட்டுங்களவு நிகழ்தற்குக் காரணமாம் என்று கொள்க. இது தலைமகட்கும் தலைமகற்கும் ஒக்கும். இவற்றிற்குச் செய்யுள் வந்தவழிக் காண்க. (9) நச்சினார்க்கினியம் இதுமுதலாகக் களவிலக்கணங் கூறுவார் இதனான் இயற்கைப் புணர்ச்சிமுதற் களவு வெளிப்படுந்துணையும் இருவர்க்கும் உளவாம் இலக்கணம் இவ்வொன்பதுமெனப் பொதுவிலக்கணங் கூறுகின்றார். (இ - ள்.) ஒருதலைவேட்கை - புணராத முன்னும் புணர்ந்த பின்னும் இருவர்க்கும் இடைவிட்டு நிகழாது ஒரு தன்மைத்தாகி நிலைபெறும் வேட்கை; ஒருதலை உள்ளுதல் - இடை விடாது ஒருவர் ஒருவரைச் சிந்தியாநிற்றல்; மெலிதல் - அங்ஙனம் உள்ளுதல் காரணத்தான் உடம்பு வாடுதல்; ஆக்கஞ் செப்பல் - யாதானும் ஓர் இடையூறு கேட்டவழி அதனை ஆக்கமாக நெஞ்சிற்குக் கூறிக் கோடல்; நாணுவரையிறத்தல் - ஆற்றுந் துணையும் நாணி அல்லாதவழி அதன்வரையிறத்தல்; நோக்குவ எல்லாம் அவையே போறல் - பிறர் தம்மை நோக்கிய நோக்கெல்லாந் தம் மனத்துக் கரந்து ஒழுகுகின்றவற்றை அறிந்து நோக்குகின்றாரெனத் திரியக் கோடல் ; மறத்தல் - விளையாட்டு முதலியவற்றை மறத்தல்; மயக்கம் - செய்திறன் அறியாது கையற்றுப் புள்ளும்மாவும் முதலியவற்றோடு கூறல்; சாக்காடு - மடலேறுதலும் வரை பாய்தலும் போல்வன கூறல் ; என்று அச்சிறப்பு உடை மரபினவை களவு என மொழிப - என்று சொல்லப்பட்ட அந்தச் சிறப்புடைத் தான முறையினையுடைய ஒன்பதுங் களவொழுக்கமென்று கூறுப (எ - று). இயற்கைப் புணர்ச்சிக்கு இயைபுடைமையின் வேட்கை முற் கூறினார். சேட்படுத்தவழித் தலைவன் அதனை அன்பென்று கோடலும், இயற்கைப்புணர்ச்சி புணர்ந்து நீங்கியவழித் தலைவி அதனை அன்பென்று கோடலும் போல்வன ஆக்கஞ்செப்பல். தலைவன் பாங்கற்குந் தோழிக்கும் உரைத்தலுந், தலைவி தோழிக்கு அறத்தொடு நிற்றலும் போல்வன நாணுவரை யிறத்தல். களவதிகார மாதலின் அவையென்னுஞ் சுட்டுக் களவை உணர்த்தும் கையுறை புனைதலும் வேட்டைமேலிட்டுக் காட்டுத்திரிதலுந் தலை வற்கு மறத்தல் ; கிளியும் பந்தும் முதலியன கொண்டு விளையாடு-தலைத் தவிர்ந்தது தலைவிக்கு மறத்தல். சாக்காடாவன; அணிற்பல் அன்ன கொங்குமுதிர் முண்டகத்து மணிக்கே ழன்ன மாநீர்ச் சேர்ப்ப இம்மை மாறி மறுமை யாயினும் நீயா கியரெங் கணவனை யானா கியர்நின் னெஞ்சுநேர் பவளே. (குறுந். 49) நிறைந்தோர்த் தேரும் நெஞ்சமொடு குறைந்தோர்1 பயனின் மையிற் பற்றுவிட் டொரூஉம் நயனின் மாக்கள் போல வண்டினஞ் சுனைப்பூ நீத்துச் சினைப்பூப் படர மையின் மானினம் மருளப் பையென வெந்தாறு பொன்னின் அந்தி பூப்ப ஐயறி வகற்றுங் கையறு படரோடு அகலிரு வானம் அம்மஞ் சீனப் பகலாற்றுப் படுத்த பழங்கண் மாலை காதலர்ப் பிரிந்த புலம்பின் நோதக ஆரஞர் உறுநர் அருநிறஞ் சுட்டிக் கூரெஃ கெறிஞரின் அலைத்தல் ஆனாது எள்ளற இயற்றிய நிழல்காண் மண்டிலத் துள்ளூ தாவியிற் பைப்பய நுணுகி மதுகை மாய்தல் வேண்டும் பெரிதழிந்து இதுகொல் வாழி தோழி யென்னுயிர் விலங்குவெங் கடுவளி யெடுப்பத் துளங்குமரப் புள்ளில் துறக்கும் பொழுதே. (அகம். 81) இவை தலைவி சாக்காடாயின. மடலேறுவலெனக் கூறுதன் மாத்திரையே தலைவற்குச் சாக்காடு. இவை சிறப்புடைய வெனவே களவு சிறப்புடைத்தாம். இவை கற்பிற்கு ஆகா. இருவர்க்கும் இவை தடுமாறி வருதலின் மரபினவையெனப் பன்மை கூறினார். (9) ஆய்வுரை இது, களவொழுக்கத்தில் காதலருள்ளத்தே நிகழும் உணர்வு நிலைகளை விரித்துரைக்கின்றது. (இ-ள்)1 ஒருவரையொருவர் தமக்குரியவராகப் பெறுதல் வேண்டும் என்னும் உறுதியான வேட்கையும், இடைவிடாது நினைத்தலும், உண்ணாமையால் உண்டாகும் உடல்மெலிவும், தமக்கு ஆக்கமாவன இவையெனத் தமக்குள்ளே கூறிக்கொள்ளுதலும், நாணத்தின் எல்லை கடத்தலும், காண்பனவெல்லாம் தம்மாற் காதலிக்கப்பட்டாரது உருவாகவே தோன்றுதலும், தம்மை மறத்தலும், மனமயக்கம் உறுதலும், உயிர் நீங்கினாற் போன்று உயிர்ப்படங்குதலும் ஆகிய இவை ஒன்பதும் உயிரோரன்ன செயிர்நீர் நட்பாகிய காமவுணர்வின் சிறப்பினைப் புலப்படுத்தும் உணர்வு நிலைகளாதலின் இவற்றைக் களவொழுக்கத்திற்குச் சிறந்தனவாகக் கூறுவர் ஆசிரியர் எ-று. வேட்கை முதல் சாக்காடீறாக இங்குச் சொல்லப்பட்ட உணர்வு நிலைகள் காதலர் இருவர்பாலும் தோன்றியபின்னரே மெய்யுறு புணர்ச்சி நிகழும் என்பதாம். காட்சி விகற்பமாகிய ஐயமும் துணிவும் முதலாவது உணர்வுநிலை. வேட்கை இரண்டாவது உணர்வுநிலை. காட்சி விகற்பமாகிய முதலாவது உணர்வு நிலையுடன் வேட்கை முதலிய இவ்வொன்பது உணர்வு நிலைகளையும் சேர்க்க காதலர் இருவரிடையே நிகழும் உணர்வு நிலைகளாகிய அவத்தைகள் பத்தாகும் என்பது இளம்பூரணர் கருத்தாகும். 10. முன்னிலை யாக்கல் சொல்வழிப் படுத்தல் நன்னயம் உரைத்தல் நகைநனி உறாஅ அந்நிலை யறிதல் மெலிவுவிளக் குறுத்தல் தன்னிலை யுரைத்தல் தெளிவகப் படுத்தலென்று இன்னவை நிகழும் என்மனார் புலவர். இளம்பூரணம் என்---எனின், இஃது இயற்கைப் புணர்ச்சிக்குரியதொரு திறன் உணர்த்துதல் நுதலிற்று. தனியினால்1 தலைமகளை யெதிர்ப்பட்ட தலைமகன் தனது பெருமையும் அறிவும் நீக்கி வேட்கை மீதூரப் புணர்ச்சி வேண்டினானாயினும், தலைமகள்மாட்டு நிற்கும் அச்சமும் நாணும் மடனும் நீக்குதலும் வேண்டுமன்றே,2 அவை நீங்குதற் பொருட்டு இவையெல்லாம் நிகழுமென்பது. உலகத்துள்ளார் இலக்கணமெல்லாம் உரைக்கின்றா ராகலின், இவ்வாசிரியர் உரைக்கின்றிவாற்றான் நிகழ்தல் பெரும்பான்மையாகவும், சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழி (தொல். களவியல் 11) என ஓதுதலின், இவையெல்லாம் நிகழ்தலின்றிச் சிறுபான்மை வேட்கை மிகுதியாற் புணர்ச்சி கடிதின் முடியவும் பெறுமெனவுங் கொள்க.1 (இ - ள்.) முன்னிலையாக்கல் என்பது - காமக்குறிப்புண்மை அறிந்த தலைமகள் வேட்கையாற் சாரநினைத்தவழித் தலைமகளும் வேட்கைக் குறிப்புடையா ளாயினும் குலத்தின் வழிவந்த இயற்கை யன்மையான் நாணமும் அச்சமும் மீதூர அக்குறிப்பில்லாதாரைப் போல் நின்றவழி அவளை முன்னிலையாகப் படுத்துச் சில கூறுதல். சொல்வழிப்படுத்த லாவது --- தான் சொல்லுகின்ற சொல்லின் வழி அவள் நிற்குமாறு படுத்துக் கூறுதல். நன்னய முரைத்தலாவது --- தலைமகளினது நலத்தினை யுரைத்தல். நகைநனி யுறாஅ அந்நிலை யிறத லாவது - தலைமகன் தன் நன்னய முரைத்தலைக் கேட்ட தலைவிக்கு இயல்பாக அகத்து உளவாகும் மகிழ்வால் புறந்தோன்றும் முறுவற்குறிப்பு மிக்குத் தோன்றா அந்நிலையினைத் தலைவன் அறிதல். மெலிவு விளக்குறுத்த லாவது --- தலைவன் அகத்துறும் நோயாற் புறத்து நிகழும் தளர்வினைக் குறிப்பான் எடுத்துக் கூறலும். உதாரணம் வந்துழிக் காண்க. குறிப்பாவன: புறத்துறுப்பா யவர்க் கின்றியமையாதன. தன்னிலை யுரைத்த லாவது---அப் புறநிகழ்ச்சியின் பொலி விழவைக் கண்ட தலைமகள்மாட்டுத் தலைவன் தன் உள்ள வேட்கை மீதூர் வினை நிலைப்படக் கூறுதல். சொல்லிற் சொல்லெதிர் கொள்ளாய் யாழநின் என்னும் நற்றிணைப்பாட்டுள், காமங் கைம்மிகில் தாங்குதல் எளிதோ ... ... ... கடைமணி சிவந்தநின் கண்ணே கதவ அல்ல (நற்றிணை-31) எனத் தன்னிலை யுரைத்தவாறு காண்க. தெளிவு அகப்படுத்தலாவது---தலைவன் முன்னிலையாக்கல் முதலியன கூறிப் பின்னர் இயற்கைப் புணர்ச்சியினை விழைந்து நின்றனாக, அப்புணர்ச்சியினைக் கூறுவார் முன்னம் ஒத்த பண்புடைமை உள்ளத்து இருவர் மாட்டும் வேண்டுதலின் தலைமகள் பண்பினைத் தலைவன் அறிந்து அத்தெளிவைத் தன்னகப்படுத்துத் தேர்தல். யாயும் ஞாயும் யாரா கியரோ என்னும் குறுந்தொகைப்பாட்டுள், அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே (குறுந்-40) என இயற்கைப்புணர்ச்சி முன்னர்த் தலைவன் தலைவியர் உள்ளம் ஒத்த பண்பினைக் கூறியவாறு காண்க. இதுகாறும் இயற்கைப்புணர்ச்சிக்குரிய திறன்கூறி, மேல் இயற்கைப் புணர்ச்சி நிகழுமாறு கூறுகின்றார். அஃதேல், தன்னிலை யுரைத்தலைத் தெளிவகப் படுத்தலுடன் இணைத்து மெய்யுறு புணர்ச்சியாக்கிய பின்னர்த் தோன்றுந் துறையாகப் படுத்தாலோ எனின் அது சான்றோர் வழக்கின்றாதலானும், மெய்யுறுபுணர்ச்சி முன், மெய்தொட்டுப் பயிறல் (களவியல்-11) முதலியன யாண்டும் நிகழ்ந்தே தலைவிக்கு மெய்யுறுபுணர்ச்சி நிகழுமாதலானும் அஃதன்றென்க. (10) நச்சினார்க்கினியம் இஃது இன்பமும் இன்ப நிலையின்மையுமாகிய புணர்தல் பிரிதல் கூறிய முறையானே இயற்கைப் புணர்ச்சி முற்கூறி அதன் பின்னர்ப் பிரிதலும் பிரிதனிமித்தமுமாய் அத்துறைப்படுவன வெல்லாந் தொகுத்துத் தலைவர்க்கு உரியவென்கிறது.1 (இ - ள்.) முன்னிலையாக்கல் - முன்னிலையாகாத வண்டு, நெஞ்சு முதலியவற்றை முன்னிலையாக்கிக் கோடல்; சொல்வழிப் படுத்தல் - அச் சொல்லாதவற்றைச் சொல்லுவனபோலக் கூறுதல்; நன்னயம் உரைத்தல் - அவை சொல்லுவனவாக அவற்றிற்குத்தன் கழிபெருங்காதல் கூறுவானாய்த் தன்னயப்புணர்த்துதல்; நகைநனி உறாஅது அந்நிலை அறிதல் - தலைவி மகிழ்ச்சி மிகவும் எய்தாமற் புணர்ச்சிக்கினமாகிய பிரிவுநிலைகூறி அவள் ஆற்றுந்தன்மை அறிதல்; மெலிவு விளக்குறுத்தல்-இப்பிரிவால் தனக்குள்ள வருத்தத்தைத் தலைவி மனங்கொள்ளக் கூறுதலுந் தலைவி வருத்தங் குறிப்பான் உணர்ந்து அதுதீரக் கூறுதலும்; தம் நிலை உரைத்தல் - நின்னொடுபட்ட தொடர்ச்சி எழுமையும் வருகின்றதெனத் தமதுநிலை உரைத்தல்; தெளிவு அகப்படுத்தல் - நின்னிற் பிரியேன், பிரியின் ஆற்றேன், பிரியின் அறனல்லது செய்கேனாவலெனத் தலைவி மனத்துத் தேற்றம்படக் கூறுதல்; என்று இன்னவை நிகழும் என்மனார் புலவர் - என்று இக்கூறிய ஏழும் பயின்றுவரும் இயற்கைப் புணர்ச்சிப்பின் தலைவற்கு (எ - று). முற்கூறிய மூன்றும் நயப்பின்கூறு. இஃது அறிவழிந்து கூறாது தலைவி கேட்பது காரியமாக வண்டு முதலியவற்றிற்கு உவகை பற்றிக் கூறுவது. நன்னயம் எனவே எவரினுந் தான் காதலனாக உணர்த்தும். இதன்பயன் புணர்ச்சியெய்தி நின்றாட்கு இவன் எவ்விடத்தான் கொல்லோ இன்னும் இது கூடுங்கொல்லோ இவன் அன்புடையன் கொல்லோ என நிகழும் ஐயநீங்குதல். இது பிரிதனி மித்தம். இவன் பிரியாவிடின் இவ்வொழுக்கம் புறத்தார்க்குப் புலனாம்; ஆண்டு யாம் இறந்துபடுதலின் இவனும் இறந்து படுவனெனக் கருதப் பிரிவென்பதும் ஒன்று உண்டெனத் தலைவன் கூறுதல். அவட்கு மகிழ்ச்சியின்றென்பது தோன்ற நகை நனியுறா தென்றார். புணர்தல் பிரிதல் (தொல். பொ. 14) எனக் கூறிய சூத்திரத்திற் புணர்தலை முற்கூறி ஏனைப் பிரிவை அந்நிலை யென்று ஈண்டுச் சுட்டிக் கூறினார். இதனால் தலைவிக்குப் பிரிவச்சங் கூறினார். தண்ணீர் வேட்டு அதனை உண்டு உயிர்பெற்றான் இதனான் உயிர் பெற்றேமெனக் கருதி அதன் மாட்டு வேட்கை நீங்காதவாறு போலத் தலைவிமாட்டு வேட்கை யெய்தி அவளை அரிதிற்கூடி உயிர்பெற்றானாதலின், இவளான் உயிர்பெற்றே மென்றுணர்ந்து, அவண்மேல் நிகழ்கின்ற அன்புடனே பிரியு மாதலின் தலைவற்கும் பிரிவச்சம் உளதாயிற்று. இங்ஙனம் அன்பு நிகழவும் பிறர் அறியாமற் பிரிகின்றேனென்பதனைத் தலைவிக்கு மனங்கொள்ளக் கூறுமென்றற்கு விளக்குறுத்தலென்றார். இதனானே வற்புறுத்தல் பெற்றாம். அஃது அணித்து எம்மிட மென்றும் பிறவாற்றானும் வற்புறுத்தலாம் மேலனவும் பிரிதனிமித்தம். உ-ம்: கொங்குதேர் வாழ்க்கை அம்சிறைத் தும்பி காமஞ் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல் செறியெயிற் றரிவை கூந்தலின் நறியவும் உளவோ நீயறியும் பூவே. (குறுந். 2) இதனுள் தும்பி என்றது முன்னிலையாக்கல்; கண்டது மொழிமோ என்றது சொல்வழிப்படுத்தல்; கூந்தலின் நறியவும் உளவோ என்றது நன்னயமுரைத்தல்; காமஞ் செப்பாது என்றது என்னிலத்து வண்டாதலின் எனக்காகக் கூறாது மெய் கூறெனத் தன் இடம் அதுவாகக் கூறலின் இடமணித்தென்றது; பயிலியது நட்பு என்றது தந்நிலை யுரைத்தல். பூவிடைப் படினும் யாண்டு கழிந்தன்ன நீருறை மகன்றில் புணர்ச்சி போலப் பிரிவரி தாகிய தண்டாக் காமமோடு உடனுயிர் போகுக தில்ல கடனறிந்து இருவேம் ஆகிய வுலகத்து ஒருவே மாகிய புன்மைநாம் உயற்கே. (குறுந். 57) முற்பிறப்பில் இருவேமாய்க் கூடிப் போந்தனம்; இவ்வுலகிலே இப் புணர்ச்சிக்கு முன்னர் யாம் வெவ்வேறாயுற்ற துன்பத்து இன்று நாமே நீங்குதற்கெய்திய பிரிவரிதாகிய காமத்துடனே இருவர்க்கும் உயிர்போவதாக, இஃதெனக்கு விருப்ப மென்றான்; என்பதனால் தந்நிலையுரைத்தலும் பிரிவச்சமுங் கூறிற்று. குறுந். 300: இது நயப்பும்பிரிவச்சமும் வன்புறையுங் கூறிற்று. குறுந். 40: இது பிரிவரெனக் கருதிய தலைவி குறிப்புணர்ந்து தலைவன் கூறியது. குறுந். 137; அகம். 5: இவை தெளிவகப்படுத்தல். அம்மெல் ஓதி விம்முற் றழுங்கல் எம்மலை வாழ்ந ரிரும்புனம் படுக்கிய அரந்தின் நவியறுத் துறத்த சாந்தநும் பரந்தேந் தல்குல் திருந்துதழை யுதவும் பண்பிற் றென்ப வண்மை அதனால் பல்கால் வந்துநம் பருவரல் தீர அல்கலும் பொருந்துவ மாகலின் ஒல்கா வாழ்க்கைத் தாகுமென் உயிரே. இதுவும் அணித்து எம்மிடமென ஆற்றுவித்தது. பயின்றெனவே1 பயிலாதுவரும் ஆயத்துய்த்தலும், யான் போவலெனக் கூறுதலும் மறைந்து அவட்காண்டலுங், கண்டு நின்று அவணிலை கூறுவனவும், அவளருமை யறிந்து கூறுவனவும் போல்வன பிறவுங் கொள்க. யான்றற் காண்டொறும் என்னுஞ் செய்யுளுள், நீயறிந் திலையால் நெஞ்சே யானறிந் தேனது வாயா குதலே என மறைந்து அவட்கண்டு நின்று தலைவன் அவளொடு நிகழ்ந்தது நினைஇ நெஞ்சிற்குக் கூறியது, காணா மரபிற்று உயிரென மொழிவோர் நாணிலர் மன்ற பொய்ம்மொழிந் தனரே யாஅங் காண்டுமெம் அரும்பெறல் உயிரே சொல்லும் ஆடும் மென்மெல வியலும் கணைக்கால் நுணுகிய நுசுப்பின் மழைக்கண் மாதர் பணைப்பெருந் தோட்டே ஆயத்தொடு போகின்றாளைக் கண்டு கூறியது. இதன்கண் ஆயத்துய்த்தமையும் பெற்றாம். இனி வேட்கை யொருதலை (தொல். பொ. 100) என்னுஞ் சூத்திரத்திற் கூறியவற்றை மெய்யுறு புணர்ச்சிமேல் நிகழ்த்துதற்கு அவத்தை கூறினாரென்றும் இச்சூத்திரத்தைத் தலைவியை நோக்கி முன்னிலையாக்கல் முதலியன கூறிப் பின்னர் இயற்கைப் புணர்ச்சி புணருமென்றுங் கூறுவாரும் உளர்.1 அவர் அறியார்; என்னை? ஈண்டு அவத்தை கூறிப் பின்னர்ப் புணர்ச்சி நிகழுமெனின் ஆண்டுக் கூறிய மெய்ப்பாடு பன்னிரண்டும் வேண்டாவாம். அன்றியும், ஆறாம் அவதி கடந்து வருவன அகமன்மை மெய்ப்பாட்டியலிற் கூறலிற் பத்தாம் அவத்தையாகிய சாக்காடெய்தி மெய்யுறுபுணர்ச்சி நடத்தல் பொருந்தாமையுணர்க. இனித் தலைவியை முன்னிலை யாக்கன் முதலியன கூறிப் பின்னர்ப் புணருமெனின் முன்னர்க் கூட்டி யுரைக்குங் குறிப்புரை யாகும் (தொல்-பொ-96) எனக் கண்ணாற் கூறிக் கூடுமென்றலும் இருகையுமெடுத்தல் (தொல்-பொ-263) எனப் பின்பு கூறுதலும் பொருந்தாதாம். ஆய்வுரை இஃது இயற்கைப் புணர்ச்சிக்குரியதோர் திறன் கூறுகின்றது. (இ-ள்.) தனியிடத்தே தலைமகளை எதிர்ப்பட்ட தலைமகள் தனது பெருமையும் உரனும் நீங்க வேட்கை மீதூர்தலால் மெய்யுறு புணர்ச்சியை வேண்டினானாயினும் தலைமகள்பால் இயல்பாகத் தோன்றும் அச்சமும் நாணும் மடனும் அதற்குத் தடையாய் முந்துற்று நிற்பனவாதலின் அத்தடைகள் நீங்குதற்பொருட்டுத் தலைமகளை முன்னிலைப்படுத்திச் சில மொழிகளைக் கூறுதலும், தான் கூறும் அச்சொல்லின் வழி அவள் நிற்கும்படி சில சொற் கூறுதலும், அவளது நலத்தினை எடுத்துரைத்தலும், அதுகேட்ட தலைமகள் பால் நகைமிகுந்து தோன்றாது முறுவற் குறிப்புத் தோன்றிய அந்நிலையினைக் கூர்ந்து அறிதலும், தன் அகத்தே நிகழும் நோயால் புறத்து நிகழும் தளர்வினைக் குறிப்பால் விளக்குதலும், தன்னுள்ளத்து வேட்கை மீதூர்தலை நிலைப்படச் சொல்லுதலும், தலைமகளது உள்ளப் பண்பினைத் தான் அறிந்த தெளிவினைத் தன் மனத்தகத்தே தேர்ந்து வெளிப்படுத்தலும் ஆகிய இவ்வுரையாடல்கள் தலைவன்பால் நிகழும் என்பர் உளநூற் புலவர் எ-று. நகை நனியுறா அந்நிலையாவது, நகை மிக்குத் தோன்றாது சிறிதே அரும்பித் தோன்றிய முறுவற் குறிப்பாகிய அந்நிலைமை. 