தொல்காப்பிய உரைத்தொகை - 7 சொல்லதிகாரம் சேனாவரையம்-2 சி. கணேசையர் உரைவிளக்கக் குறிப்புக்களுடன் - 1938,1955 மீள்பதிப்பு - 2018 பதிப்பாசிரியர் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் தமிழ்மண் பதிப்பகம் நூற்குறிப்பு தொல்காப்பிய உரைத்தொகை – 7 சொல்லதிகாரம் - சேனாவரையம் - 2 முதற்பதிப்பு - 1938 சி. கணேசையர் (உரைவிளக்கக் குறிப்புக்களுடன்)பதிப்பாசிரியர் மீள்பதிப்பு (2018) முதுமுனைவர் இரா. இளங்குமரனார் பதிப்பாசிரியர்கள் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் பக்கம் : 24+384 =408 விலை : 635/- பதிப்பு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. bjh.ng.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்:  தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் :408  f£lik¥ò : இயல்பு  படிகள் : 500   நூலாக்கம் : கோ. சித்திரா   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (Harrish)   அச்சு : மாணவர் நகலகம், பிராசசு இந்தியா, ரியல் இம்பேக்ட் சொல்யூசன், தூரிகை பிரிண்ட், வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.  தொல்காப்பிய உரைத்தொகை தொல்காப்பியம் நம் வாழ்வியல் ஆவணம்; நம் முந்தையர் கண்ட மொழியியல் வளங்கள் அனைத்தையும் திரட்டித் தந்த தேன் தேட்டு! அத்தேட்டைச் சுவைத்த கோத்தும்பிகள் பழைய உரையாசிரியர்கள். அவர்கள் உரைகளையெல்லாம் ஒன்று திரட்டி, வரிசையுறத் தமிழுலகம் கொள்ள வைத்த உரைத்தொகுதிகள் இவையாம்! முன்னைப் பதிப்பாசிரியர்கள் தெளிவுறுத்தும் மணிக்குவைகள் எல்லாமும், அவர்கள் வைத்த வைப்புப்படி வைத்த செப்பேடுகள் இத் தொல்காப்பிய உரைத் தொகையாம். மேலும், இவை கிடைத்தற்கு அரிய கருவூலமுமாம்! ***** ***** ***** இளம்பூரணர், சேனாவரையர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், தெய்வச் சிலையார், கல்லாடர் ஆகிய பழைய உரையாசிரியர்கள், உரை விளக்கம் பல காலங்களில் எழுதியுளர். எழுத்து, சொல், பொருள் ஆகியவற்றின் பதிப்புகள் ஒரே காலத்தில் ஒருவரால் வெளியிடப்பட வில்லை. அவற்றையெல்லாம் ஓரிடத்தில் ஒரே வேளையில் ஒட்டு மொத்தமாக முன்னைப் பதிப்பாசிரியர்கள் உரை - விளக்கம் - குறிப்பு - இணைப்பு ஆகியவற்றுடன் பெற வெளியிடும் அரிய பெரிய முயற்சியில் வெளியிடப்படுவது தமிழ்மண் பதிப்பகத்தின் இப்பதிப்பாகும். தொல்காப்பியத்திற்குக் கிடைத்த உரைகள் அனைத்தையும் ஒருமொத்தமாகத் தருவதால் இது, தொல்காப்பிய உரைத்தொகை எனப்பட்டது. தொகையாவது தொகுக்கப்பட்டது. இரா. இளங்குமரன் புன்னாலைக் கட்டுவன் சி. கணேசையர் ஈழநாட்டு யாழ்ப்பாணத்திற்கு அணித்தாகவுள்ள புன்னாலைக் கட்டுவன் என்னும் ஊரில், சின்னையர் - சின்னம்மையார் என்பார் மகனாக கி.பி. 1878 -இல் பிறந்தார். கதிர்காமர், பொன்னம்பலர், குமரசாமி என்பார்களிடம் கல்விகற்று, தொடக்கப் பள்ளி ஆசிரியராய்ப் பணி செய்தார். தம் 32 ஆம் அகவையில் அன்னலக்குமி என்பாரை மணந்தார். பின்னர் 1921 முதல், சுன்னாகம் பிராசீன பாடசாலை என்னும் கல்விக் கழகத்தில் தலைமைப் பேராசிரியராக விளங்கி ஓய்வு பெற்றபின் முழுதுறு தமிழ்ப் பணியில் ஊன்றினார். கற்பதும், கற்பிப்பதும், நூல் யாப்பதுமாக நாளெல்லாம் பணி செய்தார். `மகாவித்துவான்’, `வித்துவ சிரோமணி’ என்னும் உயரிய விருதுகளும் பாராட்டுகளும் பெற்றார். உரையும் பாட்டும் வல்ல இவர் இயற்றிய சிற்றிலக்கியங்கள் பல. இவர் இயற்றிய `புலவர் சரிதம்’ 101 புலவர் பெருமக்கள் வரலாறுகளைக் கொண்டதாகும். தம்மிடம் பயின்ற மாணவர்களுக்குத் தொல்காப்பியம் பயிற்றும்போது எழுதிய அரிய குறிப்புகளையும், சி.வை. தாமோதரனார் பதிப்பை அடிப்படையாகக் கொண்டு, பவானந்தர் பதிப்பு, வையாபுரியார் பதிப்பு, கனக சபையார் பதிப்பு ஆகிய முப்பதிப்புகளையும் கிடைத்த ஏட்டுப் படிகளையும் ஒப்பிட்டுத் திருத்திய குறிப்புகளையும் விளக்கங்களையும் கொண்டு “ஈழகேசரி” அதிபர் நா. பொன்னையா அவர்கள் தம் சுன்னாகம் திருமகள் அழுத்தகத்தில் பதிப்பிக்கப் பட்டவையே, புன்னாலைக் கட்டுவன் சி. கணேசையர் அவர்கள் பதிப்பாகும். நச்சினார்க்கினியர் - எழுத்ததிகார உரை, (1937) சேனாவரையர் - சொல்லதிகார உரை (1938) பேராசிரியர் - பொருளதிகாரப் பின்னான்கியல் உரை (1943) நச்சினார்க்கினியர் - பொருளதிகார முன்னைந்தியல் (1948) பதிப்பு உலகில், தனிப்பெருமை பெற்ற தொல்காப்பியப் பதிப்பு என்பது இந்நாள் வரை வெள்ளிடைமலையாக விளங்குவதாம் அவர் பதிப்பு. இவரியற்றிய கட்டுரைகள் சில மதுரைத் தமிழ்ச் சங்கச் செந்தமிழ் இதழில் வெளிவந்தன. நிறைவில் துறவு வாழ்வு பூண்டவர் போல் வாழ்ந்து, தம் எண்பதாம் அகவையில் (1958) இயற்கை எய்தினார். சென்னைப் பல்கலைக் கழக வித்துவான் நிறைநிலைத் தேர்வுக்குப் பாடமாக இருந்த பேராசிரியம் தமிழகப் பரப்பில் கிட்டாத நிலையில் 1948 இல் ஈழத் திருமகள் அழுத்தகப் பதிப்பக வழியே பெற்று யான் கற்க வாய்த்தது. அதன் பெரும்பயன் கணேசனார் பதிப்புக் குறிப்பு, பதிப்பு அமைப்பு ஆயவற்றால் ஏற்பட்ட பூரிப்பினும் பன்மடங்கான பூரிப்பை ஏற்படுத்தியது பேராசிரியர் உரை. அவ்வுரையே, “உரையாசிரியர்கள் கண்ட சொற்பொருள் நுண்மை விளக்கம்” என்னும் அரியதோர் நூலைப் படைக்கத் தூண்டலாக அமைந்தது! முதற்கண் சை. சி. கழகத் தாமரைச் செல்வராலும் பின்னர்த் தமிழ்மண் பதிப்பகத்தாலும் பதிப்பிக்கப்பெற்றுத் தமிழ்வளம் ஆகியது. - இரா. இளங்குமரன் தொல்காப்பியம் அரிய பதிப்புகளும் தேவைகளும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் தமிழின் பண்டை இலக்கண/ இலக்கிய நூல்கள் அச்சிடப் பெற்றன. அவ்வகையில் தமிழில் அச்சடிக்கப்பட்ட முதல் இலக்கண நூலாக இன்று அறியப்படுவது நன்னூலே. காரணம் தமிழக மடங்கள் நன்னூலைப் பயிற்றிலக்கண மாகவும் பயன் பாட்டு இலக்கணமாகவும் கொண்டிருந்தன. 1835 -இல் திருத்தணிகை விசாகப் பெருமாளையர் தாமே உரையெழுதி நன்னூல் மூலமும் காண்டிகையுரையும் என்னும் தலைப்பில் வெளியிட்டார். தொடர்ந்து தாண்டவராய முதலியாரும்,அ. முத்துச்சாமி பிள்ளையும் இணைந்து இலக்கணப் பஞ்சகம் என்னும் தலைப்பில் நன்னூல், நம்பியகப் பொருள், புறப்பொருள் வெண்பாமாலை ஆகியவற்றின் மூலங்களை வெளிக் கொணர்ந் தனர். இதன் தொடர்ச்சியாக 1838 -இல் வீரமா முனிவரின் தொன்னூல் விளக்கம் அச்சாக்கம் பெற்றது. 1847 -இல் தான் மழவை மகாலிங்கையரால் தமிழின் தொல் இலக்கணம் தொல்காப்பிய எழுத்ததிகாரம் உரையோடு அச்சிடப்பட்டது. தொடர்ந்து யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலர், யாழ்ப்பாணத்து சி.வை. தாமோதரம் பிள்ளை, கோமளபுரம் இராசகோபாலபிள்ளை, சோடசாவதானம் சுப்பராய செட்டியார், போன்றோர் 19 -ஆம் நூற்றாண்டில், தொல்காப்பியத்தைக் கிடைத்த உரைகளோடு பதிப்பித்தனர். 1935 - இல் தொல்காப்பியத் திற்கு எழுதப்பட்ட உரைகள் (இன்று கிடைத்துள்ள அனைத்து உரைகளும்) பதிப்பிக்கப்பட்டு விட்டன. 1847 - 2003 வரை தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரை எட்டுப் பதிப்புகளும், 1885-2003 வரை தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் முன்னைந்தியல் எட்டுப் பதிப்புகளும், செய்யுளியல் நச்சினார்க்கினியர் தனித்து மூன்று பதிப்புகளும் வெளிவந்துள்ளன. 1892 - 2003 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை ஐந்து பதிப்புகளும், 1868 - 2006 வரை எழுத்து இளம்பூரணம் ஏழு பதிப்புகளும், 1920 - 2005 வரை தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணம் பத்துப் பதிப்புகளும், 1927 - 2005 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் இளம்பூரணம் ஆறு பதிப்புகளும், 1885 - 2003 வரை தொல்காப்பியம் பொருளதிகாரம் பேராசிரியம் ஏழு பதிப்புகளும், 1929 - 2003 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் மூன்று பதிப்புகளும், 1964 - 2003 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடம் மூன்று பதிப்புகளும் வெளிவந்துள்ளன என முனைவர் பா. மதுகேவரன் தமது தொல்காப்பியம் பதிப்பு ஆவணம் நூலில் குறிப்பிட்டுள்ளார். 2003 -இல் தமிழ்மண் பதிப்பகத்தின் வாயிலாகத் தொல்காப்பிய உரைகள் (இளம்பூரணம், நச்சினார்க்கினியம், பேராசிரியம், சேனாவரையம், கல்லாடம், தெய்வச்சிலையம்) பண்டித வித்வான் தி.வே. கோபாலையர், முனைவர் ந. அரணமுறுவல் ஆகியோரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, முதுமுனைவர் இரா. இளங்குமரனாரின் வாழ்வியல் விளக்கத்துடன் வெளிவந்துள்ளன. இருப்பினும் அச்சில் இன்று கிடைக்காத அரிய பதிப்புகளை மீள் பதிப்பாகப் பதிப்பிக்க வேண்டும் என்னும் நோக்கத்தில், சி.வை. தாமோதரம் பிள்ளை பதிப்பு, கா. நமச்சிவாய முதலியார் பதிப்பு, வ.உ. சிதம்பரம் பிள்ளை பதிப்பு, இரா. வெங்கடாசலம் பிள்ளை பதிப்பு, சி. கணேசையர் பதிப்பு, தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் பதிப்பு ஆகியோரின் பதிப்புகளுடன் தொல்காப்பியம் தொடர்பாக அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரைகளும் இணைத்து தமிழ்மண் பதிப்பகத்தின் வழி மீள் பதிப்புகளாகப் பதிப்பிக்கப் படுகின்றன. மீள் பதிப்பில் பின்பற்றியுள்ள பொது நெறிகள் முதுமுனைவர் இரா. இளங்குமரனாரின் தொல்காப்பியம் குறித்த விளக்கம், ஒவ்வோர் அதிகாரம் பற்றிய வாழ்வியல் விளக்கம், உரையாசிரியர் விவரம் ஆகியவை நூலின் தொடக்கத் தில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. முன்னைப் பதிப்புகளின் முகப்புப் பக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முன்னைப் பதிப்பாசிரியர் பற்றிய விவரங்கள் கால அடிப்படையில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. ஒவ்வோர் இயலின் தொடக்கத்தில், பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் தொல்காப்பியம் தொகுப்பில் எழுதி யுள்ள தொல்காப்பிய இயல் பற்றிய விளக்கம் தரப்பட்டுள்ளன. முன்னைப் பதிப்பில் அடிக்குறிப்புகள் அந்த அந்தப் பக்கத்தில் தரப்பட்டிருந்தன. இப்பதிப்பில் ஒவ்வோர் இயலுக்கும் தொடர் இலக்கமிட்டு, அந்தந்த இயலின் இறுதியில் தொகுத்து வழங்கப் பட்டுள்ளன. முன்னைப் பதிப்புகளில் நூற்பாக்களைக் கையாண்டுள்ள முறையையே இப் பதிப்பிலும் பின்பற்றப்பட்டுள்ளது. நூற்பாக் களுக்குத் தமிழ் எண் கொடுக்கப்பட்டிருப்பின் அவை நடை முறையில் இப்போது உள்ள எண்களாக மாற்றப்பட்டுள்ளன. நூற்பா அகரமுதலி, மேற்கோள் அகரமுதலி போன்றவற்றிற்குப் பக்க எண்கள் கொடுக்கப்பட்டிருப்பின் அவை நூற்பா எண்களாக மாற்றப்பட்டுள்ளன. பின்னிணைப்பாகத் தொல்காப்பியம் தொடர்பாக அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ள கட்டுரைகள் இணைக்கப் பட்டுள்ளன. நூற்பா முதற் குறிப்பு அகராதி மட்டும் கொடுக்கப் பட்டுள்ள பதிப்புகளில் அவற்றோடு, 2003 தமிழ்மண் பதிப்பகத்தின் வழியே பண்டித வித்துவான் தி.வே. கோபாலையர் முனைவர் ந. அரணமுறுவல் ஆகியோரைப் பதிப்பாசிரியர்களாகக் கொண்டு வெளிவந்த இலக்கணப் பதிப்பில் இணைக்கப் பட்டிருந்த, - நூற்பா நிரல் - மேற்கோள் சொல் நிரல் - மேற்கோள் சொற்றொடர் நிரல் - செய்யுள் மேற்கோள் நிரல் - கலைச் சொல் நிரல்( நூற்பாவழி) - கலைச்சொல் நிரல் (உரைவழி) ஆகியவை எடுத்துப் பயன்படுத்தப்பட்டுள்ளன. - பாடவேறுபாடுகள் சுட்டப்பட்டுள்ளன. - முன்னைப் பதிப்பில் வடமொழிச் சொற்கள் பயன் படுத்தப்பட்டிருப்பின் அவை அப்படியே கையாளப் பட்டுள்ளன. - தொல்காப்பியப் பதிப்புகள் குறித்த விவரம் தொகுக்கப்பட்டுள்ளன. சி.வை. தாமோதரம் பிள்ளை பதிப்பு - 1892 சொல்லதிகாரம் - நச்சினார்க்கினியர் 1868 - இல் தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரை யருரையைப் பதிப்பித்த சி.வை. தாமோதரம் பிள்ளை, 1892 ஆம் ஆண்டு சொல்லதிகாரம் நச்சினார்கினியர் உரையைப் பதிப்பித்தார். சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை தொடர்ச்சியாகப் பதிப்பிக்கப்பட்டாலும், முதலில் பதிப்பித்த சி.வை. தாமோதரம் பிள்ளையின் பதிப்பு இன்று அச்சுவடிவில் புழக்கத்தில் இல்லை. அப்பதிப்பினை வெளியிடும் நோக்கத்தில் இப்பதிப்பு மீள் பதிப்பாக வெளிவருகிறது. இப்பதிப்பில் நூற்பா முதற்குறிப்பு அகராதி மட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் மற்ற இணைப்புகளும் இணைக்கப்பட்டு, முதுமுனைவர் இரா. இளங்குமரன் அவர்களின் வாழ்வியல் விளக்கமும், ஒவ்வோர் இயலின் தொடக்கத்தில் க. வெள்ளைவாரணனார் எழுதியுள்ள இயல் விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் சொல்லதிகாரம் தொடர்பாக அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரைகள் பின்னிணைப்பாக இணைக்கப் பட்டுள்ளன. கா. நமச்சிவாய முதலியார் பதிப்பு - 1927 சொல்லதிகாரம் - இளம்பூரணம் இளம்பூரணம் எழுத்ததிகாரம் பொருளதிகாரம் உரைகள் முன்பே வெளிவந்தன. சொல்லதிகாரம் இளம்பூரணர் உரை 1927 - இல் காவேரிப்பாக்கம் நமச்சிவாய முதலியாரின் ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் சென்னை ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸால் வெளியிடப்பட்டது. இதுவே சொல்லதிகாரம் இளம்பூரணர் உரையின் முதற் பதிப்பாகும். இப் பதிப்பில் அடிக்குறிப்புகள் அந்தந்தப் பக்கத்தில் கொடுக்கப்பட்டிருந்தன. இப்பதிப்பில் தொடர் இலக்கமிட்டு, ஒவ்வோர் இயலின் முடிவில் அடிக் குறிப்புகள் தரப்பட்டுள்ளன. இப் பதிப்பில் நூற்பாக்களுக்குத் தமிழ் எண்வரிசையும் நடைமுறை எண் வரிசையும் கொடுக்கப்பட்டிருந்தன. இப்பதிப்பில் நடைமுறை எண் முறை மட்டும் பின்பற்றப்பட்டுள்ளது. வ.உ. சிதம்பரம்பிள்ளை பதிப்பு - 1928 , 1931, 1933, 1935 எழுத்ததிகாரம், பொருளதிகாரம் - இளம்பூரணம் 1868 இல் திரிசிரபுரம் சோடசாவதானம் சுப்பராய செட்டியாரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு கன்னியப்ப முதலியாரால் பதிப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து 1928 -இல் தொல்காப்பியம் இளம்பூரணம் எழுத்ததிகாரம் பதவுரை என்னும் பெயரில் வ.உ. சிதம்பரம் பிள்ளை பதிப்பு வேலாயுதம் பிரிண்டிங் பிர, தூத்துக்குடியிலிருந்து வெளிவந்தது. அப்பதிப்பின் தொடக்கத்தில் கொடுக்கப்பட்டிருந்த நூற்பா அகராதி இப்பதிப்பின் நூலின் இறுதியில் கொடுக்கப் பட்டுள்ளது. அத்துடன் சொல் நிரல் (மேற்கோள்), சொற்றொடர் நிரல் (மேற்கோள்), செய்யுள் நிரல் (மேற்கோள்) கலைச் சொல் நிரல் (நூற்பா வழி) கலைச் சொல் நிரல் (உரைவழி) தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. 1920 -இல் கா. நமச்சிவாய முதலியார் பொருளதிகாரம் இளம்பூரணம் உரை முதல் பகுதியாகக் களவியல், கற்பியல், பொருளியல் மூன்று இயல்களையும் ஸி. குமாரசாமி நாயுடு ஸன் நிறுவனத்தார் வெளியிட்டுள்ளார். மற்ற பகுதிகள் வெளிவந்ததாக அறிய இயலவில்லை. இப்பதிப்பிற்குப் பின் வ.உ. சிதம்பரம் பிள்ளை தொல்காப்பியம் இளம்பூரணம் பொருளதிகாரம் அகத்திணையியல், புறத்திணையியல் ஆகிய இரு இயல்கள் இணைந்த பதிப்பு, சென்னைப் பிரம்பூரில் இருந்து வெளிவந்தது. இப்பதிப்பில் ஆண்டு குறிப்பிடப்படவில்லை. ஆனால் 1921- இல் வெளிவந்த குறிப்பினை, தொல்காப்பியம் இளம்பூரணம் எழுத்திகாரம் பதவுரை பதிப்பில் குறிப்பிடுகிறார். களவியல், கற்பியல், பொருளியல் 1933 - இல் வாவிள்ள இராமவாமி சாட்ருலு அண்ட் ஸன் மூலம் வெளி வந்துள்ளது. 1935 - இல் மேற்கண்ட பதிப்பாளர்களைக் கொண்டு மெய்ப்பாட்டியல், உவமையியல், செய்யுளியல், மரபியல் பதிப்பித்துள்ளார். மூன்று பகுதிகளாக வெளிவந்தாலும் அவற்றிற்கும் தொடர் எண் கொடுக்கப்பட்டுள்ளன. 1935 - இல் ஒருங்கிணைந்த பதிப்பாக வ.உ. சிதம்பரம் பிள்ளை எ. வையாபுரிப்பிள்ளை ஆகியோர் பதிப்பாசிரியர்களாக அமைந்து வெளிவந்துள்ளது. தனித்தனிப் பதிப்புகளாக மூன்று பகுதிகளாக வெளிவந்துள்ள பதிப்பினை அடிப்படையாகக் கொண்டு இம் மீள் பதிப்பு பதிப்பிக்கப்படுகின்றது. இரா. வெங்கடாசலம் பிள்ளை பதிப்பு - 1929 சொல்லதிகாரம் - தெய்வச் சிலையார் 1929 -இல் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தால் முதன் முதலில் பதிப்பிக்கப்பட்டது. பதிப்பாசிரியர் ரா. வேங்கடாசலம் பிள்ளை. இதன் நிழற்படிவம் 1984 -இல் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இப் பதிப்பில் சூத்திர முதற் குறிப்பு அகராதி மட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் சொல் நிரல் (மேற்கோள்), சொற்றொடர் நிரல் (மேற்கோள்), செய்யுள் நிரல் (மேற்கோள்) கலைச் சொல் நிரல் (நூற்பா வழி) கலைச் சொல் நிரல் ( உரைவழி) தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. சி. கணேசையர் பதிப்பு - 1937, 1938, 1943,1948 எழுத்து நச்சினார்க்கினார்கினியர், சொல்லதிகாரம் சேனாவரையர் பொருள் - நச்சினார்க்கினியர், பேராசிரியர் 1847 - இல் மழவை மகாலிங்கையரால் எழுத்ததிகாரம் நச்சினார்க் கினியம் பதிப்பிக்கப்பட்டது. 1891 - இல் சி. வை. தாமோதரம் பிள்ளை பதிப்பும் 1923 - இல் த. கனகசுந்தரத்தின் பதிப்பும் கழகத்தின் மூலமும் வெளிவந்தன. 1937 - இல் நா. பொன்னையா அவர்களால் கணேசையர் எழுதிய உரைவிளக்கக் குறிப்புகளுடன் எழுத்ததிகாரம் மூலமும் நச்சினார்க்கினியருரையும் வெளியிடப்பட்டன. 1868 -இல் யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுக நாவலர் பதிப்பு, சென்னபட்டணம் ஊ. புஷ்பரதச் செட்டியாரது கலாரத்நாகர அச்சுக்கூடத்தில் சி.வை. தாமோரதம் பிள்ளையால் பதிப்பிக்கப்பட்டது. இதே ஆண்டு கோமளபுரம் இராசகோபால பிள்ளையின் பதிப்பும் தொல்காப்பியம் சேனாவரையம் என்ற பெயரில் வெளிவந்துள்ளது. 1923 - இல் கந்தசாமியார் திருத்திய திருத்தங்களோடும் குறிப்புரையோடும் கழகப் பதிப்பாக வெளிவந்தது. 1938 -இல் சி. கணேசையர் பதிப்பு அவர் எழுதிய உரைவிளக்கக் குறிப்புகளுடன் வெளியிடப்பட்டது. 1885 -இல் சி.வை. தாமோதரம் பிள்ளையால் தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் இயற்றிய உரையோடும் பலதேசப் பிரதிரூபங்களைக் கொண்டு பரிசோதித்து யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரரால் பதிப்பிக்கப்பட்டது என்னும் குறிப்புடன் பதிப்பு வெளிவந்தது. அப்பதிப்பில் உள்ள பின்னான்கியல் நச்சினார்க்கினியர் உரை அன்று என்று மறுத்து இரா. இராகவையங்கார் 1902 - 1905 வரையான செந்தமிழ் இதழில் ஆய்வுக்கட்டுரை எழுதித் தெளிவுபடுத்தினார். அதனைத் தொடர்ந்து பொருளதிகாரம் முழுதும் நான்கு பகுதியாக நச்சினார்க்கினியம், பேராசிரியம் எனப் பிரித்து 1916, 1917 - ஆம் ஆண்டுகளில் ச. பவனாந்தம் பிள்ளை பதிப்பித்தார். 1917 - இல் ரா. இராகவையங்கார் செய்யுளியலுக்கு நச்சினார்க்கியர் உரை இருப்பதை அறிந்து, நச்சினார்கினியர் உரை உரையாசிரியர் உரையுடன் என இரு உரைகளையும் இணைத்து வெளியிட்டார். 1934, 1935 -இல் எ. வையாபுரிப்பிள்ளை அவர்களால் ஓலைப் பிரதி பரிசோதிக்கப்பட்டு மா.நா. சோமசுந்தரம் பிள்ளை அவர்களது அரிய ஆராய்ச்சிக் குறிப்புகளுடனும் திருத்தங் களுடனும் தொல்காப்பியம் பொருளதிகாரம் முதற்பாகம் வெளிவந்தது. 1948 - இல் தொல்காப்பிய முனிவரால் இயற்றப் பட்ட தொல்காப்பியம் பொருளதிகாரம் (முதற்பாகம்) முன்னைந்தியலும் நச்சினார்க்கினியமும் என, சி. கணேசையர் எழுதிய ஆராய்ச்சிக் குறிப்புரையுடன் நா. பொன்னையா அவர்களால் பதிப்பிக்கப்பட்டது. 1943 -இல் தொல்காப்பியம் பொருளதிகாரம் (இரண்டாம் பாகம்) என்பதோடு பின்னான்கியலும் பேராசிரியமும் இவை புன்னாலைக் கட்டுவன் தமிழ் வித்துவான், பிரமரீ சி. கணேசையர் அவர்கள் ஏட்டுப் பிரதிகளோடு ஒப்புநோக்கித் திருத்திய திருத்தங்களோடும் எழுதிய உரை விளக்கக் குறிப்புகளோடும் ஈழகேசரி அதிபர் நா. பொன்னையா அவர்களால் தமது சுன்னாகம், திருமகள் அழுத்தகத்தில் பதிப்பிக்கபட்டன என வரையறுக்கப் பட்டிருந்தது. 2007-இல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மறுபதிப்பாக சி. கணேசையரின் பதிப்பைப் பதித்துள்ளது. அப்பதிப்பினைப் பின்பற்றியே இப்பதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சூத்திர அகராதி, சூத்திர அரும்பத விளக்கம் ஆகியவற்றிற்கு இப்பதிப்பில் பக்க எண் கொடுக்கப்பட்டிருந்தன. அவை இம் மீள்பதிப்பில் நூற்பா எண்களாக மாற்றப்பட்டுள்ளன. அனுபந்தமாக சி. கணேசைய்யர் சில கட்டுரைகளை அப்பதிப்பில் இணைத் திருந்தார் அவற்றோடு மேலும் அவருடைய சில கட்டுரைகள் இப்பதிப்பில் இணைக்கப்பட்டுள்ளன. தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் பதிப்பு 1971 சொல்லதிகாரம் கல்லாடம் சி.வை. தாமோதரம் பிள்ளை தொல்காப்பியம் பொருளதி காரம் நச்சினார்க்கினியர் உரை பதிப்புரையில் (1885) கல்லாடர் உரை பற்றிய குறிப்பினைத் தருகிறார். டி.என் அப்பனையங்கார் செந்தமிழ் இதழில் (1920, தொகுதி-19, பகுதி-1, பக்கம்-20) கல்லாடருரை என்னும் கட்டுரையில் ரீமான் எம் சேக்ஷகிரி சாதிரியார் (1893) கல்லாடர் உரை குறித்து ஆராய்ந்துள்ளதாகக் குறிப்பிடுகிறார். சோழவந்தான் அரசஞ்சண்முகனார் (1905) ரா. இராகவையங்கார் (1917) பெயர் விழையான், கா. நமச்சிவாய முதலியார்(1920) நவநீதகிருஷ்ண பாரதி(1920) பி. சிதம்பர புன்னைவனநாத முதலியார்(1922) கந்தசாமியார் (1923) வ.உ. சிம்பரம் பிள்ளை (1928) மன்னார்குடி தமிழ்ப் பண்டிதர் ம.நா. சோமசுந்தரம் பிள்ளை (1929) அரங்க. வேங்கடாசலம் பிள்ளை (1929) ஆகியோர் கல்லாடர் உரை குறித்த குறிப்புகளைத் தமது கட்டுரைகளில் குறிப்பிடுகின்றனர். பின்னங்குடி சா. சுப்பிரமணிய சாதிரியார் கல்லாடர் உரை ஓரியண்டல் கையெழுத்துப் புத்தக சாலையில் உள்ளது என்றும், அவ்வுரை எவ்வியல் வரை உள்ளது என்னும் குறிப்புரையும் தருகிறார். 1950 - 1952 வரை தருமபுர ஆதீனம் வெளியிட்ட ஞான சம்பந்தம் இதழில் அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகத்தின் இரண்டாம் பிரதியை ஒட்டிப் பதிப்பிக்கப்பட்டது. கிளவியாக்கம் தொடங்கி இடையியல் 10 - ஆவது நூற்பா வரை வெளிவந்தது. கல்லாடர் உரையைத் தம்முடைய திருத்தங்களுடன் வெளியிட்டவர் மகாவித்துவான் தண்டபாணி தேசிகர். 1963 -இல் தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரைக்கோவை என்னும் பெயரில் ஆபிரகாம் அருளப்பனும் வ.ஐ. சுப்பிரமணியமும் இணைந்து வெளியிட்டனர். இது நான்கு இயலுக்கான பதிப்பாக அமைந்திருந்தது. கழகப் பதிப்பாக 1964 -இல் கு. சுந்தரமூர்த்தி விளக்கவுரையுடன் கல்லாடம் வெளிவந்தது. 1971 -இல் தெ.பொ.மீ அவர்களால் ஒன்பது பிரதிகளைக் கொண்டு ஒப்பிட்டு அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகப் பதிப்பாக வெளிவந்தது. 2003 -இல் தி.வே. கோபாலையர், ந. அரணமுறுவல் ஆகியோரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு தமிழ் மண் பதிப்பகம் கல்லாடனார் உரையைப் பதிப்பித் துள்ளது. 2007 -இல் தி.வே. கோபாலையரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, சரசுவதி மகால் நூலகம் தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரைக்கொத்தில் கல்லாடர் உரையை வெளியிட்டுள்ளது. கல்லாடர் உரை முழுமையாக இதுவரை கிடைத்திலது. இம்மீள்பதிப்பில் செந்தமிழ் அந்தணர் அவர்களின் இலக்கண வாழ்வியல் விளக்கமும் கா. வெள்ளைவாரணனாரின் இயல் விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இவை தொல்காப்பியத்திற்குள் புகுவாருக்கு எளிதான மனநிலையை உருவாக்குவதுடன், ஆய்வாளர்களுக்கு மிகுந்த பயன் உடையதாக இருக்கும். பின்னிணைப்பாக இணைக்கப்பட்டுள்ள கட்டுரைகள், தொல்காப்பிய உரையாசிரியர், உரைகள் குறித்த நுட்பத்தைப் புலப்படுத்துவதுடன், தொல்காப்பியம் பற்றிய நுண்மையை அறியவும் துணை செய்யும். நூற்பா, உரை வழிக் கலைச்சொற்கள், உரையில் உள்ள மேற்கோள் அகராதி போன்றவை தொகுத்துத் தரப்பட்டுள்ளன. தொல்காப்பியத்தை அறிய விரும்புவாருக்கும், ஆய்வாளர்களுக்கும் இத் தொகுப்பு பயன் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியம் மூலமும், உரையோடும் பல பதிப்புகளைக் கண்டுள்ளது. இருப்பினும் தொடக்கத்தில் தமிழ் அறிஞர் பெருமக்களால் உரையோடு தொல்காப்பியத்தைப் பதிப்பித்த பதிப்புகள் இன்று கிடைக்கவில்லை. அந்நிலையைப் போக்கும் பொருட்டு, தமிழரின் பண்பாட்டை, மேன்மையை, உயர்வைப் பொதித்து வைத்துள்ள நூல்களைத் தேடித் தேடிப் பதிப்பிக்கும் தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் ஐயா கோ. இளவழகனார் அவர்கள் பழம் பதிப்புகளைப் பதிப்பிக்க வேண்டும் என்று விரும்பியதன் காரணமாக இப்பதிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பதிப்பிற்கு, தமிழின் மூத்த அறிஞர், செந்தமிழ் அந்தணர் முதுமுனைவர் ஐயா இரா. இளங்குமரனார் அவர்கள் பதிப்பாசிரியராக அமைந்து என்னையும் இப்பணியில் இணைத்துக்கொண்டார்கள். பழந்தமிழ் நூல்களைப் பாதுகாத்து வைத்துள்ள புலவர் பல்லடம் மாணிக்கம் அவர்களிடம் இருந்து தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடர் உரை பெறப்பட்டுப் பதிப்பிற்குப் பயன்படுத்தப்பட்டது. மற்ற உரைகள் அனைத்தும் தமிழ் இணையப் பல்கலைக்கழக நூலகம், உலகத் தமிழாராய்ச்சி இணையப் பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு இம் மீள்பதிப்பிற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. சி. கணேசையர் பதிப்பினை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வழி வெளிவந்த சி. கணேசைய்யரின் தொல்காப்பியப் பதிப்பிற்கு உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தின் மேனாள் இயக்குநர் (முழுகூடுதல் பொறுப்பு) முனைவர் திரு ம. இராசேந்திரன் அவர்கள் கணேசையர் பதிப்பிற்கு எழுதியுள்ள முகவுரை அவருடைய ஒப்புதலுடன் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. முனைவர் பா. மதுகேவரன் அவர்களின் தொல்காப்பியம் பதிப்பு ஆவணம் 7 என்னும் நூற்பகுதியில் இருந்து தொல் காப்பியப் பதிப்பு அடைவுகள் இப்பதிப்பில் இணைக்கப் பட்டுள்ளன. தொல்காப்பியம் தொடர்பான பல்வேறு அறிஞர் பெருமக்களின் ஆய்வுக் கட்டுரைகள் தொகுத்து வழங்கப் பட்டுள்ளன. தொல்காப்பியம் உரைகள் முழுதும் ஆய்வு செய்துள்ள பேராசிரியர் முனைவர் ச. குருசாமி அவர்களின் கட்டுரைகள் இப்பதிப்பில் இணைக்கப் பட்டுள்ளன. பதிப்பிற்குத் துணை செய்த மேற்கண்ட அனைவருக்கும் நன்றியினைப் புலப்படுத்திக் கொள்ளுகிறேன். முனைவர் ஸ்ரீ. பிரசாந்தன் அவர்கள் தொகுத்த இலக்கண வரம்பு நூலிலிருந்த கட்டுரைகள் கணேசையர் பதிப்பில் இணைக்கப்பட்டுள்ளன. செந்தமிழ், தமிழ்ப்பொழில், தமிழியல் முதலிய ஆய்விதழ்களிலிருந்து தொல்காப்பியம் தொடர்பான கட்டுரைகள் சேர்க்கப் பட்டுள்ளன. பதிப்புப் பணியில் ஈடுபடுத்திய ஐயா திரு கோ. இளவழகனார் அவர்களுக்கும் பதிப்பில் இணைந்து செயல்படப் பணித்த ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்களுக்கும், பதிப்பிற்குத் துணைபுரிந்த புலவர் செந்தலை கௌதமன் ஐயா அவர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றி. தட்டச்சுச் செய்து கொடுத்த திருமதி ப. கயல்விழி திருமதி கோ. சித்திரா. அட்டை வடிவமைத்த செல்வன் பா. அரி (ஹரிஷ்), மற்றும் பதிப்பகப் பணியாளர்கள் திரு இரா. பரமேசுவரன், திரு தனசேகரன், திரு கு. மருது, திரு வி. மதிமாறன், இப்பதிப்பிற்கு உதவிய என்னுடைய முனைவர் பட்ட மாணவர்கள் பா. மாலதி, கா. பாபு, சு. கோவிந்தராசு, கா. கயல்விழி ஆகிய அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப் பதிப்புப் பணியில் என்னை முழுவதாக ஈடுபடத் துணையாக நிற்கும் என் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார் அவர்களுக்கு என் நன்றியினை உரித்தாக்குகிறேன். கல்பனா சேக்கிழார் நுழைவுரை தமிழ்மண் பதிப்பகம் இதுகாறும் வெளியிட்டுள்ள அறிஞர் பெருமக்களின் உரைகள் யாவும் பழைய இலக்கிய இலக்கணக் கருவூலத்தின் வாயில்களைத் திறக்கின்ற திறவுகோல்கள்; தமிழரை ஏற்றிவிடும் ஏணிப்படிகள்; வரலாற்றுப் பாதையைக் கடக்க உதவும் ஊர்திகள். தமிழறிஞர்களின் அறிவுச்செல்வங்களை முழு முழு நூல் தொகுப்புகளாக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் பெரும் பங்களிப்பை எம் பதிப்பகம் செய்து வருவதை உலகத் தமிழர்கள் அனைவரும் அறிவர். தமிழகம் வேற்றினத்தவர் படையெடுப்பால் தாக்குண்டு அதிர்ந்து நிலைகுலைந்து தமிழ்மக்கள் தம் மரபுகளை மறந்தபோதெல்லாம் பழம்பெரும் இலக்கியச் செல்வங்களை எடுத்துக்காட்டி விளக்கித் தமிழ் மரபை வாழச் செய்த பெருமை உரையாசிரியர்களுக்கு உண்டு. தமிழ்மொழியின் நிலைத்த வாழ்விற்கும் வெற்றிக்கும் காரணமாக இருப்பவர்கள் உரையாசிரியர்களே ஆவர். இலக்கணக் கொள்கைகளை விளக்கி மொழிக்கு வரம்பு கட்டி இலக்கியக் கருத்துகளை விளக்கி காலந்தோறும் பண்பாட்டை வளர்த்து, தமிழ் இனத்திற்குத் தொண்டு செய்த பெருமை உரையாசிரியர்களையே சாரும். ஒவ்வொரு உரையாசிரியரும் தமிழினம் உறங்கிக் கொண்டிருந்தபோது விழித்தெழுந்து, எழுச்சிக்குரல் கொடுத்த முற்போக்குச் சிந்தனையாளர்கள். அவர்கள் எழுதியுள்ள உரைகள் யாவும் காலத்தின் குரல்கள்; சமுதாயத்தின் எதிர்பார்ப்புகள்; தமிழ் இன வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவைகள்; நெருக்கடியின் வெளிப்பாடுகள் ஆகும். - உரையாசிரியர்கள், (மு.வை. அரவிந்தன்). தொல்காப்பியம் இலக்கணநூல் மட்டுமன்று; தமிழரின் அறிவுமரபின் அடையாளம். தமிழரின் வாழ்வியலை, மெய்யியலைப் பாதுகாத்த காலப்பேழை. இதில் பொதிந்துள்ள தருக்கவியல் கூறுகள் இந்தியத் தருக்கவியல் வரலாற்றின் மூல வடிவங்கள் - அறிஞர்களின் பார்வையில் பேரறிஞர் அண்ணா, (முனைவர் க. நெடுஞ்செழியன்) மேற்கண்ட அறிஞர்களின் கூற்று, தொல்காப்பியத்தின் இன்றியமை யாமையையும், உரையாசிரியர்களின் கருத்துச் செறிவையும் உழைப்பையும் உணர்த்த வல்லவை. சி.வை. தாமோதரம் பிள்ளை, கா. நமச்சிவாய முதலியார், வ.உ. சிதம்பரனார், சி. கணேசையர், இரா. வேங்கடாசலம் பிள்ளை, தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் போன்ற பெருந்தமிழ் அறிஞர்களின் உழைப்பால் உருவான இவ் வாழ்வியல் கருவூலம் தொல்காப்பிய உரைத்தொகை எனும் பெயரில் தமிழ்மண் பதிப்பகம் மீள் பதிப்பு செய்துள்ளது. 2003 -ஆம் ஆண்டில் எம் பதிப்பகம் தொல்காப்பியத்தை (எழுத்து - சொல் - பொருள்) முழுமையாக வெளியிட்டுள்ளது. இதுகாறும் வெளிவந்துள்ள தொல்காப்பிய நூல் பதிப்புகளில் இடம் பெறாத அரிய பதிப்புச் செய்திகள் இவ்வுரைத் தொகையில் சேர்க்கப்பட்டுள்ளன. இவ்வுரைத் தொகை எல்லா நிலையிலும் சிறப்பாக வெளிவருவதற்கு தோன்றாத் துணையாக இருந்தவர்களைப் பற்றி தனிப்பக்கத்தில் பதிவு செய்துள்ளோம். இவ்வாழ்வியல்நூல் பிழையற்ற செம்பதிப்பாக வெளிவருவதற்கு முதன்மைப் பதிப்பாசிரியர் முதுமுனைவர் ஐயா இரா. இளங்குமரனார், இணை பதிப்பாசிரியர் அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் ஆகியோரின் உழைப்பும் பங்களிப்பும் என்றும் மறக்க முடியாதவை. எம் தமிழ் நூல் பதிப்பிற்கு எல்லா நிலையிலும் தொடர்ந்து ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் இனிய நண்பர் புலவர் செந்தலை ந. கவுதமன் அவர்களின் தன்னலம் கருதா தமிழ்த் தொண்டிற்கு என்றும் நன்றி உடையேன். தமிழர்கள் தம் இல்லம்தோறும் பாதுகாத்து வைக்க வேண்டிய இவ்வருந்தமிழ்ப் புதையலைத் தமிழ் கூறும் உலகிற்கு வழங்குவதைப் பெருமையாகக் கருதி மகிழ்கிறோம். இப்பதிப்பைத் தமிழ்க்கூறும் நல்லுலகம் ஏற்றிப்போற்றும் என்று நம்புகிறோம். கோ. இளவழகன் நூலாக்கத்திற்கு உதவியோர் முதன்மைப்பதிப்பாசிரியர்: முதுமுனைவர் இரா. இளங்குமரனார் இணைப்பதிப்பாசிரியர்: முனைவர் கல்பனா சேக்கிழார் நூல் வடிவமைப்பு: திருமதி. கயல்விழி, கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (Harrish) திருத்தத்திற்கு உதவியோர்: புலவர் பனசை அருணா புலவர் மு. இராசவேலு முனைவர் அரு. அபிராமி முனைவர் ஜா. கிரிசா நூலாக்கத்திற்கு உதவியோர்: திருமிகு. இரா. பரமேசுவரன், திருமிகு. வே. தனசேகரன், திருமிகு. கு. மூர்த்தி, திருமிகு. வி. மதிமாறன் கணினியில் நூலாக்கம்:  மாணவர் நகலகம்,  பிராசசு இந்தியா,  ரியல் இம்பேக்ட் சொல்யூசன்,  தூரிகை பிரிண்ட் குறுக்க விளக்கம் அகம். அகநானூறு ஐங்குறு. ஐங்குறுநூறு கலி. கலித்தொகை குறள். திருக்குறள் குறிஞ்சிப். குறிஞ்சிப்பாட்டு குறுந். குறுந்தொகை சிறுபாண். சிறுபாணாற்றுப்படை சிலம்பு. சிலப்பதிகாரம் சீவக. சீவகசிந்தாமணி திணைமாலை. திணைமாலை நூற்றைம்பது திரிகடு. திரிகடுகம் தூதுவிடு. தூதுவிடு சருக்கம் தொ.எ. தொல்காப்பியம் எழுத்ததிகாரம் தொ.சொ. தொல்காப்பியம் சொல்லதிகாரம் தொ.பொ. தொல்காப்பியம் பொருளதிகாரம் நற். நற்றிணை நன்மணி. நான்மணிக்கடிகை நாலடி. நாலடியார் நெடுநல். நெடுநல்வாடை பட். பட்டினப்பாலை பதிற்று. பதிற்றுப்பத்து பரி. பரிபாடல் பு.வெ. புறப்பொருள் வெண்பாமாலை புறம். புறநானூறு பெரும்பா. பெரும்பாணாற்றுப்படை மணி. மணிமேகலை மதுரைக். மதுரைக்காஞ்சி முருகு. திருமுருகாற்றுப்படை முல்லைப். முல்லைப்பாட்டு உள்ளடக்கம் வினையியல் ...... 3 இடையியல் ...... 69 உரியியல் ...... 106 எச்சவியல் ...... 134 பின்னிணைப்புகள் ....... 217 1. வடசொல் ...... 219 2. வடமொழி முதுமொழியன்றா? ...... 222 3. சேனாவரையருரைப் பதிப்பும் பிழை திருத்தமும் ...... 228 4. தொல்காப்பிய நூற்பா பொருளாராய்ச்சி ...... 234 5. பிறிது பிறிதேற்றல் ...... 249 6. ஆறனுருபு பிறிதுருபேற்றல் ....... 256 7. இருபெயரொட்டாகுபெயரும் அன்மொழித்தொகையும் ....... 263 8. தொகை நிலை ....... 274 9. பொருட்புடை பெயர்ச்சி ....... 285 - நூற்பா நிரல் ....... 312 - சொல் நிரல் ....... 318 - சொற்றொடர் நிரல் ....... 325 - செய்யுள் நிரல் ....... 336 - விஷய (பொருள்) அகராதி ....... 342 - அருஞ்சொல் விளக்க முதலியன ....... 353 - கலைச்சொல் நிரல் (நூற்பா வழி) ....... 369 - கலைச்சொல் நிரல் (உரை வழி) ....... 374 சொல்லதிகாரம் - சேனாவரையம்-2 சி.கணேசையர் - (1938, 1955) முதற் பதிப்பு 1938லும், இரண்டாம் பதிப்பு 1955லும் சுன்னாகம் திருமகள் அழுத்தகத்திற் அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளன. 2007இல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் வெளியிட்டுள்ளது. இப்பதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு மீள் பதிப்பாக இந்நூல் வெளிவருகிறது. வினையியல் வினையென்பது பலபொருளொருசொல்லாய்த் தொழிற் பண்பினையும் அதன் காரியமாகிய வினைநிகழ்ச்சியையும் உணர்த்தும், தொழிற் பண்பையுணர்த்துஞ் சொல்லை உரிச்சொல்லெனவும் அதன் காரியமாகிய வினைநிகழ்ச்சியை யுணர்த்துஞ்சொல்லை வினைச்சொல்லெனவும் கூறுதல் மரபு. வினைச்சொல்லாவது வேற்றுமையுருபேலாது வெளிப் படையாகவும் குறிப்பாகவும் காலத்தோடு விளங்குவதாகும். இறந்தகாலம், நிகழ்காலம் எதிர்காலம் எனக் காலம் மூன்றாம். தொழில் முற்றுப்பெற்றநிலை இறந்தகாலம். தொழில் தொடங்கி முடிவுபெறாது தொடர்ந்து நிகழும்நிலை நிகழ்காலம். தொழிலே தொடங்கப்பெறாதநிலை எதிர்காலம். இம்முக்காலங்களுள் ஒன்றை வெளிப்படையாகக் காட்டுவனவற்றை வினையென்றும் இவற்றைக் குறிப்பாக உணர்த்துவனவற்றைக் குறிப்பு என்றும் கூறுவர் தொல்காப்பியனார். பிற்காலத்தார் இவற்றை முறையே தெரிநிலை வினையென்றும் குறிப்பு வினையென்றும் வழங்குவர். இவ்வினைச்சொற்கள் முற்று, வினையெச்சம், பெயரெச்சம் என மூவகைய. பாலுணர்த்தும் ஈறுகளாகிய விகுதிகளோடுகூடி நிறைந்து நிற்பன வினைமுற்றுக்களாம். ஐம்பாலவாகிய வினைமுதலைத் தரும் விகுதியுறுப்புக் குறைந்த குறைச்சொற் களாய் மற்றொரு வினைச்சொல்லோடல்லது முற்றுப்பெறாது நிற்பன வினையெச்சங்களாம். பாலுணர்த்தும் விகுதியின்றிக் குறைத்த குறைச்சொற்களாய்ப் பெயரை எச்சமாகவுடைய வினைச்சொற்கள் பெயரெச்சம் எனப்படும். வினைச்சொற்களின் இலக்கண முணர்த்தினமையால் இது வினையியலென்னும் பெயர்த்தாயிற்று. இவ்வியலிலுள்ள சூத்திரங்களை 49-ஆக இளம்பூரணரும் 51-ஆகச் சேனாவரையரும் நச்சினார்க்கினியரும் 54-ஆகத் தெய்வச்சிலையாரும் பகுத்து உரை கூறியுள்ளார்கள். எச்சவியலிலுள்ள ‘இறப்பின் நிகழ்வின்’, ‘எவ்வயின் வினையும்’, ‘அவைதாம் தத்தங்கிளவி’ எனவரும் மூன்று சூத்திரங்களையும் வினையிலக்கணமாதல் பற்றி இவ்வியலின் இறுதியில், தெய்வச்சிலையார் சேர்த்துரைத்தமையால் அவர் கருத்துப்படி இவ்வியலின் சூத்திரங்கள் 54-ஆயின. வினைச்சொற்களெல்லா வற்றையும் உயர்திணைக்குரியன, அஃறிணைக்குரியன, இரு திணைக்குமுரியன என மூன்று வகையாக இவ்வியலில் ஆசிரியர் பகுத்துக் கூறியுள்ளார். உயர்திணைக்குரியன உயர்திணைவினை தன்மைவினை படர்க்கைவினை என இடத்தால் இருவகைத்து. அவற்றுள் தன்மைவினை பன்மைத் தன்மையும் தனித்தன்மையும் என இருவகைப்படும். அம், ஆம், எம், ஏம், கும், டும், தும், றும் என்னும் இவ்வெட்டு விகுதிகளையும் இறுதியாகவுடைய வினைச்சொற்கள் பன்மையுணர்த்துந் தன்மைச் சொற்களாம். தன்மைக் குறித்துப் பேசுதற்கேற்ற மொழிவளம் உயர்திணை மாந்தர்க்கே யுரியதாகலின் தன்மைச் சொற்கள்யாவும் உயர்திணைச் சொல்லேயாம். ஒருவனோ ஒருத்தியோ தன்னைக் குறித்துப் பேசுங்கால் தனக்கு ஒருமையல்லது பன்மை சொல்லுதற்கிடமில்லை. எனினும் தனக்கு முன்னும் அயலிலும் உள்ள பிறரையும் தன்னோடு உளப்படுத்துக் கூறும் வழக்கமுண்மையால் தன்மைப் பன்மையும் கொள்ள வேண்டியதாயிற்று. ஆகவே பன்மைத் தன்மை யென்றது உளப்பாட்டுத் தன்மையேயாம். தன்னொடு முன்னின்றாரை யுளப்படுத்தலும் படர்க்கையாரை யுளப்படுத்தலும் அவ்விரு திறத்தாரையும் ஒருங்கு உளப்படுத்தலும் என உளப்படுத்தல் மூவகைப்படுமெனவும், அம், ஆம் என்ற விகுதிகள் முன்னிலையாரையும் தமராயவழிப் படர்க்கையாரையும், எம், ஏம் என்பன படர்க்கையாரையும், கும், டும், தும், றும் என்பன அவ்விருதிறத்தாரையும் உளப்படுத்துமெனவும், அம், ஆம், எம், ஏம் என்பன மூன்று காலமும் பற்றி வருதலும் கும், டும், தும், றும் என்பன எதிர்காலம்பற்றி வருதலும் உடைய வெனவும் கூறுவர் சேனாவரையர். கு, டு, து, று என், ஏன், அல் என்பவற்றை இறுதியாகவுடைய ஏழும் ஒருமையுணர்த்தும் தனித்தன்மை (தன்மையொருமை) வினைச்சொற்களாம். அவற்றுள் செய்கு என்னும் வாய்பாட்டு வினைமுற்று வினைகொண்டு முடியுமாயினும் முற்றுச் சொல்லாகிய இலக்கணத்திற் சிறிதும் மாறுபாடது. அன், ஆன், அள், ஆள் என்னும் ஈற்றையுடைய நால்வகைச் சொற்களும் உயர்திணை யொருமை யுணர்த்தும் படர்க்கை வினைச்சொற்களாம். அர், ஆர், ப என்னும் ஈற்றையுடைய மூவகைச் சொற்களும் பலர்பாற் படர்க்கையாம். மார் என்பதும் உயர்திணைப் பலர்பாற் படர்க்கை வினைக்கீறாதலையுடைத்து. அது முடியுங்கால் பெயர்கொள்ளாது வினைகொண்டு முடியும். இவ்வாறு அம் விகுதி முதலாக மார் விகுதி யீறாகச் சொல்லப்பட்ட இருபத்துமூன்றீற்று வினைச்சொற்களும் உயர்திணைக்கே யுரியனவாம். மேற்சொல்லப்பட்டவற்றுள் பன்மையுணர்த்தும் தன்மைச் சொல் திணைவிரவி யெண்ணுங்கால் அஃறிணையை யுளப்படுத்துத்திரிதலும் உண்டு. யார் என்னும் வினாவினைக் குறிப்பு உயர்திணை மூன்று பாலுக்கும் ஒப்பவுரியதாகும். பாலுணர்த்தும் ஈறுகளாகிய ன, ள, ர, என்னும் இறுதியையுடைய ஆகாரமும் முன்னிலையில் வரும் ஆய் என்பதன் ஆகாரமும் செய்யுளுள் ஓகாரமாய்த் திரியும். ஆறாம் வேற்றுமைக்குரிய உடைமைப்பொருள், ஏழாம் வேற்றுமைக்குரிய நிலப்பொருள், ஒப்புப்பொருள், பண்பு என்னுமிவற்றை நிலைக்களமாகக் கொண்டும் அன்மை, இன்மை, உண்மை, வன்மை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டும் வினைக்குறிப்புத் தோன்றுமென்பர் ஆசிரியர் குறிப்பாற் கால முணர்த்தலின் இது குறிப்பெனப்பட்டது. முன்னர்க் கூறிய இருபத்துமூன்றீற்று வினைச்சொற்களுக்கீறாகிய எழுத்துக் களையே (விகுதிகளையே) இவ்வினைச்குறிப்புச் சொற்களும் பெற்றுப் பாலுணர்த்துவனவாம். அஃறிணைக்குரியன ஆ, ஆ, வ என்னும் இறுதியையுடைய மூவகை வினைச் சொற்களும் அஃறிணைப்பன்மைப் படர்க்கையாம். து, று, டு என்பவற்றை யிறுதியாக உடையன அஃறிணை ஒருமைப்பாற் குரிய வினைச்சொற்களாம். இங்கெடுத்துக் காட்டிய அறுவகை யீற்றுச் சொற்களே அஃறிணைக்குரிய வினைச்சொற்களாம். வினாப் பொருளையுடைய எவன் என்னும் வினைக் குறிப்புச்சொல் அஃறிணையிருபாலுக்கும் ஒப்பவுரியதாகும். இன்று, இல உடைய, அன்று, உடைத்து, அல்ல, உள என்பனவும் பண்புகொள் கிளவியும் பண்பினாகிய சினைமுதற் கிளவியும் ஒப்புப்பற்றி வருஞ்சொல்லும் ஆகிய இப்பத்தும் அஃறிணை வினைக்குறிப்புச் சொற்களாம். மேல் அஃறிணை வினைச்சொற் கீறாய் நின்று பாலுணர்த்து மெழுத்துக்களே அஃறிணை வினைக் குறிப்பச் சொற்கண்ணும் ஈறாய் நின்று பால் விளக்குவன. இருதிணைக்குமுரியன முன்னிலை வினைமுற்று, வியங்கோள் முற்று, வினையெச்சம், இன்மையையுணர்த்தும் இல்லை, இல் என்பன. வேறு என்னும் சொல், செய்ம்மன் என்னும் வாய்பாட்டு முற்று, முற்றும் பெயரெச்சமுமாகிய செய்யுமென்னும் வாய்பாட்டு வினைச் சொல், செய்த என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம் ஆகிய எண்வகை வினைச்சொற்களும் இருதிணைச் சொல்லாதற்கும் ஒத்த உரிமை யுடையனவாம். மேற்கூறப்பட்ட விரவு வினைகளுள் இ, ஐ, ஆய் என்னும் இறுதியையுடைய முன்னிலை வினைச்சொற்கள் ஒருவன், ஒருத்தி, ஒன்று என்னும் இருதிணை முக்கூற்றெருமைக்கும் ஒப்பவுரியன. இர், ஈர், மின் என்னும் இறுதியையுடைய முன்னிலை வினைச் சொற்கள் உயர்திணைப் பலர்பாலுக்கும் அஃறிணைப் பலவின் பாலுக்கும் ஒப்பவுரியன. முன்னிலை வினையல்லாத ஏனை எழுவகை வினைச்சொற்களும் இருதிணை ஐம்பால் மூவிடத்திற்கும் பொதுவாய் வருவன. அவற்றுள் வியங்கோள், வினை முன்னிலை தன்மையென்னும் இரண்டிடத்திலும் நிலைபெறாது. நிகழ்கால முணர்த்தும் செய்யுமென்னும் மூன்று பலர்பாற் படர்க்கையிலும் தன்மை முன்னிலைகளிலும் வருதலில்லை. மற்றொரு வினைச்சொல்லோடு கூடியல்லது முற்றுப் பெறாத, குறைச்சொல் வினையெச்சமாகும். செய்து, செய்யூ, செய்பு, செய்தென, செய்யியர், செய்யிய, செயின், செய், செயற்கு எனவரும் இவ்வொன்பது வாய்பாட்டுச் சொற்களும் பின், முன், கால், கடை, வழி, இடத்து என்பவற்றை யிறுதியாக வுடையனவும் இவைபோலக் காலமுணர்த்தி வருவன பிறவும் வினையெச்ச வினைகளாம். இவற்றுள் முதலிலுள்ள செய்து, செய்யூ, செய்பு என வரும் மூன்றும் தனக்குரிய வினை முதல் வினையையே கொண்டு முடிவன. அவை மூன்றும் சினை வினையாங்கால் தமக்குரிய முதல் வினையைக்கொண்டு முடியினும் தம்தொழிலைக் கொண்டு முடிந்தனவே. இம்மூன்றுமல்லாத பிற வினையெச்சங்கள் தம் வினை முதல் வினையையேனும் அன்றி அங்கு வந்து இயையும் பிற வினைமுதல் வினையையெனும் வரையறையின்றிக் கொண்டு முடியுமியல்பினவாம். வினையெச்சங்கள் பல வாய்பாட்டான் அடுக்கிவரினும் முன்னின்ற எச்சம் முடிய ஏனையவும் பொருளால் முடிந்தனவேயாம். பெயரை ஒழிபாகவுடைய வினைச்சொல் பெயரெச்சம் அது செய்யும், செய்த எனவரும் இரு வாய்பாடுகளில் அடங்கும் நிலப்பெயர், பொருட்பெயர், காலப்பெயர், கருவிப்பெயர், வினை முதற்பெயர், வினைப்பெயர் எனவரும் அறுவகைப் பெயர்களையும் கொண்டு முடிதற்கேற்ற பொருள் நிலைமையையுடைய இப்பெயரெச்சம் இருதிணை யைம்பாற்கு முரிய பொது வினையாகும். செய்யும் என்னும் வாய்பாட்டுச் சொற்கள் பெயரெச்சமாங்கால் முன் செய்யுமென்னும் முற்றிற்கு விலக்கப்பட்ட பல்லோர் படர்க்கை முன்னிலை, தன்மை என்னும் இவ்விடங்களுக்கும் உரியனவாம். பெயரெச்சமும் வினையெச்சமும் வினை நிகழ்ச்சியை யுணர்த்தாது அதனை எதிர்மறுத்துச் சொல்லினும் பெயரெஞ்ச நிற்றலும் வினையெஞ்ச நிற்றலுமாகிய தம் பொருள் நிலைமையில் வேறுபடா. இவ்வெச்சங்களுக்கும் இவற்றை முடிக்குஞ் சொற் களாய் வரும் பெயர் வினைகளுக்குமிடையே முடிக்குஞ் சொல்லொடு தொடர்புடைய வேறு சொல் வந்து நிற்றலுமுண்டு. செய்யுமென்னும் பெயரெச்ச வாய்பாடுகளின் ஈற்றயலெழுத் தாகிய உகரம் தான் ஊர்ந்துநின்ற மெய்யொடுங் கெட்டு முடிதலும் உண்டு. செய்து என்னும் வாய்ப்பாட்டு இறந்தகால வினையெச்சம் ஏனைக் காலச் சொல்லோடு இயைதலும், விரைவின்கண் எதிர்காலமும் நிகழ்காலமும் இறந்தகாலத்தோடு மயங்குதலும், மிக்கது ஒன்றின்கண்ணே இறந்தகாலமும் எதிர்காலமும் நிகழ்காலத்தோடு மயங்குதலும், இது செயல் வேண்டும் என்னும் பொருளில் வரும் வினைச்சொல் தானும் பிறருமாகிய ஈரிடத்தும் பொருள் தருதலும், வற்புறுத்தலில் வரும் வினாப் பொருளையுடைய வினைச்சொல் எதிர்மறைப் பொருள் தருதலும், இயற்கை பற்றியும் தெளிவுபற்றியும் காலம் மயங்குதலும், செயப்படுபொருள் வினைமுதல்போல வருதலும், இவ்வாறே வேறிடங்களில் முக்காலமு மயங்குதலும் ஆகிய விதிகளை இவ்வியல் 40-முதல் 49-வரையுள்ள சூத்திரங்களால் ஆசிரியர் விரித்துக் கூறியுள்ளார். - க. வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 208-213 ஆறாவது வினையியல் 198. வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது நினையுங் காலைக் காலமொடு தோன்றும். நிறுத்த முறையானே வினைச்சொல்லாமா றுணர்த்திய வெடுத்துக் கொண்டார். அதனான் இவ்வோத்து வினையிய லென்னும் பெயர்த்தாயிற்று. இதன் பொருள் : வினையென்று சொல்லப்படுவது வேற்றுமை யொடு பொருந்தாது ஆராயுங்காற் காலத்தொடு புலப்படும் என்றவாறு. ஈண்டு வேற்றுமை யென்றது உருபை. (எ-டு) உண்டான், கரியன் என வேற்றுமை கொள்ளாது காலமொடு தோன்றியவாறு கண்டுகொள்க. வேற்றுமை கொள்ளாதென்னாது காலமொடு தோன்று மெனின் 1தொழினிலையொட்டுந் தொழிற்பெயரும் வினைச் சொல்லாவான் செல்லுமாகலானும், காலமொடு தோன்று மென்னாது வேற்றுமை கொள்ளாதெனின் இடைச்சொல்லும் உரிச்சொல்லும் வினைச்சொல் லெனப்படு மாகலானும், அவ் விரு திறமும் நீக்குதற்கு ‘வேற்றுமை கொள்ளாது காலமொடு தோன்றும்’ என்றார். வினைச்சொல்லுள் வெளிப்படக் காலம் விளக்காதனவு முள; அவையும் ஆராயுங்காற் காலமுடைய வென்றற்கு, ‘நினையுங் காலை’ என்றார். அவை யிவையென்பது முன்னர்ச் சூத்திரத்தாற் பெறப்படும். 2உணர்த்தப்படும் வினைச்சொற்கெல்லாம் பொது விலக்கண முணர்த்தியவாறு. (1) 199. காலந் தாமே மூன்றென மொழிப. இதன் பொருள் : மேற்றோற்றுவாய் செய்யப்பட்ட காலம் மூன் றென்று சொல்லுவர் புலவர் என்றவாறு. தாமென்பது 3கட்டுரைச் சுவைபட நின்றது. (2) 200. இறப்பி னிகழ்வி னெதிர்வி னென்றா வம்முக் காலமுங் குறிப்பொடுங் கொள்ளு மெய்ந்நிலை யுடைய தோன்ற லாறே. இதன் பொருள் : இறப்பும், நிகழ்வும், எதிர்வும் என்று சொல்லப்படும் அம் மூன்று காலமுங் குறிப்புவினையொடும் பொருந்தும் மெய்ந் நிலைமையையுடைய, வினைச்சொல் லானவை தோன்று நெறிக் கண் என்றவாறு. எனவே, காலமூன்றாவன இறப்பும், நிகழ்வும், எதிர்வு மென்ப தூஉம், வெளிப்படக் காலம் விளக்காதன குறிப்புவினை யென்ப தூஉம் பெற்றாம். உதாரணம்: உண்டான், உண்ணாநின்றான், உண்பான் என வரும். இறப்பாவது தொழிலது கழிவு. நிகழ்வாவது தொழில் தொடங்கப் பட்டு முற்றுப்பெறாத நிலைமை. எதிர்வாவது தொழில் பிறவாமை. தொழிலாவது பொருளினது புடை பெயர்ச்சியாகலின், அஃதொருகணம் நிற்பதல்லது இரண்டு கணம் நில்லாமையின், நிகழ்ச்சியென்பதொன்று அதற்கில்லை யாயினும், உண்டல் தின்ற லெனப் 4பஃறொழிற் றொகுதியை ஒரு தொழிலாகக் கோடலின், உண்ணாநின்றான், வாராநின்றான் என நிகழ்ச்சியு முடைத்தாயிற் றென்பது. வினைக்குறிப்புக் காலமொடு தோன்றுங்கால், பண்டு கரியன், இதுபொழுது கரியன் என இறந்தகாலமும் நிகழ்காலமும் முறை யானே பற்றி வருதலும், நாளைக் கரியனாம் என எதிர்காலத்து ஆக்க மொடு வருதலும் அறிக. ‘மெய்ந்நிலையுடைய’வென்றது, விளங்கித் தோன்றா வாயினும் காலம் வினைக்குறிப்பொடும் கோடல் மெய்ம்மை யென வலியுறுத்தவாறு. (3) 201. குறிப்பினும் வினையினு நெறிப்படத் தோன்றிக் காலமொடு வருஉம் வினைச்சொ லெல்லா முயர்திணைக் குரிமையு மஃறிணைக் குரிமையு மாயிரு திணைக்கு மோரன்ன வுரிமையு மம்மூ வுருபின தோன்ற லாறே. பொதுவகையாற் கூறிய வினைச்சொல்லை சிறப்பு வகையா னுணர்த்திய வெடுத்துக்கொண்டார். இதன் பொருள் : குறிப்புப் பொருண்மைக்கண்ணுந் தொழிற் பொருண்மைக் கண்ணுந் தோன்றிக் காலத்தொடு வரும் எல்லா வினைச்சொல்லும், உயர்திணைக்குரியனவும் அஃறிணைக் குரியனவும் இரண்டு திணைக்கும் ஒப்பவுரியனவுமென, மூன்று கூற்றனவாம், தோன்றுநெறிக்கண் என்றவாறு. கரியன், செய்யன் என்புழித் தொழின்மை தெற்றென விளங்காது குறித்துக் கொள்ளப்படுதலிற் குறிப்பென்றார். உதாரணம்: உண்டான், கரியன்; சென்றது, செய்யது; வந்தனை வெளியை என வரும். 5‘குறிப்பொடுங் கொள்ளும்’ (சொல். 200) என மேற் குறிப்பியைபு பட்டு நிற்றலிற் ‘குறிப்பினும் வினையினும்’ என்றார். 6முன் ஈறுபற்றி உணர்த்தப்படும் வினைச்சொற்களை இஃதிறந்த காலத்திற்குரித்து, இது நிகழ்காலத்திற்குரித்து, இஃ தெதிர் காலத்திற்குரித்து என வழக்கு நோக்கி, உணர்ந்து கொள்க வென்பது விளக்கிய, ‘காலமொடு வரூஉம்’ என்றார். வினைச்சொற் கால முணர்த்துங்காற் சிலநெறிப்பா டுடைய வென்பது விளக்கிய, ‘நெறிப்படத் தோன்றி’ என்றார். நெறிப் பாடாவது 7அவ் வீற்றுமிசை நிற்கும் எழுத்து வேறுபாடு. அவை முற்றவுணர்த்தலாகா வாயினும், அவ்வீறுணர்த்தும்வழிச் சிறிய சொல்லுதும். (4) 202. அவைதாம் அம்மெம்மே மென்னுங் கிளவியு மும்மொடு வரூஉங் கடதற வென்னும் மந்நாற் கிளவியோ டாயெண் கிளவியும் பன்மை யுரைக்குந் தன்மைச் சொல்லே. நிறுத்த முறையானே உயர்திணைவினையாமா றுணர்த்து கின்றார். அவைதாம் இருவகைய, தன்மைவினையும் படர்க்கை வினையுமென. தன்மை வினையும் இருவகைத்து; 8பன்மைத் தன்மையும் ஒருமைத்தன்மையுமென. தனித்தன்மையும் உளப் பாட்டுத்தன்மையுமெனினு மமையும். இச் சூத்திரத்தாற் பன்மைத் தன்மை யுணர்த்துகின்றார். இதன் பொருள் : மேன் மூவகைய வெனப்பட்ட வினைச்சொல் தாம் அம் - ஆம் - எம் - ஏம் என்னுமீற்றவாகிய சொல்லும், உம்மொடு வரூஉங் க - ட - த- ற வாகிய கும்மும் டும்மும் தும்மும் றும்மும் என்னு மீற்றவாகிய சொல்லுமென, அவ் வெட்டும் பன்மை யுணர்த்துந் தன்மைச் சொல்லாம் என்றவாறு. 9தனக்கு ஒருமையல்லதின்மையின் தன்மைப்பன்மையாவது தன்னொடு பிறரை உளப்படுத்ததேயாம். அவ்வுளப்படுத்தல் மூவகைப்படும்; முன்னின்றாரை உளப்படுத்தலும், படர்க்கை யாரை உளப்படுத்தலும், அவ் விருவரையும் ஒருங்குளப்படுத்தலு மென. அம் - ஆம் என்பன முன்னின்றாரை உளப்படுக்கும்; தமராய வழிப் படர்க்கையாரையும் உளப்படுக்கும். எம் - ஏம் என்பன படர்க்கையாரை உளப்படுக்கும். உம்மொடு வரூஉங் க - ட - த - ற அவ்விருவரையும் ஒருங்குளப் படுத்தலுந் தனித்தனி யுளப்படுத்தலு முடைய. ஈண்டும் அவைதாமென்பதற்கு முடிபு ‘அவைதாம் இ - உ - ஐ - ஓ’ (சொல். 120) என்புழி உரைத்தாங் குரைக்க. அம், ஆம், எம், ஏம் என்பன மூன்று காலமும்பற்றி வரும். உம்மொடு வரூஉம் க - ட- த- ற எதிர்காலம் பற்றி வரும். முன்னின்ற நான்கீறும் இறந்த காலம் பற்றி வருங்கால், அம்மும் எம்மும், க - ட - த - ற -வென்னு நான்கன்முன் அன் பெற்று வரும். ஏம் அன் பெற்றும் பெறாதும் வரும். ஆம் அன் பெறாது வரும். உதாரணம்: நக்கனம் நக்கனெம், உண்டனம் உண்டெனம், உரைத் தனம் உரைத்தனெம், தின்றனம், தின்றனெம் எனவும்; நக்கனேம் நக்கேம், உண்டனேம் உண்டேம், உரைத்தனேம் உரைத்தேம், தின்றனேம் தின்றேம் எனவும்; நக்காம் உண்டாம், உரைத்தாம் தின்றாம் எனவும் வரும். அந்நான்கீறும் ஏனை யெழுத்தின்முன் ஙகாரமும் ழகாரமு மொழித்து இன் பெற்று வரும். உதாரணம்: அஞ்சினம், அஞ்சினாம், அஞ்சினெம், அஞ்சினேம்; உரிஞினம், உரிஞினாம், உரிஞினெம், உரிஞினேம் என வரும். பிறவெழுத்தோடு மொட்டிக்கொள்க. கலக்கினம், தெருட்டினம் என்னுந் தொடக்கத்தன குற்றுகர வீறாகலான், அதுவும் ஏனை யெழுத்தேயாம். இனி அவை நிகழ்காலம் பற்றி வருங்கால், நில், கின்று என்பனவற்றொடு வரும். நில்லென்பது லகாரம் னகாரமாய் றகாரம் பெற்று நிற்கும். உதாரணம்: உண்ணாநின்றனம், உண்கின்றனம்; உண்ணா நின்றாம், உண் கின்றாம்; உண்ணாநின்றனெம், உண்கின்றனெம்; உண்ணாநின்றேம், உண்கின்றேம்; உண்ணாநின்றனேம், உண்கின்றனேம் என வரும். ஈண்டு அன் பெற்ற விகற்பம் இறந்த காலத்திற் கூறியவாறே கொள்க. உண்ணாகிடந்தனம், உண்ணாவிருந்தனம் எனக் கிட இரு என்பனவுஞ் சிறுபான்மை நிகழ்காலத்து வரும். நிகழ்காலத்திற்கு உரித்தென்ற நில்லென்பது, உண்ணா நிற்கும் உண்ணாநிற்பல் என வெதிர்காலத்தும் வந்ததா லெனின்,அற்றன்று; ‘பண்டொருநாள் இச்சோலைக்கண் விளையாடாநின்றேன்; அந்நேரத் தொரு தோன்றல் வந்தான்’ என்றவழி, அஃதிறந்த காலத்து நிகழ்வு பற்றி வந்தாற்போல், ஆண்டெதிர் காலத்து நிகழ்வு பற்றி வருதலான், ஆண்டும் அது நிகழ்காலத்திற் றீர்ந்தின் றென்க. அவை எதிர்காலம்பற்றி வருங்கால் பகரமும் வகரமும் பெற்று வரும். வகரமேற்புழிக் குகரமும் உகரமும் அடுத்து நிற்கும். உதாரணம்: உரைப்பம், செல்வம்; உண்குவம், உரிஞுவம் என வரும். ஒழிந்த வீற்றோடும் ஒட்டிக்கொள்க. பாடுகம், செல்கம் என ஏற்புழிச் சிறுபான்மை ககரவொற்றுப் பெறுதலுங் கொள்க. உம்மொடு வரூஉம் க - ட - த - ற - உண்கும், உண்டும், வருதும், சேறும் என வரும். உரிஞுதும், திருமுதும் என ஏற்புழி உகரம் பெற்று வரும். கும்மீறு, வினைகொண்டு முடிதலின், ஒழிந்த உம்மீற்றின் வேறெனவேபடும். ட - த - ற வென்பன, எதிர்காலத்திற்குரிய எழுத் தன்மையான், பாலுணர்த்தும் 10இடைச்சொற்கு உறுப்பாய் வந்தன வெனவேபடும். படவே, அவற்றை உறுப்பாகவுடைய ஈறு மூன்றாம்; அதனான் உம்மென ஓரீறாக அடக்கலாகாமையின், அந்நாற் கிளவியொ டென்றார். (5) 203. கடதற வென்னு மந்நான் கூர்ந்த குன்றிய லுகரமோ டென்னே னல்லென வரூஉ மேழுந் தன்வினை யுரைக்குந் தன்மைச் சொல்லே. இதன் பொருள் : க ட த ற வென்னு நான்கு மெய்யையூர்ந்து வருங் குற்றிய லுகரத்தை ஈறாகவுடைய சொல்லும், என், ஏன் அல்லென்னு மீற்றாலாகிய சொல்லுமென அவ்வேழும், ஒருமை யுணர்த்துந் தன்மைச்சொல்லாம் என்றவாறு. குற்றுகரம் நான்கும், அல்லும், எதிர்காலம்பற்றி வரும். குற்றுகரம், காலவெழுத்துப் பெறுங்கால், உம்மீற்றோ டொக்கும். அல்லீறு பகரமும் வகரமும் பெற்று வரும். என் ஏன் என்பன மூன்று காலமும் பற்றி வரும். உதாரணம்: உண்கு, உண்டு, வருது, சேறு எனவும்; உரிஞுகு, திருமுகு எனவும்; உண்டனென், உண்ணாநின்றனென், உண்குவென் எனவும்; உண்டேன், உண்ணாநின்றேன், உண்பேன் எனவும்; உண்பல் வருவல் எனவும் வரும். காலவெழுத்தடுத்தற்கண் எம்மீற்றோடு என்னீறும், ஏமீற்றோடு ஏனீறு மொக்கும். ஆண்டுக் கூறிய விகற்பமெல்லாம் அறிந்தொட்டிக் கொள்க. 11குற்றியலுகரமென ஒன்றாகாது நான்காதற்கு முன்னுரைத் தாங் குரைக்க. எதிர்காலம் பற்றி வழக்குப்பயிற்சியு மில்லாக் குற்றுகரத்தை அங்ஙனம் வரும் அல்லோடு பின் வையாது, மூன்றுகாலமும் பற்றிப் பயின்று வரும் என் ஏன் என்பனவற்றின் முன் உம்மீற்றோடியைய வைத்தது, செய்கென்பது போலச் செய்குமென்பதூஉங் காண்கும் வந்தேம் என வினைகொண்டு முடியுமென்ப தறிவித்தற்கெனக் கொள்க. (6) 204. அவற்றுள் செய்கென் கிளவி வினையொடு முடியினு மவ்விய றிரியா தென்மனார் புலவர். இதன் பொருள் : மேற்கூறப்பட்ட ஒருமைத் தன்மைவினை ஏழனுள், செய் கென்னுஞ் சொல் வினையொடு முடியுமாயினும், முற்றுச் சொல்லாதலிற் றிரியாது என்றவாறு. உதாரணம்: காண்கு வந்தேன் என வரும். செய்கென்கிளவி அவ்வியல் திரியா தெனவே, ‘பெயர்த்த னென் முயங்க யான்’ (குறுந்.84) எனவும், ‘தங்கிளை சென்மோ’ (புறம்.320) எனவும், ‘மோயின ளுயிர்த்த காலை’ (அகம்.5) எனவும் ஏனை முற்றுச் சொல் வினை கொள்ளுங்கால் அவ்வியல் திரியு மென்பதாம். அவை திரிந்தவழி வினை யெச்சமாதல் ‘வினையெஞ்சு கிளவியும் வேறு பல்குறிய’ (சொல். 457) என்புழிப் பெறப்படும். 12இருசாரனவும் பெயர் கொள்ளாது வினை கொண்டவழிச் செய்கென் கிளவி திரியாதென்றும் ஏனைய திரியுமென்றுங் கூறிய கருத்தென்னை யெனின், நன்று சொன்னாய்! காண்கு வந்தேன் என்றவழிச் செய்கென் கிளவி வினையெச்சமாய்த் திரிந்ததாயிற் 13செய்தெனெச்சமாதற் கேலாமையின், செயவெனெச்சமாய்த் திரிந்ததெனல் வேண்டும். வேண்டவே, செயவெனெச்சத்திற்குரிய வினைமுதல்வினையும் பிற வினையும் அது கொள்வான் செல்லும்; வினைமுதல் வினையல்லது கொள்ளாமையிற் செயவெனெச்சமாய்த் திரிந்த தென்றல் பொருந்தாது. பிறிதாறின் மையின், முற்றுச் சொல்லாய் நின்றதெனவே படும். அதனான் அவ்வியல் திரியா தென்றா ரென்பது. அல்லதூஉம், செய்கென் கிளவி சிறுபான்மையல்லது பெயர் கொள்ளாமையின், பெரும்பான்மையாகிய வினை கோடல் அதற்கியல்பேயாம்; ஆகவே அது திரிந்து வினைகொள்ளு மெனல் வேண்டாவாம்; அதனாலும் முற்றாய் நின்று வினை கொண்ட தென்றலே முறைமையென் றுணர்க. 14முற்றுச் சொற்கும் வினையொடு முடியினு முற்றுச்சொ லென்னு முறைமையி னிறவா என்றார் பிறருமெனக் கொள்க. ‘பெயர்த்தனென் முயங்க’ (குறுந். 84) என்னுந் தொடக் கத்தன இறந்தகால முணர்த்தலிற் செய்தெனெச்சமாதற் கேற்பு டைமையான், அவற்றைத் திரிபென்றார். முன்னர் ‘எத்திறத் தானும் பெயர்முடி பினவே’ (சொல். 429) என்பதனாற் பெயரொடு முடிதலெய்துவதனை விலக்கியவாறு. (7) 205. அன்ஆன் அள்ஆள் என்னும் நான்கும் ஒருவர் மருங்கிற் படர்க்கைச் சொல்லே. தன்மைவினை யுணர்த்தி, இனி யுயர்திணைப் படர்க்கை வினை யுணர்த்துகின்றார். இதன் பொருள் : அன், ஆன், அள், ஆள் என்னு மீற்றையுடைய நான்கு சொல்லும் உயர்திணை யொருமை யுணர்த்தும் படர்க்கைச் சொல்லாம் என்றவாறு. இவை நான்கீறும் மூன்றுகாலமும் பற்றி வரும். உதாரணம்: உண்டனன், உண்ணாநின்றனன், உண்பன் எனவும்; உண்டான், உண்ணாநின்றான், உண்பான் எனவும்; உண்டனள், உண்ணாநின்றனள், உண்பள் எனவும்; உண்டாள், உண்ணா நின்றாள், உண்பாள் எனவும் வரும். 15காலத்துக் கேற்ற எழுத்துப் பெறுங்கால், அன்னும் அள்ளும் அம்மீற்றோடும், ஆனும் ஆளும் ஆமீற்றோடு மொக்கும். அவ் வேறுபா டெல்லாமறிந் தொட்டிக்கொள்க. (8) 206. அர்ஆர் பஎன வரூஉ மூன்றும் பல்லோர் மருங்கிற் படர்க்கைச் சொல்லே. இதன் பொருள் : அர் ஆர் ப என்னுமீற்றையுடையவாய் வரு மூன்று சொல்லும் பல்லோரை யுணர்த்தும் படர்க்கைச் சொல்லாம் என்றவாறு. ரகாரவீறு இரண்டும் மூன்றுகாலமும் பற்றி வரும்; பகாரம் எதிர்காலம் பற்றி வரும். உதாரணம்: உண்டனர், உண்ணாநின்றனர், உண்பர் எனவும்; உண்டார், உண்ணாநின்றார், உண்பார் எனவும்; உண்ப எனவும் வரும். அன் ஈற்றிற்குரிய காலவெழுத்து அர் ஈற்றிற்கும், ஆன் ஈற்றிற்குரிய காலவெழுத்து ஆர் ஈற்றிற்குமுரிய. பகரம் உகரம்பெற்றும் பெறாதும், உரிஞுப உண்ப என வரும். வருகுப எனச் சிறுபான்மை குகரமும் பெறும். இவ்வேறு பாடு ஏற்புழியறிந் தொட்டிக் கொள்க. (9) 207. மாரைக் கிளவியும் பல்லோர் படர்க்கை காலக் கிளவியொடு முடியு மென்ப. இதன் பொருள் : முன்னையனவேயன்றி மாரீற்றுச் சொல்லும் பல்லோர் படர்க்கையை யுணர்த்தும்; அஃது அவைபோலப் பெயர் கொள்ளாது வினைகொண்டு முடியும் என்றவாறு. பகரத்திற்குரிய காலவெழுத்து மாரைக் கிளவிக்கு மொக்கும். உதாரணம்: எள்ளுமார் வந்தார், கொண்மார் வந்தார் என வரும். குகரம் வந்தவழிக் கண்டுகொள்க. மாரைக்கிளவி வினையோடல்லது பெயரொடு முடியா மையின், எச்சமாய்த் திரிந்து வினைகொண்ட தெனப்படாமை யறிக. அஃதேல், பீடின்று பெருகிய திருவிற் பாடின் மன்னரைப் பாடன்மா ரெமரே (புறம். 375) எனவும், காமம் படரட வருந்திய நோய்மலி வருத்தங் காணன்மா ரெமரே (நற். 64) எனவும் மாரீற்றுச்சொற் பெயர்கொண்டு வந்தனவாலெனின், அவை 16பாடுவார் காண்பார் என்னும் ஆரீற்று முற்றுச்சொல்லின் எதிர்மறையாய் ஒருமொழிப்புணர்ச்சியான் மகரம் பெற்று நின்றன. மாரீறாயின், அவை பாடாதொழிவார், காணாதொழி வார் என எதிர்மறைப் பொருண்மை யுணர்த்துமாறில்லை யென்க. (10) 208. பன்மையு மொருமையும் பாலறி வந்த வந்நா லைந்து மூன்றுதலை யிட்ட முன்னுறக் கிளந்த வுயர்திணை யவ்வே. இதன் பொருள் : பன்மையும் ஒருமையுமாகிய பாலுணர வந்த இருபத்து மூன்றீற்று வினைச்சொல்லும் முன்னுறக் கிளக்கப் பட்ட உயர்திணை யுடையன என்றவாறு. ஈண்டுக் கூறிய படர்க்கைவினையே கிளவியாக்கத்துட் கூறப் பட்டன; அவை வேறல்லவென்பார், ‘முன்னுறக் கிளந்த’ வென்றார். அதனாற் பயன், அன் ஆன் அள் ஆளென்பன ஆண்பால் பெண் பாலுணர்த்துதல் ஈண்டுப் பெறுதலும், னஃகா னொற்று முதலாயின படர்க்கைவினைக் கீறாய்நின்று பாலுணர்த்துதல் ஆண்டுப் பெறுதலுமாம். அஃதேல், முற்றுப் பெற ஓரிடத்துக் கூறவமையும், ஈரிடத்துக் கூறிப் பயந்ததென்னை யெனின்:- பாலுணர்த்தும் இடைச்சொற்பற்றி உயர்திணைப் படர்க்கை வினை யுணர்த்துதல் ஈண்டுக் கூறியதனாற் பயன்; ஆண்டுக் கூறியதனாற் பயன் வழுக்காத்தற்கு இவற்றைத் தொகுத்திலக்கண வழக்கு ணர்த்துதலா மென்க. பெயரியல் நோக்கிப் ‘பெயரிற் றோன்றும் பாலறி கிளவியும்’ என்றாற்போல, வினையியல் நோக்கி ‘வினையிற் றோன்றும் பாலறி கிளவியும், மயங்கல் கூடா’ என அமையும், ஆண்டுக் கூறல் வேண்டா வெனின், அற்றன்று; இருதிணை யைம்பாற் சொலுணர்த் தாக்கால் திணை பால்பற்றி வழுவற்க வெனவும் வழீஇயமைக வெனவும் வழுக்காத்த சூத்திரங்க ளெல்லா வற்றானும் பொரு ளினிது விளங்காமையானும். வினை யுள்ளுந் திரிபின்றிப் பால் விளக்குதற் சிறப்புடையன படர்க்கை வினையே யாகலானும், அவற்றைப் பிரித்து ஆண்டுக் கூறினா ரென்பது. 17படர்க்கைப் பெயரீறு திரிபின்றிப் பாலுணர்த்தாமையின், இலக்கண வெழுத் தோடு கூறாது, எதிரது நோக்கிக் கொள்ள வைத்தாரென்க. மூன்றுதலையிட்ட அந்நாலைந்துமாவன இவையென இனிது விளங்கப் ‘பன்மையு மொருமையும் பாலறி வந்த’ என்றார். இதனாற் பயன், உயர்திணைவினை மூன்றுதலையிட்ட நாலைந் தென்னும் வரையறை. (11) 209. அவற்றுள் பன்மை யுரைக்குந் தன்மைக் கிளவி எண்ணியன் மருங்கிற் றிரிபவை உளவே. இதன் பொருள் : கூறப்பட்ட இருபத்துமூன்று சொற்களுள், பன்மை யுணர்த்துந் தன்மைச்சொல் எண்ணியலும் வழி அஃறிணையை யுளப்படுத்துத் திரிவனவுள என்றவாறு. உதாரணம்: ‘யானுமென் எஃகமுஞ் சாறும்’ என வரும். தன்மைப்பன்மை வினைச்சொல், உயர்திணை வினையா கலின், உயர்திணையே உளப்படுத்தற்பாலன; அஃறிணையை உளப்படுத்தல் வழுவாயினும் அமைக வென்பார், திரிபவை யுள வென்றார். அதனான் 18இச்சூத்திரத்தை ‘முன்னுறக் கிளந்த வுயர் திணை யவ்வே’ (சொல். 208) என்னுஞ் சூத்திரத்தின் பின் வைத்தார். திரியுமென்னாது திரிபவையுள வென்றதனான், எல்லாந் திரியா சிலவே திரிவன வென்பதாம். (12) 210. யா அ ரென்னும் வினாவின் கிளவி யத்திணை மருங்கின் முப்பாற்கு முரித்தே. இதன் பொருள் : யாரென்னும் வினாப்பொருளை யுணர்த்துஞ் சொல் உயர்திணை மருங்கின் முப்பாற்கு முரித்து என்றவாறு. உதாரணம்: அவன் யார், அவள் யார், அவர் யார் என வரும். ஊதைகூட் டுண்ணு முகுபனி யாமத்தெங் கோதைகூட் டுண்ணிய தான்யார்மன் - போதெல்லாந் தாதொடு தாழுந்தார்க் கச்சி வளநாடன் றூதொடு வாராத வண்டு’ என்புழி, வண்டுதான் யார் என, யாரென்பது அஃறிணைக் கண்ணும் வந்ததா லெனின், அது திணைவழுவமைதியெனப் படும். இது வினைக்குறிப்பாயினும், பல்லோர் படர்க்கை யுணர்த்தும் ஆரீற்றின் மூன்றுபா லுணர்த்தும் வேறுபாடுடைமை யான், அவற்றொடு வையாது ஈண்டு வைத்தார். செய்யுளின்ப நோக்கி அளபெழுந்து நின்றது. வினாவின்கிளவியென 19அதன்பொரு ளுணர்த்தியவாறு. (13) 211. பாலறி மரபி னம்மூ வீற்று மா வோ வாகுஞ் செய்யு ளுள்ளே. இதன் பொருள் : பால் விளங்க வருமியல்பையுடைய அம்மூன் றீற்றின் கண்ணும் ஆகாரம் ஓகாரமாகுஞ் செய்யுளிடத்து என்றவாறு. பாலறிமரபி னென்றதனான் 20பாலுணர்த்துதற்கண் திரிபுடை ஆமீறு விலக்குண்ணும், மார் சிறுவழக்கிற் றாகலானும், ஆகாரம் ஓகாரமாதற் கேலாமையானும், அம்மூவீறாவன ஆன் ஆள் ஆர் என்பனவேயாம். உதாரணம்: ‘வினவிநிற்றந் தோனே’ (அகம். 48), ‘நல்லை மன்னென நகூஉப்பெயர்ந் தோளே’ (அகம். 248), ‘பாசிலை, வாடா வள்ளியங் காடிறந் தோரே’ (குறுந். 216) என ஆகாரம் ஓகாரமாய்த் திரிந்தவாறு கண்டுகொள்க. வந்தோம், சென்றோம் என வழக்கினுள் வருவனவோ வெனின், அவை ஏமீற்றின் சிதைவென மறுக்க. (14) 212. ஆயென் கிளவியு மவற்றொடு கொள்ளும். இதன் பொருள் : முன்னிலையீற்றுள், ஆயென்னுமீறும் மேற்கூறப் பட்டன போல ஆகாரம் ஓகாரமாஞ் செய்யுளுள் என்றவாறு. உதாரணம்: ‘வந்தோய் மன்ற தண்கடற் சேர்ப்ப’ (அகம். 80) என வரும். 21கூறப்பட்ட நான்கீற்றுத் தொழிற்பெயரும் ஆகாரம் ஓகார மாதல் பெயரியலுட் கொள்ளப்படும் (சொல். 195). ஆயென்கிளவி ஆவோவாவது பெரும்பான்மையும் உயர் திணைக்கண் வந்தவழி யென்பதறிவித்தற்கு, முன்னிலை யதிகாரத்துக் கூறாது ஈண்டுக் கூறினார். அவற்றொடு கொள்ளுமென்றது அவற்றோ டொக்கு மென்றவாறு. (15) 213. அதுச்சொல் வேற்றுமை யுடைமை யானுங் கண்ணென் வேற்றுமை நிலத்தி னானு மொப்பி னானும் பண்பி னானுமென் றப்பாற் காலங் குறிப்பொடு தோன்றும். இதன் பொருள் : ஆறாம் வேற்றுமையது உடைமைப் பொருட் கண்ணும், ஏழாம் வேற்றுமையது நிலப்பொருட் கண்ணும், ஒப்பின் கண்ணும், பண்பின்கண்ணுமென அப்பகுதிக் காலங் குறிப்பாற் றோன்றும் என்றவாறு. அப்பகுதிக்காலமாவது - அப்பொருட்பகுதிபற்றி வருஞ் சொல் லகத்துக் காலமாம். அப்பகுதிக் காலங் குறிப்பாற் றோன்றுமெனவே, அப் பொருள்பற்றி வினைக்குறிப்பு வருமென்றவாறாம். 22உடையானது உடைமைத்தன்மையேயன்றி உடைப் பொருளும் உடைமையெனப்படுதலின் உடைமையானு மென்ப தற்கு உடைப்பொருட் கண்ணுமெனவு முரைக்க. உரைக்கவே, உடைப்பொருட்கண் வருங்கால், உடைப்பொருட் சொல்லாகிய முதனிலைபற்றி வருதலும் பெறப்படும். கருமைய னென்பது உடைமைப் பொருளாயடங்கலின், பண்பினானும் என்புழிக் 23கரியனென இன்ன னென்பதுபட வருதலே கொள்க. 24வாளாது உடைமையானும் என்றவழி ‘அன்மையின்’ (சொல். 214) என்பது போல அவ்வொரு வாய்பாடே பற்றி நிற்கும். இதனை இஃதுடைத் தென்பதுபட வரும் எல்லா வாய்பாடுந் தழுவுதற்கு ‘அதுச்சொல் வேற்றுமை யுடைமை யானு’ மென்றார். ‘கண்ணென் வேற்றுமை நிலத்தினானு’ மென்பதற்கும் ஈதொக்கும். ஆயின் 25இஃதிரண் டாம் வேற்றுமைப் பொருளா மெனின், ஆண்டுடைமை உருபு நோக்கிய சொல்லாய் வருவதல்லது இரண்டாம் வேற்றுமைப் பொருளெனப் படாது. என்னை? அது செயப்படு பொருண்மைத் தாகலின், அதனான் உடைமை ஆறாவதன் பொரு ளெனவே படுமென்பது. உதாரணம்: கச்சினன் கழலினன் எனவும், இல்லத்தன் புறத்தன் எனவும், பொன்னன்னன் புலிபோல்வன் எனவும், கரியன் செய்யன் எனவும் வரும். கச்சினான், இல்லத்தான் எனப் பெயருங் குறிப்பாற் காலம் விளக்கலின் அப்பால் காலங்குறிப்பொடு தோன்று மென்றத னான் வினைக் குறிப்பென்பது பெறுமாறென்னை யெனின், ‘தொழினிலை யொட்டு மொன்றலங் கடை’ (சொல். 70) எனத் தொழிற் பெயரல்லன காலந் தோன்றா வென்றமையால், கச்சினான் இல்லத்தா னென்பன காலம் விளக்காமையின், குறிப் பாற் காலம் விளக்குவன வினைக்குறிப்பாதல் பெறுதும். அல்லதூஉம், வினைக்குறிப்பும் காலந்தோன்றுதலை இலக்கண மாகவுடைய வினைச் சொல்லே யாதலின், தெற்றென விளக்கா வாயினுங் காலமுடையவெனவே படும். பெயர்க்கு அன்னதோ ரிலக்கண மின்மையின், காலந் தெற் றென விளக்குவன வுளவேற் கொள்வ தல்லது, காலம் விளக்காத பெயருங் காலமுடையவென உய்த்துண ருமாறில்லை. அதனானுங் குறிப்பாற் கால முணர்த்துவன வினைக்குறிப்பே யென்பது பெறப்படு மென்க. தன்னினமுடித்த லென்பதனான், 26ஐயாட்டையன், துணங் கையன் எனச் சிறுபான்மை, காலமும் வினைசெய்யிடமும் பற்றி வருவனவுங் கொள்க. (16) 214. அன்மையி னின்மையி னுண்மையின் வன்மையி னன்ன பிறவுங் குறிப்பொடு கொள்ளு மென்ன கிளவியுங் குறிப்பே காலம். இதன் பொருள் : அன்மை இன்மை உண்மை வன்மை யென்னும் பொருள் பற்றி வருவனவும், அவை போல்வன பிறவும், குறிப்புப் பொருண்மையொடு பொருந்தும் எல்லாச் சொல்லுங் காலங் குறிப்பா னுணரப்படும் என்றவாறு. காலங் குறிப்பா னுணரப்படுமெனவே, இவையும் வினைக் குறிப்பா மென்றவாறாம். உதாரணம்: அல்லன், அல்லள், அல்லர் எனவும்; இலன், இலள், இலர் எனவும்; உளன், உளள், உளர் எனவும்; வல்லன், வல்லள், வல்லர் எனவும் வரும். 27பொதுப்படக் கூறியவதனான், பொருளிலன், பொருளிலள், பொருளிலர் என உடைமைக்கு மறுதலையாகிய இன்மையுங் கொள்ளப்படும். இவை ஒரு வாய்பாடேபற்றிப் பிறத்தலின், வேறு கூறினார். பண்போடு இவற்றிடை வேற்றுமை யென்னையெனின்:- 28இன்மை, பொருட்கு மறுதலையாகலின், பொருளின்கட் கிடக்கும் பண்பெனப் படாது. அன்மையும் உண்மையும் பண்பிற்கு மொத்தலிற் பண்பெனப் படா; என்னை? குணத்திற்குக் குண மின்மையின். 29வன்மை-ஆற்றல்; அதுவுங் குணத்திற்கும் உண்டா தலிற் குணமெனப்படாது; 30ஊறெனின், அது பண்பா யடங்கும். அதனாற் 31பொருட்கட் கிடந்து தனக்கொரு குணமின்றித் தொழிலின் வேறாய குணத்தின் அன்மை முதலாயின வேறெனப் படும். பண்பெனி னுங் குணமெனினு மொக்கும். இக் கருத்தேபற்றி யன்றே ஆசிரியர் 32இன்மையும் உண்மையு முணர்த்துஞ் சொற் களை முடிப்பாராயிற் றென்பது. ‘என்ன கிளவியு’மென்றது ‘அன்னபிறவு’ மெனப்பட்ட வற்றையே யாகக் கொள்க. குறிப்பே காலம் என்றவழிக் குறிப்பென்றது குறிக்கப்படுவ தனை. 33அன்னபிறவு மென்றதனான், நல்லன், நல்லள், நல்லர்; தீயன், தீயள், தீயர்; உடையன், உடையள், உடையர் என இத்தொடக்கத் தனவெல்லாங் கொள்க. (17) 215. பன்மையு மொருமையு பாலறி வந்த வன்ன மரபிற் குறிப்பொடு வரூஉங் காலக் கிளவி யுயர்திணை மருங்கின் மேலைக் கிளவியொடு வேறுபா டிலவே. இதன் பொருள் : பன்மையும் ஒருமையுமாகிய பால் விளக்கிக் குறிப்புப் பொருண்மையுடையவாய் வரும் வினைச்சொல், மேல் வரு முயர் திணைக்கட் கூறிய தெரிநிலை வினையோ டொக்கும் என்றவாறு. தெரிநிலைவினையோ டொத்தலாவது, உயர்திணைத் தெரிநிலை வினைக்கோதிய ஈற்றுள் தமக்கேற்பனவற்றொடு வினைக்குறிப்பு வந்தவழி, அவ்வவ் வீற்றான் அவ்வப்பாலும் இடமும் விளக்கலாம். மேல் வினைக்குறிப்பு இன்னபொருள்பற்றி வருமென்ற தல்லது இன்னவீற்றான் இன்னபால் விளக்குமென்றிலர்; அதனான் அஃதீண்டுக் கூறினார். கூறப்பட்ட பொருட்கண் வந்தனவாயினும், இல்லை, இல், இன்றி என்பன பால் விளக்காமையின், அவற்றை நீக்குதற்குப் ‘பன்மையு மொருமையும் பாலறி வந்த’ வென்றார். 34ஒருபொருட்கட் பல வாய்பாடும் ஒருபொருட்கண் ஒரு வாய்பாடும் பற்றி வரும் இருதிறமும் எஞ்சாமற் றழுவுதற்கு, ‘அன்னமரபின்’ என்றார். தன்மையும் படர்க்கையும் உணர்த்துந் தெரிநிலைவினை யீற்றுட் குறிப்புவினைக்கேற்பன:- அம், ஆம், எம், ஏம், என், ஏன் என்னுந் தன்மை யீறாறும், அன், ஆன், அள், ஆள், அர், ஆர் என்னும் படர்க்கை யீறாறும் எனப் பன்னிரண்டாம். உதாரணம்: கரியம், கரியாம், கரியெம், கரியேம், கரியென், கரியேன் எனவும்; கரியன், கரியான், கரியள், கரியாள், கரியர், கரியார் எனவும் அவ்வவ்வீறு அவ்வவ்விடமும் பாலும் விளக்கியவாறு கண்டு கொள்க. ஒழிந்த பொருட்கண்ணு மொட்டிக்கொள்க. ஆன், ஆள், ஆர், என்பன நிலப்பொருண்மைக்கண் அல்லது பிற பொருட்கண் பயின்று வாரா. இன்னும், மேலைக்கிளவியொடு வேறுபாடில வென்றத னான், வந்தனன் எனத் தெரிநிலைவினை தொழின்மை 35மேற் படத் தொழிலுடைப் பொருள் கீழ்ப்பட முற்றாய் நின்றுணர்த்திய வாறு போல, உடையன் எனக் குறிப்புவினையும் உடைமை மேற்பட உடையான் கீழ்ப்பட முற்றாய் நின்றுணர்த்துதலுங் கொள்க. வந்தான், உடையான் எனப் பெயராயவழித் தொழிலுடைப் பொருளும் உடையானும் மேற்பட்டுத் தோன்றுமாறறிக. இஃது ‘அஃறிணை மருங்கின், மேலைக் கிளவியொடு வேறுபா டிலவே’ (சொல். 221) என்பதற்கு மொக்கும். (18) 216. அஆ வஎன வரூஉ மிறுதி யப்பான் மூன்றே பலவற்றுப் படர்க்கை. உயர்திணை வினை யுணர்த்தி, இனி யஃறிணைவினை யுணர்த்து கின்றார். இதன் பொருள் : அகரமும் ஆகாரமும் வகர வுயிர்மெய்யு மாகிய ஈற்றையுடைய அக்கூற்று மூன்றும் அஃறிணைப் பன்மைப் படர்க்கை யாம் என்றவாறு. அகரம் மூன்று காலமும்பற்றி வரும். ஆகாரம் எதிர்மறை வினையாய் மூன்று காலத்திற்கும் உரித்தாயினும், எதிர்காலத்துப் பயின்று வரும். அகரம், இறந்தகாலம்பற்றி வருங்கால், க - ட - த - ற வென்னு நான்கன்முன், அன் பெற்றும் பெறாதும் வரும். ஏனை யெழுத்தின்முன் ரகார ழகார மொழித்து இன் பெற்று வரும். யகரத்தின்முன் சிறுபான்மை இன்னேயன்றி அன்பெற்றும் பெறாதும் வரும். நிகழ்காலத்தின்கண் நில், கின்று என்பனவற் றோடு அன்பெற்றும் பெறாதும் வரும். எதிர்காலத்தின்கண் பகர வகரத்தோடு அன்பெற்றும் பெறாதும் வரும். உதாரணம்: தொக்கன தொக்க, உண்டன உண்ட, வந்தன வந்த, சென்றன சென்ற எனவும்; அஞ்சின எனவும்; போயின போயன போய எனவும்; உண்ணாநின்றன உண்ணாநின்ற, உண்கின்றன உண் கின்ற எனவும்; உண்பன உண்ப, வருவன வருவ எனவும் வரும். உரிஞுவன உரிஞுவ என உகரத்தோடு ஏனை யெழுத்துப் பேறும் ஏற்றவழிக் கொள்க. வருவ, செல்வ என்னுந் தொடக்கத்தன அகரவீறாதலும், வகர வீறாதலுமுடைய வென்பது கிளவியாக்கத்துட் கூறினாம். ஆகாரம் காலவெழுத்துப் பெறாது, உண்ணா, தின்னா என வரும். வகரம், 36உண்குவ தின்குவ என வெதிர்காலத்திற் குரித்தாய்க் குகரமடுத்தும், ஓடுவ, பாடுவ எனக் குகரமடாதும் வரும். உரிஞுவ, திருமுவ என உகரம் பெறுதலும் ஏற்றவழிக் கொள்க. ஒழிந்தவெழுத் தோடும் ஒட்டிக் கொள்க. (19) 217. ஒன்றன் படர்க்கை தறட வூர்ந்த குன்றிய லுகரத் திறுதி யாகும். இதன் பொருள் : ஒன்றனை யுணர்த்தும் படர்க்கை வினையாவது, த - ற - ட வென்பனவற்றை ஊர்ந்துநின்ற குற்றிய லுகரத்தை ஈறாகவுடைய சொல்லாம் என்றவாறு. தகரவுகரம் - மூன்று காலத்திற்கு முரித்து. றகரவுகரம் -இறந்த காலத்திற்குரித்து. டகரவுகரம் - மூன்றுகாலத்திற்குமுரிய வினைக் குறிப்பிற்கல்லது வாராது. அஃதேல், வினைக்குறிப்புக் கூறும்வழிக் கூறாது ஈண்டுக் கூறிய தென்னையெனின்:- ‘அஃறிணை மருங்கின் மேலைக் கிளவியொடு வேறுபா டிலவே’ (சொல். 221) என வினைக் குறிப்புப் பாலுணர்த்துமாறு தெரிநிலை வினையொடு மாட்டெறி யப்படுமாகலின், 37டகரமூர்ந்த குற்றியலுகரம் தெரிநிலை வினைக் கீறாகாமையின், மாட்டேற்று வகையாற் பாலுணர்த்துதல் பெறப் படாதாம்; அதனான் ஈண்டு வைத்தார். தகரவுகரம் - இறந்தகாலத்து வருங்கால் புக்கது, உண்டது, வந்தது, சென்றது, போயது, உரிஞியது எனக் க - ட - த - ற - வும் யகரமுமாகிய உயிர்மெய்ப் பின் வரும். போனது என னகர உயிர் மெய்ப் பின் வருவதோவெனின்:- அது சான்றோர் செய்யுளுள் வாரா மையின், அது சிதைவெனப்படும். நிகழ்காலத்தின்கண், நடவா நின்றது, நடக்கின்றது; உண்ணாநின்றது, உண்கின்றது என, நில், கின்று என்பனவற்றோடு அகரம் பெற்று வரும். எதிர்காலத்தின் கண், உண்பது, செல்வது எனப் பகரவகரம் பெற்றுவரும். றகரவுகரம் - புக்கன்று, உண்டன்று, வந்தன்று, சென்றன்று எனக் க - ட - த - ற வென்பனவற்றின்முன் அன்பெற்று வரும். கூயின்று, கூயிற்று; போயின்று, போயிற்று என ஏனை யெழுத்தின்முன் இன் பெற்று வரும். ஆண்டு இன்னின் னகரந் திரிந்துந் திரியாதும் வருதல் கொள்க. வந்தின்று என்பதோ வெனின்:- அஃது எதிர்மறுத்தலை யுணர்த்துதற்கு வந்த இல்லினது லகரம் னகரமாய்த் திரிந்த எதிர் மறைவினையென மறுக்க, அஃதெதிர் மறையாதல், வந்தில, வந்திலன், வந்திலள், வந்திலர் என வரும் ஏனைப்பாற் சொல்லா னறிக. டகரவுகரம் - குண்டுகட்டு, குறுந்தாட்டு என வரும். (20) 218. பன்மையு மொருமையும் பாலறி வந்த அம்மூ விரண்டு மஃறிணை யவ்வே. இதன் பொருள்: பன்மையும் ஒருமையுமாகிய பாலறியவந்த அவ்வாறீற்றுச் சொல்லும் அஃறிணையனவாம் என்றவாறு. பன்மையு மொருமையும் பாலறிவந்த வென்பதற்கு முன்னுரைத் தாங்குரைக்க. இதனாற் பயன், 38அஃறிணைச்சொல் ஆறே பிறிதில்லை யென வரையறுத்தலெனக் கொள்க. (21) 219. அத்திணை மருங்கி னிருபாற் கிளவிக்கு மொக்கு மென்ப வெவனென் வினாவே. இதன் பொருள் : எவனென்னும் வினாச்சொல் மேற்கூறப் பட்ட அஃறிணை இரண்டுபாற்கும் உரித்தென்று சொல்லுவர் ஆசிரியர் என்றவாறு. உதாரணம்: அஃதெவன், அவையெவன் என வரும். னகரவீறாய் இரண்டுபாற்கும் பொதுவாய் வருதலின், இதனை வேறு கூறினார். அஃதேல் நுமக்கிவன் எவனாம் என உயர்திணைக் கண்ணும் வருமாலெனின்:- ஆண்டு அது முறைபற்றி நிற்றலின், அஃறிணைக் கண் வந்ததெனவேபடு மென்பது. அஃதேல் நுமக்கிவனென்ன முறையனாம் என்பதல்லது என்ன முறையாம் என்பது பொருந்தா தெனின்:- என்னமுறை என்பது ஆண்டு முறைமேனில்லாது ஒற்றுமை நயத்தான் முறையுடையான் மேனிற்றலின், அமையு மென்க. 39எவனென்பதொரு பெயரும் உண்டு; அஃதிக்காலத்து என்னென்றும் என்னையென்றும் நிற்கும். ஈண்டுக் கூறப்பட்டது வினைக்குறிப்புமுற் றென்க. (22) 220. இன்றில வுடைய வென்னுங் கிளவியு மன்றுடைத் தல்ல வென்னுங் கிளவியும் பண்புகொள் கிளவியு முளவென் கிளவியும் பண்பி னாகிய சினைமுதற் கிளவியு மொப்பொடு வரூஉங் கிளவியொடு தொகைஇ யப்பாற் பத்துங் குறிப்பொடு கொள்ளும். இதன் பொருள் : இன்று இலவென்பன முதலாகிய பத்தும் வினைக் குறிப்புச் சொல்லாம், என்றவாறு. அவற்றுள், இன்று, இல, உடைய, அன்று, உடைத்து, அல்ல, உள என்பன தம்மையுணர்த்தி நின்றன. அல்லன பொருளு ணர்த்தி நின்றன. உதாரணம்: இன்று, இல, கோடுடைத்து, கோடுடைய, அதுவன்று, அவையல்ல, உள என வரும். ஈண்டும், கோடின்று, கோடில என உடைமைக்கு மறுதலையாய் இன்மைபற்றி வருவனவுங் கொள்க. உடையவென்பது முதலாயவற்றைச் செய்யுளின்ப நோக்கி மயக்கங் கூறினார். அவ்வேழனையும் 40பொருள்பற்றி யோதாராயினார்; கிளந் தோதிய வழியுஞ் சூத்திரமுஞ் சுருங்குமாகலானென்பது. உளதென்பது பெருவழக்கிற் றன்மையின், உளவென்பதே கூறினார். அது தன்னின முடித்தலென்பதனாற் கொள்ளப்படும். பண்புகொள்கிளவி - கரியது, கரிய; செய்யது, செய்ய என வரும். பண்பினாகிய சினைமுதற்கிளவி - நெடுஞ்செவித்து, நெடுஞ் செவிய என வரும். பண்படுத்த சினைபற்றியல்லது அவ்வினைக் குறிப்பு நில்லாமையின், பண்பினாகியவெனப் பண்பை முதனிலை யாகக் கூறினார். பெருந் தோளன் என உயர்திணைக்கண்ணும் பண்படுத்து வருதல் ஒன்றென முடித்த லென்பதனாற் கொள்க. வேற்றுமைப் பொருள்பற்றி வருங்கால், பிறிதின் கிழமையும் உறுப்பின்கிழமையல்லாத தற்கிழமையும் ஏழாம் வேற்றுமைப் பொருண்மையும்பற்றி அஃறிணை வினைக்குறிப்புப் பயின்று வாராமையின், சினைக்கிழமையே கூறினார். அப்பொருள்பற்றிப் பயிலாது வருவன உரையிற் கோடலென்ப தனாற் கொள்ளப்படும். ‘சிறப்புடைப் பொருளைத் தானினிது கிளத்தல்’ என்பதனாற் கொள்ளினு மமையும். 41அறிந்த மாக்கட் டாகுக தில்ல (அகம். 15) மெல்விரன் மந்தி குறை கூறுஞ் செம்மற்றே (கலி. 40) எனவும், ‘அணித்தோ சேய்த்தோ கூறுமி னெமக்கே’ (புறம். 173) எனவும் வரும். ‘வடாது’ ‘தெனாது’ (புறம். 6) என்பனவும் ஏழாம் வேற்றுமைப் பொருண்மைக்கண் வந்த வினைக்குறிப்பு; பெயருமாம். ஒப்பொடு வரூஉங் கிளவி - பொன்னன்னது, பொன்னன்ன என வரும். ஒப்பொடு வருதலாவது ஒப்புப் பொருள்பற்றி வருதல். வழக்குப்பயிற்சி நோக்கிப் பத்தென வரையறுத்தவாறு. (23) 221. பன்மையு மொருமையும் பாலறி வந்த வன்ன மரபிற் குறிப்பொடு வரூஉங் காலக் கிளவி யஃறிணை மருங்கின் மேலைக் கிளவியொடு வேறுபா டிலவே. இதன் பொருள் : பன்மையும் ஒருமையுமாகிய பால் விளக்கிக் குறிப்புப் பொருள்பற்றி வரும் வினைச்சொல் மேற்கூறப்பட்ட அஃறிணை வினையோ டொக்கும் என்றவாறு. 42வாய்பாடு பற்றியும் பொருள் பற்றியும் கூறிய இருவகையும் எஞ்சாமற் றழுவுதற்கு ‘அன்னமரபின்’ என்றார். ஒத்தலாவது, அஃறிணை வினைக்கோதிய ஈற்றுட் பொருந்துவன வினைக் குறிப்பின்கண் வருங்காலும், அவ்வவ் வீற்றான் அவ்வவ் விடமும் காலமும் விளக்குதல். பொருந்துவனவாவன - ஆகாரமும் வகாரமுமொழித்துக் குற்றுகரம் மூன்றும் அகரமுமாம். அவற்றுள் தகரமூர்ந்த குற்றுகரம் ‘ஒன்றன் படர்க்கை' (சொல். 217) என்புழிக் கூறுதலான், ஒழிந்த மூன்றும் ஈண்டுக் கொள்ளப்படும். அவை அவ்வப்பால் விளக்குதல் மேற்காட்டப்பட்டன வற்றுட் கண்டுகொள்க. (24) 222. முன்னிலை வியங்கோள் வினையெஞ்சு கிளவி யின்மை செப்பல் வேறென் கிளவி செய்ம்மன செய்யுஞ் செய்த வென்னு மம்முறை நின்ற ஆயெண் கிளவியும் திரிபுவேறு படூஉஞ் செய்திய வாகி யிருதிணைச் சொற்குமோ ரன்ன வுரிமைய. இதன் பொருள் : முன்னிலை முதலாகச் செய்தவென்ப தீறாகக் கூறிய முறை யானின்ற எட்டுச் சொல்லும், பொதுமையிற் பிரிந்து ஒருகால் உயர்திணை யுணர்த்தியும், ஒருகால் அஃறிணையு ணர்த்தியும், வேறுபடுந் தொழிலை யுடையவாய், இருதிணைச் சொல்லாதற்கும் ஒத்தவுரிமைய என்றவாறு. முன்னிலை வினைச்சொல்லாவது - எதிர்முகமாய் நின்றான் தொழிலுணர்த்துவது. வியங்கோள் ஏவற்பொருட்டாய் வருவது, வாழ்த்துதன் முதலாகிய பிறபொருளுமுடைத்தாகலின், 43இக்குறி மிகுதி நோக்கிச் சென்ற குறியென வுணர்க. வினையெஞ்சுகிளவி - வினையை யொழிபாகவுடைய வினை. இன்மை செப்பல் - இல்லை, இல் என்பன. வேறென்பது தன்னை யுணர்த்தி நின்றது. செய்ம்மனவென்பது - மனவீற்று முற்றாய் எதிர்கால முணர்த்தும். செய்யுமென்பது - முற்றும் எச்சமுமாகிய இருநிலை மையுமுடைத்தாய் உம் மீற்றான் நிகழ்காலமுணர்த்தும். செய்த வென்பது - அகரவீற்றெச்சமாய் இறந்த கால முணர்த்தும். செய்ம்மன முதலாகிய மூன்று வாய்பாட்டானும், அவ்வீற்ற வாய்க் காலமுணர்த்தும் உண்மன, உண்ணும், உண்ட என்னுந் தொடக்கத்தன வெல்லாந் தழுவப்பட்டன. அவற்றான் அவை தழுவப்பட்டவாறென்னை யெனின், 44எல்லாத் தொழிலும் செய்தல் வேறுபாடாகலின், பொதுவாகிய செய்தல் எல்லாத் தொழிலையும் அகப்படுத்து நிற்கும்; அதனான் அவற்றான் அவை தழுவப்படு மென்க. அவை பொதுவுஞ் சிறப்பு மல்லவேல், என் செய்யா நின்றான் என்று வினாயவழி, உண்ணாநின்றான் எனச் செப்புதல் இயையாதா மென்க. இது செய்து செய்பு என்பன வற்றிற்கு மொக்கும். அஃதேல், 45சிலவற்றை ஈற்றானுணர்த்திச் சிலவற்றை வாய் பாட்டா னுணர்த்திய தென்னையெனின், அம்மீறும் அன்னீறும் ஐயீறும் முதலாகிய சொற்கண் காலப்பன்மையான் வரும் வாய் பாட்டுப் பன்மையாற் சூத்திரம் பெருகு மென்றஞ்சி, அவற்றை ஈற்றானுணர்த்திக் கால வேறுபாடு 46இலேசாற் கொள்ள வைத்தார். காலப்பன்மையில்லனவற்றை வாய்பாட்டானு முணர்த்துப, ஈற்றானு முணர்த்துப. முற்றாதலும் பலவாய்பாட்டாற் பயின்று வருதலு முடைமையான், முன்னிலைவினையை முன்வைத்தார். ஏவற் பொருண்மை முன்னிலை வினைக்கண்ணு முண்மையிற் பொருள் இயைபுடைத்தாகலானும், இடங் குறித்து முற்றாய் வருதலொப் புமையானும், அதன் பின் வியங்கோள் வைத்தார். அதன் பின், முற்றாதலொப்புமையான் இன்மைசெப்பல் வேறென் கிளவி செய்ம்மன என்பனவற்றை வைத்தல் முறைமையாயினும், முற்றின்கண் வினையெச்ச முண்மையானும், ஈற்றுப்பன்மை யொடு பயின்று வருதலானும், வினையெச்சம் வைத்தார். இன்மை பற்றி வரும் வினை யெச்சமு முண்மையான் அதனோடியைய இன்மை செப்பல் வைத்தார். வினைக்குறிப்பாத லொப்புமை யானும், செய்ம்மனவிற் பயிற்சி யுடைமையானும், அதன்பின் வேறென்கிளவி வைத்தார். முற்றாத லொப்புமையான், அதன்பின், செய்ம்மன வைத்தார். முற்றாம் நிலைமையு முடைத்தாகலின், அதன்பின் செய்யுமென்பது வைத்தார். பெயரெச்சமாத லொப்புமையான், அதன்பின், செய்த வென்பது வைத்தார். இவ்வாறு இயைபுபற்றி வைத்தமையான், ‘அம்முறை நின்ற’ வென்றார். 47‘திரிபுவேறுபடூஉஞ் செய்தியவாகி’ யெனவே, வேறுவேறு ணர்த்தினல்லது ஒரு சொற் சொல்லுதற்கண் இருதிணையு முணர்த்தாமை பெறுதும். (25) 223. அவற்றுள் முன்னிலைக் கிளவி இ ஐ ஆயென வரூஉ மூன்று மொப்பத் தோன்று மொருவர்க்கு மொன்றற்கும். இதன் பொருள் : கூறப்பட்ட விரவுவினைகளுள், முன்னிலைச் சொல், இகர வீறும் ஐகாரவீறும் ஆயீறுமாகிய மூன்றும் ஒருவற்கும் ஒருத்திக்கும் ஒன்றற்கும் ஒப்பச்செல்லும் என்றவாறு. முன்னிலைக்கிளவி யென்பதற்கு முடிபு ‘அவைதாம் அம் ஆம் எம் ஏம்’ (சொல். 202) என்புழி ‘அவைதாம்’ என்பதற் குரைத்தாங் குரைக்க. இகரம் த - ட - ற வூர்ந்து எதிர்காலம் பற்றி வரும். ஐகாரம் அம் மீற்றிற் குரிய எழுத்துப்பெற்றும், ஆயீறு ஆமீற்றிற் குரிய எழுத்துப் பெற்றும், மூன்றுகாலமும் பற்றி வரும். உதாரணம்: உரைத்தி, உண்டி, தின்றி எனவும்; உண்டனை, உண்ணா நின்றனை, உண்பை எனவும்; உண்டாய், உண்ணா நின்றாய், உண்பாய் எனவும் வரும். ஒழிந்தவெழுத்தோடு மொட்டிக் கொள்க. ‘ஐயசிறி தென்னை 48யூக்கி’ (குறிஞ்சிக் கலி. 1) என இகரம் சிறுபான்மை ககரம் பெற்று வரும். உண், தின்; நட, கிட என்னுந் தொடக்கத்த முன்னிலை ஒருமை பெறுமாறென்னையெனின், அவை ஆயீறாதல் எச்சவியலுட் பெறப்படு மென்க. (26) 224. இர் ஈர் மின்னென வரூஉ மூன்றும் பல்லோர் மருங்கினும் பலவற்று மருங்கினுஞ் சொல்லோ ரனைய வென்மனார் புலவர். இதன் பொருள் : இர், ஈர், மின்னென்னும் ஈற்றையுடைய மூன்று சொல்லும், பல்லோர்கண்ணும் பலவற்றின்கண்ணுஞ் சொல்லுதற் கண் ஒத்தவுரிமைய என்றவாறு. இர் ஈறு அர் ஈற்றிற்குரிய எழுத்துப் பெற்றும், ஈரீறு ஆரீற்றிற் குரிய எழுத்துப் பெற்றும், மூன்றுகாலமும் பற்றி வரும். மின்னீறு பிறவெழுத்துப் பெறாது, ஏற்றவழி உகரம் பெற்று, எதிர்காலம் பற்றி வரும். உதாரணம்: உண்டனிர், உண்ணாநின்றனிர், உண்குவிர் எனவும்; உண்டீர் உண்ணாநின்றீர், உண்குவீர் எனவும் உண்மின், தின்மின், உரிஞுமின் எனவும் வரும். ஒழிந்த வெழுத்தோடு மொட்டிக் கொள்க. முன்னிலைவினைக்குறிப்பு, உயர்திணை வினைக்குறிப்பிற் கோதிய பொருள்பற்றி ஐகாரமும் ஆயும் இருவும் ஈருமென்னு நான்கீற்றவாய், கழலினை, நாட்டை, பொன்னன்னை, கரியை எனவும்; கழலினாய், நாட்டாய், பொன்னன்னாய், கரியாய் எனவும்; கழலினிர், நாட்டினிர், பொன்னன்னிர், கரியிர் எனவும்; கழலினீர், நாட்டினீர், பொன்னன்னீர், கரியீர் எனவும் வரும். ஒழிந்த பொரு ளோடு மொட்டிக்கொள்க. 49போறி என இகரவீற்று வினைக்குறிப்பு முண்டாலெனின், போன்றனன், போன்றான் என்பனபோல வந்து தெரிநிலை வினையாய் நின்றதென மறுக்க. அஃறிணை வினைக்குறிப்பும் உயர்திணை வினைக்குறிப்பிற் கோதிய பொருள்பற்றி வருதலின், அவற்றை யெடுத்தோதிற் றென்னை யெனின்:- இன்று முதலாயின பொருள் பற்றி வந்தன கிளந்தோதலாஞ் சுருக்கத்தன ஆகலானும், சினைமுதற்கிளவி பண்புமடுத்து வருதல் உயர்திணை யதிகாரத்துப் பெறப்படாமை யானும் அவற்றை யோதுவார் ஏனைப் பொருளு முடனோதினார். முன்னிலை வினைக்குறிப்புப் பலவாதலானும், எடுத்தோதா வழிப்படுவதொரு குறைபாடின்மையானும், இவற்றை யுய்த்துணர வைத்தாரென்பது. அல்லது, எடுத் தோத்தில் வழி உய்த்துணர்வ தெனினுமமையும். முன்னிலை வினையீற்றான் எதிர்காலம்பற்றி வரும் இகரத்தையும் மின்னையும் முதலும் இறுதியும் வைத்து, மூன்று காலமும்பற்றி வரும் நான்கீற்றையுந் தம்முளியைய இடை வைத்தார். அல்லது, பொருண்மை கருதாது சூத்திர யாப்பிற் கேற்ப வைத்தா ரெனினுமமையும். (27) 225. எஞ்சிய கிளவி யிடத்தொடு சிவணி யைம்பாற்கு முரிய தோன்ற லாறே. இதன் பொருள் : முன்னிலைவினை யொழித்து ஒழிந்த ஏழுவினைச் சொல்லும் மூன்றிடத்திற்கும் ஐந்துபாற்குமுரிய, தத்தம் பொருட் கண் தோன்றுமிடத்து என்றவாறு. இவ்வாறு பொதுவகையான் எல்லாவிடத்தோடும் எல்லாப் பாற்கும் உரியவாத லெய்தினவெனினும், 50முன்னர் விலக்கப்படுவன வொழித்து ஒழிந்த விடமும் பாலும் பற்றி வருமாறு ஈண்டுக் காட்டப்படும். உதாரணம்: அவன் செல்க, அவள் செல்க, அவர் செல்க, அது செல்க, அவை செல்க எனவும்; உழுது வந்தேன், உழுது வந்தேம், உழுது வந்தாய், உழுது வந்தீர், உழுது வந்தான், உழுது வந்தாள், உழுது வந்தார், உழுது வந்தது, உழுது வந்தன எனவும்; யானில்லை, யாமில்லை, நீயில்லை, நீயிரில்லை, அவனில்லை, அவளில்லை, அவரில்லை, அதுவில்லை, அவை யில்லை எனவும்; யான் வேறு, யாம் வேறு, நீ வேறு, நீயிர் வேறு, அவன் வேறு, அவள் வேறு, அவர் வேறு, அது வேறு, அவை வேறு எனவும்; யானுண்மன, யாமுண் மன, நீயுண்மன, நீயிருண்மன, அவனுண்மன, அவளுண்மன, அவருண்மன, அதுவுண்மன, அவையுண்மன எனவும்; யானுண்ணு மூண், யாமுண்ணுமூண், நீயுண்ணுமூண், நீயிருண்ணுமூண், அவனுண்ணுமூண், அவளுண்ணுமூண், அவருண்ணுமூண், அதுவுண்ணுமூண், அவையுண்ணுமூண் எனவும்; அவன் வரும், அவள் வரும், அது வரும், அவை வரும் எனவும்; யானுண்டவூண், யாமுண்டவூண், நீயுண்ட வூண், நீயிருண்டவூண், அவனுண்டவூண், அவளுண்டவூண், அவருண்ட வூண், அது வுண்டவூண், அவை யுண்டவூண் எனவும் வரும். (28) 226. அவற்றுள் முன்னிலை தன்மை யாயீ ரிடத்தொடு மன்னா தாகும் வியங்கோட் கிளவி. இதன் பொருள் : மேல் ‘எஞ்சிய கிளவி’ (சொல். 225) எனப்பட்ட ஏழனுள், வியங்கோட்கிளவி, முன்னிலையும் தன்மையுமாகிய இரண்டிடத்தொடு நிலைபெறாதாம் என்றவாறு. ஆயீரிடத்தொடு கொள்ளாதென்னாது மன்னதாகு மென்ற தனான், அவ்விடத்தொடு சிறுபான்மை வருதல் கொள்க. மன்னுதல் பெரும் பான்மையும் நிகழ்தல். சிறுபான்மை வருவன: நீ வாழ்க என்னும் வாழ்த்துதற் பொருண்மைக்கண்ணும், யானு நின்னோ டுடனுறைக என்னும் வேண்டிக் கோடற் பொருண்மைக் கண்ணும் வருவனவாம். ‘கடாவுக பாகநின் கால்வ னெடுந்தேர்’ என்பதும் வேண்டிக்கோடற் பொருண்மைக் கண் வந்ததாம். தன்மைக்கண் 51ஏவலில்லை. முன்னிலைக்கண் ஏவல் வருவதுண்டேற் கண்டுகொள்க. அஃதேல் வியங்கோளீறு கூறாராயிற் றென்னையெனின்:- எழுத்தோத்தினுள் ‘ஏவல் கண்ணிய வியங்கோட் கிளவியும்’ (எழுத். 210) என அகரவீற்றுள் 52எடுத்தலாற் பொருந்திய மெய் யூர்ந்து அகரவீறாய் வருதலும், செப்பும் வினாவும் வழாஅ லோம்பல்’ (சொல். 13) எனவும், ‘சொல்வரைந் தறியப் பிரித்தனர் காட்டல்’ (சொல். 463) எனவும். ‘மறைக்குங் காலை மரீஇய தொராஅல்’ (சொல். 443) எனவும், உடம்பொடு புணர்த்தலான் அல்லீறாய் வருதலும் ஆலீறாய் வருதலும் பெறுதலின், வியங் கோளீறுங் கூறினாரெனவே படும். பிறவு முளவேற் கொள்க.