தொல்காப்பிய உரைத்தொகை - 19 சொல்லதிகாரம் பேராசிரியம் - 3 பின்னான்கியல் சி. கணேசையர் உரைவிளக்கக் குறிப்புக்களுடன் - 1943 மீள்பதிப்பு - 2018 பதிப்பாசிரியர் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் தமிழ்மண் பதிப்பகம் நூற்குறிப்பு தொல்காப்பிய உரைத்தொகை – 19 பொருளதிகாரம் - பேராசிரியம் - 3 பின்னான்கியல் முதற்பதிப்பு - 1943 சி. கணேசையர் (உரைவிளக்கக் குறிப்புக்களுடன்)பதிப்பாசிரியர் மீள்பதிப்பு (2018) முதுமுனைவர் இரா. இளங்குமரனார் பதிப்பாசிரியர்கள் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் பக்கம் : 24+328 = 352 விலை : 550/- பதிப்பு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. bjh.ng.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்:  தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 352  f£lik¥ò : இயல்பு  படிகள் : 500   நூலாக்கம் : கோ. சித்திரா   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (Harrish)   அச்சு : மாணவர் நகலகம், பிராசசு இந்தியா, ரியல் இம்பேக்ட் சொல்யூசன், தூரிகை பிரிண்ட், வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.  தொல்காப்பிய உரைத்தொகை தொல்காப்பியம் நம் வாழ்வியல் ஆவணம்; நம் முந்தையர் கண்ட மொழியியல் வளங்கள் அனைத்தையும் திரட்டித் தந்த தேன் தேட்டு! அத்தேட்டைச் சுவைத்த கோத்தும்பிகள் பழைய உரையாசிரியர்கள். அவர்கள் உரைகளையெல்லாம் ஒன்று திரட்டி, வரிசையுறத் தமிழுலகம் கொள்ள வைத்த உரைத்தொகுதிகள் இவையாம்! முன்னைப் பதிப்பாசிரியர்கள் தெளிவுறுத்தும் மணிக்குவைகள் எல்லாமும், அவர்கள் வைத்த வைப்புப்படி வைத்த செப்பேடுகள் இத் தொல்காப்பிய உரைத் தொகையாம். மேலும், இவை கிடைத்தற்கு அரிய கருவூலமுமாம்! ***** ***** ***** இளம்பூரணர், சேனாவரையர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், தெய்வச் சிலையார், கல்லாடர் ஆகிய பழைய உரையாசிரியர்கள், உரை விளக்கம் பல காலங்களில் எழுதியுளர். எழுத்து, சொல், பொருள் ஆகியவற்றின் பதிப்புகள் ஒரே காலத்தில் ஒருவரால் வெளியிடப்பட வில்லை. அவற்றையெல்லாம் ஓரிடத்தில் ஒரே வேளையில் ஒட்டு மொத்தமாக முன்னைப் பதிப்பாசிரியர்கள் உரை - விளக்கம் - குறிப்பு - இணைப்பு ஆகியவற்றுடன் பெற வெளியிடும் அரிய பெரிய முயற்சியில் வெளியிடப்படுவது தமிழ்மண் பதிப்பகத்தின் இப்பதிப்பாகும். தொல்காப்பியத்திற்குக் கிடைத்த உரைகள் அனைத்தையும் ஒருமொத்தமாகத் தருவதால் இது, தொல்காப்பிய உரைத்தொகை எனப்பட்டது. தொகையாவது தொகுக்கப்பட்டது. இரா. இளங்குமரன் புன்னாலைக் கட்டுவன் சி. கணேசையர் ஈழநாட்டு யாழ்ப்பாணத்திற்கு அணித்தாகவுள்ள புன்னாலைக் கட்டுவன் என்னும் ஊரில், சின்னையர் - சின்னம்மையார் என்பார் மகனாக கி.பி. 1878 -இல் பிறந்தார். கதிர்காமர், பொன்னம்பலர், குமரசாமி என்பார்களிடம் கல்விகற்று, தொடக்கப் பள்ளி ஆசிரியராய்ப் பணி செய்தார். தம் 32 ஆம் அகவையில் அன்னலக்குமி என்பாரை மணந்தார். பின்னர் 1921 முதல், சுன்னாகம் பிராசீன பாடசாலை என்னும் கல்விக் கழகத்தில் தலைமைப் பேராசிரியராக விளங்கி ஓய்வு பெற்றபின் முழுதுறு தமிழ்ப் பணியில் ஊன்றினார். கற்பதும், கற்பிப்பதும், நூல் யாப்பதுமாக நாளெல்லாம் பணி செய்தார். `மகாவித்துவான்’, `வித்துவ சிரோமணி’ என்னும் உயரிய விருதுகளும் பாராட்டுகளும் பெற்றார். உரையும் பாட்டும் வல்ல இவர் இயற்றிய சிற்றிலக்கியங்கள் பல. இவர் இயற்றிய `புலவர் சரிதம்’ 101 புலவர் பெருமக்கள் வரலாறுகளைக் கொண்டதாகும். தம்மிடம் பயின்ற மாணவர்களுக்குத் தொல்காப்பியம் பயிற்றும்போது எழுதிய அரிய குறிப்புகளையும், சி.வை. தாமோதரனார் பதிப்பை அடிப்படையாகக் கொண்டு, பவானந்தர் பதிப்பு, வையாபுரியார் பதிப்பு, கனக சபையார் பதிப்பு ஆகிய முப்பதிப்புகளையும் கிடைத்த ஏட்டுப் படிகளையும் ஒப்பிட்டுத் திருத்திய குறிப்புகளையும் விளக்கங்களையும் கொண்டு “ஈழகேசரி” அதிபர் நா. பொன்னையா அவர்கள் தம் சுன்னாகம் திருமகள் அழுத்தகத்தில் பதிப்பிக்கப் பட்டவையே, புன்னாலைக் கட்டுவன் சி. கணேசையர் அவர்கள் பதிப்பாகும். நச்சினார்க்கினியர் - எழுத்ததிகார உரை, (1937) சேனாவரையர் - சொல்லதிகார உரை (1938) பேராசிரியர் - பொருளதிகாரப் பின்னான்கியல் உரை (1943) நச்சினார்க்கினியர் - பொருளதிகார முன்னைந்தியல் (1948) பதிப்பு உலகில், தனிப்பெருமை பெற்ற தொல்காப்பியப் பதிப்பு என்பது இந்நாள் வரை வெள்ளிடைமலையாக விளங்குவதாம் அவர் பதிப்பு. இவரியற்றிய கட்டுரைகள் சில மதுரைத் தமிழ்ச் சங்கச் செந்தமிழ் இதழில் வெளிவந்தன. நிறைவில் துறவு வாழ்வு பூண்டவர் போல் வாழ்ந்து, தம் எண்பதாம் அகவையில் (1958) இயற்கை எய்தினார். சென்னைப் பல்கலைக் கழக வித்துவான் நிறைநிலைத் தேர்வுக்குப் பாடமாக இருந்த பேராசிரியம் தமிழகப் பரப்பில் கிட்டாத நிலையில் 1948 இல் ஈழத் திருமகள் அழுத்தகப் பதிப்பக வழியே பெற்று யான் கற்க வாய்த்தது. அதன் பெரும்பயன் கணேசனார் பதிப்புக் குறிப்பு, பதிப்பு அமைப்பு ஆயவற்றால் ஏற்பட்ட பூரிப்பினும் பன்மடங்கான பூரிப்பை ஏற்படுத்தியது பேராசிரியர் உரை. அவ்வுரையே, “உரையாசிரியர்கள் கண்ட சொற்பொருள் நுண்மை விளக்கம்” என்னும் அரியதோர் நூலைப் படைக்கத் தூண்டலாக அமைந்தது! முதற்கண் சை. சி. கழகத் தாமரைச் செல்வராலும் பின்னர்த் தமிழ்மண் பதிப்பகத்தாலும் பதிப்பிக்கப்பெற்றுத் தமிழ்வளம் ஆகியது. - இரா. இளங்குமரன் தொல்காப்பியம் அரிய பதிப்புகளும் தேவைகளும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் தமிழின் பண்டை இலக்கண/ இலக்கிய நூல்கள் அச்சிடப் பெற்றன. அவ்வகையில் தமிழில் அச்சடிக்கப்பட்ட முதல் இலக்கண நூலாக இன்று அறியப்படுவது நன்னூலே. காரணம் தமிழக மடங்கள் நன்னூலைப் பயிற்றிலக்கண மாகவும் பயன் பாட்டு இலக்கணமாகவும் கொண்டிருந்தன. 1835 -இல் திருத்தணிகை விசாகப் பெருமாளையர் தாமே உரையெழுதி நன்னூல் மூலமும் காண்டிகையுரையும் என்னும் தலைப்பில் வெளியிட்டார். தொடர்ந்து தாண்டவராய முதலியாரும்,அ. முத்துச்சாமி பிள்ளையும் இணைந்து இலக்கணப் பஞ்சகம் என்னும் தலைப்பில் நன்னூல், நம்பியகப் பொருள், புறப்பொருள் வெண்பாமாலை ஆகியவற்றின் மூலங்களை வெளிக் கொணர்ந் தனர். இதன் தொடர்ச்சியாக 1838 -இல் வீரமா முனிவரின் தொன்னூல் விளக்கம் அச்சாக்கம் பெற்றது. 1847 -இல் தான் மழவை மகாலிங்கையரால் தமிழின் தொல் இலக்கணம் தொல்காப்பிய எழுத்ததிகாரம் உரையோடு அச்சிடப்பட்டது. தொடர்ந்து யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலர், யாழ்ப்பாணத்து சி.வை. தாமோதரம் பிள்ளை, கோமளபுரம் இராசகோபாலபிள்ளை, சோடசாவதானம் சுப்பராய செட்டியார், போன்றோர் 19 -ஆம் நூற்றாண்டில், தொல்காப்பியத்தைக் கிடைத்த உரைகளோடு பதிப்பித்தனர். 1935 - இல் தொல்காப்பியத் திற்கு எழுதப்பட்ட உரைகள் (இன்று கிடைத்துள்ள அனைத்து உரைகளும்) பதிப்பிக்கப்பட்டு விட்டன. 1847 - 2003 வரை தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரை எட்டுப் பதிப்புகளும், 1885-2003 வரை தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் முன்னைந்தியல் எட்டுப் பதிப்புகளும், செய்யுளியல் நச்சினார்க்கினியர் தனித்து மூன்று பதிப்புகளும் வெளிவந்துள்ளன. 1892 - 2003 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை ஐந்து பதிப்புகளும், 1868 - 2006 வரை எழுத்து இளம்பூரணம் ஏழு பதிப்புகளும், 1920 - 2005 வரை தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணம் பத்துப் பதிப்புகளும், 1927 - 2005 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் இளம்பூரணம் ஆறு பதிப்புகளும், 1885 - 2003 வரை தொல்காப்பியம் பொருளதிகாரம் பேராசிரியம் ஏழு பதிப்புகளும், 1929 - 2003 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் மூன்று பதிப்புகளும், 1964 - 2003 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடம் மூன்று பதிப்புகளும் வெளிவந்துள்ளன என முனைவர் பா. மதுகேவரன் தமது தொல்காப்பியம் பதிப்பு ஆவணம் நூலில் குறிப்பிட்டுள்ளார். 2003 -இல் தமிழ்மண் பதிப்பகத்தின் வாயிலாகத் தொல்காப்பிய உரைகள் (இளம்பூரணம், நச்சினார்க்கினியம், பேராசிரியம், சேனாவரையம், கல்லாடம், தெய்வச்சிலையம்) பண்டித வித்வான் தி.வே. கோபாலையர், முனைவர் ந. அரணமுறுவல் ஆகியோரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, முதுமுனைவர் இரா. இளங்குமரனாரின் வாழ்வியல் விளக்கத்துடன் வெளிவந்துள்ளன. இருப்பினும் அச்சில் இன்று கிடைக்காத அரிய பதிப்புகளை மீள் பதிப்பாகப் பதிப்பிக்க வேண்டும் என்னும் நோக்கத்தில், சி.வை. தாமோதரம் பிள்ளை பதிப்பு, கா. நமச்சிவாய முதலியார் பதிப்பு, வ.உ. சிதம்பரம் பிள்ளை பதிப்பு, இரா. வெங்கடாசலம் பிள்ளை பதிப்பு, சி. கணேசையர் பதிப்பு, தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் பதிப்பு ஆகியோரின் பதிப்புகளுடன் தொல்காப்பியம் தொடர்பாக அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரைகளும் இணைத்து தமிழ்மண் பதிப்பகத்தின் வழி மீள் பதிப்புகளாகப் பதிப்பிக்கப் படுகின்றன. மீள் பதிப்பில் பின்பற்றியுள்ள பொது நெறிகள் முதுமுனைவர் இரா. இளங்குமரனாரின் தொல்காப்பியம் குறித்த விளக்கம், ஒவ்வோர் அதிகாரம் பற்றிய வாழ்வியல் விளக்கம், உரையாசிரியர் விவரம் ஆகியவை நூலின் தொடக்கத் தில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. முன்னைப் பதிப்புகளின் முகப்புப் பக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முன்னைப் பதிப்பாசிரியர் பற்றிய விவரங்கள் கால அடிப்படையில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. ஒவ்வோர் இயலின் தொடக்கத்தில், பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் தொல்காப்பியம் தொகுப்பில் எழுதி யுள்ள தொல்காப்பிய இயல் பற்றிய விளக்கம் தரப்பட்டுள்ளன. முன்னைப் பதிப்பில் அடிக்குறிப்புகள் அந்த அந்தப் பக்கத்தில் தரப்பட்டிருந்தன. இப்பதிப்பில் ஒவ்வோர் இயலுக்கும் தொடர் இலக்கமிட்டு, அந்தந்த இயலின் இறுதியில் தொகுத்து வழங்கப் பட்டுள்ளன. முன்னைப் பதிப்புகளில் நூற்பாக்களைக் கையாண்டுள்ள முறையையே இப் பதிப்பிலும் பின்பற்றப்பட்டுள்ளது. நூற்பாக் களுக்குத் தமிழ் எண் கொடுக்கப்பட்டிருப்பின் அவை நடை முறையில் இப்போது உள்ள எண்களாக மாற்றப்பட்டுள்ளன. நூற்பா அகரமுதலி, மேற்கோள் அகரமுதலி போன்றவற்றிற்குப் பக்க எண்கள் கொடுக்கப்பட்டிருப்பின் அவை நூற்பா எண்களாக மாற்றப்பட்டுள்ளன. பின்னிணைப்பாகத் தொல்காப்பியம் தொடர்பாக அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ள கட்டுரைகள் இணைக்கப் பட்டுள்ளன. நூற்பா முதற் குறிப்பு அகராதி மட்டும் கொடுக்கப் பட்டுள்ள பதிப்புகளில் அவற்றோடு, 2003 தமிழ்மண் பதிப்பகத்தின் வழியே பண்டித வித்துவான் தி.வே. கோபாலையர் முனைவர் ந. அரணமுறுவல் ஆகியோரைப் பதிப்பாசிரியர்களாகக் கொண்டு வெளிவந்த இலக்கணப் பதிப்பில் இணைக்கப் பட்டிருந்த, - நூற்பா நிரல் - மேற்கோள் சொல் நிரல் - மேற்கோள் சொற்றொடர் நிரல் - செய்யுள் மேற்கோள் நிரல் - கலைச் சொல் நிரல்( நூற்பாவழி) - கலைச்சொல் நிரல் (உரைவழி) ஆகியவை எடுத்துப் பயன்படுத்தப்பட்டுள்ளன. - பாடவேறுபாடுகள் சுட்டப்பட்டுள்ளன. - முன்னைப் பதிப்பில் வடமொழிச் சொற்கள் பயன் படுத்தப்பட்டிருப்பின் அவை அப்படியே கையாளப் பட்டுள்ளன. - தொல்காப்பியப் பதிப்புகள் குறித்த விவரம் தொகுக்கப்பட்டுள்ளன. சி.வை. தாமோதரம் பிள்ளை பதிப்பு - 1892 சொல்லதிகாரம் - நச்சினார்க்கினியர் 1868 - இல் தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரை யருரையைப் பதிப்பித்த சி.வை. தாமோதரம் பிள்ளை, 1892 ஆம் ஆண்டு சொல்லதிகாரம் நச்சினார்கினியர் உரையைப் பதிப்பித்தார். சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை தொடர்ச்சியாகப் பதிப்பிக்கப்பட்டாலும், முதலில் பதிப்பித்த சி.வை. தாமோதரம் பிள்ளையின் பதிப்பு இன்று அச்சுவடிவில் புழக்கத்தில் இல்லை. அப்பதிப்பினை வெளியிடும் நோக்கத்தில் இப்பதிப்பு மீள் பதிப்பாக வெளிவருகிறது. இப்பதிப்பில் நூற்பா முதற்குறிப்பு அகராதி மட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் மற்ற இணைப்புகளும் இணைக்கப்பட்டு, முதுமுனைவர் இரா. இளங்குமரன் அவர்களின் வாழ்வியல் விளக்கமும், ஒவ்வோர் இயலின் தொடக்கத்தில் க. வெள்ளைவாரணனார் எழுதியுள்ள இயல் விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் சொல்லதிகாரம் தொடர்பாக அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரைகள் பின்னிணைப்பாக இணைக்கப் பட்டுள்ளன. கா. நமச்சிவாய முதலியார் பதிப்பு - 1927 சொல்லதிகாரம் - இளம்பூரணம் இளம்பூரணம் எழுத்ததிகாரம் பொருளதிகாரம் உரைகள் முன்பே வெளிவந்தன. சொல்லதிகாரம் இளம்பூரணர் உரை 1927 - இல் காவேரிப்பாக்கம் நமச்சிவாய முதலியாரின் ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் சென்னை ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸால் வெளியிடப்பட்டது. இதுவே சொல்லதிகாரம் இளம்பூரணர் உரையின் முதற் பதிப்பாகும். இப் பதிப்பில் அடிக்குறிப்புகள் அந்தந்தப் பக்கத்தில் கொடுக்கப்பட்டிருந்தன. இப்பதிப்பில் தொடர் இலக்கமிட்டு, ஒவ்வோர் இயலின் முடிவில் அடிக் குறிப்புகள் தரப்பட்டுள்ளன. இப் பதிப்பில் நூற்பாக்களுக்குத் தமிழ் எண்வரிசையும் நடைமுறை எண் வரிசையும் கொடுக்கப்பட்டிருந்தன. இப்பதிப்பில் நடைமுறை எண் முறை மட்டும் பின்பற்றப்பட்டுள்ளது. வ.உ. சிதம்பரம்பிள்ளை பதிப்பு - 1928 , 1931, 1933, 1935 எழுத்ததிகாரம், பொருளதிகாரம் - இளம்பூரணம் 1868 இல் திரிசிரபுரம் சோடசாவதானம் சுப்பராய செட்டியாரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு கன்னியப்ப முதலியாரால் பதிப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து 1928 -இல் தொல்காப்பியம் இளம்பூரணம் எழுத்ததிகாரம் பதவுரை என்னும் பெயரில் வ.உ. சிதம்பரம் பிள்ளை பதிப்பு வேலாயுதம் பிரிண்டிங் பிர, தூத்துக்குடியிலிருந்து வெளிவந்தது. அப்பதிப்பின் தொடக்கத்தில் கொடுக்கப்பட்டிருந்த நூற்பா அகராதி இப்பதிப்பின் நூலின் இறுதியில் கொடுக்கப் பட்டுள்ளது. அத்துடன் சொல் நிரல் (மேற்கோள்), சொற்றொடர் நிரல் (மேற்கோள்), செய்யுள் நிரல் (மேற்கோள்) கலைச் சொல் நிரல் (நூற்பா வழி) கலைச் சொல் நிரல் (உரைவழி) தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. 1920 -இல் கா. நமச்சிவாய முதலியார் பொருளதிகாரம் இளம்பூரணம் உரை முதல் பகுதியாகக் களவியல், கற்பியல், பொருளியல் மூன்று இயல்களையும் ஸி. குமாரசாமி நாயுடு ஸன் நிறுவனத்தார் வெளியிட்டுள்ளார். மற்ற பகுதிகள் வெளிவந்ததாக அறிய இயலவில்லை. இப்பதிப்பிற்குப் பின் வ.உ. சிதம்பரம் பிள்ளை தொல்காப்பியம் இளம்பூரணம் பொருளதிகாரம் அகத்திணையியல், புறத்திணையியல் ஆகிய இரு இயல்கள் இணைந்த பதிப்பு, சென்னைப் பிரம்பூரில் இருந்து வெளிவந்தது. இப்பதிப்பில் ஆண்டு குறிப்பிடப்படவில்லை. ஆனால் 1921- இல் வெளிவந்த குறிப்பினை, தொல்காப்பியம் இளம்பூரணம் எழுத்திகாரம் பதவுரை பதிப்பில் குறிப்பிடுகிறார். களவியல், கற்பியல், பொருளியல் 1933 - இல் வாவிள்ள இராமவாமி சாட்ருலு அண்ட் ஸன் மூலம் வெளி வந்துள்ளது. 1935 - இல் மேற்கண்ட பதிப்பாளர்களைக் கொண்டு மெய்ப்பாட்டியல், உவமையியல், செய்யுளியல், மரபியல் பதிப்பித்துள்ளார். மூன்று பகுதிகளாக வெளிவந்தாலும் அவற்றிற்கும் தொடர் எண் கொடுக்கப்பட்டுள்ளன. 1935 - இல் ஒருங்கிணைந்த பதிப்பாக வ.உ. சிதம்பரம் பிள்ளை எ. வையாபுரிப்பிள்ளை ஆகியோர் பதிப்பாசிரியர்களாக அமைந்து வெளிவந்துள்ளது. தனித்தனிப் பதிப்புகளாக மூன்று பகுதிகளாக வெளிவந்துள்ள பதிப்பினை அடிப்படையாகக் கொண்டு இம் மீள் பதிப்பு பதிப்பிக்கப்படுகின்றது. இரா. வெங்கடாசலம் பிள்ளை பதிப்பு - 1929 சொல்லதிகாரம் - தெய்வச் சிலையார் 1929 -இல் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தால் முதன் முதலில் பதிப்பிக்கப்பட்டது. பதிப்பாசிரியர் ரா. வேங்கடாசலம் பிள்ளை. இதன் நிழற்படிவம் 1984 -இல் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இப் பதிப்பில் சூத்திர முதற் குறிப்பு அகராதி மட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் சொல் நிரல் (மேற்கோள்), சொற்றொடர் நிரல் (மேற்கோள்), செய்யுள் நிரல் (மேற்கோள்) கலைச் சொல் நிரல் (நூற்பா வழி) கலைச் சொல் நிரல் ( உரைவழி) தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. சி. கணேசையர் பதிப்பு - 1937, 1938, 1943,1948 எழுத்து நச்சினார்க்கினார்கினியர், சொல்லதிகாரம் சேனாவரையர் பொருள் - நச்சினார்க்கினியர், பேராசிரியர் 1847 - இல் மழவை மகாலிங்கையரால் எழுத்ததிகாரம் நச்சினார்க் கினியம் பதிப்பிக்கப்பட்டது. 1891 - இல் சி. வை. தாமோதரம் பிள்ளை பதிப்பும் 1923 - இல் த. கனகசுந்தரத்தின் பதிப்பும் கழகத்தின் மூலமும் வெளிவந்தன. 1937 - இல் நா. பொன்னையா அவர்களால் கணேசையர் எழுதிய உரைவிளக்கக் குறிப்புகளுடன் எழுத்ததிகாரம் மூலமும் நச்சினார்க்கினியருரையும் வெளியிடப்பட்டன. 1868 -இல் யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுக நாவலர் பதிப்பு, சென்னபட்டணம் ஊ. புஷ்பரதச் செட்டியாரது கலாரத்நாகர அச்சுக்கூடத்தில் சி.வை. தாமோரதம் பிள்ளையால் பதிப்பிக்கப்பட்டது. இதே ஆண்டு கோமளபுரம் இராசகோபால பிள்ளையின் பதிப்பும் தொல்காப்பியம் சேனாவரையம் என்ற பெயரில் வெளிவந்துள்ளது. 1923 - இல் கந்தசாமியார் திருத்திய திருத்தங்களோடும் குறிப்புரையோடும் கழகப் பதிப்பாக வெளிவந்தது. 1938 -இல் சி. கணேசையர் பதிப்பு அவர் எழுதிய உரைவிளக்கக் குறிப்புகளுடன் வெளியிடப்பட்டது. 1885 -இல் சி.வை. தாமோதரம் பிள்ளையால் தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் இயற்றிய உரையோடும் பலதேசப் பிரதிரூபங்களைக் கொண்டு பரிசோதித்து யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரரால் பதிப்பிக்கப்பட்டது என்னும் குறிப்புடன் பதிப்பு வெளிவந்தது. அப்பதிப்பில் உள்ள பின்னான்கியல் நச்சினார்க்கினியர் உரை அன்று என்று மறுத்து இரா. இராகவையங்கார் 1902 - 1905 வரையான செந்தமிழ் இதழில் ஆய்வுக்கட்டுரை எழுதித் தெளிவுபடுத்தினார். அதனைத் தொடர்ந்து பொருளதிகாரம் முழுதும் நான்கு பகுதியாக நச்சினார்க்கினியம், பேராசிரியம் எனப் பிரித்து 1916, 1917 - ஆம் ஆண்டுகளில் ச. பவனாந்தம் பிள்ளை பதிப்பித்தார். 1917 - இல் ரா. இராகவையங்கார் செய்யுளியலுக்கு நச்சினார்க்கியர் உரை இருப்பதை அறிந்து, நச்சினார்கினியர் உரை உரையாசிரியர் உரையுடன் என இரு உரைகளையும் இணைத்து வெளியிட்டார். 1934, 1935 -இல் எ. வையாபுரிப்பிள்ளை அவர்களால் ஓலைப் பிரதி பரிசோதிக்கப்பட்டு மா.நா. சோமசுந்தரம் பிள்ளை அவர்களது அரிய ஆராய்ச்சிக் குறிப்புகளுடனும் திருத்தங் களுடனும் தொல்காப்பியம் பொருளதிகாரம் முதற்பாகம் வெளிவந்தது. 1948 - இல் தொல்காப்பிய முனிவரால் இயற்றப் பட்ட தொல்காப்பியம் பொருளதிகாரம் (முதற்பாகம்) முன்னைந்தியலும் நச்சினார்க்கினியமும் என, சி. கணேசையர் எழுதிய ஆராய்ச்சிக் குறிப்புரையுடன் நா. பொன்னையா அவர்களால் பதிப்பிக்கப்பட்டது. 1943 -இல் தொல்காப்பியம் பொருளதிகாரம் (இரண்டாம் பாகம்) என்பதோடு பின்னான்கியலும் பேராசிரியமும் இவை புன்னாலைக் கட்டுவன் தமிழ் வித்துவான், பிரமரீ சி. கணேசையர் அவர்கள் ஏட்டுப் பிரதிகளோடு ஒப்புநோக்கித் திருத்திய திருத்தங்களோடும் எழுதிய உரை விளக்கக் குறிப்புகளோடும் ஈழகேசரி அதிபர் நா. பொன்னையா அவர்களால் தமது சுன்னாகம், திருமகள் அழுத்தகத்தில் பதிப்பிக்கபட்டன என வரையறுக்கப் பட்டிருந்தது. 2007-இல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மறுபதிப்பாக சி. கணேசையரின் பதிப்பைப் பதித்துள்ளது. அப்பதிப்பினைப் பின்பற்றியே இப்பதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சூத்திர அகராதி, சூத்திர அரும்பத விளக்கம் ஆகியவற்றிற்கு இப்பதிப்பில் பக்க எண் கொடுக்கப்பட்டிருந்தன. அவை இம் மீள்பதிப்பில் நூற்பா எண்களாக மாற்றப்பட்டுள்ளன. அனுபந்தமாக சி. கணேசைய்யர் சில கட்டுரைகளை அப்பதிப்பில் இணைத் திருந்தார் அவற்றோடு மேலும் அவருடைய சில கட்டுரைகள் இப்பதிப்பில் இணைக்கப்பட்டுள்ளன. தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் பதிப்பு 1971 சொல்லதிகாரம் கல்லாடம் சி.வை. தாமோதரம் பிள்ளை தொல்காப்பியம் பொருளதி காரம் நச்சினார்க்கினியர் உரை பதிப்புரையில் (1885) கல்லாடர் உரை பற்றிய குறிப்பினைத் தருகிறார். டி.என் அப்பனையங்கார் செந்தமிழ் இதழில் (1920, தொகுதி-19, பகுதி-1, பக்கம்-20) கல்லாடருரை என்னும் கட்டுரையில் ரீமான் எம் சேக்ஷகிரி சாதிரியார் (1893) கல்லாடர் உரை குறித்து ஆராய்ந்துள்ளதாகக் குறிப்பிடுகிறார். சோழவந்தான் அரசஞ்சண்முகனார் (1905) ரா. இராகவையங்கார் (1917) பெயர் விழையான், கா. நமச்சிவாய முதலியார்(1920) நவநீதகிருஷ்ண பாரதி(1920) பி. சிதம்பர புன்னைவனநாத முதலியார்(1922) கந்தசாமியார் (1923) வ.உ. சிம்பரம் பிள்ளை (1928) மன்னார்குடி தமிழ்ப் பண்டிதர் ம.நா. சோமசுந்தரம் பிள்ளை (1929) அரங்க. வேங்கடாசலம் பிள்ளை (1929) ஆகியோர் கல்லாடர் உரை குறித்த குறிப்புகளைத் தமது கட்டுரைகளில் குறிப்பிடுகின்றனர். பின்னங்குடி சா. சுப்பிரமணிய சாதிரியார் கல்லாடர் உரை ஓரியண்டல் கையெழுத்துப் புத்தக சாலையில் உள்ளது என்றும், அவ்வுரை எவ்வியல் வரை உள்ளது என்னும் குறிப்புரையும் தருகிறார். 1950 - 1952 வரை தருமபுர ஆதீனம் வெளியிட்ட ஞான சம்பந்தம் இதழில் அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகத்தின் இரண்டாம் பிரதியை ஒட்டிப் பதிப்பிக்கப்பட்டது. கிளவியாக்கம் தொடங்கி இடையியல் 10 - ஆவது நூற்பா வரை வெளிவந்தது. கல்லாடர் உரையைத் தம்முடைய திருத்தங்களுடன் வெளியிட்டவர் மகாவித்துவான் தண்டபாணி தேசிகர். 1963 -இல் தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரைக்கோவை என்னும் பெயரில் ஆபிரகாம் அருளப்பனும் வ.ஐ. சுப்பிரமணியமும் இணைந்து வெளியிட்டனர். இது நான்கு இயலுக்கான பதிப்பாக அமைந்திருந்தது. கழகப் பதிப்பாக 1964 -இல் கு. சுந்தரமூர்த்தி விளக்கவுரையுடன் கல்லாடம் வெளிவந்தது. 1971 -இல் தெ.பொ.மீ அவர்களால் ஒன்பது பிரதிகளைக் கொண்டு ஒப்பிட்டு அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகப் பதிப்பாக வெளிவந்தது. 2003 -இல் தி.வே. கோபாலையர், ந. அரணமுறுவல் ஆகியோரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு தமிழ் மண் பதிப்பகம் கல்லாடனார் உரையைப் பதிப்பித் துள்ளது. 2007 -இல் தி.வே. கோபாலையரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, சரசுவதி மகால் நூலகம் தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரைக்கொத்தில் கல்லாடர் உரையை வெளியிட்டுள்ளது. கல்லாடர் உரை முழுமையாக இதுவரை கிடைத்திலது. இம்மீள்பதிப்பில் செந்தமிழ் அந்தணர் அவர்களின் இலக்கண வாழ்வியல் விளக்கமும் கா. வெள்ளைவாரணனாரின் இயல் விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இவை தொல்காப்பியத்திற்குள் புகுவாருக்கு எளிதான மனநிலையை உருவாக்குவதுடன், ஆய்வாளர்களுக்கு மிகுந்த பயன் உடையதாக இருக்கும். பின்னிணைப்பாக இணைக்கப்பட்டுள்ள கட்டுரைகள், தொல்காப்பிய உரையாசிரியர், உரைகள் குறித்த நுட்பத்தைப் புலப்படுத்துவதுடன், தொல்காப்பியம் பற்றிய நுண்மையை அறியவும் துணை செய்யும். நூற்பா, உரை வழிக் கலைச்சொற்கள், உரையில் உள்ள மேற்கோள் அகராதி போன்றவை தொகுத்துத் தரப்பட்டுள்ளன. தொல்காப்பியத்தை அறிய விரும்புவாருக்கும், ஆய்வாளர்களுக்கும் இத் தொகுப்பு பயன் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியம் மூலமும், உரையோடும் பல பதிப்புகளைக் கண்டுள்ளது. இருப்பினும் தொடக்கத்தில் தமிழ் அறிஞர் பெருமக்களால் உரையோடு தொல்காப்பியத்தைப் பதிப்பித்த பதிப்புகள் இன்று கிடைக்கவில்லை. அந்நிலையைப் போக்கும் பொருட்டு, தமிழரின் பண்பாட்டை, மேன்மையை, உயர்வைப் பொதித்து வைத்துள்ள நூல்களைத் தேடித் தேடிப் பதிப்பிக்கும் தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் ஐயா கோ. இளவழகனார் அவர்கள் பழம் பதிப்புகளைப் பதிப்பிக்க வேண்டும் என்று விரும்பியதன் காரணமாக இப்பதிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பதிப்பிற்கு, தமிழின் மூத்த அறிஞர், செந்தமிழ் அந்தணர் முதுமுனைவர் ஐயா இரா. இளங்குமரனார் அவர்கள் பதிப்பாசிரியராக அமைந்து என்னையும் இப்பணியில் இணைத்துக்கொண்டார்கள். பழந்தமிழ் நூல்களைப் பாதுகாத்து வைத்துள்ள புலவர் பல்லடம் மாணிக்கம் அவர்களிடம் இருந்து தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடர் உரை பெறப்பட்டுப் பதிப்பிற்குப் பயன்படுத்தப்பட்டது. மற்ற உரைகள் அனைத்தும் தமிழ் இணையப் பல்கலைக்கழக நூலகம், உலகத் தமிழாராய்ச்சி இணையப் பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு இம் மீள்பதிப்பிற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. சி. கணேசையர் பதிப்பினை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வழி வெளிவந்த சி. கணேசைய்யரின் தொல்காப்பியப் பதிப்பிற்கு உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தின் மேனாள் இயக்குநர் (முழுகூடுதல் பொறுப்பு) முனைவர் திரு ம. இராசேந்திரன் அவர்கள் கணேசையர் பதிப்பிற்கு எழுதியுள்ள முகவுரை அவருடைய ஒப்புதலுடன் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. முனைவர் பா. மதுகேவரன் அவர்களின் தொல்காப்பியம் பதிப்பு ஆவணம் 7 என்னும் நூற்பகுதியில் இருந்து தொல் காப்பியப் பதிப்பு அடைவுகள் இப்பதிப்பில் இணைக்கப் பட்டுள்ளன. தொல்காப்பியம் தொடர்பான பல்வேறு அறிஞர் பெருமக்களின் ஆய்வுக் கட்டுரைகள் தொகுத்து வழங்கப் பட்டுள்ளன. தொல்காப்பியம் உரைகள் முழுதும் ஆய்வு செய்துள்ள பேராசிரியர் முனைவர் ச. குருசாமி அவர்களின் கட்டுரைகள் இப்பதிப்பில் இணைக்கப் பட்டுள்ளன. பதிப்பிற்குத் துணை செய்த மேற்கண்ட அனைவருக்கும் நன்றியினைப் புலப்படுத்திக் கொள்ளுகிறேன். முனைவர் ஸ்ரீ. பிரசாந்தன் அவர்கள் தொகுத்த இலக்கண வரம்பு நூலிலிருந்த கட்டுரைகள் கணேசையர் பதிப்பில் இணைக்கப்பட்டுள்ளன. செந்தமிழ், தமிழ்ப்பொழில், தமிழியல் முதலிய ஆய்விதழ்களிலிருந்து தொல்காப்பியம் தொடர்பான கட்டுரைகள் சேர்க்கப் பட்டுள்ளன. பதிப்புப் பணியில் ஈடுபடுத்திய ஐயா திரு கோ. இளவழகனார் அவர்களுக்கும் பதிப்பில் இணைந்து செயல்படப் பணித்த ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்களுக்கும், பதிப்பிற்குத் துணைபுரிந்த புலவர் செந்தலை கௌதமன் ஐயா அவர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றி. தட்டச்சுச் செய்து கொடுத்த திருமதி ப. கயல்விழி திருமதி கோ. சித்திரா. அட்டை வடிவமைத்த செல்வன் பா. அரி (ஹரிஷ்), மற்றும் பதிப்பகப் பணியாளர்கள் திரு இரா. பரமேசுவரன், திரு தனசேகரன், திரு கு. மருது, திரு வி. மதிமாறன், இப்பதிப்பிற்கு உதவிய என்னுடைய முனைவர் பட்ட மாணவர்கள் பா. மாலதி, கா. பாபு, சு. கோவிந்தராசு, கா. கயல்விழி ஆகிய அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப் பதிப்புப் பணியில் என்னை முழுவதாக ஈடுபடத் துணையாக நிற்கும் என் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார் அவர்களுக்கு என் நன்றியினை உரித்தாக்குகிறேன். கல்பனா சேக்கிழார் நுழைவுரை தமிழ்மண் பதிப்பகம் இதுகாறும் வெளியிட்டுள்ள அறிஞர் பெருமக்களின் உரைகள் யாவும் பழைய இலக்கிய இலக்கணக் கருவூலத்தின் வாயில்களைத் திறக்கின்ற திறவுகோல்கள்; தமிழரை ஏற்றிவிடும் ஏணிப்படிகள்; வரலாற்றுப் பாதையைக் கடக்க உதவும் ஊர்திகள். தமிழறிஞர்களின் அறிவுச்செல்வங்களை முழு முழு நூல் தொகுப்புகளாக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் பெரும் பங்களிப்பை எம் பதிப்பகம் செய்து வருவதை உலகத் தமிழர்கள் அனைவரும் அறிவர். தமிழகம் வேற்றினத்தவர் படையெடுப்பால் தாக்குண்டு அதிர்ந்து நிலைகுலைந்து தமிழ்மக்கள் தம் மரபுகளை மறந்தபோதெல்லாம் பழம்பெரும் இலக்கியச் செல்வங்களை எடுத்துக்காட்டி விளக்கித் தமிழ் மரபை வாழச் செய்த பெருமை உரையாசிரியர்களுக்கு உண்டு. தமிழ்மொழியின் நிலைத்த வாழ்விற்கும் வெற்றிக்கும் காரணமாக இருப்பவர்கள் உரையாசிரியர்களே ஆவர். இலக்கணக் கொள்கைகளை விளக்கி மொழிக்கு வரம்பு கட்டி இலக்கியக் கருத்துகளை விளக்கி காலந்தோறும் பண்பாட்டை வளர்த்து, தமிழ் இனத்திற்குத் தொண்டு செய்த பெருமை உரையாசிரியர்களையே சாரும். ஒவ்வொரு உரையாசிரியரும் தமிழினம் உறங்கிக் கொண்டிருந்தபோது விழித்தெழுந்து, எழுச்சிக்குரல் கொடுத்த முற்போக்குச் சிந்தனையாளர்கள். அவர்கள் எழுதியுள்ள உரைகள் யாவும் காலத்தின் குரல்கள்; சமுதாயத்தின் எதிர்பார்ப்புகள்; தமிழ் இன வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவைகள்; நெருக்கடியின் வெளிப்பாடுகள் ஆகும். - உரையாசிரியர்கள், (மு.வை. அரவிந்தன்). தொல்காப்பியம் இலக்கணநூல் மட்டுமன்று; தமிழரின் அறிவுமரபின் அடையாளம். தமிழரின் வாழ்வியலை, மெய்யியலைப் பாதுகாத்த காலப்பேழை. இதில் பொதிந்துள்ள தருக்கவியல் கூறுகள் இந்தியத் தருக்கவியல் வரலாற்றின் மூல வடிவங்கள் - அறிஞர்களின் பார்வையில் பேரறிஞர் அண்ணா, (முனைவர் க. நெடுஞ்செழியன்) மேற்கண்ட அறிஞர்களின் கூற்று, தொல்காப்பியத்தின் இன்றியமை யாமையையும், உரையாசிரியர்களின் கருத்துச் செறிவையும் உழைப்பையும் உணர்த்த வல்லவை. சி.வை. தாமோதரம் பிள்ளை, கா. நமச்சிவாய முதலியார், வ.உ. சிதம்பரனார், சி. கணேசையர், இரா. வேங்கடாசலம் பிள்ளை, தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் போன்ற பெருந்தமிழ் அறிஞர்களின் உழைப்பால் உருவான இவ் வாழ்வியல் கருவூலம் தொல்காப்பிய உரைத்தொகை எனும் பெயரில் தமிழ்மண் பதிப்பகம் மீள் பதிப்பு செய்துள்ளது. 2003 -ஆம் ஆண்டில் எம் பதிப்பகம் தொல்காப்பியத்தை (எழுத்து - சொல் - பொருள்) முழுமையாக வெளியிட்டுள்ளது. இதுகாறும் வெளிவந்துள்ள தொல்காப்பிய நூல் பதிப்புகளில் இடம் பெறாத அரிய பதிப்புச் செய்திகள் இவ்வுரைத் தொகையில் சேர்க்கப்பட்டுள்ளன. இவ்வுரைத் தொகை எல்லா நிலையிலும் சிறப்பாக வெளிவருவதற்கு தோன்றாத் துணையாக இருந்தவர்களைப் பற்றி தனிப்பக்கத்தில் பதிவு செய்துள்ளோம். இவ்வாழ்வியல்நூல் பிழையற்ற செம்பதிப்பாக வெளிவருவதற்கு முதன்மைப் பதிப்பாசிரியர் முதுமுனைவர் ஐயா இரா. இளங்குமரனார், இணை பதிப்பாசிரியர் அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் ஆகியோரின் உழைப்பும் பங்களிப்பும் என்றும் மறக்க முடியாதவை. எம் தமிழ் நூல் பதிப்பிற்கு எல்லா நிலையிலும் தொடர்ந்து ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் இனிய நண்பர் புலவர் செந்தலை ந. கவுதமன் அவர்களின் தன்னலம் கருதா தமிழ்த் தொண்டிற்கு என்றும் நன்றி உடையேன். தமிழர்கள் தம் இல்லம்தோறும் பாதுகாத்து வைக்க வேண்டிய இவ்வருந்தமிழ்ப் புதையலைத் தமிழ் கூறும் உலகிற்கு வழங்குவதைப் பெருமையாகக் கருதி மகிழ்கிறோம். இப்பதிப்பைத் தமிழ்க்கூறும் நல்லுலகம் ஏற்றிப்போற்றும் என்று நம்புகிறோம். கோ. இளவழகன் நூலாக்கத்திற்கு உதவியோர் முதன்மைப்பதிப்பாசிரியர்: முதுமுனைவர் இரா. இளங்குமரனார் இணைப்பதிப்பாசிரியர்: முனைவர் கல்பனா சேக்கிழார் நூல் வடிவமைப்பு: திருமதி. கயல்விழி, கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (Harrish) திருத்தத்திற்கு உதவியோர்: புலவர் பனசை அருணா புலவர் மு. இராசவேலு முனைவர் அரு. அபிராமி முனைவர் ஜா. கிரிசா நூலாக்கத்திற்கு உதவியோர்: திருமிகு. இரா. பரமேசுவரன், திருமிகு. வே. தனசேகரன், திருமிகு. கு. மூர்த்தி, திருமிகு. வி. மதிமாறன் கணினியில் நூலாக்கம்:  மாணவர் நகலகம்,  பிராசசு இந்தியா,  ரியல் இம்பேக்ட் சொல்யூசன்,  தூரிகை பிரிண்ட் குறுக்க விளக்கம் அகத். அகத்திணையியல் அகம். அகநானூறு உயிர். உயிர்மயங்கியல் உரு. உருபியல் எச்ச. எச்சவியல் எழுத். எழுத்ததிகாரம் ஐங்குறு. ஐங்குறுநூறு கலித். கலித்தொகை கிளவி. கிளவியாக்கம் குற். குற்றியலுகரப் புணரியல் குறள். திருக்குறள் குறுந். குறுந்தொகை கைக். கைக்கிளைப்படலம் சிலப். சிலப்பதிகாரம் செய். செய்யுளியல் சொல். சொல்லதிகாரம் தொல். தொல்காப்பியம் நாலடி. நாலடியார் நூன். நூன்மரபு பட்டினப். பட்டினப் பாலை பிற். பிற்சேர்க்கை புள்ளி. புள்ளிமயங்கியல் புணர். புணரியல் புறம். புறநானூறு பு.வெ. புறப்பொருள் வெண்பாமாலை பெரும்பாண். பெரும்பாணாற்றுப்படை பொருந. பொருநராற்றுப்படை மதுரைக். மதுரைக்காஞ்சி மர. மரபியல் மலைபடு. மலைபடுகடாம் முத்தொள். முத்தொள்ளாயிரம் முருகு. (திரு)முருகாற்றுப்படை யா.வி. யாப்பருங்கல விருத்தி உள்ளடக்கம் மரபியல் ....... 3 பின்னிணைப்புகள் 1. தொனி ....... 167 2. யாப்பருங்கலக்காரிகை யுரைத்திருத்தம் ....... 172 3. மெய்ப்பாடு ....... 174 4. தொல் பொருள் உவமவியல் ....... 186 5. உரைநெறியும் விளக்கமும் ....... 197 6. இலக்கணத்தில் எது இடம்பெற வேண்டும்? ....... 223 - நூற்பா நிரல் ....... 233 - செய்யுள் நிரல் ....... 238 - அரும்பத (அருஞ்சொல்) விளக்கம் ....... 248 - தொல்காப்பியப் பதிப்புகள் ....... 261 பொருளதிகாரம் பேராசிரியம்-3 பின்னான்கியல் சி. கணேசையர் - 1943 முதற் பதிப்பு 1943இல் சுன்னாகம் திருமகள் அழுத்தகத்திற் அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளது. 2007இல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப் பதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு மீள் பதிப்பாக இந்நூல் வெளிவருகிறது. மரபியல் உலக வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் நெடுங்காலமாக வழங்கிவரும் சொற்பொருள் மரபு உணர்த்தினமையின் இது மரபியல் என்னும் பெயர்த்தாயிற்று. இவ்வதிகாரத்துக் கூறப்பட்ட பொருட்கு மரபு உணர்த்தினமையான் மரபியல் என்னும் பெயர்த்து என்பர் இளம்பூரணர். கிளவியாக்கத்து மரபென்று வரையறுத்து ஓதப்பட்டனவும் செய்யுளியலுள் மரபென்று வரையறுத்து ஓதப்பட்டனவுமின்றி, இருதிணைப் பொருட் குணனாகிய இளமையும் ஆண்மையும் பெண்மையும் பற்றிய வரலாற்று முறைமையும், உயர்திணை நான்கு சாதியும் பற்றிய மரபும்; அஃறிணைப் புல்லும் மரனும் பற்றிய மரபும்; அவை பற்றிவரும் உலகியல் மரபும் நூன் மரபும் என இவை யெல்லாம் மரபெனப்படும் எனவும், முன்னர் வழக்கிலக்கணங் கூறி யதன்பின் செய்யுளிலக்கணம் செய்யளியலுட் கூறினான், அவ் விரண்டிற்கும் பொதுவாகிய மரபு ஈண்டுக் கூறினமையின் இது செய்யுளியலோடு இயையுடைத்தாயிற்று எனவும், வழக்குஞ் செய்யுளுமென்று இரண்டு மல்லாத நூலிற்கும் ஈண்டு மரபு கூறினமையின் இது செய்யுளியலின் பின் வைக்கப்பட்டது எனவும் கூறுவர் பேராசிரியர். இவ்வியலிலுள்ள சூத்திரங்களை 112-ஆக இளம்பூரணரும், 110-ஆகப் பேராசிரியரும் பகுத்து உரை வரைந்துள்ளார்கள். பார்ப்பு, பறழ், குட்டி, குருளை, கன்று, பிள்ளை, மகவு, மறி, குழவி எனவரும் இவ்வொன்பதும் இளமைப் பண்பு பற்றிய மரபுப் பெயர்களாகும். ஏறு, ஏற்றை, ஒருத்தல், களிறு, சே, சேவல், இரலை, கலை, மோத்தை, தகர், உதள், அப்பர், போத்து, கண்டி, கடுவன் என்பனவும் பிறவும் ஆண்பால் பற்றிய மரபுப் பெயர்களாகும். பேடை, பெடை, பெட்டை, பெண், மூடு, நாகு, கடமை, அளகு, மந்தி, பாட்டி, பிணை, பிணவு, பிடி என்பன பெண்மை பற்றிய மரபுப் பெயர்களாம் - என இம்மூவகைப் பெயர்களையும் இவ்வியலில் முதல் மூன்று சூத்திரங்களில் ஆசிரியர் தொகுத்துக் கூறியுள்ளார். இளமைப் பெயர் - இளமைப் பண்பு பற்றிய பெயர்களுள் இவையிவை இன்னின்ன வற்றுக்கு உரியன என்பன இவ்வியலில் 4-முதல் 26-வரையுள்ள நூற்பாக்களால் விரித்து விளக்கப் பெற்றுள்ளன. பார்ப்பு, பிள்ளை என்னும் இரண்டும் பறப்பவற்றின் இளமைப் பெயர்களாம். இவை ஊர்வனவற்றிற்கும் உரியனவாம். மூங்கா, வெருகு, எலி, அணில் என்னும் இவை நான்கும் குட்டி என்ற பெயர்க்குரியன இவற்றைப் பறழ் என்ற பெயரால் வழங்கினும் குற்றமில்லை, நாய், பன்றி, புலி, முயல், நரி என்பவற்றின் இளமைப் பெயர் குருளை என்பதாகும். இவ்வைந்தினையும் குட்டி பறழ் என்ற பெயர்களால் வழங்குதலும் பொருந்தும். மேற்கூறிய ஐந்தனுள் நாயல்லாத ஏனை நான்கிற்கும் பிள்ளை என்ற பெயரும் உரியதாகும். யாடு, குதிரை, நவ்வி, உழை, புல்வாய் எனச் சொல்லப் பட்ட ஐந்தும் மறி என்னும் இளமைப் பெயர் பெறுவன. மரக்கிளையினையே வாழுமிடமாகக் கொண்ட குரங்கும் குட்டி என்று கூறப்படும். மகவு, பிள்ளை, பறழ், பார்ப்பு என்ற இந்நான்கு பெயர்களும் குட்டி என்பது போல அக் குரங்கின் பகுதிக்கு உரியவாகும். கன்று என்னும் பெயர்க்குரியன; யானை, குதிரை, கழுதை, கடமை, மான், எருமை, மரை, கவரி, கராகம் ஒட்டகம் என்பனவாம். குழவி என்ற பெயர்க்குரியவை: யானை, ஆ, எருமை கடமை, மரை, குரங்கு, முசு, ஊகம் என்பனவாம். மேற்குறித்தவற்றுள் குழவி, மக, என்ற இரு பெயர்களைத் தவிர ஏனைய பெயர்கள் மக்களுக்கு உரியனவாக வழங்கப் பெறா. பிள்ளை, குழவி, கன்று, போத்து என்னும் இந்நான்கும் ஓரறிவுயிர்கட் குரியனவாய் வழங்கும் இளமைப் பெயர்களாம். இப்பெயர்களால் நெல்லும் புல்லும் குறிக்கப்பெறுதல் இல்லை. பயின்று வழங்கும் இளமைப் பெயர்களைக் கூறுமிடத்து மேற்கூறியவை யன்றி வேறில்லை என்பர் தொல்காப்பியர். அறுவகை உயிர்ப்பாகுபாடு:- மேல் இளமைப் பெயர் பற்றிய மரபு கூறும் வழி, ஓரறிவுயிர் என்னும் உயிர்ப் பாகுபாடு அதிகாரப்பட்டமையால் அதனொடு பொருந்த உலகத்துப் பல்லுயிர்களையும் அறுவகையாக இவ்வியல் 27-முதல் 34-வரை யுள்ள சூத்திரங்களால் வகைப்படுத்திக் கூறியுள்ளார். உற்றால் அறிவதாகிய உடம்புணர்ச்சி யொன்றேயுடையது ஓரறிவுயிர். பரிசவுணர்ச்சியாகிய அதனோடு சுவையறிதலாகிய நாவுணர்வும் உடையது ஈறறிவுயிர். இவ்விரண்டுடன் மூக்கினால் முகர்ந்தறிதலாகிய நாற்ற வுணர்ச்சியும் உடையது மூவறிவுயிர். இம்மூவகையுணர்வுடன் கண்களாற் கண்டறித லாகிய ஒளி யுணர்ச்சியும் பெற்றது நாலறிவுயிர். இந்நால்வகை யுணர்வுடன் ஓசையறிதலாகிய செவியுணர்வும் வாய்க்கப் பெற்றது ஐயறி வுயிராகும். மேற்கூறிய ஐம்பொறி யுணர்வோடு உய்த்துணர் வாகிய மனவுணர்வும் பெற்று விளங்குவது ஆறறிவுயி ரெனப்படும். புல்லும் மரனும் ஓரறிஉடையன. அவ்வகையைச் சார்ந்தன பிறவும் உளவாம். நந்தும் முரளும் ஈரறிவுடையன; அவ்வகையைச் சார்ந்தன பிறவும் உள. சிதலும் எறும்பும் மூவறிவுடையன; அவ்வகையைச் சார்ந்தன பிறவும் உள. நண்டும் தும்பியும் நான்கறிவுடையன; அவ்வகையைச் சார்ந்தன பிறவும் உள. மாவும் புள்ளும் ஐயறிவுடையன; அவ்வகையைச் சார்ந்தன பிறவும் உள. மக்கள் தாம் ஆறறிவுடைய உயிர்களாவர்; அவ்வகையைச் சார்ந்தன பிறவும் உளவாம் என்பர் ஆசிரியர். உலகிலுள்ள உயிர்த்தொகுதிகளின் உடம்புகளையும் அவ் வுடம்புகளில் வையிய உயிர்கள், மெய், வாய், மூக்கு, கண், செவி என்னும் ஐம்பொறிகளும் மனமும் ஆகிய அறுவகை வாயில்களையும் படிப்படியாகப் பெற்று அறிவினாற் சிறந்து விளங்கும் இயல்பினையும் நன்கு கண்டு. அவற்றை ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் ஈறாக அறுவகையாகப் பகுத்துரைக்கும் இம்முறை, தமக்கு நெடுங்காலத்திற்கு முன்னரே நுண்ணறி வுடைய புலவர்களால் ஆராய்ந்து வகுக்கப்பெற்று வழங்கிவரும் தொன்மை வாய்ந்ததென்பதனை நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே (தொல்-மரபு-27) என்ற தொடரால் ஆசிரியர் தொல்காப்பியனார் தெளிவாகக் குறித்துள்ளார். ஐம்பொறி யுணர்வுக்கும் அடிப்படையாய் விளங்குவது மன வுணர்வாயினும், மனமாகிய கருவியினை வாயிலாகக் கொண்டு நன்றுந்தீதும் பகுத்துணரும் ஆற்றல் மக்களாகிய ஒருசார் உயிர்த் தொகுதிக்கே வெளிப்படப் புலனாதலின் மக்கள் தாமே ஆறறி வுயிரே என்றார் ஆசிரியர். ஒரு பொருளைக் குறித்து மனம் எண்ணிக் கொண்டிருக்கும் நிலையில் மற்றொரு பொருள் கண்ணெதிர்ப்பட்டால் அதனைக் கண்ணென்னும் பொறி யுணர்வு கொள்ள அவ் வுணர்வின் வழியே மனம் திரிந்து அக்காட்சியில் அறிவித்தது பொறியுணர்வாதலால் மனவுணர்வும் பொறியுணர்வும் தம்முள் வேற்றுமையுடையன என்பது புலனாம். அன்றியும் தேனாகிய சுவைப்பொருளை நாவென்னும் பொறி யுணர்ந்தவழி இன்புறுதலும் அதனையே கண்ணுள் வார்த்து மெய்யுணர்ந்த வழித் துன்புறுதலும், கத்தூரியாகிய மணப்பொருளை மூக்கு உணர்ந்தவழி இன்புறுதலும் அதனையே கண்ணுணர்ந்த வழி இன்பங் கொள்ளாமையும் உடைமையால் அவை அவ்வப் பொறியுணர் வெனப்படும். மனமானது, கனவு நிலையிற் போன்று நனவு நிலையிலும் ஐம்பொறிகளின் உதவி வேண்டாது பொருள்களின் நலந்தீங்குகளைப் பகுத்துணரும் ஆற்றலுடையதென்பர் அறிஞர். அங்ஙனம் ஐம்பொறிகளின் உதவியின்றி மனம்தானே உய்த்துணரும் உணர்வு மனவுணர் வெனப்படும். இவற்றுள் ஐம்பொறி யுணர்வுக்கும் அடிப்படை யாய் முற்பிறந்தது மனவுணர்வாமாகவே, பொறியுணர் வென்பது, இதனை நுகர்கின்றோம் என்று எண்ணும் உய்த்துணர்வுக்கு இடமின்றியே அவ்வப் பொறிகளுக்கு அமைந்த பழக்கமெனக் கருதும்படி தன்னியல்பில் நிகழ்வதாகும் எனப் பேராசிரியர் விளக்கிய திறம் இங்கு நினைக்கத் தகுவதாகும். ஆண்பாற் பெயர்:-இவ்வியல் 35 முதல் 51 வரையுள்ள சூத்திரங்களால் ஆண்மைப் பண்பு பற்றிய பெயர்களுள் இவையிவை இன்னின்னவற்றுக்கு உரியன என்பது விரித்துரைக் கப்படுகின்றது. களிறு என்ற ஆண்பாற் பெயரால் விதந்து பேசப்படுதல் யானைக்கு உரியதாகும். பன்றியும் களிறு என்ற பெயரால் வழங்குதல் விலக்கத் தக்கதன்றாம். ஒருத்தல் என்னும் பெயர் பெறுவன: புல்வாய், புலி, உழை, மறை, கவரி, கராம், யானை, பன்றி, எருமை என்பனவாம். ஏறு என வழங்கப்படுவன: பன்றி, புல்வாய், உழை, கவரி, எருமை, மரை, சுறவு என்பனவாம். போத்து என்ற பெயர் பெறுவன: பெற்றம், எருமை, புலி, மரை, புல்வாய், நீர்வாழ்சாதி, மயில், எழால் என்பனவாம். இரலை, கலை என்ற பெயர்கள் இரண்டும் புல்வாய் என்னும் இனத்துள் ஆண்பாற்கு உரியன. இவற்றுள் கலை என்னும் பெயர் உழை, முசு என்பவற்றிற்கும் உரியதாகும். மோத்தை, தகர், உதள், அப்பர் என்ற பெயர்கள் ஆடுகளில் ஆண்பாற் குரியனவாய் வழங்கும். சேவல் என்ற பெயர், தோகையையுடைய மயிலல்லாத ஏனைப் பறவையினத்துள் ஆண்பாற்கொல்லாம் ஒப்பவுரிய தாகும். ஏற்றை என்ற பெயர், ஆற்றலுடைத்தாகிய ஆண்பாற் கெல்லாம் பொதுவாக வழங்குதற்குரியதாம். ஆண்என்றசொல் இருதிணை ஆண்பாற்கும், பெண் என்றசொல் இருதிணைப் பெண்பாற்கும் வழங்குதல் உலக வழக்கிற் காணப்படும். பெண்பாற் பெயர்:-பெண்மைப்பண்பு பற்றிய பெயர்களுள் இவையிவை இன்னின்னவற்றுக்குரியன என்பதனை இவ்வியல் 52-முதல் 68-முடியவுள்ள சூத்திரங்களாலும் இம் மரபுபற்றிய அதிகாரப் புறனடையினை 69, 70-ஆம் சூத்திரங்களாலும் எடுத்துரைப்பர் ஆசிரியர். பிடி என்னும் பெண்பாற் பெயர், யானையினத்துக்கு உரியதாகும். பெட்டை என்ற பெண்பாற் பெயர் பெறுதற்குரியவை. ஒட்டகம், குதிரை, கழுதை, மரை என்பனவும் பறவைகளும் ஆகும். பேடை, பெடை என்ற பெண்மைப் பெயர்கள் பறவை யினத்துக்குப் பொருந்துவன. அளகு என்னும் பெண்மைப் பெயர், கோழி, கூகை என்ற இவ்விரண்டிற்கல்லது ஏனையவற்றுக்கு ஏலாததொன்றாம். இப் பெயர் ஒரோவழி மயிலுக்குரியதாய் வருதலும் உண்டு. பிணை என்னும் பெண்மைப் பெயர்க்குரியன: புல்வாய், நவ்வி, உழை, கவரி என்னும் நான்குமாம். பிணவு, பிணவல் என்னும் பெண்மைப் பெயர்கள் பன்றி புல்வாய், நாய் என்பவற்றுக்கு உரியன. ஆ என்னும் பெண்மைப்பெயர், பெற்றம், எருமை, மரை என்ற மூன்றிற்கும் உரியதாகும். பெண், பிணவு என்ற பெயர்கள், மக்களிற் பெண் பாலுக்கு உரியனவாம். நாகு என்னும் பெண்பாற்பெயர், எருமை மரை, பெற்றம், நீர்வாழுயிராகிய நந்து என்பவற்றுக்கு உரியதாகும். மூடு, கடமை என்ற பெண்மைப் பெயர்கள் ஆட்டினத் துக்கே உரியனவாம். மந்தி என்னும் பெண்மைப் பெயர், குரங்கு, முசு, ஊகம் என்ற மூன்றற்கும் உரியதாகும். ஆண் குரங்கினைக் கடுவன் என்றும், மரப் பொந்தினுள் வாழும் கூகையைக் கோட்டான் என்றும், கிளியைத் தத்தை என்றும், வெருகினைப் பூசை என்றும், ஆண் குதிரையைச் சேவல் என்றும், பன்றியை ஏனம் என்றும், ஆண் எருமையினைக் கண்டி என்றும் இவ்வாறு வழங்கும் பெயர்கள் வழக்கினுள் நிலைபெற்று விட்டமையால் இவை கற்றறிந்தோரால் விலக்கப்படா எனவும், பெண் ஆண் பிள்ளை என்ற பெயர்களும் மேற்கூறியவாறு வழக்கினுள் நிலைபெற்றன எனவும் கூறுவர் ஆசிரியர். இவ்வியலில் 71 முதல் 85 முடியவுள்ள சூத்திரங்கள் பதினைந்தும் உயர்திணை நான்கு சாதியும் பற்றிய மரபு உணர்த்துவனவாக அமைந்துள்ளன. நூல், கரகம், முக்கோல், மணை என்பன அந்தணர்க்கு உரியனவாம். படை, கொடி, குடை, முரசு, புரவி, களிறு, தேர், தார், முடி முதலாகப் பொருந்துவன பிறவும் அரசர்க்கு உரியனவாம். அந்தணாளர்க்கு உரியனவாக ஓதப்பட்டவற்றுள் அரசர்க்குப் பொருந்துவனவும் சில உள. பரிசில் கடாநிலையும் பரிசில் விடையும் போல்வனவும் பாடாண்திணைக்குரிய துறைப்பொருள் பற்றிவரும் கிழமைப் பெயர்களும் நெடுந்தொகை, செம்மல் என்பன முதலாகவரும் பிறவும் சாதிவகையாற் பொருந்தச் சொல்லப் பெறுதல் அந்தணர்க்கு உரியதன்றாம். ஊரும், இயற்பெயரும் சிறப்புப்பெயரும் ஆகிய பெயர்களும் தத்தமது தொழிலுக்கேற்ற கருவியும் ஆகிய அவை அவரவர்களைச் சார்த்திச் சொல்லப்பெறும். தலைமைக்குணமுடையாராகக் கூறுஞ்சொல்லும் அவரவர் நிலைமைக்குப் பொருந்துமாறு கூறப்படும். இடையிருவகையோராகிய அரசரும் வணிகரும் அல்லது ஏனையோர் படைப்பகுதி பெறார். வைசிகன் வாணிகத்தால் வாழும் வாழ்க்கையைப் பெறு வான். எட்டுவகைக் கூலங்களாகிய கூலங்களைப் பெருக்குதலும் வணிகரது கடமையாகும். கண்ணியும் தாரும் அவர்க்குச் சொல்லப்பெறும். வேளாண் மாந்தர்க்கு உழுதுண்டு வாழ்தல் அல்லது வேறு தொழில் இல்லை யென்பர். வேந்தரால் ஏவப்பட்ட தொழிலினால் படையும் கண்ணியும் அவர்க்கு உளவாம் என்று கூறுவர். அந்தணாளர்க்கு அரசர் தன்மையும் நீக்கத் தக்கதன்று. வில், வேல், கழல், கண்ணி, தார், மாலை, தேர், வாள் எனச் சொல்லப்பட்டன வெல்லாம் மன்னனால் ஏவப்படும் மரபுடைய ஏனோர்க்கும் உரியவாகும். அன்னராயினும் இழிந்தோர்க்கு இவை கூறப்படுதல் இல்லை. உயர்திணை நான்கு சாதியும் பற்றிய மரபுகளைக் கூறுவன வாக 71 முதல் 85 முடியவுள்ள பதினைந்து சூத்திரங்களும் பிற்காலத்தாரால் இவ்வியலிற் புகுத்தப்பட்ட இடைச்செருகல் என்பது முன்னர் விளக்கப்பட்டது. மக்களை நிலைவகையாற் பகுத்துரைப்பதன்றி நிறவகை யாகிய வருணத்தாற் பகுத்துரைக்கும் நெறியினை ஆசிரியர் தொல்காப்பியனார் மக்களது ஒழுகலாறுகளை விரித்துரைக்கும் முன்னைய இயல்களில் யாண்டும் குறிப்பிடவேயில்லை. இளமை, ஆண்மை, பெண்மை முதலியன காரணமாகத் தம் காலத்திற் பயின்று வழங்கிய மரபுப் பெயர்களைத் தொகுத்துணர்த்தும் முறையிலேயே ஆசிரியர் இம்மரபியலை அமைத்துள்ளார். இதன் கண் 1-முதல் 70-வரையுள்ள சூத்திரங்களும், 86-முதல் 90-வரையுள்ள சூத்திரங்களும் இம்மரபினையே தொடர்ந்து விரித்துரைப்பனவாக அமைந்துள்ளன. இயல்பாக அமைந்த இத்தொடர்பு இடையுறவு பட்டுச் சிதையும் நிலையில் உயர்திணை நான்கு சாதிகளையும் பற்றிய பதினைந்து சூத்திரங்கள் 71-முதல் 85-வரையுள்ள எண்ணுடையனவாக இதன்கண் இடையே புகுத்தப்பட்டுள்ளன. முன், அகத்திணை யொழுகலாற்றுக்குரிய மக்களை வகைப் படுத்துக்கூறிய நிலையிலும் புறத்திணை யொழுகலாற்றில் வாகைத் திணைப்பகுதிகளை விரித்துரைத்த நிலையிலும் மக்களை அவர்கள் வாழும் நிலத்தாலும் அவரவர்கள் மேற்கொண்ட தொழில் வகையாலும் பகுத்துரைத்ததன்றி அவர்களை வேளாண் மாந்தரென்றோ வைசியரென்றோ இவ்வாறு வருணம் பற்றி ஆசிரியர் யாண்டும் குறிப்பிடவே யில்லை. வைசிகன் என்ற சொல், சங்கச் செய்யுட்களில் யாண்டும் வழங்கப்பெற்றிலது. வருணம் நான்கு என்ற தொகையினை ஆசிரியர் முன் தெளிவாகச்சொல்லாத நிலையில் அரசர் வணிகர் என்ற இருதிறத்தாரையும் இடையிரு வகையோர் என இங்குக் குறிப்பிட்டார் எனல் பொருந்தாது. அன்றியும் இவ்விருதிறத் தோரல்லாத பிறர்க்குப் படைப்பகுதி கூறுதல் இல்லையெனக் கூறும் இவ்வியல் 77-ஆம் சூத்திர விதி, பின்னுள்ள 82-ஆம் சூத்திர விதிக்கும் சங்க நூல்களிற் காணப்படும் பழந்தமிழ் வழக்குக்கும் முற்றிலும் முரண் பட்டதாகும். வேளாண் மாந்தர் என்றதொரு குலப்பிரிவு தொல்காப்பியனாரால் முன்னர்க் குறிக்கப் பெறவில்லை. உரிப்பொருளாகிய ஒழுகலாறு பற்றிய இச் செய்திகள் முதல், கரு, உரி என்னும் பொருட் பகுதிகளை விளக்க அகத்திணையியல். புறத்திணையியல் முதலாக முன்னுள்ள இயல்களிற் கூறத்தக்கனவேயன்றி, மரபுச் சொற்களின் வழக்குப் பயிற்சியைக் கூறுதற்கமைந்த இம் மரபியலில் இடம் பெறத்தக்கன அல்ல. ஆகவே, 71-முதல் 85-வரையுள்ள இச்சூத்திரங்கள் பதினைந்தும் நால்வகை வருணப் பாகுபாடு இத்தமிழ் நாட்டில் உலக வழக்கில் வேரூன்றத் தொடங்கிய மிகப் பிற்காலத்திலே தான் இம்மரபியலில் இடம் பெற்றிருத்தல் வேண்டுமென்பதும், பிற்றைநாளில் களப்பிரர், பல்லவர் முதலிய அயல் மன்னரது ஆட்சியுட்பட்டுத் தமிழ்நாடு அல்லற்பட்ட நிலையிலே தமிழரது உரிமை யுணர்வினைச் சிதைத்தற்குரிய இத்தகைய அடிமைக் கருத்துக்கள் சில தமிழ்முதல்நூலாகிய தொல்காப்பியத்திலும் அயலாரால் மெல்லமெல்ல நுழைக்கப் பட்டமை வியப்பிற்குரிய தன்றென்பதும், மனு முதலிய வடமொழி நூல்களால் வளர்க்கப்பட்ட நால்வகை வருணத்தைப் பற்றிய நம்பிக்கை தமிழ் மக்கள் உள்ளத்தில் வேரூன்றி நிலைபெற்றுவிட்ட பிற்காலத்திலே வாழ்ந்தவர்கள் இளம்பூரணர், பேராசிரியர் முதலிய பெருமக்களாதலின் அன்னோர் தொல்காப்பியத்திற்கு உரைகாணும் நிலையில் தம் காலச் சூழ்நிலையில் அகப்பட்டு இடைச் செருகலாகிய இச்சூத்திரங்களைத் தொல்காப்பியனார் வாக்கெனவே உண்மையாக நம்பி உரையெழுத நேர்ந்த தென்பதும் ஆழ்ந்துணரத் தக்கனவாகும். இவ்வியல் 86-முதல் 90-வரையுள்ள சூத்திரங்களால் ஓரறி வுயிர்களுக்குரிய சொல்மரபுகள் உணர்த்தப்படுகின்றன. உள்ளே வயிரமின்றிப் புறத்தே வயிரமுடையவற்றைப் புல் எனவும், உள்ளே வயிரமுடையனவற்றை மரன் எனவும் வழங்குவர். தோடு, மடல், ஒலை, எடு, இதழ், பாளை, ஈர்க்கு, குலை எனக் கூறப்பட்ட உறுப்பின் பெயர்களும் இவற்றையொத்த பிறவும் புல் என்ற வகையைச் சார்ந்துவரும். இலை, தளிர், முறி, தோடு, சினை, குழை, பூ, அரும்பு, நனை முதலாகச் சொல்லப்பட்டனவும் அனையவை பிறவும் மரன் என்ற வகையைச் சார்ந்து வரும் உறுப்பின் பெயர்களாகும். காய், பழம், தோல், செதிள், வீழ் என்பன புல், மரம் என்னும் அவ்விருவகைக்கும் உரியனவாகும். நிலம், நீர், தீ, வளி, விசும்பு என்னும் ஐம்பெரும் பூதங்களும் கலந்த மயக்கம் இவ்வுலகம் ஆதலால் இருதிணையும் ஐம்பாலும் வழுவாமல் திரிபின்றிப் பொருந்திய சொற்களால் உலகத்துப் பொருள்களை வழங்குதல் வேண்டும். உலக வழக்காவது வரலாற்று முறைமை பிறழாது வருதலே தக்கதாதலின் அவ்வழக்கினை அடியொற்றியமைந்த செய்யுட்களும் மேற் குறித்த மரபு நிலையில் திரியாது அமைதல் வேண்டும். மரபு நிலை திரிந்து வேறுபடுமானால் உலகத்துச் சொல்லெல்லாம் பொருளிழந்து வேறுபட்டுச் சிதைவனவாம். உலக நிகழ்ச்சி யெல்லாம் உயர்ந்தோரையே சார்பாகக்கொண்டு நிகழ்தலால் செய்யுட்கு அடிப்படையாகிய வழக்கென்று சிறப்பித்துச் சொல்லப்படுவது, உயர்ந்தோர் வழங்கிய வழக்கேயாகும் என இவ்வியல் 91 முதல் 94 வரையுள்ள சூத்திரங்களால் மரபு பற்றிய இலக்கணத்தை ஆசிரியர் நிறைவு செய்துள்ளார். உலக வழக்கும் செய்யுள் வழக்கும் ஆகிய இருவகை வழக்கிலும் நெடுங் காலமாகப் பயின்று வழங்கும் மரபுச் சொற்கள், இருதிணையும் ஐம்பாலும் ஆகிய பொருள்களின் இளமைத் தன்மை, ஆண்மை, பெண்மை முதலிய இயல்புகளைப் புலப்படுத்தும் நிலையில் அமைந்தன எனவும் இருதிணைப்பொருள்களின் இயல்புகளை நுண்ணிதின் விளக்குவனவாகிய இம்மரபுச் சொற்களின் பொருள்நிலை மாறுபடாதபடி உலக வழக்கினையும் செய்யுள் வழக்கினையும் போற்றிக்காத்தல் வேண்டுமெனவும் ஆசிரியர் தொல்காப்பியனார் இவ்வியலில் விளக்கிய திறம் அறிந்து போற்றத் தக்கதாகும். இவ்வியலின் இறுதியில் 95 முதல் 112 வரையுள்ள சூத்திரங்கள் நூலினது இலக்கணம் உணர்த்துவனவாக அமைந்துள்ளன. நூலுக்கு இன்றியமையாத மரபிற் பிறழாதனவாகி உரைக் கப்படும் நூல்கள் முதனூல், வழிநூல் என இருவகைப்படும். வினையின் நீங்கி விளங்கிய அறிவினையுடைய முதல்வனாற் செய்யப் பெற்றது முதனூலாகும். முதல்வன் செய்த நூலின் வழியே இயற்றப் பெறுவது வழிநூல் எனப்படும். விரிந்து பரந்த பொருள்களைத் தொகுத்துக் கூறுவதும், தொகுத்துச் சொல்லப்பட்டவற்வை விரித்து விளக்குவதும், தொகையும் விரியும் ஆகிய அவ்விருதிறமும் ஒருங்கு அமைந்ததும், பிறமொழி நூல்களை அடியொற்றி மொழி பெயர்க்கப் பெறுவதும் என வழி நூல் நான்கு வகைப்படும். சூத்திரத்தின் பொருளை விரித்துரைக்கும் நிலையில் அமைந்த காண்டிகையுரையும் அதனையும் விளங்கக்கூறும் உரை விகற்பமும் உடையதாகிப் பத்துவகைக் குற்றமுமின்றி நுண் பொருளினவாகிய முப்பத்திரண்டு உத்திகளோடும் பொருந்தி வருவது நூல் எனச் சிறப்பித்துரைக்கப்படுவதாம். சூத்திரத்தின் முன்னர் உரையை விரித்துரைக்குமிடத்தும் சூத்திரப் பொருள் விளங்கக் காண்டிகையுரையினை இயைத் துரைக்குமிடத்தும் இப்பொருளை இவ்வாறு கூறல் வேண்டு மென விதித்தலும், இப்பொருளை இவ்வாறு கூறலாகாது என விலக்குதலும் ஆகிய இருவகையோடு அவ்விடத்துப் பொருந்துவன கூட்டியுரைக்கப்படும். மேல், தொகுத்தல் முதலாக நால்வகையாற் சொல்லப் பட்ட பொருளோடு சிலவெழுத்தினால் இயன்ற யாப்பினதாய், விரித்துரைத்தற்கேற்ற பொருளனைத்தையும் தன்னகத்து அடக்கி நுட்பமும் விளக்கமும் உடையதாகிப் பல்லாற்றானும் பொருளை ஆராய்தற்குக் கருவியாய் விளங்குவது சூத்திரத்தின் இயல்பாகும். சூத்திரத்தில் அமைந்த சொற்பொருள்களை விட்டு நீங்காத விரிவுடன் பொருந்தி அதன் பொருளை முடித்தற்கேற்ற ஏதுவும் எடுத்துக்காட்டும் வாய்ந்த உரை காண்டிகை யெனப்படும். சூத்திரத்தினது உட்பொருளேயன்றி அதற்கு இன்றியமை யாது பொருந்துவனவெல்லாம் அதனொடுகூட்டிச் சொல்லுதல் உரையெனச் சிறப்பித்துரைக்கப்படும். மாறுபட்ட கொள்கையை இடையே கொணர்ந்துரைத்து வினாவுதலும், அதற்கு மறு மாற்றமாகிய விடைகூறுதலும் உடையதாய்த் தனக்கு முதனூலாகிய சூத்திரத்தானும் அதன் பொருள் முடிபினை யுணர்த்தும் பிற நூலானும் தெளிய ஒருபொருளை ஒற்றுமைப்படுத்து இதுவே பொருளாகும் எனத் துணிதல் உரையினது இயல்பாகும். மேற்கூறிய இலக்கணமெல்லாம் சிதையாது மாட்சிமைப் படினும் முதனூலொடு பொருள் மாறுகொள்ளின் அந்நூல் சிதைவுடைய தெனவேபடும். முதல்வன் செய்த நூலின் கண்ணே இத்தகைய சிதைவுகள் உளவாகா. முதனூலையே அடியொற்றி ஒருவன் நூல் செய்யினும், வல்லவனாற் புணர்க்கப்படாதவாறு இசைபோன்று அவ்வழி நூலமைப்பில் குற்றம் நேர்தல் இயல்பேயாம். குற்றங்களாவன: கூறியது கூறல், மாறுகொளக்கூறல், குன்றக்கூறல், மிகைப்படக்கூறல், பொருளிலமொழிதல், மயங்கக் கூறல், கேட்போர்க்கு இன்னாயாப்பிற்றாதல், பழித்த மொழியான் இழுக்கங்கூறல், தன்னானொரு பொருள் கருதிக்கூறல். என்ன வகையினும் மனங்கோளின்மை என்னும் இப்பத்தும் இவை போல்வன பிறவுமாகும். மேற்கூறிய குற்றங்களின்றி அவற்றுக்கு மாறுபட்ட குணங்களை யடையதாதல் நூலிற்கு அழகென்பர். சூத்திரத்தில் அமைந்த பொருளமைப்பினைப் புலப் படுத்துதற்குக் கருவியாகிய நூற்புணர்ப்பு உத்தி யெனப்படும். நுதலிய தறிதல் முதல் உய்த்துக் கொண்டுணர்தல் ஈறாக உத்தி முப்பத்திரண்டாகும். சொல்லிய அல்ல பிற அவண் வரினும் சொல்லிய வகையாற் சுருங்கநாடி மனத்தின் எண்ணி மாசறத் தெரிந்துகொண்டு இனத்திற் சேர்த்தி யுணர்த்தல் வேண்டும் நுனித்தகு புலவர் கூறிய நூலே என இவ்வியல் நிறைவு பெறுகின்றது. செய்யுளியலுள் நூலைப் பற்றியும் அதன் பகுதிகளாகிய சூத்திரம், ஓத்து, படலம் என்பவற்றைப் பற்றியும் உரைவகை நடையைப் பற்றியும் விளக்கிய ஆசிரியர், மீண்டும் அவற்றின் இயல்பினை ஈண்டுக் கூறுதல் கூறியது கூறலாமாதலானும், இப்பொருள் பற்றிச் செய்யுளியலில் அமைந்த சூத்திரங்களையும் இவ்வியலில் உள்ள சூத்திரங்களையும் ஒப்பவைத்து நோக்குங்கால் இவ் விருவகைச் சூத்திரங்களும் சொல் நடை யாலும் பொருளமைப்பாலும் தம்முள் வேறுபாடுடையவாதல் நன்கு புலனாமாதலானும், நூன்மரபு பற்றிய இச் சூத்திரங்கள், தொல்காப்பியனார் காலத்திற்குப் பின்பு இயற்றப்பெற்று வழங்கியவை, பிற்காலத்தவரால் எல்லாநூற்கும் உரிய பொதுப் பாயிர மரபாக இந்நூலின் இறுதியிற் சேர்க்கப்பட்டிருத்தல் வேண்டுமெனவும், அதனால் பின்வந்த உரையாசிரியர்கள் இச்சூத்திரங்களையும் தொல்காப்பியனார் வாய்மொழி யெனவே கொண்டு உரையெழுத நேர்ந்த தெனவும் எண்ணுதற்கும் இடமுளது. நூலின் இலக்கண முணர்த்துவனவாக அமைந்த இச் சூத்திரங்களின் சொற் பொருளமைதியினைக் கூர்ந்து நோக்குங் கால் இவை காலத்தாற் பிற்பட்டன அல்ல என்பதும் தொல் காப்பிய நூலுடன் அடுத்து வைத்து எண்ணத்தக்க பழமை யுடையன என்பதும் நன்கு விளங்கும். - வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 404-418 ஒன்பதாவது மரபியல் (மரபுபற்றி வரும் இளமைப்பெயர் இவை எனல்) 556. மாற்றருஞ் சிறப்பின் மரபியல் கிளப்பின் பார்ப்பும் பறழுங் குட்டியுங் குருளையுங் கன்றும் பிள்ளையு மகவு மறியுமென் றொன்பதுங் குழவியொ டிளமைப் பெயரே. என்பது சூத்திரம். இவ்வோத்து என்ன பெயர்த்தோவெனின், - மரபியலென்னும் பெயர்த்து. இதனானே ஓத்து நுதலியதூஉம் மரபு உணர்த்துதலென்பது பெற்றாம். மற்றுப் பொருள்களின் இளமைபற்றி வரும் மரபு கூறினான், மூப்புப்பற்றி வரும் மரபு கூறானோவெனின், - அது வரையறை யின்மையிற் கூறானென்பது. மற்று, மேலை ஓத்தினோடு இவ்வோத்திடை இயை பென்னை யெனின், முன்னர் வழக்கிலக்கணங் கூறியதன்பின் செய்யுளிலக்கணம் செய்யுளியலுட் கூறினான், அவ் 4விரண்டற் கும் பொதுவாகிய மரபு ஈண்டுக் கூறினமையின் இது செய்யுளிய லோடு இயைபு உடைத்தாயிற்று. மற்று, 5வழக்கிலக்கணஞ் செய்யுட்கும் பொதுவாகலின் இங்ஙனம் இரண்6டற்கும் பொதுவாகிய மரபினையும் செய்யுளிய லின்முன் வைக்க வெனின், - அவ்வாறு வழக்கும் செய்யுளுமென்ற இரண்டுமல்லாத 7நூலிற்கும் ஈண்டு மரபு கூறினமையின் இது செய்யுளியலின் பின் வைக்கப்பட்டது. இவ்வோத்தின் முதற்சூத்திரம் என்னுதலிற்றோவெனின் எல்லாப் பொருளின்கண்ணும் இளமைக்குணம்பற்றி நிகழுஞ் சொல் இவையென்று வரையறுத்துக் கூறுகின்றது. இ-ள்: மாற்றருஞ் சிறப்பின் மரபியல் கிளப்பின் - விலக்கருஞ் சிறப்பிற்றாகிய மரபிலக்கணங்கூறின்; பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் 8என்று ஒன்பதும் குழவியோடு இளமைப்பெயர் - குழவியோடு இவையொன்பதும் இளமைப்பெயர் என்றவாறு. மேலன எட்டுங் குழவியுமென இளமைப்பெயர் ஒன்பதா யின. குழவியோடொன்பதென்னாது ஒன்பதுங் குழவியோ டென மயங்கக் கூறியதனாற் போத்தென்பதும் இளமைப் பெயரெனவும் பிறவும் வருவன உளவாயினுங் கொள்ளப்படும். இவற்றையெல்லாம் மேல்வரையறுத்து இன்ன பொருட்கு இன்ன பெயர் உரித்தென்பது 9சொல்லுதும். மாற்றருஞ் சிறப்பின் என்றதனானே, 10இவை ஒருதலை யாகத் தத்தம் மரபிற் பிறழாமற் செய்யுள் செய்யப்படுமென்ப தூஉம், 11ஈண்டுக் கூறாதனவாயின் வழக்கொடு பட்ட மரபு பிறழ வும் செய்யுளின்பம் படின் அவ்வாறு செய்பவென்பதூஉங் கூறியவாறாயிற்று. அவை, அகலிரு விசும்பிற் பாயிருள் பருகிப் பகல்கான் றெழுதரு பல்கதிர்ப் பரிதி (பெரும்பாண். 