11. மெய்தொட்டுப் பயிறல் பொய்பா ராட்டல் இடம்பெற்றுத் தழாஅல் இடையூறு கிளத்தல் நீடுநினைந் திரங்கல் கூடுத லுறுதல் சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழித் தீராத் தேற்றம் உளப்படத் தொகைஇப் பேராச் சிறப்பின் இருநான்கு கிளவியும் பெற்றவழி மகிழ்ச்சியும் பிரிந்தவழிக் கலங்கலும் நிற்பவை நினைஇ நிகழ்பவை உரைப்பினும் குற்றங் காட்டிய வாயில் பெட்பினும் பெட்ட வாயில்பெற் றிரவுவலி யுறுப்பினும் ஊரும் பேருங் கெடுதியும் பிறவும் நீரிற் குறிப்பின் நிரம்பக் கூறித் தோழியைக் குறையுறும் பகுதியும் தோழி குறையவட் சார்த்தி மெய்யுறக் கூறலும் தண்டா திரப்பினும் மற்றைய வழியும் சொல்லவட் சார்த்தலிற் புல்லிய வகையினும் அறிந்தோள் அயர்ப்பி னவ்வழி மருங்கில் கேடும் பீடுங் கூறலும் தோழி நீக்கலி னாகிய நிலைமையும் நோக்கி மடல்மா றும் இடனுமா ருண்டே. இளம்பூரணம் என்---எனின், களவிற் கூட்டம் நான்கினிடத்தும் தலைவன் கூற்று நிகழுமாறும் காதல்மிக்கு ஆற்றாமை கையிருப்பின் தலை வனாம் இயலும் கூறுதல் நுதலிற்று. (இ - ள்.) மெய்தொட்டுப் பயிற லாவது--பெருமையும் உரனுமுடைய தலைமகன் தெளிவகப்படுத்தியது காரணமாகக் காதல் வெள்ளம் புரண்டோடத் தலைவியின் மெய்யைத் தீண்டிப் பயிறல். பொய் பாராட்ட லாவது1---தலைவியின் ஐம்பால் முதலிய கடை குழன்று சிதைவின்றேனும் அஃதுற்றதாக மருங்குசென்று தொட்டான் ஒரு காரணம் பொய்யாகப் படைத்து உரைத்து பாராட்டல். இடம்பெற்றுத் தழாஅல் ஆவது---பொய்பாராட்டல் காரண மாத் தலைவிமாட்டு அணிமையிடம் பெற்றுத்2 தழுவக்கூறல். இடையூறு கிளத்த லாவது -- நாண் மடன் நிலைக்களனாக் கொண்ட தலைவி தன் அறிவு நலன் இழந்து ஒன்றும் அறியாது உயர்த்தனள். அஃது ஒக்குமோ எனின் ஒக்கும். புதிதாய்ப் புக்கார், ஊற்றுணர்வு என்றும் பயிலாததம் மெல்லியல் மெய்யிற்பட அறி-விழப்பினும் உள்நொக்கு உயிர்க்கும் என்க. அதுபற்றிப் புலையன் தொடு தீம்பால் போல் காதல் கூரக் கொம்பானும் கொடியானும் சார்ந்தாளைத் தலைவன் இப்பொழுது இவ்வூற்றின்பிற்கு இடை யூறாய் நின்மனத்தகத்து நிகழ்ந்தவை யாவென வினவுதலும். நீடுநினைந்திரங்க லாவது---இருவர் இயலும் ஒருங்கு இணைந்தும் தலைவி பெரு நாணால், பால்வழி உறுகவென எண்ணி மாற்றமுங்குறியுங் காட்டாது கண்புதைப்பாளைத் தலைவன் புறம் ஓச்சி நிற்கவும் ஆண்டும் கலக்கலாம் பொழுது கூடாமைக்கு நினைந்து இரங்கல். கூடுதலுறுத லாவது---இங்ஙனமாய்க் காட்சி நிகழ்வின் பின்னர்ப் புணர்ச்சி எய்தலும். இதுவரை இயற்கைப் புணர்ச்சியாங் காரணங்கூறிக், கூடு தலுறுதலால் மெய்யுறு புணர்ச்சி கூறினார். இவற்றிற்குச் செய்யுள்: வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை போழப் படாஅ முயக்கு (குறள். 1108) இது கூடுதலுறுதல். பிற வந்துழிக் காண்க. சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழி என்பது---இயற்கைப் புணர்ச்சிக்குக் களனாக மேற்கூறப்பட்டவற்றுடன் அவ்வின்பந் திளைத்தலையும் விரைவாக ஒன்றாய்ப் பெற்ற விடத்து. இத்தெய்வப் புணர்ச்சிக்குப் பொருள் கூறுங்கால், பயிறல், பாராட்டல், தழாஅல், கிளத்தல், இரங்கல், உறுதல், நுகர்ச்சி, தேற்றம் என்று சொல்லப்பட்ட இருநான்கு கிளவியும் என எண்-ணப்படுத்துக. மெய்தொட்டுப் பயிறல் முதலாகக் கூடுத லுறுதல் வரை இயற்கைப் புணர்ச்சிக்கே உரிய கூறி, சொல்லிய நுகர்ச்சி முதல் இருநான்கு கிளவி வரை இடந்தலைப்பாடும் சேர்த்து உணர்த்தினார், அற்றாயின் நுகர்ச்சியும் தேற்றமும் இயற்கைப் புணர்ச்சியன்றோ, இடந்தலைப் பாடாமாறு என்னை யெனின், நன்று கடாயினாய். மெய்யுறுபுணர்ச்சியினைப் பால் கூட்டும் நெறிவழிப்பட்டுப் பெற்றார்க்கு மெய்தொட்டுப் பயிறல் முதல் அறுதுறையே இன்றியமையாத் துறையாக, ஏனைய இரண்டும் இடந்தலைப்பாட்டிற்கும் சேர்ந்த துறையாகலின், பொதுப்பட இரண்டற்கும் நடுவே வைத்துச் செப்பம் ஆக்கினாரென்க. நுகர்ச்சியும் தேற்றமும் எனப் பிரித்துக் கூட்டுக. தீராத் தேற்ற மாவது --- இயற்கைப்புணர்ச்சியுடன் முடியாத தெளிவு. வேட்ட பொழுதின் அவையவை போலுமே தோட்டார் கதுப்பினாள் தோள் (குறள். 1005) இஃது இயற்கைப் புணர்ச்சித் துறையன்று; இடந்தலைப்பாட்டின் கண் தலைமகன் கூறியது; நுகர்ச்சி பெற்றது. கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள (குறள். 1101) என்பதோ எனின், இயற்கைப்புணர்ச்சிக்கண் நுகர்ச்சி யுற்றமை கூறிற்று என்க. எம்மணங் கினவே மகிழ்ந முன்றில் கனைமுதர் புன்கின் பூத்தாழ் வெண்மணல் வேலன் புனைந்த வெறிஅயர் களந்தொறுஞ் செந்நெல் வான்பொரி சிதறி அன்ன எக்கர் நண்ணிய எம்மூர் வியன்துறை நேர்இறை முன்கை பற்றிச் சூரர மகளிரோ டுற்ற சூளே. (குறுந்.53) இஃது இயற்கைப்புணர்ச்சிப் பின்றைச் சொற்ற தீராத் தேற்றவுரை. இன்னிசை யுருமொடு என்னும் அகப்பாட்டுள், நின்மார் படைதலின் இனிதா கின்றே நும்மில் புலம்பினும் உள்ளுதொறும் நலியும் (அகம். 85) என்றது இடந்தலைப்பாட்டில் நேர்ந்த தேற்றம், பேராச் சிறப்பின் எட்டு என்றல். பேரும் சிறப்பினை ஆறு என்றலை எடுத்தோத்தாற் காட்டி நின்றது. இதுவரை இயற்கைப் புணர்ச்சியும் இடந்தலைப்பாடும், மேல் வாயில் பெட்பினும் என்னுமளவும் பாங்கற் கூட்டம்; மேல் தொடர்பவை தோழியிற் கூட்டம். பெற்றவழி மகிழ்ச்சியும் என்பது---இடந்தலைப்பாட்டினை யொட்டி நிகழும் இன்பினைப் பெற்றவழி அகத்துத் தோற்றும் பெருமகிழ்வும். நீங்கின் தெறூஉங் குறுகுங்கால் தண்ணென்னுந் தீயாண்டுப் பெற்றாள் இவள் (குறள்.1104) ஒடுங்கீ ரோதி ஒண்ணுதற் குறுமகள் நறுந்தண் நீர ளாரணங் கினளே இனையள் ஆன்றவட் புனையளவு அறியேன் சிலமெல் லியவே கிளவி அனைமெல் லியல்யா முயங்குங் காலே (குறுந். 70) இவை புணர்ச்சியான் மகிழ்ந்ததற்குச் செய்யுட்கள். பிரிந்தவழிக் கலங்கலாவது---இவ்வாறு கூடின தலைமகள் பிரிந்தவழிக் கலக்க முறுதலும் என்றவாறு. என்றும் இனிய ளாயினும் பிரிதல் என்றும் இன்னாள் அன்றே நெஞ்சம் பனிமருந்து விளைக்கும் பரூஉக்கண் இளமுலைப் படுசாந்து சிதைய முயங்குஞ் சிறுகுடிக் கானவன் பெருமட மகளே என வரும். இத்துணையும் இடந்தலைப்பாடு, பெற்றவழி மகிழ்தலும் பிரிந்தவழிக் கலங்கலும் பாங்கற் கூட்டத்தினுந் தோழியிற் கூட்டத்தினும் நிகழும். நிற்பவை நினைஇ நிகழ்பவை உரைப்பினும்1 என்பது---காம நுகர்ச்சி யொன்றனையும் நினையாது இவளாலே நமக்கு இல்லறம் இனிது நடக்குமென்று உட்கோடலும். நிற்பவை---இல்லறவினை. தேரோன் தெறுகதிர் மழுங்கினுந் திங்கள் தீரா வெம்மையொடு திசைநடுக்கு உறுப்பினும் பெயராப் பெற்றியில் திரியாச் சீர்சால் குலத்தில் திரியாக் கொள்கையுங் கொள்கையொடு நலத்தில் திரியா நாட்டமும் உடையோய் கண்டத னளவையிற் கலங்குதி யெனின்இம் மண்திணி கிடக்கை மாநிலம் உண்டெனக் கருதி உணரலன் யானே இது நிற்பவை நினை இக் கழறியது. இடிக்குங் கேளிர் நுங்குறை யாக நிறுக்க லாற்றினோ நன்றுமற் றில்ல ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில் கையில் ஊமன் கண்ணிற் காக்கும் வெண்ணெய் உணங்கல் போலப் பரந்தன் றிந்நோய் நோன்றுகொளற் கரிதே. (குறுந். 58) இது நிகழ்பவை உரைத்தது. குற்றங்காட்டிய வாயிலாவது---தலைவன் மாட்டுச் சோர் வானும் காதல் மிகுதியானும் நேர்வுற்ற பழிபாவங்களை எடுத்துக் காட்டும் பாங்கன். பெட்பினும்---அத்தகைய பாங்கன் இவ்வியல் பண்டைப் பால் வழியது என எண்ணி இவ்வாறு தலைமகன் மறுத்தவழி அதற்குடன் படல். அவ்வழி, நின்னாற் காணப்பட்டாள் எவ் விடத்தாள்? எத்தன்மையாள்? எனப் பாங்கன் வினாவுதலும், அதற்குத் தலை மகன் இடமும் உருவுங் கூறுதலும், அவ்வழிப் பாங்கன் சென்று காண்டலும், மீண்டு தலைமகற்கு அவள் நிலைமை கூறலு மெல்லாம் உளவாம். அவ்வழிப் பாங்கன் வினாதலும் தலைமகன் உரைத்தனவும் உளவாம். பாங்கன் வினாயதற்குச் செய்யுள் வந்தவழிக் கண்டுகொள்க. அவ்வழித் தலைமகன் உரைத்தற்குச் செய்யுள் :--- எலுவ சிறாஅர் ஏமுறு நண்ப புலவர் தோழ கேளாய் அத்தை மாக்கடல் நடுவண் எண்ணாட் பக்கத்துப் பசுவெண் திங்கள் தோன்றி யாங்குக் கதுப்பயல் விளங்குஞ் சிறுநுதல் புதுக்கோள் யானையிற் பிணித்தற்றால் எம்மே (குறுந். 129) கழைபாடு இரங்கப் பல்லியங் கறங்க ஆடுமகள் நடந்த கொடும்புரி நோன்கயிற்று அதவத் தீங்கனி அன்ன செம்முகத் துய்த்தலை மந்தி வன்பறழ் தூங்கக் கழைக்கண் இரும்பொறை ஏறி விசைத்தெழுத்து குறக்குறு மாக்கள் தாளங் கொட்டுமக் குன்றகத் ததுவே கொழுமிளைச் சீறூர் சீறூ ரோளே நாறுமயிர்க் கொடிச்சி கொடிச்சி கையகத்தது வேபிறர் விடுத்தற் காகாது பிணித்தஎன் நெஞ்சே. (நற்றிணை. 65) இன்னும் இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் வரைந்தெய்தல் வேண்டிக் கூறினவுங் கொள்க. முலையே முகிழ் முகிழ்த் தனவே தலையே கிளைஇய குரலே கிழக்குவீழ்ந் தனவே செறிநிரை வெண்பலும் பறிமுறை நிரம்பின சுணங்குஞ் சிலதோன் றினவே அணங்குதற்கு யான்தன் அறிவலே தானறி யலளே யாங்கா குவள்கொல் தானே பெருமுது செல்வன் ஒருமட மகளே. (குறுந். 337) [ïJ பாங்கன் நின்னை அணங்காக்கியாள் எவ்விடத்தவள், எவ்வியலினள் என்று வினாய் m¿ªjJ.] இவ்வாறு கேட்ட பாங்கன் அவ்வழிச் சென்று கண்டதற்குச் செய்யுள், இரவி னானும் இன்துயில் அறியாது அரவுறு துயரம் எய்துப தொண்டித் தண்ணறு நெய்த னாறும் பின்னிருங் கூந்தல் அணங்குற் றோரே (ஐங். 173) என வரும். இச்சூத்திரத்துள் கூற்று வரையறுத்துணர்த்தாமை பாங்கற் கூற்றும் அடங்கற்குப் போலும்.1 பெட்ட வாயில்பெற் றிரவு வலியுறுப்பினும் என்பது மேற் சொல்லியவாற்றான் உடம்பட்ட பாங்கனால் தலைமகளைப் பெற்றுப் பின்னும் வரைந்தெய்த லாற்றாது களவிற் புணர்ச்சி வேண்டித் தோழியை இரந்து பின்நின்று கூட்டக் கூடுவன் என்னும் உள்ளத்தனாய் அவ்விரத்தலை வலியுறுத்தினும் என்றவாறு. வலியுறுத்தலாவது, தான் வழிமொழிந்தது யாது தான் அவ்வாறு செய்குவல் என்றமை. பெட்டவாயிலால் தலைமகளைக் கண்டு கூறியதற்குச் செய்யுள்: கடல்புக் குயிர்கொன்று வாழ்வர்நின் ஐயர் உடல்புக் குயிர்கொன்று வாழ்வைமன் நீயும் மிடல்-க் கடங்காத வெம்முலையோ பாரம் இடர்புக் கிடுகு மிடையிழவல் கண்டாய் (சிலப். கானல். 17) இன்னும், பெட்டவாயில் பெற்று என்பதற்கு இரட்டுற மொழிதல் என்பதனால் தலைமகள் தான் விரும்ப்பட்ட தோழியாகி எமக்கு வாயில் நேர்வாள் இவள் எனப் பெற்றுப் பின்னிரந்து குறையுற நினைப்பினும் என்றுமாம். அதற்குச் செய்யுள் : தலைப்புணைக் கொளினே தலைப்புணைக் கொள்ளும் கடைப்புணைக் கொளினே கடைப்புணைக் கொள்ளும் புணைகை விட்டுப் புனலோ டொழுகின் ஆண்டும் வருகுவள் போலும் மாண்ட மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகைச் செவ்வெரிந் உறழுங் கொழுங்கடை மழைக்கண் துளிதலைத் தலைஇய தளிர்அன் னோளே. (குறுந்.2-2) இரவு வலியுறுத்தற்குச் செய்யுள் வந்தவழிக் கண்டுகொள்க. கொண்டல் மாமழை குடக்கேர்பு குழைத்த சிறுகோல் இணர பெருந்தண் சாந்தம் வகைசேர் ஐம்பால் தகைபெற வாரிப் புலர்விடத் துதிர்த்த துகள்படு கூழைப் பெருங்கண் ஆயம் உவப்பத் தந்தை நெடுந்தேர் வழங்கும் நிலவுமணல் முற்றத்துப் பந்தொடு பெயரும் பரிவி லட்டி அருளினும் அருளா ளாயினும் பெரிதழிந்து பின்னிலை முனியல்மா நெஞ்சே என்ன தூஉம் அருந்துயர் அவலந் தீர்க்கும் மருந்துபிறி தில்லையான் உற்ற நோய்க்கே (நற்றிணை.140) என்னும் பாட்டும் ஆம். இத்துணையும் பாங்கற்கூட்டம். .gFâí என்பது --- ஊராயினும் பேராயினும் கெடுதியாயினும் பிறவாயினும் நீர்மையினால் தன்குறிப்புத் தோன்றக் கூறித் தலைமகன் தோழியைக் குறையுறும் பகுதியும் உண்டு என்றவாறு. அவற்றுள் ஊர்வினாயதற்குச் செய்யுள் : அருவி ஆர்க்கும் பெருவரை நண்ணிக் கன்றுகால் யாத்த மன்றப் பலவின் வேர்க்கொண்டு தூங்குங் கொழுஞ்சுளைப் பெரும்பழங் குழவிச் சேதா மாந்தி அயலது வேய்பயில் இறும்பின் ஆம்அறல் பருகும் பெருங்கல் வேலிச் சிறுகுடி யாதெனச் சொல்லவுஞ் சொல்லீர் ஆயிற் கல்லெனக் கருவி மாமழை வீழ்ந்தென எழுந்த செங்கேழ் ஆடிய செழுங்குரற் சிறுதினைக் கொய்புனங் காவலும் நுமதோ கோடேந் தல்குல் நீள்தோ ளீரே. (நற்றிணை.213) பெயர் வினாயதற்குச் செய்யுள் வந்தவழிக் கண்டுகொள்க. கெடுதி வினாயதற்குச் செய்யுள் :--- நரைபரந்த சாந்தம் அறஎறிந்து நாளால் உறையெதிர்ந்து வித்தியஊழ் ஏனல்---பிறையெதிர்ந்த தாமரைபோல் வாள்முகத்துத் தாழ்குழலீர் காணீரோ ஏமரை போந்தன ஈண்டு. (திணைமாலை.1) இல்லுடைக் கிழமை யெம்மொடு புணரில் தீதும் உண்டோ மாத ரீரே என்றது பிறவாறு வினாயது. பிறவுமன்ன. தோழி குறை...ïlDkhU©nl என்பது---தோழி குறையைத் தலைமகளைச் சார்த்தி மெய்யுறக் கூறுதலும், அமையாதிரப்பினும் மற்றைய வழியும், சொல்லவட் சார்த்தலிற் புல்லிய வகையினும், அறிந்தோள் அயர்ப்பின் அவ்வழி மருங்கிற் கேடும் பீடும் கூறுதலின் நீக்கலினாகிய நிலைமையும் நோக்கி மடல்மா கூறுதலும் உண்டு தலைமகன்கண் என்றவாறு. தலைமகன்கண் என்பது ஆற்றலாற் கொள்ளக்கிடந்தது. உம்மையாற் பிறகூறுதலு முண்டென்றவாறு. புணர்ச்சி நிமித்தமாகத் தலைமகன் இரத்தலுங் குறையுறுதலும் மடலெறுவல் எனக் கூறுதலும் பெறுமென்றவாறு. ஈண்டு, குறையவட் சார்த்தி மெய்யுறக் கூறல் என்பது தோழி கூற்றுள் அருமையி னகற்சி யென்று ஓதப்பட்டது தண்டாதிரத்த லாவது---தலைமகன் பலகாலுஞ் சென்று இரத்தல். மற்றைய வழி என்பது---பின்வர வென்றல் முதலாயின. சொல்லவட் சார்த்தலிற் புல்லியவகை என்பது---முன்னுறு புணர்ச்சி முறைநிறுத் துணர்த்தலென ஓதப்பட்டது. அறிந்தோளயர்ப் பென்பது---பேதைமை யூட்டல்என ஓதப் பட்டது. கேடு கூறுதலாவது---உலகுரைத் தொழிப்பினும் என ஓதப்பட்டது. பீடுகூறுதலாவது---பெருமையிற் பெயர்ப்பினும் என ஓதப்பட்டது. நீக்கலினாகிய நிலைமை என்பது---அஞ்சி அச்சுறுத்தலென ஓதப் பட்டது. இவையெல்லாந் தோழி கூற்றினுட் காணப்படும். தோழியைக் குறையுறும் பகுதி வருமாறு :--- தோளுங் கூந்தலும் பலபா ராட்டி வாழ்தல் ஒல்லுமோ மற்றே செங்கோற் குட்டுவன் தொண்டி அன்ன எற்கண்டு மயங்கிநீ நல்காக் காலே (ஐங்குறு. 178) இனி மடலேறுவல் என்பதற்குச் செய்யுள் : மாவென மடலும் ஊர்ப பூவெனக் குவிமுகிழ் எருக்கங் கண்ணியுஞ் சூடுப மறுகின் ஆர்க்கவும் படுப பிறிதும் ஆகுப காமங்காழ்க் கொளினே (குறுந்.17) அவ்வழி தலைமகன் கூறிய சொற்கேட்டு இஃது அறிவும் அருளும் நாணமும் உடையார் செய்யார் எனக் கூறியவழித் தலைமகன் கூறியதற்குச் செய்யுள்: நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன் காமுற்றார் ஏறும் மடல் (குறள். 