(29) 227. பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை யவ்வயின் மூன்றும் நிகழுங் காலத்துச் செய்யு மென்னுங் கிளவியொடு கொள்ளா. இதன் பொருள் : பல்லோர் படர்க்கையும் முன்னிலையும் தன்மையு மாகிய அவ்வயின் மூன்றும், நிகழ்காலத்து வருஞ் செய்யு மென்னுஞ் சொல்லொடு பொருந்தா என்றவாறு. அவ்வயினென்றது - இடமும் பாலுமாகிய எஞ்சிய கிளவிக் குரிய பொருட்கண் என்றவாறு. நிகழுங்காலத்துச் செய்யுமென்னுங் கிளவியொடென அதனாற் றோன்றுங்கால முணர்த்தியவாறு. இவையிரண்டு சூத்திரமும் 53பொதுவகையா னெய்தியன வற்றை விலக்கி நின்றன. (30) 228. செய்து செய்யூச் செய்பு செய்தெனச் செய்யியர் செய்யிய செயின்செயச் செயற்கென வவ்வகை யொன்பதும் வினையெஞ்சு கிளவி. பொதுவகையா னெய்தியவற்றுள், வியங்கோட்கிளவிக்குஞ் செய்யு மென்னுங் கிளவிக்கும் எய்தாதன விலக்கி, இனி நிறுத்த முறையானே வினையெச்சத்தினது பாகுபாடுணர்த்துகின்றார். இதன் பொருள்: செய்தென்பது முதலாகச் சொல்லப்பட்ட ஒன்பதும் வினை யெச்சமாம் என்றவாறு. அவ்வகையொன்பது மென்றது - இறுதி நின்ற இடைச் சொல்லான் வேறுபட்ட ஒன்பது மென்றவாறு. அவ் விடைச் சொல்லாவன உகரமும், ஊகாரமும், புகரமும், எனவும், இயரும், இயவும், இன்னும், அகரமும், குகரமுமாம். ‘செய்கென் கிளவி வினையொடு முடியினும்’ (சொல். 204) எனவும், ‘செய்யா யென்னு முன்னிலை வினைச்சொல்’ (சொல். 450) எனவும், இறுதி யிடைச்சொ லேற்றவாற்றாற் பிரித்துணர வாய்பா டோதினாற் போல, ஏற்றவாற்றான் 54இறுதியிடைச் சொற் பிரித்து ணர்ந்துகொள்ள ஈண்டும் வாய்பாடுபற்றி யோதினார். உகரம், க - ட - த - ற- வூர்ந்து இயல்பாயும், ஏனையெழுத் தூர்ந்து இகரமாய்த் திரிந்தும், நெடிலீற்று முதனிலை முன்னர் யகரம் வரத் தான் கெட்டும், இறந்தகாலம்பற்றி வரும் இவ்வுகரவீறு இகரமாதலும், யகரம் வரக் கெடுதலும் ‘வினை யெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய’ (சொல். 457) என்பதனாற் பெறப்படும். உதாரணம்: நக்கு, உண்டு, வந்து, சென்று எனவும்; எஞ்சி, உரிஞி, ஓடி எனவும்; ஆய், போய் எனவும் வரும். சினைஇ, உரைஇ, இரீஇ, உடீஇ, பராஅய், தூஉய், தாஅய் என்பனவோவெனின், அவை செய்யுண்முடி பென்க. ஆகி, போகி, ஓடி, மலர்த்தி, ஆற்றி என்புழி முதனிலை குற்றுகர வீறாதலின், ஏனையெழுத்தாத லறிக. க - ட - த - ற வென்பன 55குற்றுகரத்தொடு வருமிடமும் தனிமெய் யாய் வருமிடமும் தெரிந்துணர்க. அஃதேல், ஆய் என்பதனை யகரவீறென்றும், ஓடியென்ப தனை இகரவீறென்றுங்கொள்ளாது. உகரவீறென்ற தென்னை யெனின், நன்று சொன்னாய்! இகரவிறுதி இடைச்சொல்லாயின், இறுதி யிடைச்சொல் எல்லாத் தொழிலும்பற்றி வருதலிற் செலவு வரவென்பனவற்றொடும் வரல்வேண்டும். இனிச் செய்தெ னெச்சத் துகரமும் இறுதியிடைச்சொல் லாதலின் ஆகுதல் ஓடுதலென்னுந் தொழில்பற்றியும் வரல்வேண்டும். செலவு வரவுபற்றி இகரம் வாராமையானும், ஆகுதல் ஓடுதல் பற்றி உகரம் வாராமையானும், இறுதி யிடைச்சொல் இகரமேயாக உகரமேயாக ஒன்றாவதல்லது இரண்டெனப் படாதாம். உகரம் ஒன்றாய் நின்று க - ட - த - ற - வூர்ந்த விதிவினைக்கட் பயின்று வருதலானும், எதிர்மறையெச்ச மெல்லாம் பெரும்பான்மையும் உகரவீறாயல்லது வாராமை யானும், உகரம் இயல்பாக இகரம் அதன் றிரிபென்றலே முறைமை யென்க. யகரவீற்றிற்கும் இஃதொக்கும். ஊகாரம் உண்ணூவந்தான், தின்னூவந்தான் எனப் பின்வருந் தொழிற்கு 56இடையின்றி முன்வருந் தொழின்மேல் இறந்தகாலம் பற்றி வரும். அஃது உண்ணா என ஆகாரமாயும் வரும். பகரவுகரம் 57நகுபு வந்தான் என நிகழ்காலம் பற்றி வரும். நகா நின்று வந்தான் என்றவாறு. ஈண்டு நிகழ்காலமென்றது முடிக்குஞ் சொல்லா னுணரப்படுந் தொழிலோடு உடனிகழ்தல். உரிஞுபு என உகரமும், கற்குபு எனக் குகரமும், ஏற்றவழிப் பெறுதல் கொள்க. எனவென்பது க - ட - த -ற -வூர்ந்து இறந்தகாலம்பற்றி முடிக்குஞ் சொல்லா னுணர்த்தப்படுந் தொழிற்குத் தன் முதனிலைத் தொழில் காரணமென்பதுபட வரும். உதாரணம்: சோலைபுக்கென வெப்பநீங்கிற்று; உண்டெனப் பசி கெட்டது; உரைத்தென உணர்ந்தான்; மருந்து தின்றெனப் பிணி நீங்கிற்று என வரும். எஞ்சியென எனவும், உரிஞியென எனவும், ஏனை எழுத்தொடும் வருமாறறிந் தொட்டிக் கொள்க. இயர், இய என்பன, எதிர்காலம் பற்றி, உண்ணியர், தின்னியர்; உண்ணிய, தின்னிய என வரும். போகியர், போகிய என ஏற்றவழிக் ககரம் பெற்று வருதலுங் கொள்க. இன் எதிர்காலம்பற்றிக் காரணப்பொருட்டாய் வரும். உதாரணம்: மழைபெய்யிற் குளநிறையும்; மெய்யுணரின் வீடெளி தாம் என வரும். நடப்பின், உரைப்பின் என ஏற்றவழிப் பகரம் பெற்று வருதலுங் கொள்க. அகரம், மழை பெய்யக் குளம் நிறைந்தது; ஞாயிறு பட வந்தான், உண்ண வந்தான் என மூன்று காலமும் பற்றி வரும். உரைப்ப, உரைக்க என ஏற்றவழிப் பகரமும் ககரமும் பெறுதல் கொள்க. குகரம் உணற்கு வந்தான்; தினற்கு வந்தான் என வெதிர்காலம் பற்றி வரும். புகரமும் குகரமும் உகரத்தின்கண்ணும், எனவும் இயவும் அகரத்தின் கண்ணும் அடங்குமெனின், ஆரீற்றில் மார் அடங்கா மைக்கு உரைத்தாங் குரைக்க. செயற்கென்னும் வினையெச்சம் நான்கனுரு பேற்று நின்ற தொழிற் பெயரின் வேறாதல் கிளவியாக்கத்துட் கூறினாம். திரியாது நிற்கும் ஊகாரமும், புகரமும், எனவும், இயரும், இயவு மென்னும் ஐந்தீற்றுவினையெச்சமும் வழக்கினுள் இக் காலத்து வாராவாயினும், சான்றோர் செய்யுளுள் அவற்றது வாய்பாட்டு வேற்றுமை யெல்லாங் கண்டு கொள்க. (31) 229. பின்முன் கால்கடை வழியிடத் தென்னு மன்ன மரபிற் காலங் கண்ணிய வென்ன கிளவியு மவற்றியல் பினவே. இதன் பொருள் : பின்னும், முன்னும், காலும், கடையும், வழியும், இடத்தும் என்னுமீற்றவாய் வருவனவும், அவைபோலக் காலங் கண்ணி வருவன பிறவும், வினையெச்சமாம் என்றவாறு. உதாரணம்: நீயிர் பொய் கூறியபின் மெய் கூறுவார் யார் எனவும், நீ யிவ்வாறு கூறுகின்றபின் உரைப்பதுண்டோ எனவும், பின் இறப்பும் நிகழ்வும் பற்றியும், மருந்து தின்னாமுன் நோய் தீர்ந்தது என முன் இறந்தகாலம் பற்றியும், ‘வலனாக வினையென்று வணங்கிநாம் விடுத்தக்கால்’ (கலி. 35) எனவும், ‘அகன்றவர் திறத்தினி நாடுங்கால்’ (கலி. 10) எனவும் காலீறு மூன்று காலமும் பற்றியும், ‘தொடர்கூரத் தூவாமை வந்தக்கடை’ (கலி. 22) எனக் கடையீறு இறந்தகாலம் பற்றியும், உரைத்த வழி, உரைக்கும் வழி, உரைத்த விடத்து, உரைக்கு மிடத்து என வழியென்னு மீறும் இடத்தென்னுமீறும் மூன்று காலமும் பற்றியும் வரும். கால், வழி, இடத்து என்பனவற்றின் நிகழ் காலத்து வாய்பாடு எதிர்காலத்திற்கு மேற்ற லறிக. 58கூதிர் போயபின் வந்தான் எனவும், நின்றவிடத்து நின்றான் எனவும், பின் முதலாயின பெயரெச்சத்தொடும் வந்தவழி, இறப்பு முதலாகிய காலங் கண்ணாமையின், அவற்றை நீக்குதற்குக் ‘காலங் கண்ணிய’ வென்றார். காலவேறுபாட்டான் வரும் வாய்பாட்டுப் பன்மை யெல்லாம் ஒரு வாய்பாட்டாற் றழுவலாகாமையின், இவற்றை ஈறுபற்றி யோதினார். அன்ன மரபிற் காலங் கண்ணிய வென்ன கிளவியு மென்றத னான், உண்பாக்கு, வேபாக்கு என வரும் பாக்கீறும், உண்பான் வருவான் என்னும் ஆனீறும், ‘நனவிற் புணர்ச்சி நடக்கலு மாங்கே’ (குறிஞ்சிக்கலி. 3) என்னும் உம்மீறும், ‘அற்றா லளவறிந் துண்க’ (குறள். 943) என்னும் ஆலீறும், எதிர்மறை பற்றிக் ‘கூறாமற் குறித்ததன்மேற் செல்லும்’ (கலி. 1) என வரும் மல்லீறும், ‘கூறாமை நோக்கிக் குறிப்பறிவான்’ (குறள். 701) என்னும் மகர வைகார வீறுங் கொள்க. ‘என்ன கிளவியு’ மென்றதனான், இன்றி, அன்றி, அல்லது, அல்லால் என வருங் குறிப்புவினையெச்சமுங் கொள்க. பிறவுமன்ன. (32) 230. அவற்றுள் முதனிலை மூன்றும் வினைமுதன் முடிபின. இதன் பொருள் : மேற்சொல்லப்பட்ட பதினைந்து வினையெச்சத் துள், முதற் கணின்ற செய்து, செய்யூ, செய்பு என்னு மூன்றும் தம் வினை முதல் வினையான் முடியும் என்றவாறு. உதாரணம்: உண்டு வந்தான், உண்ணூ வந்தான், உண்குபு வந்தான் எனவும்; கற்று வல்லனாயினான், கல்லூ வல்லனாயினான், கற்குபு வல்லனாயினான் எனவும் வரும். ‘உரற்கால் யானை யொடித்துண் டெஞ்சிய, யாஅவிரி நிழற் றுஞ்சும்’ (குறுந். 232) எனச் செய்தெனெச்சம் வினைமுதல் வினை யல்லா வினையான் முடிந்ததா லெனின், அது ‘வினையெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய’ (சொல். 457) என்புழிப் பெறப்படும். இது முன்னர், வினையெஞ்சு கிளவிக்கு வினையுங் குறிப்பு நினையத் தோன்றிய முடிபா கும்மே (சொல். 432) எனப் பொதுவகையான் முடிவனவற்றை எதிரது நோக்கி இவை மூன்றும் வினைமுதன் முடிபினவென நியமித்தவாறு. அஃதேல், இதனையும் ஆண்டே கூறுகவெனின், ஆண்டுச் செய்து செய்யூச் செய்பு என்னு மூன்று மெனக் கிளந்தோதுவதல்லது, 59முதனிலை மூன்றுமெனத் தொகுத்தோத லாகாமையானும், ஈண்டு இயை புடைத்தாகலானும், ஆண்டுக் கூறாது ஈண்டுக் கூறினாரென்பது. (33) 231. அம்முக் கிளவியுஞ் சினைவினை தோன்றிற் சினையொடு முடியா முதலொடு முடியினும் வினையோ ரனைய வென்மனார் புலவர். இதன் பொருள் : வினைமுதன் முடிபினவாகிய அம்மூன்று சொல்லும், சினைவினை நின்று சினைவினையொடு முடியாது முதல்வினையொடு முடியினும், வினையா னொருதன்மைய என்றவாறு. வினையா னொருதன்மைய வென்றது - முதல்வினையொடு முடியினும் முதலொடு சினைக்கொற்றுமையுண்மையாற் பிறவினை கொண்டனவாகா, வினை முதல்வினை கொண்டனவேயா மென்ற வாறு. உதாரணம்: கையிற்று வீழ்ந்தான், கையிறூ வீழ்ந்தான், கையிறுபு வீழ்ந்தான் என வரும். ‘உரற்கால் யானை யொடித்துண் டெஞ்சிய’ என்புழிப் போலக் கையிற்றென்னுஞ் செய்தெனெச்சம் கையிறவெனச் செயவெனெச்சப் பொருட்டாய் நின்றதென வமையும், இச்சூத்திரம் வேண்டாவெனின், அற்றன்று; வினைமுதல்வினை கொள்ளாத வழியன்றே 60அது பிற பொருட் டாயது? வினைமுதல் வினை கொண்டு தன் பொருளே யுணர்த்துவதனைப் பிறபொருண்மே னின்ற தென்றல் பொருந்தாமையின், அது கடாவன் றென்க. (34) 232. ஏனை யெச்சம் வினைமுத லானு மான்வந் தியையும் வினைநிலை யானும் தாமியன் மருங்கின் முடியு மென்ப. இதன் பொருள் : முதனிலை மூன்றுமல்லாத பிற வினையெச்சம் வினைமுதல் வினையானும், ஆண்டு வந்து பொருந்தும் பிறவினை யானும், வரையறை யின்றித் தாமியலுமாற்றான் முடியும் என்றவாறு. உதாரணம்: மழை பெய்தெனப் புகழ் பெற்றது, மழை பெய்தென மரங்குழைத்தது எனவும்; மழை பெய்யிய ரெழுந்தது, மழை பெய்யியர் பலி கொடுத்தார் எனவும்; மழை பெய்யிய முழங்கும், மழைபெய்யிய வான் பழிச்சுதும் எனவும்; மழை பெய்யிற் புகழ்பெறும், மழை பெய்யிற் குளநிறையும் எனவும்; மழை பெய்தற்கு முழங்கும், மழை பெய்தற்குக் கடவுள் வாழ்த்துதும் எனவும்; இறந்த பின்னிளமை வாராது, கணவன் இனிதுண்டபின் காதலி முகமலர்ந்தது எனவும் அவை வினைமுதல் வினையும் பிறவினையும் கொண்டவாறு கண்டுகொள்க. அல்லனவும் இருவகை வினையுங் கோடல் வழக்கினுட் கண்டுகொள்க. வரையறையின்றி இருவகை வினையுங்கோடலின் ‘வினையுங் குறிப்பும், நினையத் தோன்றிய முடிபா கும்மே’ (சொல். 432) என்னும் பொதுவிதியான் முடிவனவற்றை ஈண்டுக் கூறல்வேண்டா வெனின், வினையெச்சங்களுள் ஒருசாரன வினைமுதல் வினை கொள்ளுமென்றதனான், ஏனை யெச்சம் பிறவினையே கொள்ளுமோ இருவகை வினையுங் கொள்ளுமோ என்றையமாம்; அதனான், ஐயநீங்க இவ்வாறு கூறல் வேண்டு மென்பது. அஃதேல், 61வினையொடு முடிதல் ஈண்டுக் கூறப்பட்ட மையின் எச்சவியலுள் ‘குறிப்பும் முடிபாகும்’ எனவமையும், வினையுமெனல் வேண்டா வெனின், குறிப்புமென்னு மும்மையாற் றழுவப்படுவது சேய்த்தாகலின் தெற்றென விளக்காமையானும், வினைமுதலென்பது பெயர்க்கும் வினைக் கும் பொதுவாகலானும், வினையுமெனல் வேண்டுமென்பது.(35) 233. பன்முறை யானும் வினையெஞ்சு கிளவி சொன்முறை முடியா தடுக்குந வரினு முன்னது முடிய முடியுமன் பொருளே. இதன் பொருள் : ஒரு வாய்பாட்டானும் மற்றைப் பல வாய் பாட்டானும் வினையெஞ்சுகிளவி அச்சொற்கண் முறையான் முடியாது அடுக்கிவரினும், முன்னின்றவெச்சம் முடிய ஏனையவும் பொருண் முடிந்தனவாம் என்றவாறு. உதாரணம்: உண்டு தின்றோடிப் பாடி வந்தான் எனவும், உண்டு பருகூத் தின்குபு வந்தான் எனவும் வரும். முன்னது முடிய முடியுமென்றாராயினும், உண்டு தின்று மழை பெய்யக் குளநிறையும் என்றவழி, முன்னதன் தொழிலான் ஏனைய முடியாமையின் பன்முறையான் அடுக்குங்கால் முன்னதன் றொழிலான் முடிதற் கேற்பனவே கொள்க. சொன்முறை முடியாமையாவது 62தம்மொடு தாமும் பிறசொல்லும் முடியாமை. உண்டு வந்தான்; தின்று வந்தான் எனச் சொற்றொறும் வினை யியைதன் மரபு. அங்ஙனம் நில்லாது தம்முளியைபில்லன அடுக்கி வந்து இறுதி வினையெச்சத்திற்கு முடிபாகிய சொல்லான் எல்லாம் முடியினும் இழுக்காதென அமைத்தவாறு. வினையெச்சம் பன்முறையானும் அடுக்கி ஒரு சொல்லான் முடியுமெனவே, பெயரெச்சம் ஒருமுறையானடுக்கி ஒரு சொல் லான் முடியுமென்பதாம். நெல்லரியு மிருந்தொழுவர்’ (புறம். 24) என்னும் புறத் தொகைப் பாட்டினுள் ‘தென்கடற் றிரைமிசைப் பாயுந்து’ எனவும், ‘தன்குரவைச் சீர் தூங்குந்து’ ‘எனவும், எல்வளை மகளிர் தலைக்கை தரூஉந்து’ எனவும், ‘முந்நீர்ப் பாயும்’ எனவும் செய்யுமென்னும் பெயரெச்ச மடுக்கி ‘ஓம்பா வீகை மாவே ளெவ்வி, புனலம் புதவின் மிழலை’ என்னும் ஒரு பொருள் கொண்டு முடிந்தவாறு கண்டு கொள்க. ஆங்குத் ‘தாங்கா வுறையு ணல்லூர் கெழீஇய’ என்னும் பெயரெச்சம் இடைநிலையாய் வந்தது. பிறவுமன்ன. (36) 234. நிலனும் பொருளுங் காலமுங் கருவியும் வினைமுதற் கிளவியும் வினையு முளப்பட வவ்வறு பொருட்குமோ ரன்ன வுரிமைய செய்யுஞ் செய்த வென்னுஞ் சொல்லே. வினையெச்சமுணர்த்தி, இனிப் பெயரெச்ச முணர்த்து கின்றார். இதன் பொருள் : செய்யும், செய்த என்னுஞ் சொற்கள், தொழின் முதனிலை யெட்டனுள் இன்னதற்கு இது பயனாக என்னும் இரண்டொழித்து ஏனை யாறுபொருட்கும் ஒத்த வுரிமைய என்றவாறு. இவற்றிற் கொத்தவுரிமைய வெனவே, 63ஒழிந்த விரண்டற் கும் இவற்றோடொப்ப வுரியவாகா, சிறுபான்மை யுரிய வென்ற வாறாம். உதாரணம்: வாழுமில், கற்குநூல், துயிலுங்காலம், வனையுங் கோல், ஓதும் பார்ப்பான், உண்ணுமூண் எனச் செய்யுமென்னும் பெயரெச்சத்து உம்மீறு காலவெழுத்துப் பெறாது ஆறு பொருட்கு முரித்தாய் வந்தவாறு. புக்கவில், உண்டசோறு, வந்த நாள், வென்ற வேல், ஆடிய கூத்தன், போயின போக்கு எனச் செய்தவென்னும் பெயரெச்சத்திறுதி அகரம் க - ட - த - ற - வும் யகர னகரமும் ஊர்ந்து அப்பொருட்குரித்தாய் வந்தவாறு. நோய் தீருமருந்து, நோய் தீர்ந்த மருந்து என்னு மேதுப் பொருண்மை, கருவிக்க ணடங்கும். அரசன் ஆ கொடுக்கும் பார்ப்பான், ஆ கொடுத்த பார்ப்பான் எனவும்; ஆடையொலிக்குங் கூலி, ஆடை யொலித்த கூலி எனவும் ஏனை யிரண்டற்குஞ் சிறு பான்மை யுரியவாய் வந்தவாறு. எல்லைப்பொருள் பஃறொழில்பற்றி வருஞ் சிறப்பின்றாக லிற் றொழின் முதலொடு கூறாது ‘இன்மை யுடைமை நாற்றந் தீர்தல்’ (சொல். 78) என்னும் பொருண்மையாற் றழீஇக் கொண்டாராகலின், பழமுதிருங்கோடு, பழமுதிர்ந்தகோடு எனச் சிறுபான்மை 64எல்லைப்பொருட் குரியவாதலுங் கொள்க. ‘நின்முகங் காணு மருந்தினே னென்னுமால்’ (குறிஞ்சிக்கலி. 24) என்புழிக் காட்சியை மருந்தென்றானாதலின், காணு மருந் தென்பது 65வினைப்பெயர் கொண்டதாம்; ‘பொச்சாவாக், கருவி யாற் போற்றிச் செயின்’ (குறள். 537) என்புழிப் பொச்சாவாக் கருவி யென்பதும் அது. ‘ஆறுசென்ற வியர்’ என்புழி வியர் ஆறுசேற லான் வந்த காரியமாகலின், செயப்படு பொருட்கணடங்கும். நூற்ற நூலா னியன்ற கலிங்கமும் ஒற்றுமை நயத்தான் நூற்ற கலிங்க மெனப்படும். ‘நூலாக் கலிங்கம் வாலரைக் கொளீஇ’ (பதிற்று. 12) எனப் பெய ரெச்சத்தி னெதிர்மறை பொருட்பெயர் கொண்டு நின்றதாம். பிறவுங் கூறப்பட்ட பொருட்க ணடங்குமாறறிந் தடக்கிக் கொள்க. உண்டான் சாத்தன், மெழுகிற்றுத் திண்ணை என்புழி உண்டான் மெழுகிற்று என்னு முற்றுச்சொல் வினை முதலுஞ் செய்யப்படு பொருளுமாகிய பொருட் குரியவாமாறு போல, இவ்விருவகைப் பெயரெச்சமும் நில முதலாகிய பொருட்குரிய வாமென அவற்றது அறு பொருட்கு முரிமை உணர்த்தியவாறு. முடிபு எச்சவியலுட் பெறப்படும். பொருளைக் கிளவி யென்றார். நிலமுதலாயினவற்றைப் பெயரெச்சப் பொருளென்னாது முடிக்குஞ் சொல்லெனின், அவ்வறுபொருட்கு மென்னாது அவ்வறு பெயர்க்கு மென் றோதுவார்; ஓதவே, ‘பெயரெஞ்சு கிளவி பெயரொடு முடிமே’ (சொல். 433) என்னுஞ் சூத்திரம் வேண்டா வாம்; அதனான் இவை பொருளென்றலே யுரை. அம் ஆமென்பன முதலாக அகரமீறாகக் கிடந்த இறுதி இடைச்சொற்குக் கூறப்பட்ட காலவெழுத்துச் சிறிய சிதைந்து வரினும், சிறுபான்மை பிறவெழுத்துப் பெறினும், நுண்ணுணர்வு டையோர் வழக்கு நோக்கி யுணர்ந்து கொள்க. (37) 235. அவற்றொடு வருவழிச் செய்யுமென் கிளவி முதற்கண் வரைந்த மூவீற்று முரித்தே. இதன் பொருள் : நில முதலாகிய பொருளொடு வருங்கால் செய்யு மென்னுஞ் சொல், விலக்கப்பட்ட பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை யென்னும் மூவகைக்கும் உரித்தாம் என்றவாறு. உரித்தாய் வருமாறு ‘எஞ்சிய கிளவி’ (சொல். 225) என்னுஞ் சூத்திரத்திற் காட்டினாம். 66அவற்றொடு வருவழியெனவே செய்யுமென்னுஞ் சொல் அப் பொருண்மைக் குரித்தாயும் உரித்தன்றியும் வரும் இருநிலை மையும் உடைத்தென்பது பெறுதும். அவற்றொடு வரு நிலைமை பெய ரெஞ்சு கிளவியாம்; அவற்றொடு வாரா நிலைமை முற்றுச் சொல்லாம். அஃதேல், அது முற்றுச்சொல்லாதற்கண்ணும் பெய ரெஞ்சு கிளவியாதற்கண்ணும் வேற்றுமை யென்னையெனின், ஏனை முற்றிற்கும் ஏனை யெச்சத்திற்கும் வேற்றுமையாவதே ஈண்டும் வேற்றுமையா மென்க. முற்றுச் சொல்லிற்கும் எச்சத்திற்கும் வேற்றுமை யாதெனின், பிறிதொரு சொல்லோடி யையாது தாமே தொடராதற்கேற்கும் வினைச்சொல் முற்றாம்; பிறிதொரு சொற் பற்றியல்லது நிற்றலாற்றா வினைச்சொல் எச்சமாம். இது தம்முள் வேற்றுமையென்க. அஃதேல், உண்டா னென்பது சாத்தனென்னும் பெயர் அவாவி யன்றே நிற்பது? தாமே தொடராமென்றது என்னை யெனின், அற்றன்று; உண்டான் சாத்தன் என்றவழி, எத்தை யென்னும் அவாய்நிலைக் கண் சோற்றை யென்பது வந்தியைந்தாற் போல, உண்டான் என்றவழி யாரென்னும் அவாய்நிலைக்கண் சாத்தனென்பது வந்தியைவ தல்லது, அப்பெயர்பற்றியல்லது நிற்ற லாற்றா நிலைமைத்தன்று அச்சொல்லென்பது. இவ்வேற்றுமை விளங்க ஆசிரியர் முற்றுச் சொல்லென்றும், எச்சமென்றும், அவற்றிற்குப் பெயர் கொடுத்தார். (38) 236. பெயரெஞ்சு கிளவியும் வினையெஞ்சு கிளவியு மெதிர்மறுத்து மொழியினும் பொருணிலை திரியா. இதன் பொருள் : பெயரெச்சமும் வினையெச்சமும், செய்தற் பொருள வன்றி அச்செய்தற்பொருண்மை எதிர்மறுத்துச் சொல்லினும், அவ் வெச்சப் பொருண்மையிற் றிரியா என்றவாறு. பொருணிலையாவது - தம்மெச்சமாகிய பெயரையும் வினை யையுங் கொண்டல்லது அமையாத நிலைமை. என் சொல்லிய வாறோவெனின், செய்யும் செய்த எனவும், செய்து செய்யூ செய்பு எனவும் பெயரெச்சமும் வினையெச்சமும் விதிவாய்பாட்டா னோதப்பட்டமையான், ஆண்டுச் செய்யா, செய்யாது என்னும் எதிர்மறை வாய்பாடு அடங்காமையின், அவை எச்சமாதல் பெறப் பட்டின்று. அதனான், அவையும் அவ்வெச்சப் பொருண்மையிற் றிரியாது பெயரும் வினையுங் கொள்ளுமென எய்தாத தெய்து வித்தவாறு. உதாரணம்: உண்ணா வில்லம், உண்ணாச் சோறு, உண்ணாக் காலம், வனையாக் கோல், ஓதாப் பார்ப்பான், உண்ணா வூண் எனவும்; உண்ணாது வந்தான், உண்ணாமைக்குப் போயினான் எனவும் வரும். உண்ணா என்பது உண்ணும், உண்ட என்னுமிரண்டற்கும் எதிர்மறையாம். உண்ணாத என்பதுமது. உண்ணாது என்பது உண்டு, உண்ணூ, உண்குபு என்பனவற்றிற் கெதிர்மறை. உண்ணா மைக்கு என்பது உண்ணியர், உண்ணிய, உணற்கு என்பன வற்றிற்கும் உண்ண எனச் செயற்கென்பதுபட வரும் செயவெ னெச்சத்திற்கும் எதிர்மறையாம். உண்ணாமை, உண்ணா மல் என்பனவும் அதற்கு எதிர்மறையாம். பிறவும் எதிர்மறை வாய்பா டுளவேற் கொள்க. உண்டிலன், உண்ணாநின்றிலன், உண்ணலன், உண்ணான் என முற்றுச்சொல்லும் எதிர்மறுத்து நிற்குமாகலின், பொருணிலை திரியாதென அதற்கோதாராயிற் றென்னை யெனின், விதி வினைக்கும் எதிர்மறை வினைக்கும் பொதுவாக ஈறுபற்றி ஓதிய தல்லது 67விதிப்பொருளவாகிய வாய்பாடுபற்றி ஓதாமையின், ஆண்டுக் கட்டுரையில்லை யென்க. (39) 237. தத்த மெச்சமொடு சிவணுங் குறிப்பி னெச்சொல் லாயினு மிடைநிலை வரையார். இதன் பொருள் : தத்தமெச்சமாகிய வினையொடும் பெயரோடும் இயையுங் குறிப்பையுடைய எச்சொல்லாயினும், இவ்வெச்சத் திற்கும் அவற்றான் முடிவனவாகிய தமக்கும் இடைநிற்றல் வரையார் என்றவாறு. உதாரணம்: உழுது சாத்தன் வந்தான், உழுதேரொடு வந்தான் எனவும்; கொல்லுங் காட்டுள் யானை, கொன்ற காட்டுள் யானை எனவும் வரும். சிவணுங் குறிப்பின வரையாரெனவே, சிவணாக் குறிப்பின வரைப வென்பதாம். சிவணாக்குறிப்பினவாவன - ஒருதலையாக எச்சத்தோ டியைந்து நில்லாது நின்ற சொல்லொடுந் தாமே யியைந்து கவர்பொருட் படுவன. உண்டு விருந்தொடு வந்தான்; ‘வல்லமெறிந்த நல்லிளங் கோசர் தந்தை மல்லல் யானைப் பெருவழுதி’ என்றவழி, விருந்தொடுண்டென வினையெச்சத் தோடு மியைதலிற் பொருள் கவர்க்கும்; வல்லமெறிதல் நல்லிளங் கோசர்க்கும் ஏற்குமாகலின் ஆண்டும் பொருள் கவர்க்கும். அன்ன சிவணாக் குறிப்பினவாம். எச்சொல்லாயினு மென்றதனான், உழுதோடிவந்தான், கவளங் கொள்ளாக் களித்த யானை (சீவக. 1076) என எச்சமும் 68இடைநிலையாதல் கொள்க. சாத்தன் உண்டு வந்தான், அறத்தை யரசன் விரும்பினான், உண்டான் வந்த சாத்தன் என ஏனைத் தொடர்க்கண்ணும் பிற சொல் இடை நிற்ற லொக்கு மாயினும், எச்சத்தொடர்க்கு இடை நிற்பனவற்றின்கண் ஆராய்ச்சி யுடைமையாற் கூறினார். (40) 238. அவற்றுள் செய்யு மென்னும் பெயரெஞ்சு கிளவிக்கு மெய்யொடுங் கெடுமே யீற்றுமிசை யுகர மவ்விட னறித லென்மனார் புலவர். இதன் பொருள் : மேற்சொல்லப்பட்ட எச்சங்களுட் செய்யு மென்னும் பெய ரெச்சத்திற்கு ஈற்றுமிசை நின்ற உகரந் தன்னா னூரப் பட்ட மெய்யொடுங் கெடுமிட மறிக என்றவாறு. கெடுமிடனறிக வென்றது - அவ்வீற்றுமிசையுகரம் யாண்டுங் கெடாது; வரையறுக்கவும்படாது; சான்றோர் வழக்கி னுள்ளும் செய்யுளுள்ளும் வந்தவழிக் கண்டுகொள்க வென்ற வாறு. உதாரணம்: வாவும்புரவி, போகும்புழை என்பன ஈற்றுமிசையுகரம் மெய்யொடுங்கெட, வாம்புரவி, போம்புழை என நின்றன. பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க. செய்யுமென்னும் பெயரெஞ்சு கிளவிக்கு ஈற்றுமிசையுகரம் மெய்யொடுங் கெடு மெனவே, செய்யுமென்னு முற்றுச் சொற்கு ஈற்றுமிசை யுகரம் மெய்யொடுங் கெடும், மெய்யொழித்துங் கெடுமென்பதாம். உதாரணம்: ‘அம்ப லூரு மவனொடு மொழிமே’ (குறுந். 51), ‘சார னாட வென் றோழியுங் கலுழ்மே’ என வரும். பிறவுமன்ன. (41) 239. செய்தெ னெச்சத் திறந்த காலம் எய்திட னுடைத்தே வாராக் காலம். இதன் பொருள் : செய்தென்னும் வினையெச்சத்தினது இறந்தகாலம் வாராக் காலத்தை எய்துமிடமுடைத்து என்றவாறு. ஈண்டுச் செய்தெனெச்சத் திறந்தகால மென்றது - 69முடிபாய் வரும் வினைச்சொல்லா னுணர்த்தப்படுந் தொழிற்கு அவ் வெச்சத் தானுணர்த்தப்படுந் தொழில் முன்நிகழ்தலை. அது வாராக்கால மெய்துதலாவது அம் முன்னிகழ்வு சிதையாமல் அவ்வெச்சம் எதிர்காலத்து வருதல். உதாரணம்: நீயுண்டு வருவாய், உழுது வருவாய் எனச் செய்தெ னெச்சம் பொருள் சிதையாமல் எதிர்காலத்து வந்தவாறு கண்டு கொள்க. ‘எய்திட னுடைத்தே வாராக் காலம்’ என்றதனான், உண்டு வந்தான், உழுது வந்தான் என அவ்வெச்சம் இறந்தகாலத்து வருதல் இலக்கண மென்பதாம். இறந்தகாலத்துச்சொல் எதிர்காலத்து வந்ததாயினும் அமைக எனக் காலவழு வமைத்தவாறு. (42) 240. முந்நிலைக் காலமுந் தோன்று மியற்கை எம்முறைச் சொல்லு நிகழுங் காலத்து மெய்ந்நிலைப் பொதுச்சொற் கிளத்தல் வேண்டும். இதன் பொருள் : மூன்றுகாலத்தும் உளதாம் இயல்பையுடைய எல்லாப் பொருளையும் நிகழ்காலத்துப் பொருணிலைமை யுடைய செய்யு மென்னுஞ் சொல்லாற் கிளக்க என்றவாறு. முந்நிலைக் காலமுந் தோன்று மியற்கை யெம்முறைப் பொருளுமாவன, மலையது நிலையும் ஞாயிறுதிங்கள தியக்கமு முதலாயின. அவற்றை இறந்தகாலச்சொல்லானும், எதிர்காலச் சொல் லானும், ஏனை நிகழ்காலச் சொல்லானும் சொல்லாது, இறந்த காலத்தையும் எதிர் காலத்தையும் அகப்படுத்து மூன்று காலத்திற்கும் பொதுவாய் நிற்குஞ் செய்யுமென்னுஞ் சொல்லாற் சொல்லுக என்றவாறு. பொதுச்சொற் கிளத்தல்வேண்டு மெனவே, முற்றானும் பெய ரெச்சத்தானுங் கிளக்க வென்பதாம். உதாரணம்: மலைநிற்கும், ஞாயிறியங்கும், திங்களியங்கும் எனவும்; ‘வெங்கதிர்க் கனலியொடு மதிவலந் திரிதருந், தண்கடல் வையத்து’ (பெரும்பா. 17) எனவும் வரும். நிகழ்காலச் சொல்லாயினும் 70ஒருகாற் பொதுவாகலுடை மையாற் ‘பொதுச்சொல்’ என்றார். நிகழ்காலச்சொல், இறந்தகாலமும் எதிர்காலமு முணர்த்துதல் வழுவாயினும் அமைகவென அமைத்தவாறு. (43) 241. வாராக் காலத்து நிகழுங் காலத்து மோராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி யிறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் விரைந்த பொருள வென்மனார் புலவர். இதன் பொருள் : எதிர்காலத்தும் நிகழ்காலத்தும் ஒருபடியாக வரும் வினைச்சொற்பொருண்மை இறந்தகாலத்தாற் சொல்லுதல் விரைவு பொருளையுடைய என்றவாறு. சோறு 71பாணித்தவழி, உண்ணாதிருந்தானைப் போகல் வேண்டுங் குறையுடையானொருவன் ‘இன்னு முண்டிலையோ’ என்றவழி, ‘உண்டேன் போந்தேன்’ என்னும்: உண்ணாநின்றானும் உண்டேன் போந்தேன் என்னும். ஆண்டு எதிர்காலத்திற்கும் நிகழ் காலத்திற்கும் உரிய பொருளை விரைவு பற்றி இறந்தகாலத்தாற் கூறியவாறு கண்டுகொள்க. தொழில் இறந்தனவல்லவேனும், சொல்லுவான் கருத்து வகையான் இறந்தனவாகச் சொல்லப்படுதலின், ‘குறிப்பொடு கிளத்தல்’ என்றார். எதிர்காலத்துப் பொருண்மையைக் கிளத்தலும், நிகழ் காலத்துப் பொருண்மையைக் கிளத்தலும் என இரண்டாகலான், ‘விரைந்த பொருள’ என்றார். இதுவும் காலவழுவமைதி (44) 242. மிக்கதன் மருங்கின் வினைச்சொற் சுட்டி யப்பண்பு குறித்த வினைமுதற் கிளவி செய்வ தில்வழி நிகழுங் காலத்து மெய்பெறத் தோன்றும் பொருட்டா கும்மே. இதன் பொருள்: 72மிக்கதன்கண் நிகழும் வினைச் சொல்லை நோக்கித் திரிபின்றிப் பயக்கும் அம் மிக்க தனது பண்பைக் குறித்துவரும் வினைமுதற் சொல், சுட்டிச் சொல்லப் படுவதொரு வினை முதலில்லாதவிடத்து, நிகழ்காலத்தான் யாப்புறுத்த பொருளை யுடைத்தாம் என்றவாறு. முயற்சியும் தெய்வமுமாகிய காரணங்களுள் தெய்வஞ் சிறந்தமையான், அதற்குக் காரணமாகிய தவஞ்செய்தல் தாயைக் கோறன் முதலாகிய தொழிலை ‘மிக்கது’ என்றார். தெய்வமாய இருவினை மிக்கதன்கண் வினைச் சொல்லாவன, தவஞ்செய்தான், தாயைக் கொன்றான் என்னுந் தொடக்கத்தன, அப் பண்பு குறித்த வினைமுதற்கிளவியாவன, சுவர்க்கம் புகும்; நிரயம் புகும் என்பன. யாவன் தவஞ்செய்தான் அவன் சுவர்க்கம் புகும், யாவன் தாயைக் கொன்றான் அவன் நிரயம் புகும் எனவும்; ஒருவன் தவஞ்செய்யிற் சுவர்க்கம் புகும், தாயைக் கொல்லின் நிரயம் புகும் எனவும், மிக்கதன் வினைச்சொல்நோக்கி அம்மிக்கதன் றிரிபில் பண்பு குறித்த வினைமுதற் கிளவி நிகழ்காலத்தான் வந்தவாறு கண்டு கொள்க. அப் பண்பு குறித்தவென்பதற்கு மிக்கதாகிய இருவினைப் பயனுறுதல் அவ்வினைமுதற் கியல்பென்பது குறித்தவென்று உரைப்பினுமமையும். பொதுவகையாகக் கூறாது ஒருவற் சுட்டியவழி, அவன் தவஞ் செய்து சுவர்க்கம் புக்கான், புகுவன் என ஏனைக்காலத்தாற் சொல்லப் படுதலின், அவ்வாறு ஒருவற் சுட்டுதலை நீக்குதற்கு, வினைமுதற்கிளவி யாயினுஞ் 73செய்வ தில்வழி யென்றார். செய்வ தென்றது செய்கையை யென்பாரு முளர். வினைச்சொலென்றாரேனும், தவஞ்செய்தான் சுவர்க்கம் புகும். தாயைக் கொன்றான் நிரயம் புகும் என வினைப்பெயராய் வருதலுங் கொள்க. தவஞ்செய்யிற் சுவர்க்கம் புகுவன் என எதிர்காலத்தாற் சொல்லப் படுவதனை நிகழ்காலத்தாற் சொல்லுதல் வழுவா யினும் அமைகவென வழு வமைத்தவாறு. அஃதேல், ‘இயற்கையுந் தெளிவுங் கிளக்குங் காலை’ (சொல். 245) என்புழி இது தெளிவாயடங்குமெனின், அற்றன்று. இயற்கை யுந் தெளிவும் சிறந்த காரணமாகிய தெய்வத்தானாக பிறிதொன் றானாக திரிதலுமுடைய; இது திரிபின்றாகலானும், இறந்த காலத்தாற் சொல்லப்படாமையானும், ஆண்டடங்கா தென்பது. இதனது திரிபின்மையும் அவற்றது திரிபுடைமையும் விளக்குதற்கன்றே, ஆசிரியர் ‘மிக்கதன் மருங்கின்’ என்றும், ‘இயற்கையுந் தெளிவுங் கிளக்கும் காலை’ என்றும் ஓதுவாராயிற் றென்பது. (45) 243. இதுசெயல் வேண்டு மென்னுங் கிளவி யிருவயி னிலையும் பொருட்டா கும்மே தன்பா லானும் பிறன்பா லானும். இதன் பொருள் : இது 74செயல்வேண்டு மென்பதுபட வருஞ்சொல், தன் பாலானும் பிறன்பாலானுமென ஈரிடத்தும் நிலைபெறும் பொருண் மையை யுடைத்தாம் என்றவாறு. தானென்றது - செயலது வினைமுதலை. ஓதல்வேண்டும் என்றவழி வேண்டுமென்பது ஓதற்கு வினைமுதலா யினாற்கும் அவனோதலை விரும்புந் தந்தைக்கும் ஏற்றவாறு கண்டு கொள்க. இதனான் ஒருசார்வினைச்சொல் பொருள்படும் வேறுபாடு உணர்த்தினார், உணர்த்தாக்காற் தெற்றென விளங்காமையி னென்பது. (46) 244. வன்புற வரூஉம் வினாவுடை வினைச்சொ லெதிர்மறுத் துணர்த்துதற் குரிமையும் உடைத்தே. இதன் பொருள் : துணிந்து 75திட்பமெய்துதற்கு வரும் வினாவை யுடைய வினைச்சொல் வினைநிகழ்வுணர்த்தாது எதிர்மறுத்து ணர்த்துதற்கு உரித்தாதலு முடைத்து என்றவாறு. வினாவாவன - ஆ, ஏ, ஓ, என்பன. கதத்தானாக களியானாக ஒருவன் தெருளாது ஒருவனை வைதான்; அவன்றெருண்டக்கால், வையப்பட்டான் ‘நீ யென்னை வைதாய்’ என்ற வழித் தான் வைதவை யுணராமையான் ‘வைதேனே’ யென்னும்; ஆண்டவ் வினாவொடு வந்த வினைச் சொல் வைதிலே னென்னும் எதிர்மறைப் பொருள்பட வந்தவாறு கண்டுகொள்க. வினாவொடு வந்தவழி எதிர்மறைப் பொருள் படுமா றென்னையெனின், சொல்லுவான் குறிப்பு வகையான் எதிர்மறைப் பொருளுணர்த்திற் றென்க. எதிர்மறைப் பொருளு ணர்த்திற்று ஆண்டு ஏகாரமாகலின், வினைச்சொல் எதிர்மறுத் துணர்த்துதற் குரிமையு முடைத்தென்றல் நிரம்பா தெனின், எதிர்மறையாயின பயன்றருவது வினாவுடை வினைச்சொ லென்றாராகலின், அஃதெதிர் மறுத்தல் யாண்டையதென மறுக்க. வினைநிகழ்வு உணர்த்தற்பாலது வினையது நிகழாமை யுணர்த்துதல் வழுவாயினும் அமைகவென வினைச்சொற்பற்றி மரபுவழுவமைத்தவாறு. (47) 245. வாராக் காலத்து வினைச்சொற் கிளவி யிறப்பினு நிகழ்வினுஞ் சிறப்பத் தோன்று மியற்கையுந் தெளிவுங் கிளக்குங் காலை. இதன் பொருள்: எதிர்காலத்துக்குரிய வினைச்சொற் பொருண்மை இயற்கை யாதலும் தெளியப்படுதலும் சொல்லுமிடத்து, இறந்த காலச் சொல்லானும் நிகழ்காலச் சொல்லானும் விளங்கத் தோன்றும் என்றவாறு. இயற்கையென்பது - 76பெற்றி முதலாயினவற்றாலுணரப் படுவது; தெளிவு - நூற்றெளிவான் வருவது. ஒருகாட்டின்கட் போவார் கூறைகோட்படுதல் ஒருதலை யாகக் கண்டு இஃதியற்கையென்று துணிந்தான், கூறைகோட்படா முன்னும், இக்காட்டுட் போகிற் கூறைகோட்பட்டான், கூறை கோட் படும் என்னும். எறும்பு முட்டை கொண்டு தெற்றியேறின் மழை பெய்தல் நூலாற் றெளிந்தான், அவை முட்டைகொண்டு தெற்றியே றியவழி, மழை பெய்யா முன்னும், மழை பெய்தது, மழை பெய்யும் என்னும். ஆண்டு எதிர்காலத்திற்குரிய பொருள் இறந்த காலத் தானும் நிகழ்காலத்தானும் தோன்றியவாறு கண்டுகொள்க. இது காலவழு வமைத்தவாறு. (48) 246. செயப்படு பொருளைச் செய்தது போலத் தொழிற்படக் கிளத்தலும் வழக்கியன் மரபே. இதன் பொருள் : செயப்படுபொருளைச் செய்த வினைமுதல் போலத் தொழிற்படச் சொல்லுதலும் வழக்கின்கண் இயலு மரபு என்றவாறு. வழக்கியன் மரபெனவே, இலக்கண மன்றென் றவாறாம். உதாரணம்: திண்ணை மெழுகிற்று, கலங் கழீஇயிற்று என வரும். 77திண்ணை மெழுகப்பட்டது, கலங் கழுவப்பட்டது என்றுமன் ஆகற்பாலது, அவ் வாய்பாடன்றி வினைமுதல் வாய் பாட்டான் வருதலும் வழக்கினுள் உண்மையான் அமைகவென வினைச்சொற் பற்றி மரபுவழு வமைத்தவாறு. செயப்படுபொருளை வினைமுதல் வாய்பாட்டாற் கிளத்தலேயன்றி, எளிதினடப்படுதனோக்கி அரிசிதானேயட்டது எனச் செயப்படு பொருளை வினைமுதலின் றொழிற்படக் கிளத்தலும் வழக்கியன் மரபென் றற்கு, ‘தொழிற்படக் கிளத்தலும்’ என்றார். இதனைக் கரும கருத்த னென்ப. (49) 247. இறப்பே யெதிர்வே யாயிரு காலமுஞ் சிறப்பத் தோன்று மயங்குமொழிக் கிளவி. இதன் பொருள் : இறப்பும் எதிர்வுமாகிய இரண்டுகாலமும் மயங்கு மொழிப் பொருளாய் விளங்கத் தோன்றும் என்றவாறு. உதாரணம்: இவர் பண்டு இப்பொழிலகத்து விளையாடுவர்; நாளை அவன் வாளொடு வெகுண்டு வந்தான், பின் நீ யென் செய்குவை என வரும். அவ்விரண்டு காலமும் மயங்குமொழிப் பொருளாய்த் தோன்று மெனவே, அவற்றை யுணர்த்துஞ்சொன் மயங்குமென்ற வாறாம். அவை பெயரும் வினையுமாய் மயங்குதலின், மயங்கு வினைச்சொற் கிளவி யென்னாது பொதுப்பட ‘மயங்குமொழிக் கிளவி’ என்றார். 78தோன்றுமென்பது பெயரெச்சமெனினு மிழுக்காது. பண்டு விளையாடினார் என்றும், நாளை வருவன் என்று மன்றே கூறற்பாலது? அவ்வாறன்றித் தம்முண் மயங்கக் கூறினும் அமைகவெனக் காலவழு வமைத்தவாறு. (50) 248. ஏனைக் காலமும் மயங்குதல் வரையார். இதன் பொருள் : இறப்பும் எதிர்வுமேயன்றி நிகழ்காலமும் அவற்றொடு மயங்கும் என்றவாறு. உதாரணம்: இவள் பண்டு இப்பொழிலகத்து விளையாடும் எனவும் நாளை வரும் எனவும் வரும். சிறப்பத்தோன்று மெனவும், மயங்குதல் வரையா ரெனவும் கூறினார்; இறப்பும் எதிர்வும் மயங்குதல் பயின்று வருதலானும், அத்துணை நிகழ்கால மயக்கம் பயின்று வாராமையானு மென்க. மூன்றுகாலமுந் தம்முண் மயங்குமென்றாரேனும், ஏற்புழி யல்லது மயங்காமை கொள்க. ஏற்புழிக் கொள்ளவே, வந்தானை வருமென்றலும் வருவானை வந்தானென்றலுமென இவை முதலாயினவெல்லாம் வழுவென்பதாம். பிறவுமன்ன. (51) ஆறாவது - வினையியல் முற்றிற்று. கணேசையர் அடிக்குறிப்புகள்: 1. தொழினிலையொட்டுந் தொழிற்பெயரென்றது வினையாலணையும் பெயரை. ஒட்டும் - ஒக்கும் (வேற் - 6ஆம் சூத்திர நோக்குக.) தொழிற் பெயரும் என்பதிலுள்ள உம்மை எச்சமன்றி எண்ணன்று. வெளிப்பட விளக்காதன - குறிப்பு வினை. 2. உணர்த்தப்படும் வினைச்சொற்கெல்லாம் பொதுவிலக்கணம் என்றது - உயர்திணைவினையும் அஃறிணைவினையும் பொதுவினையும் என்று பகுத்து உணர்த்தப்படும் வினைச்சொற்கெல்லாம் பொது விலக்கணமென்றவாறு. பொதுவினைகள் திணைபான் முதலிய வுணர்த்தாவாயினும் காலமுணர்த்தலும். வேற்றுமை கொள்ளாமையு மாகிய இப் பொதுவிலக்கணத்துள் அடங்குமாதலின் பொது இலக்கண மென்றார். வினைச்சொற்களின் வகையாகிய உயர்திணை வினைச் சொற்கும் அஃறிணை வினைச்சொற்கும் பொதுவினைச் சொற்கும் உரிய இலக்கணங்களைப் பின் தனித்தனி உணர்த்தலின் அவை அவற் றிற்குச் சிறப்பிலக்கணங்கள் எனப்படும். மூவகை வினைச்சொற்கும் பொது என்பதே கருத்தாதல் 4ஆம் சூத்திரத்துப் பொதுவகையாற் கூறிய வினைச்சொல்லைச் சிறப்புவகையானுணர்த்திய வெடுத்துக் கொண்டார் எனச் சேனாவரையர் கூறுமாற்றானறியப்படும். 3. கட்டுரைச் சுவையென்றது - செய்யுளாக யாக்கப்பட்ட வாக்கியச் சுவையை. 4. பல்தொழிற் றொகுதியை ஒரு தொழிலாகக் கோடலின் என்றது - உண்கின்றான் என்புழி உண்ணுதலாகிய தொழில் பலதரம் நிகழ்தலின் கழிவதும் எதிர்வதுமாய் நிகழும் அத்தொழிற் றொகுதியை உண்ணுத லாகிய ஒரு தொழிலாகவே கொள்ளுதலின் என்றபடி. உண்ணுந் தொழி லென்றது - வாயை அசைத்து உண்ணுதலை. உண்ணலாகிய ஒரு தொழிலே அத்தொழிலின் தொடக்கம் முதல் முடிவு வரையும் நிகழ்வதா கலின் நிகழ்காலமுங் கொள்ளப்படுமென்பது கருத்து. ஏனையவு மன்ன. 5. வினையினுங் குறிப்பினும் எனத் தெரிநிலைவினையை முற்கூறாது குறிப்பை முற்கூறியதற்குக் காரணம் முதற்சூத்திரத்துக் குறிப்பொடும் எனக் குறிப்பு இயைபுபட்டு நிற்றலான் என்றபடி. சிறப்புவகை யென்றது - உயர்திணை வினை. அஃறிணைவினை, பொதுவினை எனப் பகுத்து வைத்து உணர்த்தலை. 6. முன் ஈறுபற்றி உணர்த்தப்படும் வினைச்சொற்களை, இஃது இறந்த காலத்திற்கு உரித்து; இஃது நிகழ்காலத்திற்குரித்து; இஃது எதிர்காலத்திற் குரித்து என வழக்குநோக்கி உணர்ந்து கொள்க என்பது விளக்கிய `காலமொடு வரூஉம்' என்றார் என்று சேனாவரையர் கூறியது அவசியமா? என்று சிலர் வினா நிகழ்த்துவர். வரையறுத்தவற்றைப் பின்னும் வரையறுத்தற்குப் பயன் பிறிதொன்று பெறுதலேயாமெனச் சேனாவரையர் (விளி-7ஆம் சூ) கூறுவதை நோக்கின், இஃதும் அவசிய மென்பது பெறப்படும். பெற்றதன் பெயர்த்துரை நியமப் பொருட்டு என்பது கொண்டு நச்சினார்க்கினியர் வலியுறுத்தற்குக் கூறினாரென்று கொள்வது பொருந்தாது. என்னை? 1ஆம் சூத்திரத்தில் `காலமொடு தோன்றும்' என்று கூறிய பின்னும் 3ஆம் சூத்திரத்தில் குறிப்பிற்குக் காலம் உண்டென்று கூறலே வரையறத்தற்பயனைக் காட்டும். அதன் மேலும் கூறியதற்குப் பயன் பிறிதொன்று பெறுதலே எனக் கூறியதே பொருத்த மாகுமாதலின். 7. ஈற்றுமிசை நிற்கு மெழுத்து வேறுபாடென்றது - விகுதிக்குமேல் நிற்கும் எழுத்துக்களின் வேறுபாட்டை. அவையே காலங் காட்டுவன. நன்னூலார் போல இவர் காலங்காட்டுமெழுத்துகளை இடைநிலை என்று வழங்காது, விகுதிமேல் நிற்கும் எழுத்துக்களென்று வழங்குவர். 8. பன்மைத் தன்மையை உளப்பாட்டுத் தன்மை யென்றும் ஒருமைத் தன்மையை தனித்தன்மை யென்றும் உரைப்பினுமமையும். 9. தன்மை யென்பது ஒருவனாகிய தன்னையே உணர்த்தலின் ஒருவ னாகிய தனக்கு ஒருமை அல்லது இல்லாமையின் என்றார். எனவே தன்மைப் பன்மையெல்லாம் உளப்பாடென்பது கருத்து. ஏனைய எழுத் தென்றது மேல் உதாரணத்துக் காட்டிய, க, ட, த, ற, அல்லாதவற்றை. உண்ணாநின்றனம், உண்ணாகிடந்தனம், உண்ணா இருந்தனம் என்பவற்றை நன்னூலுரைகாரர் ஆநின்று, ஆகிடந்து, ஆவிருந்து எனப் பிரிப்பர். சேனாவரையர் ஆவைச் சாரியை என்று கருதினர் போலும். 10. இடைச்சொற்கு உறுப்பெழுத் தென்றது - உம்மூர்ந்த ட, த, ற என்னு மெழுத்துக்களை. அவை டும், தும், றும் என்னும் விகுதி இடைச் சொற்களுக்கு உறுப்பாய் நிற்றலின் அவ்வாறு கூறப்பட்டன. டும், தும், றும் என்னும் இவற்றுள் டும் இறந்தகாலமும், ஏனைய இறந்த காலமும் எதிர்காலமும் உணர்த்துமென்பது நன்னூலார் கருத்து. பதவியல் 18ஆம் சூத்திரம் நோக்குக. நச்சினார்க்கினியர் க - ட - த -றக்கள் முதனிலையை யடுத்து வருங்கால் இறப்பும் ஈற்றினை அடுத்து வருங்கால் எதிர்வும் உணர்த்தும் என்றது கருதத்தக்கது. நக்கனம் உண்டனம் என்பன போல முதனிலையை அடுத்து வருங்கால் இறப்பும், உண்கும். உண்டும் என ஈற்றினை அடுத்து வருங்கால் எதிர்வும் உணர்த்தும் என்றது அதன் கருத்து. பாடுகம், செல்கம் என்புழிக் ககர ஒற்று எதிர்காலங் காட்டிற்று. 11. குற்றுகரமென்றது - குகரம் முதலிய நான்கீற்றையும். கால எழுத் தென்றது - கால எழுத்தோடு பெறுஞ் சாரியையை. என் ஈறு எம் மீற்றையும் ஏன் ஈறு ஏமீற்றையும் ஒக்கும் என்றது 5ஆம் சூத்திர உரையுட் கூறியவாறு இறந்த காலத்து வருங்கால், க, ட, த, ற முன் அன் பெற்றும் பெறாதும் வருதலையும். ஏனை எழுத்தின் முன் இன் பெற்று வருதலையும் ஏனைய காலத்தும் அச் சூத்திர உரையுட் கூறியவாறே பெறுதலையும். ஆண்டு கூறிய விகற்பமென்றது அச்சூத்திரத்துக் கூறியபடி கால எழுத்துப்பெறும் வேறுபாடுகளை. வழக்குப் பயிற்சியு மில்லா என்பதிலுள்ள உம்மை செய்யுட் பயிற்சியுமில்லா என்பதைக் காட்டுதலின் இரண்டினும் அருகி வரும் என்பது கருத்து. உம்மீற் றோடு இயைய வைத்ததென்றது - முதற்சூத்திரத்துக் கூறிய கும் முதலிய ஈறுகளோடு இயைய இச் சூத்திரத்து முன் வைத்தமையை. 12. இருசார் அணவுமென்றது - வினையொடு முடியினு முற்றாகும் செய்கென் கிளவியையும் வினையொடு முடியினு முற்றாகாத ஏனையவற்றையும். 13. செய்தெனெச்சமாய்த் திரிந்ததெனற் கேலாமைக்குக் காரணம் - எதிர்காலங் காட்டல் பெயர்த்தனென் என்பது முதலியன இறந்த காலங் காட்டலின் செய்தெனெச்சமாய்த் திரிதற் கேற்புடையவாம் என்றபடி. ஏனையவும் அன்ன. 14. முற்றுச்சொற்கும் என்பதற்கு முற்றுச்சொல்லாகிய கும் எனப் பொருள் கொள்க. பெயரொடு முடியுமென விதித்த விதியை இதனான் விலக்கி வினையொடும் முடியும் என்றபடி. 15. காலத்திற்கு ஏற்ற எழுத்துப் பெறுங்கால் அன்னும், அள்ளும் அம் ஈற்றோடும், ஆனும், ஆளும், ஆம் ஈற்றொடு ஒத்தலை 5ஆம் சூத்திரம் நோக்கி உணர்ந்து கொள்க. 16. பாடன்மார் காணன்மார் என்பன பாடாதொழிவாராக காணாதொழி வாராக என வியங்கோளாக வரும் என்பதும், அவற்றிற்கு உடன் பாடாகிய பாடுவார் காணுவார் என்பனவும் பாடுவாராக காணுவாராக என வியங்கோளாக வருமென்பதும் சேனாவரையர் கருத்தென்பது மாரீறாயின் அவை ஏவற் பொருண்மை உணர்த்துமாறில்லை என்பதனா னுணரக்கிடக்கின்றது. இக்கருத்தினை நச்சினார்க்கினியர் உரைநோக்கியுந் தெளிந்து கொள்க. மார் ஈற்றைப்பற்றி, இலக்கண விளக்க நூலார் கூறியதாவது:- இனி, வினையொடுமுடியுமென்ற மாரீற்றுச்சொல்லை, "பீடின்றுபெருகிய திருவிற் - பாடின் மன்னரைப் பாடன்மா ரெமரே", "படரட வருந்திய - நோய்மலி வருத்தங் காணன்மா ரெமரே" எனப் பெயரோடு முடிந்ததா லெனின், இவை பாடுக காண்க என்னும் வியங்கோட்கு எதிர் மறையாய்ப் பாடாதொழிக. காணாதொழிக என ஏவற்பொருளவாய் நின்றன மார் ஈறு அல்லவென்க. அல்லதூஉம் பாடுவார், காண்பார் என்பன சில வியங்கோள் முற்றெனக்கொண்டு அவற்றிற்கு எதிர்மறையாய்ப் பாடாதொழிவார், காணாதொழிவார் என ஏவற் பொருளவாய் நின்றன என்றலுமொன்று. அன்றி மார் ஈறாயின் ஏவற் பொருண்மையை உணர்த்துமாறில்லை என்க. ஏவல் என்றது வியங்கோளை. 17. படர்க்கைப்பெயரீறு திரிபின்றிப் பாலுணர்த்தாமையைப் பெயரியல் 7ஆம் சூத்திர உரை நோக்குக. வேறல்ல என்றதனாற் பயன் என்னெனின்? ஆண்டுக் கூறிய பாலை ஈண்டுப் பெறுதலும், ஈண்டுக் கூறிய இடத்தை ஆண்டுப் பெறுதலுமாம். அன், ஆன், இர், ஈர் முதலியவற்றில் முதலிலுள்ள அ, ஆ, இ, ஈ முதலியன இடங்குறித்து வந்தனவென்று ஒருவாறு கூறலாமென்பது சிலர் கருத்து. இது பொருத்தமே என்பது எமக்குங் கருத்தேயாம். 18. முன் வைப்பின் `உயர்திணைய' என்பதனோடு மாறுபடு மாதலின் பின் வைத்தார் என்றபடி. 19. அதன் பொருளென்றது. யார் என்றதன் பொருளை. 20. பாலுணர்த்துதற்கண் திரிபுடையதென்றதை 12ஆம் சூத்திர அகலவுரையிற் பார்க்க. யானும் என் குதிரையும் செல்வாம் எனின். ஆம் விகுதி அஃறிணையை உளப்படுத்தி அப்பாலையுங் காட்டித்திரியும் என்றபடி. 21. கூறப்பட்ட நான்கு ஈறென்றது ஆன், ஆள், ஆர், ஆய் என்பவற்றை தொழிற்பெயர் - வினையாலணையும் பெயர். 22. சாத்தன் கச்சை உடையன் என்புழிக் கச்சை உடைமையாகிய உடைமைத் தன்மையும் உடைமை எனப்படும். சாத்தனுடைய கச்சு என்புழி உடைப் பொருளாய் நிற்கும் கச்சும் உடைமை எனப்படும். இவ்விரண்டனுள் ஈண்டு உடைமை எனப்பட்டன. உடைப் பொருளாய் நிற்குங் கச்சு முதலியன. ஆதலின் உடைமையானும் என்பதற்கு உடைப் பொருட்கண்ணும் என உரைக்க என்பது கருத்து. அவ்வுடைப்பொருட் சொல்லாகிய முதனிலைபற்றி வரும் என்றது. கச்சு என்னும் உடைப்பொருட் சொல்லே பகுதியாக அதன்வழிக் கச்சினன் எனக் குறிப்பு வினைமுற்றுப் பிறக்கும் என்றபடி. ஏனையவுமன்ன உடைப் பொருட்கண்ணுமெனவு முரைக்க என்பதில் உம்மை இல்லாம லிருப்பதே பொருத்தம். 23. இன்னன் என வருதல் - கருநிறத்தன் என வருதல். 24. வாளாது உடைமையின் என்றால் அவ்வொரு வாய்பாடே பற்றி வரும் உடையன் என்ற குறிப்பு வினைமுற்று ஒன்றே கொள்ளப்படும். அவ்வொன்றே கொள்ளாது. ஆறாம்வேற்றுமை உடைப்பொருள்பற்றி வரும் வாய்பாடு பலவும் கோடற்கு. அதுச்சொல் வேற்றுமையுடை மையானு மென்றா ரென்க. ஈண்டு உடைமை என்றது உடைப் பொருளை என்றபடி. நிலத்தினானும் என்பதற்கும் ஈதொக்கும் என்றது, வாளா நிலத்தினானும் என்றால் நிலம் என்னும் ஒரு வாய்பாடே கொள்ளப்படும். இடப்பொருள்பற்றிவரும் எல்லா வாய்பாடும் கொள்ளுதற்குக் கண்ணென் வேற்றுமை நிலத்தினானு மென்றார் என்றபடி. நிலம் - இடம். 25. கச்சினன் என்றவிடத்து கச்சையுடையன் என விரிவுழி, உடையன் என்பது ஐ யொடு வருதலின் இரண்டாம் வேற்றுமைப் பொருளன்றொ வெனின்? அற்றன்று: அது செயப்படுபொருள் குறியாது உருபுநோக்கிய சொல்லாய் வந்தவென்க. உருபு நோக்கிய சொல்லென்றது வரு மொழியை. உடைமை ஆறாவதெனவே, சாத்தன் கச்சினன் என்பதைச் சாத்தன் கச்சினையுடையன் என விரிக்குங் கால் உடைமை சாத்தனோடி யைந்து ஆறாவதாகும் என்றபடி. அங்ஙனம் ஆறாவதாதலைக் கச்சினன் என்புழி, அன் விகுதியாற் குறிக்கப்படும் உடையானை (சாத்தனை) முன்வைத்துச் சாத்தனுடைய கச்சு என மாறிக் கூறிக் காண்க. 26. ஐயாட்டையன் காலம்பற்றி வந்தது. துணங்கையன் வினைசெய்யிடம் பற்றி வந்தது. துணங்கைக்கூத்து ஆடுமிடத்தன் என்பது பொருள். 27. இன்மை - உண்மைக்கு மறுதலையும், உடைமைக்கு மறுதலையும் என இரு வகைப்படும். ஆதலின், `பொதுப்படக் கூறியதனான்' என்றார். உ-ம்: உண்மைக்கு மறுதலை; சாத்தனிலன் உடைமைக்கு மறுதலை; சாத்தன் பொருளிலன். சாத்தன் உண்மைப்பொருள்; அவனுக்குப் பொருள் உடைமையாகும். 28. சாத்தன் இலன் என்புழி இன்மை சாத்தனாகிய பொருளினது இன்மையை உணர்த்தி நிற்றலின் இன்மை பொருட்கு மறுதலை யென்றார். இன்மை பொருளினது இன்மையை (அபாவத்தை) உணர்த் தலின் பொருளின்கட் கிடக்கும் பண்பெனப்படாது. அன்மையும், உண்மையும் பண்பிற்கு மொத்தலிற் பண்பெனப்படா என்றது - அன்மை உண்மைகள் பொருளின் அன்மை உண்மைகளை உணர்த்தி வருதலே யன்றிக் கருமை வெண்மையன்று. வெண்மை உண்டு எனப் பண்பின் அன்மை உண்மைகளை உணர்த்தியும் வருதலின் குறிப்பு வினைமுற்றன்றிப் பண்பாகா. பண்பாகா என்றது என்னை எனின்? குணத்திற்குக் குணமில்லை; ஆதலால் என்க. 29. வன்மை - ஆற்றல்; அதுவும் குணத்திற்கும் உண்டாதலிற் குணமெனப் படாது என்றது சாத்தன் வல்லன் எனப் பொருட்குளதாயதுபோல, அறிவு வல்லது எனக் குணத்திற்கும் வன்மை உளதாதலின் குணமெனப்படாது. என்னை? குணத்திற்குக் குணமின்மையின் என்றபடி. 30. ஊறு - பரிசம். அது பண்பாயடங்குமென்றது - நிலம் வலிது என்புழி, நிலத்திற்கு வன்மையாகிய பரிசம் குணமாதலின் அது பண்பாயடங்கும் என்றபடி. 31. பொருட்கட் கிடந்து தனக்கோர் குணமின்றித் தொழிலின் வேறாயது - குணம் என்றது. குணமாவது - பொருளின்கண் உளதாய்த் தனக்கொரு குணமின்றித் தொழிலின் வேறாயது என்றபடி. பொருட்கன்றிக் குணத் திற்குக் குணமில்லை யென்பது தருக்கநூற் றுணிபாதலிற் தனக்கொரு குணமின்றி யென்றார். 32. இன்மையும் உண்மையும் என்னுஞ் சொற்களை முடித்தலை. எழு - 430ஆம் 322ஆம் சூத்திரங்களை நோக்கி உணர்க. 33. குணம் திரவியந் தோன்றிய பிற்கணத்துத் தோன்றுமென்பது தருக்கநூன் முடிபு. நன்மை தீமை உடைமை என்பன ஒருபொருளில், அப் பொருளைக் கண்ட பிற்கணத்தில், (அஃதாவது இரண்டாங் கணத்தில்) தோன்றுவன அல்ல. ஆதலின் அவை பண்பெனப்படா. கருமையன் என்புழிக் கருமைபோல, நன்மை தீமை உடைமை என நில்லாது. கரியன் என்பதுபோல நல்லன் தீயன் உடையன் என்றிங்ஙனம் வந்தமையின் அது சொல் வேற்றுமை உடைமையும் ஆகா. 34. ஒரு பொருட்கண் பலவாய்பாடு - அதுச் சொல் வேற்றுமை உடைமை யானும் என்பது போல்வன. ஒரு பொருட்கண் ஒருவாய்பாடு - அன்மை முதலாயின. நிலப்பொருண்மை என்றது - கண்ணென் வேற்றுமை நிலத்தினானு மென்றதை. 35. மேற்படல் - பொருள் சிறத்தல். கீழ்ப்படல் - பொருள் சிறவாமை. பெயர் - வினையாலணையும் பெயர். வந்தான் உடையான் என்பன முற்றாய வழிப் பகுதியிற் பொருள் சிறந்துநிற்கும். வினையாலணையும் பெய ராயின் விகுதியிற் பொருள் சிறந்துநிற்கும். பொருள் சிறந்து நிற்கு மிடத்தை எடுத்தும், அயலெழுத்தை நலிந்தும், ஏனையெழுத்துக்களைப் படுத்துங் கூறுக என்பர் சிவஞானமுனிவர். சேனாவரையர் வினைமுற்றி னீற்றைப் படுத்துக்கூறப் பெயராகும் என்பர். ஆதலின் இஃது ஆராயத்தக்கது. 36. இங்கே உண்குவ என்பதில் வ விகுதியென்று கூறும் ஆசிரியர் உண்குவம் என்பதில் வம் விகுதியென்று கூறாமையின் அ எனவும் பிரிக்கலாம் என்பது அவர் கருத்துப்போலும். ஏனை எழுத்துப் பேறு என்றது - `அன்'னை. உரிஞுவன என்பது உகரமும் அன்னும் பெறுதல் காண்க. ஒழிந்த எழுத்தென்றது - முதனிலையீற்றெழுத்துள் இங்கே எடுத்துக்காட்டியன ஒழிந்தவற்றை. 37. டகரமூர்ந்த குற்றியலுகரம் தெரிநிலைவினைக் கீறாகாமையின் மாட்டேற்று வகையாற் பாலுணர்த்துதல் பெறப்படாதாம்; அதனா னீண்டுவைத்தா ரென்றது - `பன்மையும் ஒருமையும் பாலறிவந்த' என்னும் 24ஆம் சூத்திரத்தால் ஒருமையீறு இவை. பன்மையீறு இவை யென விதந்து கூறிய தெரிநிலைவினை விகுதிகளே குறிப்பு வினை யினும் வருதலின் அவைபோலக் குறிப்பு வினைக்கும் ஒருமைபன்மை கொள்கவென மாட்டெறிகின்றவர் டுகரத்தையும் அஃறிணைக் குறிப்பு வினைச் சூத்திரத்துட் கூறிவிட்டுப் பின் மாட்டெறிந்தால், டுகரம் தெரிநிலை வினைக்கின்மையின், டுகரம் ஒருமைப் பாலுணர்த்துமோ, பன்மைப்பாலுணர்த்துமோ என ஐயம் வருமாதலின் அக்குறிப்பு வினைச் சூத்திரத்தோடு வையாது. அஃறிணைத் தெரிநிலை வினை முற்று ஒருமைப்பாலுணர்த்துமிச் சூத்திரத்தோடு வைத்தாரென்பது கருத்து. போனது - போயினது என்பதன் சிதைவு. போயின்று எனத் திரியாதும் போயிற்று எனத் திரிந்தும் வந்தது என்க. 38. அஃறிணைச்சொல் ஆறேயென்பது - விகுதி ஆறாதலைக் குறித்தது. 39. `எவன்' என்பது குறிப்புவினைக்கண் எவ்வியல்பினது என்னும் பொருள்பட வந்து காலமுணர்த்தும். வினாப்பெயராயும் வரும் என்று சேனாவரையர் முதலியோர் கூறுவதன்றிப் பரிமேலழகரும், `கற்றதனா லாய பயனென் கொல்' என்புழி எவன் என்னும் வினாப்பெயர் என் என மரீஇயிற்று என்று கூறுதல் காண்க. 40. பொருள்பற்றி என்றது - `அதுச்சொல் வேற்றுமை உடைமையானும்' என்பதுபோல பொருள்பற்றியோதுதலை. கிளந்து ஓதல் - இன்னதென எடுத்துக் கூறல். அப்பொருள் என்றது - பிறிதின் கிழமையும், தற் கிழமையும், ஏழாம் வேற்றுமைப் பொருண்மையும் என்னு மூன்றையும். 41. மாக்கட்டு - பிறிதின் கிழமைப் பொருள்பற்றி வந்தது. செம்மற்று - பண்புத் தற்கிழமைபற்றி வந்தது. அணித்து, சேய்த்து ஏழாம் வேற்றுமைப் பொருண்மை பற்றி வந்தன. பொருள்பற்றி வருதல் - ஒப்புப் பொருள்பற்றி வருதல். 42. வாய்பாடுபற்றி வருவன - `இன்று, இல' என்பனபோல வருவன. பொருள் பற்றிவருவன. - `அதுச்சொல் வேற்றுமையுடைமையானும்' என்பதுபோல வருவன. ஒழிந்த மூன்றாவன - டுகர மொழிந்த குற்றுகர மிரண்டும் அகரமும். 43. இக்குறி என்றது - வியங்கோள் என்றபெயரை, வினையை ஒழிபாக வுடைய வினையென்றது - வினைச்சொல்லைத் தனக்குமுடிக்குஞ் சொல்லாக வுடைய வினைச்சொல் என்றபடி. தன்னை உணர்த்தி நிற்றல் - சொல்லாகிய தன்னை உணர்த்தி நிற்றல். 44. எல்லாத்தொழிலும் செய்தல் வேறுபாடென்றது. தொழிலெல்லாம் செய்தலின் வேறுபாடே என்பதாம். எனவே நடத்தல் வருதல் முதலிய தொழில்களெல்லாம் செய்தலின் வேறுபாடென்பது கருத்து. 45. சிலவற்றை ஈற்றானுணர்த்திய தென்றது. அம்மீறு முதலியன வாய் பாட்டா னுணர்த்தப்புகின் இறப்பு - நிகழ்வு - எதிர்வு என்னும் காலவேறு பாட்டால் பல வாய்பாடுகளாய் விரியும். அதனாற் சூத்திரம் பெருகும். அதுபற்றி ஈற்றானுணர்த்தினா ரென்பது. 46. இலேசு என்றது - 4ஆம் சூத்திரத்து. `தோன்றிவரும் வினைச்சொல்' என்னாது `காலமொடுவரூஉம்' என்று கூறிய இலேசானென்றபடி. இடங் குறித்து வருதல் - முன்னிலைபோலத் தானும் இடங்குறித்து வருதல். ஈற்றுப்பன்மை யோடு பயிறலாவது - பலவீற்றோடு பயிறல். செய்து, செய்பு என ஈறு பலவாதல் நோக்குக. 47. திரிபு வேறுபடூஉம் என்பது பிரிபு வேறுபடூஉம் என்றுமுள்ளது. ஆசிரியர் பெயரியல் 18ஆம் சூத்திரத்திலும் வேறு சூத்திரங்களிலும் திரிபு வேறுபடூஉம் என்றும் திரிந்து வேறுபடினும் என்றும் பிரயோகித்தலின், ஈண்டும் அவ்வாறே கொண்டாம். திரிதல் என்பதற்குப் பொதுமையிற் பிரிந்து திணையிரண்டன் கண்ணும் சேறல் என்பதே பொருள். திரிதல் என்பதன் கருத்தறியாது `பிரிந்து' என்று திருத்தப்பட்டது. இச் சூத்திர உரையுள் பின் வரும் வாக்கியத்துள் `திரிந்து வேறுபடூஉம்' என்றே உரையாசிரியர் சூத்திரச் சொற்களை எடுத்தாளுதலானும் திரிந்து வேறுபடூஉம் என்பதே சூத்திரத்தின் பாடமாதல் துணியப்படும். 48. ஊக்கி - ஊக்குவாய். ககர ஒற்று - எதிர்காலங் காட்டி வந்தது. நட, வா முதலியன முன்னிலை ஏவல். அவை ஆய்விகுதி குன்றி நின்றன வாதலின் அதற்குரிய ஒருமை உணர்த்தி நின்றன என்றபடி உண்ணாய் வாராய் என ஒருமை உணர்த்தல் காண்க. 49. போறி என்பது - சேறி என்பதுபோல நின்ற தெரிநிலை வினைமுற்று. பொருள் பற்றியோதல் வேறு. கிளந்தோதல் வேறு. ஆதலால் இவ் வாக்கியம் அன்மை முதலாயினபொருள்பற்றி வந்தன கிளந்தோதலாஞ் சுருக்கத்தனவாகை யானும் என்றிருத்தல் வேண்டும். முதலாயின பொருள்பற்றி வந்தன என்பது முதலாய பொருள்பற்றி வந்தன எனப் பொருள் கொள்ளப்படும். இங்ஙனம் பொருள்பட எழுதுவது சேனா வரையர் வழக்காதலை `இயற்சொற்றிரிசொல் முதலாயின செய்யுளதி காரத்து' என்னும் (எச்-சூ-57) வாக்கியத்தானுமறிக. எனவே இவ் வாக்கியப்போக்கு அறியாமையால் என என்பது பின் சேர்க்கப்பட்டது. சுருக்கத்தனவன்மையானும் என்ற பாடம் பொருத்தமில்லை. ஏனெனின்? அது சுருக்கம்பற்றிச் சூத்திரஞ் செய்தார் என்பதற்குக் காரணமாகாமையின், சுருக்கத்தனவாகையானுமென்ற பாடமே பொருத்தமென்பதை, வினை 23ஆம் சூத்திர உரையுள் வரும் "அவ் வேழனையும் பொருள்பற்றி யோதாராயினார். கிளந்தோதிய வழியுஞ் சூத்திரஞ் சுருங்குமாகலான்" என்பதனானுமறிக. அவற்றை - அஃறிணை வினைக்குறிப்பை. இவற்றை - முன்னிலை வினைமுற்றை. பொருண்மை கருதாதென்றது - காலப் பொருண்மை கருதாதென்றபடி. 50. முன்னர் என்பது - பின்வரும் விலக்குச் சூத்திரங்களை அவை 29ஆம் 30ஆம் சூத்திரங்கள். 51. ஏவலில்லை என்றது - ஏவற்பொருளில் வரும் வியங்கோளில்லை என்றபடி. எனவே வாழ்த்துதற் பொருண்மைக்கண்ணும் வேண்டிக் கோடற்பொருட் கண்ணும், முன்னிலைதன்மைகளில் வியங்கோள் வருமென்றபடி. 52. எடுத்தலால் - எடுத்துச் சொல்லுதலால். பொருந்திய மெய்யூர்ந்து வரும் அகர மெய்யென்றது. க-ய முதலியவற்றை. 53. பொதுவகையா னெய்தியதென்றது. 28ஆம் சூத்திரத்து மூவிடத்திற்கும் ஐம்பாற்கும் உரிய என்று பொதுவாக விதித்தலான் எய்தியதை. 54. இறுதியிடைச்சொல் விகுதி. பிரித்துணர்தல் - விகுதியாகப் பிரித்தறிதல் 55. குற்றுகரத்தோடு வருமிடம் - ஆகி, போகி என்புழி ஆகு, போகு என்னும் குற்றுகரத்தோடு வருதல்போலு மிடம். தனிமெய்யாய் வருமிடம். நக்கு உண்டு என்பனவற்றில் ககர, டகரங்களாய் வருதல் போலுமிடம். வரவு முதலிய முதனிலையோடு இகரம் வராது; ஆகு முதலியவற்றோடு உகரம் வராது; ஆதலால், யாதானு மொன்று ஈறு எனப்படும். உகரம் பெரும்பாலும் வருதலால் அதுவே ஈறாகும். அதுவே ஆகு முதலியவற்றோடு திரிந்து வருமெனப்பட்டது. இகரம் பயின்று வராமையின் நீக்கப்படும். ஏனெனின் பயின்று வந்த ஒன்றை மற்றை வாய்பாடுக ளோடுந் திரிந்து வந்ததெனக் கொள்ள வேண்டு மாதலின். 56. இடை - தடை. உண்ணூவந்தான் என்பது - உண்டவுடன் வந்தான் என உடன் வருதலைக் காட்டுமென்றபடி. 57. உடனிகழ்தல் - நகுதலும் வருதலும் கூட நிகழ்தல். எனவே வரும் பொழுதே நகுதலைச் செய்துகொண்டு வந்தான் என்றபடி. இறந்தகாலம் பற்றி வருதல் என்றது. சோலைபுக்கானாக அதனால் வெப்பம் நீங்கிற்று எனப் பொருள் படுமிடத்துப் புக்கென என்பது இறந்தகாலத்து வருதலை. 58. கூதிர் போயபின் வந்தான். நின்றவிடத்து நின்றான் என்பவற்றிலுள்ள பின், இடம் என்பன பெயர். பின் - பிற்காலம். செய்து முதலியன போல வாய்பாடுபற்றி ஓதலாகாமையின் என்றது - ஒரு வாய்பாட்டினுள் கால வேறுபாட்டால் வரும் பல வாய்பாடுகளும் அடக்கமுடியாமையின் என்றபடி. 59. முதற் சூத்திரத்தில் செய்து முதலிய வாய்பாடு ஓதினமையின் அவற்றை முதனிலை மூன்றும் என்று தொகுத்துச் சொல்லலாமென்றபடி. 60. அது என்றது உண்டு என்னு மெச்சத்தை. பிறபொருட்டாய தென்றது - செயவெனச்சப் பொருளாயதை. உண்டு என்பது - செயவெனெச்சப் பொருளதென்பது சேனாவரையர்க்குக் கருத்தின்றேனும், ஈண்டுப் பிறர் கருத்தையே எடுத்து வினாவி விடுத்தனரென்க. பிறர் பொருட்டாவது என்று பாடமிருப்பின் அது என்பதை கையிற்று வீழ்ந்தான் என்பதைச் சுட்டி நின்றதாகக் கொள்ளலாம். அங்ஙன மின்மையின் அது பொருந்தா தென்க. அன்றியும் உம்மை வாளா நின்று வற்றும். ஆதலானும் அது பொருந்தா தென்க. 61. இங்கே, தெரிநிலை வினையொடு முடிதல் கூறப்பட்டமையின், எச்ச வியலிற் குறிப்பொடு முடிதலை மாத்திரம் சொல்ல அமையுமெனின்? இவ்வியலிற் சொன்ன வினையை, ஆண்டுச் சொல்லும் `குறிப்பும்' என்னும் உம்மையாற் றழுவல் சேய்த்து ஆதலின் அமையாது என்றபடி. 62. தம்மொடு தாமும் பிற சொல்லும் முடியாமை என்றது - செய்து என்னும் வாய்பாட்டுச் சொல், அடுத்து வரும் செய்தென்னும் வாய்பாட்டுச் சொற்களோடும். செய்பு முதலிய வாய்பாட்டுச் சொற்களோடும் முடியாமையை. முடியுமாயின் அடுக்கெனப்படா என்றபடி. எனவே ஈற்றுவினையொடு தனித்தனி முடியுமன்றி, உண்கு என்பது பருகூ என்பதனோடும். அது தின்குபு என்பதனோடும் முடியாவென்றபடி. ஒரு முறையானடுக்கல் - ஒரு வாய் பாட்டானடுக்கல். பன்முறையானடுக்கல் - பலவாய்ப்பாட்டானடுக்கல். 63. ஒழிந்த இரண்டு - இன்னதற்கு இது பயன் என்பன. ஆ கொடுக்கும் பார்ப்பான் என்பதில் பார்ப்பான் கோடற் பொருளாதலின். இன்னதற்கு என்பதுபட நின்றது. ஆடை ஒலிக்குங் கூலி என்பதில். கூலி ஒலித்த லால் வந்த பயனாதலின் இது பயன் என்பதுபட நின்றது. 64. எல்லை என்றது - நீக்கத்தை. அதனைத் தீர்த்தல் என்பதனாற் றழுவிக் கொண்டார் என்றபடி. எல்லை நீக்கத்துளடங்கும். பழம் உதிருங்கோடு என்பதை நீக்கம் என்றது. கோட்டினின்றும், பழமுதிர்ந்து அதனின் வேறாதலை. உதிர்தற்குக் கோடு எல்லையாயும் நிற்றலின் நீக்கத்தை எல்லை யென்றார். 65. வினைப்பெயரென்றது - செய்வது முதலிய ஆறனுள் வரும் வினைப் பெயரை. வினை - செயல். உண்ணுமுண் என்பதில் உண்ணல் - செயல். காணுமருந்து - காணுதலாகிய மருந்து, என்றது காணுதலையே ஈண்டு மருந்தென்றாராகலின் காணுதலைத்தான் மருந்தென்று கூறியதாயிற்று. ஆகவே காணுதல் தொழிற் பெயராகலின் மருந்துந் தொழிற்பெயரா யிற்று. அதுபற்றித் தொழிற்பெயர் கொண்டதென்றார். ஏனையவுமன்ன. சென்றவியர் - செல்லுதலாற் தோன்றப்பட்ட வேர்வை. நூற்றகலிங்கம் நூலாதகலிங்கம் இரண்டும் செயப்படுபொருள் கொண்டன. இச்சூத்திரத்தாற் பெயரெச்சப் பொருள் சொன்னதன்றி முடிபு சொன்ன தன்று என்பது கருத்து. கால எழுத்து - காலங்காட்டுமெழுத்து. 66. அவற்றோடு என்றது - நிலன் முதலிய ஆறனோடும் என்றபடி. 67. விதிப்பொருளவாகிய வாய்பாட்டா னோதப்பட்டதென்றது - ஈறுபற்றி ஓதாது, செய்து முதலிய உடன்பாட்டுப் பொருளவாகிய வாய்பாட்டாற் சொல்லியதென்றபடி. அவையுமென்றது - அவ்வெதிர்மறையை. ஈறுபற்றி ஓதியதென்றது - அன், ஆன் முதலிய ஈறுபற்றி ஓதியது என்றபடி. ஈறுபற்றி ஓதினமையான் உண்டான், உண்ணான் என விதியு மெதிர்மறையும் நிலைதிரியாமை அவ்வீறுகளையுடைய சொற்களா லுணர்ந்து கொள்ளலாமாதலின். பொருணிலை திரியாதென்று சொல்ல வேண்டாமென்றபடி. எனவே விதி வாய்பாடு பற்றிச் சொன்னமையின் இவற்றிற்கு எதிர்மறை வாய்பாடும் ஓதல் வேண்டுமென்பது கருத்து. ஆண்டு ஈறுபற்றி ஓதியதல்லது ஈண்டுப்போல வாய்பாடுபற்றி ஓதாமையின் ஆண்டுக் கட்டுரை இல்லை என்றபடி. கட்டுரை - ஆnக்ஷபம். பேச்சு. விதிப்பொருள் - நியமப்பொருள் - உடன்பாட்டுப்பொருள். சேனாவரையர் எதிர்மறை வினைகளுக்கு வினை நிகழ்ச்சியில்லை என்று கூறலின் எதிர்மறையெல்லாம் வினை நிகழ்ச்சியில்லாதவற்றை உள்ளது போலக் கூறுவதொரு இலக்கணை யென்க. 68. இடைநிலை என்பதை இடைப்பிறவரல் என்பர் நன்னூலார். 69. முடிபாய் வரும் வினைச்சொல்லா லுணர்த்தப்படும் தொழிற்கு. எச்சத்தா னுணர்த்தப்படுந் தொழில் முன்னிகழ்தல் என்றது:- உண்டு வருவாய் என்புழி வருதற்கு உண்ணுதல் முன்னிகழ்தலை; என்றது வருதல் எதிர்வில் நிகழ்வதாகக் கூறினமையின் உண்ணுதலும் எதிர்காலத்து நிகழ்வது என்பது பெறப்படுமாயினும் வருதற்குமுன்னே உண்ணுதல் நிகழுமாதலின் இறந்தகாலமே உணர்த்தும் என்றபடி. 70. பொதுவாதல் - மூன்றுகாலத்துக்கும் பொதுவாதல். செய்யும் என்னும் முற்றானும் செய்யும் என்னும் பெயரெச்சத்தானும் கூறுக என்றபடி. 71. பாணித்தல் - தாமதித்தல், இறந்தன - முடிந்தன. இரண்டாகலான் பொருள் எனப் பன்மை ஈற்றாற் கூறினா ரென்றபடி. 72. குறை - காரியம்; என்றது இன்றியமையாத காரியத்தை. மிக்கது - பயனுக்குரிய காரணங்களுள் சிறந்தது என்றது தெய்வத்தை. தெய்வம் - ஊழ். தெய்வமாய இருவினை மிக்கது - தெய்வமாய இரு வினையாய்ச் சிறந்தது. அதன்கண் வரும் வினையென்றது - செய்தான், கொன்றான் முதலியவற்றை. அப்பண்பு - அத்தொழிலின் பயன்; என்றது - தவஞ்செய்தலும் தாயைக்கோறலும் ஆகிய தொழிலின் பயன் என்றது - முறையே சுவர்க்கம் புகுதலும், நரகம் புகுதலும் என்றபடி. சுட்டிக் குறித்த கிளவியென வியைக்க. பண்பென்றார், முயற்சிக்கு அதன் பயன் குணமாதல்பற்றி. வினைமுதற்சொல் - வினைமுதற்குப் பயனிலையாய் வருஞ் சொல். வினைமுதற்குரிய சொல் எனினும் அமையும். திரிபில் பண்பு - நியதியான பயன். எனவே நிச்சயமாக அடைவதென்றபடி. இனி, அப்பண்பு குறித்த என்பதற்கு (மிக்கதாகிய இருவினைப் பயனுறுதல்) அவ்வினைமுதற் கியல்பென்பது குறித்த என்று உரைப்பினு மமையு மென்றபடி. வினைப்பெயர் - வினையாலணையும் பெயர். 73. செய்வது - வினைமுதல். செய்கை - செய்தல். (செய்வதென்பது என்றது செய்வதென்றது என இருத்தல் வேண்டும்) இது என்றது - மிக்கதன் திரிபின் பண்பை. அவற்றது என்றது - இயற்கையையுந் தெளிவையும். இது `புகும்' என நிகழ்வாற் சொல்லப்படுவதன்றிப் புகுந்தார் என இறந்த காலத்தாற் சொல்லப்படா தென்றபடி. 74. செயல் - ஓதுஞ் செயல். அதன் வினைமுதல் - ஓதுபவன். சாத்தன் ஓதல் வேண்டுமென்புழிச் சாத்தன் ஓதலை விரும்புவானெனத் தன்பாலினும், சாத்தனுடைய ஓதலைத் தந்தை வேண்டுமெனப் பிறன்பாலினும் வந்தமை காண்க. பால் - பக்கம் 75. திட்பம் - திடம். எதிர்மறைப் பொருளுணர்த்தியது வினா வெழுத்தன்று. அது எதிர்மறையைத் திடப்படுத்தியது. எனவே வைதேன் என்பதே எதிர்மறைப் பொருளை ஓசை வேற்றுமையான் உணர்த்துமென்றபடி. இடைச்சொற்குத் தனித்துப் பொருளில்லையென்பது சேனாவரை யர்க்குக் கருத்தாகலின் இங்ஙனம் கூறினார். இதனை இடையியல் 2ஆம் சூத்திரத்தில் கூறிய `கூரியதோர் வாண்மன்' என்பதனுரை நோக்கித் தெளிக. எதிர்மறையாயின பயன்தருவது வினாவுடை வினைச்சொல் என வினைச்சொன் மேலேற்றிக் கூறினமையின் எதிர்மறைப் பொருளைத் தனிய வினாத்தராது. அதுபற்றிச் சொல்லுவான் குறிப்பால் எதிர்மறை பெறப்படுமென்றார். அஃது - அவ் வினா வெழுத்து. 76. பெற்றி - இயல்பு; சுபவாம். 77. திண்ணை மெழுகப்பட்டது என்றவழி மெழுகப்பட்டது திண்ணை யாதலின் அது செயப்படுபொருளாம். திண்ணை மெழுகிற்று எனின் மெழுகுதல் வினை, திண்ணையின் வினையாம். இங்கே திண்ணை யாகிய செயப்படுபொருள் மெழுகுதலைச் செய்த வினைமுதல்போலக் கிளக்கப்பட்ட வாறறிக. இங்ஙனமன்றிச் செயப்படுபொருளைக் கருத்தா வாகவே வைத்து அரிசி தானே யட்டது என்புழி தானே அட்டது என அடுதலாகிய தொழிலை அரிசியின் வினையாகக் கூறலும் தொழிற்படக் கிளத்தலேயாம் என்றபடி. முன்னது செயப்படுபொருளைச் செய்ததன் வாய்பாட்டாற் கிளக்கப்பட்டது; பின்னது செயப்படு பொருளைச் செய்த தாகவே கூறியதென வேறுபாடறிக. மெழுகிற்று என்றதை மெழுகப் பட்டதென மாற்றலாம். அட்டது என்பதை அடப் பட்டதென மாற்ற முடியாது. ஆதலால் அரிசி தானே யட்டது என்பது செயப்படு பொருளை வினைமுதலாகக் கூறப்பட்டது என்க. கரும கருத்தன் - செயப்படுபொருள் கருத்தாவாகக் கூறப்படுவது. 78. தோன்றும் என்பது பெயரெச்சமெனினு மிழுக்காது என்றதனான், தோன்றும் மொழிக்கிளவி தம்முள் மயங்கும் என்றும் மாற்றியும் கொள்ளலாம் என்பது கருத்தாகும். இடையியல் இடைச்சொற்களின் இலக்கணமுணர்த்தினமையால் இடையியலென்னும் பெயர்த்தாயிற்று. பெயரையும் வினையையும் சார்ந்து தோற்றுதலின் அவற்றின்பின் கூறப்பட்டது மொழிக்கு முன்னும் பின்னும் வருமாயினும் பெரும்பான்மையும் இடை வருதலின் இடைச்சொல்லாயிற்று என்பர் சேனாவரையர். இடைச்சொல்லாவது பெயரும் வினையும்போலத் தனித்தனியே பொருளுணர உச்சரிக்கப்படாது பெயர் வினைகளைச் சார்ந்து புலப்படுமென்றும் பெயரும் வினையும் இடமாகநின்று பொருளுணர்த்தலின் இடைச்சொல்லாயிற்றென்றும் கூறுவர் தெய்வச்சிலையார். பொருளையும் பொருளது புடை பெயர்ச்சியையுந் தம்மாலன்றித் தத்தங்குறிப்பாலுணர்த்துஞ் சொற்கள் பெயர்ச்சொல் வினைச்சொற்களுமாகாது அவற்றின் வேறுமாகாது இடைநிகரனவாய் நிற்றலின் இடைச்சொல்லெனப் பட்டன என்பர் சிவஞான முனிவர். இவ்வியலிலுள்ள சூத்திரங்கள் 48. இவற்றை 47-ஆகக் கொள்வர் தெய்வச்சிலையார். இடைச்சொல்லென்று சொல்லப்படுவன பெயரும் வினையும் உணர்த்தும் பொருளைச் சார்ந்துநின்று அவற்றையே வெளிப்படுத்து நிற்றலல்லது தமக்கென வேறு பொருளில்லாதன் என்பர் ஆசிரியர். எனவே அவை பொருளுணர்த்தும்வழிப் பெயர்ப் பொருண்மை யுணர்த்தியும் வினைப்பொருண்மை யுணர்த்தியும் வருவன என்பது பெறப்படும். ஒரு சொல்லோடு ஒரு சொல் புணர்ந்தியலும் வழி அப்பொருள் நிலைக்கு உதவியாகி வருவனவும், வினைச் சொற்களை முடிக்குமிடத்து அச்சொல்லகத்துக் காலங்காட்டும் உறுப்பு முதலியனவாய் நிற்பனவும், வேற்றுமையுருபுகளாய் வருவனவும், தமக்கெனப் பொருளின்றிச் சார்த்திச் சொல்லப்படும் அசைநிலைகளாய் நிற்பனவும், இசை நிறைக்க வருவனவும், தத் தங்குறிப்பாற் பொருளுணர்த்துவனவும். ஒப்புமையுணர்த்தும் உவமவுருபுகளாய் வருவனவும் என இடைச்சொற்கள் எழுவகைப்படுமென்பர் தொல்காப்பியர். அவற்றுள் ‘புணரியல் நிலையிடைப் பொருள் நிலைக்குதவுந’ என்றது அல்வழிப் பொருளுக்கு உரியன இவை வேற்றுமைப் பொருளுக்கு உரியன இவையென எளிதில் உணர்ந்து கொள்ளுதற்கு அறிகுறியாகிய இன், வற்று, முதலிய சாரியைகளை இவை எழுத்ததிகாரத்திற் சொல்லப்பட்டன. ‘வினை செயல் மருங்கிற் காலமொடு வருந’ என்றது வினைச்சொல் முடிவுபெறுமிடத்துக் காலங்காட்டியும் பால்காட்டியும் வினைச்சொல்லகத்து உறுப்பாய் நிற்பனவற்றை. இவை வினையியலுட் கூறப்பட்டன வேற்றுமைப் பொருளிடத்து உருபாய் வரும் ஐ, ஒடு, கு, இன், அது, கண் எனவரும் வேற்றுமையுருபுகள் வேற்றுமையியலிற் கூறப்பட்டன. அசைநிலையும் இசைநிறையும் தத்தங் குறிப்பிற் பொருள் செய்வனவும் ஆகிய மூவகையிடைச் சொற்களும் இவ்வியலின் கண்ணே உணர்த்தப்படுகின்றன. ஒப்புமையுணர்த்தும் இடைச் சொற்களாகிய அன்ன, ஆங்கு முதலிய உவம உருபுகள் பொருளதிகாரத்து உவம இயலில் விரித்துரைக்கப்படும். இவ்விடைச்சொற்கள் தம்மாற் சாரப்படும் சொற்கு முன்னும் பின்னும் வருதலும் தம்மீறுதிரிதலும் பிறிதோரிடைச் சொல் தம்முன்வந்து சாரப்பெறுதலும் ஆகிய இயல்பினவாம். இவ்வியலின்கண் உணர்த்தப்படும் அசைநிலை, இசைநிறை தத்தங்குறிப்பிற் பொருள்செய்வன என்னும் மூவகையிடைச் சொற்களுள் பொருள்புணர் இடைச்சொல்லாகிய தத்தங்குறிப்பிற் பொருள் செய்வனவற்றை முதற்கண்ணும், பொருள்புணரா இடைச்சொற்களாகிய அசைநிலை இசைநிறைகளை அதன் பின்னரும் உணர்த்துகின்றார். தத்தங்குறிப்பிற் பொருள்செய்யும் இடைச் சொற்களுள் பலபொருள் குறித்த இடைச்சொற்களை 4-முதல் 12-வரையுள்ள சூத்திரங்களிலும், ஒருபொருள் குறித்த இடைச்சொற்களை 13-முதல் 21-வரையுள்ள சூத்திரங்களிலும் ஆசிரியர் எடுத்தோதுகின்றார். அவர் எடுத்தோதிய இடைச்சொற்களுள் எல் என்னும் சொல் இலங்குதல் என்னும் ஒரு பொருள் குறித்த இடைச்சொல்லாகும். “எல்லென்பது உரிச்சொல் நீர்மைத்தாயினும் ஆசிரியர் இடைச்சொல்லாக ஒதினமையான் இடைச்சொல் லென்று கோடும்” என்றார் சேனாவரையர். ‘உரிச்சொல் குறைச் சொல்லாகி நிற்கும், இது குறையின்றி நிற்றலின் இடைச் சொல்லாயிற்று’ என்றார் தெய்வச்சிலையார். அசைநிலையாகவும் இசைநிறையாகவும் வரும் இடைச்சொற்களை 22-முதல் 32-வரையுள்ள சூத்திரங்களால் எடுத்துரைத்தார். உயிரெழுத்துக்களுள் ஒளகாரமல்லாத நெடில்கள் ஆறும் இரட்டித்தும் அளபெடுத்தும் தனித்தும் இடைச்சொற்களாய் நின்று ஓசையாலும் குறிப்பாலும் பொருளுணர்த்தும் முறையினை 38-ஆம் சூத்திரத்திலும், நன்றே, அன்றே, அந்தோ, அன்னோ என்பவற்றின் இறுதி நின்ற ஏகாரமும் ஓகாரமும் குறிப்பாற் பொருளுணர்த்து முறையினை 34-ஆம் சூத்திரத்திலும், மேற்கூறிய இடைச் சொல்லின்கண் இலக்கண வேறுபாடுகளையெல்லாம் 35-முதல் 46-வரையுள்ள சூத்திரங் களிலும் ஆசிரியர் விரித்துக் கூறியுள்ளார். மேற்கூறப்பட்ட இடைச்சொற்களில் இச்சொல்லுக்கு இது பொருள் என நிலைபெறச் சொல்லப்பட்டனவாயினும் அச்சொற்களின் முன்னும் பின்னும் நின்ற வினையோடும் பெயரோடும் இயைத்து நோக்க அச்சொற்கள் முற்கூறியவாறன்றி வேறு பொருளவாயும் அசைநிலையாயும் திரிந்து வேறுபடினும் அவற்றின் பொருள் நிலையை ஆராய்ந்துணர்தல் வேண்டு மெனவும், இங்கெடுத்துரைத்த இடைச்சொற்களேயன்றி இவைபோல்வன பிற வரினும் அவற்றையும் இங்குச் சொல்லிய வற்றின் இலக்கணத்தால் உணர்ந்து வகைப்படுத்துக் கொள்ளுதல் வேண்டுமெனவும் இவ்வியலிறுதியிலுள்ள புறனடைச் சூத்திரங்களால் ஆசிரியர் அறிவுறுத்துகின்றார். இதனால் ஆசிரியர் காலத்து வழங்கிய தமிழ்ச்சொற்களின் பரப்பும் இருவகை வழக்கினும் சொற்கள் பொருளுணர்த்தும் நெறியின் விரிவும் இனிது புலனாதல் காணலாம். - க. வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 214-216 ஏழாவது இடையியல் 249. இடையெனப் படுவ பெயரொடும் வினையொடு நடைபெற் றியலுந் தமக்கியல் பிலவே. நிறுத்த முறையானே இடைச்சொலுணர்த்திய வெடுத்துக் கொண்டார். அதனான், இவ்வோத்து இடையியலென்னும் பெயர்த்தாயிற்று. மொழிக்கு முன்னும் பின்னும் வருமாயினும் பெரும்பான்மையும் இடை வருதலின் இடைச்சொல்லாயிற்று. இதன் பொருள் : இடைச்சொல் என்று சொல்லப்படுவன 1பெயரொடும் வினையொடும் வழக்குப்பெற் றியலும்; தாமாக நடக்குமியல்பில என்றவாறு. இடைச்சொற் கிளவியு முரிச்சொற் கிளவியு மவற்றுவழி மருங்கிற் றோன்றும் (சொல். 159) என்றதனான் இடைச்சொல் பெயரும் வினையுஞ் சார்ந்து வருதல் பெறப்பட்டமையான், ‘பெயரொடும் வினையொடும் நடை பெற்றியலுந் தமக்கியல் பில வென்றது’, ஈண்டுப் பெயரும் வினையு முணர்த்தும் பொருளைச் சார்ந்து நின்று அவற்றை வெளிப்படுப்பதல்லது தமக்கெனப் பொருளுடையவல்ல வென்றவாறாம். உதாரணம்: ‘அதுகொ றோழி காம நோயே’ (குறுந். 5) எனவும், ‘வருகதில் லம்ம வெஞ்சேரி சேர’ (அகம். 276) எனவும், பெயரும் வினையுஞ் சார்ந்து அப்பொருளை வெளிப்படுத்தவாறு கண்டுகொள்க. சார்ந்து வருதல் உரிச்சொற்கு மொத்தலின், தமக்கெனப் பொருளின்மை இடைச்சொற்குச் சிறப்பிலக்கணமாம். ‘தமக்கியல் பிலவே’ யென்றது, சார்ந்தல்லது வாராவென வலியுறுத்தவாறு. ‘பெயரொடும் வினையொடும் நடைபெற் றியலுந் தமக்கியல் பில’வெனப் பொதுப்படக் கூறியவதனான், சாரப்படுஞ் சொல்லின் வேறாய் வருதலேயன்றி, உண்டனன் உண்டான் எனவும், என்மனார் என்றிசினோர் எனவும், அருங்குரைத்து எனவும், அவற்றிற் குறுப்பாய் வருதலுங் கொள்க. இனி ஓருரை:- ‘இடைச்சொற் கிளவியும் உரிச்சொற் கிளவியும் அவற்றுவழி மருங்கிற் றோன்றும்’ என்பதற்கு, “சார்ந்து வருதலான் இடைச் சொல்லும் உரிச்சொல்லுஞ் சிறப்பில; இவை யுட்படச் சொன்னான்கா” மென்பது கருத்தாகலின், இடைச் சொல் பெயரும் வினையுஞ் சார்ந்து வருமென்னும் வேறுபாடு அதனாற் பெறப்படாது. என்னை? இடைச்சொல் பெயர் சார்ந்தும் உரிச்சொல் வினைசார்ந்தும் வரினும் அவற்றது சிறப்பின்மையுஞ் சொல் நான்கு ஆதலும் உணர்த்துதல், சிதையாதாகலான். அதனான் இடைச்சொல் பெயரும் வினையுஞ் சார்ந்து வருமென்பது இச் சூத்திரத்தாற் கூறல் வேண்டு மென்ப. அவ்வுரை யுரைப்பார் ‘பெயரினும் வினையினு மெய்தடு மாறி’ (சொல். 297) என்பதற்கும் பெயரும் வினையுஞ் சார்ந்தென்று பொருளுரைப்ப. (1) 250. அவைதாம் புணரிய னிலையிடைப் பொருணிலைக் குதநவும் வினைசெயன் மருங்கிற் காலமொடு வருநவும் வேற்றுமைப் பொருள்வயி னுருபா குநவு மசைநிலைக் கிளவி யாகி வருநவு மிசைநிறைக் கிளவி யாகி வருநவுந் தத்தங் குறிப்பிற் பொருள்செய் குநவு மொப்பில் வழியாற் பொருள்செய் குநவுமென் றப்பண் பினவே நுவலுங் காலை. இதன் பொருள்: மேற்சொல்லப்பட்ட இடைச்சொற்கள் தாம், இரண்டு சொற் புணருமிடத்து அப் பொருணிலைக் குதவுவன வும், வினைசொல்லை முடிக்கு மிடத்துக் காலப் பொருளவாய் வருவனவும், செயப்படுபொருண் முதலாகிய வேற்றுமைப் பொருட்கண் உருபென்னுங் குறியவாய் வருவனவும், பொரு ளுடையவன்றிச் சார்த்திச் சொல்லப்படுந் துணையாய் வருவன வும், வேறு பொருளுணர்த்தாது இசைநிறைத்தலே பொருளாக வருவனவும், தத்தங் குறிப்பாற் பொருளுணர்த்து வனவும், ஒப்புமை தோன்றாதவழி அவ் வொப்புமைப்பொருள் பயப்பனவு மெனக் கூறப்பட்ட ஏழியல்பையுடைய சொல்லுமிடத்து என்றவாறு. புணரியனிலை புணரியலது நிலை. ஆண்டுப் பொருணிலைக் குதவுதலாவது எல்லாவற்றையும் என்புழி வற்றுச் சாரியை நிலை மொழிப் பொருள் அஃறிணைப் பொரு ளென்பதுபட வருதலும், எல்லா நம்மையும் என்புழி நம்முச் சாரியை அப்பொருள் தன்மைப் பன்மை யென்பது பட வருதலு மாம். அல்லனவும் தாஞ் சார்ந்து வரும் மொழிப்பொருட்கு உபகாரமுடையவாய் வருமா றோர்ந்து கொள்ளப்படும். அல்லாக்கால், சாரியை மொழியாகா வென்பது. வினைச்சொல் ஒரு சொல்லாயினும் முதனிலையும் இறுதி நிலையும் இடைச்சொல்லுமாகப் பிரித்துச் செய்கை செய்து காட்டப்படுதலின், ‘வினை செயன் மருங்கின்’ என்றார். அம் முடிபுணர்த்தாமைக்குக் காரணம் ‘புணரிய னிலையிடை யுணரத் தோன்றா’ என்புழிச் சொல்லப்பட்டது. அவற்றுள் ஒரு சாரன 2பாலுணர்த்தாமையானும், எல்லாங் காலமுணர்த்துதலானும், ‘கால மொடு வருநவும்’ என்றார். வேற்றுமைப் பொருளவாய் வருவன பிறசொல்லுமுள வாகலின், அவற்றை நீக்குதற்கு உருபாகுநவு மென்றார். பிறசொல் லாவன ‘கண்ணகன் ஞாலம்’ (திரிகடுகம்) ‘ஊர்க்கா னிவந்த பொதும்பர்’ (குறிஞ்சிக்கலி. 20) என ஏழாம் வேற்றுமைப் பொருட்கண் வருங் கண் கால் முதலாயினவும், ‘அனையை யாகன் மாறே’ (புறம். 4) ‘சிறந்தோன் பெயரன் பிறந்த மாறே’ (நற். 40) ‘இயல்புளிக் கோலோச்சு மன்னவன்’ (குறள். 545) என மூன்றாம் வேற்றுமைப் பொருட்கண் வரும் மாறு உளி என்பனவும், அன்ன பிறவுமாம். அஃதேல், வேற்றுமையுருபுமென் றோதுவார்; ஓதவே, இவை நீங்குமெனின், அஃதொக்கும்; அவை தம்மையுந் தழீஇக்கோடற்கு ‘வேற்றுமைப் பொருள் வயின்’ என்றார். அவை வருங்கால் நிலைமொழி யுருபிற்கேற்ற செய்கை ஏற்புழிப் பெறுதலுடைமையின், ‘உருபா குநவும்’ என்றார். இஃது இருபொரு ளுணர்த்தலான் 3இருதொடராகக் கொள்க. அசைத்தல் - சார்த்துதல். பொருளுணர்த்தாது பெய ரொடும் வினை யொடுஞ் சார்த்திச் சொல்லப்பட்டு நிற்றலின், அசைநிலை யாயிற்று. அவை அந்தின் முதலாயின. ‘புகழ்ந்திகு மல்லரோ பெரிதே’ ‘உரைத்திசி னோரே’ எனச் சார்ந்த மொழியை வேறு படுத்து நிற்றலின், அசைநிலை சொல்லாயின வென்பாரு முளர். செய்யுட்கண் இசைநிறைத்து நிற்றலின், இசைநிறையாயின. குறிப்புச் சொல்லுவான் கண்ணதாயினும் அவன் குறித்த பொருளைத் தாங்குறித்து நிற்றலின், தத்தங்குறிப்பினென்றார். சொல்லுவான் குறித்த பொருளைத் தாம் விளக்குமெனவே, ‘கூரியதோர் வாள்’ என மன்னானன்றி ஓசை வேறுபாட்டான் ஒருகாற்றிட்பமின்றென்னுந் தொடக்கத்து ஒழியிசைப் பொருள் தோன்றலும் பெறப்படும். பொருட்கும் பொருளைப் புலனாக வுடைய உணர்விற்கும் ஒற்றுமை கருதிப் பொருளு ணர்வைப் பொரு ளென்றார். ‘மிகுதி செய்யும் பொருள’ (சொல். 299) என்பது முதலாயினவற்றிற்கும் ஈதொக்கும். ஒக்குமென்னுஞ் சொல்லன்றே ஒப்புமை யுணர்த்துவது. அச்சொல் ஆண்டின்மையான் ஒப்புமை தோன்றாமையான், ஒப்பில் வழியாலென் றார்; உவமையொடு பொருட்கு ஒப்பில்லை யென்றாரல்லரென்பது. ஒக்கு மென்னுஞ் சொல்லை ஒப்பென்றா ரென்பாருமுளர். ஒப்பில் வழியாற் பொருள் செய்குநவாவன, அன்ன, ஏய்ப்ப, உறழ, ஒப்ப என்பன முதலாகப் பொருளதிகாரத்துக் கூறப்பட்ட முப்பத்தாறனுள் ஒக்குமென்ப தொழிய ஏனையவாம். சாரியையும், வேற்றுமையுருபும், உவமஉருபும், குறிப்பாற் பொருளு ணர்த்துமாயினும், புணர்ச்சிக்கண் உபகாரப்படுதலும் வேற்றுமைத் தொகைக்கும் உவமத் தொகைக்கும் அவ்வுருபுபற்றி இலக்கணங் கூறுதலும் முதலாகிய பயனோக்கி, இவற்றை வேறு கூறினார். இடைச்சொ லேழனுள்ளும் முதனின்ற மூன்றும் மேலே யுணர்த்தப் பட்டமையான் முன் வைத்தார். ஒப்பில்வழியாற் பொருள் செய்குந முன்னரு ணர்த்தப்படுதலின் இறுதிக்கண் வைத்தார். ஒழிந்த மூன்றும் இவ்வோத்தின் கண் உணர்த்தப் படுதலின் இடை வைத்தார். (2) 251. அவைதாம் முன்னும் பின்னு மொழியடுத்து வருதலுந் தம்மீறு திரிதலும் பிறிதவண் நிலையலு மன்னவை யெல்லா முரிய வென்ப. இதன் பொருள் : மேற்சொல்லப்பட்ட இடைச்சொல், இடை வருதலே யன்றி, தம்மாற் சாரப்படுஞ்சொற்கு முன்னும் பின்னும் வருதலும், தம்மீறு வேறுபட்டு வருதலும், பிறிதோரிடைச்சொல் ஓரிடைச் சொன்முன் வருதலுமாகிய அத்தன்மையவெல்லாம் உரிய என்றவாறு. உதாரணம்: ‘அதுமன்’ எனவும், ‘கேண்மியா’ (புறம். 148) எனவும், சாரப்படுமொழியை முன்னடுத்து வந்தன. ‘கொன்னூர்’ (குறுந். 138) எனவும், ‘ஓஒவினிதே’ (குறள். 1176) எனவும், பின்னடுத்து வந்தன. ‘உடனுயிர் போகுக தில்ல’ (குறுந். 57) என ஈறு திரிந்து வந்தது. ‘வருகதில் லம்மவெஞ் சேரி சேர’ (அகம். 276) என்பது பிறிதவணின்றது. அவைதாமெனப் பொதுவகையா னோதினாரேனும், இவ் விலக் கணம் இவ்வோத்தின்கண் உணர்த்தப்படும் அசைநிலை முதலாகிய மூன்றற்குமெனக் கொள்க. அன்னவையெல்லா மென்றதனான், 4‘மன்னைச் சொல்’ (சொல். 252) ‘கொன்னைச்சொல்’ (சொல். 254) எனத் 5தம்மை யுணர நின்றவழி ஈறு திரிதலும், ‘னகாரை முன்னர்’ (எழுத். 52) என எழுத்துச்சாரியை ஈறு திரிதலுங் கொள்க. (3) 252. கழிவே யாக்க மொழியிசைக் கிளவியென் றம்மூன் றென்ப மன்னைச் சொல்லே. இவ்வோத்தின்கண் உணர்த்தப்படும் மூவகை யிடைச் சொல்லுள் தத்தங் குறிப்பாற் பொருள் செய்குந பொருளுணர்த் துதற் சிறப்புப் பரப்புடைமையான் அதனை முன்னுணர்த்து கின்றார். இதன் பொருள் : கழிவு குறித்து நிற்பதும், ஆக்கங் குறித்து நிற்பதும், ஒழியிசைப் பொருண்மை குறித்து நிற்பதுமென மன்னைச்சொல் மூன்றாம் என்றவாறு. உதாரணம்: ‘சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே’ (புறம். 235) என்புழி மன்னைச்சொல், இனி அது கழிந்த தென்னும் பொருள் குறித்துநின்றது. ‘பண்டு காடும னின்று கயல் பிறழும் வயலாயிற்று’ என்புழி அஃதாக்கம் குறித்து நின்றது. 6‘கூரியதோர் வாண்மன்’ என்புழித் திட்ப மின்றென்றானும் இலக்கணமின் றென்றானும் எச்சமாய் ஒழிந்த சொற்பொருண்மை நோக்கி நின்றது. (4) 253. விழைவே கால மொழியிசைக் கிளவியென் றம்மூன் றென்ப தில்லைச் சொல்லே. இதன் பொருள் : விழைவு குறித்து நிற்பதும், காலங் குறித்து நிற்பதும், ஆண்டொழிந்து நின்ற சொற்பொருளை நோக்கி நிற்பது மெனத் தில்லைச்சொல் மூன்றாம் என்றவாறு. உதாரணம்: வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி யரிவையைப் பெறுகதில் லம்ம யானே (குறுந். 14) என அவளைப் பெறுதற்க ணுளதாகிய விழைவின்கண் வந்தது. ‘பெற்றாங் கறிகதில் லம்மவிவ் வூரே’ (குறுந். 14) எனப் பெற்றகாலத் தறிகவெனக் காலங்குறித்து நின்றது. 7‘வருகதில் லம்மவெஞ் சேரி சேர’ (அகம். 276) என வந்தக்கால் இன்னது செய்வலென்னும் ஒழி யிசைப்பொரு ணோக்கிற்று. (5) 254. அச்சம் பயமிலி காலம் பெருமையென் றப்பா னான்கே கொன்னைச் சொல்லே. இதன் பொருள் : அச்சப்பொருளதும், பயமின்மைப் பொருளதும், காலப் பொருளதும், பெருமைப்பொருளதுமெனக் கொன்னைச் சொல் நான்காம் என்றவாறு. உதாரணம்: கொன்முனை யிரவூர் போலச் சிலவா குகநீ துஞ்சு நாளே (குறுந். 91) என்புழி அஞ்சி வாழுமூர் எனவும், கொன்னே கழிந்தன் றிளமை (நாலடி. 55) என்புழிப் பயமின்றிக் கழிந்தது எனவும், கொன்வரல் வாடை நினதெனக் கொண்டேனோ என்புழிக் காதலர் நீங்கிய காலமறிந்து வந்த வாடை எனவும், கொன்னூர் துஞ்சினும் யாந்துஞ் சலமே (குறுந். 138) என்புழிப் பேரூர் துஞ்சினும் எனவும், கொன்னைச்சொல் நான்கு பொருளும் பட வந்தவாறு கண்டுகொள்க. (6) 255. எச்சஞ் சிறப்பே யையம் மெதிர்மறை முற்றே யெண்ணே தெரிநிலை யாக்கமென் றப்பா லெட்டே யும்மைச் சொல்லே. இதன் பொருள் : எச்சங் குறிப்பது முதலாக ஆக்கங் குறிப்பதீறாக உம்மைச் சொல் எட்டாம் என்றவாறு. உதாரணம்: 8சாத்தனும் வந்தான் என்னுமும்மை, கொற்றனும் வந்தா னென்னும் எச்சங் குறித்து நிற்றலின், எச்சவும்மை. கொற்றனும் வந்தான் என்பதூஉம், இறந்த சாத்தன் வரவாகிய எச்சங் குறித்து நிற்றலின், எச்ச வும்மை. ‘குறவரு மருளுங் குன்றத்துப் படினே’ (மலைபடு. 275) என்பது குன்றத்து மயங்கா தியங்குதற்கண் குறவர் சிறந்தமையாற் சிறப்பும்மை. ஒன்று, இரப்பான்போ லிளிவந்துஞ் சொல்லு முலகம் புரப்பான் போல்வதோர் மதுகையு முடையன் வல்லாரை வழிபட் டொன்றறிந் தான்போ னல்லார்கட் டோன்று மடக்கமு முடைய னில்லோர் புன்க ணீகையிற் றணிக்க வல்லான் போல்வதோர் வண்மையு முடையன் (கலி. 47) என்புழி இன்னானென்று துணியாமைக்கண் வருதலின் ஐயவும்மை. சாத்தன் வருதற்கு முரியன் என்பது, வாராமைக்கு முரிய னென்னும் எதிர் மறையை ஒழிபாகவுடைத்தாய் நிற்றலின், எதிர்மறையும்மை. தமிழ்நாட்டு மூவேந்தரும் வந்தார் என எஞ்சாப் பொருட்டாகலான் முற்றும்மை. ‘நிலனு நீருந் தீயும் வளியுமாகாயமு மெனப் பூதமைந்து’ என்புழி எண்ணுதற்கண் வருதலின் எண்ணும்மை. “இரு நில மடிதோய்தலிற் றிருமகளு மல்லள்; அரமகளு மல்லள்; இவள் யாராகும்” என்றவழித் தெரிதற் பொருட்கண் வருதலிற் தெரிநிலையும்மை. திருமகளோ அர மகளோ என்னாது அவரை நீக்குதலின், ஐயவும்மையின் வேறாத லறிக. ஆக்கவும்மை வந்தவழிக் கண்டுகொள்க. உரையாசிரியர் நெடியனும் வலியனுமாயினான் என்புழி உம்மை ஆக்கங்குறித்து நிற்றலின் ஆக்கவும்மை யென்றார். ‘செப்பே வழீஇயினும் வரைநிலை யின்றே’ (சொல். 15) என்னுமும்மை, வழுவை யிலக்கண மாக்கிக் கோடல் குறித்து நின்றமையின் ஆக்கவும்மை என்பாரு முளர். பால் உணவும் ஆயிற்று என்றால், அதுவே மருந்துமாயிற்று என வருதல் (ஆக்கம்). (7) 256. பிரிநிலை வினாவே யெதிர்மறை யொழியிசை தெரிநிலைக் கிளவி சிறப்பொடு தொகைஇ யிருமூன் றென்ப வோகா ரம்மே. இதன் பொருள் : பிரிநிலைப் பொருட்டாவது முதலாக ஓகாரம் அறுவகைப் படும் என்றவாறு. உதாரணம்: ‘யானோ தேறேனவர் பொய்வழங் கலரே’ (குறுந். 21) என்பது தேறுவார் பிறரிற் பிரித்தலிற் பிரிநிலை யெச்ச மாயிற்று. சாத்தனுண்டானோ என்பது வினாவோகாரம். யானோ கொள்வேன் என்பது கொள்ளே னென்னு மெதிர்மறை குறித்து நிற்றலின், எதிர்மறை யோகாரமாம். கொளலோ கொண்டான் என்பது, கொண்டுய்யப் போயினானல்ல னென்பது முதலாய ஒழியிசை நோக்கி நிற்றலின் ஒழியிசையோ காரம். “திருமகளோ அல்லள் அரமகளோ அல்லள் இவள் யார்?” என்றவழித் தெரிதற் கண் வருதலிற் தெரிநிலையோ காரம். ஓஒபெரியன் என்பது பெருமை மிகுதியுணர்த்தலிற் சிறப்போகாரம். (8) 257. தேற்றம் வினாவே பிரிநிலை யெண்ணே யீற்றசை யிவ்வைந் தேகா ரம்மே. இதன் பொருள் : தேற்றேகார முதலாக ஏகார மைந்து என்றவாறு. உதாரணம்: உண்டோ மறுமை எனத் தெளிவின்கண் வருதலிற் தேற்றேகாரம். நீயே கொண்டாய் என வினாப் பொருள் உணர்த்தலின் வினாவேகாரம். அவருளிவனே கள்வன் எனப் பிரித்தலிற் பிரிநிலை யேகாரம். நிலனே நீரே தீயே வளியே என எண்ணுதற்கண் வருதலின் எண்ணேகாரம். ‘கடல்போற் றோன்றல காடிறந் தோரே’ (அகம். 1) என்பது செய்யு ளிறுதிக் கண் வருதலின் ஈற்றசையேகாரம். ‘வாடா வள்ளியங் காடிறந் தோரே’(குறுந்.216) எனச் செய்யுளிடையும் வருதலின் ஈற்றசை யென்பது மிகுதி நோக்கிச் சென்ற குறி. இஃ தசை நிலையாயினும் ஏகார வேறுபாடாகலின் ஈண்டுக் கூறினார். (9) 258. வினையே குறிப்பே இசையே பண்பே யெண்ணே பெயரோ டவ்வறு கிளவியும் கண்ணிய நிலைத்தே யெனவென் கிளவி. இதன் பொருள் : வினை முதலாகிய ஆறு பொருண்மையுங் குறித்து வரும் என வென்னு மிடைச்சொல் என்றவாறு. உதாரணம்: ‘மலைவான் கொள்கென உயர்பலி தூஉய்’ (புறம். 143) என வினைப் பொருண்மையும், ‘துண்ணெனத் துடித்தது மனம்’ எனக் குறிப்புப் பொருண்மையும், ஒல்லென வொலித்தது என இசைப் பொருண்மையும், வெள்ளென விளர்த்தது எனப் பண்புப் பொருண்மையும், நிலனென நீரெனத் தீயென வளியென என எண்ணுப்பொருண்மையும், ‘அழுக்கா றெனவொரு பாவி’ (குறள். 168) எனப் பெயர்ப் பொருண்மையுங் குறித்து, எனவென்னுஞ் சொல் வந்தவாறு கண்டு கொள்க. (10) 259. என்றென் கிளவியு மதனோ ரற்றே. இதன் பொருள் : என்றென்னு மிடைச்சொல்லும் என வென்பது போல அவ் வாறு பொருளுங் குறித்து வரும் என்றவாறு. உதாரணம்: ‘நரைவரு மென்றெண்ணி’ (நாலடி. 11) எனவும்; ‘விண் ணென்று விசைத்தது’ எனவும், ‘ஒல்லென் றொலிக்கு மொலிபுன லூரற்கு’ (ஐந்திணை ஐம்பது 28) எனவும், பச்சென்று பசுத்தது எனவும், நிலனென்று நீரென்று தீயென்று எனவும், பாரியென் றொருவனுளன் எனவும் வரும். (11) 260. விழைவின் றில்லை தன்னிடத் தியலும். இதன் பொருள் : ‘அப்பான் மூன்றே தில்லைச்சொல்’ (சொல். 253) என்று சொல்லப்பட்ட மூன்றனுள், விழைவின்கண் வருந் தில்லை தன்மைக் கணல்லது வாராது என்றவாறு. தன்மைக்கண் வருதல் மேற்காட்டப்பட்டனவற்றுள்ளும் பிறாண்டுங் கண்டு கொள்க. இடம் வரையறுத் தோதாமையின், விழைவின்றில்லை தன்மைக்கண் வருதலும் மேலே பெறப்பட்ட தனைப் பின்னுங் கூறினார், ஏனையிடத்து வாராதென்று நியமித்தற் கென்பது. (12) 261. தெளிவி னேயுஞ் சிறப்பி னோவு மளபி னெடுத்த விசைய என்ப. இதன் பொருள் : தெளிவின்கண் வரும் ஏகாரமுஞ் சிறப்பின்கண் வரும் ஓகாரமும் அளபான் மிக்க இசையை யுடையவென்று சொல்லுவர் ஆசிரியர் என்றவாறு. அளபெடையாய் வருதல் மேற்காட்டப்பட்டனவற்றுள் ளும் பிறாண்டுங் கண்டுகொள்க. (13) 262. மற்றென் கிளவி வினைமாற் றசைநிலை யப்பா லிரண்டென மொழிமனார் புலவர். இதன் பொருள் : மற்றென்னுஞ்சொல் வினைமாற்றும் அசை நிலையு மென இரண்டாம் என்றவாறு. உதாரணம்: ‘மற்றறிவா நல்வினை யாமிளையம்’ (நாலடி. 9) என்றவழி அறஞ்செய்தல் பின்னறிவாமென அக்காலத்து வினை மாற்றுதலான் மற்றென்பது வினைமாற்றின்கண் வந்தது. ‘அதுமற் றவலங் கொள்ளாது நொதுமற் கலுழும்’ (குறுந். 12) என அசை நிலையாய் வந்தது. 9கட்டுரையிடையும் மற்றோ என அசைநிலை யாய் வரும். (14) 263. எற்றென் கிளவி யிறந்த பொருட்டே. இதன் பொருள் : எற்றென்னுஞ் சொல் இறந்த பொருண் மைத்து என்றவாறு. (எ-டு) ‘எற்றென் னுடம்பி னெழினலம்’ என்பது என்னல மிறந்த தென்னும் பொருள்பட நின்றது. ‘எற்றேற்ற மில்லாருள் யானேற்ற மில்லாதேன்’ என்பதூஉம் இதுபொழுது துணி வில்லாருள் துணிவில்லா- தேன் யான்என்று துணிவிறந்த தென்பது பட நின்றது. (15) 264. மற்றைய தென்னுங் கிளவி தானே சுட்டுநிலை யொழிய இனங்குறித் தன்றே. இதன் பொருள்: மற்றையதெனப் பெயர்க்கு முதனிலை யாய் வரும் மற்றை யென்னும் ஐகாரவீற் றிடைச்சொல் சுட்டப்பட்டதனை ஒழித்து, அதனினங் குறித்து நிற்கும் என்றவாறு. ஆடை கொணர்ந்தவழி அவ்வாடை வேண்டாதான் மற்றையது கொணாவென்னும். அஃது அச்சுட்டிய வாடை யொழித்து அதற்கினமாகிய பிறவாடை குறித்து நின்றவாறு கண்டுகொள்க. 10பெரும்பான்மையும் முதனிலையாய் நின்றல்லது அவ் விடைச்சொல் பொருள் விளக்காமையின், ‘மற்றையதென்னுங் கிளவி’ என்றார். சிறு பான்மை மற்றையாடை எனத் தானேயும் வரும். மற்றையஃது மற்றையவன் என்னுந் தொடக்கத்தனவும் அவ்விடைச்சொன் முதனிலையாய பெயர். (16) 265. மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும். இதன் பொருள் : மன்ற வென்னுஞ்சொல், தெளிவுப் பொருண்மை யை யுணர்த்தும் என்றவாறு. உதாரணம்: கடவு ளாயினு மாக மடவை மன்ற வாழிய முருகே (நற். 34) என வரும். மடவையே யென்றவாறாம். (17) 266. தஞ்சக் கிளவி யெண்மைப் பொருட்டே. ‘முரசுகெழு தாயத் தரசோ தஞ்சம்’ (புறம். 73) எனத் தஞ்சக் கிளவி அரசுகொடுத்த லெளிதென எண்மைப் பொரு ளுணர்த்திய வாறு கண்டு கொள்க. (18) 267. அந்தி லாங்க வசைநிலைக் கிளவியென் றாயிரண் டாகு மியற்கைத் தென்ப. இதன் பொருள் : அந்திலென்னுஞ் சொல், ஆங்கென்னும் இடப் பொருளுணர்த்துவதும் அசைநிலையுமென இரண்டாம் என்றவாறு. உதாரணம்: ‘வருமே சேயிழை யந்திற் கொழுநற் காணிய’ (குறுந். 293) என்புழி ஆங்கு வருமென்றவாறாம். ‘அந்திற், கச்சினன் கழலினன்’ (அகம். 76) என வாளாதே அசைத்து நின்றது. (19) 268. கொல்லே யையம். குற்றிகொல்லோ மகன்கொல்லோ எனக் கொல் ஐயத்துக் கண் வந்தவாறு. (20) 269. 11எல்லே யிலக்கம். எல்லென்பது உரிச்சொ னீர்மைத்தாயினும், ஆசிரியர் இடைச் சொல்லாக ஓதினமையான், இடைச்சொல்லென்று கோடும். ‘எல்வளை’ (புறம். 24) என எல்லென்பது இலங்குதற்கண் வந்தவாறு. (21) 270. இயற்பெயர் முன்ன ராரைக் கிளவி பலர்க்குரி யெழுத்தின் வினையொடு முடிமே. இதன் பொருள் : இயற்பெயர் முன்னர் வரும் ஆரென்னு மிடைச்சொற் பலரறிசொல்லான் முடியும் என்றவாறு. ஈண்டியற்பெயரென்றது இருதிணைக்கும் அஃறிணை யிருபாற்கு முரிய பெயரை. உதாரணம்: பெருஞ் சேந்தனார் வந்தார், முடவனார் வந்தார், முடத்தாமக் கண்ணியார் வந்தார், தந்தையார் வந்தார் எனவும்; நரியார் வந்தார் எனவும் வரும். தாம், தான், எல்லாம், நீயிர், நீ என்னும் ஐந்து மொழித்து அல்லா வியற்பெய ரெல்லாவற்று முன்னரும் அஃறிணையியற் பெய ரெல்லாவற்று முன்னரும் ஆரைக்கிளவி வருதலின், பெரும் பான்மை குறித்து ‘இயற்பெயர் முன்னர்’ என்றார். நம்பியார் வந்தார், நங்கையார் வந்தார் எனச் சிறுபான்மை உயர் திணைப் பெயர் முன்னர் வருதல் ஒன்றென முடித்த லென்பதனாற் கொள்க. ஆரைக்கிளவி கள்ளென்பதுபோல ஒற்றுமைப்பட்டுப் பெயரீறாய் நிற்றலின், ஆரைக்கிளவி பலரறி சொல்லான் முடியு மென்றது அதனை யீறாகவுடைய பெயர் பலரறி சொல்லான் முடியு மென்றவாறாம். ‘பலர்க்குரி யெழுத்தின் வினையொடு முடிமே’ என ஆரைக் கிளவிய தியல்புணர்த்தவே, அஃது உயர்த்தற் பொருட்டாதலும், திணைவழுவும் பால்வழுவும் அமைத்தலும் பெற்றாம். 12ஒருமைப்பெயர் முன்னர் ஒருமை சிதையாமல் ஆரைக் கிளவி வந்து பலரறிசொல்லான் முடிதலின், ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியின் வேறாத லறிக. (22) 271. அசைநிலைக் கிளவி யாகுவழி யறிதல். இதன் பொருள் : ஆரைக்கிளவி அசைநிலையா மிடமறிக என்றவாறு. உதாரணம்: ‘பெயரி னாகிய 13தொகையுமா ருளவே’ (சொல். 67) எனவும், ‘எல்லா வுயிரொடுஞ் செல்லுமார் முதலே’ (எழுத். 61) எனவும் வரும். ‘ஆகுவழியறித’ லென்றதனான், அசைநிலை யாங்கால் உம்மை முன்னரும், உம்மீற்று வினைமுன்னரு மல்லது வாராமை யறிக. சிறுபான்மை பிறாண்டு வருமேனுங் கொள்க. (23) 272. ஏயுங் குரையு மிசைநிறை யசைநிலை யாயிரண் டாகு மியற்கைய வென்ப. இதன் பொருள்: ஏயென்னு மிடைச்சொல்லும் குரையென்னு மிடைச் சொல்லும் இசைநிறையும் அசைநிலை யுமென ஓரொன்றி ரண்டாம் என்றவாறு. உதாரணம்: ‘ஏஎ யிஃதொத்த னாணிலன் நன்னொடு காண்’ (கலி. 62) என்பது இசைநிறை. ஏஎயென் சொல்லுக என்பது அசைநிலை. ‘அளிதோ தானேயது பெறலருங் குரைத்தே’ (புறம். 5) என்பது இசைநிறை. ‘பல்குரைத் துன்பங்கள் சென்றுபடும்’ (குறள். 