1, 2) எனவும், நும்மினுஞ் சிறந்தது நுவ்வை யாகுமென் றென்னை கூறினள் புன்னையது சிறப்பே (நற். 172) எனவும் வரும். அவற்றுள் பரிதியஞ் செல்வனைப் 12பருகும் காலும் என்றலும், புன்னைமரத்தினை நுவ்வையென்றலும் மரபன்மை யின் வழக்கினுள் மாற்றுதற்கு உரியவாமென்பது கருத்து. 13நிலவுக்குவித் தன்ன வெண்மணல் (குறுந். 123) எனவும், இருடுணிந் தன்ன வேனங் காணின் (மலைபடு. 247) எனவும், இருணூற் றன்ன விரும்பல் கூந்தல் எனவும் வருவனவும் அவை. (1) (மரபு பற்றி வரும் ஆண்பாற் பெயர் இவை எனல்) 557. ஏறு மேற்றையு மொருத்தலுங் களிறுஞ் சேவுஞ் சேவலு மிரலையுங் கலையு மோத்தையும் தகரு 14முதளு மப்பரும் போத்துங் கண்டியுங் கடுவனும் பிறவும் யாத்த வாண்பாற் பெயரென மொழிப. இ-ள்: ஆண்பாற்பெயர் இவ்வெண்ணப்பட்ட பதினைந் தும் என்றவாறு. பிறவும் என்றதனான் ஆணென்றும் விடையென்றும் வருவன போல்வனவுங் கொள்க. இவற்றை வரையறை கூறும்வழி (589 - 605.) உதாரணங் காட்டுதும். ‘யாத்த ஆண்பாற்பெயர்’ என்றதனாற் போத் தென்பது இளமைப்பெயரா மாயினும் இங்ஙனம் ஆண்பாற்குச் சிறந்து வருமாறுபோலச் சிறவாது 15அதற்கென்பது கொள்க.(2) (மரபுபற்றி வரும் பெண்பாற் பெயர் இவை எனல்) 558. பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணு மூடூ நாகுங் கடமையு மளகு மந்தியும் பாட்டியும் பிணையும் பிணவு மந்தஞ் சான்ற பிடியொடு பெண்ணே. இ-ள்: கூறப்பட்ட பதின்மூன்று பெயரும் பெண்மைப் பெயர் என்றவாறு. 16கடமையென்பதொரு சாதிப்பெயர் உண்டேனும் அது வன்று, ஈண்டெண்ணப்பட்டது பெண்மை மேற்றென்று கொள்க. அந்தஞ் சான்ற என்பது, முடிபமைந்தன இவை யென்ற வாறு. எனவே, ஆ என்பது பெண் பெயராதலும் பெண் ஆணென்பன ஒருசார் புல்லிற்கும் நேர்தலுங் கொள்க; என்னை? 17ஆனே றென்பது ஆவினுள் ஏறெனப்படுதலின், 18ஆவென்பது ஆண்பாற்கும் பொதுவாகலின் அது முடிபமையாதெனப் பட்டது. அது மேற்காட்டுதும். ஆண்மை பெண்மை புல்லிற்கின்மையின் அவையும் முடிபு டையன ஆகாவாயினுங் காயாப் பனையை ஆண்பனை யென்றுங் காய்ப்பனவற்றைப் பெண்பனை யென்றும் வழங்குப. இவை யெல்லாம் வழக்காகலிற் செய்யுளுள் வருமாறு அறிந்து கொள்ளப் படும். இவற்றுக்கு மேல் வரையறை கூறும்வழி (நூற்பா 606- 22) உதாரணங் காட்டுதும். (3) (இளமைப் பெயர்களுள்; பார்ப்பும் பிள்ளையும் இவற்றிற்குரியவெனல்) 559. அவற்றுள் பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற் றிளமை. இது, நிறுத்த முறையானே இளைமைப்பெயருள் முற்கூறிய பார்ப்பினைக் கூறுவான் அதனோடொப்புமை கண்டு பிள்ளைப் பெயருங் கூறுகின்றது. இ-ள்: இவ்விரண்டும் புள்ளிளமைக்குரிய என்றவாறு. இவையெல்லாம் இக்காலத்து வழக்கினுள் அரியவாகலிற் சான்றோர் செய்யுளுட் காணப்படும்; 19அல்லன வழக்கின்மேற் காட்டுதும். மேற்கவட் டிருந்த பார்ப்பினங் கட்கு (அகம். 31) எனவும், இல்லிறைப் பள்ளிதம் பிள்ளையொடு வதியும் (குறுந். 46) எனவும், பைதற் பிள்ளைக் கிளிபயிர்ந் தாஅங்கு (குறுந். 139) எனவும் இவை பருந்தும் ஊர்க்குருவியும் கிளியுமென்னும் பறவைமேல் வந்தன. பிறவும் அன்ன. 20புள்ளுக்குலம் பலவாகலான் இச்சூத்திரத்துள் அடங்கிய மரபு எத்துணையும் பலவாதல் நோக்கி முதற் சூத்திரத்துட் பார்ப் பினை முற்கூறினானென்பது. (4) (பார்ப்பும் பிள்ளையும் தவழ்பவைக்கும் ஆம் எனல்) 560. தவழ்பவை தாமு மவற்றோ ரன்ன. இ-ள்: பார்ப்பும் பிள்ளையுந் தவழ்பவற்றிற்கும் உரிய என்றவாறு. அவை, ஆமையும் உடும்பும் ஓந்தியும் முதலையும் முதலா யின. ஆமையும் முதலையும் நீருள் வாழினும் நிலத்தியங்குங்கால் தவழ்பவை யெனப்படும்; உதாரணம், யாமைப் பார்ப்பி னன்ன காமங் காதலர் கையற விடினே (குறுந். 152) எனவும், தன்பார்ப்புத் தின்னு மன்பின் முதலை (ஐங்குறு. 41) எனவும், தாய்சாப் பிறக்கும் புள்ளிக் கள்வனொடு பிள்ளை தின்னு முதலைத் தவனூர் (ஐங்குறு. 24) எனவும் வரும். தாமும் என்றதனான் ஊர்வன நடப்பனவுஞ் சிறுபான்மை பிள்ளைப்பெயர்க்கு உரியன கொள்க. அது, பிள்ளைப்பாம்பென ஊர்வன மேல் வந்தது. பிள்ளை வெருகிற் கல்கிரை யாகி (குறுந். 107) என நடப்பனமேல் வந்தது. மூங்காப்பிள்ளை என்பதும் ஈண்டே கொள்ளப்படும். பார்ப்பும் அவ்வாறே வருவன உளவேற் கொள்க. இதுவுந் தவழுஞ் சாதிக்கெல்லாம் பொதுவாகிய பரப்புடைமையின் இரண்டாவது வைத்தா னென்பது. (5) (குட்டி என்னும் பெயர்க்குரியன இவை எனல்) 561. 21மூங்கா 22வெருகெலி மூவரி யணிலொ டாங்கவை நான்குங் குட்டிக் குரிய. இது, மேல் எடுத்தோத்தானும் இலேசானும் அதிகாரப் பட்ட தவழ்வனவும் நடப்பனவும் பற்றிக் குட்டியென்னும் பெய ரினையும் முறையன்றிக் கூறுகின்றது. இ-ள்: குட்டியெனப்படுவன இவை நான்கும் என்றவாறு. அவை, மூங்காக்குட்டி, வெருகுக்குட்டி, எலிக்குட்டி, அணிற் குட்டியெனவரும். மூவரியணில் என்றதனால், ஒழிந்த மூன்றுந் தம்முள் ஒரு பிறப்பினவாம். 23இவை ஒருநிகரனவே என்பது கொள்க. ஆங்கவை நான்கும் என்றதனால் தத்துவனவற்றுக்கும் குட்டிப் பெயர் கொடுக்கப்படும்; தவளைக்குட்டி யெனவரும். மேல் ஊர்வனவற்றுக்குந் தவழ்வனவற்றிலக்கணம் எய்துவித்தமை யாற் பாம்புக்குட்டி யென்பதுங் கொள்க. மற்றுக் கீரியும் நாவியும் போல்பவற்றையுங் குட்டி யென் னாரோவெனின், அவை பிள்ளையென்றலே பெரும்பான்மை யாகலின். உரிய என்றதனால் சிறுபான்மை குட்டியென்பதுங் கொள்க. மூங்காவின் விகற்பமென்பாருமுளர். (6) (பறழும் மூங்கா முதலிய நான்கற்கும் உரியவெனல்) 562. பறழெனப் படினு முறழாண் டில்லை. இ-ள்: மேற்கூறிய நான்கும் பறழெனவும்படும் என்றவாறு. இவை இக்காலத்து வீழ்ந்தன. மற்று முற்கூறிய நான் கினையும் 24இப்பெயரானே முற்கூறுக, 25முதற்சூத்திரத்துள் ஓதிய முறைமைக் கேற்பவெனின்,- அற்றன்று; அவற்றுக்கு இப்பெயர் சிறுபான்மை யென்பான் பிற்கூறினானென்பது. உறழாண்டில் லை யென்ற மிகையானே, கைம்மை யுய்யாக் காமர் மந்தி கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி (குறுந். 69) என்பதுங் கொள்க. (7) (குருளை என்னும் பெயர் இவைக்குரிய எனல்) 563. நாயே பன்றி புலிமுய னான்கு மாயுங் காலைக் குருளை யென்ப. இது, முறையானே நான்காம் எண்ணு முறைமைக்கணின்ற குருளையாமா றுணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: நாயும் பன்றியும் புலியும் முயலும் என நான்குங் குருளை யென்று சொல்லப்படும் என்றவாறு. திறவாக் கண்ண சாய்செவிக் குருளை (சிறுபாண். 130) எனவும், விழியாக் குருளை மென்முலை சுவைப்பக் குழிவயிற் றுஞ்சுங் குறுந்தாட் பன்றி எனவும், இரும்புலிக் குருளையிற் றோன்றுங் காட்டிடை (குறு. 47) எனவும், குருளை கோட்பட லஞ்சிக் குறுமுயல் வலையிற் றப்பாது மன்னுயி ரமைப்ப எனவும் வரும். ஆயுங்காலை யென்றதனால், சிறுவெள் ளரவி னவ்வரிக் குருளை (குறுந். 119) என்பதுங் கொள்க (8) (நரியும் குருளை என்னும் பெயர்க்குரியது எனல்) 564. நரியு மற்றே நாடினர் கொளினே. இ-ள்: நரியுங் குருளையெனப்படும் என்றவாறு. பிணந்தின் பெண்டிர்க்குக் குருளை காட்டிப் புறங்காட் 26டோரி புலவுத்தசை பெறூஉம் எனவரும். நாடினர் கொளினே என்றதனானே, வெயிலாடு முசுவின் குருளை யுருட்டுங் குன்ற நாடன் கேண்மை (குறுந். 38) என்றாற்போல முசுவிற்குங் குருளைப்பெயர் கொடுக்க. (9) (மேற்கூறிய ஐந்தற்கும் குட்டியும் பறமும் உரிய எனல்) 565. குட்டியும் பறழுங் கூற்றவண் வரையார். இ-ள்: மேற்கூறிய ஐந்தனையுங் குட்டியென்றும் பறழென்றுங் கூறுதல் வரையார் என்றவாறு. அவை நாய்க்குட்டி பன்றிக்குட்டி புலிக்குட்டி முயற்குட்டி நரிக்குட்டி என வழக்கினுள் வந்தன. பாசிப் பரப்பிற் பறழொடு வதிந்த வுண்ணாப் பிணவி னுயக்கஞ் சொலிய நாளிரை தரீஇய வெழுந்த நீர்நாய் (அகம். 336) எனவும், வயநா யெறிந்து வன்பறழ் தழீஇ . . . . . . . . . . . . . . . . . . . . . . . . தறுகட் பன்றி (அகம். 248) எனவும், புலிப்பற ழன்ன பூஞ்சினை வேங்கை எனவும், பதவுமேயல் பற்றி முயற்பற ழோம்புஞ் சீறூ ரோளே நன்னுதல் எனவும், நரிப்பறழ் கவர நாய்முதல் சுரக்கும் எனவும் முறையானே வந்தன. நாயெனச் செந்நாய் நீர்நாய் முதலாயினவும் அடங்கு மென்பது. மூவரியணி லென்றவழிச் சொல்லப்பட்டவாறும் உய்த்துணர்க. பிறவும் அன்ன. (10) (மேற்கூறிய ஐந்தனுள் நாயொழித் தேனைய பிள்ளைப் பெயர்க்குமுரிய எனல்) 566. பிள்ளைப் பெயரும் பிழைப்பாண் டில்லை கொள்ளுங் காலை நாயலங் கடையே. இ-ள்: மேற்கூறிய ஐந்து சாதியுள்ளும் நாயொழித்து ஒழிந்த நான்கற்கும் பிள்ளையென்னும் பெயர்க்கொடையும் உரித்து என்றவாறு. இவை செய்யுட்கண் வருவன கண்டுகொள்க. கொள்ளுங் காலை யென்றதனான் முற்கூறிய நாய் முதலாகிய நான்கும் விலக்கி 27நரிப்பிள்ளை யென்பதே கோடலும் ஒன்று. (11) (மறி என்னும் பெயர் இவைக்குரியது எனல்) 567. யாடுங் குதிரையு நவ்வியு முழையு மோடும் புல்வா யுளப்பட மறியே. இ-ள்: இவ்வைந்து சாதியின் இளமைப் பெயர் மறியெனப் படும் என்றவாறு. அவை, மறித்துரூஉத் தொகுத்த பறிப்புற விடையன் (அகம். 94) எனவும், உள்ளில் வயிற்ற வெள்ளை வெண்மறி (அகம். 104) எனவும் யாட்டின்மேல் வந்தன. மறிக்குதிரையெனவும் மறி நூக்கிற்றெனவுஞ் சொல்லுதலின் இது குதிரைக்கும் உரித்தாயிற்று. நவ்வி நாண்மறி கவ்விக்கடன் கழிக்கும் (குறுந். 282) எனவும், மறியாடு மருங்கின் மடப்பிணை யருத்தித் தெள்ளறல் தழீஇய . . . . . . (அகம். 34) எனவும், தெறித்துநடை மரபிற்றன் மறிக்குநிழ லாகி (குறுந். 213) எனவும் இவை, நவ்வியும் உழையும் புல்வாயும் முறையானே மறி யென்னும் பெயர் எய்தியவாறு அவ்வச்செய்யுளுட் கண்டு கொள்க. நவ்வியும் உழையும் புல்வாயுள் அடங்குமன்றே? அவற்றை மூன்றாக ஓதியதென்னை? நாயென்றதுபோல அடங்காதோ வெனின், 28மானென்பது, குதிரையும் யானையும் புலியுஞ் சிங்கமும் முதலாயவற்றுக்கெல்லாம் பெயராகலின் அவ்வாறு ஓதானென் பது. ஓடும் புல்வாயென்றதனானே 29மடனடையன நவ்வி யெனவும் இடைநிகரன உழையெனவுங் கொள்க. எட்டாம் முறைமைக்கண் ஓதிய மறியினை ஐந்தாம்வழிக் கூறியதனானே, செவ்வரைச் சேக்கை 30வருடை மான்மறி (குறுந். 187) என்றது போல்வன கொள்க. (12) (குரங்கும் குட்டி என்னும் பெயர்பெறும் எனல்) 568. கோடுவாழ் குரங்குங் குட்டி கூறுப. இ-ள்: கோட்டினையே வாழ்க்கையாகவுடைய குரங்குங் குட்டியென்று கூறப்படும் என்றவாறு. கோடுவாழ் குரங்கு எனவே குரங்கின் பிறப்புப் பகுதி யெல்லாங் கொள்க. அவை குரங்குக்குட்டி முசுக்குட்டி 31ஊகக் குட்டியென்பன. உம்மை இறந்தது தழீஇயிற்றாதலான் மேற்கூறிய யாடு முதலாகிய ஐந்துசாதிக்குங் குட்டியென்னும் பெயர் கூறப்படுமென்பது. அவை யாட்டுக்குட்டி குதிரைக் குட்டி நவ்விக் குட்டி உழைமான்குட்டி புல்வாய்க்குட்டி என வரும், (13) (குரங்கிற்கு மகவு முதலியனவும் உரியவெனல்) 569. மகவும் பிள்ளையும் பறழும் பார்ப்பு மவையு மன்ன வப்பா லான. இ-ள்: மேலைச் சூத்திரத்தெடுத்தோதிய குரங்கிற்குக் குட்டியென்னும் பெயரேயன்றி மகவும் பிள்ளையும் பறழும் பார்ப்புமெனப்பட்ட இந்நான்கும் குட்டியென்னும் பெயர் போல அக்குரங்கின் பகுதிக்கு உரியவாம் என்றவாறு. உயர்கோட்டு, மகவுடை மந்திபோல (குறுந். 29) எனவும், குரங்குப் பிள்ளை எனவும், வரையாடு வன்பறழ்த் தந்தை (குறுந். 26) எனவும், ஏற்பன வேற்பன வுண்ணும் பார்ப்புடை மந்திய மலையிறந் தோரே (குறுந். 278) எனவும் வரும். அன்ன வென்பதனான் முன்னைய வற்றோ டொக்கும்; மிகுதி குறைவு இலவென்பதாம். வெயிலாடு முசுவின் குருளை யுருட்டும் (குறுந். 38) என (564) இலேசினாற் கொள்ளுமாறுகூறிப்போந்தமையின் ஈண்டு 32அது கூறானாயினான்; அன்றி, அஃது இத்துணைப் பயிலாமையானுமென்க. ஏழாமுறை நின்ற மகவினை ஈண்டு வைத்தான், 33அதிகாரப்பட்ட பெயர்க் குரிமையானென்பது.(14) (கன்றென்னும் பெயர்க்குரியன இவை எனல்) 570. யானையுங் குதிரையுங் கழுதையுங் கடமையு மானோ டைந்துங் கன்றெனற் குரிய. இ-ள்: ஐந்தாம் எண்ணு முறைமைக்கண் நின்ற கன்றென்னும் பெயர்க்கு இவை உரிய என்றவாறு. அவை, யானைக்கன்று குதிரைக்கன்று கழுதைக்கன்று கடமைக்கன்று ஆன்கன்று என வரும். கன்று34கா லொய்யுங் கடுஞ்சுழி நீத்தம் புன்றலை மடப்பிடிப் பூசல் பலவுடன் வெண்கோட் டியானை விளிபடத் துழவும் (அகம். 68) என்பது, யானைக்கன்று. கன்றுபுகு மாலை நின்றோ ளெய்தி (அகம். 9) என்பது ஆன்கன்று, பிறவும் 35அன்ன உளவேற் கொள்க. இனி, உரியவென்றதனானே மான்கன்று குதிரைக்குட்டி யென்பன வுஞ் சொல்லுப. (15) (கன்றென்னும் பெயர் இவற்றிற்குமுரியதெனல்) 571. எருமையு மரையும் வரையா ராண்டே. இ-ள்: எருமையும் மரையும் கன்றெனப்படும் என்றவாறு. அவை, எருமைக்கன்று, மரையான்கன்று என்பன வழக்கு. 36கன்றுடை மரையா துஞ்சும் (குறுந். 115) 37கன்றாற்றுப் படுத்த புன்றலைச் சிறாஅர் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . குன்ற நாடற் கண்டவெங் கண்ணே (குறுந். 241) எனவரும். வரையார் எனவே, அவையெல்லாம்போலாது சிறுவரவினவென்பது பெற்றாம். (16) (கன்றென்னும் பெயரை இவையும் பெறுமெனல்) 572. கவரியுங் கராமு நிகரவற் றுள்ளே. இஃது. அவற்றொடு மாட்டெறிந்தது. இ-ள்: கவரியும் கராமும் கன்றெனப்படும் என்றவாறு. கவரிமான்கன்று கராக்கன்று எனவரும். அவற்றுள்ளே என்பது முற்கூறிய ஏழனுண் முதனின்ற (571) யானையோ டொக்கு மென்றவாறு. இதன் பயம், குஞ்சரம் பெறுமே குழுவிப் பெயர்க்கொடை (574) என வருகின்ற பெயரும் இவற்றுக்கு எய்துவித்தலாயிற்று. அது முன்னர்ச் சொல்லும். 38இவையெல்லாம் தம்மினொத்த வரவின அன்மையின் வேறு வேறு சூத்திரஞ் செய்கின்றவா றாயிற்று. (17) (கன்றெனற்கு ஒட்டகமுஞ் சிறுபான்மை உரியதெனல்) 573. ஒட்டக மவற்றோ டொருவழி நிலையும். இ-ள்: சிறுபான்மை ஒட்டகமும் கன்றெனப்படும் என்ற வாறு. அஃது, ஒட்டகக்கன்று எனவரும். ஒருவழிஎன்றத னானே, எவற்றினும் இது சிறுபான்மை யெனவுணர்க. (18) (குழவி என்னும் பெயர் யானைக்குரியதெனல்) 574. குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை. இ-ள்: ஒழிந்துநின்ற குழவிப்பெயர் குஞ்சரத்திற்கு உரியது என்றவாறு. அது, ஒய்யென வெழுந்த செவ்வாய்க் குழவி (அகம். 165) எனவரும். நிகரவற்றுள்ளென 39மேற் குஞ்சரத்தோடொக்கு மெனப்பட்ட கராத்தின் குழவியுங் கவரிக் குழவியும் வந்தவழிக் கண்டுகொள்க (19) (குழவி என்னும் பெயரை இவையும் பெறுமெனல்) 575. ஆவு மெருமையு மவைசொலப் படுமே. இ-ள்: ஆவும் எருமையும் அவைபோலக் குழவிப்பெயர்க் கொடைபெறும் என்றவாறு. குஞ்சரம், ஆணும்பெண்ணுமென இருகூற்றனவாகலான் 40அவை யென்றான். மக்கள்மேல் வருங்காலும் இஃதொக்கும். மடக்கட் குழவி யணவந் தன்ன நோயே மாகுத லறிந்துஞ் சேயர் தோழி சேய்நாட் . (குறுந். 64) என்பது ஆன்குழவி. மோட்டெருமை முழுக்குழவி கூட்டுநிழற் றுயில்வதியும் (பட்டின. 14-5) என்பது, எருமைக்குழவி. (20) (குழவிப் பெயரை இவையும் பெறுமெனல்) 576. கடமையு மரையு முதனிலை யொன்றும். இ-ள்: இவையும் அப்பெயர்க்கு உரிய என்றவாறு. குஞ்சரம்போலக் குழவிப்பெயர் பெறுமென்பான் முத னிலை யொன்று மென்றானென்பது. அவை tந்துழிக்fண்டுbகாள்க. (21) (குழவி என்னும் பெயர் இவற்றிற்குமுரியதெனல்) 577. குரங்கு முசுவு மூகமு மூன்று நிரம்ப நாடி னப்பெயர்க் குரிய. இ-ள்: இம்மூன்றுங் குழவியென்னும் பெயர்க்கு உரிய என்றவாறு. நிரம்ப நாடின் என்பது, மூன்றுபெயரும் ஒருபிறப்பின் பகுதியாக லின் அம்மூன்றற்கும் ஒப்பவருமென்றவாறு. இக்கருத்தானே கோடுவாழ் குரங்கு (568) என்றவழி, இம்மூன்றுங் கொண்டாமென்பது. இவற்றுக்கு உதா ரணங் காணாமையிற் காட்டாமாயினாம். இலக்கணம் உண்மையின் அமையு மென்பது. (22) (மேற்கூறிய இளமைப் பெயர்களுள் மக்கட்குரியன இவை எனல்) 578. குழவியு மகவு மாயிரண் 41டல்லவை கிழவ அல்ல மக்கட் கண்ணே. இ-ள்: குழவியும் மகவுமென்னும் இரண்டு42மல்லது மக் கட்கணின்ற இளமை தமக்கு வேறுபெயருடையவல்ல. என்ற வாறு. ஆணிளமையும்பெண்ணிளமையுமென இரண்டாகலின் 43அல்லவை யெனப் பன்மை கூறினான். காவல், குழவிகொள் பவரி னோம்புமதி (புறம். 5) எனவும், மான்றோற் பள்ளி மகவொடு முடங்கி (பெரும்பாண். 89) எனவும் வரும். கிழவவல்ல என்ற மிகையானே, ஆண்பிள்ளை பெண் பிள்ளையெனப் பிள்ளைப்பெயரும் மக்கட்பாற்படுவன கொள்க. (23) (மேற்கூறிய இளமைப் பெயர்களுள் ஓரறிவுயிர்க்குரியன இவை எனல்) 579. பிள்ளை குழவி கன்றே போத்தெனக் கொள்ளவு kமையுnமாரறிîயிர்க்கே.ï-Ÿ: பிள்ளை குழவி கன்று போத்தென்னும் நான்கும் ஓரறிவுயிரின் இளமைப்பெயர் என்றவாறு. ஓரறிவுயிரென்பன முன்னர்ச் (583) சொல்லப்படும் ஓரறி வுயிரென்பது, 44பண்புத்தொகை. கமுகம்பிள்ளை தெங்கம்பிள்ளை எனவும், வீழி றாழைக் குழவித் தீநீர் (பெரும்பாண். 357) எனவும், பூங்கன்று எனவும், போத்துக்கால் எனவும் வரும். வீழிறாழை யெனப்பட்டது, தெங்கு;. போத்துக்காலென் பது கரும்பு. ஓரறிவுயிர்க்குக் கொள்ளவும் அமையும் என்னும் உம்மையை எச்சப்படுத்துப் பிறவழியுங் கொள்ளப்படும். அவை, குழவிவேனில் (கலி. 36) எனவும், குழவித்திங்கள் (கலி. 103, சிலப். 2: 38) எனவும், குழவிஞாயிறு (பெருங். 1: 33: 29) எனவும், பகுவாய் வராஅல் பல்வரி யிரும்போத்து (அகம். 36) எனவும், புலிப்போத் தன்ன புல்லணற் காளை (பெரும்பாண். 138) எனவும் இவையும் இளமைக்குறிப்பினவாகலிற் காணப்பட்டன. மற்று, ஓரறிவுயிர் ஈண்டுக் கூறியதென்னையெனின், குழவிப் பெயர் அதிகாரப்பட்டமையானென்பது. மற்றுப் புல்லும் மரனும் 45உயிரெனப் படுமோவெனின், அவற்றை யுயிரென்றல் மரபுபட்ட வழக்காகலின் அம்மரபுங் கோடற்குக் கூறினான், மரம் 46உய்ந்ததென்பவாகலின். (24) (மேற் சூத்திரத்துட் கூறிய பெயர்களை நெல்லும் புல்லும் பெறா எனல்) 580. நெல்லும் புல்லு நேரா ராண்டே. இஃது, எய்தியது விலக்குகின்றது. இ-ள்: அந்நான்கு பெயரானும் நெல்லும் புல்லுஞ் சொல் லப்படா என்றவாறு. மற்றுப், புறக்கா ழனவே புல்லென மொழிப என்னுமாகலான், மேற்காட்டிய கமுகு முதலாகிய புல்லும் விலக்குண்ணும் பிறவெனின்,-அற்றன்று; புல்லென்பது பல பொருளொரு சொல்லாகலான் நெல்லென்னும் இனத்தானே வேறுபடுத்துப் 47புல்லென்பது (புறம். 248) உணவின் மேற்கொள்க. (25) (இளமைப்பெயர் அவைஅன்றி இல எனல்) 581. சொல்லிய மரபி னிளமை தானே சொல்லுங் காலை யவையல விலவே. இது, புறனடைச் சூத்திரம். இ-ள்: சொல்லிய மரபின் இளமை- பாடலுட் பயின்றவை நாடுங் காலை (3) எனவும், பாடல் சான்ற புலனெறி வழக்கு (53) எனவும் அகத்திணையியலுட் கூறிய புலனெறி வழக்கிற்றாகிய இளமை; சொல்லுங்காலை அவையல இல- அவற்றுக்கு இலக்கணங் கூறுங் கால், வேறு பலவின்றி வரும், இங்ஙனம் வரையறைப்பட்டன 48இன்றி என்றவாறு. இளமையு மவையல வில எனவே, அதற்கு மறுதலை யாகிய முதுமையாயின், அவையலதிலவென்பதொரு வரைய றைப்படுத்து இலக்கணங் கூறப்படாவென்பது கருத்து. சொல்லுங்காலை என்றதனால் சொல்லாத இளமைப் பெயருங் கொள்க; அவை, நன்னாட் பூத்த நாகிள வேங்கை (அகம். 85) எனவும், நாகிளவளை (புறம். 266) எனவும், கணைக்கோட்டு வாளைக் கமஞ்சூன் மடநாகு (குறு. 164) எனவும், எருமை நல்லான் கருநாகு பெறூஉம் (பெரும்பாண். 165) எனவும் வரும். இவற்றுள் ஓரறிவுயிர் முதலாக ஐந்தறிவுயிரளவும் நாகென் னும் இளமைப்பெயர் வரையறையின்றிச் சென்றது; 49வண்டென்பதற்கும் ஒக்கும், 50அது விரவுப் பெயராகலின். (26) ஓரறிவு முதலியன 582. ஒன்றறி வதுவே யுற்றறி வதுவே யிரண்டறி வதுவே யதனொடு நாவே. மூன்றறி வதுவே யவற்றொடு மூக்கே நான்கறி வதுவே யவற்றொடு கண்ணே யைந்தறி வதுவே யவற்றொடு செவியே யாறறி வதுவே யவற்றொடு மனனே நேரிதி னுணர்ந்தோர் நெறிப்படுத் தினரே. இது, மேல் அதிகாரப்பட்ட ஓரறிவுயிர் உணர்த்தும்வழி அவ்வினத் தனவெல்லாங் கூறுதல் நுதலிற்று. இ-ள்: ஒன்றறிவதென்பது ஒன்றனையறிவது; அஃதாவது உற்றறிவ தென்பதும்: இரண்டறிவதென்பது அம்மெய்யுணர்வி னோடு நாவுணர்வுடையதெனவும், மூன்51றறிவுடையது அவற் றோடு நாற்றவுணர்வுடைய தெனவும், நான்கறிவுடையது அவற் றோடு கண்ணுணர்வுடையதெனவும், ஐந்தறிவுடையது அவற் றோடு செவியுணர்வுடையதெனவும், ஆறறிவுடை யது அவற் றோடு மனவுணர்வுடையதெனவும், அம்முறையானே நுண் ணுணர்வுடையோர் நெறிப்படுத்தினர் என்றவாறு. இது முறையாதற்குக் காரணமென்னையெனின்,-52எண்ணு முறையாற் கூறினானென்பது; அல்லதூஉம், எல்லாவுயிர்க்கும் 53இம்முறையானே பிறக்கும் அவ்வவற்றுக்கோதிய அறிவுக ளென்றற்கு அம்முறையாற் கூறினாரென்பது; என்னை? அது பெறுமாறெனின்,- நேரிதி னுணர்ந்தோர் நெறிப்படுத்தினர் என்பதனாற் பெறுதும். மற்று, ஒன்றுமுதல் ஐந்தீறாகிய பொறியுணர்வு மனமின்றி யும் பிறப்பனபோல வேறு கூறியதென்னையெனின், - ஓரறிவு யிர்க்கு 54மனமின்மையின் அங்ஙனங் கூறினாரென்பது. அதற்கு உயிருண்டாயின் மனமின்றாமோவெனின்,- உயிருடைய வாகிய நந்து முதலாகியவற்றுக்குச் செவி முதலாய பொறியின்மை கண்டி லையோவென்பது. அவ்வாறே ஒழிந்தவற்றிற்கும் மனவுணர் வில்லை யென்பாரும் மனமுண்டென்பாரு மென இருபகுதியர். அவையெல்லாம் வல்லார்வாய்க் கேட்டுணர்க. அல்லதூஉம் பொறியுணர்வென்ப தாமே உணரும் உணர்ச்சி; அங்ஙனம் உணர்ந்தவழிப் பின்னர் அவற்றை மனஞ்சென்று கொள்ளு மென்பதென்னையெனின்,- மனம் ஒன்றனை நினையாநிற்க மற்றொன்று கட்புலனாயக்கால் அதனைப் பொறியுணர்வுகொள்ள 55அதன்வழியே மனந்திரிந்து செல்லுமாகலின்; என்னை? மனனுணர்வு மற்றொரு பொருட் கண் நின்றகாலத்துப் பிறபொருட்கட் சென்றதெனப் படா தன்றே? பின்னர் அதனை அறிவித்தது பொறியுணர்வாகலான் அவை தம்மின் வேற்றுமையுடையன வென்பது. அல்லதூஉந் 56தேனெய்யினை நாவின்பொறி உணர்ந்த வழி இன்புற்றுங், கண்ணுள் வார்த்து மெய்யுணர்வு ணர்ந்தவழித் துன்புற்றும், நறிதாயின மான்மதத்தினை மூக்குணர்வுணர்ந்த வழி இன்புற்றுங், கண்ணுணர்வுணர்ந்தவழி இன்பங்கொள்ளா மையும் வருதலின் அவை பொறியுணர்வெனப்படும். மனவுணர் வும் 57ஒருதன்மைத்தாதல் வேண்டுமா லெனின், ஐயுணர் வின்றிக் கனாப்போலத் தானே யுணர்வது மனவுணர் வெனப் படும். பொறியுணர்வு மனமின்றிப் பிறவாதெனின்,-58முற் பிறந்தது மனவுணர்வாமாகவே பொறியுணர்59வென்பது ஓரறிவின்றாகியே செல்லுமென்பது. அற்றன்றியும், ஒருவனு றுப்பிரண்டு தீண்டிய வழி அவ்விரண்டும் படினும் ஒருகணத்துள் ஒருமனமே இருமனப்பட்டு அவ்வுறுப்பிரண்டற் கும் ஊற்றுணர்வு கெடாது கவர்ப்ப வாங்கிக் கைக்கொண்டு மீளு மென்பது காட்டலாகாமை யானும் அஃதமையாதென்பது. (27) (ஓரறிவுடையன இவை எனல்) 583. புல்லு மரனு மோரறி வினவே பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே. இது, முறையானே ஓரறிவுடையன வுணர்த்துதல் நுத லிற்று. இ-ள்: புறக்காழனவாகிய புல்லும் அகக்காழனவாகிய மர னும் ஓரறிவுடைய; பிறவும் அக்கிளைப் பிறப்பு உள்ளன என்ற வாறு. கிளைப்பிறப் பென்பது கிளையும் பிறப்புமென்றவாறு. கிளை யென்பன:- புறக்காழும் அகக்காழுமின்றிப் புதலுங் கொடியும் போல்வன. பிறப்பென்பன:- மக்களானும் விலங்கானும் ஈன்ற குழவி 60ஓரறிவின ஆகிய பருவமும், எஞ்ஞான்றும் ஓரறிவினவே யாகிய என்பில் புழுவுமென இவை. இவை வேறு பிறப்பெனக் கொள்க. மற்று இவற்றுக்கு அறிவில்லை பிறவெனின், 61பயிலத் தொடுங்காற் புலருமாகலின் ஓரறிவுடையவென வழக்கு நோக்கிக் கூறினான், இது வழக்கு நூலாதலின். அஃதேல், இவை உணர்ச்சியாயின் இன்பதுன்பங் கொள்ளுமோ வெனின், அதற்கு 62மனமின்மையின் அது கடாவன்றென்பது. (28) (ஈரறிவுடையன இவை எனல்) 584. நந்து முரளு மீரறி வினவே பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே. இது, முறையானே ஈருணர்வுடையன வுணர்த்துதல் நுத லிற்று. இ-ள்: நந்தும் முரளும் ஈரறிவாகிய ஊற்றுணர்வும் நாவுணர்வு முடையன. பிறவும் அக்கிளைப் பிறப்பு உள என்றவாறு. இரைசுவைகோடலும் பிறிதொன்று தாக்கியவழி அறிதலு முடைமையின் மெய்யுணர்வொடு நாவுணர்வுமுடையன வென்றவாறு. இவற்றுக்குக் கிளையென்பன கிளிஞ்சிலும் முற்றிலும் (மட்டிச் சுண்ணாம்பு) முதலாகிய கடல்வாழ் சாதியும் பிறவுமெனக் கொள்க. பிறப்பென்பன 63முற்கூறியவாறே கொள்ளப் படும். (29) (மூவறிவுடையன இவை எனல்) 585. சிதலு மெறும்பு மூவறி வினவே பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே. இது, மூவறிவின கூறுகின்றது. இ-ள்: சிதலும் எறும்பும் ஊற்றுணர்வும் நாவுணர்வும் மூக்குணர்வு முடைய; அவற்றுக் கிளையும் பிறப்பும் அவ்வாறே மூவறிவுடைய என்றவாறு. இவை 64உற்றுணர்ந்து மீடலும் நாச்சுவை கோடலும் நெய்யுள்வழி மோந்தறிதலுமென மூன்றறிவினையுடையவாறு கண்டுகொள்க. இவற்றுக்குக் கண்ணுஞ் செவியுமின்மை எற்றால் அறிதுமெனின்,- ஒன்று தாக்கிய வழியன்றி அறியாமை யிற் கண்ணிலவென்பதறிதும், உரப்பியவழி ஓடாமையிற் செவி யில வென்பதறிதும். இவற்றின் கிளையென்பன 65ஈயன்மூதாய் (அகம். 14) போல்வன. பிறப்பென்பன, முற்கூறியவாறே மக்கட் குழவியும் விலங்கின் குழவியும் இம்மூன்றுணர்வாகிய பருவத் தனவும் அட்டை முதலாகியவுமெல்லாங் கொள்க. (30) (நான்கறிவுடையன இவை எனல்) 586. 66நண்டுந் தும்பியு நான்கறி வினவே பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே. நண்டுந் தும்பியும் நான்கறிவினவெனவும், அந்நாலறி வினை யுடைய கிளையும் பிறப்பும் வேறுளவென்பதூஉங் கூறிய வாறு. இ-ள்: நண்டிற்குந் தும்பிக்குஞ் செவியுணர்67வொழித்து ஒழிந்த நான்கு உணர்வும் உள; அவற்றுக் கிளையும் பிறப்பும் பிறவும் உள என்றவாறு. மெய்யுடைமையின் ஊற்றுணர்வும், இரைகோடலின் நாவுணர்வும், நாற்றங்கோடலின் மூக்குணர்வும், கண்ணுடை மையிற் கண்ணுணர்வு முடையவாயின. நண்டிற்கு மூக்குண்டோ வெனின், அஃது ஆசிரியன் கூறலான் உண்டென்பது பெற்றாம். இவற்றுக்குக் கிளையென்பன வண்டுந் தேனீயுங் குளவியும் முதலாயின. பிறப்பென்பன நான்கறிவுடைய பிற சாதிகளென முற்கூறியவாறே கொள்க. (31) (ஐயறிவுடையன இவை எனல்) 587. மாவு 68மாக்களு மையறி வினவே பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே. இஃது, ஐயறிவுடையன கூறுகின்றது. இ-ள்: ஐயறிவுடையன விலங்கும் அவை போல்வன ஒரு சார் மானிடங்களுமாம்; அக்கிளைப்பிறப்புப் பிறவும் உள என்றவாறு. மாவென்பன - நாற்கால்விலங்கு. மாக்களெனப்படுவார் - மனவுணர்ச்சியில்லாதார். கிளையென்பன - 69எண்கால் வருடை யுங் குரங்கும் போல்வன. எண்காலவாயினும் 70மா வெனப்படுத லின் வருடை கிளை யாயிற்று. குரங்கு நாற்காலவாகலிற் கிளை யாயிற்று. பிறப்பென்பன - கிளியும் பாம்பும் முதலாயின. மற்றுப் பாம்பிற்குச் செவியுங் கண்ணும் ஒன்றேயாகிக் கட்செவி யெனப்படுமாகலின் ஐயறிவில்லை பிறவெனின், - பொறியென்பன வடிவு நோக்கின அல்லவாகலின் ஒன்றே இரண்டுணர்விற்கும் பொறியாமென்பது. கிளியென்பது பறவை யாகலின் அதனை வேறோதுகவெனின், 71முன்னைய வற்றிற்கும் பறவையென்றோதிய திலனாகலான் அவ்வச்சூத்திரங்களானே எல்லாம் அடங்குமென்பது. மற்றுப் புல்லும் மரனும் முதலாக இவ்விரண்டு பிறப் பெடுத்தோதி ஒழிந்தனவற்றையெல்லாம் பிறவுமுள வெனப் புறனடுத்த தென்னை யெனின்,- அவை வரையறையில வாகலின் அங்ஙனங் கூறினான்; அல்லதூ உம், மக்களும் புள்ளும் விலங்கும் முதலாயின ஓரறிவினவென்றும் ஈரறி வினவென்றும் எண்ணி வரையறுக்கப் படாமையாலும் அவ்வாறு கூறினா னென்பது. (32) (ஆறறிவுடைய உயிர் மக்கள் எனல்) 588. மக்க டாமே யாறறி வுயிரே பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே. இஃது, ஆறறிவுயிர் கூறுகின்றது. இ-ள்: மக்களெனப்படுவார் ஐம்பொறியுணர்வேயன்றி மனமென்பதோர் அறிவும் உடையர்; அக்கிளைப் பிறப்பு வேறும் உள என்றவாறு. முப்பத்திரண்டு அவயவத்தான் அளவிற்பட்டு அறிவொடு புணர்ந்த ஆடூஉ மகடூஉ மக்களெனப்படுப. அவ்வாறுஉணர்வி லுங் குறைவு பட்டாரைக் குறைந்தவகை அறிந்து முற்கூறிய சூத்திரங்களானே அவ்வப் பிறப்பினுட் சேர்த்திக்கொள்ள வைத்தானென்பது. அவை, ஊமுஞ் செவிடுங் குருடும் போல் வன. கிளையெனப்படுவார் - தேவருந் தானவரும் முதலாயினார். பிறப்பென்றதனாற், குரங்கு முதலாகிய விலங்கினுள் அறிவுடை யன வெனப்படும் 72மனவுணர்வுடையன உளவாயின் அவையும் ஈண்டு ஆறறிவுயிராயடங்குமென்பது. தாமேயெனப் பிரித்துக் கூறினமை யான் நல்லறிவுடையரென்றற்குச் சிறந்தாரென்பதுங் கொள்க. (33) (மேற்கூறிய ஆண்பாற் பெயருள் களிறு என்னும் பெயர் இதற்குரியது எனல்) 589. 73வேழக் குரித்தே விதந்துகளி றென்றல் கேழற் கண்ணுங் கடிவரை யின்றே. 74மக்கடாமே ஆறறிவுயிரெனப் பிரித்துக் கூறினமையான் ஆண்பால் அதிகாரப்பட்டதுகண்டு மற்றை விலங்கினுள் ஆண்பாற்குரியன கூறிய தொடங்கியவாறு. நிறுத்தமுறையாற் கூறாது களிற்றினை முற்கூறினான் அப்பொருள் விலங்கினுட் சிறந்தமையானென்பது. ஏறும் ஏற்றையும் பயின்ற வரவினவாக லின் முதற்சூத்திரத்துள் (556) முற்கூறினானென்பது. இ-ள்: யானைக்கு விதந்து களிறென்ற லுரித்து; கேழற் கண்ணுஞ் சிறுபான்மை வரும் என்றவாறு. விதந்தென்ற விதப்பினாற் களிறென்பது சாதிப்பெயர் போலவும் நிற்குமென்பது; அஃதாவது, யானையென்னுஞ் சாதிப் பெயரினைக் 75களிறென்னும் பெயர்வந்து 76குறிப்பித்தாற் கடுங்களிற் றொருத்தல் (கலி. 2) என்றும் ஆகுமென்பது. 77இரலைமா னேறு என்பதும் அதனாற் கொள்க. பன்றிக்கும் அவ்வாறு வருவனவுளவேற் கொள்க. 78கேழற் பன்றி (புறம் . 152) என்பதனைக் களிற்றுப்பன்றியென்றுஞ் சொல்லுப. (34) (ஒருத்தல் என்னும் பெயர்க்குரியன இவை எனல்) 590. புல்வாய் புலியுழை மரையே கவரி சொல்லிய கராமோ டொருத்த லொன்றும். (35) 591. வார்கோட் டியானையும் பன்றியு மன்ன. (39) 592. ஏற்புடைத் தென்ப வெருமைக் கண்ணும். இவை, உரையியைபு நோக்கி உடனெழுதப்பட்டன. இ-ள்: இவை ஒன்பதுபெயரும் ஒருத்தலென்னும் பெயருக்கு ஒன்றும் என்றவாறு. இவற்றைப் பெரும்பான்மை சிறுபான்மை பற்றி மூன்று சூத்திரத்தான் ஓதினானென்பது. உதாரணம், காடுமீக் கூறுங் கோடேந் தொருத்தல் (அகம் . 65) என யானை ஒருத்தலென்றாயிற்று. பிறவும் வந்தவழிக் கண்டு கொள்க. (35 - 37) (ஏறென்னும் பெயர்க்குரியன இவை எனல்) 593. பன்றி புல்வா யுழையே கவரி யென்றிவை நான்கு மேறெனற் குரிய. (38) 594. எருமையு மரையும் 79பெற்றமு மன்ன. (39) 595. கடல்வாழ் சுறவு மேறெனப் படுமே. இம்மூன்று சூத்திரத்தான் ஓதிய எட்டுச்சாதியின் ஆண்பாலும் ஏறெனப்படும் என்றவாறு. காற்றுச்சுவ டொற்றுக் கடிபுனங் கவரு மேற்றிளம் பன்றியி னிருளை வெரூஉம் எனவும், வெருளேறு பயிரு மாங்கண் (அகம். 121) எனவும், பொரிமலர்ந் தன்ன பொறிய மடமான் திரிமருப் பேறொடு 80தேரறேர்க் கோட (கலி . 13) எனவும், ஏற்றிளங் கவரி யெரியென வெருவப் பூத்த விலவத்துப் பொங்க ரேறி எனவும், ஏற்றெருமை நெஞ்சம் வடிம்பி னிடந்திட்டு (கலி. 103) எனவும், வரிமரற் பாவை மரையேறு கறிக்கும் எனவும், புலம்பயி ரருந்த வண்ணனல் லேறு (குறுந். 344) எனவும், சுறவே றெழுதிய மோதிரந் தொட்டாள் (கலி. 84) எனவும் வரும். பிறவும் அன்ன. (38 - 40) (போத்தென்னும் பெயர்க்குரியன இவை எனல்) 596. பெற்ற மெருமை புலிமரை புல்வாய் மற்றிவை யெல்லாம் போத்தெனப் படுமே. (41) 597. நீர்வாழ் சாதியு 81ளறுபிறப் புரிய (42) 598. மயிலு 82மெழாலும் பயிலத் தோன்றும். இ-ள்: போத்தென்னும் பெயர் இப் பதின்மூன்று சாதியின் ஆண்பாற்கு முரியது என்றவாறு. மற்றிவையெல்லாம் என்றதனால் பன்றியும் ஓந்தியும் முதலாயினவுங் கொள்ளப்படும். நீர்வாழ் சாதியுள் அறுபிறப் பென்பன - சுறாவும் முதலையும் இடங்கருங் கராமும் வராலும் வாளையுமென இவை. பயிலத் தோன்று மென்றதனானே நாரை முதலியனவுங் கொள்க. மற்றிவை பயிலத்தோன்றுமெனிற் சூத்திரம் வேறு செய்ததென்னை? முதற்சூத்திரத்துள் எண்ணுக பிறவெனின், இவை பறவையுட் பயிலத் தோன்றுமாகலின் வேறோதினா னென்க. 83எறிபோத்து, 84உழுபோத்து. எருமைப் போத்து எனவும், புலிப்போத் தன்ன புல்லணற் காளை (பெரும்பாண். 138) எனவும், மரைப்போத்து எனவும், 85கவைத்தலை முதுபோத்து காலி னொற்றி . . . . . . . . . . . . . . . . . தெறித்துநடை மரபிற்றன் மறிக்குநிழ லாகி (குறுந். 213) எனவும் வரும். எல்லாம் என்றதனால் பன்றிப்போத்து எனவும் வரும். முதலைப் போத்து முழுமீ னாகும் (ஐங்குறு. 5) எனவும், பகுவாய் வராஅற் பல்வரி யிரும்போத்து (அகம் . 36) எனவும், வாளை வெண்போத் துணீஇய (அகம் . 276) எனவும், நீர்வாழ்சாதியுட் சில வரும். மயிற்போத் தூர்ந்த வயிற்படை நெடுவேள் எனவும், 86போத்தொடு வழங்கா மயிலு மெழாலும் எனவும் வந்தவாறு. பயில என்றதனால், நாரை நிரைபோத் தயிரை யாரும் (குறுந் . 166) எனவும், ஒழிந்தனவும் இவ்வாறே கண்டுகொள்க. மற்று முதலை யும் இடங்கரும் கராமும் தம்மின் வேறெனப்படுமோவெனின், கராஅங் கலித்த குண்டுகண் ணகழி யிடங்கருங் குட்டத் துடன்றொக் கோடி யாமங் கொள்பவர் சுடர்நிழற் கதூஉங் கடுமுரண் முதலைய நெடுநீ ரிலஞ்சி (புறம் . 37) என வேறெனக் கூறப்பட்டன வென்பது. இனிச், 87செம்போத்தென்பதும் ஈண்டுக் கொள்ளாமோ வெனின், அது பெண்பாற்கும் பெயராகலின் ஒரு பெயரே; பண்புகொள் பெயரன்றென்பதுணர்க. (41 - 43) (இரலையும் கலையும் என்னும் பெயர்கள் இவைக்குரியன எனல்) 599. இரலையுங் கலையும் புல்வாய்க் குரிய. (44) 600. கலையென் காட்சி யுழைக்கு முரித்தே. (45) 601. நிலையிற் றப்பெயர் முசுவின் கண்ணும். இவை மூன்று சூத்திரமும் எண்ணிய மூன்று சாதிக்கும் இரலையுங் கலையுமென்னும் ஆண்பாற் பெயர் இன்னவா றுரிய வென்கின்றன. இ-ள்: இரலையுங் கலையுமென்பன புல்வாய்க்குரிய; அவற்றுட் கலையென்பது உழைக்குமுரித்து; அக்கலை யென் பது முசுவிற்கு வருங்கால் உழைக்குப்போலச் 88சிறுவரவிற்றன்றி வரும் எள்றவாறு. புல்வா யிரலை நெற்றி யன்ன (புறம் . 374) எனவும், கவைத்தலை முதுகலை காலி னொற்றி (குறுந் . 213) எனவும், கள்ளியங் காட்ட புள்ளியம் பொறிக்கலை (அகம் . 97) எனவும், மைபட் டன்ன மாமுக முசுக்கலை (குறுந். 121) எனவும் வரும். முசுவிற்கு நிலைபெற்றதெனவே, அத்துணை நிலைபேறின் றிக் குரங்கிற்கு வருவனவுங் கொள்க. அது, கருங்கட் டாக்கலை பெரும்பிறி துற்றென (குறுந் . 69) என வருமாற்றான் அறிக. (44 - 46) (மோத்தை முதலிய நான்குபெயரும் யாட்டிற்குரிய எனல்) 602. மோத்தையுந் தகரு முதளு மப்பரும் யாத்த வென்ப யாட்டின் கண்ணே. இ-ள்: இக்கூறப்பட்ட நான்கு பெயரும் யாட்டிற்குரிய என்றவாறு. அவை, வெள்யாட்டு மோத்தை எனவும், தகர்மருப் பேய்ப்பச் சுற்றுபு சுரிந்த (அகம் . 101) எனவும், உதள நெடுந்தாம்பு தொடுத்த குறுந்தறி முன்றில் (பெரும்பாண். 151, 2) எனவும் வரும். அப்பரென்பது இக்காலத்து வீழ்ந்தது போலும். யாத்த வென்றதனாற் 89கடாயென்பதும் யாட்டிற்குப் பெயராகக் கொள்க. அது, நிலைக்கோட்டு வெள்ளை நரல்செவிக் கடாஅய் (அகம். 156) என வரும். இனிக் குரங்கினை அப்பரென்றலுங் கொள்க. (47) (சேவல் என்னும் பெயர்க்குரியன இவை எனல்) 603. சேவல் பெயர்க்கொடை சிறகொடு சிவணு மாயிருந் தூவி மயிலலங் கடையே. இ-ள்: பறப்பனவற்றுள் ஆண்பாற்கெல்லாஞ் சேவற் பெயர் உரித்து; அவற்றுள் மயிற்காயின் அஃதாகாது என்றவாறு. காமர் சேவ லேமஞ் செப்ப (அகம். 103) எனவும், வளைக்கட் சேவல் வாளாது மடியின் (அகம். 122) எனவும், தொகுசெந் நெற்றிக் கணங்கொள் சேவல் (குறுந். 107) எனவும், கானங் கோழிக் கவர்குரற் சேவல் (குறுந். 242. புறம். 395. மலைபடு. 510) எனவும், உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல் (குறுந். 85) எனவும் வரும். பிறவும் அன்ன. மாயிருந் தூவி மயில் என்றதனான் அவை தோகை யுடையவாகிப் பெண்பால்போலுஞ் சாயலவாகலான் ஆண் பாற்றன்மை இலவென்பது கொள்க. எனவே, 90செவ்வேள் ஊர்ந்த மயிற்காயின் அது 91நேரவும்படு மென்பது. (48) (ஏற்றை என்னும் பெயர்க்குரியன இவை எனல்) 604. ஆற்றலொடு புணர்ந்த வாண்பாற் கெல்லாம் மேற்றைக் கிளவி யுரித்தென மொழிப. இ-ள்: ஏற்றையென்னுஞ் சொல் ஆற்றலொடு கூடிய ஆண் பாற்கெல்லாம் உரித்து என்றவாறு. அவை குறுங்கை யிரும்புலிக் கோள்வ லேற்றை (நற். 36. குறுந். 141) எனவும், செந்நா யேற்றை கம்மென வீர்ப்ப (அகம். 111) எனவும், கொடுந்தாண் முதலைக் கோள்வ லேற்றை (குறுந்.324) எனவும் வரும். இக்கருத்தினானே, பிணர்மோட்டு நந்தின் பேழ்வா யேற்றை (அகம். 246) எனவும், புன்றாள் வெள்ளெலி மோவா யேற்றை (அகம். 133) எனவுங் கூறினார். அவையும் அப்பெயரானே வழங்குதல் ஆற்றலுடையவா கத் தோன்றும். எல்லா மென்றதனாற் சிறுபான்மை ஆற்றல் இல்லாதனவுங் கொள்க. அது, இடுகாட்டு ளேற்றைப் பனை (நாலடி. 96) என்பதுபோன்று வருவன; பிறவும் அன்ன. (49) (ஆண் பெண் என்னும் பெயர்கள் இவ்விவற்றிற்குரியவெனல்) 605. ஆண்பா லெல்லா மாணெனற் குரிய பெண்பா லெல்லாம் பெண்ணெனற் குரிய காண்ப வவையவை யப்பா லான. இது, மேற்கூறிய ஆண்பாற் பெயர்க்கும் இனிவரும் பெண்பாற் பெயர்க்கும் புறனடை. இ-ள்: ஆணென்னுஞ் சொல் எல்லாச் சாதியுள்ளும் ஆண்பாற்கு உரித்து; பெண்ணென்னுஞ்சொல் எல்லாச்சாதி யுள்ளும் பெண்பாற்கு உரித்து; வழக்கினுள் அவ்வாறு காணப் படும் அவை என்றவாறு. அவை ஆண்யானை, பெண்யானை, ஆண்குரங்கு, பெண் குரங்கு; ஆண்குருவி, பெண்குருவி என்றாற்போல்வன. இவை காணப்படும் எனவே, இத்துணை விளங்கவாராது சிறுவரவி னான் வருவனவுமுள இருபாலு மல்லாதனவென்பது. 92ஆணலி பெண்ணலி எனவும், ஆண்பனை பெண் பனை எனவும் வரும். பிறவும் அன்ன. (50) (மேற்கூறிய பெண்பாற் பெயர்களுள் பிடியென்னும் பெயர் இதற்குரியது எனல்) 606. பிடியென் பெண்பெயர் யானை மேற்றே. இது முறையானே மூன்றாம் எண்ணு முறைமைக்கணின்ற பெண்மைப்பெயர் கூறிய தொடங்கி ஆண்பாலிற் களிறு முற்கூறியவாறு போலப் பிடியினை முற்கூறியது. இ-ள்: பிடியென்னும் பெயர் யானைக்கண்ணது என்றவாறு. பிடிபடி முருக்கிய பெருமரப் பூசல் (அகம். 8) என வரும். பெயரென்றதென்னையெனின், அவை தொடங்கு கின்றன என்பது அறிவித்தற்கென்பது. (51) (பெட்டை என்னும் பெயர்க்குரியன இவை எனல்) 607. ஒட்டகங் குதிரை கழுதை மரையிவை பெட்டை யென்னும் 93பெயர்க்கொடைக் குரிய. இ-ள்: ஒட்டகமுங் குதிரையுங் கழுதையும் மரையாவும் பெட்டையென்னும் பெயர்பெறும் என்றவாறு. ஒட்டகப்பெட்டை குதிரைப்பெட்டை கழுதைப் பெட் டை மரையான்பெட்டை என வரும். (52) (அப்பெயரைப் புள்ளும் பெறுமெனல்) 608. புள்ளு முரிய வப்பெயர்க் கென்ப. இ-ள்: எல்லாப் புள்ளும் பெட்டையென்னும் பெயரான் வழங்குதற்குரிய என்றவாறு. அவை, கோழிப்பெட்டை மயிற்பெட்டை யென வரும்; பிறவும் அன்ன. (53) (பேடையும் பெடையும் புள்ளுக்குரிய எனல்) 609. பேடையும் பெடையு நாடி னொன்றும். இ-ள்: பேடையும் பெடையு மென்னும் இரண்டும் முன்னர் நின்ற புள்ளிற்கு 94ஒன்றும் என்றவாறு. அவை குயிற்பேடை அன்னப்பெடை என வரும். நாடின் என்றதனாற் பெட்டையென்பது வழக்கினுட் பயிலா வென்பது. (54) (அளகென்னும் பெயர் இவைக்குரிய எனல்) 610. கோழி கூகை யாயிரண் டல்லவை சூழுங் காலை யளகென லமையா. (55) 611. அப்பெயர்க் கிழமை மயிற்கு முரித்தே. இ-ள்: கோழியுங் கூகையும் மயிலுமென்பனவற்றுக்கு அளகென்னும் பெயர் உரியது என்றவாறு. மனைவா ழளகின் வாட்டொடு பெறுகுவிர் (பெரும்பாண். 256) என்பது, கோழி. பிறவும் அன்ன. (56) (பிணையென்னும் பெயர் இவைக்குரியது எனல்) 612. புல்வாய் நவ்வி யுழையே கவரி சொல்வாய் நாடிற் பிணையெனப் படுமே. இ-ள்: பிணையென்னும் பெண்பெயர்க்குரியன இவை நான்கும் என்றவாறு. அலங்கல் வான்கழை யுதிர்நென் னோக்கிக் கலைபிணை விளிக்குங் கானத் தாங்கண் (அகம். 129) எனவும், சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை (புறம். 2) எனவும். சிறுதலை நவ்விப் பிணையிற் றீர்ந்த நெறிகோட் டிரலை மான் (குறுந். 183) எனவும், கவரி மான்பிணை நரந்தங் கனவும் (பதிற். 11) எனவும் வரும். சொல்வாய் நாடிற் பிணையெனப் படுமே என்பது, பிணையென்னுஞ் சொற்பொருளினை உண்மை நோக் கிற் பிரியாது 95பிணையும் பிற சாதிக்குஞ் 96சேவற்குஞ் செல்லுமா யினும், மரபுநோக்கப் பிணையென்றதற்குச் சிறப்புடையன இவை என்றவாறு. (57) (பிணவென்னும் பெயர் இவைக்குரியதெனல்) 613. பன்றி புல்வாய் நாயென மூன்று மொன்றிய வென்ப பிணவென் பெயர்க்கொடை. இ-ள்: இவை மூன்று சாதியும் பிணவென்னும் பெயர்க்குரி யன என்றவாறு. நெடுந்தாட் செந்தினைக் கெழுந்த கேழல் குறுந்தாட் பிணவொடு குறுகல் செல்லாது எனவும், குறியிறைக் குரம்பைக் குறத்தி யோம்பிய மடநடைப் பிணவொடு கவர்கோட் டிரலை எனவும், நாய்ப்பிண வொடுங்கிய கிழநரி யேற்றை எனவும், மென்புனிற் றம்பிணவு பசித்தெனப் பசுங்கட் செந்நா யேற்றை கேழ றாக்க (அகம். 21) எனவும் வரும். ஒன்றிய என்றதனான், ஈருயிர்ப் பிணவின் வயவுப்பசி களைஇய (அகம். 72) எனப் புலிக்குங் கொள்க. பிறவும் அன்ன. (58) (பிணவம் என்னும் பெயரும் அவற்றிற்குரியதெனல்) 614. பிணவ லெனினு மவற்றின் மேற்றே. இ-ள்: பிணவலென்பதூஉம் அம்மூன்றற்கும் உரித்து என்றவாறு. இரியற் பிணவ றீண்டலின் (அகம். 21) என்பது பன்றி. நான்முலைப் பிணவல் சொலியக்கா னொழிந்து (அகம். 248) என்பதுவும் அது; ஒழிந்தனவும் அன்ன. (59) (ஆ என்னும் பெயர் இவற்றிற்குரியதெனல்) 615. பெற்றமு மெருமையு மரையு மாவே. இது, மேல் அந்தஞ் சான்ற (558) வென்னும் இலேசி னானே ஆவென்பது தழீஇக்கொண்டமையின் அஃது 97இன்னுழி அல்லது ஆகாது என்கின்றது. இ-ள்: ஆவென்னும் பெயர் பெற்றமும் மரையும் எருமை யும் பெறும் என்றவாறு. அவை, புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி (அகம். 56) எனவும், சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான் (அகம். 46. குறுந். 261) எனவும், மரையா மரல்கவர மாரி வறப்ப (கலி. 6) எனவும் வரும். (60) (பெண் என்பதும் பிணா என்பதும் மக்கட்குரிய எனல்) 616. பெண்ணும் பிணாவு மக்கட் குரிய. இ-ள்: பெண்ணும் பிணாவும் உயர்திணைப் பெண்மைக் குரிய என்றவாறு. பெண்ணென்பது, பெண்பா லெல்லாம் பெண்ணெனற் குரிய (தொல். மர. 50) என்றமையின், ஈண்டுக் கூறுதல் மிகையாம் பிறவெனின், - அற் றன்று; அச்சூத்திரம் அஃறிணையதிகாரமாகலின், ஈண்டு விதந் தோதினானென்பது. ஒன்றெனமுடித்த (665) லென்பதனான், உயர்திணை ஆணென்பதும் ஈண்டே கொள்ளப்படும். பெண்கோ ளொழுக்கங் கண்கொள நோக்கி (அகம். 112) எனவும், ஈன்பிண வொழியப் போகி (பெரும்பாண். 90) எனவும் வரும். ஆண்கட னுடைமையிற் பாண்கட னாற்றிய (புறம். 201) என ஆணென்பது உயர்திணைக்கண் வந்தது. பிறவும் அன்ன. 98பிணா வென்னும் ஆகாரவிறுதி வன்கணமன்மையிற் குறியதன் இறுதிச் சினை கெட்டு உகரம்பெறாது நின்றது. மக்கட்குரிய வெனவே, உரியவன்றித் துறுகல் விடரளைப் பிணவுப்பசி கூர்ந்தென (அகம். 146) எனப் புலி முதலியனவற்றிற்குங் கொள்க. (61) (நாகு என்னும் பெயர் இவைக்குரியதெனல்) 617. எருமையு மரையும் பெற்றமு நாகே. (42) 618. நீர்வாழ் சாதியு ணந்து நாகே. இ-ள்: இந்நான்கற்கும் நாகெனும் பெயர் உரித்து என்ற வாறு. எருமை நல்லான் கருநாகு பெறூஉம் (பெரும்பாண். 165) எனவும், உடனிலை வேட்கையின் மடநாகு தழீஇ யூர்வயிற் பெயரும் பொழுதின் (அகம். 64) எனவும், நாகிள வளையொடு பகன்மணம் புகூஉம் (புறம். 266) எனவும் வரும். (62, 63) (மூடும் கடமையும் யாட்டிற்குரிய எனல்) 619. மூடுங் கடமையும் யாடல பெறா. இ-ள்: இவ்விரு பெயரும் யாட்டிற்கேயுரிய பெண்மைப் பெயர் என்றவாறு. இவை இப்பொழுது வழக்கினுள் அரிய. (64) (பாட்டி என்னும் பெயர் இவற்றிற்குரியதெனல்) 620. பாட்டி என்பது பன்றியு நாயும். (15) 621. நரியு மற்றே நாடினர் கொளினே. இ-ள்: பாட்டியென்று சொல்லப்படுவன பன்றியும் நாயும், நரியும் என்றவாறு. 99பிறவும் அன்ன. (65, 66) (மந்தி என்னும் பெயர் இவற்றிற்குரியதெனல்) 622. குரங்கு முசுவு மூகமு மந்தி. இ-ள்: இம் மூன்றுசாதிப் பெண்பாலும் மந்தியென்னும் பெயர் பெறும் என்றவாறு. கைம்மை யுய்யாக் காமர் மந்தி (குறுந். 69) எனவும், 100கருமுக மந்தி செம்பி னேற்றை எனவும் வரும். ஊகத்துக்கும் இஃதொக்கும். (67) (மரீஇவந்த மரபுப்பெயர்கள் இவை எனல்) 623. குரங்கி னேற்றினைக் கடுவ னென்றலு மரம்பயில் கூகையைக் கோட்டா னென்றலுஞ் செவ்வாய்க் கிளியைத் தத்தை யென்றலும் வெவ்வாய் வெருகினைப் பூசை யென்றலும் குதிரையு ளாணினைச் சேவ லென்றலு மிருணிறப் பன்றியை யேன மென்றலு மெருமையு ளாணினைக் கண்டி யென்றலு முடிய வந்த வவ்வழக் குண்மையிற் கடிய லாகா கடனறிந் தோர்க்கே. இது. மரீஇவந்து முடிந்த மரபுணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: ஆண்குரங்கினைக் கடுவனென்றலும், மரப் பொதும்பினுள் வாழுங் கூகையைக் கோட்டானென்றலும், செவ்வாய்க் கிளியைத் தத்தையென்றலும், வெருகினைப் பூசை யென்றலும், ஆண்குதிரையைச் சேவலென்றலும், இருணிறப் பன்றியை ஏனமென்றலும், எருமையேற்றினைக் கண்டி யென்ற லும், அவ்வாறு முடிந்த வழக்குண்மையிற் கடியப்படா கடப் பாடு அறிந்தோர்க்கு எ-று. கடுவனு மறியுமக் கொடியோ னையே (குறுந். 26) ஆண்குரங்கு, இதனைக் கடியலாகாது எனப்பட்ட இழுக் கென்னையெனின், - மக்கட்கும் 101வெருகிற்கும் அக்காலத்துப் பயின்றனபோலுமாதலின். கூகையைக் கோட்டா னென்றலும் வழக்காகலான் அமையும்; மரம்பயில் கூகை யென்ற தென்னை யெனின், மரக்கோடு விடாமையிற் கோட்டானென்னும் பெயர்பெற்றதென்றற்கு. தத்தையென்பது பெருங்கிளியாதலிற் சிறுகிளிக்கும் அப்பெயர் கொடுத்தலமையு மென்றவாறு. செவ்வாய்க் கிளி யென்றதனைச் சிறுகிளிமேற் கொள்க. வெவ்வாய் வெரு கென்றதனாற், படப்பை வேலியும் புதலும் பற்றி 102விடக்கிற்கு வேற்றுயிர்கொள்ளும் வெருகினை, இல்லுறை பூசையின் பெயர்கொடுத்துச் சொல்லலும் (புறம். 117, 326) அமையுமென்றவாறு. 103குதிரையைச் சேவலென்றல் இக்காலத்தரிதாயிற்று. அது வுஞ் சிறகொடு சிவணாதாயினும் அதனைக் கடுவிசைபற்றிப் பறப்பதுபோலச் சொல்லுதல் அமையுமென்பது கருத்து. எருமையேற்றினைக் கண்டி யென்பபோலும். அது காணலாயிற் றில்லை. அதனை, இலக்கணைவகையானுடைய பெயரென்றலுமாம்; இதுபொழு தின்றென்பது. கடனறிந்தோ ரென்றதனான், வழக்கினுஞ் செய்யுளினும் அவை வந்தமையிற் கடப்பாடறிவோர்க்குக் கடியலாகா தென்ற வாறு. இன்னும் 104இப்பரிகாரத்தானே கோழியை வாரண மென்றலும் வெருகினை விடை யென்றலும் போல்வன பலவுங் கொள்க. அவை, கான வாரண மீனுங் காடாகி விளியு நாடுடை யோரே (புறம். 52) எனவும், வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ (முருகு. 219) எனவும், வெருக்குவிடை யன்ன வெருணோக்குக் கயந்தலை (புறம். 324) எனவும் வரும். (68) (இவையும் மரீஇவந்த மரபுப்பெயர் எனல்) 624. பெண்ணு மாணும் பிள்ளையு மவையே. இதுவுமது. பெண் ஆணென்பன இருதிணைப் பெண் மைக்கும் ஆண்மைக்கும் பொதுவென்பன முற்கூறினான்; மேல் ஒன்றற்குரிய பெயர் மரீஇ வந்து பிறிதொன்றற்காய வழியுங் கடியலாகாதென நின்ற அதிகாரத்தான் இவையும் அவ்வாறே திரியினுங் கடியலாகாதென்றவாறு. இ-ள்: 105பெண்ணும் ஆணும் பிள்ளையுமென வாளாது சொல்லிய வழி உயர்திணைக்கேற்றன மரீஇவந்த மரபு என்றவாறு. மக, குழவியென்பனவோவெனின், - அவை அத்துணைப் பயின்றில உயர்திணைக்கென்பது; எடுத்தோதிய மூன்றும் 106ஆயின. வாளாதே பெண்வந்தது என்றவழி அஃறிணைப் பொருளென்பது உணரலாகாது; பெண்குரங்கு வந்தது என விதந்தே கூறல்வேண்டுமென்பது. பெண் பிறந்தது ஆண் பிறந்தது பிள்ளை பிறந்தது, என அடையடாது சொல்லிய வழி உயர்திணைக்கேயாம். அஃறிணைக்காயின் அற்றன் றென்பது. (69) (அந்தணர்க்குரியன இவை எனல்) 625. நூலே கரக முக்கோன் மணையே யாயுங் காலை யந்தணர்க் குரிய. இஃது, உயர்திணை நான்குசாதியும் பற்றிய மரபு உணர்த்துவான், முறையானே அந்தணர்க்குரிய மரபுபட்டுவருங் கலப்பை வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: முந்நூலுங் 107குண்டிகையும் முக்கோலும் 108யாமை மணையும் போல்வன அந்தணர்க்கு உரிய எ-று. ஆயுங்காலை யென்றதனாற் குடையுஞ் செருப்பும் முதலாயினவும் ஒப்பன அறிந்துகொள்க. உதாரணம் : எறித்தரு கதிர்தாங்கி யேந்திய குடைநீழ லுறித்தாழ்ந்த கரகமு முரைசான்ற முக்கோலும் (கலி. 9) எனவும், தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப் படிவ வுண்டிப் பார்ப்பன மகனே (குறுந். 156) எனவும் வரும். இன்னும் ஆயுங்காலை யென்றதனான், 109ஒருகோலுடை யார் இருவருளர். அவர் துறவறத்து நின்றாராகலின் உலகியலின் ஆராயப்படா ரென்பது. 110முக்கோலுடையார் இருவருட் பிச்சை கொள்வானும் பிறாண் டிருந்து தனதுண்பானும் உலகியலின் நீங்காமையின் அவரையே வரைந் தோதினானென்பது. மற்று அரசர்க்கும் வணிகர்க்கும் உரிய நூலினை ஈண்டு 111வரைந்தோ தினதென்னையெனின், ஒருகோலுடையான் 112நூல் களைவானாகலின் அவனுஞ் சிறுபான்மை அந்தண னெனப்படு மென்பது கோடற்குங் கரகமும் மணையும் உடைய னென்றற்கு மென்பது. நூலினை முற்கூறினான் 113பிறப்பு முறையானுஞ் 114சிறப்பு முறையானுமென்பது. ïÅ¡ FLÄí§ Firí«nghštd T¿‰¿y‹, mJ 115K‹dU« ã‹dU« tUjyhD«, k‹dU« tÂfU« bgWjyhDbk‹gJ.(70) (அரசர்க்குரியன இவை எனல்) 626. படையுங் கொடியுங் குடையு முரசு நடைநவில் புரவியுங் களிறுந் தேருந் தாரு முடியு நேர்வன பிறவுந் தெரிவுகொள் செங்கோ லரசர்க் குரிய. இது, முறையானே அரசர்க்குரியன கூறுகின்றது. இ-ள்: 116கொடிப்படையுங் கொடியுங் குடையும் முரசுங் குதிரையும் யானையுந் தேருந் தாரும் முடியும் பொருந்துவன பிறவும் அரசர்க்குரிய என்றவாறு. பிறவும் என்றதனாற் 117கவரியும் அரியணையும் அரண் முதலாயினவுங் கொள்க; தெரிவுகொள் செங்கோல் அரச ரென்றதனானே 118செங்கோல் கொளப்பட்டது. 119தாரெனவே போர்ப்பூவுந் தார்ப்பூவும் அடங்கின. படை யென்புழி நடைநவில் புரவியுங் களிறுந் தேரும் அடங் காவோ வெனின்,அடங்கும். அவைநோக்கிக் கூறினானல்லன்; 120அவை பட்டஞ் சாத்தியவாதல் நோக்கிக் கூறப்பட்டன. அஃதேல், தேர்கூறியதென்னையெனின்,அதுவும் அவைபோல அரசர்க்கே உரிய தென்றுளதென்றற்கும், அது பூண்ட குதிரை யும் அவர்க்கே யுரியவென்றுளவென்றற்குங் கூறினானென்பது. இக்கருத்தினாற் போலும் நடைநவில் புரவியெனச் சிறப்பித்து அதனை முற்கூறியதென்பது. எல்லாவற்றினுஞ் சிறந்ததாதலான் 121முடிபிற் கூறப் பட்டது. தெரிவு கொள் செங்கோல் அரசரென்பதனான் அரச ரெல்லாந் தந்நாட்டு நன்றுந் தீதும் ஆராய்ந்து 122அதற்குத் தக்க தண்டஞ் செய்தற்கு உரிமையும் 123அதுவெனக் கொள்க. (71) (அந்தணர்க்குரியவற்றுட் சில அரசர்க்குமுரியவாமெனல்) 627. அந்த ணாளர்க் குரியவு மரசர்க் கொன்றிய வரூஉம் பொருளுமா ருளவே. இது, மேலதற்கொரு புறனடை. இ-ள்: அந்தணாளர்க்கு உரியவென மேல் ஓதப்பட்டன வற்றுண் முந்நூலும் மணையும்போல்வன அரசசாதிக்குரிய வாகியும் வரும் என்றவாறு. பொருளுமாருள வென்றதனான், அந்தணாளர்க் குரியனவற்றுள் வேள்விக் 124கலப்பை யொன்றிவருதல். பெரும் பான்மையென உணர்க. ஈண்டு 125அவற்றை விதந்தோதினான், ஒழிந்த, புலனெறிவழக்கினுட் பயிலாமையி னென்பது. அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமு மைவகை மரபி னரசர் பக்கமு யிருமூன்று மரபி னேனோர் பக்கமும் (தொ. புத். 20) பற்றி வாகைப்பொருள் பிறத்தலின் அவற்றைப் புறத்திணை யியலுட் கூறினானாயினும், ஈண்டுத் தழீஇக்கொள்ளப்படும், மரபுவகையானென்பது; என்போலவெனின், அ இ உ அம் மூன்றுஞ் சுட்டு (தொ. எழு. 31) என நூன்மரபினுள் ஓதிய மூவகைச்சுட்டினை இடைச் சொலோத்தினுள் ஓதானாயினான், அது போலவென்பது. கொன்று126களம் வேட்ட ஞான்றை (அகம். 36) எனவும், அடுகளம் வேட்ட வடுபோர்ச் செழிய (புறம். 26) எனவும் அரசர்க்கு வேள்வி கூறினவாறு. பிறவும் அன்ன. (72) (அந்தணர்க்குரித்தல்லாதன இவை எனல்) 628. பரிசில்பா டாண்டிணைத் துறைக்கிழ மைப்பெயர் நெடுந்தகை செம்ம லென்றிவை பிறவும் பொருந்தச் சொல்லுத லவர்க்குரித் தன்றே. இஃது, ஐயம் அறுத்தது; அந்தணாளர்க்குரியன அரசர்க்கு முரியன உளவெனக் கேட்ட மாணாக்கன் அரசர்க்குரியனவும் அந்தணர்க் குரியகொல்லென்று ஐயுறாமற் காத்தமையின், இஃது, எய்தியதன்மேற் சிறப்புவிதியெனினும் அமையும்; என்னை? ஈண்டு ஓதப்பட்டவை அரசர்க்குரியவென்பது கொள்ள வைத்தமையின். இ-ள்: பரிசில் - பரிசில்கடாநிலையும், பரிசில்விடையும் போல்வன; பாடாண்டிணைத்துறைக்127கிழமைப்பெயர் - பாடாண் டிணைக்குரிய கைக்கிளைப்பொருள் பற்றியுங் கொடைத்தொழில் பற்றியும் பெறும் பெயர்; அவை காளை இளையோன் என்பன போல்வன. அவையும், நெடுந்தகை செம்ம லென்பன முதலாயினவும், இவைபோல்வன பிறவும் புனைந்துரை வகையாற் சொல்லி னல்லது சாதிவகையாற் கூறுதல் அந்தணர்க் குரித்தன்று என்றவாறு. 128பரிசில்கடாநிலையும் 129பரிசில்விடையும் போல்வன கூறியுங், கைக்கிளைப்பொருள் கூறியுங், கொடைத்தொழில் கூறியும், அவற்றுக் கேற்ப எடுத்தோதிய பெயர்கூறியும், அந்தண ரைத் 130தன்மை வகையாற் செய்யுள் செய்யப்பெறா வென்பது கருத்து. புனைந்துரை வகையான் அவையாமாறு: 131எண்ணாணப் பலவேட்டு மண்ணாணப் புகழ் பரப்பியும் (புறம். 166) என வரும். கொடுத்தற்றொழில் வேள்விக்காலத்ததென வரையறுத்த லிற் பொருந்தக் கூறுதல் அவர்க்குரித்தன்றென்றானென்பது. பாடாண்டிணைத் துறைப்பெயரென்னாது, கிழமைப் பெயரென்றதென்னையெனின், - அவை, ஐந்திணைப் பெயராகி வருங்காலும் அவர்க் குரியவல்ல வென்றற்கு. எனவே, அரசர்க் காயின் இவையெல்லாம் உரியவென்ப வாயிற்று. மற்றுப் பாடாண்டிணைக்குரியவல்லவென மற்றைத் திணைக் கிழமைப்பெயர் உரியவாம் பிறவெனின், -அஃது, இடையிரு வகையோ ரல்லது நாடிற் படைவகை பெறாஅர் (தொ. மர. 76) என மேற்கூறி விலக்குமென்பது. (73) (நான்கு வருணத்தாருக்கும் ஊர் முதலியளவு முரியவெனல்) 629. ஊரும் பெயரு முடைத்தொழிற் கருவியும் 132யாருஞ் 133சார்த்தி யவையவை 134பெறுமே. இது, மேற்கூறிய அந்தணர்க்கும் அரசர்க்கும் உரியன வற்றோடு ஒழிந்த சாதியோர்க்கும் ஒப்பன உடன்கூறுகின்றது. இ-ள்: நான்கு சாதியாரும் பிறந்த ஊரும், அவர்தம் பெயரும், அவர்சாதிக்கு உரித்தென்றற்கேற்ற கருவியும், யாருஞ் சார்த்தப்பட்டு அவை அவை பெறுப என்றவாறு. இம்மூன்றும் வரையறுத்துச் சொல்லப்படா, எல்லாச் சாதியார்க்கும் ஒப்பச்செல்லுமென்பது கருத்து; எற்றுக்கு? இவை சாதிபற்றி வேறுபடாப் பொருளாகலின். ஊரும் பெயரு மென்பன: உறையூர் ஏணிச்சேரி முடமோசி, பெருங்குன்றூர்ப் பெருங் கௌசிகன், கடியலூ ருருத்திரங்கண்ணன் என்பன அந்தணர்க் குரியன: உறையூர்ச் சோழன், மதுரைப் பாண்டியன் என்பன அரசர்க்குரியன; காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக் கண்ணன், மதுரை அறுவைவாணிகன் இளவேட்டன் என்பன வணிகர்க் குரியன ; அம்பர்கிழான் நாகன், வல்லங் கிழான் மாறன் என்பன வேளாளர்க்குரியன. இனி, உடைத்தொழிற் கருவியென்பன, அந்தணாளர்க் குச் 135சுருவையுஞ் 136சமிதைகுறைக்குங் கருவியும் முதலாயின; 137அரசர்க்குக் குடியும் கூழும் அமைச்சும் நட்பும் முதலாயின; வணிகர்க்கு 138நாவாயும் 139மணியும் 140மருந்தும் முதலாயின; வேளாளர்க்கு 141நாஞ்சிலுஞ் 142சகடமும் முதலாயின. பிறவும் அன்ன. mit bašyh« mtut® brŒí£FÇabt‹gJ.(74) (தலைமைக் குணச்சொல்லும் நான்கு வருணத்தாரும் பெறுவர் எனல்) 630. தலைமைக் குணச்சொலுந் தத்தமக் குரிய நிலைமைக் கேற்ப நிகழ்த்துக வென்ப. இதுவும் அது. இ-ள்: அந்நான்குசாதியார் தலைமைக்குணம்படச் சொல் லுஞ் சொல்லும் அவரவர்க்குரிய நிலைமைக்கேற்ப நிகழ்த்தவும் படும் என்றவாறு. அந்தணர் தலைமைக்குணங் கூறுங்காற் பிரமனொடு கூறியும், அரசரை மாயனொடு கூறியும், வணிகரை 143நிதியின் கிழவனொடு கூறியும், வேளாண்மாந்தரை வருணனொடு கூறியுந், தலைமைக் குணச்சொல் நிகழ்த்தப்படும். அவை யெல்லாம் அவரவர் செய்யுளுட் கண்டு கொள்க. (75) (அரசரும் வணிகரும் படைவகையும் பெறுவர் எனல்) 631. இடையிரு வகையோ ரல்லது நாடிற் படைவகை பெறாஅ ரென்மனார் புலவர். மேல் நான்கு வருணத்தாரையும் உடன் கூறிவந்தான், இது முதலும் கடையும் ஒழித்து இடைநின்ற இருவருணத்தார்க்கும் ஆவதொரு புறனடை கூறுகின்றது. இ-ள்: அரசரும் வணிகருமல்லது படைப்பகுதி பெறார் என்றவாறு. படைப்பகுதி யென்பன, வேலும் வாளும் வில்லும் முதலாயின. நாடினென்பதனான், ஒருசார் அந்தணரும் படைக் குரியா ரென்பது கொள்க. அவர் 144இயமதங்கியாருந் 145துரோணனும் கிருபனும் முதலாயினாரெனக் கொள்க. வேளாண்மாந்தர்க்கும் இஃதொக்கும். ïit Éfhu bkdî« vL¤njhâa tUz§ f£nf ï~âašbgdî§ bfhŸf.(76) (வணிகர்க்கு வாணிகமுரித்தெனல்) 632. வைசியன் பெறுமே வாணிக வாழ்க்கை. இது, வணிகர் மரபு கூறுகின்றது. இ-ள்: வணிகர்க்குத் தொழிலாகிய வாணிகவாழ்க்கை உள்ளுறையாகச் செய்யுள் செய்தல் பெரும்பான்மையுமாம் (என்றவாறு). அவையும் அவர் செய்யுளிற் காணப்படுமாறு அறிந்து கொள்க. (77) (வணிகர் எண்வகைக் கூலமும் பெறுவர் எனல்) 633. மெய்தெரி வகையி னெண்வகை யுணவின் செய்தியும் வரையா ரப்பா லான. இன்னும் வணிகர்க்கே உரிய தொழில் கூறுகின்றது. இ-ள்: பொருள் தெரிந்தவகையான் எண்வகைக் 146கூலமுஞ் செய்யில் விளைத்தலும் அவர் கடன் என்றவாறு. அவையும் அவர் பண்டத்தோடு உபகாரப்படுமாகலின் வரையப் படாதென்றானென்பது. v©tifízbt‹gd: gaW« cGªJ« fLF« fliyí« vŸS« bfhŸS« mtiuíª Jtiuíkh«.(78) (அவர் கண்ணியும் தாரும் பெறுவர் எனல்) 634. கண்ணியுந் தாரு மெண்ணின ராண்டே. இதுவும் அது. இ-ள்: இவையும் வணிகர் திறத்தன என்றவாறு. கண்ணியென்பது, சூடும்பூ. தாரென்பது, ஒருகுடிப் பிறந் தார்க்குரித்தென வரையறுக்கப்படுவ147தாயிற்று. எண்ணப்படு மெனவே, 148அவரவர்க்குரிய வாற்றாற் பலவாகி வரும். அவை வந்தவழிக் கண்டுகொள்க. (79) (வேளாளர்க்கு உழவுதொழில் உரித்தெனல்) 635. வேளாண் மாந்தர்க் குழுதூ ணல்ல தில்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி. இது, வேளாண்மாந்தர்க்குக் கூறப்படுந் தொழில் கூறுகின்றது. இ-ள்: வேளாண்மாந்தர் பலவகைப்பட்ட தொழிலரேனும் உழுந்தொழிலே பெரும்பான்மைத்தாகலான் அதனையே சிறப் பித்துச் சொல்லுதன் மரபு என்றவாறு. உழுதுண்டு வாழ்வார்.