1133) எனவும், அறிகிலா ரெல்லாரும் என்றேயென் காமம் மறுகில் மறுகும் மருண்டு (குறள். 1139) எனவும் வரும். பிறவு மன்ன. மடல்மா கூறாது பிற கூறியதற்குச் செய்யுள் :--- பணைத்தோட் குறுமகள் பாவை தைஇயும் பஞ்சாய்ப் பள்ளஞ் சூழ்ந்து மற்றிவள் உருந்தெழு வனமுலை ஒளிபெற எழுதிய தொய்யில் காப்போர் அறிதலும் அறியார் முறையுடை அரசன் செங்கோல் வையத்து யான்தற் கடவின் யாங்கா வதுகொல் பெரிதும் பேதை மன்ற அளிதோ தானேயிவ் அழுங்கல் ஊரே (குறுந். 279) இவ்வாறு இரந்து பின்னிற்றலும் மடலேறுவல்1 என்றலும் கைக் கிளை பெருந்திணைப் பாற்படுமோ எனின், அவ்வாறு வருவன அகத்திணைக்கும் புறத்திணைக்கும் பொதுவாமாறு வருகின்ற சூத்திரத்தான் விளங்கும். (11) நச்சினார்க்கினியம் இது மேல் இயற்கைப் புணர்ச்சிப் பகுதியெல்லாங் கூறி அதன்வழித் தோன்றும் இடந்தலைப்பாடும் அதன்வழித் தோன்றும் பாங்கற்கூட்டமும் அவற்றுவழித் தோன்றும் தோழியிற் கூட்டமும் நிகழுமிடத்துத் தலைவன் கூற்று நிகழ்த்துமாறும் ஆற்றாமை கையிகந்து கலங்கியவழி அவன் மடன்மா கூறுமாறுங் கூறுகின்றது. இதனுள் இருநான்கு கிளவியும் என்னுந் துணையும் இடந்தலைப் பாடும் வாயில் பெட்பினும் என்னுந் துணையும் பாங்கற்கூட்டமும் ஒழிந்தன தோழியிற் கூட்டமுமாம். (இ - ள்.) மெய்தொட்டுப் பயிறல் - தலைவன் தலைவியை மெய்யைத் தீண்டிப் பயிலாநிற்கு நிலைமை : என்றால், இயற்கைப் புணர்ச்சிப்பின்னர்ப் பெருநாணின ளாகிய தலைமகள் எதிர்நிற்குமோவெனின் தான் பிறந்த குடிக்குச் சிறந்த வொழுக்கத்திற்குத் தகாதது செய்தாளாதலின், மறை யிற்றப்பா மறையோ னொருவனை மறையிற் றப்பிய மறையோன் போலவும் வேட்கைமிகுதியான் வெய்துண்டு புண்கூர்ந்தார் போலவும் நெஞ்சும் நிறையுந் தடுமாறி 2இனிச் செயற்பாலதியா தென்றும், ஆயத்துள்ளே வருவான்கொல் என்னும் அச்சங் கூரவும் வாரான்கொல் என்னும் காதல்கூரவும்3, புலையன் றீம்பால்போன் மனங்கொள்ளா அனந்தருள்ளம்1 உடையளாய், நாணு மறந்து காதலீர்ப்பச் செல்லும்! சென்று நின்றாளைத் தலைவன் இவ் வொழுக்கம் புறத்தார் இகழப் புலனாய் வேறுபட்டாள் கொல்லோ எனவும்; அங்ஙனம் மறைபுலப்படுதலின்2 இதனினூங்கு3 வரைந்து கொள்ளினன்றி இம் மறைக்கு உடம்படாளோவெனவுங் கருதுமாறு முன்பு போல் நின்ற தலைவியை மெய்யுறத் தீண்டி நின்று குறிப்பறியு மென்றற்குத் தொடுமென்னாது பயிறலென்றார்.4 பொய் பாராட்டல் - அங்ஙனந் தீண்டிநின்றுழித் தலைவி குறிப்பறிந்து அவளை ஓதியும் நுதலும் நீவிப் பொய்செய்யா நின்று5 புனைந்துரைத்தல் : சிதைவின்றேனுஞ் சிதைந்தனபோல்6 திருத்தலிற் பொய் யென்றார். இடம்பெற்றுத் தழாஅல் -அவ்விரண்டனானுந் தலைவியை முகம்பெற்றவன் அவள் நோக்கி நோக்கினைத் தன்னிடத்திலே சேர்த்துக்கொண்டு கூறல் : இடையூறு கிளத்தல் - அவள் பெருநாணினளாதலின் இங்ஙனங் கூறக் கேட்டுக் கூட்டத்திற்கு இடையூறாகச் சில நிகழ்த்தியவற்றைத் தலைவன் கூறல் : அவை கண்புதைத்தலுங் கொம்பானுங் கொடியானஞ் சார்தலுமாம் : நீடுநினைந்திரங்கல் - புணர்ச்சி நிகழாது பொழுது நீண்டதற்கு இரங்கி7 இரக்கந்தோன்றக் கூறல் : கூடுதல் உறுதல் - நீடித்ததென்று இரங்கினானென்பது அறிந் தோள் இவன் ஆற்றானாகி இறந்துபடுவனெனப் பெரு நாணுக் கடிதுநீங்குதல் : 1 சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழி - தலைவன் தான் முற் கூறிய நுகர்ச்சியை விரையப் பெற்றவழி : பெற்றவழி என்பதனைப் பெறுதலெனப் பெயர்ப்படுத்தல் அக்கருத்தாற் பெறுதும் : 2 தீராத் தேற்றம் 3 உளப்படத் தொகைஇ - எஞ்ஞான்றும் பிரியாமைக்குக் காரணமாகிய சூளுறுதல் அகப்படத் தொகுத்து : புணர்ச்சி நிகழ்ந்துழியல்லது தேற்றங்கூறல் ஆகாதென்றற்கு வல்லே பெற்றுழித் தீராத் தேற்ற மென்றார். முன் தெளிவகப்படுத்த பின் 4 நிகழ்ந்த ஆற்றாமை தீர்தற்குத் தெய்வத்தொடு சார்த்திச் சூளுறுதலின் இத்தேற்றமும் வேண்டிற்று. பேராச் சிறப்பின் இருநான்கு கிளவியும் - குறையாச் சிறப் பினவாகிய இவ்வெட்டும் : தாமே கூடும் இடந்தலைப்பாடும் பாங்கனாற் குறிதலைப் பெய்யும் இடந்தலைப்பாடும் ஒத்த சிறப்பினவாதற்குப் பேராச் சிறப்பி னென்றார். எனவே, இடந்தலைப்பாடு இரண்டாயிற்று. தோழியிற் கூட்டம்போலப் பாங்கன் உரையாடி இடைநின்று கூட்டாமையிற் பாங்கற்கூட்டம் என்றதனைத் தலைமகன் பாங்கனைக் கூடுங் கூட்டமென்று கொள்க. 5 உ-ம்: உறுதோ றுயிர் தளிர்ப்பத் தீண்டலாற் பேதைக்கு அமிழ்தி னியன்றன தோள் (குறள். 1106) இஃது என் கை சென்றுறுந்தோறும் இன்னுயிர் தளிர்க்கும் படி யான் தீண்டப்படுதலினெனப் பொருள் கூறவே மெய் தீண்டலா யிற்று. தீண்டலும் இயைவது கொல்லோ மாண்ட வில்லுடை வீளையர் கல்லிடுபு எடுத்த நனந்தலைக் கானத்து இனந்தலைப் பிரிந்த புன்கண் மடமா னேர்படத் தன்னையர் சிலைமாண் கடுவிசைக் கலைநிறத் தழுத்திக் குருதியொடு பறித்த செங்கோல் வாளி மாறுகொண் டன்ன வுண்கண் நாறிருங் கூந்தற் கொடிச்சி தோளே (குறுந். 272) கழறிய பாங்கற்குக் கூறுந் தலைவன் இவனான் இக்குறை முடியாது, நெருநல் இடந்தலைப்பாட்டிற் கூடியாங்குக் கூடுவல், அது கூடுங்கொலென்று கூறுவான் அற்றைஞான்று மெய் தொட்டுப் பயின்றதே கூறினான். சொல்லிற் சொல்லெதிர் கொள்ளாய் யாழநின் திருமுகம் இறைஞ்சி நாணுதி கதுமெனக் காமங் கைம்மிகில் தாங்குதல் எளிதோ கொடுங்கேழ் இரும்புறம் நடுங்கக் குத்திப் புலிவிளை யாடிய புலவுநாறு வேழத்தின் தலைமருப் பேய்ப்பக் கடைமணி சிவந்தநின் கண்ணே கதவ அல்ல நண்ணார் அரண்டலை மதில ராகவு முரசுகொண்டு ஓம்பரண் கடந்த அடுபோர்ச் செழியன் பெரும்பெயர் கூட லன்னநின் கரும்புடைத் தோளு முடையவா லணங்கே. (நற்றிணை. 39) இஃது, அங்ஙனம் மெய்தீண்டி நின்றவன் யான் தழீஇக் கொண்டு கூறில் அதனை ஏற்றுக்கொள்ளாயாய் இறைஞ்சி நின்று நாணத்தாற் கண்ணைப் புதைத்தியென இடையூறு கிளத்தல் கூறிக் காமங் கைம்மிகிற் றாங்குத லெளிதோவென நீடுநினைந்திரங்கல் கூறிப் புலியிடைத் தோய்ந்து சிவந்த கோடு போல என்னிடைத் தோய்ந்து காமக்குறிப்பினாற் சிவந்த கண்ணெனக் கூடுதலுங் கூறிற்று. எம்மணங் கினவே மகிழ்ந முன்றில் நனைமுதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல் வேலன் புனைந்த வெறியயர் களந்தொறுஞ் செந்நெல் வான்பொரி சிதறி யன்ன எக்கர் நண்ணிய வெம்மூர் வியன்துறை நேரிறை முன்கை பற்றிச் சூரர மகளிரொ டுற்ற சூளே (குறுந். 53) இதனுள் தீராத்தேற்றத்தைப் பின்னொருகால் தலைவி தேர்ந்து தெளிவொழித்துக் கூறியவாறு காண்க. இயற்கைப் புணர்ச்சிக்கண் தலைவி கருத்தெல்லாம் உணர்ந் தானாயினுங் காவன்மிகுதியானுங் கரவுள்ளத்தானும் இரண்டாங் கூட்டத்தினும் அவள்நிலை தெளியாது ஐயுறுதலுங் கூறி, மூன் றாவதாய் மேல்நிகழும் பாங்கர்கூட்டத்தின் பின் நிகழும் இடந்தலைப்பாட்டினும்1 ஐயுறவு உரித்தென்று மெய்தொட்டுப் பயிறன் முதலியன அதற்குங் கூறினார். அன்றியும் மக்களெல்லாம் முதல் இடை கடையென மூவகைப்படுதலின் அவர்க்கெல்லாம் இது பொது விதியாகலானும் அமையும், எண்ணிய தியையா தாங்கொல் கண்ணி அவ்வுறு மரபி னுகர்ச்சி பெறுகென வரிவுண் டார்க்குறி வாய்புகு கடாஅத்த அண்ணல் யானை யெண்ணருஞ் சோலை விண்ணுயர் வெற்பினெம் அருளி நின்னின் அகலி னகலுமெ னுயிரெனத் தவலி வருந்துய ரவலமொ டணித்தெம் மிடமெனப் பிரிந்துறை வமைந்தவெம் புலம்புநனி நோக்கிக் கவர்வுறு நெஞ்சமொடு கவலுங் கொல்லோ ஆய நாப்பண் வருகுவன் கொல்லென உயவுமென் னுள்ளத் தயர்வுமிக லானே. இது வருவான்கொ லென்னும் அச்சமும் வாரான்கொலென் னுங் காதலுங் கூர்ந்து தலைவி கூறியது. இனிச் சொல்லிய வென்றதனானே இன்னும் இப் புணர்ச்சி கூடுங்கொலெனக் கூறுவனவும், இன்னும் தெய்வந் தருமெனக் கூறுவனவுந், தலைவியை எதிர்ப்பட்ட இடங்கண்டுழி அவளாகக் கூறுவனவும், காட்சிக்கு நிமித்தமாகிய கிள்ளையை வாழ்த்து வனவும், தலைவி தனித்தநிலைமை கண்டு வியப்பனவும், முன்னர்த் தான் நீங்கிய வழிப் பிறந்த வருத்தங் கூறுவனவும், அணி யணிந்து விடுத்தலும், இவைபோல்வன பிறவும் இடந்தலைப்பாட்டிற்குக் கொள்க. பெற்றவழி மகிழ்ச்சியும் - சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழி அவன் மனம் மகிழும் மகிழ்ச்சியும் ; பேராச் சிறப்பி னென்றதனாற் பாங்கனால் நிகழும் இடந்தலைப்பாட்டிற்கும் இது கொள்க. பிரிந்தவழிக் கலங்கலும்-அங்ஙனம் புணர்ந்து பிரிந்துழி அன்பு மிகுதியால் தான் மறைந்து அவட் காணுங்கால் ஆயத்திடை யுஞ் சீறூரிடையுங் கண்டு இனிக் கூடுதல் அரிதென இரங்கலும். வழி யென்றதனாற் பிரியலுறுவான் கூறுவனவும் கொள்க. வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல் அதற்கன்னள் நீங்கு மிடத்து. (குறள்.1124) இது1 மூன்றாங் கூட்டத்தினையுங் கருதலின் ஈண்டுவைத்தார். இதுமுதலாகப் பாங்கற்கூட்டமாம். கலங்கலுமெனவே அக் கலக்கத்-தான் நிகழ்வனவெல்லாங் கொள்க. அவை தலைவன் பாங்கனை நினைத்தலும் அக் கலக்கங் கண்டு பாங்கன் வினாவு வனவும் அதுவே பற்றுக்கோடாக உற்றதுரைத்தலும் பிறவுமாம். நிற்பவை நினைஇ நிகழ்பவை உரைப்பினும் - நிற்பவை நினைஇ உரைப்பினும் நிகழ்பவை உரைப்பினும் என உரைப்பி னென்பதனை முன்னுங் கூட்டுக;1 அதுகேட்ட பாங்கன் உலகத்து நிலைநிற்கின்ற நற்குணங் களை அவனை நினைப்பித்துக் கழறிக் கூறினும், அக் கழறியவற்றை மறுத்துத் தன் நெஞ்சின் நிகழும் வருத்தங்களை அவற்குக் கூறினும் : இப் பன்மையான் வேறுபட வருவனவெல்லாங் கொள்க. குற்றங்காட்டிய வாயில் பெட்பினும் - அங்ஙனத் தலைவற்கு நிகழுங் குற்றங்களை வெளிப்படக் காட்டிய பாங்கன் அவன் ஆற்றாமை மிகுதி கண்டு அதனை நீக்குதற்கு விரும்பினும் : அது நின்னாற் காணப்பட்ட உரு எவ்விடத்து எத்தன்மைத்து என வினாவும். அதுகேட்டுத் தலைவன் கழியுவகை2 மீதூர்ந்து இன்ன விடத்து இத்தன்மைத்து என்னும். மீட்டுங் குற்றங் காட்டிய என்றதனானே இக் கூட்டத்திற் குரிய3 கூற்றாகிச் சான்றோர் செய்யுட்கண் வேறுபட வருவன வெல்லாங் கொள்க. இனிப் பாங்கன் தலைவி தன்மை தலைவற்குக் கூறுவனவும் இடங்காட்டுவனவுஞ் சான்றோர் செய்யுளுள் வரும்வழிக் காண்க. ஆண்டுச் சென்ற தலைவன் இடந்தலைப்பாட்டிற் கூறியவாற்றானே கூடுதல் கொள்க. அங்ஙனம் கூடிநின்று அவன் மகிழ்ந்து கூறு வனவும் பிறவுங்கொள்க. வேட்ட பொழுதின் அவையவை போலுமே தோட்டார் கதுப்பினாள் தோள். (குறள். 1105) எமக்குநயந் தருளினை யாயிற் பணைத்தோள் ஒண்ணுத லரிவையொடு மென்மெல இயலி வந்திசின் வாழியோ மடந்தை தொண்டி யன்னநின் பண்புபல கொண்டே. (ஐங்குறு. 175) இது பாங்கற் கூட்டங்கூடி நீங்குந் தலைவன் நீ வருமிடத்து நின் தோழியோடும் வரல்வேண்டுமெனத் தலைவிக்குக் கூறியது. நெய்வளர் ஐம்பால் நேரிழை மாதரை மெய்ந்நிலை திரியா மேதகு சுற்றமொ டெய்துத லரிதென் றின்னண மிரங்கிக் கையறு நெஞ்சமொடு கவன்று நனி பெயர்ந்தவென் பைத லுள்ளம் பரிவு நீக்கித் தெய்வத் தன்ன தெரியிழை மென்றோள் எய்தத் தந்த ஏந்தலொ டென்னிடை நற்பாற் கேண்மை நாடொறு மெய்த அப்பாற் பிறப்பினும் பெறுகமற் றெமக்கே. அங்ஙனங் கூடிநின்று தலைவன் பாங்கனை உண்மகிழ்ந்து உரைத்தது. இவன் பெரும்பான்மை பார்ப்பானாம். இத்துணையும் பாங்கற்கூட்டம்.1 பெட்டவாயில் பெற்று1 இரவு வலியுறுப்பினும் - அங்ஙனம் அவனைப் புணைபெற்றுநின்ற தலைவன் தலைவிக்கு வாயிலாதற்கு உரியாரை யாராய்ந்து பலருள்ளுந் தலைவியாற் பேணப்பட்டாள் தனக்கு வாயிலாந் தன்மையையுடைய தோழியை அவள் குறிப்பினான் வாயிலாகப் பெற்று இவளை இரந்துபின் னிற்பலென வலிப்பினும்; மறைந்து தலைவியைக் கண்டு நின்றான் அவட்கு அவள்2 இன்றியமையாமை கண்டு அவளை3 வாயிலெனத் துணியும். உ-ம்: தலைப்புணைக் கொளினே தலைப்புணைக் கொள்ளும் கடைப்புணைக் கொளினே கடைப்புணைக் கொள்ளும் புணைகை விட்டுப் புனலோ டொழுகின் ஆண்டும் வருகுவள் போலும் மாண்ட மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகைச் செவ்வெரிந் உறழுங் கொழுங்கடை மழைக்கண் துளிதலைத் தலைஇய தளிரன் னோளே. (குறுந். 22) இது தலைவி அவட்கு இனையளென்று கருதி அவளை வாயிலாகத் துணிந்தது. அன்றித் தோழி கூற்றெனில் தலைவியை அருமை கூறினன்றி இக் குறை முடிப்பலென ஏற்றுக் கொள்ளாள் தனக்கு ஏதமாமென்று அஞ்சி; அன்றியுந் தானே குறையுறுகின்றாற்கு இது கூறிப் பயந்தூஉமின்று.4 மருந்தில் தீராது மணியின் ஆகாது அருந்தவ முயற்சியின் அகறலும் அரிதே தான்செய் நோய்க்குத் தான் மருந் தாகிய தேனிமிர் நறவின் தேறல் போல நீதர வந்த நிறையழி துயரநின் ஆடுகொடி மருங்குல்நின் அருளின் அல்லது பிறிதில் தீரா தென்பது பின்நின்று அறியக் கூறுகம் எழுமோ நெஞ்சே நாடுவிளங்கு ஒண்புகழ் நடுதல் வேண்டித்தன் ஆடுமழைத் தடக்கை அறுத்துமுறை நிறுத்த பொற்கை நறுந்தார்ப் புனைதேர்ப் பாண்டியன் கொற்கையம் பெருந்துறை குனிதிரை தொகுத்து விளங்குமுத் துறைக்கும் வெண்பல் பன்மாண் சாயல் பரதவர் மகட்கே என்னுஞ் செய்யுள் இரவு வலியுற்றுது. ஊரும் பெயரும் கெடுதியும் பிறவும் நீரிற் குறிப்பின் நிரம்பக் கூறித் தோழியைக் குறையுறும் பகுதியும்-தோழியை இரந்து பின்னிற்றலை வலித்த தலைவன்1 தலைவியுந் தோழியும் ஒருங்கு தலைப்பெய்த செவ்வி பார்த்தாயினுந், தோழி தனித்துழி யாயினும், நும்பதியும் பெயரும் யாவை யெனவும் ஈண்டு யான் கெடுத்தவை காட்டுமினெனவும், அனையன பிறவற்றையும் அகத் தெழுந்ததோர் இன்னீர்மை தோன்றும் இக்கூற்று வேறோர் கருத்து உடைத்தென அவள் கருதுமாற்றானும் அமையச் சொல்லித், தோழியைத் தன் குறையறிவிக்கும் கூறுபாடும் :2 வினாவுவான் ஏதிலர்போல ஊரினை முன் வினாய்ச் சிறிது உறவு தோன்றப் பெயரினைப் பின்வினாய் அவ் விரண்டினும் மாற்றம் பெறாதான் ஒன்று கெடுத்தானாகவும் அதனை அவர் கண்டார் போலவும் கூறினான். இவன் எண்ணினாயதோர் குறை யுடையனென்று அவள் கருதக் கூறுமென்பார் நிரம்ப1 வென்றார். கெடுதியாவன,2 யானை புலி முதலியனவும் நெஞ்சும் உணர்வும் இழந்தேன் அவை கண்டீரோ வெனவும் வினாவுவன பலவுமாம். பிறவு மென்றதனால் வழிவினாதலுந் தன்னொடு அவரிடை உறவு தோன்றற்பாலனவுங் கூறுதலுங் கொள்க. குறையறூஉம் பகுதி, குறையுறு பகுதி எனவுமாம்; எனவே குறையுறுவார் சொல்லுமாற்றானே கண்ணி முதலிய கையுறை யோடு சேறலுங் கொள்க. பகுதியென வரையாது கூறலில் தனித்துழிப் பகுதி முதலியனவும் இருவருமுள்வழி இவன் தலைப் பெய்தியுடையன் எனத் தோழி உணருமாறும் வினாவுதல் கொள்க. இவை குறையுறவுணர்தலும் இருவருமுள்வழி அவன் வரவுணர்தலுமாம். முன்னுறவுணர்தல் நாற்றமுந் தோற்றமும் (தொல்.பொ.114) என்புழிக் கூறுப. மதியுடம்பாடு மூவகையவென மேற்கூறுப. தோழி குறை அவட் சார்த்தி மெய்யுறக்3 கூறலும் - தோழி இவன் கூறுகின்ற குறை தலைவியிடத்தேயாய் இருந்ததென்று அவள்மேலே சேர்த்தி அதனை உண்மையென்று உணரத் தலைவன் கூறுதலும் : குன்ற நாடன் குன்றத்துக் கவாஅன் பைஞ்சுனைப் பூத்த பகுவாய்க் குவளையும் அஞ்சி லோதி யசையியற் கொடிச்சி கண்போன் மலர்தலு மரிதிவள் தன்போற் சாயன் மஞ்ஞைக்கு மரிதே. (ஐங்குறு. 299) இஃது இருவரும் உள்வழி வந்த தலைவன் தலைவி தன்மை கூறவே இவள்கண்ணது இவன் வேட்கையென்று தோழி குறிப்பான் உரைக் கூறியது. குன்றநாடன், முருகன் ; அவள் தந்தையுமாம். இது முதலியவற்றைத் தலைவன் கூற்றாகவே கூறாது தோழி கூறினாளாகக் கூறி அவ்விடத்துத் தலைவன் மடன்மா கூறுமென்று பொருள்கூறின், நாற்றமுந் தோற்றமும் (தொல். பொ. 