1045) என்பது அசைநிலை. தொடர்மொழி முதற்கட் பிரிந்துநின்றல்லது பெரும் பான்மையும் ஏகாரம் இசைநிறையும் அசைநிலையு மாகாமை யின், சார்ந்த மொழியோடு ஒன்றுபட்டிசைத்து இடையும் இறுதி யும் நிற்குந் தேற்றேகார முதலாயின வற்றோடு ஒருங்கு கூறாது வேறு கூறினார். அஃதேல், இதனை நிரனிறைப் பொருட்டாகக் கொண்டு ஏ இசை நிறை; குரை அசைநிலை யென்றாரால் உரையாசிரிய ரெனின், அற்றன்று. மற்று அந்தில் என்பனபோலப் பொருள் வகையான் வேறுபடுவனவற்றை இரண்டாமென்பதல்லது, சொல் வகையான் இரண்டாகிய சொல்லை இரண்டா மென்றதனான் ஒரு பயனின்மையின், அவர்க்கது கருத்தன் றென்க. அல்லதூஉம், 14ஒரு சொல்லே இசைநிறையும் அசைநிலையுமாக லுடைமை யான் அவற்றையுடன்கூறினா ரென்னாக்கால், இசைநிறையும் அசை நிலையும் ஒருங்கு மயங்கக்கூறலா மாகலானும் அவர்க்கது கருத்தன்மை யுணர்க. (24) 273. மாவென் கிளவி வியங்கோ ளசைச்சொல். இதன் பொருள்: மாவென்னு மிடைச்சொல் வியங்கோளைச் சார்ந்து அசைநிலையாய் வரும் என்றவாறு. உதாரணம்: ‘புற்கை 15யுண்கமா கொற்கை யோனே’ எனவரும். (25) 274. மியாயிக மோமதி யிகுஞ்சி னென்னு மாவயி னாறு முன்னிலை யசைச்சொல். இதன் பொருள் : மியா முதலாகிய ஆறும் முன்னிலை மொழியைச் சார்ந்து வரும் அசைச்சொல்லாம் என்றவாறு. உதாரணம்: கேண்மியா சென்மியா எனவும், ‘கண்பனி யான்றிக வென்றி தோழி’ எனவும், ‘காமஞ் செப்பாது கண்டது மொழி மோ’ (குறுந். 2) எனவும், ‘உரைமதி வாழியோ வலவ’ எனவும், ‘மெல்லம் புலம்ப கண்டிகும்’ எனவும், ‘காப்பும் பூண்டிசிற் கடையும் போகலை’ (அகம். 7) எனவும் வரும். (26) 275. அவற்றுள் இகுமுஞ் சின்னு மேனை யிடத்தொடு தகுநிலை யுடைய வென்மனார் புலவர். இதன் பொருள் : மேற்கூறப்பட்ட ஆறனுள், இகுமுஞ் சின்னும் படர்க்கைச் சொல்லொடுந் தன்மைச்சொல்லொடும் பொருந்து நிலையுடையவென எய்தியதன்மேற் சிறப்புவிதி வகுத்தவாறு. உதாரணம்: ‘கண்டிகு மல்லமோ’ (ஐங்குறு. 121) எனவும், ‘கண்ணும் படுமோ வென்றிசின் யானே’ (நற். 61) எனவும், தன்மைக்கண் வந்தன. ‘புகழ்ந் திகு மல்லரோ பெரிதே’ எனவும், ‘யாரஃ தறிந்திசி னோரே’ (குறுந். 18) எனவும் படர்க்கைக்கண் வந்தன. (27) 276. அம்மகேட் பிக்கும். இதன் பொருள் : அம்மவென்னு மிடைச்சொல் ஒருவனை ஒருவன் ஒன்று கேளென்று சொல்லுதற்கண் வரும் என்றவாறு. உதாரணம்: ‘அம்ம வாழி தோழி’ (ஐங். 31) என வரும். மியா இக முதலாகிய அசைநிலை ஒரு பொருளுணர்த்தா வாயினும் முன்னிலைக்க ணல்லது வாராமையான் அவ்விட முணர் விக்குமாறு போல, அம்ம வென்பதூஉம் ஒரு பொருளுணர்த் தாதாயினும் ஒன்றனைக் கேட்பிக்குமிடத்தல்லது வாராமையான் அப்பொருளுணர்விக்கு மென்பது விளக்கிய, ‘கேட்பிக்கு’ மென்றார். (28) 277. ஆங்க வுரையசை. இதன் பொருள் : ஆங்கவென்னு மிடைச்சொல் கட்டுரைக்கண் அசை நிலையாய் வரும் என்றவாறு. உதாரணம்: ‘ஆங்கக் குயிலு மயிலுங் காட்டி’ என வரும். (29) 278. ஒப்பில் போலியு 16மப்பொருட் டாகும். இதன் பொருள்: ஒப்புமை யுணர்த்தாத போலிச்சொல்லும் ஆங்கவென்பது போல உரையசையாம் என்றவாறு. உதாரணம்: மங்கலமென்ப தோரூருண்டு போலும் என வரும். போலும் போல்வது என்னுந் தொடக்கத்துப் பலவாய் பாடுந் தழுவுதற்குப் ‘போலி’ யென்றார். ‘நெருப்பழற் சேர்ந்தக்கா னெய்போல் வதூஉம்’ (நாலடி. 124) என்பதுமது. அசைநிலையும் பொருள் குறித்தல்லது நில்லாமையின் ‘அப் பொருட் டாகும்’ என்றார். (30) 279. யாகா பிறபிறக் கரோபோ மாதென வரூஉம் ஆயேழ் சொல்லு மசைநிலைக் கிளவி. இதன் பொருள் : யா முதலாகிய ஏழிடைச் சொல்லும் அசை நிலையாம் என்றவாறு. உதாரணம்: யா பன்னிருவர் மாணாக்கருளர் அகத்தியனார்க்கு எனவும், ‘புறநிழற் பட்டாளோ விவளிவட் காண்டிகா’ (கலி. 99) எனவும், ‘தான் பிற வரிசை யறிதலிற் றன்னுந் தூக்கி’ (புறம். 140) எனவும், ‘அதுபிறக்கு’ எனவும், ‘நோதக விருங்குயி லாலுமரோ’ (கலி. 33) எனவும், ‘பிரியின் வாழா தென்போ தெய்ய’ எனவும், ‘விளிந்தன்று மாதவர்த் தெளிந்த வென் நெஞ்சே’ (நற். 178) எனவும் வரும். இடம் வரையறாமையின் இவை மூன்றிடத்திற்கு முரிய. 17ஆங்கவும் ஒப்பில்போலியும் உரை தொடங்குதற்கண்ணும் ஆதரமில்வழியும் வருதலின் வேறு கூறினார். (31) 280. ஆக வாக லென்ப தென்னு மாவயின் மூன்றும் பிரிவி லசைநிலை. இதன் பொருள் : ஆக, ஆகல், என்பது என்னு மூன்றிடைச் சொல்லும், அசைநிலையாங்கால், இரட்டித்து நிற்கும் என்றவாறு. பிரிவிலசைநிலை யெனவே தனித்து நின்று அசைநிலை யாகா வென்பதாம். ஒருவன் யானின்னேன் என்றானும், 18நீ யின்னை என்றானும், அவனின்னன் என்றானும் கூறியவழிக் கேட்டான் ஆகஆக, ஆகல்ஆகல் என்னும்; இவை உடம்படாமைக்கண்ணும் ஆதரமில் வழியும் வரும். ஒருவனொன் றுரைப்பக் கேட்டான், என்பதுஎன்பது என்னும்; அது நன்குரைத்தற்கண்ணும் இழித்தற் கண்ணும் வரும். பிறாண்டுவரினும் வழக்கு நோக்கி யுணர்ந்து கொள்க. (32) 281. ஈரள பிசைக்கு மிறுதியி லுயிரே யாயிய னிலையுங் காலத் தானு மளபெடை நிலையுங் காலத் தானு மளபெடை யின்றித் தான்வருங் காலையு முளவென மொழிப பொருள்வேறு படுதல் குறிப்பி னிசையா னெறிப்படத் தோன்றும். இதன் பொருள் : இரண்டு மாத்திரையை யுடைத்தாய மொழிக் கீறாகா தெனப்பட்ட 19ஒளகாரம், பிரிவிலசை நிலையென மேற்கூறப் பட்டனபோல இரட்டித்து நிற்குமிடத்தும், இரட்டி யாது அளபெடையாய் நிற்குமிடத்தும், அளபெடை யின்றித் தான்வரு மிடத்தும், பொருள் வேறுபடுதலுள; அப்பொருள் வேறுபாடு சொல்வான் குறிப்பிற்குத் தகுமோசை வேறு பாட்டாற் புலப்படும் என்றவாறு. பொருள் வேறுபாடாவன வழக்கு நோக்கச் சிறப்பும் மாறு பாடுமாம். உதாரணம்: ஒளஒளவொருவன் றவஞ் செய்தவாறு என்றவழிச் சிறப்புத் தோன்றும். ஒரு தொழில் செய்வானை ஒளஒள வினிச் சாலும் என்றவழி, மாறுபாடு தோன்றும். ஒளஉ வொருவ னிரவலர்க் கீந்தவாறு, ஒளஉவினி வெகுளல் எனவும்; ஒளவவன் முயலுமாறு, ஒளவினித் தட்டுப்புடையல் எனவும்; அளபெடுத் தும் அளபெ டாதும் வந்தவழியும், அப்பொரு டோன்றியவாறு கண்டுகொள்க. இதனை இக்காலத்து ஓகாரமாக வழங்குப. பிறபொருள்படுமா யினும் அறிந்து கொள்க. ஈரளபிசைக்கு மென்றேயொழியின் நெட்டெழுத் தெல்லா வற்று மேலும், இறுதியிலுயி ரென்றேயொழியின் எகர ஓகரத்து மேலுஞ் சேறலான், ‘ஈரளபிசைக்கு மிறுதியி லுயிர்’ என்றார். இது தத்தங் குறிப்பிற் பொருள் செய்வதாயினும் அடுக்கி வருத லுடைமையான் ஈண்டு வைத்தார். (33) 282. நன்றீற் றேயு மன்றீற் றேயு மந்தீற் றோவு மன்னீற் றோவு மன்ன பிறவுங் குறிப்பொடு கொள்ளும். நன்றீற்றேயும் அன்றீற்றேயுமாவன நன்றே அன்றே என்பன. அந்தீற் றோவும் அன்னீற்றோவுமாவன அந்தோ அன்னோ என்பன. நன்றின தீற்றின்கண் ஏயென விரியும். இவ்விரிவு ஏனையவற்றிற்கு மொக்கும். நன்றீற்றே யென்பதனான் ‘நம்மூர்ந்து வரூஉம் இகர ஐகாரமும்’ (சொல். 163) என்புழிப்போலச் சொன்முழுவதுங் கொள்ளப்படும். ஒழிந்தனவு மன்ன. குறிப்பொடுகொள்ளு மென்றது - மேலதுபோல இவையுங் குறிப்போசையாற் பொருளுணர்த்து மென்றவாறு. ஒருவன் ஒன்றுரைத்தவழி அதற்கு மேவாதான் நன்றே நன்றே, அன்றே யன்றே என அடுக்கலும் வரும்; அவை மேவாமைக்குறிப்பு விளக்கும். அவனன்றே யிது செய்வான் என அடுக்காது நின்றவழி, அன்றீற் றேவுக்குத் தெளிவு முதலாகிய பிறபொருளும் படும். ஏனையிரண்டும் அடுக்கியும் அடுக்காதும் இரங்கற்குறிப்பு வெளிப்படுக்கும். இவையும் தத்தங் குறிப்பிற் பொருள் செய்குவன. அன்னபிறவு மென்றதனான், அதோ அதோ, சோ சோ, ஒக்கும் ஒக்கும் என்னுந் தொடக்கத்தன கொள்க. (34) 283. எச்ச வும்மையு மெதிர்மறை யும்மையுந் தத்தமுண் மயங்கு முடனிலை யிலவே. இனி, மேற்கூறப்பட்ட இடைச்சொல்லின்கட் படு மிலக்கண வேறுபா டுணர்த்துகின்றார். இதன் பொருள்: எச்சவும்மை நின்றவழி எஞ்சு பொருட்கிளவியாம் எதிர் மறையும்மைத் தொடர் வந்து தம்முண் மயங்குதலில என்றவாறு. 20சாத்தனும் வந்தான் கொற்றனும் வரலுமுரியன் எனின் இயையாமை கண்டுகொள்க. 21ஏனையும்மையொடு மயங்குதல் விலக்காராயிற் றென்னை யெனின், அவை எஞ்சுபொருட்கிளவியவாய் வாராமையி னென்பது. (35) 284. எஞ்சுபொருட் கிளவி செஞ்சொ லாயிற் பிற்படக் கிளவார் முற்படக் கிளத்தல். இதன் பொருள் : எச்சவும்மையாற் றழுவப்படும் எஞ்சுபொருட் கிளவி உம்மையில் சொல்லாயின், அவ்வும்மையில் சொல்லை அவ் வும்மைத் தொடர்க்குப் பின் சொல்லாது முன் சொல்லுக என்றவாறு. உதாரணம்: சாத்தன் வந்தான் கொற்றனும் வந்தான் என வரும். கொற்றனும் வந்தான் சாத்தன் வந்தான் எனப் பிற்படக் கிளப்பின், முற் கூறியதனை விலக்குவதுபோன்று பொருள் கொள்ளாமை கண்டுகொள்க. அடகுபுலால் பாகு பாளிதமு முண்ணான் கடல்போலுங் கல்வி யவன் என்பது மது. உம்மையடாதே தானே நிற்றலிற் செஞ்சொலென்றார். செஞ்சொலாயின் முற்படக் கிளக்க வெனவே, 22எஞ்சு பொருட்கிளவி உம்மையொடு வரிற் பிற்படக் கிளக்க வென்ற வாறாம். (36) 285. முற்றிய வும்மைத் தொகைச்சொன் மருங்கி னெச்சக் கிளவி யுரித்து மாகும். இதன் பொருள்: முற்றும்மை யடுத்து நின்ற தொகைச்சொல் லிடத்து எச்சச்சொல் லுரித்துமாம் என்றவாறு. உதாரணம்: பத்துங்கொடால், அனைத்துங்கொடால் என்புழி 23முற்றும்மை தம்பொருளுணர்த்தாது சிலவெஞ்சக் கொடு வென்னும் பொருள் தோன்றி நின்றவாறு கண்டுகொள்க. முற்றுதலென்னும் பொருளது பண்பு முற்றியவும்மையென ஒற்றுமை நயத்தாற் சொன்மே லேறி நின்றது. உரித்துமாகுமெனவே, எச்சப்பொருண்மை குறியாது நிற்றலே பெரும்பான்மை யென்பதாம். ஏற்புழிக்கோட லென்பதனான் எச்சப்படுவது எதிர்மறை வினைக்க ணென்று கொள்க. பத்துங்கொடு என்பது பிறவுங் கொடு வென்பது பட நிற்றலின், விதிவினைக்கண்ணும் எச்சங் குறிக்கு மென்பாரு முளர். இப்பொழுது பத்துங்கொடு என்பது கருத்தாயின், இப்பொழுது பத்துக்கொடு என உம்மையின்றியும் பொருள் பெறப்படும்; பத்துங்கொடு பிறவுங்கொடு என்பது கருத்தாயின், இஃதெச்சவும்மையாகலின் ஈண்டைக் கெய்தாது; அதனான் அது பொருத்தமின் றென்க. இவை மூன்று சூத்திரத்தானும் வழுவற்க வென இடைச் சொற் பற்றி மரபுவழுக் காத்தவாறு. (37) 286. ஈற்றுநின் றிசைக்கு மேயெ னிறுதி கூற்றுவயி னோரள பாகலு முரித்தே. இதன் பொருள் : செய்யு ளிறுதிக்கண் நின்றிசைக்கும் ஈற்றசையே காரங் கூற்றிடத்து ஒருமாத்திரைத் தாகலு முரித்து என்றவாறு. உதாரணம்: ‘கடல்போற் றோன்றல 24காடிறந் தோரே’ (அகம். 1) என்புழி ஓரளபாயினவாறு கண்டுகொள்க. தேற்ற முதலாயின நீக்கி ஈற்றசையே தழுவுதற்கு ‘ஈற்று நின்றிசைக்கு’ மென்றார். செய்யுளிடை நிற்பதனை நீக்குதற்கு ஈற்று நின்றிசைக்கு மென்றே யொழியாது ‘இறுதி’ யென்றார். மேனின்ற செய்யுளுறுப்பொடு பொருந்தக் கூறுதற்க ணென்பார் ‘கூற்றுவயி’ னென்றார். உம்மை: எதிர்மறை. (38) 287. உம்மை யெண்ணு மெனவெ னெண்ணு தம்வயிற் றொகுதி கடப்பா டிலவே. இதன் பொருள் : உம்மையான் வருமெண்ணும், எனவான் வருமெண்ணும், இறுதிக்கட் டொகை பெறுதலைக் கடப்பாடாக வுடையவல்ல என்றவாறு. எனவே, தொகை பெற்றும் பெறாதும் வருமென்பதாம். உதாரணம்: உயர்திணைக் குரிமையு மஃறிணைக் குரிமையு மாயிரு திணைக்குமோ ரன்ன வுரிமையு மம்மூ வுருபின (சொல். 160) எனவும், ‘இசையினுங் குறிப்பினும் பண்பினுந் தோன்றி’ (சொல். 297) எனவும், ‘நிலனென நீரெனத் தீயென வளியென நான்கும்’ எனவும், ‘உயிரென வுடலென வின்றி யமையா’ எனவும் அவ்விரு வகை யெண்ணுந் தொகை பெற்றும் பெறாதும் வந்தவாறு. தொகையெனப் பொதுப்படக் கூறிய வதனான் எண்ணுப் பெயரே யன்றி, அனைத்தும் எல்லா மென்னுந் தொடக்கத் தனவுங் கொள்க. (39) 288. எண்ணே கார மிடையிட்டுக் கொளினு மெண்ணுக்குறித் தியலு மென்மனார் புலவர். இதன் பொருள் : சொற்றொறும் வாராது எண்ணேகாரம் இடையிட்டு வரினும் எண்ணுதற் பொருட்டாம் என்றவாறு. உதாரணம்: மலைநிலம் பூவே துலாக்கோலென் றின்னர் எனவும், தோற்ற மிசையே நாற்றஞ் சுவையே யுறலோ டாங்கைம் புலனென மொழிப எனவும் வரும். எண்ணுக் குறித்து வருவன எண்ணப்படும் பெயரெல்லா வற்றொடும் வருதன் மரபாயினும், இடையிட்டு வரினும் அமைக வென அமைத்தவாறு. எனவும் என்றும் சொற்றொறும் வாராது ஒருவழி நின்றும் எண்ணுக் குறிக்குமாலெனின், அவை ஒருவழி நின்று எல்லா வற்றோடும் ஒன்றுதலின் ஆண்டாராய்ச்சி யில்லை யென்க. 25பிறவெண் ஓடாநின்றவழி ஏகாரவெண் இடை வந்ததா யினும், ஓடா நின்ற பிறவெண்ணேயாமென உரைத்தாரால் உரை யாசிரியரெனின், அவ்வாறு விராயெண்ணியவழிப் பிற வெண்ணாற் பெயர் கொடுப்பின் அதனை ஏகார வெண்ணென் பாரையும் விலக்காமையானும், பிறவெண்ணா மென்றதனாற் பெறப்படுவதொரு பயனின்மையானும், அவர்க்கது கருத்தன் றென்க. (40) 289. உம்மை தொக்க வெனாவென் கிளவியு மாவீ றாகிய வென்றென் கிளவியு மாயிரு கிளவியு மெண்ணுவழிப் பட்டன. இதன் பொருள் : உம்மை தொக்கு நின்ற எனாவென்னு மிடைச் சொல்லும் என்றாவென்னு மிடைச்சொல்லும் இரண்டும் எண்ணு மிடத்து வரும் என்றவாறு. உதாரணம்: நிலனெனா நீரெனா எனவும், நிலனென்றா நீரென்றா எனவும் வரும். 26உம்மைதொக்க வெனாவென்கிளவி யெனவே, எனாவுமென அச்சொல் உம்மொடு வருதலுமுடைத்தென்பதாம். உம்மொடு வந்தவழி அவ்வெண் உம்மைஎண்ணு ளடங்கும். எண்ணுவழிப்பட்டன வெனவே, அவை சொற்றொறும் வருதலே யன்றி இடையிட்டும் வருமென்பதாம். ‘பின்சா ரயல்புடை தேவகை யெனா’ (சொல். 82) எனவும், ‘ஓப்பிற் புகழிற் பழியி னென்றா’ (சொல். 72) எனவும் இடையிட்டு வந்தவாறு, இவை எண்ணுதற்கண்அல்லது வாராமை யானும், ‘அவற்றின் வரூஉ மெண்ணி னிறுதியும்’ (சொல். 290) எனச் சூத்திரஞ் சுருங்குதற் சிறப்பினானும், இவற்றினை ஈண்டு வைத்தார். (41) 290. 27அவற்றின் வரூஉ மெண்ணி னிறுதியும் பெயர்க்குரி மரபிற் செவ்வெ ணிறுதியு மேயி னாகிய வெண்ணி னிறுதியும் யாவயின் வரினுந் தொகையின் றியலா. இதன் பொருள் : மேற்சொல்லப்பட்ட எனா என்றா என்பனவற்றான் வரும் எண்ணி னிறுதியும், இடைச்சொல்லா னன்றிப் பெயரா னெண்ணப்படுஞ் செவ்வெ ணிறுதியும், ஏகாரத்தான் வரும் எண்ணினிறுதியும், யாதானுமோரிடத்து வரினுந் தொகையின்றி நில்லா என்றவாறு. உதாரணம்: நிலனெனா நீரெனா விரண்டும் எனவும், நிலனென்றா நீரென்றா விரண்டும் எனவும், நிலநீரென விரண்டும் எனவும், நிலனே நீரேயென விரண்டும் எனவும் தொகை பெற்று வந்தவாறு. செவ்வெண் இடைச்சொல்லெண்ணன் றென்றாராயினும், எண்ணா தலுந் தொகைபெறுதலுமாகிய ஒப்புமையான் ஈண்டுக் கூறினார். (42) 291. உம்மை யெண்ணி னுருபுதொகல் வரையார். இதன் பொருள் : உம்மை யெண்ணின்கண் உருபு தொகுதல் வரையப் படாது என்றவாறு. பிறிதுபிறி தேற்றலும் உருபுதொக வருதலும் நெறிபட வழங்கிய வழிமருங் கென்ப (சொல். 104) என்னும் பொதுவிதியான் 28உம்மை யெண்ணின்கண் உருபு தொகல் பெறப்பட்டமையான், பெற்றதன் பெயர்த்துரை நியமப் பொருட்டாகலான் உம்மை யெண்ணி னுருபுதொகல் வரையப் படாது; ஏனையெண்ணின்கண் அவை வரையப்படுமென நியமித்தல் இதற்குப் பயனாகக் கொள்க. குன்றி கோபங் கொடிவிடு பவள மொண்செங் காந்த ளொக்கு நின்னிறம் எனப் பிறவெண்ணின்கண் உருபு தொக்கதாலெனின், அற்றன்று. செவ்வெண் தொகையின்றி நில்லாமையின்அவற்றையென ஒரு சொல் விரிக்கப்படும்; விரிக்கவே, குன்றி முதலாயின எழுவா யாய் நின்றனவா மென்பது. உதாரணம்: பாட்டுங் கோட்டியு மறியாப் பயமி றேக்கு மரம்போ னீடிய வொருவன் ‘இசையினுங் குறிப்பினும் பண்பினும் தோன்றி’ (சொல். 267) என உம்மை யெண்ணின்கண் உருபு தொக்கவாறு கண்டுகொள்க. வரையா ரென்றதனான், ஆண்டும் எல்லாவுருபுந் தொகா; ஐயுங் கண்ணுமே தொகுவனவெனக் கொள்க. யானை தேர் குதிரை காலா ளெறிந்தார் என உம்மையும் உருபும் உடன் றொக்கவழி, உம்மைத்தொகை யென்னாது உருபு தொகை யென்க வென்பது இச்சூத்திரத்திற்குக் கருத்தாக உரைத்தாரால் உரையாசிரிய ரெனின், அஃது உம்மைத் தொகை யாதலின் ஒரு சொன்னடைத்தாய் உருபேற்றானும் பயனிலை கொண்டானும் நிற்கும். அத்தொகையிடை உருபின்மை சிற்றறி வினார்க்கும் புலனாம். அதனான் அஃதவர்க்குக் கருத்தன்மை சொல்ல வேண்டுமோ வென்பது. (43) 292. உம்முந் தாகு மிடனுமா ருண்டே. இதன் பொருள் : வினைசெயன் மருங்கிற் காலமொடு வருவனவற்றுள் உம்மீறு உந்தாய்த் திரிதலு முடைத்து என்றவாறு. உதாரணம்: ‘நீர்க்கோழி கூப்பெயர்க் குந்து’ (புறம். 395) எனவும், ‘நாரரி நறவினாண் மகிழ்தூக் குந்து’ (புறம். 400) எனவும் வரும். வினைசெயன் மருங்கிற் காலமொடு வரும் உம்மென்பது ஏற்புழிக் கோடலென்பதனாற் பெற்றாம். இடனுமாருண்டேயென்றது, இத்திரிபு 29பெயரெச்சத்திற் கீறாயவழி யென்பது கருதிப்போலும். 30தம்மீறு திரிதன் முதலாயின இவ்வோத்தினுட் கூறப்படும் இடைச் சொற்கே யென்பது இதனானும் பெற்றாம். வினையிய லுள்ளுங் கூறப்படு மாயினும், இடைச்சொற் றிரிபாகலான் ஈண்டுக் கூறலும் இயைபுடைத் தென்பது. (44) 293. வினையொடு நிலையினு மெண்ணுநிலை திரியா நினையல் வேண்டு மவற்றவற் றியல்பே. இதன் பொருள் : வினையொடு நிற்பினும் எண்ணிடைச் சொற்கள் தந்நிலை யிற்றிரியா; அவற்றொடு வருங்கால் அவற்றவற்றியல்பு ஆராய்தல் வேண்டும் என்றவாறு. உதாரணம்: உண்டுந் தின்றும் பாடியும் வந்தான் எனவும், உண்ணவெனத் தின்னவெனப் பாடவென வந்தான் எனவும் வரும். ஒழிந்த வெண்ணொடு வருவனவுளவேற் கண்டுகொள்க. பெரும்பான்மையும் பெயரோடல்லது எண்ணிடைச்சொல் நில்லாமையின் அதனை முற்கூறி, சிறுபான்மை வினையொடு நிற்றலுமுடைமை யான் இதனை ஈண்டுக் கூறினார். ‘நினையல் வேண்டு மவற்றவற்றியல்பே’ யென்றதனான், எண்ணி டைச்சொல் முற்றுச்சொல்லும் பெயரெச்சமும் பற்றி வாரா வென்பதூஉம், வினையெச்சத்தோடும் ஏற்பன பற்றி அல்லது வாராவென்பதூஉம், ஆண்டுத் தொகை பெறுதல் சிறுபான்மை யென்பதூஉங் கொள்க. சாத்தன் வந்தான், கொற்றன் வந்தான், வேடன் வந்தான் என மூவரும் வந்தமையாற் கலியாணம் பொலிந்தது எனச் செவ் வெண் தொகை பெற்று வந்ததென்றாரால் உரையாசிரிய ரெனின், அவை எழுவாயும் பயனிலையுமாய் 31அமைந்துமாறுத லின் எண்ணப்படாமையானும், மூவருமென்பது சாத்தன் முதலாயினோர் தொகையாகலானும், அது போலியுரை யென்க. (45) 294. என்று மெனவு மொடுவுந் தோன்றி யொன்றுவழி யுடைய வெண்ணினுட் பிரிந்தே. இதன் பொருள் : என்றும் எனவும் ஒடுவும் என்பன ஒருவழித் தோன்றி எண்ணினுட் பிறவழியும் பிரிந்து சென்று ஒன்றுமிடமுடைய என்றவாறு. உதாரணம்: ‘வினைபகை யென்றிரண்டி னெச்சம்’ (குறள். 674) எனவும், ‘கண்ணிமை நொடியென’ (நூன்மரபு 7) எனவும், ‘பொருள்கருவி காலம் வினையிடனொ டைந்தும்’ (குறள். 675) எனவும், அவை ஒருவழி நின்று, வினையென்று, பகையென்று எனவும், கண்ணிமையென நொடியென எனவும், பொருளொடு கருவியொடு காலத்தொடு வினையொடு இடத்தொடு எனவும், நின்றவிடத்துப் பிரிந்து பிறவழிச் சென்று ஒன்றியவாறு கண்டுகொள்க. ‘ஒன்று வழியுடைய’ வென்றதனான் சொற்றொறும் நிற்பதே பெரும்பான்மை யென்பதாம். சொற்றொறும் நின்ற எண் இக்காலத்தரிய. 32ஒடுவென்ப தோரிடைச்சொல் எண்ணின்கண் வருத லிதனாற் கொள்க. இவை மூன்றும் 33பொருளிற்பிரிந்து எண்ணின்கண் அசையாய் வருதலுடைய வென்பது உரையாசிரியர்க்குக் கருத்தென்பாரு முளர். அசை நிலை யென்பது இச்சூத்திரத்தாற் பெறப்படாமை யானும், ‘கண்ணிமை நொடி’ (எழுத். 7) என்னுஞ் சூத்திரத்து எனவைக் கண்ணிமை யென்பதனொடுங் கூட்டுக வென் றுரைத்தலானும், அவர்க்கது கருத்தன்றென்க. (46) 295. அவ்வச் சொல்லிற் கவையவை பொருளென மெய்பெறக் கிளந்த வியல வாயினும் வினையொடும் பெயரொடு நினையத் தோன்றித் திரிந்துவேறு படினுந் தெரிந்தனர் கொளலே. இதன் பொருள் : மேற்கூறப்பட்ட இடைச்சொற்கள், அவ்வச் சொல்லிற்கு அவையவை பொருளென நிலைபெறச் சொல்லப் பட்ட இயல்பை யுடையன வாயினும், வினையொடும் பெயரொடும் ஆராய்ந்து உணரத் தோன்றி வேறு பொருள வாயும் அசைநிலை யாயுந் திரிந்துவரினும், ஆராய்ந்து கொள்க என்றவாறு. எனவே, கூறிய முறையான் வருதல் பெரும்பான்மை யென்றும், வேறுபட வருதல் சிறுபான்மையென்றுஞ் சொல்லிய வாறாம். வினையொடும் பெயரொடு மென்றது, 34அவை வேறு பொருள வென்றுணர்த்தற்குச் சார்பு கூறியவாறு. உதாரணம்: ‘சென்றீ பெருமநிற் றகைக்குநர் யாரோ’ (அகம். 46) எனவும், ‘கலக்கொண்டன கள்ளென்கோ காழ்கோத்தன சூடென்கோ’ எனவும் ஓகாரம் ஈற்றசையாயும் எண்ணாயும் வந்தது. ‘ஓர்கமா தோழியவர் தேர்மணிக் குரலே’ (அகம். 273) என மா முன்னிலை யசைச்சொல்லாயிற்று. ‘அதுமற் கொண்கன் றேரே’ என மன்அசைநிலையாயிற்று. பிறவுமன்ன. செய்யுளின்ப ‘நோக்கி வினையொடும் பெயரொடு’ மென்றார். (47) 296. கிளந்த வல்ல வேறுபிற தோன்றினுங் கிளந்தவற் றியலா னுணர்ந்தனர் கொளலே. இதன் பொருள் : மேற்சொல்லப்பட்டனவன்றி யவை போல்வன பிறவரினும், அவற்றைக் கிளந்த சொல்லி னியல்பா னுணர்ந்து கொள்க என்றவாறு. கிளந்தவற்றியலானென்றது, ஆசிரியர்ஆணையானன்றிக் கிளந்தவற்றையும் இன்னவென்றறிவது வழக்கினுட் சார்பும் இடமுங் குறிப்பும் பற்றி யன்றே? கிளவாதவற்றையும் அவ்வாறு சார்பும் இடமுங் குறிப்பும் பற்றி இஃதசைநிலை இஃதிசைநிறை இது குறிப்பான் இன்ன பொருளுணர்த்தும் என்றுணர்ந்து கொள்க வென்றவாறு. உதாரணம்: ‘சிறிதுதவிர்ந் தீக மாளநின் பரிசில ருய்ம்மார்’ எனவும், ‘சொல்லேன் றெய்ய நின்னொடு பெயர்ந்தே’ எனவும், ‘அறிவார் யாரஃ திறுவுழி யிறுகென’ எனவும், ‘பணியுமா மென்றும் பெருமை’ (குறள். 978) எனவும், ‘ஈங்கா குநவா லென்றிசின் யானே’ (நற். 55) எனவும், மாள, தெய்ய, என, ஆம், ஆல் என்பனவும் அசைநிலையாய் வந்தன, ‘குன்றுதொ றாடலு நின்றதன் பண்பே’ (முருகு. 217) எனத் தொறுவென்பது தான் சார்ந்த மொழிப் பொருட்குப் பன்மையும் இடமாதலு முணர்த்தி நிற்கும். ஆனம், ஏனம், ஓனம் என்பன எழுத்துச்சாரியை. பிறவும் எடுத்தோதாத விடைச்சொலெல்லாம் இப்புறனடையால் தழீஇக் கொள்க. (48) ஏழாவது - இடையியல் முற்றிற்று. கணேசய்யர் அடிக்குறிப்புகள் 1. ஈண்டு இடைச்சொல் பெயரொடும் வினையொடும் சார்ந்து வருமென்றது. பெயர்ப் பொருளையும் வினைப் பொருளையும் சார்ந்து அப்பொருளை வெளிப்படுத்தி வருவதை. அங்ஙனம் பொருள் கொள்ளுவதென்னெனின் - முன் (பெயர்-5) இடைச்சொற் கிளவியும் உரிச்சொற் கிளவியும் அவற்றுவழி மருங்கிற்றோன்றி வருமென்ற மையின். இனி ஓருரை என்பதன் விளக்கம் வருமாறு: பெயரியலிலே `சொல்லெனப் படுவ பெயரே வினையென் றாயிரண்டென்ப வறிந்திசி னோரே' (பெயர் -4) என்னுஞ் சூத்திரத்துள் சொல். பெயரும் வினையுமென்று இரண்டெனக் கூறிப் பின் `இடைச்சொற் கிளவியும் உரிச்சொற்கிளவியும் அவற்றுவழி மருங்கிற்றோன்றுமென்ப' (பெயர் - 5) என்னுஞ் சூத்திரத்தானே இடைச்சொல்லும் உரிச்சொல்லும் பெயரையும் வினையையும் சார்ந்து தோன்றும் என்றதனானே இடையும் உரியும் சிறப்பிலாச் சொற்களென்பதும், அவற்றோடு இவையுஞ் சேர்ந்து நான்கா மென்பதும் பெறப்பட்டதன்றி இடைச்சொல் பெயரையும் வினையையும் சார்ந்து பிறக்குமென்பது அச் சூத்திரத்தாற் பெறப்படாது. என்னெனின் பெயரைச் சார்ந் திடைச்சொல்லும் வினையைச் சார்ந்து உரிச்சொல்லும் தோன்றுமென நிரனிறையாகப் பொருள் கொண்டாலும் இடையும் உரியும் சிறப்பிலவாதலும் சொல் நான்காதலும் பெறப்படுதலான். ஆதலின் இடைச்சொல் பெயரும் வினையும் சார்ந்து தோன்றுமென இச்சூத்திரத்தாற் கூற வேண்டுமெனக் கொண்டு பெயர்ச் சொல்லையும் வினைச்சொல்லையும் இடைச்சொல் சார்ந்து தோன்றுமெனப் பொருள் கூறுவாருமுளர் என்றபடி. முதலுரையின் கருத்து இடைச்சொல் பெயர்ப்பொருளையும் வினைப் பொருளையுஞ் சார்ந்து அப்பொருளை வெளிப்படுத்து மென்பது. பின்னுரையின் கருத்து பெயர் வினைகளைச் சார்ந்து வருமென்பது. இனிச் சிலர் இடைச்சொல் பெயர் வினைகளைச் சார்ந்து நின்றன்றித் தனித்து நின்று பொருள் விளக்காதென்று கொள்கின்ற பொருள். "பெயரொடும் வினையொடும் நடைபெற்றியலும்" எனப் பொதுப்படக் கூறியவதனால் சாரப்படும் சொல்லின் வேறாய் வருதலேயன்றி. "உண்டனன், உண்டான் எனவும், என்மனார் என்றிசினோர் எனவும், அருங்குரைத்து எனவும் அவற்றிற் குறுப்பாய் வருதலுங் கொள்க" என்று சேனாவரையர் கூறியதனாற் பெறப்படுமென்க. இங்ஙனஞ் சேனாவரையர் கூறியதனால் இடைச்சொற்கள் பெயர்வினைகளைச் சார்ந்துநின்று அவற்றின் பொருளை வெளிப்படுத்துவதல்லது. தமக்கெனப் பொருளுடையவல்ல என்பது இரண்டுவிதமாகும்; ஒன்று, தனக்கெனப் பொருளின்றிப் பெயர் வினைகளுணர்த்தும் பொருளைச் சார்ந்துநின்று அப்பொருளை வெளிப்படுப்பது. ஒன்று, பெயர் வினைகளைப் போலத் தனியே நின்று பொருளுணர்த்தாது அவற்றைச் சார்ந்துநின்று தானும் பொருளுணர்த்துவது. பண்டு காடுமன் என்பதில் பண்டு காடு என்பதே எடுத்த லோசையால் ஆக்கப்பொருளை யுணர்த்த அப்பொருளை மன் என்பது வெளிப்படுத்தி நின்றது என்பது ஒருவகை. உண்டான் என்பதில் ஆன் என்னும் விகுதி யிடைச்சொல் உன் என்னும் பகுதியைச் சார்ந்துநின்று தான் ஆண்பாற்பொருளை உணர்த்தி அப்பகுதியும் ஆண்பாற்குரிய வினைப்பொருளில் வந்தமையை யுணர்த்தி நின்றது என்பது ஒருவகை. ஆன் விகுதி தனித்துநின்று ஆண்பாற் பொருள் தராதென்க. பிறவுமன்ன. 2. பாலொடு வருநவுமென்று விதவாதது வினையினொரு சாரன பாலுணர்த்தாமை பற்றியும் காலமொடு வருநவுமென்று விதந்தது எல்லாங் காலமொடு வருதல் பற்றியு மென்க. பாலுணர்த்தாவினைகள்;- வியங்கோள். வேறு, இல்லை, உண்டு, பெயரெச்சம், வினையெச்சம் முதலியன. 3. இருதொடராகக் கொள்க என்றமையான் வேற்றுமைப் பொருள்வயின் உருபென்னும் பெயர்க்குரியவாய் வருவனவாகிய அவ்வுருபுகளும் எனவும். வேற்றுமைப் பொருள்வயின் உருபாகி வருவன பிற சொற்களு மெனவும் பொருள் கொள்க என்றபடி. உருபாகி வருவன பிற சொற் களைச் சொல்லுருபென்ப. ஓசை வேறுபாடென்றது. எடுத்தல் படுத்தல் முதலியவற்றை. கூரியதோர் வாள் என்புழி எடுத்தலோசையாலேயே வாளின் திட்பமின்மை முதலிய ஒழயிசைப் பொருள் தோன்றிவிடும். அதனை வெளிப்படுத்த மன் வந்ததென்பது கருத்து. புகழ்ந்திகு மல்லரோ - இகும் அசைநிலை. உரைத்தி சினோர் - இசின் அசைநிலை. இவை புகழ்ந்தாரல்லரோ உரைத்தார் என்னுஞ் சொல்லொடு சேர்ந்து அவற்றை வேறுபடுத்தி நிற்றலின் அசைநிலை என்பாருமுளர். அசைத்தல் சார்த்துதல். வேறுபடுத்தலுமாம். பொருள் செய்குந - பொருளுணர்ச்சியைச் செய்குந என்றபடி. ஒப்பில் வழி என்பதற்கு - ஒப்புப் பொருளுணர்த்தும் ஒக்கும் என்னுஞ்சொல் இல்லாதவிடத்து என்பது கருத்து. சாரியை முதலிய மூன்றையும் குறிப்புளடக்காது வேறு கூறியது. சாரியை புணர்ச்சிக்கண் உபகாரப்படுதலும் வேற்றுமையுருபும் உவமஉருபும்பற்றி தொகைக்கு இலக்கணங் கூறுதலு முதலாகிய பயன் நோக்கி என்க. தொகை யிலக்கணம் எச்சவியலிற் கூறப்படும் முதனின்ற மூன்றும் என்றது - சாரியையும் காலங்காட்டுவனவும் உருபாகுநவும் என்னும் மூன்றையும், ஒழிந்த மூன்று. அசைநிலையும் இசைநிறையும் தத்தம் குறிப்பிற் பொருள் செய்குநவும். முன்னர் என்றது - பொருளதிகாரத்து உவம இயலில் என்றபடி. 4. மன் - மன்னை எனவும். கொன் - கொன்னை எனவும் திரிந்தன. 5. தம்மை உணர நின்ற வழி என்றது - சொல்லாகிய தம்மை உணர நின்ற வழி என்றபடி. 6. கூரியதோர் வாள்மன் என்புழி இப்பொழுது வலிமை இன்றென்றா யினும் வாளுக்குரிய இலக்கண மின்றென்றாயினும் பொருள்படும். இலக்கணம் - கூர்மை. 7. வருகதில்லம்ம எம்சேரிசேர - ஒழியிசை. எம்சேரிக்கு ஊரன் வருக; வந்தால் அவனை இன்னது செய்வல் என்னும் ஒழியிசைப் பொருள் தந்து நின்றது. இன்னது செய்வல் என்றாள் பரத்தை. இன்னது செய்வல் என்றது. துறைகேழூரன் எம்சேரி சேர வருக. வந்தால் அதனைப் பொருங்களிறு போலத் தோள் கந்தாகக் கூந்தலிற் பிணித்து அவன் மார்பைக் கடிகொள்ளுவேனென்றமையை. அகம்-276ஆஞ் செய்யுள் நோக்கு. இக்காலத்தும் கலாசாலைமாணவர்களுள் ஒருமாணாக்கன் ஒரு மாணாக்கனை அடித்தால் அடிபட்ட மாணவன் அடித்தவனை நோக்கி நீ எங்கள் வீட்டிற்கு வாவென்று சொல்வது வழக்கு. வந்தால் நான் உன்னை நன்கு அடிப்பேன் என்பதே அவன் கருத்தாம். அது போலவே இதுவுமென்பது. 8. சாத்தனும் வந்தான் கொற்றனும் வந்தான் என்று கூறியக்கால், சாத்தனும் வந்தான் என்புழி உம்மை பின்வந்த கொற்றன் வரவைத் தழுவுதலால் எதிரது தழீஇய எச்சம். கொற்றனும் வந்தான் என்புழி உம்மை முன்வந்த சாத்தன் வரவைத் தழுவி நிற்றலின் இறந்தது தழீஇய எச்சம். இறந்த - கழிந்த - முன் வந்த. கொற்றனும் வந்தான் சாத்தனும் வரும் என்று நிகழ் காலத்தானும் எஞ்சு பொருட்கிளவி வருமென்பது உரையாசிரியர் கருத்து. `உம்மையெச்சம்... தன்வினை யொன்றிய முடிபாகும்மே' என்று ஆசிரியர் கூறியதல்லது காலங் குறியாமையான் நிகழ்காலத்தானும் தன்வினை வரலாமென்பது உரையாசிரியர் கருத்தாம். அதுவும் பொருத்தமேயாயினும் அவ்வக் காலத்தான் தன்வினை வருதலே சிறப்பென்பது சேனாவரையர் கருத்து. என்னையெனின்? `தன்மேற் செஞ்சொல் வரூஉங்காலை... முறைநிலையான' (எச்ச-41) என்று ஆசிரியர் கூறலின். 9. கட்டுரை - வார்த்தை. (பேச்சு) 10. மற்றையது என்பது போன்ற பெயர்களுக்கு முதனிலையாய் நின்று மற்றை என்பது பொருள் விளக்குதலின் மற்றையென்னாது மற்றையது எனக் கூறினாரென்பது கருத்து. முதனிலை - பகுதி. மற்றை என்பதே சொல் என்றபடி. 11. `எல்லேவிளக்கம்' எனப் பாடங்கொள்வாருமுளர். எல் - இலக்கம் என்று தானே பொருடரலின் உரிச்சொன்னீர்மைத்தாயினும் என்று சேனா வரையர் கூறினமையால் தஞ்சக்கிளவி முதலியன சார்ந்துநின்று தான் எளிது முதலிய பொருள்களை உணர்த்துமென்ப துணரப்படும். தஞ்சக் கிளவியும் தானே பொருள் உணர்த்துமென்பார் கொள்கை ஆராயத் தக்கது. 12. ஒருமைப்பெயரென்றது - முடவனார் என்பதில் முடவன் என்பதை. இவன் என்பதை இவர் என்று கூறுதல் முதலியன ஒருமைசிதைந்து உயர்த்தற்கண் வந்தன. முடவனார் முதலியன ஒருமை சிதையாமல் உயர்த்தற்பொருட்கண் ஆரைக்கிளவி பெற்று வந்தன. ஆதலால் வேறு கூறப்பட்டன என்பது சேனாவரையர் கருத்து. அது பொருத்தமாம். தாம் வந்தார் தொண்டனார் என்ற விடத்துச் சேனாவரையர் கருதிய உயர் சொற்கிளவி தொண்டனார் என்பதன்று; தாம் என்பதாம். அது தான் என்னும் ஒருமைக்கிளவியே ஒருமை சிதைந்து தாம் என உயர்த்தற்கண் வந்தது என்றபடி. எனவே தொண்டன் என்பது இச்சூத்திரத்தால் ஆர் பெற்று ஒருமை சிதையாமல் வந்தது என்றபடி. தெய்வச்சிலையாரும் ஒருவரைக் கூறும் பன்மைக்கிளவியும் - ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும் `இயற்பெயர் முன்னர் வினையொடு முடிமே' என்புழி யடங்காதோவெனின், ஆண்டு நம்பி நங்கை சாத்தன் என்னும் பெயர்தானே பால் காட்டுதலான் அதன்மேல் ஓர் இடைச்சொல்லாயிற்று. ஈண்டுப் பன்மைச்சொற்றானே ஒருமைக்கு வருதலின் அடங்காதாயிற்று என்று கிளவியாக்கத்து 27ஆம் சூத்திர உரையுட் கூறுதல் காண்க. 13. தொகையுமார் என்பதில் ஆர் உம்மை முன்வந்தது. செல்லுமார் என்பதில் ஆர் உம்மீற்றுவினை முன்வந்தது. 14. ஒரு சொல்லே என்றது - ஏயுங் குரையுமாகிய இரு சொல்லுள்ளும் ஒரு சொல்லே என்றபடி. அவை இருபொருளுந் தருதலினாலே அவற்றை உடன் கூறினாரென்று சொல்லாதவிடத்து ஏ இசைநிறை குறை அசை நிலை என்று ஏயொடு இசைநிறையையும் குரையொடு அசைநிலை யையும் ஒருங்கு சேரக் கூறலாம் என்றபடி. அங்ஙனம் கூறாமையால் அது பொருந்தாதென்க. அவற்றை என்றது - ஏயும் குரையும் ஆகிய அவ்விரண்டையும். 15. உண்க - வியங்கோள். 16. அப்பொருள் - கேள் என்ற பொருள். 17. நிரனிறையாகக் கொள்க. ஆதரம் - விருப்பம். 18. நீ கள்வன் என்றால் ஆக ஆக எனின். அவை உடன்படாமை யையாதல் விருப்பமின்மையயாதல் உணர்த்துமென்றபடி. 19. ஒள அடுக்கும். அளபெடையும். அளபெடாமையுமாகிய மூன்றிடத்தும் சிறப்பும், மாறுபாடுமாகிய இரண்டு பொருளிலும் வருமென்பது கருத்து. மாறுபாடு - மாறுபடுதல்; ஒழிக என்னும் பொருளில் வருதல்; இறுதியில் உயிர் - இறுதியில் வராத உயிர். எ ஒ ஒள என்பன. எழுத்ததிகாரம் மொழிமரபு நோக்குக. 20. சாத்தனும் வந்தான் கொற்றனும் வந்தான் என்பது எச்சவும்மை வந்த தொடர். இத்தொடரில் சாத்தனும் கொற்றனும் என்பவைகள் எச்சவும் மைகள். இவ்வும்மைகளோடு எதிர்மறையும்மையுஞ் சேர்ந்து சாத்தனும் வந்தான் கொற்றனும் வரலுமுரியன் என ஒரு தொடரில் மயங்கி வரல் கூடாதென்பது ஆசிரியர் கருத்தாம். உதாரணத்தின்கண் வரலுரியன் என்பது வரலுமுரியன் என்றிருத்தல் வேண்டும். அதுவே எதிர்மறை உம்மையாதலின் இளம்பூரணரும். `சாத்தனும் வந்தான் கொற்றனும் வரும் என்பது எச்சவும்மை; அதனைச் சாத்தனும் வந்தான் கொற்றனும் வரலு முரியன் என எதிர்மறையும்மையோடு கூட்டிச் சொல்லப்படாது' - என்று கூறுதல் காண்க. 21. ஏனையும்மை என்றது முற்றும்மை முதலியவற்றை. அவை எஞ்சு பொருட்கிளவியவாய் வாராமையின் என்றது. அவை எஞ்சு பொருட் கிளவியை யுடையனவாய் வாராமையின் என்றபடி. எதிர்மறை யும்மை எஞ்சுபொருட் கிளவியையுடையதாய் வருதலின் எச்சவும்மைத் தொடரோடு வந்து மயங்கல் கூடா; மயங்கின் எச்சவும்மை இனிது பொருள்படாது. ஏனெனின் சாத்தனும் வந்தான் கொற்றனும் வரலுமுரியன் எனின் வாராமையுமுரியன் என்று பொருள்தருதலின் சாத்தனும் வந்தான் என்பதிலுள்ள எச்சவும்மைக்கு அது எஞ்சு பொருட்கிளவியாகாமையின். 22. எஞ்சு பொருட்கிளவி - பொருளெஞ்சி நிற்கும் சொல். உம்மைப் பொருட்கு முடிபு எஞ்சுபொருட் கிளவியேயாம். உம்மையோடு வரிற் பிற்படக் கிளக்க வென்றது - சாத்தனும் வந்தான் என உம்மையோடு வரின். கொற்றனும் வந்தான் சாத்தனும் வந்தான் எனப் பிற்படக் கிளக்க வென்றபடி. 23. முற்றும்மை எச்சப்படுவது எதிர்மறை வினையைக் கொண்டு முடியு மிடத்தென்க. இப்பொழுது பத்துங்கொடு என்பது முற்றும்மையாயின் பத்துக் கொடு என நிற்கலாம்; உம்மை வேண்டியதின்று. அன்றி, பத்துங் கொடு என்பது பிறவுங் கொடு என்பதை உணர்த்தி எச்ச வும்மையாயின் அது எச்ச உம்மைப் பாற்படும்; முற்றும்மையாகா தென்றபடி. 24. காடிறந்தோரே என்பதிலுள்ள ஏகாரம் ஒரு மாத்திரை பெறும். இரண்டு மாத்திரையாயின் இசை நீளும். மேனின்ற செய்யுளுறுப்பென்றது ஏகாரத்து மேல் நின்ற செய்யுள் உறுப்புக்களை. ஈண்டுச் செய்யு ளுறுப்போடு இயைய என்றாரேனும் ஓசையோடு பொருந்தா என்பதே கருத்தாம். இங்கே செய்யுளுறுப்பென்றது - மாத்திரையாளவை. அது உறுப்பாதலை `மாத்திரை எழுத்திய லசைவகை யெனாஅ' என்னுந் தொல் - செய்யுளியற் சூத்திரத்தா னுணர்க. 25. ஏகார எண்ணாலும் பெயர் கொடுக்கலா மென்றபடி. பிற எண் - செவ்வெண் முதலியன. செவ்வெண் - உம்மை தொக்கு வருவன. இடையிட்டு வருதல் என்றது. என்றும் எனவும் போல இறுதி நின்று முன்னின்ற எல்லாவற்றோடுஞ் சென்று கூடும் இயல்பின்றி இடை யிடையே வருவதென்றபடி. பிற எண் ஓடா நின்றவழி என்றது, - பிற எண் எண்ணுப் பொருளிற் செல்லும் வழி என்றபடி. 26. உம்மை தொக்க எனா என்றது - `எனா'வும் என்னுஞ் சொல்லை. எனாவும் என்றதிலும்மையும் எனாவோடு சேர்ந்து எண்ணுப் பொருளில் வருமென்பார் எண்ணுளடங்குமென்றார். இடையிட்டு வருதலைக் `கண்கால்... பின்சார் அயல்புடை தேவகை எனா' என்னும் வேற்றுமை இயலில் வரும் 21ஆம் சூத்திரத்தில் நோக்கியறிக. 27. எண்ணிடைச் சொற்களுட் சில தொகை பெறுமென இதனான் உணர்த்தினார். 28. உம்மை யெண்ணின்கண் உருபு தொகுமெனவே செவ்வெண் முதலிய எண்ணின்கண் தொகாதென்றபடி. இது நியமித்ததல். குன்றியும் கோபமும் பவளமும் எழுவாயாய் நின்று அவற்றை என்னுந் தொகை யோடு சேரும் என்றபடி. எழுவாய் - முதல் வேற்றுமை. யானை குதிரை தேர் காலாள் - இது உம்மைத் தொகையாதலால் ஒரு சொல்லாய் நின்று இறுதியில் உருபேற்கும். ஆதலால் அவ்வும்மைத் தொகைக்கண் உருபில்லை என்க. 29. உம் உந்தாதல் முற்றின்கண்ணும் வருதலின். `இடனுமாருண்டே என்றது இத்திரிபு பெயரெச்சத்திற்கு ஈறாயவழி என்பது கருதிப்போலும்' என்றது இடையில் செருகப்பட்டதுபோலும் என்பது சிலர் கருத்து. 30. `தம்மீறு திரிதல்' இடையியல் 3-ஆம் சூத்திரம். செய்யுமென்பது வினைச் சொல்லாதலின் வினையியலுள்ளுங் கூறப்படும். இயல்புடைத்தாயினு மென்றார். 31. அமைந்து மாறுதலின் - அமைந்து ஒழிதலின். 32. ஒடு என்பதோர் இடைச்சொல், எண்ணுப்பொருளில் வருதல் இச்சூத்திரத்தாற் கொள்க. என்னை? ஆசிரியர் எண்ணுப்பொருளில் வருதலை முன் எடுத்தோதாமையின். 33. பொருள் - எண்ணுப்பொருள். கூட்டுக என்றதனால் எண்ணுப் பொருளில் வருதல் கொள்ளப்படும். 34. அவை - மேற்கூறப்பட்ட இடைச்சொற்கள். இச்சூத்திரம் மேற்கூறப் பட்ட இடைச்சொற்கள் வேறு பொருளில் வருமாயினும் அமைத்துக் கொள்க என்று புறனடை கூற எழுந்தது; வருஞ் சூத்திரம் சொல்லப் படாதன இடைச்சொற்கள் உளவாயினும் கொள்க எனப் புறனடை கூற எழுந்தது என உணர்ந்துகொள்க. செய்யுளின்பம் நோக்கி பெயரை முற்கூறாது வினையை முற்கூறினார் என்பது கருத்து. உரியியல் உரிச்சொற்களின் இலக்கண முணர்த்தினமையால் உரியிய லென்னும் பெயர்த்தாயிற்று. இசை, குறிப்பு, பண்பு என்னும் பொருளை யுடையனவாகிப் பெயர் வினகளைப் போன்றும் அவற்றிற்கு முதனிலையாகியும் வருவன உரிச்சொற்களாம். இசை செவியால் உணரப்படுவது, குறிப்பு மனத்தாற் குறித் துணரப்படுவது, பண்பு ஐம்பொறிகளால் உணரப்படுங் குணம். இசை குறிப்பு பண்பு என்னும் பொருட்குத் தாமே யுரியவாதலின் உரிச்சொல்லாயினவென்றும் பெரும்பான்மையும் செய்யுட்குரிய வாய் வருதலின் உரிச்சொல்லாயிற்றென் பாருமுளரென்றும் கூறுவர் சேனாவரையர், ஈறுபற்றிப் பல பொருள் விளக்கலும் உருபேற்றலுமின்றிப் பெயரையும் வினையையுஞ்சார்ந்து பொருட்குணத்தை விளக்கலின் உரிச்சொல் பெயரின் வேறென்பர் நச்சினார்க்கினியர். ஒரு வாய்பாட்டாற் சொல்லப்படும் பொருட்குத் தானும் உரித்தாகி வருவது உரிச்சொல்லென்றும், ‘ஒரு சொல் பல பொருட்குரிமை தோன்றினும் பல சொல் ஒரு பொருட்குரிமை தோன்றினும்’ என ஆசிரியர் கூறுதலால் இவ்வியல்பு புலனாமென்றும், எழுத்ததிகாரத்துள் இதனைக் குறைச் சொற்கிளவியென்று ஓதினமையால் வடநூலாசிரியர் தாது எனக் குறியிட்ட சொற்களே உரிச்சொற்களாமென்றும், தொழிற் பொருண்மை யுணர்த்தும் சொற்கள்யாவும் உரிச்சொல்லாயினும் வழக்கின்கட் பயிற்சியில்லாத சொற்கள் ஈண்டு எடுத்தோதப்படுகின்றன வென்றும், தொழிலாவது வினையங் குறிப்புமாதலின் அவ்விருவகைச் சொற்கும் அங்கமாகி வெளிப்படாதன இவ்வியலிற் கூறப்படுகின்றனவென்றும், ஈண்டுக் கூறப்படுகின்ற உரிச்சொல் சொல்லானும் குறிப்பானும் குணத்தானும் பொருள் வேறுபடுமென்றும், அவை பெயர் வினைகளைச்சார்ந்தும் அவற்றிற்கு அங்கமாகியும் வருமென்றும் கூறுவர் தெய்வச்சிலையார். இசை, குறிப்பு, பண்பு என்னும் மூன்றும் குணப் பண்புந் தொழிற் பண்புமென இரண்டா யடங்கு மென்றும், இவ்விருவகைப் பண்பும் பொருட்கு உரிமை பூண்டு நிற்றலின் அப்பண்பை யுணர்த்துஞ்சொல் உரிச்சொல்லெனப் பட்டதென்றும், நடவா முதலிய முதனிலைகளும் தொழிற் பண்பை யுணர்த்துஞ் சொற்களாதலின் அவையெல்லாம் உரிச்சொல்லேயா மென்றுங் கூறுவர். சிவஞான முனிவர். இதுகாறும் எடுத்துக்காட்டிய உரைக் குறிப்புக்களால் உரிச்சொல்லென்பன வினையும் குறிப்புமாகிய சொற்களுக் கொல்லாம் பகுதியாகிய வேர்ச் சொற்களென்பதும் குறைச் சொற்களாகிய இவற்றை முதனிலையாகக்கொண்டே எவ்வகை வினைச்சொற்களும் தோன்றுவனவென்பதும் இனிது புலனாதல் காண்க. இவ்வியலிலுள்ள சூத்திரங்களை 99-ஆக இளம்பூரணரும் 100-ஆகச் சேனாவரையரும் தெய்வச்சிலையாரும், 98-ஆக நச்சினார்க்கினியரும் பகுத்து உரை கூறியுள்ளார்கள். இசை, குறிப்பு, பண்பு என்னும் பொருளை யுணர்த்துவனவாய்ப் பெயர் வினைபோன்றும் அவற்றிற்கு முதனிலையாயும் தடுமாறி ஒருசொல் ஒருபொருட் குரித்தாதலேயன்றி ஒருசொல் பலபொருட்கும் பல சொல் ஒருபொருட்கும் உரியவாய் வருவன உரிச்சொல்லென்றும், அவை பெயரும் வினையும்போல ஈறுபற்றிப் பொருளுணர்த்த லாகாமையின் பொருள் வெளிப்படாத சொல்லைப் பொருள் வெளிப்பட்ட சொல்லோடு சார்த்தி அச்சொற்களையே யெடுத்தோதிப் பொருளுணர்த்தப்படு மென்றும் இவ்வியல் முதற் சூத்திரத்தால் உரிச்சொற்குப் பொதுவிலக்கணமும் அவற்றிற்குப் பொருளுணர்த்து முறைமையும் உணர்த்தினார் ஆசிரியர். நால்வகைச் சொற்களுள்ளும் பண்புணர்த்துவனவாகிய உரிச்சொற்களே பலவாதலின் அவற்றுள் வெளிப்படப் பொரு ளுணர்த்தும் சொற்களை எடுத்துரையாது வெளிப்பட வாராத உரிச்சொற்களுள் உறுஎன்பது முதல் எறுழ் என்பதீறாக நூற்றிருபது உரிச்சொற்களை இவ்வியல் 3-முதல் 91-வரையுள்ள சூத்திரங்களால் எடுத்தோதிப் பொருளுணர்த்துகின்றார். மேற்சொல்லப்பட்ட உரிச்சொல் எல்லாவற்றிற்கும் முன்னும் பின்னும் வந்த மொழியையறிந்து அதற்கேற்பப் பொருளுரைத்தல் வேண்டு மெனவும் மேல் ஓதப்பட்ட உரிச்சொற்கு முற்கூறிய பொருணிலையல்லது பிற பொருள் தோன்றினும் கூறப்பட்ட வற்றோடு அவற்றையுஞ் சேர்த்துக்கொள்ளுதல் வேண்டு மெனவும் வெளிப்பட வழங்காத சொற்களுக்கு வெளிப்படப் பழகிய சொற்களைக் கொண்டு பொளுணர்த்துங்கால் அங்ஙனம் பொருளுணர்த்த வந்த சொற்கும் பொருள் யாது எனப் பொருளுக்குப் பொருள் வினவுவானாயின் அவ்வினா எல்லையின்றிச் செல்லுமாதலால் பொருளுக்குப் பொருள் கூறுதலியலாதெனவும் மாணாக்கன் உணர்தற்குரிய வழிமுறை யறிந்து உணர்த்தவல்லனாயின் தான் சொல்ல எடுத்துக்கொண்ட பொருள் திரிபின்றி விளங்குமெனவும், சொற்பொருளை உணர்தற்குரிய வாயில் இதனை யுணர்வோனது அறிவைப் பற்றுக்கோடாக வுடையதாகலான் ஒருவாற்றானும் உணருந்தன்மை யொருவற்கில்லையாயின், ஆவனுக்குப் iபாருளுணர்த்தும் வழியில்லை யெனவும் 92-முதல் 96-வரையுள்ள சூத்திரங்களால் உரிச்சொற்குப் பொருளுணரும் முறைமையும் கூறிப்போந்தார் ஆசிரியர். பொருளோடு சொல்லுக்குத் தொடர்புடைமையின் பொருளுணர்த்தும் நெறியில் எல்லாச் சொற்களும் காரணமுடைய வென்பதும், இப்பொருட்கு இச்சொல் என நியமித்தற்குரிய காரணம் நுண்ணுணர்வுடையோர்க்கன்றி ஏனையோர்க்கு விளங்கத் தோன்றாவென்பதும் மொழிப் பொருட்காரணம் விழிப்பத்தோன்றா’ என்ற சூத்திரத்தால் அறிவுறுத்தப்பட்டன. எழுத்துக்கள் முதல் நிலையும் இறுதிநிலையுமாகப் பிரிந்து பொருட் காரணத்தை யுணர்த்துதல் இவ்வுரிச்சொல்லிடத்து இயல்பிலை யென்பார் ‘எழுத்துப் பரிந்திசைத்தல் இவணியில் பின்றே’ என்றார். இவ்வுரிச்சொற்கள் குறைச்சொற்களாதலின் நின்றாங்கு பிரிப்பின்றி நின்று பொருளுணர்த்துவனவன்றி முதல்நிலையும் இறுதிநிலையுமாகப் பிரிந்து பொருளுணர்த்தா வென்பது ஆசிரியர் கருத்தாதல் புலனாம். எழுத்துப் பிரிந்திசைத்தல் இவ்வுரிச் சொல்லிடத் தில்லையேனவே, ஏனைப் பெயர்ச் சொல்லிடத்தும் வினைச்சொல்லிடத்தும் முதனிலையும் இறுதிநிலையுமாக எழுத்துக்கள் பிரிந்து பொருளுணர்த்தல் உண்டென்பது பெறப்படும். பெயர் பிரிந்தன பெயரியலுள்ளும் வினை பிரிந்தன வினையியலுள்ளும் ஈறுபற்றிப் பிரித்துரைக்கப் பட்டமை காண்க. இடைச்சொல் தனித்து நின்று பொருளுணர்த் தாமையின் பிரிதலும் பிரியாமையும் அதற்கில்லையென்பர் நச்சினார்க்கினியர். - க. வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 216-219 எட்டாவது உரியியல் 297. உரிச்சொற் கிளவி விரிக்குங் காலை யிசையினுங் குறிப்பினும் பண்பினுந் தோன்றிப் பெயரினும் வினையினும் மெய்தடு மாறி யொருசொல் பலபொருட் குரிமை தோன்றினும் பலசொல் ஒருபொருட் குரிமை தோன்றினும் பயிலாத வற்றைப் பயின்றவை சார்த்தித் தத்த மரபிற் சென்றுநிலை மருங்கி னெச்சொல் லாயினும் பொருள்வேறு கிளத்தல். நிறுத்த முறையானே உரிச்சொல் லுணர்த்திய வெடுத்துக் கொண்டார்; அதனான் இவ்வோத்து உரியியலென்னும் பெயர்த் தாயிற்று. தமக்கியல் பில்லா விடைச்சொற் போலாது இசை குறிப்புப் பண்பென்னும் பொருட்குத் தாமே யுரியவாகலின், உரிச் சொல்லாயிற்று. பெரும்பான்மையுஞ் செய்யுட் குரியவாய் வருதலின் உரிச்சொல் லாயிற்றென்பாருமுளர். இதன் பொருள் : உரிச்சொல்லை விரித்துரைக்குமிடத்து, இசை குறிப்புப் பண்பென்னும் பொருண்மேற் றோன்றி, பெயர்க் கண்ணும் வினைக்கண்ணும் தம்முருபு தடுமாறி, ஒருசொற் பல பொருட் குரித்தாய் வரினும் பலசொல் ஒருபொருட் குரியவாய் வரினும் கேட் பானாற் பயிலப்படாத சொல்லைப் பயின்றவற் றொடு சார்த்திப் பெயரும் வினையுமாகிய தத்தமக்குரிய நிலைக்களத்தின்கண் யாதானுமொரு சொல்லாயினும் வேறு வேறு பொருளுணர்த்தப் படும் என்றவாறு. என்றது, இசை குறிப்புப் பண்பென்னும் பொருளவாய்ப் பெயர் வினை போன்றும் அவற்றிற்கு முதனிலையாயுந் தடுமாறி, ஒருசொல் ஒருபொருட் குரித்தாதலேயன்றி, ஒருசொற் பல பொருட்கும் பலசொல் ஒரு பொருட்கும் உரியவாய் வருவன உரிச்சொல்லென்றும், அவை பெயரும் வினையும்போல ஈறுபற்றிப் பொருளுணர்த்தலாகாமையின், வெளிப்படாதவற்றை வெளிப் பட்டவற்றொடு சார்த்தித் தம்மையெடுத் தோதியே அப்பொரு ளுணர்த்தப்படுமென்றும், உரிச்சொற்குப் பொது இலக்கணமும் அவற்றிற்குப் பொருளுணர்த்து முறைமையு முணர்த்திய வாறு. குறிப்பு - மனத்தாற் குறித்துணரப்படுவது. பண்பு - 1பொறியானுணரப் படுங் குணம். கறுப்பு, தவவென்பன 2பெயர்வினைப்போலி. துவைத்தல் துவைக்கும் என்பன பெயர் வினைக்கு முதனிலையாயின. உறு முதலாயின 3மெய் தடுமாறாது வருதலின், பெயரினும் வினையினு மெய்தடுமாறி யென்றது பெரும்பான்மைபற்றியெனக் கொள்க. அவை கூறியவாற்றாற் பொருட்குரியவாய் வருமாறு முன்னர்க் காணப்படும். மெய்தடுமாறலும், ஒருசொற் பலபொருட் குரிமையும், பலசொல் ஒரு பொருட்குரிமையும் உரிச்சொற்கு உண்மையான் ஓதினாரேனும், உரிச்சொற்கு இலக்கணமாவது இசை குறிப்புப் பண்பென்னும் பொருட் குரியவாய் வருதலேயாம். ஒருசொல் ஒருபொருட் குரித்தாதல் இயல்பாகலாற் சொல்லா மையே முடியுமென்பது. (1) 298. வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா வெளிப்பட வாரா வுரிச்சொன் மேன. இதன் பொருள் : வெளிப்பட்ட உரிச்சொல் கிளந்ததனாற் பயனின் மையிற் கிளக்கப்படா; வெளிப்பட வாரா உரிச்சொன் மேற்றுக் கிளந்தோதல் என்றவாறு. ‘பயிலா தவற்றைப் பயின்றவை சார்த்தி, யெச்சொல் லாயினும் பொருள்வேறு கிளத்தல்’ (சொல். 297) என்றதனான் பயிலாதவற்றைப் பயின்றவற்றொடு சார்த்தியும் பயின்றவற்றைப் பிறிதொன்றனொடு சார்த்தாது 4தம்மையே கிளந்தும் எல்லா வுரிச் சொல்லும் உணர்த்தப்படு மென்பது பட்டு நின்றதனை விலக்கி, பயனின்மையாற் பயின்ற உரிச்சொற் கிளக்கப்படாது பயிலாத உரிச்சொல்லே கிளக்கப்படுமென, வரையறுத்த வாறு, மேலவென்பது மேனவென நின்றது. (2) 299. அவைதாம் உறுதவ நனியென வரூஉ மூன்று மிகுதி செய்யும் பொருள வென்ப. வெளிப்பட வாரா உரிச்சொல்லைக் கிளந்தோதி விரிக் கின்றார். அவைதாம் என்றது வெளிப்பட வாரா உரிச்சொற்றாம் என்றவாறு. அதற்கு முடிபு ‘அவைதாம், அம்மா மெம்மே மென்னும் கிளவியும்’ (சொல். 202) என்புழி உரைத்தாங் குரைக்க. இதன் பொருள் : ‘உறுபுன றந்துல கூட்டி’ (நாலடி. 185) எனவும், ‘ஈயாது வீயு முயிர் தவப் பலவே’ (புறம். 236) எனவும், ‘வந்துநனி வருந்தினை வாழியென் னெஞ்சே’ (அகம். 19) எனவும், உறு, தவ, நனி யென்பன மிகுதியென்னுங் குறிப்புப் பொருளுணர்த்தும் என்றவாறு. குறிப்புச்சொற் பரப்புடைமையான் முற்கூறினார். (3) 300. உருவுட் காகும் புரையுயர் பாகும். இதன் பொருள்: ‘உருகெழு கடவுள்’ எனவும், ‘புரைய மன்ற புரையோர் கேண்மை’ (நற். 1) எனவும், உருவும் புரையும் உட்கும் உயர்பு முணர்த்தும் என்றவாறு. (4) 301. குருவுங் கெழுவு நிறனா கும்மே. இதன் பொருள்: ‘குருமணித் தாலி’ ‘செங்கேழ் மென்கொடி’ (அகம்.80) எனக் குருவும் கெழுவும் நிறமென்னும் பண்புணர்த்தும் என்றவாறு. (5) 302. செல்ல லின்ன லின்னா மையே. இதன் பொருள் : ‘மணங்கமழ் வியன்மார் பணங்கிய செல்லல்’ (அகம்.22) எனவும், ‘வெயில்புறந் தரூஉம் இன்ன லியக்கத்து’ (மலைபடு. 374) எனவும், செல்லலும் இன்னலும் 5இன்னாமை யென்னுங் குறிப்புணர்த்தும் எ-று. (6) 303. மல்லல் வளனே. 304. ஏபெற் றாகும். இதன் பொருள் : ‘மல்லன் மால்வரை’ (அகம். 52) எனவும், 6‘ஏகல் லடுக்கம்’ (நற். 116) எனவும், மல்லலும் ஏவும் வளமும் பெற்றுமாகிய குறிப்புணர்த்தும் என்றவாறு. பெற்று - பெருக்கம். ஈது அக்காலத்துப் பயின்றதுபோலும். இவை யிரண்டு சூத்திரம். (7, 8) 305. உகப்பே யுயர்த லுவப்பே யுவகை. இதன் பொருள் : ‘விசும்புகந் தாடாது’ எனவும், ‘உவந்துவந் தார்வ நெஞ்சமோ டாய்நல னளைஇ’ (அகம். 35) எனவும், உகப்பும் உவப்பும் உயர்தலும் உவகையுமாகிய குறிப்புணர்த்தும் என்றவாறு. (9) 306. பயப்பே பயனாம். 307. பசப்புநிற னாகும். இதன் பொருள் : ‘பயவாக் களரனையர் கல்லா தவர்’ (குறள். 406) எனவும், ‘மையில் வாண்முகம் பசப்பூ ரும்மே’ (கலி. 7) எனவும், பயப்பும் பசப்பும் பயனும் நிறவேறுபாடுமாகிய குறிப்பும் பண்பும் முணர்த்தும் என்றவாறு. (10) (11) 308. இயைபே புணர்ச்சி. 309. இசைப்பிசை யாகும். இதன் பொருள்: ‘இயைந்தொழுகும்’ எனவும், ‘யாழிசையூப் புக்கு’ எனவும், இயைபும், இசைப்பும், புணர்ச்சிக் குறிப்பும் இசைப் பொருண்மையு முணர்த்தியவாறு. (12, 13) 310. அலமர றெருமர லாயிரண்டுஞ் சுழற்சி. இதன் பொருள்: ‘அலமர லாயம், (ஐங். 66) எனவும், ‘தெருமர லுள்ளமோ டன்னை துஞ்சாள்’ எனவும், அலமரலும் தெருமரலும், சுழற்சியாகிய குறிப்புணர்த்தும் என்றவாறு. (14) 311. மழவுங் குழவு மிளமைப் பொருள. இதன் பொருள்: ‘மழகளிறு’ (புறம். 38) எனவும், ‘குழக்கன்று’ (புறம்.103) எனவும், மழவுங் குழவும், இளமைக் குறிப்புப் பொருளுணர்த்தும் என்றவாறு. (15) 312. சீர்த்தி மிகுபுகழ். 313. மாலை யியல்பே. இதன் பொருள் : ‘வயக்கல்சால் சீர்த்தி’ எனவும், ‘இரவரன் மாலையனே’ (குறிஞ்சிப். 239) எனவும், சீர்த்தியும் மாலையும், பெரும் புகழும் இயல்பு மாகிய குறிப்புணர்த்தும் என்றவாறு. (16, 17) 314. கூர்ப்புங் கழிவு முள்ளது சிறக்கும். இதன் பொருள் : ‘துனிகூ ரெவ்வமொடு’ (சிறுபாண். 39) எனவும், ‘கழிகண் ணோட்டம்’ (பதிற். 22) எனவும், கூர்ப்பும் கழிவும், ஒன்றனது சிறத்தலாகிய குறிப்பை யுணர்த்தும் என்றவாறு. உள்ளதென்றது முன் சிறவாதுள்ள தென்றவாறு. (18) 315. கதழ்வுந் துனைவும் விரைவின் பொருள. இதன் பொருள்: ‘கதழ்பரி நெடுந்தேர்’ (நற். 223) எனவும், ‘துனை பறை நிவக்கும் புள்ளின மான’ (மலைபடு. 55) எனவும், கதழ்வும் துனைவும், விரைவாகிய குறிப்புணர்த்தும் என்றவாறு. (19) 316. அதிர்வும் விதிர்ப்பு நடுக்கஞ் செய்யும். இதன் பொருள் : ‘அதிர வருவதோர் நோய்’ (குறள். 429) எனவும், ‘விதிர்ப்புற லறியா வேமக் காப்பினை’ (புறம். 20) எனவும் அதிர்வும் விதிர்ப்பும், நடுக்கமாகிய குறிப்புணர்த்தும் என்றவாறு. அதிழ்வென்று பாடமோதி, 7‘அதிழ்கண் முரசம்’ என்றுதாரணங் காட்டுவாரு முளர். (20) 317. வார்தல் போக லொழுகன் மூன்று நேர்பு நெடுமையுஞ் செய்யும் பொருள. இதன் பொருள் : ‘வார்ந்திலங்கும் வையெயிற்று’ (குறுந். 14) ‘வார்கயிற் றொழுகை’ (அகம். 173) எனவும், ‘போகுகொடி மருங்குல்’ ‘வெள்வேல் விடத்தேரொடு காருடை போகி’ (பதிற்.12) எனவும்; ‘ஒழுகுகொடி மருங்குல்’ ‘மால்வரையொழுகிய வாழை’ (சிறுபாண்.21) எனவும், வார்தல் போகல் ஒழுகல் என்னும் மூன்றுசொல்லும், நேர்மையும் நெடுமையுமாகிய பண்புணர்த் தும் என்றவாறு. (21) 318. தீர்தலுந் தீர்த்தலும் விடற்பொருட் டாகும். இதன் பொருள் : தீர்தலுந் தீர்த்தலுமென்னு மிரண்டும் விடுதலாகிய குறிப்புணர்த்தும் என்றவாறு. உதாரணம்: ‘துணையிற் றீர்ந்த கடுங்கண் யானை’ (நற். 108) என வரும். தீர்த்தல் விடுதற்பொருண்மைக்கண் வந்தவழிக் கண்டு கொள்க. 8தீர்த்த லென்பது செய்வித்தலை யுணர்த்திநின்ற நிலைமையெனின், செய்வித்தலை யுணர்த்து நிலைமை வேறோதின் ‘இயைபே புணர்ச்சி’ (உரி. 12) என்புழியும் இயைப்பென வேறோதல் வேண்டும். அதனாற் றீர்த்தலுஞ் செய்தலை யுணர்த்துவதோர் உரிச்சொல் லெனவே படுமென்பது. விடற்பொருட்டாகு மென்பதனை இரண்டனொடுங் கூட்டுக. பன்மை யொருமை மயக்க மெனினு மமையும். (22) 319. கெடவரல் பண்ணை யாயிரண்டும் விளையாட்டு. இதன் பொருள் : ‘கெடவர லாயமொடு’ எனவும், ‘பண்ணைத் தோன்றிய வெண்ணான்கு பொருளும்’ (பொருள். மெய்ப்பாட். 1) எனவும், கெட வரலும் பண்ணையும் விளையாட்டாகிய குறிப்புணர்த்தும் என்றவாறு. (23) 320. தடவுங் கயவு நளியும் பெருமை. இதன் பொருள் : ‘வலிதுஞ்சு தடக்கை வாய்வாட் குட்டுவன்’ (புறம். 394) ‘கயவாய்ப் பெருங்கை யானை’ (அகம். 118) ‘நளிமலை நாடன்’ (புறம்.150) எனத் தடவும் கயவும் நளியும், பெருமையாகிய பண்புணர்த்தும் என்றவாறு. (24) 321. அவற்றுள் தடவென் கிளவி கோட்டமுஞ் செய்யும். 322. கயவென் கிளவி மென்மையு மாகும். 323. நளியென் கிளவி செறிவு மாகும். இதன் பொருள் : ‘தடமருப் பெருமை’ (நற். 120), ‘கயந்தலை மடப்பிடி’(நற். 137), ‘நளியிருள்’* எனத் தடவென்கிளவி முதலாயின, பெருமையே யன்றிக் கோட்டமும் மென்மையுமாகிய பண்பும் செறிவாகிய குறிப்பு முணர்த்தும் என்றவாறு. (25 - 27) ‘சிலைப்புவல் லேற்றுத் தலைக்கை தந்துநீ, நளிந்தனை வருதல்’ (பதிற்று. 52). 324. பழுதுபய மின்றே. 325. சாயன் மென்மை. 326. முழுதென் கிளவி யெஞ்சாப் பொருட்டே. இதன் பொருள் : ‘பழுதுகழி வாழ்நாள்’ ‘சாயன் மார்பு’ (பதிற். 16) ‘மண்முழு தாண்ட’ எனப் பழுது முதலாயின, பயமின்மையாகிய குறிப்பும் மென்மையாகிய பண்பும் எஞ்சாமையாகிய குறிப்பு முணர்த்தும் என்றவாறு. (28 - 30) 327. வம்புநிலை யின்மை. 328. மாதர் காதல். 329. நம்பு மேவு நசையா கும்மே. இதன் பொருள் : ‘வம்பு மாரி’ (குறுந். 66), ‘மாதர் நோக்கு’ ‘நயந்துநாம் விட்ட நன்மொழி நம்பி’ (அகம். 198), ‘பேரிசை நவிர மேஎ வுறையுங், காரி யுண்டி’ (மலைபடு. 82) என வம்பும் மாதரும், நிலையின்மையுங் காதலுமாகிய குறிப்புணர்த்தும்; நம்பும் மேவும் நசையாகிய குறிப்புணர்த்தும் எ-று மே - நசையாக. (31 - 33) 330. ஓய்த லாய்த னிழத்தல் சாஅ யாவயி னான்கு முள்ளத னுணுக்கம். இதன் பொருள் : ‘வேனி லுழந்த வறிதுயங் கோய்களிறு’ (கலி. 7) ‘பாய்ந்தாய்ந்த தானைப் பரிந்தானா மைந்தினை’ (கலி. 96) ‘நிழத்த யானை மேய்புலம் படர’ (மது. 303) ‘கயலற லெதிரக் கடும்புனற் சாஅய்’ (நெடுநல். 18) என ஓய்தன் முதலாயின நுணுக்கமாகிய குறிப்புணர்த்தும் என்றவாறு. ஆய்ந்த 9தானை - பொங்குதல் ம்விசித்தலானுணுகிய தானை. உள்ள தென்றது - முன்னுணு காதுள்ளது தென்றவாறு. (34) ம் (பாடம்) ‘அவிதலா னுணுகிய தானை’ 331. புலம்பே தனிமை. 332. துவன் றுநிறை வாகும். 333. 10முரஞ்சன் முதிர்வே. 334. வெம்மை வேண்டல். இதன் பொருள் : ‘புலிப்பற்கோத்த புலம்புமணித் தாலி’ (அகம். 7) எனவும், ‘ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்’ (நற். 170) எனவும், ‘சூன்முரஞ் செழிலி’ எனவும், ‘வெங்காமம்’ (அகம். 15) எனவும், புலம்பு முதலாயின, தனிமையும் நிறைவும் முதிர்வுமாகிய குறிப்பும் விரும்புதலாகிய பண்பு முணர்த்தும் என்றவாறு. (35 - 38) 335. பொற்பே பொலிவு. 336. வறிதுசிறி தாகும். 337. 11ஏற்ற நினைவுந் துணிவு மாகும். இதன் பொருள் : ‘பெருவரை யடுக்கம் பொற்ப’ (நற். 34) எனவும், ‘வறிதுவடக் கிறைஞ்சிய’ (பதிற். 24) எனவும், ‘கானலஞ் சேர்ப்பன் கொடுமை யேற்றி’ (குறுந். 145), ‘எற்றேற்ற மில்லாருள் யானேற்ற மில்லாதேன்’ எனவும், பொற்பு முதலாயின முறையானே பொலிவும், சிறிதென்பதூஉம், நினைவும் துணிவுமாகிய குறிப்புணர்த்தும் என்றவாறு. (39 - 41) 338. பிணையும் பேணும் பெட்பின் பொருள. இதன் பொருள் : ‘அரும்பிணை யகற்றி வேட்ட ஞாட்பினும்’ எனவும், ‘அமரர்ப் பேணியு மாவுதி யருத்தியும்’ (புறம். 99) எனவும், பிணையும் பேணும், பெட்பின் பொருளாகிய 12புறந்தருதலென்னுங் குறிப்பு ணர்த்தும் என்றவாறு. பெட்பின் பொருள வென்றதனான் பெட்பின் பொருளா கிய விரும்புதலுணர்த்தலுங் கொள்க. அது வந்தவழிக் கண்டு கொள்க. (42) 339. பணையே பிழைத்தல் பெருப்பு மாகும். இதன் பொருள் : ‘பணைத்துவீழ் பகழி’ எனப் பணை யென்பது பிழைத்தலாகிய குறிப்புணர்த்தும்; அதுவே யன்றி ‘வேய்மருள் பணைத்தோள்’ (அகம். 1) எனப் பெருப்பாகிய குறிப்பு முணர்த்தும் என்றவாறு. பெருமையாகிய பண்புணர்த்தாது பெருத்தலாகிய குறிப்பு ணர்த்து மென்பார் 13பெருப்பென்றார். (43) 340. படரே யுள்ளல் செலவு மாகும். இதன் பொருள் : ‘வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற் போகி’ (புறம். 47) ‘கறவை கன்றுவயிற் படர’ (குறுந். 108) எனப் படரென்பது உள்ளுதலுஞ் செலவு மாகிய குறிப்புணர்த்தும் என்றவாறு. (44) 341. பையுளுஞ் சிறுமையு நோயின் பொருள. இதன் பொருள் : ‘பையுண்மாலை’ (குறுந். 165) எனவும், ‘சிறுமை யுறுப செய்பறி யலரே’ (நற். 1) எனவும், பையுளுஞ் சிறுமையும், நோயாகிய குறிப்புணர்த்தும் என்றவாறு. (45) 342. எய்யா மையே யறியா மையே. இதன் பொருள்: ‘எய்யா மையல்லை நீயும் வருந்துதி’ (குறிஞ்சிப். 8) என எய்யாமை அறிவின்மையாகிய குறிப்புணர்த்தும் என்றவாறு. அறிதற் பொருட்டாய் எய்தலென்றானும் எய்த்தலென் றானும் சான்றோர் செய்யுட்கண் வாராமையின், 14எய்யாமை எதிர்மறையன்மையறிக. (46) 343. நன்றுபெரி தாகும். இதன் பொருள் : 15‘நன்று, மரிதுதுற் றனையாற் பெரும’ (அகம். 10) என நன்றென்பது பெரிதென்னுங் குறிப்புணர்த்தும் என்றவாறு. பெருமை யென்னாது பெரிதென்றதனான் நன்றென்பது வினையெச்சமாதல் கொள்க. (47) 344. தாவே வலியும் வருத்தமு மாகும். இதன் பொருள்: ‘தாவி னன்பொன் றைஇய பாவை’ (அகம். 212) எனவும், ‘கருங்கண் தாக்கலை பெரும்பிறி துற்றென’ (குறுந். 69) எனவும், தாவென்பது வலியும் வருத்தமுமாகிய குறிப்புணர்த்தும் என்றவாறு. (48) 345. தெவுக்கொளற் பொருட்டே. 346. தெவ்வுப்பகை யாகும். இதன் பொருள் : ‘நீர்த்தெவு நிரைத் தொழுவர்’ (மது. 89) எனவும், ‘தெவ்வுப் புலம்’ எனவும், தெவுந் தெவ்வும், முறையானே கொள்ளுதலும் பகையு மாகிய குறிப்புணர்த்தும் என்றவாறு. (49 , 50) 347. விறப்பு முறப்பும் வெறுப்புஞ் செறிவே. இதன் பொருள் : ‘விறந்த காப்போ டுண்ணின்று வலியுறுத்தும்’ எனவும், ‘உறந்த விஞ்சி’ எனவும், ‘வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்’ (புறம். 53) எனவும், விறப்பு முதலாயின செறிவென்னுங் குறிப்புணர்த்தும் என்றவாறு. (51) 348. அவற்றுள் விறப்பே வெரூஉப் பொருட்டு மாகும். இதன் பொருள் : ‘அவலெறி யுலக்கைப் பாடுவிறந் தயல’ (பெரும் பாண். 226) என விறப்பென்பது செறிவே யன்றி வெருவுதற் குறிப்பு முணர்த்தும் என்றவாறு. (52) 349. கம்பலை சும்மை கலியே யழுங்க லென்றிவை நான்கு மரவப் பொருள. இதன் பொருள் : ‘கம்பலை மூதூர்’ (புறம். 54) எனவும், ‘ஒரு பெருஞ் சும்மை யொடு’ எனவும், ‘கலிகொ ளாய மலிபுதொகு பெடுத்த’ (அகம். 11) எனவும், ‘உயவுப் புணர்ந்தன்றிவ் வழுங்க லூரே’ (நற். 203) எனவும், கம்பலை முதலாகிய நான்கும் அரவமாகிய இசைப் பொருண்மை யுணர்த்தும், என்றவாறு. (53) 350. அவற்றுள் அழுங்க லிரக்கமுங் கேடு மாகும். இதன் பொருள் : ‘பழங்க ணோட்டமு நலிய வழுங்கின னல்லனோ’ (அகம். 66) எனவும், ‘குணனழுங்கக் குற்ற முழைநின்று கூறுஞ் சிறியவர் கட்கு’ (நாலடி. 353) எனவும், அழுங்கல் அரவமேயன்றி இரக்கமுங் கேடுமாகிய குறிப்பு முணர்த்தும் என்றவாறு. (54) 351. கழுமென் கிளவி மயக்கஞ் செய்யும். இதன் பொருள் : 16‘கழுமிய ஞாட்பு’ (களவழி. 11) எனக் கழுமென்பது மயக்கமாகிய குறிப்புணர்த்தும் என்றவாறு. (55) 352. செழுமை வளனுங் கொழுப்பு மாகும். இதன் பொருள் : ‘செழும்பல் குன்றம்’ எனவும், ‘செழுந்தடி தின்ற செந் நாய் எனவும், செழுமை, வளனுங் கொழுப்புமாகிய பண்புணர்த்தும் என்றவாறு. (56) 353. விழுமஞ் சீர்மையுஞ் சிறப்பு மிடும்பையும். இதன் பொருள்: 17‘விழுமியோர்க் காண்டொறுஞ் செய்வர் சிறப்பு’ (நாலடி. 159) எனவும், ‘வேற்றுமை யில்லா விழுத்திணைப் பிறந்து’ (புறம். 27) எனவும், ‘நின்னுறு விழுமங் களைந்தோள்’ (அகம். 170) எனவும், விழுமம் முறை யானே சீர்மையுஞ் சிறப்பும் இடும்பையு மாகிய குறிப்புணர்த்தும் எ-று. (57) 354. கருவி தொகுதி. 355. கமநிறைந் தியலும். இதன் பொருள்: ‘கருவி வானம்’ (புறம். 159) எனவும், ‘கமஞ்சூல் மாமழை’ (அகம். 43) (குறுந். 158) எனவும், கருவியும் கமமும், தொகுதியும் நிறைவுமாகிய குறிப்புணர்த்தும் என்றவாறு. ‘கருவிவானம்’ என்புழிக் கருவி மின்னு முழக்கு முதலாயவற்றது தொகுதி. (58, 59) 356. அரியே யைம்மை. 357. கவவகத் திடுமே. இதன் பொருள் : ‘அரிமயிர்த் திரண் முன்கை’ (புறம். 11) எனவும், ‘கழூஉவிளங் காரங் கவைஇய மார்பே’ (புறம். 19) எனவும், அரியுங் கவவும், ஐம்மையும் அகத்தீடு மாகிய குறிப்புணர்த்தும் என்றவாறு. (60, 61) 358. துவைத்தலுஞ் சிலைத்தலு மியம்பலு மிரங்கலு மிசைப்பொருட் கிளவி யென்மனார் புலவர். இதன் பொருள் : ‘வரிவளை துவைப்ப’ எனவும், ‘ஆமா நல்லேறு சிலைப்ப’ (முருகு. 315) எனவும், கடிமரந் தடியு மோசை தன்னூர் நெடுமதில் வரைப்பிற் கடிமனை யியம்ப (புறம். 39) எனவும், ‘ஏறிரங்கிருளிடை’ (கலி. 46) எனவும், துவைத்தன் முத லாயின இசைப்பொரு ளுணர்த்தும் என்றவாறு. (62) 359. அவற்றுள் இரங்கல் கழிந்த பொருட்டு மாகும். இதன் பொருள் : 18‘செய்திரங்காவினை’ (புறம். 10) என இரங்கல், இசை யேயன்றிப் பொருளது கழிவாகிய குறிப்பு முணர்த்தும் என்றவாறு. கழிந்த பொருள்பற்றி வருங் கவலையைக் கழிந்த பொருளென்றார். (63) 360. இலம்பா டொற்க மாயிரண்டும் வறுமை. இதன் பொருள் : ‘இலம்படு புலவ ரேற்றகைந் நிறைய’ (மலைபடு. 576) எனவும், ‘ஒக்க லொற்கஞ் சொலிய’ (புறம். 327) எனவும், இலம்பாடும் ஒற்கமும் வறுமையாகிய குறிப்புணர்த்தும் என்றவாறு. இலமென்னும் உரிச்சொல், பெரும்பான்மையும் பாடென்னுந் தொழில்பற்றியல்லது வாராமையின் இலம்பா டென்றார். (64) 361. ஞெமிர்தலும் பாய்தலும் பரத்தற் பொருள. இதன் பொருள் : ‘தருமணன் ஞெமிரிய திருநகர் முற்றத்து’ (நெடுநல்.90) எனவும், ‘பாய்புனல்’ எனவும், ஞெமிர்தலும் பாய்தலும், பரத்தலாகிய குறிப்புணர்த்தும் என்றவாறு. (65) 362. கவர்வுவிருப் பாகும். 363. சேரே திரட்சி. 364. வியலென் கிளவி யகலப் பொருட்டே. இதன் பொருள் : ‘கவர்நடைப் புரவி’ (அகம். 130) எனவும், ‘சேர்ந்து செறி குறங்கு’ (நற். 170) எனவும், ‘வியலுலகம்’ எனவும், கவர்வு முதலாயின முறையானே விருப்புந் திரட்சியும் அகலமுமாகிய குறிப்புணர்த்தும் என்றவாறு. (66 - 68) 365. பேநா முருமென வரூஉங் கிளவி யாமுறை மூன்று மச்சப் பொருள. இதன் பொருள் : ‘மன்ற மராஅத்த பேமுதிர் கடவுள்’ (குறுந். 87) எனவும், ‘நாம நல்லரா’ (அகம். 72) எனவும், ‘உருமில் சுற்றம்’ (பெரும் பாண். 447) எனவும், பேம் முதலாகிய மூன்றும் அச்சமாகிய குறிப்பு ணர்த்தும் என்றவாறு. (69) 366. வயவலி யாகும். 367. வாளொளி யாகும். 368. துயவென் கிளவி யறிவின் றிரிபே. இதன் பொருள் : ‘துன்னருந் துப்பின் வயமான்’ (புறம். 44) எனவும், ‘வாண் முகம்’ (புறம். 6) எனவும், ‘துயவுற்றேம் யாமாக, எனவும் வயமுதலாயின, வலியும் அறிவு வேறுபடுதலுமாகிய குறிப்பும் ஒளியாகிய பண்பு முணர்த்தும் என்றவாறு. (70 - 72) 369. உயாவே யுயங்கல். 370. உசாவே சூழ்ச்சி. 371. வயாவென் கிளவி வேட்கைப் பெருக்கம். இதன் பொருள் : ‘பருந்திருந் துயாவிளி பயிற்று மியாவுயர் நனந்தலை’ (அகம்.19) எனவும், ‘உசாத்துணை’ (பொ. 126) எனவும், ‘வயவுறு மகளிர், (புறம். 20) எனவும், உயா முதலாயின, முறை யானே உயங் கலுஞ் சூழ்ச்சியும் வேட்கைப் பெருக்கமுமாகிய குறிப்புணர்த்தும் என்றவாறு. (73 - 75) 372. கறுப்புஞ் சிவப்பும் வெகுளிப் பொருள. இதன் பொருள் : ‘நிற்கறுப்பதோ ரருங்கடி முனையள்’ எனவும், ‘நீ சிவந் திறுத்த நீரழி பாக்கம்’ (பதிற். 13) எனவும், கறுப்புஞ் சிவப்பும், வெகுளியாகிய குறிப்புணர்த்தும் என்றவாறு. கருமை செம்மையென்னாது கறுப்புச் சிவப்பென்றதனான், 19தொழிற்பட்டுழியல்லது அவை வெகுளியுணர்த்தாமை கொள்க. (76) 373. நிறத்துரு வுணர்த்தற்கு முரிய வென்ப. இதன் பொருள் : ‘கறுத்த காயா’ ‘சிவந்த காந்தள்’ (பதிற். 15) என அவை வெகுளியேயன்றி நிறவேறுபாடுணர்த்தற்கு முரிய என்றவாறு. இவை வெளிப்படு சொல்லாயினும், ‘கறுப்புஞ் சிவப்பும் வெகுளிப் பொருள’ வென்றதனான், கருங்கண் செவ்வாய் எனப் பண்பாயவழி யல்லது தொழிலாயவழி நிறவேறுபா டுணர்த்தா வென்பது படுதலின், அதனைப் பாதுகாத்தவாறு. (77) 374. நொசிவு நுழைவு நுணங்கு நுண்மை. இதன் பொருள் : ‘நொசிமட மருங்குல்’ (கலி. 60) எனவும், ‘நுழைநூற் கலிங்கம்’ (மலைபடு. 561) எனவும், ‘நுணங்கு துகி னுடக்கம் போல’ (நற். 15) எனவும், நொசிவு முதலாயின, நுண்மையாகிய பண்புணர்த்தும் என்றவாறு. (78) 375. புனிறென் கிளவியீன் றணிமைப் பொருட்டே. இதன் பொருள் : ‘புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி’ (அகம். 56) எனப் புனி றென்பது ஈன்றணிமையாகிய குறிப்புணர்த்தும் என்றவாறு. (79) 376. நனவே களனு மகலமுஞ் செய்யும். இதன் பொருள் : ‘நனவுப்புகு விறலியிற் றோன்று நாடன்’ (அகம். 82) எனவும், ‘நனந்தலை யுலகம்’ (பதிற். 63) எனவும், நனவு, களனும் அகலமுமாகிய குறிப்புணர்த்தும் என்றவாறு. (80) 377. மதவே மடனும் வலியு மாகும். இதன் பொருள் : ‘பதவு மேய்ந்த மதவுநடை நல்லான்’ (அகம். 14) எனவும், ‘கயிறிடு கதச்சேப் போல மதமிக்கு’ (அகம். 36) எனவும், மதவென்பது மடனும் வலியுமாகிய குறிப்புணர்த்தும் என்றவாறு. (81) 378. மிகுதியும் வனப்பு மாகலு முரித்தே. இதன் பொருள் : ‘மதவிடை’ எனவும், ‘மாதர்வாண்முக மதைஇய நோக்கே’ (அகம். 130) எனவும், மடனும் வலியுமே யன்றி மிகுதியும் வனப்புமாகிய குறிப்புஞ் சிறுபான்மை யுணர்த்தும் என்றவாறு. மதவிடை யென்புழி, மிகுதி - உள்ள மிகுதி. (82) 379. புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி. இதன் பொருள் : ‘மீனொடு பெயரும் யாண ரூர’ (நற். 210) என யாண ரென்பது வாரி புதிதாகப் படுதலாகிய குறிப்புணர்த்தும் என்றவாறு. (83) 380. அமர்தல் மேவல். 381. யாணுக் கவினாம். இதன் பொருள் : ‘அகனமர்ந்து செய்யா ளுறையும்’ (குறள். 84) எனவும், ‘யாணது பசலை’ (நற். 50) எனவும், அமர்தலும் யாணும், முறையானே மேவுதலுங் கவினுமாகிய குறிப்புணர்த்தும் என்றவாறு. (84, 85) 382. பரவும் பழிச்சும் வழுத்தின் பொருள. இதன் பொருள் : ‘நெல்லுகுத்துப் பரவுங் கடவுளு மிலவே’ (புறம். 335) எனவும், ‘கைதொழூஉப் பழிச்சி’ (மது. 664) எனவும், பரவும் பழிச்சும், வழுத்துத லாகிய குறிப்புணர்த்தும் என்றவாறு. (86) 383. கடியென் கிளவி வரைவே கூர்மை காப்பே புதுமை விரைவே விளக்கம் மிகுதி சிறப்பே யச்ச முன்னேற் றாயீ ரைந்து மெய்ப்படத் தோன்றும் பொருட்டா கும்மே. இதன் பொருள் : கடியென்னு முரிச்சொல் வரைவு முதலாகிய பத்துக் குறிப்பு முணர்த்தும் என்றவாறு. உதாரணம்: ‘கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு’ (குறள். 658) என வரைவும், ‘கடிநுனைப் பகழி’ எனக் கூர்மையும், ‘கடிகா’ (களவழி.26) எனக் காப்பும், ‘கடிமலர்’ எனப் புதுமையும், ‘கடுமான்’ (அகம். 134) என விரைவும், ‘கடும்பகல்’ (அகம். 148) என விளக்கமும், ‘கடுங்கா லொற்றலின்’ (பதிற். 25) என மிகுதியுங், ‘கடுநட்பு’ எனச் சிறப்பும், ‘கடியையா னெடுந்தகை செருவத் தானே’ என அச்சமும், ‘கொடுஞ் சுழிப் புகாஅர்த் தெய்வ நோக்கிக் கடுஞ்சூ டருகுவ னினக்கே’ (அகம். 110) என 20முன்றேற்றும் உணர்த்தியவாறு கண்டுகொள்க. முன்றேற்று - புறத்திலன்றித் தெய்வமுதலாயினவற்றின் முன்னின்று தெளித்தல். (87) 384. ஐயமுங் கரிப்பு மாகலு முரித்தே. இதன் பொருள் : ‘கடுத்தன ளல்லளோ வன்னை’ எனவும், ‘கடிமிளகு தின்ற கல்லா மந்தி’ எனவும், கடியென்கிளவி மேற்கூறப்பட்ட பொருளேயன்றிச் சிறுபான்மை ஐயமாகிய குறிப்புங் கரிப்பாகிய பண்பு முணர்த்துதற்கு முரித்து என்றவாறு. (88) 385. ஐவியப் பாகும். 386. முனைவு முனி வாகும். 387. வையே கூர்மை. 388. எறுழ்வலி யாகும். இதன் பொருள் : ‘ஐதே காமம் யானே’ (நற். 143) எனவும், ‘சேற்றுநில முனைஇய செங்கட் காரான்’ (அகம். 46) எனவும், ‘வைநுனைப் பகழி’ (முல்லைப். 73) எனவும், ‘போரெறுழ்த் திணிதோள்’ (பெரும்பாண். 93) எனவும், ஐ முதலாயின முறையானே வியப்பும் முனிவுங் கூர்மையும் வலியுமாகிய குறிப்புணர்த்தும் என்றவாறு. (89 - 92) 389. மெய்பெறக் கிளந்த வுரிச்சொல் லெல்லா முன்னும் பின்னும் வருபவை நாடி யொத்த மொழியாற் புணர்த்தன ருணர்த்த றத்த மரபிற் றோன்றுமன் பொருளே. இதன் பொருள் : இச்சொல் இப்பொருட்குரித்தென மேற்கூறப் பட்ட உரிச்சொலெல்லாவற்றையும், அவற்று முன்னும் பின்னும் வருமொழிகளை ஆராய்ந்து, அம்மொழிகளுட் டக்க மொழி யாலே ஒருபொருளுணர்த்துக; இவ்வாறுணர்த்தவே, 21வரலாற்று முறைமையாற் றத்தமக் குரித்தாய பொருள் விளங்கும் என்றவாறு. இஃது என் சொல்லியவாறோ வெனின், உறுதவ நனியென வரூஉ மூன்று மிகுதி செய்யும் பொருள வென்ப (சொல். 299) எனவும், செல்ல லின்ன லின்னா மையே (சொல். 302) எனவும் ஓதியவழி, அவை வழக்கிடைப் பயின்ற சொல்லன்மை யான் இவை மிகுதியும் இன்னாமையு முணர்த்துமென்று ஆசிரிய ராணையாற் கொள்வ தல்லது வரலாற்றாற் பொருளுணர்த்தப் படாவோ வென்று ஐயுறுவார்க்கு, ‘உறுகால்’ (நற். 300) ‘தவப்பல’ (புறம். 235) ‘நனிசேய்த்து’ (ஐங்குறு. 443) எனவும், ‘மணங் கமழ் வியன்மார் பணங்கிய செல்லல்’ (அகம். 22) எனவும், முன்னும் பின்னும் வருஞ்சொன்னாடி அவற்றுள் இச்சொல்லோடு இவ் வுரிச்சொல் இயையு மென்று கடைப்பிடிக்கத் தாம் புணர்த்த சொற்கேற்ற பொருள் விளங்குதலின், உரிச்சொல்லும் வரலாற் றாற் பொருளுணர்த்து மென்பது பெறப்படுமென ஐய மகற்றிய வாறெனக் கொள்க. வரலாற்றாற் பொருளுணர்த் தாவாயின், குழுவின் வந்த குறிநிலைவழக்குப் போல இயற்கைச் சொல் லெனப்படா வென்பது. (93) 390. கூறிய கிளவிப் பொருணிலை யல்ல வேறுபிற தோன்றினு மவற்றொடுங் கொளலே. இதன் பொருள் : முன்னும் பின்னும் வருபவை நாடியவழி, உரிச்சொற்குக் கூறப்பட்ட பொருளேயன்றிப் பிற பொரு டோன்று மாயினும், கூறப்பட்ட வற்றோடு அவற்றையுங் கொள்க என்றவாறு. ‘கடிநாறும் பூந்துணர்’ என்றவழிக் கடியென்பது முன்னும் பின்னும் வருபவை நாட, வரைவு முதலாயின பொருட்கேலாது மணப் பொருட் டாயினவாறு கண்டுகொள்க. பிறவுமன்ன. (94) 391. பொருட்குப் பொரு டெரியினதுவரம் பின்றே. பயிலாதவற்றைப் பயின்றவை சார்த்திப் பொருளுணர்த் துங் காற் படுமுறைமை யுணர்த்துகின்றார். இதன் பொருள் : ஒரு சொல்லை ஒரு சொல்லாற் பொருளு ணர்த்திய வழி அப்பொருளுணர்த்த வந்த சொற்கும் பொருள் யாதெனப் பொருட்குப் பொருடெரியுமாயின், மேல் வருவனவற்றிற் கெல்லாம் ஈதொத்தலின், அவ்வினா 22இறை வரம்பின்றியோடும்; அதனாற் பொருட்குப் பொரு டெரியற்க என்றவாறு. ஒரு சொற்குப் பொருளுரைப்பது பிறிதொரு சொல்லா னன்றே? அச்சொற்பொருளும் அறியாதானை உணர்த்துமா றென்னையெனின், அது வருகின்ற சூத்திரத்தாற் பெறப்படும்.(95) 392. பொருட்குத்திரி பில்லை யுணர்த்த வல்லின். இதன் பொருள் : ‘உறுகால்’ (நற். 300) என்புழி உறுவென்னுஞ் சொற்குப் பொருளாகிய மிகுதி யென்பதன் பொருளும் அறியாத மடவோனாயின், அவ்வாறு ஒருபொருட்கிளவி கொணர்ந்து ணர்த்தலுறாது, “கடுங்காலது வலிகண்டாய், ஈண்டு உறுவென்ப தற்குப் பொரு”ளென்று தொடர்மொழி கூறியானும், கடுங்காலுள் வழிக் காட்டியானும், அம் மாணாக்கனுணரும் வாயிலறிந்து உணர்த்தல் வல்லானாயின் அப்பொருடிரிபு படாமல் அவனு ணரும் என்றவாறு. அவற்றானு முணர்த லாற்றாதானை உணர்த்து மாறென்னையெனின், அதற்கன்றே வருஞ்சூத்திர மெழுந்த தென்பது. (96) 393. உணர்ச்சி வாயி லுணர்வோர் வலித்தே. இதன் பொருள்: வெளிப்படத் தொடர்மொழி கூறியானும் பொருளைக் காட்டியானும் உணர்த்தவும் உணராதானை உணர்த்தும் வாயிலில்லை; உணர்ச்சியது வாயில் உணர்வோர துணர்வை வலியாக வுடைத்தாகலான் என்றவாறு. யாதானு மோராற்றா னுணருந்தன்மை அவற்கில்லை யாயின், அவனை யுணர்த்தற் பாலனல்ல னென்றவாறு. (97) 394. மொழிப்பொருட் காரணம் 23விழிப்பத் தோன்றா. இதன் பொருள் : உறு தவ முதலாயின சொற்கு மிகுதி முதலாயின பொரு ளாதல் வரலாற்று முறைமையாற் கொள்வதல்லது, அவை அப் பொருளாவதற்குக் காரணம் விளங்கத் தோன்றா என்றவாறு. பொருளொடு சொற்24கியைபு இயற்கையாகலான் அவ்வியற் கையாகிய இயைபாற் சொற்பொரு ளுணர்த்து மென்ப ஒரு சாரார். ஒரு சாரார் பிற காரணத்தா னுணர்த்து மென்ப. அவற்றுண் மெய்ம்மையாகிய காரணம் ஆசிரியர்க்குப் புலனாவ தல்லது நம்மனோர்க்குப் புலனாகாமையின், மொழிப்பொருட் காரண மில்லை யென்னாது விழிப்பத் தோன்றா வென்றார். அக் காரணம் பொதுவகையான் ஒன்றாயினுஞ், சொற்றொறு முண்மையிற் சிறப்பு வகையாற் பலவாம்; அதனான் விழிப்பத் தோன்றா வெனப் பன்மையாற் கூறினார். உரிச்சொற்பற்றி யோதினாரேனும், ஏனைச் சொற் பொருட்கு மிஃதொக்கும். (98) 395. எழுத்துப்பிரிந் திசைத்த லிவணியல் பின்றே. இதன் பொருள் : முதனிலையும் இறுதிநிலையுமாக எழுத்துக்கள் பிரிந்து வேறு வேறு பொருளுணர்த்தல் உரிச்சொல்லிடத்தியை புடைத்தன்று என்றவாறு. இவணியல்பின்றெனவே, எழுத்துப் பிரிந்து பொருளு ணர்த்தல் பிறாண்டு இயல்புடைத் தென்பதாம். அவை யாவன: வினைச்சொல்லும் ஒட்டுப்பெயருமாம். பிரிதலும் பிரியா மையும் பொருளுணர்த்துவன வற்றிற்கேயாகலின், கூறை கோட்படுதல் கடவுளர்க்கு எய்தாதவாறு போல, இடைச்சொற்கு இவ்வா ராய்ச்சி யெய்தாமை யறிக. தவ நனி யென்னுந் தொடக்கத்தன குறிப்பு வினையெச்சம் போலப் பொருளுணர்த்தலின், அவைபோலப் பிரிக்கப்படுங் கொல்லோ வென்று ஐயுறாமை ஐயமகற்றியவாறு. (99) 396. அன்ன பிறவுங் கிளந்த அல்ல பன்முறை யானும் பரந்தன வரூஉ முரிச்சொல் லெல்லாம் பொருட்குறை கூட்ட வியன்ற மருங்கி னினைத்தென வறியும் வரம்புதமக் கின்மையின் வழிநனி கடைப்பிடித் தோம்படை யாணையிற் கிளந்தவற் றியலாற் பாங்குற வுணர்த லென்மனார் புலவர். இதன் பொருள் : அன்ன பிறவுங் கிளந்தவல்ல பன்முறையானும் பரந்தன வரூஉம் உரிச்சொல் லெல்லாம் என்பது, சொல்லப் பட்டனவே யன்றி அவை போல்வன பிறவும் பலவாற்றானும் பரந்து வரும் உரிச்சொல் லெல்லாம் என்றவாறு. பொருட்குறை கூட்ட வியன்ற மருங்கினினைத்தென அறியும் வரம்பு தமக்கின்மையின் என்பது, பொருளொடு புணர்த் துணர்த்த இசை குறிப்புப் பண்பு பற்றித் தாமியன்ற நிலத்து இத்துணையென வரையறுத்துணரு மெல்லை தமக்கின்மையான் எஞ்சாமைக் கிளத்தலரிதாகலின் என்றவாறு. வழி நனி கடைப்பிடித் தோம்படை யாணையிற் கிளந்தவற்றியலாற் பாங்குறவுணர்தல் என்பது, இசையினுங் குறிப்பினும் பண்பினுந் தோன்றிப் பெயரினும் வினையினு மெய்தடு மாறி (சொல். 297) எனவும், ‘முன்னும் பின்னும் வருபவை நாடி’ எனவுங் கூறிய நெறியைச் சோராமற் கடைப்பிடித்து ‘எச்சொல் லாயினும் பொருள் வேறு கிளத்தல்’ (சொல். 297) எனவும், ஒத்த மொழியாற் புணர்த்தன ருணர்த்த றத்த மரபிற் றோன்றுமன் பொருளே (சொல். 389) எனவும், என்னாற் றரப்பட்ட பாதுகாவ லாணையிற் கிளந்த வற்றியல்பொடு மரீஇயவற்றை முறைப்பட வுணர்க என்றவாறு. குறிப்புப்பொருண்மை பலவகைத்தாகலானும், பெயரினும் வினையினு மெய்தடுமாறியுந் தடுமாறாதும் ஒரு சொற் பலபொருட் குரித்தாயும் வருதலானும், ஈறுபற்றித் தொகுத்து ணர்த்தற்கு அன்ன வீறுடைய வன்மை யானும், ‘பன்முறை யானும் பரந்தன வரூஉம்’ என்றார். 25பொருளைச் சொல் இன்றியமையாமையின், அதனைக் குறையென்றார்; ஒருவன் வினையும் பயனும் இன்றியமை யாமை யின், ‘வினைக் குறை தீர்ந்தாரிற் றீர்ந்தன் றுலகு’ (குறள். 612) ‘பயக்குறை யில்லைத் தாம் வாழு நாளே’ (புறம். 188) என்றாற் போல. பொருட்குறை கூட்ட வரம்பு தமக் கின்மையி னென இயையும். இருமை யென்பது கருமையும் பெருமையுமாகிய பண்பு ணர்த்தும். சேணென்பது சேய்மையாகிய குறிப்புணர்த்தும். தொன்மை யென்பது பழைமையாகிய குறிப்புணர்த்தும். இவை யெல்லாம் ‘அன்ன பிறவுங் கிளந்த வல்ல’ வென்பதனாற்கொள்க. பிறவுமன்ன. (100) எட்டாவது - உரியியல் முற்றிற்று. கணேiசையர் அடிக்குறிப்புகள்: 1. பொறி - மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறி. 2. பெயர்வினைப் போலி - பெயர்வினைபோன்று வருவன. கறுப்பு - பெயர் போன்றது. தவ - வினைபோன்றது. துவைத்தல். இதில் துவை என்னும் உரிச்சொல் பெயர்க்கு முதனிலையாய் வந்தது. துவைக்கும் இதில் துவை என்னும் உரிச்சொல் வினைக்கு முதனிலையாய் வந்தது. முதனிலை - பகுதி. 3. மெய்தடுமாறல் என்றது பெயர்வினைகளாகத் திரிதலை. 4. தம்மையே கிளத்தல் - சொல்லாகிய தம்மையே எடுத்தோதல். பயின்றது - எல்லார்க்கும் பொருள் தெரிந்தது. பயிலாதது - எல்லார்க்கும் பொருள் தெரியாதது. உட்கு - அச்சம். 5. இன்னாமை - துன்பம். 6. ஏகல்லடுக்கம் - பெருகிய வளர்ந்த கன்மலை. 7. அதிழ்கண்முரசம் - நடுங்குகின்ற கண்ணையுடைய முரசு. 8. தீர்த்தல் பிறவினையெனின்? இயைபு என்னுந் தன்வினையோடு இயைப்பு என்னும் பிறவினையையு மொருங்கோதல் வேண்டும். அவ்வாறோதாமையின் தீர்த்தலுந் தன்வினைப்பொருட் டேயாமென்க. தீர்த்தலைப் பிறவினையாக இளம்பூரணர் கோடலின் இவ்வாறு அதனை மறுத்துக் கூறினார் என்க. 9. தானை - வஸ்திரம். பொங்குதல் - பொலிதல். நுணுகுதல் - ஒடுங்குதல் - முன்னுள்ள பொலிவு விசித்தலால் ஒடுங்குதல். விசித்தல் - கட்டுதல். 10. முரஞ்சல் - முதிர்தல் - முற்றுதல். 11. ஏற்றம் - நினைவு. கொடுமையேற்றி - கொடுமையை நினைந்து. ஏற்ற மில்லாருள் - துணிவில்லாருள். ஏற்றமில்லாதேன் - துணிவில்லாதேன். 12. புறந்தரல் - காத்தல். 13. பெருப்பு - பெருத்தல். இது தொழில். 14. எய்யாமைக்கு எய்த்தல் எதிர்மறையாகி பிற்கால நூல்களில் வழங்கல். காலத்துட்பட்டதாகும். 15. நன்று மரிது உற்றனை - பெரிது மரிதாக உற்றாய். 16. கழும் - மயக்கம் - கலப்பு - கழுமிய ஞாட்பு - கைகலந்தபோர். 17. விழுமம் - சீர்மை. விழுமியோர் - சீரியோர்; நாகரிகர் என்பது கருத்து. 18. செய்திரங்காவினை - செய்து (முற்றுப்பெறாமையாற்) பின் இரங்காத செயல் என்பது கருத்து. கழிந்த பொருள் - முற்றப்பெறாத காரியம். 19. கறுப்பு - கோபம். இது கறுப்பது என வினைப்பட்டுழிக் கோபிப்பது என்னும் பொருளையுடையதாகும். 20. முன்றேற்று - தெய்வத்தின் முன்னின்று சத்தியஞ் செய்து தெளிதல். 21. வரலாறு - வருதல் வழி; தொன்றுதொட்டு வழங்கி வந்த முறை என்பது பொருள். தாம் புணர்த்த சொல் என்றது உரிச்சொல்லை. இயற்கை - இயல்பு. 22. இறை - விடை 23. விழிப்பு - விளங்க. 24. இயைபு - பொருத்தம். சம்பந்தம். இயற்கை - இயல்பு. இயற்கையாகிய இயைபு என்றது ஆற்றலை. இச்சொல் இப்பொருளுணர்த்துக என்னும் இறைவனுடைய சங்கேதமே ஆற்றலாதலின் இயற்கையாகிய இயைபு என்றார். ஆதலால் சங்கேதம் என்பதும் இயற்கையாகிய இயைபு என்பதும் வேறன்று; ஒன்றே. சங்கேதம் - நியமம். சொற்றொறுமுண்மை - ஒவ்வொரு சொற்கு முண்மை. 25. பொருட்குறை - பொருளாகிய குறை. குறை - இன்றியமையாதது. சொல் தனக்கு இன்றியமையாததாகக் கொண்டது - பொருள் என்பது கருத்து. அதனை - பொருளை. வினைக்குறை - வினையாகிய இன்றியமை யாதது. பயக்குறை - பயனாகிய இன்றியமையாதது. எச்சவியல் கிளவியாக்கம் முதலாக உரியியல் இறுதியாகவுள்ள இயல் களுள் உணர்த்துதற்கு இடமில்லாமையாற் கூறப்படாது எஞ்சி நின்ற சொல்லிலக்கணமெல்லாவற்றையுந் தொகுத்துணர்த்துவது இவ்வியலாதலின் எச்சவியலென்னும் பெயர்த்தாயிற்று. பத்துவகையெச்சம் உணர்த்தலால் எச்சவியல் எனப் பெயராயிற்றென்பாருமுளர். பலபொருட்டொகுதிக்கு அத் தொகுதியைச் சேர்ந்த ஒரு பொருளைப்பற்றிப் பெயரிடுங்கால் அத்தொகுதியுள் தலைமையான பொருளைப்பற்றியோ பெரும்பான்மையாகிய பொருளைப்பற்றியோ பெயரிடுதல் மரபு. அத்தகைய தலைமையாகிய பொருளாகவோ பெரும்பான்மை யாகிய பொருளாகவோ இவ்வெச்சங்களைக் கொள்ளுதற் கில்லாமையால் அவர் கூற்றுப் பொருந்தாதென்பர் சேனாவரையர். இவ்வியலிலுள்ள சூத்திரங்களை 66-ஆக இளம்பூரணரும், 67-ஆகச் சேனாவரையரும் நச்சினார்க்கினியரும் பகுத்துப் பொருளுரைப்பர். இவ்வியலிலுள்ள ‘இறப்பின் நிகழ்வின்’ (31) ‘எவ்வயின் வினையும், (32) ‘அவைதாந்தத்தங்கிளவி’ (33) என்னும் மூன்று சூத்திரங்களையும் வினையிலக் கணமாகிய இயைபு நோக்கி வினையியலிறுதியில் வைத்து உரை கூறினார் தெய்வச்சிலையார். அவருரையின்படி இவ்வியற் சூத்திரங்கள் அறுபத்தொன்றாம். இவ்வியலின்கண் 1-முதல் 15-வரையுள்ள சூத்திரங்களால் செய்யுட்குரிய சொல்லும் அவற்றது இலக்கணமும் அவற்றாற் செய்யுள் செய்யும் வழிப்படும் விகாரமும் செய்யுட் பொருள் கோளும் ஆகியவற்றையுணர்த்துகின்றார் 16-முதல் 25-வரை யுள்ள சூத்திரங்களால் வேற்றுமைத்தொகை, உவமத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை ஆகிய அறுவகைத் தொகைச்சொற்களின் இயல்பினை விரித்துரைக்கின்றார். 26-முதல் 30-வரை சொல் மரபுபற்றிய வழுக்காக்கின்றார். 31-முதல் 33-வரை முற்றுச் சொற்கு இலக்கணங்கூறுகின்றார். 34-முதல் 45-வரை மேல் வினையியலுள்ளும் இடைச்சொல்லுள்ளும் முடிபு கூறப்படா தெஞ்சிநின்ற பிரிநிலையெச்சம், வினையெச்சம், பெயரெச்சம், ஒழியிசையெச்சம், எதிர்மறையெச்சம், உம்மையெச்சம், என வென்னெச்சம், சொல்லெச்சம், குறிப்பெச்சம், இசையெச்சம் ஆகிய பத்துவகை யெச்சங்களுக்கும் முடிபு கூறுகின்றார். 46- முதல் 65-வரையுள்ள சூத்திரங்களால் ஒருசார் மரபு வழுக்காத்தலும், கிளவியாக்கத்துக் கூறப்படாதெஞ்சிநின்ற மரபிலக்கணமும், ஒருசார் வழுக்காத்தலும், வினையியலுள்ளும் இடையியலுள்ளும் சொல்லாது ஒழிந்துநின்ற ஒழிபு, புதியன புகுதலும், தலைக்குறை, இடைக்குறை; கடைக்குறையாகிய விகாரமும், வேறுபடுத்தலும் வேறு பகுக்கப்படுதலுமாகிய சொல்வகையுள் இடைச்சொல் லெல்லாம் பொருளை வேறுபடுத்தும் சொல்லாதலும், உரிச்சொல்லுள்ளும் சில அவ்வாறு பொருள் வேறுபடுத்துஞ் சொல்லாதலும், வினை யெச்சத்திரிபும், பொருளால் மாறுபட்ட இருசொற்கள் ஒருங்கு வருதலும்’ குறிப்பாற் பொருளுணரப் படுவனவும், ஒரு பொருள்மேல் வரும் இரண்டு சொற்கள் பிரிவின் நிற்றலும், ஒருமைக்குரிய பெயர்ச்சொல் பன்மை யுணர்த்தலும். ஆற்றுப்படைச் செய்யுளில் முன்னிலை குறித்து நின்ற ஒருமைச் சொல் பன்மையொடு முடிதலும் உணர்த்தப் படுகின்றன. இவ்வியலிறுதி யிலுள்ள 66-ஆம் சூத்திரம் இச் சொல்லதிகாரத்திற்குப் புறனடையாக அமைந்துளது. செய்யுளாக்குதற்குரிய சொல்லாவன இயற்சொல், திரி சொல், திசைச்சொல், வடசொல் என நான்காம். அவற்றுள் இயற்சொல்லாவன செந்தமிழ் நிலத்தார் வழங்கும் வழக்கத் திற்குப் பொருந்தித் தத்தம் பொருளின் வழுவாமல் நடக்குஞ் சொல்லாம். ஒரு பொருளைக் கருதிய பலசொல், பல பொருளைக் கருதிய ஒருசொல் எனத் திரிசொல் இருவகைப்படும். திசைச்சொல்லாவன செந்தமிழ் வழக்கைப் பொருந்திய பன்னிரு நிலங்களினும் அவ்வந்நிலத்து வாழ்வார்தம் குறிப்பினையே பொருளாகக் கொண்டு வழங்குவன. வடசொல்லாவன வட மொழிக்கே யுரிய எழுத்தினை நீங்கி இருமொழிக்கும் பொதுவாகிய எழுத்தினையுறுப்பாகவுடைய சொற்களாம். சிறப்பெழுத்தாலாகிய வடசொற்கள் சிதைந்துவந்தனவாயினும் தமிழொலிக்கு ஏற்புடையவாயின் அறிஞர் அவற்றை விலக்கார் எனக் கூறுவர் தொல்காப்பியர். பெயர், வினை, இடை உரி யென மேற்கூறப்பட்ட நால்வகைச் சொற்களே செய்யுட் சொல்லாவன எனத் தெரிதல் வேண்டி இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என நால்வகையாகப் பகுத்துரைக்கப்பட்டன. வடசொல்லென்பது ஆரியச்சொற்போலுஞ்சொல் என்பர் இளம்பூரணர். எனவே வடசொல் யாவும் ஆரியச் சொற்களாகவே இருக்கவேண்டும் மென்ற நியதியில்லையென்பது உரையாசிரியர் கருத்தாதல் பெறப்படும். அன்றியும் ஆசிரியர் தொல்காப்பியனார் வடசொல் எனத் திசைபற்றிப் பெயர்கூறியதல்லது இன்னமொழியெனக் கூறாமையானும் வடசொற்கிளவியில் வடவெழுத்தொடு பொருந்திய ஆரியச்சொல்லும் ஏனைப்பொதுவெழுத்தான் அமைந்த தமிழ்திரி சொற்களும் உளவென்பது “வடசொற்கிளவி வடவெழுத்தொரீஇ, எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே” என ஆசிரியர் கூறுதலாற் பெறப்படுதலின், வடவெழுத் தானமைந்த ஆரியச்சொற்களும் பொதுவெழுத்தானமைந்த தமிழ் திரிசொற்களுமாக வடநாட்டில் வழங்கிய இருவகைச் சொற்களையுமே ஆசிரியர் வடசொல்லெனத் தழுவிக்கொண் டாராதல் வேண்டும். ஆரியச்சிறப்பெழுத்தால் வருவன தமிழொலிக்கேலாமையின் ‘வடவெழுத்தொரீ இ எழுத்தோடு புணர்ந்தசொல் வடசொல், என்றும் ஆரியச் சிறப்பெழுத் தாலாகிய சொற்களும் தமிழொலிக்கு இயைந்தனவாகச் சிதைந்துவரின், அவற்றையும் வடசொல்லெனத் தழுவிக்b காள்ளலாமென்றும் ஆசிரியர் கூறுதலால் தமிழோடு தொடர்பில்லாத வேற்றுமொழி யொலிகள் கலத்தல் கூடாதென்னும் வரையறை இனிது புலனாதல் காண்க. செந்தமிழ நாடாவது: வையையாற்றின் வடக்கும் மருத யாற்றின் தெற்கும் கருவூரின் கிழக்கும் மருவூரின் மேற்கும் என்பர் இளம்பூரணர் முதலியோர். இவ்வாறு உரைத்தற்குத்தக்க ஆதாரங் காணாமையானும் வையையாற்றின் தெற்காசிய கொற்கையும் கருவூரின் மேற்காகிய கொடுங்கோளூரும் மருதயாற்றின் வடக்காரிய காஞ்சியும் ஆன்னோர் கருத்துப்படி தமிழ்திரி நிலமாதல் வேண்டுமாதலானும் அவர் கூற்றுப் பொருந்தாது. “ வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து வழக்குஞ் செய்யுளுமா யிருமுதலின் எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி” எனவரும் சிறப்புப் பாயிரத்துள் வடவேங்கடத்திற்கும் தென் குமரிக்கும் இடைப்பட்ட நிலப்பகுதி முழுவதையும் ‘தமிழ்கூறும் நல்லுலகம்’ எனப் பனம்பாரனார் சிறப்பித்தமையானும், கிழக்கும் மேற்கும் எல்லைகூறாது தென்குமரியெனத் தெற்கெல்லை கூறியவதனாற் குமரியின் தெற்கேயுள்ள நாடுகளையொழித்து வேங்கடமலையின் தெற்கும் குமரியின் வடக்கும் குணகடலின் மேற்கும் குடகடலின் கிழக்குமாகிய தமிழகம் முழுவதையுமே செந்தமிழ் நிலமெனத் தொல்காப்பியர் காலத் தமிழ் மக்கள் வழங்கினர் எனக் கொள்ளுதலே பொருத்தமுடையதாகும். வடவேங்கடந் தென்குமரியிடைப்பட்ட தமிழகம் ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்துப் பன்னிரு நிலங்களாகப் பகுக்கப்பட்டிருந்ததென்பது “செந்தமிழ்சேர்ந்த பன்னிரு நிலத்தும்” (எச்ச-ச) என அவ்வாசிரியர் கூறுதலால் இனிது விளங்கும். இப்பன்னிரு நிலங் களாவன: பொங்கர்நாடு, ஒளிநாடு, தென்பாண்டிநாடு, குட்டநாடு, குடநாடு, பன்றிநாடு, கற்காநாடு, சீதநாடு, பூழிநாடு, மலைநாடு, அருவாநாடு, அருவாவடதலை என்பன என்றும் இவற்றைத் தென்கீழ்பால் முதலாக வடகீழ்பாலிறுதியாக எண்ணிக்கொள்க வென்றும் கூறுவர் சேனாவரையர். ‘செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்’ என்ற தொடர்க்குச் ‘செந்தமிழ் வழங்கும் தமிழ்நாட்டின் பகுதிய வாகிய பன்னிரு நிலங்களினும்’ எனப் பொருள் கொள்ளுதலே ஆசிரியர் கருத்துக்கு ஏற்புடையதாகும். இவ்வாறுகொள்ளாது ‘செந்தமிழ்நாட்டைச் சூழ்ந்த பன்னிரண்டு நிலத்தும்’ எனப் பழைய வுரையாசிரியர்கள் பொருள்கொண்டு, செந்தமிழ் நிலம் வேறாகவும் அதனைச் சூழ்ந்த பன்னிரு நிலங்களும் வேறாகவும் கூறுப. ‘தென்பாண்டிகுட்டம்’ எனத்தொடங்கும் பழைய வெண் பாவிலும் ‘செந்தமிழ்சேர் ஏதமில் பன்னிருநாடு’ எனக் கூறப் படுதலால் இப்பன்னிரு நாடுகளும் செந்தமிழ் வழக்கினை மேற் கொண்டவை யென்பது நன்கு விளங்கும் எனவே. இப்பன்னிரண்டின்வேறாகச் செந்தமிழ் நிலமெனத் தனியே ஒரு நாடிருந்ததென்றும் அஃதொழிந்த பன்னிரு நாடுகளும் கொடுந் தமிழ் நாடுகளாமென்றுங் கூறுதல் ஆசிரியர் தொல்காப்பியனார்க்கு முரணாதல் தெளிக. செய்யுளகத்து மொழிகள் தம்முட்புணரும்முறைநிரல் நிறை, சுண்ணம், அடிமறி, மொழிமாற்று என நால்வகைப் படுமென்றார் தொல்காப்பியனார். பிற்காலத்தார் கூறும் யாற்று நீர்ப் பொருள்கோளும். அளைமறிபாப்புப் பொருள் கோளும் திரிவின்றிப் பொருள் விளக்குதலின் இயல்பாயடங்கும். கொண்டு கூட்டு சுண்ணமொழிமாற்றிலும், பூட்டுவிற் பொருள்கோள் மொழிமாற்றிலும் அடங்குமென்றும், தாப்பிசைப் பொருள்கோளில் முன்னொருசொல் வருவிக்க வேண்டுதலின் அது ‘பிரிநிலைவினையே’ என்னுஞ் சூத்திரத்துளடங்கு மென்றுங் கூறுவர் தெய்வச்சிலையார். அறுவகைத் தொகை சொற்களின் இலக்கண முணர்த்துங் கால், வேற்றுமை யுருபும் உவமவுருபும் உம்மையும் வினைச்சொல் லீறும் பண்புச்சொல்லீறும் தொகுதலின் தொகையாயின வென்றும், அவ்வப் பொருள்மேல் ஒன்றும் பலவுமாகிய சொற்கள் பிளவுபாடது ஒற்றுமைப்படத் தம்முள் இயைதலின் தொகை யாயினவென்றும் உரையாசிரியர்கள் இருவகைப் பெயர்க்காரணங் கூறியுள்ளார்கள். ‘ஐம்பாலறியும் பண்புதொகு மொழியும்’ எனவும் ‘செய்யுஞ் செய்தவென்னுங் கிளவியின் மெய்யொருங்கியலுந் தொழில் தொகு மொழியும்’ எனவும் ‘உருபுதொக வருதலும்’ எனவும் ‘மெய்யுருபுதொகா விறுதியான’ எனவும் ‘பண்புதொக வரூஉங்கிளவியானும்’ எனவும் ‘உம்மைதொக்க பெயர்வயி னானும்’ எனவும் வேற்றுமை தொக்க பெயர்வயிறானும் எனவும் ‘உம்மையெஞ்சிய இருபெயர்த் தொகைமொழி’ எனவும் ஆசிரியர் தொக்கே நிற்குமெனச் சூத்திரஞ் செய்தலின், வேற்றுமை யுருபும், உவம வுருபும், உம்மும், வினைச்சொல்லீறும், பண்புணர்த்தும் ஈறும், இத்தொகைச் சொற்கள் அல்லாததோர் சொல்லும் தொக்கு நிற்றலின் தொகைச் சொல்லென்பதே அவர் கருத்தாயிற்று” என நச்சினார்க்கினியர் தொகைமொழிபற்றிய தொல்காப்பியனார் கருத்தை நன்கு விளக்கியுள்ளார். முற்றுச் சொல்லாவது இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் மூன்று காலத்தாலும், தன்மை முன்னிலை படர்க்கையென்னும் மூன்றிடத்தாலும், தொழிலாலும் குறிப்பாலும் இவ்விரண்டாய் வரும் அவ்வறுவகைச் சொல்லாம் என்பர் ஆசிரியர். மூவிடத்தும் தொழிலும் குறிப்புப்பற்றி இவ்விரண்டாய் வருதலின் அறுவகைச் சொல்லாயின. செய்கையும், பாலும், காலமும், செயப்படு பொருளும் தோன்றி முற்றி நிற்றலானும், பிறிதோர் சொல் நோக்காது முடிந்து நிற்றலானும், எப்பொழுது அவை தம் எச்சம் பெற்று நின்றனவோ அப்பொழுதே பின் யாதும் நோக்காவாய்ச் செப்பினை மூடினாற்போன்று பொருள் முற்றி அமைந்து மாறுதலானும் முற்றாயின எனக் காரணங் கூறுவர் உரையாசிரியர். பின் ‘பிரிநிலை வினையே பெயரே’ (எச்-34) என்புழிப் பெயரெச்சமும் என்புழிப் பெயரெச்சமும் வினையெச்சமுங் கூறுதலின் அவற்றோடியைய முற்றுச் சொல்லிலக்கணமும் ஈண்டுக் கூறினார். கூறவே முற்றும் பெயரெச்சமும் வினையெச்சமும் என வினைச்சொல் மூவகைத்தாதல் இனிதுணரப்படும். எஞ்சி நிற்பதோர் பொருளையுடைய சொல் எச்சச் சொல் லாகும். பிரிக்கப்பட்ட பொருளையுணர்த்துஞ் சொல் எஞ்ச நிற்பது பிரிநிலையெச்சம். வினைச்சொல் எஞ்ச நிற்பது வினையெச்சம். பெயர்ச்சொல் எஞ்ச நிற்பது பெயரெச்சம். சொல்லொழிந்த சொற்பொருண்மை யெஞ்ச நிற்பது ஒழியிசையெச்சம். தன்னின் மாறுபட்ட பொருண்மை யெஞ்ச நிற்பது எதிர்மறையெச்சம். உம்மையுடைத்தாயும் உம்மை யின்றியும் வருஞ்சொற்றொடர்ப் பொருளை எச்சமாகக் கொண்டு முடிய நிற்பது உம்மையெச்சமாகும். எனவென்னும் ஈற்றையுடையதாய் வினையெஞ்ச நிற்பது எனவென்னெச்ச மாகும். இவையெழும் தமக்குமேல் வந்து முடிக்கும் எச்சச் சொற்களையுடையனவாகும். சொல்லெச்சம், குறிப்பெச்சம், இசையெச்சம் என்னும் மூன்றும் ஒருதொடர்க்கு ஒழிபாய் எஞ்சிநிற்பன. எனவே இவை பிற சொற்களை விரும்பி நில்லாது சொல்லுவார் குறிப்பால் எஞ்சி நின்ற பொருளை யுணர்த்துவன வென்பர் ஆசிரியர். ஒரு சொல்லளவு எஞ்சி நிற்பன சொல் லெச்சமென்றும், தொடரா யெஞ்சுவன இசையெச்சமென்றும் இங்ஙனம் சொல்வகை யானன்றிச் சொல்லுவான் குறிப்பினால் வேறு பொருளெஞ்ச நிற்பன யாவும் குறிப்பெச்சமென்றும் கூறுப. இப்பத்தெச்சங்கட்கும் வேறு பொருள் கூறுவாருமுளர். எச்சமாவன ஒருசார் பெயரும் வினையும் இடைச்சொல்லு மாதலின் பெயரியல் முதலாயினவற்றுள் இப்பத்தையும் ஒருங் குணர்த்துதற் கிடமின்மையால் எஞ்சி நின்ற இலக்கணங்களைக் கூறும் இவ்வியலின்கண்ணே தொகுத்துக் கூறினார் ஆசிரியர். இவ்வாறே இவ்வியலிற் கூறிய ஏனையவற்றையும் பகுத்துணர்தல் கற்போர் கடனாகும். - க. வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 219-225 ஒன்பதாவது எச்சவியல் 397. இயற்சொற் றிரிசொற் றிசைச்சொல் வடசொல்லென் றனைத்தே செய்யு ளீட்டச் சொல்லே. கிளவியாக்கமுதலாக உரியிய லிறுதியாகக் கிடந்த ஒத்துக்களுள் உணர்த்துதற் கிடமின்மையான் உணர்த்தப்படாது 1எஞ்சி நின்ற சொல்லிலக்கண மெல்லாந் தொகுத்துணர்த்திய வெடுத்துக்கொண்டார். அதனான் இவ்வோத்து எச்சவிய லென்னும் பெயர்த்தாயிற்று. ‘கண்டீ ரென்றா’ (சொல். 