(குறள் . 1033) என்பது, இதன் பொருளாயிற்று. மற்றுப் 149பார்ப்பியன் முதலாகிய நால்வகைத் தொழிலும் வாகையுட் கூறினமையின் இச்சூத்திரமும் மேலைச் சூத்திரங்களும் மிகையாம் பிறவெனின், அற்றன்று; பார்ப்பியலும் அரசியலும் வாணிகத்தொழிலுமாகிப் பொதுப்பட நின்ற ஓதலும் வேட்டலும் ஈதலும் இவர்க்கு ஒத்த சிறப்பினவாகலானும், அவருள் வணிகர்க்கும் ஒழிந்த வேளாளர்க்கும் ஒத்த செய்தியனவாகிய உழவுத் தொழிலும் நிரைகாத்தலும் வாணிகமு மென்பன அவற்றின் ஒத்த சிறப்பின வன்றி அவற்றுள்ளும் ஒரோவொன்று ஒரோவருணத்தார்க்கு உரியதாமாகலானும் ஈண்டு அவை விதந்துகூறினானென்பது. நிரைகாவலும் உழவுத் தொழிலும் வணிகர்க்கும் வேளாளர்க்குந் தடுமாறுதல் போலாது, வாணிக வாழ்க்கை வேளாண் மாந்தர்க்குச் சிறுவரவிற்றெனவும், உழுதுண்டல் வணிகர்க்குச் சிறுவரவிற் றெனவும், எண்வகைக் கூலத்தொடுபட்டதே பெருவரவிற்றென வுங் கூறினான் இச்த்திரங்களானென்பது. இதனது பயம் : புலனெறிவழக்கினுள் இவர்க்கு இவை சிறந்த மரபென்றலா யிற்று. (80) (வேளாளர் வேந்தர் கொடுப்பின் படையுங் கண்ணியும் பெறுவரெனல்) 636. வேந்துவிடு தொழிலிற் படையுங் கண்ணியும் வாய்ந்தன ரென்ப வவர்பெறும் பொருளே. இது, நான்காம் வருணத்தார்க்கோர் புறனடை. இ-ள்: வேந்தர் கொடுப்பின் வேளாண்மாந்தர்க்குப் படைக்கலமுங் கண்ணியும் பெறும்பொருளாகச் சொல்லப் படும் என்றவாறு. வேந்து விடுதொழிலென்பது, வேந்தனாற் கொடுக்கப் படும் 150தண்டத்தலைமையாகிய சிறப்புக் காரணத்தா னென்ற வாறு; அகத்திணையியலுள், உயர்ந்தோர்க் குரிய வோத்தி னான (31) என்புழிக் கூறப்பட்டதெனின், - வேளாளரையொழித்து ஒழிந் தோரை நோக்கிற்று அச்சூத்திரமென்பது. மேற்கூறிய வற்றை யும் மரபுபற்றி ஈண்டு வரையறை கூறுகின்றவாறெனக் கொள்க. அவையும் அவரவர் பாட்டுக்களுட் கண்டுகொள்க. (81) (அந்தணாளர் அரசுத் தொழிலும் பெறுவரெனல்) 637. அந்த ணாளர்க் கரசுவரை வின்றே. இஃது, எல்லாவற்றிலுஞ் சிறுவரவிற்றாகி அரசர்க்குரிய தொழில் அந்தணர்க்குரியவாகலின் ஈண்டுப் போதந்து கூறுகின்றது. இ-ள்: அரசர் இல்வழி அந்தணரே அவ்வரசியல் பூண்டொழுகலும் வரையப்படாது என்றவாறு. மக்களைத்தின்ற மன்னவர்க்குப்பின்னை மறையோரான் அரசு தோற்றப்பட்டாற்போலக் கொள்க. (82) (இது குறுநில மன்னர்க்குரியன கூறுகின்றது) 638. வில்லும் வேலுங் கழலும் கண்ணியுந் தாரு மாலையுந் தேரும் வாளு மன்பெறு மரபி னேனோர்க்கு முரிய. இது, முடியுடை வேந்தரல்லாக் குறுநில மன்னர்க்குரியன கூறுகின்றது. இ-ள்: இவ்வெண்ணப்பட்டனவெல்லாங் குறுநில மன் னர்க்கும் உரியன என்றவாறு. மன்பெறு மரபின் ஏனோ ரெனப்படுவார் அரசுபெறு மரபிற் 151குறுநிலமன்னர் எனக் கொள்க. அவை பெரும்பாணாற் றுள்ளும் பிறவற்றுள்ளுங் காணப்படும். (83) (இழிந்தோர் வில் முதலியன பெறார் எனல்) 639. அன்ன ராயினு மிழிந்தோர்க் கில்லை. இஃது, எய்தியது இகந்துபடாமைக் காத்தது. இ-ள்: மன்னவர்போலுஞ் செல்வத்தாராகிய இழிகுலத் தோர் நாடாண்டாராயினும் அவர்க்கு இவை கூறலமையாது (என்றவாறு). மன்பெறு மரபி னேனோர் (438) எனவே, அரசர் வைசியரன்றிக் 152கீழ் அமையாவாயிற்று, (84) (புறக்காழுடையன இன்ன பெயரான் வழங்கப்படுமெனலும் அகக்காழுடையன இன்ன பெயரான் வழங்கப்படுமெனலும்) 640. புறக்கா ழனவே புல்லென மொழிப வகக்கா ழனவே மரமென மொழிப. இது, மக்களை வழங்குமாற்றுக்கண் மரபுகூறி இனி ஓரறிவுயிர்க்கு இன்னவாறு சொல்லுதன் மரபென்ப துணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: புறத்துக் காழ்ப்புடையனவற்றைப் புல்லெனவும் அகத்துக் காழ்ப்புடையனவற்றை மரமெனவுஞ் சொல்லுப என்றவாறு. புறக்காழனவெனவே 153,அல்வழி வெளிறென்பதறியப் படும், 154அவை. பனையுந் தெங்குங் கமுகும் முதலாயின புல்லெனப்படும். இருப்பையும் புளியும் ஆச்சாவும் முதலாயின மரமெனப்படும். இங்ஙனம் வரையறை கூறிப் பயந்ததென்னை? புறத்தும் அகத்துங் கொடி முதலாயின 155காழ்ப்பின்றி யும் அகின்மரன் போல்வன இடையிடை 156பொய்பட்டும் புல்லும் மரனும் வருவன உளவாலெனின், இரண்டிடத்தும் ஏகாரம் பிரித்துக் கூறினமை யானும் எனமொழிப என்று இருவழியுஞ் சிறப்பித்து விதந்தமையானுஞ் சிறுபான்மை அவையும் புல்லும் மரனுமென அடங்குமென்பது. இரும்பனம் புல்லின் பசுந்தோட்டுக் குடம்பை எனவும், யாஅங் கொன்ற மரஞ்சுட் டியவின் (குறுந். 198) எனவும் வரும். நிலாவி னிலங்கு மணன்மலி மறுகிற் புலாலஞ் சேரிப் புல்வேய் குரம்பை (அகம். 200) எனப் புறக்காழும் அகக்காழும் அல்லன புல்லெனப்பட்டன வென்பது. 157அது பனையோலையுமாகலிற் புறக்காழுடைய பனையுமா மென்பது. 158ஓதி மரக்கிளவியுமாமென்பது சிறு பான்மை. பிறவும் அன்ன. (85) (புல்லினுறுப்புகளை வழங்கும் வாய்பாடு இவை எனல்) 641. தோடே மடலே யோலை யென்றா வேடே யிதழே பாளை யென்றா வீர்க்கே குலையென நேர்ந்தன பிறவும் புல்லொடு வருமெனச் சொல்லினர் புலவர். இது, முறையானே புறக்காழனவற்றைச் சொன்மரபுணர்த் துதல் நுதலிற்று. இ-ள்: எண்ணப்பட்ட வாய்பாடும் பிறவும் புல்லுறுப் பினைச் சொல்லும் வாய்பாடு என்றவாறு. பிறவு மென்றதனாற் குரும்பை நுங்கு 159நுகும்பு போந்தை யென்றற் றொடக்கத்தனவுங் கொள்க. இரும்பனை வெண்டோடு மிலைந்தோனு மல்லன் (புறம். 45) எனவும், மாவென மடலு மூர்ப (குறுந். 17) எனவும்? துகடபு காட்சி யவையத்தா ரோலை (கலி. 94) எனவும் வரும். ஒழிந்தனவுங் கொள்க. வண்டோட்டு நெல்லின் வருகதிர் வணங்க (நெடுநல்.22) என்பதும் அது,. நேர்ந்தன பிறவும் என்பது கேட்டாரை உடம்படுவிப்பன பிறவுமென்றவாறு. வண்கோட் பெண்ணை வளர்ந்த நுங்கின் (சிறுபாண். 27) எனவும், பனைநுகும் பன்ன சினைமுதிர் வராலொடு (புறம். 249) எனவும் வரும். பிறவும் அன்ன. (86) (மரவுறுப்புக்களை வழங்கும் வாய்பாடு இவை எனல்) 642. இலையே தளிரே முறியே தோடே சினையே குழையே பூவே யரும்பே நனையுள் ளுறுத்த வனையவை யெல்லா மரனொடு வரூஉங் கிளவி யென்ப.. இஃது, அகக்காழனவற்றுறுப்பினைச் சொல்லும் மரபுணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: எண்ணப்பட்டனவும் பிறவுமெல்லாம் மரத்துறுப் பினைச் சொல்லும் வாய்பாடு என்றவாறு. அனையவையெல்லாம் என்ற புறநடையானே 160புல்லுந் தழையும் பொங்கரும் முதலாயின கொள்க. அவை தெய்வ மடையிற் றேக்கிலை குவைஇ (பெரும்பாண். 104) எனவும், முறிமே யாக்கை (நற். 151; மலைபடு. 313) எனவும், யாஅ வொண்டளி ரரக்கு விதிர்த் தன்ன (அகம். 333) எனவும், தோடுதோய் மலிர்நிரை யாடி யோரே (அகம். 166) எனவும், மேக்கெழும் பெருஞ்சினை யிருந்த தோகை (குறுந். 26) எனவும், கொய்குழை யகைகாஞ்சித் துறையணி நல்லூர (கலி. 74) எனவும், நனைத்த செருந்தி (அகம். 150) எனவும், அண்டர் மகளிர் தண்டழை யுடீஇயர் மரஞ்செல மிதித்த மாஅல் போல (அகம். 59) என்றாற்போல வருவனவுமெல்லாங் கொள்க. மேலைச் சூத்திரத்து, புல்லொடு வருமெனச் சொல்லினர் (941) எனவும், இச்சூத்திரத்து, மரனொடு வரூஉங் கிளவி (642) யெனவும் மிகைபடக் கூறியதென்னையெனின்,- அம்மிகை யானே எடுத்தோதிய புறக்காழனவும் அகக்காழனவுமன்றி அவற்றொடு தழீஇக் கொள்ளப்படுவனவுமெல்லாம் இவற்றுக்குரிய வென்பது கொள்க. அவை, ஊகம்புல்லுஞ் சீழகம்புல்லும் பஞ்சாய் முதலியனவும், 161புழற்கால் ஆம்பல் முதலியனவும் புல்லெனப் பட்டடங்கி, 162யவற்றின் பெயரும் பெறுமென்பது. பிடாவுங், காயாமுதலிய புதலும், பிரம்பு முதலாகிய கொடியும் மரமெனப் பட்டவற்று உறுப்பின் பெயர் பெறுமென்பது. அவை ஊகந்தோடு சீழகந்தோடு எனவும், பிடவிலை காயாம்பூ முல்லைப்பூ எனவும் வரும். பிறவும் அன்ன. மற்றுப் பிறப்பு முறையான் தளிர் முற்கூறாது இலை முற் கூறிய தென்னையெனின்,- புல்லினுள் ஒருசாரன இலை யெனவும் பூவெனவும் படுமென 163அதிகாரங்கோடற்கென்க. அவை, ஈய்த்திலை வேய்ந்த வெய்ப்புறக் குரம்பை (பெரும்பாண். 88) எனவும், ஆம்பலிலை, தாமரையிலை எனவும், ஆம்பற்பூ, தாமரைப்பூ எனவும் வரும். பிறவும் அன்ன கொள்க. இன்னும் இவ்விலேசானே, புல்லிற்குரியன மரத்திற்கு வருவனவுங் கொள்க. அவை, ஈன்றவ டிதலைபோ 164லீர்பெய்யுந் தளிரொடும் (கலி. 32) என ஈர்க்கென்பது மாவிலைமேல் வந்தது. பிறவும் அன்ன. (87) (மேற்கூறிய இரண்டற்கும் பொதுவாகச் சொல்லப்படும் உறுப்புக்களிவை எனல்) 643. காயே பழமே தோலே செதிளே வீழோ டென்றாங் கவையு மன்ன. இது மேற்கூறிய இரண்டற்கும் பொதுவுறுப்புணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: இவையும் அவ்விருதிறத்தோ டொக்கும் என்றவாறு. உதாரணம்:- தெங்கங்காய் கமுகங்காய் எனவும், வேப்பங் காய் மருதங்காய் எனவுங், காயென்பது அவ்விரண்டற்கும் வந்தது. பழமென்பதற்கும் இஃதொக்கும். பனந்தோல் வேப்பந்தோல், பனஞ்செதிள் வேப்பஞ் செதிள், தாழைவீழ் இத்திவீழ் என இவையும் இருபாற்குமுரியவாயின. மற்றிவையெல்லாம் வரையறையின்றிச் செல்லுமாயிற் புறக்காழன அகக்காழனவென வரையறுத்துப் பயந்ததென்னை யெனின்,- அவ்விரு பகுதியுள் அடங்கக் கூறிய வெல்லாம் புல் லெனவும் மரமெனவும் படாவென்றற்கும் 165அவற்றுறுப்பு ஓதிய வாற்றாற் புல்லின்கண்ணும் மரத்தின் கண்ணும் பெரு வரவின வாமென்றற்கு மென்பது. (88) (இருதிணை யைம்பாற்பொருள்களை மரபு பிறழாமற் சொல்லல்வேண்டுமெனல்) 644. நிலந்தீ நீர்வளி விசும்போ டைந்துங் கலந்த மயக்க முலக மாதலி னிருதிணை யைம்பா லியனெறி வழாஅமைத் திரிவில் சொல்லொடு தழாஅல் வேண்டும். இஃது, உலகிலெல்லாம் மரபிற்றிரியாமையின் அதன் சிறப்புணர்த்தி அதற்குக் காரணமுங் கூறுகின்றது. இ-ள்: நிலனுந் தீயும் நீருங் காற்றும் ஆகாயமுமென்னும் ஐம்பெரும் பூதமுங் கலந்த கலவையல்லது உலகமென்பது பிறிதில்லாமையின், அவற்றைச் சொல்லுமாறு சொல்லாது, இருதிணைப்பொருளென வேறுபடுத்தும் ஐம்பாலென வேறுபடுத்தும் வழங்குகின்ற வழக்கெல்லாம் மரபில் திரியாத சொல்லொடு தழீஇ வரல்வேண்டும் என்றவாறு. இதன் கருத்து;- நிலம்வலிது, தீவெய்து, நீர் தண்ணென் றது, வளியெறிந்தது, விசும்புஅகலியது, என அஃறிணை வழக்கின வாயினும், இவை கலந்த வழியும் அவ்வாய்பாட்டான் வழங்காது, உயர்திணை வாய்பாடு வேறாகவும், அஃறிணை வாய்பாடு வேறாகவும் அவைதம்முட் பகுதியாகிய ஐந்துபாற்சொல்லும் வெவ்வேறாகவும் வழங்குகின்ற வழக்கிற்குக் காரணம் மரபல்லது பிறிதில்லையென்றவாறு. எனவே, மரபினை வலியுறுத்தவாறு. மற்று, நிலம் நீர் தீ வளி ஆகாயமென ஒன்று ஒன்றனுள் அடங்கு முறையாற் கூறுதல் செய்யாது மயங்கக் கூறியதென்னை யெனின்,- அவை கலக்குங்கால் ஒரோபொருளின்கண்ணும் அம் முறையானே நிற்குங்கொலென்று கருதினுங் கருதற்க, மயங்கி நிற்குமென்றற்கு அவ்வாறு கூறினானென்பது. (89) (செய்யுள் மரபு பிறழாமற் செய்தல்வேண்டுமென்றற்குக் காரணங் கூறல்) 645. 166மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை மரபுவழிப் பட்ட சொல்லி னான. இது, மரபினையே வற்புறீஇயது. இ-ள்: வழக்கினகத்து வரலாற்றுமுறைமை பிறழாது வருதலே தக்கது, மற்றுச் செய்யுள்செய்த சான்றோர் அதற்கேற்ற வகையாற் செய்யப்பெறுவராகலின் என்றவாறு. அவர்க்கு இம்மரபு வேண்டுவதன்றுகொலென்று கருதினுங் கருதற்க, மரபேதானு, நாற்சொல் லியலான் யாப்புவழிப் பட்டன்று (392) என்றதனான். மரபுவழிப்படுங்காலென்பான் மரபுவழிப் பட்ட சொல்லி னான என்றானென்பது. ஆண்டுக் கூறிய மரபு உலகியலாகலான் அவ் வுலகியல் அவ்வாறாதற்குக் காரணம் ஈண்டுக் கூறிச் செய்யுட்கும் அதுவே காரண மெனக் கூறினானென்பது. இதனது பயன்: செஞ்ஞாயி றென்பது வழக்கன்றாயினும் 167உண்மை நோக்கி அதனைச் 168செய்யுள்செய்யுஞ் சான்றோர் (புறம். 38) அவ்வாறு வழங்கினாற்போல, உயர்திணைப் பொருளையும் ஐம்பெரும் பூதங்கள் அஃறிணையான் வழங்குதலுண்மை நோக்கி அவ்வாறுஞ் சொல்லப்பெறுபகொலென்று ஐயுற்றானை ஐயம் அறுத்தவாறு. அஃறிணைப் பாற்கும் இஃதொக்கும். அல்லதூஉம் இன்ன செய்யுட்கு இன்னபொரு ளுரித்தெனவும், இனைப் பகுதியாற் பெயர்பெறுமெனவும், மரபு பற்றியே சொல்லப்படு மென்றற்கும், இனி நிறைமொழி மாந்தர் மறைமொழி போல்வன சில 169மிறைக்கவி பாடினாருள ரென்பதே பற்றி 170அல்லாதாரும் அவ்வாறு செய்தல் 171மரபன்றென்றற்கும் இது கூறினா னென்பது. அவை: சக்கரஞ், சுழிகுளங், கோமூத்திரிகை, ஏகபாதம், எழுகூற்றிருக்கை, மாலை மாற்று என்றாற்போல்வன. இவை மந்திரவகை யானன்றி வாளாது மக்களைச் செய்யுள் செய்வார்க்கு அகனைந்திணைக்கும் மரபன்றென்பது கருத்து. அல்லாதார் இவற்றை எல்லார்க்குஞ் செய்தற்குரியவென இழியக் கருதி அன்ன வகையான் 172வேறு சில பெய்துகொண்டு அவற்றிற்கும் இலக்கணம் சொல்லுப. அவை இத்துணை யென்று வரையறுக்கலாகா; என்னை? 173ஒற்றை 174இரட்டை 175புத்தி 176வித்தார மென்றாற் போல்வன பலவுங் கட்டிக் கொண்டு அவற்றானே செய்யுள் செய்யினுங் கடியலாகாமையின், அவற்றிற்கு வரையறை வகையான் இலக்கணங் கூறலாகா வென்பது. 177ஐயைதன் கையு ளிரண்டொழித்தெ னைம்பான்மேற் பெய்தார் பிரிவுரைத்த லில்லையான் எனவுங், கோடாப் புகழ்மாறன் கூட லனையாளை 178யாடா வடகினுளுங் காணேன். (திணை மாலை. நூற். 4) எனவுஞ் சொல்லுவார் சொல்லுவனவற்றுக்கெல்லாம் வரை யறையின்மையின், அவற்றுக்கு இலக்கணங் கூறார், பண்ணத்திப் பாற் (492) படுப்பினல்லதென்பது. (90) (மரபுநிலை திரியிற் பொருள் வேறுபடுமெனல்) 646. மரபுநிலை திரியிற் பிறிதுபிறி தாகும். இது, மேற்போன வழக்கிற்குஞ் செய்யுட்கும் வருகின்ற இலக்கணத்திற்கும் பொது. இ-ள்: மரபினை நிலை திரித்துச் சொல்லுபவெனின், உலகத்துச் சொல்லெல்லாம் பொருளிழந்து பிறிதுபிறிதாகும் என்றவாறு. செவிப்புலனாய ஓசைகேட்டுக் கட்புலனாய பொருளு ணர்வ தெல்லாம் மரபு பற்றாக அல்லது மற்றில்லையென்றவாறு. (91) (வழக்காவது இது வெனல்) 647. வழக்கெனப் படுவ துயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி யவர்கட் டாக லான. 179இது, வழக்கினுள் மரபினைப் பிழைத்துக் கூறுவனவும் உளவென்ப துணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: வழக்கென்று சொல்லப்படுவது உயர்ந்தோர் வழங்கிய வழக்கே; என்னை? உலகத்து நிகழ்ச்சியெல்லாம் அவரையே நோக்கினமையின் என்றவாறு. அவரையே நோக்குதலென்பது அவராணையான் உலக நிகழ்ச்சி செல்கின்றதென்றவாறு. எனவே, உயர்ந்தோரெனப் படுவார் அந்தணரும் அவர்போலும் அறிவுடையோருமாயினா ரென்பது. (92) (நூல் இருவகையவெனல்) 648. மரபுநிலை திரியா மாட்சிய வாகி யுரைபடு நூறா மிருவகை யியல முதலும் வழியுமென நுதலிய நெறியின. இது, மேற்கூறப்பட்ட மரபு வழக்கிற்கேயன்றி இலக் கணஞ் செய்வார்க்கும் வேண்டுமெனவும் அவ்விலக்கணம் இனைப்பகுதித் தெனவுங் கூறுகின்றது. இ-ள்: மரபுநிலையில் திரியாமை தமக்குக் குணனாக உடையவாகி எல்லாரானும் உரைக்கப்படும் நூல் இரண்டி லக்கணத்தவாகும், முதனூலெனவும், வழிநூலெனவுங் கருதிக் கொள்ளும் அடிப்பாட்டான் என்றவாறு. மரபுநிலை திரியிற் பிறிதுபிறி தாகும். (949) என்பதனை இதற்குமேல் எய்துவித்தானன்றே, அதனான் மரபு நிலை திரியாமையே 180தமக்குத் தகுதியாவதெனவும் இவ்181விரு வாற்றானும் ஒன்றனாற் செய்தலே மரபெனவுங் கூறியவாறு. நுதலியநெறி (648) யென்றதென்னையெனின், இன்னதே முதனூல் இன்னதே வழிநூலென்பதோர் யாப்புறவில்லை; ஒரு நூல் பற்றி ஒருவன் வழிநூல் செய்தவழி அவ் வழிநூல் பற்றிப் பின்னொருகாலத்து ஒருநூல் பிறந்ததாயின் அது வழிநூலெனப் பட்டு முன்னை வழிநூலே முதனூ லெனப்படுமென்றற் கென்பது. இதனைச் சார்புநூலென்னாமோ வெனின்,- 182வழி நூலுஞ் சார்பு நூலுமாகலின் அங்ஙனங் கூறானாயினான். எற்றுக்கு? சார்பு நூலினைப் பற்றி ஒருநூல் பிறந்தவழிச் சார்பின் சார்பெனக் கூறல் வேண்டுவதாகலானும், அதனைச் சார்ந்து தோன்றிற் சார் பென்னுஞ் சொல்லை மும்முறை சொல்லியும் அதன்பின் தோன்றிய நூற்கு நான்முறை சொல்லியும் எண்ணிகந் தோடுத லானுமென்பது. மற்று இரண்டாமெண்ணுமுறைமைக்கணின்ற நூலினை யே வழிநூலெனக்கொண்டு மூன்றாவது தோன்றிய நூலே சார்பு நூலாகவும் அதன்பின்னர் நூல் செய்யப்பெறாரெனவும் கொள்ளாமோவெனின், முதனூலிற் கிடந்த பொருளை 183ஓர் உபகாரப்பட வழிநூல் செய்த ஆசிரியன் செய்தக்காற் சார்பு நூலெனப் பின்னர் ஓர் ஆசிரியன் நூல் செய்ததனாற் பயந்த தென்னையென்க. என்றார்க்கு, வழிநூலும் பிற்காலத்தரிதாமா யின் அதனையும் எளிதாகச் செய்தலன்றே இதனாற் பயந்த தெனின், அதுதானும் பின்னொருகாலத்து 184அரிதாமாயின் அதனையும் எளிதாகச் செய்வா னல்லனோவென்று மறுக்க. இவ்வாராய்ச்சி வேண்டா வென்றற்கன்றே இவ்விருவகை யானும் வருதலே மரபென்பானாயிற்றென் றொழிக. ஒன்றன்வழியே யன்றியுந் தாந்தாம் அறிந்தவாற்றானும் நூல்செய்யப் பெறாரோவெனின், அது மரபன்று; அதுநோக்கி யன்றே, மரபுநிலை திரியிற் பிறிதுபிறி தாகும் (646) என்றவிதி நூலிற்கும் எய்துவித்துப் புகுந்ததென்பது. என்னை? பிறிது பிறிதாகுமாறெனின், - ஒரு பொருட்கண்ணே மாறுபட்ட இலக்கணங் கூறின் 185அவ்விரண்டும் அதற்கிலக்கணமாகாது; என்போல? மாணிக்க மணியினைச் செவ்வண்ணம் முதலாயின சில இலக்கணங் கூறிய நூல் கிடப்பக் கருவண்ண முதலாயின வும் அதற்கிலக்கணமென்று ஒருவன் எதிர்நூலென்பதொரு நூல் பிற்காலத்துச் செய்யுமாயின், அஃது அதன் இலக்கணமெனப் படாதாகலானென்பது. மற்றுக் காலந்தோறும் வழக்கு வேறுபடுதலின் வழக்கு நூலும் வேறுபட அமையும்பிற எனின்,- வழக்கெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி யவர்கட் டாக லான (947) என்றமையானும், அங்ஙனம் காலந்தோறும் ஓரோர்நூல் செய் யின் 186வழக்கல்லது எஞ்ஞான்றும் அவ்விலக்கணத்தாற் பயமின் றாகியே செல்லுமாகலானும் அது பொருந்தாதென்பது. அல்லதூஉம், முற்காலத்து வழங்கிவந்ததனை வழு வென்று களைபவாயினன்றே, பிற்காலத்துப் பிறந்த வழக்கு இலக்கணமெனத் தழீஇக்கொள்வதென்க. 187இந்நூல் இலக்க ணத்தினை இவ்வோத்தின் இறுதிக்கண் வைத்தான் வழக்குஞ் செய்யுளு மென்று விதந்து புகுந்த இரண்டிலக்கணமும் முடித் தல்லது, அவற்றைக் கூறும் இலக்கணங் கூறலாகாமையினென் பது. 188இக்கருத்தறியாதார் செய்யுளியலினை ஒன்பதாம் ஓத்தென்ப. அல்லதூஉம் இந்நூலிலக்கணம் வழக்கிற்குஞ் செய்யுட்கு மேயன்றி, அங்ஙனமாகப் பொருண்மேவும் 189பண்டம் முதலாய வற்றிற்கு இலக்கணஞ் செய்யுங்காலும் 190நியாயஞ்செய்யினுந், தமிழ்நூலதற்கிலக்கணம் எவ்வாற் றானும் இதுவே யென்றற்கும் ஈண்டுக் கூறினானென்பது, எனவே, பிறபாடை நூல்களாயின் இம்மரபு வேண்டுவதன்றாயிற்று. மற்று முதனூலினை இன்ன தென்பது துணிந்து உரையாரோவெனின், - அதுவன்றே இனிக் கூறுகின்றதென்பது. (93) (முதனூலாவது இதுவெனல்) 649. வினையி னீங்கி விளங்கிய வறிவின் முனைவன் கண்டது முதனூ லாகும். மேல் ஒன்றற்கு முதனூலாகியும் ஒன்றற்கு வழிநூலாகியும் வந்து தடுமாறுமென்றான், இனி அவ்வாறன்றி ஒன்றே முதனூலாகலுஞ் சிறுபான்மை உண்டென்கின்றது. இ-ள்: செய்வினையின் பயன் 191துவ்வாது மெய்யுணர்வு டையனாகிய முன்னோனாற் செய்யப்பட்டதே ஒருதலையாக முதனூலாவது என்றவாறு. எனவே, மேலைச்சூத்திரத்து முதனூலும் வழிநூலுமெனப் பட்டன முதலுஞ் சினையும் போலத் தடுமாறுமென்பதூஉம் இதுவாயின் தடுமாறாது எஞ்ஞான்றும் முதனூலாமென்பதூ உம் பெற்றாம். வினையென்பன இருவினை; இன் நீக்கத்துக்கண் வந்தது. விளங்கிய அறிவென்பது. முழுதும் உணரும் உணர்ச்சி. அறிவினென நின்ற இன் சாரியை. இன்ன அறிவினொடு கூடிய முனைவன் அறிவின் முனைவனெனப்படும். முன்னோனை 192முனைவனென்பது ஒருசொல் விழுக்காடாம். முன்னென் பதனை முனையென்பவாகலின். மற்று வினையினென்ற வேற்றுமை 193நிற்பதன் நிலையும் நீங்குவதன் நீக்கமுங் கூறுமாகலின் ஒருகாலத்து வினையின் கணின்று ஒருகாலத்து நீங்கினான்போலக் கூறியதென்னை யெனின், அற்றன்று; வினைப்பயந் தொடரற்பாற்றுள்ளம் இல னென்பதன்றி அவர்க்குச் சில செய்கையுள வென்பது பல் லோர்க்கும் உடம்பாடாகலின், அவ்வினைக்கணின்றே, 194போகமும் பாவமும் மெய்யுணர்வு பற்றித் தெறப்பட்ட வித்துப் போலப், பிறப்பில் பெற்றியனாகி நீங்குமாகலின் அவ்வாறு கூறல் அமையுமென்பது. என்னை? 195குற்றங் கெடுத்து முற்ற உணர்ந்தோருங், கெடுப்பதொரு 196குற்றமின்றி முழுதுணர்ந் தோரும் எல்லாம் பிறர்க்குறுதியாகிய ஆகமஞ் செய்யினுந் துறக்கம் முதலாகிய பயன்றுய்ப்பாரல்லராகலின். இனி முனைவனாற் செய்யப்படுவதொரு நூலில்லை யென்பார் அவன்வழித் தோன்றிய நல்லுணர்வுடையார் அவன் பாற் பொருள் கேட்டு முதனூல் செய்தாரெனவும், அம் முனைவன் முன்னர் 197ஆகமத்துப் பிறந்த தொரு மொழியைப் பற்றி அனைத்துப் பொருளுங் கண்டு பின்னர் 198அவற்றவற்றுக்கு நூல்செய்தார் அவரெனவும், அவ்வாகமத்தினையே பிற்காலத் தாரும் ஒழுக்கம் வேறுபடுந்தோறும் வேறுபடுத்து வழிநூலுஞ் சார்புநூலுமெனப் பலவும் செய்தாரெனவுங் கூறுப. அவை எவ்வாற்றானும் முற்ற உணர்ந்தோர் செய்த நூலன்மையின் அவைதேறப்படா; அல்லதூஉம் அவை தமிழ்நூலன்மையின் ஈண்டு ஆராய்ச்சியில வென்பது. மற்று, மேலைச்சூத்திரத்து நுதலிய நெறியானே முதலும் வழியுமா மெனவே, எல்லார்க்கும் முதல்வனான் செய்தது முதனூலேயாமென்பது பெறுதுமாகலின், ஈண்டு இச்சூத்திரங் கூறியதென்னையெனின், தாமே தலைவராவாரும் அத்தலை வரை வழிப்பட்டுத் தலைவராயினாரும் பலராகலின், தாமே தலைவராயினார் நூல் செய்யின் முதனூலாவ தெனின், அற்றன்று: தாமே தலைவராயினார் முற்காலத்துத் தமிழ்நூல் செய்திலராகலின், தலைவர் வழிநின்று தலைவனாகிய அகத்திய னாற் செய்யப் பட்டதும் முதனூலென்பது அறிவித்தற்கும், பிற் காலத்துப் 199பெருமானடிகள் களவியல் செய்தாங்குச் செய்யினும் பிற்காலத்தானும் முதனூலாவதென் பது அறிவித்தற் கும், அங்ஙனம் வினையி னீங்கி விளங்கிய 200அறிவினான் முதனூல் செய்தா னென்பது அறிவித்தற்கும் இது கூறினா னென்பது. எனவே, அகத்தியமே முற்காலத்து முதனூலென்பதூ உம், அதன் வழித்தாகிய தொல்காப்பியம் அதன் வழிநூ லென்பதூஉம் பெற்றாம். என்றார்க்கு முந்துநூலெனப்பட்டன முற்காலத்து வீழ்ந்தன வெனக் கூறித் தொல்காப்பியர் அகத்தியத்தொடு பிறழவும் அவற்றுவழி நூல் செய்தாரென்றக்கால் இழுக் கென்னை யெனின், - அது வேத வழக்கொடு மாறுகொள்வார் இக்காலத்துச் சொல்லினும், இறந்த காலத்துப் பிற 201பாசாண்டி களும் மூன்று வகைச் சங்கத்து நான்கு வருணத்தொடு பட்ட சான்றோரும் அது கூறாரென்பது. என்னை? கடைச்சங்கத் தாருட் களவியற் பொருள் கண்ட கணக்காயனார்மகனார் நக்கீரர் இடைச்சங்கத்தார்க்குங் கடைச்சங்கத்தார்க்கும் நூலாயிற்றுத் தொல்காப்பியம் என்றாராகலானும், பிற்காலத்தார்க்கு உரையெழுதினோரும் அது கூறிக் 202கரிபோக்கினாராக லானும், 203அவர் 204புலவுத் துறந்த நோன்புடை யாராகலாற் பொய்கூறாராக லானுமென்பது. இங்ஙனங் கூறாக்கால் இதுவும் மரபுவழு வென்று அஞ்சி அகத்தியர்வழித் தோன்றிய ஆசிரிய ரெல்லாருள்ளுந் தொல்காப்பியனாரே தலைவரென்பது எல்லா ஆசிரியருங் கூறுபவோ வென்பது. எங்ஙனமோ வெனின், கூறிய குன்றினு முதனூல் கூட்டித் தோமின் றுணர்த றொல்காப் பியன்ற னாணையிற் றமிழறிந் தோர்க்குக் கடனே இது பல்காப்பியப் புறனடைச் சூத்திரம். வீங்குகட லுடுத்த வியன்கண் ஞாலத்துத் தாங்கா நல்லிசைத் தமிழ்க்குவிளக் காகென வானோ ரேத்தும் வாய்மொழிப் பல்புக ழானாப் பெருமை யகத்திய னென்னு மருந்தவ முனிவ னாக்கிய முதனூல் பொருந்தக் கற்றுப் புரைதப வுணர்ந்தோர் நல்லிசை நிறுத்த தொல்காப் பியனும் என்பதனான் அகத்தியர் செய்த அகக்தியத்தினை முதனூ லெனவும், அவர் வானோர் ஏத்தும் வாய்மொழிப் பல்புகழ் ஆனாப்பெருமை யுடையா ரெனவும், அவராற் செய்யப்பட்ட முதனூல் பொருந்தக் கற்றுப் புரைதப உணர்ந்தோருள் தலைவ ராயினார் தொல்காப்பியனாரெனவும், பன்னிரு படலத்துப் 205புனைந்துரைவகையாற் பாயிரச் சூத்திரத்துள் உரைக்கப் பட்டது. இனிப், பன்னிரு படலம் முதனூலாக வழிநூல் செய்த வெண்பா மாலை ஐயனாரிதனாரும் இது கூறினார்; என்னை? மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத் தென்மலை யிருந்த சீர்சால் முனிவரன் றன்பாற் றண்டமிழ் தாவின் றுணர்ந்த துன்னருஞ் சீர்த்தித் தொல்காப் பியன்முதற் பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த எனப் பாயிரஞ் செய்தற்கு 206உடன்பட்டமையினென்பது. இவற்றானெல்லாம் அகத்தியமே முற்காலத்து முதனூ லென்பதூஉந், தொல்காப்பியம் அதன் வழிநூலென்பதூஉம், அதுதானும் பனம்பாரனார், வடவேங்கடம் தென்குமரி (பாயிரம்) எனக் குமரியாற்றினை எல்லையாகக் கூறிப் பாயிரஞ்செய்தமை யிற் சகரர் வேள்விக்குதிரை நாடித் தொட்ட கடலகத்துப் பட்டுக் 207குமரியாறும் பனைநாட்டொடு கெடுவதற்கு முன்னைய தென்பதூஉம், அவ்வழக்குநூல் பற்றியல்லது 208ஈண்டு மூன்று வகைச் சங்கத்தாருஞ் செய்யுள் செய்திலரென்பதூஉம், ஆசிரியரும் அவர் போல்வாரும் அவர்வழி ஆசிரியருஞ் செய்யுள் செய்த சான்றோருஞ் சொல்லாதன சொல்லப்படா வென்பதூஉம், அவருடம்படாதன சொல் உளவென்று எதிர் நூலென ஒருவன் பிற்காலத்து நூல்செய்யுமாயின் தமிழ் வழக்கமாகிய மரபினோடுந் தமிழ்நூலோடும் மாறுபட நூல் செய்தானாகுமென்பதூஉம், இனித் தமிழ்நூலுள்ளுந் தமது மதத்துக்கேற்பன முதனூல் உளவென்று இக்காலத்துச் 209செய்து காட்டினும் அவை முற்காலத்து இலவென்பது முற்கூறிவந்த வகையான் அறியப்படு மென்பதூஉம், 210பாட்டுந் தொகையும் அல்லாதன சில நாட்டிக்கொண்டு மற்று அவையுஞ் சான்றோர் செய்யுளாயின வழுவில் வழக்கமென்பார் உளராயின் இக்காலத் துள்ளும் ஒருசாரார்க் கல்லது அவர் சான்றோரெனப்படா ரென்பதூஉம், இங்ஙனங் கட்டளை செய்யவே காலந்தோறும் வேறுபட வந்த 211அழிவழக்கும் இழிசினர் வழக்கும் முதலாயின வற்றுக் கெல்லாம் நூல்செய்யின் இலக்கணமெல்லாம் எல்லைப் படாது இகந்தோடு மென்பதூஉம், இறந்தகாலத்து நூலெல் லாம் பிறந்த பிறந்த வழக்குப் பற்றிக் குன்றக்கூறலென்னுங் குற்றந்தங்கு மென்பதூஉம், ஒன்றாகப் புறனடுத்து ஒரு சூத்திரமே செய்துபோத 212அமையுமன்றி ஒழிந்த சூத்திரங்களெல்லாம் மிகையாமென்பதூஉமெல்லாம் படு மென்பது. (94) (வழிநூலாவது இதுவெனல்) 650. வழியெனப் படுவ ததன்வழித் தாகும். இது, வழிநூலாமாறுணர்த்துகின்றது. இ-ள்: நுதலிய நெறியான் வழிநூலென்றற்குச் சிறப்புடை யது அம்முதனூல்வழிப் பிறந்த வழிநூல் என்றவாறு. அது தொல்காப்பியம். மற்றுப் பல்காப்பியம் முதலியன வோவெனின், - அவை வழிநூலே; தொல்காப்பியத்தின்வழித் தோன்றின வென்பது; என்னை? கூறிய குன்றினு முதனூல் கூட்டித் தோமின் றுணர்த றொல்காப் பியன்ற னாணையிற் தமிழறிந் தோர்க்குக் கடனே என்பவாகலானும், இவ்வாசிரியர் பல்காப்பியர் பல்காயனார் முதலாயினாரை அவ்வாறு கூறாராகலானுமென்பது. என்றார்க் குத், தொல்காப்பியங் கிடப்பப் பல்காப்பியனார் முதலியோர் நூல்செய்த தெற்றுக்கெனின், அவரும் அவர்செய்த எழுத்துஞ் சொல்லும் பொருளுமெல்லாஞ் செய்திலர். செய்யுளிலக்கணம் அகத்தியத்துப் பரந்துகிடந்ததனை இவ்வாசிரியர் சுருங்கச் செய்தலின் அருமைநோக்கிப் பகுத்துக் கூறினாராக லானும், 213அவர் தந்திரத்துக்கேற்ப 214முதனூலொடு பொருந்த நூல் செய்தாராகலானும் அமையுமென்பது. பிற்காலத்துக் காக்கைப் பாடினியாருந் தொல்காப்பியரொடு பொருந்தவே நூல் செய்தாரென்பது. மற்று, வடதிசை மருங்கின் வடுகுவரம் பாகத் தென்றிசை யுள்ளிட் டெஞ்சிய மூன்றும் வரைமருள் புணரியொடு கரைபொருது கிடந்த நாட்டியல் வழக்க நான்மையின் கடைக்கண் யாப்பின திலக்கண மறைகுவன் முறையே எனத் தெற்குக் குமரியன்றிக் கடலெல்லையாகியகாலத்துச் சிறு காக்கைப்பாடினியார் செய்த நூலினையும் அதன் வழிநூ லென்று மோவெனின்,- ஈண்டுக் கூறிய பொருளெல்லாந் தழுவு மாற்றாற் 215செய்தாராயின், அது வழிநூலாதற்கு இழுக் கென்னையென்க. இனிச், சில குன்றக் கூறினார் தொகுத்து நூல்செய்தாராகலி னென்பாரும் உளர். 216ஒழிபொருளவா யினது தொகையெனப் படாமையின். அங்ஙனங் கூறுதல் வழிநூலிலக்கணமன்றென்பது. (95) (வழிநூல் இனைத்துவகையெனல்) 651. வழியி னெறியே நால்வகைத் தாகும். இது, வழிநூல் இனைத்து வகைத்தென்கின்றது. இ-ள்: மேல், வழிநூலெனப்பட்டது நான்குவகையாற் செய்யப்படும் என்றவாறு. இதன்பயன்:- ஒரு நூலுள் ஒன்றல்லது பல வாராவெனவும், அதனானே நான்குவகைய வழிநூலெனவும், முதனூலாயின் ஒன்றேயா மெனவுங் கூறியவாறாயிற்று. அவையாவன மேற் கூறுப. (96) (வழிநூலின் வகைநான்கும் இவை எனல்) 652. தொகுத்தல் விரித்த றொகைவிரி மொழிபெயர்த் ததர்ப்பட யாத்தலோ டனைமர பினவே. இந் நான்குவகையுங் காரணமாக மேற்கூறிய நால்வகை வழிநூலும் பெறலாம் என்றவாறு. தொகுத்தலென்பது முதனூலுள் விரிந்ததனைச் சில்வாழ் நாட் சிற்றறிவின் மாக்கட்கு அறியத் தொகுத்துக்கூறல்; விரித்த லென்பது முதனூலில் தொகுத்துக் கூறப்பட்டு விளங்காது நின்றதனை விளங்கு மாற்றான் விரித்துக்கூறல். தொகைவிரி யென்பது அவ்விருவாறும் பற்றித் தொகுத்து முன்னிறீஇ அந்நிறுத்த முறையானே பின் விரித்துக் கூறுதல். மொழிபெயர்த் தென்பது பிறபாடையாற் செய்யப்பட்ட பொருளினைத் தமிழ்நூலாகச் செய்வது. அதுவுந் தமிழ்நூலுள் வழிநூற்கு மரபாமென்றவாறு. அதர்ப்படவென்பது, நெறிப்பட வென்ற வாறு. நெறிப்படுதலென்பது, அவ்வாறு மொழி பெயர்த்துச் செய்யுங்கால் அது கிடந்தவாற்றானே செய்யப்படும்; தொகுத் தும் விரித்துந் தொகைவிரியாகவுஞ் செய்ததனாற் பயமில்லைத் தமிழர்க்கும் ஆரியர்க்குமென்பது. மொழிபெயர்த்தெனவே, பொருள் பிறழாமை பெற்றாம். 217வழக்குநூலுள்ளும் மொழி பெயர்த்து யாக்கப்படுவன உளவோவெனின், 218அற்றன்று; அது வேண்டுமே? 219வேதப்பொருண்மையும் ஆகமப்பொருண்மை யும் நியாயநூற் பொருண்மையும் பற்றித் தமிழ்ப்படுக்குங்கால், அவற்றிற்கும் இதுவே இலக்கணமென்றற்கு மொழிபெயர்த் தலையும் இவற்றுக் கட் கூறினானென்பது. இனிப், பரந்துபட்ட பொருண்மையவாகிய மாபுராணம், பூத புராணமென்பன சில்வாழ்நாட் சிற்றறிவின் மாக்கட்கு உபகாரப்படாமையின், தொகுத்துச் செய்யப்பட்டு வழக்கு நூலாகிய தொல்காப்பியம் இடைச்சங்கம் முதலாக இன்று காறும் உளதாயிற்றெனக் கொள்க. (97) (நூலிலக்கணம் இதுவெனல்) 653. ஒத்த சூத்திர முரைப்பிற் காண்டிகை மெய்ப்படக் கிளந்த வகைய தாகி யீரைங் குற்றமு மின்றி நேரிதின் முப்பத் திருவகை யுத்தியொடு புணரி னூலென மொழிப நுணங்குமொழிப் புலவர். இஃது, எல்லா நூற்கும் ஆவதோர் இலக்கணமுணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: ஒத்த சூத்திரத்தினை உரைநடாத்தல் வேண்டின வழிப் பிறந்த காண்டிகையும், அக்காண்டிகையானும் விளங்காத காலத்து அதனையும் விளங்கக்கூறும் உரைவிகற்பத்ததுமாகிப், பத்துவகைக் குற்றமுமின்றி, நுண்பொருளவாகிய முப்பத்திரு வகை உத்தியொடு பொருந்திவரின், அதனை நூலென்று சொல்லுப நுண்ணிதின் உணர்ந்துரைக்கும் புலவர் என்றவாறு. ஒத்த சூத்திர மென்றதனான் நூலின் வேறாகிய இரு வகைப் பாயிரமுஞ் சூத்திரத்தோடு ஒத்த இலக்கணத்த வென்பது கொள்க. உரைப்பினென்றதனான், உண்ணின் றகன்ற வுரையொடு பொருந்தி (478) வருதலை நூலிலக்கணமெனச் செய்யுளியலுட் கூறிப்போந் தான்; அங்ஙனம் வேறாகிப் பொருந்திவருமெனப்பட்ட உரையின்றிச் 220சூத்திரத்தானே பொருள் நிகழ்ந்த காலமும் உண்டென்பதாம். இதனது பயம் : உரையுங் காண்டிகையுமின்றிச் சூத்திரத் தானே சொற்படுபொருள் உரைத்தலுமுண்டு; 221அஃது 222அவற்றை யொழிய ஆகாது இக்காலத் தென்றலாயிற்று. உரைப்பினென்னும் வினையெச்சங் கிளத்தலென்பத னொடு முடியும். வகை யென்றதனான் உரையெனப்பட்டது தானும் அக் காண்டிகையின் மெய்ப்படக் கிளந்ததே யாகலின் அவ்விரண்டுஞ் செய்யுளியலுட் கூறிவந்த உரைவிகற்பமே யென்பதுணர்த்தியவாறு. அஃதேற் காண்டிகை யென்றாற்போல இதற்குப் பெயர் வேறு கூறானோவெனின்,-வேண்டியார் வேண்டியவாறு, 223மறுதலைக் கடாஅ மாற்றமும் (659) எல்லையின்றி இகந்துவருவனவெல்லாம் 224உரையுள் எழுதப் படாமையின், 225அதுவுங் காண்டிகைப் பகுதியேயென்பது அறிவித்தற்கு வேறுபெயர் கூறாது மெய்ப்படக் கிளந்த வகையென்றே போயினானென்பது. மற்று இல்லதற்கும் இலக்கணஞ் சொல்லுவார் போல ஈரைங் குற்றமுமின்றி யென்றதென்னையெனின்,-அவற்றை எதிர் மறுத்துக்கொள்ளும் பத்துவகைக் குணமுங் கோடற்குத் தந்து கூறினானென்பது. அவை, எதிர்மறுத் துணரின் திறத்தவு மவையே (964) என்புழிச் சொல்லுதும். அல்லதூஉம் 226இவை கூறியவதனானே, பிறிதொரு பொருள் கொள்ளப்படும் இடங்களும் உள; அவை நோக்கி அங்ஙனங் கொள்ளாதனவுந் தொகுத்து உடன்கூறினா னென்பது. 227அவையும் அவற்று விரிச்சூத்திரத்துட் கூறுதும். ஈரைங்குற்றமுமென்ற உம்மையை எச்சப்படுத்துப் பிறவுங் குற்றம் உளவென்பதுங் கொள்க. அவை முதனூலொடு மாறுகோடலும் யாப்பினுட் சிதைதலும் போல்வன. அவை முன்னர்ச் சொல்லுதும். நேரிதினென்றதனான் முதல்வன் செய்த நூலாயினும் வழி நூலாயினும் 228அவ்வழிநூலின் முழுவதூஉந் தெரிந்து ணரும் நுண்ணுணர்வி னார்க்கே முப்பத்திருவகை உத்தியும் புலனாவ தெனக் கொள்க. அவையும் முன்னர்ச் சொல்லுதும். வகையதாகி யென்பது புணரினென்பதனொடு முடிந்தது. புணரினென்பது மொழிப வென்பதனொடு முடிந்தது. ஒத்த சூத்திரத்தினை உரைநடாத்தல் வேண்டிற் காண்டி கைப் பொருளினை விளங்கச்சொல்லும் உரைவிகற்பத்த தாகியெனவே சூத்திரமுங் 2காண்டிகையும் 3உரையுமென மூன்றும் அவற்றொடு 4குற்றமின்மை யும் 5உத்திவகையுங் கூட்ட நூலிலக்கணம் ஐந்தாயின. இதனது பயம் : இவற்றது விரிச்சூத்திரங்களான் உய்த்துணர்வான் எடுத்தோதித் தொகுத்துக் காட்டலாயிற்று. மற்றுக் குற்றத்தினை இடைவைத்து உத்திவகையினை ஈற்றுக்கண் வைத்த தென்னையெனின், ஈரைங்குற்றமு229மின்றி வரும் இலக்கணம் முதனூற்கண் இல்லையென்பது முதல்வன் கண் (தொல். மர. 106) என்புழிச் சொல்லுமாகலின், அவை போல முதனூற்கண் உத்திவகையும் வாரா, சிறுவரவின வென்றற் கென்பது. இனி, ஒத்தவென்றதனாற் பொதுப்பாயிரமும் சிறப்புப் பாயிரமும் சூத்திரமும் தம்மின் வேறென்றலும், அவ்விருவகைப் பாயிரவுரையும் சூத்திரவுரையும் வேறெழுதப்படுமென்றலும், சூத்திரவுரையுட் பாயிரவுரை மயங்கிவருவன உளவென்றலும், 230அவ்விருவகை யுரைக்கும் வேறாயினும் அவ்வுரைசெய்தான் பெயர் கூறுதல் முதலாகிய பாயிரவுரை கூற அமையுமென்ற லுஞ், 231சூத்திரந்தானே பாயிரமில்லாதவழிப் பாயிரம்போல நூன்முகத்து நிற்குமென்றலும், அங்ஙனம் நின்றவழிப் பொதுப் பாயிரமுஞ் சிறப்புப்பாயிரமும் உரைவகைத்தாற் பெய்துரைத்த லும், அவ்விரு வகைப் பாயிரமுஞ் செய்தார் இன்னாரென்றலு மென்று இன்னோரன்ன கோடலாயிற்று. இவையெல்லாஞ் சூத்திரத்தோடு ஒத்த இலக்கணமே யாதலின் ஒத்தவென்னும் மாட்டேற்றா னடங்கின. அவை வருமாறு : வலம்புரி முத்திற் குலம்புரி பிறப்பும் என்னும் பொதுப்பாயிரமும், வடவேங்கடந் தென்குமரி (பாயிரம்) என்னுஞ் சிறப்புப்பாயிரமும், ஒழிந்த சூத்திரங்கள் போல நூற்பா வகவலாகி நூலின் வேறாகி இன்றியமையாவாயின. அவற்றிற்குச் சூத்திரவுரையொடு மயங்காமல் வேறுரையும் ஆண்டெழுதப் பட்டன. எழுத்தெனப்படும் (தொ. எழு.1) என்னுஞ் சூத்திரத்தினை 232நிறீஇ, என்பது சூத்திரமெனவும், இவ்வதிகாரம் என்ன பெயர்த்தோவெனவும், இவ்வதிகாரம் யாதனை நுதலியதெனவும், 233அவற்றிற்கு விடைகூறலும், இவ்வதி காரம் எனைப்பகுதியான் உணர்த்தினா னெனவுங்கூறி ஒழிந்த ஓத்திற்கும் இவ்வாறே சூத்திரவுரையொடு பாயிரவுரை மயங்கச் சொல்லியவாறும், அவற்றவற்றுட் கண்டுகொள்க. இனி, 234இவ்வுரைசெய்தார் யாரோ(வெனின்), என்றவழி, மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனாரென உரையெழுதி னான் பெயர் கூறுதலுஞ் சூத்திரஞ்செய்தான் பெயர் கூறுதலோடு ஒத்த இலக்கணத்ததாயிற்று. அன்பி னைந்திணைக் களவெனப் படுவ தந்தண ரருமறை மன்ற லெட்டனுட் கந்தருவ வழக்க மென்மனார் புலவர் (இறை.சூ.1) என்பது பாயிரமின்றித் தானே நூன்முகத்துநின்று இருவகைப் பாயிரவுரையும் பெய்து உரைக்கப்பட்டது. வடவேங்கடந் தென்குமரி என்னுஞ் சிறப்புப்பாயிரஞ் செய்தார் பனம்பாரனாரெனவும், வலம்புரி முத்திற் குலம்புரி பிறப்பும் என்னும் பொதுப்பாயிரஞ்செய்தான் ஆத்திரையன் பேராசிரிய னெனவும் பாயிரஞ்செய்தான்பெயர் கூறியவாறு. 235என்பது பாயிரம் ; என்னுதலிற்றோ(எனின்)எனப் பாயிரவுரைக்கு முகவுரைவந்தவாறு கண்டுகொள்க. பிறவும் அன்ன. (98) (ஐயமறுத்தல் இதுவு நூற்குரிய இலக்கணமெனினுமாம்) 654. 236உரையெடுத் ததன்முன் யாப்பினுஞ் சூத்திரம் புரைதப வுடன்படக் காண்டிகை புணர்ப்பினும் விடுத்தலும் விலக்கலு முடையோர் வகையொடு புரைதப நாடிப் புணர்க்கவும் படுமே. இஃது, ஐயம் அறுத்தல் நுதலிற்று ; என்னை? மேற்கூறிய சூத்திரம் உரைபெறுங்காற் காண்டிகையும் உரையும் வேறுவேறு பிறக்கக் கண்ட மாணாக்கன் ஒழிந்தனவும் ஒன்றொன்றனை ஒழித்துவருங்கொலென்று ஐயுற்றாற்குக் காண்டிகையும் உரையு மே கண்டாய் ஒன்று ஒன்றனை ஒழிந்துவருவன வென்று ஐயம் அறுத்தமையின். மேலதற்கே புறனடை யெனவும் அமையும். இ-ள்: உரையெடுத்து அதன்முன் யாப்பினும் - காண்டிகை யினை விளக்குங் கருத்தினாலும் அக்கருத்தின்றியும் அச்சூத்திரத் திற்கு 237உரைதொடர்ந்தெழுதினும் ; சூத்திரத்தினை அது வென்று சுட்டினான். முற்படக் கிளத்தல் செய்யுளு ளுரித்து (தொ. சொ. 39) என்பதனா னெனவுணர்க. சூத்திரம் புரை தப உடன்படக் காண்டிகை புணர்ப்பினும் - அச்சூத்திரத்திற்கு இடையின்றிக் காண்டிகை பொருந்தச் செய்யினும் புரைதப என்பதனான் மேல் இடைபுகுமெனப் பட்ட பாயிரவுரையின்றிச் 238செய்தல் காண்டிகைக்கும் பெரும் பான்மை யெனக் கொள்க. உடன்பட என்பதனாற் காண்டிகை யல்லாத முகவுரைக்கண்ணே முன்னும் பின்னுங் காண்டிகை பெய்து உரைத்தலுங் கொள்க. கொள்ளவே, 239முற்கூறிய ஐந்தும் ஒருங்கு வருதலும் இவ்வாறே பெற்றாம். விடுத்தலும் விலக்கலும் உடையோர் வகையொடு- கடா விற்கு விடைகூறுவாரும் போலி மறுப்பாருஞ் சொல்லுஞ் சொற் பகுதியோடு ; வகை யென்றதனான் அவ்விருபகுதியுங் காண்டி கைக்கு வருங்காற் குறிப்பினாற் கொள்ளவருமெனவும், உரைக் கண் வருங்காற் கூற்றினாற் கொள்ளவருமெனவுங் கொள்க. அஃதேற் கூற்றினாற் கோடல், மறுதலைக் கடாஅ மாற்றமு முடைத்தாய் (659) என வருகின்ற சூத்திரத்திற் பெறுதுமெனின், அற்றன்று ; அது பிறன்கோள் பற்றி மறுதலைக் கடாஅ மாற்றமுங் கூறுதற்குச் சொல்லினான்; இஃது அன்னதன்றி அறியாது வினாவுந் துணையேயாகலின் வே240றென்பது. விடுத்தலெனவே வினா வினை விடுத்தல் பெற்றாம். விலக்கலெனவே அஃதல்லாப் போலியை விலக்குதலென்பது பெற்றாம். புரைதப நாடிப் புணர்க்கவும்படுமே- காண்டிகையிரண் டும் உரையிரண்டுமென்று வருகின்ற நான்கன்கண்ணும் 241இடை அந்தரமின்றிப் புணர்க்கவும்படும் 242அவ்விருபகுதியும் என்றவாறு. அஃதாவது, 243காண்டிகைப்பகுதி இரண்டற்கும் விடுத்த லும் விலக்கலும் உடையோர் குறிப்பினாற் கொள்ளவைத்தலும், 244ஒழிந்த உரையிரண்டன் கண்ணும் அவை கூற்றினாற் கொள்ள வைத்தலுமென உணர்க. 245உம்மை இறந்தது தழீஇயிற்று ; என்னை? காண்டிகையும் உரையும் ஒன்று ஒன்றனை ஒழித்தும் வருமென்றமையின். ஒழியாதுவருதல் உடன்படவென்றத னான் தழுவப் பட்டது. இவற்றிற்கு உதாரணமாமாறு தத்தம் விரிச் சூத்திரத்துட் சொல்லுதும் (99) (சூத்திரமாவது இதுவெனல்) 655. மேற்கிளந் தெடுத்த யாப்பினுட் பொருளொடு சில்வகை யெழுத்தின் செய்யுட் டாகிச் சொல்லுங் காலை யுரையகத் தடக்கி நுண்மையொடு புணர்ந்த வொண்மைத் தாகித் துளக்க லாகாத் துணைமை எய்தி யளக்க லாகா வரும்பொருட் டாகிப் பல்வகை யானும் பயன்றெரி புடையது சூத்திரத் தியல்பென யாத்தனர் புலவர். இது, நிறுத்த முறையானே சூத்திரமாமா றுணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: மேற் கிளந்து எடுத்த யாப்பின் உட்பொருளொடு......... சூத்திரந் தானே ஆடி நிழலி னறியத் தோன்றி நாடுத லின்றிப் பொருணனி விளங்க யாப்பினுட் டோன்ற யாத்தமைப் பதுவே என மேற்செய்யுளியலுள் விதந்தோதிய இலக்கணமுடைத்தாய், எனவே, வழுவமைக்கின்ற கிளவியாக்கத்து முதற்கண்ணே வினையியலுட் கூறப்படும் இலக்கணத்தினை ஆண்டு ஓர் உபகாரப்படக் கூறியதுபோல, அடிவரையின்மைக்கு ஆண்டுக் கூறியதல்லது, இச் சொல்லப்பட்ட இலக்கணம், ஈண்டு இனிக் கூறுகின்ற இலக்கணத்தொடு கூடி மரபெனவே படும் என்றா னாம். ஆண்டுப் பொதுவகையாற் கூறிய நூலிற்கும் இஃ தொக்கும்; என்னை ? பல சூத்திரந் தொடர்ந்து நூலாகி ஈண்டே மரபு கூறப்படுதலின். உரையாயின், அன்னதன்றி 246நால்வகை யுரையுள் 247ஏற்பது பகுதி வேறுபடும் மரபு கூறுகின்றமையின், அது செய்யுளியலுட் கூறியவாறு போலாது, வேறெனவே படும் ஈண்டென்பது. இனி, முற்கூறிய பாயிர இலக்கணத்தினை இன்றியமை யாது 248சூத்திரமென்றற்கும் இதுவே ஓத்தாகக் கொள்க; என்னை? 249மேற்250புறத்து நின்று மேற்கிளந் தெடுத்த யாப்பெனவே படுமாகலி னென்பது. இதனது பயம் : பாயிர இலக்கணங்களொடு பொருந்தச் சூத்திரஞ் செய்த லென்பதாயிற்று : இஃது ஒப்பக்கூற (665) லென்னும் உத்திவகை. மேற்கிளந்தெடுத்த இலக்கணமாவது, ஆடிநிழற் போல் பொருளானுந் 251தேர்தல் வேண்டாமற் பொருட்பெற்றி உணர்கின்றாங்குச் சூத்திரத்தொடருள் இலக்கியமின்றாயினும் 252அதனை இதுகேட்டான் காணுமாற்றாற் செய்தலாயிற்று. இனி, மேற்கிளந்தெடுத்த பாயிர இலக்கணம் சூத்திரத் தொடு பொருந்துங்காற் பொதுப்பாயிர இலக்கணம் பொருந்தா, சிறப்புப்பாயிர இலக்கணம் எட்டுமே பொருந்துவனவெனக் கொள்க. அஃதென்னை பெறுமாறெனின், மேற்கிளந்த யாப் பென்னாது எடுத்த யாப்பென்றதனானே ஒரு நூற்குச் சிறப்பு வகையான் இன்றியமையாதாகி எடுத்துக் கொள்ளப்படுவது வடவேங்கடம் தென்குமரி (பாயிரம்) என்றாற்போலுஞ் சிறப்புப்பாயிரமாகலானும், பொதுப்பாயிரம் எல்லா நூன்முகத்தும் உரைக்கப்படுமென்றற்கும் அங்ஙனங் கூறப்பட்டது ; சில்வகை எழுத்தின் செய்யுட்டாகி- ஆடிநிழலின் அறியச் செய்யுங்கால், அதுபோல ஒருவழிப் பொருளடக்கி ஒருவழி வெள்ளிடைகிடப்பச் செய்யப்படாது, பொருட்கு வேண்டுஞ் சில சொல்லாற் செய்யுஞ் செய்கைத்தாகி; செய்யுளென்றான், அறுவகைச் செய்யுளின் 253வேறுபட்ட பொருட்பாட்டிற்றாகிய அடிவரைப்பாட்டினுட் சிறப்புடைய ஆசிரியத்தானும் வெண்பாவானும் செய்யவும்படுஞ் சூத்திரமென்றற்கென்பது ; என்னை? 254மண்டிலப்பாட்டின் உடம்பொடு புணர்த்துச் சூத்திரஞ் செய்தமையானுஞ், சின்மென் மொழியிற் றாய பனுவல் (547) வெண்பாட்டாகியும் வருமாதலானு மென்பது. சொல்லுங்காலை உரையகத்து அடக்கி- பொருளானும் போலியானுஞ் சொல்லுவார் சொல்லுங்கால் அவ்வுரையெல் லாந் தன்னகத்தடக்கி; நுண்மையொடு புணர்ந்த ஒண்மைத்தாகி- பருப்பொருட் டாகிய பாயிரம்போலாது நுண்பொருட்டாகிய பொருள் கேட் டார்க்கு வெள்ளி தன்றி உள்ளுடைத்தாகி; துளக்கலாகாத் துணைமை எய்தி- முன்னும் பின்னுங் கிடந்த சூத்திரங்களானே தன்னுட்பொருள் இன்றியமையாத தாகலெய்தி ; எனவே, ஒன்றொன்றனை இன்றியமையாத உறுப்புப் போலச் செய்யல் வேண்டு மென்றவா றாயிற்று. அளக்கலாகா அரும்பொருட்டு ஆகி - அளத்தற்கரிய பெரும் பொருட்டாகி ; பல்வகையானும் பயன் தெரிபுடையது - பலவாற்றானும் பொருள் விளங்க வருவது : சூத்திரத்து இயல்பென யாத்தனர் புலவர் - இவையெல் லாம் சூத்திரத் திலக்கணமென்று முதனூல்செய்த ஆசிரியராற் சொல்லப்பட்டன என்றவாறு. இஃதியல்பெனவே இவற்றிற் சிறிய வேறுபட்டன விகாரமென்றானாம். உகரமொடு புணரும் புள்ளி யிறுதி யகரமு முயிரும் வருவழி யியற்கை (தொ. எழு. 193) என்றவழி, யகரமும் உயிரும் வருவழியெனவே, இது நிலை மொழித் தொழிலென்பது, ஆடிநிழலின் அறியத் தோன்றிற்று. இனி, நிலைமொழித்தொழில் வேறு கூறினமையின், மயங்கா மரபி னெழுத்துமுறை காட்டி (தொ. பாயிரம்) எனப் பாயிர இலக்கணத்துடன் பொருந்துவதாயிற்று. இனி, 255எண்வகையாற் பரந்துபட்ட புள்ளியீற்றுச் சொல் லினையெல்லாம் உகரமொடு புணரும் புள்ளியென அடக் கினமையிற் சில்வகை யெழுத்தின் செய்யுளுமாயிற்று. யகரமும் உயிரும் வருவழி இயற்கையென வருமொழிப் பரப்பெல்லாம் அடக்கினமையின் அதற்கும் இஃதொக்கும். இதனைப் பற்றி யெழுந்த பொய்ப்பொருளும் மெய்ப் பொரு ளும் பலவாகலின் உரையகத் தடக்கலும் உடைத்தாயிற்று. தொகைமரபினுள்ளும் உயிர்மயங்கியலினுள்ளும் புள்ளி மயங்கிய லினுள்ளுங் குற்றியலுகரப்புணரியலினுள்ளும் பரந்து பட்ட பொருளினை நுழைந்து வாங்கிக் கொள்ள வைத்தமையின் நுண்மையொடு புணர்ந்ததூஉ மாயிற்று. இச்சூத்திரம் பொருளு ரைத்தவழியும் வெள்ளிதன்றி 256உள்ளுடைத்தாகலின் நுண்மை யுடைத்தெனவும் பட்டது. குறியதன் முன்னர்த் தன்னுரு பிரட்டலும் (தொ. எ. 160) என்பதூஉம் ஞகாரை யொற்றிய தொழிற்பெயர் முன்னர் (தொ. எழு. 296) என்பதூஉம் முதலாயவற்றிற்கு இஃது இன்றியமையாததாகலும் இதற்கு அவை இன்றியமையாவாகலும் உடைமையின், துளக்க லாகாத்துணைமை யெய்தியதூஉமாயிற்று. இருபத்துநான் கீறும் இருபத்திரண்டு முதலும்பற்றி எழுந்த மொழிகளெல்லாம் வேற்றுமைக்கண்ணும் அல்வழிக்கண்ணும் இருமொழித் தொழி லும் ஒருவகையான் தொகுத்துக் கூறினமையின் அளக்கலாகா அரும்பொருட்டாதலும் பெற்றாம். இங்ஙனம் வருதல் இயல் பெனவே சிறிய வேறுபட்டுவருவன உளவாயின் அவையும் அமையு மென்றானாம். அவை, அந்நா லைந்தும் மூன்றுதலை யிட்ட முன்னுறக் கிளந்த வுயர்திணை யவ்வே (தொ. எ. 206) என்றாற்போல்வனவும் 257பிற இலேசுச் சொல்லும் இயல்பின்றி விகாரமெனப் படும். (100) (காண்டிகை உரை இதுவெனல்) 656. பழிப்பில் சூத்திரம் பட்ட பண்பிற் கரப்பின்றி முடிவது காண்டிகை யாகும். இது, முறையானே காண்டிகையாமாறுணர்த்துதல் நுத லிற்று. இ-ள்: குற்றமில்லாத சூத்திரம் தனதுட்பட்ட இலக்கணத் துள் ஒன்றுங் கரவாது முடியச்செய்வது காண்டிகையாம். என்றவாறு. பழிப்பில் சூத்திரமென்றதனாற், காண்டிகை செய்யத் தகாதென்று இகழ்ச்சிப்படப் பரந்தன உளவாயின் மறுத்துச் செய்க வென்பதாம். இதனை வருகின்ற காண்டிகைக்கும் அகலவுரைக்கும் ஏற்பித்துக் கொள்க. உதாரணம் : 258எழுத்தென்று சிறப்பித்துச் சொல்லப் படுவன அகரமுத, னகர விறுவாய் முப்பஃது என்று சொல்லு வார். ஆசிரியர், சார்ந்து வரலிலக்க ணத்த மூன்று மல்லாத இடத்து (தொல். எழுத்து. சூ : 1) எனவரும். பிறவும் அன்ன. இனி மறுத்துச் செய்யுங்கால், வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட் டயர்ந்த காந்தளும் (63) என்பது தெய்வச் சிறப்பினை அறியுஞ் சிறப்பொடு வெவ்வா யுடைய வேலனது வெறியாட்டினை ஆடிய காந்தளுமென்றாற் போல வருவன பலவுங் கொள்க. இங்ஙனங் கூறி உதாரணங் காட்டல் வேண்டாமையை உணர்ந்து உரைநடந்த காலமும் உடையவாகும் முற்காலத்து நூல்க ளென்பது கருத்து. அஃதேல், உதாரணத்தொடுவருங் காண்டிகையிலவோ வெனின், அது வருகின்ற சூத்திரத்துட் சொல்லுதும். கரப்பில்லதென்னாது முடிவதென்றான், அதனாற் பரந்துபட்ட சூத்திரத்தினை அங்ஙனம் மறுத்துச் செய்யாது தொகுத்துக் காண்டிகையான் உரைக்குங்கால் உட்பொருளெல்லாம் விளங்காமற் கரந்து செய்தலும் உண்டென்பது கொள்க; அது, 259வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட் டயர்ந்த காந்தளும் (63) என்பது முதலாக இக் கூறப்பட்ட 260இருபத்தொரு துறையுங் கரந்தையெனப் படுமென்றாற்போல மாட்டென்னுஞ் செய்யுளு றுப்பினைத் தோற்றுவாய் செய்துவிடுதல். பிறவும் அன்ன. (101) (காண்டிகையுரையின் பகுதி இவ்வாறு வருமெனல்) 657. 261விட்டகல் வின்றி விரிவொடு பொருந்திச் சுட்டிய சூத்திர முடித்தற் பொருட்டா வேது நடையினு மெடுத்துக் காட்டினு மேவாங் கமைந்த மெய்ந்நெறித் ததுவே. இது, மேலதற்கொரு புறனடை ; எய்தியதன்மேற் சிறப்பு விதியுமாம்; என்னை? காண்டிகையை மேலதனோடு இருவகைய என்றமையின். இ-ள்: 262விட்டகல்வின்றி விரிவொடு பொருந்தி - சொற்படுபொருள் சொல்லுங்கால் தொடர்மொழிகளைத் 263தொகைநிலை பயனிலை முதலாயவற்றாற் பகுத்துக்கூறாது, பகுத்துக்கூறும் உரைவிகற்பம் போன்று மற்றப் பொருள் தோன்றி; விடுத்தலென்பது, 264கண்ணழிவு; அக்கண்ணழி வான் அகன்று படுதல் விட்டகல் வெனப்பட்டது. அங்ஙனம் அகன்று படுத 265லின்றி யெனவே, இஃது இன்ன வேற்றுமைத் தொடர், இஃது இன்ன பயனிலைத்தொடரென்றாற்போலச் சொன்னிகழ்ச்சி யுடைத்தாயின் அஃது உரையெனப்படு மென்றானாம். சுட்டிய சூத்திரம் முடித்தற் பொருட்டா- இது நியமச் சூத்திரம் அதிகாரச்சூத்திர மென்றாற்போல முதற்கட் சொல்லிய சூத்திரப்பெயரினை அவ்வாறாகி முடிந்த முடிபு சொல்லுதல் பொருட்டாக; ஏது நடையினும் - நியமச் சூத்திரமென்றானும் பிறிதொன்றென்றானும் மேற்கொண்டக்கால் இன்னது காரணத்தினெனக் காரணங் கூறும் வழக்கினானும்; எடுத்துக் காட்டினும்- அங்ஙனங் காரணங் கூறியக்கால் அதற்கேற்பது ஒன்றாயினும் உதாரணமாயினும் வழிநூற்காயின் முதனூல் எடுத்துக் காட்டுதலாயினும் ஒன்றுபற்றியும்; மேவாங்கமைந்த மெய்ந் நெறித்து அதுவே- சூத்திரஞ் செய்த ஆசிரியன் வேண்டியதே சொல்லிவிடும் பொருளிலக்கணத்திற்று மேற் கூறிவருகின்ற காண்டிகை என்றவாறு. 266இது, மெய்ந்நெறி யென்பது சூத்திரத்துச் சொல்லிற் கருதிய பொருளிலக்கணம். அதனை அவன் வேண்டியாங்குச் சொல்லி முடிப்பி னல்லது, சூத்திரத்துச் சொற்கண் வந்த சொல்லாராய்ச்சியும் எழுத்தாராய்ச்சியும் அறியவேண்டுவன வெல்லாஞ் சொல்லாரென்பது கருத்து. இதனை ஈற்றுக்கண் வைத்ததனானே வருகின்ற உரையும் இங்ஙனம் விட்டகல்வின்றி வருதலுடைத்தெனக் கொள்க. உதாரணம் : இயற்கைப் பொருளை யிற்றெனக் கிளத்தல் (தொ. சொ. 19) என்பது 267தன்றன்மையான் நிகழ்பொருளை இன்னதன்மைத் தென்று சொல்லுகவென்றவாறு. அது 268நிலம் வலிது, நீர் தண்ணிது, தீ வெய்து, வளி யுளரும்என்றாற்போல்வன. இதற்குக் 269கருத்தோதுதல் பாயிரவகையாற் பெறுதுமென்பது, உரைப்பிற் காண்டிகை (953) என்புழிக் கூறிவந்தாம். மற்று, 270உயர்திணையென்று சொல்லுப ஆசிரியர் மக்கட் சுட்டின்கண், அஃறிணையென்று சொல்லுப ஆசிரியர் அவரல பிறவற்றுக்கண், அவ்விருதிணைப் பொருள்மேலும் இசைக்குஞ் சொல்லினை(தொ. சொ: 1) என்றக்காலும், வேற்றுமை யெனப்பட்ட பொருள் ஏழு என்றக்காறும் உதாரணங் காட்டுமாறென்னை? அவற்றவற்றுப் பின் வேறு சூத்திரங்களான், ஆடூஉ வறிசொன் மகடூஉ வறிசொற் பல்லோ ரறியுஞ் சொல்லொடு சிவணி (தொ. சொ. 2) எனவும், ஒற்றறி சொல்லே பலவறி சொல்லென்று (தொ. சொ. 3) எனவும், அவைதாம், பெயர்ஐ யொடுகு இன் அது கண் (தொ. சொ. 95) எனவும் உதாரணங் கூறுமாலெனின், - அவை துளக்கலாகாத் 271துணைமை யெய்தி நின்றமையின் அவ்வாறு உதாரணம் ஆண்டுக் காட்டாக்காலும் அமையும், அவற்றைப் பிற்கூறுமாக லினென்பது. அல்லதூஉம் எதிரது நோக்கி உயர்திணைச்சொல் மூன்றும் அஃறிணைச் சொல் இரண்டுங் காட்டியக்காலும் இழுக்கன்றென்பது. ஒழிந்தவற்றிற்கும் இஃதொக்கும் (102) (உரையாவது இதுவெனல்) 658. சூத்திரத் துட்பொரு ளன்றியும் யாப்புற வின்றி யமையா தியைபவை யெல்லா மொன்ற வுரைப்ப துரையெனப் படுமே. இது மேல், ஒத்த சூத்திர முரைப்பிற் காண்டிகை மெய்ப்படக் கிளந்த வகைய தாகி (952) என நிறுத்தமுறையானே காண்டிகையினை மெய்ப்படக் கிளந்த வகை யுணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: மேல், பழிப்பில் சூத்திரம் பட்ட பண்பின் (656) வருதலும், அதுவே ஏதுவும் எடுத்துக்காட்டும் உடைத்தாகி வருதலுமென இருவகையும் உடைத்தென்றான். இனிச் சூத்திரத் துட் பொருளன்றியும் ஒருதலையாக அதற்கு இன்றியமையாது பொருந்துவனவெல்லாம் 272அதனொடு கூட்டிச் சொல்லுதல் உரையெனப்படும் என்றவாறு. அவை, இயற்கைப் பொருளை யிற்றெனக் கிளத்தல் (தொ. சொ. 19) என்றவழி, 273எடுத்தோத்தின்றி நிலம் வலிதாயிற்று என்னும் 274வழுவமைதி கோடலும், ஒத்த சூத்திரம் (653) என்றவழி, பாயிரம் ஒத்தசூத்திரமென்று கோடலும் இன்னோரன்ன கொள்க. எல்லாமென்றதனாற் சூத்திரப்பொருளேயன்றி எழுத்துஞ் சொல்லும் பற்றி ஆராயும் பகுதியுடையதாதல் வேண்டும் அவ்வுரை யென்பது கொள்க. இனி, மேற் காண்டிகைக்கு ஓதிய இலக்கணங்களுள் இதற்கேற்பன வெல்லாம் அதிகாரத்தாற் கொள்ளப்படும். அவை ஏது நடையும் எடுத்துக்காட்டுஞ் சூத்திரஞ் சுட்டுதலுமென்று இன்னோரன்ன கொள்க. இவையெல்லாந் தழுவுதற்குப் போலும், இன்றி யமையா தியைபவை யெல்லாம் (958) என்று எடுத்தோதுவானாயிற்றென்பது. (103) (உரையின் பகுதி இவ்வாறு வரும் எனல்) 659. 275மறுதலைக் கடாஅ மாற்றமு முடைத்தாய்த் தன்னூ லானு முடிந்த நூலானு மையமு மருட்கையுஞ் செவ்விதி னீக்கித் தெற்றென வொருபொரு ளொற்றுமை கொளீஇத் துணிவொடு நிற்ற லென்மனார் புலவர். இதுவுங் காண்டிகைபோல உரையும் இருவகைத்தென்பது அறியுமாற்றான் எய்தியதன்மேற் சிறப்புவிதி யுணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: மறுதலைக்கடாஅ மாற்றமும் உடைத்தாய்- மறு தலை மாற்றத்தினை இடைசெறித்துக் கடாவுதலும் அதற்கு மறுமாற்றமாகிய விடை கூறுதலும் உடைத்தாய்; தன் நூலானும்- உரையெழுதுவானாற் கூறப்படுகின்ற உரை தனக்கு முதனூலாகிய சூத்திரத்தானும்; 276இதனானே உரையின்றிச் சூத்திரமே நூலெனப்படுவதூஉமாயிற்று; முடிந்த நூலானும் - அதன் முதனூலானும்; முடிந்தநூலென்பது இணைநூலென் பாரும் உளர்; 277இணைவன கூறத்தான் கூறானாயின் அது குன்றக் கூறலென மறுக்க. அங்ஙனங் கொள்ளும் பொருண்மை யுளவாயின் அவை, சூத்திரத் துட்பொரு ளன்றியும் (658) என்பதனான் அடங்கும். மற்று, முதனூலாற் கூறிய பொருள் சில குன்றக்கூறினான் போல முடிந்த நூலாற் கொள்க என்ற தென்னையெனின், அற்றன்று; இப்பொருண்மை 278முடிந்த நூலினும் உண்டென்று எடுத்துக்காட்டப்படு மென்றானென்பது; இது, மேல் ஏது நடையினு மெடுத்துக் காட்டினும் (657) என்றவழிப் பெறுதுமாயினும் முதனூலல்லது எடுத்துக்காட்டப் பெறாஅ ரென்றற்கு ஈண்டு வரைந்து கூறினானென்பது; எனவே, இணைநூலும் அவற்றின் வழிநூலும் எடுத்துக் காட்டுங்கால் தனக்கு முதல்வராயினாரை நாட்டி அவர் கருத்தே பற்றிப் பிறர் செய்தாரெனினல்லது பிறர்மேல் தலைமை நிறீஇ அவர் கருத்துப் பற்றி இவர் செய்தாரெனக் கூறார். அங்ஙனங் கூறின் அவர் நூற்கே உரையெழுதுவா னல்லனோவென மறுக்க. இனி, வினையி னீங்கி விளங்கிய வறிவின் முனைவ (949) னாற் செய்யப்பட்ட முதனூற்காயின் முடிந்தநூல் எடுத்துக் காட்டுத லென்னும் இவ்விலக்கணமின்றென்பது கொள்க, 279ஒரு தலையன்மை யென்னும் உத்திவகைபற்றியென்பது. ஐயமும் மருட்கையுஞ் செவ்விதின் நீக்கி- ஐயவுணர்வும் பொய்யுணர்வுஞ் செம்பொருளினான் நீக்கி; தெற்றென ஒரு பொருள் ஒற்றுமை கொளீஇ- அச்செம்பொருள் கருவியாகக் கேட்பான் உணர்வு மருட்கை நீக்கி மெய்யுணர்ந்து தெற்றென வும் இரட்டுறுதனீக்கி ஒற்றுமை கொளுத்தியும்; துணிவொடு நிற்றல் என்மனார் புலவர்- கவர்படச் சொல்லாது ஒருபொருள் துணிந்துரைத்து 280மாறுதலும் அதிகாரத்தான் நின்ற உரை யிலக்கணம் என்றவாறு. மறுதலையும் மாற்றமுமென்பது கடா விடை; ஐயமும் மருட்கை யும், ஒருபுடை யொப்புமையுடைய போலியும் அதற்கு ஒன்றும் இயைபில் லாத பொய்ப்பொருளுமெனப்படும். பிறிதுபிறி தேற்றலு முருபுதொக வருதலும் (தொ. சொ. 105) என்றவழிப் பிறிதென்று ஒருகாற் சொல்ல ஆறாமுருபெனவும் பின்னொருகாற் பிறிதென ஒழிந்த உருபெல்லாந் தழுவுமென வுஞ் சொல்லுதல் போலியெனப்படும்; என்னை? அவ்வாறாவத னோடு ஏழாமுருபும் பிறவுருபேற்கும் வழக்குள்வழி 281ஒன்ற னைக் கொண்டமையின், 282அஃது ஒருபுடை யொப்புமை யுடைத்தாகி அப்பொருளன்றெனவும் படாது 283மற்றொன்றினைக் கோடல் பொருளெனத் துணியவும் படாது ஐயவுணர்வு செய்தமையின் அது போலியாயிற்று. இனிப், பிறிதுபிறி தேற்றலு முருபுதொக வருதலும் (தொ.சொல்.105) என்னும் இரண்டும்மையும் 284பொருளிலவென்று பிறிது பிறி தேற்றல் உருபுதொக வருவதற்கண்ணென்று பொருள் கூறுதல் போல்வன சூத்திரத்தின் கருத்தறியாது பொய்யை மெய்யென்று மயங்கிய மருட்கை யெனப்படும். இவ்விரண்டனையும் நீக்கி உண்மை உணர்த்துதல் உரை யெனப்படுவதா யிற்று. நிற்ற லென்பது நிற்க அவ்வுரை யென்றவாறு. தன் நூலானும் முதனூலானும் ஐயமும் மருட்கையும் நீங்குங்கால் அவற்றுட் கிடந்த செம்பொருளானே நீக்கப்படு 285மென்பது இரண்டு கண்ணானுங் கூர்மையாற் பார்த்தா னென்பது போலக் கொள்க. (104) (வழிநூல் முதனூலோடு மாறுபடச் செய்யிற் குற்றமாமெனல்) 660. சொல்லப் பட்டன வெல்லா மாண்பு மறுதலை யாயினு மற்றது சிதைவே. இது, வழிநூற்கே ஆவதொரு வேறுபாடுணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: மேற்கூறிய சூத்திரமுங் காண்டிகையும் உரையு மென்னும் மூன்றற்குஞ் சொல்லப்பட்ட இலக்கணமெல்லாஞ் சிதையாது மாட்சிமைப்படினும், முதனூலொடு மாறு கொள்ளின் அவற்றான் எல்லாஞ் சிதைந்ததெனவேபடும் அந்நூல் என்றவாறு. மறுதலையாயினுமென்ற உம்மை எதிரது தழீஇயிற்று; மேற்கூறும் பத்துவகைக் குற்றமே (653) யன்றி வழிநூற்கு இதுவுங் குற்றமாமென்றமை யின். ஈரைங் குற்றமு மின்றி என்பதனை நோக்க இறந்தது தழீஇயிற்றுமாம். இதனானே, பிற்காலத்து நூல்செய்வார் நூலிலக்கணம் பிறழாமற் செய்யினும் முற்காலத்து நூலொடு பொருள் மாறுபடச் செய்யின் அது மரபன்று வழிநூற்கென விலக்கியவாறாயிற்று. ஆகவே, முதனூற்காயின் இவ்வாராய்ச்சியின்றென்பது கருத்து; என்னை? முதல்வனூல் மாறுபடுவதற்கு அதன் முன்னையதொரு நூல் இன்மையி னென்பது. அல்லதூஉம் மற்றது என்று ஒருமை கூறினமை யானும் இது வழிநூற்கே விலக்கிற் றென்பது கொள்க. மற்றுமேல், முதலும் வழியுமென நுதலிய நெறியின (948) எனவே, முதனூலின் வழித்து வழிநூலென்பதூஉம் மறுதலை யாயிற் சிதைவென்பதூஉம் பெறுதுமாதலின் இச்சூத்திரம் மிகையாம் பிற வெனின்,- அற்றன்று; முதல் வழியென்பன முன்னும் பின்னும் காட்டினன்றி மாறுபடாமைக் கூறல்வேண்டு மென்பதூஉம் 286பெறுதுமாயின் 287அது கூறல்வேண்டு மென்பது. பெறாமாகலின் 288இது கூறல்வேண்டுமென்பது. அல்லாக்கால், 289முன்னோர் நூலின் முடிபொருங் கொவ்வாமைப் பின்னோன் வேண்டும் விகற்பங் கூறுவான் செல்லுமென்பது. (105) (முதனூற்கண் குற்றம் இல எனல்) 661. சிதைவில வென்ப முதல்வன் கண்ணே. இது, மேற்கூறிய வழிநூற்குப் போல முதனூற்கே ஆவ தொரு வேறுபாடுணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: மேற் பொதுவகையாற் கூறப்பட்ட நூலிலக்கணம் ஐந்தனுள் ஈரைங்குற்றமுமின்றியென முன்னே ஓதிய இலக்கணம் ஒன்று; முதனூற்காயின் அம்மரபின இலக்கணம் வேண்டுவ தன்று என்றவாறு. சிதைவிலக்கணத்தைச் சிதைவென்று ஓதினான் ஆகுபெய ரானென உணர்க. மற்று, வினையி னீங்கி விளங்கிய வறிவின் முனைவற்கு (649) சிதைவிலவென்பது அறிவானே உணர்வலெனின், - எடுத் தோத்துக் களைந்து உய்த்துணர்தல் பயமின்றென்பது. அல்லதூ உம் முதனூற்கு முன்னையதோர் நூலினை இலக்கியமாகப் பெறினன்றே முதல்வன்றான் நூலிலக்கணஞ் செய்வது; மற்று 290அன்னதொரு நூலின்மையின் அவன் செய்யாத 291நுலிலக்க ணம் யான் செய்தேனெனவும், 292அவற்றுள் சிதைவே முதனூற்கண் இல்லை 293யெனவும், 294ஒழிந்த நான்கும் முதல்வ னூற் கண்ணே உளவாகலின் அவற்றை இலக்கணங் 295கூறினேன் எனவும், இனிக்குற்றங்களும் பிற்றோன்றுங் கொலென்று அஞ்சி இங்ஙனம் அவற்றை வரையறுத்து யான் பாதுகாக் கின்றேனெ னவும், அங்ஙனம் பாதுகாத்து இவ்விலக்கணங்கள் ஓதிற்றும் அவன் முதனூலே இலக்கியமாகப் 296பெற்றெனவுங், கூறியது கூறல் (663) போல்வன வேறொரு பொருள் விளக்குமாயிற் குற்றமன் றென்பதனையும் யானே கூறியதன்றி முதல்வனாயிற் சில்வகை யெழுத்தின் செய்யுட்டாகவே அவற்றை வேறுவேறு விதித்துப் பரந்துபடச் செய்யுமெனவும், இவை யெல்லாம் அறிவித்தற்குச், சிதைவில வென்ப முதல்வன் கண் (661) என்றானென்பது. மற்று, முதல்வன் 297யாப்பே கூறுமாயின் அந்நூற்குத் தந்திரவுத்தியும் வேண்டுவதன்றாம் பிறவெனின்,-அங்ஙனமே முதனூற்காயின் முப்பத்திருவகையுத்தி வாராது சிறுபான்மை யான் வருமென்றற்கன்றே, ஈரைங் குற்றமு மின்றி நேரிதின், முப்பத் திருவகை யுத்தியொடு புணர்ந்தது (653) என ஈண்டு விலக்கப்பட்ட குற்றத்தின் பின்னர் அவ்வுத்தியை வைத்த கருத்தென்பது 298ஆண்டுங் கூறினாமாயிற் றென்பது. மற்று, முதனூலினான் நூல் இலக்கணங் கூறானோவெ னின், கூறினானே யன்றோ? தான் ஒருவகையான் நூல்செய்து மற்று அதுவே நூலிலக்கணமெனப் பிற்காலத்தார்க்கு அறிய வைத்தமையினென்பது. மற்றுச் சிதைவிலவென்பார், யாரோ வெனின், - நிகழ்காலத்தாசிரியரும் எதிர்காலத்தாசிரியரும் என உணர்க. (106) (வழிநூற்கே குற்றம் வருமெனல்) 662. முதல்வழி யாயினும் யாப்பினுட் சிதையும் வல்லோன் புணரா வாரம் போன்றே. இது, முதனூலொடு மறுதலைப்படுதல் வழிநூற்குக் குற்ற மென்கின்றது. இ-ள்: முதல்வழி யாயினும் யாப்பினுட்சிதையும் -அதிகாரத்தானே முதனூலினைக் குற்றமின்றி வருவதென்று ஈண்டு இலக்கணங்கூறல் வேண்டுவதன்றென்றான். இனி அம்முதனூலினை மாறுபடாமல் ஆண்டோதிய பொருண்மை கூறுமாயினும் நால்வகையாப்பினுள் முதனின்ற மூன்றும் பற்றி வழிநூற்குக் குற்றம்பிறக்கும் ; மற்று மொழிபெயர்த்த லொழியக் கொள்ளுமாறென்னையெனின், யாப்பினுட் சிதையுமென்று 299இடமும் இடத்தியல் பொருளுமாக ஓதினானாகலின் அஃதொழிக்கப்படும். மற்று அஃதொழிக்குமா றென்னை யெனின், - 300தமிழ்நாட்டு வழக்கிற்கு முதனூலாகிய அகத்தியத் துண் மொழிபெயர்த்துச் செய்யவேண்டும் பொருளிலவாக லானும், பிறபாடைக்கும் 301பொதுவாயின பொருளவாயின் அவையுந் தமிழ்வழக்கு நோக்கியே 302இலக்கணஞ் செய்யப்படு மாக லானும், 303அவர்க்கும் மொழிபெயர்த்தல் வேண்டுவதன்றா கலின் அதுவே ஒழிக்கப் படும். இக்கருத்தினானன்றே, வழியி னெறியே நால்வகைத் தாகும் (951) என வழிநூலையே விரித்து நால்வகை யாப்பிற்கும் உரிமை கூறிய தென்பது. அங்ஙனம் முதனூற்கு மொழிபெயர்த்தலின் மையின் 304யாப்பொன்றும் பற்றிச் சிதைவுபிறவாது, ஒழிந்தன பற்றி வழி நூற்குச் சிதைவுண்டாமென்பது கருத்து. வல்லோன் புணரா வாரம் போன்றே - வாரம் புணர்ப்பான் வேறொருவ னாயவழி முதற்கூறு புணர்ந்தாற் புணர்ந்தவாற் றொடு பொருந்தச் செய்யாதவாறு போல என்றவாறு. வாரமென்பது கூறு; என்னை? ஒரு பாட்டினைப் பிற்கூறு சொல்லுவாரை, வாரம் பாடுந் தோரிய மகளிரும் (சில. 14.: 155) என்பவாகலின். யாப்பினுட் சிதைதலென்பது, முதனூலும் வழக்கு நூலா யின் இழிந்தோர் வழக்கும் வழக்கன்றோவெனக் கூட்டி விரித்து யாத்துச் 305செய்யினும், அழான் புழான் (தொல். எழுத். 