தொல்காப்பிய உரைத்தொகை - 10 சொல்லதிகாரம் தெய்வச்சிலையம் இரா. வேங்கடாசலம் பிள்ளை (பதிப்பு - 1929) மீள்பதிப்பு - 2018 பதிப்பாசிரியர் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் தமிழ்மண் பதிப்பகம் நூற்குறிப்பு தொல்காப்பிய உரைத்தொகை – 10 சொல்லதிகாரம் - தெய்வச்சிலையம் முதற்பதிப்பு (1929) இரா. வேங்கடாசலம் பிள்ளை பதிப்பாசிரியர் மீள்பதிப்பு (2018) முதுமுனைவர் இரா. இளங்குமரனார் பதிப்பாசிரியர்கள் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் பக்கம் : 24+520 = 544 விலை : 850/- பதிப்பு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. .: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்:  தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் :850  கட்டமைப்பு: இயல்பு  படிகள் : 500   நூலாக்கம் : கோ. சித்திரா   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (Harrish)   அச்சு : மாணவர் நகலகம், பிராசசு இந்தியா, ரியல் இம்பேக்ட் சொல்யூசன், தூரிகை பிரிண்ட், வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.  தொல்காப்பிய உரைத்தொகை தொல்காப்பியம் நம் வாழ்வியல் ஆவணம்; நம் முந்தையர் கண்ட மொழியியல் வளங்கள் அனைத்தையும் திரட்டித் தந்த தேன் தேட்டு! அத்தேட்டைச் சுவைத்த கோத்தும்பிகள் பழைய உரையாசிரியர்கள். அவர்கள் உரைகளையெல்லாம் ஒன்று திரட்டி, வரிசையுறத் தமிழுலகம் கொள்ள வைத்த உரைத்தொகுதிகள் இவையாம்! முன்னைப் பதிப்பாசிரியர்கள் தெளிவுறுத்தும் மணிக்குவைகள் எல்லாமும், அவர்கள் வைத்த வைப்புப்படி வைத்த செப்பேடுகள் இத் தொல்காப்பிய உரைத் தொகையாம். மேலும், இவை கிடைத்தற்கு அரிய கருவூலமுமாம்! ***** ***** ***** இளம்பூரணர், சேனாவரையர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், தெய்வச் சிலையார், கல்லாடர் ஆகிய பழைய உரையாசிரியர்கள், உரை விளக்கம் பல காலங்களில் எழுதியுளர். எழுத்து, சொல், பொருள் ஆகியவற்றின் பதிப்புகள் ஒரே காலத்தில் ஒருவரால் வெளியிடப்பட வில்லை. அவற்றையெல்லாம் ஓரிடத்தில் ஒரே வேளையில் ஒட்டு மொத்தமாக முன்னைப் பதிப்பாசிரியர்கள் உரை - விளக்கம் - குறிப்பு - இணைப்பு ஆகியவற்றுடன் பெற வெளியிடும் அரிய பெரிய முயற்சியில் வெளியிடப்படுவது தமிழ்மண் பதிப்பகத்தின் இப்பதிப்பாகும். தொல்காப்பியத்திற்குக் கிடைத்த உரைகள் அனைத்தையும் ஒருமொத்தமாகத் தருவதால் இது, தொல்காப்பிய உரைத்தொகை எனப்பட்டது. தொகையாவது தொகுக்கப்பட்டது. இரா. இளங்குமரன் கரந்தைக் கவியரசு வேங்கடாசலனார் கந்தருவக் கோட்டைக்கு அருகில் உள்ள மோகனூரில் அரசங்கசாமி என்பார் மகனாராக 1888 வியவ மார்கழி ஐந்தாம் நாள் தோன்றினார். கரந்தை தூய பேதுரு பள்ளியில் பயின்றார். கரந்தை வேங்கடராமர் என்பாரிடம் தமிழ்ப் புலமை பெற்றார். மேலும் தூய பேதுரு கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் சுப்பிரமணியர் என்பாரிடமும், இலக்கணம் வல்ல காவல் துறை வல்ல சோம சுந்தரரிடம் இலக்கணமும்கற்று வல்லமையுற்றார். கோனாபட்டில் தமிழாசிரியரானார். ஆங்குப் பண்டித மணியின் தொடர்பும் மேலைச் சிவபுரிச் சன்மார்க்க சபைத் தொடர்பும் உண்டாயின. கரந்தையில் தமிழ்ச் சங்கம் அமைந்ததும் கரந்தைக் கல்லூரியில் பணிசெய்தார். அப்பொழுது நாவலர் ந.மு.வே. அவர்களின் நட்பு வாய்த்தது. 1922இல் பீட்டர்சு உயர்பள்ளித் தமிழாசிரியராக அமர்த்த எண்ணி, மதுரைத் தமிழ்ச் சங்கத்திற்கு `இவர் தமிழில் தக்கார் தாமர்’ என எழுதிக் கேட்க, சங்கத்தார், “சங்கத் தேர்வாளர்களுள் அவர் ஒருவர்,” “மிகத் தக்கார்” எனச் சான்றளிக்க வேலை பெற்றார். 1932இல் திருவையாற்று அரசர் கல்லூரியில் வேலை பெற்றுப் பத்தாண்டுகள் பணி செய்தார். தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்குத் தெய்வச் சிலையார் என்பார் உரை உள்ளதை அறிந்து, அவ்வேட்டை ஆய்ந்து கரத்தைத் தமிழ்ச சங்க வெளியீடாக வெளியிட்டார். 1942இல், அரசர் கல்லூரியில் இருந்து ஓய்வு பெற்று கரத்தைத் தமிழ்ச் சங்கப் புலவர் கல்லூரியில் பணி செய்தார். நாவலர் அவர்களோடு இணைந்து அகநானூற்றுக்கு அரிய உரை கண்டார். அகவை 60 ஆக, புலமையர் பலரும் கூடி மணிவிழா எடுத்துக் `கவியரசு’ என்னும் விருதும், பொற்கிழியும் வழங்கிச் சிறப்பித்தனர். இவர்தம் துணைவியார்: செகதாம்பாள். மகனார்: சுப்பிரமணியனார் இவர் இயற்கையுற்ற நாள்: 16.12.1953 - இரா. இளங்குமரன் தொல்காப்பியம் அரிய பதிப்புகளும் தேவைகளும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் தமிழின் பண்டை இலக்கண/ இலக்கிய நூல்கள் அச்சிடப் பெற்றன. அவ்வகையில் தமிழில் அச்சடிக்கப்பட்ட முதல் இலக்கண நூலாக இன்று அறியப்படுவது நன்னூலே. காரணம் தமிழக மடங்கள் நன்னூலைப் பயிற்றிலக்கண மாகவும் பயன் பாட்டு இலக்கணமாகவும் கொண்டிருந்தன. 1835 -இல் திருத்தணிகை விசாகப் பெருமாளையர் தாமே உரையெழுதி நன்னூல் மூலமும் காண்டிகையுரையும் என்னும் தலைப்பில் வெளியிட்டார். தொடர்ந்து தாண்டவராய முதலியாரும்,அ. முத்துச்சாமி பிள்ளையும் இணைந்து இலக்கணப் பஞ்சகம் என்னும் தலைப்பில் நன்னூல், நம்பியகப் பொருள், புறப்பொருள் வெண்பாமாலை ஆகியவற்றின் மூலங்களை வெளிக் கொணர்ந் தனர். இதன் தொடர்ச்சியாக 1838 -இல் வீரமா முனிவரின் தொன்னூல் விளக்கம் அச்சாக்கம் பெற்றது. 1847 -இல் தான் மழவை மகாலிங்கையரால் தமிழின் தொல் இலக்கணம் தொல்காப்பிய எழுத்ததிகாரம் உரையோடு அச்சிடப்பட்டது. தொடர்ந்து யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலர், யாழ்ப்பாணத்து சி.வை. தாமோதரம் பிள்ளை, கோமளபுரம் இராசகோபாலபிள்ளை, சோடசாவதானம் சுப்பராய செட்டியார், போன்றோர் 19 -ஆம் நூற்றாண்டில், தொல்காப்பியத்தைக் கிடைத்த உரைகளோடு பதிப்பித்தனர். 1935 - இல் தொல்காப்பியத் திற்கு எழுதப்பட்ட உரைகள் (இன்று கிடைத்துள்ள அனைத்து உரைகளும்) பதிப்பிக்கப்பட்டு விட்டன. 1847 - 2003 வரை தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரை எட்டுப் பதிப்புகளும், 1885-2003 வரை தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் முன்னைந்தியல் எட்டுப் பதிப்புகளும், செய்யுளியல் நச்சினார்க்கினியர் தனித்து மூன்று பதிப்புகளும் வெளிவந்துள்ளன. 1892 - 2003 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை ஐந்து பதிப்புகளும், 1868 - 2006 வரை எழுத்து இளம்பூரணம் ஏழு பதிப்புகளும், 1920 - 2005 வரை தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணம் பத்துப் பதிப்புகளும், 1927 - 2005 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் இளம்பூரணம் ஆறு பதிப்புகளும், 1885 - 2003 வரை தொல்காப்பியம் பொருளதிகாரம் பேராசிரியம் ஏழு பதிப்புகளும், 1929 - 2003 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் மூன்று பதிப்புகளும், 1964 - 2003 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடம் மூன்று பதிப்புகளும் வெளிவந்துள்ளன என முனைவர் பா. மதுகேவரன் தமது தொல்காப்பியம் பதிப்பு ஆவணம் நூலில் குறிப்பிட்டுள்ளார். 2003 -இல் தமிழ்மண் பதிப்பகத்தின் வாயிலாகத் தொல்காப்பிய உரைகள் (இளம்பூரணம், நச்சினார்க்கினியம், பேராசிரியம், சேனாவரையம், கல்லாடம், தெய்வச்சிலையம்) பண்டித வித்வான் தி.வே. கோபாலையர், முனைவர் ந. அரணமுறுவல் ஆகியோரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, முதுமுனைவர் இரா. இளங்குமரனாரின் வாழ்வியல் விளக்கத்துடன் வெளிவந்துள்ளன. இருப்பினும் அச்சில் இன்று கிடைக்காத அரிய பதிப்புகளை மீள் பதிப்பாகப் பதிப்பிக்க வேண்டும் என்னும் நோக்கத்தில், சி.வை. தாமோதரம் பிள்ளை பதிப்பு, கா. நமச்சிவாய முதலியார் பதிப்பு, வ.உ. சிதம்பரம் பிள்ளை பதிப்பு, இரா. வெங்கடாசலம் பிள்ளை பதிப்பு, சி. கணேசையர் பதிப்பு, தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் பதிப்பு ஆகியோரின் பதிப்புகளுடன் தொல்காப்பியம் தொடர்பாக அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரைகளும் இணைத்து தமிழ்மண் பதிப்பகத்தின் வழி மீள் பதிப்புகளாகப் பதிப்பிக்கப் படுகின்றன. மீள் பதிப்பில் பின்பற்றியுள்ள பொது நெறிகள் முதுமுனைவர் இரா. இளங்குமரனாரின் தொல்காப்பியம் குறித்த விளக்கம், ஒவ்வோர் அதிகாரம் பற்றிய வாழ்வியல் விளக்கம், உரையாசிரியர் விவரம் ஆகியவை நூலின் தொடக்கத் தில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. முன்னைப் பதிப்புகளின் முகப்புப் பக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முன்னைப் பதிப்பாசிரியர் பற்றிய விவரங்கள் கால அடிப்படையில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. ஒவ்வோர் இயலின் தொடக்கத்தில், பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் தொல்காப்பியம் தொகுப்பில் எழுதி யுள்ள தொல்காப்பிய இயல் பற்றிய விளக்கம் தரப்பட்டுள்ளன. முன்னைப் பதிப்பில் அடிக்குறிப்புகள் அந்த அந்தப் பக்கத்தில் தரப்பட்டிருந்தன. இப்பதிப்பில் ஒவ்வோர் இயலுக்கும் தொடர் இலக்கமிட்டு, அந்தந்த இயலின் இறுதியில் தொகுத்து வழங்கப் பட்டுள்ளன. முன்னைப் பதிப்புகளில் நூற்பாக்களைக் கையாண்டுள்ள முறையையே இப் பதிப்பிலும் பின்பற்றப்பட்டுள்ளது. நூற்பாக் களுக்குத் தமிழ் எண் கொடுக்கப்பட்டிருப்பின் அவை நடை முறையில் இப்போது உள்ள எண்களாக மாற்றப்பட்டுள்ளன. நூற்பா அகரமுதலி, மேற்கோள் அகரமுதலி போன்றவற்றிற்குப் பக்க எண்கள் கொடுக்கப்பட்டிருப்பின் அவை நூற்பா எண்களாக மாற்றப்பட்டுள்ளன. பின்னிணைப்பாகத் தொல்காப்பியம் தொடர்பாக அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ள கட்டுரைகள் இணைக்கப் பட்டுள்ளன. நூற்பா முதற் குறிப்பு அகராதி மட்டும் கொடுக்கப் பட்டுள்ள பதிப்புகளில் அவற்றோடு, 2003 தமிழ்மண் பதிப்பகத்தின் வழியே பண்டித வித்துவான் தி.வே. கோபாலையர் முனைவர் ந. அரணமுறுவல் ஆகியோரைப் பதிப்பாசிரியர்களாகக் கொண்டு வெளிவந்த இலக்கணப் பதிப்பில் இணைக்கப் பட்டிருந்த, - நூற்பா நிரல் - மேற்கோள் சொல் நிரல் - மேற்கோள் சொற்றொடர் நிரல் - செய்யுள் மேற்கோள் நிரல் - கலைச் சொல் நிரல்( நூற்பாவழி) - கலைச்சொல் நிரல் (உரைவழி) ஆகியவை எடுத்துப் பயன்படுத்தப்பட்டுள்ளன. - பாடவேறுபாடுகள் சுட்டப்பட்டுள்ளன. - முன்னைப் பதிப்பில் வடமொழிச் சொற்கள் பயன் படுத்தப்பட்டிருப்பின் அவை அப்படியே கையாளப் பட்டுள்ளன. - தொல்காப்பியப் பதிப்புகள் குறித்த விவரம் தொகுக்கப்பட்டுள்ளன. சி.வை. தாமோதரம் பிள்ளை பதிப்பு - 1892 சொல்லதிகாரம் - நச்சினார்க்கினியர் 1868 - இல் தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரை யருரையைப் பதிப்பித்த சி.வை. தாமோதரம் பிள்ளை, 1892 ஆம் ஆண்டு சொல்லதிகாரம் நச்சினார்கினியர் உரையைப் பதிப்பித்தார். சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை தொடர்ச்சியாகப் பதிப்பிக்கப்பட்டாலும், முதலில் பதிப்பித்த சி.வை. தாமோதரம் பிள்ளையின் பதிப்பு இன்று அச்சுவடிவில் புழக்கத்தில் இல்லை. அப்பதிப்பினை வெளியிடும் நோக்கத்தில் இப்பதிப்பு மீள் பதிப்பாக வெளிவருகிறது. இப்பதிப்பில் நூற்பா முதற்குறிப்பு அகராதி மட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் மற்ற இணைப்புகளும் இணைக்கப்பட்டு, முதுமுனைவர் இரா. இளங்குமரன் அவர்களின் வாழ்வியல் விளக்கமும், ஒவ்வோர் இயலின் தொடக்கத்தில் க. வெள்ளைவாரணனார் எழுதியுள்ள இயல் விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் சொல்லதிகாரம் தொடர்பாக அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரைகள் பின்னிணைப்பாக இணைக்கப் பட்டுள்ளன. கா. நமச்சிவாய முதலியார் பதிப்பு - 1927 சொல்லதிகாரம் - இளம்பூரணம் இளம்பூரணம் எழுத்ததிகாரம் பொருளதிகாரம் உரைகள் முன்பே வெளிவந்தன. சொல்லதிகாரம் இளம்பூரணர் உரை 1927 - இல் காவேரிப்பாக்கம் நமச்சிவாய முதலியாரின் ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் சென்னை ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸால் வெளியிடப்பட்டது. இதுவே சொல்லதிகாரம் இளம்பூரணர் உரையின் முதற் பதிப்பாகும். இப் பதிப்பில் அடிக்குறிப்புகள் அந்தந்தப் பக்கத்தில் கொடுக்கப்பட்டிருந்தன. இப்பதிப்பில் தொடர் இலக்கமிட்டு, ஒவ்வோர் இயலின் முடிவில் அடிக் குறிப்புகள் தரப்பட்டுள்ளன. இப் பதிப்பில் நூற்பாக்களுக்குத் தமிழ் எண்வரிசையும் நடைமுறை எண் வரிசையும் கொடுக்கப்பட்டிருந்தன. இப்பதிப்பில் நடைமுறை எண் முறை மட்டும் பின்பற்றப்பட்டுள்ளது. வ.உ. சிதம்பரம்பிள்ளை பதிப்பு - 1928 , 1931, 1933, 1935 எழுத்ததிகாரம், பொருளதிகாரம் - இளம்பூரணம் 1868 இல் திரிசிரபுரம் சோடசாவதானம் சுப்பராய செட்டியாரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு கன்னியப்ப முதலியாரால் பதிப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து 1928 -இல் தொல்காப்பியம் இளம்பூரணம் எழுத்ததிகாரம் பதவுரை என்னும் பெயரில் வ.உ. சிதம்பரம் பிள்ளை பதிப்பு வேலாயுதம் பிரிண்டிங் பிர, தூத்துக்குடியிலிருந்து வெளிவந்தது. அப்பதிப்பின் தொடக்கத்தில் கொடுக்கப்பட்டிருந்த நூற்பா அகராதி இப்பதிப்பின் நூலின் இறுதியில் கொடுக்கப் பட்டுள்ளது. அத்துடன் சொல் நிரல் (மேற்கோள்), சொற்றொடர் நிரல் (மேற்கோள்), செய்யுள் நிரல் (மேற்கோள்) கலைச் சொல் நிரல் (நூற்பா வழி) கலைச் சொல் நிரல் (உரைவழி) தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. 1920 -இல் கா. நமச்சிவாய முதலியார் பொருளதிகாரம் இளம்பூரணம் உரை முதல் பகுதியாகக் களவியல், கற்பியல், பொருளியல் மூன்று இயல்களையும் ஸி. குமாரசாமி நாயுடு ஸன் நிறுவனத்தார் வெளியிட்டுள்ளார். மற்ற பகுதிகள் வெளிவந்ததாக அறிய இயலவில்லை. இப்பதிப்பிற்குப் பின் வ.உ. சிதம்பரம் பிள்ளை தொல்காப்பியம் இளம்பூரணம் பொருளதிகாரம் அகத்திணையியல், புறத்திணையியல் ஆகிய இரு இயல்கள் இணைந்த பதிப்பு, சென்னைப் பிரம்பூரில் இருந்து வெளிவந்தது. இப்பதிப்பில் ஆண்டு குறிப்பிடப்படவில்லை. ஆனால் 1921- இல் வெளிவந்த குறிப்பினை, தொல்காப்பியம் இளம்பூரணம் எழுத்திகாரம் பதவுரை பதிப்பில் குறிப்பிடுகிறார். களவியல், கற்பியல், பொருளியல் 1933 - இல் வாவிள்ள இராமவாமி சாட்ருலு அண்ட் ஸன் மூலம் வெளி வந்துள்ளது. 1935 - இல் மேற்கண்ட பதிப்பாளர்களைக் கொண்டு மெய்ப்பாட்டியல், உவமையியல், செய்யுளியல், மரபியல் பதிப்பித்துள்ளார். மூன்று பகுதிகளாக வெளிவந்தாலும் அவற்றிற்கும் தொடர் எண் கொடுக்கப்பட்டுள்ளன. 1935 - இல் ஒருங்கிணைந்த பதிப்பாக வ.உ. சிதம்பரம் பிள்ளை எ. வையாபுரிப்பிள்ளை ஆகியோர் பதிப்பாசிரியர்களாக அமைந்து வெளிவந்துள்ளது. தனித்தனிப் பதிப்புகளாக மூன்று பகுதிகளாக வெளிவந்துள்ள பதிப்பினை அடிப்படையாகக் கொண்டு இம் மீள் பதிப்பு பதிப்பிக்கப்படுகின்றது. இரா. வெங்கடாசலம் பிள்ளை பதிப்பு - 1929 சொல்லதிகாரம் - தெய்வச் சிலையார் 1929 -இல் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தால் முதன் முதலில் பதிப்பிக்கப்பட்டது. பதிப்பாசிரியர் ரா. வேங்கடாசலம் பிள்ளை. இதன் நிழற்படிவம் 1984 -இல் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இப் பதிப்பில் சூத்திர முதற் குறிப்பு அகராதி மட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் சொல் நிரல் (மேற்கோள்), சொற்றொடர் நிரல் (மேற்கோள்), செய்யுள் நிரல் (மேற்கோள்) கலைச் சொல் நிரல் (நூற்பா வழி) கலைச் சொல் நிரல் ( உரைவழி) தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. சி. கணேசையர் பதிப்பு - 1937, 1938, 1943,1948 எழுத்து நச்சினார்க்கினார்கினியர், சொல்லதிகாரம் சேனாவரையர் பொருள் - நச்சினார்க்கினியர், பேராசிரியர் 1847 - இல் மழவை மகாலிங்கையரால் எழுத்ததிகாரம் நச்சினார்க் கினியம் பதிப்பிக்கப்பட்டது. 1891 - இல் சி. வை. தாமோதரம் பிள்ளை பதிப்பும் 1923 - இல் த. கனகசுந்தரத்தின் பதிப்பும் கழகத்தின் மூலமும் வெளிவந்தன. 1937 - இல் நா. பொன்னையா அவர்களால் கணேசையர் எழுதிய உரைவிளக்கக் குறிப்புகளுடன் எழுத்ததிகாரம் மூலமும் நச்சினார்க்கினியருரையும் வெளியிடப்பட்டன. 1868 -இல் யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுக நாவலர் பதிப்பு, சென்னபட்டணம் ஊ. புஷ்பரதச் செட்டியாரது கலாரத்நாகர அச்சுக்கூடத்தில் சி.வை. தாமோரதம் பிள்ளையால் பதிப்பிக்கப்பட்டது. இதே ஆண்டு கோமளபுரம் இராசகோபால பிள்ளையின் பதிப்பும் தொல்காப்பியம் சேனாவரையம் என்ற பெயரில் வெளிவந்துள்ளது. 1923 - இல் கந்தசாமியார் திருத்திய திருத்தங்களோடும் குறிப்புரையோடும் கழகப் பதிப்பாக வெளிவந்தது. 1938 -இல் சி. கணேசையர் பதிப்பு அவர் எழுதிய உரைவிளக்கக் குறிப்புகளுடன் வெளியிடப்பட்டது. 1885 -இல் சி.வை. தாமோதரம் பிள்ளையால் தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் இயற்றிய உரையோடும் பலதேசப் பிரதிரூபங்களைக் கொண்டு பரிசோதித்து யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரரால் பதிப்பிக்கப்பட்டது என்னும் குறிப்புடன் பதிப்பு வெளிவந்தது. அப்பதிப்பில் உள்ள பின்னான்கியல் நச்சினார்க்கினியர் உரை அன்று என்று மறுத்து இரா. இராகவையங்கார் 1902 - 1905 வரையான செந்தமிழ் இதழில் ஆய்வுக்கட்டுரை எழுதித் தெளிவுபடுத்தினார். அதனைத் தொடர்ந்து பொருளதிகாரம் முழுதும் நான்கு பகுதியாக நச்சினார்க்கினியம், பேராசிரியம் எனப் பிரித்து 1916, 1917 - ஆம் ஆண்டுகளில் ச. பவனாந்தம் பிள்ளை பதிப்பித்தார். 1917 - இல் ரா. இராகவையங்கார் செய்யுளியலுக்கு நச்சினார்க்கியர் உரை இருப்பதை அறிந்து, நச்சினார்கினியர் உரை உரையாசிரியர் உரையுடன் என இரு உரைகளையும் இணைத்து வெளியிட்டார். 1934, 1935 -இல் எ. வையாபுரிப்பிள்ளை அவர்களால் ஓலைப் பிரதி பரிசோதிக்கப்பட்டு மா.நா. சோமசுந்தரம் பிள்ளை அவர்களது அரிய ஆராய்ச்சிக் குறிப்புகளுடனும் திருத்தங் களுடனும் தொல்காப்பியம் பொருளதிகாரம் முதற்பாகம் வெளிவந்தது. 1948 - இல் தொல்காப்பிய முனிவரால் இயற்றப் பட்ட தொல்காப்பியம் பொருளதிகாரம் (முதற்பாகம்) முன்னைந்தியலும் நச்சினார்க்கினியமும் என, சி. கணேசையர் எழுதிய ஆராய்ச்சிக் குறிப்புரையுடன் நா. பொன்னையா அவர்களால் பதிப்பிக்கப்பட்டது. 1943 -இல் தொல்காப்பியம் பொருளதிகாரம் (இரண்டாம் பாகம்) என்பதோடு பின்னான்கியலும் பேராசிரியமும் இவை புன்னாலைக் கட்டுவன் தமிழ் வித்துவான், பிரமரீ சி. கணேசையர் அவர்கள் ஏட்டுப் பிரதிகளோடு ஒப்புநோக்கித் திருத்திய திருத்தங்களோடும் எழுதிய உரை விளக்கக் குறிப்புகளோடும் ஈழகேசரி அதிபர் நா. பொன்னையா அவர்களால் தமது சுன்னாகம், திருமகள் அழுத்தகத்தில் பதிப்பிக்கபட்டன என வரையறுக்கப் பட்டிருந்தது. 2007-இல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மறுபதிப்பாக சி. கணேசையரின் பதிப்பைப் பதித்துள்ளது. அப்பதிப்பினைப் பின்பற்றியே இப்பதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சூத்திர அகராதி, சூத்திர அரும்பத விளக்கம் ஆகியவற்றிற்கு இப்பதிப்பில் பக்க எண் கொடுக்கப்பட்டிருந்தன. அவை இம் மீள்பதிப்பில் நூற்பா எண்களாக மாற்றப்பட்டுள்ளன. அனுபந்தமாக சி. கணேசைய்யர் சில கட்டுரைகளை அப்பதிப்பில் இணைத் திருந்தார் அவற்றோடு மேலும் அவருடைய சில கட்டுரைகள் இப்பதிப்பில் இணைக்கப்பட்டுள்ளன. தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் பதிப்பு 1971 சொல்லதிகாரம் கல்லாடம் சி.வை. தாமோதரம் பிள்ளை தொல்காப்பியம் பொருளதி காரம் நச்சினார்க்கினியர் உரை பதிப்புரையில் (1885) கல்லாடர் உரை பற்றிய குறிப்பினைத் தருகிறார். டி.என் அப்பனையங்கார் செந்தமிழ் இதழில் (1920, தொகுதி-19, பகுதி-1, பக்கம்-20) கல்லாடருரை என்னும் கட்டுரையில் ரீமான் எம் சேக்ஷகிரி சாதிரியார் (1893) கல்லாடர் உரை குறித்து ஆராய்ந்துள்ளதாகக் குறிப்பிடுகிறார். சோழவந்தான் அரசஞ்சண்முகனார் (1905) ரா. இராகவையங்கார் (1917) பெயர் விழையான், கா. நமச்சிவாய முதலியார்(1920) நவநீதகிருஷ்ண பாரதி(1920) பி. சிதம்பர புன்னைவனநாத முதலியார்(1922) கந்தசாமியார் (1923) வ.உ. சிம்பரம் பிள்ளை (1928) மன்னார்குடி தமிழ்ப் பண்டிதர் ம.நா. சோமசுந்தரம் பிள்ளை (1929) அரங்க. வேங்கடாசலம் பிள்ளை (1929) ஆகியோர் கல்லாடர் உரை குறித்த குறிப்புகளைத் தமது கட்டுரைகளில் குறிப்பிடுகின்றனர். பின்னங்குடி சா. சுப்பிரமணிய சாதிரியார் கல்லாடர் உரை ஓரியண்டல் கையெழுத்துப் புத்தக சாலையில் உள்ளது என்றும், அவ்வுரை எவ்வியல் வரை உள்ளது என்னும் குறிப்புரையும் தருகிறார். 1950 - 1952 வரை தருமபுர ஆதீனம் வெளியிட்ட ஞான சம்பந்தம் இதழில் அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகத்தின் இரண்டாம் பிரதியை ஒட்டிப் பதிப்பிக்கப்பட்டது. கிளவியாக்கம் தொடங்கி இடையியல் 10 - ஆவது நூற்பா வரை வெளிவந்தது. கல்லாடர் உரையைத் தம்முடைய திருத்தங்களுடன் வெளியிட்டவர் மகாவித்துவான் தண்டபாணி தேசிகர். 1963 -இல் தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரைக்கோவை என்னும் பெயரில் ஆபிரகாம் அருளப்பனும் வ.ஐ. சுப்பிரமணியமும் இணைந்து வெளியிட்டனர். இது நான்கு இயலுக்கான பதிப்பாக அமைந்திருந்தது. கழகப் பதிப்பாக 1964 -இல் கு. சுந்தரமூர்த்தி விளக்கவுரையுடன் கல்லாடம் வெளிவந்தது. 1971 -இல் தெ.பொ.மீ அவர்களால் ஒன்பது பிரதிகளைக் கொண்டு ஒப்பிட்டு அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகப் பதிப்பாக வெளிவந்தது. 2003 -இல் தி.வே. கோபாலையர், ந. அரணமுறுவல் ஆகியோரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு தமிழ் மண் பதிப்பகம் கல்லாடனார் உரையைப் பதிப்பித் துள்ளது. 2007 -இல் தி.வே. கோபாலையரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, சரசுவதி மகால் நூலகம் தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரைக்கொத்தில் கல்லாடர் உரையை வெளியிட்டுள்ளது. கல்லாடர் உரை முழுமையாக இதுவரை கிடைத்திலது. இம்மீள்பதிப்பில் செந்தமிழ் அந்தணர் அவர்களின் இலக்கண வாழ்வியல் விளக்கமும் கா. வெள்ளைவாரணனாரின் இயல் விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இவை தொல்காப்பியத்திற்குள் புகுவாருக்கு எளிதான மனநிலையை உருவாக்குவதுடன், ஆய்வாளர்களுக்கு மிகுந்த பயன் உடையதாக இருக்கும். பின்னிணைப்பாக இணைக்கப்பட்டுள்ள கட்டுரைகள், தொல்காப்பிய உரையாசிரியர், உரைகள் குறித்த நுட்பத்தைப் புலப்படுத்துவதுடன், தொல்காப்பியம் பற்றிய நுண்மையை அறியவும் துணை செய்யும். நூற்பா, உரை வழிக் கலைச்சொற்கள், உரையில் உள்ள மேற்கோள் அகராதி போன்றவை தொகுத்துத் தரப்பட்டுள்ளன. தொல்காப்பியத்தை அறிய விரும்புவாருக்கும், ஆய்வாளர்களுக்கும் இத் தொகுப்பு பயன் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியம் மூலமும், உரையோடும் பல பதிப்புகளைக் கண்டுள்ளது. இருப்பினும் தொடக்கத்தில் தமிழ் அறிஞர் பெருமக்களால் உரையோடு தொல்காப்பியத்தைப் பதிப்பித்த பதிப்புகள் இன்று கிடைக்கவில்லை. அந்நிலையைப் போக்கும் பொருட்டு, தமிழரின் பண்பாட்டை, மேன்மையை, உயர்வைப் பொதித்து வைத்துள்ள நூல்களைத் தேடித் தேடிப் பதிப்பிக்கும் தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் ஐயா கோ. இளவழகனார் அவர்கள் பழம் பதிப்புகளைப் பதிப்பிக்க வேண்டும் என்று விரும்பியதன் காரணமாக இப்பதிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பதிப்பிற்கு, தமிழின் மூத்த அறிஞர், செந்தமிழ் அந்தணர் முதுமுனைவர் ஐயா இரா. இளங்குமரனார் அவர்கள் பதிப்பாசிரியராக அமைந்து என்னையும் இப்பணியில் இணைத்துக்கொண்டார்கள். பழந்தமிழ் நூல்களைப் பாதுகாத்து வைத்துள்ள புலவர் பல்லடம் மாணிக்கம் அவர்களிடம் இருந்து தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடர் உரை பெறப்பட்டுப் பதிப்பிற்குப் பயன்படுத்தப்பட்டது. மற்ற உரைகள் அனைத்தும் தமிழ் இணையப் பல்கலைக்கழக நூலகம், உலகத் தமிழாராய்ச்சி இணையப் பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு இம் மீள்பதிப்பிற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. சி. கணேசையர் பதிப்பினை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வழி வெளிவந்த சி. கணேசைய்யரின் தொல்காப்பியப் பதிப்பிற்கு உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தின் மேனாள் இயக்குநர் (முழுகூடுதல் பொறுப்பு) முனைவர் திரு ம. இராசேந்திரன் அவர்கள் கணேசையர் பதிப்பிற்கு எழுதியுள்ள முகவுரை அவருடைய ஒப்புதலுடன் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. முனைவர் பா. மதுகேவரன் அவர்களின் தொல்காப்பியம் பதிப்பு ஆவணம் 7 என்னும் நூற்பகுதியில் இருந்து தொல் காப்பியப் பதிப்பு அடைவுகள் இப்பதிப்பில் இணைக்கப் பட்டுள்ளன. தொல்காப்பியம் தொடர்பான பல்வேறு அறிஞர் பெருமக்களின் ஆய்வுக் கட்டுரைகள் தொகுத்து வழங்கப் பட்டுள்ளன. தொல்காப்பியம் உரைகள் முழுதும் ஆய்வு செய்துள்ள பேராசிரியர் முனைவர் ச. குருசாமி அவர்களின் கட்டுரைகள் இப்பதிப்பில் இணைக்கப் பட்டுள்ளன. பதிப்பிற்குத் துணை செய்த மேற்கண்ட அனைவருக்கும் நன்றியினைப் புலப்படுத்திக் கொள்ளுகிறேன். முனைவர் ஸ்ரீ. பிரசாந்தன் அவர்கள் தொகுத்த இலக்கண வரம்பு நூலிலிருந்த கட்டுரைகள் கணேசையர் பதிப்பில் இணைக்கப்பட்டுள்ளன. செந்தமிழ், தமிழ்ப்பொழில், தமிழியல் முதலிய ஆய்விதழ்களிலிருந்து தொல்காப்பியம் தொடர்பான கட்டுரைகள் சேர்க்கப் பட்டுள்ளன. பதிப்புப் பணியில் ஈடுபடுத்திய ஐயா திரு கோ. இளவழகனார் அவர்களுக்கும் பதிப்பில் இணைந்து செயல்படப் பணித்த ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்களுக்கும், பதிப்பிற்குத் துணைபுரிந்த புலவர் செந்தலை கௌதமன் ஐயா அவர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றி. தட்டச்சுச் செய்து கொடுத்த திருமதி ப. கயல்விழி திருமதி கோ. சித்திரா. அட்டை வடிவமைத்த செல்வன் பா. அரி (ஹரிஷ்), மற்றும் பதிப்பகப் பணியாளர்கள் திரு இரா. பரமேசுவரன், திரு தனசேகரன், திரு கு. மருது, திரு வி. மதிமாறன், இப்பதிப்பிற்கு உதவிய என்னுடைய முனைவர் பட்ட மாணவர்கள் பா. மாலதி, கா. பாபு, சு. கோவிந்தராசு, கா. கயல்விழி ஆகிய அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப் பதிப்புப் பணியில் என்னை முழுவதாக ஈடுபடத் துணையாக நிற்கும் என் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார் அவர்களுக்கு என் நன்றியினை உரித்தாக்குகிறேன். கல்பனா சேக்கிழார் நுழைவுரை தமிழ்மண் பதிப்பகம் இதுகாறும் வெளியிட்டுள்ள அறிஞர் பெருமக்களின் உரைகள் யாவும் பழைய இலக்கிய இலக்கணக் கருவூலத்தின் வாயில்களைத் திறக்கின்ற திறவுகோல்கள்; தமிழரை ஏற்றிவிடும் ஏணிப்படிகள்; வரலாற்றுப் பாதையைக் கடக்க உதவும் ஊர்திகள். தமிழறிஞர்களின் அறிவுச்செல்வங்களை முழு முழு நூல் தொகுப்புகளாக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் பெரும் பங்களிப்பை எம் பதிப்பகம் செய்து வருவதை உலகத் தமிழர்கள் அனைவரும் அறிவர். தமிழகம் வேற்றினத்தவர் படையெடுப்பால் தாக்குண்டு அதிர்ந்து நிலைகுலைந்து தமிழ்மக்கள் தம் மரபுகளை மறந்தபோதெல்லாம் பழம்பெரும் இலக்கியச் செல்வங்களை எடுத்துக்காட்டி விளக்கித் தமிழ் மரபை வாழச் செய்த பெருமை உரையாசிரியர்களுக்கு உண்டு. தமிழ்மொழியின் நிலைத்த வாழ்விற்கும் வெற்றிக்கும் காரணமாக இருப்பவர்கள் உரையாசிரியர்களே ஆவர். இலக்கணக் கொள்கைகளை விளக்கி மொழிக்கு வரம்பு கட்டி இலக்கியக் கருத்துகளை விளக்கி காலந்தோறும் பண்பாட்டை வளர்த்து, தமிழ் இனத்திற்குத் தொண்டு செய்த பெருமை உரையாசிரியர்களையே சாரும். ஒவ்வொரு உரையாசிரியரும் தமிழினம் உறங்கிக் கொண்டிருந்தபோது விழித்தெழுந்து, எழுச்சிக்குரல் கொடுத்த முற்போக்குச் சிந்தனையாளர்கள். அவர்கள் எழுதியுள்ள உரைகள் யாவும் காலத்தின் குரல்கள்; சமுதாயத்தின் எதிர்பார்ப்புகள்; தமிழ் இன வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவைகள்; நெருக்கடியின் வெளிப்பாடுகள் ஆகும். - உரையாசிரியர்கள், (மு.வை. அரவிந்தன்). தொல்காப்பியம் இலக்கணநூல் மட்டுமன்று; தமிழரின் அறிவுமரபின் அடையாளம். தமிழரின் வாழ்வியலை, மெய்யியலைப் பாதுகாத்த காலப்பேழை. இதில் பொதிந்துள்ள தருக்கவியல் கூறுகள் இந்தியத் தருக்கவியல் வரலாற்றின் மூல வடிவங்கள் - அறிஞர்களின் பார்வையில் பேரறிஞர் அண்ணா, (முனைவர் க. நெடுஞ்செழியன்) மேற்கண்ட அறிஞர்களின் கூற்று, தொல்காப்பியத்தின் இன்றியமை யாமையையும், உரையாசிரியர்களின் கருத்துச் செறிவையும் உழைப்பையும் உணர்த்த வல்லவை. சி.வை. தாமோதரம் பிள்ளை, கா. நமச்சிவாய முதலியார், வ.உ. சிதம்பரனார், சி. கணேசையர், இரா. வேங்கடாசலம் பிள்ளை, தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் போன்ற பெருந்தமிழ் அறிஞர்களின் உழைப்பால் உருவான இவ் வாழ்வியல் கருவூலம் தொல்காப்பிய உரைத்தொகை எனும் பெயரில் தமிழ்மண் பதிப்பகம் மீள் பதிப்பு செய்துள்ளது. 2003 -ஆம் ஆண்டில் எம் பதிப்பகம் தொல்காப்பியத்தை (எழுத்து - சொல் - பொருள்) முழுமையாக வெளியிட்டுள்ளது. இதுகாறும் வெளிவந்துள்ள தொல்காப்பிய நூல் பதிப்புகளில் இடம் பெறாத அரிய பதிப்புச் செய்திகள் இவ்வுரைத் தொகையில் சேர்க்கப்பட்டுள்ளன. இவ்வுரைத் தொகை எல்லா நிலையிலும் சிறப்பாக வெளிவருவதற்கு தோன்றாத் துணையாக இருந்தவர்களைப் பற்றி தனிப்பக்கத்தில் பதிவு செய்துள்ளோம். இவ்வாழ்வியல்நூல் பிழையற்ற செம்பதிப்பாக வெளிவருவதற்கு முதன்மைப் பதிப்பாசிரியர் முதுமுனைவர் ஐயா இரா. இளங்குமரனார், இணை பதிப்பாசிரியர் அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் ஆகியோரின் உழைப்பும் பங்களிப்பும் என்றும் மறக்க முடியாதவை. எம் தமிழ் நூல் பதிப்பிற்கு எல்லா நிலையிலும் தொடர்ந்து ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் இனிய நண்பர் புலவர் செந்தலை ந. கவுதமன் அவர்களின் தன்னலம் கருதா தமிழ்த் தொண்டிற்கு என்றும் நன்றி உடையேன். தமிழர்கள் தம் இல்லம்தோறும் பாதுகாத்து வைக்க வேண்டிய இவ்வருந்தமிழ்ப் புதையலைத் தமிழ் கூறும் உலகிற்கு வழங்குவதைப் பெருமையாகக் கருதி மகிழ்கிறோம். இப்பதிப்பைத் தமிழ்க்கூறும் நல்லுலகம் ஏற்றிப்போற்றும் என்று நம்புகிறோம். கோ. இளவழகன் நூலாக்கத்திற்கு உதவியோர் முதன்மைப்பதிப்பாசிரியர்: முதுமுனைவர் இரா. இளங்குமரனார் இணைப்பதிப்பாசிரியர்: முனைவர் கல்பனா சேக்கிழார் நூல் வடிவமைப்பு: திருமதி. கயல்விழி, கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (Harrish) திருத்தத்திற்கு உதவியோர்: புலவர் பனசை அருணா புலவர் மு. இராசவேலு முனைவர் அரு. அபிராமி முனைவர் ஜா. கிரிசா நூலாக்கத்திற்கு உதவியோர்: திருமிகு. இரா. பரமேசுவரன், திருமிகு. வே. தனசேகரன், திருமிகு. கு. மூர்த்தி, திருமிகு. வி. மதிமாறன் கணினியில் நூலாக்கம்:  மாணவர் நகலகம்,  பிராசசு இந்தியா,  ரியல் இம்பேக்ட் சொல்யூசன்,  தூரிகை பிரிண்ட் உள்ளடக்கம் தொல்காப்பியம் ..... 1 இயலமைதி ..... 27 வாழ்வியல் விளக்கம் ..... 31 தெய்வச்சிலையார் ..... 64 தெய்வச்சிலையார் உரை ..... 75 1. கிளவியாக்கம் ..... 82 2. வேற்றுமையியல் ..... 128 3. வேற்றுமை மயங்கியல் ..... 155 4. விளிமரபு ..... 185 5. பெயரியல் ..... 201 6. வினையியல் ..... 230 7. இடையியல் ..... 272 8. உரியியல் ..... 302 9. எச்சவியல் ..... 335 சேர்க்கை ..... 392 பின்னிணைப்புகள் ..... 425 - நூற்பா நிரல் ..... 476 - சொல் நிரல் ..... 481 - சொற்றொடர் நிரல் ..... 487 - செய்யுள் நிரல் ..... 493 - கலைச்சொல் நிரல் (நூற்பா வழி) ..... 502 - கலைச்சொல் நிரல் (உரை வழி) ..... 508 தொல்காப்பியம் பழந்தமிழ் நூல்களின் வழியே நமக்குக் கிடைத்துள்ள முழு முதல் இலக்கண நூல் தொல்காப்பியமே. ஆசிரியர், தொல்காப்பியம் என்னும் நூலை இயற்றியமையால்தான் தொல்காப்பியன் எனத் தம் பெயர் தோன்றச் செய்தார் என்பதைப் பாயிரம்’ “தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றி” என்று தெளிவாகக் கூறுகிறது. தொல்காப்பியம் ‘பழமையான இலக்கண மரபுகளைக் காக்கும் நூல்’ என்பதற்குப் பலப்பல சான்றுகள் இருப்பவும், ‘பழமையான காப்பியக்குடியில் தோன்றியவரால் செய்யப் பட்டது’ என்னும் கருத்தால், “பழைய காப்பியக்குடியில் உள்ளான்” என நச்சினார்க்கினியர் கூறினார். பழைய காப்பியக்குடி என்னும் ஆட்சியைக் கண்டு ‘விருத்த காவ்யக்குடி’ என்பது ஒரு வடநாட்டுக்குடி என்றும், பிருகு முனிவர் மனைவி ‘காவ்ய மாதா’ எனப்படுவாள் என்றும் கூறித் தொல்காப்பியரை வடநாட்டுக் குடி வழியாக்க ஆய்வாளர் சிலர் தலைப்படலாயினர். இம்முயற்சிக்கு நச்சினார்க்கினியர் உரையின் புனைவையன்றி நூற் சான்றின்மை எவரும் அறியத்தக்கதே. இவ்வாய்வுகளையும் இவற்றின் மறுப்புகளையும் தமிழ் வரலாறு முதற்றொகுதி1 (பக். 255 - 257) தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி2 (பக். 2, 3) தமிழிலக்கிய வரலாறு - தொல்காப்பியம்3 (பக். 17-23) என்பவற்றில் கண்டு கொள்க. காப்பியர் தொல்காப்பியர் சிறப்பால் அவர் வழிவந்தவரும், அவரை மதித்துப் போற்றியவரும் அவர் பெயரைத் தம் மக்கட்கு இட்டுப் பெருக வழங்கினராதல் வேண்டும். இதனால் காப்பியாற்றுக் காப்பியன், வெள்ளூர்க் காப்பியன் என ஊரொடு தொடர்ந்தும், காப்பியஞ் சேத்தன், காப்பியன் ஆதித்தன் எனக் காப்பியப் பெயரொடு இயற்பெயர் தொடர்ந்தும் பிற்காலத்தோர் வழங்கலாயினர். இனிப் பல்காப்பியம் என்பதொரு நூல் என்றும் அதனை இயற்றியவர் பல்காப்பியனார் எனப்பட்டார் என்றும் கூறுவார் உளர். அப்பெயர்கள் ‘பல்காயம்’ என்பதும் பல்காயனார் என்பதுமேயாம்; படியெடுத்தோர் அவ்வாறு வழுப்படச் செய்தனர் என்று மறுப்பாரும் உளர். தொல்காப்பியர் தமிழ் நாட்டாரே “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகத்து வழக்கும் செய்யுளும்” ஆய்ந்து, தமிழியற்படி “எழுத்தும் சொல்லும் பொருளும்” ஆகிய முப்பகுப்பு இலக்கணம் செய்தவரும், “போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவையும்” (1006) “வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் நாற்பெய ரெல்லை அகத்தவர் வழங்கும் யாப்பின் வழியையும்” (1336) “தமிழென் கிளவியும் அதனோ ரற்றே” (385) எனத் தமிழமைதியையும், “வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே” (884) என வடவெழுத்துப் புகாது காத்தலையும் கூறிய தொல்காப்பியரை வலுவான அகச்சான்று வாய்த்தால் அன்றி வடநாட்டவர் என்பது வரிசை இல்லை என்க. இனி, சமதக்கினியார் மகனார் என்பதும் திரணதூமாக் கினியார் இவர் பெயர் என்பதும் பரசுராமர் உடன் பிறந்தார் என்பதும் நச்சினார்க்கினியர் இட்டுக் கட்டுதலை அன்றி எவரும் ஒப்பிய செய்தி இல்லையாம். தொல்காப்பியப் பழமை சங்க நூல்களுக்குத் தொல்காப்பியம் முற்பட்டதா? பிற்பட்டதா? ஆய்தல் இன்றியே வெளிப்பட விளங்குவது முற்பட்டது என்பது. எனினும் பிற்பட்டது என்றும் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு அளவினது என்றும் குறித்தாரும் உளராகலின் இவ்வாய்வும் வேண்டத் தக்கதாயிற்று. தொல்காப்பியர் பரிபாடல் இலக்கணத்தை விரிவாகக் கூறுகிறார். அவ்விலக்கணத்துள் ஒன்று, கொச்சகம் அராகம் சுரிதகம் எருத்து என்னும் நான்கு உறுப்புகளையுடையது அது என்பது. மற்றொன்று, காமப் பொருள் பற்றியதாக அது வரும் என்பது. இப்பொழுது கிடைத்துள்ள பரிபாடல்கள் இருபத்திரண் டனுள் “ஆயிரம் விரித்த” என்னும் ஒரே ஒரு பாடல் மட்டும் பலவுறுப்புகளை யுடையதாக உள்ளது. எஞ்சிய பாடல்கள் இருபத்து ஒன்றும் உறுப்பமைதி பெற்றனவாக இல்லை. பரிபாடல் திரட்டிலுள்ள இரண்டு பாடல்களுள் ஒரு பாடல் பலவுறுப்புகளை யுடையதாக உள்ளது. மற்றது உறுப்பற்ற பாட்டு. பரிபாடல் காமப் பொருள் பற்றியே வரும் என்பது இலக்கணமாக இருக்கவும் கடவுள் வாழ்த்துப் பொருளிலேயே பதினைந்து பாடல்கள் வந்துள்ளன. பரிபாடல் உயர் எல்லை நானூறடி என்பார். கிடைத்துள்ள பரிபாடல்களில் ஒன்றுதானும் சான்றாக அமையவில்லை. இவற்றால் அறியப்படுவது என்ன? தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ள இலக்கணங்களையுடைய பரிபாடல்கள் இவையில்லை. அவ்விலக்கணங்களையுடைய பரிபாடல்கள் இறந்தொழிந்தன. தலைச்சங்கத்தார் பாடியதாக வரும் ‘எத்துணையோ பரிபாடல்களின்’ அமைதியைக் கொண்டது தொல்காப்பிய இலக்கணம். ஆதலால், பாடலமைதி யாலும் பொருள் வகையாலும் இம்மாற் றங்களையடைய நெடிய பலகாலம் ஆகியிருக்க வேண்டும் என்பதே அது. தொல்காப்பியர் குறளடி சிந்தடி அளவடி நெடிலடி கழிநெடிலடி என்பவற்றை எழுத்தளவு வகையால் சுட்டுகிறார். அவ்வடிவகை கட்டளை யடி எனப்படும். அவ்வாறாகவும் சங்கப் பாடல்கள் சீர்வகை அடியைக் கொண்டனவாக உள்ளனவே யன்றிக் கட்டளை யடிவழி யமைந்தவையாக இல்லை. முற்றாக இம்மாற்றம் அமைய வேண்டுமானால் நெட்ட நெடுங்கால இடைவெளி ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது தெளிவு. தொல்காப்பியர் நேர், நிரை அசைகளுடன் நேர்பசை, நிரைபசை என்பவற்றையும் குறிக்கிறார். இந்நேர்பசை நிரை பசையை வேறு எவ் விலக்கண ஆசிரியரும் கொண்டிலர்; நேர் நிரை என்னும் இருவகை அசைகளையே கொண்டனர். கட்டளையடி பயிலாமை போலவே, இவ்வசைகளும் பயிலாமை தொல்காப்பியப் பழமையை விளக்குவதேயாம். யாப்பருங் கலத்திற்கு முற்பட்டது காக்கைபாடினியம். அந்நூலிலும் அவிநயம் முதலிய நூல்களிலும் இவ்விருவகை அசைகளும் இடம் பெறாமையால் இவற்றுக்கு மிகமுற்பட்ட நூல் தொல்காப்பியம் என்பது விளங்கும். காக்கைபாடினிய வழிவந்ததே யாப்பருங்கலம் ஆதலின் அதன் பழமை புலப்படும். பாட்டுயாப்பு, உரையாப்பு, நூல்யாப்பு, வாய்மொழியாப்பு, பிசியாப்பு, அங்கதயாப்பு, முதுசொல்யாப்பு என எழுவகை யாப்புகளை எண்ணுகிறார் தொல்காப்பியர் (1336). இவற்றுள் பாட்டுயாப்பு நீங்கிய எஞ்சிய யாப்புகள் எவையும் சான்றாக அறியுமாறு நூல்கள் வாய்த்தில. ஆகலின் அந்நிலை தொல்காப்பியத்தின் மிகுபழமை காட்டும். பேர்த்தியரைத் தம் கண்ணெனக் காக்கும் பாட்டியரைச் ‘சேமமட நடைப் பாட்டி’ என்கிறது பரிபாட்டு (10:36-7). பாட்டி என்பது பாண்குடிப் பெண்டிரைக் குறிப்பதைச் சங்கச் சான்றோர் குறிக்கின்றனர். ஆனால், தொல்காப்பியம் “பாட்டி என்பது பன்றியும் நாயும்” என்றும் “நரியும் அற்றே நாடினர் கொளினே” என்றும் (1565, 1566) கூறுகின்றது. பாட்டி என்னும் பெயரைப் பன்றி நாய் நரி என்பவை பெறும் என்பது இந் நூற்பாக்களின் பொருள். முறைப்பெயராகவோ, பாடினியர் பெயராகவோ ‘பாட்டி’ என்பது ஆளப்படாத முதுபழமைக்குச் செல்லும் தொல் காப்பியம், மிகு நெட்டிடைவெளி முற்பட்டது என்பதை விளக்கும். இவ்வாறே பிறவும் உள. சங்கச் சான்றோர் நூல்களில் இருந்து சான்று காட்டக் கிடையாமையால் உரையாசிரியர்கள் “இலக்கணம் உண்மை யால் இலக்கியம் அவர் காலத்திருந்தது; இப்பொழுது வழக்கிறந்தது” என்னும் நடையில் பல இடங்களில் எழுதுவா ராயினர். ஆதலால், சங்கச் சான்றோர் காலத்திற்குப் பன்னூற் றாண்டுகளுக்கு முற்பட்டவர் தொல்காப்பியர் என்பது வெள்ளிடைமலையாம்! “கள் என்னும் ஈறு அஃறிணைக்கு மட்டுமே தொல்காப்பியர் காலத்தில் வழங்கியது. அது திருக்குறளில் ‘பூரியர்கள்’ ‘மற்றையவர்கள்’ எனவும் கலித்தொகையில் ‘ஐவர்கள்’ எனவும் வழங்குகின்றது. ‘அன்’ ஈறு ஆண்பாற் படர்க்கைக்கே உரியதாகத் தொல்காப்பியம் கூறுகின்றது. இரப்பன், உடையன், உளன், இலன், அளியன், இழந்தனன், வந்தனன் எனத் தன்மையில் பெருவரவாகச் சங்கநூல்களில் இடம் பெற்றுள்ளன. “தொல்காப்பியத்தில் வழங்காத ஆல், ஏல், மல், மை, பாக்கு என்னும் இறுதியுடைய வினையெச்சங்கள் சங்கநூல்களில் பயில வழங்குகின்றன. “தொல்காப்பியத்தில் வினையீறாக வழங்கப்பட்ட ‘மார்’, ‘தோழிமார்’ எனப் பெயர்மேல் ஈறாக வழங்கப்பட்டுள்ளது. “வியங்கோள்வினை, முன்னிலையிலும் தன்மையிலும் வாராது என்பது தொல்காப்பிய விதி. அவற்றில் வருதலும் சங்கப் பாடல்களில் காணக்கூடியது. “கோடி என்னும் எண்பற்றித் தொல்காப்பியத்தில் குறிப்பு இல்லை. தாமரை, வெள்ளம், ஆம்பல் என்பனபோல எண்ணுப் பெயர்கள் (ஐ அம் பல் என்னும் இறுதியுடையவை) வழங்கு வதைச் சுட்டும் அவர், கோடியைக் குறித்தார் அல்லர். சங்கப் பாடல்களில் கோடி, ‘அடுக்கியகோடி’ என ஆளப் பெற்றுள்ளது. ஐ, அம், பல் ஈறுடைய எண்ணுப் பெயர்கள் அருகுதலும் சங்க நூல்களில் அறிய வருகின்றன. “சமய விகற்பம் பற்றிய செய்திகள், சமணம் புத்தம் பற்றிய குறிப்புகள் தொல்காப்பியத்தில் இல்லை. ஆனால் சங்க நூல்களில் இவற்றைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. எழுத்து சொல் ஆகிய அளவில் நில்லாமல் வாழ்வியலாகிய பொருள் பற்றி விரித்துக் கூறும் தொல்காப்பியர் காலத்தில் இவை வழக்கில் இருந்திருந்தால் இவற்றைக் கட்டாயம் சுட்டியிருப்பார். ஆகலின் சமண, பௌத்தச் சமயங்களின் வரவுக்கு முற்பட்டவரே தொல் காப்பியர். ஆதலால் தொல்காப்பியர் காலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதே யன்றிப் பிற்பட்டதாகாது.” இக்கருத்துகளைப் பேரா. க. வெள்ளைவாரணரும் (தமிழிலக்கிய வரலாறு - தொல்காப்பியம், பக். 87 - 96), பேரா.சி. இலக்குவனாரும் (தொல்காப்பிய ஆராய்ச்சி, பக். 12 - 14) விரித்துரைக்கின்றனர். சிலப்பதிகாரத்தால் இலங்கை வேந்தன் கயவாகு என்பான் அறியப்படுகிறான். அவன் காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டு என்பர். அச் சிலப்பதிகாரத்தில் ‘திருக்குறள்’ எடுத்தாளப்பட்டுள்ளது. ஆகலின் திருக்குறள் சிலப்பதிகாரக் காலத்திற்கு முற்பட்டது என்பது வெளிப்படை. இளங்கோவடிகள் காலத்து வாழ்ந்தவரும், மணிமேகலை இயற்றியவரும், சேரன் செங்குட்டுவன் இளங்கோவடிகள் ஆகியோருடன் நட்புரிமை பூண்டவரும், ‘தண்டமிழ் ஆசான் சாத்தன்’ என இளங்கோவடிகளாரால் பாராட்டப்பட்டவருமாகிய கூலவாணிகன் சாத்தனார், திருவள்ளுவரைப் ‘பொய்யில் புலவன்’ என்றும், திருக்குறளைப் ‘பொருளுரை’ என்றும் குறித்துக் கூறிப் பாராட்டுகிறார். ஆகலின், சிலப்பதிகார மணிமேகலை நூல்களுக்குச் சில நூற்றாண்டுகளேனும் முற்பட்டது திருக்குறள் எனத் தெளியலாம். அத் திருக்குறளுக்கு முப்பால் கொள்கை அருளியது தொல்காப்பியம். ‘அறமுதலாகிய மும்முதற் பொருள்’ என்பது தொல்காப்பியம். ‘இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு’ என வருவதும் தொல்காப்பியம். அது வகுத்தவாறு அறம் பொருள் வழக்காறுகள் திருக்குறளில் இடம் பெற்றுள்ளதுடன், இன்பத்துப்பாலோ, புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் எனத் தொல்காப்பியர் சொல்லும் உரிப்பொருள் ஐந்தற்கும் முறையே ஐந்தைந்து அதிகாரங்களாக 25 அதிகாரங்கள் கொண்டு முற்றாகத் தொல்காப்பிய வழியில் விளங்க நூல் யாத்தவர் திருவள்ளுவர். ஆகலின் அத்திருக்குறளின் காலத்திற்குப் பன்னூற்றாண்டு முற்பட்ட பழமையுடையது தொல்காப்பியம் என்பது தெளிவுமிக்க செய்தியாம். திருக்குறள் ‘அறம்’ என்று சுட்டப்பட்டதுடன், குறள் தொடர்களும் குறள் விளக்கங்களும் பாட்டு தொகை நூல்களில் இடம் பெற்ற தொன்மையது திருக்குறள். அதற்கும் முற்பட்டது தொல்காப்பியம். இனித் தொல்காப்பியத்தில் வரும் ‘ஓரை’ என்னும் சொல்லைக் கொண்டு தொல்காப்பியர் காலத்தைப் பின்னுக்குத் தள்ள முயன்றவர் உளர். ஓரை அவர் கருதுமாப்போல ‘ஹோரா’ என்னும் கிரேக்கச் சொல் வழிப்பட்டதன்று. அடிப்பொருள் பாராமல் ஒலி ஒப்புக் கொண்டு ஆய்ந்த ஆய்வின் முடிவே அஃதாம். ‘யவனர் தந்த வினைமாண் நன்கலம்’ இவண் வந்ததும், அது ‘பொன்னொடு வந்து கறியொடு (மிளகொடு)’ பெயர்ந்ததும், ‘யவன வீரர் அரண்மனை காத்ததும்’ முதலாகிய பல செய்திகள் சங்க நூல்களில் பரவலாக உள. அக்காலத்தில் அவர்கள் ‘தோகை’ ‘அரி’ முதலிய சொற்களை அறிந்தது போல அறிந்து கொண்ட சொல் ‘ஓரை’ என்பது. அச்சொல்லை அவர்கள் அங்கு ‘ஹோரா’ என வழங்கினர். கிரேக்க மொழிச் சொற்கள் பல தமிழ்வழிச் சொற்களாக இருத்தலைப் பாவாணர் எடுத்துக் காட்டியுள்ளார். ஓரை என்பது ஒருமை பெற்ற - நிறைவு பெற்ற - பொழுது. திருமணத்தை முழுத்தம் என்பதும், திருமண நாள் பார்த்தலை முழுத்தம் பார்த்தல் என்பதும், திருமணக் கால்கோளை ‘முழுத்தக்கால்’ என்பதும், ‘என்ன இந்த ஓட்டம்; முழுத்தம் தவறிப்போகுமா?’ என்பதும் இன்றும் வழக்கில் உள்ளவை. முழுமதி நாளில் செய்யப்பட்ட திருமணமே முழுத்தம் ஆயிற்று. இன்றும் வளர்பிறை நோக்கியே நாள் பார்த்தலும் அறிக. ஆராய்ந்து பார்த்து - நாளும் கோளும் ஆராய்ந்து பார்த்து - ‘நல்லவையெல்லாம் ஒன்றுபட்டு நிற்கும் பொழுதே நற்பொழுது’ என்னும் குறிப்பால் அதனை ஓரை என்றனர். இத்திறம் அந்நாள் தமிழர் உடையரோ எனின், “செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப் பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும் வளிதிரிதரு திசையும் வறிது நிலைஇய காயமும் என்றிவை சென்றளந் தறிந்தோர் போல, இனைத்தென்போரும் உளரே” என்னும் புறப்பாடலை அறிவோர் ஓரையைப் பிறர்வழியே நம் முன்னோர் அறிந்தனர் என்னார். உண்கலத்தைச் சூழ வைத்திருந்த பக்கக் கலங்களை, “நாள்மீன் விரவிய கோள்மீனுக்கு” உவமை சொல்லும் அளவில் தெளிந் திருந்த அவர்கள், ஓரையைப் பிறர் வழியே அறிந்தனர் என்பது பொருந்தாப் புகற்சியாம். தொல்காப்பியர் சமயம் தொல்காப்பியனார் சமயம் பற்றியும் பலவகைக் கருத்துகள் உள. அவர் சைவர் என்பர். சைவம் என்னும் சொல் வடிவம் மணிமேகலையில் தான் முதற்கண் இடம் பெறுகிறது. பாட்டு தொகைகளில் இடம் பெற்றிலது. சேயோன், சிவன் வழிபாடு உண்டு என்பது வேறு. அது சைவ சமயமென உருப்பெற்றது என்பது வேறு. ஆதலால் தொல்காப்பியரைச் சைவரெனல் சாலாது. இனி, முல்லைக்கு முதன்மையும் மாயோனுக்குச் சிறப்பும் தருதல் குறித்து ‘மாலியரோ’ எனின், குறிஞ்சி முதலா உரிப்பொருளும் காலமும் குறித்தல் கொண்டு அம் முதன்மைக் கூறும் பொருள்வழி முதன்மை எனக் கொள்ளலே முறை எனல் சாலும். தொல்காப்பியரை வேத வழிப்பட்டவர் என்னும் கருத்தும் உண்டு. அஃதுரையாசிரியர்கள் கருத்து. நூலொடுபட்ட செய்தியன்றாம். சமயச் சால்பில் ஓங்கிய திருக்குறளை - வேத ஊழியைக் கண்டித்த திருக்குறளை - வேத வழியில் உரை கண்டவர் இலரா? அது போல் என்க. தொல்காப்பியரைச் சமணச் சமயத்தார் என்பது பெருவழக்கு. அவ்வழக்கும் ஏற்கத்தக்கதன்று. அதன் சார்பான சான்று தொல்காப்பியத்தில் இல்லை. ஆனால் அச்சமயம் சார்ந்தார் அல்லர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. சமணச் சமய நூல்களாக வழங்குவன அருக வணக்கம் சித்த வணக்கம் உடையவை. அவ்வாறு பகுத்துக் கூறாவிடினும் அருக வணக்கம் உடையவை. சமணச் சமய நூல்களாகக் கிடைப்பவற்றை நோக்கவே புலப்படும். தொல்காப்பியர் காலத்தில் கடவுள் வாழ்த்து நூன் முகப்பில் பாடும் மரபில்லை எனின், அவர் சமணச் சமயத்தார் என்பதும் இல்லை என்பதே உண்மை. என்னெனின் சமணர் தம் சமயத்தில் அத்தகு அழுந்திய பற்றுதல் உடையவர் ஆதலால். சமணச் சமயத்தார் உயிர்களை ஐயறிவு எல்லை யளவிலேயே பகுத்துக் கொண்டனர். ஆறாம் அறிவு குறித்து அவர்கள் கொள்வது இல்லை. “மாவும் மாக்களும் ஐயறிவினவே” என்னும் தொல்காப்பியர், “மக்கள் தாமே ஆறறி வுயிரே” என்றும் கூறினார். நன்னூலார் சமணர் என்பதும் வெளிப்படை. அவர் ஐயறிவு வரம்பு காட்டும் அளவுடன் அமைந்ததும் வெளிப்படை. சமணச் சமயத்தார் இளமை, யாக்கை, செல்வ நிலையாமை களை அழுத்தமாக வலியுறுத்துவர். துறவுச் சிறப்புரைத்தலும் அத்தகையதே. ஆகவும் நிலையாமையையே கூறும் காஞ்சித் திணையைப் பாடுங்காலும், “நில்லா உலகம் புல்லிய நெறித்தே” என ‘உலகம் நிலையாமை பொருந்தியது’ என்ற அளவிலேயே அமைகிறார். “காமஞ் சான்ற கடைக்கோட் காலை ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே” (1138) என அன்பு வாழ்வே அருள் வாழ்வாம் தவவாழ்வாக வளர்நிலையில் கூறுகிறார். இல்லற முதிர்வில் தவமேற்கும் நிலை சமணம் சார்ந்ததன்று. அஃது இம்மண்ணில் தோன்றி வளர்ந்து பெருகிய தொல் பழந்தமிழ் நெறி. தொல்காப்பியர் சமணச் சமயத்தார் எனின் அகத்திணையியல் களவியல் கற்பியல் பொருளியல் என அகப் பொருளுக்குத் தனியே நான்கு இயல்கள் வகுத்ததுடன் மெய்ப்பாட்டியல் செய்யுளியல் உவம இயல் என்பனவற்றிலும் அப்பொருள் சிறக்கும் இலக்கணக் குறிப்புகளைப் பயில வழங்கியிரார். காமத்தைப் ‘புரைதீர்காமம்’ என்றும் (1027) ‘காமப் பகுதி கடவுளும் வரையார்’ என்றும் (1029) கூறியிரார். “ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது தேனது வாகும்” என்பது போலும் இன்பியல் யாத்திரார். கிறித்துவத் துறவு நெறிசார் வீரமாமுனிவரின் தொன்னூல் விளக்கப் பொருளதி காரம் காண்பார் இதனை நன்கு அறிவார். சிந்தாமணியாம் பாவிகத்தை எடுத்துக்காட்டுவார் எனின் அவர், திருத்தக்கதேவர் பாடிய நரிவிருத்தத்தையும் கருதுதல் வேண்டும். பாட இயலாது என்பதை இயலுமெனக் காட்ட எழுந்தது அந்நூல் என்பதையும், காமத்தைச் சூடிக் கழித்த பூப்போல் காவிய முத்திப் பகுதியில் காட்டுவதையும் கருதுவாராக. கடவுள் நம்பிக்கை தொல்காப்பியர் கடவுள் வாழ்த்துக் கூறவில்லை எனினும், “கொடிநிலை கந்தழி வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே” என்றும் (1034), புறநிலை வாழ்த்து, “வழிபடு தெய்வம் நிற்புறம் காப்பப் பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து பொலிமின்” என்பது என்றும் ஆளும் இடங்களில் தெளிவாகக் கடவுள் வாழ்த்து என்பதையும் ‘வழிபடு தெய்வம்’ என்பதையும் குறிக்கிறார். மேலும் கருப்பொருள் கூறுங்கால் ‘தெய்வம் உணாவே” என உணவுக்கு முற்படத் தெய்வத்தை வைக்கிறார். உலகெலாம் தழுவிய பொதுநெறியாக இந்நாள் வழங்கும் இது, பழந்தமிழர் பயில்நெறி என்பது விளங்கும். ஆதலால் பழந்தமிழர் சமய நெறி எந்நெறியோ அந்நெறியே தொல்காப்பியர் நெறி எனல் சாலும். வாகைத் திணையில் வரும், ‘கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமை’, ‘அருளொடு புணர்ந்த அகற்சி’, ‘காமம் நீத்தபால்’ என்பனவும், காஞ்சித் திணையில் வரும் தபுதார நிலை, தாபத நிலை, பலர் செலச் செல்லாக் காடு வாழ்த்து என்பனவும் பழந்தமிழர் மெய்யுணர்வுக் கோட்பாடுகள் எனக் கொள்ளத்தக்கன. கொற்றவை நிலை, வேலன் வெறியாட்டு, பூவைநிலை காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு சிறப்பில் பெரும்படை வாழ்த்தல் என வரும் வெட்சிப் பகுதிகள் பழந்தமிழர் வழிபாட்டியலைக் காட்டுவன. சேயோன் மாயோன் வேந்தன் வண்ணன் என்பார், குறிஞ்சி முதலாம் திணைநிலைத் தெய்வங்களெனப் போற்றி வழிபடப் பட்டவர் என்பதாம். ஆசிரியர் திருவள்ளுவர் கடவுள் வாழ்த்துப் பாடினாலும், அவர் இன்ன சமயத்தவர் என்பதற்குரிய திட்டவட்டமான அகச்சான்று இல்லாமை போலத் தொல்காப்பியர்க்கும் இல்லை. ஆகவே சமயக் கணக்கர் மதிவழிச் செல்லாத பொதுநெறிக் கொள்கையராம் வள்ளுவரைப் போன்றவரே தொல்காப்பியரும் என்க. தொல்காப்பியக் கட்டொழுங்கு தொல்காப்பியம் கட்டொழுங்கமைந்த நூல் என்பது மேலோட்டமாகப் பார்ப்பவர்க்கும் நன்கு விளங்கும். இன்ன பொருள் இத்தட்டில் என்று வைக்கப்பட்ட ஐந்தறைப் பெட்டியில் இருந்து வேண்டும் பொருளை எடுத்துக் கொள்வதுபோல் எடுத்துக்கொள்ள வாய்த்தது தொல்காப்பியம். அதனையே பாயிரம் ‘முறைப்பட எண்ணிப் புலம் தொகுத்த’தாகக் குறிக்கின்றது. எழுத்து சொல் பொருள் என்னும் மூன்றதிகாரங்களைக் கொண்ட தொல்காப்பியம் ஒவ்வோர் அதிகாரத்திற்கும் ஒன்பது ஒன்பது இயல்களைக் கொண்டிருத்தல் அதன் கட்டமைதிச் சிறப்புக் காட்டுவதாம். “ஆயிரத்தின் மேலும் அறுநூற்றுப் பஃதென்ப பாயிரத்தொல் காப்பியங்கற் பார்” என்பது தொல்காப்பிய நூற்பா அளவினைக் கூறுவதொரு வெண்பா. ஆனால் உரையாசிரியர்களின் அமைப்புப்படி 1595 முதல் 1611 நூற்பா வரை பல்வேறு எண்ணிக்கையுடையவாய் அமைந்துள்ளன. இக்கணக்கீடும், தொல்காப்பியர் சொல்லியதோ, பனம்பாரனார் குறித்ததோ அன்று. உரையாசிரியர்களின் காலத்தவரோ அவர்களின் காலத்திற்கு முன்னே இருந்த மூல நூற்பா எல்லையில் கணக்கிட்டறிந்த ஒருவரோ கூறியதாகலாம். தொல்காப்பிய அடியளவு 3999 என்று அறிஞர் வ.சுப. மாணிக்கனார் (தொல்காப்பியக்கடல் பக். 95) எண்ணிக் கூறுவர். ஏறக்குறைய 5630 சொல் வடிவங்கள் தொல்காப்பியத்தில் உள்ளமையையும் கூறுவர். அவர் “தொல்காப்பிய இலக்கணத்தைக் காண்பதற்குத் தொல்காப்பியத்தையே இலக்கியமாகக் கொள்ளலாம். தன்னைத் தானே விளக்கிக் காட்டுதற்குரிய அவ்வளவு பருமனுடையது தொல்காப்பியம்” என்று வாய்மொழிகின்றார். முப்பகுப்பு தனியெழுத்துகள், சொல்லில் எழுத்தின் நிலை, எழுத்துப் பிறக்கும் வகை, புணர் நிலையில் எழுத்தமைதி என்பவற்றை விரித்துரைப்பது எழுத்ததிகாரம். நூன் மரபு, மொழி மரபு, பிறப்பியல், புணரியல், தொகை மரபு, உருபியல், உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல் என்பன எழுத்ததிகார இயல்கள். எழுத்துகள் சொல்லாம் வகை, பெயர்கள் வேற்றுமையுருபேற்றல், விளிநிலை எய்தல், பெயர் வினை இடை உரி என்னும் சொல் வகைகள் இன்னவற்றைக் கூறுவது சொல்லதிகாரம். கிளவியாக்கம், வேற்றுமை யியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, பெயரியல், வினையியல், இடையியல், உரியியல், எச்சவியல் என்பன சொல்லதிகார இயல்கள். இன்ப ஒழுக்க இயல்பு, பொருள் அற ஒழுக்க இயல்பு, களவு கற்பு என்னும் இன்பவியற் கூறுகள், பொருளியல் வாழ்வில் நேரும் மெய்ப்பாடுகள், பொருளியல் நூலுக்கு விளக்காம் உவமை, செய்யுளிலக்கணம், உலக வழக்கு செய்யுள் வழக்கு என்பவற்றின் மரபுகள் ஆகியவற்றைக் கூறுவது பொருளதிகாரம். அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் என்பன பொருளதிகார இயல்கள். எடுத்துக்கொண்ட பொருளின் அடிக்கருத்தை முதற்கண் கூறி, பின்னர் வித்தில் இருந்து கிளரும் முளை இலை தண்டு கிளை கவடு பூ காய் கனி என்பவை போலப் பொருளைப் படிப்படியே வளர்த்து நிறைவிப்பது தொல்காப்பியர் நடைமுறை. எழுத்துகள் இவை, இவ்வெண்ணிக்கையுடையன என்று நூன் மரபைத் தொடங்கும் ஆசிரியர், குறில் நெடில் மாத்திரை, உயிர் மெய் வடிவு உயிர்மெய், அவற்றின் ஒலிநிலைப்பகுப்பு, மெய்ம்மயக்கம், சுட்டு வினா எழுத்துகள் என்பவற்றைக் கூறும் அளவில் 33 நூற்பாக்களைக் கூறி அமைகிறார். முப்பத்து மூன்றாம் நூற்பாவை, “அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் உளவென மொழிப இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர்” என்கிறார். இயலிலக்கணம் கூறும் ஆசிரியர் இசையிலக்கணம் பற்றிய நூல்களில் இவ்வெழுத்துகளின் நிலை எவ்வாறாம் என்பதையும் சுட்டிச் செல்லுதல் அருமையுடையதாம். அவ்வாறே ஒவ்வோர் இயலின் நிறைவிலும் அவர் கூறும் புறனடை நூற்பா, மொழிவளர்ச்சியில் தொல்காப்பியனார் கொண்டிருந்த பேரார்வத்தையும் காலந்தோறும் மொழியில் உண்டாகும் வளர்நிலைகளை மரபுநிலை மாறாவண்ணம் அமைத்துக் கொள்வதற்கு வழிசெய்வதையும் காட்டுவனவாம். “உணரக் கூறிய புணரியல் மருங்கின் கண்டுசெயற் குரியவை கண்ணினர் கொளலே” (405) என்பது குற்றியலுகரப் புணரியல் புறனடை “கிளந்த அல்ல செய்யுளுள் திரிநவும் வழங்கியல் மருங்கின் மருவொடு திரிநவும் விளம்பிய இயற்கையின் வேறுபடத் தோன்றின் வழங்கியல் மருங்கின் உணர்ந்தனர் ஒழுக்கல் நன்மதி நாட்டத்து என்மனார் புலவர்” (483) என்பது எழுத்ததிகாரப் புறனடை. “அன்ன பிறவும் கிளந்த அல்ல பன்முறை யானும் பரந்தன வரூஉம் உரிச்சொல் எல்லாம் பொருட்குறை கூட்ட இயன்ற மருங்கின் இனைத்தென அறியும் வரம்புதமக் கின்மையின் வழிநனி கடைப்பிடித் தோம்படை ஆணையிற் கிளந்தவற் றியலாற் பாங்குற உணர்தல் என்மனார் புலவர்” (879) என்பது உரியியல் புறனடை. இன்னவற்றால் தொல்காப்பியர் தொன்மையைக் காக்கும் கடப்பாட்டை மேற்கொண்டிருந்தவர் என்பதுடன் நிகழ்கால எதிர்கால மொழிக் காப்புகளையும் மேற்கொண்டிருந்தவர் என்பது இவ்வாறு வரும் புறனடை நூற்பாக்களால் இனிதின் விளங்கும். தொல்காப்பியம் இலக்கணம் எனினும் இலக்கியமென விரும்பிக் கற்கும் வண்ணம் வனப்பு மிக்க உத்திகளைத் தொல்காப்பியர் கையாண்டு நூலை யாத்துள்ளார். இலக்கிய நயங்கள் எளிமை : சிக்கல் எதுவும் இல்லாமல் எளிமையாகச் சொல்கிடந்தவாறே பொருள் கொள்ளுமாறு நூற்பா அமைத்தலும், எளிய சொற்களையே பயன்படுத்துதலும் தொல்காப்பியர் வழக்கம். “எழுத்தெனப் படுவ, அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப” “மழவும் குழவும் இளமைப் பொருள” “ஓதல் பகையே தூதிவை பிரிவே” “வண்ணந் தானே நாலைந் தென்ப” ஓரியல் யாப்புரவு ‘ஒன்றைக் கூறுங்கால் அதன் வகைகளுக்கெல்லாம் ஒரே யாப்புரவை மேற்கொள்ளல்’ என்பது தொல்காப்பியர் வழக்கம். “வல்லெழுத் தென்ப கசட தபற” “மெல்லெழுத் தென்ப `ஞண நமன” “இடையெழுத் தென்ப யரல வழள” சொன்மீட்சியால் இன்பமும் எளிமையும் ஆக்கல் ஓரிலக்கணம் கூறுங்கால் சிக்கல் இல்லாமல் பொருள் காண்பதற்காக வேண்டும் சொல்லைச் சுருக்காமல் மீளவும் அவ்விடத்தே சொல்லிச் செல்லுதல் தொல்காப்பியர் வழக்கம். “அவற்றுள், நிறுத்த சொல்லின் ஈறா கெழுத்தொடு குறித்துவரு கிளவி முதலெழுத் தியையப் பெயரொடு பெயரைப் புணர்க்குங் காலும் பெயரொடு தொழிலைப் புணர்க்குங் காலும் தொழிலொடு பெயரைப் புணர்க்குங் காலும் தொழிலொடு தொழிலைப் புணர்க்குங் காலும் மூன்றே திரிபிடன் ஒன்றே இயல்பென ஆங்கந் நான்கே மொழிபுணர் இயல்பே” என்னும் நூற்பாவைக் காண்க. இவ்வியல்பில் அமைந்த நூற்பாக்கள் மிகப் பல என்பதைக் கண்டு கொள்க. நூற்பா மீட்சியால் இயைபுறுத்தல் ஓரிடத்துச் சொல்லப்பட்ட இலக்கணம் அம்முறையிலேயே சொல்லப்படத் தக்கதாயின் புதிதாக நூற்பா இயற்றாமல், முந்தமைந்த நூற்பாவையே மீளக்காட்டி அவ்வவ் விலக்கணங்களை அவ்வவ்விடங்களில் கொள்ளவைத்தல் தொல்காப்பிய ஆட்சி. இது தம் மொழியைத் தாமே எடுத்தாளலாம். “அளபெடைப் பெயரே அளபெடை இயல” “தொழிற்பெய ரெல்லாம் தொழிற்பெய ரியல” என்பவற்றைக் காண்க. எதுகை மோனை நயங்கள் எடுத்துக் கொண்டது இலக்கணமே எனினும் சுவைமிகு இலக்கிய மெனக் கற்குமாறு எதுகை நயம்பட நூற்பா யாத்தலில் வல்லார் தொல்காப்பியர். “வஞ்சி தானே முல்லையது புறனே எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்றே”. “ஏரோர் களவழி அன்றிக் களவழித் தேரோர் தோற்றிய வென்றியும்”. இவை தொடை எதுகைகள். இவ்வாறே ஐந்தாறு அடிகளுக்கு மேலும் தொடையாகப் பயில வருதல் தொல்காப்பியத்துக் கண்டு கொள்க. “மாற்றருங் கூற்றம் சாற்றிய பெருமையும் கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும்”. இவை அடி எதுகைகள். “விறப்பும் உறப்பும் வெறுப்பும் செறிவே” “நொசிவும் நுழைவும் நுணங்கும் நுண்மை”. முன்னதில் முழுவதும் எதுகைகளும், பின்னதில் முழுவதும் மோனைகளும் தொடைபடக் கிடந்து நடையழகு காட்டல் அறிக. முன்னது முற்றெதுகை; பின்னது முற்றுமோனை. “வயவலி யாகும்” “வாள்ஒளி யாகும்” “உயாவே உயங்கல்” “உசாவே சூழ்ச்சி” இவை மோனைச் சிறப்பால் அடுத்த தொடரைக் கொண்டு வந்து நிறுத்துகின்றன. இதனை எடுத்து வருமோனை எனலாம். அடைமொழி நடை மரம்பயில் கூகை, செவ்வாய்க் கிளி, வெவ்வாய் வெருகு, இருள்நிறப் பன்றி, மூவரி அணில், கோடுவாழ் குரங்கு, கடல்வாழ் சுறவு, வார்கோட்டி யானை என அடைமொழிகளால் சுவைப்படுத்துதல் தொல்காப்பியர் உத்திகளுள் ஒன்று. “இழுமென் மொழியால் விழுமியது பயிலல்” “எண்ணு வண்ணம் எண்ணுப் பயிலும்” இவ்வாறு ஒலி நயத்தால் கவர்ந்து பொருளை அறிந்துகொள்ளச் செய்வதும் தொல்காப்பியர் உத்திகளுள் ஒன்று. “மாத்திரை முதலா அடிநிலை காறும் நோக்குதற் காரணம் நோக்கெனப் படுமே” “ஒரூஉ வண்ணம் ஒரீஇத் தொடுக்கும்” என எடுத்த இலக்கணத்தை அச்சொல்லாட்சியாலேயே விளக்கிக் காட்டுவதும் தொல்காப்பிய நெறி. ‘மாற்றருஞ் சிறப்பின் மரபியல்’ என இயலின் பெயர் குறிக்கும் மாற்றானே இலக்கணமும் யாத்துக் காட்டியமை நூற்பாவுள் தனி நூற்பாவாகிய பெற்றிமையாம். வரம்பு இளமைப் பெயர், ஆண்மைப் பெயர், பெண்மைப் பெயர் என்பவற்றை முறையே கூறி விளக்கிய ஆசிரியர் “பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே” என நிறைவித்தல் நூல் வரம்புச் சான்றாம். செய்யுளியல் தொடக்கத்தில் செய்யுள் உறுப்புகள் மாத்திரை முதலாக முப்பத்து நான்கனை உரைத்து அவற்றை முறையே விளக்குதலும் பிறவும் திட்டமிட்ட நூற்கொள்கைச் சிறப்பாக அமைவனவாம். “வகரக் கிளவி நான்மொழி ஈற்றது” “அம்மூன் றென்ப மன்னைச் சொல்லே” இன்னவாறு வருவனவும் வரம்பே. விளங்க வைத்தல் விளங்கவைத்தல் என்பதொரு நூலழகாகும். அதனைத் தொல்காப்பியனார் போல விளங்க வைத்தவர் அரியர். “தாமென் கிளவி பன்மைக் குரித்தே” “தானென் கிளவி ஒருமைக் குரித்தே” “ஒருவர் என்னும் பெயர்நிலைக் கிளவி இருபாற்கும் உரித்தே தெரியுங் காலை” இவ்வளவு விளங்கச் சொன்னதையும் எத்தனை எழுத்தாளர்கள் இந்நாளில் புரிந்துகொண்டுளர்? நயத்தகு நாகரிகம் சில எழுத்துகளின் பெயரைத்தானும் சொல்லாமல் உச்சகாரம் (சு), உப்பகாரம் (பு), ஈகார பகரம் (பீ) இடக்கர்ப் பெயர் என்பவற்றை எடுத்துச் சொல்லும் நாகரிகம் எத்தகு உயர்வு உடையது! இஃது உயர்வெனக் கருதும் உணர்வு ஒருவர்க்கு உண்டாகுமானால் அவர் தம் மனம்போன போக்கில் எண்ணிக்கை போன போக்கில் கிறுக்கிக் கதையெனவோ பாட்டெனவோ நஞ்சை இறக்கி ‘இளையர்’ உளத்தைக் கெடுத்து எழுத்தால் பொருளீட்டும் சிறுமை உடையராவரா? தொல்காப்பிய நூனயம் தனியே ஆய்ந்து வெளிப்படுத்தற் குரிய அளவினது. தொல்காப்பியக் கொடை முந்து நூல் வளங்கள் அனைத்தும் ஒருங்கே பெறத்தக்க அரிய நூலாகத் தொல்காப்பியம் விளங்குவதுடன், அவர்கால வழக்குகளையும் அறிந்துகொள்ளும் வண்ணம் தொல்காப்பியர் தம் நூலை இயற்றியுள்ளார். அன்றியும் பின்வந்த இலக்கியப் படைப்பாளிகளுக்கும் இலக்கணப் படைப்பாளிகளுக்கும் அவர் வழங்கியுள்ள கொடைக்கு அளவே இல்லை. தொட்டனைத் தூறும் மணற்கேணியென அது சுரந்துகொண்டே உள்ளமை ஆய்வாளர் அறிந்ததே. பொருளதிகார முதல் நூற்பா ‘கைக்கிளை முதலா’ எனத் தொடங்குகின்றது. அக் கைக்கிளைப் பொருளில் எழுந்த சிற்றிலக்கியம் உண்டு. முத்தொள்ளாயிரப் பாடல்களாகப் புறத்திரட்டு வழி அறியப் பெறுவன அனைத்தும் கைக்கிளைப் பாடல்களே. “ஏறிய மடல் திறம்” என்னும் துறைப்பெயர் பெரிய மடல், சிறியமடல் எனத் தனித்தனி நூலாதல் நாலாயிரப் பனுவலில் காணலாம். ‘மறம்’ எனப்படும் துறையும் ‘கண்ணப்பர் திருமறம்’ முதலாகிய நூல் வடிவுற்றது. கலம்பக உறுப்பும் ஆயது. ‘உண்டாட்டு’ என்னும் புறத்துறை, கம்பரின் உண்டாட்டுப் படலத்திற்கு மூலவூற்று. ‘தேரோர் களவழி’ களவழி நாற்பது கிளர்வதற்குத் தூண்டல். ‘ஏரோர் களவழி’ என்பது பள்ளுப்பாடலாகவும், ‘குழவி மருங்கினும்’ என்பது பிள்ளைத் தமிழாகவும் வளர்ந்தவையே. “காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்த மரபின் பெரும்படை வாழ்த்தலென் றிருமூன்று மரபின்கல்” என்னும் புறத்திணை இயல் நூற்பா தானே, சிலப்பதிகார வஞ்சிக் காண்டத்திற்கு வைப்பகம். பாடாண் திணைத் துறைகள் சிற்றிலக்கிய வளர்ச்சிக்கு வழங்கியுள்ள கொடை தனிச்சிறப்பினவாம். “அறம் முதலாகிய மும்முதற் பொருட்கும்” என நூற்பாச் செய்து முப்பாலுக்கு மூலவராகத் தொல்காப்பியனார் திகழ்வதைச் சுட்டுவதே அவர்தம் கொடைப் பெருமை நாட்டுவதாகலாம். இவை இலக்கியக் கொடை. இலக்கணக் கொடை எத்துணைக் கொடை? இலக்கண நூல்கள் அனைத்துக்கும் நற்றாயாயும், செவிலித் தாயாயும், நல்லாசானாயும் இருந்து வளர்த்து வந்த - வளர்த்து வருகின்ற சீர்மை தொல்காப்பியத் திற்கு உண்டு. இந்நாளில் வளர்ந்துவரும் ‘ஒலியன்’ ஆய்வுக்கும் தொல்காப்பியர் வித்திட்டவர் எனின், அவர் வழி வழியே நூல் யாத்தவர்க்கு அவர் பட்டுள்ள பயன்பாட்டுக்கு அளவேது? “தொல்காப்பியன் ஆணை” என்பதைத் தலைமேற் கொண்ட இலக்கணர், பின்னைப் பெயர்ச்சியும் முறை திறம்பலுமே மொழிச்சிதைவுக்கும் திரிபுகளுக்கும் இடமாயின என்பதை நுணுகி நோக்குவார் அறிந்து கொள்ளக்கூடும். இலக்கணப் பகுப்பு விரிவு இனித் தொல்காப்பியம் பிற்கால இலக்கணப் பகுப்பு களுக்கும் இடந்தருவதாக அமைந்தமையும் எண்ணத் தக்கதே. தமிழ் இலக்கணம் ஐந்திலக்கணமாக அண்மைக் காலம் வரை இயன்றது. அறுவகை இலக்கணமென ஓரிலக்கணமாகவும் இது கால் விரிந்தது. இவ் விரிவுக்குத் தொல்காப்பியம் நாற்றங்காலாக இருப்பது அறிதற்குரியதே. எழுத்து சொல் பொருள் என முப்பகுப்பால் இயல்வது தொல்காப்பியம் ஆகலின் தமிழிலக்கணம் அவர் காலத்தில் முக் கூறுபட இயங்கியமை வெளி. அவர் கூறிய பொருளிலக்கணத்தைத் தனித்தனியே வாங்கிக் கொண்டு அகப்பொருள், புறப்பொருள் என இலக்கணங் கூறும் நூல்கள் கிளைத்தன. அது பொருளிலக்கணத்தைப் பகுத்துக் கொண்டதே. அவர் கூறிய செய்யுளியலை வாங்கிக் கொண்டு, ‘யாப்பருங்கலம்’ முதலிய யாப்பு இலக்கண நூல்கள் தோன்றித் தமிழ் இலக்கணத்தை நாற்கூறுபடச் செய்தன. அவர் கூறிய உவமையியலையும் செய்யுளியலில் சில பகுதிகளையும் தழுவிக்கொண்டு வடமொழி இலக்கணத் துணையொடு அணியிலக்கணம் என ஒரு பகுதியுண்டாகித் தமிழ் இலக்கணம் ஐங்கூறுடையதாயிற்று. இவ்வைந்துடன் ஆறாவது இலக்கணமாகச் சொல்லப்படுவது ‘புலமை இலக்கணம்’ என்பது. அது தமிழின் மாட்சி தமிழ்ப் புலவர் மாட்சி முதலியவற்றை விரிப்பது. “தமிழ்மொழிக் குயர்மொழி தரணியில் உளதென வெகுளியற் றிருப்போன் வெறும்புல வோனே” என்பது அவ்விலக்கணத்தில் ஒரு பாட்டு. ஆக மூன்றிலக்கணத்துள் ஆறிலக்கணக் கூறுகளையும் மேலும் உண்டாம் விரிவாக்கங்களையும் கொண்டிருக்கின்ற மொழிக் களஞ்சியம் தொல்காப்பியம் என்க. தொல்காப்பியரின் சிறப்பாகப் பாயிரம் சொல்வனவற்றுள் ஒன்று, ‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்’ என்பது. ஐந்திரம் இந்திரனால் செய்யப்பட்டது என்றும், பாணினியத்திற்குக் காலத்தால் முற்பட்டது என்றும், வடமொழியில் அமைந்தது என்றும் பாணினியத்தின் காலம் கி.மு. 450 ஆதலால் அதற்கு முற்பட்ட ஐந்திரக் காலம் அதனின் முற்பட்ட தென்றும், அந் நூற்றேர்ச்சி தொல்காப்பியர் பெற்றிருந்தார் என்றும், அந்நூற் பொருளைத் தம் நூலுக்குப் பயன்படுத்திக் கொண்டார் என்றும் ஆய்வாளர் பலப்பல வகையால் விரிவுறக் கூறினர். சிலப்பதிகாரத்தில் வரும் ‘விண்ணவர் கோமான்’ விழுநூல், ‘கப்பத் திந்திரன் காட்டிய நூல்’ என்பவற்றையும் ‘இந்திரன் எட்டாம் வேற்றுமை என்றனன்’ என்னும் ஒரு நூற்பாவையும் காட்டி அவ்வைந்திர நூலைச் சுட்டுவர். விண்ணவர் கோமான் இந்திரன் வடமொழியில் நூல் செய்தான் எனின், தேவருலக மொழி வடமொழி என்றும், விண்ணுலக மொழியே மண்ணில் வடமொழியாய் வழங்குகின்றது என்றும் மண்ணவர் மொழி யுடையாரை நம்பவைப்பதற்கு இட்டுக் கட்டப்பட்ட எளிய புனைவேயாம். அப்புனைவுப் பேச்சுக் கேட்டதால்தான் இளங்கோ தம் நூலுள்ளும் புனைந்தார். அவர் கூறும் “புண்ணிய சரவணத்தில் மூழ்கி எழுந்தால் விண்ணவர் கோமான் விழுநூல் எய்துவர்” என்பதே நடைமுறைக் கொவ்வாப் புனைவு என்பதை வெளிப்படுத்தும். அகத்திய நூற்பாக்களென உலவ விட்டவர்களுக்கு, இந்திரன் எட்டாம் வேற்றுமை சொன்னதாக உலவவிட முடியாதா? இவ்வாறு கூறப்பட்டனவே தொன்மங்களுக்குக் கைம் முதல். இதனைத் தெளிவாகத் தெரிந்தே தொல்காப்பியனார், “தொன்மை தானே உரையொடு புணர்ந்த பழமை மேற்றே” என்றார். தொன்மை என்பது வழிவழியாக உரைக்கப்பட்டு வந்த பழஞ்செய்தி பற்றியதாம் என்பது இந்நூற்பாவின் பொருள். இவ்வாறு தொல்காப்பியர் கேட்ட தொன்மச் செய்திகளைப் பனம்பாரனார் கேட்டிரார் என்ன இயலாதே. “இந்திரனாற் செய்யப்பட்டதொரு நூல் உண்டு காண்; அது வடமொழியில் அமைந்தது காண்; அதன் வழிப்பட்டனவே வடமொழி இலக்கண நூல்கள் காண்” என்று கூறப்பட்ட செய்தியைப் பனம்பாரர் அறிந்தார். ‘அறிந்தார் என்பது இட்டுக் கட்டுவதோ’ எனின் அன்று என்பதை அவர் வாக்கே மெய்ப்பிப்பதை மேலே காண்க. திருவள்ளுவர் காலத்திலும், “தாமரைக் கண்ணானின் உலக இன்பத் திலும் உயரின்பம் ஒன்று இல்லை” என்று பேசப் பட்டது. இவ்வாறு பிறர் பிறர் காலத்தும் பிறபிற செய்திகள் பேசப்பட்டன என்பவற்றை விரிப்பின் பெருகுமென்பதால் வள்ளுவர் அளவில் அமைவாம். திருவள்ளுவர் கேட்ட செய்தி, அவரை உந்தியது. அதனால் “தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல், தாமரைக் கண்ணான் உலகு?” என்றோர் வினாவை எழுப்பி இவ்வுலகத் தெய்தும் இன்பங்களுள் தலையாய காதலின்பத்தைச் சுட்டினார். அடியளந்தான் கதையை மறுத்து, மடியில்லாத மன்னவன் தன் முயற்சியால் எய்துதல் கூடும் முயல்க; முயன்றால் தெய்வமும் மடிதற்று உன்முன் முந்து நிற்கும் என்று முயற்சிப் பெருமை யுரைத்தார். இன்னதோர் வாய்பாட்டால் பனம்பாரனார் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியரைச் சுட்டினார். ‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்’ என்று வாளா கூறினார் அல்லர் பனம்பாரனார். “மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” என்றார். அவர் கேள்வியுற்றது ‘விண்ணுலக ஐந்திரம்!’ அவ்விண்ணுலக ஐந்திரத்தினும் இம்மண்ணுலகத்துத் தொல்காப்பியமே சிறந்த ஐந்திரம் என்னும் எண்ணத்தை யூட்டிற்றுப் போலும்! “ஆகாயப்பூ நாறிற்று என்றுழிச் சூடக்கருதுவாருடன்றி மயங்கக் கூறினான் என்னும் குற்றத்தின் பாற்படும்” என்பதை அறியாதவர் அல்லரே பனம்பாரர். அதனால் நீர்நிறைந்த கடல் சூழ்ந்த நிலவுலகின்கண் விளங்கும் ஐந்திரம் எனத்தக்க தொல்காப்பியத்தை முழுதுற நிரம்பத் தோற்றுவித்ததால் தன் பெயரைத் தொல்காப்பியன் எனத் தோன்றச் செய்தவன் என்று பாராட்டுகிறார். இனி ‘ஐந்திரம்’ என்பது சமண சமயத்து ஐந்தொழுக்கக் கோட்பாடு. அவற்றை நிறைந்தவர் தொல்காப்பியர் என்றும் கூறுவர். ஒழுக்கக் கோட்பாடு ‘படிமையோன்’ என்பதனுள் அடங்குதலால் மீட்டுக் கூற வேண்டுவதில்லையாம். அன்றியும் கட்டமை நோற்பு ஒழுக்கம் அவ்வாதனுக்கு உதவுதலன்றி, அவனியற்றும் இலக்கணச் சிறப்புக்குரிய தாகாது என்பதுமாம். ஆயினும், தொல்காப்பியர் சமண சமயச் சார்பினர் அல்லர் என்பது மெய்ம்மையால், அவ்வாய்வுக்கே இவண் இடமில்லை யாம். இனி ‘ஐந்திறம்’ என்றாக்கி ஐங்கூறுபட்ட இலக்கணம் நிறைந்தவர் என்பர். அவர் தமிழ் இலக்கணக் கூறுபாடு அறியார். தமிழ் இலக்கணம் முக்கூறுபட்டது என்பதைத் தொல்காப்பியமே தெளிவித்தும் பின்னே வளர்ந்த ஐந்திலக்கணக் கொள்கையை முன்னே வாழ்ந்த ஆசிரியர் தலையில் சுமத்துவது அடாது எனத் தள்ளுக. ‘ஐந்திரம்’ எனச் சொன்னடை கொண்டு பொருளிலாப் புதுநூல் புனைவு ஒன்று இந்நாளில் புகுந்து மயக்க முனைந்து மயங்கிப்போன நிலையைக் கண்ணுறுவார் ஏட்டுக் காலத்தில் எழுதியவர் ஏட்டைக் கெடுத்ததும் படித்தவர் பாட்டைக் கெடுத்ததும் ஆகிய செய்திகளைத் தெளிய அறிவார். எழுதி ஏட்டைக் காத்த - படித்துப் பாட்டைக் காத்த ஏந்தல்களுக்கு எவ்வளவு தலை வணங்குகிறோமோ, அவ்வளவு தலை நாணிப் பிணங்கவேண்டிய செயன்மையரை என் சொல்வது? தொல்காப்பிய நூற்பாக்கள் இடமாறிக் கிடத்தல் விளங்குகின்றது. தெய்வச்சிலையார் அத்தகையதொரு நூற்பாவைச் சுட்டுதலை அவர் பகுதியில் கண்டு கொள்க. மரபியலில் “தவழ்பவை தாமும் அவற்றோ ரன்ன” என்னும் நூற்பாவை அடுத்துப் “பறழ்எனப் படினும் உறழாண் டில்லை” என்னும் நூற்பா அமைந்திருத்தல் வேண்டும். அவ்வாறு அமைந்தால் எடுத்துக்காட்டு இல்லை என்பனவற்றுக்கு இலக்கியம் கிடைத்தல் இயல்பாக அமைகின்றது. “இக்காலத்து இறந்தன” என்னும் இடர்ப்பாடும் நீங்குகின்றது. இடப் பெயர்ச்சிக்கு இஃதொரு சான்று. இடையியலில் “கொல்லே ஐயம்” என்பதை அடுத்த நூற்பா “எல்லே இலக்கம்” என்பது. இவ்வாறே இருசீர் நடை நூற்பா நூற்கும் இடத்தெல்லாம் அடுத்தும் இருசீர் நடை நூற்பா நூற்றுச் செல்லலும் பெரிதும் எதுகை மோனைத் தொடர்பு இயைத்தலும் தொல்காப்பியர் வழக்காதலைக் கண்டு கொள்க. இத்தகு இருசீர் நடை நூற்பாக்கள் இரண்டனை இயைத்து ஒரு நூற்பாவாக்கலும் தொல்காப்பிய மரபே. “உருவுட் காகும்; புரைஉயர் வாகும்” “மல்லல் வளனே; ஏபெற் றாகும்” “உகப்பே உயர்தல்; உவப்பே உவகை” என்பவற்றைக் காண்க. இவ்விருவகை மரபும் இன்றி “நன்று பெரிதாகும்” என்னும் நூற்பா ஒன்றும் தனித்து நிற்றல் விடுபாட்டுச் சான்றாகும். அகத்திணையியல் இரண்டாம் நூற்பா, ‘அவற்றுள்’ என்று சுட்டுதற்குத் தக்க சுட்டு முதற்கண் இன்மை காட்டி ஆங்கு விடுபாடுண்மை குறிப்பர் (தொல். அகத். உரைவளம். மு. அருணாசலம் பிள்ளை). இனி இடைச் செருகல் உண்டென்பதற்குத் தக்க சான்று களும் உள. அவற்றுள் மிகவாகக் கிடப்பது மரபியலிலேயேயாம். தொல்காப்பியரின் மரபியல் கட்டொழுங்கு மரபிய லிலேயே கட்டமைதி இழந்து கிடத்தல் திட்டமிட்ட திணிப்பு என்பதை உறுதிப் படுத்துகின்றது. ‘மாற்றருஞ் சிறப்பின் மரபியல்’ என்று மரபிலக்கணம் கூறி மரபியலைத் தொடுக்கும் அவர் இளமைப் பெயர், ஆண்பாற் பெயர், பெண்பாற் பெயர் ஆகியவற்றைக் குறிக்கிறார். அக்குறிப்பொழுங்குப் படியே இளமைப் பெயர்கள் இவை இவை இவ்விவற்றுக்குரிய என்பதை விளக்கி முடித்து, “சொல்லிய மரபின் இளமை தானே சொல்லுங் காலை அவையல திலவே” என நிறைவிக்கிறார். அடுத்து ஓரறிவு உயிரி முதல் ஆறறிவுடைய மாந்தர் ஈறாக ஆண்பால் பெண்பால் பெயர்களை விளக்க வரும் அவர் ஓரறிவு தொடங்கி வளர்நிலையில் கூறி எடுத்துக்காட்டும் சொல்லி ஆண்பாற் பெயர்களையும் பெண்பாற் பெயர்களையும் இவை இவை இவற்றுக்குரிய என்பதை விளக்கி நிறைவிக்கிறார். ஆண்பால் தொகுதி நிறைவுக்கும் பெண்பால் தொகுதித் தொடக்கத்திற்கும் இடையே “ஆண்பா லெல்லாம் ஆணெனற் குரிய பெண்பா லெல்லாம் பெண்ணெனற் குரிய காண்ப அவையவை அப்பா லான” என்கிறார். பின்னர்ப் பெண்பாற் பெயர்களைத் தொடுத்து முடித்து, “பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே” என்று இயல் தொடக்கத்தில் கூறிய பொருளெல்லாம் நிறைந்த நிறைவைச் சுட்டுகிறார். ஆனால் இயல் நிறைவுறாமல் தொடர்நிலையைக் காண்கி றோம். எப்படி? “நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய” என்பது முதலாக வருணப் பாகுபாடுகளும் அவ்வவர்க் குரியவையும் 15 நூற்பாக்களில் தொடர்கின்றன. கூறப்போவது இவையென்று பகுத்த பகுப்பில் இல்லாத பொருள், கூற வேண்டுவ கூறி முடித்தபின் தொடரும் பொருள், ‘மரபியல்’ செய்தியொடு தொடர்பிலாப் பொருள் என்பன திகைக்க வைக்கின்றன. நூலும் கரகமும் முக்கோலும் மணையும் படையும் கொடியும் குடையும் பிறவும் மாற்றருஞ்சிறப்பின் மரபினவோ? எனின் இல்லை என்பதே மறுமொழியாம். “வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை” என்னும் நூற்பா நடை தொல்காப்பியர் வழிப்பட்டதென அவர் நூற்பாவியலில் தோய்ந்தார் கூறார். “வாணிகன் பெறுமே வாணிக வாழ்க்கை” என நூற்கத் தெரியாரோ அவர்? இளமை, ஆண்மை, பெண்மை என்பன மாறா இயலவை. பிறவியொடு வழி வழி வருபவை. நூல், கரகம் முதலியன பிறவியொடு பட்டவை அல்ல. வேண்டுமாயின் கொள்ளவும் வேண்டாக்கால் தள்ளவும் உரியவை. முன்னை மரபுகள் தற்கிழமைப் பொருள; பிரிக்க முடியாதவை. பின்னைக் கூறப்பட்டவை பிறிதின் கிழமைப் பொருளவை. கையாம் தற்கிழமைப் பொருளும் கையில் உள்ளதாம் பிறிதின் கிழமைப் பொருளும் ‘கிழமை’ என்னும் வகையால் ஒருமையுடையவை ஆயினும் இரண்டும் ஒருமையுடையவை என உணர்வுடையோர் கொள்ளார். இவ்வொட்டு நூற்பாக்கள் வெளிப்படாதிருக்க ஒட்டியிருந்த ‘புறக்காழ்’ ‘அகக்காழ்’ ‘இலை முறி’ ‘காய்பழம்’ இன்னவை பற்றிய ஐந்து நூற்பாக்களைப் பின்னே பிரித்துத் தள்ளி ஒட்டாஒட்டாய் ஒட்டி வைத்தனர். இதனை மேலோட்டமாகக் காண்பாரும் அறிவர். “நிலம்தீ நீர்வளி விசும்போ டைந்தும்” என்னும் நூற்பாவே மரபியல் முடிநிலை நூற்பாவாக இருத்தல் வேண்டும். பின்னுள்ள ‘நூலின் மரபு’ பொதுப் பாயிரம் எனத்தக்கது. அது சிறப்புப் பாயிரத்தைத் தொடுத்தோ, நூன் முடிவில் தனிப்பட்டோ இருந்திருக்க வேண்டும். அதுவும் நூலாசிரியர் காலத்திற்குப் பிற்பட்டுச் சேர்த்ததாக இருத்தல் வேண்டும். அதிலும் சிதைவுகளும் செறிப்புகளும் பல உள. “அவற்றுள், சூத்திரந்தானே” என வரும் செய்யுளியல் நூற்பாவை யும் (1425) “சூத்திரத்தியல்பென யாத்தனர் புலவர்” என வரும் மரபியல் நூற்பாவையும் (1600) ஒப்பிட்டுக் காண்பார் ஒரு நூலில் ஒருவர் யாத்த தெனக் கொள்ளார். மரபியல் ஆய்வு தனியாய்வு எனக் கூறி அமைதல் சாலும். இவ்வியல் நூற்பாக்கள் அனைத்திற்கும் இளம்பூரணர் உரையும் பேராசிரியர் உரையும் கிடைத்திருத் தலால் அவர்கள் காலத்திற்கு முன்னரே இம்மாற்றங்கள் நிகழ்ந்திருக்க வேண்டும் என்பது தெளிவான செய்தி. மேலும் சில குறிப்புகளும் செய்திகளும் ‘வாழ்வியல் விளக்க’த்தில் காணலாம். - இரா. இளங்குமரன் தமிழ்வளம் -19, தமிழர் வாழ்வியல் இலக்கணம் எனும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது சொல்லதிகாரம் இயலமைதி சொல்லதிகாரம் கிளவியாக்கம் (சொல்லாக்கம்) முதலாக எச்சவியல் இறுதியாக ஒன்பது இயல்களை உடையது. அவ்வியல்கள் முறையே கிளவியாக்கம், வேற்றுமைஇயல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, பெயரியல், வினையியல், இடையியல், உரியியல், எச்சவியல் என்பன. இவை ஒன்றற் கொன்று தொடரிபோல் - சங்கிலிபோல் - தொடர்புடையன. சொல் சொல் என்பது பொருளுணர்த்தும் கருவி; மாந்தர் தம் நெஞ்ச ஊர்தி; உலகத்தை நெருக்கி வைக்க வல்ல இயக்கி. சொல் என்பது மாந்தர்தம் குறிப்பு உணர்த்துவதற்கும் தேவை நிறைவேற்றத்திற்கும் தம் பட்டறிவால் இயற்கையின் துணை கொண்டு படைக்கப்பட்ட செய்நேர்த்தியுடையது. சொல்லின் ஆற்றல் பெரிது. “ஆவதும் சொல்லால்; அழிவதும் சொல்லால்” என்பது பழமொழி. சொல் ஆக்கத்திற்கே அன்றி அழிவுக்கும் ஆதலுண்டு என்பதே அதற்குக் ‘கூற்று’ என்றொரு பெயரைத் தந்தது கூறுபடுத்துவது அழிப்பது கூற்றெனப்படுதல் அறியத்தக்கது. சொல் எதுவும் பொருளற்றதில்லை என்பது தொல்காப்பியர் தெளிவு. அதனால், “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்றார் (640). அப்பொருள் பார்த்த அளவில் புலப்படல் உண்டு. ஆழ்ந்து பார்த்து அதன்பின் கண்டு கொள்ளத்தக்கனவும் உண்டு என்பதால், “மொழிப் பொருட் காரணம் விழிப்பத்தோன்றா” என்றார் (877). நெல் மணி இல்லாத நெல்லை ‘நெல்’ என்பது வழக்கில்லை. பதர், பதடி என்பனவே வழக்கு. நெல் மணி பிடித்தலைப் ‘பலன்’ பிடித்தல் என்பர்;ஆடு மாடு கருக் கொள்ளுதல் ‘பலப்படுதல்’ எனப்படும். மக்கள் வாழ்வில் கொள்ளும் பயன்மற்றை உயிரிகளின் வாழ்வில் பலன் எனப்படுகின்றது. பலன் இல்லா நெல்லும் பயன் இல்லாச் சொல்லும் ஒத்தவை என்பதால் ‘சொல்’ என்பதற்கு நெல் என ஒரு பொருள் உண்டாயிற்று. சொல் தரும் உணவு சோறு என்றும் சொன்றி என்றும் வழக்கில் ஆயது. “பயனில் சொல் பாராட்டு வானை மகனெனல் மக்கட் பதடி எனல்” என்னும் வள்ளுவ உவமை எண்ணின், உண்மை விளக்கமாம். சொல்லதிகார முதலியலின் பெயர் ‘கிளவியாக்கம்’. ஆக்கம் என்பது என்ன? ஆக்குவது ஆக்கம். ‘ஆக்குப் புரை’ என்பது சமையல் அறை. சொல்லை ஆக்குதல், நெல்லைச் சோறாக்கும் செயல் போல்வது என்பதை, உரையாசிரியர் சேனாவரையர், “வழுக்களைந்து சொற்களை ஆக்கிக் கொண்டமையான் இவ்வோத்துக் கிளவியாக்க மாயிற்று. ஆக்கம், அமைத்துக் கோடல், நொய்யும் நுறுங்கும் களைந்து அரிசியமைத் தாரை அரிசியாக்கினார் என்ப ஆகலின்” என்றது எண்ணத்தக்கது. கிளவி சொல்லாதல், இரட்டைக் கிளவி என்பதால் வெளிப்பட விளங்கும். கிளத்தல் வழியாவது கிளவி. கிளத்தல் சொல்லுதல். இனி, உயர்திணை, அஃறிணை என்னும் இருதிணை; ஆண், பெண், பலர், ஒன்று, பல என்னும் ஐம்பால், வினா விடை; இயல்பு வழக்கு தகுதி வழக்கு, தன்மை முன்னிலை படர்க்கை என்னும் மூவிடம்; ஒருமை பன்மையாகிய எண்; இவற்றுள் வரும் வழு - வழா நிலை என்பனவெல்லாம் கிளவியாக்கத்தில் இடம் பெறுகின்றன. வேற்றுமை அடுத்துள்ள வேற்றுமையியலில் வேற்றுமை வகை, வேற்றுமை உருபு, பொருள் நிலை என்பவை கூறப்பட்டுள்ளன. வேற்றுமை உருபுகள் மயங்குதல் வேற்றுமை மயங்கியலாக விரிகின்றது. விளி நான்காவது இயல் விளி மரபு என்பது. விளி என்பதன் இலக்கணம், உயர்திணைப் பெயர் விளியேற்கும் முறை, முறைப் பெயர் விரவுப் பெயர், அஃறிணைப் பெயர் ஆயவை விளியேற்கும் முறை பற்றியது அது. பெயர் அடுத்த இயல் பெயரியல், சொற்களின் இயல்பு, பெயர்ச் சொல்லின் இலக்கணம், உயர்திணைப் பெயர்கள், அஃறிணைப் பெயர்கள், விரவுப் பெயர்கள் என்பவை பற்றிய விதிகள் விளக்கங்கள் பற்றியது அது. வினை ஆறாம் இயல் வினை இயல். வினைச் சொல் என்பதன் இலக்கணம் கூறி, உயர்திணை வினை அஃறிணைவினை, விரவுவினை, வியங்கோள், வினை, எச்சம் பற்றியது அது. இடை ஏழாம் இயல் இடை இயல். இடைச் சொல் என்பதன் பொது இலக்கணம் சிறப்பிலக்கணம் பற்றிக் கூறியது அது. எண்ணிடைச் சொல் விளக்கமும் உடையது. உரி உரியியல் என்பது எட்டாவது இயல். இடைச் சொல் போலவே உரிச்சொல்லும் பொது இலக்கணம் சிறப்பிலக்கணம் என்பவற்றைக் கொண்டுளது. உரிச் சொல்லுக்குப் பொருள் காண் முறையும் கூறுகிறது. அகராதி எனவும் நிகண்டு எனவும் பின்னே எழுந்த வரவுகளுக்கு இவ்விடையியலும் உரியியலும் மூலவைப்பகம் ஆகும். எச்சம் ஒன்பதாவது எச்சவியல். நால்வகைச் சொற்கள், பொருள்கோள் வகை, தொகைகள் வினைமுற்று வகை, சில மரபுக் குறிப்புகள் ஆகியவற்றைக் கூறி நிறைகின்றது அது. இச் சொல்லதிகாரம் உரைவல்லார் பலரைத் தன்பால் ஈர்த்துளது என்பது இதற்குக் கிடைத்துள்ள உரையாசிரியர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், கல்லாடனார், தெய்வச்சிலையார் ஆகியோர் உரைகளால் புலப்படும். - இரா. இளங்குமரன் தமிழ்வளம் -19, தமிழர் வாழ்வியல் இலக்கணம் எனும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது சொல்லதிகாரம் வாழ்வியல் விளக்கம் திணை திணை பால் எண் இடம் காலம் ஆகிய பொதுவகுப்பு உலகப் பொதுமையது. எனினும் தமிழர் கண்ட திணை பால் வகுப்பு அருமையும் பெருமையும் மிக்கவை. சொல்லதிகார முதலியலாகிய கிளவியாக்க முதல் நூற்பாவே, “உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே அஃறிணை என்மனார் அவரல பிறவே” என்கிறது. ‘திணை’ என்பது திண்மை என்னும் பண்பு வழியில் அமைந்த சொல். திண்மை உடலுக்கும் உளத்திற்கும் உண்டேனும், இவண் உளத்திண்மை குறித்ததேயாம். உளத்திண்மையாவது உறுதியான கட்டொழுங்கு. அதனை ஆசிரியர் மேலே விளக்கியுரைப்பார். பெண்மைக்குத் திண்மை வேண்டும் என்னும் வள்ளுவம் ஆண்மைக்கு நிறையும் துறவர்க்கு நோன்பும் வேண்டும் என்பதையும் வலியுறுத்தும். உயர்ந்த ஒழுக்கம் உடையவர் எவரோ அவர் உயர்திணையர்; அவ்வுயர் ஒழுக்கம் இல்லாரும் மற்றை உயிரிகளும் உயிரில்லாதனவும் அல்திணையாம் (அஃறிணை யாம்) என்கிறார் தொல்காப்பியர். மக்களெல்லாரும் உயர்திணையர் என்னாமல் உயர் ஒழுக்கம் உடையாரே உயர்திணையர் என்றார், “அவ்வுயர் ஒழுக்கம் இல்லார் மாந்தரே எனினும் அவர்கள் மக்கள் அல்லர்; மாக்கள் எனப்படுவர். விலங்கொடும் இணைத்துச் சொல்லப் படுவர்” என்பதை, “மாவும் மாக்களும் ஐயறி வினவே” என்பார் மேலே. திணை இரண்டும் ஐம்பாலாகப் பகுக்கப்படுதலை அடுத்து உரைக்கிறார் (485, 486). பால் பால் என்பது தூய்மை; வால் என்பதும் அதுவே. பட்டொளி வீசும் பகல் ‘பால்’ ஆகும். இரவு பகல் எனப் பகுத்தலால் பால் என்பது பகுதி, பக்கம் என்னும் பொருள்களைக் கொண்டது. எ-டு: மேல்பால், கீழ்பால். பக்கங்களை இணைப்பது ‘பாலம்’ எனப்பட்டது. இவ்வாறும் மேலும் விரிபொருள் கொண்டது பால். ஓர் உயிரின் தோற்றம், வளர்வு, வீவு என்பனவும் உலகத்தியற்கை எனப்பட்டது. அதனால் உகலத்தியற்கை யாம் ஊழுக்குப் ‘பால்’ என்பதொரு பெயரும் உண்டாயிற்று. திணையை இரண்டாகக் கண்ட நம் முன்னோர் பால் என்பதை ஐந்து எனக் கண்டனர். அவை ஆண், பெண், பலர், ஒன்று, பல என்பன. உயர்திணைப்பால் மூன்றாகவும், அஃறிணைப்பால் இரண்டாகவும் கொண்டனர். திணை பால் என்பவற்றைச் சொல்லமைதி கொண்டு வகுக்காமல் சொல் சுட்டும் பொருள் அமைதியைப் பண்பாட்டு வகையால் வகுத்த அருமை நினைந்து மகிழத் தக்கதாம். ஆண்பால் சொல் அடையாளம் என்ன? பெண்பால் சொல் அடையாளம் என்ன? “னஃகான் ஒற்றே ஆடூஉ அறிசொல்” “ளஃகான் ஒற்றே மகடூஉ அறிசொல்” என்கிறார் தொல்காப்பியர் (488, 489) இவ்வாறே பிறவும் தொடர்கிறார். நெடிய தொலைவில் இருந்து உருண்டுவரும் கல், தேய்வுறும்; தேய்ந்து தேய்ந்து சுருங்கி நிற்கும். அதுபோல் நெட்ட நெடுங்காலத்தின் முன் தோன்றிப் பெருக வழங்கும் சொற்கள் தேய்தல் இயற்கை. அவன், அவள்,அவர், அது, அவை என்பனவற்றின் இறுதி எழுத்து ஒன்றுமே நின்று அச்சொல்லமைதியைக் குறித்த வகை இது. வந்த+அவன் = வந்தவன்; எனத் தேய்தல் இல்லையா? மக்கள் வழக்கில் எப்படி வழங்கப்படுகிறதோ, அதனைத் தக்க வகையில் புலமையாளர் போற்றிக் கொண்ட முறை இன்னதாம். பால் திரிபு ‘அரவானி’ என்பார் உளர். அரவான் இறப்போடு தம்மைப் புனைந்து தாலியறுக்கும் சடங்காக நடத்தி வருகின்றனர். அது வரவரப் பெருக்கமும் ஆகின்றது. முழுதுறு ஆண்மையோ, முழுதுறு பெண்மையோ அமையாதவர் அவர். ஓர் எருமையின் கொம்பைப், “பேடிப் பெண் கொண்டு ஆடுகை கடுப்ப” என உவமை காட்டுகின்றது கலித்தொகை. போர்க்களம் புக விலக்கப்பட்டவராக இருந்தனர் அவர். ஆனால் களியாட்டத்தில் பங்கு கொண்டனர். பதினோராடல்களுள் ஒன்று பேடு. ஆண்மை இயல்பு மாறியவரையும் பெண்மை இயல்பு மாறியவரை யும் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். “ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி” என்கிறார். ஆண் தன்மை மாறிப் பெண் தன்மை மிக்கார் பேடியர் என்றும், பெண் தன்மை மாறி ஆண் தன்மை மிக்கார் அலியர் என்றும் கூறப் படுகின்றனர். இலக்கணம் கூறவந்த ஆசிரியர் பால்திரி தன்மையரை எப்பால் வகுப்பில் சேர்த்தல் வேண்டும் என்னும் ஐயம் பயில்வார்க்கு எழாவாறு, “இப்பால் படுத்திக் கூறுக” என இலக்கணம் வகுத்தார் என்க. செப்பும் வினாவும் “செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்” என்பதொரு கிளவியாக்க நூற்பா (496). ‘வினா விடை’ மலிந்த காலம் இது. வினாவுதலும் விடை தருதலும் வழக்கு. ஆனால், ஆசிரியர் தொல்காப்பியர் பார்வை ஆழமானது. வினாவுதற்கு உரிய பொருள் ஒன்று இல்லாமல் வினாவுதல் என்பது இல்லையே என எண்ணியவராய் விடை என்பதனைக் குறிக்கும் ‘செப்பு’ என்னும் சொல்லை முன்வைத்துச் “செப்பும் வினாவும்” என்றார். செப்பல் ஓசையமைந்த வெண்பா, வினாவுக்கும் விடைக்கும் பொருந்தி வரக் கண்ட புலமையர், அதனைப் போற்றி வளர்த்த இலக்கியப் பரப்பு பேரளவினதாம். வினா விடை வெண்பா, சேதுவேந்தர் அவையில் சிறக்க வளர்ந்தது. இரட்டையர், காளமேகர் முதலியோர் பாடியவை தனிப்பாடல் திரட்டில் இடம் பெற்றன. வினாவே விடை “படிப்பாயா” என வினாவுகிறார் ஒருவர். வினாவப் பட்டவர், “படியேனோ? (படிக்க மாட்டேனோ?)” என அவரும் வினாத் தொடுக் கிறார். இவ்வினாவும் விடையே என்பதை மக்கள் வாழ்வியல் வழக்குக் கண்டு உரைத்துள்ளார் தொல்காப்பியர் அது, “வினாவும் செப்பே வினாஎதிர் வரினே” என்பது (497). தகுதி சட்ட மன்றத்திலோ, நாடாளுமன்றிலோ பயன்படுத்தக் கூடாத சொல் என்று அவைக் குறிப்பில் இருந்து விலக்கக் கூறுதல் மக்களாட்சி நடைமுறை. இம்முறை பெரியவர் முன்பிலும், பெரு மக்கள் அவை முன்பிலும் பண்டே பயன்படுத்தப்பட்ட செம்முறை ஆகும். மாண்டார், இறந்தார், துஞ்சினார், செத்தார் என்பன வெல்லாம் ஒரு பொருள் தருவனவே எனினும், ‘செத்தார்’ என்பது மதிப்புக் குறைவாகக் கருதப்படுகின்றது. விடுக்கப்படுவது, ‘ஓலை’ என்றாலும் அது ‘திருமுகம்’ எனப் பட்டது. ‘விளக்கை அணை’ என்னாமல், ‘விளக்கை அமர்த்து’, ‘குளிரவை’ என்பவை மின் காலத்திலும் பின்பற்றல் உண்டு. இவற்றை அவையல்கிளவி, (இடக்கரடக்கு) என்றும், மங்கல வழக்கு என்றும் கூறப்பட்டன. “இதனை இவ்வாறு கூறுதலே தகுதி” எனச் சான்றோரால் வகுக்கப்பட்டது ’தகுதி வழக்கு’ என்பதாம் இதனைத், “தகுதியும் வழக்கும் தழீஇயின ஒழுகும் பகுதிக் கிளவி வரைநிலை இலவே” என்கிறார் (500). இனச் சுட்டு ஞாயிறு என்பதற்கும் செஞ்ஞாயிறு என்பதற்கும் வேறுபாடு உண்டா? உண்டு. ஞாயிறு என்பதைப் பொது வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் கொள்ளலாம். ஆனால், செஞ்ஞாயிறு என்பது பொது வழக்குச் சொல் அன்று; அது, செய்யுள் வழக்குச் சொல். ஏனெனில், இனச்சுட்டு இல்லாச் சொல் செஞ்ஞாயிறு என்பது கரு ஞாயிறு என ஒன்று இல்லையே; அதனால் ‘செந்தாமரை’ என்பது பொது வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் உண்டே எனின், அது இனச் சுட்டுடைய பண்பினது. வெண்டாமரை உள்ளதே! “இனச்சுட் டில்லாப் பண்புகொள் பெயர்க்கொடை வழக்கா றல்ல செய்யு ளாறே” என்பது நூற்பா (501). இயற்கை செயற்கை இயற்கைப் பொருளை இவ்வாறு கூறவேண்டும் செயற்கைப் பொருளை இவ்வாறு கூறவேண்டும் என்னும் நெறிமுறைகள் உண்டு. ‘மண்திணிந்த நிலம்’ என அதன்செறிவு கூறப்படும். மக்கள் வழக்கிலும் நிலம் வலிது; நீர் தண்ணிது எனப்படும். ஆனால் செயற்கைப் பொருளுக்குக் கூறும் முறை வேறானது. ‘பயிர் செழுமையானது’ எனஆக்கச் சொல் தந்து கூறுதல் வேண்டும். ஆக்கச் சொல்லொடு காரணம் கூறலும் வழக்கு. “நீர் விட்டு களைவெட்டி உரமிட்டு வளர்த்ததால் பயிர் செழுமை யானது” என ஆக்கம் காரணம் பெற்று வருதல் உண்டு. ஆக்கம் காரணம் அறிவிக்காமல் அறியத்தக்கது எனின், காரணம் இல்லாமலும் ஆக்கம் வரும். உழவர் முதலோர் வழக்குகளில் ஊன்றிய ஊன்றுதலே இவ்விலக்கண ஆட்சி முறையாம் (502 - 505). ஒருவர் அவர், பலர்பால் சொல், ஆனால் ஒருவரை அவர் எனச் சிறப்பு வகையால் கூறல் உண்டு. அம்முறை இலக்கண முறை ஆகாது; மக்கள் வழக்கு முறையாகும். வேந்தனே எனினும் அவனைப் பாடிய புலவரை அவன் என்னாது அவர் எனல் உரையாசிரியர் மரபு. அதனால் ‘அவனை அவர் பாடியது’ என்றே நெறியாக வழங்கினர். “கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது” என்று சிறப்பு வகையாலே பாடல் தொகுத்தவர்கள் போற்றி உரைத்தனர். ஆர் இறுதி வரும் பெயரோடு சாதிப் பெயர் ஒட்டுதல் இல்லை என்பதை உணர்வார் அதனைப் போற்றத் தவறார். ஆனால் செய்யுளில் ஒரு புலவரை ஒரு புலவர் “பரணன் பாடினன்”, “கபிலன் பாடிய மையணி நெடுவரை” என ஒருமைப் பெயராகவே குறித்தனர். இவை எண்ணிப் போற்றத்தக்கவையாம். தாய்ப்பசு வரும் என்பதை, “இன்னே வருகுவர் தாயர்” என்கிறது முல்லைப் பாட்டு. இஃது அஃறிணையை உயர்திணை ஆக்கிக் கூறியது ஆகும். இவ் விலக்கணத்தைத் தொல்காப்பியர் சுட்டியுள்ளார் (510). யாது எவன் யாது என்றோ எவன் என்றோ வினாவின் வினாவப் பட்ட பொருள் முன்னர் அறியப்படாத பொருளாக இருத்தல் வேண்டும் என்பது மரபு. வரையறை இடக்கண் வலிக்கிறது; வலக்கண் வலிக்கிறது எனத் தனித் தனியே கூறல் உண்டு. ஒரு கண் வலிக்கிறது எனலும் வழக்கே. இரண்டு கண்களும் வலித்தால், இரண்டு கண்கள் வலிக்கின்றன எனல் மரபு ஆகாது. இரண்டு கண்களும் வலிக்கின்றன” என்பதே மரபு. ஏனெனின், கண்கள் இரண்டே ஆதலால் உம்மை இட்டுச் சொல்லல் வேண்டும். இவ்வளவே என வரம்புடையவற்றை உம்மையிட்டுக் கூறாமை பிழையாகும். ‘முத்தமிழ் வல்லார்’ என்னாமல் ‘முத்தமிழும் வல்லார்’ எனலே முறை. ஏனெனின் தமிழ் மூன்றே ஆகலின். இதனை, “இனைத்தென அறிந்த சினைமுதல் கிளவிக்கு வினைப்படு தொகையின் உம்மைவேண்டும்” என்கிறார் (516). எங்குமே இல்லாத பொருளைச் சொன்னாலும் அவ்வாறு உம்மை தந்தே சொல்ல வேண்டும் (517). எ-டு: “எந்த முயலுக்கும் கொம்பு இல்லை” அல்லது இல்லது துவரம் பயறு உள்ளதா என்று ஒரு வணிகரிடம் வினாவினால் உள்ளது எனின் உள்ளது என்பார். இல்லை எனின் இல்லை என்று கூறார். ஆனால், துவரம் பயறு போன்ற ஒரு பயறு வகையைச் சுட்டிக் கூறுவார். பாசிப்பயறு உள்ளது; மொச்சைப் பயறு உள்ளது என்பார். ‘இல்லை’ என்று சொல்லுதல் தம் வணிக மரபுக்கு ஆகாது என அவர் கொண்டுரைக்கும் உரை வழக்கு இன்றும் நடைமுறையில் காண்பதேயாம். இதனை, “எப்பொருள் ஆயினும் அல்லது இல்எனின் அப்பொருள் அல்லாப் பிறிதுபொருள் கூறல்” என்கிறார் தொல்காப்பியர் (618). இன்னும், ‘இருந்ததுதான்;’ ‘நாளை வரும்’ என்பதும் இவ்வழிப்பட் டதே. இல்லை என்பது இல்லை என்னும் மக்கள் வழக்கைச் சுட்டுவது இது. பெயர்; சுட்டு ஒளவையார் வந்தார்; அவர், அரண்மனையை அடைந்தார். இதில் ஒளவையார் என்பது இயற் பெயர். அவர், சுட்டுப்பெயர். இயற்பெயரைச் சொல்லிய பின்னரே சுட்டுப் பெயரைச் சொல்லுதல் வழக்கம். ஆனால், செய்யுளில் சுட்டுப் பெயரை முதற்கண் சொல்லிப் பிற்பட இயற்பெயர் கூறலும் உண்டு. பெயர்களுள் சிறப்புப் பெயர், இயற்பெயர் என இரண்டும் வருவதாயின் சிறப்புப் பெயரை முற்படக் கூறி, இயற்பெயரைப் பிற்படக் கூறவேண்டும் என்பதும் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையாகும். எ-டு: ‘தெய்வப் புலவர் திருவள்ளுவர்’ சிறப்புப் பெயரைப் பின்னே வைத்து, இயற்பெயரை முற்பட வைத்தல் ஆகாது என்பதை வலியுறுத்தவே இதனைக் கூறினாராம் (524). ஒரு சொல் பலபொருள் கால் என்பது பல பொருள் ஒரு சொல். உறுப்பு, சக்கரம், காற்று, கால்பங்கு, கால்வாய் முதலாய பலபொருள்களை யுடையது. இவ்வொரு சொல், இப் பல பொருளுக்கு இடமாகி வருதலை அறிய வகை என்ன? கால், கை, தலை என்னும் இடத்து உறுப்பு என்றும், ‘கால் பார் கோத்து’ என்னும் இடத்துச் சக்கரம் என்றும், புனல் அனல் கால் என எண்ணுமிடத்துக் காற்று என்றும், ஒன்றே கால் என்றும் இடத்துக் கால் பங்கு என்றும், கண்வாய் கால்வாய் என்னும் போது நீர் வருகால் என்றும் அறிய முடிகின்றது. இவ்வாறு அறியும் முறையை ஆசிரியர் கிளவியாக்கத்தில் சுட்டுகிறார். பொருள் மயக்கம் உண்டாகா வகையில் பொருள் காண வழிகாட்டுகிறார். “அவற்றுள், வினைவேறு படூஉம் பலபொருள் ஒருசொல் வேறுபடு வினையினும் இனத்தினும் சார்பினும் நேரத் தோன்றும் பொருள்தெரி நிலையே” என்பது அது (535). வேற்றுமை தொல்காப்பியர்க்கு முன்னர் வேற்றுமை ஏழாக எண்ணப் பட்டுள்ளது. முதல் வேற்றுமையாகிய எழுவாய் வேற்றுமை விளியாகும் நிலையையும் முதல் வேற்றுமையின் திரிபாகவே கொண்டு அதனைத் தனித்து எண்ணாமல் இருந்துளர். ஆனால் தொல்காப்பியர், “வேற்றுமை தாமே ஏழென மொழிப” என்று கூறி, “விளிகொள் வதன்கண் விளியோடு எட்டே” எனத் தனித்து எண்ணியுள்ளார் என்பது அவர்தம் நூற்பாக்களின் அமைதியால் விளக்கம் ஆகின்றது. வேற்றுமை எட்டு என எண்ணப்பட்ட வகை அது. பெயர், விளி வேற்றுமையை ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு என எண்ணாமல், “அவைதாம், பெயர் ஐ ஒடு கு இல் அது கண் விளி என்னும் ஈற்ற” என எண்ணியுள்ளார். ஐ என்றால் இரண்டாம் வேற்றுமை என்றும்... கு என்றால் நான்காம் வேற்றுமைஎன்றும்... கண் என்றால் ஏழாம் வேற்றுமை என்றும்... அறியச் செய்துள்ளார். ஒன்று இரண்டு என எண்ணிக்கையால் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உண்டு எனினும் பெயர், ஐ, ஒடு என உருபுகளைக் கொண்டு எண்ணும் வகையால் சிக்கல் ஏற்பட வாய்ப்பு இல்லை. ஏனெனில் பொருள் வேறுபடுத்தும் சொல்லே பெயராகி விடுகின்றதே. ஆதலால் இந்நெறி மேற்கொண்டனர் நம்முன்னோர். ஐ என்னும் உருபு வெளிப்பட்டோ மறைந்தோ வரக் கண்டதும் அதன் பொருள் புலப்பட்டு விடும். ஆதலால் உருபையும் அவ்வுருபு வழியாக ஏற்படும் பொருளையும் தெளிவாக அறிந்துகொள்ள வேற்றுமை உருபு-பொருள்களைப் படைத்துளர். முருகன் என்னும் பெயர் எழுவாய் நிலையில் நின்று உருபுகளை ஒட்டும்போது முருகனை, முருகனால், முருகனுக்கு, முருகனின், முருகனது, முருகன்கண், முருகா என வேறுபடுகின்றது. உருபு மாற மாறப் பொருளும் மாறுபடுதலால் வேற்றுமை என்றனர். “முருகன் வாழ்த்தினான்” “முருகனை வாழ்த்தினான்” என்பவற்றில் வாழ்த்தியவனும் வாழ்த்துப் பெற்றவனும் வேற்றுமையாகிவிட வில்லையா! இவ் வேறுபாட்டை உருபு ஆக்குதலால் வேற்றுமை உருபு எனப்பட்டது. உருபு என்பது வடிவம் அடையாளம். அரசுத்தாள் என்பதன் அடையாளம் உருபா. வினை, பண்பு, உவமை, உம்மை இன்னவற்றின் அடையாளச் சொற்களையும் உருபு என்றது இதனால்தான். மரம் நட்டினான்; மரத்தை நட்டினான் மரம் வெட்டினான் ; மரத்தை வெட்டினான் ஊரை அடைந்தான். ஊரை நீங்கினான் ‘காளையைப் போன்றான்’ இப்படியெல்லாம் வருவனகொண்டு இன்ன உருபு இன்ன பொருளில் வரும் எனக் கண்டு அம்மரபு போற்றுமாறு காத்தனர். ஆயினும் சில உருபு மயக்கங்களும் உண்டாயின. சிலவற்றை ஏற்கவும் சிலவற்றை மறுக்கவும் ஆயின. என் வீடு என்பது, எனதுவீடு என ஆறாம் வேற்றுமை யாகும். என் மகள் என்று வரும்போது எனது மகன் எனக் கூடாது. ஏன்? வீடு உடைமைப் பொருள். மகள் உடைமைப் பொருள் அன்று. உறவுப் பெயர்; உரிமைப்பெயர். எனக்கு மகள் என உறவுரிமை தருதலே முறையாகும் (578). இந்நாளில் அடிக்கப் படும் திருமண அழைப்பிதழ்களில் பல இவ்வேறுபாடு அறியாமல் அடிக்கப்படுவதைக் காணலாம். எவ்வளவோ நுண்ணிய அறிவால் கண்டு வைத்த கட்டுக் கோப்பான நம் மொழி அக்கறை இல்லாத மக்களால் அழிக்கப்படுவதற்கு இஃதொரு சான்றாம். உருவாக்கிக் காத்த உயர்ந்த அறிவாளர் வைத்துள்ள மொழிச் சுரங்கம் இலக்கணம் என்னும் உணர்வு மக்களுக்கு ஏற்பட்டால் இத்தகு குறைகள் ஏற்படா. வேற்றுமை வரிசை சொற்கள் பெயர் வினை இடை உரி என நான்காக எண்ணப்படினும் பெயர், வினை என்னும் இரண்டனுள் அடங்கும். அப்பெயரே முதல் வேற்றுமை; அப்பெயராகிய எழுவாய் வினைபுரிதல் விளக்கமே வாழ்வியலாகும். அவற்றை முறையே வைப்பு முறையால் வைத்த அருமையது இரண்டாம் வேற்றுமை முதலியனவாம். இவ்வருமையை முதற்கண் கண்டுரைத்தவர் உரையாசிரியர் தெய்வச்சிலையார். அவர் கூறுமாறு: “யாதானும் ஒருதொழிலும், செய்வான் உள்வழி யல்லது நிகழாமையின் அது செய்து முடிக்கும் கருத்தா முன் வைக்கப்பட்டான். அவன் ஒரு பொருளைச் செய்து முடிக்குங்கால் செய்யத் தகுவது இதுவெனக் குறிக்க வேண்டுதலின் செயப்படு பொருள் இரண்டாவது ஆயிற்று. அவ்வாறு அப்பொருளைச் செய்து முடிக்குங்கால் அதற்கு ஆம் கருவி தேடுதலின் அக்கருவி மூன்றாவதாயிற்று. அவ்வாறு செய்து முடித்த பொருளைத்தான் பயன்கோடலே அன்றிப் பிறர்க்கும் கொடுக்கும்ஆதலின் அதனை ஏற்றுநிற்பது நான்காவது ஆயிற்று. அவ்வாறு கொடுப்புழி அவன் கையினின்றும் அப்பொருள் நீங்கி நிற்பது ஐந்தாவதுஆயிற்று. அவ்வாறு நீங்கிய பொருளைத் தனது என்று கிழமை செய்தலின் அக்கிழமை ஆறாவது ஆயிற்று. ஈண்டுக் கூறப்பட்ட எல்லாவற்றிற்கும் இடமும் காலமும் பொதுவாகி நிற்றலின் அவை ஏழாவது ஆயின.” மணிமாலை போல வேற்றுமையமைவு விளக்கம் சிறத்தல் எண்ணி மகிழத் தக்கதாம். நூலாசிரியர் கண் கொண்டு உரையாசிரியர் நோக்கி யுரைக்கும் இன்னவை நூற்பெருமையை மேலும் பெருமை செய்வதாம். ஒடு “ஊராட்சித்தலைவரொடு உறுப்பினர்கள் கூடினர்” இது செய்தித் தாளில் வரும் செய்தி. உறுப்பினர்கள் பலர்; தலைவரோ ஒருவர். ஆயினும் தலைவரோடு என அவர்க்கு முதன்மை கொடுப்பது ஏன்? “ஒருவினை ஒடுச்சொல் உயர்பின் வழித்தே” என்பது தொல்காப்பிய நாள் தொட்ட நடைமுறை வழக்கம் (575). விளி மரபு அம்மை அன்னை தந்தை தங்கை அக்கை தம்பி முதலான முறைப்பெயர்கள் விளிக்கப்படும் பெயர்களாக வழக்கில் மாறாமல் உள்ளன. விளித்தல் அழைத்தல், கூப்பிடுதல். அம்மா, அம்மே, அம்மோ என்றெல்லாம் வழங்குதல் பழமையும், ‘அம்ம’ என்று அண்மை விளியாம் பழமையும் இவ்வியலால் நன்கு அறியப்படும். “அண்மைச் சொல்லே இயற்கையாகும்” என்றும் விளியேலாமை குறிப்பார் (612). இம் மரபு தமக்கு முற்றொட்டே வரும் வகையை உணர்த்துமாறே ‘விளிமரபு’ என்று பெயரிட்டு வழங்கினார் என்பதும் அறியத்தக்கது. கோமான், பெருமாள் என்பன ஈற்றயல் நெடிலாகியவை. இவை விளியாம்போது இயற்கையாய் அமையும் என்கிறார். பெருமானே, பெருமாளே, கோமானே எனவருதல் இருவகை வழக்கிலும் உண்டு. “உளவெனப் பட்ட எல்லாப் பெயரும் அளபிறந் தனவே விளிக்கும் காலைச் சேய்மையின் இசைக்கும் வழக்கத் தான” என விளியை விரிவாக்கிப் போற்றுகிறார் (637). குழந்தை தொட்டுப் பெருமுதுமை வரை மக்கள் வாழ்வில் மட்டுமா? இறையடியாரும் “அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே” என்று விளிக்கும் விளிமரபு மாறாமரபு அல்லவா! சொல்லும் பொருளும். பெயர் வினை இடை உரி என முறையே சொற்களை எண்ணும் ஆசிரியர் அவற்றின் இலக்கண அடிமூலம் கூறுவாராய், “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்கிறார். தமிழ்ச் சொற்களில் இடுகுறி என்பதொரு சொல் இல்லை என்பதைச் சொல்லி எல்லாச் சொற்களும் பொருள்புணர்ந்தனவே என உறுதி மொழிகிறார் (640). பெயர், வினை சொற்கள் இரண்டே என்பாராய், “சொல்எனப் படுப பெயரே வினைஎன்று ஆயிரண் டென்ப அறிந்திசி னோரே” என்பது (643) குடிக்கணக்கு எடுப்பார் தலைக் கட்டு எண்ணுவது போன்றதாம். தலைக்கட்டு வரி ஊர்ப்பொதுப் பணிக்கு ஊரவர் மதிப்பிட்டுப் பெறும் தொகையாகும். ஆள் எண்ணிக்கையில் இருந்து வரிதண்டலுக்கு விலக்கப்பட்ட முறை போல்வது அது. பொருளை உணர்த்துவது பெயர். பொருளின் பெயர்ச்சி (புடை பெயர்தல்) வினை. என இரண்டன் பொருந்துதலும் நோக்கத் தக்கது. இடைச் சொல்லும் உரிச் சொல்லும் சொல்லென ஆகாவோ எனின், “இடைச்சொல் கிளவியும் உரிச்சொல் கிளவியும் அவற்றுவழி மருங்கில் தோன்றும் என்ப” என்பார் (644). பெண்மகன் ஆண், பெண், பிள்ளை எனவும்; ஆண்பிள்ளை, பெண் பிள்ளை எனவும்; வழங்கல் உண்டு. ஆண்மகன்; பெண்மகள் என்பனவும் வழங்குவனவே. பெருமகள் பெருமாள் ஆகும்; பெருமகன் பெருமான் ஆவது போல. ‘பெண் பெருமாள்’ என்பார் வரலாற்றில் இடம் பெற்றுளார். தொல்காப்பியர், “பெண்மை அடுத்த மகன் என் கிளவி” என்பதைக் குறிக்கிறார். அதனால், ‘பெண்மகன்’ என வழங்கப் பெற்றமை அறியவரும். உரையாசிரியர் சேனாவரையர், “புறத்துப் போய் விளையாடும் பேதைப் பருவத்துப் பெண் மகளை மாறோக்கத் தார் இக்காலத்துப் பெண்மகன் என்று வழங்குப” என்கிறார். கல்வி அறிவாற்றலால் தக்கோர் அவையில் முந்தி யிருக்கச் செய்யும் கடமை யமைந்த பெற்றோரை நோக்க, மகற் காற்றல் என்பது இருபாலையும் தழுவியபேறும் உண்டெனக் கொள்ளத் தகும். இனி இந்நாளிலும் பெண்மகவை ‘வாடா’ ‘போடா’ என்பதும், ஆண்பெயராக்கி அழைப்பதுடன் ஆணுடையுடுத்து மகிழ்தலும் காணக் கூடியனவேயாம். குறிப்பாகப் பெண்பிள்ளை இல்லார் அவ்வாறு செல்வமாகப் போற்றி மகிழ்தல் அறியலாம். தொல்காப்பியர் நாளை எச்சமாக அதனை எண்ணலாம். பெயர்வகை உயர்திணைப் பெயர் அஃறிணைப் பெயர் என விரிவாகப் பட்டிய லிட்டுக் காட்டும் ஆசிரியர் நூற்பாக்களொடு சங்கத்தார் பெயர்களை ஒப்பிட்டு ஆய்ந்தால் மொழித் தூய்மை பேணும்வழி தானே புலப்படும். நிலப் பெயர், குடிப் பெயர், குழுவின்பெயர், வினைப் பெயர், உடைப்பெயர், பண்பு கொள் பெயர், முறைநிலைப் பெயர், சினை நிலைப் பெயர், திணை நிலைப் பெயர், ஆடியற்பெயர், எண்ணியற் பெயர் என்னும் இவை இடைக்கால பிற்கால வேந்தர் முதலோரால் கொண்டு போற்றப் படாமையால் இந்நாளில் முறை நிலைப் பெயர் (அம்மா, அப்பா, அண்ணா, அக்கை) தாமும் ஒழிந்துபடும் நிலைமை எண்ணத் தகும். சிறுநுண் நச்சுயிரியினால் பேருயிரியாம் மாந்தர் அழிந்து படுதல் ஆகாது என அறிவியலாளரும் அரசியலாளரும் எடுக்கும் நலத்துறை அக்கறையில் ஒரு சிறிதளவு தானும் மொழித்துறை, பண்பாட்டுத் துறையில் கருத்துச் செலுத்த வில்லையே என்னும் ஏக்கம் உண்டாக்கு வது தொல்காப்பியர் சுட்டிக் காட்டும் பெயர் வகைகள் ஆகும் (647-650). அவர்கள் அவன் அவள் அவர் அது அவை என்பன ஐம்பாற் பெயர்கள். இந்நாளில் ‘அவர்கள்’ எனப் பலர்பால் வழங்கப்படுகிறது. ‘ஆசிரியர் அவர்கள்’ எனச் சிறப்பொருமைப் பெயராகவும் வழங்கப்படுகிறது. ‘கள்’ என்பது அஃறிணைப் பன்மைப் பெயர் ஈறு. அது மக்கட் பெயரொடு ஆண்கள் பெண்கள் அவர்கள் என வருதல் ஆகாது. ஆடுகள் மாடுகள் மலைகள் எனவரும் என்பது பழைய மரபு. “கள்ளொடு சிவணும் அவ்வியற் பெயரே கொள்வழி யுடைய பல அறி சொற்கே” என்பது தொல்காப்பியம் (654). பலவின் பாலுக்குரிய ‘கள்’ பலர்பாலுக்கும் வருதல் சங்கத்தார் காலத்திலேயே தோற்றமுற்று வரவரப் பெருக்கமாகி விட்டது. அவர்கள் எனக் கள்ளீறு இல்லாமல் ஒருவரைச் சொன்னால் அவர் பார்வையே வேறாகிப் ‘பண்போடு பேசத் தெரியவில்லை’ எனப் பழிப்புக்கும் ஆளாகிவிடுதல் இந்நாளில் கண்கூடு. தாம், தான் தாம் என்பது பன்மைக்குரிய சொல் (669). எ-டு: அவர்தாம் கூறினார்; அவர் தம்முடைய பணிக்குச் சென்றார். தான் என்பது ஒருமைக்குரிய சொல் (670). எ-டு: அவன்தான் கூறினான்; அவன் தன்னுடைய பணிக்குச் சென்றான். எல்லாம் என்பது பன்மைச் சொல் (671). எ-டு: அவர் எல்லாம்; அவை எல்லாம். இப்படித் தெளிவாகத் தொல்காப்பியம் கூறியும் இந்நாளை இதழாசிரியர் நூலாசிரியர் தாமும் கண்டு கொள்வதில்லை. அவர் தன்னுடைய வேலையுண்டு தானுண்டு என்றிருப்பார் - என அச்சிட்ட செய்தி படிப்பார் அப்பிழையைக் கற்றுக் கொண்டு பரப்பாளரும் ஆகிவிடுகிறாரே! வினை வினை என்பதன் இலக்கணம் ‘காலத்தொடு தோன்றும்’ என்பது. அது ‘வேற்றுமை கொள்ளாது’ என்பதும் அதன் இலக்கண மே. இதனைச் சொல்லியே வினையியலைத் தொடங்குகிறார். மெய்யியல் வல்லாராகிய அவர், செயல் வழியாம் வினையைச் சொல்வதை அன்றித் ‘தலைவிதி’ என்னும் பொருளில் ஆளவில்லை. 49 நூற்பாக்கள் அதற்கென வகுத்தும் அவ்வாறு ஆளாமை தாம் கூற எடுத்துக் கொண்ட பொருளமைதியை விடுத்து வேறு வகையில் செல்லார் என்பது நாட்டும். ‘செய்வினை’ செய்தல்; அதனை நீக்க ‘வினைக் கழிவு’ செய்தல் அறிவியல் பெருகிவருவது போலப் பெருகி வருதலை நினைக்க ஏதோ மூளைச் சலவைக்கு ஆட்பட்ட மக்கள் போலத் தோன்றுதல்தானே உண்மை. விரைவு வாரான் ஒருவனும் வருவான் ஒருவனும் விரைவுக் குறிப்பில் வந்தேன் வந்தேன் எனல் உண்டே! உண்ணப் போவான் ஒருவன் உண்டேன் எனலும் உண்டே! இது குற்ற மல்லவோ எனின், “வாராக் காலத்தும் நிகழும் காலத்தும் ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் விரைந்த பொருள என்மனார் புலவர்” என அமைதி காட்டுகிறார் ஆசிரியர் (726). நிகழ் காலம் மலை நிற்கும் எனவும், கதிர் இயங்கும் எனவும் வழங்குகிறோம். மலை நின்றதும், நிற்கின்றதும், நிற்பதும் ஆகிய முக்காலத்திற்கும் உரியதாக இருந்தும் நிகழும் காலத்துச் சொல்லுதல் வழு இல்லையா? கதிர் இயங்கியது; இயங்குகிறது; இயங்கும்; இவ்வாறு இருந்தும், நிகழ்காலத்தில் சொல்லுதல் வழுத்தானே! ஆசிரியர் தெளிவிக்கிறார்: “முந்நிலைக் காலமும் தோன்றும் இயற்கை எம்முறைச் சொல்லும் நிகழும் காலத்து மெய்ந்நிலைப் பொதுச்சொல் கிளத்தல் வேண்டும்” என்பது அவர்காட்டும் அமைதி (725). முக்காலத்திற்கும் ஒத்தியலும் அவற்றைச் ‘செய்யும்’ என்னும் வாய்பாட்டால் சொல்ல வேண்டும் என வழிகாட்டுகிறார். தெளிவு இச் சுழலுள் போவான் செத்தான் எனின் வழுவாகும் அல்லவோ! அப்படிச் சொல்லுதல் வழக்கில் உண்டே எனின், நிகழப் போவதை உறுதியாகக் கொண்டு நிகழ்ந்ததாகக் கூறியது அது என்கிறார். “வாராக் காலத்து வினைச்சொற் கிளவி இறப்பினும் நிகழ்வினும் சிறப்பத் தோன்றும் இயற்கையும் தெளிவும் கிளக்கும் காலை” என்பது நூற்பா (730). இடைச் சொல் ‘நான்’ என்பது தன்மைப் பெயர். ‘நீ’ என்பது முன்னிலைப் பெயர். ‘நான் நீ’ என்று நின்றால் பொருள் விளக்கம் பெறுவது இல்லை. “நானும் நீயும்” என்னும் போது பொருள் விளக்கம் பெற வாய்க்கின்றது; ‘செல்வோம்’ எனச் சேர்த்தால் பொருள் முடிபு கிட்டுகின்றது. சொற்கள் பெயர், வினை எனப் பகுக்கப் பட்டாலும், இத்தகு (உம்) இணைப்புகளும் வேண்டியுள. இவ்விணைப்புச் சொற்களே இடைச் சொற்கள் எனப்படுகின்றன. இடைச் சொல் என்பதால் சொல்லுக்கு இடையே மட்டும் வரும் சொல் என்பதாகாது. சொல்லுக்கு முன்னும் பின்னும் இடையும் வேண்டும் இடத்தால் வருவது இடைச் சொல் எனப்பட்டது என்க. “இடைச் சொல் தான் சார்ந்த பெயரின் பொருளையும் வினையின் பொருளையும் தழுவி நிற்றல் அன்றித் தனித்து நடக்கும் தன்மையது அன்று” என்று ஆசிரியர் கூறுகிறார் (734). எலும்புகளை இணைக்கவும் இயங்க வைக்கவும் இணைப்பு மூட்டுகள் உடலில் இடம் பெற்றிருப்பன போலச் சொற்பொருள் விளக்கத் திற்கு இடைச்சொற்கள் உதவுகின்றன எனல் தகும். “யான் அரசன்; யான் கள்வன்” இடைச் சொல் பெறா நிலையில் இத் தொடர்கள் தரும் பொருளுக்கும், “யானோ அரசன்; யானே கள்வன்” என இடைச் சொல் இணைதலால் வரும் தொடர்கள் தரும் பொருளுக்கும் உள்ள வேறுபாடு பளிச்சிட்டுத் தோன்றவில்லையா? இடைச் சொற்கள் சொல்லுறுப்புகளே எனினும் சொல்லுக்கும் பொருளுக்கும்; தொடர்புப் பாலமாக இருப்பவை அவையே. இனி, இடைச் சொல் தானும் பொருளின்றி வாரா என்பதன் விளக்கமே, “கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவியென்று அம்மூன் றென்ப மன்னைச் சொல்லே” என வருவது முதலான நூற்பாக்கள். உரிச்சொல் இயற்றப்படும் செய்யுள் சுவையும் தெளிவும் உறுதியும் அழகும் கொண்டு விளங்குமாறு இதற்கு இதுவே உரிய சொல் எனத் தேர்ந்து வைக்கப்படும் சொல் உரிச் சொல்லாகும். பெயர் வினை இடை என்னும் முச்சொற்களைக் கொண்டே எடுத்த பொருளைக் கூறிவிட முடியும். ஆனால் உரிச் சொல் தரும் சுவை முதலிய நலங்கள் ஏற்பட்டு ஆழ்ந்து எண்ணவும் மீள மீளக் கற்கவும் வாய்க்காமல் அமையும். அவையறிந்து பேசுவார் தம்மைச், சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர், சொல்லின் நடையறிந்த நன்மையவர், சொல்லின் வகை யறிவார் (711 - 713) என்று வள்ளுவர் தொகுத்துக் கூறும் இலக்கணம் அமைந்த சொல் உரிச் சொல் ஆகும். உரிச்சொல் உணர்வில் நின்று சுவை யாக்குதல், உரிப்பொருள் ஒப்பது எனப் பெயரீடு கொண்டு உணரலாம். நிகண்டு படைப்பாளி கொண்ட பொருள் நயம் படிப்பாளியும் கொள்ளல் வேண்டும் எனின் புரிதல் வேண்டும். காட்சிப் பொருள் போலக் குருத்துப் பொருளை அறிதலின் அருமை நோக்கியே உரிச்சொல் விளக்கமாக நிகண்டு நூல்கள் தோற்றமுற்றன. அந்நிகண்டு நூல்களில் ஒன்றன் பெயர் உரிச்சொல் நிகண்டு என்பது. வழக்காற்றில் நிகழ்கின்றவற்றைக் கொண்டு திரட்டி வைக்கப்பட்ட சொல்லடைவே நிகண்டு என்னும் பொருட் (காரணப்) பெயராகும். உரிச்சொல் இயல் இத்தகு செய்யுட் சொல்லைப் பொருள் உணர்ந்து ஓதிச் சுவைக்கும் வகையில் வழிகாட்டியவர் தொல்காப்பியர். அவர் வகுத்த உரிச் சொல் இயல் அதன் விளக்கமாகும். வேண்டும் வேண்டும் சொல்களை உருவாக்கிக் கொள்ள அடிச் சொல்லாகத் திகழும் அருமை உரிச் சொல்லுக்கு உண்டு. தொல்காப்பியர், ‘உறு தவ நனி’ என்னும் உரிச் சொற்களைக் கூறி, மூன்று என்னும் எண் தந்து, மிகுதி என்னும் பொருள் தருவன அவை என்கிறார். “சால உறு தவ நனி கூர் கழிமிகல்” (நன். 