425) எனவும், ‘செய்யா யென்னு முன்னிலை வினைச்சொல்’ (சொல். 450) எனவும், ‘உரிச்சொன் மருங்கினும்’ (சொல். 456) எனவும், ‘ஒருமை சுட்டிய பெயர் நிலைக் கிளவி’ (சொல். 461) எனவும், இவை முதலாகிய சூத்திரங்களா னுணர்த்தப்பட்ட அசைநிலையும் வினைச்சொல் இலக்கணமும் வழுவமைதியும் அவ்வோத்துக்களு ளுணர்த்தாது ஈண்டு ணர்த்திய தென்னையோ வெனின், அதற்குக் காரணம் அவ்வச் சூத்திர முரைக்கும்வழிச் சொல்லுதும். பலபொருட்டொகுதிக்கு ஒன்றனாற் பெயர் கொடுக்குங் கால் தலைமையும் பன்மையும் பற்றிக் கொடுப்பினல்லது பிறிதாறின்மையானும், தலைமையும் பன்மையும் எச்சத்திற்கின் மையானும், பத்துவகையெச்சம் ஈண்டு உணர்த்தலான் எச்ச வியலாயிற்றென்றல் பொருந்தாமை யுணர்க. செய்யுட்குரிய சொல்லும், அவற்றதிலக்கணமும், அவற்றாற் செய்யுள் செய்வுழிப்படும் விகாரமும், செய்யுட் பொருள் கோளும், 2எடுத்துக் கோடற்கண் உணர்த்துகின்றார். இதன் பொருள் : இயற்சொல்லும், திரிசொல்லும், திசைச் சொல்லும், வட சொல்லும் என அத்துணையே செய்யுளீட்டுதற் குரிய சொல்லாவன என்றவாறு. இயற்சொல்லானுஞ் செய்யுட்சொல்லாகிய திரிசொல் லானுமே யன்றித் திசைச்சொல்லும் வடசொல்லும் இடை விராய்ச் சான்றோர் செய்யுள் செய்யுமாறு கண்டு ஏனைப் பாடைச் சொல்லுஞ் செய்யுட் குரியவோ வென்றை யுற்றார்க்கு, இந்நான்கு சொல்லுமே செய்யுட்குரியன; பிற பாடைச் சொல் உரியவல்ல வென்று வரையறுத்தவாறு. செய்யுள் செய்யலாவது - ஒருபொருண்மேற் பலசொற் கொணர்ந் தீட்டலாகலான், 3ஈட்டமென்றார். பெயர் வினையிடை யுரி யென்பன இயற்சொற் பாகுபா டாகலான், இயற்சொல் அந்நான்கு பாகுபட்டானுஞ் செய்யுட் குரித்தாம். திரிசொற் பெயராயல்லது வாரா. என்மனா ரென்பதனை வினைத்திரிசொல் என்பாரு முளர். அஃது ‘என்றிசினோர்’ ‘பெறலருங் குரைத்து’ (புறம். 5) என்பன போலச் செய்யுண் முடிபு பெற்று நின்றதென்றலே பொருத்த முடைத்து. தில்லென்னு மிடைச் சொல், தில்லவென்றானுந் தில்லையென் றானும் திரிந்து நின்றவழி அவை வழக்கிற்குமுரியவாகலின், திரிசொல்லெனப் படாது. ‘கடுங்கால்’ என்புழிக் கடியென்னு முரிச்சொல், ‘பெயரினும் வினையினு மெய்தடுமாறி’ (சொல். 297) என்பதனாற் பண்புப் பெயராய்ப் பெயரொடு தொக்கு வழக்கினுட் பயின்று வருதலான், திரிசொல்லெனப் படாது. திசைச்சொல்லுள் ஏனைச் சொல்லு முளவேனும், செய்யுட்குரித் தாய் வருவது பெயர்ச் சொல்லேயாம். வடசொல்லுள்ளும் பெயரல்லது செய்யுட் குரியவாய் வாரா. இவ்வாறாதல் சான்றோர் செய்யுள் நோக்கிக் கண்டுகொள்க. (1) 398. அவற்றுள் இயற்சொற் றாமே செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித் தம்பொருள் வழாமை யிசைக்குஞ் சொல்லே. இதன் பொருள் : அந்நான்கனுள், இயற்சொல்லென்று சொல்லப் பட்ட சொற்றாம், செந்தமிழ்நிலத்து வழக்காதற்குப் பொருந்திக் கொடுந்தமிழ் நிலத்துந் தம்பொருள் வழுவாமலுணர்த்துஞ் சொல்லாம் என்றவாறு. அவையாவன: நிலம், நீர், தீ, வளி, சோறு, கூழ், பால், தயிர், மக்கள், மா, தெங்கு, கமுகு என்னுந் தொடக்கத்தன. செந்தமிழ் நிலமாவன - வையையாற்றின் வடக்கும் மருதயாற் றின்றெற்கும் கருவூரின் கிழக்கும் மருவூரின் மேற்குமாம். திரிபின்றி இயல்பாகிய சொல்லாகலின் 4இயற்சொல்லா யிற்று. கொடுந்தமிழ் நிலத்திற்கும் பொதுவாகலின் இயற் சொல்லா யிற்றெனினு மமையும். நீரென்பது ஆரியச்சிதை வாயினும் அப் பொருட்கு அதுவே சொல்லாய்ச் செந்தமிழ் நிலத்தும் கொடுந் தமிழ் நிலத்தும் வழங்கப்படுதலான் இயற்சொல்லாயிற்று. பிறவு மிவ்வாறு வருவன இயற்சொல்லாகக் கொள்க. தாமென்பது - கட்டுரைச் சுவைபட நின்றது. (2) 399. ஒருபொருள் குறித்த வேறுசொல் லாகியும் வேறுபொருள் குறித்த வொருசொல் லாகியு மிருபாற் றென்ப திரிசொற் கிளவி. இதன் பொருள் : ஒருபொருள் குறித்து வரும் பல சொல்லும் பலபொருள் குறித்து வரும் ஒருசொல்லுமென இருவகைப்படுந் திரிசொல் என்றவாறு. வெற்பு, விலங்கல், விண்டு என்பன ஒரு பொருள் குறித்த வேறு பெயர்க் கிளவி. எகின மென்பது அன்னமும் கவரிமாவும் புளிமரமும் நாயு முணர்த்தலானும், உந்தியென்பது யாழ்ப்பத்தலு றுப்பும் கொப்பூழும் தேர்த்தட்டும் கான்யாறு முணர்த்தலானும், இவை வேறு பொருள் குறித்த ஒரு சொல். திரிசொல்லது திரிவாவது - உறுப்புத் திரிதலும் முழுவதுந் திரிதலு மென இருவகைத்து. கிள்ளை, மஞ்ஞை என்பன உறுப்புத் திரிந்தன. விலங்கல், விண்டு என்பன முழுவதுந் திரிந்தன. முழுவதுந் திரிந்தனவற்றைக் 5கட்டிய வழக்கென்பாரு முளர். அவை கட்டிய சொல்லாமாயிற் செய்யுள் வழக்காமாறில்லை; அதனான் அவையுந் திரிவெனல் வேண்டுமென்பது. அஃதேல், பலசொல் ஒருபொருட் குரியவாதலும் ஒருசொல் பல பொருட்குரித்தாதலும், உரிச்சொன் முதலாகிய இயற்சொற்கு முண்மை யான் அது திரிசொற் கிலக்கணமாமா றென்னையெனின்:- அது திரிசொற் கிலக்கண முணர்த்திய வாறன்று; அதனது பாகுபாடுணர்த்தியவாறு. திரிபுடைமையே திரிசொற்கிலக்கண மாதல் ‘சொல்லின் முடிவினப் பொருண் முடித்தல்’ என்பதனாற் பெற வைத்தார். கிள்ளை மஞ்ஞை யென்பன ஒருசொல் ஒரு பொருட்குரித்தாகிய திரிசொல்லாத லின் இருபாற் றென்றல் நிரம்பாதெனின், அற்றன்று; ஆசிரியர் இருபாற்றென்ப திரிசொற் கிளவி எனத் தொகை கொடுத்தா ராதலின், 6கிள்ளை மஞ்ஞை யென்பன வற்றோடு ஒரு பொருட் கிளவியாய் வரும் திரிசொலுள வாகலொன்றோ, இவை பிற பொருள்படுதலொன்றோ, இரண்டனு ளொன்று திட்ப முடைத் தாதல் வேண்டும். என்னை? ஆசிரியர் பிற கூறாமையி னென்பது. திரித்துக்கொண்டது இயற்கைச்சொல்லான் இன்பம் பெறச் செய்யுளீட்ட லாகாமையானன்றே? அதனாற் றிரி சொல்லெனவே, செய்யுட் குரித்தாதலும் பெறப்படும். (3) 400. செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்துந் தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி. இதன் பொருள் : செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த பன்னிரண்டு நிலத்துந் தாங் குறித்த பொருள் விளக்குந் திசைச்சொல் என்றவாறு. என்றது, அவ்வந் நிலத்துத் தாங் குறித்த பொருள் விளக்குவதல்லது அவ் வியற் சொற்போல எந்நிலத்துந் தம்பொருள் விளக்கா வென்றவா றாம். பன்னிருநிலமாவன: பொங்கர்நாடு, ஒளிநாடு, தென் பாண்டி நாடு, குட்டநாடு, குடநாடு, பன்றிநாடு, கற்காநாடு, சீதநாடு, பூழிநாடு, மலைநாடு, அருவாநாடு, அருவாவடதலைநாடு எனச் செந்தமிழ் நாட்டுத் தென்கீழ்பால் முதலாக வடகீழ்பாலி றுதியாக எண்ணிக் கொள்க. தென்பாண்டிநாட்டார் ஆ எருமை என்பவற்றைப் பெற்ற மென்றும், தம்மாமி யென்பதனைத் தந்துவை யென்றும் வழங்குப. பிறவுமன்ன. 7‘தங்குறிப்பின’ வென்று தனிமொழி தம்பொருளுணர்த்து மாற்றுக்குச் சொல்லினார். இருமொழி தொடருமிடத்துத் தள்ளை வந்தாள் என வேண்டியவாறு வரப்பெறு மென்றாரல்ல ரென்பது. (4) 401. வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ யெழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே. இதன் பொருள் : வடசொற் கிளவியாவது வடசொற்கே உரிய வெனப்படுஞ் சிறப்பெழுத்தினீங்கி இருசார் மொழிக்கும் பொதுவாகிய எழுத்தானியன்ற சொல்லாம் என்றவாறு. எனவே, பொதுவெழுத்தா னியன்ற வடசொல்லும் செய்யுட் செய்தற்குச் சொல்லா மென்றவாறாயிற்று. அவை வாரி, மேரு, குங்குமம், மணி என்னுந்தொடக்கத்தன. வடசொல்லாவது 8வடசொல்லோடொக்குந் தமிழ்ச்சொல் லென்றாரால் உரையாசிரியரெனின், அற்றன்று; ஒக்குமென்று சொல்லப்படுவன ஒருபுடையா னொப்புமையும் வேற்றுமையு முடைமையான் இரண்டாகல் வேண்டும். இவை எழுத்தானும் பொருளானும் வேறுபாடின்மையாகிய ஒரு சொல்லிலக்கண முடைமையான் இரண்டுசொல்லெனப்படா; அதனான் ஒத்தல் யாண்டையது, ஒரு சொல்லேயாமென்பது. ஒரு சொல் லாயினும் ஆரியமுந் தமிழுமாகிய இடவேற்றுமையான் வேறாயின வெனின், அவ்வாறாயின் வழக்குஞ் செய்யுளுமாகிய இடவேற்றுமையாற் சோறு கூழென்னுந் தொடக்கத்தனவும் இரண்டு சொல்லாவான் செல்லும்; அதனான் இடவேற்றுமை யுடையவேனும் ஒரு சொல்லிலக்கணமுடைமையான் ஒரு சொல்லேயாம். ஒரு சொல்லாயவழித் தமிழ்ச்சொல் வட பாடைக்கட் செல்லாமை யானும், வடசொல் எல்லாத் தேயத் திற்கும் பொதுவாகலானும், இவை வட சொல்லாய் ஈண்டு வழங்கப்பட்டன வெனல் வேண்டும். அதனான் அது போலியுரை யென்க. அல்லதூஉம், அவை தமிழ்ச் சொல்லாயின் ‘வடவெழுத் தொரீஇ’ யென்றல் பொருந்தாமையானும், வடசொல்லாதலறிக. (5) 402. சிதைந்தன வரினு மியைந்தன வரையார். இதன் பொருள் : பொதுவெழுத்தா னியன்றனவேயன்றி, வட வெழுத்தானியன்ற வடசொற் சிதைந்து வரினும், பொருத்த முடையன, செய்யுளிடத்து வரையார் என்றவாறு. உதாரணம்: ‘அரமிய வியலகத் தியம்பும்’ (அகம். 424) எனவும், ‘தசநான் கெய்திய பணைமரு ணோன்றாள்’ (நெடுநல். 115) எனவும் வரும். சிதைந்தன வரினுமெனப் பொதுப்படக் கூறியவதனான், ஆணை, வட்டம், நட்டம், கண்ணன் எனப் 9பாகதமாய்ச் சிதைந்து வருவனவுங் கொள்க. இச் சூத்திரத்தானும் அவை தமிழ்ச்சொ லன்மையறிக. (6) 403.அந்நாற் சொல்லுந் தொடுக்குங் காலை வலிக்கும்வழி வலித்தலு மெலிக்கும்வழி மெலித்தலும் விரிக்கும்வழி விரித்தலுந் தொகுக்கும்வழித் தொகுத்தலு நீட்டும்வழி நீட்டலுங் குறுக்கும்வழிக் குறுக்கலு நாட்டல் வலிய வென்மனார் புலவர். இதன் பொருள் : இயற்சொற் றிரிசொற் றிசைச்சொல் வடசொல் லென்னு நான்கு சொல்லையுஞ் செய்யுளாகத் தொடுக்குங்கால், மெலியதனை வலிக்கவேண்டும்வழி வலித்தலும், வலியதனை மெலிக்க வேண்டும்வழி மெலித்தலும், குறைவதனை விரிக்க வேண்டும்வழி விரித்தலும், மிகுவதனைத் தொகுக்க வேண்டும் வழித்தொகுத்தலும், குறியதனை நீட்ட வேண்டும் வழி நீட்டலும், நெடியதனைக் குறுக்க வேண்டும்வழிக் குறுக்கலுமாகிய அறுவகை விகாரமும், செய்யுளின்பம் பெறச் செய்வான் நாட்டுதலை வலியாகவுடைய என்றவாறு. உதாரணம்: ‘குறுக்கை யிரும்புலி’ (ஐங். 266) ‘முத்தை வரூஉங் காலந் தோன்றின்’ (எழுத். 194) என்பன வலிக்கும்வழி வலித்தல். ‘சுடுமண் பாவை’ ‘குன்றிய லுகரத் திறுதி’ (சொல். 9) என்பன மெலிக்கும்வழி மெலித்தல். 10‘தண்ணந் துறைவன்’ (குறுந். 296) என்பது விரிக்கும்வழி விரித்தல். ‘மழவ ரோட்டிய’ (அகம். 1) என்பது தொகுக்கும்வழித் தொகுத்தல். ‘குன்றி கோபங் கொடிவிடுபவள மொண்செங்காந்த ளொக்கு நின்னிறம்’ என்புழிச் செவ் வெண்ணின் றொகைதொக்கு நிற்றலின் இதுவுமது. ‘வீடுமின்’ என்பது நீட்டும்வழி நீட்டல். ‘பாசிலை’ (புறம். 54) யென்பது காட்டுவாருமுளர். உண்டார்ந் தென்பது உண்டருந்தெனக் குறுகி நிற்றலிற் குறுக்கும்வழிக் குறுக்கல். 11‘அழுந்துபடு விழுப்புண்’ (நற். 97) என்பதுமது. பிறவு மன்ன. ‘நாட்டல் வலிய’ வென்றது, இவ்வறுவகை விகாரமும் இன்னுழியா மென்று வரையறுக்கப்படா; செய்யுள் செய்யுஞ் சான்றோர் அணிபெற நாட்டலைத் தமக்கு வலியாகவுடைய வென்றவாறு. நாட்டல் - நிலைபெறச் செய்தல். (7) 404. நிரனிறை சுண்ண மடிமறி மொழிமாற் றவைநான் கென்ப மொழிபுண ரியல்பே. இனிச் செய்யுளிடத்து விகாரவகையான் மொழிகள் தம்முட் புணருமாறு கூறுகின்றார். இதன் பொருள் : நிரனிறையும், சுண்ணமும், அடிமறியும், மொழி மாற்று மென நான்கென்று சொல்லுப, அந்நான்கு சொல்லுஞ் செய்யுளிடத்துத் தம்முட்புணரு முறையை என்றவாறு. நான்கு சொல்லு மென்பதூஉஞ் செய்யுளிடத்தென்பதூஉம் 12அதிகாரத்தாற் பெற்றாம். 13நிரனிறையுஞ் சுண்ணமும் மொழிமாற்றாத லொக்குமா யினும், நிரனிற்றலும் அளவடியெண்சீரைச் சுண்ணமாகத் துணித்தலுமாகிய வேறுபாடுடைமையான், அவற்றைப் பிரித்து அவ்வேறுபாட்டாற் பெயர் கொடுத்து, வேறிலக்கணமில்லாத மொழிமாற்றை மொழிமாற்றென்றார். இச் சூத்திரத்தான் மொழிபுணரியல் நான்கென வரையறுத்த வாறு .(8) 405. அவற்றுள் நிரனிறை தானே வினையினும் பெயரினு நினையத் தோன்றிச் சொல்வேறு நிலைஇப் பொருள்வேறு நிலையல். இதன் பொருள் : அந்நான்கனுள், நிரனிறையாவது வினையானும் பெயரானும் ஆராயத் தோன்றிச் சொல் வேறு நிற்பப் பொருள் வேறு நிற்றலாம் என்றவாறு. தொடர்மொழிப்பொருள் முடிக்குஞ் சொற்கண்ணதாக லான் முடிக்குஞ் சொல்லைப் பொருளென்றார். வினையினும் பெயரினு மென்றதனான், வினைச் சொல்லான் வருவதூஉம், பெயர்ச்சொல்லான் வருவதூஉம், அவ்விரு சொல்லான் வருவதூஉமென நிரனிறை மூன்றாம். உதாரணம்: ‘மாசு போகவுங் காய்பசி நீங்கவுங் - கடிபுனன் மூழ்கி யடிசில்கை தொட்டு’ என முடிவனவும் முடிப்பனவுமாகிய வினைச்சொல் வேறு வேறு நிற்றலின், வினை நிரனிறை யாயிற்று, அவை மாசுபோகப் புனன் மூழ்கி, பசி நீங்க அடிசில் கைதொட்டு என வியையும், ‘கொடி குவளை கொட்டை நுசுப்புண்கண் மேனி’ என முடிவனவும் முடிப்பனவு மாகிய பெயர்ச்சொல் வேறு வேறு நிற்றலின், பெயர் நிரனிறையாயிற்று. அவை நுசுப்புக் கொடி, உண்கண்குவளை, மேனிகொட்டை என வியையும். 14உடலு முடைந்தோடு மூழ்மலரும் பார்க்குங் கடலிரு ளாம்பல்பாம் பென்ற-கெடலருஞ்சீர்த் திங்க டிருமுகமாச் செத்து என முடிப்பனவாகிய வினையும் முடிவனவாகிய பெயரும் வேறு வேறு நிற்றலின், பொதுநிரனிறையாயிற்று. அவை கடல் உடலும், இருள் உடைந் தோடும், ஆம்பல் ஊழ்மலரும், பாம்பு பார்க்கும் என வியையும். ‘நினையத்தோன்றி’ யென்றதனால், சொல்லும் பொருளும் வேறு வேறு நிற்குங்கால் நிரல்பட நில்லாது, 15களிறும் கந்தும் போல நளிகடற் கூம்புங் கலனுந் தோன்றுந் தோன்றன் மறந்தோர் துறைகெழு நாட்டே என மயங்கி வருதலுங் கொள்க. (9) 406. சுண்ணந் தானே பட்டாங் கமைந்த வீரடி யெண்சீ ரொட்டுவழி யறிந்து துணித்தன ரியற்றல். இதன் பொருள் : சுண்ணமாவது இயல்பாக அமைந்த ஈரடிக் கணுளவாகிய எண் சீரைத் துணித்து இயையும்வழி அறிந்து கூட்டி இயற்றப்படுவதாம் என்றவாறு. அளவடியல்லாதன விகாரவடியாகலிற், 16பட்டாங் கமைந்தில வாதலிற் பட்டாங்கமைந்த வீரடியெனவே, அளவடி யாதல் பெறப்படும். ஈரடியெண்சீர் 17விகாரவடியானும் பெறப் படுதலின், அவற்றை நீக்குதற்குப் ‘பட்டாங் கமைந்த வீரடி’ யென்றார்; எனவே, சுண்ணம் அளவடி யிரண்டனு ளல்லது பிறாண்டு வாராதென்பது. உதாரணம்: சுரையாழ வம்மி மிதப்ப வரையனைய யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப கானக நாடன் சுனை என்புழி, ஆழ, மிதப்ப, நீத்து, நிலையென்பனவும், சுரை, அம்மி, யானைக்கு, முயற் கென்பனவும், நின்றுழி நிற்ப இயையாமையின், சுரை மிதப்ப, அம்மி யாழ, யானைக்கு நிலை, முயற்கு நீத்து எனத் துணித்துக்கூட்ட, இயைந்த வாறு கண்டுகொள்க. சுண்ணம்போலச் சிதராய்ப் பரந்து கிடத்தலிற் சுண்ண மென்றார். (10) 407. 18அடிமறிச் செய்தி யடிநிலை திரிந்து சீர்நிலை திரியாது தடுமா றும்மே. இதன் பொருள் : அடிமறிச்செய்யுளாவது, சீர் நின்றாங்கு நிற்ப, அடிகள் தத்தம் நிலையிற் றிரிந்து ஒன்ற னிலைக்களத்து ஒன்று சென்று நிற்கும் என்றவாறு. எனவே, எல்லாவடியும் யாண்டுஞ் செல்லுமென்பதாம். உதாரணம்: 19மாறாக் காதலர் மலைமறந் தனரே யாறாக் கட்பனி வரலா னாவே வேறா மென்றோள் வளைநெகி ழும்மே கூறாய் தோழியான் வாழு மாறே என வரும். இதனுட் சீர் நின்றாங்கு நிற்பப் பொருள் சிதையாமல் எல்லா வடியுந் தடுமாறியவாறு கண்டுகொள்க. பெரும்பான்மையும் நாலடிச்செய்யுட்கணல்லது இப் பொருள் கோள் வாராதென்க. ‘நிரனிறைதானே’ ‘சுண்ணந்தானே’ ‘மொழிமாற்றியற்கை’ என்பன போல, ஈண்டும் ‘அடிமறிச்செய்தி’யென்பதனைக் குறளடி யாக்கி, ‘அடி நிலை திரிந்து சீர்நிலை திரியாது, தடுமா றும்மே பொருடெரி மருங்கின்’ என்று சூத்திரமாக அறுப்பாரு முளர். (11) 408. பொருடெரி மருங்கி னீற்றடி யிறுசீ ரெருத்துவயிற் றிரிபுந் தோற்றமும் வரையா ரடிமறி யான. இதன் பொருள் : பொருளாராயுங்கால், அடிமறிச் செய்யுட்கண் ஈற்றடியது இறுதிச்சீர் எருத்தடியிற் சென்று திரிதலும் வரையார் என்றவாறு. சீர்நிலை திரியாது தடுமாறுமென்றாராகலின் சீர்நிலை திரிதலும் ஒருவழிக் கண்டு 20எய்தியதிகந்துபடாமற் காத்தவாறு. இலக்கியம் வந்தவழிக் கண்டுகொள்க. எருத்துவயி னென்பதற்கு ஈற்றயற்சீர்வயி னென்று பொருளுரைத்து, சூரல் பம்பிய சிறுகான் யாறே சூரர மகளி ராரணங் கினரே சார னாட நீவரு தீயே வார லெனினே யானஞ் சுவலே என்புழி அஞ்சுவல் யான் என இறுதிச்சீர் ஈற்றயற்சீர்வயிற் சென்று திரிந்ததென்று உதாரணங் காட்டினாரால் உரையாசிரியரெனின், யானஞ் சுவலென நின்றாங்கு நிற்பவும் பொருள் செல்லுமாகலின் இவ்வாறு திரிதல் பொருந்தாமையின், அவர்க்கது கருத்தன்றென்க. எல்லாவடியும் யாண்டுஞ் செல்லுமாயினும், உரைப்போர் குறிப்பான் எருத்தென்றும் ஈற்றடியென்றுங் கூறினார். உரைப்போர் குறிப்பி னுணர்வகை யன்றி யிடைப்பான் முதலீ றென்றிவை தம்முண் மதிக்கப் படாதன மண்டில யாப்பே என உரைப்போர் குறிப்பான் முதலு மிடையு மீறுங்கோடல் பிறருங் கூறினாரென்பது. (12) 409. மொழிமாற் றியற்கை சொன்னிலை மாற்றிப் பொருளெதி ரியைய முன்னும் பின்னுங் கொள்வழிக் கொளாஅல். இதன் பொருள் : மொழிமாற்றினதியல்பு, பொருளெ திரியையுமாறு சொன்னிலையை மாற்றி முன்னும் பின்னும் கொள்ளும்வழிக் கொளுவுதலாம் என்றவாறு. உதாரணம்: ஆரிய மன்னர் பறையி னெழுந்தியம்பும் பாரி பறம்பின்மேற் றண்ணுமை-காரி விறன்முள்ளூர் வேங்கைவீ தானாணுந் தோளா ணிறனுள்ளூ ருள்ள தலர் என இதனுள், பாரி பறம்பின்மேற் றண்ணுமைதானாணுந் தோளாள் எனவும், நிறன் விறன்முள்ளூர் வேங்கைவீ எனவும், உள்ளூருள்ளதாகிய அலர் ஆரிய மன்னர் பறையினெழுந்தியம் பும் எனவும், முன்னும் பின்னுங் கொள்வழி யறிந்து கொளுவப் பொருளெதிரியைந்தவாறு கண்டுகொள்க. 21மொழி மாற்று நின்று ஒன்றற்கொன்று செவ்வாகாமை கேட்டார் கூட்டி யுணரு மாற்றாற் கடாவல்வேண்டும். அல்லாக்கால், அவாய் நிலையுந் தகுதியு முடையவேனும் அண்மையாகிய காரண மின்மையாற் சொற்கள் தம்முள் இயையாவா மென்க. (13) 410. த ந நு எ எனு மவைமுத லாகிய கிளைநுதற் பெயரும் பிரிப்பப் பிரியா. செய்யுட்குரிய சொல்லும், சொற்றொடுக்குங்காற்படும் விகாரமும் அவை செய்யுளாக்குங்காற் றம்முட்புணர்ந்து நிற்கு மாறுமாகிய செய்யு ளொழிபு உணர்த்தி, இனி வழக்கிலக்கணத் தொழிபு கூறுகின்றார். இதன் பொருள் : த ந நு எ என்பனவற்றை முதலாக வுடையவாய்க் கிளைமை நுதலி வரும் பெயரும் பிரிக்கப்படா என்றவாறு. அவையாவன தமன், தமள், தமர்; நமன், நமள், நமர்; நுமன், நுமள், நுமர்; எமன், எமள், எமர்; தம்மான், தம்மாள், தம்மார்; நம்மான், நம்மாள், நம்மார்; நும்மான், நும்மாள், நும்மார்; எம்மான், எம்மாள், எம்மார் என வரும். உம்மையாற் பிற கிளை நுதற் பெயரும் பிரிக்கப் பிரியா வென்பதாம். அவை தாய், ஞாய், தந்தை, தன்னை என்னுந் தொடக்கத்தன. இவற்றைப் 22பிரிப்பப் பிரியாவென்றது என்னையெனின், வெற்பன் பொருப்பன் என்னுந் தொடக்கத்து ஒட்டுப்பெயர் வெற்பு+அன், பொருப்பு+அன் எனப் பிரித்தவழியும், வெற்பு பொருப்பு என்னு முதனிலை தம் பொருள் இனிது விளக்கும். தமன் எமன் என்பனவற்றைத் தம்+அன், எம் + அன் எனப் பிரிக்கலுறின் தம் எம் என்பன முதனிலையாய்ப் பொரு ளுணர்த்துவனவாதல் வேண்டும்; அவை பொருளுணர்த்தாமை யான், தமன் எமன் என வழங்கியாங்குக் கொள்வதல்லது பிரிக்கப்படாமையின், அவ்வாறு கூறினாரென்பது. பிறவுமன்ன. அஃதேல், தாம் யாம் என்பன அவற்றிற்கு முதனிலையாகப் பிரிக்கவே, அவையுந் தம் பொரு ளுணர்த்து மெனின், தமன் எமன் என்பன, தன் கிளை என் கிளை எனவும், தங்கிளை எங்கிளை எனவும் முதனிலை வகையான் ஒருமைக்கும் பன்மைக்கும் பொதுவாதலுடைய. ஒருமையுணர்த்துங் கால் தாம் யாம் என்பன பொருந் தாமையின் தான் யான் என்பனவே முதனிலையெனல் வேண்டும். வேண் டவே, இவ்வாறு பிரிப்பின் தமன் எமன் என ஓரொன்றிரண்டு சொல்லாதல் வேண்டுதலான், எழுத்தானும் பொருளானும் வேறுபாடின் மையின் ஒரு சொல்லெனவே படும்; இரண்டு சொல்லென்றல் நிரம்பாமையின், அவ்வாறு பிரித்தலும் பொருத்தமின்றென்பது. கிளை நுதற்பெயர் விளிமரபின்கட் பெறப்பட்டமையாற் பெயரியலுளுணர்த்தாராயினார். அதனான் ஆண்டியைபு பட்டின் றாகலான், பிரிப்பப் பிரியா ஒருசொல்லடுக்கோடியைய இதனை ஈண்டு வைத்தார். (14) 411. இசைநிறை யசைநிலை பொருளொடு புணர்தலென் றவைமூன் றென்ப ஒருசொல் லடுக்கே. இதன் பொருள்: இசைநிறையும், அசைநிலையும், பொருள்வேறு பாட் டொடு புணர்வதுமென ஒரு சொல் லடுக்கு அம்மூன்று வகைப்படும் என்றவாறு. உதாரணம்: ‘ஏ ஏ ஏ எ யம்பன் மொழிந்தனள்’ என்றது இசைநிறை. மற்றோ மற்றோ, அன்றே அன்றே என்பன அசைநிலை. பாம்பு பாம்பு; அவனவன்; வைதேன் வைதேன்; 23உண்டு உண்டு; போம் போம் என்பன, முறை யானே விரைவுந், துணிவும், உடம்பாடும், ஒரு தொழில் பல கால்நிகழ் தலுமாகிய பொருள் வேறுபாடுணர்த்தலிற் பொருளொடு புணர்த்தல். பொருள் வேறுபாடு பிறவு முளவேல் வழக்கு நோக்கிக் கண்டுகொள்க. 24அடுக்கு ஒருசொல்லது விகாரமெனப்படும்; இரண்டு சொல்லாயின் இருபொருளுணர்த்துவதல்லது இப்பொருள் வேறுபாடுணர்த்தாமையி னென்பது. (15) 412. வேற்றுமைத் தொகையே யுவமத் தொகையே வினையின் றொகையே பண்பின் றொகையே யும்மைத்தொகையே யன்மொழித் தொகையென் றவ்வா றென்ப தொகைமொழி நிலையே. இனித் தொகையிலக்கண முணர்த்துகின்றார். இதன் பொருள் : வேற்றுமைத்தொகை முதலாகத் தொகைச்சொல் ஆறாம் என்றவாறு. 25வேற்றுமையுருபும் உவமவுருபும் உம்மையும் வினைச் சொல்லீறும் பண்புச்சொல்லீறுந் தொகுதலிற் றொகையாயின வென் பாரும், அவ்வப் பொருண்மேல் இரண்டும் பலவுமாகிய சொற்கள் பிளவுபடாது ஒற்றுமைப் படத் தம்மு ளியைதலிற் றொகையாயின வென்பாருமென இருதிறத்தர் ஆசிரியர். செய்தான் பொருள், இருந்தான் மாடத்து என உருபு தொக்கு ஒருசொன்னீர்மைப் படா தனவுந் தொகையாவான் சேறலின் அவற்றை நீக்குதற்கும், வேழக் கரும்பு, கேழற்பன்றி என்புழித் தொக்கனவில்லை யெனினும் தொகையென வேண்டப்படு மாகலான் அவற்றைத் தழுவுதற்கும், உருபு முதலாயின தொகுதலிற் றொகையென்பார்க்கும் ஒட்டி யொரு சொன்னீர் மைப்படுதலுந் தொகை யிலக்கணமெனல் வேண்டும். அதனான் உருபு முதலாயின தொகுதல் எல்லாத் தொகையினுஞ் செல் லாமையான், எல்லாத் தொகைக்கண்ணுஞ் செல்லுமாறு ஒட்டி யொருசொல்லாதல் தொகையிலக்கணமாய் முடிதலின், இவ்வாசிரியர்க்கு இதுவே துணிவெனப் படுமென்பது. அற்றாயின், ‘உருபு தொகவருதலும்’ (சொல். 104) எனவும், ‘வேற்றுமை தொக்க பெயர்வயி னானும்’ (சொல். 418) எனவும், ‘உம்மை தொக்க பெயர்வயி னானும்’ (418) எனவும், ‘உவமை தொக்க பெயர்வயி னானும்’ எனவும் ஓதுதலான் அவை ஆண்டுத்தொக்கன வெனப்படு மன்றோ வெனின், அற்றன்று; ‘அதுவென் வேற்றுமை யுயர்திணைத் தொகைவயின்’ (சொல். 94) என்புழி அதுவெனுருபு நின்று கெட்டதாயின் நின்ற காலத்துத் திணைவழுவாம்; அத் திணைவழு அமைவுடைத்தெனின், விரிக் கின்றுழி நான்கா முருபு தொடராது அது தன்னையே விரிப்பினும் அமைவுடைத்து; அதனான் முறைப்பொரு டோன்ற நம்பிமகன் என இரண்டு சொற் றொக்கன வென்பதே ஆசிரியர் கருத்தெனல் வேண்டும். அல்ல தூஉம், வினைத்தொகை பண்புத்தொகை அன்மொழித் தொகை யென்பனவற்றின்கண் வினையும் பண்பும் அன்மொழியும் தொக்குநில் லாமையானும், அஃதே கருத்தாதலறிக. அதனான் உருபும் உவமையும் உம்மையுந் தொகுதலாவது தம்பொருள் ஒட்டிய சொல்லாற் றோன்றத் தாம் ஆண்டுப் புலப்படாது நிற்றலேயாம். வேற்றுமைத் தொகையென்பது வேற்றுமைப் பொருளை யுடைய தொகையென்றானும் வேற்றுமைப் பொருள் தொக்க தொகை யென்றானும் விரியும். உவமத்தொகை உம்மைத்தொகை அன்மொழித் தொகை யென்பனவும் அவ்வாறு விரியும். அன் மொழியாவது தொக்க சொல்லல்லாத மொழி. வினைத் தொகை பண்புத்தொகை யென்பன, வினையினது தொகை பண்பினது தொகையெனவிரியும். வினைபண்பென்றது அவற்றை யுணர்த் துஞ் சொல்லை. ஒரு சொல்லாற் றொகையின்மையிற் பிறிதொரு சொல்லொடு தொகுதல் பெறப்படும். இச்சூத்திரத்தாற் றொகைச்சொல் இனைத்தென வரை யறுத்தவாறு. (16) 413. அவற்றுள் வேற்றுமைத் தொகையே 26வேற்றுமை யியல. இதன் பொருள் : வேற்றுமைத்தொகை அவ்வேற்றுமை யுருபு தொடர்ப் பொரு ளுணர்த்தியாங் குணர்த்தும் என்றவாறு. எனவே, சாத்தனொடு வந்தான் என்னும் பொருட்கண் சாத்தன் வந்தான் எனவும், சாத்தற்குக் கொடுத்தான் என்னும் பொருட்கண் சாத்தன் கொடுத்தான் எனவும் உருபுதொடர்ப் பொருளுணர்த்தும் ஆற்றலில்லன தொகா; அவ்வாற்ற லுடையனவே தொகுவன வென்றவாறாம். இரண்டாம் வேற்றுமைத்தொகை முதலாக வேற்றுமைத் தொகை அறுவகைப்படும். நிலங்கடந்தான், குழைக்காது எனவும்; தாய் மூவர், பொற்குடம் எனவும் கருப்புவேலி, கடிசூத்திரப்பொன் எனவும்; வரை பாய்தல், கருவூர்க்கிழக்கு எனவும்; சாத்தன் புத்தகம், கொற்றனுணர்வு எனவும், மன்றப் பெண்ணை, மாரியாமா எனவும் வரும். இவை முறையானே நிலத்தைக் கடந்தான், குழையை யுடைய காது; தாயொடு மூவர், பொன் னானியன்ற குடம்; கரும்பிற்கு வேலி, கடிசூத்திரத்திற்குப் பொன்; வரையி னின்றும் பாய்தல், கருவூரின் கிழக்கு; சாத்தனது புத்தகம், கொற்றன துணர்வு; மன்றத்தின்கண் நிற்கும் பெண்ணை, மாரிக்கணுள தாமா என்னும் உருபு தொடர்ப் பொருளை இனிது விளக்கியவாறு கண்டு கொள்க. பிறவு மன்ன. (17) 414. உவமத் தொகையே உவம வியல. இதன் பொருள்: உவமத் தொகை உவமவுருபு தொடர்ப்பொருள் போலப் பொரு ளுணர்த்தும் என்றவாறு. எனவே, புலியன்ன சாத்தன், மயிலன்ன மாதர் என் னும் பொருட்கட் புலிச்சாத்தன், மயின்மாதர் என அப்பொருள் விளக்கும் ஆற்றலில்லன தொகா; ஆற்றலு டையவே தொகுவனவென்பதாம். உதாரணம்: புலிப்பாய்த்துள், மழைவண்கை, துடிநடுவு, பொன்மேனி என்பன புலிப்பாய்த்துளன்ன பாய்த்துள், மழையன்ன வண்கை, துடியன்ன நடுவு, பொன்னன்ன மேனி எனத் தம் விரிப் பொருளுணர்த்தியவாறு கண்டு கொள்க. அஃதேல், புலிப் பாய்த்துளையொக்கும் பாய்த்துள்; மழையை யொக்கும் வண்கை என விரிதலின், அவையெல்லாம் வேற்றுமைத்தொகை யெனப்படும்; அதனான் உவமத்தொகையென ஒன்றில்லை யெனின், அற்றன்று; சொல்லுவார்க்கு அது கருத்தாயின் வேற்றுமைத் தொகையுமாம். 27அக் கருத் தானன்றிப் புலியன்ன பாய்த்துள் பொன்மானு மேனி என வேற்றுமையோடு இயைபில்லா உவமவுருபு தொடர்ப் பொருட்கட்டொக்க வழி, உவமத்தொகையா வதல்லது, வேற்றுமைத் தொகை ஆண்டின் மையின் வேற்றுமைத் தொகையாமாறில்லை யென்க. உவமவுருபு ஒப்பில் வழியாற் பொருள் செய்யும் இடைச்சொல்லாகலான், வினையும் வினைக் குறிப்பும் பற்றி வரும். அவைபற்றி ‘என்போற் பெருவிதுப் புறுக நின்னை, யின்னா துற்ற வறனில் கூற்றே’ (புறம். 255) என்புழிப் போலவென்பது 28குறிப்பு வினையெச்சமாய் நிற்றலானும், ‘நும்ம னோருமற் றினைய ராயி, னெம்ம னோரிவட் பிறவலர் மாதோ’ (புறம். 210) என்புழி அன்னோரென்பது இடைச்சொன் முதனிலை யாகப் பிறந்த குறிப்புப்பெயராக லானும், என்னைப்போல நும்மை யன்னோர், எம்மையன்னோ ரென இரண்டாவது விரித்தற் கேற்பு டைமை யறிக. (18) 415. வினையின் றொகுதி காலத் தியலும். இதன் பொருள் : வினைத்தொகை காலத்தின்கணிகழும் என்றவாறு. காலத்தியலுமெனப் பொதுவகையாற் கூறியவதனான் மூன்று காலமுங் கொள்க. 29தொகுதி காலத்தியலுமெனவே, அவ்வினை பிரிந்து நின்ற வழித் தோன்றாது தொக்கவழித் தொகையாற்றலாற் காலந் தோன்று மென்ற வாறாம். ஈண்டு வினையென்றது எவற்றையெனின்:- வினைச் சொற்கும் வினைப் பெயர்க்கும் முதனிலையாய், உண், தின், செல், கொல் என வினைமாத்திர முணர்த்தி நிற்பனவற்றை யென்பது. இவற்றை வடநூலார் தாது வென்ப. உதாரணம்: ஆடரங்கு, செய்குன்று, புணர்பொழுது, அரிவாள், கொல் யானை, செல்செலவு என வரும். கால முணர்த்தாது வினை மாத்திர முணர்த்தும் பெயர், நிலப்பெயர் முதலாகிய பெயரொடு தொக்குழிக் காலமுணர்த்தியவாறு கண்டுகொள்க. கால முணர்த்து கின்றுழிப் பெய ரெச்சப் பொருளவாய் நின்று ணர்த்துமென்பது ‘செய்யுஞ் செய்த வென்னுங் கிளவியின்-மெய்யொருங் கியலுந் தொழிறொகு மொழியும்’ (எழுத். 482) என்பதனாற் கூறினார். தொகைப்பொருளாகிய தாம் பிரிந்த வழிப் பெறப்படாமையின் ஆசிரியர் இவற்றைப் ‘புணரியனிலை யிடை யுணரத் தோன்றா’ (எழுத். 482) என்றார். அதனான் இவை தஞ்சொல்லான் விரிக்கப் படாமையிற் பிரிவிலொட்டாம். 30பெயரெச்சம் நின்று தொக்கதென்றாரால் உரையாசிரிய ரெனின், அற்றன்று; ஆசிரியர் இவற்றைப் பிரித்துப் புணர்க்கப் படா; வழங்கியவாறே கொள்ளப்படுமென்றது, பிரித்த வழித் தொகைப் பொருள் சிதைதலா னன்றே? கொன்ற யானை என விரிந்தவழியும் அப்பொருள் சிதைவின்றேல் ‘புணரிய னிலையிடை யுணரத் தோன்றா’ (482) என்றற்கொரு காரண மில்லையாம், அதனாற் பெயரெச்சம் நின்று தொகுதல் ஆசிரியர் கருத்தன்மையின், உரையாசிரியர்க்கும் அது கருத்தன்றென்க. அல்லதூஉம், ஆகுபெயர் உணர்த்தியவழி வினைத்தொகை யுளப்பட 31‘இரு பெயரொட்டும்’ (சொல். 114) என்றாராகலானும், வினை நின்று தொகுதல் அவர்க்குக் கருத்தன்மை யறிக. அஃதேல், வினைத்தொகைக்கு முதனிலை பெயராமன்றோ வெனின்:- உரிஞென்பது முதலாயினவற்றைத் தொழிற்பெய ரென்றாராகலின், தொழின் மாத்திர முணர்த்துவனவெல்லாம் தொழிற்பெயரென்பது ஆசிரியர் கருத்தென்க. (19) 416. வண்ணத்தின் வடிவி னளவிற் சுவையினென் றன்ன பிறவு மதன்குண நுதலி யின்ன திதுவென வரூஉ மியற்கை யென்ன கிளவியும் பண்பின் தொகையே. இதன் பொருள் : வண்ணம், வடிவு, அளவு, சுவை என்பனவும் அவை போல்வன பிறவுமாகிய குணத்தை நுதலிப்பின் றொக்கவழிக் குணச்சொற் குண முடையதனை யுணர்த்தலான் இன்ன திதுவென ஒன்றனை ஒன்று விசேடித்து இருசொல்லும் ஒரு பொருளின்மேல் வருமியல்பையுடைய எல்லாத் தொகைச் சொல்லும் பண்புத் தொகையாம் என்றவாறு. நுதலியென்னுஞ் 32சினைவினையெச்சம் வருமென்னு முதல்வினை யொடு முடிந்தது. இயற்கையென்றது, தொக்குழிப் பண்புடையதனைக் குறித்தல் அத்தொகைச் சொல்லதியல் பென்பதல்லது காரணங் கூறப்படாதென்றவாறு. தொகைக்கணல்லது அச்சொல் தனி நிலையாய், உண், தின், செல், கொல் என்பன போலப் பொருளு ணர்த்தாமையின், பண்புத் தொகையும் வினைத்தொகை போலப் பிரிக்கப் படாதாம். உதாரணம்: கருங்குதிரை என்பது வண்ணப்பண்பு. வட்டப்பலகை யென்பது வடிவு. நெடுங்கோ லென்பது அளவு. தீங்கரும் பென்பது சுவை. அன்னபிறவு மென்றதனான், நுண்ணூல், பராரை, மெல்லிலை, நல்லாடை என்னுந் தொடக்கத்தன கொள்க. அவை, கரிதாகிய குதிரை, வட்டமாகிய பலகை எனப் பண்புச்சொல்லும் பண்புடைப் பொருளே குறித்தலான், இரு சொல்லும் ஒரு பொருளவாய் இன்ன திதுவென ஒன்றை யொன்று பொதுமை நீக்கியவாறு கண்டுகொள்க. பிறவுமன்ன. அஃதேல், கரிதாகிய குதிரை, வட்டமாகிய பலகை என்பன அத் தொகையின் விரியாகலிற் பண்புத்தொகை பிரிக்கப்படா தென்ற தென்னை யெனின், அற்றன்று. தொகைப்பொரு ளுணர்த்து தற்குப் பிறசொற் கொணர்ந்து விரித்ததல்லது, தன் சொல்லான் விரியாமையின் அவை விரி யெனப்படா வென்க. வட நூலாரும் பிரியாத்தொகையும் பிற சொல்லான் விரிக்கப்படு மென்றார். கரிய தென்னும் பண்புகொள் பெயர் 33கருங்குதிரை யெனத் தொக்க தென்றாரால் உரையாசிரியரெனின், அதனைப் பெய ரெச்சம் வினைத்தொகை நிலைமொழி யென்றதற் குரைத் தாங் குரைத்து மறுக்க. பிறசொற் கொணர்ந்து விரிக்குங்கால், கரிய குதிரை கரிதாகிய குதிரை, கரியது குதிரை என அத்தொகைப் பொருளு ணர்த்துவன வெல்லா வற்றானும் விரிக்கப்படும். முதனிலையாவது, கரியன், செய்யன், கருமை, செம்மை என்பனவற் றிற்கெல்லாம் முதனிலையாய்ச் சொல்லாய் நிரம்பாது கரு செவ்வெனப் பண்புமாத்திர முணர்த்தி நிற்பதாம். என்ன கிளவியுமென்றதனான், சாரைப்பாம்பு, வேழக் கரும்பு, கேழற் பன்றி எனப் பண்பு தொகாது பெயர் தொக்கனவும் அத் தொகையாதல் கொள்க. இவற்றது சாரை முதலாகிய நிலைமொழி பிரித்தவழியும் பொருளுணர்த்தலின், இவற்றைப் பிரித்துப் புணர்த்தார். அஃதேல், பாம்பைச் சாரை விசேடித்த தல்லது சாரையைப் பாம்பு விசேடித்தின்றாகலின் ஒன்றை ஒன்று பொதுமை நீக்காமையாற் சாரைப்பாம்பென்பது முதலாயின பண்புத்தொகை யாயினவா றென்னையெனின், நன்று சொன்னாய்! விசேடிப்பதும் விசேடிக்கப்படுவதுமாகிய இரண்டனுள் விசேடிப்பது விசேடியாக்கால் அது குற்றமாம்; விசேடிக்கப்படுவது விசேடித்தின்றென் றாலும் விசேடிக்கப்படுத லாகிய தன்றன்மைக் கிழுக்கின்மையான், விசேடியாது நிற்பினும் அமையுமென்க. இவ்வேறுபாடு பெறுதற்கன்றே இன்ன திதுவென வரூஉமெனப் பின்மொழியை விசேடிப்பதாகவும், முன் மொழியை விசேடிக்கப் படுவதாகவும், ஆசிரியர் ஓதுவாரா யிற்றென்பது. அற்றேனும், சாரையெனவே குறித்த பொருள் விளங்கலிற் பாம்பென்பது மிகையாம் பிறவெனின், அற்றன்று; உலக வழக்காவது சூத்திர யாப்புப் போல மிகைச்சொற்படாமைச் சொல்லப்படுவ தொன்றன்றி, மேற்றொட்டுக் கேட்டார்க்குப் பொருள் இனிது விளங்க வழங்கப்பட்டு வருவதாகலின், அது கடாவன்றென்க. மிகைச் சொற்படாமைச் சொல்லப்படு மாயின், யான் வந்தேன், நீ வந்தாய் என்னாது வந்தேன், வந்தாய் என்றே வழங்கல் வேண்டுமென்பது. இனி ஒற்றுமை நயத்தான் என்புந் தோலு முரியவாதலாகிய உறுப்புஞ் சாரை யெனப்படுதலின், அவற்றை நீக்கலாற் பாம்பென்பதூஉம் பொதுமை நீக்கிற் றென்பாரு முளர். உயர்சொற் கிளவி, இடைச்சொற்கிளவி உரிச்சொற்கிளவி என்புழியும், உயர்சொல், இடைச் சொல், உரிச்சொல்லென்பன சொல் லென்பதன்கட் கருத்துடைய வன்றிக் குறி மாத்திரமாய், உயர்வு இடை உரி என்ற துணையாய் நின்றன வாகலின், சாரை யென்பது பாம்பை விசேடித்தாற்போல அவை கிளவி யென்பதனை விசேடித்து நின்றனவென்பது. அவ்வாற்றான் அமைவுடைய வாயினுஞ், சூத்திரமாகலின், உயர்சொல், இடைச்சொல், உரிச்சொ லெனவே யமையும்; கிளவி யென்பது மிகையெனின், மிகையா யினும் இன்னோரன்ன அமைவுடைய வென்ப துணர்த்துதற்கு அவ்வாறோதினா ரென்பது. (20) 417. இருபெயர் பல்பெய ரளவின் பெயரே யெண்ணியற் பெயரே நிறைப்பெயர்க் கிளவி யெண்ணின் பெயரோ டவ்வறு கிளவியுங் கண்ணிய நிலைத்தே யும்மைத் தொகையே. இதன் பொருள் : இருபெயர் முதலாகச் சொல்லப்பட்ட அறுவகைச் சொற் றிரளையும் தனக்குச் சார்பாகக் குறித்து நிற்கும் உம்மைத் தொகை என்றவாறு. உதாரணம்: உவாஅப்பதினான்கு என்பது இருபெயரானாய உம்மைத் தொகை. புலிவிற்கெண்டை என்பது பல பெயரானாய உம்மைத்தொகை. தூணிப்பதக்குஎன்பது அளவுப்பெயரானாய உம்மைத்தொகை. முப்பத்து மூவரென்பது எண்ணியற் பெயரா னாய உம்மைத்தொகை. தொடியரை யென்பது நிறைப் பெயரா னாய உம்மைத்தொகை. பதினைந்தென்பது 34எண்ணுப் பெயரா னாய உம்மைத்தொகை. இனி அவை விரியுங்கால், உவாவும் பதி னான்கும் எனவும், புலியும் வில்லுங் கெண்டையும் எனவும், தூணி யும் பதக்கும் எனவும், முப்பதின்மரும் மூவரும் எனவும், தொடியும் அரையும் எனவும், பத்துமைந்தும் எனவும் விரியும். வேற்றுமைத்தொகை முதலாயின பலசொல்லாற் றொகுதல் சிறுபான்மை. அதனான் உம்மைத்தொகை இரு சொல்லானும் பல சொல்லானும் ஒப்பத் தொகுமென்பது அறிவித்தற்கு இருபெயர் பல்பெயரென் றார். கற்சுனைக் குவளையிதழ், பெருந்தோட் பேதை எனப் பிற தொகையும் பெரும்பான்மையும் பல சொல்லான் வருமாலெனின், கல்லென்பதுஞ் சுனையென்பதுங் கற்சுனையெனத் தொக்கு ஒரு சொல்லாய்ப் பின் குவளையென்பதனொடு தொக்கு ஒரு சொல்லாய்ப் பின் இதழென்பத னொடு தொக்குக் கற்சுனைக் குவளையிதழென வொன்றாயிற்று. பெருந்தோ ளென்னுந் தொகை ஒருசொல்லாய்ப் பேதையென்பதனொடு தொக்குப் பெருந்தோட் பேதையென வொன்றாயிற்று. அவை இவ்வாற்றா னல்லது தொகா மையின் இருசொற்றொகையேயாம். புலிவிற் கெண்டை என்புழி மூன்று பெயருந் தொகுமென்னாது முதற் பெயரொழித்தும் இறுதிப்பெய ரொழித்தும், ஏனையிரண்டுந் தம்முட்டொக்கு ஒரு சொல்லாய்ப் பின் மற்றையதனொடு தொகுமெனின், முன்றொகு மிரண்டற்கும் 35ஓரியைபு வேறு பாடின்மையானும், இரு தொகைப் படுத்தல் பலசெய்கைத் தாகலானும், அவை மூன்று பெயரும் ஒருங்கு தொக்கனவெனவே படுமென்பது. அளவின் பெயர் முதலாயின, இருபெயராயல்லது தொகா வென வரையறுத்தற்கு இருபெயர் பல்பெயரென அடங்குவன வற்றைப் பெயர்த்துக் கூறினார். கலனே தூணிப்பதக்கு, தொடியே கஃசரை, நூற்றுநாற்பத்து நான்குஎன்புழித் தூணிப்பதக்கு, கஃசரை, நாற்பத்து நான்கு என்பன ஒரு சொற்போல அளவுப்பெயரும் நிறைப்பெயரும் எண்ணுப் பெயருமாய் வழங்கப்பட்டு வருதலின், கலமுந் தூணிப்பதக்கும், தொடியும் கஃசரையும், நூறும் நாற்பத்து நான்கும் என இருமொழி நின்று தொக்க வென்றலே பொருத்த முடைமையறிக. உம்மைத்தொகை இன்ன பொருள்பற்றித் தொகு மென்னாது ‘அவ்வறு கிளவியும்’ எனச் சொல்லேபற்றி ஓதினா ரேனும், 36ஏற்புழிக் கோடலென்பதனான் ‘உயர்திணை மருங்கி னும்மைத் தொகையே பலர் சொன் னடைத்து’ (சொல். 421) என்பதனான் எண்ணும்மைப் பொருட்கட் டொகுமென்பது பெறப்படும். 37எண்ணின்கண் வரும் இடைச்சொற் பலவேனும், தொக்கு நிற்கும் ஆற்றலுடையது உம்மைப் பெயராகலான், உம்மைத் தொகையா யிற்று. (21) 418. பண்புதொக வரூஉங் கிளவி யானு மும்மை தொக்க பெயர்வயி னானும் வேற்றுமை தொக்க பெயர்வயி னானு மீற்றுநின் றியலு மன்மொழித் தொகையே. இதன் பொருள் : பண்புச்சொற் றொகுஞ் சொல்லினும் உம்மை தொக்க பெயர்க்கண்ணும் வேற்றுமை தொக்க பெயர்க்கண்ணும் இறுதிச் சொற்கண் நின்று நடக்கும் அன்மொழித் தொகை என்றவாறு. பண்புத்தொகைபடவும் உம்மைத்தொகைபடவும் வேற்று மைத் தொகைபடவும் அச்சொற்றொக்கபின் அத்தொகை அன்மொழித் தொகையாகாமையின் தொகுவதன்முன் அவற்றிற்கு நிலைக்களமாகிய சொற்பற்றி வருமென்பது விளக்கிய, தொகை வயினானு மென்னாது, ‘பண்புதொக வரூஉங் கிளவி யானு, மும்மை தொக்க பெயர்வயினானும், வேற்றுமை தொக்க பெயர் வயினானும்’ என்றார். இறுதிச்சொற் படுத்தலோசையாற் பொருள் விளக்குமாறு வழக்கி னுள்ளுஞ் செய்யுளுள்ளுங் கண்டுகொள்க. உதாரணம்: வெள்ளாடை, அகரவீறு என்பன பண்புத் தொகை நிலைக் களத்துப் பிறந்த அன்மொழித்தொகை. தகரஞாழல் என்பது உம்மைத் தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித் தொகை. பொற்றொடி என்பது வேற்றுமைத் தொகை நிலைக் களத்துப்பிறந்த அன்மொழித் தொகை. இனி, அவை வெள்ளாடை யுடுத்தாள், அகரமாகிய ஈற்றையுடைய சொல் எனவும், தகரமு ஞாழலுமாகிய சாந்து பூசினாள் எனவும், பொற்றொடி தொட்டாள் எனவும் விரியும். 38பண்புத்தொகை நிலைக்களத்துப் பிறத்தல் பெரும் பான்மை யாகலின், முறையிற் கூறாது அதனை முற் கூறினார்; வேற்றுமைத் தொகை நிலைக்களத்துப் பிறத்தலின் உம்மைத் தொகை நிலைக்களத்துப் பிறத்தல் சிறுபான்மை யாயினும், ஒரு பயனோக்கி அதனை அதன்முன் வைத்தார். யாதோபய னெனின், சிறுபான்மை உவமத்தொகை நிலைக் களத்தும் வினைத்தொகை நிலைக்களத்தும் அன்மொழித் தொகை பிறக்குமென்ப துணர்த்துதலென்க. அவை பவளவாய், திரிதாடி என வரும். அவைதாம் பவளம் போலும் வாயை யுடையாள்; திரிந்த தாடியை யுடையான் என விரியும். பிறவுமன்ன. (22) 419. அவைதாம் முன்மொழி நிலையலும் பின்மொழி நிலையலு மிருமொழி மேலு மொருங்குட னிலையலு மம்மொழி நிலையா தன்மொழி நிலையலு மந்நான் கென்ப பொருணிலை மரபே. இதன் பொருள் : முன்மொழிமே னிற்றலும், பின்மொழிமே னிற்றலும், இரு மொழிமே னிற்றலும், அவற்றின்மே னில்லாது பிற மொழிமே னிற்றலுமென அத்தொகையும் அவற்றது பொரு ணிலைமரபும் நான்கென்று சொல்லுவர் ஆசிரியர் என்றவாறு. தொகையும் அவற்றது பொருணிலைமரபும் ஒருவகையான் வேறா யினும், 39ஒற்றுமைநயம் பற்றி அவைதாமென்றார். பொருணிற்றலாவது வினையோடியையுமாற்றான் 40மேற் பட்டுத் தோன்றுதல். உதாரணம்: வேங்கைப்பூ என்புழிப் பூவென்னும் முன் மொழிக்கட் பொருணின்றது. அது நறிதென்னும் வினையோ டியையுமாற்றான், மேற் பட்டுத் தோன்றியவாறு கண்டுகொள்க. மேல் வருவன வற்றிற்கும் ஈதொக்கும். இடவகையான் முன்மொழி யாயிற்று. அடைகடல் என்புழி அடையென்னும் பின்மொழிக்கட் பொருணின்றது. இடவகையாற் பின் மொழி யாயிற்று. முன் பின் னென்பன காலவகையாற் றடுமாறி நிற்கும். கடலுங் கடலடைந்த விடமுங் கடலெனப்படுதலின், அடைகடலென்பது அடை யாகிய கடலென இருபெயர்ப் பண்புத்தொகை. இனி வரைய றை யின்மையாற் சிறுபான்மை முன்மொழி பின்மொழியாகத் தொக்கதோ ராறாம் வேற்றுமைத் தொகை யெனவுமமையும். உவாஅப்பதி னான்கு என்புழி இருமொழி மேலும் பொருணின்றது. தன்னின முடித்தலென்பதனாற் பல பெயர்மே னிற்றலுங் கண்டு கொள்க. வெள்ளாடை என்புழித் தொக்க இருமொழி மேலும் நில்லாது உடுத்தாளென்னும் அன்மொழி மே னின்றது. வேற்றுமைத் தொகைமுத னான்குதொகையும் முன் மொழிப் பொருள; வேற்றுமைத்தொகையும் பண்புத் தொகை யுஞ் சிறு பான்மை பின்மொழிப் பொருளவுமாம். உம்மைத் தொகை இருமொழிப் பொருட்டு. ஆறெனப்பட்ட தொகை பொருள்வகையான் நான்கா மெனப் பிறிதொரு வகை குறித்தவாறு, (23) 420. எல்லாத் தொகையு மொருசொன் னடைய. இதன் பொருள் : அறுவகைத் தொகைச் சொல்லும் ஒருசொல்லாய் நடத்தலையுடைய என்றவாறு. ஒருசொன்னடையவெனப் பொதுப்படக் கூறியவதனான், யானைக் கோடு, கொல்யானை என முன்மொழி பெயராகியவழி ஒரு பெயர்ச் சொன்னடையவாதலும், நிலங்கடந்தான், குன்றத் திருந் தான் என முன் மொழி வினையாயவழி ஒருவினைச் சொன்னடைய வாதலுங் கொள்க. அவை உருபேற்றலும் பயனிலை கோடலு முதலாகிய பெயர்த்தன்மையும், பயனிலை யாதலும் பெயர்கோடலு முதலாகிய வினைத்தன்மையு முடையவாதல் அவ்வச்சொல் லொடு கூட்டிக் கண்டுகொள்க. நிலங்கடந்தான், குன்றத்திருந்தான் எனப் பெயரும் வினையுந் தொக்கன ஒருசொன்னீர்மை யிலவாகலிற் றொகை யெனப்படா வென்பாரு முளர். எழுத்தோத்தினுள் 41‘பெயருந் தொழிலும் பிரிந்தொருங் கிசைப்ப-வேற்றுமையுருபு நிலைபெறு வழியுந் - தோற்றம் வேண்டாத் தொகுதிக் கண்ணும்’ (எழுத். 132) என்றத னான், வேற்றுமையுருபு தொகப் பெயருந் தொழிலும் ஒருங்கிசைத் தல் ஆசிரியர் நேர்ந்தாராகலின், அவை தொகை யெனவேபடு மென்பது. கடந்தானிலம், இருந்தான் குன்றத்து என்பன ஒருங்கிசையாது பக்கிசைத்தலின், அவை தொகை யன்மையறிக. ‘எல்லாத் தொகையு மொருசொன் னடைய’ என்றதனான், தொகை யல்லாத தொடர்மொழியுள் ஒருசொன் னடையவாவன சிலவுளவென்ப தாம். யானை கோடு கூரிது, இரும்பு பொன்னா யிற்று, மக்களை உயர் திணையென்ப என்பனவற்றுள், கோடுகூரிது, பொன்னாயிற்று, உயர் திணையென்ப என்னுந் தொகையல் தொடர்மொழி ஒரு சொன்னடைய வாய் எழுவாய்க்கும் இரண்டாவதற்கும் முடிவாயினவாறு கண்டுகொள்க. பிறவுமன்ன. (24) 421. உயர்திணை மருங்கி னும்மைத் தொகையே பலர்சொன் னடைத்தென மொழிமனார் புலவர். இதன் பொருள்: உயர்திணைக்கண் வரும் உம்மைத்தொகை பலர்க்குரிய ஈற்றான் நடக்கும் என்றவாறு. 42பொதுவிற் கூறினாரேனும், மாமூலபெருந்தலைச்சாத்தர்; கபில பரண நக்கீரர் என வரும். விரவுப்பெயர்த்தொகையும் அடங்குதற்கு உயர்திணைப் பெயரும்மைத் தொகை யென்னாது, உயர்திணைமருங்கின் உம்மைத் தொகை யென்றார். அவை யொட்டி யொருசொல்லாய் நிற்றலிற் பலரறி சொல்லெனப் படும். பலரறி சொற் கபில பரணன் என ஒருமையீற்றான் நடத்தல் வழுவாகலின் வழுக்காத்தவாறு. இதனானுந் தொகை ஒரு சொல்லாதல் பெற்றாம். ஒரு சொன்னீர்மை பெற்றின்றாயின், கபிலன் பரணன் என ஒருமைச் சொல் ஒருமையீற்றான் நடத்தற்கட்படும் இழுக்கென்னை யென்பது. (25) 422. வாரா மரபின வரக்கூ றுதலு மென்னா மரபின வெனக்கூ றுதலு மன்னவை யெல்லா மவற்றவற் றியல்பா னின்ன வென்னுங் குறிப்புரை யாகும். இதன் பொருள் : வாராவியல்பினவற்றை வருவனவாகச் சொல்லு தலும், என்னாவியல்பினவற்றை என்பனவாகச் சொல்லுதலும், அத் தன்மையன வெல்லாம் அவ்வப் பொருளியல்பால் இத் தன்மைய வென்று சொல்லுங் குறிப்புமொழியாம் என்றவாறு. உதாரணம்: 43அந்நெறி யீண்டு வந்து கிடந்தது, அம்மலை வந்தித னொடு பொருந்திற்று எனவும்; அவலவலென்கின்றன நெல், மழை மழையென் கின்றன பைங்கூழ் எனவும் வரும். அவை வரவுஞ் சொல்லுதலு முணர்த்தாது இன்னவென்பதனைக் குறிப்பாலு ணர்த்தியவாறு கண்டுகொள்க. முலை வந்தன, தலை வந்தன என்பன காட்டுவாருமுளர். ஆண்டு வருதல் வளர்தற் பொருட்டாகலான், அவை ஈண்டைக் காகாவென்க. நிலம் வல்லென்றது, நீர் தண்ணென்றது என்பன காட்டி னாரால் உரையாசிரியரெனின்:- சொலற்பொருள வன்மையின், அவை காட்டல் அவர் கருத்தன்றென்க. ‘அன்னவை யெல்லா’ மென்றதனான், இந்நெறி யாண்டுச் சென்று கிடக்கும்; இக்குன்றக்குன்றோடொன்றும் என்னுந் தொடக்கத்தன கொள்க. (26) 423. இசைப்படு பொருளே நான்குவரம் பாகும். 424. விரைசொல் லடுக்கே மூன்றுவரம் பாகும். இதன் பொருள் : மேற்கூறப்பட்ட ஒரு சொல்லடுக்கினுள், இசை நிறை யடுக்கு நான்காகிய வரம்பையுடைத்து; பொருளொடு புணர்தற் கண் விரைவுப் பொருள்பட அடுக்குவது மூன்றாகிய வரம்பை யுடைத்து என்றவாறு. வரம்பாகு மென்றது, அவை நான்கினும் மூன்றினு மிறந்து வாரா, குறைந்து வரப்பெறு மென்றவாறு. உதாரணம்: ‘பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ’ எனவும் தீத்தீத்தீ எனவும் வரும். அவை மும்முறையாயினும் இருமுறையாயினும் அடுக்கி வருதல், இவற்றைக் குறைத்துச் சொல்லிக் கண்டுகொள்க. இசைப்பொருளாவது செய்யுளின்பம். 44விரைவிக்குஞ் சொல்லை விரைசொ லென்றார். அசைநிலை இருமுறையல்லது அடுக்காமையின், அதற் கெல்லை கூறாராயினார். அஃ திருமுறை யடுக்குமென்பது யாண்டுப் பெற்றாமெனின், அடுக் கென்பதனாற் பெற்றாம்; ஒருமுறை வருவது அடுக்கெனப் படாமையினென்பது. 45முன்னர்க் கூறப்படும் அசைநிலை அடுக்கி வருமென்பது அதிகாரத்தாற் கோடற்பொருட்டு ‘இசைநிறை யசைநிலை’ (411) என்னுஞ் சூத்திரத்தின் பின் வையாது இச்சூத்திர மிரண்டனை யும் ஈண்டு வைத்தார். (27) (28) 425. கண்டீ ரென்றா கொண்டீ ரென்றா சென்ற தென்றா போயிற் றென்றா வன்றி யனைத்தும் வினாவொடு சிவணி நின்றவழி யசைக்குங் கிளவி யென்ப. இதன் பொருள் : கண்டீரெனவும், கொண்டீரெனவும், சென்ற தெனவும் போயிற்றெனவும் வரும் வினைச் சொன்னான்கும், வினாவொடு பொருந்தி நின்றவழி, அசைநிலையடுக்காம் என்றவாறு. 46கட்டுரையகத்து ஒருவன் ஒன்று சொல்லியவழி அதற்குடம்படாதான் கண்டீரே கண்டீரே என்னும்; ஈண்டு வினைச் சொற் பொருண்மையும் வினாப் பொருண்மையு மின்மையின், அசைநிலை யாயினவாறு கண்டு கொள்க. வரை யாது கூறினமையான், கண்டீரே எனச் சிறுபான்மை அடுக்காது வருதலுங் கொள்க. ஏனையவும் ஏற்றவழி அடுக்கியும் அடுக்காதும் அசைநிலையாம். அவை இக்காலத் தரிய; வந்தவழிக் கண்டு கொள்க. (29) 426. கேட்டை யென்றா நின்றை யென்றா காத்தையென்றா கண்டை யென்றா வன்றி யனைத்து முன்னிலை யல்வழி முன்னுறக் கிளந்த வியல்பா கும்மே. இதன் பொருள் : கேட்டை யெனவும், நின்றை யெனவும், காத்தை யெனவும், கண்டை யெனவும் வரும் நான்கும், முன்னிலை யல்லாக்கால், மேற்சொல்லப் பட்ட அசைநிலையாம் என்றவாறு. இவையுங் கட்டுரைக்கண் அடுக்கியும் சிறுபான்மை அடுக்காதும் ஏற்ற வழி அசைநிலையாய் வருமாறு கண்டுகொள்க. நின்றை, காத்தை யென்பன இக்காலத்துப் பயின்று வாரா. 47வினாவிற்கு அடையாக அடுக்கிவந்தவழி முன்னிலை யசை நிலையே யாம். இவை அடுக்கியும் அடுக்காதும் முன்னிலைச் சொல்லாதலு முடைமையான், அந்நிலைமை நீக்குதற்கு, ‘முன்னிலை யல்வழி’ யென்றார். முன்னுறக்கிளந்த வியல்பாகு மென்றதனான், முன்னைய போலச் சிறுபான்மை வினாவொடு வருதலுங் கொள்க. ‘முன்னிலை யல்வழி’ யென்பதற்கு முன்னையபோல வினா வொடு சிவணி நில்லாதவழி யென்றுரைத்தாரால் உரையாசிரிய ரெனின், அற்றன்று; வினாவொடு சிவணல் 48இவற்றிற் கொன்றா னெய்தாமையின் விலக்க வேண்டா; அதனான் அவர்க்கது கருத்தென்றென்க. இரண்டு சூத்திரத்தானுங் கூறப்பட்டன வினைச்சொல் லாதலும் இடைச்சொல்லாதலு முடைமையான், வினையிய லுள்ளும் இடையிய லுள்ளுங் கூறாது ஈண்டுக் கூறினார். அஃதேல், ஆக ஆகல் என்பது என்பனவற்றோடு இவற்றிடை வேற்றுமையென்னை அவையும் வினைச்சொல்லாத லுடைமை யானெனின், இசை நிறைத்தற்கும் பொருள் வேறு பாட்டிற்கும் அடுக்கிவரி னல்லாது அடுக்காது வருதலே வினைச்சொற் கியல்பாம். ஆக, ஆகல் - என்பது என்பன அடுக்கியல்லது நில்லா மையின், வினைச்சொல் இடைச்சொல் லாயின வெனப்படா. கண்டீர், கொண்டீர் என்பன முதலாயின வினைச்சொற்குரிய ஈற்றவாய் அடுக்கியும் அடுக்காதும் வருதலான் வினைச்சொல் அசைநிலை யாயின வெனப்படும். இது தம்முள் வேற்றுமையென்க. அல்லதூஉம், வினாவொடு சிவணி நிற்றலானும் வினைச்சொல் லெனவே படுமென்பது.(30) 427. இறப்பி னிகழ்வி னெதிர்வி னென்றச் சிறப்புடை மரபி னம்முக் காலமுந் தன்மை முன்னிலை படர்க்கை யென்னு மம்மூ விடத்தான் வினையினுங் குறிப்பினு மெய்ம்மை யானு மிவ்விரண் டாகு மவ்வா றென்ப முற்றியன் மொழியே. இதன் பொருள் : முற்றுச்சொல்லாவது, இறப்பு நிகழ்வு எதிர் வென்னும் மூன்று காலமும், தன்மை முன்னிலை படர்க்கை யென்னும் மூன்றிடத்தும், உயர்திணையும் அஃறிணையும் இரு திணைப் பொதுவுமாகிய பொருடோறும், வினையானுங் குறிப் பானும் இவ்விரண்டாய் வரும் அவ்வறு வகைச் சொல்லா மென்று சொல்லுவர் ஆசிரியர் என்றவாறு. உதாரணம்: சென்றனன், கரியன் எனவும்; சென்றது, கரிது எனவும்; சென்றனை, கரியை எனவும் வரும். 49இடமுணர்த்தலுந் திணையும் பாலும் விளக்கலும் போல ஒருசாரன வற்றிற்கே யாகாது, எல்லா முற்றுச் சொற்குங் காலம் முற்சிறத்தலின் ‘சிறப் புடை மரபி னம்முக் காலமும்’ என்றார். வினையினுங் குறிப்பினும் என்புழி 50ஓரீற்றவாகிய வினையும் வினைக் குறிப்புமே கொள்ளப்படும்; இவ்விரண்டாதற் கேற்பன அவையே யாகலான். மெய்ம்மையாவது பொருண்மை. உயர்திணையும் அஃறிணையுமல்லது இருதிணைப் பொது வென்பதொரு பொருளில்லையாயினும், சென்றனை, கரியை என்பன செலவிற்கு வினை முதலாதலும் பண்பியுமாகிய 51ஒரு நிமித்தம் பற்றி இருதிணைக் கண்ணும் சேறலின் அந்நிமித்தம் இருதிணைப் பொதுவெனப்பட்டது. வினையினுங் குறிப்பினும் இவ்விரண்டாய் வருதலாவது தெரிநிலை வினையால் தெற்றெனத் தோன்றலும் குறிப்பு வினையால் தெற்றெனத் தோன்றாமையுமாம். முற்றி நிற்றல் முற்றுச்சொற் கிலக்கணமாதல் ‘முற்றியன் மொழியே’ யென்பதனாற் பெற்றாம். முற்றிநிற்றலாவது இதுவென்பது வினையியலுட் கூறினாம் (சொல். 235). திணையும் பாலும் இடமும் விளக்கல் எல்லா முற்றிற்கு மின்மையான் இலக்கணமன்மை யறிக. உயர்திணை அஃறிணை விரவென்னும் பொருண்மேல் வினையும் வினைக்குறிப்புமாய் வருதல்பற்றி ‘அவ்வாறென்ப’ வென்றார். காலமும் இடமும் முதலாயினவற்றொடு கூட்டிப் பகுப்பப் பலவாம். ஊரானொரு தேவகுலம் என்றாற்போல மெய்ம்மை யானும் என்புழி ஆனென்பது தொறுமென்பதன் பொருட்டாய் நின்றது. முன்னர்ப் பிரிநிலை வினையே பெயரே (சொல். 430) என்புழிப் பெயரெச்சமும் வினையெச்சமுங் கூறுபவாகலின் அவற் றோடியைய முற்றுச் சொல்லையும் ஈண்டுக் கூறினார். கூறவே முற்றுச்சொல்லும் பெயரெச்சமும் வினையெச்சமுமென வினைச் சொன் மூவகைத்தாதல் இனிதுணரப்படு மென்பது. 52உரையாசிரியர் வினையியலுள் ஓதப்பட்டன சில வினைச்சொற்கு முற்றுச் சொல்லென்று குறியிடுதல் நுதலிற்று இச் சூத்திரமென்றா ராலெனின், குறியீடு கருத்தாயின் அவ்வாறென்ப முற்றியன் மொழியே என்னாது அவ்வாறும் முற்றியன் மொழி எனல் வேண்டுமாகலான் அது போலியுரை யென்க. முற்றியன் மொழியென்ப என மொழிமாற்றவே குறியீடா மெனின், குறியீடு ஆட்சிப் பொருட்டாகலின் அக்குறியான் அதனை யாளாமையான் மொழிமாற்றி யிடர்ப்படுவ தென்னையோ வென்பது. அல்லதூஉம் முற்றியன் மொழியெனக் குறியிட்டாராயின் இவை பெயரெஞ்சு கிளவி யெனவும், இவை வினையெஞ்சு கிளவியெனவுங் குறியிடல் வேண்டும்; அவ்வாறு குறியிடாமையானும் அது கருத்தன்றாம். அதனான் வினைச் சொல்லுள் இருவகையெச்ச மொழித்து ஒழிந்த சொன் முற்றிநிற்கு மென்றும், அவை இனைத்துப் பாகுபடு மென்றும் உணர்த்தல் இச்சூத்திரத்திற்குக் கருத்தாகக் கொள்க. (31) 428. எவ்வயின் வினையு மவ்விய னிலையும். இதன் பொருள்: மூவிடத்தாற் பொருடோறும் இவ்விரண்டாமென மேற்சொல்லப்பட்ட கட்டளையுட்பட் டடங்காது 53பிறாண்டு வரும் வினையும் முற்றியல்பாய் நிலையும் என்றவாறு. யார், எவன், இல்லை, வேறு என்பன இடமுணர்த்தாமை யின், மேற் கூறிய கட்டளையினடங்காது பிறாண்டு வந்தனவாம். சிறப் பீற்றான் வருந் தெரிநிலை வினையுங் குறிப்பு வினையும் பொரு டொறும், வினையும் வினைக் குறிப்புமாய் வருதற்கு எய்தாமையின் ‘மெய்ம்மையானு மிவ்விரண் டாகும்’ (சொல். 427) கட்டளையுட் படாது பிறாண்டு வந்தனவாம். குறிப்பு வினைக் கீறாகாது தெரிநிலைவினைக் கீறாவனவுந், தெரிநிலைவினைக் கீறாகாது குறிப்புவினைக் கீறாவனவும் சிறப்பீற்றவாம். அவை வினை யியலுட் கூறிப் போந்தாம். யார் எவன் என்பன பாலும், இல்லை, வேறு என்பன திணையும் பாலும் உணர்த்தாவாயினும் மேலைச் சூத்திரத்தான் முற்றுச்சொற்குப் பாலுந் திணையு முணர்த்தல் ஒருதலையாக எய்தாமையின் இடமுணர்த் தாமையே பற்றி ஈண்டுக் காட்டப்பட்டன. திணையும் பாலு முணர்த்தல் ஒருதலையாயின் ‘தன்மை முன்னிலை படர்க்கை யென்னு மம்மூ விடத்தான்’ (சொல். 427) என ஆசிரியர் முன்னிலையிடம் ஆண்டு வையா ரென்பது. முற்றுச்சொல்லே யன்றிப் பெயரெச்சமும் வினை யெச்சமும் காலமும் இடமு முணர்த்துமென்பது இச்சூத்திரத்திற்குப் பொருளாக உரைத்தாரால் உரையாசிரிய ரெனின், அவை இடவேறுபா டுணர்த்தாது மூவிடத்திற்கும் பொதுவாய் நிற்றலின், அது போலியுரை யென்க. இனி ஓருரை:- 54மேலைச் சூத்திரத்தாற் கூறப்பட்ட பொருண் மேல் வரும் எல்லாவினையும் முற்றுச்சொல்லாய் நிற்கும் என்ற வாறு. ஈண்டு வினையென்றது வினைச்சொல்லை யாக்கும் முதனி லையை. எல்லா வினையும் முற்றுச்சொல்லா மெனவே, எச்சமாதல் ஒருதலையன்று என்பதாம். ஆகவே, வினைச் சொல்லாதற்குச் சிறந்தன முற்றுச்சொல்லே யென்ப தாம். எல்லா வினையும் முற்றுச்சொல்லாகலும், கச்சினன், கழலினன், நிலத்தன், புறத்தன் என்னுந் தொடக்கத்து வினைக் குறிப்பின் முதனிலை எச்சமாய் நில்லாமையும், வழக்கு நோக்கிக் கண்டு கொள்க. பிறவுமன்ன. இவையிரண்டும் இச்சூத்திரத்திற்குப் பொருளாகக் கொள்க. (32) 429. அவைதாம் தத்தங் கிளவி யடுக்குந வரினு மெத்திறத் தானும் பெயர்முடி பினவே. இதன் பொருள் : மேற்சொல்லப்பட்ட முற்றுச்சொற்றாம், தத்தங் கிளவி பல அடுக்கிவரினும், தம்முட் டொடராது எவ்வாற்றானும் பெயரொடு முடியும் என்றவாறு. உதாரணம்: உண்டான் தின்றான் ஆடினான் பாடினான் சாத்தன்; நல்லன் அறிவுடையன் செவ்வியன் சான்றோர் மகன் என வரும். 55அடுக்கிவரினு மென்ற உம்மையான், வந்தான் வழுதி; கரியன் மால் என அடுக்காது பெயரொடு முடிதலே பெரும் பான்மை யென்பதாம். தம்பாற் சொல்லல்லது பிறபாற் சொல்லொடு விராயடுக்கின் மையின், ‘தத்தங்கிளவி’, யென்றார். என்மனார் புலவர், முப்பஃதென்ப என வெளிப்பட்டும் வெளிப் படாதும் பெயர்முடிபா மென்றற்கு எத்திறத்தானு மென்றார். ‘எவ்வயிற் பெயரும் வெளிப்படத் தோன்றி’ (சொல். 68) என்றதனான், வெளிப்படாது நிற்றலும் பெறப்பட்டமையான் ஈண்டுக் கூறல் வேண்டாவெனின், ஆண்டு முடிக்கப்படும் பெயர் வெளிப்படாது நிற்றலுமுடைத் தென்றார்; இது முடிக்கும் பெயராகலின் ஆண்டடங்கா தென்பது. முடிக்கப்படுவதனொடு முடிப்பதனிடை வேற்றுமை, வேற்றுமை யோத்தினுட் கூறினாம். இன்னும் எத்திறத்தானு மென்றதனான், உண்டான் சாத்தன், சாத்தனுண்டான் என முன்னும் பின்னும் பெயர் கிடத்தலும் கொள்க. அஃதேல், முற்றி நிற்றலாவது மற்றுச் சொன்னோக்காமை யாகலின் முற்றிற்றேல் அது பெயர் அவாய் நில்லாது; பெயர் அவாவிற்றேல் முற்றுச் சொல்லெனப்படாது; அதனான் முற்றுசொற் பெயர்கொள்ளுமென்றல் மாறுகொள்ளக் கூறலா மெனின், அற்றன்று; உண்டான் சாத்தன் என்பது எத்தையென் னும் அவாய்நிலைக்கட் சோற்றை யென்பதனோடு இயைந்தாற் போல, உண்டான் என்பது யாரென்னும் அவாய் நிலைக்கட் சாத்தனென்பதனோடு இயைவதல்லது, அவாய் நிலையில்வழி உண்டானெனத் தானே தொடராய் நிற்றல் வினையியலுள்ளுங் கூறினாமென்பது. அஃதேல், சாத்த னென்னும் பெயர் சோற்றையென்பதுபோல் அவாய்நிற்றலையுள் வழி வருவதாயின், ‘எத்திறத்தானும் பெயர் முடிபினவே’ என விதந்தோதல் வேண்டாவாம் பிறவெனின், நன்று சொன்னாய்! அவாய்நிற்றலை யுள்வழி வருவது, அவ்விரண்டற்கும் ஒக்கு மேனும், உண்டா னென்றவழி உண்டற் றொழிலாற் செயப்படு பொருள் உய்த்துணர்ந்து பின் அதன் வேறுபாடறியலுறிற் சோற்றை யென்பது வந்தியைவதல்லது, சொற்கேட்ட துணையான் எத்தை யெனக் கேட்பான் செயப்படுபொருள் வேறுபாடு அறிதற்கு அவாவாமையின், சோற்றை யென்பது வருதல் ஒருதலையன்று. இனி, உண்டானென்னுஞ் சொல்லாற் பொதுவகை யான் வினை முதலுணர்ந்து, கேட்பான், அதன் வேறுபா டறியலுறுதலின், சாத்த னென்பது வருதல் ஒரு தலையாம். அதனான் இச்சிறப்பு நோக்கி விதந்தோதினா ரென்பது. (33) 430. பிரிநிலை வினையே பெயரே யொழியிசை யெதிர்மறை யும்மை யெனவே சொல்லே குறிப்பே யிசையே யாயீ ரைந்து நெறிப்படத் தோன்றும் மெஞ்சுபொருட் கிளவி. முற்றுச்சொல்லுணர்த்தி எச்சம் ஆமாறு உணர்த்து கின்றார். எஞ்சு பொருட்கிளவி கொண்டல்லது அமையாமை யின் எச்சமாயினவும், ஒரு தொடர்க்கொழிபாய் எச்சமாயினவு மென அவை 56இருவகைப்படும். இதன் பொருள் : பிரிநிலை முதலாகச் சொல்லப்பட்ட பத்தும் எஞ்சு பொருட் கிளவியாம் என்றவாறு. அவற்றுட் கடைநிலை மூன்றும் ஒருதொடர்க் கொழிபாய் எச்சமாயின. அல்லன எஞ்சுபொருட்கிளவியான் முடிவன. எஞ்சு பொருட் கிளவியெனினும் எச்சமெனினு மொக்கும். பெயரெச்சம் வினையெச்சம் பெயர் வினையான் முடிதலின், ஆகுபெயராற் பெயர் வினையென்றார். ஆயீரைந்து மெஞ்சுபொருட்கிளவி யென்றாரேனும், எஞ்சு பொருட் கிளவி பத்துவகைப்படு மென்பது கருத்தாகக் கொள்க. எச்சமாவன ஒருசார்பெயரும் வினையும் இடைச்சொல்லு மாதலின், பெயரியன் முதலாயினவற்றுட் பத்தும் ஒருங்கு ணர்த்துதற் கேலாமையறிக. முடிபும் பொருளு மொத்தலான், என்றென்பதனை எனவின் கணேற்றினார். (34) 431. அவற்றுள் பிரிநிலை யெச்சம் பிரிநிலை முடிபின. இதன் பொருள் : மேற்சொல்லப்பட்ட எச்சங்களுள், பிரிநிலை யெச்சம் ஏகாரப் பிரிநிலையும் ஓகாரப்பிரிநிலையுமென இருவகைப்படும். அவ் விருவகைப் பிரிநிலையெச்சமும் பிரிக்கப் பட்ட பொருளை யுணர்த்துஞ் சொல்லொடு முடியும் என்றவாறு. உதாரணம்: 57தானே கொண்டான்; தானோ கொண்டான் என்னும் பிரிநிலை யெச்சம் பிறர் கொண்டிலரெனப் பிரிக்கப் பட்ட பொருளையுணர்த்துஞ் சொல்லான் முடிந்தவாறு கண்டுகொள்க. அஃதேல், தானெனப்பட்டானன்றே ஆண்டுப் பிரிக்கப் பட்டான் பிறர் கொண்டிலரென்பது அவனையுணர்த்துஞ் சொல்லன்மையான், அவை பிரிநிலை கொண்டு முடிந்திலவா லெனின், அற்றன்று; தானெனப் பட்டான் பிறரிற் பிரிக்கப்பட்ட வழிப் பிறரும் அவனிற் பிரிக்கப்பட்டமை யான், அவை பிரிநிலை கொண்டனவேயா மென்க. பிரிநிலையோடு முடிதலாவது - அவனே கொண்டான் என்றவழி, அவனே யென்பது கொண்டானெனப் பிரிக்கப்பட்ட பொருளை வினை யெனக்கொண்டு முடிதலென்றாரால் உரையா சிரியரெனின், அற்றன்று; அவனே கொண்டான் என்புழி அவனென்னும் எழுவாய் வேற்றுமை கொண்டா னென்னும் பயனிலை கொண்டது; ஏகாரம் பிரிவுணர்த்திற்று, ஆண்டெச்சமும் எச்சத்தை முடிக்குஞ் சொல்லுமின்மையான், அவர்க்கது கருத்தென் றென்க. (35) 432. வினையெஞ்சு கிளவிக்கு வினையுங் குறிப்பு நினையத் தோன்றிய முடிபா கும்மே யாவயிற் குறிப்பே யாக்கமொடு வருமே. இதன்பொருள்: வினையெச்சத்திற்குத் தெரிநிலை வினையுங் குறிப்பு வினையும் முடிபாம்; ஆண்டைக் குறிப்புவினை ஆக்கவினை யொடு வரும் என்றவாறு. உதாரணம்: 58உழுது வந்தான்; மருந்துண்டு நல்ல னாயினான் என வரும். உழுது வருதல்; உழுது வந்தவன் என வினையெச்சம் வினைப் பெயரொடு முடிதல் ‘நினையத் தோன்றிய’ வென்றத னாற் கொள்க. வினையெச்சத்திற்கு முடிபு வினையியலுட் கூறப்பட்டமை யான் இச்சூத்திரம் வேண்டாவெனின், இதற்கு விடை ஆண்டே கூறினாம். ‘வேங்கையுங் காந்தளு நாறி யாம்பன் மலரினுந் தான் றண்ணி யளே’ (குறுந். 84) ‘வில்லக விரலிற் *பொருந்தியவர், நல்லகஞ் சேரி னொருமருங் கினமே’ (குறுந். 370) எனவும்; கற்றுவல்லன், பெற்றுடையன் எனவும் வினைக்குறிப்பு ஆக்கமின்றி வந்தனவா லெனின்:- 59ஆக்கமொடு வருமென் றது பெரும்பான்மை குறித்த தாகலிற் சிறுபான்மை ஆக்கமின்றியும் வருமென்பது. (36) 433. பெயரெஞ்சு கிளவி பெயரொடு முடிமே. இதன் பொருள் : பெயரெச்சம் பெயரொடு முடியும் என்றவாறு. உதாரணம்: உண்ணுஞ் சாத்தன், உண்ட சாத்தன் என வரும். ‘அவ்வறு பொருட்குமோ ரன்ன வுரிமைய’ (சொல். 234) என்றதனாற் பெயரெச்சம் பொருள்படுமுறைமை கூறினார். முடிபு எச்சவியலுட் பெறப்படுமென வினையியலுட் கூறியவாறு கடைப் பிடிக்க. (37) 434. ஒழியிசை யெச்ச மொழியிசை முடிபின. இதன் பொருள் : மன்னை யொழியிசையும், தில்லை யொழியிசை யும், ஓகார வொழியிசையும் ஆகிய ஒழியிசை யெச்சமூன்றும் ஒழியிசை யான் முடியும் என்றவாறு. உதாரணம்: ‘கூரியதொரு வாண்மன்’ ‘வருகதில் லம்மவெஞ் சேரி சேர’ (அகம். 276) கொளலோ கொண்டான் என்னும் ஒழியிசை யெச்சம், முறையானே, திட்பமின்று, வந்தாலின்னது செய்வல், கொண்டுய்யப் போமாறறிந்திலன் என்னும் ஒழியிசை யான் முடிந்தவாறு. பிறவும் முடித்தற்கேற்கும் ஒழியிசை யறிந்து கொள்க. (38) 435. எதிர்மறை யெச்ச மெதிர்மறை முடிபின. இதன் பொருள் : மாறுகொ ளெச்ச மெனப்பட்ட ஏகார வெதிர் மறையும் (எழுத். 275), ஓகார எதிர்மறையும் (எழுத். 290), உம்மை யெதிர்மறையும் (சொல். 255) ஆகிய எதிர்மறையெச்ச மூன்றும் எதிர்மறையான் முடியும் என்றவாறு. உதாரணம்: 60யானே கொள்வேன், யானோ கள்வேன், வரலு முரியன் என்னும் எதிர்மறையெச்சம், முறையானே, கொள்ளேன், கள்ளேன், வாராமையு முரியன் என்னும் எதிர்மறையான் முடிந்தவாறு கண்டு கொள்க. (39) 436. உம்மை யெச்ச மிருவீற் றானுந் தன்வினை யொன்றிய முடிபா கும்மே. இதன் பொருள்: 61எஞ்சுபொருட்கிளவியும் அவ்வெஞ்சுபொருட் கிளவியான் முடிவதுமாகிய உம்மையெச்ச வேறுபாடிரண்டன் கண்ணும், தன்வினை உம்மையொடு தொடர்ந்த சொற்குப் பொருந்திய முடிபாம் என்றவாறு. என்றது, ‘எஞ்சுபொருட் கிளவி செஞ்சொ லாயின்’ (சொல்.284) என்றதனான் 62உம்மையுடைத்தாயும் உம்மையின்றி யும் வரும் எஞ்சு பொருட்கிளவி உம்மையெச்சத்திற்கு முடிபாத லெய்திற்று. என்னை? எல்லாவெச்சத்திற்கும் எஞ்சுபொருட் கிளவியே முடிபாகலின். இனி உம்மையொடு தொடர்ந்த சொல்லிரண்டற்கும் வினையொன்றேயாகல் வேண்டுமென எய்தாத தெய்துவித்தவாறு. 63ஒன்றற்காயதே ஏனையதற்கு மாகலிற் றன்வினை யென்றார். உதாரணம்: 64சாத்தனும் வந்தான் கொற்றனும் வந்தான் என இரண்டும் ஒரு வினை கொண்டவாறு கண்டுகொள்க. சாத்தனும் வந்தான் கொற்றனு முண்டான் என வினை வேறுபட்டவழி உம்மை யெச்சமும் எஞ்சு பொருட் கிளவியும் இயையாமை கண்டுகொள்க. அஃதேல், 65பைம்புதல் வேங்கையு மொள்ளினர் விரிந்தன நெடுவெண் டிங்களு மூர்கொண் டன்றே (அகம். 2) என வினை வேறுபட்டுழியுந் தம்மு ளியைந்தனவா லெனின், இணர் விரி தலும் ஊர் கோடலும் இரண்டும் மணஞ்செய் காலம் இது வென்றுணர்த் துதலாகிய ஒருபொருள் குறித்து நின்றமை யான், அவை ஒரு வினைப்பாற் படுமென்பது. பிறவும் இவ்வாறு வருவனவறிந்து ஒரு வினைப்பாற்படுக்க. எஞ்சுபொருட்கிளவி செஞ்சொலாயவழித் தன்வினை கோடல் ஈண்டடங்காமையான், அது தன்னினமுடித்தலென்ப தனாற் பெறப்படும். ‘உம்மை யெச்ச மிருவீற் றானு’ மென்றதனான், உம்மை யெச்சத்திற்கு முடிபாகிய எஞ்சுபொருட்கிளவி உம்மையொடு வரின் எச்சமாமென்பதாம். அஃதெச்சமாங்கால், முன்னின்றது, எஞ்சுபொருட் கிளவியாமென்பது. எதிர்மறையும்மை எதிர்மறை யெச்சமா யடங்குதலின், ஈண்டும்மை யெச்சமென்றது எச்சவும்மையேயாம். (40) 437. தன்மேற் செஞ்சொல் வரூஉங் காலை நிகழுங் காலமொடு வாராக் காலமு மிறந்த காலமொடு வாராக் காலமு மயங்குதல் வரையார் முறைநிலை யான. இதன் பொருள்: உம்மை யெச்சத்தின்முன் எஞ்சுபொருட்கிளவி உம்மையில் சொல்லாய் வருங்கால், நிகழ்காலத்தோடு எதிர் காலமும் இறந்தகாலத்தோடு எதிர்காலமும் மயங்குதல் வரையார் என்றவாறு. ‘முறைநிலையான’ வென்றதனான், கூறிய முறையானல்லது எதிர் காலம் முன்னிற்ப ஏனைக்காலம் பின் வந்து மயங்குதலில்லை யென்பதாம். உதாரணம்: கூழுண்ணாநின்றான் சோறுமுண்பன் எனவும், கூழுண்டான் சோறுமுண்பன் எனவும் அவை கூறிய முறையான் மயங்கியவாறு கண்டு கொள்க. இவற்றொடு இது மயங்குதல் வரையா ரெனவே, இறந்த காலத்தொடு நிகழ்காலமும் நிகழ்காலத்தோடு இறந்தகாலமும் வந்து மயங்குதல் வரையப் படு மென்றவாறாயிற்று. ‘தன்மேற் செஞ்சொல் வரூஉங்காலை’ யென்றதனான், உம்மை யடுத்த சொல் வருங்கால், வேறுபாடின்றி 66இரண்டு சொல்லும் ஒருகாலத் தான் வருமென்பதாம். தன்வினை, காலம்வேறுபடுதலும் படாமையும் உடைமை யான், இன்னுழி இன்னவாற்றா னல்லது காலம் வேறுபடாதென வரையறுத்தவாறு. (41) 438. எனவெ னெச்சம் வினையொடு முடிமே. இதன் பொருள் : எனவென்னுமெச்சம் வினைகொண்டு முடியும் என்றவாறு. உதாரணம்: கொள்ளெனக் கொடுத்தான், துண்ணெனத் துடித்தது; ஒல்லென வொலித்தது, காரெனக்கறுத்தது எனவும்; 67நன்றென்று கொண்டான், தீதென் றிகழ்ந்தான் எனவும் வரும். (42) 439. 68எஞ்சிய மூன்று மேல்வந்து முடிக்கு மெஞ்சுபொருட் கிளவி யிலவென மொழிப. இதன் பொருள்: சொல்லப்பட்டனவொழிந்து நின்ற சொல்லுங் குறிப்பும் இசையுமாகிய எச்சமூன்றும் மேல் வந்து தம்மை முடிக்கும் எஞ்சுபொருட் கிளவியை யுடைய வல்லவென்று சொல்லுவர் ஆசிரியர் என்றவாறு. என்றது, அவ்வத்தொடர்க்குத் தாமெச்சமாய் வந்து அவற்ற தவாய் நிலையை நீக்கலின், பிரிநிலையெச்ச முதலாயின போலத் தம்மை முடிக்கும் பிறசொல்லைத் தாம் அவாய் நில்லா வென்ற வாறு. அவை பிறசொல் அவாவாது தாம் எச்சமாய் வருமாறு முன்னர்ச் சூத்திரத்தாற் பெறப்படும்.¹ (43) 440. அவைதாம் தத்தங் குறிப்பி னெச்சஞ் செப்பும். இதன் பொருள்: 69அவ்வெச்சமூன்றும் சொல்லுவார் குறிப்பான் எஞ்சி நின்ற பொருளையுணர்த்தும் என்றவாறு. உதாரணம்: பசப்பித்துச் சென்றா ருடையையோ வன்ன நிறத்தையோ பீர மலர் இளைதாக முண்மரங் கொல்க களையுநர் கைகொல்லுங் காழ்த்த விடத்து (குறள். 879) என்புழி, முறையானே, ‘பசப்பித்துச் சென்றாரை யாமுடையேம்’ எனவும், ‘தீயாரைக் காலத்தாற் களைக’ எனவும் வந்த தொடர் மொழி எச்சமாய் நின்ற குறிப்புப்பொருளை வெளிப்படுத்தலாற் குறிப்பெச்சமாயின. அகர முதல வெழுத்தெல்லா மாதி பகவன் முதற்றே யுலகு (குறள். 1) அளித்தஞ்ச லென்றவர் நீப்பிற் றெளித்தசொற் றேறியார்க் குண்டோ தவறு’ (குறள். 1154) என்றவழி, முறையானே, ‘அதுபோல’ எனவும், ‘நீத்தார்க்கே தவறு’ எனவும் வருவன எஞ்சிய இசைப்பொரு ளுணர்த்தலான் இசையெச்ச மாயின. சொல்லெச்சத்திற்கு உதாரணம் முன்னர்க் காட்டுதும். ‘சொல்லள வல்ல தெஞ்சுத லின்றே’ (சொல். 441) என்பதனான் அஃதொரு சொல்லாதல் பெறப்படுதலின், இது தொடர்ச்சொல்லாமென்பது. சொல்லென்னுஞ் சொல் எஞ்சுவது சொல்லெச்சமென்பார், இவ்விருவகையும் இசை யெச்ச மென அடக்குப. பசப்பித்துச் சென்றாரை யாமுடையேம் என்னுந் தொடக்கத்தன குறிப்பிற்றோன்றலா யடங்குதலின், விண்ணென விசைத்தது என்பது குறிப் பெச்சமென்றும், அதுபோல என்னுந் தொடக்கத்தன விகார வகையாற் றொக்கு நின்றமையான், ஒல்லென வொலித்தது என்பது இசையெச்ச மென்றும், இவை தத்தஞ் சொல்லான் முடிவதல்லது பிற சொல்லான் முடியாமை யின் இவற்றை மேல்வந்து முடிக்கும் எஞ்சு பொருட்கிளவியில வென்றாரென்றும், உரைத்தாரால் உரையாசிரியரெனின்:- அற்றன்று; 70‘தெரிபுவேறு நிலையலுங் குறிப்பிற் றோன்றலும் (சொல். 157) எனச் சொற்பொருட் பாகுபாடு உணர்த்திற்று. குறிப்பிற்றோன்றும் பொருளை வெளிப்படுத்தும் எச்சமாதலுடை மையான் எச்சமென்றார்; அதனான் ஆண்டடங்காது. இனி 71விசைத்தது ஒலித்தது என்பன தஞ்சொல்லெனப் படா; படினும், விண்ணென வீங்கிற்று துண்ணெனத் துளங்கினான் எனவும், ஒல்லென வீழ்ந்தது எனவும் பிற சொல்லானும் முடிதலின் எஞ்சு பொருட் கிளவி இலவென்றல் பொருந்தாதாம். என்னை? தஞ்சொல் அல்லாதன எஞ்சுபொருட் கிளவியாமாகலின். இனி 72அதுபோல வென்பது தொகுக்கும்வழித் தொகுத்த லென்பதனாற் றொக்கதாயின், அதனைச் சுட்டிக் கூறாவுவமை யென அணியியலுள் ஆசிரியர் ஓருவமை வேறுபாடாகக் கூறல் பொருந்தாது. தொகுக்கும்வழித் தொகுத்தல் ஒருமொழிக் கண்ணதாகலிற் பலசொற் றொகுமென்றலும் பொருத்தமின்று. அதனான் அவர்க்கது கருத்தன்று. விண்ணென விசைத்தது, ஒல்லென வொலித்தது என்னுந் தொடக்கத்தனவற்றை எனவென் எச்ச மென அடக்கிக் குறிப்பெச்சத்திற்கும் இசையெச்சத்திற்கும் வேறுதாரணங் காட்டல் கருத்தென்க. அல்லதூஉம், எனவே னெச்சமென அடக்காது இசையுங் குறிப்பும்பற்றி வருவனவற்றை வேறோதின், வெள்ளென வெளுத்தது எனப் பண்புபற்றி வருவதனையும் வேறோதல் வேண்டும்; அதனை வேறோதா மையானும் எனவெனெச்சமென அடக்குதலே கருத்தாகக் கொள்க. குறிப்புப்பொருளைப் ‘பசப்பித்துச் சென்றா ருடையை யோ’ ‘இளைதாக முண்மரங் கொல்க’ என்பன முதலாகிய தொடர் மொழியே உணர்த்தலான் எஞ்சுபொரு ளெனப்படா வாயினும், அப் பொருள் 73பிறசொல்லானல்லது வெளிப்படா மையின், அச் சொல் எச்சமாயிற்று. குறிப்புப் பொருளேயன்றி எஞ்சு பொருளுஞ் சொல்லுவான் குறிப்பொடு படுத்துணர்ந்து தமக்கேற்ற சொல்லாலுணர்த்தப்படுதலின், குறிப்பானெச்சஞ் செப்பல் மூன்றற்கும் ஒத்தவாறறிக. (44) 441. சொல்லெ னெச்ச முன்னும் பின்னுஞ் சொல்லள வல்ல தெஞ்சுத லின்றே. இதன் பொருள் : சொல்லெச்சம், ஒருசொற்கு முன்னும் பின்னுஞ் சொன் மாத்திரம் எஞ்சுவதல்லது, 74தொடரா யெஞ்சுத லின்று என்றவாறு. ‘உயர்திணையென்மனார்’ (சொல். 1) என்புழி ஆசிரிய ரென்னுஞ் சொல் முன்னும், ‘மருந்தெனின் மருந்தே வைப் பெனின் வைப்பே’ (குறுந். 71) என்புழி எமக்கென்னுஞ் சொல் பின்னும், எஞ்சி நின்றவாறு கண்டு கொள்க. ஒருசாரார் இவற்றை இசையெச்சமென்று, ‘சொல்லள வல்ல தெஞ்சுத லின்றே’ என்பதற்குச் சொல்லென்னுஞ் சொல்லள வல்லது பிறிது சொல் லெஞ்சுத லின்றென்று பொருளுரைத்து, ‘பசித்தேன் பழஞ்சோறு தாவென்று நின்றாள்’ என்புழித்தா வெனச்சொல்லி யெனச், சொல் லென்னுஞ்சொல் எஞ்சி நின்ற தென்று, இதனை உதாரணமாகக் காட்டுப. அவர் ‘முன்னும் பின்னு’ மென்பதற்குச் சொல்லென்னுஞ் சொற் கொணர்ந்து கூட்டுவதன் முன்னும் பின்னுமென இடர்ப்பட்டுப் பொருளுரைப்ப. (45) 442. அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல். இதன் பொருள் : அவைக்கணுரைக்கப்படாத சொல்லை அவ் வாய்பாடு மறைத்துப் பிறவாய்பாட்டாற் சொல்லுக என்றவாறு. அவைக்கண் வழங்கப்படுஞ்சொல்லை ‘அவை’யென்றார், உதாரணம்: ‘ஆன்முன் வரூஉ மீகார பகரம்’ எனவும், ‘கண்கழீஇ வருதும்; கான்மே னீர்பெய்து வருதும்’ எனவும், 75கருமுகமந்தி, செம்பினேற்றை; ‘புலிநின் றிறந்த நீரல் ஈரத்து’ எனவும் இடக்கர் வாய்பாடு மறைத்துப் பிறவாய்பாட்டாற் கூறியவாறு. ஈகாரபகரமென்பது போலக் கண் கழுவுதன் முதலாயின, அவையல் கிளவியைக் கிடந்தவாறு கூறாது பிறிதோராற்றாற் கிளந்தனவல்ல வெனினும், அவையல் கிளவிப் பொருண்மையை யுணர்த்தலின், ஒற்றுமை நயத்தான் அவையல் கிளவியைப் பிறிதோராற்றாற் கூறிய வாய்பாடாகக் கொள்ளப்படும். இவை 76‘தகுதியும் வழக்கும்’ (சொல். 17) என்புழித் தகுதியா யடங்கு மெனின், செத்தாரைத் துஞ்சினாரென்றல் முதலாயினவன்றே தகுதி யாவன? ஆண்டுச் செத்தாரென்பதும் இலக்கணமாகலின் அதனானும் வழங்கப்படும்; தகவுநோக்கிச் சொல்லுங்காற்றுஞ் சினாரென்றுஞ் சொல்லப்படும். ஈண்டை யவையல் கிளவியாற் கிளத்தல் வழுவாதலின் மறைத்த வாய்பாட்டானே கிளக்கப்படும். அதனான் ஆண்டடங்கா வென்பது. 77இது வழுவமைதி யன்மையாற் கிளவியாக்கத்துக் கூறாரா யினார். (46) 443. மறைக்குங் காலை மரீஇய தொராஅல். இதன் பொருள் : அவையல்கிளவியை மறைத்துச் சொல்லுங்கால், மேற் றொட்டு வழங்கப்பட்டு வருவன மறைக்கப்படா என்றவாறு. உதாரணம்: ஆப்பி, ஆனையிலண்டம் என மரீஇ வந்தன மறைக்கப் படாது வந்தவாறு. 78‘பகல்கான் றெழுதரும் பல்கதிர்ப் பரிதி’ (பெரும்பாண். 2) என்புழிக் கான்றென்பது, தன் பொருண்மே னில்லாது அணி குறித்துப் பிறிதொரு பொருண்மே னிற்றலின் மரீஇய சொல்லாய் மறைக்கப்படாமையும், 79அதன் பொருண்மே னின்றவழி மறைக்கப் படுதலுமறிக. (47) 444. ஈதா கொடுவெனக் கிளக்கு மூன்று மிரவின் கிளவி யாகிட னுடைய. இதன் பொருள் : ஈ, தா, கொடு எனச் சொல்லப்படும் மூன்றும் ஒருவன் ஒன்றை இரத்தற்கண் வருஞ் சொல்லாம் என்றவாறு. 80அவை பிறபொருண்மேல் வருதலுமுடைமையான். ‘இரவின் கிளவி யாகிட னுடைய’ வென்றார். வழங்கல், உதவல், வீசல் முதலாயின பிறவு முளவாக இவற்றையே விதந்தோதிய தென்னையெனின், அவை கொடைப் பொருளவாய் வருவதல்லது இவைபோல இரத்தற்குறிப்பு வெளிப்படுக்கும் இரவின் கிளவியாய்ப் பயின்று வாராமை யானும், இன்னார்க்கு இன்னசொல் உரித்தென்று வரையறுத்த லும் வழுவமைத்தலுமாகிய ஆராய்ச்சி ஆண்டின்மையானும், இவற்றையே விதந்தோதினாரென்பது. அஃதேல், ‘ஈயென்கிளவி’ (சொல். 445) என்னுஞ் சூத்திர முதலாய நான்கும் அமையும், இச்சூத்திரம் வேண்டாவெனின், இவை இரவின் கிளவியாதலும் மூன்றென்னும் வரையறையும் அவற்றாற் பெறப்படாமை யின் வேண்டுமென்பது. முன்னிலைச் சொல்லாய் வருவழியல்லது பிறாண்டு இன்னசொல் இன்னார்க் குரித்தென்னும் வரையறை யில்லென்ப துணர்த்துதற்கு ஈ தா கொடுவென முன்னிலை வாய்பாடுபற்றி யோதினார். (48) 445. அவற்றுள் ஈயென் கிளவி யிழிந்தோன் கூற்றே. 446. தாவென் கிளவி யொப்போன் கூற்றே. 447. கொடுவென் கிளவி யுயர்ந்தோன் கூற்றே. இதன் பொருள் : ஈயென்கிளவி இரக்கப்படுவோனின் இழிந்த விரவலன் கூற்றாம். தாவென்கிளவி அவனோ டொப்பான் கூற்றாம். கொடுவென் கிளவி அவனி னுயர்ந்தவன் கூற்றாம் என்றவாறு. உதாரணம்: சோறீ (சோறு ஈ); ஆடை தா; சாந்து கொடு என மூன்று சொல்லும் முறையானே மூவர்க்கு முரியவாய் வந்தவாறு கண்டு கொள்க. (49) (50) (51) 448. கொடுவென் கிளவி படர்க்கை யாயினுந் தன்னைப் பிறன்போற் கூறுங் குறிப்பிற் றன்னிடத் தியலு மென்மனார் புலவர். இதன் பொருள் : 81கொடுவென்னுஞ் சொல், முதனிலை வகையாற் படர்க்கை யாயினும், தன்னைப் பிறனொருவன் போலக் கூறுங் கருத்து வகையான், தன்னிடத்துச் செல்லும் என்றவாறு. உதாரணம்: மேற்காட்டப்பட்டது. தன்மைக்கும் முன்னிலைக்கு முரிய தா வென்பதனானாக, பொதுவாகிய ஈ யென்பதனானாகவன்றே சொல்லற்பாலது? உயர்ந்தான் அங்ஙனந் தானேற்பானாகச் சொல்லாது, கொடு வெனப் படர்க்கை வாய்பாட்டாற் சொல்லும்; ஆண்டுத் தன்னையே பிறன்போலக் குறித்தானாகலிற் றன்னிடத்தே யாமென இடவழு வமைத்தவாறு. உயர்ந்தான் 82தமனொருவனைக் காட்டி இவற்குக் கொடு வென்னு மென்றாரால் உரையாசிரியரெனின், ஆண்டுப் படர்க்கைச்சொற் படர்க்கைச் சொல்லோடியைதலான் வழுவின் மையின் அமைக்கல் வேண்டாவாம்; அதனான் அது போலியுரை யென்க. (52) 449. பெயர்நிலைக் கிளவியி னாஅ குநவுந் திசைநிலைக் கிளவியி னாஅ குநவுந் 83தொன்னெறி மொழிவயி னாஅ குநவு மெய்ந்நிலை மயக்கி னாஅ குநவு மந்திரப் பொருள்வயி னாஅ குநவு மன்றி யனைத்துங் கடப்பா டிலவே. இதன் பொருள் : பெயர்நிலைக் கிளவியி னாகுநவும் என்றது - ஒரு திணைப் பெயர் ஒருதிணைக்காய் வருவனவும் என்றவாறு. அவையாவன, ஓரெருத்தை நம்பியென்று வழங்குதலும், ஒரு கிளியை நங்கை யென்று வழங்குதலுமாம். பிறவுமன்ன. திசைநிலைக் கிளவியி னாகுநவும் என்றது-திசைச்சொல்லிடத்து வாய்பாடு திரிந்து வருவனவும் என்றவாறு. அவை புலியான், பூசையான் என்னுந் தொடக்கத்தன. தொன்னெறி மொழிவயி னாகுநவும் என்றது - முதுசொல்லாகிய செய்யுள் வேறுபாட்டின் கண் இயை பில்லன இயைந்தனவாய் வருவனவும் என்றவாறு. அவை ‘யாற்றுட் செத்த வெருமை யீர்த்த லூர்க்குயவர்க்குக் கடன்’ என்பது முதலாயின. மெய்ந்நிலை மயக்கி னாகுநவும் என்றது - பொருண் மயக்காகிய பிசிச் செய்யுட்கண் திணை முதலாயின திரிந்து வருவனவும் என்றவாறு. அவை, 84எழுதுவரிக் கோலத்தா ரீவார்க் குரியார் தொழுதிமைக் கண்ணணைந்த தோட்டார் - முழுதகலா நாணிற் செறிந்தார் நலங்கிள்ளி நாடோறும் பேனற் கமைந்தார் பெரிது. என்பது புத்தகமென்னும் பொருண்மேற் றிணை திரிந்து வந்த வாறு கண்டு கொள்க. பிறவுமன்ன. மந்திரப்பொருள்வயி னாகு நவும் என்றது - மந்திரப் பொருட்கண் அப்பொருட்குரித் தல்லாச் சொல் வருவனவும் என்றவாறு. இதற்குதாரணம் மந்திர நூல்வல்லார்வாய்க் கேட்டுணர்க. அன்றியனைத்துங் கடப் பாடிலவே என்றது-அவ்வனைத்தும் வழங்கியவாறே கொள்வ தல்லது இலக்கணத்தான் யாப்புறவுடைய வல்ல என்றவாறு. இஃது இச்சூத்திரத்திற்கு ஒரு சாராருரை. ஒருசாரார் பிறவுரைப்ப. இஃ தியற்சொல்லுந் திசைச்சொல்லும் பிறவும் பற்றி வழுவ மைத்ததாகலின், கிளவியாக்க முதலாயினவற்றின்கண் உணர்த்து தற் கியைபின்மை யான், ஈண்டு வைத்தார். (53) 450. செய்யா யென்னு முன்னிலை வினைச்சொற் செய்யென் கிளவி யாகிட னுடைத்தே. இதன் பொருள் : 85செய்யாயென்னும் வாய்பாட்டதாகிய முன்னி லை முற்றுச் சொல் ஆயென்னு மீறு கெடச் செய்யென்னுஞ் சொல்லாய் நிற்றலுடைத்து என்றவாறு. ஆகிடனுடைத் தென்றதனான், செய்யாயென ஈறு கெடாது நிற்றலே பெரும்பான்மை யென்பதாம். உதாரணம்: உண்ணாய், தின்னாய், கிடவாய், நடவாய், தாராய், வாராய், போவாய் என்பன ஈறுகெட உண், தின், கிட, நட, தா, வா, போ எனச் செய்யென் கிளவி யாயினவாறு கண்டுகொள்க. செய்யாயென்னும் முன்னிலை யெதிர்மறை செய்யென் கிளவியாதற் கேலாமையின், செய்யாயென்னும் முன்னிலை வினைச்சொலென்றது விதி வினையையேயாம். தன்னின முடித்த லென்பதனான் வம்மின், தம்மின் என்பன மின் கெட வம், தம் என நிற்றலும், அழியலை அலையலை என்னும் முன்னிலை யெதிர்மறை, ஐகாரங்கெட்டு அழியல், அலையல், என நிற்றலுங் கொள்க. ஒன்றென முடித்தலென்பத னான், புகழ்ந்தா ரென்னும் படர்க்கைவினை ஆரீறுகெடப் ‘புகழ்ந்திகு மல்லரோ’ என நிற்றலுங் கொள்க. இவை யெல்லாஞ் செய்யுண்முடி பென்பாருமுளர். 86செய்யாயென்னு முன்னிலையெதிர்மறை எதிர்மறை படாது செய்யென் விதிவினையாதலு முரித்தென் றுரைத்தாரால் உரையாசிரியரெனின், அற்றன்று; செய்யாயென்னும் எதிர்மறை வினையுஞ் செய்யா யென்னும் விதிவினையும் முடிந்த நிலைமை ஒக்குமாயினும், எதிர்மறைக் கண் மறையுணர்த்தும் இடைநிலையு முண்மையான், முடிக்குஞ்சொல் வேறெனவே படும். மறை யுணர்த்தும் இடைநிலையாவன: உண்ணலன், உண்டிலன், உண்ணாது, உண்ணேன் என்புழி வரும் அல்லும், இல்லும், ஆவும், ஏயும், பிறவுமாம். உண்ணாய் உண்ணேன் என்புழி எதிர்மறை யாகார வேகாரங் கெட்டு நின்றன வெனல் வேண்டும்; அல்லாக் கால், மறைப் பொருள் பெறப்படாமையின். அதனான் எதிர்மறைச் சொல்லே விதி வினைச்சொல் ஆகாமையின் அவர்க்கது கருத்தன்றென்க. அல்லதூஉம், ஆசிரியர் அக் கருத்தினராயின், ‘செய்யா யென்னு மெதிர்மறை வினைச்சொல்’ என்றோதுவார்மன்; அவ்வாறோதாமையான் அவர்க்கது கருத்தன்மையான் உரையாசிரியர்க்கும் அது கருத்தன்மை யறிக. (54) 451. முன்னிலை முன்ன ரீயு மெயு மந்நிலை மரபின் மெய்யூர்ந்து வருமே. இதன் பொருள் : முன்னிலை வினைச்சொன்முன் வரும் ஈகாரமும் ஏகாரமும் அம் முன்னிலைச்சொற் கேற்ற மெய்யூர்ந்து வரும் என்றவாறு. உதாரணம்: ‘சென்றீ பெருமநிற் றகைக்குநர் யாரோ’ (அகம். 46) ‘அட்டி லோலை தொட்டனை நின்மே’ (நற். 300) என அவை முன்னிலைக் கேற்ற மெய்யூர்ந்து வந்தவாறு கண்டுகொள்க. முன்னிலை யென்றாரேனும், செய்யென் கிளவியாகிய முன்னிலை யென்பது 87அதிகாரத்தாற் கொள்க. ஈகார மொன்றேயாக, புக்கீ, உண்டீ, உரைத்தீ, சென்றீ என முன் னிலை வினையீற்று வேறுபாட்டிற் கேற்ப மெய் வேறுபட்டு வருதலான், ‘அந்நிலை மரபின் மெய்’ என்றார். ஏகாரம் மகர மூர்ந்தல்லது வாராது. இவ்வெழுத்துப்பேறு புணர்ச்சி விகாரமாதலின் ஈண்டுக் கூறற் பாற்றன்றெனின், அற்றன்று. ‘இயற்பெயர் முன்ன ராரைக் கிளவி’ (சொல். 270) அப்பெயரொடு ஒற்றுமைப்பட்டு நின்றாற் போல, முன்னிலை முன்னர் ஈயும் ஏயும் முன்னிலைச் சொல் லோடு ஒற்றுமைப்பட்டு நிற்றலான், நிலைமொழி வருமொழி செய்து புணர்க்கப்படாமையான், அம்மெய் புணர்ச்சிவிகார மெனப்படா வென்க. அஃதேல், இடையியலுள் ‘இயற்பெயர் முன்ன ராரைக் கிளவி’ (சொல். 270) என்பதனோடியைய இதனையும் வைக்க வெனின், ஆண்டு வைப்பிற் செய்யா யென்பது செய்யென் கிளவி யாய வழியது அவ்வீகார வேகார வரவென்பது பெறப்படா மையின், ஈண்டு வைத்தார். ‘செய்யா யென்னு முன்னிலை வினைச் சொல்’ என்பதனை ஈண்டு வைத்ததற்கும் இதுவே பயனாதலறிக. முன்னிலைச்சொல் விகாரம் ஒருங்குணர்த்தல் அதற்குப் பயனெனினு மமையும். ஈயென்பதோ ரிடைச்சொல் உண்டென்பது இச்சூத்திரத்தாற் பெற்றாம். இவையிரண்டும் ஈண்டுப் 88புறத்துறவு பொருள்பட நின்றன. அசைநிலை யென்பாருமுளர். (55) 452. கடிசொல் லில்லைக் காலத்துப் படினே. இதன் பொருள் : இவை தொன்றுதொட்டன வல்லன வென்று கடியப்படுஞ் சொல்லில்லை; அவ்வக்காலத்துத் தோன்றி வழங்கப்படுமாயின் என்றவாறு. உதாரணம்: சம்பு சள்ளை சட்டி சமழ்ப்பு எனவரும். இவை தொன்று தொட்டு வந்தனவாயின், முதலாகாதனவற்றின்கண், சகரக் கிளவியு மவற்றோ ரற்றே அ ஐ ஒளவெனு மூன்றலங் கடையே (எழு. 62) என விலக்கார் ஆசிரியர்; அதனான் அவை பிற்காலத்துத் தோன்றிய சொல்லேயா மென்பது. இஃது எழுவகை வழுவமைதியுள் ஒன்றாகாது ஒரு பாதுகாவ லாதலின் கிளவியாக்கத் தியைபின்மையான் ஈண்டுக் கூறினா ரென்பது. இனி ஒருசாரா ருரை:- இன்ன அநுவதிக்குங் காலமாம் அக் காலத்து, அவை வழுவன்மை எல்லா ஆசிரியர்க்கும் உடம்பாடா கலின் அதனைத் தழுவிக்கொண்டவா றென்க. இவையிரண்டும் இச்சூத்திரத்துக்குப் பொருளாகக் கொள்க. இனி ஒன்றென முடித்தலான் புதியன தோன்றினாற் போலப் பழையன கெடுவனவும் உளவெனக் கொள்க. அவை அழான், புழான் முதலியன வும், 89எழுத்திற் புணர்ந்த சொற்கள் இக்காலத்து வழங்காதனவுமாம். (56) 453. குறைச்சொற் கிளவி குறைக்கும் வழியறிதல். இதன் பொருள் : குறைக்குஞ் சொல்லைக் குறைக்கு மிடமறிந்து குறைக்க என்றவாறு. 90குறைக்கும்வழி யறித லென்பது, ஒரு சொற்குத் தலையு மிடையுங் கடையுமென இடமூன்றன்றே? அவற்றுள் இன்னுழிக் குறைக்கப்படும் இச்சொல் லென்றறிந்து குறைக்க வென்றவாறு. உதாரணம்: தாமரை யென்பது, ‘மரையிதழ் புரையு மஞ்செஞ் சீறடி’ எனத் தலைக்கண்ணும், ஓந்தியென்பது ‘வேதின வெரிநி னோதிமுது போத்து’ (குறுந். 140) என இடைக்கண்ணும், நீலமென்பது ‘நீலுண் டுகிலிகை கடுப்ப’ எனக் கடைக்கண்ணும், குறைக்கப்பட்டவாறும், அவை பிறாண்டுக் குறைத்தற் கேலாமை யுங் கண்டுகொள்க. குறைத்தலாவது ஒருசொல்லிற் சிறிது நிற்பச் சிறிது கெடுத்தலாகலின் முழுவதுங் கெடுத்தலாகிய தொகுக்கும் வழித் தொகுத்தலின் வேறாத லறிக. ‘இயற்சொல் திரிசொல்’ (சொல். 397) என்னுஞ் சூத்திர முதலாயின செய்யுளதிகாரத்துக் கூறாமையானும், ஒரு காரணத் தாற் கூறினாரேனுஞ் செய்யுட்க ணென்று விதந்து கூறாமை யானும், இது வழக்கு முடிபென்பாரு முளர். (57) 454. குறைத்தன வாயினு நிறைப்பெய ரியல. இதன் பொருள் : குறைத்தனவாயினும், அவை குறையாது நிறைந்து நின்ற பெயரியல்புடைய என்றவாறு. என்றது, முற்கூறிய உதாரணங்கள் தாமரை ஓந்தி நீலமென நிறைந்த பெயர்களின் பொருள்களைத் தந்தே நிற்குமென்ற வாறாம். குறைந்தவழியும் நிறைந்த பெயராகக் கொள்கவென்றவா றாம். குறைக்கப்படுவன பெயரேயாகலின், ‘நிறைப் பெயரியல’ வென்றார். (58) 455. வேற்றுமைச்சொல்லே இடைச்சொல்லெல்லாம் . இதன் பொருள் : பிறிதோர் சொல்லை வேறுபடுப்பனவும் பிறிதோர் சொல்லான் வேறுபடுக்கப்படுவனவுமெனச் சொல் இருவகைப் படும். பிறிதொரு சொல்லை வேறுபடுத்தலாவது விசேடித்தல்; பிறிதொரு சொல்லான் வேறு படுக்கப்படுதலாவது விசேடிக்கப் படுதல். இடைச்சொல்லெல்லாம் பிறிதோர் சொல்லை வேறு படுக்குஞ் சொல்லாம் என்றவாறு. வேறுபடுத்தலும் வேறுபடுக்கப்படுதலும் ஆகிய இரண்டும் பொது வகையான் எல்லாச் சொற்குங் கூறாமை எய்துமாகலின், இடைச்சொல் லெல்லாம் வேற்றுமைச்சொல் என்றதனான், இவை வேறுபடுக்குஞ் சொல்லாத லல்லது ஒருஞான்றும் வேறுபடுக்கப்படுஞ் சொல்லாகாவென நியமித்தவாறாம். அவை அன்னவாதல் இடையியலுள் ஓதப்பட்ட இடைச்சொல் வழக்கினுள்ளுஞ் செய்யுளுள்ளும் வரும்வழிக் கண்டுகொள்க. 91வேற்றுமைச்சொல் வேற்றுமையைச் செய்யுஞ் சொல் லென விரியும். வேற்றுமையெனினும், வேறுபாடெனினு மொக்கும். இடைச்சொல் லெல்லாம் வேற்றுமைச் சொல்லாயினும், அவற்றுள் ஒரு சாரனவற்றை ‘வேற்றுமைச் சொல்’லென்று ஆள்ப; இயற்சொல்லுள் (172, 174) ஒரு சாரனவற்றை இயற்பெய ரென்றாற் போல வென்பது. இதுவு மொரு நயம். (59) 456. உரிச்சொன் மருங்கினு முரியவை யுரிய. இதன் பொருள் : உரிச்சொல்லிடத்தும் வேறுபடுக்குஞ் சொல்லா தற்கும் உரியன உரியவாம்; எல்லாம் உரியவாகா என்றவாறு. எனவே, 92உரிச்சொல் லுள் வேறுபடுத்தும் வேறுபடுக்கப் பட்டும் இருநிலைமையு முடையவாய் வருவனவே பெரும்பான்மை யென்பதாம். வேறுபடுக்குஞ் சொல்லேயாவன உறு, தவ, நனி, ஏ - என்னுந் தொடக்கத்தன. இருநிலைமையு முடையன குரு, கெழு, செல்லல், இன்னல் என்னுந் தொடக்கத்தன. உறு பொருள், தவப்பல, நனி சேய்த்து, ஏகல்லடுக்கம் என இவை ஒன்றை விசேடித்தல்லது வாராமையும், குருமணி, விளங்குகுரு; கேழ்கிளரகலம், செங்கேழ்; செல்லனோய், அருஞ் செல்லல்; இன்னற் குறிப்பு, பேரின்னல் என இவை ஒன்றனை விசேடித்தும் விசேடிக்கப்பட்டும் இரு நிலைமையு முடையவாய் வருமாறும் வழக்குஞ் செய்யுளு நோக்கிக் கண்டுகொள்க. குரு விளங்கிற்று, செல்லறீர எனத் தாமே நின்று வினைகொள்வன, விசேடிக்கப் படுந் தன்மை யுடையவாதலின், விசேடிக்கப்படுஞ் சொல்லாம். பிறவும் விசேடித் தல்லது வாராதனவும், விசேடித்தும் விசேடியாதும் வருவனவும், வழக்குஞ் செய்யுளும் நோக்கி யுணர்க. வேறுபடுக்குஞ் சொல்லேயாவன இவையெனத் தொகுத்து ணர்த்தற்கும், உரிச்சொன் மருங்கினு முரியவை யுரிய எனச் சூத்திரஞ் சுருங்குதற்கும், இடையியலுள்ளும் உரியிய லுள்ளும் வையாது, இரண்டு சூத்திரத்தையும் ஈண்டு வைத்தார். (60) 457. வினையெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய. இதன் பொருள் : மேற்கூறப்பட்ட வினையெச்சமும் வேறுபட்ட பல விலக்கணத்தையுடைய என்றவாறு. அவையாவன: ‘உரற்கால் யானை யொடித்துண் டெஞ்சிய’ (குறுந். 232) எனவும், ‘ஞாயிறு பட்டு வந்தான்’ எனவும், செய்தெ னெச்சம் வினைமுதல் கொள்ளாது பிறிதின் வினை கோடலும், அஃதீறு திரிதலும்; ‘மோயின ளுயிர்த்த காலை’ (அகம்.5) எனவும், ‘கண்ணியன் வில்லன் வரும்’ எனவும் முற்றுச்சொல்லது திரிபாய் வருதலும்; 93ஓடிவந்தான் விரைந்து போயினான் எனவும், வெய்ய சிறிய மிழற்றுஞ் செவ்வாய் எனவும், செவ்வன் றெரிகிற் பான், ‘புதுவத னியன்ற வணியன்’ (அகம். 66) எனவும், தம்மை முடிக்கும் வினைக்கட் கிடந்த தொழிலானும் பண்பானுங் குறிப் பானும் உணர்த்தித் தெரிநிலைவினையுங் குறிப்புவினையுமாய் முடிக்குஞ் சொல்லை விசேடித்தலும்; பிறவுமாம். செய்தெ னெச்சத்தீறு திரிதல் வினையியலுட் (228) காட்டிப் போந்தாம். 94‘பெருங்கை யற்றவென் புலம்புமுந் துறுத்து’ என்புழிப் பெருமென்பதனை ஒருசாரார் வினையெச்ச வாய்பாடென்ப; ஒருசாரார் வினைச்சொற் பற்றி நின்றதோ ருரிச்சொலென்ப. இடைச்சொல்லும் உரிச்சொல்லும் மேற்கூறப்பட்ட இலக்கணமே யன்றிப் பிறவிலக்கணமு முடைய வென்பதுணர்த் தினார். இனி அவையே யன்றி வினையெஞ்சுகிளவியும் பல விலக்கணத்தன வென்பது பட நின்றமை யான், உம்மை இறந்தது தழீஇய வெச்சவும்மை. அவ்விலக்கணம் ஓரியலவன்றித் திரிதலும் வேறு பொருளுணர்த்துதலும் விசேடித்தலு முதலாகிய வேற்றுமை யுடையவாகலின், ‘வேறு பல்குறிய’ வென்றார். வினையெச்சத்துள் விசேடித்தே நிற்பனவுமுள வென்ப தூஉம் உணர்த்துகின்றாராகலின், இதனை வினையியலுள் வையாது, ஈண்டு விசேடிக்குஞ்சொல் லுணர்த்துவனவற்றொடு வைத்தார். ‘பெயர்த்தனென் முயங்க’ (குறுந். 84) என்பது முதலாயின செய்தெ னெச்சம் முற்றாய்த் திரிந்தனவென்றும், ஒடித்துண் டெஞ்சிய என்பது முதலாயின செயவெனெச்சம் செய்தெனெச்ச மாய்த் திரிந்தன வென்றும், முன்னருரைத்தாரால் உரையாசிரிய ரெனின், ‘பெயர்த்தனென் முயங்க’ என்பது முதலாயின எச்சத்திரி பாயின் எச்சப்பொரு ளுணர்த்துவதல்லது இடமும் பாலும் உணர்த்தற்பாலவல்ல. எச்சப் பொருண்மையாவது மூன்றிடத் திற்கும் ஐந்துபாற்கும் பொதுவாகிய வினைநிகழ்ச்சி யன்றே? அவ் வாறன்றி முற்றுச்சொற்கு ஓதிய ஈற்றவாய் இடமும் பாலுமுணர்த்தலின், அவை முற்றுத்திரிசொல் லெனவேபடும். சொன்னிலை யுணர்ந்து வினை கோடன் மாத்திரத்தான் வினை யெச்சமெனின்:- மாரைக் கிளவியும், வினையொடு முடியும் வேற்றுமையும், பிறவு மெல்லாம் வினையெச்ச மாவான் செல்லும்; அதனான் அவர்க்கது கருத்தன்றென்க. அல்லதூஉம், ‘கண்ணியன் வில்லன் வரும்’ என வினைக்குறிப்புமுற்றாய்த் திரிதற்கேற்ப தொரு வினையெச்சம் இன்மையானும், அது கருத்தன்மை யறிக. ‘ஓடித்துண்டெஞ்சிய’ என்பதூஉம் ஞாயிறு பட்டு வந்தான் என்ப தூஉம் பிறவினை கொண்டனவாயினும், செய்தெ னெச்சத்திற் குரிய இறந்த கால முணர்த்தலான், ஏனைக் காலத்திற்குரிய செயவெ னெச்சத்தின் திரிபெனப்படா; செயவெ னெச்சத் திரிபாயிற் செயவெனெச்சத்திற்குரிய காலமுணர்த்தல் வேண்டும். மழை பெய்ய மரங்குழைத்தது எனச் செயவெ னெச்சத்திற்கு இறந்தகாலமு முரித்தெனின், காரண காரியப் பொருண்மை யுணர்த்தும் வழியல்லது செயவெனெச்சம் இறந்தகால முணர்த்தாது; ஒடித் துண்டலும் ஞாயிறு படுதலும் எஞ்சுதற்கும் வருதற்குங் காரண மன்மை யான், ஆண்டிறந்த கால முணர்த்தாமையின், செய்தெ னெச்சமாய் நின்று தமக்குரிய இறந்தகால முணர்த்தின வெனப் படும். அதனாற் செயவெ னெச்சஞ் செய்தெனெச்சமாய்த் திரிந்தன வென்றலும் அவர் கருத்தன் றென்க. ஞாயிறு பட்டு வந்தான் என்பது ஞாயிறு பட்டபின் வந்தான் என இறந்தகால முணர்த் தலும், ஞாயிறு பட வந்தான் என்பது ஞாயிறு படா நிற்க வந்தான் என நிகழ்கால முணர்த்தலும் வழக்கு நோக்கிக் கண்டு கொள்க. (61) 458. உரையிடத் தியலு முடனிலை யறிதல். இதன் பொருள்: 95வழக்கிடத்து உடனிற்கற்பால வல்லனவற்றது உடனிலை போற்றுக என்றவாறு. உடனிற்கற்பால வல்லனவாவன தம்முண் மாறுபாடுடை யன. மாறுபாடில்லனவற்ற துடனிலைக்கண் ஆராய்ச்சி யின்மையின், உடனிலை யென்றது மாறுபாடுடையன வற்ற துடனிலையேயாம். உதாரணம்: இந்நாழிக்கிந்நாழி சிறிது பெரிது என, உடனிற்கற் பாலவல்லாச் சிறுமையும் பெருமையும் உடனின்ற வாறு கண்டு கொள்க. சிறிதென்பது பெரிதெனப்பட்ட பொருளை நோக்காது பெரிதென்பதற்கு அடையாய் மிகப் பெரிதன்றென்பதுபட நிற்றலான், அமைவுடைத் தாயிற்று. அறிதலென்பது இவ்வாறு அமைவுடையன கொள்க வென்றவாறு. மாறுபாடுடையன உடனிற்றல் எழுவகை வழுவினுள் ஒன்றன்மை யான் இதனைக் கிளவியாக்கத்துட் கூறாது ஈண்டுக் கூறினார். (62) 459. முன்னத்தி னுணருங் கிளவியு முளவே யின்ன வென்னுஞ் சொன்முறை யான. இதன் பொருள் : சொல்லானன்றிச் 96சொல்லுவான் குறிப்பாற் பொருளுணரப் படுஞ் சொல்லுமுள, இப்பொருள் இத்தன்மைய வென்று சொல்லுதற்கண் என்றவாறு. உதாரணம்: செஞ்செவி, வெள்ளொக்கலர் என்புழி மணியும் பொன்னும் அணிந்த செவி என்றும், வெளியதுடுத்த சுற்றம் என்றும், குறிப்பானுணரப் பட்டவாறு கண்டு கொள்க. குழைகொண்டு கோழியெறியும் வாழ்க்கையர் என்புழி அன்ன பெருஞ்செல்வத்தார் என்பதூஉங் குறிப்பா னுணரப்படும். இது ‘தெரிபுவேறு நிலையலுங் குறிப்பிற் றோன்றலும்’ (சொல். 