193) என்பன போல்வன இக்காலத்திலவென்று களைந்து தொகுத்து யாத்துச் 306செய்யினும், 307தொகை விரியும் மயங்கு மாற்றான் 308விரிந்தது தொகுத்தலென்னும் 309நூற்புணர்ப் பினைத் தொகைவிரியெனும் யாப்பெனக் கூறியதல்லாதவழித் தொகுத்து யாத்தே செய்தலும் இம்மூவகை யாப்பினொடு 310மெய்த்திறங் கூறுவலென மொழி பெயர்த்தலை மயக்கிக் கூறுதலுமெல்லாம் யாப்பினுட் சிதைவே யாம். அது பண்ணும் பாணியும் முதலாயின ஒப்பினும் வல்லோன் புணர்த்த இன்னிசையதன் நீர்மைப்படக் காட்டாது, வாரம் புணர்ப்பான் புறநீர தாகிய இசைபடப் 311புணர்த்தல் போல்வதாயிற்று. மற்று இழிந்தோர் வழக்கினைப் பிற்காலத்து உயர்ந் தோருந் 312தகுதி பற்றி வழங்குபவாகலான் அவையும் அமையா வோவெனின், அவை சான்றோர் செய்யுட்குதவா; 313கற்றுணர்ந் தாருங் கற்றுணரா தாரும் மற்று அவை கேட்டே மனமகிழ் வாரைப் பற்றி நிகழ்ந்தன வாயினும், 314ஒற்றுமைப் பட்டு ஒருவகை நில்லா. பெற்ற காலந் தோறும் பிறிதுபிறிதாகிக் கட்டளைப் படுத்து நூல்செய்வார்க்குங் கையிகந்து, வரையறை யின்றாமாகலின் அஃது இலக்கண மெனப்படாதென்பது. (107) (குற்றத்தின் விரி இவை எனல்) 663. சிதைவெனப் படுபவை வசையற நாடிற் கூறியது கூறன் மாறுகொளக் கூறல் குன்றக் கூறன் மிகைபடக் கூறல் பொருளில மொழிதன் மயக்கங் கூறல் கேட்போர்க் கின்னா யாப்பிற் றாதல் பழித்த மொழியா னிழுக்கங் கூற றன்னா னொருபொருள் கருதிக் கூற லென்ன வகையினு மனங்கோ ளின்மை யன்ன பிறவு மவற்றுவிரி யாகும். இது, நிறுத்தமுறையானே ஈரைங் குற்றமும் (953) உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: சிதைவு எனப்படுபவை வசையற நாடின் - குற்ற மென்றற்குச் சிறப்புடையனவற்றைக் குற்றந்தீர ஆராயின்: இவற்றை எனப்படுப வென்பதென், குற்றமாதற்குச் சிறந்திலவாம் பிறவெனின், இவ்வாசிரியர் எஞ்ஞான்றுங் குற்றத்திற்கு இலக்கணங் கூறாராகலான் இலக்கணத்தொடு 315கூறுந்துணைப் பயம்படுதலும் ஒருவாற்றாற் சிறப்பெனவேபடுமென்பது. அல்லதூஉம், ஒழிந்த செய்யுட்காயின் இவையனைத்தும் ஆகாவென்பது ஈண்டே தழாஅல் வேண்டுமாகலானுஞ், செய்யுட்காயின் அவை 316அமையாச் சிறப்பு உடைமையானும், இது வழக்குஞ் செய்யுளுமேயன்றி அவற்றின் வேறுபட 317வுஞ் செய்யப்படும் நூலிலக்கணமாகலானும், எழுவகை வழுப்போல அமைவனவே கூறாது நூலுள் வரப்பெறாதனவும் வரைந்து கூறினானென்பது. அமைவனவற் றினஞ்சார்த்தி, 318ஒழிந்தனவுங் கூறினான்; அல்லாக் கால், அவையே குற்றமாகி ஒழிந்தன புகுதப்பெறுவான் செல்லு மென்றஞ்சியென்பது. வசையற நாடின் என்றதனான் இங்ஙனங் குற்றமென்று வரையப் பட்டனவற்றைக் கொண்டு புகுந்து மற்றொரு பொருள் கொள்ளின் அவை வசையற்றனவாமென்பது. அவை 1கூறியது கூறன், 2மாறுகொளக்கூறல், 3மிகைபடக்கூறல், 4பொருளில மொழிதன் 5மயங்கக்கூறல் என்னும் ஐந்துமாயின. 1கூறியதுகூறல் முன்னொருகாற் சொல்லிய பொருள் பின்னு மொருகாற் சொல்லுதல். அது, உட்குவரத் தோன்று மீரேழ் துறைத்து (56) எனவும், வந்த வீரேழ் வகையிற் றாகும் (58) எனவும் இருகாற்சொல்லி 319ஒருகாற் பயன்கொண்டவாறு. மாறுகொளக்கூறல் மரப்பெயர்க் கிளவிக் கம்மே சாரியை (தொ. எழு. குற். 10) என்றவழி, 320புல்லினையும் மரமென அடக்குதல். 321இக்கருத்து நோக்கி(யே) போலும்; 322ஆண்டு, ஒன்றென முடித்தல் தன்னின முடித்தல் என்பதனால், புல்லினையும் மரமென்று தழீஇயினது (அக்)கருத் தென்பது. குன்றக்கூறல் சொல்லப்புகுந்த பொருளினை ஆசறக் கூறாது ஒழியப்போதல்; இஃதொரு பயன்படாக் குற்றம். மிகைபடக்கூறல் சில்வகை யெழுத்தின் செய்யுட்டாகச் செய்யாது சூத்திரத்துட் சிலசொல் மிகையாகச் செய்தல் போல்வன; அவை, 323ஆயீ ரியல புணர்நிலைச் சுட்டு (தொ. எழு. புண. 5) என்றாற்போல்வன. இங்ஙனம் மிகைபடச் செய்யுங்கால் முன் னின்ற சொல்லிற்கு ஒன்றும் இயைபில்லன கூறலாகா. என்னை? முப்பாற் புள்ளியு மெழுத்தோ ரன்ன (தொ. எழு. நூன். 2) என்றவழி, அவைதாம் முப்பாற் புள்ளியும் எனப் பயனிலை கொண்டு மாறிப் பின்னர் எழுத்தோரன்ன என்றது ஆண்டு இயைபில்லதொரு சொல்லென்று 324இலேசுபடாது தான் சொல்லுகின்ற பொருட்கும் இயைபுபடச் சொல்லியே மிகைப்படுத்தல் வேண்டுமென்பது, என்னை? எழுத்தெனப்படுப (தொ. எழு. நூன் 1) என்பதனுள் மூன்றுமே சிறப்புடையவென்பது கொண்டானா யிற் பின்னர் அம்மூன்றினையுஞ் சிறப்பில்லா முப்பதினோடும் ஒக்கு மென உவமிக்க லாகாதெனவும் 325மாட்டேற்றுச் சூத்திரங் களானெல்லாம் ஒப்புமை பெறுவதல்லது சிறப்பின்மை காட்டப்படா தாகலானும், முப்பஃதுமே சிறந்தன வென்னுங் கருத்தினனாயின் மூன்றுஞ் சிறப்பிலவென்பது 326முதற் சூத்திரத்துட் பெறப்படு மாகலின் பின்னர் 327இவ்விலேசு கூறிச் சிறப்பழித்தல் வேண்டா வாகலானும், பலபொருட் கேற்பினல் லது கோடலன்றி 328ஐயுறற்றோறுஞ் சூத்திரஞ் செய்யானாக லானும், எழுத்தோ ரன்ன (தொல். எழு.நூன் 2) என்பது ஆண்டு இயைபில்லதோர் 329சொல்லென்றதனை ஆண் டுப்பெய்து இலேசுகொண்டானெனல் ஆகாதென்பது. பொருளிலமொழிதல் - நூனுதலிய பொருளன்றி, என்மனார் புலவர் என்றாற் போல வழிநூல் வாய்பாட்டு மாத்திரையே பயனாகச் செய்வன. மயங்கக்கூறல் - நிறுத்தமுறையானன்றி, அத்தி னகர மகரமுனை யில்லை (தொ. எழு. புண. 23) என மயங்கக் கூறிப் 330பிறிதொன்று கோடல்; கேட்போர்க்கின்னா யாப்பிற்றாதல் - சூத்திரச்செய்யுள் கேட்போர்க்கு இன்னாதிசைப்பச் செய்தல். பழித்தமொழியான் இழுக்கங்கூறல் - முடிவில்லாத சொல் லானும் இழிந்த சொல்லானும் எடுத்து முடிப்பனவற்றை மறு முடிவுபற்றி இழுக்கங் கூறலாயிற்று. தன்னானொருபொருள் கருதிக்கூறல் - முன்னோராற் கூறவும் படாது வழக்கினுள்ளதுமன்றித் தன்னுள்ளே ஒரு பொருள் படைத்துக் கூறுதல். 331தன்னானென்பது ஒரு சொல் லெனத் தானென்பதொரு சொற்றாய் மெய்யினுள் உணர நின்றது. தன்னாற் றானொரு பொருள்படைத்துக் கூறுதன் மூன்றாவ தெனினும் இழுக்காது, என்னை? 332நுதலிக்கூற லென்னும் பயனி லைக்குத் தானென்னும் 333பெயர் வெளிப்படா நின்றது வெளிப் படுத்துக்கொளப் பெறுதுமாகலின். 10என்னவகையினு மனங்கோளின்மை - எவ்வாற்றானும் பொருளறிதற்கு அரிதாகச் செய்தல். இவைநான்குங் குன்றக் கூறலொடு கூட்ட ஐந்தும் எஞ்ஞான்றும் பயன்படாதனவாயின. அன்ன பிறவும் அவற்றுவிரி யாகும் - அவை போல்வன பிறவும் ஈரைங்குற்றமென்னப்பட்ட தொகை எண்ணிற்கு (853) அவ்வாறு தொகுத்தற்கேற்ற விரியெண்ணாம், எ-று. விரிந்தது தொகுத்தலென்பதனான், 334எதிரது நோக்கி 335ஆண்டுத் தொகுத்தானாதலின் (853) ஈண்டு அவற்றைத் தொகை கூறாது விரித் தெண்ணினானென்பது. பிறவும் என்றதனான் வெற்றெனத் தொடுத்தன், மற் றொன்று விரித்தல், சென்று தேய்ந்திறுதல், நின்று பயனின்மை என்றாற்போல்வன கொள்க. இவை மேல் ஈரைங்குற்றமுமென உம்மையால் 336தழுவியவற்று விரியாயின. 337முதனூலொடு மாறுபடுதலும் யாப்பினுட் சிதைதலும் இவை போல ஒரோவழி வாரா; அந்நூலின் முழுவதூஉங் கொள்ளக் கிடந்தமையின் ஈண்டவை புறனடையால் தழுவப்பட்டவாறென்பது. இவை யெல்லாங் குற்றமென்று களையப்படுவனவாயினும், ஈரைங் குற்றமு மின்றியென முதற்சூத்திரத்துள் ஓதிப்புகுந்தான், 338அல்லாக்கால் இவற்றுட் சில நூலுட் புகுதுமாறும் அவற்றாற் பயன்கொள்ளு மாறும் 339இன்மையினென்பது. பயன்கொள்ளப் படுவன ஐந் தென்பது மேற்காட்டினாம்; இனி, அப்பதினான்குங் குற்றமேயாகி வருமாறு: தன்மை யுவமை யுருவகந் தீவகம் பின்வரு நிலையே முன்ன விலக்கே வேற்றுப் பொருள்வைப்பு வேற்றுமை யெனாஅ எனவும், உருவக முவமை வழிநிலை மடக்கே விரிசுடர் விளக்கென மரீஇ வருவன எனவுஞ் சில சூத்திரங்களை முதனிறீஇப் பின்னரும் அவ்வாய் பாட்டானே, தன்மை யுவமை யுருவகந் தீவகம் பின்வரு நிலையே முன்ன விலக்கே வேற்றுப் பொருள்வைப்பு வேற்றுமை யென்றாங் கெண்வகை யியல செய்யுட் கணியென மையறு புலவர் வகுத்துரைத் தனரே என்றாற்போலப் பின்னரும் அவ்வாறே சூத்திரஞ்செய்தல் கூறியது கூறலாய்ப் பயன்படாதாயிற்று. என்னை? இவற்றது வேறுபாடு தொகைச் சூத்திரத்துத் 340துணித்தெண்ணியத னானே பெற்றவழிப், பின்னும் அவ்வாறே மற்றொரு சூத்திரஞ் செய்ததனாற் பயந்ததின் மையி னென்பது. 341அன்றென வொருதலை துணிந்த குற்ற நன்றறி புலவர் நாட்டுதற் குரிய என்றாற்போல்வன 342வரையாது குற்றமென்றதனையே சான் றோர்க்காயிற் குற்றமாகாதென்றல் மாறுகொளக்கூறலாம், செய்யுட்கெல்லாம் அணியிலக்கணங் கூறுவான் குற்றங் கூறும்வழி 343வரைந்து கூறுதலின். செய்யுட்குரிய பொருட்படை யெல்லாவற்றுள்ளும் நல்லனவுந் தீயனவும் இவையென்று சொல்லப் புகுந்தான் அவற்றுட் சில சொல்லி யொழிதலும், வழக்கொடு 344மெய்ப் பொருளும் ஆராய்வலென்று புகுந்தான் அவற்றுள் வழக்கிற்கு வேண்டுவ கூறி மெய்ப்பொருள் ஆராய்ச்சி முழுவதூஉஞ் சொல்லாது நெகிழ்ந்து போதலும், எடுத்துக்கொண்ட நூலுட் காட்டும் இலக்கியங்களைச் சூத்திரத்தான் அடிவரை செய்வ லென்று புகுந்து சில 345மறுத்துச் செய்து சிலவற்றுக்குச் செய்யாது போதல் போல்வனவுங் 3குன்றக்கூறலாம். அவை முடிந்த நூலிற் கண்டுகொள்க. இடையிடை திரியா தியனெறி மரபி னுடைய கருப்பொரு ளொரோவழித் துவன்றவு மியற்கை மரபி னுரிப்பொரு டோன்றவும் 346பன்னிரு காலமும் நால்வகை யிடத்தொடுந் தொன்னெறி மரபிற் றோன்றினர் செயலே எனச் சூத்திரஞ்செய்து நாற்பத்தெட்டினும் நாற்பத்தெட்டுக் காலமுந் தொக்க சூத்திரத்தான், துடைப்பன துடைத்துச் செயற்கை போல வழியிட னொழித்துக் காலங் கூறுவல் என்று புகுந்து, அக்காலத்துள்ளுஞ் சிறுபொழுது கூறாது இட இலக்கணமே கூறி இடத்திற்குச் சுருங்க வேறு சூத்திரஞ் செய்தவாறு போலாது 347அதற்கு இன்றியமையாதன வெல்லாங் குன்றாமற் கூறாது, சென்றுபட்ட பரப்பிற்றாகச் சூத்திரஞ் செய்தல் போல்வன 4மிகைபடக் கூறலாம். அஃதாவது இன்னிளவேனி லென்பது தண்ணிழ லறல்யாற் றடைகரைத் துறைதொறு மிலங்கு முலைக்க ணேய்ப்பக்கோங் கவிழ்ந்து வண்டுதா தூதுந் தண்டளிர்க் காவிற் பருமல ருதிர்ந்து முருகுகமழ் பரப்பின் மண்வயிறு குளிர்க்குந் தண்ணறுங் கயத்து நிழலிரு ணடுவ ணழலவிர் தாமரைத் தாள்கறித் தருந்தும் வாளெயிற் றிளமீன் புள்ளுக வெறிய வெள்ளென்று பிறழும் பளிங்குநெகிழ் தன்ன துளங்காத் தெண்ணீர் தளிர்குடைந்து தெவிட்டிய குயில்குனிந்து குடிப்ப மரவந் தாழ்ந்த கரைமரச் சாரற் றேனாறு தேறல் வேனிற் கண்ணும் வாரார் கொல்லென நீர்வார் கண்ணொடு புலம்புடை மகடூஉக் கலங்கஞ ரெய்த யாறுங் குளனுங் காவு மாடி யோருயிர் மைந்தரு மகளிருங் களிப்பக் காம விழவொடு கன்னியர் நோற்ப நிலவுஞ் சாந்தும் பலவயிற் பயன்படத் துன்பக் காலந் துடைத்தனர் பெறூஉ மின்பக் கால மென்மனார் புலவர் என்றாற்போலக் காலம் 348பற்றிக் கூறிப் பெருஞ்சூத்திரஞ் செய்தவழியும் பருவத்திற்கு வரையறையிலக்கணம் போதுத லின்றி 349விடுதலாயிற்று. இனி, அம்மூன் றென்ப மன்னைச் சொல்லே (தொ. சொ. 254) எனவும், அப்பா லெட்டே யும்மைச் சொல்லே (தொ. சொ. 257) எனவும், ஆயீ ரைந்தொடு பிறவு மன்ன எனவும் இன்னோரன்ன பலவும் மிகைபடச் செய்தார் இவ் வாசிரியராகலிற் பிற்காலத்து நூல்செய்தார்க்கும் மிகைபடச் செய்தல் அமையு மென்பாரு முளர். அற்றன்று; யாவயின் வரினுந் தொகையின் றியலா (தொ. சொ. இடை. 42) எனப்பட்ட எண்ணாகலின் தொகைகூறினமையானும் வழக் காதலானும் 350அதுமுதலாக அல்லது சூத்திரச் செய்யுளுஞ் செய்யாராகலானும் அங்ஙனந் தொகைதொடராக்கால் 351இரண்டாகப்பட்டு 352விகார வகையான் தொகுத்தனனா மெனவும் அவை பலசொல்லாகலான் தொகுக்கப்படுவனவல்ல வெனவுஞ் சொல்லி மறுக்க. அல்லதூ உம், மன்னென்பது ஓர் இடைச்சொல்; அது தானடைந்த சொற்பொருளன்றித் தனக்கு வேறுபொருளின்மையிற் பொருள் பற்றி மூன்றெனலாகாது, 353பலபொருளொருசொல் எனப்படுவ தன்றி; அதனான் அதனை நோக்கி மூன்றென்றானல்லன், அஃது 354அடுத்த சொல்லினை மன்னைச் சொல்லென்றான், அவை மூன்றன்றி எத்துணையும் பலவாயினும் 355ஒன்றாய் இம்மூன்று பகுதிப் படுமென்று கோடற் கென்பது. ஒழிந்த இடைச்சொல்லாயினும் அவற்றிற்கும் இஃதொக்கும். மன்னைச் சொல்லென்பது 356வேற்றுமைத் தொகையே யன்றிப் பண்புத் தொகையாகலு முடைத்து. மன்னடுத்த சொல்லினையும் மன்னென ஆகுபெயராற் கூறினானென்பது. வழக்கு வழிப்பட்ட சொல்லீறு திரியினும் படைத்துக் கொண்ட சொல்லொடு சிவணித் திரிசொல் லென்றே செப்பினர் புலவர் 357வரிவளைப் பணைத்தோண் மடநல் லோயே என்றாற்போல இயைபில்லன கூறுதல் பொருளிலமொழிதலாம். இவை ஒழிந்த செய்யுட்காயின் தடங்கண்ணாய் (நாலடி. 216) என்றாற்போல் வரப்பெறுமென்றற்கு ஓத்தென்னை யெனின்,-அது செய்யுள் செய்வார் வேண்டியவாறு செய்பவாகலின், ஈண்டுச் சில்வகையெழுத்தின் (655) செய்யுட்டாகச் செய்யுநூற்கே இது விலக்கினமையின் அதன்திறத்துக் கடாவின் றென மறுக்க. மயங்கக் கூறலென்பது, மயங்கா மரபி னெழுத்துமுறை காட்டுவல் (பாயிரம்) என்று புகுந்தாற்போல இன்னது சொல்லுவலென்று புகுந்தான், 358மெய்ந்நூலும் வழக்குநூலும் உடனாராய்தலும் ஆரியமுந் தமிழும் போல்வன உடனாராய்தலும் போல்வன. கேட்போர்க்கின்னா யாப்பாவது, கதந பம (தொ. எழு. 61) சஞயவ உயிர்முன் பின்வல்லினம் லரயநதா மென என்றாற்போலச் சூத்திரச்சுருக்கமும் மொழிக்கு முதலா மெழுத்தும் ஈறாமெழுத்தும் பொதுவகையான் அடங்க ஓதுதற் பயனோக்கி இங்ஙனம் இன்னாவோசைத்தாகச் சூத்திரஞ் செய்தல்போல்வன. பழித்தமொழியா னிழுக்கங்கூறல், விளாமெ னிறுதி பழமொடு புணரிற் றளாவியற் றன்றி யியற்கை யாகும் என்றாற்போல 359விளாமென்பதொரு வழுச்சொல்லாற் சூத்திரஞ்செய்தல். ஒன்றற்கொன்றென்பதனை, ஒன்றினுக் கொன்று எனச் சூத்திரஞ் செய்தலும் அது. தன்னானொருபொருள் கருதிக் கூறலென்பது, மலைபடுகடாத்தினை 360ஆனந்தக் குற்றமெனப் 361பிற் காலத்தா னொருவன் ஒரு சூத்திரங் காட்டுதலும், 362பதமுடிப் பென்பதோர் இலக்கணம் படைத்துக் கோடலும் போல்வன. என்னவகையினி மனங்கோளின்மை வருமாறு : இருதிணைப் பிறந்த வைம்பாற் கிளவிக்கும் (தொ. சொ. பெ. 7) என்னுஞ் சூத்திரத்திற்கும், எப்பெயர் முன்னரும் வல்லெழுத்து வருவழி (தொ. எழு.புண. 26) என்பதற்கும் வேறுபொருள் உரைப்பா ருரைக்குமாற்றான் அறியப்படும். இனி மற்றொன்று விரித்தலென்பது, 363ஆறுறுப்பும் பாவினமும் கூறுவலென்று புகுந்து பொருளாராய்ச்சி பலவுங் கூறுதல். இதுவும் இன்னோரன்னவும் மிகைபடக் கூறலாய் அடங்குமெனினும் அமையும். நின்றுபயனின்மை யென்பது, பிற்காலத்துத் தோன்றிய வழக்கே பற்றி அவற்றிற்குங் குற்றந் தீர இலக்கணங் காட்டியவழி, அது சான்றோர் செய்யுட்குப் பயன்படாது 364தம்மோரன்னோர் செய்யுட்குப் பயன் பட்டொழியச் செய்தல். அவை வந்தவழிக் கண்டுகொள்க. 365பாட்டியன்மரபெனக் காட்டுவனவும் அவை. இனி வெற்றெனத்தொடுத்தலென்பது, கேட்போர்க்கின்னா யாப்பின்பாற் பட்டு அடங்கும். சென்றுதேய்ந்திறுதலென்பது, சொல்லப்புகுந்த தொருபொருள் எல்லாவிடத்துஞ் சொல்லப் படுவதாகவும் ஈற்றுக்கண் மாய்ந்து மாறுவது. அதுவுங் குன்றக்கூறலாய் அடங்கும். ஒழிந்தனவும் அன்ன. மற்றுக் கூறியதுகூறன் முன் வைத்ததென்னையெனின், அது நூலுட்போலச் செய்யுட்கண்ணும் பயன்படவரின் அமையு மென்றற் கென்பது. அவை, வைகலும் வைகல் வரக்கண்டு மஃதுணரார் (நாலடி. 4:9) எனவும், வஞ்சியாய் வஞ்சியார் கோ (யா. வி. ப.230) எனவுஞ் சொல்வகையான் இரட்டித்தவாறு. இனியமைவன வற்றிடையே குன்றக்கூறல் வைத்தான் 366அவற்றுத்துணைச் சிறப்பில வென்று ஐயுறாமை யென்பது. இவ்வாசிரியன் யாண்டும் இலக்கணமேகூறி இவ் விலக்க ணத்திற் பிறழ வருதலைக் குற்றமென்று கொள்ள வைப்பினன்றி இல்லாத குற்றங்கட்கு இலக்கணங் கூறாதான் 367இது கூறினான்; எதிர்மறுத் துணரின் றிறத்தவு மவை (தொ. மர. 109) என வருகின்ற சூத்திரத்தான் இவையும் இலக்கணத்திற்கு உபகா ரப்படுதலி னென்பது. (108) (குணம் இவை எனல்) 664. எதிர்மறுத் துணரின் திறத்தவு மவையே. இது, மேற் குற்றம் பத்துங் கூறி இனிக் குணமும் பத்துள வென்கின்றது. மேலெல்லாம் இவ்வாசிரியன் இலக்கண வழக்கி னையே விதந்தோதி அதனிற் பிறழ்ந்தது குற்றமென்று கொள்ள வைத்தான்; இவ்வோத்தினுள் ஈரைங்குற்றமுமென்பன சில குற்றங் கூறினான். இது மாறுகொளக்கூறலாங் கொல்லோ வெனின், அற்றன்று; இவையும் இலக்கணமே கூறினனென்பான் இவற்றை யெதிர்மறுத்துக் கொள்ள வென்றானென்பது. இதனது பயன், உள்ளது சொல்லுதலேயன்றி இல்லது சொல்லுதலும் நூலிலக்கணமென்றறிவித்தலாயிற்று. அவை, 368பெயர்நிலைக் கிளவி காலந் தோன்றா (தொ. சொ. 71) எனவும், வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது (தொ. சொ. 200) எனவும் வரும். எனவே, கூறியது கூறாமையும் மாறுகொளக் கூறாமையும், குன்றக் கூறாமையும் போல்வனவும் பத்து உள நூலிலக்கணமென்றானாம். மேல், ஈரைங் குற்றமு மின்றி என்றதல்லது அவற்றை நாட்டிக்கொண்டு எதிர்மறுத்துக் கோடல் பெறாமையின் 369இது கூறினானென்பது. (109) (உத்தியின் விரி இவை எனலும், நூற் புறனடையும்) 665. ஒத்த காட்சி யுத்திவகை விரிப்பி னுதலிய தறித லதிகார வகையே தொகுத்துக் கூறல் வகுத்துமெய்ந் நிறுத்தன் மொழிந்த பொருளோ டொன்ற வவ்வயின் மொழியா ததனை முட்டின்று முடித்தல் வாரா ததனான் வந்தது முடித்தல் வந்தது கொண்டு வாராத துணர்த்தன் முந்து மொழிந்ததன் றலைதடு மாற்றே யொப்பக் கூற லொருதலை மொழிதல் தன்கோட் கூறன் முறைபிற ழாமை பிறனுடம் பட்டது தானுடம் படுத லிறந்தது காத்தல் லெதிரது போற்றன் மொழிவா மென்றல் கூறிற் றென்ற றான்குறி யிடுத லொருதலை யன்மை முடிந்தது காட்ட லாணை கூறல் பல்பொருட் கேற்பி னல்லது கோட றொகுத்த மொழியான் வகுத்தனர் கோடன் மறுதலை சிதைத்துத் தன்றுணி புரைத்தல் பிறன்கோட் கூற லறியா துடம்படல் பொருளிடை யிடுத லெதிர்பொரு ளுணர்த்தல் சொல்லி னெச்சஞ் சொல்லியாங் குணர்த்த றந்துபுணர்ந் துரைத்தன் ஞாபகங் கூற லுய்த்துக்கொண் டுணர்த்தலொடு மெய்ப்பட நாடிச் சொல்லிய வல்ல பிறவவண் வரினுஞ் சொல்லிய வகையான் சுருங்க நாடி மனத்தி னெண்ணி மாசறத் தெரிந்துகொண் டினத்திற் சேர்த்தி யுணர்த்தல் வேண்டு நுனித்தகு புலவர் கூறிய நூலே. இது முறையானே இறுதிக்கணின்ற முப்பத்திருவகை யுத்தியுங் கூறி மற்றும் இந்நூலுள் அதிகாரம் மூன்றற்கும் வேண்டும் புறனடையுங் கூறுத னுதலிற்று. இ-ள்: ஒத்த 370காட்சி யுத்திவகை விரிப்பின் முற்கூறிய குற்றங்களோடு ஒப்பத்தோன்றுந் தோற்றத்தினை உடையவாகிய உத்திக் கூற்றினை விரித்துச் சொல்லின்: பத்துவகைக் குற்றத்தோடும் ஒத்துவருமெனவே இவையும் நூற்கணன்றி ஒழிந்த செய்யுட்கு வருங்கால் விலக்கப்படுதலும், முற்கூறிய குற்றம்போல இவையும் வேறு சில பொருள் படைத்தலுமுடையவாயின. காட்சியுத்தி யென்று இவற்றைக் கூறியவதனான் நூலுட்காணப்படு மென்ற ஐந்து குற்றத்தோடும் ஒத்தல் கொள்ளப்படும், அவ்வந்நூற்குப் பயம்படவரும் பகுதியானென்பது. 371உத்தி யென்பது நூல்செய்யுங்கால் இயல்புவகையாகிய வழக்குஞ் செய்யுளும் போலச் செவ்வனஞ்சொல்லுதல் ஒண்மை யுடைத்தன்றாம் பிறவெனின், அற்றன்று; அவ்வாறு 372செய்தக் கால், நுண்மையொடு புணர்ந்த வொண்மைத்தாகல் வேண்டும். என்பது 373முன்னர்ச்374சொல்லினான். ஈண்டுச்செவ்வனஞ் சொல்லாத தந்திரவுத்தி வகையும் அவ்வாறே ஒண்மையுடைய வாமென்பது கருத்து; என்றார்க்குச் செவ்வனஞ் செய்தலை உத்தியென்னானோ வெனின்,- அது சொல்லாமை 375முடிந்ததாக லினன்றே உத்தியென்னாது இவற்றை 376உத்திவகை யென் பானாயிற்றென்பது. அஃதேல், இவற்றை முன் தொகுத்தான் போல விரிப்பினென்ற தென்னை யெனின், முன்னர் எதிரது நோக்கி (மர. 98) முப்பத்திரண்டெனத் தொகைகூறிப் பின்னர், மனத்தி னெண்ணி மாசறத் தெரிந்துகொண் டினத்திற் சேர்த்தி யுணர்த்தல் வேண்டும் என்கின்றானாகலான், அங்ஙனம் இனம் பற்றி 377அவற்றோடு அடங்குவன வெல்லாம் அவற்று விரியாகுமென்னுங் கருத்தி னாற் கூறினானென்பது. அவனிவ னுவனென வரூஉம் பெயரு மவளிவ ளுவளென வரூஉம் பெயரு மவரிவ ருவரென வரூஉம் பெயரும் யான்யா நாமென வரூஉம் பெயரும் யாவன் யாவள் யாவ ரென்னு மாவயின் மூன்றோ டப்பதி னைந்தும் பாலறி வந்த வுயர்திணைப் பெயரே (தொ. சொ. 164) என்பதனுள், ஆவயின் மூன்றோ டப்பதி னைந்தும் எனத் தொகுத்துக் கூறியவழி அது மிகைபடக் கூறலாகாது; என்னை? 378உம்மையெண்ணாகலின் தொகையின்றியுஞ் சில்வகை யெழுத்திற் செய்யுட்டாக வழக்கியலானே சுருங்கச் செய்வதோர் ஆறுளதாயினும் அப்பதினைந்துமெனத் தொகுத் துக் கூறல் உத்திவகையான் அமையுமாகலி னென்பது கருத்து. இங்ஙனந் தொகைகூறுதல் வெள்ளிதன்றி ஒள்ளிதாகல்; அவை, 379பதினைந்து பெயருமே ஒருநிகரன வென்பது அறியலாகு மென்பது. இனி, மெய்பெறு மரபிற் றொடைவகை தாமே. (413) என்னுஞ் சூத்திரம் போல்வன பிறிதொருபொருள் பயக்கு மென்றலும் அச்சூத்திரத்துட் காட்டப்பட்டது. இவ்வாற்றான் இவ்வுத்திவகை எல்லா நூற்கும் இன்றியமையாவாயின. மற்று, வகையெனப்படாது செவ்வனஞ்செய்யும் உத்தி யாவன யாவையெனின், இயற்கைப் பொருளை 380யிற்றெனக் கிளத்தல் (தொ. சொ. 19) என்றாற்போலச் சொல்லியொழிவன. பிறவும் அன்ன. விரிப்பின்என்ற வினையெச்சம் சேர்த்தி யுணர்த்தல் வேண்டு மென்ற முற்றுவினைகொண்டு முடிந்தது. மெய்ப்பட நாடி யென்பன போல்வனவற்றுக்கும் இதுவே முடிபு; அதற்கு நூலென்னும் 381பெயர் கொடுத்து முடிக்க. நூலையென்று ஐகாரம் விரிப்பின், வேண்டுமென்பது 382தன்பாலானும் பிறன் பாலானும் பெற்றதொரு பெயர்கொண்டு முடியும். (1) நுதலியதறிதல்:சூத்திரத்துள் ஓதிய பொருளாற் சொல்லப்படும் பயன் இல்லதுபோலச் சொல்லி, யதனானே அதற்கேற்றவகையாற் கருதியுணரப்படுபொருள் இன்னதென்று கொள்ளவைத்தல்; அது, வேறுவினைப் பொதுச்சொ 383லொருவினை கிளவார் (தொ. சொ. 46) எனவும், சிறப்பி னாகிய பெயர்நிலைக் கிளவிக்கு மியற்பெயர்க் கிளவி முற்படக் கிளவார் (தொ. சொ. 41) எனவும் இவை வழுவற்க வழுவமைக்க என்னும் இருபகுதி யுள் வழுவமைத்தற்கெழுந்தனவென்பது கருதினான் ஆசிரிய னென்பது அறிய வந்தன. இதனை முதற்கண் வைத்துப்போய் இறுதிக்கண்ணே உய்த்துக் கொண்டுணர்தலை வைத்தான்; 384இதுவுமதுபோல் உய்த்துக் கொண் டுணர்தல் ஒருவகையானு டைத்தாயினும் 385அதனாற் பெற்றபயன் பிறிது மொன்று உளதாதல் வேற்றுமை யுடைமையினென்பது. அது முன்னர்ச் சொல்லுதும் (பக். 378). இனி, மூவகைத் தமிழ்வழக்கமும் நுதலியதும், அவற்றுள் இயற்றமிழே நுதலியதும், அதிகாரம் நுதலியதும், அதிகாரத் துள் ஓத்து நுதலியதும், ஓத்தினுட் சூத்திரம் நுதலியதுமெனவும் இவை நுதலியதறிதற் பகுதியாய் அடங்குமென்பான், மனத்தி னெண்ணி மாசறத் தெரிந்துகொண் டினத்திற் கேர்த்தி யுணர்த்தல் வேண்டும் 386என்கின்றானென்பது. மேல்வருகின்றவற்றுக்குமொக்கும். அஃதேல். இதனை ஆண்டுவைத்து 387மற்றதனை ஈண்டு வைப்பினும் இஃதொக்கும் பிறவெனின், - அற்றன்று; நூலின் வேறாகிய பாயிரத் துள்ளாயினும் இந் நுதலியதறிதல் வருதலும் உத்திவகையென் றற்கு இதனை முன்வைத்தா னென்பது. (2) அதிகாரமுறைமைஎன்பது: முன்னின்ற சூத்திரப் பொருண்மை பின்வருஞ் சூத்திரத்திற்கும் பெறற்பாலன பெற வைத்தல்; அவை, இயற்கைப் பொருளை யிற்றெனக் கிளத்தல் (தொ. சொ. 19) என்றவழி இற்றெனக் கிளத்த லுரிமைபூண்டதன்றே, 388அதனைச், செயற்கைப் பொருளை யாக்கமொடு கூறல் (தொ. சொ. 20) என்புழியுங் கொள்ள வைத்தலும்; குற்றிய லிகர நிற்றல் வேண்டும் (தொ. எழு. 34) என்பதனைக், குற்றிய லுகரம் வல்லா றூர்ந்து (தொ. எழு. 36) நிற்றல் வேண்டும் என்று கொள்ள வைத்தலும் போல்வன. இனி, வழக்கியலும் வழக்கியலாற் செய்யப்பட்ட செய்யுளி யலும் பற்றி எழுந்த இலக்கணம் இயற்றமிழெனப்படும். அச்செய்யுளின்றி அமையாத இசையிலக்கணம் இசைத் தமிழெனப் பெயரெய்தி அவ்வியற் றமிழ்ப் பின்னர் வைக்கப் பட்ட தெனப்படும்; இவ்விரண்டன்வழி நிகழ்த்துங் கூத்திலக்க ணங் கூறிய நாடகத் தமிழ் அவற்றுப் பின்னர்த்தா மென முறைமை கூறுதலும், இனி இயற்றமிழுள்ளும் எழுத்ததிகாரத் தொடு சொல்லதிகாரத் திற்குஞ் சொல்லதிகாரத்தொடு பொருளதிகாரத்திற்கும் இயைபு கூறுதலும், அதிகாரத்துள் ஓத்துப் பலவாகலின் அவை ஒன்றன் பினொன்று வைத்தற்கு இயைபு கூறுதலும், அவ்வாறே சூத்திரத்திற்கு இயைபு கூறுதலுமெல்லாம் அதிகாரமுறைமைக்கு இன மென்று சேர்த்தியுணரப்படும். பிறவும் அன்ன. அதிகாரமென்ற பொருண்மை யென்னையெனின், முறை மையெனவும், இடமெனவுங், கிழமையெனவுங் கொள்ளப்படும். அவற்றுள், ஈண்டு அதிகாரமென்றொழியாது முறைமையென வுங் கூறினமையின், அதிகாரமென்பது முறைமைப் பொருட் டன்றி முன் ஓரிடத்து நிறுத்தியதனை வழிமுறையாற் பொருள் கோடல் கொள்க; என்னை? முன்னும் பின்னும் நின்ற சூத்திரம் இரண்டனையும் ஓரிடத்தனவாகக் கருதல் வேண்டும்; அங்ஙனங் 389கருதாத லியைபுகொண்டன்றி ஒன்றன் பொருண்மை ஒன்றற்கு வருவித்தல் அரிதாகலானும், அங்ஙனம் இடம் பற்றாக் கால் ஒருவன் செய்த நூலொடு பிறிதொருநூற்கு இயைபு கூறாத வாறு போல எழுத்ததி காரத் தொடு சொல்லதிகாரத்திடை இயைபு கூறல் வேண்டுவதன்றாவான் செல்லுமாதலானு மென்பது. எனவே, இடமெனப் பட்டதுதானே முறைமைப் பொருளும் படுமாயினும் இச்சூத்திரத் துள் அதிகாரமெனவும் முறைமை யெனவுங் கூறினமையின் ஈண்டு 390இடமுறைமை யென்பதே கருத்தாயிற்று. இதனானே 391உடன் பிறந்தாருள் ஒருவற்குரியது வழித் தோன்றினார்க்கும் ஒருவழி உரியவாறு போல, முன்னர் நின்ற விதி பின்னர் வந்ததற்கும் வேண்டியவழிக் கொள்ளப்படுமென்பது உத்திவகையாயிற்று. இனியொருசாரார், இங்ஙனம் வரைந்துகொண்ட இடத் துள்ளே யாற்றொழுக்குப் போலவன்றி இடையிடையும் பெறு மென்பது நோக்கி அரிமா நோக்குந், தேரைப் பாய்த்துளும், பருந்து விழுக்காடும் ஆகி வருமெனவுஞ் சொல்லுப; அவையும் 392இனத்திற் சேர்த்தி யுணர்த்தவே படுமென்பது. (3) தொகுத்துக் கூறல்: தொகுத்தியாத்த நூலுள்ளுந் தொகுத்துக் கூறுதல்; அவையாவன: எழுத்து முப்பத்துமூன்று, 393சொல்லி ரண்டு, பொருளிரண்டு என ஆசிரியன்றானே தொகை கூறுதல் போல்வன. இருதிணை மருங்கி னைம்பா லறிய வீற்றினின் றிசைக்கும் பதினோ ரெழுத்தும் (தொ. சொ. 10) எனப் பல சூத்திரத்து விரிந்தன தொகுத்தலும், ஆவயின் மூன்றோ டப்பதி னைந்தும் பாலறி வந்த வுயர்திணைப் பெயர் (தொ. சொ. 164) என ஒரு சூத்திரத்து விரித்துத் தொகுத்தலும் போல்வனவும் அதன் பகுதியாய் அடங்கும். (4) வகுத்து மெய்ந்நிறுத்தல்: அங்ஙனந் தொகுத்துக் கூறிய வழி எழுத்து முப்பத்துமூன்றென்ற தொகையினைக் குற்றெழுத் தும் நெட்டெழுத்தும் உயிரும் உயிர்மெய்யும் வல்லினமும் மெல்லினமும் இடை யினமுமென்றாற் போலவும், உயர்திணை அஃறிணை யென்ற தொகை யினை ஒருவன் ஒருத்தி பலர் ஒன்று பலவென்றாற்போலவும் வகுத்தல் : உயர்திணைக் குரிமையு மஃறிணைக் குரிமையு மாயிரு திணைக்குமோ ரன்ன வுரிமையும் (தொ. சொ. 162) எனவும், இயற்சொ றிரிசொ றிசைச்சொல் வடசொலென் றனைத்தே செய்யு ளீட்டச் சொல்லே (தொ. சொ. 387) எனவும் வருவனவும் அவை. இவற்றுள் 394இருதிணையெனக் கூறிப்பெயர் மூன்று, வினை மூன்றென்றலும், இனி அகத்திணை புறத்திணையெனக்கூறி, அகம்புறமெனக் கோடலும் இன மென்றது, அவை குற்றெழுத்து நெட்டெழுத்தென முற்கூறியன வே 395மற்றொரு பெயர் பெற்றாற் போலாது சொல்வகை யான் 396மூன்றாவதொரு சொல் வேறு பெற்றிலாமையினென்பது. இங்ஙனங் கொள்ளாக்கால் இருதிணைப் பெயரும் வினையும் மும்மூன்றெனல் ஆகாதன்றோவென்பது. சொல்லெனப் படுப பெயரே வினையென் றாயிரண் டென்ப வறிந்திசி னோரே (தொ. சொ. 160) என்றவழி, இடைச்சொற் கிளவியு முரிச்சொற் கிளவியு மவற்றுவழி மருங்கிற் றோன்று மென்ப (தொ. சொ. 161) என வகுத்தலும், இனி ஆராய்ந்த இயற்சொல்லொடு 397வேறு மூன்று சொற்கூட்டி நான்கென்றலும் அவ்வாறே இனமெனப் படும். என்னை? ஒழிந்த மூன்று சொல்லும் இயற்சொல்லின் வேறு பட்டமை கூறுமாகலி னென்பது. அஃதேல், எழுத்து முப்பத்து மூன்றெனக் கூறிப் பின்னர் இருநூற்றொருபத்தாறு யிர் மெய்க் 398குப்பை கோடலும் வேற்றெழுத்தாகி வருமென்பது வகுத்து மெய்ந்நிறுத்த லென்பதனாற் 399கொள்ளாமோ வெனின், கோடுமன்றே, புள்ளி யில்லா வெல்லா மெய்யும் (தொ. எழு. 17) என்புழி, உருவுரு வாகி யகரமொ டுயிர்த்தலும் என ஆசிரியன் இரண்டெழுத்தின் கூட்டமாகச் சூத்திரஞ் 400செய்தி லானாயினென்பது. மெய்யென்றதனான் வகுத்தவற்றைப் பின்னும் வகுத்து நிறுத்தல் கொள்ளப்படும்; என்னை? இயற்சீர் பத்தெனவும் ஆசிரியவுரிச்சீரா றெனவும் வகுத்தவற்றை, இயற்சீ ரிறுதிமுன் நேரவ ணிற்பி னுரிச்சீர் வெண்பா வாகு மென்ப (தொ. பொ. 331) என இயலசைமயக்கமாகிய நான்கனையே இயற்சீரெனவும், வெண்பா வுரிச்சீ ராசிரிய வுரிச்சீ ரின்பா நேரடிக் கொருங்குநிலை யிலவே (தொ. பொ.335) என்றவழி, ஆசிரியவுரிச்சீர் ஆறனுள் இரண்டனை ஒழித்து உரியசை மயக்கமாகிய நான்கனையே ஆசிரியவுரிச்சீரெனவும் வகுத்து நின்றமையினென்பது. மெய்யென்றதனான் வகுத்தவற்றைப் பின்னும் வகுத்து நிறுத்தல் கொள்ளப்படும்; என்னை? இயலசை மயக்க மியற்சீ ரேனை யுரியசை மயக்க மாசிரிய வுரிச்சீர் (தொ. பொ. 325) என்று பகுத்தோதியவாற்றானென்பது; அக்கருத்தினானன்றே 401ஒழிந்த இரண்டனையுங், கலித்தளை மருங்கிற் கடியவும் படாஅ (தொ. பொ. 336) என இறந்ததுதழீஇ உரைப்பானாயிற்றென்பது. (5) மொழிந்த பொருளோடொன்ற வவ்வயின் மொழி யாததனை முட்டின்று: முடித்தல்எடுத்தோதிய பொருண் மைக்கு ஏற்ற வகையான் அப்பொருண்மைக்கட் சொல்லாத தொன்று கொள்ள வைத்தல். முட்டின்றி முடித்தலென்றதனான் எடுத்தோதாததும் எடுத்தோதியதனோடு ஒக்குஞ் சிறப்பிற்றென்றவாறாம். அது போல்வன அதற்கு இனமெனப்படும். 402மற்று 403இதனை 404அருத்தா பத்தி யென்னாமோ வெனின், என்னா மன்றே, பிறசீ ருள்வழித் தன்றளை வேண்டுப (தொ.பொ. 367) என்னும் பொருட்டன்றித் தன்சீரொடு இயற்சீர் வந்து தளை கொள்ளுமென மொழியாதொரு பொருள்கோடலினென்க. இனி, ரஃகா னொற்றும் பகர விறுதியும் (தொ. எழு. 490) என்றவழி 405ஒழிந்த நான்கெழுத்தும் ஈற்றினிற்குமென்று 406கோடல் போல்வனவும் அதன் இனமெனப்படும். என்னை? ஒன்றெனமுடித்தல் தன்னின முடித்தலெனினும் இழுக்காது. இனிச், சீரியை மருங்கி னோரசை யொப்பின் (தொ. பொ. 368) என்றவழி, ஒன்றாதது இயற்சீர்வெண்டளை யென்றுகோடல் அருத்தாபத்தி யாகி, எடுத்த மொழியினஞ் செப்பலு முரித்து (தொ. பொ. 61) என்ற வழக்கியலானே வழுவன்றி அடங்குமென்பது. (6) வாராததனான் வந்தது முடித்தல்:ஒரு பொருண் மைக்கு வேண்டும் இலக்கணம் நிரம்ப வாராததொரு சூத்திரத் தானே அங்ஙனம் வந்த பொருண்மைக்கு வேண்டும் முடிபு கொள்ளச் செய்தல்; அது, தொடர லிறுதி தம்முற் றாம்வரின் லகரம் றகரவொற் றாகலு முரித்தே (தொ. எழு. 214) என அகரத்திற்குக் கேடு வாராத சூத்திரத்தானே லகரம் றகரவொற்றாய் வருமெனப் பிரித்துத் திரிபு கூறியதே பற்றாக 407அகரம் ஆண்டு நில்லாது கெடுமென்று கொள்ளவைத்து அதனானே சிற்சில வித்திப் பற்பல கொண்டாரென்று வந்த புணர்ச்சி முடித்தவாறு கண்டுகொள்க. எல்லா மென்னு மிறுதி முன்னர் வற்றென் சாரியை முற்றத் தோன்றும் (189) என்றவழி, எல்லாமென்னும் விரவுப்பெயருள் உயர்திணை கூறின் வற்றுச்சாரியை பெறாமையான் அது பெற்றுவந்த அஃறிணைக் கூறே முடித்தலும் அது; பிறவும் அன்ன. இனி, இங்ஙனம் முடிபுகோடலன்றி, 408ஆண்டுக் 409குறியிடு தலும், ஆட்சியுங் குறியீடும் ஒருங்குநிகழ்ந்தது பின்னர் ஆட்சிக் கண் வாராமையும் வந்தவழிப் 410பிறவற்றொடு கூறுதலும் அதற்கு இனமெனப்படும். அவை, அவ்வகை யொன்பதும் வினையெஞ்சு கிளவி (தொ. சொ. 230) என முடிந்ததனை மீண்டும், நெறிப்படத் தொன்று மெஞ்சுபொருட் கிளவி (தொ. சொ. 430) எனக் குறியிடுதல் எச்சவியலுள் வந்ததாயினும் முன்னர் அக் குறியீடு வந்ததின்மையின் அது வாராததெனப்படுமாகலின் 411அஃது ஈண்டுக் குறியிடுத லாயிற்று. வினையியலுட் பெயரெச்ச மென்று ஆளுதலும் அது. வண்ணச்சினைச்சொல் முற்றுச்சொல் என்பனவுங் குற்றிய லிகரத்தைப் புள்ளியென்றலும் ஆட்சியுங் குறியீடும் ஒருங்கு நிகழ்ந்தன வாகலின் அவையும் 412இனி வாராமையான் வந்துழி வந்துழி 413அவ்வாறு ஆண்டானென்பது. இனி; 414புள்ளியெனமேல் ஆள வாராததனைப் புள்ளியென்று ஆள்வனவற்றொடு மயக்கங் கூறுதலென்பது, அவைதாங், குற்றிய லிகரங் குற்றிய லுகர மாய்த மென்ற முப்பாற் புள்ளியு மெழுத்தோ ரன்ன (தொ. எழு. 2) என்புழி, குற்றியலிகரம் புள்ளியென்று யாண்டும் ஆள வாராமையானும் அதுதான் அவ்வழி வரவேண்டுதலானும் அங்ஙனம் புள்ளியென்று ஆளவருங் குற்றுகரத்தோடும் ஆய்தத் தோடும் உடன்கூறுதலாயிற்று. இங்ஙனம் உடன்கூறாக்காற் 415புள்ளியுங் குற்றிகரமுமெனச் சூத்திரம் பெறுதல் வேண்டுவ தாவான் செல்லுமென்பது. இனி, ஆ ஏ ஓ அம்மூன்றும் வினா (32) எனவும், மாறுகொ ளெச்சமும் வினாவு மையமும் (290) எனவுங் கூறுவனவும் அவை; என்னை? இடைச்சொல்லோத்தி னுள் வினாவென்றோதாத ஆகாரம் வாராததுடன் ஆண்டு வினாவென்று ஓதிய ஏகார ஓகாரங்கள், ஆ ஏ ஓ அம்மூன்றும் வினா (32) என்று உடன் கூறினமையானும், அவ்வாறு இடைச்சொல் லோத்தினுள் எடுத்தோதாத மாறுகொளெச்சத்தோடும் ஐயத் தோடும் ஆண்டோதிய வினாவினையும் எண்ணினையும் எழுத் தோத்தினுள் விதந்துடன் கூறினமையானுமென்பது. இது நோக்கிப் போலும், ஈற்றசை யிவ்வைந் 416தேகாரம் (தொ. சொ. இடை. 9) என இடைச்சொல்லினை எழுத்துச்சாரியை பெய்தோதிய கருத் தானே இப்பொருண்மைகொள்ள வைப்பானாயிற்று மென்பது. மற்று இவை எதிரது போற்றலாகாவோவெனின்,417அது பொருட் படைக் கண்ணதெனவும், 418இவை ஆட்சியுங் குறி யீடும் பற்றியதொரு பகுதி யெனவுங் கூறி விடுக்க. அஃதேற், 419குறியீட்டால் ஈண்டாராயானோவெனின், - இவை உத்தி வகையாகலானும், 420அதுதானே உத்தியெனப் படுமாதலானும், அதனை ஈண்டு ஆராயானென்பது. (7) வந்ததுகொண்டு வாராததுணர்த்தல்: பின்னொருவழி வந்தது கொண்டு முன்வாராததொரு பொருள் அறியவைத்தல்; அது, 421ஞாங்கர்க் கிளந்த வல்லெழுத்து மிகும் (தொ. எழு. 204) என்பது. எஞ்சிய மூன்று மேல்வந்து முடிக்கு மெஞ்சுபொருட் கிளவி யிலவென மொழிப (தொ. சொ. 439) என, வந்தது கொண்டு மேற்கூறப்பட்ட ஏழெச்சத்திற்கும் மேல் வந்து முடிக்குஞ் சொல் வாராததனை வருமென்றுணர்ந்து கொள்ளவைத்தமை யின் இதுவுமதுவேயாயிற்று. ஆயிரு திணையி னிசைக்குமன சொல்லே (தொ. brh.கிs. 1) என்றவழி, 422திணையென்னும் பெயர் எப்பொருட்கும் எய்துவித்தல் ஒரு சூத்திரத்துள்ளே கோடலின் அதனை அதற்கு இனமென்று கொள்ளப் படும்; பிறவும் அன்ன. (8) முந்து மொழிந்ததன் றலைதடுமாற்று:முன் னொருகாற் கூறிய முறையன்றிப் பின்னொருகால் தலை தடுமாறாகக் கூறுதல்; அது, பன்னீ ருயிரு மொழிமுத லாகும் (தொ. எழு. 59) எனவும், உயிர்மெய் யல்லன மொழிமுத லாகா (தொ. எழு. 60) எனவும், உயிரும் மெய்யும் நிறுத்தமுறையானன்றிக், கதந பமவெனு மாவைந் தெழுத்து மெல்லா வுயிரொடுஞ் செல்லு மார் (தொ. எழு. 41) எனவும் மெய்பற்றி வரையறை கூறுதலும்,. எல்லா மொழிக்கு மிறுதியு முதலு மெய்யே யுயிரென் றாரீ ரியல (தொ. எழு. 103) என 423முற்கூறிய முறைபிறழக் கூறுதலுமாயின. மெய்யும் உயிரும் பற்றி 424விதந்து வரையறுப்பினும் அஃது இரண்டற்குஞ் செல்லுமென்று கோடற்கும், இனி இயல்புவகை யான் ஈறாதல் ஒருதலையாக உடையன மெய்யென்றற்கும் 425அவ் வாறு கூறினானென் னாமோவெனின், அங்ஙனமே அக்கருத்தி னானன்றே ஒத்தகாட்சியெனக் குற்றத்தோடு ஒப்புமைகூறி 426மற்றுப் பொருள் பயத்தலின் அமையுமென்று கொள்வாமா யிற்றென்பது. இனி, மூன்றுதலை யிட்ட முப்பதிற் றெழுத்தின் (தொ. எழு. 103) என்றாற்போல்வன இனமெனப்படும். புள்ளி யில்லா வெல்லா மெய்யும் (தொ. எழு. நூன். 17) என்பது மெய் முற் கூறினமையின் இதுவும் இதற்கு உதாரண மெனப்படும். மற்று, 427மயங்கக்கூறலோடு இதனிடை வேற்றுமை யென்னை யெனின், - அஃது, இன்னே வற்றே (தொ. எழு. புண. 17) என நிறுத்தமுறையாற் கூறாது மற்றதுவே பற்றாக மற்றொரு பொருள் கொள்ளப்படும். இஃது 428அன்னதன்றி அங்ஙனம் மயங்கக்கூறல்வேண்டும் பொருண்மைத்தாகி வருமென்பது; அஃதேல், இது மாறுகொளக்கூற லென்னுங் குற்றமாகாதோ வெனின், ஆகாது; என்னை? இது முற்கூறிய பொருளினை மாறுபடாமையானும் நிறுத்தமுறை தலைதடுமாற வைக்குந் துணையாகலானுமென்பது. (9) ஒப்பக்கூறல் :ஒன்று கூறுங்கால் இருபொருட் குறித்த தென்று இரட்டுறச்செய்தல். அது, இன்னி னிகர 429மாவி னிறுதி முன்னர்க் கெடுத லுரித்து மாகும் (தொ. எழு. 120) என்றாற்போல்வன. வினையெஞ்சு கிளவியு முவமக் கிளவியும் (தொ. எழு. 204) எனவும், அன்ன வென்னு முவமக் கிளவியும் (தொ. எழு. 210) எனவும் இனமல்லனவற்றை உடனெண்ணுதலும், மாமரக் கிளவியு மாவு மாவும் (தொ. எழு. 231) என மாட்டெறியுங்கால் 430வேறுவேறு விதியுடையனவற்றை ஒருங்கு மாட்டெறிதலும், 431ஆண்டு நான்கு வல்லெழுத்தினை யும் உடன்கோடலும், நிலைமொழித்தொழிலொடு வருமொழித் தொழிலும் ஒப்பக்கொண்டு 432மாட்டெறிதலும் போல்வன ஒப்பக் கூறலென்பதன் பகுதியாய் அடங்குமென்பது. (10) ஒருதலை மொழிதல்: ஓர் அதிகாரத்திற் சொல்லற் பாலதனை வேறு அதிகாரத்துச் சொல்லி அவ்விலக்கணமே 433ஆண்டுங் கொள்ள வைத்தல் ; அது, அ இ உஅம் மூன்றும் சுட்டு (தொ. எழு. 31) எனவும், ஆணும் பெண்ணு. மஃறிணை யியற்கை (தொ. எழு. 303) எனவும் இவை எழுத்ததிகாரத்துக் கூறியவாற்றானே சொல்லதி காரத்துள்ளும் 434அவ்விலக்கணங் கொள்ள வைத்தமையின் அப்பெயர்த்தாயிற்று. உடம்பொடுபுணர்த்துச் சொல்லுவன அதற்கு இன மெனப்படும். என்னை? 435விதியல்லாதது விதிபோல மற்றொரு வழிச் சேறலின். (11) தன்கோட்கூறல்:சொல்லாதன பிறவுளவாயினும் அந் நூற்கு வேண்டுவதே கொள்வலென்றல்; அது. அஃதிவ ணுவலா தெழுந்துபுறத் திசைக்கு மெய்தெரி வளியிசை யளபுநுவன் றிசினே (தொ. எழு. 102) எனவும், சகரக் கிளவியு மவற்றோ ரற்றே அஐ ஔவெனு மூன்றலங் கடையே (தொ. எழு. 62) எனவும், குற்றெழுத் தைந்து மொழிநிறை பிலவே (தொ. எழு. 44) எனவும், பாடலுட் பயின்றவை நாடுங் காலை (தொ. பொ. 3) எனவும் வரும். இவ்வாற்றானே, அளபிற் கோட லந்தணர் மறைத்து (தொ. எழு. 102) ஆயினும் அது 436கூறிலேனெனவும், இயற்சொல்லிற்437கல்லது நிலைமொழி யாக்கங் கூறேனெனவும், வழக்குஞ் செய்யுளும் ஆராய்வல் (பாயிரம்) என்று புகுந்தான் பாடலுட் பயின்ற வழக்கே கூறவலெனவுங் கூறுதலின் அவை தன்கோட்கூறுதலாம். இனி, ஒன்பதுமயக்கத்துண் 438மெய்ம்மயக்கங்கூறி ஒழிந்தன கூறாமையும், வினைத்தொகையும் பண்புத்தொகையும் 439எடுத் தோதி முடியாமையும், நாடக வழக்கினு முலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம் (தொ. பொ. 53) பற்றிப் பொருளிலக்கணங் கூறுவலென்றலும், 440பெரும் பான்மைய இலக்கண வழக்கென்ப என்றலும், அதனானே சிறுபான்மைய மயக்கமென்றலும், அம் ஆம் எம் ஏம் என்பன முதலாயவற்றை அங்ஙனம் பகுத்தோதுதற் பயனும், 441அவை வினையின்றி அவ்வினைசெய்தான்மேல் நிகழ்கின்ற கூறாதலே பற்றி, வினைசெயன் மருங்கிற் 442காலமொடு வருநவும் (தொ. சொ. 252) என்று இடைச்சொல்லோடு ஓதுதலும் போல்வன அதற்கு இனமெனப் படும்; என்னை? இவை தான் கூறுவலென்று புகுந்த வற்றுள்ளும் ஒரு பொருளானவற்றை வரைந்து கொண்டமை யின் அவற்று இனமெனப் பட்டன. (12) முறைபிறழாமை:காரணமின்றித் தான் சில பொருள் எண்ணி நிறுத்தியபின்னர் அம்முறை பிறழ்ந்தாலுங் குற்றமில் வழியும் அம் முறையினையே இலக்கணமாகச் சொல்லுதல் ;அது, பெயர் ஐ ஒடு கு இன் அது கண்விளி யென்னு மீற்ற (தொ. சொ. வே. 3) என 443நிறுத்த முறை பற்றி எழுவாய்வேற்றுமை இரண்டாவது மூன்றாவ தெனப் பெயர்கொடுத்தல். அகரமுத னகர விறுவாய் (தொ. எழு. 1) எனவுங், கைக்கிளை முதலாப் பெருந்திணை யிறுவாய் (தொல். அகத். 1) எனவும், வழக்கியலானும் இலக்கணவகையானும் உள் பொருளை 444விதந்தே எண்ணி நிறுத்தாதவழியும், அவற்றுள், அ இ உ எ ஒ (தொ.எழு.3) எனவும், அவற்றுள், நடுவ ணைந்திணை நடுவண தொழிய (தொ. பொ. அக. 2) எனவும் முறைபிறழாமற்கோடல் அதற்கு இனமெனப்படும். (13) பிறனுடம்பட்டது தானுடம்படுதல்:445உள்பொருள் அன்றாயினும் வழக்கியலாற் கொள்பொருள் இதுவெனக் கூறுதல் ; அது, பண்டியன் மருங்கின் மரீஇய மரபு (தொ. சொ.வே.7) என்றாற் போல்வனவற்றான் அறிக. இனி, மீயென மரீஇய விடம்வரை கிளவியும் (தொ. எழு.உயி. 48) என்புழி மேலென்பது இலக்கணமென்று எடுத்தோதியதனை உட்கொண்டு மீஎன்றதனை மரூஉவென்றமையின் அஃது இனம் எனப்படும்; என்னை? முதனூலுட் கொண்டவாறறிந்து மற்று அதனைத் தான் இச்சொல் இன்னவாறாயிற்றென்று இலக்கணங் கூறாது உடம்படுதலின். மற்று அதனை இனமென்ப தெற்றுக்கு? இதுதானே பிறனுடம்பட்டது தானுடம்பட்டதாகாதோ, முதனூலாசிரியன் உடம்பட்டதாகலினெனின், - அற்றன்று; முதனூலாசிரியனைப் பிறனென்னாமையானும், முதனூலின் வழித்தாகிய நூலுள் அவன் உடம்பட்டதொன்று உடம்படுவ லென்று உத்திவகையாற் கொள்ளாது முழுவதூஉங் கொள்வ னாகலானும் அவ்வாய்பாடு கூறலாகாதென்பது. இனி, முதனூலுள்மேலென்பது மீயென மரீஇயிற்றென்று விதந்தோதப்பட்டதனை அங்ஙனங் கூறாது மீயென மரீஇயிற் றென்று வாளாது கூறினமையின், அதனை இனமென்று கொண்டாமென்பது. எனவே, ஈண்டுப் பிறனென்றது வழக்கி னுள்ளோரை நோக்கியாயிற்று; என்றாற்கு, ஒழிந்த வழிநூலா சிரியரைப் பிறனென்றானென்னாமோ வெனின், அவருடம் பட்டது உடம்பட்டதனாற் பயந்ததென்னை? முதனூலிற் பிறழாமை நூல்செய்யுமாயினென மறுக்க. அல்லதூஉம் இசைநூலுங் கூத்தநூலும் பற்றிப் பிறன்கோட் கூறலென்பதனாற் பிறனென்னினன்றி, இயற்றமிழ்க் கண்ணே முதனூலாசிரி யனைப் பிறனென்னானென்பது. அஃதேல், வழக்கு நூல் செய்வான் அவ்வழக்கினை வழங்குவாரைப் பிறனென்னு மோவெனின்,- இலக்கண மும் வழக்கு மென இரண்டனுள் இஃதி லக்கணமாதலின் அவ்வழக்கினுள் வழங்குவாரைப் பிறனென்றல் அமையுமன்றோவென்பது; என்றாற்கு, அவருடம் பட்டது உடம்படுதல் உத்திவகையென்ப தெற்றுக்கு? அஃது இயல் பேயன்றோ வெனின். அங்ஙனம் 446மரீஇயினும் இலக்கண மென்பது திரிபில்லாதாகலிற், றிரிபு படும் வழக்கினை உடம்படுதல் இலக்கணமன் றாயினும், அது வழக்கினுள்ளார் வேண்டுமாற்றான் இலக்கணமேயா மென்பது கருத்து; அல்லாக்கால், எள்ளேபோல 447எட்குப்பை யுந்தன் தன்மை யான் உள்பொருளாகலும் வேண்டுமன்றோவென்பது. (14) 448இறந்தது காத்தல்என்பது: முற்கூறியவொரு சூத்திரப் பொருண்மையைப் பின்னொரு சூத்திரத்தான் விலக்குதல் ; அது, பால்கெழு கிளவி நால்வர்க்கு முரித்தே (தொ. பொ. 5) எனக் கூறிய பின்னர். நட்பி னடக்கை யாங்கலங் கடையே (தொ. பொ. 6) என்றாற்போல விலக்குதல். நூற்புறனடையும் ஒத்துப்புறனடையும் அதிகாரப்புறன டை யும் போல்வன அதற்கு இனமெனப்படும். அவை, ஈறியன் மருங்கி னிவையிவற் றியல்பெனக் கூறிய கிளவிப் பல்லா றெல்லாம் மெய்த்தலைப் பட்ட வழக்கொடு சிவணி யொத்தவை யுரிய புணர்மொழி நிலையே (தொ. எழு. 171) எனவும், புள்ளி யிறுதியு முயிரிறு கிளவியுஞ் சொல்லிய வல்ல வேனைய வெல்லாம் (தொ. எழு. 202) எனவும் வருவன போல்வன. (15) எதிரதுபோற்றல்:வருகின்ற சூத்திரப் பொருண்மைக் கேற்ப வேறொருபொருள் முற்கூறுதல் ; அது, ஈறாகு புள்ளி யகரமொடு நிலையும் (தொ. எழு.தொ 16) என வருகின்றதனை நோக்கி, ஆற னுருபி னகரக் கிளவி யீறா ககரமுனைக் கெடுதல் வேண்டும் (தொ. எழு. 115) எனக் கூறுதலும், பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை (தொ. சொ. 229) என வருகின்றதனை நோக்கித், தன்மைச் சொல்லே யஃறிணைக் கிளவியென் றெண்ணுவழி மருங்கின் விரவுதல் வரையார் (தொ. சொ. 43) என வழுவமைத்தலும் போல்வன. இனி, ஒரு சூத்திரத்துள்ளே, ஈறாகு புள்ளி யகரமொடு நிலையும் (தொ. எழு. 161) என வருவதனை நோக்கிக் கூறிய, குற்றொற் றிரட்ட லில்லை (தொ. எழு. தொகை. 19) என்றல் அதற்கு இனமெனப்படும். (16) மொழிவாமென்றல்:ஒருபயனோக்கி முற்கூறுவ லென்றல்; அவை, உணரக் கூறின் முன்னர்த் தோன்றும் (தொ. எழு. மொ.2) எனவும், கடப்பா டறிந்த புணரிய லான (தொ. எழு. மொ. 4) எனவும், அவ்வே, இவ்வென வறிதற்கு மெய்பெறக் கிளப்ப (தொ. சொ. 121) எனவும் வரும். இங்ஙனங் கூறியதனாற் பயன் : குற்றுகரவீற்றுக்கணன்றிப் புணர்மொழிக் குற்றிகர மின்றென்பதூஉம், இனிப் புணர் மொழிக் குற்றிகரம் பெருவரவிற்றென்பதூஉம் அறிவித்தலா யிற்று. அவ்வே, இவ்வென வறிதற்கு மெய்ப்பெறக் கிளப்ப (தொ. சொ. 121) என்பதூஉம், 449அவ்விளி யேலா (தொ. சொ. 126) என்றதூஉம் அவ்விளியிலக்கணமென்றற் பயம்பட வந்தது. ஈற்றுப் பொதுவினான் விளியேற்குமென்று ஓதப்பட்ட பெயருள் இவை விளியேலாவென விளிவிலக்கல் வேண்டுத லானும், 450நீ வாராயென்பது இயல்பு விளியன்றென விலக்குத லும் விளியிலக்கணமே யாதலானு மென்பது. இனி, மெய்ப்பெறக் கிளந்து பொருள்வரைந் திசைக்கு மைகார வேற்றுமைத் திரிபென மொழிப (தொ. எழு.தொகை. 1) எனவும், மெல்லெழுத் தியற்கை சொல்லிய முறையான் ஙஞநம வென்னு மொற்றா கும்மே (தொ. எழு. தொகை. 1) எனவும் வருவன இனமெனப்படும். என்னை? 451அவையும் முன்னர்ப் போய் மொழிவனவற்றை அவாவி நின்றமையி னென்பது. (17) கூறிற்றென்றல்:முற்கூறியதோர் இலக்கணத்தினை மற்றொரு பொருட்கும் விதிக்கவேண்டியவழி, அவ்விலக்கணத் தினை மீட்டுங்கூறாது மேற்கூறியவாற்றானே கொள்க வென் பான் அவை கூறினேனென்று நெகிழ்ந்து போதல்; அவை, கைக்கிளை முதலா வெழுபெருந் திணையு முற்கிளந் தனவே முறைநெறி வகையின் (தொ. பொ. 497) எனவும், எண்வகை யியனெறி பிழையா தாகி முன்னுறக் கிளந்த முடிவின ததுவே (தொ. பொ. 507) எனவும் வரும். இவை அகப்பொருட்கும் புறப்பொருட்கும் ஓதிய இலக்கணஞ் செய்யுளுள்ளும் அவ்வாறெய்துவித்தவாறாயிற்று. முதலெனப் படுவ தாயிரு வகைத்தே (தொ. பொ. 17) எனவும், மெய்பெறு மவையே கைகோள் வகையே (தொ. பொ. 500) எனவும், மாத்திரை யளவு மெழுத்தியல் வகையு மேற்கிளந் தன்ன வென்மனார் புலவர் (தொ. பொ. 314) எனவும் வருவன அதற்கு இனமெனப்படும் ; என்னை? கைக்கிளை பெருந்திணைக்கும் இவையே முதலென்றலானுந், திணையுங் கைகோளும் போல்வன புறப்பொருட்குங் கோடற் பயன்பட வைத்தமையானும், முற்கூறிய 452மாத்திரையும் 453எழுத்தும் பிறவாற்றாற் செய்யுட்குப் பயன்படு மாற்றான் வேறுபட்ட வல்லது அவை மேற்கூறிய மாத்திரையும் எழுத்துமே என்றமையானுமென்பது. (18) தான் குறியிடுதல்:உலகுகுறியின்றித் தன்னூலுள்ளே வேறு குறியிட்டாளல் ; அவை, 454உயர்திணை அஃறிணையெனவும், கைக்கிளை பெருந் திணை யெனவும், சொல்லிற்கும் பொருளிற்கும் வழக்கியலா னன்றி ஆசிரியன் தானே குறியிடுதல். வண்ணச் சினைச்சொன், முற்றுவினைச்சொல்லென 455ஆட்சியுங் குறியீடும் ஒருங்கு நிகழ்ந்தனவும், வினையெஞ்சுகிளவியும் பெயரெஞ்சுகிளவியு மென்று ஆண்டு, ஆயீ ரைந்து நெறிப்படத் தோன்று மெஞ்சுபொருட் கிளவி (தொ. சொ. 430) எனக் குறியிடுதலும் அது. இரண்டா குவதே யையெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி (தொ. சொ. 72) எனவும், மூன்றனு மைந்தனுந் தோன்றக் கூறிய வாக்கமொடு புணர்ந்த வேதுக் கிளவி (தொ. சொ. 93) எனவும் 456பெயர் கொடுத்தல் அதற்கு இனமெனப்படும். (19) ஒருதலையன்மை: உறுதி அல்லாத நிலை. வேற்றுமை யாயின் வல்லெழுத்து மிகும் (தொ. எழு. 235) என விரித்தாற் போலாது, இலக்கணங் கூறியொழிதல் : அது, குறியதன் முன்ன ராய்தப் புள்ளி யுயிரொடு புணர்ந்தவல் லாறன் மிசைத்தே (தொ. எழு. 38) என்றக்கால் யாண்டும் 457ஒருதலையாக வாராது, வருஞான்று வருவது ஆண்டென்று கொள்ளவைத்தல். இனிச், சொல்லோத்தினுள் வேற்றுமையென்று ஓதப் பட்ட எட்டனுள் எழுவாய் வேற்றுமையினையும் விளிவேற்று மையினையும் வேற்றுமையென்னாது எழுத்தோத்தினுள் அல்வழி யென்றல் போல்வன அதற்கு இனமெனப்படும். (20) முடிந்தது காட்டல்:சொல்லுகின்ற பொருட்கு வேண்டுவன வெல்லாஞ் சொல்லாது தொல்லாசிரியர் கூறினா ரென்று சொல்லுதல். அஃது ஒன்றறிவது உற்றறிவதென்றற்கும், இரண்டறி வது உற்றுஞ் சுவைத்தும் அறிவது என்றற்கும் முறைமையாற் சூத்திரஞ் செய்வான் அவை அவ்வாறாதற்குக் காரணங் கூறாது, நேரிதி னுணர்ந்தோர் நெறிப்படுத் தினரே (தொ. மர. 72) என முடிந்தது காட்டல். நுண்ணிதி னுணர்ந்தோர் கண்ட வாறே (தொ. எழு.நூன். 7) என்றாற் போல்வன அதற்கு இனமெனப்படும். (21) ஆணை கூறல்:இவ்வாசிரியன் கருத்து இதுவெனக் கொள்ள வைத்தல் : அது, அம்மி னிறுதி கசதக் காலைத் தன்மெய் திரிந்து ஙஞந வாகும் (தொ. எழு. 129) எனக் கருவியோத்தினுட் சாரியை மகரம் பகர வருமொழிக்கண் திரியா தென்று போய்ச் செய்கையுள் வல்லெழுத்தினது 458இயற்கை மெல்லெழுத் தாதல் அறிவித்தற்கு அல்வழி யெல்லா மெல்லெழுத்தாகுமெனச் சொல்லுதல் போல்வன. ஙஞந ஆதற்கும் இஃதொக்கும். ஒம்படை யாணையிற் கிளந்தவற் றியலாற் பாங்குற வுணர்த லென்மனார் புலவர் (தொ. சொ. 396) என்றாற் போல்வன அதற்கு இனமெனப்படும். மற்றுத் தன்கோட்கூறலோடு இதனிடை வேற்றுமை யென்னை யெனின், 459அது 460தந்திரஞ் செய்யும் பகுதிக் கண்ணது ; இஃது அன்னதன்றிப் புணர்ச்சிக்கட் சிறப்புடைய நிலைமொழி 461வருமொழித் திரிபு போலா தென்று 462கருவி யாகிய இடைச்சொற் காயின் இத்துணை யமையுமென்று ஆணை செய்தலின் அப் பெயர்த்தாயிற்று. (22) பல்பொருட்கேற்பின் நல்லது கோடல்ஒரு சூத்திரத் துட் பயந்த சொற்றொடர் பலபொருட் கேற்றதாயினும் நல்லது கொள்கின்றாரெனக் கருதி அவ்வாறு செய்தல் : அவை, ஒருவ ரென்னும் பெயர்நிலைக் கிளவி யிருபாற்கு முரித்தே தெரியுங் காலை (தொ. சொ. 193) என்றவழி, ஒருவரென்பதொரு சொல் தன்கண்ணே 463இருபாலா ரையுந் தழீஇ நிற்குமெனவும், அது கருவியாக இருபாலாரையுஞ் சொல்லப்படுமெனவும் கவர்த்தவழி, தன்மை சுட்டிற் பன்மைக் கேற்கும் (தொ. சொ. 194) என்பதனொடு படுத்துநோக்க இருபாலாரையும் ஒருசொல் தன்கட் டழீஇ நிற்றலே நல்லதென்று கொள்ளவைத்தல். நும்மெ னிறுதி யியற்கை யாகும் (தொ. எழு. 187) என்புழி, எழுத்து விகாரமுடையதனைக் களைந்து சாரியைக் கண்ணே 464இயற்கை கோடல் அதன்பாற்படும். 465இதனை ஏற் புழிக் கோடலெனவும் ஒருபுடைச் சேறலெனவுஞ் சொல்லுப. (23) தொகுத்தமொழியான் வகுத்தனர் கோடல்:ஒரு வாய்பாடு எடுத்தோதப் பலவாய்பாடு அதற்கு வந்து 466பூணுமென்று வகுத்துக் கொள்ளவைத்தல் ; அது, செய்து செய்யூச் செய்பு செய்தெனச் செய்யியர் செய்யிய செயின்செயச் செயற்கென வவ்வகை யொன்பதும் வினையெஞ்சு கிளவி (தொ. சொ. 230) எனவும், காப்பி னோப்பி னூர்தியி னிழையின் (தொ. சொ. 73) எனவும் ஒரு வாய்பாடு தொகுத்து ஓதியவாற்றானே பல வாய்பாடு வகுத்துக் கொள்ளவைப்பதென்பது, செய்தென்ப தனை, நக்கு வந்து கண்டு நின்று பாடிப் போய் எனப் பலவாக்குதலும் முற்றுவாய்பாடு பலவுமாக்குதலும், இனிக் காப்பின் என்றவழி, புரத்தல் புறந்தர லோம்புதல் போற்றல் எனப் பலவாக வகுத்தலுங் கண்டுகொள்க. உருவென மொழியினும் (தொ. செல். 24) என்றலும், இதன திது விற்று (தொ. சொ. 111) என்றலும் போல்வன அதற்கு இனமெனப்படும். (24) 467மறுதலைசிதைத்துத் தன்றுணிபுரைத்தல்:ஒரு பொருளினை ஒருவன் வேறுபடக்கொள்வதோர் உணர்வு தோன்றியக்கால் அவ் வேறுபாட்டினை மாற்றித் தான் துணிந்த வாறு அவற்கும் அறிவுறுத்தல். இது மறுதலை சிதைத்தலுடை மையின் வாளாது தன்கோட் கூறலின் அடங்காதாயிற்று. மூவள பிசைத்த லோரெழுத் தின்றே (தொ. எழு. 5) எனவும், நீட்டம் வேண்டி னவ்வள புடைய (தொ. எழு. 6) எனவும், குன்றிசை மொழிவயி னின்றிசை நிறைக்கும் (தொ. எழு. 41) எனவும் 468மூன்று மாத்திரையான் ஓரெழுத்து உண்டென்பாரை விலக்கி வழக்கியலான் இல்லையென்று தன்றுணிபு உரைத்த வாறு. உயிர்மெய் வேறெழுத்தன்றென்பான், புள்ளி யில்லா வெல்லா மெய்யு முருவுரு வாகி யகரமோ டுயிர்த்தலும் (தொ. எழு. 17) எனவும், மெய்யின் வழிய துயிர்தோன்று நிலையே (தொ. எழு. 18) எனவும் வேறுபடாது கூறுதலும் அது. வழக்கினுள் அறியாதார்மாட்டு வேறுபோல் இசைப்பன வாயினும் அன்றென்று கூட்டமுணர்த்தினமையின், மொழிப்படுத் திசைப்பினுந் தெரிந்துவே றிசைப்பினு மெழுத்திய றிரியா (தொ. எழு. 53) என்றலும் அதன்பாற் சார்த்தி யுணரப்படும்; பிறவும் அன்ன. (25) பிறன்கோட்கூறல்:தன்னூலே பற்றாகப் பிறநூற்கு வருவதோர் இலக்கணங் கொள்ளுமாறு கூறுதல் ; அது, அரையளபு குறுகன் மகர முடைத்தே யிசையிட னருகுந் தெரியுங் காலை (தொ. எழு. 13) எனவும், அளபிறந் துயிர்த்தலு மொற்றிசை நீடலும் . . . . . . . . . . . . . . . . . . நரம்பின் மறைய வென்மனார் புலவர் (தொ. எழு. 33) எனவும், பண்ணைத் தோன்றிய வெண்ணான்கு பொருளுங் கண்ணிய புறனே நானான் கென்ப எனவும், 469இவை அவ்வந் நூலுட் கொள்ளுமாற்றான் அமையு மென்றவா றாயின. அளபிற் கோட லந்தணர் மறைத்து (தொ. எழு. 102) என்பது அதற்கு இனமெனப்படும்; என்னை? 470அவர் மதம்பற்றி இவன் கொள்வதொரு பயனின்றாகலினென்பது. (26) அறியாதுடம்படல்:தானோதிய இலக்கணத்தின் வேறுபட வருவன தான் அறிந்திலனாகக் கூறி அதன்புறத்துச் செய்வதொரு புறனடை; அவை, கிளந்த வல்ல வேறுபிற தோன்றினுங் கிளந்தவற் றியலா னுணர்ந்தனர் கொளலே (தொ. சொல். 119) எனவும், வருவவுள வெனினும் வந்தவற் றியலாற் றிரிவின்றி முடித்த றெள்ளியோர் கடனே (தொ. பொ. 555) எனவும் வரும். இறந்தது காத்தலோடு இதனிடை வேற்றுமையென்னை யெனின், இறந்ததென்பது தான் துணிந்து சொல்லப்பட்ட பொருளாகல் வேண்டும். இஃது அன்னதன்றிச் சொல்லப்படாத பொருண்மேற்றாகி அதுவுந் தான் துணியப்படாத பொருளா கித் தான் நூல்செய்த காலத்தே உள்ளவற்றுள் ஒழியப்போயின உளவாயினுங் கொள்கவென்பான், வேறுபிற தோன்றினும் எனவும், வருபவுளவெனினும் எனவுந் தேறாது அதன் ஐயப்பாடு தோன்றச் சொல்லுதலின் இது வேறென்க. முழுதுணர்ந்தாற் கல்லது பழுதறச் சொல்லலாகாமையின் 471அஃது அவை யடக்கியல் போல்வதோர் உத்தியெனக்கொள்க. குறியதன் முன்னர்த் தன்னுரு பிரட்டலு மறியத் தோன்றிய நெறியிய லென்ப (தொ. எழு. 160) எனவும், செல்வழி யறிதல் வழக்கத் தான (தொ. எழு. 312) எனவும் வருவன அதற்கு இனமென வுணர்க. (27) பொருளிடையிடுதல்:472வேற்றுமைப் பொருளினைச் சொல்கின்ற பொருண்மைக்கிடையே பெய்து சொல்லுதலும், சொல்கின்ற பொருட்கு இயைபுடையதனை ஆண்டுச் சொல் லாது இடையிட்டுபோய்ப் பிறிதொருவழிச் சொல்லுதலும் போல்வன; அவை, முறைப்பெயர்க் கிளவி யேயொடு வருமே (தொ. சொ.விளி. 19) என்றாற்போலச் சொல்கின்ற உயர்திணைப் பெயரிடை விரவுப் பெயர் பெய்துரைத்தலும், வழுவமைக்கின்ற கிளவியாக்கத்துள் ஓதாது எச்சவியலுட் போக்கி, அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல் (தொ. சொ. எச். 46) எனச் சொல்லுதலும்போல்வன. தானென் பெயருஞ் சுட்டுமுதற் பெயரும் யானென் பெயரும் வினாவின் பெயரு மன்றி யனைத்தும் விளிகோ ளிலவே (தொ. சொ. 139) என்றவழித், 473தானென்னும் விரவுப் பெயரினை இடைப்பெய்து விலக்குதலும், வேற்றுமைக் கிளவியோத்தினுட் கூறாது எஞ்சி நின்ற வேற்றுமைத் தொகை முதலிய தொகைகளை எச்சவிய லுட் சொல்லுதலும் போல்வனவும் இனம் என அதன்பாற் சார்த்தி யுணர்க. (28) எதிர்பொருளுணர்த்தல்தான் கூறிய இலக்கணத்திற் சில பிற்காலத்துத் திரிபுபடினும் படுமென்பது, முதற்கால முதனூலுங் கொண்டுணர்ந்த ஆசிரியன், எதிர்காலத்து வருவது நோக்கி அதற்கேற்றதோர் இலக்கணங் கூறிப்போதல் : மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த னகரத் தொடர்மொழி யொன்பஃ தென்ப புகரறக் கிளந்த வஃறிணை மேன (தொ. எழு. 82) என்று ஓதிய இலக்கணத்துச் சில பிற்காலத்துக் குறைய வருதல் எதிர்பொரு ளெனப்படும். அதனைத் தான் உணர்ந்து, கடிசொ லில்லைக் காலத்துப் படினே (தொ. சொ. எச். 56) என்று கூறவே முற்கூறிய பொருளினை வற்புறுத்தலாம் அதுவென்பது. இங்ஙனந் திரிபுபடுதல் அறிந்தே கூறுதலானும், எதிர்பொருளாகலானும், இஃதறியாது உடம்படுதலினடங்கா தாயிற்று. பொய்யும் வழுவுந் தோன்றிய பின்ன ரையர் யாத்தனர் கரணம் என்பதூஉம் அதன்பாற்படும். (29) சொல்லி னெச்சஞ் சொல்லியாங் குணர்த்தல் -சொல்லினாற்றலாற் பெறப்படும் பொருளினையும் எடுத்தோதி யாங்குக் கொள்ள வைத்தல்; அஃது, எஞ்சிய வெல்லா மெஞ்சுத லில (தொ. எழு. மொ. 77) என்புழி, எல்லாமென்பதனை 474எச்சப்படுத்ததற்காகாதன இரு பத்தாறு கொண்டவழியும் அதனை 475எடுத்தோதிற் சிறப்பின் றென்று கொள்ளற்க என்பது இதன் கருத்து. எச்சவியலுட் கூறிய பொருள் 476அகத்தோத்துக் கூறிய பொருளோடு ஒப்பக் கூறுதலும் இனமென அதன்பாற்படும். மொழிந்த பொருளோடொன்ற வவ்வயின் மொழியாத தனை முட்டின்று முடித்தலோடு இதனிடை வேற்றுமை யென்னையெனின், அஃது எடுத்தோதப்பட்ட பொருட்கண்ண தெனவும், இஃது எடுத்தோத்தி னோடு ஒப்ப எச்சப்பட வைத்துக் கொள்ளும் இலக்கணம் எனவும் அதனோ டிதனிடை வேற்றுமை யுணர்க. (30) தந்து புணர்ந்துரைத்தல்: உள்பொரு ளல்லதனை உளது போலத் தந்து கூட உணர்த்தல் ; அவை, அளபெடை யசைநிலை யாகலு முரித்தே (தொ. செ. 