455) என ஆறு எண்ணுகிறார் நன்னூலார். உரிச் சொற்கள் எல்லாவற்றையும் எடுத்து ஓத வேண்டுவது இல்லை; அவற்றுள் பொருள் வெளிப்பாடு உடைய சொல் பொருள் வெளிப் பாடு அரிய சொல் என்பவற்றுள் பின்னதையே கூறினேம் என்கிறார். அவ்வாறானால் வெளிப்பட வாராச் சொல்லென அவர் எண்ணுவன வற்றையே கூறுகிறார் என்பது தெளிவாகும். மிகுதி மிகுதிப் பொருள் தரும் உறு என்னும் உரிச்சொல் ‘உறுபசி’ என வள்ளுவத்தில் ஆளப்படுகிறது; ‘உறுதுயர்’ என்பதும் அது. உறு என்பது உறுதல், உறுதி, உற்றார், உறவு, உறக்கம், உறிஞ்சுதல் உறுவலி முதலிய சொல்லாக்க அடிச் சொல்லாக அமைந்திருத்தலும் நெருக்கம் கட்டொழுங்கு மிகுதி என்னும் பொருள்களைச் சார்ந்தே நடை யிடுதலும் அறியத் தக்கதாம். மிகுதிப் பொருள் தரும் ‘தவ’ என்பது, தவப்பிஞ்சு தவச் சிறிது என மக்கள் வழக்கிலும் இடம் பெற்றுள்ளது. இது, தவம், தவசம், தவசி, தவசு எனச் சொல்லாக்கம் பெற்று வழங்குதலும் காணலாம். நல், நன், நன்று, நனவு, நனி, நனை என்பன வாழ்வியல் வளச் சொற்களேயாம். மழ, குழ மழலை, மதலை, குழந்தை, குதலை என்னும் சொற்களை எண்ணிய அளவில் இளமை மின்னலிடல் எவர்க்கும் இயற்கை. தொல்காப்பியர், “மழவும் குழவும் இளமைப் பொருள” என்கிறார். உள்ளங்கள் ஒன்றிப் போகிய வகையால் உண்டாகிய பொருள் அல்லவோ இது. அலமரல் அலமரல் என்பது தொல்காப்பியர் நாளில் வெளிப்படப் பொருள் வாராச் சொல்லாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இந்நாளில் ‘அல மருதல்’ மக்கள் வழக்குச் சொல்லாகி விட்டது. அலமருதல் சுழற்சிப் பொருளிலேயே வழங்குகின்றது. தெருமரல் என்பதும் அப்பொருளதே. சீர்த்தி சீர் சீர்மை சீர்த்தி சீரை என்பன வெல்லாம் இலக்கிய வழக்கில் உள்ளவை. முன்னிரண்டு சொற்களும் மக்கள் வழக்கிலும் உள்ளவை. சீர்த்தி என்ன ஆயது? ‘கீர்த்தி’ ஆகிவிட்டது. வேற்றுச் சொல் எனவும் கொள்ளப் பட்டது. சீரை ‘சீலை’யாகிவிட்டது. சீரை என்னும் துலைக்கோல் பொருள் இலக்கிய அளவில் நின்று விட்டது. குரு ‘குரு’ என்பது ஒளி என்னும் பொருள் தரும் உரிச்சொல். உள்ளொளி பெருக்குவான் ‘குரு’. குருந்து, குருந்தம், குருமணி, குருதி என்பன ஒளிப்பொருள் - நிறப் பொருள் - தருவன. குருத்து என்பது மக்கள் வழக்குச் சொல். ஒளியுடன் வெளிப்படுவது அது. குருத்தோலையும் குருத்திலையும் மிக வெளிறித் தோன்றுதல் ‘குரு’ வின் பொருள் காட்டுவன. குருந்தத்துக் குருமணி நினைவில் எழலாமே! அதிர்வு “அதிர்வும் விதிர்வும் நடுக்கம் செய்யும்” என்பது அப்படியே நடையில் வழங்கும் உரிச்சொற்களாக உள்ளனவே. “அதிர்ந்து போனார்” “விதிர் விதிர்த்துப் போனேன்” வழக்கிலும், செய்தித் தாள்களிலும் இடம் பெறும் சொற்கள் தாமே இவை. தொல்காப்பியர் நாளில் அருஞ் சொற்களாக இருந்ததால்தானே விளக்கம் தந்தார். கம்பலை கண்ணீரும் கம்பலையும் என்பதோர் இணைமொழி. கண்ணீர் விட்டு அழுவதே அது. அழுகையால் உண்டாகும் ஒலி கம்பலை. “கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்றிவை நான்கும் அரவப் பொருள” என்கிறார் தொல்காப்பியர். அரவம் - ஒலி; நீ இருக்கும் அரவமே இல்லையே என்பது வழக்கில் உள்ளது. பாம்புக்கு அரவம் எனப் பெயர் வந்தமை இதனால் அறியலாம். ‘கமலை’ கம்பலை என்பதன் தொகுப்பே. அழுங்கல் அழுகையால் அறியலாம். கலித்தல் துள்ளல்; அலை ஒலியால் கலித்தல் விளங்கும். ‘சும்’ என்பது மூச்சின் ஒலிக்குறிப்பு. புலம்பு ஆற்றுவார் இல்லாமல் புலம்புதல் உண்டு. தானே பேசுதலை ‘ஏன் புலம்புகிறாய்?’ என்பதும் வழக்கே. “புலம்பே தனிமை” என்பது தொல்காப்பியம். புலம்பல் உரிப்பொருளுக்கு உரிய நெய்தல் நிலப் பெயர் ‘புலம்பு’ எனப்படும். அதன் தலைவன் புலம்பன்! வெம்மை கோடைக் காலத்தில் தமிழகத்து வாழும் வளமைமிக்கார் கோடைக் கானைலை நாடி உறைவர். கோடைமலை சங்கச் சான்றோர் பாடு புகழ் பெற்றது. கோடைக்கு அதனை நாடும் இக் காலநிலைபோல், தொல்காப்பியர் காலத்தே வெப்பத்தைத் தேடி உறையும் குளுமை மிக்க நிலையும் இருந்திருக்கும் போலும் அதனால், “வெம்மை வேண்டல்” என ஓர் உரிச் சொல்லையும் பொருளையும் சுட்டுகிறார். நாம் நம் அன்பர்களைக் குளுமையாக வரவேற்க; குளிர்நாட்டார் ‘வெம்மையாக வரவேற்றல்’ காண்கிறோமே! பேம், நாம் குழந்தைகள் அழுமானால் அச்சம் காட்டி அடக்குதல் இன்றும் சிற்றூர் வழக்கம். அவ்வச்சக் குறிப்பு ‘பே பே’ என ஒலி எழுப்புதலும் தொண்டையைத் தட்டுதலும் ஆகும். ‘பே’ (பேம்) என்னும் குறிப்பு அச்சப் பொருள் தருதல் தொல் காப்பியர் நாளிலேயும் இருந்தது. ‘பேய்’ என்பதன் மூலம் இப் பேம் ஆகும். ‘ஓர் ஆளும் கருப்புடையும் பேய்’ என்பார் பாவேந்தர். ‘நா’ (நாம்) என்பதும் அச்சப் பொருள் தருதல் ‘நாமநீர்’ என்னும் கடலலைப்பால் புலப்படும். நாயும் அச்சப் பொருளாதல் அறிந்தது. உரும் உரும் அச்சமாதல் விலங்குகள் உருமுதலால் விளங்கும். உரும் இடியும் ஆகும். உரும் வழியே உண்டாகிய ‘உருமி’க் கொட்டு, கேட்ட அளவால் அசைப்பது தெளிவு. இவற்றைத் தொகுத்து “பேம் நாம் உரும் என வரூஉம் கிளவி ஆமுறை மூன்றும் அச்சப் பொருள” என்றார். ‘உரு’ என்பதை மட்டும் தனியே எடுத்து “உரு உட்கு (அச்சம்) ஆகும்” என்றும் கூறினார். கண்டறியாத் தோற்றங்களும் விலங்குகளும் பாம்பு முதலியனவும் அஞ்சச் செய்தலை எண்ணி ‘உரு’ எனத் தனித்துக் கூறினார். அவர்தம் விழிப்புணர்வு வெளிப்பாடு இன்னவையாம். ஆய்தல் ‘ஆய்தம்’ என்னும் எழுத்து முப்பாற்புள்ளி வடிவினது; ஆய்தப் புள்ளி என்பதும் அது; அஃகேனம் என்பதும் அதற்கொரு பெயர்; என்பவற்றைக் கூறும் ஆசிரியர், ஆய்தம் என்பதன் பொருள் ‘நுணுக்கம்’ என்கிறார். “ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்” என்பது அது. ‘ஆய்வுப் பட்டறை’ எனப் பெயரிட்டு ஆய்வாளர் பலர் கூடித் திட்ட மிட்டுச் செய்து வரும் தொடர் நிகழ்வாகிய அதன் பெயர் தானும் பிழையாயது என்பது அறியாமலே ஆய்வுகள் நிகழ்கின்றன. ‘பட்டடை’ என்னும் சொல் தொழிலகப் பெயர். ‘பட்டடை’ என்பது “சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு” என வள்ளுவரால் ஆளப்பட்ட சொல் (821) ஆய்தல் என்பது நாட்டுப்புறப் பெருவழக்குச் சொல். கீரை ஆய்தல், கொத்தவரை ஆய்தல் என்று கூறுதல் இந்நாள் வரை மாறியதில்லை. முற்றல் அழுகல் பூச்சி முதலியவை போக்கித் தக்கவற்றைத் தேர்ந்து கொள்ளுதலே ஆய்தல் பொருளாக அமைகின்றது. ஆய்தலினும் நுணுக்க ஆய்வு ‘ஆராய்தல்’ (ஆர் ஆய்தல்). ஆய்வும், ஆராய்வும் கொள்ளுவ கொண்டு தள்ளுவ தள்ளும் நுண்ணிய நோக்குடைய சொற்கள். ஒன்றின் ஒன்று நுணுகியவையாக, ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் என்பவற்றைச் சுட்டும் இவ்வுரிச் சொல் விளக்கம் அரிய வாழ்வியல் விளக்கமாம். ஓயா உழைப்பாளி, ஓயாப் போராளி, ஓயாச் சிந்தனையாளர், ஓயாப் பொருளீட்டாளர் ஓய்வு கொள்ளும் நிலை என்பது யாது? தம் ஓயாப் பாட்டின் பயன்பாட்டை மீள் பார்வை பார்க்க வேண்டும் அல்லவா! அவ்வாய்வு தானே ஓய்வின்பயன்! ஓய்வு என்பது சிந்தித்தலும் அற்றுப் போன நிலை அன்றே! அச் சும்மா இருக்கும் நிலை கோடியர்க்கு ஒருவர் இருவர் அல்லரோ தேடிக் கண்டு கொள்வது! அச் ‘சும்மா’ அரும் பொருளுள் அரும் பொருள். ஓய்வு கொள்வார்க் கெல்லாம் பொதுப் பொருளாகக் கைவர வல்லது ஆய்தலேயாம். ஆதலால் ஓய்தலில் நுண்ணியது ஆய்தல். ஆய்ந்து கண்ட பொருளை அடக்கிவைத்துக் கொள்வதால் ஆய்ந்து கண்ட பயன் தான் என்ன? அதனால் ஆய்ந்து கண்ட பயன் கருத்துகளைப் பலருக்கும் பல விடத்தும் சென்று கூறுதல் நிழத்தல் ஆகும். குடை நிழற்றல் என்பது நாடு தழுவுதல் போல் இந்நிழத்தல் ஆய்தலினும் நுண்மை யுடையதாம். இருந்தும் நடந்தும் நுவலும் நிலையும் இயலாமையாயின் அந்நிலையிலும் தாம் கண்ட அரும்பயன் பொருள் - நுவன்று நுவன்று வந்த பொருள் - பின் வருவோர்க்குக் கிட்டும் வகையால் நுவன்றதை நூலாக்கி (நுவல் - நூல்) வைத்தல் வேண்டும். அக்கொடை உயர்கொடை என்பதை ஒளவையார் “தாதா கோடிக்கு ஒருவர்” என்று பாராட்டுகிறார். ஓய்தல் முதல் சாய்த்தல் (வடித்தல்) வரைப்பட்டவை ஒன்றில் ஒன்று நுண்ணியவை ஆதலின் “உள்ளதன் நுணுக்கம்” என்றார். எவ்வொரு கடப்பாட்டில் ஊன்றியவரும் தம் ஊன்றுதல் கடனாக உயர்கொடை புரியலாம் என்னும் அரிய வழிகாட்டுதல், உரிச்சொல் வழியாகத் தரப்பெற்றதாம். வை வையே கூர்மை என்பதோர் உரிச்சொல் விளக்கம் (870). வை என்பதற்குக் கூர்மைப் பொருள் எப்படி வாய்த்தது? ‘வை’ என்னும் நெல்லைப் பார்த்தால் - நெல் நுனியாம் மூக்கைப் பார்த்தால் கூர்மை நன்கு புலப்படும். மழிதகடு போலும் கூர்மையுடையது நெல் மூக்காகும். வெகுளி “கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள” (855) என்பது வண்ணத்தை விலக்கி எண்ணத்தை வெளிப்படுத்தும் உரிச் சொல் விளக்கம். சினங் கொண்டார் கண்நிறம் என்ன? அவர் முகத்தின் நிறம் என்ன? - இவற்றை நோக்கின் வெகுண்டாரின் முகமும் கண்ணும் காட்டிவிடும். “முகத்தின் முதுக்குறைந்த துண்டோ உவப்பினும் காயினும் தான்முந் துறும்” என்பது குறள். கறுப்பும் சிவப்பும் நிறம் குறித்து வாராவோ எனின், “நிறத்துரு உணர்த்தற்கும் உரிய என்ப” என்று கூறுவார் (856). எறுழ் காளையை அடக்க விரும்புவார் அதன் கொம்பை வளைத்துத் திமிலைப் பற்றித் தாவி ஏறி அடக்குதல் வழக்கம். திமிலுக்கு ‘எறுழ்’ என்பது பெயர். எறுழ் என்பதன் பொருள் வலிமை என்பதாம். எறுழ் என்னும் உரியொடு எறும்பு, எறும்பி (யானை) என்பவற்றை எண்ணினால் வலிமை விளக்கமாம். “எறுழ் வலியாகும்” என்பது நூற்பா (871). கலியாணர் உண்ணாட்டு வாணிகரன்றி அயல் நாட்டு வாணிகராகப் பெரும் பொருள் ஈண்டியவர் கலியாணர் எனப்பட்டனர். கலி=மிகுதி; யாணர் = வருவாயினர். யாணர் என்பதன் பொருள் புதிதுபடல் (புதிய வளம் பெறுதல்) என்பார் தொல்காப்பியர் (862) யாணர் என்பதை யன்றி ‘யாண்’ என்னும் உரிச் சொல்லைக் காட்டி, “யாணுக் கவினாம்” என்றும் கூறுவார் (864). புதுவருவாயும் கவினும் பெருக்குவதாய திருமணம் ‘கலியாணம்’ எனவும் வழங்கப்படுதல் விளக்கமாக வில்லையா? வேற்றுச் சொல்லென மயங்காதீர் என்கிறது உரிச் சொற் பொருள். உணர்தல் உள்ளது உள்ளவாறு உணரும் உணர்ச்சி எவர்க்கு உண்டு என்று வினாவின், “உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே” என்கிறார் (876). சொல்லும் பொருளும் சொல்வோன் குறிப்பும் வெளிப்படப் புலப்பட்டு விடுமா? என வினாவின், உணர்வோர்க்கும் உடனே வெளிப்படப் புலப்படுதல் அரிது. ஆனால் அவரே ஆழ்ந்து நோக்கின் பொருள் புலப்படுதல் இல்லாமல் போகாது என்பதை, “மொழிப்பொருட் காரணம் விழிப்பத்தோன்றா” என்பதனால் தெளிவுபடுத்துகிறார் (877). இது முன்னரும் சுட்டப்பட்டது. எச்சம் ஒரு தொகையை ஒருவரிடம் தந்து செலவு கணக்குக் கேட்பார் எச்சம் எவ்வளவு என வினாவுவார். எச்சமாவது எஞ்சியிருப்பது. ஒருவர் தம் வாழ்வின்பின் வைப்பாக வைத்துச் செல்லுவன வெல்லாம் எச்சம் என்பதால், “தக்கார் தகவிலர் என்ப தவரவர் எச்சத்தால் காணப் படும்” என்றார் பொய்யாமொழியார். எச்சம் என்பதற்கு மக்கள் எனச் சொல்லை மாற்றினாரும் பொருள் கண்டாரும் உண்டு. ஆனால் தொல்காப்பிய எச்ச இயல் எஞ்சியது என்னும் தெளிபொருள் தந்து விளக்குகிறது. இவ்வதிகாரத்தில் சொல்லியவைபோகச் சொல்ல வேண்டி நிற்கும் எச்சத்தைச் சொல்வதால் எச்சவியல் எனப்பட்டது. எச்சம் மக்கள் வாழ்வில் மாறாது வழங்கும் விளக்க மிக்க சொல்லாம். நால்வகைச் சொற்கள் தமிழ்கூறும் நல்லுலகச் செய்யுள் வழக்கிலே பயிலும் சொற்களை இயற்சொல், திரிசொல், திசைச் சொல், வடசொல் என நான்காக எண்ணி இயலைத் தொடங்குகிறார். தமிழுலகத்து வழங்கும் வழுவிலாச் சொல் இயற்சொல் என்றும், ஒரு பொருள் குறித்த பல சொல்லும் பலபொருள் குறித்த ஒரு சொல்லுமாகிய தமிழ்ச் சொல் திரிசொல் என்றும், தமிழ் வழங்கும் நிலப் பரப்பின் அப்பாலாய் வழங்கிய சொல் திசைச் சொல் என்றும், வடக்கிருந்து வந்து வழங்கிய வேற்றுச் சொல் வடசொல் என்றும் இலக்கணம் கூறினார். தொல்காப்பியர் காலத்திற்கு முற்படவே தமிழர் கடல் வணிகம் செய்தமையும் அயல் வணிகர் இவண் வந்து சென்றமையும் உண்டாகிச் சொற்கலப்பு நேர வாய்ப்பிருந்தும் அச் சொற்களைச் செய்யுட் சொல்லாக ஏற்றார் அல்லர். வட சொல்லையும் தமிழியல்புக்கு ஏற்ப அமைத்துக் கொண்டு தமிழ்நெறிச் சொல்லாக வருவதையே வற்புறுத்தி ஏற்றுக் கொண்டார். திசைச் சொல்லும் திரிசொல்லும் தமிழியற் சொல் போலவே தமிழ் எழுத்து வடிவு கொண்டிருந்தமையால் அவ்வெழுத்தை விலக்கிச் சொல்லாட்சி செய்யுமாறு சொல்ல அவர்க்கு நேரவில்லை. ஆதலால் வடசொல் ஒன்று மட்டுமே தமிழுக்கு வேற்றுச் சொல்லாகவும் வேற்றெழுத்துச் சொல்லாகவும் தொல்காப்பியர் நாளில் இருந்தமை விளங்கும். அச்சொல்லை அப்படியே கொள்ளாமல் தமிழ் மரபுக்குத் தகுமாறு கொள்ளவேண்டும் என்னும் உறுதியால், “வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே” (884) என நெறிகாட்டினார். இவ்வாணை எந்த அயல் மொழிக்கும் உரிய பொது ஆணையெனப் போற்றுதல் மொழிக்காப்பாளர் கட்டாயக் கடமையாம். ஓர் அயற்சொல்லைக் கொள்ள வேண்டும் நிலை எப்படி உண்டாகும்? ஓர் அயற் சொல்லுக்கு ஒத்த அல்லது ஏற்ற சொல், அதனைக் கொள்ள விரும்புவார் மொழியில் இல்லாமல் இருக்க வேண்டும். சொல் இல்லை எனினும், ஏற்ற சொல்லை ஆக்கிக் கொள்ள முடியாத அரிய சொல்லாக அஃது இருத்தல் வேண்டும். அச்சொல்லை எடுத்துக் கொள்ளவில்லை என்றால், அப்பொருளை விளக்கிக் கூற முடியாத இடர் எடுத்துக் கொள்வார் மொழியில் இருத்தல் வேண்டும். இத்தகு நிலைகளிலேயே அயற் செல்லைத் தம் மொழியியற் கேற்பக் கொள்ள வேண்டும் என்பனவே இந் நூற்பாவின் கருத்துகளாம். வளமான செல்வமும் வாய்ப்பான வாழ்வும் உடையான் கடன் கொண்டு வாழ விரும்பான். கடன் கொள்ளல் இழிவெனவும் கொள்வான். அந் நிலையில், கடனாளன் என்னும் பெயர் கொள்வதற்காகக் கடன் கொள்ளுதலை அருவறுப் பாகவும் கொள்வான். அப் பொருட்கடன் போன்றதே வேண்டாச் சொற்கடனுமாம். பொருட்கடன் வேண்டாது பெற்றுக் கொண்டே போனால், உள்ளவை உரியவை அனைத்தும் அக் கடனாலேயே இழந்து எல்லாமும் இல்லாமல் ஒழிந்து போவான். இந்நிலையை எண்ணுவார் வேண்டாச் சொற்கடனைக் கொள்ளார். ஒரு சொல்லைக் கட்டாயம் எடுத்தாகவேண்டும் நிலை இருந் தாலும், மகப்பேறு வாயாதவர் ஒரு குழந்தையை மகவாகக் கொள்ளும் போது தம் குடும்பத்துக் குழந்தை என்பதை முற்றிலும் காக்கும் வகையால், அக் குழந்தையின் முன்னைத் தொடர்பை விலக்கித் தம் குடும்பத்திற்குத் தகுபெயர் சூட்டித் தம் குடிமை உறுப்பாகவே வளர்த்து வருதல் போல் அயற் சொல்லைத் தம்மொழிக்குத்தகக் கொண்டு ஆளவேண்டும் இதனைக் கூறுவதே, “எழுத்து ஒரீஇ, எழுத் தொடு புணர்ந்த சொல்லாகும்மே” என்னும் ஆணையாம். இவ்வாணையை மொழிக் காவலர் காலம் காலமாகப் போற்றினர். ஆனால் நாட்டுக் காவலர் போற்றத் தவறினர். அயன்மொழியார் வழியில் சாய்ந்தனர். மொழிக் காவலும் நாட்டுக் காவலும் ஒப்பப் போற்றிய மன்னர் காலத்தில் அயலெழுத்துப் புகவில்லை. அவர்கள் நம்பிக்கைக்கு இடமான வட மொழியார், படிப்படியே ஊர்கள் பெயர்கள் முதலியவற்றை மாற்றி வழங்க இடந்தந்தனர். மெய்க் கீர்த்தியில் மிக இடந் தந்தனர். அயன் மொழி வழிபாடு சடங்கு என்பவற்றை ஏற்றனர். அதனால் பொது மக்கள் வாழ்விலும் இந் நிலை புகுந்தது. கட்டிக் காத்த மொழிக் காவலர்களும், அயற் சொற்களேயன்றி அயலெழுத்துகளும் கொள்ளத் தலைப் பட்டனர். பின்னே வந்த அயன் மொழியாகிய ஆங்கிலம் பிரெஞ்சு போர்த்துக்கேசியம் உருது இந்தி ஆகிய மொழிச் சொற்களும் புகுந்து மொழியழிப்புப் பணியை முழு வீச்சாக செய்தன. தமிழால் வாழ்வாரும் இதற்குப் பங்காளர் ஆயினர். “தொல்காப்பிய ஆணை மீறிய இக்குற்றம் காட்டுத்தீயாகப் பரவி இந்நாளில் மொழியை அழிக்கின்றது” என்பதை இன்று உணர்ந்தாலும் பயனுண்டு. இல்லையேல் அயலார் கணக்குப்படி தமிழும் விரைவில் ‘இருந்த மொழி’ என்னும் நிலையை அடைதல் ஆகவும் கூடும். “தொல்காப்பியப் புலவோர் தோன்ற விரித்துரைத்தார்” எனச் சான்றோர் ஒருவர் பெருமிதம் கொண்டார்! தோன்ற விரித்துரைத்தாலும் போற்றிக் கொள்வார் இல்லாக்கால் என்ன பயனாம்? உரைநடைக்கு இல்லாத சில இடர்கள் செய்யுள் நடைக்கு உண்டு. அதற்கென அமையும் கட்டொழுங்குகள் சில; சுவை, நயம், ஒலி, பொருள் என்பவை கருதி வழங்கு சொற்கள் சற்றே மாற்றமாய் அமைத்துப் போற்றுதற்கு இடனாகும். அதனால் சில சொற்களில் மெல்லெழுத்து வல்லெழுத்தாகவும், வல்லெழுத்து மெல்லெழுத்தாகவும், சில எழுத்துகளை விரிக்கவும், சில எழுத்துகளைத் தொகுக்கவும், சில எழுத்துகளை நீட்டவும், சில எழுத்துகளைக் குறுக்கவும் ஆகும். ஆனால் இம்மாற்றங்களால் சொல்லின் பொருள் மாற்றமாவது இல்லை என்றும் செய்யுள் நயம் மிகும் என்றும் அறிய வேண்டும் என்று இலக்கியக் கல்விக்கு நெறிகாட்டுகிறார் (886). பாடலுக்குப் பொருள்கண்டு சுவைக்கத் தக்க வகையைப் ‘பொருள்கோள்’ எனக் கூறி அவ் விளக்கமும் தருகிறார் (887). இவை பயில்வார்க்குப் பயின்று சிறந்தார் காட்டும் வழியாகத் திகழ்கின்றன. ஆக்கிவைத்த உணவை உண்ண அறிந்தான் ஆக்கும் வகையையும் அறிந்துகொள்ளல் இரட்டை நலமாதல் போல் நலம் செய்வன இத்தகு துய்ப்பு நெறி காட்டலாகும். ஈ, தா, கொடு ‘ஈ’ என்றோ ‘தா’ என்றோ ‘கொடு’ என்றோ கூறுவதில் பொதுவாக நோக்குவார்க்கு வேறுபாடு இல்லை. ஆனால் நுணுகி நோக்கின் வேறுபாடு உண்டு. இதனை விளக்குகிறார் தொல்காப்பியர். கொடுப்பவனினும் அவனிடம் ஒன்றைப் பெற வருவோன் தாழ்வுடையன் எனின், ‘ஈ’ என்று கூறுவான். இருவரும் ஒப்புடையவர் எனின் பெறுவோன் ‘தா’ என்று கூறுவான். கொடுப்போனினும் பெறுவோன் உயர்ந்தவன் எனின் ‘கொடு’ என்று கூறுவான் என்று அக்கால மக்கள் வழக்கினை உரைக்கிறார். இரப்பவர் அனைவரும் இழிந்தாரும் அல்லர் கொடுப்பவர் அனைவரும் உயர்ந்தாரும் அல்லர். இரு நிலைகளிலும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் உண்டு. உயர்வு தாழ்வு என்பவை வயது அறிவு பண்பு உதவி நன்றிக் கடன் தொண்டு ஆளுரிமை என்பவற்றால் ஆவனவேயாம். பிறவிக் குல வேற்றுமை இல்லாததும் கருதப்படாததுமாம் காலநிலை தொல் காப்பியர் கால நிலையாம். வாராதனவும் பேசாதனவும் இந்தச் சாலை சென்னையில் இருந்து வருகிறது. கன்னி வரை செல்கிறது. என்று கூறுதல் உண்டு. இச் சாலை எங்கே போகிறது என வினாவுதலும் உண்டு. எறும்பு அணில் மலை முதலியவை பேசுவதாகக் கதைகள் உண்டு. இம்முறை உலகளாவியதாகவும் பெருவரவினதாகவும் உள. குழந்தையர் கல்விக்கு ஏற்றது இம் முறை எனப் போற்றவும் படுகிறது இதனைத் தொல்காப்பியர், “வாரா மரபின வரக்கூ றுதலும் என்னா மரபின எனக்கூ றுதலும் அன்னவை எல்லாம் அவற்றவற் றியல்பான் இன்ன என்னும் குறிப்புரை யாகும்” (905) என்கிறார் (என்னா = என்று சொல்லாத). அடுக்கு அடுக்கு என்றாலே ஒன்றற்கு மேற்பட்டது என்பது பொருள். அடுக்குச் சட்டி, அடுக்குப் பானை என்பவை அன்றி அடுக்கு மல்லி அடுக்குப் பாறை என இயற்கை அடுக்கும் உண்டு. பாடலில் இசை கருதி அடுக்கு வரும் எனின், நான்கு முறை அடுக்கலாம் என்றும், விரைவு கருதிய அடுக்கு மும்முறை வரலாம் என்றும் ஓர் எல்லை வகுத்துக் காட்டுகிறார் (906, 907). எந்த ஒன்றிலும் அளவீடு இருத்தல் வேண்டும் என்னும் ஆசிரியர் மொழிக் காவல் நெறி இஃதாம். ஒரு பொருள் இருசொல் உயர்தலும் ஓங்குதலும் ஒன்று தானே! மீயும் மிசையும் ஒன்று தானே! ஒருபொருள் தரும் இரு சொற்களை இணைத்தல் ஆகுமா எனின் ஆகுமென மக்கள் வழக்குக் கொண்டு தொல்காப்பியர் சொல்கிறார். அது, “ஒரு பொருள் இரு சொல் பிரிவில வரையார்” என்பது. வரையார் = நீக்கார், விலக்கார். புதுவரவு பழைய சொற்கள் காலவெள்ளத்தில் அழிந்துபடுவது போலப் புதுப்புதுச் சொற்கள் தோற்றமும் ஆகின்றனவே எனின் வாழும் மொழி என்பதன் அடையாளம் அதுவே என்பர் மொழியறிஞர். இதனைக் “கடிசொல் இல்லைக் காலத்துப் படினே” (935) என்கிறார். கடிசொல் லாவது விலக்கும் சொல் நாட்காட்டி, எழுதுகோல், செய்தித்தாள் என்பன வெல்லாம் காலம் தந்த புதுவரவுகள் அல்லவா! மொழிவளம் செய்யும் சொற்களின் பெருக்கமும் தொடர் வரவுமே மொழிவளம் ஆதலால், அவற்றைப் போற்றிக் காக்க ஏவினார். - இரா. இளங்குமரன் தமிழ்வளம் -19, தமிழர் வாழ்வியல் இலக்கணம் எனும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது தெய்வச்சிலையார் தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு உரை கண்டாருள் ஒருவர் தெய்வச்சிலையார். அவருரை சொல்லதிகாரம் முழுமைக்கும் கிடைத்துள்ளது. பெயர் ‘தெய்வச்சிலையான்’, ‘தெய்வச்சிலைப் பெருமான்’ என்பன கல்வெட்டுகளில் வரும் பெயர்கள். “அரையன் தெய்வச்சிலையான் எடுத்தகையழகியான்”, “இளையாழ்வார் தெய்வச்சிலைப் பெருமாள் ஆன விக்கிரம பாண்டிய காலிங்கராயர்” என்பன அவை. அவற்றால் ‘தெய்வச் சிலையார்’ எனப்படும் பெயருடையார் பிறரும் இருந்தமை புலப்படும். கல்வெட்டு கூறும் தெய்வச்சிலையார் என்னும் பெயருடை யாருள் முன்னவர், பாண்டி மண்டலத்துக் காகூர்க் கூற்றத்து வளமர் ஆன வேம்ப நல்லூரினர். பின்னைக் கல்வெட்டு நெல்லை மாவட்டத்து மன்னார் கோயிலில் உள்ளது . ஆதலால் இப்பெயருடைய இவ்வுரையாசிரியரும் பாண்டி நாட்டைச் சேர்ந்தவர் எனக் கொள்ள இடமுள்ளது. காலம் இவர் இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், ஆகியோரைப் பெயர் சுட்டாமல் மறுத்தெழுதிச் செல்கிறார். நச்சினார்க்கினியர் சேனாவரையர் ஆகியோர்க்கு இவர் முற்பட்டவர் எனின் இவர் பெயரை அவர்கள் சுட்டியிருப்பர். அதனால், அவர்களுக்கு இவர் பிற்பட்டவர் என்பது தெளிவாகின்றது. மேலும் “பெண்மையடுத்த மகனென் கிளவி” (சொல். 160) என்பதற்குப் பெண்மகன் என்று மாறோகத்தார் இக்காலத்தும் கூறுப என்று நிகழ்காலத்தால் சேனாவரையரும் கல்லாடனாரும் கூறினர். ஆனால் இவரோ “விளையாடும் பருவத்துப் பெண்மகளைப் பெண்மகன் என்றல் பண்டையோர் வழக்கு” என இறந்த காலத்து நிகழ்வாகக் கூறினார். அதனாலும் சேனாவரையர்க்கும் கல்லாடனார்க்கும் பின்னவர் என்பது விளங்கும். இவற்றாலும் முற்காட்டப்பட்ட கல்வெட்டுகள் பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதியும் பதினான்காம் நூற்றாண்டின் தொடக்கமும் ஆகிய காலத்தன எனப்படுத லாலும் கல்லாடனார் காலம் நச்சினார்க்கினியர்க்கும் பிற்பட்டது ஆகலானும் இவர் 16 ஆம் நூற்றாண்டினர் ஆகலாம். சமயம் “மன்னாப் பொருளும் அன்ன இயற்றே” என்னும் நூற்பா விளக்கத்தில் (32) “வேதாகமத் துணிவு ஒருவர்க்கு உணர்த்து மிடத்து, உலகும் உயிரும் பரமும் அனாதி; பதியும் பாசமும் அனாதி எனவரும். உலகும் உயிரும் பரமும் பசுவும் பொருந்தும் பொருள் ஆனவாறும் பாசமும் பதியும் இவற்றோடு பொருந்தாத பொருள் ஆனவாறும் காண்க” என்பதும், “மந்திரப் பொருள் வயின் ஆஅகுநவும்” என்பதற்கு (439), “மண்ணைச் சுமந்தவன் தானும் வரதராசன் மகன்றானும் எண்ணிய வரகாலி மூன்றும் இரண்டு மரமும் ஓர்யாறும் திண்ணமறிய வல்லார்க்குச் சிவகதியைப் பெறலாமே” என்பதை எடுத்துக்காட்டி “இதனுள் மண்ணைச் சுமந்தவன் - ந, வரதராசன் மகன் - ம, வரகாலி மூன்று - சி, இரண்டு மரம் - வா, ஓர்யாறு - ய, எனக்கூற ‘நமச்சிவாய’ எனப் பொருளாயிற்று என்று குறிப்பதும் கொண்டு இவர் வைதிகம் சார்ந்த சைவ சமயத்தர் எனக் கருதலாம். உரைநிலை இவர், ‘கடாவிடை யுள்ளுறுத்து’ முதல் நூற்பாவுக்கு உரை விரிக்கிறார். அதன் நிறைவில் “இனி இச்சூத்திரத்திற்குப் பிறவாற்றானும் கடாவிடையுள்ளுறுத்து உரைப்பிற் பெருகும்” என அமைகிறார். எனினும் இவருரை காண்டிகை யுரையினும் விரிவுரையாகவே செல்கின்றது. தமிழ் வழக்காற்றை இவர் ‘தமிழ்நடை’ என்கிறார் (2, 243); காலம் உலகம் எனவரும் நூற்பாவில் வரும் (56) “சொல்” என்பதற்கு வேதம் எனப் பொருள் செய்கிறார். “சொல் என்பது எழுத்தினான் இயன்று பொருள் உணர்வது. அச்சொல்லினான் இயன்ற மந்திரம், விடம் முதலாயின தீர்த்தலின் தெய்வம் ஆயிற்று. இந்நூல் செய்தான் வைதிக முனிவர் ஆதலின் சொல்லென்பது ‘வேதம்’ என்று கொள்ளப்படும்” என்கிறார். இவர் தொல்காப்பியரை வைதிக முனிவர் என்று கொண்டதால் அக்கொள்கைக்கு ஏற்ப உரை செய்யத் துணிகிறார். வடசொல் “எல்லா நாட்டிற்கும் பொதுவாயினும் வடநாட்டிற் பயில வழங்குதலின் வடசொல் ஆயிற்று. வடசொல் என்றதனால் தேயவழக்காகிய பாகதச் சொல்லாகி வந்தனவும் கொள்க. வடமொழியாவன: வாரி, மணி, குங்குமம் என்னும் தொடக்கத்தன. வட்டம் நட்டம் பட்டினம் என்பன பாகதம்” என்கிறார் (397). ஒருவினை ஒடுச்சொல் என்னும் நூற்பா உரையில் (88), பிற உரையாசிரியர்களின் கருத்துக்கு மாறுபடும் இவர் “இப்பொருள் பாணினியார்க்கும் ஒக்கும்” எனத் தமக்குச் சார்பு காட்டுகிறார். ஒரு சார் ஆசிரியர் வேற்றுமை ஏழெனக் கொண்டதையும் குறிக்கிறார் (150). ஆசிரியர் சிறப்பு “ ‘ஆஅய்’ என யகர ஈறு விளி ஏற்றதால் எனின் அவ்வாறு வருவன வழக்குப் பயிற்சியின்மையின் எடுத்தோதிற்றிலர்” என்று அமைதி காட்டும் இவர் அதிகாரப் புறநடையால் கொள்ள ஏவுகிறார் (150). இடைச்சொல் உரிச்சொல் ஆகியவை பொருண்மை நிலையில் வரும் வகையை ஆசிரியர் விரித்துரையாமையை எண்ணும் இவர், “பொருண்மை நிலை வழக்கினும் சான்றோர் செய்யுளகத்தும் பயின்று வருதலானும் இவ்வழக்குத் தமிழ்நாட்டுப் பிறந்து தமிழறிவாரை நோக்குதலினாலும் இலக்கணம் இன்றியும் பாகம் உணர்வார் ஆகலானும் எடுத்து ஓதாராயினர். அஃது அற்றாதல், ‘வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா, வெளிப்பட வாரா உரிச்சொன் மேன’ என ஓதிய அதனானும் கொள்க. சொன்மை நிலை இலக்கணம் இல்வழி உணர்வரிது ஆதலான் எடுத்து ஓதப்பட்டது” (155) என்கிறார். இத்தகையவை ஆசிரியர் சிறப்பியல் காட்டுவனவாம். உவமை “வலனாக என்னும் எச்சத்துக்கண் ஆக என்பது செய்யுள் விகாரத்தால் தொக்கு நின்றது. தொக்கு நின்ற காலத்தும் அதற்கு இயல்பு முற்பட்ட நிலைமை என்று கொள்க. என்போலவோ எனின், வாலும் செவியும் இழந்த ஞமலியைப் பின்னும் ஞமலி என்றே வழங்கினாற் போல” எனச் சுவைமிக்க வகையில் உவமைப் படுத்துகின்றார் (408). பூத்தொடை யொடு சொற்றொடையையும் விரிய விளக்குகின்றார் (408). “எழுத்துப் பிரிந்திசைத்தல் இவணியல் பின்றே” என்பதன் உரையில் ‘இத்தமிழகத்தில் இல்லை” என்கிறார் (391). தமிழ்நாடு செந்தமிழ் நாட்டு எல்லை குறித்து இவர் கூறும் கருத்து பிறரினும் தெளிவும் திருத்தமும் உடையதாம். பிறருரைகள் சோழ நாடே செந்தமிழ் நாடு என்பது சொல்ல இவர், “செந்தமிழ் நாடாவது வையையாற்றின் வடக்கும் மருதயாற்றின் தெற்கும், கருவூரின் கிழக்கும் மருவூரின் மேற்கும் என்ப. இவ்வாறு உரைத்தற்கு ஓர் இலக்கணம் காணாமையானும் வையையாற்றின் தெற்காகிய கொற்கையும் கருவூரின் மேற்காகிய கொடுங் கோளூரும் மருதயாற்றின் வடக்காகிய காஞ்சியும் தமிழ் திரி நிலமாதல் வேண்டுமாதலானும் அஃது உரையன்று என்பார் உரைக்குமாறு என்று வரைந்து வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத்தமிழ் கூறு நல்லுலகமே செந்தமிழ் நிலம்” என்கிறார் (394). பழங்கொல்லம் கடல் கொள்ளப் பட்டபின், இப்பொழுதுள்ள கொல்லத்தை “அப்பெயரானே கொல்ல மெனக் குடியேறினார் போலும்” என்கிறார் (396). உரைநலம் சில இடங்களில் இவர் தரும் விளக்கமும் எடுத்துக்காட்டும் நினைதோறும் இன்பம் பயப்பனவாம். முன்னவர் உரைகளைத் தழுவியும் சார்ந்தும் பின்னவர் உரைகாண்பதும் காட்டுவதும் வழக்கெனினும், அப்பின்னவர் உரைகளால் முன்னவர் விளக்காத பகுதிகள் விளக்கம் பெறுவதும், சிக்கல்கள் அவிழ்க்கப்படுவதும் பட்டறிவால் ஏற்படுவன. அவ்வகையில் தெய்வச்சிலையார் தனிச்சிறப்புக்குரியவராகச் சொல்லத் தக்கவர். ‘உண்டு’ என்பதைப் பொதுவினை என்றும், சிறப்பு வினை என்றும் இருவேறு வகையாகக் கொள்வர் உரையாசிரியர்கள். இவர் தக்க எடுத்துக்காட்டுகளின் வழியே பொதுவினை என்பதை நிலைப்படுத்துகிறார். அது முன்னை உரையாசிரியர் களின் தோள்மேல் அமர்ந்து பார்க்கும் பார்வை யின் விளைவாம். “ஊன் துவை, கறிசோ றுண்டு வருந்து தொழில் அல்லது, பிறிது தொழில் அறியா வாகலின் (புறநா. 14) என்ற வழி உண்டு என ஒரு வினையான் வந்ததால் எனின், அது பொதுவினை என்று கொள்க. என்னை? ‘உண்ணு நீர் வேட்டேன் என வந்தாற்கு’ (கலி. குறி. 15) எனவும், ‘பாலும் உண்ணாள் பழங்கண்கொண்டு’ (அகம். 48) எனவும், ‘கலைப்புற வல்குல் கழுகு குடைந்துண்டு’ (மணிமே. 6:112) எனவும், ‘கள்ளுண்ணாப் போழ்து’ (திருக். 930) எனவும், ‘உண்ணாமை வேண்டும் புலாஅல்’ (திருக். 257) எனவும் வருதலின்” என்று எடுத்துக்காட்டி ‘உண்டு’ என்பது உண்ணல், கறித்தல், குடித்தல், சுவைத்தல் முதலிய பலவற்றுக்கும் வரும் பொது வினையாதலை விளக்குகின்றார் (45). ‘குறித்தோன் கூற்றம் தெரித்து மொழி கிளவி’ என்பதற்குச் ‘சேவலை’ எடுத்துக்காட்டுகிறார் (54). அதில், “நிவந்தோங் குயர்கொடிச் சேவலோய்’ (பரிபா. 3:18) என்ற வழிச் சொல்லுவான் குறிப்பு மாயவனை நோக்கலிற் கருடனாயிற்று. ‘சேவலங் கொடியோன் காப்ப’ (குறுந். 1) என்ற வழிச் சொல்லுவான் குறிப்பு முருகவேளை நோக்குதலிற் கோழியாயிற்று” என்கிறார். இத்தகும் இணைப்புச் சான்றுகள் தெய்வச்சிலையார் கொண்டிருந்த இலக்கியப் பயிற்சியின் பரப்பை வெளிப்படக் காட்டுவன. வேற்றுமைகள் அனைத்தும் முறையே வருமாறு இவர் காட்டும், “காதலியைக் கொண்டு கவுந்தியொடு கூடி மாதரிக்குக் காட்டி மனையின் அகன்றுபோய்க் கோதில் இறைவனது கூடற்கண் கோவலன்சென் றேத முறுதல் வினை” என்னும் இன்னிசை வெண்பா எடுத்த இலக்கணத்திற்கு எடுத்துக்காட்டாவதுடன் சிலப்பதிகாரச் செய்திச் சுருக்கமாகவும் அமைந்து சுவை பயக்கின்றது. பாடம் “விழுமம் சீர்மையும் இடும்பையும் செய்யும்” என இளம்பூரணரும், “விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும்” எனச் சேனாவரையரும் நச்சினார்க்கினியரும் பாடம் கொண்டனர். அதனை இவர், “விழுமம், சீர்மையும் சிறப்பும் இடும்பையும் சிறப்பும்” எனப் பாடங்கொள்கிறார். இப்பாடம், இரு சார் கருத்தையும் ஏற்றுக் கொண்டு இவரே அமைத்துக் கொண்டதாகலாம் (349). அத்தகு கருத்துடையர் இவர் என்பது வினைமுற்றைப் பற்றி இவர் கொண்ட கருத்தினால் வலியுறும். “வினைச்சொற்கள் முற்றும் பெயரெச்சமும் வினையெச்சமும் என மூவகைப்படும். அவற்றுட் பெயரெச்சம் வினையெச்சம் என்பன இத் தன்மையன என்று எடுத்தோதி முற்றுச் சொல்லாவது இத்தன்மையது என்று ஓதிற்றிலர். அதற்கு இலக்கணம் யாங்குப் பெறுதும் எனின், எச்சவியலுட் பெறுதும். வினைக்கு இன்றியமையாத முற்றினை ஒழிபியல் கூறுகின்றுழிக் கூறிய அதனாற் பெற்ற தென்னை எனின், அஃது எனக்குப் புலனாயிற்றன்று. இஃதேல் வினையிலக்கணம் அறிந்தேன் ஆகுங்கால் முற்றிலக்கணமும் அறிதல் வேண்டும் அன்றே. அதனை ஆண்டுக் கூறியவாறு ஈண்டுரைத்தல் வேண்டும் எனின் உரைக்குமாறு” என்று கூறி வினைமுற்றுப் பற்றிய மூன்று நூற்பாக்களையும் காட்டி உரை வரைகின்றார். இவ்வகையால் இடப்பெயர்ச்சி செய்தாருள் முதல்வரெனத் தெய்வச்சிலையார் அமைந்து விடுகின்றார். இவ்விடப் பெயர்ச்சியிலும் பெயர்ச்சி வேண்டினார் விளக்கவுரை கண்ட கு. சுந்தரமூர்த்தியார்: “இங்ஙனம் ஆய்ந்து வைத்த அருமை பாராட்டுக்குரியதாம். பிறவுரையாசிரியர்கள் அனைவரும் இது பற்றிச் சிறிதும் நினைந்திலர். இவ்வகையில் இவ்வுரையாசிரியர் பாராட்டிற்குரிய ரேனும் இம்மூன்று நூற்பாக்களையும் வினையியலின் முதற்கண் வைத்திருப்பின் இன்னும் நலமாக இருக்கும் என்பது கருத்து ஆகும். முற்றின் இலக்கணத்தைக் கூறாது முற்றுக்களுக்குரிய ஈறுகளை வினையியலின் முதற்கண் கூறுதல் பொருந்தாது ஆதலான் இவை ஆண்டிருப்பதே இன்னும் பொருத்த முடையதாகும்”. விளக்கம் உரிச்சொல் திரிசொல் இடைச்சொல் என்பவற்றின் அடை யாளத்தை எளிமையாய் அதே பொழுதில் அருமையாய் விளக்குகிறார் தெய்வச்சிலையார். “உரிச்சொல்லோடு இதனிடை (திரிசொல்லிடை) வேறுபாடு என்னை எனின், உரிச்சொல் குறைச்சொல்லாகி வரும்; திரிசொல் முழுச்சொல்லாகி வரும்” என்கிறார் (395). எல் என்பதை உரிச்சொல்லெனக் கொண்டார் சேனாவரையர். எனினும் உரியியலுக்கு மாற்றாமல், உரிச்சொல் லாகக் கொண்டே ஆசிரியர் வைப்புப் போல இடையியலில் வைத்துத் தம் கருத்தை எழுதியமை அவர் உரையுள் அறியப்பட்டது . அச்சொல் இடைச்சொல்லே உரிச்சொல் அன்று என்று தெளிவிக்கிறார் தெய்வச்சிலையார். “இது (எல்) உரிச்சொல் அன்றோ எனின், அது குறைச் சொல்லாகி நிற்கும். இது குறையின்றி நிற்றலின் இடைச்சொல் ஆயிற்று” என்கிறார். எவரையும் பெயர் சுட்டிக் கூறாமல் எழுதுதல் தெய்வச் சிலையார் வழக்கு. அவ்வழக்குப்படியே சேனாவரையரை இவண் குறியாதே உரை வரைந்தார். முறைவைப்புக் கூறுதலில் மிக நுணுக்கம் காட்டுகிறார் தெய்வச்சிலையார்: “பெயரை முதல் வேற்றுமை என்னாது எட்டு வேற்றுமையுள்ளும் யாதானும் ஒன்றை முதல் வேற்றுமை எனினும் அமையும் எனின், ஒருவன் ஒன்றை ஒன்றானே இயற்றி ஒருவற்குக் கொடுப்ப அவன் அதனை அவனினின்றும் தனது ஆக்கி ஓரிடத்து வைத்தான் கொற்றா என்றவழி, செய்கின்றான் முதல் வேற்றுமையாகி இம்முறையே கிடத்தலின் அமையாது என்க” என்று இலக்கண மரபினைப் போற்றுகிறார். இவர் காட்டும் வேற்றுமை எட்டன் வைப்புமுறைச் சிறப்பை வாழ்வியல் விளக்கத்துள் காண்க. ‘எல்லாம்’ என்பது உயர்திணைப் படர்க்கையிலும் முன்னிலையிலும் வருவனவற்றை எடுத்துக்காட்டி “அவை இலக்கண வழக்கல்ல” (182) என்று மறுப்பு வகையாலும் மரபினைக் காக்கிறார். அஃறிணைக்கண் தன்மைக்கூற்று நிகழாது என்பதை, “கிளியும் பூவையும் ஆகிய சாதி எல்லாம் உரையாடும் என்னும் வழக்கின்மையானும், அவை உரைக்குங்கால் ஒருவர் உரைத்ததைக் கொண்டு உரைக்கும் ஆதலானும், ஒருவன் பாடின பாட்டை நரம்புக் கருவியின்கண் ஓசையும் பொருளும்பட இயக்கியவழிக் கருவியும் உரையாடிற்றாதல் வேண்டு மாகலானும் அவ்வாறு வருவன மக்கள் வினையாதலால் தன்மை வினை அன்றென்க” என உவமை நயத்துடன் விளக்கி மரபு காக்கிறார் (210). இத்தகையவர், ‘எல்லாச் சொல்லும் பொருள்குறித்தனவே’ என்னும் நூற்பாவின் விளக்கத்தில் ஓருரை உரைத்துப் பின்னர், இன்னும் “எல்லாச் சொல்லும் எல்லாப் பொருளையும் குறித்து நிற்கும் என்றவாறு, எனவே, இச்சொல் இப்பொருள் உணர்த்தும் என்னும் உரிமை இல என்றவாறாம். என்னை உரிமை இலவாகிய வாறு எனின், உலகத்துப் பொருள் எல்லாவற்றையும் பாடை தோறும் தாம் அறிகுறியிட்டு ஆண்ட துணையல்லது இவ்வெழுத்தினான் இயன்ற சொல் இப்பொருண்மை உணர்த்தும் என எல்லாப்பாடைக்கும் ஒப்ப முடிந்ததோர் இலக்கணம் இன்மையான் என்க. எனவே பொருள் பற்றி வரும் பெயரெல்லாம் இடுகுறி என்பது பெறப்பட்டது” (151), என்பது வியப்பாக உள்ளது. இது நூலாசிரியர் கருத்தொடு மட்டுமன்றி, தாம் உரைத்த உரைக்கும் முரணாக உள்ளமை புலப்படுகின்றது! சில வழக்குகள் தைந்நீராடல், ஈழத்திற்கு ஏற்றின பண்டம், சுக்ரீவன் துணையாக இலங்கை கொண்டான் என அக்கால வழக்குகள், தொன்மக் குறிப்புகள் ஆகியவற்றை ஆங்காங்குக் காட்டுகிறார். ‘கூப்பிடு தொலைவு’ என நீட்டல் அளவும், ‘அந்தணி’ என அந்தணனுக்குப் பெண்பாலும், நெயவு தொடர்பான பல செய்திகளும், நாண்மீன் கோண்மீன் குறிப்பும் இன்னபிறவும் இவர் உரைக்கண் காண வாய்க்கின்றன. அரசன் வலத்திருந்தான் அமைச்சன்; அரசன் இடத்திருந்தான் சேனாபதி என அரசிருக்கை காட்டுகிறார்; இந்நாளில் வேளாங்கன்னி என்றும், வேளாங்கண்ணி என்றும் வழங்கப்படுவது வேளாண்காணி அல்லது வேளார் காணி என்பதோ என்று நினைக்க வைக்கிறார்: “வேளார்காணி என்பது வேளார் காணியிற் பிறந்த ஆடையை அப்பெயரால் வழங்குதலின் ஆகுபெயராயிற்று” என்பது அது (111). அடுத்த நூற்பாவுரையிலும் வேளார் காணியைக் குறிக்கிறார் (112). செப்பு வகை நான்கனுள் வாய்வாளா திருத்தலையும் (மறுமொழி கூறாதிருத்தலையும்) ஒன்றாகக் கூறுகிறார். ஆகாயப்பூ நன்றோ தீதோ என்றார்க்கு உரையாடாமை என்கிறார் (13). தொல்காப்பியம் என்பதற்கும் இவர் இலக்கணம் கூறுகிறார்: “தொல்காப்பியம் என்பதோ எனின் அஃது ஈறு திரிந்து நின்று, அவனால் செய்யப்பட்டது என்னும் பொருளை விளக்குதலின் ஆகுபெயராகாது; காரணப் பெயராம்” என்பது அது (111). அரிய செய்திகளையும் எடுத்துக்காட்டு நயங்களையும் உடையது தெய்வச்சிலையார் உரை. - இரா. இளங்குமரன் தமிழ்வளம் -19, தமிழர் வாழ்வியல் இலக்கணம் எனும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது சொல்லதிகாரம் - தெய்வச்சிலையம் இரா. வேங்கடாசலம் பிள்ளை - (1929) கரந்தைத் தமிழ்ச்சங்கப் பதிப்பு 1929 இல் (சுக்கில வைகாசி) வெளிவந்த பதிப்பை மூலமாகக் கொண்டு தொல்காப்பிய உரைத்தொகை மீள்பதிப்பாக வெளிவருகிறது தெய்வச்சிலையார் உரை பதிப்புரை அமிழ்தினு மினிய நம் தமிழ்மொழியிலுள்ள இயல் (இலக்கண) நூல்களுட் பழமையும் பெருமையும் வாய்ந்தது தொல்காப்பியம் எனும் நூலாகும். இதனை யியற்றினோர் தொல்காப்பியர் என்ப. இது, எழுத்து, சொல், பொருள் எனும் முப்பெரும்பிரிவுகளையுடையது. இதற்கு நல்லிசைப் புலவர் சிலர் உரைகண்டுளார். பண்டைத் தமிழ் நூல்களுள் இன்னும் அச்சிடப்பெறாத ஏட்டுச் சுவடிகளையும் அவற்றை யுடையார் களையும் அளந்தறிதலாகாமையின், இத்தொல்காப்பியம் முழுமைக்குமோ, அன்றிச் சிலபல பகுதிகட்கோ உரைகண்டார் இவரிவரே யென அறுதியிட்டுக் கூறுதல் இயலாது; கூறுதல் காலப்போக்கிற் பிழைபடுவதாகும். பழைய நூலுரைகளை அச்சிட்ட பேரறிஞர்கள் தாம் அச்சிட்ட நூல்கட்கு எழுதி வந்திருக்கும் முன்னுரை, பதிப்புரை முதலாயவற்றைத் தொடர்புற நோக்குவார்க்கு, பண்டை நூல்களின் பெயர்கள், அவற்றை ஆக்கியோர் பெயர்கள், அவற்றிற் கூறப் பெறும் பொருள்கள், அவற்றின் உரைகள் முதலாயவற்றிற் காலந்தொறும் எய்தியுள வேறுபாடுகள் இனிது புலப்படும். வேறு கூறுவானேன்? தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு இவ்வுரை யொன் றுளதெனப் பெரும்புலவருட் பலரும் சிலகாலங்கட்கு முன்வரை உணர்ந்திலரன்றோ? எனவே இதுகாறும் அச்சிட்டிருப்பவைகளைக் கண்டும், அறிஞர் கூறுவதைக் கேட்டும் உணரும் அளவில், தொல்காப்பிய உரைகளென இதுபோது கூறத்தக்கன எழுத்ததி காரத்திற்கு இளம்பூரணர், நச்சினார்க்கினியர் உரைகளும், சொல்லதிகாரத்திற்கும் இளம்பூரணர், சேனாவரையர், தெய்வச் சிலையார் (இவ்வுரையாளர்), நச்சினார்க்கினியர், கல்லாடர் என்பார் உரைகளும், பொருளதிகாரத்திற்கு இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் எனும் இவர்கள் உரைகளுமே யாகும். பேராசிரியரும் கல்லாடரும் தொல்காப்பியம் முழுவதற்கும் உரை கண்டவர் என்பதும், இளம்பூரணரின் வேறாக உரையாசிரியர் என்பாரொருவர் உளர் என்பதும் உண்டு. சொல்லதிகாரத்திற்குரியனவாய் மேற்கண்ட ஐவர் உரைகளுள், கல்லாடர் உரை வெளிவராமையின் அதுபற்றிச் சொல்லாடற் கொன்றுமிலது. எவற்றினும் முன்னையதெனக் கூறப்பெறும் இளம்பூரணர் உரையினைப் பின் தொடர்ந்து சேனாவரையரும், இவ்விருவர் உரையினையும் பெரிதும் பின் தொடர்ந்து நச்சினார்க்கினியரும் உரை யெழுதியிருப்பது அவற்றைப் பயின்றார் யாவரும் அறிவர். ஆனால் இவ்வுரையோ, அவற்றுள் எவற்றிற்குப் பின்னையது அன்றி முன்னையது; எவர் உரையின் எப்பகுதியை மேற்கொள்ளுகின்றது அன்றி மறுக்கின்றது; இவ்வுரையின் எப்பகுதி எவரால் மேற்கொள்ளப் படுகின்றது அன்றி மறுக்கப்படுகின்றது என்பன போன்ற ஆராய்ச்சிகள் செய்து முடிவு கட்டற்கு எளிய தொன்றாக விலது. இளம்பூரணர் முதலியோர் கொள்கைகளின் மறுப்புக்கள் சில இதன்கண் காணப்பெறுகின்றன. அவற்றாற் பெற்றதென்? மற்று, இவ்வுரைக் கொள்கைகளின் மறுப்புக்கள் போல்வனவும் ஒரோவழி அவ்வுரைகளிற் காணப்பெறுகின்றன! இவ்வுரையாளர் எவர் பெயரையும் எவ்விடத்தும் கூறிற்றிலர்; அங்ஙனமே இவர் பெயரையும் எவரும் எங்கும் கூறினாரிலர். இளம்பூரணர் முதலோர் உரைப்போக்கு நடைப்போக்குக்கள் வேறு; இவர் உரைப் போக்கு நடைப்போக்குக்கள் வேறு. இவ்விருவகையினரும் கொண்ட நூற்பாக்களின் பாடம், அடிகள், முறைவைப்பு முதலாயவே பல்லிடங்களில் வேறுபடுவன. இங்ஙனம் பல்லாற்றானும் வேறுபட்டு நிற்கும் இவ்விரு வகை யுரைகளையும் ஒருங்குவைத்து ஆராய்ந்து முடிவு காண்டல் ஆராய்வார்க்குப் பேரூக்கத்தினையும், பெருமகிழ்வினையும் விளைப்ப தொன்றாகும். இதன்கண் நன்னூல் மயிலைநாதர் உரையுடன் ஒற்றுமைப்படும் பகுதிகள் பலவுள. இவ்வுரையினுள், சமயப் பற்று மிக்க பிற்காலத்தினர் ஒருவர் எழுதிச்சேர்த்த சிற்சில பகுதிகளும் உளவோ எனும் ஐயம், இதனை அச்சிடற்குக் கிடைத்த முதலேட்டிற்கும் இரண்டாவது ஏட்டிற்கும் உள்ள சில வேறுபாடுகளாலும் வேறுசில குறிப்புக்களாலும் உண்டாகும். நிற்க. இவ்வுரை, சொல்லழகு பொருளழகு திட்ப நுட்பங்களில் எவ்வுரைக்கும் பின்னிடுவதொன்றன்று. பிறவுரைகளிற் காண லாகாத பல அரும் பொருள்களும் தெளிவுகளும் ஆங்காங்குக் கொண்டு வியப்பிப்பது இவ்வுரை, இதன்கண் வலிந்து கூறல், மெலிந்து போதல் முதலாய குறைகள் யாண்டுங்காண்டல் அரிது. இங்ஙனமாய் இதன் தனிச்சீர்கள் விரிப்பிற் பெருகும்.1 நம் தமிழ்மொழியின் அரிய அணிகலன்களின் ஒன்றாக வைத்தெண்ணற்குரிய இவ்வுரை யேடு ஒன்று, தஞ்சைமாநகரில், சரபோஜி மன்னர் பெரும் புகழென விளங்கி யொளிரும் கலைமகள் மன்றத்தே (சரசுவதிமால்) உளதெனத் தமிழ்ப் பெரும்புலவர் சிலர் பல்லாண்டுகளுக்கு முன்னரே இரண்டோ ரிடங்களிற் குறித்துளார். எனினும் பல காலம்வரை இதனை அச்சிடக்கருதி முன்வருவா ரிலராயினர். இக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தலைவர், திரு. வே. உமாமகேசுவரம் பிள்ளையவர்கள் மேற்கூறிய கலைமகள் மன்ற நூல் நிலையத்தின் மேற்பார்வையை யெய்திய தொருகாலத்தே, அங்கு ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த தமிழ்ப் புலவர் திரு. டு. உலகநாத பிள்ளை யவர்கள் வாயிலாக இந்நூலினை எடுத்துப் பார்த்து, இதன் அருமை பெருமைகளை யுணர்ந்து, இதனை அச்சிடும அவாவெய்தினர். அதன்மேல், இச்சங்க உறுப்பினரும், தமிழ்ப் பெரும் புலவருமாகிய பண்டிதமணி, மு. கதிரேசச் செட்டியாரவர்கள் இதனை யுணர்ந்து, விரைவில் அச்சிட்டு வெளியிடத் தூண்டிய தோடு, தமது அரிய நண்பரும், இச்சங்க உறுப்பினரும், பெருந் திருவினருமாகிய பலவான்குடி ராம. கும. சு. குமரப்பச் செட்டியாரவர்களிடம் இதனை அச்சிடற்குப் பொருளுதவி செய்ய வேண்டினர். அவர்கள் அன்புடன் ஏற்று, ஒரு பெருந்தொகையினை உடன் தந்துதவினர். பின்னர், இச்சங்கம் இவ்வேலையினை மேற்கொண்டு செய்து முடித்தலை என்பாற் பணித்தது. என் தகுதியினை நோக்காது கடன் நோக்கி ஏற்ற யான், இவ்வேட்டினைப் பெற்றுப் பார்த்தகாலை, இது சில ஏடுகள் முழுவதும் இன்றியும் சில ஏடுகள் பாதியில் முரிந்தும் சில பொடிந்தும் போய்விட்டமையின் மிகப் பழுதுபட்டிருப்பதும்; கற்றறிஞர் எவராலும் எழுதப்பெறாது கூலிக்கு எழுதுவோர் எவராலோ எழுதப்பெற்றதால், ண, ன, ந, ல, ள, ழ வேறுபாடுகளும் பிறவும் தேறாமையான் எழுந்த எழுத்துப் பிழை சொற்பிழைகளும் ஒருமை பன்மைப் பிறழ்ச்சி முடிபுகள் முதலாய சொற்றொடர்ப் பிழைகளும் மல்கியும், சில விடங்களில் நூற்பா வின்றியும், சிலவிடங்களில் உரைகளின்றியும், சிலவிடங்களில் அவை பிறழ்ந்தும் காணப்பெற்றமையின் பல்லிடங்களிற் பொருள்துணிதற் கியலாதவா றிருப்பதும் காணலாயினேன். இதன் பிரதியென நூனிலையாளர் எழுதி வைத்திருப்ப தொன்றுளதேனும், அது, பிரதிசெய்தோரால், இடைவெளியுற்ற பகுதிகள் இணைக்கப்பெற்றதும், குறையுற்றிருந்த நூற்பாக்கள் சில சொற்களால் முடிக்கப்பெற்றும் இன்னோரன்ன பிற புத்தாக்கம் பெற்றும் இருப்பதால், இவ்வேலைக்குப் பயன்படாத தாயிற்று. அரித்துவாரமங்கலத்தில் புலவரும், புலவரைப் போற்றும் செல்வருமாகவிருந்த வா. கோபாலசாமி ரகுநாத ராசாளியாரவர்கள் வீட்டில் இவ்வேட்டின் பிரதியொன்றிருப்ப துணர்ந்தேன் ஆங்குச் சென்று அரிதிற்றேடிக் கண்ட அப்பிரதிதானும், மேற்கூறிய பிரதிபோன்ற தொன்றேயா யிருந்தது. எனினும், இது, சிறிது முற்காலத்தில் எழுதப்பெற்ற தொன்றாயினமையின், இவ்வேட்டில் இப்பாற் பொடிந்துள சில பகுதிகளைக் கண்டுகொள்ளுமளவில் உதவியாயிருந்தது. வேறு ஏடுகள் பெறவேண்டிப் பழைய ஏடுகள் இருக்கும் இடங்களெனத் தெரிந்த சில்லிடங்களிற் கேட்டும் பார்த்தும் ஒன்றும் கிடைத்திலது. இவ்வளவில் இவ்வொற்றை ஏட்டினை, பிழைமலி ஏட்டினை, சிதைவுறும் ஏட்டினைக் கொண்டு அச்சிடல் பெரியதோர் அச்சத்தினை விளைத்ததேனும், இவ்வேடு `நென்னற்கண்ட திருமேனி யின்று பிறிதா நிலைதளரும்’ நிலையிலிருந்ததால், காலந்தாழ்த்தலில் உண்டாகும் ஏதப்பாடு அதனினும் காட்டில் அச்சம் விளைத்தமையின், உடனே தொடங்கி முடிக்கும் இன்றியமையாமை எய்தியது. பண்டைத் தமிழ் நூல் ஏடுகளை அச்சிடுவதென்பது எளிய வேலையன்று. ஆழ்ந்தகன்ற பயிற்சியும், கூர்ந்து கூர்ந்து செல்லும் மதிநுட்பமும், ஏட்டுச்சுவடியிற் பன்னெடுங்காலப் பழக்கமும், சிறந்த பயிற்சியுடையார் துணையும் உடையாரே பண்டைத் தமிழ் நூலேடுகளை அச்சிடற்குரியார். இன்னோர்தாமும், தாம் அச்சிடப்புகும் நூலிற்குப் பற்பல ஏட்டுப்பிரதிகள் தேடி வைத்துக் கொள்ளல் வேண்டும். அவற்றுள் ஒன்றிரண்டேனும் சிறந்த புலவர் கைப்பட்டனவாய் அன்றிச் சிறந்த பயிற்சியுடையோரால் எழுதப் பெற்றனவா யிருத்தல் வேண்டும். இவர், தாம் அச்சிட எடுத்துக் கொள்ளும் நூலுரைகளைப் பன்முறை பயின்று அந்நூற்பொருள் முழுவதையும் சிலையெழுத்தெனத் தம் மனத்தகத்தே பதிப்பித்துக் கொண்டு, அவ்வுணர்ச்சியோடு பண்டைத்தமிழ் இயனூல் செய்யுணூல்களை யெல்லாம் ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்து, ஒப்புமைப் பகுதிகள், மேற்கோள் விளக்கங்கள் முதலாயவற்றைத் திரட்டிக்கொள்ளல் வேண்டும். இங்ஙனமெல்லாம் பண்டைநூற்பதிப்பிற்குச் செயத்தகும் முன்வேலைகள், பின்வேலைகள் பலப்பலவாகும். ஆயினும், மேற்கூறியாங்கு உடன் அச்சிடவேண்டும் இன்றியமையாமை நோக்கியே, குற்றறிவும் குறும்பயிற்சியும் பெரும் மறதியும் மிகு சோர்வும் பிற குறைபாடுகளும் கொண்ட யான், ஏட்டுச்சுவடி என்பதனையே கேட்டு மறியாத யான், தக்கார் துணையொன்றும் வாய்க்கப்பெறேனாய், பல்வகைக் குறைபாடுகளையெல்லாம் கொண்ட இவ்வேடொன்றையே துணைக் கொடு, ஏதோ இயன்ற ஒருவாறு அச்சிட்டு முடித்தேன். இதன்கண் பல்வகையான பிழைகளும் மலிந்திருத்தல் கூடுமெனயான் உணரேனல்லேன்; உணர்ந் தஞ்சேனல்லேன்; அஞ்சி அஞ்சியும் அச்சிட்டது, ஒன்றே ஒன்றைக் கருதியதாகும். அஃதாவது, இதில் என் மனமாரச் செய்த ஆக்கல், அழித்தல், திரித்தல் முதலாய செய்கைகள் இலவாகலின், நாளும் நாளும் பழுது பட்டொழிந்துவரும் இவ்வேட்டின் ஒரு நேர் பிரதியாக இது நின்று, பிற்காலத்து அச்சிடும் பெரியார்கட்கு ஒருவாறு உதவி செய்யும் என்று எண்ணிய தொன்றே யாகும். ஒரு பெரிய நூலை அச்சிட்டதொரு பிழையினை இதுபற்றியேனும் தமிழுலகம் பொறுத்திடுவதாக. இனி, இவ்வேட்டின் இறுதியில் `ஆத்திரேய கோத்’ என்னுஞ் சொற்கள் இருந்தனவென்றும், ஆதலால் இது ஆத்திரேய கோத்திரத்துப் பேராசிரியர் உரையென்றும் பேரறிஞர் சிலர் எழுதியுளார். அதுபற்றி, முதலில் இந்நூலிற்குப் பேராசிரியர் உரை யெனும் பெயர் தந்திடப்பெற்றது. அங்ஙனமே நூலைப் பற்றிய விளம்பரங்களும் செய்யப்பெற்றன. தமிழ்த்தாயின் முதல்மகனும் தமிழுலகப் பேராசிரியரும் (மகாமகோபாத்தியாயர்) தமிழ்நூல்களை அச்சிடற்குரியாரை எண்ணின் அணிவிரல் முடக்கவொட்டாது நிற்பாரும் தமிழ்ப் பெருவள்ளலுமாகிய உயர்திருவினர் உ.வே. சாமிநாதையரவர் களிடம் இவ்வுரையேடொன்றிருப்ப துணர்ந்து, சங்கம் அதனை வேண்டிக் குறையிரந்து நிற்க, அவர்கள் மனமுவந்து அன்புடன் உதவி யருளினார்கள். அதனை வைத்து ஒப்புநோக்க இவ்விரு வேடுகளினு மெய்திய வேறுபாடுகளை யெல்லாம், நூல் முன்னரே அச்சிடப்பெற்றிருந்தமையின் இடையிடையே இணைக்க வியலாமையின், சேர்க்கையாக அச்சிட்டு இறுதியில் இணைக்கலாயிற்று. நூலின் பெயரையும் ஐயரவர்கள் தந்த ஏட்டின் முன்னும் பின்னும் கண்டவாறு தெய்வச்சிலையார் உரையெனக் கொள்ளலாயிற்று. இவ்வேட்டினால், முன்னம் ஏடுகள் இன்மையானும் ஒடிபட்டிருந்த தானும் விடப்பெற்றிருந்த பல இடைவெளிகள் மீண்டும் அச்சிட்டு இடைச்செருகப் பட்டதொடு பற்பல திருத்தங்களும் எய்தலாயின. சுருங்கக்கூறின் இவ்விரண்டாம் ஏடே நூலிற்குப் புத்துயிர் தந்த தெனலாம். இந்நூல் அச்சிட்டு முடித்தற்கு முன்னின்று உதவினர் மிகப்பலர் ஆவர். அவ்வப்போது உடனின்று படியெடுத்துத் தந்தும் அச்சுப்பிழை பார்த்தும் உதவிய உயர் தரத் தமிழ்க்கல்வி மாணவர் சிலர்க்கும், அச்சிட்ட பதிப்பை நோக்கிச் சிற்சில செப்பங்களும் மேற் கோள்விளக்கங்களும் இன்னோரன்ன பிறவும் காட்டியுதவிய தமிழ்ப்புலவர்கள் சிலர்க்கும் (விரிவும் அன்புரிமையும் நோக்கி யன்னோர் பெயர்களைக் குறித்திலேன்). என் நன்றியறிவினைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். இந்நூலினை அச்சிடற்கு ஒரு பெருந்தொகையினைத் தந்தருளிய பலவான்குடித் திருவாளர் ராம. கும. சு. குமரப்பச் செட்டியார் அவர்களுக்கு இச்சங்கம் என்றும் மறவா நன்றி பாராட்டுகின்றது. இவர்கள் குன்றக்குடியன் அருளாலெய்திய தமது முதன்மகப் பேறுபற்றித் தம் தமிழ்த்தாயின் காணிக்கையாக இதனைத் தந்தனர். இவர்களும், பிறக்கும்போதே ஒரு அரிய தமிழ்நூலின் வெளியீட்டிற்குரியனாய இவர்தம் செல்வமகனும், ஏனைமக்களும், சுற்றமும் இனிது வாழ எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகின்றேன். இந்நூலிற்குரிய தாள், அச்சுக்கூலி, கட்டுவேலை முதலாயவற்றிற்கெல்லாம் வேண்டும் தொகை, எதிர்பார்த்த அளவினும் விஞ்சியதை உணர்ந்த தஞ்சை லாலி அச்சுக்கூடத் தலைவர் திருவாளர் ஹ. சுந்தரபாண்டியன் அவர்கள் இதன் அச்சுக் கூலி முழுவதையும் தமது நன்கொடையாக்கி யருளினர். இவர்கட்கு இச்சங்கத்தின் மனமார்ந்த நன்றியறிவினையும் வாழ்த்தினையும் தெரிவிக்கின்றேன். இனி, இவ்வரிய ஏட்டுச்சுவடியினைப் பேணிவைத்திருந் துதவிய தஞ்சைக் கலைமகள் மன்றத்தாருக்கும், தாம் வைத்திருந்த இதன் பிரதியை அன்புடன் தந்துதவிய அரித்துவாரமங்கலம் இராசாளியாரவர்கள் குடும்பத்தினருக்கும், இரண்டாம் ஏட்டினை தந்துதவிய தமிழ்ப்பெரியார் ஆய ஐயரவர்கட்கும், இந்நூலின் வெளியீட்டிற்குப் பல்லாற்றானும் முதன்மையாளராகி நின்ற பண்டிதமணியாரவர்கட்கும், இச்சங்கத் தலைவரவர்கட்கும் என் மனமார்ந்த நன்றியறிவினையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். நலம். விரிந்த வுலகில் வியப்பார் பொருளாய்ச் செறிந்த பலவுட் சிறந்த - தெரிந்த பொருள்ஓங்கு நூலோர் புரிபுன் னகைக்காம் சிறுநூலு மோரேன் செயல் சு. வேங்கடாசலம் கிளவியாக்கம் கிளவி-சொல் ஆக்கம்-ஆதல். சொற்கள் பொருள் மேல் ஆமாறுணர்த்தினமையின் கிளவியாக்கமென்னும் பெயர்த் தாயிற்று என இளம்பூரணரும், வழுக்களைந்து சொற்களை அமைத்துக் கொண்டமையால் கிளவியாக்கமாயிற்று எனச் சேனாவரையரும் நச்சினார்க்கினியரும், சொற்கள் ஒன்றோ டொன்று தொடர்ந்து பொருள்மேல் ஆகும் நிலைமையைக் கூறுவது இவ்வியலாதலின் கிளவியாக்கம் என்னும் பெயர்த்தாயிற்று எனத் தெய்வச்சிலையாரும் இவ்வியலுக்குப் பெயர்க்காரணங் கூறினர். கிளவியது ஆக்கத்தைக்கூறுவது கிளவியாக்கம் என வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையாகக்கொண்டார் தெய்வச்சிலையார். இவ்வியலின் சூத்திரங்கள் அறுபத்திரண்டென இளம்பூரணர் நச்சினார்க்கினியரும், அறுபத்தொன்றெனச் சேனாவரையரும், ஐம்பத்தொன்பதெனத் தெய்வச்சிலையாரும் பகுத்து உரை கூறியுள்ளார்கள். சொல் உயர்திணைச்சொல், அஃறிணைச்சொல் என இரண்டு வகைப்படும். அவற்றுள் உயர்திணைச்சொல் ஆடூஉ வறிசொல், மகடூஉ வறிசொல், பல்லோரறிசொல் என மூவகைப்படும். இம்மூன்றினையும் முறையே ஆண்பாற்சொல், பெண்பாற்சொல், பலர்பாற்சொல் எனப் பிற்காலத்தார் வழங்குவர். அஃறிணைச் சொல் ஒன்றறிசொல், பலவறிசொல் என இரு வகைப்படும். இவற்றை முறையே ஒன்றன்பாற்சொல், பலவின்பாற்சொல் எனப் பிற்காலத்தார் வழங்குவர். அறிவார்க்குக் கருவியாகிய சொல் அறிசொல்லாயிற்று. உயர்திணையென்பது மற்றுள்ள பொருளெல்லாவற்றினும் உயர்வாகியபொருள் என விசேடித்து நின்றமையின் பண்புத் தொகையாமென்றும், உயர்ந்த மக்கள் உயராநின்ற மக்கள் உயரும் மக்கள் என மூன்று காலமுங் கொள்வார்க்கு வினைத் தொகையுமாமென்றும், மக்களாவார் ஒருதன்மையரன்றி ஆண், பெண், அலியென்னும் வடிவு வேற்றுமையுடையராகலின் அவரெல்லாரிடத்தும் பொதுவாக அமைந்துள்ள மக்கட்டன் மையைக் குறித்து மக்கள் இவர் என்னும் பொதுப் பொருண்மை உயர்திணையாமென்பதறிவித்தற்கு மக்களென்னாது மக்கட் சுட்டென்றாரென்றும், மக்களல்லாத உயிருடையனவும் உயிரில் லனவும், அஃறிணையாமென்பதறிவித்தற்கு அவரல பிற என்றரென்றும் கூறுவர் தெய்வச்சிலையார். உயர்திணையல்லாத திணை அஃறிணையாதலின் அல்திணை அஃறிணை யென்றாயிற்று. உயிர்பொருள், உயிரில்பொருள் என்னும் அஃறிணைப் பொருள்வகை யிரண்டனுள் உயிர்ப்பொருள் வகையுள் ஆண் பெண் வேறுபாடு காணப்படுமேனும் அவ்வேறுபாடு உயிருள்ள வற்றுள் சிலவற்றிற்கும் உயிரில்லாத பொருள்களுக்கும் இயையா மையால் உயிருள்ளன இல்லனவாகிய எல்லாவற்றிற்கும் பொருந்த ஒன்றறிசொல், பலவறிசொல் என்னும் இருவகைச் சொன் முடிபுகளே வகுக்கப் பெறுவனவாயின. மக்கட் பிறப்பிலே தோன்றிப் பெண்தன்மை மிகுந்தும் ஆண் தன்மை குறைந்தும் ஆண் பெண் என்னும் இருவகையுங் கலந்து நிற்கும் பேட்டினைக்குறித்த பெயர்ச்சொல்லும் தெய்வத்தைக் குறித்த பெயர்ச்சொல்லும் இருதிணை ஐம்பால்களுள் இன்னபால் எனத்தெரிந்து கொள்ளுதற்குக் கருவியாகிய ஈற்றெழுத்தினை (விகுதியினை) உடையன அல்ல. அவைதாம் உயர்திணைப் பெயராய் நின்று ஆண்பாற்சொல் முதலியவற்றின் விகுதியினையே தம் வினைக்கீறாகப்பெற்று இன்னபால் என விளங்கி நிற்பனவாம். இவற்றின் இயல்பினை இவ்வியல் ஆம் சூத்திரத்தால் ஆசிரியர் தெளிவுபடுத்துகின்றார். னகரமாகிய மெய்யெழுத்தை இறுதியாகவுடையது ஆண் பாற் சொல்லாம். ளகரமெய்யை இறுதியாகவுடையது பெண் பாற் சொல்லாம். ரகரமெய்யும் பகரவுயிர்மெய்யும் மார் என்னும் சொல்லும் ஆகிய இம்மூன்றனுள் ஒன்றை யிறுதியாகவுடைய சொல் பலர்பாற் சொல்லாம். து, று, டு எனவரும் மூன்றெழுத் துக்களுள் ஒன்றையிறுதியாகப்பெற்றசொல் ஒன்றன்பாற் சொல்லாம். அ, ஆ, வ என்பவற்றுள் ஒன்றை யிறுதியாகப்பெற்றது பலவின்பாற் சொல்லாம். இவ்வாறு இருதிணைக்கண்ணும் ஐந்துபாலும் விளங்க இறுதியில் நின்றொலிக்கும் இப்பதினோ ரெழுத்தும் வினைச் சொல்லிடத்தேதான் தெளிவாகப் புலப்படுவன. இவை பெயரொடு வருவழித் திரிபின்றி ஐம்பாலை விளக்கும் ஆற்றலுடையன அல்ல. எனவே “இருதிணைமருங்கின் ஐம்பாலறிய ஈற்றில்நின்று இசைக்கும் பதினோரெழுத்தும் தோற்றந்தாமே வினையொடு வருமே” என்றார் தொல்காப்பியனார். இதனால் இருதிணை ஐம்பால்களையும் ஒருவன் சொல்லகத்து அறியுமாறு இவ்வாறென ஆசிரியர் விளக்கினமை காண்க. இருதிணையுள் ஒருதிணைச்சொல் ஏனைத் திணைச் சொல்லொடு முடிவது திணைவழு, ஒருதிணையுள் ஒருபாற்சொல் அத்திணையிலுள்ள ஏனைப் பாற்சொல்லொடு முடிவது பால்வழு. தன்மை, முன்னிலை, படர்க்கையாகிய மூவிடச் சொற்களுள் ஓரிடச்சொல் பிறவிடச் சொல்லொடு முடிவது இடவழு இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்னும் மூன்று காலங்களுள் ஒரு காலத்தினைக் குறித்த சொல் ஏனைக் காலச்சொல்லொடு முடிவது காலவழு. வினாவுக்கு ஏற்ற விடையாகாதது செப்புவழு. வினாவுதற்குரியதல்லாத பொருளைப்பற்றி வருவது வினாவழு. ஒருபொருட்குரிய வழக்குச் சொல் மற்றொரு பொருள்மேற் சென்றது மரபுவழு. இங்ஙனம் திணை, பால், இடம், காலம், செப்பு, வினா, மரபு என்னும் இவ்வேழு வகையாலும் சொற்கள் வழுவாமற் காத்தலே வழுக்காத்தலெனப்படும். வழுவற்கவென்றலும், வழுவமைத்தலும் என வழுக்காத்தல் இருவகைப்படும். குறித்த பொருளை அதற்குரிய சொல்லாற் சொல்லுகவென்றல் வழுவற்க வென்றலாம். குறித்த பொருளுக்குரிய சொல்லன்றாயினும் ஒருவாற்றால் அப்பொருள் தருதலின் அமைத்துக்கொள்க என அமைதிகூறுதல் வழுவமைத்தலாகும். இவ்வியலின் 11-ஆம் சூத்திர முதலாகவுள்ள சூத்திரங்கள் மேற்கூறிய இருவகையானும் வழுக்காப்பனவாம். - க. வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 191-194 முதலாவது கிளவியாக்கம் 1. உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே அஃறிணை யென்மனார் அவரல பிறவே ஆயிரு திணையி னிசைக்குமன சொல்லே. என்பது சூத்திரம். இவ்வதிகாரம் என்ன பெயர்த்தோவெனின், மேற்சொல்லப் பட்ட எழுத்தினா னியன்று பொருளறிவிக்குஞ் சொற்களைப் பாகுபடுத்துதலாற், சொல்லதிகாரம் என்னும் பெயர்த்து. அஃதியாங்கனம் உணர்த்தினாரெனின், சொற்களைப் பொருணிலைமை நோக்கித் தொடர்மொழி, தனிமொழி யென இருவகைப்படுத்து; அத்தொடர்மொழியை அல்வழித் தொடர், வேற்றுமைத்தொடரென இருவகைப்படுத்து; அவ்விருவகைத் தொடரும் செப்பும் வினாவுமாக நிகழ்தலான், அவற்றை வழுவாமற் கூறுதற்காக முற்படச் சொன்னிலைமையாற் பொருளை உயர்திணை யஃறிணையென இருவகைப்படுத்து; அவ்வுயர்திணை யுணர்த்துஞ் சொற்களை ஒருவனை யறியுஞ் சொல், ஒருத்தியை யறியுஞ் சொல், பலரை யறியுஞ் சொல்லென மூவகைப்படுத்து; அஃறிணை யுணர்த்துஞ் சொற்களை ஒன்றனையறியுஞ்சொல், பலவற்றை யறியுஞ்சொல்லென இருவகைப்படுத்த...வ்வகைப்பட்ட சொல்லும் (பெயர்ச் சொல்லும்) பெயர்ச்சொற்கண்ணும் வினைச்சொற்கண்ணும் வருதலிற் பெயராற் பாலறியப்படுஞ் சொல்லினாலும்? அமைக்க வேண்டும் சொற்களை எடுத்தோதி; அதன்பின் வேற்றுமைத் தொடர் கூறுவார் மயங்கா மரபினவாகி வருவன எழுவகை வேற்றுமை யுணர்த்தி; அதன்பின் அவ்வேற்றுமைக்கண் மயங்குமாறு உணர்த்தி; அதன்பின் எட்டாவதாகிய விளிவேற்றுமையுணர்த்தி; அதன்பின் தனிமொழிப் பகுதியாகிய பெயர்ச்சொற் பாகுபாடும், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொற் பாகுபாடும் உணர்த்தி; அதன்பின் சொற்கள் விகாரப்படுமாறும், ஒட்டுமாறும், எஞ்சுமாறும், பிறவும் உணர்த்தினாரென்க. அவற்றுள், அல்வழித்தொடர் கிளவியாக்கத் துள்ளும், வேற்றுமைத் தொடர் வேற்றுமையோத்துள்ளும், வேற்றுமை மயங்கியல், விளிமரபென்பனவற்றுள்ளும், தனிமொழிப் பகுதியாகிய பெயரிலக்கணம் பெயரியலுள்ளும், வினையிலக்கணம் வினையியலுள்ளும், இடைச்சொல்லிலக்கணம் இடைச்சொல்லோத்தினுள்ளும், உரிச்சொல்லிலக்கணம் உரிச்சொல் லோத்தினுள்ளும், எஞ்சியவெல்லாம் எச்ச வியலுள்ளும் உணர்த்தினாரென்று கொள்க. இவ்வகை யினானோத்தும் ஒன்பதாயிற்று. பொருளுணர்த்துவன தனிமொழியாதலால், தொடர் மொழியென வகுத்ததனாற் பயனென்னையெனின், பொருளுணர்த்துதற்குச் சிறப்புடை யன தொடர்மொழியென்று கொள்க. என்னை சிறந்தவாறெனின், சாத்தனென்றவழிப் பொருண்மை மாத்திரமுணர்த்துதலல்லது கேட்டார்க்கொரு பயன்பட நில்லாமையின், சாத்தனுண்டானெனப் பயன்பட வரூஉந் தொடர்மொழியே பொருள் இனிது விளக்குவதென்க. சொல்லிலக்கணம் அறிந்ததனாற் பயன், தொடர்மொழியாகிய வாக்கியத்தினைப் பிரித்துப் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்லெனக் குறியிட வேண்டுதலின் அதன்பிற் கூறப்பட்டது. இனி, எழுவாய் வேற்றுமையையும் விளி வேற்றுமையையும் எழுத்ததிகாரத்துள் அல்வழிக்கண்ணே முடித்தாராதலான் அவற்றை வேற்றுமைத் தொடரென்ற லமையாதெனின் :- அவை வேற்றுமையென்று குறிபெறுதலானும், எழுவாய் வேற்றுமை கிளவியாக்கத்தொடு மணந்து கிடப்ப வைத்தலானும், விளிவேற்றுமை எழுவாயது திரிபாதலானு மமையு மென்க. இவ்வதிகாரத்துக் கூறப்பட்ட வொன்ப தோத்தினுள்ளும் முதற்கண்ணது கிளவியாக்கம். அது கிளவிய தாக்கமென விரியும். அதற்குப் பொருள், சொல்லினது தொடர்ச்சி யென்றவாறு. சொற்கள் ஒன்றோடொன்று தொடர்ந்து பொருண்மேலாகு நிலைமையைக் கிளவியாக்க மென்றார். அது வேற்றுமைத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையாகி, அதனையுடைய வோத்திற்குப் பெயராயிற்று. இவ்வோத்தினுள் இச் சூத்திரமென்னுதலிற்றோ வெனின், சொல்லிலக்கண முணர்த்துதல் நுதலிற்று. “உயர்திணை.... சொல்லே’’ என்பதனுள், உயர்தலென்பது மிகுதல். திணை யென்பது பொருள். என்மனாரென்பது என்று சொல்லுவாரென்றவாறு. மக்களென்பது மக்களென்னும் பொதுப் பொருண்மை. சுட்டென்பது குறிப்பு, இனச்சுட்டில்லா? வெனவும், தெய்வஞ்சுட்டிய? வெனவும் ஓதினாராகலின், அது சுட்டப்படும் பொருண்மேல் ஆகுபெயராய் நின்றது. ஏயென்ப தீற்றசை; அல் என்பது அல்லாமை. திணையென்பதற்கும் என்மனாரென்பதற்கும் மேலுரைத்தவாறே கொள்க. அவரலவென்பது மக்களல்லாத பொருள்; பிற என்பது பிற பொருள்; மக்களல்லாதவும் பிறவும் என்னும் உம்மை எஞ்சி நின்றது. ஆயென்பது அவ்வென்னுஞ் சுட்டு நீண்டிசைத்தது. இருதிணையென்பது இரண்டு திணையின் கண்ணும் என்றவாறு. கண்ணென்னுமுருபும் உம்மும் தொக்கு நின்ற(ன). இசைக்குமன சொல் லென்பது ஒலிப்பன சொல்லாவன என்றவாறு. உலகத்துப் பொருளெல்லாவற்றினும் மக்களென்று சுட்டப்படும் பொருளை உயர்திணையென்று சொல்லுவர்; அவரல்லாத பொருளையும் பிறபொருளையும் அஃறிணை யென்று சொல்லுவர் ஆசிரியர். அவ்விரு திணையின் கண்ணு மொலிப்பன சொல்லாவன என்றவாறு. எனவே, உயர்திணைச் சொல், அஃறிணைச் சொல் எனச் சொல் இருவகையாமென்பது பெறுதும். அஃதேல், திணை யிடமாக, அத்திணைக்கட் பிறவற்றை யிசைத்தல் வேண்டுமெனின், ஒக்கும். அவ்விரு திணைக்கண்ணுமுளவாகிய பாலினையே சொற்களிசைப்பன வென்க. மேலெழுத்ததிகாரங் கூறி, இனிச் சொல்லதிகாரங் கூறுவார், சொல்லாவ தித்தன்மையதென அதனிலக்கணங் கூற வேண்டுதலின், இச்சூத்திரம் கூறப்பட்டது. அஃதற்றாக, தேவரை யறியுஞ்சொல் அஃறிணை யாகுமோ வெனின், அஃதாகாவாறு முன்னர்க் கூறப்படும். உயர் என நிற்பத் திணை யென வந்தசொல் எவ்வாறு வந்ததெனின், ஒரு சொன்முன் ஒரு சொல் வருங்கால், தொகைநிலை வகையான் வருதலும், தொகாநிலை வகையான் வருதலுமென இரண்டல்லதில்லை. அவற்றுள் தொகைநிலை வகையான் வந்தன; யானைக்கோடு, பொன்மேனி, கொல்யானை, கருங்குதிரை, உவாப்பதினான்கு, பொற்றொடி என்பன தொகாநிலை வகையான் வந்தன; சாத்தன் உண்டான், சாத்தனை வெட்டினான், உண்டான் சாத்தன், உண்டு வந்தான், நிலம் நீர் தீ வளி யாகாயம் என்பன. அவற்றுள் இது தொகைநிலை வகையான் வந்தது. தொகைதாம் பல : அவற்றுள் இஃதெத் தொகையான் வந்ததெனின் பண்புத் தொகையான் வந்த தென்க, மற்றுள்ள பொருளெல்லாவற்றினும் உயர் பொருளென விசேடித்து நின்றமையின். உயர்வான மென்றாற்போல வினைத்தொகை யாகாதோவெனின், ‘வினையின் றொகுதி காலத் தியலும்’ (எச்.18) என்றாராதலின் ஈண்டுக் காலம் தோன்றாமையின் ஆகாதென்(க). எற்றுக்கு? உயர்ந்த மக்கள், உயராநின்ற மக்கள், உயருமக்களென நல்வினை யேதுவாக மூன்று காலமும் கொண்டாலாகுமே யெனின், அவ்வாறு கருதுவார்க்கு வினைத்தொகையுமாம். உயர் பொருள் என்னாது திணையென்றது என்னை யெனின், அவ்வாறு ஆகல் வேண்டி ஆசிரியன் இட்டதொரு குறி யென்று கொள்க. என்மனார் என என்ப வென்னும் முற்றுச்சொல் திரிந்து நின்றது. குறைக்கும்வழிக் குறைத்தல் என்பதனான் பகாரம் குறைத்து, விரிக்கும் வழி விரித்தல் என்பதனான் மன்னும் ஆருமென இரண்டிடைச்சொற்பெய்து என்மனார் என்றாயிற்று எனப் பொருளுரைப்பவாலெனின், பகரங்குறைக்கின்றது செய்யுளின்பம் வேண்டியன்றே; ஆண்டுக் குறைத்த வழிப் பின்னும் இரண்டெழுத்து விரிக்கல் வேண்டுமாயிற் குறைத்த தனாற் பயனின்மையின் இவ்வாறு எழுதும் உரை குற்றமென்க. இஃது எதிர்காலச் சொல்லாயினும் இறந்தகாலம் குறித்து நின்றது; இறப்பும் எதிர்வும் மயங்கப் பெறுமாகலின். அஃது ஆசிரியரென்னும் பெயர்கொண்டு முடியும். ஈண்டு அப்பெயர் எஞ்சி நின்றது. மக்களென்னாது சுட்டென்ற தென்னையெனின், மக்களாவார் ஒரு நீர்மையரன்றி, ஆணும் பெண்ணும் அலியுமாகிய வடிவு வேற்றுமையுடையாராகலின், அவரெல்லார் மாட்டும் பொதுவாகக் கிடக்கும் மக்கட்டன்மையைக் குறித்து மக்களிவ ரென்னும் பொதுப்பொருண்மை உயர்திணையாவ தென்பதறிவித்தற்குச் சுட்டென்றார். அவரல்லாத அஃறிணை யென்னாது, பிறவென்ற தென்னை யெனின், மக்களல்லாத வென்ற வழி, உயிருடையனவற்றையே சுட்டுமென்றையுற்று உயிரில் பொருளும் அஃறிணை என்பதறிவித்தற்குப் பிறவென்றார். இசைக்குமன வென்பது செய்ம்மனவென்னும் தொழிற்பெயர். அது செய்யுமனவென விரிந்து நின்றது. அது சொல்லென்னும் பெயர்ப் பயனிலை கொண்டு முடிந்தது. இனி இச்சூத்திரத்திற்குப் பிறவாற்றானும் (பொருள் படுமெனக்) கடாவிடை யுள்ளுறுத் துரைப்பிற் பெருகும். (1) 2. ஆடூஉ வறிசொல் மகடூஉ வறிசொல் பல்லோ ரறியுஞ் சொல்லொடு சிவணி அம்முப் பாற்சொல் உயர்திணை யவ்வே. நிறுத்த முறையானே உயர்திணைச்சொற் பாகுபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்:- ஆடூஉ வறிசொல் லென்பது ஆண்மகனை யறியுஞ் சொல், எ-று. அறிவார்க்குக் கருவியாகிய சொல் அறி சொல்லாயிற்று. மகடூஉ வறிசொல் லென்பது பெண்டாட்டியை அறியுஞ்சொல், எ-று. பல்லோ ரறியுஞ் சொல்லொடு சிவணி என்பது பலரை யறியுஞ் சொல்லொடு கூடி, எ-று. அம்முப்பாற் சொல் உயர்திணையவ்வே என்பது அம்மூன்று கூற்றுச் சொல் உயர்திணையிடத்த எ-று. உயர்திணைப் பொருள்பற்றி வரும் பெயர்ச்சொல்லும் வினைச் சொல்லும் மூன்று பகுதிய என்றவாறாயிற்று. எற்றுக்கு? ஆண், பெண், அலி; ஆண்பன்மை, பெண்பன்மை, அலிப்பன்மை; இவரெல்லாரும் தொக்க பன்மையெனப் பலவகைப் படுமாலெனின், பொருள் நோக்கிக் கூறினாரல்லர்; சொல்முடிபு மூவகையென்று கூறினாரென்க. என்னை? அலிப்பன்மை மகடூஉ வறிசொல்லானும் கூறப்படுமாதலானும், ஆண் பன்மையும் பெண்பன்மையும் எல்லாரும் தொக்க பன்மையும் வந்தாரெனவே முடிதலானும், மூவகையாகி யடங்கிற்றென்க. பல்லோரறியுஞ் சொல் லென்னாது சிவணியென்றதனாற் பெற்ற தென்னை யெனின், ஒன்று, இரண்டு, பலவென வடமொழிப் புலவர் கூறியவாறு போலப் பாகுபடும் வழக்கின்மையின், ஒன்று பலவெனத் தமிழ்நடை இரண்டு பாலாம். அவற்றுள், உயர்திணை ஒருமை யாடூஉ வறிசொல், மகடூஉ வறிசொல் லென விருமுடிபுடைத்தாகலின், அச்சொற்கள் பலரறி சொல்லொடு கூடி மூன்று பாலாயின அல்லது, பாலுள்ளன இரண்டென்பது அறிவித்தற் கெனக் கொள்க. சிவணி என்பது வினையெச்சமன்று; ஒடுவின் பொருண்மை தோன்ற வந்தது, தாயொடுகூடி மூவர் என்றாற் போல. அம்முப்பாற் சொல்லும் என உம்மை கொடாதது என்னையெனின், பால் ஐந்துளவாதலிற் கொடாமையும் அமையும் என்க. (2) 3. ஒன்றறி சொல்லே பலவறி சொல்லென் றாயிரு பாற்சொல் லஃறிணை யவ்வே. அஃறிணைச் சொற் பாகுபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள். ஒன்றனையறியுஞ் சொல்லும், பலவற்றை யறியுஞ் சொல்லு மென அவ்விருகூற்றுச் சொல், அஃறிணையிடத்த, எ-று. அஃறிணைப் பொருண்மை, உயிர்ப்பொருள் உயிரில் பொருளெனவும்; உயிர்ப்பொருட்கண், ஆண், பெண் எனவும்; அவையெல்லாம் பொருள் தொறும் ஒருமையும் பன்மையு மாகியும் பலவகைப்படுமாலெனின், அவை யெல்லாம் ஒருமையாயின், வந்தது எனவும், பன்மையாயின், வந்தன எனவும் வழங்கப்படுதலிற் சொன்முடிபு நோக்கிக் கூறினாரென்க. அஃறிணைப் பொருள்பற்றிவரும் பெயர்ச் சொல்லும், வினைச் சொல்லும் இருபகுதியவாமென்றே கொள்ளப்படும். (3) 4. பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின் ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியும் தெய்வஞ் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும் இவ்வென வறியு மந்தந்தமக் கிலவே உயர்திணை மருங்கிற் பால்பிரிந் திசைக்கும். எஞ்சியது உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின் என்பது: பெண்மையைக் குறித்த உயர்திணைப் பெண் பிறப்பினுள். எ-று. ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியும் என்பது, ஆண்மைத் தன்மையிற்றிரிந்த பெயர்க்கண் நிற்குஞ் சொல்லும். எ-று. தெய்வஞ் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும் என்பது; தெய்வப் பொருண்மையைச் சுட்டிய பெயர்க்கண் நிற்குஞ் சொல்லும். எ-று. இவ்வென அறியும் அந்தம் தமக்கிலவே என்பது. இவையென அறிய நிற்கும் ஈற்றெழுத்தினைத் தமக்கென இல. எ-று. உயர்திணை மருங்கிற் பால் பிரிந் திசைக்கும் என்பது; உயர்திணை மருங்கிற் பாலாகிப் பிரிந்திசைக்கும். எ-று. ஆண்மை திரிந்த பெயராவது பேடி, அச்சத்தினாண்மையிற் றிரிந்தாரைப் பேடியென்ப வாகலான். ஈண்டு அப்பெயர் பெற்றது அலியென்று கொள்க. அலி மூவகைப்படும்; ஆணுறுப்பிற் குறைவின்றி ஆண்டன்மை யிழந்ததூஉம், பெண்ணுறுப்பிற் குறைவின்றிப் பெண்டன்மை யிழந்ததூஉம், பெண்பிறப்பிற் றோன்றிப் (பொருணாமத்திற்?)பெண்ணுறுப்பின்றித் தாடி தோற்றி ஆண்போலத் திரிவதூஉமென. அவற்றுட் பிற் கூறியது ஈண்டுப் பேடியெனப் பட்டது. அதன்கண் நிற்குஞ் சொல்லாவது வினைச் சொல். இப் பேடி யென்னுஞ் சொல்லொடு தொடரும் வினைச்சொல்லும், தெய்வப் பொருண்மை குறித்த பெயரொடு தொடரும் வினைச் சொல்லும், உயர்திணை யாண்பா லறிசொல்லானும், பலரறி சொல்லானும் ஒலிக்கும் என்றவாறாயிற்று. உதாரணம் முன்னர்க் காட்டுதும். தேவரும் மக்களும் விலங்குமாகிய கதிப் பொருண்மை கூறி நரககதிப் பொருண்மை கூறாததென்னையெனின், அக்கதி மேனிகழ்வதோர் வழக்கின்மையிற் கூறாராயினர். நரகன் வந்தான், நரகி வந்தாள், நரகர் வந்தார் என வழங்குபவாலெனின், அக்கதியுட் டோன்றுவார் ஆணும் பெண்ணு மாகிப் போகம் நுகர்வரென்னும் இலக்கணமின்மையான், மக்களிற் றூய்மை யில்லாதாரை யுலகத்தார் வழங்குமாறவையென்க. நரகர் துயருழப்பர் என அக்கதிமேற் றோற்றுவார் (தம்) மேலும் வருமாலெனின், அவ்வாறு வருவன பால் கூறப்படுதலின்றி ஆணும் பெண்ணும் வரையறுக்கப்படாத பொருளை உயிர்த் தன்மையைக் குறித்து உயர்திணைப் பன்மையான் வழங்கினா ரென்க. (4) 5. னஃகா னொற்றே யாடூஉ வறிச்சொல். நிறுத்த முறையானே ஆடூஉ வறிசொல்லாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள். னகாரமாகிய ஒற்றை அந்தமாகவுடைய சொல் ஆண்பாலுணர வருஞ்சொல், எ-று. ஏகாரம் ஈற்றசை. அந்தம் என்பது மேலைச் சூத்திரத் தினின்றுந் தந்துரைக்கப்பட்டது. இவ்வுரை வருகின்ற சூத்திரங்கட்கும் ஒக்கும். உ-ம்:- உண்டான், உண்ணாநின்றான், உண்பான் இவை வினைச்சொல். கரியன், நெடியன் இவை வினைக்குறிப்பு. பாண்டியன், மாயவன் இவை பெயர். அஃதேல் வினையியலுள்ளும், “அன் ஆன் அள் ஆள் என்னும் நான்கும் - ஒருவர் மருங்கிற் படர்க்கைச் சொல்லே’’ (வினை சூ.8) என ஓதுகின்றாராகலின், ஈண்டுக் கூறுதற்குக் காரணம் என்னை யெனின், “வினையிற் றோன்றும் பாலறி கிளவியும், பெயரிற் றோன்றும் பாலறி கிளவியும், மயங்கல் கூடா” (சூ. 11) என வழூஉக் காக்கின்றாராகலின், அவை வழுவாமற் கூறுங்கால், அச்சொற்களின் இயல்பு அறிய வேண்டுமன்றே, அதற்காக ஈண்டுத் தோற்றுவாய் செய்தாரென்க. ஆண்மைப் பொருண்மைக்கண் வரும் பெயர்ச்சொற்கும் வினைச்சொற்கும் ஈற்றெழுத்துப் பலவுளவாயினும் அவையெல்லாம் கூறாது, னகரவொற் றொன்றனையுங் கூறினமையானும் தோற்றுவாய் செய்தவாறுணர்க. இவ்வுரை முன்வருகின்றவற்றிற்கும் ஒக்கும். (5) 6. ளஃகா னொற்றே மகடூஉ வறிசொல். மகடூஉ வறிசொல் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ளகாரமாகிய ஒற்றை அந்தமாகவுடைய சொல் பெண்பால் உணரவருஞ் சொல். எ-று. ஏகாரம் ஈற்றசை. உ-ம்:- உண்டாள், உண்ணாநின்றாள், உண்பாள்; இவை வினை. கரியள், குறியள் இவை வினைக்குறிப்பு. அவள், திருவினாள்; இவை பெயர். (6) 7. ரஃகா னொற்றும் பகர விறுதியும் மாரைக் கிளவி 2யுளப்பட மூன்றும் நேரத் தோன்றும் பலரறி சொல்லே. பலரறி சொல் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்:-- ரகாரம் ஆகிய ஒற்றும், பகாரம் ஆகிய உயிர்மெய் யிறுதியும், மார் என்னுஞ் சொல் உளப்பட இம்மூன்றும் பொருந்தப் பலரறிசொல் தோன்றும். எ-று. மூன்றும் பொருந்த என்றாராயினும் பால் காட்டுவது தனித்தனியென்று கொள்க. பகரம் என்னாது இறுதி யென்றது, பகரம் ஒற்றாகவரின் மொழிக்கு ஈறாகாமையின் உயிரீறு என்பது தோற்றுதற்கு. ‘3கானந் தகைப்ப செலவு’ 4எனப் பகரம் அஃறிணைக்கும் உரித்தாகலின் உயர்திணைக்கே யுரித்தாமாறு என்னை யெனின், அஃறிணைக்கண் ஓதுகின்ற அகரம் எல்லாப் புள்ளியினும் ஏறி முடிதலின் ஆண்டு அகர ஈறாகி வந்தது. ஈண்டுப் பகர ஒற்றின் மேல் அல்லது வாராமையிற் பகரம் என வேறுபட்டு நின்றது. மார் என்பது ரகரத்துள் அடங்காதோ வெனின், வினைக்கண் ஏனைய போல முற்றிநில்லாது எச்சம் போல வருதலானும், பெயர்க்கண் ஆர் ஈறாகி வருமிடத்துப் பன்மை யுணர்த்தாத சொற்கள் மார் ஈறாகி வர வேண்டுதலானும் வேறுபடுத்தோதப் பட்டதென்க. உ-ம்:- உண்டனர், உண்ணாநின்றனர், உண்பர், உண்ப, ஆ கொண்மார் வந்தார்; இவை வினை. கரியர், நெடியர்; இவை வினைக்குறிப்பு. அவர், இவர், நம்பியர், நங்கையர், தாய்மார், தந்தைமார்; இவை பெயர். 5பகர இறுதி அஃறிணைப் பெயராயல்லது வாராது. (7) 8. ஒன்றறி கிளவி தறட வூர்ந்த குன்றிய லுகரத் திறுதி யாகும். அஃறிணை யொருமை யுணரவருஞ் சொல் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்:- த, ற, டக்களை யூர்ந்த குற்றுகரத்தினை ஈறாகவுடையன ஒன்றனை அறியுஞ் சொற்களாம். எ-று. உ-ம்: உண்டது, உண்ணாநின்றது, உண்பது, கூயிற்று உண்டு; இவை வினை. கரிது,கோடின்று, குண்டுகட்டு; இவை வினைக்குறிப்பு. அது, ஒன்று, இரண்டு; இவை பெயர். (8) 9. அஆ வஎன வரூஉ மிறுதி அப்பான் மூன்றே பலவறி சொல்லே. பலவறிசொல் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்:- பலவற்றை யுணரவருஞ் சொல் அ,ஆ என்னும் உயிரெழுத் தினையும், வ என்னும் உயிர்மெய்யெழுத்தினையும் ஈறாக வுடைய அக்கூற்று மூன்று. எ-று. உ-ம்:- உண்டன, உண்ணாநின்றன, உண்பன, உண்ணா, உண்குவ; இவை வினை. கரிய, நெடிய; இவை வினைக்குறிப்பு. பல, சில, யா, வருவ; இவை பெயர். வ என்பது அகரத்துள் அடங்காதோ எனின், அடங்காது. என்னை? உண் என்னும் தொழிற்சொல் இறந்தகாலங் குறித்துழி உண்டு எனவும், நிகழ்காலங் குறித்துழி உண்கின்று எனவும், எதிர்காலங் குறித்துழி உண்பு எனவும் நின்று, அன், அள், அர், அது, அ என்னும் பால் உணர்த்தும் எழுத்தொடு கூடிப் புணருழி, அன் சாரியை மிக்கும், இயல்பாகியும் இறந்த காலத்துக்கண் உண்டனன், உண்டனள், உண்டனர், உண்டது, உண்டன, உண்ட எனவும்; நிகழ்காலத்துக்கண் உண்கின்றனன், உண்கின்றனள், உண்கின்றனர், உண்கின்றது, உண்கின்றன எனவும்; எதிர் காலத்துக்கண் உண்பன், உண்பள், உண்பர், உண்பது, உண்பன எனவும் வரும். உண்கு என நின்ற எதிர்காலச் சொல் பன்மை யுணர்த்தும் அகரம் ஏறியவழி உண்க என வியங்கோட் பொருண்மைப் படும் ஆகலின், ஆங்கு உண்குவ என வகர வுயிர்மெய் கொடுக்க வேண்டுதலின் வகரமென வோதல் வேண்டுமென்க. (9) 10. இருதிணை மருங்கின் ஐம்பா லறிய ஈற்றுநின் றிசைக்கும் பதினோ ரெழுத்தும் தோற்றந் தாமே வினையொடு வருமே. மேல், பாலுணர்த்தப்பட்ட எழுத்திற்கெல்லாம் உரியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இரண்டு திணைக்கண்ணும் ஐந்து பாலும் விளங்க இறுதிக்கண் நின்று ஒலிக்கும் பதினோரெழுத்தும் தாந்தோற்றமாக வினையொடு வரும். எ-று. தோற்றமாக என்பது பெரிதாக என்பது குறித்து நின்றது. எனவே, பெயரொடு வருகை சிறுவரவிற்று என்று கொள்ளப் படும்; ஆடூஉ, மகடூஉ, மக்கள், மரம், அவை எனப் பெயர்க்கட் பிறவாற்றானும் வரும் ஆதலின். உதாரணம் மேற்காட்டப்பட்டன. (10) 11. வினையிற் றோன்றும் பாலறி கிளவியும் பெயரிற் றோன்றும் பாலறி கிளவியும் மயங்கல் கூடா தம்மர பினவே. வழுப்படாமற் கூறுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இவ்வோத்தினுட் செப்பும் வினாவும் வழுவாமற் கூறுதல் பயனாதலின், அவை வழுவாமற் கூறுங்கால் வினையிற் றோன்றும் பாலறி சொல்லும், பெயரிற்றோன்றும் பாலறி சொல்லும் தம்முள் மயங்குதல் பொருந்தா; தத்தம் மரபினை யுடைய வாதலான். எ-று. ஆதலால் என்பது எஞ்சிநின்றது. பெயர் என்றதனால் தன் பொருண்மையாகிய திணை பெறுதும். பாலறிசொல் என்றதனாற் பால் பெறுதும். வினை யென்றதனால் அதற்கு இன்றியமையாத காலமும் இடனும் பெறுதும். தம்மரபின என்றதனால் மரபு பெறுதும். மயங்கல் கூடா என்றதனால் வழூஉப்படுதல் குற்றமென்பது பெறுதும். திரிபின்றிப் பால் உணர்த்துவது வினையாதலிற் சிறப்பு நோக்கி முற்கூறினார். அன்றியும் மேனின்ற சூத்திரம் வினை யதிகாரப் பட்டு வருதலின் அதனொடு சேரவைத்தார் எனினும் அமையும். உ-ம்: அவன் நெருநல் உண்டான் என்பது. இதனுள் அவன் என்னும் உயர்திணைப் பெயர் உயர்திணைவினை கொண்டு முடிதலின், திணை வழுவாதாயிற்று. ஆடூஉப் பெயர் ஆடூஉவினை கொண்டு முடிதலிற் பால் வழுவாதாயிற்று. படர்க்கைப் பெயரொடு படர்க்கைவினை முடிதலின் இடம் வழுவாதாயிற்று. நெருநலென்னும் இறந்தகாலப் பெயரோடு இறந்தகால வினை முடிதலின் காலம் வழுவாதாயிற்று. உண்டற்றொழிற்கு உரியானை உண்டான் என்றமையான் மரபு வழுவாதாயிற்று. பிறவு மன்ன. இனி, வழுவாமாறு :- உயர்திணை மூன்று பாலும் அஃறிணை யிரண்டு பாலொடு மயங்குதல் திணை வழுவாம். அவை தம்முட்டாம் மயங்குதல் பால் வழுவாம். தன்மை, முன்னிலை, படர்க்கையென்னும் மூன்றிடமும் ஒன்றோடொன்று மயங்குதல் இட வழுவாம். இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்னும் மூன்று காலமும் தம்முண்மயங்குதல் கால வழுவாம். எல்லாப் பொருளையும் பயின்ற மரபினாற் கூறாதது மரபு வழுவாம். உ-ம்: அவன் உண்டது : திணை வழூஉ. அவன் உண்டனள் : பால் வழூஉ. நீ யுண்டனன் : இட வழூஉ. நாளை உண்டேன் : கால வழூஉ. அவன் மேய்ந்தான் : மரபு வழூஉ. பிறவுமன்ன. திணை வழூஉப் பன்னிரண்டு. பால் வழூஉ எட்டு. இடவழூஉ ஆறு. காலவழூஉ ஆறு. மரபுவழூஉ வரம்பில. (11) 12. ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி யாண்மை யறிசொற் காகிட னின்றே. ஐயம் அறுத்தலை நுதலிற்று. (இ-ள்.) மேல், உயர்திணை மருங்கிற் பால்பிரிந் திசைக்கும் (சூ.4) என்று ஓதப்பட்ட பேடி யென்னும் பெயர்க்கண் நிற்கும் சொல் ஆண்மை யறிசொற்கு ஆகும் இடன் இலது. எ-று. எனவே பெண்மையறிசொற்கு ஆகும் என்றவாறாம். (எ-டு.) ‘பெண்ணவா யாணிழந்த பேடி யணியாளோ- கண்ணவாத் தக்க கலம் ‘ (நாலடி. 251) என வரும். ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி பெண்மை யறிசொற்கு ஆகும் என்னாது, ஆண்மை யறிசொற்கு ஆகுமிடமின்று என எதிர்மறை வாய்பாட்டாற் கூறினமையாற் சிறுபான்மை ஆடூஉ வறிசொல்லால் வருவன உளவேற் கொள்க. இச்சூத்திரம் ‘ பெண்மை சுட்டிய’ என்னுஞ் சூத்திரத்தின் (சூ.4) பின் வையாது ஈண்டுக் கூறியது என்னையெனின், பெயரும் வினையும் மயங்காமற் கூறுக என்றாராகலிற் பேடி யென்பது இவ்வாறு சொல்லத் தகும் என இறந்தது காத்து ஈண்டு ஓதப்பட்டது. (12) 13. செப்பும் வினாவும் வழாஅ லோம்பல் இதுவும் வழுப்படாமற் கூறுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) செப்பினையும் வினாவினையும் வழுவாமற் கூறுக. எ-று. உலகத்துப் பொருளுணர்த்துஞ் சொல்லெல்லாம் வினாவுஞ் செப்பும் ஆகிய பொருண்மேல் நிகழ்தலின், அவை வழுவாமற் கூறல் வேண்டும் என்றவாறாயிற்று. எனவே வழு எழுவகையாம் என்பது பெற்றாம். செப்பு வருமாறு :- அச்செப்பு நான்கு வகைப்படும்: துணிந்து கூறல், கூறிட்டு மொழிதல், வினாவி விடுத்தல், வாய் வாளாதிருத்தல் என. துணிந்து கூறலாவது, தோன்றியது கெடுமோ என்றவழி, கெடும் என்றல். கூறிட்டு மொழிதலாவது:- செத்தவன் பிறப்பானோ என்றவழி, பற்றறத் துறந்தானோ, பிறனோ என்றல். வினாவி விடுத்தல் என்பது: முட்டை மூத்ததோ பனை மூத்ததோ என்ற வழி, எம் முட்டைக்கு எப்பனை என்றல். வாய் வாளாமை யாவது:- ஆகாயப்பூ நன்றோ தீதோ என்றார்க்கு உரையாடாமை. (மணி.30 : 235-249) இனி, அவற்றுள் வினா வழுவாவது வினாவிய சொல்லாற் பயனின்றி நிற்பது. அஃது ஒருவிரல் காட்டி நெடிதோ குறிதோ என்றலும், ஆகாயப்பூ நன்றோ தீதோ என்றலும். செப்பு வழுவாவது:- துணிந்து கூறும்வழித் தோன்றியது கெடுமோ என்றார்க்குக் கெடாதென்றலும், ஒலி செவிக்குப் புலனன்று என்றலும், என் தாய் மலடி என்றலும், பிறவும் இந்நிகரனவும். இனிக் கூறிட்டு மொழிய வேண்டும் வழியும், வினாவி விடுக்க வேண்டும் வழியும், வாளாதிருக்க வேண்டும் வழியும் துணிந்து கூறின் வழுவாம். (வினாவின்றியும் வருதலிற் செப்பு முற்கூறப்பட்டது. அது யான் குமரியாடிப் போந்தேன், ஒரு பிடி சோறு தம்மின் எனவரும்). (இ.ஏ.) (13) 14. வினாவுஞ் செப்பே வினாவெதிர் வரினே. செப்பின்கட் கிடந்ததோர் வழுவமைத்தலை நுதலிற்று. (இ-ள்.) வினாவும் செப்பாம் நிலையைப் பெறும், வினாவப் பட்ட சொற்றன்னானே யெதிர்த்து வருமாயின். எ-று. (உ-ம்):- சாத்தா உண்ணாயோ என வினாயவழி, உண்ணேனோ என்பது உண்ணேன், உண்பல் எனச் செப்பாது உண்பன் என்னும் பொருள்படச் செப்பினமையான் வழுவமைதி யாயிற்று. (14) 15. செப்பே வழீஇயினும் வரைநிலை யின்றே அப்பொருள் புணர்ந்த கிளவி யான. இதுவுமது. (இ-ள்.) செப்பு வழீஇயினும் நீக்கப்படாது, அச் செப்புதற் பொருண்மையைப் பொருந்திய சொல்லின்கண். எ-று. ஏகாரம் சிறப்புப் பற்றி வந்தது, அதிகாரப் புறநடையாற் கொள்ளப் படும். உ-ம்: உண்ணாயோ சாத்தா என்றவழி, நீ யுண் எனவும், வயிறு குத்திற்று எனவும், வயிறு குத்தும் எனவும் இவ்வாறு வருவன. இவையும் உண்ணேன், உண்பல் என வாராமல் 7உண்ணே னென்னும் பொருள்பட வருதலின் வழுவமைதி யாயின. (15) 16. செப்பினும் வினாவினுஞ் சினைமுதற் கிளவிக்கு அப்பொரு ளாகும் உறழ்துணைப் பொருளே. செப்பின்கண்ணும் வினாவின் கண்ணும் உறழ்பொருட்கண் வரும் வழுக்காத்தலை நுதலிற்று. 8(இ-ள்.) சினையு முதலுமாகிய பொருளுணர்த்துஞ் சொற்குச் செப்பின் கண்ணும் வினாவின் கண்ணும் உறழப்படும் பொருள் அப்பொருளாகும். எ-று. துணை யென்பதுதிணை. முதலென்றதனாற் பண்புந் தொழிலுங் காலமு மிடனும் பொருளுங் கொள்க. சினைபற்றி யுறழ்தல் பெரும் பான்மையாகலான் முற்கூறப்பட்டது. அப்பொருளென்றது அவ்வப் பொருட்கு அவ்வப்பொருளே யுறழப்படுவது. எ-று. அவை யொருபொருட்கண்ணும் பிறபொருட்கண்ணும் ஒத்தன கொள்ளப்படும். அவை வினாவின்கண் வருமாறு:- வலமுலையோ இடமுலையோ பெரிதெனத் தன்பொருட்கண் வந்தது. இவள் முலையோ அவள் முலையோ பெரிதெனப் பிறபொருட்கண் வந்தது. இவை சினை. இந்நிறமோ அந்நிறமோ நல்லது: இது பண்பு. இந்நடையோ அந்நடையோ நல்லது: இது தொழில். 9இன்றோ நாளையோ வாழ்வு : இது காலம். இந் நிலமோ அந்நிலமோ விளைவது : இது இடம். இவளோ அவளோ கற்புடையாள்: இது பொருள். இனிச் செப்பு வருமாறு :- இம்முலையின் அம்முலை பெரிதென் றானும், ஒக்கு மென்றானும் வரும். பிறவு மன்ன. இனி அப் பொருளல்லாப் பிறிது பொருளோடு உறழ்தல் வருகின்ற சூத்திரத்தான் அமைக்கப்படும். (16) 17. தகுதியும் வழக்கும் தழீஇயின வொழுகும் பகுதிக் கிளவி வரைநிலை யிலவே. மேற்சொல்லப்பட்ட உறழ்பொருட்கண் வரும் வழு வமைத்தல் நுதலிற்று. (இ-ள்) சினை முதலாகிய பொருள்களை அவ்வப் பொருளோடு உறழ்தலே யன்றித் தகுதியையும் வழக்கினையுந் தழுவினவாய் நடக்கும் ஒரு கூற்றுச் சொல் விலக்கும் நிலைமையில. எ-று. சினைமுதற்கிளவியும், உறழ்பொருளும் அதிகாரத்தான் வந்தன. தகுதியாவது இதற்கிது தகுமோவெனப் பண்பினானாதல் தொழிலினானாதல் உறழநிற்பது. வழக்காவது ஒப்புமையின்றி உலகத்தார் பயில வழங்கப்படுவது. அவற்றுள் தகுதிபற்றி வந்த வினா :- இந்நங்கை கண் நல்லவோ இக்கயல் நல்லவோ என வருவது : இது பண்பு. இம்முகிலோ இவன் கையோ கொடுக்க வல்லது : இது தொழில். செப்பு வருமாறு :- கயலிற் கண் நல்ல என்றானும், ஒக்கும் என்றானும் உரைப்பது. இனி, வழக்குப்பற்றி வினா வருமாறு :- கரிதோ வெளிதோ: இருப் பேனோ போவேனோ; ஊரோ காடோ; பகலோ இரவோ; எனவும், ‘தேவராய் வாழ்தல் நன்றோ, நரகத்துள் உறைதல் நன்றோ’எனவும், பிறவும் இவ்வாறு ஒன்றினொன்று பொருத்தமின்றி உலக வழக்கின்கண் வருவன கொள்க. செப்பு வருமாறு:- கரிதன்று வெளிதென்றானும் வெளி தன்று கரிதென்றானும் இவ்வாறே பிறவாற்றானும் உரைப்பன. இவை மேற்சொல்லப்பட்ட இலக்கணத்தின் வழுவுதலின் அமைதி யாயிற்று. (17) 18. இனச்சுட் டில்லாப் பண்புகொள் பெயர்க்கொடை வழக்கா றல்ல செய்யு ளாறே. உலகத்துப் பொருளெல்லாம் இனச்சுட்டுடையவும், இனச்சுட்டில்லவுமென இருவகைப்படும். அவற்றுள் இனச் சுட்டுடையன உறழ்ச்சி வகையுள் அடங்குதலின், இனச்சுட்டில்லாத பொருண்மேற் செப்பு வழீஇ யமையுமா றுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஒரு பொருட்கு இனச்சுட்டில்லாத பண்புகொள் பெயரைக் கொடுத்தல் வழக்குநெறியல்ல; செய்யுள் நெறி. எ-று. ‘பொருட்கு’ என்னும் வேற்றுமையேற்ற பெயர் எஞ்சி நின்றது. அல்ல வென்பது வழக்குப்பன்மை குறித்து வந்தது. செய்யுணெறி யென அமையும்; வழக்குநெறியல்ல வெனல் வேண்டாவெனின், நன்கு 10மறுத்தற்குக் கூறினா ரென்க. இனச்சுட்டில்லாத பொருளாவன.-ஞாயிறு, திங்கள், தீ யென்பன. அவை ‘11மாக்கட னிவந்தெழு செஞ்ஞாயிற்றுக் கவினை’ (புறம். 4) எனவும், ‘நெடுவெண்டிங்களு மூர்கொண் டன்றே’ (அகம்.2) எனவும், ‘வெவ்வெரி கொளீஇ’ எனவும் வரும். இவை வழக்கின்கண்வரின் கருஞாயிறும், கருந்திங்களும், தண்ணெரியும் உளபோலத் தோன்றும்; ஆயினும் செய்யுட்கண் அமையும் என்றவாறு. செம்போத்து என வழக்கின்கண் இனஞ்சுட்டாது வந்ததாலெனின், அப்பொருட்கு அது பெயரென்க. பெருவண்ணான், பெருங்கொல்லன் என வழக்கின் கண் இனஞ்சுட்டாது வந்ததாலெனின், பண்பாவது தமக்குள்ள தோரியல்பு: ஈண்டப் பெருமையியல்பின்மையான், அஃது உயர்த்துச் சொல்லுதற்கண் வந்ததென்க. பண்புகொள் பெயர் என்று விசேடித்தமையான், ஏனைப் பெயர்கள் இருவகை வழக்கினும் இனஞ்சுட்டாது வரப்பெறுமெனக் கொள்க. (18) 19. இயற்கைப் பொருளை யிற்றெனக் கிளத்தல். உலகத்துப் பொருளெல்லாம் இயற்கைப் பொருள், செயற்கைப் பொருள் என அடங்குதலின், அவற்றுள் இயற்கைப் பொருண்மேற் செப்பு நிகழுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இயற்கைப் பொருளென்பது காரணப் பொருள், அதனை இத்தன்மைத்து எனச் சொல்லுக. எ-று. அவை நிலம் நீர் தீ வளி ஆகாயம் உயிர் என்பன. அவற்றை நிலம் வலிது, நீர் தண்ணிது, தீ வெய்து, வளியுளரும், ஆகாயம் நிற்கும், உயிர் உணரும் எனக் கூறுக. நிலம் வலியதாயிற்று எனக் கூறலாகாது. என்னை? ஆக்கங் கொடுப்பின் அதற்கு இயல்பு பிறிதாவான் செல்லு மாகலின் வழுவாம். (19) 20. செயற்கைப் பொருளை யாக்கமொடு கூறல். செயற்கைப் பொருண்மேற் செப்பு நிகழுமாறுணர்த்துதல் நுதலிற்று (இ-ள்.) செயற்கைப் பொருளாவது காரியப் பொருள் : அதனை ஆக்கச் சொல்லொடு படுத்துக் (சொல்லொடடுத்து. இ.ஏ.) கூறுக. எ-று. செயற்கையாய்த் தம்மியல்பின் வேறுபடுவன வெல்லாம் செயற்கைப் பொருளென்று கொள்க. உ-ம்: மண் குடமாயிற்று, நூல் ஆடையாயிற்று, மரங் கதவாயிற்று எனவும்; பைங்கூழ் நல்லவாயின, மயிர் நல்லவாயின எனவும் வரும். அஃதேல், பைங்கூழ் நல்ல, மயிர் நல்ல என ஆக்க மின்றியும் வருமால் எனின், அவை யக்காலத்தியற்கை பற்றிக் கூறப்பட்டன; முன்பு நின்ற நிலைகண்டு கூறப்பட்டன அல்ல வென்க. அதனானேயன்றே வருகின்ற சூத்திரங் கூறவேண்டியது. (20) 21. ஆக்கந் தானே காரண முதற்றே. மேலதற்கோர் புறநடை யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற்சொல்லப்பட்ட ஆக்கக் கிளவி காரணத்தை முதலாக வுடைத்து, எ-று. செயற்கைப் பொருளெல்லாம் ஆக்கங்கொடுத்துக் கூறப் படா (கூறப்பட்ட. இ.ஏ.) காரணமுள் வழியே ஆக்கங் கொடுப்ப தென்றவாறாயிற்று. (21) 22. ஆக்கக் கிளவி காரண மின்றியும் போக்கின் றென்ப வழக்கி னுள்ளே. மேலதற்கோர் புறநடை யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஆக்கச் சொல் காரணமின்றியும் வரும் வழக்கினுள், எ-று. எனவே, செய்யுளகத்து வரப்பெறா என்றவாறாம். போக்கின் றென்பது போகுதலின்று (போக்குதல் இல்லை இ.ஏ.) என்றவாறு. எனவே வரும் என்று பொருளாயிற்று. உம்மை இறந்தது தழீஇயிற்று. ஆடை நன்றாயிருந்தது, மணி நன்றாயிருந்தது என நன்றாதற்குக் காரணங் குறியாது வந்தன. பைங்கூழ் நல்லவாயின வென இடமுங் காலமும் இனமுஞ் சுட்டாது கண்டகாலத் தியற்கைபற்றி வரும் வழக்குக் கொள்க. (22) 23. பான்மயக் குற்ற வையக் கிளவி தானறி பொருள்வயிற் பன்மை கூறல். மேற் சொல்லப்பட்ட இருவகைப் பொருட்கண்ணும் ஐயக்கிளவி உணர்த்துகின்றாராகலின், இச்சூத்திரம் அதன் பகுதி யாகிய பால் ஐயம், திணை ஐயம் என்னும் இரண்டனுள்ளும் பால் ஐயம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தானறிந்த பொருட்கட் பான்மயக்குற்ற ஐயப் பொருண்மையைப் (பொருண்மையைப் பன்மை. இ.ஏ.) பன்மையாற் கூறுக. எ-று. தானறிபொருள் என்றமையான் திணையறிந்து பால் அறியாதவழி என்பது பெறப்பட்டது. பால் ஐயம் பெரு வழக்கிற்று ஆதலின் முற்கூறப்பட்டது. சேய்மைக்கட் டோன்றுவ தோர் மக்கட்பிழம்பு கண்டு, ஒருவன் கொல்லோ ஒருத்தி கொல்லோ என ஐயுற்றான் அதனைத் தோன்றுவான் எனவும் ஆகாது, தோன்றுவாள் எனவும் ஆகாது, ஆயிடைத் தோன்றுவார் என்க. பைங்கூழ் அழிவு கண்டான் ஒன்றுகொல்லோ பல கொல்லோ செய்புக்கன என்க. (23) 24. உருபென மொழியினும் அஃறிணைப் பிரிப்பினும் இருவீற்று முரித்தே சுட்டுங் காலை. திணை ஐயத்தின்கண் சொல் நிகழுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உயர்திணை அஃறிணை யென்னும் இரண்டு வேறு பாட்டினையுஞ் சுட்டி ஐயப்படுங் காலத்து, உருபெனச் சொல்லினு முரித்து. அஃறிணை ஒருமையாற் கூறலு முரித்து அப்பொருள். எ-று. தானறி பொருள் என்றமையானும், ஈண்டு இருவீற்று மென்றமையானும் திணை ஐயம் என்பது பெற்றாம். ஐயம் என்பது அதிகாரத்தான் வந்தது. இருவீற்று முரித்து என்பதனை உரித்திரு வீற்றும் என்று மொழி மாற்றுக. அஃறிணைப் பிரிப்பென்றதனால் பொதுமையிற் பிரிவது (பன்மையிற் பிரிவது: இ.ஏ) ஒருமை யாதலின் ஒருமைச் சொல்லாற் சொல்லினும் என்றாராகக் கொள்க. குற்றியோ மகனோ என ஐயுற்றுழி, குற்றியோ மகனோ தோன்றுகின்ற உருபு, தோன்றுகின்ற அது என்க. உருபு என்றதனான், அப்பொருள் பயக்கும் பிழம்பு, வடிவு, பிண்டம் என்பனவுங் கொள்க. (24) 25. தன்மை சுட்டலு முரித்தென மொழிப அன்மைக் கிளவி வேறிடத் தான. மேல் ஐயப்பட்ட பொருள் துணியப்பட்டவழிச் சொல் நிகழுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) துணியப்பட்ட பொருளின் வேறாகிய பொருட்கண் வரும் அன்மைக் கிளவி, துணியப்பட்ட பொருளைச் சுட்டலும் உரித்தென்று சொல்லுவர் புலவர். எ-று. தன்மை என்பதனான் அப்பொருட்கு இயல்பு என்பது பெற்றாம். பெறவே துணியப்பட்ட பொருளாயிற்று. வேறிடத்து அன்மைக் கிளவி தன்மை சுட்டலும் உரித்தெனக் கூட்டுக. உம்மை எதிர்மறை யாதலான் சுட்டாமை பெரும்பான்மை. உ-ம்: குற்றியல்லன் மகன்; மகன் அன்று குற்றி; பெண்டாட்டி அல்லன் ஆண்மகன்; ஆண்மகன் அல்லள் பெண்டாட்டி; ஒன்றல்ல பல; பலவன்று ஒன்று; இவை துணியப்பட்ட பொருளைச் சுட்டி வந்தன. குற்றியன்று மகன், மகன் அல்லன் குற்றி; பெண்டாட்டி யல்லள் ஆண் மகன்; ஆண் மகன் அல்லன் பெண்டாட்டி; ஒன்றன்று பல; பலவல்ல ஒன்று இவை துணியப்படாத பொருளைச் சுட்டி வந்தன. குற்றியல்லன் மகனே எனத் தேற்றேகாரங் கொடுத்துழி அன்மை துணியப்பட்ட பொருளைச் சுட்டின், குற்றி நின்று வற்றும் ஆதலால், அன்மைக்கிளவி அல்லாத பொருளைச் சுட்டுதல் ஆசிரியர் மதமென்று கொள்க. (25) 26. அடைசினை முதலென முறைமூன்று மயங்காமை நடைபெற் றியலும் வண்ணச் சினைச்சொல். ஒருசார் மரபு வழுக்காத்தலை நுதலிற்று. (இ-ள்.) வண்ணம் பெற்ற சினையையுடைய பெயர்ச்சொல் முற்பட அடையும், அதன்பின் சினையும் அதன்பின் முதலுமாகி அம்முறை மயங்காமை வழக்குப் பெற்றியலும். எ-று. வண்ணச் சினைச் சொல் மயங்காமை நடைபெற்றியலும் எனவே, வண்ண முதற்சொல் மயங்கியல்லது நடவா தென்றவாறாம். இதனாற் பெற்ற பொருள் என்னையெனின், பொருட்கு உளதாகிய பண்பும், சினையும், பொருளோடு அடுத்துக் கூறக் கருதுவானாயின், பொருண்மேற் செல்லாது சினைமேற் செல்லும் என்பது அறிவித்தற் கென்க. உ-ம்: செங்கால்நாரை: வண்ணம் சினைமேலேறி முதலொடு முடிந்தது. கருங்கோட்டியானை எனப் பண்பினை முதலோடு அடுத்துக் கூறக் கருதுவானாயின், கருமை யானையின் மேற்செல்லாது கோட்டின் மேற் செல்லுதலின் இம்முறை நடைபெறாததாயிற்று. 13வந்தது கொண்டு வாராதது முடித்தல் என்பதனான், வடிவு முதலாய பண்புங் கொள்ளப்படும். (எ-டு.) சிறுகண்யானை பிறவும் அன்ன. அடையென்று பொதுப்படக் கூறியவதனால் ஒரு பொருண்மே லடையிரண்டு வருதலுங் கொள்க. ‘கருநெடுங் கூந்தற் காரிகை’ என வரும். முறை மயங்காமை என்றதனால், மயங்குமாயின், குறித்த பொருண் மேற் செல்லா தென்க. உ-ம்: ‘பெருந்தலைப் புல்லார் நல்லா(ர்)’ என்றவழி, பெருந்தலை யென்பது புல்லொடு சார்ந்து வருதலிற் சொல்லுவான் குறிப்புள் ஒன்றாயினும் 14அதன்மேற் செல்லாதாயிற்று. ‘கவிசெந் தாழிக் குவிபுறத்திருந்த - செவிசெஞ் சேவலும்’ (புறம்.283) என முறை மயங்கி வந்ததால் எனின், ஆண்டுச் செஞ்செவி என்பது மொழி மாறி நின்ற தென்க. (26) 27. ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும் ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும் வழக்கி னாகிய வுயர்சொற் கிளவி இலக்கண மருங்கிற் சொல்லா றல்ல. ஒருசார் பால்வழுவும் திணைவழுவும் அமைத்தலை நுதலிற்று. (இ-ள்.) ஒருவரைச் சொல்லும் பன்மைச் சொல்லும் ஒன்றனைச் சொல்லும் பன்மைச் சொல்லும் இலக்கண மருங்கிற் சொல் நெறியல்ல, வழக்கின் ஆகிய உயர்சொற் கிளவி. எ-று. உயர் சொற் கிளவி - இருபெயரொட்டுப் பண்புத்தொகை. உ-ம்: அவர் வந்தார் என வரும். ஒருவனையும் ஒருத்தியையும் ஒன் றனையும் இவ்வாறு கூறுதல் வழுவாயினும், உயர்வுகுறித்துச் சொன்னமையான் அமைதியாயிற்று. ‘இயற் பெயர்முன்ன ராரைக் கிளவி - பலர்க்குரி யெழுத்தின் வினை யொடு முடிமே’ (இடையியல் 22) என்புழி யடங்காதோ எனின், ஆண்டு, நம்பி, நங்கை, சாத்தன் என்னும் பெயர் தானே பால் காட்டுதலான் அதன் மேல் ஓர் இடைச்சொல் லாயிற்று, ஈண்டுப் பன்மைச் சொற்றானே ஒருமைக்கு வருதலின் அடங்காதாயிற்றென்க. வந்தது கொண்டு வாராதது முடித்தல் என்பதனால், ஒரு பசுவை எம் அன்னை வந்தாள் எனவும், பெருங்கொல்லன், பெருவண்ணான் எனவும் வருவன(வுங்) கொள்க. (27) 28 15செலவினும் வரவினும் தரவினும் கொடையினும் நிலைபெறத் தோன்றும் அந்நாற் சொல்லும் தன்மை முன்னிலை படர்க்கை யென்னும் அம்மூ விடத்தும் உரிய வென்ப; அவற்றுள், தருசொல் வருசொல் ஆயிரு கிளவியும் தன்மை முன்னிலை யாயீ ரிடத்த; ஏனை யிரண்டும் ஏனை யிடத்த. ஒருசார் 16வினைச்சொற்கு இலக்கணம் உணர்த்தலை நுதலிற்று. (இ-ள்.) செலவு, வரவு, தரவு, கொடை யென்னும் தொழிற்கண் நிலைபெறத் தோன்றும் அந்நாற் சொல்லும் தன்மை முன்னிலை படர்க்கை யென்னும் அம்மூன்றிடத்தும் உரியவென்ப ஒருசாரார். அவற்றுள், தருசொல் வருசொல் ஆயிரு கிளவியும் தன்மை முன்னிலை யென்னும் இரண்டிடத்தினும் வரும்; ஏனையிரண்டும் படர்க்கைக்கண் வரும். எ-று. உ-ம் எனக்குத் தந்தது; எனக்கு வந்தது; நினக்குத் தந்தது; நினக்கு வந்தது; அவர்க்குச் சென்றது; அவர்க்குக் கொடுத்தது என வரும். இந்நான்கு சொல்லும் மூன்றிடத்தும் வரும் என்பார். உதாரணங் காட்டுமாறு:- எனக்குச் சென்றது; எனக்குக் கொடுத்தது; நினக்குச் சென்றது; நினக்குக் கொடுத்தது; அவர்க்குத் தந்தது; அவர்க்கு வந்தது எனக் காட்டுவர். இவற்றுள் கொடுவென்பதனை ‘கொடுவென் கிளவி படர்க்கை யாயினும்-தன்னைப் பிறன்போற் கூறுங்குறிப்பின்-தன்னிடத்தியலும் என்மனார் புலவர்’ (எச்.49) என எடுத்து வழுவமைக்கின்றார் ஆகலானும், பிறவும் இத்துணைச் சிறப்பில வாதலானும் இலக்கண வழக்கு மேற்காட்டப்பட்ட 17ஆறு தாரணமுமே. ஏனைய ஆறும் ஒருமுகத்தான் வழுவமைத்த வாறாகக் கொள்க. (28) 29. யாதெவ னென்னும் ஆயிரு கிளவியும் அறியாப் பொருள்வயிற் செறியத் தோன்றும். வினா வழுக் காத்தலை நுதலிற்று. (இ-ள்.) யாது எவன் என்று சொல்லப்பட்ட இரண்டு சொல்லும் அறியாத பொருட்கட் பொருந்தத் தோன்றும். எ-று. நின்னாடு யாது? இப்பண்டியுள்ளது எவன்? என வரும். ஏனைப்பால் உணர்த்தும் வினாச் சொற்களெல்லாம் கூறாது இவ் விரண்டினையும் வகுத்துக் கூறியது என்னை யெனின், ஆண்டு உளதோர் வழுவமைத்தற் பொருட்டென்க. (29) 30. அவற்றுள், யாதென வரூஉம் வினாவின் கிளவி அறிந்த பொருள்வயின் ஐயந் தீர்தற்குத் தெரிந்த கிளவி யாகலு முரித்தே. வினாவழு அமைத்தலை நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்டவற்றுள் யாது என்று சொல்லப்பட்ட அறியாத பொருண்மைக்கண் நிகழும் சொல், அறிந்த பொருட்கண் ஐயந்தீர்தற் பொருட்டு ஆராய்ந்த சொல்லாகலும் உரித்து. எ-று. உம்மை எச்சவும்மை ஆகலான், ஐயம் அறுத்தலே யன்றி அறிவொப்புக் காண்டற் பொருட்டும் வினாவப்படும் என்றுங் கொள்க. ஐயம் அறுத்தலாவது, இச்சொற்குப் பொருள் இஃது என உணர்ந்தான் ஒருதலையாகத் துணிதலாற்றாது, அஃதறிவான் ஒருவனை வினாதல். அறிவு ஒப்புக்காண்டலாவது, சொல் இலக்கணம் அறிவான் ஒருவன் அஃது அறிவான் ஒருவனை இதற்குப் பொருள் யாது என வினாதல். பிறவும் அன்ன. இவ்வாறு அறிந்த பொருளை வினாதல் வழுவாயினும் அமைக என்றவாறு. (30) 31. இனைத்தென வறிந்த சினைமுதற் கிளவி வினைப்படு தொகுதியின் உம்மை வேண்டும். ஒருசார் செப்பு வழுக் காத்தலை நுதலிற்று. (இ-ள்.) இத்துணையென வரையறுக்கப்பட்ட சினைக் கிளவியும், முதற் கிளவியும் தொழிற்படு தொகுதிக்கண் உம்மை பெறல் வேண்டும். எ-று. எனவே, தொழிற்படாத் தொகை இயல்பாகி வரப்பெறும் என்பது பெறுதும். உ-ம்: தேவர் முப்பத்து மூவரும் வந்தார், நங்கை முலையிரண்டும் நல்ல: இவை தொழிற்பட்ட தொகை. தேவர் முப்பத்து மூவர், ஆவிற்கு முலை நான்கு : இவை தொழிற்படாத் தொகை. “கடுவன் முதுமகன் கல்லா மூலற்கு-வதுவை வந்த வன்பறழ்க் குமரி-இருதோள் தோழர் பற்ற” என்புழி உம்மை வந்ததன்றால் எனின் ஆண்டு எஞ்சிநின்றது என்க. (31) 32. மன்னாப் பொருளும் அன்ன வியற்றே. இது மரபுவழுக் காக்கின்றது. (இ-ள்.) பொருந்தும் பொருளும் பொருந்தாப் பொருளும் உறழ வேண்டும் இடத்தும், பொருந்தும் பொருள் கூறுமிடத்தும் உம்மை கொடுத்துச் சொல்லவேண்டும். எ-று. வேதாகமத் துணிவு ஒருவர்க்கு உணர்த்துமிடத்து, உலகும், உயிரும், பரமும் அனாதி; பதியும், பசுவும், பாசமும் அனாதி என வரும். உலகும் உயிரும், பரமும் பசுவும் பொருந்தும் பொருள் ஆனவாறும்; பாசமும் பதியும் பொருந்தாத பொருள் ஆனவாறுங் காண்க. ‘உடம்பும் உயிரும் வாடியக் கண்ணும்’ எனவும், ‘நோயும் இன்பமும்’ எனவும் கூறியவாறுங் காண்க. மன்னிக் கழிகின்றேன் என்றான்:- மன்னுதல் பொருத்தமும் மன்னாமை பொருந்தாமையுமான வாறுங் காண்க. இரண்டாவது ஏட்டிற்காணும் உரை. இதுவுமது. (இ-ள்.) நிலையாத பொருள் உம்மை பெறல்வேண்டும், எ-று. அவையாவன இளமை, செல்வம், யாக்கை யென்பன. உ-ம்: சக்கரவர்த்தி இளமையும் நிலையாது. சக்கரவர்த்தி செல்வமும் நிலையாது. சக்கரவர்த்தி யாக்கையும் நிலையாது. “ஏமமாக இந்நில மாண்டோர் சிலரே,” “பெருங்கே ளினினாளும்-பலரே யத்தைஅஃதறியா தோரே-அன்னோர் செல்வமும் மன்னி நில்லா” என வரும். இல்லாப்பொருளென உரைப்பவாலெனின் இல்பொருள் வழக்கின்றென மறுக்க. உம்மை கொடாக்கால் வருங் குற்றம் என்னை யெனின், பிறரிளமையும் செல்வமும் யாக்கையும் நிற்குமெனப் பொருள்படு மாதலான் கொடுக்கவேண்டு மென்க. (32) 33. எப்பொரு ளாயினும் அல்ல தில்லெனின் அப்பொருள் அல்லாப் பிறிதுபொருள் கூறல். செப்பு வழுவமைதி உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) யாதானும் ஒருபொருளாயினும் அல்லது என்னும் சொல்லொடு கூட்டி இல்லை எனக் குறித்தான் ஆயின், அவன் வினாவிய பொருள் அல்லாத பிறிதாய பொருளைச் சொல்லுக. எ-று. எனவே, அதனொடு கூட்டிச் சொல்லுக என்றவாறாம். ‘அப்பொருள் அல்லாப் பிறிது’ என்றமையான் அதற்கு இனமாகிய பொருளே சொல்லப்படும். பயறு உளவோ வணிகீரே என்றார்க்கு உழுந்தல்லது இல்லை என்க. கொல்லவன் பட்டு உளவோ என்றால் கோசிகம் அல்லது இல்லை என்க. எனவே, அவன் கருத்திற்கேற்று வினாவிய பொருளை இல்லை என்னாது, பிறிது ஒன்று கூறுதல் வழுவாயினும், அப்பொருள் பயத்தலின் அமைதியாயிற்று. (33) 34. அப்பொருள் கூறின் சுட்டிக் கூறல். செப்பின்கண் வழுக்காத்தலை நுதலிற்று. (இ-ள்.) வினாவிய பொருளையே சொல்லி அல்லதில்லை யெனின், சுட்டிக் கூறுக. எ-று. இப்பயறு அல்லதில்லை; இப்பட்டு அல்லதில்லை என்க. எனவே அவன் கருத்திற்கேற்ற பயறும் பட்டும் இல என்றவாறாம். (34) 35. பொருளொடு புணராச் சுட்டுப்பெய ராயினும் பொருள்வேறு படாஅ தொன்றா கும்மே. செப்பு வழுவமைத்தலை நுதலிற்று; மேலதற்கோர் புறநடை எனினும் அமையும். (இ-ள்.) வினாவப்பட்ட பொருளொடு புணராச் சுட்டுப் பெயரைச் சொல்லினும், பொருள் வேறுபடாது ஒன்றாம். எ-று. இப்பயறல்லது இப்பட்டல்லது இல்லை 18என்னாது இவையல்லது இல்லை எனினும் பொருள் வேறுபடாவாறு கண்டு கொள்க. (35) 36. இயற்பெயர்க் கிளவியுஞ் சுட்டுப்பெயர்க் கிளவியும் வினைக்கொருங் கியலுங் காலந் தோன்றிற் சுட்டுப்பெயர்க் கிளவி முற்படக் கிளவார் இயற்பெயர் வழிய என்மனார் புலவர். ஒரு பொருண்மேற் பலபெயர் வருவழிச் செப்புவழுக் காத்தலை நுதலிற்று. (இ-ள்.) ஒரு பொருள்மேல் வரும் இயற்பெயர்ச் சொல்லும், சுட்டுப் பெயர்ச் சொல்லும் வினைகோடற்கு ஒருங்கு இயலுங்காலம் தோன்றின், சுட்டுப் பெயர்ச்சொல்லை முற்படச் சொல்லார்; இயற்பெயர் வழியவாகக் கூறப்படும் என்று சொல்லுவர் புலவர். எ-று. வழிய எனப் பன்மை கூறியது சுட்டுப்பெயர் பல ஆகலான். இயற் பெயராவன:- சாத்தன், கொற்றன், சாத்தி, கொற்றி என்பன. சுட்டுப் பெயராவன:- அவன், இவன், அவள், இவள் என்பன. இயற்பெயர் என்றாராயினும் வந்தது கொண்டு வாராதது முடித்தல் என்பதனான் ஒரு பொருட்குப் பெயராகிவரும் நிலப்பெயர் முதலாயினவுங் கொள்க. ஒருங்கு இயலுங் காலம் தோன்றின் என்றதனான், ஒருபெயர் ஒருவினையொடு முற்றி நில்லாது பல சொல்லொடு தொடருங் காலத்து இவ்வாறு வருவ தென்று கொள்க. சாத்தன்வந்தான் அவற்குச் சோறு கொடுக்க. சாத்தி வந்தாள் அவட்குப் பூக்கொடுக்க என வரும். பிறவும் அன்ன. சுட்டுப் பெயர் முற்கூறின் ஒரு பொருளாதல் தோன்றாதாம். (36) 37. முற்படக் கிளத்தல் செய்யுளுள் உரித்தே. எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தலை நுதலிற்று. (இ-ள்.) மேலைச் சூத்திரத்துப் பிற்படக் கூறப்படும் என்று சொல்லப்பட்ட சுட்டுப் பெயரை முற்படக் கூறுதல் செய்யுட்கண் ஆம். எ-று. அவனணங்கு நோய்செய்தான் 19ஆயிழாய் வேலன் விறன்மிகுதார்ச் சேந்தன்பேர் வாழ்த்தி-முகனமர்ந்20 தன்னை யலர்கடப்பந் தாரணியின் என்னைகொல் பின்னை யதன்கண் விழைவு. இதனுள் சேந்தன் என்பதூஉம், அவன் என்பதூஉம் ஒரு பொருள் ஆகியவாறும், சுட்டு முன் வந்துழியும் பொருள் வேறுபடாமையுங் கண்டு கொள்க. அஃது அற்றாக, சுட்டுப் பல ஆகலின் உரிய எனப் பன்மையிற் கூறாதது என்னை யெனின், ஈண்டு அகரச் சுட்டே வருதலின் ஒருமையாகக் கூறப்பட்டது. 21`வந்தது கொண்டு வராதது முடித்தல்’ என்பதனாற் கொள்க. ‘நாயுடைமுதுநீர்க் கலித்த’ என்னும் அகப்பாட்டினுள் (அகம்.16) கூர் எயிற்றரிவை குறுகினள், செத்தனள், கொண்டனள், நாணி நின்றோள், அணங்கருங் கடவுள் அன்னோள் என ஒரு பொருண்மேற் பல பெயர்(ச்)சுட்டிக் காலங் காட்டியவாறு காண்க. (37) 38. சுட்டுமுத லாகிய காரணக் கிளவியுஞ் சுட்டுப்பெய ரியற்கையிற் செறியத் தோன்றும். செப்பு வழுக்காத்தலை நுதலிற்று. (இ-ள்.) சுட்டெழுத்து முதலாகிய காரணச் சொல்லும், சுட்டுப்பெயர் இயற்கை போலப் பொருந்தத் தோன்றும், எ-று. என்றது பிற்படக் கூறப்படும். எ-று. உ-ம்: மழை பெய்தது, அதனால் யாறு பெருகும். பிறவும் அன்ன. இது, சுட்டுப் பெயருள் அடங்காதோ எனின், பொருளைச் சுட்டாது தொழிலைச் சுட்டுதலானும், காரணக் கிளவி கருவியாதலானும் வேறு ஓதப்பட்டது. (38) 39. சிறப்பின் ஆகிய பெயர்நிலைக் கிளவிக்கும் இயற்பெயர்க் கிளவி முற்படக் கிளவார். இதுவுமது. (இ-ள்.) மன்னர் முதலாயினாராற் பெற்ற சிறப்பினான் ஆகிய பெயர்ச் சொற்கும், உம்மையான் நிலப்பெயர் முதலாகிய பெயர்க்கும் இயற்பெயர்ச் சொல்லை முற்படக் கூறார் ஆசிரியர். எ-று. சிறப்பினான் வந்தன:- ஏனாதி, வாயிலான், படைத் தலைவன். அவை ஏனாதி நல்லுதடன், வாயிலான் சாத்தன், படைத்தலைவன் கீரன் என்பன. இக்காலத்து, உடையார், தேவர் என்பனவும் சிறப்பினான் ஆகிய பெயர். அருவாளன் சாத்தன், பாண்டியன் மாறன், முனிவன் அகத்தியன், ஆசிரியன் சாத்தன். பிறவும் அன்ன. (39) 40. ஒருபொருள் குறித்த வேறுபெயர்க் கிளவி தொழில்வேறு கிளப்பின் ஒன்றிடன் இலவே. இதுவுமது. (இ-ள்.) ஒரு பொருள் குறித்த வேறு வேறாகிய பெயர்ச்சொல் தொழிலைப் பெயர்தோறுங் கிளப்பின் ஒரு பொருளாகி ஒன்றும் இடன் இல. எ-று. எனவே, பல பெயர் அடுக்கி வரின் ஒரு வினையான் முடித்தல் வேண்டும் என்றவாறாம். ஆசிரியன் பேரூர்கிழான் செயிற்றியன் இளங்கண்ணன் சாத்தன் வந்தான் என வரும். ஆசிரியன் வந்தான், பேரூர்கிழான் வந்தான், செயிற்றியன், இளங்கண்ணன், சாத்தன் வந்தான் எனின் ஒரு பொருள் ஆதல் தோன்றாதாம். விழைந்துமுதிர் கொற்றத்து விறலோன் வாழி, கடற்கடம் பெறிந்த காவலன் வாழி, விடர்ச்சிலை பொறித்த வேந்தன் வாழி, பூந்தண் பொருநைப் பொறையன் வாழி, மாந்தரஞ் சேரல் மன்னவன் வாழி. (சிலம்பு. 23) என்றவழி, ஒருபொருள்குறித்த பெயர்தோறும் வினை வந்ததால் எனின், இச் சூத்திரத்தில் தொழில் வேறுகிளப்பின் என்பதற்கு மொழிந்த பொருளோடு ஒன்றவைத்தல்22 என்பதனான் வேறுவேறு வினை கிளப்பின் ஒன்றிடன் இல வெனப் பொருளுரைக்கப் பெயர்தோறும் ஒரு வினைவரின் ஒன்றும் என்பது பெற்றாம். அதனானே இவ்வாறு வருவன அமைத்துக் கொள்க. ‘ விழைந்து முதிர்கொற்றத்து விறலோன் வாழ்க. கடற்கடம் பெறிந்த காவலன் கெடுக ‘ எனின் வழுவாம். (40) 41. தன்மைச் சொல்லே அஃறிணைக் கிளவியென் றெண்ணுவழி மருங்கின் விரவுதல் வரையார். திணை வழு வமைத்தலை நுதலிற்று. (இ-ள்.) தன்மைப் பெயர்ச்சொல்லும் அஃறிணைப் பெயர்ச் சொல்லும் எண்ணுமிடத்தில் விரவுதல் நீக்கார். எ-று. (எ-டு.) ‘யானுமென் னெஃகமும் சாறும் அவனுடைய-யானைக்கும் சேனைக்கும் போர் என வரும். நீயும் நின்படைக் கலமுஞ் சாறீர். அவனும் அவன் படைக்கலமும் சாலும் என ஏனை யிடத்தும் வருமால் எனின், முன்னிலைவினை இருதிணைக்கும் பொதுவாகலினானும், படர்க்கை வினைக்கட் `செய்யும்’ என்னும் முற்றுச்சொல் இருதிணைக்கும் பொதுவாய் வருதலானும் அவை ஆண்டு அடங்குமென்க. (41) 42. ஒருமை யெண்ணின் பொதுப்பிரி பாற்சொல் ஒருமைக் கல்லது எண்ணுமுறை நில்லாது. உயர்திணைப் பொருண்மேல் எண்ணுமுறை நிகழுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஒருமை யெண்ணின் பொதுமையாகிய ஒருவர் என்னும் சொல்லினின்றும் பிரிந்த ஒருவன், ஒருத்தியென்னுஞ் சொல் அவ்வொருமைக் கல்லது எண்ணு முறைக்கண் ணோடாது. எ-று. எனவே, எண்ணுமுறைக்கண் ஆண்பாலாயினும் பெண் பாலாயினும் ஒருவர், இருவர், மூவர் என எண்ணினல்லது பால்தோன்ற எண்ணப்படாது என்றவாறாம். (42) 43. வியங்கோள் எண்ணுப்பெயர் திணைவிரவு வரையார். ஐயமறுத்தலை நுதலிற்று. என்னை? வினையியலுள் வியங்கோள் இருதிணைக்கும் பொது என்றாராயினும், எண்ணுங்கால் தனித்தனி எண்ணல் வேண்டுமோ, விரவி எண்ணல் வேண்டுமோ என்ன நின்ற ஐயம் நீக்குதலின். இது திணைவழு வமைதியுமாம். (இ-ள்.) வியங்கொள்ளும் எண்ணுப் பெயர் திணை விரவுதல் நீக்கார், எ-று. (43) உ-ம்: ஆவும் ஆயனுஞ் செல்க என வரும். 44. வேறுவினைப் பொதுச்சொல் ஒருவினை கிளவார். மரபு வழுக்காத்தலை நுதலிற்று. (இ-ள்.) பல வினையையுடைய பொதுப் பெயரை ஒரு வினையாற் கூறார் அறிவோர். எ-று. எனவே, பொதுவினையாற் கிளத்தல் வேண்டும், என்றவாறும் அது, இயம் என்பது கொட்டுவனவும் எறிவனவும் ஊதுவனவும் ஆம். அதனை இயம் கொட்டினார், ஊதினார், எறிந்தார் என்னற்க. பொதுவினையான் இயம்பினார் என்க. பிறவும் அன்ன. (44) 45 எண்ணுங் காலை யதுவதன் மரபே.23 மேலதற்கு எய்துவதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வேறு வேறு வினையையுடைய பொருளைப் பொதுப் பெயராற் கூறுதலன்றி எண்ணுமிடத்தும் அதன் மரபு பொது வினையாற் கிளத்தல். எ-று. உ-ம்; அம்பும், வேலும், தண்டும், வாளும் வழங்கினார் என்க. எறிந்தார் எய்தார் என ஒரு வினையாற் கிளவற்க. ‘ஊன்றுவை - கறிசோறுண்டு வருந்துதொழில் அல்லது பிறிதுதொழிலறியா வாகலின்’ (புறம். 14) என்றவழி உண்டு என ஒரு வினையான் வந்ததால் எனின், அது பொது வினை என்று கொள்க. என்னை? ‘உண்ணுநீர் வேட்டேன் என வந்தாற்கு’ (கலி. குறி. 15) எனவும், ‘பாலுமுண்ணாள் பழங்கண் கொண்டு’ (அகம். 48) எனவும், ‘கலைப்புற வல்குல் கழுகுகுடைந்துண்டு’ (மணி. 6, சக். 112) எனவும், ‘கள்ளுண்ணாப் போழ்தில்’ (குறள். 930) எனவும், ‘உண்ணாமை வேண்டும் புலாஅல்’ (குறள். 257) எனவும் வருதலின்.24 (45) 46. இரட்டைக் கிளவி இரட்டிற் பிரிந்திசையா. இது செப்பு வழுக்காத்தலை நுதலிற்று (இ-ள்.) இரட்டித்துச் சொல்லப்படும் சொற்கள் அவ்விரட்டித்தலிற் பிரிந்து ஒலியா. எ-று. உ-ம்: ஒன்றொன்றாக வந்தன. இரண்டிரண்டாக நீக்குக என வரும். இவை ஒன்றாக வந்தன, இரண்டாக நீக்குக என்ற வழிப் பொருண்மைப் படாமையான் பிரிந்தொலியா வாயின. (46) 47 25ஒருபெயர்ப் பொதுச்சொல் உள்பொருள் ஒழியத் தெரிபுவேறு கிளத்தல் தலைமையும் பன்மையும். மரபு வழுவமைத்தலை நுதலிற்று. (இ-ள்.) ஒரு பெயராகிப் பல பொருட்கும் உரித்தாகிய பொதுச் சொல்லை வகுத்துக் கூறுதல் தலைமையானும் பன்மை யானும். எ-று. எனவே, தலைமையும் பன்மையும் இல்வழி, பொதுச் சொல்லாற் கிளக்க என்றவாறாம். (எ-டு.) பார்ப்பார் வேதம் என்பது அரசர்க்கும் வணிகர்க்கும் பொதுவாயினும், பார்ப்பார் வேதம் எனத் தலைமைபற்றி வந்தது. எயினர் நாடு என்பது பிறவுங் குடி உளவாயினும் பன்மை பற்றி வந்தது. ஆ மேய்ப்பான் என்பதும் அது. இளமரக்கா என்பது தலைமையும் பன்மையும் இல்வழிப் பொதுவாய் வந்தது. பிறவும் அன்ன. (47) 48. உயர்திணை மருங்கினும் அஃறிணை மருங்கினும் பெயரினும் தொழிலினும் பிரிபவை யெல்லாம் மயங்கல் கூடா வழக்குவழிப் பட்டன. எண்ணின்கட் கிடந்ததோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று; வழுக்காத்ததுமாம். (இ-ள்.) உயர்திணைக் கண்ணும் அஃறிணைக் கண்ணும் பெயரானும் தொழிலானும் பொதுமையிற் பிரியும் பொரு ளெல்லாம் எண்ணுங்கால், தம்முள் மயங்குதல் கூடாத வழக்கு வழிப்பட்டன. எ-று. மரபல என்றவாறு; எனவே, இனஞ்சேர எண்ணல் வேண்டும் என்றவாறாயிற்று. எண்ணுங்கால் என்பது தந்துகொணர்ந் துரைத்தல் என்னும் தந்திர உத்தியால், வருகின்ற சூத்திரத்தி னின்றுங் கொணர்ந்துரைக்கப் பட்டது. உ-ம்: முனிவரும் அந்தணரும் சான்றோரும் எனவும், பாணருங் கூத்தரும் விறலியரும் எனவும், முத்தும் மணியும் பவளமும் பொன்னும் எனவும், மாவும் மருதும் புன்னையும் ஞாழலும் எனவும் எண்ணுக. இவை பெயர். எறிவாரும் எய்வாரும் வெட்டுவாரும் குத்துவாரும் எனவும், ஆடுவாரும் பாடுவாரும் நகுவாரும் எனவும், உண்பனவும் தின்பனவும் பருகுவனவும் நக்குவனவும் எனவும் எண்ணுக. இவை வினை. அஃதேல், ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித் தென்புல வாழ்நர்க்கு இருங்கடன் இறுக்கும் பொன்போற் புதல்வற் பெறாஅ தீரும் எம்அம்பு கடிவிடுதும் நும்மரண் சேர்மின் (புறம். 9) எனக் காட்டின் இதனுள் அடங்காதால்26 எனின், அவையும் உய்யத்தகுவார் இவரென்னும் இனங்குறித்து நின்றனவென்று கொள்க. பிறவும் அன்ன. (48) 49. பலவயி னானும் எண்ணுத்திணை விரவுப்பெயர் அஃறிணை முடிபின செய்யு ளுள்ளே. திணை வழுவமைத்தலை நுதலிற்று. (இ-ள்.) எண்ணின்கண், திணை விரவிவரும் பெயர், பெரும்பான்மை யும் அஃறிணை முடிபின செய்யுளுள். எ-று. எனவே, சிறுபான்மை உயர்திணையான் முடியவும் பெறுமென்று கொள்க. உ-ம்: கோலஞ்சி வாழுங் குடியுங் குடிதழீஇ ஆலம்வீழ்பு27 போலும் அமைச்சனும் - வேலின் கடைமணிபோற் றிண்ணியான் காப்புமிம் மூன்றும் படைவேந்தன் பற்று விடல். (திரி. 33) இது விரவி எண்ணி அஃறிணையான் முடிந்தது. அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்குந் திங்களுஞ் சான்றோரும் ஒப்பர் (நாலடி. 151) எனவும், பார்ப்பார் தவரே சுமந்தார் பிணிப்பட்டார் மூத்தார் இளையார் பசுப்பெண்டிர் என்றிவர்கட்கு ஆற்ற வழிவிலங்கி னாரே பிறப்பிடைக்கட் போற்றி எனப்படு வார். (ஆசாரக். 