157) என்புழி அடங்குமெனின், ஆண்டுப் பொருணிலை இரு வகைத் தென்ப தல்லது இன்னுழி இப்பொருள் குறிப்பிற் றோன்று மென்னும் வேறுபாடு பெறப்படாமையான், ஆண்ட டங்கா தென்பது. இதுவும் மேலையோத்துக்களுள் உணர்த்துதற் கியைபின் மையான் ஈண்டுணர்த்தினார். (63) 460. ஒருபொரு ளிருசொற் பிரிவில வரையார். இதன் பொருள்: பொருள் வேறுபாடின்றி ஒரு பொருண் மேல் வரும் இரண்டுசொற் பிரிவின்றித் தொடர்ந்துவரின், அவற்றைக் கடியார் என்றவாறு. (எ-டு) 97‘நிவந்தோங்கு பெருமலை’ எனவும் ‘துறுகன் மீமிசை யுறுகண்’ எனவும் வரும். பிரிவில வென்றது - வேறொரு சொல்லான் இடையிடப் படாது நிற்பன வென்றவாறு. இருசொல் ஒரு பொருண்மேல் வருதல் எழுவகை வழுவினுள் ஒன்றன்மையான் ஈண்டுக் கூறினார். வையைக் கிழவன் வயங்குதார் மாணகலந் தையலா யின்றுநீ நல்கினை நல்காயேற் கூடலார் கோவொடு நீயும் படுதியே நாடறியக் கௌவை யொருங்கு என்புழி, வையைக்கிழவன், கூடலார்கோ என்பன ஒரு பொருளை வரைந் துணர்த்தலாற் பிரிவிலவாகலின் வரையப்படாவென்றும், கொய்தளிர்த் தண்டலைக் கூத்தப் பெருஞ்சேந்தன் வைகலு மேறும் வயக்களிறே - கைதொழுவல் காலேக வண்ணனைக் கண்ணாரக் காணவெஞ் சாலேகஞ் சார நட’ என்புழிக் காலேகவண்ணன் என்பது அச்சாந்து பூசினா ரெல் லார்க்கும் பொதுவாய்க் கூத்தப்பெருஞ்சேந்தனையே வரைந் துணர்த்தாமையின், அவை பிரிவுடையவாமென்றும், உரையா சிரியர் உரைத்தாராலெனின், அற்றன்று. நாணி நின் றோணிலை கண்டி யானும் பேணினெ னல்லனோ மகிழ்ந வானத் தணங்கருங் கடவுளன் னோணின் மகன்றா யாதல் புரைவதாங் கெனவே’ (அகம். 16) என்புழி, ‘வானத் தணங்கருங்கடவு ளன்னோள்’ என்பது மகளிர்க் கெல்லாம் பொதுவாய் நாணி நின்றோளை வரைந்துணர்த்தாதா யினும், சொல்லுவான் குறிப்பான் அவளையே உணர்த்தினாற் போலக் காலேக வண்ணன் என்பதூஉம் பொதுவாயினுஞ் சொல்லுவான் குறிப்பாற் கூத்தப் பெருஞ் சேந்தனையே உணர்த்திப் பிரிவிலவாய் நிற்றலான், அவர்க்கது கருத்தன் றென்க. (64) 461. ஒருமை சுட்டிய பெயர்நிலைக் கிளவி பன்மைக் காகு மிடனுமா ருண்டே. இதன் பொருள் : ஒருமைக்குரிய பெயர்ச்சொற் பன்மைக் காகுமிடமு முண்டு என்றவாறு. (எ-டு) ‘ஏவ லிளையர் தாய்வயிறு கரிப்ப’ என்புழித் 98தாய் என்னும் ஒருமை சுட்டிய பெயர் இளையரென்பதனாற் தாயர் என்னும் பன்மை உணர்த்தியவாறு கண்டுகொள்க. ‘பன்மைக் காகு மிடனுமா ருண்டே’ யென்பது, ஒருமைச் சொற்பன்மைச் சொல்லொடு தொடர்தற்குப் பொருந்துமிட முண்டென்பதூஉம் படநின்றமையான், ‘அஃதை தந்தை யண்ணல் யானையடு போர்ச் சோழர்’ என ஒருமைச்சொற் பன்மைச் சொல் லொடு தொடர்தலுங் கண்டுகொள்க. ஈண்டு ஒருமைச் சொற் பன்மைச்சொல்லொடு மயங்குதலுடைமையான் ‘ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவி’ (சொல். 27) என்புழி அடங்காமையறிக. ஏற்புழிக்கோடலென்பதனான் உயர்திணைக்கண்ணது இம் மயக்க மென்று கொள்க ஆகுமிடமென்பதனான், பன்மையுணர்த்துதற்கும் பன்மைச் சொல்லொடு தொடர்தற்கும் பொருந்தும்வழிக் கொள்க வென்பதாம். (65) 462. முன்னிலை சுட்டிய வொருமைக் கிளவி பன்மையொடு முடியினும் வரைநிலை யின்றே யாற்றுப்படை மருங்கிற் போற்றல் வேண்டும் இதன் பொருள் : முன்னிலை குறித்து நின்ற ஒருமைச் சொல், பன்மை யொடு முடிந்ததாயினும், வரையப்படாது; அம்முடிபு ஆற்றுப் படைச் செய்யுளி டத்துப் போற்றியுணரப் படும் என்றவாறு. 99கூத்தராற்றுப்படையுள் ‘கலம்பெறு கண்ணுள ரொக்கற் றலைவ’ (மலைபடுகடாம். 50) என நின்ற ஒருமைச் சொற் போய் ‘இரும்பேரொக்கலொடு பதமிகப் பெறுகுவிர்’ (மலைபடு கடாம்.157) என்னும் பன்மைச் சொல்லொடு முடிந்தவாறு கண்டுகொள்க. ஈண்டு முன்னிலை யொருமை பெயராதல் அதிகாரத்தாற் (461) கொள்க. ஒருமை சுட்டிய பெயர்நிலைக் கிளவி பன்மைக் காகு மிடனுமா ருண்டே (சொல். 461) என்பதனான் இதுவும் அடங்குதலின், இச்சூத்திரம் வேண்டா வெனின், ‘பன்மையொடு முடியுமிடனுமா ருண்டே’ என்னாது, ‘பன்மைக் காகு மிடனுமா ருண்டே’ என்றாராதலின், ஆண்டுப் பன்மைச் சொற் கொண்டு முடியாது ஒருமைச்சொற் பன்மை யுணர்த்துதலும் பன்மைச் சொல்லொடு ஒரு பொருட்டாகிய துணையாய் மயங்குதலு முணர்த்தினார். அதனான் இக்கொண்டு முடிபு ஆண்டடங்கா தென்பது. அல்லதூஉம், இம்முடிபு செய்யுட் குரித்தென்றமையானும் ஆண்டடங்காமையறிக. பொதுவகையான் ‘ஆற்றுப்படை மருங்கி’ னென்றாரா யினும், சுற்றத்தொடு சுற்றத்தலைவனை ஆற்றுப்படுத்தற்கண்ணது இம்மயக்க மென்பது பாதுகாத்துணர்க வென்பார் ‘போற்றல் வேண்டும்’ என்றார். ‘பான்மயக் குற்ற வையக் கிளவி’ (சொல். 23) என்பதனாற் கூறிய ஒருமை பன்மை மயக்கம் வழுவமைதியாயினும் இலக்கணத் தோடொத்துப் பயின்று வரும். ‘ஒருமை சுட்டிய பெயர்நிலைக் கிளவி பன்மைக் காத’லும், முன்னிலையொருமை பன்மையொடு முடிதலும் அன்னவன்றிச் சிறுவழக்கினவாதலின், ஆண்டு வையாது ஈண்டு வைத்தார். ஒருவர் ஒருவரை ஆற்றுப்படுத்தற்கண் முன்னிலை யொருமை பன்மையொடு முடிதல் வழக்கிற்கும் ஒக்குமாகலான், ஆற்றுப்படை யெனப் பொதுவகையாற் கூறினார். (66) 463. செய்யுள் மருங்கினும் வழக்கியன் மருங்கினு மெய்பெறக் கிளந்த கிளவி யெல்லாம் பல்வேறு செய்தியி னூனெறி பிழையாது சொல்வரைந் தறியப் பிரித்தனர் காட்டல். இதன் பொருள் : செய்யுளிடத்தும் வழக்கிடத்தும் இவ்வதிகாரத்தின் கண் பொருள்பெறச் சொல்லப்பட்ட சொல் லெல்லாவற்றையும் பல்வேறு செய்கையுடைய தொன்னூ னெறியிற் பிழையாது சொல்லை வேறுபடுத் துணருமாற்றாற் பிரித்துக் காட்டுக என்றவாறு. என்றது, ‘நிலப்பெயர் குடிப்பெயர்’ எனவும், ‘அம்மா மெம்மேம்’ எனவும் பொதுவகையாற் கூறப்பட்டன. அருவாள நிலத்தானென்னும் பொருட்கண் அருவாளன் எனவும்; சோழ நிலத்தானென்னும் பொருட்கண் சோழியன் எனவும்; இறந்த காலத்தின்கண் உண்டனம், உண்டாம் எனவும்; நிகழ் காலத்தின் கண் உண்ணாநின்றனம், உண்ணாநின்றாம், உண்கின் றாம் எனவும்; எதிர்காலத்தின்கண் உண்குவம், உண்பாம் எனவும் வேறுபட்டு வருமன்றே? அவ்வேறுபாடெல்லாம் கூறிற் பல்கு மென்றஞ்சிக் கூறிற்றிலராயினும், தொன்னூ னெறியிற் பிழை யாமல் அவ்வேறு பாடுணரப் பிரித்துக் காட்டுக நூல்வல்லா ரென்றவாறா யிற்று. இது பிறநூன் முடிந்தது தானுடம்படுதலென்னுந் தந்திர வுத்தி. பிறவுமன்ன. செய்கை - விதி. சொல்வரைந்தறிய வெனவே, வரைந்தோதாது பொது வகை யானோதப் பட்டவற்றின்மேற்று இப்புறனடை யென்பதாம். இனி ஓருரை:- செய்யுளிடத்தும் வழக்கிடத்தும் என்னாற் கிளக்கப் படாது தொன்னூலாசிரியராற் கிளக்கப்பட்டு எஞ்சிநின்ற சொல்லெல்லாவற்றையும் அவ்வத் தொன்னூனெறி யிற் பிழையாமைச் சொல்லை வரைந்துணரக் கொணர்ந்து பிரித்துக்காட்டுக என்றவாறு. என்னாற் கிளக்கப்படாது என்பது பெற்றவாறென்னை யெனின், கிளந்தன பிற நூலிற் கொணர்ந்து காட்டல் வேண்டா மையிற் கிளக்கப் படாதன வென்பது பெறப்படுமென்க. புறனடையாற் கொள்ளப்படுவன:- யானு நீயு மவனுஞ் செல்வேம் எனவும், யானு நீயுஞ் செல்வேம் எனவும் ஏனையிடத் திற்குரிய சொல் தன்மைச் சொல்லோ டியைந்தவழித் தன்மை யான் முடிதலும்; அவனு நீயுஞ் சென்மின் எனப் படர்க்கைச் சொன் முன்னிலையோடியைந்தவழி முன்னிலையான் முடிதலும்; ‘நில்லாது பெயர்ந்த பல்லோ ருள்ளும்’ என்புழிப் பல்லே முள்ளு மெனத் தன்மையாகற்பாலது பல்லோருள்ளு மெனப் படர்க்கைப் பன்மையாயவழி அமைதலும்; முரசுகெழு தானை மூவ ருள்ளு மரசெனப் படுவது நினதே பெரும (புறம். 35) என்புழி, மூவிருள்ளுமென முன்னிலையாகற் பாலது மூவருள்ளு மெனப் படர்க்கையாயவழி அமைதலும்; ‘இரண்டனுட் கூர்ங் கோட்ட காட்டுவல்’ என்புழிக் கூர்ங்கோட்டதென ஒருமை யாகற்பாலது கூர்ங்கோட்டவெனப் பன்மையாயவழி அமை தலும் ஆம். பிறவுமுளவேற் கொள்க. அகத்தியமுதலாயின 100எல்லாவிலக்கணமும் கூறலிற் ‘பல்வேறு செய்தியி னூலெ’ன்றார். இவ்விரண்டுரையும் இச்சூத்திரத்திற் குரையாகக் கொள்க. (67) ஒன்பதாவது - எச்சவியல் முற்றிற்று. சொல்லதிகாரச் சேனாவரையருரை முற்றுப் பெற்றது. கணேசையர் அடிக்குறிப்புகள்: 1. எஞ்சிக்கிடந்த சொல்லிலக்கணம் உணர்த்தலின் எச்சவியலாயிற்று என்பது சேனாவரையர் கருத்து. தலைமையாற் பெயர் கொடுத்தல் - பார்ப்பனச்சேரி என்றாற்போல்வன. பன்மையாற் பெயர் கொடுத்தல் - எயினர்சேரி என்றாற்போல்வன. பத்துவித எச்சமுமுணர்த்தலான் எச்சவியல் என்று பெயர் பெற்றதென்றல் பொருந்தாது. ஏனெனின்? எச்சத்திற்குத் தலைமையும் பன்மையுமின்மையின், எச்சவியலிற் சொல்லப் படும் விஷயத்துள் பத்துவகை யெச்சங்களுக்குரிய இலக்கணங்கள் அதிகமாயிருத்தலால் பன்மையாற் பெயர் கொடுக்க லாம்; அவற்றிலும் ஏனைய இலக்கணங்கள் அதிகமாயிருத்தலின் பன்மையாற் பெயர் கொடுக்கப்பட்டது எனலுமாகாது. எச்சத்திற்குத் தலைமையுமின்று. ஆதலாற்றலைமையாற் பெயர் கொடுக்கப்பட்ட தெனலு மாகா தென்பது கருத்து. 2. எடுத்துக்கோடல் - ஆரம்பம்; தொடக்கம். ஈட்டல் - சேர்த்தல். வினைத் திரிசொல்லென்பார் உரையாசிரியர். (கிள.சூ.1) கடுங்காலென்புழிக் கடுவென்து கடியின் திரிபு. 3. ஈட்டல் என்பது பற்றி "ஈட்டற்சொல்" என்று சூத்திரப் பாடம் இருத்தல் வேண்டுமென்று கருதுவாருமுளர். அது ஓசையின்மையின், `ஈட்டச் சொல்' என்பதே பாடமாம். ஈட்டம் என்று பிரிப்பின் ஈட்டுதல் எனப் பொருள்படும். ஆதலால் பாடம் ஈட்டச் சொல்லென்று மிருக்கலாம். உரையாசிரியர்கள் பாடம் எல்லாம் அதுவே. 4. இயற்சொல் - எல்லாரானும் இயல்பாகப் பொருளறியப்படுவது. நீரம் என்னும் ஆரியச்சொல் ஈறு கெட்டு நீர் எனத் திரிந்து வந்தது என்பது சேனாவரையர் கருத்து. சிலர் தமிழ்ச்சொல் ஆரியத்துப் புக்கதென்பர். 5. சுட்டிய சொல் என்றது - புதிதாக இயற்றிக்கொண்ட சொல்; குழூஉக்குறி போல. 6. கிளி என்ற பொருண்மேல் வருங் கிள்ளை தனித்து நில்லாது அப் பொருளுணர்த்தும் வேறுசொல்லோடு சேர்த்து நோக்க ஒருபொருள் குறித்த வேறு சொல்லாம் என்றபடி. கிள்ளை மஞ்ஞை என்பவற்றுள் கிள்ளையென்பது தன்னைப்போலக் கிளி என்னும் பொருளை யுணர்த்துதற்குரிய சுகம் தத்தை முதலியவற்றோடு சேர்ந்து கிளி யென்னும் பொருண்மேல் வருவது ஒருவகை. கிளியை உணர்த்தலோடு பிறபொருளையு முணர்த்தி வேறு வேறு பொருளவாய் வருவது ஒருவகை. இவ்விரண்டு வகையல்லது சொற்கள் பொருளுணர்த்தும் வகை வேறின்மையின் ஆசிரியர் இருபாற் றென்றார். கிள்ளை என்பது கிளி குதிரை என வேறு வேறு பொருளுணர்த்துதல் காண்க. 7. தங்குறிப்பின் என்றது - அவ்வந்நிலத்துக் குறித்த பொருளையே செந்தமிழ் நிலத்தும் உணர்த்தி வழங்குமென்பது கருத்து. இயற்சொற் போல என்றது - நிலம் என்னுமியற்சொல் செந்தமிழ் நிலத்தும் கொடுந் தமிழ் நிலத்தும் தம் பொருளை இனிது விளக்குதல்போலக் கொடுந்தமிழ் நாட்டுச் சொற்கள் தத்தம் நாட்டில் இயற்சொல்லாய் நின்று தம்பொருளை இனிது விளக்குமன்றிச் செந்தமிழ் நாட்டில் இயற்சொல்லாய் நின்று பொருள்விளக்கா. ஆதலின், செந்தமிழ் நாட்டில் அச்சொற்கள் திசைச் சொல்லாகக் கொள்ளப்படுமென்பது கருத்து. தங் குறிப்பினவென்று தனிமொழிகள் செந்தமிழ் நிலத்தும் தம்பொரு ளுணர்த்து மாற்றிற்குச் சொன்னாரன்றி இரு மொழிகள் விரும்பியவாறு தொடர்பு வரலா மென்பது கருதிக் கூறினாரல்லர் என்பது கருத்து. `தள்ளை (வன்னு) வந்தான்' என்பது போலப் பால் முதலிய நோக்காது வினைச் சொற்கள் தொடர்ந்து வரா என்பது கருத்து. 8. வடசொல்லோடொத்த தமிழ்ச்சொல் என்றது - வாரி என்பது தமிழினுமுண்டு; வடமொழியினுமுண்டு; ஆதலால் வடசொல்லோ டொத்த தமிழ்ச் சொல்லென்று உரையாசிரியர் கூறுவரென்றபடி. ஒரு பொருட்கு ஒரு பொருளை உவமை கூறுங்கால் அப்பொருள் ஒருபுடை யான் ஒற்றுமையும் ஏனையவற்றான் வேற்றுமையும் உடையதாயே யிருக்கும். ஈண்டு வடசொல்லுக்கும் தமிழ்ச்சொல்லுக்கும் ஒப்புமை சொல்லுங்கால் ஒற்றுமையும் வேற்றுமையும் அவைக்கில்லை; ஏனெனில்? எழுத்தாலும் பொருளாலும் அவ்விரு சொல்லும் ஒற்றுமை யுடையனவாய்க் காணப்படுவனவன்றி, வேற்றுமை உடையனவாகக் காணப்படாமையின். ஆதலால் ஒருசொல் எனப்படுமன்றி இரண்டு சொல்லெனப்படாமையின் ஒக்குமென்றல் பொருந்தாமை காண்க என்றபடி. எழுத்தானும் பொருளானும் வேற்றுமையுடையவற்றை இரண்டு சொல்லென்று சொல்வதேயன்றி, இடத்தான் வேற்றுமை யுடையவற்றை இரண்டென்றல் பொருந்தா தென்றபடி. 9. பாகதம் - பிராகிருதம் - என்றது இழிசனர் வழக்கு என்றபடி. 10. தண்ணந்துறைவன் என்பதில் `அம்' சாரியை விரிந்தது. `மழவரோட்டிய' (அக-1) என்பதில் ஐ தொக்கது. 11. ஆழ்ந்து என்பது அழுந்து எனக் குறுகி நின்றது. 12. அதிகாரம் என்றது இவ்வியன் முதற் சூத்திரத்து அதிகரித்தமையை. 13. நிரனிறையும் சுண்ணமும்போல வேறு இலக்கணமில்லாத மொழி மாற்றை என்க. நிரனிறை - முறைநிற்றல். சுண்ணம் - சுண்ணம்போலக் கிடத்தல். சுண்ணம் - பொடி. 14. உடலும் - பகைக்கும். செத்து - நினைத்து. 15. தந்து - தறி. கூம்பு - பாய்மரம். கலன் - தோணி. 16. பட்டாங்கு - உண்மை; இயல்பு. 17. விகாரவடி; என்றது - ஐஞ்சிரும் முச்சீருமாய் வருவதை. சிதராய் - துண்டு துண்டாய். 18. அடிகள் மாறி வருவது - அடிமறி, எனவே சொல் மாறுவதின்று என்றபடி. 19. நீங்காத காதலையுடையார் எமது மலையை மறந்தனர். ஆறாகக் கண்ணீர் வருதல் ஒழியாது. வேறுபட்ட மென்றோளினின்றும் வளைகள் நெகிழா நிற்கும். தோழி யான் வாழுமாறு கூறாய் என்பது பொருள். இச்செய்யுளில் அடிகளை எப்படி மாற்றிக் கூறினும் பொருள் வேறுபடாமையின் அடிமறியாயின. வேறாமென்றோள் என்பது ஏறா மென்றோள் எனவும் பாடம். இப்பாடத்திற்கு தோளின் மேலிடத்தேறி எனப் பொருள் கொள்க. ஏறல் வளையின் வினை. இது பகற்குறிக்கண் தலைவனீட்டித்தவிடத்து நீங்கருமை தலைவி சாற்றல். மறைந்தனர் என்று பாடங்கொண்டு, பகற்குறியிற்றலைவன் வந்து நீங்கியபின் கவற்சி என்னென்ற தோழிக்குத் தலைவி கூறியதாகக் கொள்ளினும் பொருந்தும். 20. எய்தியதிகந்து படாமைக் காத்தல் என்றது - சீர்நிலை திரியாதென்று முதற் சூத்திரத்தால் எய்தியதை, சீர்நிலை திரிதலும் ஒருவழி உண்டென இச்சூத் திரத்தால் இகந்து படாமற் காத்தது என்றபடி. 21. `மொழிமாற்று...கடாவல் வேண்டும்' எப்படிக் கடாவல்வேண்டும்? மொழிகள் நின்று செவ்வாகாமையைக் கேட்டார் பின் கூட்டியுணரு மாற்றாற் கடாவல் வேண்டும் என்றபடி. கடாவல் - சொருகுதல். செவ்வாகாமை - நேராகாமை; இயைபுபடாமை. செவ்வனிறை யென்பதில் செவ்வென்பது நேர்மை உணர்த்தலுங் காண்க. 22. பிரிப்பப் பிரியா என்றது - பகுதி விகுதியாகப் பிரிக்கப்பிரிந்து பொருளுணர்த்தா என்றபடி. தாம், யாம் என்பவற்றிற்கு முதனிலை யாகப் பிரித்தலென்றது. தமன் நமன் என்பனவற்றை முறையே தாம், யாம் என்பவற்றிற்கு அவை முதனிலையாக வரப்பிரித்தலை. என்பவற்றிற்குப் பிரித்தல் என இயையும். தமன் எமன் என்பன பன்மையாக நின்றே சந்தர்ப்பத்திற்கேற்றபடி. தன் கிளை என்கிளை என்றொருமையாகவும், தங்கிளை எங்கிளை என்று பன்மையாகவும் பொருள் தரும். தமன் - எமன் என்பன ஒருமையுணர்த்துங்கால். தான் யான் என்பனவற்றைப் பகுதியாக வைத்துத் தான் + அன், யான் + அன் எனப் பிரித்தல் வேண்டும். பன்மையுணர்த்துங்கால் தாம். யாம் என்பவற்றைப் பகுதியாக வைத்துத் தாம் + அன், யாம் + அன் எனப் பிரித்தல் வேண்டும். தான், யான் எனப் பிரித்தற்குப் பன்மையாக நிற்கும் தமன், எமன் என்பன இடந்தராமையின் பன்மையாக நின்றே ஒருமையும், பன்மையுமாகிய பொருளைத் தருமென்று கொள்வதன்றித் தாம் யாம் என்பனவற்றிற்கு முதனிலையாகப் பிரித்துக் கொள்ள முடியாதென்றபடி. 23. உண்டு உண்டு - இரண்டுஞ் சேர்ந்து பலகால் நிகழ்தலைக் காட்டும் எனினுமாம். உண்டு உண்டு போம் எனினுமாம். 24. அடுக்கு ஒரு சொல்லது விகாரம். இரு சொல்லாயின் இரு பொருளுணர்த்து மன்றி விரைவு முதலிய இப்பொருள் வேறுபாடுகளை உணர்த்தாதென்றபடி. 25. தொகையாவது - இரு சொல் வேற்றுமைப்பொருள் முதலிய பொருண்மேற் சேர்ந்து வருவதென்பது சேனாவரையர் கருத்து. வினையும், பண்பும் அன்மொழியுந் தொக்கு நில்லாவென்றது. கொல்யானை யென்புழி கொல்லென்னும் வினை தொகாமையையும், செந்தாமரையென்புழி, செவ் என்னும் பண்புச் சொல் தொகாமையையும். அன்மொழிப் பொருண்மேல் இருசொற்றொகுவதன்றி அன்மொழி தொகாமையையும் அறிக. அன்மொழி - கருங்குழல் வந்தாள் என்புழிக் கருங்குழல் என்பது படுத்தலோசையால் அதனையுடை யாளை உணர்த்தி வருதலின் ஆண்டோர் சொற்றொகாமையறிக. உடையாளென்பது தொக்கதன்றோவெனின் அது தொக்கபொருளை (பெண்ணைக்) காட்டுதற்கு விரித்துக்கொள்ளப்பட்டதன்றித் தொக்க தன்று. எனவே, கருங்குழல் என்னு மிகுமொழித் தொகையே படுத்த லோசையால் கருங்குழலை யுடையாள் என்றவரையு முணர்த்திவிடு மென்பதாம். ஒரு சொல்லாற் றொகையின்மையின் வினைத்தொகை. பண்புத்தொகை யென்றது:- வினைச் சொல்லும், பண்புச்சொல்லும் பிறசொல்லோடு தொகுதலென்பது கருத்து. வேற்றுமை உருபு இருந்தே வேற்றுமைப்பொருள்வர வேண்டுதலின் உரையாசிரியர் நச்சினார்க் கினியர் கூறிய முறைப்படி வேற்றுமை உருபு தொக்க தொகையென்று பொருள் கொள்வதே சாலும் என்று சேனாவரையரை மறுப்பாரும் உளர். சேனாவரையர்க்கு வேற்றுமையுருபு ஆண்டில்லை யென்பது கருத்தன்று. அஃது ஆண்டு மறைந்து நின்றதென்பது கருத்து. `அதனை, உருபும் உவமையும் உம்மையுந் தொகுதலாவது தம்பொருளொட்டிய சொல்லாற்றோன்றத் தாம் ஆண்டுப் புலப்படாதே நிற்றலேயாம்' என்று இச்சூத்திர உரையிற் கூறுமாற்றானறிக. பிரயோகவிவேக நூலாரும் உருபு தொகுதலை அழிவுபாட்டபாவமாகக் கொள்ளாது முன்ன பாவமாகக் கொள்க என்று கூறியதனானும் அஃதுணரப்படும். இதனைப் பின்னர் அனுபந்தமாக சேர்க்கப்படுந் தொகைநிலை என்னும் பொருளுரை நோக்கி அறிந்து கொள்க. 26. வேற்றுமை இயலவென்றது - வேற்றுமை விரிபோல விரிந்து பொருளு ணர்த்துவன தொகும் என்றபடி. எனவே அங்ஙனம் பொருளுணர்த் தாதன தொகா என்பதாம். 27. அக்கருத்தென்றது - இரண்டாம் வேற்றுமைக் கருத்தென்றபடி. புலியன்ன பாய்த்துள் பொன்மானுமேனி என இயைபில்லா உவமஉருபு தொடரின் பொருட்கட் டொக்கவழி உவமைத் தொகையன்றி வேற்றுமைத் தொகை ஆண்டில்லை என்க. எனவே அப்பொருட்கண் தொகாதவிடத்து (வேற்றுமைப்பொருட்கண் தொக்கவிடத்து) வேற்றுமைப்பொருட்கண் வரும் என்பதாம். உவமஉருபு இடைச்சொல்லாகலான் தெரிநிலைவினைப் பொருள் பற்றியும். குறிப்பு வினைப்பொருள் பற்றியும் வரும். அவைபற்றி அவ்வினை வினைக்குறிப்புப் பற்றி இரண்டாவது விரித்தற் கேற்புடைமை அறிக; என இயைத்துப் பொருள் கொள்க. ஏனைய இடைப்பிறவரலாய் வினைகள் இடைச்சொல்லடியாகப் பிறத்தலையும் உருபு விரித்தலையும் விளக்கி நின்றன. இரண்டாம் வேற்றுமை என்பது பாடங்கேட்ட மாணாக்கரால் இடை சேர்க்கப்பட்டிருத்தல் வேண்டும். இரண்டாவது என்பது பின்வரலின். 28. குறிப்பு வினையெச்சமாகலானும் என்பதனுள் குறிப்பு என்பது நீக்கப்படல் வேண்டும். குறிப்பு என்பது நச்சினார்க்கினியருரையைப் படித்தோராற் சேர்க்கப்பட்டது சேனாவரையர்க்குப் போல முதலிய வினையெச்சங்கள் தெரிநிலைவினை என்பதே கருத்தாதல். வினையியல் 27ஆம் சூத்திரவுரையுள், போறி என இகர ஈற்று வினைக்குறிப்பு முண்டாலெனின்:- போன்றனன், போன்றான் என்பன போல வந்து தெரிநிலைவினையாய் நின்றதென மறுக்க எனக் கூறுமாற்றா னறியப்படும். அங்ஙனேல்; வினையியல் 16ஆம் சூத்திரவுரையுள், ஒப்பினானு மென்பதற்கு பொன் அன்னான் புலி போல்வான் என்று காட்டினாராலெனின்: புலியனையான் என்று அவர் காட்டிய உதாரணத்தை நச்சினார்க்கினியருரை படித்தார் பிற்காலத்தே திருத்தினாராவார். இளம்பூரணரும் பொன்னன்னான் என ஒன்றே காட்டினார். ஒப்பினானும் என்றதனால் உமவ உருபெல்லாம் குறிப்பு வினையாயே வருமென்பது கருத்தன்று; ஏற்றனவே வருமென்பது கருத்து. பொருளதிகாரத்து உவம இயலில், இளம்பூரணர் அன்ன, இன்ன என்பனவே இடைச்சொல் என்றும், ஏனையுருபுகள் வினையெச்ச நீர்மைய வென்றும், இவ்வடிகளால், முற்றும் பெயரெச்ச வினையெச்சங்களும் பிறக்குமென்றும் கூறுதலானும். உவம உருபுகளெல்லாம் குறிப்பு வினைக்கு அடி அன்றென்பது உணர்ந்து கொள்க. இச் சூத்திரத்தும், பொன்னன்ன மேனி என்பது பொன் மானுமேனி எனத் திருத்தப்பட்டது. அன்னதாதல், முன் காட்டிய தொகையை விரிப்புழிப் பொன்னன்ன மேனி என்று விரித்திருத்தல் காண்க. 29. தொகுதி காலத்தியலு மென்றது - காலம். வினையும் பெயருஞ் சேர்ந்தவழி அத்தொகையாற்றலினாற் றோன்றுமென்றபடி. தோன்றுதல் - வெளிப்படுதல்; எனவே கொல்யானை என்பது வேறு வேறு சொல்லாக நின்றவழி ஆண்டுக் காலந் தோன்றாமை காண்க. 30. கொன்ற யானை யென்பது நின்று தொக்கதாயின் வாழிய சாத்தா என்பது போலப் பிரித்துப் புணர்க்கப்படும். அப்போது அது தொகையாகா தென்றபடி. என்னை? கொன்றயானை, கொல்யானை என வந்ததென்றால் ஆண்டுப் புணர்ச்சிபற்றி றகர அகரம் கெட்டதென்றாகும். ஆண்டுத் தொக்க தொன்றுமில்லையாகலின் தொகைப்பொருள் சிதையுமென்றா ரென்க. 31. இருபெயரொட்டும் என்புழி, வினைத்தொகையும் இருபெயரொட்டாய் அடங்குமென்பது சேனாவரையர் கருத்து. ஏனெனில்? கொல்லென்பது முதனிலைத் தொழிற்பெயராதலின், கொல்லென்னுந் தாதுவைச் சேனாவரையர் பெயரென்று கூறுவது பொருந்தும். என்னையெனின்? ஆசிரியரே உரிஞ் முதலிய முதனிலைகளைத் தொழிற் பெயரென்று `ஞகாரை யொற்றிய தொழிற் பெயர் முன்னர்' என்னும் புள்ளி மயங்கியல் முதற் சூத்திரத்துட் கூறலானும், வனைதல் முதலிய தொழில் நிகழ்ச்சிக்கண், வனைதல் முதலிய செயலுங் காரணமாகக் கூறப்படலால், ஆண்டும் வனை என்னுந் தாது வனைதலாகிய செயலை உணர்த்திப் பெயராய்நிற்றலானும் பெயரே என்பது ஆசிரியர் கருத்தாதல் நன்கு துணியப்படுதலின். 32. சினை என்றது - ஈண்டுக் குணச்சொல்லை (பண்புச் சொல்லை). அதன்வினை நுதலுதல். முதலென்றது (பண்பும் பண்புடையதுமாகிய இரண்டுந் தொக்க) தொகைச் சொல்லை. அதன் வினை வருதல். எனவே குணச் சொல்லின் வினையாகிய நுதலி என்பது வரும் என்னும் முதல் வினையோடு முடிந்த தென்க. இது `சினைவினை' என்னும் வினையியல் 34ஆம் சூத்திர விதிப்படி முடிந்தது. 33. கருங்குதிரை என்பதில் `கரு' பண்புச்சொல். குதிரை பண்புடையது கருங்குதிரை கரியது குதிரை என விரியுமிடத்து இன்னது இதுவென வருதல் காண்க. ஒன்றை ஒன்று பொதுமை நீக்குதலாவது - செந்தாமரை என்புழிச் செம்மை என்பது தாமரையை விசேடித்து, அத்தாமரை என்னுஞ்சொல் வெண்டாமரையையும் உணர்த்தும் பொதுமையை நீக்கியும், தாமரையென்பது செம்மையை விசேடித்து அச்செம்மை, செம்மையுடைய பிறபொருட்கும் பொதுவாய் நிற்றலை நீக்கியும் வருதல். சாரைப்பாம்பு என்புழி, பாம்பு என்பது ஏனைப்பாம்புக்கும் பொதுவாதலின் அப்பொதுமையைச் சாரை விசேடித்து நீக்கியதல்லது. சாரை செம்மை முதலிய போலப் பிறபொருட்குப் பொதுவன்மையின் அதனைப் பாம்பு விசேடித்து வந்ததில்லையென்பது கருத்து. சாரைப் பாம்பு என்புழி, சாரை விசேடிப்பது. பாம்பு விசேடிக்கப்படுவது அவ்விரண்டனுள் விசேடிப்பதாகிய சாரை விசேடியாக்கால் அது குற்றமாகும். விசேடிக்கப்படுவதாகிய பாம்பு விசேடியாது நின்றது என்று சொல்லுதல் விசேடிக்கப்படுதலாகிய தன் இயல்பிற்குக் குற்றமின்மை யான் விசேடியாது நிற்பினும் அமையும் என்றபடி. எனவே விசேடிப்பது விசேடித்தே வரவேண்டும். விசேடிக்கப்படுவது விசேடியாமலும் வரலாமென்பது கருத்து. மிகைச்சொல் - அதிகமானசொல்; வேண்டாத சொல். இக்காலத்துச் சாரைபோல் என்புந் தோலுமாய்த் தோன்றும் மனுடருடைய வயிற்றைச் சாரைக் குடல் என்று கூறுவதும் இங்கு நோக்கத்தக்கது. இச்சூத்திரத்தும் சேனாவரையர் மதத்தை இக்காலத்தார் சிலர் மறுத்தல் பொருந்தாதென்பதைப் பின்னர் அநுபந்தமாகப் சேர்க்கப்படும் தொகைநிலை யென்னும் பொருளுரை நோக்கியறிக. 34. எண்ணுப்பெயரென்றது - ஒன்றிரண்டு முதலாக எண்ணைக் குறித்து வரும் பெயரை, எண்ணியற்பெயர் - எண்ணாகிய இயல்புபற்றிப் பொருளுணர்த்தும் பெயர். அவை முப்பதின்மர் மூவர் என்றாற் போல்வன. 35. இயைபு வேறுபாடின்மை யென்றது - கற்சுனைக் குவளையிதழ் என்புழிக் கல்லும் சுனையும் முதற்றொகுதற்குக் குவளையோடு இயைபுவேறுபாடுண்டு; ஆதலான் அது தொகலாம். புலிவிற்கெண்டை யென்புழிப் புலியும் வில்லும் முதற்றொகுதற்குக் கெண்டையோடு இயைபு வேறுபாடில்லை என்றபடி. மூன்றுந் தம்முள் இயைபுடைய வாகலின் ஒன்றாய்த் தொகுவதல்லது முன் இரண்டு தொக்குப்பின் மற்றதனோடு தொகாதென்றபடி. இருபெயர் பல பெயர் என்பவற்றுள் அடங்கும் அளவுப் பெயர் முதலியவற்றை மீண்டுங் கிளந்து கூறியது அவை இருபெயராய் அல்லது தொகாவென அறிவித்தற் கென்க. 36. இரண்டிடத்தும் `என்பதனான்' என்பது, `என்பதனானும்' என்றிருப்பது நலம். இலக்கணவிளக்கம் நோக்குக. 37. எண்ணின்கண் வரும் தொகைச்சொல் பல என்றது ஏ, என்று, என்றா, எனா முதலியவற்றை. 38. வெள்ளாடை என்புழி, வெளியது ஆடை எனப் பண்புத்தொகையாகக் கருதும்படி தொக்குவரின் அது பண்புத் தொகையாகக் கருதப்படும். அவ்வாறு கருதாது வெள்ளாடை வந்தாள் என்புழி வெள்ளாடையை யுடையாள் வந்தாள் என, வெள்ளாடை என்பதன் இறுதியில் அன் மொழிப்பொருள் தொக்கதாகக் கருதப்படின் ஆண்டுப் பண்புத் தொகைக் கருத்தின்றாம். ஆதலினாற்றான் தொகைவயினானு மென்னாது `தொக வரூஉங் கிளவி யானும்' என்றார். தெய்வச்சிலையார் இச் சூத்திரத்து, ஆகுபெயராவது ஒட்டுப்பட்ட பெயரொடு ஒற்றுமைப்பட்டுவரும்; அன்மொழித்தொகையாவது அப்பொருளின் வேறுபட்டுவரும் என்று கூறியது பொருத்தமில்லை யென்பதைப் பின் அநுபந்தமாகச் சேர்க்கப்படும். `ஆகுபெயரும் அன்மொழித்தொகையும்' என்னும் பொருளுரையைப் படித்து அறிந்துகொள்க. ஆசிரியர் காலத்திலே உவமைத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையும், வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையும் பயின்றுவாராமையின் அவர் கூறிற்றில ரென்பதே பொருத்தமாகலின். அவற்றை ஆகுபெயராகுமென்று கூறா தொழிந்தனர் என்றல் பொருந்தாதென்பது சேனாவரையர் கருத்து. 39. ஒற்றுமைநயம் - தொகைக்கும் அவற்றின் பொருணிலை மரபுக்குமுள்ள ஒற்றுமைநயம். இரண்டையுஞ் சேர்த்து அவைதாம் என்று சுட்டியது இரண்டற்குமுள்ள ஒற்றுமைநயம் பற்றி என்பது கருத்து. 40. மேற்படல் - சிறத்தல். 41. பெயருந் தொழிலும் பிரிந்தொருங் கிசைப்ப வேற்றுமை யுருபு நிலைபெறு வழியும் தோற்றம் வேண்டாத் தொகுதிக் கண்ணும் என்பதற்குச் சேனாவரையர் `பெயரும் பெயரும். பெயருந் தொழிலும் பிரிந்திசைப்பவும் ஒருங்கிசைப்பவும் வேற்றுமை உருபு விரிந்து நின்றவழியும் அவை மறைந்துநின்றவழியும்' எனப் பொருள்கொண்டு, பெயரும் பெயரும், பெயருந் தொழிலும் பிரிந்திசைப்ப விரிந்தும், ஒருங்கிசைப்பத் தொக்கும் என்று நிரனிறையாகக் கொள்ளுகின்றனர். அதுவே தமிழ் வழக்கிற்கும் ஆசிரியர் கருத்திற்கும் பொருந்திய தென்க. இங்ஙனமன்றி வடமொழிக் கருத்திற்கிசையப் பொருள் கோடல் பொருந்தாதென்க. பெயரினாகிய தொகையுமாருளவே என்னுஞ் சூத்திர உரையின்கண் பெயரும் வினையும் தொகும் என்பதைக் கொள்வதற்காக, சந்தர்ப்பத் திற்கு விரோதமாகச் சேனாவரையர் உம்மைக்குப் பொருள் கொண்டன ரென்று இக்காலத்துச் சிலர் கூறியது பொருத்த மன்றென்பது அச்சூத்திரக் குறிப்பில் உரைத்தாம். அதனை ஆண்டு நோக்கி உணர்க. 42. உயர்திணை மருங்கின் என உயர்திணை முப்பாற்கும் பொதுவிற் கூறினாரேனும் மாமூலபெருந்தலைச்சாத்தர் என்பது போலப் பலர் சொன்னடைத்தாய் உயர்திணையுள் இயைபுடைய ஆடுவறிசொல்லே பெரும்பாலும் வரும் என்பது கருத்து. 43. வாரா மரபின வரக் கூறுதல் - அந்நெறி ஈண்டு வந்து கிடந்தது என்பது. என்னாமரபின எனக் கூறுதல் - அவல் அவல் என்கின்றன நெல் என்பது. இவற்றில் நெறிக்கு வருதலும், நெற்கு என்னுதலும் இலவாகவும் உளபோலக் கூறுதல் காண்க. 44. விரைவித்தல் - விரைந்து செல்லச் செய்தல். 45. முன்னர் நின்றது வருஞ் சூத்திரத்தை 46. கண்டீரே என்பதில் கண்டீர் என்னும் வினைச்சொற் பொருண்மையும். ஏகாரத்துக்குரிய வினாப் பொருண்மையும் இன்மையின் கண்டீரே கண்டீரே என்பது அசைநிலையாயிற்று என்பது கருத்து. கட்டுரை என்றது ஈண்டு வார்த்தையை (பேச்சை)க் குறித்து நின்றது. 47. கேட்டை முதலாயின வினாவிற்கடையாக அடுக்கி வந்தவழி முன்னிலை அசையேயாம். 48. இவற்றிற்கு ஒன்றான் எய்தாமை என்றது - இச்சொற்களுக்கு வினாவோடு சிவணி நிற்குமென ஒன்றால் விதிக்கப்படாமை என்பது கருத்து. ஒன்றால் - ஒரு சூத்திரத்தால். 49. யார், எவன், இல்லை, வேறு என்பன இடமுணர்த்தா. வியங்கோளும் இடத்தாற் பொதுவாயினும், "அவற்றுள் - முன்னிலை தன்மை யாயீ ரிடத்தொடு மன்னா தாகும் வியங்கோட் கிளவி" (வினை - 29ஆம் சூத்திரம்) என்று ஆசிரியர் முன்னிலை தன்மைகளை விலக்கிப் படர்க்கைக்குரியவாகக் கூறலின். அதனைப் பொதுவெனக் கூறல் பெரும்பாலும் சேனாவரையர்க் குடன்பாடன்று. செய்யும் என்னு முற்றும் படர்க்கைக்குரிய, இவைகளும் திணையும் பாலுமுணர்த்தா. முன்னிலையு மவ்வாறே. முன்னிலைபோலத் தன்மையும் ஒருமை பன்மையன்றி ஐம்பாலுமுணர்த்தா. இக்காரணத்தால் முற்றுக்களுள் இடமுணர்த்துவனவும் திணையும் பாலு முணர்த்துவனவும் ஒருசாரன வற்றிற் கேயுரிய என்றார். 50. ஓரீற்றவாய் வருத லென்றது - உண்டனன் எனத் தெரிநிலை வினைக்கு வரும் அன் ஈறே, கரியன் எனக் குறிப்புக்கும் வருதல் போல்வன. 51. ஒரு நிமித்தம் - ஒரேகாரணம். சென்றனை கரியை என்புழி, செல்லுத லாகிய தொழிற்கு வினை முதலாதலும் கருநிறத்தை யுடையதாதலும் இரண்டு திணைப் பொருளுக்கும் பொதுவாய் வருதல் காண்க. தெற்றெனத் தோன்றல் - வெளிப்படத் தோன்றல். தெற்றெனத் தோன்றாமை - வெளிப்படத் தோன்றாமை - குறிப்பாகத் தோன்றல். ஆறாய் வருதல் - வினையையும், குறிப்பையும் உயர்திணை அஃறிணை பொதுத் திணைகளோடு உறழ ஆறாய் வருதல். 52. முற்றுச்சொல் எனப் பெயரிடுதலே கருத்தாயின் அவ்வாறும் முற்றியன் மொழி என்பர். மொழிமாற்றிக் கொள்ளலாமே எனின்? அதனைக் குறியீடாக வேறிடத்து ஆசிரியர் எடுத்தாளாமையின் அவ்வாறு இடர்ப் பட்டுப் பொருள் கொள்ளவேண்டியதில்லை என்பது கருத்து. 53. பிறாண்டு வரும் வினை என்றது - இடமுணர்த்தா வினைகளையும் சிறப்பீற்றவாய் வரும் வினைமுற்றுக்களையும். இடமுணர்த்தாதன - யார். எவன் முதலியன. சிறப்பீறென்றது - இரண்டற்கும் பொதுவாகாது தெரிநிலைக்கே சிறப்பாயும், குறிப்புக்கே சிறப்பாயுமுள்ள விகுதிகளை. தெரிநிலைக்கே சிறப்பாயின - ப, மார், கும், டும், தும், றும், கு, டு, து, று முதலிய. குறிப்பு வினைக்கே சிறப்பாயின - டு. பிறாண்டு - பிறவிடம். முன்னிலையில் திணையும் பாலுந் தோன்றா. 54. மேலைச் சூத்திரத்தால் கூறப்பட்ட எப்பொருளும் என்றது - உயர் திணைப் பொருள் அஃறிணைப்பொருள் இருதிணைக்கும் பொது வாகிய பொருள் என்பவற்றை. இம்மூன்றின் மேலும் வரும் எல்லா வினையடியும் முற்றாய் வருமெனவே எச்சமாய் வருதல் நிச்சயமல்ல என்றபடி. வினையென்றது வினையடிகளை (முதனிலைகளே). குறிப்பு வினையடிகளுள் கச்சு, கழழ் என்பன போன்ற பெயரடிகள் எச்சங் களுக்கு முதனிலையாக வரமாட்டாமையின் இங்ஙனம் கூறினார் என்க. 55. அடுக்கிவரினும் என்பதில் உம்மை சிறுபான்மை என்பதைக் காட்டி நின்றது. எனவே அடுக்காது வந்து பெயரொடு முடிதலே பெரும் பான்மை என்பதாம். உண்டான் என்பது யார் என்னும் அவாய் நிலைக்கண் சாத்தனோடு முடிவதல்லது அவாய்நிலை இல்வழிச் சாத்தனென்பது இல்லாமலே உண்டானென்பது தானே தொடராய் நிற்குமென்றபடி. அங்ஙனேல் எத்திறத்தானும் பெயர் முடிபினவே எனல் வேண்டா எனின்? உண்டான் என்புழிக் கேட்போன் வினை முதலை யறிதற்கு அவாவலின் வினைமுதல் வருதல் ஒருதலையாதல் பற்றி அங்ஙனங் கூறினாரென்க. ஒருதலை - நிச்சயம். 56. எச்சம் இரண்டு வகை யென்றது - எஞ்சுபொருட் கிளவியான் முடிவனவும் ஒரு தொடர்க் கொழிபாய் எஞ்சி நிற்பனவுமென விவற்றை. எஞ்சு பொருட்கிளவியென்றது - எஞ்சிய பொருளையுணர்த்துஞ் சொல்லை. அவை தொடராயும் தனிமொழியாயும் வரும். அச் சொல்லின்றி அப் பொருள் நிரம்பாமையின் அவ்வாறு கூறினார். உதாரணமாகத் தானே கொண்டான் என்புழி ஏகாரத்தாற் பிரிக்கப்பட்ட பொருள் பிறர் கொண்டிலர் என்பதாகலின் அப்பொருளையுணர்த்தும் அத்தொடர் மொழியான் அப்பிரிநிலையெச்சம் முடிந்தவாறு காண்க. பிறவும் இதுபோலக் கொள்ளப்படும். பிரிநிலையெச்சம் முதலிய ஏழற்கும் அவற்றை முடிக்கவருஞ் சொல் உள என்பதும். ஏனைய மூன்றும் அவ்வத் தொடர்க்குத் தாமே எச்சமாய் நின்று. அவ்வத் தொடரை முடித்து நிற்பனவன்றித் தம்மை முடிக்க வருஞ்சொல் உளவல்ல என்பதும் கருத்து. 57. தானே கொண்டான் என்பது பிரிநிi எச்சம் என்ற வழித் தான் பிறரி னின்றும் பிரிக்கப்பட்டானன்றிப் பிறர் கொண்டிலரென்பது அவனை உணர்த்தாமையின் பிரிநிலையன்றெனின்? அற்றன்று; பிறரினின்றும் அவன் பிரிக்கப்பட்டவழிப் பிறரும் அவனினின்றும் பிரிக்கப்பட்ட மையின் அஃது பிரிநிலை கொண்டதேயாம் என்க. பிறவுமன்ன, பிறரினும் அவனே எனப் பிரிக்கப்பட்ட வழி அப்பிரிநிலைக்குப் பொருள் கொண்டான் என்னும் முடிக்குஞ் சொற் பொருளாதலின் அதனைக் கொண்டு முடியும் என்பது உரையாசிரியர் கருத்து. 58. வினையெச்சத்திற்குத் தெரிநிலை வினையும் குறிப்பு வினையும் முடிபாகும். 59. குறிப்பு ஆக்கமொடு வருதல் நல்லனாயினான் என வருதல். 60. யானோ கள்வேன் என்புழிக் கள்ளேன் என்பதுபட நின்றமையின் எதிர்மறை முடிபின எனப்பட்டது. 61. உம்மை எச்சத்தாற் பெறப்படும் பொருள் எஞ்சு பொருளென்க. எனவே அப்பொருளே அதற்கு எஞ்சு பொருளாகலின் அதனை உணர்த்துஞ் சொல்லை 'எஞ்சு பொருட்கிளவி' யென்றார். 62. உம்மையுடைத்தாயும் உம்மையின்றியும் வருதலை "எஞ்சுபொருட் கிளவி செஞ்சொல் லாயின்" என்னும் இடையியல் 36ஆம் சூத்திர உரையுட் காண்க. 63. உம்மையோடு தொடர்ந்தசொல் இரண்டாகலின் தம்வினையென்று கூறல் வேண்டும். அங்ஙனங் கூறாமல் தன்வினையென்று கூறியதற்குக் காரணம், ஒன்றற்காய அவ் வினையே ஏனையதற்கும் வினையாதல் பற்றி என்பது கருத்து. எனவே இரண்டற்கும் முடிக்குஞ் சொல்லாய் வருவன ஒருவினையே என்பதாம். சாத்தனும் வந்தான் கொற்றனும் வந்தான் என இரண்டற்கும் வினை ஒன்றே வந்தமை காண்க. 64. சாத்தனும் வந்தான் கொற்றனும் வந்தான் என்றவிடத்து. கொற்றனும் வந்தான் என்பது உம்மையெச்சமாங்கால் முன்னின்ற சாத்தனும் வந்தான் என்பது எஞ்சுபொருட் கிளவியாம் என்றபடி. 65. வேங்கை விரிதலும் சந்திரன் நிரம்பலு முற்றகாலத்தே வரைதல் குறிஞ்சி நில வழக்கு. வேங்கையும் விரிந்து மணஞ்செய்யுங் காலத்தைக் காட்டியது. திங்களு நிறைந்து மணஞ்செயுங் காலத்தைக் காட்டியது. அதனால் அவை ஒருவினைப்பாற்பட்டன என்றபடி. 66. இரண்டு சொல்லும் ஒருகாலத்தால் வருதல் சோறுமுண்டான் கறியு முண்டான் என வருதல். 67. என்றென்பதை எனவின்கண் ஏற்றினார் (எச் - 34) என்றது பற்றி ஈண்டு என்றிற்கும் உதாரணங் காட்டினார். 68. எஞ்சிய மூன்று சொல்லெச்சம். குறிப்பெச்சம். இசையெச்சம் ஆகிய மூன்று. 69. இம் மூன்றெச்சமும் செய்யுட்டொடர்க்கண் சொல்லுவான் குறிப்பான் எஞ்சிக்கிடந்த பொருளை விளக்குமென்பது கருத்து. செய்யுட்கண் குறிப்பான் எஞ்சிக்கிடந்த பொருளை இம் மூன்றும் வெளிப்படுத்தலின் இவைகளும் எச்சமெனப்பட்டன என்க. 70. தெரிபு வேறு நிலையலுங் குறிப்பிற் றோன்றலும் என்னுஞ் சூத்திரத்தால், பொருள் குறிப்பாலும் தோன்றுமெனக் கூறப்பட்டது. குறிப்பிற்றோன்றும் அப்பொருளை வெளிப்படுத்துஞ் சொற்றொடரை ஈண்டு எச்சம் என்றார் என்பது கருத்து. 71. விசைத்தல் விண்ணென்றிருத்தலானும், ஒலித்தல் ஒல்லென்றிருத்த லானும் விசைத்தலும் விண்ணெனலும் ஒலித்தலும் ஒல்லெனலும் ஒன்றென்பதே உரையாசிரியர் கருத்தாகலின் தத்தஞ் சொற்கொண்டு முடியுமென்றார். அவர்க்கு அதுவே கருத்தாதல். - `விண்ணென்றதே விசைத்தது எனப்பட்டது. அதனால் தத்தம் குறிப்பி னெச்சத்தான் முடிந்தது என்பது' என்று கூறியதனால் அறியக்கிடக்கின்றது. சேனாவரையர் தஞ்சொல்லெனப்படா என்றதற்குக் காரணம் இரண்டும் வெவ்வேறு என்று கருதிப்போலும். எஞ்சு பொருட்கிளவி இல என்றல் பொருந்தா என்றது எஞ்சுபொருட் கிளவி இல என்று ஆசிரியர் கூறல் பொருந்தா என்றபடி. விண்ணென விணைத்தது என்பது நச்சினார்க்கினியர் பாடம் தஞ்சொல் என்பதற்குப் பொருத்தம்போலும். 72. அதுபோலும் என்பது தொகுக்கும்வழித் தொகுத்தல் எனின். அதனை ஆசிரியர் சுட்டிக் கூறா உவமை என்று உவமை வேறுபாடாகக் கூறல் பொருந்தாதென்பது. 73. எச்சம் எஞ்சி நின்ற பொருள் எனப்படினும் அவை பிறசொல்லானல்லது வெளிப்படாமையின் அச்சொல் எச்சமாயிற்று என்பது கருத்து. குறிப்புப் பொருளென்றது - குறிப்பெச்சப் பொருளை, எஞ்சு பொருளென்றது - சொல்லெச்சம் இசையெச்சம் என்னும் இரண்டையும். குறிப்பெச்சம். இசையெச்சம், சொல்லெச்சம் என்னும் மூன்றையும் சேர்த்துக் கூறிய தற்குக் `குறிப்புப் பொருளேயன்றி' என்பதை முதலாகக் கொண்ட தொடராற்காரணங் கூறினார் என்க. 74. இச்சூத்திரத்தில் தொடராய் எஞ்சி நில்லாதென்று கூறியதற்குக் காரணம் `சொல்லளவு அல்லது எஞ்சுதலில்லை' எனக் கூறப்பட்டமை. குறிப்பெச்சம் முதலிய மூன்றும் எச்சப் பொருள் தருமாறு முன்னர்ச் சூத்திரத்தானுணர்த்தி அதன்பின் இச்சூத்திரத்தால் சொல்லெச்சத்திற் கோர் சிறப்புவிதி கூறப்பட்டதாகக் கொண்டால் குறிப்பெச்சத்திற்குமுன் சொல்லெச்சமுணர்த்தப்படுதல் பொருந்தாதென்பார் கருத்தே பொருந் தாமை காணப்படுமென்க. 75. கருமுகமந்தி - பெண்குறி. செம்பினேற்றை - ஆண்குறி. நீரல்லீரம் - மூத்திரம். 76. செத்தாரென்னும் வழக்கும் செய்யுள் வழக்கினிடத்துக் காணப்படு தலின் சேனாவரையர் கூற்றை மறுப்பார் கூற்றுப் பொருந்தாதென்க. "துஞ்சினார் செத்தாரின் வேறல்ல ரெஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர்" என வருதல் நோக்கத்தக்கது. 77. மறைத்த வாய்பாட்டானே கூறுதலின் இது வழுவமைதியன்றெனின், கிளவி யாக்கத்து 17ஆஞ் சூத்திர உரையுள் அமைதி என்று கூறுதலோடு மாறுபடும். ஆராயத்தக்கது. 78. கான்றென்பது, கக்குதல் என்று தன் பொருண்மேனில்லாது செய் தென்னும் பொருண்மேனிற்றலின் மறைக்கப்படாமையும். கக்குத லென்ற தன் பொருண்மேனிற்பின் மறைக்கப்படுதலுமறிக என்க. அணி என்பது - சமாதி என்னுங் குணவணியை. 79. அதன் என்பது தன் என்றிருப்பது பொருத்தம். 80. ஈ முதலியன பிறபொருளு முணர்த்தலான் `ஆகிடனுடையவென்றார்' என்க. வழங்கல் முதலியன கொடைப்பொருளவாய் வருவதல்லது அவை இரத்தற் குறிப்புணர்த்தா. இவை அவ்விரத்தற் குறிப்புணர்த்த லின் எடுத்துக் கூறினார் என்க. முன்னிலை என்றது முன்னிலை ஏவலை. ஆண்டு இன்மையானும் என்றது - வழங்கல் முதலியனவற்றின்கண் இன்மையானும் என்றபடி. 81. கொடு என்பது படர்க்கையாயினும் தன்னைப் பிறன்போல வைத்துக் கூறலால் தன்னிடத்துச் செல்லுமென்றபடி. சாந்து கொடு என்பது தன்னைப் பிறன் போல மனத்தில் வைத்துக்கொண்டு கூறியது. தன்மைக்கண் கொடு வென்னும் படர்க்கைச் சொல்லாற் சொல்லல் வழுவாயினும் தன்னையே பிறன்போலக் குறித்துக்கொண்டு கூறலின் அமைக்கப்படுமென்பது சேனாவரையர் கருத்து. 82. தமனொருவனைக் காட்டி இவற்குக் கொடுவென்று உரையாசிரியர் கூறியதையே மறுத்ததன்றி இவற்கு என்னுஞ் சொல் வந்து இயைதலைச் சேனாவரையர் மறுக்கவில்லை. ஆதலின் நச்சினார்க்கினியர் மறுப்புப் பொருந்தாதென்க. தமனொருவனைக் காட்டி இவற்குக் கொடுவென்பது சேனாவரையர் கூறியவாறு படர்க்கைச் சொல் படர்க்கைச் சொல்லோ டேயே இயைதலின் அது வழுவன்றாம். இக்காலத்துப் பெரியோர் சிலர் தம்மையே சுட்டி, இப்பழங்களை இவனுக்குக் கொடுக்கின்றாயா? என்றும். `இது நல்லபழம் இதனைத் தம்பிரானுக்குக் கொடு' என்றும். `குருவுக்குத் தக்கிணை கொடு' என்றும், தம்மையே படர்க்கையாகக் கூறுவதைக் கேட்டிருக்கின்றோம். அக்கருத்தையே கொண்டு இதற்கும் பொருள் கூறலாமென்பது எமது கருத்து. 83. `தொன்னெறி மொழிவயி னா அ குநவும்' என்பதற்கு இவ்வுரையாசிரியர் `முதுசொல்லாகிய செய்யுள் வேறுபாட்டின்கண் இயைபில்லன இயைந் தனவாய் வருவன; அவை யாற்றுட்செத்த எருமையை ஈர்த்தல் ஊர்க் குயவர்க்குக் கடன் என்பது முதலியன' என வரைந்துள்ளனர். இத் தொடர்மொழியின் பொருள் தெற்றெனப் புலப்படவில்லை. இயை பில்லன இயைந்தனவாய் வருதலென்றமையின், ஊர்க் குயவர்க்கு எருமையை ஈர்த்தலில் இயைபு இன்றேனும் இயைபுண்மை ஒருதலை யான் வேண்டற்பாலதாம். அன்றியும் அது முதுசொல்லாயிருத்தலோடு செய்யுள் வேறுபாடுடையதா யிருக்க வேண்டுமெனவும் ஆணை தந்துள்ளார். நம் தமிழ்நாட்டின்கண் பண்டைக் காலந் தொட்டுப் பரவை வழக்கின்கண் அடிப்பட்ட சான்றோரால் நெறிப்பட வழங்கிவரும் இம்முதுமொழி பொருத்தமுடையதாகக் காணக்கிடக்கின்றது. அது வருமாறு: வாணிகச் சாத்தொடு சென்றானொருவன். அச்சாத்தி னின்றும் பிரிந்து ஒரு பட்டினத்துட் சென்று பல வெருமைகளைப் பொருள்கொடுத்தேற்றுத் தந்நாடு சேறற்கு ஒருப்பட்டுப் பலப்பல காவதங்கடந்து ஒரு கான்யாற் றடைகரையை யண்மி அவ்வெருமை களை நீரருந்தச் செய்து அயர்வுயிர்த்துப் பின்னர் அவ்வாற்றைக் கடக்குமமையத்து, காலமல்லாத காலத்துச் சேய்மைக்கண் பெய்த மழையான் பொருக்கென வெள்ளந்தோன்றி அவ்வெருமைகளை யெல்லாம் அடித்துக்கொண்டு ஓர் ஊர்ப்புறத் தொதுக்கி விட்டது. அதனையுணர்ந்த அவ்வூரவர் அவைகளை ஈர்த்துக்கொணர்ந்து கரை சேர்த்தற்குப் பலரை வேண்டியும் நாற்றம் மிகுதியாக விருந்தமையின் ஒருவரும் உடன்பட்டிலர். இதனையுணர்ந்த பெரியாரொருவர் இங்ஙனமாய்ச் செயல் நேரிடின். இச்செயலை இன்னவர் செய்து முடித்தல் வேண்டுமென நம்மூர் அடங்கலிலிருக்கும் அதனைக் கணக்கனை அழைத்துக் கேட்பின் உண்மை வெளியாமென உரைத்தனர். அவ்வாறே கணக்கனை அழைத்துக் கேட்க அவன் அடங்கலை எடுத்து வந்து `கண்ணுறீஇக் கழறுகின்றேன்' எனக் கூறி, தம் மில்லிற் சென்று தனக்கு ஆண்டுதோறும் நன்கொடையாகக் கொடுக்கும் பொருளை அவ்வாண்டிற் கொடாத அவ்வூர்க் குயவரை யொறுத்தற்குத் தக்க வமையமிதுவே யெனக் கருதி. காட் டெருமுட்டை பொறுக்கி மட்கலஞ் சுட்ட புகையான் மேற்கே மேகந் தோன்றி மின்னி யிடித்து மழைபொழிந்து யாற்றில் நீத்தம் பெருகி யடித்துக் கொல்லும் எருமைகளை ஈர்த்துக் கொணர்ந்து கரையேற்றல் இவ்வூர்க் குயவர்க் கென்றுங் கடனே என்று ஒரு பழைய ஓலையில் வரைந்து அவ்வடங்கலோடு சேர்த்துக் கட்டி அவ்வூரவர் முன் கொணர்ந்து கட்டையவிழ்த்துப் பல ஏடுகளைத் தள்ளிப் படித்துக் காட்டினன். அதனைக்கேட்ட பெரியார் பலரும் குயவன் சுள்ளை யினெழுந்த புகையானாய மேகந்தந்த நீரான் எருமை சாதலின், இவ்வூர்க்குயவரே இவைகளைக் கரையேற்றல் முறையென முடிவுசெய்தனர் என்பதாம். இது பொருத்தமாகக் காணப்படுகின்றது. ஆசிரியர் நச்சினார்க்கினியர், `தொன்னெறி மொழிவயினாஅ குநவும்' என்பதற்குச் `சொல்லிடத்துப் பழைய நெறியானாய் வரும் சொல்லும்' என உரை கூறி, `முதுமொழி பொருளுடையனவும் பொருளில்லனவு மென இருவகைப்படும். அவை `யாட்டுளான் இன்னுரைதாரான்' என்றது; இடையன் எழுத்தொடு புணராது பொருளறிவுறுக்கும் மொழியைக் கூறுதலன்றி, எழுத்தொடு புணர்ந்து பொருளறிவுறுக்கும் மொழியைக் கூறான் என்னும் பொருள் தந்து நின்றது. "யாற்றுட் செத்த எருமையை ஈர்த்தல் ஊர்க்குயவர்க்குக் கடன்" என்பது. குயவன் சுள்ளையான் எழுந்த புகையானாய மேகந்தந்த நீரான் எருமை சாதலின். அதனை ஈர்த்தல் குயவர்க்குக் கடனாயிற்றென ஒரு காரணம் உள்ளதுபோலக் கூறுகின்றது; உண்மைப் பொருளன்றி ஒருவன் இயைபின்றிக் கூறிய சொற்கு எடுத்துக்காட்டாகக் கூறப்படுதலின் பொருளுணர்த்தாதாயிற்று' எனவும், இலக்கண விளக்க நூலாசிரியர், "தொன்னெறி மொழி வயினாஅ குநவும்" என்பது அடிப்பட்ட நெறியான் வழங்குதலுடைய முதுமொழியாகிய செய்யுள் வேறுபாட்டின்கண் இயையாதன இயைந்தனவாய் வருவன. அவை "யாற்றுட் செத்த எருமை ஊர்க்குயவர்க்கு இழுத்தல் கடன்" என்றது முதலாயின. குயவன் சுள்ளையின் எழுந்த புகையானாகிய மேகந்தந்த நீரான் எருமைசாதலின் குயவர்க்கு ஈர்த்தல் கடனாயிற்று என்க. ஒரு காரணம் உள்ளதுபோலக் கூறுகின்றது. உண்மைப் பொருளன்றி ஒருவன் இயைபின்றிக் கூறிய சொற்கு எடுத்துக்காட்டாகக் கூறப்படுதலின், "இயையாதன இயைந் தனவாய் வருதலாயிற்று" எனவும் கூறியிருத்தலின், இது நன்கு விளங்கும். இக்குறிப்பு கழகப்பதிப்பிலுள்ளது. பூசை - பூனை. பிசி - கொடி. 84. வரிக்கோலம் - வரிவடிவு. தொழுதி - கூட்டம். மை - எழுத்து விளங்கப் பூசுவது. தோடு - இதழ். நாண் - கயிறு. பேணல் - விரும்பல்; பாதுகாத்தல். 85. செய்யாய் என்பது செய்யென விகுதி கெட்டு நிற்கும். கெடினும் அப் பொருளையே உணர்த்தும். இங்கே மறைவினையன்று; விதிவினையே அங்ஙனம் வருமென்க. 86. செய்யாய் என்னும் எதிர்மறைவினை உடன்பாடாதலும் உரித்தென்றார் உரையாசிரியர். இரண்டு சொற்கும் வேறுபாடுண்மையின் அது பொருந்தாதென்றபடி. வேறுபாடு - எதிர்மறை இடைநிலை இன்மையும், உண்மையும். உண்ணேன் என்பதற்கும் இடைநிலை ஆகாரம் என்றலே பொருத்தம். 87. செய் என் கிளவி என்பது அதிகாரத்தாற் கொள்க என்றதனால் வினை என்பதும் ஏவல் என்பதும் அதிகாரத்தாற் பெறப்படும் என்பது கருத்து. 88. புறத்துறவு - புறத்தே துறத்தல்; என்றது - புறத்தே வெறுப்புக்காட்டுதலை. 'சென்றீ பெரும நிற்றகைகுநர் யாரே' என்பது பொருள்வயிற் பிரியக் கருதிய தலைவற்குத் தலைவி கூறியது. 'பெரும! நின்னைத் தடுப்பார் யார் நீ செல்வாயாக' என்று தலைவி புறத்தே வெறுப்புடையாள் போலக் காட்டிக் கூறினும். செல்லுதல் அவட்கு விருப்பில்லையாதலின் அகத்தே வெறுப்பிலளாயிற்று. ஆதலின் புறத்துறவு பொருள்பட நின்ற தென்றார். "அட்டில் ஓலை தொட்டனை நின்மே" என்பது பாணனை நோக்கித் தலைவி கூறியது. பாண! அட்டிற் சாலையின் கூரையைப் பற்றி நிற்கின்றனை. அங்ஙனே நில். எனப் பாணன்மேல் வெகுண்டு கூறியது. இதுவும் புறத்தே வெருட்சியுடையாள் போலக் கூறியதன்றி, அகத்தே வெறுப்பிலள் என்பதாம். எனவே, இதுவும் புறத்துறவு பொருள்பட வந்ததாயிற்று. 89. எழுத்திற் புணர்ந்த சொல் என்றது - எழுத்தாற் புணர்ச்சியடைந்த சொல் என்பதை. அவை, அவ்வாண்டை, இவ்வாண்டை, உவ்வாண்டை போல் வன. எழுத்தில் என்பதற்கு எழுத்ததிகாரத்தில் புணர்ந்த என்றல் பொருந் தாது. என்னை? அழன், புழன் முதலியனவுமாண்டுப் புணர்ந்தனவே யாகலின். `ஆசிரியர் சுட்டுச் சினை நீடிய ஐகாரவீற்றுப் பெயர் உறழ்ந்து முடிக என்றார். அவை இக்காலத்தரியவாயின.' என்று இளம்பூரணர் கூறலும் ஈண்டு நோக்கத்தக்கது. `சுட்டுச்சினை நீடிய ஐயென் னிறுதியும்' என்றாற்போல ஆசிரியனால் ஈற்றெழுத்துக்களை மாத்திரம் எடுத் தோதிப் புணர்க்கப்பட்ட சொல் என்று கோடல் பொருத்தமாதலின் எழுத்திற் புணர்ந்த சொல் என்பதில் புணர்ந்த என்பது புணர்த்த என்றிருப்பது நலமாகும். 90. குறைக்கு மிடத்துக் குறைக்குமிடமறிந்து குறைத்தல் வேண்டு மென்றார். தாமரையை ஈற்றிற் குறைத்தாற் பொருடராது. ஆதலால் முதலிற் குறைக்க வேண்டுமென அறிந்து குறைத்தல் வேண்டும் என்பது கருத்து. பிறவுமன்ன. 91. இடைச்சொற்கள் பிறிதோர் சொல்லை வேறுபடுக்குமென்றபடி. வேற்றுமைச்சொல் - வேற்றுமையைச் செய்யுஞ்சொல். வேற்றுமை - வேறுபாடு. ஒரு சாரனவென்றது - வேற்றுமை உருபை. இயற்பெயர் என்றது - சாத்தன் கொற்றன் மரம் என்பன போல வரும் இருதிணைக்கும் அஃறிணையிருபாற்கு முரிய பெயர்களை. நயம் - பொருணயம். 92. உரிச்சொல் வேறுபடுதலும், வேறுபடுக்கப்படுதலுமாகிய இருநிலை யுடையவாம். குரு - ஒளி. கேழ் - நிறம். அகலம் - மார்பு. செல்லல் - துன்பம். இன்னல் - துன்பம். 93. `ஓடிவந்தான்' என்பன போல்வனவற்றில் ஓடி என்னும் வினையெச்சம் தம்மை முடிக்கும் வினைக்கட்கிடந்த தொழிலை உணர்த்திவந்த தென்றது ஓடுதல் வருதலின்கட் கிடந்த தொழிலையே யுணர்த்தி அதனை விசேடித்து, நடந்துவாராது ஓடிவந்தான் என்னும் பொருள்பட நின்றதென்றபடி. வெய்ய சிறிய மிழற்றும் செவ்வாய் என்புழி, வெய்ய சிறிய என்னும் குறிப்புவினை எச்சங்கள் கேட்டோர் விரும்பத் தக்கனவாய் சிறியவாய் எனப் பொருடந்து பேசுதலின் கட்கிடந்த குணத்தையே யுணர்த்தி அத்தொழிலையே விசேடித்து நின்றதென்றபடி. ஏனையவுமன்ன, `செவ்வன் றெரிவிப்பான்' என்புழி செவ்வனென்பது செவ்விதாய் என எச்சப்பொருடந்து ஆராய்தற்கண் செவ்விதாக ஆராய்ந்தானென ஆராய்தலின்கண் கிடந்த குறிப்பையே யுணர்த்தி அதனையே விசேடித்து நின்றதென்றபடி. ஏனையவுமன்ன. 94. பெரும் - பெரிதும்; கையற்ற - செயலற்ற; என்பது பொருள். பெரிது - பெரிதாக, குறிப்பு வினையெச்சம். இச்சூத்திரம் இங்கே வைத்த வினையெச்சத்துள் விசேடித்து வருவனவுள என்பதுணர்த்தற்கென்க. நச்சினார்க்கினியர் தமதுரையுட் காட்டிய `முற்றெ யெச்சமாகலு முரித்தே' என்பது நன்னூற் சூத்திரத்தின் பாகமென்று சிலர் கூறுவர் "வினைமுற்றே வினையெச்சமாகலும் குறிப்பு முற்றீரெச்சமாகலு முளவே" என்பது நன்னூற் சூத்திரம் ஆதலின் அது ஆராயத்தக்கது. வேற்றுமையுடைய வாகலின் குறிய எனப் பன்மையாற் கூறினார் என்க. அவையென்றது பெயர்த்தனென் முதலிய முற்றுச் சொல்லை. பெயர்த்து முதலிய வினை யெச்சங்கள் பெயர்த்தனென் முதலிய முற்றுக்களாய்த் திரிந்து நின்றன வன்று. முற்றுக்களே எச்சங்களாய்த் திரியும் என்க. வினைகோடலாகிய சொன்னிலைமையை அறிந்து வினைகோடன் மாத்திரையானே வினையெச்சமென்று சொல்லப்புகின் மாரைக்கிளவி முதலியனவும் வினையெச்சமாவான் செல்லும்; ஆதலினது பொருந்தாதென்க. பெயர்த்தனென் என்னும் முற்றாய், பெயர்த்து என்னும் வினையெச்சம் திரிந்து வந்ததென்று கொள்வார்க்கு. கண்ணியன் என்னும் முற்றாய்த் திரிதற்கு ஏற்றதோர் வினையெச்சம் இல்லாமையானும் அது பொருந்தா தென்க. முற்றுகள் வினையெச்சமாய்த் திரியுமன்றி வினையெச்சம் முற்றாய்த் திரியாதென்பது சேனாவரையர் கருத்து. எச்-32ஆம் சூத்திர உரைக்குறிப்பு நோக்குக. 95. வழக்கிலே தம்முண் சொற்கள் உடனிற்குமிடமறிந்து கொள்ளுக என்றது:- இந்நாழிக் கிந்நாழி சிறிது பெரிது என்புழி உடனிற்கலாம் என்றபடி. இங்கே முரணாய் வராமல் சிறிது பெரிது என்பதை விசேடித்து நிற்றல் காண்க. மிகப் பெரிதன்றென்பது கருத்து. 96. முன்னம் - சொல்லுவான் குறிப்பு. இங்கே இப்பொருள் இத்தன்மைய வென்புழி அச்சொற்றொடர் பொருளுணர்த்துமாறு கூறப்பட்டது. 97. நிவந்தோங்கு பெருமலை - இங்கே மிக உயர்ந்த என இரண்டும் ஒரு பொருளே குறித்து வருதலின் ஒரு பொருள் இருசொல் என்றார். 98. தாய் என்பது தாயர் என்னும் பொருட்டாய் நின்றது. அஃது ஒருமை பன்மை உணர்த்தியது. இனிப் பன்மைச் சொல்லோடு தொடர்தற்கு உதாரணம்: `அஃதை தந்தை அண்ணல் யானை அடுபோர்ச் சோழர்' என்பது. அஃதை தந்தை சோழர் என்பதில் தந்தை யென்னும் ஒருமை சோழர் என்னும் பன்மையோடு தொடர்ந்து நின்றது. சோழர் ஒவ்வொரு வரும் தனித்தனி அஃதைக்குத் தந்தை என்னும் பொருளில் வந்ததாக லினஃதமைக்கப்படும். 99. ஆற்றுப்படைச் செய்யுளில் முன்னிலை ஒருமைச்சொல் பன்மையோடு முடியினும் கொள்ளப்படுமென்றபடி. `தலைவ...பெறுகுவீர்' என முடிந்தமை காண்க. பெறுகுவீர் எனப் பன்மையாகக் கூறியது சுற்றத் தலைவனோடு சுற்றத்தையும் சேர்த்தாகலின். இதுபோலச் சுற்றத்தோடு சுற்றத் தலைவனை ஆற்றுப்படுத்தற்கண்ணது இம்மயக்கம் என்க. அதிகாரம் - `பெயர் நிலைக் கிளவி' என அதிகரித்த பெயர். இக்கொண்டு முடிபு என்றது பன்மைச் சொற்கொண்டு முடிதலை. 100. எல்லாவிலக்கணமும் என்றது - இயல் இசை நாடகம் என்னும் மூன்றையும். பின்னிணைப்புகள் 1. வடசொல் தமிழில் வந்து வழங்கும் ஆரியச் சொல் வடசொல் எனப்படும். பண்டைக்காலத்திலே தமிழில் வந்து வழங்கிய ஆரியச் சொற்கள் மிகச்சிலவேயாம். தற்காலத்திலே மிகப் பலவாகும். அதன் காரணம் பெரும்பாலும் ஆரிய நூல்கள் பல தமிழில் மொழிபெயர்க்கப்பட்டமையே. பண்டைக்காலத்திலே வடசொற்கள் போன்றனவாய்ச் சில சொற்கள் தமிழிலும் வழங்கியனவுண்டு. தேவன், தேவி, தேவர், பூதம், காலம், உலகம் என்பன வடமொழிப் பதங்கள், இவைபேன்ற சொற்கள் தமிழிலுமிருந்தன என்பது, தொல்காப்பியத்திலுள்ள. “பெண்மை சுட்டிய வுயர்திணை மருங்கி னாண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியுந் தெய்வஞ் சுட்டிய பெயர்நிலைக் கிளவியு மிவ்வென வறியு மந்தந்தமக் கிலவே யுயர்திணை மருங்கிற் பால் பிரிந்திசைக்கும்” என்னும் சூத்திரத்துத் ‘தெய்வஞ்சுட்டிய பெயர்நிலைக் கிளவி’ பால்பிரிந்திசைத்தற்குத் காண்பித்த தேவன், தேவி, தேவர் என்னு முதாரணங்களானும், “கால முலக முயிரே யுடம்பே பால்வரை தெய்வம் வினையே பூதம் ஞாயிறு திங்கள் சொல்லென வரூஉ மாயீ ரைந்தொடு பிறவு மன்ன வாவயின் வரூஉங் கிளவி யெல்லாம் பால்பிரிந் திசையா வுயர்திணை மேன” என்னுஞ் சூத்திரத்து வரும் உலகம் பூதம் என்னுஞ் சொற் களானும் அறியக்கிடக்கின்றது. உரையாசிரியருக்கு மிது கருத்தாதல். “ வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே” என்னுஞ் சூத்திரத்து விசேடவுரையிலே “வடசொல்லாவது வடசொல்லோடொத்த தமிழ்ச் சொல்லென் றாராலுரையாசிரிய ரெனின்” என எடுத்துச் சேனாவரையர் மறுத்தலானு முணரப்படும். அன்றியும் அவர். “சகரக் கிளவியு மவற்றோ ரற்றே அஐ ஓளவெனு மூன்றலங் கடையே” என்னுஞ் சூத்திரத்துக்காட்டிய உதாரணத்து வரும் சாலை, சிலை என்னுஞ் சொற்களானும், “கதந பமவெனு மாவனர் தெழுத்து மெல்லா வுயிரொடு சொல்லுமார் முதலே.” என்னுஞ் சூத்திரத்துக்காட்டிய உதாரணத்துவரும் தேவர், தடம், பீடம், மாலை, மீனம், முகம் முதலிய சொற்களாலும் அறியக் கிடக்கின்றது. சேனாவரையர்க்கு மிதுவே கருத்தாதல், “கடிசொல் லில்லைக் காலத்துப் படினே” என்னுஞ் சூத்திரத்துக் காட்டிய உதாரணத்துவரும் சம்பு என்னுஞ் சொல்லானறியப்படும். நச்சினார்க்கினியருக்கு மிதுவே கருத்தாதல் அவர் காட்டும் சகடம், நிலம், நேமி, மாலை, பௌவம் முகம் முதலிய சொற்களான் அறியப்படும். நன்னூற் குரைசெய்த மயிலைநாதருக்கு மிதுவே கருத்தாதல் “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே” என்னும் நன்னூற்சூத்திரத்துப் ‘புதியனபுகுதலும்’ என்பதற்குக் காட்டிய உதாரணத்து வரும் சம்பு என்னுஞ் சொல்லானறியப்படும். சனி, சரடு, சமழ்ப்பு, சள்ளை என்னுந் தமிழ்ச் சொற்களோடு விரவக்கூறியதனாலும் சம்பு என்பது தமிழ்ச்சொல் என்பதே அவர்கருத்து. சேனாவரையரும் சம்பு என்பதைச் சரி சமழ்ப்பு என்னுந் தமிழ்ச் சொற்களோடு விரவக் கூறுதல் காண்க. ‘கடி சொல் லில்லைக் காலத்துப் படினே’ எனத் தொல்காப்பியர் பொதுவாகக் கூறினமையின் வடசொற் கொண்டா ரெனினுமிழுக்காது. சாலை சிலை முதலிய வடசொற்களைத் தமிழ்ச் சொல் என உரையாசிரியர் முதலியோர் மயங்கிக் கூறினாரெனின், காலம் உலகம் முதலிய சொற்களையும் தொல்காப்பியர் மயங்கிக் கூறினார் எனல் வேண்டுமாகலின் அது பொருந்தாது. அன்றியும், உரையாசிரியர் “ஆரியச் சிதைவல்லாதனகொள்க” என்னும் “ஆரியச் சிதைவென மறுக்க” என்றுங் கூறுதலானும், சேனாவரையார் “வடமொழி நிலைகண்டுணர்ந்தவர்” எனப் புகழப்படுதலானும், நச்சினார்க்கினியர் “வடசொல் லெனமறுக்க” எனக் கூறுதலானும் அவர்களை அங்ஙனங் கூறல் பொருந்தாது. இனித் தேவன், தேவி, தேவர், காலம், உலகம், பூதம், வருணன், யாமம், மங்கலம், தேயம், தாபதம், நிமித்தம், உவமம், மந்திரம், சூத்திரம், ஆநந்தம் முதலிய வடசொற்களெல்லாம் தொல்காப்பியத்துவருதலின், தொல்காப்பியர் வடமொழியை விலக்கினாரல்லர் என்பாருமுளர். அகத்தியருங் கொண்டார் என்பர். இனிச் சிலர் தமிழ்மொழிகள் ஆரியத்துச் சென்று வழங்குவனவுமுள என்பர். ஆகையினாற் சொற்களை ஆராய்ந்து வரையறுத்தல் மிகவரிது. - இலக்கண வரம்பு மகாவித்துவான் சி. கணேசையர் கலாநிதித ஸ்ரீ. பிரசாந்தன், பக். 6-8 2. வடமொழி முதுமொழியன்றா? வடமொழியே எம்மொழிகட்கும் முதுமொழியென்று பல ஆன்றோர் கூறப் பல ஆன்றோர் அவ்விருமொழியு மொரே காலத்தன என்றும், இரண்டற்கு மிலக்கணஞ் சொன்னவரு மொருவரே என்றுங் கூறுகின்றார்கள். இற்றைக்கு ஐயாயிர மாண்டுக்கு முன்னிருந்தவராகிய திருமூலரும், “மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின் றேரியு நின்றங் கிளைக்கின்ற காலத் தாரியமுத் தமிழு முடனே சொலிக் காரிகை யார்க்குக் கருணைசெய் தானே” எனவும், “அவிழ்கின்ற வாறு மதுகிட்டு மாறுஞ் சிமிட்டலைப் பட்டுயிர் போகின்ற வாறும் தமிழ்ச்சொல் வடசொ லெனுமிவ் விரண்டும் உணர்த்து மவனை யுணர்த்தலு மாமே” எனவுங் கூறினர். கம்பரும், “உழக்குமறை நாலினு முயர்ந்துலக மோதும் வழக்கினு மதிக்கவினி லும்மரபி னாடி நிழற்பொலி கணிச்சிமணி நெற்றியுமிழ் செங்கட் டழற்புரை சுடர்க்கடவு டந்ததமிழ் தந்தான்” எனக் கூறுவர். சிவஞானசுவாமிகளும் “இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குர வரியல்வாய்ப்ப இருமொழியும் வழிப்படுத்தார் முனிவேந்த ரியல்வாய்ப்ப இருமொழியு மான்றவரே தழீஇயினா ரென்றாலிவ் விருமொழியு நிகரென்னு மிதற்கைய முளதேயோ” எனக்கூறுவர். சங்கச்சான்றோராகிய நரிவெரூத்தலையாரும், “இன்பம் பொருளறம் வீடென் மிந்நான்கு முன்பறியச் சொன்ன முதுமொழி நூன் - மன்பதைகட் குள்ள வரிதென் றவைவள் ளுவருலகங் கொள்ள மொழிந்தார் குறள்” எனக் கூறுவர். (முதுமொழி - வடமொழி) இங்ஙனமெல்லாம் நம் சங்கச் சான்றோரும் மற்றைச்சான்றோரும் மொழிந்திருப்பவும், வவுனியவிளாங்குளத்து இராஜையனார் என்பவர் தமிழபி மானங்கொண்டு தாமுஞ் சில வடமொழிப்பகைஞர்போற் றோன்றி, வடமொழி பிற்காலத்துமொழி என்று இரண்டே யிரண்டேதுக் கொண்டு சென்ற ஆவணிமாதச் செந்தமிழ்ப் பத்திரிகையில் “தமிழ்மொழிக்கு வடமொழி செவிலித்தாயாகுமா? என்னும் விஷயத்தினகத்தே யுரைத்தார். அவர் உரைத்த அவ்வேதுக்களிரண்டும் அவர்கருத்தை நிலைநிறுத்த வல்லனவோவென ஆராய்வாம். அவர் காட்டிய வேதுக்க ளிரண்டும் வருமாறு: 1. எழுத்துச்சாரணமுறையை நோக்குமிடத்து வடமொழி பிற்காலத்து மொழியாதல் 2. வடமொழி எழுத்தில் வழங்கிய பாஷையன்றிப் பேச்சில் வழங்கியதன்மை. இவ்விரண்டனுள்ளும், உச்சாரண முறையை நோக்குமிடத்து வடமொழி பிற்காலத்து மொழியாதல் என்னு மேதுவை முதல் ஆராய்வாம். 1. எழுத்துக்களும். ட், ண், ர், ல், ழ், ள், ற், ன் என்னு மெட்டெழுத்துக்களும் நா மேலண்ணத்தைச் சென்று தொடும் முயற்சியாற் பிறப்பனவாதலிற் சிறுவரா லுச்சரிக்கப்படாதன எனவும், அதனால் அவை மொழிமுதற் றோன்றா எனவும், படைப்புக்காலத்து முற்பருவத்தே தோன்றிய மனுஷர் சிறார்க்கு ஒப்பாவர் என்றும், அதனாற்றான் அவர்கள் தோற்றுவித்த பாஷையிலே, அவ்வெட்டெழுத்துக்களும் மொழிக்கு முதலாகா வாயின என்றும், பிற்பருவத்திலுள்ள மனுஷராற்றோற்று விக்கப்பட்ட பாஷையாதலின் வடமொழியிலே ட, ர முதலியன மொழிக்கு முதலாக வருகின்றன என்றும் இராஜையனார் உரைத்தார். அங்ஙனமாயின், அவர் கூறியவாறு, நா மேலண்ணத்தைச் சென்று தொடுதலாற் பிறக்கு மெழுத் தெல்லாம் சிறுவரா லுச்சரிக்கப்படாதனவாயும், மொழிக்கு முதலாகா தனவாயுமிருத்தல் வேண்டும். அந்நியதிதவறி, நா மேலண்ணத்தைச் சென்று தொடுதலாற்பிறப்பனவாய இ, ஈ, எ, ஏ, ஐ, த, ந முதலியன சிறுவரா லுச்சரிக்கப்படுவனவாயும், மொழிக்கு முதலானவாயும் வருதலானும், மொழிக்கு முதலான வற்றுள்ளும் சகர யகர வகர ஞகரங்கள் சிலவுயிர்களோடு மொழிக்குமுதலாகாமையானும் மொழிமுதலாதற்குக் காரணம் பிறிதொன்றாவதன்றி உச்சாரணமுறையன்று என்பதே தேற்றம். அன்றி, உச்சாரணமுறையே காரணமேனும், படைப்புக்காலத்தின் முற்பருவத்தேதோன்றிய மனுஷருக்கு முதியோரையும் உவமை கூறல் பொருந்தாது. என்னை? முற்பருவத்து மனுஷரினும் பிற்பருவத்து மனுஷர் அறிவு மாற்றலுங் குறைந்தவர்களாதலின், அன்றேல், அவர் அதற்குத் திருட்டாந்தங்காட்டல் வேண்டும். சங்கப் புலவர்களைப் போலச் செய்யுள் செய்யவல்லவ ரொருவரை அவர்கள் காலத்தின்பின் இருந்தவராகக் காட்டுவாரா? கம்பர் காளிதாசர்களைப்போலக் கவியியற்ற வல்லவரொருவரை அவர்கள் காலத்தின் பின் இருந்தவராகக் காட்டுவாரா? தொல்காப்பியரைப் போல இலக்கணஞ் செய்யவல்லா ரொருவரை அவர் காலத்தின் பின் இருந்தவராகக் காட்டுவாரா? பரிமேலழகரைப் போல உரையுரைக்க வல்லாரை அவர்காலத்தின் பின் இருந்தவராகக் காட்டுவாரா? காட்டல் கூடாதன்றோ? அங்ஙனமாக இராஜையனாருக்குத் திருட்டாந்தமு மின்றே. ஆதலின், இராஜையனார் தாங் கூறிய உவமையை மாறிக் கூறிற் பொருந்துமன்றி மற்றுப் பொருந்தாதென்க. மனுஷர் அறிவினு மாற்றலினு மிகுங்காலத்தை உற்சர்ப்பிணி என்றும், குறையுங்காலத்தை அவசர்ப்பிணி என்றும் நூல்கள் கூறும். சங்கச்சான்றோராகிய நரிவெரூத்தலையார் கூறிய “இன்பம் பொருளறம் வீடென்னு மிந்நான்கு - முன்பறியச் சொன்ன முதுமொழி நூன் - மன்பதைகட் - குள்ள வரிதென்று” என்னுஞ் செய்யுளுக்குத் திருத்தணிகைச் சரவணப் பெருமாளையர் உரைத்த உரையிலே “முன்பறியவெனவே உற்சார்ப்பிணியாகலின் அக்காலத்தோர்க்கு உணர்தற்கேற்ற ஆயுணீட்சியும், உணர்வுவலியு மிருந்தன வென்பதூஉம், அவசர்ப்பிணியாகலின் இக் காலத்தோர்க்கு அவையில் என்பதும் பெறப்பட்டன என உரைத்ததும், பிற்காலத்தோர் அறிவு மாற்றலுங் குறைந்தவர்களென்பதை வலியுறுத்தும். இன்னும் முன்னூல்கள் கடினமானவையாதலின், அவைகள் மெல்லிய மொழிகளாலாக்கப்படல் வேண்டுமென்றும், செய்யுணுல்களெல்லாம் வசனநூல்களாக ஆக்கப்பட வேண்டுமென்றும் பலர் இப்போது விரும்புவது இக்காலம் அவசர்ப்பிணி என்பதை வலியுறுத்தும். ஆதலின், அவர்கூறிய சொல்லுச் சாரணமுறையென்னும் ஏதுச் சிறிதும் பொருந்தாது என்க. இனி அவர்கள் கூறிய இரண்டாவது ஏது வடமொழி ஒருதேயத்தாலேயே பேசப்பட்டுவந்தபாஷையன்று என்பது. அதனை நாமும் ஒப்புக் கொள்ளுகின்றாம். வடமொழி தேவபாஷையன்றி மனுஷபாஷையன்மையின், ஒருதேயத் தாராலே பேசப்பட்டு வந்ததன்றாயிற்று. அற்றேல், அதனை வடமொழி என்றதென்னை யெனின், வடக்கின்கணிருந்து ஆரியர்களாலே பரிபாலிக்கப்பட்டு அத்திசைக்கண் வளர்ந்தமை யானென்பது. கம்பரும் “தேவபா டையினிக்கதை செய்தவர் மூவர்” என வடமொழியைத் தேவபாடையெனக் கூறுதல் காண்க. இங்ஙனமே சரவணப் பெருமாளையரும், செய்யுளுரையில், மேற்படி செய்யுளுரையில், “தேயவழக்கிற் படாத தூஉம், வருந்திக்கற்போர்க்குமாத்திரம் புலப்படுவதூமாய் எல்லா மொழிகட்கும் முற்பட்டுக் கடவுண் மொழியாய் நிற்றலின் ‘முதுமொழி’ என்றார்” என்றும், சிவஞானமுனிவரும், “தென்றமிழ்க் கெதிரியது கடவுட்சொல்லாகிய ஆரிய மொன்றுமே” யென்றும், “ஆரியச்சொல் எல்லாத் தேயத்திற்கும் விண்ணுலக முதலியவற்றிற்கும் பொதுவாகலான் என்றும், “வடசொல் என்றது ஆண்டுப் பயிற்சிமிகுதிபற்றி” என்றும், சேனாவரையரும் “வடசொற்கிளவி” என்னுஞ் சூத்திர வுரையில், வடமொழி எல்லாத் தேயத்திற்கும் பொதுவாகலானும் என்றும் கூறுதலானும், சங்கச் சான்றோராகிய வெள்ளிவீதி யாரும், “செய்யாமொழி” எனக் கூறுதலானும், அஃது நூல்வழக்கில் வந்த பாஷையன்றி, ஒருதேயத்தாராலே பேசப்பட்டுவந்த பாஷையன்மை யறிக. ஆதலின், அவர்கள் கூறிய மற்றைய ஏதுவும் பொருந்தாமையறிக. இங்ஙனம் இராஜையனார் காட்டிய இரண்டேதுவும் பொருந்தாமையின் அவர் இவற்றை ஏதுவாகக் கொண்டு வடமொழியைப் பிற்காலத்து மொழி என்றதூஉம் பொருந்தாது, பயனில் கூற்றாயும் அபிமானம் பற்றிக் கூறியகூற்றாயும் முடிந்தவாறு காண்க. இன்னும் வடமொழி முதுமொழி என்பது இராஜையனார்க்கும் உடன்பாடாதல், “தமிழைப் போலவே பழமையுடையவெனச் சொல்லற் கியைந்த வடமொழி, கிரேக்கு, லத்தீன், ஈபுரு, அராபி முதலிய மொழிகளெல்லாம்” என அவரே “நான் மறக்கினும் சொல்லுநா” என்றபடி சொல்லுதலானு மறியப்படும். இனி, இராஜையனார் பொருளிலக்கணம் தமிழுக்கு விசேடம் என்றும், திருவள்ளுவர், பொருளை அறம், பொருள், இன்பம் எனப் பகுத்தது வடநூன் முறை பற்றியன்று, அப்பகுப்புத் தமிழ் நூல்களுக்கு இயல்பென்றும் பரிமேலழகர் பொருளை வடநூன்முறைபற்றி அறம் பொருளின்பம் எனப் பகுத்தார் என்றது பிழை என்றும் உரைத்தார்கள். பொருளிலக்கணந் தமிழுக்கு விசேடமே. ஆயினும், இறையனார் ‘களவெனப்படுவது - அந்தண ரருமறை மன்ற லெட்டனுட் - கந்தருவ வழக்கம்’ எனக் கூறுதலானும், தொல்காப்பியரும், ‘மறையோர் தேத்து மன்ற லெட்டினுட், கந்தருவ வழக்க மென்மனார் புலவர்’ எனக் கூறுதலானும், வடமொழிக் காந்தமுதலியவற்றுள்ளுங் கூறப்படுதலானும் வடமொழிக் கண்ணும் அப் பொருளிலக்கணஞ் சுருக்கிக் கூறப்பட்டுளதென்பதூம், திருவள்ளுவர் வடநூன் முறையையுந்தழுவி நூல் செய்தாரென்பதை, அந்நூல் சிறப்புப்பாயிரத்திலேதானே, சங்கப்புலவர், “நான்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா” எனவும் “சாற்றிய பல்கலையும் தப்பா வருமறையும் - போற்றி யுரைத்த பொருளெல்லாம் - தோற்றவே - முப்பான் மொழிந்த” எனவும், “மெய்யாய வேதப் பொருள் விளங்கப் பொய்யாது தந்தான்” எனவும், “முப்பாலினோதும் - தருமமுதனான்கும் சாலும்” எனவும் கூறுதலானே, வேதமுதலியவற்றிலே சொல்லப்பட்ட தரும முதலிய நான்கனையுமே வள்ளுவனார் முப்பாலாக விரித்துச் செய்தார் என்பது அறியக் கிடத்தலின், வடமொழிவழக்குப் பற்றித் திருவள்ளுவர் பொருளை முப்பாலாக வகுத்தார் எனப் பரிமேலழகர் கூறியது வழுவன்மையும் உணரப்படுதலின் இராஜையனார் உரைத்தது ஈண்டும் பொருந்தாமையுணர்க. இன்னும் அவருரைத்தன பல பொருந்தாமையுள்ளன. அவற்றை யாம் இங்கே யெடுத்து மறுக்கப்புகின் விரியுமென்றஞ்சி விடுக்கின்றோம். அறிஞர்கள் நோக்கியுணர்க. இதுகாறும் கூறியவாற்றால் தமிழ்மொழிக்கு வடமொழி பிந்திய மொழியன் றென்பதூஉம், வடமொழியைப் பிற்காலத்துண்டான மொழியென்று இராஜையனார் உரைத்தது பொருந்தாது என்பதூம் பொருளிலக்கணம் வடமொழிக் கண்ணும் சுருக்கிக் குறிப்பிக்கப்பட்டுள தென்பதூஉம், திருவள்ளுவனார் அறம்பொருளின்பமெனப் பொருட்பாகுபாடு செய்தது வடமொழிபற்றி என்பதூம் அறியக்கிடந்தமை காண்க. (தமிழ்ப் பாஷையை வளர்க்கவிரும்புவோர் அதனை வளர்க்க முயலுவதை யொழித்து வடமொழியை இகழ்வதுதான் என்னையோ? அதனாற்றமிழை வளர்க்கலாமா? ஆதலின் அதனையொழித்துத் தமிழைச் சங்கச் சான்றோர் போல வளர்க்க முயலுவாராக) - இலக்கண வரம்பு மகாவித்துவான் சி. கணேசையர் கலாநிதித ஸ்ரீ. பிரசாந்தன், பக். 11-15 3. சேனாவரையருரைப் பதிப்பும் பிழை திருத்தமும் ஏட்டுப் பிரதிகளிலுள்ள பழைய நூல்களை அச்சிற்பதிக்குங்கால், அவற்றினுருவங்களை உண்மையாக அறிந்து திருத்தமுறப்பதித்தல் மிக அரிதாகும். ஏனெனின், பிரதி எழுதுவோரானும், சிதன் முதலியவற்றானும் அவற்றினுருவங்கள் வேறுபட்டுஞ் சிதைந்துமிருத்தலின், ஒரு பிரதியைப்பார்த்து மற்றொரு பிரதியெழுதுவோர் அவதானமின்றி யெழுதுவதாலும் உண்மையுணராது திருத்தி விடுவதாலும் பல பிழைகள் நேருகின்றன. பொருளுணராதோர் எழுதுவதாலும் பல பிழையாகின்றன. ஒருவர் சொல்லக் கேட்டெழுதுவொர் ஒன்றை ஒன்றாகக் கேட்டெழுதுவதாலும் பிழைகள் நேருகின்றன. இங்ஙனம் நேருகின்ற பிழைகளை உண்மையறிந்து திருத்தல் மிகவுங் கஷ்டமாகும். அப்பிழைகளை யோகிருந்து சிந்தித்தாலும் காண்டல் அரிதாகும். திருக்குறட் பரிமேலழகருரை, திருத்தமுற முன்பதிக்கப்பட்டதாயினும், பின்னும் பல திருத்தப்பட்டுச் செந்தமிழ்ப் பத்திரிகையில் வெளிவந்துள்ளன. அங்ஙனமே சேனாவரையருரைப் பதிப்பினும் சில திருத்தப்பட்டு மேற்குறித்த பத்திரிகையில் வெளிவந்துள்ளன. இப்போதும் அதன்கண் ஸ்ரீமாந் பண்டித. சித நாராயணசாமியார் அவர்களாலே சில திருத்தப்பட்டு மேற்குறித்த பத்திரிகையில் வெளிவந்தன. அப்பிழைகளுள் ஒன்று இடைச்செருகல். ஒன்று சொல்விடுக்கப் பட்டது. ஒன்று எழுத்துத்திரிபு. ஒன்று எழுத்து விடுக்கப்பட்டது. அவற்றுள், இடைச்செருகல் என்ற வழுவை மாத்திரம் யாம் ஒப்புக்கொள்ளவில்லை; ஏனெனின், ஒரு தொடர் முழுவதையும் இடைச்செருகல் என்று கூறுவதை ஒப்புக் கொள்ளினும், ஒருபெருந்தொடரினுள், ஒரு சிறுதொடரை ஒருவர் இடைச் செருகினார் என்றதை எப்படி ஒப்புக் கொள்ளலாம் என்னுங் கருத்தினால், அன்றியும், சேனாவரையருரையில் வாக்கியப் பிழைகளின்றி, இடைச்செருகல்கள் இருப்பதாகவும், எமக்குப் புலப்படவில்லை; அதனானுமாம். அதனாலே இடைச்செருகல் என்ற அத்தொடரை இடைச் செருகலன்றென யாம் காரணங்காட்டி மறுத்து ஓர்கட்டுரை எழுதி, ய பத்திரிகையில் வெளிப்படுத்தினேம். அதனைப் படித்துப் பார்த்து ஸ்ரீமத் பண்டித. நாராயணசாமியாரவர்கள். அவ்வாக்கியத்தில் வரும் ‘பகுப்ப’ என்பதற்குத் தன் வினையாகப் பொருள்கோடல் பொருந்தாதென அதனை மறுத்துரைத்தார்கள். வேறு பிரமாண மின்றாயினும், வெளுப்ப, பரப்ப, பிளப்ப, வளைப்ப, முதலிய சொல்வழக்கை நோக்கின் அதுவும் தன்வினையில் வருமென்றே அங்ஙனமுரைத்தேம் ஆயினும், பின் அவ்வாக்கியத்தின் உண்மைரூபம் தற்செயலாக எமக்குப் புலப்பட்டமையானே அதன்கண் யாம் முன்னர்க் கொண்ட கருத்தைவிட்டு, அவ்வுண்மை ரூபத்தை இப்பொழுது இப்பத்திரிகை வாயிலாக வெளிப்படுத்துகின்றோம். (உண்மையுணர வேண்டுமென்பது எமது கருத்தன்றி மறுத்துரையாடவேண்டுமென்பது எமது கருத்தன்று.) அவ்வுண்மைரூபம் வருமாறு: “உணற்கு என்னும் வினையெச்சம் உருபேற்ற தொழிற் பெயரோடு ஒப்புமையுடைத்தாயினும், உருபும் பெயரு மொன்றாகாது பகுப்பப் பிளவுபட்டிசையாது ஒன்று பட்டிசைத்தலான் அதனின் வேறாயினாற் போல” என்பதில் உருபும் பெயருமென்றாகாது பகுப்ப என்பதே முன்னருள்ள உண்மைரூபமாகும். சொல்வோன் “மென்றாகாது” எனக் கூறக் கேட்டோன் மொன்றாகாது எனக் கேட்டு எழுதியனமையால் அது திரிவுபட்டது என்பது எமது கருத்து. அன்றிப் பார்த்தெழுது வோனும் அவதானமின்றி, அல்லது கருத்து நோக்காது “மொன்றாகாது” என்றும் எழுதியிருக்கலாம். எவ்வாறோ அது பிழையாக எழுதப்பட்டு வழங்கிவரலாயிற்று. இனி அவ்வாக்கியம் பொருத்தமாமாறு காட்டுதும்:- உணற்கு என்னும் வினையெச்சம் உருபேற்ற தொழிற்பெயரோடு ஒப்புமையுடைத்தாயினும் உருபும் பெயருமென்றாகாது பகுப்பப், பிளவுபட்டிசையாது ஒன்றுபட்டிசைத்தலான் அதனின் வேறாயவாறு போல” என்பதில் உருபும் பெயருமென்றாகாது என்பது பகுப்ப என்பதோடு முடிக்கப்படும் படுங்கால் உணற்கு என்னும் வினையெச்சம் உருபேற்ற தொழிற்பெயரோடு ஒப்புமையுடைத்தாயினும், தொழிற் பெயர்போல உருபும் பெயருமென்று இரண்டு சொல் ஆகாமல் (தன்னை அவ்விருசொல்லில்) பகுத்துணரும்படி (ஒரு சொல்லாக உணரும்படி) பிளவுபட்டிசையாது ஒன்றுபட்டிசைத்தலான் அதனின் வேறாயினாற்போல என்பது கருத்து. இங்ஙனமுரைக் குங்கால் உருபும் பெயருமென்றாகாதுபகுப்ப என்பதும், வினையெச்சதருமமாதல் காண்க. பகுத்துணர்தல் - வேறுபடுத்தறிதல். இக்கருத்தைச் சேனாவரையர் முன்னும் வேற்றுமையியலில், கூறிய முறையின் உருபுநிலை திரியாது ஈறுபெயர்க் காகு மியற்கைய வென்ப என்னும் (69 - ஞ்) சூத்திரஉரையில் “வினைச்சொல் இறுதிநிற்கும் இடைச்சொல் தாமென வேறுணரப்படாது அச்சொற் குறுப்பாய்நிற்குமன்றே! இவை அவ்வாறு பெயர்க்குறுப்பாகாது தாமென வேறுணரப்பட்டு இறுதி நிற்கு மென்பார் நிலைதிரியாதென்றார்” என்று விரித்துரைத்தவாற்றால், உணர்ந்து கொள்க. எனவே ஒன்றுபடுதலாற்றான் உருபும் பெயருமென்று இரு சொல்லாக உணராமல் அவற்றிற் பகுத்து ஒரு சொல்லாக உணரப்படுகின்றது என்பது கருத்து. இங்ஙனங் கொள்ளுங்கால் இடைச் செருக லென்பது வேண்டிய தின்றாம். இன்னும் இதுபோன்ற வாக்கியங்களிற் பிழைகாணப்படின் அவை உண்மைநோக்கித் திருத்தப் படுவனவேயன்றி, இடைச்செருகலென்பது பொருந்தாதென்பது எமது கருத்து. இன்னும், இதுபோன்ற ஓர் திருத்தத்திற்கு, ஸ்ரீமத் ஞ.ளு. சுப்பிரமணியசாஸ்திரியார் அவர்கள் (க்ஷ.ஹ.,ஞா. னுட.கூ) காரணராகின்றார்கள். அது வருமாறு: உருபெனமொழியினுமஃறிணைப் பிரிப்பினு மிருவீற்று முரித்தே சுட்டுங் காலை என்னும் (கிளவி. 24-ம்) சூத்திரத்துக்குச் சேனாவரையருரைத்த உரை பின்கண்வரும் “உருபினுமென்னாது உருபென மொழியினும் என்றமையால், அவ்வுருபின் பொருளவாகிய வடிவு, பிழம்பு, பிண்டமென்னுந் தொடக்கத்தனவுங் கொள்க” என்னும் விரிவுரையுள், ‘உருபினும்’ என்பதன்கண், சாஸ்திரியா ரவர்கள் ஒரு ஆஷேபம் நிகழ்த்தியுள்ளார்கள். அஃது “உருபினும் என்றால் உருபென்னுஞ் சொல்லெனப் பொருள்படுமா? எனின், சொல் என்பதைக் குறிக்கவேண்டித்தான் சூத்திரத்தில் உருபு என மொழியினுமெனத் தொல்காப்பியர் கூறியுள்ளார் என்பது தோன்றுகின்றது. தன்னினமுடித்தலான் வடிவு முதலிய சொற்களுங் கொள்ளலாமென்று சேனாவரையர் கூறியிருப்பிற் பொருந்தும்” என்று சேனாவரையரைக் கண்டித்துள்ளார்கள். உருபினும் என்பதற்கு உருபின்கண்ணும் என்பது பொருள், உருபென மொழியினும் என்பதற்கு உருபு என்று சொன்னாலும் என்பது பொருள். இரண்டும் ஒருபொருள் படவே வந்தன. அது பற்றியே சாஸ்திரியாரவர்கள் சொல் என்பதைக் குறித்தே உருபென மொழியினும் எனத் தொல்காப்பியர் கூறியுள்ளார் என மயங்கிக் கூறியதும் என்க. இதன் காரணம் யாதென மிகவும் உற்றுநோக்கினோம். அதன் காரணமுந் தற்செயலாக எமக்குப் புலப்பட்டது. அதனையும் ஈண்டு விளக்குதும், ‘உருபினும்’ எனும் கொள்ளின் ‘காப்பினொப்பின்’ என்புழிப்போலப் பொருளையே குறித்துவருதலானும், அச்சூத்திரத்துவரும் மொழியினும் என்பதோடு இயையாமையானும் அது பாடமன்று; ‘உருபெனும்’ என்பதே பாடமாகும். அது ஓசையொற்றுமை யானே உருபினு மென்று கேட்கப்பட்டோ அல்லது அவதானமின்மைபற்றியோ ‘உருபினு’ மெனப் பிரதியில் எழுதப்பட்டது. உருபெனுமொழியினு மென்பது “எல்லாரு மென்னும் பெயர் நிலைக்கிளவிய என்பது போல உருபு என்கிற சொல்லின் கண்ணும், எனப் பொருள் சொல்லையே உணர்த்திவருதலும் ‘உருபு என்று சொல்லுவதற்கு என்புழி உருபு என்பது தனித்துப் பொருளையே உணர்த்தி உணரப்படுதலின் இரண்டும் வேறான கருத்துடையவாதல் புலப்படும். ஆதலாற் சேனாவரையருரையே பொருத்தமாதலும் சாஸ்திரியாரவர்கள் கூறியதே பொருத்த மில்லாமையும் அறியலாம். சாஸ்திரியாரவர்கள் அங்ஙனம் கூற வந்தகாரணம் பாடவேற்றுமையே. ஆதலின் நன்கு ஆராயாது சேனாவரையருரையிற் குற்றஞ்சுமத்தல் தகுதியன்றேயாம். இன்னும் சேனாவரையருரையின்கண், அவ்வுரையை இரண்டாவதாகப் பதித்த ஸ்ரீமத். கந்தசாமியாரவர்களும் பல திருத்தங்கள் செய்துள்ளார்கள். அவற்றுட் சில உரையின் அழகைக் கெடுப்பனவாகக் காணப்படுதலின் அவற்றையும் ஈண்டுக் காட்டுதும்: “பெண்மை சுட்டிய வுயர்திணை மருங்கின் ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியும் தெய்வஞ் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும் இவ்வென வறியு மந்தந்தமக் கிலவே உயர்திணை மருங்கிற் பால்பிரிந் திசைக்கும்” என்றும் 4 ம் சூத்திரவுரையின்கண் “தமக் கெனவீறுடைய ஆடுஉவறிசொன் முதலாயினவற்றிற் குரிய வீற்றானும் இசைக்குங் கொல்” என்பதில் ‘தமக்கென வீறுடைய’ என்பதைத் ‘தமக்கெனவீறுடைய வாய்’ எனத் திருத்தி அவ்வாக்கியத்தில் அழகையும் செறிவையும் கெடுத்து விட்டார்கள். அவர்கள் திருத்தியதற்குக் காரணம், ஈறுடைய என்பது வினையாலணையும் பெயராகப் பொருள்படுமென்று கருதாமையே. உடைய - உடையன. ஈறுடைய என்பதற்கு ஒரு தொடரிசைக்குறியிடின், அது ஈறுடையன எனப்பொருள்பட்டு எழுவாயாய், இசைக்குங்கொல் என்பதோடு முடிந்து பொருள்படும், ‘ஈறுடையவாய்’ என்னுந் திருத்தம் அவ்வாக்கியச் செறிவைக் கெடுத்தல் காண்க. இன்னும் க- ம் சூத்திரத்து உரையில் வரும் சமயவாற்றலைச் சமவாயவாற்றல் என்று திருத்தினார்கள். அது சாஸ்திரியாரவர்களாற் சொல்லதிகாரக் குறிப்பில் மறுக்கப்பட்டது. இன்னும், “இரட்டைக்கிளவி இரட்டிற் பிரிந்திசையா” என்னுஞ் சூத்திரஉரையுள்ளும், குறுகுறுத்தது என்னுஞ்சொல் குறுத்தது குறுத்தது எனச் சொன்முழுவதும் வரின் அடுக்காம். அங்ஙனம் சொன் முழுதும்வாராது முதற்சொல் குறைந்திருத்தலின் அடுக்கன்மையறிக என்னுங் கருத்தில, சேனாவரையர் “குறுத்தது குறுத்தது” கறுத்தது கறுத்தது எனச் சொன்முழுதும் வாராமையின் அடுக்கன்மையறிக” எனச் கூறச் மென்பதை நோக்காது. அதனைச் ‘சொன் முழுதும் இருமுறை வாராமையின்’ என்று திருத்தி விட்டார்கள். இருமுறையாயின், குறுகுறுத்தது குறுகுறுத்தது என்றன்றோ இருத்தல் வேண்டும். இத்திருத்தமும் சேனாவரையரைப் பிழைப்படுத்துகின்றது. இன்னும், ஆசிரியர் “அதனினியறல்” என்னுஞ் சூத்திரத்து ஓடுவெனத், தாம் ஒடு எனத் திருத்தியுள்ளார். ஓடு என்பது ஆசிரியர் காலத்து அதிகம் வழக்கின்று. இவற்றையெல்லாம் அறிஞர் உற்று நோக்கி, உண்மைகாணாது சேனாவரை யருரையைத் திருத்துவது நன்றன்று என்பதை உணர்ந்து கொள்க. இவ்வுரையை யாம் எழுதியது. உண்மையுணருமுன் ஒரு நூலைத் திருத்துவது நன்றன்று என்பதை உணர்த்துதற்கன்றி, அறிஞர்களைக் கண்டிக்கவேண்டுமென்ற கருத்தாலன்று. ஆதலால் இவ்வுரையை அறிஞர்கள் உவப்பார்களென எண்ணுகின்றேம். - இலக்கண வரம்பு மகாவித்துவான் சி. கணேசையர் கலாநிதித ஸ்ரீ. பிரசாந்தன், பக். 