17) எனவும், குறிலிணை யுகர மல்வழி யான (தொ. செ. 5) எனவுங் கூறுங்கால் அளபெடையினை எழுத்துப் போலவுங் குற்றுகரத்தினைக் குற்றெழுத்துப் போலவும் ஓதுதல் போல்வன. மெய்யீ றெல்லாம் புள்ளியொடு நிலையல் (தொ. எழு. புண. 2) எனவும், மெய்யுயிர் நீங்கிற் றன்னுரு வாகும் (தொ. எழு. புண. 37) எனவும் மேற்கூறிய புள்ளியினையே ஒருபயனோக்கி மீட்டும் புள்ளி பெறுமெனக் கூறுதல் அதற்கு இனமெனப்படும். குறுமையு நெடுமையு மளவிற் கோடலிற் றொடர்மொழி யெல்லா நெட்டெழுத் தியல (தொ. எழு. 50) என்பதேபற்றி, நெடியதன் முன்ன ரொற்றுமெய் கெடுதலும் (தொ. எழு.தொகை 18) என்புழித் 477தொடர்மொழியை நெட்டெழுத்தாக்கிக் கோட லும் அது. (31) ஞாபகங் கூறல்சூத்திரஞ் செய்யுங்கால் அதற்கு ஓதிய இலக்கண வகையானே சில்வகையெழுத்தின் செய்யுட்டாகவும் நாடுதலின்றிப் பொருணனி விளங்கவுஞ் செய்யாது அரிதும் பெரிதுமாக நலிந்து செய்து மற்றும் அதனானே வேறுபல பொருளுணர்த்தல் : அது, மெய்பெறு மரபிற் றொடைவகை தாமே . . .................. உணர்ந்திசி னோரே (தொ. செ. 101) என வருதல். இதனாற்கொண்ட பொருண்மையெல்லாஞ் செய்யுளியலுட் காட்டப்பட்டன. எப்பெயர் முன்னரும் வல்லெழுத்து வருவழி யக்கி னிறுதிமெய்ம் மிசையொடுங் கெடுமே என்றாற் போல்வன அதற்கு இனமெனப்படும். பிறவும் அன்ன. (32) உய்த்துக்கொண்டுணர்தல்ஒருவழி ஒரு பொருள் சொல்லியக்கால் அதன்கண்ணே மற்றொரு பொருளினையுங் கொணர்ந்து கொண்டறியுமாறு தோன்றச் செய்தல் : அவை, நெட்டெழுத் திம்பருந் தொடர்மொழி யீற்றுங் குற்றிய லுகரம் வல்லா றூர்ந்தே (தொ. எழு. 36) என இடனும் பற்றுக்கோடும் கூறி, அதனான் ஈறு ஆக்கங் கோடலுங், குற்றிய லுகர முறைப்பெயர் மருங்கி னொற்றிய நகரமிசை நகரமொடு முதலும் (தொ. எழு. 67) என முதலாக்கங் கூறி, அதனானே இடனும் பற்றுக்கோடும் அதுவேயெனக் கோடலும் போல்வன. பெயர்வினைக்கு ஓதிய இலக்கணம் ஒழிந்த சொற்குஞ் செவ்வனஞ் செல்லுமென்று கோடல் அதற்கு இனமெனப்படும்; பிறவும் அன்ன. மற்று நுதலியதறிதலோடு இதனிடை வேற்றுமை யென்னை யெனின்,- அது 478வாளாது பயமில கூறியது போலக் கூறியவழி இவ்வாறு கூறியது இன்ன கருத்துப் போலுமென்று அறிய வைத்தலும், உரைவகை யானும் நுதலியதறியச் சொல்லுதலுமாம்; இஃது அன்னதன்றி, அச்சூத்திரந் தன்னான் ஒருபொருள் பயந்ததன்றலையும் பின்னொருபொருள் பெற வருதலின் இது வேறென்பது. மற்று ஞாபகங் கூறலோடு இதனிடை வேற்றுமை யென்னை யெனின், - பயமில்லது போலவும் அரிதும் பெரிது மாகவும் இயற்றி எளிதுஞ் சிறிதுமாக இயற்றாது சூத்திரஞ் செய்தல் வேறுபாடே 479நிமித்தமாகத் தோற்றிக் கொள்வதொரு பொருள்பெற வைத்தலின் இதுவும் வேறெனப்படுமென்பது. மெய்ப்பட நாடிச் சொல்லிய அல்ல பிற அவண் வரினும் - உய்த்துக் கொண்டுணர்தலொடு மேற்கூறிய முப்பத்திரண்டும் இச்சூத்திரத்துள் எடுத்தோதிய பொருள்வகையான் ஆராய்ந்து சொல்லப்பட்டனவன்றே? அங்ஙனஞ் சொல்லாதன பிறவும் இந்நூலுள் வரினும்; சொல்லிய வகையாற் சுருங்க நாடி - உத்திவகையென வகுத்துக்கொண்டு ஓதிய முப்பத்திரண்டு பகுதி யான் அடங்குமாறு ஆராய்ந்து; மனத்தின் எண்ணி மாசறத் தெரிந்து கொண்டு- ஓதப்பட்ட உத்தி பலவும் ஒருங்கு வரினும் உள்ளத்தான் தெள்ளிதின் ஆராய்ந்து மயக்கந் தீர வேறு வேறு தெரிந்து வாங்கிக் கொண்டு; இனத்தில் சேர்த்தி உணர்த்தல் வேண்டும்- முப்பத்திரண்டாகும் ஏற்ற வகையான் இனஞ் சார்த்தி மற்றவற்றை இன்னதிதுவெனப் பெயர் கூறல் வேண்டும், அங்ஙனந் தொகநின்ற வழியும் வேறுவேறு கொண்டு; நுனித்தகு புலவர் கூறிய நூலே - தலைமை சான்ற ஆசிரியராற் கூறப்பட்ட நூல் என்றவாறு. எண்ணிய முப்பத்திரண்டு மல்லன தோன்றினும் அவற்றுள் அடக்கி, 480அவைதாம் ஒருங்கு வரினும் வேறு தெரிந்து இனந்தோறுஞ் சேர்த்துதலை அவாவி நிற்கும் ஈண்டு ஓதியநூலென்பது கருத்து. சொல்லிய அல்ல பிற அவண் வருமாறும், அவை சொல்லிய வகையாற் சுருங்க நாடி இனத்திற் சேர்த்துமாறும் மேற் காட்டப் பட்டன. இனி, ஒருங்கு பலவுத்தி வந்தவழி உள்ளத்தான் தெள்ளிதி னெண்ணித் தெரிந்து கொண்டு இனத்திற் சேர்த்துதல் வருமாறு: அன்ன பிறவுங் கிளந்த வல்ல பன்முறை யானும் பரந்தன வரூஉ முரிச்சொ லெல்லாம் பொருட்குறை கூட்ட இயன்ற மருங்கி னெனைத்தென வறியும் வரம்புதமக் கின்மையின் வழிநனி கடைப்பிடித் தோம்படை யாணையிற் கிளந்தவற் றியலாற் பாங்குற வுணர்த லென்மனார் புலவர் (தொ. சொ. 396) என்றவழி, அன்ன பிறவும் கிளந்த வல்ல பன்முறை யானும் பரந்தன வரூஉ முரிச்சொல் என்பது, இறந்தது காத்தலாம்; என்னை? இசையுங் குறிப்பும் பண்புமே யன்றிச் 481சீர்த்தியும் 482புனிறும் போல்வன வேறும் உள எடுத்தோதப் பட்டன எனவும், எடுத்தோதாது இசையுங் குறிப்பும் பண்புமன்றிச் சேணென்றுந் தொறுவென்றும் வருவன உளவெனவுங் கூறினமையின், வரம்புதமக் கின்மையின் என்பது, எதிர்பொருளுணர்த் தலும் அறியாதுடன்படலுமாம். ஓம்படை யாணை என்பது ஆணை கூறலாம். இங்ஙனம் ஒரு சூத்திரத்துட் பல வந்தவழி, ஒன்றே உத்தியென்றுணராது, மனத்தினெண்ணி மாசறத் தெரிந்துகொண்டு இவ்வாற்றான் இனத்திற் சேர்த்துக என்றான் ஆசிரியனென்பது. மரபுநிலை திரியா மாட்சிய வாகி யுரைபடு நூறா மிருவகை நிலைய என்பது முதலாக இத்துணையும் வழக்குநூலிலக்கணங் கூறினான், எழுநிலத்தெழுந்த செய்யுளின் (தொல். செய். 476) 483இதுவும் ஒன்றாகலின் இதனைச் செய்யுளியலிற் 484கூறினான். ஈண்டு மரபு கூறும்வழி ஒழிந்த செய்யுட்குப் போலாது, நூலிற்குப் பொருட்படையாகிய யாப்புக் குற்றங்களும் உத்தி வகையுங் கூறல் வேண்டுதலிற் கூறினானென்பது. அங்ஙனங் கூறாக்காற் பாட்டின் மரபு 485கட்டுரை போலவுங், கட்டளை 486அரங்கின்றி வட்டா டியது போலவும், வரம்பின்றி வேண்டியவாறு நூல்செய்தல் விலக்கின் றாவான் செல்லும் ; செல்லவே, எழுசீரானாகிய முடுகியலடி யானும் எத்துணையும் நீண்டதொரு வஞ்சிப்பாட்டானும் பிறவும் வேண்டியவாறுஞ் சூத்திரஞ் செய்தலும், ஒருவன் பெயரினை அவ்வச் சூத்திரச் செய்யுளுட் 487சார்த்து வகையாற் பெய்து கூறலும், உணர்த்தப்படும் பொருளினை முதனூலுட் கிடந்தவாறு போலாது மரபுநிலை திரியச் செய்தலும், நால்வகை யாப்பொடு மாறுபடச் செய்தலும், வேண்டியவர் வேண்டிய வாற்றாற் சில பொருள்களை வேறு தோற்றிக்கொண்டு நூல் செய்தலும் விலக்கின்றாகல் படுமென்பது. இனி உத்திவகையும் அவ்வாறே இன்றியமையாதன வெனப்படும். என்னை? உணர்த்தப்படும் பொருள் இதுவென்று அறிவித்தலும், எழுத்துச் சொற்பொருளெனப் பகுத்துக் கொண்டு அதிகாரஞ் செய்தலும், உணர்வு புலங்கொள்ளு மாற்றான் தொகுத்துக் காட்டலும், மற்று அவற்றை வகுத்துக் காட்டியவழிப் பயமில கூறலென்று கருதாமல் அதுதன்னா னொரு பயம்படச் செய்தலும், முதனூலாயின வெல்லாம் நூற்பொரு ளுணர்தற்குக் கருவியாகலுஞ் சூத்திரச்சுருக்கத்துக் கேதுவாகலும் உடைமையின் அவையும் வேண்டப்பட்டன வென்பது. இனி, அவற்றை இத்துணையென வரையறாக்கால், எத் துணையும் பலவாகி இகந்தோடுதலும், வழிநூன் முதனூல் வழித் தன்றாகலும் படும்; முப்பத்துமூன்றெழுத் தென்றானாயினும், அப்பெற்றித்தன்றி 488அறுபத்தாறாகக் கொள்ளவைத்தா னென்று உத்தி கூறலும் உடம்படுவானாதல் செல்லுமென மறுக்க. இனி, நுனித்தகு புலவர் கூறிய நூல் என்றதனானே, பாயிரச்செய்யுளுஞ் சூத்திரச்செய்யுளும் ஆசிரியப்பாவும் வெண்பாவும் பெற்று வருதலும், அவ்விருபாவும் பெற்று வருதற்கண், பாட்டுப்போல எல்லாவுறுப்பும் பெறுதற்குச் செல்லா வென்பதூஉம், மாத்திரை முதலாகப் பாவீறாக வந்த பதினொன்றும் வண்ணங்களுள் ஏற்பன கொள்ளினுங் கொள்ளு மெனவும், யாப்புறுப்புக் கொள்ளுங்கால் ஈண்டோதிய மரபுங் கொள்ளப்படுமெனவுங் கொள்க. உரைக்குங் காண்டிகைக்கும் இவற்றுள்ளும் ஏற்பன அறிந்து கொள்க. இன்னும் நுனித்தகு புலவர் என்றதனானே, 489தந்திரமுஞ் சூத்திரமும் விருத்தியுமென மூன்றும் ஒருவரேயன்றி ஒன்று ஒருவர் செய்தலும், இரண்டு செய்தலும் பெறப்படுமென்றலும், ஒருசாலை மாணாக்கருந் தம்மாசிரியருந் தம்மிடை நூல் கேட்ட மாணாக்கரும் பாயிரஞ் செய்யப்பெறுப வென்றலும், பொதுப் பாயிரமுஞ் சிறப்புப்பாயிரமுமென அப்பாயிரந்தாம் இரண்டா மென்றலும், ஈவோன்றன்மையும் ஈதலியற்கையுங் கொள்வோன் றன்மையுங் கோடன்மரபுமென்ற நான்குறுப்புடை யது பொதுப் பாயிரமென்றலும், அதன்வழியே கூறப்படுஞ் சிறப்புப் பாயிரந் தான் எட்டிலக்கண முடைத்தென்றலும், அவை ஆக்கியோன் பெயரும் வழியும் எல்லையும் நூற்பெயரும் யாப்பும் நுதலிய பொருளுங் கேட்போரும் பயனு (நன்னூல் 47) மெனப்படு மென்றலும், அவைதாம் நூற்கின்றியமையாவெனக் கொள்ளப் படுதலுங் கூறி முடிக்க. சிறப்புப்பாயிரத்தானே நூலிலக்கணம் ஒருவகையான் உணரப்படும்; பொதுப்பாயிரத்தானே ஆசிரியரும் மாணாக்க ரும் நூலுரைத்தலும் நூல்கேட்டலும் மாசறவறிந்து உரை நடாத்துவாராக. அதனானே இவை நூன்முகத்தினின்று நிலாவுமென்பது. (110) நுண்மா ணுழைபுல மில்லா னெழினல மண்மாண் புனைபாவை யற்று (குறள் . 407) ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப் பியனடி பல்காற் பரவுது மெழுத்தொடு சொல்கா மருபொருட் டொகைதிகழ் பொருட்டே மரபியல் முற்றிற்று. கணேசையர் அடிக்குறிப்புகள்: 1. கிளவியாக்கத்து மரபு என்று வரையறுத்தோதப்பட்டன - வினையிற் றோன்றும் பாலறி கிளவியும், பெயரிற்றோன்றும் பாலறி கிளவியும். மயங்கல் கூடா தம்மர பினவே என்னுஞ் சூத்திரத்தானும். பிறசூத்திரங்களானும் மரபு வழுவாமற் காப்பன. 2. செய்யுளியலின் மரபென்று வரையறுத்தோதப்பட்டனவற்றை பாட்டுரை நூலே என்பதை முதலாகவுடைய 391-ம் சூத்திரத் தானும், மரபேதானும் நாற்சொல் என்னும் 392-ம் சூத்திரத்தானும், அதனுரையானு மறிந்துகொள்க. 3. நான்கு சாதி - நான்கு வருணம். 4. இரண்டு - வழக்கும் செய்யுளும். 5. வழக்கு - அகத்திணைவழக்குப் புறத்திணை வழக்கு முதலியன. அவை செய்யுளியற்கு முற்கூறப்பட்ட ஏழியானும் கூறப்படுவன. 6. இரண்டற்கும் - வழக்குஞ் செய்யுளுமாகிய இரண்டற்கும். 7. நூல் என்றது - இலக்கண நூலினை. அதன் மரபென்பது அதன் மரபாக வந்த பகுப்பும் அது செய்யுமுறையு முதலியவற்றை. 8. என்று ஒன்பதும் என்பதில் ஒன்பதும் என்பது வேண்டியதில்லை. 9. சொல்லும் - செய்யுமென்னுமுற்று. ஆசிரியன் சொல்லும் என்றபடி. 10. ஒருதலையாக - துணிபாக. 11. இவற்றிற் குதாரணம் பின்வருகின்றன. அவற்றால் விளங்குக. 12. பருகும். காலும், நுவ்வை என்பன வழக்கொடுபட்ட மரபு பிறழவும்... அவ்வாறு செய்ப எனத் தாம் முன் கூறியதற்குக் காட்டிய உதாரணங் களென்க. பிறவுமன்ன. நுவ்வை - நுமது தங்கை. 13. நிலவைக் குவித்தலும் இருளைத் துணித்தலும் நூற்றலும் கூடாமையின் அவையும் வழக்கொடுபட்ட மரபன்றாயின. 14. உதள் எனப் பிரிக்க. 15. அதற்கு - இளைமைப் பெயருக்கு. 16. கடமை - காட்டாவுக்கும் பெயர். ஆதலின் அதனைச் சாதிப்பெயர் என்றார். 17. ஆன் என்றது - பசுப்பொதுவை. ஆனேறு என்புழி ஆ என்ற பெயர் ஆணுக்கும் வருதலால் இச்சூத்திரத்து முடிக்கப்படும் பெண்பாற் பெயர்களோடு சார்த்தி முடிக்கப்படாமையின் முடிபமையா தெனப்பட்டது என்றார். 18. ஆனென்பது - ஆவென்பது என்று பாடமுள்ளது. அதுவே பொருத்தம். என்னை? னகரமெய் சாரியையாதலின். 19. அல்லன - வழக்கின் அரியவல்லாதன. 20. புள்ளினம் பலவாதலின். அவற்றிற்கு வரும் மரபாகிய பார்ப்பும் பலவாத னோக்கி அதனை முற்சூத்திரத்து முற்கூறினார் என்றபடி. 21. மூங்கா - கீரியு ளொரு சாதி. 22. வெருகு - பூனையுளொருசாதி. காட்டுப்பூனை என்பாருமுளர். 23. இவை, இது என்றிருத்தல் வேண்டும்; அணிலைச் சுட்டுதலின். ஆணும் பெண்ணுமாகிய பன்மைபற்றி ஆசிரியர் இவை என்றார் என்று வேறிடத்துப் பேராசிரியர் கூறுவர். ஆதலின் தாமும் இங்கு அவ்வாறு கூறினாரெனினுமாம். 24. இப்பெயர் - பறழ் என்ற பெயர். 25. 556=ம் சூத்திரம். (மரபியல் - 1.) 26. ஓரி - நரி. 27. இக்காலத்தும் வழக்கிலுள்ளது. 28. மா என்பது விலங்கு என்னும் பொருளவாகலின் அப்பொதுமை பற்றி அதனுள் வேறுபாட்டுச் சிறப்புடைய குதிரை முதலியனவற்றை அடக்குதல் முடியாதவாறுபோல. புல்வாயென்ற பொதுப்பெயருள் வேறுபாடுடைய நவ்வி முதலிய சிறப்புப் பெயர்களை அடக்குதல் முடியாதென்றபடி. புல்வாய் சிறப்புப் பெயராயும் வருமென்பதுபற்றி அதனையுஞ் சேர்த்துக் கூறினார் போலும். 29. மடம் - மடப்பம். மடனடையன என்று மிருந்திருக்கலாம் போலும். 30. வருடை - மலையாடு. 31. ஊகம் - குரங்குள் ஒரு சாதி. 32. அது - குருளை. 33. அதிகாரப்பட்ட பெயர் - குரங்கு. 34. கால் ஒய்யும் - காலை இழுக்கும். 35. அன்ன உளவேல் - அவைபோல்வன உளவேல். 36. இது மென்னடை மரையா என்று டாக்டர் உ.வே. சாமிநாதையர் பதித்த குறுந்தொகையுரைப் பதிப்பிற் காணப்படுகின்றது. கன்றுடை என்றும் பாடமோ வேறு நூலடியோ என்பது ஆராயத்தக்கது. 37. இவ்வடி முற்பதிப்புக்களில் விடப்பட்டது. கன்று - எருமைக்கன்று. 38. இவையெல்லாம் என்றது - இச்சூத்திரத்திற் கூறியவற்றையும் இதற்கு முன்னுள்ள சூத்திரங்களிற் கூறியவற்றையும். ஒத்த வரவினவல்ல வென்றது எல்லாமொத்த வரவினவாகாது பயின்றும் பயிலாதும் வரும் என்றபடி. அதுபற்றியே வெவ்வேறு சூத்திரம் செய்தார் என்க. கராம் - முதலை. 39. மேல் என்றது மரபியல் பதினேழாம் சூத்திரத்தை. 40. குஞ்சரமென்பது ஒருமையாக, அவையெனப் பன்மையாற் சுட்டியது. ஆண் பெண் என்னும் வகைப்பன்மை நோக்கியென்பது கருத்து. 41. உரையின் படி. அல்லவை, அல்லது என்றிருத்தல் வேண்டும். 42. அல்லது. உடையவல்லவென இயைக்க. 43. அல்லவை என்பது, இவர் கருத்தின்படி அல்ல என்று இருத்தல் வேண்டும். 44. ஓரறிவுயிர் - ஓரறிவாகிய உயிர் என விரிதலின் பண்புத்தொகை யென்றார். அவை மரம் முதலிய பரிச உணர்ச்சி மாத்திரம் உடையன. 45. உயிரெனப்படுமோவெனின் என வினாவினமையால் உயிரன்று எனக் கூறுவாருமுளர் என்பது பெறுதும். 46. உய்தல் - பிழைத்தல். (உயிர் நிலைத்தல்) 47. புல் - இது நெற்போன்றதொரு சாதிப் பெயர். அதன் தானியத்தைப் புற்றா னியமென்றும் அரிசியைப் புல்லரிசியென்றும் வழங்குத லாலறிக. வேறுபடுத்தென்றது புல்லென்னும் பொதுப்பெயரின் வேறுபடுத்துச் சிறப்புப்பெயராகக் கொள்க. அது நெல்லோடு இனம் சேர்த்தி எண்ணினமையாற் பெறப்படுமென்றபடி. உணவு - உணவுக்குரியது. 48. இன்றி என்பது, அன்றி என்றிருத்தல் வேண்டும். 49. வண்டும் , நாகு என்ற இளமைப்பெயர் பெறுமென்றபடி. 50. அது விரவுப்பெயராகலின் என்றது நாகு என்றது ஐயறிவுயிர்க்கும் பொதுவாகலின் என்றபடி. 51. அறிவுடையது என்பன அறிவது என்றும் பாடம். 52. எண்ணுமுறை என்றது ஓரறிவுயிர் ஈரறிவுயிர் என எண்ணுமுறை. கூறினானென்பது - கூறினமை என்றிருத்தல் வேண்டும். 53. இம்முறை என்றது பரிசம், இரசம், கந்தம், உருவம், சத்தம் என்னுமிவைகள் இம்முறையே (அஃதாவது பரிச உணர்ச்சி பிறந்தபின் இரச உணர்ச்சி பிறக்கும் ஏனையவும் அம்முறையே) பிறக்கும் என்றபடி. 54. ஓரறிவுயிர் முதலியவற்றிற்கும் சூக்குமமாக மனமுண்டென்பது ஆன்றோர் கருத்து. 55. அதன்வழி - அக்கட் புலன்வழி. 56. தேனெய் - தேன்குழம்பு. 57. ஒருதன்மைத்தாதல் - ஐந்தின் தன்மையாதலன்றித் தனக்கென ஒருதன்மை உடையதாகல். கனாப்போல் என்றது கனாவில் பொறிகளின் அறிவின்றித் தானே உணர்தல்போல என்றபடி. 58. முன் - முதலில். முன் பொறியுணர்வும் பின் மனவுணர்வும் பிறக்கும். அன்றெனின் (முன் பிறந்ததும் மன உணர்வெனின்) பொறி யுணர்வென ஓருணர்ச்சி இல்லையாம் என்றபடி. ஆக செல்லும் என இயைக்க. 59. என்பது, என என்றிருப்பது நலம். 60. ஓரறிவினவாகிய பருவம் - பரிச உணர்ச்சிமாத்திரமுடைய பருவம். 61. தொட்டாற் சுருங்கி என்னுஞ் செடியாலறியலாம். 62. மனஞ் சூக்குமமாக உண்டென்பதும் இன்பதுன்பங் கொள்ளு மென்பதும் சிலர் கொள்கை. 63. முற்றில் - மட்டி சிப்பி வகையுளொன்று என்பர். 64. உற்றுணர்தல் - பரிசித்தறிதல். 65. ஈயன்மூதாய் - இந்திரகோபம். தம்பலப்பூச்சி என்பது இக்கால வழக்கு. 66. வண்டுந் தும்பியும் என்று பாடமிருந்திருக்கலாம் போலும். நன்னூலார் அவ்வாறு கொள்வர். நச்சினார்க்கினியரும் அவ்வாறு கொண்டன ரென்பது பெரும்பாண் - 183ஆம் அடியுரையா லறியலாம். 67. ஒழித்து என்பதே சி.வை. தாமோதரம்பிள்ளை பதிப்பிற் பாடம். அது பொருத்தமாதல் காண்க. ஒத்து என்பது ஏனைய பதிப்புக்களிற் பாடம். அது பொருத்தமில்லை. 68. புள்ளும் எனப் பாடங்கொள்வர் இளம்பூரணர். அது சிறப்பாதல் காண்க. 69. எண்கால் வருடை - செங்குத்தான மலையில் வசிக்கும் ஒரு விலங்கு. குறுந். 187-ம் செய்யுளுரையும். மலைபடுகடாம். 502 - 3-ம் அடியுரையும். ஐங்குறு 287ம் செய்யுளும் பார்க்குக. 70. மாவெனப்படுதலின் - விலங்கு எனப்படுதலின். 71. முன்னைய - தும்பி வண்டு தேனீ முதலியன. கிளி பேசுபவாதலின் மாக்களுள் அடங்குமெனக் கருதினர்போலும். பாம்பு என்றது நாகர் சாதியை நோக்கிப் போலும். அன்றி இவை விலங்குள் அடங்கு மென்றலுமாம். முன்னையவற்றிற்குப் பறவை வேறோதியதிலனா கலான் என்றும் இவ்வாக்கியம் இருந்திருக்கலாம்போலும். முன்னைய - முற்கூறிய பிறப்புக்கள். 72. வாலி சுக்கிரீவன் அநுமன் முதலிய குரங்குச் சாதிகள் ஆறறிவுடையனவாக இராமாயணத்துட் கூறப்படலின் இவ்வாறு கூறினர்போலும். 73. இதன்முன் ஒரு சூத்திரம் இளம்பூரணத்திலுள்ளது. 74. மக்கடாமே ஆறறிவுயிர் என்று பிரித்துக் கூறினமையானே. அது மக்களுள்ளும் தக்கது இன்னது தகாதது இன்னது என்று பகுத்துணரும் ஆண்பாலாரையே குறிக்கும் என்பது இவர் கருத்து. பிறரும் இவ்வாறு கருதுவாருமுளர். யானைக்கும் ஆறறிவுண்டென்பது சிலர் கருத்து. அதுபற்றி மக்களுக்கடுக்க வைத்தாரெனினு மமையும். இங்ஙனமன்றி 24-ஞ் சூத்திரத்தில் ஓரறிவுயிர் அதிகாரப் பட்டமையின் அதுமுதலாக ஓரறிவுயிர் முதலியவற்றை விளக்கி அதன்மேல் மீளவும் தலையில் வைத்த முறைப்படி ஆண்பாற்பெயர் எடுத்துக் கொண்டார் என்றல் பொருத்தமாம். இளம்பூரணருரை நோக்குக. 75. களிறு - யானையினாணையுணர்த்தலன்றி யானைச்சாதியை யுணர்த்தும் பெயராயும் நிற்கும் என்றபடி. 76. குறிப்பித்தால் என்பது சிறப்பித்தால் என்றும் பாடமுள்ளது. அது பொருத்தமில்லை. களிற்றொருத்தல் என்பதில் ஒருத்தல் என்பது ஆணையுணர்த்தக் களிறு யானையை உணர்த்தி வந்தமை காண்க என்றபடி. 77. இரலை என்பது ஆணை உணர்த்தாது மான்சாதியை உணர்த்திற்று. 78. கேழற்பன்றி - பன்றியுளொருசாதி. எய்ப்பன்றியினீக்குதற்கு கேழற் பன்றி எனப்பட்டமையிற் பண்புத்தொகை என்பர் மயிலைநாதர். 79. பெற்றம் - ஆ. 80. தேரல்தேர் - பேய்த்தேர் (கானற்சலம்) 81. அது பெறற்குரிய என்பது, இளம்பூரணர் கொண்ட பாடம். 82. எழாஅல் - வல்லூறு. எழா லுற வீழ்ந்தென (குறுந். 151). 83. எறிபோத்து - குத்தும்போத்து - ஆனேறு. 84. உழுபோத்து - ஆனேறு. எருமைப்போத்தையு முணர்த்தும். 85. இப்பாடம் டாக்டர் உ.வே. சாமிநாதையர் பதிப்பில் வேறாகக் காணப் படுகிறது. 86. போத்தொடு வழங்கா என்ற செய்யுள் எதிலுள்ளதென்பது தெரிய வில்லை. வழங்கா என்பதனால் மயிலும் எழாலும் பயிலத் தோன்றும் என்னுஞ் சூத்திரத்தோடு மாறுபடுவது ஆராயத்தக்கது. 87. செம்போத்து - சாதிப்பெயர். அது செம்பகம் என இக்காலத்து வழங்கும். 88. சிறுவரவிற்றன்றி - பெருவரவிற்றாய். 89. கடா என்பது சி.வை. தாமோதரம்பிள்ளை. பவானந்தம்பிள்ளை பதிப்புக்களிற் காணப்பட்ட பாடம் வழக்கிற்கிடாஅய் என வழங்குகின்றது. ஆயின் இது கடா எனவும் வழங்குகின்றது. 90. எழுந்து முன்னுறு மஞ்ஞையஞ் சேவன்மேலேறி என்பர் கந்த புராணகாரர். (தெய்வயானையம்மை திருமணப்படலம் 112) 91. நேர்தல் - பொருந்தல். 92. ஆணலி - ஆண்மை திரிந்து அலியானது. பெண்ணலி - பெண்மை. திரிந்து அலியானது. ஆணலி பெண்ணலி என்பன இக்காலத்தும் உலகவழக்கிலுள்ளன. ஆண்பனை - காயாப்பனை. பெண்பனை - காய்க்கும்பனை. 93. பெயர்க்கொடைக்கு - பெயரைத் தமக்கு கொடுத்தற்கு - எனவே பெயரைப் பெறுதற்கு என்றபடி. 94. ஒன்றும் - பொருந்தும் என்றபடி. 95. பிணையும் என்பது பிணைகின்ற என்னும் பொருள் பட நின்றது. பிணைதல் - சேர்தல். அஃதாவது. ஆணும் பெண்ணுமாகப் பிரியாது கூடித்திரிதல். 96. சேவல் என்பது ஈண்டு வருதல் பொருத்தமாய்க் காணவில்லை. ஆண் பறவை பெண்பறவையோடு கூடித்திரிதலின் அவ்வாறு கூறினா ரெனினுமாம். 97. இன்னுழியல்லதாகாதென்றிருத்தல் வேண்டும் அன்றேல் ஆகும் என்றிருத்தல் வேண்டும். 98. பிணாவும் என்பது பிணா உம் எனப் பிரிந்து நிற்குங்கால் உம் என்னும் வருமொழி முதலெழுத்து உயிராகும். அதனால் பிணவு என ஆகாரம் உகரம் பெறாதாயிற்று. என்றார் குறியத னிறுதிச் சினைகெட வுகரம் - அறிய வருதல் செய்யுளு ளுரித்தே; என்னும் உயிர் மயங்கியல் 32-ம் சூத்திரம் பிணவு என வருதற்கு விதி. பிணாவும் என்பது உடம்படுமெய் பெற்று வந்தது. 99. பிறவுமென்ன என்பது இவையுமன்ன என்றிருத்தல்வேண்டும். இவையும் அன்னவென்றது இவையும் வழக்கினுள் அரிய என்றபடி. 100. கருமுகமந்தி, செம்பினேற்றை என்பன இடக்கரடக்கலுக்கு. தொல், சொல், சேனாவரையருரை முதலியவற்றில் உதாரணமாக வருகின்றன. அதுநோக்கிக் கருமுகமந்தி என்பதனோடு செம்பினேற்றை என்பதை யாரும் இடைச்செருகினார்களோ அல்லது இரண்டுஞ் சேர்ந்து ஒரு செய்யுளடியோ என்பது ஆராயத்தக்கது. 101. இக்காலத்தும் - ஆண்பூனைக்குக் கடுவன் என்ற வழக்குண்டு. 102. விடக்கு - இறைச்சி. 103. குதிரையைச் சேவல் என்றது பறவைச் சேவல் போல விரைந்து செல்வது பற்றி. புள்ளியற் கலிமா வுடைமையான என்பது நோக்குக. புள்ளியன் மான் றேர் (சிலப். கானல்வரி. 30) என்பதுமது. 104. பரிகாரம் - பாதுகாப்பு. இச்சொல் சேனாவரையராலும் ஆளப்படும். 105. பெண்பிறந்தது ஆண்பிறந்தது பிள்ளைபிறந்தது என அடையடாது சொல்லின் உயர்திணைக்கே யாம். அடையடுப்பின் அஃறிணைக்காம் என்றபடி. எனவே அஃறிணைக்குத் திரிந்து வந்தது என்பது கருத்து. 106. ஆயின் என்று கொண்டு சிலசொற் றவறியதாகக்கொள்வதுநலம். 107. குண்டிகை - நீர் மொண்டுவைத்திருக்கும் பாத்திரம். 108. யாமைமணை - யாமை வடிவாகச் செய்த ஆசனப்பலகை. 109. ஒருகோலுடையாரிருவர் என்றது; ஹம்சன், பரமஹம்சன் என்னுஞ் சந்நியாசிகளிருவரையும். 110. முக்கோலுடையாரிருவரென்றது; பகூதகன். குடீசகன் என்னுஞ் சந்நியாசி களிருவரையும். இவர்களியல்பை அரும்பதவுரையுள் கூறுதும். ஆண்டுக் காண்க. 111. வரைந்து - நியமித்து. 112. நூல் களைவான் - பரமஹம்ச சந்நியாசி. 113. பிறப்புமுறை - துவிஜன் என்னும் பிறப்பைக் காட்டுமுறை. 114. சிறப்புமுறை - ஏனையவற்றிலும் நூல் சிறந்ததாகியமுறை. நூல் இட்டபின் கரகந் தாங்கல் பற்றிப்பிறப்புமுறை - எனினுமாம். 115. முன்னர் - நூலிடுதற்குமுன். பின் - நூலிட்டபின். குடுமி முன்னும் குகை பின்னுமென்க. 116. கொடிப்படை - கொடி தாங்கும் படை - தார்ப்படை. 117. கவரி - சாமரை. அரியணை - சிங்காசனம். அரண் - மதில். இக்காலத்துக் கோட்டை என்பர். 118. செங்கோல் - உடம்பொடுபுணர்த்தலாற் கொள்ளப்பட்டது. உடம்படு புணர்த்தல் என்பர் சங்கரநமச்சிவாயருரையுள் டாக்டர் சாமிநாதையர வர்கள். 119. தார் - பூமாலை. போர்ப்பூ - வெட்சி, வஞ்சி போல்வன தார்ப்பூ - வேம்புஆர் போல்வன. 120. அவை குதிரையும் யானையும். பட்டஞ்சூட்டல்பற்றியே பட்டத்துக் குதிரை; பட்டத்து யானை என்பர். 121. எல்லாவற்றிலுஞ் சிறந்ததைப் பிற்கூறலும் வழக்கு. சிறப்புடைப் பொருளைப் பிற்படக் கிளத்தல் என்பது பழைய சூத்திரம். 122. அதற்குத்தக்க - அதற்குத்தக என்றிருப்பதே பொருத்தம். அதற்குத்தக வொறுத்தல் என்பர் பரிமேலழகரும். அதற்கு - தீதிற்கு. 123. அது - செங்கோல் - முறை. செவ்விய கோல்போறலின் முறை செங்கோல் எனப்பட்டது. உரிமையும் அது என்பது உரிமையுடைய ரென்றும் பாடமுள்ளது. 124. கலப்பை - உபகரணம். 125. அவற்றை - வேள்விக் கலப்பையை. 126. களம்வேட்டல் - களவேள்வி செய்தல். 127. கிழமை - உரிமை. 128. பரிசில் கடாநிலை - பரிசில் வேண்டல். 129. பரிசில் விடை - பரிசில் கொடுத்து விடுத்தல். 130. தன்மை - இயற்கை. 131. எண் - அளவு. 132. யாரும் - எல்லாச் சாதியாரும். 133. சார்த்தி - சார்த்திச் சொல்லப்பட்டு. 134. பெறும் என்பது உரையிற் கண்டபடி பெறுப என்றிருத்தல் வேண்டும். இளம்பூரணரும் பெறும் என்றே பாடங்கோடலின் இது ஆராயத் தக்கது. 135. கருவை - நெய்ம்முகந்து ஓமஞ்செய்யுங் கருவி. 136. சமிதை - ஓமவிறகு. 137. இவை பவானந்தம்பிள்ளை பதிப்பிலில்லை. 138. நாவாய் - தோணி. 139. மணி - இரத்தினங்கள். 140. மருந்து - மருந்துப் பொருள்கள். 141. நாஞ்சில் - உழுங் கலப்பை. 142. சகடம் - பண்டி (வண்டி). 143. நிதியின் கிழவன் - குபேரன். 144. இயமதங்கி - பரசுராமன் இராமாயணத்தும் பாரதத்தும் இவன் படைக்குரியனாதல் கூறப்பட்டுளது காண்க. 145. துரோணனும் கிருபனும் படைத்தொழிற் பகுதிக்குரியராதலைப் பாரதத்துட் காண்க. 146. கூலம் - பண்டம். 147. ஆயிற்று - ஈண்டு வேண்டியதில்லை. 148. அவரவர்க்கு உரிய என்றது - அவ்வக் குடிப்பிறந்தார்க்கு உரிய என்றபடி. கடி - இப்பர்குடி கவிப்பர்குடி, பெருங்குடி என்பன. 149. பார்ப்பியல் - பார்ப்பனச் சாதியின் இயல்பு. 150. தண்டம் - சேனை. 151. குறுநில மன்னராவார் பாரிமுதலாயினோர். 152. கீழ் - குறுநில மன்னரினும் வேளாளர் காணப்படலின் கீழ் என்பதற்கு ஐந்திணைத் தலைவர் போல்வாரைக் கூறல் நலம். இதற்கும் முதற் சூத்திரத்திற்கும் இளம்பூரணர் வேறு பொருள் கூறுவர். 153. அல்வழி - புறமல்லாத இடம். எனவே அகமென்றாயிற்று. 154. அவை - என்பது வேண்டியதில்லை. 155. காழ்ப்பு - வயிரம். 156. பொய் - உள்ளீடின்மை. 157. அது என்றது புல்வேய் குரம்பை என்பதிற் புல் என்பதை. புல் என்பதற்கு. குரம்பை பனையோலையானும் வேய்தலின் பனை என்றுங் கூறலாம் என்றபடி. புல் என்பதும் புற்சாதிக்கும் பெயர். அது நெல்லும் புல்லும் வரையா ராண்டே என்பதனாலறிக. புறக்காழுடையவற்றிற்கும் பெயர். 158. ஓதி - உதி. அது அகக்காழும் புறக்காழு மல்லாதது. அதனை மரமென்றல் சிறுபான்மை என்றபடி. உதிமரக் கிளவி (தொ. எழு. உயிர். 141) 159. நுகும்பு - சுருண்ட குருத்து என்பர் டாக்டர் உ.வே. சாமிநாதையர். (குறுந். தொகை உரை 308) இளமடல் என்பர் நற்றிணை உரையாசிரியர். (நற்றிணை 92). 160. புல் - புற்சாதியினிலையைப் புல் என்றல் வழக்கு. மரங்களுக்குக் காணப்படவில்லை. 161. புழற்கால் - துளையுடைய தண்டு. 162. அவற்றின் பெயர் எனப் பிரிக்க. 163. முதற் சூத்திரத்து வந்த புல்லை இதற்கும் அதிகாரத்தாற் கோடற்கு என்றபடி. 164. ஈர் - ஈர்க்கு என்றது மாவிலையின் நடுவே செல்லும் காம்பை. 165. அவற்றுறுப்பு என்றது புறக்காழுக்கும் அகக்காழுக்கும் ஓதிய உறுப்புக்கள் அவை. தோடே மடலே என்னுஞ் சூத்திரத்தானும் கூறியன. 166. மரபுவழிப்பட்ட சொல்லாற் செய்யப்பெறுதலின் மரபு நிலைதிரிதல் செய்யுளுக்கில்லை எனவே செய்யுள் மரபுவழிப்பட்ட முறையாற் செய்யப்படு மென்பதாம். 167. உண்மை - ஞாயிற்றுக்குச் செம்மைக்குணம் உண்மை. 168. செஞ்ஞாயிற்று நிலவு வேண்டினும் என்பது செய்யுள் (புறம் - 38). 169. மிறைக்கவி - சித்திரகவி. தேவார முதலியவற்றில் ஏகபாதம். எழு கூற்றிருக்கை. மாலைமாற்று முதலியன தேவரைப் பற்றி அமைந்திருக்கின்றன. 170. அல்லாதார் - நிறைமொழி மாந்தர் அல்லாதார். 171. மரபன்றென்றற்கு என்ற பாடம் பொருத்தம். சி.வை. தாமோதரம்பிள்ளை பாடம் பொருத்தமில்லை. 172. வேறுசில - அதனோடு வேறு சில. அவை ஆக, மதுரம், வித்தாரம் என்பன. 173. ஒற்றை - தனிநின்று முடிவது. 174. இரட்டை - ஒருவினை கொண்டு முடியும் இரு செய்யுள். 175. புத்தி - நுட்ப புத்தியினாற் செய்வது போலும். 176. வித்தாரம் - அகலக் கவி. ஒற்றை, இரட்டை, புத்தி, வித்தாரம் என்பன பேராசிரியர் பிறரைப் பழித்துக் காட்டியது. 177. ஐயைதன்கை எட்டு. அதனுள் இரண்டொழிக்க ஆறாம். ஆறு என்றது அறுமீனை - கார்த்திகையை. கார்த்திகை - கார்த்திகைப்பூ என்றது காந்தட்பூவை. 178. அடாவடகு - விளையாட்டு. ஈண்டு ஆயத்தைக் குறித்ததுபோலும். திணைமாலைநூற்றைம்பதின் உரை நோக்குக. உரைகாரர் ஆடாவடகு நீட்டல் விகாரமென்பர். 179. உயர்ந்தோர் வழக்கல்லாதன பிழைத்துக் கூறுவன என்பது கருத்து. 180. தமக்கு என்றது - இருவகை நூற்கும் என்றவாறு. 181. இருவாறு - முதல், வழி என்ற இருவாறு. 182. வழிநூலுஞ் சார்பு நூலு மாகலின் - மூன்றாவது நூல், வழிநூலும் சார்பு நூலும் எனப்படுமாகலின் என்பது கருத்து. எனவே இரண்டுமெனப் படும். ஆதலின் அங்ஙனம் கூறார் என்க. 183. உபகாரப்படச் செய்தக்கால் என இயைக்க. 184. அரிது - உணர அரியது. 185. அவ்விரண்டும் - மாறுபட்ட இலக்கணம் இரண்டும். 186. வழக்கல்லது... செல்லும் என்றது - வழக்கே பயனாவதல்லது அவ் விலக்கணத்தாற் பயமின்றாகியே செல்லும் என்றபடி. 187. இந்நூலிலக்கணம் - நூல் செய்யு முறைமையைப் பற்றிய இவ் விலக்கணம். இவ்வோத்து - மரபியல். 188. இக்கருத்து - இந்நூலிலக்கணத்தைப் பின்வைத்த கருத்து. செய்யுளிலக் கணத்தை ஒன்பதாக வைப்பின் நூலிலக்கணம் இறுதியிற் கூறப்படல் வேண்டும். ஆதலின் அது எட்டே என்றபடி. 189. பண்டம் முதலாய - திரவியம் முதலாய. இது தருக்கம். 190. நியாயம் - நியாய இலக்கணம். 191. துவ்வாது - அநுபவியாது. துவ்வாறு உடையனாகிய என இயைக்க. 192. முனைவன் - முன்னோன். முனை - முன். விழுக்காடு - விழுகை; கோட்பாடு - கொள்கை என்பது போல. 193. நிற்பது - வினை; நிலை - அதன் கண் நிற்றல். 194. போகமும் பாவமும் நீங்குமாகலின் என இயைக்க. 195. குற்றங்கெடுத்து என்றது - போகமும் பாவமும் நீங்கலின். குற்றம் அவர்க்கு இல்லை என்றபடி. 196. குற்றமின்றி முழுதுணர்ந்தோர் - இறைவன் கூறானோர். 197. ஆகமம் - நூல். 198. அவற்றவற்றிற்கு - அவ்வப் பொருளுக்கு. 199. பெருமானடிகள் - இறையனார். 200. அறிவினான் - அறிவினையுடையான். 201. பாசாண்டிகள் - வேதவழக்கொடு மாறுபட்ட சமயிகள். பாசாண்டிகர் எனவும் வழங்கும். அறுவகைப் பாசாண்டிகரும் இணைவிழைச்சு தீதென்ப என்பது களவியலுரை. 202. கரிபோக்கல் - சான்று கூறல். சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லாரைக் குறித்ததுபோலும். 203. அவர் - நக்கீரர். 204. புலவுத்துறந்த நோன்பு - உடம்பை வெறுத்த விரதம். 205. புனைந்துரைத்தல் - புகழ்ந்து கூறல். 206. உடன்படல் - சம்மதித்தல். தொல்காப்பியரை முதல்வரென்று கூறற்குச் சம்மதித்தல். 207. செய்யுளியல் முதற்சூத்திர உரையுள்ளு மிவ்வாறு கூறுவர். பனைநாடு - ஏழ்குறும்பனைநாடு. அவை குமரியாற்றுக்கும் பஃறுளியாற்றுக்கு மிடையிலிருந்து கடல்கொண்டன. நெடியோன் குன்றமும் தொடி யோள் பௌவமும் என்ற அடியின விரிவுரை நோக்குக. சிலப்பதிகாரம் வேனிற்காதை 1-ம் அடி. 208. ஈண்டு என்பது, இங்கு வேண்டியதில்லைப் போலும். 209. செய்துகாட்டினும் என்பது யாப்பருங்கல விருத்தி போல்வனவற்றை. 210. பாட்டுந் தொகை - பத்துப் பாட்டும் எட்டுத்தொகையும். 211. அழிவழக்குப் பற்றிப் பிற்காலத்து நூல் செய்யின் புறனடைச் சூத்திரம் ஒன்றே செய்ய அமையும். ஏனைய மிகையாம். ஏனெனிற் பின் அவ்வழக்கு மழிதலின் என்றபடி. 212. அமையுமன்றி என்றிருப்பது நலம். 213. அவர் - தொல்காப்பியர். தந்திரம் - நூல். 214. முதனூல் - அகத்தியம். 215. செய்தாராயின் என்னும் பாடமே பொருத்தம். (S. கனகசபாபதிப்பிள்ளை பதிப்பு.) 216. ஒழிபொருளவாயின் அது எனப் பிரிக்க. ஒழிபொருள் - சில குறைவுபட்ட பொருள். அது - அந்நூல், தொகை - தொகுத்துச் செய்யப்பட்ட நூல். 217. இலக்கண நூலுளன்றி வழக்கு நூலுள்ளு மென்க. 218. அற்றன்று - வேண்டியதில்லை. 219. வேதப் பொருண்மை முதலியன வழக்கு நூல். 220. உரைப்பினென்றதனான் உரையின்றி நிகழ்ந்த காலமுமுண்டு என இயைக்க. 221. அஃது - அவ்வாறு சூத்திரத்தாற் பொருளுரைத்தல். 222. அவற்றை - அவ்வுரைக்கப்பட்டவற்றை. 223. மறுதலைக் கடா - தடை; மாற்றம் - விடை. 224. உரை - காண்டிகையுரை. 225. அதுவும் - அவ்வுரையும். 226. இவை - இக்குற்றங்கள். 227. அவை - பிறிதொரு பொருள்கொள்ளல். 228. அவ்வழிநூலின் - அவ்வழி நூலின் கண். 229. இன்றிவரும் - இன்றி வருதலாகிய. 230. அவ்விருவகையுரை - சூத்திரவுரையும் பாயிரவுரையும். உரை செய்தான் பெயர் கூறன் முதலாகிய பாயிரவுரை அதற்கு வேறென்க. 231. சூத்திரந்தானே பாயிரம்போல் நிற்பதையும். பாயிரம் பெய்துரைத் தலையும் இறையனார் களவியலுட் காண்க. 232. நிறீஇ எனவும் எனவியைக்க. 233. அவற்றிற்கு விடை கூறலும் என்பது பின்வரும் கூறி என்பதன் பின் வரல் வேண்டும். இவ்வாறே மாறியெழுதின பல. 234. இவ்வுரை - களவியலுரை. எனின் என்பது சிதைவுற்றது போலும். 235. இங்கும் எனின் என்பது சிதைவுற்றது போலும். 236. இதற்கு உரையாசிரியர் கூறுவதே பொருத்தம். 237. உரை - விரிவுரை. 238. செய்த - செய்தல் என்றிருத்தல் வேண்டும். 239. முற்கூறிய ஐந்து - சூத்திரம். உரை, காண்டிகை, குற்றமின்மை, உத்திவகை. 240. என்பன - எனப்படும் என்றிருத்தல் வேண்டும். 241. இடை அந்தரம் - இடைவெளி. 242. அவ்விருபகுதி - விடுத்தலும், விலக்கலும். 243. காண்டிகையுரைப்பகுதி இரண்டு - சூத்திரம்பட்ட பண்பிற் சொல்வதும் அஃதின்றி ஏதுவும் எடுத்துக்காட்டும் கூறுவதும். (101,102-ம் சூத்திரம்.) 244. ஒழிந்தவுரையிரண்டு - விரிவுரை இரண்டு. பின்வரும் சிறப்புச் சூத்திரங்களை நோக்குக. (658, 659-ம் சூத்திரம்.) 245. உம்மை - புணர்க்கவும் என்ற உம்மை. 246. நால்வகையுரை என்றது பாட்டிடை வைத்த என்னுஞ் 465-ம் சூத்திரத்தாற் கூறப்படும் நால்வகையுரையை. 247. ஏற்பது என்றது அவற்றுள் பாவின் றெழுந்த கிளவியானும் என்று கூறிய உரைப்பகுதியை. பகுதி வேறுபடுதல் - காண்டிகையும் உரையும் எனப் பகுதி வேறுபட்டுப்பின் அவையும் இவ்விரண்டாதல். 653-ம் சூத்திர உரை நோக்குக. 248. சூத்திரம் இன்றியமையாதது என்றற்கும் இதுவே ஒத்து என்க. 249. மேல் - முன். 250. புறம் - நூற்புறம். 251. தேர்தல் வேண்டாது - வெளிப்பட என்றபடி. 252. அதனை - அவ்விலக்கியத்தை. இது - இலக்கணம். 253. வேறுபட்ட பொருட்பாடு என்றது - பாட்டுக்கள் தம்முள் வேறுபட்ட பொருட்டோற்றமுடைத்தாதலை. வேறுபட்ட இலக்கண முடைத்தாதல் எனினுமமையும். அடிவரைச் செய்யுளின் - அடிவரையறை கூறுஞ் செய்யுளின் கண். அடிவரைப் பாட்டு என்றது இன்னபாட்டு இத்துணை யடியுடையது என அளவியல் கூறும் ஆசிரிய முதலிய பாட்டுக்களை. அடிவரைச் செய்யுள் என்பது அறுவகைச் செய்யுள் என்றும் பாடமிருந்திருக்கலாமோ என்பது ஆராயத்தக்கது. 254. மண்டிலப்பாட்டின் - மண்டிலப்பாட்டான் என்றவாறு; என்றது மண்டில வாசிரியப்பாவான் சூத்திரஞ் செய்தமையானே சூத்திரங்கள் ஆசிரியப்பா வானுஞ் செய்யப்படுமென்பது உடம்பொடு புணர்த்திய இலக்கணத்தாற் பெறப்படுமென்றபடி. 255. ஞ ண ந ம ல வ ள ன என்பன. 256. உள் - உட்பொருள் (சூக்குமம்.) 257. பிற இலேசுச் சொல்லும் எனவும் பாடம். அது சிறப்பு. 258. இது காண்டிகை உரைக்குதாரணம். 259. வெறியறி சிறப்பின் என்ற சூத்திரத்துள் (தொல். புற. 5) சொல்லப்பட்ட இலக்கணம் பலவும் பரந்து சேறலின் அச்சூத்திரம் முழுவதற்கும் உரை கூறாது என்றாற் போல (இச்சூத்திரத்துள்) வருவன பலவும் என்பதே மறுத்துச் செய்தலாம். 260. இருபத்தொரு துறையுங் கரந்தையென்று கரந்தையை இருபத்தொன்றாக மாட்டியமை காண்க. இது மறுத்துச் செய்யாது செய்தது. 261. இச்சூத்திரமும் காண்டிகை செய்யு மிலக்கணங் கூறிற்றென்றல் பொருத்தம். இளம்பூரணம் நோக்குக. 262. விட்டகல்வு - பதம் பிரித்துப் பொருள் கூறலால் அகன்று படுதல். 263. தொகைநிலை பயனிலை முதலாயவற்றால் என்றது தொகை நிலைத் தொடர். பயனிலைத் தொடர் என்னுநிலைத் தொடர் என்பவற்றை. உதாரணம் குடம் வனைந்தான். சாத்தன் வந்தான், தீநீர் என்பன. இவற்றை நன்னூல் விருத்தி 3-ம் சூத்திர உரை நோக்கியறிக. 264. கண்ணழிவு - பதம் பிரித்தல் எனவே பதம் பிரித்துப் பொருள் கூறல் என்றபடி. 265. இன்றி - பதப்பொருள் இன்றி. 266. இது என்பது வேண்டியதில்லை. இனி என்று மிருக்கலாம். 267. தன்றன்மையான் - தன்னியல்பான். 268. இது சூத்திர முடித்தற் பொருட்டாக உதாரணங்காட்டி விளக்கியது. இச் சூத்திரம் நியமச் சூத்திரம். 269. கருத்து - கருத்துரை. தன்றன்மையான் சொல்லுக என்ற கருத்துரையை. 270. இது பேராசிரியர் கொண்ட பொருள். 271. துணைமை - துணைச் சூத்திரங்கள். துணை - உதவி. 655-ம் சூத்திர விரிவுரை நோக்குக. 272. அது - அச்சூத்திரம். 273. எடுத்தோத்து - சூத்திரம். 274. ஆயிற்றென்பது வழு. சேற்றுநில மிதித்துச் சென்றான் கூறியதாகலின் அமைதியாயிற்று. சேனாவரையருரை நோக்குக. 275. இச் சூத்திரத்தையும் விரிவுரை யிலக்கண முணர்த்தியதாகவே இளம்பூரணர் கூறுவர். அது பொருத்தமாதல் காண்க. 276. இதனான் - தன்னூலானுமென்றதனான். 277. இணைவன - இணை நூல்கள். 278. முடிந்த நூலினு முண்டென் றெடுத்துக் காட்டுவது வலியுறுத்துவதற்கு. அன்றிக் குறைவை நிறைவுசெய்தன்றென்க. 279. ஒருதலையன்மை - நிச்சயமில்லாமை. சொன்னவிதி யாண்டும் ஒரு தலையாக வாராமை. 280. மாறுதல் - நிற்றல்; ஒழிதல். 281. ஒன்றனைக் கொண்டு - ஆறாவதையே கொண்டு. 282. அஃது ஒருபுடை ஒப்புமையுடைத்தாகி என்றது ஆறாவதனையே கொண்ட அப்பொருள் ஒரு பகுதியாகிய ஆறாவதனோடு மாத்திரம் ஒப்புமை யுடைத்தாய் என்றபடி. 283. மற்றொன்று - ஏழாவது. அது பெயராய் நின்று பிறவுருபேற்கும். ஏழாமுருபு பிறவுருபேற்றற்கு உதாரணம். தலைக்கணின்றான் இடைக் கணின்றான் என்பன போல்வன. ஆறாவது தன்னுடைமைப் பொருளோடு பெயராய் நின்று ஏற்கின்றது. இஃதன்னதன்று. ஆதலின் அப்பொருளன்றெனவும் படாது என்றார். 284. பொருளில் என்றது அசைநிலையை. இவ்வாறு பொருள் கொள்பவர் எவர் என்பது புலப்படவில்லை. 285. என்பது, என்பதை என்றிருத்தல் வேண்டும். 286. பெறுதுமாயின் என்றிருத்தல் வேண்டும். 287. அது என்றது மிகையை. 288. இது - இச்சூத்திரம். 289. முன்னோர் நூலின் முடிபொருங்கொத்துப் - பின்னோன் வேண்டும் விகற்பங் கூறி என்ற நன்னூற் சூத்திரத்தின் அடிகளைச் சேர்த்து எழுதப்பட்டது இவ்வாக்கியம். 290. அன்னதோர் நூலின் என்பது அன்னதோர் நூலின்மையின் என்றிருத்தல் வேண்டும். இதன் முதற் சூத்திர உரையுள் முன்னைய தோர் நூலின்மையின் 660 என வருதல் நோக்குக. 291. நூலிலக்கணம் என்றது நூல் செய்யு முறையை. இது பாயிரத்துக்குரியது. 292. அவற்றுள் - அந்நூலிக்கணங்களுள். அவற்று - அவற்றுள் என்றிருத்தல் வேண்டும். 293. என்றதூஉம் என்பது என்றது எனவும் என்றிருப்பது நலம். 294. ஒழிந்த நான்கு - சிதைவு (குற்றம்) ஒழிந்த சூத்திரம். காண்டிகை. விருத்தி, உத்தி என்பன. 295. கூறினேன் என்றிருத்தல் வேண்டும். 296. பெற்றனவும் எனற் பாடம் பெற்றெனவும் என்றிருப்பது நலமாதல் பற்றி அது திருத்தப்பட்டது. பெற்று ஓதிற்று என இயைக்க. ஓதிற்று - ஓதியது. 297. யாப்பு - செய்யுள். 298. ஆண்டு - அச்சூத்திரத்து (653) 299. இடம் - யாப்பு. இடத்தியல்பொருள் - சிதைவு. வழிநூல் செய்வோன் யாத்தற்கண். எனவே முதனூற்கண்ணுள்ள வற்றையே யாப்பதாயிற்று. முதனூல் தமிழ்நூலாதலின் அதன் கண் மொழிபெயர்ப்பு இல்லை. 300. தமிழ்நாட்டு வழக்கையே அகத்தியங் கூறுகிறபடியால் அதனுள் மொழிபெயர்த்துச் செய்ய வேண்டும் பகுதியில்லை என்றபடி. 301. பொதுவாயினவாகிய பொருளவாயின் என்பது கருத்து. 302. இலக்கணம் என்றது யாத்தலை. 303. அவர்க்கும் - தமிழ் வழக்கு நோக்கி இலக்கணஞ் செய்வார்க்கும். 304. யாப்பொன்றும் என்றது - மொழிபெயர்ப்பு யாப்பொன்றையும். 305-306. செய்யினும் என்பன செய்தலும் என்றிருப்பதுநலம். 307. தொகையும் விரியும் என்றிருத்தல் வேண்டும். 308. விரிந்தது தொகுத்தல் என்பது ஒருத்தி. 309. நூற்புணர்ப்பு - உத்தி. புணர்ப்பினைத் தொகுத்து யாத்தே செய்தலும் என முடிக்க. தொகுத்துக் கூறல் என்னும் உத்தி நோக்குக. 310. மெய்த்திறம் - உண்மைப்பகுதி. 311. புணர்த்தல் போல்வது காட்டா என முடிக்க. 312. தகுதி - இந்த இடத்தில் இது வழங்கத்தக்கது என்னும் தகுதி. இனி, இச் சொல்லால் வழங்கத்தக்கது என்னுந் தகுதி எனினுமாம். 313. கற்றுணர்ந்தாரும் கற்றுணராதாருகிய மகிழ்வார் என்க. 314. ஒற்றுமைப்பட்டு ஒருவகை நில்லா என்றது இருவழக்கும் ஒற்றுமைப் பட்டு ஒருவகை நில்லா என்றபடி. 315. கூறுந்துணைப் பயம்படல் - கூறுமளவிற்குப் பயன்படல். 316. அமையா - வழு அமைக்கப்படாத. 317. உம்மை. எச்சம்; வேறுபடாமையேயன்றி வேறுபடவும் எனப் பொருடரலின் இல்லாமலுமிருக்கலாம். 318. ஒழிந்தன - அமையாத குற்றங்கள். 319. ஒருகால் பயன்கொண்டது என்றது - முன் பதினான்கு துறைஎன்று கூறிப்பின் ஈரேழ்வகைத்து என்றதனால் கவர்தலும் மீட்டலும்பற்றி ஒன்றை இரண்டாக்கி இருபத்தெட்டாகக் கொண்டது என்றபடி. 320. புல் - புறக்காழ். ஆதலின் மரமெனல் முன்பின் மாறாம். ஆயினும் உத்திபற்றி அமையும் என்றபடி. 321. இக்கருத்து - குற்றமும் அமைக்கப்படும் என்று இங்கே கூறிய கருத்து. 322. ஆண்டு - அச்சூத்திரத்துள். 323. ஆயீரியல என்பது மிகை. ஆயினும் வரையறைபற்றிக் கூறலின் குற்றமின்று. 324. இலேசுபடாது - இலேசுபடாமல். இது இயைபுபடச் சொல்லி என்பத னோடு முடியும். 325. மாட்டுதல் - முன் சொன்ன சூத்திரத்தோடு கொளுவல். 326. முதற் சூத்திரத்துள் பெறப்படல் எதனாலெனின்? மூன்றையும் வேறு பிரித்துச் சார்ந்துவரல் என்று கூறினமையின் அன்றியும் எழுத்தெனப் படுப என்று சிறப்பித்துக் கூறலானும் பெறப்படும். 327. இலேசினாற் சிறப்பழிவு கூறுவார் இளம்பூரணர். 328. ஐயுறற்றோறும் என்றது ஐயப்படக் கூறிப் பின் ஐயப்படுந்தோறும். அதனை நீக்கற்குச் சூத்திரஞ்செய்யான் என்றபடி. 329. சொல்லென்று அதனை எனப் பிரிக்க. 330. பிறிதொன்று கோடல் என்றது விளவத்துக்கண் எனக் கெடாது நிற்றலைக் கோடலை. 331. தன்னான் என்பதில் தன் சிதைவுபட்டிருத்தல் வேண்டும். தன்னான் என்பதில் ஆனுஞ் சேர்ந்துதான் என்னும் பொருள்பட நின்றதென்றபடி. 332. நுதலிக் கூறல் என்று உரையுள் வருதலின் சூத்திரமுமப்படி இருந்திருக்கலாம் போலும். 333. பெயர் என்றது - ஈண்டு எழுவாய்ப் பெயரை. 334. எதிரது நோக்கி - பின்வரும் இதனை நோக்கி. 335. ஆண்டு - ஈரைங்குற்றமுமின்றி என்றவிடத்து. 336. தழுவியவற்றுவிரி - தழுவி அவற்று விரி எனப் பிரிக்க. 337. முதனூலொடு மாறுதலும் யாப்பினுட் சிதைத்தலும் 660-1ம் சூத்திரங் களிற் கூறப்பட்டன. 338. அல்லாக்கால் - புகுதராக்கால். 339. இன்மையின் - இல்லாது முடியுமாதலின். 340. துணிந்து - துணித்து என்றிருப்பது நலம். 341. அன்று என - பொருந்தாது என்று; ஒருதலை - நிச்சயம். 342. வரையாது ஆகாதென்றலென இயைக்க. 343. வரைந்து - வரைவுசெய்து. வரைதல் - நியமித்தல். அது சான்றோர்க்காகு மென்றல். 344. மெய்ப்பொருள் - தத்துவப் பொருள். 345. மறுத்துச் செய்தல் - ஒன்றைக் கூறி அது முதலாயின என்று செய்தல். 656-ம் சூத்திர உரை நோக்குக. இது அறுத்து என்றிருந்திருக்கலாமோ என்று ஆராயத் தக்கது. அறுத்தல் - வரையறுத்தல். 346. பன்னிருகாலம் - பெரும்பொழுதாறு சிறுபொழுதாறு; இடம் நான்கோடும் காலம் பன்னிரண்டையும் உறழ 48 காலமாகும். நால்வகை இடம் - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல். 347. அதற்கு - அக்காலத்திற்கு. 348. காலம்பற்றிக் கூறி என்றிருப்பது நலம். பற்றி என்பது இல்லாமலு மிருக்கலாம். 349. விடுதல் - தவறவிடல். 350. அதுமுதலாக - அவ்வழக்கு அடியாக. 351. இரண்டாகப்பட்டு - இடர்ப்பட்டு என்று பாடமுள்ளது. அதுவே பொருத்தம். 352. விகாரம் - செய்யுள் விகாரம். 353. பலபொருள் ஒருசொல் என்றது தானே மூன்றுபொருளுணர்த்திற் பலபொருளொருசொல்லாம் என்றபடி. 354. அடுத்தசொல் - மன் அடுத்துவருஞ் சொல். 355. ஒன்றாயினும் மூன்று பகுதிப்படும் - ஒன்றாயிம் மூன்று பகுதிப்படும் என்றிருப்பதே பொருத்தம். 356. வேற்றுமைத் தொகை - மன்னையுடைய சொல்; பண்புத் தொகை - மன்னடுத்த சொல்லாகிய சொல். மன் - ஆகுபெயர். 357. இவ்வடியே இயைபில்லன கூறல். 358. மெய்ந்நூலும் - தத்துவ நூலும். 359. விளா என்பது ஆகாரவீற்று மரப்பெயர். 360. இக்குற்றம் யாப்பருங்கல விருத்தியுள்ளும் காட்டப்படுகின்றன. 361. பிற்காலத்தான் என்றது யாரை என்பது புலப்படவில்லை. யாப்பருங்கல விருத்தியுள் ஒழிபியல் 548 - ம் பக்கத்தில் உறுபுகழ் மரபி னுயர்ந்தோர் கூறிய அறுவகை மரபின வானந்தம்மே என்பது முதலாகச் சில சூத்திரம் மேற்கோளாகக் காட்டி விளக்கவுரையும் எழுதப்பட்டுள்ளன. அதன்கண் மலைபடுகடாத்திலும் ஆனந்தக் குற்றங்களெனச் சில எடுத்துக்காட்டப் பட்டுள்ளன. ஆண்டு நோக்கி உணர்க. 362. பதமுடிபு காட்டினோர் நன்னூலார். 363. ஆறுறுப்பு - எழுத்தும், அசையும், சீருந், தளையும், அடியும், தொடையும். 364. தம்மோரன்ன - தம்மோரன்னோர் செய்யுட்கு என்றிருத்தல் வேண்டும். 365. பாட்டியன்மரபு - இது ஒரு நூல். அது யாப்பருங்கல விருத்தி செய்யுளியல் 351 - ம் பக்கத்தில் என்பது பாட்டியன் மரபு என்பதனாலறிக. (93 சூ) 366. அவற்றுத்துணை - குற்றமென்று கூறப்பட்ட மற்றவற்றளவு. 367. இது - இக்குற்றங்கள் பத்து. 368. இது முதலிய உதாரணம் இரண்டும். இல்லது கூறலும் இலக்கண மென்றற்குக் காட்டிய உதாரணங்கள். 369. இது - இச்சூத்திரம். 370. காட்சி என்றதனான் காணப்படுதலாகிய உத்தி என்பது பெறப்படும். அதனால் வழிநூலுட் காணப்படுமென்று முன்னர்க் கூறிய (வேறொரு பொருள்படின் தழுவப்படுமென்ற) குற்றத்தோடு ஒத்த உத்தி என்பது கருத்தாம். 371. உத்தி என்பது - இது வேண்டியதில்லை. 372. செய்தக்கால் - நூல் செய்தக் கால். 373. முன்னர் - 655-ம் சூத்திரம். 374. சொல்லினாம் - சொல்லினான் என்றிருத்தல் வேண்டும். 375. முடிந்தமை - முடிந்துகிடந்தமை. 376. இவற்றை உத்திவகை என்றமையானே உத்தி செவ்வனஞ் சொல்லல் என்றாயிற்று. 377. அம்முப்பத்திரண்டோடு. 378. உம்மையெண் தொகையின்றியும் வருமென்பதனை. தொல்சொல், இடை. 39-ம் சூத்திரத்தாலறிக. 379. பதினைந்து ஒருநிகரன என்பதை உணர்த்துதற்குத் தொகை கொடுத்தார் என இவர் கூறியவாறுபோலவே. தருக்க சங்கிரத்திலும். பதார்த்தத் தன்மை திரவிய முதலிய ஏழனுள் ஒன்றன்கண் வியாப்பியமாகா தெனவும் பொருள்படுமன்றே அவற்றை நீக்குதற்கு (எனவே ஏழன் கண்ணும் தனித் தனி வியாப்பியமாதலை உணர்த்தற்பொருட்டுத்) தொகை கொடுத்தார் எனத் தருக்கசங்கிரக தீபிகை என்னும் உரைகாரர் கூறுதல் காண்க. 380. இற்றெனக் கிளத்தல் என்பதனால் இயற்கையை விளக்கினமையின் செவ்வனஞ் செய்தலாயிற்று. 381. பெயர் - எழுவாய். 382. நூலை உணர்த்தல் வேண்டும் உணர்த்துவோன்- தன்பால். ஆசிரியன் - பிறன்பால். ஆசிரியன் நூலை உணர்த்தலை வேண்டும் என்க. 383. பொதுவினையாற் கிளத்தல் வேண்டும். இது வழுவற்க என்றது என்றும், இயற்பெயரும் முன்வரல் வேண்டும். இதுவும் வழுவற்க என்றது என்றும் இளம்பூரணர் சேனாவரையர் முதலியோர் கூறுவர். நன்னூல் விரிவுரையாளர் முன்னையதை வழுவற்க என்றது என்றும், பின்னையதை முற்படக் கிளப்பின் வழுவமைதி என்றுங் கூறுவர். இவரும் வழுவமைதி என்றலின் முன்னையதைக் கிளப்பின் வழுவமைதி என்றும், பின்னையதை முற்படக் கிளப்பின் வழுவமைதி யென்றும் கருதுகின்றனர் போலும். 384. இதுவும் - இவ்வுத்தியும், இதுவும் உடைத்தாயினும் என்க. 385. அதனால் - உய்த்துக் கொண்டுணர்தலால். 386. என்றானென்றிருத்தல் நலம். 387. அதனை - உய்த்துக்கொண்டுணர்தலென்னும் அவ்வுத்தியை. 388. அதனை - அவ்வுரிமையை; ஆக்கமொடு கூறல் என்ற வழியுங் கொள்ள வைத்தல் என்றது. ஆக்கமொடு கூறல் செயற்கைக்கு உரிமை எனக் கொள்ள வைத்தல். 389. கருதலியைபு கொண்டன்றி என்றிருத்தல் வேண்டும். 390. இடமுறைமை - இடவியைபு. 391. உடன்பிறந்தாருள் ஒருவனுக்குரியது உடன்பிறந்தானுக்கன்றி வழித் தோன்றினார்க்கும் உரித்தாயிற்று என்றபடி. 392. அதிகார முறைமை என்ற உத்தியின் இனமாகச் சேர்க்கப்படும் என்பது கருத்து. 393. சொல் இரண்டு - உயர்திணைச் சொல். அஃறிணைச் சொல். பொருள் இரண்டு - அகப்பொருள். புறப்பொருள். 394. திணை இரண்டென்றதற்கேற்ப உயர்திணைப்பெயர் அஃறிணைப் பெயரென்னாது பொதுப்பெயர் கோடலும். உயர்திணைவினை யென்னாது பொதுவினை கோடலும் இன்மென்றதென்க. 395. மற்றொருபெயர் - சுட்டெழுத்து. வினாவெழுத்து என்று பெயர் பெறுதல். 396. மூன்றாவதோர் சொல் என்றது பொதுப்பெயர். பொதுவினை, அகப்புறம் என மூன்றாவதாய் வேறு நின்றவற்றை. 397. வேறுமூன்று - திரிசொல். திசைச்சொல், வடசொல். 398. குப்பை - கூட்டம். 399. கொள்ளாமோ - கொள்ளுதல் செய்யாமோ. 400. செய்திலனாயிற் கோடுமன்றே என முடிக்க. எனவே இரண்டு எழுத்தின் கூட்டமாகச் செய்தமையின் கோடலாகாது என்றபடி. 401. ஒழிந்த இரண்டு - நீடுகொடி குளிறுபுலி என்னும் ஆசிரிய உரிச்சீரிரண்டு. 402. மற்று என்பதன்முன். தன்சீ ருள்வழித் தளைவகை வேண்டா என்னும் உதாரணம் தவறியதுபோலும். 403. இதனை - இவ்வுத்தியை. 404. அருத்தாபத்தி - பொருட்பேறு. தன்சீருள்வழி என்னுஞ் சூத்திரத்தினால் பிறசீருள்வழித் தன்றளை வேண்டுப என்று பொருள் கொண்டாற்றான் அருத்தாபத்தியாம். 405. ஒழிந்த நான்கு - னகரம், ளகரம், ளகரம், மார் என்பன. என்னை? என்று தொடங்கும் வாக்கியம். பொருத்தமில்லை அதன் முன் சில வாக்கியம் தவறியிருத்தல் வேண்டும். 406. கோடல் - கொள்ளுதல். 407. சில சில - சிற்சில. பலபல பற்பல. இவற்றிலுள்ள அகரக்கேடுதான் இவ்வுத்தியாற் கொள்ளப்பட்டது. 408. ஆண்டு என்றது எழுத்தினும் சொல்லினும் என்றபடி. 409. குறி - பெயர். 410. பிறவற்றோடு கூறுதல் என்றது குற்றியலுகரம் ஆய்தம் என்பவற்றோடு சேர்த்துப் புள்ளி என்று கூறுதல். பின் காட்டும் உதாரணத்தாலறிக. 411. அஃது - வினையெஞ்சு கிளவி. வாராததனான் வந்தது குறியிடுத லாயிற்று என்றபடி. 412. இனி - பின். 413. அவ்வாறு - ஆட்சியுங் குறியீடுமாக. 414. புள்ளியென மேல் ஆளவாராதது என்றது குற்றியலிகரத்தைப் புள்ளிபெறும் என்று மேல் ஆளவில்லை என்றபடி. 415. குற்றிகரத்தோடு புள்ளிபெறுதலும் உடன் வைத்துச் சூத்திரஞ் செய்தல் வேண்டிவருமென்பது கருத்து. 416. எழுத்துச் சாரியை - காரம்; ஏகாரமென்று சாரியை பெய்தது என்க. 417. அது - அவ்வுத்தி. (எதிரது போற்றல்.) 418. இவை - இனங் கூறியவை. 419. குறியீடு - பெயரிடுதல். 420. அது - குறியீடு. 421. ஞாங்கர்க் கிளந்த என்றது முதற் சூத்திரத்துள் கூறிய என்றபடி. அதனுள் தத்தமொத்தவொற்று என்றதை. இச்சூத்திரத்தினால் வல்லெழுத்தென்று பெறவைத்தல். 422. திணையென்னும் பெயர் எப்பொருட்கும் எய்துவித்தல் ஆயிருதிணையின் எனத் தொகுத்ததனால் உயர்திணைப்பொருள் அஃறிணைப் பொருள் என்னும் எல்லாவற்றிற்கும் அத்திணையென்னும் பெயரை எய்துவித்தல். 423. முற்கூறிய முறை - உயிர் முற்கூறல். 424. விதந்துவரையறுத்தல் மெய்யேயுயிரென் றாயீரியல வரையறுத்தல். அஃது - அவ்வரையறை. இரண்டற்கும் சேறல் என்றது. நிரனிறை யாகாது இறுதியு முதலுமாகிய இரண்டற்குஞ் சேறலை. 425. அவ்வாறு என்றது - மெய்யே உயிரென் றாயீ ரியல என்ற சூத்திர அடியுள் மெய்யை முற்கூறுதலை. 426. மற்றுப்பொருள் பயத்தலின் அமையும் என்றது. குற்றமாயினவும் பொருள் பயப்பின் அமையும் என்றபடி. 427. மயங்கக் கூறல் குற்றத்துளொன்று 663-ம் சூத்திரத்தும் நோக்குக. 428. அத்தினகர மகரமுனையில்லை என்ற சூத்திரம் நிறுத்த முறையாற் கூறாது மயங்கக் கூறலை ஆண்டு நோக்கியுணர்க. 429. ஆ. மா என நிற்க இரட்டுற மொழிதல். 430. வேறுவேறு விதி என்றது. மாமரக் கிளவிக்கு வேறுவிதி. ஆவுக்கும் மாவுக்கும் வேறுவிதி என்றதை. (எழு. உயி. 29) 431. ஆண்டு - அச்சூத்திரத்து. 432. அவற்றோரன்ன என்று மாட்டியதை. 433. ஆண்டும் - சொல்லாத அதிகாரத்தும். 434. அவ்விலக்கணம் - சுட்டிலக்கணமும் ஆண் பெண் அஃறிணை முடிபும். 435. விதியல்லாதது விதிபோல மற்றொருவழிச் சேறல் என்றது - விதிக்கப் படாதது விதிக்கப்பட்டதுபோல ஓரிடத்துச் சேறல். அஃதாவது ஒன்றற்கு விதிக்கப்படாதது அதற்கு விதிக்கப்பட்டது போல அதன் கண்ணுஞ் சேறல். (உ-ம்) திருப்பரங்குன்ற முருகன் திருச்செந்தூரிலு மிருப்பன் ஆவினன் குடியிலுமிருப்பன் என்றால் மற்றிரண்டுக்கும் விதிக்கப்பட்ட இருப்பு விதிக்கப்படாத திருப்பரங்குன்றத்துக்கும் விதிக்கப்பட்டது போல அதன் கண்ணுஞ் சென்றது காண்க. 436. கூறினேன் என்பது, கூறேன் என்றிருத்தல் வேண்டும். அதுவே பொருத்தம். 437. அல்லது என்றதனால் ஏனைய மொழிக்கு என்பது பெறுதும். நிலைமொழி யாக்கம் - நிலையும் மொழியாக்கமும் (உம்மைத் தொகை) நிலை - முதனிலை. இறுதிநிலை. மொழியாக்கம் - இடைநிலைமயக்கம். 438. ஒன்பது மயக்கம் என்று இவர் கருதியன எவை என்பது நன்கு புலப்பட வில்லை. மெய்ம்மயக்கம் - இடைநிலை மெய்ம்மயக்கம். 439. தொல்காப்பியர் புணர்ச்சியுள் எடுத்தோதி முடித்திலர். 440. ஒன்றற்கு இலக்கணங் கூறுங்கால் பெரும்பான்மை பற்றிச் சொல்லுமாயின் அப்பெரும்பான்மை பற்றி அதனை இலக்கணமாகக் கோடலைப் பெரும்பான்மை இலக்கண வழக்கென்ப என்பது குறித்து நின்றது. சிறுபான்மையாயின் இலக்கணமாகாது வழுவாம் என்றபடி. சிறுபான்மை வழக்கு வழுவமைதியாகக் கொள்ளப்படும். 441. அவை - ஆம் முதலிய விகுதிகள். வினை செய்தான் கருத்தா. பயனுங் கூறாதலும் பற்றி ஓதுதலும் என இயைக்க. 442. காலமொடு - வருநவும் - காலங்காட்டுவனவற்றோடு வருவனவும். 443. நிறுத்தமுறைபற்றி என்றிருப்பது நலம். இஃது இவர் கருத்துப்போலும். 444. விதந்து எண்ணி நிறுத்தல் - உயிர் பன்னிரண்டையும் இவையென எண்ணி நிறுத்தலும் கைக்கிளை முதலிய எழுதிணையையும் இவையென எண்ணி நிறுத்தலும் ஆகும். 445. உள்பொருளின்றாயினும் என்பது உள் பொருளன்றாயினும் என்றிருப்பது நலம். இயற்கையான பொருளல்லவாயினும் எனவே திரிபான பொருளாயினும் என்றபடி. 446. மரீஇயினும் இலக்கணமாமென்பது கருத்து என முடிக்க. 447. எட்குப்பை - எள்ளுக் கூடிக் குப்பையாதலின் திரிபென்றார். 448. இறந்தது - விதியைக் கடந்து வருவது. எனவே விதித்த சூத்திரப் பொருளைக் கடந்து வருவதைக் காப்பது என்றாயிற்று. 449. விதியன்றி விலக்கும் இலக்கணமாம் என்றபடி. அவ்விளி யேலா என்று சூத்திரமில்லை. ஆதலால் தரம் விளி கொள்ளா என்றதை மாறி எழுதினர் போலும். 450. நீ என்பது முன்னிலைப் பெயரேயன்றி இயல்பு விளியன்று என்றபடி. 451. அவையும் முன்னர்ப்போய் மொழிவனவற்றை அவாவி நின்றன என்றது அகத்தோத்துட் கூறுஞ் சிறப்பு விதிகளை அவாவிநின்றன என்றபடி. அகத்தோத்து என்றது அகச் செய்கை கூறும் உயிர்மயங்கியல் புள்ளிமயங்கியல்களை. அவற்றுள், மரப்பெயர்க் கிளவி மெல்லெ ழுத்து மிகுமே என்னும் (உயிர்மய. 15-ம்) சூத்திரத்தையும். அல்வழி யெல்லா மெல்லெழுத்தாகும் என்னும் (புள்ளி 16-ம் சூத்திரத்தையும், மெல்லெழுத் தியற்கை...... கும்மே (தொ.கை.1) என்னும் சூத்திரம் அவாவி நின்றது. ஏனையதையும் அவ்வாறே அறிந்துகொள்க. 452. மாத்திரை வேறுபடுதல். செய்யுளியலில் வரும் குறிலிணை யுகர மல்வழி யான என்பதாலும் எழுத்தள வெஞ்சினும் என்ற சூத்திரத்தாலும் பிறவற்றானும் பெறப்படும். 453. எழுத்து வேறுபடல் - செய்யுட் கேற்பப் பதினைந்தாக வகுத்துக் கோடல். 454. உயர்திணை அஃறிணையென்று சொல்லிற்கும், கைக்கிளை பெருந்திணை யெனப் பொருளுக்கும் நிரனிறையாகக் கொள்க. 455. ஆட்சியுங் குறியீடும் ஒருங்கு நிகழ்தல் என்றார். அச்சூத்திரங்களி லன்றிப் பின் அக்குறியை எடுத்தாளாமையின். வாராததனான் வந்தது முடித்தல் என்பதனுரை பார்க்க. 456. இரண்டாவது என்றும் ஏதுக்கிளவி என்றும் பெயர் கொடுத்தல் குறியீடாம் இனமென்றது. வேற்றுமைப் பொதுச் சூத்திரத்துப் பெயர் கொடாது சிறப்புச் சூத்திரத்துப் பெயர் கொடுத்தமையானும் மயக்கச் சூத்திரத்து ஏதுக்கிளவி எனப் பெயர் கொடுத்தமையானும் இனமாயின என்றபடி. 457. ஒருதலை - நிச்சயம். குறியதன் முன்னர் வரும் உயிரொடு புணர்ந்த வல்லெழுத்தாறன் மேலெல்லாம் ஆய்தம் வருதல் நிச்சயமன்று என்றபடி. 458. இயற்கை மெல்லெழுத்து என்றது அம்மகரம் பகரத்தின் இயற்கை மெல்லெழுத்தாதலின் திரிபுவிதி வேண்டியதில்லை. அது அல்வழி யெல்லாம் - ஆகும் என்றதனால் அமையும். 459. அது - தன்கோட் கூறல். 460. தந்திரம் - நூல். 461. வருமொழித் திரிபுபோலாதென்றிருப்பது நலம். அல்லது பிறவாறு மிருக்கலாம். 462. கருவி என்றது அம் சாரியையை. 463. ஆண் பெண் என்னும் இருபாற்கும் பொதுவாய் இருபாலையுந் தழுவல். 464. இயற்கைகோடல் என்றது. எழுத்து விகாரப்படாது இயல்பாம் என்று பொருள் கொள்ளாது சாரியை பெறாது இயற்கையாம் என்று பொருள். கோடலை. 465. இதனை - இவ்வுத்தியை. 466. பூணல் - அகப்படல். 467. மறுதலை - எதிர்க்கொள்கை. 468. ஓரெழுத்தே அளபெடுக்குமென்பார் தொல்காப்பியர் காலத்து முளர்போலும். பிற்காலத்து நேமிநாத நூலாரும் நன்னூலாரும் அவ்வாறு கூறுவர். 469. இவை என்றது இசைத் தமிழையும் நாடகத் தமிழையும் குறித்தன. 470. அவர் - அந்தணர். 471. இஃது - அறியாதுடம்படல். 472. வேற்றுமைப்பொருள் - வேறான பொருள். சம்பந்த மில்லாதது. 473. உயர்திணை விரவுப்பெயரை உயர்திணைப் பெயரோடு கூட்டி விளிக்குமாறு ஓதப்பட்டமையின் இதனையும் விலக்கினர் என்பர் சேனாவரையர். 474. எச்சப்படுத்ததற்காகாத என்பதில் தகரம் விடப்பட்டது. எச்சப்படுத்து - அதற்காகாத எனப் பிரிக்க. அதற்கு - ஈறாதற்கு. எச்சம் - எஞ்சிநிற்கும் பொருள். அதற்காகாதன இருபத்தாறு என்றது. இருபத்தாறு எழுத்து ஈறாய் வராதன. அவையும் தம்பெயர் கூறின் ஈறாம் என்பது எல்லாம் என்பதாற் கொள்ளப்பட்டது. எச்சப்படுத்து ஈறாகாதன எனவும் பாடம். அது நன்கு பொருந்தும். 475. எடுத்தோதின் - தம்பெயர் கூறின். 476. அகத்தோத்து - பெயர் வினை முதலிய இயல். 477. தொடர்மொழி - புகர் புகழ் போல்வன. 478. வாளாது - ஒருபயனுமின்றி. 479. நிமித்தம் - ஏது. 480. அவைதாம் - அம்முப்பத்திரண்டு உத்திகடாம். 481. சீர்த்தி - மிகுபுகழ். 482. புனிறு - ஈன்றணிமை இவை பண்புளடங்கும். 483. இதுவும் - நூலும். 484. கூறினான் - பெயர். 485. கட்டுரை - வாக்கியம். 486. அரங்கின்றி வட்டாடியற்றே என்ற குறள் நோக்குக. 487. சார்த்துவகையாற் கூறல் என்பது முன் குற்றத்து 163 வரிவளைப் பணைத் தோண் மடநல் லோயே என்றாற் போல இயைபில்லன கூறல் என்று இவரே கூறலின் அதனைக் குறித்ததுபோலும். 488. அறுபத்தாறு - ஒலிவடிவு 33; வரிவடிவு 33; ஆக 66 என்பது கருத்துப் போலும். 