64) எனவும், இவை உயர்திணையான் முடிந்தன. யானையுங் குதிரையும் வீரரும் போர்க்களத்துப்பட்டன; அரசனும் படையும் பட்டன எனவும் வழக்கின்கண்ணும் வருமால் எனின், மொழிந்த பொருளோ டொன்றவைத்தல் என்னும் தந்திர உத்தியால் 28இச் சூத்திரத்திற்குப் பலவயினானும் அஃறிணை முடிபின செய்யுளுள் என்றமையான், சிலவயினான வழக்கினுள்ளும் விரவி வந்து தலைமையும் பன்மையும் பற்றி வந்த அஃறிணையான் முடியவும் பெறுமென்று கொள்க. (49) 50. வினைவேறு படூஉம் பலபொருளொ ருசொல் வினைவேறு படாஅப் பலபொரு ளொருசொலென்று றாயிரு வகைய பலபொருளொ ருசொல். பலபொரு ளொருசொற் பாகுபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பலபொளுணரவருஞ் சொல்லாவ(ன) பல பொருட்கும் தனித்தனிப் பெயராகி வருவதூஉம் பலபொரு ளொருசொல்லாம். பல பொருட்கும் பொதுப் பெயராகி வருவதூஉம் பல பொருளொரு சொல்லாம். அவற்றுள் வினைவேறுபடூஉம் பலபொருளொரு சொல்லாவன: மா, வேங்கை எனவும், மக்கள், பெற்றம் எனவும் வருவன. வினை வேறுபடாஅப் பலபொரு ளொரு சொல்லாவன: சேவல், பெடையென்பன. அவற்றுக்கு உதாரணம் வருகின்ற சூத்திரத்தாற் காட்டுதும். 50) 51. அவற்றுள், வினைவேறு படூஉம் பலபொரு ளொருசொல் வேறுபடு வினையினும் இனத்தினுஞ் சார்பினும் தேறத் தோன்றும் பொருடெரி நிலையே. வினைவேறுபடும் பலபொருளொரு சொல் பொரு ளுணர்த்துமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற்கூறப்பட்டவற்றுள் வினைவேறுபடும் பல பொருளொரு சொல் பொருள் தெரியுங்காலத்து வேறுபட்ட வினையினானும், இனத்தினானும், சார்பினானும் தெளியத் தோன்றும். எ-று. உ-ம்: மா காய்த்தது; வேங்கை பூத்தது என்றவழி மரம் என்பது அறியப்பட்டது. மா ஓடிற்று; வேங்கை பாய்ந்தது என்றவழி விலங்கு என்பது அறியப்பட்டது. இவை தனித்தனிப் பொருள் உணர்த்தின. இவ்வூர் மக்களெல்லாம் போர்க்குப் போயினார் என்றவழி ஆண்பால் உணரப்பட்டது. இவ்வூர் மக்களெல்லாம் தைந்நீராடினார் என்றவழிப் பெண்பால் உணரப்பட்டது. இவ்வூர்ப் பெற்றமெல்லாம் அறம் கறக்கும் என்றவழிப் பெண்பால் உணரப்பட்டது. இவ்வூர்ப் பெற்ற மெல்லாம் உழவு ஒழிந்தன என்றவழி ஆண்பால் உணரப்பட்டது. இவை பொதுப் பொருள் உணர்த்தின. இவை வினையினாற் பொருள் விளக்கின. மாவும் மருதும் அவை என்றவழி மாமர மென்பது அறியப்பட்டது. மாவும் புள்ளும் என்றவழி விலங்கென்பது அறியப்பட்டது. இவை இனம். இப்பொழிலகத்து நூறு மாவுள என்றவழி மரம் என்பது அறியப்பட்டது. இப்போர்க்களத்து நூறு மாவுள என்றவழி விலங்கென்பது அறியப்பட்டது. இவை சார்பு. பொதுமை யுணர்த்தும் பலபொரு ளொருசொல் இனமும் சார்பும் பற்றி வருவன வந்தவழிக் கண்டு கொள்க. (இ.ஏ.) (51) 2952. ஒன்றுவினை மருங்கின் ஒன்றித் தோன்றும். மேலதற்கோர் புறநடை யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வினைவேறுபடும் பல பொருள் ஒரு சொல், வேற்று வினை கொண்டு முடிதலேயன்றி இருபொருட்கும் பொருந்தின ஒருவினை கொண்டு முடியின், பிறிதொரு சொல்லோடு (பொருளொடு இ.ஏ.) ஒன்றிப் பொருள் தோன்றும். எ-று. பிறிதொரு சொல்லென்பது எஞ்சி நின்றது. உ-ம்: மாவீழ்ந்தது என்றவழி இன்ன மாவென்பது அறியாலாகாமையின், யானை முறித்ததலால் வீழ்ந்தது என்றவழி மரம் என்பதூஉம், அம்பு படுதலான் வீழ்ந்தது என்றவழி விலங்கு என்பதூஉம் உணர்த்தியவாறு கண்டுகொள்க. (52) 53. வினைவேறு படாஅப் பலபொரு ளொருசொல் நினையுங் காலைக் கிளந்தாங் கியலும். இது வினைவேறுபடாப் பலபொருள் ஒருசொல் பொருள் உணர்த்துமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வினை வேறுபடாத பல பொருள் ஒரு சொல் பொருள் உணருங்கால் எடுத்துக் கூறல் வேண்டும். எ-று. உ-ம்: சேவல், பெடை என்பன வினையான் வேறுபடாமை யான் அன்னச் சேவல், குயிற் சேவல், அன்னப் பெடை, குயிற் பெடை என எடுத்துக் கூறப் பொருள் விளங்கினவாறு கண்டு கொள்க. (53) 54. குறித்தோன் கூற்றம் தெரித்துமொழி கிளவி. மேலதற்கோர் புறநடை உணர்த்துதல் நுதலிற்று, (இ-ள்.) தெரிந்து வேறுபடுக்கவருஞ் சொல் கிளந்துரைத்தலே யன்றி, குறித்தோன் கூற்றமும் ஆம். எ-று. உம்மும் ஆமும் எஞ்சி நின்றன. உ-ம்: ‘நிவந்தோங் குயர்கொடிச் சேவலோய்’ (பரி. 3:18) என்றவழிச் சொல்லுவான் குறிப்பு மாயவனை நோக்கலிற் கருடனாயிற்று. ‘சேவலங் கொடியோன் காப்ப’ (குறுந். 1) என்றவழிச் சொல்லுவான் குறிப்பு முருக வேளை நோக்குதலிற் கோழியாயிற்று. பிறவும் அன்ன. (54) 55. குடிமை யாண்மை யிளமை மூப்பே அடிமை வன்மை விருந்தே குழுவே பெண்மை யரசே மகவே குழவி தன்மை திரிபெயர் உறுப்பின் கிளவி காதல் சிறப்பே செறற்சொல் விறற்சொலென்று ஆவறு மூன்றும் உளப்படத் தொகைஇ அன்ன பிறவும் அவற்றொடு சிவணி முன்னத்தின் உணருங் கிளவி யெல்லாம் உயர்திணை மருங்கின் நிலையின வாயினும் அஃறிணை மருங்கிற் கிளந்தாங் கியலும். திணை வழுவமைதி யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) குடிமை முதலாக எண்ணப்பட்டனவும், அத்தன்மைய பிறவும் அவற்றொடு பொருந்திக் குறிப்பினான் உணருங் கிளவியெல்லாம் உயர்திணை மருங்கின் நின்றன வாயினும் அஃறிணையிடத்துச் சொல்லான் வழங்கப்படும். எ-று. ‘உயர்திணை மருங்கின் நிலையினவாயினும்’ என்ற உம்மையான் இவையெல்லாம் பண்பு குறித்தவழி அஃறிணை யாம் என்பதூஉம், பொருள் குறித்தவழி உயர்திணையாம் என்பதூஉம் கூறியவாறாயிற்று. குடிமையாவது குடியாகிய தன்மை. அது அக்குடியிற் பிறந்தாரைக் குறித்து நின்றது. இக்குடி வாழ்ந்தது, இக்குடி கெட்டது என்ப. குடிமை என்பது குடி என வருமோ எனின் “மடிமை குடிமைக்கட் டங்கிற்றன் னொன்னார்க்(கு)-அடிமை புகுத்தி விடும்” (குறள். 608) என்றவழிக் குடி எனப் பொருளாகியவாறு கண்டுகொள்க. ஆண்மை யென்பது ஆணாகிய தன்மை : அத்தன்மையைக் குறித்து ஓர் ஆண் வந்தது என்ப. இளமை யென்பது இளையாரைக் குறித்து நிற்கும். இவ்வவை இளமையின்று என இளையாரை இலது என்னும் பொருள்பட வந்தது. மூப்பு என்பது முதியாரைக் குறித்து நிற்கும். இவ்வவை மூப்பு இன்று என முதியாரை இலது என்னும் பொருள்பட வந்தது. அடிமை என்பது அடிமைத் தொழில் செய்வார் மேற்று. அவனதடிமை வந்தது என அப்பொருள் குறித்து நின்றது. வன்மையென்பது வலியாகிய தன்மை. அவனது வலி போயிற்றென அவற்குத் துணையாயினாரைக் குறித்து நின்றது. விருந்து என்பது புதுமை. விருந்து வந்ததென, புதியார் வந்தார் என்பது குறித்து நின்றது. குழூஉ என்பது திரள். குழூஉப் பிரிந்தது, அவை எழுந்தது, படை திரண்டது என்ப குழுவிய மாந்தரைக் குறித்து. பெண்மை என்பது பெண்ணாகிய தன்மை. ஒரு பெண் வந்தது என்ப. அரசு என்பது அரசத் தன்மை. அரசிருந்தது என்ப அரசன் என்பதைக் குறித்து. மக என்பது மகன், மகள் என்னும் முறைப்பெயர் இரண்டற்கும் பொதுவாக நிற்பது. மகக் கிடந்தது என்ப. குழவி என்பது அப்பொருளின் இளமை குறித்து நிற்கும். குழவி அழுதது என்ப. தன்மை திரிபெயர் என்பது தன் இயல்பிற் றிரிந்த பொருட்பெயர். அது மருள் என்பது. அதனை மருள் வந்தது என்ப. உறுப்பின் கிளவி என்பது உறுப்பினாற் கூறப்படும் சொல். அஃதாவது குருடு முடம் என்பன. குருடு வந்தது, முடம் வந்தது என்ப. காதல் என்பது காதல்பற்றி நிகழுஞ் சொல். காதற்சொல் சிறப்புச் சொல் என ஒரு சொல் வருவிக்க. என் பாவை வந்தது, என் யானை வந்தது என்ப. தன் மகளை ‘ஈங்கிதோர் நல்கூர்ந்தார் செல்வமகள்’ (கலி.56) என்றவழி இது என்பது காதல்பற்றி வந்தது. சிறப்பு என்பது சிறப்பைப்பற்றி வருஞ்சொல். கண்போலச் சிறந்தனை என்கண் வந்தது என்ப. செறற் சொல் என்பது செறலினாற் கூறுஞ் சொல். என்பகை வந்தது, திருவிலி வந்தது என்ப. ‘ஏஏ இஃதொத்தன்’ (கலி.62) என்றவழி இஃதென்ப தும் அது. விறற் சொல் என்பது வீரியத்தாற் கூறுஞ்சொல். விறல் வந்தது, சிங்கம் வந்தது, புலி வந்தது என்ப, அவ்வீரியங் குறித்து. அன்ன பிறவும் என்றதனால், குடும்பம் வாழ்ந்தது, வேந்து சென்றது, ஆள் வந்தது, அமைச்சு வந்தது, தூது வந்தது, ஒற்று வந்தது, நட்பு நன்று என்பன கொள்க. அவற்றொடு சிவணி முன்னத்தின் உணருங் கிளவி யெல்லாம் என்றதனான், உலகு வாழ்ந்தது, நாடு வந்தது, ஊர் வந்தது என்பது அவ் விடத்திலுள்ள மாந்தரைக் குறித்தது. பிறவும் அந்நிகரன வெல்லாம் கொள்க. இவை யெல்லாம் ஆகுபெயர் அன்றோ எனின் ஆகுபெயராயின் தன் பொருட்கு உரிய பாலான் முடியும், இவை அன்னவன்றி வேறுபட்டு முடிதலிற் குறிப்புமொழியாயின. (55) 56. கால முலகம் உயிரே யுடம்பே பால்வரை தெய்வம் வினையே பூதம் ஞாயிறு திங்கள் சொல்லென வரூஉம் ஆயீ ரைந்தொடு பிறவு மன்ன ஆவயின் வரூஉங் கிளவி யெல்லாம் பால்பிரிந் திசையா உயர்திணை மேன. உயர்திணைப் பொருட்கண் எஞ்சியது உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) காலம் முதலாகச் சொல்லப்பட்டனவும் அத்தன்மைய பிறவுமாகிய பொருட்கண் வரும் சொல்லெல்லாம் உயர்திணை யிடத்தன. ஆண்டுப் பால் பிரிந்திசையா. எ-று. காலம் என்பது முன்னும் பின்னும் நடுவும் ஆகி என்றும் உள்ளதோர் பொருள். உலகம் என்பது மேலும் கீழும் நடுவும் ஆகி எல்லாவுயிரும் தோற்றுதற்கு இடமாகிய பொருள். உயிர் என்பது சீவன். உடம்பு என்பது மனம் புத்தி ஆங்காரமும் பூத தன்மாத்திரையுமாகி வினையினாற் கட்டுப்பட்டு எல்லாப் பிறப்பிற்கும் உள்ளாகி நிற்பதோர் நுண்ணிய உடம்பு. இதனை மூலப்பகுதி எனினும் ஆம். பால்வரை தெய்வம் என்பது ஆணும் பெண்ணும் அலியும் ஆகிய நிலைமையை வரைந்து நிற்கும் பரம்பொருள். வினை என்பது ஊழ். பூதம் என்பது நிலம், நீர், தீ, வளி, ஆகாயம் ஆகிய ஐம்பெரும் பூதம். ஞாயிறு என்பது தீத்திரளாய் உலகு விளக்குவது. திங்களென்பது நீர்த்திரளாய் உலகிற்கு அருள் செய்வது. சொல் என்பது எழுத்தினான் இயன்று பொருள் உணர்வது. அச் சொல்லினான் இயன்ற மந்திரம், விடம் முதலாயின தீர்த்தலின் தெய்வம் ஆயிற்று. 30இந்நூல் செய்தான் வைதிக முனிவன் ஆதலின் சொல்லென்பது வேதம் என்று கொள்ளப் படும். பிறவும் என்றதனால், வியாழம், வெள்ளி முதலாயின கோண்மீனும், பரணி, கார்த்திகை முதலாயின நாண்மீனும், தாரகையும், பூதம், பேய் எனப் பாலுணர நில்லாத தெய்வப் பொருண்மையும் கொள்ளப்படும். உதாரணம் 31முன்னர்க் காட்டுதும். (56) 57. நின்றாங் கிசைத்தல் இவணியல் பின்றே. மேலதற்கோர் புறநடையுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேல் உயர்திணைக்கட் பால் பிரிந்திசையா என்று ஓதப்பட்டன வெல்லாம் அத்திணை யுணர நின்றனவேனும், அவ்வாறு உயர் திணையுணர நின்று ஒலித்தல் இவ்விடத்து வழக்கின்று. எ-று. இவ்விடம் என்றது உயர்திணையை. (57) 58. இசைத்தலு முரிய வேறிடத் தான. மேற்கூறப்பட்ட சொற்கள் பாலுணர வருமாறு உணர்த்துதல் நுதலிற்று. வழுவமைதியும் ஆம். வேறிடம் என்பது அஃறிணையை. (இ-ள்.) மேல் பால் பிரிந்திசையா என ஓதப்பட்ட சொற்கள் அஃறிணையாய் இசைத்தலும் உரிய. எ-று. உம்மை எச்சவும்மை ஆகலான் அஃறிணைக்குரிய சொல்லான் அன்றி இருதிணைக்கும் பொதுவாகிய சொல்லானும் இசைத்தலும் உரிய. எ-று. உ-ம்: காலம் வந்தது, வரும். உலகு கிடந்தது. உயிர் போயிற்று. உடம்பு விட்டது. தெய்வம் தந்தது. வினை விளைந்தது. பூதம் செறிந்தது. ஞாயிறு எழுந்தது. திங்கள் எழுந்தது. சொல் பயன் தந்தது. வியாழம் எழுந்தது. வெள்ளிபட்டது. பரணி தோன்றிற்று. பூதம் புடைத்தது. பேய் பிடித்தது. பிறவும் அன்ன. (58) 59. எடுத்த மொழியினஞ் செப்பலு முரித்தே. இது செப்பின்கட் கிடந்ததோர் குறிப்பு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) எடுத்துச் சொல்லப்பட்ட சொல் தனக்கு இனமாகிய பொருளைச் சொல்லுதலும் உரித்து. எ-று. உம்மையாற் சொல்லாமையும் உரித்து, எ-று. தென்சேரிக் கோழி வென்றது என்றவழி, வடசேரிக் கோழி தோற்றது என்னும் பொருளும் காட்டி நின்றது. இஃது இனம் செப்பியது. அந்தணர் வாழ்க என்றவழி, அரசரும் வணிகரும் கெடுக என்றவாறின்றி, அந்தணரையே குறித்து நின்றது. இஃது இனம் செப்பாது வந்தது. இன்னும் இச்சூத்திரத்தின்கண் இனம் செப்பலும் உரித்து என்றத னானே இனமல்லாதன செப்பலும் உரித்து என்று கொள்ளப்படும், அவ்வாறு வருவன ஏற்புழிக் கொள்க. சுமந்தான் வீழ்ந்தான் என்றவழி, சுமவாதவன் வீழ்ந்திலன் என்னும் பொருள்படுதலேயன்றிச் சுமக்கப்பட்டதும் வீழ்ந்ததெனச் செப்பியவாறுங் கண்டு கொள்க. பிறவும் அன்ன. (59) 60. கண்ணுந் தோளும் முலையும் பிறவும் பன்மை சுட்டிய சினைநிலைக் கிளவி பன்மை கூறுங் கடப்பா டிலவே தம்வினைக் கியலும் எழுத்தலங் கடையே. ஒருசார் பாலறிசொற்கட் கிடந்ததோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) கண்ணும், தோளும், முலையும், அத்தன்மைய பிறவும் ஆகிய பன்மை சுட்டிய சினை உணர வருஞ்சொல், தம் வினைக்கேற்ற எழுத்தான் முற்றுப் பெறாதவழிப் பன்மை யுணர்த்தும் மரபில. எ-று. எனவே, பன்மை ஈற்றான் வாராக்கால் ஒருமை ஈற்றான் வரப்பெறும் என்பதூஉம், அவ்வழி அவ்விரு பொருட்கண்ணும் கிடப்பதொரு பொதுமையைக் குறிக்கும் என்பதூஉங் கொள்ளப் படும். கண் நொந்தது, முலை எழுந்தது, தோள் தசைத்தது என்ற வழி, பன்மையுணர்த்திற்றிலவாயினும் அச்சாதி யொருமையை உணர்த்தியவாறு கண்டு கொள்க. பிறவும் என்றதனால், கை, கால் என்பனவுங் கொள்க. ‘இருநோக் கிவளுண்கண் உள்ளது’ (குறள். 1091) என்றவழி நோக்காகிய ஒருமை குறித்து வந்தது. ஒப்பக்கூறல் என்னும் தந்திர உத்தியால், சினைப் பொருளேயன்றி முதற் பொருளும் சாதியொருமை பற்றி வருவனவும் அமைத்துக் கொள்க. ‘உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தான் உள்ளான் வெகுளியெனின்’ (குறள்.309) இதனுள் உள்ளிய வெல்லாம் எனற்பாலது நினைக்கப் படுதல் ஆகிய ஒருமை குறித்து வந்தது. அஃதேல் கண்ணல்லன் என்பது எவ்வாறு வந்ததெனின், கண்ணது நன்மையுடையன் என்னும் பொருள்பட வந்தது. கண் நொந்தான் என்பது எவ்வாறு வந்ததெனின், கண் நோவப்பட்டா னெனச் செயப்படுபொருள் குறித்து நின்றது. இவை வினையியலுட் காணப்படும். (60) முதலாவது கிளவியாக்கம் முடிற்றும். இவ்வோத்தினுட் சூத்திரமுட்பட்ட உரையினது அளவுகிரந்த வகையான் ஐந்நூற்று நாற்பது (ஐந்நூற்று அறுபது இ.ஏ.) கிளவியாக்கம் அடிக்குறிப்புகள் 1. இளம்பூரணம் இறையனாராகப் பொருளுரை. சூ. 1. 2. உட்பட இளம்பூரணம். 3. கலி. பாலை. 2 4. இரண்டாம் ஏட்டின் உரை: கானம் தகைப்ப செலவு எனவும் நயந்து தாங் கொடுப்ப போல் எனவும் அஃறிணைக் கண்ணும் வந்ததென எடுத்துக் காட்டினார் உளராலெனின், தாழிசை மூன்றனுள்ளும் தகைப்ப என ஓதியவண்ணம் அவ்வாறு சுரிதகத்துக்கண்ணும் வரின் அவ்வண்ணக் கேடு குறித்துக் குறைக்குவழிக் குறைத்ததென்க. நயந்து தாங் கொடுப்ப போலென்பது விரும்பிக் கொடுப்பாரைப் போலென மாந்தரொடு உவமை குறித்து வந்தது. 5. (இ.ஏ) பகர வீறுற்றறியாது உயர்திணைப் பெயராயல்லது வாராது. (?) 6. இவ்வகை மற்றை உரைகளிற் காண்பனவற்றின் பெரிதும் வேறுபடுவது காண்க. இளம்: வினாவெதிர் வினாதல், ஏவல், மறுத்தல், உற்றுதுரைத்தல், உறுவது கூறல், உடன்படுதல் என அறுவகைப்படும் என்பர். 7. உண்ணென்னும். (இ.ஏ). 8. 16, 17 ஆம் சூத்திர உரைகள் மற்றையோர் உரைகளினின்றும் முற்றும் வேறுபட்டவை. 9. நெருநலோ இன்றோ நல்லது; இது காலம். (இ.ஏ.) 10. மதித்தற்கு (இ.ஏ.) 11. புறநா. 4. 12. இங்குள்ள உதாரணங்கள் இரு ஏடுகளையும் வைத்து ஒப்புநோக்கி முறை செய்யப் பெற்றன. 13. வந்தது கண்டு (இ.ஏ). 14. குறிப்பு வேறாயினும். 15. இச்சூத்திரத்தினை இளம்பூரணர் முதலியோர் முச்சூத்திரங்களாகக் கொள்வர். 16. வினைச்சொற்கண் இடவழுக்காத்தலை (இ.ஏ.). 17. ஆறுதாரணமும் (இ.ஏ.) 18. 33, 34, 35 ஆம் சூத்திரங்களில், பட்டுப்பற்றிய வினாவிடை யுதாரணங்கள் இரண்டாவதேட்டில் இல்லை. 19. நோயென்றான். 20. முகமலர்ந்து. 21. அதனைப் பல்பொருட்கேற்பின் நல்லது கோடல் என்பதனாற் கொள்க. (இ.ஏ.). `வந்தது கொண்டு’ என்பது முதல் இச்சூத்திர முடிபுவரை உள்ளன இரண்டாவதேட்டில் இல்லை. 22. ஒப்பக் கூறல் (இ.ஏ.) 23. எண்ணுங் காலும் அதுவதன் மரபே. (இ.ஏ.) 24. பாலும், கலை, கள் என்று தொடங்கும் உதாரணங்கள் இரண்டாவதேட்டில் இல்லை. 25. இளம்பூரணர் முதலியோர் அடுத்த சூத்திரத்தின் முதல் வரியையும் இதனொடு சேர்த்துள்ளார்கள். இச்சூத்திரங்களின் உரைப்போக்கு வேறுபடுகின்றது. 26. சேர்மின் என்பதனுள் மயங்கி வந்ததாலெனின், 27. வீழ்து. (இ.ஏ.) 28. ஒப்பக் கூறல் என்னும் தந்திர உத்தியால் (இ.ஏ.) 29. 51, 52ஆம் சூத்திரங்களைச் சேனாவரையர் ஒன்றாக்குவார். 30. செய்தான் வைதிரு முனிவன். (இ.ஏ.) 31. 57 ஆம் சூத்திரம். வேற்றுமையியல் வேற்றுமை யிலக்கணம் உணர்த்தினமையால் இது வேற்றுமை யியலென்னும் பெயருயடையதாயிற்று. கிளவியாக் கத்துள் பெயர், வினை, இடை, உரியென்னும் நான்கு சொற்கும் பொதுவிலக்கணமுணர்த்தினார். அப்பொதுவிலக்கணத்தினைத் தொடர்ந்து அவற்றது சிறப்பிலக்கணங்கூறுதல் முறை. ஆயினும் வேற்றுமையென்பன ஒருசார் பெயரும் இடைச்சொல்லுமா தலின் அவற்றின் இலக்கணமும் பொதுவிலக்கணமாதல் கருதிக் கிளவியாக்கத்திற்கும் பெயரியலுக்குமிடையே வேற்றுமை யிலக்கணம் உணர்த்த எடுத்துக்கொண்டார். வேற்றுமை யிலக்கணமென்பது ஒன்றாயினும் சிறப்புடைய எழுவகை வேற்றுமைகளும் அவற்றது மயக்கமும் எட்டாவதாகிய விளிவேற்றுமையும் தனித்தனி யியல்களால் உணர்த்துதற்குரிய பொருள்வேறுபாடுடைமையின் அவற்றை முறையே வேற்றுமை யியல், வேற்றுமை மயங்கியல் விளிமரபு என மூன்றியல்களால் உணர்த்தினார். வேற்றுமையியற் பகுதியைப் பதினேழு சூத்திரங்களாக இளம்பூரணரும், இருபத்திரண்டு சூத்திரங்களாகச் சேனாவரை யரும் நச்சினார்க்கினியரும், இருபத்தொரு சூத்திரங்களாகத் தெய்வச்சிலையாரும் பகுத்து உரைகூறியுள்ளார்கள். பெயர்ப்பொருளை வேறுபடுத்தும் உருபுகள் வேற்றுமை யெனப்பட்டன. செயப்படுபொருள் முதலியனவாகப் பெயர்ப் பொருளை வேறுபடுத்துணர்த்தலின் வேற்றுமையாயின எனவும் செயப்படுபொருள் முதலாயினவற்றின் வேறுபடுத்துப் பொருள் மாத்திர முணர்த்தலின் எழுவாயும் வேற்றுமையாயிற்று எனவும் கூறுவர் சேனாவரையர். “பொருண்மை சுட்டல் முதலிய ஆறு பொருளையுங் குறித்து அவற்றால் தான் வேறுபட நிற்றலானும் முடிக்குஞ்சொல்லைத் தான் விசேடித்து நிற்றலானும் எழுவாயும் வேற்றுமையாயிற்று” என்பர் நச்சினார்க்கினியர். ஒரு பொருளை ஒருகால் வினைமுதலாக்கியும் ஒருகாற் செயப்படு பொருளாக்கியும் ஒருகால் ஏற்பது ஆக்கியும் ஒருகால் நீங்க நிற்பது ஆக்கியும் ஒருகால் உடையது ஆக்கியும் ஒருகால் இடமாக்கியும் இவ்வாறு தம்மையேற்ற பெயர்ப்பொருளை வேறுபடுத்தினமையால் வேற்றுமையெனப்பட்டன என்றும், மேல் கிளவியாக்கத்தால் அல்வழித்தொடர் கூறி இனி வேற்றுமைத்தொடர் கூறுகின்றா ரென்றும் கூறுவர் தெய்வச்சிலையார். பெயர், ஐ, ஒடு, கு, இன், அது, கண், விளிஎன வேற்றுமை யெட்டென்றார் தொல்காப்பியனார். வேற்றுமை ஏழெனக் கொள்வோர் விளிவேற்றுமையை எழுவாயுள் அடக்குவர். பிறிதோர் இடைச்சொல்லையேலாது இயல்பாகியும் தானே திரிந்தும் நிற்கும் பெயரின் இறுதி விளியெனப்படும். படர்க்கைச் சொல்லையும் பொருளையும் முன்னிலைச் சொல்லும் பொருளுமாக வேற்றுமை செய்வது விளி வேற்றுமையாதலின் இதனை எழுவாயுள் அடக்காது வேறாகக் கொள்வதே தமது துணிபென்பார், ‘வேற்றுமைதாமே ஏழெனமொழிப’ ‘விளிகொள்வதன்கண் விளியோடெட்டே’ என்றார் தொல்காப்பியனார். எத்தகைய தொழிலும் கருத்தா இல்லாமல் நடைபெறாது. ஆதலின் அதனைச்செய்து முடிக்கும் வினை முதற்பொருளைத் தருவதாய்த் திரிபில்லாது நின்றபெயர் எழுவாய் வேற்றுமையென முதற்கண் வைக்கப்பட்டது. வினைமுதல் ஒருதொழிலைச் செய்யுங்கால் அச்செயலாற் றோன்றிய பொருள் செயப்படு பொருளெனப்படும். இத்தகைய செயப்படுபொருளாகப் பெயர்ப்பொருளை வேறுபடுத்துவது ஐயுருபாதலின் அஃது இரண்டாம் வேற்றுமையெனப்பட்டது. வினைமுதல் ஒரு காரியத்தைச்செய்து முடித்தற்கு இன்றியமையாது வேண்டப் படுவது கருவி. இத்தகைய கருவிப்பொருளாகப் பெயர்ப்பொருளை வேறுபடுத்துவது ஒடுவுருபாதலின் அது மூன்றாம் வேற்றுமை யெனப்பட்டது. ஒருவன் ஒரு காரியத்தைக் கருவியாற் செய்வது தனக்கும் பிறர்க்கும் உதவுதற் பொருட்டேயாம். இவ்வாறு தரப்படும் எவ்வகைப் பொருளையும் ஏற்றுக்கொள்வதாகப் பெயர்ப்பொருளை வேறுபடுத்துவது குவ்வுருபாதலின் அது நான்காம் வேற்றுமை யெனப்பட்டது. ஒருவன் ஒரு பொருளைப் பிறர்க்குக் கொடுக்குங்கால் அப்பொருள் அவனை விட்டு நீங்குதலைக் காண்கின்றோம். இவ்வாறு நீங்க நிற்கும் பொருளாகப் பெயர்ப்பொருளை வேறுபடுத்துவது இன்னுரு பாதலின் அஃது ஐந்தாம் வேற்றுமையாயிற்று. ஒருவனிடத்து நீங்கிய பொருளை யேற்றுக்கொண்டவன் அப்பொருளைத் தன் னுடையது எனக் கிழமை (உரிமை) பாராட்டக் காண்கிறோம், இத்தகைய கிழமைப் பொருளாகப் பெயர்ப் பொருளை வேறு படுத்துவது அது வுருபாதலின் அஃது ஆறாம் வேற்றுமையாயிற்று. மேற்கூறிய எல்லா நிகழ்ச்சிக்கும் இடம் இன்றியமையாதது. தன்னையேற்ற பெயர்ப்பொருளை இடப்பொருளாக வேறுபடுத்துவது கண்ணுருபாதலின் அஃது ஏழாம் வேற்றுமை யாயிற்று. இவற்றின் வேறாகப் பெயர்ப்பொருளை எதிர் முகமாக்குவது விளி வேற்றுமையாதலின் அஃது எட்டாம் வேற்றுமையென இறுதிக் கண் வைக்கப்பட்டது. மேற்கூறிய எட்டு வேற்றுமைகளையும் முறையே பெயர் வேற்றுமை, ஐகார வேற்றுமை, ஒடு வேற்றுமை, குவ்வேற்றுமை, இன் வேற்றுமை, அது வேற்றுமை, கண் வேற்றுமை, விளி வேற்றுமை எனப் பெயர் தந்து வழங்குதலும், இவற்றுள் ஐகார வேற்றுமை முதல் கண் வேற்றுமை ஈறாகவுள்ள ஆறையும் முறையே இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது, ஆறாவது, ஏழாவது என எண் முறையாற் பெயரியிட்டு வழங்கு தலும் ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்தும் அவர்க்கு முன்னும் வழங்கிய தமிழியற் குறியீடுகளாகும். இவ்வுண்மை இவ்வேற்றுமையியற் சூத்திரங்களால் நன்கு விளங்குகின்றது. இவ்வியலில் எழுவாய் வேற்றுமை முதலாக ஏழாம் வேற்றுமையீறாகவுள்ள ஏழு வேற்றுமைகளின் இலக்கணங்கள் விரித்துரைக்கப்பட்டுள்ளன. ஏழுவேற்றுமையின் உருபும் உருபுநிற்கும் இடமும் அதன் பொருளும் அப்பொருளின் வகைகளும் ஆகியவற்றை இவ்வியலில் ஆசிரியர் முறையே விளக்கிச் செல்கின்றார். இங்ஙனம் ஏழு வேற்றுமைகளின் இலக்கணங் கூறுமுகமாகப் பயனிலை கோடலும், உருபேற்றலும், காலந்தோன்றாமையும் ஆகிய இம்மூன்றும் பெயர்க்குரிய இலக்கணங்கள் என்பதனை ஆசிரியர் உய்த்துணர வைத்துள்ளார். மேற்கூறிய வேற்றுமைகளின் பொருள்வகையை விரித் துரைக்குங்கால் ‘காப்பின் ஒப்பின் ஊர்தியின் இழையின்’ என்பன முதலாக இவ்வியலிற்கூறிய பொருள்களேயன்றி இப்பொருளோடு பொருந்தித்தோன்றும் எல்லாச் சொற்களும் கொள்ளுதற்குரியன என்பதை இவ்வியலின் புறனடைச் சூத்திரத்தால் ஆசிரியர் தெளிவுபடுத்துகின்றார். - க. வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 194-197 இரண்டாவது வேற்றுமை1யியல் 61. 2வேற்றுமை தாமே யேழென மொழிப விளிகொள் வதன்கண் விளியோ டெட்டே. இஃது என்ன பெயர்த்தோ எனின், வேற்றுமையியல் என்னும் பெயர்த்து: பொருள்களை வேறுபடுத்தினமையாற் பெற்ற பெயர். என்னை வேறுபடுத்தியவாறு எனின், ஒரு பொருளை யொருகால் 3வினைமுதலாக்கியும், ஒருகாற் செயப்படு பொருளாக்கியும், ஒருகாற் கருவியாக்கியும், ஒருகால் ஏற்பது ஆக்கியும், ஒருகால் நீங்க நிற்பது ஆக்கியும், ஒருகால் உடையது ஆக்கியும், ஒருகால் இடம் ஆக்கியும் இவ்வாறு வேறு படுத்தது என்க. மேல் அல்வழித் தொடர் கூறி இனி வேற்றுமைத் தொடர் கூறுகின் றார் ஆதலின் அதன்பின் கூறப்பட்டது. இவ்வோத்தினுள், தலைச்சூத்திரம் என் நுதலிற்றோ எனின், வேற்றுமை இனைத்தென வரையறுத்து உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வேற்றுமை என்பனதாம் ஏழென்று சொல்லுப ஒரு சாரார்; விளி கொள்வதன்கண் நிகழும் விளியோடு எட்டாம், எ-று. ஏகாரம் தேற்றம். விளி கொள்வது என்றது பெயரை. ஏழென்று சொல்லுவார் விளி வேற்றுமையை எழுவாயுள் அடக்குவார். (1) 62. அவைதாம், பெயர் ஐ ஒடு கு இன். அது கண் விளி யென்னு மீற்ற. வேற்றுமைச் சொற்கு ஈற்றெழுத்து வரையறுத்து உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்ட வேற்றுமைகள் தாம் பெயர், ஐ, ஒடு, கு, இன், அது, கண், விளி யென்று சொல்லப்பட்ட ஈறுகளையுடைய. எ-று. விளி யீறாவது விளிக்கண் வரும் எழுத்துக்கள். பிறவும் வேற்றுமை ஈறு உளவாயினும் சிறப்புடைப் பொருளைத் தானினிது கிளத்தல் என்பதனான் இவை எடுத்து ஓதப்பட்டன. எடுத்தோதாதன, மூன்றாவதன்கண் ஆன் ஆல் ஓடு; ஆறாவதன் கண் அ; ஏழாவதன்கண் இடப் பொருண்மை உணர்த்துஞ் சொற்கள். உ-ம்: சாத்தன், சாத்தனை, சாத்தனொடு, சாத்தற்கு, சாத்தனின், சாத்தனது, சாத்தன்கண், சாத்தா என வரும். ஐ முதலாயின மற்றொரு பெயர்க்கு ஈறாகி வருதலின், பெயரீறு என்பது விளங்கும். அங்ஙனமே பெயரும் மற்றொரு பெயர்க்கு ஈறாகி வரல் வேண்டும் எனின் அஃதன்று கருத்து. பெயர்தானே ஈறாகியும், பிற எழுத்தொடு கூடி ஈறாகியும் வருமென்று கொள்ளப்படும். இவ் வேற்றுமைகளை இவ் வீற்று வேறுபாட்டானே, பெயர் வேற்றுமை, ஐகார வேற்றுமை, ஒடு வேற்றுமை, குவ் வேற்றுமை, இன் வேற்றுமை, அது வேற்றுமை, கண் வேற்றுமை, விளி வேற்றுமை எனவும் குறியிட்டு வழங்குப. அஃது யாண்டுப் பெறுதும் எனின், ஐ யெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி (சொல். 69) ஒடுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி (சொல். 71) என்புழியும் பிறாண்டும் பெறுதும். (2) 63. அவற்றுள், எழுவாய் வேற்றுமை பெயர்தோன்று நிலையே. மேல், வேற்றுமை எட்டு என்பதும், அவற்றுக்கண் வரும் ஈறும் கூறினார் அல்லது, அவற்றிற்குப் பெயரும் முறையும் கூறிற்றிலர் அன்றே; அவை கூறுவார், முற்பட, முதல் வேற்றுமை யாவது இஃது என்பது உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்டவற்றுள் முதல் வேற்றுமையாவது பெயர் தோன்றும் நிலை. எ-று. அஃதேல், பெயர் என அமையும்; தோன்றும் நிலை என்றதனாற் பயன் என்னை யெனின், பெயர் கண்டுழியெல்லாம் வேற்றுமை யென்று கொள்ளற்க என்பது அறிவித்தற்கெனக் கொள்க. அஃது யாதோ எனின், ஆயன் சாத்தன் வந்தான் என்றவழி ஆயன் என்பது சாத்தற்கு அடையாகி நிற்றலானும், வருதற்றொழில் சாத்தனொடு முடிதலானும், இருபெயரும் ஒரு பொருட்கண் வருதலின் இரண்டனையும் வேற்றுமை எனப்படாது ஆகலானும் இறுதி நின்றதே வேற்றுமை எனப்படுவது என்று கொள்க. இதனை எழுவாய் வேற்றுமை யடுக்கென்றார் உளரால் எனின், ஆயன் சாத்தனை வெட்டினான் என்ற வழி, இறுதி நின்ற பெயர் உருபேற்று இரண்டாம் வேற்றுமையாயிற்று. ஆண்டு உருபு ஏலாத ஆயன் முதல் வேற்றுமை யாதல் வேண்டும். அவ்வாறாக, வெட்டினான் என்பது ஒற்றுமைப்பட்டு முடியாதாகலான் அது பொருளன்று என்க. அஃதற்றாக, பெயரை முதல் வேற்றுமை என்னாது, எட்டு வேற்றுமையுள்ளும் யாதானும் ஒன்றை முதல் வேற்றுமை எனினும் அமையும் எனின், ஒருவன் ஒன்றை ஒன்றானே யியற்றி ஒருவற்குக் கொடுப்ப, அவன் அதனை அவனினின்றும் தனது ஆக்கி ஓரிடத்து வைத்தான் கொற்றா என்ற வழி, செய்கின்றான் முதல் வேற்றுமையாகி இம்முறையே கிடத்தலின் அமையாது என்க. அஃதேல், யாற்றினது கரைக்கண் நின்ற மரத்தை அறச்சாலை யியற்றுதற்கு ஊரினின்றும் வந்து மழுவினானே வெட்டினான் சாத்தன் என்றவழி, எழுவாயாகிய பெயர் ஏழாவதுமாய் நின்றதால் எனின், சொல்லுவான் குறிப்பினால் முதல் வேற்றுமையாயிற்று என்பது (என்பதன்று இ.ஏ) கருத்து. யாதானும் ஒரு தொழிலும் செய்வான் உள்வழி அல்லது நிகழாமையின் அது செய்து முடிக்கும் கருத்தா முன் வைக்கப் பட்டான். அவன் ஒரு பொருளைச் செய்து முடிக்குங்கால் செய்யத்தகுவது இஃது எனக் குறிக்க வேண்டுதலின் செயப்படுபொருள் இரண்டாவது ஆயிற்று. அவ்வாறு அப்பொருளைச் செய்து முடிக்குங்கால் அதற்காங் கருவி தேடுமாதலின் அக்கருவி மூன்றாவதாயிற்று. அவ்வாறு, செய்து முடித்த பொருளைத் தான் பயன்கோடலே யன்றிப் பிறர்க்குங் கொடுக்கும் ஆதலின் அதனை ஏற்று நிற்பது நான்காவது ஆயிற்று. அவ்வாறு கொடுப்புழி அவன் கையினின்றும் அப்பொருள் நீங்கி நிற்பது ஐந்தாவது ஆயிற்று, அவ்வாறு நீங்கின பொருளைத் தனதென்று கிழமை செய்தலின் அக்கிழமை ஆறாவது ஆயிற்று. ஈண்டுக் கூறப்பட்ட எல்லாவற்றிற்கும் இடமும் காலமும் பொதுவாகி நிற்றலின், அவை ஏழாவது ஆயின. இவையிற்றோடு ஒத்த இயல்பிற்று அன்றி எதிர்முகம் ஆக்குதற்பொருட்டு ஆகலின், விளி என்பது எல்லாவற்றினும் பிற் கூறப்பட்டது. அஃதேல் ஆறாவதாகிய கிழமை, கொண்டான் கண்ணாதலே யன்றிச் செய்தான்கண் இயையாதோவெனின் தோற்றுவித்தாற்குக் கிழமை சொல் லாமலும் பெறும், அதனைக் கொண்டாற்கே கிழமை கூறல் வேண்டுவது என்க. (3) 64. பொருண்மை சுட்டல் வியங்கொள வருதல் வினைநிலை யுரைத்தல் வினாவிற் கேற்றல் பண்புகொள வருதல் பெயர்கொள வருதலென் றன்றி யனைத்தும் பெயர்ப்பய னிலையே. எழுவாய் வேற்றுமைக்கு முடிபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ‘பொருண்மை சுட்டல்’ என்பது, முடிக்குஞ்சொல் எழுவாயாகி நின்ற பொருடன்னையே சுட்டி, அதன் தொழில் முதலாயின சுட்டாது நிற்கும் நிலைமை. எ-று. உ-ம்: சாத்தன் உளன் என வரும். ‘வியங்கொள வருதலாவது’, தொழிலைப் பெயர்ப் பொருண்மை கொள்ளுமாறு வரும் ஏவற் சொல். உ-ம்: சாத்தன் செல்க. ‘வினைநிலை யுரைத்தலாவது’, அப் பொருளின் தொழிலின் நிலைமையை உணர்த்த வருஞ் சொல். உ-ம்: சாத்தன் சென்றான். ‘வினாவிற் கேற்றலாவது’, அப்பெயர்ப் பொருண்மையை வினாவுதற்கு ஏற்புடைய சொல். உ-ம்: சாத்தன் யாவன்? சாத்தன் யாண்டையன்? சாத்தன் எத்தன்மையன்? என்பன. `பண்புகொள வருதலாவது’, அப்பெயர்ப் பொருண்மை பண்பு கொள்ளுமாறு வருஞ் சொல். உ-ம்: சாத்தன் கரியன், நெடியன் என்பன. ‘பெயர்கொள வருதலாவது’, அப்பெயர்ப் பொருண்மை யுணரப் பிறிதொரு காரணத்தான் வந்து முற்பெயரோடு ஒட்டுப்படாது நிற்பது. உ-ம்: சாத்தன் வணிகன், முடவன் என்பன. ‘என்று அன்றி யனைத்தும் பெயர்ப் பயனிலையே’ என்பது, என்று சொல்லப்பட்ட அவ்வனைத்தும் பெயர்க்குப் பயனிலை யாம். எ-று. பயனிலை என்பது:- பெயர் வாளாது நிற்குமாயின், செப்பின்கட் பயனின்றாம் ஆதலான், அதனை முடிக்கும் சொல் பயனிலை என்றாயிற்று. அஃதேல், இவையெல்லாம் பெயர்ப் பொருண்மையைச் சுட்டி நிற்றலின், பொருண்மை சுட்டல் என அடங்கும் எனின், அடங்குமாயினும் பொருண்மை சுட்டல் பொருண்மை மாத்திரத்தைக் குறித்தலானும், வியங்கொள வருதல் அப்பொருண்மை புடைபெயர்தற்கு நிமித்தம் ஆகி வருதலானும், வினைநிலையுரைத்தல் அப்பொருளின் புடை பெயர்ச்சி யாகலானும், வினாவிற்கேற்றல் அவ்வாறன்றி வினாவப் படும் நிலைமைய தாகி நிற்றலானும், பண்புகொள வருதல் அப்பொருட்கண் உள்ளதொரு குணத்தைக் குறித்து நிற்றலானும், பெயர்கொள வருதல் அப்பொருண்மை முழுதும் உணரப் பிறிதொரு வாய்பாடாக வருதலானும், வகுத்துக் கூறினார் என்க. சாத்தன் தலைவன் ஆயினான், இரும்பு பொன் ஆயிற்று என்பன எவ்வாறு வந்தன எனின், அவையும் பொருளின் புடை பெயர்ச்சி யாகலானும், ஒன்று ஒன்றாகித் திரிதலாகிய வினையான் வருதலானும், வினைநிலையுரைத்தலுள் அடங்கும். அஃதேல், தலைவன் பொன் என்னும் பெயரை எழுவாய் என்றுமோ பயனிலை என்றுமோ எனின் இரண்டும் அல்ல : தலைவன் ஆதல், பொன் ஆதல் எனத் திரிபு குறித்து நின்றன, பெயர் குறித்து நின்றன எனப்படா வென்க. அன்றி யனைத்தும் பெயர் முடிபு என்னாது பயனிலை என்றதனால் பயனிலை பெயர்க்கு முன்னிற்றலே யன்றிப் பின்னிற்றலும் ஆம் என்று கொள்க, உ-ம்: உளன் சாத்தன்; செல்க சாத்தன்; வந்தான் சாத்தன்; யாண்டையான் சாத்தன்; கரியன் சாத்தன்; வணிகன் சாத்தன் என வரும். ஈண்டுக் காட்டப்பட்ட உதாரணத்துள் வினைபற்றி வருவன வெல்லாம் முற்றுச்சொல் பெயர் கொண்டு முடிந்தவாம், பயனிலை மாறி நின்றன ஆகா வெனின்; முற்றுச்சொல் எனவே முடிந்த சொல் என்பது பெறுதும்; அது பின்னும் மற்றொரு சொல்லை அவாவி நிற்கும் என்றல் பொருந்தாமையானும், மற்றுச்சொ னோக்கா மரபின அனைத்தும் முற்றி நிற்பது முற்றியன் மொழியே என அகத்தியனார் ஓதுதலானும், மொழிமாறுதல் இலக்கணமாக எச்சவியலுள் ஓதுகின்றமையானும் அது சொல்லறியாதார் உரையென்க. (4) 65. பெயரி னாகிய தொகையுமா ருளவே அவ்வு முரிய அப்பா லான. எய்தியதன் மேற் சிறப்புவிதி வகுத்தலை நுதலிற்று. (இ-ள்.) பெயரான் ஆகிய தொகைச் சொல்லும் உள; அவையும் எழுவாயாகிப் பயனிலை கோடற்கு உரிய, எ-று. பல் பொருட் கேற்பின் நல்லது கோடல் (மர.110) என்பதனால் பொருள் குறித்த பெயரே கொள்ளப்படும். உம்மை இறந்தது தழீஇய எச்சவும்மை. உ-ம்: யானை குதிரை உள; செல்க; வந்தன; கரிய; யாண்டைய; பல-என வரும். அஃதேல், பலபொருள் குறித்து வருதல் வேண்டுமென்ற தென்னை? ஒரு பொருட்கண் வரும் பெயரும் தொகையாகாதோ எனின், தொகையாம் ஆயினும், இறுதிக்கண் நின்ற பெயர் பயனிலைகொண்டும் ஏனைய பெயர் பயனிலை ஏலாதும் நிற்கும். இவை இரண்டு பெயர் மேலும் பயனிலை ஒத்து வருதலின் வேறோதப்பட்டன. (5) 66. எவ்வயிற் பெயரும் வெளிப்படத் தோன்றி அவ்விய னிலையல் செவ்வி தென்ப. இது எழுவாய் வேற்றுமைக்கு உரியதோர் புறநடை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மூன்றிடத்துப் பெயரும் வெளிப்படத் தோன்றி, பயனிலையொடு நிற்றல் செவ்விது. எ-று. எனவே, வெளிப்படத் தோன்றாது பயனிலை கோடல் செவ்விது அன்று என்றவாறாம். அவையாவன:- (1) ‘சோறு உண்ணாயோ சாத்தா’ என்ற வழி ‘உண்பல்’ என்பது. இச் செப்பின்கண் ‘யான் உண்பல்’ என எழுவாயும் பயனிலையுமாக நிற்கற்பாலது ‘உண்பல்’ என்னும் பயனிலை வெளிப்பட்டு ‘யான்’ என்னும் பெயர் தோன்றாது நிற்பினும், அப்பொருள்பட நிற்றலின் அத்தொடர் வழு எனப் படாமையான் செவ்விதன்று ஆயிற்று. இஃது இத் தொடர்ச்சிக்கண் வழுவமைத்தவாறு. இது தன்மை. (2) ‘யான் யாது செய்வல்’ என்றானை ‘இது செய்’ என்பது. இதன் கண் ‘நீ’ என்னும் பெயர் வெளிப்படாது நின்றது. இது முன்னிலை. (3) ‘அவன் யார்’ என்றார்க்குப் ‘படைத்தலைவன்’ என்றவழி ‘அவன்’ என்னும் பெயர் தோன்றாது நின்றது. இது படர்க்கை. அஃதேல், இவை, பெயரெச்சம் என்று எச்சவியலுட் (37) கூறுகின்றதனுள் அடங்காவோ வெனின், அடங்குமாயினும், எழுவாயும் பயனிலையும் ஆகி நிற்குங்கால், பெயர் தோன்றாது நிற்பின் வழுவாம் என்பதனால் ஈண்டுக் கூறல் வேண்டும் என்க. இன்னும் இச் சூத்திரத்திற்குப் பொருள், வெளிப்படத் தோன்றிப் பயனிலை கோடல் செவ்விதெனவே, வெளிப்படத் தோன்றாத பெயர் திரிபு உடைய என்றவாறாம். அவையாவன:- இரும்பு பொன் ஆயிற்று: குயவன் குடத்தை வனைந்தான் என்றவழி, எழுவாய்க்கும் பயனிலைக்கும் இடைக்கிடந்த பொன், குடம் என்பன ஆயிற்று என்பதனோடும் வேற்றுமையுருபினோடும் திரிந்தவாறு கண்டுகொள்க. அஃதற்றாக, வனைந்தான் என்பதற்குக் குயவனொடு முடிக்க இடைகிடந்த குடத்தை யென்பதற்கு முடிபு யாதோ எனின், அது ‘குடத்தை வனைந்தான்’ என ஒரு சொல் நீர்மைப் பட்டுக் ‘குயவன்’ என்பதற்குப் பயனிலையாகி நிற்பின் அல்லது வேறு முடிபு உரைக்கப்படா தென்க. ஆயின், எழுவாயும் பயனிலையும் என எல்லாச் சொல்லும் அடங்கும். வேற்றுமை எட்டு எனல் வேண்டா எனின், குயவன் வனைந்தான் என்ற வழி, வனையப் பட்டதும், அதற்காம் கருவியும் அதனாற் பயனும், பிறவும் தோன்று மாதலின், அப்பொருள்களே வேற்றுமையாகி இடைக் கிடக்கின்றன வென்க. இவையெல்லாம் இடைக்கிடப்பன ஆகலின், செய்கின்றானை முன் வைக்கப்பட்டது. (6) 67. கூறிய முறையின் உருபுநிலை திரியாது ஈறுபெயர்க் காகும் இயற்கைய வென்ப. பெயர்ச் சொற்கண் உருபுநிற்கும் நிலை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) சொல்லப்பட்ட உருபு முறையானே நின்ற நிலையைத் திரியாது பெயர்க்கு ஈறாகும் இயல்பினையுடைய, எ-று. முறையானே என்றது அடைவே ஒன்றொன்றாக என்றவாறு. நிலையைத் திரியாது என்றது உருபேற்று நிற்கும் பெயரைத் திரியாது அதன்கண் இயல்பாகி நிற்கும் என்றவாறு. இச் சூத்திரங் கூற வேண்டா; மேலைச் சூத்திரத்துப் பெயர் ஐ ஒடு கு இன் அது கண் விளி யென்னும் ஈற்ற என்பதனாற் பெறுதும் எனில், அது கருதியன்று கூறியது : வடமொழிக்கண் எழுவாயாகிய பெயர் ஈறுகெட்டு உருபேற்கும். அவ்வாறன்றித் தமிழ்மொழிக்கண் ஈறுதிரியாது எழுவாயாகிய பெயரின் மேலே உருபு நிற்கும் என்பது அறிவித்தற்கெனக் கொள்க. உதாரணம் மேற்காட்டப் பட்டன. வருகின்ற சூத்திரத்தின் கண்ணும் விளங்கும். (7) 68. பெயர்நிலைக் கிளவி காலந் தோன்றா தொழில்நிலை யொட்டும் ஒன்றலங் கடையே. மேற்பல சூத்திரத்தானும் பெயர் என்று எடுத்தோதிப் போந்தார். அஃது இத்தன்மையதென அதன் இலக்கணங் கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) பெயர் நிலைமையுடைய சொல் காலம் தோன்றா; தொழில் நிலையோடு ஒட்டி நிற்கும் பெயரும் ஒருவகையல்லன காலம் தோன்றா, எ-று. காலம் தோன்றா என்றது மத்திம தீபமாகி நின்றது. உம்மை இறந்தது தழீஇயிற்று. பெயர்க்கு இலக்கணம் பயனிலை கோடலும், உருபு ஏற்றலும், காலந்தோன்றாமையும் ஆம். அவற்றுள், பயனிலை கோடலும், உரு பேற்றலும் முற்பட்ட சூத்திரத்தாற் கூறலின் இதனாற் காலந்தோன்றாமை கூறப்பட்டது. பெயராவன-தனிப்பெயர், ஒட்டுப்பெயரென இருவகைப் படும். அவற்றுள் தனிப்பெயர் - பொருள்மேல் வருவனவும், தொழில் மேல் வருவனவும் என இருவகைப்படும். ஒட்டுப்பெயர் தெரிநிலைவினை யொட்டுப்பெயரும், குறிப்புவினை யொட்டுப் பெயரும் என இருவகைப் படும். அவற்றுள் பொருள் மேல் வரும் தனிப்பெயர் - சாத்தன், கொற்றன், யானை, குதிரை, மா, தெங்கு என்பன. தொழில் மேல் வரும் தனிப்பெயர் - உண்டல், தின்றல், கொடுத்தல், எடுத்தல் என்பன. தெரிநிலை வினையொட்டுப் பெயராவன - தொழிற்பெயரோடு ஒட்டி ஒருபொருட்குப் பெயராகி வருவன. அவை - உண்டான், தின்றான், கொடுத்தான், எடுத்தான் என்பன. இவை வினைக்கருத்துள்வழி வினைச் சொல்லாம், பெயர்க் கருத்துள்வழி பெயராம். குறிப்புவினை யொட்டுப் பெயராவன - மற்றொரு பொருட்பெயரோடு ஒட்டிப் பொருண்மேல் வருவன. அவை குழலன், கோட்டன், கச்சினன், கழலினன் என்பன. இவையும் வினைக்கருத்துள்வழி வினைக் குறிப்பாம், பெயர்க்கருத்துள்வழி பெயராம். இவற்றுள் தெரிநிலை வினையொட்டுப் பெயரல்லாதன காலந்தோன்றா. இப் பெயர்கள் - சாத்தனை, உண்டலை, உண்டானை, குழலனை என உருபேற்கும். (8) 69. இரண்டா குவதே, ஐ எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி எவ்வழி வரினும் வினையே வினைக்குறிப்பு அவ்விரு முதலிற் றோன்று மதுவே. நிறுத்த முறையானே இரண்டாம் வேற்றுமை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இரண்டாம் வேற்றுமை யாவது ஐ என்று குறிபெற்ற வேற்றுமைச் சொல், அஃதியாதானும் ஒரு பெயர்க்கண் வரினும் வினையும் வினைக் குறிப்புமாகிய அவ்விரண்டு முதற்கண்ணும் தோன்றும், எ-று. ஐகார வேற்றுமை இரண்டாவதென்னும் குறியும்பெற்றது. வினை யென்பது செயல். வினைக்குறிப்பென்பது அவ்வினை யினாற் குறிக்கப்பட்ட பொருள். அஃதாவது செயப்படுபொருள். முதல் என்பதனை வடநூலாசிரியர் காரகம் என்ப. அஃதாவது தொழிலை யுண்டாக்குவது. அது பல்வகைத்து; செய்வானும், செயலும், செயப்படுபொருளும், கருவியும், கொள்வானும், பயனும், காலமும், இடமும் என. 4வினையே செய்வது செயப்படு பொருளே நிலனே காலங் கருவி யென்றா இன்னதற் கிதுபய னாக வென்னும் அன்ன மரபின் இரண்டொடுந் தொகைஇ ஆயெட் டென்ப தொழின்முத னிலையே (109) என முதனிலை எட்டென்றாராதலின், அவற்றுள் இது செயப்படு பொருள் மேலும் செயல்மேலும் வரும். குடத்தை வனைந்தான் என்பது செயப்படு பொருள்மேல் வந்தது. வனைதலைச் செய்தான் என்பது செயன்மேல் வந்தது. தொழின் முதனிலை யெட்டென்றமையான் காரகப் பொருண்மேல் வரும் வேற்றுமையெல்லாம் வினையான் முடியும் என்று கொள்க. (9) 70. காப்பி னொப்பி னூர்தியி னிழையின் ஓப்பிற் புகழிற் பழிப்பி னென்றா பெறலி னிழவிற் காதலின் வெகுளியிற் செறலி னுவத்தலிற் கற்பி னென்றா அறுத்தலிற் குறைத்தலிற் றொகுத்தலிற் பிரித்தலின் நிறுத்தலி னளவி னெண்ணி னென்றா ஆக்கலிற் சார்தலிற் செலவிற் கன்றலின் நோக்கலி னஞ்சலிற் சிதைப்பி னென்றா அன்ன பிறவு மம்முதற் பொருள என்ன கிளவியு மதன்பால வென்மனார். இதுவும் இரண்டாம் வேற்றுமைப் பொருள் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) காப்பு முதலாகச் சிதைப்பீறாக ஓதப்பட்டன வற்றினும், அத்தன்மைய பிறவற்றினும் வருஞ் சொல்லும், செயப்படு பொருளவாகி வரும் எல்லாச் சொல்லும் இரண்டாம் வேற்றுமைப் பாலன, எ-று. காப்பு என்பது காவற்றொழிலையும், காக்கப்படும் பொருளையும் உணர்த்தும். ஏனையவும் தொழிலும் பொருளும் உணர்த்துமாறு அறிந்து கொள்க. ‘அன்ன பிறவினும்’ என ‘இன்’ செய்யுள் விகாரத்தான் தொக்கது. இவை யெல்லாம் வகுத்துக் கூறல்வேண்டா : வினைக்குறிப்பென அடங்கும் எனின், அடங்கும் எனினும், செயப்படுபொருள் காரணகாரியம் தோன்ற நிற்பனவும் தோன்றாது நிற்பனவும் என இருவகைப்படும் எனற்கு வேறு ஓதினார் என்க. ஆடையை நெய்தான், குடத்தை வனைந்தான். இவை காரண காரியம் தோன்ற நின்றன. ஊரைக் காத்தான் என்பது தோன்றாது நின்றது. ஈண்டு ஓதப்பட்டனவெல்லாம் தொழிற்சொல் ஆதலின், இவற்றை முடிக்குஞ் சொல்லும் இவையடியாகப் பிறந்த சொல்லென்க. ஊரைக் காக்கும் என்பது காக்கப்படும் பொருள்மேல் வந்தது. காவலைக் காக்கும் என்பது காவற் றொழில்மேல் வந்தது. தந்தையை ஒக்கும். தேரை ஊரும். இழை என்பது அணிகலன். ஆரகத்தைப் பூணும். நூலை யிழைக்கும் எனவுமாம். கிளியை ஓப்பும். கொடுப்பாரைப் புகழும். கொடாதாரைப் பழிக்கும். புதல்வனைப் பெறும். பொருளை இழக்கும். அறத்தைக் காதலிக்கும். பகைவரை வெகுளும். செற்றாரைச் செறும். நட்டாரை உவக்கும். நூலைக் கற்கும். வினையை அறுக்கும். ஆசையைக் குறைக்கும். பலவற்றைத் தொகுக்கும். சிலவற்றைப் பிரிக்கும். பொன்னை நிறுக்கும். அரிசியை அளக்கும். அடைக்காயை எண்ணும். அறத்தை யாக்கும். தூணைச் சாரும். நெறியைச் செல்லும். சூதினைக் கன்றும். கணையை நோக்கும். 5கள்ளரை யஞ்சும். அறிவைச் சிதைக்கும். அன்ன பிறவும் என்றதனால், இசையைப் பாடும், பகைவரைப் பணிக்கும் எனவும், குழையையுடையன், வலியை யுடையன், கல்வியை யுடையன், காலையுடையன் எனவும் ஆறாம் வேற்றுமைப் பொருள் மொழிமாற்றாகி வருவனவும் கொள்க. பிறவும் அன்ன. ‘அம்முதற் பொருள என்ன கிளவியும்’ என்றதனால், செயப்படுபொருளே யன்றி அதற்குக் காரணமாகிய பொருள் மேலும் பொருளினது உறுப்பின்மேலும் பொருள் நிகழும் இடத்தின் மேலும் வருவனவும் கொள்க. மண்ணை வனைந்தான், நூலை நெய்தான். இவை காரணம். விளிம்பை நெய்தான்-உறுப்பு. சுவரை யெழுதினான்-இடம். பிறவும் அன்ன. (10) 71. மூன்றா குவதே, ஒடுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி வினைமுதல் கருவி யனைமுதற் றதுவே. மூன்றாம் வேற்றுமையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மூன்றாம் வேற்றுமையாவது ஒடுவெனப் பெயர் பெற்ற வேற்றுமைச் சொல். அது வினைமுதலுங் கருவியுமாகிய அவ்விரண்டு காரகத்தையும் உடைத்து, எ-று. ஈண்டு, முதல் என்பது காரகம். அது கருத்தாவின்கண்ணும், கருவியின்கண்ணும் வரும், எ-று. கொடியொடு தொடக் குண்டான். இது வினை முதல். “ஊசியொடு குயின்ற தூசும் பட்டும்”-இது கருவி. (11) 72. அதனி னியறல் அதற்றகு கிளவி அதன்வினைப் படுதல் அதனி னாதல் அதனிற் கோட லதனொடு மயங்கல் அதனோ டியைந்த ஒருவினைக் கிளவி அதனோ டியைந்த வேறுவினைக் கிளவி அதனோ டியைந்த வொப்ப லொப்புரை இன்னா னேது வீங்கென வரூஉம் அன்ன பிறவு மதன்பால வென்மனார். இதுவும் மூன்றாம் வேற்றுமைக்குரியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அதனினியறல் முதலாக ஒப்பல் ஒப்புரை ஈறாக எடுத்தோதப்பட்ட சொல்லினான் வரும் பொருண்மையும், இன், ஆன், ஏது என இவ்விடத்து வரும் அத்தன்மைய பிற சொற்களும் மூன்றாம் வேற்றுமைப் பாலன, எ-று. ‘அதனின் இயறலாவது’:- இயலப்படுவதற்குக் காரண மாகிய பொருண்மேல் உதாரணவாய்பாட்டான் வந்தது. மண்ணினானியன்ற குடம், அரிசியானாகிய சோறு. ‘அதற்றகு கிளவியாவது’:- அதனாற் றகுதியை யுடைத்தாயிற்றென்னும் பொருண்மை தோன்ற வருவது. கண்ணான் நல்லன், குணத்தான் நல்லன், நிறத்தான் நல்லன் என உறுப்பும், பண்பும்பற்றி வருவன. ‘அதன்வினைப் படுதலாவது’:- ஒன்றன் றொழின்மேல் வருதல். புலி பாய்தலாற்பட்டான், ஓட்டாற்கடிது குதிரை என்பன. ‘அதனினாதலாவது’:- ஆக்கத்திற்கு ஏதுவாகி வருவது. வாணிகத்தா னாயினான், எருப்பெய்து இளங்களை கட்டமை யாற் பைங்கூழ் நல்லவாயின. ‘அதனிற் கோடலாவது’:- ஒன்றனானே ஒன்றைக்கோடல். காணத்தாற் கொண்ட வரிசி. ‘அதனொடு மயங்கலாவது’:- ஒன்றோடொன்று விரவிவருதல். பாலொடு கலந்த நீர். ‘அதனோடு இயைந்த ஒருவினைக் கிளவி யாவது’:- ஒருவினையான் இரு பொருள் முடிவது. படையொடு வந்தான் அரசன். ‘அதனோடு இயைந்த வேறு வினைக் கிளவியாவது’:- வேறுவினையுடையன இரண்டு சொல் ஒரு வினையொடு தொடர்வது. காவோ டறக்குளந்தொட்டான். ‘அதனோடு இயைந்த ஒப்பலொப்புரையாவது’:- உவமை யின்றி யிதுவும் அதுவும் ஒக்குமென அளவினாலும் நிறையினாலும் எண்ணி னாலும் வருவன. இதனோடு ஒக்கும் இது, இக்கூற்றோடொக்கும் இக்கூறு. ‘இன்னென்பது’ இன் என்னும் சொல். ‘ஆனென்பது’ ஆன் என்னும் சொல். ‘ஏது வென்பது’ ஏது என்னும் சொல். ‘அன்ன பிறவாவன’:- காரணம், நிமித்தம், துணை, மாறு என்பன. இவையும் மூன்றாம் வேற்றுமைப் பொருளுணர்த்து முருபுகளும் பொருளுணர்த்தும் சொற்களுமாம். எ-று. புகையுண்மையின் நெருப்புண்மை யறிக, புகையுண்மையான் நெருப்புண்மையறிக, புகை யேதுவாக நெருப்புண்மையறிக, புகை காரணமாக நெருப்புண்மையறிக, புகை நிமித்தமாக நெருப்புண்மையறிக, சுக்கிரீபன் துணையாக இலங்கை கொண்டான். ``அனையை யாகன் மாறே மன்னுயி ரெல்லாம் நின்னஞ் சும்மே.’’ (புறம் 20) இன்னும், ‘அன்ன பிறவு’ மென்றதனான், ஓடு ஆல் என வரும் உருபுங் கொள்க. என்னோ டிருப்பினும் இருக்க இளங்கொடி தன்னோ டெடுப்பினும் தகைக்குந ரில்லென்று (மணி - சிறைவிடுகாதை. 35-6) கணிகொண் டலர்ந்த நறவேங்கை யோடுங் கமழ்கின்ற காந்த ளிதழா லணிகொண்ட’’ (சூளா. அரசியல். 197) என்புழி ஓடு வந்தது. ஆன் வந்தவழி யெல்லாம் ஆல் வருதல் வழக்கினிற் கண்டு கொள்க. (12) 73. நான்கா குவதே, குஎனப் பெயரிய வேற்றுமைக் கிளவி எப்பொரு ளாயினுங் கொள்ளு மதுவே. நான்காம் வேற்றுமையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) நான்காம் வேற்றுமையாவது கு எனப் பெயர்பெற்ற வேற்றுமைச் சொல். அஃது யாதானுமொரு பொருளாயினும் ஏற்று நிற்கும் நிலைமைத்து. எனவே, ஏற்கும் பொருண்மைக்கண் வரும், எ-று. அந்தணர்க்குக் கொடுத்தான் என வரும். (13) 74. அதற்குவினை யுடைமையி னதற்குடம் படுதலின் அதற்குப் படுபொருளி னதுவாகு கிளவியின் அதற்கியாப் புடைமையி னதற்பொருட் டாகலின் நட்பிற் பகையிற் காதலிற் சிறப்பினென் றப்பொருட் கிளவியு மதன்பால வென்மனார். இதுவும் நான்காம் வேற்றுமைக்கண் வரும் பொருள் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று (இ-ள்.) அதற்கு வினையுடைமை முதலாகச் சிறப்பீறாகச் சொல்லப்பட்ட வற்றின்கண் அப்பொருள்பட வருஞ் சொல்லும், உம்மையான் அந்நிகரன பிற பொருட்கண் வருஞ் சொல்லும் நான்காம் வேற்றுமைப் பாலன, எ-று. உம்மை எச்சவும்மை. ‘அதற்கு வினையுடைமையின்’ என்பது மேற்சொல்லப் பட்ட கொடைப் பொருண்மையே யன்றி உருபேற்கும் பொருட்கு வினையாத லுடைமை கூறும் வழியும் நான்காம் வேற்றுமைப் பாலனவாம், எ-று. உ-ம்: அவர்க்குப் போக்குண்டு, அவர்க்கு வரவுண்டு, இவை வினை. கரும்பிற்குழுதான் என்பதுமது. ‘அதற்கு உடம்படுத லென்பது’ உடம்பாடு கூறும் வழியும் நான்காவ தாம், எ-று. உ-ம்: கொலைக்குடம்பட்டான். ‘அதற்குப் படு பொருளாவது’ - உருபேற்கும் பொருட்கு இயல்பு கூறும் வழியும் நான்காவதாம், எ-று. உ-ம்: இதற்கு நிறங்கருமை; இதற்கு வடிவு வட்டம்; இதற்கு அளவு நெடுமை; இதற்குச் சுவை கார்ப்பு; இச் சொற்குப் பொருள் இது; இவ் வாடைக்கு விலை இது எனவும், இவ்வாறு வருவனவும் கொள்க. இன்னும் அதற்குப் படுபொருள் என்றதனான், உடைப்பொருளும் அவ்விடத்திற்கு ஆம்பொருளும், காலத்திற்கு ஆம்பொருளுமாகி வருவனவும் கொள்க. அவற்குச் சோறுண்டு, ஈழத்திற் கேற்றின பண்டம், காலத்திற்கு வைத்த விதை என வரும். ‘அதுவாகுகிளவி’ - ஒன்றொன்றாகத் திரிந்துவரும் பொருட்கு வருவது. கடிசூத்திரத்துக்குப் பொன், கும்மாயத்திற்குப் பயறு. ‘அதற்கியாப்புடைமை’யாவது - உருபேற்கும் பொருட்கு வலியாத லுடைமை. ‘யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர் தாம்பெற்ற யாக்கை’ (நாலடி. 28) என்றவழி வலியெனப் பொருளாயிற்று. உ-ம்: போர்க்கு வலி குதிரை; நினக்கு வலி வாள் என வரும். ‘அதற்பொருட்டாகலின்’ என்பது-ஒரு பொருட்காக வென்பது படவருதல். உ-ம்: கூழிற்குக் குற்றேவல் செய்யும், கூலிக்கொலிக்கும். ‘நட்பு’ - அவற்குத் துணை, அவற்கு நட்பு எனவரும். ‘பகை’ - அவற்குப் பகை. ‘காதல்’ - மகற்குக் காதலன். ‘சிறப்பென்பது’ - இன்றி யமையாமை பற்றிவரும். உ-ம்: யாமுமக்குச் சிறந்தன மாத லறிந்தனி ராயின் (கலி. 5) எனவும், “நிலத்திற் கணியென்ப நெல்லுங் கரும்பும்” (நான்மணிக். 9) எனவும் வரும். உம்மையாற் கொள்ளப்படுவன - இவ்வூர்க் கவ்வூர் காதம், நாளைக்கு வரும், இவர்க்குத் தகும் இது, இவர்க்கு நன்மை பயக்கும், அவற்குப் பிறந்த மகன். பிறவும் இந்நிகரன வெல்லாம் கொள்க (14) 75. ஐந்தா குவதே, இன்னெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி இதனின் இற்றிது என்னு மதுவே. ஐந்தாம் வேற்றுமை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஐந்தாம் வேற்றுமையாவது இன் என்று பெயர் கொடுத்தோதப்பட்ட வேற்றுமைச்சொல். அஃது இப்பொருளின் இத்தன்மைத்து இப்பொருள் என உணர்த்தும். எனவே இவ்வாய்பாட்டான் வரும் பொருண்மை யெல்லாம் ஐந்தாவதாம், எ-று. அவையாவன:- நீங்க நிற்பதூஉம், பொருவும், ஏதுவும் என்பன. அவற்றுள் நீங்க நிற்பது பொருள் நீங்கி நிற்பதூஉம், இடம் நீங்கி நிற்பதூஉம் என இருவகைப்படும். பொருவும் மிகுதலும், குறைதலும், ஒத்தலும் என மூன்று வகைப்படும். அவற்றுள் பொருவும், ஏதுவும் வருகின்ற சூத்திரத்தால் கூறுத லானும், பல்பொருட் கேற்பின் நல்லது கோடல் என்பதனானும் இச்சூத்திரம் நீங்க நிற்பது குறித்ததென்பது கொள்ளப்படும். உ-ம்: வரையினின்றும் வீழாநின்றது அருவி. (15) 76. வண்ணம் வடிவே அளவே சுவையே தண்மை வெம்மை அச்சம் என்றா நன்மை தீமை சிறுமை பெருமை வன்மை மென்மை கடுமை யென்றா முதுமை யிளமை சிறத்தல் இழித்தல் புதுமை பழமை ஆக்கம் என்றா இன்மை யுடைமை நாற்றம் தீர்தல் பன்மை சின்மை பற்று விடுதலென் றன்ன பிறவும் அதன்பால என்மனார். இதுவும் ஐந்தாம் வேற்றுமைப் பொருள் வேறுபாடுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வண்ணம் முதலாகப் பற்றுவிடுதல் ஈறாக ஓதப்பட் டனவும், அத்தன்மைய பிறவும் ஐந்தாம் வேற்றுமைப் பாலன, எ-று. யாதானும் ஒன்றைப் பொருவிக் கூறும்வழி, பண்பினானாதல், தொழிலினானாதல், பொருளினானாதல் கூறல் வேண்டுதலின், அவை யெல்லாம் எடுத்தோதப்பட்டன. உ-ம்: இதனிற்கரிது, இதனின் வட்டம், இதனின் நெடிது, இதனிற் கைக்கும், இதனிற் றண்ணிது, இதனின் வெய்து, இதனின் அஞ்சும், இதனின் நன்று, இதனிற்றீது, இதனிற் சிறிது, இதனிற் பெரிது, இதனின் வலிது, இதனின் மெலிது, இதனிற் கடிது, இதனின் முதிது, இதனின் இளைது, இதனிற் சிறந்தது, இதனின் இழிந்தது, இதனிற் புதிது, இதனிற் பழைது, இதனின் 6ஆக்கம், இவனின் இலன், இவனின் உடையன், இதனின் நாறும், இதனிற்றீரும், இவரிற் பலர் இவர், இவற்றிற் சில ஏறும், இதனிற் பற்றுவிடும். இது என்பதனை ஏற்றவற்றொடு கூட்டிக் கொள்க. அன்ன பிறவும் என்றதனான், இவனிற் காக்கும், இவனிற் பண்ணும், இவனிற் பாடும் என வருவன கொள்க. இவற்றுட் பெரிதென்பது மிகுதி குறித்து நின்றது. சிறிதென்பது குறைவு குறித்து நின்றது. ஏனையவும் இவ்வாறு நோக்கிக் கொள்க. இவையெல்லாம் ஒப்புக்குறித்துழி உவமையாம். ஏதுக்குறித்துழிக் கரிதாயிற்று, வட்டமாயிற்று என உதாரணங் காட்ட உருபேற்ற பொருளெல்லாம் ஏதுவாம். (16) 77 ஆறா குவதே, அதுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி தன்னினும் பிறிதினும் இதன திதுவெனும் அன்ன கிளவிக் கிழமைத் ததுவே. ஆறாம் வேற்றுமை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஆறாம் வேற்றுமையாவது அதுவெனப் பெயர் பெற்ற வேற்றுமைச் சொல். அது தன்னினானும் பிறிதினானும் இதனது இது என வரும் பெற்றிப்பட்ட பொருட் கிழமையை யுடைத்து, எ-று. தன் என்றது உடையானை. பிறிதென்றது உடைப் பொருளை. ஈண்டுக் கிளவி என்பது பொருள். கிளக்கப்படுவது கிளவியாயிற்று. கிழமை என்பது உரிமை. தன்னோடும் பொருளோடும் உள்ள உரிமையுணர வரும் ஆறாவதென்றவாறு. அதுவென்பது ஒருமையுணர்த்தும் சொல்லாகலின், வந்தது கொண்டு வாராதது முடித்தல் என்பதனால், பன்மையுணர்த்தும் அகர உருபுங் கொள்க. உ-ம்: சாத்தனது குழை, சாத்தனகுழைகள். உலகத்துக்குழை யுடையாரும் பலர். குழையும் பல. ஆயினும், இக்குழை இவன தென்னும் உரிமை தோன்ற வந்தவாறு கண்டுகொள்க. (17) 78. இயற்கையி னுடைமையின் முறைமையிற் கிழமையிற் செயற்கையின் முதுமையின் வினையின் என்றா கருவியிற் றுணையிற் கலத்தின் முதலின் ஒருவழி யுறுப்பிற் குழுவி னென்றா தெரிந்துமொழிச் செய்தியின் நிலையின் வாழ்ச்சியிற் றிரிந்துவேறு படூஉம் பிறவு மன்ன கூறிய மருங்கிற் றோன்றுங் கிளவி ஆறன் பால என்மனார் புலவர். இது ஆறாம் வேற்றுமைப் பொருள் வேறுபாடுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இயற்கை முதலாக வாழ்ச்சி யீறாக எண்ணப்பட்ட கிழமையினும், திரிந்து வேறுபடூஉம் பிறவற்றினும், அத்தன்மைய வாகி மேற் சொல்லப்பட்ட இதனது இது எனும் பொருட் டோன்றும் சொல்லெல்லாம் ஆறாம் வேற்றுமைப் பாலன, எ-று. மேலைச்சூத்திரத்தான், உடையானும் உடைப்பொருளு மாகிய கிழமை எடுத்தோதினார்; இச்சூத்திரத்தான் அதனின் வேறுபட்டு வருவன எடுத்தோதினார் என்று கொள்க. ‘இயற்கை’ என்பது இயல்பாகிய கிழமை. அஃதாவது பொருட்கு இயல் பாகிய பண்பு. நிலத்தது வலி. நீரது தண்மை. தீயது வெம்மை என வரும். ‘உடைமை’ என்பது உடைப்பொருளின் பாகுபாடு உணர நில்லாது பொதுமை உணர நிற்பது. அப்பொது கிழமையினும் வரும் என்றவாறு. சாத்தனது உடைமை என வரும். சாத்தனது குழை என்றதனோடு இதனிடை வேற்றுமை என்னையெனின், சாத்தனதுடைமை குழை எனவும் வந்து, குறிப்பு வினைப் பொருளொடு முடிதலின் வேறோதப்பட்டது. வினைக்குறிப்பு ஓதுகின்ற வழி, அதுச் சொல் வேற்றுமை யுடைமை யானும் என்று ஓதினார் ஆகலின், ஈண்டுக் குழை என நிற்றலேயன்றிக் குழையை யுடையன் எனவும் வருதலின் ஈண்டு வேறுபடுத்து ஓதல்வேண்டு மென்று உணர்க. ‘முறைமை’ என்பது உடையானும் உடைப் பொருளுமன்றி, முறைமை யாகிய கிழமையான் வருவது. ஆவினது கன்று, மறியது தாய். ‘கிழமை’ என்பது உரிமை. அஃதாவது இவற்கு இவள் உரியள் என்னும் பொருள்பட வருவது. முறைமையைச் சாரவைத்ததனால் கிழத்தியரென்று கொள்ளப் படும். அரசனது உரிமை. ‘செயற்கை’யாவது, செயற்கையான் வருவது. சாத்தனது கல்வி, சாத்தனது கோலம். ‘முதுமை’ என்பது பரிணாமம் குறித்து நிற்கும். சாத்தனது முதுமை. வந்தது கொண்டு வாராதது முடித்தல்8 என்பதனான், இளமையுங் கொள்க. சாத்தனது இளமை. ‘வினை’யென்பது தொழில் உணர வருவது. சாத்தனது வரவு. ‘கருவி’ என்பது உடைமை குறியாது இதற்கிது கருவி யென்னும் பொருள்பட வருவது. யானையது தோட்டி, வனைகலத்தது திகிரி. ‘துணை’ யென்பது நட்பின் மேல்வரும். சாத்தனது துணை இது. வந்தது கொண்டு வாராதது முடித்தல் என்பதனான் பகையும் கொள்க. சாத்தனது பகை. மாறுபடும் இனம் ஆகுமோ எனின், மாறுபடும் அப்பொருள் குறித்தலின் இனமாம். ‘கலம்’ என்பது பாலது கலம், நிலத்தது விலைக்கலம். ‘முதலென்பது’ சினையோடு அடுத்து முதலுணர வருவது. கொடியது முதல். ‘ஒருவழியுறுப்பு’ என்பது முதலொடு சினை யடுத்து வருவது. சண்பகத்துக் கோடு. ‘குழாமென்பது’ பல பொருட்டொகுதி. படையது குழாம், நெல்லது குப்பை. ‘தெரிந்து மொழிச்செய்தி’யாவது தெரிந்த மொழியினது செயல் கூறல். பாட்டது கருத்து, பாட்டது பொருள். ‘நிலை’ என்பது அவரவர் நின்ற நிலைமை குறித்து வருவது. சாத்தனது இல்வாழ்க்கை, சாத்தனது தவம். ‘வாழ்ச்சி’ என்பது இடம் பற்றிவரும். யானையது காடு, காட்டது யானை. ‘திரிந்து வேறு படுவன’, எண்ணது சாந்து, கோட்டது நூறு. ‘கூறிய மருங்கிற்றோன்றுவன’, சாத்தனது தோப்பு, பொருளது கேடு, ஆவினது பால், கரும்பினது சாறு என இந்நிகரன வெல்லாம் கொள்க. இன்னுங் ‘கூறிய மருங்கிற் றோன்றுங் கிளவி’ என்பதனால், உருபின் பொருள்படவரும் உடைய வென்னுஞ் சொல்லுங் கொள்க. (18) 79. ஏழா குவதே, கண்ணெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி வினைசெய் யிடத்தின் நிலத்தின் காலத்தின் அனைவகைக் குறிப்பிற் றோன்றும் அதுவே. ஏழாம் வேற்றுமை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஏழாம் வேற்றுமையாவது கண் எனப் பெயர் பெற்ற வேற்றுமைச் சொல். அது வினை நிகழுமிடத்து நிலத்தினும், காலத்தினும், அவ்விருவகைக் குறிப்பினும் தோன்றும், எ-று. எனவே, தொழில் நிகழாதவழி, நிலமும், காலமும் ஏழாம் வேற்றுமை யாகா என்றவாறாம். உ-ம்: அரங்கின்கண் வனைந்தான். மாடத்தின்கண் இருந்தான், இவை நிலம். காலைக்கண் வனைந்தான், மாலைக்கண் வனைந்தான், இவை காலம். போரின்கண் வந்தான் என்றவழி இடங் குறித்தான் ஆயின், போர் நின்றவிடத்து வந்தான் எனவும், காலங் குறித்தானாயின் போர் நின்ற காலத்து வந்தான் எனவும், நிலமும் காலமும் குறித்துக் கொள்ளக் கிடந்தது. ஆலின் கட்கிடந்தது ஆ. ஆலின்கண் இருந்தது குரங்கு என்றவழி கீழ்க் கிடந்தது ஆ ; மேலிருந்தது குரங்கு என இவ்வாறு வரும் இட வேறுபாடுங் குறித்துக் கொள்ளப்படும். பிறவும் அன்ன. 9இனி அப் பொருண்மைக்கண் உருபு புலப்படாமல் இட வேறுபாடு காட்டுவன சில கண்டவற்றை எடுத்தோதுகின்றார் வருகின்ற சூத்திரத்தான். (19) 80. கண்கால் புறம்அகம் உள்உழை கீழ்மேல் பின்சார் அயல்புடை தேவகை எனாஅ முன்இடை கடைதலை வலம்இடம் எனாஅ அன்ன பிறவும் அதன்பால என்மனார். இதுவும் ஏழாம் வேற்றுமைப் பொருள் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) கண்முதலாக இடம் ஈறாக ஓதப்பட்டனவும், அத்தன்மைய பிறவும் ஏழாம் வேற்றுமைப் பாலன, எ-று. இவையெல்லாம் பெயரைச் சார்ந்து தனித்தனி வரின் பெயராகி உருபேற்கும்; பெயரைச் சாராது இடமும் காலமும் ஆகிய பொதுமை உணரவரினும், உருபு மாத்திரமாகி நிற்கும்; இடம் வேறுபாடு உணரவரின் உருபு புலப்படாது பொருள் உணர வரும். அகத்தை, அகத்தொடு, புறத்தை, புறத்தொடு என்பன தனித்து உருபேற்றன. அரங்கினுள் அகழ்ந்தான். மாடத்துழை இருந்தான் என்பன உருபாகி நின்றன. இனி இடம் வேறுபாடு காட்டுமாறு :- கண் என்பது இடம். அரசர்கட் சென்றான் என்பது நெறிக்கட் சென்றான் என்றாற்போலச் சேறற் றொழிற்கு... அரசன் ஆதாரம் ஆதலின்றி அவனிடத்துச் சென்றான் என உருபு புலப்படாமல் இடம் என்பதொரு பொருள் உணர்த்தியவாறு கண்டு கொள்க. கால் - ‘ஊர்க்கானி வந்த பொதும்பர்’ (கலி. 56). ஊரையடுத்தல் ஆகிய பொருள் மேல் வந்தது. புறம் - சுவர்ப் புறத்துப் பாவை. பாவைக்கு ஆதாரமாகி நின்றது சுவராயினும் அச்சுவரகத்துப் பாவையின்மையின் புறமென ஒரு பொருள் தோன்ற நின்றது. அகம் - எயிலகத்துப் புக்கான். எயிற் புறம் உண்டாகலின் அகம் என ஒருபொருள் தோன்றி நின்றது. உள் -சிலையுட் பொருள். சிலைப்புறத்துப் பொருள் இன்மையின் உள் என ஒரு பொருள் தோன்றி நின்றது. உழை- அரசனுழை இருந்தான். அரசன் அருகென ஒரு பொருள் தோன்றி நின்றது. கீழ் - மாடத்தின் கீழ் இருந்தான் : மேல் - அன்மை காட்டிற்று. மேல் மாடத்தின் மேலிருந்தான் : கீழ் அன்மை காட்டிற்று. பின் - அரசன் பின் இருந்தான் : முன் அன்மை காட்டிற்று. சார்-காட்டுச்சார் ஓடும் குறுமுயல் : காட்டைச் சார்ந்த இடம் என்பது தோன்றிற்று. அயல்-மனை அயல் இருந்தான் : மனை அல்லாத பிறஇடம் தோன்ற வந்தது. புடை என்பது பக்கம். எயிற்புடை நின்றான். எயிலின்கண் ஒருபக்கம் என்பது தோன்றிற்று. தேவகை என்பது திசைக்கூறு. அரங்கின் வடக்கிருந்தான், தெற்கிருந்தான் என்றவழி, வடக்கு தெற்கென ஒரு பொருள் தோன்றி நின்றது. முன்-அரசன் முன் இருந்தான் : பின் அன்மை காட்டிற்று. இடை, கடை, தலை என்பன கலத்தின் இடை நின்றான்; கலத்தின் கடை நின்றான்; கலத்தின் தலைநின்றான் என மரக்கலத்தின் இட வேறுபாடு காட்டின. வலம், இடம் என்பன அரசன் வலத்திருந்தான் அமைச்சன், அரசன் இடத்திருந்தான் சேனாபதி என வலம் இடம் எனச் சில பொருள் தோன்றி நின்றன. அன்ன பிறவும் என்றதனால், இல், வயின், வழி, மாட்டு, தேம், மருங்கு, பால், வாய், முதல் என வருவன வெல்லாம் கூறிய நெறியினால் வேறுபாடு உணர்த்துவனவும், உருபுமாத்திரமாகி நிற்பனவும், பெயராகி நிற்பனவும் அறிந்துகொள்க. (20) 81. வேற்றுமைப் பொருளை விரிக்குங் காலை ஈற்றினின் றியலும் தொகைவயிற் பிரிந்து பல்லாறாகப் பொருள் புணர்ந் திசைக்கும் எல்லாச் சொல்லும் உரிய என்ப. அறுவகை வேற்றுமைக்கும் புறநடை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வேற்றுமைக்கு உரிய பொருளை விரியக் கூறுங்கால், முதற்பெயர் இறுதிக்கண் இயலும் தொகைச் சொல்லின்கண், தொகையாம் தன்மையிற் பிரிந்து, பலநெறியாகப் பொருளைப் புணர்ந்து ஒலிக்கும் எல்லாச் சொல்லும் உரிய என்று சொல்லுவர் ஆசிரியர், எ-று. தொகுத்தல் என்பது செறிதல். முதற் பெயரொடு செறிவது தொகை என்று பெயர் ஆயிற்று. இவையாவன:- படைக்கை, குழைக்காது, தாய்மூவர், குதிரைத்தேர், கருப்புவேலி, வரையருவி, பாண்டியநாடு, குன்றக்கூகை என்பன. இவ் வேற்றுமையின் இறுதிப் பெயர் முதற்பெயரோடு ஒட்டி நிற்றலின் தொகை என்றார். இவை விரிய நின்ற காலத்து, இவற்றைப் புணர்ந்து ஒலிக்கும் சொல்லாவன :- படைக்கை என்றவழி படையைப் பிடித்த கை, எடுத்த கை, ஏந்திய கை எனவும்; குழைக்காது என்றவழி குழையையுடைய காது, செறித்த காது, இட்ட காது, அணிந்த காது எனவும்; தாய்மூவர் என்ற வழி தாயோடு கூட மூவர், கூடிய மூவர் எனவும்; குதிரைத்தேர் என்றவழி குதிரையாற் பூட்டப்பட்ட தேர், பூணப்பட்ட தேர், ஓட்டப்பட்ட தேர் எனவும்; கரும்புவேலி என்றவழி கரும்பிற்கு ஏமமாகிய வேலி, வலியாகிய வேலி எனவும்; வரையருவி என்றவழி வரையினின்றும் வீழா நின்ற அருவி, ஒழுகா நின்ற அருவி நீங்கா நின்ற அருவி எனவும்; பாண்டிய நாடு என்றவழி பாண்டியனது நாடு, உடைய நாடு, எறிந்த நாடு, கொண்ட நாடு எனவும்; குன்றக் கூகை என்றவழி, குன்றத்துக்கண் வாழாநின்ற கூகை, இராநின்ற கூகை எனவும் இவ்வாறு வருவன. இவையெல்லாம் எடுத்தோதின் வரம்பில ஆதலின், எல்லாச் சொல்லும் உரிய எனப் புறநடை ஓதல் வேண்டிற்று. இவற்றுள் ஆறாம் வேற்றுமை உருபு புலப்பட்டவழி பெயரொடு முடிந்தும், புலப்படாதவழி சிறுபான்மை வினைக் குறிப்பொடும், வினையொடும் முடிந்தும், ஏனை வேற்றுமைகள் எல்லாம் வினையொடும், வினைக் குறிப்பொடும் முடிந்தும் வருதலால் பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் ஆகிய எல்லாச் சொல்லும் வேற்றுமைக்கு முடிபாம் என்று கொள்க. அவ்வழி, வினையும் வினைக்குறிப்பும் ஆகிய சொற்கள் இறுதி நின்ற பொருளோடு முடிபுழிப் பெயரெச்சமாகியும், தனிவரின் முற்றாகியும் வரும் என்று கொள்க. இச்சூத்திரத்தானே வேற்றுமைக்கு முடிபு கூறினாரும் ஆம். (21) இரண்டாவது வேற்றுமை ஓத்து முடிந்தது இவ்வோத்தினுள் சூத்திரம் உட்பட உரையினது அளவு கிரந்த வகையால் முந்நூற்று முப்பது வேற்றுமையியல் அடிக்குறிப்புகள் 1. ஓத்து. (இ.ஏ.) 2. இதனை இளம்பூரணர் முதலோர் இரண்டு சூத்திரங்களாகக் கொள்வர். 3. ஒருக்கால். (இ.ஏ.) 4. வேற்றுமை மயங்கியல் - 28. 5. கள்வர்க் கஞ்சும் என்று பிரதியில் காணலுறுகின்றது. 6. இதனின் ஆம் - இரண்டாம் ஏடு. 7. வினையியல் - 16. 8. தன்னினமுடித்தல். இரண்டாவதேடு. வேற்றுமை மயங்கியல் ஒரு வேற்றுமைக்குரிய உருபு மற்றொரு வேற்றுமையோடு மயங்குவது உருபு மயக்கம், ஒரு வேற்றுமைக்குரிய பொருள் மற்றொரு வேற்றுமையிற் சென்று மயங்குவது பொருள் மயக்கம். இவ்விருவகை மயக்கத்தினையுங் கூறுவது இவ்வியல். அதனால் இது வேற்றுமை மயங்கியலென்னும் பெயர்த்தாயிற்று. வேற்றுமைக்குச் சொல்லிய இலக்கணத்திற் பிறழ்ந்து வழுவாய் அமைத்துக்கொள்ளப்படுவனவும் பிறவுமாக வேற்றுமையொடு தொடர்புடைய விதிகள் சில ஈண்டுக்கூறப்படுதலின் வேற்றுமை மயங்கியலென்னும் இப்பெயர் பன்மை நோக்கிச் சென்ற குறி யென்றும் இதன்கண் “யாதனுருபிற் கூறிற்றாயினும்” என்ற சூத்திரத்தால் உருபு மயக்கமுணர்த்தி ஏனைச் சூத்திரங்களாற் பொருள் மயக்கமுணர்த்தினாரென்றுங் கூறுவர் சேனாவரையர். இவ்வியலிலுள்ள சூத்திரங்களை 35-ஆக இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும், 34-ஆகச் சேனாவரையரும், 33-ஆகத் தெய்வச்சிலையாரும் பகுத்து உரை கூறியுள்ளார்கள். இவ்வியலின் தொடக்கத்தே ‘கருமமல்லாச் சார்பென் கிளவி’ (1) என்பது முதல் ‘அச்சக் கிளவிக்கு’ (17)என்னும் சூத்திர முடிய வேற்றுமைப் பொருள் மயக்கம் உணர்த்தி ‘அன்னபிறவும்’ (18) என்பதனால் அதற்குப் புறனடையுங்கூறி முடித்தார். பொருள் மயக்கமாவது ஒவ்வொரு வேற்றுமைக்கும் உரியனவாக வேற்றுமையியலிற் சொல்லப்பட்ட காத்தல் ஒத்தல் முதலிய அவ்வவ்வேற்றுமையின் பொருட் பகுதிகள் தமக்குரிய வேற்றுமைப் பொருளைவிட்டு நீங்காது பிறிதொரு வேற்றுமையின் பொருளின் கண்ணே சென்று மயங்குதலாம். எடுத்துக்காட்டாக ஒன்றை நோக்குவோம். இரண்டாம் வேற்றுமைக்குச் சொல்லப்பட்ட ‘காப்பின் ஒப்பின்’ எனவரும் பொருட் பகுதிகளுள் சார்பு பொருண்மையும் ஒன்றாகும். அது கருமச் சார்பும் கருமமல்லாச் சார்பும் என இரண்டு வகைப்படும். அவற்றுள் கருமச் சார்பாவது தூணைச்சார்ந்தான் என்றாற்போல ஒன்றையொன்று மெய்யுற்றுச் சார்தலாகும். கருமமல்லாச் சார்பென்பது அரசரைச் சார்ந்தான் என்றாற்போல ஒன்றையொன்று மெய்யுறுதலின்றி வருவதாகும். இவற்றுள் கருமமல்லாத சார்புபொருண்மை தனக்குரிய இரண்டாம் வேற்றுமையாகிய செயப்படு பொருளில் நீங்காது அரசர்கட் சார்ந்தான் என ஏழாம் வேற்றுமைக்குரிய இடப் பொருளிலும் மயங்கினமை காணலாம். இவ்வாறே தொல்காப்பியனார் கூறிய ஏனைய வேற்றுமைப் பொருள் மயக்கங்களையும் பகுத்துணர்ந்து கொள்ளுதல் பயில்வோர் கடனாகும். இனி உருபு மயக்கமாவது ஒரு வேற்றுமைக்குரிய உருபு தனக்குரிய வேற்றுமைப் பொருளை விட்டுப் பிறிதொரு வேற்றுமைப் பொருளிற் சென்று மயங்குதல் ‘நாணற் கிழங்கு மணற்கு ஈன்ற முளை’ என்புழி நாணற் கிழங்கு மணலிடத்தே தோற்றுவித்த முளையென்பது பொருளாதலால், மணற்கண் எனக் கண்ணுருபு நிற்க வேண்டிய ஏழாம் வேற்றுமைப் பொருளிடத்தே மணற்கு என நான்காம் வேற்றுமை யுருபு மயங்கியதெனக் கொள்ளுதல் வேண்டும். இவ்வாறு ஒரு தொடர் எந்த வேற்றுமை யுருபினாற் சொல்லப்பட்டாலும் அவ்வுருபிற் கேற்பப் பொருளை மாற்றாமல் பொருளுக்கேற்ப உருபினை மாற்றிக் கொள்ளுதல் வேண்டுமென்பார், ‘யாதனுருபிற் கூறிற்றாயினும் பொருள் செல்மருங்கின் வேற்றுமைசாரும்’ என்றார் ஆசிரியர், வேற்றுமை யுருபுகள் ஒன்றும் பலவுமாகத் தொடர்ந்து அடுக்கி, முடிக்குஞ் சொல்லொன்றால் முடிதலும், அவ்வுருபுகள் ஒரு தொடரின் இடையிலே யன்றி இறுதியிலும் நிற்றலும், இங்ஙனம் இறுதியிலும் இடையிலும் விரிந்து நின்ற எல்லா வுருபுகளும் முடிக்குஞ் சொல்லொன்றினால் முடிதலேயன்றித் தனித்தனி முடிக்குஞ் சொல்லைப் பெற்று முடிதலும், விரிந்து நிற்பதாகிய தொகாநிலைத் தொடரின்கண்ணே நின்ற அவ்வுருபுகள் மறைந்து நிற்றலும் உளவென்பதும், தொடரிறுதியிலே மறைந்து நிற்றற்குரிய உருபுகள் ஐயுருபும் கண்ணுருபுமேயன்றி ஏனைய அல்லவென்பதும், கு, ஐ, ஆன் என்னும் இவ்வுருபுகள் அகரம் பெற்றுத் திரிவனவென்பதும், ஒரு வேற்றுமையின் பொருள் சிதையாமல் அதன்கண் பிறிதொரு வேற்றுமையின் உருபு மயங்கி நிற்றல் கூடுமென்பதும், அவ்வாறு நான்காம் வேற்றுமை யுருபு பிறவேற்றுமைகளின் பொருள் சிதையாமல் மயங்கி நிற்கும் இடங்கள் இவை யென்பதும், இங்ஙனமே ஏனையுருபுகளும் வழக்கு நடையை யொட்டி மயங்கி வருதலால் அவை குற்றமுடையன அல்லவென்பதும் ஆகிய உருபு மயக்கம்பற்றிய விதிகளை இவ்வியலில் 19 முதல் 28 வரையுள்ள சூத்திரங்களால் ஆசிரியர் தெளிவுபடுத்துகின்றார். இவ்வேற்றுமைகளை முடிக்குஞ் சொல்லாயும் ஏற்குஞ் சொல்லாயும் வருவன வினையும் பெயருமாதலின் வினைச் சொல்லால் அறியப்படுந் தொழிற்காரணங்களையும் பெயர்ச்சொல்லால் அறியப்படும் பொருள் வேறுபாட்டினையும் ஆசிரியர் இவ்வியலிற் கூறுகின்றார். வினை, செய்வது, செயப்படுபொருள், நிலம், காலம், கருவி என்னும் ஆறுடனே இன்னதற்கு, இது பயன் எனவரும் இரண்டினையுங் கூட்டத் தொழிலுக்குரிய காரணங்கள் எட்டாமென்றும், எல்லாத் தொழிற்கும் இவ்வெட்டும் வருமென்னும் இன்றியமையாமை யில்லை; இவற்றுள் சில தொழிற்கண் ஒன்றிரண்டு குறையத்தக்கன வழக்கின்கண் குறைந்துவரு மென்றும் வினைக்குரிய முதனிலை களைக் குறித்து ஆசிரியர் விளக்கியுள்ளார். ஒரு பொருளின் இயற்பெயர் மற்றொரு பொருளுக்கு ஆகி வருவது ஆகுபெயராம். முதலுக்குரிய இயற்பெயரால் சினைப் பொருளும், சினைக்குரிய பெயரால் முதற்பொருளும், இடத்தின் பெயரால் அவ்விடத்து நிகழ் பொருளும், பண்பின் பெயரால் பண்பு கொள்பொருளும், காரணப் பெயரால் அக்காரணத்தால் இயன்ற காரியப் பொருளும், இரண்டுபெயர்தொக்கு ஒருசொல் நீர்மைப்பட்டு நிற்றலால் மற்றொரு பொருளும், செயப்படு பொருளை யுணர்த்தும் பெயரால் வினைமுதலாகிய பொருளும் விளங்க நிற்பன ஆகுபெயர்களாம். அளவுப்பெயரும் நிறைப் பெயரும் அளக்கப்படுவதும் நிறுக்கப்படுவதுமாகிய பொருளை யுணர்த்தின் அவையும் ஆகுபெயரேயாம். எனவே ஒரு பொருளின் இயற்பெயர் அப்பொருளோடு தொடர்புடைய பிறிதொரு பொருளின் மேல் ஆகிவருங்கால் ஆகுபெயரெனப்படுமென்பது நன்கு புலனாம். இவ் வாகுபெயர்கள் இயற்பெயராய் நின்ற காலத்துத் தமக்குரிய பொருளின் நீங்காது நின்று தம் பொருளைவிட்டுப் பிரியாத தொடர்புடைய பொருளை யுணர்த்துதலும், அவ்வாறு நெருங்கிய தொடர்பின்றி அச்சொற்பொருளோடு ஒருவாற்றான் தொடர்புடையவேறொ ரு பொருளையுணர்த்துதலும் என இவ்விரண்டியல்பினையுடையன என்பர் தொல்காப்பியர். எனவே இவ்வாகுபெயர்களெல்லாம் நின்றாங்கு நின்று தம் இயற்பெயர்ப் பொருளையும் வேறுணர்த்தி நிற்கும் ஆற்றலுடையன வென்பது பெறப்படும். இவ்வாறு இயற்பெயர்கள் தம் பொருளோடு தொடர்புடைய வேறொரு பொருள்மேல் ஆகிவருங்கால் அங்ஙனம் ஆதற்குரிய பொருட்டொடர்பு ஐ முதலிய அறுவகை வேற்றுமைகளின் இடமாக நின்று தோற்றுமியல்பினதாகும். இவ்வாறு ஆகுபெயர்களெல்லாம் வேற்றுமைப் பொருள்களுடன் நெருங்கிய தொடர்புடையன என்பதை ஆராய்ந்தறிதல் வேண்டு மென்பார் வேற்றுமை மருங்கிற் போற்றல் வேண்டும்’ என்றார் தொல்காப்பியனார். இங்ஙனம் ஆசிரியர் கூறியதனையுளங் கொண்டு “இவ்வாகுபெயர்கள் எழுவாய் வேற்றுமை மயக்கமென்றுணர்க” என நச்சினார்க்கினியரும், “முதலிற் கூறுஞ் சினையறி கிளவியும் சினையிற்கூறும் முதலறிகிளவியும் பண்புகொள் பெயரும் இருபெயரொட்டும் ஆறாம் வேற்றுமைப் பொருள் மயக்கம். பிறந்தவழிக் கூறல் ஏழாம் வேற்றுமைப்பொருள் மயக்கம். இயன்றது மொழிதலும் வினைமுதலுரைக்குங் கிளவியும் மூன்றாம் வேற்றுமைப்பொருள் மயக்கம்” எனத் தெய்வச்சிலையாரும் கூறியவை இவண் கருதத்தக்கனவாம். ஆகவே வேற்றுமைப் பொருண்மயக்கமாகிய ஒப்புமைகருதி ஆகுபெயரிலக்கணம் இவ்வியலின் இறுதிக்கண் கூறப்பட்ட தென்பது பழைய உரையாசிரியர்களின் கருத்தாதல் நன்கு பெறப்படும். ஆகுபெயர்ச் சூத்திரத்தின்கண்வரும் இருபெயரொட் டென்பதற்குப் ‘பொற்றொடி’ யென உதாரணங்காட்டினர் இளம்பூரணர். அதனையுணர்ந்த சேனாவரையர் இருபெயரொட் டென்பதற்கு “அன்மொழித் தொகைமேல்வரும் இருபெயரொட்டு” எனப்பொருள் கூறியதோடு தொகையாத லுடைமையால் எச்சவியலுளுணர்த்தப்படும் அன்மொழித் தொகை இயற்கைப் பெயர் ஆகுபெயர் என்னும் இருவகைப் பெயருள் ஆகுபெயரென ஒன்றாயடங்குதல் பற்றி ஈண்டுக் கூறப்பட்டது என விளக்கமுங் கூறியுள்ளார். ‘பொற்றொடி’ யென்பது அன்மொழித் தொகையாவதன்றி ஆகுபெயராகாதெனக்கண்டுணர்ந்த நச்சினர்க்கினியர் இருபெயரொட்டென்பதற்கு ‘அன்மொழிப் பொருள்மேல் நில்லாத இரு பெயரொட்டு’ எனப் பொருள்கூறி மக்கட்சுட்டு, என அதற்கு உதாரணமுங் காட்டினார். மக்கள்+சுட்டு என்னும் இருபெயரும் ஒட்டி நின்று மக்களாகிய சுட்டப்படும் பொருள் என்னும் பொருளைத்தந்தன. இதன்கண் சுட்டு என்னும் பெயர் சுட்டப்படும் பொருளையுணர்த்தி ஆகுபெயராய் நிற்ப, மக்கள் என்னும் முதன்மொழி அவ் வாகுபெயர்ப் பொருளை விசேடித்து நிற்க இங்ஙனம் இருபெயரும் ஒட்டிநின்றனவாதலின் இருபெயரொட்டென்றார் ஆசிரியர். இதன்கண் பின்னுள்ள மொழியே ஆகுபெயராய் நின்றதாதலின் இதனைப் பின்மொழி யாகுபெயரென்பாருமுளர். இனி ‘பொற்றொடி’ என்னும் தொடரின்கண் பொன் என்னும் முதல்மொழி இவ்வாறு அன்மொழித் தொகைப்பொருளை விசேடித்து நில்லாது தொடி யென்னும் இயற்பெயர்ப் பொருளையே விசேடித்து நிற்க அவ்விரு சொற்களின் தொகையாற்றலால் அவ்விரண்டுமல்லாத மற்றொரு மொழியின் பொருள் தோன்றக் காண்கின்றோம். எனவே மக்கட்சுட்டு என ஆகுபெயராய்வரும் இருபெயரொட்டும் பொற்றொடியென அன்மொழித் தொகைமேல் வரும் இருபெயரொட்டும் தம்முள் வேறெனவே உணர்தல் வேண்டும். இருபெயரொட்டென்பது, ‘இரண்டு பெயர் தொக்கு ஒரு சொல் நீர்மைப்பட்டு மற்றொரு பொருள் தரு பெயராகி வருவது’ எனக்கூறித் துடியிடை யென்பது துடிபோன்ற இடையினை யுடையாளை யுணர்த்தி ஆகுபெயராயிற்று என உதாரணங்காட்டி விளக்கிய தெய்வச்சிலையார், ஆகுபெயராவது ஒட்டுப்பட்ட பெயரோடு ஒற்றுமைப்பட்டுவரும் என்றும் அன்மொழித் தொகையாவது அப்பொருளின் வேறுபட்டு வருமென்றும் அத்தன்மை யுடையதாதல் அன்மொழி என்ற சொல்லாலேயே விளங்கு மென்றும் அவ்விரண்டிற்கும் வேறுபாடு காட்டினார். எனினும் அவர் இருபெயரொட்டாகு பெயர்க்குக்காட்டிய துடியிடை யென்பதும் சேனாவரையர் காட்டிய பொற்றொடி யென்பதுபோல இரண்டு பெயருந்தொக்க தொகையாற்றலால் அதனையுடையாளை யுணர்த்திய அன்மொழி தொக்கு நின்றதெனக் கொள்ளுதற்கும் இடமுண்டாதலின் அதனை ஒருதலையாக ஆகுபெயரெனத் துணிதற்கில்லை. ஆகுபெய ரென்றும் அன்மொழித்தொகையென்றும் வேறுவேறு இலக்கணமுடையனவாக ஆசிரியர் கூறுதலால் ஆகுபெயரும் அன்மொழித் தொகையும் தம் பொருளுணர்த்தாது பிறிது பொருளுணர்த்தலான் ஒக்குமாயினுங் ஆகுபெயர் ஒன்றன் பெயரான் அதனோடு தொடர்புடைய பிறிது பொருளையுணர்த்தி ஒருமொழிக் கண்ணதாய் வருமென்றும் அன்மொழித்தொகை அத்தகைய தொடர்பெதுவும் வேண்டாது இருமொழியுந் தொக்க தொகையாற்றலால் பிறிது பொருளுணர்த்தி இருமொழிக்கண் வருமென்றும் இவையே இரண்டிற்கும் வேறுபாடென்றும் சிவஞானமுனிவர் கூறுங் கொள்கையே ஆசிரியர் தொல்காப்பியனார்க்கு உடன்பாடாதல் பெற்றாம். - க. வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 197-202 மூன்றாவது வேற்றுமை மயங்கியல் 82. கருமம் அல்லாச் சார்பென் கிளவிக் குரிமையும் உடைத்தே கண்ணென் வேற்றுமை. இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின், வேற்றுமை மயங்கியல் என்னும் பெயர்த்து : ஒன்றற்கு உரிய உருபு ஒன்றனொடு மயங்குதலும், ஒன்றற்கு உரிய பொருள் ஒன்றனொடு மயங்குதலும் கூறினமையாற் பெற்ற பெயர். இதனுள் இச்சூத்திரம் என் நுதலிற்றோ எனின், இரண்டாவது ஏழாவதனொடு மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. கருமம் என்பது வடமொழிச் சிதைவு. செயப்படு பொருளை அவர் கருமம் என்று வழங்குப. (இ-ள்.) செயப்படு பொருள் அல்லாத சார்பு என்னுஞ் சொற்கு ஏழாம்வேற்றுமை யாவதும் உடைத்து. எ-று. உம்மை எதிர்மறையாதலான் இரண்டாம் வேற்றுமை உரித்தாதல் பெரும்பான்மை. உ-ம்: மனையைச் சார்ந்தான்-மனைக்கட் சார்ந்தான் எனவரும். தூணைச் சார்ந்தான் என்றாற்போலச் சாரப்பட்ட பொருள் தோன்றாது இடமே தோன்றுதலின் ஏழாவதற்கும் உரித்தாயிற்று. ஒரு பொருள் இரண்டு உருபிற்கும் உரித்தாகி வருதலின் உருபு மயக்கம் ஆயிற்று. (1) 83. சினைநிலைக் கிளவிக்கு ஐயும் கண்ணும் வினைநிலை ஒக்கும் என்மனார் புலவர். இதுவும் அது. (இ-ள்.) சினைப் பொருண்மைக்கண் நிற்கும் பெயர்க்கு இரண்டாவதும் ஏழாவதும் வினைநிலைக்கண் ஒத்த இயல்பின, எ-று. உ-ம்: கண்ணைக் குத்தினான், கண்ணுட் குத்தினான் எனவரும். கண் என்பது குத்தப்படும் பொருளுமாகிக் குத்துதற்கு இடமும் ஆகி வருதலின், இரண்டற்கும் ஒத்த இயல்பினதாயிற்று. இடம் ஆயினவாறு என்னை யெனின், கண்ணின்கண்ணும் குத்தப்படும். ஆகலின் என்க. வினைநிலை ஒக்கும் என்றார் ஆயினும் ஏற்கும் வினையே கொள்ளப்படும். (2) 84. கன்றலும் செலவும் ஒன்றுமார் வினையே. இதுவும் அது. (இ-ள்.) கன்றலும் செலவும் ஆகிய வினைப் பொருண்மை, மேற் சொல்லப்பட்ட இரண்டாவதனோடும், ஏழாவதனோடும் ஒன்றித் தோன்றும், எ-று. இரண்டும் ஏழும் என்பது மேலைச்சூத்திரத்தினின்றும் தந்துரைக்கப்பட்டது. உ-ம்: சூதினைக் கன்றினான்; சூதின்கண் கன்றினான். நெறியைச் சென்றான்; நெறிக்கண் சென்றான். அவை பொருளு மாகி இடமுமாகி நிற்றலின் இரண்டற்கும் உரியவாயின. (3) 85 முதற்சினைக் கிளவிக் கதுவென் வேற்றுமை முதற்கண் வரினே சினைக்கை வருமே முதல்முன் ஐவரின் கண்ணென் வேற்றுமை சினைமுன் வருதல் தெள்ளி தென்ப. இதுவும் அது; இரண்டாவதும் ஏழாவதும் ஒரு பொருட்கண் நிகழ்வதோர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) முதலும் சினையும் பொருளுஞ்சேரப்பெறுஞ் சொற்கு, முதற்கண் அது வரின் சினைக்கு ஐ வரும், முதற் கண் ஐ வரின் சினைக் கண், கண் வருதல் தெளியப்பட்டது என்று சொல்லுவர் புலவர், எ-று. மயக்கம் அன்று என்றவாறாம். (உ-ம்.) யானையது கோட்டைக் குறைத்தான்; யானையைக் கோட்டின்கண் குறைத்தான் என வரும். ‘கண் என் வேற்றுமை சினை முன் வருதல் தெள்ளிது’ எனவே தெள்ளிதன்றிச் சிறுபான்மை ஐ வருதலும் கொள்ளப் படும். (உ-ம்) யானையைக் கோட்டைக் குறைத்தான். (4) 86. முதலுஞ் சினையும் பொருள்வேறு படாஅ நுவலுங் காலைச் சொற்குறிப் பினவே. முதல் சினைக் கிளவி யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) முதல் சினை என்பன பொருளால் நியமம் இல. அவற்றைச் சொல்லுமிடத்துச் சொற்குறிப்பினால் அறியப்படும், எ-று. என்றது :- ஒரு காற் சினையாகி வந்தது தானே ஒரு கால் முதலும் ஆகிவரும் என்றவாறு. (உ-ம்.) கோட்டது நுனியைக் குறைத்தான். கோட்டை நுனிக்கட் குறைத்தான். கோட்டை நுனியைக் குறைத்தான் எனவரும். (5) 87. பிண்டப் பெயரும் ஆயியல் திரியா பண்டியல் மருங்கின் மரீஇய மரபே. பிண்டப்பெயர்க்கு உரியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பிண்டப் பெயராவது திரட்சியானாகிய பெயர் அதுவும்-திரட்சியும் திரண்ட பொருளும் பொருளான் வேறுபடாவற்றைச் சொல்லுந் திறம் பண்டு வழங்கின பக்கத்து மருவிய மரபு, எ-று. எனவே, மேற் சொல்லியவாறு போலச் சொல்லுவான் குறித்த வழியோடா தென்றவாறாம், எ-று. (உ-ம்.) படையது குழாத்தைக் கெடுத்தான். நெல்லது குப்பையைச் சிதறினான். குப்பையைத் தலைக்கட் சிதறினான். குப்பையது தலையைச் சிதறினான். குப்பையைத் தலையைச் சிதறினான் என வரும். குழாத்தைத் தலைக்கட் கெடுத்தான் எனவும், படையைக் குழாத்தின் கட் கெடுத்தான் எனவும், நெல்லைக் குப்பையின்கட் சிதறினான் எனவும் வரின், பொருள் ஒற்றுமைப்பட்டுத் தோன்றாமையின் மரீஇய மரபு அன்றாயிற்று. பிறவும் அன்ன. (6) 88. ஒருவினை ஒடுச்சொல் உயிர்பின் வழித்தே. மூன்றாம் வேற்றுமை உடனிகழ்ச்சிக்கு உரியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இருபொருட்கண் ஒருவினை பற்றிவரும் ஒடுச்சொல் அவ்விரு பொருளினும் உயர்ந்த பொருளின் வழியை உடைத்து, எ-று. ‘வழி’ என்றது அப்பொருளின் வழியாகிய பொருள் என்று கொள்க. உயர்வு என்பதைச் சிறப்பென்று கொள்க. கொள்ளவே, அத்தொழிற்குச் சிறவாத பொருட்கண் வரும் என்றவாறாம். (உ-ம்.) அமைச்சரோடு இருந்தான் அரசன். இருந்தான் என்னும் தொழிற்குச் சிறந்தான் அரசன் ஆதலின், சிறவாத அமைச்சர் மேல் ஒடு வந்தது. அரசரோடு இருந்தார் அமைச்சர் என்றவழி இருந்தார் என்னும் தொழிற்குச் சிறந்தார் அமைச்சர் ஆதலின் ஒடு அரசன்மேல் வந்தது. இஃது உடனிகழ்ச்சி ஆகலான் அத்தொழிற்கு இருவரும் சிறந்தார் எனிற் குற்றம் என்னையெனின், அரசனோடு இருந்தார் அமைச்சர், அவரை மந்திரம் இருமின் என்றான் என்றவழி, அச்சுட்டு ஈரிடத்தும் செல்லாமையாலும், தொழில் முடியும் பெயரே சிறப்புடைய தெனவுங் கொள்க. இனிச் சிறப்புடைய பொருண்மேல் ஒடு வருமெனப் பொருள் உரைத்தார் உளர் 1ஆயினும், இப்பொருள் பாணினியார்க்கும் ஒக்கும். (7) 89. மூன்றனும் ஐந்தனும் தோன்றக் கூறிய ஆக்கமொடு புணர்ந்த ஏதுக் கிளவி நோக்கோ ரனைய என்மனார் புலவர். மூன்றாவதற்கும் ஐந்தாவதற்கும் உரியதோர் இயல்பு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மூன்றாவதன்கண்ணும் ஐந்தாவதன்கண்ணும் விளங்க எடுத்தோதப்பட்ட ஆக்கம் என்னும் சொல்லொடு தொடர்புபட்ட ஏதுக் கிளவி, இருவகை வேற்றுமைக்கும் நோக்கு ஒரு தன்மைய, எ-று. (உ-ம்.) வாணிகத்தான் ஆயினான்; வாணிகத்தின் ஆயினான் என இருவாற்றானும் வரும். ஆக்கமொடு புணர்ந்த ஏது என விதந்தோதிய அதனான், ஏனை ஏதுக்கள் நோக்கு ஒவ்வாத நிலைமைய என்பது பெறுதும். “அமைத்தனாற் றக்கான் அரசன்” என்னும் பொருட்கண், “அமைத்தனிற் றக்கான் அரசன்” என்றவழித் திரிபின்றி ஏதுப் பொருள்படுதலின்றி, அமைத்தனைப்போல வென்றாதல், அமைத்தனிற் காட்டில் என்றாதல் பொருள் உரைக்கவும் படுமாகலால், ஆக்கமொடு புணர்ந்த ஏதுவே ஒப்ப முடிவது. ஏனைய ஏதுக்கள் திரிபுடைய என்பது அறிவித்தற்கு இச்சூத்திரங் கூறப்பட்டது. (8) 90. இரண்டன் மருங்கின் நோக்கல் நோக்கமவ் விரண்டன் மருங்கின் ஏதுவு மாகும். இரண்டாவதனோடு மூன்றாவதும் ஐந்தாவதும் மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இரண்டாம் வேற்றுமைக்கண் ஓதப்பட்ட நோக்கப் பொருண்மையின்கண் நோக்குதல் அல்லாத நோக்கம், மூன்றாவ தினும் ஐந்தாவதினும் ஓதப்பட்ட ஏதுவினும் ஆம், எ-று. அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறநோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை (திருக்குறள் -புறங்கூறாமை. 91) என்றவழி அறத்தை நோக்கியென விரித்தலேயன்றி, அறத்தான் நோக்கி யாற்றுங்கொல், அறத்தின் நோக்கி யாற்றுங் கொல் என விரிப்பினும் ஆம் என்றவாறு. புன்சொல் உரைப் பானை நிலம் பொறுக்கின்றது. பொறையாகிய தருமத்தைக் குறித்தோ; அத்தருமம் தனக்கியல்பாதலின் அஃதேதுவாகவோ என இருவாற்றானும் விரிப்பினும் அமைந்தவாறு கண்டுகொள்க. (9) 91 2தடுமாறு தொழிற்பெயர்க் கிரண்டும் மூன்றுங் கடிநிலை யிலவே பொருள்வயி னான. இரண்டாவதும் மூன்றாவதும் மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இரண்டு பொருட்கண் தடுமாறி வரும் தொழிலை யுடைய பெயர்க்கு இரண்டாவதும், மூன்றாவதும் வருதல் நீக்கப்படாது பொருள் கொள்ளுமிடத்து, எ-று. அஃதாவது ‘புலிகொல் யானை’ என்பது. இதற்குப் பொருள் உரைக்குங்கால், புலியைக் கொன்ற யானை எனவும், புலியாற் கொல்லப்பட்ட யானை எனவும் இவ்வாறு இருவகை வேற்றுமைக்கும் உரித்தாகலின் மயக்கம் ஆயிற்று. பொருள் துணியுமாறு வருகின்ற சூத்திரத்தாற் கூறுப. (10) 92. ஈற்றுப்பெயர் முன்னர் மெய்யறி பனுவலின் வேற்றுமை தெரிய உணரு மோரே. மேலதற்கோர் புறநடை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இறுதிக்கண் நின்ற பெயர் முன்னர்ப் பொருள் அறியவரும் முறையினான், வேறுபாடறிவதன் இயல்பு உணர வேண்டுவார், எ-று. (உ-ம்.) புலி கொல் யானை ஓடுகின்றது; புலி கொல் யானைக் கோடு வந்தது என்றவழி, கொலையுண்ட பொருள் விளங்கிய வாறு கண்டு கொள்க. (11) 93. ஓம்படைக் கிளவிக் கையு மானுந் தாம்பிரி விலவே தொகைவரு காலை. இரண்டாவதும் மூன்றாவதும் மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஓம்படுத்துச் சொல்லுதற்கண் வருஞ் சொற்கண், உருபு தொகையாகி வருங்காலத்து, இரண்டாவதும், மூன்றாவதும் நீக்குதல் இல. எனவே இரண்டாவதன் பொருளும் மூன்றாவதன் பொருளும் படும், எ-று. (உ-ம்.) ‘அறம் போற்றி வாழ்மின்’ என்றவழி, அறத்தைப் போற்றி வாழ்மின் எனப் போற்றப்படுவது அறம் என்னும் பொருளும்பட்டது : அறத்தாற் போற்றி வாழ்மின் என்றவழி போற்றப்படுவான் தான் என்னும் பொருளும் பட்டது. (12) 94 4குத்தொக வரூஉங் கொடையெதிர் கிளவி அப்பொரு ளாறற் குரித்து மாகும். நான்காவதோடு ஆறாவது மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) நான்காம் உருபு தொக எதிர்காலம் பற்றிவரும் கொடைப் பொருண்மை ஆறாவதும் விரித்தற்கு உரித்தும் ஆகும், எ-று. (உ-ம்.) ‘தேவர் பலி’ என்பது தேவர்க்கோ பலி என விரிதலே யன்றித் தேவரது பலி எனவும் விரியும். (13) 95. அச்சக் கிளவிக் கைந்து மிரண்டும் எச்ச மிலவே பொருள்வயி னான. ஐந்தாவதும் இரண்டாவதும் மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அச்சம் என்னும் பொருண்மைக்கு ஐந்தாவதும் இரண்டாவதும் பொருட் பக்கத்தான் ஒழிபில, எ-று. எனவே சொற் பக்கத்தான் ஏனை வேற்றுமையும் ஒழிபில எ-று. (உ-ம்.) கள்ளரை அஞ்சும் என்பது செயப்படுபொருள் குறித்து நின்றது. கள்ளரின் அஞ்சும் என்பது பொரூஉப் பொருளும், ஏதுவும் குறித்து நின்றது. இனிக் கள்ளரான் அஞ்சும், கள்ளர்க்கஞ்சும், கள்ளர் மாட்டு அஞ்சும் எனவரினும், அவை ஏதுக் குறித்து நிற்றலின் பொருள் வகையான் ஏதுவாகின. (14) 96. அதுவென் வேற்றுமை உயர்திணைத் தொகைவயின் அதுவென் னுருபுகெடக் குகரம் வருமே. ஆறாவது நான்காவதனொடு மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உயர்திணைத் தொகைப்பொருண்மேல் வரும் அது வென் வேற்றுமை அது என்னும் உருபுகெடக் குகரம் வரும், எ-று. (உ-ம்.) நம்பி மகன் என்பதனைக் கிழமைப் பொருள்பட விரிப்புழி, நம்பிக்கு மகன் என விரியும். நம்பியது மகன் எனின் வழுவாம். (15) 97. ஆறன் மருங்கின் வாழ்ச்சிக் கிழமைக்கு ஏழு மாகும் உறைநிலத் தான. ஆறாவதனோடு ஏழாவது மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஆறாம் வேற்றுமைக்கண் வாழ்ச்சிக் கிழமைக்கு ஏழாவதும் ஆம் பொருள் உறையும் நிலத்துக்கண், எ-று. எனவே உறையாப் பொருட் கண் வாராது என்றவாறாம். உறை பொருட்கண் வந்தது - யானையது காடு. உறையும் நிலத்துக் கண் வந்தது-காட்டது யானை. அது காட்டுள் யானை எனவும் வரும். (16) 98. அன்ன பிறவும் தொன்னெறி பிழையாது உருபினும் பொருளினும் மெய்தடு மாறி இருவயி னிலையும் வேற்றுமை யெல்லாம் திரிபிட னிலவே தெரியு மோர்க்கே. வேற்றுமை மயக்கத்திற்குப் புறநடை யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற்சொல்லப்பட்டன போல்வன பிறவும் ஆகித் தொன்னெறியிற் றப்பாது, உருபானும் பொருளானும் இயல்பு தடுமாறி, இரண்டிடத்தும் நிலைபெறும் வேற்றுமைச் சொல்லெல்லாம் ஆராய்ந்து உணர்வார்க்குப் பொருள் திரியும் இடன் இல, எ-று. என்றது-பரந்துபட்ட சொல்லெல்லாம் எடுத்து ஓதல் அரிதாகலான் ஈண்டு எடுத்து ஓதப்பட்ட நிகரனவாகி உயர்ந்தோர் வழக்கினும், சான்றோர் செய்யுளினும் வரூஉம் வேற்றுமை மயக்கம் எல்லாம் இதுவே ஓத்தாகப் பொருள் உரைத்துக் கொள்க என்றவாறாயிற்று. (உ-ம்.) ‘நோயின் நீங்கினான்’ என்பது ‘நோயை நீங்கினான்’ எனவும், ‘சாத்தனை வெகுண்டான்’ என்பது ‘சாத்தனொடு வெகுண்டான்’ எனவும் ஆம். இத்துணையும் ஒரு வேற்றுமைக்குரிய பொருளே ஏனை வேற்றுமைக் கண்ணும் மயங்குமாறு கூறப்பட்டது. (17) 99. உருபுதொடர்ந் தடுக்கிய வேற்றுமைக் கிளவி ஒருசொன்னடைய பொருள்சென் மருங்கே. ஓர் உருபு தொடர்ந்தடுக்கியவழி வரும் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று, ஒரு சொல் பல அடுக்கி வரும் வழி-பெயரடுக்கு, வேற்றுமை யடுக்கு, முற்றுச்சொல்லடுக்கு, பெயரெச்சவடுக்கு, வினையெச்ச வடுக்கு, இடைச்சொல்லடுக்கு, உரிச்சொல்லடுக்கு எனப் பல வகைப்படும். அவற்றுள், வேற்றுமை யடுக்காவது-ஓருருபு அடுக்கி வருதலும், பல உருபு அடுக்கி வருதலும் என இருவகைப்படும். அவற்றுள் ஓருருபு அடுக்கி வருதல்-ஒரு பொருண்மேல் அடுக்கி வருதலும், பல பொருண்மேல் அடுக்கி வருதலும் என இருவகைப்படும். அவ்விருவகையும் இச்சூத்திரத்தாற் கூறப்படும். (இ-ள்.) உருபு தொடர்ந் தடுக்கிய வேற்றுமைச் சொல் ஒரு சொல் நடையவாம், முடிக்கும் பொருண்மை செல்வுழி, எ-று. ஓர் உருபு ஒரு வினையான் முடியாது, பல உருபு ஒரு வினையான் முடியும் என்றமை வழுவமைதி கூறியவாறாம். தேம்பைந்தார் மாறனைத் தென்னர் பெருமானை வேந்தனை வேந்தர்மண் கொண்டானை - யாஞ்சிறிதும் எங்கோல் வளைகவர்ந்தான் என்னலும் ஆகுமோ! செங்கோல் சிறுமை யுற. இதனுள் ஐகார உருபு பல அடுக்கி, ஒரு பொருட்கண் வந்து, வளை கவர்ந்தான் என்னலும் ஆகுமோ என்பதனொடு முடிந்தவாறு கண்டுகொள்க. கொல்லிப் பொருப்பனாற் கொங்கர் பெருமானால் வில்லிற் பகைகடிந்த வேந்தனால் - அல்லியந்தார்க் கோதையால் வையங் குளிர்தூங்க என்கொலோ! பேதையார் எய்துவது பேது. இது மூன்றாவது அடுக்கி வந்து குளிர் தூங்க என்பதனொடு முடிந்தது. வாராய்நீ புறமாறி வருந்திய மேனியாட்கு ஆரிருட் டுணையாகி யசைவளி யலைக்குமே கமழ்தண்டா துதிர்ந்துக வூழுற்ற கோடல்வீ யிதழ்சோருங் குலைபோல விறைநீவு வளையாட்கு (கலி.நெய்.4.) இதனுள் நான்காவது அடுக்கிவந்து அலைக்கும் என்பதனொடு முடிந்தது. வீரப் புலியனின் வெல்போர் வளவனிற் கோரப் பரியுறந்தைக் கோமானின்-ஆரலங்கல் மற்படுதோட் செம்பியனின் மல்லன் மணிநேரி வெற்பனிற் றீர்ந்துளதோ வேந்து.’ இதனுள் ஐந்தாவது அடுக்கிவந்து தீர்ந்து என்பதனொடு முடிந்தது. பெற்றி திரிந்து பெருவறங் கூறினும் மற்றுயிர்கள் நோயான் வருந்தினுங்-கொற்றக் குடையான்கண் நீதிபுரி கோலான்கண் ஆழிப் படையான்கண் நிற்கும் பழி. இதனுள் ஏழாவது அடுக்கிவந்து நிற்கும் என்பதனொடு முடிந்தது. இவை ஒரு பொருண்மேல் ஓருருபு அடுக்கி வந்தன. உழவை, வாணிகத்தைச் செய்யும் எனவும்; சோற்றால், தண்ணீரால் வயிறு நிறைக்கும் எனவும்; அந்தணர்க்கு, சான்றோர்க்குக் கொடுக்கும் எனவும்; நிலத்தினும், வானினும் பெரிது எனவும்; நல்லாற்றது, தீயாற்றது என்னாது கொள்ளும் எனவும்; அரங்கிலே, அறையிலே கிடக்கும் எனவும் இவ்வாறு வருவன பல பெயர்க்கண் ஓருருபு வந்து ஒரு சொல்லான் முற்றுப்பெற்றன. துணிநீராற் றூய்மதி நாளா லணிபெற ஈன்றவ டிதலைபோ லீர்பெய்யுந் தளிரொடும் ஆன்றவ ரடக்கம்போல் அலர்செல்லாச் சினையொடும் வல்லவர் யாழ்போல வண்டார்க்கும் புதலொடும் நல்லவர் நுடக்கம்போல் நயம்வந்த கொம்பொடும் உணர்ந்தவர் ஈகைபோல் இணரூழ்த்த மரத்தொடும் புணர்ந்தவர் முயக்கம்போற் புரிவுற்ற கொடியொடும் நயந்தார்க்கோ நல்லைமன் இளவேனில்’’ (கலி. பாலை.32) என்பதனுள் ஆலும், ஒடுவும் பல அடுக்கிவந்து நல்லை என்பதனொடு முடிந்தன. (18) 100. இறுதியு மிடையு மெல்லா வுருபும் நெறிபடு பொருள்வயின் நிலவுதல் வரையார். பல உருபு தொடர்ந்து அடுக்கி வருமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) முதற்கண் நின்ற வேற்றுமை உருபே பொருளொடு முடித லன்றி, இறுதிக்கண்ணும் இடையின்கண்ணும் எல்லா உருபும் விரவிவந்து முடிக்கும் பொருண்மைக்கண்ணே நிலைபெறுதல் நீக்கார். எ-று. நெறிபடுபொருள் என்பது முதலும் இடையும் இறுதியும் நின்ற பலவகை உருபிற்கும் ஏற்புடைப் பொருளை. (எ-டு.) குயவன் குடத்தைத் திகிரியால் அரங்கின்கண் வனைந்தான் எனவும், சாத்தன் ஆடையை வலியினாற் காட்டின்கண் பறித்தான் எனவும் இறுதியும் இடையும் முதலும் நின்ற உருபெல்லாம் ஒரு வினையால் முடிந்தவாறு கண்டு கொள்க. (19) 101. பிறிதுபிறி தேற்றலும் உருபுதொக வருதலும் நெறிபட வழங்கிய வழிமருங் கென்ப. இதுவும் பல உருபுந் தொடர்ந் தடுக்கியவழி வரும் வேறுபாடும், உருபு தொகுமாறும் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இறுதியும் இடையும் நின்ற எல்லா உருபும் முடிக்கும் வினை ஒன்றனொடு முடிதலேயன்றி, வேறு வேறு வினையேற்று ஒரு வினையொடு முடிதலும், அவ்வுருபுகள் தொக்குநின்று முடிக்குஞ் சொல்லொடு முடிதலும் நெறிபட வழங்கிய நெறிப் பக்கத்தன என்று சொல்லுவர், எ-று. இறுதியும் இடையும் என்பது மேலைச் சூத்திரத்தினின்றும் தந்துரைக்கப்பட்டது. நெறிபட வழங்கிய வழி பக்கம் என்றமையான் ஏற்கும் வினையே கொள்ளப்படும். ‘பிறிது பிறிதேற்றல்’ கூறல் வேண்டா; வேற்றுமை உருபு வினையொடு முடியும் என்பதனாற் பெறுதுமெனின், மேல் நின்ற அதிகாரம் பல உருபடுக்கியவழி ஒருவினையான் முடியும் என்றமையால், தனித்தனி வினை கொண்டு முடியவும் பெறுமோ என நின்ற ஐயம் தீர்த்தற்குக் கூறல் வேண்டுமென்க. ஈண்டு உருபு, தொகுதல் கூறிய தென்னை? வேற்றுமைத் தொகை என எச்சவியலுட் கூறுகின்றாராதலின் எனின், தொகைச் சொல்லாவது இறுதிப் பெயரொடு தொக்கு ஒரு சொன்னீர்மைப் பட்டு நிற்பது; அஃதன்ன தன்றித் தொகாநிலைத் தொடர்ச்சிக்கண் உருபு மாத்திரம் தொக்கு நிற்கும் என்று கொள்க. (உ-ம்.) காதலியைக் கொண்டு கவுந்தியொடு கூடி மாதரிக்குக் காட்டி மனையி னகன்றுபோய்க் கோதி லிறைவனது கூடற்கட் கோவலன்சென் றேத முறுதல் வினை. இதனுள், பல உருபு பலவினையான் வந்தன; ஒருவினையான் முற்றுப் பெற்றன. உருபு தொக வருமாறு:- நிலத்தைக் கடந்தான்; வாளால் வெட்டினான்; கொலைக்கு உடம்பட்டான்; வரையினின்றும் பாய்ந்தான்; சாத்தனது பொத்தகம்; மாடத்துக்கண் இருந்தான் என்பன, நிலம் கடந்தான்; வாள் வெட்டினான்; கொலை யுடம்பட்டான்; வரைபாய்ந்தான்; சாத்தன் பொத்தகம்; மாடத்திருந்தான் என உருபு தொக்கவழியும் ஒட்டுப்படாது நின்று, தொகாநிலைத் தொடர்ச்சியாகிய பொருள் பட்டவாறு கண்டு கொள்க. தொகைச் சொல்லும், உருபு தொகைச் சொல்லும் வேறுபாடில வாயினு மோசை வேற்றுமையான் வேறுபாடறிந்து கொள்க. ‘பிறிது பிறிதேற்றல்’ என்பதனை ஆறனுருபு ஏனையுரு பேற்கும் எனப் பொருளுரைத்துச் சாத்தனதனை, சாத்தனதனொடு என உதாரணங் காட்டுபவாலெனின், அவ்வாறு வரும் அது என்பது உருபுநிலையொழிந்து பொருளாய் நிற்றலானும், சாத்தனதனைக் கொணர்ந்தான் என்றவழி இடைநின்ற அது என்பது உருபாயிற் சாத்தனைக் கொணர்ந் தான் என்னும் பொருள் படல்வேண்டும்; அவ்வாறு பொருள் படாது உடைப் பொருளையே காட்டுதலானும்; அஃறிணை யொருமை அது என்னும் பெயர்த்தாகலானும், சாத்தன் பொத்தகத்தைக் கொணர்ந் தான் என்றாற் போல்வதல்லது, உருபு பெற்றது என்றல் அமையாதென்க. (20) 102. 5ஐயுங் கண்ணு மல்லாப் பொருள்வயின் மெய்யுருபு தொகா விறுதி யான. மேலதற்கோர் புறநடை யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இரண்டாவதும் ஏழாவதும் அல்லாத பொருட்கண் வரும் உருபு தொடர்மொழி யீற்றின்கண் தொகா, எ-று. ‘உய்த்துக் கொண்டுணர்தல்’ என்னும் தந்திர உத்தியான் உருபேற்ற சொல்லும் முடிக்குஞ் சொல்லும் மாறி நிற்கவும் பெறும் என்பது பெற்றாம். என்னை? அவை இறுதியிற்றொகா என்றமையின். அவை மொழிமாறி நிற்குமாறு;- கடந்தான் நிலத்தை; வெட்டினான் வாளால்; கொடுத்தான் சாத்தற்கு; நீங்கினான் ஊரின், ஆடை சாத்தனது; இருந்தான் குன்றத்துக்கண் என்பன; இவற்றுள் உருபுதொக வந்தன :- கடந்தான் நிலம், இருந்தான் குன்றத்து என்பன. என்னை? இவை உருபு தொக்கவழியுந் தம் பொருண்மை விளக்கின. ஏனையவும் இவ்வாறு வருமெனக் கருதின் அவை தம் பொருள் படாமையிற் றொகா என்றார். வெட்டினான் வாள்; கொடுத்தான் சாத்தன்; நீங்கினான் ஊர்; ஆடை சாத்தன் என்றவழித் தம்பொருள் படாமை கண்டுகொள்க. (21) 103. யாத னுருபிற் கூறிற் றாயினும் பொருள்செல் மருங்கின் வேற்றுமை சாரும். வேற்றுமை உருபு தம்முள் மயங்குதலன்றிப் பிற உருபொடு மயங்கும் என்பது உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) யாதொன்றன் உருபிற் கூறினும் பொருள் செல்லும் வழி வேற்றுமையும் செல்லும், எ-று. யாதனுருபு என்பது வேற்றுமை யல்லாத உருபு. உருபு எனினும் வடிவு எனினும் ஒக்கும். ‘6அம்மூ வுருபின தோன்றலாறே’ (156) என வடிவிற்குப் பெயராகிப் பிறாண்டும் வந்தது. வானின் றுலகம் வழங்கி வருதலாற் றானமிழ்த மென்றுணரற் பாற்று’ (குறள். வான். 1.) எனவும், மருந்துண்டு நோய்தீர்ந்தது எனவும் வருவுழி, உலகம் வழங்கி வருதற்கு மழை ஏதுவாகலானும், நோய் தீர்தற்கு மருந்து ஏதுவாகலானும் இவற்றிற்குப் பொருளுரைக்குங்கால் மழை நிலைநிற்றலான் உலக நடை தப்பாது வருதலான் எனவும், மருந்துண்டலான் நோய் தீர்ந்தது எனவும் உரைக்க வேண்டுதலின், இவை வேற்றுமை உருபான் வந்திலவாயினும், பொருண்மை முகத்தான் வேற்றுமை யாதலின், இவை இவ்வாறும் வரப் பெறும் என்று வழுவமைத்த வாறாம். (22) 104. எதிர்மறுத்து மொழியினுந் தத்த மரபிற் பொருணிலை திரியா வேற்றுமைச் சொல்லே. எல்லா வேற்றுமைக்கும் உரியதோர் இயல்பு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வேற்றுமைச் சொற்கள் தத்தமரபிற் பொருணிலையை எதிர்மறுத்து மொழியினும் திரியா, எ-று. (உ-ம்.) குடத்தை வனையான், சாத்தனொடு கூடான், அந்தணர்க்குக் கொடான், ஊரின் நீங்கான், சாத்தனதன்று ஆடை, குன்றத்துக்கண் இரான் என வரும். குடத்தை வனையான் என்றவழிச் செயப்படுபொருள் தோன்றிற்றின் றாயினும், இவ்வாறு சொல்லப்பெறும் என வழுவமைத்தவாறு. (23) 105. கு ஐ ஆன்என வரூஉ மிறுதி அவ்வொடுஞ் சிவணுஞ் செய்யு ளுள்ளே. வேற்றுமை யுருபினுள் சிலவற்றிற்கு உரியதொரு திரிபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) கு, ஐ, ஆன் என்று சொல்லப்பட்ட தொடர்மொழி இறுதிக்கண் வரும் உருபு, அவ்வொடும் சிவணும் செய்யுளகத்து, எ-று. உதாரணம் வருகின்ற சூத்திரத்துட் காட்டுதும். (24) 106. அ எனப் பிறத்தல் அஃறிணை மருங்கிற் குவ்வும் ஐயும் இலவென மொழிப. எய்தியது ஒருமருங்கு விலக்குதல் நுதலிற்று (இ-ள்.) அஃறிணைப் பொருட்கண் குவ்வும், ஐயும் அகரட்தொடு சிவணா, எ-று. எனவே, உயர்திணைக்கண் மூன்றுருபு சிவணும் என்பதூஉம், அஃறிணைக்கண் ஓருருபு சிவணும் என்பதூஉம் கூறியவாறாம். (உ-ம்.) ‘7கடிநிலை யின்றே ஆசிரி யர்க்க (தொல். புள்ளி. 94); ‘புள்ளினான’; ‘புலவரினான’ என வந்தன. ஐகாரம் அகரத்தொடு சிவணுமாறு வந்தவழிக் கண்டு கொள்க. பரிபாடலகத்து - ‘நின்னொக்கும் புகழ் நிழலவை, நீழ னேமியன’ (பாடல் 1) என்பன அகரத்தொடு சிவணி வந்தன எனினும் அமையும். இவை அஃறிணைப் பொருள் அன்றோ எனின்; தெய்வப் பொருண்மை யான் உயர்திணையாம். (25) 107. இதன திதுவிற் றென்னுங் கிளவியும் அதனைக் கொள்ளும் பொருள்வயி னானும் அதனாற் செயப்படற் கொத்த கிளவியும் முறைக்கொண் டெழுந்த பெயர்ச்சொற் கிளவியும் பால்வரை கிளவியும் பண்பி னாக்கமும் காலத்தின் அறியும் வேற்றுமைக் கிளவியும் பற்றுவிடு கிளவியும் தீர்ந்துமொழிக் கிளவியும் அன்ன பிறவும் நான்க னுருபிற் றொன்னெறி மரபின தோன்ற லாறே. ஓருருபு பலபொருட்கண் மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இதனது இது இற்று என்பது முதலாகச் சொல்லப்பட்ட னவும், அத்தன்மைய பிறவும் நான்காம் உருபின் பண்டையோர் வழக்காகிய மரபின வாகித் தோன்றுதல் நெறி, எ-று. ‘இதனது இது இற்று’ என்பது ‘யானையது கோடு வெள்ளிது’ என்பது ‘யானைக் கோடு வெள்ளிது’ என வரும். ‘அதனைக் கொள்ளும் பொருள் வயினானும்’ என்பது ஒன்றைக் கொள்ளும் பொருட்கண்ணும் வரும், எ-று. ஆன் இடைச்சொல். ‘காணத்தாற் கொண்ட வரிசி’ யென்பது ‘காணத்திற்குக் கொண்ட அரிசி’ என வரும். ‘அதனாற் செயப்படற் கொத்த கிளவி’ என்பது அவனாற் செயப் படும் என்னும் பொருண்மைக்குப் பொருந்திய சொல், எ-று. ‘அவனான் முடியும்’ என்பது ‘அவற்கு முடியும்’ என வரும். ‘முறைக்கொண்டெழுந்த பெயர்ச்சொற் கிளவி’ என்பது முறையைக் கொண்டெழுந்த பெயர்ச்சொற் பொருண்மை, எ-று. ‘ஆவினது கன்று’ என்பது ‘ஆவிற்குக் கன்று’ என வரும். ‘பால்வரை கிளவி’ என்பது இடம் வரைந்த சொல் என்றவாறு. ‘கருவூரின் கிழக்கு’ என்பது ‘கருவூர்க்குக் கிழக்கு’ என வரும். ‘பண்பின் ஆக்கம்’ என்பது பண்பினான் ஆகுஞ் சொல் என்றவாறு. ‘இதனின் நெடிது’ என்பது ‘இதற்கு நெடிது’ என வரும். ‘காலத்தின் அறியும் வேற்றுமைக் கிளவி’ என்பது காலத்தான் உணருஞ் சொல் என்றவாறு. ‘காலைக்கண் வரும்’ என்பது ‘காலைக்கு வரும்’ என வரும். ‘பற்றுவிடு கிளவி’ என்பது ‘இதனிற் பற்றுவிடும்’ என்னும் ஏதுப் பொருண்மைக்கண் ‘இதற்குப் பற்றுவிடும்’ என வரும். ‘தீர்ந்து மொழி கிளவி’ என்பது ‘மருந்தின் தீர்ந்தது’ என்பது ‘மருந்திற்குத் தீர்ந்தது’ என வரும். ‘அன்ன பிறவும்’ என்றதனான் ‘8கிளைவரி நாணற் கிழங்கு மணற் கீன்ற’ (அகம். 221) என ஏழாவதன் இடப்பொருண்மைக் கண் நான்காவது வந்தது. பிறவும் இந்நிகரனவெல்லாம் வந்தவழி அமைத்துக்கொள்க. (26) 108. ஏனை யுருபும் அன்ன மரபின மான மிலவே சொன்முறை யான. நான்காவது ஒழிந்த உருபுகள் ஏனை உருபிற்கு உரிய பொருளொடு மயங்கும் என்பது உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) நான்காவது ஒழிந்த உருபுகளும் ஏனைப் பொரு ளொடு மயங்கும் மரபினை யுடைய; அவை சொல்லிலக்கணத் தாற் குற்றமில, எ-று. (உ-ம்.) கோட்டுப்பூச் சூடினுங் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று (குறள். 1323) இதனுள் ஒருத்திக்கு எனற்பாலது ஒருத்தியை யென இரண்டாவதனோடும் மயங்கி வந்தது. “9அறல்சாஅய் பொழு தோடெம் அணிநுதல் வேறாகி” என்றவழிப் பொழுதின்கண் எனற்பாலது பொழுதோடென மூன்றாவத னொடு மயங்கிற்று. பிறவும் அன்ன. (27) 109. வினையே செய்வது செயப்படு பொருளே நிலனே காலங் கருவி யென்றா இன்னதற் கிதுபயன் ஆக வென்னும் அன்ன மரபின் இரண்டொடுந் தொகைஇ ஆயெட் டென்ப தொழின்முதல் நிலையே. எழுவகை வேற்றுமையினும் காரக வேற்றுமை வரையறுத்து உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வினையும், கருத்தாவும், செயப்படுபொருளும், இடமும், காலமும், கருவியும் என்று சொல்லப்பட்டவற்றொடு கொள்வதூஉம், பயனும் ஆகிய அவ்விரண்டொடும் தொகைஇ, அவ்வெட்டென்று சொல்லுவர் தொழிற் காரகம், எ-று. நெய்தான் என்றவழி, நெய்யப்பட்ட பொருளும், நெய்தலாகிய தொழிலும், நெய்தற்குக் கருவியும், நெய்தற்குக் காலமும், நெய்தற்கு இடமும், நெய்யுங் கருத்தாவும், அதனைக் கொள்வானும், அதனாற் பயனும் உள்ள வழியல்லது நெய்தற் றொழிலாற் செய்யப்பட்ட பொருள் உளதாகாமையின், அவற்றை முதனிலை யென்றார். அவற்றுள், பயனும் கொள்வதும் ஏனையவற்றொடு ஒத்த சிறப்பின்மையின், இரண்டென, வகுத்துக் கூறினார். இவற்றுள், தொழிலும், செயப்படுபொருளும் இரண்டாவதாயின : ஆடையை நெய்தான், நெய்தலைச் செய்தான். கருவியும், கருத்தாவும் மூன்றாவதாயின : சாலியனால் நெய்யப்பட்டது, நெம்பினால் நெய்யப்பட்டது. கொள்வதும் பயனும் நான்காவது ஆயின: அந்தணர்க்கு நெய்தான், கூலிக்கு நெய்தான். இடமும் காலமும் ஏழாவது ஆயின: கூடத்துக்கண் நெய்தான், காலைக்கண் நெய்தான். இவற்றுள் கருத்தா முதல் வேற்றுமையும் ஆம். சாலியன் நெய்தான். அஃதேல், ஐந்தாவ தாகிய நீங்க நிற்றல் காரகம் அன்றோ எனின், காரகம் என்பது தொழில் முதனிலையாகலிற் காரகம் அன்றென்பது போலும் கருத்து. நீங்க நிற்றல் முதனிலையாகாவாறு என்னையெனின், ஆடையை நெய்து முடித்தான் படைமரத்தினின்றும் வாங்குதல் நீக்கம் ஆகலின், அஃது அத்தொழில் முடிந்தபின் நிகழின் அல்லது தொழிற்கு உறுப்பு அன்மையால் காரணம் அன்றாயிற்று. ஆறாவது அவ்வாடையைக் கிழமை செய்வான் மாட்டே நிகழ்தலின், அதுவும் காரகம் அன்றாயிற்று. முதற்காரகம் கருவியின் அடங்கும் : நூலால் நெய்தான். (28) 110. அவைதாம், வழங்கியன் மருங்கிற் குன்றுவ குன்றும். மேலதற்கோர் புறநடை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்ட எண்வகைப் பொருளினும் வழங்கிய நெறிக்கண் குறைவன குறையும், எ-று. தொழில் கண்டுழி யெல்லாம் இவை எட்டும் வருதல் நியமமின்று, எ-று. (உ-ம்.) ஆடையை நெய்தான் றனக்கு என்றவழிக் கொள்வான் பிறன் ஒருவன் இன்மையின், அப் பொருண்மை குறைந்து நின்றது. உலகினைப் படைத்தான் என்றவழிக் கொள்வானும், பயனும் இன்றி வந்தது. கொடி ஆடிற்று என்றவழி கருத்தாவும், கொள்வானும் பயனும் இன்றி வந்தது. பிறவும் அன்ன. (29) 111. முதலிற் கூறும் சினையறி கிளவியும் சினையிற் கூறும் முதலறி கிளவியும் பிறந்தவழிக் கூறலும் பண்புகொள் பெயரும் இயன்றது மொழிதலும் இருபெய ரொட்டும் வினைமுத லுரைக்குங் கிளவியொடு தொகைஇ அனைமர பினவே ஆகுபெயர்க் கிளவி. ஆகுபெயர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. வேற்றுமைப் பொருள் மயக்கம் உணர்த்திற்று எனினும்அமையும். ஆகுபெயர் என்பது யாதோ எனின், யாதானும் ஒரு பொருத்தத்தினால் ஒன்றன் பெயர் ஒன்றதாகி வருவது. (இ-ள்.) முதலிற் கூறும் சினையறி கிளவி முதலாக எண்ணப்பட்டனவும், வினைமுதல் உரைக்குங் கிளவியொடு கூட அத்தன்மையவாகிய மரபினையுடையவும் ஆகுபெயர்ச் சொல்லாம், எ-று. மரபினவும் என்னும் உம்மை எஞ்சி நிற்க ஏகாரம் எண்ணுக் குறித்து நின்றது. ஆம் என்பதும் எஞ்சி நின்றது. (உ-ம்.) ‘முதலிற் கூறும் சினையறி கிளவி’ என்பது சினைப் பொருளை முதலாற் கூறும் பெயர்ச்சொல்; கடு என்பது, கடுவினது காயைக் கடு என வழங்குதலின் ஆகுபெயராயிற்று. ‘சினையிற் கூறும் முதலறி கிளவியாவது’ முதற்பொருளைச் சினையாற் கூறும் பெயர்ச்சொல்; பூ நட்டார் என்பது, நடப்படுவது பூவினது முதலாதலின், அம்முதலைப் பூ என்று வழங்குதலின் ஆகுபெய ராயிற்று. ‘நகையச் சாக நல்லமிர்து கலந்த-நடுநிலை திறம்பிய நயமி லொருகை’ (பரி. 3 - 33, 34) ‘ஏந்திள வனமுலை இறைநெறித்ததூஉம்’ (மணி. 18 - 69) என்பனவும் அவை. “பிறந்த வழிக் கூறலென்பது” இடத்து நிகழ் பொருளை இடத்தாற் கூறுதல்; வேளார்காணி என்பது, வேளார்காணியிற் பிறந்த ஆடையை அப்பெயரான் வழங்குதலின் ஆகு பெயராயிற்று. யாழதுகேட்டான் என்பதும் அது : யாழிற் பிறந்த இசையையும் யாழ் என்றமையால். “பண்பு கொள் பெயராவது” பண்பின் பெயரான் பண்புடைய தனைக் கூறல்; நீலம் என்றவழி அந்நீல நிறத்தை உடைய மணியை நீலம் என்பதாக வழங்குதலின் ஆகுபெயராயிற்று. “இயன்றது மொழிதலாவது” இயன்றதனான் மொழிதல் என விரியும். அது காரியப் பொருளைக் காரணத்தான் மொழிதல். பொன் பூண்டான் என்றவழிப் பொன்னினான் ஆகிய அணிகலத்தைப் பொன் என்று வழங்கு தலின் ஆகுபெயராயிற்று. தன் மேற் காட்டி இஃதோர் அம்பு, இஃதோர் வேல் என்றவழி அவை பட்ட வடுவை அவற்றிற்குக் காரணமாகிய கருவிப் பெயரான் வழங்குவனவும் அமையும். இன்னும் ‘இயன்றது மொழிதல்’ என்பதன்கண் இரண்டாவதை விரித்து இயன்றதனை மொழிதல் எனவாம்; அது காரணப்பொருளைக் காரியத்தாற் கூறுதல். நெல்லாதல், காணமாதல் ஒருவன் கொடுப்பக் கொண்டவன்- இற்றைக்குச் சோறு பெற்றேன் என்னும்: அவ்வழிச் சோற்றுக்குக் காரணமாகிய நெல்லுங் காணமும் சோறு என ஆகுபெயராயின. “இருபெயரொட்டு” என்பது இரண்டு பெயர் தொக்கு ஒரு சொன்னீர்மைப் பட்டு மற்றொரு பொருட்குப் பெயராகி வருவது. அது துடியிடை என்பது, துடிபோன்ற இடையினை உடையாளைத் துடியிடை என்பவாகலின் ஆகுபெயராயிற்று. இஃது உவமத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை யன்றோ எனின், ஆகுபெயராவது ஒட்டுப்பட்ட பெயரோடு ஒற்றுமைப் பட்டு வரும். அன்மொழித் தொகையாவது அப்பொருளின் வேறுபட்டு வரும். அன்னதாதல் அன்மொழித் தொகை என்றத னானும் விளங்கும். அதனானேயன்றே ‘பண்பு தொகவரூஉங் கிளவியானும்-உம்மை தொக்க பெயர் வயினானும் வேற்றுமை தொக்க பெயர்வயினானும் ஈற்றுநின் றியலும் அன்மொழித் தொகையே’ (எச்சவியல் 21) 10என ஓதுவாராயிற்று. “வினைமுத லுரைக்குங் கிளவி” என்பது - வினையும் முதலும் உரைக்குங் கிளவி என உம்மைத் தொகையாகக் கொள்ளப்படும். கொள்ளவே, வினையான் உரைக்குங் கிளவியும், வினைமுதலான் உரைக்குங் கிளவியும் ஆகுபெயராம் என்றவாறாம். வினையான் உரைக்கப்பட்டன:- எழுத்து, சொல் என்பன எழுதப்பட்டதனையும், சொல்லப்பட்டதனையும் அப் பெயரான் வழங்குதலின், ஆகுபெயராயின. என் காவலிலே கட்டான் என்பதும் அது. வினைமுதலான் உரைக்கப்பட்டன செய்தானாற் செயப்படு பொருட்குப் பெயராகி வருவன: சாலியனால் நெய்யப்பட்ட ஆடையைச் சாலியன் என்பது. தொல்காப்பியம் என்பதோ எனின், அஃது ஈறு திரிந்து நின்று, அவனான் செய்யப்பட்டது என்னும் பொருளை விளக்குதலின் ஆகுபெயராகாது : காரணப் பெயராம். ‘அனைமரபின’ என்றதனான் ஈண்டு ஓதப்பட்டன வற்றுள் அடையடுத்து வருவனவும் கொள்க. தாழ்குழல் என்றவழி அதனையுடையாட்குப் பெயராகி வருதலின் ஆகுபெயராயிற்று. இது வினைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையன்றோ வெனின், ஆண்டு எடுத்து ஓதாமையினானும், பொருள் ஒற்றுமைப்படுதலானும் ஆகாது என்க. (30) 112. அவைதாம், தத்தம் பொருள்வயிற் றம்மொடு சிவணலும் ஒப்பில் வழியாற் பிறிதுபொருள் சுட்டலும் அப்பண் பினவே நுவலுங் காலை வேற்றுமை மருங்கிற் போற்றல் வேண்டும். இதுவும் ஒருவாற்றான் ஆகுபெயர்க்கு உரியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. விரிந்தது தொகுத்தலை நுதலிற்று எனினும் அமையும். (இ-ள்.) மேற் சொல்லப்பட்ட ஆகுபெயர்தாம், தத்தம் பொருள்வயிற் சிவணலும், தம்மொடு சிவணலும், பொருத்த மில்லாத நெறிக்கண் சுட்டலும், பிறிதின்கிழமைப் பொருளைச் சுட்டலும் என அவ்வியல்பினையுடைய என அவ்வாறு சொல்லுங்காலத்து வேற்றுமைப் பொருட்கண் பாதுகாத்தல் வேண்டும், எ-று. ‘சிவணல்’ என்பதனை இரண்டிடத்துங் கூட்டுக. ‘சுட்டல்’ என்பதனையும் இரண்டிடத்துங் கூட்டுக. ‘தத்தம் பொருள் வயிற் சிவணல்’ என்பது முதற்பொருள் சினைப்பொருளைச் சிவணுதல். அவை கடு, பொன் என்பன. ‘தம்மொடு சிவணல்’ ஆவது சினைப்பொருள் முதற்பொருளைச் சிவணுதல். அவை பூ, நீலம், சோறு, துடியிடை, தாழ்குழல் என்பன. ஒப்பில் வழிக்கண் சுட்டியது வேளார்காணி. ‘பிறிது பொருள் சுட்டியது’ சாலியன். ‘வேற்றுமை மருங்கிற் போற்றல் வேண்டும்’ என்பது-ஆகு பெயர் என்பது வேண்டியவாறு சொல்லப்பட்டது: வேற்றுமைப் பொருட் கண்ணே வரப்பெறுவது என்றவாறு. அவை அப்பொருட்கண் வந்தவாறு-முதலிற் கூறும் சினையறி கிளவியும், சினையிற் கூறும் முதலறி கிளவியும், பண்புகொள் பெயரும், இருபெயர் ஒட்டும் ஆறாம் வேற்றுமைப் பொருண் மயக்கம். பிறந்தவழிக் கூறல் ஏழாம் வேற்றுமைப் பொருண் மயக்கம். இயன்றது மொழிதலும், வினைமுதல் உரைக்கும் கிளவியும் மூன்றாம் வேற்றுமைப் பொருண் மயக்கம். (31) 113. அளவும் நிறையும் அவற்றொடு கொள்வழி உளவென மொழிப உணர்ந்திசி னோரே. இதுவும் ஆகுபெயராமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அளவுப்பெயரும் நிறைப்பெயரும் மேற்சொல்லப் பட்ட ஆகுபெயரொடு கொள்ளுமிடமும் உளவென்று சொல்லுவர் உணர்ந்தோர், எ-று. கொள்வழி உள என்றதனான், தம்பொருள் விளங்கும் எண்ணுக் குறியன்றி அளக்கப்பட்ட பொருள் மேலும், நிறுக்கப்பட்ட பொருள் மேலும், கருவி மேலும் வரின் அவையும் வேற்றுமைப் பொருளான் ஆகுபெயராம் என்று கொள்க. எண்ணுமுறையான் உழக்கு, நாழி என்னும் அளவினைக் கொள்ளும் பாண்டத்தினையும், அளக்கப்படும் பொருளினையும் உழக்கு, நாழி என்ப. கால், கழஞ்சு என்னும் நிறையின தளவாகிய கல்லையும், பொன்னையும் கால், கழஞ்சு என்ப. இந் நிலம், ஒருமா, இம்மனை முக்கோல் என்பனவும் அளவுப் பகுதிய. அஃதேல், இவ்வெருகு ஒன்று என எண்ணப்பட்ட பொருள்மேல் எண்ணுப் பெயர் வருவது ஆகுபெயர் ஆகாதோ எனின், அளவும் நிறையும் போலாது எண்ணப்பட்ட பொருளை எண்ணுப் பிரிந்து நில்லாமையான், அதுவும் அப்பொருட்கு ஒரு காரணத்தாற் பெற்ற பெயர் எனின் அல்லது ஆகுபெயர் எனப்படாதென்று கொள்க. அளவும், நிறையும் பிரிந்து நின்றவாறு என்னை யெனின், இப்பொன் கால், இப்பொன் கழஞ்சு என்ற வழி, அவை ஓர் உருவாகியும், பல உருவாகியும் வரின் அல்லது, கால், கழஞ்சு என்னும் நிறைப்பொருண்மை புலப்படாது நிற்றலிற் பிரிந்து நின்றன. (32) 114. கிளந்த வல்ல வேறுபிற தோன்றினும் கிளந்தவற் றியலான் உணர்ந்தனர் கொளலே. ஆகுபெயர்க்குப் புறநடை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) எடுத்து ஓதப்பட்ட வாய்பாட்டான் அன்றி வேறு வருவனவும் எடுத்தோதிய நெறியினான் ஆகுபெயர் ஆமாறு அறிந்துகொள்க, எ-று. அவையாவன :- பாவை, திரு என்பன வடிவுபற்றியும்; பசு, கழுதை என்பன குணம் பற்றியும்; புலி, சிங்கம் என்பன தொழில் பற்றியும் ஒன்றன் பெயர் ஒன்றற்கு ஆகி வருவனவும் ஆகுபெயர் என்றே கொள்ளப்படும். ‘11எயின் முகம் சிதையத் தோட்டி ஏவலிற்-தோட்டி தந்த தொடிமருப் பியானை’ (பதிற்றுப். 