114) என்னுஞ் சூத்திரத்துத் தோழி இவற்றையே கூறினாளென்றல்1 வேண்டாவாம், அது கூறியது கூறலாமாகலின். தண்டாது இரப்பினும் - இடந்தலைப்பாடு முதலிய கூட்டங் களான் அமையாது பின்னும் பகற்குறியையும் இரவுக் குறியையும் வேண்டினும் : உ-ம்: கொண்டன் மாமழை குடக்கேர்பு குழைத்த சிறுகோ லிணர பெருந்தண் சாந்தம் வகைசே ரைம்பா றகைபெற வாரிப் புலர்விடத் துதிர்த்த துகள்படு கூழைப் பெருங்கண் ணாயம் உவப்பத் தந்தை நெடுந்தேர் வழங்கும் நிலவுமணன் முற்றத்துப் பந்தொடு பெயரும் பரிவி லாட்டி அருளினும் அருளா ளாயினும் பெரிதழிந்து பின்னிலை முனியன்மா நெஞ்சே யென்னதூஉம் அருந்துய ரவலந் தீர்க்கும் மருந்துபிறி தில்லை யானுற்ற நோய்க்கே. (நற்றிணை. 140) இதில் பரிவிலாட்டியையென இரண்டாவது விரிக்க. கடுந்தே ரேறியுங் காலிற் சென்றும் கொடுங்கழி மருங்கின் அடும்புமலர் கொய்தும் கைதை தூக்கியும் நெய்தல் குற்றும் புணர்ந்தாம் போல உணர்ந்த நெஞ்சமொடு வைகலும் இனைய மாகவும் செய்தார்ப் பசும்பூண் வேந்தர் அழிந்த பாசறை யொளிறுவேல் அழுவத்துக் களிறுபடப் பொருத பெரும்புண் உறுநர்க்குப் பேஎய் போலப் பின்னிலை முனியா நம்வயின் என்னென நினையுங்கொல் பரதவர் மகளே. (நற்றிணை, 349) தோழி நம்வயிற் பரதவர்மகளை யென்னென நினையுங்கொ லென்க. பாலொத்த வெள்ளருவி பாய்ந்தாடிப் பல்பூப்பெய் தாலொத்த வைவனங் காப்பாள்கண்-வேலோத்தென் நெஞ்சம்வாய்ப் புக்கொழிவு காண்பா ளெவன்கொலோ வஞ்சாயற் கேநோவல் யான். (திணை. நூற்.19) இவை பகற்குறி இரந்தன. எல்லும் எல்லின் றசைவுபெரி துடையன் மெல்லிலைப் பரப்பின் விருந்தண வொருவன் (அகம். 110 : 11-12) எனத் தலைவன் இரவுக்குறி வேண்டியதனைத் தோழி கூறிய வாறு காண்க. இன்னும் இரட்டுற மொழிதல் என்பதனால், தண்டாது என்பதற்குத் தவிராது இரப்பினு மெனப் பொருள் கூறிக், கையுறை கொண்டுவந்து கூறுவனவும், நீரேவுவன யான் செய்வேனெனக் கூறுவனவுந், தோழி நின்னாற் கருதப்படுவாளை அறியேனென்றுழி அவன் அறியக் கூறுவனவும், பிறவும் வேறுபட வருவனவெல்லாம் இதன்கண் அடக்குக.1 உ-ம்: கவளக் களியியல்மால் யானைசிற் றாளி தவழத்தா னில்லா ததுபோல்---பவளக் கடிகை யிடைமுத்தம் காண்டொறு நில்லா தொடிகை யிடைமுத்தம் தொக்கு. (திணை. நூற். 42) நின் வாயிதழையும் எயிற்றையும் காணுந்தோறும் நில்லா என் கையிடத்தில் இருக்கின்ற பவளக்கொடியும் முத்தும் என்க.2 மற்றைய வழியும் - குறியெதிர்ப்பட்டுங் கையுறை மறுக்கப் பட்டுங் கொடுக்கப்பெற்றும் இரந்து பின்னின்றான் அங்ஙனங் குறியெதிர்ப்பாடின்றி ஆற்றானாய் இரந்து பின்னிற்றலை மாறுமவ் விடத்தும் : சொல்லவற் சார்தலிற் புல்லிய வகையினும் - தான் வருந்திக் கூறுகின்ற கூற்றினைத் தலைவியைச் சார்த்தித் தலைவன் கூறலின் இவ்வாறு ஆற்றானாய் இங்ஙனங் கூறினானென்று அஞ்சித் தோழி உணராமல் தலைவி தானே கூடிய பகுதியினும் : களஞ்சுட்டுக் கிளவி கிழவிய தாகும் (தொல். பொ. கள. 29) என்பதனால் தலைவியாற் குறிபெற்றுந் தோழியை இரக்கும். வகை யென்றதனானே இதனின் வேறுபட வருவனவுங் கொள்க. அறிந்தோள் அயர்ப்பின்1 அவ்வழி மருங்கிற் கேடும் பீடுங் கூறலும் - மதியுடம்பட்ட தோழி நீர் கூறிய குறையை யான் மறந் தேனெனக் கூறுமாயின், அவ்விடத்துத் தன்னொடு கூடாமையால் தலைவிமருங்கிற் பிறந்த கேட்டையும், அவள் அதனை ஆற்றி யிருந்த பெருமையையும் கூறுதலும் : தோழி நீக்கலி னாகிய நிலைமையும் நோக்கி - தோழி இவ் விடத்துக் காவலர் கடியரெனக் கூறிச் சேட்பட நிறுத்தலிற் றனக்கு உண்டாகிய வருத்தத்தையும் பார்த்து : உம்மை, சிறப்பு. இதுவே மடன்மா கூறுவதற்கு ஏதுவாயிற்று. மடன்மாகூறும் இடனுமாருண்டே - அச் சேட்படையான் மடலேறுவலெனக் கூறும் இடனும் உண்டு என்றவாறு. நோக்கி மடன்மா கூறுமென்க. உம்மையான் வரைபாய்வ லெனக் கூறும் இடனும் உண்டென்றவாறு. உ-ம்: விழுத்தலைப் பெண்ணை விளையன் மாமடன் மணியணி பெருந்தார் மார்பிற் பூட்டி வெள்ளென் பணிந்துபிறர் எள்ளத் தோன்றி ஒருநாண் மருங்கிற் பெருநா ணீக்கித் தெருவி னியலவுந் தருவது கொல்லோ கலிழ்தவி ரசைநடைப் பேதை மெலிந்தில ணாம்விடற் கமைந்த தூதே. (குறுந். 182) இது நெஞ்சொடு கிளத்தல். நாணாக நாறு நனைகுழலாள் நல்கித்தன் பூணாக நேர்வளமும் போகாது---பூணாக மென்றே னிரண்டாவ துண்டோ மடன்மாமேல் நின்றேன் மறுகிடையே நேர்ந்து. (திணை. நூற். 16) இது தோழிக்குக் கூறியது. இவை சாக்காடு குறித்தன. மாவென மடலும் ஊர்ப பூவெனக் குவிமுகிழ் எருக்கங் கண்ணியுஞ் சூடுப மறுகின் ஆர்க்கவும் படுப பிறிதும் ஆகுப காமங்காழ்க் கொளினே. (குறுந். 17) இதுனுட் பிறிதுமாகுப என்றது வரைபாய்தலை. இட னென்றதனால் தோழி பெரியோர்க்குத் தகாதென்ற வழித் தலைவன் மறுத்துக் கூறுவனவும், பிறவும் வேறுபட வரு வனவும் கொள்க. நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன் காமுற்றார் ஏற மடல் (குறள். 1133) எனவரும். இனி இடனும் என்ற உம்மையைப் பிரித்து நிறீஇ இரு நான்கு கிளவியும் மகிழ்ச்சியுங் கலங்கலுங் கூறும் இடனும் உண்டு, உரைப்பினும் பெட்பினு முவப்பினு மிரப்பினும் வகையினும் கூறும் இடனும் உண்டு, பகுதிக்கண்ணும் மற்றைய வழிக்கண்ணுங் கூறும் இடனும் உண்டு, மெய்யுறக் கூறலும் பீடுங்கூறலும் உண்டென முடிக்க. (11) ஆய்வுரை இஃது, இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம், பாங்கியிற் கூட்டம் என்னும் களவிற் கூட்டத்தின்கண் தலைவன் கூற்று நிகழ்த்துமாறும் காதல் மிக்கு ஆற்றாமை எல்லை கடந்த நிலையில் தலைவனுக்குளதாம் நிலையும் கூறுகின்றது. (இ-ள்.) பெருமையும் உரனும் உடைய தலைவன் காதல் மீதூர்ந்த நிலையில் தனக்குச் சிறந்தாள் எனத் தெளிந்த தலை மகளது மெய்யினைத் தீண்டிப் பழகுதலும், விளையாட்டின்கண் அவள் நலத்தைப் பாராட்டியுரைத்தலும், அவள் நின்ற இடத்தை நெருங்கி நின்று அன்பொடு தழீஇய சொற்களைக் கூறுதலும், (தலைவனது ஊற்றுணர்வு என்றும் பயிலாததன் மெல்லியல் மெய்யிற்படுதலால் நாணமுடையளாகிய தலைமகள், அவ்விடத்திலுள்ள மரக்கிளை களையும் கொடிகளையும் தனக்குச் சார்பாகக் கொண்டு மறைந்து ஒல்கி நின்றாளாக, அதுகண்ட தலைமகன்) தனது ஊற்றின்பத்திற்கு இடையூறாக நின்ற தடைகளை எடுத்துரைத்தலும், தலைமகளை மெய்யுறுதற்குரிய காலம் வாய்க்காமைமைய எண்ணி வருந்துதலும், பின்னர் மெய்யுறுதலும், மேற்கூறியவற்றுடன் இன்ப நுகர்ச்சி யினையும் விரைவாகப் பெற்றவிடத்து, நின்னைப் பிரியேன் எனத் தலைவிக்குத் தான் பிரியாமைக்கு ஏதுவாகிய தெளிவுரை பகர்தலும் ஆகிய நிலைபெயராச் சிறப்பினவாகிய எட்டுவகைக் கூற்றும், முன் கூட்டம் பெற்ற இடத்தினையே மீண்டுந் தலைப்பட்டுக் கூடி மகிழ்தலும், தலைமகளைப் பிரிந்தவழிக் கலக்கமுறுதலும், என்றும் நிலைநிற்பனவாகிய இல்லறப் பண்புகளை நினைந்து மேல் நிகழ்வனவற்றை எடுத்துரைக்குமிடத்தும், தன்பால் சோர்வு மிகுதியாலும் காதல் மிகுதியாலும் நேரும் குற்றங்களை எடுத்துக் காட்டி இடித்துரைக்கும் உயிர்த்தோழனாகிய பாங்கன் தனது கள வொழுக்கத்தை ஏற்று உடன்பட்ட இடத்தும், தலைமகளால் விரும்பப்பட்ட உயிர்த்தோழியை வாயிலாகப்பெற்று அவளை இரந்து பின்னின்று அவள் கூட்டக் கூடுவேன் எனக் கருதி அங்ஙனம் இரத்தலை மேற்கொள்ளுமிடத்தும், ஊரும் பேரும் தான் இழந்தனவும் பிறவும் ஆகியவற்றை வினவுமுகத்தால் தன் மனக்கருத்துப் புதுக் கலத்துப் பெய்த நீர் புறம் பொசியுமாறுபோன்று குறிப்பிற் புலனாகத் தோழியைக் குறையிரந்து நிற்கும் பகுதியும், தோழி இவன் கூறுகின்ற குறை தலைவியைக் குறித்ததாக இருந்ததென்று அவள்பாற் சார்த்தி எண்ணும் நிலையிற் சில கூறுதலும், தடைபடாது பல முறையுஞ் சென்று இரத்தலும், மற்றைய வழியும் தலைவன் வருந்திக் கூறுகின்ற சொல்லினைத் தலைவியொடு சார்த்திக் கூறுதலின் முன்னுறுபுணர்ச்சி முறையே யடைகவெனவும் தலைவி பேதைத் தன்மையள் எனவும், இவ்வாறு ஒழுகுதலாற் கேடு உண்டாகும் எனவும், இவ்வொழுக்கம் நின் பெருமைக்கு ஏலாது எனவும் கூறித்தோழி தலைவனை அவ் விடத்தினின்றும் அஞ்சி நீங்குதலாலுளதாய வருத்த நிலைமையும் நோக்கி மடலேறுவேன் எனக் கூறும் இடமும் தலைவனுக்கு உண்டு எ-று. 12. பண்பிற் பெயர்ப்பினும் பரிவுற்று மெலியினும் அன்புற்று நகினும் அவட்பெற்று மலியினும் ஆற்றிடை யுறுதலும் அவ்வினைக் கியல்பே. இளம்பூரணம் என்---எனின், எய்தியது விலக்குதல் நுதலிற்று. (இ - ள்.) மேல் தலைமகன் மடல்மா கூறும் இடனுமா-ருண்டே என்றார், இஃது அவன் மடல்மா கூறுதற்கு நிமித்தமாகிய நீக்கத்திணை மாறுபட்டுக் கூறாத் தலைமகள் இயல்பைக் கூறிப் பெயர்ப்பினும், அஃதறிந்து தாம் உடன்படத் தலைமகன் வருத்தத்தினான் மெலிகின்றமை கூறிய இடத்தினும், தலைமகன் குறையை மறுப்புழி அன்பு தோன்றத் தக்க இடத்தும், தோழி உடன்-பாடுற்றவழியும், தலைமகனும் மேற்சொல்லப்பட்ட மடல்மா கூறுதல் இடையூறுபடுதலும் தோழியிற் கூட்டத்திற்கு இயல்பு என்றவாறு.1 உம்மை இறந்தது தழீஇய எச்சவும்மை. பண்பிற் பெயர்ப்பினும் --- தலைமகள் இளமைப்பண்பு கூறிப் பெயர்த்த வழித் தலைமகன் கூறியது. அதற்குச் செய்யுள்:--- குன்றக் குறவன் காதல் மடமகள் வண்டுபடு கூந்தல் தண்தழைக் கொடிச்சி வளையள் முளைவாள் எயிற்றள் இளைய ளாயினும் ஆரணங் கினளே. (ஐங்குறு. 256) பரிவுற்று மெலியினும் --- பரிந்த வுள்ளத்துடன் மெலிதலுறு-தலும். பரிவுற்றுத் தோழி மெலிதலாவது உடம்படுவளியாள் என்-றாற்போல வருவது. அவ்வழித் தலைமகன் கூற்று:--- தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு மாலை உழைக்குந் துயர். (குறள். 1135) அன்புற்று நகினும் --- அன்பு தோன்றும் உள்ளத்துடன் நக்ககாலும் கூற்று நிகழும். அன்புற்று நக்கவழித் தலைமகன் கூறியதற்குச் செய்யுள்:--- நயனின் மையிற் பயனிது என்னாது பூம்பொறிப் பொலிந்த அழலுமிழ் அகன்பைப் பாம்புயிர் அணங்கி யாங்கும் ஈங்கியது தகாஅது வாழியோ குறுமகள் நகாஅது உரைமதி யுடையுமென் உள்ளஞ் சாரல் கொடுவிற் கானவன் கோட்டுமா தொலைச்சிப் பச்சூன் பெய்த பகழி போலச் சேயரி பரந்த ஆயிழை மழைக்கண் உறாஅ நோக்க முற்றவென் பைதல் நெஞ்சம் உய்யு மாறே (நற்றிணை,75) அவட்பெற்று மலியினும்---தோழி உடம்பாட்டினைப் பெற்று மகிழல். இரட்டுற மொழிதலான் தலைமகளை இருவகைக் குறியினும் பெற்று மகிழினும் என்றும் கொள்க. உ-ம்:- எமக்குநயந் தருளினை யாயிற் பணைத்தோள் நன்னுதல் அரிவையொடு மென்மெல இயலி வந்திசின் வாழியோ மடந்தை தொண்டி அன்னநின் பண்புபல கொண்டே. (ஐந்குறு.175) இது அவட்பெற்று மலியுந் தலைவன் கூற்று. இனி,உள்ளப்புணர்ச்சியா னின்றி யியற்கை யிடையீடு பட்டுழி, பின் தலைமகள் குறியிடங் கூறியவழி யதனைப் பாங்கற் குரைத்தற்குச் செய்யுள்:- அணங்குடைப் பனித்துறைத் தொண்டி அன்ன மணங்கமழ் பொழிற்குறி நல்கினள் நுணங்கிழைப் பொங்கரி பரந்த உண்கண் அங்கலிழ் மேனி அசையியல் எமக்கே. (ஐங்குறு. 174) எனவுஞ் சிறுபான்மை வரும். காணிற் குவளை கவிழ்ந்து நிலனோக்கும் மாணிழை கண்ஒவ்வேம் என்று. (குறள்.1114) இது தலைவியைப் பகற்குறிக்கண் பெற்று மலிதல். மதியும் மடந்தை முகனும் அறியா பதியிற் கலங்கிய மீன். (குறள். 1116) இஃது இரவுக்குறிக்கண் தலைவன் அவட்பெற்று மலிந்தது. மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் காதலை வாழி மதி (குறள். 1118) என்பதும் அது. ஆற்றிடை உறுதலும்---தான்சேறும் ஆற்றிடை இடையூறு உண்டாய விடத்தும் கூற்று நிகழும். இரட்டுற மொழிவான் வரைவிடை வைத்துப் பிரிந்தான், தான் சேறும் ஆற்றின்கண் வருத்த முற்றுக் கூறலும் கொள்ளப்படும்.1 குருதி வேட்கை உருகெழு வயமான் வலிமிகு முன்பின் மழகளிறு பார்க்கும் மரம்பயில் சோலை மலியப் பூமியர் உருவத் துருவின் நாள்மேயல் ஆரும் மாரி எண்கின் மலைச்சுர நீளிடை நீநயந்து வருதல் எவனெனப் பலபுலத்து அழுதனை உறையும் அம்மா அரிவை பயங்கெழு பலவின் கொல்லிக் குடவரைப் பூதம் புணர்த்த புதிதியல் பாவை விரிகதிர் இளவெயில் தோன்றி அன்னநின் ஆய்நலம் உள்ளி வரினெமக்கு ஏமம் ஆகும் மலைமுதல் ஆறே (நற்றிணை,192) இந் நற்றிணைப்பாட்டு தலைவி ஆற்றினது அருமை செப்பத் தலைவன் செப்பியது. ஓம்புமதி வாழியோ வாடை பாம்பின் தூங்குதோல் கடுக்குந் தூவெள் ளருவிக் கல்லுயர் நண்ணி யதுவே நெல்லி மரையினம் ஆரும் முன்றிற் புல்வேய் குரம்பை நல்லோள் ஊரே (குறுந். 235) இக் குறுந்தொகைப் பாட்டு தலைவன் வரைவிடத்துச் சேறுவான் கூறியது. நச்சினார்க்கினியம் இதுவும் இரந்து பின்னிற்புழித் தலைவன் கூற்று நிகழுமாறு கூறுகின்றது. (இ - ள்.) பண்பிற் பெயர்ப்பினும்1- தோழி தலைவியது இளமை முதலிய பண்புகூறி அவ் வேட்கையை மீட்பினும் : உ-ம்: குன்றக் குறவன் காதன் மடமகள் வண்டுபடு கூந்தல் தண்டழைச் கொடிச்சி வளையண் முளைவா ளெயிற்றள் இளைய ளாயினும் ஆரணங் கினளே (ஐங்குறு.256) இஃது இளையளெனப் பெயர்த்துழித் தலைவன் கூறியது. பரிவுற்று மெலியினும்1 இருவகைக் குறியிடத்துந் தலைவியை எதிர்ப்படும் ஞான்றும் எதிர்ப்பட்ட ஞான்றும் எதிர்ப்படா நின்ற ஞான்றும் பலவாயவழி அவன் பரிந்த உள்ளத்தனாய் மெலியினும்: இன்னும் பரிவுற்று மெலியினும் என்றதனானே புணர்ந்து நீங்குந் தலைவன் ஆற்றாது உறுவனவும், வறும்புனங்கண்டு கூறுவனவும், இற்செறிப்பறிவுறுப்ப ஆற்றானாய்க் கூறுவனவும், தோழி இற்புணர்ச்சிக்கண்2 தன்னிலைக் கொளீஇக் கூறுவனவும், இரவுக்குறிக்கண் வருகின்றான் தலைவியை ஐயுற்றுப் பாங்கற்குக் கூறுவனவும், பிறவும் வேறுபட வருவனவெல்லாம் இதன்கண் அமைக்க. மயில்கொல் மடவாள்கொல் மாநீர்த் திரையுள் பயில்வதோர் தெய்வங்கொல் கேளீர்---குயில்பயிலும் கண்ணி யிளஞாழல் பூம்பொழில் நோக்கிய கண்ணின் வருந்துமென் னெஞ்சு (திணை. ஐம்.49) என வரும். அன்பு உற்று நகினும்3- தோழி குறைமறுப்புழி அன்பு தோன்ற நகினும்: உ-ம்: நயனின் மையிற் பயனிது வென்னாது பூம்பொறிப் பொலிந்த வழலுமி ழகன்பைப் பாம்புயி ரணங்கி யாங்கு மீங்கிது தகாஅது வாழியோ குறுமக ணகா அது... (நற்றிணை,75) இஃது அன்புற்று நக்குழித் தலைவன் கூறியது. அவட்பெற்று4 மலியினும்-தோழி உடம்பாடு பெற்று மனம் மகிழினும்: இன்னும் அவட்பெற்று மலியினும் என்றதற்கு, இரட்டுற மொழிதலென்றதனாற், றலைவியைப் பகற்குறியினும் இரவுக் குறியினும் பெற்று மகிழினும் என்று பொருளுரைக்க.1 நன்றே செய்த வுதவி நன்று தெரிந்து யாமென் செய்குவ நெஞ்சே காமர் மெல்லியல் கொடிச்சி காப்பப் பல்குரல் ஏனற் பாத்தருங் கிளியே. (ஐங்குறு. 288) இது பகற்குறிக்கண் கிளி புனத்தின்கண்கட் படிகின்றதென்று தலைவியைக் காக்க ஏவியதனை அறிந்த தலைவன் அவளைப் பெற்றெமென மகிழ்ந்து கூறியது. காணிற் குவளை கவிழ்ந்து நிலனோக்கும் மாணிழை கண்ணொவ்வே மென்று. (குறள். 1144) இஃது இரவுக்குறிக்கண் அவட்பெற்று மலிந்தது. ஆற்றிடை உறுதலும்2- தலைவன் செல்லும் நெறிக்கண் இடையூறு தோன்றின் இடத்தும் : என்றது, தலைவியுந் தோழியும் வருவழியருமை கூறியவழித் தலைவன் கூற்று நிகழுமென்றவாறு. உ-ம்: குருதி வேட்கை யுருகெழு வயமான் வலமிகு முன்பின் மழகளிறு பார்க்கும் மரம்பயில் சோலை மலியப் பூழியர் உருவத் துருவி னாண்மேய லாரு மாரி யெண்கின் மலைச்சுர நீளிடை நீநயந்து வருத லெவனெனப் பலபுலந் தழுதனை யுறையும் அம்மா வரிவை பயங்கெழு பலவின் கொல்லிக் குடவரைப் பூதம் புணர்த்த புதிதியல் பாவை விரிகதிர் இளவெயிற் றோன்றி யன்னநின் ஆய்நல் முள்ளி வரினெமக் கேம மாகு மலைமுத லாறே (நற்றிணை. 