116-120 4. தொல்காப்பிய நூற்பா பொருளாராய்ச்சி வேற்றுமைப் பொருளை விரிக்குங் காலை ஈற்றுநின் றியலுந் தொகைவயிற் பிரிந்து பல்லா றாகப் பொருள்புணர்ந் திசைக்கு வெல்லாச் சொல்லு முரிய வென்ப. என்பது சூத்திரம் இச்சூத்திரத்திற்குச் சேனாவரையர், "வேற்றுமைத் தொகையை விரிக்குமிடத்து, வேற்றுமையுருபே யன்றி, அன்மொழித்தொகை விரிப்புழி, வேறுபட்டுப் பல்லாறாக அன்மொழிப் பொருளோடு புணர்ந்துவரும் எல்லாச் சொல்லும் விரித்தற்குரிய" என்னுங் கருத்தமையப் பொருள்கூறி, "தாழ்குழல், பொற்றொடி, மட்காரணம் என்னும் அன்மொழித் தொகை களை விரிப்புழித் தாழ்குழலையுடையாள், பொற்றொடியை யணிந்தாள், மண்ணாகிய காரணத்தானியன்றது என விரிக்கப்படும் உடைமையும், அணிதலும், இயறலும்; கருங்குழற் பேதை, பொற்றொடியரிவை, மட்குடம் என்னும் வேற்றுமைத் தொகைகளை விரிப்புழியும், கருங்குழலையுடைய பேதை, பொற்றொடியை யணிந்த அரிவை, மண்ணானியன்ற குடம் என வந்தவாறு கண்டுகொள்க" என உதாரணமுந் தந்து விளக்கியுள்ளார். ஏனைய வுரையாசிரியர்களும் இக்கருத்தி லுடன்பாடுடையர்களேயாம். அம் மூவருங் கூறும் பொருளை மறுத்துச் சிவஞான முனிவர் தொல்காப்பியச் சூத்திரவிருத்தியுள் வேறு உரை கூறினர். அவ்வுரை வருமாறு:- "(ஓத்தினிறுதிக்கட் புறனடை) காப்பினொப்பின்.... என்றற்றொடக்கத்தவாக ஆண்டுக் கூறிய பொருளே யன்றி, இன்னும் வேற்றுமைப்பொருளை விரித்துக் கூறுங்கால், அக் காப்பினொப்பின் என்றற்றொடக்கத்துத் தொகைச் சொற்களின் வேறுபட்டுப் பொருளொடு புணர்ந் திசைக்கும் எல்லாச் சொற்களும் ஈண்டுக் கோடற்குரிய வென்பர் என்றவாறு. முடிக்குஞ் சொல்லைப் பொருள் என்றார், தொடர் மொழிப் பொருள் அதன் கண்ணதாகலின். காப்பினொப்பின் ..... முதலிய சொற்கள் புரத்தல் ஓம்புதல் தேர்தல் நிகர்தல் என்றற் றொடக்கத்துப் பொருள் புணர்ந்திசைக்குஞ் சொற்களை யெல்லாம் கருத்துவகையான் உள்ளடக்கித் தொகுத்த மொழி யாய் நிற்றலின் அவற்றைத் தொகையென்றும் `அதனினியறல்' `அதற்றகுகிளவி' என்றற்றொடக்கத்துத் தொடர்மொழிகளின் ஈற்றுச் சொற்களே ஈண்டுக் கொள்ளப்படும் என்பது விளக்கிய `ஈற்றினின்றியலுந் தொகை' என்றும், `ஊரைப்பேணும்' `ஊரைத் தாங்கும்' என்றாற்போலப் பிறவாற்றான் வருவனவுங் காத்தற் பொருளே பயந்து நிற்றலின் அவையுந் தழுவுவதற்குப் `பல்லாறாக' என்றுங் கூறினார்" என்பதாம். இவ்வுரைகளுள் எவ்வுரை பொருத்தமுடைய தென்பதே ஈண்டு நாம் ஆராய்வது:- ஆசிரியர், "இன்றில வுடைய வென்னுங் கிளவியும்" என்புழிப் போலச் சொற்பற்றியோதாது "அன்மையி னின்மையின்" என்புழிப் போலக் "காப்பினொப்பின்" எனப் பொருள் பற்றி யோதினா ராகலின், காவன் முதலிய பொருள்பற்றி வருஞ் சொல்லெல்லாம் கொள்ளப்படுமாதலின், அதற்கென வேறொரு சூத்திரஞ் செய்தார் எனக் கோடல் மிகைபடக் கூறலாமாதலின் ஆசிரியர்க்கது கருத் தன்றென்பது. கருத்தாயின் "வேற்றுமைத் தொடரி னீற்றுமொழி நிலவயின் - பல்லாறாகப் பொருள் புணர்ந்திசைக்கு - மெல்லாச் சொல்லு முரிய" என ஆசிரியர் விளங்கச் சூத்திரிப்பர்மன்; அங்ஙனஞ் சூத்திரியாமை யானும் அவர்க்கது கருத்தன்று என்பது பெறப்படும். படவே முனிவருரை பொருத்த மென்பதூஉம், சேனாவரையர் முதலியோருரையே பொருத்த மென்பதூஉம் பெறப்படும். சேனாவரையரும் "காப்பி னொப்பின் எனப் பொருள் பற்றியோதினமையானே அப்பொருள் பற்றிவருவன வெல்லாங் கொள்க" எனக் கூறுதல் காண்க. அன்மை முதலாயின தன் பொருட்கண் ஒருவாய்பாடே உடையன. காப்பு முதலாயின தன் பொருட்கண் பல வாய்பாடுடையன. இதனைத் தொல்-சொல்-215ஆம் சூத்திரத்துச் சேனாவரையருரை நோக்கி யுணர்க. இங்ஙனமே பொருள்பற்றி நன்னூலாரும், "ஆக்கலழித்த லடைத னீத்த லொத்த லுடைமையாதி யாகும்" எனப் பொருள் பற்றி யோதிப் புறனடைகூறாமையு முணர்க. இன்னும், முனிவர் தம்முரையுள் "வேற்றுமைப் பொருளை விரிக்குங் காலை" என்பதற்கு, முதற்கூறிய பொருள்களன்றி, "இன்னும், வேற்றுமைப்பொருளை விரிக்குமிடத்து" என்று பொருளுரைத்து, ஈண்டுப் பொருளென்றது வருமொழியை என்று விரிவுரைத்துள்ளார். அங்ஙனேல் `வேற்றுமைப் பொருளை விரிக்குங்காலை' என்பதற்கு வேற்றுமைப் பொருளைத் தரும் வருமொழிகளை இன்னும் விரிக்குமிடத்து என்பதே பொருளாம். அங்ஙனம் பொருள் கொள்ளுங்கால், ஈற்றுநின் றியலுந் தொகை வயின்... எல்லாச் சொல்லும், காப்பு முதலாக முன் சொன்ன பொருண்மேல் வந்தனவன்றி, இன்னும் விரிக்கப்பட்ட வேற்றுமைப் பொருளைத் தரும் வருமொழி களன்றாதலின் அவ்வுரை முன்னொடு பின் முரணுதலிற் பொருந்தாதென்பது. அற்றன்று; இன்னும் விரிக்கப்படும் மொழியென்றது ஈற்று நின்றியலுந் தொகை மொழிகளாகிய அம்மொழிகளையே யாதலிற் பொருந்தும் எனின் ஈற்றினின்றியலுந் தொகைமொழி யென்றாவது, வேற்றுமைப் பொருள் என்றாவது ஒன்றுகூறவே அமையும்; இரண்டுங் கூற வேண்டா என்பது ஈற்றுநின்றியல்வது தொகை மொழி யென்பதை விளக்கக் கூறினாரெனின், அத்தொகையெனச் சுட்டி மொழியவே யமையும். ஈற்றுநின்றி யலும் என்பது வேண்டாவாம். அன்றியும் தொகைமொழி யென்பதே ஆசிரியர்க்குக் கருத்தாயின், அங்ஙனம் விளங்கக் கூறியிருப்பர்மன்; அங்ஙனங் கூறாமையானும் அவர்க்கு அது கருத்தன்றென்பது பெறப்படும். இன்னும் வேறுவேறு பொருளைக் கூறலன்றி, ஒரு பொருண் மேல்வரும் பலசொல்லு மப்பொருளே தருதலின் அவற்றை விரித்தல் பயனில் கூற்றா மாதலின், அவற்றை யாசிரியர் கூறியிருப்பரென்பதூஉம் கொள்ளத்தக்க தொன்றன்றாம். கூறினும், யாம் முன் சொன்ன வாறு "வேற்றுமைத் தொடரி னீற்று மொழி நிலைவயின் அம்மொழிப் பொருண்மேல் வரும் எல்லாச் சொல்லும் வருதற்குரிய" என்றே கூறுவாரன்றி விரிக்குங்காலை யெனவுங்கூறார். ஆதலானும் அவ்வுரை ஆசிரியர் கருத்தொடு முரணும் என்பது. அங்ஙனேல், சேனாவரையருரைக்கண் முனிவர் நிகழ்த்திய தடைகள் பொருந்தாதெனக் காட்டிய பின்னன்றோ அவ்வுரை பொருந்துமெனின், முனிவர்தடை பொருந்தாதன வாமாற்றையும் அத்தடையை முன்னர்த் தந்து பின்னர்க் காட்டுதும். முனிவர் தடை வருமாறு:- வேற்றுமைத் தொகையை விரிக்குங்காலை என்னாமை யானும், வேற்றுமைத்தொகை விரியுமாறு வேற்றுமையியலுட் கூற ஓர் இயைபின்மையானும், வேற்றுமையியலுள் உருபும் பொருளும், உருபு நிற்குமிடமும் மாத்திரையே கூறியொழிந் தாரன்றி, வேறொன்றுங் கூறாமையானும், வேற்றுமைத்தொகை விரியுமாறு "வேற்றுமையியல்" என்பதனாற் பெறப்படுதலின் வேறு கூறவேண்டாமையானும், வேண்டுமெனின் உவமைத் தொகை விரியுமாறுங் கூறவேண்டுதலானும் அச்சூத்திரத்திற்கது பொருளன் றென்பது. இத்தடை பொருந்தாமையை முறையே காட்டுதும்:- தொகையைப் பொருளென வாசிரியர் ஈண்டன்றி "ணகார விறுதி வல்லெழுத் தியையின் டகாரமாகும் வேற்றுமைப் பொருட்கே" (தொல்-புள்ளி-7) என்றும், "னகார விறுதி வல்லெழுத் தியையிற்-றகார மாகும் வேற்றுமைப் பொருட்கே" (தொல்-எழுத்-புள்ளி-37) என்றும். "யகர விறுதி வேற்றுமைப் பொருள்வயின், வல்லெழுத் தியையி னவ்வெழுத்து மிகுமே" (தொல்-புள்-62) என்றும், "லனவென வரூஉம் புள்ளி யிறுதிமுன்.... வேற்றுமை குறித்த பொருள்வயினான" (தொல்-குற்றி-75) என்றும், ஆளுதலின், தொகையைப் பொருளென்றல் பொருந்து மென்பதூஉம், தொகை விரிப்புழி மயங்கும் மயக்கம் வருமோத்தினாற் கூறுதலின் அதற் கியைய ஈண்டுத் தொகைவிரிக்குமாறு கூறினாரெனச் சேனாவரையரே இயைபு கூறியிருத்தலினாலும், அன்றியும், வேற்றுமை யியலுட் கூறியது விரியிலக்கணமே யாகலின் அதனோடியையத் தொகையிலக்கணமன்றித் தொகைவிரியுங் காற் படுமிலக்கணமும் கூறுதலும் பொருந்துமாதலினாலும், "வேற்றுமையியல" என்பதனால் வேற்றுமைத் தொகையின் இலக்கணமுணர்த்தியதன்றித் தொகைவிரியிலக்கணங் கூறிய தன்றா மாதலானும், உவமைத் தொகையை விரிக்குங்கால் வேறுசொற்பெய்து விரித்தல் வேண்டா வாகலானும் அத் தடைகள் பொருந்தாமை காண்க. உவமைத் தொகைக்குச் சொற்பெய்து விரித்தல் ஏன்வேண் டாவெனின், `பவளவாய்' என்பதை விரிக்குங்கால், பவளம் போலும் வாய் என விரிந்து பொருட் பொருத்தமுறத் தழுவி வேறுசொல் வேண்டாது உவம உருபு முடிந்து நிற்றலின் என்பது. அற்றேல் `பவளம் போலுஞ் சிவந்த வாய்' என ஆண்டுச் சொற் பெய்து விரிக்கப்படுமெனில் அற்றன்று; ஆண்டுப் பொதுத் தன்மை இதுவென வுணர்த்தற்குச் சிவந்த என வொருசொல் விரிக்கப்பட்ட தன்றி உவமவுருபும் பொருளு மியையாமையின் விரிக்கப்பட்ட தன்றாகலான் அது பொருந்தாதென்பது. வேற்றுமைத் தொகையோ வெனின் `பொற்றொடி யரிவை' என்ற விடத்து `பொற்றொடியை அரிவை' என உருபு மாத்திரம் விரிக்குங்கால் வருமொழியோடி யைந்து பொருள் விளக்காமை யின் அதற்கு அணிந்த என ஒருசொல் விரித்து முடிக்கவேண்டு மென்பது. இதுபற்றியே ஆசிரியர் "வேற்றுமைப் பொருளை விரிக்குங்காலை... பொருள் புணர்ந் திசைக்கும் எல்லாச் சொல்லு முரிய" வென்றார். பண்புத் தொகையில் விரிக்கப்படுவதுளதேல் அது தன்னின் முடித்தலாற் கொள்ளப்படும். அங்ஙனேல், அன்மொழித் தொகைபோல விரிக்கப்படு மென்ற தென்னையெனின், அன்மொழித்தொகை பல்லாற் றானும் பொருள் புணர்ந்திசைக்குஞ் சொல்லானன்றி விரியாமை யாவரு முணர்ந்ததொன்றாகலின் அதனை முதற்கணெடுத்தோதி அவ் விதியை இதற்குங் கொண்டா ரென்பது. அற்றேல் அன்மொழித் தொகை, விரிதற்கு விதி முன் சொல்லவில்லையே யெனின் அவ்விதியையும் அநுவாதமுகத்தானே ஈண்டுக் கொள்ள வைத்தாரென்பது. இன்னோரன்ன அநுவாதத்தாற் பெறவைத்தல் பொருத்த மன்றெனின், அற்றன்று; முன் கூறப்படாததாயினும், ஆன்றோர்க் கெல்லா முடன்பாடாய தொன்றைத் தம் நூலுள் அநுவதித்துக் கூறுதலும் ஆசிரியர்க்கு வழக்காதலின் அது குற்றமாகாதென்க. ஆசிரியர்க்கு வழக்காதல், "அகரமுத னகரவிறு வாய் முப்பஃதென்ப" எனவும், "ஓரள பிசைக்கும் குற்றெழுத்துத் தென்ப எனவும், ஈரள பிசைக்கும் நெட்டெழுத் தென்ப" எனவும், `அகரமுத னகரவிறுவாய்' `ஓரளபு', `ஈரளபு' என்பவற்றை அநுவாதத்தாற் பெறவைத்தலா னறியப்படும். அதனாற் பெறவைத்தல் முனிவர்க்கு முடன் பாடாதல், "அகர முதலிய முப்பதும் நெடுங்கணக்கினுட் பெறப்படுதலின் அவற்றை விரித்தோதாது முதலு மிறுதியு மெடுத்தோதி அநு வதித்தார்" என முதற் சூத்திர விருத்தியுட் கூறலா னறியப்படும். அநுவாத முகத்தாற் கூறாது அன்மொழித் தொகையையும் விதிமுகத்தாற் கூறவமையாதோ வெனின், அமையுமாயினும் விதிமுகத்தாற்கூறின் ஈண்டு அதிகரித்த பொருள் வேற்றுமைத்தொகை யென்பது பெறப்படாமையான், விரிக்கப்படுதலை வேற்றுமைத் தொகையுள் எல்லாத் தொகையும்? பெறாமையின் அஃது அன்மொழித் தொகைக்கே நியதி என்பதுணர்த்தற்காகவும் அங்ஙனங் கூறினார் என்பது வேற்றுமைத்தொகையுள் எல்லாம் பெறாமையானன்றே ஆசிரியர் `உரிய' என்றார் என்பது. ஆகலின், சேனாவரையர் கூறியவாறு அன்மொழித் தொகையையும், வேற்றுமைத் தொகையையும் விரிப்புழி வரும் வேறுபாடு இச்சூத்திரத்தாற் கூறியதென்பதே பொருத்தமாதல் தெளிக. இனி, `வேற்றுமையியல' என்பதனால் விரியிலக்கணம் பெறுதலின் வேறு கூறல்வேண்டா வென்னும் முனிவருரை யையும் ஆராய்தும்:- முனிவர், `வேற்றுமைத் தொகையே வேற்றுமையியல' என்னுஞ் சூத்திரத்திற் குரைத்த பொருளாவது:- வேற்றுமைத் தொகை விரியுங்கால் தொகாநிலை வேற்றுமை யியல்பினவாய் விரியும்; எனவே அங்ஙனம் விரியுமியல்புடையது வேற்றுமைத்தொகை என்றதாயிற்று; என்பதும் தொகாநிலை வேற்றுமையியல்பாவதென்னையெனின், கிழமைப்பொருட்கண் வந்த ஆறாவதொழித்து ஒழிந்த உருபுகளெல்லாம் காரகப் பொருளவாகலின் வினை கொண்டன்றி முடியாமை; என்பதுமே. தொகைகள் இவையெனக்கூறி, முறையே அவற்றின் இலக் கணங்கூறுவான் புகுந்த ஆசிரியர் இவ்வாறு தொகுவது வேற்று மைத்தொகை என அதனியல்பு உணர்த்தாது, அது விரியுமாறு கூறி அம்முகத்தானே வேற்றுமைத்தொகையி னிலக்கண முணர்த்தினாரென்றல் மலைவுகூற்றாமாகலானும், தொகை யிலக்கணங் கூறவறியாது ஆசிரியர் இடர்ப்பட்டுக் கூறினா ரெனவு மமையு மாகலானும், வேற்றுமையாய் விரியுமென்றன்றி, இயல்பாய் விரியுமென்று கூறாராகலானும், உருபு வினை கொண்டு முடிதலே அதற்குச் சிறப்பிலக்கணமாய் முடியுமன்றி, உருபுவிரிதல் அதற்குச் சிறப்பிலக்கணமாய் முடியாமையானும், வினைகொண்டு முடிதல் ஆறாவதன்கட் செல்லாமையானும், ஆசிரியர் விரிப்புழி எனவும் தொகாநிலை வேற்றுமையெனவும் விதந்து கூறாமையானும தொகாநிலையென்பது தொகையே என்பதன்கண்வரும் பிரிநிலை யேகாரத்தாற் பெறப்படுமெனின், அவ்வேகாரம் "னஃகானொற்றே" என்புழியும், "அளபெடைப் பெயரே" என்புழியும் வரு மேகாரங்கள் போல அசைநிலை யாவதன்றிப் பிரிநிலை யாகாமையானும், ஆகுமெனின், தொகைநிலை வேற்றுமை, தொகாநிலை வேற்றுமை யென வேற்றுமையின் விகற்பமுணர்த்துவான் புகுந்தது இச்சூத்திர மாகுமன்றி, தொகையிலக்கண முணர்த்துவான் புகுந்ததன்றாய் முடியுமாதலானும். வினைகொண்டு முடியவிரிதலாகிய அவ் விலக்கணம், பெயரும் பெயருந்தொக்க வுவமைத் தொகைக்கட் செல்லாமையானும், வழிநூலாசிரியராகிய நன்னூலாரும் வேற்று மைத்தொகையாவது ஆறுருபும் வெளிப்படலில்லது எனக் கூறுதலினாலும் அவ்வுரை வலிந்து கொண்டதொரு போலியுரை யென்க. அன்றியும், "அளபெடைப் பெயரே யளபெடை யியல" என்பது போல "வேற்றுமைத் தொகையே வேற்றுமையியல" என மாட்டே றாகச் சூத்திரஞ் செய்திருத்தலின், அச்சூத்திரத்திற்குப் போல இச்சூத்திரத்திற்கும் பொருள் கோடல் பொருந்துமன்றிப் பிறவாறு பொருள்கோடலும் பொருந்தாது. அச்சூத்திரத்திற்குப் போலப் பொருள் கொள்ளுங்கால், வேற்றுமைத் தொகை, தொகாநிலை வேற்றுமை விரியுமாறுபோல விரியும் என்றே பொருள்கொள்ள வேண்டும். அங்ஙனம் கொள்ளுங்கால், பொதுத்தன்மையாகிய விரிதல், தொகாநிலைவேற்றுமைக்குச் செல்ல மாட்டாதாதலின் அவ்வாறு கோடலும் பொருந்தா தென்பது. மாட்டேற்றை வினை விரிதலளவிற்கே கோடலா மெனின் அது தொகையிலக்கண மன்றாதலின் அதுவும் பொருந்தாது. ஆதலானும் இச்சூத்திரத்திற்குச் சேனாவரையர் முதலியோ ருரையே பொருத்தமாதல் தெளிவாம். ஆகவே தொகை விரியிலக்கணம் இச்சூத்திரத்தாற் பெறப்படா மையின் "வேற்றுமைப் பொருளை விரிக்குங் காலை" என்னுஞ் சூத்திரத்தினால் அதனைக் கூறினாரென்பதே பொருத்தமாதல் காண்க. இன்னும் ஆசிரியர் தொகையிலக்கணங் கூறுங்கால் வேற்றுமைத் தொடர்மொழியோடு மாட்டெறிதலின், உருபோடு விரியும் மொழிகளையும் முன்னர்க் கூறியே மாட்டெறிய வேண்டு தலினாலும், ஆண்டுக் கூறுதற் கோரிடமின்மையானும், தொகை விரியுங்காற்படுமிலக்கணமாதலினாலும், தொடர்மொழியிலக் கணத்தோடு பொருந்த வேற்றுமையியலின் ஈற்றிலே வைத்தார் எனக் கோடலும் பொருத்தமாதல் காண்க. இனித் தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பாசிரியர் தாம் செந்தமிழ்-26ஆந் தொகுதியில் (பக்-340-343) வெளிப்படுத்திய குறிப்பினுள் வரும் இச் சூத்திரக்குறிப்பின்கண் மேலுஞ் சேனா வரையர் "இதனை `வேற்றுமைத் தொகையே உவமைத் தொகையே' என்னுஞ் சூத்திரத்தின்பின் வைக்கவெனின், அதுவுமுறையாயினும் இனி வருஞ் சூத்திரங்களான் வேற்றுமைத் தொகைவிரிபற்றிய மயக்கமுணர்த்துதலான் ஆண்டுப்படுமுறை யுணர்த்துதல் ஈண்டு மியைபுடைத் தென்க" என்று கூறியுள்ளார். இது ஆராயத்தக்கது. என்றும், "வேற்றுமை மயங்கியலில், தொகை தொக, தொகா என்ற சொற்கொண்ட சூத்திரங்கள் ஐந்தே; அவைகளுள், ஓம்படைக் கிளவி என்னுஞ் சூத்திரத்துள்ள தொகை என்னுஞ் சொல்லைத் தவிர மற்றைச் சூத்திரங்களிலுள்ள தொகை, தொக, தொகா என்ற சொற்கள் சமாசனைக் குறிக்கின்றனவா? அல்லவா? என்பதை அவ்வச் சூத்திரங்களுட் கூறுவோம். எவ்வாறாயினும் இவ் வைந்து சூத்திரங்களுள் ஒன்றிலாவது வேற்றுமைத் தொகையை விரிக்குமிடத்து வேற்றுமையேயன்றி அன்மொழிப் பொருளோடு புணர்ந்துவரும் எல்லாச்சொல்லும் உணர்த்தப்படவில்லை. ஆதலால் சிவஞான முனிவர் கூறிய பொருளே பொருத்தமானதாகக் தோன்றுகின்றது" என்றுங் கூறியுள்ளார்கள். அவர்கள் கூறியவாறு அச்சொற்கள் தொகைப்பொருளை யுணர்த்துகின் றனவா? அல்லவா? என்பதையும் ஈண்டு ஆராய்தும். ஆசிரியர் தொல்காப்பியனார் வேற்றுமை மயக்கத்தைத் தம்பொருளிற்றீராது பிறிது பொருட்கண்வரும் பொருண் மயக் கமும், தம்பொருளிற்றீர்ந்து பிறிதுபொருட்கண்வரும் உருபு மயக்கமுமென இரண்டாக வகுத்துக் கூறியுள்ளார். அங்ஙனங் கூறுங்காற் பொருண்மயக்கத்தைத் தொகையிலும் தொடரினும், உருபுமயக்கத்தைத் தொடரினும் வைத்துணர்த்தி யுள்ளார். பொருண்மயக்கத்துட் சிலவற்றைத் தொகையிலும் சிலவற்றைத் தொடரிலும் வைத்து உணர்த்துவான் ஏன்? யாவற்றையுந் தொட ரில் வைத்துணர்த்தினாலென்னை எனின், அங்ஙன முணர்த்தின் அம் மயக்கந் தொகைக்கண் எவ்வாறாமென மாணக்கனுக்கு ஐயம் நிகழும். ஆதலின் அவ்வையம் நீக்குமாறு தொக்கு வருவனவற்றைத் தொகைக் கண்ணும், தொகாது வருவனவற்றைத் தொடர்க்கண்ணும் வைத்துணர்த்தினாரென்பது. இதுபற்றியே சேனாவரையரும், "இதன திதுவிற் றென்னுங் கிளவியும்" என்னுஞ் சூத்திரவுரைக்கண் "இதுவும் வேற்றுமை மயக்கமாதலின் மேற்கூறப்பட்டவற்றோடு ஒருங்கு வையாது இத்துணையும் போதந்துவைத்தது என்னை யெனின் அது தொகைவிரிப்ப மயங்குமதிகாரம்; இது தொகை யல்வழி யானையதுகோடு கூரிது என்னுந் தொகைப்பொருள் சிதை யாது யானைக்குக் கோடு கூரிது என நான்காவதாண்டுச் சென்று நின்றதாகலான் அவற்றோடு வையாராயினார் என்பது" எனக் கூறினாரென வுணர்க. இன்னும் வடமொழிக்கட் போலன்றித் தமிழ்மொழிக்கட் பெயரோடு தொழிலுந் தொகுமாதலின் அவ் வழக்குப்பற்றியும் மாணவர்க்கு இனிது விளங்கத் தொகைக்கண் வைத்துணர்த்தினாரெனவு முணர்க. ஆசிரியர் தொகைக்கண் வைத்தே இம்மயக்க முணர்த்தினாரென்பது "கரும மல்லாச் சார்பென் கிளவிக் - குரிமையு முடைத்தே கண்ணென் வேற்றுமை" என்னுஞ் சூத்திரமுதலாக "அச்சக் கிளவிக் கைந்து மிரண்டு - மெச்ச மிலவே பொருள் வயினான" என்ப திறுதியாகவுள்ள சூத்திர விதிகளெல்லாம் தொகைவிரி மயக்கத்திற்கேற்றவாறு வருத லானும், "உருபுதொடர்ந் தடுக்கிய வேற்றுமைக் கிளவி - யொருசொன் னடைய பொருள்சென் மருங்கே " என்னுஞ் சூத்திர முதலாக "ஏனை யுருபு மன்ன மரபின-மான மிலவே தொன்முறை யான" என்னுஞ் சூத்திரமிறுதியாக உள்ள சூத்திரங்களெல்லாம் தொடர் மொழிக்கட் படுவனவற்றையே விதிப்பனவாக வருத லானும் அறியக்கிடத்தல் காண்க. இனி, உரையாசிரியர்க்கும் பொருண்மயக்கத்தைத் தொகைக் கண்ணும் வைத்து ஆசிரியர் உணர்த்தினாரென்பதே கருத்தாதல் "இரண்டன் மருங்கி னோக்க னோக்க - மிரண்டன் மருங்கி னேதுவு மாகும்" என்னுஞ் சூத்திரவுரையுள், "வானோக்கி வாழும்" என்னுந் தொகையையே உதாரணமாகத் தந்து விரித்துக்காட்டலானும், "ஓம்படைக் கிளவிக்கு" என்னுஞ் சூத்திரவுரையுள் "தொகை வருகாலை" என்பதை யாண்டும் ஒட்டிக்கொள்க என்பதனானும், "குத்தொக வரூஉம்" என்னுஞ் சூத்திரவுரையுள் `நாகர்பலி என்பது தொக்கு நின்றது ஆண்டு ஆறாவதுமாக' வெனக் கூறியவதனானும் அறியப்படும். அன்றியும் உரையாசிரியர்க்கது கருத்தன்றாயின் சேனாவரையர் அவரை யாண்டாயினும் மறுத்துக் கூறியிருப்பர். அங்ஙனங் கூறாமை யானும் உரையாசிரியர்க்கும் அதுவே கருத்தாதல் துணிபு. ஆதலின் தொகை தொக தொகா என்பன சமாசனையே உணர்த்தி வந்த பதங்களென்பது துணிபாம். நிற்க. இனித் தொகை முதலிய பதங்கள் சமாசனையே உணர்த்தி வந்தனவென்பதை யாம் முற்கூறியவாறு அவ்வச் சூத்திரங்களுள் வைத்து ஆராய்ந்து காட்டுதும். அதுவென் வேற்றுமை உயர்திணைத் தொகைவயின் அதுவெ னுருபுகெடக் குகரம் வருமே. என்னுஞ் சூத்திரத்துள் வருந்தொகை என்பது உரையாசிரியர் மதப்படி சம்பந்தப்படுதல் என்னும் பொருளில் வருவதாகக் குறிப் பாசிரியர் கூறியுள்ளார். உரையாசிரியரோ, முதலடிக்கு, ஆறாம் வேற்றுமைக்குரிய முறைப்பொருள் உயர்திணைக்காயின் எனக் கருத்துரை கூறியுள்ளார்; அன்றி, அதன் பதப்பொருள் கூறினா ரல்லர். ஆதலின் உயர்திணைக்காயி னென்பதற்கு உயர் திணைத் தொகைக்கண் வருமாயின் என்பதே பொருளாகும். முறைப் பொருள், உயர்திணைத் தொகைக்கண்ணும் அஃறிணைத் தொகைக்கண்ணும் வருதலின் அவ்வாறு கூறினார். குறிப்பாசி ரியர் கூறியவாறு சம்பந்தப்படுதல் என்னும் பொருளிற் றொகை யென்பது வந்ததாயின், அது விரியுங்கால், உயர்திணையொடு தொகைவயின் என விரிந்துநிற்றல்வேண்டும். அவ்வாறு நில்லா மையின் அது பொருந்தாதென்பது. அன்றியும், சம்பந்தப் பட்ட விடத்து என்று குறிப்பாசிரியர் கூறியுள்ளார். அங்ஙனம் பெய ரெச்சப் பொருள்படுதற்குத் 'தொகைவயின்' என்ற பாடம் பொருந் தாது. உயர்திணையொடு தொகுவயின் என்றிருத்தல் வேண்டும். அங்ஙனம் ஆசிரியர் சூத்திரியாமையின் அவர் கருத்து நிரம்பா தென்பது. அன்றியும், தொகை என்பது உரையாசிரியர் கருத் தன்றாயிற் சேனாவரையர் மறுத்திருப்பர். மறுக்காமை யானும் அவர்க்கும் அதுவே கருத்தென்பது பெறப்படும் ஆதலிற் றொகை சமாசமென்பதே ஆசிரியர் கருத்தாதல் துணிபு. அங்ஙனேல் உயர்திணைத் தொகைக்கண் அது உருபு வருவது வழு வென்பது பெறப்படாதன்றோவெனின், நன்று சொன்னாய்! தொகை என்னாது உயர்திணைத்தொகை என்றதனால் அது வழுவாதல் பெறப்படுமென்பது. உயர்திணைத் தொகை என்பது உயர் திணைப் பொருளோடு தொக்க தொகை என்றாவது விரியும். அங்ஙனம் விரியவே அது உருபு வாராமைக்குக் காரணம் உயர் திணைப்பொருளோடு தொக்கமை என்பது பெறப்படும். ஆதலின் வழுவென்பது பெறப்படாமை யாண்டையது என்பது. உயர் திணைத் தொகை என்பது - பின்மொழி நிலையல். "உயர் திணை யும்மைத் தொகைபல ரீறே" என நன்னூலாரும் இங்ஙனமே பின் மொழி நிலையலாகக் கூறுதல் காண்க. இதுபற்றியே சேனா வரையரும், "உயர்திணைத் தொகைவயி னதுவெ னுருபுகெடக் குகரம் வருமென்றதனால், ஆறனுருபு அஃறிணைப்பால் தோன்ற நிற்றல் பெற்றாம்" எனக் கூறியதூஉமென்க. உயர்திணைத் தொகைக்கண் அதுவென் உருபுகெடக் குகரம் வருமெனவே அஃறிணைத் தொகைக்கண் இரண்டும் வரும் என்பது பெற்றாம். இரண்டும் வருமென்பது "முறை கொண்டெழுந்த பெயர்ச் சொற் கிளவியும்" என்பதனாற் கூறுப. ஆதலிற் தொகைக்கண் எவ்வுருபு விரித்தாலென்? என்னும் ஆnக்ஷபம் பொருந்தா தென்பது இனி, ஓம்படைக் கிளவிக் கையு மானும் தாம்பிரி விலவே தொகைவரு காலை. என்பது சூத்திரம், இச்சூத்திரக் குறிப்பில், `புலிபோற்றிவா' என்னுந் தொடர்க்குப் பொருள், சந்தர்ப்பத்திற்குத் தக்கவாறு `புலியைப் போற்றிவா' என்றாவது `புலியாற் போற்றிவா' என்றாவது கொண்டு விடலாம் என்று குறிப்பாசிரியர் கூறினார். இது செயப்படு பொருட்கண் ஏதுப்பொருள் வந்த மயக்கமேயன்றிப் பொருளால் வேறுபாடுடையதன்று. ஆதலிற் சந்தர்ப்பத்துக் கேற்றவாறு கொண்டுவிடலாம் எனக் குறிப்பாசிரியர் கூறிய கருத்து நன்கு புலப்படவில்லை. புலிபோற்றிவா என்பது தனக்குத் தீங்கு செய்யாமற் போற்றி வரப்படுதல் பற்றிப் புலி செயப்படு பொருளாயும்; போற்றி வருதற்குக் காரணமாதல்பற்றி ஏதுப் பொருளாயும் கொள்ளப்படுதலால் இரண்டுபொருளும் ஒரு பொருட்கண்ணே வந்தனவேயாம். புலியைப்போற்றிவா என்னும் இரண்டாவதற்குப் பொருள் `உனக்குத் தீங்கு செய்யாமற் புலியைப் போற்றிவா' என்பதன்றி, வேறொன்று, அதற்குத் தீங்குசெய்யாமற் புலியைப் போற்றிவா என்பதன்று. ஆதலால் இதன்கட் சந்தர்ப்பத்தாற் கொள்ளக்கிடந்த பொருள் யாது மில்லை. பொருள் மயங்காது உருபுமாத்திரம் மயங்கியதாகக் கொள்ளிற் குறிப்பாசிரியர் பொருள் பொருந்தும். இது பொருண் மயக்கமாதலிற் பொருந்தாது. ஆதலின் இச்சூத்திரம் எற்றுக்கென்னும் ஆnக்ஷபமும் ஈண்டுத் தோன்றாது. இதன்கண் தொகை என வந்தமையே குறிப்பாசிரியர் வெறுப்புக்குக் காரணம்போலும். இனி, குத்தொக வரூஉங் கொடையெதிர் கிளவி அத்தொகை யாறற் குரித்து மாகும். என்பது சூத்திரம். இச்சூத்திரந் தொகைவிதியன்றென்பதை மாற்றுதற்காகப் போலும் முற்சூத்திரங்களால் `நாகர்க்குப் பலி கொடுத்தான்', `நாகர்பலிகொடுத்தான்' என்று இரண்டுவகை யாகப் பிரயோகம் வரலாமென்றுதெரிய, நாகரது பலிகொடுத் தான் என்றும் வரலாமென்பதை இச்சூத்திரம் விதிக்கின்றது என்று குறிப்பாசிரியர் கூறினார். இச்சூத்திரத்தின் முதலடிக்குக் குவ்வுருபுதொகும்படி வருகின்ற கொடையெதிர் பொருண் மையை யுணர்த்துந் தொகைச்சொல் என்று பொருள் கொள்ளப் படும். கொடையெதிர் பொருண்மையில் வருந்தொகை எனவே அப்பொருட்கண் தொக்க தொகை என்பது கருத்தாயிற்று. ஆகவே கொடையெதிர்கிளவி என்பது ஈண்டுக் கொடுத்தலென் னும் வருமொழியைக் குறித்தன்று என்பது பெற்றாம். கொடை யெதிர்தல் என்பாற்குச் சேனாவரையர் கொடையை விரும்பி மேற்கோடல் என்று பொருள் கூறியதனாற் கொடையெதிர்தல் நேர்தல் என்பது பெறப்படும். அன்றியும் நச்சினார்க்கினியர் நாகர்க்கு நேர்ந்தபலி எனவே அது பிறர்க்காகாது அவருடைமை யாயிற் றாதலின் ஆண்டு ஆறாவதும் உரித்தாகப் பெற்றது. சாத்தற்கு நேர்ந்த சோறென்புழி அது பிறர்க்குமாதலின் ஆண்டு ஆறாவது நில்லாது. தெய்வமல்லாதாரினுஞ் சிறந்தார்க்கு நேர்ந்ததேல் ஆண்டு ஆறாவதுவரும் என்பதுணர்க என்று விளங்கக் கூறியதாலும் அது பெறப்படும். உரையாசிரியர்க்கும் இதுவே கருத்தாதல் நாகர் பலி கொடுத்தான் என உதாரணங்காட்டாது நாகர் பலி என உதாரணங்காட்டியதா லறியப்படும். அவர் ஆண்டு நாகர்க்குப் பலி என ஆறாவது தொக்குநின்றது என்றது குத்தொக என்பதை விளங்கவைத்ததே யாம். அன்றிக் குறிப்பாசிரியர் கருத்தின்படி தொக்குவிரியும் என்பதை உணர்த்தக்கூறியவ ரல்லர். இன்னும் கொடையெதிர்தல் நேர்தல் என்பதே அவர்க்குங் கருத்தாதல், "நாகர்பலி என்பது அவர்க்குத் திரிபில்லாமையின் நாகரது பலியென உடைமைக் கிழமை செப்பலாயிற்று" என அவர் கூறியதனா லறியக்கிடக் கின்றது. இக்கருத்தை யோர்ந்தே சேனா வரையர் `நாகர்க்குக் கொடுத்தலை விரும்பி மேற்கொண்ட வழியவர்க் கஃதுடைமை யாதலிற் கிழமைப் பொருட்குரிய உருபாற் கூறினும் அமையும் என்றவாறு' என விளங்கக் கூறினார். இதனை யுணராது குறிப்பாசிரியர் பாக்ஷhந்தரப் பொருளென்றது தவறே யாம். உரையாசிரியர் `கொடை யெதிர்ந்து நின்றவழி' என்றது கருத்துப்பொருளேயாம். அதற்குக் கொடையெதிர் பொருளுற்று நின்றவழி என்பது பொருள். நாகர்க்குப் பலி கொடுத்தான் நாகரது பலிகொடுத்தான் என்பது தொடர்மொழி மயக்க மாதலின் அது `ஏனை யுருபுமன்ன மரபின' என்னுஞ் சூத்திரத்தான் முடிக்கப்படும். அச்சூத்திரத்தின்கண் `அவட்குக் குற்றேவல் செய்யும் அவளது குற்றேவல் செய்யும்' எனச் சேனாவரையரும் உதாரணங் காட்டுதல் காண்க. நாகர்பலி என்பது தொக்கவரு மன்றோ வெனின், ஆண்டுக் குவ்வுருபுக்கு முடிபு கொடுத்தான் என்பதன்று; நாகர்க்கு நேர்ந்த பலி என விரிதலின் நேர்தலே யதற்கு முடிபாம். இது போல்வனவற்றை மத்தியபத லோபன் என்றும் நாகர்க்குப் பலிகொடுத்தான் என்பது போல்வனவற்றை உபபதவிபத்தி யென்றும் பிரயோக விவேக நூலாரும் கூறுதல் காண்க. ஆதலின் இதனுள்ளும் தொக என்பது சமாசனைக் குறித்து வந்ததென்பதே துணிபாம். இனி, அச்சக் கிளவிக் கைந்து மிரண்டு மெச்ச மிலவே பொருள்வயி னான. என்பது சூத்திரம். இதன்கட் பொருள்வயினான என்பதற்குப் பொருட்கண் என்று உரையாசிரியரும், ஏனையோர் வேற்றுமை தொக அதன்பொருள் நின்றவழி என்றும் உரைத்தனர்; இவற்றுள் உரையாசிரியர் பொருளே பொருத்தமுடைத் தென்று குறிப் பாசிரியர் கூறியுள்ளார். உரையாசிரியர் உரைக்கண் அப்பொருள் காணப்படவில்லை. ஆயினும், அப்பொருள், தொகை என்பதை விலக்காது; ஏனெனின், "தொகைவரு காலை" என்பதை யாவற்றிற்குங் கூட்டுக என முற்கூறினாராதலிற் றொகையதிகார மென்பது பெறுதுமாதலின். அன்றியும், பொருண்மயக்க மென்றதாற் றொடர்க்கண் என்பது துணிபாகாது; தொகைக்கண்ணும் வருதலின். இனி `ஐந்து மிரண்டு மெச்சமில' என்றதனால் ஐந்தும் வரும் இரண்டும் வரும் என்பது பெறப்படுதலின் உம்மைகள் எச்சவும்மைகளாயும் நின்று தொகை விரிக்கண் வரும் மயக்கத்தையே காட்டலானும் அது நன்கு துணிபாம். தொடர்விரி மயக்கமாயின் ஆசிரியர் ஐந்தன் பொருள் இரண்டாவதா றோன்றும் எனக் கூறுவார்; பின் "இதன திதுவிற்றென்னுங் கிளவியும் ........ நான்கனுருபிற் றொன்னெறி மரபின தோன்ற லாறே" எனக் கூறினாற்போல என்பது. ஆசிரியர் "கரும மல்லாச் சார்பென் கிளவிக் - குரிமையுமுடைத்தே கண்ணென் வேற்றுமை" என்பது முதலாக வருஞ் சூத்திரங்களி லெல்லாம் உம்மை கொடுத்தது தொகைவிரி மயக்க மென்பதைப் புலப்படுத்தற்கேயாம். இச் சூத்திரமும் தொகைவிரி மயக்கங் கூறியதென்பதே துணிபாம். இனி, "உருபு தொக வருதலும்" என்பதில் வரும் "தொக" என்பதும் "மெய்யுருபு தொகா விறுதி யான" என்பதில் வரும் "தொகா" வென்பதும் சமாசனையே யுணர்த்து மென்பது செந்தமிழ் 26ஆந் தொகுதி 1ஆம் பகுதியில் வெளிவந்த "தொகைநிலை" எனும் பொருளுரை நோக்கி அறிக. இதுகாறுங் கூறியவற்றால் "தொகை, தொக, தொகா" என்பன சமாசனையே யுணர்த்தி வந்தன வென்பது வலியுறுத்தப் பட்டது. ஆதலின், அவைகள் சமாசனை யுணர்த்தி வந்தன வன்றெனக் குறிப்பாசிரியர் கூறியது பொருந்தாதென்பது. இன்னும் "நாகர்பலி", "முறைக் குத்து", "காட்டியானை" என்னுந் தொகைகள் உருபும் பொருளும் விரிதலிற் குறிப்பா சிரியர் உருபும் பொருளும் விரிவன ஒன்றுமின்றெனக் கூறிய தூஉம் பொருந்தாதென்க. - இலக்கண வரம்பு மகாவித்துவான் சி. கணேசையர் கலாநிதித ஸ்ரீ. பிரசாந்தன், பக். 61-73 5. பிறிது பிறிதேற்றல் பிறிதுபிறி தேற்றலு முருபுதொக வருதலு நெறிபட வழங்கிய வழிமருங் கென்ப என்னுந் தொல்காப்பியச் சூத்திரத்தினுட் `பிறிதுபிறிதேற்றலும்' என்பதற்கு. இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க் கினியர் என்னும் மூவரும், ஆறாம் வேற்றுமையுருபு மற்றைய உருபுகளை ஏற்றலும் எனப் பொருளுரைத்துச் சாத்தனதனை, சாத்தனத னால்..... சாத்தனதன்கண் என உதாரணம் காட்டினார்கள். அப் பொருட்கண்ணே தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பா சிரியர் சில தடை நிகழ்த்தியுள்ளார்கள். அத்தடைகள் வருமாறு: (செந்தமிழ்த் தொகுதி 26ல், 421ம் பக்கம் பார்க்க) சாத்தனதாடை என்பது சாத்தனுடைய ஆடை எனப் பொருள்படுதல் போலச் சாத்தனதனை என்புழிச் சாத்தனது என்பது சாத்தனுடைய எனப் பொருள்படாது சாத்தனுடைய பொருள் எனப் பொருள்படுதலிற் பெயர் உருபேற்றதன்றி, உருபு உரு பேற்றதன்று என்பது ஒன்று. மற்றொன்று, சாத்தனது என்பது பெயராயின் பெயர் உருபேற்றலின்கண் மாறுபாடொன்று மின்மையின் அது கூறல் வேண்டியதின்று என்பது. இவ்விருதடைகளுள், சாத்தனதனை என்புழி சாத்தனது என்பது. சாத்தனுடைய என ஆறனுருபின் பொருள்படாது, சாத்த னுடைய பொருள் எனப் பெயராய் நிற்றலின் ஆறனுருபேற்ற சொல்லன்று என்னும் தடையை முதலில் ஆராய்ந்தும். ஆறாம் வேற்றுமை அது உருபிற்கு அஃறிணை ஒருமைப் பொருளைத் தொல்காப்பியர், ஆறாம் வேற்றுமைச் சூத்திரத்து விதந்து கூறிற்றிலராயினும் "இதனதிது" என்பதனானே குறிப்பித் துள்ளனர். அது கொண்டு உரையாசிரியர்கள் மூவரும் `அது' ஒருமை யுருபென்று உரையிற் கூறினார்கள். அன்றியும், முதனூ லாசிரியராகிய அகத்தியனார். ஆற னுருபே யதுவா தவ்வும் வேறொன் றுரியதைத் தனக்குரி யதையென விருபாற் கிழமையின் மருவுற வருமே என்று கூறியதாக இலக்கண விளக்கநூலா ருரைத்தனர். நன்னூ லாரும். ஆற னொருமைக் கதுவு மாதுவும் பன்மைக் கவ்வு முருபாம் எனக் கூறினர். ஆதலின், `அது' என்னும் ஆறாம் வேற்றுமையுருபு அஃறிணையொருமைப் பொருளுணர்த்துமென்பது துணிபே யாம். ஆகவே, ஒருமையுருபாகிய அது என்பது தன்னையேற்கும் சாத்தன் என்னும் பெயரோடு கூடிச் சாத்தனுடையது என்னும் பொருள்பட நிற்குமன்றிச் சாத்தனுடைய எனப் பொருள்படாது என்பதுந்திண்ணமேயாம். ஆகவே `சாத்தனதாடை' என்பது `சாத்தனுடைய பொருளாகிய ஆடை' என்றும், `சாத்தன ஆடைகள்' என்பது `சாத்தனுடைய பொருள்களாகிய ஆடைகள்' என்றும் பொருடந்து முறையே, `இதனதிது', `இதனவிவை' என ஆறாம் வேற்றுமைப் பொருடருமென்பதூஉம், ஆண்டு அதுவும் அகரமும் உருபென்பதூஉம் வெள்ளிடை மலைபோல் விளங்கக் கிடந்தனவே யாம். கிடந்தன எனவே, சாத்தனதாடை என்புழி ஆண்டு. அது `உருபு பெயராய் நின்றே ஆடையொடு தொடர்ந்தாற் போலச் சாத்தன தனை' என்புழியும் `அது' உருபுபெயராய் நின்றே `ஐ' உருபொடு தொடரும் என்பதூஉம். ஆண்டுவரும் `அது' வும் உருபென்பதூஉம் பெறப்படும். படவே முதலாவது தடை தடையன்றென்பது துணிபாயிற்று. இனி, `அது' உருபு `சாத்தனதாடை' என்றவிடத்து எப்படிச் `சாத்தனுடையதாகிய ஆடை' என நின்று உடைமைப் பொரு ளுணர்த்திற்றோ, அப்படியே `சாத்தனதனை' என்றவிடத்தும் `சாத்தனுடையதை' என நின்று உடைமைப் பொருளுணர்த்த லினும் தடையின்மை காண்க. ஆதலில் `சாத்தனதனை' என்புழிச் சாத்தனது என்பது உருபானும் பொருளானும் `சாத்தனதாடை' என்புழிச் சாத்தனது என்பதுபோல ஆறாம் வேற்றுமையாதற்குத் தடையின்மை கண்டே, `பிறிது பிறிதேற்றலும்' என்னும் தொல்காப்பியச் சூத்திரத்துக்கு, அதனுரையாசிரியர்கள் மூவரும் ஆறனுருபு பிறிதுருபேற்கு மென உரை கூறினார்கள் என நுண்ணிதாக ஆராய்ந்து கண்டு கொள்க. இவ்வாறு நன்னூலாரும் "ஆறனுருபு மேற்குமவ் வுருபே" என்றார். நன்னூலுரையாசிரியராகிய மயிலைநாதர் முதலியோரும் அவ்வாறுணர்ந்து கூறுதல் காண்க. இங்ஙனம் முதலாவது தடைக்குத் தடையுண்டாகவே இரண்டாவது தடைக்குந் தடையுண்டாயிற்று. எங்ஙனமெனின், பிறிதோருருபு பிறிதோருருபையேற்றல் மாறுபாடாதலானும், ஏனைப் பெயர்போலாது உருபே பெயராய் நின்று உருபேற்ற லானு மென்பது. இன்னும் சாத்தனது என்பது சாத்தனுடைய எனப் பொருள் படுமாயின் ஒருமை, பன்மை, உயர்திணை, அஃறிணை என்ற நியதி யின்றி யாண்டும் அது உருபுவரலாமெனப்பட்டு, நூலாசிரியர்கள் கருத்துக்களோடும் மாறுபடும். என்னை? சாத்தனது ஆடை = சாத்தனுடைய ஆடை, சாத்தனது ஆடைகள் = சாத்தனுடைய ஆடைகள், சாத்தனது மகன் = சாத்தனுடைய மகன் எனப் பொருடந்து வழுவின்றாய் முடிதலின். அன்றியும், உயர்திணைப் பொருளில்வரும் ஆறாம்வேற்றுமைத் தொகைக்கண், அது உருபு விரிக்கப்படாது எனத் தொல்காப்பியர் கூறிய "அதுவென் வேற்றுமை யுயர்திணைத் தொகைவயி னதுவெ னுருபு கெடக் குகரம் வருமே" என்னுஞ் சூத்திரமும் வேண்டியதின்றாம். அன்றியும், "உடைய" என்பதையே உருபாகக் கூறியும் விடலாம். ஆதலின் உடைய என்பது ஆறாம் வேற்றுமைக்குரிய உடைமைப் பொருள் இது என்பதைக் காட்டற்கு விரிக்கப்படும் ஓர் சொல் லுருபேயன்றி அதுவின் பொருளன்று என்பது தெற்றெனப்படும். இனி, இடைச்சொற்கள் பெயர் வினைகளைச் சார்ந்தன்றித் தம்பொருளுணர்த்தா. என்னை? "இடையெனப் படுப பெயரொடும் வினையொடும் - நடைபெற் றியலுந் தமக்கியல் பிலவே" எனத் தொல்காப்பியரும், அச் சூத்திரவுரைக்கண் "தமக்கெனப் பொரு ளின்மை இடைச்சொற் கிலக்கணமாம்" எனச் சேனாவரையருங் கூறுதலின். அதனால், ஆறனுருபாகிய `அது'வும் இடைச் சொல்லாதலின் தன்னையேற்கும் பெயரைச் சார்ந்து நின்றே. தன்னொருமைப் பொருளுணர்த்துமன்றித் தனித்து நின்று தன் பொருள் உணர்த்தாது என்பது பெறப்படும். படவே, நடந்தது என்புழித் துவ்விகுதி நட என்னும் முதனிலை வினயோடுகூடித் தன்னொருமைப் பொருளுணர்த்தினாற் போலவே, `அது' உருபும் தன்னையேற்கும் பெயரோடுகூடிச் சாத்தனது என நின்றே ஒருமைப்பொரு ளுணர்த்துமென்பது துணிபாம். ஆகவே ஆண்டு `அது' உருபு ஒருமையுணர்த்துங்கால் முற்றாயேனும், பெயராயேனும் நின்றே உணர்த்துவதல்லது, பிறவாறு உணர்த்தமாட்டாது என்பதும் துணிபாயிற்று. தொல்காப்பியர் "அதுச் சொல் வேற்றுமை யுடைமையானும்" என்னுஞ் சூத்திரத்தினால் ஆறாம்வேற்றுமை உடைமைப் பொருள் பற்றியும் குறிப்பு முற்றுப் பிறக்குமென்றலின், `சாத்தனது' என்னும் முற்றாய் உருபே வேறுபட்டு நின்றதென்பது பெறப்படுதலின், `சாத்தனது' என்னும் பெயராயும் உருபு வேறுபடுமென்பது பெறப்படும். இதனை அச்சூத்திரவுரையில், நச்சினார்க்கினியர், "உடைமைப் பொருளாவது; ஒன்றற்கு ஒன்றை உரிமைசெய்து நிற்பது. அஃது இப்பொருளினுடையது இப்பொரு ளென்றும், இப்பொருள் இப்பொருளினுடையதா யிருந்தது என்றும், இப்பொருளையுடைய தாயிருந்தது இப்பொருளென்றும் மூன்றுவகைப்படும். அவை முறையே. `சாத்தனதாடை' என ஆறனுருபாயும், `ஆடை சாத்தனது' எனவும், `குழையன், கச்சினன்' எனவும் வினைக் குறிப்பாயும் நிற்கும். உருபு உணர்த்தும்வழி ஆடை முதலியன முன்னிற்குமாறும் உணர்க." எனக் கூறுமாற்றானும் ஓர்ந்துணர்ந்து கொள்க. சாத்தனதாடை என்றவழி. அது உருபென்ற தன்றிப் பெயரென்று நச்சினார்க் கினியர் கூறிற்றிலரா லெனின், "இறுதியுமிடையும்" என்னும் வேற்றுமைமயங்கியற் சூத்திரவுரையின் கண் "சாத்தனதாடை" என்புழி `அது' வென்பது பெயராய் நிற்கும்" எனக் கூறினா ராதலின் ஈண்டுக் கூறிற்றில ரென்க. இன்னும் ஆறனுருபு இவ்வாறு பெயராய் நிற்கும் என்னுங் கருத்துப்பற்றியே சேனாவரையரும், மேற்காட்டிய "இறுதி யுமிடையும்" என்னுஞ் சூத்திரவுரையின்கண் "ஆறாவதும் ஏழாவதும் `சாத்தனதாடை' `குன்றத்தின்கட் கூகை' என இடை நின்று தம்பொருளுணர்த்தினாற் போல `ஆடை சாத்தனது' `கூகை குன்றத் துக்கண்' என இறுதி நின்றவழி அப்பொருளுணர்த் தாமை யான் அவ்வுருபுகள் ஆண்டு வரையப்படும். ஆறனுருபேற்றபெயர் உருபோடுகூடிப் பெயராயும் வினைக்குறிப்பாயும் நிற்றலுடைமை யான் அந்நிலைக்கண் ஆடை சாத்தனது என இறுதிக்கண்ணு நிற்குமென்பது" எனக் கூறினார். முற்று அது உருபிற்குக் கூறிய உடைமைப் பொருளுணர்த்தி வருதலினாற்றான் இளம்பூரண ரும் உதாரணங் காட்டினார். முற்றாய் நிற்கும் சாத்தனது என்பது. சாத்தனதாடை என நிற்குங்கால் வருமொழியோடு பிளவுபட்டு ஒலித்து நிற்கும் என்பதும், பெயராய் நிற்கும் சாத்தனது என்பது வருமொழியோடு பிளவுபடாது ஒன்றுபட்டொலித்து நிற்கு மென்பதும் உணர்ந்துகொள்க. இனிச் சாத்தனது ஆடை என்புழி வரும் `அது' தொக்கு, சாத்தனாடை என நின்றவழியும், சாத்தனுடைய பொருளாகிய ஆடை என்னும் விரிப்பொருடருதற் கேற்புடைமை கண்டே, சாத்தனது ஆடை என்பதை விரியென்றும், சாத்தனாடை என்பதைத் தொகை என்றும் ஆசிரியர் வழங்கினர் போலும். இவ்வழக்கு, இவ்வழக்கை உணர்ந்துரைக்க தொல்லாசிரியர்க் கன்றி ஏனையோர்க்குப் புலப்படலரிதென்க. இஃதுணர்ந்தே பிறிது பிறிதேற்றலும் வழக்குநெறி என்பதை உணர்த்துதற்குப் "பிறிது பிறிதேற்றலும்....... நெறிபட வழங்கிய வழிமருங் கென்ப" என்றார் தொல்காப்பியரும். அற்றேல், சாத்தனது ஆடை என்புழிச் சாத்தனது என்பது பெயர்ப்பொருடரின் `அது' பண்புத்தொகை யாமன்றோ வெனின், ஆகாது என்னை? சாத்தனது ஆடை என்னும் ஆறாம்வேற்றுமைத் தொகை இதனது இது என்னும் பொருள்பட வருதலானும், பண்புத் தொகை இன்னது இது என்னும் பொருள்பட வருதலானுமென்பது. இவ்வேறுபாடு ணர்ந்து கோடற்கே தொல்காப்பியர் ஆறாம் வேற்றுமைச் சூத்திரத்து இதனது இது என்றும், பண்புத்தொகைச் சூத்திரத்து இன்னது இது என்றும் விதந்து கூறினாரென்பது. அங்ஙனேல், சாத்தனது என்பது உடைப் பொருளையும் உணர்த்தி நிற்றலின் ஆடையோடு தொடர வேண்டியதின்றெனின், அற்றன்று; அது உடைப்பொருளைப் பொதுவாகத் தெரித்து நின்றதன்றிச் சிறப்பாகத் தெரித்து நில்லாமையின் இது எனச் சிறப்பாக உணர ஆடையோடு தொடர்ந்தே நிற்றல் வேண்டுமென்பது. இதனால் ஆறாம் வேற்றுமையை இவ்வாறு கொள்ளும் வழக்கு, தமிழ்வழக் கென்பது உணரக்கிடக்கின்றது. என்னை? வடநூலார் ஆறாம் வேற்றுமை விரியை (ராமஸ்ய வஸ்திரம்) இராமனுடைய ஆடை யென்றும், தமிழ் நூலார் இராமனது ஆடை என்றும் கோடலின். அது என்பதற்கு உடைய எனப் பொருள்கொள்ளின் இம்மாறுபாடு ஒன்றும் வாராதேயெனின் இது பொருந்தாது. என்னை? தமிழ் நூலார் உருபிற்கு ஒருமை பன்மை கூறினமையின். இதனை முன்னும் உரைத்தாம். ஆகையால் வடமொழியில்வரும் ஆறாம் வேற்றுமைக்கும், தமிழில்வரும் ஆறாம்வேற்றுமைக்கும் சிறிது வேறுபாடுண்டென அறிந்துகொள்க. இங்ஙனமாக சிவஞான முனிவரைப் பின்பற்றியே, உருபு உருபேலாதென்றும், பெயர் உருபேற்றலின்கண் மாறுபாடின் றாதலின் அது கூறல் வேண்டியதின்றென்றும் தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பாசிரியர் கூறினார் என்பது எனது அபிப் பிராயம். சிவஞான முனிவர். "இதனது இது" என்றும், "இதனது இது விற்று" என்றுந் தொல்காப்பியர் கூறிய தொடர்களின் பொருள்களை நுண்மையாக ஆராய்ந்துணர்ந்திருப்பரேல், பிறிது பிறிதேற்றல் மாட்டாதெனக்கூறுதற்கு எழுந்திருக்க மாட்டார் என்பது என்றுணிபு. இது காறுங் கூறியவாற்றாற் போந்தபொருள் யாவையோ எனின், ஆறாம்வேற்றுமை `அது' உருபு ஒருமைப்பொருடரும் என ஆசிரியர் ஓதுதலின், அது பெயர் சார்ந்தே ஒருமைப் பொருடரும் என்பதூஉம், தருங்கால் சாத்தனது என்பது சாத்தனுடையது எனப் பொருடந்தே ஒருமையுணர்த்துமென்பதூஉம், சாத்தனு டைய எனப் பொருடரின் ஒருமை உணர்த்தாதென்பதூஉம். சாத்தனுடையது என்பதற்குச் சாத்தனுடைய பொருள் என்பதே பொருள் என்ப தூஉம், சாத்தனது ஆடை என்புழிச் சாத்தனது என்பதற்கும் அதுவே பொருளென்பதூஉம். அது போலவே சாத்தனதனை என் புழியும் சாத்தனுடைய பொருளை என்பதே பொருள் என்பதூஉம். பொருள் அதுவாதலாற்றான் உரையாசிரியர்கள் மூவரும் "பிறிது பிறிதேற்றலும்" என்பதற்கு ஆறனுருபு பிறிதுரு பேற்றலும் எனப் பொருள் கூறினார்க ளென்பதூஉம் அதனால் அவருரைக்கண் யாதுந் தடையில்லை யென்பதூஉம் பிறவுமென்க. - இலக்கண வரம்பு மகாவித்துவான் சி. கணேசையர் கலாநிதித ஸ்ரீ. பிரசாந்தன், பக். 55-60 6. ஆறனுருபு பிறிதுருபேற்றல் "ஆற னுருபு மேற்குமவ் வுருபே" என்பது நன்னூற் சூத்திரம். இதற்கு ஆறாம்வேற்றுமையுரும் மற்றையுருபுகளை யேற்று வருமெனப் பொருளுரைத்து, அஃதேற்றுவருங்கால் சாத்தனது, சாத்தனதனை, சாத்தனதால், சாத்தனதற்கு. சாத்தனதனின், சாத்தனதனது, சாத்தனதன்கண் என உதாரணமுங்காட்டினர் மயிலை நாதர். இலக்கண விளக்க நூலாரும் அவ்வாறே யுரைத்தனர். இவர்கள் உரையை மறுத்துச் சிவஞானமுனிவர், உருபு, இடைச் சொல்லாதலானும் சாத்தனதனை என்புழிச் சாத்தனது என்பது துவ் விகுதியும் அகரச் சாரியையும் பெற்று உருபேற்று நின்ற பெயரா மாதலின் ஆண்டு அதுவென ஒன்றாக வைத்து ஆறனுரு பென்றல் பொருந்தாமையானும் பொருந்தா தெனக் கூறினர். அம்மறுப்புப் பொருத்தமுடையதன்றென்பதை யாம் ஈண்டுக் காட்டுவாம். "பெயர்வழித் தம்பொருள் தரவரு முருபே" எனவும் "ஏற்கு மெவ்வகைப் பெயர்க்கு மீறாய்" எனவும் கூறப்படுதலினால் பெயர்ச் சொல்லே யுருபேற்குமென்பதும் ஏனைச்சொற்களும் பெயராய் நின்றவிடத்து உருபேற்குமென்பதும் நன்கு புலப்படும். ஆறாம் வேற்றுமையுருபேற்று நின்ற சாத்தனது என்னும் சொல், ஆடை யென்னும் சொல்லோடு சேருமிடத்து, சாத்தனது ஆடையென ஆறாம்வேற்றுமை உடைமைப் பொருளில் வருகின்றது. ஆடை சாத்தனது என்புழி அவ்வுருபேற்று நின்ற சொல்லே அப்பொருளில் வினைக்குறிப்பு முற்றாகின்றது. அச்சொல் வினைக்குறிப்பு முற்றாய விடத்துப் பாலுணர்த்தும் ஈறுநோக்கி அவ்வுருபே துவ்விகுதியும் அகரச் சாரியையுமாகப் பிரிக்கப்படுகின்றது. பிரிக்கப்படினும் சாத்தனுடையது என உடைமைப் பொருளில் வருதலானே ஆறனுருபு என்றார். ஆறனுருபென்பதற்கு ஆறனுருபேற்று நின்ற சொல் லென்பதே ஈண்டுப் பொருளாகும். இதுபற்றியே சேனாவரையரும் சொல்லதிகாரத்து "இறுதியுமிடையும்" என்னும் 103ஆம் சூத்திரத்து விரிவுரையின்கண் ஆறனுருபேற்ற பெயர் உருபோடு கூடிப் பெயராயும் வினைக்குறிப்பாயும் நிற்றலுடைமையான் அந்நிலை மைக்கண் ஆடை சாத்தனது என இறுதிக்கண்ணும் நிற்குமென்றும், ஆடூஉ வறிசொல் மகடூஉ வறிசொல் பல்லோ ரறியும் சொல்லோடு சிவணி யம்முப் பாற்சொல் லுயர்திணை யவ்வே. என்னும் 2ஆம் சூத்திரவுரையின்கண் சிவணியென்னும் வினை யெச்சம் உயர்திணையவென்னும் வினைமுற்றுக்கொண்டது; ஆறாம் வேற்றுமையுருபேற்று நின்ற சொல் பெயராயும் வினைக் குறிப்பாயும் நிற்குமாதலால் என்றும் உரைத்தனர். இவ்வுரையை நுணுகி நோக்குமிடத்து, உருபு இடையில்வரின் உருபாகவும் இறுதியில் வரின் வினைக்குறிப்பு முற்றாகவும் கொள்ளப்படும் என்பது நன்கு புலப்படுகின்றது. புலப்படுதலினால், சாத்தனது என்பது வினைக்குறிப்பு முற்றாய்நின்று உருபேற்குங்கால் குறிப்பு முற்றாலணையும் பெயராய் நின்று பிறிதுருபுகளை யேற்கு மென்பது வெள்ளிடை மலைபோல் விளங்கக்கிடக்கின்றது. இன்னும் மயிலைநாதர், சாத்தனது என்னும் ஆறாம் வேற் றுமையுருபேற்றுநின்ற சொல் எழுவாயுருபுமேற்கு மென்றும், அது சாத்தனது வந்தது சாத்தன வந்தன எனவும், சாத்தனது நன்று; சாத்தன நல்லன எனவும் வினையும் வினைக்குறிப்பும் கொண்டு முடியும் என்றும் உரைத்தமையை யாம் உற்றுநோக்கும் போது ஆறாம்வேற்றுமையுருபேற்று நின்ற சொல்லே வினைக்குறிப்புப் பெயராய் நின்று பிறிதுருபேற்குமென்பதூஉம், ஏற்குங்காலும் தன் உடைமைப் பொருளிற் றீராமையின் ஆறனுரு பென்றே வழங்கி வந்தனரென்பதூஉம் நன்கறியக் கிடக்கின்றன. இவ்வாறு சாத்தனது என்னும் ஆறாம் வேற்றுமையுரு பேற்று நின்ற சொல் வினையாலணையும் பெயராய் நின்று பிறிதுருபை யேற்குமென்பது பற்றியே சேனாவரையரும். பிறிதுபிறி தேற்றலும் உருபுதொக வருதலும் நெறிபட வழங்கிய வழிமருங் கென்ப. என்னுஞ் சூத்திரத்தில், `பிறிதுபிறிதேற்றலும்' என்பதற்குப் பிறிதோருருபு பிறிதோருருபை யேற்றலும் என்று பொருள் கூறிச் சாத்தனதை என்பது முதலிய உதாரணங்களுங் காட்டிப் பெயரி றுதிநின்றஉருபு தன்பொருளோடு தொடராது பிறிதுருபை யேற்றல் இலக்கணமன்மையின் வழுவமைதியென்றுங் கூறினார். உரையாசிரியர் முதலியோர்க்கு இதுவே கருத்தாதல் அவரவ ருரை நோக்கித் தெளிக. முனிவர் இவ்வுரையை மறுத்து இச்சூத்திரத்திற்கு இடை யினும் இறுதியினும் உருபேற்றலும் இடையிற்றொக இறுதி யினுருபு வருதலும் நெறிபட வழங்கிய வழக்கைச் சார்ந்து வருத லான் வழுவாகா என்றுரைத்து இதற்கு முதற்சூத்திரத்திற்கு இடை யினும் இறுதியினும் விரிந்துவருமென்றும் அது வடநூலார் மதம் என்றும் பொருளுரைத்தனர். தமிழ்மொழியிலக்கணம் கூறவந்த ஆசிரியர் அதன்கண் வடமொழியிலக்கணங் கூறினா ரென்றால் பொருத்தமில் கூற்றாமாதலானும், கூறினும் "அளபிற் கோட லந்தணர் மறைத்தே" என்புழிப்போல இங்ஙனம் கூறுவர் வட நூலார் என விளங்கச்சூத்திரிப்பார்மன்; அங்ஙனம் சூத்திரி யாமை யானும், பிறாண்டும் வடநூலார் மதம் இஃதிஃதென எடுத்துக் காட்டும் வழக்கு இந்நூலகத்தின்மை யானும், "எல்லா மொழிக்கு முயிர்வரு வழியே - உடம்படு மெய்யினுருபுகொளல் வரையார்" எனவும், "உரைப்பொருட்கிளவி நீட்டமும் வரையார்" எனவும், "குட்டியும் பறழுங் கூற்றவண் வரையார்" எனவும், "பொருடெரி மருங்கின்...... தோற்றமும் வரையாரடிமறி யான" எனவும் வருமிடங்க டோறும் வரையாரென்பதற்குத் தமிழாசிரியர் என்பதே பொரு ளாக அமைதலின் ஈண்டும் அதுவே வினை முதலாகக் கோடல் பொருந்துமன்றி, வடநூலார் எனக் கோடல் பொருந்தாதலானும், வடநூலார் மதமிதுவெனின், அது வேண்டாக்கூற்றாய் முடித லானும் வேறுபாடறிதற்குக் கூறினாரெனின் அதனாற் போந்த பயன் ஈண்டு யாது மின்றாதலானும் அவ்வுரை பொருந்தா தென்பது. இன்னும், ஐயுங் கண்ணு மல்லாப் பொருள்வயின் மெய்யுருபு தொகா விறுதி யான என்னுஞ் சூத்திரத்தின்கண்வரும் `தொகாவிறுதியான' என்னும் மறைப்பொருள் வேற்றுமைத்தொடரில் வருதலின், அத்தொட ரிலேயே அப்பொருளின் உடன்பாட்டுப் பொருளும் வருதல் வேண்டும்; அவ்வாறு வருதல் முனிவருரைக்கின்மையானும் அவருரை பொருந்தாதென்பது. இன்னும், `பிறிதுபிறிதேற்றலும் உருபுதொகவருதலும்' என்னுஞ் சூத்திரத்து, சூத்திரவிருத்தியுட் காட்டிய காரணங்களுள் உருபிடைச் சொல் வேற்றுமை யுருபேலாதென்பதூஉம், சாத்தனது என்பது துவ்விகுதியும் அகரச்சாரியையும்பெற்ற வினைக்குறிப்பாகு மன்றி உருப்பேற்ற பெயர்ச் சொல்லாகா தென்பதூஉம் முன்னே மறுக்கப்பட்டனவாதலானும், மறுக்கப்பட வேண்டியதாய் நின்ற "இனமல்லவற்றை உடனெண் ணுதல் மரபன்" றென்பது. சேனாவரையர் இச்சூத்திரம் வழுவமைதியென்று கூறுதலின், வழுவமைத் தற்கண் வழுவான வற்றையெல்லாம் வழுவாதலாகிய இனம்பற்றி உடன் எண்ணுதல் பொருந்துமென்பது அறியக் கிடத்தலான், அது மரபேயென மறுக்கப்படுதலினாலும், அன்றியும், இருவழுவும் உருபுபற்றிய வழுவாதலானும் இனமாதல் பொருந்து மெனவும் மறுக்கப் படுதலினாலும் சேனாவரையருரையே பொருத்த மென்பது துணிபாம். துணிபாகவே அவருரைக்குக் காரணமாய் நின்ற உரையாசிரியர் முதலியோரையும் பொருத்தமுடைய தென்ப தூஉம், அவை பொருத்த முடையனவாகவே, அவ்வழி யெழுந்த பின்னோருரைகளும் பொருத்தமுடைய வென்பதூஉந் தெற் றெனப்படும். அங்ஙனேல், உருபுபிறிதேற்றலும் என விளங்கச் சூத்திரி யாது "பிறிது பிறிதேற்றலும்" எனச் சூத்திரித்த தென்னையெனின், அதனாலும் ஓர்நயந்தோன்றற்கேயாம். என்னை நயமோ வெனின்? உருபு இடைச்சொல்லாதலின் பிறிதுருபை ஏற்கமாட்டா தாதலின், உருபு தன்னையேற்ற சொல்லோடுகூடிப் பெயர்த் தன்மை யெய்தி நின்ற என்னும் வேற்றுமைநயமேயாம். அங்ஙனேல், பெயர்த்தன்மை யெய்தியதை உருபென்ற தென்னையெனின், தன்பொருளிற் றீரா மையானென முன்னரே உரைத்தாம்; ஆண்டுக் காண்க. நச்சினார்க்கினியரும் இச் சூத்திரவுரையில், பெயர்க்குப் பிறிதாய்நிற்றலின் பிறி தென்றார் என உரைத்தனர். அவர் ஈண்டுப் பெயரென்றது சாத்தனது என்பதுபோல ஆறாம் வேற்றுமை யுருபின் பொருளை யுடைத்தாய் நின்ற பெயரல்லாதவைகளை. இன்னும் சாத்தனது ஆடை நல்லது என்றவிடத்துச் சாத்தனது ஆடை என்னுந் தொடர் சம்பந்தப் பொருளுணர்த்தி ஒரு சொல்லாய்நின்று பின் வினைகொண்டு முடிந்தாற்போலவே, சாத்தனது நல்லது என்றவிடத்தும் சாத்தனது என்பது சாத்தனுடை யதாயிருந்ததாகிய ஆடை என விரிந்துநின்று பின்வினை கொண்டு முடிதலினாலும் ஆறாம் வேற்றுமையுருபே தன்னை யேற்றுநின்ற சொல்லோடு கூடித் தன் உடைமைப் பொருளிற் றீர்ந்து வினைக் குறிப்புப் பெயராயிற்று என்பது நுணுகி நோக்குவார்க்கு நன்கு புலனாம். இனிச் சாத்தனது என்பது போல வேற்றுமைப் பொருள் பற்றிக் குறிப்பு வினைமுற்றுப் பிறத்தல் - உண்டென்பது "அதுச் சொல் வேற்றுமை யுடைமை யானும் - கண்ணென் வேற்றுமை நிலத்தினானும்" எனத் தொல்காப்பியனார் விதந்து கூறுதலான றியப்படுதலின், சாத்தனது என்பது `அதுச்சொல்' வேற்றுமைப் பொருளில் வந்து, உடைமைப்பொருள் முன்னும், உடையது பின்னுமாக வரும் கோட்டது குழையது என்பது போலாது, உடையது முன்னும் உடைமைப்பொருள் பின்னுமாக வந்த குறிப்பு வினைமுற்றாகிச் சாத்தனுடையதாயிற்று எனப் பொருள் தந்து உருபேற்ற சாத்தனதுபோல நிற்குமென்பதூஉம், பின் அது பெயராய் நின்று உருபேற்குமென்பதூஉம் அக்காலத் துரை யாசிரியர்களுக்கன்றி நூலாசிரியர்களுக்குங் கருத்தாதல் துணியப்படும். இதுபற்றியே ஆடை சாத்தனது என்பது சாத்தனது ஆடை என நின்றாற்போல், "புருஷோராஜ்ஞ; ராஜ்ஞ; புருஷ: என நிற்கும் என்றார் பிரயோக விவேக நூலாரும். இன்னும், சாத்தனது, சாத்தன என்னும் வினைக்குறிப்பு முற்றுக்களை ஒருமையீறும் பன்மையீறுமாகக் கொள்ளுதல் போலவே, அது உருபையும் அகரவுருபையும் முறையே ஒருமையுருபும் பன்மையுருபுமாகக் கோடலானும் இரண்டதற்கு முள்ள ஒற்றுமை நன்கு புலப்படும். ஏனை வேற்றுமைக்கட் கங்ஙனங் கூறாமையும் ஈண்டு நோக்கத்தக்கது. அங்ஙனேல் வினையாலணையும் பெயரும் பெயருளடங்குதலின் வேறுகூறல் வேண்டா வெனின், அங்ஙனங் கூறினு மமையுமெனினும், உடைமைப் பொருளில் வரும் இதற்கும் ஏனைய பெயர்களுக்கு முள்ள வேறுபாடறிவித்தற்கு வேறு கூறினாரென்பது வினாவெதிர்வரும் வினாவும் செப்பாயடங்குமெனினும் வினாச் செப்பாதலாகிய வேறுபாடறி வித்தற்கு "வினாவுஞ் செப்பே வினாவெதிர் வரினே" என விதந்து கூறினாற்போல வென்பது. இனி "ஆறா னுருபு மேற்குமவ் வுருபே" என்பதற்கு முனிவருரைத்த உரையை ஆராய்வாம். அவருரை வருமாறு:- அவ்வுருபு - எழுவாயாய்நின்ற அவ்வுருபே - ஆறனுருபு மேற்கும் - ஐ முதலிய ஆறுருபுகளையும் ஏற்றுவரும் என்பது. இவ்வுரையுள், அவ்வுருபே என்பதற்கு அவ்வெழுவா யுருபென்று பொருள்கோடல் பொருந்தாது. ஏனெனின், மேற்கூறிய "பெயரே ஐ ஆல் கு இன் அது கண் - விளியென் றாகு மவற்றின் பெயர்முறை" என்னுஞ் சூத்திரத்து எட்டுருபும் ஒருங்கு கூறப்பட்டிருத்தலின் அகரம் எட்டையுஞ் சுட்டுமேயன்றிப் பெயரை வேறுபிரித்துச் சுட்டுதற்குக் கூடாமையின் எழுவாயுருபு பிறிதுரு பேற்குமென்றலும் பொருந்தாது. ஏனெனின், எழுவாயுருபு பெயர்தோன்று மாத்திரையேயாகலின் அது தன் பொருளிற்றீராது நின்று பிறிதுருபேற்க மாட்டாமையின் பெயராய் நின்றேற்கு மெனின்; பெயர் உருபேற்றல், "ஏற்கு மெவ்வகைப் பெயர்க்கு மீறாய்" எனவும், "பெயர்வழித் தம்பொரு டாவரு முருபே" எனவும் மேற்கூறப்பட்ட சூத்திரங்களாற் கூறப்பட்டன வாதலின் ஈண்டுக் கூறல், கூறியது கூறலாமாதலின் அதுவும் பொருந்தாது. இனி ஆறனுருபென்பது - ஆறாம் வேற்றுமையுருபென்று பொருள் படுவதன்றி ஆறுருபு என்று பொருள்படாது. ஏனெனின்; அன்சாரியை நிற்றலின்; தவிர்வழி வந்த சாரியை யெனின், அதுவும் பொருந்தாது. ஏனெனில், அங்ஙனமாளுதற் கருத்து, ஆசிரியர் கட்கின்றாமாதலின். நன்னூலார் "ஆறனொருமைக்கு" எனவும், "ஏழனுருபு" எனவும், "எட்டனுருபே" எனவும், தொல்காப்பியனார் "ஆறனுருபி னகரக்கிளவி" எனவும். "ஆறன் மருங்கின்" எனவும், "இரண்டன் மருங்கின்" எனவும், "ஆறனுருபினும்" இவ்வாறே பிறவுங் கூறுதலினானும் அவர்கட் கவ்வாறு ஆளுதற் கருத்தின் றென்பது பெறப்படும். நன்னூலார் ஆறுருபுகள் எனப் பொருள் கொள்ள வேண்டிய விடத்தெல்லாம். "இரண்டு முதலாஇடையா றுருபும் - வெளிப்பட லில்லது" எனவும், "முற்றீ ரெச்ச மெழுவாய் விளிப்பொருள் - ஆறுரு பிடையுரி யடுக்கிவை" எனவும், ஆறுருபு என்றே ஆளுமாற்றானும் அது பொருந்தாமை யறியப்படும். இங்ஙனமே "ஆற னுருபு மேற்குமவ் வுருபே" என்னுஞ் சூத்திரத்திற்கு மயிலைநாதருரைத்தவுரைக்கு, முனிவருரைத்த மறுப்பும், அச்சூத்திரத்திற்கு அவருரைத்தவுரையும் பொருத்தமி லுரைகளாதல் தெளியப்படுதலின், மயிலைநாதருரையே பொருத்தமாதல் தெளிக. - இலக்கண வரம்பு மகாவித்துவான் சி. கணேசையர் கலாநிதித ஸ்ரீ. பிரசாந்தன், பக். 22-27 7. இருபெயரொட்டாகுபெயரும் அன்மொழித்தொகையும் இருபெயரொட்டாகுபெயரும் அன்மொழித்தொகையும் ஒன்றென்பாரும் வேறென்பாருமாக உரையாசிரியர்கள் பல திறப்பட உரைக்கின்றனர். அவை ஒன்றா? வேறா? என்பதைக் கற்போர்க்கு உணர்ச்சி பெருகும்படி ஆராய்ந்து காட்டுதும். உரையாசிரியர்கள் கருத்துகளை முன்னர்த் தருதும். முதலிற் கூறும் சினையறி கிளவியும் சினையிற் கூறும் முதலறி கிளவியும் பிறந்தவழிக் கூறலும் பண்புகொள் பெயரும் இயன்றது மொழிதலும் இருபெய ரொட்டும் வினைமுத லுரைக்குங் கிளவியொடு தொகைஇ அனையமர பினவே ஆகுபெயர்க் கிளவி என்னுந் தொல்காப்பியச் சூத்திரத்துள் வரும் `இருபெயரொட்டு' என்பதற்கு இளம்பூரணர் இரண்டுபெய ரொட்டி நிற்பது அது சொல்லப் பிறிதுபொருள் விளக்கும். அது வருமாறு: `பொற் றொடி' என்பது இருபெயர் நின்று ஒட்டிற்று. அது சொல்லப் பொற்றொடி தொட்டாளை விளக்கும் என உரைத்தார். சேனாவரையர், `பொற்றொடி வந்தாள் என இருபெய ரொட்டு அன்மொழிப்பொருண்மேலும்...... வந்தவாறு கண்டு கொள்க' என உரைத்து, அகலவுரையுள், "அன்மொழித் தொகை எச்சவியலுள் உணர்த்தப்படுதலின், ஈண்டுக்கூறல் வேண்டா வெனின், அன்மொழித்தொகை தொகையாகலுடைமையின் ஆண்டுக் கூறினார். இயற்பெயர் ஆகுபெயரெனப் பெயரிரண் டாய் அடங்கும்வழி ஆகுபெயர்ப் பட்டதன் மேலும் வந்தவாறு கண்டுகொள்க. அன்மொழித்தொகை எச்சவியலு ளுணர்த்தப் படும். அதனால் அவ்வாகுபெயராதலுடைமைபற்றி ஈண்டுக் கூறினார். எச்சவியலுட் கூறப்பட்டவாயினும் வினையெச்ச முதலாயின வினைச்சொல்லாகலும் இடைச் சொல்லாகலு முடைமையான் அவற்றை வினையியலுள்ளும் இடையிய லுள்ளும் கூறியவாறுபோல என்பது என உரைத்தார். நச்சினார்க்கினியர், "அன்மொழிப்பொருண்மேனில்லாத இரு பெயரொட்டும்" என்றுரைத்து, மக்கட்சுட்டென இரண்டு மில்லாதோர் பொருளையுணர்த்தாது மக்களையுணர்த்திற்று. `பொற்றொடி' அன்மொழி; ஆகுபெயர் அன்மையுணர்க என உரைத்தனர். தெய்வச்சிலையார் இருபெயர் தொக்கு ஒருசொன்னீர் மைப்பட்டு, மற்றொருபொருள் தருபெயராகி வருவது. அது துடியிடை யென்பது துடிபோன்ற இடையினை யுடையாளைத் துடியிடை என்பவாகலின் ஆகுபெயராயிற்று. இஃது உவமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையன்றோ வெனின், ஒட்டுப் பட்ட பெயரோடு ஒற்றுமைப்பட்ட உருபு; அன்மொழித் தொகையாவது அப்பொருளின் வேறுபட்டுவரும் அன்னதாதல், அன்மொழி என்பதனானும் விளங்கும். அதனானன்றோ "பண்பு தொக வரூஉங் கிளவியானும்...... ஈற்றுநின்றியலு மன்மொழித் தொகையே" என ஓதுவாராயிற்று. அனையமரபினென்றதனால் ஈண்டு ஓதப்பட்டனவற்றுள் அடை அடுத்து வருவனவுங் கொள்க. `தாழ்குழல்' என்றவழி அதனை யுடையாட்குப் பெயராகி வருதலின் ஆகுபெயராயிற்று. இது வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை யன்றோ வெனின், ஆண்டு எடுத்தோதாமையானும், பொருள் ஒற்றுமைப் படுதலானும் ஆகாதென்க. இனித் தெய்வச்சிலையார் அன்மொழித்தொகைச் சூத்திரத்திற் குரைத்த உரையும், இதற்கு வேண்டுமாகலின் அதனையும் ஈண்டுத் தருவதும். பண்பு தொகவரூஉங் கிளவி யானும் உம்மை தொக்க பெயர்வயி னானும் வேற்றுமை தொக்க பெயர்வயி னானும் ஈற்றுநின் றியலு மன்மொழித் தொகையே என்பது சூத்திரம். இதற்கு அவருரை வருமாறு: இ-ள்: பண்புதொகவரும் பெயர்க்கண்ணும் உம்மை தொக்க பெயர்க்கண்ணும், வேற்றுமைதொக்க பெயர்க்கண்ணும் இறுதி... அன்மொழித்தொகை. எ-று அல்லாதமொழி தொகுதலின் அன்மொழித் தொகை யாயிற்று. இம்மூவகைத் தொகையினும் ஈற்று நின்றியலும் என்றத னான் முன்னும் பின்னும் என்னும் இரண்டினும் உணரப்படு பொருண்மையுடைத்து அன்மொழித்தொகை என்று கொள்க. உதாரணம்:- கடுங்கோல் பண்புத்தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை, கடுமையும் கோலும் அரசன் மேல் நிற்றலின் அன்மொழி. `தகரஞாழல்' உம்மைத்தொகைப் புறத்துப் பிறந்தது. தகரமும் ஞாழலும் சாந்தின்மேல் நிற்றலின் அன்மொழி `தூணிப்பதக்கு' இரண்டும் பொருண்மேனிற்றலின் அன்மொழி. `பொற்றொடி' பொன் தொடிக்கு விசேடணமாயினும் உடையாளது செல்வத்தைக் காட்டலின் அன்மொழி. இனித் துடியிடையும், தாழ்குழலும் என்பவற்றில் முன் மொழி அடையாய் வருவதல்லது அன்மொழியை விசேடியாமை யின் ஆகுபெயரன்றி அன்மொழி ஆகா என்றார். இனிச் சிவஞானமுனிவர், ஆகுபெயர்க்கும் அன்மொழித் தொகைக்கும் வேறுபாடு கூறுவதும் ஈண்டுக் காட்ட வேண்டுதலின் அதனையும் காட்டுதும்:- அற்றேல், ஆகுபெயரும் அன்மொழித் தொகையும் தம் பொருளுணர்த்தாது பிறிதுபொருளுணர்த்துதலான் ஒக்குமா கலின், அவை தம்முள் வேற்றுமை யாதோவெனின், ஆகுபெயர் ஒன்றன்பெயரானதனோடியைபுபற்றிய பிறிதொன்றனையு ணர்த்தி ஒரு மொழிக்கண்ணதாம். அன்மொழித்தொகை இயைபு வேண்டாது இருமொழியும் தொக்க தொகையாற்றலாற் பிறிது பொருளுணர்த்தி இருமொழிக்கண்ணதாம். இவை தம்முள் வேற்றுமை என்க. இருபெயரொட்டாகுபெயர் இருமொழிக்கண் வந்ததன் றோவெனின், அன்று; என்னை? வகரக்கிளவி, அதுவாகுகிளவி, மக்கட் சுட்டு என்னும் இருபெயரொட்டாகுபெயருள் வகரமும், அதுவாதலும், மக்களுமாகிய அடைமொழிகள், கிளவி, சுட்டு என்னும் ஆகுபெயர்ப்பொருளை விசேடித்து நிற்பக் கிளவி, சுட்டு என்பனவே, ஆகுபெயராய் அப்பொருளை யுணர்த்த இரு பெயரொட்டி நிற்குமாகலின் இனிப் `பொற்றொடி' என்னும் அன்மொழித்தொகையில் `பொன்' என்பது அவ்வாறு அன் மொழித்தொகையை விசேடித்து நில்லாது, தொடியினையே விசேடித்து நிற்ப, அவ்விரண்டன் தொகையாற்றலான் அன் மொழித்தொகைப் பொருளை யுணர்த்துமாறறிக. இங்கே காட்டிய உரைகளுள், உரையாசிரியருரையும், சேனாவரையருரையும், தம்முள் ஒத்தகருத்தினவாயும், மற்றைய மூவருரையும் ஒத்தகருத்தினவாயும் காணப்படுகின்றன. எனினும் தெய்வச்சிலையாருரையினும் சிவஞானமுனிவ ருரையினும் ஒரு வேறுபாடு காணப்படுகின்றது. அது, தெய்வசிலையார் இரு பெயரொட்டு ஆகுபெயர்க்குச் சொன்ன இலக்கணம். சிவஞான முனிவர் அன்மொழித்தொகைக்குச் சொன்ன இலக்கணமாயும் தெய்வச்சிலையார் அன்மொழித்தொகைக்குச் சொன்ன இலக்கணம் சிவஞானமுனிவர் இரு பெயரொட்டாகு பெயர்க்கும் சொன்ன இலக்கணமாயும் மாறிநிற்றலே; இவ்வேறு பாட்டை நோக்கும்போது இவர்கள்; இருபெயரொட்டாகு பெயர்க்கும் அன்மொழித் தொகைக்கும் ஏதோ வேறுபாடு கூறிவிடவேண்டு மென்று கருதித் தத்தங் கருத்திற்பட்டதைக் கூறிவிட்டதே அன்றி, உண்மை நோக்கிக் கூறிற்றிலர் என்பது புலனாகின்றது. இவ்விருவருரையும் நோக்கும்போது பெரிய நகைக்கிட மாகின்றது. இனித் தெய்வசிலையாரும் சிவஞானமுனிவரும் தாங் காட்டிய உதாரணங்களையும் துனித்து நோக்காது, ஆகுபெயர், பொருளோடு ஒற்றுமையுடையதாய் வரும்; அன்மொழி அங்ஙன மின்றி வரும் என்று கூறினர். தெய்வச்சிலையார், தகரஞாழல் என்பதில் தகரமுஞாழலு மாகிய இரண்டும் சாந்தின்மேனிற்றலின் அன்மொழித்தொகை யென்றார். அங்ஙனமாயின், தகரமும் ஞாழலும் கூடியதே சாந்தா தலின் அம்மொழிப் பொருளோடு இயைபுடையதன்றெனக் கூறல் எவ்வாறு பொருந்தும்? `கடுங்கோல்' என்னும் பண்புத் தொகையில் வரும் அன்மொழியில், கோலுக்கும் அரசனுக்கும் ஒற்றுமை யின்றேனும் கருங்குழல் முதலிய பண்புத்தொகையில் வரும் அன்மொழியில் ஒற்றுமை காணப்படுகின்றதே? அங்ஙன மன்று; `கருமை குழலுக்கன்றிப் பொருளுக்கு விசேடண மன்மையின், இன்னோரன்ன அன்மொழியாகாது இருபெய ரொட்டாகு மெனின், `பண்பு தொகவரூஉம் கிளவி யானும்' என ஆசிரியர் கூறிய நியதி தப்புகின்றதே? இவற்றிற்கெல்லாம் தக்க சமாதானம் ஒன்று மில்லையாகும். இன்னும் பொற்றொடி என்பதில், பொன் தொடியை விசேடித்து நின்றதென்பது வெள்ளிடை விலங்கல் போல் தெரிந்த தொன்றாகவும் தெய்வச் சிலையார் இருமொழியும் அன்மொழிப்பொருளை விசேடித்து வருவதே அன்மொழித் தொகையெனத் தாம் கொண்டதற் கேற்பப் பொன் தொடியையே யன்றி உடையாளையும் விசேடித்துச் செல்வமுடையாள் என்பதைக் காட்டிநின்றதென வலிந்து பொருள் கொள்கின்றனர். அங்ஙனேல், துடியிடை தாழ்குழல் என்பனவும் உடையாளது இலக்கணச் சிறப்பைக் காட்டி நின்றதெனக் கூறலாமாதலின் அது பொருந்தா தென்பது இவற்றால் அன்மொழிக்கும் ஆகு பெயர்க்கும் தெய்வச் சிலையார் காட்டிய வேறுபாடு பொருந்தாமை யுணரப்படும். இனிச் சிவஞான முனிவரும், இயைபுவேண்டாது பிறிது பொருளுணர்த்திவருவது அன்மொழித்தொகையென்றனர். இவர் இங்ஙன முரைத்தற்குக் காரணம் வடமொழியில் அன்மொழித் தொகைகள் எல்லாம் சக்கிய சம்பந்தமின்றியே தொகையாற்றலால் அன்மொழிப் பொருளை உணர்த்து மென்றும், இலக்கணைக்குச் சக்கியசம்பந்தம் வேண்டுமென்றும் பிரயோக விவேக நூலார் கூறியதை நோக்கிப்போலும். நுணுகி நோக்குவோர்க்குத் தொகையாற்றலாற் பெறப்படும் அன்மொழிப் பொருளும் சம்பந்தம்பெற்று வருகின்றது என்பது பெறப்படும். தொகையாற்றலாற் பெறப்படும் என்று கூறிய பிரயோக விவேக நூலாரே, "தொல்காப்பியர் கூறிய ஆகுபெயரிலக்கணத்தைப் பாணினி முனிவர், தற்குண சம்விஞ் ஞான வெகுவிரீகி, அதற்குண சம்விஞ்ஞான வெகுவிரீகி எனக் கூறுவர்" எனக் கூறுவதாலும் உணரப்படும். தற்குண சம்விஞ்ஞான வெகுவிரீகி, அதற்குண சம்விஞ்ஞான வெகுவிரீகி என்பவற்றிற்குப் பாணினி சூத்திர உரையில் வருவதையும் இங்கே தருகின்றோம். (சர்வாதீநி சர்நாமாநி என்னுஞ் சூத்திரவுரையில் வருவது) தற்குண சம்விஞ்ஞான வெகுவிரீகி - அன்மொழியின் விசேடண மொழிக்குத் தொழிலோடு சம்பந்தமுள்ளதாக அறிதல் எந்த அன்மொழியில் உண்டோ அது தற்குண சம்விஞ்ஞான வெகுவிரீகி; அச்சம்பந்தம் சமவாயம் சம்யோகம் என்ற இரண்டானும் கொள்ளப்படும். இங்ஙனமன்றி, உடைமை முதலிய பிற சம்மந்தமுறுவது அதற்குண சம்விஞ்ஞான வெகுவிரீகி; அவற்றிற்குதாரணம் முறையே லம்பகர்ணோ பும்க்தே - தூங்கு செவிகள் சம்பந்தப்படுகின்றன. இது சமவாய சம்பந்தம். துவிவாசா பும்க்தே-இரு ஆடை யுடையவன் உண்கின்றான். இதில் உண்பவனிடத்தில் இரு ஆடையும் சம்பந்தப்படுகின்றன. இது சையோக சம்பந்தம். சித்திரமும் ஆ நயதி பல நிறம் பொருந்திய பசுக்களை யுடையவனை அழைக்கி றான். இங்கே அழைத்துக் கொண்டு வருதலின் சம்பந்தப் படுகிறவன் உடையவன்; பசுக்கள் அவனுடைய பொருள்; அவை அவனோடு வருதலின்மையின் வினையோடு சம்பந்தப்படுத லில்லை. செவி, ஆடைகளுக்கு உண்ணுந் தொழிலில் சம்பந்த மில்லையேனும் உண்பானோடு குறித்த சம்பந்தங்களினாலே சம்பந்தப்படுதல் பற்றித் தற்குண சம்விக்ஞான வெகுவிரீகி எனப்படும் என்பது. இங்ஙனங் கூறிய அன்மொழிப் பொருட் சம்பந்தத்தை நோக்கும்போது, அன்மொழிப்பொருள் தொகையாற்றலாற் பெறப்படு மேலும், ஆண்டு மியைபுடையதோர் மொழியைப் பற்றியே பெறப்படும் என்பது பெறப்படும். அன்மொழிப் பொருட்கு இயைபு வேண்டாமென்ற சிவஞானமுனிவரும். சூத்திரவிருத்தியில் "அற்றேல் ஆகுபெயர் - விட்ட ஆகுபெயரும் விடாத ஆகுபெயரும் என இருவகையாயவாறுபோல, அன்மொழித்தொகையும் - விட்ட அன்மொழித்தொகையும் விடாத அன்மொழித்தொகையும் என இருவகைப்படும்......... வடநூலார் விடாத அன்மொழித்தொகையைத் தற்குண சம்விஞ்ஞான வெகுவிரீகி என்றும் விட்ட அன்மொழித் தொகையை, அதற்குண சம்விஞ்ஞான வெகுவிரீகி என்றும் கூறுவர்" எனக் கூறுதலானும், அவ்வியைபும் ஆண்டுளதாதல் பெறப்படும். சிவஞான முனிவர் தற்குண சம்விஞ்ஞான வெகுவிரீகிக்குக் காட்டிய உதாரணம்:- `அகரமுதல்'......`னகரவீறு', அகரவீறு, புள்ளியீறு என்பன. அதற்குண சம்விஞ்ஞான வெகுவிரீகிக்குக் காட்டிய உதாரணம். `பொற்றொடி வந்தாள்', `ஒண்ணுதல் கண்டாள்' என்பன. இவற்றுள் பின்னுள்ள இண்டும் முறையே சம்யோகசம்பந்தமும், சமவாய சம்பந்தமுமுடையவாய் வருதலின் தற்குண சம்விஞ்ஞான வெகுவிரீகி ஆகின்றன. சிவஞானமுனிவர் தொழிற் சம்பந்த மந்திரம் நோக்கிக் கூறினார் போலும். அது பாணிணி சூத்திர உரையோடு மாறுபடுதல் நோக்குக. இம்மாறுபாட்டை நோக்கும்போது வடமொழியிற் சம்பந்தங்கொள்வாரும் தத்தங் கருத்துக்கேற்பக் கொண்டு உரைக்கின்றனர் என்பது புலனாகின்றது. இனித் தொல்காப்பியர், ஆகுபெயர்ச் சம்பந்தங்கூறிய "தத்தம் பொருள்வயிற் றம்மொடு சிவணலும் - ஒப்பில் வழியாற் பிறிது பொருள் சுட்டலும்" என்னஞ் சூத்திரத்தை நோக்கும் போது அவர் தொழிலியைபை நோக்காது, ஆகுபெயர்க்கும் பொருளுக்குமே சம்பந்தங்கூறியதாகத் தெரிகின்றது. எங்ஙனமெனில் `ஆகுபெயர் தம் பொருளோடியையுடைய பொருளோடு பொருந்துதலும், தம் பொருட்கியைபில்லாத பிறிது பொருள் சுட்டலும் என இயைபைப் பொருளோடியைபு படுத்திக் கூறினமையின், அன்றி வினையோடு இயைபுபடுத்திக் கொள்ளப்படுமெனின் அதற்கேற்ற சொற்களான் விளங்கக்கூறி யிருப்பார்; அங்ஙனங் கூறாமையிற் பொருட் சம்பந்தமே கூறினார் என்பது துணிபு. இதனை நோக்காது தொல். சொல் - குறிப்பாசிரியரவர்கள் `செந்தமிழ்' தொகுதி-உ.சு, பகுதி-கூ, பக்கம்-சஉச-ல் சேனாவரையர் ஆகுபெயர்க்கு இயைபு கூறிய "தத்தம் சுட்டலும்" என்னுஞ் சூத்திரத்துக்கு இலக்கணையை நோக்காது பொருள் கூறியது பொருத்தமன்றென்பது பொருந்தாது; குறிப்பாசிரியரவர்கள் கிரியைச் சம்பந்தமே நோக்கிக் கூறலின். இனிச் சேனாவரையர் "ஆகுபெயரும் அன்மொழித் தொகை யும் ஒன்றெனவும், இயற்பெயர், ஆகுபெயர் எனப் பெயர் இரண்டா யடங்கும்வழிப் பொற்றொடி என்பது ஒருபெயர்ப் பட்டது. அதுவே அன்மொழித் தொகையாதலுமுடைமை எச்சவியலுள்ளுங் கூறப்பட்டது" எனவுங் கூறினார். அது வடநூல் விதியோடு மாறுபடுதலானும், வடநூல்விதியோடு, மாறு கொள்ளாமற் கூறலே ஆசிரியர் மேற்கோளென `அதனினியறல்' என்னுஞ் சூத்திரத்துத் தாமும் கூறினாராத லானும், அவர்க்கது கருத்தன் றென்க எனச் சிவஞானமுனிவ ருரைத்தமையையும் ஆராய்வாம். முனிவர், வடமொழியோடு மாறுபடுதலானும் எனக் கூறிய தற்குக் காரணம் அன்மொழி தொகையாற்றலாற் பெறப்படும். சக்கிய சம்பந்தம் வேண்டாமென்பது நோக்கியே, தொகையாற்ற லாற் பெறப்படும் அன்மொழிப் பொருளும் சம்பந்தமுடைய மொழிகளிடத்தேயே பெறப்படும் என்பது யாமுன்னுரைத்த வாற்றாற் பெறப்படுதலினாலும், வடமொழியோடு மாறுபடாமற் கூறல், வடமொழிக்குந் தமிழ்மொழிக்கும் ஒத்தவழியன்றிப் பிறவழிக்கூறல் பொருந்தாமையானும், அவர்கருத்துப் பொருந்தாமை யுணர்க. வடமொழியில்வரும் அன்மொழித் தொகை, தமிழில் வரும் அன்மொழித் தொகைபோலன்றித் தாம் எந்த எந்தப் பொருண்மேல் வருகின்றதோ அந்த அந்தப் பொருட்குரிய லிங்கவிகுதியைப் பெற்றுவருதலினாலே தமிழில் வரும் அன்மொழித்தொகை யோடு வேறுபாடுடையது. எங்ஙனம் பெற்று வருகின்றதெனின், வடமொழியிலே நீலகண்ட; (நீலகண்டன்) என்பது நீல கண்டத்தையுடையவன் என விரிந்து அன்மொழிப் பொருளை உணர்த்துகின்றது. இங்கே நீலகண்ட; நீல:- (நீலம்) கண்ட; (கண்டம்) என்னும் இருசொல்லும் தொக்குநின்று தொகை யாற்றலினாலே, அன்மொழிப்பொருளை யுணர்த்தி, அதன்மேல் தான்உணர்த்தும் அப்பொருட்குரிய ஆண்பால் (பும்லிங்க) விகுதியைப்பெற்று நீலகண்ட; என வருகின்றது. ஆண்பாலில் வரும் பீதாம்பர; என்பது பெண்பாலில் பீதாம்பரா எனவரும். தமிழில் வரும் பொற்றொடி என்னும் அன்மொழித் தொகை தானுணர்த்தும் பொருட்குரிய விகுதியின்றியே நிற்கின்றது. விகுதிபெற்றுப் பொற்றொடியாள் என நிற்பின், அது பெயராகுமன்றி, அன்மொழித் தொகையாகாது. ஆதலின், இரண்டிடத்தும் வரும் அன்மொழித் தொகைகளுள் சிறிது வேறுபாடுடையன. ஆதலின் இரண்டையும் ஒப்புக்கொண்டு இலக்கணங்கூறல் பொருந்தாது என்பதூஉம், வடமொழியோடு ஒப்புக் கோடல் ஒத்தவிடத்தன்றி, ஒவ்வாதவிடத்தன்று என்பதூஉம் உணர்ந்துகொள்க. இரண்டிடத்தும் வரும் அன்மொழித் தொகைகளும் சிறிது வேறுபாடுடையவெனத் தொல்-சொல்-குறிப்பாசிரியர் அவர்களும் தமது குறிப்புள் எழுதியிருக்கிறார்கள். அதனைச் `செந்தமிழ்'த் தொகுதி-24, பகுதி-கூ, பக்கம்-424-ல் காண்க. இன்னும் இவ்விகுதி வேறுபாடு குறியாதே, சேனாவரையர் தொகையை நோக்கும்போது அன்மொழித் தொகை என்றும் பெயரை நோக்கும் பொழுது ஆகுபெய ரென்றும், கூறியிருப்பதே தக்க சமாதானமாதலின், அதனையும் ஈண்டு விளக்குவாம். `பொற்றொடி' என்புழி, பொன், தொடி என்னும் அவ்விருமொழி யும் தொக்கதொகை யாற்றலினாலே, அன்மொழிப் பொருள் பெறப்படும் என்றும், அது இறுதிமொழியைப் படுத்துக்கூறப் பெறப்படும் என்றும், சேனாவரையர் கூறுதலினாலே பொற்றொடி என்பது `வந்தாள்' என்பதோடு தொடர்புப்பட்டு நிற்குமிடத்து, `வந்தாள்' என்னும் வினைக்கும், `தொடி' என்னும் பெயர்க்கும் இயைபின்மையின், அத் `தொடி' என்பது, அவ்வினை யோடியை புடைய `அணிந்தாள்' என்னும் வேறு பொருளை யுணர்த்தி நிற்கின்றது என்பது பெறப்படும். அப்பொருள் அன்மொழிப் பொருளாதலின் `பொற்றொடி' அன்மொழிப் பொருளை யுணர்த்தி வந்த தொகைமொழி எனப்படும். அவ்வன்மொழிப் பொருள் `தொடி' என்னும் இயற்பெயரினின்றும் ஆகிய பொருளாதலின் `பொற்றொடி' இருபெயரொட்டாகு பெயரெனவும் பட்டது சுருங்கக் கூறில், `பொற்றொடி' யென்னுந் தொகையாற்றலாற் பெறப்பட்ட அன்மொழிப் பொருளே. `பொற்றொடி' என்னும் இரு பெயரொட்டில் வந்த ஆகுபெயர்ப் பொருளுமாதலின் இரண்டு மொன்றென்பதே சேனாவரையர் கருத்தாம். ஆதலாற்றான் தொகையை நோக்கும்போது அன்மொழித் தொகை யென்றும், பெயரை நோக்கும்போது ஆகுபெயரென்றுங் கூறினார். இதில் வரும் வழு யாது என்பதை யாம் அறியேம். தமிழில் வரும் அன்மொழித்தொகைக்கும், இருபெய ரொட்டுக்கும் சிறிதும் வேறுபாடு காணப்படாமையின் இங்ஙனம் கூறலே பொருத்தமாம். தொல்காப்பியர் `இருபெயர்' எனக் கூறாது இரு பெயரொட்டு எனக் கூறியதை உற்று நோக்கினார்க்குத் தொகையும் ஒட்டும் ஒன்றென்பது பெறப்படும். ஒட்டுதல் - சேர்தல் = தொகுத்து. ஒட்டெனக் கூறியது இருமொழி யும் பிரிந்து நின்று ஆகுபெயர்ப்பொருளை உணர்த்த மாட்டாமை கருதி, அங்ஙனமே அன்மொழித்தொகையும் பிரிந்து நின்று அன்மொழிப் பொருளை யுணர்த்தா. ஆதலால் இரண்டும் ஒன்றென்றற்கு வருந்தடை யென்னையோ? கிளிமொழி, தகரஞாழல், வடகிழக்கு என்னும் அன்மொழியுள், மொழி, ஞாழல், கிழக்கு என்பன பிரிந்துநின்று அன்மொழிப் பொருளையுணர்த்த மாட்டாமையும் அங்ஙனமே, அவ்வாகு பெயர் வேறெனக் கூறுவார். அவ்வாகுபெயர்க்குக் காட்டிய மக்கட்சுட்டு, அறுபதம், வகரக்கிளவி முதலியனவும், பின்மொழிகள் தனித்துநின்று குறித்த ஆகுபெயர்ப் பொருளை யுணர்த்தமாட்டாமையும் அறிந்து கொள்க. இனி, பசுங்கிளி, பூங்கொடி முதலிய அன்மொழிகள் பிரிந்து நின்றும் உணர்த்துமன்றோவெனின், அவைபோன்ற சில மொழிகள் வழக்காற்றில் இருவேறுவகையால் (அஃதாவது ஓரிடத்துத் தொக்கும் பிறிதோரிடத்துத் தனித்தும்) உணர்த்து மாற்றலுள்ளனவாகின், அக்காரணம் பற்றித் தொகையிலக்கணம் பிறழா; தொக்கு வரும் வழித் தொகையிலக்கணமமைதலின். இங்ஙனம் கிளி என்ற விடத்து ஆகுபெயரென்றும், `பசுங்கிளி' என்றவிடத்து அம்மொழியே தொகையென்றும் கூறப்படுதலும் ஆகுபெயரும் அன்மொழியும் ஒன்றென்பதற்கும் தக்கசான்றாம். பாயினமேகலை, வாரேறு கொங்கை, முற்றாமுலை, கைபரந்து வண்டிசைக்குங் கூந்தல், என்பனவற்றை வடமொழி நோக்கிப் பிரயோக விவேக நூலார் அன்மொழி என்பர். தமிழில் இவை அன்மொழியாகா. ஏனெனில், தொகைமொழியில் அன்மொழிப் பொருள் வருதல் நோக்கி, அத்தொகைமொழிகளை, அன்மொழித் தொகையெனத் தொகைகளோடு ஒருங்குவைத்து, எல்லா ஆசிரியரும் ஓதுதலின் `பாயினமேகலை' முதலாயின தொகை யன்றித் தொடர் ஆதலில், இவற்றை அடையடுத்து நின்ற ஒருமொழியாகக் கொண்டு ஆகுபெயரென்றலே பொருத்தமாம். பேராசிரியரும், `பாயினமேகலை', ஒரு சொல்லாதலின் ஆகுபெய ரென்றதும் இக்கருத்து நோக்கியே என்க. தமிழ்மொழி இலக்கணத்தை வடமொழியிலும் வடமொழி இலக்கணங்களைத் தமிழிலும் புகுத்திவிட வேண்டுமென்றும், அப்படிக் கூறினால் வடமொழியிலக்கண முணர்ந்தவர் எனத் தம்மை மதிப்பார் என்றுங் கருதியே, இவ்வாறு அன்மொழித் தொகைக்கும் ஆகுபெயருக்கும் வடமொழிநோக்கி வேறுபாடு கூறித் தமிழிலக்கணத்தைப் பிறழச்செய்தனர் என்பதும், சேனாவரையர் இரண்டையும் நன்கு ஆராய்ந்து ஒப்பனவற்றை ஒப்பக்கூறியும், ஒவ்வாதவற்றை விடுத்தும் கூறலின் அவருரையே கொள்ளத்தக்கன என்பதும் எமது கருத்தாகும். இருபெய ரொட்டாகுபெயரும் அன்மொழியும் ஒன்றென்பதில் ஒத்தகருத்துடையார், உரையாசிரியர் நல்லார் முதலியோருமாம். "கனங்குழை" ஆகுபெயர் என்பர் பரிமேலழகர். `அருந்திறல் - இராமன்' அது, அன்மொழித்தொகை ஆகுபெயர் (சிலப்பதிகாரம்: புறஞ்சேரி-309-ம் பக்க உரை) என்பர் அடியார்க்கு நல்லார். `மகரப்பகுவாய்' முதலியவற்றை (திருமுரு-25-ம் அடி-உரை) நச்சினார்க்கினியரும் மயங்கி ஆகுபெயரென்பர். இதுகாறும் கூறியவாற்றால், ஆகுபெயரென்றி, அன் மொழித் தொகையும் உற்றுநோக்குவோர்க்குச் சக்கியசம்பந்தம் பெற்றே வருகின்ற தென்பதூஉம், வடமொழியில்வரும் அன்மொழித் தொகைக்கும், தமிழில் வரும் அன்மொழித் தொகைக்கும் சிறிது வேறுபாடு உண்டென்பதூஉம், வடமொழி யில்வரும் அன்மொழித் தொகைக்கும், இலக்கணைக்கும் வேறுபாடு இருத்தல் போலத் தமிழில் வரும் அன்மொழித் தொகைக்கும் ஆகுபெயர்க்கும் வேறுபாடின்மையிற் சேனாவரையர் ஒன்றெனக் கூறியதே பொருத்தமுடைய தென்பதூஉம், சேனாவரையர்க்கன்றி உரையாசிரியர், பரிமேலழகர், அடியார்க்குநல்லார் முதலியோர்க்கும் ஒன்றென்பது கருத்தென்பதூஉம் பெறப்படுதல் காண்க - இலக்கண வரம்பு மகாவித்துவான் சி. கணேசையர் கலாநிதித ஸ்ரீ. பிரசாந்தன், பக். 25-84 8. தொகை நிலை தொகைநிலையாவது வேற்றுமை முதலிய பொருண்மேல் இரண்டும் பலவுமாகிய சொற்கள் பிளவுபடாது ஒன்றுபடத் தம்முளியைந்து நிற்றல் என்றும், தொகுங்காற் பெயரும் பெயரும், பெயரும் வினையும் தொகுமென்றும் சேனாவரையர் கூறுவர். உரையாசிரியர் முதலியோர் பெயரும் பெயருமே தொகுமென்றும் பிளவுபட்டிசைத்தலானே பெயரும் வினையும் தொகா வென்றுங் கூறுவார்கள். இவ்விருகூற்றினுள் எது பொருத்தமுடைத்தென்பதே ஈண்டு நாம் ஆராய்தற்பாலது. (ஈண்டு நாம் ஆராய்வது மாணாக்கருக்கு உணர்வு பெருகலாகிய பயன்குறித்தேயாகலின், பெரியோ ருரைக்கண் ஆராய்ச்சி நிகழ்த்தி அவர்களை அவமதித்தான் இவன் என்னும் குற்றம் நம்மேல் அணுகாதென்பதே துணிபு) உரையாசிரியருக்குப் பெயரும் பெயருமே தொகுமென்ப தும் பெயரும் வினையுந் தொகாவென்பதும் கருத்தாதல். பெயருந் தொழிலும் பிரிந்தொருங் கிசைப்ப வேற்றுமை யுருபு நிலைபெறு வழியுந் தோற்றம் வேண்டாத் தொகுதிக் கண்ணும் என்னுஞ் சூத்திரத்திற்கு அவர் பெயர்ச்சொல்லும் வினைச் சொல்லும் பெயரும் வினையுமாய்ப் பிரிந்தும் பெயரும் பெயரு மாய்க் கூடியுமிசைப்ப வேற்றுமையுருபு தொகாது நிலைபெற்ற விடத்தும் அவை தோற்றுதல் வேண்டாத தொகுதிக்கண்ணும் எனவுரைத்த வுரையானும், விளவினைக் குறைத்தான் விளவினைக் குறைத்தவன் எனவும், நிலாத்துக்கொண்டான் நிலாத்துக் கொண் டவன் எனவும் காட்டியவுதாரணத்தானு மறியப்படும். இவர் இங்ஙனங்கூறியது பெயரும் பெயருமே தொகுமென் னும் வடநூல்விதியை மேற்கொண்டேயாம். வடநூலில் வினை கொண்டு முடிவதெல்லாங் காரகமெனப்படுமாயினு, வினை கொண்டு முடிதற்கண் உருபு விரிந்தல்லது தொக்கு வாரா. தமிழ் நூலில் விரிந்தன்றித் தொக்கும் வருதலின் தொகையெனவேபடும். வடநூல் விதியையுந் தமிழ்நூல்விதியையும் ஒப்பக்காண்பது இரண்டற்கும் மாறுபாடில்லாதவிடத்தேயாம். உள்ளவிடத்திலே ஒப்பக்காணில் ஒன்றோடொன்று முரணும். இத்தொகையில் இரண்டற்கும் மாறுபாடுண்மையின் ஈண்டு வடநூல் விதியை மேற்கோடல் பொருந்தாது. மேற்கொள்ளின், தமிழ் வழக்கழியும். ஆதலால், தமிழ் நூல் வழக்கையுணர்ந்து உரைசெய்தலே முறை யாம். இம்முறையைப் பெரிதும் அங்கீகரித்து உரை செய்தவர் சேனாவரையரொருவரே. ஆதலின், தமிழ்வழக்கறிந்து பெயரும் வினையுந் தொகுமெனக்கொண்ட சேனாவரையருரையே யீண்டுப் பொருத்தமாம். அங்ஙனமாயின், மேற்கூறிய சூத்திரம் அவருரையோடு மாறுபடுமேயேனின் மாறுபடாது. என்னை? அதற்கு அது பொருளன்றாதலின். அங்ஙனேல், அதன்பொருள் என்னையெனிற் கூறுதும். அதன்பொருள், "பெயரும் பெயரும். பெயரும் தொழிலும் பிரிந்திசைப்ப வேற்றுமையுருபு நிலை பெறு வழியும் அவை ஒருங்கிசைப்ப அவ்வுருபுகள் நிலைபெறுதல் வேண்டாத தொகைச் சொற்கண்ணும்" என்பதே. ஆசிரியருக்கு மிதுவே கருத்தாதல் பிரிந்தொருங்கிசைத்தலைப் பெயருக்கும் வினைக்கும் பொதுவாகக் கூறினமையினானும் பின் விரிதலையும் தொகுதலையும் முறை நிரனிறைவகையானே விளங்க வைத்தமை யினானும் அறியப்படும். அன்றி, உரையாசிரியர் முதலியோர் கூறியதே கருத்தாயின் "பெயரும் தொழிலும் பெயரும் பிரிந் தொருங்கிசைப்ப" என விளங்கச் சூத்திரிப்பார். அங்ஙனஞ் சூத்திரி யாமையினானும், பெயருந் தொழிலும் என்பதிற் பெயரை முற்கூறினமையினானே பெயரும் பெயரும். பெயரும் தொழிலும் என்று பொருள்கோடல் முறையாகுமன்றிப் பெயரும் தொழிலும் பெயரும் பெயருமெனப் பொருள்கோடல் முறையன்றாமாக லானும். பிறாண்டும் "பெயரினாகிய தொகை" எனப் பெயரும் பெயரும் இயையுந் தொகையையே முன்வைத்து உம்மையால் தழுவிய பெயருந் தொழிலுமியையும் வினையினாகிய தொகையைப் பின்வைத்தமையினானும், அம்முறையே பெயரும் பெயரும் பெயருந் தொழிலும் எனப் பொருள் கொள்ளுமிடத்துப் பிரிந்திசைத்தல் பெயருக்கேயாய்க் குறித்த பொருளோடு மாறுபடுதலினாலும், ஒருங்கிசைத்தலை எதிர்நிரனிறையாகக் கொண்டு பெயரொடு முடிக்கலாமெனின் அது மயங்க வைத்த லாய் முடிதலானும், சேனாவரையர் கருத்தே பொருத்தமாதல் காண்க. இன்னும், தோற்றம் வேண்டாத்தொகுதியென இருசொற் றொகுதலே தொகையென்பதூஉம்பட ஆசிரியர் கூறினமை யானும் சேனாவரையர் கருத்தே ஆசிரியருக்கும் கருத்தாதல் தெரியப்படும். இனி, உரையாசிரியருக்கு மிதுவே கருத்தாதல். நிறுத்த சொல்லுங் குறித்துவரு கிளவியு யடையொடு தோன்றினும் புணர்நிலைக் குரிய என்னுஞ் சூத்திரத்து உரையின்கண் `இனி ஒழிந்த வேற்றுமைத் தொகையும் உவமத்தொகையும் தன்னினமுடித்தலென்பதனால் ஈண்டு ஒரு சொல்லெனப்படும்' என அவர்கூறினமையினானும் அறியப்படும். சாத்தனிலங்கடந்தான் என்புழி நிலங்கடந்தான் என்பது ஒருசொல்லாய்வைத்து நிலைமொழியோடு புணர்க்கப் படுதல் காண்க. இன்னும், ஆசிரியர், "பெயரினாகிய தொகையுமாருளவே, அவ்வுமுரிய வப்பாலான," என்னுஞ் சூத்திரத்தானும் இக்கருத்தே யமையக்கூறுதல் காண்க. எங்ஙனமெனில், உம்மையால், பெயரும் வினையுந் தொக்க தொகையுமுள என்னும் பொருளை எளிதிற் பெறவைத்தமையான் என்பது. இனி, இவ்வும்மைப் பொருளைச் சிவஞானமுனிவர் மறுத்து வினையினாகிய பெயரும் உள என அதற்கு வேறுபொருள் கூறுவர். உம்மைக்கு அவ்வாறு பொருள் கோடல் வழக்கின்மையின் அது பொருந்தாதென்க. அன்றியும், அவ்வினையினாகிய பெயரும் பெயரினாகிய தொகையுள் அடங்கு மாதலினாலும் அது பொருளன்மையுணர்க. இனி, தொல்காப்பியத்தின் வழி நூல்செய்த நன்னூலா ருக்கு மிதுவே கருத்தாதல், பெயரொடு பெயரும் வினையும் வேற்றுமை முதலிய பொருளினவற்றி னுருபிடை யொழிய விரண்டு முதலாத் தொடர்ந்தொரு மொழிபோன டப்பன தொகைநிலைத் தொடர்ச்சொல் என்பதனானும், முற்றீ ரெச்ச மெழுவாய் விளிப்பொரு யாறுரு பிடையுரி யடுக்கிவை தொகாநிலை என்பதனானும் அறியப்படும். இன்னும், ஆசிரியர் தொல்காப்பியருக்கும் உருபு விரிந்து நிற்றல் தொகையென்பது கருத்தன்றாதல், உருபுதொடர்ந் தடுக்கிய வேற்றுமைக் கிளவி ஒருசொன் னடைய பொருள்சென் மருங்கே என விரியை வேறாகவும், எல்லாத் தொகையி மொருசொன் னடைய எனத் தொகையை வேறாகவும் பிரித்துக் கூறினமையானும் அறியப்படும். இனி, சிவஞான முனிவர் நிலங்கடந்தான், நாய்கோட்பட் டான், அறங்கறக்கும், வரைபாய்ந்தான், குன்றத்திருந்தான் என்ப வற்றுள் உருபுதொக்கவாயினும் வினையொடு முடிதலின், "எல்லாத் தொகையு மொருசொன் னடைய" என்னுந் தொகை யிலக்கணம் பெறாது பக்கிசைத்தலான் இவை தொகாநிலை யேயாம் என்க என்றார். இதனால் முனிவர் இருசொற் பிளவு படாது நிற்றல் தொகை யென்னுங் கருத்தளவிற் சேனாவரைய ரோ டொப்பினும், பெயரும் வினையும் இயைவது பிளந் திசைத்தலின் அது தொகா நிலையெனக் கோடலினாலே பெயரும் வினையும் இயைவதுந் தொகையெனக் கொள்ளும் சேனாவரையரோடு மாறுபடுகின்றன ரென்பது அறியக் கிடக்கின்றது. ஆதலின் அதனையும் ஈண்டு ஆராய்வாம். நிலங்கடந்தான் என்பது வினையொடு முடிதலினாலே பிளந்திசைத்தலின்று. ஏனெனில், நிலத்தைக்கடந்தான் என்பது போலாது ஒருசொற்பட நிற்றலின் என்பது. அங்ஙனேல் நிலத்தைக் கடந்தான் என்பதும் ஒருசொல்லாய் நிற்குமென்று கொண்டா லென்னையெனின், நிலத்தைக்கடந்தான் என்பது உருபு இடையே விரிந்துநின்று இருசொல்லையும் பிளவுபடச் செய்தலின் அது பொருந்தாதென்பது. நிலங்கடந்தான் என்பது உருபுவிரியாமையினாலே இருசொல்லும் பிளவுபடாது ஒட்டி நிற்றலினால் ஒருசொல்லேயாம் என்பது. இருசொல் ஒட்டி நிற்றலே தொகை யென்பது வடநூலாருக்குங் கருத்தாதலினால் நிலங்கடந்தான் என்பது தொகைப்பதமெனவே படும். அங்ஙனேல் வடநூலார் வினையொடு முடிதலைத் தொகைப்பதமென விதித்திலரெனின் அதற்குப் பெயரும் வினையும் ஒட்டிமுடியாத லின்றாதலின் அவ்வாறு கூறிற்றிலரென்பது ஒட்டிமுடியா ததற்குக் காரண மென்னையெனின் வினையொடு முடியுங்கால் நிலத்தைக் கடந்தான் (பூமிம் அலங்கயது) என ஆண்டு உருபு விரிந்தே நிற்குமன்றித் தொக்கு நில்லாமையானென்பது ஈண்டு நிலங்கடந்தான் என்பது தொக்கு நிற்றலின் தொகை யெனவே படும். அவ்வாறாதல் முன்னருங்கூறினாம். அறிந்துகொள்க. இங்ஙனம் பெயரும் வினையும் பிளவுபடாதிசைத்தல் பற் றியே "எல்லாத் தொகையு மொருசொன் னடைய" என ஆசிரியர் கூறினார். "ஒருசொன் னடைய" என்பதற்கும் பிளவு படாது ஒரு சொல்லாய் நடத்தலையுடைய எனப் பொருள் கோடலே முனிவருக்குக் கருத்தாம். அதுவே சேனாவரையர் கருத்துமாம்: அதனை அச்சூத்திரத்திற்கு "அறுவகைத் தொகைச் சொல்லும் ஒரு சொல்லாய் நடத்தலையுடைய" எனக் கூறிய உரையாலும், அதற்கு "ஒரு சொன்னடையவெனப் பொதுப்படக் கூறியவத னால் யானைக் கோடு, கொல்யானை என முன்மொழி பெய ராகிய வழி ஒரு பெயர்ச்சொன்னடையவாதலும், நிலங் கடந்தான், குறைத் திருந்தான் என முன்மொழி வினையாயவழி ஒரு வினைச்சொல் நடையவாதலுங் கொள்க. அவை உருபேற்றலும் பயனிலை கோடலும் முதலாகிய பெயர்த் தன்மையும் பயனிலையாதலும் பெயர்கோடலும் முதலாகிய வினைத்தன்மையு முடையவாதல் அவ்வச் சொல்லொடு கூட்டிக் கண்டுகொள்க" என்னும் விரிவுரையானும் அறியப்படும். ஈண்டு உருபும் பயனிலையும் கொள்ளுங்காற் கோடு என்பது போலவே யானைக்கோடு என்பதும் ஒருமொழியாக நிற்கு மென்பதும், பயனிலையாதலையும் பெயர்கோடலையு மடையுங் கால் நடந்தான் என்பதுபோலவே நிலங்கடந்தான் என்பது நிற்கு மென்பதுமே ஒருபெயர்ச்சொல்நடையவாதல், ஒருவினைச் சொல்நடையவாதல் என்பவற்றின் கருத்தாதலின் "அவற்றை அவ்வச்சொல்லொடு கூட்டிக்கண்டுகொள்க" என்றார். எனவே அவை ஒரு சொல்லாதலை முடிபு கோடலில் வைத்தறிந்து கொள்க என்பதே அவர் கருத்தாம். அன்றி ஒருசொல்லாய் நின்று முடிபு கொள்ளும் என்பது அவர்கருத்தன்று; இன்னும் ஒரு சொல்லாய் நிற்குமென்பதே அவர் கருத்தாதல் "ஒருசொன் னடைய" என்பதற்கு ஒருசொன்னடையவா மென்பதல்லது எழுவாய் வேற்றுமையா மென்னுங் கருத்தின்மையானும் அறியப் படும் (சொ-கூஎ-உரை) ஆதலின் வினையொடு முடிவது தொகை யன்றென்னும் முனிவர் கருத்து நிரம்பாதென்க. அற்றேல் நிலங் கடந்தான் நாய்கோட் பட்டான் என்பனபோலவே. நிலத்தைக் கடந்தான் நாயாற்கோட் பட்டான் என்பனவும் ஒருசொன்னீர் மையனவாக நின்று பயனிலை யாகுமென்றால் என்னையெனின் அவை ஒருசொன்னீர் மையனவாக நின்று பயனிலை யாகாவாதலின் அது பொருந்தா தென்பது எங்ஙனமெனிற், காட்டுதும். சாத்தன் நிலங்கடந்தான் என்புழிச் சாத்தன் என்ன செய்தான் என்னும் வினாவுக்கு நிலங்கடந்தான் என்பது விடையாதலினாலே, ஆண்டு நிலங்கடந்தான் என்பது ஒருவினைச் சொல்லாய் நின்று பயனிலையாதலானும், சாத்தன் நிலத்தைக் கடந்தானென் புழிச் சாத்தன் என்னசெய்தான் என்ற வினாவுக்குக் கடந்தான் என்பதே விடையாதலின் ஆண்டு நிலத்தைக் கடந்தான் என்பது ஒருசொல் லாகாது வேறுபிரிந்து எதை? என்னும் வினாவுக்கு விடையாதலானும் என்பது. அற்றேல், நிலங்கடந்தவன் வந்தான் என்புழி வந்தான் என்னும் பயனிலைக்கு நிலங்கடந்தவன் என்பது ஒருசொன்னீர்மைப்பட்டு எழுவாயாய் நின்றாற்போல நிலத்தைக்கடந்தவன் வந்தான் என்புழியும் நிலத்தைக் கடந்தவன் என்பதும் ஒருசொல்லாய் எழுவாயாய் நின்றதன்றோவெனின், ஆண்டு நிலத்தைக் கடந்தவன் என்பது பொருள்பற்றி ஒருசொல்லாய் நின்றதன்றித் தொகையால் ஒருசொல்லாய் நின்றதன்றாம். அதனை "எவன் வந்தான்" என்னும் வினாவுக்கு நிலங்கடந்தவன் என்பது விடையாதலானும் நிலத்தைக் கடந்தவன் என்பது விடையாகாமையானும் அறிந்துகொள்க. இன்னும், குன்றக்கூகை பறந்தது என்புழிக் குன்றக்கூகை என்பது பறந்தது என்னும் வினைக்கு எழுவாயாய் நின்றாற் போலக் குன்றத்தின்கட்கூகை பறந்தது என்புழியும் குன்றத்தின் கட்கூகை என்பது ஒருசொல்லாய்ப் பறந்தது என்னும் பயனிலை கொண்டு நில்லாதோவெனின் நில்லாது. என்னை? ஆண்டுக் குன்றத்தின்கண் என்பது பறந்தது என்பதனோடு முடிந்து குன்றத்தின்கட் பறந்தது எனவும் பொருள்பட்டு மயங்கிநிற்றலின் என்பது. குன்றத்தின் கட்கூகை என்பதைக் குன்றத்தின் கண்ணுள்ள கூகை என விரித்து முடித்தல் அமையுமன்றோ வெனின். அமையுமேனும் ஆண்டு உட்டொடர் பலவாய் விரியாகுமன்றித் தொகையாதல் நிரம்பா தென்க. ஆதலின் உருபுதொகப் பெயரும் பெயரும், பெயரும் வினையும் இயைவதே தொகைச்சொல் என்பதற் கிழுக்கின்மையறிக. இனி, செய்தான்பொருள், இருந்தான்மாடத்து என்பவற்றைத் தொகாநிலைச்சொல்லெனக் கொண்டமையாற் பெயரும் வினையும் இயைவது தொகையன்றென்பது சேனா வரையருக்கும் கருத்துப்போலும் என்று முனிவர் கூறினார். சேனாவரையர் அவற்றைத் தொகாநிலையெனக் கொண்டது வினை முன்னும் பெயர் பின்னுமாக மாறிப் பிளவுபட்டு நிற்றலா னன்றி வினையொடு முடிதல்பற்றியன்று. அதனை முனிவர் "எல்லாத்தொகையும்" என்னுஞ் சூத்திரத்துரை யாயனும், "வேற்றுமைத்தொகை" என்னுஞ் சூத்திரத்துச் செய்தான் பொருள், இருந்தான் மாடத்து என உருபுதொக்கு ஒரு சொன்னீர்மைப்படாதனவும் தொகை யாவான் சேறலின் அவற்றை நீக்குதற்கும் என்றமையானும் நன்கறிந்தும் தாம்பிடித்த தையே சாதிக்குமாறு சேனாவரையர்க்கும் அதுவே கருத்துப் போலுமென்றொழிந்தார். கருத்துப்போலும் என்றதனால் அவர்க்கது கருத்தன்மை தெரிந்தாரென்பதே துணிபு. இன்னும், நச்சினார்க்கினியர் செய்தான்பொருள், இருந்தான் மாடத்து என்பன பிளவுபட்டிசைத்தலின் இருசொற் றொகுதல் தொகையெனக்கொண்ட சேனாவரையர் கருத்து நிரம்பாது; உருபுதொகுதலே தொகையென்றாரா லெனின், அது பொருந்தாது என்னை? அவை ஒட்டி ஒருசொல்லாய் நில்லாமையின் தொகைச் சொல்லாவது ஒட்டி ஒருசொல்லாய் வரவேண்டு மென்பதே ஆசிரியர் கருத்தாமென முன்னருமோ தினாம். அது பற்றியே சேனாவரையரும் செய்தான்பொருள் இருந்தான் மாடத்து என்பன ஒட்டி ஒருசொல்லாய்வாரா மையின் அவை தொகையன் றென்றார். அங்ஙனேல் அவற்றையும் உருபுதொகுதலிற் றொகை யெனல் வேண்டுமன்றோவெனின், தொகையே மாறிப் பிளவுபட்டு நின்றதெனப்படுமாதலின் அதன்கண் ஆராய்ச்சியின்றென்பது. தொகை மாறிநின்ற தென்பதே சங்கர நமச்சிவாயர் கருத்தும். அதனை, பொதுவியல் கஉ(12)ஆம் சூத்திரவுரையிற் காண்க. இன்னும், சேனாவரையர். உயர்திணை மருங்கி னும்மைத் தொகையே பலர்சொன் னடைத்தென மொழிமனார் புலவர் என்னுஞ் சூத்திரவுரையின்கண், உயர்திணைக்கண்வரும். உம்மைத் தொகை பலர்க்குரிய வீற்றான் நடக்கும் என்றதனானும் தொகை யொருசொல்லாதல்பெற்றாம். ஒரு சொன்னீர்மை பெற்றின்றாயின், கபிலன், பரணன் என ஒருமைச்சொல் ஒருமை யீற்றான் நடத்தற் கட்படும் இழுக்கென்னை யென்பது என வுரைத்தமை யானும் இருசொற் பிளவுபடாது நடத்தலே தொகையிலக்கணம் என்பதை வலியுறுத்துதல் காண்க. இதனால், பெயரும் பெயரும் கூடிப் பிளபுபடாதிசைத்தற்கு உருபுந் தொகல் வேண்டுமென்பது ஆசிரியருக்கும் சேனாவரையருக்குங் கருத்தாதல் தெளிக. இனி, நச்சினார்க்கினியர், "எல்லாத்தொகையு மொரு சொன் னடைய" என ஆசிரியர் கூறிய சூத்திரக் கருத்தை நுணுகி நோக்காது பெயரும் வினையும் பிரிந்திசைத்தவழியும் வேற்றுமையுருபு தொகுதலின் தொகையெனத் தாங்கொண்ட பொருளைச் சாதிக்குமாறு, அச்சூத்திரத்திற்கு எல்லாத் தொகைச்சொற்களும் ஒருசொல் நின்று தன்னைமுடிக்குஞ் சொற்களோடு முடியுமாறு போலித் தாமுந் தம்மை முடிக்குஞ் சொற்களோடு முடிதலை யுடைய என்று பொருள் கூறினார். ஆசிரியருக்கு இச்சூத்திரத்தால் முடிபு கோடல் கருத்தாயின், பெயரி னாகிய தொகையுமா ருளவே யவ்வு முரிய வப்பா லான. எனத் தொகைகொண்டு முடிவுகூறார். என்னை! அது கூறியது கூறிற்றாமாகலின். அன்றியும், "பெயரினாகியதொகை" என ஆசிரியர் கூறினமையினானே உருபு மறையச் சொற்றொகு தலையே தொகையென ஆசிரியர் வேண்டினாரென்பது நன்கு தெளியப்படும். உம்மையினாலே உருபு மறையப் பெயரும் வினை யுந் தொகுதலையும் தொகையென்றே ஆசிரியர் கொண்டா ரென்பதும் நன்கு தெளியப்படும். அங்ஙனமாகச் சொற் பிளவு படினும், உருபு தொகுதலே தொகையென்ற நச்சினார்க்கினியர் கருத்து, ஆசிரியர் கருத்தோடு முரணுதல் காண்க. அன்றியும், ஒருசொல்லாய் நிற்றல் என்பதன்கண் இவர்கொண்ட கருத்து ஒருசொல்லாய் நின்று உருபேற்றலும் பயனிலை கோடலுமே யாகலின் அது உருபு விரிந்து நிற்குந் தொகாநிலைச் சொற் கண்ணும் வருதலின் அது பொருந்தாதென வுட்கொண்டே சங்கர நமச்சிவாயரும் "பெயரோடு பெயரும்" (பொ. க0) என்னும் நன்னூற் சூத்திரவுரையின்கண் "ஒருமொழி போனடத்தலாவது கொல்யானை வந்தது, நிலங்கடந்தான், சாத்தன் என இரண்டு முதலிய பல சொற்றொடர்ந்து ஒருபெயராயும் வினையாயும் நின்று தம்முடிபேற்றலெனப் பொருள் கூறின், அவ்வாறு தொகா நிலைத் தொடருங் கொன்ற யானைவந்தது நிலத்தைக் கடந்தான் சாத்தன் என நடக்குமாதலின் அது பொருந்தாதென்க" என மறுத்தார். இன்னும், நச்சினார்க்கினியர், சேனாவரையர் மறுக்குமாறு, அதுவென வேற்றுமை யுயர்திணைத் தொகைவயின் அதுவெ னுருபுகெடக் குகரம் வருமே என ஆசிரியர் கூறிய சூத்திரத்திற்கு நேரே பொருள் கொள்ளாது, "உயர்திணைத் தொகையிற் குகரம்வரும் அது வென் வேற்றுமை அதுவெனுருபு கெடவரும்" என இயைபின்றி மாற்றியும், "உடை மைப் பொருள்வரு" மென இல்லாத பொருளை வருவித்தும் ஆசிரியர் கருத்தொடுமுரணப் பொருள்கொண்டு, `நம்பிமகன் என்னுந் தொகை நம்பிக்கு மகன் என விரியும்; இஃது உருபு மயக்கம்' என்றும், `நின்மகள் பாலுமுண்ணாள்' `யா மெம்மகனைப் பாராட்ட' என்பவற்றுள் அதுவெனுருபுகெட அதனுடைமைப் பொருள் விரிந்தவாறு காண்க; இவை உருபுநிலைக்களத்துப் பொருண் மயங்கின என்றும், இவற்றிற்கு நான்கனுருபு விரிப்பின் நினக்கு மகளாகியவள் எமக்கு மகனாகியவனை என ஆக்கங் கொடுத்துக் கூறல்வேண்டும்; ஆண்டு அம்முறைமை செயற்கை யாமாதலின் அது பொருளன்மையுணர்க என்றும் உதாரணங் காட்டினர். ஆசிரியர் அதுவெனுருபுகெட வுடைமைப் பொருள் வரும் என்று கூறினாரல்லராதலானும், உடையவென்பது சொல்லுருபன்றிப் பொருளுள்ளறாதலானும், நின்மகள் என்பதும் நம்பி மகன் என்பதுபோலப் பயனிலை கொள்ளாது நின்ற வழி நினக்கு மகள் என விரியுமாதலானும், நம்பிமகன் என்பதும் பயனிலை கொள்ளுங்கால் நம்பிக்குமகன் வந்தான் என முடியாமையின் நம்பியுடையமகன் வந்தான் என்றாதல் நம்பிக்குப் பிறந்தமகன் வந்தான் என்றாதல் விரித்தல் வேண்டுமாதலானும், நின்மகன் என்பதையும் நினக்கு பிறந்தமகன் என விரிக்கலாமாதலானும் அது பொருந்தாதென மறுக்க அன்றியும், நினக்கு மகனா யுள்ளவன் என்பது ஆக்கமெனின் இயற்கையைச் செயற்கையாகக் கூறியதோர் இலக்கணையெனினுமாம். ஆதலின், அதுவும் பொருந்துமாறறிக. இன்னும் நச்சினார்க்கினியர் சாரைப்பாம்பு முதலிய வற்றினும் ஆகிய என்னுஞ் சொல்லுருபு தொக்கதென்றாரா லெனின், அது ஐம்பாலறியும் பண்புதொகுமொழி என்பதற் கேலாமையின் அது பொருந்தாதென்க. வட்டப்பலகையில் மகரங் குன்றலும் தொகுதலெனின் அது புணர்ச்சிபற்றி வந்த தன்றித் தொக்கதன்றாமாதலின் அவர்கருத்து நிரம்பாதென்க. ஆதலின், சேனாவரையர் கருத்தே வலியுறுத்தல் காண்க. இன்னும், சேனாவரையர் கருத்தே இலக்கணவிளக்க நூலாருக்குக் கருத்தாதல். பெயரொடு பெயரும் வினையும் வேற்றுமை முதலிய பொருளின் முட்டுங் காலை வேற்றுமை யுருபு முவம வுருபு மும்மையுந் தம்மிடை யொழிய வொட்டியு மொழிவதொன் றின்றி யொன்றொடொன் றொட்டியு மிரண்டும் பலவு மாகவொற் றுமைப்பட் டொருசொலி னியல்வன தொகைநிலைத் தொடர்ச்சொல். என்னுஞ் சூத்திரத்தானும் அதனுரையானும் அறியப்படும். அவர் கருத்தே பிரயோக விவேக நூலாருக்குங் கருத்தாதல் "தனி நிலைச் சொற்கள் தகுதி முதலாகிய மூன்றுந் தோன்ற அல்வழியாக வேற்றுமையாக அவ்வப்பொருண்மேற் பிளவு பட்டிசையாது தம்முட் கூடுவது தொகைநிலையாம். பிளவுபட்டு விரிந்தது தொகாநிலை" (சமாசம்-உ) எனக் கூறியதனால் அறியப்படும். - இலக்கண வரம்பு மகாவித்துவான் சி. கணேசையர் கலாநிதித ஸ்ரீ. பிரசாந்தன், பக். 28-37 9. பொருட்புடை பெயர்ச்சி சேனாவரையர் தொல்காப்பியச் சொல்லதிகாரத்து வினையில் 3ஆம் சூத்திரவுரையுள், தொழிலாவது `பொருளினது புடை பெயர்ச்சியாதலின்' என்று கூறினர். அவர் கூறிய அப்`பொருளினது புடைபெயர்ச்சி' என்பதைக் குறித்ததே எமது ஆராய்ச்சியாகும். பொருளினது புடைபெயர்ச்சி என்றது - பொருளினது நிலை பெயர்தலை. நிலைபெயர்தலாவது - ஒருபொருள் தான் முன்னிருந்த நிலையிற் பெயர்ந்து அசைவு பெறுதல். எனவே அசைவு பெறுவது பொருளாகும். மற்றும் கருவிகளோவெனின், அவைகள் அப்பொருளின் செயலின்றி அசையாவென்க. இதனை, வேற்றுமை மயங்கியலில் வரும். வினையே செய்வது செயப்படு பொருளே நிலனே காலம் கருவி யென்றா வின்னதற் கிதுபய னாக வென்னு மன்ன மரபி னிரண்டொடுந் தொகைஇ யாயெட் டென்ப தொழின்முத னிலையே. என்னுஞ் சூத்திரத்திற்கு உரைகூறிய நச்சினார்க்கினியர், "வினையே - வினைப்பெயரையும் வினைச்சொல்லையும் தோற்று விக்கும் உண், தின், சொல், கொள், வனை என்பன முதலாகிய வினையும். செய்வது = அவ்வினையைச் செய்யும் வினைமுதலும், செயப்படு பொருளே = அவ்வினை முதலதனைச்செய்ய அத்தொழிலையுறும் பொருளும், நிலனே = அத்தொழிலைச் செய்கின்ற இடமும், காலம் = அத்தொழிலைச் செய்கின்ற காலமும், கருவி - அவ்வினைமுதல் தொழிலைச் செய்யுங் காலத்து அதற்குத் துணையாம் கருவிகளும்" என்று விளங்கவுரைத் தமை யானும் உணர்க. இங்கே உண், தின் முதலிய வினைகளென்றது முதனிலைகளை யன்று; அம்முதனிலை களாலுணர்த்தப்படும் சிறப்புத் தொழில்களையென்க. அத்தொழில்களும் வினை நிகழ் தற்கோர் காரணமாம். என்னை? உண்டான் என்புழி உண்டலைக் கருதியே வினை முதலாகிய கருத்தா அத்தொழிலைச் செய்தலின். எனவே உண்டற் றொழில் வினைமுதலாற் செய்யப்படுதலின் அத்தொழிலுஞ் செயப்படு பொருள் நீர்மைத்தாய்ச் செய்தற்குக் காரணமாயிற்று என்றபடி. செய்தல் பொதுத் தொழிலும் உண்டல் சிறப்புத் தொழிலுமென்க. எங்ஙனமெனின்? ஒருவன் உண்டலைக் குறித்துச் சோற்றைக் கையான் அள்ளி வாயிலிட்டு வாயை யசைத்து உண்டலைச் செய்தவிடத்து அத்தொழில் உண்டலென்று பெயர் பெறுகின்றது; அது வனைதலென்று பெயர்பெறாது. வனைதலைக் குறித்து மண் கூட்கை திரிகை சுழற்றுகை முதலிய தொழிலைச் செய்தவிடத்து அத்தொழில் வனைதலென்று பெயர் பெறுகிறது. அத்தொழில் உண்ட லென்று பெயர்பெறாது; இங்ஙனமே உண்டல் முதலிய தொழில்கள் பொதுத் தொழிலான செய்தற்றொழிலின் வேறு பட்டுப் பற்பல பெயர் பெறும் சிறப்புத் தொழிலாதலின் என்க. எனவே செய்தற் றொழிலென்றே செய்கை வேறுபாட்டாற் பற்பல தொழிலாகின்றது என்பது பெறப்படும். இதனை, சேனாவரையரும் வினைவியல் 25ஆம் சூத்திரவுரையுள், `எல்லாத் தொழிலும் செய்தல் வேறுபாடாகலின், பொதுவாகிய செய்தல் எல்லாத் தொழிலையும் அகப்படுத்துநிற்கும் அதனான் அவற்றான் அவை தழுவப்படுமென்க. அவை பொதுவுஞ் சிறப்பு மல்ல வேல் என்செய்யா நின்றானென்று வினாயவழி உண்ணா நின்றா னென்று செப்புதல் இயையாதாம்' என விளக்கவுரைத் தமையான் அறிக. இனிப் பொருளின் புடைபெயர்ச்சியாகிய தொழிலின் நிகழ்ச்சியை உணர்த்துஞ் சொல்லே வினைச்சொல்லெனப்படும். இது பற்றியே சேனாவரையரும் மேற்காட்டிய "வினையே செய்வது" என்னும் சூத்திரவுரையுள், `வனைந்தானென்றவழி வனைதற்றொழிலும் வனைந்த கருத்தாவும், வனையப்பட்ட குடமும், வனைதற் கிடமாகிய நிலமும், அத்தொழில் நிகழும் காலமும், அதற்குக் கருவியாகிய திகிரி முதலாயினவும், வனையப்பட்ட குடத்தைக் கொள்வானும், வனைந்தானாய பயனும் ஆகிய எட்டும்பற்றி அத்தொழில் நிகழ்ந்தவாறு கண்டு கொள்க' என்றார். சிவஞான முனிவரும் தொல் - முதற்சூத்திர விருத்தி யுரையுள், பொருட்புடைபெயர்ச்சியாகிய தொழிற் பண்பின் காரியத்தை யுணர்த்துஞ் சொல் வினைச்சொல் என்று கூறுதலும் காண்க. தொழில் என்றது நட உண் தின் என்பன முதலிய முதனிலைத் தொழிற்பெயர்களா லுணர்த்தப்படுந் தொழில்களை. புடை பெயர்ச்சியாகிய என்பது தொழிலை விசேடித்து நின்றது. அத்தொழில்களைப் பண்பென்றது - அவை பொருளின் குணமாதலின்; காரியமென்றது - அத்தொழில்களின் நிகழ்ச்சியை. இங்ஙன மன்றிப் பொருட்புடைபெயர்ச்சியாகிய என்பதைக் காரியத்தோடு முடித்தல் அமையாது. என்னை? இவரே `பின் பொருட் புடை பெயர்ச்சியாவது பொருட்பண்பின் புடைபெயர்ச்சி' என்று கூறலின். நட உண் தின் முதலிய முதனிலைகள், நடந்தான் உண்டான் தின்றான் என்பன முதலிய வினை நிகழ்ச்சிப் பொருளை உணர்த்தி நிற்குஞ் சொற்களை நடத்தலைச் செய்தான் உண்டலைச் செய்தான் தின்றலைச் செய்தானென விரிக்குமிடத்துத் தல் விகுதிபெற்று நடத்தல், உண்டல், தின்றல் என அந் நடத்தல் முதலிய வினை முதலின் தொழில்களுக்குப் பெயராய் அவ்வத் தொழில்களை உணர்த்திநிற்குமென்க. இனி, சாத்தன் நடத்தல் நன்று என்றவிடத்து நடத்தலென்பது சாத்தனது புடைபெயர்ச்சி யாகிய தொழிலை மாத்திர முணர்த்திப் பெயராய் நிற்குமே யொழிய, ஆண்டுத் தொழில் நிகழ்ச்சியை உணர்த்தி நில்லாதென்க தொழில் நிகழ்ச்சியைக் காலத்தோடு கூடிய செய் என்னும் வாசகமே உணர்த்தும் என்க. இதுவே நச்சினார்க்கினியர் கருத்துமாம். தொழில் நிகழ்ந்தவிடத்திலேதான் நட முதலிய முதனிலைகள் தல் விகுதியோடு கூடி வினைமுதலின் புடை பெயர்ச்சியை யுணர்த்தும். தொழில் நிகழாவிடத்து அவைகள் அப்பொருளின் தொழிற் பண்பை யுணர்த்துஞ் சொற்களா யமையும் என்க. இனி, சிவஞான முனிவர் மற்றோரிடத்துப் `பொருட்புடை பெயர்ச்சியாவது பொருட்பண்பின் புடைபெயர்ச்சி' என்று கூறியது பொருந்தாது. என்னை? பொருளின் புடை பெயர்தற் குணமே பொருளின் தொழிற்பண்பாதலின். இன்னும் அவர் `புடைபெயர்ச்சியெனினும் வினை நிகழ்ச்சியெனினும் ஒக்கும்' என்றதும் பொருந்தாது. என்னை? பொருட்புடை பெயர்ச்சியே வினையும் அதன்நிகழ்ச்சியே வினை நிகழ்ச்சியுமாதலின். வினை யென்றது ஈண்டுச் சிறப்புத்தொழிலை. சிறப்புத் தொழில்களெல் லாம் செய்தலின் வேறானவையென்பது முன்னர்க் கூறப்பட்டது. புடைபெயர்ச்சி வேறு, வினைநிகழ்ச்சி வேறு என்பதை ஈண்டு ஓர் உதாரணங்காட்டி விளக்குவதும். விளக்குங்கால் சாத்தன் நடந்தான் என்புழிச் சாத்தனது புடைபெயர்ச்சியே (நிலை பெயர்தலே) நடத்தலாகிய தொழிலாதலின் அப்புடை பெயர்ச்சி வினை நிகழ்ச்சியின் வேறென்பதும், அந்நடத்தற்றொழில் சாத்தனாற் செய்யப்பட்டு நிகழ்தலின் அத்தொழில் நிகழ்ச்சி வேறென்பதும் அறியப்படுதலின் புடைபெயர்ச்சியும் வினை நிகழ்ச்சியும் வேறாதல் காண்க. எத்தொழிலை ஒருவன் செய்யினும் அத்தொழில்களெல்லாம் அவனாற் செய்யப்பட்டு நிகழுங்கால் தொழிற்கு நிகழ்ச்சியும் செய்வோனுக்குப் புடைபெயர்ச்சியும் உளதாதல் கண்கூடாதலின், தொழிற்கு (வினைக்கு)ப் புடைபெயர்ச்சி யென்பது எவ்வாறு பொருந்தும்? ஓராற்றானும் பொருந்தாதென்பது வெளிப்படை. அற்றேல், கடவுளிருக்கிறார், மலைநிற்கும், வான்பெரிது என்பன போலும் வினைகளிலே அவற்றின் கருத்தாப் பொருள் களாகிய கடவுள், மலை, வான் என்பனவற்றிற்குப் புடை பெயர்ச்சி யின்றேயெனின், அஃதுண்மையே; ஆயினும் அவைகளெல்லாம் வினையுடையனபோலச் சொல்லுவான் தன்கருத்தாகக் கூறுவன வாதலின், அவ்வினைகளெல்லாம் இலக்கணப் போலியாய வழுவமைதிகளாய். வாரா மரபின வரக்கூ றுதலும் என்னா மரபின வெனக்கூ றுதலும் அன்னவை யெல்லா மவற்றவற் றியல்பான் இன்ன வென்னுங் குறிப்புரை யாகும். என்னுந் தொல்காப்பியச் சூத்திரத்து, "அன்னவை யெல்லாம்" என்பதனாலும், முந்நிலைக் காலமுந் தோன்று மியற்கை யெம்முறைச் சொல்லு நிகழுங் காலத்து மெய்ந்நிலைப் பொதுச்சொற் கிளத்தல் வேண்டும் என்னும் அந்நூற் சூத்திரத்தானும் அமைக்கப்படுமென்க. வினை நிகழ்ச்சியில்லாத எதிர்மறைவினைகளும் வழுவமைதி களாமென்க. வினையில்லாதவற்றையும் வினையுடையன போலக் கூறுதல் ஆன்றோர் கொண்ட மரபாதலின், அவை வழுவாகா வென்க. பொருளதிகாரத்தும் இவ்வாறு தொல்காப்பியர் கூறுதலை, அவ்வதிகாரத்துப் பொருளியலில் வரும் 2,19 முதலிய சூத்திர நோக்கியுணர்க. பொருளின் புடை பெயர்ச்சியே (அசைவே) வினை (தொழில்) என்பது கொடியாடிற்று என்புழிக் கொடி யினசைவே ஆடுதலாதலானும் நன்கு தெளியப்படும். இனி, `சாத்தன் காணப்பட்டான்' என்ற விடத்தும், `நீர்குளிரும்', `மலை தோன்றும்' என்றவிடத்தும் பொருட்கண் அசைவின் றெனின்? சாத்தன் காணப்பட்டானென்பது செயப்பாட்டு வினை வாய்பாடாதலின் அதன்கண் செய்வினைக்கசைவுண் டென்ப தும், நீர் குளிரும் என்பது இயற்கைப் பொருளை இற்றெனக் கிளந்த வாய்பாடாதலானும், மலை தோன்று மென்றவழி, மலைக்குத் தோன்றுதல் இல்லையேனும், சேய்மைக்கண் வரும்போது தோன்றாது அண்மைக்கண் வரும்போது தனக்குத் தோன்றுதலின், அது பற்றிச் சொல்லுவான் தன்கருத்தை மலைமேலேற்றி மலைதோன்று மெனக் கூறிய வாய்பாடாத லானும் அவற்றின்கணெல்லாம் பொருட்கண் அசைவின்றென ஆட்சேபித்தல் எவ்வாற்றானும் பொருந்தா தென்க. நீர் குளிரும் என்பதை நீர் குளிர்ந்தது என வாய்பாடு வேறுபடுத்திக் கூறியவழி நீர்க்கு அசைவுளதாதல் காண்க. நீர் குளிரும் என்பதை நிகழ்கால வாய்பாடாகக் கொள் ளுங்காலும் நீர்க்கு அசைவுண்டென்க. இனிப் பொருளது புடைபெயர்ச்சியாகிய தொழிலின் நிகழ்ச்சிக்கிடம், அப்பொருளின் அகமும் புறமுமாகும். மாங்காய் கனிந்தது என்றவிடத்துக் கனிதலாகிய புடைபெயர்ச்சி நிகழ்தற் கிடம் அதனகமேயாகும். சாத்தன் நடந்தான் என்ற விடத்து நடத்த லாகிய புடைபெயர்ச்சி நிகழ்தற்கிடம், சாத்தனாகிய பொருளின் புறமாகிய நிலமேயாகும். மாங்காய் கனிந்தது என்றவிடத்து அதனகத்துப் புடைபெயர்ச்சியுளதென்பது அது காயாகிய நிலையிற் பெயர்தலின்றேல் கனிநிலையை அடையாது காயாயே இருக்கும். காய் நிலையிற்பெயர்தலே அதன் புடைபெயர்ச்சியாம் என்க. மாப்பூத்தது, மாக்காய்த்தது என்பன போல்வனவும் அன்னவாதல் அறிந்துகொள்க. பொருட்கே புடைபெயர்ச்சி யென்பதை, தொல். சொல் - 80ஆம் சூத்திரத்து உரையுள், சாத்தனது தொழில், சாத்தனதுசெலவு என்பன வினைக்கிழமை. இவை, மெய் திரிந்தாயதற்கிழமை என்று கூறுமுரையையும் உற்றுநோக்கி யுணர்ந்து கொள்க. இன்னும் நட வா முதலிய முதனிலை புடைபெயர்தலே வினையென்பார் கருத்தும் பொருந்தாமை மேற்கூறியவாற்றான் அறிந்துகொள்க. மேலும், நட வா முதலிய முதனிலைகள் அவ்வத் தொழில்களை (வினைகளை) யுணர்த்துஞ் சொற்களேயாதலும், அவ்வத்தொழில்களெல்லாம் பொருளின் புடை பெயர்ச்சியே யாதலும் அவ்வத் தொழிலின் நிகழ்ச்சியே வினை நிகழ்ச்சி யாதலும் ஆராய்ந்து உணரப்படுதலின் முதனிலை புடை பெயர்தலே வினையென்பார் கருத்து எவ்வாறு பொருந்தும்? ஆதலின் வினைகளின் (தொழில்களின்) நிகழ்ச்சியே வினை நிகழ்ச்சி யென்பதும், தொழில்களெல்லாம் பொருளின் புடை பெயர்ச்சி யென்பதும் நன்கு துணியப்படும். இன்னும் அப்பொருளினது புடைபெயர்ச்சியை இனிது விளக்குங்கால், செய்தலாகிய பொதுத்தொழிலாலே நடத்தல் முதலிய சிறப்புத்தொழில் செய்யப்பட்டு நிகழ்தலின் அச்சிறப்புத் தொழிலே பொருளினது புடைபெயர்ச்சியாகும். சாத்தன் நடந்தான் (நடத்தலைச் செய்தான்) என்ற விடத்து சாத்தன் காலைப் பெயர்த்துவைத்தலே அவனது செய்தலாகிய பொதுத் தொழி லென்பதும், அங்ஙனம் காலைப் பெயர்த்து வைக்குங்கால் அவன் நின்ற நிலையிற் பெயர்தலே நடத்தல் என்பதும், காலைப் பெயர்த்து வைத்தலாகிய பொதுத் தொழிலாலே அவனது சிறப்புத் தொழிலாகிய நிலையிற் பெயர்தல் (நடத்தல்) நிகழ்தலும் அறியப் படுதலின் பொருட்கே புடைபெயர்ச்சி என்பது தெளிவாதல் காண்க. இனிச் சேனாவரையரும், நச்சினார்க்கினியரும் பொருட் குணத்தின் புடைபெயர்ச்சியே வினைநிகழ்ச்சி என்று கருதி யிருப்பரேல் அவ்வாறு தாங்களும் விளங்க உரைத்திருப்பார்கள் அவ்வாறு அவர்கள் கருதவில்லை என்பது. தொல் - சொல் - பெயரியல் 4ஆம் சூத்திரவுரையுள் `இவற்றுள்ளும் பொருளினது புடைபெயர்ச்சியாகிய தொழில் பற்றாது. அப்பொருள்பற்றி வருஞ் சிறப்புடைமையால் பெயரை முற்கூறினார்' என்று சேனா வரையரும், `பொருளும் பொருளினது புடைபெயர்ச்சி யுமாகிய முறைமைபற்றிப் பெயரை முற்கூறினார்' என்று நச்சினார்க் கினியரும் கூறிய உரைகளானே தெளிவாக உணரக்கிடத்தலின், `பொருட்குப் புடைபெயர்ச்சியில்லை; வினைக்கே புடைபெயர்ச்சி' என்பார் கருத்து எவ்வாறு பொருந்தும்? பொருட்கே புடை பெயர்ச்சி யென்பதையுணராது வினைக்கே புடைபெயர்ச்சி யென்று சாதிப்பார் உளரேல் அவரையாம் ஓராற்றானுந் தெளி வித்தல் கூடாதாகலின், "உணர்ச்சி வாயிலுணர்வோர் வலித்தே" என்றொழிவேமாக. செந்தமிழ் தொகுதி - 43, பகுதி - 1 10.