38) என்ற வழி, தோட்டியை யுடையானைத் தோட்டி என ஆகு பெயர் ஆயிற்று. இவை ஆகுபெயர் ஆகுங்கால் பாவை வந்தாள், சிங்கம் வந்தான் எனத் தத்தம் பொருண்மை வாய்பாட்டான் முடியும். 12கவழக் களிப்பியன் மால்யானை சிற்றாளி தவழத்தா னில்லா ததுபோற்-பவழக் கடிகை யிடைமுத்தங் காண்டொறும் நில்லா தொடிகை யிடைமுத்தந் தொக்கு (திணைமாலை. 42) என்றவழித் தொடியென்பது ஆகுபெயராயிற்று. (33) மூன்றாவது வேற்றுமை மயங்கியல் முடிந்தது. இவ்வோத்துனுட்சூத்திரமுட்பட உரையினது அளவு கிரந்த வகையான் முந்நூறு வகையான் வேற்றுமை மயங்கியல் அடிக்குறிப்புகள் 1. இளம்பூரணர் 2. இங்கே, ஏனை உரையாசிரியர்கள், அதுவென் வேற்றுமை என்ற சூத்திரத்தை வைத்து உரை செய்துள்ளார்கள். 3. இங்கு, ஏனை உரையாசிரியர்கள், ஆறன் மருங்கின் என்னுஞ் சித்திரத்தை வைத்து உரைசெய்துளார்கள். 4. இளம்பூரணர் முதலியோர் உரை. 5. இச்சூத்திரத்திற்கு நுதலியது உரைத்தலும், பொழிப்புரையும் காணப்பட்டில. 6. சொல், பெயர். 6. 7. தொல். புள்ளி. 94. 8. அகம். 221. 9. கலி. பாலை. 26. 10. எச்சவியல் 21. 11. பதிற்று. 38. 12. திணைமாலை நூற்றைம்பது. 42 இவ்வெண்பா மிகவும் சிதைந்துளது. விளிமரபு விளி வேற்றுமையது இலக்கணம் உணர்த்தினமையின் விளிமரபென்னும் பெயர்த்தாயிற்று. இதன்கண் உள்ள சூத்திரங்கள் 37. தெய்வச்சிலையார் 36-ஆகப் பகுத்து உரை கூறியுள்ளார். விளி வேற்றுமையாவது படர்க்கைப் பெயர்ப்பொருளை எதிர்முகமாக்குதலைப் பொருளாகவுடையதாகும். ஈறுதிரிதல், ஈற்றயல் நீடல், பிறிது வந்தடைதல், இயல்பாதல் என்பன விளி வேற்றுமையின் உருபுகளாகக் கொள்ளத்தக்கன. விளி கொள்ளும் பெயர்கள் இவையெனவும் விளி கொள்ளாப் பெயர்களிவையெனவும் ஆசிரியர் இவ்வியலில் உணர்த்துகின்றார். இ, உ, ஐ, ஓ, ன, ர, ல, ள என்பவற்றை யிறுதியாகவுடைய உயர்திணைப் பெயர்கள் விளி கொள்ளும் பெயர்களாம். ஏனைப் பெயர்கள் விளியேலா. தான், யான், நீயிர் என்பனவும் சுட்டுவினாப் பெயர்களும் த, ந, நு, எ என்பவற்றை முதலாகவுடைய கிளைப் பெயர்களும் இவைபோல்வன பிறவும் விளிவேற்றுமையோடு பொருந்தாத பெயர்களாம். ஈறுதிரிதல்: இகரவீறு ஈகாரமாகவும் ஐகாரவீறு ஆய் எனவும் முறைப் பெயரீற்று ஐகாரம் ஆகாரமாகவும் அண்மை விளியாயின் அகர மாகவும் திரியுமென்றும், தொழிற் பெயர் பண்புகொள்பெயர் என்பவற்றின் இறுதியிலுள்ள ஆன் விகுதியும் ஆள் விகுதியும் ஆய் விகுதியாகத் திரியுமென்றும், அர், ஆர் என்பன ஈர் எனத் திரியுமென்றும் கூறுவர் ஆசிரியர். ஈற்றயல் நீடல்: லகர ளகர வீற்று உயர்திணைப் பெயர்கள் ஈற்றயல் நீண்டு விளியேற்பன. பிறிது வந்தடைதல்: ஓகாரவீற்றுப் பெயரும் குற்றியலுகரவீற்றுப் பெயரும் லகர ளகரவீற்று முறைப் பெயரும் ரகரவீற்றுத் தொழிற் பெயரும் பண்புகொள் பெயரும் இறுதியில் ஏகாரம் பெற்று விளிப்பன. இயல்பாதல்: இகரவீற்று அளபெடைப் பெயரும் அண்மையிலுள்ளாரை யழைக்கும் பெயரும் ஆனீற்றுப் பெயரும் ன, ர, ல, ள என்பவற்றை யிறுதியாகவுடைய அளபெடைப் பெயர்களும் இயல்பாய் நின்று விளியேற்பனவாம். இ, உ, ஐ, ஓ, ன, ர, ல, ள என்னும் எழுத்துக்களை யிறுதியாகவுடைய அஃறிணை விரவுப் பெயர்கள் மேல் உயர்திணைப் பெயர்க்குச் சொல்லிய முறையால் விளியேற்பன வென்றும், அஃறிணைக்கண் வரும் எல்லா வீற்றுப் பெயர்களும் ஏகாரம் பெற்று விளியேற்பன வென்றும் இங்குக்கூறப்பட்ட இருதிணைப் பெயர்களும் சேய்மை விளிக்கண் வருங்கால் தத்தம் மாத்திரையில் நீண்டொலிப்பன் வென்றும் கூறுவர் ஆசிரியர். - க. வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 203-204 நான்காவது விளிமரபு 115. விளியெனப் படுவ கொள்ளும் பெயரொடு தெளியத் தோன்று மியற்கைய வென்ப. என்பது சூத்திரம் இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின், விளிமரபு என்னும் பெயர்த்து. நிறுத்த முறையானே ஏழு வேற்றுமையும், அவற்றது மயக்கமும் உணர்த்தியதன்பின், எட்டாவதாகிய விளி இலக்கணம் உணர்த்தினமையாற் பெற்ற பெயர். இதன் முதற் சூத்திரம் என்னுதலிற்றோ எனின், விளி இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) விளி என்று சொல்லப்படுவன தம்மை ஏற்கும் பெயரொடு விளங்கத் தோன்றும் இயற்கையினை யுடைய என்று சொல்லுவார், எ-று. ஏனை வேற்றுமை போல உருபு பிரிந்து வாராது பெரும் பான்மையும் பெயரோடு ஒற்றுமைப்பட்டு வருமென்பதூஉம், ‘கொள்ளும் பெயரொடு’ என்றமையாற் கொள்ளாப் பெயரும் உளவென்பதூஉம் பெறுதும். விளி என்றதனான் இவ்வேற்றுமை விளித்தற் பொருண்மைக்கண் வரும் என்று கொள்க (1) 116. அவ்வே, இவ்வென வறிதற்கு மெய்பெறக் கிளப்ப. எய்தியதன்மேற் சிறப்புவிதி வகுத்தலை நுதலிற்று. (இ-ள்.) மேற்சொல்லப்பட்ட விளி வேற்றுமைதாம் இவையென அறிதற்கு உருபு பெறவும் கிளப்ப ஆசிரியர், எ-று. உம்மை எஞ்சி நின்றது. இவ்விரண்டு சூத்திரத்தானும் சொல்லியது விளி வேற்றுமை வருவழி, அதனை ஏற்கும் பெயர் இயல்பாகியும் திரிந்தும் குறைந்தும் மிக்கும் வரும் என்றவாறு. (2) 117. 1அவற்றுள், இ உ ஐ ஓ வென்னு மிறுதி யப்பா னான்கே உயர்திணை மருங்கின் மெய்ப்பொருள் சுட்டிய விளிகொள் பெயரே. உயர்திணைப் பெயருள் உயிரீறாகி விளியேற்கும் பெயரை வகுத்து உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உயர்திணை இடத்துள்ள பொருளைச் சுட்டிய விளியேற்கும் பெயர் இ, உ, ஐ, ஓ என்னும் ஈற்றினை யுடைய அக்கூற்று நான்கு, எ-று. உயர்திணை மருங்கினுள்ள பொருள் சுட்டிய என்றமை யான் உயர்திணைப் பெயரென வகுத்தோதப் படுவனவும், விரவுப் பெயருள் உயர்திணை குறித்தனவும் கொள்ளப்படும். (3) 118. அவற்றுள், இ ஈ யாகும் ஐ ஆ யாகும். இகர ஐகார ஈற்றுப் பெயர் விளி ஏற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இகரம் ஈகாரமாய்த் திரிந்தும், ஐகாரம் ஆய் எனத் திரிந்தும் விளி ஏற்கும், எ-று. (எ-டு.) நம்பி, சாத்தி என்பன நம்பீ, சாத்தீ என விளி யேற்கும். நங்கை நங்காய், தந்தை தந்தாய் என விளி ஏற்கும். (4) 119. 2ஓவும் உவ்வும் ஏவொடு சிவணும் உகரந் தானே குற்றிய லுகரம். உகர ஓகார ஈற்றுப் பெயர் விளி யேற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஓகாரமும், உகரமும் ஏகாரம் பெற்று விளியேற்கும்; ஆண்டுக் குற்றிய லுகரமே ஈறாகுவது, எ-று. (உ-ம்.) கோ, கோவே; வேந்து, வேந்தே என வரும். பிறவு மன்ன. (5) 120. ஏனை யுயிரே உயர்திணை மருங்கிற் றாம்விளி கொள்ளா வென்மனார் புலவர். ஐயந்தீர்த்தலை நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்ட உயிரல்லாத உயிர்கள் உயர்திணை யிடத்து வரின் விளி ஏலா, எ-று. (உ-ம்.) அவையாவன:-ஆடூ, மகடூ, நீ என்பன. (6) 121. அளபெடை மிகூஉ மிகர விறுபெயர் இயற்கைய வாகுஞ் செயற்கைய வென்ப. இகர ஈற்றுக்கண் வருவதோர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அளபெடை மிக்க இகர ஈற்றுப் பெயர் இயற்கைய வாகிய செய்தியையுடைய, எ-று. (உ-ம்.) தோழீஇ என்பது விளிக்கண்ணும் அவ்வாறே வரும். செயற்கை என்றதனான் விளிக்கண் வரும் ஓசை வேறுபாடு அறிந்து கொள்க. (7) 122. முறைப்பெயர் மருங்கின் ஐயெ னிறுதி ஆவொடு வருதற் குரியவு முளவே. ஐகார வீறு முறைப் பெயர்க்கண் வரும் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) முறைப் பெயர்க்கண் வரும் ஐகார ஈறு, ஆய் ஆகி வருதலன்றி, ஆ வொடு வருவதற்கு உரிய பெயரும் உள, எ-று. (உ-ம்.) அன்னை என்பது அன்னாய் என வருதலேயன்றி, அன்னா எனவும் வரும். உம்மை இறந்தது தழீஇயிற்று. (8) 123. அண்மைச் சொல்லே யியற்கை யாகும். இருதிணைக்கண்ணும் வரும் எல்லாவீற்றுப் பெயரும் அண்மைக்கண் விளி ஏற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. இச்சூத்திரம் முன்னும் பின்னும் நோக்கி நிற்றலிற் சிங்க நோக்கிற் கிடந்ததெனக் கொள்க. (இ-ள்.) மேற் சொல்லப்பட்ட உயிரீற்றுப் பெயரும், இனியோதுகின்ற புள்ளியீற்றுப் பெயரும் அஃறிணைப் பெயரும் அண்மைக்கண் இயல்பாகி விளியேற்கும். னகர ஈறு சிறப்பு விதி பெறுதலின், அது ஒழித்து ஏனைய கொள்ளப்படும், எ-று. (உ-ம்.) நம்பிவாழி; நங்கைவாழி; வேந்துவாழி; கோவாழி; மாதர் கூறு; அண்ணல் கூறு; கடவுள்வாழி; தும்பி கூறு; அன்னங் கூறு; கானல் கூறு எனவரும். பிறவும் அன்ன. ‘ஆவுமானியற் பார்ப்பனமாக்களும்’ (புறம். 9) என்பதும் அண்மை விளி. பிறவும் அன்ன. (9) 124. னரலள வென்னு மந்நான் கென்ப யிள்ளி யிறுதி விளி (கொள்) பெயரே. உயர்திணைப் பெயருள் புள்ளியீறாகி விளிகொள்ளும் பெயர் வகுத்து உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உயர்திணை மருங்கிற், புள்ளியீறாகி விளிகொள்ளும் பெயர் ன, ர, ல, ள என்னும் ஈற்றினையுடைய அந்நான்கென்று சொல்லுவார் ஆசிரியர், எ-று. உயர்திணை என்பது அதிகாரத்தான் வந்தது. ன, ர, ல, ள என்பன ஆகுபெயராய் அவ் வீற்றினை யுடைய பெயர்க்குப் பெய ராயின. உதாரணம் தத்தம் சிறப்புச் சூத்திரத்துட் காட்டுதும். (10) 125. ஏனைப் புள்ளி யீறுவிளி கொள்ளா. ஐயமறுத்தலை நுதலிற்று. (இ-ள்.) உயர்திணைப் பொருட்கண் மேற் சொல்லப்பட்ட நான்கீற்றுப் பெயரும் ஒழிய, ஏனையீற்றுப் பெயர்கள் விளியேலா, எ-று. (உ-ம்.) அவை: யாம், நாம், எல்லாரும், எல்லீரும், எல்லாம், தாம் என்பன. (11) 126. அவற்றுள், அன்னெ னிறுதி ஆவா கும்மே. நிறுத்த முறையானே னகர ஈறு விளியேற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்டவற்றுள், அன் என்னு மீற்றினையுடைய பெயர் ஆ என விளி ஏற்கும், எ-று. ஈறென்பது ஈற்றினையுடைய பெயரை. (உ-ம்.) சோழன் - சோழா - வெற்பன் - வெற்பா; சாத்தன் - சாத்தா எனவரும். (12) 127. அண்மைச் சொல்லிற் ககர மாகும். எய்தியது விலக்கி மேலதற்கோர் புறநடை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அன் என்னுமீறு அண்மைக்கண் அகரமாகி விளியேற்கும், எ-று. அன் என்பது அதிகாரத்தான் வந்தது. (உ-ம்.) சோழ, சாத்த, வெற்ப என வரும். (13) 128. ஆனெ னிறுதி யியற்கை யாகும். இதுவும் னகர வீற்றுக்கண் வருவதோர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உயர்திணைப் பொருள் உணர்த்தும் னகார வீற்றுப் பெயருள் ஆன் என்னும் ஈற்றுப் பெயர் இயல்பாகி விளியேற்கும், எ-று. (உ-ம்.) சேரமான், மலையமான் என்பன விளிக்கண்ணும் அவ்வாறே வரும். (14) 129. தொழிலிற் கூறும் ஆனென் இறுதி ஆயா கும்மே விளிவயி னான. ஆனீற்றுப் பெயர்க்கண் வருவதோர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தொழிலாற் கூறப்படும் ஆன் ஈற்றுப் பெயர் ஆய் என வரும் விளித்தற்கண், எ-று. (எ-டு.) உண்டான், வந்தான் என்னுந் தொழிற்பெயர் உண்டாய், வந்தாய் என விளியேற்கும். தொழில் என்றதனாற் குறிப்பு வினைப் பெயருங் கொள்க. உடையான், கழலான் என்பன உடையாய், கழலாய் என வரும். ஈண்டும் விளிவயினான என விதந்தோதினமையான், தொழிலான் வருஞ் சொல் முன்னிலை வினையாகிய வழியும் உண்டாய் எனவரும் : அஃதன்று இது என்பதூஉம், அதனோடு இதனிடை ஓசை வேறுபாடு உள என்பதூஉம் அறிவித்தற்கு எனக் கொள்க. (15) 130. பண்புகொள் பெயரும் அதனோ ரற்றே. ஆனீற்றுப் பெயருள் பண்புப் பெயர்க்கு உரியதோர் இயல்பு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பண்பினால் பெற்ற ஆன் ஈற்றுப் பெயரும் ஆய் என விளி ஏற்கும், எ-று. (உ-ம்.) கரியான், கொடியான் என்பன கரியாய், கொடியாய் என வரும். கரியான் எனவும் விளியேற்குமாலெனின், அவ்வாறு வருவது பண்பு குறியாது அப்பொருட்கு இடுகுறியாகி வந்தது என்க. (16) 131. அளபெடைப் பெயரே அளபெடை யியல. னகர ஈற்று அளபெடைப்பெயர் விளி ஏற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) னகார இறுதி அளபெடைப் பெயராயின் மேற் சொல்லப் பட்ட அளபெடைப் பெயர் போல இயல்பாகி விளி ஏற்கும், எ-று. (உ-ம்.) கிழாஅன், கோஒன் என்பன விளிக்கண்ணும் அவ்வாறே வரும். (17) 132. முறைப்பெயர்க் கிளவி ஏவொடு வருமே. னகார ஈற்றுள் முறைப்பெயர் விளி ஏற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) னகார ஈற்றுள் முறைமை குறித்த பெயர் ஏகாரத்தொடு விளி ஏற்கும், எ-று. (உ-ம்.) மகன் என்பது மகனே என வரும். ஒப்பின் முடித்தல் என்பதனான் முறைமை சுட்டாத மகன் என்னும் பெயரும் ஏவொடு சிவணும் என்று கொள்க. “3பார்ப்பன மகனே, பார்ப்பன மகனே” (குறுந். 156) என வரும். ‘4சான்றாள ரீன்ற தகாஅத் தகாஅ மகாஅ-ஈன்றாட் கொருபெண் இவள்’ என (பரி. 8) ஆகாரமாகியும் வரும். வந்தது கொண்டு வாராதது முடித்தல் என்பதனால் பிற பெயர்க்கண்ணும் ஏவொடு வருதல் கொள்ளப்படும். 5கூந்தன்மா வூர்ந்து குடமாடிக் கோவலனாய்ப் பூந்தொடியைப் புல்லிய ஞான்றுண்டால்-யாங்கொளித்தாய் தென்னவனே தேர்வேந்தே தேறுநீர்க் கூடலார் மன்னவனே மார்பின் மறு.’ (முத்தொள்ளாயிரம்) எனவும், கோன் என்பது கோனே எனவும் வரும். இவை ‘செய்யுள் மருங்கினும்’ (453) என்னும் அதிகாரப் புறநடை யாற்கொள்ளினும் அமையும். (18) 133. தானென் பெயரும் சுட்டுமுதற் பெயரும் யானென் பெயரும் வினாவின் பெயரும் அன்றி யனைத்தும் விளிகோ ளிலவே. னகார ஈற்றுப் பெயருள் விளி ஏலாதன உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தான்; அவன், இவன், உவன்; அத்தன்மையன் அத்தன்மை யான்; அன்னான், அனையான்; யான், யாவன் என வருவன விளி ஏலா; எ-று. (19) 134. ஆரும் அருவும் ஈரொடு சிவணும். நிறுத்த முறையானே உயர்திணைக்கண் ரகரவீற்றுப்பெயர் விளி ஏற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஆர், அர் என்னும் ஈற்றுப் பெயர்கள் ஈர் என்பதனொடு சிவணும், எ-று. (உ-ம்.) பார்ப்பார், கூத்தர், உடையர் என்பன பார்ப்பீர், கூத்தீர், உடையீர் என வரும். வந்தது கொண்டு வாராதது முடித்தல் என்பதனால் பெண்டிர், பெண்டீர் எனவும் வரும். (20) 135. தொழிற்பெய ராயின் ஏகாரம் வருதலும் வழுக்கின் றென்மனார் வயங்கி யோரே. (இ-ள்.) மேற் சொல்லப்பட்ட ஈறுகள் தொழிற் பெயராயின் ஏகாரம் வருதலும் குற்றமில்லை என்பார் அறிந்தோர். எ-று. உம்மை இறந்தது தழீஇயிற்று. (உ-ம்.) வந்தார், வந்தவர் என்பன வந்தீர் என வருதலேயன்றி, வந்தாரே, வந்தவரே எனவும் வரும். ஈரொடு சிவணும் என்றோதி, ஏகாரம் வருதலுங் குற்றமில்லை என்றதனான் அதனோடு அடுத்து வருதலும் கொள்க. வந்தீரே எனவும் வரும். (21) 136. பண்புகொள் பெயரும் அதனோ ரற்றே. ரகார ஈற்றுப் பண்புகொள் பெயர் விளி ஏற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ரகார ஈற்றுப் பண்பினான் வரும் பெயரும் தொழிற் பெயர் போல விளி ஏற்கும், எ-று. (உ-ம்.) கரியார், கரியவர் என்பன கரியீர் என வருதலே யன்றிக் கரியாரே, கரியவரே, கரியீரே எனவும் வரும். (22) 137. அளபெடைப் பெயரே அளபெடை யியல. ரகார ஈற்று அளபெடைப் பெயர் விளி ஏற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ரகார ஈற்று அளபெடைப் பெயர் மேற்சொல்லப் பட்ட அளபெடைப் பெயரே போல இயல்பாகி விளி யேற்கும், எ-று. (உ-ம்.) மகாஅர், சிறாஅர் என்பன விளிக்கண்ணும் அவ்வாறே வரும். (23) 138. சுட்டுமுதற் பெயரே முற்கிளந் தன்ன. ரகார ஈற்றுள் விளி ஏலாதன உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) சுட்டு முதலாகிய ரகரவீற்றுப் பெயர் மேற் சொல்லப்பட்ட சுட்டு முதற் பெயர் போல விளி ஏலா, எ-று. (உ-ம்.) அவர், இவர், உவர், அத்தன்மையர், அத்தன்மை யார் என்பன விளி ஏலா. (24) 139. நும்மின் திரிபெயர் வினாவின் பெயரென் றம்முறை யிரண்டும் அவற்றியல் பினவே. இதுவுமது. (இ-ள்.) நும்மின் திரிபெயராவது நீயிர். வினாவின் பெயராவது வினாவானாகிய பெயர். அது யாவர் என்பது. அம்முறையாகிய இரண்டு பெயரும் விளியேலா எ-று. இவ் வீற்றினுள் முறைப் பெயர் கூறாதது என்னையெனின், அது பொது விதியான் அடங்குதலின் என்க. (25) 140. எஞ்சிய இரண்டின் இறுதிப் பெயரே நின்ற வீற்றயல் நீட்டம் வேண்டும். லகார ளகார ஈற்றுப் பெயர் விளி ஏற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) லகார, ளகார ஈற்றுப் பெயர் விளி ஏற்புழி ஈற்றயல் நீட்டம் கொடுத்தல் வேண்டும், எ-று. (உ-ம்.) குருசில், தோன்றல், மக்கள் என்பன குருசீல், தோன்றால், மக்காள் என வரும். (26) 141. அயல்நெடி தாயின் இயற்கை யாகும். (இ-ள்.) லகார, ளகார ஈற்றுப் பெயர் விளி ஏற்புழி ஈற்றயல் நெடிதாயின் இயல்பாகி விளி ஏற்கும், எ-று. (உ-ம்.) பெம்மாள், கோமாள் என்பன விளிக்கண்ணும் அவ்வாறே வரும். (27) 142. வினையினும் பண்பினும் நினையத் தோன்றும் ஆளென் இறுதி ஆயா கும்மே விளிவயி னான. ளகார ஈற்றுள் ஒருசாரன விளி ஏற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தொழிற்பெயர்க்கண்ணும் பண்புப் பெயர்க் கண்ணும் வரும் ஆள் என் இறுதி ஆய் ஆகும் விளித்தற்கண், எ-று. பெயரென்பது அதிகாரத்தான் வந்தது. ஈண்டு ‘விளி வயினான’ என்பதற்கு மேல் உரைத்தவாறே (சூ. 129) உரைக்க. (உ-ம்.) உண்டாள், கரியாள் என்பன உண்டாய், கரியாய் எனவரும். (28) 143. முறைப்பெயர்க் கிளவி முறைப்பெய ரியல. ளகார வீற்று முறைப்பெயர் விளி ஏற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ளகார ஈற்று முறைப் பெயர்ச்சொல் னகார ஈற்று முறைப் பெயர் போல விளி ஏற்கும், எ-று. (உ-ம்.) மகள், மகளே என வரும். ஒப்பக்கூறல் என்பதனால் முறைமை சுட்டாத மகள் என்பதும் ஏகாரம் பெற்று விளி ஏற்கும். ‘6அகவன் மகளே அகவன் மகளே’ என வரும். (29) 144. சுட்டுமுதற் பெயரும் வினாவின் பெயரும் முற்கிளந் தன்ன என்மனார் புலவர். ளகர வீற்றுப் பெயருள் விளி ஏலாதன உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) சுட்டெழுத்தை முதலாக உடைய பெயரும், வினாவானாகிய பெயரும் மேற்சொல்லியவாறு போல் விளி ஏலா, எ-று. (எ-டு.) அவள், இவள், உவள், அத்தன்மையள், யாவள் என்பன விளி ஏலா என்றவாறு. (30) 145. அளபெடைப் பெயரே அளபெடை யியல. லகார ளகார ஈறுகள் அளபெடைக்கண் விளி ஏற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) லகார, ளகார ஈற்று அளபெடைப் பெயர் மேற் சொல்லப்பட்ட அளபெடைப் பெயர் போல இயல்பாகும். எ-று. (உ-ம்.) ‘வலம்புரித் தடக்கை மாஅல்’; ‘மேவார்த் தொலைத்த விறன்மிகு வேஎள்’ என வரும். (31) 146. கிளந்த இறுதி அஃறிணை விரவுப்பெயர் விளம்பிய நெறிய விளிக்குங் காலை. அஃறிணைப் பொருள் உணரவரும் விரவுப் பெயர் விளி ஏற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்ட ஈற்றினை யுடையவாகிய அஃறிணைப் பொருண்மேல் வரும் விரவுப் பெயர் சொல்லப் பட்ட நெறியவாம் விளிக்குங் காலத்து, எ-று. (உ-ம்.) சாத்தன்- சாத்தா; சாத்தி- சாத்தீ; குருடன்- குருடா; குருடி- குருடீ என வரும். பிறவும் வந்தவழிக் கண்டு கொள்க. (32) 147. புள்ளியு முயிரும் இறுதி யாகிய அஃறிணை மருங்கின் எல்லாப் பெயரும் விளிநிலை பெறூஉங் காலந் தோன்றிற் றெளிநிலை யுடைய ஏகாரம் வரலே. அஃறிணைக்கு உரிய பெயர் விளி ஏற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) புள்ளியும் உயிருமாகிய எழுத்தினை ஈறாக வுடையவாகிய அஃறிணைப் பெயராகி வருவனவெல்லாம் விளி ஏற்கும் காலந் தோன்றின், ஏகாரம் வருதல் தெளிவிளங்கு நிலையுடைய, எ-று. எனவே, பிறவாற்றான் வருவன இத்துணை இலக்கம் இல என்றவாறாம். என்பது என் சொன்னவாறோ எனின், அஃறிணைப் பெயர் ஏகாரம் பெற்று விளி ஏற்றல் பெரும்பான்மை : உயர் திணைக்கு ஓதிய வாய்பாட்டால் வருதல் சிறுபான்மை என்றவாறு. காலந் தோன்றின் என்றது அஃறிணைப் பெயர் உயர்திணை போல விளி ஏற்பன சில என்பதூஉம், ஏலாதனவும் ஒருகாலம் பற்றி விளிக்கப்படும் என்பதூஉம் அறிவித்தற்கு எனக் கொள்க. (உ-ம்.) புலியே, வண்டே, மரையே, மானே, மாவே, குயிலே, மரமே என வரும். தும்பி, தும்பீ எனவும்; யானை, யானாய் எனவும்; வேங்கை, வேங்காய் எனவும்; தென்றல், தென்றால் எனவும்; அரிமான், அரிமா அன்னே எனவும் உயர்திணை வகையான் வருவன சிறுபான்மை. (33) 148. உளவெனப் பட்ட எல்லாப் பெயரும் அளவிறந் தனவே விளிக்குங் காலைச் சேய்மையி னிசைக்கும் வழக்கத் தான. இருதிணைக்கண்ணும் வரும் விளிவேற்றுமைக் கெல்லாம் உரியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இருதிணைக்கண்ணும் விளி ஏற்றற்குள எனப்பட்ட எல்லாப் பெயரும் ஓதிய அளவினானன்றி மாத்திரை நீண்டு ஒலிக்கும்: சேய்மைக்கண் நின்ற பொருளை விளிக்கும் வழக்கின் கண், எ-று. எனவே, மேற் சொல்லப்பட்டவற்றுள் நெட்டெழுத்துப் பெற்றன விடநிலைப் பொருட்கண் என்று கொள்ளப்படும். அளவிறந்தன என்றமையான் மூன்று மாத்திரையின் நீண்டு ஒலித்தலும் கொள்க. (உ-ம்.) சாத்தாஅ, கொற்றாஅ எனவும்; சாத்தாஅஅ, கொற்றாஅஅ எனவும் வரும். (34) 149. அம்ம வென்னும் அசைச்சொன் னீட்டம் தம்முறைப் பெயரொடு சிவணா தாயினும் விளியொடு கொள்ப தெளியு மோரே. இடைச் சொற்கண் விளிப் பொருண்மை உணர வருவன உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அம்ம என்னும் அசைச்சொல் நீட்டமாகிய அம்மா என்னும் சொல் முறைப் பெயரொடும் பொருந்தாதாயினும், அதனை விளிப் பொருண்மை உணர்த்துஞ் சொல்லொடு கூட்டிக் கொள்ப அறிவோர், எ-று. (உ-ம்.) அம்மா கொற்றா என வரும். ‘வந்தது கொண்டு வாராதது முடித்தல்’ என்பதனான், ஏட, ஏடா; ஏடி, ஏடீ என வருவனவுங் கொள்க. (35) 150. த ந நு எ என அவைமுத லாகித் தன்மை குறித்த னரளவெ னிறுதியும் அன்ன பிறவும் பெயர்நிலை வரினே இன்மைவேண் டும்விளி 7வேற்றுமை கொளலே. எஞ்சியது உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) த, ந, நு, எ-என்பன முதலாகிய பொருண்மை குறித்த, ன, ர, ள என்னும் ஈற்றினையுடைய சொற்களும், அத்தன்மைய பிறவும் வினைக் குறிப்பு நீர்மையன்றிப் பெயராகி வரின் விளியேற்றலின்மை வேண்டும் ஆசிரியர், எ-று. அவையாவன :- தமன், தமள், தமர்; நமன், நமள், நமர்; நுமன், நுமள், நுமர்; எமன், எமள், எமர். அன்ன பிறவும் என்றதனான் பிறன், பிறள், பிறர் என வரும். இவை விளி ஏலா. 8விளங்கு மணிக்கொடும் பூணாஅய் நின்னாட் டிளம்பிடி யொருசூல் பத்தீ னும்மோ. (புறம். 130) என்றவழி, யகர வீறு விளி யேற்றதாலெனின், அவ்வாறு வருவன வழக்குப் பயிற்சியின்மையின், எடுத்தோதிற்றிலர். ஆயினும் செய்யுண் மருங்கின் (453) என்னும் அதிகாரப் புறநடையால், இந்நிகரன வெல்லாம் அமைத்துக் கொள்க. இவ்விளி வேற்றுமையை முடிக்குஞ் சொல் யாதோ எனின், இஃது எழுவாய் வேற்றுமையது திரிபாகலான், அதற்குப் பயனிலையாகி வருவனவற்றுள் இதற்கு ஏற்புடையன முடிக்குஞ் சொல்லாம் எனக் கொள்க. இவ்வாறு ஒற்றுமை யுடைத்தாக லானே ஒருசார் ஆசிரியர் வேற்றுமை யேழெனக் கொண்டதென உணர்க. (36) நான்காவது விளி மரபு முடிந்தது இவ்வோத்தினுட் சூத்திரம் உட்பட உரையினது அளவு கிரந்த வகையான் நூற்று முப்பது விளி மரபு அடிக்குறிப்புகள் 1. அவைதாம் - ஏனை உரைகள். 2. இதனை இரண்டு சூத்திரங்களாகக் கொள்வர் ஏனை யுரையாளர். 3. குறு. 156. 4. பரி. 8ஆம் பாடல். 5. முத்தொள்ளாயிரம் 6. குறு. 23. 7. விளியொடு கொளலே - ஏனை யுரைப் பாடங்கள். 8. புறநா. 130. பெயரியல் இதுகாறும் அல்வழி வேற்றுமையாகிய தொடர்மொழி யிலக்கணங் கூறிய ஆசிரியர், இனி அத்தொடர்மொழிக்கு உறுப் பாகிய தனிமொழி யிலக்கணங் கூறத் தொடங்கி முதற்கண் பெயரிலக்கண முணர்த்துகின்றார். அதனால் இது பெயரிய லென்னும் பெயர்த்தாயிற்று. இதன்கண் 43-சூத்திரங்கள் உள்ளன. இவற்றை 41-சூத்திரங்களாக அடக்குவர் தெய்வச்சிலையார். எல்லாச் சொற்களும் பொருள் குறித்து வருவனவே. சொல்லாற் குறிக்கப்பட்ட பொருளைத் தெரிந்துகொள்ளுதற்கும் சொல்லைத் தெரிந்துகொள்ளுதற்கும் அச்சொல்லே கருவியாகும். சொல் பொருளுணர்த்தும் முறை வெளிப்படுநிலை, குறிப்புநிலை யென இருவகைப்படும். சொல்லெனச் சிறப்பித்துரைக்கத்தக்கன பெயரும் வினையும் என இரண்டேயாம். இடைச்சொல்லும் உரிச்சொல்லும் பெயர் வினைகளைச் சார்ந்து தோன்றுவன என்பர் ஆசிரியர். பெயர் என்பது பொருள். பொருளை யுணர்த்துஞ் சொல் பெயர்ச்சொலெனப்பட்டது. பொருளது புடைபெயர்ச்சியாகிய தொழிற் பண்பின் காரியம் வினையாகும். அவ்வினையை யுணர்த்துஞ்சொல் வினைச்சொலெனப்பட்டது. பெயருமாகாது வினையுமாகாது அவ்விரண்டற்கும் நடு நிகரனவாய் நிற்பன இடைச்சொற்களாம். இடை-நடு. குணப்பண்பும் தொழிற்பண்பு மாகிய பொருட்பண்பை யுணர்த்துஞ் சொற்கள் உரிச்சொற்களாம். பொருட்குப் பண்பு உரிமைபூண்டு நிற்றலின் அப்பண்பினை யுணர்த்துஞ்சொல் உரிச்சொலெனப்பட்டதென்பர் சிவஞான முனிவர். உயர்திணைப் பெயரும், அஃறிணைப் பெயரும், அவ்விரு திணைக்கும் ஒத்த உரிமையுடைய விரவுப்பெயரும் எனப் பெயர்ச் சொல் மூன்று வகைப்படும். அவன், பெண்மகன், சாத்தன் என னகரவீறும், அவள், மக்கள், மகள் என ளகரவீறும் நம்பி, பெண்டாட்டி, முள்ளி என இகரவீறும், ஆடூஉ, மகடூஉ, அழிதூஉ என உகரவீறும் உயர்திணை ஆண்பால் பெண்பால் களுக்கும் அஃறிணைக்கும் உரியவாய் வந்தன. இப்பெயர்ச் சொற்களை வினைச் சொற்போல இன்னஈறு இன்ன பாலுக்குரித்து என ஈறு பற்றிப் பகுத்துணர்த்துதலாகாமையின் இருதிணைப் பிரிந்த ஐம்பாலுணர்த்துஞ் சொல்லாதற்குப் பெயருள் உரியன உரியவாம் என்றார் தொல்காப்பியனார். இவ்வியலில் 8-முதல் 12-வரையுள்ள சூத்திரங்களால் உயர் திணைப் பெயர்களையும், 13-முதல் 14-வரையுள்ள சூத்திரங்களால் அஃறிணைப் பெயர்களையும், 17-முதல் 19-வரையுள்ள சூத்திரங்களால் விரவுப்பெயர் பால் விளங்க நிற்றலையும், 20-முதல் 36-வரையுள்ள சூத்திரங்களால் இரு திணைப் பொதுப்பெயர்களையும் அவற்றின் வகையினையும் விரித்துக் கூறுவர் ஆசிரியர். அருவாளன், சோழியன் என்றாங்கு நிலம்பற்றி வழங்கும் பெயர் நிலப்பெயர். சேரன், சோழன், பாண்டியன் என்றாற்போல ஒருவன் பிறந்த குடி பற்றி வழங்குவன குடிப்பெயர். அவையத்தார், அத்திகோசத்தார் என்றாங்கு ஒரு துறைக்கண் உரிமை பூண்ட பலரையுங் குறித்து வழங்குவன குழவின்பெயர். தச்சன், கொல்லன் என்றாற்போலத் தொழில்பற்றி வழங்கும் பெயர் வினைப்பெயர். அம்பர்கிழான், பேரூர்கிழான் என்றாற்போல உடைமைப் பொருள்பற்றி அதனையுடையார்க்கு வழங்கும் பெயர் உடைப்பெயரெனப்படும். கரியன் செய்யன், நல்லன் தீயன் என்றாற்போல நிற முதலிய குணம் பற்றி அப்பண்புடையார்க்கு வழங்கும் பெயர் பண்புகொள் பெயராகும். தந்தையர், தாயர், தன்னையர் என அம்முறையுடையார் பலர்க்கும் வழங்கும் பெயர் பல்லோர்க் குறித்த முறைநிலைப் பெயராம். பெருங்காலர், பெருந்தோளர் என்றாற்போலச் சினையுடைமைபற்றி அச்சினை யுடையார் பலர்க்கும் வழங்கும் பெயர் பல்லோர்க்குறித்த சினை நிலைப் பெயராம். ஆயர், வேட்டுவர் முதலாகத் திணைபற்றிப் பலர்க்கும் வழங்கும் பெயர் பல்லோர்க் குறித்த திணை நிலைப் பெயராம். பட்டி புத்திரர் கங்கை மாத்திரர் என்றாற்போல விளையாட்டுக் குறித்து இளைஞர்கள் பகுதிபடக் கூடித் தமக்குப் படைத்திட்டுக்கொள்ளும் பெயர் கூடிவரு வழக்கின் ஆடியற் பெயரெனப்படும். ஒருவர், இருவர், மூவர் என எண்ணாகிய இயல்புபற்றி இவ்வளவினர் என்னும் பொருளில் வழங்கும் பெயர் இன்றிவரென்னும் எண்ணியற் பெயராம். இங்கெடுத்துக் காட்டிய பெயர் விகற்பமெல்லாம் தம் காலத்தே தமிழகத்தில் வழங்கப்பெற்றனவாதலின் இவற்றைப் பால் விளங்க வந்த உயர்திணைப் பெயர்களில் அடக்கிக் கூறினார் ஆசிரியர். ஆ, யானை, தெங்கு, பலா என்றாற்போன்று ஒருமைக்கும் பன்மைக்கும் பொதுவாய் வழங்கும் அஃறிணைப் பெயர்களை ‘அஃறிணையியற்பெயர்’ எனக் குறியிட்டு வழங்குவர் தொல் காப்பியர். இவற்றை நன்னூலாரும் பிறரும் பால்பகா அஃறிணைப் பெயர் என வழங்குவர். ஒருவர்க்குக் காரணங் கருதாது சாத்தன், கொற்றன் என்றாங்கு இயல்பாக இட்டு வழங்கும் பெயர் இயற்பெயரெனப்படும். பெருங்காலன், முடவன் என்றாற்போன்று சினையுடைமைபற்றி முதற்பொருளுக்கு வழங்கும் பெயர் சினைப் பெயராம். சீத்தலைச் சாத்தன், கொடும் புறமருதி என்றாற்போன்று சினைப்பெயரொடு தொடர்ந்துவரும் முதற்பெயர் சினைமுதற் பெயராம். பிறப்பால் ஒருவரோடொருவர்க்குளதாகிய முறை பற்றித் தந்தை, தாய் முதலாக வழங்கும் பெயர்கள் முறைப் பெயர்களாம். இயற்பெயர், சினைப்பெயர், சினைமுதற்பெயர், முறைப்பெயர் ஆகிய இவையும் தாம், தான், எல்லாம், நீயிர், நீ என்பனவும் இருதிணைக்கும் உரியனவாய் வழங்கும் பொதுப் பெயர்களாகும். இவற்றை விரவுப்பெயர் என வழங்குதலும் உண்டு. மேற்கூறிய இயற்பெயர், சினைப்பெயர், சினைமுதற் பெயர் ஆகிய மூன்றும் ஆண்மை பெண்மை ஒருமை பன்மை என இந்நான்குங் காரணமாக இருதிணைக்கும் பொதுவாகி வழங்குங் கால் முந்நான்கு பன்னிருண்டுவகைப்படுமென்றும், முறைப்பெயர் ஆண்மை முறைப்பெயர் பெண்மை முறைப்பெயர் என இரு வகைப்படுமென்றும், இவை பெண்மை சுட்டிய பெயர், ஆண்மை சுட்டிய பெயர், ஒருமை சுட்டிய பெயர், பன்மை சுட்டிய பெயர் என நான்காயடங்குமென்றும், இவற்றுள் பெண்மை சுட்டிய பெயர் உயர்திணையில் பெண்ணொருத்தியையும் அஃறிணையில் பெண்ணொன்றையும் உணர்த்துதலும், ஆண்மை சுட்டிய பெயர் உயர்திணையுள் ஒருவனையும் அஃறிணையில் ஆண் ஒன்றையும் உணர்த்துதலும் ஒருமை சுட்டிய பெயர் உயர்திணையுள் ஒருவன் ஒருத்தி என்னும் இருபாலும் அஃறிணையில் ஒன்றன்பாலு மாகிய மூன்று பால்களை யுணர்த்துதலும், பன்மை சுட்டிய பெயர் இருதிணைப் பன்மையும் உணர்த்தி வருதலோடு அவற்றுள் ஒரு சாரன அஃறிணையொருமை அஃறிணைப் பன்மை உயர் திணையில் ஆண்மை பெண்மை ஆகிய இந்நான்கு பால்களை யுணர்த்துதலும் உடையன என்றும் விரித்துரைப்பர் தொல்காப்பியர். பன்மை சுட்டிய பெயர் என்பதற்கு இருதிணையிலும் பன்மைப் பாலைச் சுட்டிவரும் பொதுப் பெயரென்பதே பொருள். இதுவே ஆசிரியர் கருத்தென்பது தாமென் கிளவி பன்மைக்குரித்தே’ (தொல்-சொல். 181) ‘ஏனைக்கிளவி பன்மைக்குரித்தே’ (தொல்-சொல். 187) எனவருஞ் சூத்திரங்களால் உயர்திணைப் பலர்பாற்கும் அஃறிணைப் பலவின் பாற்கும் பொதுவாகிய நிலையினைப் பன்மையென்ற சொல்லால் அவர்கூறுதலால் நன்கு புலனாம். பன்மை சுட்டிய பெயர்கள் தமக்குரிய இருதிணைப் பன்மையையுஞ் சுட்டி வழங்குதலே முறையாகவும் அவற்றுள் ஒருசாரன அஃறிணையில் ஒன்றன்பால் பலவின்பால் உயர்திணையில் ஆணொருமை பெண்ணொருமை ஆகிய இந்நான்கு பால்களையும் குறித்து வருதலுண்டென்பார், ‘பன்மை சுட்டிய எல்லாப் பெயரும் ஒன்றே பலவே ஒருவ ரென்னும் என்றிப் பாற்கும் ஓரன் னவ்வே’ எனச் சூத்திரஞ் செய்தார் தொல்காப்பியனார். இதன்கண் என்றிப்பாற்கும் என்ற உம்மையால் பன்மை சுட்டிய பெயர் தனக்குரிய இருதிணைப் பன்மையையும் ஏற்றுவருதலை ஆசிரியர் தழீஇக் கூறினாராதல்வேண்டும். இவ்வுண்மை ‘தன்பாலேற்றலை உம்மையால் தழீஇயினார்’ எனவரும் சிவஞானமுனிவர் உரைக் குறிப்பினால் இனிது புலனாதல் காண்க. இங்கே “பன்மை சுட்டிய பெயரென்பது வெண்குடைப் பெருவிறல் என்பதுபோல ஒருமையியைபு நீக்காது இயைபின்மை மாத்திரை நீக்கிப் பன்மை சுட்டும் என்பதுபட நின்றது” என்பர் சேனாவரையர். இச்சூத்திரத்திற் கூறியவாறு பன்மை சுட்டிய பெயர் உயர்திணைப் பன்மையையுணர்த்தா தொழிதலும் ஏனையொருமைகளை யுணர்த்துதலும் பொருந்தா வென்பது கருதி இத்தொல்காப்பியச் சூத்திரக் கருத்தை மறுத்தல் என்னும் மதம்பட ‘அவற்றுள்’ ஒன்றேயிரு, திணைத் தன்பாலேற்கும்’ என நன்னூலார் சூத்திரஞ் செய்தாரென்பர் சங்கர நமச்சிவாயர், பன்மை சுட்டிய பெயரென்றது உயர்திணை ஆணொருமை பெண்ணொருமை அஃறிணையொருமை பன்மை ஆகிய பல பால்களையும் சுட்டி நிற்றலின் இனமுள்ள அடைமொழியே யென்பதும் எவ்வகையால் நோக்கினும் ஆசிரியர் தொல் காப்பியனார் கருத்து மறுக்கத்தக்கதன்றென்பதும் சிவஞான முனிவர் கருத்தாகும். ஒருவரென்னும் பெயர்ச்சொல் ஒருவன் ஒருத்தி யென்னும் இருபாற்கும் பொதுவாய் வழங்கும். அச்சொல் பொருளால் ஒருமையைக் குறிப்பதாயினும் பலர்பாற் சொல்லோடு தொடரும் இயல்புடையதாகும். பெண் மகன் என்னும் பெயர் பெண்பால் வினைகொண்டு முடியும். பெயர்களின் ஈற்றயலிலுள்ள விகுதி ஆகாரம் செய்யுளுள் ஓகாரமாகத் திரியும். செய்யுளிலே கருப் பொருள்களின்மேல் வழங்கும் இருதிணைப் பொதுப் பெயர்களுள் அவ்வந்நிலத்து மக்களால் அஃறிணைப் பொருளுக்கே யுரிமை யுடையனவாய் வழங்கும் பெயர்கள் உயர்திணையை யுணர்த்தா வென்பர் ஆசிரியர். - க. வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 204-208 ஐந்தாவது பெயரியல் 151. எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின், பெயரியல் என்னும் பெயர்த்து. இது பெயரியல்பு உணர்த்தினமையாற் பெற்ற பெயர். கிளவியாக்க முதலாக விளிமரபு ஈறாகத் தொடர் மொழி இலக்கணங் கூறி, இனி, அத்தொடர் மொழிக்கு உறுப்பாகிய தனிமொழி இலக்கணம் கூறுகின்றார். அத் தனிமொழி நான்கனுள் பெயர்ச்சொல் சிறந்ததாகலின், இவ்வோத்து முற்கூறப்பட்டது. மேலதனோடு இயைபுமிது. இதனுள் இம் முதற்சூத்திரம் என்னுதலிற்றோ எனின், எல்லாச் சொற்கும் உரியதோர் பொது இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உலகத்தாரான் வழங்கப்பட்ட எல்லாச் சொல்லும் பொருள் குறித்தன, எ-று. எனவே, பொருளின்றி வழங்குஞ் சொல் இல என்றவாறும் ஆம். என்னை? முயற்கோடு எனச் சொல் நிகழுமன்றே, அதனாற் குறிக்கப்பட்ட பொருள் யாங்கது? எனின், அறியாது கடாவினாய், முயல் என்பதற்குப் பொருண்மை காண்டி, கோடு என்பதற்கும் பொருண்மை காண்டி, இவை இரண்டு பொருளும் தனித்தனி உளவாதலின், இவை தனி மொழிக்கண் பொருள் குறித்து நின்றன; தொடர் மொழியாயுழி, உள்ள பொருளோடு அதன்கண் இல்லாத பொருளை அடுத்தமையான் ஆண்டு இன்றாயிற்று அல்லது, இல்பொருள்மேல் வழக்கின்று என்று கொள்க. அஃதேல், எல்லாச் சொல்லும் பொருள் குறித்து வருமாயின், அசை நிலை, இசைநிறை, ஒரு சொல்லடுக்கு என்பன பொருள் குறித்திலவாலெனின், பொருள் உணர்த்தும் என்னாது குறித்தன என்றமையான், அவையும் சார்ந்த பொருளைக் குறித்தன என்று கொள்க. அன்றியும் எடுத்தோத்துப் பெரும் பான்மை பற்றி என்றும் கொள்க. ‘இவ்வூரார் எல்லாம் கல்வி உடையர்’ என்றவழி, கல்லாதாரும் சிலர் உளராயினும் கற்றார் பலர் என்பது குறித்து நின்றாற் போலக் கொள்க. இன்னும், “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தன” என்பதற்குப் பொருள், எல்லாச் சொல்லும் எல்லாப் பொருளையும் குறித்து நிற்கும் எ-று. எனவே, இச்சொல் இப்பொருள் உணர்த்தும் என்னும் உரிமை இல என்றவாறாம். என்னை உரிமை இலவாகியவாறு எனின், உலகத்துப் பொருள் எல்லாவற்றையும் பாடைதோறும் தாம் அறிகுறியிட்டு ஆண்ட துணையல்லது, இவ்வெழுத்தினான் இயன்ற சொல் இப்பொருண்மை உணர்த்தும் என எல்லாப் பாடைக்கும் ஒப்பமுடிந்ததோர் இலக்கணம் இன்மையான் என்க. எனவே, பொருள்பற்றிவரும் பெயரெல்லா மிடுகுறி யென்பது பெறப்பட்டது. இவ் விடுகுறியான் அடிப்பட்ட சொல்லோடு ஒட்டி மற்றொரு பொருட்குப் பெயராகி வருவது காரணக் குறியாம். (1) 152. பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும் சொல்லி னாகும் என்மனார் புலவர். இதுவும் சொல் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) சொல்லினாற் குறிக்கப்பட்ட பொருளின் தன்மை ஆராய்தலும், சொல்லின் தன்மை ஆராய்தலும் சொல் தன்னானே ஆகும், எ-று. (உ-ம்.) நிலம் என்பது பொருளின் தன்மை ஆராய்வார்க்கு மண்ணினான் இயன்றதோர் பூதம் என்றாயிற்று. சொல்லின் தன்மை ஆராய்வார்க்குப் பெயர்ச்சொல் என்றாயிற்று. அதனான் இரு பகுதிய சொல் நிலைமை என்றவாறு. (2) 153. தெரிபுவேறு நிலையலும் குறிப்பிற் றோன்றலும் இருபாற் றென்ப பொருண்மை நிலையே. மேற்சொல்லப்பட்ட இரு பகுதியினுட் பொருண்மை நிலை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பொருண்மை நிலையாவது இச் சொற்குப் பொருள் இதுவென உணரப் பலபொருளினும் தெரிந்து வேறாகி நிற்றலும், சொற்படு பொருளன்றிச் சொல்லுவான் குறிப்பினாற் பிறிது பொருள்பட நிற்றலும் என இரு பகுதியை உடைத்து என்று சொல்லுவர், எ-று. வெளிப்படுநிலை, குறிப்புநிலை எனச் சொற்பொருள் உணர்த்துமாறு இருவகை என்றமையான், இதுவும் சொல் ஆராய்ச்சியாம். அஃது எற்றாற் பெறுதும் எனின், யாதானும் ஒரு சொல்லையும் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் எனக் குறியிடுங்கால், அதன் பொருண்மை உணர்த்த வேண்டுதலின் பொருண்மை நிலையும் சொல் இலக்கணம் என்பது உய்த்துணர வைத்தார். ‘தெரிபு வேறு நின்றன’ நிலம், நீர், தீ, வளி எனப் பொருள் உணர்த்துவனவும்; உண்டான், தின்றான் எனத் தொழில் உணர்த்துவனவும். ‘குறிப்பிற் றோன்றின’-இவன் நெருப்பு, இவன் பசு எனக் குணம் பற்றியும், தீமை செய்தாரை நன்மை செய்தீர் எனவும்; கொடுமை செய்தாரை வாழ்வீராக எனவும் அப்பொருள் பயவாது பிற பொருள் பயப்ப வருவன. (3) 154. சொல்லெனப் படுவ பெயரே வினையென் றாயிரண் டென்ப அறிந்திசி னோரே. சொன்மை நிலை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) சொல் என்று சொல்லப்படுவன பெயர்ச்சொல், வினைச்சொல் என அவ் விருவகைய என்ப ஆசிரியர். எ-று. (4) 155. இடைச்சொற் கிளவியும் உரிச்சொற் கிளவியும் அவற்றுவழி மருங்கிற் றோன்று மென்ப. இதுவும் அது. (இ-ள்.) இடைச் சொல்லாகக் கிளக்கப்படுவனவும், உரிச் சொல்லாகக் கிளக்கப்படுவனவும் பெயர் வினைகளைச் சார்ந்த இடத்திற் றோன்றும், எ-று. எனவே, பெயரையும் வினையையும் சாராதவழிக் கூற்று நிகழாது என்றவாறாம். இத்துணையும் சொல்லப்பட்டது சொல்லாயிற் பொருள் குறித்து வரும் எனவும்; அது பொருண்மைநிலை, சொன்மைநிலை என இருவகைப்படும் எனவும்; அவற்றுள் பொருண்மைநிலை வெளிப்படுநிலை, குறிப்புநிலை என இருவகைப்படும் எனவும்; சொன்மைநிலை பெயர், வினை எனச் சிறப்புடைச் சொல் இரண்டும், இடை, உரி எனச் சிறப்பில் சொல் இரண்டும் என நால்வகைப்படும் எனவும்; தனி மொழிக்குப் பொது இலக்கணம் கூறியவாறாம். இவற்றுள், பொருண்மைநிலை வழக்கினும், சான்றோர் செய்யுளகத்தும் பயின்று வருதலானும், இவ்வழக்குத் தமிழ்நாட்டுப் பிறந்து தமிழறிவாரை நோக்குதனானும், இலக்கணம் இன்றியும் பாகம் உணர்வார் ஆகலானும் எடுத்து ஓதாராயினார். அஃது அற்றாதல் 1வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா, வெளிப்பட வாரா உரிச்சொன் மேன என ஓதிய அதனானுங் கொள்க. சொன்மை நிலை இலக்கணமில்வழி உணர்வரிது ஆதலான் எடுத்து ஓதப்பட்டது. (5) 156. அவற்றுள், பெயரெனப் படுபவை தெரியுங் காலை உயர்திணைக் குரிமையும் அஃறிணைக் குரிமையும் ஆயிரு திணைக்கு மோரன்ன வுரிமையும் அம்மூ வுருபின தோன்ற லாறே. நிறுத்த முறையானே பெயர்ச்சொற் பாகுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்ட நான்கு சொல்லுள்ளும் பெயர் என்று சொல்லப்படுபவை ஆராயுங் காலத்து உயர்திணைப் பொருட்கே உரிமையவாகியும், அஃறிணைப் பொருட்கே உரிமையவாகியும், அவ்விரு திணைக்கும் ஒத்து உரிமையவாகியும் அம் மூன்று வடிவினையுடைய, தோன்று தற்கண், எ-று. எனவே, பெயர்ச் சொல் உயர்திணைப் பெயர், அஃறிணைப் பெயர், விரவுப் பெயர் என மூவகைப்படும் என்பதூஉம், அஃது அவ்விருதிணைப் பொருளையும் உணர்த்தும் என்பதூஉம் பெறுதும். உதாரணம் தத்தம் சிறப்புச் சூத்திரத்துட் காட்டுதும். (6) 157. இருதிணைப் பிரிந்த வைம்பாற் கிளவிக்கும் உரியவை யுரிய பெயர்வயி னான. இதுவும் பெயர்ச்சொற்கெல்லாம் பொது இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இருதிணையினின்றும் பிரிந்த ஐம்பாற் சொற்கும் பெயர்வயின் உரியவை உரியவாம், எ-று. இதனாற் சொல்லியது, நாம் முன் எடுத்து ஓதப்படுகின்ற பெயர்களைப் பால் விரித்து ஒதுகின்றலம்: பெயர்களுள் அவ்வப்பாற்குரிய பெயரைப் பாலறி கிளவியாகக் கொள்க என்றவாறு. இதனானே பெயர்ச்சொற்கு ஈறு வரையறுக்கப் படாது என்பதூஉம் கூறினாராம். (7) 158. அவ்வழி, அவனிவ னுவனென வரூஉம் பெயரும் அவளிவ ளுவளென வரூஉம் பெயரும் அவரிவர் ருவரென வரூஉம் பெயரும் யான்யாம் நாமென வரூஉம் பெயரும் யாவன் யாவள் யாவ ரென்னும் ஆவயின் மூன்றோ டப்பதி னைந்தும் பாலறி வந்த உயர்திணைப் பெயரே. நிறுத்த முறையானே உயர்திணைப் பெயராமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்ட பெயரிடத்து அவன் முதலாகிய சுட்டுப்பெயர் ஒன்பதும், யான் முதலாகிய தன்மைப் பெயர் மூன்றும், யாவன் முதலாகிய வினாவின் பெயர் மூன்றும், ஆய அப் பதினைந்து பெயரும் பால் விளங்க வந்த உயர்திணைப் பெயராம், எ-று. யான் என்பது ஒருமை உணர நின்றது. (8) 159. ஆண்மை யடுத்த மகனென் கிளவியும் பெண்மை யடுத்த மகளென் கிளவியும் பெண்மை யடுத்த விகர விறுதியும் நம்மூர்ந்து வரூஉ மிகரவை காரமும் முறைமை சுட்டா மகனும் மகளும் மாந்தர் மக்கள் என்னும் பெயரும் ஆடூஉ மகடூஉ வாயிரு பெயரும் சுட்டுமுத லாகிய அன்னும் ஆனும் அவைமுத லாகிய பெண்டென் கிளவியும் ஒப்பொடு வரூஉங் கிளவியொடு தொகைஇ அப்பதி னைந்து மவற்றோ ரன்ன. இதுவுமது. (இ-ள்.) ஆண்மை அடுத்த மகன் என்பது முதலாக ஓதப்பட்ட பதினைந்து பெயரும் பால் விளங்க வந்த உயர்திணைப் பெயராம், எ-று. ‘ஆண்மை அடுத்த மகன்’ என்பது ஆண்மகன். ‘பெண்மை அடுத்த மகள்’ என்பது பெண்மகள். ‘பெண்மை அடுத்த இகர இறுதி’ பெண்டாட்டி. இகர இறுதியை யுடையது இறுதி என்றாயிற்று. இவ்வுரை நம்பி, நங்கை என்பனவற்றிற்கும் ஓக்கும். ‘நம் ஊர்ந்து வரூஉம் இகர ஐகாரம்’ என்பது நம்பி, நங்கை என்பன. ‘முறைமை சுட்டா மகனும் மகளும்’ என்பது முறைப் பெயரைக் குறியாது உயர்திணைப் பொருட்குப் பெயராகி மகன் மகள் என வரும். ‘மாந்தர், மக்கள் என்னும் பெயராவன’ மாந்தர் மக்கள் எனப் பொருட் பன்மை உணர வருவன. ‘ஆடூஉ, மகடூஉ வாயிரு பெயரும்’ என்பது-’ஆடூஉ, மகடூஉ என்பன. ‘சுட்டு முதலாகிய அன்னும் ஆனும் ஆவன’ சுட்டெழுத்தை முதலாகவுடைய அன் ஆன் என்னும் சொல்லீறாகி வருவன. (அது சினையிற் கூறும் முதலறி கிளவியாகிய பெயர்க்குப் பெயராயிற்று.) அத்தன்மையன் அத்தன்மையான், அன்னான், அனையான் என வருவன. ஏனைச் சுட்டோடும் ஒட்டிக்கொள்க. இவை உவமை குறியாது முன்னம் சில குணத்தையடுத்து அத்தன்மையான் எனப் பண்பு குறித்து வரும். ‘அவை முதலாகிய பெண்டென் கிளவி’ என்பது சுட்டெழுத்தை முதலாக உடையவாகிப் பெண்மை உணரவரும் சொல். அத்தன்மையள், அத்தன்மையாள், அன்னாள், அனையாள் என்பன. ‘ஒப்பொடு வரூஉங் கிளவி’ உவமிக்கப்படும் பொருளோடு அடுத்துவரும் பெயர். கண்ணன்னான், கண்போல்வான், பொன்னனையான். குரங்கன், பேயன், குரங்கி என்பனவும் அவை. அஃதேல், அன்னார், அனையார் எனச் சுட்டு முதலாகிய பன்மை உணரவரும் பெயர் கூறாதது என்னையெனின், அவை பெரு வழக்கின அன்மையான் ஈண்டு ஓதிற்றிலராயினும், அன்ன பிறவும் என்பதனாற் கொள்க. (9) 160. எல்லாரு மென்னும் பெயர்நிலைக் கிளவியும் எல்லீரு மென்னும் பெயர்நிலைக் கிளவியும் பெண்மை யடுத்த மகனென் கிளவியும் அன்ன வியல என்மனார் புலவர். இதுவுமது. (இ-ள்.) எல்லாரும் என்னும் பெயரும், எல்லீரும் என்னும் பெயரும், பெண் மகன் என்னும் பெயரும் பால் விளங்கவந்த உயர் திணைப் பெயராம், எ-று. விளையாடு பருவத்துப் பெண்மகளைப் பெண்மகன் என்றல் பண்டையோர் வழக்கு. (10) 161. நிலப்பெயர் குடிப்பெயர் குழுவின் பெயரே வினைப்பெயர் உடைப்பெயர் பண்புகொள் பெயரே பல்லோர்க் குறித்த முறைநிலைப் பெயரே பல்லோர்க் குறித்த சினைநிலைப் பெயரே பல்லோர்க் குறித்த திணைநிலைப் பெயரே கூடிவரு வழக்கி னாடியற் பெயரே இன்றிவ ரென்னு மெண்ணியற் பெயரோ டன்றி யனைத்து மவற்றியல் பினவே. இதுவுமது. (இ-ள்.) நிலப் பெயர் முதலாக ஓதப்பட்ட அனைத்தும் பால் விளங்க வந்த உயர்திணைப் பெயராம், எ-று. உ-ம்: ‘நிலப் பெயராவது’ இடத்தினாற் பெற்ற பெயர். அவை சோணாட்டான், சோணாட்டாள், சோணாட்டார் எனவும்; மதுரையான், மதுரையாள், மதுரையார் எனவும் வரும். ‘குடிப்பெயராவது’ குடியினானாகிய பெயர். அவையாவன : சேரலன் சோழன், பாண்டியன் என்பன. இன்னும் “வந்தது கொண்டு வாராதது முடித்தல்” என்பதனான் குலத்தினானாகிய பெயருங் கொள்க. அவையாவன: அந்தணன், அந்தணி, அந்தணர் என்பன. அஃதேல் பாம்பு, நாய், மணி என்பனவும்; அந்தணர், அரசர் என வருமாலெனின் அவ்வாறு வருவன அந்நூலகத்து ஆளுதல் வேண்டி ஆசிரியன் இட்டதோர் குறி என்று கொள்ளினல்லது பாம்பைப் பிடித்தான் என்னும் பொருட்கண் அந்தணனைப் பிடித்தான் என்றவழி அப்பொருள் புலப்படாமையின், அது வழக்கன்றென மறுக்க. 2வந்தது கண்டு வராதது முடித்தல் என்பதனான் குடியிற்கு (அருகிய?) பெயராவன சேரன் சோழன் பாண்டியன் என்பன. ‘குழுவின் பெயராவது’ பலர் கூடின கூட்டத்தாற் பெற்ற பெயர். அவை பலர், அவையத்தார் என்பன. பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க. ‘வினைப் பெயராவது’ உண்டவன், உண்டவள், உண்டவர் என வரும். ‘உடைப் பெயராவது’ உடைமையாற் பெற்ற பெயர். அவை நிலமும் பொருளும் கருவியும் பற்றிவரும். குட்டுவன், பூழியன் என்பன குட்ட நாட்டையும், பூழி நாட்டையும் உடையான் என்னும் பொருள்பட வந்தன. முடியான், குழையான், குழையாள், குழையார் என்பன பொருள் பற்றி வந்தன. வேலான், வில்லி என்பன கருவி பற்றி வந்தன. ‘பண்புகொள் பெயராவது’ பண்பினாற் பெற்ற பெயர். அவை கரியான், நெடியான், நல்லான், தீயான், நல்லாள், நல்லார் என வரும். ‘பல்லோர்க் குறித்த முறைநிலைப் பெயராவன, தாயர், தாய்மார், தந்தையர், தந்தைமார் என்பன. இது முதலாகிய நான்கு பெயரும் இருதிணைக்கும் பொதுவாகி வருதலின் பல்லோர்க் குறித்து என்றார். அஃதேல்; அஃறிணைக்கண்ணும் “3கொடுங்கோற் கோவலர் பின்னின் றுய்ப்ப, இன்னே வருகுவர் தாயர்” (முல்லை. 15, 16) என வந்ததாலெனின், ஆண்டு உயர்த்துச் சொல்லுதற்கண் வந்தது. அதற்கு இலக்கணம் “செய்யுண் மருங்கினும்” (453) என்னும் புறநடைச் சூத்திரத்தாற் கொள்ளப்படும். ‘பல்லோர்க் குறித்த சினைநிலைப் பெயராவது’ சினையினாற் பன்மை குறித்து வரும் பெயர். அவை கூனர். குருடர். முடவர் என்பன. ‘பல்லோர்க் குறித்த திணைநிலைப் பெயராவது’ திணைபற்றிவரும் பன்மைப் பெயர். ‘குறிஞ்சிக் கண்ணியர் குவளை பூண்டு-வெற்பராடும் வெற்புச்சே ரிருக்கை’ என்றவழி உயர்திணைப் பெயராகிப் பன்மைகுறித்து வந்தது. வெற்பன், மலையன், நாடன் என ஒருமை குறித்து வருவன உளவாலெனின், அவை அந்நிலத்துத் தலைமகனைக் குறிக்கின் உடைப் பெயராம். அந்நிலத்துள்ள மாந்தரைக் குறிக்கின் இருதிணைக்கும் பொதுவாம். வெட்சியார், கரந்தையார் என்பனவும் அவை. வெட்சியான், கரந்தையான் என வாராதோ எனின்; அவ்வாறு வழக்குவரின், அத்திரளின் உள்ளான் என்னும் பொருள்பட வரினல்லது நிரைகோடல், நிரை மீட்டல், எடுத்து விடுத்தல் என்பன ஒருவனாற் செய்யப்படாமை யானும், வெட்சியாள், கரந்தையாள் எனப் பெண்பால் உணரவரும் வழக்கின்மையானும் திணையாற் பெறும் பெயர் பன்மைகுறித்து வருதல் பெரும்பான்மை என்று கொள்க. சிறுபான்மை ஒருமை குறித்துவரின், அன்னபிறவாற் கொள்ளப் படும். ‘கூடிவரு வழக்கினாடியற் பெயராவது’ கூடியியலும் வழக்கின் வழங்கும் இயற்பெயர் என்றவாறு. இயற் பெயராவது ஒரு பொருட்கு இடு குறியாகிய பெயர். அஃது இருதிணைக்கும் உரித்தாதலின் விரவுப் பெய ரென வேறெடுத்து ஓதினார். ஈண்டு அப் பெயருடையார் பலரை ஒரு வினையாற் சொல்லுங் காலத்துச் சொல் தொகுத்துக் கூற வேண்டுதலின் ஈண்டு ஓதப்பட்டது. சாத்தன் என்னும் பெயருடையார் இருவர் மூவர் சேரவந்தவழிச் சாத்தன் வந்தான் சாத்தன் வந்தான் எனத் தனித் தனி கூறின் பொருள் வேற்றுமை உணர்த்தாது. ஒரு பொருளை இருகாற் சொன்னாற் போலப்படும். ஆண்டுச் சாத்தன்மார் வந்தார், சாத்திமார் வந்தார் எனக் கூறுதல் வேண்டுதலானும், அப்பொருள் உயர்திணை ஆதலானும் ஈண்டு ஓதப்பட்டது. ‘இன்றிவ ரென்னும் எண்ணியற் பெயராவது’ இத்துணைவர் என எண்ணினான் இயன்ற பெயர். ஒருத்தி, ஒருவன், இருவர், மூவர் என்பன. (11) 162. அன்ன பிறவு முயர்திணை மருங்கிற் பன்மையும் ஒருமையும் பாலறி வந்த என்ன பெயரும் அத்திணை யவ்வே. உயர்திணைப் பெயர் புறநடைவகையான் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேல் எடுத்து ஓதப்பட்டன போல்வன பிறவும், உயர்திணைப் பொருளிடத்து ஒருமை பன்மை எனப் பால்விளங்க வரும் எல்லாப் பெயரும் உயர்திணையிடத்த, எ-று. (உ-ம்.) பெண்டிர், பெண்டுகள் என்பனவும், அத்தன்மையர், அத்தன்மையார் எனவும், ஏனாதி, அமைச்சன், படைத்தலைவன் எனச் சிறப்புப் பற்றி வரும் பெயரும், நாயன், நாச்சி எனத் தலைமைபற்றி வரும் பெயரும், அடியான், அடியாள் அடியார் என இழிபுபற்றி வரும் பெயரும், ஆசிரியன், புலவன் எனக் கல்விபற்றி வரும் பெயரும், குழலள், குழலாள், இடையாள், தோளாள் என உறுப்புப்பற்றி வரும் பெயரும், ஆதிரையான், ஓணத்தான். வேனிலான் எனக் காலம்பற்றி வரும் பெயரும், பிறன், பிறள், பிறர், நுமன், நுமள், நுமர், தமன், தமள், தமர் என்பனவும் பிறவும் உயர்திணைப் பொருட்கே உரியவாகி வரும் பெயரெல்லாம் இதுவே ஓத்தாகக் கொள்க. (12) 163. அதுஇது உதுவென வரூஉம் பெயரும் அவைமுத லாகிய ஆய்தப் பெயரும் அவைஇவை உவையென வரூஉம் பெயரும் அவைமுத லாகிய வகரப் பெயரும் யாதுயா யாவை என்னும் பெயரும் ஆவயின் மூன்றோ டப்பதி னைந்தும் பாலறி வந்த அஃறிணைப் பெயரே. நிறுத்த முறையானே அஃறிணைப் பெயராமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அது முதலாக ஓதப்பட்ட பதினைந்து பெயரும் பாலறிய வந்த அஃறிணைப் பெயராம், எ-று. (உ-ம்.) அது, இது, உது; அஃது, இஃது, உஃது; அவை, இவை, உவை; அவ், இவ், உவ்; யாது, யா, யாவை என வரும். (13) 164. பல்ல பலசில என்னும் பெயரும் உள்ள இல்ல என்னும் பெயரும் வினைப்பெயர்க் கிளவியும் பண்புகொள் பெயரும் இனைத்தெனக் கிளக்கும் எண்ணுக்குறிப் பெயரோடு ஒப்பி னாகிய பெயர்நிலை உளப்பட அப்பா லொன்பதும் அவற்றோ ரன்ன. இதுவுமது. ‘பல்ல, பல, சில என்னும் பெயராவன’ பல்ல, பல, சில என்பன. ‘உள்ள, இல்ல என்னும் பெயராவன’ உள்ள, இல்ல என்பன. ‘வினைப் பெயர்க் கிளவியாவது’ வினையானாகும் பெயர். வந்தது, உழுதது என்பன வினையினாற் பொருட்குப் பெயராகி வந்தன. ‘பண்பு கொள் பெயராவது’ பண்பினைக் கொண்ட பெயர். கரியது, காரி, வெள்ளை எனப் பண்பினைக் கொண்ட பொருட்குப் பெயராயின. ‘இனைத்து எனக் கிளக்கும் எண்ணுக் குறிப் பெயராவது’ இத்துணை என வரையறுத்து உணர்த்தும் எண்ணுக் குறிப்பெயராம். அவை எண்ணப்படும் பொருண்மேல் வருவனவும், எண்ணுப் பெயராம்; எண்ணின் பெயரும் எண்ணுப் பெயராம். நீ தந்த காணம் ஆயிரம் என்றவழி, எண்ணப்பட்ட பொருண்மேல் வந்தது. நாலிரண்டெட்டு என்ற வழி எண்ணின்மேல் வந்தது. ‘ஒப்பினாகிய பெயர்நிலை என்பது’ ஒப்புப் பற்றி வருவது. பொன் போல்வது, பொன்னனையது, யானைப்போலி என்பன. ‘அப்பால் ஒன்பதும் அவற்றோரன்ன என்பது’ அக்கூற்று ஒன்பது பெயரும் அஃறிணைப் பாலறி சொல்லாம் என்றவாறு. (14) 165. கள்ளொடு சிவணும் அவ்வியற் பெயரே கொள்வழி உடைய பலவறி சொற்கே. இதுவுமது. (இ-ள்.) கள் என்னுஞ் சொல்லொடு சிவணிய அவ் வஃறிணைப் பொருண்மேல் வரும் இயற்பெயர் பலவறி சொற்குக் கொள்ளும் இடனுடைய, எ-று. என்றமையாற் சிவணாத இயற்பெயர் பால் விளங்காது என்ற வாறாம். ஆக்கள், தெங்குகள் என வரும். (15) 166. அன்ன பிறவும் அஃறிணை மருங்கிற் பன்மையும் ஒருமையும் பாலறி வந்த என்ன பெயரும் அத்திணை யவ்வே. அஃறிணைப் பெயர்க்கெல்லாம் புறநடை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற்சொல்லப்பட்டன போல்வன பிறவுமாகி அஃறிணைப் பொருட்கண் பன்மையும் ஒருமையுமாகிப் பால் விளங்க வந்த எல்லாப் பெயரும் அஃறிணை யிடத்த, எ-று. (எ-டு.) உள்ளது, இல்லது, பிறிது, பிற, அத்தன்மையது, அத்தன்மைய. இவையும் இவை போல்வனவும். (16) 167. தெரிநிலை யுடைய அஃறிணை இயற்பெயர் ஒருமையும் பன்மையும் வினையொடு வரினே. மேற் பால் விளங்குவன கூறினார். இனி, பால் விளங்காத அஃறிணை இயற்பெயர் பாலுணர்த்துமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அஃறிணைப் பொருண்மேல் வரும் இயற்பெயர் ஒருமையும், பன்மையும் தெரிநிலை யுடையவாம் வினையொடு வரின்; அல்லது பால் விளங்கா என்றவாறு. உயர்திணைப் பொருண்மேல் விரவி வரும் இயற்பெயர் ஒருமையும் பன்மையும் தோன்ற நிற்றலின் வேறோதப்பட்டது. இவை பொருளும், உறுப்பும், பண்பும், தொழிலும், இடமும், காலமும் பற்றி வரும். (உ-ம்.) ஆ, தெங்கு என்பன பொருள். இலை, பூ, என்பன உறுப்பு. கருமை, வட்டம் என்பன பண்பு. உண்டல், ஓடல் என்பன தொழில். அகம், புறம் என்பன இடம். யாண்டு, திங்கள் என்பன காலம். ஆ வந்தது என்றவழி ஒன்று என்பதூஉம், வந்தன என்றவழிப் பல என்பதூஉம் உணர்த்தியவாறும், இவ்விரு வீற்றுக்கும் பொதுவாகி நின்றவாறும் கண்டு கொள்க. பிறவும் அன்ன. (17) 168. இருதிணைச் சொற்குமோ ரன்ன உரிமையிற் றிரிபுவேறு படூஉம் எல்லாப் பெயரும் நினையுங் காலைத் தத்தம் மரபின் வினையோ டல்லது பால்தெரி பிலவே. நிறுத்த முறையானே இருதிணைக்கும் உரிய பெயர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உயர்திணைப் பெயர்ச் சொல், அஃறிணைப் பெயர்ச் சொல் என இருதிணைச் சொற்கும் ஒத்த உரிமையினின்றும் திரிந்து பொருள் வேறுபடூஉம் எல்லாப் பெயரும் நினையுங் காலைத் தத்தம் மரபின் வினையொடு கூடியல்லது பால் விளங்குதல் இல. எ-று. (உ-ம்) பால் எனவே திணையும் அடங்கும். அவையாவன இயற் பெயர் முதலாக முன் எடுத்து ஓதுகின்ற பெயர். அவற்றுள், சாத்தன் என்னும் பெயர் உயர்திணை ஆண்பாற்கும் அஃறிணை ஆண்பாற்கும் இடுகுறியாகி வழங்கு மாதலின், அது வந்தான் என்பதனொடு தொடர்பு பட்டுழி உயர்திணை எனவும், வந்தது என்பதனொடு தொடர்பு பட்டுழி அஃறிணை எனவும் நின்றவாறு கண்டு கொள்க. பிறவுமன்ன. இச்சூத்திரம் எதிரது நோக்கிற்று. (18) 169. நிகழூஉ நின்ற பலர்வரை கிளவியின் உயர்திணை ஒருமை தோன்றலும் உரித்தே அன்ன மரபின் வினைவயி னான. மேலதற்கோர் புறநடை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தத்தம் மரபினாற் பால் உணர வரூஉம் வினைச் சொல்லா னன்றி நிகழ்காலத்தை உணர நின்ற பலரை வரைந்த, செய்யும் என்னும் முற்றுச் சொல்லானும் உயர்திணை ஒருமை தோன்றலும் உரித்து : அப்பால் தெரிய வரும் தொழிலின் கண் எ-று. நிகழூஉ நின்ற என்பதனைப் பெயரெச்சமாகவும், பலர் வரை கிளவி என்பதனை வினைத்தொகை யாகவுங் கொள்க. உம்மை எச்சவும்மை யாகலான், அஃறிணை யொருமை தோன்றலும் உரித்தென்று கொள்க. (உ-ம்.) சாத்தன் யாழெழூஉம், சாத்தி சாந்தரைக்கும் என்றவழி உயர்திணை என்பது பெறப்பட்டது. சாத்தன் புல்மேயும், சாத்தி புல்மேயும் என்றவழி அஃறிணை என்பது பெறப்பட்டது. (19) 170. இயற்பெயர் சினைப்பெயர் சினைமுதற் பெயரே முறைப்பெயர்க் கிளவி தாமே தானே எல்லாம் நீரே நீயெனக் கிளந்து சொல்லிய அன்ன பிறவு மாஅங்கு அன்னவை தோன்றி னவற்றொடுங் கொளலே. மேற்சொல்லப்பட்ட இருதிணைக்குமுரிய சொல் பாகுபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இயற்பெயர் முதலாக எடுத்து ஓதப்பட்டனவும் எடுத்து ஓதப்படாத அத்தன்மைய பிறவும் இருதிணைப் பொருண்மையும் உணரத் தோன்றின், அவ்விருதிணையொடுங் கொள்க ஒரு திணைமேற் கொள்ளற்க என்றவாறாயிற்று. ‘இயற் பெயராவது’ ஒரு பொருட்கு இடுகுறியாகி வழங்கும் பெயர். மேற் சினைப் பெயர் கூறுகின்றாராதலின் இதனை முதற் பெயர் என்று. கொள்க. ‘சினைப் பெயராவது’ உறுப்பின் பெயர். ‘சினைமுதற் பெயராவது’ சினையையும் முதலையும் உணர்த்தும் பெயர். ‘முறைப் பெயராவது’ பிறப்பு முறை பற்றி வரும் பெயர். தாம், எல்லாம், நீர் என்பன பன்மை உணர்த்தும் பெயர். தான், நீ என்பன ஒருமை யுணர்த்தும் பெயர். ‘அன்ன பிறவும்’ ஆவன பிராயம் பற்றி வரும் பெயரும், இடம் பற்றி வரும் பெயரும், தொழில் பற்றி வரும் பெயரும் பிறவும். (20) 171. அவற்றுள், நான்கே இயற்பெயர் நான்கே சினைப்பெயர் நான்கென மொழிமனார் சினைமுதற் பெயரே முறைப்பெயர்க் கிளவி இரண்டா கும்மே ஏனைப் பெயரே தத்தம் மரபின. மேற் சொல்லப்பட்ட பெயர் விரிவகையான் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்டவற்றுள் இயற் பெயர் நான்கு வகைப்படும், சினைப் பெயர் நான்கு வகைப்படும், சினை முதற் பெயர் நான்கு வகைப்படும், முறைப் பெயர் இரண்டு வகைப்படும், ஏனைப் பெயர் ஓதிய வாய்பாட்டன, எ-று. (21) 172. அவைதாம், பெண்மை இயற்பெயர் ஆண்மை இயற்பெயர் பன்மை இயற்பெயர் ஒருமைஇயற் பெயரென் றந்நான் கென்ப இயற்பெயர் நிலையே நிறுத்த முறையானே இயற்பெயர் நான்கும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்ட இயற் பெயரது நிலைமை யாவது இருதிணைக்கண்ணும் பெண்மைப் பொருண்மையைக் குறித்த இயற் பெயரும், ஆண்மைப் பொருண்மையைக் குறித்த இயற்பெயரும், பன்மைப் பொருண்மையைக் குறித்த இயற் பெயரும், ஒருமைப் பொருண்மையைக் குறித்த இயற் பெயரும் என அந் நான்கும், எ-று. பன்மை இயற்பெயர் என்றாராயினும் உயர்திணைப் பன்மை இயற்பெயர் பால் தோன்றலின், அஃதொழித்து ஏனையது கொள்ளப்படும். அவ்வாறாதல் வருகின்ற சூத்திரங் களானும் விளங்கும். இவ்வுரை வருகின்ற சூத்திரங்கட்கும் ஒக்கும். உ-ம்: பெண்மை குறித்த பெயர் சாத்தி. ஆண்மை குறித்த பெயர் சாத்தன். ஒருமை குறித்த பெயர் கோதை. பன்மை குறித்த பெயர் யானை. பிறவும் அன்ன. (22) 173. பெண்மைச் சினைப்பெயர் ஆண்மைச் சினைப்பெயர் பன்மைச் சினைப்பெயர் ஒருமைச் சினைப்பெயரென் றந்நான் கென்ப சினைப்பெயர் நிலையே. சினைப் பெயர் நான்கும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்ட சினைப் பெயரது நிலைமை யாவது பெண்மைப் பொருண்மைக்கண் வரும் சினைப் பெயர், ஆண்மைப் பொருண்மைக்கண் வரும் சினைப் பெயர், பன்மைப் பொருண்மைக்கண் வரும் சினைப் பெயர், ஒருமைப் பொருண்மைக்கண் வரும் சினைப்பெயர் என அந்நான்கும், எ-று. உ-ம்: முலை என்பது பெண்மை குறித்து நின்றது. மோவாய் என்பது ஆண்மை குறித்து நின்றது. கை என்பது ஒருமை குறித்து நின்றது. தலை என்பது பன்மை குறித்து நின்றது. (23) 174. பெண்மை சுட்டிய சினைமுதற் பெயரே ஆண்மை சுட்டிய சினைமுதற் பெயரே பன்மை சுட்டிய சினைமுதற் பெயரே ஒருமை சுட்டிய சினைமுதற் பெயரென்று அந்நான் கென்ப சினைமுதற் பெயரே. சினைமுதற் பெயர் நான்கும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பெண்மை சுட்டிய சினை முதற் பெயர் முதலாகிய நான்கும் சினை முதற் பெயர் நான்கு மாவன, எ-று. ஈண்டுச் சினை முதற் பெயர் என்றமையான் முதலைக் குறித்த பெயரும் சினையைக் குறித்த பெயரும் அன்றி, முதலையும் சினையையும் குறித்த பெயர் என்று கொள்ளப்படும். உ-ம்: முடத்தி என்பது பெண்மையைக் குறித்தது. முடவன் என்பது ஆண்மையைக் குறித்தது. செவியிலி என்பது ஒருமையைக் குறித்தது. தூங்கல் என்பது பன்மை குறித்தது. (24) 175. பெண்மை முறைப்பெயர் ஆண்மை முறைப்பெயரென் றாயிரண் டென்ப முறைப்பெயர் நிலையே. முறைப் பெயர் இரண்டும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பெண்மைப் பொருண்மையைச் சுட்டிய முறைப் பெயரும், ஆண்மைப் பொருண்மையைச் சுட்டிய முறைப் பெயரும் என முறைப் பெயர் இரண்டாவன, எ-று. (எ-டு.) தாய் என்பது பெண்மை குறித்தது. தந்தை என்பது ஆண்மை குறித்தது. பிறவுமன்ன. (25) 176. பெண்மை சுட்டிய எல்லாப் பெயரும் ஒன்றற்கு மொருத்திக்கும் ஒன்றிய நிலையே. பெண்மைப் பெயர் திணை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பெண்மை குறித்த எல்லாப் பெயரும், அஃறிணைப் பெண்பாலாகிய ஒன்றற்கும், உயர்திணைப் பெண்பாற்கும் ஒத்த நிலைமைய, எ-று. மேல், நினையுங் காலைத் தத்தம் மரபின்-வினையோ டல்லது பால்தெரி பிலவே (18) என்றமையான், இவையும் உயர்திணை வினை கொண்டவழி உயர்திணை எனவும், அஃறிணை வினை கொண்டவழி அஃறிணை எனவும் கொள்க. இவ்வுரை வருகின்ற சூத்திரங்கட்கும் ஒக்கும். உ-ம்: சாத்தி வந்தது, முலை எழுந்தது, முடத்தி வந்தது, தாய் வந்தது என்றவழி அஃறிணைப் பொருண்மை உணர்த்தின. சாத்தி வந்தாள், முலை யெழுந்தாள், முடத்தி வந்தாள், தாய் வந்தாள் என்றவழி உயர்திணைப் பொருள் உணர்த்தின. அஃதேல், முலை எழுந்தது எனத் தன்வினையான் வரின் அஃறிணைப் பொருளே யாம் பிற எனின், முலை என்பது இரு திணைப் பொருட்கும் உள்ளதோர் உறுப்பாகலின், ஆண்டுத் திணை தெரியாமற் பொதுப்பட நிற்கும், அது முதல் வினையோடு முடியினல்லது திணை விளங்காது என்க. (26) 177. ஆண்மை சுட்டிய எல்லாப் பெயரும் ஒன்றற்கு மொருவற்கும் ஒன்றிய நிலையே. ஆண்மைப் பெயர் திணை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஆண்மை குறித்த பெயரெல்லாம் அஃறிணை ஆண் பாலாகிய ஒன்றற்கும், உயர்திணை ஆண்பாலிற்கும் ஒத்த நிலைமைய, எ-று. உ-ம்: சாத்தன் வந்தான், மோவாய் எழுந்தான், முடவன் வந்தான், தந்தை வந்தான் என்றவழி உயர்திணை ஆயின. சாத்தன் வந்தது, முடவன் வந்தது, தந்தை வந்தது எனவும்; குன்றியன்ன கண்ண குரூஉமயிர் புன்றாள் வெள்ளெலி மோவா யேற்றை எனவும்; முடங்குபுற விறவின் மோவா யேற்றை எனவும் அஃறிணைப் பொருண்மை உணர்த்தின. (27) 178. பன்மை சுட்டிய எல்லாப் பெயரும் ஒன்றே பலவே ஒருவ ரென்னும் என்றிப் பாற்கும் ஓரன் னவ்வே. பன்மை குறித்த பெயர் திணை உணர்த்துமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பன்மை குறித்த பெயர் எல்லாம் அஃறிணை ஒருமை, பன்மைக்கும், உயர்திணை ஆண்பால் பெண்பாற்கும் ஒத்த நிலைமைய, எ-று. உ-ம்: யானை வந்தது, தலை முடித்தது, தூங்கல் வந்தது என அஃறிணை ஒருமை ஆயின. யானை வந்தன, தலை முடித்தன, தூங்கல் வந்தன; இவை அஃறிணைப் பன்மை உணர்த்தின. யானை வந்தான், தலை முடித்தான், தூங்கல் வந்தான் என உயர்திணை ஆண்பாலாயின. யானை வந்தாள், தலை முடித்தாள், தூங்கல் வந்தாள் என உயர்திணைப் பெண்பால் ஆயின. (28) 179. ஒருமை சுட்டிய எல்லாப் பெயரும் ஒன்றற்கும் ஒருவர்க்கும் ஒன்றிய நிலையே. ஒருமை குறித்த பெயர் திணை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஒருமையைக் குறித்த எல்லாப் பெயரும் அஃறிணை ஒருமைக்கும், உயர்திணை ஆண்பாற்கும் பெண்பாற்கும் ஒத்த நிலைமைய, எ-று. உ-ம்: கோதை வந்தது, கையிழந்தது, செவியிலி வந்தது என அஃறிணை ஒருமை உணர்த்தின. கோதை வந்தாள், கையிழந்தாள், செவியிலி வந்தாள் என உயர்திணைப் பெண்பாலாயின. கோதை வந்தான். கையிழந்தான், செவியிலி வந்தான் என உயர்திணை ஆண்பால் உணர்த்தின. கையிழந்தன என அஃறிணைப் பன்மையும் உணர்த்துமாலெனின், அவ்வாறு வருவன சினை வினையுங் காட்டும். திரிபின்றி வரும் உதாரணம் வந்தவழிக் கண்டுகொள்க. (29) 180. தாமென் கிளவி பன்மைக் குரித்தே. தாம் என்னும் சொல் திணை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தாம் என்பது இருதிணைப் பன்மைக்கும் உரித்து, எ-று. உ-ம்: தாம் வந்தார் என உயர்திணை ஆயிற்று. தாம் வந்தன என அஃறிணை ஆயிற்று. (30) 181. தான்என் கிளவி ஒருமைக் குரித்தே. தான் என்னுஞ் சொல் திணை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தான் என்னும் சொல் இருதிணைக்கண்ணும் ஒருமைக்கு உரித்து, எ-று. உ-ம்: தான் வந்தான், தான் வந்தாள் என உயர்திணை ஒருமை உணர்த்திற்று. தான் வந்தது என அஃறிணை ஒருமை உணர்த்திற்று. (31) 182. 4எல்லா மென்னும் பெயர்நிலைக் கிளவி பல்வழி நுதலிய நிலைத்தா கும்மே தன்னு ளுறுத்த பன்மைக் கல்லது உயர்திணை மருங்கின் ஆக்க மில்லை. எல்லாம் என்னும் சொல் திணை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) எல்லாம் என்னும் பெயர் இருதிணைக்கண்ணும் பன்மை குறித்த நிலைமைத்து. அஃது உயர்திணைக்கண் உளப்பாட்டுத் தன்மைக்கண் அல்லது, முன்னிலை, படர்க்கையின் ஆகுதலில்லை, எ-று. உ-ம்: எல்லாம் வந்தன, எல்லாம் வந்தீர் என்றவழி அஃறிணைப் படர்க்கையினும், முன்னிலையினும் வந்தது. எல்லாம் வந்தேம் என்ற வழி, உயர்திணை ஆயிற்று. அஃதேல் ‘நெறிதாழ் இருங்கூந்தல் நின்பெண்டிர் எல்லாம்’ (கலி. 97) என உயர்திணைப் படர்க்கையினும், ‘நீஇர் எல்லாம் விளையாடப் போதுமின்’ என முன்னிலையிலும் வருமால் எனின், அவை இலக்கண வழக்கல்ல. நின்பெண்டிர் எல்லாரும் என்னும் சொல் எல்லாம் எனவும், நீங்கள் எல்லீரும் என்பது எல்லாம் எனவும் மரூஉ வழக்காகி வந்தன. மரூஉ வழக்கு நீக்கப்படாது என்பது எழுத்ததிகாரத்து மொழிப்புணர்ச்சி கூறுகின்றுழி, மரூஉ முடிபென (111) எடுத்தோதினமையாற் கொள்ளப் படும். இலக்கண வழக்காயின் வரும் குற்றம் என்னையெனின், ஈண்டு விலக்கினமை யானும், உயர்திணைக்கண் எல்லாரும், எல்லீரும் என எடுத்தோதி ஆண்டுத் தன்மைப் பெயர் ஓதாமையானும், எழுத்ததிகாரத்துள் எல்லாம் என்னும் பெயர்க்கு வற்றுச் சாரியை விதித்து ‘உயர்திணை யாயின் நம்மிடை வரும்’ (எழு. 190) என ஆண்டும் உளப்பாட்டுத் தன்மைக் கேற்ற சாரியை வரும் என விதித்தமையானும். இப்பெயர் உயர்திணைக்கண் உளப்பாட்டுத் தன்மைக்கே உரித்து என்பது இவ்வாசிரியர் கருத்தென்று கொள்க. இதனைச் ‘செய்யுள் மருங்கினும்’ (453) என்னும் அதிகாரப் புறநடையாற் பிறநூல் முடிபு எனத் தழீஇக் கோடலுமாம். (32) 183. நீஇர் நீயென வரூஉங் கிளவி பால்தெரி பிலவே உடன்மொழிப் பொருள. நீஇர், நீ என்னும் பெயர்க்கு உரியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) நீஇர், நீ என்னும் பெயர் திணையும் பாலும் விளங்க நில்லா; இருதிணையையும் உடன் உணர்த்தும் பொருண்மை யுடைய, எ-று. திணை உணர்த்துவதோர் சொல்லின்மையிற் பால் எனவே திணையும் அடங்கும். (33) 184. 5அவற்றுள் நீ என் கிளவி ஒருமைக் குரித்தே ஏனைக் கிளவி பன்மைக் குரித்தே. மேலதற்கோர் புறநடை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) நீ என்னும் பெயர் இருதிணைக் கண்ணும் ஒருமை விளக்கு தற்கு உரித்து. நீஇர் என்னும் பெயர் பன்மை விளக்குதற்கு உரித்து, எ-று. உ-ம்: நீ வந்தாய், நீஇர் வந்தீர் என்றவழிப், பால் விளங்காது ஒருமை பன்மை விளங்கியவாறு கண்டுகொள்க. அன்ன பிறவாற் கொள்ளப்படுவன: முதியான் என்பது பிராயம் பற்றி வரும். அது முதியான் வந்தது, முதியான் வந்தான் என வரும். சுமையான் என்பது தொழில்பற்றி வந்தது. சுமையான் வந்தது, சுமையான் வந்தான் என வரும். பிறவுமன்ன. (34) 185. ஒருவர் என்னும் பெயர்நிலைக் கிளவி இருபாற்கு முரித்தே தெரியுங் காலை. உயர்திணைப் பொருட்கண் விரவுப் பெயரிலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஒருவர் என்று சொல்லப்படுகின்ற பெயர்ச்சொல் உயர் திணைக்கண் ஆண்பாற்கும், பெண்பாற்கும் உரித்து ஆராயுங்காலத்து, எ-று. (35) 186. தன்மை சுட்டிற் பன்மைக் கேற்கும். மேலதற்கோர் முடிபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஒருவர் என்னும் பெயரின் தன்மையைக் கருதின், பன்மை வினை கோடற்குப் பொருந்தும், எ-று. உ-ம்: ஒருவர் வந்தார். (36) 187. இன்ன பெயரே இவையெனல் வேண்டின் முன்னம் சேர்த்தி முறையின் உணர்தல். பெயரானும் வினையானும் பால் அறியப்படாத சொற்கள் பால் விளங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) நீஇர், நீ, ஒருவர் என்று சொல்லப்பட்ட பெயர்கள் இன்ன பாற்குரிய என்று அறியவேண்டின் சொல்லுவான் குறிப்பினொடு சேர்த்தி அவற்றின் பின்வரும் சொல்லால் உணர்க, எ-று. ‘முன்னம் சேர்த்தி முறையின் உணர்க’ என்றமையான், குறிப்பினாலும், முறையினாலும் உணர்க என்றவாறாகக் கொள்க. உ-ம்: 6‘நீயும் தவறிலை நின்னைப் புறங்கடைப் போதர விட்ட நுமரும் தவறிலர்’ (கலி. 56) என்றவழி, நீ என்பது பெண்பால் உணர நின்றது. 7‘நீயே பிறர்நாடு கொள்ளுங் காலை’ (புறம். 57) என்றவழி, ஆண்பால் உணரப்பட்டது. ‘என்போல இன்றுணைப் பிரிந்தாரை உடையையோ நீ’ (நெய்தற் கலி. 12) என்றவழி, அஃறிணை என்பது உணரப்பட்டது. இவை குறிப்பினான் உணர நின்றன. நீ அரசன், நீ குயத்திநீ கடல், நீ வான் என்பன முறைவந்த சொல்லினால், பால் விளங்கின. நீஇர் என்பதற்கும் இவ்வாறே உதாரணம் வந்தவழிக் கண்டுகொள்க. ‘ஒருவர் ஒருவரைச் சார்ந்தொழுகல் ஆற்றி வழிபடுதல் வல்லுதல் அல்லால்’ என்றவழி, ஆண்பால் உணர நின்றது. ‘வண்டு சுழல வருவா ரொருவரைக் - கண்டு கலங்கிற் றுயிர்’ என்பது பெண்பால் உணர நின்றது. இவை குறிப்பினான் உணர நின்றன. ஆயிழையார் ஒருவர், அயில் வேலார் ஒருவர் என்பவை சார்ந்த சொல்லாற் பாலுணரப்பட்டன. பிறவுமன்ன. (37) 188. மகடூஉ மருங்கிற் பால்திரி கிளவி மகடூஉ இயற்கைத் தொழில்வயி னான. உயர்திணைப் பெண்பாற்கு உரியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மகடூஉ மருங்கின் பால்திரிந்த பெண்மகன் என்னும் சொல் தொழிற் படுங்கால் மகடூஉ இயற்கையாம், எ-று. உ-ம்: பெண்மகன் வந்தாள் என வரும். (38) 189. ஆவோ வாகும் பெயருமா ருளவே ஆயிட னறிதல் செய்யு ளுள்ளே. இஃது ஒருசார் பெயர்க்கு உரியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஆகாரம் ஓகாரமாகத் திரியும் பெயரும் உள: அவ்வாறு வரும் இடம் செய்யுளகத்து அறிந்து கொள்க, எ-று. ‘8வில்லோன் காலன கழலே தொடியோள், மெல்லடி மேலவும் சிலம்பே, நல்லோர் யார்கொல் அளியர் தாமே’ என்ற வழி, வில்லான், தொடியாள், நல்லார் என்பன ஓகாரம் பெற்று வந்தன. உம்மை எச்ச உம்மை யாகலான் அகரம் ஓகாரமாகத் திரியும் பெயரும் உள என்றவாறு. கிழவன் கிழவள் என்பன ‘9நாடு கிழவோன்’, ‘கிழவோடேத்து’ எனவும் வரும். அஃறிணைப் பொருட்கண்ணும் இவ்வாறு வருவன அறிந்துகொள்க. (39) 190. இறைச்சிப் பொருள்வயிற் செய்யுளுட் கிளக்கும் இயற்பெயர்க் கிளவி உயர்திணை சுட்டா நிலத்துவழி மருங்கிற் றோன்ற லான. ஒருசார் இயற் பெயர்க்கு உரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. எய்தியது விலக்கியதுமாம். (இ-ள்.) ‘இறைச்சிப் பொருள்’ என்பது செய்யுளுள் உரைக்கப்படுகின்ற பொருட்புறத்ததாகிய கருப்பொருள். அஃதாவது மாவும், புள்ளும் மரமும் முதலாயின. அவற்றின்மேல் இடுகுறியாகி வரும் இயற்பெயர் - அவற்றின்கண் செய்யுளுள் கிளக்கும் இயற்பெயர்ச் சொல், உயர்திணைப் பொருண்மையைச் சுட்டா : நிலத்து வழித் தோன்றலான், எ-று. வழியும், மருங்கும் ஒரு பொருட்கண் இருசொல் பிரிவின்றி வந்தன. என்பதென் சொன்னவாறெனின், இயற்பெயர் என்பதனை இரு திணைக்கும் பொதுவென ஓதினாராயினும், செய்யுளகத்துக் கருப்பொருள் ஆகி, நிலத்துவழித் தோன்றும் மாவும், புள்ளும், மரமும் முதலாயின வற்றின்மேல் இடுகுறியாகி வரும் இயற்பெயர், அஃறிணைப் பொருண்மையைச் சுட்டுமதல்லது உயர்திணைப் பொருண்மையைச் சுட்டா என எய்தியது விலக்கியவாறாயிற்று. செய்யுளகத்து இறைச்சிப் பொருட்கண் தோன்றும் இயற்பெயரென ஓதல் வேண்டியது, அஃறிணைப் பொருட்கண் சாத்தன் கொற்றன் என வரும் இயற்பெயரே வழக்கின்கண் என்பதூஉம், செய்யுட்கண் பொருட் பெயராகிய நிலத்து வழித்தோன்றும் பெயரே கூறுதல் வேண்டும் என்பதூஉம் அறிவித்தற் கெனக் கொள்க. அவையாவன: மான், மரை, முயல், நாரை, அன்றில், புன்னை, ஞாழல் என்பன. (40) 191. திணையொடு பழகிய பெயரலங் கடையே. எய்தியது ஒருமருங்கு விலக்குதல் நுதலிற்று (இ-ள்.) மேல் உயர்திணையைச் சுட்டா என ஓதப்பட்டன அவ்வாறு வருதல், உயர்திணையொடு பழகிப் போந்த பெயர் அல்லாத இடத்து, எ-று. எனவே பழகிப்போந்த பெயர் இருதிணைக்கும் பொதுவாகி நிற்கும் என்று கொள்க. அவையாவன : யானை, சிங்கம், அன்னம், மயில், மான் என இவ்வாறு வருவன. (41) ஐந்தாவது பெயரியல் முடிந்தது இவ்வோத்தினுள் சூத்திரம் உட்பட உரையினது அளவு கிரந்த வகையான் முன்னூற்று ஒருபது. பெயரியல் அடிக்குறிப்புகள் 1. உரி. 2. 2. இங்குப் பொருட் பொருத்தம் நோக்கி, சிதைந்திருந்த சில வரிகளிடைச் சிறு மாறுதல் செய்யப்பட்டுள்ளது. 3. முல்லைப்பாட்டு 15, 16. 4. இதனை இரு சூத்திரமாகக் கொள்வர் ஏனை யுரையாசிரியர்கள். 5. இதனை இரு சூத்திரமாகக் கொள்வர் ஏனை உரையாசிரியர்கள். 6. கலி 46 7. புறம் 57. 8. குறு. 7 9. பொருந 248. வினையியல் வினையென்பது பலபொருளொருசொல்லாய்த் தொழிற் பண்பினையும் அதன் காரியமாகிய வினைநிகழ்ச்சியையும் உணர்த்தும், தொழிற்பண்பையுணர்த்துஞ் சொல்லை உரிச்சொல்லெனவும் அதன் காரியமாகிய வினைநிகழ்ச்சியை யுணர்த்துஞ்சொல்லை வினைச்சொல்லெனவும் கூறுதல் மரபு. வினைச்சொல்லாவது வேற்றுமையுருபேலாது வெளிப் படையாகவும் குறிப்பாகவும் காலத்தோடு விளங்குவதாகும். இறந்தகாலம், நிகழ்காலம் எதிர்காலம் எனக் காலம் மூன்றாம். தொழில் முற்றுப்பெற்றநிலை இறந்தகாலம். தொழில் தொடங்கி முடிவுபெறாது தொடர்ந்து நிகழும்நிலை நிகழ்காலம். தொழிலே தொடங்கப்பெறாதநிலை எதிர்காலம். இம்முக்காலங்களுள் ஒன்றை வெளிப்படையாகக் காட்டுவனவற்றை வினையென்றும் இவற்றைக் குறிப்பாக உணர்த்துவனவற்றைக் குறிப்பு என்றும் கூறுவர். தொல்காப்பியனார். பிற் காலத்தார் இவற்றை முறையே தெரிநிலை வினையென்றும் குறிப்பு வினையென்றும் வழங்குவர். இவ்வினைச்சொற்கள் முற்று, வினையெச்சம், பெயரெச்சம் என மூவகைய. பாலுணர்த்தும் ஈறுகளாகிய விகுதிகளோடுகூடி நிறைந்து நிற்பன வினைமுற்றுக்களாம். ஐம்பாலவாகிய வினைமுதலைத் தரும் விகுதியுறுப்புக் குறைந்த குறைச்சொற்களாய் மற்றொரு வினைச்சொல்லோடல்லது முற்றுப்பெறாது நிற்பன வினையெச்சங்களாம். பாலுணர்த்தும் விகுதியின்றிக் குறைத்த குறைச்சொற்களாய்ப் பெயரை எச்சமாகவுடைய வினைச்சொற்கள் பெயரெச்சம் எனப்படும். வினைச்சொற்களின் இலக்கண முணர்த்தினமையால் இது வினையியலென்னும் பெயர்த்தாயிற்று. இவ்வியலிலுள்ள சூத்திரங்களை 49-ஆக இளம்பூரணரும் 51-ஆகச் சேனாவரையரும் நச்சினார்க்கினியரும் 54-ஆகத் தெய்வச்சிலையாரும் பகுத்து உரை கூறியுள்ளார்கள். எச்சவியலிலுள்ள ‘இறப்பின் நிகழ்வின்’, ‘எவ்வயின் வினையும்’, ‘அவைதாம் தத்தங்கிளவி’ எனவரும் மூன்று சூத்திரங்களையும் வினையிலக்கணமாதல் பற்றி இவ்வியலின் இறுதியில், தெய்வச்சிலையார் சேர்த்துரைத்தமையால் அவர் கருத்துப்படி இவ்வியலின் சூத்திரங்கள் 54-ஆயின. வினைச்சொற்களெல்லா வற்றையும் உயர்திணைக்குரியன, அஃறிணைக்குரியன, இரு திணைக்குமுரியன என மூன்று வகையாக இவ்வியலில் ஆசிரியர் பகுத்துக் கூறியுள்ளார். உயர்திணைக்குரியன உயர்திணைவினை தன்மைவினை படர்க்கைவினை என இடத்தால் இருவகைத்து. அவற்றுள் தன்மைவினை பன்மைத் தன்மையும் தனித்தன்மையும் என இருவகைப்படும். அம், ஆம், எம், ஏம், கும், டும், தும், றும் என்னும் இவ்வெட்டு விகுதிகளையும் இறுதியாகவுடைய வினைச்சொற்கள் பன்மையுணர்த்துந் தன்மைச் சொற்களாம். தன்மைக் குறித்துப் பேசுதற்கேற்ற மொழிவளம் உயர்திணை மாந்தர்க்கே யுரியதாகலின் தன்மைச் சொற்கள்யாவும் உயர்திணைச் சொல்லேயாம். ஒருவனோ ஒருத்தியோ தன்னைக் குறித்துப் பேசுங்கால் தனக்கு ஒருமையல்லது பன்மை சொல்லுதற்கிடமில்லை. எனினும் தனக்கு முன்னும் அயலிலும் உள்ள பிறரையும் தன்னோடு உளப்படுத்துக் கூறும் வழக்கமுண்மையால் தன்மைப் பன்மையும் கொள்ள வேண்டியதாயிற்று. ஆகவே பன்மைத் தன்மை யென்றது உளப்பாட்டுத் தன்மையேயாம். தன்னொடு முன்னின்றாரை யுளப்படுத்தலும் படர்க்கையாரை யுளப்படுத்தலும் அவ்விரு திறத்தாரையும் ஒருங்கு உளப்படுத்தலும் என உளப்படுத்தல் மூவகைப்படுமெனவும், அம், ஆம் என்ற விகுதிகள் முன்னிலையாரையும் தமராயவழிப் படர்க்கையாரையும், எம், ஏம் என்பன படர்க்கையாரையும், கும், டும், தும், றும் என்பன அவ்விருதிறத்தாரையும் உளப்படுத்துமெனவும், அம், ஆம், எம், ஏம் என்பன மூன்று காலமும் பற்றி வருதலும் கும், டும், தும், றும் என்பன எதிர்காலம்பற்றி வருதலும் உடைய வெனவும் கூறுவர் சேனாவரையர். கு, டு, து, று என், ஏன், அல் என்பவற்றை இறதியாகவுடைய ஏழும் ஒருமையுணர்த்தும் தனித்தன்மை (தன்மையொருமை) வினைச்சொற்களாம். அவற்றுள் செய்கு என்னும் வாய்பாட்டு வினைமுற்று வினைகொண்டு முடியுமாயினும் முற்றுச் சொல்லாகிய இலக்கணத்திற் சிறிதும் மாறுபாடது. அன், ஆன், அள், ஆள் என்னும் ஈற்றையுடைய நால்வகைச் சொற்களும் உயர்திணை யொருமை யுணர்த்தும் படர்க்கை வினைச்சொற்களாம். அர், ஆர், ப என்னும் ஈற்றையுடைய மூவகைச் சொற்களும் பலர்பாற் படர்க்கையாம். மார் என்பதும் உயர்திணைப் பலர்பாற் படர்க்கை வினைக்கீறாதலையுடைத்து. அது முடியுங்கால் பெயர்கொள்ளாது வினைகொண்டு முடியும். இவ்வாறு அம் விகுதி முதலாக மார் விகுதி யீறாகச் சொல்லப்பட்ட இருபத்துமூன்றீற்று வினைச்சொற்களும் உயர்திணைக்கே யுரியனவாம். மேற்சொல்லப்பட்டவற்றுள் பன்மையுணர்த்தும் தன்மைச் சொல் திணைவிரவி யெண்ணுங்கால் அஃறிணையை யுளப்படுத்துத்திரிதலும் உண்டு. யார் என்னும் வினாவினைக் குறிப்பு உயர்திணை மூன்று பாலுக்கும் ஒப்பவுரியதாகும். பாலுணர்த்தும் ஈறுகளாகிய ன, ள, ர, என்னும் இறுதியையுடைய ஆகாரமும் முன்னிலையில் வரும் ஆய் என்பதன் ஆகாரமும் செய்யுளுள் ஓகாரமாய்த் திரியும். ஆறாம் வேற்றுமைக்குரிய உடைமைப்பொருள், ஏழாம் வேற்றுமைக்குரிய நிலப்பொருள், ஒப்புப்பொருள், பண்பு என்னுமிவற்றை நிலைக்களமாகக் கொண்டும் அன்மை, இன்மை, உண்மை, வன்மை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டும் வினைக்குறிப்புத் தோன்றுமென்பர் ஆசிரியர் குறிப்பாற் கால முணர்த்தலின் இது குறிப்பெனப்பட்டது. முன்னர்க் கூறிய இருபத்துமூன்றீற்று வினைச்சொற்களுக்கீறாகிய எழுத்துக்களையே (விகுதிகளையே) இவ்வினைச்குறிப்புச் சொற்களும் பெற்றுப் பாலுணர்த்துவனவாம். அஃறிணைக்குரியன ஆ, ஆ, வ என்னும் இறுதியையுடைய மூவகை வினைச் சொற்களும் அஃறிணைப்பன்மைப் படர்க்கையாம். து, று, டு என்பவற்றை யிறுதியாக உடையன அஃறிணை ஒருமைப்பாற்குரிய வினைச்சொற்களாம். இங்கெடுத்துக் காட்டிய அறுவகையீற்றுச் சொற்களே அஃறிணைக்குரிய வினைச்சொற்களாம். வினாப் பொருளையுடைய எவன் என்னும் வினைக் குறிப்புச்சொல் அஃறிணையிருபாலுக்கும் ஒப்பவுரியதாகும். இன்று, இல உடைய, அன்று, உடைத்து, அல்ல, உள என்பனவும் பண்புகொள் கிளவியும் பண்பினாகிய சினைமுதற் கிளவியும் ஒப்புப்பற்றி வருஞ்சொல்லும் ஆகிய இப்பத்தும் அஃறிணை வினைக்குறிப்புச் சொற்களாம். மேல் அஃறிணை வினைச்சொற்கீறாய் நின்று பாலுணர்த்து மெழுத்துக்களே அஃறிணை வினைக் குறிப்புச் சொற்கண்ணும் ஈறாய் நின்று பால் விளக்குவன. இருதிணைக்குமுரியன முன்னிலை வினைமுற்று, வியங்கோள் முற்று, வினையெச்சம், இன்மையையுணர்த்தும் இல்லை, இல் என்பன. வேறு என்னும் சொல், செய்ம்மன் என்னும் வாய்பாட்டு முற்று, முற்றும் பெயரெச்சமுமாகிய செய்யுமென்னும் வாய்பாட்டு வினைச்சொல், செய்த என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம் ஆகிய எண்வகை வினைச்சொற்களும் இருதிணைச் சொல்லாதற்கும் ஒத்த உரிமை யுடையனவாம். மேற்கூறப்பட்ட விரவு வினைகளுள் இ, ஐ, ஆய் என்னும் இறுதியையுடைய முன்னிலை வினைச்சொற்கள் ஒருவன், ஒருத்தி, ஒன்று என்னும் இருதிணை முக்கூற்றொருமைக்கும் ஒப்பவுரியன. இர், ஈர், மின் என்னும் இறுதியையுடைய முன்னிலை வினைச் சொற்கள் உயர்திணைப் பலர்பாலுக்கும அஃறிணைப் பலவின் பாலுக்கும் ஒப்பவுரியன. முன்னிலை வினையல்லாத ஏனை எழுவகை வினைச்சொற்களும் இருதிணை ஐம்பால் மூவிடத்திற்கும் பொதுவாய் வருவன. அவற்றுள் வியங்கோள், வினை முன்னிலை தன்மையென்னும் இரண்டிடத்திலும் நிலைபெறாது. நிகழ்கால முணர்த்தும் செய்யுமென்னும் மூன்று பலர்பாற் படர்க்கையிலும் தன்மை முன்னிலைகளிலும் வருதலில்லை. மற்றொரு வினைச்சொல்லோடு கூடியல்லது முற்றுப்பெறாத, குறைச்சொல் வினையெச்சமாகும். செய்து, செய்யூ, செய்பு, செய்தென, செய்யியர், செய்யிய, செயின், செய், செயற்கு எனவரும் இவ்வொன்பது வாய்பாட்டுச் சொற்களும் பின், முன், கால், கடை, வழி, இடத்து என்பவற்றை யிறுதியாக வுடையனவும் இவைபோலக் காலமுணர்த்தி வருவன பிறவும் வினையெச்ச வினைகளாம். இவற்றுள் முதலிலுள்ள செய்து, செய்யூ, செய்பு என வரும் மூன்றும் தனக்குரிய வினை முதல் வினையையே கொண்டு முடிவன. அவை மூன்றும் சினை வினையாங்கால் தமக்குரிய முதல் வினையைக்கொண்டு முடியுனும் தம்தொழிலைக் கொண்டு முடிந்தனவே. இம்மூன்றுமல்லாத பிற வினையெச்சங்கள் தம் வினை முதல் வினையையேனும் அன்றி அங்கு வந்து இயையும் பிற வினைமுதல் வினையையெனும் வரையறையின்றிக் கொண்டு முடியுமியல்பினவாம். வினையெச்சங்கள் பல வாய்பாட்டான் அடுக்கிவரினும் முன்னின்ற எச்சம் முடிய ஏனையவும் பொருளால் முடிந்தனவேயாம். பெயரை ஒழிபாகவுடைய வினைச்சொல் பெயரெச்சம் அது செய்யும், செய்த எனவரும் இரு வாய்பாடுகளில் அடங்கும் நிலப்பெயர், பொருட்பெயர், காலப்பெயர், கருவிப்பெயர், வினை முதற்பெயர், வினைப்பெயர் எனவரும் அறுவகைப் பெயர்களையும் கொண்டு முடிதற்கேற்ற பொருள் நிலைமையையுடைய இப்பெயரெச்சம் இருதிணை யைம்பாற்கு முரிய பொது வினையாகும். செய்யும் என்னும் வாய்பாட்டுச் சொற்கள் பெயரெச்சமாங்கால் முன் செய்யுமென்னும் முற்றிற்கு விலக்கப்பட்ட பல்லோர் படர்க்கை முன்னிலை, தன்மை என்னும் இவ்விடங்களுக்கும் உரியனவாம். பெயரெச்சமும் வினையெச்சமும் வினை நிகழ்ச்சியை யுணர்த்தாது அதனை எதிர்மறுத்துச் சொல்லினும் பெயரெஞ்ச நிற்றலும் வினையெஞ்ச நிற்றலுமாகிய தம் பொருள் நிலைமையில் வேறுபடா. இவ்வெச்சங்களுக்கும் இவற்றை முடிக்குஞ் சொற்களாய் வரும் பெயர் வினைகளுக்குமிடையே முடிக்குஞ்சொல்லொடு தொடர்புடைய வேறு சொல் வந்து நிற்றலுமுண்டு. செய்யுமென்னும் பெயரெச்ச வாய்பாடுகளின் ஈற்றயலெழுத் தாகிய உகரம் தான் ஊர்ந்துநின்ற மெய்யொடுங் கெட்டு முடிதலும் உண்டு. செய்து என்னும் வாய்ப்பாட்டு இறந்தகால வினையெச்சம் ஏனைக் காலச் சொல்லோடு இயைதலும், விரைவின்கண் எதிர்காலமும் நிகழ்காலமும் இறந்தகாலத்தோடு மயங்குதலும், மிக்கது ஒன்றின்கண்ணே இறந்தகாலமும் எதிர்காலமும் நிகழ்காலத்தோடு மயங்குதலும், இது செயல் வேண்டும் என்னும் பொருளில் வரும் வினைச்சொல் தானும் பிறருமாகிய ஈரிடத்தும் பொருள் தருதலும், வற்புறுத்தலில் வரும் வினாப் பொருளையுடைய வினைச்சொல் எதிர்மறைப் பொருள் தருதலும், இயற்கை பற்றியும் தெளிவுபற்றியும் காலம் மயங்குதலும், செயப்படுபொருள் வினைமுதல்போல வருதலும், இவ்வாறே வேறிடங்களில் முக்காலமு மயங்குதலும் ஆகிய விதிகளை இவ்வியல் 40-முதல் 49-வரையுள்ள சூத்திரங்களால் ஆசிரியர் விரித்துக் கூறியுள்ளார். - க. வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 208-213 ஆறாவது வினையியல் 192. வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது நினையுங் காலைக் காலமொடு தோன்றும். என்பது சூத்திரம். இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின், வினையியல் என்னும் பெயர்த்து : வினைச் சொல் உணர்த்தினமை யாற் பெற்ற பெயர். நிறுத்த முறையானே பெயர் இலக்கணங் கூறி, அதன்பின் வினையிலக்கணங் கூறவேண்டுதலின், அதன்பிற் கூறப்பட்டது. இதன் தலைச்சூத்திரம் என்னுதலிற்றோ எனின், வினைச்சொல் இலக்கணம் பொது வகையான் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வினை என்று சொல்லப்படுவது வேற்றுமை உருபு ஏலாது; காலத்தொடு தோன்றும்; ஆராயும் காலத்து, எ-று. வினை என்பது தொழில் உணர்த்தும் சொல்லாதலின் அது வேற்றுமை கொண்டு நிற்பதும் ஒருநிலை உண்டு. அந்நிலை ஒழியக், காலத்தொடு பொருந்தி நிற்குமது, நம்மால் வினைச்சொல்லென வேண்டப்பட்டது, எ-று. உ-ம்: அஃதாவது உண்டலைச் செய்தான் என்பது ஈண்டு ஓதுகின்றது உண்டான் எனக் காலத்தோடு ஒட்ட நிற்பது. (1) 193. காலந் தாமே மூன்றென மொழிப. காலத்துக்குத் தொகை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்ட காலந்தாம் மூன்று என்று சொல்லுவர் ஆசிரியர், எ-று. அதன் வகை வரும் சூத்திரத்துக் கூறுப. (2) 194. இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றா அம்முக் காலமும் குறிப்பொடுங் கொள்ளும் மெய்ந்நிலை உடைய தோன்ற லாறே. காலத்திற்கு வகையும் அதற்கு உரியதோர் இலக்கணமும் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்ட காலத்தின் பாகுபாடாகிய இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என அம்முக்காலமும் குறிப்பொடும் கொள்ளும் பொருள் நிலைமையை உடைய, தோன்று நெறிக்கண், எ-று. உம்மை எச்சவும்மை. எனவே, காலந்தோற்ற நில்லாது குறித்துக் கொள்ளப்படும் வினைச்சொல்லும் உள என்றவாறாம். உ-ம்: உடையன் என்பது முன்பு உடையன், இப்போது உடையன், பின்பு உடையன் என மூன்று காலத்திற்கும் வடிவு வேற்றுமைப்பட நில்லாமையின், காலம் குறித்துக் கொள்ளப் பட்டது. (3) 195. குறிப்பினும் வினையினும் நெறிப்படத் தோன்றிக் காலமொடு வரூஉம் வினைச்சொல் எல்லாம் உயர்திணைக் குரிமையும் அஃறிணைக் குரிமையும் ஆயிரு திணைக்கும் ஓரன்ன உரிமையும் அம்மூ வுருபின தோன்ற லாறே. மேற்கூறப்பட்ட வினையும் வினைக் குறிப்பும் தொகைநிலை வகையாற் பாகுபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) காலங் குறிக்கப்படும் பொருண்மையினும், தொழிற் பொருண்மையினும் நெறிப்படத் தோன்றிக் காலத்தொடு வரூஉம் வினைச் சொல் எல்லாம் உயர்திணைப் பொருட்கு உரிமைய வாகியும், அஃறிணைப் பொருட்கு உரிமையவாகியும், அவ்விரு திணைப் பொருட்கும் ஒத்த உரிமையவாகியும் அம்மூன்று வேறுபாட்டனவாம், புலப்படும் இடத்து, எ-று. அவற்றுள் உயர்திணைவினை - தெரிநிலைவினை, குறிப்பு வினை என இருவகைப்படும். அவற்றுள் தெரிநிலைவினை - தன்மைவினை, முன்னிலை வினை, படர்க்கைவினை என மூன்றுவகைப்படும். அவற்றுள் தன்மைவினை உளப்பாட்டுத் தன்மை, தனித்தன்மை என இருவகைப்படும். முன்னிலை வினை ஒருமைவினை, பன்மைவினை என இருவகைப்படும். படர்க்கை வினை ஆடூஉ வினை, மகடூஉ வினை, பன்மைவினை என மூவகைப்படும். குறிப்பு வினையும் அவ்வாறே வரும். அவற்றுள் முன்னிலைவினை இரு திணைக்கும் பொதுவாகலின், அது விரவு வினைக்கண் கூறப்படும். ஏனைய ஈண்டுக் கூறப்படுகின்றன. அஃதேல், இடம் மூன்று என்பது எற்றாற் பெறுதும் எனின், எச்சவியலுட் பெறுதும். (243) (4) 196. அம்ஆம் எம்ஏம் என்னுங் கிளவியும் உம்மொடு வரூஉம் கடதற என்னும் அந்நாற் கிளவியோ டாயெண் கிளவியும் பன்மை உரைக்கும் தன்மைச் சொல்லே. நிறுத்தமுறையானே உயர்திணைவினை ஓதுவான் எடுத்துக் கொண்டார்; அவற்றுள், உளப்பாட்டுத் தன்மைவினை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ‘அம்’ முதலாக ஓதப்பட்ட எட்டீற்றினையு முடைய சொல் உயர்திணைப் பொருட்கண் தன்னொடு கூடிய பன்மைவினை உரைக்கும் சொல்லாம். எ-று. உயர்திணை என்பது ‘முன்னுறக் கிளந்த உயர்திணை யவ்வே’ என்பதனின்றும் தந்துரைக்கப்பட்டது. வினை என்பது மேலைச் சூத்திரத்தினின்றும் தந்துரைக்கப்பட்டது. மேற் காலமொடு வரூஉம் வினைச் சொல் என்று ஓதி, ஈண்டுப் பாலுணர்த்தும் சொற்களை ஓதினமையான், வினைச் சொல் நிலைமை மூவகையாம் என்று கொள்ளப்படும் : தொழில் உணர்த்துதலும், காலங்காட்டலும், பால்காட்டலும் என. உ-ம்: உண்டனம், உண்கின்றனம், உண்பம் என்றவழி, உண் என்பது தொழில் உணர்த்திற்று, டு, கின்று, பு என்பன காலங் காட்டின. அன் சாரியை ஆகிநின்றது. அம் பாலுணர்த்திற்று. பிறவும் இவ்வாறாம் என்பது அறிந்து கொள்க. உண்டனம், உண்டாம், உண்டனெம், உண்டேம் இவை இறந்த காலம் பற்றி வந்தன. உண்கின்றனம், உண்கிறாம், உண்கின்றாம், உண்கின்றனெம், உண்கின்றேம் இவை நிகழ்காலம் பற்றி வந்தன. உண்பம், உண்பாம், உண்பெம், உண்பேம் இவை எதிர்காலம் பற்றிவந்தன. உண்கும், உண்டும், வருதும். சேறும் என்பன எதிர்காலங் குறித்துழி, எதிர்காலத்திற்கு ஏற்கும். நிகழ்காலம் குறித்துழி நிகழ்காலத்திற்கு ஏற்கும். அம் ஆம் என்பன ஈற்றெழுத்து ஓதினமையான் உடம்பாட்டின் வருதலேயன்றி, மறையினும் வரப்பெறும் என்று கொள்க. உண்ணலம், உண்ணாம், உண்ணலெம், உண்ணேம் என வரும். இவ்வுரை மேல் வருவன வற்றிற்கும் ஒக்கும். (5) 197. கடதற என்னும் அந்நான் கூர்ந்த குன்றிய லுகரமோடு என் ஏன் அல் என வரூஉம் ஏழும் தன்வினை உரைக்கும் தன்மைச் சொல்லே. இனித் தன்மை வினை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) க, ட, த, ற என்னும் அந் நான்கு எழுத்தினையும் ஊர்ந்த குற்றியலுகரத்தோடேகூட என் ஏன் அல் என வரூஉம் ஏழு ஈறும் தன்வினைஉரைக்கும் தன்மைச் சொல்லாம், எ-று. தன்வினை உரைக்கும் சொல் என்னாது தன்மைச் சொல் என்றது தன்வினையைத் தானே உரைக்கும் சொல் என்று கொள்க. உ-ம்: உண்கு, உண்டு, வந்து, சென்று எனவும்; உண்டனென், உண்ணாநின்றனென், உண்குவென்; உண்டேன், உண்கின்றேன், உண்பேன்; உண்பல் எனவும்; உண்ணலென், உண்ணேன் எனவும் வரும். (6) 198. அவற்றுள் செய்கென் கிளவி வினையொடு முடியினும் அவ்வியல் திரியா தென்மனார் புலவர். மேற் சொல்லப்பட்டவற்றுள் செய்கு என்பதற்கு ஒரு வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்டவற்றுள் செய்கு என்னும் சொல் வினையோடு முடிந்துழியும், பாலுணர்த்தும் இயற்கையில் திரியாது, எ-று. உ-ம்: காண்கு வந்தேன். காண்கு யான் எனப் பெயரோடும் முடிதல் இலக்கணம் என்று கொள்க. அஃதேல், முற்றுச் சொல் பெயர் கொண்டு முடிதல் யாண்டுப் பெற்றாம் எனின், முன் முற்றுச் சொல்லிலக்கணம் கூறுகின்றுழி, அவைதாம், “தத்தம் கிளவி யடுக்குந வரினும்-எத்திறத் தானும் பெயர்முடி பினவே” (சூ.245) என்னுஞ் சூத்திரத்தாற் பெறுதும். ஈண்டு முடியினும் என்றதற்குப் பொருள் தொடர்புபடினும் என்றவாறாகக் கொள்க. (7) 199. அன்ஆன் அள்ஆள் என்னும் நான்கும் ஒருவர் மருங்கிற் படர்க்கைச் சொல்லே. உயர்திணைப் படர்க்கை வினையுள் ஒருமை வினை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அன் முதலாக ஓதப்பட்ட நான்கும் உயர்திணை ஒருமை உணரவரும் படர்க்கைச் சொல்லாம், எ-று. உ-ம்: உண்டனன், உண்கின்றனன், உண்பன்; உண்டான், உண்ணா நின்றான், உண்பான்; உண்ணான் இவை ஆண்பால் உணர வந்தன. உண்டனள், உண்கின்றனள், உண்பள்; உண்டாள், உண்கின்றாள், உண்பாள்; உண்ணாள் இவை பெண்பால் உணரவந்தன. பிறவும் அன்ன. (8) 200. அர் ஆர் ப என வரூஉம் மூன்றும் பல்லோர் மருங்கிற் படர்க்கைச் சொல்லே. உயர்திணைப் படர்க்கைப் பன்மை வினை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அர், ஆர், ப என வரும் மூன்று சொல்லும் உயர்திணைப் படர்க்கைப் பன்மைவினை உணர வரும் சொல்லாம், எ-று. 1அரு என்புழி வந்த உகரம் செய்யுள் விகாரம் என்பதும் ஒன்று. ஒற்றீறாக வரும் சொற்கள் உகரம் பெற்று வழங்கப் பெறும் என்பது அறிவித்துற்கு, உடம்பொடு புணர்த்துக் கூறினார் என்பதும் ஒன்று. உ-ம்: உண்டனர், உண்ணாநின்றனர், உண்பர்; உண்டார், உண்ணா நின்றார், உண்பார்; உண்ணார்; உண்ப என வரும். (9) 201. மாரைக் கிளவியும் பல்லோர் படர்க்கை காலக் கிளவியொடு முடியும் என்ப. மேலதற்கோர் புறநடை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மார் ஈற்று வினைச்சொல்லும் பல்லோரை உணர்த்தும் படர்க்கைச் சொல்லாம். அது பெயரோடு முடிதலே யன்றி, வினையோடும் முடியும் என்று சொல்லுவார், எ-று. உ-ம்: ஆ கொண்மார் வந்தார். இது வினையோடு முடிந்தது. ‘2பாடில் மன்னரைப் பாடன்மார் எமரே’ இது பெயரொடு முடிந்தது. இதனையும், செய்கு என்பதனையும் வினையெச்சம் என்றதனாற் குற்றம் என்னை எனின். வினை எச்சம் பால் தோன்றாது : இவை பால் தோன்றலின், முற்று எனல் வேண்டும். (10) 202. பன்மையும் ஒருமையும் பாலறி வந்த அந்நா லைந்தும் மூன்றுதலை யிட்ட முன்னுறக் கிளந்த உயர்திணை யவ்வே. விரிந்தது தொகுத்தலை உணர்த்துதல் நுதலிற்று. மேல், உயர் திணை என்று ஓதாமையான், எஞ்சியது உணர்த்திற்று என்றுமாம். (இ-ள்.) பன்மையும் ஒருமையுமாகிப் பாலுணர வரும் மூன்று தலையிட்ட இருபதும் முந்துற எடுத்து ஓதப்பட்ட உயர்திணை இடத்த, எ-று. பெயரெச்சம் மொழி மாறிநின்றது. இவ்வாறு மாறிவருவன உடம்பொடு புணர்த்ததனானும் கொள்க. மேல் ஓதப்பட்ட ஈறுகள் உயர்திணை என்பது இச் சூத்திரத்தாற் பெறப்பட்டது. அவை இருபத்து மூன்றுமாவன :- அம், ஆம், எம், ஏம், கும், டும், தும், றும். கு, டு, து, று, என், ஏன், அல், அன், ஆன், அள், ஆள், அர், ஆர், ப, மார் என்பன. (11) 203. அவற்றுள், பன்மை உரைக்கும் தன்மைக் கிளவி எண்ணியல் மருங்கிற் றிரிபவை உளவே. உளப்பாட்டுத் தன்மைக்கண் வருவதோர் திரிபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்டவற்றுள், உளப்பாட்டுப் பன்மைச் சொல் எண் இயலும்வழித் திரிபவை உண்டு, எ-று. உ-ம்: எண் என்பன இரண்டு மூன்று என்பன. யாம் இருவேம் எனற்பாலது, யாம் இருவர் எனவும் வரும். இன்னும் ‘எண்ணியன் மருங்கின்’ என்பதற்கு, எண்ணப்பட்டியன்ற மருங்கின் எனப் பொருள் உரைக்க உளப்பாட்டுத் தன்மைக்கு ஓதிய எட்டீற்றினும், திரிபவை உள என்றுமாம். வருவோம், உண்போம் என ஓகாரம் பெற்று வருவன ஏகாரத் திரிபு என்று கொள்க. (12) 204. யாஅ ரென்னும் வினாவின் கிளவி அத்திணை மருங்கின் முப்பாற்கு முரித்தே. இது ரகரவீற்றுக்கண் வழுவமைத்தலை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) யார் என்னும் வினாப் பொருண்மை உணர்த்துஞ் சொல் அவ் வுயர்திணைக்கண் முப்பாற்கும் உரித்து, எ-று. யார் என்பது காலங் காட்டாமையின், வினைச் சொல் ஆகாது எனின். வேற்றுமை ஏலாமையான் வினை எனப்படும். அதனானேயன்றே, வினை எனப்படுவது காலமொடு தோன்றும் என்னாது, வேற்றுமை கொள்ளாது எனவும் ஓதல் வேண்டிற்று என்க. உ-ம்: அவன் யார், அவள் யார், அவர் யார் என வரும். (13) 205. பாலறி மரபின் அம்மூ வீற்றும் ஆஓ ஆகும் செய்யு ளுள்ளே. இது படர்க்கை வினைக்கண் வரும் திரிபு உணர்த்துதல் நுதலிற்று, (இ-ள்.) பால் விளங்குதலை மரபாக உடைய னகாரம், ளகாரம், ரகாரம் ஆகிய மூவீற்றினும் ஆகாரம் ஓகாரமாகித் திரியும் செய்யுளகத்து, எ-று. உ-ம்: ‘3வினவி நிற்றந் தோனே’. ‘4நல்லை மகனென நகூஉப் பெயர்ந் தோளே’. ‘சான்றோ ரல்லர் தோழி’ எனவரும். செய்யுள் ஆகாரமாகி வரப் பெறாதோ எனின், வழக்கிற்கு உரியன செய்யுட்காம் என்பது சொல்லாமற் பெறுதும் என்று கொள்க. (14) 206. ஆயென் கிளவியும் அவற்றொடு கொள்ளும். இது முன்னிலை வினைச்சொற்கு உரியதோர் திரிபு உணர்ஆய் என்பதும் அங்ஙனமாதல் நுதலிற்று. (இ-ள்.) ஆய் என்னும் முன்னிலை வினைச்சொல்லும் ஓகாரமாகத் திரியும், எ-று. முன்னிலை வினை ஈண்டுக் கூறிற்றிலராயினும், திரிபு ஒப்புமை நோக்கிப், பருந்துவிழுக்காடு என்னும் சூத்திரக் கிடக்கையான், ஈண்டு ஓதப்பட்டது. உ-ம்: ‘5வந்தோய் மன்ற தண்கடற் சேர்ப்ப’ என வரும். (15) 207. அதுச்சொல் வேற்றுமை உடைமை யானும் கண்என் வேற்றுமை நிலத்தி னானும் ஒப்பி னானும் பண்பி னானுமென் றப்பாற் காலங் குறிப்பொடு தோன்றும். உயர்திணை வினைக்குறிப்பு ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஆறாம் வேற்றுமைக்கண் ஓதிய உடைமை என்னும் பொருண்மையானும், ஏழாம் வேற்றுமைக்கண் ஓதிய நிலப் பொருண்மையானும், ஒன்றோடொன்று உவமையாகி வரும் பொருண்மையானும், ஒன்றன் குணமாகிய பண்பினானும் மேற்பகுக்கப்பட்ட காலம் குறிப்பொடு தோன்றும், எ-று. என்று என்பது எண்ணுக் குறித்து நின்றது. இதனாற் சொல்லியது இப்பொருண்மை காரணமாக வினைக்குறிப்புத் தோன்றும் என்றவாறு. ‘உடைமையாவது’ உடையானும், உடைப்பொருளும் தோன்ற வரும். சாத்தனதுடைமை குழை என்பது. இதனுள் உடைப்பொருளை முந்துறக் கிளக்குங்கால், குழையை உடையன் சாத்தன் என வரும். ஆண்டு உடையன் என்பது பெயருமன்றி வினையுமன்றி நின்றதாயினும், உருபேலாது வினைச்சொற்போல நிற்றலின் வினைக்குறிப்பெனக் குறிபெற்றது. ‘நிலத்தினான் வந்தது’:- சாத்தன் மாடத்துக்கண்ணிருந்தான் என்னும் பொருட் கண் சாத்தன் மாடத்தன் என வருவது. மாடத்தன் என்றவழி இடமும், உருபும், வினையும் ஒற்றுமைப்பட்டுச் சாத்தன் என்பதற்குப் பயனிலையாகி வினைச்சொல் நீர்மைப்பட்டு வருதலின், இதுவும் வினைக் குறிப்பாயிற்று. ‘ஒப்பு என்பது’-இதனை ஒக்கும் இது என்புழி, ஒத்தல் பெயருமன்றி வினையுமன்றி நின்றதாயினும், தந்தையை ஒப்பன் என வினைச்சொற் போல நிற்றலின், இதுவும் வினைக்குறிப்பாயிற்று. ‘பண்பாவது’-இவற்கு நிறம் கரிது என்புழி, கருமை என்பது அப்பொருட்குப் பண்பாதலின், அப்பண்பினை உடையானைக் கரியன் என்ப ஆகலான், அது பெயருமன்றி வினையுமன்றி வரினும் வினைச் சொற்போல நிற்றலின், அதுவும் வினைக்குறிப் பாயிற்று. இவை எல்லாம் அவ்வப்பொருள் காரணமாக வந்த சொல்லாயினவாறு கண்டு கொள்க. இவற்றுள், ‘காலம் குறிப்பொடு தோன்றலாவது’-இவன் திருவுடையன் என்றவழிச் சொல்வான் குறிப்புத் தொன்று தொட்டுத் திருவுடையன் என்பதாயின், இறந்தகாலம் காட்டும்; இப்பொழுது என்பதாயின், நிகழ்காலம் காட்டும்; இனி என்பதாயின் எதிர்காலம் காட்டும். பிறவும் இவ்வாறு அறிந்துகொள்க. (16) 208. அன்மையின் இன்மையின் உண்மையின் வன்மையின் அன்ன பிறவும் குறிப்பொடு கொள்ளும் என்ன கிளவியும் குறிப்பே காலம். இதுவுமது. (இ-ள்.) இப்பொருள் அல்ல என்னும் பொருண்மை யானும், இப்பொருள் இல்லை என்னும் பொருண்மையானும், இப்பொருள் உண்டு என்னும் பொருண்மையானும், இது செய்யவல்லன் என்னும் பொருண்மை யானும் வரும் சொல்லும், அத்தன்மைய பிறவுமாகி வரும் சொல்லும், குறிப்பாற் கொள்ளப்படும் எல்லாச் சொல்லும் காலம் குறிப்பான் உணரப் படும், எ-று. இதனாற் சொல்லியது இவை காரணமாகப் பிறந்த சொல்லும் குறிப்பு வினையாம், எ-று. உ-ம்: அல்லன், இலன், உளன், வல்லன் என வரும். அன்ன பிறவாற் கொள்ளப்படுவன இவற்றின் எதிர்மறை வாய்பாட்டான் வரும் அவன், வல்லான் எனக் கொள்க. பிறவும் அன்ன. “குறிப்பொடு கொள்ளு மென்ன கிளவியும்” என்று ஓதியவதனாற் காலங் குறித்தலேயன்றி, ஈண்டு ஓதப்பட்ட பொருண்மை புலப்பட நில்லாது குறித்ததுக் கொள்ள நிற்கும் சொல்லும் வினைக் குறிப்பாம் என்றவாறு. சாத்தன் குழையை உடையன் எனக் கூறற்பாலது சாத்தன் குழையன் என்ற வழிக், குழையாகிய பொருளும், உருபும், உடைமை என்னும் சொல்லும் ஒற்றுமைப்பட்டுக் குழையன் என ஒரு சொல்லாகி வருதலின், அதுவும் வினைக்குறிப்பாம் என்று கொள்க. 6குழலன் கோட்டன் (முருகா. 209) என்பனவும் அவை. அஃதேல், இவை வேற்றுமைத் தொகையாகாவோ எனின், அது உருபு தொக வருதலும், பொருள் தொக வருதலும் என இருவகைத்து. அவற்றுள் உருபு தொக வரின் குழை உடையன் எனல் வேண்டும். பொருள் தொகவரின் குழைச்சாத்தன் எனல் வேண்டும். அவ்விருவாற் றானும் அன்றிக், குழையன் என வினைச்சொல் நீர்மைப்பட்டு வருதலின், வினைக் குறிப்பாயிற்று. இன்னும் ‘குறிப்பொடு கொள்ளு மென்ன கிளவியும்’ என்றதனாற் பைங்கண்ணன் புன்மயிரன் (இறை. அக. 1 உரை) எனப் பண்பினாகிய சினை முதற் கிளவியாகி இருதிணைக்கும் பொதுவாகி வரும் வினைக்குறிப்பும் கொள்ளப்படும். (17) 209. பன்மையும் ஒருமையும் பாலறி வந்த அன்ன மரபிற் குறிப்பொடு வரூஉம் காலக் கிளவி உயர்திணை மருங்கின் மேலைக் கிளவியொடு வேறுபா டிலவே. குறிப்பு வினைச்சொற்கு ஈறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பன்மையும் ஒருமையும் ஆகிப் பால் விளங்க வந்தன வாகிய மேற்சொல்லப்பட்ட மரபினவாகிக் குறிப்பொடு வரூஉங் காலத்தையுடைய சொல் உயர்திணை மருங்கின் மேற் சொல்லப்பட்ட சொல்லொடு வேறுபாடில, எ-று. இவ்வாறு மாட்டெறிந்ததனான் ஆண்டு ஓதிய ஈறே வினைக் குறிப்பிற்கும் ஈறு என்றவாறாம். ஏற்புழிக் கோடல் என்பதனான் ஈண்டு ஏற்பன கொள்ளப்படும். உ-ம்: உடையம், உடையாம், உடையெம், உடையேம் இவை உளப்பாட்டுத் தன்மை. உடையென், உடையேன் இவை தனித்ன்மை. உடையன், உடையான், உடையள், உடையாள், உடையர், உடையார், உடையோன், உடையோள், உடையோர் இவை படர்க்கை. ஏனையவற்றோடும் இவ்வாறே ஒட்டிக்கொள்க. பிறவீற்றினும் ஏற்பன வந்தவழிக் கண்டுகொள்க. (18) 210. அஆ வஎன வரூஉ மிறுதி அப்பான் மூன்றே பலவற்றுப் படர்க்கை. நிறுத்த முறையானே அஃறிணை வினை உணர்த்துவான் எடுத்துக் கொண்டார். அவற்றுள், தன்மைக்கண் கூற்று நிகழாமையானும், முன்னிலை விரவு வினையாதலானும், அஃறிணைக்கே யுரித்தாகி வருவது படர்க்கை ஆதலான், அதுவும் தெரிநிலை வினை, குறிப்பு வினை என இரு வகைப்படுதலின், அவற்றுள், தெரிநிலை வினை உணர்த்துவார் முதற்பட அதற்கண் பல வறிசொல் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. அஃதற்றாக, கிளியும், பூவையும் தன்வினை உரைக்கு மாதலின், அஃறிணைக்கண் தன்மைவினை இன்றென்றது என்னையெனின், கிளியும், பூவையும் ஆகிய சாதி எல்லாம் உரையாடும் என்னும் வழக்கின்மையானும், அவை உரைக்குங் கால் ஒருவர் உரைத்ததைக் கொண்டு உரைக்கும் ஆதலானும், ஒருவன் பாடின பாட்டை நரம்புக் கருவியின்கண் ஓசையும் பொரு ளும்பட இயக்கியவழிக், கருவியும் உரையாடிற்றாதல் வேண்டுமாக லானும், அவ்வாறு வருவன மக்கள் வினையாதலான் தன்மைவினை யன்றென்க. யான் என்னும் பெயரை விரவுப் பெயர்க்கண் ஓதாது உயர்திணைக்கண் ஓதினமையானும் அஃறிணைக்கண் தன்மைவினை இன்றென்க. (இ-ள்.) அ ஆ வ என்னும் ஈற்றினை உடைய அக்கூற்று மூன்று சொல்லும் அஃறிணைப் படர்க்கைக்கண் பன்மை உணர்த்தும் சொல்லாம், எ-று. அஃறிணை என்பது வருகின்ற சூத்திரத்தினின்றும் தந்துரைக்கப்பட்டது. உ-ம்: உண்டன, உண்கின்றன, உண்பன; உண்ணல; உண்ணா; உண்குவ என வரும். பிறவுமன்ன. (19) 211. ஒன்றன் படர்க்கை தறட ஊர்ந்த குன்றிய லுகரத் திறுதி யாகும். அஃறிணைப் படர்க்கைக்கண் ஒருமை உணரவரும் சொல்லாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அஃறிணை யொன்றனை அறியவரும் படர்க்கை வினைச்சொல் த, ற, ட க்களை ஊர்ந்த குற்றியலுகரத்தினை ஈறாக உடைய, எ-று. உ-ம்: உண்டது, உண்ணாநின்றது, உண்பது, உண்ணாது; கூயிற்று; உண்டு என வரும். உண்டு என்பது உண்டது என்னும் பொருட்டு. பிறவுமன்ன. (20) 212. பன்மையும் ஒருமையும் பாலறி வந்த அம்மூ விரண்டும் அஃறிணை யவ்வே. விரிந்தது தொகுத்தலை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேல், பன்மையும் ஒருமையுமாகிய பால் உணர பட்ட ஆறு ஈற்று வினைச் சொல்லும் அஃறிணை யிடத்த, எ-று. அவையாவன அ, ஆ, வ, து, று, டு என்பன. (21) 213. அத்திணை மருங்கின் இருபாற் கிளவிக்கும் ஒக்கும் என்ப எவன்என் வினாவே. அஃறிணைக்கு உரியதோர் வினாச்சொல் பாலுணர்த்து மாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அஃறிணை இடத்து இருபாற் கிளவிக்கும் எவன் என் வினா ஒக்கும் என்று சொல்லுவர், எ-று. உ-ம்: இப் பண்டியுள்ளது எவன், இப் பண்டியுள்ளன எவன் என வரும். (22) 214. இன்றில வுடைய என்னுங் கிளவியும் அன்றுடைத் தல்ல என்னுங் கிளவியும் பண்புகொள் கிளவியும் உளவென் கிளவியும் பண்பி னாகிய சினைமுதற் கிளவியும் ஒப்பொடு வரூஉங் கிளவியொடு தொகைஇ அப்பாற் பத்தும் குறிப்பொடு கொள்ளும். அஃறிணை வினைக்குறிப்பாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இன்றென்பது முதலாகச் சொல்லப்பட்ட பத்தும் காலம் குறிப்பொடு கொண்டு நிற்கும், எ-று. உ-ம்: ‘இன்று, இல’ என்பன ஒரு பொருளின்மை உணர வருவன. கோடின்று, கோடில என வரும். ‘உடைய, உடைத்து’ என்பன ஒரு பொருட்கு ஒரு பொருள் உண்டென்னும் பொருண்மேல் வரும். கோடுடைத்து, கோடுடைய என வரும். ‘அன்று, அல்ல’ என்பன தாம் குறித்த பொருளை விளக்க வரும். அதுவன்று, அவையல்ல என வரும். ‘பண்புகொள் கிளவி’யாவது பண்பினைக் கொண்டு நிற்குஞ் சொல். இது கரிது, இது நெடிது என வருவன. ‘உளவென் கிளவி’யாவது ஒரு பொருளின் உண்மை உணரநிற்பது. அவை உள என வரும். இதன் ஒருமையாகிய உண்டு என்னும் சொல் இருதிணைக்கும் உரித்தாகலின் ஈண்டு ஓதாராயினர். ‘பண்பினாகிய சினைமுதற் கிளவி’யாவது பண்பும் சினையும் அடுத்து முதலொடு முடிவது. குறுந்தாட்டு, குறுந்தாள என வரும். ‘ஒப்பொடு வரூஉங் கிளவி’யாவது ஒன்றனோடு ஒன்று ஒக்கும் என்னும் பொருண்மை குறித்து வருவது. அன்னது, அனையது, அன்ன, அனைய என வரும். (23) 215. பன்மையும் ஒருமையும் பாலறி வந்த அன்ன மரபிற் குறிப்பொடு வரூஉங் காலக் கிளவி அஃறிணை மருங்கின் மேலைக் கிளவியொடு வேறுபா டிலவே. அஃறிணை வினைக்குறிப்பிற்குப் புறநடை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேல் ஓதிய வாய்பாட்டான், பால் விளங்க வந்தனவாய்ச் சொல்லப்பட்ட மரபினாற், குறிப்பொடு வரூஉம் வினைச்சொல் அஃறிணைத் தெரிநிலை வினையொடு வேறுபாடில, எ-று. அதற்கு ஓதிய ஈறே இதற்கும் ஈறென்பது பெற்றாம். உ-ம்: உடைத்து, இன்று, குண்டுகட்டு, குறுந்தாள, பொல்லா என வரும். ‘அன்ன மரபிற் குறிப்பொடு வரூஉம்’ என்றதனான், உருபும், பொருளும், வினையும் ஒற்றுமைப்பட்டு வருவனவும், உயர்திணை வினைக்கண் ஓதிய இடமும், வன்மையும் பற்றி வருவனவுங் கொள்க. முதற்று, முதல என்பன உருபும், பொருளும், வினையும் ஒற்றுமைப்பட்டன. மேற்று, மேல; மாடத்தது, மாடத்த என்பன இடம் பற்றி வந்தன. ஓடவற்று, ஓடவல்ல; ஓடவல்லாது, ஓடவல்லா என்பன வன்மைபற்றி வந்தன. பிறவுமன்ன. (24) 216. முன்னிலை வியங்கோள் வினையெஞ்சு கிளவி இன்மை செப்பல் வேறென் கிளவி செய்ம்மன செய்யும் செய்த என்னும் அம்முறை நின்ற ஆயெண் கிளவியும் திரிபுவேறு படூஉம் செய்திய வாகி இருதிணைச் சொற்குமோ ரன்ன உரிமைய. நிறுத்த முறையானே இரு திணைக்கும் உரிய வினை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்டவற்றுள், முன்னிலை வினை முதலாக எடுத்து ஓதப்பட்ட எண்வகைச் சொல்லும், பிரிந்து பொருள் வேறுபடூஉம் செய்கையவாகி, இருதிணைச் சொற்கும் ஒத்த உரிமையை உடைய என்ற வாறு. உதாரணம் மேற் காட்டுதும். (25) 217. அவற்றுள், முன்னிலைக் கிளவி இ ஐ ஆயென வரூஉம் மூன்றும் ஒப்பத் தோன்றும் ஒருவர்க்கும் ஒன்றற்கும். முன்னிலை வினைச்சொல்லுள் ஒருமை உணர்த்தும் ஈறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்டவற்றுள் முன்னிலைக் கிளவிக்கண் இ, ஐ, ஆய் என்று வரும் ஈற்றினை யுடைய மூன்று சொல்லும் உயர்திணை ஆண்பாற்கும், பெண்பாற்கும், அஃறிணை ஒன்றன்பாற்கும் ஒத்த இயல்பினவாகித் தோன்றும், எ-று. முன்னிலை வினையென்னாது முன்னிலையெனப் பொதுப்பட ஓதினவதனால், அச்சொல் இருவகைப்படும் : முன் நின்றான் தொழில் உணர்த்து வனவும், அவனைத் தொழிற்படுத்தற்கு ஏவல் குறித்து வருவனவு மென. உ-ம்: உண்டி, உண்கிற்றி; உண்டனை, உண்ணாநின்றனை, உண்குவை, உண்பை; உண்டாய்; உண்ணாநின்றாய், உண்பாய், உண்ணாய்; கருத்தி, கரியை, கரியாய் என்பன முன்னின்றான் தொழில் உணர்த்தின. இவற்றுள் ஆய் என்பது மறையினும். ஏவலினும், தொழிலினும் வரும். உண்டி என்பது தொழிலினும் ஏவலினும் வரும். பிறவுமன்ன. அஃதேல், நட, வா, அறி, ஈ, கொடு, தூ, ஏ, வை, போ, கௌ எனவும்; செல், கொள், உண், தின், கூட்டு எனவும் உயிரீறும் ஒற்றீறுமாகிப் பலவகையான் வருவன எல்லாம் ஓதாது முன்னிலைச்சொல் மூன்றென்றது என்னை யெனின், அவை எல்லாம் ஆய் என்னும் சொல் குறைந்து நின்றன. அன்னவாதல், ‘7செய்யா யென்னும் முன்னிலை வினைச்சொல், செய்யென் கிளவியாகிட னுடைத்தே’ (எச்சவியல் 51) என்பதனுட் கண்டுகொள்க. (26) 218. இர் ஈர் மின்என வரூஉம் மூன்றும் பல்லோர் மருங்கினும் பலவற்று மருங்கினும் சொல்லோ ரனைய 8என்மனார் புலவர். முன்னிலை வினைச்சொல்லுள் பன்மை உணர்த்தும் ஈறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இர், ஈர், மின் என்று சொல்லப்பட்ட மூன்றீற்று வினைச் சொல்லும் உயர்திணைப் பன்மைக் கண்ணும், அஃறிணைப் பன்மைக் கண்ணும் சொல் நோக்கொக்கும், எ-று. உ-ம்: உண்டனிர், உண்ணாநின்றனிர், உண்பிர்; உண்டீர், உண்ணா நின்றீர், உண்பீர்; உண்மின், உண்ணலிர், உண்ணீர், உண்ணன்மின் என வரும். இவை உணர்த்துமாறு என்னை எனின், இவ்வினைக்குப் பெயராகிய நீ, நீயிர் என்பனவற்றிற்கு, ‘9இன்ன பெயரே இவையெனல் வேண்டின் முன்னஞ் சேர்த்தி முறையி னுணர்தல்’ (பெயரியல் 37), என விதித்தார் ஆண்டை விதியே ஈண்டுங் கொண்டு சொல்லுவான் குறிப்பினானும் தொடர்வுபட்ட பெயரினானும் உணர்ந்து கொள்க. உண்டாயோ மகனே உண்டாயோ மகளே என்றவழி உயர்திணை உணரப்பட்டது. உண்டாயோ குயிலே என்றவழி அஃறிணை யுணரப்பட்டது. உண்டீரோ மக்காள் என்ற வழி உயர்திணை உணரப்பட்டது. உண்டீரோ கிளிகாள் என்றவழி அஃறிணை உணரப்பட்டது. உண்டீரோ மக்காள் என்றவழி ஆண் பன்மை பெண் பன்மை விளங்கல் வேண்டின் அதனொடு புணர்ந்த சொல்லான் உணர்க. (27) 219. எஞ்சிய கிளவி இடத்தொடு சிவணி யைம்பாற்கு முரிய தோன்ற லாறே. முன்னிலை யொழிந்த சொற்கள், பால் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற்சொல்லப்பட்ட முன்னிலை ஒழிந்த சொற்கள்10 மூன்றிடத்தோடுங் கூடி ஐந்து பாற்குமுரிய, தோன்று நெறிக்கண் எ-று. அவற்றுள், சிறப்பு விதியுடைய வியங்கோட்கும், வினையெச்சத்திற்கும், செய்யும், செய்த என்னும் சொற்கும் உதாரணம் தத்தஞ் சிறப்புச் சூத்திரத்துட் காட்டுதும். ஏனைய ஈண்டுக் காட்டப்படும். உ-ம்: இன்மை செப்பல் என்பது இல்லை என்னுஞ் சொல். அது யானில்லை, யாமில்லை; நீயில்லை, நீயிரில்லை; அவனில்லை, அவளில்லை, அவரில்லை, அதுவில்லை, அவை யில்லை என வரும். வேறென் கிளவியாவது வேறென்னும் சொல். அது, யான் வேறு, யாம் வேறு; நீ வேறு, நீயிர் வேறு; அவன் வேறு, அவள் வேறு, அவர் வேறு, அது வேறு, அவை வேறு என வரும். வந்ததுண்டு வாராதது முடித்தல் என்பதனான், கூட்டு என்பதூஉம், ஆம் என்பதூஉம் கொள்க. யான் கூட்டு, யான் ஆம், நீ கூட்டு; நீயாம், அவர் கூட்டு, அவர் ஆம் என மூன்றிடத்துக் கண்ணும் ஒட்டுக. செய்ம்மன என்பது, யான் செய்ம்மன, நீ செய்ம்மன, அவன் செய்ம்மன என எல்லாப் பாலோடும் ஒட்டுக. இஃது இக்காலத்துச், செய்வது, செய்வன, செய்பவை, செய்யுமவை என வழங்கும்போலும். (28) 220. அவற்றுள், முன்னிலை தன்மை ஆயீ ரிடத்தொடு மன்னா தாகும் வியங்கோட் கிளவி. எய்தியது ஒருமருங்கு விலக்குதலை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லபட்டவற்றுள் வியங்கோட் சொல் முன்னிலையும் தன்மையுமாகிய இடத்து நிலைபெறாது, எ-று. எனவே, படர்க்கை ஐந்து பாற்கண்ணும் வரும் என்றவாறாம். வியங்கோள் என்பது யாதோ எனின், செய் என்னும் பொருட்கண்ணும், தவிர் என்னும் பொருட்கண்ணும், வேண்டிக் கோடற் பொருட்கண்ணும் வருவது. அஃதாவது வாழ், உண், தவிர் என்னும் ஏவல் குறித்த சொற்கள், தன்மைப் பெயர்க்கண்ணும், படர்க்கைப் பெயர்க்கண்ணும் ஏலாது முன்னிலை ஒருமைப் பெயர்க்கண், நீ வாழ், நீ யுண், நீ தவிர் என ஏற்றலின், ஆண்டுப் பாலுணர்த்துஞ் சொல்லோடு ஒரு நிகரனவாகி முன்னிலை வினையுள் அடங்கின. அப்பொருட்கண், தன்மை கூறும் வழி, யான் வாழ்வல், உண்பல், தவிர்வல் எனக் கூறவேண்டலின் அவை தன்மை வினையுள் அடங்கின. இனிப் படர்க்கைக்கண் வருங்கால், அவன் வாழ்க, உண்க, தவிர்க எனக் ககரம் கடையாத்துக் கூற வேண்டுதலின், அவ்வாறு வருஞ்சொல், பாலுணர்த்தாமையின் வியங்கோள் என வேறு குறி பெற்றது. அவன் வாழ்க, அவள் வாழ்க. அவர் வாழ்க, அது வாழ்க, அவை வாழ்க என ஐந்து பாற்கும் உரித்தாகி வந்தவாறு கண்டு கொள்க. நீ வாழ்க, உண்க எனவும் வருமாலெனின், அவை அக்ககரம் பெறாக்காலும் பொருள் இனிது விளங்குதலின் அவ்வாறு வருவன மரூஉ வழக்கென்று கொள்க. ‘கடாவுக பாகநின் கால்வல் நெடுந்தேர்’ எனச் செய்யுளகத்தும் வந்ததாலெனின், நீ கடாவுக என வாராது, பாக கடாவுக என வருதலின், அது படர்க்கைப் பெயர் விளியேற்றவழி வந்த தென்க. ‘11என்முதற் பிழைத்தது கெடுகவென் னாயுள்’ எனத் தன்மைக்கண் வந்ததா லெனின், ஆண்டுக் கெடுக எனப்பட்டது ஆயுளா தலின் அதன் மேல் வந்த தென்க. இனி, அவ்வியங்கோட் கிளவி ஈறு திரிந்து வந்து அப்பொருள் படுதலுங் கொள்க. ‘12வாழிய வென்னுஞ் 13செய்யென் கிளவி-யிறுதி யகரங் கெடுதலு முரித்தே’ (எழுத். உயிர்மய. 9) என்றமையான் வாழ்க என்பது வாழி, வாழிய, வாழியர் எனவும்; ‘14செப்பும் வினாவும் வழாஅ லோம்பல்’, என்றமையான் ஓம்புக என்பது அல் ஈறாகி வருதலுங் கொள்க. ‘15மகனெனல் மக்கட் பதடியெனல்’ (குறள். 996) என்றமையான் உடம்பாட்டினும், மறையினும் அல்லீறு வருதலுங் கொள்க. ‘16ஓஒதல் வேண்டு மொளிமாழ்குஞ் செய்வினை - யாஅது மென்னு மவர்’ என்பது பல்லோர் படர்க்கை யாதலின், வேண்டும் என்னும் முற்றுச் சொற் கொண்டு முடியாமையின், ஆக்கங் கருதுவார் இவ்வாறு செய்தல் வேண்டு மென வேண்டிக் கோடற் பொருண்மைக்கண் வியங்கோ ளீறு திரிந்தது. “திசைதிசை தேனார்க்குந் திருமருத முன்றுறை வசைதீர்ந்த வென்னலம் வாடுவ தருளுவார் நசைகொண்டு தந்நிழல் சேர்ந்தாரைத் தாங்கித்தம் இசைபரந் துலகேத்த வேதினாட் டுறைபவர்” (கலி. பாலை. 