132) எனத் தலைவி ஆற்றினதருமை கூறியதற்குத் தலைவன் கூறியது. இரட்டுறமொழித லென்பதனான், ஆற்றிடையுறுத ற்கு வரைவிடைவைத்துப் பிரிந்தான் ஆற்றிடை வருத்தமுற்றுக் கூறுவன வுங் கொள்க.1 அது போகின்றான் கூறுவனவும் மீண்டவன் பாங்கற்குத் கூறுவனவுமாம். ஓம்புமதி வாழியோ வாடை பாம்பின் தூங்குதோல் கடுக்குந் தூவெள் ளருவிக் மரையின மாரு முன்றில் புல்வேய் குரம்பை நல்லோ ளுரே. (குறுந். 235) கவலை கெண்டிய கல்வாய்ச் சிறுகுழி கொன்றை யொள்வீ தாஅய்ச் செல்வர் பொன்செய் பேழை மூய்திறந் தன்ன காரெதிர் புறவி னதுவே யுயர்ந்தோர்க்கு நீரொடு சொரிந்த மிச்சில் யாவர்க்கும் வரைகோ ளறியாச் சொன்றி நிரைகோதற் குறுந்தொடி தந்தை யூரே. (குறுந். 233) அவ் வினைக்கு இயல்பே-அத்தோழியிற் கூட்டத்திடத்துத் தலைவன் கூற்று நிகழ்வதாகிய இலக்கணமாம் என்றவாறு. (12)2 ஆய்வுரை இது, தோழியிற் கூட்டத்தின் தலைமகனுக்குரியதோர் இயல் புணர்த்து நின்றது. (இ-ள்.) தலைமகளது இளமைப்பண்பினைத் தோழி எடுத்துக் கூறித் தலைவனை அவ்விடத்திருந்து பெயர்த்த வழியும், வருத்தத் தினால் மெலிகின்றமை கூறியவிடத்தும், தலைமகனது குறையை மறுக்குந்தோழி அன்பு தோன்ற நகைத்த நிலையிலும், அவளது உடன்பாட்டினைப் பெற்று மகிழுமிடத்தும், தான் செல்லும் வழியிடை இடையூறுண்டாமிடத்தும் தோழியிற் கூட்டமாகிய அவ்வினைக்கண் (தலைவன் கூற்று நிகழ்தல்) இயல்பாம் எ-று. 13. பாங்கர் நிமித்தம் பன்னிரண் டென்ப. இளம்பூரணம் என்-எனின், பலவகை மணத்திற் பாங்கராயினார் துணை யாகுமிடம் இத்துணையென வரையறுத்துணர்த்துதல் நுதலிற்று. பாங்கராயினார் துணையாகக் கூடும் கூட்டம் பன்னிரண்டு வகையென்றவாறு. நிமித்தம் என்பது நிமித்தமாகக் கூடும் கூட்டம். அக்கூட்டம் நிமித்தமென ஆகுபெயராய் நின்றது. பாங்கராற் கூட்டம் பாங்கர் நிமித்தமென வேற்றுமைத் தொகையாயிற்று. அவையாவன:--- பிரமம் முதலிய நான்கும், கந்திருவப் பகுதியாகிய களவும், உடன்-போக்கும், அதன்கண் கற்பின் பகுதியாகிய இற்கிழத்தியும், காமக் கிழத்தியும், காதற்பரத்தையும், அசுரம் முதலாகிய மூன்றுமென இவை.1 (13) நச்சினார்க்கினியம் இது மேற் பாங்கிநிமித்தங் கூறிய அதிகாரத்தானே பாங்கன் நிமித்தங் கூறுகின்றார். வாயில்பெட்பினும் (தொல் - பொ - கள - 11) என்ற பாங்கினிமித்தம் போலாது இது வேறுபடக் கூறலின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது. என்னை? பாங்கன் தலைவியை எதிர்ப்பட்டு வந்து தலைவற்கு உரைத்தலன்றிக். காளையரொடு கன்னியரை உலகியலாற் புணர்க்குமாறு புணர்க்குத் துணையே யாகலின்.1 (இ - ள்) அகனைந்திணையும் அல்லாதவழிப் பாங்கன் கண்ணவாகிய நிமித்தம் பன்னிரு பகுதியவாம் (எ-று). எண்வகை மணத்தினும் இடைநின்று புணர்க்கும் பார்ப்பான் இருவகைக் கோத்திரம் முதலியனவுந் தானறிந்து இடை நின்று புணர்த்தல் வன்மை அவர் புணர்தற்கு நிமித்தமாதலின் அவை அவன்கண்ண வெனப்படும். இவனைப் பிரசாபதியென்ப. நிமித்தமுங் காரணமும் ஒன்று. காரணம் பன்னிரண்டென்வே காரியமும் பன்னிரண்டாம் ; அவை எண்வகை மணனுமாதலின் அவற்றைக் கைக்கிளை முதலிய ஏழுதிணைக்கும் இன்னவாறு உரியவென வருகின்ற சூத்திரங்களாற் பன்னிரு பகுதியும் அடங்கக் கூறுப. அவ்வாற்றானே பிரமம் பிரசாபத்தியம் ஆரிடந் தெய்வம் எனவும், முல்லை குறிஞ்சி பாலை மருதம் நெய்தல் எனவும், அசுரம் இராக்கதம் பேய் எனவும் பன்னிரண்டாம். பிரமம் முதலிய நான்கற்கும் பாங்கன் ஏதுவாகலின் இவ்வாறு பிரமச்சரியங் காத்தா னெனவும், இவன் இன்ன கோத்திரத்தான் ஆகலின் இவட்க்கு உரியனெனவும், இவனை இன்னவாற்றாற் கொடுக்கத் தகு மெனவும், இன்னோனை ஆசாரியனாகக்கொண்டு வேள்வி செய்து மற்றிற் கன்னியைக் கொடுக்கத் தகுமெனவுஞ் சொல்லிப் புணர்க்கு மென்பது. இனி யாழோர் கூட்டத்துள் ஐந்திணையுமாயிற் பாடலுட் பயின்ற வகையானே முதல் கரு உரிப்பொருள் வரையறை பற்றி முறை சிறந்து வருதலும் பெயர்கொளப் பெறாமையும் உடைய வன்றே அவ்வாறன்றி. ஈண்டுக் கொள்கின்ற யாழோர் கூட்டத்து ஐந்திணையுமாயின் அவ்வந் நிலத்தியல்பானும் பிறபாடை யொழுக்கத்தானும் வேறுபட்ட வேறுபாடு பற்றியுஞ் சுட்டி யொருவர்ப் பெயர் கொடுத்தும் வழங்குகின்ற உலகியலான் எல்லாரையும் இடைநின்று புணர்ப்பாருள் வழி அவ்வந்நிமித் தங்களும் வேறுவேறாகி வரும் பாங்கன் நிமித்தங்களையுடைய எனப்பட்டன.1 இங்ஙனம் ஐந்திணைப் பகுதியும் பாங்கனிமித்தமாங்கால் வேறுபடுமெனவே, புலனெறி வழக்கிற்பட்ட இருவகைக் கைகோளும் போலா இவை யென்பதூஉம், அவ்வைந்நிலத்தின் மக்கட்குத் தக்க மன்றலும் வேறாகலின் அவர்க்கும் பாங்கர் உளரென்பதூஉம், இவ் வாற்றான் எண்வகை மணனும் உடனோதவே இவையும் ஒழிந்த எழுவகை மணனும்போல அகப்புறமெனப்படுமென்பதூஉங் கொள்க.2 இனி, அசுரத் தன்மையாளைக் குரவர் இன்னவாறு கொடுப் பர், நீயுஞ் சேறியென்று ஒருவன் பாங்குபடக் கூறலும், இவனை அவட்குக் காட்டி இவன் இன்னனென்று ஒருவன் இடைநின்று கூறலும் உண்மையின், அதுவும் பாங்கனிமித்தமுடைத்து. இராக்கதத்திற்கும் இத்தன்மையாள் இன்னுழி இருந்தாளென்று பாங்காயினார் கூறக்கேட்டு ஒருவன் வலிதிற் பற்றிக் கோடலின் இதுவும் பாங்கனிமித்தமுடைத்து. போய்க்கும் பொருந்துவது அறியாதான் இடைநின்று புணர்ப்பின் அதற்கும் அது நிமித்தமாம். இப்பன்னிரண்டுந் தொன்மையுந் தோலு (550-1) மென்ற வனப்பினுள் வருவன. (13) ஆய்வுரை பாங்கா நிமித்தம் பன்னிரண் டென்ப. இது, களவொழுக்கத்தில் தலைவன் தலைவி இருவரும் கூடுதற்கு நமித்தமாவன இவையெனக் கூறுகின்றது. (இ-ள்.) அன்புற்றார் இருவர் துணையாய்க் கூடுதற்கு நிமித்தாவன பன்னிரண்டு என்பர் ஆசிரியர். அவையாவன: காட்சி, ஐயம், துணிவு என இயற்கைப் புணர்ச்சிக்கு முன்னர்க் கூறிய மூன்றும், குறிப்பறிதலின் பயனாய்த் தோன்றும் வேட்கை முதல் சாக்காடு ஈறாகச் சொல்லப்பட்ட ஒன்பதுமாகும். இவை பன்னிரண்டுமே அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கிற் காமக்கூட்டத்திற்குக் காரணமானவாதலாற் பாங்கா நிமித்தம் எனப்பட்டன. பாங்கா நிமித்தம் என்பது பாங்கு ஆம் நிமித்தம் எனப் பிரியும். பாங்கு-துணை; நிமித்தம்-காரணம். பாங்கா நிமித்தம் என்பதே ஏடெழுதுவோரால் பாங்கர் நிமித்தம் எனப் படிக்கப்பெற்றிருத்தல் வேண்டும். பாங்கர் நிமித்தம் என்பது இளம்பூரணர் கொண்ட பாடம். 14. முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே. இளம்பூரணம் என்---எனின், மேற்சொல்லப்பட்ட பன்னிருவகையினும் கைக்கிளைப் பாற்படுவன வகுத்துணர்த்துதல் நுதலிற்று. எண்வகை மணத்தினுள்ளும் முன்னையவாகிய அசுரம் முதல் மூன்றும்1 சைக்கிளைப்பாற்படும் என்றவாறு. 15. பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே. இளம்பூரணம் என்---எனின், மேற்சொல்லப்பட்டவற்றுள் பெருந்திணைக் குரியன உணர்த்துதல் நுதலிற்று. எண்வகை மணத்தினுள்ளும் பிரமம் முதலிய நான்கும் பெருந்திணைப்பாற்படும் என்றவாறு. (15) நச்சினார்க்கினியம் மேற் பன்னிரண்டெனப்பட்ட எண்வகை மனத்தினுள் ஏழனை எழுதிணையுள் இன்னதிணைப்பாற்படும் என்கின்றது. (இ-ள்.) முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே- இதற்கு முன் நின்ற அசுரமும் இராக்கதமும் பைசாசமும் கைக்கிளை யென்றற்குச் சிறந்திலவேனுங் கைக்கிளையெனச் சுட்டப்படும்; பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே-பின்னர் நின்ற பிரமம் பிரசாபத்தியம் ஆரிடந் தெய்வமென்னும் நான்கினையும் பெருந் திணை தனக்கு இயல்பாகவே பெறுமெனவும்கூறப்படும்(எ-று.)2 மன்றல் எட்டு என்ற வரலாற்று முறையானே வாளாது பன்னிரண்டென்றார் என்பதே பற்றி, ஈண்டும் அம்முறையானே இடவகையான் முன்னைய மூன்றும், பின்னர் நான்கு மென்றார். எனவே, இனிக் கூறும் யாழோர் மேன (தொல்-பொ-106) ஐந்தும் ஒன்றாக அவ்விரண்டற்கும் இடையதெனப் படுவதாயிற்று. வில்லேற்றி யாயினுங் கொல்லேறு தழீஇயாயினுங் கொள்வ லென்னும் உள்ளத்தனாவான் தலைவனேயாதலின், அதனை முற்படப் பிறந்த அன்பு முறைபற்றி ஒருதலைக் காமமாகிய கைக்கிளை யென்றார். இராக்கதம் வலிதின் மணஞ்செய்தலாதலின் அதுவும் அப்பாற்படும்; பேயும் அப்பாற்படும். இவை முன்னைய மூன்றுங் கைக்கிளையாயவாறு. காமஞ் சாலா இளமையோள் வயிற் (தொல்-பொ-50) கைக்கிளை சிறப்புடைத் தென்றற்குப் புல்லித் தோன்றும் (தொல்-பொப் 50) எனக் கூறி, இதனை வாளாது குறிப்பென்றார். ஆண்டு பிற்காலத்தன்றிக் காட்சிக்கண் மணம் அதற்கின்மையின் ஈண்டு மணங் கூறும்வழிக் கூறாது அகத் திணையியலுட் கூறினார். ஏறிய மடன்மா முதலியவற்றைப் பெருந்திணைக் குறிப்பே (தொல்-பொ-51) எனக் கூறி, ஈண்டும் பெருந்திணை பெறுமே யென்றார். அவை சிறப்பில; இவை சிறப்புடைய வென்றற்கு. இந் நான்கும் ஒருதலைக் காமம்பற்றி நிகழாமையானும் ஒருவனோடொருத்தியை எதிர்நிறீஇ அவருடம்பாட்டோடு புணர்க்குங் கந்தருவ மன்மையானும் அவற்றின் வேறாகிய பெருந் திணையாம். (14) ஆய்வுரை இது, மேற்கூறியவற்றுள் கைக்கிளைப்பாற்படுவன இவை யென்கிறது. (இ-ள்.) மேற்கூறப்பட்ட நிமித்தம் பன்னிரண்டனுள் முற்-கூறப்பட்ட காட்சி, ஐயம், துணிவு என்பன மூன்றும் அன்பினைந் திணைக்குரியவாதலே யன்றி ஒருதலைக் காமமாகிய கைக்கிளைக்-குரிய குறிப்புக்களாகவும் அமையும் எ-று. (14) இது, பெருந்திணைப்பாற்படுவன இவை யென்கின்றது. (இ-ள்.) மேற்குறித்தவற்றுள் நோக்குவவெல்லாம் அவையே போறல், மறத்தல், மயக்கம், சாக்காடு எனப் பின்னர்க் கூறிய நிலைகளும் ஒத்த அன்பால் நிகழும்வழி அன்பினைந்திணை யாதலேயன்றி ஒவ்வாக் காமத்தால் நிகழும்வழிப் பெருந்திணைக் குரிய பொருந்தாநிலைகளாகவும் கொள்ளப்பெறும் எ-று. (15) 16. முதலொடு புணர்ந்த யாழோர் மேன தவலருஞ் சிறப்பின் ஐந்நிலம் பெறுமே. இளம்பூரணம் என்---எனின், மேற்சொல்லப்பட்ட ஒருதலைக் காமமும் பொருந்தாக் காமமுமன்றி, ஒத்த அன்பின் வருங் கூட்டம் உணர்த்து தல் நுதலிற்று. (இ-ள்.) முதல் என்பது நிலமும் காலமும். நிலத்தொடும் காலத்தொடும் பொருந்திய கந்திருவர் பாற்பட்டன கெடுதலில்லாத சிறப்பினை யுடைய ஐந்துவகைப்படும் என்றவாறு. முதலொடு புணர்ந்த என்றாரேனும் வந்தது கண்டு வாராதது முடித்தல் (மரபியல்-112) என்பதனால் ஒழிந்த கருப்பொருளும் உரிப்பொருளும் கொள்ளப்படும். நிலம் என்பது இடம். இதனாற் சொல்லியது. ஒத்த காமமாகிக் கருப்பொருளோடும் புணர்ந்த கந்திருவநெறி இட வகையான் ஐந்து வகைப்படும் என்றவாறு. அவையாவன: களவும் உடன்போக்கும், இற்கிழத்தி, காமக்கிழத்தி, காதற் பரத்தையும் எனச் சொல்லப்பட்ட ஐவகைக் கூட்டம். இச்சொல்லப்பட்ட பன்னிருவகைப்பட்ட கூட்டத்திற்கும் பாங்ராயினார் நிமித்தமாக வேண்டுதலின், அவற்றுள் தலைவற்கும் தலைவிக்கும் ஒத்த காத லுள்வழிப் பாங்கராயினாரால் நிகழும் நிகழ்ச்சி கந்திருவப் பகுதியாகவும், ஒருதலை வேட்கையாகிய வழி இவரால் வரும் நிகழ்ச்சி கைக்கிளையாகவும் ஒப்பில் கூட்டமாகிய வழிப் பெருந்திணையாகவும் கொள்க. ஐந்நிலம் என்பதனை முல்லை குறிஞ்சி முதலாயின வென்றார் உளராலெனின், முதலொடு புணர்ந்த என்பதனால் நிலம்பெறு மாதலால் நிலம் என்பதற்கு வேறுபொருள் உரைத்தல்வேண்டு மென்க. அஃது அற்றாக, இற்கிழத்தி, காமக் கிழத்தி என்பார் உள்ளப் புணர்ச்சியானாதல் மெய்யுறு புணர்ச்சியானாதல் வரையப்பட்டாராகப் பொருட் பெண்டிராகிய காதற்பரத்தையர் கூட்டம் ஒத்த காமமாகிய வாறென்னையெனின், அரும் பொருளானாதல், அச்சத்தானாதல் அன்றி அன்பினாற் கூடுதலின் அதுவுங் கந்திருவப்பாற்படும். அவ்வாறன்றி அவரைப் பிறிது நெறியாற் கூடுவராயின் இவன் மாட்டுத் தலைமை இன்றாமென்பது உணர்ந்து கொள்க. அஃதாமாறு, அன்னை கடுஞ்சொல் அறியாதாய் போலநீ என்னைப் புலப்பது ஒறுக்குவேன் மன்யான் சிறுகாலை இற்கடை வந்து குறிசெய்த அவ்வழி என்றும்யான் காணேன் திரிதர எவ்வழிப் பட்டாய் சமனாக இவ்வெள்ளல் (கலித்.90) எனவும், கண்டேனின் மாயங் களவாதல் என்னுங் கலியுள், ...nehí« வடுவுங் கரந்து மகிழ்செருக்கிப் பாடுபெயல் நின்ற பானாள் இரவில் தொடிபொலி தோளும் முலையுங் கதுப்புங் வடிவார் குழையும் இழையும் பொறையா ஒடிவது போலும் நுசுப்போ டடிதளரா வாராக் கவவின் ஒருத்திவந் தல்கல்தன் சீரார் ஞெகிழஞ் சிலம் ச் சிவந்துநின் போரார் கதவம் மிதித்த தமையுமோ (கலித். 97) எனவும், பரத்தையர் அன்பினாற் கூறியவாறும் இவர் இற்கிழத்தியும் காமக்கிழத்தியும் அன்மையுங் அறிந்து கொள்க. இவ்வகை வருவன ஐந்து நிலனாய் வரும். அஃதேல், மருதக்கலியுள், அடக்கமில் போழ்தின்கண் தந்தை காமுற்ற தொடக்கத்துத் தாயுழைப் புக்கான் (கலித். 82) எனவும், வழிமுறைத்தாய் எனவும், புதியோள் எனவும் இவ்வாறு கூறக் கேட்கின்ற காமக்கிழத்தியுமென மனைவியர் நால்வருளர், அவரெல்லாரையும் கூறாது மனைக்கிழத்தியா இருவர் என்றதனாற் பயன் இன்றெனின், அவரெல்லாரும் இற்கிழத்தியும் காமக்கிழத்தியு மென இரண்டு பகுப்பினுள் அடங்குப, அன்றியும், இவர் நால்வ-ரோடு பரத்தையுட்பட ஐவர் கந்திருவப்பகுதியர் என உரைப்பினும் அமையும். பரத்தை வாயில் நால்வர்க்கும் உரித்தே (பொருளியல். 28) என ஓதுதலானும், தலைவற்குப் பிரமம் முதலாக வரும் நான்கு வருணத்துப் பெண்பாலாரும் பரத்தையும் என ஐவகைப்படு மென்பநூஉம் ஒன்றெனக் கொள்க. (16) நச்சினார்க்கினியம் இஃது அப் பன்னிரண்டனுள் இடையதாய் ஒழிந்த ஐந்துங் கூறுகின்றது. (இ - ள்.) முதலொடு புணர்ந்த யாழோர் மேன - மேற்கூறிய நடுவணைந்திணையுந் தமக்கு முதலாக அவற்றோடு பொருந்தி வருங் கந்தருவமார்க்கம் ஐந்தும்; தவலருஞ் சிறப்பின் ஐந்நிலம் பெறுமே - கெடலருஞ் சிறப்பொடு பொருந்திய ஐவகை நிலனும் பெறுதலின் அவை ஐந்தெனப்படும் (எ - று). எனவே, முதற்கந்தருவம் ஐந்துமேயன்றி அவற்றோடு பொருத்தமுடைய கந்தருவம் இவ்வைந்துமென வேறுபடுத்தினார் இவை அப் பன்னிரண்டனுட் கூறாநின்ற ஐந்தும், முதலொடு புணர்ந்தவென்றே ஒழியாது பின்னும் யாழோர் மேன வென்றார் இவையுங் கந்தருவமே என்றற்கு. இவையும் ஒருவன் ஒருத்தி யெதிர்நின்று உடம்படுத்த லொப்புமையுடைய, கெடலருஞ் சிறப் பெனவே முதல் கரு உரிப்பொருளானுங் களவென்னுங் கை கோளானும் பாங்கி புணர்த்தலின்மையானும் இலக்கணங் குறைப்பட்ட தேனுஞ், சுட்டி யொருவர்ப் பெயர்கொள்ளப்பட்டுக் கற்பியலாகிய இல்வாழ்க்கையும் பெற்றுவருதற் சிறப்புடைய இவையும். ஐந்நிலம் பெறுதலேயன்றி. யென்றானாம். இது புல நெறியன்றி உலகியலாகலின், உலகியலாற் பாலைநிலனும் ஆண்டு வாழ்வார்க்கு மன்றலும் உளதாகலிற் பாலையுங் கூறினார். எனவே, ஐம்புலத்து வாழ்வார் மணமுஞ் செய்யுளுட் பாடியக்கால் இழுக்கின் றென்றார்.1 (15) ஆய்வுரை இஃது அன்பினைந்திணைக்குச் சிறந்தன இவை என்கின்றது. (இ - ள்.) முதல் கரு உரியென்னுந் திணைக் கூறுபாட்டுடன் பொருந்திய யாழோர் நெறியினையொத்த காமக்கூட்டம், வேட்கை ஒருதலையுள்ளுதல், மெலிதல், ஆக்கஞ்செப்பல், நாணு வரையிறத்தல் என்னும் கெடுதலில்லாத சிறப்பினையுடைய ஐந்து நிலைகளையும் தனக்குச் சிறந்த நிலைக்களன்களாகக் கொள்ளும் எ---று. (16) தவல் அருஞ்சிறப்பு---கெடுதலில்லாத சிறப்பு. அருமை ஈண்டு இன்மை குறித்துநின்றது. 