489. jªâu« - üš. “jªâu« N¤âu« ÉU¤â _‹w‰F« - KªJ üÈšyJ Kj}yhF«” v‹gJ N¤âu« (ïiwadh® fsÉaš 1« N¤âu ciu.) பின்னிணைப்புகள் 1. தொனி அஃதாவது கவிதான் எடுத்துக்கொண்ட செய்யுட் பொருளாகிய புகழ்பொருளேயன்றி, சொல்லாற்றலாற் பிறிது மொரு பொருள் தோன்றவைப்பது. இது செய்யுட்கு மிக்க அலங்காரத்தைக் கொடுப்பதாகும். அதுபற்றியே இதனைக் கவிஞர் பலர் தாமியற்றிய நூல்களுள் ஆங்காங்கு அமைத்துப் பாடியிருக்கின்றனர். அவற்றுட் சிலவற்றை இங்கே காட்டுதும். இரகுவம்சத்து உதயமா வலரியெண்ணி லுதித்தன வொளியிற் றாய சிதைவிலா நிலவுச் செக்கர்ச் செவ்வந்தி மெய்யார் தந்த புதைகொண்மா மதத்த வாம்ப லானனப் புனிதப் பொற்றே னிதயவா ரிசத்த தானா லெக்கலை மணவா தெற்கே. என்றும் 1- ம் செய்யுள் இத்தொனியுடையதாய் வந்தது. இதில் உதயஞாயிறு அளவிறந்தன உதித்தாற் போன்ற ஒளியை யுடைத்தாய செவ்வானம் போன்ற மேனியை யுடையராகிய சிவனீன்றருளிய யானைமுகத்தையுடையதேன் என் இருதய கமலத்தின் கண்ணதாயின் எக்கலைகடாம் எனக்குத் தோன்றப் பெறா என்னும் பொருளேயன்றி, அலரிப்பூக்கள் அளவிறந்தன பூத்தாற் போன்ற ஒளியை யுடைத்தாய செவ்வந்திப்பூப்பூத்த ஆம்பற்பூவிலுள்ளதேன் தாமரைப் பூவின் கண்ணதாயின் எம்மணம் உண்டாகா எனவும் வேறுமொரு பொருள் தொனித்தல் காண்க. யானைமுகத்தை யுடையதேன் விநாயகக் கடவுள், அலரி, செவ்வந்தி, ஆம்பல் வாரிசம் என்பன பின்னைய பொருட்குப் பூவையுணர்த்தும் பெயர்களாய் நின்றன. இன்னும் மேற்படி நாட்டுப்படலத்து நடவு நட்டிடு நாரியர்க் கெளியவோ நறுஞ்செய் வடம தற்றிட மனக்களி விளைத்தவம் மடவார் சுடர்செய் கற்பல சிந்தினர் சிந்தலுந் துள்ளித் தடமு லைத்தலைப் பங்கமிட் டெறிந்தன தடிகள் என்னும் 22 - ம் செய்யுளில் பின்னிரண்டடியும் இத்தொனி யுடையனவாய் வந்தன. மகளிர் ஒளியையுடைய ரத்தினக் கற்கள் பலவற்றைச் சிந்தினர். அதற்குப் பிரதியாகச் சேற்றை யிட்டெறிந்தன வயல்கள் என்னும் பொருளேயன்றி, கற்களை யெறியத் தடிகளை யெறிந்தன என வேறுமொருபொருள் தொனித்தல் காண்க. இன்னும் மேற்படி இரகுவுற்பத்திப் படலத்து, வலியிரா நவ்வியு மடங்க லேறுமொத் தொலிவிரா யெதிர்ந்துள ரேனு மோர்ந்திடின் மெலியரோ மெல்லியர் வேற்கை யாடவர் புலிவிரா யெறிந்திடக் களபம் போக்குவார். என்னும் 26 - ம் செய்யுளில், ஈற்றடி இத்தொனியுடையதாய் வந்தது. ஆடவர் புலியென்னுஞ் சாந்தையெறிய மகளிர் களபமென்னுஞ் சாந்தை எறிவார்கள் என்னும் பொருளே யன்றி, ஆடவர் புலியை யெறிய மகளிர் யானைக்கன்றை என வேறுமொரு பொருள் தொனித்தல் காண்க. புலி, களபம் என்பன பின்னையபொருட்கு விலங்கின் பெயர்களை யுணர்த்தநின்றன. இன்னும் கந்தபுராணத்துச் சூரபத்மன் வதைப்படலத்து, நெடுங்காலை முயன்மான் கொண்டு நிலவுமம் புலியு நீத்த மடுந்கதிர் படைத்த கோவு மளகையை யாளி தானுங் கடங்கலுழ் கின்ற வாசைக் கரிகளுங் கடாவிற் செல்லு மடங்கலும் வெருவச் சூரன் மாவுருக் கொண்டு நின்றான் என்னும் 471 - ம் செய்யுள் இத்தொனியுடையதாய் வந்தது. இதில் சந்திரனும், சூரியனும், குபேரனும் என்னும் பொருளே யன்றி, கலை, முயல், மான், புலி, பசு, யாளி, யானை, கடா, சிங்கம் என்னும் விலங்குகள் வெருவச் சூரன் குதிரை வடிவைக் கொண்டு நின்றான் என வேறுமொரு பொருடொனித்தல் காண்க. இன்னும் மேற்படி படலத்து, மிக்கு ருவண மன்ன மிசைப்படு மெகினப் புள்ளு மைக்குயில் சேவ லாகி மயூரமாம் வலியன் றானும் புக்கமர் தெரிக்கு மாடற் பூவையுங் கொடிய தான குக்குட முதலு மஞ்சக் கொக்குரு வாகி நின்றான் என்னும் 472 - ம் செய்யுளும் இத்தொனி யுடையதாய் வந்தது. இதில், விட்டுணுவும், பிரமாவும், இந்திரனும், வீரதுர்க்கையும், கோழிக் கொடியாய் நிற்கும் அக்கினிதேவனு மஞ்சுமாறு சூரன் மாமரமாய் நின்றான் என்னும் பொருளேன்றி, கருடன், அன்னம், குயில், மயில், வலியன், நாகணவாய், காக்கை, கோழி என்னும் பறவைகள் அஞ்சுமாறு கொக்குப்பறவை வடிவாய் நின்றான் என வேறுமொரு பொருடொனித்தல் காண்க. இன்னும் மேற்படி படலத்து காலெனும் மொய்ம்ப னுட்கச் சட்செவி கவிழ்ந்து சோர வாலிய வசுக்க ளேங்கி மலர்க்கர மறிக்க வெய்யோன் பாலர்மெய் வியரா நிற்பப் பணைமுலை யரிவை மார்கள் சேலெனும் விழிகள் பொத்தச் சேகரமாக நின்றான் என்னும் 473 - ம் செய்யுளும் இத்தொனியுடைதாய் வந்தது. இதில், வாயு அஞ்ச, சேடன் சோர, வசுக்கள் கரமறிக்க, மருத்துவர் வியர்க்க, சத்தவன்னையர்கள் விழிகள் பொத்தச் சூரன் மாமரமாய் நின்றான் என்னும் பொருளேயன்றி, காலும் புயமுமுட்க, செவிசோர, கரமறிக்க மெய்வியர்ப்ப, விழிகள் பொத்த உத்தமாங்க மென்னுமுறுப்பாய் நின்றான் என வேறுமொரு பொருள் தொனித்தல் காண்க. இன்னும் மேற்படி படலத்து அத்தியி னரசு பேர வாலமுந் தெரிக்கி லேங்க மெய்த்திறல் வாகை வன்னி மெலிவுற வீரை யாவுந் தத்தம திருப்பை நீங்கத் தாதவிழ் நீபத் தாரோ னுய்த்திடு தனிவேன் முன்னரொருதனி மாவாய் நின்றான் என்னும் 474 - ம் செய்யுளும் இத்தொனியுடையதாய் வந்தது. இதில், சமுத்திரராசன் நிலைகுலைய, நஞ்சு மேங்க, வடவாமுகாக்கினி மெலிய, கடலெல்லாம் இருக்கையை நீங்கச் சூரன் மாமரமாய் நின்றான் என்னும் பொருளேயன்றி, அத்தி அரசு என்னு மரங்கள் பேர, ஆலமரமுமேங்க, வாகை வன்னி என்னுமரங்கள் மெலிய, வீரை இருப்பை என்னு மரங்கள் நீங்க மாமரமாய் நின்றான் என வேறுமொரு பொருடொனித்தல் காண்க. இன்னும் ஒருதுறைக் கோவையிடத்து ஒவ்வொரு செய்யுளும் இத்தொனியுடையனவாய் வந்திருக்கின்றன. அவற்றுள்ளும் சிலவற்றை இங்கே காட்டுதும், நங்காம தேனு வெனவந்த கார்செம்பி நாடனுயர் செங்கா வியங்குடை யான்ரகு நாதன்சி லம்பின்மிக்க வெங்காம வெய்ய விடாய்க்கிள நீர்தந்து வெவ்விடத்தை யங்காம வல்லிநல் லீர்மறைத் தீர்நன் றறிவுமக்கே என்னும் 60 - ம் செய்யுளும் இத்தொனியுடையதாய் வந்தது. இதில், மாணிக்க வள்ளம் போன்ற தனங்களை விட்டு வண்டு போன்ற கண்களைக் கையினால் மறைக்குஞ் செயலாகிய இது என்னை? என்னும் பொருளேயன்றி, மாணிக்கவள்ளத்தை இங்கே வைத்து விட்டுக் கள்ளைக்கையிலே ஏந்துகின்ற செயலாகிய இது என்ன அறியாமை? என வேறுமொரு பொருடொனித்தல் காண்க. நல்லார் நகைக்கு மனைவளர் தாளி நகை மலரு மல்லார் கரந்தை ரகுநாதன் றேவை வரையின்மணிக் கல்லார் கனங்குழை யீர்மருண் டீரின்று கண்டசர மெல்லார் வரிவளைக் கைபுனைந் தீர்குரு கெய்தவுமே என்னும் 68 - ம் செய்யுளும் இத்தொனியுடையதாய் வந்தது. இதில், சக்கரவாகம் போன்ற தனங்கள் சிறுக்கவும் காணப்பட்ட சரம் போன்ற கண்களைக் கையால் மறைத்தீர் என்னும் பொருளேயன்றி, வளையலிருக்கவும், கண்டசரத்தைக் கையில் மயங்கி அணிந்து விட்டீர் என வேறுபொருபொருடொனித்தல் காண்க. நெய்வாய்த் திகன்மன்னர் சோரியின் மூழ்கி நிணமருந்து மைவாய்த்த வேற்படை யான்ரகு நாதன் மணவையன்னீர் மெய்வாய்த்த கோல வனமுலையார் தம்மை விட்டுவளைக் கைவாய்த்த மைவிழி வே யாருடன் சேர்தல் கடனல்லனே என்னும் 72 - ம் செய்யுளும் இத்தொனியுடைதாய் வந்தது. இதில் முலைகளைவிட்டுக் கண்களைக் கையாற் பொத்துதல் முறைமையல்ல என்னும் பொருளேயன்றி, முறையாக விவாகஞ்செய்த குலமகளிரை விட்டு வேசியர்களைச் சேர்தல் முறைமையல்ல என வேறுமொரு பொருடொனித்தல் காண்க. இங்ஙனமே ஆன்றோரி யற்றிய பிறநூல்கள்ளும் இத்தொனி வருகின்றது. அதனை ஆய்ந்துணர்ந்து கொள்க. - இலக்கண வரம்பு மகாவித்துவான் சி. கணேசையர் கலாநிதி ஸ்ரீ. பிரசாந்தன், பக்: 1-5 2. யாப்பருங்கலக்காரிகை யுரைத்திருத்தம் சுன்னாகம் ஸ்ரீமத். அ. குமாரசுவாமிப் புலவரவர்கள், இரண்டாவது பதிப்பிற் பதிப்பிக்குமாறு தமது யாப்பருக்கலக் காரிகையுரையிற் சில திருத்தங்கள் செய்து வைத்திருந்தார்கள். அவற்றைப் படிப்போர்க்குபயோகமாகும் பொருட்டு யாம் இச்செந்தமிழ்ப் பத்திரிகையில் வெளிப்படுத்துகின்றாம். உறுப்பியல் 2-ம் செய்யுளுரையில், குறிலே நெடிலே நெறியேவரினும் நிரைந்து ஒற்றடுப்பினும் என்பதை, குறிலே நெடிலே நெறியே வரினும் ஒற்றடுப்பினும் எனத் திருத்துக. குறிலிணையேனைக் குறினெடிலே நெறியேவரினும் நிரைந்து ஒற்றடுப்பினும் என்பதை, குறிலிணையேனைக் குறினெடிலே நிரைந்துவரினும் ஒற்றடுப்பினும் எனத் திருத்துக. குறிலிணையேனைக் குறினெடிலே நெறியேவரினும் நிரைந்து ஒற்றடுப்பினும் என்பதை, குறிலிணையேனைக் குறினெடிலே நிரைந்துவரினும் ஒற்றடுப்பினும் எனத் திருத்துக. 9-ம் செய்யுளுரையில், வழுவாவெழுத்தொன்றின் எதுகை என்பதோடு இரண்டாம் என்பதைக் கூட்டி, இரண்டாம் வழுவாவெழுத்தொன்றின் எதுகை எனத் திருத்துக. அடிதோறும் என்பதை, மோனைமுதலிய எல்லா வற்றோடுங் கூட்டுக. 12-ம் செய்யுளில், இடையிட்ட தொடூஉ எனப் பாடங்கோடலுமமையும். செய்யுளியல் 6-ம் செய்யுளுரையில் அங்கண் விசும்பின் என்னும் செய்யுளை, அங்கண் விசும்பி னகனிலர்ப பாரிக்குந் திங்களுஞ் சான்றோரு மொப்பர்மற் --றங்கள் மறுவாற்றுஞ் சான்றோரஃ தாற்றார் தெருமத்து தேய்வ ரொருமா சுறின் எனத் திருத்துக. ஒழிபியல் 1-ம் செய்யுளுரையில், தில்லைவாழ் இல்லையே குன்றையார் என்பன நெடிலாகக் கொண்டு, மூவகைச் சீராகக் கொள்ளப்படும் என்பதை, குன்றையார் நெடிலாகக் கொண்டு மூவகைச்சீராகக் கொள்ளப்படும் எனத் திருத்துக. 9-ம் செய்யுளுரையில், குர வணங்கிமலை மாவொடு சூழ்கரைச் சர வணம்மிது தானனி போலுமால் அர வணங்குவி லாண்டகை சான்றவன் பிரி வுணர்ந்துழி வாரல னென்செய்கோ என்னும் செய்யுளை, குரவ ணங்கிலை மாவொடு சூழ்கரைச் சரவ ணம்மிது தானனி போலுமால் அரவ ணங்குவி லாண்டகை சான்றவன் பிரிவு ணர்ந்துழி வாரல னென்செய்கோ எனத் திருத்துக. இவையும் இன்னுஞ் சிலவும் குமாரசுவாமிப் புலவரவர்களால் திருத்தி எழுதப்பட்டிருந்தன. அவற்றை நாம் இங்கே எழுதினாம். அறிஞர் நோக்கியுணர்க. பிழைகள் யாவும் மற்றைய பதிப்பிற் றிருத்தியச்சிடப்படும். தண்டியலங்காரவுரை முதலியவற்றிலும் புலவரவர்களாற் றிருத்தங்கள் செய்யப் பட்டிருக்கின்றன. அவை பின் காட்டப்படும். - இலக்கண வரம்பு மகாவித்துவான் சி. கணேசையர் கலாநிதி ஸ்ரீ. பிரசாந்தன், பக்: 9-10 3. மெய்ப்பாடு மெய்ப்பாடாவது, உலகத்தாருள்ள நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்தவாறே புறத்தார்க்குப் புலப்படுவதொருவழியால் வெளிப்படுதல் என்றும், மெய்ப்பாடு - பொருட்பாடு என்றும் கூறுவர் பேராசிரியர். பொருள் - உள்ள நிகழ்ச்சி (சுவைக்குறிப்பு), பாடு - வெளிப்படுத்தல், படுதல் - தோன்றல் - வெளிப்படுதல். உலகத்தாருள்ள நிகழ்ச்சி என்றது - உலகத்தி லுள்ளானொருவன் ஒரு பொருளைத் தன் பொறியால் உணர்ந்தவிடத்து அப்பொருள் காரணமாக அவனுள்ளத்து நிகழும் நிகழ்ச்சி (சுவைக்குறிப்பு) என்றபடி. புலப்படுவத தொருவழி என்றது சத்துவத்தினை. ஒருவனுள்ளத்தே நிகழ்வது உடம்பின் வேறுபாட்ல் தோன்றுமென்பது. அடுத்தது காட்டும் பளிங்குபோ னெஞ்சங் கடுத்தது காட்டும் முகம் என்று தேவர் கூறுதலானும் அறியப்படும். இனி இளம்பூரணர், உய்ப்போன் செய்தது காண்போர்க் கெய்துதன் மெய்ப்பா டென்ப மெய்யுணர்ந் தோரே என்று செயிற்றினார் கூறலின், அச்சமு (தலியனவு)ற் றான்மாட்டு நிகழும் அச்சம் (முதலியன) அவன்மாட்டு நிகழுஞ் சத்துவத்தினாற் புறப்பட்டுக் காண்போர்க்குப் புலனாந் தன்மை மெய்ப்பாடு என்றும், மெய்யின்கட்பட்டுத் தோன்றலின் மெய்ப்பாடாயிற்று என்றும் கூறுவர். உய்ப்போன் - அநுபவிப்போன் (சுவைப்போன் ) என்றபடி. காதல காத லறியாமை யுய்க்கிற்பின் ஏதில வேதிலார் நூல் (அதி - 44 - செய் - 10) என்னுங் குறளுரையில் உய்க்கற்பின் - அநுபவிக்க வல்லனாயின் என்று பரிமேலழகர் கூறலும் காண்க. உய்த்தல் - செலுத்தல். அஃது ஈண்டுச் செலுத்தி அநுபவித்தன் மேனின்றது. உய்த்தாடித் திரியாதே உள்ளமே என்பது தேவாரம். மெய்ப்பாடு - மெய்க்கட்பட்டு விளக்குந் தோற்றம் என்பர் வீரசோழியகாரரும். சொற்பொருளால் வேறுபடினும் வரவிலக்கணங் களைப் உற்று நோக்கும் போது யாவர் கருத்தும் ஒன்றாகும். இனி, நாடக நூலார் கூறிய மெய்ப்பாட்டுக் பொருள்கள் முப்பத்திரண்டென்றும், அவை பதினாறாயும், அப்பதினாறும் எட்டாயும் அடங்குமென்றும் தொல்காப்பியனார் கூறுவர். மெய்ப்பாடுகள் முப்பத்திரண்டாவன; சுவைக்கப்படு பொருளும்? அதனையுணர்ந்த பொறியுணர்வு மனத்துட் பட்டவழி நிகழும் நகை முதலிய சுவையும், அச்சுவையானாய குறிப்பும், அக்குறிப்புக்கள் தோன்றிய உள்ளங்காரணமாக உடம்பின் கண்வரும் வேறுபாடாதிய சத்துவங்களும் என்னும் நான்கனோடும் மெய்ப்பாடு எட்டையும் உறழ முப்பத்திரண்டு பொருளாம். சுவைப்பொருளாவன: நகைமுதலிய சுவைக்கு முதலாகிய ஆசிரியர் கூறுந் தமிழும், குருடரும் முடவரும் செல்லுஞ் செலவும் போல்வன. சுவையாவது : நகைமுதலிய சுவைக்குரிய பொருள்களும் சுவைப்போனுடைய பொறியுணர்ச்சியும் கூடியவழி அவனுள்ளத்து நிகழ்வது. இதுபற்றியே. இருவகை நிலத்தி னியல்வது சுவையே என்றார் பிறரும். இச்சுவையைக் குறித்துப் பேராசிரியர் உரைக்குமிடத்து, இருவகை நிலத்தி னியல்வது சுவையே என்னுஞ் சூத்திரத்துள் இரு நிலமென்ப உய்ப்போன் செயலும் காண்போனறிவும் என்னும் இரண்டிடமும் என்று பொருள் கூறுவார் கருத்தை மறுத்து, இருநிலமென்பன சுவைக்கப்படு பொருளும் சுவைப் போனுணர்வு மென்னும் இரண்டிடமுமே என்று நாட்டியுரைத்தலின் அவருரையையும் விளங்குதற் பொருட்டு ஈண்டுக் காட்டுதும். அது வருமாறு: இனி இருவகை நிலமென்ப உய்ப்போன்செய்தது காண்போழ் கெய்துதலன்றோவெனின், சுவையென்பது ஒப்பினானாய பெயராகலான் வேம்பு சுவைத்தவன் அறிந்த கைப்பறிவினை நாவுணர்வினாற் பிறனுணரான், இவன் கைப்புச் சுவைத்தானெனக் கண்ணுணர்வினாற் பிறனுணரான், இவன் கைப்புச்சுவைத்தானெனக் கண்ணுணர்வினான் அறிவதன்றி, அதுபோல, அச்சத்துக்கு ஏதுவாகிய ஒரு பொருள் கண்டு அஞ்சி ஓடி வருகின்றானொருவனை மற்றொருவன் கண்டவழி, இவன் வள்ளெயிற்றரிமா முதலாயின் கண்டு அஞ்சினானென் றறிவதல்லது வள்ளெயிற்றரிமாவினைத் தான் காண்டல் வேண்டுவதன்று. தான் கண்டானாயின் அதுவுஞ் சுவை யெனவேபடும். ஆகவே, அஞ்சினானைக் கண்டு நகுதலும் கருணைசெய்தலும் கண்டோற்குப் பிறப்பதன்றி அச்சம் பிறவாதாகலான் உய்ப்போன் செய்தது காண்போனுய்த்த அறிவின்பெற்றியாற் செல்லாதாகலின், இருவகை நிலமெனப் படுவன சுவைப்பொருளும் சுவைத்தோனுமென இருநிலத்தும் நிகழுமென்பதே பொருளாதல் வேண்டுமென்பது கண்டோர்க்குச் சுவை பிறவாதென்று பேராசிரியர் மறுத்துக் கூறிய அதனால் கண்டோர்க்கும் சுவைபிறக்குமென்று கூத்த நூலாருட் சிலர் கூறுவரென்பது பெறப்படும். குறிப்பாவது : உள்ளத்தின்கண் சுவையுணர்வு பிறந்தவழி உண்டாகும் வெறுப்பு, மயக்கம் முதலிய குணங்கள். சத்துவமாவன: மெய்ம்மயிர் சிலிர்த்தல், கண்ணீர் வார்தல், நடுங்கல், வியர்த்தல், தேற்றம், களித்தல், விழித்தல், வெதும்பல், சாக்காடு, குரற்சிதைவு என்னும் பத்துமாம். இளம்பூரணர்க்கும் இதுவே கருத்தென்பது. பேயானும் புலியானும் கண்டா னொருவன் அஞ்சியவழி (அவன்கண்) மயக்கமும் கரப்பும் நடுக்கமும் வியர்ப்புமுளவாகின்றே அவற்றுள் அச்சத்திற் கேதுவாகிய புலியும் பேயும் சுவைக்கப்படுபொருள். அவற்றைக் கண்டகாலந்தொட்டு நீங்காதுநின்ற அச்சம் சுவை. அதன்கண் மயக்கமும் கரத்தலும் அச்சக்குறிப்பு. நடுக்கமும் வியர்ப்பும் சத்துவம். இவற்றுள் நடுக்கமும் வியர்ப்பும் பிறர்க்கும் புலனாவன என்று கொள்க. ஏனைய மன நிகழ்ச்சி, பிறவுமன்ன, இவற்றின் விரிவை நாடக நூலிற் காண்க என்று கூறுதலான் அறியப்படும். இங்ஙனம் பேராசிரியரும் இளம்பூரணரும் உள்ளத்து நிகழ்வது சுவையும் குறிப்பும் என்றும், அச்சுவை உடம்பின் வழியாகப் பிறர்க்குப் புலனாவது சத்துவம் என்றும் கூறுதலானே, சுவையும் குறிப்பும் அகத்து நிகழும் மெய்ப்பாடுகள் என்பதும், சத்துவம் புறத்து நிகழும் மெய்ப்பாடு என்பதும் பெறப்படும். இதுபற்றியே, உண்ணிகழ் தன்மை புறம்பொழித் தோங்க எண்மெய்ப் பாட்டி னியல்வது சுவையே என்றார் தண்டியாசிரியரும் என்க. இனித் தொல்காப்பியரும் புறத்துநிகழும் சத்துவத்தையும் அகத்துநிகழும் குறிப்பையும் சுவையுளடக்கி அகத்து நிகழும் சுவை மெய்ப்பாட்டையே கூறினாரென்பது அவர் பொருளும் சுவையுமாகப் பகுத்துக் கூறும் மெய்ப்பாட்டுச் சிறப்புக் சூத்திரங்களாலே யறியப்படும். படவே, அகத்துக் கண் சுவையானே சுவைக் குறிப்பும் அதனாற் சத்துவமாகிய புறத்து நிகழும் மெய்ப்பாடுகளும் தோன்றும் என்பதும், புறத்து நிகழுமெய்ப்பாட்டானே அகவி நிகழுஞ் சுவை அறியப்படு மென்பதும் பெறப்படும். ஆகவே, ஒருவனுள்ளத்து நிகழுஞ் சுவையை அறிதற்குக் கருவ அச்சுவையாற்றோன்றும் சத்துவங்க ளென்பதும், அவற்றை அவற்றை அறிதற்குக் கருவி அறிவோ னுடைய கண்ணும் செவியுமென்பதும், சுவைக்குக் காரணமாகிய சுவைக்கப்படு பொருளையறிதற்குக் கருவி சுவைப்போனுடைய ஐம்பொறிகளென்பதும் அறிந்து கொள்ளப்படுமென்க. சத்துவங்களை அறிதற்குக் கருவி அறிவோனுடைய கண்ணும் செவியுமென்பது, கண்ணினுஞ் செவியினுந் திண்ணிதி னுணரும் உணர்வுடை மாந்தர்க் கல்லது தெரியின் நன்னயப் பொருள்கோ ளெண்ணருங் குரைத்தே என்று தொல்காப்பியனார் மெய்ப்பாட்டியலினிறுதியிற் கூறுதலானும், சுவைக்கப்படு பொருளை அறிதற்குக் கருவி சுவைப் போனுடைய ஐம்பொறியென்பது தொல்காப்பியர் பொருளும் சுவையுமாகப் பகுத்துக் கூறலானும், பொறியுணர் வொடும்ஒரு பொருளினை எதிர்ந்த நெறியுடை மனத்து நிகழ்தரு பான்மை அயலவ ருறப்புறத் தாய்ப்பெரு ளெட்டின் குயல்வது சுவையென் றியம்பினர் புலவர் என்னும் மாறனலங்கார சூத்திரத்தானும் அறிந்து கொள்க. சுவைக்கப்படு பொருள்களை ஐம்பொறிகளாலுணர்ந்து சுவைக்கு மாற்றிற் குதாரணம் வருமாறு. இவள் மேனி அணைபோலும், இது பரிசத்தாலறிந்து சுவைத்தது. இக்கனி அமிழ்தம் போலும் இது; நாவாலுணர்ந்து சுவைத்தது. இவள் மேனி மாந்தளிர் போலும்; இது கண்ணாலுணர்ந்து சுவைத்தது. இவள் கூந்தல் பூப்போலும் நாற்றமுடையது; இது மூக்காலுணர்ந்து சுவைத்தது. இவள் மொழி யாழிசைபோலும் இனிமையுடையது; இது செவி யாலுணர்ந்து சுவைத்தது. புறத்து நிகழும் மெய்ப்பாட்டையுணருங் கருவிக் குதாரணம் பின்னர்க் காட்டுதும். இனித் தண்டியலங்காரசாரநூலார், மெய்ப்பாடாவது (ஒரு பொருளை) நேராகக் கண்டதுபோலத் தோன்றுங் கருத்து என்றும், இவை நாட்டியத்திலும் காப்பியத்திலும் செய்கைத் திறத்தினாலும் சொற்றிறத்தினாலும் தூண்டப் பட்ட வாசனையின் திண்மையால் தம்மவையேபோல அநுபவ நிலையில் வந்து ஆநந்தமாகவே நிற்பன என்றும் கூறுவர். செய்கைத்திறம் என்றது அவிநயத்தை, அவிநயம் எட்டுச் சுவையோடுங் கூடலானே எட்டு வகையாம். அவற்றுள் வீரச்சுவையவிநயமாவது; வீரச்சுவை யவிநயம் விளம்புங் காலை முரிந்த புருவமுஞ் சிவந்த கண்ணும் பிடித்த வாளுங் கடித்த வெயிறும் மடித்த வுதடுஞ் சுருட்டிய நுதலும் தீண்ணென வுற்ற சொல்லும் பகைவரை யெண்ணல் செல்லா விகழ்ச்சியும் பிறவும் நண்ணு மென்ப நன்குணர்ந் தோரே என்பதாம். ஏனைச்சுவைக்குரிய அவிநயங்களையும் சிலப்பதிகாரம் அரங்கேற்று காதை நோக்கி அறிக. இவ்வபிநயத்தைப் பற்றிக் கம்பரும் ஒரு செய்யுளிற் கூறியுள்ளார். அது, கூற்றுறழ் நயனங்கள் சிவப்பக் கூனுத லேற்றிவா ளெயிறுக ளதுக்கி யின்றளிர் மாற்றருங் கரதல மறிக்கு மாதொரு சீற்றமா மபிநயந் தெரிக்கின் றாரினே (கம்பரா - பால - உண் 25) என்பது. மாது மறிக்கும் என இயைக்க. இன் உவமவுருபு. மேற்காட்டிய வீரமுதலிய சுவைகட்குரிய மெய்ப்பாடுகள் காப்பியச் செய்யுள்களிற் புலவனுடைய சொற்றிறத்தினாலும் அறியப்படும். சொற்றிறமாவது : வன்சொல் மென்சொல் முதலியன. அவ்வச் சுவைக்கேற்ப வன்மையும் மென்மையுமான சொற்கள் தொடர்ந்திருப்பதே சுவைக்குக் காரணமாம். சிருங்காரம் (உவகை), கருணை (அழுகை), சாந்தம் (சமநிலை) : இவை மூன்றும் மென்மையான சுவை. uî¤âu« (nfhg«), Õg‰r« (ïËtuš.), வீரம்; இவை மூன்றும் வன்மையான சுவை. ஆசியம் (நகை.) பயானகம் (அச்சம்), அற்புதம் (அதிசயம்); இவை மூன்றும் நடுநிலைச்சுவை என்பது ஒருசாரார் பாகுபாடு. சிருங்காரம் (உவகையும்), கருணையும், (அழுகையும்) மிகமென்மை. ரவுத்திரம் (கோபமும்), பீபற்சமும் (இளிவரலும்) மிகுவன்மை. ஆசியமும் (நகையும்), சாந்தமும் (சமநிலையும்), அற்புதமும் (வியப்பும்) சற்று மென்மை. வீரமும், பயானகமும் (அச்சமும்) சற்றுவன்மை என்பது ஒரு சாரார் பாகுபாடு. இவைகளெல்லாம் அவ்வச்சுவைக்கேற்ப வன்மை மென்மை இடைமைச் சொற்களே ஆக்கப்படும் என்க. மென்மைக்கும் வன்மைக்கும் உதாரணம் வருமாறு; கன்று குணிலாக் கனியுகுத்த மாயவன் இன்றுநம் மானுள் வருமே லவன்வாயிற் கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழி பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன் ஈங்குநம் மானுள் வருமே லவன்வாயில் ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழீ கொல்லையஞ் சாரற் குருந்தொசித்த மாயவன் எல்லைநம் மானுள் வருமே லவன்வாயில் முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழி இது சிருங்காரம் (உவகை), மென்மை இடித்து ரப்பி வந்து போரெதிர்த்தி யேல டர்ப்பனென் றடித்த லங்கள் கொட்டி வாய்ம டித்த டுத்த லங்குதோள் புடைத்து நின்று ளைந்த பூசல் புக்க தென்ப மிக்கிடந் துடிப்ப வங்கு றங்கு வாலிதிண்செ வித்தொ ளைக்கணே இது ரவுத்திரம் (கோபம்) வன்மை. இனி வடநூலார் சுவைக்குக் காரணமான பொருள்களை விபாவமென்றும், அச்சுவையே வெளிப்படுத்துங் காரியங்களை (குறிப்புக்களை) அநுபாவமென்றும், சுவைக்குத் துணையாய், அவற்றை நிறைவுபடுத்தி நிற்பனவற்றைச் சஞ்சாரிபாவம் (பொதுமெய்ப்பாடு) என்றும், சுவையை தாயிபாவமென்றும், சுவையானே உண்டாகிச் சுவையைப் புறத்தார்க்கு வெளிப்படுத்து வனவற்றைச் சாத்துவிக பாவமென்றும் கூறுவர். எனவே, விபாவங்களால் (பொருள்களால்) தோன்றி, அநுபாவங்களால் (குறிப்புக்களால்) வெளிப்பட்டுச் சஞ்சாரி பாவங்களால் (பொதுமெய்ப்பாடுகளால்) புஷ்டியடைந்து நிற்கும் தாயி பாவம் சுவை (ரஸம்) எனப்படும். இனி, மெய்பாடுகள் எட்டாவன; நகை, அழுகை, இழிவு, வியப்பு, அச்சம், வீரம், வெகுளி, உவகை யென்பன. சமநிலைக்கூட்டி ஒன்பதென்ப. இவற்றுள் நகைச்சுவை தோன்றற்குக் காரணமான பொருள்களாவன; இகழ்ச்சி, இளமை, அறிவின்மை, மடமை என்பன. இவை காரணமாக நகைதோன்றும், இவற்றுக்கும் உதாரணங்களைப் பேராசிரியருரை நோக்கி அறிக. இனி இச்சுவை எளிதின் விளங்கச் சில உதாரணங் காட்டுதும். இவ்வாறே மேலுங் கொள்க. வானுற நிமிர்ந்த கோபுரத்து வாயிலிற் கூனருங் குறளருந் தலைநிமிர்ந்துமேற் கூனலாக் கண்கொடு நோக்கிக் கூனியே போனது கண்டுளர் முறுவல் பூத்தனர். இதில், கூனரும் குறளரும் கோபுரவாயில், தலைமேல் முட்டுமோ என்று அஞ்ச அதனை நிமிர்ந்து பார்த்துக் குனிந்து சென்றமையைக் கண்டு அங்குள்ளார் எள்ளிச் சிரித்தமையின் இது இகழ்ச்சி பற்றி வந்த நகையாயிற்று. நிருதர்தம் மருளும் பெற்றே னின்னலம் பெற்றே னின்னோ டொருவருங் செல்வத் தியாண்டு மறையவும் பெற்றே ணொன்றோ திருநகர் தீர்ந்த பின்னர்ச் செய்தவம் பயந்த தென்னா வரிசிலை வடித்த தோளான் வாளெயி றிலங்க நக்கான் இது சூர்ப்பநகை கூறிய வார்த்தையை இராமன் எள்ளி நகையாடலின் எள்ளல் பற்றி வந்த நகையாயிற்று. இனி அழுகைக்குக் காரணமான பொருள்களாவன; இகழ்ச்சி, இழத்தல், நிலைமைவேறுபடல், வறுமை என்பன. இவை காரணமாக அழுகை தோன்றும், உதாரணம். மைந்தவோ வென்றன் மதகளிறோ வல்வினையேன் சிந்தையோ சிந்தை தெவிட்டாத தெள்ளமுதோ தந்தையோ தந்தைக்குத் தந்தையிலான் கொன்றனனோ வெந்தையோ நின்னை யிதற்கோ வளர்த்தனனே இது, மைந்தனை இழந்தமை பற்றி அவலமுற்றமையின், இழவு பற்றி வந்த அழுகைச் சுவையாயிற்று. உரனெரிந்து விழவென்னை யுதைத்துருட்டி மூக்கரிந்த நானிருந்து தோள்பார்க்க நானிருந்து புலம்புவதோ கரனிருந்த வனமன்றோ விவைபடவுங் கடவேனோ அரணிருந்த மலையெடுத்த வண்ணாவோ அண்ணாவோ இது, தன்னுறுப்பையிழந்தமை பற்றி வந்த அழுகை. இனி,, இளிவரற்சுவைக்குரிய பொருள்களாவன; மூப்பும், பிணியும், வருத்தமும், மென்மையுமாம். இவை காரணமாக இளிவரல் பிறக்கும். இளிவரலெனினும் இழித்தலெனினும் அருவருப்பு எனினும் ஒக்கும். உதாரணம். புரையிறு புன்றொழி லரக்கர் புண்பொழி திரையுறு குருதியா றீர்ப்பச் செல்வன வரையுறு பிணப்பெரும் பிறக்க மண்டிய கரையுறு கடன்முகங் கடுப்பக் காண்டியால் இது, உதிரவாறீர்ப்பச் செல்லும் பிணப் பெருங் குன்றத்தைக் காண முகங்கடுக்கும் என்றதனால் அருவருப்புத் தோன்றலின், இளிவரற்சுவையாயிற்று. இது மூப்பே பிணியே (தொ - மர) எனவருஞ் சூத்திரத்து யாப்பு என்ற இலேசினாற் கொள்ளப்பட்டது. பிணியுளடக்கலுமாம். காசொடு முடியும் பூணுங் கரியதாங் கனகம் போன்றும் தூசொடு மணியு முந்நூ றோறரு தோற்றம் போன்று மாசொடு கருகி மேனி வனப்பழிந் திடவூர் வந்தான் சீசியென் றியாரு மெள்ளத் திகைப்பொடு பழுவஞ் சேர்ந்தான் இதுவுமது. வியப்புக்குக் காரணமான பொருள்களாவன; புதுமை, பெருமை சிறுமை, ஆக்கம் என்பன. இவை காரணமாக வியப்புத் தோன்றும், உதாரணம். புகைகொண் டியலும் புதியசக டேறி நகைகொண்டு நண்பை விளிக்கித் - தொகை கொண்ட காவதத்துத் தம்மூர்க் கடைகண்டு மாந்தர்செயற் காவதற்றுக் கண்பரந்தா ராங்கு புகைவண்டயிலேறி அடுத்த வண்டியிலிருக்கும் தமது நண்பரைக் கூப்பிடுவதற்குள் தம்மூரிடம் வண்டிசேரக்கண்டு ஒரு செய்கையுந் தோன்றாமல் வியப்பால் கண்பரந்து நின்றார்கள் என்பது இதன் கருத்து. இது புதுமைபற்றி வந்த வியப்புச்சுவை. பண்புற நெடிது நோக்கிப் படைக்குர் சிறுமை யல்லால் எண்பிறங் கழகிற் கெல்லை யில்லையா மென்று நின்றாள் கண்பிற பொருளிற் செல்லா கருத்தெனி னஃதே கண்ட பெண்பிறந் தேனுக் கென்றா லென்படும் பிறருக் கென்றாள் இதுவுமது, மேற்கூறிவந்த மெய்ப்பாடுகள் நான்கும் தன் கண்தோன்றும் பொருள்காரணமாகவும், பிறபொருள் காரணமாகவும் தோன்றுவனவாம். மேல் வருவனவற்றின் தோற்றம் ஆங்காங்குக் கூறுதும். அச்சுவைக்குக் காரணமான பொருள்களாவன; தெய்வமும், விலங்கும், கள்வரும் இறைவரும் என்பன. இவை காரணமாக அச்சம் பிறக்கும். இம்மெய்ப்பாடு பிறபொருள் பற்றியே வருமென்க. உதாரணம். மண்டி யோடினர் சிலர்நெடுங் கடகரி வயிற்றிற் புண்டி றத்ந்தமா முழையிடை வாளொடும் புகுவார் தொண்டை நீங்கியே கவந்தத்தைத் துணைவநீ யெம்மைக் கண்டி லேமென்று புகலெனக் கைதலைக் கொள்வார் இது பகையரசரும் இறையுள் அடங்கலின் இறை பற்றி வந்த அச்சமாகும். ஆரிடைப் புகுது நாமென் றமரர்கள் கமலத் தோன்றன் பேருடை யண்ட கோளம் பிளந்த தென்றேங்கி நைந்தார் பாரிடையுற்ற தன்மை பகர்வதென் பாரைத் தாங்கி வேரெனக் கிடந்த நாக மிடியென வெருவிற் றன்றே இது அணங்குபற்றி வந்த அச்சம். அணங்கு - வருத்துந் தெய்வம் இனி, வீரச்சுவைக்குக் காரணமான பொருள்களாவன; கல்வியும் தறுகண்மையும் (அஞ்சாமையும்) புகழும் கொடையும் என்பன. இவை பற்றிய வீரம் பிறக்கும் உதாரணம். அங்கிறைவ னப்பரிசு ரைப்பவது கேளாக் கொங்குறை நறைக்குல மலர்ச்செனி குலுக்கா எங்குறைவ தித்தொழிலி யற்றுபவ ளென்றான் சங்குறை கரத்தொரு தனிச்சிலை தரித்தான். இது தறுகண்மைபற்றி வந்த வீரமாதலின் வீரச்சுவை யாயிற்று முடியவிம் மொழியெலா மொழிந்து மந்திரி கொடியனென் றுரைத்தசொ லொன்றுங் கொண்டில னடியொரு முன்றுநீ யளந்து கொள்கென நெடியவன் குறியகை நீரி னீட்டினான். இது கொடை வீரம் இனி, வெகுளிச் சுவைக்குரிய பொருள்களாவன; தன் உறுப்பைச் சிதைத்தலும், தன்குடிக்குக் கேடுசூழ்தலும், தன்னறிவையும் புகழையும் கொன்றுரைத்தலும், தன்னை அலைவு செய்தலும் என்பன. இவை காரணமாக வெகுளிச்சுவை பிறக்கும். பிறபொருள் பற்றி வரும் உதாரணம் உருத்துமு கிற்குல முட்குடன் மட்கச் சிரித்திகழ் கவ்வியெ யிற்றிணை தின்றாங் கரித்துவ சன்றனை நோக்கிய ரக்கன் கருத்துட னின்றிவை கட்டுரை செய்வான் இது வீமனை நோக்கி அரக்கன் கூறியது. இது கொலை பற்றி வந்த வெகுளியாதலின் வெகுளிச்சுவை யாயிற்று. என்றனனென் றலுமுனிவோ டெழுத்தனன்மண் படைத்தமுனி யிறுதிக் கால மன்றெனவா மெனவிமையோ ரயிர்த்தனர்மேல் வெயில்கரந்த தங்கு மிங்கு நின்றனவுந் திரிந்தனமீ றிவந்தகொழுங் கடைப்புருவ நெற்றி முற்றச் சென்றனவந் தது நகையுஞ் சிவந்தனகண் ணிருண்டனபோய்த் திசைக ளெல்லாம் இதுவுமது, கொலை - ஈண்டு வாக்கைச் கொன்றுரைத்தல். இனி, உவகைச்சுவைக்குரிய பொருள்களாவன; செல்வ நுகர்ச்சியும், அறிவுடைமையும், புணர்ச்சியும் விளையாட்டும் என்பன. இவை பற்றி உவகை பிறக்கும். இவை தன்கண் தோன்றும் பொருள் பற்றி வரும் உதாரணம். ஓவியத் துறைகை போக வொருவனை யுருவின் மிக்க காவலன் ஒருவன் மற்றோர் கன்னிநீ தீட்டு கென்னத் தாவரு மெழிலிற் கோட்டத் தானுமந் நளனு மாக மேவர வினிது நோக்கி மெய்ம்மயிர் பொடிக்கு மன்றே இது காதல் பற்றி வந்த உவகைச்சுவை. இதுவும் புணர்ச்சியுளடங்கும். மெய்ப்பாடுகளை அகமெய்ப்பாடு என்றும், புற மெய்ப்பாடு என்றும் வீரசோழியகாரர் பிரிப்பர். அவர் பிரித்தது போலத் தொல்காப்பியர் கூறிய மெய்ப்பாடுகளுள் அகத்தே நிகழ்ந்து புறமெய்ப்பாடுகளுக்குத் துணையாய் நிற்குமிடத்து, உடைமையின் புறல் முதலிய முப்பத்திரண்டு மெய்ப்பாடு களையும் அகமெய்ப்பாடு என்றும், ஏனையவற்றைப் புறமெய்ப்பாடு என்றும் யாமும் பிரித்துக் கூறலாம். அகமெய்ப்பாடு எனப் பிரிக்கப்பட்டவையும் தனிமெய்ப்பாடு களாகப் புறத்தே தோன்றுமாயின் புறமெய்ப்பாடு எனலாம். இளம்பூரணரும் உடைமையின் புறல் என்னுஞ் சூத்திரவுரையிற் இம்முப்பத்திரண்டும். மேற்கூறிய முப்பத்திரண்டும் நிகழா விடத்து நிகழும் எனவும், அவை நிகழுமிடத்து இவை அவற்றிற்கு அங்கமாக (துணையாக) நிகழும் எனவும். கூறுவர். வடநூலர், நிர்வேதை முதலாக முப்பத்துமூன்று மெய்ப்பாடுகள் கூறுவர். என்றும், அவற்றைச் சஞ்சாரிபாவம் (பொது மெய்ப்பாடு) என்றும், இவை எண்வகை மெய்ப் பாட்டிற்கும் வலி கொடுத்து நிற்பன என்றும் தண்டி யலங்காரசார நூலார் கூறியுள்ளார். வடநூலார் கூறும் முப்பத்து மூன்று மெய்ப்பாடுகளோடு, தொல்காப்பியர் கூறிய, உடைமையின்புறல் முதலிய முப்பத்திரண்டுட் பெரும்பாலன ஒத்து வருகின்றன. ஆதலின் இவற்றையும் பொது மெய்ப்பாடுகள் என்று கூறுல் பொருத்தமாகும். இன்னும், தொல்காப்பியர் கூறிய மற்றும் மெய்ப் பாடுகளையும் கூறப்புகின் விரியுமாதலின் அவற்றை இவ்வளவில் விடுத்து, மேற்கூறியபடி புறமெய்ப்பாடுகளைக் கண்ணானும் செவியானும் உணர்தற்கு ஒருதாரணந் தந்து முடிக்குதும். நல்லியன் மகர வீணைத் தேனுக நகையுந் தோடும் வில்லிட வாளும் வீச வேல்கிடந் தனைய நாட்டத் தெல்லியன் மதிய மன்ன முகத்திய ரெழிலி தோன்றச் சொல்லய பருவ நோக்குந் தோகையி னாடி னாரே - இலக்கண வரம்பு மகாவித்துவான் சி. கணேசையர் கலாநிதி ஸ்ரீ. பிரசாந்தன், பக்: 132-143 4. தொல் பொருள் உவமவியல் - சில விளக்கவுரைக் குறிப்புகள் செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு 23, பரல் 8 - 9 ல் அண்ணாமலைநகர் வித்துவான் மு. அருணாசலம் பிள்ளை அவர்கள், தொல், பொருள் - உவமவியலை ஆராய்ந்து சில திருத்தங்கள் காட்டியபோது எமது பதிப்பிலும் பல திருத்தங்கள் காட்டியுள்ளார்கள். அவர்கள் காட்டிய திருத்தங்களுள் உண்மையானவற்றை யாம் ஒப்புக் கொள்வது அறிவின் முறைமையாகும். பிழையானவற்றைப் பிழையன்றெனத் தாபிப்பதும், பிழையல்லாதவற்றைப் பிழையெனத் தாபிப்பதும் அறிஞர்க்கு அழகல்லவாகும். முக்குண வசத்தானும் மறதி முதலியவற்றாலும் முறை பிறழ்ந்துரைப்பதுமக்கட்கு இயல்பே; ஆதலின் நமது பதிப்பிலும் பிழைவருவது ஓர் அதிசயமன்று. எமது பதிப்பிலும் பிழைகள் காணப்படுமென முகவுரையிற் காட்டியிருக்கின்றாம். நிற்க. பிள்ளையவர்கள் எடுத்துக்காட்டிய பிழைகட்குப் பல அச்சினாலும் கவனமின்றி எழுதியதனாலும் நேர்ந்த பிழை களாகும். அவற்றினுண்மையை அவர்கள் உணராமலிருக்க மாட்டார்கள். அங்ஙனமாகவும், அவர்கள் அவற்றையெடுத்துத் காட்டியது, பிழை கூற வேண்டுமென்னும் எண்ணத்தாற் போலும். யாம் கவனமின்றி எழுதியதனான் நேர்ந்த பிழைகளை விடுத்து, அச்சு முதலியவற்றால் நேர்ந்த பிழைகளையும், எமது கருத்தை விளங்காமையான் அவர்கள் எடுத்துக்காட்டிய பிழைகளையும், இங்கே விளங்க வைப்பாம். 1. மணிவாழ்பாவை நடைகற்றன்ன (சூ. 276) என்பதற்கு யாமெழுதிய உதாரண விளக்கச் செய்யுளுரையுள், நடைகற்றன்ன என்பதற்கு, நடை பயின்றாற் போலென்ற பொருள் செய்திருப்பது அதனினும் வியப்பாயிருக்கிறதெ ன்று பிள்ளையவர்கள் கூறியுள்ளார்கள். எரியகைந் தன்ன தாமரைப் பழனம் (சூ.287) என்பதற்கு எரி செறிந்தாற் போன்ற தாமரைப் பூவையுடைய வயலென்றும் கூற்று வெகுண்டன்ன (சூ. 294) இயமன் வெகுண்டாலொத்த வென்றும் உரைத்த உரையையும், முதலாஞ் சூத்திரத்துள் பாவையில் கற்றன்ன என்பதற்கும் மாரியன்ன வண்கை என்பதற்கும், வான்றோய் வன்னகுடிமை என்பதற்கும் உரைத்த உரைகளையும் நோக்கிய அவர்கள் போல என்னும் பொருள் கவனமின்றி எழுதியதென்பதை அறிவார்களாகவும், அதனை யெடுத்துக் காட்டியது பிழைகூற வேண்டுமெனக் கருதியேயாகும். இது போலவே பிறவுமென்பதற்கு எனவெனெச்சம் முதலிய வற்றையென்று எழுதியதும் மறதியால் நேர்ந்ததென்பதையும் அவர்கள் உணர்வார்கள். வாழ்தல் - பதித்தலை காரிய காரண உபசாரத்தால் உணர்த்தும் என்பதையு முணவார்களாக. 2. உயர்ந்ததன்..... உள்ளுங்காலை (சூ. 278) இச்சூத்திர உரையில், இவற்றுக்கு நிலைக்களங் காதலும் நலனும் வலியுமென்பது சொல்லுதும் என்பதை, இவற்றுக்கு நிலைக்களம் சிறப்புங் காவலும் நலனும் வலியும் என்பது சொல்லும் என்று திருத்தியதிலும் பிழையுளதென்பதை யடுத்த சூத்திரநோக்கி யறிக என்றார்கள். அடுத்த சூத்திரம் சிறப்பு முதலிய நான்கையுமே கூறுகிறது. ஆதலின் அதிற்றவறு இன்னதென்பது தெரியவில்லை. அதற்கடுத்த சூத்திரத்திற்கூறும் கிழக்கிடு பொருளைச் சேர்த்தெழுதாது விட்டதே அத்தவறு என்று கருதினார்களோ, சொல்லுமெனத் திருத்தியது பிழை யெனக் கருதினார்களோவென்பது எமக்குப் புலப்படவில்லை. சொல்லுமென்பதற்கு ஆசிரியன் வினைமுதலாகலின் அவ்வாறு அது திருத்தப்பட்டது. ஏனையது மறதி. 3. சிறப்பே நலனே... நிலக்கள மென்ப (சூ.278) இதனுள் சிறப்பிற்கு எடுத்துக்காட்டிய உதாரணச் செய்யுளுரையுள் யானும் நின்பொருள் பெற்றுச் சிறப்படைய வந்தேன் என்பது முன்னிலையாகக் கூறியதனால் பிழையாகு மென்றார்கள். அது, யானும் அவன்பொருள் பெற்று இன்மை தீர்ந்து சிறப்படைந்து வந்தேன் என்று எழுதவேண்டியது மறந்து அவ்வாறெழுதப்பட்டது. இறுதியில் என்பதும் அவ்வாறே, நச்சினார்க்கினியர் அரசவை யிருந்த தோற்றம் போல இன்மை தீர வந்தனன் என மேலே கூட்டுக என்று கூறியதையே ஈண்டு யாம் விளக்கினோம். பேராசிரியர் கருத்தை, யாம் வேறாக விளக்கியுள்ளோம். 4. இனி கொண்டறிந என்பதைக் கொண்டதறிஞ எனப் பாடங் கொண்டிருப்பதும் பொருத்தமில்லை யென்றார்கள். அது எழுத்தால் நேர்ந்த பிழையென்பதை யாரும் அறிவர். என்னை? அங்ஙனம் பாடபேத மொன்று பொருநராற்றுப் படைப் பதிப்பில் இன்மையின், இங்ஙனமே பின்வரும் அடைமரை என்பதும் புடைத்தமார்பினன் என்பவைகளும் அச்சால் நேர்ந்த எழுத்துப் பிழைகளாகும். அங்ஙனமாதல் யான் எழுதிய உரை விளக்கக் குறிப்புகளாலறியலாம். கவனமாக நோக்காமையால் பிழை திருத்தம் குறிக்கப்படவில்லை. 5. பெருமையுஞ் சிறுமையும்.... பாடுடைய சூ. (285) இதில் வரும் உதாரண உரையுள் சேறாகி யென்பது, சேறாதலால் என்பது ஏதுப் பொருட்டாய் நிற்றலின் அதன் முடிபிற் பிழையின்மையுணர்க. சேறாகி யென்பதை. சேறு போலாதலால் என்று விரித்துக் கொள்ளலாம்.. 6. 286 ம் சூத்திர உரையுள் வரும் கயமூழ்குமகளிந் கண்ணின் மானும் என்பதற்கு இன் வேற்றுமையும் உருபோடு வந்ததென்று பேராசிரியர் கூறியவகை ஆராய்ந்த பிள்ளையவர்கள்; கண்ணின் மானும் என்ற தொடரில் இன்சாரியை நிற்க ஐ உருபு தவிர்ந்த தாகக் கூறல் வேண்டும். ஆகவே இன் என்பது ஒப்புப் பொருளில் வந்த ஐந்தன் உருபாகாது. அன்றியும் உவமப்பொருளென்றே குறித்து இன்னு மானும் ஒருங்குவந்த தென்றலும் சிறப்பில்லை. ஆதலால் இதற்கு மேலெல்லாம் துணைப்பவென்பதும் அற்றென்பதும் வந்தன என்றெழுதியிருப்பதுபோல இவ்விடத்தும் மான என்பது வந்தது என்றிருப்பதே பொருத்தம். எனவே இரண்டாவது உதாரணத்தில் இன் உருபு தன் பொருட்கண் வந்த தென்றிருப்பதும் உம்மையின்றியிருக்கலாம் என்று கூறி யுள்ளார்கள். இதில் பிறவும் என்றதனால் தழுவப்பட்ட உருபு வரிசையில் மான வென்பது கூறப்படவில்லை. சூத்திரத்துட் கூறப்பட்டுள்ளது. ஆதலின் பேராசிரியர் முதல் உதாரணத்தை மயங்கிக் கூறினாரென்பதே பொருத்தம். அவ்வுதாரணத்தில் வரும் இச் சாரியையென்றும் இரண்டாவது தொகச்சாரியை நின்றதென்றும் யாமுங் கீழ்க்குறிப்பிற் காட்டியுள்ளாம். ஆதலின் பேராசிரியர் கருத்தினை நோக்குமிடத்து உம்மை தள்ளப்பட வேண்டியதில்லை. 7. பால்புரை மருப்பின் உரல்புரை பாவடி (சூ. 291) இதற்குப் பொருள் எழுதியிருப்பது பொருந்துமாயினும் அதன் போக்கை நோக்குங்கால் இவ்விடத்திற்கு வேண்டும் பொருள் அதன் பிற்பகுதியில் அமைந்திருப்பதாகக் கருதி எழுதியிருப்பதெனத் தெரிகின்றது என்றார்கள். முழுவதற்கும் உரை எழுதியதனால் அவ்வாறு கூறுகின்றார்கள் போலும். யான் உவமைகளின் வேறுபாடு தெரியாது எழுதியதாக அவர்கள் மதித்து எழுதியது ஒரு பிழை கூறிவிட வேண்டுமென்று எழுதிய தென்பதை நன்கு விளக்கும். 8. அங்ஙனம் தொகைப் பட்ட வழியும் மற்று மேலுரிமை கூறுகின்றதாமென்பது (சூ. 286 உரை) என்ற உரைப்பகுதிக்கு மேலுரிமை கூறுமிடம் 292 ம் சூத்திரமென்று ஈழகேசரிப் பதிப்பிற் கூறப்பட்டுள்ளது. அச்சூத்திரம் தொகைப்பட்ட வழி உரிமை கூறுமாறில்லை. 293 ஆம் சூத்திரமே தொகைப்பட்ட வழி உரிமை கூறுகின்றது என்றார்கள். ஆயின் வினை முதலிய நான்கற்கும் இன்ன இன்ன உருபுகள் உரியன எனக் கூறுவது 287 ஆம் சூத்திர முதலிய நான்குமாம். அதுவே உண்மையாதல் 288 ஆம் சூத்திர உரையுள் வினைக்கே யுரிமையெய்தியதாகக் கூறிய அன்னவென்பது என்றும் 290 ஆம் சூத்திர உரையுள் இது முறையானே மெய்யுவமத்திற்குரிய வாய்பாடு கூறுகின்றது என்றும் அச்சூத்திர உரையுள் இவற்றை உரிமை கூறிப் பெருவரவினவெனவே என்றும் 291 ஆம் சூத்திரக் கருத்துரையுள் உருவுவமத்திற்குரிய வாய்ப்பாடு கூறுகின்றது என்றும் இவை போல உரியவன்றி என்றும் பேராசிரியரே கூறுவதானா லுணரலாம். 292 ஆம் சூத்திரம் அங்ஙனம் உரிமையாதற்குக் காரணங் கூறுகின்றது. காரணம் என்பதை அச்சூத்திர உரைநோக்கியறிக. 293 ஆம் சூத்திர நான்கு உவமையும் எட்டாதலுடைய என்பது கூற எழுந்ததாகும். இது உண்மையாதல் உற்று நோக்கினார்க்கு நன்கு பெறப்படும். அன்றியும் மாறனலங்கார உரையுள்ளும் இவ்வாறு கூறப்படுதலை அவ்வலங்கார உரைநோக்கி யறிக. யான் நன்கு நோக்காது கூறியது போலவே அவர்களும் இதனை நன்கு நோக்காது கூறினார்களென்க. இனித் தொகைப் பட்ட வழியும் என்பதன் பின்னே சில வாக்கியம் விடப்பட்டிருக்கவேண்டும் என்பது எமது கருத்து. கீழ் குறிப்பில் அது காட்டப்பட்டுளது. அன்றி அங்ஙனம் தொகைப்பட்ட வழியும் என்ற உம்மையால் விரிந்து நின்ற வழியன்றித் தொகைப்பட்ட வழியும் அவ்வுருபுகளுக்கு மேலுரிமை கூறுகின்றது என்று பொருள் கொள்ளினுமமையும். 9. 292 ஆம் சூத்திரக் கீழ்க்குறிப்பில் ஆங்கு வினை யோடியைந்தன்றி வாராதென்றே எழுதியுள்ளாம். அதனாற் பெயரோடு வாராது என்பது எமக்குங் கருத்தாதல் காண்க. உருவுவமைக்கு வாராதென்று யான் சொல்லவில்லை. 10. நாலிரண் டாகும் பாலு மாருண்டே (சூ. 296) இடைச் சொல்லேயன்றிப் பொருள் பயப்பனவும் உருபாகலானும் என்னும் வாக்கியத்தில் வரும் பொருள் உவமப் பொருள் என்று யாம் குறித்துள்ளேம். அது பொருந்தாதென்றும், பொருள் என்றது பிறிது பொருளென்றும் பிள்ளையவர்கள் கூறுகின்றார்கள். அங்ஙனேல், பொருள் பயப்பன என்று கூறாது பொருளுணர்த்துவன என்றாதல் பொருளுடையன வென்றாதல் பேராசிரியர் கூறியிருத்தல் வேண்டும். அங்ஙனம் கூறாது பொருள் பயப்பன என்று கூறியதனால் உவமப் பொருள் பயப்பன என்பதே அவர் கருத்தாதல் பெறப்படும். இயல்பான தன் பொருளை விட்டுப் பிறிது பொருளுணர்த்துவன வற்றையே பயப்பனவென்று உரையாளர் பலருமாளுவர். அதனை - சொல்லதிகாரம் கிளவியாக்கம் 13 ம் சூத்திர உரையுள் செப்பு; செவ்வனிறையும் இறைபயப்பதுமென இருவகைப் படுமென்று சேனாவரையரும், நச்சினார்க்கினியரும் கூறுதலானும், வயிறு குத்திற்று என்பது உண்ணேன் என்பது பயந்தமையின் இறை பயப்பது என்று அச்சூத்திர உரையுள் சேனாவரையர் கூறுதலானும், பேராசிரியரே செய்யுளியல் 1 - ம் சூத்திரத்து பயனென்பது சொல்லிய பொருளால் பிறிதொன்று பயப்பச் செய்தலெ ன்று கூறியதானும் அறிந்து கொள்க. ஆதலாற் பொருள் பயப்பன வென்பதற்கு உவமப் பொருள் என்று பொருள் கூறியதே பொருத்தமாதல் காண்க. பொருள் பயப்பன எனவே அவை தமக்கு இயல்பாகப் பொருளுடையன வென்பதுஞ் சொல்லாமலே பெறப்படுமென்க. எனவே தமக்கென வேறு பொருளின்றி உவமப் பொருளுணர்த்துவனவும், தமக்கெனப் பொருளுடையவாய் உவமப் பொருள் பயப்பனவும் உவம வுருபுகள் இருவகைய எனப் பகுத்துக் கோடலிற் பிழையின்மை யுணர்க. இனி, அன்ன, ஆங்க, மான என்ன, எனப்பட்ட நான்கும் வேறொரு பொருளை யுணர்த்தாமையின் ஓரினமாகி யொன்றாகவும், விறப்ப, உறழ, தகைய, நொக்க என்னும் நான்கும் ஒரு பொருளுடையமையின் ஓரினமாகவும், இவ்வாறே யினம் நோக்குதற் குறிப்பினவாயிற்று எனப் பேராசிரியர் விளக்கமாக வெழுதியிருக்கின்றார். இதனாலும் உவமவுருபுகளில் வேறு பொருளுணர்த்தாமல் உருபிடைச் சொல்லாகவே நிற்பனவும் வேறுபொருளுணர்த்தாமல் உருபிடைச் சொல்லாகவே நிற்பனவும் வேறுபொருளுணர்த்தி உருபாய் வருவனவும் உளவென்பது நன்கு தெளிவிக்கப்பட்டுள்ளது என்று பிள்ளையவர்கள் கூறினார்கள். அவர்கள் பொருள் பயப்பன வென்பதற்கு, பிறிது பொருளுணர்த்துவன வென்று பொருள் கொண்டதினாலேயே, வேறொரு பொருளுணர்த்தா மையின் என்பதற்கும், மேலே கூறியவாறு வேறு பொருளுணர்த்தாமல் எனவும், வேறு பொருணர்த்தாமல் எனவும் வேறு பொருளுணர்த்தி எனவும் முறையே பொருள் கொண்டார்கள். அவ்வாறு பொருள் கொள்ளுதல் ஈண்டுப் பொருந்தாது. ஏனெனின்? பேராசிரியர் வினை முதலிய நான்கற்கும் எட்டெட்டாகக் கூறப்பட்ட வுருபுகள் இவ்விரண்டாங்கால் நந்நான் குருபுகள் ஒரு பொருளவாகி யொன்றாய் வருமென்று கூறலானும், அவை ஒரு பொருளவா யொன்றாதலைக் காட்டுதற்கு உவமேயத்தோடு உவமையைத் தொடர்புப் படுத்தியே பொருள் கொள்ளுத லானும் என்க. ஆதலின் ஈண்டும் வேறொரு பொருளுணர்த் தாமையின் என்பதற்கும் பேராசிரியர் கூறும் பொருளுக்கேற்பவே பொருள் கொள்ளல் வேண்டும். அங்ஙனங் கொள்ளுங்கால் அன்ன முதலிய நான்குருபுகளும் வேறறொரு பொருளுணர்த் தாமையின் என்பது. உவமேயம் உவமைப் பொருளைவிட வேறன்று. இரண்டும் ஒன்றேயென்னும் பொருளையன்றி வேறொரு பொருளை யுணர்த்தாமையின் (எனவே இரண்டும் ஒன்று என்று ஒரே பொருளை யுணர்த்தலின்) ஓரினமாகி யொன்றாம் எனவே பொருள் தருமெனவும், ஒரு பொரு ளுடைமையின் என்பதும் நான்கும் ஒரே பொருளுடைமையின் ஓரினமாகி யொன்றாமெனவே பொருள்தருமெனவும் கோடலே பொருத்தமாம். விறப்ப முதலிய நான்கும் ஒரே பொருளுடையன என்பதையே விறப்ப என்பது இனமாகச் செறியும் பொருட்டு என்பது தொடங்கிப் பேராசிரியர் விளங்குகின்றார் எனக் கொள்க. ஓரினமாதற்கு வேறு பொருளுடைமையின் என்பது ஏதுவாகாமையு முணர்க. வேறொரு பொருளுணர்த்தாமைலை என்பதற்கும் யாம் கூறிய பொருளே பொருத்தமாதலை 292 ம் சூத்திரத்துள், ஒட்ட ஒடுங்க என்பனவும் இரண்டனையும் ஒன்றென்னும் பொருண்மைய வாகலானும் என்றும், இச் சூத்திரத்துள், ஏய்ப்ப , ஒட்ட , ஓடுங்க, நிகர்ப்ப, என்னும் நான்கும் உவமையும் பொருளும் ஒன்றெனவுணர்வு தோன்றும் வாய் பாடாகலின் இவை நான்கும் ஒன்றெனப்பட்டு இவையெட்டும் இரண்டாயினவென்றும் பேராசிரியரே கூறுமாற்றாலுணர்க. ஒரு பொருளுடைமையின் என்பதும் அப்பொருளவாதல், பின்வரு ஓதிய வாய்பா டெண்ணான்கிற்கும் இன்னவாய்பாடும் இன்னவாய்பாடும் ஒரு பொருளனவென்று அறிதலும் என்பதினால் நன்கு துணியப்படும். 292 ம், 293 ம் சூத்திரங்களின் உரைமுழுவதையும் நுனித்து நோக்குவார்க்கே யாங் கூறிய பொருள் உண்மை யாதலுணரப்படுமென்க. இவ்வாறு பொருள் கொள்வதில் யாதும் இடர்ப்படின்மையுணர்க. 11. இனி, இரட்டை கிளவியும் இரட்டை வழித்தே (சூ. 297) இதற்கு இரட்டைக் கிளவியும் இரட்டை வழித்து என்பதற்குப் பேராசிரியர் காட்டியவுதாரணம். பொன்காண்கட்டளைகடுப்பத்தன்ன பைம்பூண் சுண்ணம் புடைத்த மார்பின் என்பது இவ்வடிகள் பெரும்பாணாற்றுப்படையில் பொன்காண் கட்டளைகடுப்பச் சண்பின் புன்காய்ச் சுண்ணம் புடைத்த மார்பின் என்று காணப்படுகின்றது. இவ்விரண்டு பாடத்தையும் யான் காண்பித்துள்ளேனன்றி எது சரி எது பிழையென்று ஆராயவில்லை ஆராயாமைக்குக் காரணம் ஏட்டுப் பிரதிகள் பார்த்து ஆராயவேண்டுமென்பதே. தன் பைம்பூண் என்பதை மார்புக் கடையாக்கி ஒருமைப் பன்மை மயக்க மென்றுங் கொள்ளலாம். ஆயினும் அப்பாடம் பொருத்தமின்றெனக் கொண்டே நச்சினார்க்கினியர் கொண்ட பாடத்தைக் காண்பித்துள்ளேம். மார்பினன் என்பது அச்சால் நேர்ந்த பிழையாகும். அது நிற்க. இனிப் பேராசிரியர் இரட்டைக்கிளவியும் என்ற உம்மையால் ஒற்றைக் கிளவியும் இரட்டை வழித்தாதல் கொள்க என்று கொண்டு, அதற்குதாரணமாக; கருற்கால்வேங்கை வீயுகுதுறுகல் இரும்புலிக் குருளையிற் றோன்றுங் காட்டிடை என்று குறுந்தொகைப் பாடற் பகுதியைக் காட்டி யுள்ளார்கள். ஒற்றைக் கிளவியென்று அவர் குறித்தது உவமேயத்தையே. ஆயின் இவ்வுதாரணத்துள் ஒற்றைக்கிளவி புலியோயாதலின் புலி உவமேயம் என்றாம். அங்ஙனங் கூறாதொழியின். அவர் கொண்ட பொருளோடு மாறுபடும் இன் உருபு புலியோடு வந்தமையின் அதுவே உவமையென்று கொள்ள வேண்டுமென்பதை யானறியாதவனல்லன். வேங்கை வீயுங் கல்லும் புலிபோலத் தோன்றும் என்றதனாலே அவ்விரண்டும் மயக்க உணர்ச்சிக்குப் புலியின் தோற்றத்தைக் காட்டுமென்பதே பொருளாதலின் புலியை உவமேயமாகவும் அவ்விரண்டையும் உவமையாகவுங் கொண்டிருக்கலாமென்று கருதியே அவ்வா றுரைத்தாம். இன் உருபை மாற்றிப் பொருள் கொள்ளவேண்டு மென்பது எமது கருத்தன்று. மாறனலங் காரத்தும் ஒன்றைக் கிளவி உவமையென்றே கொண்டு, அதற்கேற்ப உதாரணமுங் காட்டப்பட்டுள்ளது. இவ்வு தாரணமும் அவ்வலங்காரத்துள் காட்டப்பட்டுள்ளது. ஆதலால் பேராசிரியர் புலிக்குட்டியை வேங்கை வீயோடும் துறு கல்லோடும் ஒப்பித்து என்று கூறினும், யாம் மேற்கூறியவாறு கருத்துப்பற்றிப் புலிக்குட்டியை உவமேய மென்றே கருதிக் கூறியிருக்கலாம். அன்றேல், பொருள் ஒன்றாயும் உதாரணம் வேறொன்றாயுமிருப்பது பிழையாகும். இரட்டை வழித்தே என்றமையால், இரட்டைக்கிளவியும் ஒற்றைக் கிளவியும் உவமேயமென்று பேராசிரியர் பொருள் கொண்டனர். (வழி- பின்) நிற்க. என்கருத்தையுணராமல் யான் இன் உருபை மாற்றிப் பொருள் கொண்டதாய் ஒரு கருத்தைப் பிள்ளை யவர்கள் படைத்துக் கொண்டு பிழையென்று கூறுவது, எங்ஙனமாயின் பிழையொன்று கூறிவிடல் வேண்டுமென்ற கருத்துப்போலும், இங்ஙனமே பிறாண்டுங் கூறுவது நோக்கத்தக்கது. 12. கிழவோற் காயினுர னொடு கிளக்கும் ஏனோர்க்கெலாம் இடம்வரை வின்றே (சூ. 302) இதன் உரையில் ஏனொரெனப்பட்ட பாங்கனும் பாணனு முதலாயினர் சொல்லுங்காலை மேற்கூறிய வகையானே இடம் வரையப்படாது; தானறிந்த கிளவியானும் நிலம் பெயர்ந் துரையாத கிளவியானும் எந்நிலப் பொருளுளானும் உள்ளுறையுவமை சொல்லப் பெறுப என்ப என்பது. இதில் எந்நிலப் பொருளானும் என்பதனுள் ஏனையிரண்டும் அடங்குமாகலின் தானறிந்த கிளவியானும் நிலம் பெயர்ந் துரையாத கிளவியானும் என்பது மேற்கூறிய வகையான என்பதனோடு மாறிக் கூட்டல் வேண்டுமென்றாம். அங்ஙனமாகப் பிள்ளையவர்கள். அவ்வாறு கூறல் வேண்டியதில்லை என்றதே பொருத்தமின்றாம். 13. இனிதுறு கிளவியும்... தோன்றுமென்ப (சூ. 303) (கராத்தின் வெய்யவெந்தோள்) என்ற உதாரணத்திற்கு முதலையென்று முன்னோர் எவருஞ் செய்யாத புதிய முறையில் பொருள் கூறியதாகப் பிள்ளை யவர்கள் கூறுகின்றார்கள். அக்கருத்து எனக்குப் புலப்பட வில்லை. தனியடியாயிருந்தமையால் யாம் ஐந்திணையைம்பதிலும் அவ்வாறிருக்கலாமெனக் கருதி, காரம் - முதலை என்றெழுதினோம். அதிற்புதிய முறை என்னையோ? 14. உவமப் பொருளை யுணருங்காலை.... வழக்கொடுபடுமே (சூ. 296) இதற்குப் பேராசிரியர் உரைத்த உரை, உவமப் பொருளானுற்றதுணருங்காலை மரீஇவந்த வழக்கொடு படுத்து அறியப்படும் என்பது பேராசிரியர் இங்கு சுருக்கி உரை கூறினமையானே அவ்வுரை பிழை போலக் காணப்படுகின்றது. அவ்வுரையுள் உவமப் பொருளானே உற்றுதுணருங்காலை என்பது மேற் சூத்திரப் பொருளை அநுவதித்துக் கூறியதாகும். மரீஇ வந்த வழக்கொடு படுத்து அறியப்படும் எனவே, அதற்கு எழுவாய் உவமப் பொருள் என்பது பெறப்படும் ஆதலால் அதிற் பிழையின்று. ஒருபோது அவ்வுவமப் பொருள் என்பது ஏடெழுதுவோரால் விடப்பட்டுமிருக்கலாம் நிற்க; இச்சூத்திர நுதலிய துரைக்குமிடத்து, மே உவமப் பொருளானே உற்றதுணரச்செயல் வேண்டு மென்றான்; இனி அங்ஙன முணருமாறு இது கூறினான் என்று பேராசிரியர் கூறியது பொருத்தமின்று. என்னையெனின், மேல் உவமப் பொருளானே உவமேயத்திற் குற்றதெல்லாமுணருமாறு கூறினான்; இஃது அவ்வுவமைப் பொருளையுணருமாறு கூறுகின்றான் என்று இருத்தல் வேண்டும். அன்றி உவமப் பொருளானே உற்ற துணரச் செயல் வேண்டுமென்று ஆசிரியர் கூறினாரல்லராதலின் எனின் அங்ஙனமன்று, உவமப் பொருளானே உவமேயத்திற் குற்றதெல்லா முணரப்படு மெனவே, அங்ஙனமுணருமாறு செயல்வேண்டுமென்பதும் ஆசிரியர் கருத்தாகும் என்பது பற்றியே பேராசிரியர் அவ்வாறுரைத்தார். இங்ஙனமே வேறிடத்தும் அவர் கூறுதலை; அடுத்த சூத்திரத்தும் நுதலியதுரைக்குங்கால், இஃது எய்தா தெய்துவித்தது; அடையொடுவந்த பொருள் புணர்க்குமாறு கூறினமையின் என்றும், 298 ஞ் சூத்திர விரிவுரையுள், எனவே அஃது எல்லார்க்கும் புலனன்று; நல்லுணர்வுடையார்க்கே புலனென்பதும், அவர் கொள்ளச் செயல் வேண்டுமென்பதும் கூறியவாறு என்றும் 281 ஞ் சூத்திரக் கருத்துரை கூறுங்கால், முதலொடுமுதலும்... வேண்டியவாற்றான் உவமஞ் செய்தற்குரிய வெனவும், அங்ஙனஞ் செய்யுங்கால் மரபு பிறழாமைச் செய்யப்படும் எனவும், 309 ஞ் சூத்திரத்து நுதலிய துரைத்தற்கண், மேல் ஏனையுவமங் கூறுங்கால், உவமிக்கப்படும் பொருட்டுப் பெருமையுஞ் சிறுமையுஞ் சிறப்பக் கூறல் வேண்டுமென்றான், என்றும் கூறுதலானறிக. இங்ஙனமே முன்பின் பார்த்தாலன்றிப் பேராசிரியருரை விளங்குவது அரிதாகும். அன்றியும் அவர் வாக்கியங்கள் தெளிவுடையனவல்ல. ஆதலின் நுனித்து நோக்குவார்க்கன்றி அவை புலப்படாவென்க. - இலக்கண வரம்பு மகாவித்துவான் சி. கணேசையர் கலாநிதி ஸ்ரீ. பிரசாந்தன், பக்: 154-163 5. உரைநெறியும் விளக்கமும் சொல்லுரை உரையில்லாத காலமும் ஒன்று இருந்துள்ளது. இதனை, உரையின்றிச் சூத்திரத்தானே பொருள் நிகழ்ந்த காலமும் உண்டு, உதாரணங் காட்டல் வேண்டாமையை உணர்ந்து உரை நடந்த காலமும் உடையவாகும் முற்காலத்து நூல்கள் (மரபு: 98,101) என்னும் பேராசிரியர் உரையால் அறியலாம். பின்னர்ச் சொல்லுரைகள் பல தோன்றின. சொல்லுரைகள் காலம் காலமாக வழங்கி வந்தன என்பதனை அகப்பொருள் உரை நமக்குத் தெரிவிக்கிறது. இளம்பூரணர் உரைக்கு முன்பு சொல்லுரைகள் பல வழங்கி வந்திருக்கின்றன என்பதற்கு அவரது உரையே சான்றாக நிற்கிறது. தொல்காப்பிய உரையாசிரியர்கள் அனைவருமே மாணாக்கர்க்குட் தொல்காப்பியப் பாடத்தைச் சொல்லிக் கொடுத்த பேராசிரியர்கள் ஆவர். உரையாசிரியர்கள் பாடம் கற்பிக்கும் போது என்ன முறையினை மேற்கொண்டார் களோ அம்முறையினைத் தத்தம் உரையில் எழுதலாயினர். எனவே, வாய்மொழிப்பாட முறை தொல்காப்பிய உரைநெறி யாயிற்று. உரையாசிரியர்கள் ஒவ்வொருவரும் தமது கருத்தினைக் கூறியதோடு அவரவர் காலத்து நிலவிய சொல்லுரை கருத்துகளையும் உரையில் ஏற்றிக் கூறியிருக்கிறார்கள் எனில், வரிவடிவம் பெறாத வாய்மொழி உரையின் செல்வாக்கினை நன்கு உணரலாம். எனவே, சொல்லுரையே முதன்மை உரையாகும்; சொல்லுரை உரையாசிரியர்களே முதன்மை உரையாசிரியர்கள் ஆவர். இஃது இறையனார் அகப்பொருள் உரைக்கும் பொருந்தும். உரை எழுதாக் கொள்கையும் உண்டு. பக்தி நூல்களுக்கு உரை எழுதுதல் கூடாது என்ற நிலை பல காலமாக இருந்து வந்துள்ளது, இறையனார் அகப்பொருள் உரை தமிழ் உரை நூல்களுள் முதன்மையானது இறையனார் அகப்பொருள் உரை என்பது எல்லோரும் ஒப்புக் கொண்ட முடிவாகும். உரை எழுதுவதற்கு முதன் முதலாக நெறிமுறையை வகுத்துத் தந்தவர் அகப்பொருள் உரைகாரரே ஆவார். இவ்வுரைகாரரின் காலம் கி. பி. எட்டாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டது என்று கூறுவர் மு. வை. அரவிந்தன். எட்டாம் நூற்றாண்டில் எழுந்து பத்தாம் நூற்றாண்டில் ஏட்டில் எழுதி வைக்கப்பட்டது என்று மு. அருணாசலம் கூறுவர். அகப்பொருள் உரை, உரைநடை அமைப்பில் அமைந்திருப்பினும், எதுகை மோனை கொண்டு இனிய ஓசையுடன் செஞ்சொற்களாலான செய்யுள் நடையைப் போன்று அமைந்திருக்கிறது. இஃது ஓர் இலக்கண நூலின் உரையன்று; ஓர் அக இலக்கிய நூலின் உரையாகும் எனும் கூறுமளவிற்கு இலக்கியச் சுவையினைக் காணலாம். இஃது ஒரு பூக்காடு; செந்தேன் ஒழுகும் நீரருவி; தெவிட்டாத வானமுதம் எனும் பாராட்டுதலுக்கு உரியது. இஃது ஓர் உவமைக்களஞ்சியம் ஆகும். உரைகாரர் இயைபு, வைப்பு, வகைமுறை வைப்பு, சொற்பொருள் விளக்கம், கருத்து விளக்கம், தொகைப் பொருள் விளக்கம், இலக்கண விளக்கம், மூலபாட விளக்கம், வினா விடை, மறுப்புரை, உத்தி, உவமை, இதன் பயன் முதலான உரைநெறிகளை மேற்கொண்டு உரையெழுதி யிருக்கிறார், நூற்பா உரை அமைப்பானது, கருத்துரைத்தல், கண்ணழித்தல், பொழிப்புத் திரட்டுதல், அகலம் கூறல் எனும் முறையில் நான்கு பகுதிகளைக் கொண்டு விளங்குகிறது. கண்ணழித்தல் என்பது பதப்பொருள் கூறுதலாகும். அகல உரையில், நூற்பாவின் பொருள் வினா விடை, இலக்கிய இலக்கண மேற்கோள்: தொல்காப்பிய மேற்கோள் ஆகியன கொண்டு விளக்கப்படுகிறது. இவ்வுரைநெறிக்கு அடித்தளமாக அமைந்தது தொல்காப்பிய நூல் அமைப்பாகும். தொல்காப்பிய நூல் அமைப்பு தொல்காப்பிய உரையாசிரியர்களுக்கு மட்டுமன்றி இறையனார் அகப்பொருள் உரைகாரருக்கும் அமைந்தது என்பதனை அவரது உரையால் நன்கு தெளியலாம். களவியல் உரையைப் பின்பற்றி உரை எழுதுதல் இத்தகு உரைநெறிமுறைகளைக் கொண்டு விளங்கும் இவ்வுரை. உரை முதல்வர் எனவும், உரையுலகத் தந்தை எனவும் போற்றப்படும் இளம்பூரணருக்கே வழிகாட்டியாக அமைந்தது எனில், அது மிகையன்று. இவர், இவ்வுரையைப் பின்பற்றிப் பாயிர உரையிலேயே எழுதத் தொடங்கி விடுகிறார். நூலுக்குப் பாயிரம் கூறி உரை எழுதும் முறையினை முதன் முதலில் தோற்றுவித்த பெருமை களவியல் உரைகாரரைச் சாரும். களவியல் உரைகாரர் மேற்கொண்ட மேற்கோளினை இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் பாயிர உரையில் ஏற்றிக் கூறியிருக்கின்றனர். இவ்வுரைகாரர் எழுதிய பாயிர உரையையும், அதில் மேற்கொண்ட உவமைகளையும் இளம்பூரணர், நச்சினார்க்கினியர், அடியார்க்குநல்லார், மயிலைநாதர் ஆகியோர் தத்தமது உரைகளில் ஏற்று உரைத்திருக்கின்றனர். இளம்பூரணர் தமது பாயிர உரையில் தொடக்கமாகக் கூறப்படும், ஆயிர முகத்தான் அகன்ற தாயினும், ஈவோன் தன்மை ஈதல் இயற்கை என்பனவும், சிறப்புப் பாயிரத்தில் தொடக்கமாக அமையும் ஆக்கியோன் பெயரே வழியே எல்லை, காலம் களனே காரண மென்றிம் என்பனவும் இறையனார் அகப்பொருள் உரையின் மேற்கோள்கள் ஆகும். கருவமைந்த மாநகர்க்கு உருவமைந்த வாயில் மாடம் போலவும் எனும் உவமையினை, திருவமைந்த மாநகரத்திற்கு உருவமைந்த மாடம் போல் என இளம்பூரணர் பாயிர உரையில் மேற்கொண்டிருக் கிறார். இறையனார் அகப்பொருள் உரையினின்று இளம்பூரணர் மேற்கொண்ட நான்கு மேற்கோள்களை நச்சினார்க்கினியரும் மேற்கொண்டிருக்கின்றார். கொழுச் சென்றவழித் துன்னூசி இனிது செல்லுமாறு போல, அளப்பரிய ஆகாயத்திற்கு விளக்கமாகிய திங்களும் ஞாயிறும் போல எனும் இரண்டு உவமைகளை நச்சினார்க்கினியர் தமது பாயிர உரையில் காட்டுகிறார். நன்னூலார், பாயிரத்தை நூலின் ஒரு பகுதியாக அமைத்ததோடு இறையனார் அகப்பொருள் உரையினின்று ஆறு மேற்கோள்களை எடுத்துப் பாயிர நூற்பாவாக அமைத்திருக்கிறார் (நன்: 5,7,8,47,48,54) என்பது குறிப்பிடத்தக்கது. இறையனார் களவியலுரைகாரர், மேற்கொண்ட நூற்பா உரை அமைப்பினையும், நூற்பா உரையில் கையாண்ட உரைநெறிமுறைகளையும் இளம்பூரணர் பின்பற்றி உரையெழுதி யிருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இந்நூலின் நூற்பா, தொல்காப்பியம் போன்று என்மனார் புலவர் (1,54), என்ப (நூ: 6,12,25,30,52), மொழிப் (நூ. 18) எனக் குறிப்பிடுகிறது. இவற்றால், இந் நூலுக்கு முன்பு சில அகப்பொருள் நூல் இருந்தமை அறியப்படுகிறது. நூற்பாவினுள் கூறப்படும் என்மனார் என்னும் சொல்லுக்கு இவர் கூறிய இலக்கண விளக்கத்தை இளம்பூரணர் அங்ஙனமே எடுத்துக் கூறியிருக்கிறார். களவியலுரையாசிரியர் பிறரது கருத்துகளை, இனி ஒருசாரார் என்ப, இனி ஒருவன் சொல்வது, ஒருசாரார் உரைக்குமாறு, ஒரு திறத்தார் என்ப, ஒருசார் ஆசிரியர் என்ப எனப் பல இடங்களில் குறிப்பிடுகிறார். இவை யாவும் இளம்பூரணர் உரையில் இடம் பெற்றுள்ளன. உரைநெறிகளைப் பின்பற்றியதோடு அவரது உரைத் தொடர்களையும் கையாண்டிருக்கிறார். இவற்றோடு சில நெறிமுறைகளையும் மேற்கொண்டு இளம்பூணர் உரையெழுதியிருக்கும் திறம் பாராட்டுதற்குரியது ஆகும். யாப்பருங்கல விருத்தியுரை இவ்வுரையும் இளம்பூரணருக்கு முற்பட்டது என்பதனால், ஈண்டுக் கூறப்படுகிறது. யாப்பருங்கல விருத்தியின் காலம் 1015 - 40 என்று முடிவு செய்யப்பட்டது எனவும், இளம்பூரணர் காலம் இதற்குச் சிறிது பிற்பட்டிருப்பது பொருந்தும் எனவும் மு. அருணாசலம் கூறுவர். யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை ஆகிய இரண்டு நூல்களுக்கும் உரையெழுதியவர் குணசாகரர் என்பதும் அவரது காலம் ஒன்பதாம் நூற்றாண்டு என்பதும் மு. வை. அரவிந்தன் கருத்தாகும். யாப்பருங்கல ஆசிரியர் அமுதசாகரர் காலம் கி.பி. 985 - 1014 ஆகும் என்பதும் விருத்தி நூலாசிரியர் காலத்திலேயே எழுதப்பட்டிருத்தல் வேண்டும் என்பதும் எமது பேராசிரியப் பெருந்தகை க.