26) என்றவழி, ஏதினாட்டுறைபவர் அருளுவாராக என வேண்டிக் கோடற் பொருண்மைக்கண் ஈறு திரிந்தது. பிறவுமன்ன. (29) 221. பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை அவ்வயின் மூன்றும் நிகழுங் காலத்துச் செய்யு மென்னுங் கிளவியொடு கொள்ளா. இதுவும் எய்தியது ஒருமருங்கு மறுத்தலை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பலரை உணர்த்தும் படர்க்கையும், முன்னிலையும், தன்மையுமாகிய மூன்றிடமும் நிகழ்காலங் குறித்த செய்யும் என்னுங் கிளவியொடு பொருந்தா, எ-று. ஈண்டு; இவ்வாறோதி, முன்னும் ‘17அவ்வறு பொருட்கும் ஓரன்ன உரிமைய-செய்யும் செய்த என்னுஞ் சொல்லே’ என ஓதினமையாற் செய்யும் என்பது முற்றும் பெயரெச்சமும் என இருவகைப் படுமென்று கொள்க. அது முற்றாயுழித் தன்மையினும், முன்னிலையினும் உயர்திணைப் படர்க்கைப் பன்மையினும் வாராது, ஏனைப் பாலின் கண்ணே வரும் என்றவாறாம். அவன் உண்ணும், அவள் உண்ணும், அது உண்ணும், அவை உண்ணும் என வரும். ஈண்டு நிகழ்காலம் என்ற தென்னை; எதிர்காலங் குறித்து வாராதோ எனின், எதிர்காலத்துக்கண் வருவது காலமயக்கமாகக் கொள்க. முற்றுச் சொல் சேரக் கூறுகின்றாராகலின் இச்சூத்திரம் ஈண்டோதப் பட்டது. (30) 222. செய்து செய்யூச் செய்பு செய்தெனச் செய்யியர் செய்யிய செயின்செயச் செயற்கென அவ்வகை யொன்பதும் வினையெஞ்சு கிளவி. வினையெச்ச மாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) செய்து என்பது முதலாகச் செயற்கு என்பதீறாக ஓதப்பட்ட ஒன்பது வாய்பாடும் வினையெச்சச் சொல்லாம், எ-று. வினையெச்சமாவது மற்றொரு வினைச்சொல்லோடல்லது முற்றுப் பெறாது நிற்கும். இவ் வினைச்சொல்லாவது பாலுணர்த்தாது காலங் காட்டி நிற்கும். செய்து என்பது இறந்த காலங் காட்டும். செய்யூ என்பது இறந்த கால அணிமையும் நிகழ்காலமும் காட்டும். ‘18செய்யா வென்னும் வினையெஞ்சு கிளவியும்’ (உயிர் மயங். 20) என எழுத்ததிகாரத் தோதுதலின், அவ்வாய்பாடும் இப் பொருட்டாகி வருதலின் அதுவுங் கொள்க. செய்பு என்பது மூன்று காலமுங் காட்டும். செய்தென என்பது இறந்த காலப் பொருட்டாயினும் விரைவு குறித்தலானும், திரிந்து முடிதலானும் வேறோதப்பட்டது. செய்யியர் என்பது எதிர்காலங் காட்டும். செய்யிய என்பது வாய்பாடுவேற்றுமை யுடைத்தாதலான் பொருள் நோக்காது சொல் நோக்கிக் கூறப்பட்டது. செயின் என்பது எதிர்காலம் பற்றி வரினும் பொருள் வேறுபாடுடைத் தாதலான் வேறோதப்பட்டது. செய என்பது மூன்று காலத்திற்கும் பொதுவாகிப் பொருள் வேறுபாடு உடைத்து. செயற்கு என்பது எதிர்கால வாய்பாட்டு வேற்றுமை குறித்து ஓதப்பட்டது. உதாரணம் வருகின்ற சூத்திரங்களுட் காட்டுதும். (31) 223. பின்முன் கால்கடை வழியிடத் தென்னும் அன்ன மரபிற் காலங் கண்ணிய என்ன கிளவியும் அவற்றியல் பினவே. இதுவும் வினையெச்ச வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பின் முதலாக ஓதப்பட்டனவும், அத்தன்மைய வாகிய மரபினாற் காலங் குறித்து வரும் எல்லாச் சொல்லும் வினையெச்ச இயல்பின, எ-று. எனவே, மேற் சொல்லப்பட்டவற்றோடு ஒரு நீர்மைய அல்ல என்பது பெறப்பட்டது. அன்ன மரபினாற் கொள்ளப்படுவன ஆல், பான், அணி, உம், மற், மை, கிற், இன்றி, அன்று, இனி, நனி, என வருவனவும், பிறவும். இவற்றிற்கு உதாரணம் முன்னர்க் காட்டுதும். (32) 224. அவற்றுள், முதனிலை மூன்றும் வினைமுதன் முடிபின. நிறுத்த முறையானே முந்துற்ற மூன்றற்கும் முடிபுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்டவற்றுள் முந்துற்ற மூன்று சொல்லும் வினைக்குக் கருத்தாவாகிய பொருளின் வினையை முடிபாக உடைய, எ-று. உ-ம்: உண்டு வந்தான்-இது செய்தென் எச்சம். ‘19படுமகன் கிடக்கை காணூஉ-வீன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே’. இஃது இறந்த காலங் குறித்த செய்யூ என்னும் வினையெச்சம். ‘நிலம்புடையூஉ வெழுதரும் வலம்படு குஞ்சரம்’-இது நிகழ்காலம் குறித்த செய்யூ என்னும் வினையெச்சம். ‘20வானிடு வில்லின் வரவறியா வாய்மையான்’ இது செய்யா என்னும் வினையெச்சம். ‘21புலராப் பச்சிலை யிடையிடுபு தொடுத்த’ என்பது இறந்தகாலம் குறித்த செய்பு என்னும் வினை யெச்சம். ‘22வாடுபு வனப்போடி வணங்கிறை வளையூர’ என்பது நிகழ்காலங் குறித்த செய்பு என்னும் வினையெச்சம். உண்பு வந்தான்-இஃது எதிர்காலங் குறித்த செய்பு என்னும் வினையெச்சம். மூன்றிடத்தும் ஐந்து பாலோடும் ஒட்டிக்கொள்க. (33) 225. அம்முக் கிளவியுஞ் சினைவினை தோன்றிச்23 சினையொடு முடியா முதலொடு முடியினும் வினையோ ரனைய என்மனார் புலவர். எய்தியதன்மேற் சிறப்புவிதி வகுத்தலை உணர்த்துதல் நுதலிற்று. வழுவமைதியுமாம். (இ-ள்.) மேற்சொல்லப்பட்ட மூன்று சொல்லும் சினை வினையாகித் தோன்றி, அச் சினைவினையொடு முடியாவாய், முதல் வினையொடு முடியினும், அச்சினைவினையான் முடிந்ததனோடு ஒக்கும், எ-று. உ-ம்: கையிற்று வீழ்ந்தது, கையிறூஉ வீழ்ந்தது, கையிறுபு வீழ்ந்தது எனற்பாலன கையிற்று வீழ்ந்தான், கையிறூஉ வீழ்ந்தான், கையிறுபு வீழ்ந்தான் என வீழப்பட்டது கையாயினும், அதனொடு முடியாது அதன் முதல் வினையொடு முடியினும் குற்றமில என்றவாறு. உய்த்துணர வைத்தல் என்னும் தந்திர உத்தியால் வினை யெச்சத்திற்கு முடிபாகி வரும் சினைவினை முதலொடு முடிதலே யன்றித் தனிவருஞ் சினை வினையும் முதலொடும் முடியுமென்று கொள்க. கையிற்றான், கண் கெட்டான் என வரும். (34) 226. ஏனை யெச்சம் வினைமுத லானும் ஆன்வந் தியையும் வினைநிலை யானும் தாமியல் மருங்கின் முடியும் என்ப. ஏனை யெச்சங்கட்கு முடிபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வினையெச்சங்களுள் முந்துற்ற மூன்று மல்லாதன வினை முதல் வினையானும், அவ்விடத்துப் பொருந்தும் பிறவினையானும் தாம் நடக்கும் மருங்கினான் முடியும், எ-று. உ-ம்: மழை பெய்தெனப் புகழ் பெற்றது, மழை பெய்யியர் எழுந்தது, மழை பெய்யிய எழுந்தது. மழை பெய்யிற் புகழ் பெறும், மழை பெய்யப் புகழ் பெற்றது-இது இறந்தகாலம். ‘வாழச் செய்த நல்வினை யல்லா, தாழுங் காலைப் புணைபிறி தில்லை’ இது வாழாநிற்க வென நிகழ்காலங் குறித்தது. மழை பெய்ய எழுந்தது-இது எதிர் காலம். மழை பெயற் கெழுந்தது. இவை வினைமுதல் வினைமுதல் வினையான் முடிந்தன. மழை பெய்தென மரங் குழைத்தது. மழை பெய்யியர் மாதவர் அருளினர். மழை பெய்யிய மாதவரருளினர். மழை பெய்யிற் குளம் நிறையும். மழை பெய்யக் குளம் நிறைந்தது-இது இறந்தகாலம். மழை பெய்ய வந்தான், இது நிகழுங் காலம். மழை பெய்யப் பலி கொடுத்தும், இஃது எதிர்காலம். மழை பெயற்கு அறஞ்செய்தும், இவை பிற வினையான் முடிந்தன. தானுண்டபின் வந்தான், தானுண்ணாமுன் வந்தான். தானுண்டக் கால் வரும்-தானுண்டக்கடை வரும்-இஃது இது என்னும் காலங் குறித்து நின்றது. தானுண்டவழி வரும், இதுவுமது. தானுண்டவிடத்து வரும், இஃது உண்டக்கால் என்பது குறித்தது. இவை தன்வினை. பிறன் உண்டபின் வரும். பிறனுண்ணாமுன் வரும். பிறனுண்டக் கால் வரும். பிறனுண்டக்கடை வரும். பிறனுண்டவழி வரும். பிறனுண்டவிடத்துவரும். இவை பிறவினை. இவை பெயராதற்கும் ஏற்று நிற்றலின், அந்நிலையின்றித் தொழில் நிகழுங் காலத்தைக் குறித்துவரின் வினையெச்சமாம் என்பதனாற் ‘காலங் கண்ணிய’ என்று ஓதினார். அன்னமரபினாற் கொள்ளப்படுவன :- ‘24அற்றா லளவறிந் துண்க’. ‘25அலைப்பான் பிறிதுயிரை யாக்கலும் குற்றம்’. ‘26நனவிற் புணர்ச்சி நடக்கலு மாங்கே’. ‘27கூறாமற் குறித்ததன் மேற் செல்லும்’. ‘28கூறாமை நோக்கிக் குறிப்பறிவான்’. ‘செவ்வன் றிரிகிற்பான்’. ‘29விருந்தின்றி உண்ட பகலும்’. ‘30நாளன்று போகிப் புள்ளிடை தட்ப’. இனிக் கொண்டான். அணி வந்தான். நனி வந்தான். பிறவும் இவ்வாறு வருவன கொள்க. (35) 227. பன்முறை யானும் வினையெஞ்சு கிளவி சொன்முறை முடியா தடுக்குந வரினும் முன்னது முடிய முடியுமன் பொருளே. வினையெச்சம் அடுக்கி வருவழி வருவதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வினை யெச்சச் சொற்கள் சொற்றோறும் முற்றுப் பெறாது பலவாற்றானும் அடுக்கி வரினும், இறுதி நின்றது முடிய ஏனையவும் பொருண்முடிவு பெற்றனவாம், எ-று. உ-ம்: உண்டு தின்று ஓடிப்பாடி வந்தான். உண்டு பருத்தின்குபு வந்தான் என வரும். பிறவுமன்ன. (36) 228. நிலனும் பொருளும் காலமுங் கருவியும் வினைமுதற் கிளவியும் வினையு முளப்பட அவ்வறு பொருட்கு மோரன்ன வுரிமைய செய்யுஞ் செய்த வென்னுஞ் சொல்லே. செய்யும், செய்த என்னும் சொற்கு முடிபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) நிலப் பெயரும், பொருட் பெயரும், காலப் பெயரும், கருவிப் பெயரும், வினைமுதற் பெயரும், வினைப் பெயருமாகிய அவ்வாறு பெயர்க்கும் ஒத்த உரிமைய: செய்யும், செய்த என்னும் சொற்கள், எ-று. இவற்றொடு முடியு(ம் எனவே), இவை பெயரை எச்சமாக உடைய வாதலாற் பெயரெச்சமெனக் குறியும் பெறும். இவையும் பால் காட்டா என்றுணர்க. இவை ‘31எஞ்சிய கிளவி இடத்தொடு சிவணி’ என்பதன்கண் அடங்காவோ எனின், ஆண்டு வினைமுதல் தானே மூன்றிடத்து ஐந்து பாலாகி வரும். இவை அவ்வாறு அன்றிச் செயப்படு பொருளொடும், செயலொடும், கருவியொடும், இடத்தொடும், காலத்தொடும், வினை முதலொடும் ஒத்த இயல்பிற்றாகி முற்றுப்பெறுதலின் அடங்காவென்க. உதாரணம் வருகின்ற சூத்திரத்துட் காட்டுதும். (37) 229. அவற்றொடு வருவழிச் 32செய்யும் கிளவி முதற்கண் வரைந்த மூவீற்றும் உரித்தே. எய்தியதன்மேல் சிறப்புவிதி வகுத்தலை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) செய்யும் என்னும் சொல் நிலம் முதலாகிய பொருளொடு வரும்வழி, முற்பட வரையப்பட்ட பல்லோர் படர்க்கையும் முன்னிலையும், தன்மையும் ஆகிய மூன்று வேறுபாட்டினும் உரித்து, எ-று. உ-ம்: நிலம்-உண்ணுமில், உண்ட இல். பொருள்-உண்ணுஞ் சோறு, உண்ட சோறு. காலம்-உண்ணும் காலம், உண்டபொழுது. கருவி-உண்ணுங் கலம், உண்ட கலம். வினை-உண்ணும் ஊண், உண்ட ஊண். வினை முதல் மூன்றிடத்து ஐந்து பாலுமாகி ஒன்பது வகைப்படும். உண்ணும் யான், யாம்; நீ, நீயிர்; அவன், அவள், அவர், அது, அவை என வரும். செய்த என்பதும் இவ்வாறே ஒட்டிக் கொள்க. கருவி என்பதனான் மூன்றாவதற்கு ஓதிய காரணமும், ஏதுவும் கொள்க. வந்தது கொண்டு வாராதது முடித்தல் என்பதனால், ‘நிலம் பூத்த மரமிசை நிமிர்பாலும்’ என்றவழி நிலம் பொலிவு பெற்ற மரம் என்று பொலிதற்கு ஏதுவின்கண் வந்தது. யானா கொடுக்கும் பார்ப்பான் எனவும், ஒலிக்கக் கூலி எனவும் நான்காவதற்கு ஓதிய கொள்வதனோடும், பயனோடும் வருமாலெனின், கொடுக்கும் பார்ப்பான் என்றவழிக் கொடைத் தொழில் பார்ப்பான் மேலேறுதலின், யானா கொடுப்பக் கொள்ளும் பார்ப்பான் எனப் பொருள் உரைக்க வேண்டுதலின், அது வினைமுதலாம். ஒலிக்கக் கூலி என்றவழி, கூலியாவது பயனாதலின் அதற்குப் பொருள் உரைக்குங்காலை, ஒலித்ததற்குக் கூலி என உரைக்க வேண்டுதலின், ஆண்டு அதற்கென்பது புலப்படாது நின்றதல்லது கூலியென்பதனொடு பொருத்த மின்றென்க. இவையிற்றை மரூஉ வென்று கொள்ளப்படும். அஃதற்றாக, வினையெச்சம் பெயரெச்சம் என்பன தனிமொழி ஆதலின்றி, வினையொடும் பெயரொடும் முடிதலான், அவற்றைத் தனிமொழி கூறுகின்றவழிக் கூறல் 33வேண்டாம் எனின், ஈண்டுச் செய்து, செய்யூ எனவும், செய்யும், செய்த எனவும் தனிமொழி இலக்கணமே கூறிற்றென்க. அன்றியும் முடிக்குஞ் சொல்லும் ஈண்டு ஓதப்பட்டதாயினும், உண்டு வந்தான் என்றவழிச் சாத்தன் என்று ஒரு பெயரோடல்லது முற்றுப் பெறாமையானும், உண்ட சாத்தன் என்றவழி, வந்தான் என ஒரு வினையோடல்லது முற்றுப் பெறாமையானும், இவையும் தனி மொழிப் பகுதி யெனினல்லது வாக்கியமாகி முற்றி நிற்குந் தொடர் மொழியாகா வென்க. (38) 230. பெயரெஞ்சு கிளவியும் வினையெஞ்சு கிளவியும் எதிர்மறுத்து மொழியினும் பொருணிலை திரியா. இருவகை யெச்சத்திற்கும் உரியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பெயரெச்ச வினைச்சொல்லும், வினையெச்ச வினைச்சொல்லும் எதிர் மறுத்து மொழியினும் தத்தம் பொருணிலைமையிற் றிரியா, எ-று. உ-ம்: உண்ணாச் சாத்தன், உண்ணாத சாத்தன், எறியா வேல் என்பன செய்யும், செய்த என்னும் இரண்டிற்கும் மறை. பிறவுமன்ன. உண்ணாது வந்தான், மழை பெய்யாமையின் மரம் வறந்தன. இவை வினையெச்சமறை. பிறவுமன்ன. பெயரெஞ்சு கிளவியும் வினையெஞ்சு கிளவியும் 34எதிர்மறுத்து வரும் என்றோதி, முற்றுச் சொல் எதிர்மறை ஓதாதது என்னை எனின், பெயரெச்சமும் வினை யெச்சமும் ஓதுகின்றுழி உடம்பட்ட சொல்லான் ஓதுதலின், எதிர்மறை ஓதல் வேண்டிற்று. முற்றுச் சொற் கீற்றெழுத் தோதினமையான் அவைதாமே மறுத்த வாய்பாட்டிற்கும் ஈறாதலின் ஓதல் வேண்டாவாயின. அஃதற் றாதல் அ, ஆ, வ என்னும் (சூ.19) சூத்திரத்தானும் அறிக. (39) 231. தத்த மெச்சமொடு சிவணுங் குறிப்பின் எச்சொல் லாயினும் இடைநிலை வரையார். இதுவும் இருவகை எச்சத்திற்கும் உரியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பெயரெச்சமும், வினையெச்சமும் தம்மை முடிக்கும் சொல்லொடு சிவணும் குறிப்பினையுடைய யாதானும் ஒரு சொல்லாயினும் இடை நிற்றலை நீக்கார் ஆசிரியர், எ-று. உ-ம்: கொல்லுங் காட்டுள் யானை, கொன்ற காட்டுள் யானை - இவை பெயரெச்ச இடைக் கிடப்பு. இவற்றுள் இடைக் கிடந்த சொல் யானை என்பதனொடு சிவணுதலின் அமைதியுமாயிற்று. பிறவுமன்ன. உழுது ஏரொடு வந்தான், உழ ஏரொடு வந்தான்-இவை வினையெச்ச இடைக் கிடப்பு. இவற்றுள் இடைக்கிடந்த சொல் முடிக்குஞ் சொல்லொடு சிவணுதல் அமைதியாயிற்று. பிறவுமன்ன. இனிச் சிவணாதன :- உண்ட சாத்தன் தந்தை என்பது உண்ட என்பதற்குச் சாத்தன் தந்தையை முடிபாகக் குறித்தானாயிற் சிவணா தாயிற்று. வினையெச்சத்துட் சிவணாதன வந்தவழிக் கண்டு கொள்க. (40) 232. அவற்றுள், செய்யு மென்னும் பெயரெஞ்சு கிளவிக்கும் மெய்யொடுங் கெடுமே ஈற்றுமிசை யுகரம் அவ்விட மறிதல் என்மனார் புலவர். செய்யும் என்னுஞ் சொல் திரியுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்டவற்றுள், செய்யும் என்னும் பெயரெஞ்சு கிளவிக்கும், உம்மையாற் செய்யும் என்னும் முற்றுச் சொற்கும் ஈற்றுமிசை யுகரம் மெய்யொடுங் கெடும். அது கெடுமிடம் அறிந்து கொள்க, எ-று. ‘வாம் புரவி வழுதி’ என வரும். 35இது பெயரெச்சம். ‘36அம்பலூரு மவனொடு மொழிமே’ (குறுந். 51). இது முற்றுச் சொல். ‘மெய்யொடுங் கெடும்’ என்ற உம்மையான் மெய்யொழி யவுங் கெடும் என்று கொள்க. ‘சார னாடவென் றோழியுங் கலுழ்மே’ என வரும். பிறவுமன்ன. (41) 233. செய்தெ னெச்சத் திறந்த காலம் எய்திட னுடைத்தே வாராக் காலம். ஒருசார் வினையெச்சத்துக்கண் வருங்கால மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) செய்தென் எச்சத்துக்கண் வரும் இறந்தகாலம் எதிர் காலத்தைப் பொருந்து மிடனுடைத்து, எ-று. என்றது, இறந்த காலத்தாற் கூறப்படும் வினையது நிகழ்ந்துழிக் கூறுதலன்றி, நிகழாத முன்னும் அவ்வாய்பாட்டான் வரப்பெறும் என்றவாறாம். நாளை உழுது வருவன்; இனித் தவம் செய்து சுவர்க்கம் புகும் என வரும். (42) 234. முந்நிலைக் காலமும் தோன்று மியற்கை எம்முறைச் சொல்லும் நிகழுங் காலத்து மெய்ந்நிலைப் பொதுச்சொற் கிளத்தல் வேண்டும். இதுவுமது. (இ-ள்.) யாதானும் ஒருமுறைமையினையுடைய வினைச்சொல்லும் மூன்று காலமுந் தோன்றும் இயற்கைக்கண், நிகழுங் காலத்துப் பொது நிலைப் பொதுச் சொல்லாற் கிளத்தல் வேண்டும், எ-று. வினைச் சொல் எல்லாங் காலங் காட்டுதலின், காலங் காட்டாத பொதுப்பட்ட வினையை நிகழ்காலத்துக்கண் எல்லாப் பாற்கும் பொதுவாகி வரும் செய்யும் என்னும் சொல்லாற் சொல்லுக என்றவாறாயிற்று. ஒருவன் உண்பானாக அகம்புக்கான், அவனது வாயிற்கண் நின்றானை யாது செய்கிறான் என வினாயவழி, அவன் செய்கின்ற உண்டற் காலம் உணராமையின் உண்டான் எனவுமாகாது, உண்கின்றான் எனவுமாகாது, ஆயிடை உண்ணும் என்க. (43) 235. வாராக் காலத்தும் நிகழுங் காலத்தும் ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி இறந்த காலத்துக் குறிப்பொடு 37தோன்றல் விரைந்த பொருள என்மனார் புலவர். இதுவுமது. (இ-ள்.) வருங் காலத்தும் நிகழ் காலத்தும் வரும் வினைச் சொல்லாகிய சொல், இறந்தகாலத்துக்கட் குறிப்பொடு தோன்றல் விரைந்த பொருள என்மனார் புலவர், எ-று. ஒருவனை உண்டாயோ, போதாயோ என்றவழி, உண்ணாத வனும் உண்டேன், போந்தேன் என்னும்; உண்கின்றானும் அவ்வாறு சொல்லும். இவ்வாறு விரைவு குறித்து நின்றவாறு கண்டு கொள்க. ஓரும், ஆங்கும் அசைகள். (44) 236. மிக்கதன் மருங்கின் வினைச்சொற் சுட்டி அப்பண்பு குறித்த வினைமுதற் கிளவி செய்வ தில்வழி நிகழுங் காலத்து மெய்பெறத் தோன்றும் பொருட்டா கும்மே. ஒருசார் வினைச்சொற்கு உரியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ‘மிக்கது’ என்பது ஒன்றி னொன்று மிக்கது என்னும் பொருண்மை. ‘அதன் மருங்கின் வினைச்சொல் சுட்டலாவது’ அது பெயராகி நிற்கும் நிலைமையைச் சுட்டாது வினையாகி நிற்கும் நிலைமையைச் சுட்டி நிற்றல். ‘அப்பண்பு குறித்த வினைமுதற் கிளவியாவது’ அப் பொருட்கண் மிகுதலாகிய தொழிலைக் குறியாது அதன் இயல்பாகிய மிகுதியைக் குறித்த பாலுணர வருஞ்சொல். ‘செய்வதில்வழி என்பது’ அப்பாலுணர வருஞ் சொல்லின்கண் கருத்தாவை உணர்த்தும் ஈற்றெழுத்து இல்வழி, என்றவாறு. ‘நிகழுங் காலத்து மெய்பெறத் தோன்றும் பொருட்டாகும் என்பது’ நிகழுங் காலத்து உருபு பெறப் புலப்படும் பொருளை உடைத்து, எ-று. ஒரு பொருளின் ஒரு பொருள் மிக்கது என்னும் பொருட்கண், மிக்கது என்னும் வினைச்சொல்லைக் குறித்து மிக்க பண்புணர வரும் பாலுணர்த்தாத சொல் செய்யும் என்னும் சொல்லினான் வரின், அஃது அப்பொருளை இனிது விளக்கும், எ-று. மிக்கது என்பது ஒருகாலங் குறித்து வரின் தொழில் குறித்ததாம். இயல்பு குறித்ததாயின் பண்பு குறித்ததாம். ஆற்றில் நீர் மிக்கதென்ற வழி, மிகுதல் இயல்பன்மையின் தொழில் குறித்ததாம். சுவர்க்கம் மிக்கது என்றவழி எக்காலத்தும் ஒக்குமாதலின் பண்பு குறித்ததாம். பூமியிற் சுவர்க்கம் மிகும் எனவும் ஆம். யாற்றுநீர் மிக்கது என்னும் பொருட்கண் மிகும் என்றதனாற் குற்றம் என்னையெனின், அவ்வாறு கூறின் இறந்த காலம் தோன்றாதாம். வந்தது கண்டு வாராதது முடித்தல் என்பதனான் உயர்வு, தாழ்வு, குறைவு என்பனவும் இந்நிலைமைய என்று கொள்க. இச்சூத்திரத்தாற் பயன் ஒருசார் வினைச் சொற்கள் தொழிலுக்கும், பண்பிற்கும் பொதுவாகி நிற்கும் என்பதறிவித்தல். (45) 237. இதுசெயல் வேண்டு மென்னுங் கிளவி இருவயி னிலையும் பொருட்டா கும்மே தன்பா லானும் பிறன்பா லானும். இது ஒருவினை இருபொருட் படுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இதனைச் செயல்வேண்டும் என்னும் சொல் இரண்டிடத்தும் நிலைபெற்ற பொருளையுடைத்து, சொல்லுவ hன் கண்ணும் பிறன்கண்ணும், எ-று. உ-ம்: நீ உண்ணல் வேண்டும் என்றவழி, நீ உண்பாயாகல் வேண்டும் எனத் தான் வேண்டிக் கோடற் பொருண்மை சொல்லுவான்கண் நிலை பெற்றது. சாத்தன் உண்ணல் வேண்டும் என்றவழி, உண்டலைப் பிறன் விரும்பும் எனப் பிறன்கண் நிலைபெற்றது. (46) 238. வன்புற வரூஉம் வினாவுடை வினைச்சொல் எதிர்மறுத் துணர்த்துதற் குரிமையு முடைத்தே. இதுவுமது. (இ-ள்.) வன்புறுத்தற் பொருண்மைக்கண் வரூஉம் வினாவுடை வினைச்சொல் எதிர்மறுத்துப் பொருள் உணர்த்து தற்கு உரிமையாகலு முடைத்து, எ-று. உ-ம்: யான் வைதேனே, யான் வைதேனோ என்பன வினாப் பொருண்மைப் படுதலன்றி வைதிலேன் என எதிர்மறைப் பொருளும் பட்டவாறு கண்டுகொள்க. (47) 239. வாராக் காலத்து வினைச்சொற் கிளவி இறப்பினும் நிகழ்வினும் சிறப்பத் தோன்றும் இயற்கையுந் தெளிவுங் கிளக்குங் காலை. கால வழுவமைதி உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) எதிர் காலத்து நிகழும் வினைச் சொல் இறந்த காலத் தானும் நிகழ் காலத்தானும் பொருள் விளங்கத் தோன்றும்; ஓர் இயற்கையையும், ஒரு பொருளினது தெளிவையும் கிளக்குங் காலத்து, எ-று. உ-ம்: ஆறலை கள்வர் இயங்குவதோர் காட்டிடைப் போக லுற்றானை, அவ்விடத்துப் போகுவையாயின் கூறை கோட்படுவை எனற்பாலான்வாய், பட்டாய் எனவும், படாநின்றாய் எனவுங் கூறும். இஃது இயற்கை. ‘சென்றது சென்றது வாழ்நாள் செறுத்துடன் வந்தது வந்தது கூற்று’. (நாலடி.4). வாழ்நாள் செல்லாநின்றது எனற்பாலது சென்றது எனவும். கூற்று வரும் எனற்பாலது வந்தது எனவும் நிகழ்காலமும் எதிர்காலமும் இறந்தகாலத்தான் வந்தன. வாழ்நாள் செல்லுதலும் கூற்று வருதலும் ஒருதலையாகலின், இவை தெளிவுபற்றி வந்தன. நிகழ்காலத்தான் வருவன வந்தவழிக் கண்டுகொள்க. (48) 240. செயப்படு பொருளைச் செய்தது போலத் 38தொழிற்படக் கிளத்தலும் வழக்கியன் மரபே. இது வினைச் சொற்கள் தம்முள் மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) செயப்படு பொருளைச் செய்யப்பட்டதெனக் கூறாது கருத்தாவைக் கூறுமாறு போலத் தொழிற்படச் சொல்லுதலும் வழக்கியல் மரபு, அது. மரூஉ வழக்கு, எ-று. உ-ம்: சோறடப்பட்டது, திண்ணை மெழுகப்பட்டது எனற்பாலன சோறட்டது, திண்ணை மெழுகிற்று என வரும். உம்மையாற் கருவியைக் கருத்தாவாகக் கூறலுங் கொள்க. வாள் வெட்டிற்று, சுரிகை குத்திற்று என வரும். (49) 241. இறப்பே எதிர்வே யாயிரு காலமும் சிறப்பத் தோன்றும் மயங்குமொழிக் கிளவி. காலமயக்கம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மயங்குதற்குரிய மொழிக்கண் இறந்தகாலமும் எதிர்காலமும் என்று சொல்லப்பட்ட அவ்விரண்டு காலமும் ஒப்பத் தோன்றும், எ-று. உ-ம்: ‘உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே’ (சொல். 1) என்ற வழி, என்றார் எனற்பாலது என்மனார் என வந்தது. பிறவுமன்ன. (50) 242. ஏனைக் காலமும் மயங்குதல் வரையார். இதுவுமது. (இ-ள்.) இறப்பும் எதிர்வும் தம்முள் மயங்குதலன்றி அவற்றொடு நிகழ்காலமும் மயங்கப்பெறும், எ-று. உ-ம்: யாம் விளையாடுங் கா என்றவழி முன்பு விளையாடுங் கா, இன்று விளையாடுங் கா, நாளை விளையாடுங் கா என மூன்று காலத்துக் கண்ணும் வந்தவாறு கண்டுகொள்க. அஃதேல், வினைச்சொற்கள்-முற்றும், பெயரெச்சமும், வினை யெச்சமும் என மூவகைப்படும். அவற்றுட் பெயரெச்சம் வினையெச்சம் என்பன இத்தன்மைய என்று எடுத்தோதி, முற்றுச்சொல்லாவது இத்தன்மையது என்று ஓதிற்றிலர், அதற்கு இலக்கணம் யாங்குப் பெறுதும் எனின், எச்சவியலுட் பெறுதும். வினைக்கு இன்றியமையாத முற்றினை ஒழிபியல் கூறுகின்றுழிக் கூறிய அதனாற் பெற்றதென்னை எனின், அஃது எமக்குப் புலனாயிற் றன்று. அஃதேல், வினையிலக்கணம் அறிந்தே னாகுங் கால் முற்றிலக்கணமும் அறிதல் வேண்டும் அன்றே. அதனை ஆண்டுக் கூறியவாறு ஈண்டுரைத்தல் வேண்டும் எனின், உரைக்குமாறு:- (51) 243. இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றச் சிறப்புடை மரபின் அம்முக் காலமும் தன்மை முன்னிலை படர்க்கை என்னும் 39மூவிடத் தான வினையினுங் குறிப்பினும் மெய்ம்மை யானு 40மீரிரண் டாகும் அவ்வா றென்ப முற்றியல் மொழியே. முற்றுச் சொற்கு இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என வினைச் சொற்குச் சிறப்புடைத்தாகிய மூன்று காலத்தானும், தன்மை முன்னிலை படர்க்கை என்னும் மூன்றிடத்தானும், தொழிலானும் குறிப்பானும் பொருளானும் முற்று இயலும் மொழிவகை நிலைமையான் இருபத்து நான்கு, எ-று. காலம் என்பதன்கண் உருபு தொக்கு நின்றது. இடம் என்பதன்கண் உம் எஞ்சி நின்றது. அவையாவன :- தன்மைக்கண் எட்டும், முன்னிலைக் கண் எட்டும், படர்க்கைக்கண் எட்டும் ஆம். ஒருமையும் பன்மையும் எனத் தமிழ் நடை இருவகைப் படுதலின் தன்மைக்கண் வரும் எட்டும் ஒருமை உணர்த்துவன நான்கும், பன்மை உணர்த்துவன நான்கும் என இரு வகைப்படும். உ-ம்: உண்டேன், உண்ணாநின்றேன், உண்பேன், கரியேன் இவை மூன்று காலமும், வினைக் குறிப்பும்பற்றி ஒருமைக்கண் வந்தன. உண்டனம், உண்ணாநின்றனம், உண்குவம், கரியம் என்பன அவ்வாறு பன்மைப் பொருண்மைக்கண் வந்தன. முன்னிலைக்கண் எட்டும் இருவகைப்படும். உண்டனை, உண்ணா நின்றனை, உண்குவை, கரியை இவை ஒருமைபற்றி வந்தன. உண்டனிர், உண்ணாநின்றனிர், உண்குவீர், கரியீர் இவை நான்கும் பன்மைபற்றி வந்தன. படர்க்கைக்கண் எட்டும் இருவகைப்படும். அவற்றுள் ஒருவனை உணர்த்துவதும், ஒருத்தியை உணர்த்துவதும், ஒன்றனை உணர்த்துவதும், ஒருமை யென அடங்கும். பலரை உணர்த்துவதும், பலவற்றை உணர்த்து வதும் பன்மையென அடங்கும். உண்டனன், உண்ணாநின்றனன், உண்பன், கரியன் எனவும்; உண்டனள், உண்ணாநின்றனள், உண்பள், கரியள் எனவும்; உண்டது, உண்ணாநின்றது, உண்பது, கரியது எனவும் இவை பொருண் முகத்தான் ஒருமை யாதலின், மூன்று காலமும் வினைக்குறிப்பும் பற்றி நான்காய் அடங்கின. உண்டனர், உண்ணாநின்றனர், உண்குவர், கரியர் எனவும்; உண்டன, உண்ணாநின்றன, உண்குவ, கரிய எனவும் இவை பொருள் முகத்தாற் பன்மையாதலின், மூன்று காலமும் வினைக் குறிப்புமாகி நான்காய் அடங்கின. வினையெச்சமும், பெயரெச்சமும், தொழிலும் காலமும் உணர்த்தினல்லது இடமும் பாலும் உணர்த்தா என்பதூஉம், முற்றுச் சொல் தொழிலும் காலமும் இடமும் பாலும் உணர்த்தும் என்பதூஉம் கண்டு கொள்க. (52) 244. எவ்வயின் வினையும் அவ்வயின் நிலையும். மேலதற்கு ஒரு புறநடை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தொழிலும் காலமும் இடமும் பாலும் உணரவரும் வினைச் சொலன்றி, மூன்றிடத்திற்கும் பொதுவாகி வரும் வினைச் சொல்லும் முற்றாம் நிலைமையைப் பெறும், எ-று. அவையாவன :- வியங்கோள், இன்மை செப்பல், வேறென் கிளவி, செய்ம்மன, பெயரெச்சமல்லாத செய்யும் என்னுஞ் சொல். (53) 245. அவைதாம், தத்தங் கிளவி யடுக்குந வரினும் எத்திறத் தானும் பெயர்முடி பினவே. முற்றுச்சொல் தொடர்ந்தியலுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்ட முற்றுச் சொற்களுள் தத்துமக்கு ஏற்ற வினைச்சொல் அடுக்கி வரினும், உம்மையான், அடுக்காது வரினும் எவ்வழியானும் பெயர் முடிபினையுடைய, எ-று. என்பது முற்றுச் சொல் பெயரோடல்லது தொடர்பு படாது என்றவாறாயிற்று. உ-ம்: உண்டான் சாத்தன், நல்லன் அரசன் இவை தனி வந்தன. உண்டான், தின்றான், ஓடினான், பாடினான் சாத்தன்; நல்லன், அறிவுடையன், செவ்வியன் சான்றோர் மகன்; இவை வினையும் வினைக் குறிப்பும் அடுக்கிவந்தன. ‘தத்தங் கிளவி என்றதனான்’ ஒருகாலத்திற்கேற்ற வினையே அடுக்குவது என்று கொள்க. ‘எத்திறத்தானும்’ என்றமையால் சாத்தன் உண்டான்; அரசன் நல்லன் எனவும்; சாத்தன் உண்டான், தின்றான், ஓடினான்; அரசன் நல்லன்; அறிவு உடையன், செவ்வியன் எனவும் வரும். இவை எழுவாயும் பயனிலையும் ஆகா எனின், எழுவாய்த் தொடரொடு முற்றுத் தொடரிடை வேறுபாடின்மை வேற்றுமை யோத்தினுட் கூறப்பட்டது. அன்றியும், பெயர் முந்துற்றதனை எழுவாய்த் தொடர் என்றும், வினை முந்துற்றதனை முற்றுத்தொடர் என்றும் வழங்கினும் அமையும். இவை மூன்று சூத்திரமும் ஈண்டைத் தொடர்புபட்டுக் கிடந்த இதனை, உரை யெழுதுவோர், ‘பிரிநிலை வினையே’ (சூ. 423) யென்னுஞ் சூத்திரத்துட் சொல்லப்பட்ட பெயரெச்ச வினையெச்சம், என்பவற்றை ஈண்டு ஓதப்பட்ட பெயரெச்ச வினையெச்சமாகக் கருதி, ஆண்டுச் சேரவைத்தார் என்பாரும் உளர். அஃதற்றாக, வினைச்சொல்-பெயரெச்சம், வினை யெச்சம், முற்றென அடுக்கும் மூவகைப்பட்டதாயின், வினையெச்சமும், முற்றும் அடுக்கி வருமாறு கூறிப் பெயரெச்சம் அடுக்கி வருமாறு 41கூறாதது என்னை யெனின், பெயரெச்ச வடுக்கு வினையெச்ச வடுக்குப் போல் முன்னது முடிய முடியாமையின் கூறாராயினார். சிறுபான்மை வருவன ‘செய்யுண் மருங்கினும்’ (453) என்னும் அதிகாரப் புறநடையாற் கொள்ளப்படும். (54) ஆறாவது வினையியல் முடிந்தது இவ்வோத்தினுட் சூத்திரம் உட்பட உரையினதளவு கிரந்த வகையால் நானூற்றறுபது வினையியல் அடிக்குறிப்புகள் 1. அரு என்பதும் பாடம் போலும். எனினும், ஏட்டில் ஆர் என்பதே காணப்பட்டது. 2. புறம் - 375 3. அகம் - 48. 4. அகம் 248. 5. அகம் - 80. 6. முருகா - 209 7. எச்சவியல் 56 8. என்....வர் இப்பகுதிக்கு உரையில்லை. 9. பெயரில் - 37. 10. சூ. 25. 11. சிலப் வழக் - 77. 12. எழுத் - உயிர்மய - 9. 13. செய், செய - ஏனையுரைப்பாடங்கள். 14. கிளவி - 13. 15. குறள் - 209. 16. வினைத்தூய்மை 3. 17. வினையியல் - 37. 18. உயிர் மயங்கியல் 20. 19. புறம் 278. 20. நாலடி, கடவுள் வாழ்த்து. 21. புறம் 33 22. கலி. 16. 23. தோன்றில் - ஏனையுரைப்பாடம் 24. குறள் 943. 25. நான்மணி 26. 26. கலி. குறி 3. 27. கலி 1 28. குறள் 701. 29. திரிகடுகம் 44. 30. புறம் 124. 31. சூ. 28. 32. செய்யுமென் கிளவி-ஏனையுரைப்பாடம். 33. `வேண்டும்’ என்பது பிரதியில் உள்ளது. 34. `வினை யெஞ்சு கிளவியும்’ 35. ஈங்குச் சில சொற்கள் பொருட்டொடர் பின்றிக் காணப்பட்டன. 36. குறுந் - 51 37. கிளத்தல் - ஏனை உரைப்பாடம். 38. தொழிற் படுத்தடக்கலும் - ஏட்டில் கண்டது. 39. அம்மூவிடத்தான். 40. இவ்விரண்டு சேனாவரையம். 41. கூறிப் பெயரெச்சம் அடுக்கி வருமாறு. இடையியல் இடைச்சொற்களின் இலக்கணமுணர்த்தினமையால் இடையியலென்னும் பெயர்த்தாயிற்று. பெயரையும் வினையையும் சார்ந்து தோற்றுதலின் அவற்றின்பின் கூறப்பட்டது மொழிக்கு முன்னும் பின்னும் வருமாயினும் பெரும்பான்மையும் இடைவருதலின் இடைச்சொல்லாயிற்று என்பர் சேனாவரையர். இடைச்சொல்லாவது பெயரும் வினையும்போலத் தனித்தனியே பொருளுணர உச்சரிக்கப்படாது பெயர் வினைகளைச் சார்ந்து புலப்படுமென்றும் பெயரும் வினையும் இடமாகநின்று பொருளுணர்த்தலின் இடைச்சொல்லாயிற்றென்றும் கூறுவர் தெய்வச்சிலையார். பொருளையும் பொருளது புடை பெயர்ச்சியையுந் தம்மாலன்றித் தத்தங்குறிப்பாலுணர்த்துஞ் சொற்கள் பெயர்ச்சொல் வினைச்சொற்களுமாகாது அவற்றின் வேறுமாகாது இடைநிகரனவாய் நிற்றலின் இடைச்சொல்லெனப் பட்டன என்பர் சிவஞான முனிவர். இவ்வியலிலுள்ள சூத்திரங்கள் 48. இவற்றை 47-ஆகக் கொள்வர் தெய்வச்சிலையார். இடைச்சொல்லென்று சொல்லப்படுவன பெயரும் வினையும் உணர்த்தும் பொருளைச் சார்ந்துநின்று அவற்றையே வெளிப்படுத்து நிற்றலல்லது தமக்கென வேறு பொருளில்லாதன் என்பர் ஆசிரியர். எனவே அவை பொருளுணர்த்தும்வழிப் பெயர்ப் பொருண்மை யுணர்த்தியும் வினைப்பொருண்மை யுணர்த்தியும் வருவன என்பது பெறப்படும். ஒரு சொல்லோடு ஒரு சொல் புணர்ந்தியலும் வழி அப்பொருள் நிலைக்கு உதவியாகி வருவனவும், வினைச் சொற்களை முடிக்குமிடத்து அச்சொல்லகத்துக் காலங்காட்டும் உறுப்பு முதலியனவாய் நிற்பனவும், வேற்றுமையுருபுகளாய் வருவனவும், தமக்கெனப் பொருளின்றிச் சார்த்திச் சொல்லப்படும் அசைநிலைகளாய் நிற்பனவும், இசை நிறைக்க வருவனவும், தத் தங்குறிப்பாற் பொருளுணர்த்துவனவும். ஒப்புமையுணர்த்தும் உவமவுருபுகளாய் வருவனவும் என இடைச்சொற்கள் எழுவகைப்படுமென்பர் தொல்காப்பியர். அவற்றுள் ‘புணரியல் நிலையிடைப் பொருள் நிலைக்குதவுந’ என்றது அல்வழிப் பொருளுக்கு உரியன இவை வேற்றுமைப் பொருளுக்கு உரியன இவையென எளிதில் உணர்ந்து கொள்ளுதற்கு அறிகுறியாகிய இன், வற்று, முதலிய சாரியைகளை இவை எழுத்ததிகாரத்திற் சொல்லப்பட்டன. ‘வினை செயல் மருங்கிற் காலமொடு வருந’ என்றது வினைச்சொல் முடிவுபெறுமிடத்துக் காலங்காட்டியும் பால்காட்டியும் வினைச்சொல்லகத்து உறுப்பாய் நிற்பனவற்றை. இவை வினையியலுட் கூறப்பட்டன வேற்றுமைப் பொருளிடத்து உருபாய் வரும் ஐ, ஒடு, கு, இன், அது, கண் எனவரும் வேற்றுமையுருபுகள் வேற்றுமையியலிற் கூறப்பட்டன. அசைநிலையும் இசைநிறையும் தத்தங் குறிப்பிற் பொருள் செய்வனவும் ஆகிய மூவகையிடைச் சொற்களும் இவ்வியலின் கண்ணே உணர்த்தப்படுகின்றன. ஒப்புமையுணர்த்தும் இடைச் சொற்களாகிய அன்ன, ஆங்கு முதலிய உவம உருபுகள் பொருளதிகாரத்து உவம இயலில் விரித்துரைக்கப்படும். இவ்விடைச்சொற்கள் தம்மாற் சாரப்படும் சொற்கு முன்னும் பின்னும் வருதலும் தம்மீறுதிரிதலும் பிறிதோரிடைச் சொல் தம்முன்வந்து சாரப்பெறுதலும் ஆகிய இயல்பினவாம். இவ்வியலின்கண் உணர்த்தப்படும் அசைநிலை, இசைநிறை தத்தங்குறிப்பிற் பொருள்செய்வன என்னும் மூவகையிடைச் சொற்களுள் பொருள்புணர் இடைச்சொல்லாகிய தத்தங்குறிப்பிற் பொருள் செய்வனவற்றை முதற்கண்ணும், பொருள்புணரா இடைச்சொற்களாகிய அசைநிலை இசைநிறைகளை அதன் பின்னரும் உணர்த்துகின்றார். தத்தங்குறிப்பிற் பொருள்செய்யும் இடைச் சொற்களுள் பலபொருள் குறித்த இடைச்சொற்களை 4-முதல் 12-வரையுள்ள சூத்திரங்களிலும், ஒருபொருள் குறித்த இடைச்சொற்களை 13-முதல் 21-வரையுள்ள சூத்திரங்களிலும் ஆசிரியர் எடுத்தோதுகின்றார். அவர் எடுத்தோதிய இடைச்சொற்களுள் எல் என்னும் சொல் இலங்குதல் என்னும் ஒரு பொருள் குறித்த இடைச்சொல்லாகும். “எல்லென்பது உரிச்சொல் நீர்மைத்தாயினும் ஆசிரியர் இடைச்சொல்லாக ஒதினமையான் இடைச்சொல் லென்று கோடும்” என்றார் சேனாவரையர். ‘உரிச்சொல் குறைச் சொல்லாகி நிற்கும், இது குறையின்றி நிற்றலின் இடைச் சொல்லாயிற்று’ என்றார் தெய்வச்சிலையார். அசைநிலையாகவும் இசைநிறையாகவும் வரும் இடைச்சொற்களை 22-முதல் 32-வரையுள்ள சூத்திரங்களால் எடுத்துரைத்தார். உயிரெழுத்துக்களுள் ஒளகாரமல்லாத நெடில்கள் ஆறும் இரட்டித்தும் அளபெடுத்தும் தனித்தும் இடைச்சொற்களாய் நின்று ஓசையாலும் குறிப்பாலும் பொருளுணர்த்தும் முறையினை 38-ஆம் சூத்திரத்திலும், நன்றே, அன்றே, அந்தோ, அன்னோ என்பவற்றின் இறுதி நின்ற ஏகாரமும் ஓகாரமும் குறிப்பாற் பொருளுணர்த்து முறையினை 34-ஆம் சூத்திரத்திலும், மேற்கூறிய இடைச் சொல்லின்கண் இலக்கண வேறுபாடுகளையெல்லாம் 35-முதல் 46-வரையுள்ள சூத்திரங் களிலும் ஆசிரியர் விரித்துக் கூறியுள்ளார். மேற்கூறப்பட்ட இடைச்சொற்களில் இச்சொல்லுக்கு இது பொருள் என நிலைபெறச் சொல்லப்பட்டனவாயினும் அச்சொற்களின் முன்னும் பின்னும் நின்ற வினையோடும் பெயரோடும் இயைத்து நோக்க அச்சொற்கள் முற்கூறியவாறன்றி வேறு பொருளவாயும் அசைநிலையாயும் திரிந்து வேறுபடினும் அவற்றின் பொருள் நிலையை ஆராய்ந்துணர்தல் வேண்டு மெனவும், இங்கெடுத்துரைத்த இடைச்சொற்களேயன்றி இவைபோல்வன பிற வரினும் அவற்றையும் இங்குச் சொல்லிய வற்றின் இலக்கணத்தால் உணர்ந்து வகைப்படுத்திக் கொள்ளுதல் வேண்டுமெனவும் இவ்வியலிறுதியிலுள்ள புறனடைச் சூத்திரங்களால் ஆசிரியர் அறிவுறுத்துகின்றார். இதனால் ஆசிரியர் காலத்து வழங்கிய தமிழ்ச்சொற்களின் பரப்பும் இருவகை வழக்கினும் சொற்கள் பொருளுணர்த்தும் நெறியின் விரிவும் இனிது புலனாதல் காணலாம். - க. வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 214-216 ஏழாவது இடையியல் 246. இடையெனப் படுவ பெயரொடும் வினையொடும் நடைபெற் றியலும் தமக்கியல் பிலவே. இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின், இடைச்சொல் ஓத்து என்னும் பெயர்த்து : இடைச்சொல் உணர்த்தினமையாற் பெற்ற பெயர். இது பெயரையும் வினையையும் சார்ந்து தோன்றுதலின் அவற்றின் பின் கூறப்பட்டது. “இடையெனப் படுவ........தமக்கியல் பிலவே” என்பது இடைச்சொல் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இடையென்று சொல்லப்படுவன பெயரொடு கூடியும் வினையொடு கூடியும் வழக்குப் பெற்றியலுமல்லது தமக்கென வழக்கில, எ-று. என்றது, மேல் அதிகரிக்கப்பட்ட சொல் நான்கனுள் இடைச்சொல் லாவது பெயரும், வினையும் போலத் தனித்தனி பொருள் உணர உச்சரிக்கப் படாது; பெயர் வினைகளைச் சார்ந்து புலப்படும். எ-று. பெயரும் வினையும் இடமாக நின்று பொருள் உணர்த்து தலின் இடைச்சொல்லாயிற்று. மேற் பெயரியலுள்ளும் ‘அவற்று வழி மருங்கிற் றோன்றும்’ (சூ. 5) என ஓதி, ஈண்டும் இவ்வாறு கூறுதல், கூறியது கூறலாம் பிற எனின், ஆண்டுத் தோற்றுவாய் செய்தார்; ஈண்டிலக்கணங் கூறினார் என்க. ‘பெயரொடும் வினையொடும் நடைபெற்றியலும்’ என்றதனான், பொருள் உணர்த்தும்வழிப், பெயர்ப் பொருண்மை உணர்த்தியும், வினைப் பொருண்மை உணர்த்தியும் வருமதல்லது வேறு பொருள் இலதென்று மாம். (1) 247. அவைதாம், புணரியல் நிலையிடைப் பொருள்நிலைக் குதநவும் வினைசெயல் மருங்கிற் காலமொடு வருநவும் வேற்றுமைப் பொருள்வயின் உருபா குநவும் அசைநிலைக் கிளவி யாகி வருநவும் இசைநிறைக் கிளவி யாகி வருநவும் தத்தங் குறிப்பிற் பொருள்செய் குநவும் ஒப்பில் வழியாற் பொருள்செய் குநவுமென் றப்பண் பினவே நுவலுங் காலை. இடைச்சொல் பாகுபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) “அவைதாம் புணரியல் நிலையிடைப் பொருள் நிலைக்குதநவும்” என்பது மேற் சொல்லப்பட்ட இடைச் சொற்கடாம் ஒரு சொல்லொடு ஒருசொல் புணர்ந்தியலும்வழி, அப்பொருள்நிலைக்குதவி யாகி வருவனவும் என்றவாறு. பொருள்நிலைக்கு உதவலாவது அல்வழிப் பொருட்கு உரியன இவை, வேற்றுமைப் பொருட்கு உரியன இவையென வருதல். அவையாவன ‘இன்னே, அற்றே’ என்பன முதலாயின. அவை சாரியை யன்றோ எனின், அவை இடைச்சொல் எனவும் ஒரு குறி பெறும் என்றவாறு. ‘வினை செயல் மருங்கிற் காலமொடு வருநவும்’ என்றது வினைச்சொல் முடிவுபெறுமிடத்துக் காலங் காட்டுஞ் சொல்லொடு பால் காட்டும் சொல்லும் என்றவாறு. அவையாவன உண்டனம், உண்டாம், உண்ணாநின்றனம், உண்கின்றனம், உண்பம், உண்குவம் என்புழி, இறந்தகாலங் குறித்த டுகரமும், நிகழ்காலங் குறித்த நின்று, கின்று என்பனவும், எதிர்காலங் குறித்த பு, கு என்பனவும், அம் ஆம் எனப் பால்காட்டுவனவும், இவ்வாறு வருவன பிறவும் ஆம். ‘வேற்றுமைப் பொருள்வயின் உருபா குநவும்’ என்பது அவ் வேற்றுமைப் பொருளிடத்து உருபாகி நிற்குஞ் சொற்களும் என்றவாறு. அவையாவன ஐ, ஒடு, கு முதலிய. இவையும் இடைச்சொல் எனக் குறிபெற்றன. ‘அசைநிலைக் கிளவி யாகி வருநவும்’ என்பது பொருள்பட நில்லாது அசைநிலையாகி நிற்பனவும், எ-று. ‘இசைநிறைக் கிளவி யாகி வருநவும்’ என்பது அசைநிலைக் கிளவி போலப் பிரிந்து நில்லாது, ஒரு சொல்லோடு ஒற்றுமைப்பட்டு இசை நிறைத்தற் பொருட்டாகி நிற்பனவும், எ-று. ‘தத்தங் குறிப்பிற் பொருள்செய் குநவும்’ என்பது தத்தங் குறிப்பினாற் பொருள் உணர்த்துவனவும் என்றவாறு, ‘ஒப்பில் வழியாற் பொருள்செய்குநவும்’ என்பது குறிப்பினான் வருதலின்றிப் பொருத்தம் இல்லாத விடத்துப் பொருள் உணர்த்து வனவும் என்றவாறு. ‘அப்பண்பினவே நுவலுங் காலை’ என்பது அவ்வியல்பினையுடைய, சொல்லுங் காலத்து, எ-று. தத்தங் குறிப்பின் என்பதற்குச் சார்ந்த சொல்லின் குறிப்பினான் எனவும், ஒப்பில்வழி என்பதனை ஒரு சொல்லொடு பொருத்தமின்றித் தனி வந்துழி எனவும் பொருள் உரைப்பினும் அமையும். அஃது அற்றாக, ஒப்பில்வழி என்பதற்கு ஒக்கும் என்னுஞ் சொல் வாராத உவம உருபெனப் பொருள் உரைப்பவாலெனின், ‘1ஒப்பி னானும் பண்பி னானுமென்-றப்பாற் காலங் குறிப்பொடு தோன்றும்’ (வினை. சூ. 16), என்றமை யானும் போல, அன்ன, ஏய்ப்ப, உறழ என்பன சாத்தன் புலி போலும் எனவும், புலிபோலப் பாய்ந்தான் எனவும், புலி போன்ற சாத்தன், புலிபோலுஞ் சாத்தன் எனவும், இவ்வாறு பிறவும், முற்றும் வினையெச்சமும், பெயரெச்சமுமாகி வருதலினாலும் அவை யெல்லாம் வினைக்குறிப்பென்று கொள்க. அவற்றுள், ‘புணரியல் நிலையிடைப் பொருள்நிலைக் குதநவு’ எழுத்ததிகாரத்துக் கூறப்பட்டன. ‘வினைசெயல் மருங்கிற் காலமொடு வருவன’ வினையியலுட் கூறப்பட்டன. ‘வேற்றுமைப் பொருள்வயின் உருபாகுந’ வேற்றுமை யோத்தினுத் கூறப்பட்டன. ஏனை நான்கும் ஈண்டு ஓதப்படுகின்றன. (2) 248. அவைதாம் முன்னும் பின்னும் மொழியடுத்து வருதலும் தம்மீறு திரிதலும் பிறிதவண் நிலையலும் அன்னவை எல்லாம் உரிய வென்ப. இதுவும் இடைச் சொற்கு உரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்ட இடைச்சொற்றாம் மொழியை முன்னும் பின்னும் அடுத்து வருதலும், தத்தம் ஈறு திரிந்து வருதலும், பிறிதோர் இடைச்சொல் ஆண்டு அடுத்து வருதலும் ஆகிய அத்தன்மைய எல்லாம் உரிய, எ-று. உ-ம்: அதுமன், கேண்மியா என்பன மொழி 2முன் வந்தன. ‘கொன்னூர்’ (குறுந். 138), ‘ஓ ஓ கொடியை’ என்பன மொழிப் பின் வந்தன. ‘மன்னைச் சொல்’ (சூ.249) என்றவழி ஈறு திரிந்தது. ‘3வருகதில்லம்ம’ (அகம்.276) என்பது பிறிது அவண் நின்றது. பிறவுமன்ன. (3) 249. கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவியென் றம்மூன் றென்ப மன்னைச் சொல்லே. ஈண்டு உரைக்கப்படுகின்ற இடைச்சொல் நான்கும் பொருள் புணர் இடைச்சொல்லும், பொருள் புணரா இடைச் சொல்லும் என இருவகைப் படும். அவற்றுள், பொருள் புணர் இடைச்சொல்லாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) கழிந்தது என்னும் பொருண்மையும், ஆம் என்னும் பொருண்மையும், எஞ்சிய இசையான் உணரும் பொருண்மையும் உணரவரும்; மன் என்னுஞ் சொல், எ-று. மன் மன்னை என நின்றது. உ-ம்: ‘சிறியகட் பெறினே எமக்கீயு மன்னே’ (புறம். 235) என்புழி, மன் கழிந்தது என்னும் பொருள்பட நின்றது. ‘4புதுமலர் கஞல, இன்று பெயரினதுமனெம் பரிசிலாவியர் கோவே’ (புறம். 147) இதனுள் மன் என்பது ஆம் என்பது குறித்து நின்றது. ‘கூரியதொரு வாண் மன்’ என்ற வழித், திடமின்று என்றானும், வெட்ட வல்லார் உளராயின் என்றானும் ஒழிந்த சொல்லினான் உணரும் பொருள்பட்டது. (4) 250. விழைவே காலம் ஒழியிசைக் கிளவியென் றம்மூன் றென்ப தில்லைச் சொல்லே. இதுவும் அது. (இ-ள்.) விழைவுப் பொருளையும், காலப்பொருளையும், ஒழியிசைப் பொருளையும் உணரவரும் : தில் என்னுஞ் சொல், எ-று. உ-ம்: “5அரிவையைப் பெறுகதில் லம்ம யானே” (குறுந். 14) இது விழைவு பற்றி வந்தது. “6பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம், நுமக்கரி தாகுக தில்ல எமக்கெம், பெருந்தோட் கணவன் மாய்ந்தென வருப்பற, வள்ளித ழவிழ்ந்த தாமரை, நள்ளிரும் பொய்கையும் தீயுமோ ரற்றே” (புறம். 246) இதனுள் ஈமம் புகுதல் நுமக்கு அரிதாகுக. எமக்கு இக்காலத்துப் பொய்கையோடு ஒக்கும் என்றமையாற் காலங் குறித்தது, “7வருகதில் லம்மவெஞ் சேரிசேர” (அகம். 276) வந்தாலிவ்வாறு செய்வன் என்னும் ஒழியிசை குறித்து நின்றது. (5) 251. அச்சம் பயமிலி காலம் பெருமையென் றப்பால் நான்கே கொன்னைச் சொல்லே. இதுவும் அது. (இ-ள்.) அச்சப் பொருண்மையும், பயனின் றென்னும் பொருண்மையும், காலப் பொருண்மையும், பெரிதென்னும் பொருண்மையும் பற்றி வரும், கொன் என்னுஞ் சொல், எ-று. உ-ம்: ‘கொன் முனை யிரவூர் போல’ (குறுந். 91) என்பது அச்ச முணர நின்றது. ‘கொன்னே கழிந்தன் றிளமையும்’ (நாலடி. 55) என்புழிப் பயனின்மை யுணர நின்றது. ‘கொன் வரல் வாடை’ என்ற வழிப் பிரிந்த, காலத்து வருகின்ற வாடை எனக் கால முணர நின்றது. ‘கொன்னூர் துஞ்சினும்’ (குறுந்.138) என்றவழிப், பெருமையுணர நின்றது. இம்மூன்று சொல்லும் பெயர் வினையை யொட்டி வாராது தனி வந்து குறிப்பில் வழியாற் பொருளுணர்த் தினமையான், ஒப்பில் வழியாற் பொருள் செய்தன. பிறவும் இவ்வாறு வருவன அறிந்து கொள்க. (6) 252. எச்சம் சிறப்பே ஐயம் எதிர்மறை முற்றே எண்ணே தெரிநிலை ஆக்கமென் றப்பால் எட்டே உம்மைச் சொல்லே. இதுவும் அது. (இ-ள்.) எச்சம் முதலாகச் சொல்லப்பட்ட எண்வகைப் பொருளும் உணர வரும்: உம்மைச் சொல், எ-று. உ-ம்: எச்சம் இறந்தது தழீஇயதும், எதிரது தழீஇயதும் என இருவகைப்படும். சாத்தனும் வந்தான் என்றவழி, முன்னொருவன் வரவு குறித்தானாயின் இறந்தது தழீஇயதாம். பின்னொருவன் வரவு குறித்தானாயின் எதிரது தழீஇயதாம். தன்னையொழிந்த பொருளைக் குறித்தமையின் எச்சமாயிற்று. சிறப்பு என்பது மிகுதி. அஃது உயர்பான் மிகுதலும், இழிபான் மிகுதலும் என இருவகைப்படும். ‘8அக்காரம், யாவரே தின்னினுங் கையாதாங் கைக்குமே, தேவரே தின்னினும் வேம்பு’ (நாலடி. 112) என்றவழி, யாவர் என்றது இழிபு குறித்து நின்றது. தேவர் என்பது உயர்வுகுறித்து நின்றது. ஐயம் என்பது ஐயப்பட்ட பொருண்மை குறித்து வருவது. ‘ஏனல் காவ லிவளு மல்லள், மான்வழி வருகுந னிவனு மல்லன், அரந்தங் கண்ணி யிவனோ டிவளிடை, கரந்த வுள்ளமொடு’ என்றவழிக், காரணம் பிறிதாகல் வேண்டும் என்னும் ஐயங் குறித்து நின்றது. எதிர்மறையாவது யாதானும் ஒரு தொழிலை எதிர்மறுத்த தொழிற் கண்வரும். சாத்தன் வருதற்கு முரியன் என்றவழி, வாராமைக்கும் உரியன் என வரும். முற்றென்பது மற்றொரு பொருளை நோக்காது நிற்கும். தமிழ்நாட்டு மூவேந்தரும் வந்தார் என வரும். முழுதும் உணர்ந்தார் என்பதும் அது. எண் என்பது பலபொருளை எண்ணுதல் குறித்து வரும். ‘9மண்டி ணிந்த நிலனும், நிலனேந்திய விசும்பும், விசும்பு தைவரு வளியும் வளித் தலைஇய தீயும், தீ முரணிய நீரும்’ என வரும். தெரிநிலை என்பது ஒரு பொருளை ஐயப்படுதலும் துணிதலும் இன்றி, ஆராயும் நிலைமைக்கண் வரும். ‘10ஐதேய்ந் தன்று பிறையுமன்று, மைதீர்ந் தன்று மதியு மன்று’ என வரும். ஆக்கம் உம்மையடுத்த சொற்பொருண்மேல் ஆகும் நிலைமையைக் குறித்து வரும். வாழும் வாழ்வு, உண்ணுமூண் எனத் தொழிலினது ஆக்கங் குறித்து நின்றவாறு கண்டுகொள்க. இது பெயரெச்சவினைச் சொலன்றோ எனின், ஆம். அதன்கண்ணும் இடைச்சொல் என்க. அதனானேயன்றே ‘11உம் முந்தாகு மிடனுமா ருண்டே’ என்னும் இலக்கணத்தான், ‘12நெல் லரியுமிருந் தொழுவர்’ என்னும் பாட்டினுள், ‘செஞ் ஞாயிற்று வெயின் முனையிற், றெண்கடற் றிரைமிசைப் பாயும்’ எனற் பாலது பாயுந்து என வந்தது. இவ்விலக்கணம் வினையியலுள் ஓதாமையான் பெயரெச்ச உம் இடைச் சொல் என்று கொள்ளப்படும். பாயும் புனல் என்பது பாய்புனல் எனத் தொக்குழி, வேற்றுமைப் பொருட்கண் உருபு, பெயர் நிற்பத் தொக்கவாறு போல, வினை நிற்ப உருபு தொகுதலானும், செய்யும் என்பது வினையும் உருபுமாகிய இரு நிலைமைத்து என்று கொள்க. செய்யும் என்னும் முற்றுச் சொல்லின்கண் உம் எவ்வாறு வந்த தெனின், அது மற்றொரு பொருளைக் குறித்து நில்லாமையின் ஈண்டு இடமின்றென்க. முற்றி நிற்றலின் முற்றும்மை எனினும் இழுக்காது. ஆக்கவும்மை என்பதற்கு நெடியனும் வலியனும் ஆயினான் என உதாரணங் காட்டுப வாலெனின், அஃது எண்ணும்மை என்க. தனிவரின் எச்சவும்மை யாம். (7) 253. பிரிநிலை வினாவே எதிர்மறை ஒழியிசை தெரிநிலைக் கிளவி சிறப்பொடு தொகைஇ இருமூன் றென்ப ஓகா ரம்மே. இதுவும் அது. (இ-ள்.) பிரிநிலை முதலாக ஓதப்பட்ட ஆறிடமும் என்று சொல்லுவார்; ஓகாரமாகிய இடைச்சொல் பொருள் உணர்த்துமிடம், எ-று. உ-ம்: பிரிநிலையாவது பிறபொருளினின்றும் பிரித்தமை தோன்ற வருவது. ‘13கானங் காரெனக் கூறினும், யானோ தேறெனவர் பொய்வழங் கலரே’ (குறுந். 29), ‘அவரோ வாரார்’ (குறுந். 221) என வரும். எல்லாரும் தேறினும் யான் தேறேன், எல்லாரும் வரினும் அவர் வாரார் எனப் பிரிநிலைப் பொருண்மை தோன்றியவாறு கண்டுகொள்க. வினா என்பது வினாவுதற் பொருண்மேல் வரும். அதுவோ? உண்டாயோ? என வரும். எதிர்மறையாவது தன்னாற் சொல்லப்பட்ட பொருளின் மாறுபட்டு வந்தது. உண்ணேனோ, வாரேனோ என்றவழி உண்பல், வருவல் என்னும் பொருள்பட்டன. ஒழியிசையாவது தன்னாற்சொல்லப்பட்ட பொருளன்றி மற்றொரு பொருளுங் கொள்ள நிற்பது. செய்கையோ செய்தான் என்ற வழிப், பின்பும் இவ்வாறு செய்திலன் என்னும் பொருளுங் குறித்து நின்றவாறு கண்டு கொள்க. தெரிநிலை என்பது ஒருபொருளை ஆராயும் நிலைமைக்கண் வருவது. ‘திருமகளோ அல்லள், நாமகளோ அல்லள், இவள் யாராகும்’ என வரும். சிறப்பென்பது பொருளின் உயர்வு குறித்து நிற்கும், ‘கானகநாடனை நீயோஒ பெரும’ என வரும். அஃதேல் எழுத்ததிகாரத்து 14ஓகார வீற்றுள் ஐயமென்னும் ஓர் ஓகாரம் ஓதினாராலெனின், அது தெரிநிலைக்கண் அடங்கும் என்பதூஉமொன்று. வந்தது கண்டு வாராதது முடித்தல் என்பதனால், ஆண்டு ‘மாறுகோள் எச்சமும், வினாவும், ஐயமும்’ என ஓதப்பட்டவற்றுள் ஈண்டு வாராதஐயமுங் கொள்ளப்படும். ஒருவனோ, ஒருத்தியோ தோன்றுகின்றார் என வரும். (8) 254. தேற்றம் வினாவே பிரிநிலை எண்ணே ஈற்றசை இவ்வைந் தேகா ரம்மே. இதுவும் அது. (இ-ள்.) தேற்றம் முதலாக ஐந்து பகுதிய ஏகார இடைச்சொல், எ-று. உ-ம்: அவனேஎ செய்தான் என்பது துணிவுகுறித்தவழித், தேற்றேகாரமாம். ஈண்டு அளபெடைவரும். அவனே செய்தான் என்பது வினாக்குறித்தவழி, வினா வேகாரமாம். யானே வந்தேன் என்றவழிப், பிறர் கூடலின்றியே எனப் பொருள் படுதலிற் பிரிநிலையேகாரமாம். எண் எண்ணுக் குறித்து வரும் ‘சொல்லே குறிப்பே ஆயிரண்டெச்சம். ஈற்றசை என்பது சொல்லின் இறுதிக்கண் அசைநிலையாகி நிற்பது. ‘15கடல்போற் றோன்றல காடிறந்தோரே’ (அகம். 1) என வரும். அஃதேல், எழுத்ததி காரத்துள் ‘16மாறுகோள் எச்சமும் வினாவும் எண்ணும்’ (சூ. 275) என ஏகார ஈறு ஓதினார், அவற்றுள் மாறுகோள் எச்சம் ஈண்டு ஓதாதது என்னை யெனின், ‘17வன்புற வரூஉம் வினாவுடை வினைச் சொல், எதிர்மறுத்து உணர்த்துதற் குரிமையு முடைத்தே’ (238) என்றாராகலின் அது வினாவினுள் அடங்கும்; அன்றியும் வந்தது கண்டு வாராதது முடித்தல் என்பதனானுங் கொள்க. யான் வைதேனே என்றவழி வைதி லேன் என்னும் எதிர்மறைப்பொருளும் பட்டது. இவை மூன்று சொல்லும் பெயரோடு ஒட்டுப்பட்டு நின்று தத்தங் குறிப்பினாற் பொருள் உணர்த்தின. பிறவும் இவ்வாறு வருவன அறிந்து கொள்க. (9) 255. வினையே குறிப்பே இசையே பண்பே எண்ணே பெயரோ டவ்வறு கிளவியும் கண்ணிய நிலைத்தே எனவென் கிளவி. இதுவும் அது. (இ-ள்.) வினை முதலாகப் பெயரீறாகச் சொல்லப்பட்ட ஆறு சொல்லினையும் குறித்த நிலைமைத்து, என என்னுஞ் சொல், எ-று. உ-ம்: கொள்ளெனக் கொடுத்தான் என்பது வினைகுறித்து நின்றது. ‘18பொள்ளென வாங்கே புறம் வேரார்’ (குறள். 487) என்பது விரைவு என்னுங் குறிப்பு உணர நின்றது. ‘19கல்லெனக் கவின்பெற்ற விழவாற்றுப் படுத்தபின்’ (கலி. 5) என்பது இசைப் பொருண்மை குறித்து நின்றது. ‘கன் முகை யருவி தண்ணெனப் பருகி’ (புறம். 150) என்பது பண்புகுறித்து நின்றது. ‘பாழெனக், காலெனப், பாகென, ஒன்றென, இரண்டென’ (பரிபாடல் 3) என்பது எண்ணுக்குறித்து நின்றது. ‘20நாளென ஒன்றுபோற் காட்டி’ என்றவழிப், (குறள். 334) பெயர் குறித்து நின்றது. எழுத்ததிகாரத்துள் (சூ. 204) 21என என்னெச்சமென ஓதுதலான் இவையெல்லாம் வினையெச்சப் பொருண்மை யுணரவும், பெயரெச்சப் பொருண்மை யுணரவும் வரும் என்று கொள்க. ‘ஊரெனப் படுவது உறையூர்’ எனவும் சிறப்புப் பற்றியும் வருமாலெனின், அது பெயர்ப் பொருளின் பாகுபாடாதலிற் பெயரென அடங்கும். (10) 256. என்றென் கிளவியும் அதனோ ரற்றே. இதுவுமது. (இ-ள்.) என்று என்னுமிடைச் சொல்லும் மேற் சொல்லப் பட்ட அறுவகைப் பொருண்மையுங் குறித்து நிற்கும், எ-று. உ-ம்: கொள்ளென்று கொடுத்தான். துண்ணென்று துடித்தது. ஒல்லென்று ஒலித்தது. பச்சென்று கிடந்தது. நிலனென்று நீரென்று. ‘சினத்தைப் பொருளென்று கொண்டவன்’ என வரும். இது மாட்டேற்று வகையான் எச்ச வாய்பாட்டதென்று கொள்க. இச் சொற்களானும் செய்யும் என்பதன்கண் உம் இடைச் சொல்லாயின வாறு கண்டுகொள்க. (11) 257. விழைவின் தில்லை தன்னிடத் தியலும். இத்துணையும் பலபொருள் குறித்த இடைச்சொல் ஓதி, இனி ஒரு பொருள் குறித்த இடைச்சொல் ஓதுகின்றாராகலின், மேற்சொல்லப் பட்டவற்றுள் ஒரு சொற்குப் புறநடை யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) விழைவுப் பொருட்கண் வரும் தில்லைச்சொல் சொல்லு வான்மாட்டே நிகழும், எ-று. உதாரணம் மேற்காட்டப்பட்டது. (12) 258. தெளிவின் ஏவும் சிறப்பின் ஓவும் அளபின் எடுத்த இசைய என்ப. இதுவுமது. (இ-ள்.) தேற்றேகாரமும், சிறப்பின் வரும் ஓகாரமும் அளபெடை பெற்று வரும் என்று சொல்லுவர், எ-று. உதாரணம் மேற்காட்டப்பட்டது. (13) 259. மற்றென் கிளவி வினைமாற் றசைநிலை அப்பால் இரண்டென மொழிமனார் புலவர். ஒரு பொருள் குறித்த இடைச்சொல் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மற்று என்னுமிடைச்சொல் ஒரு வினையை மாற்றுதற் பொருட்கண்ணும், அசைநிலையாகியும் வரும், எ-று. உ-ம்: ‘22மற்றறிவா நல்வினை யாமிளையம்’ என்றவழி மற்று என்பது பின்பு அறிவாம் என அக்காலத்துச் செய்கின்ற வினையை மாற்றி நின்றது. ‘23மற்றடிகள் கண்டருளிச் செய்க மலரடிக்கீழ்’ என்றவழி அசைநிலை யாயிற்று. (14) 260. எற்றென் கிளவி இறந்த பொருட்டே. இதுவுமது. (இ-ள்.) எற்று என்னும் சொல் கழிந்தது என்னும் பொருண்மை யுடைது, எ-று. உ-ம்: எற்றெ னுடம்பி னெழினலம் என வரும். (15) 261. மற்றைய தென்னும் கிளவி தானே சுட்டுநிலை ஒழிய இனங்குறித் தன்றே. இதுவுமது. (இ-ள்.) மற்றையது என்னுஞ் சொல் சுட்டி நின்ற பொருள் ஒழிய அதற்கினமாகிய பொருளைக் குறித்து நிற்கும், எ-று. அது என்பது எவ்வாறு வந்தது எனின், மேல் வினைமாற்று என்றார், இது பொருள் மாற்று என்பதனை விளக்குதற்கு அது என்பதனைக் கூட்டி யுரைத்தார், அது என்பது பெயராதலின் ‘24ஒருபாற்கிளவி எனைப்பாற் கண்ணும் வருவகைதாமே வழக்கென மொழிப’, என்பத னான் ஐந்து பாற்கண்ணும் கொள்க. அவ்வாறு கொள்ளவே, மற்றை என்பது இடைச்சொல்லாகி நின்று பிறபொருளுணர்த்தியவாறு கண்டுகொள்க. இனங்குறித்து என்றமையாற், சுட்டப்பட்ட பொருட்கு இனமாகிய பொருளையே குறிக்கும். ஆடை கொணர்ந்தவழி,மற்றையதோ என்றவழிக், கொணர்ந்ததொழியப் பிறிதுமோராடையைச் சுட்டியவாறு கண்டு கொள்க. ஒரு வினைசெய்வார் இருவருள் வழி, ஒருவனைக் கண்டவன் மற்றையவனோ என்றவழி, அதுவும் இனங்குறித்தது. பிறவுமன்ன. (16) 262. மன்றவென் கிளவி தேற்றம் செய்யும். இதுவுமது. (இ-ள்.) மன்ற என்னுஞ் சொல் தேற்றப் பொருண்மையை உணர்த்தும், எ-று. உ-ம்: ‘25கடவு ளாயினு மாக-மடவை மன்ற வாழிய முருகே’ என்ற வழிக், கடவுளாயினும் மடவை எனத் தேற்றப் பொருண்மை காட்டிற்று. (17) 263. தஞ்சக் கிளவி எண்மைப் பொருட்டே. இதுவுமது. (இ-ள்.) தஞ்சம் என்பது எளிமை என்னும் பொருண்மையை உடைத்து, எ-று. உ-ம்: ‘26முரசுகெழு தாயத் தரசோ தஞ்சம்’ என்பது எளிதென்பது குறித்து நின்றது. (18) 264. அந்தில் ஆங்க அசைநிலைக் கிளவியென் றாயிரண் டாகும் இயற்கைத் தென்ப. இதுவுமது. (இ-ள்.) அந்தில் என்பது ஆங்கு என்னும் பொருண்மை பெற்றும், அசைநிலையாகியும் வரும், எ-று. உ-ம்: ‘27வருமே சேயிழை யந்திற்-கொழுநற் காணிய’ என்பது ஆங்கென்னும் பொருளுணர்த்திற்று. ‘அந்திற் கச்சினன் கழலினன்’ (அகம்.76) என்புழி, அசைநிலை யாயிற்று. (19) 265. கொல்லே ஐயம். இதுவுமது. (இ-ள்.) கொல் என்பது ஐயங் குறித்து வரும், எ-று. உ-ம்: ‘அதுகொல் தோழி காம நோயே’ (குறுந். 5), என்றவழி ஐயங் காட்டிற்று. (20) 266. எல்லே இலக்கம். இதுவுமது. (இ-ள்.) எல் என்பது இலங்குதல் குறித்து வரும், எ-று. உ-ம்: ‘எல்வளை’ (புறம்.24) - இலங்குவளை. இது உரிச்சொல்லன்றோ எனின், அது குறைச்சொல்லாகி நிற்கும். இது குறையின்றி நிற்றலின் இடைச்சொல்லாயிற்று. (21) 267. 28இயற்பெயர் முன்னர் ஆரைக் கிளவி பலர்க்குரி எழுத்தின் வினையொடு முடிமே அசைநிலைக் கிளவி ஆகுவழி யறிதல். அசைநிலை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இயற்பெயர் முன்னர் வரும் ஆர் என்னும் இடைச்சொல் ஒருமைப் பொருண்மேல் வரினும், பலர்க்குரித் தாகிய எழுத்தினையுடைய வினையொடு முற்றுப் பெறும் : அஃது அசை நிலைக்கிளவி ஆகுமிட னறிந்து கொள்க, எ-று. வந்தது கண்டு வாராதது முடித்தல் என்பதனான் பிறபெயர்க் கண்ணும் ஏற்பன கொள்க. “பலர்க்குரி யெழுத்தின் வினையொடு முடிமே” வினையொடும் என்ற உம்மை எச்சவும்மையாகலான், ஒருமையான் வரவும் பெறும் என்றவாறு. இதனானே, இடைச்சொற்பற்றிவரும் பால் வழுவும், திணை வழுவும் அமைத்தவாறாயிற்று. உ-ம்: சாத்தனார், சாத்தியார், நம்பியார், நங்கையார், முடவனார், முடத்தியார், தாயார், தந்தையார், கிளியார், மயிலார் என்பன ஒருமை யுணர்த்தி நின்றனவாயினும், வினையொடு வருங்கால் வந்தார் என வரும். நம்பியார் வந்தான், நங்கையார் வந்தாள் என இவ்வாறு வருதற்கேற்பனவுங் கொள்க. “ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும்” (கிளவி. 27) என்பதனுள் அடங்காதோ எனின், ஆண்டு உரைத்த விடையே ஈண்டும் உரைக்க. ‘ஆர்’ என்பது இடைச்சொல்லாயின், இப்பெயருடையார் பலர் வந்துழிக் கூறுமாறு என்னை யெனின், அதனானே யன்றே மார் என்பது வேறு எடுத்தோதல் வேண்டிற்று. “29எல்லா உயிரொடுஞ் செல்லுமார் முதலே” என்புழி, ஆர் அசைநிலை யாயிற்று. (22) 268. 30ஏவுங் குரையும் இசைநிறை அசைநிலை ஆயிரண் டாகு மியற்கைய வென்ப. அசைநிலையும் இசை நிறையும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஏ என்னும் சொல்லும், ‘குரை’ என்னும் சொல்லும் இசை நிறைத்தலாகியும், அசை நிலையாகியும் வரும் அவ்விரண்டு நிலைமையும் உடைய, எ-று. ஈண்டு ஏ என்றமையான் ஓரெழுத்தொரு மொழியாகிய உயிரெழுத்தே கொள்ளப்படும். முன் கூறப்பட்ட ஏகாரம் மொழிக்கு ஈறாகி வருதலின், உயிர்மெய்யென்று கொள்ளப்படும். இசை நிறையாவது இசை நிறைத்தற்பொருட்டு ஒருசொல்லோடு ஒட்டிவரும். அசை நிலையாவது தனி வரும். ‘ஏ ஏ இவளொருத்தி பேடியோ வென்றார்’ (சீவக. 652) என்றவழி, ஏ என்பது இசை நிறையாயிற்று. ஏ தெளிந்தேம்யாம் என்பது அசைநிலையாயிற்று. ‘அளிதோ தானேயது பெறலருங் குரைத்தே’ (புறம். 5), ‘சேர்ந்த சினையிளங் குரையவாயினும்’ என்பன இசைநிறை. ‘நல்குர வென்னு மிடும்பையுட் பல்குரைத் துன்பங்கள் சென்று படும்’ (குறள். 1045). இஃது அசை நிலை. (23) 269. மாவென் கிளவி வியங்கோள் அசைச்சொல். அசைநிலை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மா என்னுஞ் சொல் வியங்கோட்கண் அசை நிலையாகி வரும், எ-று. உ-ம்: ‘உப்பின்று - புற்கை யுண்கமா கொற்கை யோனே’, ‘ஓர்கமா தோழியவர் தேர்மணிக் குரலே’ என வரும். (24) 270. மியாயிக மோமதி இகுஞ்சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல். இதுவுமது. (இ-ள்.) இவை ஆறு சொல்லும் முன்னிலை வினைச் சொற்கண் அசைநிலையாகி வரும், எ-று. உ-ம்: கேண்மியா. ‘தண்டுறை யூரயாங்’ கண்டிக’. ‘காமஞ் செப்பாது கண்டது மொழிமோ’ (குறுந். 2). ‘சென்மதி பெரும’. ‘மெல்லம் புலம்ப கண்டிகும்’. ‘காப்பும் பூண்டிசிற் கடையும் போகல்’ (அகம்.7) என வரும். இவை கேள், காண், மொழி, செல், காண், பூண் என்னும் பொருட்கண் ஆய் என்பது திரிந்து வந்தன. (25) 271. அவற்றுள், இகுமுஞ் சின்னும் ஏனை யிடத்தொடு தகுநிலை யுடைய என்மனார் புலவர். எய்தியதன்மேற் சிறப்பு விதி வகுத்தலை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்டவற்றுள் இகுமும், சின்னும் தன்மையினும், படர்க்கையினும் வருதல் தகுநிலையுடைய வென்று சொல்லுவர், எ-று. உ-ம்: “கண்டிகு மல்லமோயாமே.” (ஐங்குறு.121) “கண்ணும் படுமோ வென்றிசின் யானே” (நற்.61) இவை கண்டேம், என்றேன் என்னும் பொருட்கண் வந்தன. “புகழ்ந்திகு மலரோ” பெரிதே; “பாடல் சான்ற விறல்வேந் தனும்மே”, வெப்புடைய வரண் கடந்து துப்புறுவர் புறம் பெற்றிசினே.” (புறம். 11) இவை புகழ்ந்தார், பெற்றான் என்னும் பொருட்கண் வந்தன. “யாரஃ தறிந்திசி னோரே.” (குறுந்.18) எனப் பால் காட்டும் எழுத்தோடு அடுத்து வருதலுங் கொள்க. (26) 272. அம்மகேட் பிக்கும், இதுவும் அசைநிலைச்சொல் பொருள் படுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அம்ம என்னும் சொல் அசைநிலை யாகலேயன்றிக் கேள் என்னும் பொருளும் படும், எ-று. உ-ம்: ‘அம்ம வாழி தோழி’ (ஐங். 31) என்றவழிக் கேள் என்னும் பொருள் குறித்து நின்றது. ‘உண்டா லம்மவிவ் வுலகம்’ (புறம்.182) என்பது அசைநிலையாகி வந்தது. அசைநிலை என்பது எற்றாற் பெறுது மெனின், மேல் “அம்ம என்னும் அசைச்சொல் நீட்டம்” (விளிமரபு. 35) என்பதனாற் பெறுதும். (27) 273. ஆங்க உரையசை. அசை நிலை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ‘ஆங்க’ என்னுஞ்சொல் உரையிடத்து அசை நிலையாம், எ-று. உ-ம்: “ஆங்கக் குயிலு மயிலுங் காட்டி” என வரும். (28) 274. ஒப்பில் போலியும் அப்பொருட் டாகும். இதுவுமது. (இ-ள்.) ஒப்புக் குறியாத ‘போல்’ என்னும் சொல்லும் உரையசை யாம், எ-று. உ-ம்: அவர் வந்தார் போலும். இதனுள் வந்தார் எனத் துணிந்த வழி வருதலின், அசைநிலையாயிற்று. (29) 275. யாகா, பிறபிறக் கரோபோ மாதென வரூஉம் ஆவேழ் சொல்லும் அசைநிலைக் கிளவி. இதுவுமது. (இ-ள்.) யா முதலாகச் சொல்லப்பட்ட ஏழு சொல்லும் அசைநிலைக் கிளவியாம், எ-று. உ-ம்: யா-”தோழியா சுவாகதம் போதுக ஈங்கென” (சீவக. 1021) கா-”புற நிழற் பட்டாளோ இவளிவட் காண்டிகா” (கலி. 99) பிற-”தான் பிற-வரிசை யறிதலிற் றன்னுந் தூக்கி” (புறம். 140) பிறக்கு -”நசைபிறக் கொழிய” (புறம். 15) அரோ -”நோதக, விருங்குயி லாலுமரோ” (கலி. 33) போ -”பிரியின் வாழா தென்போ தெய்ய” மாது -”விளிந்தன்று மாதவர்த் தெளிந்தவென் னெஞ்சே” (நற். 178) என வரும். (30) 276. ஆக ஆகல் என்ப தென்னும் ஆவயின் மூன்றும் பிரிவில் அசைநிலை. இதுவுமது. (இ-ள்.) இவை மூன்று சொல்லும் பிரிவின்றி இரட்டித்த விடத்து அசைநிலையாம் என்றவாறு. உ-ம்: ஆக ஆக, ஆகல் ஆகல், என்பதென்பது எனவரும். (31) 277. ஈரள பிசைக்கும் இறுதியில் உயிரே ஆயியல் நிலையுங் காலத் தானும் அளபெடை நிலையுங் காலத் தானும் அளபெடை யின்றித் தனிவருங் காலையும் உளவென மொழிப பொருள்வேறு படுதல் குறிப்பின் இசையான் நெறிப்படத் தோன்றும். ஒருசார் இடைச்சொற் பொருள் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இரண்டு மாத்திரையாகி யொலிக்கும் உயிர்களுள் இறுதி யாகிய ஒளகாரம் அல்லாத உயிர்கள் மேற்கூறியவாறு போல இரட்டித்து வருங் காலத்தினும், அளபெடை பெற்று வருங் காலத்தினும், தனிவருங் காலத்தினும் பொருள் வேறுபடுதல் உள என்று சொல்லுவர் ஆசிரியர். அவை ஒரு பொருள் உணர்த்தும் வழி, ஓசையானும், குறிப்பானும் பொருள் உணர்த்தும், எ-று. உ-ம்: அவையாவன:-ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, என்பன. ஒருவன் தகுதியல்லாத செய்த வழியும், அரியன செய்த வழியும், ஆ, ஆ என்ப. வியப்புள வழியும், துன்பமுள வழியும் ஆ ஆ என்ப. தமக்கு இசைவில்லாதது ஒன்றை ஒருவன் சொன்னவழி, அதனை மறுப்பார் ஆ என்ப. ஈ என்றவழி அருவருத்துலை உணர்த்தும். ஊ உ என்றவழி, இசைவை உணர்த்தும். “ஏ எ இஃதொத்தன்” (கலி.62) என்றவழி, இகழ்ச்சியை யுணர்த்தும். “ஏ என இறைஞ்சி யோளே” என்ற வழி, நாணங்குறித்து நின்றது. ஐ ஐ என்ற வழி, இசைவை உணர்த்தும். “ஓ ஒ உவமை உறழ் வின்றி ஒத்ததே” (களவழி. 36) என்றவழி, மிகுதியை உணர்த்தும். ஓ என்றவழி இசைவையும், இரக்கத்தையும் உணர்த்தும். ஓ ஒ என்பது விலக்குதலை உணர்த்தும். பிறவும் இவ்வாறு இரட்டித்தும், அளபெடுத்தும், தனி வந்தும் பொருள் வேறுபடுவன வந்தவழிக் கண்டு கொள்க. அஃதேல், ‘ஏவுங் குரையும்’ (268) என மேல் ஓதவேண்டிய தென்னை? அதுவும் இதனுள் அடங்குமாலெனின், ஆண்டுப் பொருளுணர்த்தா நிலையைக் கூறினார், ஈண்டுப் பொருளுணர்த்தும் நிலைமை கூறினார் என்க. (32) 278. நன்றீற் றேவும் அன்றீற் றேவும் அந்தீற் றோவும் அன்னீற் றோவும் அன்ன பிறவும் குறிப்பொடுங் கொள்ளும். ஏகார ஓகாரங்கட்கு வருவதோர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) நன்று, அன்று என்பவற்றின்கண் வரும் ஏகாரமும், அந்து, அன் என்பவற்றின்கண் வரும் ஓகாரமும், அத்தன்மைய பிறவும் மேற்கூறியவாற்றானன்றிக் குறிப்புப் பொருளோடும் ஏற்கும். உம்மை இறந்தது தழீஇயிற்று, எ-று. உ-ம்: சென்றே யெறிப வொருகால் சிறுவரை நின்றே யறைப பறையினை-நன்றேகாண் முக்காலைக் கொட்டினுள் மூடித்தீக் கொண்டெழுவர் செத்தாரைச் சாவார் சுமந்து. (நாலடி. 24) இதனுள் நன்றே காண் என்பது தீதே காண் என்னுங் குறிப்புணர்த்திற்று. “நின்னையன்றே திருமுக்குடையாய்” என்றவழி அன்றே என்பது அல்லாமையைக் குறியாது முக்குடையானையே சுட்டி நின்று அவன் கேட்பது பயனாக வந்தது. “பொன்னே கொடுத்தும்” (நாலடி.162) என்பதனுள், அன்னோ என்பது அருள் குறித்து நின்றது. “31வெந்திறற் கூற்றம் பெரும்பே துறுப்ப-அந்தோ வளியென் வந்தனென் மன்ற” (புறம். 238) என்றவழி, அந்தோ என்பது கேடு குறித்து நின்றது. அன்ன பிறவுமாகிவருவன வந்தவழிக் கண்டுகொள்க. (33) 279. எச்ச வும்மையும் எதிர்மறை உம்மையும் தத்தமுள் மயங்கும் உடனிலை இலவே. உம்மைக்குரியதோரு புறநடை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) எச்ச உம்மையும், எதிர்மறை உம்மையும் தத்தமுள் மயங்கும் உடனிலை இல, எ-று. உ-ம்: சாத்தனும் வந்தான் என்றவழிக் கொற்றனும் வரும் என்றாதல், வந்தான் என்றாதல் கூறுதலன்றி, வாரான் என்னற்க. ஒரு தொழிலே கூறல் வேண்டும் என்றவாறு. (34) 280. எஞ்சுபொருட் கிளவி செஞ்சொ லாயிற் பிற்படக் கிளவார் முற்படக் கிளத்தல். எச்ச உம்மைக்கண் வழூஉக் காத்தலை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) எஞ்சு பொருட்கிளவி, உம்மையில் சொல்லாயின், அவ் வும்மையை வருகின்ற சொல்லொடு கிளக்க, எ-று. உ-ம்: சாத்தனும் வந்தான், கொற்றனும் வரும் என்றற் பாலதன்கண் ஓர் உம்மைவரின், சாத்தன் வந்தான், கொற்றனும் வரும் என்க, சாத்தனும் வந்தான், கொற்றன் வரும் என்னற்க. (35) 281. முற்றிய உம்மைத் தொகைச்சொல் மருங்கின் எச்சக் கிளவி உரித்தும் ஆகும். இஃதும் உம்மைக்கண் வருவதோர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) முற்றும்மைத் தொகைச்சொல்லின்கண் எச்சப் பொருண்மையும் உரித்து, எ-று. ஈண்டுத் தொகை என்றது எண்ணின் தொகை. உ-ம்: நின் கையிற் காணம் பத்துங் கொடால் - என்றவழிச் சில கொடுக்க என்றவாறாம். இது மறுத்த வாய்பாட்டானல்லது வாராது. (36) 282. ஈற்றுநின் றிசைக்கும் ஏயென் இறுதி கூற்றுவயின் ஓரள பாகலும் உரித்தே. ஏகாரத்திற்கு உரியதொரு மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) செய்யுள் இறுதிக்கண் நின்று ஒலிக்கும் ஏகாரம் சொல்லு மிடத்து ஒருமாத்திரையாகி நிற்கவும் பெறும், எ-று. உ-ம்: ‘கடல்போற் 32றோன்றல காடிறந் தோரே’. (அகம். 1.) இது ஒரு மாத்திரையாகி நிற்கும். (37) 283. உம்மை எண்ணும் எனவென் எண்ணும் தம்வயிற் றொகுதி கடப்பா டிலவே. எண்ணின்கட் படுவதோர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உம்மையான் எண்ணப்பட்ட எண்ணும், எனவான் எண்ணப்பட்ட எண்ணும் தம்மிடத்துத் தொகை பெறுதல் நியமம் இல, எ-று. உ-ம்: முத்தும் பவழமும் பொன்னும்கொணர்ந்தான். நன்றெனத் தீதென நின்றது. முத்தும், பவழமும், பொன்னும் மூன்றுங் கொணர்ந்தான். நன்றெனத் தீதென இரண்டுமாகி நின்றது என இருபாற்றானும் வரும். (38) 284. எண்ணே காரம் இடையிட்டுக் கொளினும் எண்ணுக்குறித் தியலும் என்மனார் புலவர். இதுவுமது. ஏகாரத்திற்குப் புறநடை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) எண்ணுக்குறித்த ஏகாரம் சொற்றொறுங் கொள்ளாது ஒருவழிக் கொளினும் எண்ணுக் குறித்து நடக்கும், எ-று. உ-ம்: ‘தோற்றம் இசையே நாற்றஞ் சுவையே, உறலோ டாங்கைம் புலனென மொழிப’ என்புழி, இடையிட்டு வந்தும் எண்ணுக் குறித்தது. (39) 285. உம்மை தொக்க எனாவென் கிளவியும் ஆவீ றாகிய என்றென் கிளவியும் ஆயிரு கிளவியும் எண்ணுவழிப் பட்டன. எண்ணின்கண் வருவன சில இடைச்சொல் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உம்மை தொக்க எனவின் திரிபாகிய எனா என்னுஞ் சொல்லும், ஆவீறாகிய என்று என்னும் சொல்லும் எண்ணின்கட் பட்டன. எ-று என என்பது எனா எனவும், என்று என்பது என்றா எனவும் வரும், எ-று. உ-ம்: வளிநடந் தன்ன வாஅய்ச்செல் லிவுளியொடு-கொடி நுடங்கு மிசைய தேரின ரெனாஅக்-கடல்கண் டன்ன வொண்படைத் தானையொடு-மலைமாறு மலைக்கும் களிற்றின ரெனாஅ (புறம்.197) என்பதனுள் என என்பது எனா என்று வந்து எண்ணுக் குறித்தவாறு கண்டுகொள்க. ‘ஒப்பு முருபும் வெறுப்பு மென்றா, கற்பு மேரு மெழிலு மென்றா’ (பொருளியல். 53). என்பதனுள் என்று என்பது ஆவொடு கூடி எண்ணுக் குறித்தவாறு கண்டுகொள்க. (40) 286. அவற்றின் வரூஉம் எண்ணின் இறுதியும் பெயர்க்குரி மரபிற் செவ்வெண் இறுதியும் ஏயி னாகிய எண்ணின் இறுதியும் யாவயின் வரினும் தொகையின் றியலா. எண்ணுதற் குரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்ட எனா என்றா என்பனவற்றான் வரும் எண்ணிறுதியும், பெயர்க்குரி மரபினானெண்ணப்படும் செவ்வெண் இறுதியும், ஏகாரத்தான் எண்ணப்பட்ட எண்ணின் முடிவும் யாதானும் ஒரு நெறியான் வரினும் தொகையின்றி வழங்கா, எ-று. உ-ம்: மாத்திரை யெழுத்திய லசைவகை யெனாஅ- யாத்த சீரே யடியாப் பொனாஅ ஆறுதலை யிட்ட வந்நா லைந்தும். (செய்யுளியல். 1) எனவும், “அவைதாம், பெயர்ச்சொல் லென்றா வினைச்சொல் லென்றா, இரண்டன் பாலா வியங்குமன் பயின்றே” எனவும்; “படைகுடி கூழமைச்சு நட்பரணாறும், உடையான் அரசருள் ஏறு” (குறள்.381) எனவும், “தேற்றம் வினாவே பிரிநிலை எண்ணே, ஈற்றசை இவ்வைந் தேகாரம்மே” (சூ.254) எனவும் எண் தொகை பெற்றவாறு கண்டுகொள்க. ‘கண்கால் புறமகம்’ என்னும் சூத்திரத்துள் (வேற்றுமையியல். 20) எனாவும், “ஒப்பு முருவும்” (பொருளியல். 53) என்னுஞ் சூத்திரத்துள் என்றாவும்; “33நிலப்பெயர் குடிப்பெயர்” (பெயரியல் 11) என்னுஞ் சூத்திரத்துள் ஏகாரமும் தொகை பெற்றிலவாலெனில், அவை, ‘அன்ன பிறவும்’ எனவும், ‘கிளவி யெல்லாம்’ எனவும், ‘அனைத்தும்’ எனவும் தொகைப் பொருண்மை தோன்ற வந்தன. ‘செல்லலின்ன லின்னா மையே’ (உரியியல்7) என்பதன்கண் தொகை பெற்றின்றாலெனின், யாவயின் வரூஉம் என்றமையான், தொகையின்றிவரினும், அப்பொருளுரைக்குங்கால், தொகை யின்றி இயலா எனக் கொள்க. உடம்பொடு புணர்த்தல் என்பதனான் எண்ணேகாரம் இடையிட்டு வருதலேயன்றி, எனாவும், என்றாவும் இடையிட்டு வருதலுங் கொள்க. (41) 287. உம்மை எண்ணின் உருபுதொகல் வரையார். எண்ணும்மைக்கு உரியதோர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உம்மையான் எண்ணப்பட்ட பொருளின்கண் வரும் உருபாகிய உம்மை ஓரிடத்துத் தொகுதலும் நீக்கார், எ-று. எனவே, சொற்றொறும் உம்மை கொடாக்காலும் உம்மை எண்ணாகும் என்றவாறாம். உ-ம்: “இயங்குபடை யரவ மெதிர்பரந் தெடுத்தல், வயங்க லெய்திய பெருமை யானும், கொடுத்த லெய்திய கொடைமை யானும்” (புறத்திணை. 8) என உம்மை ஒரோவழித் தொக்கு நின்றது. இவ்விலக்கணம் எண்ணும்மைக்கே யுரித்து. (42) 288. உம்முந் தாகும் இடனுமா ருண்டே. இதுவுமது. (இ-ள்.) உம் என்பது உந்து எனத் திரிந்து நிற்கவும் பெறும் இடமும் உண்டு, எ-று. உ-ம்: “நெல்லரியு மிருந்தொழுவர், செஞ்ஞாயிற்று வெயின் முனையிற், றெண்கடற்றிரை மிசைப்பாயுந்து, திண்டிமில் வன்பரதவர், வெப்புடைய மட்டுண்டு, தண்குரவைச் சீர்தூங்குந்து, தூவற் கலித்த தேம்பாய் புன்னை, மெல்லிணர்க் கண்ணி மிலைந்த மைந்தர், எல்வளை மகளிர் தலைக்கை தரூஉந்து, வண்டுபட மலர்ந்த தண்ணறுங் கானன், முண்டகக் கோதை யொண்டொடி மகளிர், இரும்பனையின் குரும்பைநீரும், பூங்கரும்பின் றீஞ்சாறும், ஓங்குமணற் குவவுத்தாழைத், தீநீரோ டுடன்விராய், முந்நீ ருண்டு முந்நீர்ப் பாயுந், தாங்கா வுறையுணல்லூர் கெழீஇய.’’ (புறம். 24) என்றவழி உம் உந்தாயிற்று. எண்ணும்மை அதிகாரப்பட்டு வருதலான், இவ்வாறு வருவது ஒரு பொருண்மேல் உம்மை அடுக்கியவழி என்று கொள்க. ஈண்டு எண்ணும்மை யாங்கதெனின், ஒரு பொருண்மேல் பல வினைச்சொல் வருதலின், அவை ஒரு முகத்தான் எண்ணப் பட்டவாம். (43) 289. வினையொடு நிலையினும் எண்ணுநிலை திரியா நினையல் வேண்டும் அவற்றவற் றியல்பே. இதுவுமது. (இ-ள்.) மேற் சொல்லப்பட்ட எண்ணின் வேறுபா டெல்லாம் வினையொடு நிற்பினும் எண்ணுநிலை திரியா; ஆண்டு அவற்றவற்றியல்பு ஆராய்தல் வேண்டும், எ-று. எனவே ஒரு முடிபுடையவல்ல: தொகை பெற்றும் பெறாதும் வரும் என்றவாறாம். உ-ம்: ‘வளிநடந் தன்ன வாஅய்ச்செலல் இவுளியொடு, கொடிநுடங்கு மிசைய தேரின ரெனாஅக், கடல்கண் டன்ன வொண்படைத் தானையொடு, மலைமாறு மலைக்குங் களிற்றின ரெனாஅ, உருமுரன் றன்ன வுட்குவரு முரசமொடு, செருமேம் படூஉம் வென்றிய ரெனாஅ, மண்கெழு தானை யொண்பூண் வேந்தர், வெண்குடைச் செல்வம் வியத்தலோ விலமே.’’ (புறம். 197) என்புழி, வினைக்குறிப் பெண்ணிவந்து தொகைபெறாது நின்றது. “நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும், பேணாமை பேதை தொழில்.” (குறள். 833) இதுவும் தொகை பெறாது வந்தது. தொகை பெற்று வந்தன வந்தவழிக் கண்டுகொள்க. (44) 290. என்றும் எனவும் ஒடுவும் தோன்றி ஒன்றுவழி யுடைய எண்ணினுள் பிரிந்தே. இதுவும் எண்ணின்கண் வருவதோர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) என்றும், எனவும், ஒடுவும் எண்ணினுட் பிரிந்து ஒருவழித் தோன்றி எல்லாப் பெயரோடும் ஒன்றும் நெறியுடைய, எ-று. இதனானே ஒடு என ஓரிடைச்சொல் கூறியவாறு மாயிற்று. உ-ம்: “இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொலென், றனைட்தே செய்யு ளீட்டச் சொல்லே” (எச்சவியல் 1) எனவும், “யாகா, பிறபிறக் கரோபோ மாதென வரூஉம், ஆவேழ் சொல்லும்” (சூ. 275) எனவும், “பொருள்கருவி காலம் வினையிடனொ டைந்தும், இருடீர வெண்ணிச் செயல்” (குறள். 675) எனவும் இவை ஒரோவழிப் பிரிந்து நின்று எல்லாப் பெயரோடும் ஒன்றிமுடிந்தவாறு கண்டுகொள்க. வந்தது கொண்டு வாராதது முடித்தல் என்பதனான் ‘என்னும்’ என்னுஞ் சொல்லும் இவ்வாறு வருமெனக் கொள்க, “மியாயிக மோமதி யிகுஞ்சின் என்னும், ஆவயி னாறும் முன்னிலை யசைச்சொல்” (சூ. 270) என்றவழி ‘என்னும்’ என்பதும் வந்தது. எண்ணினுட் பிரிந்தெனப் பொதுப்படக் கூறினமையான் எல்லா எண்ணொடும் வரப்பெறும் என்று கொள்க. “சொல்லெனப் படுப பெயரே வினையென், றாயிரண் டென்ப வறிந்திசி னோரே” (பெயரியல் 4) என்றவழி ஏகாரம் எண்ணின்கண் வந்தது. பிறவும் பிற எண்ணோடு வருமாறு வந்தவழிக் கண்டுகொள்க. (45) 291. அவ்வச் சொல்லிற் கவையவை பொருளென மெய்பெறக் கிளந்த இயல வாயினும் வினையொடும் பெயரொடும் நினையத் தோன்றித் திரிந்துவேறு படினும் தெரிந்தனர் கொளலே. எடுத்தோதப்பட்ட இடைச்சொற் கெல்லாம் புறநடை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்ட இடைச் சொற்களெல்லாம் தனித் தனியே இதற்கு இது பொருளென எடுத்து உணர்த்தப் பட்டனவாயினும், வினையொடும், பெயரொடும் குறிக்கப் புலப்படும் மற்றொரு வேறுபாட்டனவாகி வரினும், அவ் வேறுபாடு ஆராய்ந்து அதுவும் அதற்கு இலக்கணமாகக் கொள்க, எ-று. உ-ம்: “ஒத்த மொழியாற் புணர்த்தன ருணர்த்தல், தத்த மரபிற் றோன்றுமன் பொருளே,” என்றவழி, மன் அசைநிலை யாயிற்று. “உறக்குந் துணையதோ ராலம்வித் தீண்டி, யிறப்ப நிழற்பயந் தாஅங்-கறப்பயனுந், தான்சிறி தாயினும் தக்கார்கைப் பட்டக்கால், வான்சிறிதாப் போர்த்து விடும்’’ (நாலடி. 38) என்பதனுள், உம்மை இசைநிறை யாயிற்று. “கான்கெழு நாடற் படர்ந்தோற்குக் கண்ணும் படுமோ என்றிசின் யானே” (நற். 61) என்றவழி, உம்மை அசைநிலையாயிற்று. “தேவரே தின்னினும் வேம்பு” (நாலடி. 112) என்றவழி, ஏகாரம் சிறப்புக் குறித்து நின்றது. மழைக்குறி கண்டு மழை பெய்யும் போலும் என்றவழிப், போலும் என்றது ஐயங் குறித்து நின்றது. “தேவாதி தேவனவன் சேவடி சேர்து மன்றே.” (சிந்தா. 1) என்றவழி அன்றே என்பது முழுவதும் அசைநிலையாயிற்று. “சென்றீ பெரும நிற் றகைக்குநர் யாரே.” (அகம். 46) என்றவழி, ஏகாரம் ஈற்றசையாயிற்று. “குரை கழல்” என்றவழிக், குரை என்பது ஒலிப் பொருண்மை உணர்த்திற்று. பிறவும் இவ்வாறு வருவன வெல்லாம் இதுவே ஓத்தாகக்கொள்க. (46) 292. கிளந்த வல்ல 34அன்ன பிறவும் கிளந்தவற் றியலான் உணர்ந்தனர் கொளலே. இஃது இடைச்சொற்குப் புறநடை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) எடுத்தோதப்பட்ட இடைச்சொலன்றி அத்தன்மைய பிறவுமாகி வருவனவும் இசைநிறை யசைநிலையாகி வருவனவும் பொருள்வேறு படுமாறு அறிந்துகொள்க, எ-று. உ-ம்: அவற்றுட் சில வருமாறு ‘குன்றுதொ றாடலும் நின்றதன் பண்பே.’ (முருகா. 217) என்றவழிக், குன்றுதொறு என்பது குன்று பல என்னும் பொருண்மை உணர நின்றது. ‘சிறிது தவிர்ந் தீக மாளநின் பரிசிலர்.’ (மயிலை.ப-ம். 299) என்ற வழி, மாள என்பது அசைநிலையாயிற்று. ‘பிரியின் வாழா தென்போ தெய்ய’ (ஐங்குறு) என்றவழி, தெய்ய என்பது அசைநிலையாயிற்று. ‘எனவாங் கொள்ளழற் பிறந்த தாமரை, வெள்ளி நாராற் பூப்பெற் றிசினே’ (புறம். 11) என்றவழி, எனவும், ஆங்கும் அசைநிலையாயிற்று. “அஞ்சுவ தோரு மறனே ஒருவனை, வஞ்சிப்ப தோரு மவா’ (குறள். 366) என்றவழி, ஓரும் என்பது அசைநிலை யாயிற்று. ‘சொலீயரத்தை நின்வெகுளி’ (புறம். 6) என்றவழி, அத்தை அசைநிலை யாயிற்று. “அரும்பெற லுலக நிறைய-விருந்து பெற்றனராற் பொலிக நும் புகழே.” (புறம். 62) என்றவழி, ஆல் அசைநிலை யாயிற்று. ‘தடுமாறு தொழிற்பெயர்க் கிரண்டு மூன்றுங், கடிநிலை யிலவே பொருள் வயினான’ (வேற்றுமை மயங்கியல் 10) என்றவழி, ஆன் அசைநிலையாயிற்று. ‘செய்வினை மருங்கிற் செலவயர்ந் தியாழநின்-கைபுனை வல்வின் ஞாணுளர் தீயே’ (கலி. 7) என்றவழி, யாழ அசைநிலை யாயிற்று. பிறவும் அன்ன. (47) ஏழாவது இடைச்சொல் ஒத்து முடிந்தது. இவ்வோத்தினுட் சூத்திர முட்பட உரையினதளவு கிரந்த வகையான் முந்நூற்று நாற்பது இடையியல் அடிக்குறிப்புகள் 1. வினை. சூ. 16. 2. இங்குக் கூறும் முன், பின் என்பன இடம் பற்றியன. 3. அகம் 276. 4. புறம் 147. 5. குறுந் 14. 6. புறம். 246. 7. அகம் 276. 8. நாலடி 112. 9. புறம் 2. 10. கலி. 55. 11. இடை. சூ. 43. 12. புறம். 24. 13. குறுந் 29. 14. சூ. 290. 15. அகம் 1. 16. சூ. 275. 17. வினை சூ. 47. 18. குறள் 487. 19. கலி. 5 20. குறள். 334. 21. சூ. 204. 22. நாலடி. 19. 23. சீவக. 1873. 24. பொருளியல் 28. 25. நற்றினை 34. 26. புறம். 73. 27. குறுந். 293. 28. இச்சூத்திரத்தை இரு சூத்திரமாகக் கொள்வர் ஏனை உரையாளர்கள். 29. மொழிமரபு. 28. 30. ஏயும் என்பது ஏனை உரைப்பாடங்கள். சூ. 37 காண்க. 31. புறம். 238. 32. தோன்றல் - பாடபேதம். 33. பெயரியல். 11. 34. வேறுபிற தோன்றினும் - சேனாவரையம். உரியியல் உரிச்சொற்களின் இலக்கண முணர்த்தினமையால் உரியிய லென்னும் பெயர்த்தாயிற்று. இசை, குறிப்பு, பண்பு என்னும் பொருளை யுடையனவாகிப் பெயர் வினைகளைப் போன்றும் அவற்றிற்கு முதனிலையாகியும் வருவன உரிச்சொற்களாம். இசை செவியால் உணரப்படுவது, குறிப்பு மனத்தாற் குறித் துணரப்படுவது, பண்பு ஐம்பொறிகளால் உணரப்படுங் குணம். இசை குறிப்பு பண்பு என்னும் பொருட்குத் தாமே யுரியவாதலின் உரிச்சொல்லாயினவென்றும் பெரும்பான்மையும் செய்யுட்குரிய வாய் வருதலின் உரிச்சொல்லாயிற்றென் பாருமுளரென்றும் கூறுவர் சேனாவரையர், ஈறுபற்றிப் பல பொருள் விளக்கலும் உருபேற்றலுமின்றிப் பெயரையும் வினையையுஞ்சார்ந்து பொருட்குணத்தை விளக்கலின் உரிச்சொல் பெயரின் வேறென்பர் நச்சினார்க்கினியர். ஒரு வாய்பாட்டாற் சொல்லப்படும் பொருட்குத் தானும் உரித்தாகி வருவது உரிச்சொல்லென்றும், ‘ஒரு சொல் பல பொருட்குரிமை தோன்றினும் பல சொல் ஒரு பொருட்குரிமை தோன்றினும்’ என ஆசிரியர் கூறுதலால் இவ்வியல்பு புலனாமென்றும், எழுத்ததிகாரத்துள் இதனைக் குறைச் சொற்கிளவியென்று ஓதினமையால் வடநூலாசிரியர் தாது எனக் குறியிட்ட சொற்களே உரிச்சொற்களாமென்றும், தொழிற் பொருண்மை யுணர்த்தும் சொற்கள்யாவும் உரிச்சொல்லாயினும் வழக்கின்கட் பயிற்சியில்லாத சொற்கள் ஈண்டு எடுத்தோதப்படுகின்றனவென்றும், தொழிலாவது வினையுங் குறிப்புமாதலின் அவ்விருவகைச் சொற்கும் அங்கமாகி வெளிப்படாதன இவ்வியலிற் கூறப்படுகின்றனவென்றும், ஈண்டுக் கூறப்படுகின்ற உரிச்சொல் சொல்லானும் குறிப்பானும் குணத்தானும் பொருள் வேறுபடுமென்றும், அவை பெயர் வினைகளைச்சார்ந்தும் அவற்றிற்கு அங்கமாகியும் வருமென்றும் கூறுவர் தெய்வச்சிலையார். இசை, குறிப்பு, பண்பு என்னும் மூன்றும் குணப் பண்புந் தொழிற் பண்புமென இரண்டா யடங்கு மென்றும், இவ்விருவகைப் பண்பும் பொருட்கு உரிமை பூண்டு நிற்றலின் அப்பண்பை யுணர்த்துஞ்சொல் உரிச்சொல்லெனப் பட்டதென்றும், நடவா முதலிய முதனிலைகளும் தொழிற் பண்பை யுணர்த்துஞ் சொற்களாதலின் அவையெல்லாம் உரிச்சொல்லேயா மென்றுங் கூறுவர். சிவஞான முனிவர். இதுகாறும் எடுத்துக்காட்டிய உரைக் குறிப்புக்களால் உரிச்சொல்லென்பன வினையும் குறிப்புமாகிய சொற்களுக் கெல்லாம் பகுதியாகிய வேர்ச் சொற்களென்பதும் குறைச் சொற்களாகிய இவற்றை முதனிலையாகக்கொண்டே எவ்வகை வினைச்சொற்களும் தோன்றுவனவென்பதும் இனிது புலனாதல் காண்க. இவ்வியலிலுள்ள சூத்திரங்களை 99-ஆக இளம்பூரணரும் 100-ஆகச் சேனாவரையரும் தெய்வச்சிலையாரும், 98-ஆக நச்சினார்க்கினியரும் பகுத்து உரை கூறியுள்ளார்கள். இசை, குறிப்பு, பண்பு என்னும் பொருளை யுணர்த்துவனவாய்ப் பெயர் வினைபோன்றும் அவற்றிற்கு முதனிலையாயும் தடுமாறி ஒருசொல் ஒருபொருட் குரித்தாதலேயன்றி ஒருசொல் பலபொருட்கும் பல சொல் ஒருபொருட்கும் உரியவாய் வருவன உரிச்சொல்லென்றும், அவை பெயரும் வினையும்போல ஈறுபற்றிப் பொருளுணர்த்த லாகாமையின் பொருள் வெளிப்படாத சொல்லைப் பொருள் வெளிப்பட்ட சொல்லோடு சார்த்தி அச்சொற்களையே யெடுத்தோதிப் பொருளுணர்த்தப்படு மென்றும் இவ்வியல் முதற் சூத்திரத்தால் உரிச்சொற்குப் பொதுவிலக்கணமும் அவற்றிற்குப் பொருளுணர்த்து முறைமையும் உணர்த்தினார் ஆசிரியர். நால்வகைச் சொற்களுள்ளும் பண்புணர்த்துவனவாகிய உரிச்சொற்களே பலவாதலின் அவற்றுள் வெளிப்படப் பொரு ளுணர்த்தும் சொற்களை எடுத்துரையாது வெளிப்பட வாராத உரிச்சொற்களுள் உறுஎன்பது முதல் எறுழ் என்பதீறாக நூற்றிருபது உரிச்சொற்களை இவ்வியல் 3-முதல் 91-வரையுள்ள சூத்திரங்களால் எடுத்தோதிப் பொருளுணர்த்துகின்றார். மேற்சொல்லப்பட்ட உரிச்சொல் எல்லாவற்றிற்கும் முன்னும் பின்னும் வந்த மொழியையறிந்து அதற்கேற்பப் பொருளுரைத்தல் வேண்டு மெனவும் மேல் ஓதப்பட்ட உரிச்சொற்கு முற்கூறிய பொருணிலையல்லது பிற பொருள் தோன்றினும் கூறப்பட்ட வற்றோடு அவற்றையுஞ் சேர்த்துக்கொள்ளுதல் வேண்டுமெனவும் வெளிப்பட வழங்காத சொற்களுக்கு வெளிப்படப் பழகிய சொற்களைக் கொண்டு பொருளுணர்த்துங்கால் அங்ஙனம் பொருளுணர்த்த வந்த சொற்கும் பொருள் யாது எனப் பொருளுக்குப் பொருள் வினவுவானாயின் அவ்வினா எல்லையின்றிச் செல்லுமாதலால் பொருளுக்குப் பொருள் கூறுதலியலாதெனவும் மாணாக்கன் உணர்தற்குரிய வழிமுறை யறிந்து உணர்த்தவல்லனாயின் தான் சொல்ல எடுத்துக்கொண்ட பொருள் திரிபின்றி விளங்குமெனவும், சொற்பொருளை உணர்தற்குரிய வாயில் இதனை யுணர்வோனது அறிவைப் பற்றுக்கோடாக வுடையதாகலான் ஒருவாற்றானும் உணருந்தன்மை யொருவற்கில்லையாயின், ஆவனுக்குப் பொருளுணர்த்தும் வழியில்லை யெனவும் 92-முதல் 96-வரையுள்ள சூத்திரங்களால் உரிச்சொற்குப் பொருளுணரும் முறைமையும் கூறிப்போந்தார் ஆசிரியர். பொருளோடு சொல்லுக்குத் தொடர்புடைமையின் பொருளுணர்த்தும் நெறியில் எல்லாச் சொற்களும் காரணமுடைய வென்பதும், இப்பொருட்கு இச்சொல் என நியமித்தற்குரிய காரணம் நுண்ணுணர்வுடையோர்க்கன்றி ஏனையோர்க்கு விளங்கத் தோன்றாவென்பதும் மொழிப் பொருட்காரணம் விழிப்பத்தோன்றா’ என்ற சூத்திரத்தால் அறிவுறுத்தப்பட்டன. எழுத்துக்கள் முதல் நிலையும் இறுதிநிலையுமாகப் பிரிந்து பொருட் காரணத்தை யுணர்த்துதல் இவ்வுரிச்சொல்லிடத்து இயல்பிலை யென்பார் ‘எழுத்துப் பிரிந்திசைத்தல் இவணியில் பின்றே’ என்றார். இவ்வுரிச்சொற்கள் குறைச்சொற்களாதலின் நின்றாங்கு பிரிப்பின்றி நின்று பொருளுணர்த்துவனவன்றி முதல்நிலையும் இறுதிநிலையுமாகப் பிரிந்து பொருளுணர்த்தா வென்பது ஆசிரியர் கருத்தாதல் புலனாம். எழுத்துப் பிரிந்திசைத்தல் இவ்வுரிச் சொல்லிடத்தில்லையெனவே, ஏனைப் பெயர்ச் சொல்லிடத்தும் வினைச்சொல்லிடத்தும் முதனிலையும் இறுதிநிலையுமாக எழுத்தக்கள் பிரிந்து பொருளுணர்த்தல் உண்டென்பது பெறப்படும். பெயர் பிரிந்தன பெயரியலுள்ளும் வினை பிரிந்தன வினையியலுள்ளும் ஈறுபற்றிப் பிரித்துரைக்கப் பட்டமை காண்க. இடைச்சொல் தனித்து நின்று பொருளுணர்த் தாமையின் பிரிதலும் பிரியாமையும் அதற்கில்லையென்பர் நச்சினார்க்கினியர். - க. வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 216-219 எட்டாவது உரியியல் 293. உரிச்சொற் கிளவி விரிக்குங் காலை இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றிப் பெயரினும் வினையினும் மெய்தடு மாறி ஒருசொற் பலபொருட் குரிமை தோன்றினும் பலசொல் ஒருபொருட் குரிமை தோன்றினும் பயிலா தவற்றைப் பயின்றவை சார்த்தித் தத்தம் மரபிற் சென்றுநிலை மருங்கின் எச்சொல் லாயினும் பொருள்வேறு கிளத்தல். இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின், உரிச்சொல் ஓத்து என்னும் பெயர்த்து : உரிச்சொல் உணர்த்தினமையாற் பெற்ற பெயர். உரிச்சொல் என்பது யாதோ எனின், ஒரு வாய்பாட்டாற் சொல்லப்படும் பொருட்குத் தானும் உரித்தாகி வருவது. அதனானேயன்றே, ஒரு சொற் பலபொருட் குரிமை தோன்றினும், பலசொல் ஒரு பொருட் குரிமை தோன்றினும் என ஓதுவாராயிற்று. எழுத்ததிகாரத்துள் இதனைக் 1குறைச்சொற் கிளவி என்று ஓதினமையான், வடநூலாசிரியர் தாது என்று குறியிட்ட சொற்களே இவையென்று கொள்ளப்படும் : அவையும் குறைச்சொல்லாதலான். அஃதேல், தொழிற் பொருண்மை உணர்த்துவன எல்லாம் இதனுள் ஓதினாரோ எனின், வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா, வெளிப்பட வாரா உரிச்சொல் மேன (உரி.2) என்றா ராகலின், வழக்கின்கட் பயிற்சி இல்லாத சொற்களே ஈண்டு எடுத்து ஓதப்படுகின்றன என்க. தொழிலாவது வினையும் வினைக் குறிப்புமாதலின், அவ்விருவகைச் சொற்கும் அங்கமாகி வெளிப்படாதன ஈண்டுக் கூறப்படுகின்றன. இதன் தலைச் சூத்திரம் என்னுதலிற்றோ எனின், உரிச்சொற் கெல்லாம் உரியதோர் பொது இலக்கணமும், அவற்றிற்குப் பொருளுணர்த்துந் திறனும் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ‘உரிச்சொற் கிளவி விரிக்குங் காலை’ என்பது உரிச்சொல் ஆகிய சொல்லை விரித்து உரைக்குங் காலத்து, எ-று. “இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றி” என்பது சொல்லானும், குறிப்பானும், பண்பானும் புலப்பட்டு, எ-று. சொல்லாற் புலப்பட்டது உறு என்பது, இதனின் இஃதுறும் என்ற வழி, மிகும் என்னும் பொருள் புலப்பட்டது. குறிப்பாற் புலப்பட்டது - கறுத்தான் என்பது, ஒருவன்மாட்டுக் கருமை யாகிய நிறத்தைக் குறியாது, அவனது வெகுட்சியைக் குறித்தலிற் குறிப்பாயிற்று. பண்பாற் புலப்பட்டது - சிவந்தான் என்பது வெகுண்டாற் கண்சிவக்கும் என்பதனால், கண்ணின் சிவப்பு அது சிவத்தற்குக் காரணமாகிய வெகுட்சியின்மேல் வந்தது. இவையிற்றை வடநூலாசிரியர் முக்கியம், இலக்கணை, கௌணம் என்ப. சொற்பொருள் படுவழிச் சொல்லானும், குறிப்பானும், குணத் தானும் பொருள்படும் என்பதூஉம், ஈண்டுக் கூறப்படுகின்ற உரிச்சொல் இம் மூவகையானும் பொருள் படும் என்பதூஉம் கூறியவாறாம். ‘பெயரினும் வினையினும் மெய்தடு மாறி’ என்பது உரிச்சொல்லாகிய உருபு பெயரின்கண்ணும் வினையின்கண்ணும் தடுமாறி, எ-று. அவை தடுமாறுங்கால் பெயர் வினைகளைச் சார்ந்தும், அவற்றிற்கு அங்கமாகியும் வரும். ‘உறுவளி’ என்பது பெயரைச் சார்ந்து வந்தது. ‘உறக்கொண்டான்’ என்பது வினையைச் சார்ந்து வந்தது. ‘உறுவர்’ என்ற வழிப் பெயர்க்கு அங்கமாயிற்று. ‘உற்றார்’ என்றவழி வினைக்கு அங்க மாயிற்று. ‘ஒருசொற் பலபொருட் குரிமை தோன்றினும், பலசொல் ஒரு பொருட் குரிமை தோன்றினும்’ என்பது ஒரு சொல் பல பொருட்கு உரியவாகித் தோன்றினும், பல சொல் ஒரு பொருட்கு உரியவாகித் தோன்றினும், எ-று. ஒருசொல் ஒருபொருட் குரித்தாகி வருதல் சொல்லாமல் முடிந்ததாம். ‘பயிலா தவற்றைப் பயின்றவை சார்த்தித்-தத்தம் மரபிற் சென்று நிலை மருங்கின்’ என்பது உரிச்சொற்கள் தத்தம் மரபினாற் சென்று நிற்குமிடத்து, வழக்கின்கட் பயின்று நடவாத சொற்களைப் பயின்ற சொற்களொடு சேர்த்தி, எ-று. பயிலாத சொல்லாவன :-உறு, தவ, நனி; பயின்ற சொல்லாவன மிகுதல், உட்கு, உயர்வு என்பன. சார்த்துதலாவது இச்சொற்கள் இச் சொல்லின் பொருள்படும் எனக் கூட்டுதல். ‘எச்சொல் லாயினும் பொருள்வேறு கிளத்தல்’ என்பது யாதானும் ஒரு சொல்லாயினும் பொருள் வேறுபடுத்திக் காட்டுக, எ-று. தோன்றித் தடுமாறி என்னும் செய்தென் எச்சம், உரிமை தோன்றினும் என்னும் செயின் எச்சத்தினோடு ஒன்றிக், கிளக்க என்னும் வியங்கோளொடு முடிந்தது. உரிச்சொற் கிளவியை விரித்துரைக்குங் காலத்துச், சொல்லானும் குறிப்பானும், பண்பானும் பொருள் புலப்பட்டுப், பெயர்க்கண்ணும் வினைக் கண்ணும் உருபு தடுமாறி, ஒருசொற் பலபொருட்கு உரிமையாகித் தோன்றினும், பலசொல் லொருபொருட்கு உரிமையாகித் தோன்றினும், தத்தம் மரபிற் சென்று நிற்குமிடத்துப், பயிலாத சொற்களைப் பயின்ற சொற்களோடு சேர்த்தி, யாதானுமொரு சொல்லாயினும் பொருள் வேறு படுத்து உரைக்க; அறிவோர் என்றவாறு. (1) 294. வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா வெளிப்பட வாரா உரிச்சொல் மேன. ஈண்டு ஓதுகின்ற உரிச்சொல் இவை என்பது உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வழக்கின்கண் எல்லாரானும் அறியப்பட்ட சொல் ஈண்டு எடுத்து ஓதல்வேண்டா; அறியப்படாத உரிச்சொன் மேலன, வருகின்ற சூத்திரங்கள், எ-று. உ-ம்: வெளிப்படு சொல்லாவன உண்டல் என்பதற்கு அயிறல், மிசைதல் எனவும்; உறங்குதல் என்பதற்குத் துஞ்சல் எனவும்; இணை விழைச்சு என்பதற்குப் புணர்தல், கலத்தல், கூடல் எனவும்; அச்சம் என்பதற்கு வெரூஉதல் எனவும் இவ்வாறு வருவன. இனி வெளிப்பட வழங்காதன கூறப்படுகின்றன. (2) 295. அவைதாம், 2உறுதவ நனியென வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப. இஃது உரிச்சொற்களிற் சில சொற்பொருள் உணர்த்து மாறு உணர்த்துதல் நுதலிற்று. இக்கருத்து வருகின்ற சூத்திரங்கட்கும் ஒக்கும். (இ-ள்.) உறு, தவ, நனி என்று சொல்லப்பட்ட மூன்று சொல்லும் மிகுதி என்னும் சொல்லான் அறியப்படும் பொருளை உணர்த்தும், எ-று. உ-ம்: ‘உறுபுனல் தந்துல கூட்டி’ (நாலடி. 185): ‘ஈயாது வீயும் உயிர்தவப் பலவே’ (புறம். 235); ‘வந்துநனி வருந்தினை வாழிய 3நெஞ்சே’ (அகம். 19); இவை மிகுதி உணர்த்தியவாறு கண்டு கொள்க. (3) வருகின்ற சூத்திரங்கட்கும் இறுதிச் சொல்லான் அறியப்படும் பொருள்மேல் வரும் என்பதனைக் கூட்டியுரைத்துக் கொள்க. 296. 4உருவுட் காகும். (இ-ள்.) உரு என்னும் சொல் உட்கு என்பதன் பொருள்படும், எ-று. உ-ம்: ‘உருகெழு கடவுள்’ (பதிற். 21) உட்குமிக்க கடவுள் எ-று. (4) 297. புரையுயர் பாகும். (இ-ள்.) புரை என்பது உயர்வு என்னும் பொருள்படும் எ-று. உ-ம்: ‘புரைய மன்ற புரையோர் கேண்மை.’ (நற். 1.) (5) 298. குருவும் கெழுவும் நிறனா கும்மே. (இ-ள்.) குரு என்பதூஉம், கெழு என்பதூஉம் நிறம் என்பதன் பொருள்படும், எ-று. உ-ம்: ‘குருமணித் தாலி,’ ‘செங்கேழ் மென்கொடி,’ (அகம். 80) கெழு என்பது கேழ் எனவும் வரும். (6) 299. செல்லல் இன்னல் இன்னா மையே. (இ-ள்.) செல்லல் என்னும் சொல்லும், இன்னல் என்னும் சொல்லும் இன்னாமைப் பொருளில் வரும், எ-று. உ-ம்: ‘5மணங்கமழ் வியன்மார் பணங்கிய செல்லல்’ (பதிற். 21), ‘வெயில் புறந் தரூஉம் இன்ன லியக்கத்து’ (மலைபடு. 374). (7) 300. மல்லல் வளனே. (இ-ள்.) மல்லல் என்னும் சொல் வளப்பம் என்னும் பொருள் தரும், எ-று. உ-ம்: ‘மல்லல் மால்வரை’. (அகம். 52) (8) 301. 6ஏபெற் றாகும். (இ-ள்.) ஏ என்னும் சொல் பெற்றுதல் என்னும் பொருள்படும், எ-று. உ-ம்: ‘ஏக லடுக்கம்’, (நற். 116) பெற்றுதல் என்பது இக்காலம் பற்றுதல் என வரும். (9) 302 உகப்பே உயர்தல். (இ-ள்.) உகப்பு என்னும் சொல் உயர்தல் என்னும் பொருள்படும், எ-று. உ-ம்: ‘விசும்புகந் தாடாது’. (10) 303. உவப்பே உவகை. (இ-ள்.) உவப்பு என்னும் சொல் உவகை என்னும் பொருள்படும், எ-று. உ-ம்: ‘உவந்துவந் தார்வ நெஞ்சமோடு.’ (அகம். 35) (11) 304. பயப்பே பயனாம். (இ-ள்.) பயப்பு என்னும் சொல் பயன் என்னும் பொருள்படும், எ-று. உ-ம்: ‘பயவாக்- களரனையர் கல்லா தவர்.’ (குறள். 406) (12) 305. பசப்பு நிறனாகும். (இ-ள்.) பசப்பு என்னும் சொல் நிறத்தை உணர்த்தும், எ-று. உ-ம்: ‘மையில் வாண்முகம் பசப்பூ ரும்மே’. (கலி. 7) (13) 306. இயைபே புணர்ச்சி. (இ-ள்.) இயைபு என்னும் சொல் புணர்தல் என்பதன் பொருள்படும், எ-று. உ-ம்: ‘இயைந் தொழுகும்.’ (14) 307. இசைப்பிசை யாகும். (இ-ள்.) இசைப்பு என்னும் சொல் இசைத்தல் என்பதன் பொருள் படும், எ-று. உ-ம்: ‘யாழிசையூப் புக்கு,’ ‘இசைத்தலு முரிய,’ (தொல். சொல். 58) ‘வாயிலிசை’ என ஒலிப்பொருட்கண் வந்தன. (15) 308. அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி. (இ-ள்.) அலமரல் என்னும் சொல்லும், தெருமரல் என்னும் சொல்லும் சுழலல் என்பதன் பொருள்படும், எ-று. உ-ம்: ‘அலமர லாயம்’ (ஐங்.64); ‘தெருமர லுள்ளமோ டன்னை துஞ்சாள்.’ (16) 309. மழவும் குழவும் இளமைப் பொருள. (இ-ள்.) மழ என்னும் சொல்லும், குழ என்னும் சொல்லும் இளமை என்பதன் பொருள்படும், எ-று. உ-ம்: ‘மழகளிறு’ (புறம்.38); ‘குழக்கன்று’ (நாலடி.101) (17) 310 சீர்த்தி மிகுபுகழ். (இ-ள்.) சீர்த்தி என்னும் சொல் மிகுபுகழ் என்பதன் பொருள்படும், எ-று. உ-ம்: ‘வயக்கஞ் சால் சீர்த்தி.’ (18) 311. மாலை இயல்பே. (இ-ள்.) மாலை என்னும் சொல் இயல்பு என்னும் பொருள் படும், எ-று. உ-ம்: ‘குறிப்பேவல் செயன்மாலைக் கொளைநடை யந்தணீர்’ (கலி. 9) (19) 312. கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும். (இ-ள்.) கூர்ப்பு என்பதூஉம், கழிவு என்பதூஉம் முன்பு உள்ளதன்கண் மிகுதியைக் குறித்து வரும், எ-று. உ-ம்: ‘துனிகூ ரெவ்வமொடு’ (சிறுபாண். 39); ‘கழிகண்ணோட் டம்’ (பதிற்.22) (20) 313. கதழ்வும் துனைவும் விரைவின் பொருளே. (இ-ள்.) கதழ்வு என்னும் சொல்லும், துனைவு என்னும் சொல்லும் விரைவு என்பதன் பொருள்படும், எ-று. கதழ், துனை என்னும் சொற்களை இனிது விளக்குதற்குப் பெயராக்கி ஓதினார். மேற் சொல்லப்பட்டவற்றினும், இனி வருவனவற்றி னும் குறைச் சொல்லாகி இவ்வாறு வருவன அறிந்துகொள்க. உ-ம்: ‘கதழ்பரி நெடுந்தேர்’ (நற். 203); ‘துனைபரி துரக்கும் துஞ்சாச் செலவின்.’ (அகம். 9) (21) 314. அதிர்வும் விதுப்பும் நடுக்கம் செய்யும். (இ-ள்.) அதிர்வு என்பதூஉம், விதுப்பு என்பதூஉம் நடுக்கம் என்பதன் பொருள் உணர்த்தும், எ-று. உ-ம்: ‘எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை, அதிர வருவதோர் நோய்’ (குறள். 429); ‘விதுப்புற வறியா வேமக் காப்பினை’ (புறம். 20) (22) 315. வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள. (இ-ள்.) வார்தல் என்னும் சொல்லும், போகல் என்னும் சொல்லும், ஒழுகல் என்னும் சொல்லும் நேர்பு என்பதன் பொருண்மையும், நெடுமை என்பதன் பொருண்மையும் உணர்த்தும், எ-று. உ-ம்: ‘வார்ந்திலங்கு வையெயிற்று’ (குறுந். 14); ‘போகுகொடி மருங்குல்’ ஒழுகுகொடி மருங்குல் இவை நேர்மை. ‘வார்கயிற் றொழுகை’ (அகம். 173); ‘7வெள்வேல் விடத்தேரொடு காருடைபோகி,’ (பதிற். 13) ‘மால்வரை யொழுகிய வாழை’ (சிறுபாண். 21). இவை நெடுமை. (23) 316. தீர்தலும் தீர்த்தலும் விடற்பொருட் டாகும். (இ-ள்.) தீர்தல் என்னும் சொல்லும், தீர்த்தல் என்னும் சொல்லும் விடுதல் என்னும் பொருள்படும், எ-று. உ-ம்: ‘துணையிற் றீர்ந்த கடுங்கண் யானை’ (நற். 108) இது தன்வினை. நோய் தீர்த்தான் என்பது பிறன்வினை-விடுத்தான் எனப்படும். இவ்வேறுபாட்டான் இரண்டாக ஓதினார். (24) 317. கெடவரல் பண்ணை ஆயிரண்டும் விளையாட்டு. (இ-ள்.) கெடவரல் என்னும் சொல்லும், பண்ணை என்னும் சொல்லும் விளையாட்டு என்பதன் பொருள்படும், எ-று. உ-ம்: ‘கெடவர லாயம்’. ‘பண்ணைத் தோன்றிய வெண்ணான்கு பொருளும்’ (மெய்ப்பாட்டியல் 1). (25) 318. தடவும் கயவும் நளியும் பெருமை. (இ-ள்.) தட என்னும் சொல்லும், கய என்னும் சொல்லும், நளி என்னும் சொல்லும் பெருமை என்பதன் பொருள்படும், எ-று. உ-ம்: ‘தடக்கை’ (புறம். 394). ‘கயவாய்.’ (அகம். 118) ‘நளிமலை’ (புறம். 150). (26) 319. 8அவற்றுள், தடவென் கிளவி கோட்டமும் செய்யும் கயவென் கிளவி மென்மையும் செய்யும் நளியென் கிளவி செறிவும் ஆகும். (இ-ள்.) மேற் சொன்னவற்றுள், தட என்னும் சொல் கோடுதல் என்பதன் பொருண்மையும், கய என்னுஞ் சொல் மென்மை என்பதன் பொருண்மையும், நளி என்னுஞ் சொல் செறிதல் என்பதன் பொருண்மையும் படும், எ-று. உ-ம்: ‘தடமருப்பெருமை’ (நற்.120); ‘கயந்தலைக்குழவி’; ‘நளியிருள்’. (27) 320. பழுது பயனின்றே. (இ-ள்.) பழுது என்னும் சொல் பயனின்மை உணர்த்தும், எ-று. உ-ம்: “பழுது கழி9வாழ் நாள்”. (28) 321. சாயல் மென்மை. (இ-ள்.) சாயல் என்னும் சொல் மென்மை என்பதன் பொருள்படும், எ-று. உ-ம்: ‘சாயன் மார்பு’. (பதிற். 16) (29) 322. முழுதென் கிளவி எஞ்சாப் பொருட்டே. (இ-ள்.) முழுது என்னும் சொல் ஒழியாமையை உணர்த்தும், எ-று. உ-ம்: ‘உலகமுழு தாண்ட’. (சிலப்.அந்தி. 1) (30) 323. வம்புநிலை யின்மை. (இ-ள்.) வம்பு என்னும் சொல் நிலையின்மையை உணர்த்தும், எ-று. உ-ம்: ‘வம்ப மாரி’ (குறுந். 66). (31) 324. மாதர் காதல். (இ-ள்.) மாதர் என்னும் சொல் காதல் என்னும் பொருள்படும், எ-று. உ-ம்: ‘மாதர் நோக்கு.’ (32) 325. நம்பும் மேவும் நசையா கும்மே. (இ-ள்.) நம்பு என்னும் சொல்லும், மேவு என்னும் சொல்லும் நசை என்பதன் பொருள்படும், எ-று. உ-ம்: ‘நயந்துநாம் விட்ட நன்மொழி நம்பி’ (அகம். 198) ‘பேரிசை நவிர மேஎ யுறையும்.’ (மலைபடு. 82) (33) 326. ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம். (இ-ள்.) ஓய்தல் என்னும் சொல்லும், ஆய்தல் என்னும் சொல்லும், நிழத்தல் என்னும் சொல்லும், சாஅய் என்னும் சொல்லும் ஆகிய அந்நான்கு சொல்லும் ஒரு பொருட்குள்ள அளவின் நுணுக்கத்தைக் காட்டும், எ-று. உ-ம்: ‘வேனி லுழந்த வறிதுயங் கோய்களிறு’ (கலி. 7); ‘பாய்ந்தாய்ந்த தானைப் பரிந்தானா மைந்தினை’ (கலி. 66); ‘நிழத்த யானை மேய்புலம் படர’ (மது. 303); ‘கயலற லெதிரக் கடும்புனற் சாஅய்’ (நெடுநல். 18). (34) 327. புலம்பே தனிமை. (இ-ள்.) புலம்பு என்னும் சொல் தனிமை என்பதன் பொருள்படும், எ-று. உ-ம்: ‘புலிப்பற் கோத்த புலம்புமணித் தாலி’ (அகம். 7). (35) 328. துவன்று நிறைவாகும். (இ-ள்.) துவன்று என்பது நிறைவு என்பதன் பொருள்படும், எ-று. உ-ம்: “ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்” (நற். 170). (36) 329. முரஞ்ச முதிர்வே. (இ-ள்.) முரஞ் சென்னுஞ் சொல் முதிர்வு என்னும் பொருள்படும், எ-று. உ-ம்: ‘கோடுபல முரஞ்சிய கோளி யாலம்’ (மலைபடு. 268). (37) 330. வெம்மை வேண்டல். (இ-ள்.) வெம்மை என்னும் சொல் வேண்டல் என்பதன் பொருள்படும், எ-று. உ-ம்: ‘நீ வெய்யோளோடு’ (அகம். 6) (38) 331. பொற்பே பொலிவு. (இ-ள்.) பொற்பு என்னும் சொல் பொலிவு என்பதன் பொருள்படும், எ-று. உ-ம்: ‘பெருவரை யடுக்கம் பொற்ப’ (நற். 34) (39) 332. வறிது சிறிதாகும். (இ-ள்.) வறிது என்னும் சொல் சிறிது என்பதன் பொருளாகும், எ-று. உ-ம்: ‘வறிதுநெறி யொரீஇ.’ (40) 333. ஏற்றம் நினைவும் துணிவும் ஆகும். (இ-ள்.) ஏற்றென்னும் சொல் நினைவு, துணிவு என்பவற்றின் பொருள்படும், எ-று. உ-ம்: ‘கானலஞ் சேர்ப்பன் கொடுமை யேற்றி’ (குறுந். 145) இது நினைவு. ‘10ஏற்றென் றிரங்குவ செய்யற்க’ (குறள். 655) இது துணிவு. (41) 334. பிணையும் பேணும் பெட்பின் பொருள. (இ-ள்.) பிணை என்னுஞ் சொல்லும், பேண் என்னும் சொல்லும் பெட்பு என்பதன் பொருள்படும், எ-று. உ-ம்: ‘அரும்பிணைப் பகற்றி வேட்ட ஞாட்பினும்’; ‘அமரர்ப் பேணியு மாவுதி யருத்தியும்’ (புறம். 99). (42) 335. பணையே பிழைத்தல் பெருப்பு மாகும். (இ-ள்.) பணை என்னும் சொல் பிழைத்தல் என்பதன் பொருளும், பெருமை என்பதன் பொருளும் படும், எ-று. உ-ம்: ‘பணைத்துவீழ் பகழி.’ இது பிழைப்பு. ‘பணைத் தோள்’ (அகம். 1) இது பெருமை. (43) 336. படரே உள்ளல் செலவும் ஆகும். (இ-ள்.) படர் என்பது நினைத்தல் என்பதன் பொருளும், செலவு என்பதன் பொருளும் படும், எ-று. உ-ம்: ‘வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற் போகி.’ (புறம். 47) இது நினைவு. ‘கறவை கன்றுவயிற் படர’ (குறுந். 108) இது செலவு. (44) 337. பையுளுஞ் சிறுமையும் நோயின் பொருள. (இ-ள்.) பையுள் என்னும் சொல்லும், சிறுமை என்னும் சொல்லும் நோய் என்பதன் பொருள்படும். எ-று. உ-ம்: ‘பையுண் மாலை.’ (குறுந். 195); ‘சிறுமை யுறுபவோ செய்பறி யலரே.’ (நற். 1) (45) 338. எய்யா மையே யறியா மையே. (இ-ள்.) எய்யாமை என்னும் சொல் அறியாமை என்னும் பொருள் படும், எ-று. உ-ம்: ‘எய்யா மையலை நீயும் வருந்துதி’. (குறிஞ்சிப். 8) (46) 339. நன்று பெரிதாகும். (இ-ள்.) நன்று என்பது பெரிது என்பதன் பொருள்படும், எ-று. உ-ம்: ‘நன்று மரிதுற் றனையாற் பெரும.’ (அகம். 10) (47) 340. தாவே வலியும் வருத்தமு மாகும். (இ-ள்.) தாவு என்னும் சொல் வலி என்பதன் பொருண்மையும், வருத்தம் என்பதன் பொருண்மையும் படும், எ-று. உ-ம்: ‘தாவி னன்பொன் றைஇய பாவை.’ (அகம். 212) இது வலி. ‘கருங்கட் டாக்கலை பெரும்பிறி துற்றென’, (குறுந். 69) இது வருத்தம். (48) 341. தெவுக்கொளற் பொருட்டே. (இ-ள்.) தெவு என்னும் சொல் கொள்ளுதல் என்பதன் பொருள் படும், எ-று. உ-ம்: ‘நீர்தெவ்வு நிரைத்தொழுவர்.’ (மதுரைக். 89) (49) 342. தெவ்வுப் பகையாகும். (இ-ள்.) தெவ்வு என்னும் சொல் பகை என்பதன் பொருள் படும், எ-று. உ-ம்: “தெவ்வுப் புலம்.” (50) 343. விறப்பும் உறப்பும் வெறுப்பும் செறிவே. (இ-ள்.) விறப்பு என்னும் சொல்லும், உறப்பு என்னும் சொல்லும், வெறுப்பு என்னும் சொல்லும் செறிவு என்பதன் பொருள்படும், எ-று. உ-ம்: “விறந்த காப்போ டுண்ணன்று வலியுறுத்தும்”. ‘உறந்த விஞ்சி.’ ‘வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்’. (புறம். 53)(51) 344. அவற்றுள், விறப்பே வெரூஉப் பொருட்கும் ஆகும். (இ-ள்.) மேற்சொல்லப்பட்ட வற்றுள் விறப்பு என்னும் சொல் வெரூஉதல் என்பதன் பொருளும் படும், எ-று. உ-ம்: “அவலெறி யுலக்கைப் பாடுவிறந் தயல” (பெரும் பாண். 226) (52) 345. கம்பலை சும்மை கலியே யழுங்கல் என்றிவை நான்கும் அரவப் பொருள. (இ-ள்.) கம்பலை என்னும் சொல்லும், சும்மை என்னும் சொல்லும், கலி என்னும் சொல்லும், அழுங்கல் என்னும் சொல்லும் இவை நான்கு அரவம் என்பதன் பொருளையுடைய, எ-று. உ-ம்: “கம்பலை மூதூர்” (புறம். 54); ‘ஒலிபெருஞ் சும்மை யொடு’; ‘கலிகொ ளாயம்’ (அகம். 11); ‘உயவுப்புணர்ந் தன்றிவ் வழுங்கலூரே’ (நற். 203). (53) 346. அவற்றுள், அழுங்கல் இரக்கமும் கேடும் ஆகும். (இ-ள்.) மேற் சொல்லப்பட்டவற்றுள், அழுங்கல் என்னும் சொல் இரக்கம் என்பதன் பொருண்மையும், கேடு என்பதன் பொருண்மையும் படும், எ-று. உ-ம்: ‘மகவிழந் தழுங்கிய’-இஃது இரக்கம். ‘குணனழுங்கக் குற்ற முழைநின்று கூறும்’ (நாலடி. 353)-இது கேடு. (54) 347. கழுமென் கிளவி மயக்கஞ் செய்யும். (இ-ள்.) கழும் என்பது மயக்கம் என்பதன் பொருள்படும், எ-று. உ-ம்: ‘கழுமிய ஞாட்பின்’ (களவழி. 11). (55) 348. செழுமை வளனும் கொழுப்பும் ஆகும். (இ-ள்.) செழுமை என்பது வளன் என்பதன் பொருளும் கொழுப்பு என்பதன் பொருளும்படும், எ-று. உ-ம்: ‘செழும்பல் குன்றம்’ - இது வளம். ‘செழுந்தடி தின்ற செஞ்ஞாயேற்றை’ - இது கொழுப்பு. (56) 349. 11விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் செய்யும். (இ-ள்.) விழுமம் என்பது சீர்மை என்பதன் பொருளும், சிறப்பு என்பதன் பொருளும், இடும்பை என்பதன் பொருளும் படும், எ-று. உ-ம்: ‘விழுமியோர்-காண்டொறுஞ் செய்வர் சிறப்பு.’ (நாலடி. 159)-இது சீர்மை. ‘வேற்றுமையில்லா விழுத்திணைப் பிறந்து-(புறம். 27)-இது சிறப்பு. ‘நின்னுறு விழுமங் களைந்தோன்’ (அகம். 170) இது இடும்பை. (57) 350. கருவி தொகுதி. (இ-ள்.) கருவி என்னுஞ் சொல் தொகுதி என்பதன் பொருள் படும், எ-று. உ-ம்: ‘கருவி வானம்’ (புறம்.159). (58) 351. கமம்நிறைந் தியலும். (இ-ள்.) கமம் என்னுஞ் சொல் நிறைந்து என்பதன் பொருள்படும் , எ-று. உ-ம்: ‘கமஞ்சூல் மாமழை’ (அகம். 43) (குறுந். 158) (முருகு. 7) (59) 352. அரியே ஐம்மை. (இ-ள்.) அரி யென்னுஞ் சொல் ஐது என்னும் பொருள் படும், எ-று. உ-ம்: ‘அரிமயிர் திரண்முன்கை’ (புறம். 11). (60) 353. கவவகத் திடுமே. (இ-ள்.) கவவு என்னுஞ் சொல் அகத்திடுதல் என்பதன் பொருள்படும், எ-று. உ-ம்: ‘கழூஉவிளங் காரம் கவைஇய மார்பே’ (புறம். 19) (61)) 354. துவைத்தலும் சிலைத்தலும் 12இரங்கலும் இயம்பலும் இசைப்பொருட் கிளவி யென்மனார் புலவர். (இ-ள்.) துவைத்தல் என்னுஞ் சொல்லும், சிலைத்தல் என்னுஞ் சொல்லும், இரங்கல் என்னுஞ் சொல்லும், இயம்பல் என்னுஞ் சொல்லும் ஓசைப் பொருண்மையுடைய, எ-று. உ-ம்: ‘அரிவளை துவைப்ப’ ‘ஆமா நல்லேறு சிலைப்ப’ (முருகு. 315). ‘ஏறிரங் கிருளிடை’ (கலி. 46) ‘கடிமரந் தடியு மோசை தன்னூர் - நெடுமதில் வரைப்பிற் கடிமனை யியம்ப’ (புறம். 36) (62) 355. அவற்றுள், இரங்கல் கழிந்த பொருட்டு மாகும். (இ-ள்.) மேற்சொல்லப்பட்டவற்றுள் இரங்கல் என்பது கழிந்தது என்னும் பொருளையும் உடைத்தாகும், எ-று. உ-ம்: ‘செய்திரங் காவினை’ (புறம். 10) (63) 356. இலம்பா டொற்கம் ஆயிரண்டும் வறுமை. (இ-ள்.) இலம்பாடு என்னுஞ் சொல்லும், ஒற்கம் என்னுஞ் சொல்லும் வறுமை யென்னுஞ் சொல்லின் பொருள்படும், எ-று. உ-ம்: ‘இலம்படு புலவர் ஏற்றகைந் நிறைய’ (மலைபடு. 577). ‘ஒக்க லொற்கஞ் சொலிய’ (புறம். 327). (64) 357. ஞெமர்தலும் பாய்தலும் பரத்தற் பொருள. (இ-ள்.) ஞெமர்தல் என்னுஞ் சொல்லும், பாய்தல் என்னுஞ் சொல்லும் பரத்தல் என்பதன் பொருள்படும், எ-று. உ-ம்: ‘தருமணல் ஞெமரிய திருநகர் முற்றத்து’ (நெடுநல். 90). பாய்புனல். (65) 358. கவர்வுவிருப் பாகும். (இ-ள்.) கவர்வு என்னுஞ் சொல் விருப்பு என்பதன் பொருள் படும், எ-று. உ-ம்: ‘கவர் நடைப்புரவி’ (அகம்.130). (66) 359. சேரே திரட்சி. (இ-ள்.) சேர் என்னுஞ் சொல் திரட்சி யென்பதன் பொருள் படும், எ-று. உ-ம்: ‘சேர்ந்தசெறி குறங்கு’ (நற்.170). (67) 360. வியலென் கிளவி யகலப் பொருட்டே. (இ-ள்.) வியல் என்னுஞ் சொல் அகலம் என்பதன் பொருள் படும், எ-று. உ-ம்: வியலுலகம். (68) 361. பேஎம் நாம் உருமென வரூஉங் கிளவி ஆமுறை மூன்றும் அச்சப் பொருள. (இ-ள்.) பேஎம் என்னுஞ் சொல்லும், நாம் என்னுஞ் சொல்லும், உரும் என்னுஞ் சொல்லுமாகிய அம்முறையை யுடைய மூன்று சொல்லும் அச்சப் பொருண்மையை உடைய, எ-று. உ-ம்: ‘மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள்’ (குறுந்.87). ‘13நாம நல்லராக் கதிர்பட உமிழ்ந்த’ (அகம். 72). ‘14உருமில் சுற்றமோ டிருந்தோற் குறுகி’ (பெரும்.447). (69) 362. வயவலி யாகும். (இ-ள்.) வயவென்னுஞ் சொல் வலியென்பதன் பொருள் படும், எ-று. உ-ம்: ‘வயக்களிறு’ (மது.15). (70) 363. வாள்ஒளி யாகும். (இ-ள்.) வாள் என்னுஞ் சொல் ஒளியென்பதன் பொருள்படும், எ-று. உ-ம்: ‘வாணுதல்’ (முருகு. 6). (71) 364. துயவென் கிளவி அறிவின் றிரிபே. (இ-ள்.) துயவு என்னுஞ் சொல் அறிவின் திரிபாகிய பொருளை உணர்த்தும், எ-று. உ-ம்: ‘துயவுற்றேம் யாமாக’. (72) 365. உயாவே யுயங்கல். (இ-ள்.) உயா என்னுஞ்சொல் உயங்கல் என்பதன் பொருள்படும், எ-று. உயங்கல் என்பது ஓய்தல். உ-ம்: ‘பருந்திருந் துயாவிளி பயிற்றும்’ (அகம். 16). (73) 366. உசாவே சூழ்ச்சி. (இ-ள்.) உசா என்பது சூழ்ச்சி என்பதன் பொருள்படும், எ-று. உ-ம்: ‘யானொன் றுசாவுகோ வைய சிறிது’ (கலி. 7). (74) 367. வயாவென் கிளவி வேட்கைப் பெருக்கம். (இ-ள்.) வயா என்னுஞ் சொல் வேட்கைப் பெருக்கத்தினை யுணர்த்தும், எ-று. உ-ம்: ‘தொடீஇய செல்வார்த் துமித்தெதிர் மண்டுங் கடுவயா நாகு போல் நோக்கி’ (முல்லைக். 16) வயா என்றது கன்றின்மேற் காதல் குறித்து நின்றது. (75) 368. கறுப்புஞ் சிவப்பும் வெகுளிப் பொருள. (இ-ள்.) கறுப்பு என்பதும் சிவப்பு என்பதும் வெகுளி என்பதன் பொருள்படும். எ-று. உ-ம்: ‘நிற்கறுத் தோரருங்கடிமுனை யாமை? போல்’. ‘நீசிவந் திறுத்த நீரிழி பாக்கம்’ (பதிற். 13) (76) 369. நிறத்துரு புரைத்தற்கும் உரிய வென்ப. (இ-ள்.) மேற் சொல்லப்பட்ட கறுப்புஞ் சிவப்பும் வெகுளிப் பொருட்கண் வருதலன்றி, நிறத்துருபு உரைத்தற்கும் உரிய, எ-று. உ-ம்: ‘கறுத்த காயா’. ‘சிவந்த காந்தள்’ (பதிற்.15). (77) 370. நொசிவும் நுழைவும் நுணங்கும் நுண்மை. (இ-ள்.) நொசிவு என்பதூஉம், நுழைவு என்பதூஉம், நுணங்கு என்பதூஉம், நுண்மை என்பதன் பொருள்படும், எ-று. உ-ம்: ‘நொசி மருங்குல்’ (குறஞ்சிக் கலி. 24). ‘நுழைநூற் கலிங்கம்’ (மலைபடு.561) ‘நுணங்கிய கேள்வியர்’ (குறள்.419). (78) 371. புனிறென் கிளவியீன் றணி(மை)ப் பொருட்டே. (இ-ள்.) புனிறு என்பது ஈன்றணித்தென்னும் பொருள்பட்டு நிற்கும், எ-று. உ-ம்: புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி (அகம்.56) (79) 372. நனவே களனும் அகலமுஞ் செய்யும். (இ-ள்.) நனவென்பது களன் என்பதன் பொருண்மையும், அகலம் என்பதன் பொருண்மையும் உணர்த்தும், எ-று. உ-ம்: ‘நனவுப்புகு விறலியிற் றோன்றும் நாடன்’ (அகம்.82). இது களம். ‘நனந்தலை யுலகம்’ (பதிற்.63). இஃது அகலம். (80) 373. மதவே மடனும் வலியும் ஆகும். (இ-ள்.) மத என்னுஞ் சொல் மடம் என்பதன் பொருண்மையும், வலியென்பதன் பொருண்மையும் உணர்த்தும், எ-று. உ-ம்: ‘பதவுமேயலருந்திய மதவுநடை நல்லான்’ (அகம். 14). இது மடம். ‘கயிறிடு கதச்சேப் போல மதமிக்கு’ (அகம். 36). இது வலி. (81) 374. மிகுதியும் வனப்பும் ஆகலும் உரித்தே. (இ-ள்.) மேற் சொல்லப்பட்ட மத என்னும் சொல் மிகுதி என்பதன் பொருளும், வனப்பு என்பதன் பொருளும் படும், எ-று. உ-ம்: ‘பொருநா கிளம்பாண்டி - றேரூரச் செம்மாந்தது போன் மதைஇனள்’ (முல்லைக்கலி. 9). இது மிகுதி. ‘மாதர் வாண்முகம் மதைஇய நோக்கே’ (அகம். 130). இது வனப்பு.’ (82) 375. புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி. (இ-ள்.) யாணர் என்னும் சொல் புதிது படுதற் பொருண்மையை உடைத்து, எ-று. உ-ம்: ‘வித்தொடு சென்ற வட்டி பற்பல, மீனொடு பெயரும் யாண ரூர’ (நற். 210). நாடொறும் புதியது படுகின்றவூர். (83) 376. அமர்தல் மேவல். (இ-ள்.) அமர்தல் என்பது மேவல் என்பதன் பொருள்படும், எ-று. உ-ம்: ‘அகனமர்ந்து செய்யா ளுறையும்’ (குறள். 84). (84) 377. ஆணுக் கவினாம். (இ-ள்.) ஆணு என்னுஞ் சொல் கவின் என்பதன் பொருள்படும், எ-று. உ-ம்: ‘15ஆணு விசும்பி னமர ருளப்படப் - பேணிப் பேணிப் பெரிதெனைப் பெட்டபின்’ - அழகிய விசும்பு எ-று. (85) 378. பரவும் பழிச்சும் வழுத்தின் பொருள. (இ-ள்.) பரவலும், பழிச்சலும் வாழ்த்தலின் பொருள்படும், எ-று. உ-ம்: ‘கடவுட் பரவிக் கைதொழூஉப் பழிச்சி’ (மலை. 538). (86) 379. கடியென் கிளவி வரைவே கூர்மை காப்பே புதுமை விரைவே விளக்கம் மிகுதி சிறப்பே அச்சம் முன்றேற் றாயீ ரைந்தும் மெய்ப்படத் தோன்றும் பொருட்டா கும்மே. (இ-ள்.) கடி என்னும் சொல் வரைவு முதலாக முன்றேற்றீறாக ஓதப்பட்ட பத்துச் சொல்லினும் தெளியத் தோன்றும் பொருளையுடைத்து, எ-று. உ-ம்: ‘கடிந்த கடிந்தொரார் செய்தார்க் கவைதாம், முடிந்தாலும் பீழை தரும்’ (குறள். 658). இது வரைவு. ‘கடுநுனைப் பகழி’; இது கூர்மை. கடி என்னும் சொற்றானே கடு என ஈறு திரிந்து வந்தது. ‘கடியில் புகூஉம் கள்வன்போல்’; இது காவல். ‘கடியுண் கடவுட் கிட்ட சிறுகுரல்-அறியா துண்ட மஞ்ஞை’. (குறுந். 105). இது புதிதுண் கடவுள். ‘கடுந்தேர் குழித்த ஞெள்ள லாங்கண்’ (புறம். 15) இது விரைவு. ‘கடும் பகல்’ (அகம். 148). இது விளக்கம். ‘கடுங்கா லொற்றலின்’. (பதிற். 25). இது மிகுதி. ‘கடிகாவற் பூச்சூடினன்’ (புறம். 239). இது சிறப்பு. ‘கடும் பாம்பு வழங்குந் தெரு’ (குறுந். 354) இஃது அச்சம். ‘கடுஞ்சூ டருகுவ னினக்கே’ (அகம். 