17. இருவகைக் குறிபிழைப் பாகிய இடத்துங் காணா வகையிற் பொழுதுநனி இகப்பினும் தானகம் புகாஅன் பெயர்தல் இன்மையிற் காட்சி யாசையிற் களம்புக்குக் கலங்கி வேட்கையின் மயங்கிக் கையறு பொழுதினும் புகாஅக் காலைப் புக்கெதிர்ப் பட்டுழிப் பகாஅ விருந்தின் பகுதிக் கண்ணும் வேளாண் எதிரும் விருப்பின் கண்ணுந் தாளாண் எதிரும் பிரிவி னானும் நாணுநெஞ் சலைப்ப விடுத்தற் கண்ணும் வரைதல் வேண்டித் தோழி செப்பிய புரைதீர் கிளவி புல்லிய எதிரும் வரைவுடம் படுதலும் ஆங்கதன் புறத்தும் புரைபட வந்த மறுத்தலொடு தொகைஇக் கிழவோன் மேன என்மனார் புலவர். இளம்பூரணம் இது தோழியிற் கூடிய தலைமகன் வரைந்தெய்துங்காறும் கூறும் பொருண்மை யுணர்த்துதல் நுதலிற்று, (இ - ள்.) இருவகைக் குறிபிழைப்பாகிய இடத்தும் என்பது---பகற்குறியும் இரவிற்குறியும் பிழைப்பாகிய இடத்தும் என்றவாறு. பகற்குறி இரவிற்குறி யென்பது எற்றாற் பெறுது மெனின். குறியெனப் படுவ திரவினும் பகலினும் அறியக் கிளந்த ஆற்ற தென்ப (களவியல். 40) என்பதனாற் கொள்க. அக்குறிக்கண் தலைவி வரவு பிழைத்தவிடத்துத் தலைவன் கூற்று நிகழும் என்றவாறு. ஐங்குறு-298 : இது, குறிபிழைத்தவழித் தோழிக்குச் சொல்லியது. குறுந். 120 : இது, குறிபிழைத்தவழி உள்ளத்திற்குச் சொல்லியது. காணா வகையிற் பொழுதுநனி இகப்பினும் என்பது---தலை-மகளைக் காணா வகையிற் பொழுது மிகவும் கடப்பினுங் கூற்று நிகழும் என்றவாறு. செய்யுள் : உள்ளிக் காண்பென் போல்வல் முள்ளெயிற்று அமிழ்தம் ஊறுஞ் செவ்வாய்க் கமழகில் ஆரம் நாறும் அறல்போற் கூந்தற் பேரமர் மழைக்கண் கொடிச்சி மூரல் முறுவலொடு மதைஇய நோக்கே (குறுந். 286) எனவரும். தானகம் புகாஅன் பெயர்தல் இன்மையிற் ... பொழுதினும் என்பது --- காணாவகையிற் பொழுது மிகக்கழிந்துழிக் காட்சி யாசையினாற் குறியிடத்துச் சென்று ஆண்டுக் காணாது கலங்கி வேட்கையான் மயக்கமுற்றுச் செயலற்று நிற்குங் காலத்தினுங் கூற்று நிகழும் என்றவாறு. புகான் என்பது முற்று வாய்பாட்டான் வந்த வினையெச்சம்1 செய்யுள் வந்தவழிக் காண்க. புகாஅக் காலை புக்கெதிர்ப் பட்டுழிப்...f©Q« என்பது--- தான் புகுதற்குத் தகுதியில்லாத காலத்துக்கண்2 அகம்புக் கெதிர்ப்பட்டுழி அவரால் நீக்கப்படாத விருந்தின்பகுதிய னாகிய வழியும் கூற்று நிகழும் என்றவாறு. செய்யுள்: இரண்டறி களவின்நம் காத லோளே முரண்கொள் துப்பிற் செவ்வேல் மலையன் முள்ளூர்க் கானம் நண்ணுற வந்து நள்ளென் கங்குல் நம்மோ ரன்னள் கூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்துச் சாந்துளர் நறுங்கதுப்பு எண்ணெய் நீவி அமரா முகத்த ளாகித் தமரோர் அன்னள் வைகறை யானே (குறுந். 312) என வரும். வேளா ணெதிரும் விருப்பின் கண்ணும்3 என்பது - தலைவி உபகாரம் எதிர்ப்பட்ட விருப்பின் கண்ணும் கூற்றுநிகழும் என்றவாறு. அது, குறிவழிக்கண்டு கூறுதல், அவ்வழித் தலைவிக்குக் கூறிய செய்யுள்: சிலம்புகமழ் காந்தள் நறுங்குலை யன்ன நலம்பெறு கையினென் கண்புதைத் தோயே பாயல் இன்துணை யாகிய பணைத்தோள் தோகை மாட்சிய மடந்தை நீயல துளரோஎன் நெஞ்சமர்ந் தோரே. (ஐங்குறு. 293) இது தலைவி கண்புதைத்தவழித் தலைவன் கூறியது. தாளாண் எதிரும் பிரிவி னானும்2 என்பது---தாளாண்மை எதிரும் பிரிவின் கண்ணும் என்றவாறு. எனவே நெட்டாறு சேறலன்றி அணிமைக்கண் பிரிவென்று கொள்க. நாணுநெஞ் சலைப்ப விடுத்தற் கண்ணும் என்பது - நாணந் தலைவி நெஞ்சினை வருத்துலானே நீக்கி நிறுத்துதற்கண்ணும் என்றவாறு. அஃது, அலராகும் என்றஞ்சி நீக்குதல். அவ்வழித் தலைவன் கூற்று நிகழும் என்றவாறு. அவ்வழி இவ்வாறு கூறுகின்றது, புனைந் துரையென்று கருதிக் கூறுதலும் மெய்யென்று கருதிக் கூறுதலும் உளவாம். களித்தொறுங் கள்ளுண்டல் வேட்டற்றாற் காமம் வெளிப்படுந் தோறும் இனிது (குறள். 1045) இது புனைந்துரையென்று கருதிக் கூறியது. உறாஅது ஊரறி கெளவை அதனைப் பெறாஅது பெற்றன்ன நீர்த்து. (குறள். 1143) ஊரறிந்த கெளவை நன்றே காண்; அதனைக் குற்றமாகக் கொள்ளாது பெறாது பெற்ற நீர்மைத்தாகக் கொள் என்றமையானுந் தமர் வரைவுடன் படுவர் எனக் கூறியவாறாம். இது மெய்யாகக் கொண்டு கூறியது. வரைதல் ...òšÈa எதிரும் என்பது---வரைந்து கோடல் வேண்டித் தோழியாற் சொல்லப்பட்ட குற்றந்தீர்ந்த கிளவி பொருந்திய எதிர்ப்பாட்டுக் கண்ணுங் கூற்று நிகழும் என்றவாறு. அஃதாவது பின்னுங் களவொழுக்கம் வேண்டிக் கூறுதல். வரைவுடம் படுதலும் தோழி கூறிய சொற்கேட்டு வரைவுடம் படுதற்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு. ஆங்கதன் புறத்தும் என்பது---அவ் வரைவு நிகழ்ச்சிக் கண்ணுங் கூற்று நிகழும் என்றவாறு. செய்யுள் வந்தவழிக் காண்க. புரைபடவந்த மறுத்தலொடு தொகைஇ என்பது---குற்றம்பட வந்த மறுத்தலொடுகூட என்றவாறு. தேன்இமிர் அகன்கரைப் பகுக்குங் கானலம் பெருந்துறைப் பரதவன் நமக்கே (அகம். 280) என வரும். கிழவோன் மேன என்மனார் புலவர் என்பது---இச் சொல்லப் பட்டன வெல்லாங் கிழவோன் இடத்தன என்றவாறு. கூற்றென்னாது பொதுப்படக் கூறுதலான் உள்ள நிகழ்ச்சியும் கூற்றும் கொள்ளப்படும்.1 (17) நச்சினார்க்கினியம் இது மேற் றலைவற்குரிய கிளவிகூறிப், பாங்கனிமித்தம் அவன்கண் நிகழும் பகுதியுங் கூறி அம் முறையானே தலைவிக்குரிய கிளவி கூறுகின்றது2. (இ-ள்.) இருவகைக்குறி பிழைப்பு ஆகிய இடத்தும்-இரவுக் குறியும் பகற்குறியும் பிழைத்தவிடத்தும்: இருள்வீ நெய்தல் இதழகம் பொருந்திக் கழுதுகண் படுக்கும் பானாட் கங்குல் எம்மினு முயவுதி செந்தலை யன்றில் கானலஞ் சேர்ப்பன் போல நின்பூ நெற்றிச் சேவலும் பொய்த்தன்றோ குறியே. இது தன்னுட் கையாறெய்திடு கிளவி. புன் கண் கூர் மாலைப் புலம்புமென் கண்ணேபோல் துன்ப முழவாய் துயிலப் பெறுதியால் இன்கள்வாய் நெய்தானீ யெய்துங் கனவினுள் வன்கணார் கானல் வரக்கண் டறிதியோ (சிலப். கானல்வரி, 33) எனவும், இவை குறிபிழைத்துழித் தன்வயி னுரிமையும் அவன் வயிற் பரத்தைமையும் படக் கூறியனவாம், குறிபிழைத்தலாவது புன- லொலிப்படுத்தலும் புள்ளெடுப்புதலும் முதலியன குறியெனக் குறித்தவழி, அவனானன்றி அவை வேறொரு காரணத்தான் நிகழ்ந்துழி, அதனைக் குறியென நினைந்து சென்று அவை அவன் குறியன்மையின் அகன்று மாறுதலாம். பகற்குறிக்கு உதாரணம் வந்துழிக் காண்க. காணா வகையிற் பொழுது நனி இகப்பினும்-குறிவழிச் செல்லுந் தலைவனை இற்றைஞான்றிற் காண்டல் அரிதென்று கையறுவதோராற்றாற் பொழுது சேட்கழியினும்: என்றது, தாய் துஞ்சாமை, ஊர் துஞ்சாமை, காவலர் கடுகுதல், நிலவுவெளிப்படுதல், நாய் துஞ்சாமை போல்வனவற்றால் தலைவன் குறியின்கண் தலைவி வரப்பெறாமல் நீட்டித்தலாம். தானகம் புகாஅன் பெயர் தலின்மையிற்1 காட்சி ஆசையிற் களம்புக்குக் கலங்கி வேட்கையின் மயங்கிய கையறு பொழுதினும் அங்ஙனங் காணாவகையிற் பொழுது நனியிகந்து தலைவி குறி தப்பியக்காலுந் தலைவன் குறியிடம் புகுந்தல்லது பெயரானென்பது தான் அறியுமாதலின், ஆண்டுப் புகுந்தல்லது பெயரானென்பது தான் அறியுமாதலின், ஆண்டுப் புகுந்தவன் தான் வந்து நீங்கினமை அறிதற்கு ஒரு குறி செய்தன்றி வாளாது பெயரானன்றே? அக் குறிகாணுங் காட்சி விரும்பினாற் றலைவி பிற்றைஞான்று விடியலிற் சென்று ஆண்டைக்குறி கண்டு கலங்கி, அவனை எதிர்ப்படுதல் வேட்கையளாகிச் செய்வதறியாது மயக்கத்தோடு கையுறவு எய்தும் பொழுதின் கண்ணும்: தான் என்றது தலைவனை. இரவுக்குறியினை அக மென்றார், இரவுக்குறி எயிலகத்தது என்பதனால்.1 குறியிற் சென்று நீங்கு வனெனவே காட்சி அவன்மேற்றன்றிக் குறிமேற்றாம். குறி, மோதிரம், மாலை, முத்தம் முதலியன கோட்டினுங் கொடியினும் இட்டுவைத்தனவாம் ; இவை வருத்தத்திற்கு ஏதுவாம். இது விடியல் நிகழுமென்றற்குப் பொழுதென்றான் ; எனவே காண்பன விடியலிற் காணுமென்றார். மயங்கும் என்றதனால் தோழியும் உடன் மயங்கும். அது, இக்காந்தண் மென்முகைமேல் வண்டன்றஃ திம்முகையில் கைக்காந்தண் மெல்விரலாய் காணிதோ---புக்குச் செறிந்ததுபோற் றோன்றுந் தொடுபொறி யாம்பண் டறிந்ததொன் றன்ன துடைத்து. புகாஅக் காலைப் புக்கு எதிர்ப்பட்டுழிப் பகாஅ விருந்தின் பகுதிக்கண்ணும்2 -உண்டிக்காலத்துத் தலைவியில்லத்துத் தலைவன் புக்கெதிர்ப்பட்டவழி நீக்கி நிறுத்தாத விருந்து ஏற்றுக் கொள்ளும் பகுதிக்கண்ணும் : எனவே, மனையகம் புகுதற்கு ஒவ்வாத மிக்க தலைவன் புகுந்தால் இஃதொன்றுடைத்தெனத் தேராது தாய் அவனை விருந் தேற்று நீக்கி நிறுத்தற் பகுதியுந் தழீஇயினவாறாயிற்று. புகாக்கால மாதலிற் பகாவிருந்தென்றான் விடியற்காலமாயிற் றலைவன் புகானெனவும், புகாக்காலத்துப் புக்கஞான்றாயின் அவர் விருந்தேற்றுக்கோடல் ஒருதலையென்று புகும் என்றுங் கொள்க. தலைவி காட்சியாசையிற் கலங்கியதற்கேற்பத் தலைவர்க்குங் காட்சியாசை கூறிற்று. அது, சுடர்த்தொடீஇ கேளாய் தெருவினா மாடு மணற்சிற்றில் காலிற் சிதையா அடைச்சிய கோதை பரிந்து வரிப்பந்து கொண்டோடி நோதக்க செய்யும் சிறுபட்டி மேலோர்நாள் அன்னையும் யானும் இருந்தேமா இல்லிரே உண்ணுநீர் வேட்டேன் எனவந்தாற் கன்னை அடர்பொற் சிரகத்தால் வாக்கிச் சுடரிழாய் உண்ணுநீ ரூட்டிவா வென்றா ளெனயானும் தன்னை அறியாது சென்றேன்மற் றென்னை வளைமுன்கை பற்றி நலியத் தெருமந்திட் டன்னாய் இவனொருவன் செய்ததுகா ணென்றேனா அன்னை அலறிப் படர்தரத் தன்னையான் உண்ணுநீர் விக்கினான் என்றேனா அன்னையுந் தன்னைப் புறம்பழித்து நீவமற் றென்னைக் கடைக்கணாற் கொல்வான்போல் நோக்கி நகைக் கூட்டஞ் செய்தானக் கள்வன் மகன். (கலி. 51) இது புகாக்காலத்துப் புக்கானை விருந்தேற்றுக் கொண்டமை இன்னொருகாலத்துத் தலைவி தோழிக்குக் கூறியவாறு காண்க. அன்னை வாழ்க பலவே தெண்ணீர் இருங்கடல் வேட்டம் எந்தை புக்கெனத் தார்மணி நெடுந்தேர் நீவி யானுமோர் எல்லமை விருந்தின னென்ற மெல்லம் புலம்பனைத் தங்கென் றோளே. இது தோழிகூற்றுமாம். ஒன்றிய தோழி யென்றதனால் தோழிகூற்று வந்துழிக் காண்க. மண்ணிய சென்ற ஒண்ணுதல் அரிவை புனறரு பசுங்காய் தின்றதன் றப்பிற் கொன்பதிற் றொன்பது களிற்றோ டவணிறை பொன்செய் பாவை கொடுப்பவுங் கொள்ளான் பெண்கொலை புரிந்த நன்னன் போல வரையா நிரயத்துச் செலீஇயரோ அன்னை யொருநாள், நகைமுக விருந்தினன் வந்தெனப் பகைமுக வூரிற் றுஞ்சலோ விலளே. (குறுந். 292) இது புகாக்காலத்துத் தலைமை மிக்க தலைவன் புக்கதற்கு விருந்தேலாது செவிலி இரவுந் துயிலாதாளைத் தலைவி முனிந்து கூறியது. வேளாண் எதிரும் விருந்தின்கண்ணும் - அங்ஙனம் விருந் தாதலேயன்றித் தலைவி வேளாண்மைசெய்ய எதிர்கொள்ளக் கருதுதல் காரணத்தால் தோழி அவனை விருந்தேற்றுக் கோடற் கண்ணும்: என்றது, தலைவி அவற்கு உபகாரஞ்செய்யக் கருதி அதனைக் குறிப்பாற் கூறத், தோழி அவனை விருந்தாய்த் தங்கென்றும். உ-ம்: நாள்வளை முகந்த கோள்வல் பரதவர் நுணங்கு மணல் ஆங்கண் உணங்கப் பெய்ம்மார் பறிகொள் கொள்ளையர் மறுக உக்க மீனார் குருகின் கானலம் பெருந்துறை எல்லை தண்பொழிற் சென்றெனச் செலீஇயர் தேர்பூட் டயர வேஎய் வார்கோல் செறிதொடி திருத்திப் பாறுமயிர் நீவிச் செல்லினி மடந்தைநின் தோழியொடு மனையெனச் சொல்லிய அளவை தான்பெரிது கலுழ்ந்து தீங்கா யினளிவ ளாயின் தாங்காது நொதுமலர் போலப் பிரியிற் கதுமெனப் பிறிதொன் றாகலும் அஞ்சுவல் அதனால் சேணின் வருநர் போலப் பேணாய் இருங்கலி யாணரெஞ் சிறுகுடித் தோன்றின் வல்லெதிர் கொண்டு மெல்லிதின் வினைஇத் துறையும் மான்றின்று பொழுதே சுறவும் ஓதம் மல்கலின் மாறா யினவே எல்லின்று தோன்றல் செல்லா தீமென எமர்குறை கூறத் தங்கி ஏமுற இளையரும் புரவியும் இன்புற நீயும் இல்லுறை நல்விருந் தாகுதல் ஒல்லுதும் பெருமநீ நல்குதல் பெறினே. (அகம். 300) இதனுள், தான் பெரிது கலுழ்ந்து தீங்காயின ளெனவே அக் குறிப்புத் தலைவன் போகாமற் றடுப்பக் கூறியதென்று உணர்ந்து தோழி கூறினாள். வாளாண் எதிரும் பிரிவினானும்1 - வாளாண்மை செய்தற்கு ஒத்த பிரிவு தோன்றியவழியும் : ஆண்டுத் தலைவிமேற்றுக் கிளவி மூவகைப் பிரிவினும் பகை வயிற்பிரிவை விதந்தோதி அதிகாரப்பட்டு வருகின்ற களவினுள் அவை நிகழப்பெறா; இதுவாயின வரைவிடை வைத்துப் பிரியவும் பெறும் அரசர்க்கு இன்றியமையாத பிரிவாகலின் என்பது கருத்து ஓதலுந் தூதும் வரைவிடை வைத்துப் பிரிவிற்குச் சிறந்தில வென்-றானாம் இப் பிரிவு அரசர்க்கு உரித்தென்பது தானே சேறலம் (தொல்-பொ 27) என்னும் சூத்திரத்தாற் பெறுதும். வாளாண்மைக்கு ஏற்ற பிரிவெனவே, முடியுடை வேந்தரேவலிற் பிரியும் அரசர் கண்ணது இப் பிரிவென்க. சிறுபான்மை அவ் வேந்தற்கு உரித்து, வெளிப்படை தானே (தொல்-பொ-141) என்பதனுள் இப் பிரிவில்லை என்பராதலின் அது, பகைவென்று திறைகொண்ட பாய்திண்டேர் மிசையவர் வகைகொண்ட செம்மனாம் வனப்பார விடுவதோ புகையெனப் புதல்சூழ்ந்து பூவங்கட் பொதிசெய்யா முகைவெண்ப னுதிபொரா முற்றிய கடும்பனி. (கலி. 31) இதனுட் பனி யெதிர் பருவங் குறிஞ்சியாகலிற் களவிற் பிரிந்தான் வாளாணெதிரும் வென்றி தோழிக்குத் தலைவி கூறிய-வாறு. இஃது அவன்வயிற் பரத்தைமை கருதாதது. நாணு நெஞ்சு அலைப்ப விடுத்தற்கண்ணும்-தலைவிக்கு இன்றியமையாத நாணுத்தான் அவள் நெஞ்சினை அலைத்தலின் அவள் அந் நாணினைக் கைவிடுதற் கண்ணும்1 ; அஃது உடன் போக்கினாம் வரைவுகடாவும் வழியும் வேட்கைமீதூர்ந்து நாண் துறந்துரைத்தல் போல்வன. அளிதோ தானே நாணே நம்மொடு நனிநீ டுழந்தன்று மன்னே இனியே வான்பூங் கரும்பின் ஓங்குமணற் சிறுசிறை தீம்புன னெரிதர வீந்துக் காஅங்குத் தாங்கு மளவைத் தாங்கிக் காம நெறிதரக் கைந்நில் லாதே. (குறுந். 149) இஃது உடன்போக்கு வலித்தமையின் நாண் துறந்து கூறியது. வரைதல் வேண்டித் தோழி செப்பிய புரைதீர் கிளவி புல்லிய எதிரும் - வரைதல் விருப்பினால் தோழி தலைவற்கு வரைவு கடாய்க் கூறிய புரைதீர் கிளவியைத் தலைவி பொருந்தி நின்றே இயற்பழித்தற்கு மறுத்தாள்போல் நிற்கும் எதிர்மறையையும் ; புரைதீர் கிளவி தலைவனுயர்பிற்கு ஏலாது இயற்பழித்து உரைக்குங் கிளவி. அது, பாடுகம் வா வாழி தோழி என்னுங் குறிஞ்சிக் கலியுள், இலங்கு மருவித் திலங்கு மருவித்து வானின் இலங்கு மருவித்தே தானுற்ற சூள்பேணான் பொய்த்தான் மலை (கலி. 41) எனத் தோழி இயற்பழித்த வாய்பாட்டான் வரைவு கடாய அதனை உடம்பட்டுப் பழித்தற்கு உடம்படாதாள், பொய்த்தற் குரியனோ பொய்த்தற் குரியனோ அஞ்சலோம் பென்றாரைப் பொய்த்தற் குரியனோ குன்றக னன்னாடன் வாய்மையிற் பொய்தோன்றின் திங்களுட் டீத்தோன்றி யற்று. (கலி. 41) எனத் தலைவி இயற்பட மொழிந்து எதிர்மறுத்தவாறு காண்க. அருவி வேங்கைப் பெருவரை நாடற் கியானெவன் செய்கோ வென்றி யானது நகையென வுணரே னாயின் என்னா குவைகொல் நன்னுத னீயே. (குறுந். 