தொல்காப்பிய உரைத்தொகை - 5 சொல்லதிகாரம் நச்சினிர்க்கினியம் சி.வை. தாமோதரம் பிள்ளை (பதிப்பு - 1892) மீள்பதிப்பு - 2018 பதிப்பாசிரியர் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் தமிழ்மண் பதிப்பகம் நூற்குறிப்பு தொல்காப்பிய உரைத்தொகை – 5 சொல்லதிகாரம் – நச்சினார்க்கினியம் முதற்பதிப்பு (1892) சி.வை. தாமோதரம் பிள்ளை பதிப்பாசிரியர் மீள்பதிப்பு (2018) முதுமுனைவர் இரா. இளங்குமரனார் பதிப்பாசிரியர்கள் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் பக்கம் : 24+536 = 560 விலை : 875/- பதிப்பு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. bjh.ng.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்:  தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 560  f£lik¥ò : இயல்பு  படிகள் : 500   நூலாக்கம் : கோ. சித்திரா   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (Harrish)   அச்சு : மாணவர் நகலகம், பிராசசு இந்தியா, ரியல் இம்பேக்ட் சொல்யூசன், தூரிகை பிரிண்ட், வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.  தொல்காப்பிய உரைத்தொகை தொல்காப்பியம் நம் வாழ்வியல் ஆவணம்; நம் முந்தையர் கண்ட மொழியியல் வளங்கள் அனைத்தையும் திரட்டித் தந்த தேன் தேட்டு! அத்தேட்டைச் சுவைத்த கோத்தும்பிகள் பழைய உரையாசிரியர்கள். அவர்கள் உரைகளையெல்லாம் ஒன்று திரட்டி, வரிசையுறத் தமிழுலகம் கொள்ள வைத்த உரைத்தொகுதிகள் இவையாம்! முன்னைப் பதிப்பாசிரியர்கள் தெளிவுறுத்தும் மணிக்குவைகள் எல்லாமும், அவர்கள் வைத்த வைப்புப்படி வைத்த செப்பேடுகள் இத் தொல்காப்பிய உரைத் தொகையாம். மேலும், இவை கிடைத்தற்கு அரிய கருவூலமுமாம்! ***** ***** ***** இளம்பூரணர், சேனாவரையர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், தெய்வச் சிலையார், கல்லாடர் ஆகிய பழைய உரையாசிரியர்கள், உரை விளக்கம் பல காலங்களில் எழுதியுளர். எழுத்து, சொல், பொருள் ஆகியவற்றின் பதிப்புகள் ஒரே காலத்தில் ஒருவரால் வெளியிடப்பட வில்லை. அவற்றையெல்லாம் ஓரிடத்தில் ஒரே வேளையில் ஒட்டு மொத்தமாக முன்னைப் பதிப்பாசிரியர்கள் உரை - விளக்கம் - குறிப்பு - இணைப்பு ஆகியவற்றுடன் பெற வெளியிடும் அரிய பெரிய முயற்சியில் வெளியிடப்படுவது தமிழ்மண் பதிப்பகத்தின் இப்பதிப்பாகும். தொல்காப்பியத்திற்குக் கிடைத்த உரைகள் அனைத்தையும் ஒருமொத்தமாகத் தருவதால் இது, தொல்காப்பிய உரைத்தொகை எனப்பட்டது. தொகையாவது தொகுக்கப்பட்டது. இரா. இளங்குமரன் சி.வை. தாமோதரனார் “பழந்தமிழ்ப் பதிப்புக்குக் கால்கோள் செய்தவர் ஆறுமுக நாவலர். அதற்குச் சுவர் எழுப்பியவர் சி.வை. தாமோதரனார். முகடு வேய்ந்து அழகு படுத்தியவர் உ.வே. சாமிநாதர்” எனத் தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்களால் பாராட்டப் பட்டவர்களுள் நடுவாகத் திகழ்பவர் சி.வை.தா. அவர்கள். சைவ சித்தாந்த சமாசத்தின் வழியாக, சங்க இலக்கியப் பதிப்பை மருதூர் நாராயணசாமி அவர்கள் கொணர்ந்தார். அப்பதிப்பைத் திரு.வி.க. வின் நினைவுக் குறியாக்க விரும்பினார். திரு.வி.க. வோ, `சி.வை.தா’ நினைவுக் குறியாக்கக் கூறினார். (வா.கு. 945). அத்தகு தகவுடையவர் சி.வை.தா! ஈழ நாட்டு யாழ்ப்பாணத்தை அடுத்தமைந்த சிறுப்பிட்டியில் சி.வை.தா. பிறந்தார். பிறந்த நாள் கி.பி. 12.09.1832. பெற்றோர்: வைரவநாதர்- பெருந்தேவி. தந்தையார் தமிழ்ப்புலமையர்: தமிழ்ப் புலமைப் பணியும் செய்தவர்; தாமோதரர்க்கு அவரே முதல் ஆசிரியர். பின்னர், சுன்னாகம் முத்துக் குமார நாவலரிடம் இலக்கிய இலக்கணங்களைக் கற்றார். அதன்மேல், தெல்லியம்பதி, வட்டுக் கோட்டை, யாழ்ப்பாணம் ஆகியவற்றில் பயின்றார். கோப்பாய் ஆசிரியப் பயிற்சிப் பள்ளியில் பணியேற்றார். அப்பொழுது அவர் அகவை 20. திருத்தந்தை பெர்சிவல் என்பார் தாமோதரர் புலமை அறிந்து தமிழகத்துக்கு அவரை அழைத்து வந்து `தினவர்த்தமானி’ என்னும் கிழமை இதழின் ஆசிரியராக்கினார். ஆங்கிலர்க்குத் தமிழ் கற்பித்தார். அது தாமோதரரைச் சென்னை மாநிலக் கல்லூரித் தமிழாசிரியராக்கியது. அங்கிருந்து கொண்டு சென்னைப் பல்கலைக் கழக இளங்கலைத் தேர்வில் சிறந்த வெற்றிபெற்றார். அதன் பின், கள்ளிக் கோட்டை அரசுக் கல்லூரிப் பேராசிரியர் ஆனார். அதன்பின்னரே மணம்புரிந்தார். தந்தையற்ற குடும்பம்; துணையும் இழந்து, அவர் இளையவரையும் மணந்து (வள்ளியம்மை, முத்தம்மை) பெருங்குடி தாங்கியானார். அந்நிலையிலும் இவர் புலமை, சென்னை வரவு - செலவு - கணக்குத்துறைத் தலைமையுற்றார். அங்குப் பணிசெய்து கொண்டே சட்டத் தேர்வில் வென்றார் (1871) ஐம்பதாம் அகவையில் (1882) ஓய்வுபெற்று, ஓய்விலாத் தமிழ்த்தொண்டில் ஆழ்ந்தார். வீரசோழியம், திருத்தணிகைப்புராணம், இறையனார் அகப்பொருள், தொல்காப்பியம், கலித்தொகை, சூளாமணி, இலக்கண விளக்கம் ஆகியவற்றைத் தமிழுலகுக்குத் தந்தார். ஏடுகள், பதிப்புகள் பற்றி எழுத அத், தாமோதரப் பிறவியன்றி வேறொரு பிறவி தோன்றவில்லை என்பது என் சுவடிப் பதிப்புப் பட்டறிவு. அவர் பட்ட வாழ்வியல் இழப்பினூடு இன்னொருவர் இருப்பின் தமிழ்ப் பணியைத் தொட்டும் பார்த்திரார் என்பது திண்ணம்! `பிறப்பிறப்பு’ என்பது தானே தொடக்கமும் முடிவும். அது 1901 சனவரி 1 இல் நிகழ்ந்தது! “காமோதி வண்டர் கடிமலர்த்தேன் கூட்டுதல் போல் நாமோது செந்தமிழில் நன்னூல் பலதொகுத்த தாமோ தரம்பிள்ளை சால்பெடுத்துச் சாற்றவெவர் தாமோ தர முடையார் தண்டமிழ்ச் செந்நாட் புலவீர்!” - பரிதிமார் கலைஞர் இரா. இளங்குமரன் தொல்காப்பியம் அரிய பதிப்புகளும் தேவைகளும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் தமிழின் பண்டை இலக்கண/ இலக்கிய நூல்கள் அச்சிடப் பெற்றன. அவ்வகையில் தமிழில் அச்சடிக்கப்பட்ட முதல் இலக்கண நூலாக இன்று அறியப்படுவது நன்னூலே. காரணம் தமிழக மடங்கள் நன்னூலைப் பயிற்றிலக்கண மாகவும் பயன் பாட்டு இலக்கணமாகவும் கொண்டிருந்தன. 1835 -இல் திருத்தணிகை விசாகப் பெருமாளையர் தாமே உரையெழுதி நன்னூல் மூலமும் காண்டிகையுரையும் என்னும் தலைப்பில் வெளியிட்டார். தொடர்ந்து தாண்டவராய முதலியாரும்,அ. முத்துச்சாமி பிள்ளையும் இணைந்து இலக்கணப் பஞ்சகம் என்னும் தலைப்பில் நன்னூல், நம்பியகப் பொருள், புறப்பொருள் வெண்பாமாலை ஆகியவற்றின் மூலங்களை வெளிக் கொணர்ந் தனர். இதன் தொடர்ச்சியாக 1838 -இல் வீரமா முனிவரின் தொன்னூல் விளக்கம் அச்சாக்கம் பெற்றது. 1847 -இல் தான் மழவை மகாலிங்கையரால் தமிழின் தொல் இலக்கணம் தொல்காப்பிய எழுத்ததிகாரம் உரையோடு அச்சிடப்பட்டது. தொடர்ந்து யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலர், யாழ்ப்பாணத்து சி.வை. தாமோதரம் பிள்ளை, கோமளபுரம் இராசகோபாலபிள்ளை, சோடசாவதானம் சுப்பராய செட்டியார், போன்றோர் 19 -ஆம் நூற்றாண்டில், தொல்காப்பியத்தைக் கிடைத்த உரைகளோடு பதிப்பித்தனர். 1935 - இல் தொல்காப்பியத் திற்கு எழுதப்பட்ட உரைகள் (இன்று கிடைத்துள்ள அனைத்து உரைகளும்) பதிப்பிக்கப்பட்டு விட்டன. 1847 - 2003 வரை தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரை எட்டுப் பதிப்புகளும், 1885-2003 வரை தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் முன்னைந்தியல் எட்டுப் பதிப்புகளும், செய்யுளியல் நச்சினார்க்கினியர் தனித்து மூன்று பதிப்புகளும் வெளிவந்துள்ளன. 1892 - 2003 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை ஐந்து பதிப்புகளும், 1868 - 2006 வரை எழுத்து இளம்பூரணம் ஏழு பதிப்புகளும், 1920 - 2005 வரை தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணம் பத்துப் பதிப்புகளும், 1927 - 2005 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் இளம்பூரணம் ஆறு பதிப்புகளும், 1885 - 2003 வரை தொல்காப்பியம் பொருளதிகாரம் பேராசிரியம் ஏழு பதிப்புகளும், 1929 - 2003 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் மூன்று பதிப்புகளும், 1964 - 2003 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடம் மூன்று பதிப்புகளும் வெளிவந்துள்ளன என முனைவர் பா. மதுகேவரன் தமது தொல்காப்பியம் பதிப்பு ஆவணம் நூலில் குறிப்பிட்டுள்ளார். 2003 -இல் தமிழ்மண் பதிப்பகத்தின் வாயிலாகத் தொல்காப்பிய உரைகள் (இளம்பூரணம், நச்சினார்க்கினியம், பேராசிரியம், சேனாவரையம், கல்லாடம், தெய்வச்சிலையம்) பண்டித வித்வான் தி.வே. கோபாலையர், முனைவர் ந. அரணமுறுவல் ஆகியோரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, முதுமுனைவர் இரா. இளங்குமரனாரின் வாழ்வியல் விளக்கத்துடன் வெளிவந்துள்ளன. இருப்பினும் அச்சில் இன்று கிடைக்காத அரிய பதிப்புகளை மீள் பதிப்பாகப் பதிப்பிக்க வேண்டும் என்னும் நோக்கத்தில், சி.வை. தாமோதரம் பிள்ளை பதிப்பு, கா. நமச்சிவாய முதலியார் பதிப்பு, வ.உ. சிதம்பரம் பிள்ளை பதிப்பு, இரா. வெங்கடாசலம் பிள்ளை பதிப்பு, சி. கணேசையர் பதிப்பு, தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் பதிப்பு ஆகியோரின் பதிப்புகளுடன் தொல்காப்பியம் தொடர்பாக அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரைகளும் இணைத்து தமிழ்மண் பதிப்பகத்தின் வழி மீள் பதிப்புகளாகப் பதிப்பிக்கப் படுகின்றன. மீள் பதிப்பில் பின்பற்றியுள்ள பொது நெறிகள் முதுமுனைவர் இரா. இளங்குமரனாரின் தொல்காப்பியம் குறித்த விளக்கம், ஒவ்வோர் அதிகாரம் பற்றிய வாழ்வியல் விளக்கம், உரையாசிரியர் விவரம் ஆகியவை நூலின் தொடக்கத் தில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. முன்னைப் பதிப்புகளின் முகப்புப் பக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முன்னைப் பதிப்பாசிரியர் பற்றிய விவரங்கள் கால அடிப்படையில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. ஒவ்வோர் இயலின் தொடக்கத்தில், பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் தொல்காப்பியம் தொகுப்பில் எழுதி யுள்ள தொல்காப்பிய இயல் பற்றிய விளக்கம் தரப்பட்டுள்ளன. முன்னைப் பதிப்பில் அடிக்குறிப்புகள் அந்த அந்தப் பக்கத்தில் தரப்பட்டிருந்தன. இப்பதிப்பில் ஒவ்வோர் இயலுக்கும் தொடர் இலக்கமிட்டு, அந்தந்த இயலின் இறுதியில் தொகுத்து வழங்கப் பட்டுள்ளன. முன்னைப் பதிப்புகளில் நூற்பாக்களைக் கையாண்டுள்ள முறையையே இப் பதிப்பிலும் பின்பற்றப்பட்டுள்ளது. நூற்பாக் களுக்குத் தமிழ் எண் கொடுக்கப்பட்டிருப்பின் அவை நடை முறையில் இப்போது உள்ள எண்களாக மாற்றப்பட்டுள்ளன. நூற்பா அகரமுதலி, மேற்கோள் அகரமுதலி போன்றவற்றிற்குப் பக்க எண்கள் கொடுக்கப்பட்டிருப்பின் அவை நூற்பா எண்களாக மாற்றப்பட்டுள்ளன. பின்னிணைப்பாகத் தொல்காப்பியம் தொடர்பாக அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ள கட்டுரைகள் இணைக்கப் பட்டுள்ளன. நூற்பா முதற் குறிப்பு அகராதி மட்டும் கொடுக்கப் பட்டுள்ள பதிப்புகளில் அவற்றோடு, 2003 தமிழ்மண் பதிப்பகத்தின் வழியே பண்டித வித்துவான் தி.வே. கோபாலையர் முனைவர் ந. அரணமுறுவல் ஆகியோரைப் பதிப்பாசிரியர்களாகக் கொண்டு வெளிவந்த இலக்கணப் பதிப்பில் இணைக்கப் பட்டிருந்த, - நூற்பா நிரல் - மேற்கோள் சொல் நிரல் - மேற்கோள் சொற்றொடர் நிரல் - செய்யுள் மேற்கோள் நிரல் - கலைச் சொல் நிரல்( நூற்பாவழி) - கலைச்சொல் நிரல் (உரைவழி) ஆகியவை எடுத்துப் பயன்படுத்தப்பட்டுள்ளன. - பாடவேறுபாடுகள் சுட்டப்பட்டுள்ளன. - முன்னைப் பதிப்பில் வடமொழிச் சொற்கள் பயன் படுத்தப்பட்டிருப்பின் அவை அப்படியே கையாளப் பட்டுள்ளன. - தொல்காப்பியப் பதிப்புகள் குறித்த விவரம் தொகுக்கப்பட்டுள்ளன. சி.வை. தாமோதரம் பிள்ளை பதிப்பு - 1892 சொல்லதிகாரம் - நச்சினார்க்கினியர் 1868 - இல் தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரை யருரையைப் பதிப்பித்த சி.வை. தாமோதரம் பிள்ளை, 1892 ஆம் ஆண்டு சொல்லதிகாரம் நச்சினார்கினியர் உரையைப் பதிப்பித்தார். சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை தொடர்ச்சியாகப் பதிப்பிக்கப்பட்டாலும், முதலில் பதிப்பித்த சி.வை. தாமோதரம் பிள்ளையின் பதிப்பு இன்று அச்சுவடிவில் புழக்கத்தில் இல்லை. அப்பதிப்பினை வெளியிடும் நோக்கத்தில் இப்பதிப்பு மீள் பதிப்பாக வெளிவருகிறது. இப்பதிப்பில் நூற்பா முதற்குறிப்பு அகராதி மட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் மற்ற இணைப்புகளும் இணைக்கப்பட்டு, முதுமுனைவர் இரா. இளங்குமரன் அவர்களின் வாழ்வியல் விளக்கமும், ஒவ்வோர் இயலின் தொடக்கத்தில் க. வெள்ளைவாரணனார் எழுதியுள்ள இயல் விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் சொல்லதிகாரம் தொடர்பாக அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரைகள் பின்னிணைப்பாக இணைக்கப் பட்டுள்ளன. கா. நமச்சிவாய முதலியார் பதிப்பு - 1927 சொல்லதிகாரம் - இளம்பூரணம் இளம்பூரணம் எழுத்ததிகாரம் பொருளதிகாரம் உரைகள் முன்பே வெளிவந்தன. சொல்லதிகாரம் இளம்பூரணர் உரை 1927 - இல் காவேரிப்பாக்கம் நமச்சிவாய முதலியாரின் ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் சென்னை ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸால் வெளியிடப்பட்டது. இதுவே சொல்லதிகாரம் இளம்பூரணர் உரையின் முதற் பதிப்பாகும். இப் பதிப்பில் அடிக்குறிப்புகள் அந்தந்தப் பக்கத்தில் கொடுக்கப்பட்டிருந்தன. இப்பதிப்பில் தொடர் இலக்கமிட்டு, ஒவ்வோர் இயலின் முடிவில் அடிக் குறிப்புகள் தரப்பட்டுள்ளன. இப் பதிப்பில் நூற்பாக்களுக்குத் தமிழ் எண்வரிசையும் நடைமுறை எண் வரிசையும் கொடுக்கப்பட்டிருந்தன. இப்பதிப்பில் நடைமுறை எண் முறை மட்டும் பின்பற்றப்பட்டுள்ளது. வ.உ. சிதம்பரம்பிள்ளை பதிப்பு - 1928 , 1931, 1933, 1935 எழுத்ததிகாரம், பொருளதிகாரம் - இளம்பூரணம் 1868 இல் திரிசிரபுரம் சோடசாவதானம் சுப்பராய செட்டியாரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு கன்னியப்ப முதலியாரால் பதிப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து 1928 -இல் தொல்காப்பியம் இளம்பூரணம் எழுத்ததிகாரம் பதவுரை என்னும் பெயரில் வ.உ. சிதம்பரம் பிள்ளை பதிப்பு வேலாயுதம் பிரிண்டிங் பிர, தூத்துக்குடியிலிருந்து வெளிவந்தது. அப்பதிப்பின் தொடக்கத்தில் கொடுக்கப்பட்டிருந்த நூற்பா அகராதி இப்பதிப்பின் நூலின் இறுதியில் கொடுக்கப் பட்டுள்ளது. அத்துடன் சொல் நிரல் (மேற்கோள்), சொற்றொடர் நிரல் (மேற்கோள்), செய்யுள் நிரல் (மேற்கோள்) கலைச் சொல் நிரல் (நூற்பா வழி) கலைச் சொல் நிரல் (உரைவழி) தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. 1920 -இல் கா. நமச்சிவாய முதலியார் பொருளதிகாரம் இளம்பூரணம் உரை முதல் பகுதியாகக் களவியல், கற்பியல், பொருளியல் மூன்று இயல்களையும் ஸி. குமாரசாமி நாயுடு ஸன் நிறுவனத்தார் வெளியிட்டுள்ளார். மற்ற பகுதிகள் வெளிவந்ததாக அறிய இயலவில்லை. இப்பதிப்பிற்குப் பின் வ.உ. சிதம்பரம் பிள்ளை தொல்காப்பியம் இளம்பூரணம் பொருளதிகாரம் அகத்திணையியல், புறத்திணையியல் ஆகிய இரு இயல்கள் இணைந்த பதிப்பு, சென்னைப் பிரம்பூரில் இருந்து வெளிவந்தது. இப்பதிப்பில் ஆண்டு குறிப்பிடப்படவில்லை. ஆனால் 1921- இல் வெளிவந்த குறிப்பினை, தொல்காப்பியம் இளம்பூரணம் எழுத்திகாரம் பதவுரை பதிப்பில் குறிப்பிடுகிறார். களவியல், கற்பியல், பொருளியல் 1933 - இல் வாவிள்ள இராமவாமி சாட்ருலு அண்ட் ஸன் மூலம் வெளி வந்துள்ளது. 1935 - இல் மேற்கண்ட பதிப்பாளர்களைக் கொண்டு மெய்ப்பாட்டியல், உவமையியல், செய்யுளியல், மரபியல் பதிப்பித்துள்ளார். மூன்று பகுதிகளாக வெளிவந்தாலும் அவற்றிற்கும் தொடர் எண் கொடுக்கப்பட்டுள்ளன. 1935 - இல் ஒருங்கிணைந்த பதிப்பாக வ.உ. சிதம்பரம் பிள்ளை எ. வையாபுரிப்பிள்ளை ஆகியோர் பதிப்பாசிரியர்களாக அமைந்து வெளிவந்துள்ளது. தனித்தனிப் பதிப்புகளாக மூன்று பகுதிகளாக வெளிவந்துள்ள பதிப்பினை அடிப்படையாகக் கொண்டு இம் மீள் பதிப்பு பதிப்பிக்கப்படுகின்றது. இரா. வெங்கடாசலம் பிள்ளை பதிப்பு - 1929 சொல்லதிகாரம் - தெய்வச் சிலையார் 1929 -இல் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தால் முதன் முதலில் பதிப்பிக்கப்பட்டது. பதிப்பாசிரியர் ரா. வேங்கடாசலம் பிள்ளை. இதன் நிழற்படிவம் 1984 -இல் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இப் பதிப்பில் சூத்திர முதற் குறிப்பு அகராதி மட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் சொல் நிரல் (மேற்கோள்), சொற்றொடர் நிரல் (மேற்கோள்), செய்யுள் நிரல் (மேற்கோள்) கலைச் சொல் நிரல் (நூற்பா வழி) கலைச் சொல் நிரல் ( உரைவழி) தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. சி. கணேசையர் பதிப்பு - 1937, 1938, 1943,1948 எழுத்து நச்சினார்க்கினார்கினியர், சொல்லதிகாரம் சேனாவரையர் பொருள் - நச்சினார்க்கினியர், பேராசிரியர் 1847 - இல் மழவை மகாலிங்கையரால் எழுத்ததிகாரம் நச்சினார்க் கினியம் பதிப்பிக்கப்பட்டது. 1891 - இல் சி. வை. தாமோதரம் பிள்ளை பதிப்பும் 1923 - இல் த. கனகசுந்தரத்தின் பதிப்பும் கழகத்தின் மூலமும் வெளிவந்தன. 1937 - இல் நா. பொன்னையா அவர்களால் கணேசையர் எழுதிய உரைவிளக்கக் குறிப்புகளுடன் எழுத்ததிகாரம் மூலமும் நச்சினார்க்கினியருரையும் வெளியிடப்பட்டன. 1868 -இல் யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுக நாவலர் பதிப்பு, சென்னபட்டணம் ஊ. புஷ்பரதச் செட்டியாரது கலாரத்நாகர அச்சுக்கூடத்தில் சி.வை. தாமோரதம் பிள்ளையால் பதிப்பிக்கப்பட்டது. இதே ஆண்டு கோமளபுரம் இராசகோபால பிள்ளையின் பதிப்பும் தொல்காப்பியம் சேனாவரையம் என்ற பெயரில் வெளிவந்துள்ளது. 1923 - இல் கந்தசாமியார் திருத்திய திருத்தங்களோடும் குறிப்புரையோடும் கழகப் பதிப்பாக வெளிவந்தது. 1938 -இல் சி. கணேசையர் பதிப்பு அவர் எழுதிய உரைவிளக்கக் குறிப்புகளுடன் வெளியிடப்பட்டது. 1885 -இல் சி.வை. தாமோதரம் பிள்ளையால் தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் இயற்றிய உரையோடும் பலதேசப் பிரதிரூபங்களைக் கொண்டு பரிசோதித்து யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரரால் பதிப்பிக்கப்பட்டது என்னும் குறிப்புடன் பதிப்பு வெளிவந்தது. அப்பதிப்பில் உள்ள பின்னான்கியல் நச்சினார்க்கினியர் உரை அன்று என்று மறுத்து இரா. இராகவையங்கார் 1902 - 1905 வரையான செந்தமிழ் இதழில் ஆய்வுக்கட்டுரை எழுதித் தெளிவுபடுத்தினார். அதனைத் தொடர்ந்து பொருளதிகாரம் முழுதும் நான்கு பகுதியாக நச்சினார்க்கினியம், பேராசிரியம் எனப் பிரித்து 1916, 1917 - ஆம் ஆண்டுகளில் ச. பவனாந்தம் பிள்ளை பதிப்பித்தார். 1917 - இல் ரா. இராகவையங்கார் செய்யுளியலுக்கு நச்சினார்க்கியர் உரை இருப்பதை அறிந்து, நச்சினார்கினியர் உரை உரையாசிரியர் உரையுடன் என இரு உரைகளையும் இணைத்து வெளியிட்டார். 1934, 1935 -இல் எ. வையாபுரிப்பிள்ளை அவர்களால் ஓலைப் பிரதி பரிசோதிக்கப்பட்டு மா.நா. சோமசுந்தரம் பிள்ளை அவர்களது அரிய ஆராய்ச்சிக் குறிப்புகளுடனும் திருத்தங் களுடனும் தொல்காப்பியம் பொருளதிகாரம் முதற்பாகம் வெளிவந்தது. 1948 - இல் தொல்காப்பிய முனிவரால் இயற்றப் பட்ட தொல்காப்பியம் பொருளதிகாரம் (முதற்பாகம்) முன்னைந்தியலும் நச்சினார்க்கினியமும் என, சி. கணேசையர் எழுதிய ஆராய்ச்சிக் குறிப்புரையுடன் நா. பொன்னையா அவர்களால் பதிப்பிக்கப்பட்டது. 1943 -இல் தொல்காப்பியம் பொருளதிகாரம் (இரண்டாம் பாகம்) என்பதோடு பின்னான்கியலும் பேராசிரியமும் இவை புன்னாலைக் கட்டுவன் தமிழ் வித்துவான், பிரமரீ சி. கணேசையர் அவர்கள் ஏட்டுப் பிரதிகளோடு ஒப்புநோக்கித் திருத்திய திருத்தங்களோடும் எழுதிய உரை விளக்கக் குறிப்புகளோடும் ஈழகேசரி அதிபர் நா. பொன்னையா அவர்களால் தமது சுன்னாகம், திருமகள் அழுத்தகத்தில் பதிப்பிக்கபட்டன என வரையறுக்கப் பட்டிருந்தது. 2007-இல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மறுபதிப்பாக சி. கணேசையரின் பதிப்பைப் பதித்துள்ளது. அப்பதிப்பினைப் பின்பற்றியே இப்பதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சூத்திர அகராதி, சூத்திர அரும்பத விளக்கம் ஆகியவற்றிற்கு இப்பதிப்பில் பக்க எண் கொடுக்கப்பட்டிருந்தன. அவை இம் மீள்பதிப்பில் நூற்பா எண்களாக மாற்றப்பட்டுள்ளன. அனுபந்தமாக சி. கணேசைய்யர் சில கட்டுரைகளை அப்பதிப்பில் இணைத் திருந்தார் அவற்றோடு மேலும் அவருடைய சில கட்டுரைகள் இப்பதிப்பில் இணைக்கப்பட்டுள்ளன. தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் பதிப்பு 1971 சொல்லதிகாரம் கல்லாடம் சி.வை. தாமோதரம் பிள்ளை தொல்காப்பியம் பொருளதி காரம் நச்சினார்க்கினியர் உரை பதிப்புரையில் (1885) கல்லாடர் உரை பற்றிய குறிப்பினைத் தருகிறார். டி.என் அப்பனையங்கார் செந்தமிழ் இதழில் (1920, தொகுதி-19, பகுதி-1, பக்கம்-20) கல்லாடருரை என்னும் கட்டுரையில் ரீமான் எம் சேக்ஷகிரி சாதிரியார் (1893) கல்லாடர் உரை குறித்து ஆராய்ந்துள்ளதாகக் குறிப்பிடுகிறார். சோழவந்தான் அரசஞ்சண்முகனார் (1905) ரா. இராகவையங்கார் (1917) பெயர் விழையான், கா. நமச்சிவாய முதலியார்(1920) நவநீதகிருஷ்ண பாரதி(1920) பி. சிதம்பர புன்னைவனநாத முதலியார்(1922) கந்தசாமியார் (1923) வ.உ. சிம்பரம் பிள்ளை (1928) மன்னார்குடி தமிழ்ப் பண்டிதர் ம.நா. சோமசுந்தரம் பிள்ளை (1929) அரங்க. வேங்கடாசலம் பிள்ளை (1929) ஆகியோர் கல்லாடர் உரை குறித்த குறிப்புகளைத் தமது கட்டுரைகளில் குறிப்பிடுகின்றனர். பின்னங்குடி சா. சுப்பிரமணிய சாதிரியார் கல்லாடர் உரை ஓரியண்டல் கையெழுத்துப் புத்தக சாலையில் உள்ளது என்றும், அவ்வுரை எவ்வியல் வரை உள்ளது என்னும் குறிப்புரையும் தருகிறார். 1950 - 1952 வரை தருமபுர ஆதீனம் வெளியிட்ட ஞான சம்பந்தம் இதழில் அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகத்தின் இரண்டாம் பிரதியை ஒட்டிப் பதிப்பிக்கப்பட்டது. கிளவியாக்கம் தொடங்கி இடையியல் 10 - ஆவது நூற்பா வரை வெளிவந்தது. கல்லாடர் உரையைத் தம்முடைய திருத்தங்களுடன் வெளியிட்டவர் மகாவித்துவான் தண்டபாணி தேசிகர். 1963 -இல் தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரைக்கோவை என்னும் பெயரில் ஆபிரகாம் அருளப்பனும் வ.ஐ. சுப்பிரமணியமும் இணைந்து வெளியிட்டனர். இது நான்கு இயலுக்கான பதிப்பாக அமைந்திருந்தது. கழகப் பதிப்பாக 1964 -இல் கு. சுந்தரமூர்த்தி விளக்கவுரையுடன் கல்லாடம் வெளிவந்தது. 1971 -இல் தெ.பொ.மீ அவர்களால் ஒன்பது பிரதிகளைக் கொண்டு ஒப்பிட்டு அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகப் பதிப்பாக வெளிவந்தது. 2003 -இல் தி.வே. கோபாலையர், ந. அரணமுறுவல் ஆகியோரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு தமிழ் மண் பதிப்பகம் கல்லாடனார் உரையைப் பதிப்பித் துள்ளது. 2007 -இல் தி.வே. கோபாலையரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, சரசுவதி மகால் நூலகம் தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரைக்கொத்தில் கல்லாடர் உரையை வெளியிட்டுள்ளது. கல்லாடர் உரை முழுமையாக இதுவரை கிடைத்திலது. இம்மீள்பதிப்பில் செந்தமிழ் அந்தணர் அவர்களின் இலக்கண வாழ்வியல் விளக்கமும் கா. வெள்ளைவாரணனாரின் இயல் விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இவை தொல்காப்பியத்திற்குள் புகுவாருக்கு எளிதான மனநிலையை உருவாக்குவதுடன், ஆய்வாளர்களுக்கு மிகுந்த பயன் உடையதாக இருக்கும். பின்னிணைப்பாக இணைக்கப்பட்டுள்ள கட்டுரைகள், தொல்காப்பிய உரையாசிரியர், உரைகள் குறித்த நுட்பத்தைப் புலப்படுத்துவதுடன், தொல்காப்பியம் பற்றிய நுண்மையை அறியவும் துணை செய்யும். நூற்பா, உரை வழிக் கலைச்சொற்கள், உரையில் உள்ள மேற்கோள் அகராதி போன்றவை தொகுத்துத் தரப்பட்டுள்ளன. தொல்காப்பியத்தை அறிய விரும்புவாருக்கும், ஆய்வாளர்களுக்கும் இத் தொகுப்பு பயன் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியம் மூலமும், உரையோடும் பல பதிப்புகளைக் கண்டுள்ளது. இருப்பினும் தொடக்கத்தில் தமிழ் அறிஞர் பெருமக்களால் உரையோடு தொல்காப்பியத்தைப் பதிப்பித்த பதிப்புகள் இன்று கிடைக்கவில்லை. அந்நிலையைப் போக்கும் பொருட்டு, தமிழரின் பண்பாட்டை, மேன்மையை, உயர்வைப் பொதித்து வைத்துள்ள நூல்களைத் தேடித் தேடிப் பதிப்பிக்கும் தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் ஐயா கோ. இளவழகனார் அவர்கள் பழம் பதிப்புகளைப் பதிப்பிக்க வேண்டும் என்று விரும்பியதன் காரணமாக இப்பதிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பதிப்பிற்கு, தமிழின் மூத்த அறிஞர், செந்தமிழ் அந்தணர் முதுமுனைவர் ஐயா இரா. இளங்குமரனார் அவர்கள் பதிப்பாசிரியராக அமைந்து என்னையும் இப்பணியில் இணைத்துக்கொண்டார்கள். பழந்தமிழ் நூல்களைப் பாதுகாத்து வைத்துள்ள புலவர் பல்லடம் மாணிக்கம் அவர்களிடம் இருந்து தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடர் உரை பெறப்பட்டுப் பதிப்பிற்குப் பயன்படுத்தப்பட்டது. மற்ற உரைகள் அனைத்தும் தமிழ் இணையப் பல்கலைக்கழக நூலகம், உலகத் தமிழாராய்ச்சி இணையப் பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு இம் மீள்பதிப்பிற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. சி. கணேசையர் பதிப்பினை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வழி வெளிவந்த சி. கணேசைய்யரின் தொல்காப்பியப் பதிப்பிற்கு உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தின் மேனாள் இயக்குநர் (முழுகூடுதல் பொறுப்பு) முனைவர் திரு ம. இராசேந்திரன் அவர்கள் கணேசையர் பதிப்பிற்கு எழுதியுள்ள முகவுரை அவருடைய ஒப்புதலுடன் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. முனைவர் பா. மதுகேவரன் அவர்களின் தொல்காப்பியம் பதிப்பு ஆவணம் 7 என்னும் நூற்பகுதியில் இருந்து தொல் காப்பியப் பதிப்பு அடைவுகள் இப்பதிப்பில் இணைக்கப் பட்டுள்ளன. தொல்காப்பியம் தொடர்பான பல்வேறு அறிஞர் பெருமக்களின் ஆய்வுக் கட்டுரைகள் தொகுத்து வழங்கப் பட்டுள்ளன. தொல்காப்பியம் உரைகள் முழுதும் ஆய்வு செய்துள்ள பேராசிரியர் முனைவர் ச. குருசாமி அவர்களின் கட்டுரைகள் இப்பதிப்பில் இணைக்கப் பட்டுள்ளன. பதிப்பிற்குத் துணை செய்த மேற்கண்ட அனைவருக்கும் நன்றியினைப் புலப்படுத்திக் கொள்ளுகிறேன். முனைவர் ஸ்ரீ. பிரசாந்தன் அவர்கள் தொகுத்த இலக்கண வரம்பு நூலிலிருந்த கட்டுரைகள் கணேசையர் பதிப்பில் இணைக்கப்பட்டுள்ளன. செந்தமிழ், தமிழ்ப்பொழில், தமிழியல் முதலிய ஆய்விதழ்களிலிருந்து தொல்காப்பியம் தொடர்பான கட்டுரைகள் சேர்க்கப் பட்டுள்ளன. பதிப்புப் பணியில் ஈடுபடுத்திய ஐயா திரு கோ. இளவழகனார் அவர்களுக்கும் பதிப்பில் இணைந்து செயல்படப் பணித்த ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்களுக்கும், பதிப்பிற்குத் துணைபுரிந்த புலவர் செந்தலை கௌதமன் ஐயா அவர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றி. தட்டச்சுச் செய்து கொடுத்த திருமதி ப. கயல்விழி திருமதி கோ. சித்திரா. அட்டை வடிவமைத்த செல்வன் பா. அரி (ஹரிஷ்), மற்றும் பதிப்பகப் பணியாளர்கள் திரு இரா. பரமேசுவரன், திரு தனசேகரன், திரு கு. மருது, திரு வி. மதிமாறன், இப்பதிப்பிற்கு உதவிய என்னுடைய முனைவர் பட்ட மாணவர்கள் பா. மாலதி, கா. பாபு, சு. கோவிந்தராசு, கா. கயல்விழி ஆகிய அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப் பதிப்புப் பணியில் என்னை முழுவதாக ஈடுபடத் துணையாக நிற்கும் என் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார் அவர்களுக்கு என் நன்றியினை உரித்தாக்குகிறேன். கல்பனா சேக்கிழார் நுழைவுரை தமிழ்மண் பதிப்பகம் இதுகாறும் வெளியிட்டுள்ள அறிஞர் பெருமக்களின் உரைகள் யாவும் பழைய இலக்கிய இலக்கணக் கருவூலத்தின் வாயில்களைத் திறக்கின்ற திறவுகோல்கள்; தமிழரை ஏற்றிவிடும் ஏணிப்படிகள்; வரலாற்றுப் பாதையைக் கடக்க உதவும் ஊர்திகள். தமிழறிஞர்களின் அறிவுச்செல்வங்களை முழு முழு நூல் தொகுப்புகளாக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் பெரும் பங்களிப்பை எம் பதிப்பகம் செய்து வருவதை உலகத் தமிழர்கள் அனைவரும் அறிவர். தமிழகம் வேற்றினத்தவர் படையெடுப்பால் தாக்குண்டு அதிர்ந்து நிலைகுலைந்து தமிழ்மக்கள் தம் மரபுகளை மறந்தபோதெல்லாம் பழம்பெரும் இலக்கியச் செல்வங்களை எடுத்துக்காட்டி விளக்கித் தமிழ் மரபை வாழச் செய்த பெருமை உரையாசிரியர்களுக்கு உண்டு. தமிழ்மொழியின் நிலைத்த வாழ்விற்கும் வெற்றிக்கும் காரணமாக இருப்பவர்கள் உரையாசிரியர்களே ஆவர். இலக்கணக் கொள்கைகளை விளக்கி மொழிக்கு வரம்பு கட்டி இலக்கியக் கருத்துகளை விளக்கி காலந்தோறும் பண்பாட்டை வளர்த்து, தமிழ் இனத்திற்குத் தொண்டு செய்த பெருமை உரையாசிரியர்களையே சாரும். ஒவ்வொரு உரையாசிரியரும் தமிழினம் உறங்கிக் கொண்டிருந்தபோது விழித்தெழுந்து, எழுச்சிக்குரல் கொடுத்த முற்போக்குச் சிந்தனையாளர்கள். அவர்கள் எழுதியுள்ள உரைகள் யாவும் காலத்தின் குரல்கள்; சமுதாயத்தின் எதிர்பார்ப்புகள்; தமிழ் இன வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவைகள்; நெருக்கடியின் வெளிப்பாடுகள் ஆகும். - உரையாசிரியர்கள், (மு.வை. அரவிந்தன்). தொல்காப்பியம் இலக்கணநூல் மட்டுமன்று; தமிழரின் அறிவுமரபின் அடையாளம். தமிழரின் வாழ்வியலை, மெய்யியலைப் பாதுகாத்த காலப்பேழை. இதில் பொதிந்துள்ள தருக்கவியல் கூறுகள் இந்தியத் தருக்கவியல் வரலாற்றின் மூல வடிவங்கள் - அறிஞர்களின் பார்வையில் பேரறிஞர் அண்ணா, (முனைவர் க. நெடுஞ்செழியன்) மேற்கண்ட அறிஞர்களின் கூற்று, தொல்காப்பியத்தின் இன்றியமை யாமையையும், உரையாசிரியர்களின் கருத்துச் செறிவையும் உழைப்பையும் உணர்த்த வல்லவை. சி.வை. தாமோதரம் பிள்ளை, கா. நமச்சிவாய முதலியார், வ.உ. சிதம்பரனார், சி. கணேசையர், இரா. வேங்கடாசலம் பிள்ளை, தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் போன்ற பெருந்தமிழ் அறிஞர்களின் உழைப்பால் உருவான இவ் வாழ்வியல் கருவூலம் தொல்காப்பிய உரைத்தொகை எனும் பெயரில் தமிழ்மண் பதிப்பகம் மீள் பதிப்பு செய்துள்ளது. 2003 -ஆம் ஆண்டில் எம் பதிப்பகம் தொல்காப்பியத்தை (எழுத்து - சொல் - பொருள்) முழுமையாக வெளியிட்டுள்ளது. இதுகாறும் வெளிவந்துள்ள தொல்காப்பிய நூல் பதிப்புகளில் இடம் பெறாத அரிய பதிப்புச் செய்திகள் இவ்வுரைத் தொகையில் சேர்க்கப்பட்டுள்ளன. இவ்வுரைத் தொகை எல்லா நிலையிலும் சிறப்பாக வெளிவருவதற்கு தோன்றாத் துணையாக இருந்தவர்களைப் பற்றி தனிப்பக்கத்தில் பதிவு செய்துள்ளோம். இவ்வாழ்வியல்நூல் பிழையற்ற செம்பதிப்பாக வெளிவருவதற்கு முதன்மைப் பதிப்பாசிரியர் முதுமுனைவர் ஐயா இரா. இளங்குமரனார், இணை பதிப்பாசிரியர் அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் ஆகியோரின் உழைப்பும் பங்களிப்பும் என்றும் மறக்க முடியாதவை. எம் தமிழ் நூல் பதிப்பிற்கு எல்லா நிலையிலும் தொடர்ந்து ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் இனிய நண்பர் புலவர் செந்தலை ந. கவுதமன் அவர்களின் தன்னலம் கருதா தமிழ்த் தொண்டிற்கு என்றும் நன்றி உடையேன். தமிழர்கள் தம் இல்லம்தோறும் பாதுகாத்து வைக்க வேண்டிய இவ்வருந்தமிழ்ப் புதையலைத் தமிழ் கூறும் உலகிற்கு வழங்குவதைப் பெருமையாகக் கருதி மகிழ்கிறோம். இப்பதிப்பைத் தமிழ்க்கூறும் நல்லுலகம் ஏற்றிப்போற்றும் என்று நம்புகிறோம். கோ. இளவழகன் நூலாக்கத்திற்கு உதவியோர் முதன்மைப்பதிப்பாசிரியர்: முதுமுனைவர் இரா. இளங்குமரனார் இணைப்பதிப்பாசிரியர்: முனைவர் கல்பனா சேக்கிழார் நூல் வடிவமைப்பு: திருமதி. கயல்விழி, கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (Harrish) திருத்தத்திற்கு உதவியோர்: புலவர் பனசை அருணா புலவர் மு. இராசவேலு முனைவர் அரு. அபிராமி முனைவர் ஜா. கிரிசா நூலாக்கத்திற்கு உதவியோர்: திருமிகு. இரா. பரமேசுவரன், திருமிகு. வே. தனசேகரன், திருமிகு. கு. மூர்த்தி, திருமிகு. வி. மதிமாறன் கணினியில் நூலாக்கம்:  மாணவர் நகலகம்,  பிராசசு இந்தியா,  ரியல் இம்பேக்ட் சொல்யூசன்,  தூரிகை பிரிண்ட் உள்ளடக்கம் தொல்காப்பியம் ....... 1 சொல்லதிகாரம் இயலமைதி ....... 27 சொல்லதிகாரம் வாழ்வியல் விளக்கம் ....... 31 நச்சினார்க்கினியர் ....... 64 1. கிளவியாக்கம் ....... 79 2. வேற்றுமையியல் ....... 135 3. வேற்றுமை மயங்கியல் ....... 163 4. விளிமரபு ....... 191 5. பெயரியல் ....... 209 6. வினையியல் ....... 239 7. இடையியல் ....... 296 8. உரியியல் ....... 330 9. எச்சவியல் ....... 369 பின்னிணைப்புகள் ....... 445 - நூற்பா நிரல் ....... 473 - சொல் நிரல் ....... 479 - சொற்றொடர் நிரல் ....... 497 - செய்யுள் நிரல் ....... 513 - கலைச்சொல் நிரல் ....... 525 - கலைச்சொல் நிரல் ....... 530 தொல்காப்பியம் பழந்தமிழ் நூல்களின் வழியே நமக்குக் கிடைத்துள்ள முழு முதல் இலக்கண நூல் தொல்காப்பியமே. ஆசிரியர், தொல்காப்பியம் என்னும் நூலை இயற்றியமையால்தான் தொல்காப்பியன் எனத் தம் பெயர் தோன்றச் செய்தார் என்பதைப் பாயிரம்’ “தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றி” என்று தெளிவாகக் கூறுகிறது. தொல்காப்பியம் ‘பழமையான இலக்கண மரபுகளைக் காக்கும் நூல்’ என்பதற்குப் பலப்பல சான்றுகள் இருப்பவும், ‘பழமையான காப்பியக்குடியில் தோன்றியவரால் செய்யப் பட்டது’ என்னும் கருத்தால், “பழைய காப்பியக்குடியில் உள்ளான்” என நச்சினார்க்கினியர் கூறினார். பழைய காப்பியக்குடி என்னும் ஆட்சியைக் கண்டு ‘விருத்த காவ்யக்குடி’ என்பது ஒரு வடநாட்டுக்குடி என்றும், பிருகு முனிவர் மனைவி ‘காவ்ய மாதா’ எனப்படுவாள் என்றும் கூறித் தொல்காப்பியரை வடநாட்டுக் குடி வழியாக்க ஆய்வாளர் சிலர் தலைப்படலாயினர். இம்முயற்சிக்கு நச்சினார்க்கினியர் உரையின் புனைவையன்றி நூற் சான்றின்மை எவரும் அறியத்தக்கதே. இவ்வாய்வுகளையும் இவற்றின் மறுப்புகளையும் தமிழ் வரலாறு முதற்றொகுதி1 (பக். 255 - 257) தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி2 (பக். 2, 3) தமிழிலக்கிய வரலாறு - தொல்காப்பியம்3 (பக். 17-23) என்பவற்றில் கண்டு கொள்க. காப்பியர் தொல்காப்பியர் சிறப்பால் அவர் வழிவந்தவரும், அவரை மதித்துப் போற்றியவரும் அவர் பெயரைத் தம் மக்கட்கு இட்டுப் பெருக வழங்கினராதல் வேண்டும். இதனால் காப்பியாற்றுக் காப்பியன், வெள்ளூர்க் காப்பியன் என ஊரொடு தொடர்ந்தும், காப்பியஞ் சேத்தன், காப்பியன் ஆதித்தன் எனக் காப்பியப் பெயரொடு இயற்பெயர் தொடர்ந்தும் பிற்காலத்தோர் வழங்கலாயினர். இனிப் பல்காப்பியம் என்பதொரு நூல் என்றும் அதனை இயற்றியவர் பல்காப்பியனார் எனப்பட்டார் என்றும் கூறுவார் உளர். அப்பெயர்கள் ‘பல்காயம்’ என்பதும் பல்காயனார் என்பதுமேயாம்; படியெடுத்தோர் அவ்வாறு வழுப்படச் செய்தனர் என்று மறுப்பாரும் உளர். தொல்காப்பியர் தமிழ் நாட்டாரே “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகத்து வழக்கும் செய்யுளும்” ஆய்ந்து, தமிழியற்படி “எழுத்தும் சொல்லும் பொருளும்” ஆகிய முப்பகுப்பு இலக்கணம் செய்தவரும், “போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவையும்” (1006) “வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் நாற்பெய ரெல்லை அகத்தவர் வழங்கும் யாப்பின் வழியையும்” (1336) “தமிழென் கிளவியும் அதனோ ரற்றே” (385) எனத் தமிழமைதியையும், “வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே” (884) என வடவெழுத்துப் புகாது காத்தலையும் கூறிய தொல்காப்பியரை வலுவான அகச்சான்று வாய்த்தால் அன்றி வடநாட்டவர் என்பது வரிசை இல்லை என்க. இனி, சமதக்கினியார் மகனார் என்பதும் திரணதூமாக் கினியார் இவர் பெயர் என்பதும் பரசுராமர் உடன் பிறந்தார் என்பதும் நச்சினார்க்கினியர் இட்டுக் கட்டுதலை அன்றி எவரும் ஒப்பிய செய்தி இல்லையாம். தொல்காப்பியப் பழமை சங்க நூல்களுக்குத் தொல்காப்பியம் முற்பட்டதா? பிற்பட்டதா? ஆய்தல் இன்றியே வெளிப்பட விளங்குவது முற்பட்டது என்பது. எனினும் பிற்பட்டது என்றும் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு அளவினது என்றும் குறித்தாரும் உளராகலின் இவ்வாய்வும் வேண்டத் தக்கதாயிற்று. தொல்காப்பியர் பரிபாடல் இலக்கணத்தை விரிவாகக் கூறுகிறார். அவ்விலக்கணத்துள் ஒன்று, கொச்சகம் அராகம் சுரிதகம் எருத்து என்னும் நான்கு உறுப்புகளையுடையது அது என்பது. மற்றொன்று, காமப் பொருள் பற்றியதாக அது வரும் என்பது. இப்பொழுது கிடைத்துள்ள பரிபாடல்கள் இருபத்திரண் டனுள் “ஆயிரம் விரித்த” என்னும் ஒரே ஒரு பாடல் மட்டும் பலவுறுப்புகளை யுடையதாக உள்ளது. எஞ்சிய பாடல்கள் இருபத்து ஒன்றும் உறுப்பமைதி பெற்றனவாக இல்லை. பரிபாடல் திரட்டிலுள்ள இரண்டு பாடல்களுள் ஒரு பாடல் பலவுறுப்புகளை யுடையதாக உள்ளது. மற்றது உறுப்பற்ற பாட்டு. பரிபாடல் காமப் பொருள் பற்றியே வரும் என்பது இலக்கணமாக இருக்கவும் கடவுள் வாழ்த்துப் பொருளிலேயே பதினைந்து பாடல்கள் வந்துள்ளன. பரிபாடல் உயர் எல்லை நானூறடி என்பார். கிடைத்துள்ள பரிபாடல்களில் ஒன்றுதானும் சான்றாக அமையவில்லை. இவற்றால் அறியப்படுவது என்ன? தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ள இலக்கணங்களையுடைய பரிபாடல்கள் இவையில்லை. அவ்விலக்கணங்களையுடைய பரிபாடல்கள் இறந்தொழிந்தன. தலைச்சங்கத்தார் பாடியதாக வரும் ‘எத்துணையோ பரிபாடல்களின்’ அமைதியைக் கொண்டது தொல்காப்பிய இலக்கணம். ஆதலால், பாடலமைதி யாலும் பொருள் வகையாலும் இம்மாற் றங்களையடைய நெடிய பலகாலம் ஆகியிருக்க வேண்டும் என்பதே அது. தொல்காப்பியர் குறளடி சிந்தடி அளவடி நெடிலடி கழிநெடிலடி என்பவற்றை எழுத்தளவு வகையால் சுட்டுகிறார். அவ்வடிவகை கட்டளை யடி எனப்படும். அவ்வாறாகவும் சங்கப் பாடல்கள் சீர்வகை அடியைக் கொண்டனவாக உள்ளனவே யன்றிக் கட்டளை யடிவழி யமைந்தவையாக இல்லை. முற்றாக இம்மாற்றம் அமைய வேண்டுமானால் நெட்ட நெடுங்கால இடைவெளி ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது தெளிவு. தொல்காப்பியர் நேர், நிரை அசைகளுடன் நேர்பசை, நிரைபசை என்பவற்றையும் குறிக்கிறார். இந்நேர்பசை நிரை பசையை வேறு எவ் விலக்கண ஆசிரியரும் கொண்டிலர்; நேர் நிரை என்னும் இருவகை அசைகளையே கொண்டனர். கட்டளையடி பயிலாமை போலவே, இவ்வசைகளும் பயிலாமை தொல்காப்பியப் பழமையை விளக்குவதேயாம். யாப்பருங் கலத்திற்கு முற்பட்டது காக்கைபாடினியம். அந்நூலிலும் அவிநயம் முதலிய நூல்களிலும் இவ்விருவகை அசைகளும் இடம் பெறாமையால் இவற்றுக்கு மிகமுற்பட்ட நூல் தொல்காப்பியம் என்பது விளங்கும். காக்கைபாடினிய வழிவந்ததே யாப்பருங்கலம் ஆதலின் அதன் பழமை புலப்படும். பாட்டுயாப்பு, உரையாப்பு, நூல்யாப்பு, வாய்மொழியாப்பு, பிசியாப்பு, அங்கதயாப்பு, முதுசொல்யாப்பு என எழுவகை யாப்புகளை எண்ணுகிறார் தொல்காப்பியர் (1336). இவற்றுள் பாட்டுயாப்பு நீங்கிய எஞ்சிய யாப்புகள் எவையும் சான்றாக அறியுமாறு நூல்கள் வாய்த்தில. ஆகலின் அந்நிலை தொல்காப்பியத்தின் மிகுபழமை காட்டும். பேர்த்தியரைத் தம் கண்ணெனக் காக்கும் பாட்டியரைச் ‘சேமமட நடைப் பாட்டி’ என்கிறது பரிபாட்டு (10:36-7). பாட்டி என்பது பாண்குடிப் பெண்டிரைக் குறிப்பதைச் சங்கச் சான்றோர் குறிக்கின்றனர். ஆனால், தொல்காப்பியம் “பாட்டி என்பது பன்றியும் நாயும்” என்றும் “நரியும் அற்றே நாடினர் கொளினே” என்றும் (1565, 1566) கூறுகின்றது. பாட்டி என்னும் பெயரைப் பன்றி நாய் நரி என்பவை பெறும் என்பது இந் நூற்பாக்களின் பொருள். முறைப்பெயராகவோ, பாடினியர் பெயராகவோ ‘பாட்டி’ என்பது ஆளப்படாத முதுபழமைக்குச் செல்லும் தொல் காப்பியம், மிகு நெட்டிடைவெளி முற்பட்டது என்பதை விளக்கும். இவ்வாறே பிறவும் உள. சங்கச் சான்றோர் நூல்களில் இருந்து சான்று காட்டக் கிடையாமையால் உரையாசிரியர்கள் “இலக்கணம் உண்மை யால் இலக்கியம் அவர் காலத்திருந்தது; இப்பொழுது வழக்கிறந்தது” என்னும் நடையில் பல இடங்களில் எழுதுவா ராயினர். ஆதலால், சங்கச் சான்றோர் காலத்திற்குப் பன்னூற் றாண்டுகளுக்கு முற்பட்டவர் தொல்காப்பியர் என்பது வெள்ளிடைமலையாம்! “கள் என்னும் ஈறு அஃறிணைக்கு மட்டுமே தொல்காப்பியர் காலத்தில் வழங்கியது. அது திருக்குறளில் ‘பூரியர்கள்’ ‘மற்றையவர்கள்’ எனவும் கலித்தொகையில் ‘ஐவர்கள்’ எனவும் வழங்குகின்றது. ‘அன்’ ஈறு ஆண்பாற் படர்க்கைக்கே உரியதாகத் தொல்காப்பியம் கூறுகின்றது. இரப்பன், உடையன், உளன், இலன், அளியன், இழந்தனன், வந்தனன் எனத் தன்மையில் பெருவரவாகச் சங்கநூல்களில் இடம் பெற்றுள்ளன. “தொல்காப்பியத்தில் வழங்காத ஆல், ஏல், மல், மை, பாக்கு என்னும் இறுதியுடைய வினையெச்சங்கள் சங்கநூல்களில் பயில வழங்குகின்றன. “தொல்காப்பியத்தில் வினையீறாக வழங்கப்பட்ட ‘மார்’, ‘தோழிமார்’ எனப் பெயர்மேல் ஈறாக வழங்கப்பட்டுள்ளது. “வியங்கோள்வினை, முன்னிலையிலும் தன்மையிலும் வாராது என்பது தொல்காப்பிய விதி. அவற்றில் வருதலும் சங்கப் பாடல்களில் காணக்கூடியது. “கோடி என்னும் எண்பற்றித் தொல்காப்பியத்தில் குறிப்பு இல்லை. தாமரை, வெள்ளம், ஆம்பல் என்பனபோல எண்ணுப் பெயர்கள் (ஐ அம் பல் என்னும் இறுதியுடையவை) வழங்கு வதைச் சுட்டும் அவர், கோடியைக் குறித்தார் அல்லர். சங்கப் பாடல்களில் கோடி, ‘அடுக்கியகோடி’ என ஆளப் பெற்றுள்ளது. ஐ, அம், பல் ஈறுடைய எண்ணுப் பெயர்கள் அருகுதலும் சங்க நூல்களில் அறிய வருகின்றன. “சமய விகற்பம் பற்றிய செய்திகள், சமணம் புத்தம் பற்றிய குறிப்புகள் தொல்காப்பியத்தில் இல்லை. ஆனால் சங்க நூல்களில் இவற்றைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. எழுத்து சொல் ஆகிய அளவில் நில்லாமல் வாழ்வியலாகிய பொருள் பற்றி விரித்துக் கூறும் தொல்காப்பியர் காலத்தில் இவை வழக்கில் இருந்திருந்தால் இவற்றைக் கட்டாயம் சுட்டியிருப்பார். ஆகலின் சமண, பௌத்தச் சமயங்களின் வரவுக்கு முற்பட்டவரே தொல் காப்பியர். ஆதலால் தொல்காப்பியர் காலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதே யன்றிப் பிற்பட்டதாகாது.” இக்கருத்துகளைப் பேரா. க. வெள்ளைவாரணரும் (தமிழிலக்கிய வரலாறு - தொல்காப்பியம், பக். 87 - 96), பேரா.சி. இலக்குவனாரும் (தொல்காப்பிய ஆராய்ச்சி, பக். 12 - 14) விரித்துரைக்கின்றனர். சிலப்பதிகாரத்தால் இலங்கை வேந்தன் கயவாகு என்பான் அறியப்படுகிறான். அவன் காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டு என்பர். அச் சிலப்பதிகாரத்தில் ‘திருக்குறள்’ எடுத்தாளப்பட்டுள்ளது. ஆகலின் திருக்குறள் சிலப்பதிகாரக் காலத்திற்கு முற்பட்டது என்பது வெளிப்படை. இளங்கோவடிகள் காலத்து வாழ்ந்தவரும், மணிமேகலை இயற்றியவரும், சேரன் செங்குட்டுவன் இளங்கோவடிகள் ஆகியோருடன் நட்புரிமை பூண்டவரும், ‘தண்டமிழ் ஆசான் சாத்தன்’ என இளங்கோவடிகளாரால் பாராட்டப்பட்டவருமாகிய கூலவாணிகன் சாத்தனார், திருவள்ளுவரைப் ‘பொய்யில் புலவன்’ என்றும், திருக்குறளைப் ‘பொருளுரை’ என்றும் குறித்துக் கூறிப் பாராட்டுகிறார். ஆகலின், சிலப்பதிகார மணிமேகலை நூல்களுக்குச் சில நூற்றாண்டுகளேனும் முற்பட்டது திருக்குறள் எனத் தெளியலாம். அத் திருக்குறளுக்கு முப்பால் கொள்கை அருளியது தொல்காப்பியம். ‘அறமுதலாகிய மும்முதற் பொருள்’ என்பது தொல்காப்பியம். ‘இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு’ என வருவதும் தொல்காப்பியம். அது வகுத்தவாறு அறம் பொருள் வழக்காறுகள் திருக்குறளில் இடம் பெற்றுள்ளதுடன், இன்பத்துப்பாலோ, புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் எனத் தொல்காப்பியர் சொல்லும் உரிப்பொருள் ஐந்தற்கும் முறையே ஐந்தைந்து அதிகாரங்களாக 25 அதிகாரங்கள் கொண்டு முற்றாகத் தொல்காப்பிய வழியில் விளங்க நூல் யாத்தவர் திருவள்ளுவர். ஆகலின் அத்திருக்குறளின் காலத்திற்குப் பன்னூற்றாண்டு முற்பட்ட பழமையுடையது தொல்காப்பியம் என்பது தெளிவுமிக்க செய்தியாம். திருக்குறள் ‘அறம்’ என்று சுட்டப்பட்டதுடன், குறள் தொடர்களும் குறள் விளக்கங்களும் பாட்டு தொகை நூல்களில் இடம் பெற்ற தொன்மையது திருக்குறள். அதற்கும் முற்பட்டது தொல்காப்பியம். இனித் தொல்காப்பியத்தில் வரும் ‘ஓரை’ என்னும் சொல்லைக் கொண்டு தொல்காப்பியர் காலத்தைப் பின்னுக்குத் தள்ள முயன்றவர் உளர். ஓரை அவர் கருதுமாப்போல ‘ஹோரா’ என்னும் கிரேக்கச் சொல் வழிப்பட்டதன்று. அடிப்பொருள் பாராமல் ஒலி ஒப்புக் கொண்டு ஆய்ந்த ஆய்வின் முடிவே அஃதாம். ‘யவனர் தந்த வினைமாண் நன்கலம்’ இவண் வந்ததும், அது ‘பொன்னொடு வந்து கறியொடு (மிளகொடு)’ பெயர்ந்ததும், ‘யவன வீரர் அரண்மனை காத்ததும்’ முதலாகிய பல செய்திகள் சங்க நூல்களில் பரவலாக உள. அக்காலத்தில் அவர்கள் ‘தோகை’ ‘அரி’ முதலிய சொற்களை அறிந்தது போல அறிந்து கொண்ட சொல் ‘ஓரை’ என்பது. அச்சொல்லை அவர்கள் அங்கு ‘ஹோரா’ என வழங்கினர். கிரேக்க மொழிச் சொற்கள் பல தமிழ்வழிச் சொற்களாக இருத்தலைப் பாவாணர் எடுத்துக் காட்டியுள்ளார். ஓரை என்பது ஒருமை பெற்ற - நிறைவு பெற்ற - பொழுது. திருமணத்தை முழுத்தம் என்பதும், திருமண நாள் பார்த்தலை முழுத்தம் பார்த்தல் என்பதும், திருமணக் கால்கோளை ‘முழுத்தக்கால்’ என்பதும், ‘என்ன இந்த ஓட்டம்; முழுத்தம் தவறிப்போகுமா?’ என்பதும் இன்றும் வழக்கில் உள்ளவை. முழுமதி நாளில் செய்யப்பட்ட திருமணமே முழுத்தம் ஆயிற்று. இன்றும் வளர்பிறை நோக்கியே நாள் பார்த்தலும் அறிக. ஆராய்ந்து பார்த்து - நாளும் கோளும் ஆராய்ந்து பார்த்து - ‘நல்லவையெல்லாம் ஒன்றுபட்டு நிற்கும் பொழுதே நற்பொழுது’ என்னும் குறிப்பால் அதனை ஓரை என்றனர். இத்திறம் அந்நாள் தமிழர் உடையரோ எனின், “செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப் பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும் வளிதிரிதரு திசையும் வறிது நிலைஇய காயமும் என்றிவை சென்றளந் தறிந்தோர் போல, இனைத்தென்போரும் உளரே” என்னும் புறப்பாடலை அறிவோர் ஓரையைப் பிறர்வழியே நம் முன்னோர் அறிந்தனர் என்னார். உண்கலத்தைச் சூழ வைத்திருந்த பக்கக் கலங்களை, “நாள்மீன் விரவிய கோள்மீனுக்கு” உவமை சொல்லும் அளவில் தெளிந் திருந்த அவர்கள், ஓரையைப் பிறர் வழியே அறிந்தனர் என்பது பொருந்தாப் புகற்சியாம். தொல்காப்பியர் சமயம் தொல்காப்பியனார் சமயம் பற்றியும் பலவகைக் கருத்துகள் உள. அவர் சைவர் என்பர். சைவம் என்னும் சொல் வடிவம் மணிமேகலையில் தான் முதற்கண் இடம் பெறுகிறது. பாட்டு தொகைகளில் இடம் பெற்றிலது. சேயோன், சிவன் வழிபாடு உண்டு என்பது வேறு. அது சைவ சமயமென உருப்பெற்றது என்பது வேறு. ஆதலால் தொல்காப்பியரைச் சைவரெனல் சாலாது. இனி, முல்லைக்கு முதன்மையும் மாயோனுக்குச் சிறப்பும் தருதல் குறித்து ‘மாலியரோ’ எனின், குறிஞ்சி முதலா உரிப்பொருளும் காலமும் குறித்தல் கொண்டு அம் முதன்மைக் கூறும் பொருள்வழி முதன்மை எனக் கொள்ளலே முறை எனல் சாலும். தொல்காப்பியரை வேத வழிப்பட்டவர் என்னும் கருத்தும் உண்டு. அஃதுரையாசிரியர்கள் கருத்து. நூலொடுபட்ட செய்தியன்றாம். சமயச் சால்பில் ஓங்கிய திருக்குறளை - வேத ஊழியைக் கண்டித்த திருக்குறளை - வேத வழியில் உரை கண்டவர் இலரா? அது போல் என்க. தொல்காப்பியரைச் சமணச் சமயத்தார் என்பது பெருவழக்கு. அவ்வழக்கும் ஏற்கத்தக்கதன்று. அதன் சார்பான சான்று தொல்காப்பியத்தில் இல்லை. ஆனால் அச்சமயம் சார்ந்தார் அல்லர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. சமணச் சமய நூல்களாக வழங்குவன அருக வணக்கம் சித்த வணக்கம் உடையவை. அவ்வாறு பகுத்துக் கூறாவிடினும் அருக வணக்கம் உடையவை. சமணச் சமய நூல்களாகக் கிடைப்பவற்றை நோக்கவே புலப்படும். தொல்காப்பியர் காலத்தில் கடவுள் வாழ்த்து நூன் முகப்பில் பாடும் மரபில்லை எனின், அவர் சமணச் சமயத்தார் என்பதும் இல்லை என்பதே உண்மை. என்னெனின் சமணர் தம் சமயத்தில் அத்தகு அழுந்திய பற்றுதல் உடையவர் ஆதலால். சமணச் சமயத்தார் உயிர்களை ஐயறிவு எல்லை யளவிலேயே பகுத்துக் கொண்டனர். ஆறாம் அறிவு குறித்து அவர்கள் கொள்வது இல்லை. “மாவும் மாக்களும் ஐயறிவினவே” என்னும் தொல்காப்பியர், “மக்கள் தாமே ஆறறி வுயிரே” என்றும் கூறினார். நன்னூலார் சமணர் என்பதும் வெளிப்படை. அவர் ஐயறிவு வரம்பு காட்டும் அளவுடன் அமைந்ததும் வெளிப்படை. சமணச் சமயத்தார் இளமை, யாக்கை, செல்வ நிலையாமை களை அழுத்தமாக வலியுறுத்துவர். துறவுச் சிறப்புரைத்தலும் அத்தகையதே. ஆகவும் நிலையாமையையே கூறும் காஞ்சித் திணையைப் பாடுங்காலும், “நில்லா உலகம் புல்லிய நெறித்தே” என ‘உலகம் நிலையாமை பொருந்தியது’ என்ற அளவிலேயே அமைகிறார். “காமஞ் சான்ற கடைக்கோட் காலை ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே” (1138) என அன்பு வாழ்வே அருள் வாழ்வாம் தவவாழ்வாக வளர்நிலையில் கூறுகிறார். இல்லற முதிர்வில் தவமேற்கும் நிலை சமணம் சார்ந்ததன்று. அஃது இம்மண்ணில் தோன்றி வளர்ந்து பெருகிய தொல் பழந்தமிழ் நெறி. தொல்காப்பியர் சமணச் சமயத்தார் எனின் அகத்திணையியல் களவியல் கற்பியல் பொருளியல் என அகப் பொருளுக்குத் தனியே நான்கு இயல்கள் வகுத்ததுடன் மெய்ப்பாட்டியல் செய்யுளியல் உவம இயல் என்பனவற்றிலும் அப்பொருள் சிறக்கும் இலக்கணக் குறிப்புகளைப் பயில வழங்கியிரார். காமத்தைப் ‘புரைதீர்காமம்’ என்றும் (1027) ‘காமப் பகுதி கடவுளும் வரையார்’ என்றும் (1029) கூறியிரார். “ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது தேனது வாகும்” என்பது போலும் இன்பியல் யாத்திரார். கிறித்துவத் துறவு நெறிசார் வீரமாமுனிவரின் தொன்னூல் விளக்கப் பொருளதி காரம் காண்பார் இதனை நன்கு அறிவார். சிந்தாமணியாம் பாவிகத்தை எடுத்துக்காட்டுவார் எனின் அவர், திருத்தக்கதேவர் பாடிய நரிவிருத்தத்தையும் கருதுதல் வேண்டும். பாட இயலாது என்பதை இயலுமெனக் காட்ட எழுந்தது அந்நூல் என்பதையும், காமத்தைச் சூடிக் கழித்த பூப்போல் காவிய முத்திப் பகுதியில் காட்டுவதையும் கருதுவாராக. கடவுள் நம்பிக்கை தொல்காப்பியர் கடவுள் வாழ்த்துக் கூறவில்லை எனினும், “கொடிநிலை கந்தழி வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே” என்றும் (1034), புறநிலை வாழ்த்து, “வழிபடு தெய்வம் நிற்புறம் காப்பப் பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து பொலிமின்” என்பது என்றும் ஆளும் இடங்களில் தெளிவாகக் கடவுள் வாழ்த்து என்பதையும் ‘வழிபடு தெய்வம்’ என்பதையும் குறிக்கிறார். மேலும் கருப்பொருள் கூறுங்கால் ‘தெய்வம் உணாவே” என உணவுக்கு முற்படத் தெய்வத்தை வைக்கிறார். உலகெலாம் தழுவிய பொதுநெறியாக இந்நாள் வழங்கும் இது, பழந்தமிழர் பயில்நெறி என்பது விளங்கும். ஆதலால் பழந்தமிழர் சமய நெறி எந்நெறியோ அந்நெறியே தொல்காப்பியர் நெறி எனல் சாலும். வாகைத் திணையில் வரும், ‘கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமை’, ‘அருளொடு புணர்ந்த அகற்சி’, ‘காமம் நீத்தபால்’ என்பனவும், காஞ்சித் திணையில் வரும் தபுதார நிலை, தாபத நிலை, பலர் செலச் செல்லாக் காடு வாழ்த்து என்பனவும் பழந்தமிழர் மெய்யுணர்வுக் கோட்பாடுகள் எனக் கொள்ளத்தக்கன. கொற்றவை நிலை, வேலன் வெறியாட்டு, பூவைநிலை காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு சிறப்பில் பெரும்படை வாழ்த்தல் என வரும் வெட்சிப் பகுதிகள் பழந்தமிழர் வழிபாட்டியலைக் காட்டுவன. சேயோன் மாயோன் வேந்தன் வண்ணன் என்பார், குறிஞ்சி முதலாம் திணைநிலைத் தெய்வங்களெனப் போற்றி வழிபடப் பட்டவர் என்பதாம். ஆசிரியர் திருவள்ளுவர் கடவுள் வாழ்த்துப் பாடினாலும், அவர் இன்ன சமயத்தவர் என்பதற்குரிய திட்டவட்டமான அகச்சான்று இல்லாமை போலத் தொல்காப்பியர்க்கும் இல்லை. ஆகவே சமயக் கணக்கர் மதிவழிச் செல்லாத பொதுநெறிக் கொள்கையராம் வள்ளுவரைப் போன்றவரே தொல்காப்பியரும் என்க. தொல்காப்பியக் கட்டொழுங்கு தொல்காப்பியம் கட்டொழுங்கமைந்த நூல் என்பது மேலோட்டமாகப் பார்ப்பவர்க்கும் நன்கு விளங்கும். இன்ன பொருள் இத்தட்டில் என்று வைக்கப்பட்ட ஐந்தறைப் பெட்டியில் இருந்து வேண்டும் பொருளை எடுத்துக் கொள்வதுபோல் எடுத்துக்கொள்ள வாய்த்தது தொல்காப்பியம். அதனையே பாயிரம் ‘முறைப்பட எண்ணிப் புலம் தொகுத்த’தாகக் குறிக்கின்றது. எழுத்து சொல் பொருள் என்னும் மூன்றதிகாரங்களைக் கொண்ட தொல்காப்பியம் ஒவ்வோர் அதிகாரத்திற்கும் ஒன்பது ஒன்பது இயல்களைக் கொண்டிருத்தல் அதன் கட்டமைதிச் சிறப்புக் காட்டுவதாம். “ஆயிரத்தின் மேலும் அறுநூற்றுப் பஃதென்ப பாயிரத்தொல் காப்பியங்கற் பார்” என்பது தொல்காப்பிய நூற்பா அளவினைக் கூறுவதொரு வெண்பா. ஆனால் உரையாசிரியர்களின் அமைப்புப்படி 1595 முதல் 1611 நூற்பா வரை பல்வேறு எண்ணிக்கையுடையவாய் அமைந்துள்ளன. இக்கணக்கீடும், தொல்காப்பியர் சொல்லியதோ, பனம்பாரனார் குறித்ததோ அன்று. உரையாசிரியர்களின் காலத்தவரோ அவர்களின் காலத்திற்கு முன்னே இருந்த மூல நூற்பா எல்லையில் கணக்கிட்டறிந்த ஒருவரோ கூறியதாகலாம். தொல்காப்பிய அடியளவு 3999 என்று அறிஞர் வ.சுப. மாணிக்கனார் (தொல்காப்பியக்கடல் பக். 95) எண்ணிக் கூறுவர். ஏறக்குறைய 5630 சொல் வடிவங்கள் தொல்காப்பியத்தில் உள்ளமையையும் கூறுவர். அவர் “தொல்காப்பிய இலக்கணத்தைக் காண்பதற்குத் தொல்காப்பியத்தையே இலக்கியமாகக் கொள்ளலாம். தன்னைத் தானே விளக்கிக் காட்டுதற்குரிய அவ்வளவு பருமனுடையது தொல்காப்பியம்” என்று வாய்மொழிகின்றார். முப்பகுப்பு தனியெழுத்துகள், சொல்லில் எழுத்தின் நிலை, எழுத்துப் பிறக்கும் வகை, புணர் நிலையில் எழுத்தமைதி என்பவற்றை விரித்துரைப்பது எழுத்ததிகாரம். நூன் மரபு, மொழி மரபு, பிறப்பியல், புணரியல், தொகை மரபு, உருபியல், உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல் என்பன எழுத்ததிகார இயல்கள். எழுத்துகள் சொல்லாம் வகை, பெயர்கள் வேற்றுமையுருபேற்றல், விளிநிலை எய்தல், பெயர் வினை இடை உரி என்னும் சொல் வகைகள் இன்னவற்றைக் கூறுவது சொல்லதிகாரம். கிளவியாக்கம், வேற்றுமை யியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, பெயரியல், வினையியல், இடையியல், உரியியல், எச்சவியல் என்பன சொல்லதிகார இயல்கள். இன்ப ஒழுக்க இயல்பு, பொருள் அற ஒழுக்க இயல்பு, களவு கற்பு என்னும் இன்பவியற் கூறுகள், பொருளியல் வாழ்வில் நேரும் மெய்ப்பாடுகள், பொருளியல் நூலுக்கு விளக்காம் உவமை, செய்யுளிலக்கணம், உலக வழக்கு செய்யுள் வழக்கு என்பவற்றின் மரபுகள் ஆகியவற்றைக் கூறுவது பொருளதிகாரம். அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் என்பன பொருளதிகார இயல்கள். எடுத்துக்கொண்ட பொருளின் அடிக்கருத்தை முதற்கண் கூறி, பின்னர் வித்தில் இருந்து கிளரும் முளை இலை தண்டு கிளை கவடு பூ காய் கனி என்பவை போலப் பொருளைப் படிப்படியே வளர்த்து நிறைவிப்பது தொல்காப்பியர் நடைமுறை. எழுத்துகள் இவை, இவ்வெண்ணிக்கையுடையன என்று நூன் மரபைத் தொடங்கும் ஆசிரியர், குறில் நெடில் மாத்திரை, உயிர் மெய் வடிவு உயிர்மெய், அவற்றின் ஒலிநிலைப்பகுப்பு, மெய்ம்மயக்கம், சுட்டு வினா எழுத்துகள் என்பவற்றைக் கூறும் அளவில் 33 நூற்பாக்களைக் கூறி அமைகிறார். முப்பத்து மூன்றாம் நூற்பாவை, “அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் உளவென மொழிப இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர்” என்கிறார். இயலிலக்கணம் கூறும் ஆசிரியர் இசையிலக்கணம் பற்றிய நூல்களில் இவ்வெழுத்துகளின் நிலை எவ்வாறாம் என்பதையும் சுட்டிச் செல்லுதல் அருமையுடையதாம். அவ்வாறே ஒவ்வோர் இயலின் நிறைவிலும் அவர் கூறும் புறனடை நூற்பா, மொழிவளர்ச்சியில் தொல்காப்பியனார் கொண்டிருந்த பேரார்வத்தையும் காலந்தோறும் மொழியில் உண்டாகும் வளர்நிலைகளை மரபுநிலை மாறாவண்ணம் அமைத்துக் கொள்வதற்கு வழிசெய்வதையும் காட்டுவனவாம். “உணரக் கூறிய புணரியல் மருங்கின் கண்டுசெயற் குரியவை கண்ணினர் கொளலே” (405) என்பது குற்றியலுகரப் புணரியல் புறனடை “கிளந்த அல்ல செய்யுளுள் திரிநவும் வழங்கியல் மருங்கின் மருவொடு திரிநவும் விளம்பிய இயற்கையின் வேறுபடத் தோன்றின் வழங்கியல் மருங்கின் உணர்ந்தனர் ஒழுக்கல் நன்மதி நாட்டத்து என்மனார் புலவர்” (483) என்பது எழுத்ததிகாரப் புறனடை. “அன்ன பிறவும் கிளந்த அல்ல பன்முறை யானும் பரந்தன வரூஉம் உரிச்சொல் எல்லாம் பொருட்குறை கூட்ட இயன்ற மருங்கின் இனைத்தென அறியும் வரம்புதமக் கின்மையின் வழிநனி கடைப்பிடித் தோம்படை ஆணையிற் கிளந்தவற் றியலாற் பாங்குற உணர்தல் என்மனார் புலவர்” (879) என்பது உரியியல் புறனடை. இன்னவற்றால் தொல்காப்பியர் தொன்மையைக் காக்கும் கடப்பாட்டை மேற்கொண்டிருந்தவர் என்பதுடன் நிகழ்கால எதிர்கால மொழிக் காப்புகளையும் மேற்கொண்டிருந்தவர் என்பது இவ்வாறு வரும் புறனடை நூற்பாக்களால் இனிதின் விளங்கும். தொல்காப்பியம் இலக்கணம் எனினும் இலக்கியமென விரும்பிக் கற்கும் வண்ணம் வனப்பு மிக்க உத்திகளைத் தொல்காப்பியர் கையாண்டு நூலை யாத்துள்ளார். இலக்கிய நயங்கள் எளிமை : சிக்கல் எதுவும் இல்லாமல் எளிமையாகச் சொல்கிடந்தவாறே பொருள் கொள்ளுமாறு நூற்பா அமைத்தலும், எளிய சொற்களையே பயன்படுத்துதலும் தொல்காப்பியர் வழக்கம். “எழுத்தெனப் படுவ, அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப” “மழவும் குழவும் இளமைப் பொருள” “ஓதல் பகையே தூதிவை பிரிவே” “வண்ணந் தானே நாலைந் தென்ப” ஓரியல் யாப்புரவு ‘ஒன்றைக் கூறுங்கால் அதன் வகைகளுக்கெல்லாம் ஒரே யாப்புரவை மேற்கொள்ளல்’ என்பது தொல்காப்பியர் வழக்கம். “வல்லெழுத் தென்ப கசட தபற” “மெல்லெழுத் தென்ப `ஞண நமன” “இடையெழுத் தென்ப யரல வழள” சொன்மீட்சியால் இன்பமும் எளிமையும் ஆக்கல் ஓரிலக்கணம் கூறுங்கால் சிக்கல் இல்லாமல் பொருள் காண்பதற்காக வேண்டும் சொல்லைச் சுருக்காமல் மீளவும் அவ்விடத்தே சொல்லிச் செல்லுதல் தொல்காப்பியர் வழக்கம். “அவற்றுள், நிறுத்த சொல்லின் ஈறா கெழுத்தொடு குறித்துவரு கிளவி முதலெழுத் தியையப் பெயரொடு பெயரைப் புணர்க்குங் காலும் பெயரொடு தொழிலைப் புணர்க்குங் காலும் தொழிலொடு பெயரைப் புணர்க்குங் காலும் தொழிலொடு தொழிலைப் புணர்க்குங் காலும் மூன்றே திரிபிடன் ஒன்றே இயல்பென ஆங்கந் நான்கே மொழிபுணர் இயல்பே” என்னும் நூற்பாவைக் காண்க. இவ்வியல்பில் அமைந்த நூற்பாக்கள் மிகப் பல என்பதைக் கண்டு கொள்க. நூற்பா மீட்சியால் இயைபுறுத்தல் ஓரிடத்துச் சொல்லப்பட்ட இலக்கணம் அம்முறையிலேயே சொல்லப்படத் தக்கதாயின் புதிதாக நூற்பா இயற்றாமல், முந்தமைந்த நூற்பாவையே மீளக்காட்டி அவ்வவ் விலக்கணங்களை அவ்வவ்விடங்களில் கொள்ளவைத்தல் தொல்காப்பிய ஆட்சி. இது தம் மொழியைத் தாமே எடுத்தாளலாம். “அளபெடைப் பெயரே அளபெடை இயல” “தொழிற்பெய ரெல்லாம் தொழிற்பெய ரியல” என்பவற்றைக் காண்க. எதுகை மோனை நயங்கள் எடுத்துக் கொண்டது இலக்கணமே எனினும் சுவைமிகு இலக்கிய மெனக் கற்குமாறு எதுகை நயம்பட நூற்பா யாத்தலில் வல்லார் தொல்காப்பியர். “வஞ்சி தானே முல்லையது புறனே எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்றே”. “ஏரோர் களவழி அன்றிக் களவழித் தேரோர் தோற்றிய வென்றியும்”. இவை தொடை எதுகைகள். இவ்வாறே ஐந்தாறு அடிகளுக்கு மேலும் தொடையாகப் பயில வருதல் தொல்காப்பியத்துக் கண்டு கொள்க. “மாற்றருங் கூற்றம் சாற்றிய பெருமையும் கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும்”. இவை அடி எதுகைகள். “விறப்பும் உறப்பும் வெறுப்பும் செறிவே” “நொசிவும் நுழைவும் நுணங்கும் நுண்மை”. முன்னதில் முழுவதும் எதுகைகளும், பின்னதில் முழுவதும் மோனைகளும் தொடைபடக் கிடந்து நடையழகு காட்டல் அறிக. முன்னது முற்றெதுகை; பின்னது முற்றுமோனை. “வயவலி யாகும்” “வாள்ஒளி யாகும்” “உயாவே உயங்கல்” “உசாவே சூழ்ச்சி” இவை மோனைச் சிறப்பால் அடுத்த தொடரைக் கொண்டு வந்து நிறுத்துகின்றன. இதனை எடுத்து வருமோனை எனலாம். அடைமொழி நடை மரம்பயில் கூகை, செவ்வாய்க் கிளி, வெவ்வாய் வெருகு, இருள்நிறப் பன்றி, மூவரி அணில், கோடுவாழ் குரங்கு, கடல்வாழ் சுறவு, வார்கோட்டி யானை என அடைமொழிகளால் சுவைப்படுத்துதல் தொல்காப்பியர் உத்திகளுள் ஒன்று. “இழுமென் மொழியால் விழுமியது பயிலல்” “எண்ணு வண்ணம் எண்ணுப் பயிலும்” இவ்வாறு ஒலி நயத்தால் கவர்ந்து பொருளை அறிந்துகொள்ளச் செய்வதும் தொல்காப்பியர் உத்திகளுள் ஒன்று. “மாத்திரை முதலா அடிநிலை காறும் நோக்குதற் காரணம் நோக்கெனப் படுமே” “ஒரூஉ வண்ணம் ஒரீஇத் தொடுக்கும்” என எடுத்த இலக்கணத்தை அச்சொல்லாட்சியாலேயே விளக்கிக் காட்டுவதும் தொல்காப்பிய நெறி. ‘மாற்றருஞ் சிறப்பின் மரபியல்’ என இயலின் பெயர் குறிக்கும் மாற்றானே இலக்கணமும் யாத்துக் காட்டியமை நூற்பாவுள் தனி நூற்பாவாகிய பெற்றிமையாம். வரம்பு இளமைப் பெயர், ஆண்மைப் பெயர், பெண்மைப் பெயர் என்பவற்றை முறையே கூறி விளக்கிய ஆசிரியர் “பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே” என நிறைவித்தல் நூல் வரம்புச் சான்றாம். செய்யுளியல் தொடக்கத்தில் செய்யுள் உறுப்புகள் மாத்திரை முதலாக முப்பத்து நான்கனை உரைத்து அவற்றை முறையே விளக்குதலும் பிறவும் திட்டமிட்ட நூற்கொள்கைச் சிறப்பாக அமைவனவாம். “வகரக் கிளவி நான்மொழி ஈற்றது” “அம்மூன் றென்ப மன்னைச் சொல்லே” இன்னவாறு வருவனவும் வரம்பே. விளங்க வைத்தல் விளங்கவைத்தல் என்பதொரு நூலழகாகும். அதனைத் தொல்காப்பியனார் போல விளங்க வைத்தவர் அரியர். “தாமென் கிளவி பன்மைக் குரித்தே” “தானென் கிளவி ஒருமைக் குரித்தே” “ஒருவர் என்னும் பெயர்நிலைக் கிளவி இருபாற்கும் உரித்தே தெரியுங் காலை” இவ்வளவு விளங்கச் சொன்னதையும் எத்தனை எழுத்தாளர்கள் இந்நாளில் புரிந்துகொண்டுளர்? நயத்தகு நாகரிகம் சில எழுத்துகளின் பெயரைத்தானும் சொல்லாமல் உச்சகாரம் (சு), உப்பகாரம் (பு), ஈகார பகரம் (பீ) இடக்கர்ப் பெயர் என்பவற்றை எடுத்துச் சொல்லும் நாகரிகம் எத்தகு உயர்வு உடையது! இஃது உயர்வெனக் கருதும் உணர்வு ஒருவர்க்கு உண்டாகுமானால் அவர் தம் மனம்போன போக்கில் எண்ணிக்கை போன போக்கில் கிறுக்கிக் கதையெனவோ பாட்டெனவோ நஞ்சை இறக்கி ‘இளையர்’ உளத்தைக் கெடுத்து எழுத்தால் பொருளீட்டும் சிறுமை உடையராவரா? தொல்காப்பிய நூனயம் தனியே ஆய்ந்து வெளிப்படுத்தற் குரிய அளவினது. தொல்காப்பியக் கொடை முந்து நூல் வளங்கள் அனைத்தும் ஒருங்கே பெறத்தக்க அரிய நூலாகத் தொல்காப்பியம் விளங்குவதுடன், அவர்கால வழக்குகளையும் அறிந்துகொள்ளும் வண்ணம் தொல்காப்பியர் தம் நூலை இயற்றியுள்ளார். அன்றியும் பின்வந்த இலக்கியப் படைப்பாளிகளுக்கும் இலக்கணப் படைப்பாளிகளுக்கும் அவர் வழங்கியுள்ள கொடைக்கு அளவே இல்லை. தொட்டனைத் தூறும் மணற்கேணியென அது சுரந்துகொண்டே உள்ளமை ஆய்வாளர் அறிந்ததே. பொருளதிகார முதல் நூற்பா ‘கைக்கிளை முதலா’ எனத் தொடங்குகின்றது. அக் கைக்கிளைப் பொருளில் எழுந்த சிற்றிலக்கியம் உண்டு. முத்தொள்ளாயிரப் பாடல்களாகப் புறத்திரட்டு வழி அறியப் பெறுவன அனைத்தும் கைக்கிளைப் பாடல்களே. “ஏறிய மடல் திறம்” என்னும் துறைப்பெயர் பெரிய மடல், சிறியமடல் எனத் தனித்தனி நூலாதல் நாலாயிரப் பனுவலில் காணலாம். ‘மறம்’ எனப்படும் துறையும் ‘கண்ணப்பர் திருமறம்’ முதலாகிய நூல் வடிவுற்றது. கலம்பக உறுப்பும் ஆயது. ‘உண்டாட்டு’ என்னும் புறத்துறை, கம்பரின் உண்டாட்டுப் படலத்திற்கு மூலவூற்று. ‘தேரோர் களவழி’ களவழி நாற்பது கிளர்வதற்குத் தூண்டல். ‘ஏரோர் களவழி’ என்பது பள்ளுப்பாடலாகவும், ‘குழவி மருங்கினும்’ என்பது பிள்ளைத் தமிழாகவும் வளர்ந்தவையே. “காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்த மரபின் பெரும்படை வாழ்த்தலென் றிருமூன்று மரபின்கல்” என்னும் புறத்திணை இயல் நூற்பா தானே, சிலப்பதிகார வஞ்சிக் காண்டத்திற்கு வைப்பகம். பாடாண் திணைத் துறைகள் சிற்றிலக்கிய வளர்ச்சிக்கு வழங்கியுள்ள கொடை தனிச்சிறப்பினவாம். “அறம் முதலாகிய மும்முதற் பொருட்கும்” என நூற்பாச் செய்து முப்பாலுக்கு மூலவராகத் தொல்காப்பியனார் திகழ்வதைச் சுட்டுவதே அவர்தம் கொடைப் பெருமை நாட்டுவதாகலாம். இவை இலக்கியக் கொடை. இலக்கணக் கொடை எத்துணைக் கொடை? இலக்கண நூல்கள் அனைத்துக்கும் நற்றாயாயும், செவிலித் தாயாயும், நல்லாசானாயும் இருந்து வளர்த்து வந்த - வளர்த்து வருகின்ற சீர்மை தொல்காப்பியத் திற்கு உண்டு. இந்நாளில் வளர்ந்துவரும் ‘ஒலியன்’ ஆய்வுக்கும் தொல்காப்பியர் வித்திட்டவர் எனின், அவர் வழி வழியே நூல் யாத்தவர்க்கு அவர் பட்டுள்ள பயன்பாட்டுக்கு அளவேது? “தொல்காப்பியன் ஆணை” என்பதைத் தலைமேற் கொண்ட இலக்கணர், பின்னைப் பெயர்ச்சியும் முறை திறம்பலுமே மொழிச்சிதைவுக்கும் திரிபுகளுக்கும் இடமாயின என்பதை நுணுகி நோக்குவார் அறிந்து கொள்ளக்கூடும். இலக்கணப் பகுப்பு விரிவு இனித் தொல்காப்பியம் பிற்கால இலக்கணப் பகுப்பு களுக்கும் இடந்தருவதாக அமைந்தமையும் எண்ணத் தக்கதே. தமிழ் இலக்கணம் ஐந்திலக்கணமாக அண்மைக் காலம் வரை இயன்றது. அறுவகை இலக்கணமென ஓரிலக்கணமாகவும் இது கால் விரிந்தது. இவ் விரிவுக்குத் தொல்காப்பியம் நாற்றங்காலாக இருப்பது அறிதற்குரியதே. எழுத்து சொல் பொருள் என முப்பகுப்பால் இயல்வது தொல்காப்பியம் ஆகலின் தமிழிலக்கணம் அவர் காலத்தில் முக் கூறுபட இயங்கியமை வெளி. அவர் கூறிய பொருளிலக்கணத்தைத் தனித்தனியே வாங்கிக் கொண்டு அகப்பொருள், புறப்பொருள் என இலக்கணங் கூறும் நூல்கள் கிளைத்தன. அது பொருளிலக்கணத்தைப் பகுத்துக் கொண்டதே. அவர் கூறிய செய்யுளியலை வாங்கிக் கொண்டு, ‘யாப்பருங்கலம்’ முதலிய யாப்பு இலக்கண நூல்கள் தோன்றித் தமிழ் இலக்கணத்தை நாற்கூறுபடச் செய்தன. அவர் கூறிய உவமையியலையும் செய்யுளியலில் சில பகுதிகளையும் தழுவிக்கொண்டு வடமொழி இலக்கணத் துணையொடு அணியிலக்கணம் என ஒரு பகுதியுண்டாகித் தமிழ் இலக்கணம் ஐங்கூறுடையதாயிற்று. இவ்வைந்துடன் ஆறாவது இலக்கணமாகச் சொல்லப்படுவது ‘புலமை இலக்கணம்’ என்பது. அது தமிழின் மாட்சி தமிழ்ப் புலவர் மாட்சி முதலியவற்றை விரிப்பது. “தமிழ்மொழிக் குயர்மொழி தரணியில் உளதென வெகுளியற் றிருப்போன் வெறும்புல வோனே” என்பது அவ்விலக்கணத்தில் ஒரு பாட்டு. ஆக மூன்றிலக்கணத்துள் ஆறிலக்கணக் கூறுகளையும் மேலும் உண்டாம் விரிவாக்கங்களையும் கொண்டிருக்கின்ற மொழிக் களஞ்சியம் தொல்காப்பியம் என்க. தொல்காப்பியரின் சிறப்பாகப் பாயிரம் சொல்வனவற்றுள் ஒன்று, ‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்’ என்பது. ஐந்திரம் இந்திரனால் செய்யப்பட்டது என்றும், பாணினியத்திற்குக் காலத்தால் முற்பட்டது என்றும், வடமொழியில் அமைந்தது என்றும் பாணினியத்தின் காலம் கி.மு. 450 ஆதலால் அதற்கு முற்பட்ட ஐந்திரக் காலம் அதனின் முற்பட்ட தென்றும், அந் நூற்றேர்ச்சி தொல்காப்பியர் பெற்றிருந்தார் என்றும், அந்நூற் பொருளைத் தம் நூலுக்குப் பயன்படுத்திக் கொண்டார் என்றும் ஆய்வாளர் பலப்பல வகையால் விரிவுறக் கூறினர். சிலப்பதிகாரத்தில் வரும் ‘விண்ணவர் கோமான்’ விழுநூல், ‘கப்பத் திந்திரன் காட்டிய நூல்’ என்பவற்றையும் ‘இந்திரன் எட்டாம் வேற்றுமை என்றனன்’ என்னும் ஒரு நூற்பாவையும் காட்டி அவ்வைந்திர நூலைச் சுட்டுவர். விண்ணவர் கோமான் இந்திரன் வடமொழியில் நூல் செய்தான் எனின், தேவருலக மொழி வடமொழி என்றும், விண்ணுலக மொழியே மண்ணில் வடமொழியாய் வழங்குகின்றது என்றும் மண்ணவர் மொழி யுடையாரை நம்பவைப்பதற்கு இட்டுக் கட்டப்பட்ட எளிய புனைவேயாம். அப்புனைவுப் பேச்சுக் கேட்டதால்தான் இளங்கோ தம் நூலுள்ளும் புனைந்தார். அவர் கூறும் “புண்ணிய சரவணத்தில் மூழ்கி எழுந்தால் விண்ணவர் கோமான் விழுநூல் எய்துவர்” என்பதே நடைமுறைக் கொவ்வாப் புனைவு என்பதை வெளிப்படுத்தும். அகத்திய நூற்பாக்களென உலவ விட்டவர்களுக்கு, இந்திரன் எட்டாம் வேற்றுமை சொன்னதாக உலவவிட முடியாதா? இவ்வாறு கூறப்பட்டனவே தொன்மங்களுக்குக் கைம் முதல். இதனைத் தெளிவாகத் தெரிந்தே தொல்காப்பியனார், “தொன்மை தானே உரையொடு புணர்ந்த பழமை மேற்றே” என்றார். தொன்மை என்பது வழிவழியாக உரைக்கப்பட்டு வந்த பழஞ்செய்தி பற்றியதாம் என்பது இந்நூற்பாவின் பொருள். இவ்வாறு தொல்காப்பியர் கேட்ட தொன்மச் செய்திகளைப் பனம்பாரனார் கேட்டிரார் என்ன இயலாதே. “இந்திரனாற் செய்யப்பட்டதொரு நூல் உண்டு காண்; அது வடமொழியில் அமைந்தது காண்; அதன் வழிப்பட்டனவே வடமொழி இலக்கண நூல்கள் காண்” என்று கூறப்பட்ட செய்தியைப் பனம்பாரர் அறிந்தார். ‘அறிந்தார் என்பது இட்டுக் கட்டுவதோ’ எனின் அன்று என்பதை அவர் வாக்கே மெய்ப்பிப்பதை மேலே காண்க. திருவள்ளுவர் காலத்திலும், “தாமரைக் கண்ணானின் உலக இன்பத் திலும் உயரின்பம் ஒன்று இல்லை” என்று பேசப் பட்டது. இவ்வாறு பிறர் பிறர் காலத்தும் பிறபிற செய்திகள் பேசப்பட்டன என்பவற்றை விரிப்பின் பெருகுமென்பதால் வள்ளுவர் அளவில் அமைவாம். திருவள்ளுவர் கேட்ட செய்தி, அவரை உந்தியது. அதனால் “தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல், தாமரைக் கண்ணான் உலகு?” என்றோர் வினாவை எழுப்பி இவ்வுலகத் தெய்தும் இன்பங்களுள் தலையாய காதலின்பத்தைச் சுட்டினார். அடியளந்தான் கதையை மறுத்து, மடியில்லாத மன்னவன் தன் முயற்சியால் எய்துதல் கூடும் முயல்க; முயன்றால் தெய்வமும் மடிதற்று உன்முன் முந்து நிற்கும் என்று முயற்சிப் பெருமை யுரைத்தார். இன்னதோர் வாய்பாட்டால் பனம்பாரனார் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியரைச் சுட்டினார். ‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்’ என்று வாளா கூறினார் அல்லர் பனம்பாரனார். “மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” என்றார். அவர் கேள்வியுற்றது ‘விண்ணுலக ஐந்திரம்!’ அவ்விண்ணுலக ஐந்திரத்தினும் இம்மண்ணுலகத்துத் தொல்காப்பியமே சிறந்த ஐந்திரம் என்னும் எண்ணத்தை யூட்டிற்றுப் போலும்! “ஆகாயப்பூ நாறிற்று என்றுழிச் சூடக்கருதுவாருடன்றி மயங்கக் கூறினான் என்னும் குற்றத்தின் பாற்படும்” என்பதை அறியாதவர் அல்லரே பனம்பாரர். அதனால் நீர்நிறைந்த கடல் சூழ்ந்த நிலவுலகின்கண் விளங்கும் ஐந்திரம் எனத்தக்க தொல்காப்பியத்தை முழுதுற நிரம்பத் தோற்றுவித்ததால் தன் பெயரைத் தொல்காப்பியன் எனத் தோன்றச் செய்தவன் என்று பாராட்டுகிறார். இனி ‘ஐந்திரம்’ என்பது சமண சமயத்து ஐந்தொழுக்கக் கோட்பாடு. அவற்றை நிறைந்தவர் தொல்காப்பியர் என்றும் கூறுவர். ஒழுக்கக் கோட்பாடு ‘படிமையோன்’ என்பதனுள் அடங்குதலால் மீட்டுக் கூற வேண்டுவதில்லையாம். அன்றியும் கட்டமை நோற்பு ஒழுக்கம் அவ்வாதனுக்கு உதவுதலன்றி, அவனியற்றும் இலக்கணச் சிறப்புக்குரிய தாகாது என்பதுமாம். ஆயினும், தொல்காப்பியர் சமண சமயச் சார்பினர் அல்லர் என்பது மெய்ம்மையால், அவ்வாய்வுக்கே இவண் இடமில்லை யாம். இனி ‘ஐந்திறம்’ என்றாக்கி ஐங்கூறுபட்ட இலக்கணம் நிறைந்தவர் என்பர். அவர் தமிழ் இலக்கணக் கூறுபாடு அறியார். தமிழ் இலக்கணம் முக்கூறுபட்டது என்பதைத் தொல்காப்பியமே தெளிவித்தும் பின்னே வளர்ந்த ஐந்திலக்கணக் கொள்கையை முன்னே வாழ்ந்த ஆசிரியர் தலையில் சுமத்துவது அடாது எனத் தள்ளுக. ‘ஐந்திரம்’ எனச் சொன்னடை கொண்டு பொருளிலாப் புதுநூல் புனைவு ஒன்று இந்நாளில் புகுந்து மயக்க முனைந்து மயங்கிப்போன நிலையைக் கண்ணுறுவார் ஏட்டுக் காலத்தில் எழுதியவர் ஏட்டைக் கெடுத்ததும் படித்தவர் பாட்டைக் கெடுத்ததும் ஆகிய செய்திகளைத் தெளிய அறிவார். எழுதி ஏட்டைக் காத்த - படித்துப் பாட்டைக் காத்த ஏந்தல்களுக்கு எவ்வளவு தலை வணங்குகிறோமோ, அவ்வளவு தலை நாணிப் பிணங்கவேண்டிய செயன்மையரை என் சொல்வது? தொல்காப்பிய நூற்பாக்கள் இடமாறிக் கிடத்தல் விளங்குகின்றது. தெய்வச்சிலையார் அத்தகையதொரு நூற்பாவைச் சுட்டுதலை அவர் பகுதியில் கண்டு கொள்க. மரபியலில் “தவழ்பவை தாமும் அவற்றோ ரன்ன” என்னும் நூற்பாவை அடுத்துப் “பறழ்எனப் படினும் உறழாண் டில்லை” என்னும் நூற்பா அமைந்திருத்தல் வேண்டும். அவ்வாறு அமைந்தால் எடுத்துக்காட்டு இல்லை என்பனவற்றுக்கு இலக்கியம் கிடைத்தல் இயல்பாக அமைகின்றது. “இக்காலத்து இறந்தன” என்னும் இடர்ப்பாடும் நீங்குகின்றது. இடப் பெயர்ச்சிக்கு இஃதொரு சான்று. இடையியலில் “கொல்லே ஐயம்” என்பதை அடுத்த நூற்பா “எல்லே இலக்கம்” என்பது. இவ்வாறே இருசீர் நடை நூற்பா நூற்கும் இடத்தெல்லாம் அடுத்தும் இருசீர் நடை நூற்பா நூற்றுச் செல்லலும் பெரிதும் எதுகை மோனைத் தொடர்பு இயைத்தலும் தொல்காப்பியர் வழக்காதலைக் கண்டு கொள்க. இத்தகு இருசீர் நடை நூற்பாக்கள் இரண்டனை இயைத்து ஒரு நூற்பாவாக்கலும் தொல்காப்பிய மரபே. “உருவுட் காகும்; புரைஉயர் வாகும்” “மல்லல் வளனே; ஏபெற் றாகும்” “உகப்பே உயர்தல்; உவப்பே உவகை” என்பவற்றைக் காண்க. இவ்விருவகை மரபும் இன்றி “நன்று பெரிதாகும்” என்னும் நூற்பா ஒன்றும் தனித்து நிற்றல் விடுபாட்டுச் சான்றாகும். அகத்திணையியல் இரண்டாம் நூற்பா, ‘அவற்றுள்’ என்று சுட்டுதற்குத் தக்க சுட்டு முதற்கண் இன்மை காட்டி ஆங்கு விடுபாடுண்மை குறிப்பர் (தொல். அகத். உரைவளம். மு. அருணாசலம் பிள்ளை). இனி இடைச் செருகல் உண்டென்பதற்குத் தக்க சான்று களும் உள. அவற்றுள் மிகவாகக் கிடப்பது மரபியலிலேயேயாம். தொல்காப்பியரின் மரபியல் கட்டொழுங்கு மரபிய லிலேயே கட்டமைதி இழந்து கிடத்தல் திட்டமிட்ட திணிப்பு என்பதை உறுதிப் படுத்துகின்றது. ‘மாற்றருஞ் சிறப்பின் மரபியல்’ என்று மரபிலக்கணம் கூறி மரபியலைத் தொடுக்கும் அவர் இளமைப் பெயர், ஆண்பாற் பெயர், பெண்பாற் பெயர் ஆகியவற்றைக் குறிக்கிறார். அக்குறிப்பொழுங்குப் படியே இளமைப் பெயர்கள் இவை இவை இவ்விவற்றுக்குரிய என்பதை விளக்கி முடித்து, “சொல்லிய மரபின் இளமை தானே சொல்லுங் காலை அவையல திலவே” என நிறைவிக்கிறார். அடுத்து ஓரறிவு உயிரி முதல் ஆறறிவுடைய மாந்தர் ஈறாக ஆண்பால் பெண்பால் பெயர்களை விளக்க வரும் அவர் ஓரறிவு தொடங்கி வளர்நிலையில் கூறி எடுத்துக்காட்டும் சொல்லி ஆண்பாற் பெயர்களையும் பெண்பாற் பெயர்களையும் இவை இவை இவற்றுக்குரிய என்பதை விளக்கி நிறைவிக்கிறார். ஆண்பால் தொகுதி நிறைவுக்கும் பெண்பால் தொகுதித் தொடக்கத்திற்கும் இடையே “ஆண்பா லெல்லாம் ஆணெனற் குரிய பெண்பா லெல்லாம் பெண்ணெனற் குரிய காண்ப அவையவை அப்பா லான” என்கிறார். பின்னர்ப் பெண்பாற் பெயர்களைத் தொடுத்து முடித்து, “பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே” என்று இயல் தொடக்கத்தில் கூறிய பொருளெல்லாம் நிறைந்த நிறைவைச் சுட்டுகிறார். ஆனால் இயல் நிறைவுறாமல் தொடர்நிலையைக் காண்கி றோம். எப்படி? “நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய” என்பது முதலாக வருணப் பாகுபாடுகளும் அவ்வவர்க் குரியவையும் 15 நூற்பாக்களில் தொடர்கின்றன. கூறப்போவது இவையென்று பகுத்த பகுப்பில் இல்லாத பொருள், கூற வேண்டுவ கூறி முடித்தபின் தொடரும் பொருள், ‘மரபியல்’ செய்தியொடு தொடர்பிலாப் பொருள் என்பன திகைக்க வைக்கின்றன. நூலும் கரகமும் முக்கோலும் மணையும் படையும் கொடியும் குடையும் பிறவும் மாற்றருஞ்சிறப்பின் மரபினவோ? எனின் இல்லை என்பதே மறுமொழியாம். “வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை” என்னும் நூற்பா நடை தொல்காப்பியர் வழிப்பட்டதென அவர் நூற்பாவியலில் தோய்ந்தார் கூறார். “வாணிகன் பெறுமே வாணிக வாழ்க்கை” என நூற்கத் தெரியாரோ அவர்? இளமை, ஆண்மை, பெண்மை என்பன மாறா இயலவை. பிறவியொடு வழி வழி வருபவை. நூல், கரகம் முதலியன பிறவியொடு பட்டவை அல்ல. வேண்டுமாயின் கொள்ளவும் வேண்டாக்கால் தள்ளவும் உரியவை. முன்னை மரபுகள் தற்கிழமைப் பொருள; பிரிக்க முடியாதவை. பின்னைக் கூறப்பட்டவை பிறிதின் கிழமைப் பொருளவை. கையாம் தற்கிழமைப் பொருளும் கையில் உள்ளதாம் பிறிதின் கிழமைப் பொருளும் ‘கிழமை’ என்னும் வகையால் ஒருமையுடையவை ஆயினும் இரண்டும் ஒருமையுடையவை என உணர்வுடையோர் கொள்ளார். இவ்வொட்டு நூற்பாக்கள் வெளிப்படாதிருக்க ஒட்டியிருந்த ‘புறக்காழ்’ ‘அகக்காழ்’ ‘இலை முறி’ ‘காய்பழம்’ இன்னவை பற்றிய ஐந்து நூற்பாக்களைப் பின்னே பிரித்துத் தள்ளி ஒட்டாஒட்டாய் ஒட்டி வைத்தனர். இதனை மேலோட்டமாகக் காண்பாரும் அறிவர். “நிலம்தீ நீர்வளி விசும்போ டைந்தும்” என்னும் நூற்பாவே மரபியல் முடிநிலை நூற்பாவாக இருத்தல் வேண்டும். பின்னுள்ள ‘நூலின் மரபு’ பொதுப் பாயிரம் எனத்தக்கது. அது சிறப்புப் பாயிரத்தைத் தொடுத்தோ, நூன் முடிவில் தனிப்பட்டோ இருந்திருக்க வேண்டும். அதுவும் நூலாசிரியர் காலத்திற்குப் பிற்பட்டுச் சேர்த்ததாக இருத்தல் வேண்டும். அதிலும் சிதைவுகளும் செறிப்புகளும் பல உள. “அவற்றுள், சூத்திரந்தானே” என வரும் செய்யுளியல் நூற்பாவை யும் (1425) “சூத்திரத்தியல்பென யாத்தனர் புலவர்” என வரும் மரபியல் நூற்பாவையும் (1600) ஒப்பிட்டுக் காண்பார் ஒரு நூலில் ஒருவர் யாத்த தெனக் கொள்ளார். மரபியல் ஆய்வு தனியாய்வு எனக் கூறி அமைதல் சாலும். இவ்வியல் நூற்பாக்கள் அனைத்திற்கும் இளம்பூரணர் உரையும் பேராசிரியர் உரையும் கிடைத்திருத் தலால் அவர்கள் காலத்திற்கு முன்னரே இம்மாற்றங்கள் நிகழ்ந்திருக்க வேண்டும் என்பது தெளிவான செய்தி. மேலும் சில குறிப்புகளும் செய்திகளும் ‘வாழ்வியல் விளக்க’த்தில் காணலாம். - இரா. இளங்குமரன் தமிழ்வளம் -19, தமிழர் வாழ்வியல் இலக்கணம் எனும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது சொல்லதிகாரம் இயலமைதி சொல்லதிகாரம் கிளவியாக்கம் (சொல்லாக்கம்) முதலாக எச்சவியல் இறுதியாக ஒன்பது இயல்களை உடையது. அவ்வியல்கள் முறையே கிளவியாக்கம், வேற்றுமைஇயல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, பெயரியல், வினையியல், இடையியல், உரியியல், எச்சவியல் என்பன. இவை ஒன்றற் கொன்று தொடரிபோல் - சங்கிலிபோல் - தொடர்புடையன. சொல் சொல் என்பது பொருளுணர்த்தும் கருவி; மாந்தர் தம் நெஞ்ச ஊர்தி; உலகத்தை நெருக்கி வைக்க வல்ல இயக்கி. சொல் என்பது மாந்தர்தம் குறிப்பு உணர்த்துவதற்கும் தேவை நிறைவேற்றத்திற்கும் தம் பட்டறிவால் இயற்கையின் துணை கொண்டு படைக்கப்பட்ட செய்நேர்த்தியுடையது. சொல்லின் ஆற்றல் பெரிது. “ஆவதும் சொல்லால்; அழிவதும் சொல்லால்” என்பது பழமொழி. சொல் ஆக்கத்திற்கே அன்றி அழிவுக்கும் ஆதலுண்டு என்பதே அதற்குக் ‘கூற்று’ என்றொரு பெயரைத் தந்தது கூறுபடுத்துவது அழிப்பது கூற்றெனப்படுதல் அறியத்தக்கது. சொல் எதுவும் பொருளற்றதில்லை என்பது தொல்காப்பியர் தெளிவு. அதனால், “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்றார் (640). அப்பொருள் பார்த்த அளவில் புலப்படல் உண்டு. ஆழ்ந்து பார்த்து அதன்பின் கண்டு கொள்ளத்தக்கனவும் உண்டு என்பதால், “மொழிப் பொருட் காரணம் விழிப்பத்தோன்றா” என்றார் (877). நெல் மணி இல்லாத நெல்லை ‘நெல்’ என்பது வழக்கில்லை. பதர், பதடி என்பனவே வழக்கு. நெல் மணி பிடித்தலைப் ‘பலன்’ பிடித்தல் என்பர்;ஆடு மாடு கருக் கொள்ளுதல் ‘பலப்படுதல்’ எனப்படும். மக்கள் வாழ்வில் கொள்ளும் பயன்மற்றை உயிரிகளின் வாழ்வில் பலன் எனப்படுகின்றது. பலன் இல்லா நெல்லும் பயன் இல்லாச் சொல்லும் ஒத்தவை என்பதால் ‘சொல்’ என்பதற்கு நெல் என ஒரு பொருள் உண்டாயிற்று. சொல் தரும் உணவு சோறு என்றும் சொன்றி என்றும் வழக்கில் ஆயது. “பயனில் சொல் பாராட்டு வானை மகனெனல் மக்கட் பதடி எனல்” என்னும் வள்ளுவ உவமை எண்ணின், உண்மை விளக்கமாம். சொல்லதிகார முதலியலின் பெயர் ‘கிளவியாக்கம்’. ஆக்கம் என்பது என்ன? ஆக்குவது ஆக்கம். ‘ஆக்குப் புரை’ என்பது சமையல் அறை. சொல்லை ஆக்குதல், நெல்லைச் சோறாக்கும் செயல் போல்வது என்பதை, உரையாசிரியர் சேனாவரையர், “வழுக்களைந்து சொற்களை ஆக்கிக் கொண்டமையான் இவ்வோத்துக் கிளவியாக்க மாயிற்று. ஆக்கம், அமைத்துக் கோடல், நொய்யும் நுறுங்கும் களைந்து அரிசியமைத் தாரை அரிசியாக்கினார் என்ப ஆகலின்” என்றது எண்ணத்தக்கது. கிளவி சொல்லாதல், இரட்டைக் கிளவி என்பதால் வெளிப்பட விளங்கும். கிளத்தல் வழியாவது கிளவி. கிளத்தல் சொல்லுதல். இனி, உயர்திணை, அஃறிணை என்னும் இருதிணை; ஆண், பெண், பலர், ஒன்று, பல என்னும் ஐம்பால், வினா விடை; இயல்பு வழக்கு தகுதி வழக்கு, தன்மை முன்னிலை படர்க்கை என்னும் மூவிடம்; ஒருமை பன்மையாகிய எண்; இவற்றுள் வரும் வழு - வழா நிலை என்பனவெல்லாம் கிளவியாக்கத்தில் இடம் பெறுகின்றன. வேற்றுமை அடுத்துள்ள வேற்றுமையியலில் வேற்றுமை வகை, வேற்றுமை உருபு, பொருள் நிலை என்பவை கூறப்பட்டுள்ளன. வேற்றுமை உருபுகள் மயங்குதல் வேற்றுமை மயங்கியலாக விரிகின்றது. விளி நான்காவது இயல் விளி மரபு என்பது. விளி என்பதன் இலக்கணம், உயர்திணைப் பெயர் விளியேற்கும் முறை, முறைப் பெயர் விரவுப் பெயர், அஃறிணைப் பெயர் ஆயவை விளியேற்கும் முறை பற்றியது அது. பெயர் அடுத்த இயல் பெயரியல், சொற்களின் இயல்பு, பெயர்ச் சொல்லின் இலக்கணம், உயர்திணைப் பெயர்கள், அஃறிணைப் பெயர்கள், விரவுப் பெயர்கள் என்பவை பற்றிய விதிகள் விளக்கங்கள் பற்றியது அது. வினை ஆறாம் இயல் வினை இயல். வினைச் சொல் என்பதன் இலக்கணம் கூறி, உயர்திணை வினை அஃறிணைவினை, விரவுவினை, வியங்கோள், வினை, எச்சம் பற்றியது அது. இடை ஏழாம் இயல் இடை இயல். இடைச் சொல் என்பதன் பொது இலக்கணம் சிறப்பிலக்கணம் பற்றிக் கூறியது அது. எண்ணிடைச் சொல் விளக்கமும் உடையது. உரி உரியியல் என்பது எட்டாவது இயல். இடைச் சொல் போலவே உரிச்சொல்லும் பொது இலக்கணம் சிறப்பிலக்கணம் என்பவற்றைக் கொண்டுளது. உரிச் சொல்லுக்குப் பொருள் காண் முறையும் கூறுகிறது. அகராதி எனவும் நிகண்டு எனவும் பின்னே எழுந்த வரவுகளுக்கு இவ்விடையியலும் உரியியலும் மூலவைப்பகம் ஆகும். எச்சம் ஒன்பதாவது எச்சவியல். நால்வகைச் சொற்கள், பொருள்கோள் வகை, தொகைகள் வினைமுற்று வகை, சில மரபுக் குறிப்புகள் ஆகியவற்றைக் கூறி நிறைகின்றது அது. இச் சொல்லதிகாரம் உரைவல்லார் பலரைத் தன்பால் ஈர்த்துளது என்பது இதற்குக் கிடைத்துள்ள உரையாசிரியர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், கல்லாடனார், தெய்வச்சிலையார் ஆகியோர் உரைகளால் புலப்படும். - இரா. இளங்குமரன் தமிழ்வளம் -19, தமிழர் வாழ்வியல் இலக்கணம் எனும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது சொல்லதிகாரம் வாழ்வியல் விளக்கம் திணை திணை பால் எண் இடம் காலம் ஆகிய பொதுவகுப்பு உலகப் பொதுமையது. எனினும் தமிழர் கண்ட திணை பால் வகுப்பு அருமையும் பெருமையும் மிக்கவை. சொல்லதிகார முதலியலாகிய கிளவியாக்க முதல் நூற்பாவே, “உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே அஃறிணை என்மனார் அவரல பிறவே” என்கிறது. ‘திணை’ என்பது திண்மை என்னும் பண்பு வழியில் அமைந்த சொல். திண்மை உடலுக்கும் உளத்திற்கும் உண்டேனும், இவண் உளத்திண்மை குறித்ததேயாம். உளத்திண்மையாவது உறுதியான கட்டொழுங்கு. அதனை ஆசிரியர் மேலே விளக்கியுரைப்பார். பெண்மைக்குத் திண்மை வேண்டும் என்னும் வள்ளுவம் ஆண்மைக்கு நிறையும் துறவர்க்கு நோன்பும் வேண்டும் என்பதையும் வலியுறுத்தும். உயர்ந்த ஒழுக்கம் உடையவர் எவரோ அவர் உயர்திணையர்; அவ்வுயர் ஒழுக்கம் இல்லாரும் மற்றை உயிரிகளும் உயிரில்லாதனவும் அல்திணையாம் (அஃறிணை யாம்) என்கிறார் தொல்காப்பியர். மக்களெல்லாரும் உயர்திணையர் என்னாமல் உயர் ஒழுக்கம் உடையாரே உயர்திணையர் என்றார், “அவ்வுயர் ஒழுக்கம் இல்லார் மாந்தரே எனினும் அவர்கள் மக்கள் அல்லர்; மாக்கள் எனப்படுவர். விலங்கொடும் இணைத்துச் சொல்லப் படுவர்” என்பதை, “மாவும் மாக்களும் ஐயறி வினவே” என்பார் மேலே. திணை இரண்டும் ஐம்பாலாகப் பகுக்கப்படுதலை அடுத்து உரைக்கிறார் (485, 486). பால் பால் என்பது தூய்மை; வால் என்பதும் அதுவே. பட்டொளி வீசும் பகல் ‘பால்’ ஆகும். இரவு பகல் எனப் பகுத்தலால் பால் என்பது பகுதி, பக்கம் என்னும் பொருள்களைக் கொண்டது. எ-டு: மேல்பால், கீழ்பால். பக்கங்களை இணைப்பது ‘பாலம்’ எனப்பட்டது. இவ்வாறும் மேலும் விரிபொருள் கொண்டது பால். ஓர் உயிரின் தோற்றம், வளர்வு, வீவு என்பனவும் உலகத்தியற்கை எனப்பட்டது. அதனால் உகலத்தியற்கை யாம் ஊழுக்குப் ‘பால்’ என்பதொரு பெயரும் உண்டாயிற்று. திணையை இரண்டாகக் கண்ட நம் முன்னோர் பால் என்பதை ஐந்து எனக் கண்டனர். அவை ஆண், பெண், பலர், ஒன்று, பல என்பன. உயர்திணைப்பால் மூன்றாகவும், அஃறிணைப்பால் இரண்டாகவும் கொண்டனர். திணை பால் என்பவற்றைச் சொல்லமைதி கொண்டு வகுக்காமல் சொல் சுட்டும் பொருள் அமைதியைப் பண்பாட்டு வகையால் வகுத்த அருமை நினைந்து மகிழத் தக்கதாம். ஆண்பால் சொல் அடையாளம் என்ன? பெண்பால் சொல் அடையாளம் என்ன? “னஃகான் ஒற்றே ஆடூஉ அறிசொல்” “ளஃகான் ஒற்றே மகடூஉ அறிசொல்” என்கிறார் தொல்காப்பியர் (488, 489) இவ்வாறே பிறவும் தொடர்கிறார். நெடிய தொலைவில் இருந்து உருண்டுவரும் கல், தேய்வுறும்; தேய்ந்து தேய்ந்து சுருங்கி நிற்கும். அதுபோல் நெட்ட நெடுங்காலத்தின் முன் தோன்றிப் பெருக வழங்கும் சொற்கள் தேய்தல் இயற்கை. அவன், அவள்,அவர், அது, அவை என்பனவற்றின் இறுதி எழுத்து ஒன்றுமே நின்று அச்சொல்லமைதியைக் குறித்த வகை இது. வந்த+அவன் = வந்தவன்; எனத் தேய்தல் இல்லையா? மக்கள் வழக்கில் எப்படி வழங்கப்படுகிறதோ, அதனைத் தக்க வகையில் புலமையாளர் போற்றிக் கொண்ட முறை இன்னதாம். பால் திரிபு ‘அரவானி’ என்பார் உளர். அரவான் இறப்போடு தம்மைப் புனைந்து தாலியறுக்கும் சடங்காக நடத்தி வருகின்றனர். அது வரவரப் பெருக்கமும் ஆகின்றது. முழுதுறு ஆண்மையோ, முழுதுறு பெண்மையோ அமையாதவர் அவர். ஓர் எருமையின் கொம்பைப், “பேடிப் பெண் கொண்டு ஆடுகை கடுப்ப” என உவமை காட்டுகின்றது கலித்தொகை. போர்க்களம் புக விலக்கப்பட்டவராக இருந்தனர் அவர். ஆனால் களியாட்டத்தில் பங்கு கொண்டனர். பதினோராடல்களுள் ஒன்று பேடு. ஆண்மை இயல்பு மாறியவரையும் பெண்மை இயல்பு மாறியவரை யும் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். “ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி” என்கிறார். ஆண் தன்மை மாறிப் பெண் தன்மை மிக்கார் பேடியர் என்றும், பெண் தன்மை மாறி ஆண் தன்மை மிக்கார் அலியர் என்றும் கூறப் படுகின்றனர். இலக்கணம் கூறவந்த ஆசிரியர் பால்திரி தன்மையரை எப்பால் வகுப்பில் சேர்த்தல் வேண்டும் என்னும் ஐயம் பயில்வார்க்கு எழாவாறு, “இப்பால் படுத்திக் கூறுக” என இலக்கணம் வகுத்தார் என்க. செப்பும் வினாவும் “செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்” என்பதொரு கிளவியாக்க நூற்பா (496). ‘வினா விடை’ மலிந்த காலம் இது. வினாவுதலும் விடை தருதலும் வழக்கு. ஆனால், ஆசிரியர் தொல்காப்பியர் பார்வை ஆழமானது. வினாவுதற்கு உரிய பொருள் ஒன்று இல்லாமல் வினாவுதல் என்பது இல்லையே என எண்ணியவராய் விடை என்பதனைக் குறிக்கும் ‘செப்பு’ என்னும் சொல்லை முன்வைத்துச் “செப்பும் வினாவும்” என்றார். செப்பல் ஓசையமைந்த வெண்பா, வினாவுக்கும் விடைக்கும் பொருந்தி வரக் கண்ட புலமையர், அதனைப் போற்றி வளர்த்த இலக்கியப் பரப்பு பேரளவினதாம். வினா விடை வெண்பா, சேதுவேந்தர் அவையில் சிறக்க வளர்ந்தது. இரட்டையர், காளமேகர் முதலியோர் பாடியவை தனிப்பாடல் திரட்டில் இடம் பெற்றன. வினாவே விடை “படிப்பாயா” என வினாவுகிறார் ஒருவர். வினாவப் பட்டவர், “படியேனோ? (படிக்க மாட்டேனோ?)” என அவரும் வினாத் தொடுக் கிறார். இவ்வினாவும் விடையே என்பதை மக்கள் வாழ்வியல் வழக்குக் கண்டு உரைத்துள்ளார் தொல்காப்பியர் அது, “வினாவும் செப்பே வினாஎதிர் வரினே” என்பது (497). தகுதி சட்ட மன்றத்திலோ, நாடாளுமன்றிலோ பயன்படுத்தக் கூடாத சொல் என்று அவைக் குறிப்பில் இருந்து விலக்கக் கூறுதல் மக்களாட்சி நடைமுறை. இம்முறை பெரியவர் முன்பிலும், பெரு மக்கள் அவை முன்பிலும் பண்டே பயன்படுத்தப்பட்ட செம்முறை ஆகும். மாண்டார், இறந்தார், துஞ்சினார், செத்தார் என்பன வெல்லாம் ஒரு பொருள் தருவனவே எனினும், ‘செத்தார்’ என்பது மதிப்புக் குறைவாகக் கருதப்படுகின்றது. விடுக்கப்படுவது, ‘ஓலை’ என்றாலும் அது ‘திருமுகம்’ எனப் பட்டது. ‘விளக்கை அணை’ என்னாமல், ‘விளக்கை அமர்த்து’, ‘குளிரவை’ என்பவை மின் காலத்திலும் பின்பற்றல் உண்டு. இவற்றை அவையல்கிளவி, (இடக்கரடக்கு) என்றும், மங்கல வழக்கு என்றும் கூறப்பட்டன. “இதனை இவ்வாறு கூறுதலே தகுதி” எனச் சான்றோரால் வகுக்கப்பட்டது ’தகுதி வழக்கு’ என்பதாம் இதனைத், “தகுதியும் வழக்கும் தழீஇயின ஒழுகும் பகுதிக் கிளவி வரைநிலை இலவே” என்கிறார் (500). இனச் சுட்டு ஞாயிறு என்பதற்கும் செஞ்ஞாயிறு என்பதற்கும் வேறுபாடு உண்டா? உண்டு. ஞாயிறு என்பதைப் பொது வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் கொள்ளலாம். ஆனால், செஞ்ஞாயிறு என்பது பொது வழக்குச் சொல் அன்று; அது, செய்யுள் வழக்குச் சொல். ஏனெனில், இனச்சுட்டு இல்லாச் சொல் செஞ்ஞாயிறு என்பது கரு ஞாயிறு என ஒன்று இல்லையே; அதனால் ‘செந்தாமரை’ என்பது பொது வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் உண்டே எனின், அது இனச் சுட்டுடைய பண்பினது. வெண்டாமரை உள்ளதே! “இனச்சுட் டில்லாப் பண்புகொள் பெயர்க்கொடை வழக்கா றல்ல செய்யு ளாறே” என்பது நூற்பா (501). இயற்கை செயற்கை இயற்கைப் பொருளை இவ்வாறு கூறவேண்டும் செயற்கைப் பொருளை இவ்வாறு கூறவேண்டும் என்னும் நெறிமுறைகள் உண்டு. ‘மண்திணிந்த நிலம்’ என அதன்செறிவு கூறப்படும். மக்கள் வழக்கிலும் நிலம் வலிது; நீர் தண்ணிது எனப்படும். ஆனால் செயற்கைப் பொருளுக்குக் கூறும் முறை வேறானது. ‘பயிர் செழுமையானது’ எனஆக்கச் சொல் தந்து கூறுதல் வேண்டும். ஆக்கச் சொல்லொடு காரணம் கூறலும் வழக்கு. “நீர் விட்டு களைவெட்டி உரமிட்டு வளர்த்ததால் பயிர் செழுமை யானது” என ஆக்கம் காரணம் பெற்று வருதல் உண்டு. ஆக்கம் காரணம் அறிவிக்காமல் அறியத்தக்கது எனின், காரணம் இல்லாமலும் ஆக்கம் வரும். உழவர் முதலோர் வழக்குகளில் ஊன்றிய ஊன்றுதலே இவ்விலக்கண ஆட்சி முறையாம் (502 - 505). ஒருவர் அவர், பலர்பால் சொல், ஆனால் ஒருவரை அவர் எனச் சிறப்பு வகையால் கூறல் உண்டு. அம்முறை இலக்கண முறை ஆகாது; மக்கள் வழக்கு முறையாகும். வேந்தனே எனினும் அவனைப் பாடிய புலவரை அவன் என்னாது அவர் எனல் உரையாசிரியர் மரபு. அதனால் ‘அவனை அவர் பாடியது’ என்றே நெறியாக வழங்கினர். “கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது” என்று சிறப்பு வகையாலே பாடல் தொகுத்தவர்கள் போற்றி உரைத்தனர். ஆர் இறுதி வரும் பெயரோடு சாதிப் பெயர் ஒட்டுதல் இல்லை என்பதை உணர்வார் அதனைப் போற்றத் தவறார். ஆனால் செய்யுளில் ஒரு புலவரை ஒரு புலவர் “பரணன் பாடினன்”, “கபிலன் பாடிய மையணி நெடுவரை” என ஒருமைப் பெயராகவே குறித்தனர். இவை எண்ணிப் போற்றத்தக்கவையாம். தாய்ப்பசு வரும் என்பதை, “இன்னே வருகுவர் தாயர்” என்கிறது முல்லைப் பாட்டு. இஃது அஃறிணையை உயர்திணை ஆக்கிக் கூறியது ஆகும். இவ் விலக்கணத்தைத் தொல்காப்பியர் சுட்டியுள்ளார் (510). யாது எவன் யாது என்றோ எவன் என்றோ வினாவின் வினாவப் பட்ட பொருள் முன்னர் அறியப்படாத பொருளாக இருத்தல் வேண்டும் என்பது மரபு. வரையறை இடக்கண் வலிக்கிறது; வலக்கண் வலிக்கிறது எனத் தனித் தனியே கூறல் உண்டு. ஒரு கண் வலிக்கிறது எனலும் வழக்கே. இரண்டு கண்களும் வலித்தால், இரண்டு கண்கள் வலிக்கின்றன எனல் மரபு ஆகாது. இரண்டு கண்களும் வலிக்கின்றன” என்பதே மரபு. ஏனெனின், கண்கள் இரண்டே ஆதலால் உம்மை இட்டுச் சொல்லல் வேண்டும். இவ்வளவே என வரம்புடையவற்றை உம்மையிட்டுக் கூறாமை பிழையாகும். ‘முத்தமிழ் வல்லார்’ என்னாமல் ‘முத்தமிழும் வல்லார்’ எனலே முறை. ஏனெனின் தமிழ் மூன்றே ஆகலின். இதனை, “இனைத்தென அறிந்த சினைமுதல் கிளவிக்கு வினைப்படு தொகையின் உம்மைவேண்டும்” என்கிறார் (516). எங்குமே இல்லாத பொருளைச் சொன்னாலும் அவ்வாறு உம்மை தந்தே சொல்ல வேண்டும் (517). எ-டு: “எந்த முயலுக்கும் கொம்பு இல்லை” அல்லது இல்லது துவரம் பயறு உள்ளதா என்று ஒரு வணிகரிடம் வினாவினால் உள்ளது எனின் உள்ளது என்பார். இல்லை எனின் இல்லை என்று கூறார். ஆனால், துவரம் பயறு போன்ற ஒரு பயறு வகையைச் சுட்டிக் கூறுவார். பாசிப்பயறு உள்ளது; மொச்சைப் பயறு உள்ளது என்பார். ‘இல்லை’ என்று சொல்லுதல் தம் வணிக மரபுக்கு ஆகாது என அவர் கொண்டுரைக்கும் உரை வழக்கு இன்றும் நடைமுறையில் காண்பதேயாம். இதனை, “எப்பொருள் ஆயினும் அல்லது இல்எனின் அப்பொருள் அல்லாப் பிறிதுபொருள் கூறல்” என்கிறார் தொல்காப்பியர் (618). இன்னும், ‘இருந்ததுதான்;’ ‘நாளை வரும்’ என்பதும் இவ்வழிப்பட் டதே. இல்லை என்பது இல்லை என்னும் மக்கள் வழக்கைச் சுட்டுவது இது. பெயர்; சுட்டு ஒளவையார் வந்தார்; அவர், அரண்மனையை அடைந்தார். இதில் ஒளவையார் என்பது இயற் பெயர். அவர், சுட்டுப்பெயர். இயற்பெயரைச் சொல்லிய பின்னரே சுட்டுப் பெயரைச் சொல்லுதல் வழக்கம். ஆனால், செய்யுளில் சுட்டுப் பெயரை முதற்கண் சொல்லிப் பிற்பட இயற்பெயர் கூறலும் உண்டு. பெயர்களுள் சிறப்புப் பெயர், இயற்பெயர் என இரண்டும் வருவதாயின் சிறப்புப் பெயரை முற்படக் கூறி, இயற்பெயரைப் பிற்படக் கூறவேண்டும் என்பதும் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையாகும். எ-டு: ‘தெய்வப் புலவர் திருவள்ளுவர்’ சிறப்புப் பெயரைப் பின்னே வைத்து, இயற்பெயரை முற்பட வைத்தல் ஆகாது என்பதை வலியுறுத்தவே இதனைக் கூறினாராம் (524). ஒரு சொல் பலபொருள் கால் என்பது பல பொருள் ஒரு சொல். உறுப்பு, சக்கரம், காற்று, கால்பங்கு, கால்வாய் முதலாய பலபொருள்களை யுடையது. இவ்வொரு சொல், இப் பல பொருளுக்கு இடமாகி வருதலை அறிய வகை என்ன? கால், கை, தலை என்னும் இடத்து உறுப்பு என்றும், ‘கால் பார் கோத்து’ என்னும் இடத்துச் சக்கரம் என்றும், புனல் அனல் கால் என எண்ணுமிடத்துக் காற்று என்றும், ஒன்றே கால் என்றும் இடத்துக் கால் பங்கு என்றும், கண்வாய் கால்வாய் என்னும் போது நீர் வருகால் என்றும் அறிய முடிகின்றது. இவ்வாறு அறியும் முறையை ஆசிரியர் கிளவியாக்கத்தில் சுட்டுகிறார். பொருள் மயக்கம் உண்டாகா வகையில் பொருள் காண வழிகாட்டுகிறார். “அவற்றுள், வினைவேறு படூஉம் பலபொருள் ஒருசொல் வேறுபடு வினையினும் இனத்தினும் சார்பினும் நேரத் தோன்றும் பொருள்தெரி நிலையே” என்பது அது (535). வேற்றுமை தொல்காப்பியர்க்கு முன்னர் வேற்றுமை ஏழாக எண்ணப் பட்டுள்ளது. முதல் வேற்றுமையாகிய எழுவாய் வேற்றுமை விளியாகும் நிலையையும் முதல் வேற்றுமையின் திரிபாகவே கொண்டு அதனைத் தனித்து எண்ணாமல் இருந்துளர். ஆனால் தொல்காப்பியர், “வேற்றுமை தாமே ஏழென மொழிப” என்று கூறி, “விளிகொள் வதன்கண் விளியோடு எட்டே” எனத் தனித்து எண்ணியுள்ளார் என்பது அவர்தம் நூற்பாக்களின் அமைதியால் விளக்கம் ஆகின்றது. வேற்றுமை எட்டு என எண்ணப்பட்ட வகை அது. பெயர், விளி வேற்றுமையை ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு என எண்ணாமல், “அவைதாம், பெயர் ஐ ஒடு கு இல் அது கண் விளி என்னும் ஈற்ற” என எண்ணியுள்ளார். ஐ என்றால் இரண்டாம் வேற்றுமை என்றும்... கு என்றால் நான்காம் வேற்றுமைஎன்றும்... கண் என்றால் ஏழாம் வேற்றுமை என்றும்... அறியச் செய்துள்ளார். ஒன்று இரண்டு என எண்ணிக்கையால் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உண்டு எனினும் பெயர், ஐ, ஒடு என உருபுகளைக் கொண்டு எண்ணும் வகையால் சிக்கல் ஏற்பட வாய்ப்பு இல்லை. ஏனெனில் பொருள் வேறுபடுத்தும் சொல்லே பெயராகி விடுகின்றதே. ஆதலால் இந்நெறி மேற்கொண்டனர் நம்முன்னோர். ஐ என்னும் உருபு வெளிப்பட்டோ மறைந்தோ வரக் கண்டதும் அதன் பொருள் புலப்பட்டு விடும். ஆதலால் உருபையும் அவ்வுருபு வழியாக ஏற்படும் பொருளையும் தெளிவாக அறிந்துகொள்ள வேற்றுமை உருபு-பொருள்களைப் படைத்துளர். முருகன் என்னும் பெயர் எழுவாய் நிலையில் நின்று உருபுகளை ஒட்டும்போது முருகனை, முருகனால், முருகனுக்கு, முருகனின், முருகனது, முருகன்கண், முருகா என வேறுபடுகின்றது. உருபு மாற மாறப் பொருளும் மாறுபடுதலால் வேற்றுமை என்றனர். “முருகன் வாழ்த்தினான்” “முருகனை வாழ்த்தினான்” என்பவற்றில் வாழ்த்தியவனும் வாழ்த்துப் பெற்றவனும் வேற்றுமையாகிவிட வில்லையா! இவ் வேறுபாட்டை உருபு ஆக்குதலால் வேற்றுமை உருபு எனப்பட்டது. உருபு என்பது வடிவம் அடையாளம். அரசுத்தாள் என்பதன் அடையாளம் உருபா. வினை, பண்பு, உவமை, உம்மை இன்னவற்றின் அடையாளச் சொற்களையும் உருபு என்றது இதனால்தான். மரம் நட்டினான்; மரத்தை நட்டினான் மரம் வெட்டினான் ; மரத்தை வெட்டினான் ஊரை அடைந்தான். ஊரை நீங்கினான் ‘காளையைப் போன்றான்’ இப்படியெல்லாம் வருவனகொண்டு இன்ன உருபு இன்ன பொருளில் வரும் எனக் கண்டு அம்மரபு போற்றுமாறு காத்தனர். ஆயினும் சில உருபு மயக்கங்களும் உண்டாயின. சிலவற்றை ஏற்கவும் சிலவற்றை மறுக்கவும் ஆயின. என் வீடு என்பது, எனதுவீடு என ஆறாம் வேற்றுமை யாகும். என் மகள் என்று வரும்போது எனது மகன் எனக் கூடாது. ஏன்? வீடு உடைமைப் பொருள். மகள் உடைமைப் பொருள் அன்று. உறவுப் பெயர்; உரிமைப்பெயர். எனக்கு மகள் என உறவுரிமை தருதலே முறையாகும் (578). இந்நாளில் அடிக்கப் படும் திருமண அழைப்பிதழ்களில் பல இவ்வேறுபாடு அறியாமல் அடிக்கப்படுவதைக் காணலாம். எவ்வளவோ நுண்ணிய அறிவால் கண்டு வைத்த கட்டுக் கோப்பான நம் மொழி அக்கறை இல்லாத மக்களால் அழிக்கப்படுவதற்கு இஃதொரு சான்றாம். உருவாக்கிக் காத்த உயர்ந்த அறிவாளர் வைத்துள்ள மொழிச் சுரங்கம் இலக்கணம் என்னும் உணர்வு மக்களுக்கு ஏற்பட்டால் இத்தகு குறைகள் ஏற்படா. வேற்றுமை வரிசை சொற்கள் பெயர் வினை இடை உரி என நான்காக எண்ணப்படினும் பெயர், வினை என்னும் இரண்டனுள் அடங்கும். அப்பெயரே முதல் வேற்றுமை; அப்பெயராகிய எழுவாய் வினைபுரிதல் விளக்கமே வாழ்வியலாகும். அவற்றை முறையே வைப்பு முறையால் வைத்த அருமையது இரண்டாம் வேற்றுமை முதலியனவாம். இவ்வருமையை முதற்கண் கண்டுரைத்தவர் உரையாசிரியர் தெய்வச்சிலையார். அவர் கூறுமாறு: “யாதானும் ஒருதொழிலும், செய்வான் உள்வழி யல்லது நிகழாமையின் அது செய்து முடிக்கும் கருத்தா முன் வைக்கப்பட்டான். அவன் ஒரு பொருளைச் செய்து முடிக்குங்கால் செய்யத் தகுவது இதுவெனக் குறிக்க வேண்டுதலின் செயப்படு பொருள் இரண்டாவது ஆயிற்று. அவ்வாறு அப்பொருளைச் செய்து முடிக்குங்கால் அதற்கு ஆம் கருவி தேடுதலின் அக்கருவி மூன்றாவதாயிற்று. அவ்வாறு செய்து முடித்த பொருளைத்தான் பயன்கோடலே அன்றிப் பிறர்க்கும் கொடுக்கும்ஆதலின் அதனை ஏற்றுநிற்பது நான்காவது ஆயிற்று. அவ்வாறு கொடுப்புழி அவன் கையினின்றும் அப்பொருள் நீங்கி நிற்பது ஐந்தாவதுஆயிற்று. அவ்வாறு நீங்கிய பொருளைத் தனது என்று கிழமை செய்தலின் அக்கிழமை ஆறாவது ஆயிற்று. ஈண்டுக் கூறப்பட்ட எல்லாவற்றிற்கும் இடமும் காலமும் பொதுவாகி நிற்றலின் அவை ஏழாவது ஆயின.” மணிமாலை போல வேற்றுமையமைவு விளக்கம் சிறத்தல் எண்ணி மகிழத் தக்கதாம். நூலாசிரியர் கண் கொண்டு உரையாசிரியர் நோக்கி யுரைக்கும் இன்னவை நூற்பெருமையை மேலும் பெருமை செய்வதாம். ஒடு “ஊராட்சித்தலைவரொடு உறுப்பினர்கள் கூடினர்” இது செய்தித் தாளில் வரும் செய்தி. உறுப்பினர்கள் பலர்; தலைவரோ ஒருவர். ஆயினும் தலைவரோடு என அவர்க்கு முதன்மை கொடுப்பது ஏன்? “ஒருவினை ஒடுச்சொல் உயர்பின் வழித்தே” என்பது தொல்காப்பிய நாள் தொட்ட நடைமுறை வழக்கம் (575). விளி மரபு அம்மை அன்னை தந்தை தங்கை அக்கை தம்பி முதலான முறைப்பெயர்கள் விளிக்கப்படும் பெயர்களாக வழக்கில் மாறாமல் உள்ளன. விளித்தல் அழைத்தல், கூப்பிடுதல். அம்மா, அம்மே, அம்மோ என்றெல்லாம் வழங்குதல் பழமையும், ‘அம்ம’ என்று அண்மை விளியாம் பழமையும் இவ்வியலால் நன்கு அறியப்படும். “அண்மைச் சொல்லே இயற்கையாகும்” என்றும் விளியேலாமை குறிப்பார் (612). இம் மரபு தமக்கு முற்றொட்டே வரும் வகையை உணர்த்துமாறே ‘விளிமரபு’ என்று பெயரிட்டு வழங்கினார் என்பதும் அறியத்தக்கது. கோமான், பெருமாள் என்பன ஈற்றயல் நெடிலாகியவை. இவை விளியாம்போது இயற்கையாய் அமையும் என்கிறார். பெருமானே, பெருமாளே, கோமானே எனவருதல் இருவகை வழக்கிலும் உண்டு. “உளவெனப் பட்ட எல்லாப் பெயரும் அளபிறந் தனவே விளிக்கும் காலைச் சேய்மையின் இசைக்கும் வழக்கத் தான” என விளியை விரிவாக்கிப் போற்றுகிறார் (637). குழந்தை தொட்டுப் பெருமுதுமை வரை மக்கள் வாழ்வில் மட்டுமா? இறையடியாரும் “அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே” என்று விளிக்கும் விளிமரபு மாறாமரபு அல்லவா! சொல்லும் பொருளும். பெயர் வினை இடை உரி என முறையே சொற்களை எண்ணும் ஆசிரியர் அவற்றின் இலக்கண அடிமூலம் கூறுவாராய், “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்கிறார். தமிழ்ச் சொற்களில் இடுகுறி என்பதொரு சொல் இல்லை என்பதைச் சொல்லி எல்லாச் சொற்களும் பொருள்புணர்ந்தனவே என உறுதி மொழிகிறார் (640). பெயர், வினை சொற்கள் இரண்டே என்பாராய், “சொல்எனப் படுப பெயரே வினைஎன்று ஆயிரண் டென்ப அறிந்திசி னோரே” என்பது (643) குடிக்கணக்கு எடுப்பார் தலைக் கட்டு எண்ணுவது போன்றதாம். தலைக்கட்டு வரி ஊர்ப்பொதுப் பணிக்கு ஊரவர் மதிப்பிட்டுப் பெறும் தொகையாகும். ஆள் எண்ணிக்கையில் இருந்து வரிதண்டலுக்கு விலக்கப்பட்ட முறை போல்வது அது. பொருளை உணர்த்துவது பெயர். பொருளின் பெயர்ச்சி (புடை பெயர்தல்) வினை. என இரண்டன் பொருந்துதலும் நோக்கத் தக்கது. இடைச் சொல்லும் உரிச் சொல்லும் சொல்லென ஆகாவோ எனின், “இடைச்சொல் கிளவியும் உரிச்சொல் கிளவியும் அவற்றுவழி மருங்கில் தோன்றும் என்ப” என்பார் (644). பெண்மகன் ஆண், பெண், பிள்ளை எனவும்; ஆண்பிள்ளை, பெண் பிள்ளை எனவும்; வழங்கல் உண்டு. ஆண்மகன்; பெண்மகள் என்பனவும் வழங்குவனவே. பெருமகள் பெருமாள் ஆகும்; பெருமகன் பெருமான் ஆவது போல. ‘பெண் பெருமாள்’ என்பார் வரலாற்றில் இடம் பெற்றுளார். தொல்காப்பியர், “பெண்மை அடுத்த மகன் என் கிளவி” என்பதைக் குறிக்கிறார். அதனால், ‘பெண்மகன்’ என வழங்கப் பெற்றமை அறியவரும். உரையாசிரியர் சேனாவரையர், “புறத்துப் போய் விளையாடும் பேதைப் பருவத்துப் பெண் மகளை மாறோக்கத் தார் இக்காலத்துப் பெண்மகன் என்று வழங்குப” என்கிறார். கல்வி அறிவாற்றலால் தக்கோர் அவையில் முந்தி யிருக்கச் செய்யும் கடமை யமைந்த பெற்றோரை நோக்க, மகற் காற்றல் என்பது இருபாலையும் தழுவியபேறும் உண்டெனக் கொள்ளத் தகும். இனி இந்நாளிலும் பெண்மகவை ‘வாடா’ ‘போடா’ என்பதும், ஆண்பெயராக்கி அழைப்பதுடன் ஆணுடையுடுத்து மகிழ்தலும் காணக் கூடியனவேயாம். குறிப்பாகப் பெண்பிள்ளை இல்லார் அவ்வாறு செல்வமாகப் போற்றி மகிழ்தல் அறியலாம். தொல்காப்பியர் நாளை எச்சமாக அதனை எண்ணலாம். பெயர்வகை உயர்திணைப் பெயர் அஃறிணைப் பெயர் என விரிவாகப் பட்டிய லிட்டுக் காட்டும் ஆசிரியர் நூற்பாக்களொடு சங்கத்தார் பெயர்களை ஒப்பிட்டு ஆய்ந்தால் மொழித் தூய்மை பேணும்வழி தானே புலப்படும். நிலப் பெயர், குடிப் பெயர், குழுவின்பெயர், வினைப் பெயர், உடைப்பெயர், பண்பு கொள் பெயர், முறைநிலைப் பெயர், சினை நிலைப் பெயர், திணை நிலைப் பெயர், ஆடியற்பெயர், எண்ணியற் பெயர் என்னும் இவை இடைக்கால பிற்கால வேந்தர் முதலோரால் கொண்டு போற்றப் படாமையால் இந்நாளில் முறை நிலைப் பெயர் (அம்மா, அப்பா, அண்ணா, அக்கை) தாமும் ஒழிந்துபடும் நிலைமை எண்ணத் தகும். சிறுநுண் நச்சுயிரியினால் பேருயிரியாம் மாந்தர் அழிந்து படுதல் ஆகாது என அறிவியலாளரும் அரசியலாளரும் எடுக்கும் நலத்துறை அக்கறையில் ஒரு சிறிதளவு தானும் மொழித்துறை, பண்பாட்டுத் துறையில் கருத்துச் செலுத்த வில்லையே என்னும் ஏக்கம் உண்டாக்கு வது தொல்காப்பியர் சுட்டிக் காட்டும் பெயர் வகைகள் ஆகும் (647-650). அவர்கள் அவன் அவள் அவர் அது அவை என்பன ஐம்பாற் பெயர்கள். இந்நாளில் ‘அவர்கள்’ எனப் பலர்பால் வழங்கப்படுகிறது. ‘ஆசிரியர் அவர்கள்’ எனச் சிறப்பொருமைப் பெயராகவும் வழங்கப்படுகிறது. ‘கள்’ என்பது அஃறிணைப் பன்மைப் பெயர் ஈறு. அது மக்கட் பெயரொடு ஆண்கள் பெண்கள் அவர்கள் என வருதல் ஆகாது. ஆடுகள் மாடுகள் மலைகள் எனவரும் என்பது பழைய மரபு. “கள்ளொடு சிவணும் அவ்வியற் பெயரே கொள்வழி யுடைய பல அறி சொற்கே” என்பது தொல்காப்பியம் (654). பலவின் பாலுக்குரிய ‘கள்’ பலர்பாலுக்கும் வருதல் சங்கத்தார் காலத்திலேயே தோற்றமுற்று வரவரப் பெருக்கமாகி விட்டது. அவர்கள் எனக் கள்ளீறு இல்லாமல் ஒருவரைச் சொன்னால் அவர் பார்வையே வேறாகிப் ‘பண்போடு பேசத் தெரியவில்லை’ எனப் பழிப்புக்கும் ஆளாகிவிடுதல் இந்நாளில் கண்கூடு. தாம், தான் தாம் என்பது பன்மைக்குரிய சொல் (669). எ-டு: அவர்தாம் கூறினார்; அவர் தம்முடைய பணிக்குச் சென்றார். தான் என்பது ஒருமைக்குரிய சொல் (670). எ-டு: அவன்தான் கூறினான்; அவன் தன்னுடைய பணிக்குச் சென்றான். எல்லாம் என்பது பன்மைச் சொல் (671). எ-டு: அவர் எல்லாம்; அவை எல்லாம். இப்படித் தெளிவாகத் தொல்காப்பியம் கூறியும் இந்நாளை இதழாசிரியர் நூலாசிரியர் தாமும் கண்டு கொள்வதில்லை. அவர் தன்னுடைய வேலையுண்டு தானுண்டு என்றிருப்பார் - என அச்சிட்ட செய்தி படிப்பார் அப்பிழையைக் கற்றுக் கொண்டு பரப்பாளரும் ஆகிவிடுகிறாரே! வினை வினை என்பதன் இலக்கணம் ‘காலத்தொடு தோன்றும்’ என்பது. அது ‘வேற்றுமை கொள்ளாது’ என்பதும் அதன் இலக்கண மே. இதனைச் சொல்லியே வினையியலைத் தொடங்குகிறார். மெய்யியல் வல்லாராகிய அவர், செயல் வழியாம் வினையைச் சொல்வதை அன்றித் ‘தலைவிதி’ என்னும் பொருளில் ஆளவில்லை. 49 நூற்பாக்கள் அதற்கென வகுத்தும் அவ்வாறு ஆளாமை தாம் கூற எடுத்துக் கொண்ட பொருளமைதியை விடுத்து வேறு வகையில் செல்லார் என்பது நாட்டும். ‘செய்வினை’ செய்தல்; அதனை நீக்க ‘வினைக் கழிவு’ செய்தல் அறிவியல் பெருகிவருவது போலப் பெருகி வருதலை நினைக்க ஏதோ மூளைச் சலவைக்கு ஆட்பட்ட மக்கள் போலத் தோன்றுதல்தானே உண்மை. விரைவு வாரான் ஒருவனும் வருவான் ஒருவனும் விரைவுக் குறிப்பில் வந்தேன் வந்தேன் எனல் உண்டே! உண்ணப் போவான் ஒருவன் உண்டேன் எனலும் உண்டே! இது குற்ற மல்லவோ எனின், “வாராக் காலத்தும் நிகழும் காலத்தும் ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் விரைந்த பொருள என்மனார் புலவர்” என அமைதி காட்டுகிறார் ஆசிரியர் (726). நிகழ் காலம் மலை நிற்கும் எனவும், கதிர் இயங்கும் எனவும் வழங்குகிறோம். மலை நின்றதும், நிற்கின்றதும், நிற்பதும் ஆகிய முக்காலத்திற்கும் உரியதாக இருந்தும் நிகழும் காலத்துச் சொல்லுதல் வழு இல்லையா? கதிர் இயங்கியது; இயங்குகிறது; இயங்கும்; இவ்வாறு இருந்தும், நிகழ்காலத்தில் சொல்லுதல் வழுத்தானே! ஆசிரியர் தெளிவிக்கிறார்: “முந்நிலைக் காலமும் தோன்றும் இயற்கை எம்முறைச் சொல்லும் நிகழும் காலத்து மெய்ந்நிலைப் பொதுச்சொல் கிளத்தல் வேண்டும்” என்பது அவர்காட்டும் அமைதி (725). முக்காலத்திற்கும் ஒத்தியலும் அவற்றைச் ‘செய்யும்’ என்னும் வாய்பாட்டால் சொல்ல வேண்டும் என வழிகாட்டுகிறார். தெளிவு இச் சுழலுள் போவான் செத்தான் எனின் வழுவாகும் அல்லவோ! அப்படிச் சொல்லுதல் வழக்கில் உண்டே எனின், நிகழப் போவதை உறுதியாகக் கொண்டு நிகழ்ந்ததாகக் கூறியது அது என்கிறார். “வாராக் காலத்து வினைச்சொற் கிளவி இறப்பினும் நிகழ்வினும் சிறப்பத் தோன்றும் இயற்கையும் தெளிவும் கிளக்கும் காலை” என்பது நூற்பா (730). இடைச் சொல் ‘நான்’ என்பது தன்மைப் பெயர். ‘நீ’ என்பது முன்னிலைப் பெயர். ‘நான் நீ’ என்று நின்றால் பொருள் விளக்கம் பெறுவது இல்லை. “நானும் நீயும்” என்னும் போது பொருள் விளக்கம் பெற வாய்க்கின்றது; ‘செல்வோம்’ எனச் சேர்த்தால் பொருள் முடிபு கிட்டுகின்றது. சொற்கள் பெயர், வினை எனப் பகுக்கப் பட்டாலும், இத்தகு (உம்) இணைப்புகளும் வேண்டியுள. இவ்விணைப்புச் சொற்களே இடைச் சொற்கள் எனப்படுகின்றன. இடைச் சொல் என்பதால் சொல்லுக்கு இடையே மட்டும் வரும் சொல் என்பதாகாது. சொல்லுக்கு முன்னும் பின்னும் இடையும் வேண்டும் இடத்தால் வருவது இடைச் சொல் எனப்பட்டது என்க. “இடைச் சொல் தான் சார்ந்த பெயரின் பொருளையும் வினையின் பொருளையும் தழுவி நிற்றல் அன்றித் தனித்து நடக்கும் தன்மையது அன்று” என்று ஆசிரியர் கூறுகிறார் (734). எலும்புகளை இணைக்கவும் இயங்க வைக்கவும் இணைப்பு மூட்டுகள் உடலில் இடம் பெற்றிருப்பன போலச் சொற்பொருள் விளக்கத் திற்கு இடைச்சொற்கள் உதவுகின்றன எனல் தகும். “யான் அரசன்; யான் கள்வன்” இடைச் சொல் பெறா நிலையில் இத் தொடர்கள் தரும் பொருளுக்கும், “யானோ அரசன்; யானே கள்வன்” என இடைச் சொல் இணைதலால் வரும் தொடர்கள் தரும் பொருளுக்கும் உள்ள வேறுபாடு பளிச்சிட்டுத் தோன்றவில்லையா? இடைச் சொற்கள் சொல்லுறுப்புகளே எனினும் சொல்லுக்கும் பொருளுக்கும்; தொடர்புப் பாலமாக இருப்பவை அவையே. இனி, இடைச் சொல் தானும் பொருளின்றி வாரா என்பதன் விளக்கமே, “கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவியென்று அம்மூன் றென்ப மன்னைச் சொல்லே” என வருவது முதலான நூற்பாக்கள். உரிச்சொல் இயற்றப்படும் செய்யுள் சுவையும் தெளிவும் உறுதியும் அழகும் கொண்டு விளங்குமாறு இதற்கு இதுவே உரிய சொல் எனத் தேர்ந்து வைக்கப்படும் சொல் உரிச் சொல்லாகும். பெயர் வினை இடை என்னும் முச்சொற்களைக் கொண்டே எடுத்த பொருளைக் கூறிவிட முடியும். ஆனால் உரிச் சொல் தரும் சுவை முதலிய நலங்கள் ஏற்பட்டு ஆழ்ந்து எண்ணவும் மீள மீளக் கற்கவும் வாய்க்காமல் அமையும். அவையறிந்து பேசுவார் தம்மைச், சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர், சொல்லின் நடையறிந்த நன்மையவர், சொல்லின் வகை யறிவார் (711 - 713) என்று வள்ளுவர் தொகுத்துக் கூறும் இலக்கணம் அமைந்த சொல் உரிச் சொல் ஆகும். உரிச்சொல் உணர்வில் நின்று சுவை யாக்குதல், உரிப்பொருள் ஒப்பது எனப் பெயரீடு கொண்டு உணரலாம். நிகண்டு படைப்பாளி கொண்ட பொருள் நயம் படிப்பாளியும் கொள்ளல் வேண்டும் எனின் புரிதல் வேண்டும். காட்சிப் பொருள் போலக் குருத்துப் பொருளை அறிதலின் அருமை நோக்கியே உரிச்சொல் விளக்கமாக நிகண்டு நூல்கள் தோற்றமுற்றன. அந்நிகண்டு நூல்களில் ஒன்றன் பெயர் உரிச்சொல் நிகண்டு என்பது. வழக்காற்றில் நிகழ்கின்றவற்றைக் கொண்டு திரட்டி வைக்கப்பட்ட சொல்லடைவே நிகண்டு என்னும் பொருட் (காரணப்) பெயராகும். உரிச்சொல் இயல் இத்தகு செய்யுட் சொல்லைப் பொருள் உணர்ந்து ஓதிச் சுவைக்கும் வகையில் வழிகாட்டியவர் தொல்காப்பியர். அவர் வகுத்த உரிச் சொல் இயல் அதன் விளக்கமாகும். வேண்டும் வேண்டும் சொல்களை உருவாக்கிக் கொள்ள அடிச் சொல்லாகத் திகழும் அருமை உரிச் சொல்லுக்கு உண்டு. தொல்காப்பியர், ‘உறு தவ நனி’ என்னும் உரிச் சொற்களைக் கூறி, மூன்று என்னும் எண் தந்து, மிகுதி என்னும் பொருள் தருவன அவை என்கிறார். “சால உறு தவ நனி கூர் கழிமிகல்” (நன். 455) என ஆறு எண்ணுகிறார் நன்னூலார். உரிச் சொற்கள் எல்லாவற்றையும் எடுத்து ஓத வேண்டுவது இல்லை; அவற்றுள் பொருள் வெளிப்பாடு உடைய சொல் பொருள் வெளிப் பாடு அரிய சொல் என்பவற்றுள் பின்னதையே கூறினேம் என்கிறார். அவ்வாறானால் வெளிப்பட வாராச் சொல்லென அவர் எண்ணுவன வற்றையே கூறுகிறார் என்பது தெளிவாகும். மிகுதி மிகுதிப் பொருள் தரும் உறு என்னும் உரிச்சொல் ‘உறுபசி’ என வள்ளுவத்தில் ஆளப்படுகிறது; ‘உறுதுயர்’ என்பதும் அது. உறு என்பது உறுதல், உறுதி, உற்றார், உறவு, உறக்கம், உறிஞ்சுதல் உறுவலி முதலிய சொல்லாக்க அடிச் சொல்லாக அமைந்திருத்தலும் நெருக்கம் கட்டொழுங்கு மிகுதி என்னும் பொருள்களைச் சார்ந்தே நடை யிடுதலும் அறியத் தக்கதாம். மிகுதிப் பொருள் தரும் ‘தவ’ என்பது, தவப்பிஞ்சு தவச் சிறிது என மக்கள் வழக்கிலும் இடம் பெற்றுள்ளது. இது, தவம், தவசம், தவசி, தவசு எனச் சொல்லாக்கம் பெற்று வழங்குதலும் காணலாம். நல், நன், நன்று, நனவு, நனி, நனை என்பன வாழ்வியல் வளச் சொற்களேயாம். மழ, குழ மழலை, மதலை, குழந்தை, குதலை என்னும் சொற்களை எண்ணிய அளவில் இளமை மின்னலிடல் எவர்க்கும் இயற்கை. தொல்காப்பியர், “மழவும் குழவும் இளமைப் பொருள” என்கிறார். உள்ளங்கள் ஒன்றிப் போகிய வகையால் உண்டாகிய பொருள் அல்லவோ இது. அலமரல் அலமரல் என்பது தொல்காப்பியர் நாளில் வெளிப்படப் பொருள் வாராச் சொல்லாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இந்நாளில் ‘அல மருதல்’ மக்கள் வழக்குச் சொல்லாகி விட்டது. அலமருதல் சுழற்சிப் பொருளிலேயே வழங்குகின்றது. தெருமரல் என்பதும் அப்பொருளதே. சீர்த்தி சீர் சீர்மை சீர்த்தி சீரை என்பன வெல்லாம் இலக்கிய வழக்கில் உள்ளவை. முன்னிரண்டு சொற்களும் மக்கள் வழக்கிலும் உள்ளவை. சீர்த்தி என்ன ஆயது? ‘கீர்த்தி’ ஆகிவிட்டது. வேற்றுச் சொல் எனவும் கொள்ளப் பட்டது. சீரை ‘சீலை’யாகிவிட்டது. சீரை என்னும் துலைக்கோல் பொருள் இலக்கிய அளவில் நின்று விட்டது. குரு ‘குரு’ என்பது ஒளி என்னும் பொருள் தரும் உரிச்சொல். உள்ளொளி பெருக்குவான் ‘குரு’. குருந்து, குருந்தம், குருமணி, குருதி என்பன ஒளிப்பொருள் - நிறப் பொருள் - தருவன. குருத்து என்பது மக்கள் வழக்குச் சொல். ஒளியுடன் வெளிப்படுவது அது. குருத்தோலையும் குருத்திலையும் மிக வெளிறித் தோன்றுதல் ‘குரு’ வின் பொருள் காட்டுவன. குருந்தத்துக் குருமணி நினைவில் எழலாமே! அதிர்வு “அதிர்வும் விதிர்வும் நடுக்கம் செய்யும்” என்பது அப்படியே நடையில் வழங்கும் உரிச்சொற்களாக உள்ளனவே. “அதிர்ந்து போனார்” “விதிர் விதிர்த்துப் போனேன்” வழக்கிலும், செய்தித் தாள்களிலும் இடம் பெறும் சொற்கள் தாமே இவை. தொல்காப்பியர் நாளில் அருஞ் சொற்களாக இருந்ததால்தானே விளக்கம் தந்தார். கம்பலை கண்ணீரும் கம்பலையும் என்பதோர் இணைமொழி. கண்ணீர் விட்டு அழுவதே அது. அழுகையால் உண்டாகும் ஒலி கம்பலை. “கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்றிவை நான்கும் அரவப் பொருள” என்கிறார் தொல்காப்பியர். அரவம் - ஒலி; நீ இருக்கும் அரவமே இல்லையே என்பது வழக்கில் உள்ளது. பாம்புக்கு அரவம் எனப் பெயர் வந்தமை இதனால் அறியலாம். ‘கமலை’ கம்பலை என்பதன் தொகுப்பே. அழுங்கல் அழுகையால் அறியலாம். கலித்தல் துள்ளல்; அலை ஒலியால் கலித்தல் விளங்கும். ‘சும்’ என்பது மூச்சின் ஒலிக்குறிப்பு. புலம்பு ஆற்றுவார் இல்லாமல் புலம்புதல் உண்டு. தானே பேசுதலை ‘ஏன் புலம்புகிறாய்?’ என்பதும் வழக்கே. “புலம்பே தனிமை” என்பது தொல்காப்பியம். புலம்பல் உரிப்பொருளுக்கு உரிய நெய்தல் நிலப் பெயர் ‘புலம்பு’ எனப்படும். அதன் தலைவன் புலம்பன்! வெம்மை கோடைக் காலத்தில் தமிழகத்து வாழும் வளமைமிக்கார் கோடைக் கானைலை நாடி உறைவர். கோடைமலை சங்கச் சான்றோர் பாடு புகழ் பெற்றது. கோடைக்கு அதனை நாடும் இக் காலநிலைபோல், தொல்காப்பியர் காலத்தே வெப்பத்தைத் தேடி உறையும் குளுமை மிக்க நிலையும் இருந்திருக்கும் போலும் அதனால், “வெம்மை வேண்டல்” என ஓர் உரிச் சொல்லையும் பொருளையும் சுட்டுகிறார். நாம் நம் அன்பர்களைக் குளுமையாக வரவேற்க; குளிர்நாட்டார் ‘வெம்மையாக வரவேற்றல்’ காண்கிறோமே! பேம், நாம் குழந்தைகள் அழுமானால் அச்சம் காட்டி அடக்குதல் இன்றும் சிற்றூர் வழக்கம். அவ்வச்சக் குறிப்பு ‘பே பே’ என ஒலி எழுப்புதலும் தொண்டையைத் தட்டுதலும் ஆகும். ‘பே’ (பேம்) என்னும் குறிப்பு அச்சப் பொருள் தருதல் தொல் காப்பியர் நாளிலேயும் இருந்தது. ‘பேய்’ என்பதன் மூலம் இப் பேம் ஆகும். ‘ஓர் ஆளும் கருப்புடையும் பேய்’ என்பார் பாவேந்தர். ‘நா’ (நாம்) என்பதும் அச்சப் பொருள் தருதல் ‘நாமநீர்’ என்னும் கடலலைப்பால் புலப்படும். நாயும் அச்சப் பொருளாதல் அறிந்தது. உரும் உரும் அச்சமாதல் விலங்குகள் உருமுதலால் விளங்கும். உரும் இடியும் ஆகும். உரும் வழியே உண்டாகிய ‘உருமி’க் கொட்டு, கேட்ட அளவால் அசைப்பது தெளிவு. இவற்றைத் தொகுத்து “பேம் நாம் உரும் என வரூஉம் கிளவி ஆமுறை மூன்றும் அச்சப் பொருள” என்றார். ‘உரு’ என்பதை மட்டும் தனியே எடுத்து “உரு உட்கு (அச்சம்) ஆகும்” என்றும் கூறினார். கண்டறியாத் தோற்றங்களும் விலங்குகளும் பாம்பு முதலியனவும் அஞ்சச் செய்தலை எண்ணி ‘உரு’ எனத் தனித்துக் கூறினார். அவர்தம் விழிப்புணர்வு வெளிப்பாடு இன்னவையாம். ஆய்தல் ‘ஆய்தம்’ என்னும் எழுத்து முப்பாற்புள்ளி வடிவினது; ஆய்தப் புள்ளி என்பதும் அது; அஃகேனம் என்பதும் அதற்கொரு பெயர்; என்பவற்றைக் கூறும் ஆசிரியர், ஆய்தம் என்பதன் பொருள் ‘நுணுக்கம்’ என்கிறார். “ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்” என்பது அது. ‘ஆய்வுப் பட்டறை’ எனப் பெயரிட்டு ஆய்வாளர் பலர் கூடித் திட்ட மிட்டுச் செய்து வரும் தொடர் நிகழ்வாகிய அதன் பெயர் தானும் பிழையாயது என்பது அறியாமலே ஆய்வுகள் நிகழ்கின்றன. ‘பட்டடை’ என்னும் சொல் தொழிலகப் பெயர். ‘பட்டடை’ என்பது “சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு” என வள்ளுவரால் ஆளப்பட்ட சொல் (821) ஆய்தல் என்பது நாட்டுப்புறப் பெருவழக்குச் சொல். கீரை ஆய்தல், கொத்தவரை ஆய்தல் என்று கூறுதல் இந்நாள் வரை மாறியதில்லை. முற்றல் அழுகல் பூச்சி முதலியவை போக்கித் தக்கவற்றைத் தேர்ந்து கொள்ளுதலே ஆய்தல் பொருளாக அமைகின்றது. ஆய்தலினும் நுணுக்க ஆய்வு ‘ஆராய்தல்’ (ஆர் ஆய்தல்). ஆய்வும், ஆராய்வும் கொள்ளுவ கொண்டு தள்ளுவ தள்ளும் நுண்ணிய நோக்குடைய சொற்கள். ஒன்றின் ஒன்று நுணுகியவையாக, ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் என்பவற்றைச் சுட்டும் இவ்வுரிச் சொல் விளக்கம் அரிய வாழ்வியல் விளக்கமாம். ஓயா உழைப்பாளி, ஓயாப் போராளி, ஓயாச் சிந்தனையாளர், ஓயாப் பொருளீட்டாளர் ஓய்வு கொள்ளும் நிலை என்பது யாது? தம் ஓயாப் பாட்டின் பயன்பாட்டை மீள் பார்வை பார்க்க வேண்டும் அல்லவா! அவ்வாய்வு தானே ஓய்வின்பயன்! ஓய்வு என்பது சிந்தித்தலும் அற்றுப் போன நிலை அன்றே! அச் சும்மா இருக்கும் நிலை கோடியர்க்கு ஒருவர் இருவர் அல்லரோ தேடிக் கண்டு கொள்வது! அச் ‘சும்மா’ அரும் பொருளுள் அரும் பொருள். ஓய்வு கொள்வார்க் கெல்லாம் பொதுப் பொருளாகக் கைவர வல்லது ஆய்தலேயாம். ஆதலால் ஓய்தலில் நுண்ணியது ஆய்தல். ஆய்ந்து கண்ட பொருளை அடக்கிவைத்துக் கொள்வதால் ஆய்ந்து கண்ட பயன் தான் என்ன? அதனால் ஆய்ந்து கண்ட பயன் கருத்துகளைப் பலருக்கும் பல விடத்தும் சென்று கூறுதல் நிழத்தல் ஆகும். குடை நிழற்றல் என்பது நாடு தழுவுதல் போல் இந்நிழத்தல் ஆய்தலினும் நுண்மை யுடையதாம். இருந்தும் நடந்தும் நுவலும் நிலையும் இயலாமையாயின் அந்நிலையிலும் தாம் கண்ட அரும்பயன் பொருள் - நுவன்று நுவன்று வந்த பொருள் - பின் வருவோர்க்குக் கிட்டும் வகையால் நுவன்றதை நூலாக்கி (நுவல் - நூல்) வைத்தல் வேண்டும். அக்கொடை உயர்கொடை என்பதை ஒளவையார் “தாதா கோடிக்கு ஒருவர்” என்று பாராட்டுகிறார். ஓய்தல் முதல் சாய்த்தல் (வடித்தல்) வரைப்பட்டவை ஒன்றில் ஒன்று நுண்ணியவை ஆதலின் “உள்ளதன் நுணுக்கம்” என்றார். எவ்வொரு கடப்பாட்டில் ஊன்றியவரும் தம் ஊன்றுதல் கடனாக உயர்கொடை புரியலாம் என்னும் அரிய வழிகாட்டுதல், உரிச்சொல் வழியாகத் தரப்பெற்றதாம். வை வையே கூர்மை என்பதோர் உரிச்சொல் விளக்கம் (870). வை என்பதற்குக் கூர்மைப் பொருள் எப்படி வாய்த்தது? ‘வை’ என்னும் நெல்லைப் பார்த்தால் - நெல் நுனியாம் மூக்கைப் பார்த்தால் கூர்மை நன்கு புலப்படும். மழிதகடு போலும் கூர்மையுடையது நெல் மூக்காகும். வெகுளி “கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள” (855) என்பது வண்ணத்தை விலக்கி எண்ணத்தை வெளிப்படுத்தும் உரிச் சொல் விளக்கம். சினங் கொண்டார் கண்நிறம் என்ன? அவர் முகத்தின் நிறம் என்ன? - இவற்றை நோக்கின் வெகுண்டாரின் முகமும் கண்ணும் காட்டிவிடும். “முகத்தின் முதுக்குறைந்த துண்டோ உவப்பினும் காயினும் தான்முந் துறும்” என்பது குறள். கறுப்பும் சிவப்பும் நிறம் குறித்து வாராவோ எனின், “நிறத்துரு உணர்த்தற்கும் உரிய என்ப” என்று கூறுவார் (856). எறுழ் காளையை அடக்க விரும்புவார் அதன் கொம்பை வளைத்துத் திமிலைப் பற்றித் தாவி ஏறி அடக்குதல் வழக்கம். திமிலுக்கு ‘எறுழ்’ என்பது பெயர். எறுழ் என்பதன் பொருள் வலிமை என்பதாம். எறுழ் என்னும் உரியொடு எறும்பு, எறும்பி (யானை) என்பவற்றை எண்ணினால் வலிமை விளக்கமாம். “எறுழ் வலியாகும்” என்பது நூற்பா (871). கலியாணர் உண்ணாட்டு வாணிகரன்றி அயல் நாட்டு வாணிகராகப் பெரும் பொருள் ஈண்டியவர் கலியாணர் எனப்பட்டனர். கலி=மிகுதி; யாணர் = வருவாயினர். யாணர் என்பதன் பொருள் புதிதுபடல் (புதிய வளம் பெறுதல்) என்பார் தொல்காப்பியர் (862) யாணர் என்பதை யன்றி ‘யாண்’ என்னும் உரிச் சொல்லைக் காட்டி, “யாணுக் கவினாம்” என்றும் கூறுவார் (864). புதுவருவாயும் கவினும் பெருக்குவதாய திருமணம் ‘கலியாணம்’ எனவும் வழங்கப்படுதல் விளக்கமாக வில்லையா? வேற்றுச் சொல்லென மயங்காதீர் என்கிறது உரிச் சொற் பொருள். உணர்தல் உள்ளது உள்ளவாறு உணரும் உணர்ச்சி எவர்க்கு உண்டு என்று வினாவின், “உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே” என்கிறார் (876). சொல்லும் பொருளும் சொல்வோன் குறிப்பும் வெளிப்படப் புலப்பட்டு விடுமா? என வினாவின், உணர்வோர்க்கும் உடனே வெளிப்படப் புலப்படுதல் அரிது. ஆனால் அவரே ஆழ்ந்து நோக்கின் பொருள் புலப்படுதல் இல்லாமல் போகாது என்பதை, “மொழிப்பொருட் காரணம் விழிப்பத்தோன்றா” என்பதனால் தெளிவுபடுத்துகிறார் (877). இது முன்னரும் சுட்டப்பட்டது. எச்சம் ஒரு தொகையை ஒருவரிடம் தந்து செலவு கணக்குக் கேட்பார் எச்சம் எவ்வளவு என வினாவுவார். எச்சமாவது எஞ்சியிருப்பது. ஒருவர் தம் வாழ்வின்பின் வைப்பாக வைத்துச் செல்லுவன வெல்லாம் எச்சம் என்பதால், “தக்கார் தகவிலர் என்ப தவரவர் எச்சத்தால் காணப் படும்” என்றார் பொய்யாமொழியார். எச்சம் என்பதற்கு மக்கள் எனச் சொல்லை மாற்றினாரும் பொருள் கண்டாரும் உண்டு. ஆனால் தொல்காப்பிய எச்ச இயல் எஞ்சியது என்னும் தெளிபொருள் தந்து விளக்குகிறது. இவ்வதிகாரத்தில் சொல்லியவைபோகச் சொல்ல வேண்டி நிற்கும் எச்சத்தைச் சொல்வதால் எச்சவியல் எனப்பட்டது. எச்சம் மக்கள் வாழ்வில் மாறாது வழங்கும் விளக்க மிக்க சொல்லாம். நால்வகைச் சொற்கள் தமிழ்கூறும் நல்லுலகச் செய்யுள் வழக்கிலே பயிலும் சொற்களை இயற்சொல், திரிசொல், திசைச் சொல், வடசொல் என நான்காக எண்ணி இயலைத் தொடங்குகிறார். தமிழுலகத்து வழங்கும் வழுவிலாச் சொல் இயற்சொல் என்றும், ஒரு பொருள் குறித்த பல சொல்லும் பலபொருள் குறித்த ஒரு சொல்லுமாகிய தமிழ்ச் சொல் திரிசொல் என்றும், தமிழ் வழங்கும் நிலப் பரப்பின் அப்பாலாய் வழங்கிய சொல் திசைச் சொல் என்றும், வடக்கிருந்து வந்து வழங்கிய வேற்றுச் சொல் வடசொல் என்றும் இலக்கணம் கூறினார். தொல்காப்பியர் காலத்திற்கு முற்படவே தமிழர் கடல் வணிகம் செய்தமையும் அயல் வணிகர் இவண் வந்து சென்றமையும் உண்டாகிச் சொற்கலப்பு நேர வாய்ப்பிருந்தும் அச் சொற்களைச் செய்யுட் சொல்லாக ஏற்றார் அல்லர். வட சொல்லையும் தமிழியல்புக்கு ஏற்ப அமைத்துக் கொண்டு தமிழ்நெறிச் சொல்லாக வருவதையே வற்புறுத்தி ஏற்றுக் கொண்டார். திசைச் சொல்லும் திரிசொல்லும் தமிழியற் சொல் போலவே தமிழ் எழுத்து வடிவு கொண்டிருந்தமையால் அவ்வெழுத்தை விலக்கிச் சொல்லாட்சி செய்யுமாறு சொல்ல அவர்க்கு நேரவில்லை. ஆதலால் வடசொல் ஒன்று மட்டுமே தமிழுக்கு வேற்றுச் சொல்லாகவும் வேற்றெழுத்துச் சொல்லாகவும் தொல்காப்பியர் நாளில் இருந்தமை விளங்கும். அச்சொல்லை அப்படியே கொள்ளாமல் தமிழ் மரபுக்குத் தகுமாறு கொள்ளவேண்டும் என்னும் உறுதியால், “வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே” (884) என நெறிகாட்டினார். இவ்வாணை எந்த அயல் மொழிக்கும் உரிய பொது ஆணையெனப் போற்றுதல் மொழிக்காப்பாளர் கட்டாயக் கடமையாம். ஓர் அயற்சொல்லைக் கொள்ள வேண்டும் நிலை எப்படி உண்டாகும்? ஓர் அயற் சொல்லுக்கு ஒத்த அல்லது ஏற்ற சொல், அதனைக் கொள்ள விரும்புவார் மொழியில் இல்லாமல் இருக்க வேண்டும். சொல் இல்லை எனினும், ஏற்ற சொல்லை ஆக்கிக் கொள்ள முடியாத அரிய சொல்லாக அஃது இருத்தல் வேண்டும். அச்சொல்லை எடுத்துக் கொள்ளவில்லை என்றால், அப்பொருளை விளக்கிக் கூற முடியாத இடர் எடுத்துக் கொள்வார் மொழியில் இருத்தல் வேண்டும். இத்தகு நிலைகளிலேயே அயற் செல்லைத் தம் மொழியியற் கேற்பக் கொள்ள வேண்டும் என்பனவே இந் நூற்பாவின் கருத்துகளாம். வளமான செல்வமும் வாய்ப்பான வாழ்வும் உடையான் கடன் கொண்டு வாழ விரும்பான். கடன் கொள்ளல் இழிவெனவும் கொள்வான். அந் நிலையில், கடனாளன் என்னும் பெயர் கொள்வதற்காகக் கடன் கொள்ளுதலை அருவறுப் பாகவும் கொள்வான். அப் பொருட்கடன் போன்றதே வேண்டாச் சொற்கடனுமாம். பொருட்கடன் வேண்டாது பெற்றுக் கொண்டே போனால், உள்ளவை உரியவை அனைத்தும் அக் கடனாலேயே இழந்து எல்லாமும் இல்லாமல் ஒழிந்து போவான். இந்நிலையை எண்ணுவார் வேண்டாச் சொற்கடனைக் கொள்ளார். ஒரு சொல்லைக் கட்டாயம் எடுத்தாகவேண்டும் நிலை இருந் தாலும், மகப்பேறு வாயாதவர் ஒரு குழந்தையை மகவாகக் கொள்ளும் போது தம் குடும்பத்துக் குழந்தை என்பதை முற்றிலும் காக்கும் வகையால், அக் குழந்தையின் முன்னைத் தொடர்பை விலக்கித் தம் குடும்பத்திற்குத் தகுபெயர் சூட்டித் தம் குடிமை உறுப்பாகவே வளர்த்து வருதல் போல் அயற் சொல்லைத் தம்மொழிக்குத்தகக் கொண்டு ஆளவேண்டும் இதனைக் கூறுவதே, “எழுத்து ஒரீஇ, எழுத் தொடு புணர்ந்த சொல்லாகும்மே” என்னும் ஆணையாம். இவ்வாணையை மொழிக் காவலர் காலம் காலமாகப் போற்றினர். ஆனால் நாட்டுக் காவலர் போற்றத் தவறினர். அயன்மொழியார் வழியில் சாய்ந்தனர். மொழிக் காவலும் நாட்டுக் காவலும் ஒப்பப் போற்றிய மன்னர் காலத்தில் அயலெழுத்துப் புகவில்லை. அவர்கள் நம்பிக்கைக்கு இடமான வட மொழியார், படிப்படியே ஊர்கள் பெயர்கள் முதலியவற்றை மாற்றி வழங்க இடந்தந்தனர். மெய்க் கீர்த்தியில் மிக இடந் தந்தனர். அயன் மொழி வழிபாடு சடங்கு என்பவற்றை ஏற்றனர். அதனால் பொது மக்கள் வாழ்விலும் இந் நிலை புகுந்தது. கட்டிக் காத்த மொழிக் காவலர்களும், அயற் சொற்களேயன்றி அயலெழுத்துகளும் கொள்ளத் தலைப் பட்டனர். பின்னே வந்த அயன் மொழியாகிய ஆங்கிலம் பிரெஞ்சு போர்த்துக்கேசியம் உருது இந்தி ஆகிய மொழிச் சொற்களும் புகுந்து மொழியழிப்புப் பணியை முழு வீச்சாக செய்தன. தமிழால் வாழ்வாரும் இதற்குப் பங்காளர் ஆயினர். “தொல்காப்பிய ஆணை மீறிய இக்குற்றம் காட்டுத்தீயாகப் பரவி இந்நாளில் மொழியை அழிக்கின்றது” என்பதை இன்று உணர்ந்தாலும் பயனுண்டு. இல்லையேல் அயலார் கணக்குப்படி தமிழும் விரைவில் ‘இருந்த மொழி’ என்னும் நிலையை அடைதல் ஆகவும் கூடும். “தொல்காப்பியப் புலவோர் தோன்ற விரித்துரைத்தார்” எனச் சான்றோர் ஒருவர் பெருமிதம் கொண்டார்! தோன்ற விரித்துரைத்தாலும் போற்றிக் கொள்வார் இல்லாக்கால் என்ன பயனாம்? உரைநடைக்கு இல்லாத சில இடர்கள் செய்யுள் நடைக்கு உண்டு. அதற்கென அமையும் கட்டொழுங்குகள் சில; சுவை, நயம், ஒலி, பொருள் என்பவை கருதி வழங்கு சொற்கள் சற்றே மாற்றமாய் அமைத்துப் போற்றுதற்கு இடனாகும். அதனால் சில சொற்களில் மெல்லெழுத்து வல்லெழுத்தாகவும், வல்லெழுத்து மெல்லெழுத்தாகவும், சில எழுத்துகளை விரிக்கவும், சில எழுத்துகளைத் தொகுக்கவும், சில எழுத்துகளை நீட்டவும், சில எழுத்துகளைக் குறுக்கவும் ஆகும். ஆனால் இம்மாற்றங்களால் சொல்லின் பொருள் மாற்றமாவது இல்லை என்றும் செய்யுள் நயம் மிகும் என்றும் அறிய வேண்டும் என்று இலக்கியக் கல்விக்கு நெறிகாட்டுகிறார் (886). பாடலுக்குப் பொருள்கண்டு சுவைக்கத் தக்க வகையைப் ‘பொருள்கோள்’ எனக் கூறி அவ் விளக்கமும் தருகிறார் (887). இவை பயில்வார்க்குப் பயின்று சிறந்தார் காட்டும் வழியாகத் திகழ்கின்றன. ஆக்கிவைத்த உணவை உண்ண அறிந்தான் ஆக்கும் வகையையும் அறிந்துகொள்ளல் இரட்டை நலமாதல் போல் நலம் செய்வன இத்தகு துய்ப்பு நெறி காட்டலாகும். ஈ, தா, கொடு ‘ஈ’ என்றோ ‘தா’ என்றோ ‘கொடு’ என்றோ கூறுவதில் பொதுவாக நோக்குவார்க்கு வேறுபாடு இல்லை. ஆனால் நுணுகி நோக்கின் வேறுபாடு உண்டு. இதனை விளக்குகிறார் தொல்காப்பியர். கொடுப்பவனினும் அவனிடம் ஒன்றைப் பெற வருவோன் தாழ்வுடையன் எனின், ‘ஈ’ என்று கூறுவான். இருவரும் ஒப்புடையவர் எனின் பெறுவோன் ‘தா’ என்று கூறுவான். கொடுப்போனினும் பெறுவோன் உயர்ந்தவன் எனின் ‘கொடு’ என்று கூறுவான் என்று அக்கால மக்கள் வழக்கினை உரைக்கிறார். இரப்பவர் அனைவரும் இழிந்தாரும் அல்லர் கொடுப்பவர் அனைவரும் உயர்ந்தாரும் அல்லர். இரு நிலைகளிலும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் உண்டு. உயர்வு தாழ்வு என்பவை வயது அறிவு பண்பு உதவி நன்றிக் கடன் தொண்டு ஆளுரிமை என்பவற்றால் ஆவனவேயாம். பிறவிக் குல வேற்றுமை இல்லாததும் கருதப்படாததுமாம் காலநிலை தொல் காப்பியர் கால நிலையாம். வாராதனவும் பேசாதனவும் இந்தச் சாலை சென்னையில் இருந்து வருகிறது. கன்னி வரை செல்கிறது. என்று கூறுதல் உண்டு. இச் சாலை எங்கே போகிறது என வினாவுதலும் உண்டு. எறும்பு அணில் மலை முதலியவை பேசுவதாகக் கதைகள் உண்டு. இம்முறை உலகளாவியதாகவும் பெருவரவினதாகவும் உள. குழந்தையர் கல்விக்கு ஏற்றது இம் முறை எனப் போற்றவும் படுகிறது இதனைத் தொல்காப்பியர், “வாரா மரபின வரக்கூ றுதலும் என்னா மரபின எனக்கூ றுதலும் அன்னவை எல்லாம் அவற்றவற் றியல்பான் இன்ன என்னும் குறிப்புரை யாகும்” (905) என்கிறார் (என்னா = என்று சொல்லாத). அடுக்கு அடுக்கு என்றாலே ஒன்றற்கு மேற்பட்டது என்பது பொருள். அடுக்குச் சட்டி, அடுக்குப் பானை என்பவை அன்றி அடுக்கு மல்லி அடுக்குப் பாறை என இயற்கை அடுக்கும் உண்டு. பாடலில் இசை கருதி அடுக்கு வரும் எனின், நான்கு முறை அடுக்கலாம் என்றும், விரைவு கருதிய அடுக்கு மும்முறை வரலாம் என்றும் ஓர் எல்லை வகுத்துக் காட்டுகிறார் (906, 907). எந்த ஒன்றிலும் அளவீடு இருத்தல் வேண்டும் என்னும் ஆசிரியர் மொழிக் காவல் நெறி இஃதாம். ஒரு பொருள் இருசொல் உயர்தலும் ஓங்குதலும் ஒன்று தானே! மீயும் மிசையும் ஒன்று தானே! ஒருபொருள் தரும் இரு சொற்களை இணைத்தல் ஆகுமா எனின் ஆகுமென மக்கள் வழக்குக் கொண்டு தொல்காப்பியர் சொல்கிறார். அது, “ஒரு பொருள் இரு சொல் பிரிவில வரையார்” என்பது. வரையார் = நீக்கார், விலக்கார். புதுவரவு பழைய சொற்கள் காலவெள்ளத்தில் அழிந்துபடுவது போலப் புதுப்புதுச் சொற்கள் தோற்றமும் ஆகின்றனவே எனின் வாழும் மொழி என்பதன் அடையாளம் அதுவே என்பர் மொழியறிஞர். இதனைக் “கடிசொல் இல்லைக் காலத்துப் படினே” (935) என்கிறார். கடிசொல் லாவது விலக்கும் சொல் நாட்காட்டி, எழுதுகோல், செய்தித்தாள் என்பன வெல்லாம் காலம் தந்த புதுவரவுகள் அல்லவா! மொழிவளம் செய்யும் சொற்களின் பெருக்கமும் தொடர் வரவுமே மொழிவளம் ஆதலால், அவற்றைப் போற்றிக் காக்க ஏவினார். - இரா. இளங்குமரன் தமிழ்வளம் -19, தமிழர் வாழ்வியல் இலக்கணம் எனும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது நச்சினார்க்கினியர் தனிப்பெருஞ்சிறப்பு தமிழெனும் பெருங்கடற் பரப்பில் ஒரு கலஞ்செலுத்தி உலாக் கொண்டு, உயர்மணித் தொகுதிகளையெல்லாம் தொகுத்துப் பின்னவர்க்குக் கருவூலமென வைத்துச் சென்ற உரையாசிரியர் ஒருவர் உண்டென்றால் அவர் நச்சினார்க்கினியரே! அவரை அடுத்து எண்ணத்தக்க ஒருவர் யாப்பருங்கல விருத்தி உரைகாரரே! இன்னொருவர் அடியார்க்குநல்லார். எத்தனை நூல்களுக்கு உரை கண்டுள்ளார் நச்சினார்க்கினியர்! எத்தனை நூல்களை மேற்கோள் காட்டியுளார்! வாழ்நாளை எல்லாம் முற்றாக உரை வரைதற்கெனவே பயன்படுத்திய பெருந்தகை நச்சினார்க்கினியரே. உரை கண்ட நூல்கள் “பாரத்தொல் காப்பியமும் பத்துப்பாட் டுங்கலியும் ஆரக் குறுந்தொகையுள் ஐஞ்ஞான்கும் - சாரத் திருத்தகு மாமுனிசெய் சிந்தா மணியும் விருத்திநச்சி னார்க்கினிய மே” என்னும் வெண்பாவுரைக்குமாறு தொல்காப்பியம், பத்துப்பாட்டு, கலித்தொகை, சிந்தாமணி ஆகியவற்றுக்கு நச்சினார்க்கினியர் வரைந்த உரை நமக்கு வாய்த்துள்ளது. குறுந்தொகைக்குப் பேராசிரியர் வரைந்த உரை அகப்படாமை போலவே நச்சினார்க்கினியர் வரைந்த 20 பாடல்களின் உரையும் அகப்பட்டிலது. தொல்காப்பியம் முழுவதற்கும் உரைகண்டிருப்பி னும் பொருளதிகாரத்திலுள்ள மெய்ப்பாட்டியல், உவமையியல், மரபியல் ஆகிய மூன்றியல்களுக்கும் உரை கிடைத்திலது. `பாரத்தொல்காப்பியம்' என்னும் வெண்பா நச்சினார்க் கினியர் உரையை `விருத்தி' என்று கூறியிருப்பினும் தொல்காப் பியத்தில் காண்டிகை உரை என்னும் குறிப்பே உள்ளது. பத்துப்பாட்டு கலித்தொகை ஆகியவற்றி லும் `விருத்தி' என்னும் குறிப்பு இல்லை. ஆதலால் இவ்வெண்பாப் பாடியவர் விருத்தி என்று கருதினார் என்று கொள்ளலாம். நச்சினார்க்கினியர் கருத்து அஃதன்று என்றும் கொள்ளலாம். பெயரும் குடிவழியும் நச்சினார்க்கு (விரும்பினார்க்கு) இனியர் என்பது இறைவன் பெயர்களுள் ஒன்று என்பர். “நச்சுவார்க் கினியர் போலும் நாகவீச் சரவ னாரே” என்பது அப்பரடிகள் தேவாரம் (4.66:1). இதில் பெயராக வந்திலது. இறைவன் இயலாகவே வந்துளது என்பது எண்ணத்தக்கது. அப்பரடி களுக்குக் காலத்தால் மிகப்பிற்பட்ட சிவஞானமுனிவரர், “நச்சினார்க் கினியாய் போற்றி” என்றதும் இயல்விளிப் பெயரேயாம். பெயரன்று என்பதறிக. இவற்றால் இவர் இயற்பெயர் வேறொன்றாக இருந்து இவர்தம் உரைச் சிறப்பறிந்தவர்கள் இப்பெயரை வழங்கியிருத்தல் வேண்டும். அதுவே இயற்பெயர்போல அமைந்துவிட்டது எனலாம். ‘மதுரை ஆசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர்’ என்று தொல்காப்பியம், பத்துப்பாட்டு ஆகியவற்றின் ஒவ்வொரு பகுதி நிறைவிலும் வருகின்றது. இக்குறிப்பை விளக்குவதுபோல், “வண்டிமிர் சோலை மதுரா புரிதனில் எண்டிசை விளங்க வந்த ஆசான் பயின்ற கேள்விப் பாரத்து வாசன் நான்மறை துணிந்த நற்பொருள் ஆகிய தூய ஞானம் நிறைந்த சிவச்சுடர் தானே யாகிய தன்மை யாளன் நவின்ற வாய்மை நச்சினார்க் கினியன்” என இவரைப் பற்றிய பாயிரப் பகுதி கூறுகின்றது. இவற்றால் இவர் மதுரையார் என்பதும் “பாரத்துவாச கோத்திரத்தார் ஆகிய பிராமணர் என்பதும் புலப்படும். பாரத்துவாச கோத்திரத்தினர் வைணவர், சுமார்த்தர், மாத்துவர் என முப்பிரிவினர் என்றும் அவருள் இவர் சுமார்த்தர் என்றும் அத்வைதக் கொள்கையர்” என்றும் கூறுவர் (உரையாசிரியர்கள் பக். 