110)-நீ தெளியுமாறு சூளுறுகின்றேன். இது முன்றேற்று. (87) 380. ஐயமும் கரிப்பும் ஆகலும் உரித்தே. (இ-ள்.) மேற் சொல்லப்பட்ட கடி என்னுஞ் சொல் ஐயப் பொருண்மையும், கரித்தற் பொருண்மையும் ஆகலும் ஆம், எ-று. உ-ம்: ‘போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின், தேற்றுதல் யார்க்கும் அரிது’ (குறள். 693). இது ஐயம். ‘கடிமிளகு தின்ற கல்லா மந்தி’. இது கரிப்பு. (88) 381. ஐவியப் பாகும். (இ-ள்.) ஐ என்பது வியப்பு என்பதன் பொருள்படும், எ-று. உ-ம்: ‘ஐயென விம்மி யவற்கது கூறிய, பொய்யில் புகழோன் புகழடி கைகூப்பி’ - வியப்பென்றது விம்மி யென்றவாறு. (89) 382. முணைவுமுனி வாகும். (இ-ள்.) முணைவு என்பது முனிதல் என்பதன் பொருள்படும், எ-று. உ-ம்: ‘சேற்றுநில முணைஇய செங்கட் காரான்’ (அகம். 46). (90) 383. வையே கூர்மை. (இ-ள்.) வை என்னும் சொல் கூர்மை யென்பதன் பொருள் படும், எ-று. உ-ம்: ‘வைந்நுனைப் பகழி’ (முல்லை. 73). (91) 384. எறுழ்வலி யாகும். (இ-ள்.) எறுழ் என்பது வலி என்பதன் பொருள்படும், எ-று. உ-ம்: 16‘போரெறுழ்த் திணிதோள்’ (பெரும்பாண். 63). (92) 385. மெய்பெறக் கிளந்த உரிச்சொல் எல்லாம் முன்னும் பின்னும் வருபவை (நாடி) ஒத்த மொழியாற் புணர்த்தனர் உணர்த்தல் தத்தம் மரபிற் றோன்றுமன் பொருளே. எடுத்து ஓதப்பட்ட உரிச்சொல் எல்லாவற்றிற்கும் புறநடை யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பொருள்பெறச் சொல்லப்பட்ட உரிச்சொல் எல்லாவற்றினையும் முன்னும் பின்னும் வருமொழிகளின் பொருண்மையை யாராய்ந்து, அவற்றிற் கியைந்த மொழியாற் புணர்த்துரைக்கவே தத்தம் மரபினாற் பொருள் தோன்றும், எ-று. எனவே பலபொரு ளொருசொல் வந்துழி, முன்னும் பின்னும் வந்த மொழியறிந்து, அதற்கொப்பப் பொருளுரைக்க என்றவாறாம். உதாரணம் மேற் காட்டப்பட்டன. (93) 386. கூறிய கிளவிப் பொருணிலை யல்லது வேறுபிற தோன்றினும் அவற்றொடுங் கொளலே. இதுவுமது. (இ-ள்.) மேல் ஓதப்பட்ட உரிச்சொற்கு ஓதப்பட்ட பொருணிலையல்லது, பிறபொருள் தோன்றினும், சொல்லப் பட்டனவற்றோடு ஒரு நிகரனவாகக் கொள்க, எ-று. உ-ம்: ‘பேஎநாறுந் தாழ்நீர்ப் பனிச்சுனை’ (இறைய. உரை. சூ. 7) என்றவழிப் பேஎ என்பது மிகுதி குறித்து நின்றது. ‘பொய்கை துவன்ற புனிறுதீர் பனுவல்’ என்றவழிப், புனிறு என்பது புதுமையின்கண் வந்தது. ‘கடிமலர்’ என்றவழி மணத்தின்கண் வந்தது. ‘மேன்முறைக் கண்ணே கடியென்றார் கற்றறிந்தார்’ (நாலடி. 56) என்றவழிக் கடியென்பது வதுவையின்கண் வந்தது. ‘தூவற் கலித்த தேம்பாய் புன்னை’ (புறம். 24) என்றவழிக், கலித்தல் தழைப்பின்கண் வந்தது. ‘அடர்பொ னவிரேய்க்கு மவ்வரி வாட’ (பாலைக்கலி. 22) என்றவழி, அரி என்பது நிறத்தின்கண் வந்தது. பிறவும் இவ்வாறு வருவன அறிந்துகொள்க. (94) 387. பொருட்குப்பொருள் தெரியின் அதுவரம் பின்றே. உரிச்சொற்கு உரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பொருட்குப் பொருள் ஆராயின் எல்லையின்று, எ-று. அஃதாவது உறு என்பதற்குப் பொருள் மிகுதி யென்றால், மிகுதி யென்பதற்குப் பொருள் யாதெனில், அதற்கும் ஒரு வாய்பாட்டாற் பொருளுரைப்பின், அதற்குப் பொருள் யாதெனப் பின்னும் வினாவும்; அவ்வாறு வினாவ, அவ்வாராய்ச்சி முற்றுப் பெறாதாம். அதனான், வினாவுவானும் அவ்வாறு வினாவற்க : செப்புவானும் அவ்வாறு செப்பற்க என்றவாறு. வந்தது கொண்டு வாராதது முடித்தல் என்பதனான், இவ் வாராய்ச்சி பெயர்ச்சொற்கும் ஒக்குமென்று கொள்க. அஃதேல், அப்பொருண்மை யுணராதான் அதனை யுணருமாறு என்னை யெனின், அது வருகின்ற சூத்திரத்தான் விளங்கும் என்க. (95) 388. பொருட்குத் திரிபில்லை உணர்த்தல் வல்லின். இஃது ஆசிரியன்கட் கிடந்ததோர் இயல்புணர்த்துதல் நுதலிற்று (இ-ள்.) பொருட்குப் பொருள் வினவிய மாணாக்கன் அவ்வாறு வினவானாம், அவன் கொள்ளுமாறு ஆசிரியன் அஃதுணர்த்த வல்லனாயின், எ-று. என்றது, ஈண்டுப் பயின்றனவாக எடுத்தோதப்பட்ட சொற்களைப் பயிலாதாற்கு அவன் பயின்ற வாய்பாட்டான் உணர்த்துக, உணர்த்தவே, பொருட்குப் பொருள் ஆராய்த லில்லை என்றவாறு. அஃதேல், ‘17உறுதவ நனிஎன வரூஉம் மூன்றும்-மிகுதி செய்யும் பொருள என்ப’ (உரி. சூ. 3) என்பதனாற் பயனின்றாம்: அஃதறியாதாற்குப் பிற வாய்பாட்டாற் பொருளுணர்த்த வேண்டுதலி னெனின், அதற்கு விடை வருகின்ற சூத்திரத்தான் விளங்கும். (96) 389. உணர்ச்சி வாயி லுணர்வோர் வலித்தே. மாணாக்கர்க்கு உரியதோ ரிலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உணர்ச்சி என்பது உணர்வு. வாயில் என்பது புலன். அஃதாவது உணர்த்தப்படுவது. உணர்வோர் வலித்து என்பது உணர்வோரது வலியை யுடைத்து, எ-று. என்றது, பயிலாதவற்றைப் பயின்றவை சார்த்தி உணர்த்து கின்றவழி, பயின்றவாக ஓதப்பட்டன, யாதும் அறியாதாரை நோக்கின அல்ல; உணர்வினான் உணரப்படுவனவற்றை யுணர்வாரை நோக்கிக் கூறப்பட்ட என்றவாறு. எனவே மேற்கூறிய கடாவிடை பெற்றதாம். (97) 390. மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா. உரிச்சொற்கு உரியதோ ரிலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. வந்தது கொண்டு வாராதது முடித்தல் என்பதனாற் பெயர்ச் சொற்கு உரிய இலக்கணமும் உணர்த்திற்றென்று கொள்ளப்படும். (இ-ள்.) இச் சொற்குப் பொருள் இதுவென நியமித்தற்குக் காரணம் விளங்கத் தோன்றா, எ-று. எனவே, காரணமுளவென்பதூஉம், அது புலனாகா தென்பதூஉம் கூறியவாறாம்; என்னை புலனாகாமை எனின், மிகுதல் என்பதற்குப் பொருளாவது முன்பு நின்ற நிலையிற் பெரிதாதல்; அப்பொருண்மை அச்சொற் காட்டுதற்குக் காரணம் உரைப்பரிதாதலான். அஃதேல், காரணமுள போலக் கூறிய வதனாற் பயனென்னையெனின், பொருண்மேற் சொன்னிகழ்தல் தொன்றுபட்டு வருகின்றதாதலின், உலகினுள் மிக்கா ரெல்லாரும் காரணமின்றி வழங்குபவோ என்னும் ஐயங் குறித்துக் கூறினார். அஃதேல், இவ்வெழுத்து இப்பொருள்படும் எனவும், இத் தன்மைத்து எனவும், இப்பயன்தரும் எனவும் மறை நூலகத்தும் பிறாண்டும் உரைக்கப்படு மாகலான், காரணம் உரைப்பரிது என்பது குற்றமெனின், அதற்கு விடை வருகின்ற சூத்திரத்தான் விளங்கும். (98) 391. எழுத்துப்பிரிந் திசைத்தல் இவணியல் பின்றே. எல்லாச் சொற்கும் உரியதோர் இலக்கண முணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஒரு சொற்கு அங்கமாகிய எழுத்துப் பிரிந்து நின்று பொருள் பட ஒலித்தல் இத்தமிழகத்திலக்கணம் இல்லை, எ-று. எனவே, மேல் எழுந்த கடா விடை பெற்றதாம். பொருட்குப் பொருள் தெரியின் என்பது முதலாக இத்துணையும் கூறப்பட்டது உரிச்சொற்குப் பொருளுணர்த்து மாறாம். (99) 392. அன்ன பிறவும் கிளந்த வல்ல பன்முறை யானும் பரந்தன வரூஉம் உரிச்சொல் எல்லாம் பொருட்குறை கூட்ட இயன்ற மருங்கின் இனைத்தென அறியும் வரம்புதமக் கின்மையின் வழிநனி கடைப்பிடித் தோம்படை ஆணையிற் கிளந்தவற் றியலாற் பாங்குற உணர்தல் என்மனார் புலவர். இஃது உரிச்சொற் கெல்லாம் புறநடை யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ‘அன்னபிறவும்...........எல்லாம்’ என்பது ஈண்டு எடுத்து ஓதப்பட்டனவல்லாத அத்தன்மைய பிறவுமாகிப் பல்லாற்றானும் பரந்துவரும் உரிச்சொல் எல்லாம், எ-று. ‘பொருட்குறை.......... இன்மையின்’ என்பது பொருட்குறை படாமற் கூட்ட வழக்கி யன்ற மருங்கின் இத்துணையென வரையறுக்கு நிலைமை தமக்கு இல்லையாகலான், எ-று. இதனானே எடுத்தோதல் அரிதாயிற்று. ‘வழிநனி கடைப்பிடித்து’ என்பது சான்றோர் செய்யுட்கண் வந்த நெறியை மிகவுங் கடைப்பிடித்து, எ-று. ‘ஓம்படை ஆணையின்’ என்பது-ஓம்படை என்பது பாதுகாவல். ஆணை என்பது விதி; பாதுகாவலாக எடுத்தோதப்பட்ட புறநடைச் சூத்திர விதியினான். அஃதாவது ‘முன்னும் பின்னும் வருபவை நாடி, ஒத்த மொழியாற் புணர்த்தன ருணர்த்தல்’ (சூ. 385) என மேற் கூறப்பட்டது. ‘கிளந்தவற்றியலான்’ என்பது பொருளுணர்த்து தற்குக் கருவியாகக் கூறப்பட்ட சொல்லானும், குறிப்பானும், பண்பானும், எ-று. ‘பாங்குற உணர்தல் என்மனார் புலவர்’ என்பது பாங்குபட அறிக என்று சொல்லுவர் புலவர், எ-று. இதன்பொழிப்பு:-எடுத்தோதப்படாத உரிச்சொல்லெல்லாம் ஈண்டுப் பொருட்குறைபடாமல் எடுத்தோதக் கருதின், அவை எல்லை யிலவாதலான், அவை செய்யுளகத்து வழங்கிய நெறியைக் கடைப்பிடித்து, நாம் அதிகாரப் புறநடையாகச் சொன்ன ‘முன்னும் பின்னும் வருபவை நாடி, ஒத்த மொழியாற் புணர்த்தனர் உணர்த்தல்’ என்னும் விதியினானே, சொல்லானதும் குறிப்பானும் பண்பானும் பொருள்படுமாறு அறிந்துகொள்க, எ-று. “கழுதுருவின கஞலிலையன கழிமடலின கைதை” (சூளாமணி. 433) என்றவழிக், கஞலென்பது நெருக்கம் குறித்து நின்றது. ‘18ஒல்லும் வகையான் அறவினை யோவாதே’ (குறள். 33) என்றவழி, ஒல்லென்பது செய்யப்படும் என்பது குறித்து நின்றது. ‘மன்னாவுலகத்து மன்னுதல் குறித்தோர்’ (புறம். 165)’ என்றவழி, மன்னென்பது நிலைபெறுதல் குறித்து நின்றது. “இரும் பிடித் தொகுதியொடு பெரும் கயம்படியா” (புறம். 44) என்றவழி, இருமை யென்பது பெருமை குறித்து நின்றது. ‘அஞ்செங் குவளைக் கண்போ லாயிதழ்’ (அகம். 48) என்றவழி, அம் என்பது அழகு குறித்து நின்றது. “வான மூர்ந்த வயங்கொளி மண்டிலம் நெருப்பெனச் சிவந்த உருப்பவி ரங்காட்டு,” (அகம். 11) என்றவழி, வயங்கென்பதூஉம், அவிரென்பதூஉம் விளக்கங் குறித்து நின்றன அம்மென்பது நுணுக்கங் குறித்தது. உருப் பென்பது வெம்மை குறித்தது. ‘19ஊரவர் கவ்வை எருவாக’ (குறள். 1147) என்றவழி, கவ்வை யென்பது அலர் குறித்து நின்றது. ‘20பொருளானா மெல்லற மென்றீயா திவறும்’ (குறள். 1002) என்றவழி, இவறென்பது லோபம் குறித்தது. “பின்னொன்று பெயர்த்தாற்றும் பீடுடை யாளர்போல்” (கலி. 34) என்ற வழிப்’ பீடென்றது பெருமை குறித்து நின்றது. ‘நொறிலியற் புரவி யதியர் கோமான்’ என்றவழி. நொறில் என்பது நுடக்கத்தின்கண் வந்தது. ‘நொறிலியற் புரவி கழற்கா லிளையோன்’ என்றவழி’ நொறிலென்பது விரை வின்கண் வந்தது. ‘கருவி மான்கணம் கல்லறை தெவிட்ட’ என்றவழித், தெவிட்ட என்பது அசையிட வென்பது குறித்து நின்றது. ‘களிறு வழங்கதர் கானத் தல்கி’ (பொரு. 49) என்றவழி, அல்குதல் தங்குதற்கண் வந்தது. ‘நெடும் பெருங் குன்றத் தமன்ற காந்தள்’ (அகம். 4) என்றவழி, அமல்தல் நெருங்குதற் கண் வந்தது, ‘மலைநாறிய வியன்ஞாலத்து’ (மதுரைக். 4) என்றவழி, நாற்றம் என்பது தோற்றங் குறித்து நின்றது. ‘ நாட்டகாட்டகத் தறுகாற் பறவை’ (புறம். 70 ) என்றவழி, நாடுதல் ஆராய்தற்கண் வந்தது. ‘தணக்குங்காற் கலுழ்பானாக் கண்ணெனவும் உளவன்றோ’ (கலி. 25) என்றவழித், தணத்தல் நீக்கங் குறித்து நின்றது. ‘குரலோர்த்துத் தொடுத்த சுகிர்புரி நரம்பின், அரலை யிவர்வுறீஇ’ (மலைபடு. 23, 24) என்றவழி; அரலை குற்றங் குறித்தது. ‘மாக்கடல் நிவந் தெழு செஞ்ஞாயிற்றுக் கவினை’ (புறம். 4) என்றவழி நிவப்பென்பது ஓக்கங்குறித்தது. ‘மாகந் திவளடி இவருநீள் கொடிமாட வீதி’ என்றவழி, திவள்தலென்பது தீண்டுதல் குறித்தது. இவர்தலென்பது பரத்தல் குறித்தது, ‘வாயாச்செத் தோய்என வாங்கே யெடுத்தனன்’ (கலி. 37) என்றவழிச் செத்தென்பது குறிப்புணர்த்திற்று. பிறவுமன்ன. (100) எட்டாவது உரிச்சொல் லோத்து டுமுடிந்தது இவ்வோத்தினுட் சூத்திரமுட்பட உரையினதளவு கிரந்த வகையான் இருநூற்றெண்பது உயிரியல் அடிகுறிப்புகள் 1. வே 2- சூ. 2. அவைதாம் - சேனாவரையம். 3. வாழியென் - வேறுபாடம். 4. அடுத்த சூத்திரத்தையும் இதனோடு சேர்த்துரைப்பர் - ஏனையுரையாளர்கள். 5. அகம் 22. 6. இதனையும் அடுத்த சூத்திரத்தினையும் ஒன்றாகக் கொள்வர் - ஏனை யுரையாளர்கள். 7. பதிற் 14- காண்க. 8. இதனை மூன்று சூத்திரங்களாகக் கொள்வர் ஏனையுரையாளர்கள். 9. வாழ் நாள் - ஏனையுரைப் பாடங்கள். 10. குறள் 665 காண்க. 11. விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் என்பது ஏனையுரை களின் பாடம். 12. இயம்பலும் இரங்கலும் என்பது ஏனை உரையாளர் பாடம். 13. நாம நல்லார் எனப் பல உரைகளுள்ளும் காணப்படும் இதனைப் பண்டிதர் திரு. அ. கோபாலையரவர்கள் கூர்ந்து ஆய்ந்து, நாம நல்லரா என விருத்தல் வேண்டும் என்றனர். இது சாலவும் பொருத்த முடையதே. 14. உருப்பில் சுற்றம் - பத்துப்பாட்டு அச்சுப்பிரதி 15. ஏட்டுப் பிரதியில் ஆணு என்றுளது. 16. பரேரெறுழ்த் திணிதோள் - பத்துப்பாட்டு அச்சுப்பிரதி. 17. சூ. 3. 18. குறள். 33. 19. குறள் 1147. 20. குறள் 1002. எச்சவியல் கிளவியாக்கம் முதலாக உரியியல் இறுதியாகவுள்ள இயல் களுள் உணர்த்துதற்கு இடமில்லாமையாற் கூறப்படாது எஞ்சி நின்ற சொல்லிலக்கணமெல்லாவற்றையுந் தொகுத்துணர்த்துவது இவ்வியலாதலின் எச்சவியலென்னும் பெயர்த்தாயிற்று. பத்துவகையெச்சம் உணர்த்தலால் எச்சவியல் எனப் பெயராயிற்றென்பாருமுளர். பலபொருட்டொகுதிக்கு அத் தொகுதியைச் சேர்ந்த ஒரு பொருளைப்பற்றிப் பெயரிடுங்கால் அத்தொகுதியுள் தலைமையான பொருளைப்பற்றியோ பெரும்பான்மையாகிய பொருளைப்பற்றியோ பெயரிடுதல் மரபு. அத்தகைய தலைமையாகிய பொருளாகவோ பெரும்பான்மை யாகிய பொருளாகவோ இவ்வெச்சங்களைக் கொள்ளுதற் கில்லாமை யால் அவர் கூற்றுப் பொருந்தாதென்பர் சேனாவரையர். இவ்வியலிலுள்ள சூத்திரங்களை 66-ஆக இளம்பூரணரும், 67-ஆகச் சேனாவரையரும் நச்சினார்க்கினியரும் பகுத்துப் பொருளுரைப்பர். இவ்வியலிலுள்ள ‘இறப்பின் நிகழ்வின்’ (31) ‘எவ்வயின் வினையும், (32) ‘அவைதாந்தத்தங்கிளவி’ (33) என்னும் மூன்று சூத்திரங்களையும் வினையிலக் கணமாகிய இயைபு நோக்கி வினையியலிறுதியில் வைத்து உரை கூறினார் தெய்வச் சிலையார். அவருரையின்படி இவ்வியற் சூத்திரங்கள் அறுபத் தொன்றாம். இவ்வியலின்கண் 1-முதல் 15-வரையுள்ள சூத்திரங்களால் செய்யுட்குரிய சொல்லும் அவற்றது இலக்கணமும் அவற்றாற் செய்யுள் செய்யும் வழிப்படும் விகாரமும் செய்யுட் பொருள் கோளும் ஆகியவற்றையுணர்த்துகின்றார் 16-முதல் 25-வரையுள்ள சூத்திரங்களால் வேற்றுமைத்தொகை, உவமத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை ஆகிய அறுவகைத் தொகைச்சொற்களின் இயல்பினை விரித்துரைக்கின்றார். 26-முதல் 30-வரை சொல் மரபுபற்றிய வழுக்காக்கின்றார். 31-முதல் 33-வரை முற்றுச் சொற்கு இலக்கணங்கூறுகின்றார். 34-முதல் 45-வரை மேல் வினையிய லுள்ளும் இடைச்சொல்லுள்ளும் முடிபு கூறப்படா தெஞ்சிநின்ற பிரிநிலையெச்சம், வினையெச்சம், பெயரெச்சம், ஒழியிசை யெச்சம், எதிர்மறையெச்சம், உம்மையெச்சம், என வென்னெச்சம், சொல்லெச்சம், குறிப்பெச்சம், இசையெச்சம் ஆகிய பத்துவகை யெச்சங்களுக்கும் முடிபு கூறுகின்றார். 46- முதல் 65-வரையுள்ள சூத்திரங்களால் ஒருசார் மரபுவழுக்காத்தலும், கிளவியாக்கத்துக் கூறப்படாதெஞ்சிநின்ற மரபிலக்கணமும், ஒருசார் வழுக்காத்தலும், வினையியலுள்ளும் இடையியலுள்ளும் சொல்லாது ஒழிந்துநின்ற ஒழிபு, புதியன புகுதலும், தலைக்குறை, இடைக்குறை; கடைக் குறையாகிய விகாரமும், வேறுபடுத்தலும் வேறு பகுக்கப்படுதலு மாகிய சொல்வகையுள் இடைச்சொல் லெல்லாம் பொருளை வேறுபடுத்தும் சொல்லாதலும், உரிச்சொல்லுள்ளும் சில அவ்வாறு பொருள் வேறுபடுத்துஞ் சொல்லாதலும், வினை யெச்சத்திரிபும், பொருளால் மாறுபட்ட இருசொற்கள் ஒருங்கு வருதலும்’ குறிப்பாற் பொருளுணரப் படுவனவும், ஒரு பொருள் மேல் வரும் இரண்டு சொற்கள் பிரிவின் நிற்றலும், ஒருமைக்குரிய பெயர்ச்சொல் பன்மை யுணர்த்தலும். ஆற்றுப்படைச் செய்யுளில் முன்னிலை குறித்து நின்ற ஒருமைச்சொல் பன்மையொடு முடிதலும் உணர்த்தப் படுகின்றன. இவ்வியலிறுதியிலுள்ள 66-ஆம் சூத்திரம் இச் சொல்லதிகாரத்திற்குப் புறனடையாக அமைந்துளது. செய்யுளாக்குதற்குரிய சொல்லாவன இயற்சொல், திரி சொல், திசைச்சொல், வடசொல் என நான்காம். அவற்றுள் இயற்சொல்லாவன செந்தமிழ் நிலத்தார் வழங்கும் வழக்கத்திற்குப் பொருந்தித் தத்தம் பொருளின் வழுவாமல் நடக்குஞ் சொல்லாம். ஒரு பொருளைக் கருதிய பலசொல், பல பொருளைக் கருதிய ஒருசொல் எனத் திரிசொல் இருவகைப்படும். திசைச்சொல்லாவன செந்தமிழ் வழக்கைப் பொருந்திய பன்னிரு நிலங்களினும் அவ்வந்நிலத்து வாழ்வார்தம் குறிப்பினையே பொருளாகக் கொண்டு வழங்குவன. வடசொல்லாவன வட மொழிக்கே யுரிய எழுத்தினை நீங்கி இருமொழிக்கும் பொதுவாகிய எழுத்தினையுறுப்பாகவுடைய சொற்களாம். சிறப்பெழுத்தாலாகிய வடசொற்கள் சிதைந்துவந்தனவாயினும் தமிழொலிக்கு ஏற்புடையவாயின் அறிஞர் அவற்றை விலக்கார் எனக் கூறுவர் தொல்காப்பியர். பெயர், வினை, இடை உரி யென மேற்கூறப்பட்ட நால்வகைச் சொற்களே செய்யுட் சொல்லாவன எனத் தெரிதல் வேண்டி இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என நால்வகையாகப் பகுத்துரைக்கப்பட்டன. வடசொல்லென்பது ஆரியச்சொற்போலுஞ்சொல் என்பர் இளம்பூரணர். எனவே வடசொல் யாவும் ஆரியச் சொற்களாகவே இருக்கவேண்டும் மென்ற நியதியில்லையென்பது உரையாசிரியர் கருத்தாதல் பெறப்படும். அன்றியும் ஆசிரியர் தொல்காப்பியனார் வடசொல் எனத் திசைபற்றிப் பெயர்கூறியதல்லது இன்னமொழியெனக் கூறாமையானும் வடசொற்கிளவியில் வடவெழுத்தொடு பொருந்திய ஆரியச்சொல்லும் ஏனைப்பொதுவெழுத்தான் அமைந்த தமிழ்திரி சொற்களும் உளவென்பது “வடசொற்கிளவி வடவெழுத்தொரீஇ, எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே” என ஆசிரியர் கூறுதலாற் பெறப்படுதலின், வடவெழுத்தானமைந்த ஆரியச்சொற்களும் பொதுவெழுத்தானமைந்த தமிழ் திரிசொற்களுமாக வடநாட்டில் வழங்கிய இருவகைச் சொற்களையுமே ஆசிரியர் வடசொல்லெனத் தழுவிக்கொண் டாராதல் வேண்டும். ஆரியச்சிறப்பெழுத்தால் வருவன தமிழொலிக்கேலாமையின் ‘வடவெழுத்தொரீ இ எழுத்தோடு புணர்ந்தசொல் வடசொல், என்றும் ஆரியச் சிறப்பெழுத்தாலாகிய சொற்களும் தமிழொலிக்கு இயைந்தனவாகச் சிதைந்துவரின், அவற்றையும் வடசொல்லெனத் தழுவிக்கொள்ளலாமென்றும் ஆசிரியர் கூறுதலால் தமிழோடு தொடர்பில்லாத வேற்றுமொழி யொலிகள் கலத்தல் கூடாதென்னும் வரையறை இனிது புலனாதல் காண்க. செந்தமிழ் நாடாவது: வையையாற்றின் வடக்கும் மருத யாற்றின் தெற்கும் கருவூரின் கிழக்கும் மருவூரின் மேற்கும் என்பர் இளம்பூரணர் முதலியோர். இவ்வாறு உரைத்தற்குத்தக்க ஆதாரங் காணாமையானும் வையையாற்றின் தெற்காசிய கொற்கையும் கருவூரின் மேற்காகிய கொடுங்கோளூரும் மருதயாற்றின் வடக்காரிய காஞ்சியும் ஆன்றோர் கருத்துப்படி தமிழ்திரி நிலமாதல் வேண்டுமாதலானும் அவர் கூற்றுப் பொருந்தாது. “வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து வழக்குஞ் செய்யுளுமா யிருமுதலின் எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி” எனவரும் சிறப்புப் பாயிரத்துள் வடவேங்கடத்திற்கும் தென் குமரிக்கும் இடைப்பட்ட நிலப்பகுதி முழுவதையும் ‘தமிழ்கூறும் நல்லுலகம்’ எனப் பனம்பாரனார் சிறப்பித்தமையானும், கிழக்கும் மேற்கும் எல்லைகூறாது தென்குமரியெனத் தெற்கெல்லை கூறியவதனாற் குமரியின் தெற்கேயுள்ள நாடுகளையொழித்து வேங்கடமலையின் தெற்கும் குமரியின் வடக்கும் குணகடலின் மேற்கும் குடகடலின் கிழக்குமாகிய தமிழகம் முழுவதையுமே செந்தமிழ் நிலமெனத் தொல்காப்பியர் காலத் தமிழ் மக்கள் வழங்கினர் எனக் கொள்ளுதலே பொருத்தமுடையதாகும். வடவேங்கடந் தென்குமரியிடைப்பட்ட தமிழகம் ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்துப் பன்னிரு நிலங்களாகப் பகுக்கப்பட்டிருந்ததென்பது “செந்தமிழ்சேர்ந்த பன்னிரு நிலத்தும்” (எச்ச-ச) என அவ்வாசிரியர் கூறுதலால் இனிது விளங்கும். இப்பன்னிரு நிலங் களாவன: பொங்கர்நாடு, ஒளிநாடு, தென்பாண்டிநாடு, குட்டநாடு, குடநாடு, பன்றிநாடு, கற்காநாடு, சீதநாடு, பூழிநாடு, மலைநாடு, அருவாநாடு, அருவாவடதலை என்பன என்றும் இவற்றைத் தென்கீழ்பால் முதலாக வடகீழ்பாலிறுதியாக எண்ணிக்கொள்க வென்றும் கூறுவர் சேனாவரையர். ‘செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்’ என்ற தொடர்க்குச் ‘செந்தமிழ் வழங்கும் தமிழ்நாட்டின் பகுதிய வாகிய பன்னிரு நிலங்களினும்’ எனப் பொருள் கொள்ளுதலே ஆசிரியர் கருத்துக்கு ஏற்புடையதாகும். இவ்வாறுகொள்ளாது ‘செந்தமிழ்நாட்டைச் சூழ்ந்த பன்னிரண்டு நிலத்தும்’ எனப் பழைய வுரையாசிரியர்கள் பொருள்கொண்டு, செந்தமிழ் நிலம் வேறாகவும் அதனைச் சூழ்ந்த பன்னிரு நிலங்களும் வேறாகவும் கூறுப. ‘தென்பாண்டிகுட்டம்’ எனத்தொடங்கும் பழைய வெண் பாவிலும் ‘செந்தமிழ்சேர் ஏதமில் பன்னிருநாடு’ எனக் கூறப் படுதலால் இப்பன்னிரு நாடுகளும் செந்தமிழ் வழக்கினை மேற் கொண்டவை யென்பது நன்கு விளங்கும் எனவே. இப்பன்னிரண்டின்வேறாகச் செந்தமிழ் நிலமெனத் தனியே ஒரு நாடிருந்ததென்றும் அஃதொழிந்த பன்னிரு நாடுகளும் கொடுந் தமிழ் நாடுகளாமென்றுங் கூறுதல் ஆசிரியர் தொல்காப்பியனார்க்கு முரணாதல் தெளிக. செய்யுளகத்து மொழிகள் தம்முட்புணரும்முறைநிரல் நிறை, சுண்ணம், அடிமறி, மொழிமாற்று என நால்வகைப் படுமென்றார் தொல்காப்பியனார். பிற்காலத்தார் கூறும் யாற்று நீர்ப் பொருள்கோளும். அளைமறிபாப்புப் பொருள் கோளும் திரிவின்றிப் பொருள் விளக்குதலின் இயல்பாயடங்கும். கொண்டு கூட்டு சுண்ணமொழிமாற்றிலும், பூட்டுவிற் பொருள்கோள் மொழிமாற்றிலும் அடங்குமென்றும், தாப்பிசைப் பொருள்கோளில் முன்னொருசொல் வருவிக்க வேண்டுதலின் அது ‘பிரிநிலைவினையே’ என்னுஞ் சூத்திரத்துளடங்குமென்றுங் கூறுவர் தெய்வச்சிலையார். அறுவகைத் தொகை சொற்களின் இலக்கண முணர்த்துங் கால், வேற்றுமை யுருபும் உவமவுருபும் உம்மையும் வினைச்சொல் லீறும் பண்புச்சொல்லீறும் தொகுதலின் தொகையாயின வென்றும், அவ்வப் பொருள்மேல் ஒன்றும் பலவுமாகிய சொற்கள் பிளவுபடாது ஒற்றுமைப்படத் தம்முள் இயைதலின் தொகை யாயினவென்றும் உரையாசிரியர்கள் இருவகைப் பெயர்க்காரணங் கூறியுள்ளார்கள். ‘ஐம்பாலறியும் பண்புதொகு மொழியும்’ எனவும் ‘செய்யுஞ் செய்தவென்னுங் கிளவியின் மெய்யொருங்கியலுந் தொழில் தொகு மொழியும்’ எனவும் ‘உருபுதொக வருதலும்’ எனவும் ‘மெய்யுருபுதொகா விறுதியான’ எனவும் ‘பண்புதொக வரூஉங்கிளவியானும்’ எனவும் ‘உம்மைதொக்க பெயர்வயினானும்’ எனவும் வேற்றுமை தொக்க பெயர்வயிறானும் எனவும் ‘உம்மையெஞ்சிய இருபெயர்த் தொகைமொழி’ எனவும் ஆசிரியர் தொக்கே நிற்குமெனச் சூத்திரஞ் செய்தலின், வேற்றுமை யுருபும், உவம வுருபும், உம்மும், வினைச்சொல்லீறும், பண்புணர்த்தும் ஈறும், இத்தொகைச் சொற்கள் அல்லாததோர் சொல்லும் தொக்கு நிற்றலின் தொகைச் சொல்லென்பதே அவர் கருத்தாயிற்று” என நச்சினார்க்கினியர் தொகைமொழிபற்றிய தொல்காப்பியனார் கருத்தை நன்கு விளக்கியுள்ளார். முற்றுச் சொல்லாவது இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் மூன்று காலத்தாலும், தன்மை முன்னிலை படர்க்கையென்னும் மூன்றிடத்தாலும், தொழிலாலும் குறிப்பாலும் இவ்விரண்டாய் வரும் அவ்வறுவகைச் சொல்லாம் என்பர் ஆசிரியர். மூவிடத்தும் தொழிலும் குறிப்புப்பற்றி இவ்விரண்டாய் வருதலின் அறுவகைச் சொல்லாயின. செய்கையும், பாலும், காலமும், செயப்படு பொருளும் தோன்றி முற்றி நிற்றலானும், பிறிதோர் சொல் நோக்காது முடிந்து நிற்றலானும், எப்பொழுது அவை தம் எச்சம் பெற்று நின்றனவோ அப்பொழுதே பின் யாதும் நோக்காவாய்ச் செப்பினை மூடினாற்போன்று பொருள் முற்றி அமைந்து மாறுதலானும் முற்றாயின எனக் காரணங் கூறுவர் உரையாசிரியர். பின் ‘பிரிநிலை வினையே பெயரே’ (எச்-34) என்புழிப் பெயரெச்சமும் என்புழிப் பெயரெச்சமும் வினையெச்சமுங் கூறுதலின் அவற்றோடியைய முற்றுச் சொல்லிலக்கணமும் ஈண்டுக் கூறினார். கூறவே முற்றும் பெயரெச்சமும் வினையெச்சமும் என வினைச்சொல் மூவகைத்தாதல் இனிதுணரப்படும். எஞ்சி நிற்பதோர் பொருளையுடைய சொல் எச்சச் சொல் லாகும். பிரிக்கப்பட்ட பொருளையுணர்த்துஞ் சொல் எஞ்ச நிற்பது பிரிநிலையெச்சம். வினைச்சொல் எஞ்ச நிற்பது வினையெச்சம். பெயர்ச்சொல் எஞ்ச நிற்பது பெயரெச்சம். சொல்லொழிந்த சொற்பொருண்மை யெஞ்ச நிற்பது ஒழியிசையெச்சம். தன்னின் மாறுபட்ட பொருண்மை யெஞ்ச நிற்பது எதிர்மறையெச்சம். உம்மையுடைத்தாயும் உம்மையின்றியும் வருஞ்சொற்றொடர்ப் பொருளை எச்சமாகக் கொண்டு முடிய நிற்பது உம்மையெச்சமாகும். எனவென்னும் ஈற்றையுடையதாய் வினையெஞ்ச நிற்பது எனவென்னெச்சமாகும். இவையேழும் தமக்குமேல் வந்து முடிக்கும் எச்சச் சொற்களையுடையனவாகும். சொல்லெச்சம், குறிப்பெச்சம், இசையெச்சம் என்னும் மூன்றும் ஒருதொடர்க்கு ஒழிபாய் எஞ்சிநிற்பன. எனவே இவை பிற சொற்களை விரும்பி நில்லாது சொல்லுவார் குறிப்பால் எஞ்சி நின்ற பொருளை யுணர்த்துவன வென்பர் ஆசிரியர். ஒரு சொல்லளவு எஞ்சி நிற்பன சொல்லெச்சமென்றும், தொடரா யெஞ்சுவன இசையெச்சமென்றும் இங்ஙனம் சொல்வகை யானன்றிச் சொல்லுவான் குறிப்பினால் வேறு பொருளெஞ்ச நிற்பன யாவும் குறிப்பெச்சமென்றும் கூறுப. இப்பத்தெச்சங்கட்கும் வேறு பொருள் கூறுவாருமுளர். எச்சமாவன ஒருசார் பெயரும் வினையும் இடைச்சொல்லு மாதலின் பெயரியல் முதலாயினவற்றுள் இப்பத்தையும் ஒருங் குணர்த்துதற் கிடமின்மையால் எஞ்சி நின்ற இலக்கணங்களைக் கூறும் இவ்வியலின்கண்ணே தொகுத்துக் கூறினார் ஆசிரியர். இவ்வாறே இவ்வியலிற் கூறிய ஏனையவற்றையும் பகுத்துணர்தல் கற்போர் கடனாகும். - க. வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 219-225 ஒன்பதாவது எச்சவியல் 393. இயற்சொற் றிசொற் றிசைச்சொல் வடசொலென் றனைத்தே செய்யு ளீட்டச் சொல்லே. என்பது சூத்திரம். இவ்வோத்து என்ன பெயர்த்தோ வெனின், எச்சவியல் என்னும் பெயர்த்து; கிளவியாக்கம் முதலாக உரிச்சொல்லோத்து ஈறாகக் கிடந்த எட்டோத்தினுள்ளும் உணர்த்தாத பொருளை ஈண்டுணர்த்துதலாற் பெற்ற பெயர். இதன் தலைச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், ஒருவகையாற் செய்யுட்குரிய சொல்லின் பாகுபாடுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இயற்சொல்லும், திரிசொல்லும், திசைச் சொல்லும், வட சொல்லும் என வரும்அந் நால்வகைத்து, செய்யுளாக்குதற் குரிய சொல், எ-று. அவையாமாறு தத்தம் சிறப்புச் சூத்திரத்தான் உணரப்படும். (1) 394. அவற்றுள், இயற்சொற் றாமே, செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித் தம்பொருள் வழாமலி சைக்குஞ் சொல்லே. நிறுத்த முறையானே இயற்சொல்லாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இயற்சொல்லாவனதாம், செந்தமிழ் நாட்டு வழக்கொடு பொருந்தித் தத்தம்பொருள் வழாமல் இசைக்குஞ் சொற்கள், எ-று. செந்தமிழ் நாடாவது:-வையையாற்றின் வடக்கும், மருதயாற்றின் தெற்கும், கருவூரின் கிழக்கும், மருவூரின் மேற்கும் என்ப. இவ்வாறு உரைத்தற்கு ஓர் இலக்கணங் காணாமையானும், வையை யாற்றின் தெற்காகிய கொற்கையும், கருவூரின் மேற்காகிய கொடுங்கோளூரும். மருத யாற்றின் வடக்காகிய காஞ்சியும் தமிழ்திரிநிலமாதல் வேண்டுமாதலானும், அஃது உரையன்று என்பார் உரைக்குமாறு:- 1வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத், தமிழ்கூறு நல்லுலகத்து, வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலின் எழுத்துஞ் சொல்லும் பொருளு நாடி.’ (தொல். எழுத்து, பாயிரம்.) என்றமையானும், இதனுள் தமிழ் கூறும் நல்லுலகமென விசேடித்தமை யானும், கிழக்கும் மேற்கும் எல்லை கூறாது தெற்கெல்லை கூறியவதனாற் குமரியின் தெற்காகிய நாடுகளை யொழித்து வேங்கடமலையின் தெற்கும், குமரியின் வடக்கும், குணகடலின் மேற்கும், குடகடலின் கிழக்குமாகிய நிலம் செந்தமிழ் நிலமென்றுரைப்ப. அந்நிலத்து வழக்கொடு சிவணித் தம்பொருள் வழாமல் இசைக்குஞ் சொல்லாவன:-சோறு, கூழ், மலை, மரம், உண்டான், தின்றான், ஓடினான், பாடினான் என்னுந் தொடக்கத்தன. இவை அந்நிலத்துப்பட்ட எல்லா நாட்டினும் ஒத்து இயறலின் இயற் சொல்லாயின. இவற்றைச் செஞ்சொல் எனினும் அமையும். (2) 395. ஒருபொருள் குறித்த வேறுசொல் லாகியும் வேறுபொருள் குறித்த வொருசொல் லாகியும் இருபாற் றென்ப திரிசொற் கிளவி. திரிசொல்லாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஒருபொருள் குறித்த வேறு வேறு சொல்லாகியும், வேறு வேறு பொருள் குறித்த ஒரு சொல்லாகியும் அவ்விரு பகுதியதென்ப திரிசொல்லாகிய சொல். எ-று. எனவே, இயற்சொல்லல் உணர்த்தப்படும் பொருண்மேல் வேறுபட்ட வாய்பாட்டான் வருவன திரிசொல்லாகும் என்றவாறாம்.அஃதேல், உரிச்சொல்லோ டிதனிடை வேறுபாடு என்னை யெனின், உரிச்சொல் குறைச் சொல்லாகி வரும்; திரிசொல் முழுச் சொல்லாகி வரும் என்க. இதனை, இயற்சொல்லைச் சாரவைத்ததனாற் செந்தமிழ் நாட்டுட்பட்ட தேயந்தோறும் தாம் அறிகுறியிட்டாண்ட சொல்லென்று கொள்க. அவையாவன: மலை யென்பதற்குக் குன்று, வரை யெனவும், குளம் என்பதற்குப் பூழி, பாழி எனவும், வயல் என்பதற்குச் செய், செறு எனவும் வருவன. இவை ஒரு பொருள் குறித்தன. அரங்கம் என்பது யாற்றிடைக் குறையையும், ஆடு மிடத்தையும், இல்லின்கண் ஒரு பக்கத்தினையும் உணர்த்தும். துருத்தி என்பது யாற்றிடைக் குறையையும், தோற் கருவியையும் உணர்த்தும். ஆழி யென்பது கடலையும், நேமியையும், வட்டத்தையும் உணர்த்தும். இவை வேறு வேறு பொருள் குறித்தன. இவ்வாறு திரிந்து வருதலிற் றிரிசொல்லாயிற்று. (3) 396. செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்துந் தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி. திசைச்சொல்லாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) செந்தமிழ் நாட்டைச் சேர்ந்த பன்னிரு நிலத்து முள்ளார் தத்தங் குறிப்பினையுடையது திசைச் சொல்லாகிய சொல், எ-று. பன்னிரு நிலமாவன:-வையையாற்றின் தென்கிழக்காகிய பொதுங்கர் நாடு, ஒளி நாடு, தென் பாண்டிநாடு, கருங்குட்டநாடு, குட நாடு, பன்றி நாடு, கற்காநாடு, 2சீதை நாடு, பூழி நாடு, மலாடு, அருவா நாடு, அருவா வடதலை நாடு என்பன3. இவை செந்தமிழ் நாட்டகத்த. செந்தமிழ் 5(சேர்ந்த) நாடென்றமையான், பிறநாடாகல் வேண்டு மென்பார் உதாரணங் காட்டுமாறு:- “கன்னித் தென்கரைக் கடற் பழந்தீபம், கொல்லங் கூபகஞ் சிங்கள மென்னும், எல்லையின் புறத்தவும் கன்னடம் வடுகம், கலிங்கம் தெலிங்கம் கொங்கணம், துளுவம், குடகம், குன்றகம்” என்பன. “குடபா லிருபுறச்சையத் துடனுறைபுகூருந் தமிழ்திரி நிலங்களும், முடியுடையவ ரிடுநில வாட்சியின், அரசு மேம்பட்ட குறுநிலக் குடுமிகள், பதின்மரும் உடனிருப் பிருவரும் படைத்த, பன்னிரு திசையில் சொன்னய முடையவும்” என்பது அகத்தியச் சூத்திரம். இதனுள் ‘எல்லையின் புறத்தவும், தமிழ்திரி நிலங்களுமாகிய பன்னிரு அரசரும் படைத்த பன்னிரு தேயத்தினும், தமிழ்ச் சொல்லாதற்கு விருப்புடையனவும்’ என்றமையானும் “தமிழ் கூறு நல்லுலகத்து, வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலின், எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி” என நிறுத்துப் பின்னுஞ் “செந்தமி ழியற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு” என ஓதிய வதனாற், சிவணிய நிலமாவது எல்லை குறித்த நிலத்தைச் சார்ந்த நிலமென வேண்டுதலானும், பன்னிரு நிலமாவன :-குமரியாற்றின் தென்கரைப்பட்ட பழந்தீபமும் கொல்லமும் கூபகமும் சிங்களமும், சையத்தின் மேற்குப்பட்ட கொங்கணமுந் துளுவமுங் குடகமுங் குன்றகமும், கிழக்குப்பட்ட கருநடமும் வடுகும் தெலிங்கும் கலிங்கமும் என்று கொள்ளப்படும். இவற்றுள், கூபகமுங் கொல்லமுங் கடல்கொள்ளப் படுதலின், குமரியாற்றின் வடகரைக்கண் அப்பெயரானே கொல்லமெனக் குடியேற்றினார் போலும். பஞ்சத்திராவிட மெனவும் வடநாட்டார் உரைப்ப வாகலான் அவையைந்தும் வேங்கடத்தின் தெற்காதலுங் கூடாமையுணர்க. அந்நிலத்து வழங்குஞ் சொல்லாகிச் 6செஞ்சொல்லின் வேறுபட்டுச் சான்றோர் செய்யுளகத்து வருவன நீக்கப்படா, எ-று. குடாவடியுளியம் (முருகு. 313) என்றவழிக், குடா என்பது குடகத்தார் பிள்ளைகட்கு இட்ட பெயர். அந்தோ என்பது சிங்களவர் ஐயோ என்பதற் கிட்ட பெயர். யான் தற்கரைய வந்து (அகம். 16) என்றவழிக், கரைதல் என்பது கருநாடர் விளிப் பொருளுண்மையுணரக் கூறுவது. செப்பு என்பது வடுகர் சொல்லுதற்குப் பெயராக வழங்குவது. பாண்டில் என்பது தெலிங்கர் பசுவிற்கும் எருத்திற்கும் பெயராக வழங்குவது; கொக்கு என்பது துளுவர் மாவுக்குப் பெயராக வழங்குவது. பிறவும் இவ்வாறு வருவன பலவற்றையும் வந்தவழிக் கண்டு கொள்க. (4) 397. வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே. வடசொற்கிளவி யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வடசொல்லாகிய சொல்லாவது வடமொழிக்கே யுரியவாகிய எழுத்தை நீக்கித் தமிழ் மொழிக்குரிய எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும், எ-று. எல்லா நாட்டிற்கும் பொதுவாயினும், வடநாட்டிற் பயில வழங்குதலின் வடசொல் ஆயிற்று. வடசொல்லென்றதனான் தேய வழக்காகிய பாகதச் சொல்லாகி வந்தனவுங் கொள்க. வடமொழியாவன:- வாரி, மணி, குங்குமம் என்னுந் தொடக்கத்தன. வட்டம், நட்டம், பட்டினம் என்பன பாகதம், பிறவும் அன்ன. (5) 398. சிதைந்தன வரினும் இயைந்தன வரையார். மேலதற்கோர் புறநடை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) எழுத்தொடு பொருந்திய சொல்லே யன்றிச் சிதைந்த சொற்கள் வரினும், தமிழ்வழக்கிற்குப் பொருந்தினவை நீக்கப்படா, எ-று. அவையாவன :-கந்தம், தசநான்கு (நெடுநல். 115), சாகரம், சத்திரம், முத்து, பவளம் என வரும். பாகதச் சிதைவாகி வருவனவுங் கொள்க. இவை நான்கு சொல்லினும் இயற்சொல், பெயர்ச் சொல்லும், வினைச் சொல்லும், இடைச்சொல்லும், உரிச் சொல்லுமாகி வரும். திரிசொல்லுந், திசைச் சொல்லும் பெரும்பான்மை பெயரும், சிறு பான்மை வினையுமாகி வரும். வடசொல் பெயரா யல்லது வாராது7. (6) 399. அந்நாற் சொல்லுந் தொடுக்குங் காலை வலிக்கும்வழி வலித்தலும் மெலிக்கும்வழி மெலித்தலும் விரிக்கும்வழி விரித்தலுந் தொகுக்கும்வழித் தொகுத்தலும் நீட்டும்வழி நீட்டலுங் குறுக்கும்வழிக் குறுக்கலும் நாட்டல் வலிய என்மனார் புலவர். மேற்சொல்லப்பட்ட நால்வகைச் சொல்லும் செய்யுளகத்து விகாரப்படுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ‘அந்நாற்சொல்லும்’ ஆவன :-இயற்சொல்லும், திரி சொல்லும், திசைச்சொல்லும், வடசொல்லும், எ-று. ‘தொடுக்குங் காலை’ யென்பது ஒன்றோடொன்று தொடர்புபடச் செய்யுளாக்குங் காலத்து, எ-று. ‘வலிக்கும்வழி வலித்த’ லென்பது மெல்லெழுத்தினை வல்லெழுத்தாகத் தொடுக்கவேண்டும்வழி வல்லெழுத்தாகத் தொடுத்தல்; ‘மெலிக்கும்வழி மெலித்தல்’ என்பது வல்லெழுத்தினை மெல்லெழுத்தாகத் தொடுக்க வேண்டும்வழி மெல்லெழுத்தாகத் தொடுத்தல். ‘விரிக்கும்வழி விரித்தல்’ என்பது பொருளுணர்த்துஞ் சொல்லின்மேல் ஒன்றும் இரண்டும் எழுத்து விரிக்கவேண்டும் வழி விரித்துத் தொடுத்தல். ‘தொகுக்கும் வழித் தொகுத்தல்’ என்பது பொருளுணர்த்துஞ் சொல்லின்கண் ஒன்றும் இரண்டும் எழுத்துத் தொகுத்துத் தொடுக்கவேண்டும் வழித் தொகுத்துத் தொடுத்தல். ‘நீட்டும் வழி நீட்ட’லென்பது குற்றெழுத்தாகி நின்று பொருள்படுஞ் சொல்லை நெட்டெழுத்தாகத் தொடுக்கவேண்டும்வழி நெட் டெழுத்தாகத் தொடுத்தல், ‘குறுக்கும் வழிக் குறுக்க’லென்பது நெட்டெழுத்தாகி நின்று பொருள்படுஞ் சொற்களைக் குற்றெழுத்தாகத் தொடுக்கவேண்டும் வழிக் குற்றெழுத்தாகத் தொடுத்தல். ‘நாட்டல் வலிய என்மனார் புலவர்’ என்பது இவ்வாறாகச் செய்யுட் கண் வைத்தல் வலியுடைய வென்று சொல்லுவர் ஆசிரியர், எ-று. குற்றமில, என்றவாறு. விகாரப்படாமற் றொடுத்தல் சொல்லாமல் முடிந்ததாம். உ-ம்: “தத்தங் கிளவி தம்மகப் பட்ட முத்தை வரூஉங் காலந் தோன்றின் ஒத்த தென்ப ஏயென் சாரியை’’ (எழுத்.164) என்றவழி, முந்தை என்பது முத்தையென வல்லெழுத் தாயிற்று. “தண்டை யினினக்கிளி கடிவோள்” என்பதனுள் தட்டை எனற்பாலது தண்டையென மெல்லெழுத்தாயிற்று. “8தண்ணந்துறைவன் தகவிலனே” என்றவழித், தண் என்பது தண்ணம் என விரிந்து நின்றது. “வேண்டார் வணக்கி விறல்மதிறான் கோடல்” என்றவழி, வேண்டாதாரை யென்பது வேண்டார் எனத் தொக்கு நின்றது. தொகுத்தலென்பது சுருக்குதல். அஃதேல், அத் ‘தா’ என்பது இவ்விலக்கணத்தான் தொகுக. ஐ என்பது “உருபு தொக வருதல்” என்புழி அடங்காதோ எனின், ஐகாரம் “9உயர்திணை மருங்கின் ஒழியாது வருதலும்” (எழுத். 157) என ஓதப்படுதலின், அஃது உயர்திணைப் பொருட் கண் தொகாது நிற்றல் வேண்டும். ஆயினும், செய்யுளின்பம் வேண்டித் தொகப்பெறு மென்பது இவ்விலக்கணத்தாற் கொள்ளப்படும். “10பாசிழையாகம் பசப்பித்தான்” என்றவழி, பச்சிழை எனற்பாலது பாசிழை என நீண்டு நின்றது. “திருத்தார் நன்றென்றேன் தியேன்” இதனுள், தீயேன் என்பது தியேன் எனக் குறுகி நின்றது. அந்நாற் சொல்லும் இவ்வாறு விகாரப்படும் என்றமையான், ஒரு மொழிக்கண்ணே இவை வருவன உணர்க. (7) 400. நிரனிறை சுண்ணம் அடிமறி மொழிமாற் றெனநான் கென்ப மொழிபுண ரியல்பே. செய்யுளகத்துப் பொருள்புணரச் சொற்றொடுக்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) நிரனிறையும், சுண்ணமும், அடிமறியும், மொழி மாற்றும் என நான்கென்று சொல்லுப : பொருள் மேல் மொழி புணர்க்கும் இயல்பு, எ-று. செய்யுளகத்துத் திரிந்து பொருள்படுஞ்சொல் எடுத் தோதினார்; வழக்கின்கண் இயல்பாகிச் செய்யுட்கண்ணும் இயல்பாகி நடக்கும் பொருள்கள் ஓதவேண்டாமையின் அவையாமாறு தத்தம் சிறப்புச் சூத்திரத்துட் காட்டுதும். (8) 401. அவற்றுள், நிரனிறை தானே வினையினும் பெயரினும் நினையத் தோன்றிச் சொல்வேறு நிலைஇப் பொருள்வேறு நிலையல். நிரனிறை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற்சொல்லப்பட்டவற்றுள், நிரனிறையாவது வினை யானும், பெயரானும் ஆராயப் புலப்பட்டு முடிபுஞ் சொற்களைச் சேர நிறுத்தி, அவற்றிற்கு முடிபாகிய பொரு ளுணர்த்துஞ் சொற்களைச் சேர நிறுத்துதல், எ-று. “11அடல்வே லமர்நோக்கி நின்முகங் கண்டே உடலும் இரிந்தோடும் ஊழ்மலரும் பார்க்கும் கடலும் கனையிருளும் ஆம்பலும் பாம்பும் தடமதியம் ஆமென்று தாம்.’’ என்பதனுள் உடலும், ஓடும், மலரும், பார்க்கும் என்னும் வினை - கடல், இருள், ஆம்பல், பாம்பு என்பனவற்றொடு கடல் உடலும், இருளோடும், ஆம்பல் மலரும், பாம்பு பார்க்கும் என அடைவே முடிந்தவாறு கண்டுகொள்க. “கொடிகுவளை கொட்டை நுசுப்புண்கண் மேனி” என்றவழி, கொடி, குவளை, கொட்டை என்னும் பெயர் நுசுப்பு, உண்கண், மேனி என்னும் பெயரொடு கொடி நுசுப்பு, குவளைக்கண், கொட்டைமேனி என அடைவே முடிந்தவாறு காண்க. வினையும் வினையுமாக வருவன உளவேல், வந்தவழிக் கண்டு கொள்க. 12நினையத்தோன்றி என்றமையான் பொருள் விளங்க நில்லாது. நினைத்தாற் றோன்றுமாறாக மயங்கி வருவனவுங் கொள்க. ‘களிறுங் கந்தும்போல நளிகடற், கூம்புங் கலனுந் தோன்றும்’ (மயிலை-பக்கம்.282) என்றவழி, களிற்றிற்குக் கூம்பும், கந்திற்குக் கலனும் உவமை யன்மையின், களிறு போலுங் கலம், கந்து போலுங் கூம்பு என மயங்கி வந்தவாறு கண்டு கொள்க. (9) 402. சுண்ணந் தானே பட்டாங் கமைந்த ஈரடி யெண்சீர் ஒட்டுவழி யறிந்து துணித்தன ரியற்றல். சுண்ணமாகிய பொருள்கோள் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) சுண்ணமாவதுதான் அளவடியான் அமைந்த ஈரடிக்கண் எண் சீரும் ஒரோவொரு சீராகத் துணித்துப் பொருந்து வழி யறிந்து கூட்டிப் பொருளுரைக்க, எ-று. பட்டாங் கென்பது இயல்பு. அது மிகுதலுங் குறைதலு மில்லாத அளவென்று பொருளாயிற்று. “சுரையாழ அம்மி மிதப்ப வரையனைய யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப கானக நாடன் சுனை.’’ இதனுட் சுரை மிதப்ப, அம்மி ஆழ, யானைக்கு நிலை, முயற்கு நீத்து எனத் துணித்து ஒட்டப், பொருள் விளங்கியவாறு கண்டு கொள்க. இது நாற்சீர்க்கண்ணே துணித்து ஒட்டியது. “தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட பைங்கூந்தல் வெண்கோழி முட்டை யுடைத்தன்ன மாமேனி அஞ்சனத் தன்ன பசலை தணிவேமே வங்கத்துச் சென்றார் வரின். இதன்பொருள்:-அஞ்சனத்தன்ன பைங்கூந்தல்! மாமை பொருந்தின மேனிமேல் தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட கோழிமுட்டை யுடைத்தா லொத்த பசலை, வங்கத்துச் சென்றார் வரில், தணிவேம், எ-று. இதனுள் எண் சீருள் ஒட்டிவந்தது. எண்சீரென வரையறுத்தமையால் அதன்மேற் சென்று ஒட்டாதென்க. (10) 403. அடிமறிச் செய்தி யடிநிலை திரிந்து சீர்நிலை திரியாது தடுமா றும்மே. அடிமறியாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அடிமறியென்பதன் செய்தி சீர்நிலை திரியாது அடி நிலைமை திரிந்து தடுமாறும், எ-று. “சூரல் பம்பிய சிறுகான் யாறே சூரர மகளிர் ஆரணங் கினரே சார னாட நீவர லாறே. வார லெனினே யானஞ் சுவலே” இது, சாரல்நாட! நீ வருகின்ற நெறி சூரற்பம்பிய சிறுகான்யாறு, சூரர மகளிர் வருத்தஞ் செய்வார், வாராதொழி யென யான் அஞ்சாநின்றேன் என அடி மாறிப் பொரு ளுணர்த்தியவாறு கண்டுகொள்க. அஃதேல், இதனை யாப்பிலக்கணத்துள் ஆராய்தல் வேண்டும், சொல்நிலை திரியாமையாலெனின், இது தொடர் மொழித் திரிபாகலான் ஈண்டுக் கூறப்பட்டதென்க. (11) 404. 13பொருடெரி மருங்கின் ஈற்றடி யிறுசீர் எருத்துவயிற் றிரியுந் தோற்றமும் வரையார் அடிமறி யான. மேலதற்கோர் புறநடை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பொருள் ஆராயும் வழி ஈற்றடிக்கண் வரும் இறுதிச் சீர் ஈற்றயலடிக்கண் திரிந்து பொருள்படும் நிலைமையும் நீக்கார், எ-று. இவ்வாறு வருவதும் அடிமறி என்றவாறாம். உதாரணம் வந்தவழிக் கண்டுகொள்க. (12) 405. மொழிமாற் றியற்கை சொன்னிலை மாற்றிப் பொருளெதி ரியைய முன்னும் பின்னுங் கொள்வழிக் கொளாஅல். மொழிமாற்று உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மொழி மாற்றினது இயல்பு சொல் நின்ற நிலையை மாற்றி, முன்னும் பின்னும் பொருள் இயைய ஏற்கும்வழிக் கொளுவுதல், எ-று. மேல், அடிமறி மொழிமாற்றென ஓதினமையானும், சுண்ண மொழிமாற்று ஈரடி எண்சீரென ஓதுதலானும், ஈண்டுச் சொன்னிலை மாற்றி யெனப் பொதுப்பட வோதினமையானும் ஓரடிக்கண் நின்ற சொல்லை அவ்வடிக்கண்ணும் பிறவடிக் கண்ணும் 14முன்பாயினும் பின்பாயினும் ஏற்கும் வழிக் கொளுவப்பெறும், எ-று. “15பன்மையும் ஒருமையும் பாலறி வந்த அந்நா லைந்தும் மூன்றுதலை யிட்ட முன்னுறக் கிளந்த உயர்திணை யவ்வே.’’ (சொல். 202) என்றவழி, மூன்று தலையிட்ட அந்நாலைந்தென ஓரடிக்கண் மொழிமாற்றி நின்றது. “ஆலத்து மேல குவளை குளத்துள வாலினெடிய குரங்கு” என்றவழி, குரங்கு ஆலத்துமேல எனப் பிற அடிக்கண் மொழிமாறி நின்றது. பிறவும் அன்ன. அஃதேல் பூட்டுவிற் பொருள்கோள், புனல்யாற்றுப் பொருள் கோள், தாப்பிசைப் பொருள்கோள், அளைமறி பாப்புப் பொருள்கோள், கொண்டு கூட்டுப் பொருள்கோள் எனவும் ஒரு சாராசிரியர் உரைப்பவால் எனின், அவற்றுள் யாற்றொழுக்கும், அளைமறிபாப்புப் பொருள்கோளும் திரிவின்றிப் பொருள் படுதலின் இயல்பாம். கொண்டுகூட்டு, சுண்ண மொழிமாற்றுள் அடங்கும். பூட்டுவிற் பொருள்கோள் மொழிமாற்றுள் அடங்கும். தாப்பிசைப் பொருள்கோட்கண் முன்னொரு சொல் வருவிக்க வேண்டுதலின். இது ‘பிரிநிலைவினை’ (சூ.30) என்னுஞ் சூத்திரத்துள் அடங்கும். (13) 406. த ந நு எ எனும் அவைமுத லாகிய கிளைநுதற் பெயரும் பிரிப்பப் பிரியா. ஒட்டுப் பெயர்க்கு உரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) த, ந, நு, எ என்னும் அவை முதலாகியவும், கிளைமை நுதலிய பெயரும் பொருள் நிலையாற் பிரிக்க நினைக்கின் பிரிந்து பொருள்படா. ஒட்டி நின்றே பொருள்படும், எ-று. ஆகியவும் என்னும் உம்மை தொக்கு நின்றது. த, ந, நு, எ என்னும் அவை முதலாகியவாவன :-தான், தாம்; நாம், யாம், யான், நீ, நீர் என மூன்றிடத்துப் பெயர்களும் ஆறாம் வேற்றுமைக் கிழமைப் பொருள் குறித்து, முன்னிலை குறுகியும் திரிந்தும் வந்து, கிழமைப் பொருளுணர்த்துஞ் சொல்லின் ஈற்றெழுத்தோடு ஒட்டி நின்று தமன், தமர், தமது, தம எனப் படர்க்கையிலும்; நுமன், நுமள். நுமர், நுமது, நும என முன்னிலையிலும்; நமன், நமள், நமர், நமது, நம, எமன், எமள், எமர், எமது, எம எனத் தன்மையிலும் வருவன. கிளை நுதற் பெயராவன:-இம்மூன்றிடத்தும் ஒட்டுப்பட்ட பெயர்கள், ஆறாம் வேற்றுமை முறைமையைக் குறித்து மேற்சொல்லியவாற்றான் தந்தை, நுந்தை, எந்தை எனவும்; தாய், ஞாய், யாய் எனவும்; தம்முன், நும்முன், எம்முன் எனவும்; தம்பி, நும்பி, எம்பி எனவும்; முதல்வனையும், ஈன்றாளையும், முன் பிறந்தானையும், பின்பிறந்தானையும் உணர்த்துவன பன்மைச் சொற்களெல்லாம் பொருள்முகத்தாற் றம்மையும் பிறரையும் உணர்த்துவன. இச் சொற்களெல்லாம் ஏனையபோலப் பிரிக்கப்படா , ஒட்டி நின்றே பொருள்உணரப்படும், எ-று. வந்தது கண்டு வாராதது முடித்தல் என்பதனான், காரணப் பெயராகிவரும் தொழிற் பெயரும், உடைய பெயரும், பண்புப் பெயர் முதலாயினவும் பிரிப்பப் பிரியாவென்று கொள்க. பிறன், பிறள், பிறர் என்பவோவெனின், அவை ஒட்டுப் பெயரல்ல என்க. (14) 407. வேற்றுமைத் தொகையே யுவமத் தொகையே வினையின் தொகையே பண்பின் தொகையே உம்மைத் தொகையே யன்மொழித் தொகையென் றவ்வா றென்ப தொகைமொழி நிலையே. தொகைச் சொல்லாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வேற்றுமைப் பொருள் குறித்த தொகையும், உவமப் பொருள் குறித்த தொகையும், தொழில் குறித்த தொகையும், பண்பு குறித்த தொகையும், உம்மைத் தொகை செய்யுந் தொகையும், அல்பொருள் குறித்த தொகையும் என அறுவகைப்படும் தொகைச்சொல்லது நிலைமை, எ-று. 16தொகைச் சொல்லாவது:- பொருளுணர்த்துஞ் சொல்லாயினும், தொழிலுணர்த்துஞ் சொல்லாயினும் இரண்டு விட்டிசைத்து நில்லாது ஒட்டி நிற்பது. இஃது ஒட்டுப் பெயர் என்னுங் குறியும் பெறும். உதாரணம் வருகின்ற சூத்திரத்துட் காட்டுதும். (15) 17இசைநிறை யசை நிலை பொருளொடு புணர்தலென் றவைமுன் றென்ப வொருசொல் லடுக்கே. 408. அவற்றுள், வேற்றுமைத் தொகையே வேற்றுமை யியல. வேற்றுமைத் தொகை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வேற்றுமை யியல்புடையன வேற்றுமைத் தொகை எ-று. வேற்றுமையியல என்றதனான், வேற்றுமைகட்கு ஓதிய செயப்படு பொருள் முதலாக இடம் ஈறாக வரும் பொருண்மைக் கண் தொகுஞ்சொல் வேற்றுமைத் தொகையாம் என்று கொள்க. முதல் வேற்றுமை பெயர்ப் பயனிலை கொள்வழியும் விட்டிசைத்தே நிற்றலானும், எட்டாவது விரிந்து நிற்றலானும் இவையிற்றை யொழித்து ஏனைய தொகுமென்று கொள்க. ஏகாரம் தேற்றேகாரம். அவை தொகுமாறு:- படையைப் பிடித்த கை, குழையையுடைய காது, குதிரையாற் பூட்டப்பட்ட தேர்; தாயொடு கூடி மூவர்; கடிசூத்திரத்திற்கு வைத்த பொன்; வரையினின்றும் வீழாநின்ற அருவி; யானையது கோடு, குன்றத்துக்கண் வாழாநின்ற கூகை என்பன-படைக்கை, குழைக்காது, குதிரைத்தேர், தாய்மூவர், கடிசூத்திரப்பொன், வரையருவி, யானைக்கோடு, குன்றக்கூகை எனத் தொகும். நிலத்தைக் கடந்தான், வாளால் வெட்டினான், கொலைக்கு உடம்பட்டான், வரையினின்றும் பாய்ந்தான், குன்றத்துக்கண் இருந்தான் என்றவழி, இறுதி நின்ற சொல் தொழிலுணர்த்தாது அது செய்தார்க்குப் பெயராகி வந்துழி, நிலங் கடந்தான், வாள் வெட்டினான், கொலையுடம்பட்டான், வரைபாய்ந்தான். குன்றத்திருந்தான் என இரண்டு பெயரும் ஒட்டி ஒரு சொல்லாகி வரும். கள்ளையுண்டல், வாளால்வெட்டல், கொலைக்குடம் படுதல், வரையினின்றும் பாய்தல், மாடத்துக்கண்ணிருத்தல் என்பன கள்ளுண்டல், வாள்வெட்டல், கொலையுடம்படுதல், வரைபாய்தல், மாடத்திருத்தல் எனத் தொகும். அஃதேல், இவ்வாறு வருவன உருபு தொகை என அடங்காவோ வெனின், ஆண்டு அவ்வேற்றுமைகட்கு ஓதிய வாய்பாட்டான், தொழிலொடும், பெயரொடும் முடிவுழி, உருபு மாத்திரம் தொக்கு இரண்டு சொல்லாகி நிற்கும்; ஈண்டு ஒரு சொல்லாகிவரும். ஆறாவதன்கண் வரும் தொகை உருபு தொகையும், பொருட்டொகையும் என வேறுபாடின்றால் எனின், ஆண்டும் வேறுபாடு உள. மரக்கோடு என்றவழி ஒட்டுப்பட்டுப் பொருட்டொகையாகி நின்றது. மரத்தின் கோடு என்றவழி, உருபு தொகையாகி இரண்டு சொல்லாகி நின்றது. இவை சொல் நோக்கான் உணர்க. “வேற்றுமைத் தொகையே வேற்றுமை யியல” என்றதனான் அவ் வேற்றுமை மொழிமாறி நிற்குமாகலின், அத்தொகைச்சொல் மொழி மாறி நின்று ஒட்டுப்படுதலுங் கொள்க. மலையதிடை, மலையதகம் என்பன இடைமலை; அகமலை எனவும் வரும். பிறவும் அன்ன. அஃது அற்றாக; 18உலக முவப்ப...........வாணுதல் கணவன் என்பது பல சொல்லாகி வந்து கணவன் என்பதனொடு முடிந்து கிடத்தலான், இரண்டு சொல் ஒரு தொகையாம் என்றல் பொருந்தாதால் எனின், எவ்வாறு வரினும் இரண்டு சொல்லாகி வந்தல்லது ஒட்டுப்படா தென்று கொள்க. அஃதாயவாறு என்னையெனின், பூந்தொடை போலக் கொள்க. அஃது இரண்டாயவாறு என்னையெனின், முற்பட இரண்டு பூவை எடுத்து ஒன்றாகக் கட்டும். அதன்பின் அவ்விரண்டும் ஒன்றாகி நின்ற தொடை யோடேகூடப் பின்னும் ஒரு பூவை யெடுத்துக் கட்டும். அதன்பின் அம்மூன்று பூவும் ஒன்றாகக் கட்டப்பட்ட தொடையோடே பின்னும் ஒரு பூவை எடுத்துக் கட்டும். அவ்வாறு கட்டப்பட்ட தொடைகளைப் பின்னும் இரண்டு பின்னாகச் சேர்த்தது ஒன்றாக்கும். இவ்வாறே எல்லாப் பூவும் இரண் டொன்றாக இணைத்ததாம். சொற்றொடையும் ஒட்டுப் படுங்கால் இவ்வாறு வருமென்று கொள்க. ‘உலக முவப்ப...வாணுதல் கணவன்’ என்பது இரண் டொன்றாக ஒட்டியவாறென்னையெனின் உலகமென்பது உலகத்துள்ளார்க்குப் பெயராகி உவப்ப என்னும் செயவென் னெச்சத்தொடு முடிந்தது. வலனாக என்னும் எச்சத்துக்கண் ஆகவென்பது செய்யுள் விகாரத்தான் தொக்கு நின்றது. தொக்குநின்ற காலத்தும் அதற்கு இயல்பு முற்பட்ட நிலைமை யென்று கொள்க. என்போலவெனின், வாலுஞ்செவியும் இழந்த ஞமலியைப் பின்னும் ஞமலியென்றே வழங்கினாற்போல. உவப்ப வலனாக என்னும் செய்பென்னெச்சமும், ஏர்பு என நிகழ்காலங் குறித்த செயவென்னெச்சமும் திரிதரு வென்னும் பெயரெச்சத்தொடு முடிந்தன. பலரானென்னும் மூன்றாம் வேற்றுமை ஏற்ற பெயர் ‘உருபு தொக வருதல்’ (சொல். 101) என்னும் இலக்கணத்தான் தொக்குப் பலரென நின்றது. அது புகழப்பட்ட என்பதற்கு அடையாகி நின்றது. அடையெனினும் விசேடணம் எனினும் ஒக்கும். புகழப்பட்ட வென்னும் பெயரெச்சம், உண்சோறென்றாற்போலப் பொருண்மேல் வந்து வினைத்தொகையாகிப், புகழ்ஞாயிறென ஒட்டி ஒரு சொல்லாகி நின்றது. அது திரிதருவென்னும் பெயரெச்சத்திற்கு முடிபாயிற்று. ஞாயிறு என்பதற்கு முன்னுள்ள சொல்லெல்லாம் தொகுத்து நோக்க ஞாயிற்றிற்கு அடையாகி நின்றன. ஞாயிற்றை யென்னும் உருபு தொக்கு நின்றது. கடலின்கண்ணென்னும் உருபு தொக்கு நின்றது. கண்டாங்கு என்பது கண்டாற்போலும் என்னும் உவமப் பொருள் உணர நின்றது. இத்துணையும் உணர்த்தப்பட்டது உதய ஞாயிறுபோல என்னும் பொருண்மை. 19ஓவற என்பது-ஓவு ஒழிவு, அற என்பது இல்லையாக என்னுஞ் செயவெனெச்ச வாய்பாடு. அதற்கு ஓவு என்பது அடையாகி நின்றது. அறவென்பது இமைக்கும் என்னும் பெயரெச்சத்தொடு முடிந்தது. சேணின்கண் என்பது சேண் என உருபு தொக்கு நின்றது. அது விளங்கும் என்பதற்கு அடையாகிநின்றது. அவிர் என்பது விளக்கத்தின் மிகுதியைக் குறித்து வந்து ஒளியென்னும் பெயரொடு வினைத்தொகையாகி, அவிரொளி யென ஒரு சொல்லாயிற்று. அது விளங்கு என்பதனோடு ஒட்டி வினைத் தொகையாகி, விளங்கவிரொளி யென ஒரு சொல்நீர்மைப்பட்டது. அஃது இமைக்கும் என்னும் பெயரெச்சத்திற்கு முடிபாயிற்று. உலகம் என்பது முதலாக இத்துணையுங் கூறப்பட்டது ஞாயிறு போல் விளங்கும் ஒளியென ஒளிக்கு அடை கூறுதலான், அவ்வொளியோடே எல்லாச் சொல்லும் முற்றி நின்றன. உறுநரை என்பது உறுநர் என உருபு தொக்கு நின்றது. தாங்கிய என்பது பெயரெச்சம். அதற்கு உறுநர் என்பது அடையாகி நின்றது. 20மதன் என்பது வலி. அது மதம் என்னும் உரிச்சொல் ஈறுதிரிந்து நின்றது. மதனை என்னும் ஐகாரம் தொக்கு நின்றது. 21நோன்மை-பொறை. திருவடி யடைவார் பலராதலின், அவரெல்லாரையும் பொறுக்க வல்ல தாளென்னும் பொருண்மைத்தாகி, நோன்றாளென வேற்றுமைத் தொகையாகி ஒரு சொன்னீர்மைப்பட்டது. அது மதனுடை நோன்றாள் என அடையடுத்து உறுநர்த் தாங்கிய என்னும் பெயரெச்சத்திற்கு முடிபாயிற்று. செறுநரை என்பது செறுநர் என உருபு தொக்கு நின்றது. தேய்த்த என்பது பெயரெச்சம். அதற்குச் செறுநர் என்பது அடையாகி நின்றது. 22செல் என்பது மழை. உறழ்தல் என்பது ஒத்தல். அது தடக்கை என்பதற்கு உவம நிலையான் அடையாகி நின்று, செல்லுறழ் தடக்கையென்று ஒரு சொன்னீர்மைப்பட்டது. அது தேய்த்த என்னும் பெயரெச்சத்திற்கு முடிபாயிற்று. மறு என்பது குற்றம். இல் என்பது இல்லாமை. குற்றமில் கற்பெனக் கற்பிற்கு அடையாயிற்று. வாள் என்பது ஒளி. அஃது ஒளிநுதல் என அடையடுத்து நின்று ‘சினையிற்கூறு முதலறி கிளவி’யாகி (சொல். 111) அதனை யுடையாட்குப் பெயராகி நின்றது. அது மறுவில் கற்பின் வாணுதல் எனப் பண்புட் தொகையாகி ஒரு சொன்னடையாயிற்று. அது கணவன் என்னும் பெயரொடு கிழமைப் பொருட்டாகிய ஆறாம் வேற்றுமைத் தொகையாகி, வாணுதல் கணவன் என ஒரு பெயராயிற்று. அது செல்லுறழ் தடக்கைக் கணவனென இரண்டாம் வேற்றுமைட் தொகையாகி ஒருசொன்னீர்மைப் பட்டது. அது மதனுடை நோன்றாள் என்பதனோடும் அவ்வாறே ஒட்டி நோன்றாட் டடக்கைக் கணவன் என ஒருசொன்னடை யாயிற்று. அது சேண்விளங் கவிரொளி என்பதனோடும் அவ்வாறே யொட்டிச் சேண் விளங் கவிரொளி நோன்றாட்டடக்கைக் கணவன் என ஒருசொன்னடையாயிற்று. இவ்வாறே சொன்னிலை யுணர இரண்டு சொல்லே தொகையாகியவாறு கண்டுகொள்க. ‘23எல்லாத் தொகையும் ஒருசொன்னடைய’, (தொல். எச். சூத். 23) என்றோதினமையானும் ஆசிரியன் கருத்திதுவென்று கொள்க.(16) 409. உவமத் தொகையே உவம வியல. உவமைத்தொகை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உவம இயல்புடையன உவமத் தொகையாம், எ-று. உவமையாவது தொழிலான் ஆதல், பயனான் ஆதல், வடிவினான் ஆதல், வண்ணத்தினான் ஆதல் இதுபோலும் இது என ஒன்றோடொன்று உவமை கூற வருவது. அவ்வுவமையும், உவமிக்கப்படும் பொருளும் விட்டிசைத்து நில்லாது செறிய நிற்பது உவமைத் தொகையாம், எ-று. புலியன்ன பாய்த்துள், மழையன்ன வண்கை, துடியன்ன இடை, பொன்னன்ன மேனி என்பன புலிப்பாய்த்துள், மழை வண்கை, துடியிடை, பொன்மேனி என வரும். பிறவும் அன்ன. இவை விரியுங்காலத்து, புலியை யொக்கும் பாய்த்துள், மழையை யொக்கும் வண்கை எனவும் விரிதலானும், ‘காப்பினொப்பின்’ (சொல். 70) என இரண்டாவதன்கண் ஒப்போதலானும் உவமைத் தொகை யென்பதொன் றில்லை, இவையும் வேற்றுமைத் தொகையாம் எனின், ஒக்கும். மழையன்ன வண்கை யென்றவழி, இரண்டாமுருபு விரியாமலும் தானின்று உவமிக்கப்படும் பொருளைக் காட்டுதலின், இவ்வாறு வருஞ் சொற்களை உவமத் தொகை யென்றார். அதனானேயன்றே, உவம இயல் புடையன உவமத் தொகையென ஓதுவாராயினர். இன்னும், ‘உவம வியல உவமத் தொகை’ யென்றதனான் உவமையும், உவமிக்கப்படும் பொருளும் மாறி நிற்றலும் கொள்க. முகத்தாமரை, கைம் மாரி என வரும். இவை உருபகம் அன்றோ வெனின், உருபகத்தொகை யென்றோதாமையானும், பண்புத் தொகையுள் அடங்காமை யானும் உவமையுள் அடங்கும். இத் தொகையை வேற்றுமைத் தொகையொடு சேர ஓதியவதனான், அதனோடு இதற்கு ஒற்றுமை யுண்டென்று கொள்க. (17) 410. வினையின் றொகுதி காலத் தியலும். வினைத்தொகை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வினையின் தொகுதி காலச் சொல்லோடே நடக்கும், எ-று. வினைச்சொல்லாவது தொழிலுங், காலமும், பாலும் உணர்த்தலின், பாலுணர்த்துஞ் சொல் முற்றுச் சொல்லாகி நின்று தொகைநிலை யாகாமையானும், பால் காட்டாத வினையெச்சம், பெயரெச்சம் என்னும் இரண்டனுள்ளும், வினையெச்சம் முற்று வினைச்சொல்லோடல்லது முடியாமை யானும், ஈண்டுத் தொகுவதும் விரிவதும் பெயரெச்சம் என்று கொள்க. அது தொகுங்காலத்துப் பொருண்மை யுணர்த்துஞ் சொல்லே தொகுவதும் விரிவதும் என்று கொள்க, தொழிலும், பொருளும் விட்டிசைத்து நில்லாது ஒற்றுமைப்பட்டதனை வினைத்தொகை யென்றார். கொல்லும் யானை, கொன்ற யானை; உண்ணும் நீர்; உண்ட நீர்; அரியும் வாள், அரிந்த வாள்; செல்லும் இடம், சென்ற விடம், உண்ணும்பொழுது, உண்டபொழுது; கொல்லுங் கொலை, கொன்ற கொலை என்பன கொல்யானை, உண்ணீர், அரிவாள், செல்லிடம், உண்பொழுது, கொல்கொலை எனத் தொகும். பிறவும் அன்ன. (18) 411. வண்ணத்தின் வடிவின் அளவிற் 24சுவையினென்(று) அன்ன பிறவும் அதன்குணம் நுதலி யின்ன திதுவென வரூஉ மியற்கை யென்ன கிளவியும் பண்பின் றொகையே. பண்புத்தொகையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வண்ணம், வடிவு, அளவு, சுவை யென்பனவற்றினும், அத் தன்மைய பிறவுமாகி, ஒரு பொருளினது குணத்தைக் கருதி இன்னது இது என ஒன்றையொன்று விசேடித்து வரும் இயல் பினையுடைய எல்லாச் சொல்லும் பண்புத் தொகையாம், எ-று. கரியது குதிரை, 25வட்டம்பலகை, நெடியது கோல், திவ்விது கரும்பு என்பன கருங்குதிரை, வட்டப்பலகை, நெடுங்கோல், தீங்கரும்பு எனத் தொகும். அன்ன பிறவும் என்றதனான், தண்ணீர், வெந்நீர் என்பன முதலாயின கொள்க. அஃதேல் இவை, கரிய குதிரை, நெடிய கோல் எனப் பெயரெச்ச வாய்பாட்டானும், பண்பு பற்றி வருஞ்சொல் வினைக்குறிப்பாகி முடிதலானும் வினைத்தொகையுள் அடங்கு மெனின், பண்புத்தொகை யொருவாய்பாட்டான் விரிக்கப்படாதென்பது எழுத்ததி காரத்துட் (எழுத். 482) கூறுதலிற் பெயரெச்ச வாய்பாடும் வரும் வினைக்குறிப்பாதலானேயன்றே, வினைத்தொகையொடு சேர ஓதுவாராயிற்று என உணர்க26 கருமையை யுடைய குதிரையென வேற்றுமைத் தொகையாயும் அடங்குமால் எனின், இன்னதிது வென ஒன்றையொன்று விசேடித்து வருதல் வேண்டும். அவ்வாறு வருங்கால் வேற்றுமைத் தொகையாகாதென்க. வேற்றுமைத் தொகை, உவமைத்தொகை, வினைத்தொகை, பண்புத் தொகை என்பன தம்முள் ஒரு புடை ஒப்புமையுடையவாதலிற், பாணினி யார் தற்புருட சமாசம் என்று குறியிட்டார். இனி, “இன்ன திதுவென வரூஉ மியற்கை என்ன கிளவியும்” என்றதனாற், பண்புபற்றி வருதலேயன்றிப், பெயரினான் ஒன்றையொன்று விசேடித்துவந்து ஒட்டுப்படினும், பண்புத்தொகையாம் என்று கொள்க. வாணிகச்சாத்தன், சாரைப் பாம்பு என வரும். ஆயன் சாத்தன், ஆசிரியன் நவ்வந்துவன் என எழுவாயும், பயனிலையு மாகி வருதலின்றி, ஒட்டுப்படாத நிலைமையவாயினும், முதற் பெயரே விசேடணமாகிவரின், அதுவும் பண்புத் தொகையா மென்று கொள்க. (19) 412. இருபெயர் பலபெயர் அளவின் பெயரே எண்ணியற் பெயரே நிறைப்பெயர்க் கிளவி எண்ணின் பெயரோ டவ்வறு கிளவியும் கண்ணிய நிலைத்தே உம்மைத் தொகையே. உம்மைத்தொகை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இருபெயர் முதலாகச் சொல்லப்பட்ட அறு வகையும் உம்மைத் தொகை, எ-று. ஊ-ம்: ‘இருபெயராவது’ பொருட்பெயரும், தொழிற் பெயரும். அவையாவன: கபிலன், பரணன்; ஆடல், பாடல். ‘பல பெயராவது’ பன்மை குறித்த பெயர். அவை பார்ப்பார், சான்றோர் என்பன. மேற்சொல்லப்பட்டன ஒருமை குறித்தலின், இது வேறோதப்பட்டது. ‘அளவின் பெயராவது’ அளக்கப்பட்ட பொருளைக் குறியாது அளவு தன்னையே குறித்து நிற்பது. அவை உழக்கு, நாழி, குறுணி, பதக்கு, தூணி, கலம் என்பனவும். கூப்பீடு, காதம் என்பனவும் அதுவே. ‘எண்ணியற் பெயராவது’ எண்ணினாற் பொருள் குறித்தியலும் பெயர். அவையாவன பதின்மர், ஐவர் என்பன. ‘நிறைப்பெயர்க் கிளவி’ என்பது நிறுக்கப்பட்ட பொருளைக் குறியாது நிறையின் பெயராகி வருவது. அவை குன்றி, மஞ்சாடி, கால், அரை, கழஞ்சு என்பன.‘எண்ணின் பெயராவது’ எண்ணப்பட்ட பொருளைக் குறியாது, எண் தன்னைக் குறித்து நிற்பது. அவை ஒன்று, இரண்டு, பத்து, நூறு என்பன. அவ்வாறு கிளவியும் கண்ணிய நிலைத்தே உம்மைத்தொகையே என்பது அறுவகைப்பட்ட பெயரையுங் குறித்த நிலைமைத்து உம்மைத் தொகை, என்றவாறு. வரையறுத்து ஓதாமையால், இரண்டும், பலவும் வரப்பெறும் என்று கொள்க. கபிலனும், பரணனும் வந்தார் எனற் பாலது கபிலர் பரணர் வந்தார் என வரும். ஆடலும், பாடலும் தவிர்ந்தார் என்பது ஆடல் பாடல் தவிர்ந்தார் என வரும். பார்ப்பாரும், சான்றாரும் வந்தார் எனற்பாலது பார்ப்பார் சான்றார் வந்தார் என வரும். தூணியும், பதக்கும் குறையும் எனற்பாலது தூணிப்பதக்குக் குறையும் என வரும். பதின்மரும், ஐவரும் போயினார் எனற்பாலது பதினைவர் போயினார் என வரும். கழஞ்சும், அரையுங் குறையும் எனற்பாலது கழஞ்சரைக் குறையும் என வரும். பத்தும் இரண்டுங் குறையும் எனற்பாலது பன்னிரண்டு குறையும் என வரும். இனி, புலிவிற்கெண்டை, அந்தணரரசர்வணிகர், தூணிப்பதக்கு முந்நாழி, நூற்றிருபத்தைவர், மாகாணியரைக் காணி, நூற்று முப்பத்து மூன்று எனவும் வரும். பிறவும் அன்ன. பல்பொருட் கேற்பின் நல்லது கோடல் என்பதனான் எண்ணும்மையே ஈண்டுத் தொகுவதென்று கொள்க. இடைச்சொல் ஓத்தினுள்ளும் உம்மை தொகும் என்றாரா லெனின், ஆண்டு விரிந்துநின்ற சொல்லின்கண் உம்மை தொகவும் பெறுமென்றார். ஈண்டு ஒட்டிநிற்கும் சொல்லினது இலக்கணங் கூறினாரென்க. (20) 413. பண்பு தொகவரூஉங் கிளவி யானும் உம்மை தொக்க பெயர்வயி னானும் வேற்றுமை தொக்க பெயர்வயி னானும் ஈற்றுநின் றியலும் அன்மொழித் தொகையே. அன்மொழித்தொகை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பண்பு தொகவரும் பெயர்க்கண்ணும், உம்மை தொக்க பெயர்க்கண்ணும், வேற்றுமை தொக்க பெயர்க்கண்ணும் இறுதிக் கண்ணின்றியலும் அன்மொழித் தொகை, எ-று. அல்லாத மொழி தொகுதலின், அன்மொழித் தொகை யாயிற்று. இம்மூவகைத் தொகையினும் ஈற்று நின்றியலும் என்றதனான், முன்னும் பின்னும் நின்ற இரண்டு சொல்லானும் உணரப்படும் பொருண்மையுடைத்து அன்மொழித் தொகை என்று கொள்க. உ-ம்: 27“கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோ லதுவல்ல, தில்லை நிலக்குப் பொறை” (குறள். 570) என்றவழிக், கடுங்கோல் என்பது அஃதுடைய அரசர்க்குப் பெயராகி வருதலின், அன்மொழித் தொகையாயிற்று. கோலிற்கு அடையாகிநின்ற கடுமையும் அரசன்மேல் ஏறியவாறு கண்டு கொள்க. இது பண்பு பற்றி வந்தது. தகர ஞாழல் என்பது உம்மைத் தொகை. இவையிற்றை யுறுப்பாக அமைக்கப்பட்ட சாந்தினையும் தகர ஞாழல் என்பவாகலின், அன்மொழித் தொகையாயிற்று. தூணிப்பதக்கு என்றவழி அளவிற்குப் பெயராதலன்றி, அளக்கப்படும் பொருளுக்கும் பெயராகியவழி, அன்மொழித் தொகையாம். இவை யிரண்டு சொல்லும் அன்மொழித் தொகைமேல் ஏறியவாறு கண்டு கொள்க. இஃது உம்மை பற்றி வந்தது. பொற்றொடி என்பது வேற்றுமைத் தொகை. அதனை யுடையாட்குப் பெயராகியவழி அன்மொழித் தொகையாம். ஈண்டுத் தொடிக்கு அடையாகி நின்ற பொன், தொடியை யுடை யாளது செல்வத்தைக் காட்டுதலின், இவ்விரண்டு சொல்லும் அதனையுடையாளைக் குறித்தவாறும் அறிந்துகொள்க. துடியிடை எனவும், தாழ்குழலெனவும் உவமைத் தொகைப் புறத்தும், வினைத்தொகைப் புறத்தும் அன்மொழித் தொகை வருமா லெனின், துடி என்பதூஉம், தாழ் என்பதூஉம் இடை, குழல் என்பவற்றிற்கு அடையாகி வரினல்லது, அவற்றை யுடையாட்குப் பெயராகுங்கால், இறுதி நின்ற பெயர்ப் பொருண்மை வந்து ஏனைய வாராமையின், ஆகுபெயரெனி னல்லது அன்மொழித்தொகை யாகாதெனக் கொள்க. அதனானே யன்றே இருபெயரொட்டும் என ஆகுபெயர்க்கண் எடுத்தோதுவாராயிற்று என உணர்க. (21) 414. அவைதாம், முன்மொழி நிலையலும் பின்மொழி நிலையலும் இருமொழி மேலும் ஒருங்குடன் நிலையலும் அம்மொழி நிலையா தன்மொழி நிலையலும் எனநான் கென்ப பொருணிலை மரபே. மேற் சொல்லப்பட்ட தொகைக்கட் பொருள் நிற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்ட தொகைச் சொற்கள் தாம் முன் மொழிக்கட் பொருள் நிற்றலும், பின்மொழிக்கட் பொருள் நிற்றலும், இருமொழிமேலும் பொருள் நிற்றலும், அத்தொகை மேற் பொருள் நில்லாது பிறமொழிக்கண் பொருள் நிற்றலும் என நால்வகைப்படும் என்ப; பொருள் நிற்கும் மரபு, எ-று. அவைதாம் என எல்லாத் தொகையுஞ் சுட்டுதலான், அவற்றுள் இவ்விலக்கணம் அவ்வத் தொகைக் கேற்றவழிக் கொள்ளப்படும். உ-ம்: மாம்பழந் தின்றான் என்றவழித், தின்னப்பட்டது பழமாதலின், அத்தொகைச்சொன் முன்மொழிக்கண் பொருள்நின்றது. “இடைமுலைக் கிடந்தும் நடுங்க லானிர்” என்றவழிக் கிடக்கப்பட்டது முலையிடையாதலின், பின்மொழிக்கண் பொருள் நின்றது. குதிரைத் தேரோடிற்று என்றவழி, குதிரை யோடத் தேருமோடுதலின், இருமொழிமேலும் பொருள் நின்றது. பொற்றொடி வந்தாள் என்ற வழிப், பொற்றொடியை அணிந்தாள்மேற் பொருள் நிற்றலின், அம் மொழியல்லாத மொழிமேற் பொருள் நின்றது. இவை நான்கும் வேற்றுமைத் தொகை. ஏனைத் தொகைக்கண்ணும் பொருள் நிற்குமாறு ஏற்பனவற்றுட் கண்டுகொள்க. (22) 415. எல்லாத் தொகையும் ஒருசொன் னடைய. தொகைச் சொற்கெல்லாம் உரியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அறுவகைத் தொகைச்சொல்லும் ஒரு சொல் நடைய, எ-று. என்பது என்சொன்னவாறோவெனின், இரண்டு சொல்லாகி ஒட்டுப்பட்ட பெயர் பிரிந்து நில்லாது ஒரு பெயர் மாத்திரமாகி நிற்கும் என்றவாறு. உ-ம்: யானைக்கோடு கிடந்தது, துடியிடை நன்று, கொல்யானை யோடிற்று, கருங்குதிரை வந்தது, கழஞ்சரை குறைந்தது, பொற்றொடி வந்தாள் என எழுவாயும், பயனிலையு மாகியும்; யானைக்கோட்டை, துடியிடையை, கொல்யானையை, கருங்குதிரையை உவாப்பதினான்கை, கழஞ்சரையை, பொற் றொடியை என உருபேற்றும் ஒரு சொன்னடைய வாகி வந்தவாறு கண்டு கொள்க. (23) 416. உயர்திணை மருங்கின் உம்மைத் தொகையே பலர்சொன் னடைத்தென மொழிமனார் புலவர். எய்திய தொருமருங்கு விலக்குதலை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உம்மைத் தொகையுள், உயர்திணைப் பொருண் மேல் வரும் உம்மைத்தொகை பலர் சொன்னடைத்தாகித் தொடரவும் பெறும், எ-று. உ-ம்: கபிலர் பரணர் வந்தார். அஃதேல், ஒட்டுப்பெயர் ஒரு சொன்னடைத்து என்றல் அமையாது, பலர் சொன்னடைத்தாகியுஞ் சில சொல் வருதலின் எனின், ஆண்டும் ஒரு சொன்னடைத்தென்பதே கருத்து. ஒருவர் என்பது பன்மை வினை கொண்டு முடிந்தாற் போல, உயர்திணை ஒட்டுப்பெயர் பன்மை வினை கொண்டு முடியுமெனச் சொன் முடிவு நோக்கிக் கூறினாரென்க. (24) 417. வாரா மரபின வரக்கூ றுதலும் என்னா மரபின எனக்கூ றுதலும் அன்னவை எல்லாம் அவற்றவற் றியல்பான் இன்ன என்னுங் குறிப்புரை யாகும். ஒருசார் சொற்களுக்குக் குறியிடுதல் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வாராமரபினவற்றை வருவனவாகக் கூறுதலும், என்னா மரபினவற்றை என்றனவாகக் கூறுதலும், அத்தன்மைய பிறவுமெல்லாம் அவற்றவற்றியல்பினான், இத்தன்மைய என்னுங் குறிப்புரையாகும். எ-று. வாரா மரபின என்றதனாற் செலவு, வரவு என்பன கொள்ளப்படும். என்னா மரபின என்றதனான் நினைத்தலும், சொல்லுதலும் செய்தலும் கொள்ளப்படும். அன்னவை எல்லாம் என்றதனாற் காணாமரபின, கேளா மரபின என்பன கொள்ளப் படும். இவ்வாறு சொல்லுதல் குற்றமாயினும், சொல்லுவான் குறிப்பு வேறாதலிற் குறிப்புமொழியாயிற்று. இதனானே சில சொற்களுக்குக் குறிப்பு மொழியெனவும் குறியிட்டாராம். உ-ம்: அம்மலை வந்து இதனொடு பொருந்திற்று. மலைவருதலின்மையின், அதுவும் இதுவும் ஒன்றிக்கிடந்தன என்னும் பொருண்மை குறித்து இவ்வாறு சொல்லப்பட்டது. “சென்றதுகொல் போந்ததுகொல் செவ்வி பெறுந்துணையும், நின்றதுகொல் நேர்மருங்கிற் கையூன்றி - முன்றில், முழங்கும் கடாயானை மொய்ம்மலர்த்தார் மாறற்கு, உழந்துபின் சென்றவெ னெஞ்சு.” இதனுள் வந்தன எல்லாங் குறிப்பு மொழியென்று கொள்க. 28‘அன்னச்சேவ லன்னச்சேவல்’ (புறம். 67) என்னும் புறப்பாட்டினுள் ‘இரும்பிசிராந்தை யடியுறையெனின்’ என்பது அன்னச்சேவலைக் குறித்துக் கூறுதலிற், சொல்லா மரபின சொல்லுமாகவந்த குறிப்பு மொழி. ‘நீலமுண்டதுகில்’ நீலம் பற்றினதுகில் என்னும் பொருண்மை குறித்து உண்டதாகக் கூறப்பட்டது. பிறவுமன்ன. (25) 418. இசைநிறை யசைநிலை பொருளொடு புணர்தலென் றவைமூன் றென்ப ஒருசொல் லடுக்கே. ஒரு பொருண்மேல் ஒரு சொல்லடுக்கி வருவழி வரும் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஒருசொல் மேலடுக்கி வருஞ் சொல் இசை நிறையாகி யடுக்குதல், அசைநிலையாகி யடுக்குதல், பொருளொடு புணர்ந்து வருதல் என மூவகையென்ப ஆசிரியர், எ-று. ஒரு சொல்லடுக்கு எனப் பொதுவாக ஓதினமையாற் பெயர் முதலாகிய நான்கு சொல்லும் அடுக்கப் பெறும் என்று கொள்க. உ-ம்: “துறக்குவ னல்லன் .................. இருடோன்றி யற்று’’ இதனுள் முந்துற்ற சொல்பொருள் உணர்த்திற்று. ஏனைய இசை நிறைக்கண் வந்தன. இசைநிறையாவது பாட்டுக்குறித்து வரும். அசைநிலை செய்யுளின்பங் குறித்து வரும். “29குறங்கென, மால்வரை யொழுகிய வாழை வாழைப், பூவெனப் பொலிந்த வோதி” (சிறுபாண். 20) என்றவழி, வாழை என்னுஞ் சொல்லிரண்டனுள் ஒன்று அசை நிலையாயிற்று. 30‘நின்றன நின்றன நில்லா வெனவுணர்ந் தொன்றின வொன்றின வல்லே செயிற் செய்க” (நாலடி.4) என்றவழி, நின்றன பலவாதலின் அடுக்கிவந்த சொல்லும் பொருள் குறித்து நின்றது. பிறவு மன்ன. (26) 419. இசைப்படு பொருளே நான்குவரம் பாகும். இசைநிறையடுக்கி நிற்கும் வரையறை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இசைப் பொருட்கண் அடுக்கிவருஞ் சொல்லிற்கு எல்லை நான்கு, எ-று. உ-ம்: ‘ஒக்குமே யொக்குமே யொக்குமே யொக்கும், விளக்கினிற் சிஃறிரி யொக்குமே யொக்கும், குளக்கொட்டிப் பூவினிறம்.’ இதனுள் ஒக்கும் என்னும் சொல் இசை நிறைக்கண் நான்கு வரம்பாகி வந்தவாறு கண்டு கொள்க. (27) 420. விரைசொல் அடுக்கே மூன்றுவரம் பாகும். குறிப்புப் பொருள் உணர்த்தும் ஒருசொல்லடுக்கிற்கு வரையறை யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) விரைவு, பொருண்மை குறித்த ஒருசொல்லடுக் கிற்கு எல்லை மூன்றாகும், எ-று. உ-ம்: பாம்பு பாம்பு பாம்பு, தீ தீ தீ இவற்றுள் முந்துற்றன பொருள் உணர்த்தின. ஏனைய பொருளிலவாயினும், விரைதல் என்பது குறித்தலிற், பொருளொடு புணர்ந்த அடுக்காயிற்று. இசை நிறைக்கும், பொருளொடு புணர்தற்கும் எல்லை கூறி, அசை நிலையடுக்கிற்கு எல்லை கூறாமையின், அஃது இரண்டல்லது வரப்பெறா தென்று கொள்க. (28) 421. கண்டீர் என்றா கொண்டீ என்றா சென்ற தென்றா போயிற் றென்றா அன்றி அனைத்தும் வினாவொடு சிவணி நின்றவழி யிசைக்குங் கிளவி என்ப. இதுவும் ஒருசார் அசைநிலை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) கண்டீர் என்பது முதலாக ஓதப்பட்ட சொற்கள் வினாப் பொருள் உணர்த்துஞ் சொல்லொடு கூடி நின்றவழி, அப்பொருளினை யிசைக்கும் சொல்லாம், எ-று. எனவே அச்சொற்களொடு கூடாதவழி அசைநிலையா மென்றவாறாம். உ-ம்: வினாவொடு கூடுதலாவது;-கண்டீரோ கண்டீரோ என ...............கண்டீரென்ப..............ன. இனி, அவை அசைநிலையாகி வருமாறு:- “படைவிடுவான் மற் கண்டீர், காமன் மடையடும் பாலொடு கோட்டம் புகின்” (முல்லைக்கலி. 9) என்பதனுள், கண்டீர் என்பது அசைநிலை யாயிற்று. ஏனையவற்றிற்கு உதாரணம் வந்துழிக் கண்டு கொள்க. (29) 422. கேட்டை என்றா நின்றை என்றா காத்தை என்றா கண்டை என்றா அன்றி அனைத்தும் முன்னிலை அல்வழி முன்னுறக் கிளந்த இயல்பா கும்மே. இதுவுமது. (இ-ள்.) இந்நான்கு சொல்லும் முன்னிலை வினைச்சொல் அல் வழி, அசை நிலையாகும், எ-று. உ-ம்: “மோரொடுவந் தாடகைகண்டை யாரொடுஞ் சொல்லி யாளன்றே வனப்பு” (முல்லைக்கலி. 9) என்றவழிக் கண்டை என்பது அசைநிலை யாயிற்று. ஏனையவும் வந்தவழிக் கண்டுகொள்க. (30) 423. 31பிரிநிலை வினையே பெயரே ஒழியிசை எதிர்மறை உம்மை எனவே சொல்லே குறிப்பே இசையே ஆயீ ரைந்தும் நெறிப்படத் தோன்றும் எஞ்சுபொருட் கிளவி. எச்சக் கிளவியாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) நெறிப்படத் தோன்றும் எஞ்சுபொருள் உணர்த்துங் கிளவி: பிரிநிலை முதலாக இசையீறாக ஓதப்பட்ட பத்தும், எ-று. ‘எஞ்சுபொருட் கிளவி’யாவது சொல்லாதொழிந்த பொருளை இனிது விளக்குஞ் சொல். ‘நெறிப்படத் தோன்றுத’ லாவது வாக்கியமாகிய தொடர் மொழிக்கண் முன்னும் பின்னும் நின்ற சொல்லை நெறிப்படுத்தற்கு ஆண்டுத் தோன்றுதல். அது புலப்பட நில்லாமையின் எச்சமாயிற்று.‘பிரிநிலை எச்சமாவது’ பல பொருளில் ஒன்று பிரிந்தவழிப் பிரிக்கப்பட்ட பொருண்மையுந் தோன்ற நிற்பது. ‘வினையெச்சமாவது’ ஒரு வினைச்சொல் எஞ்சி நிற்பது. பெயரெச்சமாவது ஒரு பெயர்ச்சொல் எஞ்சி நிற்பது. அஃதேல், வினையெச்சம் பெயரெச்சம் என்பன வினையியலுள் ஓதப்பட்டனவலவோ எனின், ஆண்டு ஓதப்பட்டன பெயரையும், வினையையும் ஒட்டி நின்றியலும். ஈண்டையன அன்னவல்லவா மாறு உதாரணத்தான் விளங்கும். ‘ஒழியிசை யெச்சமாவது’ சொல்லப்பட்ட பொருளை யொழியச், சொல்லாதொழிந்து நின்ற பொருளுந் தோன்ற நிற்பது. ‘எதிர்மறை யெச்சமாவது’ ஒரு பொருளைக் கூறியவழி, அதனின் மாறுபட்ட பொருண்மையும் அதனானே உணர நிற்பது. ‘உம்மையெச்சமாவது’ உம்மை கொடுக்கவேண்டும் வழி, அஃது எஞ்சி நிற்றல். ‘என என்னெச்சமாவது’ எனவென்று சொல்ல வேண்டும்வழி, அச்சொல்லெஞ்சி நிற்பது. ‘சொல்லெச்சமாவது’ ஒருசொல் லினான் ஒரு பொருளை விதந் தோதியவழி, அவ்விதப்பினானே பிறிதுமொரு பொருளைக் கொள்ளுமாறு நிற்பது. ‘குறிப்பெச்சமாவது’ சொற்படு பொருளன்றிச், சொல்லுவான் குறித்த பொருள் எஞ்சி நிற்பது. ‘இசையெச்சமாவது’ ஒரு சொற் றனக்குரிய பொருளன்றிப் பிறிது மொரு பொருளை இசைக்கு மாறு வருவது. இவையெல்லாம் வழக்கினும், செய்யுளினும் வந்து பொருளை விளக்குதலின் எடுத்தோதினார். உதாரணம் தத்தம் சிறப்புச் சூத்திரத்துட் காட்டுதும். (31) 424. அவற்றுள், பிரிநிலை எச்சம் பிரிநிலை முடிபின. பிரிநிலை யெச்சம் முற்றுப்பெறுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்டவற்றுள், பிரிநிலையாகிய எச்சம் அதன்கணின்றும் பிரிக்கப்பட்ட பொருளொடு தொடர்ந்து முடிவு பெறும், எ-று. உ-ம்: இவன் கல்வியுடையன் என்றவழிச், சொல்லுவான் இவ் வவையத்தாருள் எனக் கருதினானாயின், இவ் வவையத்துhருள் என்பது எஞ்சி நின்று பிரிநிலை யெச்சமாயிற்று. இவட்குக் கண்ணழகிது என்றவழி, மற்றுள்ள உறுப்புகளின் என்பது எஞ்சிநின்றது. இவை, பிரிக்கப்பட்ட பொருளொடு தொடர்பு பட்டு முற்றுப்பெற்றவாறு கண்டு கொள்க. (32) 425. வினையெஞ்சு கிளவிக்கு வினையும் குறிப்பும் நினையத் தோன்று முடிபா கும்மே ஆவயிற் குறிப்பே ஆக்கமொடு வருமே. வினையெச்சத்திற்கு முடிபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வினையெச்சமாகவுடைய சொல்லிற்கு வினையும், வினைக் குறிப்பும் நினையத் தோன்றிய முடிபாகும். ஆண்டு, வினைக் குறிப்பு ஆக்கச் சொல்லோடு அடுத்துவரும், எ-று. ‘நினையத் தோன்றும்’ என்றதனான், ஆராயத் தோன்று மென்று கொள்க. எனவே, வினையியலுட் கூறிய வினையெச்சம் ஆராய்தல் வேண்டாமையின், அஃதன்றென்று கொள்ளப்படும். உ-ம்: 32“அழுக்கா றுடையார்க் கதுசாலு மொன்னார், வழுக்கியுங் கேடீன் பது” (குறள். 165) என்பதனுள், கேடுபயத்தற்கு அழுக்காறு தானே யமையும், பகைவர் கேடு தருதல் தப்பியும் வரும் எனப் பொருளுரைக்க வேண்டுதலின், வரும் என்பது எஞ்சி நின்றது. “33அற்றா ரழிபசி தீர்த்த லஃதொருவன், பெற்றான் பொருள்வைப் புழி” (குறள். 226) என்பதற்குப் பொருள் அற்றாரது குணங்களை அழிக்கும் பசியைப் போக்குவது செய்ய ஒருவன் தான் தேடின பொருள் வைத்தற்கு இடம் பெற்றான் ஆம் என உரைக்க வேண்டுதலின், ஆமென்னும் வினைக்குறிப்பு எஞ்சி நின்றது. (33) 426. பெயரெஞ்சு கிளவி பெயரொடு முடிமே. பெயரெச்சத்திற்கு முடிபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பெயரெச்சமாகவுடைய சொல் பெயரொடு முடிவு பெறும், எ-று. உ-ம்: 34“துறக்குவ னல்லன் றுறக்குவ னல்லன். தொடர்வரை வெற்பன் றுறக்குவனல்லன், றொடர்பு ளினையவை தோன்றின்” என்ற வழி, அவன் தொடர்பு என வேண்டுதலின், அவன் என்னும் பெயர் எஞ்சி நின்றது. 35“உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே” என்பதனுள், என்மனார் ஆசிரியர் என வேண்டுதலின், ஆசிரியர் என்னும் பெயர் எஞ்சி நின்றது. “மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே, அரும்பிய சுணங்கி னம்பகட் டிளமுலைப், பெருந்தோ ணுணுகிய நுசுப்பிற், கல்கெழு கானவர் நல்குறு மகளே.” (குறுந்.71) இதனுள் எனக்கென வேண்டுதலின், வேற்றுமையேற்றபெயர் எஞ்சி நின்றது. (34) 427. ஒழியிசை எச்சம் ஒழியிசை முடிபின. ஒழியிசை எச்சத்திற்கு முடிபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஒழிந்த சொல்லை எச்சமாக உடையது அவ்வொழிந்த சொல்லினாற் பொருள் முடிவுபெறும், எ-று. உ-ம்: இவர் கல்வியாற் குறைவிலர் என்றவழி, ஒழுக்கத்தாற் குறையுடையர் என்றாதல், பொருளாற் குறையுடையர் என்றாதல், ஒழிந்த பொருண்மை குறித்த வழி, அப் பொருள் பட்டவாறும், அதனானே, அச்சொல் முற்றுப்பெற்றவாறுங் கண்டுகொள்க. (35) 428. எதிர்மறை எச்சம் எதிர்மறை முடிபின. எதிர்மறையெச்சம் முடியுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) எதிர்மறைப் பொருண்மையை எச்சமாகவுடையது அவ்வெதிர்மறையாற் பொருண்முடிவு பெறும், எ-று. உ-ம்: “இம்மைப் பிறப்போ பிரியவ மென்றேமாக்-கண்ணிறை நீர்கொண்டனள்.” (குறள்.1315) என்பதனுள், மறுபிறப்புப் பிரிவேம் என நினைத்துக் கண்ணிறை நீர் கொண்டனள் எனப் பொருளுரைக்க வேண்டுதலின், எதிர்மறை, எஞ்சி நின்றதன் எதிர்மறைப் பொருளொடு முடிந்தவாறு கண்டுகொள்க. (36) 429. உம்மை எச்சம் இருவீற் றானும் தன்வினை ஒன்றிய முடிபா கும்மே. உம்மையெச்சம் முடியுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உம்மையாகிய எச்சம் இரண்டு வேறுபாட்டின் கண்ணும் தன்வினையொடு பொருந்திய முடிபாகும், எ-று. ‘இருவீறாவன’ :-முன்னின்ற சொல்லும், பின்னின்ற சொல்லும் தன் வினையாவன: இரண்டு சொல்லின்கண்ணும் உடன்பாடாகியும், மறையாகியும் வரும் தொழிலுங் காலமும் ஒத்த வினைச்சொல். அது உம்மைக் கேற்ற வினையாதலின் ‘தன்வினை’ யென்றார். ‘ஒன்றிய முடிபாவது’ அவ்வினை யொடு பொருந்திய முடிபாகும் என்றவாறு. ஏனையெச்சம் போலத் தான் வந்தது முடிதலேயன்றித் தான் வந்தாலும் சார்ந்த வினையொடு கூடியல்லது பொருட்கு முடிபாகாது என்றவாறு. உ-ம்: சாத்தனும் வந்தான், கொற்றனும் வந்தான் எனற்பாலன-சாத்தன் வந்தான், கொற்றன் வந்தான் என வரின், ஆண்டு, உம்மை எஞ்சி நின்றதென்க இருவீற்றானும் என்ற உம்மையாற் றனிவரினும் என்று கொள்க. “வதுவை அயர்ந்த வன்பறழ்க்குமரி யிருதோ டோழர்பற்ற” என்றவழி, இருதோளும் என்னும் உம்மை எஞ்சிநின்றது. இடைச்சொல் லோத்தினுள் “உம்மை எண்ணி னுருபுதொகல் வரையார்” (287) எனவும், இவ்வோத்தினுள் “உம்மைத் தொகை” (412) எனவும் ஈண்டு உம்மை யெச்சம் எனவுங் கூறினாராதலின், அவற்றின் வேறுபாடு புலப்பட்டின்றாலெனின், பல பொருளை யெண்ணி ஒரு வினையான் முடிக்கும் வழிச், சொற்றொறும் உம்மை கொடுத்து, இடை நின்ற ஒன்றானும் இரண்டானும் சொல்லின்கண் உம்மை கொடாதவழி, உம்மை யெண்ணாகுமோ ஆகாதோ வென நின்ற ஐயங் குறித்து; ஆண்டு “உம்மை யெண்ணின் உருபு தொகல் வரையார்” (287) என்று ஓதுதலின், உம்மை ஆண்டுத் தொக்கதென்க. இரண்டானும், பலவானும் பெயரை யடுக்கி, ஒரு சொற் போல ஒருவினையான் முடிக்கும் வழி, உம்மைத்தொகை யென்க. ஈண்டுத் தனித்தனி வினைகொண்டு உம்மை பிரிந்து நின்றே பொருள்படும் சொற்கள் செய்யுளகத்து எஞ்சி நின்றதனை எஞ்சிற்றென்க. அஃதற்றாகக், காலமும் வினையும் ஒத்தல் வேண்டும் என்ற தென்னை? சாத்தன் வந்தான், கொற்றன் வரும் எனவும், சாத்தன் வந்தான், கொற்றன் போம் எனவும், காலமும் வினையும் ஒவ்வாமையும் வருமாலெனின், அவை உம்மை யெஞ்சிய சொல்லன்மை வருகின்ற சூத்திரத்தான் விளங்கும். (37) 430. தன்மேற் செஞ்சொல் வரூஉங் காலை நிகழுங் காலமொடு வாராக் காலமும் இறந்த காலமொடு வாராக் காலமும் மயங்குதல் வரையார் முறைநிலை யான. மேற் சொல்லப்பட்ட உம்மைப் பொருட்கண் வரும் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உம்மைப் பொருட்கண் உம்மை கொடாது செஞ் சொல்லாகிவரின், அவற்றுள் நிகழ்காலத்தோடு எதிர்காலமும், இறந்த காலத்தோடு எதிர்காலமும் மயங்குதல் நீக்கார்: முறை பிறழாமல் நிற்கும் வழி, எ-று. உ-ம்: சாத்தன் வாராநின்றான், கொற்றன் வருவன், போம்; சாத்தன் வந்தான், கொற்றன் வருவன், போம் என இவை உம்மை கொடாமற் பொருள்பட்டவாறும், காலமுந் தொழிலும் மயங்கியவாறும் கண்டு கொள்க. அஃதேல், சாத்தனும் வாரா நின்றான், கொற்றனும் வருவன் என உம்மை கொடுத்தும் வழக்கு நிகழுமாலெனின், உம்மை கொடுக்கின்றது பொருள் வேற்றுமை உணர்தற்கன்றே; அது கொடாக்காலும் பொருள் இனிது விளங்கு மாயின், கொடுத்ததனாற் பயனின்றென்க. இவ்வாறு செய்யுளகத் துவரின், இசைநிறைத்தற் பொருட்டு வந்ததென்க. (38) 431. எனவென் னெச்சம் வினையொடு முடிமே. எனவென் எச்சமுடிபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) எனவென்று சொல்லப்பட்ட எச்சம் வினையொடும் முடியும், எ-று. உம்மையாற் பெயரொடும் முடியுமென்று கொள்க. முடிதலாவது அவற்றைச் சார்ந்து நின்று பொருளை உணர்த்துதல். முடிதல் எனினும், தொடர்த லெனினும் ஒக்கும். உ-ம்: 36“வீடுணர்ந் தோர்க்கும் வியப்பாமா லிந்நின்ற, வாடன் முதியாள் வயிற்றிடங்-கூடார், பெரும்படை வெள்ளம் நெரிதரவும் பேரா, இரும்புலி சேர்ந்த விடம்” (புறப்பொ. வஞ்சிப்.19) என்பதனுள் இரும்புலி சேர்ந்த விடமென வியப்பாமா லெனப் பொருளுரைக்க வேண்டுதலின், என என்பது எஞ்சி நின்று வியப்பென்பதனொடு தொடர்ந்தது. இது வினை. ‘37பிரிநிலை வினையே’ (423) என்னுஞ் சூத்திரத்துள், ‘குறிப்பே யிசையே யாயீ ரைந்தும்’ என்றவழிக், குறிப்பே, இசையே யென அவ் வீரைந்துமெனப் பொருளுரைக்க வேண்டுதலின், என என்பது எஞ்சி நின்று, ஈரைந் தென்னும் பெயரொடு முடிந்தது. (39) 432. எஞ்சிய மூன்றும் மேல்வந்து முடிக்கும் எஞ்சுபொருட் கிளவி இலவென மொழிப. சொல்லெச்சத்திற்கும், குறிப்பெச்சத்திற்கும், இசை யெச்சத்திற்கும் உரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேலதிகரிக்கப்பட்ட பத்தனுள்ளும் முடிவு சொல்லாது ஒழிந்த மூன்று சொல்லும் வந்து முடிக்கும் சொற்களை எஞ்சிநிற்ற லில, எ-று. எனவே, முந்துற்ற ஏழு சொல்லும் வந்து முடிக்கும் சொற்களை யுடைய என்பதூஉம், இவை நின்றவாற்றாற் பொருள் வேறுபடூஉம் என்பதூஉங் கூறியவாறாம் என்றவாறு. அஃதாமாறு பொருள் வருகின்ற சூத்திரத்தான் விளங்கும். (40) 433. அவைதாம், தத்தங் குறிப்பின் எச்சம் செப்பும். இதுவுமது. (இ-ள்.) மேற் சொல்லப்பட்ட மூன்று சொல்லும் வந்து முடிக்குஞ் சொல்லை யுடைய வல்லவாயினும், தத்தங் குறிப்பினான் எஞ்சிய பொருண்மையை உணர்த்தும், எ-று. உதாரணம் தத்தம் சிறப்புச் சூத்திரத்துட் காட்டுதும். (41) 434. சொல்லென் எச்சம் முன்னும் பின்னும் சொல்லள வல்ல தெஞ்சுதல் இன்றே. சொல்லெச்சம் ஆமாறுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) சொல் என்னும் எச்சம் அச்சொல்லளவல்லது முன்னும் பின்னும் மற்றொரு சொல் எஞ்சிநிற்ற லிலது, எ-று. எனவே, அச்சொல்லினானே உய்த்துணர்ந்து கொள்ளப் பிறிதொரு பொருள் வரும் என்றவாறாம். உ-ம்: ‘38நெடும்புனலுள் வெல்லு முதலை யடும்புனலி, னீங்கி னதனைப் பிற’ (குறள். 495) “39காலாழ் களரி னரியடுங் கண்ணஞ்சா- வேலாண் முகத்த களிறு” (குறள். 500) என்றவழித், தமது நிலத்தில் எளியாரும் வலியராவர்; பிறர் நிலத்தில் வலியாரும் எளியராவர் என்னும் பொருண்மை இச்சொற்றானே யுணர்த்தலிற் சொல்லெச்சமாயிற்று. (42) 435. அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல். இனிக் குறிப்பெச்சம் உணர்த்தற்பாலது. அது ‘தெரிபு வேறு நிலையலும் குறிப்பிற் றோன்றலும், இருபாற்றென்ப பொருண்மை நிலையே’ எனப் பெயரியலுள் (சூ. 13) ஓதுதலான்,ஆண்டு அடங்கிற்று. அதன்கண் சில சொற்களை மரபு வழுவமைக்க வேண்டுதலின், அவையமையுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அவைக்களத்து வழக்கமல்லாத சொல்லை மறைத்துப் பிறவாய்பாட்டான் மொழிக, எ-று. உ-ம்: மறைத்துச் சொல்லுதல் இருவகைப்படும்; மங்கல மரபினாற் கூறுதலும், இடக்கரடக்கிக் கூறுதலுமென. மங்கல மரபினாற் கூறுவது:- செத்தாரைத் துஞ்சினாரென்றும், ஓலையைத் திருமுகம் என்றுங் கூறுதல். இவை அவைக்களத்துப் பட்டாங்குக் கூறிற் குற்றம்பயக்குமாதலின், அவையல் கிளவி யாயின என்க. இடக்கரடக்கிக் கூறுதல் கண்கழீஇ வருதும், கால்மேல் நீர் பெய்தும் எனப் பிறவாய்பாட்டான், கூற வரும் பொருண்மையை மறைத்துச் சொல்லுதல். இவை வேறொன்றைக் குறித்துக் கூறுதலிற், குறிப்பெச்சமாயின. (43) 436. மறைக்குங் காலை மரீஇய தொராஅல். மேலதற்கு ஒரு புறநடை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அவைக்களத்தல்லாத சொற்களை மறைத்துச் சொல்லுங்கால், அவைக்களத்து மருவிப் போந்த சொல்லை மறையா தொழிக, எ-று. உ-ம்: மருவிப் போந்தன :-ஆப்பி, கோமூத்திரம் என்றாற் போல்வன. (44) 437 40ஈதா கொடுவெனக் கிளக்கும் மூன்றும் இரவின் கிளவி ஆகிடன் உடைய அவற்றுள், ஈயென் கிளவி இழிந்தோன் கூற்றே தாவென் கிளவி ஒப்போன் கூற்றே கொடுவென் கிளவி உயர்ந்தோன் கூற்றே. இதுவும் ஒருசார் குறிப்பெச்சம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஈ, தா, கொடு என்னுஞ் சொற்கள் ஒரு பறவையின் பெயரும், தொழிற் பொருண்மையும், கொடுப்போன் கூற்றுமாதலன்றி, இரப்போன் கூற்றாதலும் உரிய. அவற்றுள், ஈ என்பது இழிந்தோன் கூற்று என்பதூஉம், தா என்பது ஒப்போன் கூற்று என்பதூஉம், கொடு என்பது மிக்கோன் கூற்று என்பதூஉம் உணர்த்தும், எ-று. இச் சொற்கடம்மானே இழிந்தான், ஒப்பான், மிக்கான் என்னும் பொருண்மை, எஞ்சிநிற்றலிற் குறிப்பெச்சமாயிற்று. (45) 438. கொடுவென் கிளவி படர்க்கை யாயினும் தன்னைப் பிறன்போற் கூறுங் குறிப்பி ற்ன்னிடத் தியலும் என்மனார் புலவர். மேலதற்கோர் வழுவமைதி உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்டவற்றுள், கொடு என்னுஞ் சொல் படர்க்கையாயினும், தன்னைப் பிறன்போற் கூறுங் குறிப் பினாற் றன்னிடத் தியலும் என்று சொல்லுவர் புலவர், எ-று. தன்னைப் பிறன்போற் கூறுதலிற் குறிப்பெச்சமாயிற்று. இச் சூத்திரத்தானும் குறிப்பெச்சம் அதிகாரப்பட்டவாறு கண்டு கொள்க. (46) 439 பெயர்நிலைக் கிளவியின் ஆஅ குநவும் திசைநிலைக் கிளவியின் ஆஅ குநவும் தொன்னெறி மொழிவயின் ஆஅ குநவும் மெய்ந்நிலை மயக்கின் ஆஅ குநவும் மந்திரப் பொருள்வயின் ஆஅ குநவும் அன்றி அனைத்தும் கடப்பா டிலவே. அதிகார முறையான் இசையெச்சமாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பெயர்நிலைக் கிளவிகளினாகுஞ் சொல்லும், திசை நிலைக் கிளவிகளினாகுஞ் சொல்லும், பழமைத்தாகி நெறிப்பட வருஞ் சொல்லினாகுஞ் சொல்லும், பொருணிலை மயக்கினாகுஞ் சொல்லும், மந்திரப் பொருள்வயினாகுஞ் சொல்லும் அவ்வனைத்தும் இச் சொற்குப் பொருள் இது வென்னும் நியமம் இல, எ-று. எனவே, தன்பொருள் ஒழியப் பிறிது பொருளும்படும் என்றவாறாம். ஒருசொல் இரண்டுபொருள்பட நின்றவழி, ஒரு பொருளை யுணர்த்தும் இசை எஞ்சி நிற்குமன்றே. அஃது இசை யெச்சமாவது என்று கொள்க. ஆகுஞ்சொல் என்றமையான், ஏற்பன கொள்ளப்படும். இசையெச்சம் ஐந்து வகையென்பது போந்தது. அவற்றுள், ‘பெயர் நிலைக் கிளவியினாகுவன’:- வேங்கை என்பது ஒரு மரத்திற்குப் பெயராயினும், புலிக்கும் பெயராயிற்று. அதுவு மன்றிக் கைவேம் என்னும் பொருளும் பட்டது. இவ்வாறு ஒரு சொல்லினானே பிறிதுபொருள் உணரின், அதை யுணர்த்தும் ஓசை எஞ்சிநின்ற தென்றுகொள்க. இது பலபொருளொருசொல் அன்றோ எனின், ஆம்; பல பொருட்கண் ஒருசொல் வருதற்கு இலக்கணம் ஈண்டு உணர்த்து கின்றது. என்னை உணர்த்தியவாறு எனின், வேங்கை என்னுஞ் சொல், புலிப் பொருண்மை யுணர்த்திற்றாயின், மரப் பொருண்மை யுணர்த்தும் சொல் யாது என ஒருகடா வரும். அக்கடா, வேங்கை என்னும் சொல்லின்கண்ணே மரப் பொருண்மையை உணர்த்துவ தோர் ஓசை எஞ்சிநின்ற தெனினல்லது விடைபெறாதாம். அதனானே இலக்கண முணர்த்தியவாறு அறிந்து கொள்க. ‘திசைநிலைக் கிளவியி னாகுநவும்’ என்பது செந்தமிழ் நாட்டு வழங்குஞ் சொல் திசைச் சொல்லாகியவழிப், பொருள் வேறுபடுதல். கரை என்பது வரம்பிற்குப் பெயராயினும், கருநாடர் விளித்தற்கண் வழங்குப. ‘தொன்னெறிமொழி’ யென்றதனான் முந்துற்ற வழக்காகித் தொடர்வு பட்டுச் செய்யுளகத்தினும், பரவை வழக்கினும் வருந் தொடர்மொழி என்று கொள்ளப்படும். ‘குன்றேறாமா’ என்றவழி, குன்று, ஏறு, ஆ, மா எனவும் படும்; குன்றின் கண் ஏறாநின்ற ஆமா எனவும் படும்; குன்றின் கண் ஏறா மா எனவும் படும். இவ்வாறு வரும் பொருட்கெல்லாம் இத்தொடர்மொழி தானே சொல்லாகி இதன்கண் இசை வேறுபட்டுப் பொருள் வேறுணர்த்தலின், அப்பொருண்மைகளை யுணர்த்தும் இசை எஞ்சிநின்றது. “காதற் கொழுநனைப் பிரிந்தல ரெய்தா-மாதர்க் கொடுங் குழை மாதவி தன்னொடும்” (சிலப். 5-189) என்றவழி, இச் சொல்லெல்லாம் குருக்கத்திக்கும் அடையாகி மாதவி என்னும் ஒரு பெண்பாற்கும் அடையாகிப் பொருள் வேறுபடுதலின், இசை யெச்சமாயிற்று. இது தனிமொழி யாகிய பெயர்நிலைக் கிளவியின் அடங்காமையின், தொடர்மொழி யென்று வேறோதினார். ‘மெய்ந்நிலை மயக்கமாவது’ பொருணிலைமை மயக்கங் கூறுதல். 41“குருகுகரு வுயிர்ப்ப, ஒருதனி யோங்கிய திருமணிக் காஞ்சி” என்றவழிக், குருகு என்பது மாதவியென்னுங் கொடிக்கும் பெயராதலின், அப் பெயருடையாளைக் குருகு என்றார். காஞ்சி என்பது மேகலைக்குப் பெயராதலின், அது மணிக்காஞ்சி என்றொட்டி மணிமேகலை யென்பாள் மேல் வந்தது. இவ்வாறு பொருணிலை மயங்க வருவனவும் இசையெச்ச மாம் என்றவாறு. ‘மந்திரம் என்பது’ பிறரறியாமல் தம்முள்ளார் அறிய மறைத்துக் கூறுஞ் சொல். அதன்கண் ஆகுவன, உலகினுள் வழங்குகின்ற பொருட்குத்தாம் அறிகுறியிட்டு ஆண்டுவருங் குழுவின்வந்த குறிநிலை வழக்கு. அது வெளிப்பட்ட சொல்லான் உணரும் பொருட்கு மறைத்துப் பெயரிடுதலும், எழுத்திற்குப் பிறபெயரிட்டு வழங்குதலும் என இருவகைப்படும். இவையும் பொருள் வேறுபடுத்தி வழங்குதலின் இசையெச்சமாயின. அவற்றுள், பொருட்கு வேறு பெயரிட்டன :- 42வண்ணக்கர் காணத்தை நீலம் என்றலும், யானைப்பாகர் ஆடையைக் காரை என்றலும் முதலாயின. எழுத்திற்கு வேறு பெயரிட்டு வழங்குமாறு:- “மண்ணைச் சுமந்தவன்றானும் வரதராசன் மகன்றானும், எண்ணிய வரகாலிமூன்று மிரண்டு மரமும் ஓர்யாறும், திண்ண மறிய வல்லார்க்குச் சிவகதியும் பெறலாமே.” இதனுள் மண்ணைச் சுமந்தவன்-ந, வரதராசன் மகன்-ம, வரகாலி மூன்று-சி, இரண்டு மரம்-வா, ஓர்யாறு-ய எனக்கூற, நமச்சிவாய எனப் பொருளாயிற்று. பிறவும் அன்ன. (47) 440. செய்யாய் என்னும் முன்னிலை வினைச்சொல் செய்யென் கிளவி ஆகிடன் உடைத்தே. இது வினைச்சொற்கு உரியதோர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) செய்யாய் என்னும் ஆய் ஈற்று முன்னிலை வினைச்சொல், செய் என்னும் ஏவல் குறித்த வினைச் சொல்லுமாகி வரும், எ-று. உ-ம்: நீ எம் இல்லத்து உண்ணாய் என்றவழி, உண்ணாமையைக் குறித்தலே யன்றி உண்க என்பதும் குறித்தவாறு கண்டுகொள்க. இவ்வாறு வருவதும் இசையெச்சம். இன்னும் இச்சூத்திரத்திற்குப் பொருள் செய்யாய் என்னும் வினைச்சொல் செய் எனக் குறைந்து நிற்கவும் பெறும் என்றவாறு. உண்ணாய் என்பது உண் எனவரும். (48) 441. முன்னிலை முன்னர் ஈயு மேவும் 43முன்னிலை மரபின் மெய்யூர்ந்து வருமே. இதுவும் முன்னிலை வினைச்சொற்கண் வருவதோர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) முன்னிலை வினைச்சொற்கண் ஈகாரமும்-மகரமூர்ந்த ஏகாரமும் முன்னிலை மரபினையுடைய மெய்யை ஊர்ந்துவரும், எ-று. முன்னிலை மரபின் மெய்யாவன உண், தின் என்னுஞ் சொற்கண் ஈற்றெழுத்தொடு பால்காட்டும் எழுத்தினைப் புணர்க்க இடையே வரும் மெய்யெழுத்து. உ-ம்: “சென்றீ பெருமநிற் றகைக்குநர் யாரோ” (அகம். 46) “அட்டி லோலை தொட்டனை நின்மே” (நற். 300) “இன்னா துறைவி யரும்படர் களைமே”44 எனவரும். மேலோதப்பட்ட இ, ஐ, ஆய் அன்றி இவையுஞ் சிறுபான்மை வருமெனக் கொள்க. (49) 442. கடிசொல் லில்லைக் காலத்துப் படினே. இது வினைச்சொற்கண் வருவதோர் வழுவமைதி உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற்சொல்லப்பட்ட இலக்கணத்தான் வந்தில எனக் கடியப்படா; அவ் வினைச்சொற்கள் காலத்தொடு பொருந்தின், எ-று. காலமாவது இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம். காலப் பொருண்மை மயங்காமல் வரின், ஈறு திரியினும் அமைக என்றவாறு. உ-ம்: “மறம்பாடிய பாடினியும்மே, பேருடைய விழுக்கழஞ்சிற், சீருடைய விழைபெற் றிசினே, இழைபெற்ற பாடினிக்குக், குரல்புணர்சீர் கொளைவல்பாண்மகனும்மே, எனவாங்கு, ஒள்ளழற் புரந்த தாமரை, வெள்ளி நாராற் பூப்பெற் றிசினே.” (புறம். 11) என்பதனுட் படர்க்கை வினைச் சொல் ஈறுதிரிந்து நின்றது, காலப்பொருண்மை வழுவாமையின், குற்றமின்றாயிற்று. “44ஆரம ரலரத் தாக்கித் தேரோ, டவர்ப்புறங் காணேனாயிற் சிறந்த, பேரம ருண்க ணிவளினும் பிரிக” எனவும், “46முறை திரிந்து, மெலிகோல் செய்தே னாகுக” எனவும் தன்மைக்கண் எதிர்காலங் குறித்த வஞ்சினம் வியங்கோள் வாய்பாட்டான் வந்தன. “47பகலே பலருங் காண நாண்விட், டகல்வயற் படப்பை யவரூர் வினவிச், சென்மோ வாழி தோழி பன்னாட், கருவிவானம் பெய்யாதாயினும், அருவி யார்க்கும் கழைபயி னனந்தலை, வான்றோய் மாமலைக் கிழவனைச், சான்றோ யல்லை யென்றனம் வரற்கே” (நற். 365) என்றவழிச் செல்வேமோ எனற்பாலது சென்மோ என வந்தது. பிறவுமன்ன. இச்சூத்திரத்திற்குப் பிறவாற்றாற் பொருளுரைப்பவா லெனின், வினைச் சொற்றிரிபு அதிகாரப்பட்டு வருதலானும், ‘காலத்துப்படினே’ என்றமையானும் பிறவாற்றானுரைப்பது பொருளன்றென்க. (50) 443. குறைச்சொற் கிளவி குறைக்கும்வழி அறிதல். குறைச் சொல்லாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) யாதானுமொரு சொல்லைக் குறைக்க வேண்டு வழிக் குறைக்க வேண்டுமிடமறிந்து குறைக்க, எ-று. அது தலைக்குறைத்தலும், இடைக்குறைத்தலும் கடைக்குறைத்தலும் என மூவகைப்படும். உ-ம்: ‘மரையிதழ் புரையு மஞ்செஞ் சீறடி’ என்றவழித், தாமரை யென்பது தலைக்குறைந்து நின்றது. ‘48அகலிரு விசும்பி னாஅல்’ என்றவழி ஆரல் என்பது இடைக் குறைந்து நின்றது. ‘நீலுண்டுகிலிகை’ என்றவழி, நீலம் என்பது கடைக் குறைந்து நின்றது.தொகுக்கும்வழித் தொகுத்தல் என்பதனோடு இதனிடை வேறுபா டென்னை யெனின், ஆண்டுவிரிந்து நின்ற சொற் றொகுக்க வேண்டுவழித் தொகுக்குமாறு கூறினார். ஈண்டு, இயற்கையிற் குறைதலிற் குறைச்சொல் லென்றார். (51) 444. குறைந்தன வாயினும் நிறைப்பெய ரியல. மேலதற்கோர் புறநடை யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) குறைச்சொற்கிளவி குறைந்து நின்றனவாயினும், பொருள் வேறுபடா நிறைந்த பெயரியல, எ-று. உதாரணம் மேற்காட்டப்பட்டன. இவ்விதி மேல் விகாரப்பட்ட சொற்கும் ஒக்கும் என்று கொள்க. (52) 445. இடைச்சொல் லெல்லாம் வேற்றுமைச் சொல்லே. இடைச்சொற்கண் எஞ்சி நின்றதோர் பொருள் நிகழ்ச்சி உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இடைச் சொற்கள் எல்லாம் வேற்றுமைச் சொல்லாம், எ-று. என்பது என் சொன்னவாறோவெனின், பெயரும், வினையும் போலப் பொருளை நேர்காட்டாது, ஐ, ஒடு, கு, இன், அது, கண் என்னும் வேற்றுமை யுருபுபோல, வேறுபட்ட பொருளைக் குறித்து நிற்றலின், இடைச்சொல்லும் பொருள் வேறுபடுக்குஞ் சொல் எனப்படும்; பொருளுணர்த்துஞ் சொல்லெனப்படா. மன் என்பது கழிவினும், ஆக்கத்தினும், ஒழியிசையினும் வந்தவழித், தானிடைப்பெற்று நிலைமொழியின் வேறுபட்ட பொருளைக் குறித்து நின்றதல்லது, அப்பொருட்கு வாசகமன்றி நின்றமை கண்டு கொள்க. பிறவுமன்ன. (53) 446. உரிச்சொன் மருங்கினும் உரியவை உரிய. உரிச்சொல் மருங்கினும் இடைநின்று பொருளுணர்த்துஞ் சொல்லுள என்பது உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உரிச்சொல்லிடத்தும் வேற்றுமை யுருபுபோல அப்பொருள் வேறுபடுத்தற்குரியவை உரியவாம், எ-று. அது, நனி என்பது உறுவும், தவவும்போல மிகுதி குறித்து வரினும், உறுவன, தவவன, எனப்பொருளுணர வாராது, இடைச் சொற் போலக் குறிப்பினான் மிகுதி யுணர்த்துதலின், இதுவும் பொருள் வேறுபடுக்குஞ் சொல்லாயினல்லது, பொருளுணர வாராமை கண்டுகொள்க. பிறவும் அன்ன. (54) 447. வினையெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய. வினையெச்சத்திற் குரியதோர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வினையெச்சச்சொல்லும் வேறுவேறாகிய பல இலக்கணத்தை யுடைய, எ-று. வேறுகுறிய என்னாது பல்குறிய என்றது சொல்லானும், பொருளானும் வேறுபடும் என்பது அறிவித்தற்கெனக் கொள்க. சொல்லான் வேறுபடுதலாவது பொதுவகையான் எடுத்து ஓதிய செய்து, செய்யூ என்பன, உகர ஊகார ஈறாகி வருதலேயன்றிப், பிறவீற்றானும் வருதலும், எச்சச் சொல்லாகி வரற்பாலது முற்றுச் சொல்லாகி வருதலும். பொருளான் வேறுபடுதலாவது ஒருவாய்பாட்டான் உணரும் பொருளை மற்றொரு வாய்பாட்டாற் கூறுதலும், எல்லா வினையெச்சமும் பிரித்து நோக்குவார்க்குப் பெரும்பான்மையும் வேற்றுமைப் பொருளாகித் தோற்றுதலும். அவையாமாறு:- செய்தெனெச்சத்துக்கண் ஓடி, போய் எனவும், செய்யூ என்பதன் கட் செய்யா வெனவும் வருவன ஈறுவேறுபட்டு வந்தனவெ. ‘49மோயினள் உயிர்த்தகாலை’ எனவும், “ஒலிசினை வேங்கை கொய்குவம் சென்றுழி” எனவும், கண்ணியன் வில்லன் வருமெனவும் வரும். இவை வினையெச்ச முற்றாகி வந்தன. இவற்றுள், மோந்து என்பது மோயினளெனவும், கொய்ய வென்பது கொய் குவமெனவும், கண்ணியணிந்து வில்லையேந்தி யென்பன கண்ணியன் வில்லன் எனவும் முற்றுவாய்பாட்டான் வரினு மெச்சப் பொருண்மைத் தாகலின் வினையெச்ச மெனப்பட்டன. அஃதேல், முற்றென்பதொன்றில்லையால், முற்றும் எச்சப்பொருண்மைத்தாக வருதலின்? எனின், அஃதாமிடனு மாகாதவிடனும் அறிதல் வேண்டுமென்பது வருகின்ற சூத்திரத் தான் விளங்கும். “50உரற்கால் யானை யொடித்துண் டெஞ்சிய - வாய்வரி நிழற் றுஞ்சும்” என்றவழி உண்டென்பது வினைமுதல் வினையொடு முடியாமையின், உண்ணவெனத் திரித்தல் வேண்டிற்று. இந்நிகரன ஈறுதிரிந்தன. மருந்துண்டு நோய் தீர்ந்தான், மழை பெய்ய மரங்குழைத்தது என்பனவற்றைப் பிரித்துநோக்க, மருந்துண்டலான், மழைபெய்தலான் என வேற்றுமைப்பொருள்பட்டன. அஃதேல், இவை வேற்றுமை மயங்கியலுட் கூறப்பட்டன வன்றோவெனின், ஆண்டு வேற்றுமைப்பொருள் வினைச்சொல்லானும் விளங்குமென அதன் இலக்கணங்கூறினார். ஈண்டு வினையெச்சம் வேற்றுமைப் பொருள் படுமென்று இதன் இலக்கணங் கூறினாரென்க. வினையெஞ்சு கிளவியுமென்ற உம்மை இறந்தது தழீஇயிற்று. (55) 448. உரையிடத் தியலும் உடனிலை யறிதல். மேலதற்கோர் புறநடை யுணர்த்துத னுதலிற்று (இ-ள்.) உரையென்பது தொடர்மொழி. முற்றுச்சொல் எச்சமாகி வருதலும், வினையெச்சமீறுதிரிதலும், தொடர் மொழிக்கண் முடிக்கும் சொல்லொடு கூடிநின்ற நிலைமையை யறிந்து கொள்க, எ-று. “மோயின ளுயிர்த்தகாலை” (அகம். 5) என்றவழி, உயிர்த்த லென்னும் வினையொடு நிற்றலின் மோயினளென்ப தெச்ச மாயிற்று. அல்லாதவழி முற்றாயே நிற்கும். ஞாயிறு பட்டு வந்தான் என்றவழி, வந்தான் என்பதற்குப் பட்டென்ப தியையாமையிற் பட எனத் திரித்தல் வேண்டிற்று. பிறவு மன்ன. (56) 449. முன்னத்தி னுணருங் கிளவியு முளவே இன்ன வென்னுஞ் சொன்முறை யான. மனக்கருத்தினாற் பொருளுணருமிட முணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) சொல்லினானன்றி இத்தன்மையவென்னுஞ் சொல்லினது தொடர்ச்சிக்கண் மனக்குறிப்பினாற் பொருளுணரப்படும் சொல்லும் உள, எ-று. உம்மை இறந்தது தழீஇய எச்சவும்மை. “தொடி நோக்கி மென் றோளு நோக்கி அடிநோக்கி, யஃதாண்டவள்செய் தது51” என்றவழி, இருப்போமாயின், வளை கழன்று தோள்மெலியு மெனக் கருதி, நடக்க வல்லீராகல் வேண்டுமென அடியை நோக்கினாளாதலான், உடன்போதற்குக் கருதினாளென இப்பொருளெல்லாம் அவள் குறிப்பினானுணர நின்றவாறு கண்டுகொள்க. இது சொல்லினானுணராமையான் எடுத்தோதல் வேண்டிற்று. பிறவும் இந்நிகரன அறிந்துகொள்க. (57) 450. ஒருபொரு ளிருசொற் பிரிவில வரையார் செப்புவழு வமைத்தலை நுதலிற்று. (இ-ள்.) ஒருபொருள்மேல் இரண்டுசொற் பிரிவின்றி வரின் நீக்கப்படா, எ-று. “உயர்ந்தோங்கு பெருமலை”, “உச்சி மீமிசை52”, “நிலத்து வழி மருங்கிற் றோன்றலான53” என்பன. “பிரிவில” என்றதனான் ஒட்டிநிற்றல் வேண்டும். (58) 451. ஒருமை சுட்டிய பெயர்நிலைக் கிளவி பன்மைக் காகு மிடனு மாருண்டே. ஒருமைப்பெயர் பன்மைப்பொருளுணர்த்துமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஒருமைகுறித்த பெயர்ச்சொல் பன்மைக்காகும் இடனுமுண்டு, எ-று. “புலைய னெறிந்த பூசற் றண்ணுமை-ஏவ லிளையர் தாய் வயிறு கரிப்ப” (அகம்.59) என்றவழித் தாயரெனல் வேண்டு மாயினும், தாய் என்பது பன்மை குறித்து நின்றது. (59) 452. முன்னிலைச் சுட்டிய ஒருமைக் கிளவி பன்மையொடு முடியினும் வரைநிலை யின்றே யாற்றுப்படை மருங்கிற் போற்றல் வேண்டும். இஃது ஒருமை பன்மை மயக்க முணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) முன்னிலையைக் குறித்த ஒருமைச்சொல் பன்மையொடு முடியினும் நீக்கப்படாது அதனை ஆற்றுப் படுக்கும்வழி பாதுகாத்துக் கூறுக, எ-று. ஆற்றுப்படைமருங்கிற் போற்றல்வேண்டும் எனவே, அஃதல்லாதவழிப் போற்றாமையுங் கூறப்படுமாயிற்று. ஆற்றுப்படை மருங்கிற் போற்றலாவது:- பெரும்பாணாற்றுள், “புல்லென்யாக்கைப் புலவுவாய்ப் பாண” (22), என அண்மை விளியேற்று முன்னிலைகுறித்து நின்ற ஒருமைப் பெயர் “நீயிரும், பல்வேற் றிரையற் படர்குவி ராயின்” (28, 37) எனப் பன்மையொடு முடிந்தது. கூத்தராற்றுப்படையுள், “கலம்பெறு கண்ணுள ரொக்கற் றலைவ” (மலைபடு. 50) என அண்மைவிளியேற்று முன்னிலை குறித்து நின்ற ஒருமைப்பெயர் “நீயிரும் நன்னற் படர்ந்த கொள்கையொடு, உள்ளினிர் சேறீராயின்” (மலைபடு. 64, 65) எனப் பன்மையொடு முடிந்தது. இவ்வாறு வருங்காற் கூத்தரும் பாணரும் விறலியருமாகி யாண்டுச் செல்வார் பலரா யுழியே வரப்பெறுவதென்றும்; தனியொருவனாயின் மயங்கப்பெறா தென் றுங் கொள்க. இனி, ஆற்றுப்படை யல்லாதவழிப் பலர் இல் வழியும் மயங்கப் பெறும். “குறிப்பேவல் செயன்மாலைக் கொளைநடை யந்தணீர் வெவ்விடைச் செலன்மாலை யொழுக்கத்தீ ரிவ்விடை என்மக ளொருத்தியும் பிறண்மக னொருவனும் தம்முளே புணர்ந்த தாமறி புணர்ச்சியர் அன்னா ரிருவரைக் காணிரோ பெரும!’’ (பாலை. 9 ) எனவும், “மறப்பரு காத லிவளீண் டொழிய இறப்பத் துணிந்தனிர் கேண்மின் மற்றைய’’(பாலை 2) எனவும், “என்னீர் அறியாதீர் போல இவைகூறல் நின்னீர வல்ல நெடுந்தகாய்’’(பாலை 6) எனவும் வரும்.(60)பிறவுமன்ன. 453. செய்யுண் மருங்கினும் வழக்கியன் மருங்கினும் மெய்பெறக் கிளந்த கிளவி யெல்லாம் பல்வேறு செய்தியி னூனெறி பிழையாது சொல்வரைந் தறியப் பிரித்தனர் காட்டல். இவ்வதிகாரத்துளோதப்பட்ட எல்லாச் சொற்கும் புறநடை யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) செய்யுளிடத்தும் வழக்கிடத்தும் பொருளுணரச் சொல்லப்பட்ட சொற்களெல்லாம் ஈண்டு ஓதிய இலக்கணத் தான் முற்றுப்பெற்றிலவாயினும், பலவகைப்பட்ட ஆசிரியமத விகற்பத்தான் வருமிலக்கணத்திற் பிழையாமல் யாதானுமொரு சொல்லாயினும் பாகுபடுத்துணருமாறு வகுத்துக்காட்டி யுணர்த்துக, நூலுணர்ந்தோர், எ-று. பிறநூன் முடிபினான் முடியினும் இலக்கணப் பிழைப்பின்றாம். எ-று. “கொடுங்கோற் கோவலர் பின்னின் றுய்ப்ப’ இன்னே வருவர் தாயர்’’ (முல்லைப். 15,16) என்றவழி ஒன்றனைக் கூறும் பன்மைக்கிளவியி னடங்காமையின் இதற்கிலக்கணம் வேறு வேண்டிற்று. “நளி இரு முந்நீர் ஏணி யாக வளியிடை வழங்கா வானஞ் சூடிய மண்டிணி கிடக்கை’’ (புறம். 35) என்றவழியும், நெடிய வலிய நீரெனப் பெயரெச்சம் அடுக்கி வந்தது. “நெல்லரியு மிருந்தொழுவர்” (புறம். 24) என்னும் புறப்பாட்டு முற்றுப்பெற் றடுக்கிவந்தது. “ஒன்னாதார்க் கடந்தடூஉம் உரவுநீர் மாகொன்ற வென்வேலான் குன்றின்மேல்’’ (கலி. 27) என்ற வழியும் அடுக்கிவந்தது. வினைத்தொகைப்புறத்தும் உவமத்தொகைப்புறத்தும் பொருளொற்றுமைப்படாது அன்மொழித்தொகையாகிச் சான்றோர் செய்யுளகத்துவரின் இச்சூத்திரமிடமாக அமைத்துக்கொள்க.“நின்ன கண்ணியு மார்மிடைந் தன்றே” (புறம். 45) என்பது நின்னுடைய வென்னும் பொருண்மைக்கண் ஒட்டி, அவ்வாய் பாடு குறித்து நின்றது. பிறவும் எடுத்தோதிய இலக்கணத்து மாறுபட்டு வருவனவுளவேல் இச்சூத்திரத்தா னமைத்துக் கொள்க. (61) ஆக நானூற்று முப்பது54 ஒன்பதாவது எச்சவியல் முடிந்தது இவ்வோத்தினுட் சூத்திரமுட்பட்ட உரையினதளவு கிரந்த வகையான் அறுநூற்றிருபது. தொல்காப்பியம் சொல்லதிகாரம் ஒருவகையான் முடிந்தது. தெய்வச் சிலையார் எழுதின விருத்தி முடிந்தது. எச்சவியல் அடிக்குறிப்புகள் 1. தொல். எழுத்து, பாயிரம். 2. சீதை நாடு, இளம்பூரணம். 3. இங்ஙனம் கூறுவோர் இளம்பூரணர்; இதனுட்காணப் பெறாத மற்றோர் நாட்டின் பெயர் பொங்கர் நாடு என்பது இளம்பூரணம். 4. இக் கொள்கையினை நச்சினார்க்கினியர் மேற்கொண்டு இவ்வாசிரியர் காட்டிய காட்டினையே எடுத்துக்காட்டுவர். 5. சேர்ந்த என்பது விடுபட்டது போலும். 6. செஞ்சொல் - இயற்சொல் (எச். 1.சூ) 7. இளம்பூரணம்: பெயர், வினை, இடை, உரி எனப்பட்ட நான்கு சொல்லுமே இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் எனப்பட்டன, பிற இல்லை. (எச். 1-சூ. உரை.) சேனாவரையம்:- `பெயர் வினை இடை யுரி என்பன இயற் சொற்பாகுபாடு’, `திரிசொல் பெயராயல்லது வாராது’, `திசைச் சொல்லுள் ஏனைச் சொல்லும் உளவேனும், செய்யுட் குரித்தாய் வருவது பெயர்ச் சொல்லே’. வடசொல்லுள்ளும் பெயரல்லன செய்யுட்குரியவாய் வாரா (எச். 1-சூ. உரை.) நச்சினார்க்கினியம்: `இயல்பாகிய சொல் முற்கூறிய நால்வகைச் சொல்லேயாய்ச் செய்யுட் குரித்தாம். அவ்வியற்சொல் திரிசொல்லாங் கால், பெரும்பான்மை பெயராகவும், சிறுபான்மை வினைத்திரிசொல் லாகவும் (திரியும்) திசைச்சொல்லும், வடசொல்லும் பெரும்பான்மை பெயர்ப் பெயராயுஞ் சிறுபான்மை தொழிற் பெயராயும் (வரும்.) (எச். 1-சூ. உரை.) 8. மயிலை நா. பக்கம் 79 காண்க. 9. பாசிலை - இளம்பூரணம். 10. எழுத் - 157. 11. `உடலு மிருந்தோடும் ஊழ்மலரும் பார்க்கும் கடலிரு ளாம்பல்பாம் பென்ற - கெடலருஞ்சீர்த் திங்கள் திருமுகமாச் செத்து’, என்பது ஏனை உரையாசிரியர்கள் காட்டிய மேற்கோள். 12. `மாசு போகவும் காய்பசி நீங்கவும் கடிபுனல் மூழ்கி யடிசில் கை தொட்டு’ - வினை நிரனிறை என்பது சேனாவரையம். 13. இச்சூத்திரம் பொருடெரி மருங்கின் ஈற்றடியிறுசீர் எருத்துவயிற் றிரியுந் தோற்றமும் வரையார் எனக் காணப்பட்டது. ஏனையுரை நூல்களையும் இவ்வுரையில் இவ்வாறு வருவதும் அடிமறி என்றவாறாம் என்னும் பகுதியையும் நோக்கி அடிமறியான என்பது சேர்த்தெழுதப்பட்டுள்ளது. 14. தொல், சொல், வினை 11-சூ. 15. `பிறவடிக்கண்ணும்’ என்பது விடுபட்டது போலும். 16. இத்தொகைச்சொல் பற்றி இளம்பூரணர் கொள்கை இதனின் வேறுபடும். இவ்வாசிரியர் கொள்கையினைச் சேனாவரையரும், இளம்பூரணர் கொள்கையினை நச்சினார்க்கினியரும் மேற்கொண்டு எழுதுவர். சேனாவரையம்: வேற்றுமை யுருபும், உவமவுருபும், உம்மையும், வினைச்சொல்லீறும், பண்புச்சொல்லீறும் தொகுதலிற் றொகை யாயின என்பாரும், அவ்வப்பொருண்மேல் இரண்டும் பலவுமாகிய சொற்கள் பிளவுபடாது ஒற்றுமைப்படத் தம்முள் இயைதலிற் றொகையாயின என்பாரும் என இரு திறத்தர் ஆசிரியர். நச்சினார்க்கினியம்: வேற்றுமை யுருபும், உவமவுருபும், உம்மும், வினைச்சொல்லீறும், பண்புணர்த்தும் ஈறும், இத் தொகைச்சொற்கள் அல்லாததோர் சொல்லுந் தொக்கு நிற்றலிற் றொகைச்சொல் லென்பதே அவர் (ஆசிரியர் தொல்காப்பியனார்) கருத்தாயிற்று. 17. இச்சூத்திரமட்டும் ஈங்குக்காணப்பட்டது. இச்சூத்திரமும், இதன் உரையும் 25. ஆம் சூத்திரத்தின் பின் காணப்படுகின்றன. 18. திருமுருகாற்றுப்படை (1-6). 19. ஓவற - ஒழிவற: பத்துப்பாட்டு இரண்டாம் பதிப்பில் காணப்பெறும் திருமுருகாற்றுப் படையின் வேறுரை. ஓ வென்பது ஓரெழுத் தொருமொழியாகிய தொழிற்பெயர் (பத்து -நச்.) 20. மதன் = அறியாமை (நச்) அழகு - வேறுரை. 21. நோன்றாள் - வலியினை யுடையதாள் (நச்.) 22. மேகம் (வேறுரை) இடி (நச்.). 23. தொல். எச். சூத். 23. 24. சுவையினென்று - சேனா - பாடபேதம். 25. வட்டமானது பலகை - இளம்பூரணம். 26. ஈங்கு ஏதோ பிழைபாடுளது போலும். 27. குறள். 570. 28. புறம் 67. 29. சிறுபாண். 20. 30. நாலடி. 4. 31. இங்கே இருத்தற்குரிய இறப்பின் நிகழ்வின், எவ்வயின் வினையும், அவைதாம் தத்தம் கிளவி என்னுஞ் சூத்திரங்களை, இவ்வுரையாசிரியர் இயைபு பற்றி வினையியல் ஈற்றில் (52, 53, 54ஆம் சூத்திரங்களாக) வைத்து உரைசெய்திருக்கின்றனர். 32. குறள் 165. 33. குறள். 226. 34. கலி. 41, மிகவும் சிதைந்து காணப்பட்டது. பக்கம் 241 காண்க. 35. கிளவி. சூ 1. 36. புறப்பொ-வெண். வஞ்சி - 19. 37. சூ. 31. 38. குறள் .495. கடும்புனல் - ஏட்டிற்காணப்படுவது. 39. குறள். 500. 40. குறள் 495. கடும்புனல் ஏட்டிற் காணப்படுவது. 39. குறள். 500. 40. இவற்றை நான்கு சூத்திரங்களாகக் கொள்வர் ஏனை உரையாசிரியர்கள். 41. மணி.காதை. 18. வரி.44, 46. 42. மயிலை 150 ஆம் பக்கம் பார்க்க. 43. அந்நிலை ஏனை உரைப்பாடங்கள். 44. புறம் 145. 45, 46 புறம் 71. 47. நற். 365. காண்க. 48. மலைபடு. 100. 49. அகம். 5. 50. குறு 232. 51. குறள். 1279. 52. மணி. 22. 53. பெய. 40. 54. மேலும், இரண்டாவது ஏட்டில் இவ்வரி முதலாகவுள்ளன. முடிவில், ஆறுமுகம், குருவாழ்க, ஹரஓம், குருப்பியோ நம: என்பன எழுதப்பெற்றன. சேர்க்கை இரண்டாவது ஏட்டினால் எய்திய திருத்தங்கள், இரண்டாவது ஏட்டிற்கண்ட வேறுபாடுகள், அச்சுப்பதிப்பின் மேற்கோள் விளக்கங்கள், பிழை திருத்தங்கள் முதலியவை. குறிப்பு: இச்சேர்க்கையிற்காணும் வரி அல்லது வரிகளின் குறிப்புகள், அச்சுப்பதிப்பிலுள்ள அவ்வவ்வரிகளிற் காணும் சிற்சில சொற்களை முன்னும் பின்னும் அடையாளமாகக் கொண்டு, அவ்வவ்விடத்து, இவ்விரண்டாவதேடு எங்ஙனம், தோன்றல் திரிதல் கெடுதல் முதலிய வேறுபாடுகளைக் கொண்டிருக்கின்றது என்பதைக் காட்டுவனவாகும். அவ்வவ்வரிக் குறிப்பின் முடிவிற்காணும் முற்றுப்புள்ளிகள் அவ்வக்குறிப்பின் முடிபையே காட்டுவனவாகும்; தொடர்ந்து வரும் பொருள் முடிபின் அடையாளங்கள் அல்ல. சூ. 64: உளன் சாத்தன்; செல்க சாத்தன்; வந்தான் சாத்தன்; வணிகன் சாத்தான்; யாண்டையான் சாத்தன்; கரியன் சாத்தன். பல்பொருட்கேற்பின் நல்லது கோடல் என்பதனால், (மரபியல் 110) இது `ஏற்புழிக்கோடல்’ எனவும் கூறப்படும் என்பது அம்மரபியற் சூத்திர உரை. சூ. 66: பயனிலையொடு நிற்றல், என்பது இச்செப்பின் கண். பயனிலை வெளிப்பட்டு யான். படைத்தலைவன் என்றவழி. (பி. 37. தி. 34), பொருள் வெளிப்படத் தோன்றிப் பயனிலை கோடல் செவ்விதெனவே வெளிப்படத் தோன்றாத பெயர். வனைந்தான் என்பதற்குக் குயவனொடு முடிக்க, இடை கிடந்த குடத்தை, எழுவாயாகிய பெயரின் மேலே. சூ. 68: அஃது இத்தன்மையதென. கூறலின் இதனாற் காலம் தோன்றாமை. மற்றொரு பொருட்பெயரொடு ஒட்டிப் பொருண்மேல் வருவன, (பி. கருத்துள்வழி தி. கருத்துள்வழிப்.) தெரிநிலைவினை யொட்டுப்பெயரல்லாதன. சூ. 69. ஐ என்று குறிபெற்ற வேற்றுமைச்சொல். ஒரு பெயர்க்கண்வரினும். என்பது. அஃதாவது தொழிலை யுண்டாக்கும். என முதனிலை எட்டென்றாராதலின் (பி. எட்டென்றாராதலின். தி. எட்டென்றாராதலின்). சூ. 70. பழிப்பினென்றோ. (பி. ஒப்பிற் தி. ஒப்பிற்). இதுவும் இரண்டாம் வேற்றுமைப்பொருள். உணர்த்தும். ஏனையவும் தொழிலும். செயப்படுபொருள் காரண காரியம் தோன்ற. இருவகைப்படும் என்பதறிவித்ததற்கு. ஈண்டு ஓதப்பட்டன வெல்லாம். காக்கப்படும் பொருண்மேல் வந்தது. காவலை. அணிகலன். ஆரத்தைப்பூணும், நூலையிழைக்கும் எனவும் ஆம். கிளியை இழக்கும். அறத்தைக் காதலிக்கும். (பி. வெகுளும். தி. வெகுளும்). கன்றும், கருணையை நோக்கும், கள்ளரையஞ்சும். உடையன், கல்வியையுடையன், காலையுடையன் எனவும் ஆறாம். செயப்படுபொருளேயன்றி; பொருளினது உறுப்பின் மேலும் பொருள் நிகழும் இடத்தின் மேலும் வருவன கொள்க. சூ. 