ப. அறவாணன் கருத்தாகும். இம்மூவர் தம் கருத்தால் விருத்தியுரைகாரர் இளம்பூரணருக்கு முந்தியவர் என்பதாகிறது. உரையமைப்பும் உரைநெறியும் கருத்துரை, பொருளுரை, மேற்கோள், விளக்கவுரை எனும் முறையில் உரையமைப்பு அமைந்துள்ளது. என்பது என் நுதலிற்றோ எனின் ..... ..... .... உணர்த்துதல் நுதலிற்று எனக் கருத்துரையும், பொழிப்புரை அல்லது சொற்பொருள் எனப் பொருளுரையும் உள்ளன. நூலாசிரியர் ஓரிடத்தில் கூறிய கருத்து மீண்டும் வருமாயின் அவ்விடத்து, இவ்வாறு சொல்ல வேண்டியது என்னை எனத் தாமே வினா எழுப்பி, இவற்றைக் கூறுதற்கு இவ்வாறு கூறினார் என்று விடை கூறுவர். உடன்பாட்டில் அமைந்த நூற்பாவை எதிர்மறையில் அமைத்துக் காட்டியும் கருத்தை வலியுறுத்துவர். இலக்கணக் கூறுகளை ஆராய்தல், உவமைகளைக் கொண்டு விளக்குதல், பொருத்த மான பாக்களை எல்லாவிடத்தும் தருதல், பிறர் உரையை ஏற்றுரைத்தல் முதலான உரைநெறிகளை விருத்தியுரைகாரர் மேற்கொண்டிருக்கிறார். சொல்வாரும் உளர், வழங்குவாரும் உளர். ஒருசார் ஆசிரியர், இரு திறத்தார் ஆசிரியர் எனப் பிறர் உரையைக் குறிப்பிடுவர். பிறர் தம் உரையை எடுத்துரைக்கும் போது பெயரைக் குறிப்பிடுவது வழக்கமன்று. எனினும், மேற்கோள் எடுத்தாளும்போது நூலாசிரியர் பெயர் அல்லது நூற்பெயரைக் குறிப்பிடுவர். சிலவிடங்களில் கூறினார் ஆகலின், சொன்னார் ஆகலின் எனப் பெயர் குறிப்பிடாமலும் செல்லுவது உண்டு. தொல்காப்பிய உரையாசிரியர்கள் தொல்காப்பிய நூற்பாக்களை எடுத்தாண்டு விளக்குவது போன்று, யாப்பருங்கல விருத்தி யுரைகாரர் காலத்தில் கூறப்படும் நூற்பாக்களுக்குப் பொருத்த மான காரிகைகளை எடுத்துரைத்து, இவற்றை விரித்துரைத்துக் கொள்க என்று உரையெழுதுவர். இதுபோன்று இவர் முப்பது காரிகைகளை எடுத்துக் காட்டுவர். விரித்துரைத்துக் கொள்க என்றுரைப்பதனால், விருத்தியுரை எழுதும் காலத்துக் காரிகைக்கு உரையெழுதப்படவில்லை என்பது தெரிகிறது. பேராசிரியர் தாம் கூறும் உரைச்சூத்திரத்தின் கீழ் இங்ஙனமே விரித்துரைத்துக் கொள்க என்று கூறிச் சென்றிருப்பது ஈண்டு நினைவுகூரத்தக்கது. இளம்பூரணர், யாப்பருங்கல விருத்தியுரை மேற்கோளைப் பல இடங்களில் மேற்கொண்டிருக்கிறார். அதுவும் பொருளதிகாரச் செய்யுளியலுள் அதிகமாகக் காணப்படுகின்றன. இவ்விருவரது உரைகளும் போற்றுதலுக்கும் எண்ணி எண்ணி மகிழ்வு கொள்வதற்கும் உரியன பேராசிரியருக்கு முன் இவ்விருவர் தம் உரைநெறி இளம்பூரணருக்குத் துணையாய் நின்றன எனில், இளம்பூரணரது உரைநெறி ஏனைய உரையாசிரியர்களுக்கு அடித்தளமாக அமைந்தது. இவ்விரு நூல்களுக்கும் இவ்வுரைகளைத் தொடர்ந்து உரையேதும் தோன்றவில்லை. உரைமரபு எதுவும் உருவாகவில்லை, இளம்பூரணர் உரைக்கு உரைமரபு உருவாகி நிலைபெற்று நிற்கிறது. இளம்பூரணரைப் பின்தொடர்ந்து பேராசிரியர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார், கல்லாடனார், பழையவுரைகாரர் எனத் தொல்காப்பிய உரையாசிரியர்கள் மட்டுமன்றிப் பின்னர்த் தோன்றிய நன்னூல் உரையாசிரியர்களான மயிலைநாதர், சங்கர நமச்சிவாயர் ஆகியோர் தம் உரைகளும், இவரது உரைநெறியினைப் பறைசாற்றிக் கொண்டு நிற்கின்றன. எழுதுவாரும், காட்டுப, காட்டுவாரும் என்பன இளம்பூரணருக்கு முன் எழுத்துரை இருந்தமையைத் தெரிவிக்கின்றன. விரவியும் அருகியும் வேறும் ஒரோவழி, மருவியும் பெறாதும் வழங்குமன் அவையே (யா. கலம், உறுப்பு: 15) என்னும் நூற்பா உரையில், அரையளவு குறுகல் மகரம் உடைத்தே, இசையிடன் அருகும் தெரியுங் காலை (நூன்: 13) எனத் தொல்காப்பியத்துள் இன்னவிடத்துக் குறுகும் என்று யாப்புறுத்துக் கூறிற்றில்லையேனும் உரையிற் கோடல் என்னும் உத்தி பற்றி வகரத்தின் பின் மகரம் குறுகும் (பு.ம: 35) என்று விருத்தியுள் விளங்கக் கூறினார்; அதுபோலக் கொள்க என்னும் யாப்பருங்கல விருத்தி உரைப்பகுதியை நோக்கும் போது தொல்காப்பியத்திற்கு ஒரு விருத்தியுரை இருந்திருக்க வேண்டும் என்பது நன்கு தெளிவாகிறது. எனவே, இளம்பூரணருக்கு முன் வரிவடிவ உரை இருந்துள்ளது என்பது முடிவாகிறது. அதிழ்வு என்று பாடமோதி, அதிழ்கண் முரசம் என்று உதாரணம் காட்டுவாரும் உளர் (உரி: 20) எனவும், சூத்திரமாக அறுப்பாரும் உளர் (எச்: 11- உரை) எனவும் சேனாவரையர் குறிப்பிடுவதனால், அவர் காலத்தில் இளம்பூரணர் உரை மட்டுமன்றி வேறு சில வரிவடிவ உரைகளும் இருந்தமை அறிய முடிகின்றது. பேராசிரியர் உரைக்கு முன்பு சொல்லுரை, இறையனார் அகப்பொருள் உரை, யாப்பருங்கல விருத்தியுரை, இளம்பூரணத்திற்கு முன்பிருந்த தொல்காப்பிய விருத்தியுரை, இளம்பூரணர் உரை என உரைகள் இருந்துள்ளன. உரைநெறி பேராசிரியர் உரை பொருளதிகாரம் முழுமைக்கும் கிடைத்திருப்பின், பொருளுக்கு நச்சினார்க்கினியம் பேராசிரியர் என்று கூறும் இரட்டை வழக்குநிலை மாறிப் பொருளுக்குப் பேராசிரியமே என்ற புதிய வழக்கு உருவாகியிருக்கும். நூற்பாவின் இன்றியமையாமையை எடுத்துரைத்து நூற்பாவை உறுதிப் படுத்துகிறார். நூற்பா இயைபில் குறிப்பிடும் எண்ணுமுறை இயைபினை இளம்பூரணர் தொடங்கி வைத்தார் எனினும் இவர்தம் எண்ணுமுறை இயைபானது குறிப்பிடத்தக்கது. நூலாசிரியரை விட்டகலாது உரையெழுதியிருக்கும் உரைநெறி முறை பாராட்டுதற்கு உரியதாகும். பிறர்தம் உரை நெறிகளிலும் இவர்தம் உரைநெறி சாலச் சிறந்தது. இவர் தொல்காப்பிய முழுமைக்கும் உரை வகுத்திருப்பரேல், அவ்வுரையே திருக்குறளுக்குப் பரிமேலழகர் உரைபோல் தலைமை எய்தியிருக்கும் என்று வ.சுப. மாணிக்கம் பேராசிரியரைப் பாராட்டுவர். பேராசிரியர் உரைநெறி வருமாறு:- 1. பெயர்க்காரணம் கூறல் (இயல்) 2. இயல் விளக்கம் 3. இயைபு 4. வைப்பு 5. வகைமுறை வைப்பு 6. நூற்பா அமைப்பு 7. நூற்பா உரையமைப்பு 8. நூற்பா விளக்கம் அ. வழக்கு, இலக்கிய, இலக்கண மேற்கோள்களைக் கொண்டு விளக்குதல் ஆ. தொல்காப்பிய நூற்பாக்களைக் கொண்டு விளக்குதல் 9. எடுத்துக்காட்டினைப் பொருத்திக் காட்டுதல், மேற்கோள் செய்யுளுக்கு உரை எழுதுதல் 10. சொற்பொருள் விளக்கம் 11. வினா விடை 12. மூலபாட விளக்கம் அ. நூற்பா இன்றியமையாமை - ஆ. அடங்குமெனின் - அடங்காது இ. இதன் பயன் ஈ. இலக்கியம் இன்மை 13. சொற்றொடரை நிலைப்படுத்துதல் 14. பாடவேறுபாடு 15. பிறர் உரை ஏற்பும் மறுப்பும் 16. ஈருரை 17. உரைத்ததே உரை, ஒக்கும் 18. வழிகாட்டுதல் 19. நினைவுபடுத்துதல் 20. ஐயம் அறுத்தல் 21. உவமை, உத்தி, உரைக்குறியீடு கொண்டு விளக்குதல் 22. எடுத்தோத்து, மாட்டேறு கொண்டு விளக்குதல் 23. இலக்கணக்குறிப்பு, இலக்கண முடிபு 24. இலக்கணத்தைக் கணக்கிடுதல் 25. இலக்கணக் கொள்கை 26. வழக்கிழந்த சொற்கள் 27. சமுதாய நிலை 28. உரைச்சூத்திரம் 29. இலக்கிய வரலாறு 30. உரைச்சுருக்கம் 31. முறையன்றிக் கூறுதல் இவை யாவும் இளம்பூரணர் உரைநெறியில் இடம் பெற்றவையாகும். எனினும், பிறரது உரையில் காணாத அளவிற்கு விரிவானதொரு விளக்கமும் இலக்கிய வரலாற்றுச் செய்தியினையும் பேராசிரியர் தந்திருப்பது குறிப்பிடத்தக்கது. உரையமைப்பு தொல்காப்பிய உரை பாயிரவுரை, அதிகார உரை, இயல் உரை, நூற்பா உரை என நான்கு வகைப்படும். இவர்தம் உரை நூல் இயல் உரை, நூற்பா உரை என இரண்டு வகைப்படும். பேராசிரியர் உரை பொருளதிகாரம் பின்னான்கு இயல்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளமையால் அதிகார இயைபு, அதிகார வைப்பு, அதிகார விளக்கம் ஆகியவை அறிவதற்கு வாய்ப்பில்லாமல் போயிற்று. நூலின் தொடக்க அதிகாரமான எழுத்ததிகாரத்திற்கு உரை எழுதாமையால் பாயிரவுரை அறியவும் இயலாமல் போயிற்று. ஏனெனில், நூலின் முதல் அதிகாரத்திற்கு உரை எழுதுவோரே பாயிரவுரை எழுதுவர். எனினும், ஒருசாலை மாணாக்கரும் தம்மாசிரியரும் தம்மிடை நூல் கேட்ட மாணாக்கரும் பாயிரம் செய்யப் பெறும் என்றலும், பொதுப்பாயிரமும் சிறப்புப் பாயிரமுமென அப்பாயிரந்தாம் இரண்டாம் என்றலும், ஈவோன் தன்மையும், ஈதல் இயற்கையும், கொள்வோன் தன்மையும், கோடல் மரபும் என்ற நான்கு உறுப்பு உடையது பொதுப்பாயிரம் என்றலும், அதன்வழியே கூறப்படும் சிறப்புப்பாயிரம் தான் எட்டு இலக்கணம் உடைத்து என்றலும், அவை ஆக்கியோன் பெயரும், வழியும், எல்லையும், நூற்பெயரும், யாப்பும் நுதலிய பொருளும், கேட்போரும், பயனும் (நன்: 47) எனப்படும் என்றலும், அவை தாம் நூற்கு இன்றியமையா எனக் கொள்ளப்படுதலும் கூறி முடிக்க. சிறப்புப் பாயிரத்தானே நூலிலக்கணம் ஒரு வகையான் உணரப்படும்; பொதுப்பாயிரத் தானே ஆசிரியரும் மாணாக்கரும் நூல் உரைத்தலும், நூல் கேட்டலும் மாசற அறிந்து உரை நடாத்துவாராக. அதனானே இவை நூன்முகத்தினின்று நிலவும் என்பது (மரபு: 110) என்று எழுதும் உரையால், இவர் பாயிரவுரையும் எழுதியிருக்கிறார் என்பது அறியமுடிகிறது. அவ்வகையில் காணும்போது இளம்பூரணர், நச்சினார்க்கினியர் உரையைப் போன்று இவரது உரையும் பாயிரவுரை, அதிகார உரை, இயல்உரை, நூற்பா உரை என நான்கு வகைப்படும், அவ்வுரை கிடைக்காமையால் இயல் உரை, நூற்பா உரை என இரண்டாயிற்று. சேனாவரையரைப் போன்று இவரும் இயல் விளக்கத்தை ஒவ்வோர் இயலின் முதல் நூற்பாவில் - நூற்பாவை அடுத்துத் தருகின்றார். என்பது சூத்திரம் என்று தொடங்கி (உவமவியல் தவிர), இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின் என்று இளம்பூரணரைப் போன்று வினா எழுப்பி விளக்கம் அளிக்கின்றார். ஆயினும், இளம்பூரணர், இவ்வோத்து என் நுதலிற்றோ எனின் என்று வினா எழுப்புவர். பேராசிரியர் ஒவ்வோர் இயலையும் மேலதனோடு இயைபு படுத்தியும் இயல் வைப்பு முறை கூறியும் உரையெழுதிச் செல்கிறார். இயலின் முதல் நூற்பாவைத் தலைச் சூத்திரம், முதற் சூத்திரம் என்று குறிப்பிடுகிறார். பிற நூற்பாக்களை இச்சூத்திரம் என்றோ அன்றிச் சூத்திரம் என்றோ கூறுவது இன்று. இது அல்லது இஃது என்று தொடங்கி - - - உணர்த்துதல் நுதலிற்று (மெய்ப்: 3), உணர்த்துகின்றது (மெய்ப்: 17), கூறுகின்றது (மெய்ப்: 2,18), என்கின்றது (மெய்ப்: 24), என்றவாறு (உவம: 11), சொல்லுகின்றது (செய்: 4), வகுக்கின்றது (செய்: 41), வரையறுக்கின்றது (செய்: 111) என்று நூற்பா நுவலும் கருத்துரையினை முடிக்கின்றார். இக்கருத்துரையில் நூற்பா இயைபு, நூற்பா வைப்பு, கூறியது இனிக் கூறுவது ஆகியன கூறப்படுகின்றன. இவையனைத்தும் ஒரு நூற்பாவில் அமைவது இல்லை. நூற்பா இயைபு பெரும்பான்மை யான இடங்களிலும், மற்றவை சில இடங்களிலும் கூறப்படு கின்றன. சில இடங்களில், உரைக்குறியீடும் அக்குறியீட்டிற்கான காரண விளக்கமும் நூற்பாவின் கருத்துரையாகக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. சில இடங்களில் உரைக்குறியீடு மட்டும் சொல்லப்படுகின்றது. இதுவும் அது என்பது நூற்பாவின் கருத்துரையும் உரைக்குறியீடுமாகும். பேராசிரியர் தம் உரையமைப்பில் கருத்துரை. இதன் பொருள் - - என்றவாறு, விளக்கம், மேற்கோள் என்று பொதுவானதொரு நிலையினைக் காணமுடிகின்றது. சில நூற்பாக்களில் கருத்துரை. இதன் பொருள், மேற்கோள், விளக்கம் என்று மேற்கோள் இடமாறியும் உள்ளது (செய்: 30,140). கருத்துரையும் பொருளுரையும் மட்டும் உள்ள இடங்களும் உண்டு (செய்: 166,168,169,174). சிலவிடங்களில் கருத்துரையின்றி இதன் பொருள், விளக்கம் மட்டும் அமைந்துள்ளன (மரபு: 2,3,7; 9-16; 18-24; 52-59; 61-67), கருத்துரையின்றி இதன்பொருள், விளக்கம், மேற்கோள் என்று நூற்பாவுரை அமைவதும் உண்டு (செய்: 193,215; 216-234). இதன் பொருள் என்று பொருளுரை மட்டும் கூறுவதும் உண்டு (மரபு: 64). இதன் பொருள் என்று பொருளுரை கூறியதோடு இதுவுமொரு கருத்து என்றும், இதன் கருத்து என்றும் உரையெழுதும் இடங்களும் உண்டு (மெய்ப்: 21; உவம்: 18; செய்: 2; மரபு: 89), இங்ஙனமாகப் பேராசிரியர் உரையமைப்பானது இளம்பூரணர், சேனாவரையரைப் போன்று ஒரு நெறிமுறையில் அமையாது நூற்பா அளவு, நூற்பாக் கருத்து ஆகியவற்றிற்கேற்பப் பல நிலைகளில் உள்ளது. தேவையான இடங்களில் முழு அளவிலான உரையமைப்பைக் காண முடிகின்றது. இலேசு, மாட்டேறு ஆகியன கொண்டும் உரையெழுதப்பட்டுள்ளது (உவம். 6,34; செய்: 9,50; செய்: 111). இளம்பூரணரைப் போன்று உரையியைபு என்று குறிப்பிட்டும் (பேரா, செய்: 36-40; 68-69; மரபு: 35-37) சேனாவரையரைப் போன்று உரையியைபு என்று குறிப்பிடாதும் (பேரா, மரபு: 38-40; 41-43; 44-46; 55-56; 65-66) நூற்பாக்களை இணைத்து உரையெழுதும் வழக்கம் பேராசிரியருக்கு உண்டு. இளம்பூரணரைப் போன்று இவரும் எடுத்துக்காட்டினை, அது, அவை, வருமாறு (உவம்: 11,16), அது வருமாறு (செய்: 146), அவை வருமாறு (செய்: 146), வரலாறு (உவம்: 1; செய்: 154), அவற்றுக்குச் செய்யுள் (செய்: 24,112,113), உதாரணம் (உவம: 33,63) என்று குறிப்பிடுகிறார். மேற்கோளின் இறுதியில் என வரும் என்னும் இணைப்புச் சொல்லைக் கொடுக்கின்றார், ஒவ்வொரு வகைப்பாட்டிற்கும் மேற்கோளுடன் கூடிய விளக்கம் தரப்படுகிறது. அங்ஙனம் வகைப்பாட்டிற்குச் சொற்பொருள் விளக்கம் தரும்போது நகை என்பது, அச்சம் என்பது என்று என்பது என்னும் துணைச்சொல்லைக் குறிப்பிடுகின்றார். என்னை? என்று வினா எழுப்பி விளக்கம் தந்தும், பிறர் உரை கூறியும், உவமை, உத்தி ஆகியவற்றோடும் இவர் உரை விரிவானதாக அமைந்திருக்கிறது. அதிகார விளக்கம் பேராசிரியரின் அதிகார விளக்கம் நமக்குக் கிடைக்க வில்லையெனினும், அதிகாரம் என்றால் என்ன என்பது பற்றியும், அதிகாரப் பெயர்களைப் பற்றியும், அதிகார அமைப்புப் பற்றியும் அறியமுடிகின்றன. அதிகாரத்தை ஓத்து என்றும் படலம் என்றும் குறிப்பிடுகிறார். அதிகாரம் என்ற பொருண்மை என்னை எனின், முறைமை எனவும், இடம் எனவும், கிழமை எனவும் கொள்ளப் படும் எனவும்; இயற்றமிழுள்ளும் எழுத்ததிகாரத் தோடு சொல்லதிகாரத்திற்கும் சொல்லதிகாரத்தோடு பொருளதிகாரத் திற்கும் இயைபு கூறுதலும் எனவும் அதிகாரத்திற்கும் அதிகார இயைபிற்கும் விளக்கம் கூறுகிறார். (மரபு: 110) எழுத்தோத்தினுட் கூறப்படாதனவல்ல, எழுத்தோத்தினுட் குறிலுநெடிலும் (செய்: 2), எழுத்தோத்தினுள் (செய்: 8,18; மரபு: 110), சொல்லோத்தினுள் இவ்வாய்பாடு விரிந்து. tUkhW TwhJ (ct«: 18), brhšnyh¤âD£ T¿a kuã‰F« brŒ: 1), brhšnyh¤âDŸS« vG¤ây¡fzkh»a ka¡fK« Ãiyí« brŒ: 2), ïJ bghUnsh¤âDŸ MuhŒtJ v‹id? (மெய்: 1) எனவும், தொல்காப்பியமென்பது. பிண்டம்; அதனுள், எழுத்ததிகாரஞ் சொல்லதிகாரம் பொருளதிகாரமென்பன படலம் எனப்படும்; அவற்றுள் ஓத்துஞ் சூத்திரமும் ஓழிந்த இருகூறுமெனப்படும் (செய்: 172) எனவும் கூறும் பேராசிரியர் உரையால் இதனை அறியலாம். இதில் அதிகாரத்தை ஓத்து என்று உரைப்பவர் உரையாசிரியர்; படலம் என்று உரைப்பவர் நூலாசிரியர். இரண்டுமே பேராசிரியர் காலத்தில் வழங்கிற்று. படலத்தை அதிகாரம் எனவும் வழங்கினமையை, அவை அதிகாரங் களாமெனக் கொள்க (செய்: 171) என்பதனான் அறியலாம். படலம் எனினும் அதிகாரம் எனினும் ஒக்கும் என்பர் இளம்பூரணர். இக்கால உரையாசிரியரான ச. சோமசுந்தர பாரதியார் பொருளதிகாரத்தைப் பொருட்படலம் என்றும், இராம. சுப்பிரமணியம் எழுத்ததிகாரத்தை எழுத்துப் படலம் என்றும் பெயரிட்டு உரையெழுதியுள்ளனர். அதிகாரத்தை ஓத்து என்றும், ஒத்தினை அதிகாரம் என்றும் வழங்குவது உண்டு. அதிகாரத்தானே என்று நூற்பா, நூற்பாவில் இடம்பெறும் சொல் அல்லது சொற்றொடரைக் குறிப்பிடுவதும் உண்டு. எனவே, அதிகாரம் என்னும் சொல்லை நூற்பிரிவாகிய எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்றனுக்கு மட்டுமே வழங்கவில்லை என்பது நன்கு புலனாகிறது. அதிகரித்து வரும் பொருள் ஒரு சொல்லாக இருப்பினும் அதனை அதிகாரம் எனக் குறிப்பிட்டனர். அதிகாரம், சிலம்பு என்னும் சொல்லுக்காகி அதுவே நூற்கும் பெயராகிச் சிலப்பதிகாரம் என விளங்குவது ஈண்டு ஒப்புநோக்கத்தக்கது. இளம்பூரணர் தொகையதிகாரம் (எச். 22) என்பர். இது முன் ஓதப்பட்ட வேற்றுமைத் தொகை முதலாக ஆறு தொகையைப் பற்றிய நூற்பாவைக் (எச்: 16) குறிக்கிறது, சேனாவரையர் எழுத்தோத்து (வே.ம: 32; வினை: 29; எச்: 24) எனவும், செய்யுளதிகாரம் (எச்: 57) எனவும் கூறுவர். சிறப்பு மரபினவை களவென மொழிப (களவு: 9) என்பதற்குக் களவதிகாரமாதலின் அவை என்னும் சுட்டுக் களவை உணர்த்தும் என்று நச்சினார்க்கினியர் உரை எழுதுவர். ஈண்டு அதிகாரம் என்றது இயலை மட்டுமன்றிக் களவு என்னும் சொல்லையும் குறிக்கிறது. ஆதலின் அதிகாரம் என்பது நூற்பிரிவு, இயல், நூற்பா, சொல். சொற்றொடர் ஆகியவற்றைக் குறிக்கும் குறியீடாக உரையாசிரியர்கள் வழங்கி வந்தனர் என்பது தெளிவு. எனினும், உரையாசிரியர்கள் குறிப்பிடும் எழுத்தோத்தினுள், சொல்லோத்தினுள், பொருளோத்தினுள் என்பன முறையே எழுத்ததிகாரத்து ஓத்தினுள், சொல்லதிகாரத்து ஓத்தினுள், பொருளதிகாரத்து ஓத்தினுள் என்னும் பொருள்படக் கூறினர் எனக் கருதவும் இடம் தருகிறது. செய்யுளதிகாரத்துக் கூறாமையானும் (எச்: 57) என்பது செய்யுள் இலக்கணத்திற் கென்று அதிகாரங் கொண்ட செய்யுளியலில் கூறாமையால் என்னும் பொருள்படக் கூறினார் என்பதாகும். பேராசிரியர் பிண்டத்திற்கு மேலும் ஒரு விளக்கத்தினைக் கொடுக்கின்றார். தோன்று மொழிப் புலவரது பிண்டமென்ப (செய்: 172) என்றதனாற் பிண்டத்தினையும் அடக்கி நிற்பது வேறு பிண்டமுளது என்பது. அது முதனூலாகிய அகத்தியமே போலும்; என்னை? அஃது இயற்றமிழ் இசைத்தமிழ் நாடகத்தமிழ் என்னும் மூன்று பிண்டத்தினையும் அடக்கி நிற்றலின் என்கிறார். சூத்திரம் பல உண்டாகி, ஓத்தும் படலமும் இன்றாகி வரினும்; ஓத்துப் பலவுண்டாகி, படலம் இன்றாகி வரினும்; படலம் பலவாகி வரினும் அதற்குப் பிண்டம் என்று பெயராம், என்றவாறு. அவற்றுள் சூத்திரத்தாற் பிண்டமாயிற்று இறையனார் களவியல், ஓத்தினாற் பிண்டமாயிற்றுப் பன்னிருபடலம்; அதிகாரத்தாற் பிண்டமாயிற்று இந்நூல் என்று கொள்க. இவற்றைச் சிறுநூல், இடைநூல், பெருநூல் என்ப (பொருள்: செய்; 165- இளம் உரை) என்று இளம்பூரணர் மேலும் ஒரு விளக்கத்தினைத் தந்திருப்பது நினைவுகூரத்தக்கது. செய்யுளியல் இயல் விளக்கத்தில் அதிகார விளக்கமும் அடங்கியிருக்கிறது. அதனை ஆண்டுக் காணலாம். இயல் விளக்கம் இயல் விளக்கம் அந்த அந்த இயலின் முதல் நூற்பா உரையில் தரப்படுகின்றது. இளம்பூரணரைப் போன்று இவரும் இயலை ஓத்து என்று குறிப்பிட்டும், இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின் என்று வினவியும் விளக்கம் கூறுகின்றார். ஏனைய உரையாசிரியரைப் போன்று இவரும் இயலுள் கூறப்படும் கருத்துகள் அனைத்தையும் இயலின் தொடக்கத் திலேயே தொகுத்து உரைக்கின்றார். மெய்ப்பாடென்பன சில பொருள் உணர்த்தினமையின் அப்பெயர்த்தாயிற்று என்று மெய்ப்பாட்டியலுக்கும், செய்யுளிலக்கணம் உணர்த்தினமை யான் அப்பெயர்த்தாயிற்று என்று செய்யுளியலுக்கும் பெயர்க்காரணத்தைக் கூறுகின்றார். உவமவியல், செய்யுளியல், மரபியல் ஆகிய இயல்களுக்குத் தந்துள்ள விளக்கம் குறிப்பிடத்தக்கது. மெய்ப்பாட்டியல் பற்றிய இயல் விளக்கம் ஏனைய இயல்களைப் போன்று விரிவாக இல்லையெனினும், இயல் இயைபிற்குக் கூறிய விளக்கத்தில் பெறப்படுகின்றது. பெயர்க்காரணம் கூறிய பேராசிரியர், மெய்ப்பாடு என்பது பொருட்பாடு. அஃதாவது, உலகத்தார் உள்ள நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்தவாறே புறத்தார்க்குப் புலப்படுவதோர் ஆற்றான் வெளிப்படுதல். அதனது இலக்கணம் கூறிய ஓத்தும் ஆகுபெயரான் மெய்ப்பாட்டியல் என்றாயிற்று என மேலும் ஒரு விளக்கத்தினைக் கூறுகின்றார். அடுத்து இயல் இயைபிற்கான விளக்கத்தினைத் தருகிறார். மெய்ப்பாட்டியல் நுதலும் பொருள்கள் :- 1. அகத்திற்கும் புறத்திற்கும் உரிய மெய்ப்பாடுகள் 2. அகத்திற்கே உரிய மெய்ப்பாடுகள் (புணர்ச்சிக்கு முன்; புணர்ச்சிக்குப்பின்) 3. களவிற்கும் கற்பிற்கும் உரிய மெய்ப்பாடுகள் 4. வரைந்து எய்தும் கூட்டத்திற்கு ஏதுவாகிய மெய்ப்பாடுகள் 5. கற்பிற்குரிய மெய்ப்பாடுகள் 6. தலைவன் தலைவிற்குரிய ஒப்புமைப் பண்புகள் 7. தலைமகனிடத்து நிகழக்கூடாத மெய்ப்பாடுகள் என்பனவாகும். இவையாவும் முற்கூறப்பட்ட அகம், புறம், களவு, கற்பு, பொருளியல் ஆகிய ஐந்து இயல்களிலுமே அடக்கி யிருக்கலாமே, மெய்ப்பாட்டியல் என வேறு ஓர் இயல் வேண்டாமே என எண்ணுவார்க்கு, மேலை ஓத்துகளுள் கூறப்படும் ஒழுகலாற்றிற்கும், காட்டலாகாப் பொருள் என்றவற்றிற்கும் எல்லாம் பொதுவாகிய மனக்குறிப்பு இவையாகலின், இவற்றை வேறுகொண்டு ஓரினமாக்கி மெய்ப்பாட்டியல் என வேறோர் ஓத்தாக வைத்தான் ஆசிரியன் என்று ஐயத்தைத் தெளிவிக்கின்றார். அகம் பற்றிய ஒழுகலாறுகளை அகம், களவு, கற்பு ஆகிய மூன்று இயல்களும், புறம் பற்றிய ஒழுகலாறுகளைப் புறத்திணையியலும் விவரிக்கின்றன. இவ்விரு ஒழுகலாறுகளுக்கும் ஒழிபாய சில கருத்துகளைப் பொருளியல் விவரிக்கிறது. இவையாவற்றிற்கும் பொதுவாகவும், இவற்றில் காட்டாத பொருள்களையும், இவ்விரு ஒழுகலாறுகளும் உலகத்தார் உள்ளத்தில் நிகழும்போது ஏற்படும் மெய்ப்பாடு களை ஆண்டு நிகழ்ந்தவாறே புறத்தார்க்குப் புலப்படுத்த வேண்டுதலால், இவையனைத்தையும் ஓரினமாக்கி மெய்ப்பாட்டியல் என வேறு ஓர் இயல் அமைத்தார் நூலாசிரியர் என்று பேராசிரியர் கூறும் விளக்கம் சிறப்பிற்குரியது ஆகும். மெய்ப்பாட்டினை மனக்குறிப்பு என்று குறிப்பிடுகிறார். இளம்பூரணர் இவ்வியலில், இயல் இயைபோ அன்றி, இத்தகையதோர் இயல் விளக்கமோ தரவில்லை. இயலின் பெயர்க்காரணத்தை மட்டும் சுருக்கமாகத் தந்திருக்கிறார். உவமவியலில், இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின், உவமவியல் என்னும் பெயர்த்து. உவமம் என்பது ஒரு பொருளோடு ஒரு பொருளினை ஒப்புமை கூறுதல், இதனானே இவ்வோத்து நுதலியதூஉம் உவமப்பொருளே கூறுதலாயிற்று. மற்று அகம் புறம் என்பனவற்றுள், இஃது என்ன பொருள் எனப்படுமோ எனின், அவ்விரண்டும் எனப்படும்: மெய்ப்பாடு போல என்பது. v‹id? என்று தாமே வினா எழுப்பி விளக்கம் தரும் முறை இவர்தம் உரைநெறிமுறைகளில் சிறப்பிடம் பெறுகின்றது. அடுத்து மேல் அகத்திணையியலுள் (49) உவமத்தினை உள்ளுறையுவமம் ஏனையுவமம் என இரண்டாக்கி ஓதியதனை ஈண்டு விரிவாகக் கூறியவாறு என்றதனால், ஆண்டுக் கூறியதனை ஈண்டும் கூறுவானேன் என்ற ஐயம் நீங்குகிறது. உள்ளுறையுவமம் ஏனையுவமம் என மேற்கூறிய முறைமையில் மாறி ஏனையுவமத்தினை முற்கூறி உள்ளுறை யுவமத்தினைப் பிற்கூறியதற்கான காரணத்தைக் கூறுகின்றார். அவற்றுள், ஈண்டு ஏனையுவமத்தினை முற்கூறினான். அஃது அகத்திணைக்கே சிறந்தது இன்றாயினும் யாப்புடைமை நோக்கி: உலகவழக்கினும் செய்யுள் வழக்கினும் வருமாகலானும் என்பது எனவும், அஃதேல் உள்ளுறையுவமம் செய்யுட்கே உரிமையின் அதனைச் செய்யுளியலுள் கூறுகவெனின், உவமப்பகுதியாதல் ஒப்புமை நோக்கி ஓரினப்பொருளாக்கி ஈண்டுக் கூறினானாயினும், வருகின்ற செய்யுளியற்கும் இயையுமாற்றான் அதனை ஈற்றுக்கண் வைத்தான். அது செய்யுட்குரித்து என்னும் கருத்தான் என்பது (உவம- 1) எனவும் எடுத்துரைத்து இரண்டு விதமான ஐயத்தைப் போக்குகின்றார். ஒன்று, முற்கூறிய வகைமுறை வைப்பில் மாறி ஏனையுவமம் உள்ளுறையுவமம் என வைத்து இலக்கணம் கூறியதேன்? என்பது. மற்றொன்று, செய்யுட்கே உரிய உள்ளுறையுவமத்தைச் செய்யுளியலில் கூறாமல் உவமவியலில் கூறியதேன்? என்பது ஆகும். இங்ஙனம் வினா எழுப்பிக் கற்பாரைச் சிந்திக்க வைக்கிறார். இளம்பூரணர் உவமவியலில் இயல் விளக்கம் தந்திருக்கின்றார். அஃதாவது. மேற்சொல்லப்பட்ட எழுதிணை யினும் யாதனுள் அடங்கும் எனின், அவையெல்லாவற்றிற்கும் பொதுவாகிப் பெரும்பான்மையும் அகப்பொருள் பற்றி வரும் என்று கூறுவதனின்று சிறுபான்மை புறத்திணையிலும் வரும் என்பது பெறப்படுகின்றது. ஆனால், பேராசிரியர் மெய்ப்பாடு போல அகம் புறம் இரண்டிலும் வரும் என இரண்டற்கும் ஒரே அளவிலான உரிமையைக் கொடுக்கின்றார். மேலும் இவரைப் போன்று இத்தகையதொரு வினா விளக்கம் தரவில்லை . செய்யுளியல் இயல் விளக்கம் ஆய்வுமுறையில் அமைந் துள்ளது. இயல் பெயர்க்காரணத்தைக் கூறிய பேராசிரியர், இயல் விளக்கத்தினை எடுத்துரைக்கின்றார். வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் - தொல். பாயிரம். ஆராய்தல் என்று புகுந்தமையால், எழுத்தினும் சொல்லினும் வழக்கிற்கும் செய்யுட்கும் வேண்டுவன விராய்க் கூறிப், பொருளதிகாரத்துள்ளும் இதுகாறும் பெரும்பான்மையும் வழக்கிற்கு வேண்டுவனவே கூறி வந்தான். அப்பொருள் பற்றிச் செய்யுள் கூறுமாதலின் இவ்வதிகாரத்துள் செய்யுள் இலக்கணமெல்லாம் தொகுத்துக் கூறுகின்றது இவ்வோத்து என்பது. எனவே, முற்கூறிய எழுவகையோத்தும் வழக்கிற்கும் செய்யுட்கும் பொது என்பதூஉம், இது செய்யுட்கே உரித்து என்பதூஉம் பெற்றாம் என்று கூறியவர் அதனோடு நில்லாது பிற்கால இலக்கணக் கருத்தோடு ஒப்பிட்டு ஆராய்கிறார். இறையனார் அகப்பொருள் உரையாசிரியர் இச்செய்யு ளியலை, யாப்பதிகாரம் என வேறோர் அதிகாரமாக்கிக் கூறுவர். (முதல் சூத்திரவுரை) இக்கருத்தினை மறுத்துரைக் கின்றார் பேராசிரியர். மற்றிதனை யாப்பதிகாரம் என வேறோரதிகாரமாக்கி உரைப்பாருமுளர்; அங்ஙனம் கூறின் வழக்கதிகாரம் எனவும் வேறு வேண்டுமென மறுக்க. அல்லதூஉம் எழுத்தும் சொல்லும் பொருளும் என மூன்றற்கும் மூன்று அதிகாரமாக்கி அதிகாரம் ஒன்றற்கு ஒன்பது ஓத்தாகத் தந்திரம் (நூல்) செய்ததனோடு மாறுகொளலாம் இதனை வேறதிகாரம் என்பார்க்கு என்பது என்று விளக்கம் தருகின்றார்.. பேராசிரியர் மூன்று அதிகாரங்களுள் சொல்லப்படும் கருத்தினை எடுத்துரைத்ததோடு, இறையனார் களவியல் உரைகாரர்தம் கருத்தினை மறுத்துரைத்து நூலாசிரியர்தம் நூலமைப்பினை நிறுவியிருக்கிறார். இளம்பூரணர், மேலுணர்த்தப்பட்ட பொருண்மை எல்லாவற்றிற்கும் இஃதிட மாதலின் அவற்றின் பிற் கூறப்பட்டது என்று வைப்புமுறையினை மட்டும் கூறினாரேயொழிய இயல் விளக்கம் பற்றி எதுவும் கூறவில்லை . பேராசிரியர் மரபியலில், இயலுக்குள் கூறப்படும் கருத்துகளையெல்லாம் தொகுத்துரைத்ததோடு இயல் இயைபையும் வைப்புமுறையையும் கூறுகின்றார். இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின் மரபியல் என்னும் பெயர்த்து. இதனானே ஓத்து நுதலியதூஉம் மரபு உணர்த்துதல் என்பது பெற்றாம். மரபு என்ற பொருண்மை என்னை எனின், கிளவியாக்கத்து மரபு என்று வரையறுத்து ஓதப்பட்டனவும், செய்யுளியலுள் (நூ:1) மரபு என்று வரையறுத்து ஓதப்பட்டனவும் அன்றி, இருதிணைப் பொருட்குணனாகிய இளைமையும் ஆண்மையும் பெண்மையும் பற்றிய வரலாற்று முறைமையும், உயர்திணை நான்கு சாதியும் பற்றிய மரபும், அஃறிணைப் புல்லும் மரனும் பற்றிய மரபும், அவை பற்றிவரும் உலகியன் மரபும் நூன்மரபும் என இவையெல்லாம் மரபு எனப்படுவது என்று மரபியலுக்கு இயல் விளக்கம் தருகின்றார். இது வெறும் இயல் விளக்கமாக மட்டும் அமையாது, சொல்லதிகாரத்துக் கிளவியாக்கத்தும் பொருளதிகாரத்துச் செய்யுளியலுள்ளும் (செய்யுள் உறுப்பாக மரபு என்பது) மரபு பற்றிக் கூறப்படுகின்றமையால், மரபியல் எனத் தனியோர் இயல் வேண்டாவே என எண்ணுவார்க்கு அமையும் விடையாகவும் அமைந்திருக்கிறது. இருதிணைக்கும் உரிய இளமைப்பெயர்களைக் கூறிய நூலாசிரியர் முதுமைப்பெயர்களைப் பற்றிக் கூறாதது ஏன் என வினவி, அது வரையறையின்மையிற் கூறான் என்பது என்று காரணம் கூறுகின்றார். இளம்பூரணர் பெயர்க்காரணத்தை மட்டும் கூறியிருக்கின்றார். நூற்பா விளக்கம் என்பது சூத்திரம், இச்சூத்திரம், இது, இஃது, இதுவும் என்பது நூற்பா உரைத் தொடக்கம். mJnt ïaÈ‹ bjhl¡f ü‰ghthf ïU¡FkhÆ‹, ‘ïj‹ jiy¢ N¤âu« v‹Djȉnwh vÅ‹’, ‘ï›nth¤â‹ jiy¢ N¤âu« v‹Djȉnwh vÅ‹’ (bkŒ¥; ctk.), இதன் முதல் சூத்திரம் என்னுதலிற்றோ எனின், இவ்வோத்தின் முதல் சூத்திரம் என்னுதலிற்றோ எனின் (செய்; மரபு) எனக் கருத்துரை எழுதுகிறார். என்னுதலிற்றோ எனின் என்று வினவுவது இயலின் முதல் நூற்பாவில் மட்டுமே ஆகும். பிற நூற்பாக்களில் இங்ஙனம் வினவுவது இல்லை. இளம்பூரணர் பெரும்பான்மையான இடங்களில் இங்ஙனமே வினவி எழுதுகிறார். ஆனால், சேனாவரையர் இவ்வினாவை எந்த இடத்திலும் வினவவில்லை. பேராசிரியர் சில இடங்களில் கருத்துரையிலேயே என்னை? எற்றுக்கு? (செய்: 61,67; 71) என்று வினாத் தொடுத்து விளக்கம் அளிக்கின்றார். வஞ்சித் தூக்கே செந்தூக் கியற்றே (செய்: 71) என்னும் நூற்பாவிற்கு, இது. முறையானே அடியுரிமை கூறியவாற்றான் வஞ்சிப்பாவிற்குக் கூறியதிலன்; ஈண்டுக் கூறினன். எற்றுக்கு? அது, வஞ்சி யடியே யிருசீர்த் தாகும் - செய்: 45 முச்சீ ரானும் வருமிட னுடைத்தே - செய்: 47 என மேற் கூறப்பட்டமையின், அது நோக்கி அடியுரிமை கூறப்படாத வஞ்சிப்பாவிற்கு வஞ்சியினது ஈற்றடியும் அவ்விரு சீரடியும் முச்சீரடியுமாவான் சென்றதனை விலக்கி இன்ன அடியான் முடியும் என்கின்றது. என்று முன் உள்ள இரண்டு நூற்பாக்களை எடுத்துக்காட்டி விளக்கம் தருகிறார். இவற்றால், முறையானே என்றதனால் இயைபும், ஈண்டுக் கூறினான் என்றதனால் வைப்பும், மேற்கோள்களால் தொடரியையும் பெறப்படுகின்றன. கருத்துரை என்பது நூற்பா நுவலும் மையக் கருத்தினைச் சுருக்கமாக உரைப்பது என்பதாகும். இளம்பூரணர் முதற்கொண்டு உரையாசிரியர் அனைவர் கருத்துரையும் அங்ஙனமே அமைந்துள்ளது. பேராசிரியரது கருத்துரையும் அங்ஙனமே அமைந்திருப்பினும், மெய்ப்பாட்டியல் 13 ஆவது நூற்பாவின் கருத்துரை, ஒரு பொருளுரை போல அமைந் திருக்கிறது. பயில்வோர்க்கு விரிவானதொரு விளக்கத்தினைக் கருத்துரையில் தருகிறார். சில இடங்களில் இதுவரை கூறியதையும், இனிக் கூறப்போவதையும் தொகுத்துரைப்பது உண்டு, இக்கருத்துரை அதற்கு மேலும் சென்று தெளிவானதொரு விளக்கத்தினைத் தருகிறது. இதன் மேலெல்லாம் அகத்திணைக்கும் புறத்திணைக்கும் பொதுவாகி வரும் மெய்ப்பாடு கூறினான். இனி அகத்திணையுட் பெரும்பான்மையவாகி வரும் மெய்ப்பாடு கூறுவான் தொடங்கி அவற்றுள்ளும் களவிற்குச் சிறந்துவரும் மெய்ப்பாடு கூறுவான், ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்பட்டவழி அவ்வெதிர்ப்பாடு தொடங்கிப் புணர்ச்சியளவும் மூன்று பகுதியவாம் மெய்ப்பாடு எனவும், புணர்ச்சிப் பின்னர்க் களவு வெளிப்படுந்துணையும் மூன்று பகுதியவாம் அவையெனவும், அவையாறும் ஒரோவொன்று நந்நான்கு பகுதியான ஒன்றன்பின் ஒன்று பிறக்கும் எனவும் கூறுகின்றான். அவற்றுள் முதலன மூன்றினும் முன்னர் நின்ற ஒரு கூற்றினை இந்நாற்பகுதித்து என்கின்றது. இச்சூத்திரம் என உணர்க. ஒருவனும் ஒருத்தியும், எதிர்ப்பட்டவழிக் கரந்தொழுகும் உள்ள நிகழ்ச்சி பெண்பாலது ஆகலாற் பெரும்பான்மையும் அவள் கண்ணே ஈண்டுக் கூறுகின்ற மெய்ப்பாடு சிறந்தது என்பது அவர் தரும் விளக்கம். கருத்துரையை முடிக்கும்போது, உணர்த்துதல் நுதலிற்று. நுதலிற்று, உணர்த்தியவாறு (செய்: 35), வரையறுத்துக் கூறுகின்றது (மரபு: 1) எனவும், சில இடங்களில், இது, நான்கசையுஞ் சீராகும் இடனுமுடைய என்கின்றது (செய்: 27), கூறுகின்றது (செய்: 21,51), வகுக்கின்றது (செய்: 41) எனவும் கூறி முடிக்கின்றார். இயலின் முதல் நூற்பாவாக இருப்பின், இயல் இயைபு, வைப்பு, விளக்கம் ஆகியவற்றிற்குப் பிறகு நூற்பா உரை இடம்பெறுகின்றது. சில இடங்களில், அதுவும் குறிப்பாக ஓரடி நூற்பாவிற்குக் கருத்துரை கூறாமல் பொருளுரை மட்டும் வழங்குவது உண்டு (செய்: 215-233), இதன் பொருள் (இ-ள்) என்று நூற்பாவின் பொருளுரையை எழுதுகின்றார். இவரது பொருளுரை பெரும்பாலும் பொழிப்புரை எனும் நிலையில் அமைந்திருக்கிறது. சிலவிடங்களில், அதுவும் குறிப்பாக வகைப்பாடுகள் அடங்கிய நூற்பாக்களுக்குப் பதவுரை எனும் முறையில் பொருளுரை இருக்கிறது. நிம்புரி கொடுமை (மெய்ப்: 26) எனத் தொடங்கி வரும் நூற்பாவில் கூறப்படும் பன்னிரு வகைப்பாடுகளுக்கும் பதவுரை கூறப்படுகிறது. சில இடங்களில் சில சொற்களுக்குப் பதப்பொருள் கூறுதுவதும் உண்டு (செய்: 80,114). முடிவில் என்றவாறு (எ-று) என்று முடிக்கின்றார், நூற்பாவில் கூறப்படும் வகைகள் ஒவ்வொன்றற்கும் மேற்கோள் பாடல் தருவதோடு அதனை என்னை? என்று வினா எழுப்பி இலக்கணக் கருத்தோடு பொருத்திக் காட்டுதல் மிகவும் சிறப்புடைத்து. மெய்ப்பாட்டியலில் மெய்ப்பாடு எட்டெனக் கூறி ஒவ்வொன்றும் நான்கு வகைப்படுமெனச் சிறப்பு நூற்பாக்களால் நூலாசிரியர் கூறுவர். இதனை விளக்கும் பேராசிரியர், எள்ளல் என்பது தான் பிறரை எள்ளி நகுதலும் பிறரால் எள்ளப்பட்டவழித் தான் நகுதலுமென இரண்டாம், இளமை என்பது தான் இளமையாற் பிறரை நகுதலும் பிறரிளமை கண்டு தான் நகுதலுமென இரண்டு, பேதைமை என்பது அறிவின்மை, மடமை என்பது பெரும்பான்மையும் கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை. இவையும் தன் மடமையான் நகுதலும் பிறன் மடமையான் நகுதலுமென இரண்டாம் (மெய்ப்: 4) என்று விளக்கம் தருகிறார். அதன்பிறகு, எள்ளல் என்பது இகழ்ச்சி . நூற்பா என எடுத்தாண்டுக் கற்பார்க்கு ஏதுவாக நூல் முழுவதற்கும் ஒரு தொடர்பினை உரையாசிரியர்கள் உருவாக்குகின்றனர். இவரும் அங்ஙனமே புரிந்திருக்கிறார். சங்க இலக்கியத்தில் இடம் பெறாத - பெயர் குறிக்கப்படாத மேற்கோள் பாடல்கள் உண்டு. இவ்வகையான பாடல்களைச் செய்யுளியல் 20,57,64,78,110,115, 125,130,145,146,149,150 முதலான இடங்களில் காணலாம். நச்சினார்க்கினியர் உரையிலும் இருநூற்றுக்கு மேற்பட்ட பாடல்கள் இன்ன நூல் என்று தெரியாத நிலையில் உள்ளோம். பேராசிரியர் சில இடங்களில் உரைச்சூத்திரங்கள் என்று குறிப்பிட்டு மேற்கோளாகத் தந்திருக்கிறார். இவ் உரைச்சூத்திரங்களை இயற்றியது இவரா என்பது ஆய்வுக்குரியது. சில இடங்களில் இவர் தந்திருக்கும் விளக்கம் படித்து இன்புறத்தக்கது ஆகும். செய்யுளியல் 132ஆவது நூற்பாவில் கூறிய தரவு என்பதற்கான விளக்கம் அத்தகையது ஆகும். தரவு என்றதன் பொருண்மை என்னை? எனின், முகத்துத் தரப்படுவது என்ப; அதனை எழுத்து எனவும் சொல்லுப; என்னை? உடம்புந் தலையுமென வேறுபடுத்து வழங்கும் வழக்குவகையான் உடம்பிற்கு முதல் எருத் தென்பதாகவின் என்பர். மெய்யும் மெய்யும் தீண்டியவழி மெல்லியல் மகளிர்க்கு நேர்படும் வேறுபாடு நான்கனுள் முதற்கண் நிற்பது கூழை விரித்தல் என்பதாகும். இதனைக் கூறும்போது, ஒன்றன் மதுரச் சுவைக்கு அதிசயம் கூறுவார் மயிரினைச் செவ்வனின்றன என்பது போலக் கொள்க (மெய்ப்: 14) என்பர். ஆறாவது மெய்ப்பாடுகளுள் கூறப்படும் கலங்கி மொழிதல் என்பதற்கு, கையொடு பட்ட கள்வரைப் போலச் சொல்லுவனவற்றைத் தடுமாற்றம் தோன்றச் சொல்லுதலும் என்று வழக்கொடு பட்ட எடுத்துக்காட்டினைக் கொண்டு விளக்குகிறார். உவமையும் பொருளும் ஒத்தல் வேண்டும் (உவம: 8) என்னும் நூற்பாவிற்கு, உவமானமும் பொருளும் தம்மின் ஒத்தவென்று உலகத்தார் மகிழ்ச்சி செய்தல் வேண்டும் என்று பேராசிரியர் பொருளுரை கூறுகிறார். இதற்கு எடுத்துக்காட்டாக, மயிற்றோகை போலும் கூந்தல் என்பதன்றிக், காக்கைச் சிறகன்ன கருமயிர் என்று சொல்லின், அஃது ஒத்தது எனப்படாது என்றவாறு. புலிப்போலப் பாய்ந்தான் என்பதன்றிப் பிழையாமற் பாயும் என்பதே பற்றிப், பூசைபோலப் பாய்ந்தான் எனின், அதுவும் ஒப்பென்று கொள்ளாது உலகம் என்றவாறு. ஈண்டு ஒத்தது என்பதனை, ஓத்தது அறிவான் (குறள்: 214) என்பது போலக் கொள்க (உவம: 8) என்று விளக்கம் தருகிறார். உலகத்தார் மகிழும்படி உவமானமும் உவமேயமும் ஒத்து அமைதல் வேண்டும் என்கிறார். உலகத்தார் மகிழும்படியான எடுத்துக்காட்டு ஒன்றனையும், உலகத்தார் மகிழும்படி அமையாத எடுத்துக்காட்டு ஒன்றனையும் காட்டிக் கற்போர் அறிந்து கொள்வதோடு மகிழும்படியாகத் தந்திருக்கும் விளக்கம் படித்து இன்புறத்தக்கது. ஆகும், இவ்விளக்கம் உவமானம் உவமேயத்திற்கு மட்டுமன்றிக் காட்டப்படும் எடுத்துக்காட்டிற்கும் ஒக்கும். உலகத்தார் மகிழும்படியாக வழக்கு எடுத்துக்காட்டு அமைதல் வேண்டும் என்பதும் அவரது விருப்பமாகும், ஐயம் ஏற்படுகின்ற இடங்களில் எல்லாம் இவரே வினா எழுப்பி, விளக்கவுரையில் விளக்கம் தந்திருப்பது, இவருடைய புலமையை எடுத்துக்காட்டுவதாகவும், உரையின் சிறப்பினைக் காட்டுவதாகவும் உள்ளது. செய்யுளியல் 86ஆம் நூற்பாவில், மாணாக்கன் இதன் முதனூல் செய்த ஆசிரியன் பண்ணுந்திறனும் பகுத்தானைக் கண்டு இவற்றையும் பாவும் இனமுமாகப் பகுத்தான் கொல்லென்று ஐயுறாமை விலக்கி இயனூலுள் அவ்வாறு கூறிற்றிலன் எனச் சொல்லினான் என்பது என்று மாணாக்கனுக்கு ஏற்படுகின்ற ஐயப்பாட்டினை, ஐயுறாமற் காத்தவாறு, ஐயுறாமை விலக்கி, ஐயமறுத்தது என்று விளக்கம் தந்து உரையெழுதிச் செல்கிறார். அடங்காதோ எனின், மிகையாலெனின் என மாணாக்கர்க்கு எழும் ஐயத்தை எழுப்பி, அற்றன்று என மறுத்து நூற்பாவின் இன்றியமை யாமையை வலியுறுத்துகின்றார். எந்த இடத்திலும் நூலாசிரிய ரொடு எதிர்திறம் செய்யாது நேர்திறம் புரிந்து உரையெழுதி யிருப்பது. இவர்தம் உரைநெறியின் சிறப்பை உயர்த்திக் காட்டுவதாக உள்ளது. ஞுஞு இலக்கணப் பொருளை இலக்கிய நயத்தோடும் உவமை நலத்தோடும் பல உத்திகளைக் கையாண்டும் விளக்குகிறார். பிற்கால இலக்கண நூற்பாக்களை எடுத்துக்காட்டி ஒப்பிட்டும் மறுத்தும் உரையெழுதிச் செல்கிறார். பிறர் உரையைப் பெயர் குறிப்பிடாமல் எடுத்துரைத்து மறுப்பது இவரது வழக்கம் ஆகும். சில இடங்களில் நூற்பாவின் இறுதியில், கூறியதையும் கூறப்போவதையும் தொகுப்புரையாகத் தருகின்றார். சில இடங்களில், முன்னர்ச் சொல்லுதும், விரி சூத்திரத்துள் சொல்லுதும் என்று கூறிப் பயில்வோரை வழிநடத்தியும், உரை அளவிறந்து செல்லாமல் இருக்கவும் செய்கிறார். எனினும், ஆயிரு தொடைக்குங் கிளையெழுத் துரிய (செய்: 94) என்னும் ஓரடி நூற்பாவிற்கு ஒன்பது பக்கத்திற்கு உரையெழுதுகிறார். அதற்கு 34 பாடல்களை மேற்கோள்களாகத் தந்திருக்கிறார். அவற்றுள் 17 பாடல்கள் பெயர் குறிப்பிடப்படாத பாடல்கள் ஆகும். நூற்பா இயைபு, கருத்துரை, பொருளுரை, நூற்பா வைப்பு, வகை முறைவைப்பு, விளக்கவுரை, வினா விடை, எடுத்துக்காட்டு, மேற்கோள், பிறர் உரை ஏற்பு மறுப்பு, பிற்கால இலக்கண ஒப்பீடு, மறுப்பு, உவமை, உத்தி, சமுதாய வழக்கு எனும் முறையில் பேராசிரியர் நூற்பா விளக்கம் செல்கிறது. சொற்பொருள் விளக்கம் பேராசிரியர் உரையால் மெய்ப்பாட்டியியலும் உவமவியலும் பெரிதும் விளக்கம் பெற்றுள்ளன. கற்போரின் மனத்தைக் கவருகின்ற வகையில் பொருள் விளக்கம் அமைந்துள்ளன. சொற்களுக்குப் பொருள் தரும்போது வெறும் அகராதிப் பொருளை மட்டும் தராமல், நுண்பொருளையும் நயப்பொருளையும் அக்கால வழக்கத்தினையும் கலந்து தருதல் உரையாசிரியர்களின் இயல்பாகும். அவ்வகையில் பேராசிரியர் உரை நயம் மிக்கது. அவற்றுள் சிலவற்றைக் காண்போம். இறையெனப்படுவர் - தந்தையரும் ஆசிரியரும் அரசரும் முதலாயினார். (மெய்ப்: 8) இசைமை - இன்பமும் பொருளும் இறப்பப் பயப்பினும் பழியொடு வருவன செய்யாமை. கொடை - உயிரும் உடம்பும் உறுப்பும் முதலாகிய எல்லாப் பொருளும் கொடுத்தல், (மெய்ப்: 9) விளையாட்டு - ஆறும் குளனும் காவும் ஆடிப் பதியிகந்து வருதல் (மெய்ப்: 11) அடக்கம் - உயர்ந்தோர் முன் அடங்கி யொழுகும் ஒழுக்கம்; அவை: பணிந்தமொழியும் தணிந்த நடையும் தானைமடக்கலும் வாய்புதைத்தலும் முதலாயின. அன்பு - அருட்கு முதலாகி மனத்தின் நிகழும் நேயம்; அஃதுடையார்க்குப் பிறர்கத் துன்பம் கண்டவழிக் கண்ணீர் விழுமாகலின் அவ்வருளானே அன்புடைமை விளங்கும் என்பது. இவையெல்லாம் தத்தம் மனத்தின் நிகழ்ச்சியை வெளிப்படுப்பன ஆகலின் மெய்ப்பாடு எனப்பட்டன. (மெய்ப்: 12) கலங்கி மொழிதல் - கையொடு பட்ட கள்வரைப் போலச் சொல்லுவனவற்றைத் தடுமாற்றம் தோன்றச் சொல்லுதல், (மெய்ப்: 18) ஊடல் - உள்ளத்து நிகழ்த்தனைக் குறிப்புமொழியானன்றிக் கூற்றுமொழியான் உரைப்பது (செய்: 185) வனப்பு - பெரும்பான்மையும் பல உறுப்புத் திரண்டவழிப் பெறுவதோர் அழகு (செய்: 235) வாயுறை - வாய் - வாய்மொழி; உறை - மருந்து. செவியுறை - செவிமருந்து சேரி மொழி - பாடிமாற்றங்கள் (செய்: 241) மக்கள் - முப்பத்திரண்டு அவயவத்தான் அளவிற்பட்டு அறிவொடு புணர்ந்த ஆடூஉ மகடூஉ மக்கள் எனப்படும் (மரபு: 33) தொகைப்பொருள் விளக்கம் சுவைப்பொருள் - வேம்பு, கடுவு, உப்பு, புளி, கரும்பு போல்வன (மெய்ப்: 1) வாழ்த்தியல் வகை - கடவுள், முனிவர், பசு, பார்ப்பார், அரசர், மழை, நாடு என்பன (செய்: 109) படைப்பகுதி - வேலும் வாளும் வில்லும் முதலாயின. (மரபு: 76) எண்வகை உணவு - பயறு, உழுந்து, கடுகு, கடலை, எள், கொள்ளு, அவரை, துவரை (மரபு: 78) இளம், - நெல், காணம், வரகு, இறுங்கு, தினை, சாமை, புல்லு, கோதுமை (மரபு: 79) எனச் சொற்கும், தொகைச்சொற்கும் பொருள் விளக்கம் தருகிறார். ச. குருசாமி 6. இலக்கணத்தில் எது இடம்பெற வேண்டும்? கருத்தரங்கத் தலைப்பு, கேள்வி உருவத்தில் இருப்பினும் பலவகையான விளக்கங்களுக்கு இடம் தருவதாக அமைந் துள்ளது. கருத்தரங்கப் பொருள் அத்தகையதாக இருக்கலாம்; அல்லது கேள்வி அமைப்பு அத்தகைய பல பொருள் விளக்கத்திற்கு இடம் தந்திருக்கலாம். ஒரு மொழியின் சொல்லுருவங்களின் அடிப்படையில் இலக்கணம் ஒன்று உருவாகும்போது அதில் விதிகளும், விதிவிலக்குகளும் இடம் பெறும். இலக்கணத்தை வரையறை செய்கின்றவர்கள் அவ்வாறுதான் கோடிட்டுக் காட்டுவர். இத்தகைய இலக்கணத்தில் இரு முகங்களுண்டு; 1. மொழிச் சொல்லுருவம் ஆகிய அதன் உள்ளீடு 2. பொதுமையான விதிகளும் சிறப்பு விதிகளும் அடங்கிய இலக்கண அமைப்புமுறை என்பன அதன் இரு முகங்கள். மற்றொரு வழியில் சொன்னால் விதிகளும் சொற்பட்டியல்களும் அடங்கியவை இலக்கணம் என்று கூற இயலும். முதல் முகத்தை உள்ளீடு என்றும் இரண்டாவது முகத்தை அமைப்பு நிலை என்றும் நாம் பெயரிட்டுக் கொள்ளலாம். `எது என்ற கேள்விக் குறியீடு, உள்ளீட்டைக் குறிக்கலாம்; அல்லது, அமைப்பு நிலையைக் குறிக்கலாம். ஒரு மொழியின் சொல்லுருவம் அளவற்றுப் பரந்து கிடப்பது; பலதரப்பட்டது. அவற்றுள் எவை எவை உள்ளீடாக அமைய வேண்டும் என்று பொருள் செய்துகொண்டால் சொல்லுருவம் மட்டும் பற்றிய கேள்வியாக அது மாறும், அதனைச் சற்று விளக்க வேண்டும். ஓர் இலக்கணம் எல்லா மொழி உருவங்களையும் உள்ளடக்கி உருவாவது; அல்லது போதுமான சொல்லுரு வங்களை உள்ளடக்குவது; அல்லது சில சொல்லுருவங்களை மட்டும் உள்ளடக்குவது என்று மூன்றாக வேறுபடுத்திட முடியும். ஒரு மொழியின் எல்லாச் சொல் உருவங்களையும் முன்னர் எழுந்த, இப்போது எழுகின்ற, வருங்காலத்தில் எழும் உருவங்களையும் உள்ளடக்குவது இயலாத அமைப்பாகும். ஏனினல் அந்தச் சொல்லுருவங்கள் பலதரப்பட்டவையாக இருக்கும். அந்த இலக்கணத்தின் உள்ளீடாக வழக்குகளையும் இருமொழி பேசுவோரின் பேச்சையும் உட்கொண்டால் விதிகள் பொதுவாக அமையாது. தனிச் சொற்களைக் குறிப்பதாகப் பெரும்பாலும் அமையும். மலையாள இலக்கண ஆசிரியர் ஏ.ஆர். இராஜ இராஜ வர்மா தனது கேரள பாணினீயத்தில் சமகிருத உருவங்களுக்கும் இலக்கண விதி அமைக்க முற்பட்டதால் பொது விதிகளனைத்தும் சிறப்பு விதிகளாக, சொற்பட்டியல்களாக மாறின. எனவே ஒரு மொழியின் எல்லாச் சொல்லுருவங்களையும் உள்ளீடாகக் கொண்டால் இலக்கணம் சொற்பட்டிகையாக மாறும்; பொது விதிகளை வகுக்க இயலாது. அதற்கு மாறாகப் போதிய சொல்லுருவங்களை மட்டும் ஓர் இலக்கணம் அடிப்படையாகக் கொண்டால், அமைப்பு முறையைச் செம்மையாக அமைத்திட முடியும். அது அடிப்படை யாகக் கொள்ளும் சொல்லீடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டவையாக இருக்கும். இந்த முறையைப் பின்பற்றினால் மற்றொரு சிக்கல் எழும். இலக்கணத்தில் உள்ளீடாக அமைந்த செல்லுருவம் போதுமானதா என்று முடிபு செய்வது எவ்வாறு? என்பதே அந்தச் சிக்கல். ஏறத்தாழ மூவாயிரம் வாக்கியங்களைக் கொண்ட உள்ளீட்டை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்பட்ட விதிகள், அம்மொழி உருவங்கள் அனைத்தையும் விளக்குகின்றனவா என்று சோதிக்கலாம். ஒரு மொழியின் உள்ளீடு போதுமானதா என்று அறிவதற்கு, ஒரு குறிப்பிட்ட அளவிலான வாக்கியங் களைத்தாம் அடிப்படையாகக் கொண்டுள்ளோம். அந்த வாக்கியங்களின் தொகுப்பு வரையறையற்றதன்று. திட்டமானது, இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் என்ற எண்ணிக்கை அளவு பெற்றது. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பதில் வாழ்ந்த மொழியியலாளருக்குத் திட்டமான சொல்லுருவங்கள், தப்பிப் பிழைக்கும் ஒருவழி நிலையாக இருந்தது. யாரேனும், ஒரு விதிக்கு மாறுபட்ட சொல்லுருவங்கள் காணப்படுகின்றன என்று குரலெழுப்பினால், `எனது உள்ளீட்டு வாக்கியங்களில் அந்தச் சொல்லுருவங்கள் காணப்படவில்லை என்று சமாதானம் கூறி நழுவினர். அப்போதெல்லாம் தப்பிப் பிழைக்கும் அந்த வழியை மேற்கொள்வர். `அந்த உருவம் எனது வாக்கிய உள்ளீட்டில் இல்லை அல்லது `எனது களஆய்வுக் குறிப்பில் அந்தச் சொல்லுருவமில்லை என்று கூறித் தப்பினர். இலக்கண விதிகளுக்கு எதிர் உருவங்கள் இருப்பதை அமைப்பியலாளர்கள் (ட்ரக்சுரலிட்) சுட்டிக்காட்டினர். எனவே இலக்கணத்தின் இயல்பை வரையறை செய்வது வரை, எத்தகைய சொல் லுருவங்கள் இலக்கணத்தில் இடம்பெற வேண்டும் என்று திட்டமாகக் கூறாமல் இருந்ததைப பெரும் குறையாக மொழியியலாளர்கள் கருதவில்லை. இந்திய இலக்கண ஆசிரியர்களனைவரும் உள்ளீட்டுச் சொல்லுருவங்களின் குறைகளை உணர்ந்திருந்தனர். அதனால் தான் தமது இலக்கண விதிகளின் இறுதியில் `அறிஞர்களின் பயன்பாட்டை நோக்கித் தெரிந்திடுக அல்லது `அறிஞர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்க என்ற சூத்திரமும் அமைத்திருக் கின்றனர். `சேஷம் பிரயோகாத்ஞேயம் (இங்குக் கூறாதன வற்றைப் பயன்பாட்டால் தெரிந்துகொள்க); `வல்லார் வாய்க் கேட்டுணர்க (இங்குக் கூறாதவற்றை அறிஞர்கள் பால் கேட்டுணர்க) போன்ற சூத்திரங்கள் அல்லது விளக்கங்கள் மலையாளத்திலும் தமிழிலும் மரபுவழிபபட்ட இலக்கணங்களில் காணப்படுகின்றன. மூன்றாவது கூறிய குறைந்த அளவிலான உள்ளீடு, ஒரு குறிப்பிட்ட இலக்கணப் பகுப்பிற்குப் பயன்படுத்தும்போது, போதியதாக அமையினும் மொத்த இலக்கணத்திற்கு அது அளவிற் குறைந்ததாகவே தென்படும். பிறவினை உருவங் களனைத்தையும் உள்ளீடாக அமையும் இலக்கணத்திற்கு வாக்கிய உருவங்கள் அனைத்தையும் அது அடிப்படையாகக் கொண்டாலும் மொத்த இலக்கணத்திற்கு அந்த வாக்கிய உள்ளீடுகள் போதுமானவையாக அமையா. பாடஞ்சொல்லும் வகுப்புகளில் பயன்படும் எடுத்துக்காட்டு உருவங்களை மட்டும் கொண்ட இலக்கணம் முதிராத குழந்தை நிலையிலுள்ள இலக்கணமாக அமையும். யாரும் அதனைத் தக்க இலக்கணமாகக் கருத மாட்டார்கள். எனவே மூன்றாவது விளக்கத்தை நாம் நிராகரித்துவிடலாம். இரண்டாவது பிரிவிற் கூறிய இலக்கணத்தின் அமைப்புப் பற்றி இதுவரை நான் எதுவும் கூறவில்லை. எல்லா இலக்கணங்களிலும் பொது விதிகளிலும் சிறப்பு விதிகளும் காணப்படும். மற்றொரு வழியில் சொன்னால் ஒவ்வொரு இலக்கணத்திலும் விதிகளும் சொற்களின் பட்டியலும் காணப்படும். உள்ளீட்டுச் சொற்கள் பெருகப் பெருக பொது விதிகள் குறைந்து சிறப்பு விதிகள் பெருகும். சிறப்பு விதிகள் அல்லது சொற்பட்டியலைக் குறைக்க, உள்ளீட்டுச் சொற்களை அறிஞர்கள் குறைக்க முயல்வர். `அவை தரங் குறைந்தவை அல்லது `சீரிய அறிஞர்களுடைய பேச்சோ அல்லது கேள்வியோ அல்ல என்று அவற்றை நிராகரித்துவிடுவது ஒரு வழி. பிரமாண இலக்கணமாக (ரெஃபரென் கிராமர்) இரண்டு அண்மையில் வெளிவந்துள்ளன. அதில் ஒன்று, சாமுவல் மார்ட்டின் `சப்பான் மொழியின் பிரமாண இலக்கணம் (ரொஃபரென் கிராமர் ஆஃப் ஜாபனீ) என்ற நூலில், பொது விதிகளும் சொற்பட்டியலும் தந்திருக்கின்றார். விதிக்கு எதிரான சொற்களை வருகை முறைக்கு ஏற்பக் கொடுத்திருக்கின்றார். ஆட்டோ யெப்பர்சன் எழுதிய `ஆங்கில இலக்கணத்தின் முக்கிய அம்சம் (எசன்சியல் ஆஃப் இங்கிலீ கிராமர்) என்ற நூல் இரண்டாவது நூலாகும். அந்த நூலிலும் பொது விதிகளும் அவற்றிற்கு எதிரான எடுத்துக்காட்டுகளும் தரப்பட்டுள்ளன. எனவே பெருகிய உள்ளீட்டால் பொது விதிகளும் எதிரான சொற்பட்டியலும்தாம் கொடுத்திட முடியும் என்பது தெளிவாகின்றன. புறநிலையில் (சர்ஃபேஃ லெவல்) அவ்வாறு தான் செய்ய இயலும். எல்லாச் சொற்களையும் விதி மூலம் தோற்றுவித்திட முடியாது என்பது உறுதியாகிறது. அகநிலை அமைப்பை (டீப்லெவல்) கணக்கிலெடுத்து விதியமைத்தால், கூடுதலளவில் மொழி உருவங்களுக்கு விதி அமைத்திட இயலும் என்று இப்போது தெளிவாகி வருகிறது. அவ்வாறு செய்யினும் விதிக்கு எதிரான சொற்களைத் திருப்தியாக விளக்க முடியுமா என்று அம்முறையிலும் தெளிவாகவில்லை. விதி பிழைத்த சொற்கள் பலவானால் பொது விதி மாற்றப்படும். அல்லது சிறப்பு விதிகளின் எண்ணும் மிகுதியாக இருக்கும். விதிக்கு எதிரான சொல்லுருவங்கள் சிலவாகையால் அவை புறக்கணிக்கப்படும்; இலக்கணத்திற்கு அவை ஒரு பொருட்டல்ல என்று ஒதுக்கப்படும். ஒரு மொழியின் எல்லா உருவங்களையும் - வாக்கியங்கள் சொற்கள், ஒலிக்கணங்கள் அனைத்தையும் ஒரு இலக்கணம் விவரித்து உறுதிப்படுத்த இயலுமா? அவ்வாறு செய்யும் இலக்கணம் என்ன வகையான இலக்கணம் என்று கூற முடியுமா? விதிகளடங்கிய இலக்கணம் என்றா? அல்லது சொற்பட்டியல் இலக்கணம் என்றா? அத்தகைய சொற்பட்டியல்களைக் கணிப்பொறி தொகுத்துத் தருவதாகக் கொண்டாலும், அந்தச் சொற்பட்டியல்களனைத்தும் ஒரு இலக்கணத்தில் இடம் பெறுமாறு செய்ய இயலுமா? என்பன போன்ற கேள்விகள் எழுவது இயல்பு. இலக்கண அமைப்பு இயல்புகள் பற்றிய விவாதமும் விளக்கமும் இன்னும் முற்றுப்பெறாததால் முடிந்த முடிவாக எவ்வித விளக்கமும் அந்தக் கேள்விகளுக்கு இப்போது அளிக்க இயலாது. எனினும் ஒன்றை மட்டும் உறுதியாகக் கூற இயலும்; பலதரப்பட்ட சொல்லுருவங்களை உள்ளீடாக இட்டால் இலக்கணத்தில் பொது விதிகள் குறைவாகவும் சொற்பட்டியல் அல்லது சிறப்பு விதிகள் கூடுதலாகவும் காணப்படும் என்பது மட்டும் திட்டமாகக் கூற இயலும். மற்றொரு வகையில் கூறினால் இலக்கணத்திற்கும் அகராதிக்குமுள்ள வேறுபாடு மிகக் குறைவாகவே இருக்கும். மரபுவழி இலக்கண ஆசிரியர்கள், பொது விதிகளின் செயற்பாட்டு வல்லமையைப் பெருக்க, உத்தி ஒன்றைக் கையாண்டு விதிகளை விளக்குகின்றனர். அதன் மூலம், பெருமளவில் சொல்லுருவங்களை விதியால் விளக்க முயன்று வெற்றி காண்கின்றனர். சமகிருதத்தில் அதனை `யுக்தி என்றழைப்பர். தொல்காப்பியர் அதன் பிரிவுகளைத் தொகுத்துக் கூறியுள்ளார். அவர் பின் வந்த யாப்பருங்கால விருத்தியின் ஆசிரியர் சிறிய மாறுபாடுகளுடன் அவற்றைத் தொகுத்துள்ளார். நன்னூலாரும் அவற்றை வரிசைப்படுத்தியுள்ளார். அத்தகைய உத்திகளைக் கௌடிலீயரின் அர்த்த சாத்திரமும், ஆயுர்வேத நூல்களும் தொகுத்துள்ளன. சட்ட நிபுணர்கள் சட்டத்தை விளக்கும் போது ஒரு விளக்க முறையைப் பின்பற்றுவதையும் நாம் இங்கே நினைவு கூர்வது நன்று. அரசாங்க அமைப்பு முறை பல ஆகையால், அர்த்த சாத்திரமும் அந்த உத்திகளைப் பின்பற்றுகின்றது. நோய்களும், நோய் நீக்கும் மருந்தும் பலதரப்பட்டவை ஆகையால் ஆயுர்வேதமும் அவற்றைப் பின்பற்றுகின்றது. சட்ட விதிகளை உள்ளடக்கும் வழக்குகள் கணக்கற்றவை. ஆகையால் வழக்கு மன்றத்தில் நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் ஒருவகையான உத்திமுறையைக் கையாண்டு சட்டவிதிகளை விளக்கி விரிவாக்குகின்றனர். அவற்றைப் போன்றே உள்ளீட்டுச் சொற்கள் கணக்கற்றவையாக இருப்பதால் விதிகளை உத்தி மூலம் விரிவாக்கி இலக்கணத்தில் செயல்படுத்துகின்றனர். தொல்காப்பியம் முதலிய இலக்கணங்கள் கூறும் உத்திகளைப் பின் இணைப்பில் அவற்றின் பொருளுடன் வரிசைப்படுத்தியுள்ளேன். உத்திகளைக் கையாண்டு விளக்கம் கூறும் வழிகள் இருவகைப்படும். இலக்கணம் கூறும் விதிகளில் உள்ள குறைபாடுகளை நீக்கப் பயன்படுத்தல் 2. புதிய சொல்லுருவங்கள் அவ்வப்போது தோன்றும்போது அவற்றையும் விதிக்குள் அடக்கல் ஆகிய இரு முனைகளில் உத்திகளைப் பயன்படுத்துகின்றனர். இலக்கண விதிகள் அந்த உத்திகளால் நிரந்தர நிலையைப் பெறுகின்றன. அதன் மூலம் ஒவ்வொரு இலக்கணமும் காலத்தால் மங்காத நிலையைப் பெறுகிறது. ஆனால் அந்த உத்திகளைப் பயன்படுத்தி விதிகளை விரிவாக்குவது அல்லது சுருக்குவது போன்ற முயற்சிகளை உரையாசிரியர்கள்தாம் செய்திட வேண்டும். எனவே அந்த விளக்கத்தை உரையாசிரியர்கள் சில முறைகளைப் பின்பற்றிச் செய்கின்றனர். சிந்தனை வளமுடைய உரையாசிரியர்களால் ஓர் இலக்கணம், அதன் மூலம், நிரந்தரம் பெறுகின்றது. விரிந்த செயற்பாட்டுத் திறமையையும் பெறுகின்றது. கருத்தரங்கத் துவக்கவுரையை ஆற்றுபவர்கள் தமது உரைச் சுருக்கத்தால் பிறர் பாராட்டைப் பெறும் உத்தியைத் தெரிந்து கொள்வது நல்லது. பல அமர்வுகளில் இலக்கண அம்சங்களை விரிவாக ஆராய இருக்கும் உங்களிடம் உத்திகளைப் பற்றிய விளக்கத்தையும், இலக்கணத்தில் அவை பெறும் இடத்தையும் விரிவாகக் கூறுவது உங்கள் நேரத்தை வீணாக்கும் என்று அஞ்சுகிறேன். யாரேனும் உத்திகளைப் பற்றி இங்கே கேள்வி யெழுப்பினால் பின்னர் நான் விளக்க முயல்கிறேன். மரபு இலக்கணங்கள் அனைத்தும் விதிகளை எக்காலத்திற்கும் ஏற்றவையாகப் போற்றவே விரும்புகின்றன. விடுபட்ட சொல்லுருவங்களை விதிக்குள் அடக்குவதற்கும் வருங்காலத்தில் பழக்கத்தில் வரும் சொல்லுருவங்களைத் தாம் கூறிய விதியால் விளக்கவும் முயல்கின்றன. அதனால் உரைகாரர்களும் தமது அறிவுத் திறமையாலும் விளக்க ஆற்றலாலும் முக்கிய இடமும் மதிப்பும் பெறுகின்றனர். ஆனால் அவர்கள் பெறும் பாராட்டு, சூத்திரகாரரை அடுத்துத்தான். எனவே மரபு இலக்கணங்களுக்கு இரு தளங்கள் உண்டு. 1. சூத்திரகாரரின் இலக்கணம் 2. விருத்தியுரைகாரரின் இலக்கணம் என்பவையே அத்தளங்கள். மேலே கூறிய விளக்கங்களால் எல்லா மரபு இலக்கணங் களையும் காலங்கடந்தவை என்று கூறிவிட முடியாது. ஆனால் திறமையான விருத்தியுரைகாரரையுடைய இலக்கணம் காலங் கடந்து நிற்கும்; நிரந்தரமாக மாறும் தன்மை உடையது எனக் கூற முடியும். பிற்சேர்க்கை 1. நுதலியது அறிதல்: `சூத்திரத்திற்கேற்பக் கருதி உணரப்படும் பொருள் இன்னதென்று கொள்ள வைத்தல். 2. அதிகார முறைமை: `முன் சூத்திரப் பொருள் பின் சூத்திரங்கள் பெரும்பாலானவற்றிற்கும் பெற வைத்தல். 3. தொகுத்துக் கூறல்: `தொகுத்து யாத்த நூலிலும் தெளிவிற்காகத் தொகுத்துக் கூறல். 4. வகுத்து மெய் நிறுத்தல்: `தொகுத்தவற்றை வகை செய்து கூறல்; எடுத்துக்காட்டு, இனம் அவை, வல்லினம், மெல்லினம், இடையினம் என்றல். 5. அவ்வயின் மொழியாததனை மொழிந்த பொருளோடு ஒன்ற முட்டின்றி முடித்தல்; `எடுத்தோதிய பொருண்மைக்கு ஏற்ப அப்பொருளில் சொல்லாத ஒன்றையும் கொள்ள வைத்தல். 6. வராததனை வந்தது முடித்தல்: இலக்கணம் வராத சூத்திரத்தான் அங்ஙனம் வந்த பொருண்மைக்கு வேண்டும் முடிவு கொள்ளச் செய்தல். 7. வந்தது கொண்டு வாராததுணர்த்தல் `பின்னொரு வழி வந்தது கொண்டு முன் வராததோர் பொருளறிய வைத்தல். 8. முந்து மெழிந்ததன் தலைதடுமாற்றம்; `முன்கூறிய முறையல்லாமல் பின்னொரு கால் தலை தடுமாற்றமாகக் கூறுதல். 9. ஒப்புக் கூறல்: `ஒன்று கூறும்போது இருபொருள் குறித்ததென்று இரட்டுறச் செய்தல்.. 10. ஒருதலை மொழிதல்: `ஒரு அதிகாரத்தில் சொல்ல வேண்டுவதனை வேறு அதிகாரத்தில் காணப்படும் இலக்கணம் பொருந்தும் என்று அங்கே கொள்ள வைத்தல். 11. தன் கோட் கூறல்: `சொல்லாதன பலவாயினும் அந்நூலுக்கு வேண்டுவனவற்றை மட்டும் கூறுதல். 12. முறை பிறழாமை: `சில பொருளைக் காரணமின்றி வரிசைப்படுத்திய பின்னர் அவ்வரிசையினையே பின்பற்றி இலக்கணம் கூறல். 13. பிறன் உடம்பட்டது தானுடம்படுதல்; `வழக்கில் எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளதோ அதைப் போன்று தானும் அமைத்தல். 14. சிறந்தது காத்தல்: `முன் கூறிய சூத்திரப் பொருளைப் பின்னொரு சூத்திரத்தால் விளக்குதல். 15. எதரது போற்றல்: `வருகின்ற சூத்திரத்தின் பொருளுக்கேற்ப வேறொரு பொருளை முன்னே கூறுதல். 16. மொழிவாமென்றல்; `ஒரு பயன் கருதி முன்னே கூறுவோம் என்று சொல்லல். 17. கூறிற்றென்றல்; முன்கூறிய இலக்கணத்தை மற்றொரு பொருளுக்குக் கூறும்போது மீண்டும் அந்த சூத்திரத்தைக் கூறாது முன்கூறிய சூத்திரத்தான் கொள்ளுதல். 18. தன் குறியிடுதல் `உலகக் குறியின்றித் தன்னூலுள் வேறு குறியிட்டு ஆளல். 19. ஒருதலையின்மை; `எல்லா இடத்தும் ஒருப்போல வாராது, வரும் பொழுது அங்கே வருவது என்றல். 20. முடிந்தது காட்டல்; `எல்லாம் விளக்கமாகக் கூறாது, தொல்லாசிரியர் கூறினாரென்று சொல்லுதல். 21. ஆணை கூறல்: `இவ்வாசிரியரின் கருத்து இதுதான் என்று உறுதியாகக் கொள்ள வைத்தல். 22. பல்பொருட் கேட்பின் நல்லது கோடல்: `பல பொருளில் நல்லதைக் கொள்ளல். 23. தொகுத்த மொழியான் வகுத்தனர் கோடல்: `ஒரு வாய்பாடு எடுத்து ஓதப் பல வாய்பாடு அதற்கு வந்து பூணும் என்று வகுத்துக்கொள்ள வைத்தல்.. 24. மறுதலை சிதைத்துத் தன் துணிவு உரைத்தல்: `ஒருவன் ஒரு பொருளை வேறுபடக் கூறின் அவ்வேறுபாட்டினை மாற்றித் தான் துணிந்தவாறு அவனுக்குக் கூறல். 25. பிறன்கோள் கூறல்: `தன்னூல் அடிப்படையில் பிற நூலுக்கு இலக்கணம் கொள்றுமாறு கூறல். 26. அறியாது உடம்படல்: `தான் கூறிய இலக்கணத்திற்கு வேறுபட வருவன தான் அறியவில்லை என்று கூறி அதனைப் புறநடையாக் கூறல். 27. பொருளிடை இடுதல்: `சொல்லுகின்ற பொருளின் இடையே வேறொரு பொருளைச் சொல்லுதலும் சொல்லுகின்ற பொருளுக்கு ஏற்ற பொருளை ஆண்டுச் சொல்லாது பிறிதொரு வழிச் சொல்லுதலும். 28. எதிர்பொருளுணர்த்தல்: முன்னூற்களால் இலக்கணத் திற்கு திரிபு படும் என்று உணர்ந்து எதிர்காலத்திற் கேற்றதோர் இலக்கணம் செய்தல். 29. சொல்லின் எச்சம் சொல்லியாங்கு உணர்த்தல்; `சொல்லின் ஆற்றலால் பெறப்படும் பொருளையும் எடுத்து ஓதிய முறையில் கொள்ள வைத்தல். 30. தந்து புணர்ந்துரைத்தல்: `உள்பொருளல்லாததனை உள போலத் தந்து கூட உணர்த்தல். 31. ஞாபகங் கூறல்: `சுருக்கமாகச் சொல்லாது அரிதும் பெரிதுமாக நலிந்து செய்து மற்றதனானே வேறுபல பொருள் உணர்த்தல். 32. உய்த்துக் கொண்டுணர்த்தல்: `ஒரு பொருளைச் சொல்லும்போது அதன் கண்ணே மற்றொரு பொருளைக் கொணர்ந்து கொண்டறியுமென்று தோன்றச் செய்தல். உத்திகள் முப்பத்திரண்டுக்கும் மேற்பட்டவை என்று நச்சினார்க்கினியர் உணர்ந்துள்ளதையும் இங்கே குறிப்பிட வேண்டும். யாப்பருங்கால விருத்தியில் கூறப்பட்டுள்ள முப்பத்திரண்டு உத்திகளும் பாடலானார் கூறியவை என்று குறிக்கப்பட்டுள்ளது என்றும், அவரைப் பின்பற்றி நவநீதப் பாட்டியல் உரையிலும் சிங்கார வடிவேலு முதலியார் செய்த அபிதான சிந்தாமணியிலும் கூறப்பட்டுள்ளன என்றும் கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை ஆய்வு மாணவர் திரு. சண்முகம் கூறினார். பாடலனார் என்ற பெயர் பாடலியார் என்றிருந்ததால், அர்த்த சாத்திரம் செய்த கௌடிலீயர் பாடலிபுத்திரனார் ஆகையால் அவரைக் குறிக்கலாம் என்று தோன்றுகிறது. அர்த்த சாத்திர உத்திகளுடன் மேலே குறிப்பிட்டவற்றை இனிமேல்தான் ஒப்புநோக்க வேண்டும். - வ.அய். சுப்ரமணியம் கட்டுரைகள், பக். 49- 56 தொகுப்பு: அருண் சுப்பிரமணியன் நூற்பா நிரல் (நூற்பா எண்) அஃதான் றென்ப 394 அஃதொழித்து ஒன்றின் 405 அகப்பாட்டு வண்ணம் 536 அகவல் என்பது 393 அகன்று பொருள் 522 அகைப்பு வண்ணம் 541 அங்கதந் தானே 436 அங்கதப் பாட்டு 471 அசைகூன் ஆகும் 360 அசைச் சீர்த்தாகும் 385 அசையுஞ் சீரும் 323 அடக்கியல்வாரம் 456 அடிதொறும் தலையெழுத்து 404 அடிநிமிர் கிளவி 494 அடியிகந்து வரினும் 495 அடியிறந்து வருதல் 346 அடியின் சிறப்பே 347 அடியுள் ளனவே 345 அடுக்கிய தோற்றம் 311 அடைநிலைக் கிளவி 447 அணங்கேவிலங்கே 256 அணங்கேவிலங்கே 256 அதுவே வண்ணகம் 451 அதுவே.. ஈரிரு 479 அதுவே...ஓரிரு 486 அதுவே..பிசியொடு 493 அந்தணாளர்க் காசு 637 அந்தணாளர்க்கு 627 அந்நிலை...அறம் 418 அந்நிலை...