141; நச்சினார்க்கினியர் பக். 6, 7). சமயம் இவர் வேத வழிப்பட்ட நெறியினர் எனினும் `சிவச்சுடர்' எனப் பாயிரம் சொல்லுதலாலும் நூலில் வரும் சில குறிப்புகளாலும் சிவனெறிப் பற்றாளர் என்று கொள்ளலாம். எனினும் இவர்தம் சிந்தாமணி உரையைப் பயின்றாரும், அச் சிந்தாமணி யுரையை அச்சமய நோக்குக்கு முரணா வகையில் உரை வரைய வேண்டும் என்பதற்காகவே அச்சமயம் புகுந்து அழுந்தக் கற்று அதன் முன்னே தாம் எழுதிய உரையை விடுத்துப் புத்துரை செய்தார் என்று கூறப்படும் செய்தி அறிந்தாரும் நச்சினார்க்கினியர் சமயச் சால்பைப் போற்றாமல் இரார். ஒரு நூலுரை செய்தற்காகத் தம் வழிவழிச் சமயந் துறந்து வேறொரு சமயத்துப் புகுந்தார் என்பதினும், அக்கொள்கை களை அழுந்தக் கற்றார் என்பதே சிறக்கும். ஒருகால் அச்சமயத்தார்க் கன்றிப் பிற சமயத்தார்க்குக் கற்பித்தல் இல்லை என்னும் கடுநெறி ஒன்று இருந்திருக்குமானால் அச் சமயத்திற்கே புகழ் வருவதாக இல்லை. அதனை அச்சமயஞ் சார்ந்து பயின்று, பயின்று முடித்த பின்னர் அதனைத் துறந்து தம் சமயம் சார்ந்தார் நச்சினார்க்கினியர் எனின், இவர் சூழ்ச்சியாளர்; பயன்கருதிய இந்நாளைக் கட்சி மாறியர்போல் - சமய மாறியர் - என்ற பழியே இவர்க்கு எய்துவதாம். இவற்றின் இடையேயும் ஒரு பசுமையான செய்தி : ஒரு நூலுக்கு மரபு பிறழாமல் உரை வரைவதற்காக எவ்வளவு அக்கறை எடுத்துக் கொண்டார் என்பதே. இச்செயல் இந்நாளைக்கு மட்டுமன்று எதிர் நாளைக்கும் இனிய வழிகாட்டும் மாண்பினதாம். காலம் நச்சினார்க்கினியர் உரை வழியால் இளம்பூரணர், சேனாவரையர், பேராசிரியர் ஆகிய தொல்காப்பிய உரையாசிரியர்களுக்கும், நன்னூல் பவணந்தியார், திருக்குறள் பரிமேலழகர், சிலப்பதிகார அடியார்க்கு நல்லார் ஆகியோர்களுக்கும் பிற்பட்டவர் இவர் என்பதற்குச் சான்றுகள் உண்மையால் 14ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியினர் என்பது தெளிவாகும். தமிழ்ம்மை “தத்தம் புதுநூல் வரிகளாற் புறநானூற்றிற்குத் துறை கூறினாரேனும் அகத்தியமும் தொல்காப்பியமுமே தொகைகளுக்கு நூலாகலின் அவர் சூத்திரப் பொருளாகத் துறை கூற வேண்டும் என்றுணர்க” என்றும் (புறத். 35), “இனித் தேவர்க்குரியவாக உழிஞையிற் றுறைகள் பலருங் கூறுவரால் எனின், அவை உலகியலாகிய அரசியலாய் எஞ்ஞான்றும் நிகழ்வின்றி ஒருகால் ஒருவர் வேண்டியவாறு செய்வனவாகலிற் றமிழ் கூறு நல்லுலகத்தன அல்லவென மறுக்க” என்றும் (புறத். 12), “அகரம் முதலாதல் ஆரியத்திற்கும் ஒக்குமேனும் ஈண்டுத் தமிழெழுத்தே கூறுகின்றா ரென்பது உணர்தற்கு னகர இறுவாய் என்றார்” என்றும் (நூன். 1), “தானே என்று பிரித்தார், இவை தமிழ் மந்திரம் என்றற்கும், மந்திரந்தான் பாட்டாகி அங்கதம் எனப்படுவன வுள, அவை நீக்குதற்கும் என்றுணர்க” என்றும் (செய். 178) இன்னவாறு கூறுமிடங்களில் தமிழ் வரம்புக்குரிய நூல் தொல்காப்பியம் என்பதை உணர்ந்து கூறுகின்றார். அதனைப் போற்றுதல் கடப்பாட்டையும் வலியுறுத்துகிறார். எதிரிடை “பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப” (கற். 4) என்னும் நூற்பாவில், “ஈண்டு `என்ப என்றது முதனூலாசிரியரை யன்று; வடநூலோரைக் கருதியது” என்கிறார். இவ்வாறு எதிரிடைப் போக்கில் அல்லது வலிந்த நோக்கில் செல்வதால் தாம் சுட்டிய தமிழ் நெறியைத் தாமே சிதைப்பவராக உரை வரையத்துணிந்தார். அதனால், “அங்கியங் கடவுள் அறிகரியாக மந்திர வகையாற் கற்பிக்கப்படுதலின் அத்தொழிலைக் கற்பென்றார்” (கற். 1) என்றும் “முற்காலத்து நான்கு வருணத்தார்க்கும் கரணம் ஒன்றாய் நிகழ்ந்தது” (கற். 2) என்றும், “மூன்று இரவின் முயக்கம் இன்றி ஆன்றோர்க்கு அமைந்த வகையாற் பள்ளி செய்து ஒழுகி; ஆன்றோராவார் மதியும் கந்தருவரும் அங்கியும்” என்றும் (கற். 5) கூறுவதும், அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கம் என்பதன் (புறத். 20) உரை விளக்கங் களும், “வேத முடிபு” (அகத். 5), “வேத நெறி அன்மை” (அகத். 11), “வேத நூலுள் இழைத்த பொருண் முடிபு” (அகத். 28), “வேதத்தையே” (அகத். 31), “வேதவிதி” (புறத். 2), “வேத முடிபு” (கள. 8) என நெடுகலும் கூறிச் செல்லுதலும் அவர் எடுத்துக்கொண்ட நூலின் தடத்தை மாற்றி எங்கோ இட்டுச் செல்லுதல் தெளிவாகின்றது. கந்தருவநெறிக்கும் களவுநெறிக்கும் உள்ள வேறுபாட்டை, “கந்தருவர்க்குக் கற்பின்றி அமையவும் பெறும். ஈண்டுக் கற்பின்றிக் களவே அமையாது என்றற்குத் துறையமை என்றார்” என்று பிறர்க்கு இல்லாத் தெளிவு காட்டும் திறத்தார் நச்சினார்க்கினியர் (கள. 1) என்பதை மறக்க முடியாது. அறிந்தே செய்யும் பிழை காலம் உலகம் என்னும் சொற்களை வடசொற்களாகச் சேனாவரையர் கூற, “காலம் உலகம் என்பன வடசொல் அன்று. ஆசிரியர் வடசொற்களை எடுத்தோதி இலக்கணம் கூறாராகலின்” (சொல். 58) என்று ஆசிரியர் ஆணை கூறுபவர் நச்சினார்க்கினியர். இவர் “அகர இகரம் ஐகாரமாகும்”, “அகர உகரம் ஒளகாரமாகும்” என்னும் நூற்பாக்களின் உரைகளில் “அகரமும் இகரமும் கூட்டிச் சொல்ல ஐகாரம்போல இசைக்கும்; அது கொள்ளற்க”; “அகரமும் உகரமும் கூட்டிச் சொல்ல ஒளகாரம் போல இசைக்கும்; அது கொள்ளற்க” என்று எழுதுதல், நூலாசிரியர் கருத்துக்கு மாறுகொளல் என்பது தெளிவாகின்றது. மேலும், “ஆகும் என்றதனான் இஃதிலக்கணம் அன்றாயிற்று” என்றும் கூறுகிறார். இஃது இவர் அறியாமையால் செய்வதன்று என்பது விளங்குகின்றது. சில இடங்களில் வலிந்து சூத்திரங்களை நலித்துப் பொருள் கூறும் வழக்கினை இவர் மேற்கொண்டவர் என்பதும் அதையும் உணர்ந்து கொண்டே செய்தார் என்பதும் விளங்குகின்றது. “அளபிறந் துயிர்த்தலும்” எனவரும் நூன்மரபு நூற்பா (33) விளக்கத்தில், “சூத்திரத் துட்பொருள் அன்றியும் யாப்புற இன்றி யமையா தியைபவை எல்லாம் ஒன்ற உரைப்ப துரையெனப் படுமே” என்னும் மரபியற் சூத்திரத்தானே (103) “இவ்வாறே சூத்திரங்களை நலித்துப் பொருளுரைப்பன வெல்லாம் கொள்க” என இவர் எழுதுதல் இவர் தம் உட்கோளைத் தெளிவாக்கும். “வரகு, கொற்றன் ஈரெழுத் தொருமொழி; அகத்தியனார் ஐயெழுத் தொருமொழி; திருச்சிற்றம்பலம் ஆறெழுத் தொருமொழி; பெரும்பற்றப் புலியூர் ஏழெழுத்தொரு மொழி” என்று அவர் எழுத்தெண்ணிக் காட்டுதல் (குற்றியலுகரம், மெய்களை நீக்கி எண்ணிக் காட்டுதல்) செய்யுளியற் கோட்பாட்டை உரைநடைக் கோட்பாடாக்கிக் காட்டும் முறையல்லா முறையாகிவிடுகின்றது.– கரணம் வடநூல் பற்றியது எனப் பல்கால் கூறும் நச்சினார்க்கினியர் காட்டும் மேற்கோள்களோ அகம். 86, 136ஆம் பாடல்களாம். அவற்றில் அங்கியங் கடவுளோ அறிகரியாக மந்திர வகைக் கரணமோ ஒன்றும் இல்லாமை எவர்க்கும் வெளிப்பட விளங்கியும்கூட, “கரணங்கள் நிகழ்ந்த வாறும் தமர் கொடுத்தவாறும் காண்க” என்று துணிந்து கூறுகிறார். இந்நிலை நூற்கருத்துக்கோ நூலாசிரியர்க்கோ பெருமை தருவது இல்லை என்பது பற்றிக் கவலை கொண்டார் இல்லை எனலாமா? தம் கொள்கையை நூலாசிரியர் தலையில் கட்டிவிடுதல் எனலாமா? ழ, ள என்னும் இரண்டு எழுத்துகளும் பிறப்பு செய்கைகளில் ஒவ்வா என்பதை உணரும் நச்சினார்க்கினியர், “ழகாரமும் ளகாரமும் ஒன்றானும் இயைபில வேனும் `இடையெழுத் தென்ப யரல வழள’ (எழுத். 21) என்றாற் சந்தவின்பத்திற்கு இயையுடைமை கருதிச் சேரவைத்தார் போலும்” என ஆசிரியர் வைப்பு முறைக்குச் சான்று தேடிக் காட்டிச் சிறப்புச் செய்கின்றாரே! (நூன். 1). ‘கண்ணிமை நொடியென’ ஆசிரியர் வைப்பு முறை செய்ததை, “நொடியிற் கண்ணிமை சிறப்புடைத்து, உள்ளத்தான் நினைத்து நிகழாமை யின்” என்று எவ்வளவு கூர்ப்புடன் உரைக்கிறார்! (நூன். 7). “இவ்வாசிரியர் நூல் செய்கின்ற காலத்து வினைத் தொகைக் கண்ணும் பண்புத்தொகைக் கண்ணும் அன்றி ஒரு மொழிக் கண்ணே மயங்குவனவும் உளவாதலின், அவற்றைக் கண்டு இலக்கணங் கூறினார். அவை பின்னர் இறந்தன வென்று ஒழித்து உதாரணம் இல்லனவற்றிற்கு உதாரணங் காட்டாமல் போதலே நன்றென்று கூறலும் ஒன்று” என்று எவ்வளவு சால்புடன் கூறுகிறார்! (நூன். 24). ‘காரும் மாலையும் முல்லை’ என்னும் ஆசிரியர் நூற்பா நடைக்கு, “முல்லைப் பொருளாகிய மீட்சிக்கும் தலைவி இருத்தற்கும் உபகாரப் படுவது கார் காலமாம்; என்னை? வினைவயிற் பிரிந்து மீள்வோன் விரைபரித்தேரூர்ந்து பாசறையினின்று மாலைக் காலத்து ஊர்வயின் வரூஉங்காலம் ஆவணியும் புரட்டாதியும் ஆகலின், அவை வெப்பமும் தட்பமும் மிகாது இடை நிகர்த்தவாகி ஏவல் செய்து வரும் இளையோர்க்கு நீரும் நிழலும் பயத்தலானும் ஆர்பதம் மிக்கு நீரும் நிழலும் பெறுதலின் களி சிறந்து மாவும் புள்ளும் துணையோடின்புற்று விளையாடுவன கண்டு தலைவற்கும் தலைவிக்கும் காமக் குறிப்பு மிகுதலானும் என்பது. புல்லைமேய்ந்து கொல்லேற்றோடே புனிற்றாக் கன்றை நினைந்து மன்றிற் புகுதரவும் தீங்குழல் இசைப்பவும் பந்தர் முல்லை வந்து மணங் கஞற்றவும் வருகின்ற தலைவற்கும் இருந்த தலைவிக்கும் காமக் குறிப்புச் சிறத்தலின் அக்காலத்து மாலைப் பொழுதும் உரித்தாயிற்று” என்று எதுகை மோனை இயற்கையழகு கொஞ்சும் உரைப்பாட்டு இலக்கிய நடையில் எழுது கின்றார் நச்சினார்க்கினியர் (அகத். 6). நூலாசிரியரோடு ஒப்ப ஒரு நூலாசிரியராயன்றோ திகழ்கின்றார்! இவ்வாறாகவும், வலிந்தும் நலிந்தும் சில இடங்களில் இவர் கூறியுள்ள உரை - ஆசிரியர் நூலுக்கும் தமிழர் நெறிக்கும் ஒவ்வாது இவர் கூறியுள்ள உரை - நடுவுள்ளங்கொண்டு நாடுவாரையும் வருத்தும். “இது போன்ற உரைகளையெல்லாம் தொல்காப்பியர் காண நேர்ந்தால் எத்துணை நொந்து போவார். இவற்றையெல்லாம் படித்துவிட்டு இத்துணைக் காலம் தமிழுள்ளம் மரக்கட்டையாகவே இருந்து வந்திருப்பதுதான் வியப்பாகும்” என்றும் “நச்சினார்க்கினியர் பிற சமயங்களை வெறுத்துப் பேசாதவராயினும் வேத வைதிகப் பற்றுமிக்கவர். ஆனால் வேண்டாத இடங்களிலெல்லாம் `வேதம் வேதம்' என்று கூறிக் கொண்டே இருப்பதால் அவரது வேதப் பற்றைக் கண்டு நாம் சலிப்படைகிறோம்” என்றும், “அவருடைய காலத்தில் தமிழைப் பொறுத்தமட்டில் அவர் ஒரு சர்வாதிகாரியைப் போலவே விளங்கியிருப்பார். இங்கிலாந்து நாட்டில் ஜான்ஸன் காலத்தில் ஜான்ஸன்ஆங்கில மொழியின் சர்வாதிகாரியைப் போல விளங்கினார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். இங்கு நாம் நச்சினார்க்கினியரை அப்படி நினைத்துக்கொள்ளலாம். பாட்டின் சொல்லமைப்பை அவர் எப்படிச் சிதைத்தாலும் பண்டிதர் பரம்பரை வழிவழியாக அவரைப் போற்றி வந்திருக்கின்றமையும் நினைக்கத்தக்கது” என்றும் வருவன (நச்சினார்க்கினியர் - பேரா. மு. அண்ணாமலை) தெளிந்து கூறிய தேர்ச்சி யுரைகளாம். “உள்ளது சிதைப்போர் உளரெனப் படாஅர்” என்பது முதுவோர் உரை! அவ்வுள்ளது சிதைப்பதை உணர வாய்த்திருந்தும், உணர்த்தக் கேட்டும் - கற்றும் - இருந்தும், இந்நூற்றாண்டின் இடைக்கால ஆய்வுக்கள மேலாண்மையரும் நச்சினார்க்கினியர் சிதைவுக்கு விளக்கங்கூறியே விழுப்பம் எய்தினர் என்னும்போது அக்காலச்சூழலில் நச்சினார்க்கினியர் சில இடங்களில் தடம் மாறி உரை வரைந்தது வியப்பும் இல்லை! பரியதோர் குறையும் இல்லை! நச்சினார்க்கினியர் புலமை, `ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு எழுமைக்கும் ஏமாப் புடைத்து' என்பதற்குச் சான்றாவது; எத்தனை உவமைகள்! எத்தனை எடுத்துக்காட்டுகள்! எத்தனை வரலாற்றுப் பின்னல்கள்! எத்தனை சிறப்புப் பெயர்கள்! “ஆய்தம் என்ற ஓசைதான் அடுப்புக் கூட்டுப்போல மூன்று புள்ளி வடிவிற்றென்பது உணர்த்தற்கு `ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும்' என்றார். அதனை இக்காலத்தார் நடுவு வாங்கியிட்டெழுதுப” (நூன். 2). “கோட்டு நூறும் மஞ்சளும் கூடிய வழிப் பிறந்த செவ்வண்ணம் போல நெடிலுங் குறிலுங் கூடிய கூட்டத்துப் பிறந்த பின்னர்ப் பிளவுபடா ஓசையை அளபெடை என்று ஆசிரியர் வேண்டினார்” (நூன். 6). “அகரந் தனியே நிற்றலானும் பலமெய்க்கண் நின்று அவ்வம் மெய்கட்கு இசைந்த ஓசைகளைப் பயந்தே நிற்றலானும் வேறுபட்ட தாகலின் ஒன்றேயாயும் பலவேயாயும் நிற்பதோர் தன்மையை யுடைத் தென்று கோடும். இறைவன் ஒன்றேயாய் நிற்கும் தன்மையும் பல்லுயிர்க்கும் தானேயாய் அவற்றின் அளவாய் நிற்கும் தன்மையும் போல” (நூன். 8). “ஒன்றரை மாத்திரையும் இரண்டரை மாத்திரையும் உடையன (வாகிய உயிர் மெய்கள்) ஒரு மாத்திரையும் இரண்டு மாத்திரையும் ஆயவாறு என்னை எனின், நீர் தனித்து அளந்துழியும் நாழியாய், அரை நாழி யுப்பில் கலந்துழியும் கூடி ஒன்றரை நாழியாய் மிகாதவாறு போல்வ தோர் பொருட்பெற்றி” (நூன். 10). இவை நூன்மரபில் நச்சினார்க்கினியர் காட்டும் உவமைகள். நச்சினார்க்கினியர் உரையால் மட்டுமே அறியப்படும் நூல்கள் சில உள. அவற்றுள் சீரிய ஒன்று `பெரும் பொருள் விளக்கம்' என்பது. அந்நூலைப் புறத்திரட்டு வழியால் பெயரறிந்து கொள்ளவும் ஒப்பிட்டுக் காணவும் வாய்க்கின்றது. புறத்திரட்டில் காணாத பாடல்கள் மிகப் பல புறத்திணை இயலில் இடம் பெற்றுத் தனி நூலாகி உள்ளன. களவியல் கற்பியல் களிலும் புறத்திணையியலில் காணப்படும் பெரும் பொருள் விளக்க வெண்பாக்களை அன்னவை, எடுத்துக்காட்டாக இலங்குகின்றன. அவற்றை நோக்க அகப்பொருள், புறப்பொருள் இரண்டும் கூடிய பொருளின் முழுப்பரப்பும் தழுவிய நூலாக அந்நூல் இருந்திருத்தல் கூடுமென எண்ண இடமாகின்றது. தகடூர் யாத்திரை, ஆசிரிய மாலை என்பவற்றிலிருந்தும் அரிய பாடல்களைப் பரிசிலென வழங்குகின்றார் இனியர். வரலாற்றுச் செய்தி புறத்திணையியலில் நச்சினார்க்கினியர் காட்டும் வரலாற்றுச் செய்திகள் மிகப் பலவாம். “ஒருவன் மேற்சென்றுழி ஒருவன் எதிர் செல்லாது தன் மதிற் புறத்து வருந்துணையும் இருப்பின் அஃது உழிஞையின் அடங்கும். அது சேரமான் செல்வுழித் தகடூரிடை அதியமான் இருந்ததாம்” (புறத். 7). அதியமானால் சிறப்பெய்திய பெரும்பாக்களை மதியாது சேரமான் முனைப்படை நின்றானைக் கண்டு அரிசில்கிழார் பொன்முடியார் ஆகியோர் பாடிய தகடூர் யாத்திரைப் பாடல்களைக் குறிக்கிறார் (புறத். 8). பெருங்கோழி நாய்கன் மகள் ஒருத்தி (நக்கண்ணையார்), ஒத்த அன்பினாற் காமுறாதவழியும் குணச்சிறப்பின்றித் தானே காமுற்றுக் கூறியதை, காமப்பகுதி கடவுளும் வரையார் என்னும் நூற்பாவில் (புறத். 28) எடுத்துக்காட்டுகிறார். தமிழகத்துச் செய்தியாம் இவையன்றி அக்காலத்தில் தமிழில் வழங்கிய இராமாயண பாரதப் பழநூல்களில் இருந்து (அவை அகவற் பாவால் இயற்றப்பட்டவை) மேற்கோளும் செய்திக் குறிப்பும் காட்டுகிறார். கொள்ளார் தேஎங் குறித்த கொற்றத்திற்கு (புறத். 12) “இராமன் இலங்கை கொள்வதன் முன் வீடணற்குக் கொடுத்த துறையும் அது” என்கிறார். “செருவகத்து இறைவன் வீழ்ந்தெனச் சினைஇ, ஒருவன் மண்டிய நல்லிசை நிலை” என்பதற்கு (17) “குருகுல வேந்தனைக் குறங்கறுத்த ஞான்று இரவு ஊரெறிந்து பாஞ்சாலரையும் பஞ்சவர் மக்கள் ஐவரையும் கொன்று வெற்றி கொண்ட அச்சுவத்தாமாவின் போர்த்தொழில் போல்வன” என்கிறார். இவ்வாறு இராமாயண பாரதச் செய்திகளை எடுத்துக் காட்டுவதுடன் தொன்ம (புராண)ச் செய்திகளையும் சுட்டுகிறார். “இரணியனைப் போல வலியானும் வருத்தத்தானும் கூறுவித்துக் கோடல் வாகையன்றாயிற்று” என்பது ஒன்று (புறத். 19). `முழுமுதல் அரணம்' என்பதை விளக்கும் நச்சினார்க் கினியர் (புறத். 10), “முழு அரணாவது மலையும் காடும் நீருமல்லாத அகநாட்டுட் செய்த அருமதில். அது வஞ்சனை பலவும் வாய்த்துத் தோட்டிமுள் முதலியன பதித்த காவற்காடு புறஞ்சூழ்ந்து அதனுள்ளே இடங்கர் முதலியன உள்ளுடைத் தாகிய கிடங்கு புறஞ்சூழ்ந்து யவனர் இயற்றிய பல பொறி களும் ஏனைய பொறிகளும் பதணமு மெய்ப்புழை ஞாயிலும் ஏனைய பிறவும் அமைந்து எழுவும் சீப்பும் முதலியவற்றால் வழுவின் றமைந்த வாயிற்கோபுரமும் பிறவெந்திரங்களும் பொருந்த இயற்றப் பட்டதாம்” எனச் செறிவு மிகக் கூறுகிறார். இனி இதே நூற்பாவில், “சிறப்புடை அரசியலாவன மடிந்த உள்ளத்தோனையும், மகப்பெறாதோனையும், மயிர் குலைந் தோனையும், அடிபிறக்கிட்டோனையும், பெண்பெயரோனையும், படை இழந்தோனை யும், ஒத்தபடை எடாதோனையும் பிறவும் இத்தன்மையுடையோரையும் கொல்லாது விடுதலும் கூறிப் பொருதலும் முதலாயினவுமாம்” என்று சொல்ல வேண்டும் என்னும் ஆர்வத்துடிப்பால் இயைத்துக் கூறுகின்றார். தெளிபொருள் ‘குற்றியலிகரம்’ உயிரா? ஒற்றா? இதனை இந்நாளிலும் ஒற்று என்பார் உளர். “ஊர்ந்தெனவே குற்றியலிகரமும் உயிரென்பது பெற்றாம். உயிர்க்கல்லது ஏறுதலின்மையின்” என்கிறார் (மொழி. 1). இராக் காக்கை, இராக் கூத்து எனவரின் இராவிடத்துக் காக்கை இராவிடத்துக் கூத்து எனப் பொருள் தரும் என்றும், இராஅக் காக்கை, இராஅக் கூத்து எனவரின் இராத என்னும் எதிர்மறைப் பெயரெச்சப் பொருள் தரும் என்றும் விளக்குகிறார் (உயிர். 25). இவ்வாறு மயக்கம் அறுக்கும் இடங்கள் பலவாம். “இல்லொடு கிளப்பின் இயற்கையாகும்” என்பதற்குக் ‘கோவில்’ என்று எடுத்துக்காட்டுக் கூறுகிறார் (உயிர். 91). அது ‘கோயில்’ என்றே இருந்திருக்கும். ‘படியெடுத்தோர் பிழையோ’ என எண்ண வேண்டியுளது. இளம்பூரணர் மரபு நிலை மாற்றாமல் ‘கோயில்’ என்றே கொண்டார் என்பது அறியத்தக்கது. ‘கோவில்’ என்பது 19ஆம் நூற்றாண்டு உரைநடைக் காலத்து வந்த தவறான புது வழக்கு. வழக்குகள் ‘புடோலங்காய்’ என்பதைப் புள்ளிமயங்கியல் புறநடையில் (110) எடுத்துரைக்கிறார் நச்சினார்க்கினியர். ‘புடலங்காய்’ என்பது அவர் காலத்தில் அவ்வாறு வழங்கிற்றுப் போலும்! “ஊ என்பது தசையை உணர்த்தி நின்ற வழக்கு ஆசிரியர் நூல் செய்த காலத்து வழக்கு. அன்றித் தேய வழக்கேனும் உணர்க” என்கிறார் (உயிர். 67). இவ்வாறு காலவழக்கு இடவழக்கு ஆகியவற்றைச் சுட்டுதலை யும் இவர் வழக்காகக் காணலாம். மாட்டின் விளைவு `மாட்டு' என்பதோர் இலக்கணத்தைத் தொல்காப்பியர் செய்யுளியலில் கூறுகின்றார். ஊசியின் காதில் ஒட்டகத்தை நுழைப்பார் போல அவ்விலக்கணம் கொண்டு நச்சினார்க்கினியர் மாட்டிச் செல்லும் தனிச் செலவில் அவர்க்கு ஒப்ப ஒருவர் இதுகாறும் இருந்தார் இலர். அம் மாட்டுரையே, முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை முதலியவற்றுக்கு மறைமலையடிகளாரைப் புத்துரை காண ஏவிற்று. நெடுநல்வாடை, முருகாற்றுப்படை ஆகியவற்றுக்குக் கோதண்டபாணியாரை நயவுரை காணத் தூண்டிற்று! இவருரையில் அமைந்துள்ள சில நூற்பாக்களின் பொருட்போக்கே நாவலர் பாரதியாரைத் தொல்காப்பியப் புத்துரை காண அழுத்திற்று. இவையும் நச்சினார்க்கினியர் கொடையெனின் கொள்ளத் தக்கவாம். “ஒன்றே யாயினும் தனித்தமிழ் உண்டோ?” என்னும் சாமிநாத தேசிகர் உரையே, “தனித்தமிழ் இயக்கம்”காண எதிரிடைத் தூண்டல் ஆயிற்று அல்லவோ! எதிரிடைப் பயனும் ஏற்புடைப் பயனாதல், எண்ணுவார் எண்ணத் திண்மையும் எழுச்சிச் செயற்பாடும் பற்றியவை. மற்றையரோ நீரில் கரைந்த மண்ணாகி நெளிந்து போய்விடுவர். - இரா. இளங்குமரன் தமிழ்வளம் -19, தமிழர் வாழ்வியல் இலக்கணம் எனும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது சொல்லதிகாரம் நச்சினார்க்கினியம் சி.வை. தாமோதரம் பிள்ளை (1892) கிளவியாக்கம் கிளவி-சொல் ஆக்கம்-ஆதல். சொற்கள் பொருள் மேல் ஆமாறுணர்த்தினமையின் கிளவியாக்கமென்னும் பெயர்த் தாயிற்று என இளம்பூரணரும், வழுக்களைந்து சொற்களை அமைத்துக் கொண்டமையால் கிளவியாக்கமாயிற்று எனச் சேனாவரையரும் நச்சினார்க்கினியரும், சொற்கள் ஒன்றோ டொன்று தொடர்ந்து பொருள்மேல் ஆகும் நிலைமையைக் கூறுவது இவ்வியலாதலின் கிளவியாக்கம் என்னும் பெயர்த்தாயிற்று எனத் தெய்வச்சிலையாரும் இவ்வியலுக்குப் பெயர்க்காரணங் கூறினர். கிளவியது ஆக்கத்தைக்கூறுவது கிளவியாக்கம் என வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையாகக்கொண்டார் தெய்வச்சிலையார். இவ்வியலின் சூத்திரங்கள் அறுபத்திரண்டென இளம்பூரணர் நச்சினார்க்கினியரும், அறுபத்தொன்றெனச் சேனாவரையரும், ஐம்பத்தொன்பதெனத் தெய்வச்சிலையாரும் பகுத்து உரை கூறியுள்ளார்கள். சொல் உயர்திணைச்சொல், அஃறிணைச்சொல் என இரண்டு வகைப்படும். அவற்றுள் உயர்திணைச்சொல் ஆடூஉ வறிசொல், மகடூஉ வறிசொல், பல்லோரறிசொல் என மூவகைப்படும். இம்மூன்றினையும் முறையே ஆண்பாற்சொல், பெண்பாற்சொல், பலர்பாற்சொல் எனப் பிற்காலத்தார் வழங்குவர். அஃறிணைச் சொல் ஒன்றறிசொல், பலவறிசொல் என இரு வகைப்படும். இவற்றை முறையே ஒன்றன்பாற்சொல், பலவின்பாற்சொல் எனப் பிற்காலத்தார் வழங்குவர். அறிவார்க்குக் கருவியாகிய சொல் அறிசொல்லாயிற்று. உயர்திணையென்பது மற்றுள்ள பொருளெல்லாவற்றினும் உயர்வாகியபொருள் என விசேடித்து நின்றமையின் பண்புத் தொகையாமென்றும், உயர்ந்த மக்கள் உயராநின்ற மக்கள் உயரும் மக்கள் என மூன்று காலமுங் கொள்வார்க்கு வினைத் தொகையுமாமென்றும், மக்களாவார் ஒருதன்மையரன்றி ஆண், பெண், அலியென்னும் வடிவு வேற்றுமையுடையராகலின் அவரெல்லாரிடத்தும் பொதுவாக அமைந்துள்ள மக்கட்டன் மையைக் குறித்து மக்கள் இவர் என்னும் பொதுப் பொருண்மை உயர்திணையாமென்பதறிவித்தற்கு மக்களென்னாது மக்கட் சுட்டென்றாரென்றும், மக்களல்லாத உயிருடையனவும் உயிரில் லனவும், அஃறிணையாமென்பதறிவித்தற்கு அவரல பிற என்றரென்றும் கூறுவர் தெய்வச்சிலையார். உயர்திணையல்லாத திணை அஃறிணையாதலின் அல்திணை அஃறிணை யென்றாயிற்று. உயிர்பொருள், உயிரில்பொருள் என்னும் அஃறிணைப் பொருள்வகை யிரண்டனுள் உயிர்ப்பொருள் வகையுள் ஆண் பெண் வேறுபாடு காணப்படுமேனும் அவ்வேறுபாடு உயிருள்ள வற்றுள் சிலவற்றிற்கும் உயிரில்லாத பொருள்களுக்கும் இயையா மையால் உயிருள்ளன இல்லனவாகிய எல்லாவற்றிற்கும் பொருந்த ஒன்றறிசொல், பலவறிசொல் என்னும் இருவகைச் சொன் முடிபுகளே வகுக்கப் பெறுவனவாயின. மக்கட் பிறப்பிலே தோன்றிப் பெண்தன்மை மிகுந்தும் ஆண் தன்மை குறைந்தும் ஆண் பெண் என்னும் இருவகையுங் கலந்து நிற்கும் பேட்டினைக்குறித்த பெயர்ச்சொல்லும் தெய்வத்தைக் குறித்த பெயர்ச்சொல்லும் இருதிணை ஐம்பால்களுள் இன்னபால் எனத்தெரிந்து கொள்ளுதற்குக் கருவியாகிய ஈற்றெழுத்தினை (விகுதியினை) உடையன அல்ல. அவைதாம் உயர்திணைப் பெயராய் நின்று ஆண்பாற்சொல் முதலியவற்றின் விகுதியினையே தம் வினைக்கீறாகப்பெற்று இன்னபால் என விளங்கி நிற்பனவாம். இவற்றின் இயல்பினை இவ்வியல் ஆம் சூத்திரத்தால் ஆசிரியர் தெளிவுபடுத்துகின்றார். னகரமாகிய மெய்யெழுத்தை இறுதியாகவுடையது ஆண் பாற் சொல்லாம். ளகரமெய்யை இறுதியாகவுடையது பெண் பாற் சொல்லாம். ரகரமெய்யும் பகரவுயிர்மெய்யும் மார் என்னும் சொல்லும் ஆகிய இம்மூன்றனுள் ஒன்றை யிறுதியாகவுடைய சொல் பலர்பாற் சொல்லாம். து, று, டு எனவரும் மூன்றெழுத் துக்களுள் ஒன்றையிறுதியாகப்பெற்றசொல் ஒன்றன்பாற் சொல்லாம். அ, ஆ, வ என்பவற்றுள் ஒன்றை யிறுதியாகப்பெற்றது பலவின் பாற் சொல்லாம். இவ்வாறு இருதிணைக்கண்ணும் ஐந்துபாலும் விளங்க இறுதியில் நின்றொலிக்கும் இப்பதினோ ரெழுத்தும் வினைச் சொல்லிடத்தேதான் தெளிவாகப் புலப்படுவன. இவை பெயரொடு வருவழித் திரிபின்றி ஐம்பாலை விளக்கும் ஆற்றலுடையன அல்ல. எனவே “இருதிணைமருங்கின் ஐம்பாலறிய ஈற்றில்நின்று இசைக்கும் பதினோரெழுத்தும் தோற்றந்தாமே வினையொடு வருமே” என்றார் தொல்காப்பியனார். இதனால் இருதிணை ஐம்பால்களையும் ஒருவன் சொல்லகத்து அறியுமாறு இவ்வாறென ஆசிரியர் விளக்கினமை காண்க. இருதிணையுள் ஒருதிணைச்சொல் ஏனைத் திணைச் சொல்லொடு முடிவது திணைவழு, ஒருதிணையுள் ஒருபாற்சொல் அத்திணையிலுள்ள ஏனைப் பாற்சொல்லொடு முடிவது பால்வழு. தன்மை, முன்னிலை, படர்க்கையாகிய மூவிடச் சொற்களுள் ஓரிடச்சொல் பிறவிடச் சொல்லொடு முடிவது இடவழு இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்னும் மூன்று காலங்களுள் ஒரு காலத்தினைக் குறித்த சொல் ஏனைக் காலச்சொல்லொடு முடிவது காலவழு. வினாவுக்கு ஏற்ற விடையாகாதது செப்புவழு. வினாவுதற்குரியதல்லாத பொருளைப்பற்றி வருவது வினாவழு. ஒருபொருட்குரிய வழக்குச் சொல் மற்றொரு பொருள்மேற் சென்றது மரபுவழு. இங்`னம் திணை, பால், இடம், காலம், செப்பு, வினா, மரபு என்னும் இவ்வேழு வகையாலும் சொற்கள் வழுவாமற் காத்தலே வழுக்காத்தலெனப்படும். வழுவற்கவென்றலும், வழுவமைத்தலும் என வழுக்காத்தல் இருவகைப்படும். குறித்த பொருளை அதற்குரிய சொல்லாற் சொல்லுகவென்றல் வழுவற்க வென்றலாம். குறித்த பொருளுக்குரிய சொல்லன்றாயினும் ஒருவாற்றால் அப்பொருள் தருதலின் அமைத்துக்கொள்க என அமைதிகூறுதல் வழுவமைத்தலாகும். இவ்வியலின் 11-ஆம் சூத்திர முதலாகவுள்ள சூத்திரங்கள் மேற்கூறிய இருவகையானும் வழுக்காப்பனவாம். - க. வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 191-194 முதலாவது கிளவியாக்கம் 1. உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே யஃறிணை யென்மனா ரவரல பிறவே யாயிரு திணையி னிசைக்குமன் சொல்லே. என்பது சூத்திரம். மேற்பாயிரத்துள் ‘எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி’ என நிறுத்தமுறையானே எழுத்து உணர்த்திச் சொல் உணர்த்துகின்றார் ஆதலின், சொல்லதிகார மென்னும் பெயர்த்து. அது, ‘சொல்லை உணர்த்திய முறைமை’ யென விரியும். ‘சொல்’லென்றது, எழுத்தினான் ஆக்கப்பட்டு இருதிணைப் பொருட் டன்மையும் ஒருவன் உணர்தற்குக் கருவியாம் ஓசையை. ஈண்டு ‘ஆக்கப்படுத’ லென்றது, ஒருசொற் கூறுமிடத்து ஓரெழுத்துப்போக ஓரெழுத்துக் கூறுவதல்லது, ஒரு சொல்லாக முடியும் எழுத்தெல்லாஞ் சேரக் கூறலாகாமையின், அவ் வெழுத்துக்கள் கூறிய அடைவே போயிற்றேனுங் கேட்டோர் கருத்தின்கண் ஒரு தொடராய் நிலைபெற்று நின்று பொருளை அறிவுறுத்தலை. ஆயின், ஓரெழுத் தொருமொழிக்கு ஆக்குத லின்றா லெனின், ஓரெழுத் தொருமொழியைக் கூறியக்கால் அதுவுஞ் செவிப் புலனாய்க் கருத்தின்கண் நிகழ்ந்து பின்னர்ப் பொருளை ஆக்குதலின், அதுவும் ஆக்குந் தன்மை உடையதாயிற்று. இருதிணைப் பொருளுமாவன, ஐம்பாற்பொருளின் பகுதியாகிய காட்சிப் பொருளுங், கருத்துப் பொருளும் அவற்றின் பகுதியாகிய ஐம்பெரும்பூதமும், அவற்றின் பகுதியாகிய இயங்குதிணையும் நிலைத் திணையுமாம். இவை யெல்லாம் ஐம்பாலாய் அடங்கின. இனிப் பொருட்டன்மையாவது, மக்கட்டன்மையும் இயங்கு திணைத் தன்மையும் நிலைத்திணைத் தன்மையுமாம். இத்தன்மை, ஒரு பொருட்குக் கேடு பிறந்தாலுந் தனக்குக் கேடின்றித் தான் ஒன்றேயாய்ப் பலவகைப் பட்ட பொருடோறும் நிற்குமென்று உணர்க. கருவியாவது, அப்பொருட்டன்மையை ஒருவன் உணர்தற்கு அவ்வோசை கருவியாய் நிற்றல். இஃது ஐம்பொறிகள் ஒருவன் பொருளை உணர்தற்குக் கருவியாய் நின்றாற்போலக் கருவியாய் நிற்குமென்று உணர்க. இனி, ‘ஓசையைச் சொல்லென்றீரேற் கடலொலி சங்கொலி விண்ணொலி முதலியனவுஞ் சொல்லாகாவோவெனின், சொல்லு இது முன்பு யான் உணர்ந்த எழுத்தென்றே பின்பு கூறியக்காலும் உணரநிற்றலிற்கேடின்றி நிலைபேறுடைய தாயிற்று. இவை அங்ஙனம் உணர்தலாற்றாமையானும், எழுத்தினான் ஆக்கப்படாமையானும் நிலைபேறிலவாயின; ஆதலின், சொல்லெனப்படா. அன்றியும் ஓசை அரவம் இசை யென்பனபோலன்றிக் கிளவி சொல் மொழியென்பன எழுத்தினான் ஆகிய ஓசையை உணர்த்தும். முற்கு, வீளை முதலியன எழுத்தினான் ஆக்கப்படாமையிற் சொல்லாகா. இனி ஒரு சாரார் எழுத்தினான் ஆகிய ஓசையையுங் கெடுமென்பர். உரையாசிரியருஞ் சொல்லென்பது எழுத்தினான் ஆக்கப்பட்டுத் திணையறிவுறுக்கும் ஓசையென்றுந் தன்னை உணரநின்றவழி எழுத்தெனப்படுந் தான் இடை நின்று பொருள் உணர்த்தியவழிச் சொல் லெனப்படுமென்றுங் கூறினார், இக்கருத்தேபற்றி. இனிச் சேனாவரையர் ‘சொல் பொருள் குறித்து வருமென்றாராலெனின், ஒருவன் பொருட்டன்மையை உணர்தற்குச் சொல் கருவியாய் நிற்றலன்றித் தனக்கு ஓருணர்வின்மையிற் தான் ஒருபொருளைக் கருதி நிற்றலின்றென மறுக்க. அச்சொல்லை எட்வகையானும் எட்டிறந்த பல வகையானும் உணர்த்துப. இரண்டுதிணையும், ஐந்துபாலும், ஏழுவகைவழுவும், எட்டுவேற்றுமையும், ஆறொட்டும் மூன்றி டமும், மூன்றுகாலமும், வழக்குஞ்செய்யுளுமாகிய இரண்டி டமுமென எட்டுவகையான் உணர்த்துப. இனி, எட்டிறந்த பலவகையாவன, சொல் நான்குவகைய என்றலும், அவற்றையே பலவாகப் பகுத்தலும், விகாரவகையும், பொருள்கோள் வகையுஞ் செய்யுட்கு உரியசொல் நான்கென்றலும், பிறவுமாம். அச்சொற்றான் தனிமொழியுந் தொடர்மொழியுமென இருவகைப்படும். தனிமொழி பொருள்விளக்குமாறு, ‘நிலந்தீ நீர்வளிவிசும்போடைந்தும், கலந்தமயக்கமுலகமாதலி னிருதிணையைம்பாலியனெ றிவழாஅமைத் - திரிவில் சொல்லொடுதழாஅல்வேண்டும்.’ என்னும் மரபியற் சூத்திரத்தான் உணர்க . தொடர்மொழி, இருமொழித்தொடரும் பன்மொழித்தொடருமென இருவகைப்படும். அவை தொடருங் காற் பயனிலைவகையானுந் தொகைநிலைவகையானும் எண்ணுநிலை வகையானுந் தொடரும். இனி வடநூலார் கூறியவாறே அவாய்நிலை யானும் அண்மைநிலையானுந் தகுதியானுந் தொடருமென்றலுமாம். சாத்தன் உண்டான், மன், நனி என்பன தனி மொழி. சாத்தன்வந்தான்- இதுபயனிலைத் தொடர். யானைக்கோடு, இது தொகைநிலைத் தொடர். நிலநீர், இஃதெண்ணுநிலைத்தொடர். இவை இருமொழித் தொடர். ‘அறம்வேண்டியரசனுலகம்புரக்கும் என்பது பன்மொழித் தொடர். வழுக் களைந்து சொற்களை அமைத்துக்கோடலின், இவ்வோத்துக் கிளவியாக்கமென்னும் பெயர்பெற்றது. இனிச் சொற்கள் பொருள்கண்மேலாமாறு உணர்த்தினமையிற் கிளவியாக்கமென்னும் பெயர்பெற்றதென்றுமாம், ஒருவன் மேலாமாறிது ஒருத்திமேலாமாறிது பலர்மேலாமாறிது ஒன்றன்மேலா மாறிது பலவற்றின்மேலாமாறிது வழுவாமாறிது வழு வமையுமாறிது எனப் பொருள்கண்மேலாமாறு உணர்த் தினமையின். இனி இத்தலைச் சூத்திரஞ் சொல்லும் பொருளும் வரையறுத்து உணர்த்துகின்றது. இதன் பொருள்: மக்கட்சுட்டே - மக்களாகிய நன்கு மதிக்கப்படும் பொருளை: உயர்திணை என்மனார் - உயர்திணை யென்று கூறுவர் தொல்லாசிரியர்: அவர் அல பிறவே - அம்மக்களல்லாத பிறபொருளை: அஃறிணை என்மனார் - அஃறிணையென்று கூறுவர் தொல்லாசிரியர்: ஆயிரு திணையின் இசைக்கும் மன் சொல்லே -அவ்விருதிணைப் பொருள்களையும் உணர்த்துஞ் சொற்கள் என்றவாறு. ஏகாரம் மூன்றும் ஈற்றசை. இனைத்தென அறிந்த உம்மை, விகாரத்தாற் தொக்கது. ‘இசைப்பிசையாகும்,’ என்றதனான், இசைப்பு ஒலிக்குமென்னும் பொருடந்ததெனின், சொல்லுக்குப் பொருள் உணர்த்தும்வழி யல்லது ஒலித்தல்கூடாமையின் உணர்த்துமெ ன்னுந் தொழிலினை ‘இசைக்குமென்னுந் தொழிலாற் கூறினார். இதுவும் மரபு வழுவமைதி. பொருளையுணர்த்துவான் ஒரு சாத்தனே எனினும், அவற்கு அது கருவியாக அல்லது உணர்த்தலாகாமையின், அக்கருவிமேல் தொழி லேற்றிச் ‘சொல் உணர்த்துமென்று கருவிக்கருத்தாவாகக் கூறினார். இவ்வாசிரியர் எவ்விடத்தும் சொல்லைக் கருவிக்கருத்தாவாகக் கூறுமாறு மேலே காண்க. அஃது, ‘எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே’ என்றாற் போல்வன. இச்சூத்திரத்தாற் ‘பொருளிரண்டு சொல்லிரண்டென வரையறுத்தார். உயர்திணையென்பது உயர்ந்த ஒழுக்கமென இறந்தகால வினைத் தொகை. அஃது ஆகுபெயராய் அப்பொருளை உணர்த்தி நின்றது. இதனைப் பண்புத்தொகையென்பாரும் உளர். அது பொருந்தாது. என்னை? இது காலந் தோன்றிநிற்றலின். மக்கட்சுட்டென்பது மக்களாகிய சுட்டென இரு பெயரொட்டுப் பண்புத்தொகை. சுட்டு நன்கு மதிப்பு. அஃது ஆகுபெயராய் மக்கட் பொருளை உணர்த்திநின்றது. சேனாவரையர் இதனைப் பண்புத் தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை யென்றாராலோ வெனின், இருபெயரொட்டாகுபெயர்க்கும் அன்மொழித் தொகைக்கும் வேறுபாடு உணராமற் கூறினமையின் அது பொருந்தாது. என்னை வேறுபாடெனில், ஈண்டு ஆகுபெயராய் நின்ற நன்குமதிக்கும் பொருளும் மக்களையே உணர்த்திநிற்கும். அன்மொழித்தொகை அவ்வாறன்றி வெள்ளாடையென்றால் வெண்மையும் ஆடையுமன்றி உடுத்தாளையே உணர்த்திநிற்கும். இது தம்முள் வேற்றுமை. “அம்மொழி நிலையாதன்மொழி நிலையலும்” யென்புழி “வெள்ளாடையென்புழித்தொக்க இரு மொழிமேலும் நில்லாது உடுத்தாளென்னும் அன்மொழிமேல் நின்றது” என்று உதாரணங் காட்டினார் சேனாவரையருமென்று உணர்க. அஃறிணை, ‘அவ்வொழுக்கமல்லவாகிய ஒழுக்கம்’ எனப் பண்புத்தொகை. அது பொருளை உணர்த்தி நின்றது ஆகுபெயராய். என்மனாரென்பது ஓர் ஆரீற்றுநிகழ்காலமுற்றுவினைத்திரி சொல். என்றிசினோரென்பது அவ்வாறு வந்த இறந்தகால முற்றுவினைத்திரிசொல். ‘மக்கடாமேயாறறிவுயிரே’ என்று மக்கள் உயர்ந்தமை மரபியலிற் கூறுப. அவரல என்னாது பிற என்றார் அஃறிணை உயிருள்ளனவும் இல்லனவுமாகிய இருகூறும் அடங்குதற்கு. “மறங்கடிந்தவருங்கற்பின்” எனவும், “சில்சொல்லிற்பல்கூந்தல்” எனவும் பிறாண்டுஞ் சான்றோர் செய்யுளில் இன்சாரியை உருபு பற்றாது நிற்றல் நோக்கி உரையாசிரியரும் “ஆயிரு திணையினையும்” என இரண்டாமுருபு விரித்துப் பொருள் கூறினார். இனிச் சேனாவரையர், ‘மக்கட்சுட்டு’ என்பதற்கு ‘மக்களாகிய சுட்டுயாதன்கண்நிகழும் அது மக்கட்சுட்டு” என்றும், ‘ஆயிருதிணையினிசைக்குமனசொல்லே’ என்பதற்குச் சொன்னிகழ்ச்சிக்குப் பொருள் இடமாதலின், ‘ஆயிருதிணையின் கண்ணென ஏழாவது விரிக்க” என்றும் பொருள் கூறினாரா லெனின், முன்னர் மக்களென்று கருதப்படும் பொருளை உயர்திணையென்ப என்று அவர் கண்ணழிவு கூறியது ஒருபொருளிடத்துநின்ற மக்கட்டன்மையாலே ஒருவற்கு அப்பொருள் மக்களென்று கருதப்பட்டதென்று பொருடந்து நின்றது; பின்னர் மக்களாகிய சுட்டு யாதன்கண் நிகழுமென்றது நோக்குகின்றவர்க்கு மக்களாகிய கருத்து யாதொரு பொரு ளிடத்துத் தோன்றுமென்று பொருடந்தால், வெள்ளாடை யென்னும் பண்புத்தொகைபோல அக்கருத்து மக்களாகாமையிற் பண்புத்தொகையன்றாம்; அது மக்கட்சுட்டென்றதற்கு அப்பொருண்மக்கட்சுட்டென்று அவர் கூறிய பொருளானும் மக்களையே தோற்றுவித்து நிற்றலின், அன்மொழித்தொகை யன்றாம்; அன்றியும் ஆசிரியர் ஈண்டு ஒரு பொருள் நின்று தன்னை ஒருவற்கு உணர்த்துமாறும் ஒருவன் அதனை உணருமாறும் ஆராய்கின்றாரல்லர்; உயர்ந்த ஒழுக்க மென்று முதனூலாசிரியர் கூறிய குறி உலகத்தார்க்கு விளங்கப் பொருள்கூறக்கருதி அதன்பயன் எய்துவிப்பத் தாமும் ‘மக்க ளாகிய நன்குமதிக்கும்பொருளென்று அச்சொற்குப் பொருள் கூறினாரென்று உணர்க. அவர் கூறிய உயர்ச்சிதோன்றத் தாமும் ‘நன்குமதிப்பென்று பொருள் கூறினார், தாமும் ‘உயர்திணை யென்றே ஆளுதல்பற்றி இனி “இசைப்பிசையாகும்” என்பதனாற் திணையிடமாகச் சொற்கள் நின்று பிறவற்றை இசைத்தல் வேண்டுமதனான் அது பொருந்தாது. அன்றியும் ஆசிரியர்க்கு அங்ஙனம் பொருள்கூறுதல் கருத்தாயின், “ஆடூஉவறிசொல்” முதலிய சூத்திரங்களெல்லாஞ் சொன்னிகழ்ச்சிக்குப் பொருள் இடமாக ஆடூஉவின்கண் நிகழுஞ்சொல் மகடூவின்கண் நிகழுஞ் சொல்லென்றே சூத்திரஞ்செய்வர், அங்ஙனஞ் செய்யாது ஒருவன் ஆண்மகனை அறியுஞ் சொல்லும் பெண்டாட்டியை அறியுஞ் சொல்லுமென அறியுமென்னும் பெயரெச்சஞ் சொல் லென்னுங் கருவிப்பொருளைக் கொண்டு முடியச் சூத்திரஞ் செய்தலின் ஆசிரியர்க்கு அங்ஙனம் பொருள் கூறுதல் கருத்தன்மை அறிக. மன்னென்பது வினைபற்றிய அசைநிலையிடைச் சொல்லாய் நின்றது. (1) 2. ஆடூஉ வறிசொன் மகடூஉ வறிசொற் பல்லோ ரறியுஞ் சொல்லொடு சிவணி யம்முப் பாற்சொ லுயர்திணை யவ்வே. இஃது உயர்திணைப்பாலைப் பகுக்கின்றது. (இ-ள்.) ஆடூஉ அறிசொல் மகடூஉ அறிசொல் = ஒருவன் ஆண்மகனை அறியுஞ் சொல்லும் பெண்டாட்டியை அறியுஞ் சொல்லும்; பல்லோர் அறியுஞ் சொல்லொடு சிவணி = பல்லோரை அறியுஞ் சொல்லொடு சிவணுகையினாலே, அம்முப்பாற்சொல் = அம்மூன்று கூறாகிய சொல்லும், உயர்திணைய = உயர் திணையினையுடையவாம், எ-று. ஆண்பன்மையும் பெண்பன்மையும் அவ்விருவருந் தொக்க பன்மையு மன்றிப் பன்மைப்பொருள் வேறின்மையின், ஆடூஉவும் மகடூஉவும் பல்லோரறியுஞ்சொல்லொடு சிவணுகையினாலே மூன்றுகூறாயிற்றென்றார். எனவே, அல்லுழி இரண்டேயா மென்பது கருத்து. செய்தெனெச்சங் காரண காரியப் பொருட்டாய் நின்றது. உயர் திணைய என்ற ஆறாம்வேற்றுமையாய்நிற்குஞ்சொல், ஈண்டுப் பெயராகாது வினைக்குறிப்பாய் நின்றது. இனிச் சிவணவெனத் திரிப்பாருமுளர். இவ்வாறன்றிச் ‘சிவணி உயர்திணையவாமென்பார்க்கு முப்பாற்சொற்கும் பயனிலையாய்நின்ற உயர்திணையவா மென்னும் வினைக்குறிப்பு ஆடூஉவறிசொல் மகடூஉவறிசொல் என்னும் இரண்டன் வினையாகிய சிவணியென்னுஞ் செய்தெ னெச்சத்திற்கு வினைமுதல்வினையாயிற்று, உயர்திணையவாகல் ஆடூஉ வறிசொற்கும் மகடூவறிசொற்கும் எய்துதலின். ஆடூஉ மகடூஉ என்பன பண்டையார்வழக்கு. அறிசொல் அறிதற்குக் கருவியாகிய சொல். (2) 3. ஒன்றறி சொல்லே பலவறி சொல்லென் றாயிரு பாற்சொ லஃறிணை யவ்வே. இஃது அஃறிணைப்பாலைப் பகுக்கின்றது. (இ-ள்.) ஒன்றறி சொல்லே பலவறி சொல்லென்று= ஒருவன் ஒன்றனை அறியுஞ்சொல்லும் பலவற்றை அறியுஞ்சொல்லு மென்று சொல்லப்பட்ட: ஆயிரு பாற்சொல் அஃறிணைய = அவ்விரண்டு கூற்றுச் சொல்லும் அஃறிணையினையுடையவாம், எ-று. (3) 4. பெண்மை சுட்டிய வுயர்திணை மருங்கி னாண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியுந் தெய்வஞ் சுட்டிய பெயர்நிலைக் கிளவியு மிவ்வென வறியுமந் தந்தமக் கிலவே யுயர்திணை மருங்கிற் பால்பிரிந் திசைக்கும். இஃது ஐயம் அறுக்கின்றது; மேற் தொகையுள் ஒழிந்த தெய்வத்தையும் வகையுள் ஒழிந்த பேடியையும் இவ்வாறா மென்றலின். (இ-ள்.) உயர்திணை மருங்கிற் பெண்மை சுட்டிய = ஒருவன் உயர் திணையிடத்துப் பெண்பாற்குரிய அமைதித்தன்மையைக் கருதுதற்குக் காரணமான, ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியும் - ஆண்பாற்கு உரிய ஆளுந்தன்மை திரிந்த பெயர்ப் பொருளும், தெய்வஞ்சுட்டிய பெயர்நிலைக் கிளவியும் - தெய்வத் தன்மையைக் குறித்த பெயர்ப் பொருளும்: இவ்வென அறியும் அந்தம் தமக்கு இலவே = இவையெனத் தம் பெயர்ப் பொருளினை வேறறிய நிற்கும் ஈற்றெழுத்தினையுடைய சொற்களைத் தமக்குடைய அல்ல; உயர்திணை மருங்கிற் பால் பிரிந்து இசைக்கும் - உயர்திணையிடத்திற்குரிய பாலாய் வேறுபட்டு யிசைக்கும், எ-று. அலியன்று என்றற்குப் பெண்மைசுட்டிய என்றார். பெண்ணன்று என்றற்கு ஆண்மைதிரிந்த என்றார். இரண்டி டத்துப் பெயர் நிலைக்கிளவியுஞ் சொல்லினாற் பொருளறியப் படுதலின் ஆகுபெயராய் அப்பொருளுணர்த்திநின்றன. சுட்டிய என்பது நிலம்பூத்த மரமென்பதுபோலும் பெயரெச்சம்; அது பெயர்நிலைக்கிளவியென்பதனொடு முடியும். ‘ஆண்மைதிரிந்த’ என்பது இடைநிலை, இதன்பொருள் ஆண்பாற்குரிய ஆளுந்தன்மை முற்பிறப்பிற் தான் செய்த தீவினையாற் தன்னிடத்து இல்லையான பெயர்ப்பொருளென்க. என்றது நல்வினை செய்யாத பொருளென்றவாறு. இதற்குப் பெண்மைதிரிதலுமுண்டேனும்ஆண்மைதிரிதல் பெரும்பான்மை. பால்பிரிந்திசைத்தலாவது தாம் உயர்திணைப்பொருளாய் அவற்றின் ஈற்றினால் இசைத்தலாம். பேடியைப் பாலுள்ளுந்தெய்வத்தைத் திணையுள்ளும் அடக்கினார். (உ-ம்.) பேடிவந்தாள், பேடியர் வந்தார், தேவன் வந்தான், தேவி வந்தாள், தேவர் வந்தார் என வரும். பேடியர் பேடிமார் பேடிகள் என்பனவும் அடங்குதற்குப் பேடியென்னாது ஆண்மைதிரிந்த என்றார். “பெண்ணவாயா ணிழந்த பேடியணியாளோ? என்பதனாற் பெண்ணவாய்நிற்றன் கொள்க. அந்தந்தமக்கில என்றதனான் நிரயப்பாலர் அலி மகண்மா முதலியவற்றையும் இம்மூவீற்றின் ஏற்பதனான் முடிக்க. (உ-ம்.) நரகன் வந்தான் நரகி வந்தாள் நரகர்வந்தார் அலிவந்தான் அலியர்வந்தார் மகண்மாவந்தாள் என வரும். (4) 5. னஃகா னொற்றே யாடூஉ வறிசொல். இஃது ஆடூஉ அறிசொல் உணர்த்துகின்றது. (இ-ள்.) னஃகான்னொற்று = னஃகானாகிய ஒற்றினை ஈறாக வுடைய சொல்: ஆடூஉ அறிசொல் = ஒருவன் ஆண்மகனை அறியுஞ்சொல்லாம். எ-று. ஏகாரந் தேற்றேகாரம். (உ-ம்.) உண்டனன் உண்டான் உண்ணாநின்றனன் உண்ணாநின்றான் உண்பன் உண்பான் கரியன் கரியான் என வரும். உண்டனன் உண்டான் என்புழி னகரம் ஒழிந்த மூவெழுத்துக்களும் ஏனைப்பாற்கும் வருதலின் னகரத்தின் சிறப்பு நோக்கி னஃகானொற்றே என்றார். அன் ஆன் என்னும் இரண்டனொ தொகுத்து னஃகானென்றார். மேலனவற்றிற்கும் இஃது ஒக்கும். (5) 6. ளஃகா னொற்றே மகடூஉ வறிசொல். இது மகடூஉ அறிசொல் உணர்த்துகின்றது. (இ-ள்.) ளஃகானொற்று - ளஃகானாகிய ஒற்றினை ஈறாக உடைய சொல், மகடூஉ அறிசொல் - ஒருவன் மகடூஉவினை அறியும் சொல்லாம், எ-று. உண்டனள், உண்டாள்; உண்ணாநின்றனள், உண்ணாநின் றாள்; உண்பள், உண்பாள், கரியள்; கரியாள் என வரும், (6) 7. ரஃகா னொற்றும் பகர விறுதியு மாரைக் கிளவி யுளப்பட மூன்று நேரத் தோன்றும் பலரறி சொல்லே. இது பலர்அறிசொல் உணர்த்துகின்றது. (இ-ள்.) ரஃகான் ஒற்றும் - ரஃகானாகிய ஒற்றினை ஈறாக உடைய சொல்லும், பகர இறுதியும் - பகரமாகிய இறுதியை உடைய சொல்லும், மாரைக் கிளவி உளப்பட மூன்றும் - மார் என்னும் இடைச்சொல்லை ஈறாக உடைய சொல் உட்பட மூன்றும், நேரத் தோன்றும் பலர் அறி சொல்லே - நிரம்பத் தோன்றும் பலரை அறியுஞ்சொல்லாம், எ-று. ‘அகரத்தொடு புணர்ந்த பகரமல்லது உயர்திணைப் பன்மையை உணர்த்தாதன்றற்கு ஈண்டுப் ‘பகரம்’ என்றும், மேல் ‘அ ஆ வ’ என்றும், பகர வகர உயிர்மெய் ஈறாய்நிற்றல் உடம்பொடு புணர்த்துக் கூறினா ராயிற்று. (உ-ம்.) உண்டனர். உண்டார்; உண்ணாநின்றனர், உண்ணாநின்றார்; உண்பர், உண்பார்; கரியர், கரியார்; கூறுப, வருப; ‘ஆர்த்தார் கொண்மார் வந்தார்’ என வரும். ‘மாரீறு, ஆரீறன அடங்குமெனின், மகர வொற்றுக் காலங் காட்டும் எழுத்தாய் முதனிலைக்கேற்றவாற்றான் ‘உண்பார், வருவாரென்றாற்போல வேறுபட்டு வரல்வேண்டும்; அங்ஙனம் வேறுபடாமை யானும், வினைகொண்டு முடிதலானும், மார் ஈறு ஆரீற்றின் அடங்காதா யிற்று. ஏனைப் பன்மையீறுகள் திரிபுடைமையின், இவற்றை ‘நேரத் தோன்றுமென்றார். ‘பகர இறுதி’ என்றது, ‘மொழிந்த பொருளோ டொன்ற அவ்வயின் மொழியா ததனை முட்டின்று முடித்தல்’ (மரபியல் 110) என்பதற்கு இனம். (7) 8. ஒன்றறி கிளவி தறட வூர்ந்த குன்றிய லுகரத் திறுதி யாகும். இஃது அஃறிணைக்கண் ஒன்றறிசொல் உணர்த்துகின்றது. (இ-ள்.) ஒன்றறிகிளவி - ஒருவன் ஒன்றனை அறியுஞ்சொல்: தறட ஊர்ந்த குன்றியலுகரத்து இறுதியாகும் - தறட என்னும் ஒற்றுக்களை ஊர்ந்துவந்த குற்றியலுகரத்தினை ஈறாகவுடைய சொல்லாம், எ-று. (உ-ம்.) வந்தது வாராநின்றது வருவது கரியது கூயிற்று தாயிற்று கோடின்று குளம்பின்று குண்டுகட்டு குறுந்தாட்டு என வரும். (8) 9. அஆ வஎன வரூஉ மிறுதி யப்பான் மூன்றே பலவறி சொல்லே. இஃது, அஃறிணைக்கட் பலவறிசொல் உணர்த்துகின்றது. (இ-ள்.) பலவறிசொல் = ஒருவன் பலவற்றை அறியுஞ் சொல்லாவன: அ ஆ வ என வரூஉம் இறுதி அப்பால் மூன்று = அ ஆ வ என வரூஉம் இறுதியையுடைய அக்கூற்று மூன்று சொல்லாம். எ-று. (உ-ம்.) உண்டன உண்ட உண்ணாநின்றன உண்ணாநின்ற உண்பன உண்ப கரியன கரிய கோட்ட எனவரும். ‘உண்ப என்பது பலரறிசொல்லன்றோவெனின் தகைத்தன தகையாநின்றன தகைப்பன என அன்பெற்றுந் தகைத்த தகையா நின்ற தகைப்ப என அன்பெறாதும் நின்றாற்போலவு “கானந்த கைப்பசெலவு’ என்றாற்போலவும் உண்ப என்பதும் அன்பெறாது நின்ற அகர ஈற்றுப் பலவறிசொல், பகர ஈற்றுப் பலவறிசொல் லன்று. ஆ உண்ணாதின்னா எனவும் வ உண்குவதின்குவ எனவும் வரும். ‘இவை அன்பெறாது எதிர்காலத்துவரும் வகரவொற்று ஊர்ந்து நின்ற அகர ஈறாகாவேனெனின் குகரம்பெறுதலின் வகர ஈறேயாம். வருவ செல்வ எனக் குகரம் பெறாதவழி அகர ஈறாதலும், பெற்றவழி வகர ஈறாதலும் உடையவாம். (9) 10. இருதிணை மருங்கி னைம்பா லறிய வீற்றினின் றிசைக்கும் பதினோ ரெழுத்துந் தோற்றந் தாமே வினையொடு வருமே. இது மேற் பாலுணர்த்திய எழுத்து இனைத்தென்றும் அவை வினைக்கண் நின்று உணர்த்துமென்றும் உணர்த்து கின்றது. (இ-ள்.) இருதிணை மருங்கின் ஐம்பால் அறிய = உயர்திணை அஃறிணை என்னும் இரண்டுதிணைக்கண்ணும் உளவாகிய ஒருவன் ஒருத்தி பலர் ஒன்று பல என்னும் ஐந்து பாலினையும் அறிய: ஈற்று நின்று இசைக்கும் பதினோர் எழுத்தும் = அவ்வச் சொல்லின் இறுதிக்கண் நின்று ஒலிக்கும் பதினோரிடைச் சொற்களும்: தோற்றந்தாமே வினையொடு வருமே = பால் உணர்த்துதற்குப் புலப்படுதற்கண் வினைச்சொற்கு ஈறாய்ப் புலப்படும். எ-று. பதினோரிடைச் சொல்லையும் எழுத்தென்றார், எழுத்தினாற் சொல்லாதல்பற்றி. இது கருத்தாதல், மாரைக் கிளவி என்றதனாற் பெற்றாம். ‘ஈற்றின் நின்று இசைக்குமென்றது னகரம் முதலிய இரண்டற்கும் ஞாபகம், அல்லனவற்றிற்கு அனுவாதம். அவை னகாரமும் ளகாரமும் ரகாரமும் பகாரமும் மாரும் துவ்வும் றுவ்வும் டுவ்வும் அவ்வும் ஆவும் வவ்வும். இது விரித்தது தொகுத்தது. வினையியலுள் வினைக்கு ஈறுபற்றி ஓதிப் பெயரியலுட் பெயர்கடம்மை எடுத்தோதினமையானும் இப்பதி னோரீறும் பெயர்க்கட் திரிபுடையவாய் வருதலானும் பெயர்க்கு இவ்வீறுகள் கோடலாகாமை உணர்க. (10) 11. வினையிற் றோன்றும் பாலறி கிளவியும் பெயரிற் றோன்றும் பாலறி கிளவியு மயங்கல் கூடா தம்மர பினவே. இது வழுவற்க என்று காத்தலும் வழுவியமைக என்று காத்தலுமாகிய இரண்டனுள் வழுவற்க என்று காக்கின்றது. (இ-ள்.) வினையிற்தோன்றும் பாலறி கிளவியும் - வினைச் சொல்லான் விளங்கும் பாலறியப்படும் பொருளும்: பெயரிற் தோன்றும் பாலறி கிளவியும் - பெயர்ச்சொல்லான் விளங்கும் பாலறியப்படும் பொருளும்: மயங்கல்கூடா - ஒன்றோடு ஒன்றை மயங்கச்சொல்லுதலைப் பொருந்தா; தம் மரபின - தத்தம் இலக்கணத்தானே சொல்லுதலுடைய. எ-று. ‘சொல்லென்றார் அதனான் உணரும் பொருளை. பால் மயங்காதெனவே திணைமயங்காமையுங் கூறிற்றாம். (உ-ம்.) உண்டானவன் உண்டாளவள் உண்டாரவர் உண்டதது, உண்டனவவை; இவை வினை நின்று பெயர்மேற் தத்தம் மரபினான் வந்தன. அவனுண்டான், அவளுண்டாள், அவருண்டார், அதுவுண்டது, அவையுண்டன; இவை பெயர் நின்று வினைமேற் தத்தம் மரபினான் வந்தன. வினைச்சொல்லான் விளங்குமெனவே அதனிலுள்ள காலமும் இடனும் மயங்காமையும் பெற்றாம். அவை, உண்டேன் நெருநல், உண்ணா நின்றேன் இன்று, உண்கு நாளை, யான் வந்தேன், நீவந்தாய், யாம் வந்தேம், நீயிர்வந்தீர் என வரும். இனி உய்த்துக்கொண்டுணர்த்தலென்பதனாற் தம்மரபின என்பதனைப் பிரித்து வேறொரு தொடராக்கி, மரபு மயங்காமையும் கொள்க. அவை, யானைமேய்ப்பானைப் பாகன் என்றலும் யாடுமேய்ப்பானை இடையன் என்றலுமாம். இச்சூத்திரத்தாற் திணையும் பாலும் இடமுங் காலமும் மரபும் வழுவாமற் காத்தார். இனி மயங்கல்கூடா என்பதனானே மயங்குதலும் உண்டென்பது பெற்றாம். அம்மயக்கம் எழுவகையவென்பது உரையிற்கோடும். அவை திணைமயக்கமும் பால்மயக்கமுங் கால மயக்கமும் இடமயக்கமுஞ் செப்புமயக்கமும் வினாமயக்கமும் மரபுமயக்கமுமென ஏழாம். இவை மயங்குமெனவே வழுவாதல் பெற்றாம். உண்டானது உண்டானவை உண்டாளது உண்டாளவை உண்டாரது உண்டாரவை உண்டதவன் உண்டனவவன் உண்டதவள் உண்டனவவள் உண்டதவர் உண்டனவவர் இவை திணைவழு; உண்டானவள் உண்டானவர் உண்டாளவன் உண்டாளவர் உண்டாரவன் உண்டாரவள் உண்டதவை உண்டனவது இவை பால் வழு; இவை வினைநின்று பெயர்மேல் வழீஇயின. அவன் வந்தது அவன் வந்தன அவள் வந்தது அவள்வந்தன அவர்வந்தது அவர்வந்தன அதுவந்தான் அவைவந்தான் அதுவந்தாள் அவைவந்தாள் அதுவந்தார் அவைவந்தார் இவை திணைவழு; அவன்வந்தாள் அவன்வந்தார் அவள்வந்தான் அவள்வந்தார் அவர்வந்தான் அவர்வந்தாள் அதுவந்தன அவைவந்தது இவை பால்வழு; இவை பெயர்நின்று வினைமேல் வழீஇயின. செத்தானைச்சாமென்றல் காலவழு. யானுண்டான் யானுண்டாய் என்றாற்போல்வன இடவழு. இவை பெயர்வினைகளைப்பற்றி வரும் விகற்பமுங் கொள்க. யானை மேய்ப்பானை இடையனென்றலும் யாடுமேய்ப்பானைப் பாகனென்றலும் மரபுவழு. செப்பும் வினாவும் வழுவாமையும், வழுவுமாறும் மேலேகூறுப. வினையியலுட் கடைக்கட் கால வழுவமைதியும் மரபியலுள் மரபுவழுவமைதியுங் கூறி ஏனைய வழீஇயமையுமாறு இவ்வோத்தினுட்கூறுப. (11) 12. ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி யாண்மை யறிசொற் காகிட னின்றே. இதுவும் அது. (இ-ள்.) ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி = உயர்திணை மருங்கிற் பால்பிரிந்திசைக்குமென மேற்கூறிய ஆண்மை திரிந்த பெயர்ச்சொல்: ஆண்மை அறிசொற்கு ஆகிடன் இன்று = ஆடூஉவறி சொல்லொடு பொருந்தும் இடனுடைத் தன்று. எ-று. இது வழுவற்க என்கின்றதாகலின் ஈண்டுப் போதந்து வைத்தார். (12) 13. செப்பும் வினாவும் வழாஅ லோம்பல். இதுவும் அது. (இ-ள்.) செப்பும் வினாவும் = வினாயபொருளை அறிவுறுப்பதனையும், அறியலுறவு வெளிப்படுப்பதனையும்: வழாஅல் ஓம்பல் = வழுவாமற் போற்றுக. எ-று. செவ்வனிறையும் இறைபயப்பதுவுமெனச்செப்பு இரு வகைத்து. அவற்றுள் இறைபயப்பனதாம் வினாவெதிர் வினாதலும் ஏவுதலும் மறுத்தலும் உற்றதுரைத்தலும் உறுவது கூறலும் உடம்படுதலுஞ் சொற்றொகுத்திறுத்தலுஞ் சொல்லாதிறுத்தலு மென எண்வகை. உயிரெத்தன்மைத்தென்று வினாயவழி உணர் தற்றன்மைத்தென்றல் செவ்வனிறையாம். உண்டியோவென்று வினாயவழி வயிறுகுத்திற்மென்றலும், உற்றதுரைத்தலாய் உண்ணேனென்பது பயத்தலின் இறை பயப்பதாம். கடம்பூர்க்கு வழியாதோவெனில் இடம்பூணியென் னாவின்கன்று என்றல் செப்புவழுவாம். அறியான்வினாவும் ஐயவினாவும். அறிபொருள் வினாவுமென வினா மூவகைத்து. உயிரெத்தன்மைத்தென்றல் அறியாவினா ஒருவாற்றானும் அறியப்படாத பொருள் வினாவப்படாமையிற் பொது வகையான் உணர்ந்து சிறப்புவகையான் அறியாமையின் வினாவினானென்று உணர்க. குற்றியோமகனோ தோன்றுகின்ற உரு என்பது ஐய வினா. அறியப் பட்டபொருளை வேறறிதலும் அறிவுறுத்தலும் முதலிய பயனோக்கி வினாதல் அறிபொருள்வினா. இவ்வறிபொருள் வினாவின்கண்ணே அறிவொப்புக்காண்டலும், அவனறிவு தான் காண்டலும் மெய்யவற்குக்காட்டலும் அடங்கின. ஒரு விரல் காட்டி நெடிதோகுறிதோவென்றலுங் கறக்கின்ற எருமை சினையோபாலோவென்றலும் பிறவும் வினாவழுவாம். செப்பு ஆசிரியன்கண்ணதாகலானும் வினாவின்றியுஞ் செப்பு நிகழ்தலானுஞ் செப்பு முற்கூறினார். செவ்வனிறையும், அறியான் வினாவும், ஐயவினாவும் வழாநிலை யாதலின் வழாஅலோம்பல்லென்பதனாற் கொள்க. ஏனைய, வழுவமைப் புழிக் காண்க. (13) 14. வினாவுஞ் செப்பே வினாவெதிர் வரினே. இது வழுவமைக்கின்றது. (இ-ள்.) வினா எதிர்வரின் = வினாப்பொருளை ஒருவாற்றான் அறிவுறுத்து வினாவிற்கு மறுமொழியாய் வரின்: வினாவுஞ் செப்பு = வினாத்தானுஞ் செப்பாம். எ-று. சாத்தா உண்டியோ என்று வினாயவழி, உண்ணேனோ எனவரும் வினா வினாவாய்பாட்டால் வந்ததேனும் உண்பேனென்னும் பொருள்பட வருதலிற் செப்பாயிற்று. இது, வினாவெதிர் வினாதல். (14) 15. செப்பே வழீஇயினும் வரைநிலை யின்றே யப்பொருள் புணர்ந்த கிளவி யான. இதுவும் அது. (இ-ள்.) செப்பே வழீஇயினும் வரைநிலையின்று - செவ்வனிறையாகாது செப்பு வழுவிவரினுங் கடியப்படாது: அப்பொருள் புணர்ந்த கிளவியான - ஒருவாற்றான். அவ்வினாய பொருட்கு இயைவுபட்ட கிளவியாதற்கண். எ-று. சாத்தா உண்டியோ என்று வினாயவழி வயிறுகுத்திற்றென உற்றதெரைத்தலும் வயிறுகுத்துகின்றறென மறுத்தலும் நீயுண்ணென ஏவுதலும் வயிறுகுத்துமென உறுவது கூறலும் பசித்தேனென்றும் பொழுதாயிற்றென்றும் உடம்படுதலும் ஒருவாற்றான் வினாய பொருளை அறிவுறுத்தன குமரியாடிப் போந்தேன் ஒருபிடி சோறுதம்மின் என்பது சொல்லாதிறுத்தல்: சொற்றொகுத்திறுத்தல் “எப்பொரு ளாயினும்” என்புழியும் “அப்பொருள்” என்புழியுங் கூறுப. செப்பே எனநின்ற ஏகாரம் பிரிநிலையேகாரம், வினாநிற்பச் செப்பைவாங்கிக்கொண் கூமைத்தலின். உம்மை, சிறப்பும்மை. செப்பு வழுவினும் அமைக. வினா வழீஇயின இடத்து அமையாதாம். (15) 16. செப்பினும் வினாவினுஞ் சினைமுதற் கிளவிக் கப்பொரு ளாகு முறழ்துணைப் பொருளே. இது செப்பிற்கும் வினாவிற்கும் மரபு கூறுகின்றது. (இ-ள்.) செப்பினும் வினாவினும் - செப்பின்கண்ணும் வினாவின்கண்ணும்: சினைமுதற் கிளவிக்கு - சினைக்கிளவிக்கும் முதற்கிளவிக்கும், உறழ்துணைப்பொருளே - ஒப்புமை கருதாது மாறுபடக் கூறும் பொருளும் ஒப்புமை கூறப்படும் பொருளும்: அப்பொருளாகும் - அவ்வப்பொருளுக்கு அவ்வப்பொருளே யாம். எ-று. (உ-ம்.) இவள் கண்ணின் இவள் கண் பெரிய; நும் மரசனின் எம் மரசன் முறை செய்யும்; இவள் கண்ணின் இவள் கண் பெரியவோ? எம்மரசனின் நும் மரசன் முறை செய்யுமோ? இவள் கண்ணொக்கும் இவள் கண்; எம் மரசனையொக்கும் நும் மரசன்; இவள் கண் ஒக்குமோ இவள் கண்? எம் மரசனையொக்குமோ நும் மரசன்? என வரும். ‘தன்னின முடித்தலென்பதனான், எண்ணுங்காலுந் துகிரும், முத்தும், பொன்னுமென இனமொத்தன எண்ணுக; ‘முத்தும், கருவிருந்தையுங், கானங்கோழியும், பொன்னுமென்று எண்ணற்க. (16) 17. தகுதியும் வழக்குந் தழீஇயின வொழுகும் பகுதிக் கிளவி வரைநிலை யிலவே. இது மரபுவழு அமையுமாறு கூறுகின்றது. (இ-ள்.) தகுதியும் வழக்கும் தழீஇயின ஒழுகும் - ஒரு பொருட்கு உரியசொல்லாற்பட்டாங்கே சொல்லுதல் நீர்மை யன்றென்று அது களைந்து அதற்குத்தக்கதோர் வாய்பாட்டாற் கூறுதலையும் ஒருகாரணமின்றி வழங்கற்பாடேபற்றி வருவதனையும் பற்றிநடக்கும்: பகுதிக்கிளவி - இலக்கணத்திற் பக்கச்சொல்: வரைநிலையில - கடியப்படா. எ-று. செத்தாரைத் துஞ்சினாரென்றலும் ஓலையைத் திரு முகமென்றலுஞ் சுடுகாட்டை நன்காடென்றலுங் கெட்டதனைப் பெருகிற்றென்றலும் போல்வன தகுதி. பண்புகுறியாது சாதிப்பெயராய் வெள்யாடு வெண்களமர் கருங்களமர் என வருவனவும் குடத்துள்ளும் பிறகலத்துள்ளும் இருந்தநீரைச் சிறிதென்னாது சிலவென்றலும் அடுப்பின் கீழ்ப்புடையை மீயடுப்பென்றலும் போல்வன வழக்காம். (17) 18. இனச்சுட் டில்லாப் பண்புகொள் பெயர்க்கொடை வழக்கா றல்ல செய்யு ளாறே. இது செய்யுட்கு மரபு வழுவமைதி கூறுகின்றது. (இ-ள்.) இனச்சுட்டில்லாப் பண்பு கொள் பெயர்க் கொடை = இனத்தைச் சுட்டி அவற்றினின்றும் விசேடிக்கப்படுதலில்லாத பண்பு அடுத்து வழங்கப்படும் பெயரை ஒரு பொருட்குக் கொடுத்தல்: வழக்காறு அல்ல செய்யுளாறு = வழக்கு நெறியல்ல; செய்யுணெறி. எ-று. “செஞ்ஞாயிற்று நிலவுவேண்டினும் வெண்டிங்களுள் வெயில்வேண்டினும்” என இவை கருஞாயிறும் கருந்திங்களு மாகிய இனம் இன்மையின் விசேடிக்கப்படா வாயினுஞ் செய்யுட்கு அணியாய் நிற்றலின் அமைத்தார். எனவே, வழக்கின் கண் பண்புகொள் பெயர் இனம் குறித்து வருதல் மரபென்பதூஉம் செய்யுட்கண் வழீஇ அமைதல் மரபு என்பதூஉம் கூறியவாறாயிற்று. பண்பு அடாது, ‘வடவேங்கடம் தென்குமரி’ முட்டாழை, கோட்சுறா எனத் திசையும் உறுப்பும் தொழிலும் முதலிய அடையடுத்து இனஞ் சுட்டாது வருவன, ‘ஒன்றென முடித்தலாற் செய்யுளாறென அமைக்க. (18) 19. இயற்கைப் பொருளை யிற்றெனக் கிளத்தல். இஃது இயற்கைப் பொருட்கண் மரபு வழுவாமை கூறுகின்றது. (இ-ள்.) இயற்கைப் பொருளை - பொருட்குப்பின் தோன்றாது உடன் நிகழுந் தன்மைத்தாய பொருளை, அதன் இயல்பு கூறுங்கால், இற்றெனக் கிளத்தல் - ஆக்கமுங் காரணமுங் கொடாது ‘இற்றெனச் சொல்லுக, எ-று. (உ-ம்.) நிலம் வலிது, நீர் தண்ணிது, தீ வெய்யது, வளி யுளரும், உயிர் உணரும் என வரும். சேற்று நிலம் மிதித்து வன்னிலம் மிதித்தான், ‘நிலம் வலிதாயிற்றென்றவழி, மெலிதாயது வலிதாய் வேறுபட்டதென ஆக்கம் வேறுபாடு குறித்து நிற்றலின், இயற்கைப்பொருள் ஆக்கமொடு வந்ததன்றாம். (19) 20. செயற்கைப் பொருளை யாக்கமொடு கூறல். இதுசெயற்கைப் பொருள்மேல் மரபு வழுவாமை கூறுகின்றது. (இ-ள்.) செயற்கைப் பொருளை - காரணத்தாற் தன்மை திரிந்த பொருளைத் திரிபு கூறுங்கால், ஆக்கமொடு கூறல் - ஆக்கங் கொடுத்துச் சொல்லுக, எ-று. (20) 21. ஆக்கந் தானே காரண முதற்றே. இது மேலதற்கோர் புறனடை. (இ-ள்.) ஆக்கந்தானே - செயற்கைப்பொருளை ஆக்கமொடு கூறுங்கால் அவ்வாக்கச் சொற்றான், காரண முதற்று - காரணச் சொல்லை முன்னாக உடைத்து, எ-று. (உ-ம்.) கடுக்கலந்த கைபிழி யெண்ணெய் பெற்றமையான் மயிர் நல்ல வாயின, எருப்பெய்து இளங்களை கட்டு நீர்கால் யாத்தமையாற் பைங்கூழ் நல்லவாயின என வரும். ‘மயிர் நல்ல; பைங்கூழ் நல்லவென ஆக்கமின்றி வந்தது, பொருட்குப் பின் தோன்றாது, உடன் தோன்றி நிற்றலின் இயற்கைப்பொருளாம். அவ்வாறன்றி, முன் தீயவாய்ப் பின் நல்லவாயினவழி, அத்தீமை காணாதான், ‘மயிர் நல்லவெனினும் இழுக்கின்று, அச்செயற்கை உணராமற் கூறலின். (21) 22. ஆக்கக் கிளவி காரண மின்றியும் போக்கின் றென்ப வழக்கி னுள்ளே. இஃது எய்தியது விலக்கிற்று. (இ-ள்.) ஆக்கக் கிளவி - ‘காரணமுதற்று,’ என்ற ஆக்கச் சொல், காரணமின்றியும் போக்கிறென்ப - காரணமின்றி வரினுங் குற்றமின்றென்று கூறுப, வழக்கினுள்ளே - வழக்கிடத்து, எ-று. (உ-ம்.) மயிர் நல்லவாயின, பயிர் நல்லவாயின, என வரும். எனவே, செய்யுட்குக் காரணம் பெற்றே வருமாயிற்று. ‘வருமழைய வாய்க்கொள்ளும் வாடாச்சீர் வண்கைக் கருமுருகன் சூடிய கண்ணி - திருநுதாஅல்லின்றென் குரற்கூந்தற் பெய்தமையாற் பண்டைத்தன் சாயல வாயின தோள்.’ என இது காரணமும் ஆக்கமும் பெற்றது. ‘குருதி படிந்துண்ட காகமுருவிழந்து குக்கிற் புறத்த சிரல்வாய’ என இதற்கு ஆக்கம் விகாரத்தாற்தொக்கதென்று உணர்க. ‘அரிய கானஞ் சென்றோர்க் கெளிய வாகிய தடமென் தோளே.’ (குறுந். 77) இதற்குக் ‘கற்புக் காலத்தான் றோள் எளியவாயின,’ என அக்காலங் காரணமாயிற்று. உம்மை எதிர்மறையாகலாற், காரணங்கொடுத்துச் சொல்லுதலே வலியுடைத்து. (22) 23. பான்மயக் குற்ற வையக் கிளவி தானறி பொருள்வயிற் பன்மை கூறல். இது மேல் ‘இயற்கை, செயற்கையெனப் பகுத்த பொருள்களுள் திணையுணர்ந்து பாலையந் தோன்றியவழி அவ்வையப்பொருண்மேற் சொல் நிகழ்த்துமாறு கூறுகின்றது. (இ-ள்.) பால் மயக்குற்ற ஐயக்கிளவி - தினைதுணிந்து பால் துணியாது நின்ற ஐயப்பொருளை, தானறிபொருள் வயிற் பன்மை கூறல் - தான் அறிந்த உயர்திணைப் பொருளிடத்துப் பன்மையாற் கூறுக, எ-று. ஐயப்பொருளாவது, சிறப்பியல்பாற் தோன்றாது பொது இயல்பாற் தோன்றிய பொருள். ‘ஆண்மகன்கொல்லோ பெண்டாட்டிகொல்லோ தோன்றுகின்றவர்!’ என வரும். ‘திணைவயினென்னாது, ‘தானறி பொருள்வயினெனப் பொதுப்படக் கூறிய அதனால, ‘ஒருவன்கொல்லோ பலர் கொல்லோ இக்கறவை யுய்த்த கள்வர்? ஒருத்திகொல்லோ பலர்கொல்லோ இக்குருக்கத்தி நீழல் வண்டல் அயர்ந்தார்?’ எனத் திணையோடு ஆண்மை பெண்மை துணிந்த பன்மை யொருமைப் பாலையமுங் கொள்க. அப்பொருட்கு இரு பாலுமாய் நிற்றலின்மையிற், தான் ஒன்றாகிய பொருளைப் பன்மையாகக் கூறினும் அமைக வென வழுவமைத்தார். (23) 24. உருவென மொழியினு மஃறிணைப் பிரிப்பினு மிருவீற்று முரித்தே சுட்டுங் காலை. இதுவும் ஐயப்பொருண்மேற் சொல் நிகழ்த்துமாறு கூறுகின்றது. (இ-ள்.) இரு வீற்றும் சுட்டுங்காலை - திணையைத்துக் கண்ணும் அஃறிணைப்பாலையத்துக்கண்ணும் கூறும் மரபு கருதுமிடத்து, உருவென மொழியினும் - திணையைத்துக்கண் உருவெனச் சொல்லுமிடத்தும், அஃறிணைப் பிரிப்பினும் - ஒருமையும் பன்மையுமாகப் பிரிக்கப்படும் அஃறிணை யியற்பெயராகிய பொதுச்சொற்கண்ணும், உரித்து - ஐயத்தைப் புலப்படுத்தும் பொதுவாகிய தன்மை உரித்து, எ-று. குற்றிகொல்லோ மகன்கொல்லோ இத்தோன்றாநின்ற உருவு ஒன்றுகொல்லோ பலகொல்லோ இச்செய் புக்க பெற்றம் என வரும். ‘உருவினுமென்னாது, ‘உருவென மொழியினுமெ’ன்ற தனான், உருவின் பொருளவாகிய வடிவு, பிழம்பு, பிண்டமென்னுந் தொடக்கத்தனவுங் கொள்க. உருவு முதலியன உயர்திணைப் பன்மையொருமைப்பால் ஐயத்திற்கு ஏலாமையும் ஏனைத் திணையைத்திற்கு ஏற்புடைமையையும் தோன்றச் ‘சுட்டுங்காலையென்றார். ‘உருபு’ எனப் பகரவுகரமாகப் பாடதின், அது வேற்றுமையுருபிற்கும் உவம உருபிற்கும் பெயராய், வடிவை உணர்த்தாதென்று உணர்க. ‘அதுவென் னுருபுகெட’ எனவும், ‘உருபினும் பொருளினு மெய்தடுமாறி’ எனவும், ‘உருபு தொடர்ந் தடுக்கிய’ எனவும், ‘உருபு தொக வருதலும்’ எனவும், ‘மெய்யுருபு தொகா’ எனவும், ‘யாதன் உருபின்’ எனவும் பிறாண்டும் வேற்றுமைக்கு ‘உருபு’ என்றே சூத்திரஞ் செய்தவாறு காண்க. ‘உவமன்றல் அவ்வோத்திற் கூறிய உரைகளான் உணர்க. அன்றியுஞ் சான்றோர் செய்யுட்களிலும் ‘உருவு கிளர் ஒளிவினை’ எனவும், ‘ஞாயிற் றுருவுகிளர் வண்ணங் கொண்ட’ எனவும், ‘உருவக் குதிரை’ எனவும், ‘வேண்டுருவங் கொண்டதோர் கூற்றங்கொல்!’ எனவும் பிறாண்டும் கூறுமாற்றான் உணர்க. ‘உருவு’ என்பது, உடல் உயிர் கூட்டப் பொதுமையாகிய ‘மக்களென்னும் பொதுமைக்கு ஏலாது உடலையே உணர்த்துதலானும், ‘பெற்றம்’ என்பது இயற் பெயராயினும் ஒருகாற் சொல்லுதற்கண் ஒருபால்மேல் நில்லாது இருபால்மேல் நிற்றலானும், இவை வழுவமைதி யாயிற்று. (24) 25. தன்மை சுட்டலு முரித்தென மொழிப அன்மைக் கிளவி வேறிடத் தான. இது முன்னர்க் கூறிய பாலையத்தையும் திணையைத்தையும் துணிந்து கூறும்வழி அவற்றிற்கு அன்மைத்தன்மை கூறும் மரபு கூறுகின்றது. (இ-ள்.) தன்மை சுட்டலும் உரித்து - ஒருவர்க்குப் பாலை யமும் திணையைமும் நிகழ்ந்துழி அங்ஙனம் ஐயுறலேயன்றி அவர்க்கு அப்பொருள்களின் உண்மைத் தன்மையைக் கருதுதலும் உரித்து, அன்மைக் கிளவி வேறிடத்தான என மொழிப - ஆண்டு ஒரு பொருள் ஒரு பொருளல்லவாந் தன்மை உணர்த்துஞ் சொல் ஐயத்துக்கு வேறாய்த் துணிந்து தழீஇக் கொண்ட பொருளின்கண்ணது என்று கூறுவர்ஆசிரியர், எ-று. (உ-ம்.) இவன் பெண்டாட்டியல்லன், ஆண் மகன்; இவள் ஆண் மகன் அல்லள், பெண்டாட்டி; இவன் குற்றி அல்லன், மகன்; இவ்வுரு மகனன்று, குற்றி; இப்பெற்றம் பலவன்று, ஒன்று; இப்பெற்றம் ஒன்றல்ல, பல என வரும். ‘இவனெ’ என்னும் எழுவாய், ‘அல்லனென்பதனொடு முடிந்தது. ‘மகன்’ என்பது, ‘இவனென்னுஞ் சுட்டுப் பெயர்க்குப் பெயர்ப் பயனிலையாய் நின்றது. இவற்றிற்கு ஐந்தாமுருபு விரித்தலுமுன்று, ‘பெண்டாட்டியின் அல்லனென. இனிச் சேனாவரையர் முன்னிற்சூத்திரத்தில் உருவென் பதனை ‘ஆண்மகன்கொல்லோ பெண்டாட்டிகொல்லோ இத்தோன்றாநின்ற உருபெனப் பாலையத்திற்கு ‘உருவென்னும் ஐயப்புலப் பொதுச்சொல் உரித்தென்று உதாரணங் காட்டி, இச்சூத்திரத்தின் ‘அன்மைக்கிளவி மறுக்கப்படும் பொருண் மேலாமென்று கூறினாராலெனின், அவர் உதாரணங் காட்டிய வற்றின் ஆண்மகனென்று துணிந்தவழிப் ‘பெண்டாட்டி அல்லள், ஆண்மகன்,’ என்றும், பெண்டாட்டியென்று துணிந்த வழி ‘ஆண்மகன் அல்லன், பெண்டாட்டியென்றும் மறுக்கப்படும் பொருண் மேல் அன்மை கூறி, அவற்றிற்கு ‘இவ்வுருவு பெண்டாட்டி அல்லள், ஆண் மகனென்றும், ‘இவ்வுருவு ஆண்மகனெல்லன், பெண்டாட்டியென்றும் ‘உருலென்னுஞ் சொற்கூட்டியே பொருண் முடிக்க வேண்டுதலின், ‘உருவென்னும் அஃறிணைப்பெயர் ‘அல்லன், அல்லள்’ என்னும் உயர்திணை வினைக்குறிப்போடு முடியாமை உணர்க. அன்றியும், ‘இவன் பெண்டாட்டி யல்லள், ஆண்மகன்; இவள் ஆண்மகனல்லன், பெண்டாட்டி’ என அவர் சொல் முடித்தற்குக் கூட்டிய சுட்டுப்பெயர் கூட்டினும் முடியாமையும் உணர்க. இனி, ‘குற்றியோ மகனோவென்று ஐயுற்றான் மகனென்று துணிந்தது, மக்கட்டன்மையை ஆண்டுப் பெற்றன்றே? அது பெறவே. குற்றித்தன்மை ஆண்டு இல்லையாயிற்று. ஆண்டு இல்லாத குற்றித் தன்மையனால்லன் மகன் ஆதலான், அஃது அல்லாதான்மேல் அன்மையேற்றுதலே ஆசிரியர் கருத்தென்று உணர்க. இனிக் குற்றியென்று துணியினும், இஃது ஒக்கும். உம்மை, எண்ணும்மை. (25) 26. அடைசினை முதலென முறைமூன்று மயங்காமை நடைபெற் றியலும் வண்ணச் சினைச்சொல். இது வண்ணச்சினைச்சொற்கண் மரபு கூறுகின்றது. (இ-ள்.) அடை சினை முதலென மூன்றும் - பண்புச் சொல்லுஞ் சினைச்சொல்லும் முதற்சொல்லுமென்ற மூன்றும், முறை மயங்காமை நடைபெற்று இயலும் - கூறப்பட்ட முறை மயங்காமை வழக்கைப் பொருந்தி நடக்கும், வண்ணச்சினைச் சொல் - வண்ணம் முதலாகிய பண்புகளொடு தொடர்ந்த சினைச்சொல்லையுடைய முதற்சொல், எ-று. மீட்டும் ‘வண்ணச்சினைச்சொல்லென்றது, அச்சொற்குப் பெயர் கூறிற்று. (உ-ம்.) செங்கானாரை, பெருந்தலைச் சாத்தன் என வழக்கினுள் மயங்காதெனவே, செய்யுளுட் ‘கவிசெந் தாழைக் குவிபுறத் திருந்த - செவிசெஞ் சேவலும் பொருவலும் வெருவா - வாய்வன் காக்கையுங் கூகையுங் கூடி’ (புறம். 238. 1-3) என மயங்கியும் வருமாயிற்று. சினையொடு முதற்கு ஒற்றுமை யுடைமையான் முதலோடும் இயைந்தன. ‘பெருந்தோள் சிறுநுசுப்பிற் பேரமர்க்கட் பேதை’ என்பதும் அவ்வாறே மயங்கி வந்தது, செய்யுளாதலின். ‘பெருவழுதுணங் காயென்பது பெருமை முதன்மேலே கூறுதலிற் சொல்லுவான் கருத்து வேறாயிற்று. இன்னும் ‘வழக்கினுள் மயங்காதென்றதனாற் ‘சிறு பைந்தூவி’ (அகம். 57) எனச் சினையொடு குணம் இரண்டு அடுக்கல் செய்யுளாறென்க. ‘இளம் பெருங்கூத்தன்’ என்பது சினையின்மையின் வேண்டியவாறு வந்தது. (26) 27. ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியு மொன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும் வழக்கி னாகிய வுயர்சொற் கிளவி யிலக்கண மருங்கிற் சொல்லா றல்ல. இது பால் வழுவும், திணை வழுவும் அமைக்கின்றது. (இ-ள்.) ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும் - ஒருவனையும் ஒருத்தியையும் சொல்லும் பன்மைச் சொல்லும், ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும் - ஒன்றனை உயர்திணைப் பன்மையாகச் சொல்லும் பன்மைச் சொல்லும், வழக்கினாகிய உயர்சொற் கிளவி - வழக்கின் உளவாகிய உயர்த்துச் சொல்லுஞ் சொல்லாம்; இலக்கண மருங்கிற் சொல்லாறல்ல - இலக்கண முறைமையாற் சொல்லும் நெறியல்ல, எ-று. ‘வழக்கினாகிய’ எனவே, வழுவமைதி பெற்றாம். உயர்சொல் - உயர்க்குஞ் சொல். ஒருவனையுந் ‘தாம் வந்தாரென்ப; ஒருத்தியையுந் ‘தாரெந்தார்,’ என்ப. ஒன்றனையுந் ‘தாம் வந்தாரென்ப. (உ-ம்.) யாம் வந்தேம், நீர் வந்தீர், இவர் வந்தார், என வரும். ‘தாம் வந்தார் தொண்டனாரென்பது, உயர்சொல் குறிப்பு நிலையின் இழிபு விளக்கிற்று. ‘இலக்கண மருங்கிற் சொல்லாறல்ல,’ என்ற மிகையான், ஓர் எருத்தை ‘எந்தை வந்தான்,’ எனவும் ஓர் ஆவை ‘எம் அன்னை வந்தாள்,’ எனவும், ‘கொடுங்கோல் கோவலர் பின்னின் றுய்த்தர - வின்னே வருகுவர் தாயர்.’(முல்லைப். 15, 16) எனவும் ஒப்புமை கருதாது காதல்பற்றி உயர்த்து வழங்கலுங் ‘கன்னி நறுஞாழல் (சிலப். 7 : 9) கன்னி யெயில்’ எனவும், ஓர் எருத்தை ‘நம்பி’ எனவும், ஒரு கிளியை ‘நங்கை’ எனவும், அஃறிணையை உயர்திணை வாய்பாட்டாற் கூறலும்; பண்புகொள் பெயர்க்கொடை, வழக்கினகத்தும் ‘பெருங்கொற்றன், பெருஞ்சாத்தன்’ என இல்குணம் அடுத்து உயர்த்துக்கூறலும் கொள்க. ‘என் பாவை வந்ததென்பது ஆகுபெயர். அஃது ஒப்புள்வழிக் கூறியது. (27) 28. செலவினும் வரவினுந் தரவினுங் கொடையினு நிலைபெறத் தோன்று மந்நாற் சொல்லுந் தன்மை முன்னிலை படர்க்கை யென்னு மம்மூ விடத்து முரிய வென்ப. இஃது இடம் பற்றி நிகழுஞ் சொற்களுக்குப் பொது விதி கூறுகின்றது. (இ-ள்.) செலவினும் வரவினுந் தரவினுங் கொடையினும் நிலை பெறத் தோன்றும் அந்நாற் சொல்லும் - செலவு முதலிய நான்கு வினை யானும், இடம் நிலைபெறப் புலப்படாநின்ற அந் நான்கு சொல்லும்; தன்மை முன்னிலை படர்க்கை என்னும் அம்மூவிடத்தும் உரியவென்ப - தன்மை முன்னிலை படர்க்கை யென்னும் அம்மூவிடத்திற்கும் உரியவாய் வருமென்று கூறுவர் புலவர், எ-று. ‘ஈங்கு’ முதலியன தன்மைக்கண்ணும், ‘ஆங்கு’ முதலியன படர்க்கைக் கண்ணும் அடக்கப்பட்டன. வினைச்சொல் பாலுணர்த்தும் ஈற்றான் மூன்றிடத்திற்கும் உரிமை வினையியலுட் கூறி, செலவு முதலியன முதனிலைதாமே இடம் உணர்த்தி நிற்றலின் ஈண்டுக் கூறினார், அவற்றுள் அடங்காமையின். (28) 29. அவற்றுட், டருசொல் வருசொல் லாயிரு கிளவியுந் தன்மை முன்னிலை யாயீ ரிடத்த. இஃது அவற்றுட் சிலவற்றிற்குச் சிறப்பிலக்கணங் கூறுகின்றது. (இ-ள்.) அவற்றுட் தருசொல் வருசொல் ஆயிரு கிளவியும் - முற்கூறிய நான்கு சொல்லினுட் தரு சொல்லும் வரு சொல்லும் ஆகிய இரண்டு சொல்லும், தன்மை முன்னிலை ஆயீரிடத்த - தன்மை முன்னிலையாகிய அவ்விரண்டிடத்திற்கும் உரிய, எ-று. (உ-ம்.) எனக்குத் தந்தான்; நினக்குத் தந்தான்; என்னுழை வந்தான்; நின்னுழை வந்தான்; ஈங்கு வந்தான், என ஈற்றானன்றித் தரவும் வரவு மாகிய வினை, தன்கண்ணும் முன்னின்றான் கண்ணுஞ் சென்றன. முன்னிற் சூத்திரத்துப் பொதுவிதியான் மூன்றிடத்தும் வரைவின்றி ஆமெனவுங் கொள்ள வைத்தமையாற், ‘பெருவிறல் அமரர்க்கு வென்றி தந்த’ ‘புன்றரு பசுங்காய் தின்ற’ ‘தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது’ ‘அரிமலர்ந்தன்னகண்ணம்மா கடைசி, திருமுகமுந் திங்களுஞ் சேத்துத் - தெருமந்து, வையத்தும் வானத்துஞ் செல்லா தணங்காகி, ஐயத்துள் நின்ற தரா.’ என மயங்குவனவும் அமைக. ‘தரவு வரவு உணர்த்துஞ் சொல்’லென்பது பொருள். (29) 30. ஏனை யிரண்டு மேனை யிடத்த. இதுவும் அது. (இ-ள்.) ஏனை இரண்டும் - செலவுச்சொல்லுங் கொடைச் சொல்லும், ஏனை இடத்த - படர்க்கைக்கு உரிய, எ-று. (உ-ம்.) அவன்கட் சென்றான். ஆங்குச் சென்றான். அவர்க்குக் கொடுத்தான் என, ஈற்றானன்றிச் செலவுத்தொழிலுங் கொடைப் பொருளும் படர்க்கையான்கட் சென்றுற்றன. (30) 31. யாதெவ னென்னு மாயிரு கிளவியு மறியாப் பொருள்வயிற் செறியத் தோன்றும். இஃது அறியாப் பொருண்மேல் சொல் நிகழ்த்தும் மரபு கூறுகின்றது. (இ-ள்.) யாது எவன் என்னும் ஆயிரு கிளவியும் - யாது எவன் என்று சொல்லப்படும் அவ்விரண்டு சொல்லும், அறியாப் பொருள்வயின் செறியத் தோன்றும் - அறியாப் பொருளிடத்து ஒருவன் வினாவும் வினாவாய் யாப்புறத் தோன்றும், எ-று. (உ-ம்.) இச்சொற்குப் பொருள் யாது? இச்சொற்குப் பொருளெவன்; இது, பொது வகையான் உணரப்பட்டுச் சிறப்பு வகையான் உணர்த்தப்படாத பொருளாம். இக் காலத்து ‘எவனென்பது, ‘என்னென்றும் ‘என்னையென்றும் மருவிற்று. ‘யாவன் யாவள் யாவர் யாது யாவை யாண்டு யாங்கு எப் பொருள் என்பன திணை பால் முதலியன உணர்த்தலின், அறியாப் பொருள்வயிற் செறியத் தோன்றாவாயின. ஆயின், ‘யாது?’ ‘எவன்?’ என்பவற்றிற்கும் அவை உளவாலெனின், வினாவுகின்றான் அஃறிணை ஒருமையும் பன்மையுந்துணிந்து அவற்றின் பகுதியறிதற்கு வினாவுகின்றானல்லன், பொது வகையான் வினாவுகின்றானென்று அறிவுறுக்குமாறு வழக்குநோக்கி உணர்க. (31) 32. அவற்றுள், யாதென வரூஉம் வினாவின் கிளவி யறிந்த பொருள்வயி னையந் தீர்தற்குத் தெரிந்த கிளவி யாதலு முரித்தே. இஃது அவற்றுள் ஒன்று அறிந்தவழியும் வரும் என்று அறிந்து வழுக்காக்கின்றது. எனவே, மரபு கூறிற்றாம். (இ-ள்.) அவற்றுள் யாது என வரூஉம் வினாவின் கிளவி - அக்கூறப்பட்ட இரண்டனுள் யாது என்னும் வினாச்சொல் அறியாப் பொருளை வினாதலேயன்றி, அறிந்த பொருள்வயின் ஐயம் தீர்தற்குத் தெரிந்த கிளவியாதலும் உரித்து - அறிந்த பொருட்கண் ஐயந் தீர்தற்கு ஆராய்ந்த சொல்லாதலும் உரித்து, எ-று. (உ-ம்.) நம் மெருது ஐந்தனுள் கெட்ட எருது யாது? என வரும். இஃது அறிந்த பொருட்கண் ஐயந் தீர்தலின், வழுவமைதி அன்று. முன்னிற்சூத்திரத்துள் ‘யாதென்பதனை இச்சூத்திரத் தொடு பொருந்தப் பின் வையாததனாற் செறியத் தோன்றாதன வற்றினும் வருவன கொள்க. நமருள் யாவன் போயினான்? என எல்லாவற்றோடும் ஒட்டுக. இனி, ‘கடிசொல் இல்லை’ என்பதனான், நமருள் எவன் போயினான்? அவற்றுள் எவ்வெருது கெட்டது? என்பனவுங் கொள்க. உம்மை எதிர்மறை ஆகலான், ஐயத்ததாய் நிற்றல் வலியுடைத்து. (32) 33. இனைத்தென வறிந்த சினைமுதற் கிளவிக்கு வினைப்படு தொகுதியி னும்மை வேண்டும். இதுவரையறையுடையது தொகை பெறும்வழிப் படுவதோர் மரபு கூறுகின்றது. இ-ள். இனைத்தென அறிந்த சினை முதல் கிளவிக்கு - கேட்போரால் இத்துணையென்று அறியப்பட்ட சினைக் கிளவிக்கும் முதற்கிளவிக்கும், வினைப்படு தொகுதியின் உம்மை வேண்டும் - முடிக்கும் சொல்லோடுபடும் தொகுதிக்கண் உம்மை கொடுத்துச் சொல்லுக, எ-று. (உ-ம்.) நம்பி கண்ணிரண்டும் நொந்தன; தமிழ் நாட்டு மூவேந்தரும் வந்தார்; எனச் சினை முதற்கிளவிகள் தாமே வினைப்பட்டமையின், உம்மை வேண்டின.‘பன்னிரு கையும் பாற்பட வியற்றி’ இது பிறவினைப் படுத்தினது. ‘முரசு முழங்கு தானை மூவரும் கூடி’ (பொருந. 54) இது தானே வினைப் பட்டது. பன்னிரண்டென்னும் தொகுதியுங் கையும் ‘இயற்றி’ யென்பதன்மேல் வருதலின், ‘கை என்பதனோடு இயைந்த ‘இயற்றி’ யென்னும் வினை தொகைப்பெயரோடும் இயைந்ததாம். ‘ஐந்தலை நாகம் உடன்றது,’ என்பதற்கு ‘நாகம்’ வினைப்படு தொகுதியன்று, முடிக்குஞ் சொல்லன்மையின். இனிக் ‘கண்ணிரண்டுங் குருடு; எருது இரண்டும் மூரி,’ எனப் பெயர் கொண்டவழிப் பெயரும் முடிக்குஞ் சொல்லேயாம். ‘சுவை யாறும் உடைத்து இவ்வடிசில்; கதியைந்தும் உடைத்து இக்குதிரை,’ எனச் சிறவாத பண்பு முதலியனபற்றி வருவனவுங் கொள்க. ‘இருதோடோழர் பற்ற’ என்பது பிறரால் வினைப்படுக்கப் பட்டது. இதற்கு உம்மை விகாரத்தாற் தொக்கது செய்யுளாதலின். இத்துணையென்று அறியாக்கால், ‘முருகற்குக் கை பன்னிரண்டு,’ என்று உம்மை பெறாதாம். ‘ஒண்குழை யொன் றொல்கி யெருத்தலைப்ப’ என்பது, ஒன்றேனும், இனைத்தென அறிதலின் உம்மை வேண்டும்; அது, விகாரத் தான் தொக்கது. (33) 34. மன்னாப் பொருளு மன்ன வியற்றே. இது நிலையாப் பொருட்கண் மரபு நிகழ்த்துமாறு கூறுகின்றது. (இ-ள்.) மன்னாப் பொருளும் - உலகத்து நிலையில்லாத பொருளும், அன்ன இயற்று - அதுபோல உம்மை கொடுத்துக் கூறுதல் வேண்டும், எ-று. ‘பொருளும்’ என்ற எச்ச உம்மையான், உலகத்தில்லாத பொரு ளும், இடமுங்காலமும் பொருளும் முதலியனவற்றோடு படுத்துக் கூறுதற் கண் உம்மை கொடுத்துக் கூறுதல் வேண்டுமென்று பொருளுரைத்துக் கொள்க. ‘யாக்கையும் நிலையாதெனவே, ‘இளமையும் செல்வமும் நிலையா தென்னும் பொருளும் உணர்த்தி எச்சஉம்மையாய் நிற்கும். உம்மை பெறுதல் ஒப்புமையான், முற்றும்மையோடு எச்சஉம்மையை மாட்டெறிந்தார். இனிப் ‘பவளக்கோட்டு நீல யானை சாதவாகனன் கோவிலுள்ளுமில்லை; குருடு காண்டல் பகலுமில்லை; ‘உறற்பால நீக்கலுறுவர்க்குமாகா’ என, இல்லாப் பொருள்களும் எச்சஉம்மை பெற்றவாறு காண்க. இடம் முதலியவற்றொடு வாராதவழி உம்மை பெறா. ‘மனுக பெரும நீ நிலமிசை யானே.’ எனவும், ‘மன்னாவுலகத்து மன்னுதல் குறித்தோர்’ எனவும், ‘மன்னாப் பொருட்பிணி முன்னிய எனவும் மன்னாமை நிலையாமையை உணர்த்துதலன்றி, இன்மையை யாண்டும் உணர்த்தாமை காண்க. (34) 35. எப்பொரு ளாயினு மல்ல தில்லெனி னப்பொரு ளல்லாப் பிறிதுபொருள் கூறல். இது வினாயதன் புறத்துச் சொற்பல்காமற் ‘சொற்றொகுத்திறுத்தல்’ என்னுஞ் செப்பாமாறு கூறுகின்றது. (இ-ள்.) எப்பொருளாயினும் - யாதானுமொரு பொருளை யாயினும், அல்லது இல்லெனின் - தன்னுழை உள்ளதல்லதனை இல்லை யெனலுறுமேயெனின், அப்பொருளல்லாப் பிறிது பொருள் கூறல் - அவன் வினாய பொருடன்னையே கூறாது அதற்கு இனமாகிய பிறிது பொருளைக் கூறி இல்லை யென்க, எ-று. ‘நூறுவிற்கும் பட்டாடையுளவோ?’ என்று வினாயினார்க்கு, ‘ஐம்பது விற்குங்கோசிகமல்லதில்லை,’ என்றும், ‘பயறுளவோ வணிகீர்?’ என்றார்க்கு, உழுந்தல்லதில்லை; கொள்ளல்லதில்லை;’ என்றுந் தன்னுழை உள்ளதல்லதனை இல்லையென்பான், பிறிது பொருளைக் கூறினான். ‘பயறுளவோ?’ என்றவழி அல்லதென்பதொழியவும், ‘பயறில்லை; உழுந்துள,’ என்றாற்படும் இழுக்கென்னையெனின், ‘எப்பொருளாயினுமென்றது ஐம்பாற்பொருளை யாகலானும், ‘அல்லதென்பது அஃறிணை யொருமைப்பாற்கு உரித்தேனும் மற்றை நான்கு பாற் கண்ணும் பால் வழுவாயும் திணை வழுவாயும் மயங்குதலானும், அது கண்டு அதனை யமைத்தற்கு ‘எப் பொருளாயினுமல்லதில்’ என்றார். ‘அவனல்லது, அவளல்லது, அவரல்லது, அதுவல்லது, அவையல்லது’ என வரும். ‘நாணும் நட்பும் இல்லோர்த் தேரின் - யானல்ல தில்லையிவ் வுலகத் தானே,’ (அகம். 268. 8 - 9) எனச் சான்றோர் செய்யுளுட் பயின்று வருமாறும் உணர்க. ‘அவனல்லது பிறனில்லை,’ என மேல்வருஞ் சொல்லொடு படுத்து வழுவமைதியாதல் அறிக. பயற்றான் முடிக்கும் குறை உழுந்தான் முடித்தலன்றிப் பாம்புணிக் கருங்கல்லான் முடித்தலாகாமையிற், ‘பயறுளவோ?’ என்றார்க்குப் ‘பாம்புணிக் கருங்கலல்லதில்லையென்றல் பொருந்தாமை உணர்க. (35) 36. அப்பொருள் கூறிற் சுட்டிக் கூறல். இது மேலதற்கோர். புறனடை யாயதோர். இறுத்தல் வகைமை கூறுகின்றது. (இ-ள்.) அப்பொருள் கூறின் - அல்லதில்லென்பான் பிறிது பொருள் கூறாது அப்பொருடன்னையே கூறுமாயின், சுட்டிக் கூறல் - முன்னர்க் கிடந்த பொருளைச் சுட்டிச் சொல்லுக எ-று. ‘இவையல்லதில்லை; இப்பயறல்லதில்லை,’ என வரும். வினாயினான் பயற்றின் நன்மையும் தீமையும் உணர்ந்து, கோடற்குந், தவிர்தற்கும் இவ்வாறே கூறுக என்றார். சுட்டாவது, ‘பயறல்லதில்லை,’ யெனின், ‘பயறு, உழுந்து முதலிய இல்லையெனப் பிறிது பொருளேற்பித்துச் செப்புவழுவாம். ‘தன்னினம் முடித்தலென்பதனாற், ‘பெரும்பயறல்லதி இல்லை; பசும்பயறல்லதில்லை,’ எனக் கிளந்து கூறுதலுங் கொள்க. (36) 37. பொருளொடு புணராச் சுட்டுப்பெய ராயினும் பொருள்வேறு படாஅ தொன்றா கும்மே. இது, திணைவழு அமையுமாறும், ஒரு பொருட்பெயர் சுட்டாய் நின்று அப்பொருளுணர்த்துவதோர் மரபு வழுவமைதியும் உணர்த்து கின்றது. (இ-ள்.) சுட்டு பொருளொடு புணராவாயினும் ஆகும் - ஒரு சுட்டுத் தான் உணர்த்துதற்கு உரிய அஃறிணைப்பொருளை உணர்த்தாது உயர்திணைப்பொருளை உணர்த்தி நிற்குமாயினும் ஆம், பெயர் பொருளொடு புணரா வாயினும் சுட்டுப்பொருள் வேறுபடாது ஒன்றாகும் - சில பொருட்பெயர் சுட்டுப்பொருளை உணர்த்தா வாயினுந் தாம் சுட்டுவதொரு பொருளிடத்து வேறுபட நில்லாமல் அப்பொருளையே உணர்த்தி நிற்கும் எ-று. ‘இஃதொத்தன்,’ என்றவழி, ‘இஃதென்ற அஃறிணைப் பொருளை உணர்த்திய சுட்டு ‘இவன் ஒருத்தன்’ என உயர்திணைப் பொருளை உணர்த்தி நின்றவாறு காண்க. ‘இஃதோ செல்வற் - கொத்தனம் யாமென’ என்பதும் அது. ‘நாயுடை முதுநீர்’ என்னும் அகப்பாட்டினுள், ‘நாணி நின்றோள் நிலைகண் டியானும்-பேணினென் அல்லனோ மகிழ்க! வானத் - தணங்கருங் கடவுளன் னோள்நின் - மகன்தாய் ஆதல் புரைவதா லெனவே.’ என்புழி ‘நாணி நின்றோள்’ என்னும் பொருட்பெயர் தன் தொடர்ப் பொருளைக்கொண்டு முடிந்த பின்னர், அப்பொருட்பெயர்மேல் ஒரு காரியம் கூற வேண்டியவழி, ‘அவள்’ எனச் சுட்டிக் கூறுதல் வேண்டும்; அங்ஙனம் கூறாது, ‘வானத் தணங்கருங் கடவுளன்னோள்’ என எல்லார்க்கும் பொதுவாயதொரு பெயரான் கூறினாள். ஆயினும், கூறுகின்றாள் பரத்தையைக் கருதியே கூறுதலின், அக் ‘கடவுளன்னோளென்ற பெயரும் சுட்டுப் பெயர்த்தன்மையாய் நின்றவாறு காண்க. ‘அளிநிலை பெறாஅது, (அகம். 5) என்னும் அகப்பாட்டினுள், ‘ஒண்ணுதலுயிர்த்த காலை மாமலர் மணியுரு விழந்த தோற்றங் கண்டே கடிந்தனம்,’ என முடிந்த பின்னர் அவள்மேல் பின்னரும் ஒரு காரியம் கூறக் கருதிய தலைவன், ‘ஒண்டொடி’ எனப் பொதுப்பெயராற் கூறினானேனும், அப்பெயர் ‘அவளென்னும் பொருள் தந்து நின்றவாறு காண்க. ‘கொய்தளிர்த் தண்டலைக் கூற்றப் பெருஞ்சேந்தன் - வைகலுமேறும் வயக்களிறே! - கைதொழுவல் காலேக வண்ணனைக் கண்ணாரக் காணவெஞ் - சாலேகம் சார நட.’ ‘பொற்பூண் சுமந்த புணர்மென்முலைக் கோடு போழ - நற்பூங் கழலானிருதிங்கண யந்த வாறும் - கற்பா டழித்த கனமாமணித் தூண்செய் தோளான் - வெற்பூ டறுத்து விரைவின்னெறிக் கொண்ட வாறும்’ என்றாற்போலப் பிற செய்யுட்களுள்ளும் பொருட்பெயர் சுட்டுப்பெயர்ப் பொருளவாய் வருதல் பெரும்பான்மை யென்று உணர்க. ‘வையைக் கிழவன் வயங்குதார் மாண்கலந் - தையலாயி இன்றுநீ நல்கினை நல்காயேற் - கூடலார் கோவொடு நீயும் படுதியே - நாடறியக் கௌவை யொருங்கு.’ என்புழிக் ‘கூடலார்கோ’ என்றாற்போலப் பின் பொருட்பெயர் பொதுவாய் நில்லாது அப்பொருளையே விளக்கிச் சுட்டாய் நிற்பனவும் ‘ஒன்றென முடித்தலாற் கொள்க. இச்சூத்திரத்திற்குப் பலருங் கூறும் பொருளெல்லாம் முன்னிற் சூத்திரத்தாற் பெற்றவாறு காண்க. உம்மை, சிறப்பும்மை, அது வேறு பொருள்படுதல் மாலைத் தாயி னும், பொருள் வேறுபடாது ஒன்றாகுமென்றவாறு. (37) 38. இயற்பெயர்க் கிளவியுஞ் சுட்டுப்பெயர்க் கிளவியும் வினைக்கொருங் கியலுங் காலந் தோன்றிற் சுட்டுப்பெயர்க் கிளவி முற்படக் கிளவா ரியற்பெயர் வழிய வென்மனார் புலவர். இஃது ஒரு பொருளை யுணர்த்தும் இருபெயர் வழுக் காக்கின்றது. (இ-ள்.) இயற்பெயர்க் கிளவியுஞ் சுட்டுப்பெயர்க் கிளவியும் - இயற் பெயராகிய சொல்லுஞ் சுட்டுப் பெயராகிய சொல்லும், வினைக்கு ஒருங்கு இயலுங் காலந் தோன்றில் - ஒன்றனை யொன்று கொள்ளாது இரண்டும் பிறிது வினை கோடற்கு ஒருங்கு நிகழுங்காலந் தோன்றுமாயின், சுட்டுப்பெயர்க் கிளவி முற்படக் கிளவார் - உலகத்தார் சுட்டுப் பெயராகிய சொல்லை முற்படக் கிளவார், இயற்பெயர் வழிய என்மனார் புலவர் - இயற் பெயர்க்குப் பின்னாகக் கூறுவர் என்று சொல்லுவர் புலவர், எ-று. ‘ஒருங்கியலும்’ என்றதனான், ஒரு பொருளை உணர்த்துதல் கொள்க. ‘வழிய’ என்றதனான், இயற்பெயர்வழி நிற்றற்குரிய அகர இகரச் சுட்டே கொள்க. சாத்தன் வந்தான், அவற்குச் சோறு கொடுக்க; சாத்தி வந்தாள், அவட்குப் பூக்கொடுக்க என வரும். ‘அவன் வந்தான், சாத்தற்குச் சோறு கொடுக்க’ எனின், அவனுஞ் சாத்தனும் வேறுவேறாய், அவன் வருந்துணையுஞ் சாத்தன் சோறு பெறா திருந்தானாவான் செல்லும்; அங்ஙனங் கூறற்க. இனி, ‘இயற்பெயர் வழிய’ என்ற மிகையான், இயற்பெயர் அல்லா உயர்திணைப் பெயர்க்கும் அஃறிணைப் பெயர்க்கும் சுட்டுப்பெயர் பின் வருதல் கொள்க. நம்பி வந்தான், அவற்குச் சோறு கொடுக்க; நங்கை வந்தாள், அவட்குப் பூக்கொடுக்க; எருது வந்தது, அதற்குப் புல் இடுக; குதிரை வந்தது, அதற்கு முதிரை கொடுக்க என வரும். ‘தன்னினம் முடித்தலென்பதனான், விரவுப் பெயருள் இயற்பெயர் ஒழிந்தனவுங் கொள்க. முடவன் வந்தான், அவற்குச் சோறு கொடுக்க; முடத்தி வந்தாள், அவட்குக் கூறை கொடுக்க என வரும். ‘வினைக்கொருங்கியலும்’ என்று வினை கூறுதலாற் பெயர்க்கு இயலாது முன்கூறினும் அமைக வென்பதாம். சாத்தன் அவனவன் சாத்தன் என வரும். (38) 39. முற்படக் கிளத்தல் செய்யுளு ளுரித்தே. இஃது எய்தியது விலக்கிற்று. (இ-ள்.) முற்படக் கிளத்தல் - இயற்பெயருஞ் சுட்டுப்பெயரும் வினைக்கு ஒருங்கியலும்வழிச் சுட்டுப்பெயரை முற்கூறுதல், செய்யுளுள் உரித்து - செய்யுளிடத்து உரித்து, எ-று. (உ-ம்.) ‘அவனணங்கு நோய்செய்தானாயிழாய்! வேலன் - விறன்மிகுதார்ச் சேந்தன்பேர் வாழ்த்தி - முகனமர்ந்- தன்னை யலர்கடப்பந் தாரணியிலென்னை கொல் - பின்னை யதன்கண் விளைவு.’ சேந்தன், இயற்பெயர். (39) 40. சுட்டுமுத லாகிய காரணக் கிளவியுஞ் சுட்டுப்பெய ரியற்கையின் செறியத் தோன்றும். இதுவும் அச்சுட்டாராய்ச்சியே கூறுகின்றது. (இ-ள்.) சுட்டு முதலாகிய காரணக் கிளவியும் - சுட்டுப்பெயர் முதலாகிய காரணப் பொருண்மையை உணர்த்துஞ் சொல்லும், (உம்மையாற் காரணமின்றி, வருஞ் சுட்டுப் பெயரும்), சுட்டுப்பெயர் இயற்கையிற் செறியத் தோன்றும் - சுட்டுப்பெயர் போலத் தன்னாற் சுட்டப்படும் தொழிலை உணர்த்துஞ் சொற்குப்பின் கிளக்கப்படும், எ-று. சுட்டுப்பெயரியற்கையெனவே, வழக்கிற்குப் பின்னுஞ் செய்யுட்கு முன்னும் நிற்குமென்பது பெற்றாம். ‘சாத்தன் கையெழுதுமாறு வல்லன், அதனாற் தந்தை உவக்கும்; சாத்தி சாந்தரைக்குமாறு வல்லள், அதனாற் கொண்டவன் உவக்கும்- இவற்றுள் சுட்டு முதலாகிய காரணக்கிளவி உருபன்று; உருபேற்ற சுட்டுப் பெயரோடு ஒப்பதோர் இடைச்சொல்; என்னை? பிளவுபடாது ஒன்று பட்டு இசைத்தலின். ‘சாத்தன் வந்தான், அஃது அரசற்குத் துப்பாயிற்று; கிழவன் பிரிந் தான், அதனைக் கிழத்தி உணர்ந்திலள் - என இவை காரணமின்றி வந்தன. (40) 41. சிறப்பி னாகிய பெயர் நிலைக் கிளவிக்கு மியற்பெயர்க் கிளவி முற்படக் கிளவார். இதுவும் ஒருபொருளை யுணர்த்தும் இருபெயர் வழுக் காக்கின்றது. (இ-ள்.) சிறப்பினாகிய பெயர்நிலைக் கிளவிக்கும் - வினைக்கு ஒருங்கியலும்வழிச் சிறப்பினாகிய பெயராய் நிற்றலையுடைய சொற்கும் உம்மையாற், தவம், கல்வி, குடி, உறுப்பு முதலியவற்றான் ஆகிய சொற்கும், இயற்பெயர்க் கிளவி முற்படக் கிளவார் - இயற்கைப் பெயராகிய சொல்லை உலகத்தார் முற்படக் கிளவார், பிற்படக் கிளப்பர், எ-று. சிறப்பு, மன்னர் முதலியோராற் பெறும் வரிசை. ஏனாதி நல்லுதடன், முனிவன் அகத்தியன், தெய்வப்புலவன் திருவள்ளுவன், சேரமான் சேரலாதன், சோழன் நலங்கிள்ளி, பாண்டியன் மாறன், குருடன் கொற்றன் என வரும். தச்சக் கொற்றன் : தொழிலினானாகிய பெயர். திருவீரவாசிரியனென்றாற்போல இயற்பெயர் முற்கூறுவன பிறவும் இக்காலத்தார் மயங்கக் கூறுவன பிறவுங் ‘கடிசொல்லில்லை’ என்பதனாற் கொள்க. (41) 42. ஒருபொருள் குறித்த வேறுபெயர்க் கிளவி தொழில்வேறு கிளப்பி னொன்றிட னிலவே. இஃது ஒரு பொருளையுணர்த்தும் பல பெயர் வழுக்காக்கின்றது. (இ-ள்.) ஒரு பொருள் குறித்த வேறு பெயர்க் கிளவி - ஒரு பொருளையுணர்த்துதலைக் குறித்து வந்த பல பெயர்ச் சொற்கள், தொழில் வேறு கிளப்பின் - ஒரு தொழிலையே முடிபாகக் கூறாது பெயர்தோறும் வேறாகிய தொழில்களைக் கொடுத்து முடிப்பின், ஒன்றிடனில - ஒரு பொருளினவாய் ஒன்றுதல் இல எ-று. கிளவி, கருவிக்கருத்தாவாய் நின்றது. ‘ஆசிரியன் பேரூர்கிழான் செயிற்றியன் இளங்கண்ணன் சாத்தன் வந்து உண்டு சென்றான்,’ என்னாது, ‘ஆசிரியன் வந்தான்; பேரூர்கிழான் உண்டான்; செயிற்றியன் சென்றான்,’ என வேறுவேறு முடிக்குஞ் சொல் கொடுப்பின் ஒருவன் ஆகாது வேறுவேறு பொருளாம். ‘எந்தை வருக! எம்பெருமான் வருக!’ என்றாற்போல்வன, காதல் பற்றிப் பலகால் ஒரு தொழிலே வந்தனவாம். (42) 43. தன்மைச் சொல்லே யஃறிணைக் கிளவியென் றெண்ணுவழி மருங்கின் விரவுதல் வரையார். இஃது எண்ணின்கண் திணைவழு அமைக்கின்றது. (இ-ள்.) தன்மைச் சொல்லே அஃறிணைக் கிளவி யென்று - தன்மைச் சொல்லும் அஃறிணைச்சொல்லுமென்று கூறிய இரண்டும், எண்ணுவழி மருங்கின் விரவுதல் வரையார் - எண்ணு மிடமாகிய இடத்து விராய்வந்து தன்மைப்பன்மைச் சொல்லான் அஃறிணைச்சொல் முடிதலை நீக்கார் ஆசிரியர் எ-று. மேற், ‘பன்மை யுரைக்குந் தன்மைக் கிளவி’ (211) என்பதனானும் பன்மைத்தன்மை பெற்றாம். ‘யானுமென் னெஃகமுஞ் சாறு மவனுடைய யானைக்குஞ் சேனைக்கும் போர்.’ இஃது, இருதிணையும் விராய் எண்ணி, அஃறிணை உயர்திணையொடு முடிந்தது. (43) 44. ஒருமை யெண்ணின் பொதுப்பிரி பாற்சொல் லொருமைக் கல்ல தெண்ணுமுறை நில்லாது. இஃது எண்ணுவகையாற் கூறும் ஒருவகைச் சொன்னிகழ்ச்சி கூறுகின்றது. (இ-ள்.) ஒருமை எண்ணின் பொதுப் பிரி பாற்சொல் - ஒருமையெண்ணினை உணர்த்தும் ஒருவரென்னும் பொதுமையி னின்றும் பிரிந்த பாலுணர்த்துஞ் சொல்லாகிய ஒருவன் ஒருத்தி யென்னுஞ் சொல், ஒருமைக்கு அல்லது எண்ணுமுறை நில்லாது - ஒருமைக்கண்ணல்லது இருமை முதலிய எண்ணுமுறைமைக்கண் நில்லாது, எ-று. எனவே, பொதுப் பிரியாப் பாற்சொல்லாகிய ‘ஒருவர்’ என்னுஞ் சொல், ‘இருவர், மூவரென எண்ணுமுறைமைக்கண் நிற்பதாயிற்று. ‘இருவன், மூவன்’ எனவும், இருத்தி, முத்தி’ எனவும், னகர ஈறும் இகர ஈறும் இயைபின்மையானும், ரகர ஈறு இயைபுடைமையானும் இங்ஙனங் கூறினார். ‘ஒன்றென முடித்தலென்பதனான், ‘ஒருவேன், ஒருவை’ என்னுந் தன்மை முன்னிலை ஈறும் எண்ணுமுறை நில்லாமை கொள்க. (44) 45. வியங்கோ ளெண்ணுப்பெயர் திணைவிரவு வரையார். இஃது எண்ணின்கண் திணைவழு அமைக்கின்றது. (இ-ள்.) வியங்கோள் எண்ணுப்பெயர் - வியங்கோளொடு தொடரும் எண்ணுப்பெயர், திணை விரவு வரையார் - திணை விராய் வருதலை நீக்கார் ஆசிரியர், எ-று. ஆவும் ஆயனுஞ் செல்க என்றது, எண்ணும்மையாதலிற், சேறற்றொழில் இரண்டிற்கும் எய்துதலின் வழுவின்றேனும், அஃறிணை ஏவற்றொழிலை முற்றமுடியாமை கருதி வழுவமைத்தார். ‘ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்’ (புறம். 9 : 1) என எண்ணி, ‘நும் அரண் சேர்மின்’ (புறம். 9 : 5)என முன்னிலைவினை கோடல் செய்யுண்முடிபு என்பது அதிகாரப் புறனடையாற் கொள்க. ‘ஆவும் ஆயனுஞ் சென்ற கானம், செல்லுங் கானம்’ என வியங்கோளல்லா விரவு வினையான் வருதல் ‘தன்னினம் முடித்த’லாற் கொள்க. (45) 46. வேறுவினைப் பொதுச்சொ லொருவினை கிளவார். இதுமரபுவழுக் காக்கின்றது. (இ-ள்.) வேறு வினைப் பொதுச்சொல் - வேறுபட்ட வினையினை யுடைய பல பொருட்குப் பொதுவாகிய சொல்லை, ஒரு வினைகிளவார் - அவற்றுள் யாதானும் ஒரு வினையாற் கூறார். எனவே, அவற்றையெல்லாம் உள்ளடக்கி நிற்கும் பொதுவினையாற் கூறுவர், எ -று. ‘அடிசிலென்பது, உண்பன, தின்பன, நக்குவன, பருகுவனவற்றிற்கும்; ‘அணியென்பது, கட்டுவன, கவிப்பன, செறிப்பன, பூண்பனவற்றிற்கும்; ‘இயமென்பது, கொட்டுவன, ஊதுவன, எழுப்புவனவற்றிற்கும்; ‘படையென்பது, எய்வன, எறிவன, வெட்டுவன, குத்துவனவற்றிற்கும் பொதுவாதலின், அடிசில் உண்டார், கை தொட்டார் எனவும்; அணி அணிந்தார், மெய்ப்படுத்தார் எனவும்; இயம் இயம்பினார், படுத்தார் எனவும்; படை வழங்கினார், தொட்டார் எனவும் பொதுவினையாற் கூறுக. இவற்றை ஒரு வினை யாற் கூறின், வழுவாம். ‘மூங்கின் மிசைந்த முழந்தாளிரும்பிடி’ எனவும், ‘நளிபுகை கமழாதினீறாயிர் மிசைந்து’ எனவும், ‘இடம்படில், வீழ்களிறு மிசையாப் புலியினும் சிறந்த’ எனவுங் கடவுளொருமீன் சாலினியொழிய, அறுவர் மற்றையோரு மந்நிலை யயின்றனர்’ எனவும், இவை தின்றெனவும் விழுங்கி யெனவும் பெரும்பான்மை வருதலின், ‘மிசைந்தார், அயின்றார்’ என்பன உதாரணங் காட்டல் பொருந்தாமை உணர்க. இனி, ‘உண்டற் குரிய அல்லாப் பொருளையுண்டன போலக் கூறலும் மரபே.’ என்னும் பொருளியற் சூத்திரத்தான் உண்டற் றொழில் எல்லாவற்றிற்கும் பெரும்பான்மை வருதல் பெற்றாம். ‘அறுசுவை யடிசிணியிழை தருதலினுறுவயி றார வோம்பாது தின்றென’என்பது இழித்தற்கண் வருதலின், வழுவன்று. (46) 47. எண்ணுங் காலு மதுவதன் மரபே. இதுவும் அது (இ-ள்.) எண்ணுங்காலும் - அவ்வேறுவினைப் பொருள் களைப் பொதுச் சொல்லாற் கூறாது பிரித்து எண்ணுமிடத்தும், அது அதன் மரபே - அதன் இலக்கணம் ஒரு வினையாற் கிளவாது பொதுவினையாற் கிளத்தலேயாம், எ -று. ‘சோறுங் கறியும் நன்றென்று உண்டார்.’ ‘யாழுங் குழலும் பறையும் இயம்பினார்.’ என வரும். ‘தின்றார், ஊதினாரென்றால் வழுவாம். ‘ஊன்றுவை கறிசோ றுண்டு வருந்துதொழி லல்லது’ என்புழி நுகரப்படும் பொருள் எல்லாவற்றிற்கும் உண்டற்றொழில் வந்த வாறு காண்க. (47) 48. இரட்டைக் கிளவி யிரட்டிற்பிரிந் திசையா. இஃது, உரிச்சொற்கண் மரபுவழுக் காக்கின்றது. (இ-ள்.) இரட்டைக் கிளவி - இரட்டித்து நின்று பொருள் உணர்த் துஞ் சொற்கள், இரட்டிற்பிரிந்து இசையா - இரட்டித்து நிற்றலிற் பிரிந்து நில்லா, எ-று. சுருசுருத்தது, மொடுமொடுத்தது என இசை பற்றியும், கொறு கொறுத்தார், மொறுமொறுத்தார் எனக் குறிப்புப் பற்றியும், குறுகுறுத்தது, கறுகறுத்தது எனப் பண்பு பற்றியும் இரட்டித்துப் பிரியாது நின்றன. இவை ‘குறுத்தது குறுத்தது’ என ஒருசொல் முழுவதும் இருமுறை வாராமையின், அடுக்கன்று. இவை மக்களிரட்டையும் விலங்கிரட்டையும்போல வேற்றுமை யின்றி, இலை யிரட்டையும் பூ விரட்டை யும் போல ஒற்றுமையும் வேற்றுமையும் உடையவாம். ‘குறு’ என்னுஞ் சொல் அடுத்துக் ‘குறுத்ததென்பது மிகுதி யுணர்த்திற்றேல், ‘குறு’ என்பது யாண்டும் மிகுதியுணர்த்தல்வேண்டும். அஃது உணர்த்தாமையின், இண்டும் ஒருசொல்லே யாயிற்று. (48) 49. ஒருபெயர்ப் பொதுச்சொ லுள்பொரு ளொழியத் தெரிபுவேறு கிளத்த றலைமையும் பன்மையு முயர்திணை மருங்கினு மஃறிணை மருங்கினும். இஃது, ஒரு பெயர்ப் பொதுச்சொல்லை மரபுவழுக் காக்கின்றது. (இ-ள்.) உயர்திணை மருங்கினும் அஃறிணை மருங்கினும் - உயர் திணைக்கண்ணும் அஃறிணைக்கண்ணும், ஒரு பெயர்ப் பொதுச்சொல் - ஒரு பெயராய்ப் பல பொருட்குப் பொதுவாகிய சொல்லை, உள் பொருள் ஒழியத் தெரிபு வேறு கிளத்தல் - பிற உள் பொருள் ஒழியத் தெரிந்து கொண்டு பொதுமையின் வேறாகச் சொல்லுக, தலைமையும் பன்மையும் - தலைமை யானும் பன்மையானும், எ-று. பிறரும் வாழ்வார் உளரேனும், ‘பார்ப்பனச்சேரியென்றல் உயர்திணைக்கட் தலைமைபற்றிய வழக்கு. ‘எயினர் நாடென்பது அத்திணைக் கட் பன்மைபற்றிய வழக்கு. பிற புல்லும் மரமும் உளவேனுங் ‘கமுகந் தோட்டமென்றல் அஃறிணைக் கட் தலைமைபற்றிய வழக்கு. பார்ப்பார் பலராயினும், கமுகு பலவாயினும் அவை தாமே பன்மைபற்றிய வழக்காம். ‘ஒன்றென முடித்தலான், அரசர் பெருந்தெரு. ஆதீண்டு குற்றி, வயிரக் கடகம் என்னும் பொதுச்சொல் அல்லனவுங்கொள்க. பல குடி சேர்ந்தது சேரி. பல பொருள் தொக்கது தோட்டம். (49) 50. பெயரினுந் தொழிலினும் பிரிபவை யெல்லா மயங்கல் கூடா வழக்குவழிப் பட்டன. இஃது, இருதிணை இருபாற்கும் பொதுவாகிய பெயர்க்கண் மரபுவழுக் காக்கின்றது. (இ-ள்.) பெயரினுந் தொழிலினும் பிரிபவை எல்லாம் - உயர்திணைக் கண்ணும் அஃறிணைக்கண்ணும் பெயரினானுந் தொழிலினானும் பொதுமையிற் பிரிந்த ஆண்பாற்கும் பெண்பாற்கும் உரியவாய் வருவன எல்லாம், மயங்கல்கூடா - வழுவாகா, வழக்கு வழிப்பட்டன - வழக்கின்கண் அடிப்பட்டன வாதலான், எ-று. (உ-ம்.) ‘பெருந்தேவி பொறை யுயிர்த்த கட்டிற்கீழ் நால்வர் மக்கள் உளர்.’ - இது, பெயரிற் பிரிந்த ஆணொழி மிகுசொல். ‘வடுகரசர் ஆயிரவர் மக்களை யுடையர்.’ - இது, தொழிலிற் பிரிந்த பெணொழி மிகு சொல். இவர் வாழ்க்கைப்பட்டார் - இது தொழிலிற் பிரிந்த ஆணொழி மிகுசொல். ‘இவர் கட்டில் ஏறினார்.’ - இது, தொழிலிற் பிரிந்த பெணொழி மிகுசொல். இவை உணர்திணைக்கட் பெயரானுந் தொழிலானும் பிரிந்தன. ‘நம்பி நூறு எருமை உடையன்.’ - இது, பெயரிற் பிரிந்த ஆணொழி மிகுசொல், நம்மரசன் ஆயிரம் யானையுடையன். - இது, பெயரிற் பிரிந்த பெண்ணொழி மிகுசொல். ‘யானை ஓடிற்று,’ என்பது, தொழிலிற் பிரிந்த பெண்ணொழி மிகு சொல். ‘யானை நடந்தது.’ - இது, தொழிலிற் பிரிந்த ஆணொழி மிகுசொல். இவை அஃறிணைக்கட் பெயரானும் தொழிலானும் பிரிந்தன. இவை இருபாற்கும் பொதுவாயினும், ஒருபாற்கட் தாமே பிரிந்தன. இவர் பெரிதுஞ் சொல்லுமாறு வல்லர் இவர் பெரிதுங் கால் கொண்டோடுவர், எனத் தொழிலின் மிகுதி விளக்கி வருவனவுங் கொள்க. (50) 51. பலவயி னானு மெண்ணுத்திணை விரவுப்பெய ரஃறிணை முடிபின செய்யு ளுள்ளே. இது, திணைவழு அமையுமாறு கூறுகின்றது. (இ-ள்.) பலவயினானும் எண்ணுத்திணை விரவுப்பெயர் - பல இடத்துந் திணைவிராய் எண்ணப்பட்ட பெயர், செய்யுளுள்ளே அஃறிணை முடிபின - செய்யுளகத்துப் பெரும்பான்மையும் அஃறிணைச் சொற் கொண்டு முடியும், எ-று. ‘வடுகர் அருவாளர் வான்கரு நாடர் - சுடுகாடு பேயெருமை யென்றிவை ஆறும் - குறுகாரறிவுடை யார்.’ ‘கடுஞ்சினத்த கொல்களிறு கதழ்பரிய கலிமாவுங் - நெடுங்கொடிய நிமிர்தேரும் நெஞ்சுடைய புகன்மறவருமென- நான்குடன் மாண்ட தாயினும்’ என வரும். ‘பலவயினானும்’ என்றமையாற், சிலவயினாற் திணை விரவாது உயர்திணையான் எண்ணி அஃறிணையான் முடிவனவுந் திணைவிராய் எண்ணி உயர்திணையான் முடிவனவுங் கொள்க. ‘பாணன் பறையன்றுடியன் கடம்பனென் - றந்நான் கல்லது குடியும் இல்லை.’ என்றது, ‘பாண்குடி, பறைக்குடி’ எனக் குடியைச் சுட்டி நில்லாது ‘பாணன், பறையன்’ எனப் பால் காட்டி நிற்றலான், உயர்திணைப் பொருள் நின்று அஃறிணை முடிபு கொண்டனவேயாம். ‘பார்ப்பார் தவரே சுமந்தார் பிணிப்பட்டார் - மூத்தாரிளையார் பசுப்பெண்டிரென்றிவர்கட் - காற்ற வழிவிலங்கி னாரே பிறப்பிடைப் - போற்றியெனப் படுவார்.’ ‘பார்ப்பார் அறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர் - மூத்தோர் குழவி எனுமிவரைக் கைவிட்டு’ இவை திணைவிராய் எண்ணி உயர்திணையான் முடிந்தன. உயர் திணையும் ‘பொருள்’ என்னும் பொதுமையான் அஃறிணைக் கண் அடங்குதலானும், உயர்திணைக்கண் அஃறிணை அவ்வாறு அடங் காமையானும் ஆசிரியர் ‘அஃறிணை முடிபின,’ என்றார். திணைவிராயெண்ணி அஃறிணையானும் உயர்திணை யானும் முடிந்தது, தலைமைபற்றியும் பன்மைபற்றியும் இழிவுபற்றியுமென உணர்க. ‘தானுந் தேரும் பாகனும் வந்தென் நலனுண்டான்.’ என்றாற்போல்வன, தலைமைப் பொருட்கு வினை கொடுப்பவே தலைமையில் பொருளும் உடன்முடிந்ததோ முறைமைபற்றி வந்தனவாம். (51) 52. வினைவேறு படூஉம் பலபொரு ளொருசொல் வினைவேறு படாஅப் பலபொரு ளொருசொலென் றாயிரு வகைய பலபொரு ளொருசொல். இதனாற், பல சொல்லான்வரும் ஒருபொருளுணர்த்தி, இனி ஒருசொல்லான் வரும் பலபொருளுணர்த்துகின்றார், அவற்றின் பெயரும் முறையுந் தொகையுங் கூறுகின்றார். (இ-ள்.) வினை வேறுபடூஉம் பல பொருள் ஒரு சொல் - வினையான் வேறுபடும் பல பொருளொரு சொல்லும், வினை வேறுபடாஅப் பல பொருளொரு சொல் - வினையான் வேறுபடாத பல பொருளொரு சொல்லும், என்று ஆயிரு வகைய பல பொருளொரு சொல் - என அவ்விரண்டு வகைப்படும் பல பொருளொரு சொல், எ-று. (52) 53. அவற்றுள், வினைவேறு படூஉம் பலபொரு ளொருசொல் வேறுபடு வினையினு மினத்தினுஞ் சார்பினுந் தேறத் தோன்றும் பொருடெரி நிலையே. இஃது அவற்றுள் வினை வேறுபடுமாறு கூறுகின்றது. (இ-ள்.) அவற்றுள் வினை வேறுபடூஉம் பலபொருள் ஒரு சொல் - அவ்விரண்டனுள்ளும் வினையான் வேறுபடும் பலபொருள் ஒருசொல், வேறுபடு வினை யினும் இனத்தினுஞ் சார்பினும் - ஒரு பொருட்கே சிறந்த வினையானும் இனத்தானுஞ் சார்பானும், பொருள் தெரிநிலை தேறத் தோன்றும் - பொருள் தெரி நிலைமைக்கண் பொதுமை நீங்கித் தெளியத் தோன்றும், எ-று. ‘மா’ என்பது, ஒரு சார் விலங்கிற்கும் மரத்திற்கும் வண்டிற்கும் பிற பொருட்கும் பொது. ‘குருகு’ என்பது, ஓர் பறவைக்கும் உலை மூக்கிற்கும் வளைக்கும் பிற பொருட்கும் பொது. ‘மா பூத்தது.’ - இது வினை. ‘மாவும் மருதும் ஓங்கின.’ - இஃது இனம். கவசம் புக்கு நின்று, ‘மாகொணா’ என்பது சார்பு. ஒரு சாதிக்கண் அணைந்த சாதி, இனம்; ஒருவாற்றான் இயை புடையது சார்பு. ‘ஒன்றென முடித்தலென்பதனால், ‘இம்மா வயிரம், வெளிறு,’ என வேறுபடுக்கும் பெயருங் கொள்க. ‘கழிப்பூக் குற்றும் கானல அல்கி’ (அகம். 330 : 1) என்றாற்போலச் சில பொருளை ஒழித்துச் சில பொருண் மேனிற்றல் உரை யிற்கொள்க. இனமுஞ் சார்பும் பின்வரும் வினையொடு கூடியல்லது பொருள் முடியாமையின், அவையும் வினை வேறுபட்டனவே யாம். (53) 54. ஒன்றுவினை மருங்கி னொன்றித் தோன்றும். இது, மேலிற் சூத்திரத்திற்கோர் புறனடை கூறுகின்றது. (இ-ள்.) ஒன்றுவினை மருங்கின் ஒன்றித் தோன்றும் - மேற்கூறிய வினை வேறுபடூஉம் பலபொருள் ஒருசொல், வினையான் வேறுபட நில்லாது பொதுவினை கொண்டு பொதுமைப்பட நின்றுழியும், வினை வேறு பட்டாற் போல ‘இன்னதிது’ என வேறுபட நிற்றலும் வழக்கினகத்து உண்டு, எ-று. ‘மா வீழ்ந்ததென்பது, வீழ்தல் வினை எல்லாவற்றிற்கும் பொது வேனும், ‘இவ்விடத்து இக்காலத்து இவன் சொல்லு கின்றது இம்மாவினை,’ என ஒன்றனை உணர்த்தி நின்றவாறு காண்க. என்றது, வினை வேறுபடும் பலபொருள் ஒருசொல், ஒருகால் வினை வேறுபடாத பலபொருள் ஒருசொற்போல நிற்குமென்றவாறு.(54) 55. வினைவேறு படாஅப் பலபொரு ளொருசொன் னினையுங் காலைக் கிளந்தாங் கியலும். இது, நிறுத்தமுறையானே வினை வேறுபடாப் பலபொருள் ஒருசொல்லாமாறு கூறுகின்றது. (இ-ள்.) வினை வேறுபடாஅப் பலபொருள் ஒருசொல் - வினையான் வேறுபடாத பலபொருள் ஒருசொல், நினையுங் காலைக் கிளந்தாங்கு இயலும் - ஆராயுங்காலத்து இன்னதிது எனக் கிளக்கப்பட்டு அவ் வாராய்ச்சி யுடையவிடத்து நடக்கும், எ-று. ‘கன்று நீரு ஊட்டுரூ,’ என்றவழிக் கேட்டான் இன்ன கன்று என்பது அறிய வாராதவழி ‘ஆன்கன்று, பூங்கன்று’ என்று கிளந்தே சொல்லுக என்றவாறு. ‘நினையுங்காலை’ என்றதனாற், கருமச் சிதைவு உள்வழிக் கிளந்து கூறுக என்பது கொள்க. ‘கன்றாற்றுப் படுத்த புன்றலைச் சிறார்,’ என்றவழிக் கருமச்சிதைவு இன்மையின் கிளத்தல் வேண்டா வாயினவாறு காண்க. அன்றி, ‘ஒன்றுவினை மருங்கின் ஒன்றித் தோன்றும் - வினைவேறு படாஅப் பலபொருள் ஒருசொல்’ என ஒரு சூத்திரமாக்கி. ‘வேறுபடாத வினைகொண்டவழி வேறுபடாது தோன்றும் வினை வேறுபடாப் பலபொருள் ஒருசொல்,’ என்று பொருள் கூறி, வினைவேறுபடும் பலபொருள் ஒருசொல்லாகிய ‘மா’ என்பதுதானே ‘வீழ்ந்தது’ என்னும் பொதுவினை கொண்டவழி வினை வேறுபடாததாய் நின்றதற்கு ‘மாமரம் வீழ்ந்தது,’ எனக் கிளந்து கூறுக என்றார் சேனாவரையர். அங்ஙனம் பொருள்கூறின், ‘வினை வேறுபடாப் பலபொருள் ஒருசொல்’ என வேறொரு சொல் இன்றி, ‘ஆயிரு வகைய’ வென்பதனொடு மாறுபடுமென மறுக்க. (55) 56. குறித்தோன் கூற்றந் தெரித்துமொழி கிளவி. இது, மரபு வழுக் காக்கின்றது. (இ-ள்.) குறித்தோன் கூற்றம் - ஒரு பொருள் வேறுபடக் குறித்தோன் கூற்றாற்றல் முதலியவற்றான் விளங்காதாயின், தெரித்து மொழி கிளவி - அப்பொருளைத் தெரிவித்துச் சொல்லுஞ் சொல்லாகக் கூறுக, எ-று. ‘அரிதாரச் சாந்தங் கலந்தது போல - வுருகெழத் தோன்றி வருமே - முருகுறழும் - மன்பன் மலைப்பெய்த நீர்.’ எனத் தெரித்துமொழிக. ‘கலந்ததுபோல வருமே இலங்கருவி அன்பன் மலைப்பெய்த நீர்,’ எனத் தெரித்து மொழியாக்கால் வழுவாம். ‘ஊட்டி யன்ன வொண்டளிர்ச் செயலை’ என்றது, ஊட்டாததனை ஊட்டியதுபோலக் கூறலின், வேறோர் உவம இலக்கணமாம். ‘பல்லார்தோடோய்ந்து வருதலாற் பூம்பொய்கை - நல்வய லூர! நின் தார்புலால் - புல்லெருக்கம்- மாசில் மணிப்பூணெம் மைந்தன் மலைந்தமையான் - காதற்றாய் நாறும் எமக்கு.’ இதுவும் தெரித்து மொழிந்தது. ‘ புல்லேங் குவளைப் புலாஅல் மகன்மார்பிற் - புல்லெருக்கங் கண்ணி நறிது.’ என்பது தெரித்து மொழியாததாயிற் றாயினுந் தலைவன் தவறும் புதல்வன் மேல் அன்புங் காரணமாகக் கூறலின் வழுவன் றென்றலும் ஒன்று. (56) 57. குடிமை யாண்மை யிளமை மூப்பே யடிமை வன்மை விருந்தே குழுவே பெண்மை யரசே மகவே குழவி தன்மை திரிபெய ருறுப்பின் கிளவி காதல் சிறப்பே செறற்சொல் விறற்சொலென் றாவறு மூன்று முளப்படத் தொகைஇ யன்ன பிறவு மவற்றொடு சிவணி முன்னத்தி னுணருங் கிளவி யெல்லா முயர்திணை மருங்கி னிலையின வாயினு மஃறிணை மருங்கிற் கிளந்தாங் கியலும். இது, திணை வழுக் காக்கின்றது. (இ-ள்.) குடிமை ஆண்மை இளமை மூப்பே அடிமை வன்மை விருந்தே குழுவே பெண்மை அரசே மகவே குழவி தன்மை திரிபெயர் உறுப்பின் கிளவி காதல் சிறப்பே செறற்சொல் விறற்சொல் என்று ஆவறு மூன்றும் உளப்பட அன்ன பிறவும் அவற்றொடு சிவணித் தொகைஇ - குடிமை முதலாக விறற்சொல் ஈறாகச் சொல்லப்பட்ட அப்பதினெட்டும் உளப்பட அவை போல்வன பிறவும் அவற்றொடு பொருந்தித் தொக்கு, முன்னத்தின் உணருங் கிளவி எல்லாம் - சொல்லுவான் குறிப்பொடு படுத்து உயர்திணைப் பொருளை உணரப்படும் சொற்கள் எல்லாம், உயர்திணை மருங்கின் நிலையினவாயினும் - உயர்திணை இருபாற்கண்ணும் பெரும்பான்மை நிலைபெற்றன ஆயினும், அஃறிணை மருங்கிற் கிளந்தாங்கு இயலும் - அஃறிணைப் பொருளை உணர்த்தி நின்றவழிப் போல அஃறிணை முடிபே கொள்ளும், எ-று. ‘என்னை உயர்திணைப்பொருளுணர்த்தியவாறெ எனின், இக் குடிமை முதலியன வெல்லாம் பெரும்பான்மையும் உயர்திணைக்குப் பண்பேயாய் நின்று அப்பண்பினை உணர்த்தி, அஃறிணையாய் நில்லாது, அப்பண்புச்சொற் தன் பன்மையும் தன்னை யுடைய பொருளையும் ஒருங்கு தோற்றுவித்துப் பிரியாது நிற்றலின், உயர்திணைப் பொருளையே உணர்த்திற்றாம். இங்ஙனம் நிற்குமென்றுணர்தல் சொல்லுவான் குறிப்பினா னன்றி உயர்திணைப் பொருளின் தீர்ந்து இன்னவாறு நிற்குமென்று வேறோர் ஆற்றான் உணர்தலின்றென்றற்கு ‘முன்னத்தின் உணருமென்றார். இவற்றுள் விரவுப்பெயராய் அஃறிணைப்பண்பை உணர்த்துவன உளவேனும், அவையுஞ் சொல்லுவான் குறிப்பான் ஒருகால் உயர்திணைப் பண்பே உணர்த்துமென்று கருதி, ‘உயர்திணை மருங்கினிலையின வாயினும்’ என்றார். உயர்திணைப்பெயரும் விரவுப்பெயரும் மேற் கூறுபடுத்துதும். இனி, ‘குடிமை, ஆண்மை’ முதலியவற்றை ஆகுபெய ரென்பாரும் உளர். ‘குடிமையென்னுங் குணப்பெயர் ஆகுபெயராய்க் குடிமகனை உணர்த்திற்றேற், ‘குடிமை நல்லயென உயர்திணையான் முடியும்; அன்றிக் ‘குடிமையெனத் தனக்குரிய பண்பை உணர்த்தி நிற்குமேற் பின்னர் ‘அஃறிணை மருங்கின் கிளந்தாங்கியலும்’ எனல் வேண்டா, தானே அஃறிணையான் முடியும். ஆதலின், ‘ஆகுபெயர்’ என்றலும் ‘பண்பு உணர்த்தி நிற்குமென்றலும் பொருந்தாமை உணர்க. இக்குடிமை முதலிய வற்றிற்கு ‘நன்று, தீது’ என்றும், ‘வந்தது, போயிற்று’ என்றும் ஏற்ற அஃறிணை வினைகொடுத்து ஒட்டுக. இனி இவை உயர்திணைப் பண்பாய் அப்பொருளையும் ஒருங்குணர்த்தி நிற்குமாறு:- குடிமையாவது, குடிப்பிறப்பிற் கேற்ற ஒழுக்கம். அஃது. ‘ஒழுக்கமுடைமை குடிமை’ என்றதனான் உணர்க. ‘மடிமை குடிமைக் கட்டங்கின்’ என உயர்திணை யிருபாலையும் உணர்த்திற்று. ஆண்மையாவது, ஆளுந்தன்மை. அஃது, ‘ஆயிடை யிருபே ராண்மை செய்த பூசல்’ என இருபாலையும் உணர்த்திற்று. இன்னும், ‘ஊராண்மைக் கொத்த படிறுடைத்து’ எனவும், ‘வேளாண்மை செய்து விருந்தோம்பி வெஞ்சமத்து, வாளாண்மையானும் வலியராய்த் - தாளாண்மை’ எனவும் வரும். இது, ‘வேளாணெதிரும் விருந்தின் கண்ணும், வாளாண் எதிரும் பிரிவினானும்’ எனவும், ‘உட்குடையாள் ஊராண் இயல்பினாள்’ எனவும் விகாரமாயும் நிற்கும். இவ் வாண்மை. ஆளுந்தன்மையே யன்றி ஆண்பாலாகிய தன்மையும் உணர்த்தும் என்றற்கு, ‘ஆண்மை சுட்டிய வெல்லாப் பெயரும்’ என்று ஆசிரியர் விரவுப்பெயர்க்கண் உடம்பொடு புணர்த்தோதினார். இவ்விரண்டு பண்பும். ‘பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோடு - உருவு நிறுத்த காம வாயில் - நிறையே அருளே உணர்வொடு திருவென - முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே.’ என்னும் மெய்ப்பாட்டியல் சூத்திரத்தான் தலைவற்கும் தலைவிக்கும் ஒப்பவுரிய என்றே ஓதுகின்றா ராதலின் ஈண்டும் இருபாற்கும் ஒப்பவே ஓதினார். இனி, ஆண்மையை ‘ஆள்வினை’ என்றும் உரைப்ப. இவ்வாண்மையும் மேற்கூறும் பெண்மையும் உயர்திணை யாண்பாலையும் பெண்பாலையும் உணர்த்தாதென்று கருதி, ‘ஆண்பாலெல்லாமாணெனற்குரிய, பெண்பாலெல்லாம் பெண்ணெனற்குரிய’ என அஃறிணைக்கே ஓதி, யவற்றையே, ‘பெண்ணுமாணும் பிள்ளையுமவையே’ எனக் கிளந்து கூறாதவழி உயர்திணையை உணர்த்துமென்று மரபியலுட் கூறுவர். அன்றியும், ‘புல்லா வாட்கை வல்லாண் பக்கமும்’ என்றும், ‘பாடாண் பகுதி’ என்றும் பிறாண்டும் ‘ஆண்மை’ யென்னாது, ‘ஆ ணென்றே சூத்திரஞ் செய்ததனானும், ‘ஆண் மக்கள், பெண்மக்கள்’ என்னும் வழக்கானும் உணர்க. இனி, ஆண்மையை விரவுப்பெயரென்றால், முற்காட்டிய உதாரணங்கட்கும் விரவுப்பெயரெ அஃறிணைப் பெயர்க்கும் ஏலாமை யுணர்க. ‘ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த’ என்பதற்கும் ‘ஆளுந் தன்மை தோன்ற’ என்றே பொருளுரைத்துக் கொள்க. இளமையாவது, காமச்செவ்வி நிகழ்வதோர் காலம். ‘இளமை கழிந்த பின்றை - வளமை காமம் தருதலும் இன்றே.’ என உயர்திணையிருபாலும் உணர்த்திற்று. மூப்பு, ‘மூப்புடை முதுபதி’ என உயர்திணை யிருபாலையும் உணர்த்திற்று. இளமையும் மூப்பும் பொருண்மேல் நில்லாது பண்பின்மேல் நிற்பின், அஃறிணையையும் உணர்த்தும். ‘அடிமையென்பது, ‘அடிமை புகுத்தி விடும் (குறள். 608) என உயர்திணை யிருபாலும் உணர்த்தும். வன்மையாவது, ஒருதொழிலை வல்லுதல். அது, சொல் வன்மை நன்று என உயர்திணை யிருபாலும் உணர்த்தும். ஈண்டு வன்மை, வலியன்று. ‘விருந்து விருந்தெதிர் கொள்ளும் என உயர்திணை யிருபாலையும் உணர்த்திற்று. ‘ஆங்கவை விருந்தாற்றப் பகலல்கி’ (கலி. 66:4)என அஃறிணைக்கும் இது வரும். குழு ‘குழுவின் பெயர்’ எனவும், ‘ஐம்பெருங் குழுவு மெண்பே ராயமும்’ எனவும் உயர்திணை யிருபாலும் உணர்த்தும். பெண்மையாவது, கட்புலனாயதோர் அமைதித் தன்மை. அது, ‘பெண்மை யடுத்த மகளென் கிளவி’ என்பதனான் உணர்க. இது ‘மகளென்பது பெண்பாலுணர்த்தப் ‘பெண்மை’ யென்பதும் பெண்பாலுணர்த்து மேற்கூறியது கூறலாமாதலின், ஆசிரியர்க்கு இதுவே பொருளாயிற்று. ‘ஆண்மை யடுத்த மகன்’ என்பதற்கும் இஃதொக்கும். அது, ‘பெண்மை சுட்டிய வுயர்திணை மருங்கின்’ என்பதனானும், ‘பிறனியலாள் பெண்மை நயவா தவன்.’ என்பதனானும் உணர்க. இப் பெண்மை, அமைதித் தன்மையேயன்றிப் பெண்பாலாகிய தன்மையும் உணர்த்து மென்பது கருதி, ஆசிரியர், ‘பெண்மை சுட்டிய வெல்லாப் பெயரும்’ என விரவுப் பெயர்க்கண் உடம்பொடு புணர்த்து ஓதினார். உயர்திணை யாண்பாற்கு உரித்தன்றிப் பெண்பாற்கே வரினும் அதுவும் உயர்திணையே ஆதல் நோக்கி, ‘உயர்திணை மருங்கினிலையின வாயினும்’ என்றார். அரசு ‘அரசுபடக் கடந்தட்டு’ என உயர்திணை யாண்பால் உணர்த்திற்று. ‘பெண்ணரசி யேந்தினள்’ என ஈறு வேறாயவழிப் பெண்பாலும் உணர்த்தும். இஃது ‘அரசுவா வீழ்ந்த களத்து’ என அஃறிணைக்கும் வரும். இனி, மகவுங் குழவியுங் ‘குழவியு மகவுமாயிரண் டல்லவை, கிழவவல்ல மக்கட் கண்ணே’ என அஃறிணைக்கே யன்றி உயர்திணை யிருபாற்கும் வருமென்றார். தன்மை திரி பெயர், அலி. உறுப்பின் கிளவி குருடு, முடம். இவை இருபாற்கும் ஒக்கும். விரவுப்பெயர்க்காயின், ‘முடவன், முடத்தி என வரும். காதல் ‘யானை வந்தது, பாவை வந்தது,’ என ஒப்பின்றிக் காதல் பற்றி நிற்கும். அது, ‘போர்யானை வந்தீக ஈங்கு.’ என வரும். ‘தன்னின முடித்தலான், ‘தேமலறிருவே புகுதக.’ என உவப்புங் கொள்க. சிறப்பு கண்போலச் சிறந்தாரைக் ‘கண்’ணென்றலும், உயிர்போலச் சிறந்தாரை ‘உயிரென்றலுமாம். அஃது, ‘ஆலமர் செல்வனணிசால் பெரு விறல், போல வருமெம் உயிர்.’ என வரும். செறற்சொல் செறுதலைப் புலப்படுக்கும் சொல். பொறி யறை, கெழீஇயிலி, சீத்தை யென்றாற் போல்வன. தன்னினம் முடித்தலான், ‘ஏவவுஞ் செய்கலான் றான்றேறானவ்வுயிர், போஒமளவுமோர் நோய்’ (குறள். 848) என இழிபுங் கொள்க. விறற்சொல் விறலை உணர்த்தும் ‘பெருவிறல், அருந்திறல்’ போல்வன. ‘அன்ன பிறவுமென்றதனால். ‘வேந்து வேள் குரிசில் அமைச்சு புரோசு’ என ஒருபாற்கு உரிய காட்டலும் ஒன்று. இருபாற்கு உரியன வந்துழிக் காண்க. இவையெல்லாம் ‘பண்பென்று விளக்கிய, பண்பு வாய்பாட்டான் ஓதினார். இவை உயர்திணைப் பண்புப்பெயராய் அப்பொருளையும் ஒருங்கு உணர்த்தின வேனும், அஃறிணைச் சொற்கொண்டு முடியுமென வழுவமைத்தார். (57) 58. கால முலக முயிரே யுடம்பே பால்வரை தெய்வம் வினையே பூத ஞாயிறு திங்கள் சொல்லென வரூஉ மாயீ ரைந்தொடு பிறவு மன்ன வாவயின் வரூஉங் கிளவி யெல்லாம் பால்பிரிந் திசையா வுயர்திணை மேன. இதுவுந் திணைவழுக் காக்கின்றது. (இ-ள்.) காலம் உலகம் உயிரே உடம்பே பால் வரை தெய்வம் வினையே பூதம் ஞாயிறு திங்கள் சொல் என வரூஉம் ஆயீரைந்தொடு அன்ன பிறவும் - காலம் முதலாகச் சொல் ஈறாகச் சொல்லப்பட்ட அப்பத்தும் அத்தன்மையன பிறவுமாகிய, ஆவயின் வரூஉங்கிளவியெல்லாம் - அவ் வுயர்திணைக் கண் வரும் சொல்லெல்லாம், உயர்திணை மேன பால் பிரிந்து இசையா - உயர்திணைச் சொல்லாயினும் உயர்திணைக்கட் பால் பிரிந்து இசையா; அஃறிணைப்பாலாய் இசைக்கும், எ-று. இச்சூத்திரத்துக் கூறியவற்றுள் உலகமும் உயிரும் உடம்பும் ஒழிந்தன வெல்லாம் தெய்வத்தையே உணர்த்தின. ‘தெய்வம்’ மென்பதனை, ‘தெய்வம் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும்’ என்பதனான் உயர்திணையென்பது பெற்றாம். இவை எல்லாந் ‘தெய்வமென்னும் உயர்திணைப் பொருளை உணர்த்திற்றேனும் ‘தெய்வமென்னுஞ் சொல் அஃறிணை வாசகமாதலின், அதற்கேற்ப அஃறிணை முடிபே கொள்ளுமென்றார். இச்சொற்கள், கூறுகின்றபொழுதே தத்தம் உயர்திணைப் பாற்பொருளே தோற்றுவித்து நிற்றலின், ஆகுபெயரன்மை யுணர்க. ‘இவற்குக் காலமாயிற்றென்றது காலக்கடவுளை. ‘உலகம் பசித்ததென்றது உலகத்தாரை. ‘உயிர் போயிற்று; உடம்பு நுணுகிற்று’ - இவை உயர்திணை முடிபு கொள்ளா என விலக்குதலின், ஈண்டு உயர்திணைக்கே உரியவாயின. என்னை? ‘அறஞ்செய்து துறக்கம் புக்கான்’ ‘உயிர் நீத்தொரு மகன் கிடந்தான்.’ என உயிரும் உடம்பும் வரின் வேறன்றி அவராக உணரப்பட்டு உயர்திணைக்கேற்ற முடிபு கோடலின் மக்களே ஆயின. இவை இங்ஙனம் உணர்த்தலின், ஆகுபெயரன்று. தெய்வஞ் செய்தது - இதனைப் பால்வரை தெய்வமென்றார், இன்ப துன்பத்திற்குக் காரணமாகிய இருவினையும் வகுத்தலின். ‘வினை விளைந்தது.’ - இஃது இரு வினைத் தெய்வம். ‘பூதம் புடைத்தது’ ஞாயிறு பட்டது, திங்கள் எழுந்தது. ‘சொல் நன்று.’ - இது நாமகளாகிய தெய்வம். ‘பிறவும்’ என்றதனாற் பொழுது நன்று; யாக்கை தீது; விதி வலிது; கனலி கடுகிற்று; மதி நிறைந்தது; வெள்ளி எழுந்தது; வியாழம் நன்று என வரும். காலம் உலகமென்பன வடசொல்லன்று. ‘உலகமென்பது, மக்கட் தொகுதியை உணர்த்தியவழி உயர்திணையாயும், இடத்தை உணர்த்தியவழி அஃறிணையாயும் வருதலின், ஒருசொல் இருபொருட்கண்ணுஞ் சென்றதெனப்படாது, இருசொல்லெனவேபடும். அங்ஙனம் மக்கள் தொகுதியை உணர்த்துங்கால் உரிப்பெயராயே உணர்த்திற்று; ஆகுபெயன்று. இங்ஙனம் வருவனவற்றைப் பலகால் எடுத்தோதாமை இலேசாகக் கருதி, ‘ஒருசொற் பலபொருட்குரிமை தோன்றினும்’ என எழுத்தொப்புமைபற்றி ‘ஒரு சொல்லென்றார். ‘உலோகமென்றது வடமொழித் திரிபு. (58) 59. நின்றாங் கிசைத்த லிவணியல் பின்றே. இது, ‘குடிமையாண்மைத்’ தொடக்கத்திற்கு ஓர் புறனடை. இ-ள். நின்றாங்கு இசைத்தல் - ஈறு திரியாது நின்றாங்கு நின்று உயர் திணையாய் இசைத்தல், இவண் இயல்பின்று - காலம் முதலிய சொற்களிடத்து இயல்பில்லை, எ-று. எனவே, ‘குடிமை, ஆண்மை’ முதலிய சொற்களிடத்து இயல்பு உண்டாமென்றவாறு. குடிமை நல்லன்; ஆண்மை நல்லன்; மூப்புத்தீயன் - என ஒட்டுக. (59) 60. இசைத்தலு முரிய வேறிடத் தான. இது, ‘காலமுலகத்திற்கோர் ஒரு புறனடை. (இ-ள்.) இசைத்தலும் உரிய - காலம் உலகம் முதலிய சொற்களும் உயர்திணையாய் இசைத்தலும் உரிய, வேறிடத்தான - ஈறு திரிதற்கு ஏற்பன ஈறு திரிந்து வாய்பாடு வேறுபட்ட இடத்து, எ-று. காலன் கொண்டான், உலகர் பசித்தார்; என ஈறு திரிவனவற்றோடு ஒட்டுக. (60) 61. எடுத்த மொழியினஞ் செப்பலு முரித்தே. இஃது அருத்தாபத்தி கூறுகின்றது. (இ-ள்.) எடுத்த மொழி - இனமாகிய பொருட்கண் ஒன்றை விதந்து வாங்கிக் கூறிய அச்சொல், இனம் செப்பலும் உரித்து - தன் பொருட்கு இனமாகிய பிற பொருளைக் குறிப்பாலுணர்த்து தலும் உரித்து எ-று. உம்மை எதிர்மறையாகலின், உணர்த்தாமையும் உரித்தாயிற்று. ‘அறஞ்செய்தான் துறக்கம் புகும்’ என்றவழி இனப்பொரு ளாகிய ‘மறம் செய்தான் நிரயம் புகுமென்பது உணர்த்திற்று. ‘இழிவறிந்து உண்பான்கண் இன்பம் எய்தும்’ என்றவழிக் கழிபேரிரையான் இன்பமெய்தான்’ னென்பதும் இனப் பொருளை உணர்த்திற்று. ‘கீழ்ச்சேரிக் கோழி அலைத்தது’ என, ‘மேற்சேரிக் கோழி அலைப் புண்டதும் அது. ஆ வாழ்க! அந்தணர் வாழ்க! என்பன, இனஞ் செப்பாதன. அருத்தாபத்தி இனஞ் செப்புமாறு, தன்னோடு மறுதலைப் பட்டு நிற்பது ஒன்று உள்வழி யாயிற்று. மறுதலைப்பாடு பல உள்வழிச் செப்பாது. ஆவிற்கு மறுதலை, எருமை, ஒட்டகமெனப் பலவுள; அந்தணர்க்கு மறுதலை, அரசர், வணிகர், வேளாளர் எனப் பிறரும் உளர். அங்ஙனம் பல மறுதலை உள்வழிச் செப்பாது. (61) 62. கண்ணுந் தோளு முலையும் பிறவும் பன்மை சுட்டிய சினைநிலைக் கிளவி பன்மை கூறுங் கடப்பா டிலவே தம்வினைக் கியலு மெழுத்தலங் கடையே. இதுவும் திணைவழுக் காக்கின்றது. (இ-ள்.) கண்ணும் தோளும் முலையும் பிறவும் - கண்ணுந் தோளும் முலையும் அவை போல்வன பிறவும், பன்மை சுட்டிய சினைநிலைக் கிளவி - பன்மையைக் குறித்து நின்ற சினை நிலை மையை உணர்த்திய சொற்கள், தம் வினைக்கு இயலும் எழுத்தலங்கடை - அவை தமக்குரிய பன்மை வினைக்கேற்ற அகர ஈற்றாற் கூறக் கருதாது தம் முதல்வினைக்கேற்ற ஒருமை ஈற்றானும் பன்மை யீற்றானும் கூறக் கருதியவழி, பன்மை கூறுங்கடப்பாடில - தமக்குரிய பன்மையாற் கூறப்படும் யாப்புறவு உடைய வல்ல, எ-று. (உ-ம்.) கண் நல்லள், முலை நல்லள் எனவும்; கண் நல்லர், தோள் நல்லர், முலை நல்லர் எனவும்; கண் நொந்தாள், தோள் நொந்தாள், முலை நொந்தாள் எனவும் வரும். ‘பிறவும்’ என்றதனாற் ‘புருவம், காது முதலியனவும் கொள்க. மூக்கு நல்லள், கொப்பூழ் நல்லள் என ஒருமைச் சினைப்பெயர் நின்று உயர்திணை கொண்டனவும், நிறங் கரியன், கவவுக் கடியள் எனப் பண்புந் தொழிலும் நின்று உயர்திணை கொண்டனவுந் ‘தன்னின முடித்தலாற் கொள்க. கண் நொந்தது, முலை எழுந்தது என்றாற்போல்வன சாதியொருமை யுணர்த்தலும் இதனாற் கொள்க. கோடு கூரிது கரி, குளம்பு கூரிது குதிரை எனப் பன்மைச் சினைப்பெயர் நின்று, முதல்வினையாகிய ஒருமையான் முடிவனவுங் கொள்க. (62) கிளவியாக்கம் முற்றிற்று. வேற்றுமையியல் வேற்றுமை யிலக்கணம் உணர்த்தினமையால் இது வேற்றுமை யியலென்னும் பெயருயடையதாயிற்று. கிளவியாக் கத்துள் பெயர், வினை, இடை, உரியென்னும் நான்கு சொற்கும் பொதுவிலக்கணமுணர்த்தினார். அப்பொதுவிலக்கணத்தினைத் தொடர்ந்து அவற்றது சிறப்பிலக்கணங்கூறுதல் முறை. ஆயினும் வேற்றுமையென்பன ஒருசார் பெயரும் இடைச்சொல்லுமா தலின் அவற்றின் இலக்கணமும் பொதுவிலக்கணமாதல் கருதிக் கிளவியாக்கத்திற்கும் பெயரியலுக்குமிடையே வேற்றுமை யிலக்கணம் உணர்த்த எடுத்துக்கொண்டார். வேற்றுமை யிலக்கணமென்பது ஒன்றாயினும் சிறப்புடைய எழுவகை வேற்றுமைகளும் அவற்றது மயக்கமும் எட்டாவதாகிய விளிவேற்றுமையும் தனித்தனி யியல்களால் உணர்த்துதற்குரிய பொருள்வேறுபாடுடைமையின் அவற்றை முறையே வேற்றுமை யியல், வேற்றுமை மயங்கியல் விளிமரபு என மூன்றியல்களால் உணர்த்தினார். வேற்றுமையியற் பகுதியைப் பதினேழு சூத்திரங்களாக இளம்பூரணரும், இருபத்திரண்டு சூத்திரங்களாகச் சேனாவரை யரும் நச்சினார்க்கினியரும், இருபத்தொரு சூத்திரங்களாகத் தெய்வச்சிலையாரும் பகுத்து உரைகூறியுள்ளார்கள். பெயர்ப்பொருளை வேறுபடுத்தும் உருபுகள் வேற்றுமை யெனப்பட்டன. செயப்படுபொருள் முதலியனவாகப் பெயர்ப் பொருளை வேறுபடுத்துணர்த்தலின் வேற்றுமையாயின எனவும் செயப்படுபொருள் முதலாயினவற்றின் வேறுபடுத்துப் பொருள் மாத்திர முணர்த்தலின் எழுவாயும் வேற்றுமையாயிற்று எனவும் கூறுவர் சேனாவரையர். “பொருண்மை சுட்டல் முதலிய ஆறு பொருளையுங் குறித்து அவற்றால் தான் வேறுபட நிற்றலானும் முடிக்குஞ்சொல்லைத் தான் விசேடித்து நிற்றலானும் எழுவாயும் வேற்றுமையாயிற்று” என்பர் நச்சினார்க்கினியர். ஒரு பொருளை ஒருகால் வினைமுதலாக்கியும் ஒருகாற் செயப்படு பொருளாக்கியும் ஒருகால் ஏற்பது ஆக்கியும் ஒருகால் நீங்க நிற்பது ஆக்கியும் ஒருகால் உடையது ஆக்கியும் ஒருகால் இடமாக்கியும் இவ்வாறு தம்மையேற்ற பெயர்ப்பொருளை வேறுபடுத்தினமையால் வேற்றுமையெனப்பட்டன என்றும், மேல் கிளவியாக்கத்தால் அல்வழித்தொடர் கூறி இனி வேற்றுமைத்தொடர் கூறுகின்றா ரென்றும் கூறுவர் தெய்வச்சிலையார். பெயர், ஐ, ஒடு, கு, இன், அது, கண், விளிஎன வேற்றுமை யெட்டென்றார் தொல்காப்பியனார். வேற்றுமை ஏழெனக் கொள்வோர் விளிவேற்றுமையை எழுவாயுள் அடக்குவர். பிறிதோர் இடைச்சொல்லையேலாது இயல்பாகியும் தானே திரிந்தும் நிற்கும் பெயரின் இறுதி விளியெனப்படும். படர்க்கைச் சொல்லையும் பொருளையும் முன்னிலைச் சொல்லும் பொருளுமாக வேற்றுமை செய்வது விளி வேற்றுமையாதலின் இதனை எழுவாயுள் அடக்காது வேறாகக் கொள்வதே தமது துணிபென்பார், ‘வேற்றுமைதாமே ஏழெனமொழிப’ ‘விளிகொள்வதன்கண் விளியோடெட்டே’ என்றார் தொல்காப்பியனார். எத்தகைய தொழிலும் கருத்தா இல்லாமல் நடைபெறாது. ஆதலின் அதனைச்செய்து முடிக்கும் வினை முதற்பொருளைத் தருவதாய்த் திரிபில்லாது நின்றபெயர் எழுவாய் வேற்றுமையென முதற்கண் வைக்கப்பட்டது. வினைமுதல் ஒருதொழிலைச் செய்யுங்கால் அச்செயலாற் றோன்றிய பொருள் செயப்படு பொருளெனப்படும். இத்தகைய செயப்படுபொருளாகப் பெயர்ப்பொருளை வேறுபடுத்துவது ஐயுருபாதலின் அஃது இரண்டாம் வேற்றுமையெனப்பட்டது. வினைமுதல் ஒரு காரியத்தைச்செய்து முடித்தற்கு இன்றியமையாது வேண்டப் படுவது கருவி. இத்தகைய கருவிப்பொருளாகப் பெயர்ப்பொருளை வேறுபடுத்துவது ஒடுவுருபாதலின் அது மூன்றாம் வேற்றுமை யெனப்பட்டது. ஒருவன் ஒரு காரியத்தைக் கருவியாற் செய்வது தனக்கும் பிறர்க்கும் உதவுதற் பொருட்டேயாம். இவ்வாறு தரப்படும் எவ்வகைப் பொருளையும் ஏற்றுக்கொள்வதாகப் பெயர்ப்பொருளை வேறுபடுத்துவது குவ்வுருபாதலின் அது நான்காம் வேற்றுமை யெனப்பட்டது. ஒருவன் ஒரு பொருளைப் பிறர்க்குக் கொடுக்குங்கால் அப்பொருள் அவனை விட்டு நீங்குதலைக் காண்கின்றோம். இவ்வாறு நீங்க நிற்கும் பொருளாகப் பெயர்ப்பொருளை வேறுபடுத்துவது இன்னுரு பாதலின் அஃது ஐந்தாம் வேற்றுமையாயிற்று. ஒருவனிடத்து நீங்கிய பொருளை யேற்றுக்கொண்டவன் அப்பொருளைத் தன் னுடையது எனக் கிழமை (உரிமை) பாராட்டக் காண்கிறோம், இத்தகைய கிழமைப் பொருளாகப் பெயர்ப் பொருளை வேறு படுத்துவது அது வுருபாதலின் அஃது ஆறாம் வேற்றுமையாயிற்று. மேற்கூறிய எல்லா நிகழ்ச்சிக்கும் இடம் இன்றியமையாதது. தன்னையேற்ற பெயர்ப்பொருளை இடப்பொருளாக வேறுபடுத்துவது கண்ணுருபாதலின் அஃது ஏழாம் வேற்றுமை யாயிற்று. இவற்றின் வேறாகப் பெயர்ப்பொருளை எதிர் முகமாக்குவது விளி வேற்றுமையாதலின் அஃது எட்டாம் வேற்றுமையென இறுதிக் கண் வைக்கப்பட்டது. மேற்கூறிய எட்டு வேற்றுமைகளையும் முறையே பெயர் வேற்றுமை, ஐகார வேற்றுமை, ஒடு வேற்றுமை, குவ்வேற்றுமை, இன் வேற்றுமை, அது வேற்றுமை, கண் வேற்றுமை, விளி வேற்றுமை எனப் பெயர் தந்து வழங்குதலும், இவற்றுள் ஐகார வேற்றுமை முதல் கண் வேற்றுமை ஈறாகவுள்ள ஆறையும் முறையே இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது, ஆறாவது, ஏழாவது என எண் முறையாற் பெயரியிட்டு வழங்கு தலும் ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்தும் அவர்க்கு முன்னும் வழங்கிய தமிழியற் குறியீடுகளாகும். இவ்வுண்மை இவ்வேற்றுமையியற் சூத்திரங்களால் நன்கு விளங்குகின்றது. இவ்வியலில் எழுவாய் வேற்றுமை முதலாக ஏழாம் வேற்றுமையீறாகவுள்ள ஏழு வேற்றமைகளின் இலக்கணங்கள் விரித்துரைக்கப்பட்டுள்ளன. ஏழுவேற்றுமையின் உருபும் உருபுநிற்கும் இடமும் அதன் பொருளும் அப்பொருளின் வகைகளும் ஆகியவற்றை இவ்வியலில் ஆசிரியர் முறையே விளக்கிச் செல்கின்றார். இங்ஙனம் ஏழு வேற்றுமைகளின் இலக்கணங் கூறுமுகமாகப் பயனிலை கோடலும், உருபேற்றலும், காலந்தோன்றாமையும் ஆகிய இம்மூன்றும் பெயர்க்குரிய இலக்கணங்கள் என்பதனை ஆசிரியர் உய்த்துணர வைத்துள்ளார். மேற்கூறிய வேற்றுமைகளின் பொருள்வகையை விரித் துரைக்குங்கால் ‘காப்பின் ஒப்பின் ஊர்தியின் இழையின்’ என்பன முதலாக இவ்வியலிற்கூறிய பொருள்களேயன்றி இப்பொருளோடு பொருந்தித்தோன்றும் எல்லாச் சொற்களும் கொள்ளுதற்குரியன என்பதை இவ்வியலின் புறனடைச் சூத்திரத்தால் ஆசிரியர் தெளிவுபடுத்துகின்றார். - க. வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 194-197 இரண்டாவது வேற்றுமையியல் 63. வேற்றுமை தாமே யேழென மொழிப. என்பது சூத்திரம். இவ்வோத்து, செயப்படு பொருள் முதலியனவாகப் பெயர்ப்பொருளை வேறுபடுத்து உணர்த்தலின், வேற்றுமையோத்தென்று காரணப்பெயர் பெற்றது. முன்னர் நான்கு சொற்கும் பொது இலக்கணம் உணர்த்திய அதிகாரத் தானே இப்பொதுஇலக்கணங் கூறுகின்ற ஓத்தினையுஞ் சேரக்கூறினார். ‘அப்பொதுஇலக்கணம் என்னையெனின், வேற்றுமை தாமும் பெயரும் ஒருசார் வினைச்சொல்லும் இடைச் சொல்லும் உரிச் சொல்லுமாகிய பொதுஇலக்கணமாதல் உடைமையானும், ‘எழுவாய் வேற்றுமை பெயர்தோன்று நிலையே’எனவும், ‘அன்றி அனைத்தும் பெயர்ப்பய னிலையே’ (67) எனவும், ‘ஈறுபெயர்க் காகுமியற்கைய வென்ப’ (70) எனவும், ‘பெயர்நிலைக் கிளவி காலந் தோன்றா’ (71) எனவும் தொழிற்பெயர் காலந் தோன்றுமெனவும் மேற்கூறுஞ் சிறப்புடைப் பெயர்க்குப் பொதுஇலக்கணம் ஈண்டுக் கூறுதல் உடைமையானும் இவ்வோத்துப் பொதுஇலக்கணமே கூறியதாயிற்று. ‘ஆயின், வேற்றுமை மயங்கியலும் விளிமரபும் இடை வைத்ததென்னையெனின், இவ்வேற்றுமையின் மயக்கம் யாப்புடைமையின் வேறு ஓத்தாக்கி, விளி இவைபோற் சிறப்பின்மையின் வேறோத்தாக்கி வைத்தார். இங்ஙனம் வைத்துப் பின்னர்ச் சிறந்த பெயர் வினை இடை உரிகளை முறையே கூறி, இவற்றுள் எஞ்சி நின்ற இலக்கணத்தை எச்சவியலிற் கூறினார் என்றுணர்க. ‘பொருண்மை சுட்டல்’ முதலிய ஆறு பொருளையுங் குறித்து அவற்றான் தான் வேறுபட நிற்றலானும், முடிக்குஞ் சொல்லைத் தான் விசேடித்து நிற்றலானும் எழுவாயும் வேற்றுமையாயிற்று. இச்சூத்திரம் வேற்றுமை இனைத்தென்கின்றது. (இ-ள்.) வேற்றுமை தாமே ஏழென மொழிப - வேற்றுமை யாவன ஏழென்று சொல்லுவர் தொல்லாசிரியர், எ-று. ‘தாமே’ யென்பது சந்த இன்பஞ் செய்து நின்றது. (1) 64. விளிகொள் வதன்கண் விளியோ டெட்டே. இஃது, ஒழிந்த வேற்றுமையும் கூறித் தொகை கூறுகின்றது. (இ-ள்.) விளி கொள்வதன்கண் விளியோடு - விளியேற்கும் பெயர்க் கண்ணதாகிய விளியொடு முற்கூறியவற்றைத் தலைப்பெய்ய, எட்டே - வேற்றுமை எட்டாம், எ-று. ‘விளி கொள்வதன்கண் விளி’ என்றதனாற், பிறிதோர் இடைச் சொல்லை ஏலாது தானே திரிந்தும் இயல்பாயும் நிற்கும் பெயரிறுதி விளியென்பது பெற்றாம். (2) 65. அவைதாம், பெயர் ஐ ஒடு கு இன்அது கண்விளி யென்னு மீற்ற. இஃது அவற்றின் பெயரும் முறையும் உணர்த்துகின்றது. (இ-ள்.) அவைதாம் - எட்டு எனப்பட்ட வேற்றுமையாவன, விளி என்னும் ஈற்ற - விளி வேற்றுமையை இறுதியாகவுடைய, பெயர் ஐ ஒடு கு இன் அது கண் - பெயரும் ஐயும் ஒடுவும் குவ்வும் இன்னும் அதுவுங் கண்ணு மாம், எ-று. ‘சிறப்புடைப் பொருளைத் தானினிது கிளத்தல்’ என்பதனான் ஒடுவும் அதுவும் ஓதினாரேனும், மூன்றாவதற்குச் சிறுபான்மை ஓடுவும் ஆனும், ஆறாவதற்கு அகர ஈறும் ஆதுவுங் கொள்க. (3) 66. அவற்றுள், எழுவாய் வேற்றுமை பெயர்தோன்று நிலையே. இது, முறையானே எழுவாய் வேற்றுமை கூறுகின்றது. இ-ள். அவற்றுள் - மேற்கூறிய வேற்றுமை எட்டனுள், எழுவாய் வேற்றுமை - முதல் வேற்றுமையாவது, பெயர் தோன்றும் நிலையே - பெயர்ப்பொருள் அறுவகைப்பட்ட பயனிலையும் தன்கண் தோன்ற நிற்கும் நிலைமை, எ-று. அஃது உருபும் விளியும் ஏலாது நிற்கும் நிலையதாயிற்று. (உ-ம்.) மக்கள், ஆ என வரும். ‘இதனை முற்கூறியது என்னையெனின், ‘சாத்தன் குடத்தைக் கையால் வனைந்து கொற்றற்குக் கொடுத்தான்’ என வினைமுதல் நின்று ஏனையவற்றை நிகழ்த்துதல் வேண்டுதலின், அவ்வினைமுதலாகிய எழுவாயை முற்கூறினார்; அன்றியும் மேல் இரண்டாவது மூன்றாவது என்று ஆளுமிடத்து இதனை முதல் வேற்றுமையென்றே ஆளவேண்டுதலின், அப்பொருள் தருதற்கு முன்னிற் சூத்திரத்திற் பெயரென்று கூறிய அதற்கே ‘எழுவாய் வேற்றுமையென்று வேறோர் பெயர் கொடுத்தார். இதற்கு இப்பெயர் கூறிய அதனானே உருபும் விளியும் ஏற்பனவற்றைப் பெயரென்று வழங்குதல் பெற்றாம். அஃது, ‘ஈறு பெயர்க்காகும்’ என்றதனானும் உணர்க. (4) 67. பொருண்மை சுட்டல் வியங்கொள வருதல் வினைநிலை யுரைத்தல் வினாவிற் கேற்றல் பண்புகொள வருதல் பெயர்கொள வருதலென் றன்றி யனைத்தும் பெயர்ப்பய னிலையே. இஃது அவ்வெழுவாய் ஆறு பயனிலையும் ஏற்குமென்கின்றது. (இ-ள்.) பொருண்மை சுட்டல் - ஒரு பொருளினது பண்பு முதலியன சுட்டாது அப்பொருட்டன்மையது உண்மைத் தன்மையே சுட்டி நிற்க வருதல், வியங்கொள வருதல் - தான் ஏவலைக் கொள்ள வருதல், வினை நிலை உரைத்தல் - தனது தொழிலினைச் சொல்ல வருதல், வினாவிற்கு ஏற்றல் - தான் வினாவிற்குப் பொருந்தி வருதல், பண்பு கொள வருதல் - தனது பண்பினைத் தான் கொள்ள வருதல், பெயர் கொள வருதல் - தான் பெயரைக் கொண்டு முடிய வருதல், என்று அன்றி அனைத்தும் - என்று சொல்லப் பட்ட அவ்வனைத்து வரவும், பெயர்ப்பயனிலையே - அவ்வெழுவாய் வேற்றுமையது பயனாகிய நிலைமை, எ-று. தன்னை முடித்தற்குப் பின் வருஞ் சொல்லின் பொருண்மையைத் தான் அவாவிநிற்கும் நிலை வேறுபாட்டைப் பயனிலை என்றார். (உ-ம்.) ஆ வுண்டு, ஆ செல்க, ஆ கிடந்தது, ஆ யாது? ஆ வெவன்? ஆ கரிது, ஆ பல என வரும். ‘தன்னினம் முடித்தலென்பதனான், ஆ வில்லை, ஆ வல்ல என வினைக்குறிப்பும் கொள்க. ‘பொருளென்னாது ‘பொருண்மையென்றார், அப் பொருளினது தன்மை யுணர்த்துதற்கு. பொருட்டன்மையாவது, அப்பொருள்களின் சாதித்தன்மை. ‘ஆ’ என்னும் பொருள் கெட்டதேனும், அவ்வாவினது சாதித்தன்மை எக்காலத்துங் கெடாது நிற்குமென்பது உணர்த்துதற்கு ‘ஆ வுண்டு’ என்றார். ‘கட்புலனாகிய ஆ கெடவும், அச்சாதித்தன்மை கெடாது’ என்பது தோன்றப் ‘பொருண்மை சுட்டல்’ என்று சூத்திரஞ் செய்தார். வினை நிலையுரைத்தல், தன்றொழில்; வியங்கொள வருதல், மேற் தன்கட் தொழில் நிகழ்வதாக ஒருவன் ஏவப்படுதல். இரண்டற்கும் இதுவே வேறுபாடு. வினைநிலையுரைத்தலும், பண்புகொள வருதலும், பெயர்கொள வருதலும், முடிக்குஞ் சொல்லாதலேயன்றி, முடிக்கப்படுஞ் சொல் லாதலுமுடைய. வியங்கோளும் வினாவும், முடிக்குஞ் சொல்லாயல்லது நில்லா. வினைக்குறிப்பும் முடிக்குஞ் சொல்லாயல்லது வாராது. ‘ஆ பல’ என்பது பிறிதோர் சொல் நோக்காது, ஆ என்பதனோடு அமைந்து மாறும். முன்னிற்சூத்திரத்துத் ‘தோன்று நிலை’ என்றதனானே ‘ஆயன் சாத்தன் வந்தானெனப் பண்பொட்டாகாது விட்டிசைத்து நின்று மற்றோர் எழுவாயின் பயனிலையொடு தானும் பயனிலை கோடலும், ‘ஆயன் வந்தான் சாத்தன்’ என வினைப்பின்னும் நிற்றலுஞ் சாத்தன் தலைவனாயினானெனப் பயனிலைக்கு அடையாய் நிற்றலுஞ் சாத்தன் கண்ணல் லன்னெனச் சினைவினை முதற்கேற்றிக்கூறலும், ‘இம்மணி நிறம் நன்றெனப் பண்பின் தொழிலைப் பண்பு அடைந்த பொருட்கு ஏற்றிக் கூறலும், ‘இக்குதிரை நடை நன்றெனத் தொழிலின் தொழிலைத் தொழிலடைந்த பொருட்கு ஏற்றிக்கூறலும், ‘இவ்யாறு நீரொழுகுமென இடத்து நிகழ்பொருளின் தொழிலை இடத்திற்கு ஏற்றிக்கூறலும், ‘இறைவன் அருளல் எம்முயிர் காக்கும்; இறைவன் அருளலின் யாம் உயிர் வாழ்தும்’ என எழுவாய்க்குப் பயனிலையாய் வந்த பெயர் தானும் எழுவாயாய்ப் பயனிலை கோடலும், அஃது உருபேற்றலும், ஆ செல்க, செல்க ஆ, என முன்னும் பின்னும் பயனிலை நிற்றலும் பிறவுங் கொள்க. ‘சிறுமை பெருமையிற் காணாது துணிந்தே’ (நற். 50) எனவும், ‘கோஒல் செம்மையிற் சான்றோர் பல்கி’ (புறம். 117 : 6) எனவும் வரும் பண்புகளும் பொருள் இயைபு இலவேனும் பெயர்கொள வருதற்பாற்படுதலும், ‘ஆசிரியன் பேரூர் கிழான் செயிற்றியன் இளங்கண்ணன் சாத்தன் வந்தான்’ எனப் பல பெயர் ஒருங்கு எழுவாயாய் நின்று ஒரு பயனிலை கோடலும் இதனாற் கொள்க. இன்னும் எழுவாய் வேற்றுமையின் விகற்பமெல்லாம் வழக்கினகத்து அறிந்து இவ்விலேசான் முடித்துக்கொள்க. (5) 68. பெயரி னாகிய தொகையுமா ருளவே அவ்வுமுரிய யப்பா லான. இது, தொகைப்பெயரும் பயனிலை கொள்ளும் என்கின்றது. (இ-ள்.) பெயரினாகிய தொகையுமாருளவே - பெயரும் பெயருந் தொக்க தொகையும் உள (உம்மையால், பெயரும் வினையும் தொக்க தொகையும் உள); அவ்வும் உரிய அப்பாலான - அவ்விரண்டனுள் பெயருந் பெயருந் தொக்க தொகையும் உரிய அவ்வெழுவாய் வேற்றுமையாய்ப் பயனிலை கொள்ளுமிடத்து, எ-று. ‘அவ்வுமுரிய’ என்றது, இரண்டற்கும் பொதுவேனும், ‘ஏற்புழிக் கோட’லானொன்றற்கே யாயிற்று. (உ-ம்.) யானைக்கோடு கிடந்தது. மதிமுகம் வெயர்த்தது, கொல் யானை நின்றது, கருங்குதிரை ஓடிற்று, உவாஅப்பதி னான்கு கழிந்தன, பொற்றொடி வந்தாள் என வரும். நிலங் கடந்தான் குன்றத்திருந்தான், எனப் பெயரொடு வினை தொக்கன எழுவாயாய்ப் பயனிலை கொள்ளாது முற்றாய் நிற்கும் என்றுணர்க. இதனான், தொகை இருவகைய என்பதூஉங் கூறினாராயிற்று. (6) 69. எவ்வயிற் பெயரும் வெளிப்படத் தோன்றி யவ்வியல் நிலையல் செவ்வி தென்ப. இஃது, அவ்வெழுவாய் புலப்பட்டும் புலப்படாதும் நிற்குமென்கின்றது. (இ-ள்.) எவ்வயிற்பெயரும் வெளிப்படத் தோன்றி - மூன்றிடத்து எழுவாயும் செவிப்புலனாகத் தோன்றி நின்று, யவ்வியல் நிலையல் செவ்விது என்ப - பயனிலை கோடல் செவ்விது என்ப ஆசிரியர், எ-று. எனவே, அவ்வாறு தோன்றாது நின்று பயனிலை கோடலுமுண்டு; அது செவ்விதன்று என்றவாறாம். ‘அவ்வியல் நிலையலென்பது எவ்வியல் நிலையலோ?’ எனின், மேற்கூறிய ஆறு பயனிலையுங் கொண்டு நிற்றல். செவ்விது - அப்பயனிலை கோடலில் திரியாவாய்ப் பயனிலைப் பட்டு நிற்றல். செவ்விது எனவே, பிறிது ஏற்றற்குச் செவ்விய யாகாமையும் உடைய; அவை நீயிர் என்பதும், ‘அவ்வாய்க் கொண்டான்’ என்பதும் உருபேற்றற்குச் செவ்விய வல்ல. ‘கருவூர்க்குச் செல்வையோ சாத்தா’ என்றவழிச் ‘செல்வல்’ எனவும், ‘யான் எது செய்வல்?’ என்றவழி, ‘இது செய்’ எனவும், ‘இவன் யார்?’ என்றவழிப் ‘படைத் தலைவன்’, எனவுஞ் செப்பியவழி, யான், நீ, இவன் என்னும் எழுவாய் வேற்றுமை வெளிப்படாது நின்று, ‘செல்வல், இது செய், படைத்தலைவன்’ என்னும் பயனிலை கொண்டவாறு காண்க. (7) 70. கூறிய முறையினுருபுநிலை திரியா தீறுபெயர்க் காகுமியற்கைய வென்ப. இஃது உருபு நிற்கும் இடம் கூறுகின்றது. (இ-ள்.) கூறிய முறையின் உருபு நிலை திரியாது - மேல் ஐ ஒடு கு இன் அது கண் என்று கூறிய முறைமையை உடைய உருபுகள் தத்தம் நிலை திரியாது, பெயர்க்கு ஈறாகும் இயற்கைய வென்ப - பெயர்க்கு ஈறாகும் இயல்புடைய வென்று கூறுவர் ஆசிரியர், எ-று. (உ-ம்.) சாத்தனை, சாத்தனொடு, சாத்தற்கு, சாத்தனின், சாத்தனது, சாத்தன்கண் என வரும். இவ்விடைச்சொற்கள் பெயர்க்குறுப்பாகாது தாம் என வேறு உணரப்பட்டிறுதி நிற்றலின், ‘நிலை திரியாது’ என்றார். எனவே, வினைக்குத் தாமென வேறுபடாது நிற்குமாயின. (8) 71. பெயர்நிலைக் கிளவி காலந் தோன்றா தொழில்நிலை யொட்டுமொன்றலங் கடையே. இது பெயர்க்கோர் இலக்கணங் கூறுகின்றது. (இ-ள்.) பெயர்க் கிளவி - பெயர்ப்பெயராகிய சொல்லும், நிலைக் கிளவி - அப்பெயரது நிலையிலே நிற்றலை உடைய சொல்லும், காலம் தோன்றா - காலந் தோன்றாவாய் நிற்கும்; தொழில் நிலை யொட்டும் ஒன்றலங் கடையே - ஒரு பொருளது புடைபெயர்ச்சியாய்க் காலந் தோன்றுதற்குப் பொருந்தும் ஒரு கூற்றுத் தொழிற்பெயர அல்லாவிடத்து, எ-று. ‘பெயர், தொழில் நிலை’ என்பன ஆகுபெயர். பெயர் - பொருள்; தொழில் நிலை - காலம்; ஒட்டும் - பொருந்தும். இதனாற், திணையும் பாலுங்காலமும் இடனுந் தோன்றும் தொழிற்சொல் படுத்தலோசைப்பட்டு நின்றாற், தொழிற் பெயராய் நின்று, பயனிலை கொண்டும் உருபேற்றும் காலத்தைத் தோற்றுவித்தலும், பெயர்ப்பெயரும், பெயரது நிலையிலே நிற்றலையுடைய சொல்லுங் காலத்தை யாண்டுந் தோற்று வியாமையுங் கூறினார். இடுகுறியாய்ச் சாத்தன், கொற்றன் என வரும் பெயர்ப்பெயரும், புடைபெயர்ச்சி மாத்திரம் உணர்த்தி நிற்கும் ‘உண்டல்’ ‘தின்றல்’ என வரும் வினைப்பெயரும், பூசல், வேட்டை என்றாற்போலப் புடைபெயர்ச்சி விளக்காது நிற்கும் வினைப்பெயரும், உண்டான் தின்றான் என்றாற் போலக் காலந் தோன்றி வினைமுதன்மேல் நின்ற படுத்தலோசையானுந் தொழிற்பெயரும், ஓசை வேறுபாட்டானன்றி உண்டவன் உண்ணுமது என்றாற்போலத் தானே பெயராய்க் காலந் தோன்றி வினைமுதன்மேல் நிற்குந் தொழிற்பெயருங் கொலைவர் கொடுமரந் தேய்த்தார் (கலி. 12 : 1, 2) அவனேறிற்றுக் குதிரை என்றாற்போலச் செயப்படுபொருட்கட் காலங் காட்டி நின்ற தொழிற்பெயரும், யான் சொன்னவன், ‘உண்பவை நாழி ‘ (புறம். 189 : 5) என்றாற்போலச் செயப்படுபொருண்மேற் பெயராய்க் காலந் தோன்றி நிற்குந் தொழிற்பெயரும், பிறவாற்றாய் வரும் பெயர் வேற்றுமையும் உணர்க. (9) 72. இரண்டாகுவதே, ஐயெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி யெவ்வழி வரினும் வினையே வினைக்குறிப் பவ்விரு முதலிற் றோன்று மதுவே. இது முறையே இரண்டாவது இப்பொருட்கண் வருமென்கின்றது. (இ-ள்.) ஐ யெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி இரண்டாகுவதே - ‘பெயர் ஐ ஒடு கு இன் அது கண்’ (65) என்னுஞ் சூத்திரத்து ஐ யெனப் பெயர் பெற்ற வேற்றுமைச்சொல் இரண்டாவதாம்; அது எவ்வழி வரினும் - அஃது யாண்டு வரினும், வினையே வினைக் குறிப்பு அவ்விரு முதலிற் தோன்றும் - வினைச்சொல்லினும் வினைக்குறிப்புச் சொல்லினும் பிறந்த செயப்படு பொருளாகிய அவ்விரண்டு காரணத்தின்கண்ணும் தோன்றும், எ-று. ‘பெயரிய’ என்பது ‘கவிரம் பெயரிய’ (அகம். 