சேனாவரையர் உரைநெறியும் விளக்கமும் சேனாவரையருக்கு முன் உரையில்லாத ஒரு காலம் இருந்தமையைப் பேராசிரியர் (மரபு: 98,101) உரையால் அறியலாம். இறையனார் அகப்பொருள் உரை, யாப்பருங்கல விருத்தியுரை, தொல்காப்பிய இளம்பூரணர் உரைகளுக்கு முன்பு சொல்லுரைகள் பல வழங்கி வந்திருக்கின்றன என்பது உரையாசிரியர்கள் தம் உரையால் நன்கு புலனாகும். உரையாசிரியர்கள் பாடம் கற்பிக்கும் போது என்ன முறையினை மேற்கொண்டார்களோ அம்முறையினைத் தத்தம் உரையில் எழுதலாயினர். எனவே, வாய்மொழிப்பாட முறை தொல்காப்பிய உரைநெறியாயிற்று. உரையாசிரியர்கள் ஒவ்வொருவரும் தமது கருத்தினைக் கூறியதோடு அவரவர் காலத்து நிலவிய சொல்லுரைக் கருத்துகளையும் உரையில் ஏற்றிக் கூறியிருக்கிறார்கள் எனில், வரிவடிவம் பெறாத வாய்மொழி உரையின் செல்வாக்கினை நன்கு உணரலாம். எழுதுவாரும், காட்டுப, காட்டுவாரும் என்பன இளம்பூரணருக்கு முன் எழுத்துரை இருந்தமையைத் தெரிவிக்கின்றன. `விரவியும் அருகியும் வேறு ஓரோவழி, மருவியும் பெறாதும் வழங்குமன் அவையே’ (யா. கலம், உறுப்பு: 15) என்னும் நூற்பா உரையில், அரையளவு குறுகல் மகரம் உடைத்தே, இசையிடன் அருகும் தெரியுங் காலை (நூன்: 13) எனத் தொல்காப்பியத்துள் இன்னவிடத்துக் குறுகும் என்று யாப்புறுத்துக் கூறிற்றில்லை யேனும் உரையிற் கோடல் என்னும் உத்தி பற்றி `வகரத்தின் பின் மகரம் குறுகும்’ (பு.ம: 35) என்று விருத்தியுள் விளங்கக் கூறினார்; அதுபோலக் கொள்க’ (யா. வி.நூ. 15) என்னும் யாப்பருங்கல விருத்தி உரைப்பகுதியை நோக்கும் போது தொல்காப்பியத்திற்கு ஒரு விருத்தியுரை இருந்திருக்க வேண்டும் என்பது நன்கு தெளிவாகிறது. எனவே, இளம்பூரணருக்கு முன் வரிவடிவ உரை இருந்துள்ளது என்பது முடிவாகிறது. அதிழ்வு என்று பாடமோதி, அதிழ்கண் முரசம் என்று உதாரணம் காட்டவாரும் உளர் (உரி: 20) எனவும், சூத்திரமாக அறுப்பாரும் உளர் (எச்: 11) எனவும் சேனாவரையர் குறிப்பிடுவதனால், அவர் காலத்தில் இளம்பூரணர் உரை மட்டுமன்றி வேறு சில வரிவடிவ உரைகளும் இருந்தமை அறிய முடிகிறது. சேனாவரையர் உரைக்கு முன்பு சொல்லுரை, இறையனார் அகப்பொருள் உரை, யாப்பருங்கல விருத்தியுரை, இளம்புரணத்திற்கு முன்பிருந்த தொல்காப்பிய விருத்தியுரை, இளம்பூரணர் உரை என உரைகள் இருந்துள்ளன. இதன் விரிவினை இளம்பூரணர் உரைநெறி எனும் நூலில் காணலாம். தொல்காப்பிய மரபுரை இளம்பூரணர் உரை நூல் முழுமைக்கும்; பேராசிரியர் உரை பொருளதிகாரப் பின்னான்கு இயல்களான மெய், உவமம், செய்யுளியல், மரபியல் ஆகியவற்றிற்கும்; சேனாவரையர் உரை சொல்லதிகாரத்திற்கும்; நச்சினார்க்கினியர் உரை எழுத்து, சொல் ஆகிய இரண்டுக்கு முழுமையாகவும், பொருளதிகாரத்திற்கு அகத், புறத், களவு, கற்பு, பொருளியல், செய்யுளியல் ஆகிய வற்றிற்கும்; தெய்வச்சிலையார் உரை சொல்லதிகாரத்திற்கும், கல்லாடனார் உரை சொல்லதிகாரம் இடையில் 10 ஆவது நூற்பா வரைக்கும்; பழையவுரைகாரர் உரை சொல்லதிகாரம் கிளவி, வேற்றுமை, வேற்றுமை மயங்கியல் 33 ஆவது நூற்பா வரைக்கும் உள்ளன. தொல்காப்பிய உரையாசிரியர்களை இளம்பூரணர், பேராசிரியர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், தெய்வச் சிலையார், கல்லாடனார், பழையவுரைகாரர் எனக் கால வரிசையின் அடிப்படையில் முறைப்படுத்துவர். நூலாசிரியர்தம் பெயரால் நூல்கள் பெற்றதைப் போன்று உரையாசிரியர் தம் பெயரால் உரைநூல்களும் பெயர் பெற்றன. உளங்கூர் உரையாம் இளம்பு ரணமும் ஆனா இயல்பின் சேனா வரையமும் உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க் கினியமும் என்று இலக்கணக் கொத்தின் பாயிரம் கூறுகிறது. உரையால் நூலிற்குப் பெருமை; நூலால் உரைக்குப் பெருமை ஆகிறது. தொல்காப்பியம் என்னும் பெருநூலால் உரையாசிரியர் சிறப்படைவர். உரையாசிரியர்தம் உரைத்திறத்தால் நூலும் சிறப்புற்று விளங்குகிறது. தொல்காப்பிய மரபு உரையாசிரியர்கள் ஈண்டுச் சேனாவரையர் தம் உரைநெறியைக் காண்போம். உரைநெறி இறையனார் களவியல் உரையும் யாப்பருங்கல விருத்தியுரையும் இளம்பூரணர் உரைநெறிக்குத் துணையாக நின்றன. இளம்பூரணர்தம் உரைநெறி ஏனைய உரையாசிரியர்க்கு அடித்தளமாய் அமைந்தது. சேனாவரையர், இவரைப் பின்பற்றி உரை எழுதியிருப்பினும், வினாவிடை, நூற்பா வைப்பு, நூற்பா இன்றியமையாமை, மறுப்புரை முதலானவை சிறப்பிடம் பெறுவனவாகும். அவர் விரித்துரைத்ததைச் சுருக்கியும், சுருக்கிக் கூறியதனை விரித்துரைத்தும் எழுதிச் செல்லுகின்றார். இவர்தம் உரைநெறி வருமாறு; 1. அதிகார முன்னரை 2. பெயர்க் காரணம் (அதிகாரம், இயல்) 3. இயல் விளக்கம் 4. இயைபு (அதிகாரம், இயல், நூற்பா) 5. வைப்பு (இயல், நூற்பா) 6. வகைமுறை வைப்பு 7. நூற்பா அமைப்பு முறை 8. நூற்பா உரை அமைப்பு 9. நூற்பா விளக்கம் அ. வழக்கு, இலக்கிய, இலக்கண மேற்கோள்களைக் கொண்டு விளக்குதல். ஆ. தொல்காப்பிய நூற்பாக்களைக் கொண்டு விளக்குதல் 10. விளக்கம் கூறல் - என்றதனால் என்றுரைத்து 11. எடுத்துக்காட்டினைப் பொருத்திக் காட்டுதல் 12. சொற் பொருள் விளக்கம் 13. வினா விடை 14. மூலத்தை ஆராய்தல் அ. நூற்பா இன்றியமையாமை ஆ. அடங்குமெனின் - அடங்காது இ. இதன் பயன் இதுவெனல் 15. சொற்றொடரை நிலைநிறுத்தல் 16. பாட வேறுபாடு 17. பிறர் உரை ஏற்பும் மறுப்பும் 18. ஈருரை 19. உரைத்தாங்கு உரைக்க, ஒக்கும் எனல் 20. அ. கூறினாம் - கூறுதும் ஆ. காட்டினாம் - காட்டப்பட்டது 21. நூற்பா வரையறை 22. வழிகாட்டுதல் 23. நினைவுபடுத்துதல் 24. உவமை, உத்தி, உரைக்குறியீடு கொண்டு விளக்குதல். 25. இலக்கணக் குறிப்பு 26. ஐயம் அறுத்தல் 27. உரைச்சுருக்கம் 28. வழக்கிழந்த சொற்களைக் கூறிச் செல்லுதல் 29. சமுதாய நிலை 30. நூலாசிரியர் கூறாதது கூறல் இளம்பூரணர் உரைநெறி முப்பத்தைந்து வகைப்படும். அவை மூன்று அதிகாரங்களுக்கும் சேர்த்துத் தொகுக்கப்பட்டது ஆகும். ஈண்டுச் சேனாவரையர் உரை எழுதிய சொல்லதி காரத்திற்கு மட்டும் சொல்லப்படுகின்ற உரைநெறியாகும். உரையமைப்பு இவரது உரையமைப்பு அதிகார உரை, இயல் உரை, நூற்பா உரை என மூவகைப்படும். இளம்பூரணர், எழுத்ததிகாரத்திற்கும் பொருளதிகாரத்திற்கும் அதிகார உரை தனியாகக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. சேனாவரையர் அங்ஙனம் கூறுவதில்லை. இளம்பூரணர் சொல்லதிகாரத்தில் கூறியிருப்பதைப் போன்று அதிகாரத்தின் முதல் நூற்பாவுரையில் (கிளவி: 1), அதாவது நூற்பாவை அடுத்து அதிகார உரையைக் கூறுகின்றார். சொல்லதிகார உரைகாரர் அறுவரில் பழையவுரைகாரர் ஒருவரே அதிகார உரையினைத் தனியாகக் கூறியிருக்கிறார் என்பது அறிதற்குரியது. எழுத்து, பொருள் (அகம், புறம்) ஆகிய இரண்டு அதிகாரங்களிலும் இயல் உரை முதற்கண் தனியாகத் தந்து அதன்பின் நூற்பா, நூற்பாவுரை எனவும், சொல்லதிகாரத்தில் மட்டும் நூற்பா, இயல் உரை, நூற்பாவுரை எனவும் இளம்பூரணர் இயல் உரையமைப்பு அமைந்திருக்கிறது. சேனாவரையர், இயல் உரையமைப்பும் இளம்பூரணரின் சொல்லதிகார இயல் உரையமைப்புப் போன்றே உள்ளது. ஒவ்வோர் இயலின் முதல் நூற்பாவுரையில் - நூற்பாவை அடுத்துத் தரப்படுகிறது. சேனாவரையர் தம் நூற்பாவுரை, இதன் பொருள் (இ-ள்) -- என்றவாறு, எடுத்துக்காட்டு (எ-டு), விளக்கம் என உள்ளது. இவ்வமைப்பு எல்லா நூற்பாக்களிலும் காண இயலாது. சில நூற்பாக்களில் பொருள் மட்டும் (கிளவி: 3), இதன் பொருள், விளக்கம் மட்டும் (கிளவி: 20); இதன் பொருள், எடுத்துக்காட்டு மட்டும் (கிளவி: 6; இடை: 25-27-29) என்று நூற்பாவிற்கேற்ப உரை அமைந்திருக்கிறது. சில இடங்களில், இதன் பொருள், எடுத்துக்காட்டு என்று எதுவும் குறிப்பிடாது விளக்கம் தருவதும் உண்டு (இடை: 20,21,34). `இதன் பொருள்’ என்னும் பொருளுரையிலேயே எடுத்துக்காட்டும் தருவது உண்டு. உரியியல் நூற்பாக்களில் பெரும்பாலும் (நூ: 3-21: 23-92 = 87), அதுவும் ஓரடி நூற்பாக்கள் அனைத்திலும் முதற்கண் எடுத்துக்காட்டு அதன்பின் ஒரு வரிப் பொருளுரை எனும் நிலையில் உள்ளது. இளம்பூரணர் உரை இயைபின் காரணமாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டும் நூற்பாக்களைச் சேர்த்து உரையெழுதி, அதனை `உரையியைபு’ என்று குறிப்பிடுவது உண்டு. சேனாவரையரும் அது போன்று நூற்பாக்களை இணைத்து உரையெழுதிடினும், உரையியைபு என்று குறிப்பிடுவது இவர்தம் வழக்கமன்று. இவருக்குப் பின்னர்த் தோன்றி உரையெழுதிய நச்சினார்க்கினியர் உரையியைபு என்று குறிப்பிட்டு உரையெழுதுகிறார். `இச் சூத்திரம் என் நுதலிற்றோ எனின் - நுதலிற்று’ என்று இளம்பூரணர் குறிப்பிடுவது போன்று கருத்துரை கூறுவதில்லை. சில இடங்களைத் தவிர ஏனைய அனைத்து இடங்களிலும் இதன் பொருள் என்று பொருளுரையே தொடக்கமாக உள்ளது; பதப்பொருள் கூறுவதும் இவர்தம் வழக்கமன்று. இவை இவருக்கும் ஏனைய உரையாசிரியருக்கும் இடையே காணப்படும் வேறுபாடுகள் ஆகும். இருப்பினும், சில இடங்களில் `நிறுத்த முறையானே லகார ளகார வீற்றுப் பெயர் விளியேற்குமாறு உணர்த்திய எடுத்துக் கொண்டார்’ (விளி: 11; பெய: 30 வினை: 5; எச்: 16), `இலக்கணம் கூறுகின்றார்’ (பெய: 40, எச்: 8), `விரிக்கின்றார்’ (உரி: 3) என்று கருத்துரை கூறுவதும் உண்டு. சில இடங்களில் உணர்த்தியதையும் உணர்த்தப் போவதையும் கருத்துரையாகக் கூறுவது உண்டு. `தன்மை வினை உணர்த்தி, இனி உயர்திணைப் படர்க்கை வினை உணர்த்துகின்றார்’ (வினை:8), முற்றுச்சொல் உணர்த்தி எச்சம் ஆமாறு உணர்த்துகின்றார் (எச்: 34) என்பனவற்றால் அறியலாம். இது போன்று இன்னும் சில இடங்களில் (பெய: 20,26; வினை; 19, 31,37; எச்: 14) இங்ஙனமான கருத்துரை காணப்படுகிறது. இவை யாவும் நினைவூட்டுதல் கருத்துரையாக அமைந்துள்ளது. இயற்கை, தெளிவு (வினை: 48); குறிப்பு, பண்பு (உரி: 1), பெற்று (உரி: 8), முன்தேற்று (உரி: 87) தாம் (வே: 1; வே.ம: 14; வினை: 2; எச்: 2) எனச் சில இடங்களில் சில சொற்களுக்குப் பதப்பொருள் கூறுவதும் உண்டு. இவரைப் போன்று பழையவுரைகாரரும் கருத்துரை எழுதுவது இல்லை; `என்பதுங் என்று குறிப்பிட்டுப் பொருளுரையே தொடக்கமாக எழுதுவது அவரது வழக்கம் ஆகும். ஈது ஈண்டு ஒப்புநோக்கத் தக்கது. கருத்துரை கூறாது உரையெழுதிச் செல்லுகின்ற சேனாவரையர், இரண்டு இடங்களில் நூற்பா உரையின் முடிவில் இதனால் சொல்லியது என்று இளம்பூரணர், தெய்வச்சிலையார், கல்லாடனார் ஆகியோர் கூறுவது போன்று உரை எழுதுகிறார். கல்லாடனார் சொல்லதிகாரக் கிளவியாக்கத்தில் மட்டும் (62 நூற்பா) 33 நூற்பாக்களில் இங்ஙனம் குறிப்பிட்டு உரையெழுதி யிருப்பது குறிப்பிடத்தக்கது. உரையாசிரியர்கள் கருத்துரையில் நூற்பா நுவலும் மையக் கருத்தினைக் கூறிப், பின் பொருளுரை, எடுத்துக்காட்டு, விளக்கவுரை என விளக்கியதோடு, சில இடங்களில் இதனால் சொல்லியது என்று குறிப்பிட்டு உரையெழுதுவதும் உண்டு. இதில், மேல் விளக்கியதனை எளிமையாகவும் சுருக்கமாகவும் கூறியும்; உணர்த்திய பொருளை வலியுறுத்தியும், நூற்பா உணர்த்தாத பொருளைக் கூறியும், வகைப்பாடுகளைப் பகுத்துக் கூறியும், இதுவரை கூறிய உரையினைத் தொகுத்தும் என ஐந்து நிலைகளில் கூறுவது உண்டு. சேனாவரையர், இதனால் சொல்லியது என்று குறிப்பிடாது நூற்பா உணர்த்தும் பொருளை வரையறுத்துக் கூறுகிறார். அவை வருமாறு; `இனிச் செய்யுளிடத்து விகாரவகையான் மொழிகள் தம்முள் புணருமாறு கூறுகின்றார்’ என்பது கருத்துரை. இச் சூத்திரத்தான் மொழிபுணரியல் நான்கென வரையறுத்தவாறு என உரையின் முடிவில் கூறியது. பிறர் கூறிய இதனால் சொல்லியது என்பதாகும் (எச்: 8) இங்ஙனமே, `இனித் தொகையின் இலக்கணம் உணர்த்துகின்றார்’ எனவும், இச் சூத்திரத்தாற் தொகைச்சொல் இனைத்தென வரையறுத்தவாறு எனவும் முறையே கருத்துரையும், இதனால் சொல்லியது என்பதையும் கூறுகிறார். (எச் 16). அதிகார விளக்கம் அதிகார இயைபு, அதிகார வைப்பு, பெயர்க் காரணம், அதிகாரத்தினுள் ஓதப்படும் இலக்கணம் ஆகியன இவ் விளக்கத்தில் சொல்லப்படுகின்றன. `சொல்லுணர்த்திய எடுத்துக் கொண்டமையால் சொல்லதிகாரம் என்னும் பெயர்த்தாயிற்று’ என்று பெயர்க் காரணத்தைக் கூறுவர். `அதிகாரம் என்னும் சொற்குப் பல பொருள் உளவேனும், ஈண்டு அதிகாரம் என்றது ஒரு பொருள் நுதலி வரும் பல ஓத்தினது தொகுதியை என்க’ எனவும், சொல்லதிகாரம் சொல்லை உணர்த்திய அதிகாரம் என விரியும் எனவும் கூறிச் சொல்லதிகாரத்திற்கு மேலும் ஒரு விளக்கத்தினைத் தருகிறார். `வடநூலாரும் ஓரிடத்து நின்ற சொல் பல சூத்திரங்களோடு சென்று இயைதலையும், ஒன்றனது இலக்கணம் பற்றி வரும் பல சூத்திரத் தொகுதியையும் அதிகாரம் என்ப’ என்பர். இங்ஙனம் அதிகாரத்திற்கு விளக்கம் தந்த சேனாவரையர் எழுத்ததிகாரத்தை, எழுத்தோத்து என்று மூன்று இடங்களில் (வே.ம: 32; வினை: 29; எச்: 24) குறிப்பிடுவர். எச்சவியல் 57 ஆவது நூற்பா உரையில், செய்யுளியலைச் செய்யுளதிகாரம் எனப் பிறர் உரையில் கூறுவர். இவர் மட்டுமன்றிப் பேராசிரியர் பொருளதி காரத்தைப் பொருளோத்து எனவும், நச்சினார்க்கினியர் களவியலை அதிகாரம் எனவும் குறிப்பிடுவது உண்டு. அதிகாரத்தை ஒத்து என்றும் ஓத்தினை அதிகாரம் என்றும் குறிப்பிடுகின்றனர். அதிகாரம் என்னும் சொல்லை இயல், நூற்பா, நூற்பாவில் இடம் பெறும் சொல் ஆகியவற்றிற்கும் கையாண்டிருக்கின்றனர். எழுத்ததிகாரத்து ஓத்தினுள், சொல்லதிகாரத்து ஓத்தினுள், பொருளதிகாரத்து ஓத்தினுள் என்பனவற்றைச் சுருக்கி முறையே எழுத்தோத்தினுள், சொல்லோத்தினுள், பொருளோத்தினுள் எனக் கூறினார். `செய்யுளதிகாரத்துக் கூறாமையானும்’ (எச்: 57) எனச் சேனாவரையர் ஓரிடத்துக் கூறுவர். செய்யுள் இலக்கணத்திற் கென்று அதிகாரங் கொண்ட செய்யுளியலில் கூறாமையால் எனப் பொருள்படவே அங்ஙனம் கூறினார். சேனாவரையர் உவமவியலை `அணியியல்’ என்று கூறுகிறார் (எச்: 44) `அச்சொல்லை யாங்ஙனம் உணர்த்தினானோ எனின், தம்மையே எடுத்தோதியும், இலக்கணம் கூறியும் உணர்த்தினான் என்பது’ என்று இவ்வளவே இவர் தரும அதிகார விளக்கம் ஆகும். ஆயின், இளம்பூரணர் `எட்டுவகை இலக்கணத்தான் உரைத்தான் எனவும், அவை யாவை என்பதனை, இரண்டு திணை, ஐம்பால், எழுவகை வழு, எட்டு வேற்றுமை, அறுவகை ஒட்டு (தொகை), மூன்று இடம், மூன்று காலம், இரண்டு இடம் (வழக்கு, செய்யுள்) எனவும் உரைத்து அதிகாரத்தினுள் கூறப்படும் இலக்கணத்தையும் கூறுவர். அதிகார உரையைப் படித்ததுமே அதிகாரம் முழுமையும் படித்தது போன்ற நிலையை அடைய முடியும். இயல் விளக்கம் இளம்பூரணரைப் போன்று இவரும் இயலை ஓத்து என்று குறிப்பிடுவது வழக்கம். பெயர்க்காரணம் கூறுதல், இயைபு, வைப்பு, இயலினுள் கூறப்படும் இலக்கணம் ஆகியன இவ்விளக்கத்தில் கூறப்படுகின்றன. இவையனைத்தும் ஒருங்கே ஒவ்வோர் இயலிலும் கூறப்படுகிறதா எனில், இல்லை; ஓரியலிலாவது சொல்லப்படுகிறதா எனில் அதுவும் இல்லை. ஒவ்வொன்றும் ஒவ்வோர் இயலில் உள்ளது. இயல் வைப்புப் பற்றிய விளக்கம் வேற்றுமையியலிலும், பெயரியலிலும் விளக்கப் படுகிறது. நிறுத்தமுறையானே என்னும் சொற்றொடரால் இயைபும் வைப்பும் பெறப்படுகின்றன. பெயர்க்காரணம் மட்டும் எல்லா இயல்களிலும் இடம் பெறுகிறது. இயலுள் கூறப்படும் இலக்கணம் வேற்றுமை மயங்கியலில் மட்டும்தான் இடம் பெறுகிறது. இந்நிலை ஏனைய உரையாசிரியரது இயல் விளக்கத்திற்கும் ஒக்கும், கிளவியாக்கத்திற்குக் கூறும் பெயர்க்காரணம் படித்து இன்புறத்தக்கது ஆகும். 1. வழுக் களைந்து சொற்களை ஆக்கிக் கொண்டமையான், இவ்வோத்துக் கிளவியாக்கம் ஆயிற்று. ஆக்கம் - அமைத்துக் கோடல், நொய்யும் நுறுங்கும் களைந்து அரிசி அமைத்தாரை அரிசியாக்கினார் என்பவாகலின், சொற்கள் பொருள்கள் மேல் ஆமாறு உணர்த்தினமையால் கிளவியாக்கம் ஆயிற்று எனினும் அமையும்’ என்று வழக்கினைக் கொண்டு கற்போர் சுவைக்கும் வகையில் சொல்லை விளக்குகிறார். பாமர மனிதனும் புரிந்து கொள்ளும் வகையில், அன்றாடம் வாழ்க்கையில் நடைபெறுகின்ற நிகழ்வினை வைத்து விளக்கியிருப்பது பாராட்டுதற்குரியது ஆகும். 2. வேற்றுமை மயங்கியலில் பெயர்க் காரணத்தைக் கூறுவதோடு இயலுள் கூறப்படும் இலக்கணத்தையும் உரைக்கின்றார். `மேற்கூறப்பட்ட வேற்றுமை தம்முள் மயங்குமாறு எடுத்துக்கொண்டார். அம்மயக்கம் இருவகைப்படும்; பொருள் மயக்கமும் உருபு மயக்கமுமென. பொருள் மயக்கமாவது தன் பொருளில் தீராது பிறிதொன்றன் பொருட்கண் சேறல். உருபு மயக்கமாவது தன் பொருளில் தீர்ந்து சேறல். `யாதன் உருபிற் கூறிற் றாயினும்’ (வே.ம: 23) என்பனான் உருபு மயக்கம் உணர்த்தினார். அல்லனவற்றான் எல்லாம் பொருண் மயக்கம் உணர்த்தினார். இவ்விருவகை மயக்கமும் உணர்த்துதலான், இவ்வோத்து வேற்றுமை மயங்கியல் என்னும் பெயர்த்தாயிற்று’ என விரிவானதொரு பெயர் விளக்கம் தருகிறார். இவ்விளக்கம் இளம்பூரணர் தராதது ஆகும். இயலுள் நுவலப்படும் பொருளினைச் சேனாவரையர் நான்கு வகையாகப் பிரிக்கிறார். அவை வருமாறு: அ. பொருள் மயக்கம் ஆ. உருபு மயக்கம் இ. வேற்றுமைக்கு ஓதிய இலக்கணத்தில் பிறழ்ந்து வழீஇ அமைவன ஈ. பிறவும் இயைபுடையன. 3. பெயரியல் இயல் விளக்கமும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இதில் பெயர்க் காரணத்தைக் கூறும்போது கிளவியாக்கத்துக்கும் பெயரியலுக்கும் இடையே வேற்றுமை இலக்கணம் உணர்த்தியமைக்கான காரணத்தைக் கூறிப் பெயர்க்காரணம் கூறுகிறார். வேற்றுமை இயல் விளக்கத்திலேயே அதன் வைப்பிற்கான காரணத்தைக் (வேற்றுமை, வேற்றுமை மயங்கியல், விளி மரபு) கூறியிருப்பினும், மீண்டும் நினைவுகொள்ளும் வகையில், ஈடு வைப்பினைக் கூறிப் பெயர்க் காரணம் கூறியிருப்பது சிறப்பிற்குரியது ஆகும். அவ்விளக்கம் வருமாறு: `நான்கு சொல்லும் பொதுவகையான் உணர்த்தி, பொதுவிலக்கணமாதல் ஒப்புமையானும், வேற்றுமை பெயரோடு இயைபு உடைமையானும், பெயர் இலக்கணத்திற்கும் பொது இலக்கணத்திற்கும் இடை வேற்றுமை இலக்கணம் உணர்த்தி, இனிச் சிறப்பு வகையான் நான்கு சொல் உணர்த்துவான் எடுத்துக்கொண்டு, இவ்வோத்தான் அவற்றின் முதற்கண்ண தாகிய பெயரிலக்கணம் உணர்த்துக்கின்றார். அதனானிது பெயரியல் என்னும் பெயர்த்தாயிற்று’. இதில் வேற்றுமை இலக்கணத்தை இடை வைத்தமைக்கு இரண்டு காரணங்களைக் கூறுகிறார். அவை, அ. பொது இலக்கணத்தோடு ஒப்புமை ஆ. வேற்றுமை இலக்கணம் பெயர் இலக்கணத்தோடு இயைபு என்பனவாகும். ஏனைய இயல்களில் கூறுவது போல ஓரிரு வரிகளில் பெயர்க் காரணத்தைக் கூறாது இடை வைத்த இலக்கணத்திற்கான வைப்பனைக் கூறி, இவ் இலக்கணத்திற்குப் பின் அமைகின்ற பெயர், வினை, இடை, உரி எனும் நான்கு இயல்களுக்கான இடத்தையும், அதனுள் பெயர் இலக்கணத்திற் கான முதன்மை இடத்தையும் கூறிப் பெயர்க் காரணம் கூறுகிறார். பெயர்க் காரணத்தினுள் காட்டும் இங்ஙனமான விளக்கம் இளம்பூரணர் முதற்கொண்டு பிறர் எவரும் கூறவில்லை. 4. இடையியலில், `நிறுத்த முறையானே இடைச்சொல் உணர்த்திய எடுத்துக் கொண்டார். அதனான் இவ்வோத்து இடையியல் என்னும் பெயர்த்தாயிற்று எனவும், மொழிக்கு முன்னும் பின்னும் வருமாயினும் பெரும்பான்மையும் இடைவருதலின் இடைச்சொல்லாயிற்று’ எனவும் இடையியல் பெயர்க்காரணத்தைக் கூறுவர். இங்ஙனம் ஒவ்வோர் இயலுக்கும் பெயர்க்காரண விளக்கம் தருகிறார். 5. `கிளவியாக்கம் முதலாக உரியியல் இறுதியாகக் கிடந்த எட்டு இயல்களிலும் உணர்த்தற்கு இடமின்மையான் எஞ்சி நிற்கும் சொல்லிலக்கணம் எல்லாம் தொகுத்து உணர்த்தினமை யால் இது எச்சவியல் என்னும் பெயராயிற்று’ என்பர் சேனாவரையர். ஈண்டு இவர் கூறும் காரணம் இடமின்மை என்பதாகும். வேற்றுமை இலக்கணத்தின் வைப்பிற்கும் இவர் கூறிய மூன்று காரணங்களுள் முதற்காரணம் இடமின்மை என்பது ஈண்டு நினைவு கொள்ளத்தக்கது. நச்சினார்க்கினியரும் எச்சவியல் பெயர்க் காரணத்திற்கு இடமின்மையையே காரணமாகக் கூறுவர். `எல்லா ஒத்தினுள்ளும் எஞ்சிய பொருள்’ என இளம்பூரணரும், `எட்டோத்தினுள்ளும் உணர்த்தாத பொருள்’ எனத் தெய்வச்சிலையாரும் கூறுவர். இவ்விருவரும் இடமின்மை எனும் காரணத்தைக் கூறவில்லை. `பத்து வகை எச்சம் ஈண்டு உணர்த்தலான் எச்சவியலாயிற்று என்றல் பொருந்தாமை உணர்க’ என்று அவர் காலத்து வழங்கப்பட்ட பிறிதொரு காரணத்தை எடுத்துக் கூறி மறுத்துரைக்கிறார் சேனாவரையர். இக்காரணம் கூறிய ஆசிரியர் பெயர் தெரியவில்லை. பத்து வகை எச்சங்களேயன்றி, செய்யுட்குரிய சொல், அவற்றது இலக்கணம், பொருள்கோள், செய்யுள், வழக்கிலக்கணத்து ஒழிபு, தொகை இலக்கணம், சில மரபு வகைகள் எனப் பல இலக்கணங்கள் உணர்த்தப்படுகின்றன. பலபொருள் தொகுதிக்கு ஒன்றனால் பெயர் கொடுக்கும் போது அவற்றின் தலைமையும், பன்மையும் பற்றியே கொடுப்பர், தலைமையும், பன்மையும் எச்சத்திற்கு இன்மையால், இப்பெயர்க்காரணம் பொருந்தாது என்று விளக்கம் தருவர். இப்பிறிதொரு காரணம் பிற உரையாசிரியர்கள் கூறாதது. மேலும் பிற உரையாசிரியர்கள் பெயர்க்காரணம் மட்டும் கூறியிருக்க, இவரும் இவரைப் பின்பற்றி நச்சினார்க்கினியரும் இயலுள் கூறப்படும் இலக்கணத்தையும் இயல் விளக்கத்தில் கூறியிருக்கின்றனர். நூற்பா உரையில் எழுப்ப வேண்டிய வினாக்களைத் தோற்றுவாயாக இயல் விளக்கத்திலேயே எழுப்புகிறார். மாணாக்கரின் சிந்தனையைத் தொடக்கத்திலேயே தூண்டி விடுகிறார். `கண்டீ ரென்றா’ (எச்: 29), `செய்யா என்னும் முன்னிலை வினைச்சொல்’ (எச்: 54), `உரிச்சொல் மருங்கினும்’ (எச்; 60), `ஒருமை சுட்டிய பெயர்நிலைக் கிளவி’ (எச்: 65) இவை முதலான சூத்திரங்கள் அவ்வவ்வியலில் உணர்த்தாது ஈண்டு உணர்த்தியது என்னை? என வினா எழுப்புகிறார். அதற்குக் காரணம் அவ்வச் சூத்திரம் உரைக்கும்வழிச் சொல்லுதும் என விடையிறுத்து எழுதும் இவரது இயல் விளக்கம் ஏனையோரது விளக்கத்தினும் சிறப்பிற்குரியது ஆகும். அதிகாரத்தின் முதல் இயலை முதற்கண்ஒ ஒத்து என்று இளம்பூரணரும் `முதற்கண்’ எனத் தெய்வச்சிலையாரும் ‘முதலோத்து’ எனக் கல்லாடனாரும் கூறுவர். சேனாவரையர் அங்ஙனம் கூறுவதில்லை. நூற்பா விளக்கம் அதிகாரம், இயல், நூற்பா ஆகியவற்றிற்கு முறையே, `இவ்வதிகாரம் என்ன பெயர்த்தோ எனின்’, `இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின்’, `இச்சூத்திரம் என் நுதலிற்றோ எனின்’ என்று இளம்பூரணர் வினாவெழுப்பி விளக்கம் தருகின்றார். ஆயின், சேனாவரையர் மேற்கூறியவாறு வினாவினை எந்த இடத்திலும் எழுப்புவது இன்று. விளக்கவுரையின் தொடக்கத்தில், என் சொல்லியவாறோ எனின் (கிளவி: 37, 43; வே.ம: 24) என்று சில இடங்களில் வினவுகிறார். எனினும், பிறர் எவரும் கூறாத அளவிற்கு அதிக அளவில் வினா எழுப்பி நூற்பா விளக்கம் தருபவர் இவரே என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பொருள் (இ-ள்) என்று பொழிப்புரையாகத் தந்து என்றவாறு (எ-று) என முடித்து எடுத்துக்காட்டுடன் நூற்பா நுவலும் பொருளை வினா விடை, பிறர் உரை, உவமை, உத்தி, உரைக்குறியீடு ஆகியவற்றான் விளக்குகின்றார். அங்ஙனம் விளக்கும்போது நூற்பா இயைபு, வைப்பு, வகைமுறை வைப்பு, நூற்பா இன்றியமையாமை, சொற்றொடரை நிலைப்படுத்துதல், இலக்கண முடிபு ஆகியன கூறப்படுகின்றன. நூற்பாவிற்கு எடுத்துக்காட்டுத் தந்தும், தேவையான இடங்களில் மேற்கோள்களை எடுத்தாண்டும் விரிவானதொரு விளக்கத்தைக் கொடுக்கின்றார். இலக்கிய இலக்கணங்களி லிருந்து மேற்கோள்களைக் காட்டியதோடு தொல்காப்பியத்தி லிருந்தும் நூற்பாக்ளை எடுத்தாண்டுக் கருத்துகளைத் தொடர்புபடுத்தி எழுதுகிறார். சில இடங்களில் சொற்பொருள் விளக்கமும் இலக்கணமும் கூறி உரையெழுதுகிறார். இம் முறையினை இளம்பூரணர் முதற்கொண்டு அனைத்து உரை யாசிரியர்களும் பின்பற்றினர். இளம்பூரணர் எழுத்ததிகாரத் திலும் பொருளதிகாரத்திலும் இதன் பொருள் என்றும், சொல்லதிகாரத்தில் உரை என்றும் குறிப்பிட்டு நூற்பாவின் பொழிப்புரையைத் தருகிறார். எ-டு எனும் குறியீட்டை எழுத்ததிகாரத்திலும், வ-று எனும் இக்குறியீட்டைச்(வரலாறு, வருமாறு) சொல்லதிகாரத்திலும், உதாரணம், செய்யுள் எனப் பொருளதிகாரத்திலும் எடுத்துக் காட்டினையும் மேற்கோள் களையும் காட்டுகின்றார். சேனாவரையர் `எ-டு’ எனக் குறிப்பிடுகிறார். சேனாவரையர் சொல்லதிகாரத்திற்கு மட்டும் உரையெழுதி யிருப்பினும், எழுத்து, பொருள் ஆகிய அதிகாரங்களிலிருந்தும் நூற்பாக்களைக் கையாண்டிருக்கிறார். எழுத்ததிகார நூற்பாக்கள் பெறும் இடம்: சேனா. சொல்: கிளவி: 1; வே.ம: 32; பெய: 33; வினை: 17, 29; இடை: 2,3,23,46; எச்: 19,24,56 என்பனவாகும். பொருளதிகார நூற்பாக்கள் பெறும் இடம்: வே.ம: 27; பெய: 7,20; இடை: 2,; உரி: 23 என்பனவாகும். பன்னிரண்டு இடங்களில் 13 எழுத்ததிகார நூற்பாக்களையும் ஐந்து இடங்களில் 7 பொருளதிகார நூற்பாக்களையும் எடுத்தாண்டு விளக்கம் தருகின்றார். இவர் தொல்காப்பிய நூல் முழுமைக்கும் பெற்றிருந்த புலமையை இவை வெளிப்படுத்துகின்றன. சொல்லதிகார நூற்பாக்களை எடுத்தாளுபோது இளம்பூரணரைப் போன்று இவரும் முன் பின் உள்ள நூற்பாவையோ, இயல், அதிகாரத்திலுள்ள நூற்பாவையோ, கருத்திற்கேற்ப அமைத்து விளக்குகிறார். இவர், 83 இடங்களில் 161 தொல்காப்பிய நூற்பாக்களை மேற்கோளாக எடுத்தாண்டு விளக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றுள் எழுத்ததிகாரப் பொருளதிகார நூற்பாக்களும் அடங்கும். சில இடங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட தொல்காப்பிய நூற்பாக்களைப் பயன் படுத்துவது உண்டு. கிளவியாக்கத்து முதல் நூற்பாவில் ஆறும், வேற்றுமையியல் முதல் நூற்பாவில் நான்கும், இடையியல் இரண்டு, மூன்றாவது நூற்பாக்களில் மூன்றும், எச்சவியல் முதல் நூற்பாவில் ஐந்துமெனத் தொல்காப்பிய நூற்பாக்களை மேற்கொள்ளுகிறார். நூலாசிரியரின் நூற்பா அமைப்பும், உரையாசிரியரின் நூற்பா இயைபும், நூற்பா எடுத்தாளுமையும் கற்போர் நினைவு கொள்ளவும் கருத்துகளை நன்கு அறியவும் வகை செய்கின்றன. சில இடங்களில் தமது உரையோடு அவர்காலத்து வழங்கிய உரையையும் சேர்த்து ஈருரை எழுதிச் செல்லுவது உண்டு. இவ்விரண்டு உரையும் இச் சூத்திரத்திற்கு உரையாகக் கொள்க (எச்: 32, 53, 67) என்று அவ்விடங்களில் குறிப்பிடுவர். இம்முறையினை இவர் மட்டுமன்றி இளம்பூரணர் தொடங்கி ஏனைய உரையாசிரியர்களும் மேற்கொண்டிருக்கின்றனர். இளம்பூரணர் சுருங்கக் கூறியவிடத்தெல்லாம் விரிவாக விளக்கி எழுதுகிறார். இளம்பூரணரைப் போன்று இவரும் நூலாசிரியரின் கூற்றை எடுத்துக்காட்டாகப் பயன்படுத்துகிறார். பெயரியலில் கூறப்படும் `பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும்’ என்பதற்கு. ஆயிரு திணையின் இசைக்குமன சொல்லே - கிளவி : 1. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே - பெய: 1 ஈறுபெயர்க் காகும் இயற்கைய என்ப - வே: 8. என நூலாசிரியர் கூறிய மூன்று கூற்றினை எடுத்துக்காட்டி விளக்கம் தருகின்றார். இடையியல் 46ஆவது நூற்பாவில் இடம்பெறும் `என்றும் எனவும்’ என்பதற்கு எழுத்ததிகார நூன்மரபிலிருந்து கண்ணிமை நொடியென (நூ: 7) என்னும் நூற்பாவை எடுத்துக்காட்டுகிறார். சில இடங்களில் மூலத்தை எடுத்துரைத்து எடுத்துக்காட்டுத் தருவதும் உண்ட (வே: 5): எடுத்துக்காட்டுத் தந்து பொருள் கூறுதலும் உண்டு. வேற்றுமையியலில் மூன்றாம் வேற்றுமையின் பாகுபாடுகளுக்கும், நான்காம் வேற்றுமையின் பாகுபாடுகளுக்கும் `இதன் பொருள்’ என்று குறிப்பிட்டு முதற்கண் எடுத்துக்காட்டினைத் தந்து அதற்குரிய பொருளையும் அதன்கண்ணே பொருத்திக் காட்டுகிறார். அதனின் இயறல் - மண்ணால் இயன்ற குடம் என்பது மண் முதற்காரணம். முதற்காரணமாவது காரியத்தோடு, ஒற்றுமை உடையது; அதன் தகு கிளவி - வாயால் தக்கது வாய்ச்சி; அறிவால் அமைந்த சான்றோர் என்பன. இவை கருவிபாற்படும். அதன் வினைப்படுதல் - சாத்தனான் முடியும் இக்கருமம் என்பது. இது வினைமுதற்பாற்பாடும். அதனின் ஆதல் - வாணிகத்தான் ஆயினான் என்பது. அதனின் கோடல் - காணத்தாற்கொண்ட அரிசி என்பது. இவையும் கருவிபாற்படும். (வே: 13) அதற்கு வினையுடைமை - கரும்பிற்கு வேலி என்பது. வினை ஈண்டு உபகாரம். அதற்குடம்படுதல் - சாத்தற்கு மகள் உடம்பட்டார் என்பது. சான்றோர் கொலைக்கு உடம்பட்டார் என்பதுமது. அதற்குப் படுபொருளாவது பொதுவாகிய பொருளைப் பகுக்குங்கால் ஒரு பங்கிற்படும் பொருள்; `அது சாத்தற்குக் கூறு கொற்றன்’ என்பது. அதுவாகு கிளவி - கடி சூத்திரத்திற்குப் பொன் என்பது, பொன் கடி சூத்திரமாய்த் திரியுமாகலின் அதுவாகு கிளவி என்றார். (கடி சூத்திரம் - அரைஞாண்) (வே: 15) சேனாவரையர், நூற்பா விளக்கத்திற்காகச் சில இடங்களில் மேற்கோள் பாடலைத் தருவதோடு நில்லாது அப்பாடலுக்கு உரையும் எழுதி, அதனை இலக்கணத்தோடு பொருத்திக் காட்டுவதும் உண்டு. கிளவியாக்கத்தில், குறித்தோன் கூற்றம் தெரிந்துமொழி கிளவி (நூ: 55) எனவரும் நூற்பாவிற்கு, ஒல்லேங் குவளைப் புலாஅன் மகன்மார்பிற் புல்லெருக்கங் கண்ணி நறிது என்னும் பாடலை மேற்கோளாகத் தந்து அதற்கு, `குவளைப் புலால் நாறுவதற்கும் எருக்கங்கண்ணி நறிதாற்கும் காரணம் கூறாமையின் வழுவாம் பிறவெனின் என வினவி விளக்கம் தருகின்றார். பரத்தையிற் பிரிந்து வந்த கிழவனோடு புலந்துரைக்கின்றாளாதலின், குவளை புலால் நாறுதற்கு இவன் தவற்றோடு கூடிய அவள் காதல் காரணம் என்பதூஉம், எருக்கங் கண்ணி நாறுதற்குப் புதல்வன் மேல் ஒருகாலைக் கொருகால் பெருகும் அன்பு காரணம் என்பதூஉம் பெறப்படுதலின் வழுவாகாது என்றுரைப்பர். சேனாவரையர் கூறும் இவ்வுரை நயமாக இருப்பினும், குவளை புலால் நாறுதற்கும், எருக்கங்கண்ணி நறிதாற்கும் காரணம் அத்தொடரில் இல்லாமையால் இந் நூற்பாவின்படி வழுவேயாம் என்பர் கு. சுந்தரமூர்த்தி13 இளம்பூரணரும் பிறரும் `பல்லோர்தோள் தோய்ந்து வருதலால் பாய்புனல்’ எனத் தொடங்கி வரும் பாடலை முழுமையாக எடுத்துக்காட்டிக் கூறுவர். இவரைப் பின்பற்றி நேமிநாத உரையாசிரியரும் கூறுவர். இதுவே பொருத்தம் உடையதாகும். எச்சவியலில் மொழிமாற்றுப் பொருள்கோள் என்னும் நூற்பாவிற்கு (13) ஆரிய மன்னர் பறையின் எழுந்தியம்பும் என்னும் பாடலைச் சேனாவரையர் பொருத்திக் காட்டுவர். ஒரு நூற்பாவில் கூறிய உரை தொடர்புடைய பிறிதொரு நூற்பாவிற்கும் கூறவேண்டிய நிலை ஏற்படுமாயின், உரைத்தாங்கு உரைக்க என்றும், ஒக்கும் என்றும் கூறிச் செல்லுவது உண்டு. `கிளவியாக்கத்துள் கூறினாம்’ (வினை: 190). `அவை வினையியலுள் கூறிப் போந்தாம்’ (எச்.: 32) என்று இயல் பெயரைக் குறிப்பிட்டுக் கூறுவதும் உண்டு. இதனால் கூறியது கூறல் எனும் குற்றமும் நீங்கி உரைச்சுரக்கமும் ஏற்படுகிறது. `இவற்றிற்கு உதாரணம் முன்னர்க் காட்டுதும்’ (பெய: 22-25) என்று உதாரணம் காட்டும் இடத்தை முன்னரே கூறுவதும் உண்டு. இந்நெறிமுறை இளம்பூரணரும் பிறரும் மேற்கொண்டது ஆகும். ஆசிரியர் மாணாக்கர்க்கு எழும் ஐயங்களை வினா விடையால் தெளிவுறுத்துவது போன்று நூற்பா நுவலும் நுட்பத்தைத் தடை விடைகளால் உணர்த்தியிருப்பது சிறப்பிற்குரியது ஆகும். சில இடங்களில் `இதனால் பயன் இது எனல்’ என்று நூற்பாவின் பயனைக் கூறுகிறார். இவருரை தருக்கநூல் புலமையும் ஆராய்ச்சித் திறனும் கொண்டதாகும். ஆசிரியர் காலத்து இலக்கணம் தம் காலத்து வழக்கிழந்து இருப்பின் அதனைத் தமது உரையில் கூறிச் செல்கிறார். சொற்பொருள் விளக்கம் நூற்பா நுவல் பொருளினைப் பொழிப்புரையாகத் தந்த சேனாவரையர், சில இடங்களில் சொற்றொடர்களை எடுத்துரைத்துப் பதப்பொருளும் கூறுவது உண்டு. சொல்லாவது, எழுத்தொடு ஒருபுடையான் ஒற்றுமை யுடைத்தாய்ப் பொருள் குறித்து வருவது. (கிளவி: 10) செப்பு என்பது வினாய பொருளை அறிவுறுப்பது; செவ்வன் இறை (நேர் விடை), இறை பயப்பது (குறிப்பாக விடை தருவது) என இருவகைப்படும். வினாவாவது அறியலுறவு வெளிப்படுத்துவது; அறியான் வினா, ஐயவினா, அறிபொருள் வினா என மூவகைப்படும். (கிளவி: 13). அடிசில் என்பது உண்பன தின்பன பருகுவன நக்குவன எனும் நால்வகை; அணி என்பது கவிப்பன, கட்டுவன, செறிப்பன, பூண்பன, இயம் என்பது கொட்டுவன, ஊதுவன, எழுப்புவன; படை என்பது எய்வன, எறிவன, வெட்டுவன, குத்துவன (கிளவி: 46). ஆகுபெயராவது - யாதானும் ஓர் இயைபு பற்றி ஒன்றன் பெயர் ஒன்றற்காதல் (வே.ம; 31). வினைமுதலாவது - கருவி முதலாயின காரணங்களைத் தொழிற்படுத்துவது; கருவியாவது - வினை முதற்றொழிற் பயனைச் செயப்படு பொருட்கண் உய்ப்பது (வினை: 37) இயற்கை என்பது பெற்றி முதலாயினவற்றால் உணரப்படுவது. தெளிவு நூற்றெளிவான் வருவது (வினை: 48) குறிப்பு - மனத்தாற் குறித்து உணரப்படுவது. பண்பு - பொறியால் உணரப்படும் குணம் (உரி: 1). பெற்று - பெருக்கம் ஈது அக்காலத்துப் பயின்றது போலும் (உரி: 8). `அடுக்கிய’ என்பர் இளம்பூரணர்; நச்சினார்க்கினியர் இவ்விரு கருத்தையும் தழுவுவர்; தெய்வச்சிலையார் `பற்றுதல்’ என்பர். முன்தேற்று - புறத்தின்றித் தெய்வ முதலாயினவற்றின் முன்னின்று தெளித்தல் (உரி: 87). எகினம் என்பது அன்னம், கவரிமா, புளிமா, காய் உந்தி என்பது யாழ்ப்பத்தல், கொப்பூழ், தேர்த்தட்டு, கான்யாறு (எச்:3) எருத்துவயின் - ஈற்றயலடி என்பர் சேனாவரையர், தெய்வச்சிலையார் ஆகியோர்; ஈற்றயற்சீர் என்பர் இளம்பூரணர், நச்சினார்க்கினியர் ஆகியோர்; ஈற்றயலடி என்பதே மிகவும் பொருத்தமுடைத்து என்பர் கு. சுந்தரமூர்த்தி. (எச்: 22) அன்மொழியாவது - தொக்கசொல் அல்லாத மொழி (எச்: 22) பொருள்நிற்றலாவது - வினையோடு இயையுமாற்றான் மேற்பட்டுத் தோன்றுதல் (எச்: 23) யாஅர் - செய்யுள் இன்பம் நோக்கி அளபெழுந்து நின்றது. வினாவின் கிளவியென அதன்பொருள் உணர்த்தியவாறு. (வினை: 13) வினையொடும் பெயரொடும் - செய்யுள் இன்பம் நோக்கிக் கூறினார் (இடை: 47) என்று சூத்திரத்தைச் செய்யுள் என்கிறார். ஆயின், `சூத்திரம் பாட்டெனப் படாவோ எனின், படா. பாட்டும் உரையும் நூலுமென (செய்: 79) வேறு ஓதினமையின்’ என்று பேராசிரியர், நச்சினார்க்கினியர் ஆகியோர் உரையெழுதுவர் (செய்: 173). சொற்பொருள் வேறுபாடு காட்டுதல் உண்ப - பலரறி சொல்லாயின் பகர இறுதியாகும். உண்ப - பலவழி சொல்லாயின் அகர இறுதியாகும் - கிளவி : 9 அறியான் வினா - பொதுவகையான் அறியப்பட்டுச் சிறப்புவகையான் அறியப் படாமை நோக்கி வினவுவது. அறிபொருள் வினா - அறியப்பட்ட பொருளையே ஒரு பயன் நோக்கி வினவுவது - கிளவி: 13. உறழ் பொருள் - ஒப்புமை கூறாது மாறுபடக் கூறப்படுவது துணைப்பொருள் - ஒப்புமை கூறப்படுவது - கிளவி: 26 அடுக்கு - சொல் முழுவதும் இருமுறை வருவது (கறுத்தது கறுத்தது) இரட்டைக்கிளவி - சொல் முழுவதும் வாராது முன் சொல்லின் பாதியும் பின் சொல் முழுவதுமாக வருவது (கறுகறுத்தது) - கிளவி: 48 குறைத்தல் - சுருக்குதலும் சிறிது இழக்கச் சிதைத்தலும் அறுத்தல் - சிறிது இழவாமல் சினையை யாயினும் முதலையாயினும் இருகூறு செய்தல் - வே: 11 செயற்கை - காரணம் பற்றி ஒரு பொருட்கண் தோன்றும் வேறுபாடு முதுமை - பிறிதோர் காரணம் பற்றாது காலம் பற்றி ஒருதலையாக அப்பொருட்கண் தோன்றும் பருவம் - வே: 19 பொருள் மயக்கம் - தன் பொருளில் தீராது பிறிதொன்றன் பொருட்கண் சேறல் உருபு மயக்கம் - தன் பொருளில் தீர்ந்து சேறல் - வே.ம: 1. கருமச் சார்பு - ஒன்றையொன்று மெய்யுறுதல் கரும மல்லாச் சார்பு - மெய்யுறுதலின்றி வருவது - வே.ம:1 நோக்கிய நோக்கம் - கண்ணால் நோக்குதல் நோக்கல் நோக்கம் - மனத்தால் நோக்குதல் வே.ம: 10 குழுவின் பெயர் - ஒரு துறைக்கண் உரிமை பூண்ட பல்லோர் மேல் எக்காலத்தும் நிகழ்வன. கூடிவரு வழக்கின் - ஆடல் குறித்து இளையர் ஆடியற் பெயர் பகுதிபடக் கூடிய வழியல்லது வழங்கப்படாமையிற் குழுவின் பெயரின் வேறாயின - பெய: 11 இயற்பெயர் முன்னர் - ஒருமைப் பெயர் முன்னர் ஆரைக் கிளவி ஒருமை சிதையாமல் ஆரைக் கிளவி வந்து பலரறி சொல்லால் முடிவது - இடை: 22 ஒருவரைக் கூறும் - ஒருமைப் பெயர் முன் ஒருமை பன்மைக் கிளவி சிதைந்து ஆர் வந்து சேர்ந்து முடிவது - கிளவி: 22 குறைச் சொற் கிளவி - ஈது ஒரு சொல்லின்கண் சிறிது நிற்பச் சிறிது கெடுத்தல் - எச்: 57 தொகுக்கும் வழித் தொகுத்தல் - முழுவதும் கெடுதல் - எச்: 7. - ச. குருசாமி- சேனாவரையர் உரைநெறி, பக். 27-42 நூற்பா நிரல் (நூற்பா எண்) அ ஆவஎன - 9, 216 அ எனப் பிறத்தல். 109 அச்சக் கிளவிக்கு 100 அச்சம் பயமிலி 254 அசைநிலைக் கிளவி 271 அடிமறிச் செய்தி 407 அடைசினை முதல்என 26 அண்மைச் சொல்லிற்கு 131 அண்மைச் சொல்லே 127 அதற்குவினை யுடைமையின் 76 அதனி னியறல் 74 அதிர்வும் விதிர்ப்பும் 316 அதுஇது உதுவென 167 அதுச்சொல் வேற்றுமை 213 அதுவென் வேற்றுமை 94 அத்திணை மருங்கின் 219 அந்தி லாங்க 267 அந்நாற் சொல்லும் 403 அப்பொருள் கூறின் 36 அம்ம என்னும் 153 அம்ம கேட்பிக்கும் 276 அம்முக் கிளவியும் 231 அமர்தல் மேவல் 380 அயல்நெடி தாயின் 145 அர் ஆர் பஎன 206 அரியே ஐம்மை 356 அலமரல் தெருமரல் 310 அவ்வச் சொல்லிற்கு 295 அவ்வழி அவன் இவன் 162 அவ்வே இவ்வென 119 அவற்றின் வரூஉம் 290 அவற்றுள் அழுங்கல் 350 அவற்றுள் அன்னென் 130 அவற்றுள் இஈ யாகும் 121 அவற்றுள் இகுமுஞ் 275 அவற்றுள் இயற்சொற் 398 அவற்றுள் இரங்கல் 359 அவற்றுள் ஈயென் கிளவி 445 அவற்றுள் எழுவாய் 65 அவற்றுள் செய்கென் கிளவி 204 அவற்றுள் செய்யும் 238 அவற்றுள் தடவென் கிளவி 321 அவற்றுள் தருசொல் 29 அவற்றுள் நான்கே 175 அவற்றுள் நிரல்நிறை 405 அவற்றுள் நீயென் 189 அவற்றுள் பன்மை 209 அவற்றுள் பிரிநிலை 431 அவற்றுள் பெயரெனப் 160 அவற்றுள் முதல்நிலை 230 அவற்றுள் முன்னிலைக் 223 அவற்றுள் முன்னிலை தன்மை 226 அவற்றுள் யாதுஎன 32 அவற்றுள் விறப்பே 348 அவற்றுள் வினைவேறுபடூஉம் 53 அவற்றுள் வேற்றுமைத் 413 அவற்றொடு வருவழிச் 235 அவைதாம் அம்ஆம் 202 அவைதாம் இ உ ஐ ஓ 120 அவைதாம் உறுதவ 299 அவைதாம் தத்தங் குறிப்பின் 440 அவைதாம் தத்தம் கிளவி 429 அவைதாம் தத்தம் பொருள் 115 அவைதாம் புணரியல் 250 அவைதாம் பெண்மை 176 அவைதாம் பெயர் ஐ 64 அவைதாம் முன்மொழி 419 அவைதாம் முன்னும் 251 அவைதாம் வழக்கியல் 113 அவையல் கிளவி 442 அளபெடைப் பெயரே... 135, 141, 149 அளபெடை மிகூஉம் 125 அளவும் நிறையும் 116 அன் ஆன் அள் ஆள் 205 அன்மையின் இன்மையின் 214 அன்ன பிறவுங் கிளந்த 396 அன்ன பிறவுந் தொன்னெறி 101 அன்ன பிறவும் அஃறிணை 170 அன்ன பிறவும் உயர்திணை 166 ஆக்கக் கிளவி 22 ஆக்கந் தானே 21 ஆக ஆகல் என்பது 280 ஆங்க உரையசை 277 ஆடூஉ அறிசொல் 2 ஆண்மை சுட்டிய 181 ஆண்மை திரிந்த 12 ஆண்மை யடுத்த 163 ஆயென் கிளவியும் 212 ஆரும் அருவும் 138 ஆவோ வாகும் 195 ஆறன் மருங்கின் 98 ஆறாகுவதே அதுவெனப் 79 ஆனென் இறுதி 132 இசைத்தலும் உரிய 59 இசைநிறை அசைநிலை 411 இசைப்படு பொருளே 423 இசைப்பிசை யாகும் 309 இடைச்சொல் எல்லாம் 455 இடைச்சொல் கிளவியும் 159 இடையெனப் படுப 249 இதன திதுவிற் றென்னும் 110 இதுசெயல் வேண்டும் 243 இயற்கைப் பொருளை 19 இயற்கையின் உடைமையின் 80 இயற்சொல் திரிசொல் 397 இயற்பெயர்க் கிளவியும் 38 இயற்பெயர் சினைப்பெயர் 174 இயற்பெயர் முன்னர் 270 இயைபே புணர்ச்சி 308 இர் ஈர் மின் என 224 இரட்டைக் கிளவி 48 இரண்டன் மருங்கின் 93 இரண்டா குவதே ஐயெனப் 71 இருதிணைச் சொற்கும் 172 இருதிணைப் பிரிந்த 161 இருதிணை மருங்கின் 10 இருபெயர் பல்பெயர் 417 இலம்பாடு ஒற்கம் 360 இறப்பின் நிகழ்வின் 200, 427 இறப்பே யெதிர்வே 247 இறுதியும் இடையும் 103 இறைச்சிப் பொருள் 196 இன்றில உடைய 220 இன்ன பெயரே 193 இனச்சுட் டில்லாப் 18 இனைத்தென 33 ஈதா கொடுவெனக் 444 ஈரள பிசைக்கும் 281 ஈற்றுநின் றிசைக்கும் 286 ஈற்றுப்பெயர் முன்னர் 96 உகப்பே உயர்தல் 305 உகரந் தானே 123 உசாவே சூழ்ச்சி 370 உணர்ச்சி வாயில் 393 உம்உந் தாகும் 292 உம்மை எச்சம் 436 உம்மை எண்ணின் 291 உம்மை தொக்க 289 உம்மை யெண்ணும் 287 உயர்திணை மருங்கின் 421 உயர்திணை யென்மனார் 1 உயாவே உயங்கல் 369 உரிச்சொல் மருங்கினும் 456 உரிச்சொற் கிளவி 297 உருபுதொடர்ந்து 102 உருபென மொழியினும் 24 உருவுட் காகும் 300 உரையிடத் தியலும் 458 உவமத் தொகையே 414 உளவெனப் பட்ட 152 எச்சஞ் சிறப்பே 255 எச்ச வும்மையும் 283 எஞ்சிய கிளவி 225 எஞ்சிய மூன்றும் 439 எஞ்சிய விரண்டன் 144 எஞ்சுபொருட் கிளவி 284 எடுத்த மொழிஇனஞ் 60 எண்ணுங் காலும் 47 எண்ணே காரம் 288 எதிர்மறுத்து 107 எதிர்மறை யெச்சம் 435 எப்பொரு ளாயினும் 35 எய்யா மையே 342 எல்லாச் சொல்லும் 155 எல்லாத் தொகையும் 420 எல்லாம் என்னும் 186 எல்லாரு மென்னும் 164 எல்லே இலக்கம் 269 எவ்வயிற் பெயரும் 68 எவ்வயின் வினையும் 428 எழுத்துப்பிரிந் திசைத்தல் 395 எறுழ்வலி யாகும் 388 எற்றென் கிளவி 263 என்றும் எனவும் 294 என்றென் கிளவி 259 எனவென் எச்சம் 438 ஏ பெற் றாகும் 304 ஏயுங் குரையும் 272 ஏழா குவதே 81 ஏற்றம் நினைவும் 337 ஏனை எச்சம் 232 ஏனைக் காலமும் 248 ஏனைக் கிளவி 190 ஏனைப் புள்ளி 129 ஏனை யிரண்டும் 30 ஏனை யுயிரே 124 ஏனை யுருபும் 111 ஐந்தா குவதே 77 ஐயமுங் கரிப்பும் 384 ஐயுங் கண்ணும் 105 ஐவியப் பாகும் 385 ஒப்பில் போலியும் 278 ஒரு பெயர்ப் பொதுச்சொல் 49 ஒரு பொருள் 42, 399, 460 ஒருமை சுட்டிய எல்லா 183 ஒருமை சுட்டிய பெயர்நிலைக் 461 ஒருமை யெண்ணின் 44 ஒருவ ரென்னும் 191 ஒருவரைக் கூறும் 27 ஒருவினை யொடுச்சொல் 91 ஒழியிசை எச்சம் 434 ஒன்றறி கிளவி 8 ஒன்றறி சொல்லே 3 ஒன்றன் படர்க்கை 217 ஒன்றுவினை மருங்கின் 54 ஓம்படைக் கிளவிக்கு 97 ஓய்தல் ஆய்தல் 330 ஓவும் உவ்வும் 122 கடதற வென்னும் 203 கடிசொல் இல்லைக் 452 கடியென் கிளவி 383 கண்கால் புறமகம் 82 கண்டீர் என்றா 425 கண்ணுந் தோளும் 61 கதழ்வுந் துனைவும் 315 கம்பலை சும்மை 349 கமம்நிறைந் தியலும் 355 கயவென் கிளவி 322 கருமம் அல்லாச் 84 கருவி தொகுதி 354 கவர்வு விருப்பாகும் 362 கவவகத் திடுமே 357 கழிவே ஆக்கம் 252 கழுமென் கிளவி 351 கள்ளொடு சிவணும் 169 கறுப்புஞ் சிவப்பும் 372 கன்றலுஞ் செலவும் 86 காப்பின் ஒப்பின் 72 காலந் தாமே 199 காலம் உலகம் 57 கிளந்த அல்ல 296, 396 கிளந்த இறுதி 150 கு ஐ ஆனென 108 குடிமை ஆண்மை 56 குத்தொக வரூஉங் 99 குருவுங் கெழுவும் 301 குறித்தோன் கூற்றம் 55 குறிப்பினும் வினையினும் 201 குறைச்சொல் கிளவி 453 குறைத்தன ஆயினும் 454 கூர்ப்புங் கழிவும் 314 கூறிய கிளவி 390 கூறிய முறையின் 69 கெடவரல் பண்ணை 319 கேட்டை என்றா 426 கொடுவென் கிளவி 447, 448 கொல்லே ஐயம் 268 சாயன் மென்மை 325 சிதைந்தன வரினும் 402 சிறப்பி னாகிய 41 சினைநிலைக் கிளவிக்கு 85 சீர்த்தி மிகுபுகழ் 312 சுட்டுமுத லாகிய 40 சுட்டு முதற் பெயரும் 148 சுட்டு முதற் பெயரே 142 சுண்ணந் தானே 406 செந்தமிழ் சேர்ந்த 400 செப்பினும் வினாவினும் 16 செப்பும் வினாவும் 13 செப்பே வழீஇயினும் 15 செய்து செய்யூச் 228 செய்தெ னெச்சத்து 239 செய்யாய் என்னும் 450 செய்யுள் மருங்கினும் 463 செயப்படு பொருளைச் 246 செயற்கைப் பொருளை 20 செல்லல் இன்னல் 302 செலவினும் வரவினும் 28 செழுமை வளனும் 352 சேரே திரட்சி 363 சொல்லென் எச்சம் 441 சொல்லெனப் படுப 158 ஞெமிர்தலும் பாய்தலும் 361 தகுதியும் வழக்கும் 17 தஞ்சக் கிளவி 266 தடவுங் கயவும் 320 தடுமாறு தொழிற்பெயர்க்கு 95 தத்தம் எச்சமொடு 237 தநநு எஎன 154 தநநு எஎனும் 410 தன்மேல் செஞ்சொல் 437 தன்மைச் சுட்டின் பன்மைக்கு 192 தன்மைச் சொல்லே 43 தன்மை சுட்டலும் 25 தன்னு ளுறுத்த 187 தாமென் கிளவி 184 தாவென் கிளவி 446 தாவே வலியும் 344 தானென் கிளவி 185 தானென் பெயரும் 137 திணையொடு பழகிய 197 தீர்தலுந் தீர்த்தலும் 318 துயவென் கிளவி 368 துவன்றுநிறை வாகும் 332 துவைத்தலுஞ் சிலைத்தலும் 358 தெரிநிலை யுடைய 171 தெரிபுவேறு 157 தெவ்வுப் பகை 346 தெவுக்கொளல் 345 தெளிவின் ஏயுஞ் 261 தேற்றம் வினாவே 257 தொழிலிற் கூறும் 133 தொழிற்பெய ராயின் 139 நம்பும் மேவும் 329 நளியென் கிளவி 323 நன்றீற்று ஏயும் 282 நன்றுபெரி தாகும் 343 நனவே களனும் 376 நான்கா குவதே 75 நிகழூஉ நின்ற 173 நிரல்நிறை சுண்ணம் 404 நிலப்பெயர் குடிப்பெயர் 165 நிலனும் பொருளும் 234 நிறத்துரு உணர்த்தற்கும் 373 நின்றாங்கு இசைத்தல் 58 நீயிர் நீயென 188 நும்மின் திரிபெயர் 143 நொசிவும் நுழைவும் 374 பசப்புநிற னாகும் 307 படரே உள்ளல் 340 பண்புகொள் பெயரும் 134, 140 பண்புதொக வரூஉங் 418 பணையே பிழைத்தல் 339 பயப்பே பயனாம் 306 பரவும் பழிச்சும் 382 பல்ல பலசில 168 பல்லோர் படர்க்கை 227 பலவயி னானும் 51 பழுது பயம் இன்றே 324 பன்முறை யானும் 233 பன்மை சுட்டிய 182 பன்மையும் 208, 215, 218, 221 பால்மயக் குற்ற 23 பாலறி மரபின் 211 பிண்டப் பெயரும் 90 பிணையும் பேணும் 338 பிரிநிலை வினாவே 256 பிரிநிலை வினையே 430 பிறிதுபிறி தேற்றலும் 104 பின்முன் கால்கடை 229 புதிதுபடற் பொருட்டே 379 புலம்பே தனிமை 331 புள்ளியு முயிரும் 151 புனிறென் கிளவி 375 பெண்மைச் சினைப்பெயர் 177 பெண்மை சுட்டிய 4, 178, 180 பெண்மை முறைப் பெயர் 179 பெயர்நிலைக் கிளவி காலம் 70 பெயர்நிலைக் கிளவியின் 449 பெயரி னாகிய 67 பெயரினும் தொழிலினும் 50 பெயரெஞ்சு கிளவி பெயரொடு 433 பெயரெஞ்சு கிளவியும் 236 பேநாம் உருமென 365 பையுளுஞ் சிறுமையும் 341 பொருட்குத்திரி பில்லை 392 பொருட்குப் பொருள் 391 பொருண்மை சுட்டல் 66 பொருண்மை தெரிதலும் 156 பொருள்தெரி மருங்கின் 408 பொருளொடு புணராச் 37 பொற்பே பொலிவு 335 மகடூஉ மருங்கின் 194 மதவே மடனும் 377 மல்லல் வளனே 303 மழவுங் குழவும் 311 மற்றென் கிளவி 262 மற்றைய தென்னுங் 264 மறைக்குங் காலை 443 மன்றவென் கிளவி 265 மன்னாப் பொருளும் 34 மாதர் காதல் 328 மாரைக் கிளவியும் 207 மாலை இயல்பே 313 மாவென் கிளவி 273 மிக்கதன் மருங்கின் 242 மிகுதியும் வனப்பும் 378 மியாஇக மோமதி 274 முதல்முன் ஐவரின் 88 முதலிற் கூறுஞ் 114 முதலுஞ் சினையும் 89 முதற்சினைக் கிளவிக்கு 87 முந்நிலைக் காலமும் 240 முரஞ்சன் முதிர்வே 333 முழுதென் கிளவி 326 முற்படக் கிளத்தல் 39 முற்றிய உம்மைத் 285 முறைப்பெயர் 136, 147 முறைப்பெயர் மருங்கின் 126 முன்னத்தின் உணரும் 459 முன்னிலை சுட்டிய 462 முன்னிலை முன்னர் 451 முன்னிலை வியங்கோள் 222 முனைவு முனிவாகும் 386 மூன்றனும் ஐந்தனும் 92 மூன்றா குவதே 73 மெய்பெறக் கிளந்த 389 மொழிப்பொருட் காரணம் 394 மொழிமாற் றியற்கை 409 யாஅர் என்னும் 210 யாகா பிறபிறக்கு 279 யாணுக் கவினாம் 381 யாத னுருபிற் கூறிற்று 106 யாதுஎவன் என்னும் 31 ரஃகான் ஒற்றும் 7 வடசொற் கிளவி 401 வண்ணத்தின் வடிவின் 416 வண்ணம் வடிவே 78 வம்பு நிலையின்மை 327 வயவலி யாகும் 366 வயாவென் கிளவி 371 வறிது சிறிதாகும் 336 வன்புற வரூஉம் 244 வார்தல் போகல் 317 வாராக் காலத்தும் 241 வாராக் காலத்து வினைச்சொல் 245 வாரா மரபின 422 வாளொளி யாகும் 367 வியங்கோள் எண்ணுப்பெயர் 45 வியலென் கிளவி 364 விரைசொல் லடுக்கே 424 விழுமஞ் சீர்மை 353 விழைவின் தில்லை 260 விழைவே காலம் 253 விளிகொள் வதன்கண் 63 விளியெனப் படுப 118 விறப்பும் உறப்பும் 347 வினாவுஞ் செப்பே 14 வினையின் தொகுதி 415 வினையின் தோன்றும் 11 வினையினும் பண்பினும் 146 வினையெஞ்சு கிளவிக்கு 432 வினையெஞ்சு கிளவியும் 457 வினையெனப் படுவது 198 வினையே குறிப்பே 258 வினையே செய்வது 112 வினையொடு நிலையினும் 293 வினைவேறு படூஉம் 52 வெம்மை வேண்டல் 334 வெளிப்படு சொல்லே 298 வேற்றுமைத் தொகையே 412 வேற்றுமை தாமே 62 வேற்றுமைப் பொருளை 83 வேறுவினைப் பொதுச் 46 வையே கூர்மை 387 ளஃகான்ஒற்றே மகடூஉ 6 னஃகான் ஒற்றே ஆடூஉ 5 னரலள என்னும் 128 சொல் நிரல் (மேற்கோள்) (நூற்பா எண்) அ அஞ்சினம் 202 அஞ்சினாம் 202 அஞ்சினெம் 202 அஞ்சினேம் 202 அணிலே 151 அது 167 அத்தா 126 அத்தாய் 126 அரசர் 165 அரிவாள் 415 அருந்திறல் 56 அருங்குரைத்து 249 அருவாளன் 165, 463 அல்லது 229 அல்லள் 214 அல்லன் 214 அல்லால் 229 அவ் 167 அவள் 161 அவன் 65, 157 அவை 167 அழியல் 450 அன்றி 229 அன்னா 126 அன்னாய் 126 ஆ ஆ 65, 169 ஆக்கள் 169 ஆகி 228 ஆடரங்கு 415 ஆடு 161 ஆணை 402 ஆய் 228 ஆயர் 165 ஆனம் 296 இ இஃது 167 இடையன் 11 இரீஇ 228 இல்ல 168 இல்லத்தான் 213 இல்லது 170 இல்லன 170 இல 220 இலர் 214 இலள் 214 இலன் 214 இவ் 167 இவ்வாளன் 163 இவர் 157 இவன் 162 இளையீர் 140 இளையீரே 140 இன்றி 229 இன்று 220 உ உஃது 167 உடீஇ 228 உடையர் 214 உடையள் 214 உடையன் 214 உண் 450 உண்கின்ற 216 உண்கின்றது 217 உண்கின்றன 216 உண்கின்றனம் 202 உண்கின்றனெம் 202 உண்கின்றனேம் 202 உண்கின்றாம் 202, 463 உண்கின்றேம் 202 உண்கு 203 உண்கும் 7, 202 உண்குவ 9, 216 உண்குவம் 202, 463 உண்குவிர் 224 உண்குவீர் 224 உண்ட 9 உண்குவென் 203 உண்டது 217 உண்டல் 70 உண்டன 9, 216 உண்டன்று 217 உண்டனம் 202, 463 உண்டனர் 7, 205 உண்டனள் 6 உண்டனன் 5, 205, 249 உண்டனிர் 224 உண்டனென் 203 உண்டனெம் 202 உண்டனேம் 202 உண்டனை 223 உண்டாம் 463 உண்டாய் 223 உண்டி 223 உண்டாள் 6 உண்டார் 7, 206 உண்டான் 5, 70, 198, 200, 201, 202, 205, 249 உண்டியோ 13, 14 உண்டிலன் 236 உண்டு 203, 228 உண்டீ 451 உண்டீர் 224 உண்டும் 7, 202 உண்டேன் 203 உண்ணலன் 236, 450 உண்ணா 9, 216, 228 உண்ணாகிடந்தனம் 202 உண்ணாது 450 உண்ணாநிற்கும் 202 உண்ணாநிற்பல் 202 உண்ணாநின்ற 9, 216 உண்ணாநின்றம் 202 உண்ணாநின்றள் 6 உண்ணாநின்றது 217 உண்ணாநின்றன 9, 216 உண்ணாநின்றனம் 202, 463 உண்ணாநின்றனர் 7, 206 உண்ணாநின்றனள் 6 உண்ணாநின்றனன் 5, 205 உண்ணாநின்றனிர் 224 உண்ணாநின்றனெம் 202 உண்ணாநின்றனென் 203 உண்ணாநின்றனேம் 202 உண்ணாநின்றனை 223 உண்ணாநின்றாம் 463 உண்ணாநின்றாய் 223 உண்ணாநின்றார் 7, 206 உண்ணாநின்றாள் 205 உண்ணாநின்றான் 5, 200, 205 உண்ணாநின்றிலன் 236 உண்ணாநின்றீர் 224 உண்ணாநின்றேம் 202 உண்ணாநின்றேன் 203 உண்ணாவிருந்தனம் 202 உண்ணாய் 450 உண்ணான் 236 உண்ணிய 228 உண்ணியர் 228 உண்ணேன் 13, 14, 450 உண்ப 9, 206, 216 உண்பது 217 உண்பர் 7, 206 உண்பல் 14, 202 உண்பள் 6 உண்பன 9, 216 உண்பாக்கு 229 உண்பாம் 463 உண்பாய் 223 உண்பார் 7, 206 உண்பாள் 6, 205 உண்பான் 5, 200, 205, 229 உண்பேன் 203 உண்பை 223 உண்மார் 7 உண்மின் 224 உது 167 உந்து 399 உரிஞபு 228 உரிஞி 228 உரிஞியது 217 உரிஞினம் 202 உரிஞினாம் 202 உரிஞினெம் 202 உரிஞினேம் 202 உரிஞுகு 203 உரிஞுதும் 202 உரிஞுப 206 உரிஞுவ 216 உரிஞுவம் 202 உரிஞுவன 216 உரிஞுமின் 224 உரைக்க 202 உரைக்கும்வழி 229 உரைக்குமிடத்து 229 உரைத்தவழி 229 உரைத்தவிடத்து 229 உரைத்தனம் 202 உரைத்தனெம் 202 உரைத்தனேம் 202 உரைத்தாம் 202 உரைத்தி 202 உரைத்திசினோரே 250 உரைத்தேம் 202 உரைப்ப 228 உவ் 167 உவ்வாளன் 163 உளர் 214 உவன் 162 உவை 167 உழவோன் 195 உழாஅன் 195, 135 உள்ளது 170 உள்ளன 170 உள 220 உளள் 214 உளன் 214 ஊ ஊர 131 ஊரன் 197 எ எஞ்சி 228 எஞ்சியென 228 எட்டி 166 எமர் 154, 410 எமள் 154, 410 எமன் 154, 410 எம்மார் 154, 410 எம்மாள் 154, 410 எம்மான் 154, 410 எல்லாரும் 164 எல்லாவற்றையும் 250 எல்லீரும் 164 என்மனார் 249 என்றிசினோர் 279 ஏ ஏற்றி 228 ஏனம் 296 ஏனாதி 166 ஒ ஒருத்தி 44 ஒருவன் 44 ஒருவர் 44 ஒன்று 168 ஓ ஓடி 228 ஓடுவ 216 ஓனம் 296 க கச்சினன் 213 கடல் 169 கண் 56 கண்ணன் 402 கமுகு 398 கரிது 8, 427 கரிய 220 கரியது 168, 220 கரியம் 215 கரியர் 7, 215 கரியள் 6, 215 கரியன் 5, 198, 201, 213, 215 கரியன 9 கரியாம் 215 கரியாய் 146, 224 கரியார் 7, 215 கரியாள் 6, 215 கரியிர் 224 கரியீர் 140, 224 கரியீரே 140 கரியெம் 215 கரியென் 215 கரியேம் 215 கரியேன் 215 கரியை 224, 427 கருங்களமர் 17 கருங்குதிரை 416 கருங்குவளை 182 கருவாடு 17 கலக்கினம் 202 கழலினாய் 224 கழலினிர் 224 கழலினீர் 224 கழலினை 224 கழுதை 169 கற்குபு 228 கறுகறுத்தது 48 கா 90 காடு 90 காத்தை 426 காவிதி 166 காளை 197 கிடவாய் 450 கிழவோன் 195 கிழாஅன் 195 கிழாஅஅஅன் 135 குங்குமம் 401 குண்டுகட்டு 8, 217 குதிரை 169 குதிரைகள் 169 குரிசில் 144 குருகு 53 குருடு 56 குறுஞ்சூலி 18 குறுகுறுத்தது 48 குறுந்தடி 18 குறுந்தாட்டு 217 கூத்தீர் 138 கூயிற்று 217 கூயின்று 217 கூழ் 398 கெழீஇயிலி 56 கேண்மியா 251, 274 கொடாநின்ற 9 கொடாநின்றன 9 கொடுத்த 9 கொடுத்தன 9 கொடுப்ப 9 கொடுப்பன 9 கொண்மார் 7 கொல்யானை 420, 415 கொல்லன் 165 கொற்றன் 70, 174 கொறுகொறுத்தார் 48 கொன்னூர் 251 கோஒஒஒள் 149 கோட்ட 9 கோமாள் 145 கோவே 122 ச சட்டி 452 சமழ்ப்பு 452 சள்ளை 452 சாத்த 150 சாத்தற்கு 69 சாத்தன் 70 சாத்தன்கண் 69 சாத்தனதற்கு 104 சாத்தனதன்கண் 104 சாத்தனதனின் 104 சாத்தனதனை 104 சாத்தனதனொடு 104 சாத்தனது 69 சாத்தனின் 69 சாத்தனை 69 சாத்தனொடு 69 சாத்தா 150 சாத்தி 150 சாத்தீ 120, 150 சில்லவை 170 சில 168 சிறாஅஅர் 141 சிறுவெள்வாய் 17 சினைஇ 228 சுருசுருத்தது 48 செங்கேழ் 456 செய்ய 220 செய்யது 168, 201 செய்யன் 213 செய்யாய் 134 செய்யான் 165 செல்கம் 202 செல்வ 9 செல்வது 217, 168 செல்வல் 68 செல்வன 9 செல்வார் 165 சென்மார் 7 சென்மியா 274 சென்ற 216 சென்றது 201, 217, 427 சென்றன்று 217 சென்றன 216 சென்றனன் 427 சென்றனை 427 சென்றாய் 133 சென்றான் 157 சென்றீ 451 சென்று 228 சேர்ப்பா 130 சேர்ப்பன் 165 சேரமான் 132, 165 சேறு 203 சேறும் 7, 202 சோழா 130 சோழியன் 463, 165 சோறீ 445 சோறு 398 த தகைத்த 9 தகைத்தன 9 தகைப்ப 9 தகைப்பன 9 தகையாநின்ற 9 தகையாநின்றன 9 தச்சன் 165 தந்தாய் 150 தந்துவை 400 தந்தை 150, 410 தந்தையர் 165 தம் 450 தம்மாள் 154, 400 தம்மான் 154 தம்முனா 129 தமர் 154, 410 தமள் 154, 410 தமன் 154, 410 தயிர் 398 தள்ளை 410 தாஅய் 228 தாயர் 165 தாயிற்று 8 திருமுகு 203 திருமுதும் 202 திருமுவ 216 திருவே 123 தின்குவ 9, 216 தின்மின் 224 தின்றல் 70 தின்றனம் 202 தின்றனெம் 202 தின்றனேம் 202 தின்றாம் 202 தின்றான் 70 தின்றி 223 தின்றேம் 202 தின்னா 9, 216 தின்னிய 228 தின்னியர் 228 தீ 398 தீங்கரும்பு 416 தீயர் 214 தீயள் 214 தீயன் 214 துஞ்சினார் 17 துணங்கையன் 213 துறைவ 131 தூஉய் 228 தெங்கு 169, 398 தெருட்டினம் 202 தெனாது 220 தொக்க 216 தொக்கன 216 ந நக்கனம் 202 நக்கனெம் 202 நக்காம் 202 நக்கு 228 நக்கேம் 202 நங்காய் 121 நங்கை 163 நட்டம் 402 நட 450 நடக்கின்றது 217 நடவாநின்றது 217 நம்பி 161, 163 நம்பீ 121 நம்பீஇ 152 நம்மார் 154, 410 நம்மாள் 154, 410 நம்மான் 154, 410 நமர் 154, 410 நமள் 154, 410 நமன் 154, 410 நரியே 151 நல்லர் 214 நல்லள் 214 நல்லன் 214 நாகம் 53 நாட்டாய் 224 நாட்டினீர் 224 நிலம் 398 நின்றாய் 146 நின்றை 426 நீர் 398 நீலம் 18 நும்மார் 154, 410 நும்மாள் 154, 410 நும்மான் 154, 410 நுமர் 154, 410 நுமள் 154, 410 நுமன் 154, 410 நூறு 168 ப படை 90 பத்து 168 பதினைந்து 417 பராஅய் 228 பராரை 416 பல்ல 168 பல்லவை 170 பல 168 பலா 169 பறி 17 பாகன் 11 பாசிலை 403 பாடுகம் 202 பாடுவ 216 பாய்புனல் 361 பார்ப்பார் 165 பார்ப்பீர் 138 பால் 398 பாவை 56 பிற 17 பிறர் 154, 166 பிறள் 154, 166 பிறன் 154, 166 பிறிது 170 புக்கது 217 புக்கன்று 217 புக்கீ 451 புலியான் 449 புலியே 151 புறத்தன் 213 பூசையான் 449 பூண்டு 150 பூண்டே 150 பூயிலான் 166 பெண்டாட்டி 161, 163 பெண்டிரோ 129 பெண்பால் 145 பெண்மகள் 163 பெண்மகன் 161, 164 பெருகிற்று 17 பெருவிறல் 56 பெற்றம் 400 பேடிகள் 4 பேடிமார் 4 பேடியர் 4 பொறியறை 56 போ 450 போகி 228 போகிய 228 போகியர் 229 போய் 164, 228 போய 216 போயது 217 போயன 216 போயிற்று 217 போயின்று 217 போயின 216 ம மக்கள் 101 மக்காள் 150, 163 மகடூ 161 மகவே 124 மகள் 161 மகளே 147 மகன் 163 மகனே 136 மகாஅஅஅர் 141 மகிழ்நன் 197 மஞ்ஞை 399 மணி 401 மதவிடை 378 மரமே 15 மருமகளே 147 மருமகனே 136 மலை 169 மலையமான் 132, 152, 165 மற்றையான் 154, 166 மற்றையஃது 264 மற்றையவன் 264 மற்றையன 170 மற்றையார் 154, 166 மற்றையாள் 154, 166 மா 398 மாஅஅல் 149 மாந்தர் 163 மீயடுப்பு 17 மீளி 197 முடம் 56 முடவன் 174 மெல்லிலை 416 மேரு 401 மொறுமொறுத்தார் 48 ய யா 31, 167 யாங்கு 31 யாண்டு 31 யாது 31 யார் 31 யாவர் 31 யாவள் 31 யாவன் 31 யாவை 31, 167 யான் 162 யானை 56 வ வட்டப்பலகை 416 வட்டம் 402 வடாது 220 வண்ணத்தான் 166 வணிகர் 165 வந்த 216 வந்தன்று 217 வந்தன 216 வந்தாய் 133 வந்தான் 157 வந்தில 217 வந்திலர் 217 வந்திலள் 217 வந்திலன் 217 வந்தின்று 217 வந்தீரே 139 வந்து 228 வம் 450 வருகுப 206 வருதும் 7 வருப 7 வருமார் 7 வருவ 9, 216 வருவது 8, 168 வருவார் 165 வருவான் 229 வல்லர் 214 வல்லள் 214 வல்லன் 214 வளி 398 வனைந்தான் 112 வா 450 வாயிலான் 166 வாராநின்றது 8 வாரி 401 விண்டு 399 விலங்கல் 399 வெங்காமம் 334 வெண்களமர் 17 வெள்யாடு 17 வெள்ளாடை 418 வெள்ளொக்கலர் 459 வெளியை 201 வெற்பன் 165 வெற்பு 399 வேட்டுவர் 165 வேந்தே 122 வேபாக்கு 229 வேளாளர் 165 சொற்றொடர் நிரல் (மேற்கோள்) (எண் : நூற்பா எண்) அ அஃதியாது 66 அஃதெவன் 66, 219 அகத்தியனாற் தமிழுரைக்கப் பட்டது 73 அடிசில் அயின்றார், மிசைந்தார் 46 அடிமை நல்ல 56 அடிமை நன்று 56 அடைக்காயையெண்ணும் 72 அடைகடல் 419 அணியணிந்தார், மெய்ப்படுத்தார் 46 அதனிற்சேய்த்திது 78 அதுஉண்டஊண் 225 அதுஉண்ணுமூண் 225 அதுஉண்மன 225 அதுசெல்க 225 அதுபிறக்கு 279 அதுவந்தது 11 அதுவரும் 225 அதுவன்று 220 அதுவில்லை 225 அதுவேறு 225 அந்தணர்க் காவைக் கொடுத்தான் 75 அந்நெறி யீண்டுவந்து கிடந்தது 422 அம்மலைவந்து இதனொடு பொருந்திற்று 422 அம்மாசாத்தா 153 அரசர் பெருந்தெரு 49 அரசரைச்சார்ந்தான் 84 அரசன் ஆகொடுக்கும் பார்ப்பான் 234 அரசன்க ணிருந்தான் 82 அரசனது முதிர்வு 80 அரசனது முதுமை 80 அரசனோ டிளையர் வந்தார் 91 அரிசி தானே யட்டது 246 அரிசியை யளக்கும் 72 அலமரலாயம் 310 அவட்குக் குற்றேவல் செய்யும் 111 அவர் செல்க 225 அவர் யார் 210 அவர் வந்தார் 11 அவர் வேறு 225 அவளுண்ணுமூண் 225 அவ ரில்லை 225 அவருண்டவூண் 225 அவருண்ணுமூண் 225 அவருண்மன 225 அவரு ளிவனே கள்வன் 257 அவலவ லென்கின்றன நெல் 422 அவள் செல்க 225 அவள் யார் 210 அவள் வந்தாள் 11 அவள்வரும் 225 அவள் வேறு 225 அவளது குற்றேவல் செய்யும் 111 அவ ளில்லை 225 அவளுண்டவூண் 225 அவளுண்மன 225 அவற்குக் கொடுத்தான் 30 அவற்குச் செய்யத்தகு மக்காரியம் 110 அவற்குத் தக்கா ளிவள் 76 அவற்குத் தமன் 76 அவற்கு நட்டான் 76 அவற்குப் பகை 76 அவற்கு மாற்றான் 76 அவற்று ளெவ்வெருது கெட்டது 32 அவன்கட் சென்றான் 30 அவன்கண் வந்தான் 29 அவன் செல்க 225 அவன் யார் 210 அவன் வந்தான் 11 அவன்வரும் 225 அவன் வேறு 225 அவன்றான் வந்தான் 38 அவனி னளிய னிவன் 78 அவனுண்டவூண் 225 அவனுண்ணுமூண் 225 அவனுண்மன 225 அவனு நீயுஞ் சென்மின் 463 அவனே கொண்டான் 431 அவனொருவனு மறங்கூறும் 38 அவை செல்க 225 அவை யில்லை 225 அவை யுண்ணு மூண் 225 அவை யுண்மன 225 அவை யெவன் 219 அவை வந்தன 11 அவை வரும் 225 அவை வேறு 225 அறங் கறக்கும் 105 அறஞ்செய்தான் றுறக்கம்புகும் 60 அறஞ் செய்து துறக்கம் புக்கான் 57 அறத்தை யரசன் விரும்பினான் 237 அறத்தை யாக்கும் 72 அறிவானமைந்த சான்றோர் 74 அனைத்துங் கொடால் 285 ஆ ஆ கரிது 66 ஆகாயத்துக்கட் பருந்து 82 ஆ கிடந்தது 66 ஆ கொடுத்த பார்ப்பான் 234 ஆங்குச் சென்றான் 30 ஆங்கு வந்தான் 29 ஆசிரியன் பேரூக்கிழான் செயிற்றியன் இளங்கண்ணன் சாத்தன் 42 ஆசிரியன் பேரூர்கிழான் செயிற்றியன் இளங்கண்ணன் சாத்தன் வந்து உண்டு சென்றான் 42 ஆசிரியன் வந்தான் 42 ஆசிரியனொடு மாணாக்கர் வந்தார் 91 ஆ செல்க 66 ஆ டரங்கு 415 ஆடிய கூத்தன் 234 ஆடை தா 446 ஆடை யொலிக்குங் கூலி 234 ஆடை யொலித்த கூலி 234 ஆண்மகன் கொல்லோ பெண்டாட்டி கொல்லோ இஃதோ தோன்றுவார் 23 ஆண்மகன் கொல்லோ பெண்டாட்டி கொல்லோ தோன்றாநின்ற உருபு 23 ஆண்மகனல்லன் பெண்டாட்டி 25 ஆண்மை தீது 56 ஆண்மை நன்று 56 ஆ தீண்டு குற்றி 49 ஆப் பி 443 ஆ பல 66 ஆலின்கட் கிடந்தது 82 ஆ வந்தது 171 ஆ வந்தன 171 ஆ அல்ல 66 ஆ வில்லை 66 ஆவிற்குக் கன்று 110 ஆவின் கன்று 110 ஆ வுண்டு 66 ஆவு மாயனுஞ் செல்க 45 ஆறு சென்ற வியர் 234 ஆனதர் 49 ஆனை யிலண்டம் 443 இ இஃதொரு குத்து 117 இஃதோ ரேறு 117 இக்காட்டுட் போகிற் கூறை கோட் பட்டான் 245 இக்காட்டுட் போகிற் கூறை கோட் படும் 245 இக்குடம் பொன் 114 இக்குன் றக்குன்றோ டொன்றும் 422 இகழ்ச்சியிற் கெட்டான் 78 இச்சொற்குப் பொருள் யாது 31 இச்சொற்குப் பொருளெவன் 31 இசையது கருவி 80 இதனிற் கடி திது 78 இதனிற் சில விவை 78 இதனிற் சிறந்த திது 78 இதனிற் சிறி திது 78 இதனிற் பல விவை 78 இதனிற் பழை திது 78 இதனிற் புதி திது 78 இதனிற் பெரி திது 78 இதனிற்றண்ணி திது 78 இதனிற் றீ திது 78 இதனிற்றீவி திது 78 இதனின் முதி திது 78 இதனின் மெலி திது 78 இதனின் வட்ட மிது 78 இதனின் வலி திது 78 இதனின்வெய் திது 78 இதனினன் றிது 78 இதனி னாறு மிது 78 இதனி னிழிந்த திது 78 இதனி னிளை திது 78 இதனி னூங்கு 77 இதனினெடி திது 78 இந்நாழிக் கிந்நாழி சிறிது பெரிது 458 இந்நெற் பதக்கு 116 இந்நெறி யாண்டுச் சென்று கிடக்கும் 422 இப்பயறு தூணி 116 இப்பொன் றொடி 116 இம்மணி நீலம் 114 இம்மரங்களுட் கருங்காலி யாது 32 இம்மா வயிரம் 53 இம்மா வெளிறு 53 இய மியம்பினார், படுத்தார் 46 இயைந் தொழுகும் 308 இரண்டனுட்கூர்ங்கோட்ட காட்டுவல் 463 இருந்தான் குன்றத்து 104 இருந்தான் குன்றத்துக்கண் 103 இரும்பு பொன்னாயிற்று 420 இலை நட்டு வாழும் 114 இவ்வாடை கோலிகன் 114 இவ்வாடையு மந்நூலா னியன்றது 76 இவ்வுரு குற்றி யாம் 25 இவ்வுருபு குற்றியன்று மகன் 25 இவ்வெள்ளி துலாம் 115 இவட்குக் கொள்ளு மிவ்வணி 110 இவர் கட்டிலேறினார் 50 இவர்பண்டு இப்பொழிலகத்து விளையாடுவர் 247 இவர் வந்தார் 27 இவர் வாழ்க்கைப்பட்டார் 50 இவள்கண்ணி னிவள் கண் பெரிய 16 இவள் கண்ணி னிவள் கண் பெரியவோ 16 இவள்கண்ணொக்கு மிவள்கண் 16 இவள்கண்ணொக்குமோஇவள்கண் 16 இவள்பண்டு இப்பொழிலகத்து விளையாடும் 248 இவற்குக் காலமாயிற்று 57 இவன்குற்றி யல்லன் 25 இவன் யார் 68 இவனி னில னிவன் 78 இவனி னுடைய னிவன் 78 இற்க ணிருந்தான் 82 இறந்தபின் இளமை வாராது 232 இன்றிவ்வூர்ப்பெற்றமெல்லா மறங் கறக்கும் 50 இன்னற் குறிப்பு 456 ஈ ஈங்கு வந்தான் 29 ஈதொன்று குருடு 38 உ உடம்பு நுணுகிற்று 57 உண்குபு வந்தான் 230 உண்ட சாத்தன் 433 உண்ட சோறு 234 உண் டருந்து 403 உண்டான் சாத்தன் 234, 429 உண்டான் வந்த சாத்தன் 237 உண்டான்தின்றான் ஓடினான் பாடி னான் சாத்தன் 429 உண்டு உண்டு 411 உண்டு தின்று ஓடிப் பாடி வந்தான் 233 உண்டு பருகூத் தின்குபு வந்தான் 233 உண்டும்தின்றும் பாடியும் வந்தான் 293 உண்டு வந்தான் 239 உண்டு விருந்தொடு வந்தான் 237 உண்டெனப் பசி கெட்டது 228 உண்டேஎ மறுமை 257 உண்ண வந்தான் 228 உண்ணவெனத் தின்னவெனப் பாடவென வந்தான் 293 உண்ணாக் காலம் 236 உண்ணாச் சோறு 236 உண்ணாது வந்தான் 236 உண்ணாமைக்குப் போயினான் 236 உண்ணா வில்லம் 236 உண்ணா வூண் 236 உண்ணுஞ் சாத்தன் 433 உண்ணு மூண் 234 உண்ணூ வந்தான் 230 உயிர்நீத் தொருமகன் கிடந்தான் 57 உயிர் போயிற்று 57 உயி ருணரும் 19 உயி ரெத்தன்மைத்து 13 உயிரென உடலென வின்றி யமையா 287 உருகெழு கடவுள் 300 உரைத்தென உணர்ந்தான் 228 உவாப்பதினான்கு 417, 419 உவாப்பதினான்கு கழிந்தன 67 உழுது சாத்தன் வந்தான் 237 உழுது வந்தது 225 உழுது வந்தவன் 432 உழுது வந்தன 225 உழுது வந்தாய் 225 உழுது வந்தார் 225 உழுது வந்தான் 225, 239, 432 உழுது வந்தீர் 225 உழுது வந்தேம் 225 உழுது வந்தேன் 225 உழுது வருதல் 432 உழுது வருவாய் 239 உழு தேரொடு வந்தான் 237 உழு தோடி வந்தான் 237 உழுந்தல்ல தில்லை 35 உழுந்தன்றி யில்லை 35 உறந்த விஞ்சி 347 உறு கால் 389, 392, 156 உறு பொருள் 456 ஊ ஊர்க்கட் செய் 82 ஊர்க்கட் சென்றான் 110 ஊர்க்கண் மரம் 82 ஊர்க்க ணுற்றது செய்வான் 110 ஊர்க்குச் சென்றான் 110 ஊர்க்குச் சேயன் 110 ஊர்க்குத் தீர்ந்தான் 110 ஊர்க் குற்றது செய்வான் 110 ஊர்ப்புறத் திருந்தான் 82 ஊரகத் திருந்தான் 82 ஊரிற் சேயன் 110 ஊரிற் றீர்ந்தான் 78 ஊரைக் காக்கும் 72 ஊரைச் சாரும் 72 ஊரைப் புரக்கும் 72 ஊரை யளிக்கும் 72 எ எந்தை வந்தான் 27, 57 எம்மரசனி னும்மரசன் முறை செய்யும் 16 எம்மரசனை யொக்கும் நும் மரசன் 16 எம்மரசனை யொக்குமோ நும்மரசன் 16 எம் மன்னை வந்தாள் 27, 57 எயிலை யிழைத்தான் 72 எயிற்கட் புக்கான் 82 எயிற்க ணின்றான் 82 எருத்தில் 49 எருப்பெய் திளங்களை கட்டு நீர் கால் யாத் தமையாக் பைங்கூழ் நல்லவாயின 21 எல்லாச் சான்றாரும் 187 எல்லாப் பார்ப்பாரும் 187 எல்லாம் வந்தன 186 எல்லாம் வந்தார் 186 எல்லாம் வந்தீர் 186 எல்லாம் வந்தேம் 186 எல்வளை 269 எள்ளுமார் வந்தார் 207 எறும்பு முட்டைகொண்டு தெற்றி யேறின் மழை பெய்தது, பெய்யும் 245 என்னுழை வந்தான் 29 எனக்குத் தந்தான் 29 ஏ ஏஎ யென் சொல்லுக 272 ஏ கல்ல டுக்கம் 304, 456 ஏர்க்கட் சென்றான் 82 ஏனாதி நல்லுதடன் 41 ஒ ஒருத்தி கொல்லோ பலர் கொல்லோ 23 ஒருபெருஞ் சும்மையொடு 349 ஒருவன்கொல்லோ ஒருத்தி கொல்லோ 25 ஒருவன் கொல்லோ பலர் கொல்லோ 23 ஒருவன் கொல்லோ பலர் கொல்லோ கறவை யுய்த்த கள்வர் 23 ஒருவன் தவஞ் செய்யிற் சுவர்க்கம் புகும் தாயைக் கொல்லின் நிரயம் புகும் 242 ஒருவர் வந்தார் 157, 191, 192 ஒருவரவர் 192 ஒல்லென வொலித்தது 258, 438 ஒழுகு கொடி மருங்குல் 317 ஒற்றியது முதல் 80 ஒற்றியது பொருள் 80 ஒன்றன்று பல 25 ஒன்றுகொல்லோ பலகொல்லோ 25 ஒன்றுகொல்லோ பலகொல்லோ செய்புக்க உருபு 24 ஒன்றுகொல்லோ பலகொல்லோ செய் புக்க பெற்றம் 24 ஒன்றோ பலவோ செய் புக்கன 23 ஓ ஓஒ பெரியன் 256 ஓடி வந்தான் 457 ஓதல் வேண்டும் 243 ஓதாப் பார்ப்பான் 236 ஓதும் பார்ப்பான் 234 ஒள ஒளஉவினிவெகுளல் 281 ஒளஉ வொருவ னிரவலர்க் கீந்தவாறு 281 ஒளஒள வினிச் சாலும் 281 ஒளஒள வொருவன்ற வஞ் செய்தவாறு 281 ஒள வவன் முயலுமாறு 281 ஒள வினித் தட்டுப்புடையல் 281 க கங்கை மாத்திரர் 165 கடந்தா னிலத்தை 103 கடந்தானிலம் 104 கடலைக் காடொட்டாது 101 கடலொடு காடொட்டாது 101 கடி கா 383 கடிசூத்திரத்திற்குப் பொன் 76 கடிசூத்திரப் பொன் 413 கடிநுனைப்பகழி 383 கடி மலர் 383 கடுத் தின்றான் 157 கடு நட்பு 383 கடும் பகல் 383 கடு மான் 383 கண் கழீஇ வருதும் 442 கண்டீரே கண்டீரே 425 கண் ணல்லள் 61 கண் ணல்லர் 61 கணவ னினி துண்டபின் காதலி முக மலர்ந்தது 232 கணையை நோக்கும் 72 கதியைந்து முடைத்திக் குதிரை 33 கபில பரண நக்கீரர் 421 கபிலரது பாட்டு 80 கருங் குதிரை ஓடிற்று 67 கருங்குழற் பேதை 83 கருப்பு வேலி 104, 413 கரும்பிற்கு வேலி 76 கருமுக மந்தி 442 கருவூர்க் கிழக்கு 413 கருவூர்க்குக் கிழக்கு 110 கருவூரின் கிழக்கு 76 கருவூர்க்குச்செல்லாயோ சாத்தா 13 கல்லூ வல்லனாயினான் 230 கலங் கழீஇயிற்று 246 கலனே தூணிப்பதக்கு 417 கவவுக் கடியள் 61 கழிபே ரிரையானின்ப மெய்தான் 60 கள்வரை யஞ்சும் 72 கள்ளரி னஞ்சும் 78 கற்குபு வல்லனாயினான் 230 கற்பார்க்குச் சிறந்ததுசெவி 76 கற்று வல்லன் 432 கற்று வல்லனாயினான் 230 கறுகறுத்தது 48 கறுத்த காயா 373 கன்னி ஞாழல் 27 கன்னி யெயில் 27 கனலி கடுகிற்று 57 காக்கையிற் கரிது களம் பழம் 17, 78 காட்டதி யானை 80, 98 காட்டி யானை 98 காட்டின்கண் யானை 98 காட்டின்க ணோடும் 82 காண்கும் வந்தேம் 203 காண்கு வந்தேன் 204 காணத்தாற் கொண்ட அரிசி 74 காமத்திற் பற்றுவிட்டான் 78 காரெனக் கறுத்தது 438 காலன் கொண்டான் 59 காலைக்கு வரும் 110 காவிதி கண்ணந்தை 41 கான்மே னீர் பெய்து வருதும் 442 குடத்தை வளைந்தான் 71 குடிமை தீது 56 குடிமை நல்ல 56 குடிமை நல்லன் 56 குடிமை நன்று 56 குதிரை வந்தது 171 குதிரை வந்தது அதற்கு முதிரை கொடுக்க 38 குப்பையது தலையைச் சிதறினான் 70 குப்பையைத் தலைக்கட் சிதறினான் 70 குப்பையைத் தலையைச் சிதறினான் 70 குமரி ஞாழல் 50 குமரியாடிப் போந்தேன் சோறு தம்மின் 13 குரிசிலைப் புகழும் 72 குருடன் கொற்றன் 41 குருடு காண்டல் பகலுமில்லை 34 குரு மணி 456 குரு மணித் தாலி 301 குருவிளங்கிற்று 456 குழல் கேட்டான் 117 குழிப்பாடி நேரிது 114 குழையை யுடையன் 71 குழையை யுடையான் 72 குளம்பின்று 8 குளம்பு கூரிது குதிரை 61 குற்றிகொல்லோ மகன் கொல்லோ 25, 268 குற்றிகொல்லோ மகன் கொல்லோ தோன்றா நின்ற உருபு 24 குற்றியல்லன் மகன் 25 குற்றியன்று மகன் 25 குன்றக் கூகை 104 குன்றத்துக் கணிருந்தான் 103 குன்றத் திருந்தான் 420 கூதிர்க்கண் வந்தான் 81 கூரியதொரு வாண்மன் 252, 434 கூழுண்டான் சோறு முண்பன் 437 கூழுண்ணாநின்றான் சோறுமுண்பன் 437 கேழற் பன்றி 412 கைக்க ணுள்ளது 82 கைக்கு யாப்புடையது கடகம் 76 கைப்பொருளொடு வந்தான் 91 கையிற்று வீழ்ந்தான் 231 கையிறூ வீழ்ந்தான் 231 கொடியொடு துவக்குண்டான் 73 கொடுத்தான் சாத்தற்கு 103 கொடும்புற மருதி 174 கொடும்புற மருது வந்தது 183 கொடும்புற மருது வந்தாள் 183 கொடும்புற மருது வந்தான் 183 கொண்மார் வந்தார் 207 கொப்பூழ் நல்லள் 61 கொல்யானை நின்றது 67 கொல்லுங் காட்டுள்யானை 237 கொள்ளல்ல தில்லை 35 கொள்ளெனக் கொடுத்தான் 438 கொளலோ கொண்டான் 112, 256 கொற்ற னுணர்வு 413 கொற்றனும் வந்தான் 255 கொன்ற காட்டுள் யானை 237 கோட் சுறா 18 கோட்டது நுனியைக் குறைத்தான் 89 கோட்டின்கட் குறைத்தான் 85 கோட்டு நூறு 80 கோட்டைக் குறைத்தான் 85 கோட்டை நுனிக்கட் குறைத்தான் 89 கோட்டை நுனியைக் குறைத்தான் 89 கோடில 220 கோடின்று 8, 220 கோடு கூரிது களிறு 61 கோடுடைத்து 220 கோடுடைய 220 கோதை வந்தது 183 கோதை வந்தான் 183 கோதை வந்தாள் 183 கோலானோக்கி வாழும் 93 கோலி னோக்கி வாழும் 93 கோலை நோக்கி வாழும் 93 கோ வாழி 127 ச சாத்தற்குக் கூறு கொற்றன் 76 சாத்தற்குக் கொடுத்தான் 103 சாத்தற்கு நெடியன் 110 சாத்தற்கு மக ளுடம்பட்டார் 76 சாத்தன் உண்டு வந்தான் 232 சாத்தன்கையெழுதுமாறு வல்லன் அதனாற் றந்தை உவக்கும் 40 சாத்தன் தாயைக் காதலன் 102 சாத்தன் யா ழெழூஉம் 173 சாத்தன் வந்தது 172, 181 சாத்தன்வந்தான் 156, 172, 181 சாத்தன்வந்தான் அஃதரசற்குத் துப்பாயிற்று 40 சாத்தன்வந்தான் அவன் போயினான் 38 சாத்தன் வந்தான் கொற்றனும் வந்தான் 284 சாத்தன்வருதற்கு முரியன் 254 சாத்தன தாடை 103 சாத்தன தியற்கை 80 சாத்தன தில்லாமை 80 சாத்தனது உடைமை 80 சாத்தனது கற்றறிவு 80 சாத்தனது செயற்கை 80 சாத்தனது செலவு 80 சாத்தனது தொழில் 80 சாத்தனது தோட்டம் 80 சாத்தனது நிலைமை 80 சாத்தனது விலைத்தீட்டு 80 சாத்தன தொப்பு 80 சாத்த னவன் 38 சாத்தனவன் வந்தான் 38 சாத்தனான் முடியு மிக்கருமம் 74 சாத்தனின் வலியன் 103 சாத்தனுங் கொற்றனும் வந்தார் 91 சாத்த னுண்டான் 429 சாத்த னுண்டானோ 256 சாத்தனும் வந்தான் 255 சாத்தனும் வந்தான் கொற்றனும் வந்தான் 436 சாத்தனொடு வந்தான் 103 சாத்தனொடு வெகுண்டான் 101 சாத்தனை வெகுண்டான் 101 சாத்த னொருவன் 172 சாத்த னொன்று 172 சாத்தா உண்டியோ 14 சாத்தி சாந்தரைக்கும் 173 சாத்தி சாந்தரைக்குமாறு வல்லள் அதனாற் கொண்டா னுவக்கும் 40 சாத்தி வந்தாள் 180 சாத்தி வந்தாள் அவட்குப் பூக்கொடுக்க 38 சாந்து கொடு 447 சாரைப்பாம்பு 416 சான்றோர் மகன் 429 சீத்தலைச்சாத்தன் 174 சுடுமண் பாவை 403 சுவை யாறு முடைத்திவ் வடிசில் 33 சூதினைக் கன்றினான் 86 சூதினைக் கன்றும் 72 சூதின்க ணிவறினான் 86 சூதினை யிவறினான் 86 சூலொடு கழுதை பாரஞ் சுமந்தது 74 செங்கால் னாரை 26 செம்பி னேற்றை 442 செயிற்றியன் சென்றான் 42 செல்ல றீர 456 செல்ல னோய் 456 செவியிலி வந்தது 183 செவியிலி வந்தாள் 183 செவியிலி வந்தான் 183 சேரமான் சேரலாதன் 41 சொல்லது பொருள் 80 சொன் னன்று 57 சோலை புக்கென வெப்பம் நீங்கிற்று 228 சோறுங் கறியு மயின்றார் 47 த தகரஞாழல் 418 தட்டுப்புடைக்கண் வந்தான் 81 தந்தை வந்தது 181 தந்தை வந்தான் 181 தந்தையார் வந்தார் 270 தந்தையை நிகர்க்கும் 72 தந்தையை யொட்டும் 72 தமிழ்நாட்டு மூவேந்தரும் வந்தார் 255 தவஞ் செய்தான் சுவர்க்கம் புகும் 242 தவப் பல 456, 389 தன்க ணிகழ்வது 82 தாம் வந்தார் 184 தாம் வந்தார் தொண்டனார் 27 தாய் மூவர் 413 தாய் வந்தாள் 180 தாயைக்கொன்றான் நிரயம் புகும் 242 தான் வந்தது 185 தான் வந்தாள் 185 தான் வந்தான் 185 திங்க ளியங்கும் 240 திங்க ளெழுந்தது 57 திண்ணை மெழுகிற்று 246 திருமகளோ வல்லள் அரமகளோ வல்லள் இவள்யார் 256 திருவீர வாசிரியன் 41 தின்னூ வந்தான் 228 தினற்கு வந்தான் 228 தினையிற் கிளியைக் கடியும் 102 தீங்கரும்பு 416 தீச்சார்தலா னீர் வெய்தாயிற்று 21 தீவெய்து 19 துண்ணெனத் துடித்தது மனம் 258 துயிலுங் காலம் 234 தூணின்கட் சார்ந்தான் 84 தூணைச் சார்ந்தான் 84 தெங்கு தின்றான் 114, 157 தெய்வஞ் செய்தது 57 தெய்வப்புலவன் திருவள்ளுவன் 41 தெவ்வுப் புலம் 346 தெற்கட் குமரி 82 தென் குமரி 18 தேவர் வந்தார் 4 தேவன் வந்தான் 4 தேரைக் கடாவும் 72 தேரைச் செலுத்தும் 72 தொகையது விரி 80 ந நங்கை கணவன் 94 நங்கையார் வந்தார் 270 நங்கை வந்தாள அவட்குப் பூக்கொடுக்க 38 நங்கை வாழி 127 நஞ்சுண்டான் சாம் 161 நட்டார்க்குத் தோற்கும் 76 நட்டாரை யுவக்கும் 72 நம்பி நூறெருமை யுடையன் 50 நம்பி மகன் 94 நம்பியார் வந்தார் 270 நம்பி யூர் 98 நம்பி வாழி 127 நம்மரச னாயிரம் யானை யுடையன் 50 நம்மெருதைந்தனுட்கெட்ட வெருது யாது 32 நமருள் யாவர் போயினார் 32 நரியார் வந்தார் 270 நளி யிருள் 323 நன்றென்று கொண்டான் 438 நனி சேய்த்து 389, 456 நாகர்க்கு நேர்ந்த பலி 99 நாகர் பலி 99 நாகரது பலி 99 நாட்டைச் சிதைக்கும் 72 நாட்டை பழிக்கும் 72 நாணையறுக்கும் 72 நாம நல்லரா 365 நாய் தேவனாயிற்று 102 நாயொடு நம்பி வந்தான் 91 நாளை அவன் வாளொடுவெகுண்டு வந்தான் பின் நீயென் செய்குவை 247 நாளை வரும் 248 நான்மறை முதல்வர் வந்தார் 33 நிலங்கடந்தான் 104, 413, 420 நிலத்த தகலம் 80 நிலத்த தொற்றிக்கலம் 80 நிலத்தைக் கடந்தான் 103 நிலம் வலிது 19 நில நீரென விரண்டும் 290 நிலனென்றா நீரென்றா 289 நிலனென்றா நீரென்றா விரண்டும் 290 நிலனென்று நீரென்று தீயென்று 259 நிலனென நீரெனத் தீயென வளியென 258 நிலனெனநீரெனத் தீயென வளியென... நான்கு 287 நிலனெனா நீரெனா 289 நிலனெனா நீரெனா விரண்டும் 290 நிலனே நீரே தீயே வளியே 257 நிலனே நீரே யென விரண்டும் 290 நின்னுழை வந்தான் 29 நினக்குத் தந்தான் 26 நீ இவ்வாறு கூறுகின்றபின் உரைப்பதுண்டோ 229 நீ யிது செய் 68 நீயிர்பொய் கூறியபின் மெய் கூறுவார் யார் 229 நீயிர் வந்தீர் 188 நீயிர் வேறு 225 நீயிருண்ட வூண் 225 நீயிருண்ணு மூண் 225 நீயிருண்மன 225 நீ யுண்ட வூண் 225 நீ யுண்ணு மூண் 225 நீ யுண்மன 225 நீ யுண்டு வருவாய் 239 நீர் கலத்தலா னிலம் மெலிதாயிற்று 21 நீர் தண்ணிது 19 நுமக்கிவன் எவனாம் 219 நூலது குற்றம் கூறினான் 111 நூலைக் கற்கும் 72 நூலைக் குற்றம் கூறினான் 111 நெடுங்கழுத்தல் வந்தது 182 நெடுங்கழுத்தல் வந்தன 182 நெடுங்கழுத்தல் வந்தாள் 182 நெடுங்கடுத்தல் வந்தான் 182 நெல்லைத் தொகுக்கும் 72 நெறிக்கட் சென்றான் 86 நெறிக்கண் நடந்தான் 86 நெறியைச் செல்லும் 72 நெறியைச் சென்றான் 86 நெறியை நடந்தான் 86 நோய் தீர்ந்த மருந்து 234 நோயி னீங்கினான் 101 நோயை நீங்கினான் 101 ப பகைவரைப் பணித்தான் 72 பகைவரைவெகுளும் 72 பச்சென்று பசுத்தது 259 பசப்பித்துச் சென்றாரு டையையோ வன்னநிறத்தையோ பீரமலர் 440 பசும்பய றல்ல தில்லை 36 பட்டி புத்திரர் 165 படைத் தலைவன் 68 படையது குழாம் 80 படை வழங்கினார், தொட்டார் 46 பண்டு காடுமன் 156 பண்டு காடுமன் இன்றுகயல் பிறழும் வயலாயிற்று 252 பண்டொருநாள் இச்சோலைக்கண் விளையாடாநின்றேம் 202 பத்துங் கொடால் 285 பயறல்ல தில்லை 35 பய றில்லை 35 பயறுளவோ வணிகீர் 35 பயிர் நல்ல 21 பரணரது பாட்டியல் 80 பருநூல் பன்னிருதொடி 13 பலவல்ல ஒன்று 25 பவளக்கோட்டு நீலயானை சாத வாகனன் கோயிலுள்ளுமில்லை 34 பழது கழி வாழ்நாள் 326 பழமுதிர்ந்தகோடு 234 பழமுதிருங் கோடு 234 பழி யஞ்சும் 100 பழியினஞ்சும் 100 பழியையஞ்சும் 100 பாம்பு பாம்பு 411 பார்ப்பான் கள்ளுண்ணான் 161 பார்ப்பனச் சேரி 49 பாரியென் றொருவனுளன் 259 புக்க வில் 234 புகழை நிறுத்தல் 71 புகழை நிறுத்தான் 71 புகழை யுடைமை 71 புகழை யுடையான் 71 புணர் பொழுது 415 புதல்வரைப் பெறும் 72 புதல்வற் கன்புறும் 76 புலிக்கட்பட்டான் 82 புலி கொல்யானை 95 புலி கொல்யானை ஓடாநின்றது 96 புலி கொன்ற யானை 95 புலிப் பாய்த்துள் 414 புலி போல்வன் 213 புலி போற்றி வா 97 புலிய துகிர் 80 புலியாற் கொல்லப்பட்ட யானை 95 புலியாற் போற்றி வா 97 புலியிற் போற்றி வா 97 புலியைக் கொன்ற யானை 95 புலியைப் போற்றி வா 97 புலிவிற் கெண்டை 417 பூதம் புடைத்தது 57 பூ நட்டு வாழும் 114 பெண்டாட்டி யல்லள் ஆண்மகன் 25 பெண்மகன் வந்தாள் 194 பெருங்கால் யானை வந்தது 182 பெருங்கால் யானை வந்தன 182 பெருங்கால் யானை வந்தாள் 182 பெருங்கால் யானை வந்தான் 182 பெருந்தலைச்சாத்தன் 26 பெருந்தோட் பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதி 26 பெரும்பலாக்கோடு 26 பெருஞ்சேந்தனார் வந்தார் 270 பேடியர் வந்தார் 4 பேடி வந்தாள் 4 பேரூர்கிழான் உண்டான் 42 பொருட்க ணுணர்வு 82 பொருளது கேடு 80 பொருளிலர் 214 பொருளிலள் 214 பொருளிலன் 214 பொருளை யிலன் 72 பொருளை யிழக்கும் 72 பொழுது நன்று 57 பொற்குடம் 413 பொற்றொடியரிவை 83 பொற்றொடி வந்தாள் 67, 114 பொன் மேனி 414 பொன் னன்னது 168, 220 பொன் னன்ன 220 பொன் னன்னவை 168 பொன் னன்னன் 213 பொன் னன்னாள் 163 பொன் னன்னிர் 224 பொன் னன்னீர் 224 பொன் னன்னை 224 பொன்னை நிறுக்கும் 72 பொன்னோ டிரும்பனையர் நின்னொடு பிறரே 74 போம் புழை 238 போம் போம் 411 போயின போக்கு 234 ம மகனல்லன் குற்றி 25 மகிழ்ச்சியின் மைந்துற்றான் 78 மங்கல மென்பதோ ரூருண்டு போலும் 278 மட் காரணம் 83 மட் குடம் 83 மண்ணா னியன்ற குடம் 74 மதிமுகம் வியர்த்தது 67 மதியோ டொக்கு முகம் 74 மயிர் நல்ல 21 மரத்தின்க ணிருந்தது 82 மரத்தைக் குறைக்கும் 72 மரத்தைக் குறையான் 107 மருந்துண்டு நல்லனாயினான் 432 மருந்து தின்றெனப் பிணி நீங்கிற்று 228 மருந்து தின்னாமுன் நோய் தீர்ந்தது 229 மலையொடு பொருத மால்யானை 74 மழை பெய்தற்குக் கடவுள் வாழ்த்துதும் 232 மழை பெய்தற்கு முழங்கும் 232 மழை பெய்தெனப் புகழ் பெற்றது 232 மழை பெய்தென மரங் குழைத்தது 232 மழை பெய்யக் குளம் நிறைந்தது 228 மழை பெய்யிய முழங்கும் 232 மழை பெய்யியர் பலிகொடுத்தார் 232 மழை பெய்யிய ரெழுந்தது 232 மழை பெய்யிய வான் பழிச்சுதும் 232 மழை பெய்யிற் குள நிறையும் 232 மழை பெய்யிற் புகழ்பெறும் 232 மழைமழை என்கின்றன பைங்கூழ் 422 மழை வண்கை 414 மற்றை யஃது 264 மற்றையது கொணா 264 மற்றை யவன் 264 மற்றோ மற்றோ 411 மறஞ் செய்தான் துறக்கம் புகான் 60 மறியது தந்தை 80 மறியது தாய் 80 மன்றப் பெண்ணை 413 மனை வாழ்க்கைக்குப் பற்று விட்டான் 110 மனைவியைக் காதலிக்கும் 72 மாக் கொணர்ந்தான் 67 மாடத்தின் கணிருந்தான் 81 மாந்தக் கொங்கேனாதி 41 மாப் பூத்தது 53 மாமரம் வீழ்ந்தது 54 மாமூல பெருந்தலைச்சாத்தர் 421 மாரி யாமா 413 மாவு மருது மோங்கின 53 மீ யடுப்பு 17 முட்டாழை 18 முடக்கொற்றன் வந்தது 181 முடக்கொற்றன் வந்தான் 181 முடக்கொற்றி வந்தது 180 முடக்கொற்றி வந்தாள் 180 முடத்தாமக் கண்ணியார் வந்தார் 270 முடத்தி வந்தது 180 முடத்தி வந்தாள் 180 முடவன் வந்தது 172, 181 முடவன் வந்தான் 172, 181 முடவனார் வந்தார் 270 முந்நீர்ப் பாயும் 233 முப்பத்து மூவர் 417 முயற்சியிற் பிறத்தலா னொலி நிலையாது 74 முருகனது குறிஞ்சி நிலம் 80 முலை நல்லர் 61 முலை நல்லள் 61 முறையாற் குத்துங் குத்து 101 முறையிற் குத்துங் குத்து 101 மொறுமொறுத்தார் 48 ய யாபன்னிருவர் மாணாக்கருள ரகத்தியனார்க்கு 279 யாம் வேறு 225 யாம் வந்தேம் 11, 27 யாமில்லை 225 யா முண்ணுமூண் 225 யாமுண்மன 225 யாவன் றவஞ்செய்தா னவன் சுவர்க்கம் புகும் 242 யாவன் றாயைக் கொன்றா னவன் நிரயம்புகும் 242 யாழ் கேட்டான் 117 யாழுங் குழலு மியம்பினார் 47 யான் நீயல்லென் 25 யான் வந்தேன் 11 யான் வைதேனே 244 யானில்லை 225 யானுண்ணுமூண் 225 யானு நின்னோடுடனுறைக 226 யானு நீயுஞ் செல்வேம் 463 யானு நீயு மவனுஞ் செல்வேம் 463 யானு மென் எஃகமுஞ் சாறும் 209 யானைக்குக் கோடு கூரிது 110 யானைக் கோடு 420 யானைக்கோடு கிடந்தது 67 யானைக்கோடுகூரிது 420 யானை குதிரை தேர் காலா ளெறிந்தான் 45 யானையது காடு 80 யானையது கோடு 80 யானையைக் கோட்டின் கட் குறைத்தாhன் 88 யானையைக் கோட்டைக் குறைத்தான் 88 யானை வந்தது 182 யானை வந்தன 182 யானை வந்தாள் 182 யானை வந்தான் 182 யானே கொள்வேன் 435 யானோ கள்வேன் 435 வ வட்டப் பலகை 416 வடக்கண் வேங்கடம் 82 வட வேங்கடம் 18 வடுகரசர்க்குச் சிறந்தார் சோழியவரசர் 76 வடுகரச ராயிரவர் மக்களை உடையர் 50 வந்தான் சாத்தனொடு 103 வந்தான் வழுதி 429 வயிறு குத்திற்று 13 வயிறு குத்தும் 15 வரலு முரியன் 435 வலியன் சாத்தனின் 103 வரை வீழருவி 104 வழிபோயினா ரெல்லாம் கூறை கோட்பட்டார் 101 வளி உளரும் 19 வனையாக் கோல் 236 வனையுங் கோல் 234 வாணிகத்தா னாய பொருள் 92 வாணிகத்தி னாய பொருள் 92 வாணிகத்தானாயினான் 74, 92 வாணிகத்தி னாயினான் 78, 92 வாம்புரவி 238 வாயாற் றக்கது வாய்ச்சி 74 வாழுமில் 234 வானா னோக்கி வாழும் 93 வானி னோக்கி வாழும் 93 விண்ணென்று விசைத்தது 259 விரைந்து போயினான் 457 விலங்கு மா வீழ்ந்தது 54 விளங்கு குரு 456 வினை விளைந்தது 57 வெண் களமர் 17 வெண்குடைப் பெருவிறல் 182 வெள்ளி எழுந்தது 57 வெள்ளிய தாட்சி 80 வெள்ளென விளர்த்தது 258 வென்ற வேல் 234 வேங்கைப் பூ 419 வேந்துசெங்கோலன் 58 வேந்துவாழி 127 வேலா னெறிந்தான் 73 வேலா னெறியான் 107 வேலியைப் பிரிக்கும் 72 வேழக்கரும்பு 412, 416 செய்யுள் நிரல் (மேற்கோள்) (நூற்பா எண்) அ அஃதை தந்தை யண்ணல் யானையடு போர்ச் சோழர் 461 அகரமுதலவெழுத்தெல்லாமாதி பகவன் முதற்றேயுலகு 440 அகன்றவர் திறத்தினி நாடுங்கால் 229 அகனமர்ந்து செய்யாளுறையும் 380 அட்டிலோலை தொட்டனை நின்மே 451 அடகுபுலால்பாகுபாளிதமுமுண்ணான் கடல்போலுங் கல்வியவன் 284 அணித்தோ சேய்த்தோ கூறுமினெ மக்கே 220 அதிர வருவதோர் நோய் 316 அதுகொ றோழி காம நோயே 249 அது மற் கொண்கன் றேரோ 295 அந்தணர் நூற்கு மறத்திற்கு மாதியாய் நின்றது மன்னவன் கோல் 102 அந்திற் கச்சினன் கழலினன் 267 அம்ப லூரு மவனொடு மொழிமே 238 அம்ம வாழி தோழி 276 அமரர்ப் பேணியு மாவுதி யருத்தியும் 338 அரமிய வியலகத் தியம்பும் 402 அரிதாரச் சாந்தங் கலந்தது போல 55 அரிமயிர்த் திரண்முன்கை 356 அரிய கானஞ் சென்றோர்க் கெளிய வாகிய தடமென் றோளே 22 அருந்திறல் 356 அரும்பிணை யகற்றி வேட்ட ஞாட்பினும் 338 அலமர லாயம் 310 அவன் கோலினுந் தண்ணிய தடமென் தோளே 16 அவலெறி யுலக்கைப் பாடுவிறந் தயல 348 அவனணங்கு நோய்செய்தா னாயிழாய் வேலன் 39 அழுக்கா றென ஒரு பாவி 258 அழுந்துபடு விழுப்புண் 403 அளித்தஞ்ச லென்றவர் நீப்பிற் றெளித்த சொற் றேறியார்க் குண்டோ தவறு 440 அளிதோ தானேயது பெறலருங் குரைத்தே 272 அற்றா லளவறிந் துண்க 229 அறிந்த மாக்கட் டாகுக தில்ல 220 அறிவார் யாரஃ திறுவுழி யிறுகென 296 அனையை யாகன் மாறே 250 ஆ ஆங்கக் குயிலு மயிலுங் காட்டி 277 ஆமா நல்லேறு சிலைப்ப 358 ஆரிய மன்னர் பறையி னெழுந் தியம்பும் 409 ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர் 332 ஆவு மானியற் பார்ப்பன மாக்களும் 45 இ இஃதோ செல்வற் கொத்தனம் 37 இயல்புளிக் கோலோச்சு மன்னன் 250 இரவரன் மாலையனே 313 இருதோ டோழர் பற்ற 33 இரும்பே ரொக்கலொடு பதமிகப் பெறுகுவிர் 462 இருமனப் பெண்டிருங் கள்ளும் கவறும் 45 இலம்படு புலவர் ஏற்றகை நிறைய 360 இவளும் இவனும் 2 இழிவறிந் துண்பான்க ணின்பமெய்தும் 60 இளைதாக முண்மரங்கொல்க 440 ஈ ஈங்காகு நவா லென்றிசின் யானே 296 ஈயாது வீயு முயிர்தவப் பலவே 299 உ உசாத்துணை 370 உடலு முடைந்தோடு மூழ்மலரும் 405 உடனுயிர் போகுகதில்ல 251 உயர்திணை என்மனார் 441 உயவுப்புணர்ந்தன்றிவ் வழுங்க லூரே 349 உரற்கால் யானை... 230 உரற்கால் யானை ஒடித்துண்டெஞ்சிய 457 உருகெழு கடவுள் 300 உருமில் சுற்றம் 365 உரைமதி வாழியோ வலவ 274 உவந்துவந் தார்வ நெஞ்சமோ டாய் நல னளைஇ 305 உள்ளம் போல உற்றுழி யுதவும் 108 உற்றார்க் குரியர் பொற்றொடி மகளிர் 76 உறந்த விஞ்சி 347 உறற்பால நீக்க லுறுவர்க்கு மாகா 34 உறு கால் 389, 392, 156 உறு புனல் தந்துலகூட்டி 299 உறு பொருள் 456 ஊ ஊட்டி யன்ன வொண்டளிர்ச் செயலை 55 ஊதைகூட்டுண்ணு முகுபனி 210 ஊர்க்கா னிவந்த பொதும்பர் 250 எ எந்தை வருக எம்பெருமான் வருக மைந்தன் வருக மணாளன் வருக 42 எய்யா மையலை நீயும் வருந்துதி 342 எல்லாவுயிரொடுஞ் செல்லுமார் முதலே 271 எல்வளை மகளிர்... 233 எழுதுவரிக் கோலத்தா ரீவார்க் குரியார் 449 எற்றென் னுடம்பி னெழினலம் 263 எற்றேற்ற மில்லாருள் யானேற்ற மில்லா தேன் 263 என்னொடும் நின்னொடுஞ் சூழாது 102 ஏ ஏஎ யிஃதொத்தனென்பெறான் கேட்டைக் காண் 272 ஏஏஏஏ யம்பன் மொழிந்தனள் 411 ஏகல் லடுக்கம் 304 ஏறிரங் கிருளிடை 358 ஐ ஐதே காமம் யானே 385 ஐய சிறி தென்னை யூக்கி 223 ஒ ஒக்க லொற்கஞ் சொலிய 360 ஒண்குழை யொன்றொல்கி யெருத் தலைப்ப 33 ஒண்செங்காந்த ளொக்கு நின் நிறம் 291, 403 ஒண் டூவி நாராய் 151 ஒருத்தி கொல்லோ பலர்கொல்லோ... 23 ஒருபெருஞ் சும்மையொடு 349 ஒல்லென்றொலிக்குமொலி புன லூரற்கு 259 ஒல்லேங்குவளைப்...... புல்லெருக்கங் கண்ணி நறிது 55 ஒன் றிரப்பான்போலிளிவந்துஞ் சொல்லு முலகம் 255 ஓ ஓஒ வினிதே 251 ஓப்பிற் புகழிற் பழியி னென்றா 289 ஓம்பா வீகை மாவே ளெவ்வி புனலம் புதவின் மிழலை 233 ஓர்கமா தோழியவர் தேர்மணிக் குரலே 295 க கடல்போற் றோன்றல காடிறந் தோரே 257 கடவுளாயினு மாக மடவைமன்ற வாழிய முருகே 265 கடாவுக பாக கால்வ னெடுந்தேர் 226 கடிகா 383 கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு 383 கடிநாறும் பூந்துணர் 390 கடிநிலை யின்றே யாசிரி யர்க்க 108 கடிபுனன் மூழ்கி யடிசில் கைதொட்டு 405 கடிமரந் தடியு மோசை 358 கடிநுனைப் பகழி 383 கடிமிளகு தின்ற கல்லா மந்தி 384 கடியையா னெடுந்தகை செருவத் தானே 383 கடுங்கா லொற்றலின் 383 கடுஞ்சினத்த கொல்களிரும் 51 கடுத்தன ளல்லளோ வன்னை 384 கடும்பகல் 383 கடுமான் 383 கடுவன் முதுமகன் கல்லா மூலற்கு வதுவை யயர்ந்த வன்பறழ்க் குமரி 196 கண்டிகு மல்லமோ 275 கண்ணகன் ஞாலம் 82, 250 கண்ணிமை நொடியென 294 கண்ணியன் வில்லன் வரும் 457 கண்ணின்று கூறுதலொற்றா... 