வஞ்சி 343 அப்பெயர்க் கிழமை 611 அம்போ தரங்கம் 463 அல்கு றைவரல் 263 அவ்வம் மக்களும் 521 அவ்விய லல்லது 398 அவற்றுட், சூத்திரம் 481 அவற்றுட், பாஅவண்ணம் 526 அவற்றுட், பார்ப்பும் 559 அவற்றுள், ஒத்தாழிசை 443 அவற்றுள், நூலெனப் 478 அவற்றுள், மாத்திரை 314 அவைதாம், அன்ன 286 அவைதாம், அன்ன 286 அவைதாம், நூலி னான 477 அவைதாம், பாஅ வண்ணம் 525 அவையடக் கியலே 425 அளபெடை தலைப்பெய 401 அளபெடை யசைநிலை 329 அளபெடை வண்ணம் 531 அளபெழின் அவையே 409 அளவடி மிகுதி 371 அளவியல் வகையே 475 அளவுஞ் சிந்தும்370 அறுசீ ரடியே 376 அன்ன பிறவும் 267 அன்ன ராயினும் 639 அன்னவாங்f287 அன்னவென் கிளவி 288 ஆங்கவை ஒருபா லாக 260 ஆங்கனம் விரிப்பின் 363 ஆசிரிய மருங்கினும் 379 ஆசிரியநடைத்தே 420 ஆசிரியப் பாட்டின் 469 ஆசிரியம் வஞ்சி 417 ஆண்பால் எல்லாம் 605 ஆயிரு தொடைக்கும் 406 ஆவு மெருமையும் 575 ஆற்றலொடு புணர்ந்த 604 இசைநிலை நிறைய 339 இடைச்சுர மருங்கின் 506 இடைநிலை...blhL 444 இடைநிலை...nl 446 இடையிரு வகையோர் 631 இடையும் வரையார் 381 இதுநனி பயக்கும் 515 இயலசை முதலிரண்டு 318 இயலசை யீற்றுமுன் 328 இயலசை...ka¡f« 325 இவண்ணம் யற்சீ ரிறுதிமுன் 331 இயற்சீர் வெள்ளடி 374 இயற்சீர்ப் பாற்படுத்து 340 இயைபு வண்ணம் 530 இரட்டைக் கிளவி 297 இரலையுங் கலையும் 599 இருசீர் இடையிடின் 411 இருவகை உகரமோடு 316 இலையே தளிரே 642 இவ்விடத் திம்மொழி 519 இவையும் உளவே 269 இழுமென் மொழியான் 550 இளிவே இழவே 253 இறப்பே நிகழ்வே 514 இறுவாய் ஒன்றல் 408 இன்சீர் இயைய 342 இன்பத்தை வெறுத்தல் 270 இன்பமும் இரும்பையும் 520 இனிதுறு கிளவியும் 303 ஈரசை கெரண்டும் 324 ஈற்றய லடியே 380 உய்த்துணர் வின்றி 516 உயர்ந்தன் மேற்றே 278 உயிரில் எழுத்தும் 356 உருட்டு வண்ணம் 544 உரைஎடுத்து அதன்முன் 654 உவமத் தன்மையும் 309 உவமப் பொருளை 296 உவமப் போலி ஐந்து 299 உவமையும் பொருளும் 283 உறுப்பறை குடிகோள் 258 ஊரு மயலும் 503 ஊரும் பெயரும் 629 எண்ணிடை ஒழிதல் 458 எண்ணு வண்ணம் 540 எண்வகை இயல்நெறி 517 எதிர்மறுத் துணரின் 664 எருத்தே கொச்சகம் 464 எருமையு...அன்ன 594 எருமையு...நாகே 617 எருமையு...வரையார் 571 எழுசீ ரடியே 377 எழுசீ ரிறுதி 388 எழுத்தளவு எஞ்சினும் 355 எழுத்து முதலா 390 எழுத்தொடும் சொல் 491 எழுநிலத் தெழுந்த 476 எள்ள லிளமை 252 எள்ள விழைய 289 ஏந்தல் வண்ணம் 543 ஏழெழுத் தென்ப 349 ஏற்புடைத் தென்ப 592 ஏறு மேற்றையும் 557 ஏனை ஒன்றே 450 ஐவகை...விரிக்குங்காலை 362 ஐவகையடியும் 364 ஒட்டக மவற்றோடு 573 ஒட்டகங் குதிரை 607 ஒண்டொடி மாதர் 505 ஒத்த காட்சி உத்தி 665 ஒத்த சூத்திரம் 653 ஒத்தா ழிசைக்கலி 442 ஒத்தா ழிசையும் 427 ஒத்துமூன் றாகும் 454 ஒப்பொடு புணர்ந்த 488 ஒரீஇக் கூறலும் 308 ஒருசீ ரிடையிட்டு 410 ஒருநெறி யின்றி 483 ஒருநெறிப் பட்டாங்கு 513 ஒருபான் சிறுமை 462 ஒருபொரு...சூத்திரந் 480 ஒருபொரு...வெள்ளடி 465 ஒருபோ கியற்கையும் 459 ஒரூஉ வண்ணம் 539 ஒழிந்தோர் கிளவி 507 ஒழுகு வண்ணம் 538 ஒற்றள பெடுப்பினும் 330 ஒற்றொடு புணர்ந்த 554 ஒற்றெழுத் தியற்றே 320 ஒன்றறி வதுவே 582 ஒன்றே மற்றும் 487 கட்டுரை வகையான் 435 கடமையும் மரையும் 576 கடல் வாழ் சுறவும் 595 கடுப்ப ஏய்ப்ப 290 கண்ணியுந் தாரும் 634 கண்ணினுஞ் செவியினும் 275 கல்வி தறுகண் 257 கலித்தளை மருங்கின் 336 கலித்தளை யடிவயின் 337 கலிவெண் பாட்டே 472 கலையென் காட்சி 600 கவரியுங் கராமும் 572 காமப் புணர்ச்சியும் 498 காயே பழமே 643 கிழக்கிடு பொருளோடு 280 கிழவன் தன்னொடும் 504 கிழவி சொல்லின் 301 கிழவோட்குவமம் 304 கிழவோற் காயின் 302 கிழவோற் காயின் 305 கிளரியல் வகையின் 496 குஞ்சரம் பெறுமே 574 குட்டம் எருத்தடி 428 குட்டியும் பறழும் 565 குரங்கி னேற்றினை 623 குரங்கு...மந்தி 622 குரங்கு...மூகமும் 577 குழவியும் மகவும் 578 குற்றிய லுகரமும் 322 குறளடி முதலா 369 குறிலிணை உகரம் 317 குறிலே நெடிலே 315 குறுஞ்சீர் வண்ணம் 533 கூழை விரித்தல் 262 கூற்றும் மாற்றமும் 468 கொச்சக வொருபோகு 460 கொச்சகம் அராகம் 433 கோடுவாழ் குரங்கும் 568 கோழி கூகை 610 கைக்கிளை தானே 431 கைக்கிளை முதலா 497 சித்திர வண்ணம் 534 சிதலும் எறும்பும் 585 சிதைவில என்ப 661 சிதைவெனப் படுவது 663 சிறப்பே நலனே 279 சீர்கூ னாதல் 361 சீர்நிலை தானே 353 சீரியை மருங்கின் 368 சுட்டிக் கூறா 282 சூத்திரத் துட் பொருள் 658 செம்பொரு ளாயின் 437 செய்யுட் டாமே 439 செய்யுள் மருங்கின் 555 செய்யுள் மொழியான் 548 சொல்லப் பட்டன 660 சொல்லிய தொடையொடு 412 சொல்லிய மரபின் 581 சொல்லொடுங் குறிப்பொடும் 518 சொற்சீ ரடியும் 434 செல்வம் புலனே 259 செவியுறை தானே 426 சேரி மொழியின் 553 சேவற் பெயர்க்கொடை 603 ஞகாரை முதலா 552 ஞாயிறு திங்கள் 512 தடுமா றுவமம் 310 தத்தம் மரபின் 292 தரவியல் ஓத்தும் 449 தரவிற் சுருங்கி 455 தரவின் றாகி 461 தரவும் பேரக்கும் 466 தரவே... நாலடி 445 தரவே... நான்கும் 453 தலைமைக் குணச்சொலும் 630 தவலருஞ் சிறப்பின் 300 தவழ்பவை தாமும் 560 தன்சீ ருள் வழி 367 தன்சீ ரெழுத்தின் 358 தன்சீர் வகையினும் 366 தன்பா அல்வழி 333 தனிக்குறில் முதலசை 319 தாஅ வண்ணம் 527 துகளொடும் பொருளொடும் 440 துள்ள... கலி 395 தூக்கியல் வகையே 399 தூங்க லோசை 396 தூங்கல் வண்ணம் 542 தெய்வம் அஞ்சல் 272 தொகுத்தல் விரித்தல் 652 தொடை வகை நிலையே 415 தொன்மை தானே 549 தெரிந்தனர் விரிப்பின் 414 தெரிந்துடன் படுதல் 265 தேரடே மடலே 641 தோழியும் செவிலியும் 306 நகையே 251 நண்டுந் தும்பியும் 586 நந்து முரளும் 584 நரியும் அற்றே 564 நரியும் அற்றே 621 நலிபு வண்ணம் 535 நாயே பன்றி 563 நாலிரண் டாகும் 250 நாலிரண் டாகும் 293 நாலெழுத்து ஆதியா 348 நாற்சீர் கொண்டது 344 நிம்பிரி கொடுமை 274 நிரனிறுத் தமைத்தல் 312 நிரனிறுத் தமைத்தலும் 403 நிரைமுதல் வெண்சீர் 372 நிரையவண் நிற்பின் 387 நிலந்தீ நீர்வளி 644 நிலையிற் றப்பெயர் 601 நிறைமொழி மாந்தர் 490 நீர்வா...ணந்தும் 618 நீர்வாழ்...ளறுபிறப்பு 597 நுண்மையும் சுருக்கமும் 489 நூலே கரகம் 625 நெடுஞ்சீர் வண்ணம் 532 நெடுவெண் பாட்டே 430 நெடுவெண்... முந்நால் 470 நெல்லும் புல்லும் 580 நேர்நிலை வஞ்சிக்கு 354 நேரவண் நிற்பின் 327 நேரின மணியே 482 நேரீற் றியற்சீர் 386 படையும் கொடியும் 626 பண்ணைத் தேரன்றிய 249 பத்தெழுத் தென்ப 350 பரத்தை வாயில் என 510 பரிசில் பாடாண்திணை 628 பரிபா டல்லே 432 பரிபாட் டெல்லை 474 பழிப்பில் சூத்திரம் 656 பறழெனப் படினும் 562 பன்றி புல்வாய் 593 பன்றி...நாய் என மூன்றும் 613 பாட்டி யென்ப 620 பாட்டிடை வைத்த 485 பாட்டிடைக் கலந்த 492 பாட்டுரை நூலே 391 பாணன் கூத்தன் 502 பாநிலை வகையே 467 பார்ப்பார் அறிவர் 509 பார்ப்பான் பாங்கன் 501 பாராட் டெடுத்தல் 264 பாவிரி மருங்கினை 419 பிடிஎன் பெண்பெயர் 606 பிணவல் எனினும் 614 பிள்ளை குழவி கன்றே 579 பிள்ளைப் பெயரும் 566 பிறப்பே குடிமை 273 பிறிதெரடு படாஅது 298 புகுமுகம் புரிதல் 261 புதுமை பெருமை 255 புல்லும் மரனும் 583 புல்வாய் நவ்வி உழையே 612 புல்வாய் புலி 590 புள்ளும் உரிய 608 புறக்கா ழனவே 640 புறஞ்செயச்சிதைத்தல் 266 புறநிலை வாயுறை 473 புறப்பாட்டு வண்ணம் 537 பெடையும் பெ...நாடின் 609 பெண்ணு மாணும் 624 பெண்ணும் பிணாவும் 616 பொருளே உவமம் 284 பொழிப்பும் ஒரூஉவும் 402 பெருமையு...மெ 285 பெருமையுஞ் சிறுமையும் 294 பெற்ற மெருமை 596 பெற்றமு மெருமையும் 615 பேடையும் பெடையும் 558 போக்கியல் வகையே 448 போல மறுப்ப 291 மக்கள் தாமே 588 மகவும் பிள்ளையும் 569 மண்டிலங் குட்டம் 429 மயிலும் எழாஅலும் 598 மரபுநிலை திரிதல் 645 மரபுநிலை திரியா 648 மரபுநிலை திரியின் 646 மரபே தானும் 392 மருட்பா ஏனை 397 மறுதலைக் கடாஅ 659 மறை வெளிப் படுத்தலும் 499 மனையோள் கிளவியும் 508 மாட்டும் எச்சமும் 523 மாத்திரை முதலா 416 மாத்திரை யெழுத்தியல் 313 மாவும் மாக்களும் 587 மாற்றருஞ் சிறப்பின் 556 முச்சீ ரானும் 359 முச்சீர் முரற்கையுள் 382 முட்டுவயின்கழறல் 271 முடுகியல் வரையார் 378 முடுகு வண்ணம் 545 முதல்வழி யாயினும் 662 முதலுஞ் சினையும் 281 முதற்றொடை பெருகி 457 முற்றிய லுகரமும் 321 முன்னிரை உறியும் 326 மூங்கா வெருகெலி 561 மூடுங் கடமையும் 619 மூப்பே பிணியே 254 மூப்பே பிணியே 254 மூவா றெழுத்தே 352 மூவைந் தெழுந்தே 351 மூன்றுறுப்பு 484 மெய்தெரி வகையின் 633 மெய்பெறு மரபின் 413 மெய்பெறு வகையே 500 மொழிகரந்து சொல்லின் 438 மொழியினும் பொருளினும் 407 மெல்லிசை வண்ணம் 529 மோத்தையுந் தகரும் 602 மோனை எதுகை 400 மேற்கிளந் தெடுத்த 655 யாடும் குதிரையும் 567 யானையும் குதிரையும் 570 வசையொடும் நகையொடும் 441 வஞ்சி மருங்கின் 334 வஞ்சி மருங்கினும் 338 வஞ்சிச் சீரென 332 வஞ்சியடியே 357 வஞ்சீத் தூக்கே 383 வண்ணகந் தானே 452 வண்ணந் தாமே 524 வண்ணம்...இவை 546 வல்லிசை வண்ணம் 528 வழக்கெனப் படுவது 647 வழிபடு தெய்வம் 422 வழியி னெறியே 651 வழியெனப் படுவது 650 வனப்பியல் தானே 547 வாயில் உசாவே 511 வாயுறை...யவை 423 வாயுறை...வயங்க 424 வார்கோட்டி யானை 591 வாழ்த்தியல் வகையே 421 விட்டகல் வின்றி 657 விரவியும் வரூஉம் 277 விராஅய் வரினும் 365 விராய தளையும் 373 விருந்தே தானும் 551 வில்லும் வேலும் 638 வினைபயன் மெய்உரு 276 வினையின் நீங்கி 649 வினையுயிர் மெலிவிடத்து 268 வெண்சீர் ஈற்றசை 341 வெண்டளை விரவியும் 375 வெண்பா வியலினும் 389 வெண்பா வுரிச்சீர் 335 வெண்பாட் டீற்றடி 384 வேந்துவிடு தொழிலின் 636 வேழக்கு உரித்தே 589 வேளாண் மாந்தர்க்கு 635 வேறுபட வந்த உவம 307 வைசியன் பெறுமே 632 செய்யுள் நிரல் மேற்கோள் (நூற்பா எண்) அ அ விழந்தான் 319 அஃகாமை செல்வத்திற்கு 535 அஉ அறியா 319 அகமலி உவகை 261 அகர முதல 307 அகல்வயல் 338 அகலிரு விசும்பின் 368,556 அகலிரு விசும்பு 405 அகன்ஞாலம் 467 அகனமர் கேள்வன் 312 அச்சறாக 256,272 அஞ்சுடர் நெடுங்கொடி 290 அட்டாலும் 384 அடல்வே லமர் 403 அடன்மா மேல் 257 அடிதாங்கு மளவு 341 அடிநோக்கின் 307 அடியதர் 360 அடுகளம் வேட்ட 627 அடைமரை யாயிதழ் 281 அண்டர் மகளிர் 642 அணங்குகொ லாய்மயில் 278 அணங்குடை நெடுவரை 273 அணங்குறு 253 அணிகிளர் சாந்தின் 256 அணித்தாத் தோன்றுவது 505 அத்தக் கள்வர் 406 அந்தீங் கிளவி 270 அம்ம வாழி தோழி 538 அமைவிடு கொடி 369 அயிரைபரந்த 272 அயிற்கதவம் 386 அரவணிந்த 375 அரவு நுங்கு மதியி 280 அரிதாய அறனெய்தி 336, 341, 344, 347, 388, 389, 417, 427 அரிதினிற் றோன்றிய 466 அரிதே தோழி 446 அரிநீரவிழ் நீலம் 468 அரிமா வன்ன 278,279 அருடுர்ந்த காட்சி 467 அரும்பொருள் வேட்கை 465 அருளல்ல தியாதெனில் 320 அலங்கல்வான் கழை 612 அலந்தாங் கமையலேன் 270 அலரிநாறு 343 அவ்வா னிலங்குபிறை 277 அவர்நாட்டு மாலைப்பெய்த 270 அவரே கேடில் 325, 361 அவரோ வாரார் 408 அவற்றுள் அஇஉ 466 அவன்வயிற் சேயேன்மன் 273 அவனுந்தான் 273 அவாப்போ லகன்ற 285 அவிசொரிந் தாயிரம் 470 அழல்போல் வெங்கதில் 289 அழிவிலர் முயலு 506 அறச்சுவையிலன் 437 அறவை யாயின் 440 அறிந்தானை ஏத்தி 470 அறியாய் கொல்லோ 265 அறிவறிந்தார் 370 அறுசுவை யுண்டி 344 அன்னதே யாயினு மாக 468 அன்னா னொருவன் தன் 255 அன்னாய் வாழி 270 அன்னை சொல்லு முய்கம் 267 அன்னை வாழி 304 அனையை யாகன் மாறே 383 ஆ ஆகத்தொடுக்கிய 312 ஆடலிற் பயின்றனை 502 ஆடுகொடி 336 ஆண்கட னுடைமையின் 616 ஆணமில் பொருள் 536 ஆமிழி யணிவரை 271 ஆயிரம் விரித்த 432 ஆர்கலி யுலகத்து 461 ஆரிய நன்று 490 ஆழ்ந்துபட்ட 338 ஆறறியந்தணர் 461 ஆனா நோயொடு 330 இ இகலிலர் 259 இடனின்றி 272 இடிக்குங் கேளிர் 498, 508 இடுகாட்டு ளேற்றை 604 இணரெரி தோமூய்வன்ன 276 இந்திர னென்னின் 307 இமயமுந் துளக்கும் 254 இமிழ்கடல் 342 இமிழ்கண் முழவு 406 இமிழ்தூங்கிசை 369 இமையவில் வாங்கிய 449 இமையாமுக்கண் 422 இரண்டறி கள்வி 275 இரிபெழுபதிர் 378 இரியற் பிணவ றீண்டலின் 614 இருங்கடலுடத்த 424 இருங்கழி மலர்ந்த 412 இருடீர்மணி 437, 471 இருடுணிந்தன்ன 556 இருணூற் றன்ன 556 இருநிதி மதிக்கும் 289 இரும்பனம் புல்லின் 640 இரும்பனை வெண்டோடு 641 இரும்புலிக் குருளை 563 இருள்கழி 415 இல்லி தூர்ந்த 253 இல்லிறைப் பள்ளி 559 இல்வழக்கு 253 இலங்காழி வெண் 467 இலங்குபிறை யன்ன 271,288 இலங்குவளை யன்ன 311 இலமலரன்ன 259 இலை யண்மெல்லியள் 505 இவளே யணியினும் 266 இழைபெற்ற பாடினி 383 இன்மணிச் சிலம்பு 444 இன்றுள னாயின் 438 இன்ன விறலு 253 இன்னா வைகல் 537 இன்னுயிர் கழிவ 271 இனிதெனக் கணவன் 267 இனியா னுண்ணலு 270 ஈ ஈத்திலை வேய்ந்த 642 ஈயற்புற்றத் தீர்ம்புறம் 523 ஈர்ந்துநிலந் தோயு 311 ஈரத்து ளின்னவை 294 ஈருயிர்ப் பிணவின் 613 ஈன்பிண வொழிய 616 ஈன்றவடி தலைபோல் 612 உ உகுவதுபோலுமென் 435 உடைதிரைப் பிதிர்விற் 428 உண்கண் சிவப்ப 536 உதளநெடுந்தாம்பு 602 உதுக்காண்சுரம் 361 உப்பிலா 381 உப்போவென 329 உயங்கின்றன்னை 508 உயர்கோட்டு மகவுரை 509 உரல்புரை பாவடி 290 உரனுடை உள்ளத்தை 259 உருமுரறு கருவிய 544 உருமெனச் சிலைக்கு 289 உருவு கிளரோவினை 276 உருவுகண் டெள்ளாமை 295 உலக முவப்ப 324, 340, 527 உலவினிவாழி 259 உவவுமதி யுரு 326, 366, 406 உழுத நோன்பகடு 295 உழுத போத்து 596 உழுந்தினுந் துவ்வா 273 உள்ளார் கொல்லோ 399, 411, 417, 527 உள்ளி னுள்ளம் 271 உள்ளில வயிற்ற 567 உள்ளினென் 273 உள்ளூதாவியிற் 280 உள்ளூர்க் குரீஇ 603 உறக்குந் துணையதோர் 255 உறாஅர்க் குறுநேரய் 386, 466 உறுதுப் பஞ்சாது 258 உறுபுலி யுரு 337 உறைபதியி 458 உறையுண் முனியும் 260 ஊ ஊர்க்குறுமாக்கள் 307 ஊர னுரன் 270 எ எண்ணாணப் பல்வேட்டு 628 எம்போர் புல்லுறை 272 எம்மனை முந்துற 499 எம்மிகழ்வோரவர் 437 எம்வெங் காமம் 503 எய்போற் கிடந்தான் 321, 387 எரிமலர் சினைஇய 433 எரியகைந் தன்ன 287 எரியுரு வுறழ 291 எரியுரு வுறழ 544 எருத்துமேல் 256 எருமை நல்லான் 581, 617, 618 எருமை யன்ன 255 எருமைப் போத்து 596 எல்லி மனை சேர் 270 எல்லீரு மென்செய்தீர் 508 எல்லோம் பிரியற்கெம் 433 எலுவரே சிறாஅ முறு 508, 510 எவ்வி யிழந்த 270 எழிலி வானம் 289 எழுத்தெனப்படுப 526 எறித்தரு கதிர்தாங்கி 625 எறிபோத்து 596 எறும்பி யளையின் 394, 473 என்மலைந்தனன் கொல் 271 என்ற வியப்ப 278 என்றோ ளெழுதிய 273 என்னை புற்கை 472 ஏ ஏடு கொடியாக 326 ஏற்பன ஏற்பன 569 ஏற்றிளங் கவரி 594 ஏற்றெருமை நெஞ்சம் 594 ஐ ஐயர் பாங்கினும் 272 ஐயோ வெனின் யான் 253 ஒ ஒக்குமே யொக்குமே 403 ஒண்செங் காந்தள் 291 ஒண்டா ரகலமும் 508 ஒத்த தறிவான் 283 ஒய்யென வெழுந்த 574 ஒருக்கு நாமாடும் 267 ஒருகை யுடைய தெறிவலோ 254 ஒருநாள் வந்து 264 ஒருவான் யாறொடு 461 ஒரூஉநீ யெங்கூந்தல் 468 ஒரூக் கொடியியல் 435 ஒழிகோ யானென 275 ஒழுகை நோன் பகடொப்ப 287 ஒளித்தியங்கு மரபின் 287 ஒன்றிரப்பான் போல் 467 ஒன்றிரப்பான்போல் 254 ஒன்றே னல்லெ னெரன்றுவென் 301, 350 ஓ ஓங்குகோட்டு 366 ஓங்குதிரை 326, 336, 406 ஓங்குமலைப் பெருவில் 366, 396 ஓதியு நுதலு நீவி 263 ஓதியு மோதார் 391 ஓரிரா வைகலுட் 456 ஓருயிர் மாத ராகலின் 511 க கடம்பமர் நெடுவேள் 281 கடல்கண் டன்ன 272,278 கடல்போற் றோன்றல 290 கடறுகவரா இழிந்து 343 கடாமுங் குருதியும் 461 கடுங்களிற் றொருத்தல் 589 கடுவனு மறியுமக் 623 கடைக்கண்ணாற் 276 கடையாயார் 392 கடையிற் சிறந்த 255 கண்டகம் பற்றி 375 கண்டற் கானல் 404 கண்ண் கருவிளை 278 கண்ண் டண்ண்ணென 330 கண்ணன வனிவன் 307 கண்ணாரக் காணாக் கதவு 321 கண்ணியன் வில்லன் 273 கண்பேரல் 343 கண்பேரன் மலர்ந்த 290 கண்யொடு நிகர்க்கும் 290 கணைக்கோட்டு வாளை 581 கணைகழி கல்லாத 270 கதிர்பகா ஞாயிரே 513 கயநாடி யானையின் 287 கயமல ருண்கண்ணாய் 253 கயமூழ்கு மகளிர் 287 கரடி வழங்கு 343 கரந்தாங்கே இன்னா 466 கராஅங் கலித்த 598 கருங்கட் டாக்கலை 601 கருங்கால் வேங்கை 297 கருங்கோட் டெருமை 302 கருங்கோட்டு நறும் 446, 449 கருப்புக் கொழுந்து 323 கரும்புநடு பாத்தி 300 கருமுக மந்தி 386, 622 கரைசேர் வேழம் 300 கரைபொரு கான்யாற் 376 கல்லாக் கோவலர் 270 கல்லாலந் தண்ணிழல் 461 கல்லெனக் கவின் 456 கலக்கொண்டன 406 கலங்கவிழ்த்த 294 கலாஅ கிளிகடியும் 386 கவிரிதழ் கதுவிய 377 கவைத்தலை முதுபோத்து 598 கழங்கா டாயத்து 270 கழறொழா 339 கழனி மாஅத்து 303 கழியாக் காதலர் 257 கள்ளியங் காட்ட 601 களிறுகவர் 272 கன்றடை மரையா 571 கன்று குணிலா 461 கன்றுகாலொய்யும் 570 கன்றுபுகு மாலை 570 கனவினிற் காண்கொடா 472 காக்கைச் சிறகன்ன கருமயிர் 283 காடுதேரா 343 காடுமீக் கூறும் 592 காடேரங்கிய 369 காண்பா னவாவினால் 467 காணாமை யிருள் 444 காதலைவாழி 308 காமங் காம மென்ப 501 காமர் சேவல் 603 காமரு சுற்றம் 433 காமரு நோக்கிணை 270 காமன் கடும்புனல் 337, 467 காமன் காணென்று 331 காய்சின வேற் 386 காயா மென்சினை 277 கார்கள்ள வுற்ற 289 கார்மழை முழங்கிசை 287 கார்விரி கொன்றை 291 கார்விரி கொன்றை 421 காரெதிர் கலிஒலி 378 கால்காய்ந்தது 369 காலுங் கழறாது 271 காவல்குழவி கொள்பவரின் 578 காழ்விரி கவையாரம் 442 காற்றுச் சுவடொற்று 593 கானங் கோழிக் 603 கானவாரண மீனும் 623 கிண்கிணி களைந்த 255 குரங்குப் பிள்ளை 569 குரங்குளைப் பொலிந்த 533 குருளை கோட்படல் 563 குழவி ஞாயிறு 579 குழவி வேனில் 579 குழவித் திங்கள் 579 குளித்துப்பொரு கயலிற் 286 குளிரும் பருவத்தே 272 குளிறுகுர லருவி 536 குறிக்கொண்டு 252 குறுங்கை யிரும்புலி 684 குறுந்தொடி யேய்க்கு 287 குன்ற நாடன் கண்ட 571 குன்றி னனையாரும் 286 குன்றியுங் கோபமும் 286 கூவற், குராலான் படுதுயர் 281 கொங்குதேர் வாழ்க்கை 498 கொடி குவளை 312 கொடியவுங் கோட்டவும் 467 கொடியுவணத் தவனரோ 536 கொடுமிடல் நாஞ்சில் 467 கொய்குழை யகைகாஞ்சி 642 கொல்வினைப் பொலிந்த 392 கொலைநவில் வேட்டுவன் 374 கொழுநனை 387 கொற்றக் கொடி 338 கொற்றச் சேரழர் 392 கொன்றன்ன இன்னா 276 கொன்றுகளம் வேட்ட 627 கொன்றுகோடு 358 கென்றைவேய்ந்த 461 கேடில் விழுப்பொருள் 406 கோட்டுமண் 386 கோடுயர் வெண்மணல் 536 கோதை மார்பின் 404 கேழற் பன்றி 589 கேள்கே டூன்றவும் 273 கேள்கே டூன்றவும் 499 கேளிர் வாழியோ 501, 510 கைகவியாச் சென்று 520 கைம்மை யுய்யாக் காமர் 562, 622 ச சந்து சிதைய 343 சாந்தகத் துண்டென்று 294 சார னாட நீவர லாறே 534 சாறுதலை கொண்டென 295 சான்றவிர் வாழியோ 466, 508 சிறியட் பெறினே 539 சிறுசோற்றானு 375 சிறுதலை நவ்வி 612 சிறுவெள்ளாவின் 563 சினைவாடச் சிறக்கும் 272 சீர்கெழு வெண்முத்தம் 501 சீற்றமிகுபு 332 சுஃஃ றென்னுந் தண்டோட்டு 323 சுடர்தொடீஇ 472 சுரஞ்செல் யானை 261 சுரும்பு மூசா 284 சுரும்புலவு நறுந் 321 சுற்றுவிற் காமனும் 307 சுறவே றெழுதிய 594 சூரலங் கடுவளி 411 செங்களம் படக்கொன்றவுணர் 518 செங்காந்தள் கைகாட்டும் 376 செங்காற் பைந்தினை 413 செஞ்சாந் தெறியினும் 260 செஞ்சுடர் வடமேரு 464 செந்தி யோட்டிய 290 செந்தொடைப் பகழி 407 செந்நா யேற்றை 604 செய்தவ றில்வழி 258 செய்தானக் கள்வன் 382 செயலையந் தளிரேய்க்கு 291 சொல்லிற் சொல்லெதிர் 498 செல்லினிச் சென்று 467 செவ்வரைச் சேக்கை வருடை 564 செவ்வழி நல்யாழ் 502 செவ்வா னன்ன 279,288 செவ்விய தீவிய 467 செவ்வேற் சேய் 407 செறிதொடி 511 செறுநர்விழையா 433 சென்றீ பெரும 563 சென்றே 346 சேய்நின்று 256 சேய ளரியோள் 254 சேயித ழனைய 290 சேயிறா முகந்த 412 சேயேன்மன் 253 சோறு வாக்கிய 285 சேற்றுக் கா னீலஞ் 322 த தஎன்று தாமிசைப்ப 412 தகர்மருப் பேய்ப்ப 602 தகைமிகு தொகைவகை 375 தஞ்சொல் வாய்மை 467 தடங்கடற் பூத்த 461 தடந்தாட் கொத்த 461 தண்டண்டலைத் 332 தண்டளிர் வியப்ப 291 தண்டுளிக் கேற்ற 268 தண்டொடு பிடித்த 625 தண்ணந் துறைவன் 467 தண்ணிய லற்ற 407 தமர்தர வோரில் 499 தலைப்புணை கொளினே 498 தவழ்பவை தாமும் 536 தழைபச்சென்னும் 369 தழைபூஞ் சாரல் 411 தளிபெற்று வைகிய 310 தளிர்சிவந் தாங்கு 276 தன்சொல் உணர்ந்தோர் 291 தன்பார்ப்புத் தின்னும் 300,301 தன்பார்ப்புத் தின்னும் 560 தன்பால் வெங்கன்னின் 338 தன்னகம் புக்க 257 தன்னசை உள்ளத்து 268,273 தாதுசேர் வண்டின் 466 தாதுண் பறவை 273 தாதுறு முறிசெறி 377 தாமரை புரையும் 281 தாமரை புரையும் 469, 523 தாமரை வண்டூது 304 தாய்சாப் பிறக்கும் 303,306 தாய்சாப் பிறக்கும் 560 தாழ்தாழைத் 335 தானுற்ற 253 திங்களங்கதிர் 422 திருந்திழாய் கேளாய் 472 திருநுதல் வேரரும்பும் 472 திருமழை 344 திருமழை தலைஇய 379 திரைத்த விரிக்கின் 425 திறந்திடுமின் தீயவை 522 திறவாக் கண்ண சாய்செவி 563 திறனல்ல 252 திறனல்ல 499 தினைப்புனத் திதண் 369 தீநீர் நஞ்சம் 407 தீம்பா லூட்டினும் 270 தீம்பால்கறந்த 465 தீயி னன்ன வொண்செல் 291 துகடபு நாட்சி 641 துகடீர் பெருஞ் 470 துணிவொடு வரூஉம் 300 தும்முச் செறுப்ப 312 துளிதலைத் தலைஇய 291 துளியிடை 253 துறந்தார் பெருமை 286 துறுகல் விடாளை 616 தூஉத் தீம்புகை 374 தூஉமணி கெழூஉமணி 329 தூங்குசிறை 326 தூதவர் விடுதரார் 270 தூதுணம் புறவென 286 தெம்முனை யிடத்திற் 276 தெய்வ மடையிற் 642 தொக்குத் துறை படியும் 376 தொடி ஞெகிழ்ந்தனவே 365 தொடிக்கண் 259 தொடித்தலை 254 தொடிநிலை நெகிழ 270 தொழுசெந்நெற்றி 603 தெரிகணை நோக்கி 503 தெறித்து நடை மரபின் 567 தேஎந் தேரும் 329 தேமாஞ் சோலைத் 346 தேர்வண் கோமான் 300 தோடுதோய் 642 தேன்பெய்தது 369 தேன்றாட் டீங் 338 ந நகுதக் கனரே 252 நகைநீ கேளாய் 252 நகையா கின்றே 252 நச்சல் கூடாது 449 நயனும் வாய்மையும் 467 நரந்த நாறும் 380, 381, 399 நரிப்பறழ் கவர 565 நல்கூர்ந்தது 369 நல்லை மன்னென 252 நல்வரை நாட 271 நலமிகநந்திய 468 நவ்வி நாண்மறி 567 நற்றா ரகலத்து 272 நறவினை வரைந் 472 நறவுண் மண்டை 325 நறுமுல்லை நேர்முகை 290 நன்கலம் பெற்ற 259 நன்றாய்ந்த செய்கோலாய் 438 நன்ன னேற்றை 540 நன்னாட் பூத்த நாகிள 581 நனைத்த செருந்தி 642 நாகிளவ்ளையொடு 617 நாகிளவளை 581 நாண்ஞாயி றுற்ற 470 நாணுக் கடுங்குரை 499 நாணுடை அரிவை 321 நாணுத் தளை 329 நாணுத் தளையாக வைகி 321, 322 நாம்நகையுடையம் 252 நாய்ப்பிண வொடுங்கிய 613 நாயகற்கு நாய்கள்போல் 312 நாரை நிரைபோத்து 598 நாவொடு நவிலா 252 நான்முலைப் பிணவல் 614 நானாற் றிசையும் 470 நிணங்கொள் புலால் 467 நிலம் பாய்அய் 329 நிலமிசை நீடுவாழ்வார் 323 நிலவுச் குறித்தன்ன 556 நிலவுமணல் 326 நிலாவி னிலங்கு மணல் 640 நிலைக் கோட்டு வெள்ளை 602 நிவந்து தோன்று 366 நிறைமொழி மாந்தர் 490 நின்கண்ணாற் காண்பென் 382 நின்கேள் புதுவது 508 நின்மகள் உண்கண் 273 நின்மகன் படையழிந்து 258 நின்ற சொல்லர் 272 நின்றுநினைந்து 370 நின்னுறு விழுமம் 270 நின்னொக்கும் புகழ் 433, 435 நினக்கியான் சொல்லிய 320 நீத்துநீர்ப் பரப்பு 327 நீயே வினைமாண் 442 நீர்வரக் கண் 382 நீர்வார் நிகர்மலர் 290 நீரலர் தூற்ற 467 நீரற வறியா 380, 381 நீரார் செறுவின் 445 நீரின் றண்மை 380, 381 நீரின் றண்மையும் 427 நீருட் குவளை 294 நீருறை கோழி 300 நீரோ ரன்ன 407 நீலமேனி வாலிழை 469 நீளரை யிலவத் 309 நீறணிந்த திருமேனி 461 நுதல திமையா நாட்டம் 323 நுதலு முகனுந் 278 நுதலுந் தோளும் 540 நும்மில் புலம்பின் 406 நும்மினுஞ் சிறந்தது 556 நும்மொடு நக்க 252 நூற்றுவர் தலைவனை 436 நெஞ்சிற் குரைத் 472 நெஞ்சு நடுக்குற 472 நெடுந்தாட் செந்தினை 613 நெய்த்தோர் மீமிசை 406 நெய்த னெறிக்கவும் 273 நெய்பெய் தீயின் 271 நெய்யொடு தீயொக்க 461 நொஅலையல் 319 நொச்சிவேலி 271 நெருந லெல்லை 258 நெருப்பி னன்ன 281 நெருப்புக் கிழித்து 461 நெருப்புச்சினந் 258 நெருப்புச்சினந் தணிந்த 322 நெருப்பெனச் சிவந்த 291 நெறியறி செறிகுறி 545 நோய்சேர்ந்த 499 நோய்சேர்ந்த திறம்பண்ணி 267 நேரிழை மகளி 383 ப பகலும்பெறுவை 514 பகுவாய் வராஅற் 579, 598 பட்டுழி யறியாது 272 படங்கெழு நாகம் 286 பண்டரங்கம் 341 பணியுடையன் 426 பதவுமேயல் பற்றி 565 பரவை மாக்கடல் 403, 408 பல்லிருங் கூந்தன் 257 பல்லோர் உவந்த 289 பலர்புகழ் ஞாயிறு 291 பலவுறு நறுஞ்சாந்தம் 507 பலாஅக் கோட்டு 329 பலியுருவிற் கேலாத 458 பழிதவு ஞாயிறே 270 பறைக்குர லெழிலி 276 பன்மாடக்கூடல் 470 பனைநுகும் பன்ன 641 பாஅல்புளிப்பினும் 374 பாஅலஞ்செவி 337, 409 பாங்கர்ப்பல்லி 270 பாசடை நிவந்த 295 பாசிப் பரப்பிற் பறழ் 565 பாடிச் சென்ற பரிசிலர் 294 பாடின்றிப் பசந்த 449 பாடுகோ பாடுகோ 403 பாம்புமணி 366 பாம்புரு வொடுங்க 290 பாரி பாரியென்று 309 பால் மருண்மருப்பின் 467 பாலு முண்ணாள் 501 பாவை மாய்ந்த 312 பாவை யன்ன 279 பிடிபடி முருக்கிய 606 பிணந்தின் பெண்டிர்க்கு 564 பிணர்மோட்டு நந்து 604 பிள்ளை வெருகிற்கு 560 பிறங்கிரு முந்நீர் 270 பிறங்குநிலை மாடத் 392 பின்னொடு முடித்த 253 புகலிரும் பனிச்சோலை 461 புட்டேம்ப 335 புத்தே ளுலகிற் 289 புரிபு புரிபு 378 புரிவுண்ட புணர்ச்சி 466 புல்வா யிரலை 599 புல்வீ ழிற்றி 271 புலம்பயி ருந்த 594 புலர்குரலேனற் 270 புலிசெத்து வெரீஇய 290 புலிப்பற் கோத்த 392 புலிப்பற ழன்ன 565 புலிப்போத் தன்ன 596 புலிபோலப் பாய்ந்தான் 283 புலியென்னக் கலிசிறந்து 287 புலிவிறப்ப 287 புள்ளி யிறுதியும் 406 புன்காற் புணர்மருதின் 338 புன்றாள் வெள்ளெலி 604 புன்னை நீழ 467 புன வேங்கைத் தாது 467 புனனாடர் கோமானும் 307 புனனாடன் 339 புனிற்றாய் பாய்ந்தென 615 புனைமலர்க் கடம்பின் 461 பூசைபோலப் பாய்ந்தான் 283 பூண்ட பறையறைய 461 பூண்டு கிடந்து வளரும் 325 பூணாக வென்பணி 461 பூத்த வேங்கை 412 பெண்கோ ளொழுக்கம் 616 பெண்டிர் நலம் வெளவி 254 பெண்ணன் றுரைத்தல் 273 பெயர்த்னென் முயங்க 501 பொய்கைப் பள்ளி 308 பொரிமலர்ந் தன்ன 594 பொருள்கருவி காலம் 547 பொன் காண் கட்டளை 297 பொன்னி னன்ன புன்னை 529 பொன்னுரை கடுக்குந் 291 பெரியகட் பெறினே 381, 526 பெருஞ்செல்வ ரில்லத்து 294 பெரும்புழுக் குற்ற 261 பேர்ந்து சென்று 324 போத்தொடு வழங்கா 598 பேரமர் மழைக்கண்ணின் 508 பேரூரட்ட 312 பைதற் பிள்ளைக் கிளி 559 ம மக்கள் குழவி 575 மக்களே போல்வர் 307 மகன்றா யாதல் 289 மடவான் மகளிர் 406 மண்டிணிந்த 338 மண்டில மழுங்க 390 மண்ணார்ந் திசைத்த 432 மண்மாய்ந்தனெ 369 மணி நிறமலர்ப் 388, 389 மணி மருடகை 435 மணிநிற மறுத்த 291 மணிநிறம் மாற்றிய 286 மணிபுரை திருமார்பு 372 மணிவாழ் பாவை 276 மணிவிளங்கு திரு 458 மணிவெண்ணகை 390 மதியத் தன்ன 311 மதியம் பொற்ப 286 மதியொத்தது மாசற்ற திருமுகம் 286 மம்மர் நெஞ்சினோன் 324 மயிற்போத் தூர்ந்த 598 மயிற்றோகை போலுங் கூந்தல் 283 மாந்தலை மணந்த 502 மராஅ மலரொடு 531 மருந்து நாடாத் 343 மருந்துகொண் மரத்தின் 295 மருந்தெனின் மருந்தே 303 மருந்தெனின் மருந்தே 514, 523 மரைப்போத்து 598 மரையா மரல்கவர 465, 615 மல்லர்க் கடந்தான் 368 மல்லரை மறஞ்சாய்த்த 294 மல்லலூர 467 மலர்காணின் மையாத்தி 532 மலர்மலி புகலெழ 378 மலிதிரை யூர்ந்துதன் 467 மலைமிசைத் தோன்று 347 மழைதுளைத்துப் புறப் 461 மழைபெய்தென 369 மழையொன்று வண்டடக்கை 286 மழைவிழை தடக்கை 289 மறித்துருத் தொகுத்த 567 மறியாடு மருங்கின் 567 மன்று பார்த்து 375, 467 மன்றுபா டவிந்து 271 மனைக்குறமகள் 369 மனைவா ழளகின் 610 மாக்கடல் நடுவண் 284 மாண மறந்துள்ளா 267 மாணெழில் வேய் 290 மாதர் முகம்போல் 308 மாநிலஞ் சேவடி 469 மாமலர் முண்டகந் 467 மாயப் பொய்ம்மொழி 254 மாயிதழ் புரையும் 291 மாயோன் மார்பில் 390, 469 மாயோன் மார்பு 347 மாயோன் மேய 405 மாரி யம்பின் 278 மாரி யன்ன 276,288 மாரிப் பீரத் தலர் 276 மாலையும் உள்ளா ராயின் 508 மாவழங்கு பெருங்காட்டு 374 மாவா ராதே 532 மாவென மடலும் 270 மாவென மடலும் 642 மாறாக் காதலர் 427, 515 மான்றோற் பள்ளி 309 மான்றோற் புள்ளி 309, 578 மானோக்கு நோக்கும் 287 மின்உற ழிமைப்பின் 287 மின்னுமிளிர்ந் தன்ன 321 மின்னொளி 467 முகைமொக்குள் 261 முட்டாச் சிறப்பிற் 522 முத்துடை வான்கோடு 290 முதிர்கோங்கின் முலையென 307 முந்தியாய் பெய்த 320 முயங்கல் விடாஅல் 272 முயற்கோடு சீவி 390 முரசுமுழங்கு 279 முரணில் பொதியிற் 490 முல்லை முகை 273 முல்லை வைந்நுனை 416 முழவுமுகம் புலரா 324 முழவுறழ் தடக்கையி னியல 290 முறிமே யாக்கை 642 முன்பொழுது 412 முன்றிலாடு 343 முன்னத்தஞ் 376, 406 மூத்துத்தலை இறைஞ்சிய 254 மெழுகு மாப்பி 253 மென்புனிற் றம்பிணவு 613 மென்றேணெகிழ்த்தான் 270 மேக்கெழு பெருஞ்சினை 642 மோட்டிரும்பாறை 290 மேற்கவட் டிருந்த 559 மேற்கோட்டு நீர் 332 மைபட் டன்ன மாமுகம் 601 மையணி தண்டனை 461 மையற விளங்கிய 516 ய யாஅ வொண்டளிர் 642 யாஅங்கொன்ற 640 யாங்கன மொத்தியோ 308 யாமைப் பார்ப்பி னன்ன 560 யாரிவ னெங்கூந்தல் 519 யாழ்கொண்ட இமிழிசை 289 யாழ்கெழு மணிமிடற் றந்தணன் 287 யாழ்செத் திருங்கல் விடரளை 209 யான்தற் காண்டொறும் 261 யான்தன் னறிவல் 254,271 யானூடத் தானுணர்த்த 324, 346 யானேயீண்டையேனே 523, 539 யானோக்குங் காலை 261 யானையனையவர் 285 வ வசையில்புகழ் 335, 417 வஞ்சியேன் என்று 336 வடவேங்கடம் 391, 526 வடாஅது பனிபடு 426 வண்டனிகொண்ட 461 வண்டுமலர் 360 வண்டொன்று 387 வண்டோட்டு நெல்லின் 641 வண்புகழ் நிறைந்து 325 வயங்குகதிர் 406 வயநா யெறிந்து 565 வயலாமைப் புழுக்குண்டு 200 வயலாமைப் புழுக்குண்டு 419 வரிமரற் பாவை 594 வரியம் பொருத 258 வருதுமென்ற 270 வருந்தாதேகுமதி 508, 569 வருமுலையன்ன 284 வரைவுரை திரை 324 வரைவுரையு மழகளிற்றின் மிசை 281 வல்லார் முன் 257 வலிமுன்பின் 452 வலியரென 254 வள்ளத்தினீர் கொண்டு 285 வள்ளெயிற் றரிமா 249 வளைக்கட் சேவல் 603 வறிதகத் தெழுந்த 252 வன்கண் குடிகாத்தல் 273 வன்புலக் கேளிர்க்கு 306 வாமா னேறி 346 வாய்பவளம் 278 வாயென்ற பவளம் 286 வாரணக் கொடியொடு 623 வாரா தாயினும் 270 வாரா ராயினும் 523, 541 வாராது நீத்தகன்றார் 376 வாரார் கொல்லென 270 வாரி நெறிப்பட 468 வாரிய பெண்ணை 385 வாள்வலந்தர 360 வாளைவெண்போத்து 598 வான்பெய்தது 369 வான்பொய்யாது 332 வான்றோய்வன்ன 276 வானாரெழிலி 433 வானி னிலங்கும் 270 வானுற நிமிர்ந்தனை 461 வானூர்மதியம் 465 விசும்பினன்ன 281 விசும்புரி வதுபோல் 276 விடியல் வெங்கதிர் 472 விண்ணதி ரிமிழிசை 289 விண்ணுயர் விறல்வரை 262 விண்பாய்ந்தென 369 விண்பொருபுகழ் 289 விதையர் கொன்ற 502 விரியுளைக் கலிமான் 272 விருந்தெதிர் கொள்ளவும் 499 வில்லோன்காலன் 505, 514 விழவுத்தலைக் கொண்ட 321 விழியாக் குருளை 563 விளங்குதொடி முன்கை 501, 508 விளங்குமணி 336 விளிநிலை கேளாள் 312 வீங்குசுரை நல்லான் 289 வீழில்தாழைக் குழவித்தீநீர் 579 வெண்பலிச் சாந்த 461 வெண்பூம் பொய்கை 300 வெயிலாடு முசுவின் குருளை 569 வெயிலொளி காய்த்த 291 வெருக்கு விடையன்ன 564, 623 வெல்புகழ் மன்னவன் 469 வெள்ளி வள்ளி 406 வெளிற்றுப்பனந் 325 வேப்பு நனையன்ன 275 வேய்பயி லழுவம் 514 வேய்மருள் பணைத்தோள் 290 வேயொடு நாடிய 286 வேயொன்று தோளொருபால் 286 வோல் வேலி 469 வேலாண் முகத்த 321 வேலொன்று கண்ணார்மேல் 286 வேனிலுழந்த 467 வேனிற் புனலன்ன 295 வைகலும் வைகல் 405, 543 வையம் புரவூக்கு 257 அரும்பத (அருஞ்சொல்) விளக்கம் முதலியன (நூற்பா எண்-பக்க எண்) அ அஃகாமை - சுருங்காமை 535 அஃகி - சுருங்கி 276 அகலம் - மார்பு 386,458 அகல் - சிறிய சட்டி 258 அகவல் - அழைத்தல், அழைத்து கூறும் பா 393 அகைதல் - நெருங்குதல் 287 அங்கதம் - வசைப்பாட்டு 430 அச்சுதன் - விஷ்ணு 458 அசை - அசைத்து இசை கொள்வது 313 அஞ்சி - ஆவி என்னும் ஊர்க்குத் தலைவன் 437 அஞ்ஞை - தாய் 504 அஞர் - துன்பம் 508 அடக்கியல் - சுரிதகம் 456 அடர் - தகடு 309 அடல் - வலி அடார் - ஒருவகைப் பொறி 329 அடியுறை - அடிக்கணுறைதல் 433 அடுக்கம் - மலைப்பக்கம் அடுதல் - சமைத்தல் 181, கொல்லுதல் அடும்பு - ஒருகொடி 420 அடை - தனிச்சொல் 444 அடைய - ஒருசேர 416 அண்டர் - இடையர் 642 அணங்கு - தெய்வம் 256, 278 அணங்குதல் - வருத்துதல் 256 அணல் - தாடி 579 அணவரல் - விரும்பல், தலையெடுத்தல் அத்தம் - காடு 406 அதர் - வழி 330 அதர்ப்பட யாத்தல் - மொழி பெயர்த்தல் 652 அதோளி - அவ்விடம் 452 அம்போதரங்கம் - நீர்த்திரை போல வரவரச் சுருங்கி 453 வரும் ஒரு செய்யுளுறுப்பு அமர்தல் - விரும்பல், பொருந்தல் 344 அமலல் - நெருங்கல் 416 அமை - மூங்கில் 467 அயிரை - ஒருமீன் 254 அயில் - கூர் அரங்கு - சபை 25 அரவம் - ஒலி 58, பாம்பு 461 அரவு - பாம்பு 281 அரற்றல் - பலவுஞ் சொல்லிக் குறை கூறல் 240 அராகம் - அறாது கடுகிச்செல்லும் அடியையுடைய உறுப்பு 464 அராகித்தல் - அறாது கடுகிச் சேறல் 464 அரிமா - சிங்கம் 279 அரில் - குற்றம் 423 அருங்குரைத்து - அரிது அல்குல் - நிதம்பம் 263 அல்லல் - துன்பம் 446 அல்லாத்தல் - துன்பப்படல் 465 அலங்கல் - அசைதல் 655, மாலை 307 அலகிடல் - எழுத்தெண்ணி அசை சீர் அடிகளை வகுத்தல் 323 அலகு - எண் 316 அலகுபெறல் - எண்பெறல் 324 அலமரல் - சுழலல் 274 அலம்வரல் - சுழலல் 267 அலர் - பழிமொழி 264 அலவன் - ஞெண்டு 271 அலறுதல் - அழுதல் அவல் - பள்ளம் 416 அவலம் - துன்பம் 446 அவிதல் - அடங்குதல் அவிர்தல் - விளங்கல் 433 அவிழ்தல் - அலர்தல் 416 அவையடக்கு - அவையை வாழ்த்தியடக்குதல் 423 அழுங்கல் - தவிர்தல் 270 அழுவம் - காடு 514 அள்ளல் - சேறு 285 அளபெடை - அளபெடுப்பது 336 அளவியல் - அளவிலக்கணம், பாவின் வரையறை 313 அளியர் - அளிக்கத்தக்கார்; இரங்கத்தக்கார் 254 அளை - புற்று 375 அளைஇ - அளவி; கலந்து 433 அற்றம் - இரகசியத்தானம்; சோர்வு 263 அறல் - கருமணல்; அற்றுச் சேறல்; நீர் 567 அறவை - அறமுடைய 440 அறை -பாறை 498 அறைதல் - துணித்தல் 467 அன்றில் - ஒரு பறவை அனு - ஒத்த எழுத்து 406 ஹம்சன் - இவன் மோட்சத்தையே விரும்பி விரதங்களை யநுட்டித்து மரத்தினடியிலாயினும் குகையிட்டு லாயினும் வசிப்பான், ஏகதண்டம், கந்தை, கௌபீனம், கமண்டலந் ) தரிப்பவன். தேவபேதமின்றி பிரமத் தியானஞ் செய்பவன் 625 ஆ ஆகம் - மார்பு 499 ஆங்கு - அசைநிலையாய் வரும் ஓரிடைச்சொல் 447 ஆடல் - கூத்தாடல் ஆடாவடகு - விளையாட்டு; (இஃது அடாவடகின் விகாரம்)647 ஆணம் - அன்பு 502 ஆணை - கட்டளை 256 ஆப்பி - சாணாகம் 253 ஆய் - ஒரு வள்ளல் 276 ஆரம் - முத்துவடம் 367; சந்தனம் 390 ஆரியம் - வடமொழி 490 ஆலி - நீர்த்துளி 309 ஆழி - சக்கரம் 458 ஆள்வினை - முயற்சி 449 ஆன் - பசு 255 ஆனந்தம் - ஒரு குற்றம், மரணம் 312 ஆனாமை - நீங்காமை 330 ஆனிழற் கடவுள் - சிவன் 458 இ இகந்துபடல் - அளவிற் கடத்தல் 363 இகுத்தல் - வளைத்தல், தாழ்த்தல் நீங்கல் 291 இசை - ஓசை 323 இசைமை - புகழ் 257 இடங்கர் - முதலைச் சாதியிலொன்று 598 இடும்பை - துன்பம் 466 இணைநூல் - தம்மோடொருங்கு கற்றோர் செய்த நூல் 313 இதணம் - பரண் 413 இமிர்தல் - மொய்த்தல் 446 இமிழ்தல் - ஒலித்தல் 458 இயம் - வாச்சியம் 464 இயலசை - இயல்பாக நடக்கும் அசை 318 இயலல் - செல்லல் 278 இயவு - வழி 640 இயைபு - ஒருதொடை 408 இரட்டும் - ஒலிக்கும் 392 இரலை - மான் 589 இரியல் - புறங்கொடுத்தல்; ஓடல் 614 இரும் - இருமல் 254 இல்லம் - தேற்றா 435 இல்லாள் - மனைவி 345 இல்லி - துளை 253 இல - இலவு 259 இலயம் - தாளவறுதி 324 இலேசு - மிகை 353, 656 இழவு - இழத்தல் 253 இழுக்கு - வழு; குற்றம் 429 இழுது - வெண்ணெய் 309 இழை - ஆபரணம் 383 இழைத்தல் - செய்தல் 467 இளிவரல் - இழிபு 251 இளிவு - எளிமை 253 இற்செறிப்பு - தலைவியை வெளியிற் செல்லாமல் இல்லில் தடுத்து வைத்தல் 265 இறத்தல் - கடத்த 325 இறந்துபடல் - கடந்துபடல் 665 இறுவாய் - ஈறு 408 இறைஞ்சுதல் - வணங்குதல்; தாழ்த்தல் 261 இன்னா - துன்பம் இன்னாஓசை - இனிமை யில்லாத ஓசை 323 ஈ ஈண்டுதல் - நெருங்குதல் ஈர் - ஈர்க்கு 644 ஈர்ந்து - இழுக்கப்பட்டு 311 ஈரம் - அன்பு 264, 394 ஈற்றா - ஈன்றணித்தான பசு 249 உ உகிர் - நகம் உகுதல் - சொரிதல் 435 உசா - ஆராய்ச்சி உட்கு - அச்சம் 663 உடலல் - பகைத்தல் உடற்றியோர் - பகைத்தவர் 383 உடுக்கை - உடை 285 உடை - உடைவேல் 424 உதள் - ஆட்டின் ஆண் 602 உந்தி - ஆற்றுவெள்ளம் 62; கொப்பூழ் 270 உமணர் - உப்பமைப்போர் 472 உய்த்துணர்தல் - ஆராய்ந் துணர்தல் 516 உய்ப்போன் - சுவைப்போன் 249 உயங்கல் - வருந்தல் 508 உயிர் - உயிர்த்தல் 356 உயிரில் எழுத்து - மெய், ஆய்தம், குற்றியலுகரம், குற்றியலிகரம் 356 உரவோன் - வலியோன் உரன் - அறிவு, வலி 259 உரற்பாணி - உரிச்சீர் - உரியசையாலாய சீர் 325 உரியசை - இயலசை செய்யுந் தொழிற்குரிய அசை 318 உரு - நிறம் 276 உருத்திரம் - கோபம் 249 உருப்பு - வெப்பம், உருத்தல் 461 உரும் - இடி 289 உலமரல் - சுழற்சி உலைக்கல் - பட்டடைக்கல் 374 உவ - உவப்பாய் 259 உவணம் - கருடன் 458 உவமத்துரு - இசைப்பாட்டின் வகை 363 உவர்த்தல் - வெறுத்தல் 272 உவவுமதி - பூரணசந்திரன் 326 உழத்தல் - வருந்தல் உழை - மானுள் ஒரு சாதி 567 உள்ளுதல் - நினைத்தல் உளை - குதிரையின் நெற்றி மயிர் 416 உற்றுணர்தல் - பரிசித்தறிதல் 276 உறழ்தல் - பெருக்கல் உறை - நீர்த்துளி 416 உறையுள் - உறைதல், இருத்தல் 240 ஊ ஊகம் - குரங்கினுள் ஒருசாதி 577 ஊடல் - ஊடுதல் 499 ஊதை - காற்று 352 ஊழ் - முறை ஊழி - முறை 262 எ எஃகு - கூரிய அறிவு 259 எஃகுசெவி - நுண்ணிதாகக் கேட்கும் செவி எக்கர் - மணற்குவியல் 446 எச்சம் - எஞ்சிநிற்பது 313 எடுத்துக்காட்டு - மேற்கோள் 657 எண் - அளவு, அம்போதரங்கம் 457 எண்பதம் - எளியசெவ்வி 427 எதுகை - ஒருதொடை 400 எய் - முட்பன்றி 359,321 எயில் - மதில் 386 எயிறு - பல் எரி - நெருப்பு 287 எருத்து - கழுத்து 23, தரவு 433 எருத்தம் - ஈற்றயலடி 380 எல்லா - ஏடி எல்லி - இரா எலுவன் - தோழன் 508 எவ்வம் - துன்பம் எவ்வி - ஒருவேள் 271,289 எழாஅல் - யாழ் வல்லூறு 598 எள்ளல் - இகழ்ச்சி 252 எறிதல் - கொல்லல் 565 எறும்பி - எறும்பு 374 ஏ ஏகபாதம் - ஒற்றைக்கால், அஃது ஒற்றைக் காலுடைய உயிர்களை உணர்த்தி வந்தது. 249 ஏடு இதழ் 326 ஏதம் - இடையூறு 59. குற்றம் 450 ஏர் - அழகு ஏர்தல் - எழுதல் ஏழைமை - அறியாமை; வெள்ளை அறிவு 274 ஏழிற்கோ - ஏழில் என்னும் ஊர்க்கரசன் 437 ஏறு - இடியேறு 256 ஏனம் - பன்றி 623 ஏனல் - தினை 270 ஐ ஐம்பால் - கூந்தல் ஐயை - துர்க்கை , காளி 646 ஒ ஒத்தாழிசை - கலிப்பாவின் ஓர் உறுப்பு 427 ஒதுக்கு - நடை 276 ஒய்யென - விரைய 261 ஒருதலை - நிச்சயம் 665 ஒருபோகு - ஒன்றாகிய போகியதை யுடையது 451,460 ஒரூஉ - நீங்கு 23, ஒருதொடை 411 ஒல்கல் - நுடங்கல் ஒல்லாமை, பொருந்தாமை ஒழியசை - அசைத்தன்மை ஒழிந்துநிற்கும் சொற்சீரடி 435 ஓ ஓத்து - இயல் 561, வேதம் 636 ஓதம் - வெள்ளம் ஓதை - ஒலி ஓதி - கூந்தல் 262,263 ஓரி - நரி 564 ஓலைப்பாயிரம் - இது ஓலைப் பாசுரம் என்று இருத்தல் வேண்டும் 504. சிலப்பதிகாரம் நோக்குக. ஓவம் -சித்திரம் 279 ஓவினை - சித்திரத் தொழில் 276 க கஃறு - நிறத்தையுணர்த்தும் குறிப்புமொழி 409 கங்குல் - இரா. 446 கட்டி - ஒரு சேனைத்தலைவன் 438 கட்டளை - வரையறை கட்டுரை - வாக்கியம் 435 கடகம் - கையணி 375 கடகண்டு - ஒரு நூல் கடமை. - காட்டுப்பசு 570 கடறு - காடு, பாலைநிலம் கடப்பு - கடத்தல் கடாவுதல் - வினாதல் கடிசூத்திரம் - அரைப்பட்டிகை என வழங்குவது போலும் கடிதல் - நீக்கல் 273, துரத்துதல் கடு - கடுக்காய் 249 கடுவன் - ஆண்குரங்கு 329,623 கடை- வாயில் 458 கடைசி - மருதநிலப் பெண் 360 கண்டம் - துண்டு 313 கண்டல் - தாழை 390 கண்ணி - சூடும்பூ 634 கண்ணோடல் - இரங்கல் 254 கணிச்சி - குந்தாலி 421 கணை - அம்பு 461 கதவ - கோபமுடையன 498 கதழ்தல் - விரைந்து செல்லல் 270 கதுப்பு - முற்பக்க மயிர் 285 கந்திருவம் - இசைநூல் 465 கபாலி - சிவன் 461 கம்பலம் - கம்பளம் 464 கம்பலை - ஒலி 272 கயம் - குளம் 287 கரகம் - நீர்வைத்திருக்கும் பாத்திரம் 625 கரத்தல் - அழித்துமறைத்தல் 270 கரந்த - மறைந்த 467 கரந்தை - அகம் புறம் பொது வான கரந்தைத்திணை 509 கரம்பை - பாழ்நிலம் 359 கராம் - முதலையுள் ஒரு சாதி கருப்பை - காரெலி 359 கல்லாரம் - குவளை 310 கலம் - தோணி 294 கலம் - பாத்திரம் கலி -ஒலி 287 கலித்தல் - தழைத்தல் 292 கலுழ்தல் - நீர்சொரிதல் 253 கவடு - மரக்கொம்பு 559 கவரி - மான் 572 கவான் - மலைப்பக்கம் 263 கவின் - அழகு 383 கழனி - வயல் 303 கழிநெடிலடி - பதினேழு எழுத்து முதல் இருபது எழுத்துவரையில் உள்ள அடி. அறுசீரடி 352 கள்வன் - ஞெண்டு 560 களமர் - மருதநிலமாக்களுள் ஒரு பகுதியார் 433 களம் - போர்க்களம் 375, இடம் 365 களியர் - கள்ளுண்டு களிப்பார் 249 களைதல் - நீக்குதல் கறிக்கும் - கடிக்கும் 595 கா காடுகெழு செல்வி - துர்க்கை 240 காடுறையுலகம் - முல்லைநிலம் காதலர் - தலைவன் 442 காதல் - ஆசை 257 காபாலம் - சிவனாடலிலொன்று 461 காரான் - எருமை 615 காரிகை - பேரழகு 446 காழ் - இருப்புக்கோல் 364, வடம் 442 காழ்ப்பு - வயிரம் 640 காழகம் - ஒருடைவிசேடம் 442 கானம் - காடு 408 கானல் - கழிக்கரை, கடற்கரைச் சோலை 326 கானவன் - வேட்டுவன் 407 கி கிண்கிணி - சதங்கை 255 கிழக்கு - கீழ் 280 கிளத்தல் - சொல்லுதல் கிளவி - சொல் 303, 501 கிளைத்தல் - வளர்தல் 461 கிளைஞர் - சுற்றத்தார் 273 கீ கீழ் - இழிந்த சாதி 640 கு குசை - தருப்பைப்புல் 626 குஞ்சரம் - யானை 574 குட்டம் - நாற்சீரிற்குறைந்து வருமடி 427 குடங்கை - உள்ளங்கை 331 குடம்பை - பறவைக்கூடு 640 குடவாயில் - கும்பகோணம் குடாரி - குந்தாலி 392 குடிஞை - ஆந்தை குடீசகன் - பிறரில்லத்தில் வசித்து, தன்னில்லத்திலாயி னும் பிறரில் லத்திலாயினும் பிச்சையெடுத் துண்பவன், சிகை, பூணூல், பிட்சா பாத்திரம், திரிதண்டந் தரிக்க வேண்டியன். தலையை மொட் டையாக்கிக் காஷாயமுந் தரிக்க லாம். தெய்வ வழிபாடு, செபம், தியானம் முதலியனவற்றிற் காலங் கழித்தல் வேண்டும். 625 குண்டிகை - நீர் மொண்டுவை த் திருக்கும் பாத்திரம் 625 குணாது - கிழக்கின்கண் உள்ளது 416 குணில் - குறுந்தடி 461 குராலான் - கபிலைப்பசு 281 குரம்பை - சிறுகுடில் 640 குரல் - பெண்மயிர் குழை - காதணி. இக்காலத்துத் தோடு என்ப 371, தளிர் 392 குறங்கு - தொடை 437 குறத்தி - குறமகள் 613 குறள்டி - நாலெழுத்து முதல் ஆறெழுத்துவரையு முள்ளவடி 348 குறிப்பிசை - எழுத்தலோசை 492 குறிப்பு - சுவைக்குறிப்பு 3, குறித்தல் 491 குறியீடு - பெயரிடுதல் 665 குறுங்கை - குறியகை 604 குறை - துணிக்கப்பட்ட இறைச்சி 258 குன்றம் - மலை 416 குன்றல் - குறைதல் 355 குன்றி - ஒருவகைக் கொடி 286 கூ கூடல் - மதுரை 645 கூடு - நெற்கூடு 575 கூதாளி - ஒருவகைச் செடி கூவல் - அழைத்தல் கூழை - கூந்தல் 521 கூற்று - யமன் 458 கூன் 360 கே கேடகம் - பரிசை 464 கேழல் - பன்றி கேள் - உறவு 263 கேளிர் - சுற்றம் 273 கை கைக்கிளை - ஒருதலைக் காமப் பொருளில் வரும் பாட்டு கைகோள் - ஒழுக்கங்கோடல் கைதை - தாழை 311 கைப்பு - ஒருசுவை 249 கைமை - விதவை 562 கையறல் - செயலறல் 266 கொ கொங்கு - பூந்தாது 498 கொச்சகம் - கொச்சக உடைபோல் அடுக்கிச் செய்யப்படும் பாட்டு 464 கொட்டை- தாமரைப் பொகுட்டு 312 கொடிச்சி - குறிஞ்சிநிலப்பெண் 412 கொடுகொட்டி - சிவன் ஆடலிலொன்று 461 கொடுமடி - வளைந்தமடி கொல்வினை - கொற்றொழில் 309 கொழுநன் - நாயகன் 387 கொளாஅல் - கொளுத்துக் 307 கொற்றம் - வெற்றி 338 கோ கோட்டான் - கூகை 623 கோட்டுமண் கொளல் - கொம் பால் மண்ணைக் குத்தி எடுத்தல் 417 கோட்படல் - கொள்ளப்படல், கொலைப்படல் கோடியர் - கூத்தர் கோதை - மாலை 521, சேரன் 256 கோய் - கள்முகக்கும் பாத்திரம் 312 கோழிலை - கொழுத்த இலை 269 கௌ கௌவை - பழிமொழி 54 ச சகடம் - பண்டி 458 495 சகரர் - சூரியகுலத்தரசர் 649 சடாடவி - சடைக்காடு, சடா+அடவி 461 சத்துவம் - உள்ள நிகழ்ச்சியை வெளிப்படுத்தும் மெய்ப்பாடு 249 சா சாதி - குலம், பிறப்புமாம் 353 சாதிப்பாட்டு - இசைப் பாட்டின் வகை 363 சாய்தல் - ஒருபக்கஞ் சார்தல் சாயின - மெலிந்தன 262 சாறு - விழா 265 சான்றவர் - அறிவின் நிறைந்தவர் 525 சி சிதல் - கறையான் 585 சிதைதல் - வழுப்படுதல், குற்றப்படுதல், அழிதல் 660,662 சிதைவு - குற்றம் 661 சிந்தடி - ஏழெழுத்துமுதல் ஒன்ப தெழுத்து வரையு முள்ளவடி, முச்சீரடி 349 சிந்தன் - குறளன் 352 சிம்புவித்தல் - கண்மூடல் 292 சிலம்பி - ஒருவகைப் பூச்சி 417 சிலம்பு - காலணியுளொன்று 505 சிலைத்தல் - ஒலித்தல் 256 சிற்றிசை - இசைப்பாப்பகுதி 465 சிற்றில் - சிறுவீடு சிறங்கணித்தல் - கண்ணைச் சுருக்கிப் பார்த்தல் 252 சின்மை - சிற்றெல்லை, இழிந்த வெல்லை 358 சினம் - கோபம் 258 சினை - மரக்கிளை 309 சீ சீர் - அசையாலாயது 313 சீர்த்தி - மிகுபுகழ் 665 சீரை - துலைக்கோற்றட்டு 257 சு சுட்டல் - குறித்தல் 272 சுணங்கு - தேமல் 465 சுரம் - பாலைநிலம் 261,369,467 சுரத்தல் - கொடுத்தல் 361 சுரிதகம் - கலிப்பாவினுறுப்பு 444 சுரும்பு - வண்டு சுரை - முலைமடி 289 சுவடு - நுண்மை அடையாளம் 313,458 சுவல் - பிடர்மயிர் 416 சுவர்ணம் - பொன் சூ சூர் - சூரன் 464 சூரல் - சுழல்காற்று 411 சூல் - கருப்பம் 256 சூழ்ச்சி - சுழற்சி 32, ஆராய்ச்சி 281 சூள் - சத்தியம் 257 செ செகுத்துண்ணல் - கொன் றுண்ணல் 470 செந்தூக்கு - ஆசிரிய அடி 383 செப்பிக் கூறல் - 394 செப்பல் - சொல்லுதல் 433 செம்பால் - சம்பாகம் 463 செய் - வயல் 268 செயலை - அசோகு 292 செவ்வழி - ஓர்பண் 502 செவிலி - கைத்தாய் 487 செவியறிவுறூஉ - செவியிலறி வுறுத்துவது 423 செற்றம் - கோபம் செற்றல் - செறிதல் செறுநர் - பகைவர் 289 சென்னி - சோழன் 441, தலை பாகங்கள் 426 சே சேந்தன் - முருகக்கடவுள் 438 சேய்மை - தூரம் சேவல் - மயிலொழிந்த ஆண் பறவை 651, ஆண்குதிரை 659 சொ சொல்லின் முடியுமிலக்கணம் - சொல்லான் முடிந்துகிடக்கு லக்கணம் 290 சொலிய - நீங்க 614 சொற்சீரடி - சொல்லே சீராக வரும்டி 434 ஞ ஞரல் - ஒலித்தல் 421 ஞா ஞாண் - நாண்; கயிறு 250 பூணூல் 440 326 ஞழால் - புலிநகக் கொன்றை 467 ஞான்று - நாள் 265 ஞாலம் - பூமி 450 ஞெ ஞெமுங்கல் - அழுந்தல் 268 ஞெகிழ்தல் - கழலுதல் த தகடூர் யாத்திரை - ஒரு நூல் 549 தகர் - ஆட்டின் ஆண் 602 தண்ணுமை - மத்தளம் 411 தணத்தல் - பிரிதல் 270 தத்தை - பெருங்கிளி 623 ததைதல் - நெருங்குதல் 324 தந்திரம் - நூல் தந்திரவாக்கியம் - ஒருசொல் 485 தப்பியார் - பகைவர் 470 தபுதி - அழிவு 257 தமனியம் - பொன் 458 தலைக்கீடு - சாட்டு 467 தலைஇ - பெய்து 271 தவிர்தல் - நீங்குதல், தங்குதல்421 தழை - ஒருவகை உடை, பூவுந் தளிரும் விரவத்தொடுத்தது 300 தளை - கட்டு, பந்தம் 340 தறுகண்மை - அஞ்சாமை 257 தா தாங்கல் - அடக்குதல், மறைத்தல் தடுத்தல் 262 தாது - மகரந்தம் 259 தாதுண் பறவை - வண்டு 273 தாம்பு - கயிறு 602 தாரகை - நட்சத்திரம் 458 தாலி - ஐம்படைத் தாலி 392 தாவல் - இடையிட்டுச் செல்லல் தாள் - நாளம், அடி 343 தானை - வஸ்திரம் 240 தி திகிரியோன் - திருமால் 469 திங்களூர் - ஒருர் 422 தித்தி - தேமல் 253 திதலை - தேமல் 270 திமிர்தல் - அப்புதல் 506 திரிகோட்ட வேணி - கோடு போலத் திரிந்ததாகிய வணியை யுடையவன் 460 திரிவிரிஇசை - இசைப் பாட்டின் வகை 363 திவவு - நரம்புக்கட்டு 287 திறம் - பகுதி 433 தீ தீர்தல் - பிரிதல், நீங்கல் 427 து துஞ்சல் - உறக்கம் 240 துடி - உடுக்கை 461 துடுப்பு - சுருக்குசுருவம் 277 துப்பு - பவளம் 392 தும்பி - வண்டு 446 துய்க்கும் - அனுபவிக்கும் 433 துயல்வரல் - அசைதல் துயில் - நித்திரை 259 துளக்கல் - அசைதல் 254 துளங்கல் - அசைதல் 433 துறை - மார்க்கம் 521 துனை - விரைவு தூ தூக்கு - பாக்களைத் துணித்து நிறுப்பது 313 தூங்கல் - தூங்குதல் 396 தூணி - அம்புக்கூடு 309 தூம்பு - துளை 272 தெ தெவிட்டல் - நிறைதல் 663 தெருமரல் - சுழற்சி தெருள் - தெளிவு தெளித்தல் - சத்தியஞ்செய்து தெளிவித்தல் 446 தெறித்தல் - துள்ளல் 416,567 தே தேரல்தேர் - பேய்த்தேர், கானல் தேவபாணி - கடவுள் வாழ்த்துச் செய்யுள் 435,458 தேறுதல் - தெளிதல் தை தைஇ - செய்து தைவரல் - தடவல் தொ தொடை - தொடுக்கப்படுஞ் செய்யுளுறுப்பு, மாலை 413 தொண்டு - ஒன்பது 413 தொய்யில் - மகளிர் முலை யிலும் தோளிலும் எழுதுங்கோலம் 465 தொழுநை - ஓராறு 259 தோ தோரிய மகளிர் - பிற்கூறுபாடு வோர் 662 தோற்றுவாய் - தொடக்கம் ந நகுதல் - சிரித்தல் 252 நகை - சிரிப்பு 251 நச்சல் - விரும்பல் நசைஇ - விரும்பி 407,458 நட்டல் - நண்புசெய்தல் 384 நடு - நடுநிலை 467 நந்து - சங்கு 584 நயத்தல் - விரும்பல் 304 நரந்தம் - நாரத்தை, கத்தூரி 80 நலம் - இன்பம் 416 நலிதல் - வருத்துதல் 446 நலிபு - ஆயுதம் 536 நவ்வி - மானுள் ஒரு சாதி 567 நவிலல் - பயிறல் 2 52,444 நனவு - விழிப்பு 467 நா நாகம் - பாம்பு 294 நாஞ்சில் - கலப்பை 629 நாட்டல் - நிறுத்தல், யாத்தல் 312 நாய்கன் - மீகாமன் 294 நாவல் - ஒருமரம் 391,458 நாவாய் - தோணி 386 நாறல் - மணத்தல் 300 நான்மாடக்கூடல் - மதுரை 433 நி நிணம் 258 நிம்பிரி - பொறாமை 274 நிமித்தம் - காரணம் 665 நியிர்தல் - உயர்தல் நிரணிறை - முறைநிறுத்தல் 312 நிலை - இயல்பு, தன்மை நிவத்தல் - உயர்தல் நு நுகும்பு - இளங்குருத்து நுசுப்பு - இடை 285 நுதல் - நெற்றி 291 நுதலுதல் - கருதுதல் 465 நுவ்வை - நுமது தங்கை 556 நெ நெகிழ்தல் - கழலுதல் 447, மெலிதல் 255 நெடிலடி - பதினைந்தெழுத்து முதல் பதினேழு எழுத்து வரையுமுள்ள வடி ஐஞ்சீரடி 351 நெய்த்தோர் - இரத்தம் 309 நெய்தல் - இரங்கற்பறை, சாப்பறை 412 நே நேமி - சக்கரம் 458 நேரடி - அளவடி. பத்தெழுத்து முதல் பதினான்கு எழுத்து வரையு முள்ளவடி; நாற்சீரடி 350 நேர்நிலை வஞ்சி - சமநிலை வஞ்சி இருசீரடியால் வருவது 354 நோ நோக்கு - நோக்கிக்கொள்ளும் பொருள்பெறச் செய்வது 313 நோய்சேர்ந்த திறம் - நோதிறம் ஒருபண் 267 நோன்றல் - பொறுத்தல் 272 ப பகடு - எருமை 294 பகழி - அம்பு 407 பகல்செய்வான் - ஞாயிறு பகல் - நுகத்தின் நடுவாணி பகூதகன் - சந்நியாசியாகி ஏழு வீட்டில் பிச்சை யெடுத்துண்ணல் வேண்டும், தன் வீட்டில் பிச்சை யெடுக்கலாகாது; தன் பூமியில் வசிக்கலாகாது. பற்றையொழித் தல் வேண்டும். 270 பசலை - பசப்பு 270 பட்டாங்கு - உண்மை 265 படப்பை - தோட்டம் 623 படலம் - அதிகாரம் 483 படாம் - வஸ்திரம் 461 பண்டரங்கம் - சிவனாடலி னொன்று 461 பண்ணத்தி - ஒருவகைச் செய்யுள் 492 பண்ணை - விளையாட்டு 300 பதம் - செல்வி 565 பதவு - புல்லு 565 பதி - ஊர் 433 பயிர்தல் - அழைத்தல் 595 பரமஹம்சன் - எல்லாம் பிரமமென வெண்ணி, பிரமத் தியானஞ் செய் பவன், இவன் ஏகண்டம், கந்தை, கௌபீனந்தரித்தல் வேண்டும். பிராமண சந்நியாசி காஷாயந் தரிக்கலாம். சம்புத்தி யிருத்தல் வேண்டும். பூணூல் களைய வேண்டும். பரம் - மேல் 313 பரவைவழக்கு - உலகவழக்கு பரிகலம் - பிச்சை ஏற்கும் பாத்திரம் 458 பரிசில்கடாநிலை - பரிசில் வேண்டல் 628 பரிசில்விடை- பரிசில் விடுத்தல் 628 பரிதல் - வருந்தல் 270 பரிதி - சூரியன் பரிபாடல் 474 பருவரல் - துன்பப்படல் 270 பலித்தல் - பயன்படல் 461 பலி - பிச்சை, தெய்வங் களுக்குப் பலியிடுதல் 458 பழங்கண் - துன்பம் 270 பழனம் - வயல் 303 பறந்தலை - போர்க்களம் 253 பறி - ஓலைப்பாய் 567 பறை - சிறை 253 பனிச்சை - ஐம்பாலிலொன்று 433 பனித்தல் - நடுங்கல் 265 பா பாக்கம் - நெய்தனிலத்தூர் பா - பரந்துபட்டுச்செல்லும் ஓசை 313 பாங்கு - பகுதி பாட்டங்கால் - தோட்டம் 465 பாடாண்கைக்கிளை - பெண்பாற் கைக்கிளைபற்றி ஒரு ஆண் மகனது வீரம் அழகு முதலிய வற்றைப் புகழ்ந்து கூறல் 472 பாடினி - விறலி பாணி - தாளம் 324 பாயல் - துயில் பால் - பகுதி பால்நிறவண்ணன் - பலதேவன் 458 பானாள் - பாதிநாள் இரவினடுக் கூறு பி பிசி - நொடி 477 பிடகை - பூந்தட்டு 406 பிடி - பெண்யானை 312,606 பிண்டி - அசோகு 433 பிணர் - சருச்சரை 604 பிணவு - பெண் பிணி - நோய் 433 பிணித்தல் - கட்டுதல் பித்திகை - கருமுகை 498 பித்தை - ஆண்மயிர் பிதிர்தல் - உடைதல், துகளாதல் 458 பிழம்பு - வடிவு 276 பின்னாகம் - பின்னிமுடிப்பது 392 பீ பீர் - பசப்பு 382 பீரம் - பீர்க்கு 276 பீலி - மயிலிறகு 464 பு புகார் - காவிரிப்பூம் பட்டினம் 472 புத்தி - பொருந்துமாறு புணை - தோணி 270 புய்க்கல் - பிடுங்கல் 449 புரைதல் - ஒத்தல் 433 புரையோர் - மேலோர் 426 புல்வாய் - மானுளொருசாதி 567 புலநெறி வழக்கம் - செய்யுள் வழக்கம் 276 புலம்பு - தனிமை 485, வறுமை 416 புலவி - புலத்தல் 453 புலவியுளழுதமங்கலம் 499 புலவு - புலான்மணம் 564 புலன் - புலம் = அறிவுடைமை, வனப்புளொன்று 273,313 புழல் - துளை 309 புழுகு - மொட்டு (முட்டு) 309,392 புறங்காடு - சுடுகாடு 424,564 புறம் - பொருட்பகுதி1, புறப்பொருள் 519 புறநிலைவாழ்த்து - தெய்வத்தைப் புறநிறுத்தி வாழ்த்துவது 422 புனிற்றா - ஈன்றணிமையை யுடைய பசு 302 பூ பூசல் - போர் 393 பூண் - ஆபரணம் 433 பெ பெண்ணை - பனை 270,417 பெருமிதம் - வீரம் 251 பெற்றம் - பசு 594 பே பேதுறல் - மயங்கல், வருந்தல் 273 பேதுறல் - வருந்தல் 416 பை பைதல் - துன்பம் 559 பைதல் - வருத்தமுடையவாய் 449 பையுள் - துன்பம் 502 பொ பொச்சாப்பு - சோர்வு 240 பொதுவன் - இடையன் 465 பொருளிசை, 491 பொழில் - உலகம் 492, சோலை 391 பொழிப்பு ஒரு தொடை 410 பொறாமை - அழுக்காறு 240 போ போக்கு - சுரிதகம் 444 போழ்தல் - பிளத்தல் 390 பௌ பௌவம் - கடல் 313 ம மக்கள் - ஆறறிவுடையமனுஷர் 588 மக - பிள்ளை 253 மகரம் - ஒருவகை மீன் மகிழ் - ஒருபுரம் 433 மடங்கல் - இயமன் 424 மடன் -மடம் - கொழுத்தக் கொண்டுகொண்டதுலிடாமை252 மடன்மா - பனைமடற் குதிரை 257 மடல் - பனைமடல் 466 மடிமை - சோம்பல் 274 மண்டிலப்பாட்டு, எல்லாவடியும் நாற்சீராய்வரும் ஆசிரியப் பாட்டு மண்டை - பாணர்கையிலுள்ள ஏற்கும் பாத்திரம் 325 மண்ணல் - கழுவல் 433 மதியம் - சந்திரன் 458 மதுகை - வலி 467 மந்தி - குரங்கு 255 மம்மர் - மயக்கம் 252,466 மயல் - மயக்கம் 458 மரல் - ஒருசெடி 465 மரா - கடம்பு 433 மருகன் - வழித்தோன்றல் மருங்குல் - இடை 276 மருட்கை - வியப்பு 255 மல்லல் - நிறைதல் மலிவு - வரைவுமகிழ்ச்சி 499 மழு - ஒரு ஆயுதம் மள்ளர் - வீரர் 406 மறக்குடி - வீரர்குடி மறுகு - வீதி 285 மன்று - பசுத்தொழுவம் 375 மா மாக்கள் - ஐயறிவுடைய மனுஷர் மாட்டுதல் - கொளுவுதல், இயைத்தல் மாத்திரை - அளவு 313 மாமை - மாந்தளிர் 270 மாய்தல் - மறைதல் 270 மாரி - மேகம் மாற்றம் - சொல் 266 மி மிடைதல் - நெருங்குதல் 254 மீ மீக்கூறல் - உயர்த்திக்கூறல் 252,254 மீன் - நாண்மீன் 422 மு முகை - அரும்பு முட்டு - முட்டுப்பாடு; தடை 271 முட்டின்று - முட்டையுடையது முட்டுதல் - நிறைதல் 435 முதுமொழி - பழமொழி 489 முதை - பழங்கொல்லை 501 முந்நீர் - கடல் 406 முரணல் - மாறுபடல் முரண் - மாறுபாடு, 275 ஒரு தொடை 400 முரள் - சிப்பிவகை 584 முரலல் - துள்ளியொலித்தல் 365 முரற்கை - கலிப்பா 382 முற்றில் - சிப்பிவகையிலொன்று 504 முறுவல் - சிரிப்பு, பல் 406,466 முன்றில் -முற்றம் 343 முன்னம் - குறிப்பு, குறிப்பால் இம்மொழி இவர்க்கு உரிய என்பதை, அறியச்செய்தல் 519 முனைதல் - வெறுத்தல் 615 முனைவன் - முன்னோன் 649 மூ மூங்கா - கீரியுள் ஒரு சாதி 561 மூதா - முதியபசு 501 மூதிற்பெண்டிர் - முதிய மறக்குடியிற் பிறந்த மகளிர் 253 மெ மெய் - வடிவு மெய்ப்பாடு - பொருட்பாடு, மெய் யின்கட் பட்டுத் தோன்றுவது 1 249 மென்புலம் - மருதமும் நெய்தலும் 433 மே மேவார் - பகைவர் 339 மேற்கோடு - மேற்கொம்பு 559 மை மைந்து - வலி 273 மொ மொக்குள் - முகிழ்ப்பு 291 மொய்ப்பு - வலி 435 மோ மோ மோடு - பெருமை 290 மோத்தை - ஆட்டினான் 602 மோதிரப்பாட்டு - ஒருவகைப் பாட்டு 492 மோனை - ஒரு தொடை 400 யா யா - ஒருமரம் 640 யாத்தல் - கட்டல், தொடுத்தல் 313 யாப்பு - அடிதோறும் பொருள் முடியச்செய்வது 313,390 வ வகையுளி - அசைகளை இசைப்படி வகுத்தல் 323 வங்கம் - தோணி 472 வஞ்சி - வஞ்சிப்பா 354 வடுகு - வடுகநாடு 650 வண்ணித்தல் - வர்ணித்தல், புனைந்துரைத்தல் 452 வண்டல் - மணல் விளையாட்டு506 வண்ணம் - சந்தவேறுபாடு 525 வணர்தல் - வளைவு, கடை குளர்வுதல் 466 வதி - தங்குமிடம் 446 வம்பலர் - வழிச்செல்வோர் வயவு - வேட்கை 300 வரன்றல் - வாரல், வாருதல் 347 வரி - இசைப்பாட்டுவகை 465 வரிவயம் - புலி 258 வரை - எல்லை, வரையறை 476 வரை உலகம் - குறிஞ்சி நிலம் 271 வரைதல் - நீக்கல், நியமமான ஒழுக்கம் வரைப்பு - எல்லை 422 வழங்கல் செல்லல், திரிதல் 598 வழியசை - பின்னுமசை வருவதற்கு ஏதுவானது 435 வள் - வார் 416 வள்ளியோன் - கொடையாளன் 286 வள்ளம் - சிறு கிண்ணம் 285 வளி - காற்று 338 வளை - சங்கு, வளையல் 458 வறத்தல் - வற்றல் வறிது - சிறிது 252 வன்புலம் - முல்லையும் குறிஞ்சியும் 433 வா வாணிகம் - வியாபாரம் 632 வாமன் - அருகன் வாய்மொழி - குறிப்புமொழி 391,491 வாய்ப்புள் - சொல் நிமித்தம் 465 வாயாகுதல் - உண்மையாதல் 261 வாயுறை - சொன்மருந்தென்பர் பேராசிரியர், மெய்ப் பொருளையறிவுறுத்துவது 423 வாரணம் - கோழி 623 வாரம் - அரிதகம், செம்பாலின் சம்பாகம், பிற்கூறு 456,662 வால் - வெண்மை, தூய்மை 281 வி விசித்தல் - கட்டுதல் 420 விடக்கு - இறைச்சி 623 விடாஅல் - விடற்க 272 விடுத்தல் - விடைகூறல் 654 விதத்தல் - சிறப்பாயெடுத்துக் கூறல் 589 விரவல் - கலப்பு 375 விலக்கல் - மறுத்தல் 654 விழுமம் - துன்பம் 270 விழைதல் - விரும்பல் 420 விள்ளல் - அலர்தல் விளித்தல் - அழைத்தல் 312 விறலி - ஆடுமகள் 255 விறல் - சத்துவம் வென்றி 253 விறத்தல் - செறிதல் 293 வீ வீழ் - விழுது 271 வீழில்தாழை - தெங்கு வீளை - சீழ்க்கை வீற்றுவீற்று - வேறுவேறு 325 வெ வெஃகாமை - விரும்பாமை 535 வெகுளி - கோபம் 251 வெண்மீன் - வெள்ளி 324 வெரிந் - முதுகு 309 வெரூஉதும் - அஞ்சுதும் 468 வெருவரல் - அஞ்சுதல் வெருகு - பூனையுள் ஒருசாதி 561 வெளில் - தறி வெள்ளில் பாடை 424 வெள்ளை - வெண்பா 370 வெள்ளாடு 407 வெறுத்திசை - இன்னாவோசை 323 வே வேய் - மூங்கில் 278 வேட்கோ - குயவன் 490 வேட்கை - விருப்பம், ஆசை 286 வேட்டல் - வேள்வி செய்தல் 628 வேலி - மதில் 271 வேழம் - யானை 290 வை வை - கூர்மை வைப்பு - சுரிதகம் 448 வைகல் - நாள், கழிதல் வைகறை - விடியல் 275