198 : 15) என்றாற் போல நின்றது. ‘வினை, வினைக்குறிப்பு’ என்பன ஈண்டு ஆகுபெயர், அம்முதனிலைகளான் பிறந்த அச் சொற்களை உணர்த்தலின். ‘முதலென்றது காரணத்தை. ‘ஆயெட் டென்ப தொழின்முதனிலையே’ என்றமையால், அக்காரணங்கள் எட்டு உளவேனும், ‘ஏற்புழிக்கோடலென்பதனாற் செயப்படுபொருளே ஈண்டுக் கோடும். காரியத்தை நிகழ்த்துவிப்பது காரணம். ஒரு வினைமுதல் செய்யுந் தொழிலினை உறுவது செயப்படு பொருள். (உ-ம்.) குடத்தை வனைந்தான், குழையையுடையன் என வரும். ‘எவ்வழி வரினும்’ என்றதனான், புகழை நிறுத்தல், புகழை யுடைமை என வினைப்பெயரிற் புடைபெயர்ச்சிபற்றியும் முடியும். இயற்றப்படுவதும், வேறுபடுக்கப்படுவதும், எய்தப் படுவதுமெ எனச் செயப்படு பொருள் மூன்றாம். அவை முறையே இல்லதனை உண்டாக்கலும், உள்ளதனைத் திரித்தலுந் தொழிற்பயனுறுந் துணையாய் நிற்றலுமாம். இவ்வுருபை முடித்தற்கு மேலிற் ‘காப்பு’ முதலிய வாய்பாடுபற்றி வரும் பொருள்களை இம்மூன்று கூற்றானும் பகுக்கின்றார், ஈண்டு வினைமாத்திரையும் வினைப்பெயருமாகப் பகுப்பர். ‘குடத்தை வனைந்தானென்றது, மேல்வரும் ‘இழை’ யென்னும் இயற்றப்படும் பொருள். அஃது ‘எயிலை இழைத்தான்’ என வரும். என்றது, ‘எயிலை இழைத்தலைச் செய்தான்’ என்னும் பொருட்டு. ‘இழை’ யென்னும் வினை மாத்திரையை உணர்த்தும் முதனிலைப் பெயர் நின்று, முன்னர் ‘இழைத்தலென வினைப்பெயரையுந் தோற்றுவித்து, ‘இழைத்தலை’யென்னும் உருபையும் ஏற்பித்து, ‘செய்தானென வினை ஒழிந்த காரணங்கள் ஏழானும் நிகழுங் காரியத்தினையுந் தோற்றுவித்து நிற்றலின், ‘இழை’யென்னும் முதனிலைப் பெயரை வேற்றுமைப் பொருளாக எடுத்தோதினார். இப்பொருட்கட் தோன்றிய ‘செய்தான்’ என்னுங் காரியத்துடன்அல்லது ‘எயிலை’ என்னும் இரண்டாவது முடியாமை உணர்க. என்னை? செய்தற்கு இழைத்தல் செயப்படுபொருள் நீர்மைத்தாய்க் காரணமாய் நிற்றலானும், ஒழிந்த காரணங்கள் தன்கண் நிகழ்ந்து காரியமாந் தன்மை இழைத்தற்கின்றாமாதலானும் என்பது. இவ்வாறே மேலிற் சூத்திரத்து ஒழிந்த பொருள்களையும் விரிக்க. இனி, வினைக்குறிப்பிற்கும் ‘குழையை உடையன்’ என்புழி உடையன் எனக் கருதுதல் வினை; அக்கருத்தை நிகழ்த்துகின்றான் வினை முதல்; அக்குழை அவன் கருத்து நிகழ்த்தப்படும் பொருளாய்க் கிடக்கின்ற தன்மை செயப்படுபொருள். இவ்வாறே ஒழிந்தனவுங் குறிப்பாற் காண்க. (10) 73. காப்பி னொப்பி னூர்தியி னிழையி னோப்பிற் புகழின் பழியி னொன்றா பெறலி னிழவிற் காதலின் வெகுளியிற் செறலி னுவத்தலிற் கற்பி னென்றா வறுத்தலிற் குறைத்தலிற் றொகுத்தலிற் பிரித்தலி னிறுத்தலி னளவி னெண்ணி னென்றா வாக்கலிற் சார்தலிற் செலவிற் கன்றலி னோக்கலி னஞ்சலிற் சிதைப்பி னென்றா வன்ன பிறவு மம்முதற் பொருள வென்ன கிளவியு மதன்பால வென்மனார். இஃது அதனை முடிக்கும் பொருள்வேறுபாடு கூறுகின்றது. (இ-ள்.) காப்பின்...... சிதைப்பினென்றா - காப்பு முதலாகச் சிதைப்பு ஈறாகச் சொல்லப்பட்ட இருபட்தெட்டுப் பொருளும், அன்ன பிறவும் அம் முதற் பொருள என்ன கிளவியும் - அவை போல்வன பிற பொருளுமாகிய அச்செயப்படுபொருள்மேல் வரும் எல்லாச் சொல்லும், அதன்பால என்மனார் - அவ்விரண்டாம் வேற்றுமையின் கூற்றன என்று கூறுவர் புலவர், எ-று. (உ-ம்.) எயிலை யிழைத்தான் - இவ்இயற்றப்படுவது ஒரு தன்மைத்தாகலின், ஒரு வாய்பாடே கூறினார். கிளியையோப்பும், பொருளை இழக்கும் - இவற்றிற்கு வேறுபாடு, ஒரு தொழில் உறுவிக்கப்பட்டுத் தானே போதலுந் தொழிற்பயன் உற்ற மாத்திரையாய் ஒருவன் கொண்டுபோகப் போதலும்; நாணை யறுக்கும், மரத்தைக் குறைக்கும் - இவற்றிற்கு வேறுபாடு, சிறிதிழவாமல் வேறுபடுத்தலும், சிறிதிழக்க வேறுபடுத்தலும், பெருமையைச் சுருக்குதலும். நெல்லைத் தொகுக்குந் வேலியைப் பிரிக்கும் - இவற்றிற்கு வேறுபாடு, விரிந்தது தொகுத்தலுந் தொகுத்தது விரித்தலும்; அறத்தையாக்கும், நாட்டைச் சிதைக்கும் - இவற்றிற்கு வேறுபாடு, மிகுத்தலுங் கெடுத்தலும்; இவ்வெட்டும் வேறுபடுக்கப்படுவன. ஊரைக் காக்கும், தந்தையை யொக்கும், தேரையூரும், குரிசிலைப் புகழும், நாட்டைப் பழிக்கும், புதல்வனைப் பெறும், மனைவியைக் காதலிக்கும், பகைவரை வெகுளும், செற்றாரைச் செறும், நட்டாரையுவக்கும், நூலைக் கற்கும், பொன்னை நிறுக்கும், அரிசியை அளக்கும், அடைக்காயையெண்ணும், ஊரைச் சாரும், நெறியைச் செல்லும், சூதினைக் கன்றும், கணையை நோக்கும், கள்ளரையஞ்சும் எனப் பத்தொன்பதும் எய்தப்படுவன. இவை தாந் தொழிலுறுவனவுந் தொழிற்பயனுறுவனவுமாய் வரும் வேறுபாடும் உணர்க. வெகுடலுஞ் செறலுங் கொலைப்பொரு ளாயவழி வேறுபடுக்கப்படுவன. செறல், வெகுளியது காரியம்; உவத்தல், காதலது காரியம். இனிச் செய்வான் கருத்து இல்வழி நிகழுஞ் செயப்படுபொருளுஞ் செய்வானுஞ் செயப்படுபொருளுந் தானேயாய் நிற்பனவுங் கொள்க. சோற்றைக் குழைத்தான், சாத்தன் தன்னைக் குத்தினான் என வரும். இன்னும் இச்செயப்படுபொருள் தன்கட் தொழில் நிகழ்ந்தும் நிகழாதும் வரும். அறுத்தல் முதலியன தன்கண் நிகழ்வன; சார்தல் முதலியன தன்கண் நிகழாதன. ‘அன்ன பிறவுமென்றதனான், ‘பகைவரைப் பணித்தான்; சோற்றையட்டான்; குழையை யுடையன், பொருளை யிலன்,’ என்றாற்போல்வன. இச்சூத்திரந் ‘தொகுத்த மொழியான் வகுத்தனர் கோடல்’ (11) 74. மூன்றா குவதே, ஒடுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி வினைமுதல் கருவி யனைமுதற் றதுவே. இது முறையானே மூன்றாவது இப்பொருட்கண் வருமென்கின் றது. (இ-ள்.) ஒடு வெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி மூன்றாகுவதே - மேல் ஒடு வெனப் பெயர் கொடுத்து ஓதப்பட்ட வேற்றுமைச்சொல் மூன்றாவதாம்; அது வினைமுதல் கருவி அனைமுதற்று - அது வினைமுதலுங் கருவியுமாகிய அவ்விரண்டு காரணத்தையும் பொருளாக உடைத்து, எ-று. மேல் ‘அதனினியறல்’ முதலியன ஆனுருபிற்கேற்ப உடம்பொடு புணர்த்துச் சூத்திரஞ் செய்தலின், அவற்றிற்கும் முற்கொண்ட ஓடு என்பதற்கும் ஆலென்பதற்கும் வினைமுதல் கருவி கொள்க. ஆன், ஆலாய்த் திரிந்தும் நிற்கும். வினைமுதல், கருத்தா என்பன ஒன்று. கருத்தா நின்று தன்னையொழிந்த கருவி முதலிய காரணங்கள் ஏழனையுங் காரியத்தின்கண் நிகழ்த்துதலின், அதனை வினைமுதலென்றார். இஃது, இயற்றும் வினைமுதலும் ஏவும் வினைமுதலும் என இரு வகைப்படும். ‘கொடியொடு துவக்குண்டான்’ என்பது, இயற்றும் வினை முதல். அது, ‘கொடி தன்னொடு துவக்குதலைச் செய்யப்பட்டான் சாத்தன்’ என்னும் பொருட்டு. கொடியினது நிகழ்ச்சி, ஈண்டுக் கருவி. கொடி சாத்தனைத் தொழிலுறுவிக்குங் காற் தான் அவனை நீங்கா உடனிகழ்ச்சியை விளக்கிற்று ஒடுவென உருபு ‘அரசனாலியற்றப்பட்ட தேவ குலம்’ என்பது, ஏவும் வினைமுதல். இனிக் கருவி, காரணம், ஏது, நிமித்தம் என்பன, தம்முள் வேறுபாடுடையவேனும், ஒத்த பொருட்டு. அக்காரணம் முதற்காரணமுந் துணைக் காரணமுமென இருவகைப்படும். முதற்காரணமாவது, காரியத்தோடு ஒற்றுமையுடையது; துணைக்காரணமாவது, அம் முதற்காரணத்திற்குத் துணையாகிய வினை முதலிய எட்டும். அக்கருவியாவது, வினைமுதற் றொழிற்பயனைச் செயப்படுபொருட்கண் உய்ப்பது. அதுவும் இயற்றுதற் கருவியாகிய காரகக் கருவியும், ஞாபகக் கருவியுமென இருவகைப்படும். ‘ஊசியொடு குயின்ற தூசும் பட்டும்’ என்பது காரகக் கருவி. அஃது, ‘ஊசிகொண்டு சாத்தன் குயிலுதலைச் செய்யப்பட்ட தூசும் பட்டுமென்னும் பொருட்டு. சாத்தன் தொழிற் பயனை ஊசி தூசிலும் பட்டிலும் நிகழ்த்திற்று. இது துணைக்காரணம். மண்ணானியன்ற குடம் - முதற் காரணம். இதுவும் காரகக் கருவி. ‘உணர்வினாலுணர்ந்தான், புகையினாலெரியுள்ளது உணர்ந்தான் - இவை ஞாபகக் கருவி. இவற்றிற்கு உணர்வு முதற்காரணம். காரகமாவது, தொழிலை இயற்றுவிப்பது. ஞாபக மாவது, அறிவிப்பது. இனி, ஆல் அகத்தியனாற்றமிழுரைக்கப்பட்டது; வேலா லெறிந்தான் எனவும், ஓடு உலகத்தோடொட்ட வொழுகல் ‘காவோட றக்குளந் தொட்டானும்’ ‘நாவீற் றிருந்த புலமா மகளோடு நன்பொற், பூவீற் றிருந்த திருமாமகள்’ எனவும் வரும். இதுநனி பயக்குமிதனானென்னும் இஃது ஆன் வந்தது. (12) 75. அதனி னியற லதற்றகு கிளவி யதன்வினைப் படுத லதனி னாத லதனிற் கோட லதனொடு மயங்க லதனொ டியைந்த வொருவினைக் கிளவி யதனொ டியைந்த வேறுவினைக் கிளவி யதனொ டியைந்த வொப்ப லொப்புரை யின்னா னேது வீங்கென வரூஉ மன்ன பிறவு மதன்பால வென்மனார். இஃது, அதனை முடிக்க வரும் பொருள் வேறுபாடு கூறுகின்றது. (இ-ள்.) அதனின் இயறல் - ஒன்றனான் ஒன்று பண்ணப் படுதலென் னும் பொருண்மை, அதற்றகு கிளவி - ஒன்றனான் ஒன்று தகுதலென்னும் பொருண்மை, அதன் வினைப்படுதல் - ஒன்றனான் ஒன்று தொழிலுறுதலென்னும் பொருண்மை, அதனின் ஆதல் - ஒன்றனான் ஒன்று ஆதலென்னும் பொருண்மை, அதனிற் கோடல் - ஒன்றனான் ஒன்றைக் கோடலென்னும் பொருண்மை, அதனொடு மயங்கல் - ஒன்றனோடு ஒன்று மயங்குதலென்னும் பொருண்மை, அதனோடு இயைந்த ஒரு வினைக் கிளவி - ஒன்றனோடு ஒன்று இயைந்த ஒரு வினையாகலெ ன்னும் பொருண்மை, அதனொடு இயைந்த வேறு வினைக் கிளவி - ஒன்றனோடு ஒன்று இயைந்த வேறு வினையாகல் என்னும் பொருண்மை, அதனோடு இயைந்த ஒப்பல் ஒப்புரை - ஒன்றனோடு ஒன்று இயைந்த ஒப்பல்லாத ஒப்பினையுரைத்த லென்னும் பொருண்மை, இன் ஆன் ஏது - இன்னும் ஆனுமாகிய ஏதுப் பொருண்மை, என வரூஉம் - என்று சொல்லப்பட்டு வரும் பத்தும், ஈங்கு வரூஉம் அன்ன பிறவும் - வினை முதலும் கருவியுமாகிய பொருளிடத்து வரும் அவைபோல்வன பிற பொருள்களும், அதன்பால என்மனார் - அம் மூன்றாவதன் கூற்றன என்று கூறுவர் புலவர், எ-று. (உ-ம்.) மண்ணானியன்ற குடம், வாயாற்றக்கது வாய்ச்சி, அறிவானமைந்த சான்றோர்: இவை கருவி. நாயாற்கோட் பட்டான், சாத்தனான் முடியுமிக்கருமம்: இவை வினைமுதல். வாணிகத்தானாயினான், காணத்தாற்கொண்ட வரிசி: இவை கருவி. இவை ஆனுருபான் வந்தன. எண்ணொடு விராயவரிசி, ஆசிரியனொடு வந்த மாணாக்கன் ‘மலையொடு பொருத மாஅல் யானை’ (மலைக்கு வினையின்மையின், இது வேறு வினை யாயிற்று.) ‘பொன்னொரும்பனையர் நின்னொடும் பிறரே’ (பொன்னோடு இரும்பை உவமித்தலையொப்பார் நின்னோடு பிறரை உவமிக்கு மிடத்தென்றவாறு): இவை வினைமுதல் ஒடு உருபான் வந்தன. முயற்சியிற் பிறத்தலானொலி நிலையாது : இதனுள் ‘முயற்சியினென்பது காரக வேது; ‘பிறத்தலானொலி நிலையாதென்பது ஞாபக ஏது. ஐந்தாவதற்கு உரிய ஏதுவும் ஈண்டு ஓதினது, ஏதுவை வரையறுத்தற்கு. ‘அன்ன பிறவுமென்றதனாற், கண்ணாற்கொத்தை : இது சினை வினைமுதற்கேறியது. ‘உறழ்மணியானுயர்மருப்பின’ ‘பெண்டகையாற் பேரமர்க் கட்டு’ இவை, ஆன் ஒடுவாயிற்று. ‘மனத்தொடு வாய்மை மொழியின்’: ஒடு, ஆனாயிற்று. மதியொனாக்குமுகம்: இஃது ஒப்பு. சூலொடு கழுதை பாரஞ் சுமந்தது : இது கட்புலனாகா ஒரு வினை ஒடு. இவை முதலியன கொள்க. இவற்றின் வேறுபாடு உய்த்துணர்க. (13) 76. நான்கா குவதே, கு எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி யெப்பொ ருளாயினுங் கொள்ளு மதுவே. இது, முறையானே நான்காவது இப்பொருட்கண் வருமென்கின்றது. (இ-ள்.) கு - எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி நான்காகுவதே - மேல் கு எனப் பெயர் கொடுத்து ஓதப்பட்ட வேற்றுமைச் சொல் நான்காவதாம்; அது எப்பொருளாயினுங் கொள்ளும் - அஃது யாதானுமொரு பொரு ளாயினும் அதனைத் தான் ஏற்று நிற்கும், எ-று. (உ-ம்.) அந்தணர்க்காவைக் கொடுத்தான் என வரும். மாணாக்கற்கு நூற்பொருளுரைத்தான் எனக் கொடைப்பொருளவாகிய சொல்லானன்றிப் பிற வாய் பாட்டாற் கூறுவனவும், மாணாக்கற்கு அறிவு கொடுத்தான் எனக் கொடுப்பான் பொருளாய்க் கொள்வான்கட்செல்லாது ஆண்டுத் தோன்றும் பொருளும் அடங்குதற்கு ‘எப்பொரு ளாயினுமென்றார். (14) 77. அதற்குவினை யுடைமையி னதற்குடம் படுதலி னதற்குப்படு பொருளி னதுவாகு கிளவியி னதற்கியாப் புடைமையி னதற்பொருட் டாதலி னட்பிற் பகையிற் காதலிற் சிறப்பினென் றப்பொருட் கிளவியு மதன்பால வென்மனார். இஃது, அதனை முடிக்க வரும் பொருள் வேறுபாடு கூறுகின்றது. (இ-ள்.) அதற்கு வினையுடைமை - ஒன்றற்கு ஒன்று பயன்படுதல், அதற்கு உடம்படுதல் - ஒன்றற்கு ஒரு பொருளை மேற் கொடுப்பதாக உடம்படுதல், அதற்குப்படு பொருள் - ஒன்றற்கு உரிமை உடையதாகப் பொதுவாகிய பொருளைக் கூறிடப்படுதல், அது ஆகு கிளவி - உருபு ஏற்கும் பொருள் தானேயாய்த் திரிவதோர்பொருண்மை, அதற்கு யாப்புடைமை - ஒன்றற்கு ஒன்று பொருத்தமுடைத்தாதல், அதற்பொருட்டாதல் - ஒரு பொருளினை மேற்பெறுதல் காரணமாக ஒரு தொழில் நிகழ்தல், நட்பு - ஒன்றற்கு ஒன்று நட்பாதல், பகை - ஒன்றற்கு ஒன்று பகையாதல், காதல் - ஒன்றற்கு ஒன்று காதலுடைத்தாதல், சிறப்பு - ஒன்றற்கு ஒன்று சிறத்தல், என்று கிளவியும் - என்று சொல்லப்பட்ட பொருள்களும், அப்பொருளும் - அன்ன பொருள்களும், அதன் பால என்மனார் - அந்நான்கனுருபின் கூற்றன வென்று கூறுவர் புலவர் எ-று. (உ-ம்.) கரும்பிற்கு வேலி. ‘நிலத்துக் கணியென்ப நெல்லும் கரும்பும்’ என்பதும் அது. வினை, உபகாரம். ‘சாத்தற்கு மகள்உடம்பட்டார்’ ‘சான்றோர் கொலைக்கு உடம்பட்டார்’ என்பதும் அது. சாத்தற்குக் கூறு கொற்றன். கடி சூத்திரத்திற்குப் பொன்: பொன்கடி சூத்திரமாய்த் திரியுமாதலின், ‘அதுவாகு கிளவியென்றார். கைக்குயாப் புடையது கடகம்; உண்டி வெய்யோர்க்குறுபிணி யெளிது என்பதும் அது. கூழிற்குக் குற்றேவல் செய்யும். அவற்கு நட்டான். ‘அவற்குத் தமன்’ என்பதும் அது. அவற்குப் பகை; ‘கள்வார்க்குத் தள்ளுமுயிர்நிலை’ என்பதும் அது. நட்டார்க்குக் காதலன்; ‘புதல்வற்கன்புறும்’ என்பதும் அது. வடுகரசர்க்குச் சிறந்தார் சோழியவரசர்; ‘கற்பார்க்குச் சிறந்தது செவி,’ என்பதும் அது. ‘அப்பொருளுமென்றதனானே, இச்சொற்குப் பொருள் இது. அவர்க்குச் சோறுஉண்டு, நினக்கு வலி வாள், அவ்வூர்க்கு இவ்வூர் காதம், ‘மனைக்குப்பாழ் வாணுதலின்மை.’ ‘போர்க்குப் புணைமன்.’ ‘பிணிக்கு மருந்து.’ ‘நட்டார்க்குத் தோற்றலை நாணாதோன்.’ ‘தன்சீரியனல்லாள் தானவற் கீன்ற மைந்தன்’, அவற்குத் தக்காளிவள், ‘உற்றார்க்குரியர் பொற்றொடி மகளிர்’ என்றாற்போல்வன கொள்க. (15) 78. ஐந்தாகுவதே, இன்னெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி யிதனி னிற்றிது வென்னு மதுவே. இது, முறையானே ஐந்தாவது இப்பொருட்கண் வருமென்கின்றது. (இ-ள்.) இன்னெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி ஐந்தாகுவதே - மேல் இன்னெனப் பெயர் கொடுத்து ஓதிய வேற்றுமைச் சொல் ஐந்தாவதாம்; அது ‘இதனின் இற்று இது,’ என்னும் - அஃது ‘இப்பொருளின் இத்தன்மையாயிருக்கும் இப்பொருளென்னும் பொருண்மையை உணர்த்தும், எ-று. ஐந்தாவது, பொருவும் எல்லையும் நீக்கமும் ஏதுவுமென நான்கு வகைப்படும். பொரு, உறழ் பொருவும் உவமப்பொருவு மென இருவகைப்படும். உறழ்தல், ஒன்றனான் ஒன்றை மிகுத்தல். ஏதுவும், ஞாபகவேதுவுங் காரக வேதுவுமென இருவகைப்படும். ஞாபகவேது முன்கூறிற்று. காரக ஏது, ‘அச்சம், ஆக்கமென்பனவற்றாற் பெறப்படும். நீக்கப் பொருண்மை, ‘தீர்தல், பற்றுவிடுதலென்பனவற்றாற் பெறப்படும். ஏனை இரண்டும் ‘இதனின் இற்று இதுவென்பதனாற் பெறப்படும், அவ் விரண்டனையும் அஃது இருமுறையான் உணர்த்துமாதலின். எல்லைப் பொருள், கருவூரின் கிழக்கு இவ்வூர், இதனினூங்கு என வரும். இவையும் ‘இற்றென்னும் பொருட்டு. (16) 79. வண்ணம் வடிவே யளவே சுவையே தண்மை வெம்மை யச்ச மென்றா நன்மை தீமை சிறுமை பெருமை வன்மை மென்மை கடுமை யென்றா முதுமை யிளமை சிறத்த லிழித்தல் புதுமை பழமை யாக்க மென்றா வின்மை யுடைமை நாற்றந் தீர்தல் பன்மை சின்மை பற்று விடுதலென் றன்ன பிறவும் அதன்பால வென்மனார். இஃது, அதனை முடிக்க வரும் பொருள் வேறுபாடு கூறுகின்றது. (இ-ள்.) வண்ணம்...... விடுதலென்று - வண்ணம் முதலாகப் பற்று விடுதல் ஈறாகச் சொல்லப்பட்ட பொருள்களும், அன்ன பிறவும் அதன்பால என்மனார் - அவை போல்வன பிற பொருள்களும் ஐந்தாம் வேற்றுமைத் திறத்தன வென்று கூறுவர் புலவர் எ-று. வண்ணம், வெண்மை கருமை முதலியன. வடிவு, வட்டஞ் சதுரம் முதலியன. அளவு, நெடுமை குறுமை முதலியன. சுவை, கைப்புப் புளிப்பு முதலியன. நாற்றம், நறுநாற்றந் தீநாற்ற முதலிய. (உ-ம்.) காக்கையிற்கரிது களம்பழம் - ‘இதனினென்பது, காக்கை; ‘இற்று’ என்பது கரிது; ‘இதுவென்பது களம்பழம். இதனின் வட்டமிது, இதனினெடிதிது, இதனிற்றீதிது, இதனிற்றண்ணிதிது இதனின்வெய்யதிது இதனினன்றிது இதனிற்றீதிது இதனிற்சிறிதிது இதனிற்பெரிதிது இதனின் வலிதிது இதனின்மெலிதிது இதனிற்கடிதிது இதனின்முதிதிது இதனினிளைதிது இதனிற்சிறந்ததிது இதனினிழிந்ததிது இதனிற்புதிதிது இதனிற்பழைதிது இவனினிலனிவன் இவனினுடையவனிவன் இதனினாறுமிது இதனிற்பலவிவை இதனிற்சிலவிவை. இவற்றிற்கு இருவகைப்பொருவும் விரிக்க. அச்சம், கள்ளரினஞ்சும். ஆக்கம், வாணிகத்தினாயினான்; ‘கோட்டிற் செய்த கொடிஞ்சி நெடுந்தேர்’ (பொருந. 163) என்பதுமது. தீர்தல் - ஊரிற்றீர்ந்தான்; ‘தலையினிழிந்த மயிரனையர்’ என வரும். பற்று விடுதல் - ‘காமத்திற் பற்று விட்டான்’ என வரும். ‘அன்ன பிறவுமென்றதனான், அவனினிளியனிவன், அதனிற் சேய்த்தி இகழ்ச்சியிற் கெட்டான், மகிழ்ச்சியின் மைந்துற்றான். என்பன போல்வன கொள்க. (17) 80. ஆறாகுவதே, அதுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி தன்னினும் பிறிதினு மிதன திதுவெனு மன்ன கிளவிக் கிழமைத் ததுவே. இது, முறையானே ஆறாவது இப்பொருட்கண் வருமென்கின்றது. (இ-ள்.) அது எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி ஆறாகுவதே - மேல் அதுவெனப் பெயர் கொடுத்தோதப்பட்ட வேற்றுமைச் சொல் ஆறாவதாம்; அது - அவ்வேற்றுமைச்சொல், தன்னினும் - ஒரு பொருளினது உடைமைப் பொருளாகி நிற்குந் தன்னோடு ஒற்றுமையுடைய பொருளானும், பிறிதினும் - ஒரு பொருளினது உடைமைப் பொருளாய் நிற்குந் தன்னின் வேறாகிய பொருளானும், ‘இதனது இது’ எனும் - ‘இப்பொருளினு டையது இப்பொருளென்பது பட நிற்கும், அன்ன கிளவிக் கிழமைத்து - அன்ன பொருளாற் தோன்றும் கிழமையைப் பொருளாக வுடைத்து, எ-று. ஈண்டுத் ‘தன்’ னென்றது. உருபேற்கும் பொருளை. ‘அன்ன’ யென்றார். ‘இதன இவை’ யென்னும் பன்மையுருபும், ‘ஆதென்னும் ஒருமை உருபும் அடங்குதற்கு. (உ-ம்.) சாத்தன வாடை, ‘தனாது வெள்வேல், யானை வளவன் கொல்லி மீமிசை’ என வரும். ஒன்று பல குழீஇயதும், வேறு பல குழீஇயதும், ஒன்றியற் கிழமையும், உறுப்பின் கிழமையும், மெய்திரிந்தாயதுமெனத் தற்கிழமை ஐந்து வகைப்படும், ‘ஐம்பாலுரிமையுமதன்தற் கிழமை.’ என்பது அகத்தியமாதலின். பொருளின் கிழமையும், நிலத்தின் கிழமையுங்காலத்தின் கிழமையுமெனப் பிறிதின் கிழமை மூவகைப்படும். (18) 81. இயற்கையி னுடைமையின் முறைமையிற் கிழமையிற் செயற்கையின் முதுமையின் வினையி னென்றா கருவியிற் றுணையிற் கலத்தின் முதலி னொருவழி யுறுப்பிற் குழுவி னென்றா தெரிந்துமொழிச் செய்தியி னிலையின் வாழ்ச்சியிற் றிரிந்து வேறுபடூஉம் பிறவு மன்ன கூறிய மருங்கிற் றோன்றுங் கிளவி யாறன் பால வென்மனார் புலவர். இஃது, அதனை முடிக்க வரும் பொருள் வேறுபாடு கூறுகின்றது. (இ-ள்.) இயற்கை........ வாழ்ச்சியின் - இயற்கை முதலாக வாழ்ச்சி ஈறாகச் சொல்லப்பட்டனவும், திரிந்து வேறு படூஉம் அன்ன பிறவும் - ஒரு சாரன திரிந்து வேறுபடும் அவை போல்வன பிறவுமாகிய, கூறிய மருங்கிற் தோன்றும் கிளவி - முற்கூறிய கிழமைப்பொருட்கட் தோன்றுஞ் சொல்லெல்லாம், ஆறன் பால என்மனார் புலவர் - ஆறாம் வேற்றுமைத் திறத்தன வென்று கூறுவர் புலவர், எ-று. (உ-ம்.) எண்ணது குப்பை - இஃது, ஒன்றுபல குழீஇய தற்கிழமை; படையது குழாம் - இது, வேறு பல குழீஇய தற்கிழமை; சாத்தனதியற்கை, நிலத்ததகலம் - இவை இயற்கைக் கிழமை; சாத்தனது நிலைமை, சாத்தனதில்லாமை - இவை நிலைக்கிழமை. இந்நான்கும் ஒன்றியற்கிழமை. ஒரு பொருளின் ஏகதேசம் அறிவித்தற்கு ‘ஒரு வழியுறுப் பென்றார். அவை யானையது கோடு, புலியதுகிர் - இவை உறுப்பின் கிழமை. செயற்கையாவது, தன்றன்மை திரிந்து வேறோர் தன்மையாதல்; அவை சாத்தனது செயற்கை, சாத்தனது கற்றறிவு. முதுமைக் கிழமை: அரசனது முதுமை, அரசனது முதிர்வு. இஃது அறிவின் முதிர்ச்சியென்பது அறிவித்தற்கு இளமை கூறாராயினார். வினைக்கிழமை: சாத்தனது வினை, சாத்தனது செலவு. இவை, மெய் திரிந்தாய தற்கிழமை. உடைமைக் கிழமை: சாத்தனதுடைமை, சாத்தனது தோட்டம். முறைமைக் கிழமை: மறியதுதாய், மறியது தந்தை. கருவிக் கிழமை: இசையது கருவி, வினைக் கலத்தது திகிரி. துணைக் கிழமை: அவனது துணை, அவனதிணங்கு. கலமாவது, ஓலை. நிலத்ததொற்றிக்கலம், சாத்தனது விலைத் தீட்டு. இஃது, இரு பொருட்கு உரிமை யுடைமையின், உடைமையின் வேறாயிற்று. முதற்கிழமை: ஒற்றியது முதல், ஒற்றியது பொருள். தெரிந்து மொழிச்செய்தி: தெரிந்து மொழியாற் செய்யப்படுதலிற் தெரிந்து மொழிச் செய்தியாயிற்று. கபிலரது பாட்டு. இது ‘பாரியது பாட்டு’ எனவும் நிற்றலின் இரு பொருட்கு உரியதாம். பரணரது பாட்டியல். இதுவும் அது. இவை பொருட்பிறிதின் கிழமை. கிழமைக் கிழமை: முருகனது குறிஞ்சி நிலம். இது நிலப்பிறிதின் கிழமை. வெள்ளியதாட்சி. இது காலப்பிறிதின் கிழமை. வாழ்ச்சி - காட்டது யானை: இது பொருட்பிறிதின் கிழமை, யானையது காடு - இது நிலப்பிறிதின் கிழமை. வாழ்ச்சி வாழ்தலை உணர்த்துங்கால் தற்கிழமையுமாம். ‘அன்ன பிறவுமென்றது, எட்சாந்து, கோட்டு நூறு; இவை முழுதுந் திரிந்தன. சாத்தனது ஒப்பு, தொகையது விரி, பொருளது கேடு, சொல்லது பொருள். இவை சிறிது திரிந்தன. (19) 82. ஏழாகுவதே; கண்ணெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி வினைசெய் யிடத்தி னிலத்திற் காலத்தி னனைவகைக் குறிப்பிற் றோன்று மதுவே. இது, முறையானே ஏழாவது இப்பொருட்கண் வருமென்கின்றது. (இ-ள்.) கண் எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி ஏழாகுவதே - மேல் கண் என்று பெயர் கொடுத்து ஓதப்பட்ட வேற்றுமைச் சொல் ஏழாவதாம்; அது வினை செய் இடத்தில் நிலத்தின் காலத்தின் அனை வகைக் குறிப்பிற் தோன்றும் - அது வினை செய்யாநிற்றலாகிய இடத்தின்கண்ணும், வினை நிகழாது வரையறை உடையதொரு நிலமாகிய இடத்தின்கண்ணும், வினை நிகழாது வரையறைப்பட்டு நிற்கும் காலமாகிய இடத்தின் கண்ணும் என மூவகைக் குறிப்பின்கண்ணும் தோன்றும், எ-று. எனவே, ஏழாவது இடப்பொருட்டாயிற்று. (உ-ம்.) தட்டுப்புடைக்கண் வந்தான், மாடத்தின்கண் ணிருந்தான், கூதிர்க் கண் வந்தான் என வரும். இவை இடமும் இடத்து நிகழ் பொருளும் வேறாய் வந்தன. குன்றத்தின்கட் குவடு - இஃது அவ்விரண்டும் ஒன்றாய் வந்தது. ‘குறிப்பிற் தோன்றும்’ என்றது, ‘அவற்றை இடமெனக் கருதியவழியே அவ்வேழனுருபு தோன்றுவது; அல்லுழித் தோன்றாதென்றவாறு. (20) 83. கண்கால் புறமக முள்ளுழை கீழ்மேல் பின்சா ரயல்புடை தேவகை யெனாஅ முன்னிடை கடைதலை வலமிட மெனாஅ வன்ன பிறவு மதன்பால வென்மனார். இஃது, இவ்வேழாவதற்கு முடிக்க வரும் பொருள் வேறுபாடின்றி உருபின் பாகுபாடே உடைமையின், உருபின் பாகுபாடே கூறுகின்றது. (இ-ள்.) கண் - கண்ணென்னும் பொருளும், கால்..... புடை - கால் முதலாகப் புடை ஈறாகச் சொல்லப்பட்ட உருபுகளும், தே வகை எனா - தே வகை என்னும் திசைக்கூற்றுப் பொருண்மையும், முன்..... இடம் எனா - முன் முதலாக இடம் ஈறாக ஓதப்பட்ட உருபுகளும், அன்ன பிறவும் - அவை போல்வன பிறவுருபுகளும், அதன்பால என்மனார் - ஏழாவதன் கூற்றனவென்று கூறுவர் புலவர், எ-று. இச்சூத்திரத்தாற் கூறிய உருபுகள் ஓர் இடத்தின் ஏகதேசத்தினை வரையறுத்து உணர்த்தும்வழி ஆறாவதனை உணர்த்தியும் ஓரிடத்தினை வரையறுத்துஉணர்த்தாது கண் ணென்பதுபோல இடமென முழுதுணர்வு செல்ல நின்றவழி ஏழாவதனையே உணர்த்தியும் நிற்கும் சிறப்பின்மை கருதி வேறாக எடுத்தோதினார். ஏழாவதற்கு இம்மூவகைப் பொருட் பாகுபாடன்றி வேறு பொருட்பாகுபாடு இன்மையின், முன்னையன போலப் பொருளினைப் பகுத்தோதாராயினர். ஆசிரியர் ‘கூறிய முறையினுருபு’ ‘இறுதியுமிடையும்’ என்னுஞ்சூத்திரங்களாற் பெயரிறுதிக்கும் முடிக்கும் சொற்கும் முன்னிற்பது உருபென்று கூறினமையாற் பொருளிடை நில்லாமையும் பெற்றாம். சிறந்த கண்ணென்னும் உருபை முற்கூறி, ஈண்டுக் கண் ணென்பதனைச் சிறப்பில்லா உருபுகளோடு எடுத்தோதினார், ‘கண்ணகன் ஞாலமென்புழி அக் ‘கண்’ ஞாலந்தன்னையே உணர்த்தி ஓரிடத்தினை வரையறுத்து உணர்த்தாது நிற்பதோர் இடைச்சொல்லென்பது உணர்த்துதற்கு. ‘தே வகை’ யென்னும் பொருள் வரையறைப்படாது, சொல்லுவான் குறிப்பிற்றாய் நிற்றலின், இடத்துள் அடக்காராயினார். இவ்விரண்டு பொருட்கும் வேறொர் சூத்திரஞ் செய்யாது இவ்வுருபுகளுடனே ஓதினார், சூத்திரம் சுருங்குதற்கு. (உ-ம்.) ஊர்க்காலிருந்தான், ஊர்ப்புறத்திருந்தான், மாடத்தகத்திருந்தான், ஊருளிருந்தான், சான்றோருழைச் சென்றான், மாடத்துக்கீழிருந்தான், மாடத்துமேலிருந்தான், ஏர்ப்பின் சென்றான், காட்டுச்சாரோடுங் களிறு, ஊரயலி ருந்தான், ஊர்ப்புடையிருந்தான், வடக்கண் வேங்கடம், தேர்முன் சென்றான், சான்றோரிடை யிருந்தான், கோயிற்கடைச் சென்றான், தந்தைதலைச் சென்றான், கைவலத்துஉள்ளது கொடுக்கும், கையிடத்துப் பொருள் என வரும். ‘அன்ன பிற’ வால் வருவன, குடத்தில் விளக்கு, ஊரிலே யிருந்தான், ‘கிழவோடேஎத்து’, கிழவிமாட்டு எனவும், பொருட்கணுணர்வு, மலர்க்கணாற்றம், ஆகாயத்துக்கட் பருந்து எனவும் வரும். இன்னும், மணியின்கண்ணொளி, கையின்கண் விரல், நிறத்தின்கண்ணெழில், ஆடற்கண்ணழகு எனக் கிழமையுஞ் சினையும் பண்பும் வினைப்பெயரும் பற்றி வரும். இனி, ‘கண் கால் முதலியன உருபை விளக்குதற்கு அவ்வுருபின் பொருளாய் நின்று, கண்ணெனுருபு விரித்துக் கொண்டு நிற்குமெனின், ‘கண்ணென்னும் உருபின் பொரு ளாவது, கண்ணென்னும் இடைச் சொல்லான்னுணர்த்தப்படும் இடப் பொருண்மையென்று பொருளுரைத்தாற், பின்வருகின்ற இடப்பொருண்மையை முன்னுங் கூறிற்றேயாமாகலின், கூறியது கூறிற்றாம். அல்லதூஉங் ‘கண்ணகன் ஞாலம்’ என்புழிக் கண் என்னும் இடைச் சொல்லான் உணர்த்தும் இடப்பொருண் மைக்கும் ‘இடத்துக்கண்ணெனக் கூறிய இப்பொருண்மைக்கும் வேறு கண்ணென் உருபு மீண்டுங் கூறல் வேண்டும். அல்லதூஉம், ‘கண்ணின்று கூறுதலாற்றானவனாயின்’ என்பத்து ‘என்கணின் றெனத் தோன்றா எழுவாயாய் நின்று கண்ணென் உருபேற்று நின்றதாம். அல்லதூஉம், வடக்கண் வேங்கடம் என்புழிக் கண்ணென் உருபு விரித்தலின், ஒழிந்தவற்றிற்கு ஒவ்வாதாம். அல்லதூஉம், ஆலின்கீழ்க் கிடந்த ஆ, மரத்தின்மேலிருந்த குரங்கு என்பன முதலியவற்றிற்குக் கண்ணெனுருபு கொடுத்து உலகம் வழங்காமை உணர்க. முன் இரண்டாவது முதலிய உருபுகளை முடித்தற்கு எடுத்தோதிய காப்பு முதலிய பொருள்களைப் போல உருபை முடித்து நில்லாது ஈண்டுக் கூறிய பொருள்கள் கண்ணென்னும் உருபையே உணர்த்திநின்றன என்றலிற் சேனாவரையரும் இப் பொருள்களை உருபு என்றே கூறினாராயிற்று. அங்ஙனங் கூறி அத்துச் சாரியை கொடுத்து உதாரணங் காட்டவே, உருபின் பின்னரும் அத்துச் சாரியை வருதல் தாமும் நேர்ந்தாராயிற்று. (21) 84. வேற்றுமைப் பொருளை விரிக்குங் காலை யீற்றுநின் றியலுந் தொகைவயிற் பிரிந்து பல்லா றாகப் பொருள்புணர்ந் திசைக்கு மெல்லாச் சொல்லு முரிய வென்ப. இது, வேற்றுமை தொக்குழி விரிக்குமாறும். அதற்கு இனமாகிய அன்மொழி தொக்குழி விரிக்குமாறுங் கூறுகின்றது. (இ-ள்.) வேற்றுமைப் பொருளை ஈற்று நின்று இயலுந் தொகைவயிற் பொருளை விரிக்கும் காலை - வேற்றுமைத் தொகைவயின் நின்ற பொருளை, அன்மொழித்தொகைவயின் நின்றபொருளை, விரிக்குங்காலத்து; பொருள் புணர்ந்து - அவ்வேற்றுமைப் பொருளொடும் அன் மொழிப் பொருளோடும் புணர்ந்து, பல் லாறு ஆகப் பிரிந்து இசைக்கும் எல்லாச் சொல்லும் உரிய என்ப - பலநெறியாகப் பிரிந்து ஒலிக்கும் எல்லாச் சொல்லும் விரித்தற்கு உரியவென்று கூறுவர் ஆசிரியர், எ-று. மேலும், ஈற்றுநின்றியலும் அன்மொழித் தொகையே யென்பர். கருங்குழற்பேதை, பொற்றொடி யரிவை, மட்குடம் என்னும் வேற்றுமைத் தொகைகள், கருங்குழலை வுடைய பேதை, பொற்றொடியை யணிந்த அரிவை, மண்ணானியன்ற குடம் என விரிந்தவாறு காண்க. தாழ் குழல், பொற்றொடி, மட்காரணம் என்னும் அன்மொழித் தொகைகள், தாழ் குழலையுடையாள், பொற்றொடியை யணிந்தாள், மண்ணாகிய காரணத்தான் இயன்றது. என விரிந்தவாறு காண்க. (22) வேற்றுமையியல் முற்றிற்று. வேற்றுமை மயங்கியல் ஒரு வேற்றுமைக்குரிய உருபு மற்றொரு வேற்றுமையோடு மயங்குவது உருபு மயக்கம், ஒரு வேற்றுமைக்குரிய பொருள் மற்றொரு வேற்றுமையிற் சென்று மயங்குவது பொருள் மயக்கம். இவ்விருவகை மயக்கத்தினையுங் கூறுவது இவ்வியல். அதனால் இது வேற்றுமை மயங்கியலென்னும் பெயர்த்தாயிற்று. வேற்றுமைக்குச் சொல்லிய இலக்கணத்திற் பிறழ்ந்து வழுவாய் அமைத்துக்கொள்ளப்படுவனவும் பிறவுமாக வேற்றுமையொடு தொடர்புடைய விதிகள் சில ஈண்டுக்கூறப்படுதலின் வேற்றுமை மயங்கியலென்னும் இப்பெயர் பன்மை நோக்கிச் சென்ற குறி யென்றும் இதன்கண் “யாதனுருபிற் கூறிற்றாயினும்” என்ற சூத்திரத்தால் உருபு மயக்கமுணர்த்தி ஏனைச் சூத்திரங்களாற் பொருள் மயக்கமுணர்த்தினாரென்றுங் கூறுவர் சேனாவரையர். இவ்வியலிலுள்ள சூத்திரங்களை 35-ஆக இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும், 34-ஆகச் சேனாவரையரும், 33-ஆகத் தெய்வச்சிலையாரும் பகுத்து உரை கூறியுள்ளார்கள். இவ்வியலின் தொடக்கத்தே ‘கருமமல்லாச் சார்பென் கிளவி’ (1) என்பது முதல் ‘அச்சக் கிளவிக்கு’ (17)என்னும் சூத்திர முடிய வேற்றுமைப் பொருள் மயக்கம் உணர்த்தி ‘அன்னபிறவும்’ (18) என்பதனால் அதற்குப் புறனடையுங்கூறி முடித்தார். பொருள் மயக்கமாவது ஒவ்வொரு வேற்றுமைக்கும் உரியனவாக வேற்றுமையியலிற் சொல்லப்பட்ட காத்தல் ஒத்தல் முதலிய அவ்வவ்வேற்றுமையின் பொருட் பகுதிகள் தமக்குரிய வேற்றுமைப் பொருளைவிட்டு நீங்காது பிறிதொரு வேற்றுமையின் பொருளின் கண்ணே சென்று மயங்குதலாம். எடுத்துக்காட்டாக ஒன்றை நோக்குவோம். இரண்டாம் வேற்றுமைக்குச் சொல்லப்பட்ட ‘காப்பின் ஒப்பின்’ எனவரும் பொருட் பகுதிகளுள் சார்பு பொருண்மையும் ஒன்றாகும். அது கருமச் சார்பும் கருமமல்லாச் சார்பும் என இரண்டு வகைப்படும். அவற்றுள் கருமச் சார்பாவது தூணைச்சார்ந்தான் என்றாற்போல ஒன்றையொன்று மெய்யுற்றுச் சார்தலாகும். கருமமல்லாச் சார்பென்பது அரசரைச் சார்ந்தான் என்றாற்போல ஒன்றையொன்று மெய்யுறுதலின்றி வருவதாகும். இவற்றுள் கருமமல்லாத சார்புபொருண்மை தனக்குரிய இரண்டாம் வேற்றுமையாகிய செயப்படு பொருளில் நீங்காது அரசர்கட் சார்ந்தான் என ஏழாம் வேற்றுமைக்குரிய இடப் பொருளிலும் மயங்கினமை காணலாம். இவ்வாறே தொல் காப்பியனார் கூறிய ஏனைய வேற்றுமைப் பொருள் மயக்கங்களையும் பகுத்துணர்ந்து கொள்ளுதல் பயில்வோர் கடனாகும். இனி உருபு மயக்கமாவது ஒரு வேற்றுமைக்குரிய உருபு தனக்குரிய வேற்றுமைப் பொருளை விட்டுப் பிறிதொரு வேற்றுமைப் பொருளிற் சென்று மயங்குதல் ‘நாணற் கிழங்கு மணற்கு ஈன்ற முளை’ என்புழி நாணற் கிழங்கு மணலிடத்தே தோற்றுவித்த முளையென்பது பொருளாதலால், மணற்கண் எனக் கண்ணுருபு நிற்க வேண்டிய ஏழாம் வேற்றுமைப் பொருளிடத்தே மணற்கு என நான்காம் வேற்றுமை யுருபு மயங்கியதெனக் கொள்ளுதல் வேண்டும். இவ்வாறு ஒரு தொடர் எந்த வேற்றுமை யுருபினாற் சொல்லப்பட்டாலும் அவ்வுருபிற் கேற்பப் பொருளை மாற்றாமல் பொருளுக்கேற்ப உருபினை மாற்றிக் கொள்ளுதல் வேண்டுமென்பார், ‘யாதனுருபிற் கூறிற்றாயினும் பொருள் செல்மருங்கின் வேற்றுமைசாரும்’ என்றார் ஆசிரியர், வேற்றுமை யுருபுகள் ஒன்றும் பலவுமாகத் தொடர்ந்து அடுக்கி, முடிக்குஞ் சொல்லொன்றால் முடிதலும், அவ்வுருபுகள் ஒரு தொடரின் இடையிலே யன்றி இறுதியிலும் நிற்றலும், இங்ஙனம் இறுதியிலும் இடையிலும் விரிந்து நின்ற எல்லா வுருபுகளும் முடிக்குஞ் சொல்லொன்றினால் முடிதலேயன்றித் தனித்தனி முடிக்குஞ் சொல்லைப் பெற்று முடிதலும், விரிந்து நிற்பதாகிய தொகாநிலைத் தொடரின்கண்ணே நின்ற அவ்வுருபுகள் மறைந்து நிற்றலும் உளவென்பதும், தொடரிறுதியிலே மறைந்து நிற்றற்குரிய உருபுகள் ஐயுருபும் கண்ணுருபுமேயன்றி ஏனைய அல்லவென்பதும், கு, ஐ, ஆன் என்னும் இவ்வுருபுகள் அகரம் பெற்றுத் திரிவனவென்பதும், ஒரு வேற்றுமையின் பொருள் சிதையாமல் அதன்கண் பிறிதொரு வேற்றுமையின் உருபு மயங்கி நிற்றல் கூடுமென்பதும், அவ்வாறு நான்காம் வேற்றுமை யுருபு பிறவேற்றுமைகளின் பொருள் சிதையாமல் மயங்கி நிற்கும் இடங்கள் இவை யென்பதும், இங்ஙனமே ஏனையுருபுகளும் வழக்கு நடையை யொட்டி மயங்கி வருதலால் அவை குற்றமுடையன அல்லவென்பதும் ஆகிய உருபு மயக்கம்பற்றிய விதிகளை இவ்வியலில் 19 முதல் 28 வரையுள்ள சூத்திரங்களால் ஆசிரியர் தெளிவுபடுத்துகின்றார். இவ்வேற்றுமைகளை முடிக்குஞ் சொல்லாயும் ஏற்குஞ் சொல்லாயும் வருவன வினையும் பெயருமாதலின் வினைச் சொல்லால் அறியப்படுந் தொழிற்காரணங்களையும் பெயர்ச்சொல்லால் அறியப்படும் பொருள் வேறுபாட்டினையும் ஆசிரியர் இவ்வியலிற் கூறுகின்றார். வினை, செய்வது, செயப்படுபொருள், நிலம், காலம், கருவி என்னும் ஆறுடனே இன்னதற்கு, இது பயன் எனவரும் இரண்டினையுங் கூட்டத் தொழிலுக்குரிய காரணங்கள் எட்டாமென்றும், எல்லாத் தொழிற்கும் இவ்வெட்டும் வருமென்னும் இன்றியமையாமை யில்லை; இவற்றுள் சில தொழிற்கண் ஒன்றிரண்டு குறையத்தக்கன வழக்கின்கண் குறைந்துவரு மென்றும் வினைக்குரிய முதனிலை களைக் குறித்து ஆசிரியர் விளக்கியுள்ளார். ஒரு பொருளின் இயற்பெயர் மற்றொரு பொருளுக்கு ஆகி வருவது ஆகுபெயராம். முதலுக்குரிய இயற்பெயரால் சினைப் பொருளும், சினைக்குரிய பெயரால் முதற்பொருளும், இடத்தின் பெயரால் அவ்விடத்து நிகழ் பொருளும், பண்பின் பெயரால் பண்பு கொள்பொருளும், காரணப் பெயரால் அக்காரணத்தால் இயன்ற காரியப் பொருளும், இரண்டுபெயர்தொக்கு ஒருசொல் நீர்மைப்பட்டு நிற்றலால் மற்றொரு பொருளும், செயப்படு பொருளை யுணர்த்தும் பெயரால் வினைமுதலாகிய பொருளும் விளங்க நிற்பன ஆகுபெயர்களாம். அளவுப்பெயரும் நிறைப் பெயரும் அளக்கப்படுவதும் நிறுக்கப்படுவதுமாகிய பொருளை யுணர்த்தின் அவையும் ஆகுபெயரேயாம். எனவே ஒரு பொருளின் இயற்பெயர் ஆப்பொருளோடு தொடர்புடைய பிறிதொரு பொருளின் மேல் ஆகிவருங்கால் ஆகுபெயரெனப்படுமென்பது நன்கு புலனாம். இவ் வாகுபெயர்கள் இயற்பெயராய் நின்ற காலத்துத் தமக்குரிய பொருளின் நீங்காது நின்று தம் பொருளைவிட்டுப் பிரியாத தொடர்புடைய பொருளை யுணர்த்துதலும், அவ்வாறு நெருங்கிய தொடர்பின்றி அச்சொற்பொருளோடு ஒருவாற்றான் தொடர்புடையவேறொ ரு பொருளையுணர்த்துதலும் என இவ்விரண்டியல்பினையுடையன என்பர் தொல்காப்பியர். எனவே இவ்வாகுபெயர்களெல்லாம் நின்றாங்கு நின்று தம் இயற்பெயர்ப் பொருளையும் வேறுணர்த்தி நிற்கும் ஆற்றலுடையன வென்பது பெறப்படும். இவ்வாறு இயற்பெயர்கள் தம் பொருளோடு தொடர்புடைய வேறொரு பொருள்மேல் ஆகிவருங்கால் அங்ஙனம் ஆதற்குரிய பொருட்டொடர்பு ஐ முதலிய அறுவகை வேற்றுமைகளின் இடமாக நின்று தோற்றுமியல்பினதாகும். இவ்வாறு ஆகுபெயர்களெல்லாம் வேற்றுமைப் பொருள்களுடன் நெருங்கிய தொடர்புடையன என்பதை ஆராய்ந்தறிதல் வேண்டு மென்பார் வேற்றுமை மருங்கிற் போற்றல் வேண்டும்’ என்றார் தொல்காப்பியனார். இங்ஙனம் ஆசிரியர் கூறியதனையுளங் கொண்டு “இவ்வாகுபெயர்கள் எழுவாய் வேற்றுமை மயக்கமென்றுணர்க” என நச்சினார்க்கினியரும், “முதலிற் கூறுஞ் சினையறி கிளவியும் சினையிற்கூறும் முதலறிகிளவியும் பண்புகொள் பெயரும் இருபெயரொட்டும் ஆறாம் வேற்றுமைப் பொருள் மயக்கம். பிறந்தவழிக் கூறல் ஏழாம் வேற்றுமைப்பொருள் மயக்கம். இயன்றது மொழிதலும் வினைமுதலுரைக்குங் கிளவியும் மூன்றாம் வேற்றுமைப்பொருள் மயக்கம்” எனத் தெய்வச்சிலையாரும் கூறியவை இவண் கருதத் தக்கனவாம். ஆகவே வேற்றுமைப் பொருண்மயக்கமாகிய ஒப்புமைகருதி ஆகுபெயரிலக்கணம் இவ்வியலின் இறுதிக்கண் கூறப்பட்ட தென்பது பழைய உரையாசிரியர்களின் கருத்தாதல் நன்கு பெறப்படும். ஆகுபெயர்ச் சூத்திரத்தின்கண்வரும் இருபெயரொட் டென்பதற்குப் ‘பொற்றொடி’ யென உதாரணங்காட்டினர் இளம்பூரணர். அதனையுணர்ந்த சேனாவரையர் இருபெயரொட் டென்பதற்கு “அன்மொழித் தொகைமேல்வரும் இருபெயரொட்டு” எனப்பொருள் கூறியதோடு தொகையாத லுடைமையால் எச்சவியலுளுணர்த்தப்படும் அன்மொழித் தொகை இயற்கைப் பெயர் ஆகுபெயர் என்னும் இருவகைப் பெயருள் ஆகுபெயரென ஒன்றாயடங்குதல் பற்றி ஈண்டுக் கூறப்பட்டது என விளக்கமுங் கூறியுள்ளார். ‘பொற்றொடி’ யென்பது அன்மொழித் தொகையாவதன்றி ஆகுபெயராகாதெனக்கண்டுணர்ந்த நச்சினர்க்கினியர் இருபெயரொட்டென்பதற்கு ‘அன்மொழிப் பொருள்மேல் நில்லாத இரு பெயரொட்டு’ எனப் பொருள்கூறி மக்கட்சுட்டு, என அதற்கு உதாரணமுங் காட்டினார். மக்கள்+சுட்டு என்னும் இருபெயரும் ஒட்டி நின்று மக்களாகிய சுட்டப்படும் பொருள் என்னும் பொருளைத்தந்தன. இதன்கண் சுட்டு என்னும் பெயர் சுட்டப்படும் பொருளையுணர்த்தி ஆகுபெயராய் நிற்ப, மக்கள் என்னும் முதன்மொழி அவ் வாகுபெயர்ப் பொருளை விசேடித்து நிற்க இங்ஙனம் இருபெயரும் ஒட்டிநின்றனவாதலின் இருபெயரொட்டென்றார் ஆசிரியர். இதன்கண் பின்னுள்ள மொழியே ஆகுபெயராய் நின்றதாதலின் இதனைப் பின்மொழி யாகுபெயரென்பாருமுளர். இனி ‘பொற்றொடி’ என்னும் தொடரின்கண் பொன் என்னும் முதல்மொழி இவ்வாறு அன்மொழித் தொகைப்பொருளை விசேடித்து நில்லாது தொடி யென்னும் இயற்பெயர்ப் பொருளையே விசேடித்து நிற்க அவ்விரு சொற்களின் தொகையாற்றலால் அவ்விரண்டுமல்லாத மற்றொரு மொழியின் பொருள் தோன்றக் காண்கின்றோம். எனவே மக்கட்சுட்டு என ஆகுபெயராய்வரும் இருபெயரொட்டும் பொற்றொடியென அன்மொழித் தொகைமேல் வரும் இருபெயரொட்டும் தம்முள் வேறெனவே உணர்தல் வேண்டும். இருபெயரொட்டென்பது, ‘இரண்டு பெயர் தொக்கு ஒரு சொல் நீர்மைப்பட்டு மற்றொரு பொருள் தரு பெயராகி வருவது’ எனக்கூறித் துடியிடை யென்பது துடிபோன்ற இடையினை யுடையாளை யுணர்த்தி ஆகுபெயராயிற்று என உதாரணங்காட்டி விளக்கிய தெய்வச்சிலையார், ஆகுபெயராவது ஒட்டுப்பட்ட பெயரோடு ஒற்றுமைப்பட்டுவரும் என்றும் அன்மொழித் தொகையாவது அப்பொருளின் வேறுபட்டு வருமென்றும் அத்தன்மை யுடையதாதல் அன்மொழி என்ற சொல்லாலேயே விளங்கு மென்றும் அவ்விரண்டிற்கும் வேறுபாடு காட்டினார். எனினும் அவர் இருபெயரொட்டாகு பெயர்க்குக்காட்டிய துடியிடை யென்பதும் சேனாவரையர் காட்டிய பொற்றொடி யென்பதுபோல இரண்டு பெயருந்தொக்க தொகையாற்றலால் அதனையுடையாளை யுணர்த்திய அன்மொழி தொக்கு நின்றதெனக் கொள்ளுதற்கும் இடமுண்டாதலின் அதனை ஒருதலையாக ஆகுபெயரெனத் துணிதற்கில்லை. ஆகுபெய ரென்றும் அன்மொழித்தொகையென்றும் வேறுவேறு இலக்கணமுடையனவாக ஆசிரியர் கூறுதலால் ஆகுபெயரும் அன்மொழித் தொகையும் தம் பொருளுணர்த்தாது பிறிது பொருளுணர்த்தலான் ஒக்குமாயினுங் ஆகுபெயர் ஒன்றன் பெயரான் அதனோடு தொடர்புடைய பிறிது பொருளையுணர்த்தி ஒருமொழிக் கண்ணதாய் வருமென்றும் அன்மொழித்தொகை அத்தகைய தொடர்பெதுவும் வேண்டாது இருமொழியுந் தொக்க தொகையாற்றலால் பிறிது பொருளுணர்த்தி இருமொழிக்கண் வருமென்றும் இவையே இரண்டிற்கும் வேறுபாடென்றும் சிவஞானமுனிவர் கூறுங் கொள்கையே ஆசிரியர் தொல்காப்பியனார்க்கு உடன்பாடாதல் பெற்றாம். - க. வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 197-202 மூன்றாவது வேற்றுமை மயங்கியல் 85. கரும மல்லாச் சார்பென் கிளவிக் குரிமையு முடைத்தே கண்ணென் வேற்றுமை. என்பது சூத்திரம். இது, தன் பொருளிற் தீராது பிறின்றன் பொருட்கட் செல்லும் பொருண் மயக்கமுந், தன் பொருளிற் தீர்ந்து செல்லும் உருபு மயக்கமுமென்னும் இருவகை மயக்கமும் உணர்த்தலின், ‘வேற்றுமை மயங்கியலென்னும் பெயர்த்தாயிற்று. இச்சூத்திரம், இரண்டாவதன் பொருளும், அதிகாரத்தானின்ற ஏழாவதன் பொருளும் மயங்கும் மயக்கங் கூறுகின்றது. (இ-ள்.) கருமம் அல்லாச் சார்பு என் கிளவிக்கு - கருமச் சார்ச்சியல்லாத ‘அரசரைச் சார்ந்தானென வரும் சார்பென்னும் பொருண்மைக்கு, கண் என் வேற்றுமை உரிமையும் உடைத்து - ஏழாம் வேற்றுமை உரித்தாய் வருதலுமுடைத்து, எ-று. ‘தூணினைச் சார்ந்தானென்றாற்போல மெய்யுறலின்றி, ‘அரசர்கட் சார்ந்தான்,’ என வரும். இதனுள் அரசரது சார்தற்கிடமாகிய அருள், தன் பொருளதனினீங்காதே பிறிதின் பொருளாகிய செயப்படு பொருட்கட் சென்றது ஏழாவது. ‘தூணின்கட் சார்ந்தானென்பது வழக்கமின்று, ஆசிரியர் மறுத்தலின், (1) 86. சினைநிலைக் கிளவிக் கையுங் கண்ணும் வினைநிலை யொக்கு மென்மனார் புலவர். இதுவும் அவ்விரண்டன் மயக்கங் கூறுகின்றது. (இ-ள்.) சினை நிலைக் கிளவிக்கு - சினைப்பொருண்மேல் நிற்கும் சொல்லிற்கு, ஐயும் கண்ணும் வினை நிலை ஒக்கும் என்மனார் புலவர் - இரண்டாவதும் ஏழாவதும் வினைகூறும் நிலைமைக்கண் ஒக்குமென்று கூறுவர் புலவர், எ-று. (உ-ம்.) கோட்டைக் குறைத்தான், கோட்டின்கட் குறைத்தான் என வரும். ‘அறுத்தல் குறைத்தல் முதலிய இரண்டாவதன் பொருட்கண் ஏழாவது வந்ததேனும் வழக்குப்பயிற்சி நோக்கி, ‘வினைநிலை யொக்குமென்றார். (2) 87. கன்றலுஞ் செலவு மொன்றுமார் வினையே. இதுவும் அது. (இ-ள்.) கன்றலும் செலவும் - கன்றற்பொருள்மேல் வருஞ் சொல்லும், செலவுப் பொருண்மேல் வருஞ் சொல்லும், ஒன்றுமார் வினையே - இரண் டாவதற்கும் ஏழாவதற்கும் ஒரு தொழில, எ-று. (உ-ம்.) சூதினைக் கன்றினான், சூதின்கட் கன்றினான்; நெறியைச் சென்றான், நெறிக்கட் சென்றான் என வரும். பொருள்பற்றி ஓதினமையாற் சூதினையிவறினான், சூதின்கண்ணிவறினான்; நெறியையடைந்தான், நெறிக்கணடைந் தான் எனவும் வரும். இஃது இரண்டாவதன் பொருளை எடுத்தோதலின், வேறுகூறினார். வழக்கின்கட் பயின்றுவருதலின், ஏழாவதனையும் ஒப்பக்கூறினார். சினை முதல் மயக்கங் கூறுகின்றதற்கு இடையே இச்சூத்திரம் வைத்தார், இரண்டாவதும் ஏழாவதும் அதிகாரத் தாற் பெறுகின்ற இயைபு நோக்கி. (3) 88. முதற்சினைக் கிளவிக் கதுவென் வேற்றுமை முதற்கண் வரினே சினைக்கை வருமே. இஃது, உருபு மயக்கமாய் வருவனவற்றைக் கூறுமாறு கூறு கின்றது. (இ-ள்.) முதல் சினைக் கிளவிக்கு - முதற்சொல்லொடு தொடர்ந்த சினைச்சொல்லிற்கு, அது என் வேற்றுமை முதற்கண் வரின் - ஆறாம் வேற்றுமை முதற்கண்ணே வருமாயின், சினைக்கு ஐ வரும் - சினைச் சொல்லின்கண் இரண்டாம் வேற்றுமை வரும், எ-று. (உ-ம்.) யானையது கோட்டைக் குறைத்தான், என வரும். இஃது ஒரு தொடர்க்கண் இரண்டுருபு வருதலின் மயக்க மாயிற்று. (4) 89. முதன்மு னைவரிற் கண்ணென் வேற்றுமை சினைமுன் வருத றெள்ளி தென்ப. இது பொருண்மயக்கம் உணர்த்துகின்றது. (இ-ள்.) முதல் முன் ஐ வரின் - அம்முதற்சினைக் கிளவிக்கண் முதற் சொல் முன் இரண்டாம் வேற்றுமை வரின், சினைமுன் கண் என் வேற்றுமை வருதல் தெள்ளிது என்ப - சினைச்சொல் முன் கண் என் வேற்றுமை வருதல் தெள்ளிதென்று கூறுவர் ஆசிரியர், எ-று. (உ-ம்.) யானையைக் கோட்டின்கட் குறைத்தான். இது பொருண்மயக்கம். ‘தெள்ளிதென்றதனான், யானையைக் கோட்டைக் குறைத்தானென ஐகாரம் வருதலும், முன்னர்க் கூறிய வெல்லாம் பண்புந் தொழிலும் பொருட்டொடர்ச்சியும் பற்றி வருதலுங் கொள்க. மணியது நிறத்தைக் கெடுத்தான், மணியை நிறத்தின்கண் கெடுத்தான் என முற்கூறியதும் இவையும், ஒரு தொடரின் இரண்டு உருபும் மயங்கலின், உருபு மயக்கம் தலைமகனைச் செலவின்கண் அழுங்குவித்தல், இது பொருண் மயக்கம். தலைமகனது செலவை அழுங்குவித்தல், தலைமகனைச் செலவின் கண் அழுங்குவித்தல், தலைமகனைச் செலவை அழுங்குவித்தல், சாத் தனை நூலை ஓதுவித்தான், யாற்றை நீரை விலக்கினான் - என வரும் இவையும் உருபு மயக்கம். (5) 90. முதலுஞ் சினையும் பொருள்வேறு படாஅ நுவலுங் காலைச் சொற்குறிப் பினவே. இது முதல் சினைகளை ஆராய்கின்றது. (இ-ள்.) முதலுஞ் சினையும் பொருள் வேறுபடாஅ - முதலுஞ் சினையும் முதலாயது முதலேயாய்ச் சினையாயது சினையேயாய்ப் பொருள்கள் தம்முள் வேறுபட நில்லா; நுவலுங்காலைச் சொற் குறிப்பின - சொல்லுங்கால் சொல்லு வானது சொல்லுதற் குறிப்பினான் முதலென்றும் சினையென்றும் வழங்கப்படும், எ-று. (உ-ம்.) கோட்டது நுனியைக் குறைத்தான், கோட்டை நுனிக்கட் குறைத்தான், கோட்டை நுனியைக் குறைத்தான் - என ஒரு முதலின் சினையை முதலாகக் குறித்தவழி அதுதான் முதலாய் நின்றவாறு காண்க. ‘படையென்பதனை முதலாகப் பார்க்கும்வழிப் ‘படையினது யானை’ என முதல் சினையாய் நிற்கும்.(6) 91. பிண்டப் பெயரு மாயிய றிரியா பண்டியன் மருங்கின் மரீஇய மரபே. இது, பிறனுடம்பட்டது தானுடம்படுதல்,’ (பொருள். 