96) இதுவும் இயற்பழித்த தோழிக்குத் தலைவி இயற்பட மொழிந்தது. வரைவு உடன்படுதலும்-தலைவற்குத் தலைவி தமர்வரை வுடம்பட்டதனைத் தலைவி விரும்புதலையும் : தமரான் ஒறுக்கப்பட்டு ஓவாராய்த் துயருழத்தல் ஆகா தென ஆற்றுவிக்குஞ் சொற்களான் மறுத்துரைப்பவுந் தேறாராய்த் தனித்து இருப்பார் உறக்கம் காரணமாக எழுந்த கெளவை கேளாது வரைந் தெய்திய மாற்றங் கேட்டு இவ்வூரும் இன்புறுக என்பதாம். ஆங்கதன் புறத்துப்1 புரைபட2 வந்த மறுத்தலொடுதொகைஇ- அவன் வரைவு வேண்டினவிடத்து அவ் வரைவு புறத்ததாகிய வழித் தலைவி தன்னுயர்பு உண்டாகத் தோன்றியது மறுத்தலொடே முற்கூறியவற்றைத் தொகுத்து. அதன்புறம் எனவே அதற்கு அயலாகிய நொதுமலர் வரை வாயிற்று. தலைவி தன் குடிப்பிறப்புங் கற்பும் முதலிய உயர்ச்சிக்கு ஏற்ப அதனை மறுத்துத் தலைவன் வரையுமாறு நீ கூறெனத் தோழிக்குக் கூறுமென்றற்குப், புரைபட வந்து மறுத்தல் என்றார். இச் சூத்திரத்து உருபும் எச்சமுமாயவற்றைக் கிழவோண் மேன என்பதனோடு முடித்து, முற்றிற்குக் கிளவியென ஒரு பெயர் வெளிப்படுத்து முடிக்க.3 புல்லிய எதிரையும் உடன்படு தலையும் மறுத்தலுடன் தொகுத்தது. கிழவோள் மேன என்மனார் புலவர் - தலைவியிடத்தது கிளவியென்று கூறுவர் புலவர் என்றவாறு. (16) ஆய்வுரை இது, தோழியின் உடன்பாடு பெற்றுத் தலைமகளைக் கூடிய தலைவன், தலைவியை மணந்து கொள்ளுங்காறும் நிகழ்வனவற்றைத் தொகுத்துக் கூறுகின்றது. (இ-ள்.) பகற்குறி இரவுக்குறியென்னும் இருவகைக்குறிகளும் தப்பிய நிலையிலும், தலைமகளைக் காணவியலாதவாறு பொழுதும் நீட்டித்த நிலையிலும், தான் தலைமகளது இல்லத்திற்குட் புகப் பெறானாகிக் களவொழுக்கத்தின் மீளுதலின்மையால் தலை மகளைக் காணுதல் வேண்டுமென்னும் பெருவிருப்பத்தால் மீண்டும் குறியிடத்தே சென்று காணப்பெறாது கலக்கமுற்று வேட்கையால் மயங்கிச் செயலற்று நிற்கும் காலத்தினும், உண வுண்ணுங் காலத்தில் தலைமகளது மனைக்கண் விருந்தினனாகப் புகுந்து தலைமகளை எதிர்ப்பட்ட போது அவளுடைய சுற்றத்தாரால் தள்ளத்தகாத விருந்தாக ஏற்று உபசரிக்கப் பெற்ற நிலையிலும், (தலைமகளும் தோழியும்) விருந்து உபசரிப்பாராக விரும்பி எதிரேற்ற நிலையிலும், தாளாண்மையினை மேற்கொண்டு வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரியும் நிலையிலும், களவு அலராகி வெளிப்பட்டு விடுமோ என்னும் அச்சத்தோடு நாணம் தலைவி நெஞ்சினை வருத்துதலால் தலைமகளை விலகி ஒழுகுதற் கண்ணும், தலைவியை மணந்து கொள்ளுதல் வேண்டித் தோழி கூறிய குற்றந்தீர்ந்த சொல்லினையேற்றுப் பொருந்திய எதிர்ப் பாட்டின் கண்ணும், தோழி கூறிய சொற்கேட்டு வரைவுடம் படுதற் கண்ணும், அங்கு அவ்வரைவு புறத்ததாயவழிக் குற்றம்பட நேர்ந்ததமர் வரைவு மறுத்தலொடுகூட இங்குக் கூறப்பட்டன வெல்லாம் தலைமகன் மேலன என்பர் ஆசிரியர் எ-று. இந்நூற்பாவில் தான் அகம்புகான் என்புழித் தான் தலை வனையாகலானும் நாணுநெஞ்சலைப்ப விடுத்தல் என்புழி விடுத்தல் தொழிலாகலானும் வரைதல் வேண்டித் தோழி செப்புதல் தலைவனை நோக்கியாகலானும் கிழவோன் மேன என இளம் பூரணர் கொண்ட பாடமே தொல்காப்பியனார் கருத்துக்கு ஏற்புடையதென்பதும், கிழவோள் மேன என நச்சினார்க்கினியர் கொண்ட பாடம் அத்துணைப் பொருத்தமுடையதன்றென்பதும் நன்கு புலனாகும். கிழவோன் கூற்று என்னாது கிழவோன் மேன எனப் பொதுப்படக் கூறினமையின் இவ்விடங்களில் தலைவனது உள்ள நிகழ்ச்சியும் கூற்றும் உடன்கொள்ளப்படும். 18. காமத் திணையிற் கண்நின்று வரூஉம் நாணும் மடனும் பெண்மைய ஆகலின் குறிப்பினும் இடத்தினும் இல்லது வேட்கை நெறிப்பட வாரா அவள்வயின் ஆன. இளம்பூரணம் என்பது மேல் தலைவற் குரிய கிளவி கூறி, இனித் தலைவிக் குரிய கிளவி கூறுகின்றாராகலின் முற்பட அவள் தலைவனைக் கண்ணுற்றவழி வரும் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. தலைவியிடத்து நிலைமைபெற்று வருகின்ற நாணமும் மடனும் பெண்மைக்கு அங்கமாகலின், காமவொழுக்கத்தின்கண் குறிப்பினானும் இடத்தினானுமல்லது வேட்கை புலப்பட நிகழாதுலைவிதயிடத்து எ-று.1 காமத்திணை என்பதனைக் குறிப்பென்பதற்கு முன்னே கூட்டி யுரைக்க. அச்சமும் இயல்பன்றோவெனின், அதுவும் வேட்கைக் குறிப்பினான் நீங்குமென்ப. அச்சமுள்வழி வேட்கை நிகழாமையின், வேட்கையுள்வழி நாணும் மடனும் நீங்காவோ எனின், அது வருகின்ற சூத்திரத்தாற் கூறுப. இதனாற் சொல்லியது தலைவி தலைவனை எதிர்ப்பட்டு முன்னிலையாக்கல் முதலாகத் தலைவன் மாட்டு நிகழ்ந்தமைபோலத் தலைவிமாட்டு நிகழ்பவை உளவோ வெனின். அவள்மாட்டுக் குறிப்பினானாதல், சொல்லுதற்குத் தக்க விடத்தினானாதல் தோற்றுவதல்லது, புலப்பட்டு நிகழா தென்றவா றாயிற்று. உண்டார்கண் அல்ல தடுநறாக் காமம்போற் கண்டார் மகிழ்செய்தல் இன்று (குறள். 1090) என்றது தலைவனைக் கண்ட தலைவி வேட்கைக் குறிப்பினால் தன்னுள்ளே கருதியது. இடம் பற்றி வேட்கை தோற்றியதற்குச் செய்யுள்:--- ........... ............... ................. நெடுங்கொடி நுடங்கும் நாவாய் தோன்றுவ காணா மோவெனக் காலிற் சிதையா நில்லாது பெயர்ந்த பல்லோ ருள்ளும் என்னே குறித்த நோக்கமொடு நன்னுதால் ஒழிகோ யானென அழிதகக் கூறி யான்பெயர்க என்ன நோக்கித் தான்தன் நெடுந்தேர்க் கொடிஞ்சி பற்றி நின்றோன் போலும் இன்றும்என் கட்கே1 (அகம். 110) எனத் தன் குறிப்புக் காலத்தாற் கூறுதலாற்றாது பின் இடம்பெற்றுழிக் கூறியவாறு காண்க. நச்சினார்க்கினியம் இஃது உள்ளப்புணர்ச்சிக்கு உரியவாறு மெய்யுறு புணர்ச்சிக் கண்ணும் நிகழுமென்ற நாணும் மடனுங் குறிப்பினும் இடத்தினும் வருமெனக் கூறுதலின், அச்சமு நாணும் (தொல். பொ. 99) என்பதற்குப் புறநடையாயிற்று. இதனை ஈண்டுக் கூறினான், இடத்தின்கண் வரும் நாணும் மடனுந் தந்தன்மை திரிந்துவரு மென்பதூஉம்,2 அது கூற்றின்கண் வருமென்பதூஉங் கூற்று நிகழ்கின்ற இவ்விடத்தே கூறவேண்டுதலின், எனவே, இதுமுதலிய சூத்திரம் மூன்றும் முன்னர்த் தலைவிக்குக் கூற்று நிகழுமென்றற்குக், கூற்று நிகழுங்கால் நாணும் மடனும் நீங்கக் கூறும் என்று அக் கூற்றிற்கு இலக்கணங் கூறினவேயாயிற்று. (இ - ள்.) அவள்வயின் ஆன நாணும் மடனும் பெண்மைய ஆதலின்-தலைவியிடத்து உளவாகிய நாணும் மடனும் பெண்மைப் பருவத்தே தோன்றுதலையுடையவாதலின்; காமத்திணையிற் கண்ணின்று குறிப்பினும் வரூஉம் - அப் பருவத்தே தோன்றிய காமவொழுக்கங் காரணமாக அவை கண்ணின்கணின்று குறிப்பினும் வரும்; வேட்கை நெறிப்பட இடத்தினும் வரூஉம்-அன்றி வேட்கை தன்றன்மை திரியாது வழிப்படுதலாலே கரும நிகழ்ச்சிக்கண்ணும் வரும்; அல்லது வாரா - அவ்வீரிடத்துமல்லது அவை வாரா (எ-று.)1 இயற்கைப் புணர்ச்சிக்கண் உரியவாகக் கூறும் பன்னிரண்டு மெய்ப்பாட்டானுங் குறிப்பின்கண் நாணும் மடனும் நிகழ்ந்தவா றுணர்க. ஒருநெறிப் பட்டாங் கோரியன் முடியுங் கரும நிகழ்ச்சி யிடமென மொழிப (தொல்-பொ-செய். 198) என்னுஞ் செய்யுளியற் சூத்திரத்தான் இடமென்றதனைக்2 கரும நிகழ்ச்சி என்றுணர்க: அஃதாவது இடந்தலைப்பாடும் பாங்கொடு தழாஅலுந் தோழியிற் புணர்வுமாம். இவற்றின்கண்ணும் நாணும் மடனும் நிகழுமென்றான். இனித் தோழியிற் புணர்வின்கண் வரும் நாணும் மடனுந் தந்தன்மை திரிந்துவருமென மேலிற் சூத்திரத்தாற் கூறு கின்றனான்.3 (17) ஆய்வுரை தலைவியின் வேட்கை குறிப்பினாலும், இடத்தினாலும் அன்றி கூற்றினால் வெளிப்படாது என்பதே இந்நூற்பா நுதலிய பொருளாகும். தலைவியின் வேட்கை கூற்றினால் வெளிப் படாமைக்குக் காரணம் காட்டும் நிலையில் அமைந்தது, காமத் திணையிற் கண்ணின்று உரூஉம் நாணு மடனும் பெண்மைய வாதலின் என்னும் தொடராகும். காமத்திணையாகிய அன்பின் ஐந்திணை ஒழுகலாற்றில் கண்ணின் குறிப்புடன் ஒன்றி வெளிப்படும் நாணும் மடனுமாகிய இவை பெண்மைக்குரிய நீங்காப் பண்புகளாதலின், தலைவியின் வேட்கை குறிப்பினானும் இடத்தினானும் அன்றிக் கூற்றினால் வெளிப்படும் அளவிற்குத் தலைவி மாட்டு மிக்குத் தோன்றுதல் இல்லை என்பதே இந்நூற்பாவின் பொருளாகும். இந்நூற்பாவில் கண்ணின்று வரூஉம் என்பதற்குத் தலைவி யிடத்து நிலைபெற்று வருகின்ற எனப் பொருள் கூறுவர் இளம் பூரணர். முதலடியில் வந்த கண்ணின்று வரூஉம் என்ற தொடரை கண்ணின்று எனவும், வரூஉம் எனவும் இரண்டாகப் பிரித்து மூன்றா மடியிலுள்ள குறிப்பினும் என்பதன் முன்னும் பின்னும் இயைத்துக் கண்ணின்ற குறிப்பினும் வரூஉம் என நச்சினார்க்கினியர் வலிந்து பொருள். கூறுவர். குறிப்பினும் எனவே கண்ணினான் வரும் குறிப்பு என்பது தானே விளங்கும். இவ்வாறு இடர்ப்பட்டுச் சொற்களைப் பிரித்துக் கூட்ட வேண்டிய இன்றயமையாமையில்லை. இந்நூற்பாவில் எழுவாயாக அமைந்தது வேட்கை. அவ் வேட்கை அவள்வயின் குறிப்பினும் இடத்தினும் அல்லது (கூற்றின் கண்) நெறிப்பட வாரா என்பதே இங்குக் கூறும் பொருள். அங்ஙனம் வாராமைக்குக் காரணம் கூறுவதாக அமைந்த ஏதுமொழியே காமத்திணையிற் கண்ணின்று வரூஉம் நாணுமடனும் பெண்மைய வாதலின் என்னும் தொடராகும். கண்ணின்று வருதலாவது கண்ணிலிருந்து புலப்படும் காமக் குறிப்பினுடனே நாணுமடனும் ஒருங்கு வெளிப்படுதல். ஆய்வுரை ஒத்த அன்பினராய தலைவனும் தலைவியும் எதிர்ப்பட்டுக் கண்ணுற்ற நிலையில் தலைமகள்பால் வேட்கை தோன்றுமாறு கூறுகின்றது. (இ-ள்.) அன்பின் ஐந்திணையொழுகலாற்றில் தலைமகளது கண்ணின் குறிப்புடன் ஒன்றி வெளிப்படும் நாணமும் மடனும் ஆகிய இவை பெண்மைக்குரிய இன்றியமையாப் பண்புகளாதலின், தலைவியின் வேட்கை, குறிப்பினாலும் இடத்தினாலும் அன்றிக் கூற்றினால் வெளிப்படுமளவுக்கு அவளிடத்தில் முறைமைப் படமிக்குத் தோன்றுதல் இல்லை எ-று. வேட்கை, குறிப்பினும் இடத்தினும் அல்லது அவள்வயின் நெறிப்பட வாரா என இயையும். தலைமகள் உள்ளத்தே தோன்றும் வேட்கை யுணர்வுகள் அவளது சொல்லால் வெளிப்படாமைக்குக் காரணம் கூறும் நிலையில் அமைந்தது, காமத் திணையிற் கண்ணின்று வரூஉம் நாணும் மடனும் பெண்மைய வாதலின் எனவரும் தொடராகும். காமத்திணை-காமப்புணர்ச்சி ; அன்பின் ஐந்திணையொழுகலாறு. கண் நின்று வருதலாவது கண்ணின் குறிப்புடன் ஒன்றிநின்று வெளிப்படுதல். பெண்மைய - பெண்மை-யிடத்தன ; குறிப்பு வினைமுற்று. அவள் என்றது தலைவியை. 19. காமஞ் சொல்லா நாட்டம் இன்மையின் ஏமுற இரண்டும்1 உளவென மொழிப. இளம்பூரணம் என்பது, மேலதற்கோர் புறனடை யுணர்த்துதல் நுதலிற்று. வேட்கையுரையாத கண் உலகத்தின்மையால் தலைவன் ஏமுறற் பொருட்டு நாணும் மடனும் உளவாம் என்றவாறு. இதனாற் சொல்லியது மேல் தலைவிக்கு இயல்பாய்க் கூறப் பட்ட அச்சமும் நாணும் மடனும் என்பனவற்றுள் வேட்கையால் அச்சம் நீங்கினவழி நாணும் மடனும் நீங்காவோ என்றையுற்றார்க்கு அவை தலைமகற்கு ஏமமாதற்பொருட்டு நீங்காவாம் என்பதூஉம், வேட்கைக்குறிப்புக் கண்ணினான் அறியலா மென்பதூஉம் உணர்த்தியவாறு. என்னை? நாணும் மடனும் இல்லாதாரைத் தலைமக்கள் அவமதிப்பாரதலால். உதாரணம் :- கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணிற் பெருந்தக்க தில். (குறள். 1173) இதனுள் கடலன்ன காமம் உழந்தும் என்றதனான் வேட்கை மிக்க நிலையினையும், மடலேறாப் பெண் என்றமையான் நாணும் மடனும் நீங்கர நிலையினையும் கூறுதல் காண்க. கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல. இதனுள் அகத்துநிகழ் வேட்கையினைக் கண்ணினால் அறியக்கிடந்தமை கூறியவாறு காண்க. (19) நச்சினார்க்கினியம் இது கருமநிகழ்ச்சிக்கண் வரும் நாணும் மடனுந் தந்தன்மை திரிந்துவரு மென்கின்றது. (இ-ள்.) சொல்லாக் காமம் இன்மையின் - கரும நிகழ்ச்சி யிடத்துக் கூற்று நிகழாத காமம் புலனெறி வழக்கின்கணின்மையின், இரண்டும் ஏமுற நாட்டம் உளவென மொழிப-முற்கூறிய நாணும் மடனுந் தந்தன்மை திரிந்துவர நாட்டுதல் உளவென்று கூறுவர் புலவர் எ-று.1 என்றது, தோழியிற் கூட்டத்துத் தலைவி கூற்று நிகழ்த்துவ ளென்பதூஉம், நிழுங்கால் நாணும் மடனும் பெரும்பான்மை கெட்டு அக் கூற்று நிகழுமென்பதூஉம், அங்ஙனங் கெடுதலையும் முந்து நூற்கண் ஆசிரியர் நாட்டுதல் உளவென்பதூஉங் கூறியவாறாயிற்று. தேரே முற்றன்று நின்னினும் பெரிதே (கலி. 74) பேரே முற் றாய்போல முன்னின்று விலக்குவாய் (கலி. 114) என்றாற்போல மயக்கம் உணர்த்திற்று. இனி நாணும் மடனுங் கெட்ட கூற்றுத் தோழியை நோக்கிக் கூறுமென மேற்கூறுகின்றான். (18) ஆய்வுரை இது, காதலர் இருவர் தம்முள் எதிர்ப்பட்டுக் காணும் காட்சியில் தலைமகளது உள்ளத்தே தோன்றும் வேட்கை தனித்து மீதூர்ந்து வெளிப்படாது நாணொடும் மடனொடும் பிரிவின்றித் தோன்றுதற்குரிய காரணம் கூறுகின்றது. (இ-ள்.) உள்ளத்தெழுந்த வேட்கையை வெளிப்படுத்தாத காதலர் கண்கள் உலகத்தில் இல்லாமையால் (ஒத்த காதலர் இருவரிடையே நிகழ்தற்குரிய களவொழுக்கமாகிய இவ்வொழுக லாறு) ஏமம் (பாதுகாவல்) உடையதாதற் பொருட்டு முற்குறித்த நாணமும் மடனுமாகிய பெண்மைக்குணங்கள் இரண்டும் தலை மகள்பால் நீங்காது உள்ளனவாம் என்று கூறுவர் சான்றோர் எ-று. சொல்லுதல் - வெளிப்படுத்தல். நாட்டம் - கண். ஏமம், ஏம் என மருவியது. ஏமம் - பாதுகாவல். உற - உறுதற்பொருட்டு. இரண்டு - முன்னைச் குத்திரத்திற் கூறப்பட்ட நாணமும் மடனும். மகளிர்பால் என்றும் நீங்காதுளவாதற்குரிய அச்சம் நாணம் மடன் என்னும் மூன்றனுள் முதற்கண்ணதாகிய அச்சம் வேட்கை காரணமாக நீங்கினும் நாணம் மடன் என்னும் இரண்டும் தலை மகள்பால் எக்காலத்தும் நீங்காது உளவாம் என்பது கருத்து. 20. சொல்லெதிர் மொழிதல் அருமைத் தாகலின் அல்ல கூற்றுமொழி1 அவள்வயி னான. இளம்பூரணம் என்பது, இதுவும் தலைவிமாட்டு ஒரு கூற்றுச்சொல் நிகழு மாறு உணர்த்துதல் நுதலிற்று. தலைவன் இயற்கைப்புணர்ச்சி கருதிக்கூறுஞ் சொல்லெதிர் தான் வேட்கைக் குறிப்பினளாயினும் அதற்குடம்பட்ட நெறியைக் கூறுதல் அருமையுடைத் தாதலான் அதற்கு உடம்பாடல்லாத கூற்றுமொழி தலைவியிடத்தன என்றவாறு. என்றது இசைவில்-லாதாரைப் போலக் கூறுதல். உதாரணம்:- யாரிவன் என்னை விலக்குவான் நீருளர் பூந்தா மரைப்போது தந்த விரவுத்தார்க் கல்லாப் பொதுவனை நீமாறு நின்னொடு சொல்லலோம் பென்றார் எமர் (கலித். 112) என வரும். இதன்பின், ..........................vt‹ கொலோ மாயப் பொதுவன் உரைத்த உரையெல்லாம் வாயாவ தாயின் தலைப்பட்டாம் பொய்யாயின் சாயலின் மார்பிற் கமழ்தார் குழைத்தநின் ஆயித ழுண்கண் பசப்பத் தடமென்தோள் சாயினும் ஏஎர் உடைத்து (கலித்.112) என உடம்பாடு கூறினாளாதலின் முற்கூறியது அல்ல கூற்றாயிற்று. (20) நச்சினார்க்கினியம் இது நாணும் மடனும் பெரும்பான்மை நிகழாத கூற்றுத் தோழிக்குத் தலைவி கூறுமென்கின்றது.1 (இ-ள்.) எதிர் சொல்- அங்ஙனம் நாணும் மடனும் நீங்கிய சொல்லை; அவள் வயின் மொழிதல் அருமைத்து அல்ல ஆகலின் தோழியிடத்துக் கூறுதல் அருமையுடைத்தல்லவாகை யினாலே; கூற்றுமொழி ஆன- குறிப்பானன்றிக் கூற்றாற் கூறும் மொழி தலைவிக்குப் பொருந்தின எ-று.2 எதிர்தல் தன்றன்மை மாறுபடுதல். ஒன்றிய தோழி யொடு (தொல்-பொ-41) என அகத்திணையிற் கூறுதலானுந் தாயத் தினடையா (தொல்-பொ-221) எனப் பொருளியலிற் கூறதலானும், அவள்வயின் நாணும் மடனும் நீங்கிய சொல்லைக் கூறுதலும் பொருந்து மென்றான்; அவை முற்காட்டிய உதாரணங்களுட் கூடுதல் வேட்கையாற் குறிபார்த்து எனவும், வளைமுன்கை பற்றி நலியத் தெருமந் திட்டு எனவும், காமநெரிதரக் கைந்நில்லாதே எனவுங் கூறியவாற்றானும், மேற்கூறுகின்ற உதாரணங்களானும், நாணும் மடனும் நீங்கிக் கூற்று நிகழ்ந்தவாறுணர்க. சூத்திரத்துட்பொருளன்றியும்..........gLnk’ (தொல்-பொ-மர-103) என்பதனால், இவ்விலக்கணம் பெறுதற்கு, இம்மூன்று சூத்திரத்திற்கும் மாட்டுறுப்புப்படப் bபாருள்Tறினாம்.