82 கண்ணும் படுமோ வென்றிசின் யானே 275 கதழ்பரி நெடுந்தேர் 315 கதழ்பரிய கடுமாவு 51 கம்பலை மூதூர் 349 கமஞ்சூன் மாமழை 355 கயந்தலை மடப்பிடி 322 கயலற லெதிரக் கடும்புனற் சாஅய் 330 கயிறிடு கதச்சேப் போல மதமிக்கு 377 கருங்கட் டாக்கலை பெரும்பிறி துற்றென 344 கருங்கால் வெண்குரு கொன்று கேண் மதி 151 கருவி வானம் 354 கலம்பெறு கண்ணுள ரொக்கற் றலைவ 462 கலிகொ ளாயம் மலிபுதொகு பெடுத்த 349 கவர்நடைப்புரவி 362 கவளங் கொள்ளாச் சுளித்த யானை 237 கவிசெந்தாழிக்குவிபுறத் திருந்த 26 கழிகண்ணோட்டம் 314 கழுமிய ஞாட்பு 351 கழூஉவிளங் காரங் கவைஇய மார்பே 357 களவாய்ப் பெருங்கை... 320 களிறுங் கந்தும் போல நளிகடற் 405 களிறு மஞ்சுமக் காவ லோன 108 கழனிநல்லூர்... 195 கறவை கன்றுவயிற் படா 340 கறுத்த காயா 373 காப்பும் பூண்டிசிற் கடையும் போகல் 274 காமஞ் செப்பாது கண்டது மொழிமே 274 காமம் படரட வருந்திய நோய்மலி வருத்தங் காணன்மா ரெமரே 207 காலேக வண்ணனை... 460 காவலோனக் களிறஞ் சும்மே 108 கான்மேனீர் பெய்து வருதும் 442 கானக நாடன் சுனை 406 கானந் தகைப்ப செலவு 9 கானலஞ் சேர்ப்பன் கொடுமை யேற்றி 337 கிளையரில் நாணற் கிழங்கு 106 குணனழுங்கக் குற்ற முழைநின்று கூறுஞ் சிறியவர்கட்கு 350 குருமணித் தாலி 301 குழக்கன்று 311 குறுக்கை யிரும்புலி 403 குன்றிகோபம் கொடிவிடு பவளம் 291, 403 குன்றுதொ றாடலு நின்றதன் பண்பே 296 கூறாமற் குறித்ததன்மேற் செல்லும் 229 கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் 229 கெடவர லாயமொடு 319 கைதொழூஉப் பழிச்சி 382 கொடிகுவளை கொட்டை நுசுப்புண் கண் மேனி 405 கொடுஞ்சுழிப் புக அர்த் தெய்வம் 383 கொய்தளிர்த் தண்டலை... 460 கொன்முனை யிரவூர் 254 கொன்வரல்வாடை நினதெனக் கொண்டேனோ 254 கொன்னூர் துஞ்சினும் யாம் துஞ்சலமே 254 கொன்னே கழிந்தன் றிளமை 254 கோனோக்கி வாழுங் குடி 93 ச சாயன்மார்பு 325 சார னாடவென் றோழியுங் கலுழ்மே 238 சிலைப்புவல்.... நளிந்தனை... 323 சிவந்த காந்தள் 373 சிறிதுதவிர்ந்தீகமாளநின் 296 சிறந்தோன் பெயரன் பிறந்த மாறே 250 சிறுபைந்தூவி 26 சிறுமை யுறுப செய்பறி யலரே 341 சிறியகட் பெறினே யெமக்கீயுமன்னே 252 சினையவுஞ் சுனையவும் நாடினர் 9 சுடர்த்தொடீ கேளாய் 120 சுரையாழ வம்மி மிதப்ப 406 சூரல் பம்பிய.... 408 சூன்முரஞ்செழிலி 333 செங்கேழ் மென்கொடி 301 செஞ்ஞாயிற்று நிலவுவேண்டினும் 18 செய்திரங்காவினை 359 செழுந்தடி தின்ற செந்நாய் 352 செழும்பல் குன்றம் 352 சேர்ந்து செறிகுறங்கு 363 சேற்றுநிலமுனைஇய செங்கட் காரான் 386 சொல்லேன் றெய்ய நின்னொடு பெயர்ந்தே 296 த தங்கினை சென்மோ 204 தச்சன் செய்த சிறுமா வையம் 74 தசநான் கெய்திய பணை 402 தடமருப் பெருமை 321 தண்ணந் துறைவன் 403 தப்பியா ரட்ட களத்து 22 தம்முடைய தண்ணளியுந் தாமும் 51, 82 தருமணன் ஞெமிரிய திருநகர் முற்றத்து 361 தவப்பல 388 தன்குரவைச் சீர்... 233 தாவி னன்பொன் றைஇய பாவை 344 தான்பிற வரிசையறிதலிற் 279 திருந்துவேல் விடலையொடு 197 துணையிற் றீர்ந்த கடுங்கண் யானை 318 துயவுற்றேம் யாமாக 368 துளிதலைத் தலைஇய தளிரன் னோளே 16 துன்னருந் துப்பின் வயமான் 366 துனிகூ ரெவ்வமொடு 314 துனைபறை நிவக்கும் புள்ளினம் மான 315 தெரிகணை யெஃகம் திறந்த 22 தெருமர லுள்ளமோ டன்னை துஞ்சாள் 310 தென்கடற்றிரை மிசைப்பா யுந்து 233 தொடர்கூரத் துவ்வாமை வந்தக் கடை 229 தொடியோர் கொய்குழையரும்பிய 50 ந நயந்துநாம் விட்ட 329 நரைவருமென்றெண்ணி 259 நல்லவையெல்லாந் தீயவாம் தீயவும் 22 நல்லறிவுடையன் செவ்வியன் 429 நல்லை மன்னென நகூஉப் 211 நளிமலை நாடன் 320 நன்றுமரிதுதுற்றனையாற் பெரும 343 நனந்தலை யுலகம் 376 நனவிற் புணர்ச்சி நடக்கலு மாங்கே 229 நனவுப்புகு விறலியிற் றோன்று நாடன் 376 நனிசேய்த்து 389, 456 நாணிநின்றோள் நிலைகண்டி யானும் 460 நாம நல்லரா 365 நாரரி நறவி னாண்மகிழ் தூங்குந்து 292 நாறு மருவி நளிமலை... 55 நில்லாது பெயர்ந்த.... 463 நிவந்தோங்கு பெருமலை 460 நிழத்தயானை மேய்புலம் படர 330 நிற்கறுப்பதோ ரருங்கடி முனையரண் 372 நின்முகங் காணு மருந்தினே 234 நின்னுறு விழுமம் களைந்தோள் 353 நீர்க்கோழி கூப்பெயர்க் குந்து 292 நீர்த்தெவு நிறைத்தொழுவர் 345 நீலுண் டுகிலிகை கடுப்ப 453 நுணங்குதுகி னுடக்கம்போல 374 நும்ம னோருமற்றினையர் 414 நுழைநூற் கலிங்கம் 374 நூலாக் கலிங்கம்.... 234 நெடுநல் யானையும் தேரு மாவும் 45 நெருப்பழற் சேர்ந்தக்கா னெய்போல்வ தூஉம் 278 நெல்லரியு மிருந்தொழுவர் 233 நெல்லுகுத்துப் பரவும்... 382 நெறிதா ழிருங்கூந்த.... 187 நொசிமட மருங்குல் 374 நோதக விருங்குயி லாலுமரோ 279 ப பகல்கான் றெழுதரும் பல்கதிர்ப் பருதி 443 பசப்பித்துச் சென்றா ருடையையோ 440 படுத்துவைத் தன்னபாறை மருங்கின் 55 பணியுமா மென்றும் பெருமை 296 பதவு மேய்ந்த மதவுநடை நல்லான் 377 பயக்குறை யில்லை.... 396 பரிசிலர்க் கருங்கலம் நல்கவுங் 22 பருந்திருந் துயாவிளி பயிற்று 369 பல்குரைத் துன்பங்கள் சென்று படும் 272 பழங்கண் ணோட்டமு நலிய 350 பழுதுகழி வாழ்நாள் 324 பன்னிரு கையும் பாற்பட இயற்றி 33 பாசிலை 403 பாசிலை வாடா வள்ளியங் காடிறந் தோரே 211 பாடுகோ பாடுகோ பாடுகோ 423, 424 பாய்ந்தாய்ந்த தானைப் பரிந்தானா 330 பார்ப்பார்தவரே சுமந்தார் 51 பார்ப்பா ரறவோர் பசுப்பத் 51 பிரியின் வாழா தென்போ தெய்ய 279 பீடின்று பெருகிய திருவிற் பாடின் 207 புகழ்ந்திகு மல்லரோ 250, 450 புதுவத னியன்ற வணியன் 457 புரைதீர் கேள்விப் புலவ ரான 108 புலிநின் றிறந்த நீரல் லீரத்து 442 புலிப்பற் கோத்த... 331 புற்கை யுண்கமா கொற்கை யோனே 273 புறநிழற் பட்டாளோ 279 புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி 375 பெயர்த்தனென் முயங்க 457 பெயர்த்தனென் முயங்கயான் 204 பெருங்கை யற்றவென் புலம்பு 457 பெருந்தலைச் சாத்தன் 26 பெருந்தோட் சிறு நுசுப்பிற் பேரமர்க் கட் பேதை 26 பெருவரை யடுக்கம் பொற்ப 335 பெருவிற லமரர்க்கு வென்றி தந்த 29 பெற்றாங் கறிகதில் லம்மவிவ் வூரே 253 பேரிசை நவிர 329 பைபுண்மாலை 341 பைம்புதல் வேங்கையு மொள்ளிணர் 436 பொச்சாவாக் கருவியாற் போற்றிச் 234 பொன்னுந் துகிரு முத்தும் மணியும் 16 போரெறுழ்த் திணிதோள் 388 ம மண்முழு தாண்ட 326 மணங்கமழ் வியன்மார் 389, 302 மரையிதழ் புரையு மஞ்செஞ் சீறடி 453 மல்லன் மால்வரை 304 மலைநிலம் பூவே துலாக்கோல் 288 மலைவான் கொள்கென உயர்பலி 258 மழகளிறு 311 மற்றறிவா நல்வினை 262 மன்ற மராஅத்த பேமுதிர் கடவுள் 365 மாசு போகவுங் காய்பசி நீங்கவுங் 405 மாதர் வாண்முக மதைஇய நோக்கே 378 மால்வரை யொழுகிய வாழை 317 மாறாக் காதலர் மலைமறந் தனரே 407 மீனொடு பெயரும் யாண ரூர 379 முந்நீர்ப் பாயுந்து 233 முரசுகெழு தாயத் தரசோ தஞ்சம் 266 முரசுகெழு தானை மூவ ருள்ளும் 463 முரசு முழங்கு.... 33 மெல்லம் புலம்ப கண்டிகும் 274 மெல்விரன் மந்தி குறைகூறும் 220 மையில் வாண்முகம்.... 307 மோயின ளுயிர்த்த காலை 457 ய யாணது பசலை 381 யாரஃ தறிந்திசினோரே 275 யாழிசையூப் புக்கு 309 யானுந் தோழியு மாயமு மாடுந் 51 யானுமென் எஃகமுஞ் சாறும் 209 வ ‘வடாது’, ‘தெனாது’ 220 வடுக ரருவாளர் வான்கரு நாடர் 51 வந்துநனிவருந்தினைவாழி 299 வந்தோய் மன்ற தண்கடற் சேர்ப்ப 212 வம்பு மாரி 327 வயவுறு மகளிர் 371 வரிவளை துவைப்ப 358 வரால், தூண்டில்... 29 வருகதில் லம்மவெஞ் சேரி சேர 249, 434 வருந்தினை வாழியென் நெஞ்சம் 151 வருமழைய வாய்கொள்ளும் 22 வருமே சேயிழை யந்திற் கொழுநற் 267 வல்லமெறிந்த நல்லிளம்.... 237 வலனாக வினையென்று வணங்கிநாம் 229 வலிதுஞ்சு தடக்கை வாய்வாட் 320 வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற் 340 வறிதுவடக் கிறைஞ்சிய 336 வாடா வள்ளியங் காடிறந் தோரே 257 வாண்முகம் 367 வார்கயிற் றொழுகை 317 வார்ந்திலங்கு வையெயிற்று 317 வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின் 253 வாரு மதுச்சோலை வண்டுதிர்த்த 55 வானத் தணங்கருங்கடவு.... 460 வானோக்கிவாழு முயிரெல்லாம் 93 விசும்புகந் தாடாது 305 விதிர்ப்புற வறியா வேமக் காப்பினை 316 வில்லக விரலிற் பொருந்தியவர் 432 வில்லோன் காலன கழலே 195 விழுமியோர்க் காண்டொறுஞ் 353 விளங்குமணிக் கொடும்பூணாய் 129 விளிந்தன்று மாதவர்த் தெளிந்த 279 விறந்த காப்பொ டுண்ணின்று 347 வினவி நிற்றந் தோனே 211 வினைக்குறை தீர்ந்தாரிற் 396 வினைபகை யென்றிரண்டி னெச்சம் 294 வெங்கதிர்க் கனலியொடு மதிவலந் 240 வெங்காமம் 334 வெய்ய சிறிய மிழற்றுஞ் செவ்வாய் 457 வெயில்புறந் தரூஉ மின்ன லியக்கத்து 302 வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் 347 வேங்கையுங் காந்தளு நாறி யாம்பன் 432 வேதின வெதிநி னோதிமுது போத்து 453 வேய்மருள் பணைத்தோள் 339 வேற்றுமையில்லா விழுத்திணைப் 353 வேனி லுழந்த வறிதுயங் கோய் 330 வைநுனைப் பகழி 387 வையைக் கிழவன் வயங்குதார் 460 விஷய (பொருள்) அகராதி (நூற்பா எண்) அ அஃறிணைப்பாற்பகுப்பு 3 அஃறிணை முடிபுகொள்ளும் உயர்திணைச் சொற்கள் 58,59 அஃறிணை விரவுப்பெயர் விளி யேற்குமாறு 150 அஃறிணைப் பெயர் விளி யேற்குமாறு 151 அஃறிணைப் பெயர்கள் 167, 168 அஃறிணைப் பெயர்ப்பு பாகுபாடு 170 அஃறிணை இயற்பெயர் பால் விளக்கும் வகை 171 அஃறிணைப் பலவின் பால் வினை 216 அஃறிணைஒன்றன் பால் வினை 217 அஃறிணை வினைவிகுதி களின் தொகை 218 அச்சப்பொருண்மைக்கண் ஐந்தாவதும் இரண்டாம் வதும் வருதல் 100 அச்சப்பொருளுணர்த்து முரிச்சொல் 365 அசைச்சொல் விளியாதல் 153 அசைநிலையாக அடுக்கி வருஞ் சொற்கள் 425 அடிமறிமாற்று 407, 408 அண்மைவிளி 127 அந்தில் என்னு மிடை சொற்பொருள் 267 அம்மவென்னு மிடைச்சொல் 276 அரவப்பொருளுணர்த்து முரிச்சொல் 349 அரியென்னு முரிச்சொற் பொருள் 356 அருத்தாபத்தி 60 அல்லத்தில்லென்னும் வாய் பாட்டாற் செப்பு நிகழுமாறு 35, 36 அவையல் கிளவியைக் கிளக்குமாறு 442, 443 அழுங்கலென்னு முரிச்சொற் பொருள் 350 அளபெடைப்பெயர் விளி யேற்கு மாறு 125, 135, 141, 149 அறியாப் பொருண்மேல் வரும் வினாச்சொற்கள் 31 அறிந்த பொருண்மேல் ஐயந் தீர்க்கவரும் வினாச்சொல் 32 அறுவகைச் செய்யுள் விகாரம் 409 அன்னீற்றுப்பெயர் விளியேற்குமாறு 130, 151 அன்மொழித்தொகை யினிலக்கணம் 418 ஆ ஆக்கம் காரணமுதற்றாய் வருதல் 21 ஆக்கச்சொல் காரணமின்றியும் வருதல் 22 ஆகு பெயர் 114 ஆகுபெயர் இருவகைய வென்பது 115 ஆகுபெயர் வேறுபாடு 116 ஆகுபெயர்க்குப் புறனடை 117 ஆங்கவென்னு மிடைச் சொல் 277 ஆடூஉவறிசொல் 5 ஆண்மைதிரிந்த பெயர்நிலைக் கிளவி ஆடூஉவறிசொல்லோடு பொருந்தாதென்பது 12 ஆண்மை சுட்டிய பெயர் இருதிணைக்கும் பொதுவாதல் 181 'ஆய்' ஈற்றுவினைச்சொல் செய்யுளுட்டிரியுமாறு 212 ஆர் என்னுமிடைச்சொல் இயற்பெயரொடு வந்து முடியுமாறு 270 ஆர் என்னுமிடைச்சொல் அசைநிலையாதல் 271 ஆற்றுப்படைச் செய்யுட்கண் முன்னிலை யொருமைப்பெயர் பன்மையொடு முடிதல் 462 ஆறாம் வேற்றுமையுருபும், பொருளும் 79 ஆறாம் வேற்றுமைப் பொருள்வகை 80 ஆறாம் வேற்றுமை உயர் திணைத் தொகை விரியுமாறு 94 ஆனீற்றுப்பெயர் விளியேற்குமாறு 132, 133, 134 இ இகர ஈகாரவீற்றுப்பெயர் விளியேற்குமாறு 121 இசைநிறையடுக்கிற்கு வரையறை 423 இடைப்பிறவரல் 237 இடைச்சொற் பொது விலக்கணம் 249 இடைச்சொற் பாகுபாடு 250 இடைச்சொல் வேறுபாடு 251 இடைச்சொற்களின் பொருட்குப் புறனடை 295 இடைச்சொற்களிற் கூறப்படாதவை 296 இடைச்சொல் விசேடிக்குஞ் சொல்லாய் வருமென்பது 455 இது செயல்வேண்டும் என்னும் முற்றுச்சொற்பொருள் வேறுபாடு 243 இயற்கைப் பொருட்கண் மரபுவழுவாமை 19 இயற்பெயருஞ் சுட்டுப்பெய ருஞ் சேர்ந்து வருமாறு 38 இயற்பெயருஞ் சுட்டு முதலாகிய காரணக் கிளவியும் வருமாறு 40 இயற் பெயருஞ் சிறப்புப் பெயரும் வினைக்கொருங் கியலும்வழி வருமாறு 41 இயற்சொல்லினிலக்கணம் 398 இயற்சொல் திசைச்சொல் முதலியன பற்றி வரும் வழுவமைதி 449 இயைபு, இசைப்பு,என்னு முரிச்சொற்களுணர்த்தும் பொருள் 308, 309 இரட்டைக்கிளவி இரட்டித்து நிற்றலிற் பிரியாதென்பது 48 இரண்டாம் வேற்றுமையின் உருபும் பொருளும் 71 இரண்டாம் வேற்றுமைப் பொருள்பற்றி வரும் வாய்பாடுகள் 72 இரண்டன் பொருளும் ஏழன் பொருளும் மயங்கல் 84, 85, 86 இரட்டித்து நிற்கும் அசை நிலையிடைச் சொற்கள் 280 இரத்தற்பொருண்மேல் வருஞ்சொற்கள் 444 இருதிணைக்கண் ஐம்பாலு முணர்த்து மீற்றெழுத்துக்கள் வினைக்கண்ணேயே திரிபின் றிப் பாலுணர்த்து மென்பது 10 இருதிணை இருபாற்கும் பொதுவாகிய பெயர்க்கண் மரபு வழுக்காத்தல் 50 இருபத்து மூன்றீற்றவாகிய உயர்திணைவினைகள் 208 இருதிணைப் பொதுவினை 222 'இளமைப் பண்புணர்த்து முரிச்சொல் 311 இறந்தகாலம் எதிர்காலத் தோடு மயங்கல் 247 இன்னாமை என்னுங் குறிப் புணர்த்தும் உரிச்சொற்கள் 302 இனச்சுட்டில்லாப் பண்படுத்து வரும் பெயர்கள் பற்றிய மரபு 18 இனைத்தென்றறிபொருள் உம் மைப் பெற்று வருமென்பது 33 ஈ ஈயென்னுஞ்சொல் இழிந்தோன் கூற்றாதல் 441 உ உகப்பு, உவப்பு என்னுமுரிச் சொற்களுணர்த்தும் பொருள்கள் 305 உசா, உயாவென்னுமுரிச் சொற் களுணர்த்தும் பொருள் 369, 370 உம்மிடைச் சொற்பொருள் 255 உம்மையில் சொல்லாகிய எஞ்சு பொருட்கிளவி வருமிடம் 284 உம்மையெண்ணின்கண் உருபு தொகுதல் 291 உம்மிடைச்சொல் உந்தாதல் 292 உம்மைத்தொகை 417 உம்மைத்தொகை பலர்க் குரிய வீற்றான் முடிதல் 421 உம்மையெச்சத்திற்கு முடிபு 436 உம்மையெச்சம் மயங்கி வருங்காலம் 437 உயர்திணைக்கண் வரும் பாற்பகுப்பு 2 உயர்திணைப்பெயருள் விளியேற்பவை 120, 128 உயர்திணைப்பெயர்கள் 162, 163, 164 உயர்திணைப் பெயர்ப் பாகுபாடு 165, 166 உயர்திணை ஒருமைவினை 205 உயர்திணைப் பன்மைவினை 206 உயர்திணை வினைக் குறிப்பு 213, 214 உயர்திணைவினைக்குறிப்பு உயர்திணைத்தெரிநிலை வினை விகுதிகளொடுவருதல் 215 உரிச்சொற்கெல்லாம் பொது விலக்கணம் 297 உரிச்சொல் வரலாற்று முறையாற் பொரு ளுணர்த்துமென்பது 389 உரிச்சொற்களுக்குக் கூறப்படாத பொருளுங் கொள்ளப்படுமென்பது 390 உரிச்சொற் பொரு ளுணரு மாறு 392, 393 உரிச்சொற் பொருளுணர்ச் சிக்குக் காரணம் வரலாற்று முறையென்பது 394 உரிச்சொல்லெழுத்துப் பிரிந்திசையாதென்பது 395 உரிச்சொற்களுக்குப் புறனடை 396 உரிச்சொல் விசேடிக்குஞ் சொல்லாயும் வருமென்பது 456 'உரு' என்னுமுரிச்சொற்குப் பொருள் 300 உருபுதொடந்தடுக்கிய வழிப்படுமிலக்கணம் 102 உருபுநிற்குமிடம் 103 உருபு உருபையேற்றல் 104 உருபு தொக்குவருதல் 104 உருபு தொகுமிடம் 31 உருபு மயக்கம் 106 உருபுகள் செய்யுளுட்டிரியு மென்றற்குப் புறனடை 109 உருபுகள் பிறபொருளில் மயங்குமென்பது 111 உவமத்தொகை 414 எ எச்சவும்மையும் எதிர்மறை யும்மையும் தம்முண் மயங்காமை 283 எண்ணும்மை தொகை பெற்றும் பெறாதும் வரும் என்பது 287 எண்ணேகாரமிடையிட்டு வருதல் 288 எண்ணிடைச்சொல் வினையொடு வரல் 293 எதிர்மறையெச்சத்திற்கு முடிபு 435 எதிர்கால வினைச்சொல் இறந்த காலத்தும் நிகழ் காலத்தும் மயங்குதல் 245 எய்யாமையென்னு முரிச் சொற்பொருள் 342 எல்லாம் என்னும் பெயர் இரு திணைப்பன்மையு முணர்த்தல் 186 எல்லாம் என்னும் பெயர் உயர்திணைக்காதல் 187 எல்லென்னுமிடைச் சொற்பொருள் 269 எல்லாவிடத்தும் வரும் அசை நிலை இடைச்சொற்கள் 279 எவனென்னும் வினாவினைக் குறிப்பு 219 எழுவாய் வேற்றுமை 65 எழுவாய் ஏற்கும் பயனிலைகள் 66 எழுவாய் புலப்பட்டும் புலப் படாதும் நிற்குமென்பது 68 எனவென்னுமிடைச்சொல் 258 எனவெனெச்சத்திற்கு முடிபு 438 எனா, என்றாவென்னு மிடைச் சொற்கள் எண்ணுப் பொருளில் வருதல் 289 என்று என்னுமிடைச்சொல் 259 எறுழ் என்னுமுரிச் சொல்லின் பொருள் 388 எற்றென்னுமிடைச்சொல் 263 ஏ ஏகாரவிடைச்சொற் பொருள் 257 ஏகார ஓகாரங்கள் அளபு மிக்கு வருமிடம் 261 ஏகாரவிடைச்சொல் ஓரலகு பெறுமிடம் 286 ஏதுப்பொருண்மைக்கண் மூன்றாவதும் ஐந்தாவதும் மயங்குதல் 92 ஏயென்னுமிடைச்சொல் 272 ஏழாம் வேற்றுமை உருபும் பொருளும் 81 ஏழாவதன் பொருட்டிறம் 82 ஏற்றமென்னும் உரிச்சொற்பொருள் 337 ஐ ஐகாரவீற்று முறைப்பெயர் விளியேற்குமாறு 126 ஐந்தாம் வேற்றுமையுருபும் பொருளும் 77 ஐம்பால் மூவிடத்திலும் வரும் வினைகள் 225 ஐயப்பொருள் மேற்சொன் னிகழ்த்துமாறு 24 ஐயமுற்றுத் துணிந்த பொருண் மேல் அன்மைத் தன் உறும் மரபு 25 ஐயென்னு முரிச்சொற் பொருள் 385 ஓ ஒப்பில் போலி அசைநிலை யாதல் 278 ஒருபாற்சொல் ஏனைப்பாற் சொல்லொடு மயங்காமை 11 ஒருமைப்பால் பன்மைப் பாலறி சொல்லால் வழங்கும் வழுமைதி 27 ஒரு பொருட் பல்பெயர் பற்றிய மரபு வழுக்காத்தல் 42 ஒருவன் ஒருத்தி யென்னுஞ் சொற்கள் இருமை முதலாகிய எண்ணு முறைக் கணில்லா வென்பது 44 ஒரு பெயர்ப் பொதுச்சொற் பற்றிய மரபு வழுக்காத்தல் 49 ஒருபொருளின் வேறுபாடு கருதின் அதனைத் தெரித்துச் சொல்லவேண்டு மென்பது 55 ஒரு வினை யொடுச்சொல் வருமிடம் 91 ஒருவர் என்னும் பெயர் உயர்திணை யிருபாற்குப் பொதுவென்பது 191 ஒருவர் என்னும் பெயர் கொள்ளும் முடிபு 192 ஒரு சொல்லடுக்கி வருங்கா லுணர்த்தும் பொருள் வகை 411 ஒருபொருள் குறித்து இரு சொல்வரின் அது கடியப் படாதென்பது 460 ஒருமை சுட்டிய பெயர் பன்மைக்காதல் 461 ஒழியிசை யெச்சத்திற்கு முடிபு 434 ஒன்றறிசொல் 8 ஒ ஓகார, உகர ஈற்றுப் பெயர் விளியேற்குமாறு 122 ஓகார விடைச்சொற் பொருள் 256 ஓம்படைப் பொருண்மைக் கண் மயங்கும் உருபுகள் 97 ஓரிடத்திற்கு நிற்குமிடைச் சொல் எண்ணுப் பொருட் கண் பிறவிடத்துஞ் சென்று கூடுதல் 294 ஒள ஒள என்னு மிடைச்சொல் லுணர்த்தும் குறிப்புப் பொருள் வேறுபாடு 281 க கடியென்னு முரிச்சொல்லின் பொருள் 383, 384 கமவென்னு முரிச்சொல்லின் பொருள் 385 கயவென்னு முரிச்சொல்லின் பொருள் 320, 322 கருவியென்னு முரிச்சொல்லின் பொருள் 354 கவவு என்னு முரிச்சொல்லின் பொருள் 357 கழுமென்னு முரிச்சொல்லின் பொருள் 351 கள்ளொடு பொருந்து மியற் பெயர் பலவறி சொல்லாதல் 169 கா காலம் மூன்றென்பது 199 காலம் பற்றிவரும் புதியசொற் கள் தள்ளப்பட வென்பது 452 கு குறையென்னு மிடைச்சொற்பொருள் 272 குறிப்பாற் பொருளுணர்த்து மிடைச்சொற்கள் 281, 282 குறைச் சொற்கள் குறைக்கப்படுமாறு 453, 454 கொ கொடுவென் கிளவி உயர்ந் தோரிடத்து நிகழுமென்பது 447 கொடுவென் கிளவி தன்மைக் கண் நிகழுமாறு 448 கொடையெதிர் பொருண் மைக்கண் ஆறாவதும் வருமென்பது 99 கொல்லென்னுமிடைச் சொல்லின் பொருள் 268 கொன் என்னுமிடைச் சொல்லின் பொருள் 255 சா சாயல் என்னுமுரிச் சொற் பொருள் 325 சி சில உயர்திணைப் பெயர்கள் அஃறிணை முடிபு கொள்ளுதல் 56, 57 சில உருபுகள் செய்யுளுட் டிரியு மெனல் 108 சிறத்தல் என்னுங் குறிப் புணர்த்தும் உரிச்சொற்கள் 314 சினைக்கிளவிக்கும் முதற்கிள விக்கும் உருபு நியமித்தல் 570,571 சீ சீர்த்தி என்னுமுரிச்சொற் பொருள் 312 சு சுண்ணப்பொருள்கோள் 406 சுழற்சியாகிய குறிப்புணர்த்து முரிச்சொற்கள் 310 செ செப்பிற்கும் வினாவிற்கும் பொருவுதல்பற்றியதோர் மரபு 16 செப்புவழுவமைதி 15 செப்பையும் வினாவையும் வழுவாமற் காத்தல் 13 செய்கு என்னும் வினை முடிபு கொள்ளுமாறு 204 செய்தெனெச்சம் எதிர்காலத்து வரும் வழுவமைதி 239 செய்யாயென்னும் முன்னிலை வினை செய்யென் வினையாதல் 450 செய்யுட்கண் வருஞ்சொற்கள் 397 செய்யுட்கண்வரும் அறுவகை விகாரம் 403 செய்யுட்பொருள்கோள் வகை 404 செய்யுமென்னும் பெயரெச்சத்திற்கு முடிபு 235 செய்யுமென்னும் பெய ரெச்சத்திற்குச் சிறப்புவிதி 238 செய்யுமென்னும் முற்றுவருமிடம் 227 செய்யுளுட்டிரியும் வினைகள் 211 செய்யுளுட்பெயர் திரியுமாறு 195 செயற்கைப் பொருட்கண் மரபு வழுவாமை 20 செயப்படபொருளை வினைமுதல் வாய்பாட்டாற் கிளத்தல் 246 செலவு, வரவு, தரவு, கொடை முதலிய சொற்கள் பயின்று வருமிடம் 28, 29, 30 செழுமையென்னு முரிச்சொற்பொருள் 352 செறிவு என்னும் பொருளு ணர்த்து முரிச்சொல் 347 சே சேய்மைவிளிக்கண் மாத்திரை மிகுதல் 152 சொ சொல்லதிகாரப் பறனடை 463 சொல்லின் பொது விலக்கணம் 155, 156 சொல்லைவரையறுத்தல் 1 சொல்லெச்ச முதலியன பொருளுணர்த்துமாறு 439, 440 சொல்லெச்சம் 441 சொற்கள் குறிப்பாற் பொருளுணர்த்துமாறு 459 த 'தஞ்சம்' என்னுங் கிளவியின் பொருள் 266 'தட்' வென்னும் உரிச்சொற்பொருள் 320, 321 தடுமாறு தொழிற் பெயர்க் கண் இரண்டாவதும் மூன்றாவதும் மயங்கல் 95 தடுமாறுதொழிலோடு புணர்ந்த பெயர்ப்பொருளை நிச்சயிக்கு மாறு தன்மைச்சொல்லும் அஃறிணைச் சொல்லும், விரவி ஒரு முடிபு கோடல் 43 தன்மைப் பன்மைவினை முற்று 202 தன்மை யொருமை வினைமுற்று 203 தன்மைவினை யஃறிணையை யுளப்படுத்திவருதல் 209 தா தாம் என்னும் பெயர் இரு திணைக்கண்ணும் வருதல் 184 தாவென்னுமுரிச்சொல்லின் பொருள் 344 தாவெண்கிளவியொப்போன் கூற்றாக நிகழுதல் 446 தானென்னும் பெயர் இரு திணைக்கண்ணும் வருதல் 185 தி திசைச்சொல்லி ணிலக்கணம் 400 திட்டமெய்துதற்கு வரும் வினாவுடை வினைச்சொல் 241 திணைவிரா யெண்ணப்பட்ட பெயர் அஃறிணைச் சொற் கொண்டு முடியுமென்பது 51 திரிசொல்லி னிலக்கணம் 399 தில்லென்னு மிடைச் சொற் பொருள் 253 து 'துவன்று' என்னு முரிச் சொற்பொருள் 332 தெ தெவு, தெவ்வு என்னு முரிச் சொற்பொருள் 345, 346 தொ தொகைச் சொற்களின் பொருள் சிறந்து நிற்குமிடம் 419 தொகைச்சொல் ஒருசொல்லாய் நிற்றல் 420 தொகைப்பெயரும் பயனிலை கொள்ளுமென்பது 67 தொகைமொழிகளின் பெயருந் தொகையும் 412 தொகை பெற்றுவரும் எண்ணிடைச் சொற்கள் 290 தொழில் முதனிலைகள் 112 தொழில் முதனிலை களுக்குப் புறனடை 113 ந 'நசை' என்னும் பொருளு ணர்த்து முரீச்சொற்கள் 329 நடுக்கமாகிய குறிப் புணர்த்து முரிச்சொற்கள் 316 நளியென் கிளவியுணர்த் தும் பொருள் 320, 323 நனவென்னுமுரிச்சொற் பொருள் 376 நன்றென்னு முரிச்சொற் பொருள் 343 நா நால்வகைச் சொற்கள் 158, 159 நான்கனுருபு ஏனைப்பொரு ளொடு மயங்குமாறு 110 நான்காம் வேற்றுமை யுருபும் பொருளும் 75 நான்காம் வேற்றுமைப் பொருள்பற்றிவரும் வாய்பாடுகள் 76 நி நிகழ்காலம் ஏனைக்காலத் தோடுமயங்கல் 248 நிகழாவியல்புடையவற்றை நிகழ்வதாகக் கூறுதல் 422 நிரனிறைப் பொருள்கோள் 405 நிறம் என்னும் பண்புணர்ந்து முரிச்சொற்கள் 301 நிறவேறுபாடுணர்த்து முரிச்சொல் 373 நீ நீயிர் - நீ என்னும் பெயர்க் கண் இருதிணையு முடன் தோன்றல் 188 நீயிர் - நீ ஒருவர் என்ப வற்றின்பால் தெரியுமாறு 193 நு 'நுண்மை ' என்னும் பன் புணர்த்து முரிச்சொல் 374 நுணுக்கமாகிய குறிப்பு புணர்த்து முரிச்சொல் 330 நே நேர்மை, நெடுமையென்னும் பண்புணர்த்தும் முரிச்சொற்கள் 317 நோ நோக்கனோக்கப் பொருண் மைக்கண் மயங்குமுருபுகள் 93 நோயாகிய குறிப்புணர்த்து முரிச்சொற்கள் 341 ப படர் என்னுமுரிச்சொற் பொருள் 340 பணையென்னு முரிச்சொற் பொருள் 339 பண்புத்தொகை 416 பத்துவகையெச்சங்கள் 430 பயப்பு பசப்பு என்னுமுரிச் சொற்களுணர்த்தும் பொருள் 306, 307 பயின்ற உரிச்சொல் கிளக்கப் படாது பயிலாத உரிச்சொல்லே கிளக்கப்படுமென்பது 298 பரத்தாலாகிய பொரு ளுணர்த்து முரிச்சொல் 361 பரவு பழிச்சு என்னு முரிச் சொற்களுணர்த்தும் பொருள் 382 பலரறிசொல் 7 பலவறிசொல் 9 பலபொருளொரு சொல் இருவகைப்படுமென்பது 52 பழுது என்னு முரிச்சொலு ணர்த்தும் பொருள் 324 பன்மைச்சினைச்சொல் உயர் திணைச்சொல்லொடு முடியும் வழுவமைதி 61 பன்மைசுட்டியபெயர் இரு திணைக்கும் பொதுவாதல் 182 பா பாலையந்தோன்றிய பொருண் மேற்சொன்னிகழ்த்துமாறு 23 பி பிண்டப்பெயர் முதற்சினைப் பெயரியல் பிற்றிரியா தென்பது 90 பிணையென்னு முரிச்சொற் பொருள் 338 பிரிக்கப்படாத கிளைப் பெயர்கள் 410 பிரிநிலையெச்சத்திற்கு முடிபு 431 பு புலம்பு என்னு முரிச்சொற்பொருள் 331 புனிறென்னு முரிச்சொற்பொருள் 375 பெ பெண்மைசுட்டிய பெயர் இரு திணைக்கும் பொதுவாதல் 180 பெண்மகன் என்னும் பெயர் வினைகொண்டு முடியுமாறு 194 பெயர்க்கெய்தியதோ ரிலக்கணம் 70 பெயரெச்சம் 234 பெயரெச்ச வினை யெச்சங்கள் எதிர்மறைக்கட் பொருட்டிரியாமை 236 யெரெச்சத்திற்கு முடிபு `433 பெயர்ச்சொல்லின் பாகுபாடு 160, 161 பெருமையாகிய பண் புணர்த்து முரிச்சொற்கள் 320 பே பேடியுந் தெய்வமும் திணை பாலுளடங்குமாறு 4 பொ பொருண்மைநிலை 157 பொருளொடு புணராச் சுட்டுப் பெயர் பற்றிய மரபு 37 பொற்பு என்னு முரிச்சொற்பொருள் 335 ம மகடூஉவறிசொல் மதவென்னு முரிச்சொற் பொருள் 377, 378 மரபுவழுவமைத்தல் 17 மற்றென்னுமிடைச்சொல் 262 மற்றையென்னு மிடைச்சொல் 264 மன்னிடைச்சொல் 252 மன்றவென்னிடைச்சொல் 265 மன்னாப்பொரு ளும்மை பெறுதல் 34 மா மாலையென்னுமுரிச்சொல்லா லுணர்த்தப்படும் பொருள் 313 மாவென்னுமிடைச்சொல் 272 மாரீற்றுவினை, வினை கொண்டு முடிதல் 207 மி மிக்கதன் கணிகழும் வினைச்சொல் குறித்த வினைமுதலில்லாவிடத்து நிகழ்காலத்தாலுணர்த்தப் படுமென்பது 242 மிகுதிப்பொருளுணர்த்து முரிச்சொல் 299 முக்காலமுந் தோன்றுமாறு 200 முக்காலத்தினு முளதாகிய பொருளின்வினை நிகழ் காலத்தாற் கிளக்கப்படல் 240 மு முதலுஞ் சினையு மறியுமாறு 89 முரஞ்சல் என்னு முரிச்சொற்பொருள் 333 முழுதென்கிளவி யுணர்த்தும் பொருள் 326 முற்றும்மை யெச்சவும்மையாதல் 285 முற்றுச்சொற்குமுடிபு 429 முன்னிலையசைச்சொல் 274 முன்னிலைவினைக்கண் ஈகார ஏகாரங்கள் வருமாறு 451 முன்னிலைப் பன்மை வினை இருதிணைக்கும் பொதுவாதல் 224 முன்னிலை யொருமைவினை இருதிணைக்கும் பொது வாதல் 223 முனைவென்னுமுரிச்சொற் பொருள் 386 மூ மூன்றாம் வேற்றுமையுருபும் பொருளும் 74 மொ மொழிமாற்றுப் பொருள் கோள் 409 யா யாணர் என்னுமுரிச்சொல் லுணர்த்தும் பொருள் 379 யாண் என்னுமுரிச்சொற் பொருள் 381 யார் என்னும் வினாவினைக் குறிப்பு 210 ர ரகாரவீற்றுப்பெயர் விளியேற்கு மாறு 138, 139, 140 ரகாரவீற்றுப்பொருள் விளியேலாதவை 142, 143 ல லகர ளகரவீற்றுப் பெயர்கள் விளியேற்கு மாறு 144, 145, 146, 147 லகரளகரவீற்றுப்பெயருள் விளியுருபு ஏலாதன 148 வ வட சொல்லி னிலக்கணம் 401, 402 வண்ணச்சினைச்சொன்மரபு 26 வம்பு என்னு முரிச்சொற் பொருள் 327 வயவென்னு முரிச்சொற் பொருள் 366 வழக்கின்கண்வரும் தொடர் மொழி வேறுபாடு 458 வறிது என்னு முரிச்சொற் பொருள் 336 வறுமையாகிய குறிப் புணர்த்து முரிச்சொல் 360 வா வாழ்ச்சிக்கிழமைப் பொருட் கண் ஏழாவது மயங்கல் 78 வாள் என்னு முரிச்சொற் பொருள் 367 வி விடுதலாகிய குறிப்புணர்த்து முரிச்சொற்கள் 318 வியங்கோளொடு தொடரு மெண்ணுப்பெயர் திணை விரவி வருமென்பது 45 வியங்கோள் வாராவிடம் 226 வியலென்னு முரிச்சொற் பொருள் 364 விரவுப் பெயர் திணை விளக்கு நெறி 172 விரவுப்பெயர் உயர்திணை ஒருமை விளக்கல் 173 விரவுப் பெயர்கள் 174 விரவுப்பெயர்ப் பாகுபாடு 175 விரவுப் பெயர்களின் பெயரும் தொகையும் 176, 177, 178, 179 விரவுப்பெயர் உயர்திணை சுட்டாது. அஃறிணை சுட்டி வருமிடம் 196 விரைவுப் பொருண்மைக் கண் ஏனைக்காலச் சொல் இறந்த காலச்சொல்லாய் வருதல் 241 விரைவுப் பொருளடுக்கிற்கு வரையறை 424 விரைவுப்பொரு ளுணர்த்து முரிச்சொற்கள் 315 விழுமம் என்னு முரிச்சொற் பொருள் 353 விழைவு பொருண்மை யுணர்த்தும் தில்லிடைச் சொல்வருமிடம் 260 விளியுருபேலாத கிளிப்பெயர்கள் 154 விளியினது பொது விலக்கணம் விளையாட்டாகிய குறிப்புணர்த்தும் உரிச்சொற்கள் 319 வினாச் செப்பாகவும் வருமென்பது 14 வினை வேறுபடும் பல பொருளொரு சொற் பொருள் விளக்குமாறு 53 வினைவேறுபடாப் பலபொருளொருசொற் பற்றிய மரபு வழுக்காத்தல் 54 வினைச்சொல்லின் பொது விலக்கணம் 198 வினை நிகழுங்காலம் மூன்றென்பது 199 வினைச்சொற்களின் பாகுபாடு 201 வினையெச்சம் வாய்பாடுகள் 228 வினையெச்ச விகுதிகள் 229 வினையெச்ச முடிபு 230, 231, 232 வினையெச்சங்கள் அடுக்கிமுடிதல் 233 வினையெச்சத்திற்குமுடிபு 432 வினையெச்சத்தின் வேறு பட்ட இலக்கணங்கள் 457 வினைமுற்றுக்களின் பாகுபாடு 427 வினைமுற்றிற்குப் புறனடை 428 வினைத்தொகையினிலக் கணம் 415 வெ வெகுளிப்பொருளுணர்த்து முரிச்சொல் 372 வே வேற்றுமை இத்துணைய வென்பது 62, 63 வேற்றுமையின் பெயரும், முறையும் 64 வேற்றுமையுருபு நிற்குமிடம் 69 வேற்றுமைத்தொகை விரிக்குமாறு 83 வேற்றுமைமயக்கத்திற்குப் புறனடை 101 வேற்றுமைகள் எதிர் மறைக்கண்ணுந் தம்பொருளுணர்த்தல் 107 வேற்றுமைத்தொகை 413 வேறுவினைப்பொதுச் சொல் பற்றிய மரபு வழுக்காத்தல் 46, 47 வை வையென்னுமுரிச்சொற் பொருள் 387 ன னகரவீற்று முறைப்பெயர் வினை யேற்குமாறு 136 னகரவீற்றுவிளியுருபேலாப் பெயர்கள் 137 அரும்பத (அருஞ்சொல்) விளக்கம் முதலியன நூற்பா எண் -1 நூற்பா வழி உயர்திணை - உயர்வாகிய சாதி அஃறிணை - அஃதல்லாத சாதி மக்கட் சுட்டு - மக்களென்னுங் கருத்து நிகழ்தற்கிடமாகிய பொருள். உரை வழி ஒருபுடை - ஏகதேசம் (சிறுபான்மை) சமயவாற்றல் - சங்கேதவாற்றல் சங்கேதம் - நியமம், உடன்பாடு அவாய்நிலை - ஒரு சொல் மற்றொரு சொல்லை அவாவி நிற்றல் தகுதி - பொருள் விளக்கற்கேற்ற சொற்கள் சேர்ந்து நிற்றல். அண்மை நிலை - தொடராய் நிற்கும் மொழிகளை இடையீடின்றிச் சொல்லுதல் அதிகாரம் - தலைமை. கிளவி - சொல் ஆக்கம் - அமைத்துக் கோடல் நொய் - தவிடு நுறுங்கு - குறுணி எம்மனார் - என்று சொல்வர்; மன் - எதிர்காலம் காட்டிற்று என்ப என்பதன் பகரம் குறைத்து மன் ஆர் என்னும் இரண்டிடைச் சொற் பெய்து என்மனார் என விரித்தார் ஆசிரியர் என்று இளம்பூரணர் கூறுவர். சேனாவரையர் இக் கருத்தை மறுக்குங்கால் ‘இசை நிறை' என்பது மறுத்துப் பொருள் கூறுகின்றார். பின்னும் இசைநிறை என்றன் மேற்கோண் மலைவு’ என்றும் ஒரு ஏதுக் காட்டி மறுக்கின்றார் இளம்பூரணர் உரையுள் இசைநிறை என்று கூறிய கருத்து காணப்பட வில்லை. ஆயின் மன் என்னு மிடைச் சொற்கு ஆசிரியர் இடையியலிற் பொருள் கூறியிருக்கின்றார். இசை நிறை என்று கூறவில்லை. உய்த்துணரல் - ஆராய்ந்துணரல் குறி - பெயர் வரையறை - எல்லைப்படுத்தல் நுதலுதல் - கருதுதல் நூற்பா எண் -2 நூற்பா வழி ஆடூஉ - ஆண்மகன் மகடூஉ - பெண்மகள் சிவணல் - பொருந்தல் உரை வழி கூறு - பகுதி திரிந்த புணர்ச்சி - திரிபு புணர்ச்சி விகாரம் - செய்யுள் விகாரம் வினை முதல் - எழுவாய்க் கருத்தா சிற்றில் - சிறு வீடு, சிறு மகளிர் மணலாற் கட்டி விளையாடுவது கடா - ஆட்சேபம் பாகுபாடு - பகுப்பு நூற்பா எண் -3 நூற்பா வழி ஒன்று - ஒருபொருள் பல - பலபொருள் சுட்டுதல் - குறித்தல் அந்தம் - ஈற்றெழுத்து (விகுதி) உரை வழி இசைத்தல் - ஒலித்தல் நூற்பா எண் -7 நூற்பா வழி நேரத்தோன்றல் - (பலர் பாற்குப்) பொருந்தத்தோன்றுதல் உரை வழி உண்கும் - உண்பேம் உண்டும் - உண்பேம் (இதனை இறந்த காலமென்பர் நன்னூலார்) வருதும் - வருவேம் சேறும் - செல்வேம் நூற்பா எண் -9 உரை வழி கானம் - காடு தகைப்ப - தடுப்ப சினைய - சினையிலுள்ளன சினை - கொம்பர் சுனைய - சுனைக்கணுள்ளன சுனை - நீர்நிலை நூற்பா எண் -10 நூற்பா வழி தோற்றம் - புலப்படல் என்றது வினையொடுவந்து பால்புலப்படல் உரை வழி ஞாபகம் - நினைப்பித்தல் அநுவாதம் - முன் சொன்னதை அங்கீகரித்துப் பிற்கூறல். கட்டுரை வாக்கியம் - சொற்றொடர் ஏற்புழிக்கோடல் - இடத்துக் கேற்ப பொருள் கோடல் திரிபு - (திணை) திரிதல் நூற்பா எண் -11 உரை வழி 'மரபு - முறை பொருள் - விஷயம் யோகவிபாகம் - கூட்டிப்பிரித்தல் நூற்புணர்ப்பு - தந்திரவுத்தி தந்திரம் - நூல் நூற்பா எண் -13 நூற்பா வழி செப்பு - விடை உரை வழி போற்றுதல் - பாதுகாத்தல் செவ்வன் இறை - நேர்விடை இறைபயப்பது - விடைபயப்பது தொடி - ஒருவகை அளவைப் பெயர் உத்தரம் - விடை அறியலுறவு - அறியலுறுதல் அறிவுறுத்தல் - தெரிவித்தல் நூற்பா எண் -15 நூற்பா வழி வரைதல் - நீக்கல் உரை வழி கடிதல் - நீக்கல் புணர்தல் - இயைதல் நூற்பா எண் -16 நூற்பா வழி உறழ்பொருள் - மாறுபட்ட பொருள் துணைப்பொருள் - ஒப்புப் பொருள் உரை வழி கோல் - செங்கோல் துளி - நீர்த்துளி தலைஇ - பெய்து அணியியல் - அணியிலக்கணம் ஒத்தபண்பு - ஒத்தகுணம் பொருவுதல் - ஒத்தல் யாண்டையது - எவ்விடத்தது தன்னினம் - தனக்கு இனமாயுள்ளன துகிர் - பவளம் நூற்பா எண் -17 நூற்பா வழி தகுதி - தக்கது - சொல்லத் தகுந்தது பகுதிக்கிளவி - பக்கச்சொல் உரை வழி பக்கச்சொல் - தனக்குரிய பொருளு ணர்த்தாது சார்பான பொருளுணர்த்துவது வெண்களமர் - உழவர் கருங்களமர் - பறையர் புடை - பக்கம் பொற்கொல்லர் - தட்டார் வண்ணக்கர் - நாணக பரிசோதகர், வண்ணக்கஞ் சாத்தனார் முதலிய பெயர் நோக்கியறிக. குழு - கூட்டம் குறிநிலை - பெயராகிய நிலையை யுடையது இடக்கர் - சபையிற் கூறத்தகாத சொல் அடக்கல் - மறைத்தல் மரூஉ - மருவிவந்த சொல் இடுகுறி - காரணமின்றி இடப்பட்ட பெயர் மதம் - கொள்கை நூற்பா எண் -18 நூற்பா வழி வழக்காறு - வழக்கு வழி ; உலகில் வழங்கிவரு நெறி உரை வழி சுட்டுதல் - குறித்தல் வேண்டுதல் - விரும்புதல் இல்குணம் - இயற்கையிலுள்ளதல்லாத குணம் ஒன்றெனமுடித்தல் - முடித்ததனோடு ஒருமுடிபெய்துவனவற்றையு மொன்றென்று முடித்தல். நூற்பா எண் -19 நூற்பா வழி இற்று - இத்தன்மைத்து உரை வழி இட்டிகை - செங்கல் பிறழ்தல் - மாறுபடல் நூற்பா எண் -20 நூற்பா வழி செயற்கை - காரணத்தால் இயல்பு திரிந்தது. நூற்பா எண் -22 நூற்பா வழி ஆக்கக் கிளவி - ஆக்கத்தை யுணர்த்துஞ் சொல் உரை வழி பரிசில் - சம்மானம் கலம் - ஆபரணம் எஃகம் - நுதி வாய் - இடம் குருதி - இரத்தம் படிந்து - மூழ்கி உரு - நிறம் குக்கில் - செம்போத்து சிரல் - சிச்சிலி மால் - விட்டுணு தப்பியார் - பகைவர் வாடாத - அழியாத வண்கை - கொடைக்கை சாயல் - மென்மை முகம் - வாயில் வீறு - பகுப்பு நூற்பா எண் -23 கூறு - பகுப்பு நூற்பா எண் -25 உரை வழி நடை - வழக்கு வயின் - இடம் செவ்விது - நேரிது நூற்பா எண் -26 உரை வழி கவித்தல் - மூடல் தாழி - பிணத்தை மூடிக் கவிக்கும் ஒருவகை மட்கலம் பொகுவல் - ஒரு பறவை. நுசுப்பு - இடை அமர் - போர் வண்ணம் - நிறம் நூற்பா எண் -27 உரை வழி உயர்சொல் - உயர்த்துச்சொல்லுஞ் சொல் நூற்பா எண் -28 உரை வழி இயங்குதல் - செல்லுதல் ஈதல் - கொடுத்தல் நூற்பா எண் -29 உரை வழி உழை - இடப்பொருளில் வந்த இடைச்சொல் ஈறு - விகுதி வரைவின்றி - நியமமின்றி தூண்டில் - மீன்பிடிக்கும் ஒருவகைக் கருவி வாங்க - நீரினின்று மேல் எடுக்க சேய்நிலம் - தூரமான இடம் அணிநிலம் - அணிமையான இடம் நூற்பா எண் -31 உரை வழி இறுப்பான் - விடை கூறுவான் நூற்பா எண் -32 உரை வழி கெடுதல் - காணப்படாமற் போதல் நூற்பா எண் -34 நூற்பா வழி மன்னாப் பொருள் - என்றுமில்லாப் பொருள் ; நிலையாப் பொருள் என்பாருமுளர் நூற்பா எண் -36 உரை வழி கிளந்துகூறல் - இன்னதென எடுத்துக்கூறல் நூற்பா எண் -37 உரை வழி அரசுவா - அரசனுக்குரிய பட்டத்து யானை இஃதோர் செல்வன் - இச் செல்வன் ; சுட்டுத்திரிந்து நின்றது ஓர் - அசைநிலை செல்வன் - செல்வத்தை அளித்தற்குரி யோன், செல்வம் போன்றவன் எனினுமாம். செல்வன் என்றது மகனை நூற்பா எண் -38 நூற்பா வழி இயற்பெயர் - காரணமின்றிப்பொருளையே குறித்து இட்டு வழங்கும் பெயர் விரவுப்பெயர் - உயர்திணை அஃறிணை யிரண்டினுஞ் சென்று விரவுதலையுடைய பெயர் உரை வழி இயலல் - நிகழ்தல் வழி - பின் நூற்பா எண் -39 உரை வழி அணங்கு - துன்பம் சேந்தன் - ஓருபகாரி அமர்ந்து - விரும்பி கடப்பந்தார் - கடப்பமாலை விழைவு - விருப்பம் கொண்டான் - கணவன் நூற்பா எண் -41 வரிசைப்பெயர் - பட்டப் பெயர் (நூற்பா, உரையில் இல்லை) நூற்பா எண் -43 உரை வழி எடுத்தோத்து - சூத்திரம் நூற்பா எண் -45 உரை வழி மா - குதிரை படை - படைக்கலம் மறவர் - வீரர் விதந்தோதல் - சிறப்பாகப் பிரித்தெடுத்துக் கூறல் ஆ - பசு பார்ப்பனமாக்கள் - அந்தணர் அரண் - அரணாகச் சென்றடையுமிடம் நூற்பா எண் -46 உரை வழி அடிசில் - உணவு அணி - ஆபரணம் இயம் - வாச்சியம் நூற்பா எண் -47 உரை வழி நுகர்தல் - உண்ணல் நூற்பா எண் -48 நூற்பா வழி இரட்டைக்கிளவி - இரண்டித்து நின்று பொருளுணர்த்துஞ் சொல் நூற்பா எண் -49 உரை வழி கடகம் - காப்பு அதர் - வழி எருத்தில் - எருத்துமாடு கட்டற்கியற்றிய கொட்டில் நூற்பா எண் -50 உரை வழி குழை - தளிர் குமரி - கன்னி கட்டில் - அரசு கட்டில், என்றது அரசன் வீற்றிருக்கும் சிங்காசனத்தை பெற்றம் - பசு நூற்பா எண் -51 உரை வழி சினம் - கோபம் களிறு - யானை கதழ் - விரைவு பரி - செலவு அறவோர் - துறவாது விரதங்காத்தோர் ; முனிவர் துடியன் - துடிகொட்டுவோன் கடம்பன் - ஒருவகைக்குடிப் பெயர் ஆயம் - மகளிர் கூட்டம் நூற்பா எண் -55 உரை வழி உரு - நிறம் முருகு - முருகன் உறழும் - ஒக்கும் நீர் - வரும் என முடிக்க மது - தேன் நாறும் - மணக்கும் நேயம் - தான்சொல்லக் கருதிய பொருளை விளக்கற் கேற்ற சொற்களில்லாமற் கூறல் = தெரித்து மொழியாமை. ஊட்டல் - நிறமூட்டல் செய்யாதநிறம் - இயற்கை நிறம் பிரிதோரலங்காரம் - தற்குறிப்பேற்றம் படுத்தல் - செய்துவைத்தல் பாறை - கற்பாறை இட்டு - நுணுக்கம் ஒல்லேம் - இயையேம் புலால் - புலான்மணம் புலந்து - ஊடி வறு - குற்றம் துனி - புலவி நீட்டம் வெப்பம் - கொதிப்பு கூற்று - சொல் நூற்பா எண் -56 நூற்பா வழி உறுப்பின்கிளவி - குருடு முட முதலியன. காதற்சொல் - ஒப்புமை கருதாது யாவை யானை என்றாற் போற் காதல் பற்றி வருவன. சிறப்புச்சொல் - கண்போற் சிறந்தானைக் கண் என்றலும் உயிர் போற் சிறந்தானை உயிர் என்றலு முதலாயின. செறற்சொல் - பொறியறை, கெழீஇயிலி என்பன போல்வன உரை வழி செறல் - செறுதல் விறற்சொல் - பெருவிறல், அருந்திறல் போல்வன. விறல் - வலி நூற்பா எண் -57 உரை வழி பொழுது - ஞாயிறு விதி - ஊழ் கனலி - ஞாயிறு மதி - திங்கள் துறக்கம் - சுவர்க்கம் பால்வரை தெய்வம் - இரு வினையையும் வகுப்பது = ஊழ் சொல் - நாமகள் நூற்பா எண் - 61 நூல் வழி கடப்பாடு-யாப்புறவு = நிச்சயம் நூற்பா எண் - 62 உரை வழி இடையீடு - தடை யாப்புடைமை - பொருத்தமுடைமை; நியமமுடைமை நுதலுதல் - கருதுதல் ஓதல் - சொல்லல் ஓத்து - இயல் வேற்றுமை - வேறுபடுத்துவது தலைப்பெய்தல் - சேர்த்தல், கூட்டல் இயற்கை - இயல்பு நூற்பா எண் - 64 உரை வழி பலபெயர் - உம்மைத்தொகை - பலபெயர்கள் எண்ணும்மைப் பொருள்படத் தொக்கதொகை. விசேடணம் - அடைமொழி நூற்பா எண் - 65 நூற்பா வழி எழுவாய் - தொடக்கத்திலுள்ளது ; முதலிலுள்ளது ; எனவே முதலாம் வேற்றுமை என்றபடி. உரை வழி துணை - அளவு நூற்பா எண் - 66 நூற்பா வழி பொருண்மை - உண்மை = உளதாந்தன்மை வியம் - ஏவல் உரை வழி பொய்ப்பொருள் - உலகின் இல்லாப் பொருள் மெய்ப்பொருள் - உலகின் உள்ள பொருள் முடிக்கப்படுஞ்சொல் - எழுவாய் முடிக்குஞ் சொல் - பயனிலை மாறும் - ஒழியும் நூற்பா எண் - 71 உரை வழி இயற்றல் - முன்னில்லதனை உண்டாக்கல் எய்தல் - உறுதல் ; பொருந்தல் நூற்பா எண் - 72 நூற்பா வழி காப்பு - காவல் ஊர்தி - ஊர்தல் இழை - இழைத்தல் = செய்தல் உரை வழி ஒப்புதல் - துரத்தல் செறல் - வருத்தல் கன்றல் - அடிப்படல் புரத்தல் - காத்தல் அளித்தல் - காத்தல் நிகர்த்தல் - ஒத்தல் நூற்பா எண் - 73 உரை வழி துவக்கல் - கட்டல் குயிலுதல் - தைத்தல் நூற்பா எண் - 74 நூற்பா வழி இயற்றல் - செய்தல் உரை வழி காணம் - பொற்காசு எண் - எள் விராய - கலந்த காரகம் - இயற்றுவிப்பது ஞாபகம் - அறிவிப்பது வையம் - தேர் கொத்தை - குருடு மேற்கோள் - மேற்கொளப்பட்டது ; கருத்து எதிர்முகவேற்றுமை - விளி வேற்றுமை ஐந்திரம் - இந்திரனாற் செய்யப்பட்ட தொரு வியாகரண நூல் சூல் - கருப்பம் நூற்பா எண் - 75 உரை வழி கோடல் - ஏற்றக்கொள்ளல் நூற்பா எண் - 76 நூற்பா வழி யாப்பு - பொருத்தம் உரை வழி கூறு - பங்கு கடிசூத்திரம் - அரைஞாண் பிணி - நோய் நட்டார் - நண்பர் உற்றார் - தலைவர் தொடி - வளையல் நூற்பா எண் - 77 உரை வழி பொரூஉ - ஒப்பு கள - ஒருவகைமரம் நூற்பா எண் - 78 உரை வழி நாற்றம் - மணம் தீர்தல் - விட்டுநீங்கல் பற்று - ஆசை அளி - அன்பு மைந்து - வலி நூற்பா எண் - 79 உரை வழி கிழமை - உரிமை நூற்பா எண் - 80 உரை வழி திகிரி - சக்கரம் இணங்கு - இயைபு தீட்டு - தீட்டப்பட்டது; எழுதப்பட்டது நூற்பா எண் - 84 நூற்பா வழி கருமம் - தொழில் ; என்றது ஈண்டு மெய்யுறுதலாகிய தொழிலை உரை வழி பற்று - சார்பு இடை - இடம் நூற்பா எண் - 85 உரை வழி அறுத்தல் - இருகூறுசெய்தல் குறைத்தல் - சுருக்குதல் ; சிறிதிழக்கச் சிதைத்தல் நூற்பா எண் - 86 நூற்பா வழி கன்றல் - அடிப்படல் உரை வழி இவறல் - பேராசையுறல் நூற்பா எண் - 90 உரை வழி பிண்டம் - பலபொருட்டொகுதி மாட்டுதல் - கொளுவுதல் ; பொருத்துதல். நூற்பா எண் - 93 உரை வழி நோக்கல் நோக்கம் - நோக்கு அல்லாத நோக்கம். என்றது கண்ணால் ஒன்றினை நோக்காது மனத்தானோக்கல் ஓம்படை - பாதுகாத்தல் இன்றியமையாமை - இல்லாமன் முடியாமை நூற்பா எண் - 95 நூற்பா வழி கடிதல் - நீக்கல் நூற்பா எண் - 96 நூற்பா வழி பனுவல் - சொல் நூற்பா எண் - 98 நூற்பா வழி உறைநிலம் - உறையுமிடம் ; இருப்பிடம் நூற்பா எண் - 103 நூற்பா வழி வரையார் - நீக்கார் நூற்பா எண் - 106 உரை வழி நாணற்கிழங்கு - நாணற்புல்லின் கிழங்கு எயிறு - பல் என்னும் - சிறிதும் நூற்பா எண் - 108 உரை வழி புரை - குற்றம் உற்றுழி - ஆபத்து வந்தவிடம் புள் - பறவை நூற்பா எண் - 112 உரை வழி காரகம் - காரணம் நூற்பா எண் - 114 உரை வழி சேர்ப்பு - கடற்கரை நூற்பா எண் - 115 நூற்பா வழி சிவணல் - பொருந்தல் உரை வழி எழுத்தோத்து - எழுத்ததிகாரம் நூற்பா எண் - 116 உரை வழி பதக்கு - ஒருவகை அளவுப்பெயர் தூணி - ஒருவகை அளவுப் பெயர் நூற்பா எண் - 155 உரை வழி மாலை - இயல்பு யாமை - ஆமை கம்பலம் - கம்பளம் நூற்பா எண் - 157 உரை வழி அடுதல் - சமைத்தல் கொல்லுதல் - அழித்தல் களைதல் - பிடுங்கல் காழ்த்தல் - வயிரமுடைத்தாதல் பிறிதுமொழிதல் - ஒட்டு என்னும் ஓரலங்காரம் நூற்பா எண் - 162 உரை வழி மகன் - ஆண்மகன் மகள் - பெண்மகள் நூற்பா எண் - 165 நூற்பா வழி கூடிவரு வழக்கினாடியற் பெயர் - இளைஞர் தம்முட் கூடி விளையாடிவரும் வழக்கின்கண் தம்முள் இட்ட இயற்பெயர் - அவை, பட்டி புத்திரர் கங்கை மாத்திரர் என்பன போல்வன. ஆடி என்னும் வினையெச்சம் ஆடு என முதனிலை மாத்திரையாய் நின்றது. உரை வழி பட்டிபுத்திரர் - பட்டி என்பவனுடைய குமாரர், இப்பட்டி என்பவன் உச்சயினி நகரத்தரசனாகிய விக்கிரமாதித்தன் மந்திரி. இவன் மதிநுட்ப நூலோடுடையனா யிருந்ததோடு மக்களாற் செய்தற்கரிய அரும்பெருங் காரியங்களைச் செய்தவன். அவன் மக்களெனவே அன்னோரும் அவன் போன்ற தன்மையுடையை யுடையார் என்பது விளக்கிய பட்டிபுத்திரர் என்றார். கங்கை மாத்திரர் - கங்கையை அளவிடுபவர். மக்களால் அளவிடற்கரிய கங்கையையும் அளவிட்டறியும் ஆற்றலுடையார் என்பது விளக்கிய கங்கை மாத்திரர் என்றார். இப் பெயர்கள் பண்டைக்காலத்து விளையாடல் குறித்து காலத்துப் படைத்திட்டுக் கொண்ட பெயர்கள். இக் காலத்தும் இவ்வாறு சிறார்கள் விளையாடுவது வழக்கு. நூற்பா எண் - 166 உரை வழி ஏனாதி - காவிதி, எட்டி என்பன பட்டப்பெயர்கள். வாயிலான் - வாயில் காப்போன் வண்ணத்தான் - வண்ணஞ் செய்வோன் சுண்ணத்தான் - சுண்ணஞ் செய்வோன் சுண்ணம் - பொற்பொடி நூற்பா எண் - 167 உரை வழி அவ் - அவை இனைத்து - இவ்வளவிற்று நூற்பா எண் - 174 நூற்பா வழி இயற்பெயர் - சாத்தன் கொற்றன் என வழங்குதற் பயத்தவாய் காரணமின்றிப் பொருளே பற்றிவரும் இடுபெயர் உரை வழி பாணி - ஒருவகைத் தாளம் நிமித்தம் - காரணம் நூற்பா எண் - 175 உரை வழி பாகுபாடு - பகுப்பு நூற்பா எண் - 191 உரை வழி முன்னம் - குறிப்பு நூற்பா எண் - 192 நூற்பா வழி தன்மை - இயல்பு நூற்பா எண் - 195 உரை வழி பழுவம் - காடு கழனி - வயல் இழை - ஆபரணம் நூற்பா எண் - 196 நூற்பா வழி இறைச்சிப் பொருள் - கருப்பொருட் பிறக்கும் பொருள் உரை வழி கடுவன் - ஆண்குரங்கு குமரி - கன்னி நூற்பா எண் - 203 உரை வழி உரிஞுகு - உரிஞுவேன் திருமுகு - திருமுவேன் உண்பல் - உண்பேன் செய்கு - செய்வேன் செய்கும் - செய்வேம் நூற்பா எண் - 204 உரை வழி காண்கு - காண்பேன் மோயினாள் - மோயினளாய் ; மோந்து உயிர்த்தல் - நெட்டுயிர்ப்புக் கோடல் நூற்பா எண் - 207 நூற்பா வழி மாரைக்கிளவி வினையோடல்லது பெயரோடு முடியாமையின் என்றது, உண்மார் முதலிய மாரீற்று வினைமுற்றுக்கள் உண்மார் வந்தார், சென்மார் வந்தார் என வினையொடு முடியுமேயன்றி ஏனை வினை முற்றுகள் போலப் பெயரோடு முடியாமையின் என்றபடி. எனவே, ஏனை வினைமுற்றுகள் பெயரொடன்றி வினையொடு முடியாது. வினையொடு முடியாமை யாற்றான் அம் முற்றுகள் எச்சமாய்த் திரிகின்றன. மாரீறு பெயரொடு முடியாது வினையொடு மாத்திரமே முடியுமென ஆசிரியர் கூறலின், அஃது எச்சமாய்த் திரிதல் வேண்டா ; விளம்பிய முற்றே யாய் நிற்குமென்பது கருத்து. உரை வழி பீடு - பெருமை இன்று - இன்றி திரு - வளம் பாடு - பெருமை படர் - நினைவு பாடன்மார் - பாடுவாரல்லராக காணன்மார் - காணுவாரல்லராக நூற்பா எண் - 210 உரை வழி ஊதை - காற்று கூட்டுணல் - கொள்ளை கொள்ளுதல் ; ஒருசேரக் கவர்தல் கோதை - மாலை நூற்பா எண் - 214 உரை வழி ஆற்றல் - சாமர்த்தியம் ஊறு - பரிசம் நூற்பா எண் - 220 உரை வழி மாக்கட்டு - மாக்காளையுடையது அணித்து - அணிமைக்கணுள்ளது சேய்த்து - சேய்மைக்கணுள்ளது சேய்மை - தூரம் நூற்பா எண் - 228 தன் முதனிலைத் தொழில் என்றது, எனவுக்கு முதனிலையாய் நிற்கும் புகுதல் முதலியவற்றை. அத்தொழில் காரணப் பொருளில் வருமென்றபடி. நூற்பா எண் - 233 உரை வழி தொழுவர் - உழவர் பாயுந்து - பாயும் குரவை - கைகோத்தாடல் தலைக்கை - முதற்கை ஈகை - கொடை எவ்வி - ஒருவள்ளல் உறையுள் - உறைதல் - வாழ்தல் நூற்பா எண் - 234 உரை வழி பொச்சாவாமை - சோர்வில்லாமை ஆறு - வழி வியர் - வேர்வை கலிங்கம் - வஸ்திரம் நூற்பா எண் - 237 நூற்பா வழி இடைநிலை - இடைநிற்பது இதனை, இடைப்பிறவரால் என்பர் நன்னூலார் நூற்பா எண் - 238 உரை வழி அம்பல் - சிலரறிந்தது கலுழும் - அழும் நூற்பா எண் - 239 நூற்பா வழி வாராக்காலம் - எதிர்காலம் நூற்பா எண் - 240 உரை வழி கனலி - ஞாயிறு மதி - திங்கள் வலந்திரிதல் - சூழ்தல் கடல்வையம் - பூமி நூற்பா எண் - 241 உரை வழி பாணித்தல் - தாமதித்தல் குறை - இன்றியமையாத காரியம் நூற்பா எண் - 242 நூற்பா வழி மிக்கது - சிறந்தது = தெய்வம் தெய்வம், ஊழ், என்பன ஒரு பொருளன. ஊழுக்கு இரு வினை காரணம். நூற்பா எண் - 243 உரை வழி தன் என்பதற்குத் தான் என்பதே முதனிலையாதலின் அதுபற்றித் தான் எனக் கூறினார் நூற்பா எண் - 244 உரை வழி கதம் - கோபம் களி - மயக்கம் தெருள் - தெளிவு வைதல் - ஏசுதல் பெற்றி - இயல்பு, சுபாவம் கூறை - உடுக்கும் வஸ்திரம் தெற்றி - திட்டை ; திண்ணை நூற்பா எண் - 248 உரை வழி பண்டு - முன்னாள் பொழில் - சோலை நூற்பா எண் - 249 உரை வழி சேரி - இருப்பிடம் நூற்பா எண் - 250 உரை வழி ஒப்புஇல் வழியான் - ஒப்புமை தோன்றாதவிடத்தின்கண் பொருள் செய்குந - அவ்வொப்புவுமைப் பொருளைச் செய்வன நூற்பா எண் - 252 உரை வழி கழிவு - முன்னுள்ளது இல்லாமற் போதல் சிறியகள் - அற்பமானகள் ஈயும் - கொடுக்கும் நூற்பா எண் - 253 உரை வழி விழைவு - விருப்பம் வார்தல் - நேர்மை வை - கூர்மை அரிவை - பெண் நூற்பா எண் - 254 உரை வழி கொன் - அச்சம் முனை - போர் துஞ்சல் - துயிலல் நூற்பா எண் - 255 உரை வழி புரத்தல் - காத்தல் மதுகை - வலி புன்கண் - இழிவு, வறுமை நூற்பா எண் - 262 உரை வழி அவலம் - துன்பம் நொதுமல் - அயல் நூற்பா எண் - 263 உரை வழி எற்று - இறந்தது என்னும் பொருளில் வருமோரிடைச் சொல் தேற்றம் - தெளிவு நூற்பா எண் - 265 உரை வழி மடவை - அறியாமையுடையை முருகு - முருகன் நூற்பா எண் - 266 உரை வழி எண்மை - எளிமை நூற்பா எண் - 267 உரை வழி அந்தில் - அவ்விடம் ஆங்கு - அவ்விடம் நூற்பா எண் - 269 உரை வழி எல் - விளக்கம் நூற்பா எண் - 274 உரை வழி பனி - நீர்த்துளி காமம் - விருப்பம் வலவன் - தேர்ப்பாகன் மெல்லம்புலம்பன் - நெய்தனிலத் தலைவன் காப்பு - காவல் கடை - வாயில் நூற்பா எண் - 279 உரை வழி ஆதரம் - விருப்பம் நூற்பா எண் - 288 தோற்றம் - உருவம் ; ஒளி இசை - ஒலி நாற்றம் - மணம் உறல் - பரிசம் ஓடல் - செல்லல் நூற்பா எண் - 291 உரை வழி குன்றி - குன்றிமணி கோபம் - இந்திரகோபம் நூற்பா எண் - 292 உரை வழி நார் - பன்னாடை நறவு - கள்ளு நாரரி நறவு - பன்னாடையின் வடித்தகள்ளு புறம் - 395ஆம் செய்யுள் நூற்பா எண் - 297 உரை வழி இசை - ஒலி குறிப்பு - மனத்தாற்குறித்துணரப்படுவது பண்பு - பொறியாலுணரப்படும் குணம் உறு - மிகுதி துவைத்தல் - ஒலித்தல் மெய்தடுமாறல் - வடிவு திரிதல் நூற்பா எண் - 299 உரை வழி ஊட்டல் - உண்பித்தல் வீதல் - அழிதல் தவ - மிக நூற்பா எண் - 300 உரை வழி உட்கு - அச்சம் புரை - உயர்ச்சி நூற்பா எண் - 302 உரை வழி அணங்கிய - வருத்திய புறந்தரல் - பாதுகாத்தல் இயக்கம் - வழி நூற்பா எண் - 307 உரை வழி களர் - உவர்நிலம் நூற்பா எண் - 313 உரை வழி இர - இரா மாலை - இயல்பு நூற்பா எண் - 314 உரை வழி துனி - வெறுப்பு எவ்வம் - துன்பம் நூற்பா எண் - 315 உரை வழி பரி - குதிரை புள் - பறவை ஏமம் - இன்பம், காவல் நூற்பா எண் - 317 உரை வழி ஒளுகை - பண்டி மருங்குல் - இடை வேல் - வேலமரம் விடத்தேர் - ஒருவகைமரம் இக்காலத்து விடத்தல் என்பர் நூற்பா எண் - 318 உடை - உடைமரம் ‘திரிகாய் விடத்தரொடு காருடை போகி’ என்பது அச்சிட்ட புத்தகப் பாடம் நூற்பா எண் - 329 உரை வழி நவிரம் - ஒருமலை காரி - நஞ்சு நூற்பா எண் - 330 உரை வழி பாய்ந்து - பரந்து ஆய்ந்த - நுணுகிய தானை - வஸ்திரம் அறல் - நீர் நூற்பா எண் - 334 உரை வழி சூல் - கரு எழிலி - மேகம் நூற்பா எண் - 337 நூற்பா வழி ஏற்றம் - நினைவு ; துணிவு நூற்பா எண் - 338 உரை வழி ஞாட்பு - போர்க்களம் நூற்பா எண் - 339 நூற்பா வழி பிழைத்தல் - இலக்குத்தப்பல் பெருப்பு - பெருத்தல் நூற்பா எண் - 340 உரை வழி வள்ளியோர் - கொடையாளர் படர்தல் - நினைத்தல் நூற்பா எண் - 341 உரை வழி நோய் - வருத்தம் செய்பு - செய்தல் நூற்பா எண் - 342 உரை வழி எய்யாமையல்லை - அறியாமை யுடையையல்லை நூற்பா எண் - 348 உரை வழி பெரும்பிறிது - இறப்பு பாடு - ஒலி நூற்பா எண் - 349 உரை வழி அரவம் - இசை = பேரொலி ஆயம் - மக்கட்டொகுதி மலிதல் - மிகுதல் மலிபு - மிக்கு தொகுபு - கூடி உயவு - வருத்தம் நூற்பா எண் - 350 உரை வழி அழுங்கல் - இரைச்சல் நூற்பா எண் - 353 உரை வழி விழுமியோர் - சீரியோர் - நாகரிகர் விழுத்திணை - சிறந்தகுடி நூற்பா எண் - 357 உரை வழி ஆரம் - முத்துமாலை கவைஇய - அகத்திட்ட நூற்பா எண் - 358 உரை வழி கடிமரம் - காவன்மரம் தடிதல் - வெட்டுதல் இரங்காவினை - செய்து முற்றுப் பெறாமையால் பின் இரங்காத செயல் நூற்பா எண் - 360 உரை வழி ஒக்கல் - சுற்றம் சொலிய - நீக்க நூற்பா எண் - 364 உரை வழி குறங்கு - தொடை நூற்பா எண் - 365 உரை வழி மராஅம் - கடம்பு நூற்பா எண் - 368 உரை வழி துன்னுதல் - அடைதல் துப்பு - வலிமை மான் - குதிரை துய - அறிவு வேறுபடுதல் நூற்பா எண் - 371 உரை வழி உயங்கல் - வருந்தல் நூற்பா எண் - 372 உரை வழி பாக்கம் - பட்டினம் நூற்பா எண் - 374 உரை வழி கலிங்கம் - வஸ்திரம் நூற்பா எண் - 376 உரை வழி விறலி - விறல்பட ஆடுபவள் நூற்பா எண் - 377 உரை வழி பதவு - புல் சே - எருது நூற்பா எண் - 379 உரை வழி வாரி - வருவாய் நூற்பா எண் - 382 உகுத்தல் - சொரிதல் நூற்பா எண் - 383 உரை வழி முன்றேற்று - தெய்வத்தின் முன்நின்று தெளித்தல் நூற்பா எண் - 384 உரை வழி கடுத்தல் - ஐயப்படல் நூற்பா எண் - 388 உரை வழி காரான் - எருமை நூற்பா எண் - 391 உரை வழி வரம்பு - எல்லை திரிவு - மாறுபாடு நூற்பா எண் - 392 உரை வழி வாயில் - வழி நூற்பா எண் - 393 உரை வழி வாயில் - வழி நூற்பா எண் - 395 உரை வழி ஒட்டுப்பெயர் -வினையாலணையும் பெயர் நூற்பா எண் - 396 நூற்பா வழி ஓம்படை - பாதுகாவல் உரை வழி குறை - இன்றியமையாமை நூற்பா எண் - 397 நூற்பா வழி இயற்சொல் - திரிபின்றி இயல்பாகிய சொல். எளிதாகப் பொருளுணரப் படுஞ் சொல் என்பாருமுளர். திரிசொல் - திரிபுடைய சொல். அரிதாகப் பொருளுணரப்படுஞ்சொல் என்பாருமுளர். உரை வழி விராய் - கலந்து ஈட்டல் - சேர்த்தல் நூற்பா எண் - 398 உரை வழி வளி - காற்று மா - விலங்கு நூற்பா எண் - 399 உரை வழி கிள்ளை - கிளி மஞ்ஞை - மயில் சுகம் - கிளி தத்தை - கிளி நூற்பா எண் - 400 உரை வழி தன்னை வந்தான் என்பது தள்ளை வந்தான் என்றுதான் இருக்க வேண்டுமென்பது சிலர் கருத்து. அக்கருத்தையே இங்கே குறித்துள்ளேன். ஆயின் சேனாவரையர் எக்கருத்திற் கூறினார் என்பது நன்கு புலப்பட வில்லை. நூற்பா எண் - 402 உரை வழி அரமியம் - நிலாமுற்றம் தசம் - பத்து பணை - முரசு தாள் - கால் நூற்பா எண் - 403 நூற்பா வழி நாட்டல் - நாட்டுதல் = நிலை பெறச் செய்தல் உரை வழி குறுங்கை - குறுக்கை என வலித்தது. முந்தை - முத்தை என வலித்தது. நூற்பா எண் - 404 நூற்பா வழி நிரனிறை - முறை நிற்றலுடையது சுண்ணம் - சுண்ணம்போலச் சிதறிக்கிடப்பது உரை வழி சுண்ணம் - பொடி நூற்பா எண் - 405 உரை வழி மாசு - குற்றம் அடிசில் - உணவு கொட்டை - தாமரைப் பொகுட்டு உடலுதல் - பகைத்தல் உடைந்தோடல் - தோற்றாடல் ஊழ்த்தல் - விரிதல் மயங்கிவருதல் - எதிர் நிரனிறையாய் வருதல் நூற்பா எண் - 406 உரை வழி பட்டாங்கு - உண்மை இயல்பு சிதர்தல் - சிந்துதல் நூற்பா எண் - 408 உரை வழி சூரல் - பிரம்பு சூர் - தெய்வம் அணங்குதல் - வருத்தல் நூற்பா எண் - 409 உரை வழி ஆரியமன்னர் - வடநாட்டரசர் பாரி - ஒரு வள்ளல் தண்ணுமை - மத்தளம், ஒரு கட்பறை வீ - பூ அலர் - பலரறிந்து தூற்றும் பழிமொழி ஞாய் - நின் தாய் தன்னை - தமையன் நூற்பா எண் - 415 உரை வழி கொல்யானை என்பதைக் கொன்றயானை எனப் பிரித்துப் புணர்த்தால், ஆண்டுத் தொகைப் பொருள் சிதையும் என்றார் ; முக்காலத்துக்குமுரியதனை ஒரு காலமாக விரித்துப் புணர்த்தால், ஏனைக் காலத்தையுணர்த்தாது ஆதலானும், கொன்றயானை எனவும், கொல்லும் யானை எனவும் தனித்தனி விரித்துப் புணர்க்கினும், முறையே றகர வகரமும் உம்மும் புணர்ச்சி பற்றிக் கெட்டன என்றாகுமன்றி தொக்கன வென்றாகா ஆதலானும் என்க. நூற்பா எண் - 425 உரை வழி கட்டுரை - ஈண்டு வார்த்தையாடலை (பேச்சை)க் குறித்து நின்றது. நூற்பா எண் - 427 உரை வழி குறியீடு - பெயரிடுதல் ஆட்சி - எடுத்தாளல் நூற்பா எண் - 428 உரை வழி கட்டளை - ஆணை ஒருதலை - நிச்சயம் நூற்பா எண் - 430 உரை வழி கடைநிலை - இறுதிநிற்பன ஏற்றுதல் - ஒருங்கு முடித்தல், அடக்குதல் நூற்பா எண் - 432 உரை வழி ‘வில்லகவிரலிற் பொருந்தியவாறு’ என்பது ‘வில்லகவிரலிற் பொருந்தி யவர்’ எனவும் பாடம். வில் அக விரல் - வில்லை யுள்ளடக்கியவிரல் என்பது பொருள். நூற்பா எண் - 433 உரை வழி கடைப்பிடித்தல் - நிச்சயமாகக் கோடல் நூற்பா எண் - 434 உரை வழி சேரி - ஊர் திட்பம் - திடம் நூற்பா எண் - 440 உரை வழி பீர் - பீர்க்கு பகவன் - இறைவன் அளித்தல் - அருள்செய்தல் தேறியார் - தெளிந்தார் தவறு - குற்றம் சுட்டிக்கூறாவுவமை - தொகை யுவமை நூற்பா எண் - 441 உரை வழி வைப்பு - வைப்புப்பொருள் “ஆன்முன் வரூஉமீகாரபகரம் - ஆப்பீ” நூற்பா எண் - 442 உரை வழி கான்மேனீர் பெய்துவருதும் - கால்கழீஇ வருதும் என்றது மலங்கழுவி வருதும் என்பதை உணர்த்திற்று. புலிநின்றிறந்தநீரல்லீரம். புலி மூத்திரம், “களிறு நின்றிறந்த நீரல்லீரத்து” என்பது நற்றிணை 103ஆம் செய்யுள். நூற்பா எண் - 451 உரை வழி தகைத்தல் - தடுத்தல் அட்டில் - சமையல்வீடு நூற்பா எண் - 453 உரை வழி வெரிந் - முதுகு ஓதி - ஓந்தி நூற்பா எண் - 460 உரை வழி அகலம் - மார்பு கௌவை - அலர் = பழிமொழி காலேகம் - கலவைச்சாந்து சாலேகம் - சாளரம் நூற்பா எண் - 461 உரை வழி கரித்தல் - எரிதல் நூற்பா எண் - 462 உரை வழி கண்ணுளர் - கழைக்கூத்தர் ஒக்கல் - சுற்றம் பதம் - உணவு கலைச்சொல் நிரல் (நூற்பாவழி) (நூற்பா எண்) அ அஃறிணை 1, 3 அஃறிணை இயற்பெயர் 171 அஃறிணைக் கிளவி 43 அஃறிணைக்குரிமை 201 அஃறிணை விரவுப்பெயர் 150 அச்சக் கிளவி 100 அசைக்குங் கிளவி 425 அசைச்சொல் நீட்டம் 153 அசைநிலைக் கிளவி 250, 267, 271, 279 அடிமறிச் செய்தி 407 அடிமறி மொழிமாற்று 404 அண்மைச் சொல் 127, 131 அதுச் சொல் வேற்றுமை 213 அதுவென் வேற்றுமை 87, 94 அதுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி 79 அவையல் கிளவி 442 அளபெடைப் பெயர் 135, 141, 149 அளவின் பெயர் 417 அறியாப் பொருள் 31 அன்மைக் கிளவி 25 அன்மொழித் தொகை 412, 418 ஆ ஆக்கக் கிளவி 22 ஆக்கமொடு கூறல் 20 ஆகுபெயர்க் கிளவி 114 ஆடியற் பெயர் 165 ஆடூஉ அறிசொல் 2, 5 ஆண்மை அறிசொல் 12 ஆண்மை இயற்பெயர் 176 ஆண்மைச் சினைப்பெயர் 177 ஆண்மை சுட்டிய சினைமுதற் பெயர் 178 ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி 4, 12 ஆண்மை முறைப்பெயர் 179 ஆய்தப் பெயர் 167 ஆயென் கிளவி 212 ஆரைக் கிளவி 270 ஆற்றுப்படை 462 இ இகர இறுபெயர் 125 இசைநிறைக் கிளவி 250 இசைப்படு பொருள் 423 இடைச்சொல் கிளவி 159 இடைநிலை 237 இதுசெயல் வேண்டும் என்னுங் கிளவி 243 இயற்சொல் 397, 398 இயற்பெயர் 174, 175 இயற்பெயர்க் கிளவி 38, 41, 196 இயற்கைப் பொருள் 19 இரட்டைக் கிளவி 48 இரவின் கிளவி 444 இருதிணை 10 இருதிணைக்கும் ஓரன்ன உரிமை 201 இருதிணைச் சொல் 172, 222 இருதிணைப் பிரிந்த வைம்பாற் கிளவி 161 இருபாற் கிளவி 219 இருபாற் சொல் 3 இருபெயர் 417 இருபெயரொட்டு 114 இருமொழி மேலும் ஒருங்குடன் நிலையல் 419 இருவயின் நிலையும் வேற்றுமை 101 இற்றெனக் கிளத்தல் 19 இறைச்சிப் பொருள் 196 இன்னெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி 77 இனச்சுட்டில்லாப் பண்பு கொள் பெயர் 18 ஈ ஈயென் கிளவி 445 உ உடன்மொழிப் பொருள் 188 உடனிலை அறிதல் 458 உடைப் பெயர் 165 உம்மை எச்சம் 436 உம்மைச் சொல் 255 உம்மைத் தொகை 412, 417, 421 உம்மை தொக்க எனாவென் கிளவி 289 உம்மை தொக்க பெயர் 418 உயர்திணை 1, 2, 4 உயர்திணைக்கு உரிமை 201 உரிச்சொல் கிளவி 159, 297 உருபு தொக வருதல் 104 உருபு தொடர்ந்து அடுக்கிய வேற்றுமைக் கிளவி 102 உருபுநிலை 69 உவமத் தொகை 412, 414 உள்ளதன் நுணுக்கம் 330 உளவென் கிளவி 220 உறழ்துணைப் பொருள் 16 உறுப்பின் கிளவி 56 எ எச்சக் கிளவி 285 எஞ்சுபொருட்கிளவி 284, 430, 439 எடுத்த மொழி 60 எண்ணியற் பெயர் 165, 417 எண்ணின் பெயர் 417 எண்ணுக்குறிப் பெயர் 168 எண்ணுத்திணை விரவுப்பெயர் 51 எதிர்மறை எச்சம் 435 எழுத்துப்பிரிந் திசைத்தல் 395 எழுவாய் வேற்றுமை 65 எற்றென் கிளவி 263 என்றென் கிளவி 259 என்னா மரபு 422 எனவென் எச்சம் 438 எனவென் கிளவி 258 ஏ ஏதுக் கிளவி 92 ஐ ஐம்பால் 10 ஐயெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி 71 ஒ ஒடுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி 73 ஒப்பல் ஒப்புரை 74 ஒப்பில் போலி 278 ஒப்பினாகிய பெயர்நிலை 168 ஒப்பொடு வரூஉங் கிளவி 163, 220 ஒருசொல் அடுக்கு 411 ஒருசொல் பலபொருள் 297 ஒருபெயர்ப் பொதுச்சொல் 49 ஒருபொருள் இருசொல் 460 ஒருபொருள் குறித்த வேறுசொல் 399 ஒருமை இயற்பெயர் 176 ஒருமை சுட்டிய பெயர்நிலைக்கிளவி 461 ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவி 27 ஒருவழியுறுப்பு 80 ஒருவினைக் கிளவி 74 ஒருவினை யொடுச்சொல் 91 ஒருமைச் சினைப்பெயர் 177 ஒருமை சுட்டிய சினைமுதற் பெயர் 178 ஒழியிசை எச்சம் 434 ஒன்றறி கிளவி 8 ஒன்றறிசொல் 3 ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவி 27 ஒன்றுமார் வினை 86 ஓ ஓம்படை ஆணை 396 ஓம்படைக் கிளவி 97 க கடிசொல் 452 கடியென் கிளவி 383 கண்ணென் வேற்றுமை 84, 88, 213 கண்ணெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி 81 கயவென் கிளவி 322 கழுமென் கிளவி 351 காரணக் கிளவி 40 காலக் கிளவி 207, 221 காலங் கண்ணிய என்ன கிளவி 229 காலமொடு வரூஉம் வினைச்சொல் 201 கிளைநுதல் பெயர் 410 குடிப் பெயர் 165 குழுவின் பெயர் 165 குற்றியலுகரம் 123 குறிப்பொடு வரூஉங் காலக் கிளவி 215 குறுக்கும் வழிக் குறுக்கல் 403 குறைச்சொல் கிளவி 453 குன்றியலுகரம் 8, 203, 217 கொடுவென் கிளவி 447, 448 கொடையெதிர் கிளவி 99 கொன்னைச் சொல் 254 ச சார்பென் கிளவி 84 சினைநிலைக் கிளவி 85 சினைநிலைப் பெயர் 165 சினைப்பெயர் 174, 175 சினைமுதற் கிளவி 16, 33 சினைமுதற்பெயர் 174, 175 சினையறி கிளவி 114 சுட்டிக் கூறல் 36 சுட்டுப்பெயர் 40 சுட்டுப்பெயர்க் கிளவி 38 சுட்டுமுதற் பெயர் 137, 142, 148 சுண்ணம் 404, 406 செஞ்சொல் 284, 437 செந்தமிழ் சேர்ந்தபன்னிரு நிலம் 400 செந்தமிழ் நிலம் 398 செய்கென் கிளவி 204 செய்தென் எச்சம் 239 செய்யும் என்னுங் கிளவி 227 செய்யுமென் கிளவி 235 செய்யுள் ஈட்டச் சொல் 397 செய்யுள் மருங்கு 463 செய்யென் கிளவி 450 செயப்படுபொருள் 246 செயற்கைப் பொருள் 20 செயற்படற் கொத்த கிளவி 110 செறற்சொல் 56 சேய்மையின் இசைக்கும் வழக்கம் 152 சொல்லென் எச்சம் 441 சொல்வேறு நிலைஇப் பொருள்வேறு நிலையல் 405 சொற்குறிப்பு 89 சொன்மை தெரிதல் 156 த தகுதி 17 தஞ்சக் கிளவி 266 தடவென் கிளவி 321 தடுமாறு தொழிற்பெயர் 95 தருசொல் 29 தன்மைச் சுட்டல் 25 தன்மைச் சொல் 43, 202 தன்மை திரிபெயர் 56 தன்வினை உரைக்குந் தன்மைச் சொல் 203 தன்னுளுறுத்த பன்மை 187 தாமென் கிளவி 184 தாவென் கிளவி 446 தானென் கிளவி 185 தானென் பெயர் 137 திசைச் சொல் 397 திசைச்சொற் கிளவி 400 திசைநிலைக் கிளவி 449 திணைநிலைப் பெயர் 165 திரிசொல் 397 திரிசொற் கிளவி 399 தில்லைச் சொல் 253 தீர்ந்துமொழிக் கிளவி 110 துயவென் கிளவி 368 தெய்வஞ் சுட்டிய பெயர்நிலைக் கிளவி 4 தெரிந்த கிளவி 32 தெரித்துமொழி கிளவி 55 தெரிபுவேறு நிலையல் 157 தொகுக்கும்வழித் தொகுத்தல் 403 தொகைமொழி நிலை 412 தொழிற்படக் கிளத்தல் 246 தொழிற்பெயர் 139 தொழின்முதல் நிலை 112 தொன்னெறி மரபு 110 தொன்னெறி மொழி 449 ந நளியென் கிளவி 323 நிரல்நிறை 404, 405 நிலப்பெயர் 165 நிறைப் பெயர் 454 நிறைப்யெர்க் கிளவி 417 நின்றாங்கு இசைத்தல் 58 நீட்டும்வழி நீட்டல் 403 நும்மின் திரிபெயர் 143 நோக்கல் நோக்கம் 93 ப பகுதிக் கிளவி 17 பண்பின் தொகை 412, 416 பண்பினாகிய சினை முதற் கிளவி 220 பண்புகொள் கிளவி 220 பண்புகொள் பெயர் 114, 134, 140, 165, 168 பண்புதொக வரூஉங் கிளவி 418 பல்பெயர் 417 பல்லோர் அறியும் சொல் 2 பல்லோர் படர்க்கை 227 பலசொல் ஒருபொருள் 297 பலர்சொல் நடை 421 பலர்வரை கிளவி 173 பலரறிசொல் 7 பலவற்றுப் படர்க்கை 216 பலவறி சொல் 3, 9 பற்றுவிடு கிளவி 110 பன்மை இயற்பெயர் 176 பன்மை யுரைக்கும் தன்மைக் கிளவி 209 பன்மைச் சினைப்பெயர் 177 பன்மை சுட்டிய சினைநிலைக் கிளவி 61 பன்மை சுட்டிய சினைமுதற் பெயர் 178 பால்பிரிந் திசையா உயர்திணை 57 பால்மயக் குற்ற ஐயக் கிளவி 23 பால்வரை கிளவி 110 பால்வரை தெய்வம் 57 பாலறி மரபு 211 பாலறி வந்த அஃறிணைப் பெயர் 167 பாலறி வந்த உயர்திணைப் பெயர் 162 பாலறி வந்த என்ன பெயர் 166, 170 பிண்டப் பெயர் 90 பிரிநிலை எச்சம் 431 பிரிவில் அசைநிலை 280 பிறிதுபிறி தேற்றல் 104 பிறிது பொருள் கூறல் 35 பிறிதுபொருள் சுட்டல் 115 பின்மொழி நிலையல் 419 புணரியல் நிலை 250 புனிறென் கிளவி 375 பெண்டென் கிளவி 163 பெண்மை இயற்பெயர் 176 பெண்மைச் சினைப்பெயர் 177 பெண்மை சுட்டிய உயர்திணை 4 பெண்மை சுட்டிய சினைமுதற் பெயர் 178 பெண்மை முறைப்பெயர் 179 பெண்மையடுத்த மகனென் கிளவி 164 பெயர்க்குரி மரபு 290 பெயர்ச்சொற் கிளவி 110 பெயர்தோன்றுநிலை 65 பெயர்நிலைக் கிளவி 41, 70, 164, 186, 191, 449 பெயர்ப் பயனிலை 66 பெயரின் தோன்றும் பாலறி கிளவி 11 பெயரினாகிய தொகை 67 பெயரெஞ்சு கிளவி 236, 238, 433 பொதுப்பிரிபாற் சொல் 44 பொருட்கிளவி 76 பொருண்மை தெரிதல் 156 பொருண்மை நிலை 157 பொருள்சென் மருங்கு 106 பொருள் தெரிநிலை 53 பொருள்நிலைமரபு 419 பொருள் புணர்ந்த கிளவி 15 பொருளொடு புணர்தல் 411 பொருளொடு புணரா சுட்டுப்பெயர் 37 ம மக்கட் சுட்டு 1 மகடூஉ அறிசொல் 2, 6 மகளென் கிளவி 163 மகனென் கிளவி 163 மந்திரப் பொருள் 449 மயங்குமொழிக் கிளவி 247 மற்றென் கிளவி 262 மற்றைய தென்னுங் கிளவி 264 மன்றவென் கிளவி 265 மன்னாப் பொருள் 34 மன்னைச் சொல் 252 மாரைக் கிளவி 7, 207 மாவென் கிளவி 273 மிகுதி செய்யும் பொருள் 299 முதலறி கிளவி 114 முதற்சினைக் கிளவி 87 முந்நிலைக் காலம் 240 முப்பால் 210 முப்பாற் சொல் 2 முழுதென் கிளவி 326 முற்படக் கிளத்தல் 39 முற்றிய உம்மைத்தொகை 285 முற்றியன் மொழி 427 முறைநிலைப் பெயர் 165 முறைப் பெயர் 126, 153, 174, 175, 179 முறைப்பெயர்க் கிளவி 136, 147 முன்மொழி நிலையல் 419 முன்னத்தினு ணருங் கிளவி 56, 459 முன்னிலை அசைச்சொல் 274 முன்னிலைக் கிளவி 223 முன்னிலை சுட்டிய ஒருமைக் கிளவி 462 முன்னிலை வினைச்சொல் 450 மூவிடம் 28 மெய்ந்நிலை பொதுச் சொல் 240 மெய்ந்நிலை மயக்கு 449 மெய்ப்பொருள் 120 மெய்பெறக் கிளந்த உரிச்சொல் 389 மெய்பெறக் கிளந்த கிளவி 463 மெய்யறி பனுவல் 96 மெலிக்கும் வழி மெலித்தல் 403 மேலைக் கிளவி 215 மொழிப்பொருட் காரணம் 394 மொழிபுணர் இயல்பு 404 மொழிமாற்றி யற்கை 409 மொழிமாற்று 404 ய யாணர்க் கிளவி 379 யானென் பெயர் 137 வ வடசொல் 397 வடசொற் கிளவி 401 வடவெழுத்து 401 வண்ணச் சினைச்சொல் 26 வயாவென் கிளவி 371 வருசொல் 29 வலிக்கும்வழி வலித்தல் 403 வழக்கினாகிய உயர்சொல் கிளவி 27 வழக்கு 17 வழக்குவழி 50 வழாஅல் ஓம்பல் 13 வாராக் காலம் 239, 241, 245 வாரா மரபு 422 வாழ்ச்சிக் கிழமை 98 வியங்கோள் 222 வியங்கோள் எண்ணுப்பெயர் 45 வியங்கோள் கிளவி 226 விரிக்கும்வழி விரித்தல் 403 விரைசொல் அடுக்கு 424 விரைந்த பொருள் 241 விளிகொள் பெயர் 120, 128 விறற்சொல் 56 வினாவின் கிளவி 32, 210 வினாவின் பெயர் 137, 143, 148 வினாவுடை வினைச்சொல் 244 வினைக் குறிப்பு 71 வினைச்சொற் கிளவி 241, 245 வினைசெய் இடம் 81 வினைசெயன் மருங்கு 250 வினைப்படு தொகுதி 33 வினைப்பெயர் 165 வினைப்பெயர்க் கிளவி 168 வினைமாற்று 262 வினைமுதல் உரைக்கும் கிளவி 114 வினைமுதல் கருவி 73 வினைமுதற் கிளவி 234, 242 வினையின் தொகுதி 415 வினையின் தொகை 412 வினையின் தோன்றும் பாலறி கிளவி 11 வினையெஞ்சு கிளவி 222, 228, 236, 432, 457 வினைவேறு படாஅப் பலபொருள் ஒருசொல் 52, 54 வினைவேறு படூஉம் பலபொருள் ஒருசொல் 52, 53 வெளிப்பட வாரா உரிச்சொல் 298 வெளிப்படு சொல் 298 வேட்கைப் பெருக்கம் 371 வேற்றுமைக் கிளவி 110 வேற்றுமைத் தொகை 412, 413 வேற்றுமை தொக்க பெயர் 418 வேற்றுமைப் பொருள் 83 வேறுபெயர்க் கிளவி 42 வேறுபொருள் குறித்த ஒருசொல் 399 வேறுவினைக் கிளவி 74 வேறுவினைப் பொதுச்சொல் 46 வேறென் கிளவி 222 கலைச்சொல் நிரல் (உரைவழி) (நூற்பா எண்) அ அஃறிணை ஆண் 181 அஃறிணைக் கிளவி 45 அஃறிணைச்சினை 61 அஃறிணைப் பன்மைப் படர்க்கை 216 அஃறிணைப்பால் தோன்ற நிற்றல் 94 அஃறிணைப் பெண் 180 அஃறிணைப் பெயர் 120 அஃறிணைப் பெயரிலக்கணம் 171 அஃறிணைப் பொருளென்பதுபட வருதல் 250 அஃறிணை வினைக்குறிப்பு 224 அண்மை நிலை 1 அணிகுறித்துப் பிறிதொரு பொருண்மேனிற்றல் 443 அணிநிலம் 29 அணியிலக்கணம் 157 அதிகாரப் புறனடை 45 அநுவாதம் 83 அநுவாத மாத்திரம் 10 அய்யவும்மை 255 அர்ஈற்றுத் தொழிற்பெயர் 139 அரவமாகிய இசைப் பொருண்மை 349 அவாய்நிலை 1, 235, 429 அவைக்கண் வழங்கப்படுஞ்சொல் 442 அளபெடைப் பெயரொழித்து நின்ற பெயர் 152 அளவடி 406 அறிபொருள் வினா 13 அறுபொருட்குமுரிமை 234 அறுவகைத் தொகைச் சொல் 420 அறுவகை வேற்றுமையிலக்கணம் 69 அன்பெற்ற விகற்பம் 202 அன்மைக்கிளவி 25 அன்மைத் தன்மை 25 அன்மொழிப் பொருள் 83 அன்னீற்றிற்குரிய காலவெழுத்து 206 அன்னீற்றுப்பெயர் 195 ஆ ஆடூஉ அறிசொல் 1 ஆண்மைச் சினைப் பெயர் 181 ஆண்மைச் சினை முதற்பெயர் 181 ஆண்மையியற்பெயர் 181 ஆர் ஈற்று எதிர்கால முற்றுச்சொல் 1 ஆராய்ச்சி 288 ஆரியச்சிதைவு 398 ஆரீற்று முற்றுச் சொல் 207 ஆரென்னு மிடைச் சொல் 270 ஆற்றுப் படைச்செய்யுள் 462 ஆனீற்றளபெடைப் பெயர் 135 ஆனீற்றிற்குரிய காலவெழுத்து 206 ஆனீற்றுப் பண்புகொள் பெயர் 134 ஆனீற்றுப்பெயர் 133 இ இசைக் குறிப்பு 297 இசை நிறைத்தல் 250 இசைநிறையடுக்கு 423 இசை நூலார் 174 இசைப் பொருள் 358 இசைப் பொருண்மை 258, 309 இசையெச்சம் 440 இடப் பொருண்மை 81 இடம் வரையறுத்தோதாமை 260 இடம் வரையறாமை 279 இடவழு 11 இடவேறுபாடு 428 இடும்பையுமாகிய குறிப்பு 353 இடைச்சொற்குச் சிறப்பிலக்கணம் 249 இயல்பாதல் 118 இயல்பின்மை மாத்திரை 182 இயல்விளிக்கண் திரியாது நின்ற பெயரீறு 118 இயைபின்மை நீக்கல் 182 இரக்கமுங் கேடுமாகிய குறிப்பு 350 இரண்டாம் வேற்றுமைத் தொடர் 112 இரவின் கிளவி 444 இருசார்மொழி 401 இருசொற்றொகை 417 இருதிணைக்கும் பொதுவாகிய சொல் 172 இருதிணைப் பெயர் 51 இருதிணைப் பொருள் 45 இருதொடர் 250 இருபெயர்ப் பண்புத் தொகை 419 இருபெயரொட்டுப் பண்புத் தொகை 20 இருபொருளுணர்த்தல் 250 இருமொழித்தொடர் 1 இரு மொழிமேனிற்றல் 419 இருவகையெச்சம் 427 இருவினைப் பயனுறுதல் 242 இல்லாப் பொருள் 34 இலக்கணச் சூத்திரங்கள் 52 இலக்கண மன்மை 27 இலக்கண வழக்கு 16 இலக்கணவெழுத்து 208 இழிபெயர் 91 இளமைக் குறிப்புப் பொருள் 311 இறந்தகாலத்துச் சொல் 239 இறந்தகால முற்றுச்சொல் 1 இறந்த பொருண்மை 263 இறுதியிடைச் சொல் 228 இறை பயப்பது 13 இனஞ்சுட்டாதன 26 இனஞ்சுட்டி நின்றன 26 இனப்பொருள் 18, 35 ஈ ஈற்றசையேகாரம் 257 ஈற்றயனீடல் 118 ஈறுதிரிதல் 118 ஈன்றணிமையாகிய குறிப்பு 375 உ உணர்த்தும் வாயில் 393 உந்தி 399 உம்மையெச்ச வேறுபாடு 436 உயர்சொற் கிளவி 416 உயர்திணைக்கண் பெயரிற்றிரிந்த ஆணொழி மிகுசொல் 50 உயர்திணைக்கண் வரும் உம்மைத் தொகை 421 உயர்திணைச் சினை 61 உயர்திணைத் தெரிநிலை வினை 215 உயர்திணைப் படர்க்கை வினை 205, 208 உயர்திணைப் பெயர் 120 உயர்திணை முடிபு கோடல் 43 உயர்திணையாயிசைத்தல் 58 உயர்திணை விரவுப் பெயர் 120 உயர்திணைவினை 202 உயர்திணை வினைக்குறிப்பு 224 உயிரீறு 124 உரிச்சொற் கிளவி 416 உரிச்சொனீர்மை 269 உருபு தொகப் பொருள் நிற்றல் 83 உருபு தொடர்ப் பொருள் 413 உருபு தொடர்மொழி 105 உருபு மயக்கம் 84 உருபேற்றல் 62 உரை தொடங்குதல் 279 உரையாசிரியர் 1, 4, 5, 13, 26, 29, 40, 54, 60, 62, 68, 74, 7-2, 83, 102, 114, 120, 161, 161, 174, 182, 187, 255, 272, 288, 291, 293, 294, 408, 415, 426, 428, 440, 448, 450 உரையிற் கோடல் 220 உலைமூக்கு 53 உவம வழுஆ 16 உவமவுருபு தொடர்ப் பொருள் 414 உள்ளமிகுதி 378 உளப்பாட்டுத்தன்மை 202 உறழ்பொருள் 16 உறுப்பின் கிழமை 80 உறுப்புத் திரிதல் 399 உறைநிலப்பெயர் 98 எ எச்சங்குறித்து நிற்றல் 255 எச்சத்தொடர் 237 எச்சப் பொருண்மை 236 எச்சப் பொருண்மை குறியாது நிற்றல் 285 எச்ச வாராய்ச்சி 92 எச்சவும்மை 255 எஞ்சாப் பொருள் 255 எஞ்சுபொருட் கிளவி 437, 439 எடுத்தோதாத விடைச் சொல் 296 எண்ணப்படும் பெயர் 288 எண்ணிடைச்சொல் 82 எண்ணிடைச் சொற்கள் 293 எண்ணியற் பெயர் 191 எண்ணின்கண் வரும் இடைச்சொல் 417 எண்ணுதற்கண் வாராமை 289 எண்ணுப்பொருண்மை 258 எண்ணும்மை 255 எண்ணேகாரம் 257 எதிர்காலத்துப் பொருண்மையைக் கிளத்தல் 241 எதிர்காலத்து வரும் பகரம் 9 எதிர்மறைப் பொருள் 244 எதிர்மறைப் பொருண்மை 207 எதிர்மறையன்மை 342 எதிர்மறையும்மை 255 எதிர்மறையெச்சம் 228 எதிர்மறையோகாரம் 256 எதிர்மறைவாய்பாடு 236 எதிர்மறைவினைச் சொல் 450 எழுத்துப் பிரிந்து பொருளுணர்த்தல் 395 எழுத்துச் சாரியை 251, 296 எழுத்துப்பேறு 216, 451 எழுத்தொப்புமை 57 ஏ ஏகாரத்தான்வரும் எண் 290 ஏகாரப் பிரிநிலை 431 ஏகாரவெதிர் மறை 435 ஏதுச்சொல் 92 ஏதுப் பொருண்மை 92, 112 ஏயென்னு மிடைச் சொல் 272 ஏவாமைக்குறிப்பு 282 ஏழுவினை 225 ஏற்புழிக் கோடல் 10, 34, 41, 67, 104, 417, 461 ஏற்புழிப் பெறுதல் 250 ஏனாதி 166 ஏனைப் பாடைச் சொல் 397 ஏனையெச்சம் 235 ஐ ஐகாரவீற்றிடைச் சொல் 264 ஐந்தீற்று வினையெச்சம் 228 ஐயக்கிளவி 24 ஐயப் புலமாகிய பொதுப் பொருள் 25 ஒ ஒப்புமையுணர்த்தாத போலிச்சொல் 278 ஒருசார் வினைச்சொல் 92 ஒருசொல் ஒரு பொருட் குரித்தாகிய திரிசொல் 399 ஒருசொல் ஒருபொருட் குரித்தாதல் 297 ஒருசொல் பல பொருட்குறித்தல் 399 ஒருசொல்லிலக்கண முடைமை 401 ஒரு சொன்னடைத்தாய் உருபேற்றல் 291 ஒருதிணைச் சொல் 172 ஒரு தொடர்க்கொழிபாய் எச்சம் 430 ஒரு நிமித்தத்தான் இரண்டு திணைப் பொருளுமுணர்த்துதல் 174 ஒருபொருட்கட் பலவாய்பாடு 215 ஒருபொருட்கண் ஒரு வாய்பாடு 215 ஒருபொருட் கிளவி 13, 399 ஒருபொருண்மேற் பலசொற் கொணர்ந்தீட்டல் 397 ஒருபொருள் நுதலி வரும் பல ஓத்தினது தொகுதி 1 ஒருமை சுட்டிய பெயர் நிலைக் கிளவி 462 ஒருமைத் தன்மை 202 ஒருமைத் தன்மை வினை 204 ஒருமையுணர்த்துந் தன்மைச் சொல் 203 ஒருமொழிப் புணர்ச்சி 195, 207 ஒழியிசை யோகாரம் 256 ஒன்றனை யுணர்த்தும் படர்க்கைவினை 217 ஒன்றியற் கிழமை 79 ஒன்று பல குழீஇய தற்கிழமை 79 ஒன்றென முடித்தல் 44, 45, 49, 452 ஓ ஓகார எதிர்மறை 435 ஓகாரப் பிரிநிலை 431 ஓகாரவொழியிசை 434 ஓம்படைப் பொருண்மை 97 ஓம்படைப் பொருள் 93 ஓரீற்றவாகிய வினை 427 ஓரெழுத்தொருமொழி 1 க கட்டுரைக்கண் அசைநிலை 277 கட்டுரைச் சுவை 62 கடா அன்மை 2 கடி சூத்திரம் 76 கருப்பொருளுணர்த்தும் விரவுப் பெயர் 197 கருமச்சார்ச்சி 84 கருமமல்லாச் சார்ச்சி 85 கழிந்தபொருள் பற்றி வருங் கவலை 359 கழிவாகிய குறிப்பு 359 காரக ஏது 77 காரகம் 112 காரண காரியப் பொருண்மை 457 காரணப் பொருண்மை 40 காரணம் 112 காலக்கடவுள் 57 காலக்கிளவி 11 காலத்தின் கிழமை 79 காலந்தோன்றாமை 62 காலப்பிறிதின் கிழமை 80 காலம் விளங்காத பெயர் 213 காலமுணர்த்தாது வினை மாத்திர முணர்த்தும் பெயர் 415 காலவழு 11, 239, 245 காலவெழுத்து 207, 216, 234 காலவேறுபாடு 222 காவிதி 166 கிழமைப் பொருட்கண் தோன்றுஞ் சொல் 80 கிழமைப் பொருட்குரிய உருபு 99 கிழமைப் பொருண்மை 154 குணச்சொல் 416 குரையென்னுமிடைச் சொல் 272 குழுவின் வந்த குறிநிலை வழக்கு 389 குறிப்பான் எஞ்சி நின்றபொருள் 440 குறிப்புச் செயப்படுபொருள் 71 குறிப்புப் பொருண்மை 201, 258, 396 குறிப்போசை 282 குற்றுகரம் 228 குறிப்புவினை 427, 428, 432 குறிப்பு வினையெச்சம் 229, 414 கொடைச்சொல் 30 கொடைப் பொருளவாகிய சொல் 75 கொள்ளாப் பெயர் 119 ச சாதிப் பெயர் 196 சாரப்படும் சொல்லின் வேறாய் வருதல் 249 சாரப்படுமொழி 251 சான்றோர் செய்யுள் 217, 397 சிறப்பில்லாப் பெயர் 194 சிறப்பிலக்கணம் 62 சிறப்பும்மை 255 சிறப்புவிதி 275 சிறப்போகாரம் 256 சிறுவழக்கு 211 சினைக்கிளவி 85 சினைச்சொல் 88 சினைமுதற் கிளவி 224 சினை வினைக்குரிய எழுத்து 61 சினை வினையெச்சம் 416 சீர்நிலைதல் 408 சூத்திரயாப்பு 224, 416 செஞ்சொல் 436 செப்பு வழா நிலை 16 செப்புவழு 13, 35, 37 செய்தெனெச்சம் 457 செய்யப்பட்ட பொருள் 114 செய்யுட்கண் இசை நிறைத்து நிற்றல் 250 செய்யுட்கண் மரபு வழுவமைதி 40 செய்யுட்குரியசொல் 397, 410 செய்யுட்சுவை 97 செய்யுட் சொல் 397 செய்யுட் பொருள்கோள் 397 செய்யுமென்னும் பெயரெச்சம் 233 செய்யுள் செய்வுழிப்படும் விகாரம் 397 செய்யுள் முடிபு 45 செய்யுள் நெறி 18 செய்யுளிறுதி 257 செய்யுளிறுதிக்கண் நின்றிசைக்கும் ஈற்றசை 286 செய்யுளின்பம் 108, 210, 220 செய்யுளொழிபு 410 செய்யென் கிளவி 451 செயவெனெச்சம் 457 செயற்கென்னும் வினையெச்சம் 40 செலவுச்சொல் 30 செலவுத் தொழில் 30 செவ்வன் இறை 13, 15 செவ்வெண் தொகை 291, 293 செறிவென்னுங் குறிப்பு 347 சேய்நிலம் 29 சேறலொப்புமை 110 சொல்லாராய்ச்சி 60 சொல்லிசைக்கும் பொருள் 155 சொல்லிலக்கணம் 161 சொற்பெய்து விரித்தல் 83 சொற்பொருண்மை 252 ஞ ஞாபகஏது 77 ஞாபகவேதுப் பொருண்மை 92 த தகுதி 1 தட்டுப் புடையல் 281 தந்திரவுத்தி 119, 179 தம்மாற் சாரப்படுஞ்சொல் 251 தமக்கெனப் பொருளின்மை 249 தமிழ்ச் சொல் 401 தருசொல் 99 தலைதடுமாற்ற மென்னுஞ் தந்திரவுத்தி 190 தலைமைப் பொருள் 51 தலைமையில் பொருளை 51 தற்கிழமை 79 தன்பொருளிற்றீர்தல் 106 தன்மைக்கண் வருதல் 260 தன்மைக்குரிய சாரியை 187 தன்மைக்கேற்ற சாரியை 187 தன்மை திரிபெயர் 56 தன்மைப் பன்மை வினைச் சொல் 209 தன்மைவினை 202 தன்வினை கோடல் 436 தன்னியல்பு மாத்திரை 125 தன்னின் வேறாகிய பொருள் 156 தன்னினம் முடித்தல் 27, 36, 40, 81, 213 தன்னினும் பிறிதினுமாகிய கிழமை 79 தனிமொழி 1 தாது 415 தாளம் 174 திசைக்கூறு 82 திசைச்சொல் 449 திணைக்கண் தலைமை பற்றிய வழக்கு 49 திணையுள் அடங்காத தெய்வம் 4 திணையொடு பழகிய பெயர் 197 திணையொடு பழகிய விரவுப்பெயர் 197 திணைவழு 56 திணை வழுவமைதி 57, 210 திணைவழுவோடு கூடிய பால்வழு 61 திணை விராய் எண்ணப்பட்ட பெயர் 51 தெரிநிலையும்மை 255 தெரிநிலையோகாரம் 256 தெரிநிலை வினை 427, 428, 432 தெளிவுப் பொருண்மை 265 தென்பாண்டி நாட்டார் 400 தென்பாண்டிநாடு 400 தேர்த்தட்டு 399 தேவகை 82 தேற்றேகாரம் 257 தொக்க சொல்லல்லாதமொழி 412 தொக்கவழித்தொகை 415 தொகுதலிற்றொகை 412 தொகைச் சொற்கள் 179 தொகைச் சொற்குப் பயனிலை கோடல் 67 தொகையல்லாத தொடர்மொழி 420 தொகையாதலுடைமை 114 தொகையிலக்கணம் 67, 412 தொடர்நிலைச் செய்யுள் 155 தொடர்மொழி 1 தொடர்மொழி எச்சம் 440 தொடர்மொழிப் பொருள் 40, 110, 405 தொடிதுலாமென்னும் நிறைப்பெயர் 116 தொல்லாசிரியர் 62, 71, 90 தொழிலது முதனிலை 112 தொழிலிற் பிரிந்த ஆணொழி மிகுசொல் 50 தொழிலிற் பிரிந்த பெண்ணொழி மிகுசொல் 50 தொழிற்கிழமை 79 தொழிற்பயனுறுதல் 71 தொழிற்பொருண்மை 201 தொழினிலையொட்டு 198 தொன்னூலாசிரியர் 463 தொன்னூனெறி 463 ந நசையாகிய குறிப்பு 329 நடுக்கமாகிய குறிப்பு 316 நாற்கிளவி 202 நிகழ்காலச் சொல் 240 நிகழ்காலத்துப் பொருணிலை 240 நிலத்தின் கிழமை 79 நிலைப் பொருண்மை 215 நிலைபெறும் வேற்றுமை 101 நிறவேறுபாடு 373 நினைவும் துணிவுமாகிய குறிப்பு 337 நீயிரென்னும் பெயர் 190 நீயென்னும் பெயர் 189 நுண்மையாகிய பண்பு 374 நுணுக்கமாகிய குறிப்பு 330 நோக்கப்படும் பொருள் 93 நோயாகிய குறிப்பு 341 ப பக்கிசைத்தல் 420 படர்க்கைப் பெயரீறு 208 படர்க்கையாரை உளப்படுத்தல் 202 படர்க்கை வினை 10, 11, 202, 208 படர்க்கை வினைக்கீறாய் நின்று பாலுணர்த்துதல் 208 படுத்தலோசை 418 பண்பினது தொகை 412 பண்புக்கிழமை 79 பண்புகொள்பெயர் 17 பண்புகொள் பெயர்க்கொடை 27 பண்புச்சொல் 416 பண்புடைப் பொருள் 416 பண்புத்தொகை நிலைக் களத்துப் பிறத்தல் 418 பண்புத்தொகை புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை 1 பண்புத்தொகை யாராய்ச்சி 27, 41 பண்புப் பொருண்மை 258 பத்துவகையெச்சம் 397 பதக்குத் தூணியென்னும் அளவுப் பெயர் 116 பயனிலை கோடல் 62, 67 பயனின்மையாற் பயின்ற உரிச்சொல் 298 பயிலாத உரிச்சொல் 298 பரத்தலாகிய குறிப்பு 361 பலசொல் ஒரு பொருட்குரியது 399 பலசொல்லாற் றொகுதல் 417 பலபொருட்டொகுதி 90 பலபொருளொருசொல் 49 பலரறிசொல் 7, 421 பன்மைத்தன்மை 202 பன்மைபற்றிய வழக்கு 49 பன்மையுணர்த்துந் தன்மைச் சொல் 202 பன்மை யொருமை மயக்கம் 61 பன்மொழித்தொடர் 1 பாணி 174 பாதுகாவல் 193 பார்ப்பனச் சேரி 49 பால்வழு 11 பால் விளங்க நிற்கும் உயர்திணைப்பெயர் 162 பால் விளங்க வருமியல்பு 211 பால்விளங்க வரூஉம் அஃறிணைப்பெயர் 167 பாலுணர்த்தும் இடைச்சொல் 202, 208 பாலுள் அடங்காத பேடி 4 பாற்குரிமை 161 பிரிக்கப்பட்ட பொருள் 431 பிரிநிலையேகாரம் 257 பிரிநிலையோடு முடிதல் 431 பிரியாத்தொகை 416 பிறபாடைச் சொல் 397 பிறமொழிமேனிற்றல் 419 பிறிதின் கிழமை 79 பிறிதின்வினை கோடல் 457 பிறிதினியைபு நீக்கல் 182 பிறிதுபொருள் சுட்டும் ஆகுபெயர் 106 பிறிதுமொழிதலென்பதோரணி 157 பிறிது வந்தடைதல் 118 பிறிதுவினை கோடல் 38 பிறிதொன்றன் பொருட்கட் சேறலுடைமை 101 பிறிதொன்றனோடு தொக்கு நின்றபெயர் 65 பிறிதோர் வேற்றுமைப் பொருள் 114 பிறிதோருருபை யேற்றல் 104 பின்மொழிமேனிற்றல் 419 புடையானொப்புமை 401 புணர்ச்சிக் குறிப்பு 309 புள்ளியீற்றுப்பெயர் 129 புள்ளியீற்றுயர் திணைப் பெயர் 120 புள்ளியீறும் உயரீறுமாகிய அஃறிணைப்பெயர் 151 புறத்துறவு 451 புறத்தொகை 233 பெண்மகன் 164 பெண்மைச்சினைப் பெயர் 180 பெண்மைச் சினைமுதற் பெயர் 180 பெண்மை சுட்டாப் பேடு 4 பெண்மை முறைப்பெயர் 180 பெண்மையியற்பெயர் 180 பெயர்க்கிலக்கணமாகல் 62 பெயர்க்கேயாய தொகை 67 பெயர்ச்சொற்குப் பயனிலை கோடல் 62 பெயர் தோன்றிய துணை 65 பெயர் நிலைக் கிளவி 4 பெயர்ப் பாலறி சொல் 11 பெயர்ப் பொருண்மை 258 பெயர்வினைப் போலி 297 பெயரதியல்பு 192 பெயரா னெண்ணப் படுஞ்செவ்வெண் 290 பெயரிலக்கணம் 62, 66, 155 பெயரிற் பிரிந்த ஆணொழி மிகு சொல் 50 பெயரிற் பிரிந்த பெண்ணொழி மிகுசொல் 50 பெயரிறுதி நின்ற உருபு 104 பெயரிறுதியுருபு வருதல் 156 பெயரெச்சம் 428, 433 பெயரொடுபெயர் 67 பெயரொடு பெயர் தொக்கன 67 பெயரொடு வினை 67 பெயரொடு வினைவந்து தொக்க வினை 67 பெரிதென்னுங் குறிப்பு 343 பெருந்தொடர் 42 பெருமையாகிய பண்பு 320 பொதுவிதி 291 பொதுவிலக்கணம் 62, 108, 155, 160, 297 பொய்ப் பொருள் 66, 155 பொருட் கிழமை 79 பொருட் கினமாகிய பிற பொருளைக் குறிப்பால் உணர்த்தல் 60 பொருட்குரிய சொல்லாற் சொல்லுதல் 17 பொருட்குரிய வழக்கு 11 பொருட் பிறிதின் கிழமை 80 பொருண் மயக்காகிய பிசிச்செய்யுள் 449 பொருணிலை மரபு 419 பொருள் சிதையாமலுணர்த்துதற்கேற்ற வாய்பாடு 83 பொருள் மயக்கம் 84 பொருள் வரைத்துணர்த்தாச் சுட்டு 37 பொருள் வரைத்துணர்த்தும் பெயர் 37 பொருள் வேறுபாடு 160 பொருளதுபுடை பெயர்ச்சி 158 பொருளின் கிழமை 79 பொருளின் பொதுமை 46 பொருளினது புடை பெயர்ச்சி 200 பொருளுணர்த்து முறைமை 297 பொருளொடு புணர்த்துணர்த்த இசை குறிப்பு 396 பொருளோடு சொற்கியைபு 394 பொரூஉப் பொருள் 78 போலியுரை 5, 13, 40, 54, 60, 68, 74, 114, 174, 293, 401, 428, 448 ம மக்களிரட்டை 48 மகடூ அறிசொல் 1 மதவிகற்பம் 83 மயக்கமாகிய குறிப்பு 351 மரபு வழாநிலை 11, 38 மரபு வழு 11, 42, 46, 48, 49, 50, 60, 244, 246, 285, மரூஉமுடிபு 17 மன்னை யொழியிசை 434 மாட்டேறு 154 மாரீற்றுச் சொல் 207 மிகச்சொற் படாமை 416 முடிக்குஞ் சொற்பொருள் 66 முதல்வினைக்குரிய எழுத்து 61 முதலொடு குணம் இரண்டடுக்கி வருதல் 26 முதற்சினைப் பெயரியல் 90 முதற்சொல் 88 முதனிலை 410 முதனிலையாயபெயர் 264 முதுசொல் 449 முழுவதுந் திரிந்தன 399 முற்றுகரவீறு 123 முற்றுதலென்னும் பொருளது பண்பு 285 முற்றும்மை 255 முன்மொழிமேனிற்றல் 419 முன்னில்லதனையுண்டாக்குதல் 71 முன்னிலை ஒருமை 223 முன்னிலை குறித்து நின்ற ஒருமைச் சொல் 462 முன்னிலைச் சொல் 444 முன்னிலைச் சொல் விகாரம் 451 முதனிலைத் தொழில் காரணம் 228 முன்னிலைப் பாலறி கிளவி 11 முன்னிலை மொழி 274 முன்னிலை யசைச் சொல் 295 முன்னிலை வாய்பாடு 444 முன்னிலை வினைக் குறிப்பு 224 முன்னிலை வினைகோடல் 45 முன்னின்ற வெச்சம் 233 முன்னின்றாரை உளப்படுத்தல் 202 முன்னுள்ளதனைத் திரித்தல் 71 மூவிடம் 428 மூன்றிடத்துப் பெயர் 68 மூன்றுமாத்திரையின் மிக்கியல்பு 141 மெய்திரிந்தாயதற்கிழமை 79 மெய்ப்பொருள் 66, 155 மெய்ம்மையாகிய காரணம் 394 மென்பால் 110 மேலைக் கிளவி 217 மொழிபுணரியல் 404 மொழிமாற்றியுரைத்தல் 187 ய யாப்புறவு 155 யோகவிபாகம் 11 ர ரகார வீற்றளபெடைப் பெயர் 141 ரகார வீற்றுச்சுட்டு முதற்பெயர் 142 வ வடசொல் 401 வடநூலார் 1, 55, 416 வழுக்களைந்து சொற்களை ஆக்கிக் கொண்டமை 1 வடமொழிச் சிதைவு 196 வடமொழிப் பொருள் 196 வரலாற்று முறைமை 389, 394 வரவு தொழில் 29 வருமொழி வரையறை 86 வரையறை 52 வரையறையின்றி இருவகை வினையுங் கோடல் 232 வலியும் வருத்தமுமாகிய குறிப்பு 344 வழக்கிலக்கணத் தொழிபு 410 வழக்கின்கண் மரபு வழாநிலை 40 வழக்குநெறி 18 வழக்குப் பயிற்சி 159, 165, 220 வழுத்தலாகிய குறிப்பு 382 வழுவமைத்தல் 444 வன்பால் 110 வாரி புதிதாகப் படுதலாகிய குறிப்பு 379 வாழ்த்துதற் பொருண்மை 226 விசேட இலக்கணம் 91 விடுதலாகிய குறிப்பு 318 விதிப்பொருளவாகிய வாய்பாடு 236 விதிவினை 236, 450 விதிவினைச்சொல் 450 விரவுப் பெயர்த் தொகை 421 விரும்புதலாகிய பண்பு 334 விரும்புதலுணர்த்தல் 338 விலங்கிரட்டை 48 விளிகொள்ளும் பெயர் 119 வினாப்பொருளையுணர்த்துஞ் சொல் 210 வினா வழாநிலை 16 வினாவழு 11, 32 வினா வேகாரம் 257 வினா வோகாரம் 256 வினைக்கட் கிடந்த தொழில் 457 வினைக்கிலக்கணம் 112 வினைக்குறிப்பு 8, 213, 428 வினைச் செயப்படுபொருள் 71 வினைச் சொற் பொருண்மை 241 வினைசெயன் மருங்கு 292 வினைப் பாலறிசொல் 11 வினைப்பெயர் 234, 432 வினைப் பொருண்மை 258 வினைமுதல் வினை 232 வினைமுதற் பொருள் 95 வினைமுதற்றொழிற் பயன் 73 வினையினது தொகை 412 வினையெச்சம் 427, 428, 432, 457 வினையெச்சமாதல் 204 வெளிப்பட்ட உரிச்சொல் 298 வெளிப்படவாரா உரிச்சொல் 299 வெளிப்படுசொல் 373 வேண்டிக் கோடற் பொருண்மை 226 வேற்றுமைத் தொகை நிலைகளத்துப் பிறத்தல் 418 வேற்றுமை பொருடொக்க தொகை 412 வேற்றுமைப் பொருளையுடைய தொகை 412 வேற்றுமை யிலக்கணம் 62, 155 வேற்றுமையுணர்த்திப் பெயருணர்த்தல் 62 வேற்றுமையுமுடைமை 401 வேற்றுமையுருபை யிறுதியாகவுடைய சொல் 102 வேற்றுமையோடு இயைபில்லா உவமவுருபு தொடர்ப்பொருள் 414 வேறுபடுத்தல் 71 வேறுபல குழீஇய தற்கிழமை 79 வேறுவினைப் பொதுச் சொல் 46 ளகார ஈற்றுச் சுட்டுமுதற் பெயர் 148 ளகார வீற்று முறைப் பெயர் 147 னகார வீற்றுச் சுட்டுமுதற் பெயர் 142 னகார வீற்று முறைப் பெயர் 136, 147 தொல்காப்பியப் பதிப்புகள் கால வரிசையில் - சொல்லதிகாரம் வ. காலம் நூல் பகுதி, உரை பதிப்பாசிரியர் எண் 1. 1868 செப். சொல். சேனா. சி.வை. தாமோதரம் பிள்ளை (விபவ. புரட்டாசி) 2. 1868 நவ. ” இராசகோபால பிள்ளை (விபவ, கார்த்திகை) 3. 1892 சொல். நச்சர் ” 4. 1922 மார்ச் எழுத்து. சொல் (மூலம்) கா. நமச்சிவாய முதலியார் 5. 1922 மே தொல். மூலம் புன்னைவனநாத முதலியார் 6. 1923 மார்ச் சொல். சேனா. கந்தசாமியார் 7. 1927 சொல். இளம். ” 8. 1929 சொல். தெய்வ. ரா. வேங்கடாசலம் பிள்ளை 9. 1930 சொல். குறிப்புரை பி.சா.சு. சாஸ்திரியார் 10. 1934 சொல். சேனா. ஆறுமுக நாவலர் 11. 1937 சொல் (1, 2, 3) (மொழி) ” 12. 1938 சொல். சேனா. கணேசையர் 13. 1941 சொல். நச்சர் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை 14. 1943 மார்ச் தொல் - மூலம் தி.சு. பாலசுந்தரம் பிள்ளை 15. 1945 சொல் (மொழி) பி.சா.சு. சாஸ்திரியார் 16. 1946 சொல். சேனா. தேவநேயப் பாவாணர் 17. 1952 சொல். நச்சர்* தி.த. கனகசுந்தரம் பிள்ளை 18. 1954 சொல். சேனா. ஆ. பூவராகம் பிள்ளை 19. 1960 தொல். மூலம் பதிப்பாசிரியர் குழு (மர்ரே ராஜம்) 20. 1961 தொல். முழுவதும் புலியூர் கேசிகன் 21. 1962 சொல். நச்சர் கு. சுந்தரமூர்த்தி 22. 1962 சொல். நச்சர் இராம. கோவிந்தசாமி 23. 1963 சொல். இளம். கு. சுந்தரமூர்த்தி 24. 1963 சொல். தெய்வ. ” 25. 1963 சொல். வி.ஐ. சுப்பிரமணியன் 26. 1964 சொல். கல். பழைய கு. சுந்தரமூர்த்தி 27. 1966 சொல். சேனா. ” 28. 1970 சொல். சேனா. கு.மா. திருநாவுக்கரசு 29. 1971 சொல். கல். பழைய தெ. பொ. மீ. 30. 1977 தொல். சொல். அ.கு. ஆதித்தர் 31. 1981 தொல்.சேனா. கு. சுந்தரமூர்த்தி 32. 1988 சொல். இளம். அடிகளாசிரியர் 33. 1988 சொல். ஆராய்ச்சி காண்டிகையுரை (ச. பாலசுந்தரம்) தாமரை வெளியீட்டகம் 34. 1989 சொல்.ஆத்திரேயர் உரை வ. வேணுகோபாலன் 35. 1994 சொல். கருத்துரை விளக்கம் (தமிழண்ணல்) மணிவாசகர் பதிப்பகம் 36. 1994 சொல், படலம் நா. மகாலிங்கம் 37. 2002 தொல். எழுத்து ஆலந்தூர் எளிய உரை கோ. மோகனரங்கன் 38. 2003 சொல். இளம். மு. சண்முகம் பிள்ளை 39. 2003 சொல். இளம். " சொல். சேனா. " சொல். நச்சி. " சொல். தெய்வ. தி.வே. கோபாலைய்யர், " சொல். கல்லாடம் ந. அரணமுறுவல் 40. 2005 சொல். இளம் சாரதா பதிப்பகம் 41. 2005 சொல். சேனா சாரதா பதிப்பகம் 42. 2006 சொல். சேனா மு. சண்முகம் பிள்ளை 43. கூடிடமயயீயீலையஅ ஊடிடடயவமையசயஅ, ஞயசவ ஐஐ, ஆடிசயீhடிடடிபல - ளுலவேயஒ, ஊhயயீவநச ஐ, முயஅடை ஷ்எநடநbடை, துகூளு, 1978, துரநே 13 : யீ. 79 - 86, ஐஐகூளு, கூயஅடையேனர, ஐனேயை. 44. கூடிடமயயீயீலையஅ ஊடிடடயவமையசயஅ, ஞயசவ ஐஐ, ஆடிசயீhடிடடிபல - ளுலவேயஒ, ஊhயயீவநச ஐஐ; டிn உயளந, முயஅடை ஷ்எநடநbடை, துகூளு, 1982, துரநே 21 : யீ. 9 - 19, ஐஐகூளு, கூயஅடையேனர, ஐனேயை. 45. கூடிடமயயீயீலையஅ ஊடிடடயவமையசயஅ, ஞயசவ ஐஐ, ஆடிசயீhடிடடிபல - ளுலவேயஒ, ஊhயயீவநச ஐஐஐ; டிn உயளந ளலnஉசநனளைஅ, முயஅடை ஷ்எநடநbடை, துகூளு, 1985, னுநஉநஅநெச 28 : யீ. 67 - 80, ஐஐகூளு, கூயஅடையேனர, ஐனேயை. உரைவளம் 46. 1982 சூலை கிளவியாக்கம் ஆ. சிவலிங்கனார் 47. 1982 நவ. உருபியல் ” 48. 1982 டிச. உயிர் மயங்கியல் ” 49. 1983 ஏப். புள்ளி மயங்கியல் ” 50. 1983 செப். குற்றியலுகரப் புணரியல் ” 51. 1983 அக். வேற்றுமையியல் ” 52. 1984 மே வேற்றுமை மயங்கியல் ஆ. சிவலிங்கனார் 53. 1984 மே விளிமரபு ” 54. 1984 சூலை பெயரியல் ” 55. 1984 செப். வினையியல் ” 56. 1972 முதல் 1985 எழுத்து. சொல் (மொழி) கமில்சுவலபில் 57. 1985 எழுத்து. சொல் (மொழி) டி. ஆல்பர்ட் 58. 1988 செப். சொல். இளம். அடிகளாசிரியர் 59. 1988 அக். சொல் ” 60. 1988 டிச. எச்சவியல் (உ.வ.) ஆ. சிவலிங்கனார் 61. 1989 சொல். ஆத்திரேயர் உரை வ. வேணுகோபாலன் 62. 1989 சொல். சேனா. கு. சுந்தரமூர்த்தி