79. (பி. வினைசெய். தி. வினைசெய்). ஆயின், பொர நின்ற விடத்து. குறித்தானாயின் பொர நின்ற காலத்து வந்தான், ஆலின் கட் கிடந்தது, குரங்கு என இவ்வாறு, அன்ன, இனி, அப் பொருண்மைக் கண்ணுருபு. (பி. காட்டுவன, தி. காட்டுவன) (இச்சூத்திரத்தின் அடிக்குறிப்பு வேண்டற்பாற்றன்று.) சூ. 80. இதுவும் ஏழாம் வேற்றுமைப் பாலன. எ-று. புறத்தொடு என்பன தனித்து. அகழ்ந்தான். மாடத்துழை இருந்தான். என்றாற் போல, சேறற்றொழிற்கு அரசன். ஊரையடுத்தல் ஆகிய. (பி. ஆதாரமாகின்றது. தி. ஆதாரமாகி நின்றது.) புக்கான். எயிற்புறம். (பி. தோன்ற. தி. தோன்றி.) (பி. குறுமுயால்: தி. குறுமுயல்:) மனை அயல்வந்தான்: மனை. (பி. திசைக்கூறு. தி. திசைக்கூற்று.) பால், வாய், முதல். ஈற்றினின்றியலும். சூ. 81. பொருளைப்பொருந்தி ஒலிக்கும். (பி. இவை யாவன: - தி. அவையாவன:). இவ்வேற்றுமையின் இறுதிப்பெயர் முதற்பெயரோடு ஒட்டி நிற்றலின். தாயோடு கூட மூவர், அருவி, நீங்கா நின்ற அருவி எனவும்; நின்ற பொருளொடு முடிபுழி. இரண்டாவது வேற்றுமை ஒத்து. குறிப்பு:-இவ்வேட்டில், முப்பது என்பதன்பின் “ஆகக்கிரந்தம் எண்ணூற்றுத் தொண்ணூறு” என்பது உளது. மூன்றாவது வேற்றுமை மயங்கியல் சூ. 82: செய்யப்படுபொருளை. (பிறாண்டும் இங்ஙனமே வந்துள்ளது.) ஏழாம் வேற்றுமையாவதும் உடைத்து. எ-று. தோன்றாது இடமே தோன்றுதலின் ஏழாவதற்கும் உரித்தாயிற்று. ஒரு பொருள். சூ. 83: நிற்கும் பெயர்க்கு. குத்தப்படும் பொருளுமாகி. இண்டற்கும் ஒத்த இயல்பின(தா)யிற்று. கண்ணின்கண்ணும் குத்தப்படும் ஆகலின் என்க. ஆயினும் ஏற்கும் வினையே. சூ. 85: இதுவும் அது. இரண்டாவதும்-. முதலுஞ் சினையும் பொருளும் சேரப்பெறுஞ் சொற்கு. சூ. 86: கோட்டது நுனியைக் குறைத்தான். கோட்டை நுனிக்கட் குறைத்தான். கோட்டை நுனியைக் குறைத்தான். சூ. 87: வேறுபடாவற்றைச் சொல்லுந்திறம் பண்டுவழங்கிய. பக்கத்து மருவிய மரபு. எ -று(பி. போலச். தி.போலச்). குறித்த வழியோடாதென்றவாறாம். குப்பையைச் சிதறினான் குப்பையது தலையைச் சிதறினான். குப்பையைத் தலைக்கட் சிதறினான். (பி. உயிர். தி. உயர்.) சூ. 88: இ-ள்: ஒரு பொருட்கண் ஒருவினை பற்றிவரும். அரசரோடு இருந்தார். சூ. 89: எடுத்தோதப்பட்டன ஆக்கம். ஆக்கமொடு புணர்ந்த ஏதுவென. ஏதுப்பொருள் படுதலின்றி, அமைத்தனை -. சூ. 90: ஓதப்பட்ட நோக்கப் பொருண்மையின்கண் நோக்குதல். புன்சொல் உரைப்பானை நிலம் பொறுக்கின்று(?) பொறையாகிய-. சூ. 91: இரண்டு பொருட்கண் தடுமாறி. நீக்கப்படாது. பொருள். சூத்திரத்தாற் கூறுப. சூ. 92: வேற்றுமை தெரிய உணரு மோரே. (பி. முறையினால். தி. உரையினால்.) வேறுபாடறிவதன் இயல்பு. சூ. 93: தொகைவருங் காலை. நீக்குதல் இல. எ-று. வாழ்மின் என்றவழிப் போற்றப்படுவான் தான் என்னும். சூ. 94: ஆறாவதும் விரித்தற்கு. தேவர்க்கோக்கின(?) பலி என விரித்தலேயன்றித் தேவரது பலி எனவும் விரியும். சூ. 95: இனிக் கள்ளரான் அஞ்சும்; கள்ளர்க்கஞ்சும்; கள்ளர் மாட்டஞ்சும் எனவரினும் அவை. ஏதுவாகின. சூ. 96: அது என்னும் உருபு. (பி. மகன. தி. மகன்) சூ. 97: எ-று. உரையாப் பொருட்கண் வாராது என்றவாறாம். உறைபொருட்கண். யானை எனவும் வரும். சூ. 98: புறநடை. எடுத்து ஓதல் அரிதாகலான் ஈண்டு. ஒரு வேற்றுமைக்குரிய பொருளே ஏனை வேற்றுமைக் கண்ணும் மயங்குமாறு கூறப்பட்டது. சூ. 99: என்றமையான் வழுவமைதி கூறியவாறாம். `யாஞ்சிறிதும் எங்கோல்வளை’. இது மூன்றாவது அடுக்கி. நான்காவது அடுக்கிவந்து. வீரப்புலியனின். வெற்பனிற் றீர்ந்துளதோ வேந்து. (குறிப்பு: 12-13, `தீர்ந்து என்பதனோடு முடிந்தது’ என்பதன்பின் கீழ்வரும் செய்யுளும், உரையும் உள்ளன.) “தென்னனது செங்கோற் செழியனது தென்பாண்டி மன்னனது மான்றேர் வழுதியது - கன்னித் துறைவனது தோலாப்போர் மாறனது தொல்லை அறைகடனீர் வேலி யகம்” - இதனுள் ஆறாவது பல அடுக்கிவந்து அறைகடனீர் வேலி என்பதனோடு முடிந்தது. சான்றோர்க்குக் கொடுக்கும் எனவும். நல்லாரது, தீயாரது என்னாது கொள்ளும். அறையிலே கிடக்கும் எனவும் (பி. ஒருபு. தி. ஓருருபு.). (பி. ஒடும். தி. ஒடுவும்) சூ. 100: ஏற்புடைப்பொருள். குடத்தைத் திகிரியால் அரங்கின்கண். எனவும், சாத்தன் ஆடையை. சூ. 101: இதுவும் பல உருபு தொடர்ந்து. வேறு வேறு வினையேற்று. வழங்கிய நெறிப்பக்கத்தன. வழங்கிய வழிப்பக்கம் என்றமையான் ஏற்கும். கூறல் வேண்டா. நிற்பது அஃதன்னதன்றி. தொடர்ச்சியாகிய பொருள். வேறுபாடிலவாயினு மோசை வேற்றுமையான். பெயர்த்தாகலானும், சாத்தன் போல்வதல்லது உருபுபெற்ற தென்றல் அமையாதென்க. சூ. 102: (ஐந்தாவது வரியின் கீழ்) மேலதற்கோர் புறநடையுணர்த்துதல் நுதலிற்று. இ-ள்; இரண்டாவது ஏழாவதும் அல்லாத பொருட்கண் வரும் உருபு தொடர்மொழி யீற்றின் கண் தொகா. எ-று. `உய்த்துக்கொண்டுணர்த்தல்’ என்னும் தந்திரவுத்தியான் உருபேற்ற சொல்லும் குன்றத்து என்பன. என்னை? சூ. 103: மயங்குதலன்றிப் பிற. பொருண்மை முகத்தான். இவ்வாறும் வரப்பெறும். சூ. 104: வேற்றுமைச் சொற்கள் தத்தமரபிற் பொருணிலையை. சூ. 105: அவ்வொடுஞ் சிவணும். சிலவற்றிற்குரியதோர் திரிபு உணர்த்துதல். அவ்வொடும் சிவணும். சூ. 106: குவ்வும் ஐயும் இலவென மொழிப. மூன்றுருபு சிவணும் என்பதூஉம், அஃறிணைக்கண் குறிப்பு: பரிபாடலகத்து என்பதுமுதல் `உயர்திணையாம்’ என்பதுவரை யுள்ளவை இவ்வேட்டில் இல்லை. சூ. 107: தீர்த்துமொழி கிளவியும். மரபிற் றோன்ற லாறே. ஆகித்தோன்றும். எ-று யானைக்கோடு வெள்ளிது. சொல். காணத்தாற் கொண்ட அரிசியென்பது காணத்திற்குக் கொண்ட அரிசி. பொருந்திய சொல்லின் கண்ணும் என்றவாறு. பெயர்ச்சொற்கிளவியும் என்பது. பண்பின் ஆக்கம் என்பது பண்பினான் ஆகுஞ் சொல் என்றவாறு. எனவும் வரும். தீர்த்து மொழி கிளவி யென்பது. கிளைவரி நாணல். இந்நிகரனவெல்லாம் வந்தவை அமைத்துக் கொள்க. சூ. 108: ஏனை உருபிற்குரிய. பொழுதோடென மூன்றவாதனோடு மயங்கிற்று. சூ. 109: பொருளும் நெய்தலாகிய தொழிலும். படை மரத்தினின்றும் வாங்குதல் நீக்கம் ஆகலின் அஃது அத்தொழில். தொழிற்கு உறுப்பன்மையால். கிழமை செய்வான்மாட்டே. முதற்காரகம் கருவியின் அடங்கும். சூ. 110: இன்மையின் அப்பொருண்மை. சூ. 111: அனைமரபினவே ஆகுபெயர் இலக்கணம். ஒன்றதாகி வருவது. அத்தன்மையவாகிய. என்பதும் எஞ்சி. நயமில் ஒருகை. ஏந்திள வனமுலை இறைநெறித் ததூஉம். (மணி. 18-69). என்பனவும் அவை. வேளார்காணி என்பது வேளார்காணியிற் பிறந்த ஆடையை அப்பெயரான் வழங்குபெயராதலின் ஆகுபெயராயிற்று. யாழது கேட்டான் என்பதும் அது யாழிற் பிறந்த இசையையும் யாழ் என்றமையால். என்றவழி அந்நீலத்தை யுடைய மணியை நீலம் என்பதாக வழங்குதலின் ஆகுபெய ராயிற்று. (பி. பொருளை. தி. பொருளை)அணிகலத்தைப் பொன். தன்மேற் காட்டி. (பி. எண்பதன்கண். தி. என்பதன் கண்.) இரண்டாவதனைவிரிக்க இயன்றதனை. மற்றொரு பொருட்குப் பெயராகி. அன்றோ எனின் ஆகுபெயராவது ஒட்டுப்பட்ட பெயரோடு ஒன்றுமைப்பட்டுவரும். அன்மொழித் தொகை யாவது. அன்மொழித் தொகை என்றதனாலும். “பெயர் வயினாலும் வேற்றுமை தொக்க பெயர்வயினானும் - ஈற்று நின்று.” (பி. பெயராயிற்று. தி. பெயராயின.) நின்றவவனால் (நின்று, அவனால் என்றிருக்கவேண்டும் போலும்) அனை மரபின. சுட்டலும் என அவ்வியல்பினை யுடையவாம். சூ. 112: (பி. வேண்டும். தி. வேண்டும் எ-று.) என்பது வேண்டியவாறு சொல்லப்பட்டது. வேற்றுமை. சூ. 113: கொள்ளும் இடம் உள. தம்பொருள் விளங்கும். குறியன்றி அளக்கப்பட்ட. வேற்றுமைப் பொருளான் ஆகு பெயராம். (பி. நாழி, தி. நாழி) என்னும் நிறையின தளவாகிய. இந்நிலம் ஒருமா இம்மனை முக்கோல் என்பனவும். அஃதேல், இவ்வெருகு ஒன்று என. சூ. 114: வருவனவும் எடுத்தோதிய. திரு என்பன வடிவு பற்றியும். பசு கழுதை என்பன குணம் பற்றியும், புலி சிங்கம் என்பன தொழில். என்றவழித் தொடியென்பது ஆகுபெயராயிற்று. சூத்திரமுட்பட்ட உரையினது. (பி. ஓத்துனுள். தி. ஓத்தினுள்). குறிப்பு: கிரந்தவகையான் முந்நூறு என்பதன்பின் `ஆகக் கிரந்தம் ஆயிரத்து நூற்றுத்தொண்ணூறு’ என்பதுள்ளது. நாலாவது விளிமரபு சூ. 115: விளியெனப்படுவ... என்பது சூத்திரம். இவ்வோத்து. முறையானே ஏழுவேற்றுமையும், அவற்றது மயக்கமும். பிரிந்துவாராது. என்றதனால் இவ்வேற்றுமை. வரும் என்றவாறு. சூ. 116: மேற்சொல்லப்பட்ட. சூ. 117: குறிப்பு: இச்சூத்திரத்தின் முதலிலுள்ள `அவற்றுள்’ என்னும் சொற்சீரடி இவ்வேட்டில் இல்லை. உயிரீறாக விளியேற்கும். சூ. 118: *(பி. ஈற்றுப். தி. ஈற்றுப்) ஈகாரமாகித்திரிந்துமூ. நங்கை நங்காய், தந்தை தந்தாய் என விளியேற்கும். சூ. 119: ஏவொடு. ஓகார ஈற்றுப்பெயர். குற்றியலுகரமே ஈறாகுவது. எ-று. சூ. 120: ஐயந்தீர்த்தலை நுதலிற்று. சூ.121: இறுதிப்பெயர். செய்தியையுடைய. சூ. 122: ஐகார வீறுமுறைப்பெயர். அன்னை என்பது அன்னாய். எனவும் வரும். உம்மை... சூ. 123: இருதிணைக்கண்ணும்வரும். நோக்கிற்கிடந்த தெனக்கொள்க. பெயரும் அஃறிணைப்பெயரும். பெறுதலின் அது ஒழித்து ஏனைய. அண்ணல் கூறு; கடவுள் வாழி ;தும்பி கூறு. மாக்களும் என்பது அண்மை... சூ. 124: விளிகொள்பெயரே. உயர்திணைப்பெயருள் என்பதன்பின் `புள்ளியீறாகி விளி கொள்ளும் பெயர் வகுத்து உரைத்து உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்: உயர்திணை மருங்கிற்’ என்பது சேர்த்துப், `புள்ளியீறாகி விளி கொள்ளும் பெயர்’ எனத் தொடர்ந்து கொள்க. சூ. 125: எ-று. அவையாவன: யாம், நாம், எல்லாரும், எல்லீரும், தாம் என்பன. சூ. 126: (பி. உணாத்துதல். தி. உணர்த்துதல்.) சூ. 128: ஈற்றுப்பெயர் இயல்பாகி விளியேற்கும். (பி. கேரமான். தி. சேரமான்) சூ. 129: ஆனீற்றுப்பெயர்க்கண் வருவதோர். வரும். ஈண்டு விளிவயினான. முன்னிலை வினையாகிய. அஃதன்று இது. உளவென்பதூஉம். சூ. 130: (பி. பண்ப. தி. பண்பு) சூ. 131: னகரஈற்று அளபெடைப்பெயர். சூ. 132: ஏவொடு. `ஒப்பக்கூறல்’ என்பதனால். ஏவொடு வரவும் பெறும் என்று கொள்க. வரும். `தன்னின முடித்தல்’ என்பதனால் பெயர்க்கண்ணும் ஏவொடு. `கூந்தன்மர் கோன்’ `புல்லியஞான் றுண்டாயில்.’ எனவும் கோன் என்பது கோனே எனவும் வரும். சூ. 133: ஈற்றுப்பெயருள் விளி. ரகரவீற்றுப்பெயர் விளியேற்குமாறு. ஈற்றுப் பெயர்கள். கூத்தர், உடையார் என்பன. சூ. 136: பண்புப்பெயர் விளி. சூ. 138: முதலாகிய ரகரவீற்றுப்பெயர். சூ. 139: (பி. நும்மின், தி. இ-ள்:- நும்மின்) வினாவின் பெயராவது. அது யாவர் என்பது. சூ. 141: உ-ம்: பெம்மாள், கோமாள் என்பன. சூ. 143: ஈற்று முறைப்பெயர். ஈற்று முறைப்பெயர். எனவரும். `ஒப்பக்கூறல்’ என்பதனால். சூ. 144: அத்தன்மையள், யாவள் என்பன. சூ. 145: ஈற்று அளபெடை. அளபெடைப்பெயர்போல. சூ. 146: குறிப்பு: இச்சூத்திரமும், உரையும், இவ்வேட்டில் இல்லை. சூ. 147: உடையவாகிய அஃறிணை வருதல் விளங்கு நிலையுடைய. இத்துணை இலக்கம் இல. அஃறிணைப் பொருள் உயர்திணைபோல. ஒருகாலம் பற்றி விளிக்கப்படும் என்பதூஉம். குயிலே, யாமே(?) எனவரும். அரிமான் அரிமா(அ)ன் எனவும். உயர்திணையான் வருவன சிறுபான்மை. சூ. 148: விளி ஏற்றற்குள எனப்பட்ட. ஓதிய அளவினானன்றி மாத்திரை. அளபிறந்தன. சூ. 149: தம்முறைப் பெயரொடு. சொல் முறைப் பெயரொடும். வந்தது கண்டு. சூ. 150: விளியொடு கொளலே. எஞ்சியது உணர்த்துதல். முதலாகியபொருண்மை. பிறவும் வினைக்குறிப்பு நீர்மையன்றிப் பெயராகிவரின் விளியேற்றலின்மை. எனவருவன விளி எலா. என்றவழி யகரவீறு விளி. கொண்டதென உணர்க. குறிப்பு: ஆக 148. நான்காவது. விளிவேற்றுமை முடிந்தது. ஆம் வரிகள் இவ்வேட்டிற் காணப்படவில்லை. ஐந்தாவது பெயரியல் சூ. 151. பெயரியல் பென்னும் பெயரியல்பு உணர்த்தினமை யால். கூறி அத்தொடர்மொழி. பெயர்ச்சொற் கிளந்ததாகலின் இவ்வோத்து. இதனுள் முற்சூத்திரம். பொருளைக்குறித்தன. சொல் இலவென்றவாறும் ஆம். என்னை? யாங்கது அது எனின். என்பதற்கும் பொருளுண்மை காண்டி. என்பதற்கும் பொருண்மை காண்டி. அடுத்தமையான் ஆண்டினாயிற்று அல்லது இல் பொருள்மேல் வழக்கின்றென மறுக்கொள்க(?) அன்றியும் எடுத்தோத்துப் பெரும்பான்மை பற்றி யென்றும் கொள்க. என்றவழிக் கல்லாதாரும் சிலர் உளராயினும். பாடைக்கும் ஒப்பமுடிந்ததோர் இலக்கணம். என்க. எனவே பொருள்பற்றி வரும் பெயரெல்லாம் இடுகுறி. மற்றொரு பொருட்குப் பெயராகி. சூ. 152: பெயர்ச்சொல் என்றாயிற்று. சூ. 153: இருபகுதியினும் பொருண்மை. சொற்படு பொருளன்றி (பி. குறிபபினாற். தி. குறிப்பினாற்.) உரிச்சொல் எனக் குறியிடுங்கால் அதன் பொருண்மை உணர்த்த வேண்டுதலின் பொருண்மை. குணம் பற்றியும்; தீமை செய்தாரை நன்று செய்தீர் எனவும் கொடுமைசெய்தாரை வாழ்வீராக எனவும் அப்பொருள். சூ. 154: சொல்லெனப்படுவ. என அவ்விருவகைய என்ப. சூ. 155: தமிழ்நாட்டுப்பிறந்து தமிழறிவாரை. (பி. வரா. தி. வாரா.) சூ. 156: திணைப்பொருளையும் உணர்த்தும். சூ. 157: சொல்லியது நாம் முன் எடுத்து ஓதப்படுகின்ற என்பது கூறினாருமாம். சூ. 158: குறிப்பு: இச்சூத்திரத்தின் உரை இவ்வேட்டில் இல்லை, விசேடவுரைமட்டில் உளது. என்றாயிற்று. இவ்வுரை நம்பி, (பி. என்னபனவற்றிக்கும். தி. என்பனவற்றிற்கும்.) மக்கள் எனப் பொருட்பன்மை. ஏனைச்சுட்டொடும் ஒட்டிக்கொள்க. குணத்தையடுத்து, அத்தன்மையான் என. பொருளோடு அடுத்துவரும் பெயர். குரங்கன் குரங்கி என்பனவும். பெருவழக்கின் அன்மையான் ஈண்டு. சூ. 161: ஒன்றியனைத்தும். குறிப்பு: இவ்வரி முதலாக பக். 114 வரி 8 முடிய, இவ்வேடு மாறுபட்டுள்ளது. “அது சோழநாட்டான் எனவும் மதுரையான், மதுரையாள் எனவும் வரும். குடிப்பெயராவது குடியினனாய பெயர். அவை யாவன: - சேரலன், பாண்டியன், சோழன் என்பன இன்னும் `வந்தது கண்டு வாராதது முடித்தல்’ என்பதனால் குலத்தினானாகிய பெயரும் கொள்க. அந்தணன், அந்தணி, அந்தணர் என்பன. அஃதேல், பாம்பு, நாய், மணி என்பனவும் அந்தணர் அரசர் என வருமாலெனின் அவ்வாறு வருவன அந்நூலகத்து ஆடல்வேண்டி ஆசிரியன் இட்டதோர் குறி என்று கொள்ளினல்லது பாம்மைப் பிடித்தான் என்னும் பொருட்கண் அந்தணனைப் பிடித்தா னென்றவழி அப்பொருள் புலப்படாமையின், அதுவழக்கன் றெனமறுக்க”. பெயர், பலர், அவையத்தார் என்பன. பிறவும். என்பன குட்டை நாட்டையும். `குவளைப்பூண்டு’ உயர்திணைப் பெயராகிப் பன்மை. தலைமகனைக் குறிக்கினும் அடைப் பெயராம். நிரைகோடல், நிரைமீட்டல், எடுத்து விடுத்தல். (பி. காந்தையாள். தி. கரந்தையாள்.) ஓதப்பட்டது. சாத்தன் என்னும். சூ. 162: உயர்திணை அடுத்து. எ-று. (பி. என்பனம். தி. என்பனவும்) (பி. என்பனம். தி. என்பனவும்.) அடியாள், அடியார் என. இடையாள், தோளாள் என. பிறவும் உயர்திணை. இதுவே ஒத்தாகக் கொள்க. சூ. 163: யாது யா(அ)யாவை என்னும் - ஆவயின் மூன்றோ டப்பதி னைந்தும். சூ. 164: வினையினாற் பொருட்கு. படும்பொருண்மேல். ஒன்பது பெயரும் அஃறிணை. சூ. 166: பொருட்பன்மையும், உணர்த்தியவாறும் இவ்விரு ஈற்றுக்கும். சூ. 168: பெயரும் ஆராயுங் காலத்துத் தத்தமக்கேற்ற வினையோடே கூடியல்லது பால்விளங்குதல் இல. எ-று. சூ. 169: வரூஉம்வினைச் சொல்லானன்றி நிகழ்காலத்தை பெயரெச்சமாகவும் பலர்வரை. சூ. 172: என அந்நான்கும். எ-று. சூ. 173: என நான்கும். எ-று. சூ. 174: நான்கும் சினைமுதற்பெயராவன. எ-று. சூ. 176: என்றமையான் இவையும் உயர்திணை கொண்ட வழி. அஃறிணைப் பொருளேயாம், பிற தெரியாமற் பொதுப்பட்டு நிற்கும். சூ. 177: திணை உணர்த்துமாறு உணர்த்துதல். எனவும், குன்றியன்னகன்ன குரூஉமயிர் பின்றாள் வெள்ளெலி மோவா யேற்றை; முடங்குபுற விறவின் மோவா யேற்றை எனவும். சூ. 178: திணை உணர்த்துமாறு உணர்த்துதல். என உயர் திணைப் பெண்பால் ஆயின. சூ. 180: திணை உணர்த்துமாறு உணர்த்துதல். சூ. 181: திணை உணர்த்துமாறு உணர்த்தல். சொல் இரு திணைக்கண்ணும் ஒருமை. சூ. 182: முன்னிலையினும் வந்தது. நீர் எல்லாம் விளையாடப் போதுமின். (பி. நீஇர். தி. நீயிர்) எடுத்தோதினமை யாற் கொள்ளப்படும். எடுத்தோதி ஆண்டுத்தன்மை. (பி. அற்றுச் தி. வற்றுச்). இப்பெயர் உயர்திணைக் கண்ணும் உளப்பாட்டுத் தன்மை. புறநடையாற் பிறநூல். சூ. 183: (பி. நீஇர். தி. நீயிர்.) விளங்க நில்லா இருதிணையையும். சூ. 184: (பி. நீஇர். தி. நீயிர்.) (பி. ஒருமை. தி. ஒருமைப்) சுமையன் என்பது தொழில்பற்றி வந்தது. சுமையன் வந்தது; சுமையன் வந்தான் எனவரும். சூ.187: (பி. நீஇர். தி. நீயிர்.) என்றமையான் குறிப்பினானுங் உணர்க என்றவாறாகக்கொள்க. நீயும் தவறிலை நின்னைப் புறங்கடைப் போதா விட்ட நுமருந் தவறிலர் என்றவழி. எம்போல் இன்றுணைப் பிரிந்தாரை. நீ கடல் என்பன முறைவந்த. சார்ந்தொழுகல் ஆற்றி வழிபடுதல். சூ. 189: ஆயிட னாதல் செய்யு ளுள்ளே. வரும் இடம் செய்யுளகத்து. “தாமே யாரியர்” என்றவழி. நாடு கிழவோனே. சூ. 190: பொருட்புறத்ததாகிய. புள்ளும் மரமும் முதலாயின. அதன்கட் செய்யுளுட் கிளக்கும் இயற்பெயர்ச் சொல் உயர் திணைப் பொருண்மையைச்சுட்டா, நிலத்துவழித் தென்றலான், எ-று. அஃறிணைப் பொருண்மை சுட்டுமதல்லது. எய்தியது விலக்கியவாறாயிற்று. அஃறிணைப் பொருட்குச் சாத்தன். எனவரும் இயற்பெயரே வழக்கின்கண் என்பதூஉம் செய்யுட்கண் பொருட்பெயராகிய நிலத்துவழித்தோன்றும் பெயரே கூறுதல் வேண்டுமென்பதூஉ மறிவித்தற்கெனக் கொள்க. அவையாவன: மான், மரை, முயல், நாரை, அன்றில், புன்னை, ஞாழல் என்பன. குறிப்பு: இவ்வியல் முடிவில் கீழ்வருமாறு உள்ளது. ஆக- 189. ஐந்தாவது பெயரியல் முடிந்தது. இவ்வோத்தினுட் சூத்திரம் உட்பட்ட உரையினதளவு கிரந்தவகையான்310 ஆறாவது வினையியல் சூ. 192: என்பது. ஈண்டு ஓதுகின்றது உண்டான் எனக் காலத்தோடு ஒட்ட நிற்பது. சூ. 194: உம்மை எச்சவும்மை. எனவே. (பி. உடையவன். தி. உடையன்.) சூ. 195: உரிமையவாகி அம் மூன்று வேறுபாட்டனவாம், புலப்படுமிடத்து. அவற்றுள் உயர்திணைவினை தெரிநிலை வினை. அவற்றுள் தெரிநிலைவினை - தன்மைவினை. சூ. 196: அஃதேல் இடம் மூன்று என்பது. உயர்திணை வினை உணர்த்துவான். ஏட்டிற்றினையுமுடைய சொல் உயர்திணைப் பொருட்கட்டன்னொடு கூடிய. உண்பது தொழில் உணர்த்திற்று. (பி. உன்டனெம் தி. உண்டனெம்.) (பி. உன்டேம். தி. உண்டேம்) உண்கின்றனம், உண்கிறாம், உண்கின்றாம். (பி. உன்பன. தி. என்பன.) சூ. 197: (பி. இனித்தன்மை, தி. தனித்தன்மை) ஏழுஈறும் தன்வினை. சூ. 198: காண்கு வந்தேன். காண்கு யான். அஃதேல் முற்றுச் சொல் பெயர்கொண்டு முடிதல் யாண்டுப்பெற்றாம் எனின், முன் முற்றுச்சொல்லிலக்கணம் கூறுகின்றுழி, அவைதாம், தத்தம் கிளவி யடுக்குந வரினும் - எத்திறத் தானும் பெயர்முடி பினவே. (சூத். 244) என்னுஞ்சூத்திரத்தாற் பெறுதும். ஈண்டு முடியினும் என்றதற்குப் பொருள் தொடர்புபடினும் என்றவாறாகக் கொள்க. சூ. .200: அருஆர் ப என. வரும் சொல்லாம். எ-று. அரு என்புழிவந்த. ஒற்றீறாகவரும் சொற்கள். சூ. 201: (பி. ஓர். தி.ஓர்.) இ-ள்: மாரீற்று வினைச்சொல்லும். பீடில் மன்னரை. சூ. 203: எண் என்பன இரண்டு. எண்ணப்பட்டியன்ற மருங்கின். சூ. 205: மூவீற்றினும் ஆகாரம். `நல்லைமகனென நகூஉப் பெயர்ந் தோளே’ `சென்றோ ரன்பிலர் தோழி’. சொல்லாமற் பெறும் என்று. சூ. 207: பெயருமன்றி வினையுமன்றி. நிற்றலின் வினைக் குறிப்பெனக் குறிப்பெற்றது. சாத்தன் மாடத்துக்கண்ணிருந்தான். வருதலின் இதுவும் வினைக்குறீப்பாயிற்று. ஒத்தல் பொருளுமன்றி வினையுமன்றி. நிற்றலின் இதுவும் வினைக் குறிப்பாயிற்று. என்பதப் பொருட்குப் பண்பாதலின் அப்பண்புடையானை. சூ. 208: (பி. அவன். தி. ஆவன்). நில்லாது. அதுவும் குறித்தது கொள்ளநிற்கும். (பி. யாகாதோ. தி.யாகாவோ.) குழையை உடையன். சூ. 209: என்றவாறாம். `பல்பொருட் கேற்பின் நல்லது கோடல்’ என்பதனால். சூ. 210: முன்னிலை வினை ஆகாதாகலானும் அஃறிணைக்கே. ஆதலான் அதுவும் தெரிநிலை. தன் வினை யுரைக்கும். வழக்கின்மை யானும் அவை உரைக்குங்கால். நரப்புக்கருவி. (பி. உயர்வினை. தி. உயர்திணை.) தன்மைவினை இன்றென்க. சூ. 211: உணரவரும் சொல்லாமாறு. சூ. 212: பன்மையு மொருமையுமாகிய பால் உணரப்பட்ட ஆறு. சூ. 213: இப்பண்டியுள்ளது எவன், இப்பண்டியுள்ளன. சூ. 214: என்பன ஒரு பொருளின்மை உணர வருவன, கோடின்று கோடில எனவரும். உடைய, உடைத்து என்பன ஒருபொருட்கு ஒருபொருள் உண்டென்னும் பொருண்மேல் வரும். கோடுடைத்து, கோடுடைய என வரும். அன்று, அல்ல, என்பன தாம்குறித்த பொருண்மை விளக்கவரும். கிளவி ஒரு பொருளின் உண்மை (பி. பறநடை. தி. புறநடை.) சூ. 215: இதற்கும் ஈறாயதென்றவாறாம். உ-ம்: உடைத்து, இன்று. சூ. 216: (பி. திரிபு. தி. பிரிபு.) (மேற்சொல்லப்பட்டவற்றுள் என்பது இவ்வேட்டில் இல்லை.) பிரிந்து வேறுபடூஉம் செய்கையவாகி இருதிணை. உதாரணம் முன்னர்க்காட்டுதும். சூ. 217: வினைச்சொல்லுள் ஒருமையுணர்த்தும் ஈறு உணர்த்துதல். அஃறிணை ஒருமைப்பாற்கும். வா, அறி. ஆய் என்னும் சொல் குறைந்து. சூ. 218: இருஈர் மின். பன்மை உணர்த்தும் ஈறு உணர்த்துதல். உண்மின், உண்ணலிர், உண்ணீர், உண்ணன்மின். இவ்வினைக்குப் பெயராகிய நீ, நீயிர் என்பனவற்றிற்கு. என விதித்தார் ஆண்டை விதியே ஈண்டுங் கொண்டு சொல்லுவான் குறிப்பினானும் தொடர்வுபட்ட பெயரினானும் உணர்ந்து கொள்க. உண்டாயோ மகனே, உண்டாயோ மகளே என்றவழி உயர்திணை உணரப் பட்டது. உண்டாயோ குயிலே என்றவழி அஃறிணை யுணரப் பட்டது. உண்டீரோ மக்காள் என்றவழி உயர்திணை உணரப்பட்டது. உண்டீரோ கிளிகாள் என்றவழி அஃறிணை உணரப்பட்டது. உண்டீரோ மக்காள் என்றவழி ஆண்பன்மை பெண்பன்மை விளங்கல் வேண்டின் அதனோடு தொடர்ந்த சொல்லான் உணர்க. சூ. 219: சொற்கள் பால் உணர்த்துதல் நுதலிற்று. நீ வேறு, நீயிர் வேறு அவன். நீயாம், அவர்கூட்டு, அவர் ஆம் என மூன்றிடத்துக்கண்ணும். சூ. 220: இடத்து நிலைபெறாது. எ-று. எனின், செய் என்னும் பொருட்கண்ணும் தவிர் என்னும் (பி. கடையார்த்துக் . தி. கடையாத்துக்) இனிது விளங்குதலின் அவ்வாறு. செய்யுளகத்தும் வந்ததால். பாக கடாவுக. வியங்கோட்கிளவி. ஈறாகியும் வருதலும், அல்லீறு வருதலும், பொருண்மைக்கண் வந்தது. (பி. எதினாட்டுறைவார். தி. ஏதினாட்டுறைபவர்.) முன்னும் `அவ்வாறு பொருட்கும்’. சூ. 221: நிகழ்காலம் என்றதென்னை. சூ. 222: வினை எச்சமாமாறு உணர்த்துதல். சொல்லாம். எ-று. நிற்கும் வினைச்சொல். அது பால் உணர்த்தாது. என்பது இறந்தகால அணிமையும் நிகழ்காலமும். திரிந்து முடிதலானும் வேறோதப்பட்டது. சூ. 223: அத்தன்மையவாகிய மரபினால், அன்ன மரபினாற் கொள்ளப்படுவன. உம், மற், மை, கிற், இன்றி, அன்று, இனிக் கொண்டான், நனிவந்தான் என வருவன பிறவும். (இனிக் கொண்டான், நனிவந்தான் என்பவற்றில் கொண்டான், வந்தான் என்பன மிகைபோலும்) சூ. 224: முந்துற்ற மூன்று சொல்லும் வினைக்குக் கருத்தாவாகிய. பெரிதுவந்தனளே. இஃது இறந்தகாலம். குறிப்பு: வரி 26 முதல், வரி 29இல் வினையெச்சம் என்பதுள்பட உள்ளவை இவ்வேட்டில் இல்லை.) சூ. 225: சினை வினையோடுமுடியாவாய் முதல். உய்த்துக் கொண்டுணர்த்தல் என்னும். சினைமுதலொடு முடிதலே. சூ. 226: மழை பெய்தது என. பெற்றது. இது இறந்தகாலம். எழுந்தது. இது எதிர்காலம். வினை முதல் வினை முதல் வினையான் முடிந்தன. தானுண்டக்கடை வரும். இது, இது என்னும் காலம் குறித்து நின்றது. குறிப்பு: தான் உண்டவிடத்துவரும் என்பதன்பின் பிறன் உண்டவிடத்துவரும் என்பது உள்பட இவ்வேட்டில் இல்லை. அந்நிலை யன்றி அத்தொழில். ஓதினார். அன்ன மரபினாற் கொள்ளப்படுவன. குறிப்பறிவான், செவ்வன் தெரிகிற்பான், விருந்தின்றி. கொண்டான். அணி வந்தான். நனி வந்தான். பிறவும் இவ்வாறு வருவன கொள்க. சூ. 227: வினையெச்சச்சொற்கள் சொற்றொறும். ஓடிப்பாடி வந்தான், உண்டு பருகூஉத் தின்குபு வந்தான் எனவரும். சூ. 228: பொருளும் காலையும் கருவியும் அவ்வாறு பொருட்கும். இவற்றொடு முடியும்எ-று. எனவே, சிவணி என்பதனான் அடங்காவோ. ஐந்து பாலாகி வரும். இவை அவ்வாறன்றிச் செயப்படுபொருளோடும். வினைமுதலோடு ஒத்த இயல்பிற்றாகி. சூ. 229: வரும்வழி. உண்டகாலம். நீ. நீயிர். கொள்க. கருவி என்பதனால் மூன்றாவதற்கு ஓதிய காரணமும் ஏதுவுங் கொள்க. வந்தது கண்டு வாராதது முடித்தல் என்பதனால், நிலம்பூத்த மரமிசை நிமிர்பாலும் என்றவழி. (பி. மலர். தி. மரம்) யானோ ஒலிக்கக்கூலி. யானோ ஒலிக்கக்கூலி. பொருத்த மின்றென்க. இவையிற்றை. தனிமொழி ஆதல் அன்றி வினையோடும். அவற்றைத்தொடர்மொழி கூறுகின்றுழிக்கூறல் வேண்டும் எனின். பொறாமையானும் இவையும். சூ. 230: பொணிலையிற் றிரியா. எ-று. என்னும் இரண்டிற்கும் மறை. பிறவுமன்ன. பெயரெஞ்சு கிளவியும் வினையெஞ்சு கிளவியும் எதிர்மறுத்து வரும் என்றோதி முற்றுச்சொல் எதிர்மறை யோதாதது என்னையெனின் ஓதுகின்றுழி உடம்பட் டசொல்லான் ஓதுதலின் எதிர்மறை ஓதல் வேண்டிற்று. முற்றுச்சொற்கு ஈற்றெழுத்து ஓதினமையான் அவை தாமே. சூ. 231: இவை பெயரெச்சம், இடைகிடப்பு. சிவணுதலின் அமைதியுமாயிற்று. (பி. சாத்தன் தன்கை. தி. சாத்தன் தந்தை). என்பதற்குச் சாத்தன் தந்தையை முடிபாக. சூ. 232: மெய்யோடும் கெடும் இடம் அறிந்து கொள்க எ-று. (பி. சாரனாடவென் றொழியும். தி. சாரனாட வென்றோழியும்.) சூ. 233: வினையெச்சத்துக்கண் வரும். நிகழ்ந்துவழிக் கூறுதல் அன்றி, நிகழாத. சூ. 234: யாதானும் ஒரு முறைமையினையுடைய. நிகழுங் காலத்தப் பொதுநிலைப் பொதுச்சொல்லால். என்ற வாறாயிற்று. ஒருவன் உண்பானாக அகம்புக்கான். உண்டான் எனவுமாகாது உண்கின்றான் எனவுமாகாது. ஆயிடை உண்ணும் என்க. சூ. 235: இ-ள்: எதிர்காலத்தும் நிகழ்காலத்தும். இறந்த காலத்துக்கட்குறிப்பொடு. விரைந்தபொருள் என்று சொல்லுவர் புலவர். ஒருவனை உண்டாயோ போதாயோ. சூ. 236: அப்பொருட்கண் மிகுதலாகிய தொழிலை. பொருட்கண் மிக்கது என்னும் வினைச்சொல்லைக் குறித்து மிக்கபண்புணர. இனிது விளக்கும் எ-று. பூமியிற் சுவர்க்கம் மிகும் எனவும் ஆம். சூ. 237: என்னும் சொல் இரண்டிடத்தும். சூ. 238: எதிர்மறுத் துணர்த்தற் குரிமையும் உடைத்தே. வன்புறுத்தற் பொருண்மைக்கண் வரூஉம் வினாவுடை உ-ம்: யான் வைதேனே. யான் வைதேனோ (பி. வைகிலேன். தி. வைதிலேன்.) சூ. 239: போகலுற்றானை, அவ்விடத்துப் போகுவையாயின், படுவை எனற்பாலான்வாய் பட்டாய் எனவும், வாழ்நாள் சேறலும் கூற்று. சூ. 240: இவ்வேட்டிலும் தொழிற்படக்கிளத்தலும் என்பதேயுளது. வினைச்சொற்கள் பொருண்மை மயங்குமாறு. வழக்கியன்ற மரபு எ-று: கருவியைக் கருத்தாவாகக் கூறலுங்கொள்க. வாள் வெட்டிற்று. சூ. 242: வினையியல் முடிந்தது என்பதுளது. என்று ஓதிலாததற்கு இலக்கணம் யாண்டுப்பெறுதும். அறிந்தேனாகுங்கால் முற்றிலக்கணமும். சூ. 242: அம்மூ விடத்தான். சூ. 243: எட்டும், ஒருமையும், உண்குவிர், கரியிர். உண்டன. உண்ணா நின்றன. உண்குவ, கரிய எனவும் இவை பொருண் முகத்தாற் பன்மையாதலின், மூன்று காலமும் வினைக்குறிப்பு மாகி நான்காய் அடங்கின. சூ. 244: (பி. அவ்வியன் நிலையும். தி. அவ்வயின் நிலையும்) சூ. 245: பெயரோடல்லது தொடர்புபெறாது. அரசன் நல்லன் அறிவுடையன் செவ்வியன். ஆகா வெனின். பிரிநிலை வினையே யென்னும். அஃதற்றாக அடுக்கி வருமாறு கூறிப்பெயரெச்சம் அடுக்கி வருமாறு கூறாதது. வினையெச்ச அடுக்குப் போல் முன்னது முடிய முடியாமையின். முடிபு: ஆறாவது வினையியல் முடிந்தது. இவ்வோத்தினுட் சூத்திரமுட்பட்ட உரையினதளவு கிரந்தவகையான் ஆயிரத்து நானூற்றறுபது. ஆகக்கிரந்தம். ஏழாவது இடைச்சொல்லியல் சூ. 246: (பி. ஒத்து. தி. ஓத்து) நூ. 247: ஒரு சொல்லோடு ஒரு சொல் புணர்ந்தியலும்வழி. (பி. அற்றே. தி. வற்றே. இறந்தகாலங்குறித்த டுகரமும். `குறிப்பொடு கொள்ளும்’, வரிகட்கு இடையோ `வினைசெயல் மருங்கிற் காலமொடு வருவன’ வினையியலுட் கூறப்பட்டன. சூ. 248: மொழிமுன். வருகதி லம்ம. சூ. 249: (16-17க்கு இடையே.) `பெரியகட் பெறினே யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணுமன்னே’. `புதுமல ரணியவின்று வரி னதுமனெம் பரிசி லாவியர் கோவே.’ `திட்பமின்று’ என்றானும் வெட்டவல்லா ருளராயின் என்றானும். சூ. 250: விழைவு பொருளையும். மாய்ந்தென வருப்பற வள்ளிதழ். எமக்கு இக்காலத்துப் பொய்கையொடு. சூ. 251: (பி. நாலடி. தி. நாலடி.) சூ. 252: தன்னை யொழிந்த. கையாதாங் கைக்குமாம். (பி. அரந்தங் கண்ணி. தி. நரந்தங்கண்ணி). (இவளிடை என்பதன்பின்) கரந்த வுள்ளமொடு என்றவழி - எதிர்மறுத்த தொழிற்கண்-. வளியும் வளித் தலைஇய தீயும், தீயின் முரணிய நீரும் எனவரும். (பி. அதன்கண்ணும். தி. அதன்கண்உம்.) சூ. 253: (பி. பட்டன. தி. பட்டது.) திருமகளோ அல்லள், நாமகளோ வல்லள். சிறப்பென்பது பொருளின் உயர்வு குறித்து. (பி. என்பதூஉமொன்று. தி. என்பதூஉமொன்று.) வாராத ஐயமுங்கொள்ளப்படும். சூ. 254: (13-14வது வரிகட்கிடையே இதுவுமது என்பது சேர்க்க) 17வது வரியிலுள்ள வரும் என்பதன் பின்னும் 20ஆவது வரியிலுள்ள வரும் என்பதுவரை இவ்வெட்டில் விடுபட்டுள்ளது. ஆயிரண்டெச்சம். ஈற்றசை. கடல்போற்றோன்றல. அஃதேல் எழுத்ததிகாரத்துள் மாறுகோள் எச்சமும் வினாவும் எண்ணும் என ஏகார இறுதி கூறினார், அவற்றுள் மாறுகோள் எச்சம். உடைத்தே. என்றாராகலின். மறைப்பொருளும் பட்டது. இவை மூன்று சொல்லும். சூ. 255: எண்ணே பெயரோ டவ்வாறு கிளவியும். ஆறு சொல்லினையும் குறித்த. என்பது விரைவு என்னும் குறிப்பு. கன்முகை யருவி தண்ணெனப்பருகி. பாழென. (பரி. 3: 77) இரண்டென வென்பது எண்ணுக்குறித்து நின்றது. பெயர் குறித்து நின்றது. உறையூர் எனவும் சிறப்புப்பற்றி. சூ. 256: துண்ணென்று துடித்தது. ஒல்லென்று. சூ. 258: அளபினெடுத்தல். தேற்ற ஏகாரமும். (பி. மேற்காட்டப்பட்டது. தி. மேற்காட்டப்பட்டன.) ஒரு பொருள் குறித்த. சூ. 261: இது பொருள் மாற்று என்பதனை. `கண்ணும் வருவகை தானே’. மற்றையதோ என்றவழிக் கொணர்ந்த தொழிய. சூ. 264: அந்தில் ஆங்கசை நிலைக்கிளவி. (அங்கசை நிலை(?)) (பி. நற்றினை. தி. நற்றிணை.) சூ. 267: ஒருமைப்பொருண்மை மேல்வரினும் பலர்க்குரி எழுத்தாகிய எழுத்தினையுடைய. வினையொடும் என்ற உம்மை எச்ச உம்மையாதலான். அமைத்தவாறாம். என்பன ஒருமை யுணர்த்தி நின்றனவாயினும். எனவரும். நம்பியார் வந்தான், நங்கையார் வந்தாள் என இவ்வாறு `பன்மைக்கிளவியும்’ என்பதனுள் அடங்காதோ எனின். வேறு எடுத்தோதல் வேண்டிற்று. சூ. 265: ஏஎ என்பது. சூ. 269: `ஓர்மா தோழியவர் தேர்மணிக் குரலே’ எனவரும். `தண்டுறை யூரயாங் கண்டிக. சூ. 270: பி. பூணடிசிற்கடையும். தி. பூண்டிசிற்கடையும்) செல், பூண்டாய் என்னும் பொருட்கண் ஆய்-.(?) (பி. தகுநிலையுடைத்தென்று. தி. தகுநிலையுடையவென்று.) சூ. 271: (பி. படமோயென்றிசின். தி. படுமோவென்றிசின்.) “புகழ்ந்திகுமலரோபெரிதே”, “பாடல்சான்ற விறல் வேந்தனும்மே”, “வெப்புடைய வாண்கடந்து துப்புறுவர் புறம் பெற்றிசினே”. இவை புகழ்ந்தார், பெற்றான் என்னும் பொருட்கண்வந்தன. `யாரஃதறிந்திசினோரே’. சூ. 274: வருதலின் அசை நிலையாயிற்று. சூ. 275: ஆவேழ் சொல்லும் அசைநிலைக் கிளவி. “தோழியா சுவாகதம் போக்கிங்கென்” பிற-தான்பிற, வரிசை யறிதலின். (பி. மாதவத். தி. மாதவர்த்.) சூ. 276: ஆவின மூன்றும் பிரிவில் அசைநிலை. இரட்டித்த விடத்து அசை நிலையாம். எ-று. சூ. 277: அளபெடை லின்றித் தான்வருங் காலையும் (பி. ஆ, ஆ என்ப தி. ஆ அ என்பன) தமக்கிசைவில்லாததொன்றை-. ஊ உ என்றவழி, இசைவை உணர்த்தும் - ஏ எ இஃதொத்தன் என்றவழி-. ஏ என இறைஞ்சி யோளே. ஓ ஒ உவமன் உறழ்வின்றி யொத்ததே. (களவழி. 36). ஓ ஒ என்பது விலக்குதலை. ஏவுங் குரையுமென மேல் ஓத. ஈண்டுப் பொருளுணர்த்தும் நிலைமை. சூ. 278: ஓகாரங்கட்கு வருவதோர் வேறுபாடு. “நின்னை யன்றே திருமுக் குடையாய்” என்றவழி., அன்றே யென்பது அல்லாமையை. பொன்னே கொடுத்தும் புணர்தற் கரியாரைக், கொன்னே தலைக்கூடப் பெற்றிருந்தும் - அன்னோ, பயமில் பொழுதாக் கழிப்பரே நல்ல, நயமிலறிவினவர்” என்பதனுள். (பி. பொன்னே. தி.பொன்னே) பிறவும் ஆகி வருவன வந்தவழி. சூ. 279: ஒரு தொழில், கூறல் வேண்டும். சூ. 280: சொல்லாயின் அவ்வும்மை. வரும் என்க, சாத்தனும் வந்தான், கொற்றன் வரும் என்னற்க. இதுவும் உம்மைக்கண். சூ. 281: தெகைச்சொல்லின்கண், எச்சப்பொருண்மையும் உரித்து. சூ. 282: (பி. தோன்றல், தி. தோன்றல) சூ. 283: பவழமும் பொன்னுங் கொணர்ந்தான். சூ. 285: எழிலுமென்றா, சாயலும் நாணும், மடனு மென்றா என்பதனுள். சூ. 286: எனா என்றா என்பவற்றான். (குறிப்பு: இச்சூத்திரவுரை, இப்பிரதியிலும் பெரும்பகுதி கைப்பிழையாக விடுபட்டுளது.) சீரே யடியாப் பெனாஅ’ மரபே தூக்கே தொடைவகை யெனாஅ, நோக்கே பாவே அளவிய லெனாஅ, திணையே கைகோள் கூற்றுவகை யெனாஅ, கேட்போர் களவே காலவகை யெனாஅப், பயனே மெய்ப்பா டெச்சவகை யெனாஅ, முன்னம் பொருளே துறைவகை யெனாஅ, மாட்டே வண்ணமடி யாப்பியல் வகையின், ஆறுதலையிட்ட. சூ. 287: உம்மை ஒரேவிடத்துத் தொகுதலும், இயங்கு படையாவம் எரிபரந்தெடுத்தல். சூ. 288: `மகளிர் வளைக்கை தரூஉந்து’. `முன்னீர்ப்பாயுள் தாங்கா விளையு ணல்லூர் கெழீஇய.’ சூ. 289: (பி. செருஉ. மேம்படூஉம். தி.செருமேம்படூஉம்). மணங்கெழுதானை ஒண்பூவேந்தர். சூ. 290: ஆவேழ் சொல்லும். (பெயரியல் 4) என்ற வழி ஏகாரம். (பி. ஏகார. தி. ஏகாரம்.) பிற எண்ணொடும் வருமாறு. சூ. 291 எடுத்து உரைக்கப்பட்டனவாயினும். குறிக்கப் புலப்படும் மற்றொரு. உம்மை இசைநிறை. (பி. படர்ந்தோர்க்குக் கண்ணும். தி. படர்ந்தோற்குக் கண்ணும்.) உம்மை அசை நிலையாயிற்று. என்றவழி, ஏகாரம் சிறப்புக் குறித்து. சூ. 292: அத்தன்மைய பிறவுமாகி வருவனவும், இசைநிறை அசைநிலையாகி வருவனவும் பொருள் வேறுபடுமாறு அறிந்து கொள்க. ஒள்ளழற் பரந்ததாமரை. (பி. அகைநிலை தி. அசை நிலை.) சொலீய ரத்தைநின் வெகுளி என்றவழி அத்தை என்பது அசைநிலை. ஆன் அசைநிலையாயிற்று.(47) என்பதன்பின், `ஏழாவது இடைச்சொல் லோத்து முடிந்தது’ எனஉளது. இவ்வரியின் பின்னர் ஆகக்கிரந்தம், என்பதுள்ளது. எட்டாவது உரிச்சொல் சூ. 293: பயிலாவற்றைப். என ஓதுவாராயிற்று. தொழிலாவது வினையும், வினைக்குறிப்புமாதலின் அவ்விரு வகைச் சொல்லிற்கும் அங்கமாகி வெளிப்படாதன ஈண்டுக் கூறப்படுகின்றன. அவற்றிக்குப் பொருளுணர்த்துந்திறனும். என்பது. (இசையென்பது சொல்) சொல்லானும். பண்பானும் புலப்பட்டு. எ-று. இதனின் இஃதுறும். (பி. வெகுளிக்கு. தி. வெகுட்சிக்கு). (பண்பாற் புலப்பட்டது என்பதின்று) சிவந்தான் என்பது வெகுண்டாற்குக் கண்சிவக்கும் என்பதனால் கண்ணின் சிவப்பு. இவையிற்றை வடநூலாசிரியர், முக்கியம், இலக்கணை, கௌணம் என்ப. சொற்பொருள்படும் வழிச் சொல்லானும். பொருள்படும். உறுவர் என்றவழி. உற்றார் என்றவழி. ஒரு பொருட்கு உரியவாகித் தோன்றினும். சார்த்துதலாவது இச்சொற்கள். செய்தெனெச்ச உரிமை தோன்றினும் செயின் என் எச்சத்தோடன்றிக் கிளக்கவென்னும் வியங்கொடுமுடிந்தது. பயின்ற சொற்களோடு சேர்த்தி. சூ. 294: உரிச்சொன் மேலன. இனிவெளிப்பட வழங்காதன. அவைதாம். நூ. 295: கண்டுகொள்க என்பதன்பின், `வருகின்ற சூத்திரங் கட்கும் இறுதிச்சொல்லான் அறியப்படும் பொருண் மேல் வருமென்பதனைக் கூட்டியுரைத்துக்கொள்க’ என்பதுளது. குறிப்பு: 295,296ஆம் சூத்திரங்கள் ஏனையுரைகள்போல ஒன்றாகவேயுள்ளன. சூ. 296: உருகெழுகடவுள். (பதிற். 21.) சூ. .299: சொல்லும் இன்னாமையின்கண் வரும். சூ. 303: உவந்துவந்தாரவர் நெஞ்சமொடு. சூ. 307: (பி. யாழிசையூப்புக்கு. தி. யாழிசையாப்புக்கு) சூ. 308: அலமராலாயம். சூ.309: (20. பி. குழ. என்னும். தி. குழ என்னும்) சூ.313: கதழ், துனை வென்னுஞ் சொற்களை இனிது விளக்குதற் பெயராக்கி. துனைபரி துரக்குஞ் துஞ்சாச் செலவின். (அகம். 9) சூ. 314: அதிர்வும் விதுப்பும் நடுக்கம். விதுப்பு என்பதும் விதுப்புற வறியா. சூ.315: வார் கயிற்றொழுகை. வெள்வேல், விடத்தெரொடு காருடைபோகி. சூ.316: பிறன்வினை. சூ.319: நளி என்னுஞ்சொல் செறிதல். சூ.320: பழுதுகழி வாழ்நாள். சூ.321: சாயன் மார்பு. சூ.322: `உலகமுழுதாண்ட’ (சிலப். அந்தி. 1) சூ. 324: காதல் என்னும் பொருள்படும். சூ.326: பொருட்குள்ள அளவின் நுணுக்கத்தை. சூ.327: தனிமை என்பதன் பொருள்படும். சூ.328: ஆரியர் துவன்றிய பேரிசை மூதூர். சூ. 329: முரஞ்ச முதிர்வே. முரஞ்சென்னுஞ் சொல் முதிர்வு என்பதன் பொருள்படும். `கோடு - யாலம்’ (மலைபடு. 268) சூ. 330: நீவெய்யோளொடு. (அகம். 6) சூ. 331: அடுக்கம் பொற்பச்சூர்மகள். சூ. 333: ஏற்ற நினைவும். ஏற்றென்னுஞ்சொல். குறிப்பு: பரிமேலழகர் “எற்று” என்று கொண்டு எத்தன்மைத்து என உரைகூறியுள்ளார். சூ. 334: அரும்பிணைப் பகற்றி வேட்ட. சூ. 335: பொருளும், பெருமை என்பதன் பொருளும். (அகம். 9) இது பெருமை. சூ. 336: (பி. கன்றுவயிற்படர். தி. கன்றுவயிற்படர.) சூ.337: சிறுமை யுறுப செய்பறி யலரே. சூ. 338: குறிப்பு: “எய்யாமையே யறியாமையே” `நன்று பெரிதாகும்’ என்னுஞ் சூத்திரங்கள் “எய்யாமை யறியாமை நன்று பெரிதாகும் என ஒரு சூத்திரமாகக் காணப்படுகின்றன. அறியாமை என்பதன் பொருள். சூ. 341: நீர்தெவ்வு நிரைத்தொழுவர். சூ. 342: பகை என்பதன் பொருள்படும். சூ. 343: விறந்த காப்பொ டுண்ணன்று வலியுறுத்து. சூ. 344: வெரூஉப் பொருட்கும் ஆகும். இ-ள். மேற் சொல்லப்பட்டவற்றுள் விறப்பு. என்பதன் பொருள்படும். சூ. 345: இவை நான்கும் அரவம் என்பதன் பொருளை. (பி. ஒருபெருஞ். தி. ஒலிபெருஞ்.) உயவுணர்ந் தின்றிவ் வழுங்க லூரே. சூ. 346: அழுங்கிய. இஃது இரக்கம். சூ. 347: கழுமென்னுஞ் சொல் மயக்கம். சூ. 348: (பி. செழு. தி. செழுமை.) “செழுந்தடி தின்ற செஞ்ஞா யேற்றை “இது கொழுப்பு. சூ. 350: தொகுதி என்பதன் பொருள். சூ. 351: நிறைந்தென்பதன் பொருள்படும். எ-று. சூ. 352: அரிவளை துவைப்ப. சூ. 357: ஞெமர்தலும். ஞெமர்தல் என்னும். தருமணல் ஞெமரிய. சூ. 358: கவர்வு. கவர்வு. சூ. 359: சேர்ந்தசெறி. சூ. 361: பேஎம் நாம். இ-ள். பேஎம் என்னும் சொல்லும். அம்முறையையுடைய. சூ.362: வயக்களிறு. (மது. 15) சூ. 364: திரிபாகிய பொருளையுணர்த்தும். எ-று. துயவுற்றேம் யாமாக. சூ. 365: எ-று. உயங்கல் என்பது ஓய்தல். சூ. 366: யானொன்று.... சிறிது. (கலி. 7) சூ.367: உ-ம். தொடீஇய செல்வார்த் துமித்தெதிர் மண்டுங் கடுவயா நாகுபோல் நோக்கி. (முல்லைக்கலி. 16) (நச்சினார்க் கினியர் உரை வேறுபாடுகாண்க.) சூ. 368: என்பதன் பொருள்படும். எ-று. (பி. கடிமுனை யாமை போல். தி. அரணம்போல்) நீரிழிபாக்கம். சூ.369: நிறத்துருபுரைத்தற்கும். நிறத்துருபு உரைத்தற்கும். சூ. 370: நொசிமருங்குல் (குறி. கலி. 24) சூ. 371: கிளவியீன் றணிமைப் பொருட்டே. ஈன்றணித் தென்னும் பொருள்பட்டுநிற்கும். சூ. 372: களன் என்பதன் பொருண்மையும். சூ. 373: பதவுமேய லருந்திய மதவுநடை நல்லான். சூ. 374: (பி. பாண்டிறேரூறச் தி. பாண்டிறேரூரச்.) (பி. மதையினள். தி. மதைஇனள்.) (இவ்வேட்டில் பொருநாகிளம் என்னும் தொடக்கத்தில் பொரு என்பது விடுபட்டுள்ளது). பொரு - மதைஇனள். (முல்லைக்கலி. 9) சூ. 375: சொல்புதிதுபடுதற் பொருண்மை. சூ. 377: ஆணுக்கவினாகும். இ-ள்: ஆணு என்னும் சொல். ஆணு விசும்பின் அமர ருளப்படப் பேணிப் பேணிப் பெரிதெனைப் பெட்டபின். சூ. 378: (பி. கடவுட்பாவிக். தி. கடவுட்பரவி.) கைதொழூஉப் பழிச்சி. (மலை. 538). சூ. 379: ஓதப்பட்ட பத்துச்சொல்லானும் தெளி. கடு என ஈறுதிரிந்து கடியில் புகூஉம் கள்வன் போல. இது காவல். சில்குரல். இது புதிதுண் கடவுள் கடுந்தேர் ஆங்கண் (புற. 15) (பி. கடிகாவற் தி. கடிகாவிற்) சூ. 381: ஐயென விம்மி யவற்கது கூறிய, பொய்யில் புகழோன் புகழடி கைகூப்பி வியப்பென்றது விம்மியென்றவாறு. சூ. 382: முணவு முனிவாகும். முணவு என்பது. சேற்று நிலை முணைஇய. சூ. 384: பரேரெறுழ்த்திணிதோள். சூ. 385: வருபவை நாடி. இ-ள். பொருள்பெறச் சொல்லப் பட்ட உரிச்சொல்லெல்லாவற்றினையும் முன்னும் பின்னும் வருமொழிகளின் பொருண்மையை யாராய்ந்து, அவற்றிற் கியைந்த மொழியாற் புணர்ந்துரைக்கவே தத்தம் மரபினாற் பொருள் தோன்றும். எ-று. எனவே பல பொருளொருசொல் வந்துழி, முன்னும் பின்னும் வந்தமொழி யறிந்து, அதற்கொப்பப் பொருளுரைக்க என்றாவாறாம். உதாரணம். சூ. 386: அவற்றொடு கொளலே. பேஎ நாறுந் தாழ்நீர்ப்பனிச்சுனை. (இறைய-உரை. சூ. 7. உரை) (ஈண்டும் - பேஎ - என்றேயுளது.) `புதுமையின்கண்வந்தது’ என்பதன்பின், `கடிமலர் என்ற வழி மணத்தின்கண் வந்தது. மேன்முறைக் கண்ணே கடியென்றார் கற்றறிந்தார் என்றவழிக் கடியென்பது வதுவையின்கண் வந்தது’ என்பனஉள. தூவற் கலித்த....புன்னை (புறம். 24). அடர்பொ னவிரேய்க்கு மவ்வரி யாட. (பாலைக்கலி. 22) சூ. 387: பொருட்குப் பொருளாராயின் எல்லை. சூ. 388: உணர்த்தல்வல்லின். அவன் கொள்ளுமாறு ஆசிரியன் அஃது..... வருகின்ற சூத்திரத்தான் விளங்கும். சூ. 389: மாணாக்கர்க்கு உரியதோர் இலக்கணம் உணர்த்துதல். அஃதாவது உணர்த்தப்படுவது. உணர்வோரது வலியையுடைத்து. உணரப்படுவனவற்றை உணர்வாரை. சூ. 390: காரணமுளவென்பதூஉம்: பொருண்மையை அச் சொற்காட்டுதற்குக் காரணம். தொன்றுபட்டு வருகின்றதாகலின், உலகினுள் மிக்காரெல்லாரும் இவ்வெழுத்து. இப்பொருள் மறைநூலகத்தும் பிறாண்டும். சூ. 391: இத்தமிழகத்திலக்கணமில்லை. எ-று. பொருள் தெரியின் என்பது. கூறப்பட்டது உரிச்சொற்குப் பொருளுணர்த்து மாறாம். சூ. 392: ஈண்டு எடுத்தோதப்பட்டன வல்லாத. விதி பாதுகாவலாக. ஒத்தமொழியாற் புணர்த்தன ருணர்த்தல் என. விதியினானே, சொல்லானுங் குறிப்பானும். கழுதுருவின. செய்யப்படும் என்பது. (`மன்னா -குறித்தோர்’ புறம். 165) மன்னென்பது நிலைபெறுதல் குறித்து நின்றது. இரும்பிடித் தொழுதியொடு பெருங்கயம்படியா. (புறம். 44) அஞ்செங் குவளைக் கண்போ லாயிதழ் என்றவழி அம் என்பது அழகு. `வானமூர்ந்த - அங்காட்டு’ (அகம். 11). அவிரென்பதூஉம் விளக்கங் குறித்தன. நொறியில் புரவி யதிரகாகோமான்(?) என்றவழி, நொறி என்பது நுடக்கத்தின்கண் வந்தது. நொறியிற்புரவி கழற்காலிளை யோன் என்றவழி நொறி யென்பது விரைவின் கண் வந்தது. கருவி மான்கணம் கல்லறை தெவிட்ட. களிறு - அல்கி (பொரு. 49) நெடும் காந்தள் (அகம். 4) `நாற்ற நாட்டத் தறுகாற் பறவை. (புறம். 70) குரலோர்த்தொடுத்த சுகிர்புரி நரம்பின் அரலை திரிவுறீஇ. (மலைபடு. 23-24) என்றவழி அரலை குற்றங்குறித்தது. இதன் பின்னுள்ளன: - மாக்கடல் நிவந்தெழு செஞ்ஞாயிற்றுக்கவினை (புறம். 4) என்றவழி நிவப்பென்பது ஓக்கங்குறித்தது. `மாகந்திவளடி வருநீள் கொடி மாடவீதி என்றவழி, திவள்தலென்பது தீண்டுதல் குறித்தது. இவர்தலென்பது பரத்தல்குறித்தது. `வாயாச் செத்தோய் எனவாங்கே யெடுத்தனன்’ என்றவழிச் செத்தென்பது குறிப்புணர்த்திற்று. பிறவுமன்ன. 79ஆக முந்நூற்றறுபத்தாறு . எட்டாவது உரிச்சொல்லோத்து முடிந்தது. இவ்வோத்தினுட் சூத்திரமுட்பட்ட உரையினதளவு கிரந்த வகையான் இருநூற் றெண்பது. ஆகக்கிரந்தம்.... எச்சவியல் சூ. 393: எனவரும் அந்நால்வகைத்து. சூ. 394: தம்பொருள் வழாமை. தத்தம் பொருள். சூ. 395: திரிசொல்லாகிய சொல். எ-று. எனவே இயற் சொல்லுணர்த்தப்படும். சேரவைத்ததனால். குளம் என்பதற்குப் பூழி, பாழி எனவும். சூ. 396: வையை யாற்றின் தென்கிழக்காகிய பொதுங்கர் நாடு. ஒளிநாடு. கருங்குட்ட நாடு, குட்ட நாடு, வடதலை என்பன. இவை, சேர்ந்த நாடென்றமையால். `குடபா லிருபுறச் சமயத் துடனுறைபு புகூஉந்தமிழ் திரிநிலங்களும், முடிநிலைமூவர் இடுநிலவாட்சியின் அரசுமேம்பட்ட குறுநிலக்குடுமிகள் பதின்மரு முடனிருப்பிருவரும் படைத்த பன்னிரு திசையில் சொன்னயமுடையவும்’. என்பது அகத்தியச் சூத்திரம். இதனுள் எல்லையின் புறத்தவும், தமிழ்திரிநிலங்களுமாகிய பன்னிருவரசரும் படைத்த. விருப்புடையனவும். சிங்களமும் மையத்தின் மேற்குப் பட்ட. குமரியாற்றின் வடகரைக்கண் அப்பெயரானே கொல்லமெனக் குடியேற்றினார் போலும். குடாவடி யுளியம் (முருகா. 313) (பி. குடா ஏன்பது. தி. குடா என்பது.) யான்றற்கரையவந்து என்றவழி. விளிப்பொருண்மை யுணரக்கூறுவது. சூ.397: வடசொற்கிளவியாமாறு. வட்டம், நட்டம், பட்டினம். சூ.398: எழுத்தொடு பொருந்திய சொல்லேயன்றி. (தசநான்கு, சாகரம், சத்திரம் என்பன இவ்வேட்டில் இல்லை.) சூ. 399: வலிக்குவழி, மெலிக்குவழி, விரிக்குவழி, தொகுக்கு வழி, நீட்டுவழி, குறுக்குவழி என்பன இவ்வேட்டின் பாடங்கள். தண்டையினக்கிளி கடிவோள், பண்டயளல்லள் மானோக்கினளே என்பதனுள். “தண்ணந்துறைவன் தகவிலனே” என்றவழி. தண்ண மென. வருதல் என்புழி அடங்காதோ. உயர்திணைப் பொருட்கண் தொகாது நிற்றல் வேண்டுமாயினும். யானை - யெருத்தத் திருந்த விலங்கிலைவேற் றென்னன் - றிருத்தார்நன் றென்றேன் தியேன். சூ. 400: மொழிபுண ரியல்பே. பொருள்புணரச் சொற்றொடுக்குமாறு.சொல்லுப: பொருண்மேல் மொழி புணர்க்கும் இயல்பு. எ-று. சூ. 401: ஆராயப் புலப்பட்டு முடிபுநோக்கி நிற்குஞ் சொற்களை. அவற்றிற்கு முடிபாகிய பொருளுணர்த்துஞ் சொற்களைச் சேரநிறுத்தல். எ-று. ஓடும், மலரும், பார்க்கும். என்றமையால் பொருள் விளங்கநில்லாது நினைத்தாற் றோன்றுமாறாக. களிறுபோலுங் கலமும், கந்துபோலுங்கூம்பும் என மயங்கி. சூ. 402: துணித்துப் பொருந்துவழி யறிந்து கூட்டி, ஒட்டிற்று. (பி. ஓட்டியது. தி. ஒட்டியது.) சூ. 403: வார லெனினே யானஞ் சுவலே. சாரனாட நீவர லாறே. என அடிமாறிப் பொருள் உணர்த்தியவாறு கண்டு கொள்க. சூ. 404: குறிப்பு: இவ்வேட்டினும், தோற்றமும் வரையார் என்ற அளவிலே, சூத்திரம் முடிந்துளது. சூ. 405: அவ்வடிக்கண்ணும் பிறவடிக்கண்ணும் முன்பாயினும் பின்பாயினும் எற்கும் வழிக் கொளுவப்பெறும். (பி. மொழிமாற்றி தி. மொழிமாறி.) சூ. 406: நீ. நீர் என. ஒட்டிநின்று, தமன், தமர். தன்மையினும் வருவன. உணர்த்துவன. இச் சொற்களெல்லாம். ஒட்டிநின்றே பொருளுணரப்படும். எ-று. சூ. 407: உவமத்தொகையே. அன்மொழித் தொகையே யென்(று). தொகையும், தொழில் குறித்த தொகையும் இரண்டு விட்டிசைத்து நில்லாது. (குறிப்பு: இசை நிறை எனத் தொடங்கும் சூத்திரம் இவ்வேட்டில் இங்கு இல்லை.) சூ. 408: குதிரையாற் பூட்டப்பட்ட தேர். தாயொடு கூடி மூவர். இறுதி நின்ற சொல் தொழிலுணர்த்தாது. குறிப்பு: உலக முவப்ப என்பது முதல் கணவன் என்பதீறாகவுள்ள அடிகளெல்லாம் இவ்வேட்டில் எழுதப்பட்டுள்ளன. பூந்தொடை போலக்கொள்க. (பி. தொடையொடே. தி. தொடையோடே.) இரண்டு பின்னாகச் சேர்த்தது. இணைத்ததாம். இவ்வாறு வருமென்று. குறிப்பு: தொடக்கத்தில் உள்ளவை - `உலகமுவப்ப - வாணுதல் கணவன் என்பது இரண்டொன்றாக ஒட்டியவாறு என்னையெனின்’ உலகமென்பது. நிகழ்காலங்குறித்த செய்பெனெச்சமும். வேற்றுமை ஏற்றபெயர். சொல்லாகி நின்றது என்பதன்பின் இவ்வேட்டில் உள்ளன: `அது திரிதருவென்னும் பெயரெச்சத்திற்கு முடிபாயிற்று. ஞாயிறு என்பதற்கு முன்னுள்ள சொல்லெல்லாம் தொகுத்து நோக்க ஞாயிற்றிற்கு அடையாகி நின்றன.’ ஞாயிற்றை யென்னும் உருபு. (பி. செயவெனச்சவாய்பாடு. தி. செயவெனெச்ச வாய்பாடு) (பி. ஒருசொல் நீர்மை. தி. ஒரு சொல் நீர்மை.) இஃது இமைக்கும். அது மதம் என்னும் உரிச்சொல். நின்றது. உடைய என்பது உடை எனச்செய்யுள் விகாரத்தாற் றொக்கு நின்றது. நோன்மை பொறை. உவம நிலையான அடையாகி. அடையடுத்து நின்று சினையிற்கூறும். தொகையாகிய வாணுதல் கணவனென ஒரு பெயராயிற்று. இவ்வாறே சொன்னிலையுணர, இரண்டு சொல்லே. சூ. 409: விரிதலானும்.... ஒப்போதலானும். வருஞ் சொற்களை உவமத்தொகை. ஓதுவாராயிற்று. சூ. 410: அது தொகுங்காலத்துப் பொருண்மையுணர்த்துஞ் சொல்லே. சூ. 411: அளவிற் சுவையினென்(று). பிறவுமாகி ஒரு பொருளினது. எல்லாச் சொல்லும் பண்புத்தொகையாம். வட்டம் பலகை. தம்முள் ஒருபுடை. ஆசிரியன் நவ்வந்துவன். முதற்பெயரே விசேடணமாகி. சூ. 412: அவ்வாறு கிளவியும். அளவு தன்னையே. என்பனவும், கூப்பீடு காதம் என்பனவும். எண். குன்றி, மஞ்சாடி, கால். என்பன. அவ்வாறு கிளவியும். ஆறு வகைப்பட்ட பெயரையும். வரையறுத்து ஓதாமையான். கபிலர் பரணர் வந்தார். முந்நாழி, நூற்றிருபத்தைவர், மாகாணி. பல்பொருட்கேற்பி னல்லது கோடல்’ என்பதனால் எண்ணும்மையே. ஒட்டிநிற்கும் சொல்லினது இலக்கணம். சூ. 413: இறுதிக்கண்ணின்றியலும் அன்மொழி. முன்னும் பின்னும் நின்ற இரண்டு சொல்லானும் உணரப்படும். இது பண்பு பற்றி வந்தது. தகர ஞாழல் என்ப தும்மைத்தொகை. தூணிப்பதக்கு என்றவழி அளவிற்குப் பெயராதலன்றி அளக்கப்படும் பொருளுக்கும். அன்மொழித் தொகையாம். ஈண்டுத்தொடிக் கடையாகி நின்ற பொன் தொடியையுடையாளது செல்வத்தைக் காட்டுதலின், இவ்விரண்டு. தாழ்குழலெனவும். எடுத்தோது வாராயிற்று என உணர்க. சூ. 414: மேற்சொல்லப்பட்ட தொகைக்கட் பொருள் நிற்குமாறு. முன் மொழிக்கட் பொருள் நிற்றலும். நால்வகைப் படும் என்ப: பொருணிற்கு மரபு. எ-று. எல்லாத் தொகையுஞ் சுட்டுதலான். அம்மொழியல்லாத மொழிமேற்பொருள். ஏனைத் தொகைகளும் பொருள்நிற்குமாறு. சூ. 415: கழஞ்சரை குறைந்தது. குதிரையை, உவாப் பதினான்கை, பொற்றொடியை. சூ. 416: ஒருமருங்கு விலக்குதலை உணர்த்துதல். கபிலர் பரணர் வந்தார். சூ. 417: செலவு வரவு என்பன கொள்ளப்படும். சொல்லு தலுஞ் செய்தலுங் கொள்ளப்படும். அன்னவை யெல்லாம் என்றதனால். குறியிட்டாராம். இதனொடு பொருந்திற்று. `சென்றது கொல் போந்தது கொல்’. மொய்ம்மலர்த்தார் மாறற் - குழந்துபின், என்னும் புறப்பாட்டினுள். சூ. 418: ஒரு பொருண்மேல் ஒரு சொல்லடுக்கி வருவழிவரும் வேறுபாடு. ஒரு சொல்மேலடுக்கி வருஞ் சொல் - துறக்குவ னல்லன் துறக்குவ னல்லன், தொடர் வரை வெற்பன் துறக்குவனல்லன், தொடர்பு ளினையவை தோன்றின் விசும்பிற், சுடருள் இருடோன்றி யற்று (கலி. 41) இதனுள். அசைநிலை. செய்யுளின்பங் குறித்து வரும். செய்க என்றவழி. சூ. 419: இசை நிறையடுக்கி நிற்கும் வரையறை. விளக்கினிற் சிஃறிரி யொக்குமே. சூ. 420: விரைவு பொருண்மை. அடுக்காயிற்று. சூ. 421: கண்டீ ரென்றா கொண்டீ ரெண்றா. அப்பொருளினை யிசைக்கும். எனவே அச்சொற்களோடு. கண்டீரோ கண்டீரோ கண்டீரென்பன. அவை அசைநிலையாகி வருமாறு. படை விடுவான் மற்கண்டீர் காமன் மடையடும் பாலொடு கோட்டம் புகின் (கலி. முல். 9) உதாரணம் வந்தவழி. சூ. 422: மோரொடு வந்தா டகைகண்டை யாரொடுஞ், சொல்லியா ளன்றே வனப்பு. (முல்லைக்கலி 9) என்ற வழி. (குறிப்பு: இவ்வேட்டில் 421ஆம் சூத்திர முடிவில் இறப்பினிகழ்வின், எவ்வயின் வினையும், அவைதாம் தத்தங் கிளவி என்னுஞ் சூத்திரங்களும் , `இம்மூன்று சூத்திரங்களுக்கும் பொருள் வினை யியலுள் உரைக்கப்பட்டது, என்னும் உரையும் எழுதப் பட்டுள்ளன. சூ. 423: ஒரு பெயர்ச்சொல் எஞ்சி நிற்பது. அன்ன வல்லவாமாறு உதாரணத்தால் விளங்கும். பிறிதுமொரு பொருளை. சொற்படு பொருளின்றிச் - ஒரு சொற்றனக்குரிய பொருளன்றி. சூ. 424: இவ்வையத்தாருள் எனக்கருதினானாயின், இவ்வையத்தாருள். முற்றுப்பெற்றவாறுங் கண்டுகொள்க. சூ. 425: பகைவர் கேடு தருதல் தப்பியும் வரும் எனப் பொருளுரைக்க வேண்டுதலின். அற்றாரது குணங்களை அழிக்கும் பசியைப் போக்குவது செய்ய. சூ. 426: அவன் என்னும் பெயர் எஞ்சி நின்றது. ஆசிரியர் என்னும் பெயர். வேற்றுமை ஏற்ற பெயர் எஞ்சி நின்றது. சூ. 427: அவ்வொழிந்த சொல்லினாற் பொருள். என்றாதல் ஒழிந்த பொருண்மை குறித்தவழி அப்பொருள்(-) அவ்வெதிர் மறையாற் பொருண்முடிவு. சூ. 428: `இம்மைப் பிறப்போ பிரியல மென்றேமாக் கண்ணிறை’ சூ. 429: முன்னின்ற சொல்லும் பின்னின்ற சொல்லும். அவ்வினையோடு பொருந்திய. தான் வந்தது முடிதலே யன்றி. ஐயங்குறித்து. சாத்தன் வந்தான் கொற்றன் வரும் எனவும் சாத்தன் வந்தான் கொற்றன் போம் எனவும் காலமும் வினையும். (பி. சூத்திரத்தான. தி. சூத்திரத்தான்.) சூ. 430: இவை உம்மை கொடாமல். பொருள் இனிது விளங்குமாயின். சூ.431: என என்பது எஞ்சி நின்று வியப்பென்பதனொடு தொடர்ந்தது. இதுவினை, பிரிநிலை. குறிப்பே, இசையே யென அவ்வீரைந்தும். எஞ்சி நின்று ஈரைந்தென்னும். சூ. 432: என்றவாறு - அஃதாமரறு வருகின்ற சூத்திரத்தான் விளங்கும். சூ. 433: சொல்லும் வந்து முடிக்குஞ் சொல்லை. உதாரணம் தத்தம் சிறப்பு. சூ. 434: எச்சம் அச்சொல் லளவல்லது முன்னும் பின்னும். அடும் புனலுள். தமது நிலத்தில் எளியாரும் வலியராவர்; பிறர் நிலத்தில் வலியரரும். சூ. 435: ஓதுதலால் ஆண்டு அடங்கிற்று. அதன்கண் குற்றம் பயக்குமாதலின் அவையல் கிளவியாயின. இடக்கரடக்கிக் கூறுதல். (பி. மேல்தற்கு. தி. மேலதற்கு.) சூ. 436: அவைக்களத்தல்லாத சொற்களை மறைத்துச் சொல்லுங்கால் அவைக்களத்து மருவிப்போந்த சொல்லை. சூ. 437: கொடுப்போன் கூற்றுமாதலன்றி. கொடு என்பது மிக்கோன் கூற்று. சூ. 438: தன்னைப் பிறன்போற் கூறுதலிற் குறிப்பெச்ச மாயிற்று. சூ. 439: இச்சொற்குப் பொருள் இதுவென்னும் நியமம் இல. பிறிது பொருளும் படும். எஞ்சி நின்றதென்று கொள்ள. புலிப்பொருண்மை யுணர்த்திற்றாயின், மரப்பொருண்மை யுணர்த்துஞ் சொல் யாது என ஒரு கடா வரும். அக்கடா வேங்கையென்னுஞ் சொல்லின் கண்ணே மரப்பொருண்மையை யுணர்த்துவதோர் ஓசை எஞ்சி நின்ற தெனினல்லது. முந்துற்ற வழக்காகி. செய்யுளகத்தினும் பாவை வழக்கினும். இப்பெயருடையாளைக் குருகென்றார். சூ. 439: சிவகதியும் பெறலாமே. நமச்சிவாய என. ஈயுமேவும். (முன்னிலை மரபின் என்பதே இவ்வேட்டின் பாடமும்) வினைச்சொற்க(ண்) வருவதோர் வேறுபாடு ஈற்றெழுத்தொடு பால்காட்டும். எனவரும். மேலோதப்பட்ட இ, ஐ, ஆய். சூ. 442: கடியப்படா: அவ்வினைச் சொற்கள். பாடினியும்மே, யேருடைய. தேரோடு புறங்காணேனாயி(ன்) அவரூர் வினவி. சான்றோயல்லை யென்றும் வரற்கே. (பி. சென்மொ. தி. சென்மோ.) சூ. 443: ஆ அல் என்றவழி ஆரல் என்பது. சூ. 444: உதாரணம் மேற்காட்டப்பட்டன. சூ. 445: எஞ்சிநின்றதோர் பொருள் நிகழ்ச்சி. பொருளையும் தொழிலையும் நேர்காட்டாது. சூ. 446 (குறிப்பு: 14. எறுவன் தவவன் எனவும் படிக்கலாம்.) பின்னிணைப்புகள் 1. தொல்காப்பியச் சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் உரை தொல்காப்பியச் சொல்லதிகாரத்துக்கு மிகப் பழைய பனையேட்டில் எழுதப்பட்ட உரையொன்று, சென்ற ஆண்டிலே தஞ்சை அரண்மனைப் புத்தகசாலையிலிருந்து தஞ்சை கரந்தைத் தமிழ்க் கழகத்திற்குக் கிடைத்தது, அக்கழகத்துத் தமிழ்ப்பொழில் ஆசிரியர் வேங்கடாசலம் பிள்ளையவர்களால், பேராசிரியர் உரையென்று அச்சிடப்பட்டது. அவ்வுரையேட்டின் முடிவிலே `ஆத்திரேய கோத்திரத்து’ என்ற எழுத்துக்கள் காணப்பட்டு, மேலுள்ள எழுத்துக்கள் சிதைந்திருந்தமையால், அக்கோத்திரத் தால் சிறந்த பேராசிரியர் என்பாரே அவ்வுரையாசிரியராதல் வேண்டும் என்னும் கருத்தால் அப்பெயருடன் அஃது வெளியா யிற்று. இப்பால் அவ்வுரையேடு ஒன்று, தெய்வச்சிலையார் உரை எனக் குறிக்கப்பட்டது, புலவர் தலைவர் வே. சாமிநாதையரவர் களிடமிருந்து கிடைத்து, அப்பொழில் ஆசிரியரால் அப்படியே அச்சிற் பதிக்கப்பெற்றது. ஆகவே, அவ்வுரையாசிரியரென்று கருதப்பட்டார் இருவருள் இன்னார்தாம் உண்மையுரையாசிரியர் என்று துணிந்து கொள்வது பெரும்பாலார்க்கு அரிதாயிருப்பதால், ஒருதலைத் துணிவாக இவ்வாராய்ச்சியுரை `பொழிலாசிரியர்’ விரும்பியவாறு எழுதலாயிற்று. இவ்வுலகத்தில் வழங்கும் மொழிகள் எல்லாம் எல்லாம்வல்ல இறைவன் அருளால் தோன்றியவையே ஆயினும், பெறுதற்கரிய மக்கட்பிறவியில் தோன்றியவர்க்கு உறுதியென்று கொள்ளப்படும் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கினையும் அரில் தப ஓதி, அவற்றை அவர் எளிதில் எய்தி உய்யும்படி செய்யும் முறைமையினாலும், அவ்விறைவனே தானும் ஓர் புலவனெனக் கழகத்தில் வீற்றிருந்து நூல் இயற்றியும் பாக்கள் புனைந்தும் திருவிளையாடல் புரிந்த சிறப்பினாலும், தமிழ்மொழி யென்பது ஒரு தனிமொழியேயாம். மூலபலவதையில், இராமர் கைக்கொண்ட வில்லானது ஒப்பற்றது; அந்த வில்லைக்கொண்டு அம்புகளை வழங்கிய முறைமையும் ஒப்பற்றது என்பதை ஓர் உவமையால் விளக்க எண்ணின கல்வியிற் பெரியார் ஆகிய கம்பருக்குத் தமிழ்நெறி வழக்கம் அன்றி வேறே எந்த உவமையும் கிடைக்கவில்லை. ஆகையால் `குமிழிநீர் ஓடுஞ் சோரிக் கனலொடும் கொழிக்கும் கண்ணான் தமிழ்நெறி வழக்கம் அன்ன தனிச்சிலை வழங்கச் சாய்ந்தார் அமிழ்பெருங் குருதி வெள்ளம் ஆற்றுவாய் முகத்தில் தேக்கி உமிழ்வதே ஒக்கும் வேலை ஓதம்வந் துடற்றக் கண்டான்’ எனக் களன்காண் படலத்தில் கூறினார். அதுகொண்டும் தமிழ்மொழி வழக்கும் தமிழ்மக்கள் வழக்கும் ஒப்பற்றனவென அறிக. குழவிகளுக்குத் தாய்ப்பாலின் மணம் அறாத காலத்திலே, `அறஞ்செய விரும்பு, ஆறுவது சினம்.... ஒளவியம் பேசேல்’ என்றாற்போலும் அறத்துப்பாலைப் புகட்டு மொழி தமிழையன்றி வேறு யாதுளது? இத்தகைய மொழி வழங்கப்பெற்றது முதலிலே திருவேங்கடத்திற்கும் கன்னியாகுமரிக்கும் இடைப்பட்ட நிலம். சேர, சோழ பாண்டியர் என்னும் மும்மன்னர் ஆட்சியில் உள்ளது. திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளும், குன்றமெறிந்த முருகவேளும், மாயோனும், இந்திரனும், வருணனும் கோயில்கொண்டமர்ந்தது. கங்கைநீர் ஆடினார்க்கும் குமரி நீராலன்றித் தூய்மை நேரா தென்றால், அக்குமரியின் பெருமையும் தமிழ்நாட்டின் பெருமையும் இனைத்தென அளவிடற்குரியார் யாவர்? எத்தனையோ முற்பிறவிகளிற் செய்த நல்வினைப் பயனெல்லாம் திரண்டு இறைவன் அருளோடு துணைக்கூடினாலன்றி, மக்கட் பிறவி வாய்க்கப்பெற்றார்க்கும், தமிழ் நாட்டிற் பிறத்தல் வாய்க்கப் பெறாது. இக்கருத்தை உட்கொண்டே சிறப்புப்பாயிரத்தில் `வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகத்து’ என்று ஆசிரியர் பனம்பாரனார் கூறியதூஉம் என்க. தமிழ்நாடும் தமிழவரசர்களும் வான்மீகராலும், வியாசராலும், காளிதாசராலும், முறையே இராமாயணத்திலும், பாரதத்திலும், இரகுவமிசத்திலும் பாராட்டப்பட்டிருத்தல் கொண்டும் அதன் பெருமை அறிந்து கொள்க. இப்பெற்றி உணராதார் தமிழ்மொழியானது மற்றை மொழிகளின் `எண்ணிடைப்படக் கிடப்பதாக எண்ணி’ உய்யும் வகையறியாது மாழ்குவர். அது கிடக்க, தமிழ்நாடு என்பது ஆதியிலே மிகப்பெரியதொன்றாக இருந்தது. இப்போது கன்னியாகுமரி யென்று சொல்லப்படுகிற இடமானது முற்காலத்தில் அப்பெயர்கொண்ட ஆறு ஒன்று அவ்விடத்தில் இருந்ததற்கும் ,அதற்குத் தெற்கே எழுநூற்றுக் காவதவளவுப் பரப்பினதாக இருந்த நாற்பத்தொன்பது நாடுகள் தமிழ் நாடுகளாக இருந்தன ஒரு காலத்தில் கடலால் கொள்ளப்பட்டன என்பதற்கும் அறிகுறியாக உள்ளது. இவ்வளவு பெரிய நிலத்தைக் கடல் கொண்ட வரலாறு 1800 ஆண்டுகட்குமுன் நிலையுற்ற கடைச் சங்கப் புலவராகிய நக்கீரர் இறையனார் களவியலுக்கு எழுதிய உரையிலும், இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்திலும், தொல்காப்பிய வுரைகளிலும் முழங்கப்படுகின்றது. இதை வலியுறுத்த அயனாட்டு உரைச்சான்றுகளும் உள. ஆகவே முன்னே கடல்கொண்டொழிந்த பகுதியோடு இப்போது எஞ்சியுள்ள பகுதியையும் சேர்த்து நோக்கி, இது அக்காலத்தில் எத்துணைப் பரப்பினதாயிருத்தல் வேண்டும் என்பதையும் இதில் வழங்கும் மொழி எப்பெற்றித்தாயிருத்தல் வேண்டும் என்பதையும் ஊன்றிநோக்கின் இது நிலப்பரப்பினாலும் இணையற்ற மொழியென்பது போதரும். இம்மொழி ஆதியிலே வடமொழிக் கலப்பு இல்லாமலே இந்நிலத்தில் இயற்கையிலே வழங்கி வந்தது. இதைத்தான் இப்போது இயற்சொல் என்று சொல்வது. இதைத்தான் செந்தமிழ் என்றும் சொல்லுப. வடமொழிக் கலப்பு உண்டான தெல்லாம் குறுமுனி வடநாட்டினின்றும் தென்னாடு போந்த பின்னரேயாம். குறுமுனியால் வடமொழி யிலக்கணமும் விரவச் செய்ததுவே `அகத்தியம்’ என்னும் பெயரிய நூல். இது தமிழுக்கு முதனூல் என்று பலரும் கூறுப. அது உபசாரமே. அகத்தியர் தென்றிசை புகாமுன்னமே தமிழ்மொழி இலக்கண வழக்கில் இருந்ததென்பதே அறிஞர் துணிபு. அதற்கு அவ்வகத்தியர் மாணாக்கராகிய தொல்காப்பியர், தாம் இயற்றிய `தொல்காப்பியம்’ என்னும் நூலில் முதனூலுக்கு இலக்கணம் கூறுவார் `வினையினீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதனூலாகும்’ என்னும் சூத்திரத்திலே, முதனூல் ஆசிரியர் அகத்தியர் என்று குறிக்காமல், இறைவனென்று குறித்ததே சான்று. எனவே தமிழுக்கு இறைவனே ஆதி யிலக்கணநூல் இயற்றி யருளினார் என்பதும், அதன் வழியாகவே அகத்தியமும், அகத்தியத்தின் வழியாகத் தொல்காப்பியமும் இயற்றப்பட்டன வென்பதும் தெளிந்துகொள்க. அகத்தியருக்கு இலக்கண நூல் அறிவுறுத்திய ஆசிரியர் முருகவேள் என்று புராண வழக்கு உண்மையானும் அது கொள்க. கடவுளும் நேரே இலக்கண நூல் இயற்றித் தந்தார் என்பது காட்சி அளவைக்குப் பொருந்தாதென்று வாதிப்பாரும் சிலர் உளரால் எனின், அவர் கடவுளியல்பு அறியார் எனவும் கடவுண்மாட்டு அன்பு இல்லார் எனவும் கூறி மறுக்க. இனித் தொல்காப்பியம் என்னும் அரிய நூலின் பெருமை, அது இடைச்சங்கம் தொடங்கி இன்றுகாறும் நிலைபெற்றிருத்தல் கொண்டே துணிந்துகொள்ளலாம். இது ஆதி யூழியின் அந்தத்திலே இயற்றப்பட்டதென்பர் நச்சினார்க்கினியர். நக்கீரர் உரையின்படி இந்நூல் இயற்ற எண்ணாயிரம் ஆண்டுகள் ஆயின என்பது புலப்படுகின்றது. வியாசர் இப்போது வழக்கிலுள்ள நான்கு வேதங்களையும் வகுப்பதற்கு முன்னரே தொல்காப்பியம் வழங்கி வந்ததென்று உரையாசிரியர் நச்சினார்க்கினியர் என்னும் அந்தணர் கூறுகின்றார். ஆகவே, அது பாரத காலத்துக்குப் பின்னர் வடமொழியில் இயற்றப்பட்ட பாணினியத்துக்கு மிக முற்பட்ட காலத்தினதென்பது சொல்லவேண்டா. மேனாட்டு உரையாளர் பெரும்பாலார் ஆதியில் மொழிகள் எல்லாம் பேச்சு வழக்கில் இருந்தன; நெடுங்காலம் ஆயபின்னர் எழுத்து வழக்கில் வந்தன என்று முழங்குவாரும் உளர். அது இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் ஆடை உடுக்கவும் அறியாமல் பகுத்தறிவும் இல்லாமல் இருந்த மாக்கள் தங்கப்பெற்ற தேயமொழிகளுக்குச் செல்லினும் செல்லும் அன்றி இந்நிலத்து மொழிமாட்டுச் செல்லாதென மறுக்க. எழுத்து வழக்கின் முன்னே பேச்சுவழக்கு நிகழ்ந்தது என்பாரை அப்பேச்சுவழக்கை உண்டாக்கினார் யாரோ? எவ்வாற்றானோ? எனக்கடாவியும் மறுக்க. இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் எனத் தமிழ் மூவகைப்படும், `முத்தமிழ்த் துறையின் முறைபோகிய வித்தகர்க் கொன்றுணர்த்துவன்’ என்னக் கம்பர் அவையடக்கத்தில் கூறியதும் காண்க. இந்த மூன்று தமிழுள் இயற்றமிழை மாத்திரம் வேறு பிரித்து ஓதுவது தொல்காப்பியம் என்னும் அருமந்தநூல் இதுவே எழுத்ததிகாரம் சொல்லதிகாரம் பொருளதிகாரம் என்னும் மூவகைப் பகுப்பையுடையதாய், கற்றோரால் கடத்தற் கரிதாய்க் கடலினும் பெரிதாய் விரிந்து கிடக்கின்றது. இதன் முதனூலாகிய அகத்தியமே மூன்று தமிழையும் விரிவாக ஓதியது என்றால், முதனூல் எவ்வளவினதாக விரிந்திருக்கும் என்பது மனத்தால் அளவிட்டுப் பார்க்க. இசைத் தமிழுக்கும் நாடகத் தமிழுக்கும் இலக்கண நூல்கள் அகத்தியருடைய மாணாக்கர் வேறு சிலர் இயற்றினார் என்பது அறியப்படுகிறது. ஆனால், அவற்றுள் ஒரு நூலேனும் முழுதும் நமக்குக் கிடைக்கவில்லை. சிலப்பதிகார வுரையிலே அடியார்க்கு நல்லார் அந் நூல்களிலிருந்து பல சூத்திரங்களையே மேற்கோளாகக் காட்டி அந்நூல்கள் எல்லாம் இறந்தொழிந்தன என்றார். இசைத்தமிழ் என்பது பண் அடைவோடு பாடுவது. தேவாரம், திருவாய்மொழி, திருப்புகழ் முதலியன இசைத்தமிழ் இலக்கியங்கள். சிலப்பதிகாரத்தைத் தவிர்த்து, நாடகத்தமிழுக்குப் பழைமையான இலக்கியங்கள் கிடையா. பிற்காலத்தில் அருணாசலக் கவிராயரால் செய்யப்பட்ட `இராம நாடகம்’ என்பது சிறந்த நாடகத்தமிழ் இலக்கியமே. இதுபோல இன்னும் சில நாடகங்களும் உள. கோவை, கலம்பகம், குறவஞ்சி, பள்ளு முதலியன நாடகத்தமிழ் வகையின என்பர். இயலையின்றி இசைத்தமிழும், இயலும் இசையும் இன்றி நாடகத்தமிழும் அமையா. கட்டளைக் கலித்துறை, கலிவிருத்தம் முதலாயின இசைத்தமிழின் பால. இஃது அறியார் கட்டளைக் கலித்துறை பிற்காலத்து யாப்பிலக்கணத்திற் கூறியதென்று மயங்கி, மாணிக்க வாசகர் காலத்தாற் பிற்பட்டவர் என்று பிதற்றுவர். இனி, இப்போது வெளியிடப்பட்ட தொல்காப்பியச் சொல்லதிகார வுரையாசிரியர் பேராசிரியரோ அன்றித் தெய்வச் சிலையார் என்பார் ஒருவரோ என்று ஆராயப் புகுவாம். இதற்கு முன் தெய்வச்சிலையார் என உரையாசிரியர் ஒருவர் இருந்தார் என்பது ஒருவருக்கும் தெரியாது. தொல்காப்பிய வுரையாசிரியர்கள் என்று நம்மால் தெளியப்பட்டவர்களுடைய உரைகளிலே எதனிலும் தெய்வச்சிலையார் உரையென்று சுட்டி மறுக்கப்பட்டதைக் காணோம். அதனால் தெய்வச்சிலையார் என்பார் நச்சினார்க்கினியர்க்குப் பிற்பட்டவர் என்பது இற்றைப் புலவர் சிலருடைய கொள்கை. உண்மை அதுவன்று என்பது மேல் உரைக்குமாற்றால் தெளிக. பேராசிரியர் என்பாரைப் பற்றி தெரியாத புலவர் இக்காலத்தில் ஒருவரும் இரார் என்பது திண்ணம். ஆயினும் அவருடைய உரைகள் யாவை, கோட்பாடுகள் என்ன? மற்றை உரையாசிரியர் கோட்பாடுகளுக்கு மாறுபாடாக இவர் உரையில் உள்ளவை என்ன என்று ஆராய்ந்து துணிந்து கொண்டவர்கள் ஒரு சிலரே. அவ்வாராய்ச்சியை முன்னே செய்து முடித்துக் கொண்டாலன்றி, இப்போது வெளிவந்த உரையின் கோட்பாடுகளில் ஒற்றுமை வேற்றுமை தெரிந்துகொள்ள லியலாது. இரண்டு உரைகளின் கோட்பாடுகளும் ஒத்திருந்தால் இதன் உரையாசிரியர் பேராசிரியரே என்று முடிவு செய்யலாம். அல்லாக்கால் தெய்வச்சிலையார் என்று கொள்ளலாம். இனிப் பேராசிரியர் உரைகள் எனப்பட்டன யாவையென்று ஆராய்வாம். அவை இன்னவென்று துணியப்பட்டால், அவர் பிறரொடு மாறுபடும் இடங்கள் இன்னவென்று கண்டு கொள்வது எளிதே. உண்மையில் பேராசிரியர் உரைகளாக உள்ளன சில தவறாக நச்சினார்க்கினியர் உரையென்று அச்சிற் பதிப்பிக்கப்பட்டன. அவற்றுள் ஒன்று திருச்சிற்றம்பலக் கோவையார் உரை ஆறுமுக நாவலரவர்களால் பதிப்பிக்கப் பட்டது. மற்றொன்று தொல்காப்பியத்தில் பொருளதிகாரவுரை தாமோதரம் பிள்ளையவர்களால் அச்சிடப்பட்டத்திலே மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் என்னும் பிந்திய நாலு இயல்களுக்குள்ள உரைப்பகுதி. அந்தப் பதிப்பிலே முந்துற்ற ஐந்து இயல்களின் உரைமட்டுமே நச்சினார்க்கினியருடையது. இதில் சிலருக்கு இன்னும் மயக்கம் உண்டு. ஆகலின் அதை முன்னே ஒழித்தல் வேண்டும். இவையே யன்றிக் குறுந்தொகை என்னும் நூலுக்குப் பேராசிரியர் உரை எழுதினார் என்ப. அது நமக்குக் கிடைத்திலது. தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலுக்கு இளம்பூரணர், கல்லாடர், பேராசிரியர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் என்னும் இவர்கள் எழுதிய உரைகளே இற்றைநாள் வரையில் நமக்குக் கிடைத்தன, இப்போது வெளிவந்த உரை நிற்க. அவ்வுரைகளிலே இளம்பூரணர் உரையும் நச்சினார்க்கினியர் உரையும் எழுத்துச்சொற்பொருள் என்னும் மூன்று அதிகாரங் களுக்கும் உள்ளன. சேனாவரையர், கல்லாடர் இவர்கள் எழுதிய உரை சொல்லதிகாரத்துக்கு மட்டுமே உள்ளது. இப்போது வெளிவந்த உரையும் சொல்லதிகாரத்துக்கு மட்டும் எழுதப் பட்டதாகத் தெரிகிறது. மற்றை அதிகாரங்களுக்கு அவர் உரையெழுதினதாகக் காணப்படவில்லை. ஒழிந்த பேராசிரியர் உரையோ மேலே சொல்லப்பட்ட பொருளதிகாரத்தில் பிந்திய நாலு இயல்களுக்குக் கிடைத்த பகுதியளவே. அதனையும் நச்சினார்க்கினியர் உரையென்றே கொண்டால் இழுக்கென்னையெனின், செய்யுளியலுக்கு நச்சினார்க்கினியர் உரையென ஒன்று மதுரைத் தமிழ்ச் சங்கத்திலே அச்சிடப்பட்டது; அதனுள், சூ. 62 உரையில் நச்சினார்க்கினியர் பேராசிரியர் உரையைச் சுட்டி மறுத்துள்ளார். அங்ஙனம் மறுக்கப்பட் ட உரை தாமோதரனார் பதிப்புரையாக இருப்பதனால் அது பேராசிரியர் உரையென்றே துணியப்படும். இனிப் பேராசிரியர் உரையென்று துணிந்து கொள்ளப்பட்ட செய்யுளியல் சூ. 174 உரையிலே, `மரபியலுள் பகுத்துச் சொல்லுவாம்’ என்று கூறியுள்ளார். ஆதலின் மரபியலுக்கும் பேராசிரியர் உரை செய்துள்ளார் என்பது தேற்றம். `மங்கை நல்லவர் கண்ணு மனமும்போன்று எங்கும்ஓடி யிடறும் சுரும்புகாள்’ என்னும் சிந்தாமணி யுரையிலே, நச்சினார்க்கினியர் தும்பிக்குச் செவியறிவு உண்டென்றும், இதனை `நண்டும் தும்பியும் நாலறிவினவே’ என்னும் மரபியற் சூத்திர வுரையிலே `வாராததினால் வந்தது முடித்தல்’ என்னும் தந்திர வுத்தியால் கொள்க என்று ஆண்டு உரைகூறிப் போந்தாம் என்றும் கூறினர். `பல்காற் பறவை கிளை செத்தோர்க்கும்’ என்னும் பெரும் பாணாற்றுப்படைப் பகுதியுரையிலும் அங்ஙனம் கூறினர். `எழுந்து விண்படரும் சிங்கப்பெட்டைமேல்’ என்னும் சிந்தாமணி உரையிலே, `ஒட்டகம் குதிரை கழுதை மரையிவை பெட்டை என்னும் பெயர்க்கொடைக் குரிய’ என்னும் மரபியற் சூத்திரத்துக் `கொடை’ என்றதனால் சிங்கத்துக்கும் பெட்டை கொண்டவாறு அறிக என்றும், `எருமைப் பெடையோடு எமரீங் கமரும்’ (கலி. முல்லை. 14) என்பதன் உரையிலே, எருமைப் பெடை என்பது `பேடையும் பெடையும்’ என்னும் சூத்திரத்து `நாடின்” என்றதனால் அமைத்தாம் எனவும் நச்சினார்க்கினியர் கூறினார். இவை யெல்லாம் தாமோதரனார் பதிப்புரையில் காணோம். `வடவேங்கடந் தென்குமரி யாயிடை’ என்னும் சிறப்புப் பாயிரவுரையிலே நச்சினார்க்கினியர், வடமொழியாளர் வழக்கைத் தழுவி ஓர் புரட்டுக்கதையைப் புகுத்தி உரைத்தார். அக்கதை பேராசிரியர்க்கு முற்பட்டவர் யாரோ ஒருவர் கட்டிவிட்டது போலும். அவ்வுரை வருமாறு: - (அகத்தியனார்) தொல்காப்பியனாரை நோக்கி “நீ சென்று குமரியாரை (உலோபா முத்திரையாரை)க் கொண்டுவருக” எனக் கூறினார். அவர் எம்பெருமாட்டியை எப்படிக் கொண்டுவருவேன் என்று கேட்டார். முன்னே ஆயினும் பின்னே ஆயினும் நாலுகோல் எல்லைக்கு அப்பால் நடக்க விட்டுக் கொண்டுவருக என்று அகத்தியர் சொன்னார். அப்படியே அவர் அழைத்துவந்தார். வைகையாற்றில் இறங்கிச் செல்ல வேண்டியதாயிற்று. வெள்ளம் குமரியாரை இழுத்துக்கொண்டு ஓடியது. தொல்காப்பியனார் ஒரு மூங்கிற் கோலை முறித்து நீட்டினார். அதைப் பிடித்துக் கொண்டு குமரியார் கரையேறினார். அது குற்றம் என்று அகத்தியனார் தொல்காப்பியரைச் ‘சுவர்க்கம் புகாப்பீர்’ என்று சபித்தார். ‘யான் குற்றம் செய்யாதிருக்கச் சபித்தமையால் நீரும் சுவர்க்கம் புகாப்பீர்’ என்று தொல்காப்பியரும் அகத்தியனாரைச் சபித்தார் என்பது. இந்த முழுப்புரட்டுக் கதையை யாண்டுக் கண்டெடுத்தாரோ நச்சினார்க்கினியர்! இதனை யார்தாம் நம்புவர்? ‘இது மலடிமைந்தனும் தாணுவிற் புருடனும் வான்மலர் முடிசூடி, இலகுகந்தர்ப்ப நகரினில் சுத்திகை இரசதம் விலைபேசி, கலகமாயினர் இடையினில் கயிற்றராக் கடித்திருவரும் மாண்டார், அலகையாயினர் - எனும் விவகாரத்தை ஒத்ததே. இந்தக் கதையைத் தாமோதரனார் பதிப்பு மரபியல் `வினையினீங்கி விளங்கிய அறிவின்’ என்னும் சூத்திரவுரையில், வேதவழக்கோடு மாறுகொள்ளுவார் கூற்றென மறுக்கப்பட்டுள்ளது. சிவஞான முனிவரும் இவ்வாறே சிறப்புப்பாயிர விருத்தியுள் கூறினார். இதுபோன்ற வேதவழக்கோடும் ஆன்றோர் வழக்கோடும் மாறுகொள்ளும் கதைகளைக் கூறினமையால் நச்சினார்க்கினியரைச் சமணரென்று கூறினாரும் உளர். அதுகிடக்க, தாமோதரனார் பதிப்பு மரபியல் உரை பேராசிரியருடையதென்றும், நச்சினார்க்கினியர் மரபியலுரை வேறாக உள்ளது, இன்னும் வெளிவரவில்லையன்றும், துணிந்துகொள்க. `நாட்டம் இரண்டும் அறிவுடம் படுத்தற்குக் கூட்டியுரைக்கும் குறிப்புரையாகும்’ என்னும் களவியற் சூத்திரவுரையிலே, `புகுமுகம் புரிதல்’ என்னும் மெய்ப்பாட்டியற் சூத்திரத்துக்குப் பேராசிரியர் கூறிய உரையானும் உணர்க’ என்று நச்சினார்க்கினியர் கூறியுள்ளார். `தெய்வம் அஞ்சல்’ என்னும் மெய்ப்பாட்டியற் சூத்திரத்துள்ளே, `புறஞ்சொல் மாணாக்கிளவியொடு தொகை இச்-சிறந்த பத்தும் செப்பிய பொருளே, என்பதனை, `ஒன்பதும் குழவியொடு இளமைப் பெயரே’ என்னும் மரபியற் சூத்திரம்போல மொழி மாற்றி உரைக்கப்படும் என்று கூறப்பட்டள்ளது. இவை ஒத்திருத்தல் கொண்டு மெய்ப்பாட்டியல் உரை பேராசிரியரது என்றே துணிந்து கொள்க. `ஒண்சுடர் கல்சேர’ என்னும் கலிப்பா உரையிலே, (பறவை குடம்பை) சேர்க்கையினாலே ஒலி அவிந்து பொய்கை பள்ளி புக்காற்போலே இருந்ததென்றது, தன் குறிப்பைத் தன்மேல் ஏற்றிக் கூ றியதோர் உவம்ம விசேடம். இஃது `ஒரீஇக் கூறலும் மரீஇய பண்பே’ என்னும் சூத்திரத்து அடக்கினாம் என்று நச்சினார்க்கினியர் கூறியுள்ளார். `இருபொரு ளொருசொல்’ என்னும் எச்சவியற் சூத்திரத்துரையிலே, `குழல்வளர் முல்லையிற் கோவலர் தம்மொடு - மழலைத்தும்பி வாய் வைத்தூத’ என ஒருசொல் ஒரு கால் இரண்டு பொருளை உணர்த்தல் வழுவேனும் அமைகவென அமைத்தார். இதனை உவமவியலுள் `ஒரீஇக் கூறலும்’ என்னும் சூத்திரத்துச் `செய்யுட்கண் இலக்கணமாகக் கூறுமாறும் உணர்க’ என்றார். இவ்விரண்டுரையும் தாமோதரனார் பதிப்பு உவமவியல் உரையில் காணப்படவில்லை. ஆதலின் அது பேராசிரியர் உரையென்றும் அதற்கு நச்சினார்க்கினியர் உரை இன்னும் வெளிவரவில்லை யென்றும் அறிந்துகொள்க. இத்துணையும் கூறியவாற்றால் தாமோதரனார் பதிப்பு மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் என்னும் நான்கு இயல்களின் உரையும் பேராசிரியர் உரையென்று முடிந்தவாறு அறிக. இனி, பேராசிரியர் மெய்ப்பாட்டியல் சூ. 19 உரையில் `அகத்திணையியலுள் கூறினாம்’ எனவும், செய்யுளியல் சூ. 191 உரையுள் `கற்பியலுள் கூறியவாற்றான் அறிக’ எனவும் கூறினார். ஆதலின் அவர் அகத்திணையியலுக்கும் கற்பியலுக்கும் உரை செய்துள்ளார் என்பது தேற்றம். `உள்ளுறை உவமம் ஏனை உவம மெனத், தள்ளாதாகும் திணையுணர் வகையே’ என்னும் அகத்திணையியற் சூத்திரவுரையுள், `பேராசிரியரும் - மீனெறி தூண்டில் என்பதனை ஏனை உவமம் என்றார்’ என்று நச்சினார்க்கினியர் உரைப்பதைக்கொண்டும் அகத்திணை யியலுக்குப் பேராசிரியர் உரைசெய்துள்ளார் என்று தெளிக. ஒழிந்த புறத்திணையியல், களவியல், பொருளியல் என்னும் இவற்றுக்கும் பேராசிரியர் உரைசெய்துள்ளார் என்பது மேற்கூறியவாற்றான் துணிக. ஆகவே, பொருளதிகாரத்து ஒன்பது இயல்களுக்கும் பேராசிரியர் உரை வகுத்துள்ளார் என்பதும், முதல் ஐந்து இயல்களின் உரை இன்னும் வெளியாகவில்லை யென்பதும், தாமோதரனார் பதிப்பித்த அவை நச்சினார்க்கினியர் உரை யென்பதும் தெளிந்து கொள்க. இனி, திருச்சிற்றம்பலக் கோவையார் உரையாசிரியர் நச்சினார்க்கினியரோ பேராசிரியரோ என்று ஆராய்வாம். 1. மேற்படி கோவையார் செய். 191இல் `பாலைக்கு நிலமில்லை ஆதலின் `நானிலம்’ எனப்பட்டது என்று உரைக் குறிப்பு எழுதப்பட்டுள்ளது. நச்சினார்க்கினியர் பாலைக்கு நிலம் வகுத்துக்கொண்டவர். இதனை அகத்திணையியலுக்கும், கலித்தொகை கடவுள் வாழ்த்துக்கும், சிறுபாணாற்றுப்படைக்கும், சிந்தாமணி- மண்மகள் செய். 5க்கும் அவர் எழுதிய உரையான் உணர்க. 2. `பூவால் குறிஞ்சி முதலாகிய நிலம் ஆயிற்று’ என்பது கோவையார் முதற்செய்யுள் உரைக்குறிப்பு. ‘ஒழுக்கத்தால் ஆயிற்று’ என்பது அகத்திணையியல் நச்சினார்க்கினியர் உரைக்குறிப்பு. 3. மேற்படி செய். 50 உரையிலே, ‘வல்லிபுல்லல்’ என்புழி `இரண்டாம் வேற்றுமை உருபு செய்யுள் விகாரத்தால் தொக்கு நின்றது’ என்பது உரைக்குறிப்பு. நச்சினார்க்கினியர்க்கு அது செய்யுள் விகாரம் அன்றென்பதும், ‘உயர்திணை மருங்கின் ஒழியாது வருதலும்’ (எழுத்து. சூ. 157) என்புழி, உம்மையால் ஒழிந்தும் வரும் என்பதனால் முடியும் என்பதும் கருத்து. இதனைக் ‘கோன்போல்’ (சிந்தா. பதிகம் 5) என்புழியும், பரப்பமை காதற்றாயர் பற்பல்காற் புல்லிக்கொண்டு’ (மேற்படி காந்தருவ. 68) என்புழியும், அவ்வாற்றான் முடித்துக் காட்டியதனாலும், தொகுத்தல் விகாரத்திற்கு முந்திய உரையாசிரியர்கள் காட்டிய `மழவர் ஓடட்டிய’ என்னும் உதாரணத்தை விலக்கியதனாலும் உணர்க. 4. மேற்படி செய். 83, 205, 382 உரைக்குறிப்புகளால் வினைமுற்றே எச்சமாகத் திரிந்ததென்பது அவ்வுரையாசிரியர் கருத்துப்போலும். நச்சினார்க்கினியர் அக்கொள்கையை மறுத்து வினையெச்சமே முற்றாகத் திரிந்ததென்று நாட்டுவர். 5. மேற்படி செய். 16 உரையால், செய்தெனெச்சம் பிறவினை கொள்ளாதென்பது அவ்வுரையாசிரியர் கருத்தென்று அறியப்படும். நச்சினார்க்கினியர் செய்தெனெச்சம் பிறவினையும் கொள்ளும் என்பர். 6. காமர் (செய் - 352) என்பதற்கு அழகு என்றே பொருள் கூறினார் அவ்வுரையாசிரியர். நச்சினார்க்கினியர் ‘காமம் மருவும்’ என்னும் இரண்டு சொற்கள் செய்யுள் விகாரத்தால் `காமர்’ என நின்றன வென்பர். `விருப்பம் மருவிய’ எனப் பொருளும் கூறுவர். இதனை மருதக் கலி. செய். 80 உரையிலும் பிறாண்டும் காண்க. இவ்வகையான வேறுபாடுகள் இன்னும் பலவுள. ஆதலின், கோவையார் உரையாசிரியர் நச்சினார்க்கினியர் அல்லர் என்பது ஒருதலை. மற்று, அவர் பேராசிரியரே என்பது, பிரயோக விவேக நூலாரும் சொக்கப்ப நாவலரும் நுண்பொருண் மாலை யாசிரியரும் சுட்டியுரைத்தவாற்றால் துணியப்படும். இனிப் பொருளதிகார வுரையாசிரியர் ஆகிய பேராசிரியரும் கோவையார் உரைப்பேராசிரியரும் ஒருவரோ அன்றித் தம்முள் வேறோவெனில், இரண்டு உரைகளிலும் வினைமாற்றுப் பொருளில் வரும் மற்று என்னும் இடைச்சொல் பயில வழங்கியது காணுதும். செய்யுளியல் சூ.110 உரையிலே ‘நீடு வாழ்விராமின்’ என்னும் அரிய செய்யுள் வழக்கு உரைநடை காணப்படுகின்றது. கோவையார் உரையிலே `அது கூறுவீராமின்’ (செய். 55) எனவும், ‘அணிவீராமின்’ (செய். 58) எனவும், ‘சேர்வீராமின்’ (செய். 214) எனவும் வந்தது. இது `அடங்கலர் அட்ட வேலான் ஆணையிராமின் என்றான்’ (சிந்தா - காந்தருவ, 64) என்புழிக் கண்ட செய்யுணடை. செய்யுளியல் சூ. 120 உரையுள், ‘ஒக்கும் பிறவெனின், ஒவ்வாதாகாதே’ என்ற உரைநடை வழக்குவந்தது. கோவையார் - செய். 43 உரையிலே, வருத்தத்தைச் செய்யு மென்றாகாதேயென உட்கொண்டு’ எனவந்தது. இரண்டு உரைகளும், அணியியலுள் ஓதப்பட்ட அணி வகைகளைக் குறிக்கின்றன. இரண்டு உரைகளிலும் இலக்கண முடிபுகளில் வேறுபாடு காணப்படவில்லை. இங்குக் கூறியவைகளால் பொருளதிகாரப் பேராசிரியரும் கோவையார் உரையாசிரியரும் ஒருவரே என அறிக. இனிச் செய்யுளியல் உரையிலும், மரபியல் உரையிலும் `குற்றியலுகரமும் அற்றென மொழிப’ `ஒற்றெழுத் தியற்றே குற்றிய லிகரம்’ என்னும் எழுத்தியற் சூத்திரங்களுக்கு முன்னுள்ள உரையாசிரியர் `மெய்யெழுத்துப்போல் உயிர் ஏறிமுடிய இடங்கொடுத்து நிற்கும்’ என்று கூறிய உரையை மறுத்துக் குற்றியலுகரமும் குற்றியலிகரமும் ஒற்றுப்போலப் புள்ளிபெற்று நிற்கும் என்று பேராசிரியர் கூறினார். `பிறிது பிறிதேற்றலும்’ என்னும் சொல்லதிகாரச் சூத்திரத்திற்கும் முன்னை உரையாசிரியர் ஆறாம் வேற்றுமை உருபு மற்ற வேற்றுமை உருபுகளையும் ஏற்று நிற்கும் என்று கூறிய உரையை மறுத்து வேறு உரைகூறினார். கோவையாரில் `ஏழையின்’ (செய். 19) என்புழி, ‘இன்’ ஏழனுருபு. அது புறனடையாற் கொள்ளப்பட்டதென்றார். `ஏர்குவளை’ (செய். 66) என்னும் இயல்பு புறனடையாற் கொள் எனவும் கூறினார். ஆதலின், அப்பேராசிரியர் எழுத்ததிகாரத்துக்கும் சொல்லதிகாரத்துக்கும் உரையெழுதியுள்ளார் என்பதும் அறிந்து கொள்க. இனிப் பேராசிரியரது பொருளதிகார வுரையையும் கோவையார் உரையையும், குறுந்தொகைக்கு அவர் உரை செய்துள்ளார் என்பதையும் ஆழ்ந்து நோக்குக. நோக்கின், அவர் எனைத்து மாட்சி உடையவர் என்பது தெரிந்து கொள்ளலாம். பண்டைச் சங்கத்து மூவகைத் தமிழ் இலக்கியங்களிலும் இலக்கணங்களிலும் இவர் உண்டு உமிழாதது ஒன்றும் இல்லையென்பது திண்ணம். பிற்பட்ட நூல்களும் அப்படியே. சொற்களுக்கு உண்மைப் பொருள் கண்டு எழுதுவதிலும், இலக்கணக் குறிப்புகள் விடாமல் எழுதுவதிலும், நாவுக்கும் காதுக்கும் இனிய உரை நடை எழுதுவதிலும் மிகச் சிறந்தவர் இவர். அளவிடற்கரிய அரும்பொருள் செறிந்து எதிர்ப்படும் தடைகளைத் தகர்த்துக்கொண்டு தேக்கெறிந்துவரும் காவிரி யாற்று ஒழுக்கன்றி இவர் உரையொழுக்கிற்கு ஒப்புக் காண்பதற் கில்லை. `பல்காற் பழகினும் தெரியாவுளவேல், தொல்காப்பியம் திருவள்ளுவர் கோவையார், மூன்றினும் முழங்கும்’ என்று இலக்கணக்கொத்து நூலாரால் பாராட்டப்பட்ட மூன்று கடல்களுள் இரண்டு இவர் கரைத்துக் குடித்து ஏப்பமிடப் பட்டன வெனின் இவர்க்கு ஓர் உவர்க்கடலை உண்டுமிழ்ந்த குறுமுனி ஒப்பாவது எப்படி? ஒருவழி ஒப்புக் கூறவேண்டு மானால் முன்னுள்ளோருள் நக்கீரரும் பின்னுள்ளோருள் சிவஞானமுனிவரும் தவிரவேறு ஒருவரும் கூறுவதற்கு இல்லை. யாம் கூறியது இவ்வளவும் அவர்க்குப் பொருந்தியதே என்பதற்கு அவர்தம் இயற்பெயர் நிற்கப் பேராசிரியர் என்னும் அடையடுத்த சிறப்புப் பெயரே சான்று. அற்றேல், `பச்சைமா லனைய மேகம் பௌவநீர் பருகிக் கான்ற, எச்சினால் திசையும் உண்ணும் அமிழ்தென எழுநா எச்சில், மெச்சி நாணாளும் விண்ணோர் மிசைகுவர் வேதகீத, நச்சினார்க்கினியன் எச்சில் நறுந்தமிழ் நுகர்வர் நல்லோர்’ என்று நச்சினார்க்கினியர் பாராட்டப்பட்டது, எங்ஙனம் எனின், அது புனைந்துரை வகையாற் கூறியதன்றி உண்மையன்று. பாரத் தொல்காப்பியத்துக்கும் பத்துப் பாட்டுக்கும் கலிக்கும் குறுந்தொகையுள் ஐந்நான்கு செய்யுளுக்கும் அவர் உரை செய்தது உண்மையே. ஆயினும், அவற்றுள் ஒன்றற்கேனும் அவர் புதிதாக உரை யெழுதினார் அல்லர். அவை யெல்லாவற்றிற்கும் முன்னுரைகள் இருந்தன என்று அவர் உரையினாலே விளங்கு கின்றது. தொல்காப்பிய நச்சினார்க்கினியர் உரையை நாம் மற்றை உரையாசிரியர் உரைகளோடு ஒப்புநோக்கிப் பார்ப்போமானால் சில சூத்திரங்களுக்கு இளம்பூரணர் உரையிலிருந்தும், சில சூத்திரங்களுக்குச் சேனாவரையர் உரையிலிருந்தும், சில சூத்திரங்களுக்குக் கல்லாடர் உரை யிலிருந்தும், பிறவற்றி லிருந்தும் பெரும்பான்மையும் படியெடுத்து எழுதினதாகக் காணலாம். பிற்காலத்து இலக்கண விளக்க நூலுரையும் அப்படிப்பட்டது. பேராசிரியரது உரையை நோக்கின், ஆழ்ந்தகன்று நுண்ணியதாய மதியில் தன்னியல்பிற் சுரந்ததாய், பிறரெல்லாம் தன்னில் படியெடுத்தெழுத அவாவி நிற்பதொன்று என்று கண்டுகொள்ளலாம். சிறப்புப்பாயிர விருத்தியில், சிவஞான முனிவரும், அகத்தியனாரைத் தொல்காப்பியனார் சபித்தார் என்னும் பொய்க்கதையை மறுத்தற்கு `வினையினீங்கி விளங்கிய அறிவின்’ என்னும் மரபியற் சூத்திரத்துப் பேராசிரியர் உரையிலிருந்து `முன்னோர் மொழி பொருளே யன்றி அவர் மொழியும் பொன்னேபோற் போற்றுவம்’ என்னும் முறைப்படி படியெடுத்து எழுத முற்பட்டார் என்றால் அவ்வுரையின் மேம்பாடு மதிப்பில் அடங்குவதொன்று ஆமோ. நச்சினார்க்கினியர் கல்வி மிகவிரிந்தது என்பதில் தடையில்லை. பொருளாழமும் நுண்மையும் குறைவு என்க. இதனாலன்றே அவர் பலவிடத்தும் வழுவிப் பிரயோக விவேக நூலாராலும் சிவஞான முனிவராலும் கடியப்பட்டார் என உணர்க. சிவஞானமுனிவரவர் சூறாவளியில் பறக்காதது பேராசிரியர் உரை ஒன்றேயென அறிக. `பாயின மேகலை (திருக்கோவையார்) என்பது ஆகுபெயர்’ என்ற பேராசிரியர் கூற்றைப் பிரயோக விவேக நூலார் மறுத்தது அவர் கருத்தறியாமையால் என விடுக்க. நச்சினார்க்கினியர் முன்னுரை யாசிரியர்கள் காட்டாத உதாரணங்களை மிகப் பலவாகக் காட்டியதும் உண்டு. சிற்சில விடங்களில் முன்னோரது பொருந்தாத உரைகளை மறுத்துப் பொருத்தமான பொருள் கூறியதும் உண்டு. ஆகுபெயர்க்கும் அன்மொழித் தொகைக்கும் வேற்றுமை இன்னதென்று எடுத்துக்காட்டியதும், வினையெச்சமே முற்றாய்த் திரிந்ததென்று நிலையுறுத்தியதும், எண்ணுப்பெயர் எண்ணப்படும் பொருளை உணர்த்தும்வழி ஆகுபெயரேயாமென முடித்ததும், அன்னபிறவும் பாராட்டத் தக்கனவேயாம். அது கிடக்க, மணிவாசகப் பெருமான் அருளிய கோவையாருக்கும் பிற்காலத்தில் இயற்றப்பட்ட கோவைகளுக்கும் அகப்பொருள் இலக்கணத் துறைவகையில் சிறிது வேற்றுமை உண்டு. தமது உரையில், பேராசிரியர் அதற்கொத்தபடி துறைவகுப்புச் சூத்திரங்களை மேற்கோளாக எடுத்துக் காட்டுகிறார். அவை இன்னநூலில் உள்ளன வென்று அறியப்படவில்லை. மற்றை உரையாசிரியர்கள் ஆட்சியில் வரவும் காணோம். இவருக்கு உரை யெழுதுவதன்றிச்செய்யுள் இயற்றுதலினும் திறன் உண்டு போலும். இது செய்யுளியல் உரையிலே இவர் `உரைச் சூத்திரங்கள்’ என்று எண்ணிறந்தன காட்டுவது கொண்டும், கோவையார் முகவுரையைச் செய்யுணடையில் எழுதியது கொண்டும் அறியப்படும். அதுகொண்டு கோவையார் உரையில் காட்டப்படும் துறையடைவுச் சூத்திரங்களெல்லாம் இவர் தாமே யியற்றினார் போலும் எனவும் அறிஞர் கூறுப. இலக்கண நூல்களிலெல்லாம், எழுத்தும் சொல்லும் ஆராய்வதோடு நின்றுவிடுவர் பெரும்பாலார். பொருளிலக் கணத்தில் மிகச் சிலரே நுழைவர். அதனுள்ளும் அகப்பொருள் நூலில் நுழைவார் மிக அரியர். கடைச்சங்க காலத்திலே பொருளதிகாரம் வல்லார் அரியராயிருந்தார் என்றால், இக்காலத்திலே கேட்பானேன். இவ்வகப் பொருணூல்களில் இவ்வுரையாசிரியர்க்குள்ள தேர்ச்சி மற்றெவருக்கும் இல்லை யென்றே துணிந்து சொல்லலாம். அகப்பொருணூல்களில் உள்ளுறைப் பொருளும் இறைச்சிப் பொருளும் கண்டுரைப்பது தான் மிக அரிது. அதுவோ இவர்க்கு மிக எளிது. உவமவியல் சூ. 25 உரையுள், `கரைசேர் வேழம்’, `நீருறைகோழி நீலச்சேவல்’ `வண்ண வாண்டமை துளங்கு வாலிழையே’ `பொய்கைப் பள்ளிப் புலவுநாறுநீர் நாய்’ (ஐங்குறுநூறு - 12, 51, 73, 63) என்பவை களுக்கும், செய்யுளியல் சூ. 110 உரையில், `முல்லைவைந்நுதி’ (அகம்-4.) என்பதற்கும் இவர் கண்டெழுதிய பொருள் வியக்கத் தக்கதெனக் காணலாம். உவமவியல் சூ. 32 உரையுள் `வையங்காவலர் வழி மொழிந்தொழுக’ (புறம். 8) என்பதற்கு விரித்த உரையும் வியக்கத்தக்கது. அகப்பொருள் இலக்கணங்களில் ஆழ்ந்து விரிந்த அறிவுடைமையாற்றான் அவர் திருக்கோவையார் குறுந்தொகை முதலிய அகப்பொருள் நூல்களுக்கு உரையெழுதல் எளிதாயிற்று. இனி, `ஆத்திரையன் பேராசிரியன் பொதுப்பாயிரம் செய்தான்’ என்று மரபியலுரையில் இப்பேராசிரியர் குறித்தலால் அவர் இவரின் வேறெனவும், இவர்க்கு முற்பட்டவர் எனவும் அறிக. ஆத்திரையன் பேராசிரியன் என்றது தன்மைப் படர்க்கையாக இவரையே சுட்டியதென்று கூறுவாரும் உளர். அது பொருந்தாது. யாப்பருங்கல விருத்தியில் குறிக்கப்பட்ட பேராசிரியரும் வேறெனவே கொள்க. தொல்காப்பிய உரையாசிரியராகிய பேராசிரியரது காலம். இதை வரையறுப்பதற்கு மற்றை உரையாசிரியர் காலத்தையும் ஒருவாறு வரையறுத்தல் வேண்டும். இவர், இளம்பூரணருக்குப் பிற்பட்ட காலத்தினர் என்பதும் பொருளதிகாரவுரைகளால் மயக்கமின்றி அறியப்படும். நச்சினார்க்கினியர்க்கு முந்தியவர் சேனாவரையர் என்பதும், சேனாவரையர்க்கு முந்தியவர் இளம்பூரணர் என்பதும் சொல்லதிகார வுரைகளால் அறியப்பட்டன. கல்லாடருக்கும் பேராசிரியர்க்கும் இடம் சேனாவரையர்க்கு முன்னோ பின்னோ தெரியவேண்டும். ஆனால், மரபியல் உரையிலே, பதமுடிப்பு என்பதோர் இலக்கணம் படைத்துக் கோடலும், மலைபடுகடாத் தினை ஆனந்தக்குற்றம் எனப் பிற்காலத்தான் ஒருவன் குற்றம் காட்டுதலும், `தன்னான் ஒருபொருள் கருதிக் கூறல்’ என்னும் குற்றத்தின் பாற்படும் என்றும், பாட்டியல் மரபெனக் காட்டுவன நின்றுபயனின்மை என்னும் குற்றத்தின் பாற்படுமெனவும், உவமவியல் உரையிலே, இவ்வோத்திற் கூறிய உவமங்களையும், சொல்லதிகாரத்துள்ளும் செய்யுளியலுள்ளும் சொல்லுகின்றன சில பொருள்களையும் வாங்கிக்கொண்டு, செய்யுட்கண்ணே அணியென இக்காலத்தாசிரியர் நூல் செய்தாரும் உளர் என்றும், பேராசிரியர் கூறியதனால், இவர் நன்னூலாருக்கும் ஆளவந்த பிள்ளையாருக்கும் பாட்டியல் அணியியல் ஆசிரியர்க்கும் பிற்பட்டவர் என்பது தெளிந்து கொள்ளப்பட்டது. மெய்ப்பாட்டியல் சூ. 25 உரையிலே `வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு ஐந்துடன் மாண்டதமைச்சு’ என்னும் குறளை மேற்கோளாகக் காட்டிக் கற்றறிதல் என்பதற்குக் கற்றலும் அறிதலும்’ எனப்பிரித்துரைத்தார். இது பரிமேலழகரால் மறுக்கப்படுதலால் அவர் பேராசிரியர்க்குப் பிற்பட்டவர் போலும். இப்பரிமேலழகர் உரை பெரும்பாலும் சேனாவரையர் கொள்கைகளைத் தழுவி நிற்றலால் அவர் சேனாவரையர்க்குப் பிற்பட்டவர் என்று கொள்ளப்படுவர். அவர் நச்சினார்க்கினியர்க்கு முற்பட்டவர் என்பது பரிபாடலுரை முகவுரையால் அறியலாம். சேனாவரையர், `எல்லாமென்னும் பெயர்நிலைக் கிளவி பல்வழி நுதலிய நிலைத்தாகும்மே’ என்னும் சூத்திரவுரையிலே, `மேனியெல்லாம் பசலையாயிற்று’ என்புழி `எல்லாம் என்பது எஞ்சாப் பொருட்டாய் வருவதோர் உரிச்சொல் என்பாரும் உளர்’ என்றார். கோவையார் செய். 351இல், `சென்ற தெல்லாம்’ என்புழி, `எல்லாம் என்பது முழுதும் என்னும் பொருள் படுவதோர் உரிச்சொல்’ என்றார் பேராசிரியர். இதனால் பேராசிரியர் சேனாவரையர்க்கும் முந்தியவர் என்பது பெறப்படும். இனிச் `சேனாவரையன்’ `சேனாவரசி’ யென்பன முறையே பண்படுத்துவந்த ஆண்பாற்பெயர் என்றும் பெண்பாற்பெயர் என்றும் நன்னூல் உரைகாரர் மயிலைநாதர் எடுத்துக்காட்டுவ தனால், பேராசிரியர் அம்மயிலைநாதர்க்கு மிக முந்தியவர் என்பது சொல்லாமலே அமையும். இனி, அடியார்க்குநல்லார் என்பவர் சிலப்பதிகாரத்துக்கு உரை செய்தவர். இவர் அந்நூல் முகவுரையில் `காப்பியம்’ என்பது வடமொழித் திரிபு எனக் கூறினர். இதனைச் சிந்தாமணிப் பாயிரவுரையில் நச்சினார்க்கினியர் மறுத்துள்ளார். இதனால், அடியார்க்குநல்லார் நச்சினார்க்கினியர்க்கு முந்தியவராவர். முந்நீர் என்பதற்குப் பொருள், படைத்தலும் காத்தலும் அழித்தலும் ஆகிய மூன்று தன்மையும் உடையது கடல் என்றும், பாலையோடு நிலம் ஐந்து வகைப்படும் என்றும் அடியார்க்கு நல்லார் கூறியவாறே நச்சினார்க்கினியர் கூறினார். இவ்வடியார்க்கு நல்லார் `திங்களைப் போற்றுதும்’ என்புழி திங்கள் என்பது மங்கலச் சொல் எனக் குறித்தமையாலும், தண்டியலங்காரச் சூத்திர மேற்கோள் கூறினமையாலும், பாட்டியல், அணியியல் ஆசிரியர்க்குப் பிற்பட்டவராவர். இவர் `குற்றிய லுகரமும் அற்றென மொழிப’ என்னும் சூத்திரத்திற்குப் பேராசிரியர் கருத்துக்கிணங்கப் பொருள் கொள்ளவில்லை. ஆயினும் பணித்தல், (காதை-8) அருளிச் செய்தல் `மண்டலமே பணியாய்’ (கோவை. 177) என்புழிப்போல் என்றும், வேம்பன் (காதை-16) கொன்றையன் (கோவை-400) என்றாற்போல என்றும், குறிப்பதனால், இவர்க்கும் முந்தியவர் பேராசிரியர் என்று கொள்ளலாம். இனி, எஞ்சிய உரையாசிரியர் காலத்தை வரையறை செய்யப் புகுமுன், இப்போது புதிதாக அச்சிடப்பட்ட சொல்லதிகாரவுரையாசிரியர் பேராசிரியரோ அன்றித் தெய்வச்சிலையாரோ என ஆராயவேண்டுவதாயிற்று. அதற்குப் பேராசிரியர் உரையென்று முன்னமே தெளியப்பட்டவை களுக்கும் இவ்வுரைக்கும் கருத்து வேறுபாடுகள் உள்ளனவோ வென்று பார்ப்போம். 1. `உயர்திணை யென்மனார் மக்கட்சுட்டே’ என்னும் முதற் சூத்திரவுரை இப்போது வெளிவந்த சொல்லதிகாரவுரையிற் காண்பது பின்வருமாறு. `உலகத்துக்குப் பொருள் எல்லாவற்றினும் மக்களென்று சுட்டப்படும் பொருளை உயர்திணை யென்று சொல்லுவர். அவரல்லாத பொருளையும் பிறபொருளையும் அஃறிணையென்று சொல்லுவர் ஆசிரியர். அவ்விருதிணைக் கண்ணும் ஒலிப்பன சொல்லாவன.’ எ-று. மரபியல் சூ. 102 உரையில் பேராசிரியர் உரையென்று கண்டது பின்வருமாறு, `உயர்திணையென்று சொல்லுப ஆசிரியர் மக்கட் சுட்டின்கண், அஃறிணையென்று சொல்லுப ஆசிரியர் அவரல பிறவற்றுக் கண், அவ்விருதிணைப் பொருண்மேலும் இசைக்கும் சொல்’ எ-று. 2. `வினையே குறிப்பே இசையே பண்பே’ என்னும் சொல்லதிகாரச் சூத்திரவுரையிலே `ஊரெனப்படுவது உறையூர்’ எனச் சிறப்புப்பற்றியும் வருமாலெனின், அது பெயர்ப்பொருளின் பாகுபாடாதலின் பெயரென அடங்கும்’ என்று கூறப்பட்டுள்ளது. `அடியின் சிறப்பே பாட்டெனப்படுமே’ (செய்யுளியல் சூ. 35) `மாத்திரை முதலா அடிநிலைகாறும் நோக்குதற் காரணம் நோக்கெனப்படுமே’ (மேற்படி 104) என்புழி அது சிறப்புக் குறித்தது என்பது பேராசிரியர் உரை. 3. மரபியல் கடைச்சூத்திர வுரையிலே, `அன்னபிறவும் கிளந்தவல்ல’ என்னும் சொல்லதிகாரச் சூத்திரக் கருத்து ஒருவாறு பேராசிரியரால் உணர்த்தப்பட்டது. அது வருமாறு: இசையும் குறிப்பும் பண்புமேயன்றிச் சீர்த்தியும் புனிறும் போல்வன வேறும் உள எடுத்தோதப்பட்டன எனவும், எடுத்தோதாது இசையும் குறிப்பும் பண்புமன்றிச் சேண் என்றும் தொறுவென்றும் வருவன உளவென்றும் கூறினமையின்.......... எ-று. இதுவொன்றே அவர் சொல்லதிகாரத்திற்கு உரைசெய்துள்ளார் என்பதற்கு அமையும் சான்று. இவ்வுரை இச் சொல்லதிகாரப் பதிப்புரையில் காணோம். 4. `கடிசொல் இல்லை காலத்துப் படினே’ என்னும் சூத்திரத்துக்குப், ‘புதியன புகுதலும் பழையன கழிதலும்’ என்னும் நன்னூற் சூத்திரக் கருத்திற்கிணங்கப் பேராசிரியர் மரபியற் கடைச்சூத்திரவுரையில் கூறினார். புதிய பதிப்புச் சொல்லதி காரத்தில், அச்சூத்திரத்தின் கருத்து வினைச்சொல் திரியுமாறு உணர்த்துதல் என்று கூறப்பட்டுள்ளது. 5. ‘ஒப்பில் வழியாற் பொருள் செய்குநவும்’ (இடையியல் சூ. 2) என்பதற்கு அன்ன ஏய்ப்ப உறழ என்றாற்போலும் உவம வுருபுகள் என்று கொண்டார். பேராசிரியர் என்பது ‘நாலிரண்டாகும் பாலுமாருண்டே’ என்னும் உவமவியற் சூத்திரவுரையால் அறியப்படும். சொல்லதிகாரவுரையில் உரை வேறுபாடாகக் காணப்படுகின்றது. 6. `பிரிநிலை வினையே பெயரே ஒழியிசை’ என்னும் சூத்திரத்தில் ஓதிய பத்து எச்சங்களுக்கும், சொல்லதிகார வுரையில் கூறப்படும் இலக்கணம் ஒருவகை; அவைபற்றிப் பேராசிரியர் மரபியல் உரையிற் குறிக்கும் இலக்கணம் வேறுவகை. இவற்றைப்போல இரண்டிலும் ஒன்றோடொன்று ஒவ்வாத உரைக்கருத்துக்கள் இன்னும் சிலவுள. ஆதலின் இச்சொல் லதிகார வுரையாசிரியர் பேராசிரியர் அல்லர் என்பதே துணிபு. பிறிதாறின்மையால் அவ்வாசிரியர் வேறு சில ஏட்டில் கண்டவாறு தெய்வச்சிலையார் என்பதே துணிவு. 7. வினையெச்சம் முற்றாய்த் திரிந்ததென்று இச்சொல்லதிகாரத்து ‘வினையெஞ்சு கிளவியும் வேறு பல்குறிய’ என்னும் சூத்திரவுரையிற் கூறப்பட்டுள்ளது. பேராசிரியர் கருத்து, முற்று எச்சமாய்த் திரிந்ததென்பது. தெய்வச்சிலையார் காலவாராய்ச்சி ‘உயர்திணை யென்மனார் மக்கட்சுட்டே’ என்னும் சூத்திரத்து உரையிலே, நச்சினார்க்கினியர், ‘இசைக்கும்’ என்னும் சொல்லிற்கு ‘ஒலிக்கும்’ என்பது பொருளாக முற்பட்ட உரையாசிரியர் ஒருவர் கூறியதைச் சுட்டி மறுத்துள்ளார். கல்லாடர் உரையிலும் அவ்வாறே மறுக்கப்பட்டுள்ளது. இத் தெய்வச் சிலையார் உரையிலே, அங்ஙனம் `இசைக்கும்’ என்பதற்கு ‘ஒலிக்கும்’ என்று பொருள் கூறப்பட்டுள்ளது. இளம்பூரணர் சேனாவரையர் உரைகளில் அவ்வாறு பொருள் கூறப்படவில்லை. உயர்திணை என்பது பண்புத் தொகையென்ற ஒருவர் கூற்று, நச்சினார்க்கினியர் உரையிலே மறுக்கப் பட்டுள்ளது. தெய்வச்சிலையார் உரையிலே, அது பண்புத் தொகையென்று குறிக்கப்பட்டுள்ளது. மற்றை உரைகளில் அதைக் காணோம். ஆகலின் நச்சினார்க்கினியரும் கல்லாடரும் தெய்வச்சிலையார் உரையென்று பெயர் சுட்டி மறுத்திலரேனும், மறுக்கப்பட்டது தெய்வச்சிலையார் உரையேயாம். ஆகவே, தெய்வச்சிலையார் என்பார் நச்சினார்க்கினியர்க்கும் கல்லாடர்க்கும் முற்பட்டவர் என்பதில் ஐயம் இல்லை. இனி, அச்சூத்திரத்து இளம்பூரணர் உரையிலே, `என்ப’ என்னும் முற்றுச்சொல் பகரம் குறைக்கும் வழிக் குறைத்தல் என்பதனால் குறைந்து, மன்னும் ஆரும் என இரண்டிடைச் சொல் விரிக்கும் வழிவிரித்தல் என்பதனால் விரிந்து என்மனார் என்றாயிற்று’ என்று கூறப்பட்டுள்ளது. தெய்வச்சிலையார் உரையில் அவ்வகை முடிபு மறுக்கப்பட்டுள்ளது. `பிறிது பிறிதேற்றலும்’ என்னும் சூத்திரத்து இளம்பூரணர் உரையிலே ஆறாம் வேற்றுமை உருபு மற்ற வேற்றுமை யுருபுகளை யேற்கும் என்று பொருள் கூறப்பட்டு, `சாத்தனதனை’ என உதாரணம் காட்டப்பட்டது. இது தெய்வச்சிலையார் உரையில் மறுக்கப் பட்டுள்ளது. `நெடியனும் வலியனும் ஆயினான்’ என ஆக்கவும்மைக்கு உதாரணம் இளம்பூரணர் காட்டினார். இதுவும் தெய்வச்சிலையார் உரையில் மறுக்கப்பட்டுள்ளது. இதனால் தெய்வச்சிலையார் இளம்பூரணருக்குப் பிற்பட்டவர் என்பது துணிவு. இனித் தெய்வச்சிலையார் சேனாவரையர்க்கு முற்பட்டவரோ பிற்பட்டவரோ என்று ஆராய்வோம். 1. ‘உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே’ என்னும் சூத்திரத்து உரையிலே `என்மனார்’ என்பதற்கு இளம்பூரணரால் குறிக்கப்பட்ட முடியை மறுத்த தெய்வச்சிலையார், அது `என்ப’ என்னும் முற்றுச் சொல்லின் திரிபு என்று கூறினார். `இயற் சொற்றிரிசொல்’ என்னும் சூத்திரத்துச் சேனாவரையர் உரையிலே ‘என்மனார் என்பதை வினைச்சொற்றிரிபு என்பாரும் உளர். அது `என்றிசினோர்’ ‘பெறலருங்குரைத்து’ என்பனபோலச் செய்யுண் முடிபு பெற்று நின்றதென்றலே பொருத்தமுடைத்து, என்று கூறப்பட்டுள்ளது. 2. ‘வேற்றுமைத் தொகையே உவமத்தொகையே’ என்னும் சூத்திரத்துச் சேனாவரையர் உரையிலே, `வேற்றுமை உருபும் உவமவுருபும் வினைச்சொல்லீறும் பண்புச் சொல்லீறும் தொகுதலின் தொகையாயின என்பாரும், அவ்வப் பொருண்மேல் இரண்டும் பலவுமாகிய சொற்கள் பிளவுபடாது ஒற்றுமைப்படத் தம்முள் இயைதலின் தொகையாயின என்பாரும் என இருதிறத்தர் ஆசிரியர்..... இரண்டு சொல் தொக்கன என்பதே ஆசிரியர் கருத்தாம்’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த இரண்டு கொள்கைகளுள் முந்தியது இளம்பூரணர் உரையில் கண்டது. பிந்தியது தெய்வச்சிலையார் உரையில் கண்டது. 3. `மன்னாப்பொருளும் அன்னவியற்றே’ என்புழி `மன்னாப்பொருள்’ என்பதற்கு `இல்லாப்பொருள்’ என்று இளம்பூரணர் உரைத்த உரையைத் தெய்வச்சிலையார் மறுத்து, `நிலையாத பொருள்’ எனப் பொருளுரைத்து `இளமையும் நிலையாது’ `யாக்கையும் நிலையாது’ என உதாரணம் காட்டினார். சேனாவரையர், ‘இல்லாப் பொருட்கு நிலையுறுதல் இன்மையின் மன்னாப்பொருள் என்றார்’ என்று கூறினார். இது தெய்வச் சிலையார் மறுப்புக்கு விடை யென்பது உய்த்துணரப்படும். 4. `தன்மை சுட்டலும் உரித்தெனமொழிப’ என்னும் சூத்திரத்துச் சேனாவரையர் உரையிலே `நின்றுவற்றும்’ என்னும் ஒரு குற்றத்தின் இயல்பு யாம் முன் கண்டுகொண்டது. இது இப்போது தெய்வச்சிலையார் உரையில் காணப்படுகின்றது. அச்சூத்திரத்து இளம்பூரணர் தந்துணிபு இதுவெனக் கூறிவிட்டுப் பிறர் மதம் ஒன்றையும் எடுத்துரைத்தார். அது வருமாறு:- இனி, ஒருவன் `வேறிடம்’ என்பதனைத் `துணியப்படும் பொருட்கு வேறாகி நிற்கும் பொருள்’ என்னும் அவன் உதாரணம் காட்டுமாறு `குற்றிகொல்லோ என ஐயமுற்றான், மகனென்று துணியின், `குற்றியன்று மகன்’ எனவும் குற்றியென்று துணியின், ‘மகனல்லன் குற்றி’ எனவும் வருமென்னும்’ ....... இவ்வாறு பிறர் உரையாகச் சுட்டப்பட்டது தெய்வச்சிலையார் உரைக்கும் முழுதும் ஒத்திருப்பது கொண்டு, தெய்வச்சிலையார் இளம்பூரணருக்கு முற்பட்டவரென்று கருதற்கு இடனுண்டு ஆயினும், அத்தெய்வச்சிலையார் இளம்பூரணர் கருத்துக்கு மாறாக உரைத்த உரைகள் பலவற்றுக்கும், இளம்பூரணர் உரையில் மறுப்புக் காணாமையாலும், உரியியல் உரையில் தெய்வச்சிலையார் காட்டிய உதாரண மேற்கோள்கள் பெரும் பான்மையும் ஒத்தனவாகச் சேனாவரையர் உரையில் காணப் படுவதனாலும், இளம்பூரணர் சுட்டிய பிறர் உரையென்றது, அவர்க்கு முன்னிருந்த வேறோர் ஆசிரியர் உரையென்று கொள்க. `ஆண்மையடுத்த மகனென்கிளவியும்’ என்னும் சூத்திரத்துச் சேனாவரையர் உரையிலே, `அவை முதலாகிய பெண்டென் கிளவியும்’ என்பதுபற்றி, `பெண்டன் கிளவியும்’ என்று பாடமோதி, `அவை அவ்வாட்டி இவ்வாட்டி உவ்வாட்டி என்பாரும் உளர்’ என்று கூறப்பட்டுள்ளது. இங்ஙனம் அவர் குறித்த உரை இளம்பூரணர் உரையன்று. `செப்பே வழீஇயினும் வரை நிலையின்றே’ என்புழி `உம்மை ஆக்கவும்மை என்பாரும் உளர்’ என்று சேனாவரையர் குறித்ததும் இளம்பூரணர் உரையன்று. `முதலும் சினையுமென்றா யிருபொருட்கும்’ என்னும் உவமவியற் சூத்திரவுரையிலே, `மாரி யானையின் வந்துநின் றனனே’ என்பது திணைமயங்கிற்று. ....இக்கருத்து அறியாதார் இவற்றைச் `செப்பினும் வினாவினும்’ என்புழி இலேசு கொண் டுரைக்க’ என்று பேராசிரியர் கூறினார். இதுவும் இளம்பூரணர் உரையிற் காணப்படவில்லை. இதனால் இளம்பூரணருக்கு முன்னாகப் பின்னாக நாம் கண்ட வுரைகளின் வேறாகச் சிலவுரைகள் வழங்கினவென்று தெளிக. `செப்பினும், வினாவினும் சினைமுதற் கிளவிக்கு’ என்னும் சூத்திரவுரையிலே, `இம்மகள் கண் நல்லவோ கயல் நல்லவோ’ என உதாரணம் காட்டினர் இளம்பூரணர். தெய்வச்சிலையார் அவ்வுதாரணத்தை அடுத்த `தகுதியும் வழக்கும்’ என்னும் சூத்திரவுரையில் காட்டினார். கல்லாடர் `செப்பினும் வினாவினும்’ என்புழியே காட்டினார். சேனாவரையர் அவ்வுதாரணத்தை மறுத்து, `உண்மையுணர்தற்கு வினாயதன்றி ஐயவுவமை வாய்பாட்டால் கண்ணைப் புனைந்துரைத்தல் கருத்தாகலின், அன்னவையெல்லாம் உரையென்னும் செய்யுளாம்’ என்றார். `கு ஐ ஆனென வரூஉம் இறுதி அவ்வொடு சிவணும்’ என்னும் சூத்திரவுரையில், ஐ உருபு அகரமேற்று வருதற்கு, `காவலோனக் களிறஞ்சும்மே’ என உதாரணம் காட்டினார் சேனாவரையர். தெய்வச்சிலையார் அதற்கு உதாரணம் வந்தவழிக் காண்க என்றார். `பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின், ஆண்மை திரிந்த பெயர்நிலைக்கிளவியும்’ என்னும் சூத்திரத்துச் சேனாவரையர் அலியென்னும் பெயர் உயர்திணைப்பான் முடிபு கொள்ளா தென்று விலக்கினார். இஃது அச்சூத்திரத்துத் தெய்வச்சிலையார் கொள்கையை மறுப்பதாகக் காணப்படுகின்றது. `ஆண்மையடுத்த மகனென் கிளவியும்’ என்னும் சூத்திரத்துச் சேனாவரையர் `புறத்துப்போய் விளையாடும் பேதைப்பருவத்துப் பெண்மகளை மாறோகத்தார் இக்காலத்தும் பெண்மகனென்று வழங்குப’ என்று கூறியுள்ளார். இது `அவ்வாறு கூறுதல் பண்டையார் வழக்கு’ என்று தெய்வச்சிலையார் கூறிய உரைக்கு மறுப்பாகக் காணப்படுகின்றது. எச்சவியலுள் ஓதப்பட்ட பெயரெச்சம் வினையெச்சம் பிரிநிலையெச்சம் உம்மையெச்சம் முதலாயின வினையிய லுள்ளும் இடையியலுள்ளும் ஓதப்பட்ட அவற்றின் வேறெனத் தெய்வச்சிலையார் கொண்டு, அவற்றிற்கு உதாரணங்களும் வேறாகக் காட்டினார். சேனாவரையர் அவ்வினையியலுள்ளும் இடையியலுள்ளும் ஓதப்பட்ட எச்சங்களுக்கே முடிபு எச்சவியலுள் ஓதப்பட்டதென்று கடாவிடை உள்ளுறுத்து உரைகூறினார். இதுவும் சேனாவரையர் தெய்வச்சிலையார் கொள்கையை மறுத்தவாறென்று கருதப்படும். இக் கூறியவாற்றால் தெய்வச்சிலையார் இளம்பூரணருக்கும் சேனாவரையர்க்கும் இடைப்பட்ட காலத்தினர் என்று துணியப்படும். சேனாவரையர் உரையிலே `பிறிது மொழிதல்’ என்னும் அலங்காரம் குறிக்கப்படுவதனால் அவருடைய காலம் `அணியியல்’ உடையார் காலத்திற்குப் பின்னதென்க. கல்லாடர் காலம் தெய்வச்சிலையாருக்கும் நச்சினார்க் கினியர்க்கும் இடைப்பட்டதென்பது முன்னமே முடிந்தது. இனி அவர் உரையிலே சேனாவரையரால் மறுக்கப்பட்ட உரைப்பகுதிகள் காணப்படுதலால் அவர்க்கு முந்தியவரென்று கொள்ளுதல் வேண்டும். `என்மனார்’ என்பதன் முடிபு இளம்பூரணர் கூறியவாறே கல்லாடர் கூறினார். `தகுதியும் வழக்கும்’ என்னும் சூத்திரத்துக்கும் அவ்வாறே கூறியுள்ளார். அதனையே நன்னூல் விருத்தி யுரைகாரர் தழுவினர். சேனாவரையர் மறுப்புக்கு விடையிறுக்கக் காணோம். `மன்னாப்பொருளும்’ என்னும் சூத்திரவுரையிலே, `முயற்கோடும், யாமைமயிர்க் கம்பலமும் துன்னூசிக்குடரும் சக்கரவர்த்தி கோயிலுள்ளும் இல்லை’ என உதாரணம் காட்டினர். சேனாவரையரும் நச்சினார்க்கினியரும் `ஒருபெயர்ப் பொதுச் சொல் உள்பொருளொழிய’ என்னும் சூத்திரத்தால் அமைத்துக் காட்டிய `ஆதீண்டு குற்றி, வயிரகடகம்’ என்பன வற்றைப் `பெயரினும் தொழிலினும் பிரிபவையெல்லாம்’ என்னும் சூத்திரத்து `எல்லாம்’ என்னும் இலேசுகொண்டு அமைத்துக் காட்டியுள்ளார். `செப்பினும் வினாவினும் சினைமுதற் கிளவிக்கு’ என்னும் சூத்திரவுரையிலே சேனாவரையரால் மறுக்கப்பட்ட `இம்மகள்கண் நல்லவோ கயல் நல்லவோ’ என்னும் உதாரணம், இளம்பூரணத்தில் காட்டப்பட்டபடியே கல்லாடர் உரையில் காட்டப்பட்டுள்ளது. இளம்பூரணர் உரையிலும் தெய்வச்சிலையார் உரையிலும் காணாத `குறுஞ்சூலி’, `குறுந்தடி’ என்னும் உதாரணங்கள் `இனச்சுட் டில்லாப் பண்புகொள் பெயர்க்கொடை’ என்னும் சூத்திரவுரையிலே, கல்லாடரால் காட்டப்பட்டு, வாளா பெயராய் நின்றனவென்று குறிக்கப்பட்டன. அவை பண்பு கொள்பெயர் எனப்படா என்று சேனாவரையர் மறுத்துள்ளார். `குடிமை யாண்மை’ என்னும் சூத்திரத்தில், `அன்ன பிறவும்’ என்றதனால், `வேந்து வந்தது’ முதலியவற்றோடு, `பேடுவந்தது’ `பேடுகள் வந்தன’ என்பனவற்றையும் உதாரணமாகக் கல்லாடர் காட்டினர். `பெயர்நிலைக் கிளவி காலம் தோன்றா’ என்னும் சூத்திரவுரையில், நச்சினார்க்கினியரால் எடுத்துக்காட்டப்பட்ட பெயர்ப்பெயரும், வினைப்பெயரும், தொழிற்பெயரும் ஆகிய பாகுபாடுகள் கல்லாடர் உரையில் கண்டவாறே உள்ளன. `காப்பின் ஒப்பின்’ என்னும் சூத்திரவுரையில், நச்சினார்க்கினியர் `கருத்தில் வழிநிகழும் செயப்படுபொருளும், செய்வானும் செயப்படுபொருளும் தானேயாய் நிற்பனவும் கொள்க’ என்று உரைத்து `சோற்றைக் குழைத்தான்’, `சாத்தன் தன்னைக் குத்தினான்’ என உதாரணமும் காட்டினார். இது கல்லாடர் உரையிலன்றிக் காணப்படவில்லை. கல்லாடர் அதன் மேலும் தெரிநிலைச் செயப்படுபொருளும் தெரியாநிலைச் செயப்படுபொருளும் என இரண்டு பாகுபாடு கூறி, `மரத்தைக் குறைத்தான் சாத்தன்’, `சாத்தனால் மரங்குறைக்கப்பட்டது’ என உதாரணம் காட்டினர். இக்கூறியவாற்றால் கல்லாடர் சேனாவரையர்க்கு முற்பட்டவர்ஆகார் என்பது துணியப்படும். இவ்வுண்மை அறியமாட்டாதார், இவர் கடைச்சங்கப் புலவருள் ஒருவராகிய கல்லாடரென மயங்குப. இதுநிற்க. இனி, தெய்வச்சிலையார் வரலாறு:- இவர் உரைக்குச் சிறப்புப்பாயிரமென ஒன்றும் காணப்படாமையால் இவர் வரலாறு இன்னதென்று விளங்கவில்லையாயினும், ஆகுபெயர்ச் சூத்திரவுரையில், `பிறந்தவழிக்கூறல்’ என்பதற்கு `வேளாகாணி’ என்பது அவ்விடத்தில் தோன்றிய ஆடையை உணர்த்தும்’ என்றார் ஆதலால், இவருக்குச் சோணாட்டில் நாகபட்டினத் திற்குத் தென்பால் உள்ள `வேளான்காணி’ என்னும் ஊரோ அன்றி அதற்கு அருகில் உள்ளதொரு ஊரோ பிறப்பிடம் என்று கருதற்கு இடனுண்டு. தலைமைபற்றிய வழக்கிற்குப் `பார்ப்பார் வேதம்’ என்று காட்டியுள்ளார். சொல் (சூ. 55) என்பதற்கு வேதம் என்று பொருள் கூறினார். அச்சூத்திரவுரையில் `இந்நூல் செய்தான் வைதிக முனிவன்’ என்றார். சூ. 87, 410 உரைகளிலே வடமொழியில் பாணினியர் கொள்கையைச் சுட்டினார். வடமொழி இலக்கண நூன்முறைபற்றி சூ. 2, 66, 68, 81, 292 உரைகளிலே குறித்தனர். `பஞ்சத்திராவிடம்’ `லோபம்’ `பரிணாமம்’ `வாக்கியம்’ `கோமூத்திரம்’ என வடசொற்களை வழங்கினார். இதனால் இவர் அந்தணர் குலத்தினர் என்பதும், வடநூல்களில் தேர்ச்சியுடையவர் என்பதும், துணிந்து கொள்ளப்படும். ஒரு உரையேட்டின் இறுதியிலே `ஆத்திரேய’ என்ற அளவில் எழுத்துக்கள் காணப்பட்டன என்றமை பொருத்தமேயாகும். ஆகவே இவரும் ஆத்திரேய கோத்திரத்தினர் என்று கொள்ளலாகும். இனி இவர் சமயம் சைவசித்தாந்தம் என்பது சூ. 32, 438 உரை முதலியவற்றால் துணியப்படும். இவர் தருக்க நூலினும் வல்லவர் என்பது சூ. 13 உரை முதலியவற்றால் விளங்குகிறது. இவர்க்குத் தெய்வச்சிலையார் என்று பெயர் வந்ததற்குக் காரணம் தெரியவில்லை. ஆயினும், அது அவர்க்கு இயற் பெயரன்று, சிறப்புப் பெயரேயாம். அது அவர் தவவொழுக்கத் தால் மனத்தூய்மையுடையார் என்பதைக் குறிக்கும். தொல்காப்பிய வுரையாசிரியருள் சேனாவரையரே வடமொழிக் கடலும் தென்மொழிக் கடலும் நிலைகண்டுணர்ந்தார் என்று சிவஞான முனிவராலே கொண்டாடப்பட்டனர். ஆயினும் இத்தெய்வச்சிலையார் உரையை ஊன்றிப் பார்க்கின், அச்சேனாவரை யருடைய கூரறிவும் புகுதற்கரிய நூற்பூழையினும் அவர் புகுந்து வெளிப்பட்டார் என்பது போதரும். சேனாவரையர் `செய்யா’ என்பதோர் வினையெச்ச வாய்பாடு என்று தெரியாமல், அது `செய்யூ’ என்னும் வினையெச்ச வாய்பாடு திரிந்ததென்றார். தெய்வச்சிலையார் `செய்யாவென்னும் வினையெஞ்சுகிளவியும்’ என்னும் எழுத்ததிகாரச் சூத்திரத்தை மேற்கோளாகக் காட்டி, அதுவும் ஓர் வினையெச்ச வாய்பாடென்று வரையறை செய்தார். சேனாவரையர் எடுத்துக்காட்டாத எதிர்மறைப்பொருளில் வரும் ஏகாரம் ஒன்றும், ஐயப்பொருளில் வரும் ஓகாரம் ஒன்றும் உள்ளதாகக் காட்டி, அதற்கு `மாறுகோளெச்சமும் வினாவும் ஐயமும்’ என்னும் எழுத்ததிகாரச் சூத்திரத்தை மேற்கோளாகக் காட்டினர் தெய்வச்சிலையார். இத்தெய்வச்சிலையார் காட்டியபடியே நச்சினார்க்கினியர் தம்முரையில் காட்டியதூஉம் என அறிக. ‘ஈதா கொடுவெனக் கிளக்கு மூன்றும், இரவின் கிளவி ஆகிட னுடைய’ என்னும் சூத்திரவுரையிலே, நச்சினார்க்கினியர் `ஈதாகொடு என்னும் சொற்கள், ஒரு பறவையின் பெயரும், தொழிற் பொருண்மையும் கொடுமையும் ஆதலின்றி இரப்போன் கூற்று ஆதலும் உரிய’ என்றெழுதியது இத்தெய்வச்சிலையார் உரையிலிருந்தபடியேயாம். இன்னும் `ஆவுமானியற் பார்ப்பன மாக்களும்’ என்பது அண்மைவிளி யென்றதும், தெய்வச் சிலையார் உரையில் கண்டபடியே. நச்சினார்க்கினியர் எடுத்தாண்டதைக் கூறுவது பெரிதன்று. சிவஞான முனிவர் தந்துணிபாகக் கூறியன பல தெய்வச்சிலையார் உரையிலே காணப்பெறுதும் எனின் இவ்வுரையின் அருமை உரைக்கற் பாலதோ! `நெடியனும் வலியனும் ஆயினான்’ என்பது ஆக்க வும்மைக்கு உதாரணமாக இளம்பூரணர் காட்டியதைச் சிவஞான முனிவர் மறுத்து, அது எண்ணும்மையென்றார். தெய்வச்சிலையார் அப்படியே கூறியுள்ளார். ஆறாம் வேற்றுமை உருபு பிற வேற்றுமை உருபுகளை ஏற்குமென்று இளம்பூரணர். சேனாவரையர் கூறியவுரையைச் சிவஞான முனிவர் மறுத்துள்ளார். `உருபுதொக வருதலும்’ என்பதும் தொகாநிலைத் தொடரின்கண் வேற்றுமை உருபு தொகுமாறு கூறிற்றென்றார். கிளியும் பூவையும் பேசுதலால் தன்மை இருதிணைக்கும் பொது என்பார் கூற்றை மறுத்துள்ளார். வினைமுற்றே எச்சமாகத் திரிந்தது என்பாரை மறுத்து எச்சமே முற்றாகத் திரிந்ததென்றார். இக்கொள்கைகளெல்லாம் தெய்வச்சிலையார் கொள்கைகளாகவே உள்ளன. `சுண்ணந்தானே’ என்னும் சூத்திரவுரையில் இளம் பூரணரும் பிறரும் காட்டாத `தெங்கங்காய் போலத் திரண்டு ருண்ட பைங்கூந்தல்’ என்னும் செய்யுளை உதாரணமாகக் காட்டியுள்ளார். எச்சவியலுள் ஓதப்பட்ட மூன்றொழிந்த பத்து எச்சங்களும் ஏனை உரையாசிரியர்கள் கொண்டபடி வினையிய லுள்ளும் இடையியலுள்ளும் ஓதப்பட்டனவல்லவென்று களைந்து, அவை பலபடியாலும் பெயரும் வினையும் முதலிய சொற்களை வருவித்துரைத்தற்கு விதிகளாகக் கொண்டுரைத்தார். இது `பிறிதொடுபடாஅன் தன்மதம் கொளல்’ என்னும் மதம். அம்மதம்பற்றி வரும் சூத்திரவுரைகள் இன்னும் பலவுள. மற்றை உரையாசிரியரெல்லாம் வினைமுற்றுச் சூத்திரத்தை எச்சவியலுள் வைத்து உரை கூறினார். தெய்வச்சிலையார் அச்சூத்திரத்தை வினையியலுள் வைத்து உரை கூறி, அச்சூத்திரம் முன்னை உரை எழுதினோரால் இடம் மாற்றி வைத்து உரைக்கப்பட்டதென்று குறித்தார். இவர் துணிவு மிகவும் பாராட்டத்தக்கது. பெயரெச்சம் வினையெச்சம் வினை முற்றென வினைச்சொல் மூன்று வகைப்படும். அவற்றுள் பெயரெச்சத்துக்கும் வினை யெச்சத்துக்கும் வினையியலுள் இலக்கணம் ஓதிய ஆசிரியர், தலைமையாகிய வினைமுற்றுக்கு இலக்கணம் ஆண்டே ஓதாது எச்சவியலுள் ஓதினாரெனல் பொருந்தாததே யாம். இத்தகைய சிறப்பினதாயிருந்தும், தெய்வச்சிலையார் உரை இதுநாள் காறும் வெளிவராதிருந்த காரணம், பிற்காலத்திலே சமயநூற்பயிற்சியும், அதற்குத் துணையாகிய தருக்கநூற் பயிற்சியும் மிகுந்து அத்தருக்கவுரைச் செறிவுள்ள சேனாவரையர் உரையைப் பெரிதென்று புலவர்கள் மயங்கிப் பாராட்டத் தலைப்பட்டதேயாம். தருக்கவுரையை மிகையென்று கொண்டு, இலக்கண நூலின் உண்மைப் பொருள் காணுதலே கருத்தாக உள்ளார்க்கு, இத்தெய்வச்சிலையார் உரையிலும் சிறந்ததொன்று இப்போது கிடையாதென அறிக. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. - தமிழ்ப் பொழில், தஞ்சை, கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்கள் வெளியீ 2. தொல்காப்பியன் ஒரு மொழியறிஞன் 1 உலகியலைக் கூர்ந்து அறிந்து எழுதிய புலவனது காவியம் காலவியல்பைக் காட்டுவதோடு காலங்கடந்தும் நிற்கும். நிற்பதற்குக் காரணம். காவியத்தினுள் உயிராக இயங்கும் மக்கட் பண்பேயாகும். மக்கள் வழக்கை அடிப்படையாகக் கொண்டு யாத்த இலக்கியமே சிறப்புறுமாப்போல, மொழி வழக்கை அடிமுதலாக வைத்து விதி செய்யும் இலக்கணமே தன் காலத்து இலக்கியங்கூட ஒழியவும், தான் நின்று வாழ்தற்கு ஒரு காரணம் அதன் நல்லடிப்படை என நாம் தெளியவேண்டும். தொல்காப்பியர் தமிழ்மொழியைப் பலவாறாகத் துருவியாய்ந்த ஆசிரியர்; அதன் வரவும் செலவும் இருப்பும் நன்றாகக் கணக்கிட்டவர். தமிழ்மொழியில் வகரமெய்யீறான சொற்கள் நான்கே உள; ஞகர மெய் ஈறாகும் சொல் ஒன்றுதான் உண்டு; அளவுப் பெயரிலும் நிறைப்பெயரிலும் வரும்மொழி முதலெழுத்துக்கள் ஒன்பதுவே என இவ்வாறு சொல்வரம்பு பல காட்டுபவர். தமிழ்பேச்சுமொழி யாதலால் தொல்காப்பியர் செய்யுள் வழக்கு ஒப்ப உலக வழக்கையும் மதித்தவர். விளம்பிய இயற்கையின் வேறுபடத் தோன்றின் வழங்கியல் மருங்கின் உணர்ந்தனர் ஒழுக்கல் நன்மதி நாட்டத் தென்மனார் புலவர் (483) என்ற நூற்பாவால் மொழிக்கு உரைகல் வழக்கு என்று அறிவுறுத்தினர். தாம் இதுகாறும் கூறிய விதிகளுக்கு மாறான செய்யுளையோ வழக்கையோ கண்டால், அப்பொழுதை வழக்கைக் கொண்டு பார்த்துக்கொள்ளுங்கள் என்று அறுதியிட்டனர். செய்யுள் வழக்குத்தான் சிறந்தது; உலக வழக்குச் சிறவாதது என்ற பொருந்தாக் கோட்பாடு தொல்காப்பிய மொழிஞன்பால் இல்லை. இரு வழக்குகளையும் நிகராக மதித்த மொழியறிஞர் அவர். ‘வழக்காறல்ல செய்யுளாறே’ (501), ‘வழக்கின் ஆகிய உயர்சொற் கிளவி, இலக்கண மருங்கிற் சொல்லாறல்ல’ (510) என்ற இரண்டிடங் களையும் சான்றாக நோக்குக. புணர்ச்சிக்கு உரிய நிலைமொழி வருமொழிகளை வரையறுத்துக் கொண்டுவரும் தொல்காப்பியர், மருவின் தொகுதி மயங்கியல் மொழியும் உரியவை யுளவே புணர்நிலைச் சுட்டே (111) என்று ஒரு நூற்பா யாத்தனர். வழங்கி வழங்கி ஒலி தேய்ந்து குறுகிய சொற்களை, மழுங்கிய நாணயம்போல் எள்ளாது, புணர்நிலைக்குத் தகுதியுடையவை என்று வெளிப்படுத்தினர். அகம் + கை = அங்கை என்றும், ஆதன் = தந்தை = ஆந்தை என்றும் வரும் மரூஉ முடிவுகளைத் தாமே உடன்பட்டனர். 2 வாழ்க்கையில் செல்வம் வரும்; போம். ஆதலால் இருவினையையும் ஏற்கவேண்டும் என்று விளங்கியவன் மெய்யறிஞன் ஆகின்றான். ஒரு மொழியில் சொற்செல்வம் வரும்; போகும். ஆதலால் இரண்டிற்கும் இடங்கொடுக்க வேண்டும் என்று வழக்காடுபவன் மொழியறிஞன் ஆகின்றான். மொழி நாணயத்தின் உயிரான வரவுசெலவுகளை மூவாயிரம் ஆண்டுக் கிழவனான தொல்காப்பியர் நன்னர் அறிந்திருந்தார் என்று நிறுவுவதற்கு, கடிசொல் லில்லை காலத்துப் படினே (934) என்ற ஓரடி நூற்பாவே அமையும். சொற்கள் அவ்வக் காலத்து வழக்கில் இறப்பின் அவை காக்கப்படுதலில்லை; சொற்கள் அவ்வக்காலத்து வழக்கில் தோன்றின் அவை தள்ளப்படுதல் இல்லை என்ற இருபொருளும் ஒருங்கு புலப்பட இந்நூற்பா தொகுத்தனர். உயிரோடிருக்கின்றோம் என்பதற்கு வாங்கி விடும் மூச்சுச் சான்றாதல் போல, வாழும்மொழி என்பதற்கு வந்துபோம் சொற்கள் சான்றாகும் என்பதைக் கண்டு ‘கடிசொல் இல்லை’ என வழிகாட்டினர். தொல்காப்பியம் தூய தமிழினத்தின் மனம், அறிவு, இன்பம், மறம், மரபுகளை அறிந்துகொள்ளற்குப் பொய்யாத் தனிக் கருவூலமாகக் கிடக்கின்றது. இப்பேருண்மையைச் சில்லாண்டுகளாக அறிந்து விழிப்படைந்து வருகின்றோம். இன்று தமிழகத்துப் புதுத் துறையாக வளர்ந்து வரும் மொழிக்கலைக்கும் நிரம்பிய மூலங்கள் அந்நூலகத்து உண்டு என்று தெளிவோமாக. தெளிந்து, தொல்காப்பியர் தொடங்கி வைத்த மொழியியற் கலையைப் பழமையும் புதுமையும் விரவ வளர்ப்போமாக. - வ.சுப. மாணிக்கனார் மாணக்க விழுமியங்கள், பக். 14-16 3. `யாதன் உருபில் கூறிற்று ஆயினும்’ புதிய பாதை தொல்காப்பிய உரையாசிரியர் அனைவரிலும் தெய்வச்சிலையார் துணிவு மிக்குடையவர் என்பது அவர்தம் உரையில் பல இடங்களில் வெளிப்படுகின்றது. தாம் கூறுகின்ற கூற்று பிற உரையாசிரியர்கட்கு முரண்பட்டதெனத் தெரிந்தும் தன் புரட்சி நோக்கால் இவர் மாறுபட்டுத்தான் காணப்படுகின்றார். மொழி ஆராய்ச்சியில் இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய பல புதிய கோட்பாடுகள் புரட்சிவழிப் பட்டதாகும். இம்மொழிக் கோட்பாடுகளின் வளர்ச்சியினால் தோன்றியதுதான் மொழி இயல் எனும் தனித் துறையுமாகும். இப்படி வளர்ந்துவிட்ட மொழியியற் கோட்பாடுகளின் உள்ளீடுகளும், உள்ளுணர்வுகளும் (iளேiபாவள) தெய்வச்சிலையாரின் உரைகளில் வெளிப்படுவதைக் காணும்போது நமக்குப் பெருமிதம் ஏற்படுகின்றது. தமிழ் மொழியின் இலக்கணத் தெளிவு மட்டுமல்லாது வடமொழி இலக்கணமும் அறிந்திருந்த உரையாசிரியர்களுள் இவர் தலை சிறந்தவராகக் காணப்படுகின்றார். மொழியியல் அடிப்படை என்றால் உலக மொழிகள் அனைத்துக்கும் பொருந்தும் மொழிக் கோட்பாடு (ருniஎநசளயட ழுசயஅஅயச) காண்பது என்பதாகும். தெய்வச்சிலையாரின் உரையில் இப்பொதுமைக் கோட்பாடுகளும் நிரம்பிக் கிடக்கின்றன. இதனால்தான் இவரால் புது விளக்கங்களும் புது அமைப்பும் கொண்ட உரையைத் தர முடிந்தது எனலாம். நூற்பா இட மாற்றங்களும் தொல்காப்பியத்தை அரண் செய்யும் வகையில் இடம் பெறுவதா மொழியியல் நோக்கில் இவரது உரை புதிய பாதையை நமக்குக் காட்டுகிறது எனத் தெளியலாம். யாதனுருபு யாத னுருபிற் கூறிற் றாயினும் பொருள் சென் மருங்கில் வேற்றுமை சாரும் - தொல். சொல். 102 எனும் தொல்காப்பிய வேற்றுமை மயங்கியல் சூத்திரத்திற்கு உரை எழுதிய உரையாசிரியர்கள் அனைவரும் வேற்றுமை உருபு தம்முள் மயங்கும் உருபு மயக்கம் என்ற நிலையில் நின்று உரை செய்துள்ளனர். இக்கருத்தையே இன்றைக்கும் (மொழிக் கோட்பாடுகளும் இலக்கண ஆய்வும் வளர்ந்து விட்ட நவீன காலமாகிய இன்றைக்கும்) பலர் தம் தொல்காப்பிய உரையில் வெளிக்காட்டுகின்றனர். ஆனால், தெய்வச்சிலையார் மட்டும் வேற்றுமை உருபு அல்லாத நிலையில் நின்று வேற்றுமை உருபு தம்முள் மயங்குதல் இன்றி பிற உருபோடு மயங்கும் எனப் புதுமை படைத்துள்ளார். முற்றிலும் முரணான இரு வேறுபட்ட இவ்வுரைகளை மொழி இயல் நோக்கில் ஆராய்ந்தால் தெய்வச்சிலையாரின் உரை எவ்வாறு மூல ஆசிரியரை அரண் செய்கிறது என்பதையும், வேற்றுமை இலக்கணத்தை அணுக வேண்டிய முறை எது என்பதையும் நம்மால் தெளிய முடியும். வேற்றுமை நிலைகள் வேற்றுமை என்பது ஒரு தொடரில் வரும் பெயருக்கும் வினைக்கும் உள்ள உறவு அல்லது ஒரு பெயருக்கும் மற்றுமொரு பெயருக்கும் உள்ள தொடர்பு பற்றியது என்பது நாம் முன்பே அறிந்த விளக்கமாகும். இவ்வேற்றுமை எவ்வாறு எதைக் கொண்டு வெளிப்படுத்தப்படுகிறது என்பது ஒரு நிலை. இதைப் புறநிலை (ளுரசகயஉந டநஎநட) வேற்றுமை என்கிறோம். இப்புற நிலை வேற்றுமையினால் ஒரு தொடரில் வரும் பெயர்ச் சொற்கட்கும் முடியும் வினைச் சொற்கும் உள்ள உறவு அல்லது தொடர்பு பொருண்மை அடிப்படையில் காண்பது இரண்டாவது நிலை. இந்த இரண்டாவது நிலையைப் புதை நிலை (னுநநயீ டநஎநட) வேற்றுமை என்கிறோம். இந்தப் புதைநிலை வேற்றுமைக்கு உட்படாத சில வேற்றுமைப் பொருட்கள் (ஊயளந அநயniபேள) பெயர்ப் பெயர் உறவைக் காட்டுவதாகும். இது மூன்றாவது நிலை. இப்படி வேற்றுமையை மூன்று நிலைகளில் நின்று ஆராய வேண்டியுள்ளது. புதைநிலை வேற்றுமைகள் பெரும்பாலும் வினைச் சொற்களால் நிறுவப்படுவதால்தான் ஓர் உருபுக்கு இதன் பொருள் இது என நிர்ணயிக்க முடியவில்லை. இதனால் தோன்றிய மயக்கங்கள்தான் உருபு மயக்கம், பொருள் மயக்கம் என இரண்டு மயக்கங்கள்; இவற்றைப் பற்றியதுதான் வேற்றுமை மயங்கியல் என்பதில் யாருக்கும் ஐயமில்லை. இருந்தாலும் புறநிலை வேற்றுமை (ளுரசகயஉந உயளந) என்பது வேற்றுமை உருபுகள் மட்டும்தானா? அல்லது அவை ஏற்கும் பெயரும் சேர்ந்ததா? இவை இரண்டு மல்லாது வேறு ஏதேனும் (வினை எச்சங்கள் போன்றவையும்) இதில் அடங்குமா? போன்ற வினாக்களுக்கும் பதில் காண்பதில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. இதை என்ன என்று சிந்திக்காமலேயே ‘வேற்றுமை உருபு’ என்றால் வேற்றுமை உருபுகள் மட்டுமே என்று வாளா இருந்துவிட்டால், தெய்வச்சிலையார் என்ன கூறுகின்றார் என்பது நமக்குப் புரியாது. அவருடைய உள்ளுணர்வு அல்லது உள்ளீடு என்ன என்பதையும் நம்மால் உணர முடியாது. மூல ஆசிரியரை எவ்வாறு அரண் செய்துள்ளார்; பிற உரையாசிரியரோடு எப்படி முரண் கொண்டுள்ளார் என்பதும் விளங்காது. எனவே, யாதன் உருபு என்றால் என்ன என்பதை விளக்கும் முன் புறநிலை, புதைநிலை, வேற்றுமைகளையும் வேற்றுமைப் பொருட்களையும் பற்றித் தெளிவாக விவரித்து பிறர் கருத்துகள் தெய்வச்சிலையாரின் கருத்துக்கு இரண்டாந்தரம் ஆனவை என்பதை நிறுவிச் செல்ல ஆசைப்படுகிறேன். புறநிலை வேற்றுமை ஒரு தொடரில் புறநிலையில் காணப்படும், அதே நேரத்தில் பெயர்ச் சொற்கட்கும் வினைச் சொற்கட்கும் இடையில் அமையும் தொடரியல் உறவுகளை வெளிக்காட்டப் பயன்படுத்தப் படும் உருபுகளையோ அல்லது சொற்களையோ அல்லது பிற சொல் வடிவங்களையோ நாம் புறநிலை வேற்றுமை என்கிறோம். தமிழில், எழுவாய் (nடிஅiயேவiஎந), செயப்படுபொருள் (யஉஉரளயவiஎந) கருவி (ஐளேவசரஅநவேயட), கொடை (னுயவiஎந), கிழமை (ழுநnவைiஎந), உப நிகழ்ச்சி (ளுடிஉயைவiஎந), இடம் (டுடிஉயவiஎந) நீக்கம் (ஹடெயவiஎந) ஆகிய புற நிலை, வேற்றுமைகள் உள்ளன. இப்புறநிலை வேற்றுமைகள் ஒட்டுக்கள் குறிப்பாகப் பின்னொட்டுகள் (ளுரககiஒநள) அதாவது வேற்றுமை உருபுகள் (ஊயளந ளரககiஒநள) சொல்லுருபுகள் (ஞடிளவயீடிளவைiடிளே) போன்றவற்றால் குறிக்கப்படுகின்றன. தொல்காப்பிய வேற்றுமையியல் இப்புறநிலை வேற்றுமையை, அவைதாம் பெயர், ஐ, ஒடு, கு இன், அது, கண், விளி என்னும் ஈற்ற (தொல். சொல். 63) என விளக்குகிறது. எனவே, தொல்காப்பியரின் கருத்துப்படி புறநிலை வேற்றுமை என்பது வெறும் வேற்றுமை உருபுகள் மட்டுமல்லாது பெயர்ச்சொல்லும் ஆகும் என்பது பெறப்படுகிறது. ஆகவே, புறநிலை வேற்றுமை என்றால் 1. வேற்றுமை உருபுகள், 2. சொல்லுருபுகள் 3. பெயர்ச் சொற்கள் என மூன்று வடிவங்களில் அமைவது பெறப்படுகிறது. இலக்கணக்கொத்து ஆசிரியர், உருபு, வேறு உருபு, சொல்லுருபு என்ன வேற்றுமை உருபு மூன்றென வியம்புவர் - இ.கொ. 16 என்று புறநிலை வேற்றுமையை விளக்குவது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. இதைப் பொருத்தவரையில் இன்றைக்கும் சரி; அன்றைக்கும் சரி, கருத்து வேறுபாடு கிடையாது. ஒரு தொடரில் வெளிப்படையாகத் தோன்றும் (அல்லது புறநிலையில் தோன்றும்) பெயர், உருபு, சொல்லுருபு போன்றவையே புறநிலை வடிவங்களாகும். இப்புறநிலை வேற்றுமையைக் கீழ்க்காணுமாறு பிரித்து நோக்கி ஆராயலாம். புறநிலை வேற்றுமை உருபு பெயர் வேற்றுமை உருபு சொல்லுருபு பெயர்ப் பெயர் டீ-சூனிய உருபு பற்றி, போல வினைப்பெயர் ஐ,ஆல்,கு, மாதிரி, விட வினையாலணையும் அது, அ நோக்கி, சூழ்ந்து பெயர், தொழிற்பெயர் ஒடு, இல், கொண்டு, தவிர (மேலும் வினையெச்சத் போன்றவை காட்டிலும், தால் தருவிக்கப்படும் வேண்டி, ஆக வி. அ. பெயர்கள்) மேல், கீழ், முன் போன்றவை பின், நடுவில் உள்ளே, முதல் வரை, இருந்து புறநிலையில் காணப்படும் இவ்வுருபுகள் தவிர சில வினையெச்ச வடிவங்களிலிருந்தும் புறநிலை வேற்றுமைகள் வெளிப்படுகின்றன. இதைப் பின்வரும் எடுத்துக்காட்டுகளால் அறியலாம். `மாடு முட்டி கை ஒடிந்தது’ `மழை பெய்து குளம் நிறைந்தது’ போன்ற தொடர்களில் வரும் வினையெச்சங்களாகிய முட்டி, பெய்து இரண்டுமே தன்னுள் காரணவேற்றுமையைக் (ஊயரளயவiஎந உயளந) கொண்டுள்ளன. இத்தொடர்களைப் பின்வருமாறு மாற்றி எழுதினால் பொருள் மாறாமல் வருவதைக் காணலாம். `மாடு முட்டியதால் கை ஒடிந்தது’ `மழை பெய்ததால் குளம் நிறைந்தது’ இம்மாற்றுத் தொடர்களில் முட்டி பெய்து எனும் வினையெச்சங்களுக்குப் பதிலாக முட்டியதால் பெய்ததால் எனும் வேற்றுமைச் சொற்கள் இடம் பெற்று அதே காரண வேற்றுமைப் பொருளோடு வருவதைக் காணலாம். இவ்வினையெச்சங்கள் தொடரின் புதைநிலை அமைப்பில் எவ்வாறு தருவிக்கப்படுகின்றன என்று பார்க்க வேண்டியது அவசியமாகிறது. அதாவது முட்டி, பெய்து ஆகிய இரு வினையெச்சங்களும் முதலில் முட்டியது, பெய்தது என வினையாலணையும் பெயர்களாக (யீயசவiஉiயீiடிட nடிரளே) தருவிக்கப்படுகின்றன. அவற்றோடு காரண வேற்றுமைப் பொருளுக்கான `ஆல்’ உருபு இரண்டாவது படிநிலையில் சேர்க்கப்படுகிறது. இப்படிச் சில படிநிலைகளில் நாம் புதைநிலைத் தொடரைப் (னநநயீ ளவசரஉவரசந டிக ய ளநவேநnஉந) பெறுகிறோம். இங்கே நாம் முக்கியமாக அறியவேண்டியது என்னவென்றால் பெயர் என்ற பிரிவின் கீழ் பல்விதப் பெயர்களை மட்டும் நோக்காமல் வினையெச்ச வடிவங்களையும் கொள்ள வேண்டியுள்ளது. இதே போன்று செயவென் வாய்பாட்டு வினையெச்சங் களும் குறிவேற்றுமைப் பொருளோடு (ஞரசயீடிளiஎந ஊயளந) காணப்படுகின்றன. உதாரணமாக, அவன் சாப்பிட வந்தான் அவள் பாட வந்தாள் போன்ற தொடர்களில் வரும் சாப்பிட, பாட எனும் வினையெச்சங்கள் மேல் உதாரணங்களில் காரண வேற்றுமை தவிர்க்கப்பட்டது போலவே குறிவேற்றுமையும் தருவிக்கப் படுகிறது எனலாம். அதாவது, சாப்பிட என்பது சாப்பிடுவது எனவும் பாட என்பது பாடுவது எனவும் வினைப் பெயர்களாக மாற்றப்பட்டு அதனோடு நான்காம் வேற்றுமை உருபைப் பெய்து சாப்பிடுவதற்கு, பாடுவதற்கு என தருவிக்கப்படுகின்றன. இதை மேலும் மாற்றியெழுதத் தலைப்பட்டால் அவன் சாப்பிட வந்தான் அவன் சாப்பிடுவதற்கு வந்தான் அவன் சாப்பிடுவதற்கு + ஆக வந்தான் அவன் சாப்பிடுவதற்கு + ஆக + வேண்டி வந்தான் என்று விரித்து எழுதமுடிகிறது. எனவே வினையெச்சங் களும் வேற்றுமைப் பொருளோடு வருவது இவற்றால் புலனாகின்றது. மேலும், இவ்வினையெச்சங்கள் பெயர்களாகவும், அப்பெயர்கள் சூனிய உருபு (ணநசடி அடிசமநச) ஏற்ற பெயர்களாகவும் விளங்குகின்றன. எனவே, புறநிலை வேற்றுமையைக் காட்டும் உருபூகளைப் பெயர், வேற்றுமை உருபு, சொல்லுருபு, வினையெச்ச நிலை உருபு எனப்பாகுபாடு செய்யலாம். இதனால் புறநிலை வேற்றுமையைப் பின்வருமாறு திருத்தி வகைப்பாடு செய்யலாம். புறநிலை வேற்றுமை வடிவம் பெயர் வே.உருபு சொல் வினையெச்ச வடிவம் வடிவம் வடிவம் வடிவம் பெயர் பெயர் சூனிய உருபு பற்றி, செய்து, வினைப் ஐ,ஆல்,கு, அது, போலமாதிரி, செய பெயர் விட வாய்ப்பாட்டு வி.அ.பெயர் ஓடு,இல் கொண்டு, நோக்கி வடிவங்கள் தொழிற் போன்றவை வேண்டி, பெயர் ஆக போன்றவை, முதலியவை போன்றவை புதை நிலை வேற்றுமை ஒரு தொடரில் வருகின்ற வினைச் சொல்லுக்கும் பெயர்ச் சொற்களுக்கும் இடையிலான உறவே புதைநிலை வேற்றுமை ஆகும்! எடுத்துக்காட்டாக, `முருகன் வள்ளிக்குப் பணம் கொடுத்தான்’ எனும் தொடரில் `கொடு’ என்ற வினைச் சொல்லினுக்கும் வள்ளிக்கு என்ற வேற்றுமைச் சொல்லுக்கும் உள்ள தொடர்பு கொடைப் பயன் (க்ஷநநேகயஉவiஎந ழுடியட) ஆகும். இதைப் புதைநிலை வேற்றுமை என்பர். மரபிலக்கணம் இப் புதைநிலை வேற்றுமைகளை நமது மரபிலக்கணங்கள் விளக்குகின்றன. தொல்காப்பியச் சொல்லதிகாரத்தில், வினையே செய்வது செயப்படு பொருளே நிலனே காலங் கருவி யென்றா வின்னதற் கிதுபய னாக வென்று மன்ன மரபி னிரண்டொடுந் தொகைஇ யாயெட் டென்ப தொழின் முத னிலையே -தொல். சொல். 108 என்று புதைநிலை வேற்றுமைகள் கூறப்படுவதைக் காணலாம். இச்சூத்திரத்தில் வருகின்ற `தொழின் முதனிலை’ என்ற சொல் `புதைநிலை வேற்றுமை’ என்ற பொருளில் கையாளப் பட்டுள்ளதாகக் கூறுவார் பாலசுப்பிரமணியன் (1978: 24). இச்சூத்திரத்தில் வருகின்ற வினை(யே) என்ற சொல் தொழிலைக் குறிப்பதாக வாதிடுவார் தெய்வச்சிலையார். இங்கு வினை என்பது செயலைக் (யஉவiடிn) குறிக்கும் அல்லது தொழிலைக் குறிக்கும் பாங்கிலேயே கையாளப்பட்டுள்ளது. எனவே, வினைச் சொல்லை அடிப்படையாக வைத்துதான் புதைநிலை வேற்றுமைகள் விளக்கப்படுகின்றன என்பதை மரபிலக்கண வழிநின்றும் நிறுவலாம். தொல்காப்பியச் சூத்திரத்தை மேலும் ஆராய்ந்தால் புதைநிலை வேற்றுமைகள் எட்டு என்பதும் அதன் பெயர்களும் நமக்கு வெளிப்படுகின்றன. தொழில் முதல்நிலை தொல்காப்பியக் கூற்றுப்படி, வினை (ஹஉவiடிn), செய்வது (வாயவ றாiஉh யஉவள-ஹபநவே) செயப்படுபொருள் (வாந வாiபே றாiஉh ளை யஉவநன ரயீடிn டிதெநஉவ), நிலம் (ஞடயஉந-டுடிஉயவiஎந), காலம் (வiஅந டிக கூநஅயீடிசயட), கருவி (ஐளேவசரஅநவே -ஐளேவசரஅநவேயட), இன்னதற்கு (வாயவ றாiஉh ளை கடிச க்ஷநநேகயஉவiஎந டிச ழுடியட), இது பயனாக (வாந சநளரடவ டிக - சுநளரடவயவiஎந) ஆகிய எட்டு தொழின் முதனிலைகள் அல்லது புதைநிலை வேற்றுமைகள் ஆராயப்படுகின்றன. இன்றைய மொழியியல், வேற்றுமை இலக்கணவாதிகள் (ஊயளந ழுசயஅஅயசயைளே) இது போன்ற அடிப்படையில்தான் புதை நிலை வேற்றுமைகளைக் கூறுகின்றனர். அவர்கள் வினைமுதல் (ஹபநேவ) கருவி, கொடை (னுயவiஎந), இயல்பு (குயஉவவைiஎந), இடம் (டுடிஉயவiஎந), செயப்படுபொருள் (டீதெநஉவiஎந) ஆகியவற்றை புதை நிலை வேற்றுமைகளாகக் கூறுகின்றனர் (குடைடஅடிசந, 1978: 24-25). இவற்றுள் வினைமுதல் அல்லது கருத்தா என்பது உயிருள்ள உயர்திணை அல்லது அஃறிணையாக மட்டுமே அமையும் என்றும் வினை அல்லது தொழிலால் அது அடையாளம் காட்டப்படும் என்றும் விவரிக்கப்படும். கருவி வேற்றுமை உயிரற்ற பொருளின் இயக்கம் அல்லது தாக்கம் ஒரு தொழிலில் ஈடுபடுவதால் உண்டாவது. இதுவும் வினைச் சொல்லால் சுட்டப்படுவதுதான். இதே போன்று கொடைப் பொருளும் வினைச் சொல்லால் உணர்த்தப்படுகிறது. உயிருள்ள பெயரோடு வரும் போதுதான் வினையோடு தொடர்பு கொள்கிறது. இயல்பு வேற்றுமை (குயஉவவைiஎந) வினைச்சொல்லால் ஒரு பொருளின் தன்மையைச் சுட்டி நிற்கிறது. இடவேற்றுமை வினை / செயல் நடக்கும் இடம் பற்றியது. செயப்படுபொருள் வேற்றுமை வினையின் தாக்கம் நேரிடையாக எப்பொருள் மீது ஏற்படுகிறது என்பதைச் சுட்டி நிற்கிறது. எனவே, ஒரு தொடரில் வருகின்ற பெயர்ச் சொற்களுக்கும் வினைச் சொல்லுக்கும் இடையே தோன்றும் உறவே புதைநிலை வேற்றுமைக்கு அடிப்படை யாகிறது என்பதை அறியலாம். இதனால்தான், இளம்பூரணர் தம் உரையில் புதைநிலை வேற்றுமை பற்றிய மேற்கூறிய சூத்திரத்தை விளக்கும்போது “இச்சூத்திரத்தை என்னுதலிற்றோ வெனின் வினைச்சொல் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று” என்று கூறுகின்றார். வினைச்சொல்லுக்கும் புதைநிலை வேற்றுமைக்கும் உள்ள தொடர்பு அவர் உள்ளுணர்வில் காணப்படுகின்றது. சில விசைச்சொற்கள் சில வேற்றுமை உபோடு இயைபு (உடிnஉடிசன) கொள்வதில்லை. எடுத்துக்காட்டாக நான் அவனுக்குப் பணம் கொடுத்தேன் நான் அவனிடம் பணம் கொடுத்தேன் இத்தொடர்களில் வரும் கொடு எனும் வினைச்சொல் குகர வேற்றுமை உருபுடனும் இடம் எனும் வேற்றுமை உருபுடனும் இயைபு கொண்டு வருகிறது. எனவே இலக்கணப் பிழை தோன்றவில்லை. ஆனால் பின்வரும் தொடர்களில் நான் அவனுக்கு உதவினேன் நான் அவனிடம் உதவினேன் உதவு எனும் வினைச்சொல் குகரவேற்றுமையோடு மட்டுமே இயைபு கொள்கிறது இடம் எனும் இடப்பொருள் உருபோடு இயைபு கொள்ளவில்லை. காரணம், உதவு என்ற வினை ஒரு தொழில் வினை (யஉவiடிn எநசb) இது இட வேற்றுமையை எடுக்காது அல்லது இயைபு கொள்ளாது. கொடு எனும் வினை கொடுத்தல், பெறுதல் தன்மைகனையுடைய வினை (கூசயளேகநச யஉளூரளைவைiடிn எநசb). இப்படி வேற்றுமையின் அடிப்படையில் வினைச் சொற்களைப் பாகுபாடு செய்வாரும் உள்ளனர். (ஆஉஉடில, 1967; எயளர, 1988: 39-80). வேற்றுமைப்பொருள் இப்புதைநிலை வேற்றுமைக்கு உட்படாத அல்லது காண்பதற்கு ஏற்பில்லாத பெயர்-பெயர் உறவுகளைப் பற்றிக் கூறுவது வேற்றுமைப் பொருள் எனலாம். காட்டாக `கடலில் ஆளுயரத்திற்கு அலை எழும்பியது’ எனும் தொடரில் அலை என்ற பெயர்ச் சொல்லுக்கும் ஆளுயரத்திற்கு என்ற வேற்றுமைச் சொல்லுக்கும் இடையேதான் உறவு காணப்படுகிறது. புதைநிலை வேற்றுமையில் கண்டது போல் வினைச் சொல்லாகிய எழும்பியது என்ற சொல்லுக்கும் ஆளுயரத்துக்கு என்ற வேற்றுமைச் சொல்லுக்கும் இடையே உறவு காண்பதில்லை. ஏனெனில் இதைக் கடலில் அலை எழுந்தது என்று கூறும் போது அலைக்கும்எழுந்தது என்ற வினைக்கும் தொடர்பு காண முடிகிறது. அந்த அலையை விவரிக்கும் போதுதான் ஆள் உயரத்துக்கு அலை எனக்காண்கிறோம். எனவே இது பெயர்- பெயர் உறவு இதையே வேற்றுமைப் பொருள் என்பார். (ஏயளர, 1988: 282-83) வேற்றுமை பயக்கம் ஒரு வேற்றுமை உருபுக்கு (ளுரசகயஉந ஊயளந) ஒன்றுக்கு மேற்பட்ட புதைநிலை வேற்றுமைப் பொருள்கள் வருவதும்; ஒரு புதைநிலை வேற்றுமைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வேற்றுமை உருபுகள் வருவதும் என இரண்டு நிலைகளில் வேற்றுமை மயக்கம் பேசப்படுகிறது. மேலும், உருபு மட்டுமல்லாது ஒரு பெயர்ச் சொல்லுக்குப் பதிலாகமற்றொரு பெயர்ச் சொல் வருவதையும் (ஆகு பெயரையும்) தொல்காப்பியர் வேற்றுமை மயங்கியலில் பேசுவதால் வேற்றுமை மயக்கம் உருபு, மாற்றுருபு, சொல்லுருபு, பெயர் (வினையெச்சத்தால் உண்டாகும் பெயர்) அனைத்தையும் உள்ளடக்கிய ஒன்றாகவே கொள்ளப் பட வேண்டும். இதே கருத்தை இலக்கணக் கொத்து ஆசிரியர் ஓர் உருபிற்கே பலபொருள் வருதலும் ஒரு பொருட்கே பல உருபுகள் வருதலும் என இரண்டாகும் வேற்றுமை இயல்பே இ.கொ. 23. என அற்றை நாளில் தெளிவுபடுத்தியுள்ளது போற்றுதற் குரியதாகும். இவ்வேற்றுமை மயக்கம் `உருபு மயக்கம்’ என்றும் `பொருள் மயக்கம்’ என்றும் இருவகை மயக்கங்களாக அமைகின்றது. இங்கே முக்கியமாக ஆராயப்பெற வேண்டியது - இம்மயக்கங்கள் எதனால் தோன்றுகின்றன என்பதே ஆகும். இதை விளக்குவதற்காகதான் தொல்காப்பியர் எந்த உருபில் எந்த வேற்றுமையைக் கூறினால் என்ன? பொருள் செல் மருங்கில் போற்றி உணரச் சொல்கிறார். பொருள் என்பது வேற்றுமை உருபுகளால் மட்டும் அமைவதில்லை. வினைச் சொல்லாலும் பெயர்ச் சொல்லின் தன்மை (ஐnhநசநவே டநஒiஉயட கநயவரசந டிக nடிரn) யாலும் அமையக் கூடியதாகும். இதனால்தான் தொல்காப்பியர் புதைநிலை வேற்றுமை பற்றிப் பேசும் போது `வினையே செய்வது’ எனத் தொடங்குகிறார் (தொல். சொல். 108). ஏனென்றால், பெயர்ச் சொல்லின் தன்மையைவிட வினைச்சொல் தான் வேற்றுமைப் பொருளைத் தெளிவுபடத் தரவல்லது. எனவே, உருபைப் பற்றிக் கவலைப்படாமல் பொருள் எப்படி அமைகிறதோ அப்படி உணரவேண்டும். அந்த உருபுக்கு அப்பொருளை ஏற்றி அறியவேண்டும் என்ற எண்ணத்தில் தொல்காப்பியர் `யாதனுருபில் கூறிற்று ஆயினும் பொருள் செல் மருங்கில் போற்றல் வேண்டும்’ எனக் கூறுகின்றார். உரையாசிரியர்கள் தொல்காப்பிய உரையாசிரியர்களுள் தெய்வச்சிலை யாரைத் தவிர அனைவரும் வேற்றுமை உருபுகள் தம்முள் மயங்கும்போது பொருள் அடிப்படையில் வேற்றுமையை அறியவேண்டும் என்றே விளக்குகின்றனர். ஆனால் தெய்வச்சிலையார் மட்டும் வேற்றுமை உருபுகள் என்ற எல்லையைத் தாண்டி `பிற உருபோடு மயங்கும்’ எனக் கூறுகின்றார். இளம்பூரணர் பெரும்பாலும் இளம்பூரணரின் கருத்தைத்தான் பிற உரையாசிரியர்களும் கடைப்பிடிப்பது வழக்கம். இந்தச் சூத்திர உரையிலும் இதையே, காண முடிகிறது. இளம்பூரணர், உருபுகள் தமக்குரிய பொருளன்றிப் பிற உருபுகளின் பொருளையும் குறிக்கும் தன்மையுடையது என்ற அடிப்படையில் உரை செய்கின்றார். அதனால்தான், “........... உருபுகள் ஒரோவழித் தத்தம் பொருண்மை யின்றியும் மயங்குதற்குரிய” எனக் கூறுகின்றார். மேலும் இவர் உருபு எனக் கூறுகின்றாரே அன்றி வேற்றுமை உருபு அல்லது அவை அல்லாத உருபு என வெளிப்படையாக விளக்கவில்லை. ஆனாலும் இவர் தரும் எடுத்துக்காட்டு வேற்றுமை உருபுகள் தம்முள் மயங்கும் எடுத்துக்காட்டாகவே அமைகிறது. சேனாவரையர் சேனாவரையர் வெளிப்படையாக வேற்றுமை உருபு தம்முள் மயங்கும் மயக்கமாகவே இதைக் கூறுகின்றார். இவர், “உருபு தன் பொருளிற்றீர்ந்து பிறவுருபின் பொருட்டாயும் நிற்கும் என உருபு மயக்கம் கூறியவாறாயிற்று” என உருபு மயக்கத்தையும் பொருள் மயக்கத்தையும் உறழ்ந்து நோக்குகின்றார். சேனாவரையரைப் பொருத்த வரையில் இளம்பூரணரை விட சற்று விரிவான உரை தந்து செல்வது தெரிகிறது. இவர் உருபு மயக்கம், பொருள் மயக்கம் ஆகிய இரண்டையும் முறையே ஒரு தொடரின் இலக்கண உறவு (பசயஅஅயவiஉயட கரnஉவiடிn) செயற்பாட்டு அல்லது பொருண்மை உறவு (கnஉவiடியேட சநடயவiடிn) என இரண்டு அடிப்படையில் மயக்கம் தோன்றும் எனக் கூறுகின்றார். இந்த இரண்டு வகையில் பொருண்மை உறவில் தோன்றும் மயக்கமாகவே இவர் வாதிடுகின்றார். இவர் உரை. “ஒரு தொடர் யாதானும் ஓர் வேற்றுமையது உருபு கொடுத்துச் சொல்லப்பட்டதாயினும், அவ்வுருபு தன் பொருளான் அத்தொடர்ப் பொருள் செல்லாத வழிப் பொருள் செல்லும் பக்கத்து வேற்றுமையைச் சாரும்” என்று அமைவதிலிருந்து இதை அறியலாம். இவரது இவ்வுரை தொல்காப்பியத்தை அரண் செய்வதாகவே உள்ளது என்றாலும் `யாதன் உருபு’ என்பதைப் பொருத்தவரையில் இவரும் வேற்றுமை உருபு மட்டுமே என்பதுபோல் இவருடைய உரை விளங்குகிறது. நச்சினார்க்கினியர் நச்சினார்க்கினியர் உரை இளம்பூரணர் சேனாவரையர் உரைகளையே பின்பற்றினாலும் ஏனிந்த நூற்பாவை தொல்காப்பியர் படைத்தார் என்ற கேள்வியை எழுப்பிப் பதில் காண முயன்றுள்ளது. வேற்றுமை மயங்கியலுள் கூறப்படுவன எல்லாமே உருபு அல்லது பொருள் மயக்கங்கள் தானே யாதன் உருபில் கூறிற்று ஆயினும், பொருள் செல் மருங்கில் வேற்றுமை சார்வது பற்றிய இயல்தானே போன்ற ஐயங்கள் இவர் எண்ணத்தில் தோன்றவே தொல்காப்பியத்தை அரண் செய்யும் விதத்தில் இவர், “முற்கூறிய எல்லாந் தம்முன் இயைபுடைய பொருள் மயக்கமே கூறிற்று என்று உணர்க” என உரை வகுத்துள்ளார். இவர் வேற்றுமை மயக்கத்தை இயைபுi டய வேற்றுமைப் பொருள் மயக்கம் என்றும் இயைபில்லா வேற்றுமைப் பொருள் மயக்கம் என்றும் இரண்டு வகைகளாகக் கொண்டு; ‘பொருள் செல் மருங்கில் வேற்றுமை சாரும்’ என்பதை இயைபு இல்லாத வேற்றுமை மயக்கமாகவும் வேற்றுமை மயங்கியலுள் கூறிய பிற நூற்பாக்கள் யாவும் இயைபுடைய வேற்றுமை மயக்கமாகவும் கொள்கிறார். மயக்கமென்றாலே ஏதாவதொரு இயைபு இருந்தால்தான் தோன்றும் எனலாம். இயைபு இல்லை என்றால் அவை இருவேறு பொருளில்தான் கொள்ளப்படும். எனவேதான் இளம்பூரணர் `நாணற் கிழங்கு மணற்கீன்ற’ என்ற காட்டினைக் கூறி. “`மணற்கீன்ற’ என நான்காவதன் உருபு வந்தேனும், மணலுள் ஈன்ற என ஏழாவதன் உருபே கொள்க, அதற்கேற்ற பொருட்டாகலின்.” என விளக்கமும் தருகின்றார். ஓர் உருபுக்கு இயல்பான வேற்றுமைப் பொருளும், அவையன்றி இயைபினால் தோன்றும் வேற்றுமைப் பொருளும் ஆக இருவகை பொருள் ஏற்படுமாயின் அதை உருபு மயக்கம் எனச் சுட்டுவார் சேனாவரையர். “உருபு தன் பொருளிற்றீர்ந்து பிறவுருபின் பொருட்டாயும் நிற்கும் என உருபு மயக்கம் கூறியவாறாயிற்று”. என்று உரை செய்துள்ளார். `அரசர்கட் சார்ந்தான்’ என்ற உதாரணம் `அரசரைச் சார்ந்தான்’ எனும் இரண்டாவதன் பொருளில் கொள்ளப்படுவதோடு, `அரசன் கண் சார்ந்தான்’ எனும் இடப்பொருளிலும் இயைபுடையதாக வருகிறது. ஆனால், நச்சினார்க்கினியரின் இயைபில்லாத வேற்றுமை மயக்கம் எனும் வாதம் அத்துணை பொருத்த முடையதல்ல. கல்லாடரும் - ஒருவரும் பிற உரையாசிரியர்கள் கூறிய கருத்துக்களையே இவர்களும் வெளியிட்டுள்ளனர். கல்லாடர் மயக்கம் வேண்டியவாறெல்லாம் வரப்பெறாது என்றும் அது `வழக்குள் வழியதம் முடிபு’ என்றும் கூறி அமைகின்றார். தெய்வச்சிலையார் இந்த நூற்பாவுக்கு உரைகண்ட பிற உரையாசிரியர்களிலிருந்து தெய்வச்சிலையார் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் நின்று உரை வகுத்துள்ளார். இதுவே தொல்காப்பியத்தை முழுதும் உணர்ந்து அரண் செய்யும் உரையாக அமைகிறது. இவர், வேற்றுமை இலக்கணத்திற்கான (புறநிலை, புதைநிலை, வேற்றுமைப்பொருள்) அடிப்படைகளைப் புரிந்து உரை செய்வதனால் இவரது உரை தொல்காப்பியத்தை நமக்குத் தெளிவாக விளக்குகிறது. உருபும் வடிவும் தெய்வச்சிலையார் `உருபு’ எனும் சொல்லை `வடிவு’ என்ற சொல்லோடு ஒப்புமைப்படுத்துகின்றார். உருபின் பயன் அவை வேற்றுமைகளை வெளியிடும் நிலையே ஆகும். இந்த உருபுகட்கு வடிவங்கள் உண்டு. அதாவது இவை இடைச்சொல் (ஐகேடநஒiடிn) வடிவிலோ அல்லது சொல்லுருபு (ஞடிளவயீடிளவைiடிn, nடிரn, iகேinவைந எநசb நவஉ.) எனும் வடிவிலோ அல்லது சூனிய உருபு (ணநசடி டிக அயசமநச) வடிவிலோ வேற்றுருபு (டிநே ளபைn ரளநன in வாந ளநளேந டிக யnடிவாநச ளபைn) தொடர்களில் வெளிப்பட்டு வேற்றுமைப் பொருளை அடையாளம் காட்டுகின்றன. இந்த அடிப்படையை நன்கு உணர்ந்த காரணத்தால்தான் தெய்வச்சிலையார் `யாதன் உருபு’ என்பதை வேற்றுமை உருபு என்ற எல்லையிலிருந்து வெளிப்பட்டு புறநிலை வேற்றுமையை வெளிக்காட்டும் புறநிலை வேற்றுமை `வடிவம்’ என்று உரை எழுதுகின்றார். இங்கு வடிவம் என்பது பெயர், சொல்லுருபு வினையெச்ச வடிவம் போன்ற அனைத்தையும் குறிக்கும் விதத்தில் அமைகின்றது. எனவேதான் தெய்வச்சிலையார் “வேற்றுமையுருபு தம்முள் மயங்குதலின்றிப் பிற உருபோடு மயங்கும் என்பது உணர்த்துதல் நுதலிற்று” என்று கூறுகின்றார். மேலும், `வேற்றுமையல்லாத உருபு’ எனும் இவருடைய வாதம் வினையெச்ச வடிவமாகிய உருபு எனும் பொருளில் கையாளப்பட்டுள்ளது எனலாம். “யாதனுருபு என்பது வேற்றுமையல்லாத உருபு. உருபு எனினும் வடிவு எனினும் ஒக்கும். `அம்மூவுருபின தோன்றலாறே’ (சொல். பெயர். 9) என வடிவிற்குப் பெயராகிப் பிறாண்டும் வந்தது” எனும் இவர் உரை இதை மேலும் தெளிவுபடுத்துகிறது. இவை மட்டுமல்லாது இவரது எடுத்துக்காட்டுகளும் இதையே நிறுவுவனவாக அமைந்துள்ளன. வானின் றுலகம் வழங்கி வருதலான் எனவும், `மருந் துண்டு நோய் தீர்ந்தது’. எனவும் இவரது காட்டுகள் அமைந்துள்ளன. இவற்றை `மழை பெய்தலால் உலகம் வழங்கி வருதல் என்றும் `மருந்து உண்டலால் நோய் தீர்ந்தது’ என்றும் நாம் பொருள் உணர்கிறோம். இங்கு `உண்டு’ `பெய்து’ ஆகிய இரு வினையெச்சங்களே அல்லது வினையெச்ச வடிவங்களே அல்லது வினையெச்ச வேற்றுமை உருபுகளே நமக்குக் காரணவேற்றுமையைத் (உயரளயவiஎந உயளந) தருகின்றன. எனவே `யாதன் உருபு, எனும் கருத்து வேற்றுமை உருபு என்பதன் எல்லையைத் தாண்டி மொழிப் பயன்பாட்டை ஆய்ந்து கூறுவதால் தொல்காப்பியத்தை மிகவும் அரண் செய்கிறது எனலாம். இதனால்தான் சுப்பிரமணிய சாஸ்திரியார் “உரையாசிரியர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் இம்மூவர் பொருளைக் கொள்ளின் இச்சூத்திரப்பொருள் ‘அன்ன பிறவும்’ என்ற சூத்திரத்தாற் பெறப்பட்டமையின் இச்சூத்திரம் வேண்டா. தெய்வச்சிலையார் கூறிய பொருளைக் கொள்ளின் இச்சூத்திரம் ‘சொல்லுருபு முதலிய வேற்றுமைப் பொருளில் வரும் சொற்களை உணர்த்திற்று’ என்று கூறலாம்.”என வாதிடுகின்றார். அருள்ராஜ் (1991-99) தெய்வச்சிலையாரின் உரையை மேலோட்டமாகக் கண்டதனால் இடைச்சொற்கள் எவையும் வேற்றுமைப் பொருள் மயக்கத்தில் இடம்பெறாது என்பதற்கு ப் பல உதாரணங்கள் காட்டி நிறுவுவார். இவர் வேற்றுமையல்லாதன என்றவுடன் பிற இடைச் சொற்களைத்தான் குறிப்பிடுகிறார் என்று சான்றாதாரங்களைக் கொண்டு நிறுவாமல் தெய்வச் சிலையார் கூறியது குற்றம் என்று கூறுவது மொழியியல் அறிந்தவர்க்கும் தொல்காப்பிய முணர்ந்தவர்க்கும் ஏற்புடைய தன்று. இவருடைய மனதில் தொல்காப்பியரின் `இடைச்சொல் எல்லாம் வேற்றுமைச் சொல்லே’ எனும் கருத்து மேலிட்டதால் பிற இடைச்சொற்களாகிய உருபுகளை (ஐகேடநஒiடிளே) யாதன் உருபு என எண்ணித் தடுமாறியுள்ளார் என்பது தெரிகிறது. வேற்றுமை மயங்கியல், இரண்டாம் வேற்றுமை எவ்வெவ் வேற்றுமையோடு மயங்கும் என்றும், மூன்றாம் வேற்றுமை எவ்வெவ் வேற்றுமையோடு மயங்கும் என்றும், நான்காம் வேற்றுமை எவ்வெவ் வேற்றுமையோடு மயங்கும் என்றும் ஐந்து, ஆறு, ஏழு ஆகிய வேற்றுமைகளும் எவ்வெவ் வேற்றுமைகளோடு மயங்கும் என்றும் விரிவாகச் சொல்கின்றது. இப்படிச் சொல்லி விட்டு உருபு மயக்கம் பொருள் மயக்கம் இரண்டையும் விளக்கி விட்டு தொல்காப்பியம் மீண்டும் அதே கருத்தை இச் சூத்திரத்திலும் கூறுவதாகக் கொண்டால், கூறியது கூறும் பிழையாகத்தான் அமையும். ஆராய்ச்சிக்கு அடிகோள் தொல்காப்பிய நூற்பாக்கள் ஆராய ஆராய புதுப்புது மொழிக் கோட்பாடுகளைத் தந்துகொண்டே இருக்கும் தன்மையையுடையன. அதேபோல் தெய்வச்சிலையாரின் உரையும் படிக்கப் படிக்க புதுத் தெளிவையும் ஆராய்ச்சி மனப்பாங்கையும் வளர்க்கும் சிறப்புடையது. உருபு என்பதை `வடிவம்’ என்ற அடிப்படையில் நோக்க வேண்டும் என்று தெய்வச்சிலையார் கூறியதாலும், அதற்கு வினையெச்சங்கள் அடங்கிய எடுத்துக்காட்டுகளைக் கொடுத்திருப்பதாலும் இவர் உரை நம்மை மேலும் சிந்திக்க அல்லது ஆராய்ச்சியில் இறங்கச் செய்கிறது. செயவென் வினையெச்சமும், செய்து வினையெச்சமும் முறையே குறிவேற்றுமையையும் காரணவேற்றுமையையும் தன் புதை நிலையில் கொண்டுள்ளது போல் பிற வினையெச்ச வாய்பாடுகளும் எதையோ தன்னுள் கொண்டு இருக்கலாம் என்ற உள்ளுணர்வைத் தூண்டும் வகையில் அமைகிறது. இது வரலாற்று முறை மொழியியல் ஆய்வில் தமிழ் மொழியின் மாற்றங்களைக் கண்டறியத் தூண்டுவதாகும். - ஆ.கோ. நடராசன் அண்ணாமலைநகர் பக். 357-376 நூற்பா நிரல் (நூற்பா எண்) அ ஆ வ என-சொல்லே 9 அ ஆ வ என-படர்க்கை 210 அ எனப் பிறத்தல் 106 அச்சக் கிளவிக்கு 95 அச்சம் பயமிலி 251 அடிமறிச் செய்தி 403 அடைசினை முதலென 26 அண்மைச் சொல்லிற்கு 127 அண்மைச் சொல்லே 123 அத்திணை மருங்கின் 213 அதற்குவினை யுடைமையின் 74 அதனி னியறல் 72 அதிர்வும் விதிர்ப்பும் 314 அதுஇது உதுவென 163 அதுச்சொல் வேற்றுமை 207 அதுவென் வேற்றுமை 96 அந்தில் ஆங்கு 264 அந்நாற் சொல்லும் 399 அப்பொருள் கூறின் 34 அம் ஆம் எம் ஏம் 196 அம்மகேட் பிக்கும் 272 அம்ம வென்னும் 149 அம்முக் கிளவியும் 225 அமர்தல் மேவல் 376 அயல்நெடி தாயின் 141 அர் ஆர் ப என 200 அரியே ஐம்மை 352 அலமரல் தெருமரல் 308 அவ்வச் சொல்லிற்கு 291 அவ்வழி, அவன்இவன் 158 அவ்வே, இவ்வென 116 அவற்றின் வரூஉம் 286 அவற்றுள், அழுங்கல் 346 அவற்றுள், அன்னெ னிறுதி 126 அவற்றுள், இ ஈ யாகும் 118 அவற்றுள், இ உ ஐ ஓ 117 அவற்றுள், இகுமுஞ் 271 அவற்றுள், இயற்சொல் 394 அவற்றுள், இரங்கல் 355 அவற்றுள், எழுவாய் 63 அவற்றுள், செய்கென் 198 அவற்றுள், செய்யும் 232 அவற்றுள், தடவென் 319 அவற்றுள், நான்கே 171 அவற்றுள், நிரனிறை தானே 401 அவற்றுள், நீஎன் கிளவி 184 அவற்றுள், பன்மை 203 அவற்றுள், பிரிநிலை எச்சம் 424 அவற்றுள், பெயரெனப் 156 அவற்றுள், முதனிலை 224 அவற்றுள், முன்னிலைக் கிளவி 217 அவற்றுள், முன்னிலை தன்மை 220 அவற்றுள், யாதென வருஉம் 30 அவற்றுள், விறப்பே 344 அவற்றுள், வினைவேறு 51 அவற்றுள், வேற்றுமைத் 408 அவற்றொடு வருவழி 229 அவைதாம், தத்தங் கிளவி 245 அவைதாம், தத்தங் குறிப்பின் 433 அவைதாம், தத்தம் பொருள் 112 அவைதாம், புணரியல் 247 அவைதாம், பெண்மை 172 அவைதாம், பெயர் ஐ 62 அவைதாம், முன்மொழி 414 அவைதாம், முன்னும் 248 அவைதாம், வழங்கியன் 110 அவையல் கிளவி 435 அளபெடைப் பெயரே 131, 137, 145 அளபெடை மிகூஉம் 121 அளவும் நிறையும் 113 அன் ஆன் அள் ஆள் 199 அன்மையின் இன்மையின் 208 அன்ன பிறவும் அஃறிணை 166 அன்ன பிறவும் உயர்திணை 162 அன்ன பிறவும்-கிளந்த 392 அன்ன பிறவும் தொன்னெறி 98 ஆஓ ஆகும் 189 ஆக்கக் கிளவி 22 ஆக்கந் தானே 21 ஆக ஆகல் 276 ஆங்க உரையசை 273 ஆடூஉ வறிசொல் 2 ஆண்மை சுட்டிய 177 ஆண்மை திரிந்த 12 ஆண்மை யடுத்த 159 ஆயென் கிளவியும் 206 ஆரும் அருவும் 134 ஆவோ வாகும் 189 ஆறன் மருங்கின் 97 ஆறா குவதே 77 ஆனெ னிறுதி 128 இசைத்தலும் உரிய 58 இசைநிறை யசைநிலை 418 இசைப்படு பொருளே 419 இசைப்பிசை யாகும் 307 இடைச்சொல் லெல்லாம் 445 இடைச்சொற் கிளவியும் 155 இடையெனப் படுவ 246 இதன திதுவிற்று 107 இதுசெயல் வேண்டும் 237 இயற்கைப் பொருளை 19 இயற்கையி னுடைமையின் 78 இயற்சொல் திரிசொல் 393 இயற்பெயர்க் கிளவியுஞ் 36 இயற் பெயர் சினைப்பெயர் 170 இயற்பெயர் முன்னர் 267 இயைபே புணர்ச்சி 306 இர் ஈர் மின் என 218 இரட்டைக் கிளவி 46 இரண்டன் மருங்கின் 90 இரண்டா குவதே 69 இருதிணைச் சொற்கும் 168 இருதிணைப் பிரிந்த 157 இருதிணை மருங்கின் 10 இருபெயர் பலபெயர் 412 இலம்பா டொற்கம் 356 இறப்பின்-நிகழ்வின் எதிர்வின் என்றச் 243 இறப்பின்-நிகழ்வின் எதிர்வின் என்றா 194 இறப்பே யெதிர்வே 241 இறுதியு மிடையும் 100 இறைச்சிப் பொருள்வயின் 190 இன்றில வுடைய 214 இன்ன பெயரே 187 இனச்சுட் டில்லா 18 இனைத்தென வறிந்த 31 ஈதா கொடுவென 437 ஈரள பிசைக்கும் 277 ஈற்றுநின் றிசைக்கும் 282 ஈற்றுப்பெயர் முன்னர் 92 உகப்பே உயர்தல் 302 உசாவே சூழ்ச்சி 366 உணர்ச்சி வாயி 389 உம்உந் தாகும் 288 உம்மை எச்சம் 429 உம்மை எண்ணின் 287 உம்மை எண்ணும் 283 உம்மை தொக்க 285 உயர்திணை மருங்கின் 416 உயர்திணை மருங்கினும் 48 உயர்திணை யென்மனார் 1 உயாவே யுயங்கல் 365 உரிச்சொற் கிளவி 293 உரிச்சொல் மருங்கினும் 446 உருபு தொடர்ந்தடுக்கிய 99 உருபென மொழியினும் 24 உருவுட் காகும் 296 உரையிடத் தியலும் 448 உவப்பே உவகை 303 உவமத் தொகையே 409 உளவெனப் பட்ட 148 உறுதவ நனியென 295 எச்ச உம்மையும் 279 எச்சம் சிறப்பே 252 எஞ்சிய இரண்டன் 140 எஞ்சிய கிளவி 219 எஞ்சிய மூன்றும் 432 எஞ்சு பொருட்கிளவி 280 எடுத்த மொழிஇனஞ் 59 எண்ணுங் காலை 45 எண்ணே காரம் 284 எதிர்மறுத்து மொழியினுந் 104 எதிர்மறை எச்சம் 428 எப்பொரு ளாயினும் 33 எய்யா மையே 338 எல்லாச் சொல்லும் 151 எல்லாத் தொகையும் 415 எல்லா மென்னும் 182 எல்லாரும் என்னும் 160 எல்லே இலக்கம் 266 எவ்வயிற் பெயரும் 66 எவ்வயின் வினையும் 244 எழுத்துப்பிரிந் திசைத்தல் 391 எற்றம் நினைவும் 333 எற்றென் கிளவி 260 எறுழ்வலி யாகும் 384 என்றும் எனவும் 290 என்றென் கிளவியும் 256 எனவென் னெச்சம் 431 ஏபெற் றாகும் 301 ஏவுங் குரையும் 268 ஏழா குவதே 79 ஏனை உயிரே 120 ஏனைக் காலமும் 242 ஏனைப் புள்ளி 125 ஏனை யுருபும் அன்ன 108 ஏனை யெச்சம் 226 ஐந்தா குவதே 75 ஐயமும் கரிப்பும் 380 ஐயுங் கண்ணும் 102 ஐவியப் பாகும் 381 ஒப்பில் போலியும் 274 ஒருபெயர்ப் பொதுச்சொல் 47 ஒருபொருள் - இலவே 40 ஒருபொருள் - கிளவி 395 ஒருபொரு ளிருசொல் 450 ஒருமை சுட்டிய எல்லாப் 179 ஒருமை சுட்டிய பெயர்நிலை 451 ஒருமை யெண்ணின் 42 ஒருவர் என்னும் 185 ஒருவரைக் கூறும் 27 ஒருவினை ஒடுச்சொல் 88 ஒழியிசை எச்சம் 427 ஒன்றறி கிளவி 8 ஒன்றறி சொல்லே 3 ஒன்றன் படர்க்கை 211 ஒன்றுவினை மருங்கின் 52 ஓம்படைக் கிளவிக்கு 93 ஓய்தல் ஆய்தல் 326 ஓவும் உவ்வும் 119 கடதற என்னும் 197 கடிசொல் லில்லை 442 கடியென் கிளவி 379 கண்கால் புறம்அகம் 80 கண்டீர் என்றா 421 கண்ணுந் தோளும் 60 கதழ்வும் துனைவும் 313 கம்பலை சும்மை 345 கமம்நிறைந் தியலும் 351 கரும மல்லாச் 82 கருவி தொகுதி 350 கவர்புவிருப் பாகும் 358 கவவகத் திடுமே 353 கழிவே ஆக்கம் 249 கழுமென் கிளவி 347 கள்ளொடு சிவணும் 165 கறுப்புஞ் சிவப்பும் 368 கன்றலும் செலவும் 84 காப்பி னொப்பின் 70 காலந் தாமே 193 காலம் உலகம் 56 கிளந்த இறுதி 146 கிளந்த வல்ல அன்ன பிறவும் 292 கிளந்தவல்ல வேறுபிற 114 குஐ ஆன்என 105 குடிமை யாண்மை 55 குத்தொக வரூஉங் 94 குருவும் கெழுவும் 298 குறித்தோன் கூற்றம் 54 குறிப்பினும் வினையினும் 195 குறைச்சொற் கிளவி 443 குறைந்தன வாயினும் 444 கூர்ப்பும் கழிவும் 312 கூறிய கிளவி 386 கூறிய முறையின் 67 கெடவரல் பண்ணை 317 கேட்டை என்றா 422 கொடுவென் கிளவி 438 கொல்லே ஐயம் 265 சாயல் மென்மை 321 சிதைந்தன வரினும் 398 சிறப்பின் ஆகிய 39 சினைநிலைக் கிளவிக்கு 83 சீர்த்தி மிகுபுகழ் 310 சுட்டுமுத லாகிய 38 சுட்டுமுதற் பெயரும் 144 சுட்டுமுதற் பெயரே 138 சுண்ணந் தானே 402 செந்தமிழ் சேர்ந்த 396 செப்பினும் வினாவினுஞ் 16 செப்பும் வினாவும் 13 செப்பே வழீஇயினும் 15 செய்து செய்யூ 222 செய்தெ னெச்சத்து 233 செய்யாய் என்னும் 440 செய்யுண் மருங்கினும் 453 செயப்படு பொருளைச் 240 செயற்கைப் பொருளை 20 செல்லல் இன்னல் 299 செலவினும் வரவினும் 28 செழுமை வளனும் 348 சேரே திரட்சி 359 சொல்லென் எச்சம் 434 சொல்லெனப் படுப 154 ஞெமிர்தலும் பாய்தலும் 357 தகுதியும் வழக்கும் 17 தஞ்சக் கிளவி 263 தடவும் கயவும் 318 தடுமாறு தொழிற்பெயர்க்கு 91 தத்தம் எச்சமொடு 231 தநநு எஎன 150 தநநு எஎனும் 406 தன்மேற் செஞ்சொல் 430 தன்மைச் சொல்லே 41 தன்மை சுட்டலும் 25 தன்மை சுட்டின் 186 தாமென்கிளவி 180 தாவே வலியும் 340 தான்என் கிளவி 181 தானென் பெயரும் 133 திணையொடு பழகிய 191 தீர்தலும் தீர்த்தலும் 316 துயவென் கிளவி 364 துவன்று நிறைவாகும் 328 துவைத்தலும் சிலைத்தலும் 354 தெரிநிலை யுடைய 167 தெரிபுவேறு நிலையலும் 153 தெவ்வுப்பகை யாகும் 342 தெவுக்கொளற் பொருட்டே 341 தெளிவின் ஏவும் 258 தேற்றம் வினாவே 254 தொழிலிற் கூறும் 129 தொழிற்பெய ராயின் 135 நம்பும் மேவும் 325 நன்றீற்று ஏவும் 278 நன்றுபெரி தாகும் 339 நனவே களனும் 372 நான்கா குவதே 73 நிகழூஉ நின்ற 169 நிரனிறை சுண்ணம் 400 நிலப்பெயர் குடிப்பெயர் 161 நிலனும் பொருளும் 228 நிறத்துரு வுணர்த்தற்கும் 369 நின்றாங் கிசைத்தல் 57 நீயிர் நீயென 183 நும்மின் திரிபெயர் 139 நொசிவும் நுழைவும் 370 பசப்புநிற னாகும் 305 படரே உள்ளல் 336 பண்புகொள் பெயரும் 130, 136 பண்புதொக வரூஉம் 413 பணையே பிழைத்தல் 335 பயப்பே பயனாம் 304 பரவும் பழிச்சும் 378 பல்ல பலசில 164 பல்லோர் படர்க்கை 221 பலவயி னானும் 49 பழுது பயனின்றே 320 பன்முறை யானும் 227 பன்மை சுட்டிய 178 பன்மையும்-டிலவே 209, 215 பன்மையும்-யவ்வே 202, 212 பாலறி மரபின் 205 பான்மயக் குற்ற 23 பிண்டப் பெயரும் 87 பிணையும் பேணும் 334 பிரிநிலை வினாவே 253 பிரிநிலை வினையே 423 பிறிதுபிறி தேற்றலும் 101 பின்முன் கால்கடை 223 புதிதுபடற் பொருட்டே 375 புரைஉயர் பாகும் 297 புலம்பே தனிமை 327 புள்ளியும் உயிரும் 147 புனிறென் கிளவி 371 பெண்மைச் சினைப்பெயர் 173 பெண்மை சுட்டிய எல்லா 176 பெண்மை சுட்டிய சினை 174 பெண்மை சுட்டிய வுயர் 4 பெண்மை முறைப்பெயர் 175 பெயர்நிலைக் கிளவி 68 பெயர்நிலைக் கிளவியின் 439 பெயரி னாகிய 65 பெயரெஞ்சு கிளவி 426 பெயரெஞ்சு கிளவியும் 230 பேஎநாம் உருமென 361 பையுளுஞ் சிறுமையும் 337 பொருட்குத் திரிபில்லை 388 பொருட்குப்பொருள் 387 பொருடெரி மருங்கின் 404 பொருண்மை சுட்டல் 64 பொருண்மை தெரிதலும் 152 பொருளொடு புணரா 35 பொற்பே பொலிவு 331 மகடூஉ மருங்கிற் 188 மதவே மடனும் 373 மல்லல் வளனே 300 மழவும் குழவும் 309 மற்றென் கிளவி 259 மற்றைய தென்னும் 261 மறைக்குங் காலை 436 மன்றவென் கிளவி 262 மன்னாப் பொருளும் 32 மாதர் காதல் 324 மாரைக் கிளவியும் 201 மாலை இயல்பே 311 மாவென் கிளவி 269 மிக்கதன் மருங்கின் 236 மிகுதியும் வனப்பும் 374 மியாயிக மோமதி 270 முதலிற் கூறும் 111 முதலும் சினையும் 86 முதற்சினைக் கிளவிக்கு 85 முந்நிலைக் காலமும் 234 முரஞ்சல் முதிர்வே 329 முழுதென் கிளவி 322 முற்படக் கிளத்தல் 37 முற்றிய உம்மை 281 முறைப்பெயர்க்-ஏயொடு 132 முறைப்பெயர்க்-முறைப் 143 முறைப்பெயர்-மருங்கின் 122 முன்னத்தி னுணரும் 449 முன்னிலைச் சுட்டிய 452 முன்னிலை முன்னர் 441 முன்னிலை வியங்கோள் 216 முனைவு முனிவாகும் 382 மூன்றனும் ஐந்தனும் 89 மூன்றா குவதே 71 மெய்பெறக் கிளந்த 385 மொழிப்பொருட் காரணம் 390 மொழிமாற் றியற்கை 405 யாஅ ரென்னும் 204 யாகா பிறபிறக்கு 275 யாணுக் கவினாம் 377 யாத னுருபிற் 103 யாதெவன் என்னும் 29 ரஃகான் ஒற்றும் 7 வடசொற் கிளவி 397 வண்ணத்தின் வடிவின் 411 வண்ணம் வடிவே 76 வம்புநிலை யின்மை 323 வயவலி யாகும் 362 வயாவென் கிளவி 367 வறிதுசிறி தாகும் 332 வன்புற வரூஉம் 238 வார்தல் போகல் 315 வாராக் காலத்தும் 235 வாராக் காலத்து வினைச் 239 வாரா மரபின 417 வாளொளி யாகும் 363 வியங்கோள் எண்ணுப்பெயர் 43 வியலென் கிளவி 360 விரைசொல் அடுக்கே 420 விழுமம் சீர்மையும் 349 விழைவின் தில்லை 257 விழைவே காலம் 250 விளியெனப் படுப 115 விறப்பும் உறப்பும் 343 வினாவுஞ் செப்பே 14 வினையிற் றோன்றும் 11 வினையின் றொகுதி 410 வினையினும் பண்பினும் 142 வினையெஞ்சு கிளவிக்கு 425 வினையெஞ்சு கிளவியும் 447 வினையெனப் படுவது 192 வினையே குறிப்பே 255 வினையே செய்வது 109 வினையொடு நிலையினும் 289 வினைவேறு படாஅ 53 வினைவேறு படூஉம் 50 வெம்மை வேண்டல் 330 வெளிப்படு சொல்லே 294 வேற்றுமைத் தொகையே 407 வேற்றுமை தாமே 61 வேற்றுமைப் பொருளை 81 வேறுவினைப் பொதுச்சொல் 44 வையே கூர்மை 383 ளஃகான் ஒற்றே 6 னஃகான் ஒற்றே 5 னரலள வென்னு 124 சொல் நிரல் மேற்கோள் (நூற்பா எண்) அ அஃது 163 அகம் 167 அத்தன்மைய 163 அத்தன்மையது 163 அத்தன்மையர் 138 அத்தன்மையள் 159 அத்தன்மையன் 133 அத்தன்மையார் 138 அத்தன்மையாள் 159 அத்தன்மையான் 133 அது 8, 163 அதுமன் 248 அந்தணர் 161 அந்தணன் 161 அந்தணி 161 அமைச்சன் 161 அரிமானே 147 அரிவாள் 410 அரை 412 அல்லன் 208 அலி 4 அவ் 163 அவர் 7,138 அவள் 6 அவை 163 அறி 217 அன்றில் 190 அன்ன 214 அன்னது 214 அன்னா 122 அன்னாய் 122 அன்னார் 159 அன்னாள் 159 அன்னான் 159 அனைய 214 அனையது 214 அனையார் 159 அனையாள் 159 அனையான் 133,159 ஆ ஆ 167 ஆக்கள் 165 ஆசிரியன் 162 ஆடல்பாடல் 412 ஆடூ 10, 159 ஆண்மகன் 159 ஆதிரையான் 162 ஆவன் 208 ஆழி 395 இ இஃது 163 இடையாள் 162 இது 163 இரண்டு 8,412 இருவர் 42 இல்ல 164 இல்லது 166 இலன் 208 இலை 167 இவ் 163 இவர் 7,138,158 இவள் 158 இவன் 133,158 இவை 163 இன்று 215 ஈ ஈ 217 உ உஃது 163 உண் 217 உண்கின்றனம் 196 உண்கின்றனர் 199 உண்கின்றனள் 199 உண்கின்றனன் 199 உண்கின்றாம் 196 உண்கின்றார் 196 உண்கின்றாள் 199 உண்கின்றனெம் 196 உண்கின்றனன் 197 உண்கின்றேம் 196 உண்கின்றேன் 197 உண்கும் 196 உண்குவ 210,243 உண்குவம் 247 உண்குவென் 197 உண்டது 8,211,243 உண்டல் 167 உண்டவர் 161 உண்டவள் 161 உண்டவன் 161 உண்டன 9,210,243 உண்டனர் 200 உண்டனள் 199 உண்டனன் 199 உண்டனெம் 196 உண்டனென் 197 உண்டனை 217 உண்டாம் 196 உண்டாய் 129,142,217 உண்டாயோ 253 உண்டார் 200 உண்டாள் 6,199 உண்டான் 5,153,199 உண்டும் 196 உண்டேம் 196 உண்டேன் 197 உண்ணலிர் 218 உண்ணலெம் 196 உண்ணலென் 197 உண்ணன்மின் 218 உண்ணா 9,210 உண்ணா நின்றது 8,211,243 உண்ணா நின்றன 9,210,243 உண்ணா நின்றார் 7,200 உண்ணா நின்றாள் 6 உண்ணா நின்றான் 199 உண்ணார் 200 உண்ணாள் 199 உண்ணான் 199 உண்ணேன் 197 உண்ணேனோ 253 உண்ப 7,200 உண்பது 8,211,243 உண்பம் 196 உண்பர் 200 உண்பல் 197 உண்பள் 199 உண்பன் 199 உண்பன 9,210 உண்பாள் 6,199 உண்பான் 5,199 உண்பெம் 196 உண்பேம் 196 உண்பேன் 197 உண்மின் 218 உது 163 உவ் 163 உவர் 138 உவள் 144 உவன் 133 உவை 163 உழுதது 164 உள்ள 164 உளன் 208 எ எம 406 எமது 406 எமர் 150,406 எமள் 150,406 எமன் 150,406 எல்லாம் 125 எல்லாரும் 125 எல்லீரும் 125 ஏ ஏ 217 ஏட 149 ஏடா 149 ஏடி 149 ஏடீ 149 ஏனாதி 162 ஐ ஐவர் 412 ஐயோ 396 ஒ ஒருத்தி 42 ஒருவர் 42 ஒருவன் 42 ஒன்று 8,412 ஓ ஓடல் 167 ஓடவல்ல 215 ஓடவல்லாது 215 ஓடவல்லா 215 ஓடவற்று 215 ஓடி 447 ஓணத்தான் 162 க கண்ணன்னான் 159 கண்போல்வான் 159 கந்தம் 398 கபிலபரணர் 412 கரிய 9,243 கரியது 243 கரியம் 243 கரியர் 7 கரியவரே 136 கரியள் 6 கரியன் 5,243 கரியாய் 130,142,217 கரியான் 161 கரியீர் 136 கரியீரே 136 கரியேன் 243 கரியை 217,243 கருத்தி 217 கருமை 167 கரைய 396 கலம் 412 கழஞ்சு 412 கழலாய் 129 கழுதை 114 காரி 164 கால் 412 கிழவோன் 189 கிழாஅன் 131 கிளியார் 267 குங்குமம் 397 குட்டுவன் 161 குண்டுகட்டு 8,215 குதிரை 68 குயிலே 147 குரங்கன் 159 குரங்கி 159 குருசில் 140 குருசீல் 140 குருடா 146 குருடீ 146 குருணி 412 குழலள் 162 குழலாள் 162 குழையார் 161 குழையாள் 161 குழையான் 161 குளம் 395 குறுந்தாட்டு 214 குறுந்தாள 214,215 குன்றி 412 கூட்டு 217 கூயிற்று 211 கேண்மியா 248 கை 173 கொக்கு 396 கொய்குவம் 447 கொய்ய 447 கொல்கொலை 410 கொல்யானை 410 கொள் 217 கொற்றா 148 கோஒன் 131 கோதை 172 கோமாள் 141 கோவே 119 கௌ 217 ச சாகரம் 398 சாத்த 127 சாத்தற்கு 62 சாத்தன் 62,172 சாத்தன்கண் 62 சாத்தனது 62 சாத்தனின் 62 சாத்தனை 62 சாத்தனொடு 62 சாத்தா 146 சாத்தாஅஅ 148 சாத்தி 172 சாத்தியார் 267 சான்றோர் 412 சிங்கம் 114,191 சில 9,164 சிறாஅர் 137 செப்பு 396 செம்போத்து 18 செய்பவை 219 செய்யா 447 செய்யுமவை 219 செய்யூ 447 செய்வது 219 செய்வன 219 செல் 217 செல்லிடம் 410 செவியிலி 174 சென்று 197 சேரமான் 128 சேரலன் 161 சேவல் 53 சோணாட்டார் 161 சோணாட்டாள் 161 சோணாட்டான் 161 சோழன் 161 ஞ ஞாய் 406 ஞாழல் 190 த தந்தாய் 118 தந்தை 118,406 தந்தைமார் 7,161 தந்தையர் 161 தம்பி 406 தம்முன் 406 தம 406 தமது 406 தமர் 150,162,406 தமள் 150,162,406 தமன் 150,162,406 தாம் 125 தாய் 175,406 தாய்மார் 7,161 தாயர் 161 தான் 133 திங்கள் 167 திரு 114 திருவினாள் 6 தின் 217 தின்றான் 153 தீ 153 தீயான் 161 தும்பி 147 தூங்கல் 174 தூணி 412 தெங்கு 68,167 தெங்குகள் 165 தென்றால் 147 தொடியாள் 189 தொழீஇ 121 தோன்றால் 140 தோளாள் 162 ந நங்காய் 118 நங்கை 159 நங்கையார் 267 நட்டம் 397 நட 217 நம்பியார் 7, 267 நம்பீ 118 நமர் 150 நமள் 150 நமன் 150 நல்லார் 161 நல்லாள் 161 நல்லான் 161 நாச்சி 162 நாம் 125 நாயன் 162 நாரை 190 நிலம் 153 நீ 120 நீயிர் 139 நீர் 153 நீலம் 111 நுந்தை 406 நும்பி 406 நும்முன் 406 நும 406 நுமது 406 நூறு 412 நெடிய 9 நெடியர் 7 நெடியன் 5 நெடியான் 161 ப பட்டினம் 397 படைத்தலைவன் 162 பத்து 412 பதக்கு 412 பதினைவர் 412 பதின்மர் 412 பல்ல 164 பல 9,164 பலர் 161 பவளம் 398 பாண்டியன் 5,161 பாண்டில் 396 பார்ப்பார் 412 பார்ப்பீர் 134 பிற 166 பிறர் 162 பிறள் 162 பிறன் 162 பிறிது 166 புலவன் 162 புலியே 147 புறம் 167 புன்னை 190 பூ 167 பூழியன் 161 பெடை 50 பெண்டாட்டி 159 பெண்டிர் 162 பெண்டீர் 134 பெண்டுகள் 162 பெண்பால் 141 பெண்மகள் 159 பெண்மகன் 160 பெற்றம் 50 பேடி 4 பொல்லா 215 பொன்போல்வது 164 பொன்னனையது 164 போ 217 போய் 447 ம மக்கள் 10,50,159 மக்காள் 140 மகடூ 10,120,159 மகள் 159 மகளே 143 மகன் 159 மகனே 132 மகாஅர் 137 மஞ்சாடி 412 மணி 397 மதுரையார் 161 மதுரையாள் 161 மதுரையான் 161 மயில் 191 மயிலார் 267 மரம் 10 மரமே 147 மரை 190 மரையே 147 மலை 395 மலையமான் 128 மா 50,68 மாடத்த 215 மாத்தது 215 மாந்தர் 159 மாயவன் 5 மாவே 147 மான் 190 மானே 147 முடத்தி 174 முடத்தியார் 267 முடவன் 174 முடவனார் 267 முத்து 398 முதல 215 முதற்று 215 முயல் 190 முலை 173 மூவர் 42 மேல 215 மேற்று 215 மோவாய் 173 ய யா 9,163 யாண்டு 161 யாது 163 யாம் 125 யாவர் 139 யாவள் 144 யாவன் 133 யாவை 163 யான் 133, 158 யானாய் 147 யானை 68, 172, 191 வ வட்டம் 167, 397 வண்டே 147 வந்தது 164 வந்தவரே 135 வந்தாய் 129 வந்தாரே 135 வந்து 197 வருவ 9 வருவோம் 203 வல்லன் 208 வல்லான் 208 வளி 153 வா 217 வாரேனோ 253 வில்லான் 189 வில்லி 161 வெள்ளை 164 வெற்ப 127 வெற்பா 126 வேங்காய் 147 வேங்கை 50 வேந்தே 119 வேலான் 161 வேனிலான் 162 வை 217 சொற்றொடர் நிரல் மேற்கோள் (நூற்பா எண்) அ அடைக்காயை எண்ணும் 70 அண்ணல் கூறு 123 அணி வந்தான் 226 அது அன்று 214 அது இல்லை 219 அது வேறு 219 அந்தணர்க்குக் கொடான் 104 அந்தணர்க்குக் கொடுத்தான் 73 அமைச்சு வந்தது 55 அரங்கின்கண் வனைந்தான் 79 அரங்கின் தெற்கு இருந்தான் 80 அரங்கின் வடக்கு இருந்தான் 80 அரசன் உழை இருந்தான் 80 அரசன் கண் சென்றான் 80 அரசன் முன் இருந்தான் 80 அரசு இருந்தது 55 அரிசியை அளக்கும் 70 அவர் ஆம் 219 அவர் இல்லை 219 அவர் கூட்டு 219 அவர் யார் 204 அவர் வேறு 219 அவள் இல்லை 219 அவள் யார் 204 அவள் வேறு 219 அவர்குக் கொடுத்தது 28 அவர்குச் சென்றது 28 அவர்குத் தந்தது 28 அவர்குப் போக்கு 28 அவர்கு வந்தது 28 அவர்கு வரவு 28 அவனில்லை 219 அவன் உண்டது 11 அவன் செய்ம்மன 219 அவன் மேய்ந்தான் 11 அவன் யார் 204 அவன் வேறு 219 அவனே செய்தான் 254 அவை அல்ல 214 அவை இல்லை 219 அவை எழுந்தது 55 அவை வேறு 219 அறத்தை ஆக்கும் 70 அறத்தைக் காதலிக்கும் 70 அன்னம் கூறு 123 ஆ ஆகாயம் நிற்கும் 19 ஆகொண்மார் வந்தார் 201 ஆசிரியன் வந்தான் 40 ஆசையைக் குறைக்கும் 70 ஆடகத்தைப் பூணும் 70 ஆடை சாத்தனது 102 ஆடை நன்றாயிருந்தது 22 ஆடையை நெய்தான் 110 ஆண் வந்தது 55 ஆ வந்தது 167 ஆ வந்தன 167 ஆவிற்கு முலை நான்கு 31 ஆவினது கன்று 78 ஆவினது பால் 78 இ இஃதொரு வேல் 111 இஃதோரம்பு 111 இசையைப் பாடும் 70 இதனின் அஞ்சும் 76 இதனின் ஆக்கும் 76 இதனின் இழிந்தது 76 இதனின் இளைது 76 இதனின் கடிது 76 இதனிற் கரிது 76 இதனிற் கைக்கும் 76 இதனிற் சிறந்தது 76 இதனிற் சிறிது 76 இதனிற் தண்ணிது 76 இதனிறீது 76 இதனிறீரும் 76 இதனின் நன்று 76 இதனின் நாறும் 76 இதனின் நெடிது 76 இதனிற் பழைது 76 இதனிற் பற்றுவிடும் 76 இதனிற் புதிது 76 இதனிற் பெரிது 76 இதனின் முதிது 76 இதனின் மெலிது 76 இதனின் வட்டம் 76 இதனின் வலிது 76 இதனின் வெய்து 76 இது கரிது 214 இது நெடிது 214 இந் நிலம், ஒருமா 113 இப்பொன் கழஞ்சு 113 இப்பொன் கால் 113 இம்மனை முக்கால் 113 இருந்தான் குன்றத்துக்கண் 102 இருப்பேனோ பேவேனோ 17 இரும்பு பொன்னாயிற்று 64 இவரிற் பலர் 76 இவற்றிற் சில 76 இவற்றிற் காக்கும் 76 இவன் திருவுடையன் 207 இவன் நெருப்பு 153 இவன் பசு 153 இவனிற் பண்ணும் 76 இவனிற் பாடும் 76 இவனின் இலன் 76 இவனின் உடையன் 76 இனிக் கொண்டான் 226 உ உடம்பு விட்டது 58 உண்ட இல் 229 உண்ட ஊண் 229 உண்ட கலம் 229 உண்ட காலம் 229 உண்ட சோறு 229 உண்டாயோ மகளே 218 உண்டாயோ மகனே 218 உண்டாயோ குயிலே 218 உண்டான் சாத்தன் 245 உண்டீரோ கிளிகாள் 218 உண்டீரோ மக்காள் 218 உண்ணாச் சாத்தன் 230 உண்ணாத சாத்தன் 230 உண்ணாது வந்தான் 230 உண்ணும் இல் 229 உண்ணும் ஊண் 229, 252 உண்ணுங் கலம் 229 உண்ணும் காலம் 229 உண்ணுஞ் சோறு 229 உண்பு வந்தான் 224 உயிர் உணரும் 19 உயிர் போயிற்று 58 உலகு கிடந்தது 58 உலகு வாழ்ந்தது 55 உளன் சாத்தன் 64 ஊ ஊரின் நீங்கான் 104 ஊர் வந்தது 55 ஊரைக் காக்கும் 70 ஊரோ காடோ 17 எ எண்ணது சாந்து 78 எயிலகத்துப் புக்கான் 80 எல்லாம் வந்தன 182 எல்லாம் வந்தீர் 182 எல்லாம் வந்தேம் 182 என்கண் வந்தது 55 என் பாவை வந்தது 55 என் யானை வந்தது 55 எனக்குக் கொடுத்தது 28 எனக்குச் சென்றது 28 எனக்குத் தந்தது 28 எனக்கு வந்தது 28 ஒ ஒரு பெண் வந்தது 55 ஒருவர் வந்தார் 186 ஒல்லென்று ஒலித்தது 256 ஒற்று வந்தது 55 ஓ ஓஒ கொடியை 248 க கடந்தான் நிலத்தை 102 கடவுள் வாழி 123 கடிசூத்திரத்துக்குப் பொன் 74 கடுவினது காய் 111 கண்ணான் நல்லன் 72 கண் நல்லன் 60 கண் நொந்தது 60 கண் நொந்தான் 60 கணையை நோக்கும் 70 கபிலபரணர் வந்தார் 416 கரிதன்று வெளிது 17 கரிதோ வெளிதோ 17 கரியன் சாத்தன் 64 கருங்குதிரை வந்தது 415 கரும்பிற்கு உழுதான் 74 கரும்பினது சாறு 78 கல்வியை உடையன் 70 கலத்தின் இடைநின்றான் 80 கலத்தின் கடை நின்றான் 80 கலத்தின் தலை நின்றான் 80 கழஞ்சரை குறைந்தது 415 கள்வரை அஞ்சும் 70 காட்டது யானை 78,97 காட்டுள் யானை 98 காண்கு வந்தேன் 198 காலத்திற்கு வைத்த விதை 74 காலம் வந்தது 58 காலைக்கண் வனைந்தான் 79 காவலை உடையவன் 70 காவலைக் காக்கும் 70 கானல் கூறு 123 கிளியை ஒப்பும் 70 குடத்தை வனைந்தான் 69 குடத்தை வனையான் 104 குடும்பம் வாழ்ந்தது 55 கும்மாயத்திற்குப் பயிறு 74 குழவி அழுதது 55 குழுஉப் பிரிந்தது 55 குழையை உடையன் 70 குன்றத்துக்கண் இரான் 104 குன்றேறாமா 439 கூரியதொருவாண்மன் 249 கூலிக்கு ஒலிக்கும் 74 கை இழந்தன 179 கை இழந்தாள் 179 கை இழந்தான் 179 கை இற்றான் 225 கை இற்று 225 கை இறுபு 225 கை இறூஉ 225 கொடாதாரைப்பழிக்கும் 70 கொடியது முதல் 78 கொடியாடிற்று 110 கொடுத்தான் சாத்தற்கு 102 கொடுப்பாரைப் புகழும் 70 கொல்யானை ஓடிற்று 415 கொலைக் குடம்பட்டாள் 74 கொள்ளென்று கொடுத்தான் 256 கோட்டது நூறு 78 கோடு இல 214 கோடு இன்று 214 கோடு உடைத்து 214 கோதை வந்தது 179 கோதை வந்தாள் 179 கோதை வந்தான் 179 கோ வாழி 123 ச சண்பகத்தது கோடு 78 சாத்தன் உண்டான் 245 சாத்தன் உளன் 64 சாத்தன் கரியன் 64, 207 சாத்தன் குழையன் 207, 208 சாத்தன் சென்றான் 64 சாத்தன் தலைவனாயினான் 64 சாத்தன் நெடியன் 64 சாத்தன் புலிபோலும் 247 சாத்தன் மாடத்தன் 207 சாத்தன் முடவன் 64 சாத்தன் யாண்டையான் 64 சாத்தன் யாவன் 64 சாத்தன் வணிகன் 64 சாத்தன் வந்தது 168,177 சாத்தன் வந்தான் 168,177 சாத்தன் செல்க 64 சாத்தன குழைகள் 77 சாத்தன தன்று ஆடை 104 சாத்தனது இல்வாழ்க்கை 78 சாத்தனது உடைமை 78 சாத்தனது ஒப்பு 78 சாத்தனது கல்வி 78 சாத்தனது குழை 77, 78 சாத்தனது கோலம் 78 சாத்தனது தவம் 78 சாத்தனது துணை 78 சாத்தனது பகை 78 சாத்தனது முதுமை 78 சாத்தனொடு கூடான் 104 சாத்தி வந்தது 176 சாத்தி வந்தாள் 176 சிங்கம் வந்தது 55 சிங்கம் வந்தான் 114 சிலற்றைப் பிரிக்கும் 70 சிலையுட் பொருள் 80 சுமையான் வந்தது 184 சுமையான் வந்தாள் 184 சுவர்ப் புறத்துப் பாவை 80 சுவரை எழுதினான் 70 சூதின்கண் கன்றினான் 84 சூதினைக் கன்றினான் 84 சூதினைக் கன்றும் 70 செல்க சாத்தன் 64 செவியிலி வந்தது 179 செவியிலி வந்தாள் 179 செவியிலி வந்தான் 179 செற்றாரைச் செறும் 70 சொல் பயன் தந்தது 58 சோறு அட்டது 240 ஞ ஞாயிறு எழுந்தது 58 த தந்தையை ஒக்கும் 70 தந்தையை ஒப்பன் 207 தந்தை வந்தது 177 தந்தை வந்தான் 177 தலை முடிந்தது 178 தலை முடிந்தன 178 தலை முடிந்தாள் 178 தலை முடிந்தான் 178 தாய் வந்தது 176 தாய் வந்தாள் 176 திங்கள் எழுந்தது 58 திண்ணை மெழுகிற்று 240 தீ வெய்து 19 துண்ணென்று துடித்தது 256 தும்பி கூறு 123 தூங்கல் வந்தது 178 தூங்கல் வந்தன 178 தூங்கல் வந்தாள் 178 தூங்கல் வந்தான் 178 தூணைச் சாரும் 70 தூது வந்தது 55 தெய்வம் தந்தது 58 தேரை ஊரும் 70 ந நங்கை வாழி 123 நட்பு நன்று 55 நம்பி வாழி 123 நல்லன் அரசன் 245 நனி வந்தான் 226 நாடு வந்தது 55 நாளை உண்டேன் 11 நாளைக்கு வரும் 74 நிலத்தது விலைக்கலம் 78 நிலம் வலிது 19 நிலனென்று நீரென்று 256 நிறத்தான் நல்லன் 72 நினக்குக் கொடுத்தது 28 நினக்குச் சென்றது 28 நினக்குத் தந்தது 28 நினக்கு வந்தது 28 நீ அரசன் 187 நீ ஆம் 219 நீஇர் இல்லை 219 நீ இர் வந்தீர் 184 நீஇர் வேறு 219 நீ இல்லை 219 நீ உண் 15 நீ உண்டனள் 11 நீ கடல் 187 நீ குயத்தி 187 நீ கூட்டு 219 நீ செய்ம்மன 219 நீ வந்தாய் 184 நீ வேறு 219 நீங்கினான் ஊரின் 102 நீர் தண்ணிது 19 நீலம் உண்ட துகில் 417 நீலம் பற்றின துகில் 417 நூல் ஆடையாயிற்று 20 நூலை இழைக்கும் 70 நூலைக் கற்கும் 70 நூலை நெய்தான் 70 நெல்லது குப்பை 78 நெறியைச் செல்லும் 70 ப பகலோ இரவோ 17 பகைவரை வெகுளும் 70 பச்சென்று கிடந்தது 256 படைதிரண்டது 55 படையது குழாம் 78 பரணி தோன்றிற்று 58 பலவற்றைத் தொகுக்கும் 70 பாட்டது கருத்து 78 பாலது கலம் 78 பாவை வந்தாள் 114 புதல்வரைப் பெறும் 70 புலி போலப் பாய்ந்தான் 247 புலி போலும் சாந்தன் 247 புலி போன்ற சாத்தன் 247 புலி வந்தது 55 பூதம் செறிந்தது 58 பூதம் புடைந்தது 58 பூ நட்டார் 111 பெண்மகன் வந்தாள் 188 பேய்பிடித்தது 58 பேரூர்கிழான் வந்தான் 40 பைங்கூழ் நல்ல 20 பொருளது கேடு 78 பொருளை இழக்கும் 70 பொன் பூண்டான் 111 பொன்னை நிறுக்கும் 70 போரின்கண் வந்தான் 79 ம மகக் கிடந்தது 55 மகற்குக் காதலன் 74 மண்ணை வனைந்தான் 70 மணி நன்றாயிருந்தது 22 மயிர்நல்ல 20 மனைஅயல் இருந்தான் 80 மா ஓடிற்று 51 மா காய்த்தது 51 மாடத்தின்கண் இருந்தான் 79 மாடத்தின்கீழ் இருந்தான் 80 மாடத்தின்மேல் இருந்தான் 80 மாதர் கூறு 123 மாலைக்கண் வனைந்தான் 79 மாவும் மருதும் 51 முடத்தி வந்தது 176 முடத்தி வந்தான் 176 முடம் வந்தது 55 முடவன் வந்தது 177 முலை எழுந்தது 176 முலை எழுந்தான் 176 முதியான் வந்தது 184 முதியான் வந்தான் 184 மேவாய் எழுந்தான் 176 ய யாண்டையான் சாத்தன் 64 யானையது தோட்டி 78 யானைக்கோடு கிடந்தது 415 யானையது காடு 78 யானை வந்தது 178 யானை வந்தன 178 யானை வந்தாள் 178 யானை வந்தான் 178 யாம் இருவர் 203 யாம் இருவேம் 203 யாம் இல்லை 219 யாம் வேறு 219 யான் ஆம் 219 யான் இல்லை 219 யான் கூட்டு 219 யான் செய்ம்மன 219 யான் வேறு 219 யான் வைதேன் 254 யான் வைதேனா 238 யான் வைதேனே 254 யான் வைதேனோ 238 வ வணிகன் சாத்தன் 64 வந்தான் சாத்தன் 64 வயிறு குத்திற்று 15 வயிறு குத்தும் 15 வலியை உடையன் 70 வளி உளரும் 19 வனைகலத்தது திகிரி 78 வாணிகத்தின் ஆயினான் 72 வாழும் வாழ்வு 252 வியாழம் எழுந்தது 58 விளிம்பை நெய்தான் 70 விறல் வந்தது 55 வினை விளைந்தது 58 வெட்டினான் வாளான் 102 வெள்ளி பட்டது 58 வெளிதன்று கரிது 17 வேங்கை பாய்ந்தது 51 வேந்து சென்றது 55 வேந்து வாழி 123 செய்யுள் நிரல் மேற்கோள் (நூற்பா எண்) அ அக்காரம் யாவரே..... வேம்பு - நாலடி. 112 252 அகலிரு விசும்பின் ஆஅல் - மலைபடு. 100 443 அகவன்மகளே, அகவன் மகளே - குறுந். 23 143 அகனமர்ந்து செய்யாள் உறையும் - குறள். 84 376 அங்கண் விசும்பின் - நாலடி. 151 49 அஞ்சுவது ஓரும்...... அவா - குறள். 366 292 அஞ்செங்கழுநீர்க் கண்போல் ஆயிதழ் - அகம். 48 392 அட்டில் ஓலை தொட்டனை நின்மே - நற். 300 441 அடர்பொன் அவிர்ஏய்க்கும் அவ்வரி வாட- பாலைக்கலி. 22 386 அடல்வேல் அமர்நோக்கி ..... ஆமென்று தாம் 401 அதுகொல் தோழி காம நோயே - குறுந். 5 265 அந்திற் கச்சினான் - அகம். 76 264 அம்பல் ஊரும் அவனொடு மொழிமே - குறுந். 51 232 அம்ம வாழி தோழி - ஐங்குறு. 31 272 அமரர்ப் பேணியும் ஆவுதி அருத்தியும் - புறம். 99 334 அரிமயிர் திரள்முன்கை - புறம். 11 352 அரிவையைப் பெறுகதில் அம்ம யானே - குறுந். 14 250 அரும்பிணை அகற்றி வேட்ட ஞாட்பினும் - புறம். 99 334 அரும்பெறல் உலகம் நிறைய.... புகழே - புறம். 62 292 அலமரல் ஆயம் - ஐங்குறு. 64 308 அலைப்பான் பிறிதுயிரை ஆக்கலும் குற்றம் - நான்மணி. 26 226 அவரோ வாரார் முல்லையும் பூத்தன - குறுந். 221 253 அவல்எறி உலக்கைப் பாடு விறந்து - பெரும்பாண். 226 344 அவன் அணங்கு நோய்...... விழைவு 37 அழுக்காறு உடையார்க்கு....... கேடீன்பது - குறள். 165 425 அளிதோ தானேஅது பெறலருங் குரைத்தே - புறம். 5 268 அற்றார் அழிபசி தீர்த்தல்....... புழி - குறள். 226 425 அற்றால் அளவறிந்து உண்க - குறள். 943 226 அறல்சாய் பொழுதோடெம் அணி நுதல் வேறாகி - கலி. பாலை. 26 108 அறனோக்கி யாற்றுங் கொல் - குறள். 189 90 அன்னச்சேவல் அன்னச்சேவல் - புறம். 67 417 அனையை யாகன்.... நின்னஞ்சும்மே - புறம். 20 72 ஆ ஆங்கக் குயிலும் மயிலும் காட்டி..... போகியோனே 273 ஆமான் நல்லேறு சிலைப்ப - முருகு. 315 354 ஆரமர் அலறத்தாக்கி.....பிரிக - புறம். 71 442 ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர் - நற். 170 328 ஆலத்து மேல குவளை...... குரங்கு 405 ஆவும் ஆனியல் பார்ப்பன மாக்களும்..... சேர்மின் - புறம். 9 48, 123 இ இஃதொத்தன் - கலி. 62 277 இடைமுலைக் கிடந்து நடுங்க லானீர் - குறுந். 178 414 இம்மைப் பிறப்பில்........கொண்டனள் - குறள். 1315 428 இயங்குபடை அரவம் எரிபரந் தெடுத்தல் - புறத். 8 287 இயைந்து ஒழுகும் 306 இருநோக்கு இவளுண்கண் உள்ளது - குறள்.1091 60 இரும்பிடித் தொழுதியொடு பெருங்கயம் படியா - புறம்.44 392 இலம்படு புலவர் ஏற்றகை நிறைய - மலைபடு. 577 356 இறப்பத் துணிந்தனிர் கேண்மின் மற்றைய - கலி. 2 452 இன்னாதுறைவி யரும்படர் - புறம். 145 441 ஈ ஈங்கிதோர் நல்கூர்ந்தார் - கலி. 56 55 ஈயாது வீயும் உயிர்தவப் பலவே - புறம். 235 295 உ உச்சி மீமிசை 450 உண்டா லம்ம இவ்வுலகம் - புறம் . 182 272 உண்ணாமை வேண்டும் புலாஅல் - குறள். 257 45 உப்பின்று புற்கை உண்கமா கொற்கை யோனே 269 உயர்ந்தோங்கு சமந்தத்து உச்சி மீமிசை - மணிமே. 22-11 450 உயவுப்புணர்ந் தன்றுஇவ்வழுங்க லூரே - நற். 203 345 உரற்கால் யானை - குறுந். 232 447 உருகெழு கடவுள் - பதிற். 21 296 உருமில் சுற்றமோடு இருந்தோற் குறுகி - பெரும்பாண். 447 361 உலகம் உவப்ப - கணவன் - முருகு.1-6 408 உலகமுழு தாண்ட - சிலப். அந்தி. 1 322 உவந்து உவந்து ஆர்வநெஞ்ச மோடு - அகம். 35 303 உள்ளிய தெல்லாம் உடனெய்தும் ..... எனின் - குறள். 309 60 உளரென்னும் மாத்திரையர் - குறள். 406 304 உறக்குந் துணையதோர் ..... விடும் - நாலடி. 38 291 உறந்த விஞ்சி 343 உறுபுனல் தந்து உலகூட்டி - நாலடி. 185 295 ஊ ஊரவர் கவ்வை - குறள். 1147 392 ஊன்றுவை - கறிசோறுண்டு - புறநா. 14 45 எ எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு....... நோய். - குறள். 429 314 எய்யா மையலை நீயும் வருந்துதி - குறிஞ்சிப் . 8 338 எயின்முகம் சிதையத்.... யானை - பதிற். 38 114 எல்வளை மகளிர் - புறம். 24 266 எற்றென் உடம்பின் எழில்நலம் 260 எற்றென்று இரங்குவ செய்யற்க - குறள். 655 333 எம்போல் இன்றுணைப் பிரிந்தாரை உடையையோ நீ - கலி. 12 187 என்முதல் பிழைத்தது கெடுக என் ஆயுள் - சிலப். 77 220 என்முதற் பிழைத்தது - சிலப். வழக். 77 220 என்னீர் அறியாதீர் - கலித். 6 452 என்னோ டிருப்பினும் இருக்க..... - மணி. சிறைவிடு. 35-6 72 எனவாங்கு ஒள்ளழல்...... பூப்பெற் றிசினே - புறம்.11 292 ஏ ஏஎ இஃதொத்தன் - கலி. 62 277 ஏஏ இவளொருத்தி பேடியோ என்றார் - சீவக. 652 268 ஏகல் அடுக்கம் - நற்.116 301 ஏந்திள வனமுலை - மணி. 18-69 111 ஏம மாக இந்நிலம் ஆண்டோர்........மன்னிநில்லா 32 ஏறிரங்கு இருளிடை - கலி. 46 354 ஐ ஐதென விம்மி அவர்க்கது கூறிய... கைகூப்பி 381 ஐ தேய்ந்தன்று பிறையுமன்று.... மதியுமன்று - கலி. 55 252 ஒ ஒக்கல் ஒற்கம் சொலிய - புறம். 327 356 ஒக்குமே ஒக்குமே .... நிறம் 419 ஒருபெருஞ் சும்மையொடு - அகம். 11 345 ஒருவர் ஒருவரைச் சார்ந்தொழுகல்.... அல்லால் - நாலடி. 309 187 ஒலிசினை வேங்கை கொய்குவம் சென்றுழி - அகம். 48 447 ஒல்லும் வகையான் அறவினை யோவாதே - குறள். 33 392 ஒன்னாதார்க் கடந்தடூஉம்..... மேல் - கலி. 27 453 ஓ ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும்.... மவர்- குறள். 653 220 ஓஓ உவமன் - களவழி. 36 277 ஓர்கமா தோழிஅவர் தேர்மணிக் குரலே 269 க கடல்போல் தோன்றல காடிறந் தோரே - அகம். 1 254, 282 கடவுட் பரவிக் கைதொழூஉப் பழிச்சி - மலைபடு. 538 378 கடவுள் ஆயினும் ஆக, மடவை மன்ற வாழிய முருகே - நற். 34 262 கடாவுக பாகநின் கால்வல் நெடுந்தேர் 220 கடிகாவின் பூச்சூடினன் - புறம். 239 379 கடிந்த கடிந்து ஒரார்..... தரும் - குறள். 658 379 கடிமரம் தடியும் ஓசை.... இயம்ப - புறம். 36 354 கடிமிளகு தின்ற கல்லா மந்தி 380 கடியின் புகூஉம் கள்வன்போல 379 கடியுண் கடவுட்கு இட்ட..... மஞ்ஞை - குறுந். 105 379 கடுங்கால் ஒற்றலின் - பதிற்றுப். 25 379 கடுஞ்சூள் தருகுவன் நினக்கே - அகம். 110 379 கடுந்தேர் குழித்த ஞெள்ள லாங்கண் - புறம். 15 379 கடு நுனைப் பகழி 379 கடும்பகல் - அகம். 148 379 கடும்பாம்பு வழங்கும் தெருவின்...... எம்மே - குறுந். 354 379 கடுவய நாகுபோல் நோக்கி - முல்லைக்கலி. 116 367 கடுவன் முதுமகன் கல்லா..... தோழர் பற்ற 31 கண்டிகும் அல்லமோ - ஐங்குறு. 121 271 கண்ணும் படுமோ என்றிசின் யானே - நற். 61 271 கணிகொண்டு அலர்ந்த நறவேங்கை....... கொண்ட - சூளா. அரசி. 197 72 கதழ்பரி நெடுந்தேர் - நற். 203 313 கம்பலை மூதூர் - புறம். 54 345 கமஞ்சூல் மாமழை - முருகு.7, அகம். 43, குறுந். 158 351 கயந்தலைக் குழவி 319 கயலறல் எதிரக் கடும்புனல் சாஅய் - நெடுநல். 18 326 கயவாய் - அகம். 118 318 கயிறிடு கதச்சேப் போல மதமிக்கு - அகம். 36 373 கடுங்கோட்டி யானை 26 கருங்கட் டாக்கலை - குறுந். 69 340 கருவி வானம் - புறம். 159 350 கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல்...... பொறை. - குறள். 570 413 கல்லெனக் கவின்பெற்ற விழாஆற்றுப் படுத்தபின் - கலி.5 255 கலம்பெறு கண்ணுளர் ஒக்கல்.... பெறுகுவிர் - மலைபடு. 50 452 கலிகொள் ஆயம் - அகம். 11 345 கலைப்புற வல்குல் கழுகு குடைந்துண்டு - மணி. 6-112 45 கவரி மான்கணம் கல்லறை தெவிட்ட 392 கவர்நடைப் புரவி - அகம். 130 358 கவழக்களிப்பியன் மால்யானை சிற்றாளி......தொக்கு - திணைமாலை. 42 114 கவிசெந் தாழிக் - புறம். 238 26 கழிகண் ணோட்டம் - பதிற்றுப். 22 312 கழுதுருவின கஞலிலையன கழிமடலின கைதை - சூளா, தூதுவிடு. 2 392 கழுமிய ஞாட்பின் - களவழி. 11 347 கழூஉவிளங்கு ஆரம் கனவஇய மார்பே - புறம். 19 353 கள்உண்ணாப் போழ்து - குறள். 930 45 களிறும் கந்தும் போல நளிகடல்..... நாட்டே. - மயிலை ப-ம். 282 401 களிறு வழங்கு அதர் கானத்து அல்கி - பொருந. 49 392 கறவை கன்றுவயின் படர - குறுந்.108 336 கறுத்த காயா - பதிற். 15 369 கன்முகை யருவி தண்ணெனப் பருகி - புறம்.150 255 கன்னித்தென்கரை கடற் பழந்தீபம் - குன்றகம் 396 காட்டுச்சார் ஓடும்குறு முயல் 80 காதலியைக் கொண்டு கவுந்தியொடுகூடி......வினை 101 காதற் கொழுநனைப் பிரிந்து அலர் எய்தா.. மாதவி - சிலப். 5.189-190 439 காப்பும் பூண்டிசிற் கடையும் போகல் - அகம்.7 270 காமஞ் செப்பாது - குறு. 2 270 காலாழ் களரின் நரியடும்....களிறு - குறள். 500 434 கான்கெழு நாடற் படர்ந்தோர்க்கு..... யானே - நற். 61 291 கானக நாடனை நீயோஒ பெரும - புறம். 5 253 கானம் காரெனக் கூறினும்..... வழங்கலரே - குறுந். 29 253 கானம் தகைப்ப செலவு - கலி. 3-22 7 கானலஞ் சேர்ப்பன் கொடுமை எற்றி - குறுந். 145 333 கிளைஅரில் நாணற்கிழங்கு மணற்கு ஈன்ற முளை - அகம். 212 107 குடாவடியுளியம் - முருகாற். 313 396 குணன் அழுங்கக் குற்றம் உழைநின்று கூறும். - நாலடி. 353 346 குரல்ஓர்த் துத்தொடுத்த..... -திரிவுறீஇய - மலைபடு. 23-24 392 குருகுகரு உயிர்ப்ப ஒருதனி ஓங்கிய திருமணிக்காஞ்சி - மணி. காதை. 1 439 குருமணித்தாலி 298 குரைகழல் 291 குழக்கன்று - நாலடி.101 309 குழலன் கோட்டன் - முருகு. 209 208 குறங்கென மால்வரை - சிறுபாண். 20 418 குறிஞ்சிக் கண்ணியர் குவளை பூண்டு.... இருக்கை 161 குறிப்பேவல் செயன்மாலைக் கொளை நடை அந்தணீர் - கலி. 9 311, 452 குன்றுதொ றாடலும் நின்றதன் பண்பே - முருகு. 217 292 கூந்தன்மா ஊர்ந்து.....மறு. - முத்தொள். 132 கூறாமல் குறித்ததன்மேல் செல்லும் - கலி. 1 226 கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் - குறள். 701 226 கெடவரல் 317 கொடி குவளை கொட்டை......மேனி 401 கொடிஇய செல்வார்த் - முல்லைக்கலி. 16 367 கொடுங்கோல் கோவலர்.....தாயர் - முல்லைப். 15,16 161, 453 கொல்லிப் பொருப்பனாற்.... பேது 99 கொன்முனை இரவூர் போல - குறுந். 91 251 கொன்வரல் வாடை 251 கொன்னூர் துஞ்சினும் - குறுந். 138 248,251 கொன்னே கழிந்தன்று இளமையும் - நாலடி. 55 251 கோடுபல முரஞ்சிய கோளி யாலம் - மலைபடு. 268 329 கோட்டுப்பூச் சூடினும் காயும்...... என்று - குறள். 1313 108 கோலஞ்சி வாழுங் - திரி. 33 49 ச சாயல்மார்பு நனி அலைத் தன்றே - பதிற். 16 321 சாரல் நாடஎன் தோழியும் கலுழ்மே 232 சான்றாளர் ஈன்ற தகாஅத் தகாஅ மகா... இவள் - பரி. 8 132 சான்றோர் அல்லர் தோழி 205 சிவந்த காந்தள் - பதிற். 15 369 சிறிதுதவிர்ந் தீக மாளநின் பரிசிலர் உய்ம்மார் - மயிலை ப-ம். 99 292 சிறிய கட்பெறினே எமக்கீயும் மன்னே - புறம். 235 249 சிறுகண் யானை. - சிறுபாண். 142 26 சிறுமை உறுபவோ செய்பு அறியலரே - நற். 1 337 சினத்தைப் பொருள் என்று கொண்டவன் - குறள். 307 256 சுரை ஆழ அம்மி மிதப்ப.... சுனை 402 சூரல் பம்பிய சிறுகான் யாறே..... வரலாறே 403 செங்கால்நாரை 26 செங்கேழ் மென்கொடி - அகம். 80 298 செய்திரங் காவினை - புறம். 10 355 செய்வினை மருங்கின் செலவயர்ந்து.... உளர்தீயே - கலி. 7 292 செலீஇயர் அத்தை நின்வெகுளி - புறம். 6 292 செழுந்தடி தின்ற செந்நாய் ஏற்றை 348 செழும்பல் குன்றம் 348 சென்றது சென்றது வாழ்நாள்..... கூற்று - நாலடி. 4 239 சென்றீபெரும நிற்றகைக்குநர் யாரோ - அகம். 46 291,441 சென்றே எறிப ஒருகால் சிறுவரை ..... சுமந்து - நாலடி. 24 278 சேர்ந்த சினை இளங்குரைய வாயினும் 268 சேர்ந்துசெறி குறங்கு - நற். 170 359 சேவலங் கொடியோன் காப்ப - குறு-கட-வாழ்த்து 54 சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான் - அகம். 46 382 த தடக்கை - புறம். 394 318 தடமருப்பெ ருமை - நற். 120 319 தண்டையின் இனக்கிளி கடிவோள் 399 தண்ணந் துறைவர் தகவிலர் 399 தணக்குங்கால் கலுழ்பானாக் கண் எனவும் உளஅன்றோ - கலி.25 392 தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்து - நெடுநல். 90 357 தாவில் நன்பொன் தைஇய பாவை - அகம். 212 340 தான்பிற வரிசை அறிதலின் தன்னும் தூக்கி - புறம். 140 275 திசைதிசை தேனார்க்கும் திருமருத முன்றுறை.... உறைபவர் - கலி. பாலை. 26 220 திருத்தார்நன் றென்றேன் தியேன் 399 துணிந்து சொல்லல், கூறிட்டு மொழிதல்..... - மணி. 30 - 235-249 13 துணிநீரால் தூய்மதி நாளால் அணிபெற..... இளவேனில் - கலி.32 99 துணையின் தீர்ந்த கருங்கண் யானை - நற். 108 316 துயவுற்றேம் யாமாக 364 துறக்குவ னல்லன் துறக்குவ னல்லன்.... தோன்றியற்று - கலி.41 418, 426 துனிகூர் எவ்வமொடு - சிறுபாண். 39 312 துனைபரி துரக்கும் துஞ்சாச் செலவின்..... அகம். 9 313 தூவல் கலித்த தேம்பாய் புன்னை - புறம். 24 386 தெங்கங்காய் போலத் திரண்டு..... வரின் 402 தெருமரல் உள்ளமோடு அன்னை துஞ்சாள் 308 தெவ்வுப்புலம் 343 தேம்பைந்தார் மாறனைத் தென்னர் பெருமானை.... உற 99 தேவரே தின்னினும் வேம்பு - நாலடி. 112 291 தேவாதி தேவன்அவன் சேவடி சேர்தும் அன்றே - சீவக. 1 291 தொடிநோக்கி மென்தோளும்..... செய்தது - குறள். 1279 449 தோழியா சுவாகதம் வருக ஈங்கென - சீவக. 1021 275 தோற்றம் இசையே நாற்றம் சுவையே.... மொழிப. 284 ந நகை அச்சாக நல்லமிர்து கடைந்த..... ஒருகை - பரிபாடல்-3-33,34 111 நசை பிறக்கு ஒழிய - புறம். 15 275 நயந்து நாம்விட்ட நன்மொழி நம்பி - அகம். 198 325 நரகத்துள் உறைதல் நன்றோ ஊன்தினாது... நன்றோ - சீவக. 1235 17 நல்குரவு என்றும் இடும்பையுள்.... படும் - குறள். 1045 268 நல்லவர் நுடக்கம்போல் - கலி. பாலை. 32 99 நல்லை மன்என நகூஉப் பெயர்ந்தோளே - அகம். 248 205 நளி இருள் 319 நளிமலை நாடன் நள்ளி - புறம். 150 318 நன்றும் அரி துற்றனையால் பெரும - அகம். 10 339 நனந்தலை உலகம் - பதிற். 63 372 நனவிற் புணர்ச்சி நடக்கலும் ஆங்கே..... அன்றே - கலி. குறி. 3 226 நனவுப்புகு விறலியின் தோன்றும் நாடன் - அகம். 82 372 நாடு கிழவோன் - பொருந. 248 189 நாணாமை நாடாமை நாரின்மை..... தொழில் - குறள். 833 289 நாம நல்லராக் - அகம். 72 361 நாயுடைமுதுநீர் கலித்த தாமரை - அகம். 16 37 நாளன்று போகிப் புள்ளி தப்ப - புறம். 124 226 நாளென ஒன்று போல் காட்டி - குறள். 334 255 நாற்ற நாட்டத்த அறுகாற் பறவை - புறம். 70 392 நிலத்துக்கு அணி என்ப நெல்லும் கரும்பும் - நான்மணி. 9 74 நிலப்பெயர் குடிப்பெயர் - தொ.பெய. 11 286 நிலம்புடையூ எழுதரும் வலம்படு குஞ்சரம் நிலம் பூத்த மரமிசை - நாலடி.க.வ. 224 நிவந்தோங்கு உயர் கொடிச் சேவலோய் - பரிபாடல். 3-18 54 நிழத்த யானை மேய்புலம் படர - மதுரைக். 303 326 நிற்கறுத் தோரருங்கடி - பதிற். 13 368 நின்றன நின்றன நில்லா.... செய்க - நாலடி. 4 418 நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே - புறம். 45 453 நின்னீர அல்ல நெடுந்தகாய் - கலி. 6 452 நின்னுறு விழுமம் களைந்தோன் - அகம். 170 349 நின்னை யன்றே திருமுக் குடையாய் 278 நீசிவந்து இறுத்த நீரழி பாக்கம் - பதிற். 13 368 நீயும் தவறிலை நின்னைப் புறங்கடை..... தவறிலர் - கலி. 56 187 நீயே பிறர்நாடு கொள்ளுங்காலை - புறம். 57 187 நீர்த் தெவ்வு நிரைத்தொழுவர் - மதுரைக். 89 341 நீ வெய்யோளொடு - அகம். 6 330 நுணங்கிய கேள்வியர் - குறள். 419 370 நுழைநூல் கலிங்கம் - மலைபடு. 561 370 நெடும்புனலுள் வெல்லும் முதலை.... பிற - குறள். 495 434 நெடும்பெருங் குன்றத்து அமன்ற காந்தள் - அகம். 4 392 நெடுவெண் திங்களும் ஊர்கொண் டன்றே - அகம். 2 18 நெல்லரியு மிருந்தொழுவர் - புறம். 24 252, 288 நெல்லரியும் இருந்தொழுவர்...... பாயுந்து - புறம். 24 453 நெறிதாழ் இருங்கூந்தல் நின்பெண்டிர் எல்லாம் - கலி. 97 182 நொசி மருங்குல் - குறிஞ்சிக்கலி. 24 370 நொறில் இயற்புரவி அதியர்கோமான் 392 நொறில் இயற்புரவி கழற்கால் இளையோன் 392 நோதக விருங்குயி - கலி. 33 275 ப பகலே பலரும் காண நாண் விட்டு.... வரற்கே - நற். 365 442 படுமகன் கிடக்கை காணூஉ - புறம். 278 224 படை குடி கூழ்அமைச்சு...... ஏறு - குறள். 381 286 படையிடுவான் மன்கண்டீர் காமன் .... புகின் - முல்லைக்கலி. 9 421 பணைத்து வீழ் பகழி 335 பணைத்தோள் - அகம். 1 335 பதவு மேய்ந்த மதவு நடை நல்லான் - அகம். 14 373 பயவாக் களர் அனையர் கல்லாதவர் - குறள். 406 304 பருந்திருந்து உயாவிளி பயிற்றும் யா - அகம். 16 365 பழுதுகழி வாழ் நாள் 320 பாசிழை ஆகம் பசப்பித்தான் 399 பாடல் சான்ற விறல் வேந்த னும்மே.... பெற்றிசினே - புறம். 11 271 பாடில் மன்னரைப் பாடன்மார் எமரே - புறம். 375 201 பாய்ந்தாய்ந்த தானை பரிந்தானா மைந்தினை - கலி. 96 326 பாய்புனல் 157 பார்ப்பன மகனே பார்ப்பன மகனே - குறுந். 156 132 பார்ப்பார் தவரே சுமந்தார் பிணிப்பட்டார்......வார் - ஆசார. 64 49 பாலும் உண்ணாள் பழங்கண் கொண்டு - அகம். 48 42 பிரியின் வாழாது என்போ தெய்ய 275, 292 பின்னொன்று பெயர்த்தாற்றும் பீடுடை யாளர்போல் - கலி. 34 392 புகழ்ந்திகும் அல்லரோ பெரிதே 271 புதுமலர் கஞல - புறம். 147 249 புரைய மன்ற புரையோர் கேண்மை - நற். 1 297 புலராப் பச்சிலை இடையிடுபு தொடுத்த - புறம். 33 224 புல்லென் யாக்கை புலவுவாய்ப் பாண - பெரும்பாண். 22 452 புலிப்பல் கோத்த புலம்புமணித் தாலி - அகம். 7 327 புலையன் எறிந்த பூசல் தண்ணுமை....கரிப்ப - அகம். 59 451 புறநிழல் பட்டாளோ இவள்இவட் காண்டிகா - கலி. 99 275 புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி - அகம். 56 371 பெண்ணவாய் ஆணிழந்த பேடி.... கலம் - நாலடி. 251 12 பெருங்காட்டுப் பண்ணிய பருங்கோட்டு ஈமம்....அற்றே - புறம். 246 250 பெருந்தலைப் புல்லார் நல்லார் 26 பெருவரை அடுக்கம் பொற்ப - நற். 34 331 பெற்றி திரிந்து பெருவறங் கூரினும்.... பழி 99 பேஎம் நாறும் தாழ் நீர்ப் பனிச்சுனை. இறைய - உரை சூ7. உரை 386 பேரிசை நவிரம் மேஎ உறையும் - மலைபடு. 82 325 பையுண்மாலை - குறுந். 195 337 பொய்கை துவன்ற புனிறுதீர் பனுவல் 386 பொருநா கிளம்பாண்டில் தேரூர... மதையினள் - முல்லைக்கலி. 9 374 பொருளானாம் எல்லாம் என்று ஈயாது இவறும் - குறள். 1002 392 பொருள்கருவி காலம் வினை..... செயல் - குறள். 675 290 பொள்ளென ஆங்கே புறம்வேரார்..... யவர் - குறள். 487 255 பொன்னே கொடுத்தும் புணர்தற்கு அரியாரை.... னவர். - நாலடி.162 278 போகுகொடி மருங்குல் 315 போரெறுழ்த் திணிதோள் - பெரும்பாண். 63 384 போற்றின் அரியவை போற்றல்.... அரிது - குறள். 693 380 ம மகவிழந்து அழுங்கிய 346 மகனெனல் மக்கட் பதடி எனல் - குறள். 196 220 மடிமை குடிமைக்கண் தங்கிற்றன்.... விடும் - குறள். 608 55 மண்ணைச்சுமந்தவன் தானும்.... பெறலாமே 439 மண்திணிந்த நிலனும்.....நீரும் - புறம். 2 252 மணம்கமழ் வியன்மார்பு அணங்கிய செல்லல் - பதிற். 21 299 மருந்தெனின் மருந்தே....மகளே - குறுந். 71 426 மலைநாறிய வியன்ஞாலத்து - மதுரைக். 4 392 மல்லல் மால்வரை - அகம். 52 300 மழகளிறு - புறம். 38 309 மற்றடிகள் கண்டருளிச் செய்க மலரடிக்கீழ் - சீவக. 1873 259 மற்றறிவாம் நல்வினை யாம் இளையம் - நாலடி. 19 259 மறப்பரு காத - கலித். 2 452 மறம்பாடிய பாடினியும்மே.... பெற்றிசினே - புறம். 11 442 மன்ற மராஅத்த பேமுதிர் கடவுள் - குறுந். 87 361 மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் - புறம். 165 392 மாக்கடல் நிவந்தெழுதரும் செஞ் ஞாயிற்றுக் கவினை - புறம். 4 18, 392 மாதர் நோக்கு 324 மாதர் வாண்முகம் மதைஇய நோக்கே - அகம். 130 374 மியாஇக மோமதி இகுஞ்சின்..... அசைச்சொல் 270 முறைதிரிந்து மெலிகோல் செய்தேன் ஆகுக - புறம். 71 442 மேவார்த் தொலைத்த விறன்மிகு வேஎள் 145 மையில் வாண்முகம் பசப்பூ ரும்மே - கலி. 7 305 மோயினள் உயிர்த்தகாலை - அகம். 5 447 மோரொடு வந்தாள் தகைகண்டை.... வனப்பு - முல்லைக்கலி. 9 422 ய யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர் - நாலடி. 28 74 யாணு விசும்பின் அமரர் உட்பட..... பெட்டபின் 377 யாமுமக்குச் சிறந்தன மாதல் அறிந்தனி ராயின் - கலி. 5 74 யாரஃது அறிந்திசினோரே - குறுந். 18 271 யாழிசையூப் புக்கு 307 யானும் என் எஃகமும் சாறும்....போர் 41 யானொன்று உசாவுகோ ஐய சிறிது - கலி. 7 366 வ வண்டுசுழல வருவார் ஒருவரைக்.... உயிர் 187 வந்துநனி வருந்தினை வாழிஎன் நெஞ்சே - அகம். 19 295 வந்தோய் மன்ற தண்கடற் சேர்ப்ப - அகம். 80 206 வம்ப மாரி - குறுந். 66 323 வயக்கஞ்சால் சீர்த்தி 310 வயக்களிறு - மது. 15 362 வரிவளை துவைப்ப. - முருகு. 315 354 வருகதில்அம்ம - அகம். 276 248, 250 வருமே சேயிழை அந்தில் கொழுநர்க் காணிய - குறுந். 293 264 வலம்புரித் தடக்கை மாஅல் 145 வளிநடந்தன்ன.... எனாஅ - புறம். 197 285, 289 வளியிடை வழங்கா வானம் சூடிய..... கிடக்கை - புறம். 35 453 வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற் போகி - புறம். 47 336 வறிது நெறி ஒரீஇ 332 வாடுபு வனப்போடி வணங்கிறை வளைஊர - கலி. 16 224 வாணுதல் - முருகு. 6 363 வாயாச்செத்து ஒய்யென ஆங்கே எடுத்தனன் - கலி. 37 392 வாயில் இசை 307 வார் கயிற்று ஒழுகை - அகம். 173 315 வார்ந்திலங்கு வையெயிற்றுச் .....யானே - குறுந். 14 315 வாராய்நீ புறம்மாற வருந்திய மேனியாட்கு - கலி. 121 99 வாழச்செய்த நல்வினை அல்லது..... இல்லை - புறம். 367-10,11 226 வானம் ஊர்ந்த வயங் கொளி மண்டிலம்.... காட்டு - அகம். 11 392 வானிடு வில்லின் வரவறியா வாய்மை யால் - நாலடி. கட. வாழ் 224 வானின்று உலகம் வழங்கி.... பாற்று - குறள். 11 103 விசும்பு உகந்து ஆடாது 302 வித்தொடு சென்ற வட்டி....ஊர - நற் .210 375 விதிர்ப்புற அறியா ஏமக்காப்பினை - புறம். 20 314 வியலுலகம் 360 விருந்தின்றி உண்ட பகலும் - திரிகடு. 44 226 வில்லோன் காலன கழலே....தாமே - குறுந். 7 189 விழுமியோர்க் காண்டொறும் செய்வர் சிறப்பு - நாலடி. 159 349 விழைந்து முதிர்கொற்றத்து விறலோய்.... வாழி - சிலம்பு 23: 80-84 40 விளங்குமணிக் கொடும்பூ ணாஅய்நின் நாட்டு - புறம். 130 150 விளிந்தன்று மாதுஅவர்த் தெளிந்தஎன் நெஞ்சே - நற். 178 275 விறந்த காப்போடு உள்நின்று வலியுறுத்தும் 343 வினவி நிற்றந் தோனே - அகம். 48 205 வீடுஉணர்ந் தோர்க்கும் வியப்பாமால்..... இடம் - பு.வெ.மா.வஞ்சி. 19 431 வீரப்புலியனின் வெல்போர் வளவனின்.... வேந்து 99 வெந்திறல் கூற்றம் பெரும்பே துறுப்ப.... என்ற - புறம். 238 278 வெயில் புறந்தரூஉம் இன்னல் இயக்கத்து - மலைபடு. 374 299 வெவ்வெரி கொளீஇ 18 வெள்வேல் விடத்தரொடு காருடை போகி - பதிற். 13 315 வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன் - புறம். 53 343 வேண்டார் வணக்கி விறல் மதில் தான் கோடல். - மயிலை நா. ப-ம். 79 399 வேற்றுமை இல்லா விழுத்திணைப் பிறந்து - புறம். 27 349 வேனில் உழந்த வறிது உயங்கு ஓய்களிறு - கலி. 7 326 வைந்நுனைப்பகழி - முல்லை. 73 383 கலைச்சொல் நிரல் நூற்பாவழி (நூற்பா எண்) அ அஃறிணை 1, 3 அஃறிணை இயற்பெயர் 167 அஃறிணைக் கிளவி 41 அஃறிணைக்குரிமை 195 அஃறிணை விரவுப்பெயர் 146 அச்சக் கிளவி 95 அசைச்சொல் நீட்டம் 149 அசைநிலைக் கிளவி 247, 264, 267, 275 அடிமறிச் செய்தி 403 அடிமறி மொழிமாற்று 400 அண்மைச் சொல் 123, 127 அதுச்சொல் வேற்றுமை 207 அதுவென் வேற்றுமை 85, 96 அதுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி 77 அவையல் கிளவி 435 அளபெடைப் பெயர் 131, 137, 145 அளவின் பெயர் 412 அறியாப் பொருள் 29 அன்மைக் கிளவி 25 அன்மொழித் தொகை 407, 413 ஆ ஆக்கக் கிளவி 22 ஆக்கமொடு கூறல் 20 ஆகுபெயர்க் கிளவி 111 ஆடியற் பெயர் 161 ஆடூஉ அறிசொல் 2, 5 ஆண்மை அறிசொல் 12 ஆண்மை இயற்பெயர் 172 ஆண்மைச் சினைப்பெயர் 173 ஆண்மை சுட்டிய சினைமுதற் பெயர் 174 ஆண்மை திரிந்த பெயர்நிலைக்கிளவி 4, 12 ஆண்மை முறைப்பெயர் 175 ஆய்தப் பெயர் 163 ஆயென் கிளவி 206 ஆரைக் கிளவி 267 ஆற்றுப்படை 452 இ இகர இறுபெயர் 121 இசைக்குங் கிளவி 421 இசைநிறைக் கிளவி 247 இசைப்படு பொருள் 419 இடைச்சொற் கிளவி 155 இடைநிலை 231 இதுசெயல் வேண்டும் என்னுங் கிளவி 237 இயற்கைப் பொருள் 19 இயற்சொல் 393, 394 இயற்பெயர் 170, 171 இயற்பெயர்க் கிளவி 36, 39, 190 இரட்டைக் கிளவி 46 இரவின் கிளவி 437 இருதிணை 10 இருதிணைக்கும் ஓரன்ன உரிமை 195 இருதிணைச் சொல் 168, 216 இருதிணைப் பிரிந்தவைம்பாற்கிளவி 157 இருபாற் கிளவி 213 இருபாற்சொல் 3 இருபெயர் 412 இருபெயரொட்டு 111 இருமொழி மேலும் ஒருங்குடன் நிலையல் 414 இருவயின் நிலையும் வேற்றுமை 98 இற்றெனக் கிளத்தல் 19 இறைச்சிப் பொருள் 190 இன்னெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி 75 இனச்சுட்டில்லாப் பண்புகொள் பெயர் 18 ஈ ஈயென் கிளவி 437 உ உடன்மொழிப் பொருள் 183 உடனிலை அறிதல் 448 உடைப் பெயர் 161 உம்மை எச்சம் 429 உம்மைச் சொல் 252 உம்மைத் தொகை 407, 412, 416 உம்மை தொக்க எனாவென் கிளவி 285 உம்மை தொக்க பெயர் 413 உயர்திணை 1, 2, 4 உயர்திணைக்கு உரிமை 195 உரிச்சொற் கிளவி 155, 293 உருபு தொக வருதல் 101 உருபு தொடர்ந்தடுக்கிய வேற்றுமைக் கிளவி 99 உருபுநிலை 67 உவமத் தொகை 407, 409 உள்ளதன் நுணுக்கம் 326 உளவென் கிளவி 214 உறழ்துணைப் பொருள் 16 உறுப்பின் கிளவி 55 எ எச்சக் கிளவி 281 எஞ்சுபொருட் கிளவி 280, 423, 432 எடுத்த மொழி 59 எண்ணியற் பெயர் 161, 412 எண்ணின் பெயர் 412 எண்ணுக்குறிப் பெயர் 164 எண்ணுத்திணை 49 எதிர்மறை எச்சம் 428 எழுவாய் வேற்றுமை 63 எழுத்துப் பிரிந்திசைத்தல் 391 எற்றென் கிளவி 256, 260 என்னா மரபு 417 எனவென் எச்சம் 431 எனவென் கிளவி 255 ஏ ஏதுக் கிளவி 89 ஐ ஐம்பால் 10 ஐயெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி 69 ஒ ஒடுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி 71 ஒப்பல் ஒப்புரை 72 ஒப்பில் போலி 274 ஒப்பினாகிய பெயர்நிலை 164 ஒப்பொடு வரூஉங் கிளவி 159, 214 ஒருசொல் அடுக்கு 418 ஒருசொல் பலபொருள் 293 ஒருபெயர்ப் பொதுச்சொல் 47 ஒருபொருள் இருசொல் 450 ஒருபொருள் குறித்த வேறுசொல் 395 ஒருமை இயற்பெயர் 172 ஒருமை சுட்டிய பெயர்நிலைக் கிளவி 451 ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவி 27 ஒருவழியுறுப்பு 78 ஒருவினை ஒடுச்சொல் 88 ஒருவினைக் கிளவி 72 ஒருமைச் சினைப்பெயர் 173 ஒருமை சுட்டிய சினைமுதற் பெயர் 174 ஒழியிசை எச்சம் 427 ஒன்றறிசொல் 3 ஒன்றறி கிளவி 8 ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவி 27 ஒன்றுமார் வினை 84 ஓ ஓம்படை ஆணை 392 ஓம்படைக் கிளவி 93 க கடிசொல் 442 கடியென் கிளவி 379 கண்ணென் வேற்றுமை 82, 85, 207 கண்ணெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி 79 கயவென் கிளவி 319 கழுமென் கிளவி 347 காரணக் கிளவி 38 காலக் கிளவி 201, 215 காலங் கண்ணிய என்ன கிளவி 223 காலமொடு வரூஉம் வினைச்சொல் 195 கிளைநுதற் பெயர் 406 குடிப்பெயர் 161 குரை 268 குழுவின் பெயர் 161 குற்றியலுகரம் 119 குறிப்பொடு வரூஉங் காலக் கிளவி 209 குறுக்கும்வழிக் குறுக்கல் 399 குறைச்சொற் கிளவி 443 குன்றியலுகரம் 8, 197, 211 கொடுவென் கிளவி 437, 438 கொடையெதிர் கிளவி 94 கொன்னைச் சொல் 251 ச சார்பென் கிளவி 82 சினைநிலைக் கிளவி 83 சினைநிலைப் பெயர் 161 சினைப்பெயர் 170, 171 சினைமுதற் கிளவி 16, 31 சினைமுதற்பெயர் 170, 171 சினையறி கிளவி 111 சுட்டிக் கூறல் 34 சுட்டுப்பெயர் 38 சுட்டுப்பெயர்க் கிளவி 36 சுட்டுமுதற் பெயர் 133, 138, 144 சுண்ணம் 400, 402 செஞ்சொல் 280, 430 செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலம் 396 செந்தமிழ் நிலம் 394 செய்கென் கிளவி 198 செய்தென் எச்சம் 233 செய்யும் என்னும் கிளவி 221 செய்யும் கிளவி 229 செய்யுள் ஈட்டச் சொல் 393 செய்யுள் மருங்கு 453 செய்யென் கிளவி 440 செயப்படற்கு ஒத்த கிளவி 107 செயப்படுபொருள் 240 செயற்கைப் பொருள் 20 செறற்சொல் 55 சேய்மையின் இசைக்கும் வழக்கம் 148 சொல்லென் எச்சம் 434 சொல் வேறு நிலைஇப் பொருள்வேறு நிலையல் 401 சொற்குறிப்பு 86 சொன்மை தெரிதல் 152 த தகுதி 17 தஞ்சக் கிளவி 263 தடவென் கிளவி 319 தடுமாறு தொழிற்பெயர் 91 தருசொல் 28 தன்மைச் சொல் 41, 196 தன்மை சுட்டல் 25 தன்மை திரிபெயர் 55 தன்வினை உரைக்கும் தன்மைச் சொல் 197 தன்னுள் உறுத்த பன்மை 182 தாமென் கிளவி 180 தாவென் கிளவி 437 தானென் கிளவி 181 தானென் பெயர் 133 திசைச் சொல் 393 திசைச்சொற் கிளவி 396 திசைநிலைக் கிளவி 439 திணைநிலைப் பெயர் 161 திரிசொல் 393 திரிசொற்கிளவி 395 தில்லைச் சொல் 250 தீர்ந்துமொழிக் கிளவி 107 துயவென் கிளவி 364 தெய்வஞ் சுட்டிய பெயர்நிலைக் கிளவி 4 தெரிந்துமொழி கிளவி 54 தெரிபுவேறு நிலையல் 153 தொகுக்கும்வழித் தொகுத்தல் 399 தொகைமொழி நிலை 407 தொழிற்படக் கிளத்தல் 240 தொழிற்பெயர் 135 தொழின்முதல் நிலை 109 தொன்னெறி மரபு 107 தொன்னெறி மொழி 439 ந நளியென் கிளவி 319 நிரனிறை 400, 401 நிலப்பெயர் 161 நிறைப் பெயர் 444 நிறைப்பெயர்க் கிளவி 412 நின்றாங்கு இசைத்தல் 57 நீட்டும்வழி நீட்டல் 399 நும்மின் திரிபெயர் 139 நோக்கல் நோக்கம் 90 ப பகுதிக்கிளவி 17 பண்பின் தொகை 407, 411 பண்பினாகிய சினைமுதற் கிளவி 214 பண்புகொள் கிளவி 214 பண்புகொள் பெயர் 111, 130, 136, 161, 164 பண்பு தொகவரூஉங் கிளவி 413 பதினோரெழுத்து 10 பல்லோர் அறியும் சொல் 2 பல்லோர் படர்க்கை 221 பலசொல் ஒருபொருள் 293 பலபெயர் 412 பலர்சொல் நடை 416 பலர்வரை கிளவி 169 பலரறி சொல் 7 பலவற்றுப் படர்க்கை 210 பலவறி சொல் 3, 9, 165 பற்றுவிடு கிளவி 107 பன்மை இயற்பெயர் 172 பன்மை உரைக்கும் தன்மைக் கிளவி 203 பன்மைச் சினைப்பெயர் 173 பன்மை சுட்டிய சினைநிலைக் கிளவி 60 பன்மை சுட்டிய சினைமுதற் பெயர் 174 பால்திரி கிளவி 188 பால்பிரிந் திசையா உயர்திணை 56 பால் மயக்குற்ற ஐயக் கிளவி 23 பால்வரை கிளவி 107 பால்வரை தெய்வம் 56 பாலறி மரபு 205 பாலறி வந்த அஃறிணைப் பெயர் 163 பாலறி வந்த உயர்திணைப் பெயர் 158 பாலறி வந்த என்ன பெயர் 162, 166 பிண்டப் பெயர் 87 பிரிநிலை எச்சம் 424 பிரிவில் அசைநிலை 276 பிறிது பிறிதேற்றல் 101 பிறிதுபொருள் கூறல் 33 பிறிதுபொருள் சுட்டல் 112 பின்மொழி நிலையல் 414 புணரியல் நிலை 247 புனிறென் கிளவி 371 பெண்டென் கிளவி 159 பெண்மை இயற்பெயர் 172 பெண்மைச் சினைப்பெயர் 173 பெண்மை சுட்டிய உயர்திணை 4 பெண்மை சுட்டிய சினைமுதற் பெயர் 174 பெண்மை முறைப்பெயர் 175 பெண்மை யடுத்த மகனென் கிளவி 160 பெயர்க்குரி மரபு 286 பெயர்ச்சொற் கிளவி 107 பெயர்தோன்று நிலை 63 பெயர்நிலைக் கிளவி 39, 68, 160, 182, 185, 439 பெயர்ப்பயனிலை 64 பெயரிற் றோன்றும் பாலறி கிளவி 11 பெயரினாகிய தொகை 65 பெயரெஞ்சு கிளவி 230, 232, 426 பொதுப்பிரி பாற்சொல் 42 பொருட்கிளவி 74 பொருண்மை தெரிதல் 152 பொருண்மை நிலை 153 பொருள்செல் மருங்கு 103 பொருள் தெரிநிலை 51 பொருள்நிலை மரபு 414 பொருள் புணர்ந்த கிளவி 15 பொருளொடு புணராச் சுட்டுப்பெயர் 35 ம மக்கட் சுட்டு 1 மகடூஉ அறிசொல் 2, 6 மகளென் கிளவி 159 மகனென் கிளவி 159 மந்திரப் பொருள் 439 மயங்குமொழிக் கிளவி 241 மற்றென் கிளவி 259 மற்றையது என்னும் கிளவி 261 மன்றவென் கிளவி 262 மன்னாப் பொருள் 32 மன்னைச் சொல் 249 மாரைக் கிளவி 7, 201 மாவென் கிளவி 269 மிகுதி செய்யும் பொருள் 295 முதலறி கிளவி 111 முதற்சினைக் கிளவி 85 முந்நிலைக் காலம் 234 முப்பால் 204 முப்பாற் சொல் 2 முழுதென் கிளவி 322 முற்படக் கிளத்தல் 37 முற்றிய உம்மைத்தொகை 281 முறைநிலைப் பெயர் 161 முறைப் பெயர் 122, 149, 170, 171, 175 முறைப்பெயர்க் கிளவி 132, 143 முன்மொழி நிலையல் 414 முன்னத்தினுணருங் கிளவி 55, 449 முன்னிலை அசைச்சொல் 270 முன்னிலைக் கிளவி 217 முன்னிலை சுட்டிய ஒருமைக் கிளவி 452 முன்னிலை வினைச்சொல் 440 மூவிடம் 28 மெய்ந்நிலைப் பொதுச்சொல் 234 மெய்ந்நிலை மயக்கு 439 மெய்பெறக் கிளந்த உரிச்சொல் 385 மெய்பெறக் கிளந்த கிளவி 453 மெய்ப்பொருள் 117 மெய்யறி பனுவல் 92 மெலிக்கும் வழி மெலித்தல் 399 மேலைக் கிளவி 209 மொழிப்பொருட் காரணம் 390 மொழிமாற் றியற்கை 405 மொழிமாற்று 400 ய யாணர்க் கிளவி 375 யானென் பெயர் 133 வ வடசொல் 393 வடசொற் கிளவி 397 வடவெழுத்து 397 வண்ணச் சினைச் சொல் 26 வயாவென் கிளவி 367 வருசொல் 28 வலிக்கும் வழி வலித்தல் 399 வழக்கியன் மருங்கு 453 வழக்கினாகிய வுயர்சொற் கிளவி 27 வழக்கு 17 வழக்குவழி 48 வழாஅல் ஓம்பல் 13 வாராக் காலம் 233, 235, 239 வாரா மரபு 417 வாழ்ச்சிக் கிழமை 97 வியங்கோட் கிளவி 220 வியங்கோள் 216 வியங்கோள் எண்ணுப் பெயர் 43 விரிக்கும்வழி விரித்தல் 399 விரைசொல் அடுக்கு 420 விரைந்த பொருள் 235 விளிகொள் பெயர் 124 விறற்சொல் 55 வினாவின் கிளவி 30, 204 வினாவின் பெயர் 133, 139,144 வினாவுடை வினைச்சொல் 238 வினைக் குறிப்பு 69 வினைச்சொற் கிளவி 235, 239 வினைசெய் இடம் 79 வினைசெயல் மருங்கு 247 வினைப்படு தொகுதி 31 வினைப்பெயர் 161 வினைப்பெயர்க் கிளவி 164 வினைமாற்று 259 வினைமுதல் உரைக்கும் கிளவி 111 வினைமுதல் கருவி 71 வினைமுதற் கிளவி 228, 236 வினையிற் றோன்றும் பாலறி கிளவி 11 வினையின் தொகுதி 410 வினையின் தொகை 407 வினையெஞ்சு கிளவி 216, 222, 230, 425, 447 வினை வேறுபடாஅப் பலபொருள் ஒருசொல் 50, 53 வினை வேறுபடூஉம் பலபொருள் ஒருசொல் 50, 51 வெளிப்பட வாரா உரிச்சொல் 294 வெளிப்படு சொல் 294 வேட்கைப் பெருக்கம் 367 வேற்றுமைக் கிளவி 107 வேற்றுமைத் தொகை 407, 408 வேற்றுமை தொக்க பெயர் 413 வேற்றுமைப் பொருள் 81 வேறுபெயர்க் கிளவி 40 வேறுபொருள் குறித்த ஒருசொல் 395 வேறுவினைக் கிளவி 72 வேறுவினைப் பொதுச்சொல் 44 வேறென் கிளவி 216 கலைச்சொல் நிரல் உரைவழி (நூற்பா எண்) அ அஃறிணைக்கு உரிய தொருவினாச் சொல் 213 அஃறிணைக்கு உரிய பெயர் 147 அஃறிணைப் பாலறிசொல் 164 அஃறிணைப் பெயர் 123 அஃறிணைப் பெயர்ச்சொல் 41 அஃறிணைப் பொருட்கே உரிமை 156 அஃறிணைப் பொருண்மேல் வரும் இயற்பெயர் 167 அஃறிணைப் பொருண்மேல் வரும் விரவுப்பெயர் 146 அஃறிணைப் பொருண்மை 3 அஃறிணைப் பொருள்பற்றிவரும் பெயர்ச்சொல் 3 அஃறிணை யுணர்த்துஞ்சொல் 1 அஃறிணை வினைக்குறிப்பு 214 அசைநிலை 292 அத்தை அசைநிலை 292 அதிகாரப் புறனடை 150, 182, 245 அதுச் சொல்வேற்றுமை 78 அதுவெனப் பெயர் பெற்ற வேற்றுமைச் சொல் 77 அரசத் தன்மை 55 அளைமறி பாப்புப் பொருள்கோள் 405 அறம் 51 அறியாத பொருண்மைக்கண் நிகழும் சொல் 30 ஆ ஆக்கச் சொல் 22 ஆசிரியமத விகற்பம் 453 ஆடூஉவினை 195 ஆண்பாலுணர வருஞ்சொல் 5 ஆண்மை குறித்த பெயர் 172 ஆண்மைத் தன்மையிற் றிரிந்த பெயர் 4 ஆண்மைப் பெயர் திணை 177 ஆண்மைப் பொருண்மை 5 ஆண்மைப் பொருண்மைக்கண் வரும் சினைப்பெயர் 173 ஆண்மைப் பொருண்மையைக் குறித்த இயற்பெயர் 172 ஆண்மைப் பொருண்மையைச் சுட்டிய முறைப் பெயர் 175 ஆர் என்னும் இடைச்சொல் 267 ஆன அசைநிலை 292 இ இசை நிறையாகியடுக்கு 418 இசைப் பொருட்கண் அடுக்கி வருஞ்சொல் 419 இடக்கரடக்கி 435 இடத்தினாற் பெற்ற பெயர் 161 இடத்து நிகழ் பொருளை இடத்தாற்கூறுதல் 111 இடப்பொருண்மை உணர்த்துஞ் சொற்கள் 62 இடம் பற்றி வரும் பெயர் 170 இடம் வரைந்த சொல் 107 இடவழு 11 இடவழுக் காத்தல் 28 இடைக் கிடந்த சொல் 231 இடைக்குறை 443 இடைச்சொல் இலக்கணம் 246 இடைச்சொல்லடுக்கு 99 இடைச் சொற்கண் விளிப் பொருண்மை 149 இடைச்சொற்குச் சொற்புறநடை 292 இயம் 44 இயல்பாகிய கிழமை 78 இயற்பெயர்ச் சொல் 36 இரட்டித்துச் சொல்லப்படும் சொற்கள் 46 இரப்போன் கூற்று 437 இருதிணைக்கும் உரிய பெயர் இலக்கணம் 168 இருதிணைக்கும் உரிய வினை 216 இருதிணைக்கும் பொதுவாகிய சொல் 58 இருதிணைப் பொருண்மை 170 இருவகை எச்சம் 230, 231 இலக்கண வழக்கு 28, 182 இலக்கணை 293 இழிபுபற்றி வரும் பெயர் 162 இனச்சுட்டில்லாத பொருள் 18 இனமாகிய பொருள் 33 இனிது விளக்குஞ் சொல் 423 உ உகர ஓகார ஈற்றுப் பெயர் 119 உடம்பொடு புணர்த்தல் 286 உடைப் பெயர் 161 உடைப் பொருள் 101 உடைமையாற் பெற்ற பெயர் 161 உடையபெயர் 406 உண்டற் காலம் 234 உம்மையெஞ்சிய சொல் 429 உம்மை பிரிந்து நின்றே பொருள்படும் சொல் 429 உருபு தொகைச் சொல் 101 உய்த்துக் கொண்டுணர்தல் 102 உய்த்துணர வைத்தல் 225 உயர்திணை ஒட்டுப்பெயர் 416 உயர்திணை ஒருமை உணரவரும் படர்க்கைச் சொல் 199 உயர்திணைப் படர்க்கைப் பன்மைவினை 200 உயர்திணைப் படர்க்கை வினை 199 உயர்திணைப் பன்மை இயற்பெயர் 172 உயர்திணைப் பெயர் 124, 156 உயர்திணைப் பொருட்கே உரியவாகிவரும் பெயர் 162 உயர்திணைப் பொருண்மேல் எண்ணுமுறை 42 உயர்திணை யாண்பாலறி சொல் 4 உயர்திணைப் பொருண்மேல் விரவி வரும் இயற்பெயர் 167 உயர்திணை யுணர்த்துஞ்சொல் 1 உயர்ந்தோர் வழக்கு 98 உயர்பொருள் 1 உயிர்ப் பொருள் 3 உயிரில்பொருள் 3 உயிரீற்றுப் பெயர் 123 உரிச்சொல்லடுக்கு 99 உரிச்சொற்கெல்லாம் புறநடை 392 உருபு தொகை 408 உருபு மயக்கம் 82 உவம நிலை 408 உரையசை 274 உவமிக்கப்படும் பொருள் 409 உளப்பாட்டுத் தன்மைக்கண் வருவதொரு திரிபு 203 உளப்பாட்டுத் தன்மைக்கேற்ற சாரியை 182 உளப்பாட்டுத் தன்மைவினை 196 உறுப்பின் பெயர் 170 உறுப்பினாற் கூறப்படும் சொல் 55 உறுப்புப்பற்றி வரும் பெயர் 162 எ எச்சக் கிளவி 423 எச்ச வாய்பாடு 256 எண்ணின்கட் கிடந்ததொரு மரபு 48 எண்ணினாற் பொருள் குறித்தியலும் பெயர் 412 எண்ணுதற் குரியதொரு மரபு 286 எண்ணுப் பெயர் 164 எண்ணும்மை அதிகாரப்பட்டு வருதல் 288 எதிர்காலச் சொல் 1, 9 எதிர்காலம் பற்றிவரும் கொடைப் பொருண்மை 94 எதிர்கால வாய்பாட்டு வேற்றுமை 222 எதிர்மறை வாய்பாடு 208 எய்தியதன் மேற் சிறப்புவிதி 65 எய்தியதன்மேல் சிறப்புவிதி வகுத்தல் 116 எய்தியதன்மேற் சிறப்புவிதி வகுத்தலை உணர்த்துதல் 225 எய்தியது ஒருமருங்கு விலக்குதல் 106, 191 எய்தியது ஒருமருங்கு விலகுதல் 220 எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் 37 எல்லாச் சொற்கும் உரியதோர் இலக்கணம் 391 எழுவாய்த் தொடர் 245 எழுவாய் வேற்றுமைக்கு உரியதொரு புறநடை 66 ஏ ஏகாரத் திரிபு 203 ஏதுப்பொருண்மை 107 ஏழாம் வேற்றுமைப் பொருள் வேறுபாடு 80 ஏற்புழிக் கோடல் 209, 412 ஐ ஐ எனக்குறித்த வேற்றுமைச் சொல் 69 ஐகார ஈற்றுப் பெயர் 118 ஐயந்தீர்தற் பொருட்டு ஆராய்ந்த சொல் 30 ஐயம் அறுத்தல் 30 ஐயமறுத்தல் 125 ஒ ஒட்டுப்பட்ட பெயர் 415 ஒட்டுப்பட்ட பெயர்கள் 406 ஒட்டுப் பெயர் 68, 406, 407 ஒடுவெனப் பெயர் பெற்ற வேற்றுமைச் சொல் 71 ஒப்பக்கூறல் 60 ஒப்பின் முடித்தல் 132, 143 ஒருசார் வினைச்சொற்கள் 236 ஒரு பெயராகிப் பல பொருட்கும் உரித்தாகிய பொதுச் சொல் 47 ஒருபொருட்கு இடுகுறியாகிய பெயர் 161 ஒருபொருட்கு இடுகுறியாகி வழங்கும் பெயர் 170 ஒரு பொருண்மேல் அடுக்கிவருதல் 99 ஒருபொருண் மேற் பலபெயர் 36, 37 ஒரு பொருள் குறித்த இடைச்சொல் 257, 259 ஒருபொருள் குறித்த வேறு வேறாகிய பெயர்ச் சொல் 40 ஒருமை குறித்த பெயர் 172, 179 ஒருமைப் பொருண்மைக்கண் வரும் சினைப்பெயர் 173 ஒருமைப் பொருண்மையைக் குறித்த இயற்பெயர் 172 ஒருமையுணர்த்தும் பெயர் 170 ஒரு வினையான் முடித்தல் 40 ஒலிப் பொருண்மை 291 ஒலிப்பொருள் 307 ஒன்றனையறியுஞ் சொல் 1, 3, 8 ஓ ஓசைப் பொருண்மை 354 ஓதப்பட்ட நோக்கப் பொருண்மை 90 க கடாவிடை 1, 391, 389 கடிசூத்திரம் 74 கடைக்குறை 443 கண் எனப் பெயர் பெற்ற வேற்றுமைச் சொல் 79 சுண்ணமாகிய பொருள்கோள் 402 கல்விபற்றி வரும் பெயர் 162 காரகம் 71 காரக வேற்றுமை 109 காரணக்குறி 151 காரணப் பெயராகிவரும் தொழிற் பெயர் 406 காரணப் பொருள் 19 காரியப் பொருள் 20 காலங் காட்டாத பொதுப்பட்ட வினை 234 காரியப் பொருளைக் காரணத்தான் மொழிதல் 111 காலச் சொல் 410 காலத்தான் உணருஞ் சொல் 107 காலப்பொருள் 410 காலப் பொருண்மை 442 காலம்பற்றி வரும் பெயர் 162 கால மரபு 233 காலமயக்கம் 221, 241 காலவழூஉ 11 கிளவிய தாக்கம் 1 குடியினானாய பெயர் 161 குறிப்பினான் மிகுதியுணர்த்துதல் 446 குறிப்புநிலை 153, 155 குறிப்புமொழி 55, 417 குறிப்புவினை யொட்டுப் பெயர் 68 குறிப்பெயர் 164 குறைக்கும் வழிக் குறைத்தல் 1 குறைச் சொல் 266, 313 குறைச்சொற் கிளவி 293 கூத்தராற்றுப்படை 452 கூறிட்டு மொழிதல் 13 கொண்டு கூட்டு 405 கொண்டு கூட்டுப் பொருள்கோள் 405 கொண்டு வாராதது முடித்தல் 132 ச சாதியொருமை 60 சான்றோர் செய்யுள் 98, 396 சிங்க நோக்கு 123 சிறப்புடைப் பொருளைத் தானினிது கிளத்தல் 62 சிறப்புப் பற்றிவரும் பெயர் 162 சினைக் கிளவி 31 சினைப்பொருள் முதற்பொருளைச் சிவணுதல் 112 சினைப் பொருளை முதலாற் கூறும் பெயர்ச் சொல் 111 சினைபற்றி யுறழ்தல் 16 சினையினாற் பன்மை குறித்து வரும் பெயர் 161 சினையையும் முதலையும் உணர்த்தும் பெயர் 170 சினை வினை 179 சுட்டுப் பெயரை முற்படக் கூறுதல் 37 சுட்டுப் பெயர்ச் சொல் 36 சுண்ணமொழிமாற்று 405 செஞ்சொல் 394, 394 செந்தமிழ் நாட்டுட்பட்டதேயம் 395 செப்பின்கட் கிடந்ததொரு குறிப்பு 59 செப்பின்கட் கிடந்ததொரு வழு 14 செப்பின்கண் வழுக்காத்தல் 34 செப்புதற் பொருண்மை 15 செப்புவழுக் காத்தல் 31, 36, 46 செப்பு வழுவமைத்தல் 31, 35, 46 செப்பு வழுவமைதி 33 செய்யுட்குரிய சொல் 393 செய்யுனெறி 18 செய்யுளகத்துத் திரிந்து பொருள் படுஞ்சொல் 400 செய்யுளாக்குதற்குரிய சொல் 393 செய்யுளின்பம் 1 சொல்நிலை திரியாமை 403 சொல்லாதொழிந்த பொருள் 423 சொல்லான் வேறுபடுதல் 447 சொல்லிலக்கணம் 108 சொல்லினது தொடர்ச்சி 1 சொல்லுவான் குறிப்பு 417 சொற்கு முடிபு உணர்த்துதல் 228 சொற்றொடை 408 சொன்மைநிலை 154, 155 சொன்மை நிலை இலக்கணம் 155 சொன்மைநிலைபெயர் 155 சொன்னிலைமை 1 த தந்திர உத்தி 40, 48, 49, 102, 225 தந்துகொணர்ந் துரைத்தல் 48 தமிழ்திரி நிலங்கள் 396 தமிழ்திரி நிலமாதல் 394 தமிழ் நடை 2, 243 தமிழ்நாட்டு மூவேந்தர் 252 தலைக்குறை 443 தற்புருட சமாசம் 411 தன் இயல்பிற் றிரிந்த பொருட்பெயர் 55 தன்மைப் பெயர்ச்சொல் 41 தனித் தன்மை வினை 197 தனிப்பெயர் 68 தனிமொழி 1 தனிமொழி இலக்கணம் 151, 229 தனிமொழிப் பகுதி 229 தாப்பிசைப் பொருள்கோள் 405 திசை நிலைக்கிளவிகளி னாகுஞ் சொல் 439 திணைக்கட் பிறவற்றை யிசைத்தல் 1 திணைபற்றிவரும் பன்மைப் பெயர் 161 திணை வழு 11 திணைவழுவமைத்தல் 41 திணைவழுவமைதி 43, 55 திணை வழூஉ 11 திணை விரவிவரும் பெயர் 49 துணிந்து கூறல் 13 துளுவம் 396 தெய்வப் பொருண்மை 106 தெய்வப் பொருண்மையைச் சுட்டிய பெயர் 4 தெரிநிலைவினையொட்டுப் பெயர் 68 தெலிங்கம் 396 தேய வழக்கு 397 தேற்றப் பொருண்மை 262 தொகாநிலைத் தொடர்ச்சிக்கண் உருபு 101 தொகாநிலை வகையான் வருதல் 1 தொகுக்குவழித் தொகுத்தல் 443 தொகைச் சொல் 101, 407 தொகைப் பொருண்மை 286 தொடர்மொழி 1 தொடர்மொழியாகிய வாக்கியம் 1 தொழில் பற்றி வரும் பெயர் 170 தொழில் மேல் வருவன 68 தொழிலின் நிலைமை 64 தொழிலுணர்த்துஞ் சொல் 407 தொழிற் காரகம் 109 தொழிற்பட்ட தொகை 31 தொழிற்படாத் தொகை 31 ந நரக்திப்பொருண்மை 4 நல்வினையேது 1 நிலப்பெயர் 36 நிலையாத பொருள் 32 ப பஞ்சத்திராவிடம் 396 படர்க்கை வினை 41 படர்க்கை வினைக்கண் வரும் திரிபு 205 பண்டையோர் வழக்கு 107 பண்பின் பெயரான் பண்புடையதனைக் கூறல் 111 பண்பினான் ஆகுஞ் சொல் 107 பண்பினாற் பெற்ற பெயர் 161 பண்பினைக் கொண்ட பெயர் 164 பண்பினைக் கொண்டு நிற்குஞ் சொல் 214 பண்புப் பெயர் 406 பயன்படவரூஉந் தொடர்மொழி 1 பருந்துவிழுக்காடு 206 பல பொருட்கும் பொதுப் பெயர் 50 பலபொருண்மேல் அடுக்கி வருதல் 99 பலபொருள்குறித்த இடைச்சொல் 257 பலபொருளுணரவருஞ் சொல் 50 பலபொருளொருசொல் 385 பலரை உணர்த்தும் படர்க்கை 221 பலரை யறியுஞ் சொல் 2 பலவற்றை யறியுஞ் சொல் 3 பலவற்றை யுணரவருஞ் சொல் 9 பலவினையையுடைய பொதுப்பெயர் 44 பழகிப்போந்த பெயர் 191 பழமைத்தாகி நெறிப்பட வருஞ்சொல் 439 பன்மை உணர்த்தும் பெயர் 170 பன்மைகுறித்த பெயர் 172, 412 பன்மை குறித்த பெயர்திணை 178 பன்மைப் பொருண்மைக்கண் வரும்சினைப் பெயர் 173 பன்மைப் பொருண்மையைக் குறித்த இயற்பெயர் 172 பன்மை வினை கோடல் 186 பார்ப்பார் வேதம் 47 பால் அறியப் படாத சொல் 187 பால் ஐயம் 23 பால் வழு 11 பால் வழூஉ 11 பால் விளங்காத அஃறிணை இயற்பெயர் 167 பாலறிசொற்கட் கிடந்ததொருமரபு 60 பாலுணர நில்லாத தெய்வப் பொருண்மை 56 பாலுணர வருஞ்சொல் 236 பிராயம் பற்றி வரும் பெயர் 170 பிறநூல் முடிபு 182 பிறப்பு முறை பற்றி வரும் பெயர் 170 பிறிதொரு வாய்பாடாக வருதல் 64 புணல்யாற்றுப் பொருள் கோள் 405 புள்ளியீற்றுப் பெயர் 123 புறநடை ஓதல் 81 புறநடைச் சூத்திரம் 161 பூட்டுவிற் பொருள்கோள் 405 பெண்டாட்டியை அறியுஞ்சொல் 2 பெண்ணாகிய தன்மை 55 பெண்பால் உணரவருஞ் சொல் 6 பெண்மை குறித்த பெயர் 172 பெண்மைப் பெயர் 176 பெண்மைப் பொருண்மைக்கண் வரும் சினைப்பெயர் 173 பெண்மைப் பொருண்மையைக் குறித்த இயற்பெயர் 172 பெண்மைப் பொருண்மையைச் சுட்டிய முறைப் பெயர் 175 பெயர்ச்சொற் பாகுபாடு 1, 156 பெயர்நிலைக் கிளவிகளினாகுஞ் சொல் 439 பெயர்ப்பொருண்மை 64, 246 பெயரடுக்கு 99 பெயரியல்பு 151 பெயரீறு 62 பெயரெச்ச அடுக்கு 99 பெயரெச்ச இடைக் கிடப்பு 231 பெயரெச்ச உம் இடைச் சொல் 252 பெயரெச்சப் பொருண்மை 255 பெயரெச்சமல்லாத செய்யும் என்னுஞ் சொல் 244 பெயரெச்ச வினைச்சொல் 230 பேடியென்னும் பெயர் 12 பொதுச் சொல் 47 பொதுப் பெயராற் கூறுதல் 45 பொதுப்பொருண்மை 1 பொதுமையிற் பிரியும் பொருள் 48 பொதுமையுணர்த்தும் பலபொரு ளொருசொல் 51 பொதுவினை 44 பொது வினையாற் கிளத்தல் 45 பொருட்கு இயல்பாகிய பண்பு 78 பொருட்குள்ள அளவின் நுணுக்கம் 326 பொருட் டொகை 408 பொருட் புறத்ததாகிய கருப்பொருள் 190 பொருண்மேலடை யிரண்டு வருதல் 26 பொருண்மேலாகு நிலைமை 1 பொருண்மேற் சொன்னிகழ்தல் 390 பொருண்மை நிலை 153 பொருண்மைநிலை வழக்கு 155 பொருண்மைப் படாமை 46 பொருண்மை வாய்பாடு 114 பொருணிலை மயக்கினாகுஞ் சொல் 439 பொருணிலைமை 1 பொருணிலைமை மயக்கங் கூறுதல் 439 பொருள் புணர் இடைச்சொல் 249 பொருள் புணரா இடைச்சொல் 249 பொருள் வேறுபடா நிறைந்தபெயர் 444 பொருளல்லாப் பிறிது பொருளோடு உறழ்தல் 16 பொருளான்வேறுபடுதல் 447 பொருளு™ர்த்தா நிலை 277 பொருளுணர்த்துஞ் சொல் 407 பொருளுணர்த்தும் நிலைமை 277 பொருளுணர வாராமை 446 பொருளொடு புணர்ந்து வருதல் 418 பொரூஉப்பொருள் 95 ம மக்கள் வினை 210 மகடூஉ வினை 195 மகள் என்னும் முறைப்பெயர் 55 மங்கல மரபு 435 மரபு வழு 32 மரபு வழுக்காத்தல் 26, 44 மரபு வழுவமைத்தல் 47 மரபு வழூஉ 11 மரீஇய மரபு 87 மருவிப் போந்த சொல் 436 மரூஉ 229 மரூஉ வழக்கு 220 மாட்டேற்று வகை 256 மாணாக்கர்க்கு உரிதோ ரியல்பு 389 மார் ஈற்று வினைச் சொல் 201 மிகுதலுங் குறைதலுமில்லாத அளவென் 402 முதல் வேற்றுமை 63 முதற்கிளவி 31 முற்றிலக்கணம் 242 முற்றுச்சொல் 64 முற்றுச் சொல்லடுக்கு 99 முற்றுத் தொடர் 245 முறைப் பெயர்ச் சொல் 143 முன்னிலை வினை 41 முன்னிலை வினைச்சொல் 217, 218 மொழிந்த பொருளோடு ஒன்றவைத்தல் 40 மொழிமாற்று 405 ய யாப்பிலக்கணம் 403 யாற்றொழுக்கு 405 வ வடசொல் 397 வடநாட்டார் 396 வடநூலாசிரியர் 293 வடமொழி 67, 397 வடமொழிச் சிதைவு 82 வடமொழிப் புலவர் 2 வடுகம் 396 வண்ண முதற்சொல் 26 வழங்குஞ் சொல் 439 வழுக்காத்தல் 16 வழூஉக் காத்தல் 280 வழூஉப்படுதல் 11 வினைப் பொருண்மை 84 வாய்பாடு வேற்றுமை 222 வாய்வாளாதிருத்தல் 13 விசேடணம் 408 வியங்கொள்ளும் எண்ணுப்பெயர் 43 வியங்கோட் பொருண்மை 9 வியங்கோள் வாய்பாடு 442 விரவுப் பெயர் 156 விரவுப் பெயரிலக்கணம் 185 விரிக்கும்வழி விரித்தல் 1 விரிந்தது தொகுத்தல் 112, 212 விளி இலக்கணம் 115 விளிகொள்ளும் பெயர் 124 விளித்தற் பொருண்மை 115 விளியீறு 62 வினாச் சொற்கள் 29 வினாவழு அமைத்தல் 30 வினா வழுக்காத்தல் 29 வினா விடுத்தல் 13 வினைக்குறிப்பு 7, 9, 195 வினைச் சொற்றிரிபு 442 வினைப் பொருண்மை 246 வினாப் பொருண்மை 238 வினைமுதல் 229 வினை முதல் வினை 226 வினையானாகும் பெயர் 164 வினையிலக்கணம் 242 வினையெச்ச அடுக்கு 99 வினையெச்ச இடைக் கிடப்பு 231 வினையெச்சப் பொருண்மை 255 வினையெச்ச மறை 230 வினையெச்ச வினைச்சொல் 230 வீரியத்தாற் கூறுஞ்சொல் 55 வெளிப்பட வாரா உரிச்சொல் 155 வெளிப்படுநிலை 153, 155 வேதாகமத் துணிவு 32 வேற்றுமை ஈறு 62 வேற்றுமை ஏற்ற பெயர் 426 வேற்றுமைப் பொருள் மயக்கம் 111 வேற்றுமையடுக்கு 99 வேற்றுமை யல்லாத உருபு 103 ன னகர ஈற்று அளபெடைப் பெயர் 131 தொல்காப்பியப் பதிப்புகள் கால வரிசையில் - சொல்லதிகாரம் வ. காலம் நூல் பகுதி, உரை பதிப்பாசிரியர் எண் 1. 1868 செப். சொல். சேனா. சி.வை. தாமோதரம் பிள்ளை (விபவ. புரட்டாசி) 2. 1868 நவ. ” இராசகோபால பிள்ளை (விபவ, கார்த்திகை) 3. 1892 சொல். நச்சர் ” 4. 1922 மார்ச் எழுத்து. சொல் (மூலம்) கா. நமச்சிவாய முதலியார் 5. 1923 மார்ச் சொல். சேனா. கந்தசாமியார் 6. 1927 சொல். இளம். ” 7. 1929 சொல். தெய்வ. ரா. வேங்கடாசலம் பிள்ளை 8. 1930 சொல். குறிப்புரை பி.சா.சு. சாஸ்திரியார் 9. 1934 சொல். சேனா. ஆறுமுக நாவலர் 10. 1938 சொல். சேனா. கணேசையர் 11. 1941 சொல். நச்சர் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை 12. 1945 சொல் (மொழி) பி.சா.சு. சாஸ்திரியார் 13. 1946 சொல். சேனா. தேவநேயப் பாவாணர் 14. 1952 சொல். நச்சர்* தி.த. கனகசுந்தரம் பிள்ளை 15. 1954 சொல். சேனா. ஆ. பூவராகம் பிள்ளை 16. 1962 சொல். நச்சர் கு. சுந்தரமூர்த்தி 17. 1962 சொல். நச்சர் இராம. கோவிந்தசாமி 18. 1963 சொல். இளம். கு. சுந்தரமூர்த்தி 19. 1963 சொல். தெய்வ. ” 20. 1963 சொல். வி.ஐ. சுப்பிரமணியன் 21. 1964 சொல். கல். பழைய கு. சுந்தரமூர்த்தி 22. 1966 சொல். சேனா. ” 23. 1971 செப். தொல். நன். சொல். வெள்ளைவாரணனார் 24. 1971 இ. தொகை (சொல்) ச.வே.சு. 25. 1984 மே வேற்றுமை மயங்கியல் ஆ. சிவலிங்கனார் 26. 1984 மே விளிமரபு ” 27. 1984 சூலை பெயரியல் ” 28. 1984 செப். வினையியல் ” 29. 1972 முதல் 1985 எழுத்து. சொல் (மொழி) கமில்சுவலபில் 30. 1985 எழுத்து. சொல் (மொழி) டி. ஆல்பர்ட் 31. 1988 அக். சொல் ” 32. 1989 சொல். சேனா. கு. சுந்தரமூர்த்தி