ïÅ¡ கூற்று நிகழுங்கால், நாணும் மடனும் பெண்மைய வாதலிற், குறிப்பினும் இடத்தினுமன்றி வேட்கை நெறிப்பட வாராவென்று பொருள் கூறிற், காட்டிய உதாரணங்கட்கு மாறுபாடாகலானுஞ், சான்றோர் செய்யுட்களெல்லாங் குறிப்பும் இடனுமன்றிப் பெரும்பான்மை கூற்றாய் வருதலானும், ஆசிரியர் தலைவன் கூற்றுந் தலைவி கூற்றுந் தோழிகூற்றுஞ் செவிலிகூற்று மெனக் கூற்றுஞ் சேர்த்து நூல்செய்தலானும் அது பொருளன்மையுணர்க.2 ஆய்வுரை இது, தலைமகள் தன் வேட்கையைக் குறிப்பினாலன்றிக் கூற்றினாற் புலப்படுத்துதல் இல்லை என்கின்றது. (இ-ள்.) இயற்கைப் புணர்ச்சிக்கண் தலைவன் தன்னை நோக்கி வினவும் வினாவுக்குத் தலைவி வெளிப்பட மறுமொழி கூறுதல் என்பது அவளது பெண் தன்மைக்கு மிகவும் அருமை யுடையதாதலின் கூற்றுமொழியல்லாத குறிப்பு மொழிகளே அவள்பால் தோன்றும் எ-று. அல்ல கூற்றுமொழி என்றது, கூற்றுமொழியல்லாத குறிப்பு மொழியினை. தாமுறு காமத் தன்மை தாங்களே யுரைப்பதென்ப தாமென லாவதன்றால் அருங்குல மகளிர்க் கம்மா (கம்ப-சூர்ப்பணகைப் - 45) என்பது இங்கு நினைக்கத் தகுவதாம். களிவின்கண் தலைவன் வினாவும் சொல்லிற்குத் தலைவி எதிர் மொழி கூறுதல் என்பது மிகவும் அரிதாகலின் அந்நிலையில் கூற்றல்லாத குறிப்பு மொழிகளே அவள்பால் தோன்றும் என்பதாம். அல்ல கூற்று மொழியென்றது. கூற்று மொழியல்லாத குறிப்பு மொழியினை. இங்ஙனம் கூறுபவர் இளம்பூரணர். தலைவி தனது வேட்கையினைக் குறிப்பினாலல்லது கூற்றினால் வெளிப்படுத்துரைத்தல் அவளது பெண்மைக்கு இயல்பன்று என வற்புறுத்துவதே இந்நூற்பாவாகும். இது கொண்டு களவின்கண் தலைவிக்கு யாண்டும் கூற்று நிகழ்தல் இல்லையெனக் கருதுவார் யாருமிலர். தலைவி கூற்றாக இங்கு எடுத்துக் காட்டிய செய்யுட்கள் எல்லாம் தலைவன்தலைவிபாற் கொண்ட வேட்கையைப் புலப்படுத்தும் நிலையில் அமைந்த கூற்றுக்களேயன்றித் தலைவி தனது வேட்கையினை வெளியிட்டுரைக்கும் நிலையில் வந்தன அல்ல என்பதும் இங்குக் குறித்துணரத் தகுவதாகும். 21. மறைந்தவற் காண்டல் தற்காட் டுறுதல் நிறைந்த காதலில் சொல்லெதிர் மழுங்கல் வழிபாடு மறுத்தல் மறுத்தெதிர் கோடல் பழிதீர் முறுவல் சிறிதே தோற்றல் கைப்பட்டுக் கலங்கினும் நாணுமிக வரினும் இட்டுப்பிரி விரங்கினும் அருமைசெய் தயர்ப்பினும் வந்தவழி எள்ளினும் விட்டுயிர்த் தழுங்கினும் நொந்துதெளி வொழிப்பினும் அச்சம் நீடினும் பிரிந்தவழிக் கலங்கினும் பெற்றவழி மலியினும் வருந்தொழிற் கருமை வாயில் கூறினும் கூறிய வாயில் கொள்ளாக் காலையும் மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்கு நினைத்தல் சான்ற அருமறை உயிர்த்தலும் உயிராக் காலத்து உயிர்த்தலும் உயிர்செல வேற்றுவரைவு வரின் அது மாற்றுதற் கண்ணும் நெறிப்படு நாட்டத்து நிகழ்ந்தவை மறைப்பினும் பொறியின் யாத்த புணர்ச்சி நோக்கி ஒருமைக் கேண்மையின் உறுகுறை தெளிந்தோள் அருமை சான்ற நாலிரண்டு வகையிற் பெருமை சான்ற இயல்பின் கண்ணும் பொய்தலை அடுத்த மடலின் கண்ணுங் கையறு தோழி கண்ணீர் துடைப்பினும் வெறியாட் டிடத்து வெருவின் கண்ணும் குறியின் ஒப்புமை மருடற் கண்ணும் வரைவுதலை வரினும் களவறி வுறினும் தமர்தற் காத்த காரண மருங்கினும் தன்குறி தள்ளிய தெருளாக் காலை வந்தவன் பெயர்ந்த வறுங்களம் நோக்கித் தன்பிழைப் பாகத் தழீஇத் தேறலும் வழுவின்று நிலைஇய இயற்படு பொருளினும் பொழுதும் ஆறும் புரைவ தன்மையின் அழிவுதலை வந்த சிந்தைக் கண்ணும் காமஞ் சிறப்பினும் அவனளி சிறப்பினும் ஏமஞ் சான்ற வுவகைக் கண்ணும் தன்வயின் உரிமையும் அவன்வயிற் பரத்தையும் அன்னவு முளவே ஓரிடத் தான. இளம்பூரணம் என்றது, தலைவிக்கு இயற்கைப்புணர்ச்சி முதலாகக் களவின்-கட் குறிப்பினு மிடத்தினு மல்லது (களவியல் - 18) நிகழ்ச்சி யெல்லாவற்றினும் கூற்று நிகழுமிடம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மறைந்தவற் காண்டல் என்பது-தன்னைத் தலைவன் காணாமல் தான் அவனைக் காணுங் காட்சி. தற்காட்டுறுதல் என்பது - தன்னை அவன் காணுமாறு நிற்றல். நிறைந்த ... மழுங்கல் என்பது - நிரம்பிய வேட்கையால் தலைவன் கூறிய சொற் கேட்டு எதிர்மொழி கூறாது மடிந்து நிற்றல். இம் மூன்றிடத்தினுங் கூற்று நிகழாது. வழிபாடு மறுத்தல் என்பது-அதன்பின் இவள் வேட்கைக் குறிப்புக் கண்டு சாரலுற்றவழி அதற்கு உடம்படாது மறுத்தல். அது குறிப்பினானும் கூற்றினானும் வரும். மறுத்தெதிர்கோடல் என்பது - மறுத்தாங்கு மறாது பின்னும் ஏற்றுக்கோடல். பழிதீர்...njh‰wš-F‰wªÔ®ªj முறுவல் சிறிது தோற்று- வித்தல். அது புணர்தற்கு உடன்பாடுகாட்டி நிற்கும். இவை ஆறு நிலையும் புணர்ச்சிக்கு முன் நிகழும். ஈண்டுங் குறிப்பு நிகழ்ச்சியல்லது கூற்று நிகழ்ச்சி அருகியல்லது வாராது. அவற்றுள் சில வருமாறு: இகல்வேந்தன் சேனை என்னும் முல்லைக்கலியுள், மாமருண் டன்ன மழைக்கண்சிற் றாய்த்தியர் நீமருட்டுஞ் சொற்கண் மருள்வார்க் குரையவை யாமுனியா ஏறுபோல் வைகற் பதின்மரைக் காமுற்றுச் செல்வாயோர் கட்குத்திக் கள்வனை நீஎவன் செய்தி பிறர்க்கு, யாம்எவன் செய்தும் நினக்கு; இது வழிபாடு மறுத்தது. இன்னும் இதனுள், தேங்கொள் பொருப்பன் சிறுகுடி எம்ஆயர் வேந்தூட்டு அரவத்து நின்பெண்டிர் காணாமல் காஞ்சித்தா துக்கன்ன தாதெரு மன்றத்துத் தூங்குங் குரவையுள் நின்பெண்டிர் கேளாமை ஆம்பற் குழலாற் பயிர்பயிர் எம்படப்பைக் காஞ்சிக்கீழ்ச் செய்தேங் குறி. (கலி. 108) இது மறுத்தெதிர் கோடல். பழிதீர் முறுவல் சிறிதே தோற்றற்கு உதாரணம்: அன்னையோ, மன்றத்துக் கண்டாங்கு சான்றார் மகளிரை இன்றி அமையேனென் றின்னவுஞ் சொல்லுவாய் நின்றாய்நீ சென்றீ எமர்காண்பர் நாளையுங் கன்றொடு சேரும் புலத்து. (கலித். 110) இதனுள் அன்னையோ என்பது நகையொடு கூடிய சொல். கைப்பட்டுக் கலங்கினும் என்பது---தலைவன் கையகப்பட்ட பின்பு என்செய்தே மாயினேம் எனக் கலக்கமுறினும் என்றவாறு. நாணுமிகவரினும் என்பது - தலைவிக்கு முன்புள்ள நாணத்-தினும் மிக நாணம் வந்துழியும் என்றவாறு. இட்டுப்பிரி விரங்கினும் என்பது---தலைவன் இட்டு வைத்துப் பிரிவன் என அஞ்சியதற்கு இரக்க முறினும் என்றவாறு. அருமைசெய் தயர்ப்பினும் என்பது - தலைவன் வருதற்குக் காவலாகிய அருமை செய்ததனால் அவனும் வருதலைத் தவிரினும் என்றவாறு. வருதலைத் தவிர்தலை அயர்ப்பு என்றார். அன்றியும் புறத்து விளையாடுதற்கு அருமை செய்ய மயக்கம் வரினும் என்றுமாம். செய்தென்பதனைச் செயவெனத் திரிக்க. வந்தவழி எள்ளினும் என்பது---தலைவன் வந்தவிடத்து அல- ராகு மென்றஞ்சி இகழ்ந்தவழியும் என்றவாறு. விட்டுயிர்த்தழுங்கினும் என்பது---மறையாது சொல்லி இரங்கினும் என்றவாறு. நொந்து தெளிவொழிப்பினும் என்பது---தலைவன் தெளிவித்த தெளிவை நொந்து, அதனை யொழிப்பினும் என்றவாறு. அச்சம் நீடினும் என்பது---தலைவன் வருகின்றது இடையீடாக அச்சம் மிக்குழியும் என்றவாறு. பிரிந்தவழிக் கலங்கினும் என்பது---தலைவன் பிரிந்தவழிக் கலக்க முறினும் என்றவாறு. அது தாளாணெதிரும் பிரிவு. பெற்றவழி மலியினும் என்பது --- தலைவனோடு கூட்டம் பெற்றவழி மகிழினும் என்றவாறு. வருந்தொழிற்கு அருமை வாயில் கூறினும் என்பது---தலைவன் வருதற்கு இடையீடாகக் காவலர் கடுகுதலான் ஈண்டுவருதல் அரிதெனத் தோழி தலைவிக்குச் சொல்லினும் என்றவாறு. கூறிய...fhiyí« என்பது ---தோழி இவ்வாறு கூறியதனை மனங்கொள்ளாத காலத்தினும் என்றவாறு. மனைப்பட்டு ... அருமறை யுயித்தலும் என்பது---புறத்து விளையாடுதல் ஒழிந்து மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்குச் சூழ்தலமைந்த அரிய மறைப்பொருளைச் சொல்லலும் என்றவாறு. எனவே சிதையாதவழித் தோழிக்குச் சொல்லாளாம் என்பது போந்தது. வேட்கை மறைக்கப்படுதலின் மறையாயிற்று. கைப்பட்டுக் கலங்கல் முதலாகக் கூறிய வாயில் கொள்ளாக் காலை யீறாகச் சொல்லப்பட்ட பன்னிருவகையினும் தலைமகள் தோழிக்கு உரைக்கப்பெறும். அஃது உரைக்குங்கால் மனைப்பட்டுக் கலங்கி மேனி சிதைந்தவழியே உரைக்கப்பெறுவது. ஆண்டும் இதற்கு என்செய்வாம் என உசாவுதலோடுகூடத் தனது காதன்மை தோன்ற உரைக்கும் என்றவாறு. மனைப்படாக்கால் அவனைக் காண்டலால் உரைக்கவேண்டுவதில்லை யென்றவாறாயிற்று. இப்பன்னிரண்டும் ஒருத்திமாட்டு ஒருங்கு நிகழ்வன அல்ல. இவ்விடங்கள் உரைத்தற்கு இடமென இலக்கணங் கூறியவாறு. இதனுட் கைப்பட்டுக் கலங்கியவாறும் அருமறை உயிர்த்த வாறும் இவ்வாறு செய்யாக்கால் இறந்துபடுவன் என்னுங் குறிப்-புனளாய் மன்னாவுலகத்து மன்னுவது புரையும் எனவுங் கூறிய வாறு காண்க. இவை யெல்லாம் இயற்கைப்புணர்ச்சி புணர்ந்தபின் நிகழ்வன, உள்ளப்புணர்ச்சியான் உரிமை பூண்டிருந்தவரும் இவ்வாறு கூறப்பெறும் என்று கொள்க; ஆண்டு மனநிகழ்ச்சி ஒருப்பட்டு நிற்றலின்.1 உயிராக்காலத்து உயிர்த்தலும் உயிர்செல2 என்பது-இவ்வாறு கூறாக் காலத்து உயிர்செல்லுமாறு சொல்லுதலும் என்றவாறு. ஈண்டு, உயிர்த்தல் என்பது சுவாதம் எனினும் அமையும். இந் நிகழ்ச்சியைத் தோழிக்கு நாணத்தால் உரையாளாவருந்தும் என்றவாறு. வேற்றுவரைவு...j‹ãiH¥ghf¤ தழீஇத் தேறலும் vன்பதுnவற்றுtiரவுவÇன்அJமhற்றுதல்முjலாகத்தkர்த‰காத்தகhரணப்ப¡கம்ஈwகநிfழும்வழித்த‹குறித¥பித்தiலவன்எâர்ப்படுதÈல்லாக்கhலத்துவªதவன்gயர்ந்தவWங்களம்eக்கித்த‹குறையாகவுlம்பட்டுத்jறுதலும்எ‹றவாறு.1 ஆ©L¡ கலக்கமின்றித் தேறுமென்பது கூறினாராம். அவ்வழி, வேற்று வரைவு வரின் அது மாற்றுதற்கண்ணும் என்பது-பிறனொருவன் வரைய வரின் அதனை மாற்றுதற்காகவும் தன்குறி தப்பும் என்றவாறு.நெறிப்படு.. kiw¥ãD« என்பது-கூட்டம் உண்மை வழக்கியலால் நாடுகின்ற காலத்து மெய் வேறுபாடு நிகழ்ந்துழி, தோழி அறியாமலும் செவிலி அறியாமலுந் தலைவி மறைப்பினும் என்றவாறு. பொறியின் ... இயல்பின் கண்ணும் என்பது-பொறி யென்பது ஊழ். ஊழாற் கட்டப்பட்ட புணர்ச்சியைக் குறித்து ஒற்றுமைப் பட்ட நண்பினானே தலைவன் வரைதற்குக் குறையுறுகின்றதனைத் தெளிந்த தலைவி செய்தற்கு அருமையமைத்த எண்வகையினாற் பெருமை இயைந்த இயல்பினளாகி நிற்றற்கண்ணும்2 என்றவாறு. எண்வகையாவது மெய்ப்பாட்டியலுள் மனன் அழிவில்லாத கூட்டம் என ஓதுகின்ற, முட்டுவயிற் கழறல் முனிவுமெய்ந் நிறுத்தல் அச்சத்தின் அகறல் அவன்புணர்வு மறுத்தல் தூதுமுனி வின்மை துஞ்சிச் சேர்தல் காதல் கைம்மிகல் கட்டுரை யின்மை. (மெய்ப்பாட். 23) என்பன. அவற்றுள், முட்டுவயிற் கழறல் ஆவது-களவொழுக்கம் நிகழாநின்றுழி நிலவு வெளிப்பாடு, காவலர் கடுகுதல், தாய்துஞ்சாமை, ஊர் துஞ்சாமை, தலைவன் குறிவருவதற்கு இடையீடுபடுதல், இவ்வழிக் களவொழுக்கத்தினாற் பயனின்மை கூறல். அவ்வாறு கூறி இனி இவ்வொழுக்கம் அமையுமென வரைந்தெய்துதல்காறும் புணர்ச்சியை விரும்பாது கலக்கமின்றித் தெளிவுடையளாம். முனிவு மெய்ந்நிறுத்தல் ஆவது - இவ்வொழுக்கத்தினான் வந்த துன்பத்தைப் பிறர்க்குப் புலனாகாமை மெய்யின் கண்ணே நிறுத்தல். அவ்வழியும் வரைந்தெய்தல் சான்றமையும் புணர்ச்சியெனக் குறிவழிச் செல்லாளாம். அச்சத்தின் அகறல் ஆவது-இதனைப் பிறரறிவர் என்னும் அச்சத்தினானும் குறிவழிச் செல்லாளாம். அவன் புணர்வுமறுத்தல் ஆவது-தலைவன் புணர்ச்சி யில் வழியும் குறிவழிச் செல்லாளாம். தூது முனிவின்மை ஆவது-அவ்வழித் தலைவன்மாட்டுத் தூதாகி வருஞ் சொற்கேட்டலை முனிவின்மை. துஞ்சிச் சேர்தல் ஆவது - உறங்காமையின்றி யுறக்கம் நிகழ்தல் காதல் கைம்மிகல் ஆவது-இவ்வாறு செய்யுங் காதல் அன் பின்மையன்றி அன்பு மிகுதல். கட்டுரை யின்மை ஆவது-கூற்று நிகழ்தலின்மை. இவையெல்லாம் கலக்கமில்லாத நிலைமை யாதலிற் பெருமை சான்ற இயல்பாயின. பொய்தலையடுத்த மடலின் கண்ணும் என்பது-பொய்ம்மை யால் மடலேறுவன் எனத் தலைவன் கூறிவழியும் வெறுத்த உள்ளத்தளாய்க் குறிவிழிச் செல்லாளாம். கையறு தோழி கண்ணீர்துடைப்பினும் என்பது-தோழி கையினால் தலைவி கண்ணீர் துடைத்தவழியுங் குறிவழிச் செல்லாளாம். வெறியாட்டிடத்து வெருவின் கண்ணும் என்பது - தலைவி வேறுபாடு எற்றினாயிற்றெனச் செவிலி வெறியாட்டுவிக்க வரும் அச்சத்தினானுங் குறிவழிச் செல்லாளாம். குறியின் ஒப்புமை மருடற் கண்ணும் என்பது --- தலைவன் செய்த குறியை ஒப்புமைபற்றிச் சென்று அஃது அவ்வழி மருளுதற்-கண்ணும் குறிவழிச் செல்லாளாம். அஃதாவன புள்ளெழுப்புதல் போல்வன. அவைபெற்றுப் புள்ளரவம் எழும். அவ்வாறு மருளுதல். வரைவுதலை வரினும் என்பது---தலைவன் வரையவருகின்ற நாள் அணித்தாக வரினும் குறிவழிச் செல்லாளாம். கள வறிவுறினும் என்பது --- களவினைப் பிறர் அறியினும் குறிவழிச் செல்லாளாம். தமர்தற்காத்த காரணமருங்கினும் என்பது---தன்னைத் தமர் காத்த காரணப் பக்கத்தினும் என்றவாறு. அஃது ஐயமுற்றுக் காத்தல். வழுவின்று...m‹dîKsnt என்பது---வழுவின்று நிலைஇய இயற்படு பொருண் முதலாக ஏமஞ்சான்ற உவகை யீறாகச்சொல்லப்பட்lஇடங்களில்தன்னிட¤துஉரிமையும்அவனிட¤துப்பரத்தைkயும்அன்னtயும்நிகழப்gறும்என்றவhW. அன்ன என்பது - அவைபோல்வன என்றவாறு. ஓரிடத்துக்கண் என்றதனால் இவ்வாறு எல்லார் மாட்டும் vவ்விடத்தும்Ãகழாதுv‹றவாறாம்.எdnt மேற் குறிப்பினும் இடத்தினு மல்லது (களவியல் - 18) கூற்று நிகழாதென்பதனை மறுத்து ஓரிடத்துக் கூற்று நிகழும் என்றவாறாம். அவற்றுள் வழுவின்று நிலைஇய இயற்படு பொருளினும் என்பது---தலைவனை இயற்பழித்தவழி அவன் குற்றமிலனாக நிலை நிறுத்தப்பட்ட இயற்பட மொழிந்த பொருண்மைக் கண்ணும் தன்வயின் உரிமைதோன்றவும் அவன்வயிற் பரத்தைமை தோன்றவும் கூறும் தலைவி என்றவாறு. இரண்டினுள் ஒன்றுதோன்ற உரைக்கு மென்றவாறு. எனவே இரண்டுந் தோற்ற வருவனவு முளவாம். பொழுது மாறும்...áªij¡ கண்ணும் vன்பது---jலைவன்tருங்fலமும்ïடனும்Fற்றமுளவாதலான்.M©L அழிவு வந்த சிந்தைக் கண்ணும் தலைமகள் தன்வயின் உரிமையும் அவன் வயிற் பரத்தைமையும் தோன்றக் கூறும் என்றவாறு. காமஞ் சிறப்பினும் என்பது ---jலைமகன்மாட்டுnவட்கைÄகினும்jன்வயின்cரிமையும்mவன்வயிற்gரத்தைமையும்cரைக்குந்jலைவிvன்றவாறு.mt‹ அளி சிறப்பினும் என்பது --- தலைவன் தலையளி மிக்கவழியும் தன்வயின் உரிமையும் அவன்வயிற் பரத்தைமையும் தோன்றக்கூறும் என்றவாறு. ஏமஞ்சான்ற உவகைக்கண்ணும் என்பது---ஏமம் பொருந்திய மகிழ்ச்சி வந்துழித் தன்வயின் உரிமையும் அவன்வயிற் பரத்தைமையும் தோன்றக் கூறும் என்றவாறு. அஃதாவது இவன் வரைந்தல்லது நீங்கான் என்னும் உவகை. பரத்தைமை தோன்ற வந்ததற்குச் செய்யுள்:--- .z§bfhŸ இடுமணற் காவி . பிணங்கிரு மோ£l திரைவந் தளிக்கும் மணங்கமழ் ஐம்பாலார் ஊடலை ஆங்கே வணங்கி உணர்ப்பான் . (கலித். 131) என்னும் பாட்டினுள் தான் ஊடினாளாகவும் மகிழ்ந்தவாறும் அவன் வயிற் பரத்தைமை கூறியவாறும் காண்க. இச் . சொல்லியது மறைந்தவற் காண்டல் முதலாக ஓதப்பட்ட அறுவகைப் . ‘if¥g£L¡ fy§கல் முதலாfக்கூறியtயில்கெh.’