665) (இ-ள்.) பிண்டப் பெயரும் ஆயியல் திரியா - பல பொருட் டொகுதியை உணர்த்தும் பெயரும் முதற்சினைப் பெயர் இயல்பிற் திரியா; பண்டு இயல் மருங்கின் மரீஇய மரபே - அவ்வாறு அவற்றை முதலுஞ் சினையுமாக வழங்குதல் மேற்றொட்டு வழங்கி வாராநின்ற கூற்றான் மருவிய முறை, எ-று. (உ-ம்.) குப்பையது தலையைச் சிதறினான், குப்பையைத் தலைக்கட் சிதறினான், குப்பையைத் தலையைச் சிதறினான் - என வரும். இது, முதல் சினை யதிகாரத்தின் இலக்கணமல்லா மரூஉக் கூறினார். இது, வேறுபல் குழீஇய படை முதலியவற்றிற்கும் ஒக்கும். (7) 92. ஒருவினை யொடுச்சொல் லுயர்பின் வழித்தே. இது, மூன்றாவதன்கட் சொல்லுதல் வகைமை கூறுகின்றது. (இ-ள்.) ஒரு வினையொடுச் சொல் - ‘அதனோ டியைந்த வொரு வினைக் கிளவி’ என மூன்றாவதற்கு ஓதிய ஒருவினை ஒடுச்சொல், உயர்பின் வழித்து - உயர்ந்த பொருளை உணர்த்தும் பெயர்வழித் தோன்றும், எ-று. (உ-ம்.) அரசனொடு இளையர் வந்தார் - என வரும். இஃது உயர்பொருளும் இழிபொருளும் பற்றி மயங்கி வருதலின், ஈண்டுக் கூறி, இழிபொருளை விலக்கினார். சாத்தனொடு கொற்றன் வந்தான் என, உயர்பில்வழி எண்ணொடு வந்தது. குலந், தவங், கல்வி, வினை, உபகாரம் முதலியவற்றான் உயர்பு கொள்க. ‘நாயொடு நம்பி வந்தான்’ என்றாற்போல்வன இழிபொருட் கண்ணும் ஒரு வினை ஒடுச்சொல் வந்ததாலெனின், அது யாதானும் ஒருவாற்றான் அதற்கு உயர்புண்டாயினல்லது அவ்வாறு கூறார்; கூறுப வாயின், அஃது ‘ஒருவினை யொடுச்சொல்’ லெனப்படாது. ‘கைப்பொருளொடு வந்தான்’ என்றாற் போலப் பிறிதொரு பொருள் தந்த ஒடு; அது, ‘பொருளுண்டாக வந்தானென்றலின். (8) 93. மூன்றனு மைந்தனுந் தோன்றக் கூறிய வாக்கமொடு புணர்ந்த வேதுக் கிளவி நோக்கோ ரனைய வென்மனார் புலவர். இது, மூன்றாவதற்கும் ஐந்தாவதற்கும் ஏது ஒத்த கிழமைய என்கின்றது. (இ-ள்.) மூன்றனும் ஐந்தனுந் தோன்றக் கூறிய - மூன்றாம் வேற்றுமைக் கண்ணும் ஐந்தாம் வேற்றுமைக்கண்ணும் விளங்கச் சொல்லப்பட்ட, ஆக்கமொடு புணர்ந்த ஏதுக் கிளவி - ஆக்கத்தோடு கூடிய ஏதுச்சொல், நோக்கோரனைய என்மனார் புலவர் - அவ்வேதுப் பொருண்மையை நோக்கும் நோக்கு ஒரு தன்மைய என்று கூறுவர் புலவர், எ-று. (உ-ம்.) வாணிகத்தானாயினான், வாணிகத்தானாய பொருள்; வாணிகத்தினாயினான். வாணிகத்தினாய பொருள் - என வரும். எனவே, ஞாபக வேதுவின் கண் வரும் இன்னும் ஆனும் ஒத்த உரிமையிலவென்பது பெற்றாம். இஃது உருபும் பொருளும் மயங்கிற்று. (9) 94. இரண்டன் மருங்கி னோக்க னோக்கமவ் விரண்டன் மருங்கி னேதுவு மாகும். இது நோக்கனோக்கத்திற்கு ஏதுவுஞ் செயப்படு பொருளும் ஒத்த உரிமைய என்கின்றது. (இ-ள்.) இரண்டன் மருங்கின் நோக்கேல் னோக்கம் - இரண்டாவதற்கு உரித்தாக ஓதிய கண்ணானோக்கும் நோக்கமின்றி மனத்தானோக்கும் நோக்கம், அவ்விரண்டன் மருங்கின் ஏதுவுமாகும் - அம்மூன்றாவதற்கும் ஐந்தாவதற்கும் உரிய ஏதுப் பொருண்மையுமாம், எ-று. (உ-ம்.) ‘வானோக்கி வாழுமுயிரெல்லாம் என்புழி ‘வானை நோக்கி வாழும்’ உலகம் என விரியும் வழி என ‘வானானாய பயனைக் கருதி உயிர்வாழும்’ எனவும் வானின் ஆய பயனைக் கருதி உயிர்வாழுமெனவுஞ் செயப்படுபொருளும் ஏதுவும் ஒப்பப் பிறந்து நிற்றல் இச்சூத்திரத்திற்குக் கருத்து. இஃது உருபும் பொருளும் மயங்கிற்று. (10) 95. அதுவென் வேற்றுமை யுயர்திணைத் தொகைவயி னதுவெ னுருபுகெடக் குகரம் வருமே. இஃது, ஆறாவதற்கு ஓதிய முறைப்பொருட்கண் நான்காவது விரியுமாறும், ஆறன் உருபு கெட அதன் உடைமைப்பொருள் விரியுமாறுங் கூறுகின்றது. (இ-ள்.) உயர்திணைத் தொகைவயின் குகரம் வரும் - உயர் திணைப் பொருள் இரண்டு சேர்ந்தவிடத்து உருபு விரிப்புழி நான்கனுருபு விரியும், அது என் வேற்றுமை அது என் உருபு கெட வரும் - அதுவன்றி அவ்வுயர்திணைத் தொகைவயின் ஆறாம் வேற்றுமையை விரிப்புழி அவ்வதுவெனுருபு தான் கெட்டுப்போக அதனுடைமைப் பொருள் விரியும், எ-று. (உ-ம்.) ‘நம்பி மகன்’ என்னுந் தொகை, ‘நம்பிக்கு மகன்’ என விரியும், இஃது உருபு மயக்கம். இனி, ‘நின்மகள், பாலுமுண்ணாள் பழங்கண் கொண்டு’ ‘யாம்எம் மகனைப்பாராட்ட’ ‘என்ன ணியியற் குறுமகளாடிய’ என்பவற்றுள் அதுவெனருபு கெட, அதனுடைமைப் பொருள் விரிந்தவாறு காண்க. இவை உருபு நிலைக்களத்துப் பொருள் மயங்கின. இவற்றிற்கு நான்கனுருபு விரிப்பின், ‘நினக்கு மகளாகியவள், எனக்கு மகனாகியவனை, எனக்கு மகளாகிய குறுமகள்’ என ஆக்கங் கொடுத்துக் கூறல் வேண்டும்; ஆண்டு அம்முறைமை செயற்கையாமாகலின், அது பொரு ளன்மை யுணர்க. (11) 96. தடுமாறு தொழிற்பெயர்க் கிரண்டு மூன்றுங் கடிநிலை யிலவே பொருள்வயி னான. இஃது, இரண்டாவதும் மூன்றாவதும் மயங்குமாறு கூறுகின்றது. (இ-ள்.) தடுமாறு தொழிற்பெயர்க்கு - தனக்கே உரித்தாய் நில்லாது ஒருகால் ஈற்றுப் பெயரொடுஞ் சென்று தடுமாறுந் தொழிலொடு தொடர்ந்த பெயர்க்கு, இரண்டும் மூன்றுங் கடி நிலை இல - இரண்டாவதும் மூன்றாவதுங் கடியப்படா, பொருள் வயினான - அவ்வேற்றுமை தொக்கு அவற்றின்பொருள் நிற்குமிடத்து, எ-று. (உ-ம்.) ‘புலி கொல் யானை’. என்புழிப் புலி செயப்படு பொருளாய வழி இரண்டாவதும், அது வினைமுதலாய வழி மூன்றாவதும் விரியும். அது, புலியைக் கொன்ற யானை, புலியாற் கொல்லப்பட்ட யானை என வரும். வினைத்தொகைக்கண்ணுஞ் செயப்படுபொருள் பிறக்குமோ வெனின், செய்குன்று, உறை பதி என்றாற்போல்வனவற்றுட் பிறந்தவாறு காண்க. இஃது உருபு மயக்கம். (12) 97. ஈற்றுப்பெயர் முன்னர் மெய்யறி பனுவலின் வேற்றுமை தெரிப வுணரு மோரே. இது, மேலதற்கோர் புறனடை. (இ-ள்.) ஈற்றுப் பெயர் முன்னர் - தடுமாறுந் தொழிலொடு புணர்ந்த இருவகைப் பெயருள் இறுதிப் பெயர் முன்னர் வந்த, மெய்யறி பனுவலின் - பொருள் வேறுபாடு உணர்த்துஞ் சொல்லான், வேற்றுமை தெரிப உணருமோரே - அப்பொருள் வேற்றுமை தெரிவார் உணர்வோர், எ-று. (உ-ம்.) புலி கொல் யானையோடாநின்றது, புலிகொல் யானையோடா நின்றன புலி கொல் யானைக்கோடு வந்தன என வரும். முன் புலியைக் கொன்ற யானை பின் பிறிதொன்றானிறந்துழியும் ‘புலி கொல் யானைக் கோடு வந்தன வென்ப. இது குறிப்பா னுணரப்படுவென்றற்கு ‘உணருமோரேன்றார். இன்னும் இதனானே ‘புலி கொல் யானை கிடந்ததென்புழிச் சொல்லுவான் குறிப்பான் உணர்தலுங் கொள்க. (13) 98. ஓம்படைக் கிளவிக் கையு மானுந் தாம்பிரி விலவே தொகவரு காலை. இஃது, இரண்டாவதும் மூன்றாவதும் மயங்குமாறு கூறுகின்றது. (இ-ள்.) ஓம்படைக் கிளவிக்கு - பாதுகாத்தலாகிய பொருண்மைக்கு, ஐயும் ஆனுந் தாம் பிரிவில - இரண்டாவதும் மூன்றாவதும் ஒத்த உரிமைய, தொக வரு காலை - வேற்றுமை தொக்கவழி, எ-று. (உ-ம்.) புலி போற்றி வா என்புழிப் ‘புலியைப் போற்றி வாவிரியும் வழிப் ‘புலியானாய ஏதத்தைப் போற்றி வா வெனவும் இரண்டுருபும் பொருளுமொப்ப விரிந்து இரண்டும் மயங்கியவாறு காண்க. ‘இன்னுருபு பிரிவுடைத்தாய், ‘புலியிற்போற்றி வா,’ வெனச் சிறுபான்மை வரும். (14) 99. ஆறன் மருங்கின் வாழ்ச்சிக் கிழமைக் கேழு மாகு முறைநிலத் தான. இஃது, ஆறாவதும் ஏழாவதும் மயங்குமாறு கூறுகின்றது. (இ-ள்.) ஆறன் மருங்கின் வாழ்ச்சிக் கிழமைக்கு - ஆறாம் வேற்றுமைக் கண் ஓதிய வாழ்ச்சிக் கிழமைக்கு, உறை நிலத்து ஆன ஏழுமாகும் - உறை நிலப்பெயர் பின்மொழியாயவழி ஏழாவதும் வரும், எ-று. (உ-ம்.) காட்டதி யானை, காட்டின்கண் யானை என வரும். அந் நிலத்து வாழ்வதனை ‘அதனதெனப்படும் அது பற்றுக் கோடாக உண்டாய், அஃது இன்றிவிடிற் தான் வாழ்தலில்லாமையின். ‘யானைக் காடென்பது உறைநிலப்பெயர் முன் மொழியாய் வருதலின், ‘யானைக்கட் காடென ஏழனுருபு விரியாதாயிற்று. இது பொருண்மயக்கம். (15) 100. குத்தொக வரூஉங் கொடையெதிர் கிளவி யப்பொரு ளாறற் குரித்து மாகும். இது, நான்காவதன் பொருள் ஆறாவதற்குச் செல்லுமென்கின்றது. (இ-ள்.) கு தொக வரூஉம் கொடையெதிர் கிளவி - நான்கனு உருபு தொக வரும் கொடையை விரும்பி மேற்கோடலை உணர்த்துந் தொகைச் சொல்லினது, அப்பொருள் - அக்கொடை யெதிர்தலாகிய அப்பொருண்மை, ஆறற்கு உரித்துமாகும் - ஆறாம் வேற்றுமைக்கு உரித்துமாம், எ-று. (உ-ம்.) நாகர் பலி என்பது ‘நாகர்க்கு நேர்ந்த பலி, நாகரது பலி’யென விரியும். ‘நாகர்க்கு நேர்ந்த பலியெனவே, பிறர்க்காகாது அவருடைமை யாயிற்றாதலின், ஆறாவதும் உரித்தாகப் பெற்றது. ‘சாத்தற்கு நேர்ந்த சோறென்புழி அது பிறர்க்குமாதலின், ஆண்டு ஆறாவது ஏலாது. தெய்வம் அல்லாதாரினும் சிறந்தார்க்கும் நேர்ந்ததேல், ஆண்டும் ஆறாவதும் வருமன்றுமெணர்க. (16) 01. அச்சக் கிளவிக் கைந்து மிரண்டு மெச்ச மிலவே பொருள்வயி னான. இஃது ஐந்தாவதும் இரண்டாவதும் மயங்குமாறு கூறுகின்றது. (இ-ள்.) அச்சக் கிளவிக்கு - அச்சப்பொருண்மேல் வருஞ் சொல்லிற்கு, ஐந்தும் இரண்டும் எச்சம் இல - ஐந்தாவதும் இரண்டாவதும் ஒத்த உரிமைய, பொருள் வயினான - வேற்றுமை தொக்கு அவற்றின் பொருள் நின்றவழி, எ-று. (உ-ம்.) பழியஞ்சும். என்பது ‘பழியினஞ்சும், பழியை யஞ்சும்,’ என வரும். ‘கள்ளரினஞ்சும்’ என்பதற்கு அவரின் மிக அஞ்சுமென்னும் பொருண்மையையுந் தருமேனும், அப்பொருள் கொள்ளற்க. ‘கள்ளரான் அஞ்சுமென்பதே கொள்க. இஃது உருபும் பொருளும் மயங்கிற்று. (17) 102. அன்ன பிறவுந் தொன்னெறி பிழையா துருபினும் பொருளினு மெய்தடு மாறி யிருவயி னிலையும் வேற்றுமை யெல்லாந் திரிபிட னிலவே தெரியு மோர்க்கே. இது, வேற்றுமை மயக்கத்திற்குப் புறனடை. (இ-ள்.) அன்ன பிறவும் - மேல் வேற்றுமை மயக்கங் கூறப்பட்ட வேற்றுமையே யன்றி அவை போல்வன பிறவும், தொன்னெறி பிழையாது - தொன்று தொட்டு வரும் வழக்கிற் பிழையாது, உருபினும் பொருளினும் மெய் தடுமாறி - உருபானும் பொருளானும் ஒன்றனிலைக்களத்து ஒன்று சென்று, இருவயின் நிலையும் வேற்றுமையெல்லாம் - பிறிதொன்றன் பொருளுந் தன் பொருளுமாகிய ஈரிடத்தும் நிலைபெறும் வேற்றுமையெல்லாம், திரிபிடன் இலவே தெரியுமோர்க்கே - திரிபு உடைய அல்ல தெரிந்துணர்வோர்க்கு, எ-று. ஏதுப்பொருட்கண் வரும் மூன்றாவதற்கும் ஐந்தாவதற்கும் இருவயினிற்றலின்மையின், அவற்றை யொழித்து, ஏனைய வற்றிற்கே இருவயினிற்றல் கொள்க. என்னை? ‘வழி போயினார் எல்லாருங் கூறை கோட்பட் டாரென்றவழிக் கடவுளரை யொழித்து ஏனையோர்க்கே அக்கூறைகோட்படுதல் எய்தினாற் போல. ‘அன்ன பிறவாவன, நோயினீங்கினான், நோயை நீங்கினான்; சாத்தனை வெகுண்டான், சாத்தனொடு வெகுண்டான்; முறையாற்குத்துங் குத்து, முறையிற்குத்துங் குத்து - என வரும். இது ‘முறைக் குத்துக் குத்தினானெனத் தொக்கு நின்றதன்கண் இரண்டும் விரிந்தன. கடலொடு காடொட்டாது, கடலைக் காடு ஒட்டாது; தந்தையொடு சூளுற்றான், தந்தையைச் சூளுற்றான் - என இவை தொகையாயும் தொகையன்றியும் மயங்கி நிற்குமாறு உணர்க. (18) 103. உருபுதொடர்ந் தடுக்கிய வேற்றுமைக் கிளவி யொருசொன் னடைய பொருள்சென் மருங்கே. இது, பல உருபு தொடர்ந்து அடுக்கியவழிப் படுவதோர் இலக்கணங் கூறுகின்றது. (இ-ள்.) உருபு தொடர்ந்து அடுக்கிய வேற்றுமைக் கிளவி - ஓருருபும் பல உருபும் தம்முட்டொடர்ந்து அடுக்கி வந்த வேற்றுமை உருபை இறுதியாக வுடைய சொற்கள், ஒரு சொல் நடைய - முடிக்குஞ் சொல் ஒன்றனான் முற்றுப்பெற்று நடக்கும், பொருள் செல் மருங்கே - அவ்வொன்றனாற் பொருள் செல்லும் பக்கத்து, எ-று. (உ-ம்.) ‘என்னொடு நின்னொடுஞ் சூழாது’ ‘துடுப்பெனப் புரையு நின் றிரண்டநெறிமுன்கைச் சுடர்விரி வரிவாய்த் தூதையும் பாவையும் விளையாட . . . . . . . . .’ என்புழி முன் கையாந் தூதையாலும் பாவையாலும் விளையாட வென அடுக்கி முடிந்தது. ‘அந்தணர் நூற்குமறத்திற்குமாதியாய்’ யானையது கோட்டை நுனிக்கட் குறைத்தான் என வரும். இச்சூத்திரத்தின் கருத்து, முன்னர்ப் பலவுருபு தொடர்ந்த சொற்கள் ஒருசொல்லான் முடிதலும், ஓருருபு தொடர்ச்சியும் ஒரு சொல்லான் முடிதலுங் கூறுதலாயிற்று. கோட்டை நுனிக்கட் குறைத்தானென்புழி முன்மொழிக்கட் பொருள் நிற்றலானுந் தினையிற் கிளியைக் கடியுமென்புழிப் பின் மொழிக்கட் பொருள் நிற்றலானும், இவற்றை அடையென்று கூறுதல் பொருந்தா தென்றுணர்க. (19) 104. இறுதியு மிடையு மெல்லா வுருபு நெறிபடு பொருள்வயி னிலவுதல் வரையார். இஃது உருபு நிற்கும் இடங் கூறுகின்றது. (இ-ள்.) இறுதியும் இடையும் - வேற்றுமைத்தொடரிறுதிக் கண் ணும் அதன் இடைநிலத்தும், எல்லா உருபும் - ஆறு உருபும், நெறிபடு பொருள்வயின் நிலவுதல் வரையார் - தத்தமக்கு ஓதிய பொருட்கள் நிற்றலை நீக்கார் கொள்வர் ஆசிரியர், எ-று. இவற்றுள் இறுதிக்கண் நிற்பனவற்றின் ஆறனுருபு இறுதிக்கண் நில்லாது. நின்றதேல், வினைக்குறிப்பா மென்றுணர்க. இதற்காக வன்றே ‘ஈறுபெயர்க்காகும் இயற்கைய’ என்று ஓதிய வதனை மீட்டும் ஈண்டு ‘இறுதியும்’ என்று வகுத்துக் கூறிற்றென் றுணர்க. ஆறனுருபு ஒழிந்தவற்றிற்கு உதாரணங்கடந்தானிலத்தை, வந்தான் சாத்தனொடு, கொடுத்தான் சாத்தற்கு, வலியன் சாத்தனின், இருந்தான் குன்றத்துக்கண் என வரும். இடை நிற்பன நிலத்தைக் கடந்தான், சாத்தனொடு வந்தான், சாத்தற்குக் கொடுத்தான், சாத்தனின் வலியன், சாத்தனதாடை, குன்றத்துக்கணிருந்தான் என வரும். ‘சாத்தனதாடை, என்புழி ‘அது’ என்பது பெயராய் நிற்கும். ‘ஆடை சாத்தனது, ‘என்புழி ‘ஆடையென்னும் உடைமைப்பெயர் எழுவாயாய்ச் ‘சாத்தன தாயிற்றென்னும் பயனிலையோடு முடிதலின், வினைக்குறிப்பாயிற்று. (20) 105. பிறிதுபிறி தேற்றலு முருபுதொக வருதலு நெறிபட வழங்கிய வழிமருங் கென்ப. இஃது ஆறனுருபிற்கு உரியதோர் இலக்கணமும் எல்லா உருபிற்கும் பொதுஇலக்கணமுங் கூறுகின்றது. (இ-ள்.) பிறிது பிறிதேற்றலும் - ஆறன் உருபு தன்னை யொழிந்த உருபினை ஏற்றலும் பெயர்க்குப் பிறிதாய் நிற்றலிற், ‘பிறிதென்றார். உருபு தொக வருதலும் - இடையிலும் இறுதியிலும் ஆறுருபுந் தொக்கு நிற்றலும், நெறிபட வழங்கிய வழி மருங்கு என்ப - நெறிபட வழங்கிய வழக்கைச் சார்ந்துவரும் என்று சொல்லுவர் புலவர், எ-று. (உ-ம்.) சாத்தனதனை, சாத்தனதனொடு, சாத்தனதற்கு, சாத்தனதனின், சாத்தனதன்கண் என வரும். உருபு தொகுமிடத்து உருபும் பொருளும் உடன் றொகுதலும், உருபு தானே தொகுதலுமுடைய. கடந்தானிலம், இருந்தான் குன்றத்து, என வரும். நிலங் கடந்தான், தாய் மூவர், கருப்பு வேலி, வரை வீழருவி, சாத்தன் கை, ‘குன்றக் கூகை, என வரும். இவை உருபு தொக்கன. ‘படைக்கை’ என்பது உருபும் பொருளுந் தொக்கது. சாத்தன்றனதெனத் தன்னையும் ஏற்றுல் உரையிற்கொள்க. (21) 106. ஐயுங் கண்ணு மல்லாப் பொருள்வயின் மெய்யுருபு தொகாஅ விறுதி யான. இஃது, எய்தியது விலக்கிற்று. (இ-ள்.) ஐயுங் கண்ணும் அல்லாப் பொருள்வயின் மெய் உருபு - ஐகார வேற்றுமைப் பொருளுங் கண்ணென் வேற்றுமைப் பொருளும் அல்லாத பிற பொருண்மேனின்ற உருபு, இறுதியான தொகா - தொடர்மொழியிறுதிக்கண் தொக்கு நில்லா, எ-று. (உ-ம்.) அறங்கற்குமென்றது கற்குமறமென இறுதிக்கட் தெரிகாமைகாண்க. “தணவால்வாடையும் பிரிந்தி சினோர்க்கழலே” என ஆன் இறுதிக்கண் தொக்கதாலெனின், அது வினைச்சொற் காரணப் பொருட்டாய் நின்றது.(22) 107. யாத னுருபிற் கூறிற் றாயினும் பொருள்சென் மருங்கின் வேற்றுமை சாரும். இஃது, உருபுகள் தம் பொருளன்றி மயங்குமாறு கூறுகின்றது. (இ-ள்.) யாதன் உருபிற் கூறிற்றாயினும் - ஒரு தொடர் யாதானுமொரு வேற்றுமையது உருபு கொடுத்துச் சொல்லப் பட்டதாயினும் அவ்வுருபேற்ற சொல்லும் உருபு நோக்கிய சொல்லும் பொருள் இயையாத வழி பொருள் செல் மருங்கின் வேற்றுமை சாரும் - பொருள் செல்லும் பக்கத்து வேற்றுமையைச் சாரும், எ-று. (உ-ம்.) ‘கிளையரி நாணற் கிழங்குமணற் கீன்ற, முளையோ ரன்ன முள்ளெயிற்றுத் துவர்வாய்’ என்புழி ‘மணலுளீன்றவென ஏழாவதன் பொருளாயிற்று. கொக்கினுக் கொழிந்த தீம்பழங் கொக்கின்’ என்புழி ‘கொக்கினின்றுமென ஐந்தாவதன் பொருளாயிற்று. முற்கூறிய எல்லாந் தம்முள் இயைபுடைய பொருண் மயக்கமே மயங்குமாறு கூறி, இஃது ஓரியைபுமில்லாத உருபு மயக்கமே கூறிற்றென்று உணர்க. (23) 108. எதிர்மறுத்து மொழியினுந் தத்த மரபிற் பொருணிலை திரியா வேற்றுமைச் சொல்லே. இது, வேற்றுமைகள் தம் பொருள் மாறுபட்டுழியும் அப்பொருள என்கின்றது. (இ-ள்.) எதிர் மறுத்து மொழியினும் - விதி முகத்தாற் கூறாது எதிர் மறுத்துக் கூறினும், தத்தம் மரபின் பொருணிலை திரியா - தத்தம் இலக்கணத்தான் வரும் பொருணிலை திரியா, வேற்றுமைச் சொல்லே - வேற்றுமையுருபுகள், எ-று. (உ-ம்.) மரத்தைக் குறையான், வேலானெறியான் என வரும். வினை நிகழாமையின், மரமும் வேலுஞ் செயப்படுபொருளுங் கருவியும் ஆகா வேனும், எதிர்மறையும் விதிவினையோ டொக்குமென ஆணை கூறிற்று. (24) 109. குஐ ஆனென வரூஉ மிறுதி அ ஒடுஞ் சிவணுஞ் செய்யு ளுள்ளே. இஃது அவ்வுருபுகளுட் சில செய்யுளுள் திரியுமென்கின்றது. (இ-ள்.) கு ஐ ஆன் என வரூஉம் இறுதி - கு ஐ ஆன் என வரும் மூன்று உருபுந் தொடரிறுதிக்கண் நின்றவழி, அஓடுஞ் சிவணுஞ் செய்யுளுள்ளே - அகரத்தொடு பொருந்தி நிற்றலும்முடைய செய்யுளுள், எ-று. (உ-ம்.) ‘கடிநிலையின்றே ஆசிரியர்க்க’ ‘காவலோனக் களிறஞ் சும்மே’ ‘களிறஞ்சுமக் காவலோன’ ‘புரைதீர் கேள்விப் புலவரான.’ என வரும். ‘உள்ளம் போல வுற்றுழி உதவும், புள்ளியற் கலிமா வுடைமையான’ (கற். சூ. 53) என்பது வினைக்குறிப்புக் காரணம் பெற்றது. (25) 110. அ எனப் பிறத்த லஃறிணை மருங்கிற் குவ்வு மையு மில்லென மொழிப. இஃது, எய்தியது விலக்கிற்று. (இ-ள்.) குவ்வும் ஐயும் அஃறிணை மருங்கின் அ எனப் பிறத்தல் இல்லென மொழிப - குவ்வும் ஐயும் அஃறிணைப் பெயர்க்கண் அகரத்தொடு சிவணி ஈறு திரிதல் இல்லை யென்று சொல்லுவர் புலவர், எ-று. எனவே, ‘புள்ளினான’ என அஃறிணைக்கண் ஆன் பிறக்குமாறு ஆயிற்று. (26) 111. இதன திதுவிற் றென்னுங் கிளவியு மதனைக் கொள்ளும் பொருள்வயி னானு மதனாற் செயற்படற் கொத்த கிளவியு முறைக்கொண் டெழுந்த பெயர்ச்சொற் கிளவியும் பால்வரை கிளவியும் பண்பி னாக்கமும் காலத்தி னறியும் வேற்றுமைக் கிளவியும் பற்றுவிடு கிளவியுந் தீர்ந்துமொழிக் கிளவியு மன்ன பிறவு நான்க னுருபிற் றொன்னெறி மரபின தோன்ற லாறே. இது நான்காவது ஏனையுருபுகளின் பொருள்களொடு மயங்கும் என்கின்றது. (இ-ள்.) இதனது இது இற்று என்னுங் கிளவியும் - ‘இப் பொருளி னுடையது இப்பொருள்; அதுதான் இத்தன்மைத்து,’ என்னும் ஆறாவதன் பொருண்மையும், அதனைக் கொள்ளும் பொருள்வயினானும் - ஒன்றனை ஒன்று கொள்ளுமென்னும் இரண்டாவதன் பொருண்மையும், அதனாற் செயற்படற்கொத்த கிளவியும் - ஒன்றனான் ஒன்று தொழிற்படற்கு ஏற்குமென்னும் மூன்றாவதன் பொருண்மையும், முறைக்கொண்டு எழுந்த பெயர்ச் சொற் கிளவியும் - முறைப்பொருண்மையைக் கொண்டு நின்ற பெயர்ச் சொல்லினது ஆறாம் வேற்றுமைப் பொருண்மையும், பால்வரை கிளவியும் பண்பின் ஆக்கமும் - நிலத்தை வரைந்து கூறும் பொருண்மையும், பண்பின் கண் ஆம் பொருவுமாகிய ஐந்தாவதன் பொருண்மையும், காலத்தின் அறியும் வேற்றுமைக் கிளவியும் - காலத்தின்கண் அறியப்படும் ஏழாம் வேற்றுமைப் பொருண்மையும், பற்று விடு கிளவியுந் தீர்ந்து மொழிக் கிளவி யும் - பற்றுவிடும் பொருண்மையுந் தீர்ந்து மொழிப் பொருண்மையும் ஆகிய ஐந்தாவதன் பொருண்மையும், அன்ன பிறவும் நான்கனுருபிற் தோன்றலாறு தொன்னெறி மரபின - அவை போல்வன பிறவும் நான்கன் உருபிடத்துக் கூறுதலைப் பழைய நெறி முறைமையாக வுடைய, எ-று. (உ-ம்.) யானைக்குக் கோடு கூரிது - இஃது ஆறாவது. இவட்குக் கொள்ளுமிவ்வணி - இஃது இரண்டாவது. அவற்குச் செய்யத்தகுங் காரியம் - இது மூன்றாவது. ஆவிற்குக் கன்று - இஃது ஆறாவது. கருவூர்க்குக் கிழக்கு - இஃது ஐந்தாவது. சாத்தற்கு நெடியன் - இதுவும் அது. காலைக்கு வரும் - இஃது ஏழாவது. மனைவாழ்க்கைக்குப் பற்று விட்டான் - இஃது ஐந்தாவது. ஊர்க்குட் தீர்ந்தான் - இதுவும் அது. ‘அன்ன பிறவும்’ என்றதனால், ஊர்க்கட்சென்றான், ஊர்க்கணுற்றது செய்வான், ஊரிற்சேயன் என்பனவற்றிற்கு நான்கனுருபு கொள்க. இது தொகாது நின்றவிடத்து நான்கனுருபு சென்று மயங்குதலின், வேறு கூறினார். (27) 112. ஏனை யுருபு மன்ன மரபின மான மிலவே சொன்முறை யான. இது, நான்கனுருபு ஒழிந்தனவுந் தம்முள் மயங்குமென்கின்றது. (இ-ள்.) ஏனையுருபும் அன்ன மரபின மானமில - நான்கனுருபல்லாத பிறவுருபுந் தொகையல்லாத தொடர்மொழிக்கண் ஒன்றன் பொருளிற் சிதையாமல் ஒன்று மயங்குதற்கட் குற்றமில, சொன்முறையான - வழக்கு முறையான், எ-று. (உ-ம்.) நூலது குற்றங் கூறினான். நூலைக் குற்றங் கூறினான்; அவட்குக் குற்றேவல் செய்யும், அவளது குற்றேவல் செய்யும் - என வரும். பிறவும் அன்ன. (28) 113. வினையே செய்வது செயப்படு பொருளே நிலனே காலங் கருவி யென்றா வின்னதற் கிதுபய னாக வென்னு மன்ன மரபி னிரண்டொடுந் தொகைஇ யாயெட் டென்ப தொழின்முத னிலையே. இது, வேற்றுமைப் பொருள்கள் தோன்றும் இடங் கூறுகின்றது. (இ-ள்.) வினையே - வினைப்பெயரையும் வினைச் சொல்லையுந் தோற்றுவிக்கும் உண் தின் செல் கொள் வனை என்பன முதலாகிய வினையும், செய்வது - அவ்வினையைச் செய்யும் வினைமுதலும், செயப்படு பொருளே - அவ்வினைமுதல் அதனைச் செய்ய அத்தொழிலையுறும் பொருளும், நிலனே - அத்தொழிலைச் செய்கின்ற இடமும், காலம் - அத்தொழிலைச் செய்யுங் காலமும், கருவி-அவ்வினைமுதல் தொழிலினைச் செய்யுங் காலத்து அதற்குத் துணையாங் கருவிகளும் ஆகிய ஆறும், இன்னதற்கு - ஒரு பொருள் நின்று அவ்வினைமுதல் செய்யப்பட்டதனை ஏற்றுக்கோடற்கு உபகாரமாக, இது பயனா ஆக - அப்பொருள் அதனை ஏற்றுக்கொண்டதனான் அவ்வினைமுதற்கு இப்பயனுண்டாக, என்னும் அன்ன மரபின் இரண்டொடுந் தொகைஇ - என்று சொல்லப்படும் அத்தன்மைத்தாகிய முறைமையினையுடைய இரண்டோடுந் தொக்கு, தொழில் முதனிலை ஆயெட்டு என்ப - காரியத்திற்கு முன்னிற்கும் காரணம் அவ்வெட்டு என்று சொல்லுவர் புலவர், எ-று. ‘ஆக’ என்றதனை ‘இன்னதற்காக’ வென்றுங் கூட்டுக. (உ-ம்.) வனைந்தான் என்றவழி ‘வனை’ யென்னும் வினையும், வனைந்த கருத்தாவும், வனையப்பட்ட குடமும், வனைதற்கு இடமாகிய நிலமும், அத் தொழினிகழுங் காலமும், அதற்குக் கருவியாகிய திகிரி முதலியனவும், அதனைக் கொள்வானும், அவன் கொண்டதனாற் பெறும் பயனும் ஆகிய எட்டுக் காரணத்தானுந் தொழில் நிகழ்ந்தவாறு காண்க. ஒழிந்த வினை கட்கும் அவ்வாறு விரிக்க. வினையை முன் வைத்தார், சொற்களையுந் தோற்றுவித்து, மேனிகழுங் காரியத்திற்கு ஏனை ஏழினுஞ் சிறந்த காரணமாய் நிற்றலின். வினையுந் தொழிலும் வேறென்பது இச்சூத்திரத்தான் உணர்தற்கு ‘வினை’ யென்றெடுத்துத் ‘தொழின் முதனிலையே’ யென முடித்தார். ‘வனைந்தானென்பது ‘குடத்தை வனைதலைச் செய்தானென்று பொருதெந்துழிச் ‘செய்தானென்றதன் தகரங் காலங் காட்டித் தொழிலைத் தோற்றுவித்தவாறும், ‘வனை’ யென்னும் வினை காலங்காட்டாமல் நின்றவாறும், ‘வனைதல்’ என விரிந்துழியும் புடைபெயர்ச்சி மாத்திரமன்றிக் காலங் காட்டாமல் நின்றவாறும் உணர்க. காரியத்திற்கு யாண்டுங் காலங் காட்டும் எழுத்துக்களொடு கூடிய ‘செய்’ யென்பதே வாசகமென்றுணர்க. இக்காரிய வாசகம், இவ்வாறன்றி ஒரு சொல் முழுவதும் தானாய் நிற்பனவும் உள. அவை, ‘கறைமிட றணியலுணிந்தன்று.’ (புறம். 1 : 5) என்புழிக் ‘கறை மிடற்றை அழகு பெறுதலையுஞ் செய்ததெ’, எனவும், ‘இனியானுண்ணலும் உண்ணேன்.’என்புழி, ‘இனி யான் சோற்றை உண்ணுதலையுஞ் செய்யேனெனவும், ‘வாழ்தலும் வாழேன்.’ என்புழி, ‘இனியான் உயிரை வாழுதலையுஞ் செய்யேனெனவும் வந்தவற்றுள் ‘அணிந்தன்று, உண்ணேன், வாழேன்,’ என்பன முழுதுங் காரிய வாசகமாயே நின்றவாறு காண்க. இனி, ‘வனைந்தான்’ என்பதன்கண் செய்வது எழுவாயாயும், வினையுஞ் செயப்படுபொருளும் இரண்டாவதாயும், வினை முதலுங் கருவியும் மூன்றாவதாயும். ஒருவன் ஏற்றுக்கொண்ட வழி. ‘இன்னதற்கு இது பயன்’ நான்காவதாயும், நிலமுங் காலமும் ஏழாவதாயுஞ் சேர்ந்தன. இன்னும், வனைந்தவன் கொடுத்த குடம் அவன் கையினின்று நீங்குதல் ஐந்தாவதாயும், அதனை ஒருவன் ஏற்றுக்கொண்டவழி அஃது அவன் உடைமையாதல் ஆறாவ தாயுஞ் சேருமாறும் உணர்க. கருவிக்கண் அடங்கும் ஏதுவும் ஐந்தாவதற்கு வரும். இங்ஙனம் இவ்வுருபுகள் இவ்வினைச் சொற்கட் தோன்றுதல் பற்றி இச்சூத்திரத்தை வினையியலிற் கூறாது ஈண்டுக் கூறினார். பெயர்நிலைக் கிளவி’ ‘இரண்டாகுவதே’ என்னுஞ் சூத்திரங்களானும் இக்கருத்து உணர்க. (29) 114. அவைதாம், வழங்கியன் மருங்கிற் குன்றுவ குன்றும். இது, மேலதற்கோர் புறனடை. (இ-ள்.) அவைதாம் - மேற் கூறப்பட்ட தொழின் முதனிலைகள் தாம், வழங்கியல் மருங்கிற் குன்றுவ குன்றும் - எல்லாத் தொழிற்கும் எட்டும் வரும் என்னும் யாப்புறவில்லை வழக்கின்கண் சில தொழிலிற் குன்றத் தகுவன குன்றும், எ-று. குன்றத்தகுவன, செயப்படுபொருளும், ‘இன்னதற்கு இது பயன்’ என்பனவுமாம். (உ-ம்.) கொடி யாடிற்று, வளி வழங்கிற்று, என வரும். (30) 115. முதலிற் கூறுஞ் சினையறி கிளவியுஞ் சினையிற் கூறு முதலறி கிளவியும் பிறந்தவழிக் கூறலும் பண்புகொள் பெயரு மியன்றது மொழிதலு மிருபெய ரொட்டும் வினைமுத லுரைக்குங் கிளவியொடு தொகைஇ யனையமர பினவே யாகுபெயர்க் கிளவி. இது, குறிப்பாற் பொருளுணர்த்தும் பெயர் இத்துணை யென்கின்றது. (இ-ள்.) முதலிற் கூறும் சினையறி கிளவியும் - முதற்சொல் வாய்பாட்டான் கூறப்படும் சினைப்பொருளை அறிவிக்குஞ் சொல்லும், சினையிற் கூறும் முதலறி கிளவியும் - சினைச்சொல் வாய்பாட்டாற் கூறப்படும் முதற்பொருளை அறிவிக்குஞ் சொல்லும், பிறந்தவழிக் கூறலும் - நிலத்துப் பிறந்த பொருண்மேல் அந் நிலத்துப்பெயர் கூறலும், பண்பு கொள் பெயரும் - பண்புப் பெயர் அப் பண்புடையதனை உணர்த்தி நிற்குஞ் சொல்லும், இயன்றது மொழிதலும் - முதற்காரணப் பெயரான் அக்காரணத்தான் இயன்ற காரியத்தினைச் சொல்லுதலும், இருபெயரொட்டும் - அன்மொழிப் பொருண்மேல் நில்லாத இருபெயரொட்டும், வினை முதலு ரைக்கும் கிளவியொடு தொகைஇ - செய்யப்பட்ட பொருண்மேல் அதனைச் செய்தான் பெயரைச் சொல்லுஞ் சொல்லோடே முற்கூறிய ஆறுந்தொக்கு, அனைய மரபினவே ஆகுபெயர்க் கிளவி - அப்பெற்றிப்பட்ட இலக்கணத்தை உடையவாகும் ஆகுபெயரான சொல், எ-று. (உ-ம்.) கடுத் தின்றான், தெங்கு தின்றான்; இலை நட்டு வாழும், பூ நட்டு வாழும்; குழிப்பாடி நேரிது; என வரும். இவ்வாடை கோலிகன் என்பதும் அது. ‘நீலமென மணியையுணர்த்திற்று; ‘பொன்னெனக் குடத்தையுணர்த்திற்று; ‘மக்கட்சுட்டென இரண்டு மில்லாததோர் பொருளை உணர்த்தாது மக்களையுணர்த்திற்று, நன்கு மதிக்கும் பொருள் மக்களேயாதலின். ‘பொற்றொடியென்பது அன்மொழி; ஆகுபெயரன்மை உணர்க. இச்சூத்திரத்தானே, இயற்கைப்பெயரே யன்றிக் குறிப்பாற் பொரு ளுணர்த்தும் பெயரும் பெரும்பான்மை என்றார். (31) 116. அவைதாந், தத்தம் பொருள்வயிற் றம்மொடு சிவணலு மொப்பில் வழியாற் பிறிதுபொருள் சுட்டலு மப்பண் பினவே நுவலுங் காலை. இஃது, அவ்வாகுபெயரிலக்கணம் இருவகைய என்கின்றது. (இ-ள்.) அவைதாந் தத்தம் பொருள்வயிற் தம்மொடு சிவணலும் - மேற்கூறப்பட்ட ஆகுபெயர்கள் தாந் தத்தம் பொருள்வயின் நீங்காது நின்று தம் பொருளின் வேறல்லாத பொருளொடு புணர்தலும், ஒப்பில் வழியான் பிறிது பொருள் சுட்டலும் - பொருத்தமில்லாத கூற்றான் நின்று பிறிது பொருளை உணர்த்தலும், அப்பண்பினவே நுவலுங்காலை - என்று சொல்லப்படுகின்ற அவ்விரண்டு இலக்கணத்தையுமுடைய சொல்லுங் காலத்து, எ-று. (உ-ம்.) கடுத் தின்றான், குழிப்பாடி நேரிது என வரும். (32) 117. வேற்றுமை மருங்கிற் போற்றல் வேண்டும். இஃது, ஆகுபெயரும் வேற்றுமை யேற்கும் என்கின்றது. (இ-ள்.) வேற்றுமை மருங்கிற் போற்றல் வேண்டும் - அவ்வாகு பெயர்கள் ஐ முதலிய அறுவகை வேற்றுமைப் பொருண்மை யிடத்தும் இயைபுடைமையைப் பாதுகாத்து அறியல் வேண்டும் ஆசிரியன், எ-று. (உ-ம்.) மக்கட்சுட்டை யுயர்திணை யென்மனார், தொல்காப்பியனாற் செய்யப்பட்டது, தண்டூணாதற்குக் கிடந்தது, பாவையினுமழகியாள், கடுவினது காய் குழிப்பாடியுட்டோன்றியது, எனக் காண்க. (33) 118. அளவு நிறையு மவற்றொடு கொள்வழி யுளவென மொழிப வுணர்ந்திசி னோரே. இஃது, ஆகுபெயர் வேறுபாடு கூறுகின்றது. (இ-ள்.) அளவும் நிறையும் அவற்றொடு கொள்வழி உள என மொழிப - அளவுப்பெயரும் நிறைப்பெயரும் ஆகுபெயராகக் கொள்ளும் இடமுடைய என்று சொல்லுவர், உணர்ந்திசினோரே - உணர்ந்தோர், எ-று. (உ-ம்.) பதக்கு, தூணி; தொடி, துலாம் என அளக்கவும் நிறுக்கவும் பட்ட பொருட்கட் கிடந்த வரையறைக் குணப்பெயர் அப்பொருட்குப் பெயராயிற்று. நெல்லை அளந்து பார்த்தும் பொன்னை நிறுத்துப் பார்த்தும் பின்னர் அவற்றிற்குப் ‘பதக்கு, தொடி’ என்று அளவும் நிறையுமாகிய பெயர் கூறப்படுதலின், அவற்றை ஆகுபெய ரென்றார். ‘ஒன்’ றென்னும் எண்ணுப்பெயரால் அவ்வெண்ணப் படும் பொருளைக் கூறுவதற்கு முன்னும் அப்பொருள் ஒன்றாயே நிற்றலின், எண்ணுப் பெயரை ஆகுபெயரொடு கூறாராயினார். (34) 119. கிளந்த வல்ல வேறுபிற தோன்றினுங் கிளந்தவற் றியலா னுணர்ந்தனர் கொளலே. இஃது, ஆகுபெயர்க்குப் புறனடை. (இ-ள்.) கிளந்த அல்ல வேறு பிற தோன்றினும் - சொல்லப் பட்டனவே யன்றி வேறு பிற சொற்கண்ணே ஆகுபெயர்த்தன்மை தோன்றினும், கிளந்தவற்றியலான் உணர்ந்தனர் கொளலே - சொல்லப்பட்டவற்றதியல்பான் உணர்ந்து கொள்க, எ-று. (உ-ம்.) யாழ், குழல் என்னும் கருவிப் பெயர், ‘யாழ் கேட்டான்; குழல் கேட்டான்,’ என்று அவற்றான் ஆய ஓசை மேலும்; யானை, பாவை என்னும் உவமப் பெயர், ‘யானை வந்தான்; பாவை வந்தாள்,’ என உவமிக்கப்படும் பொருண் மேலும்; ஏறு, குத்து என்னுந் தொழிற்பெயர், ‘இஃதோர் ஏறு; இஃதோர் குத்து,’ என அத்தொழிலானாய வடுவின் மேலும்; நெல்லாதல் காணமாதல் பெற்றானொருவன், ‘சோறு பெற்றேன்,’ எனக் காரணப் பொருட்பெயர் காரியத்தின்மேலும் ஆகு பெயராய் வந்தன. ‘ஆறறி அந்தணர்’ என்புழி, ‘ஆறென்னும் வரையறைப் பண்புப் பெயர் அப்பண்பினையுடைய அங்கத்தினை உணர்த்தி நிற்றலும், அவ்வெண் ணுப்பெயரினை அறிகுறியாகிய அலகு நிலைத்தானமும் அப்பெயரவாய் நிற்றலும், அகர முதலிய எழுத்துக்களை உணர்த்துதற்குக் கருவியாகிய வரி வடிவுகளும் அப்பெயர் பெற்று நிற்றலுங் கொள்க. கடி சூத்திரஞ் செய்ய இருந்த பொன்னைக் ‘கடி சூத்திரமென்றும், தண்டூணாதற்குக் கிடந்த மரத்தை ‘தண்டூ’ ணென்றுங் காரியத்தின் பெயரைக் காரணத்திற்கு இட்டு வழங்குவனவும், எழுத்து, சொல், பொருள் என்பனவற்றிற்கு இலக்கணங் கூறிய அதிகாரங்களை ‘எழுத்து, சொற் பொருளென்பன உணர்த்தி நிற்றலுங் கொள்க. ‘பிறவென்னாது வேறென்றதனான், அவை ‘தொல் காப்பியம், கபிலம், வில்லி, வாளி’ என ஈறு திரிதலுங் கொள்க. இவ்வாகுபெயர்கள் எழுவாய்வேற்றுமை மயக்கமென்று உணர்க, ‘கடு’ வென்பது தனக்கு உரிய முதற்பொருளை உணர்த்தாது சினைப் பொருளை உணர்த்தலின். (35) வேற்றுமைமயங்கியல் முற்றிற்று. விளிமரபு விளி வேற்றுமையது இலக்கணம் உணர்த்தினமையின் விளிமரபென்னும் பெயர்த்தாயிற்று. இதன்கண் உள்ள சூத்திரங்கள் 37. தெய்வச்சிலையார் 36-ஆகப் பகுத்து உரை கூறியுள்ளார். விளி வேற்றுமையாவது படர்க்கைப் பெயர்ப்பொருளை எதிர் முகமாக்குதலைப் பொருளாகவுடையதாகும். ஈறுதிரிதல், ஈற்றயல் நீடல், பிறிது வந்தடைதல், இயல்பாதல் என்பன விளி வேற்றுமையின் உருபுகளாகக் கொள்ளத்தக்கன. விளி கொள்ளும் பெயர்கள் இவையெனவும் விளி கொள்ளாப் பெயர்களிவையெனவும் ஆசிரியர் இவ்வியலில் உணர்த்துகின்றார். இ, உ, ஐ, ஓ, ன, ர, ல, ள என்பவற்றை யிறுதியாகவுடைய உயர்திணைப் பெயர்கள் விளி கொள்ளும் பெயர்களாம். ஏனைப் பெயர்கள் விளியேலா. தான், யான், நீயிர் என்பனவும் சுட்டுவினப் பெயர்களும் த, ந, நு, எ என்பவற்றை முதலாகவுடைய கிளைப் பெயர்களும் இவைபோல்வன பிறவும் விளிவேற்றுமையோடு பொருந்தாத பெயர்களாம். ஈறுதிரிதல் இகரவீறு ஈகாரமாகவும் ஐகாரவீறு ஆய் எனவும் முறைப் பெயரீற்று ஐகாரம் ஆகாரமாகவும் அண்மை விளியாயின் அகர மாகவும் திரியுமென்றும், தொழிற் பெயர் பண்புகொள்பெயர் என்பவற்றின் இறுதியிலுள்ள ஆன் விகுதியும் ஆள் விகுதியும் ஆய் விகுதியாகத் திரியுமென்றும், அர், ஆர் என்பன ஈர் எனத் திரியுமென்றும் கூறுவர் ஆசிரியர். ஈற்றயல் நீடல் லகர ளகர வீற்று உயர்திணைப் பெயர்கள் ஈற்றயல் நீண்டு விளியேற்பன. பிறிது வந்தடைதல் ஓகாரவீற்றுப் பெயரும் குற்றியலுகரவீற்றுப் பெயரும் லகர ளகரவீற்று முறைப் பெயரும் ரகரவீற்றுத் தொழிற் பெயரும் பண்புகொள் பெயரும் இறுதியில் ஏகாரம் பெற்று விளிப்பன. இயல்பாதல் இகரவீற்று அளபெடைப் பெயரும் அண்மையிலுள்ளாரை யழைக்கும் பெயரும் ஆனீற்றுப் பெயரும் ன, ர, ல, ள என்பவற்றை யிறுதியாகவுடைய அளபெடைப் பெயர்களும் இயல்பாய் நின்று விளியேற்பனவாம். இ, உ, ஐ, ஓ, ன, ர, ல, ள என்னும் எழுத்துக்களை யிறுதியாக வுடைய அஃறிணை விரவுப் பெயர்கள் மேல் உயர்திணைப் பெயர்க்குச் சொல்லிய முறையால் விளியேற்பன வென்றும், அஃறிணைக்கண் வரும் எல்லா வீற்றுப் பெயர்களும் ஏகாரம் பெற்று விளியேற்பன வென்றும் இங்குக்கூறப்பட்ட இருதிணைப் பெயர்களும் சேய்மை விளிக்கண் வருங்கால் தத்தம் மாத்திரையில் நீண்டொலிப்பன் வென்றும் கூறுவர் ஆசிரியர். - க. வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 203-204 நான்காவது விளிமரபு 120. விளியெனப் படுப கொள்ளும் பெயரொடு தெளியத் தோன்று மியற்கைய வென்ப. என்பது சூத்திரம். இது, நிறுத்த முறையானே விளி உணர்த்துதலின், இவ்வோத்து விளிமரபு என்னும் பெயர்த் தாயிற்று. இச்சூத்திரத்தான் விளியது பொதுஇலக்கணங் கூறுகின்றார். (இ-ள்.) விளி யெனப் படுப - விளி என்று சொல்லப்படுவன, கொள்ளும் பெயரொடு - தம்மை ஏற்கும் பெயரொடு, தெளியத் தோன்று மியற்கைய வென்ப - விளங்கத் தோன்றும் இயல்பினை உடைய என்று கூறுவர் ஆசிரியர், எ-று. ஈறு திரிதலும், ஈற்றயல் நீடலும், பிறிது வந்து அடைதலும், இயல்பு ஆதலும் என்னும் வேறுபாட்டாற் ‘படுப’ வென்றார். ‘கொள்ளும் பெயர்’ எனவே, கொள்ளாப் பெயரும் உளவாயின. ‘இயல்பாய் விளி ஏற்பனவுந் தெற்றென விளங்கும்,’ என்றற்குத் ‘தெளியத் தோன்று’ மென்றார். (1) 121. அவ்வே, யிவ்வென வறிதற்கு மெய்பெறக் கிளப்ப. இஃது, அப்பெயர்களைக் கூறுவல் என்கின்றது. (இ-ள்.) அவ்வே இவ் என அறிதற்கு - விளி கொள்ளும் பெயரும் கொள்ளாப் பெயரும் இவை என மாணாக்கன் உணர்தற் பொருட்டு, மெய்பெறக் கிளப்ப - பொருள் பெற எடுத்தோதுவர் ஆசிரியர். (அதனான், யானும் அம்முடிபே கூறுவல்), எ-று. (2) 122. அவைதாம், இஉ ஐஓ வென்னு மிறுதி யப்பா னான்கே யுயர்திணை மருங்கின் மெய்ப்பொருள் சுட்டிய விளிகொள் பெயரே. இஃது, உயர்திணைப் பெயருள் விளி யேற்பன இவை என்கின்றது. (இ-ள்.) அவைதாம் - கிளக்கப்படுவனவாகிய பெயர்தாம் (எண்வகைய; அவற்றுள்) உயர்திணை மருங்கின் மெய்ப்பொருள் சுட்டிய விளி கொள் பெயர் - உயர்திணையிடத்து மெய்ப் பொருளைக் கருதின விளி கொள்ளும் உயிர் ஈற்றுப்பெயர், இ உ ஐ ஓ வென்னுமிறுதி யப்பால் நான்கே - இ உ ஐ ஓ என்னும் இறுதியை உடைய அக்கூற்று நான்கு பெயரும், எ-று. ‘மெய்ப்பொருள்’ என்றதனான், அஃறிணைப்பெயர் அன்மொழியாய் உயர்திணைக்கண் வந்துழி உயர்திணைப் பெயராய் விளி ஏற்றலும், அவ்வீற்று அஃறிணைப்பெயர்களும் உயர்திணைப்பெயர்கள் போல விளி ஏற்றலுங் கொள்க. (உ-ம்.) ‘சுடர்த்தொடீஇ! கேளாய்.’ எனவும், ‘தும்பீ!’ எனவும், ‘சிறு மீன் கவுட்கொண்ட செந்தூவி நாராய்!’ எனவும் ‘கொன்றாய்! குருந்தே! கொடிமுல்லாய்! வாடினீர், நின்றீர் அறிந் தேன் நெடுங்கணாள் - சென்றாளுக்கு’ எனவும் வரும். (3) 123. அவற்றுள், இஈ யாகும் ஐயா யாகும். இஃது, இகர ஈறும் ஐகார ஈறும் விளியேற்குமாறு கூறுகின்றது. (இ-ள்.) அவற்றுள் - முற்கூறிய நான்கு ஈற்றுப் பெயருள், இ ஈ ஆகும் - இகர ஈற்றுப் பெயர் ஈகாரமாயும், ஐ ஆய் ஆகும் - ஐகார ஈற்றுப்பெயர் ஆய் ஆயும் ஈறு திரிந்து விளியேற்கும், எ-று. (உ-ம்.) நம்பி - நம்பீ! நங்கை - நங்காய்! என வரும். (4) 124. ஓவும் உவ்வுமேயொடு சிவணும். இஃது, ஒழிந்தன விளி ஏற்குமாறு கூறுகின்றது. (இ-ள்.) ஓவும் உவ்வும் ஏயொடு சிவணும் - ஓகார ஈற்றுப் பெயரும் உகர ஈற்றுப்பெயரும் ஏகாரத்தோடு பொருந்திப் பிறிது வந்தடைதலாய் விளியேற்கும், எ-று. (உ-ம்.) கோ - கோவே! வேந்து - வேந்தே! என வரும். (5) 125. உகரந் தானே குற்றிய லுகரம். இஃது, ஐயம் அறுக்கின்றது. (இ-ள்.) உகரந்தானே குற்றியலுகரம் - மேற்கூறப்பட்ட உகரமாவது குற்றியலுகரம், எ-று. ‘திரு - திருவே!’ எனச் சிறுபான்மை முற்றியலுகரமும் விளி யேற்கும். (6) 126. ஏனை உயிரே யுயர்திணை மருங்கிற் றாம்விளி கொள்ளா வென்மனார் புலவர். இது, வேண்டா கூறி, வேண்டியது முடிக்கின்றது. (இ-ள்.) ஏனை உயிரே - மேற்கூறப்பட்ட நான்கு ஈறும் அல்லா உயிரீறு, உயர்திணை மருங்கிற் தாம் விளி கொள்ளா என்மனார் புலவர் - உயர்திணைக்கண் விளிகொள்ளாவென்று கூறுவர் புலவர், எ-று. இதனாற்பயன், கணி - கணியே கரி - கரியே என முற்கூறிய உயிர்கள் பிறவாறாயும் விளி யேற்குமென்றல். ‘தாமென்றதனால், ‘மக’ வென்றது ‘மகவேனப் பிறிது வந்துஞ் சான்றோரீன்ற தகாத் தகாமகா என ஆகாரமாயும் ஆடூவென்றது ஆடூஉ கூறாயென இயல்பாயும், ‘ஆடூஉவேயெனப் பிறிது வந்தும் விளி யேற்றவாறு கொள்க. (7) 127. அளபெடை மிகூஉ மிகர விறுபெய ரியற்கைய வாகுஞ் செயற்கைய வென்ப. இஃது, எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுக்கின்றது. (இ-ள்.) அளபெடை மிகூஉம் இகர இறுபெயர் - அளபெடைதன்னியல்பு மாத்திரையின் மிக்கு நான்கு மாத்திரை பெற்று நிற்கும் இகர ஈற்றுப் பெயர், இயற்கைய ஆகுஞ் செயற்கைய என்ப - இ ஈயாகாது இயல்பாய் விளியேற்குஞ் செயற்கையையுடையவென்று கூறுவர் ஆசிரியர், எ-று. (உ-ம்.) ‘தோழீஇஇஇஇ’ என வரும். ‘தொழீஇஇஇஇஇ’ என ஐந்தெழுத்தும் இட்டெழுதுப. ‘இகர ஈற்றுப்பெயரெனவே, நெட்டெழுத்து அளபெடுத்ததன்று, குற்றெழுத்தே நின்று மாத்திரை பெற்றதென்று உணர்க. இது, ‘தொழில் செய்கின்றவளே’ என்னும் பொருடந்து நிற்பதோர் சொல். (8) 128. முறைப்பெயர் மருங்கி னையெ னிறுதி யாவொடு வருதற் குரியவு முளவே. இஃது, எய்தியதன்மேற் சிறப்பு விதி. (இ-ள்.) முறைப்பெயர் மருங்கின் ஐயென் இறுதி - முறைப் பெயரிடத்து ஐகார ஈறு, ஆவொடு வருதற்கு உரியவும் உள - ஆயாகாது ஆகாரத்தோடு வருதற்கு உரியனவும் உள, எ-று. (உ-ம்.) அன்னை - அன்னா! அத்தை-அத்தா! என வரும். உம்மை மறுத்து நிற்றலின், அன்னாய் அத்தாய்யென்று வருதலே சிறப்பிற்று. இவை விரவுப்பெயரேனும், ஈண்டு உயர்திணைப் பெயரிடை வைத்தார், மேல் விரவுப்பெயரை இவற்றோடு மாட்டெறிதலின் அம் மாட்டேற்றிற்கு ஏற்ப விளியேற்பன உயர்திணைப் பெயர்களுள் வேறின்மை யான். (9) 129. அண்மைச் சொல்லே யியற்கை யாகும். இஃது, எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது. (இ-ள்.) அண்மைச் சொல்லே இயற்கை ஆகும் - நான்கு ஈற்று அண்மைக்கண் விளியேற்குஞ் சொற்கள் இயற்கையாய் விளியேற்கும், எ-று. (உ-ம்.) நம்பிவாழி, வேந்து வாழி, நங்கை வாழி, கோ வாழி, என வரும். (10) 130. னரலள வென்னு மந்நான் கென்ப புள்ளி யிறுதி விளிகொள் பெயரே. இது, புள்ளியீற்றுள் விளியேற்பன கூறுகின்றது. (இ-ள்.) புள்ளி இறுதி விளிகொள் பெயர் - புள்ளி யீற்றினையுடைய விளித்தலைக் கொள்ளும் உயர்திணைப்பெயர், னரலள என்னும் அந்நான்கு என்ப - ன ர ல ள என்று கூறப்படும் அந்நான்கு ஈற்றுப் பெயருமென்று கூறுவர் ஆசிரியர், எ-று. (11) 131. ஏனைப் புள்ளி யீறுவிளி கொள்ளா. இது, வேண்டா கூறி, வேண்டியது முடிக்கின்றது. (இ-ள்.) ஏனைப் புள்ளியீறு விளி கொள்ளா - அந்நான்கும் அல்லாத புள்ளியீ ஈற்றுப்பெயர் விளித்தலைக் கொள்ளா, எ-று. இங்ஙனம் வேண்டா கூறிய அதனாற் பயன், மேற் கூறுகின்ற புள்ளி ஈறுகள் பிறவாற்றான் விளி கொள்வன உள என்பதூஉம், எடுத்தோதாப் புள்ளியீறுகளிலும் விளியேற்பன உள என்பதூஉம் உணர்த்துதலாம். ‘முறைமை சுட்டா மகன், மகளென்பன, ‘படிவண்டிப் பார்ப்பன மகனே!’ ‘அகவல் மகளே! அகவன் மகளே!’ என ஏகாரம் பெற்று வருதலும் (அகவன் மகள்’ முறைமை சுட்டியதன்று; அகவல் - ஓசை), ‘கூந்தல்மா குடமாடிக் கோவலனாய்ப் - பூந்தொடியைப் புல்லிய ஞான்றுண்டால் - யாங்கொளித்தாய் - தென்னவனே தேர்வந்தே தேறுநீர்க் கூடலார் - மன்னவனே மார்பின் மறு’ என ‘அன்’ ஈறு ஏகாரம்பெற்று வருதலும், ‘நம்பன்! சிறிதேயிடை தந்திதுகேட்க’ என ‘அன்’ ஈறு இயல்பாய் வருதலும், ‘நம்பானெம் பெருமாஎன ‘அன்’ ஈறு ஈற்றயனீண்டு வருதலும், ஆன் ஈறு ‘வாயி லோயே! வாயி லோயே!’ என ஏகாரம் பெற்று வருதலும், ரகர ஈறு மாந்தர்கூறீர் என இயல்பாயும், இறைவரேயென ஏகாரம் பெற்றும் வருதலும், லகார ஈறு கானல் கூறாய் குரிசில்! கூறாய் என இயல்பாயும், திருமாலே தாழ்குழலே என ஏகாரம் பெற்றும் வருதலும், ளகார ஈறு கடவுள் வாழியெ என இயல்பாயும், அடிகள் - அடிகேள் என ஈற்றயல் அகரம் ஏகாரமாயும் வருதலும், இவையிற் பிறவாறாய் வருதலுங் கொள்க. இனி, எடுத்தோதாதனவற்றுள் ஆகார ஈறு, ‘துறந்துள்ளார வரெனத் துனிகொள்ளலெல்லா நீ’ என ஏடாவென்றும், ‘எல்லாநீ முன்னர்த்தானொன்று குறித்தாய்போற் காட்டினை’ என ‘ஏடா’வென்றும் இருபாற்கும் பொதுவாய் விளியேற்றலும், ‘முன்’ ஈறு, தம்முன் - தம்முனே என ஏகாரம் பெற்றும், நம்முன் நம்முனா என ஆகாரம் பெற்றும், ‘இர்’ ஈறு, பெண்டிர் - பெண்டிரோ! என ஓகாரம் பெற்றும், ‘என்னை கேளீர்ரென ஈர் பெற்றும், ‘கேளிர்! வாழியோ கேளிர் நாளும்’ என இயல்பாயும், யகர ஈறு, ‘விளங்குமணிக் கொடும்பூணாய்!’ என இயல்பாயும், ‘ஆயே!’ என ஏகாரம் பெற்றும் வருதலுங் கொள்க. இனி, ‘கிழவோள் பிறள்குணமிவையெனக் கூறிக்- கிழவோன் குறிப்பினையுணர்தற்குமுரியள்’ என்றும், ‘கிழவோட் குவமம் ஈரிடத் துரித்தே’‘கிழவோற் காயின் இடம்வரை வின்றே’ என்றுங் பிறாண்டும் உடம்பொடு புணர்த்துக் கூறிய ‘ஓனென்னும் ஈறு, ‘தொழிலிற் கூறும் ஆனென் இறுதி’ போல சுகரமாய் விளியேற்றலுங் கொள்க. அது, ‘பெருங்கால் வைப்பின் நாடுகிழ வோயே!’ ‘மா அயோய்! என்றாற்போலச் செய்யுட் களுள்ளும் வருவனவுங் கொள்க. ஓகாரம் அடுத்த ளகார ஈறு விளியேற்குமேனும் உணர்க. ‘ஆவுமானியற் பார்ப்பன மாக்களும் - பெண்டிரும் பிணியுடை யீரும் பேணி’ என்றாற் போலும் அண்மை விளியும் இதனாற்கொள்க. (12) 32. அவற்றுள், அன்னெ னிறுதி யாவா கும்மே. இது, முறையானே னகார ஈறு விளியேற்குமாறு கூறுகின்றது. (இ-ள்.) அவற்றுள் அன் என் இறுதி, ஆ ஆகும்மே - அந்நான்கு ஈற்றுப் பெயருள் ‘அன்’ என்னும் னகர ஈற்றுப் பெயர் ஆவாய் விளியேற்கும், எ-று. (உ-ம்.) துறைவன் - துறைவா ஊரன் - ஊரா சோழன் - சோழா சேர்ப்பன் - சேர்ப்பா என வரும். (13) 133. அண்மைச் சொல்லிற் ககர மாகும். இஃது, எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது. (இ-ள்.) அண்மைச் சொல்லிற்கு அகரம் ஆகும் - அண்மை விளிக் கண் ‘அன்னீறு அகரமாகும், எ-று. (உ-ம்.) துறைவன் - துறைவ ஊரன் - ஊர சோழன் - சோழ, என வரும். (14) 134. ஆனெ னிறுதி யியற்கை யாகும். இஃது, ‘ஆன்’ என்பது விளியேற்குமாறு கூறுகின்றது. (இ-ள்.) ஆன் என் இறுதி இயற்கையாகும் - ‘ஆன்னென்னும் னகர ஈற்றுப்பெயர் இயல்பாய் விளி ஏற்கும், எ-று. ‘சேரமான் மலையமானெனக் கூவுதற்கண்ணும் அவ்வாறே நிற்றல் காண்க. (15) 135. தொழிலிற் கூறு மானென் னிறுதி யாயா கும்மே விளிவயி னான. இஃது, எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது. (இ-ள்.) தொழிலிற்கூறும் ஆனென் இறுதி விளிவயினான - தொழி லினான் ஒரு பொருள் அறியச் சொல்லும் ‘ஆன்னீற்றுப் பெயர் விளியேற்குமிடத்து, ஆயாகும் ஆயாம் ஆம், எ-று. (உ-ம்.) வந்தான் - வந்தாய் சென்றான் - சென்றாய் என வரும். ‘தொழிலினென்றதனாற் கழலாய் இடையாயெனக் குறிப்பினுங் கொள்க. (16) 136. பண்புகொள் பெயரு மதனோ ரற்றே. இதுவும் அது. (இ-ள்.) பண்பு கொள் பெயரும் அதனோரற்றே - ‘ஆனீற்றுப் பண்பைக் கொண்டு நின்ற பெயரும் அவ்வீற்றுத் தொழிற் பெயர் போல ‘ஆயாய் விளியேற்கும், எ-று. (உ-ம்.) கரியான் - கரியாய் தீயன் - தீயாய் என வரும். (17) 137. அளபெடைப் பெயரே அளபெடை யியல. இஃது, எய்தாதது எய்துவித்தது. (இ-ள்.) அளபெடைப்பெயரே அளபெடை இயல - ஆனீற்றளபெடைப்பெயர் இகர ஈற்றளபெடைப்பெயர் போல மூன்று மாத்திரையின் நீண்டு இயல்பாய் விளியேற்கும், எ-று. (உ-ம்.) உழாஅஅன் கிழாஅஅன் என வரும். இஃது, அளபெடுத்தலின், ‘ஆன்’ ஈற்றின் அடங்காதாயிற்று. (18) 138. முறைப்பெயர்க் கிளவி யேயொடு வருமே. இதுவும் அது. (இ-ள்.) முறைப்பெயர்க் கிளவி ஏயொடு வருமே - னகார ஈற்று முறைப்பெயர் ஏகாரம் பெற்று விளியேற்கும், எ-று. (உ-ம்.) மகன் - மகனே மருமகன் - மருமகனே என வரும். ஐகார ஈற்று முறைப்பெயர்க்குக் கூறிய உரையை (128) ஈண்டுங் கூறிக்கொள்க. (19) 139. தானென் பெயருஞ் சுட்டுமுதற் பெயரும் யானென் பெயரும் வினாவின் பெயரு மன்றி யனைத்தும் விளிகோ ளிலவே. இது, னகார ஈற்றுள் விளியேலாதன கூறுகின்றது. (இ-ள்.) தானென் பெயரும் சுட்டு முதற்பெயரும் யானென் பெயரும் வினாவின் பெயரும் அன்றியனைத்தும் விளிகோள் இலவே - ‘தான்’ என்னும் ‘ஆனீற்று விரவுப்பெயரும், ‘அவன், இவன், உவன்னென்னும் ‘அன்’ ஈற்றுச் சுட்டு முதற்பெயரும், ‘யானென்னும் ‘ஆனீற்றுப்பெயரும், ‘யாவனென்னும் வினாப் பொருளையுணர்த்தும் அன்னீற்றுப்பெயருமாகிய அவ் வனைத்தும் னகார ஈறேயாயினும் விளி கொள்ளா எ-று. (20) 140. ஆரு மருவு மீரோடு சிவணும். இது, முறையானே (130) ரகார ஈறு விளியேற்குமாறு கூறுகின்றது. (இ-ள்.) ஆரும் அருவும் ஈரொடு சிவணும் - ரகார ஈற்றுப் பெயருள் ஆர், அர் என நின்ற இரண்டீற்றுப்பெயரும் ‘ஈர்’ ஆய் இறுதி திரிந்து விளியேற்கும், எ-று. (உ-ம்.) பார்ப்பார் - பார்ப்பீர்! கூத்தர் - கூத்தீர்! என வரும். (21) 141. தொழிற்பெய ராயினேகாரம் வருதலும் வழுக்கின் றென்மனார் வயங்கி யோரே. இஃது, எய்தியதன் மேற் சிறப்புவிதி கூறுகின்றது. (இ-ள்.) தொழிற்பெயராயின் - மேற்கூறிய இரண்டீறுந் தொழிற் பெயர்க்கு ஈறாய் வருமாயின், ஏகாரம் வருதலும் வழுக்கி இன்று என்மனார் வயங்கியோரே - மேற்கூறிய ஈரோடு ஏகாரம் வருதலுங் குற்றமின்றென்று கூறுவர் விளங்கிய அறிவினை யுடையார், எ-று. (உ-ம்.) வந்தார் - வந்தீரே சென்றார் - சென்றீரே! என வரும். ‘அர்’ ஈறு வந்துழிக் காண்க. ‘வழுக்கின்றென்றதனாற் தொழிற்பெயரல்லா ‘ஆர்’ ஈறுகளும் ஈரோடு ஏகாரம் பெறுதல் கொள்க. நம்பியார் - நம்பியீரே கணியார் - கணியீரே! என வரும். இன்னும் இதனானே ‘அர்’ ஈறு வந்தவரே சென்றவரே என ‘ஈர்’ பெறாது ஏகாரம் பெற்று வருதலுஞ் சிறுபான்மை கொள்க. (22) 142. பண்புகொள் பெயரு மதனோ ரற்றே. இஃது, எய்தியதன்மேற் சிறப்புவிதி வகுத்தது. (இ-ள்.) பண்பு கொள் பெயரும் அதனோரற்றே - அவ்விரண்டீற்றுப் பண்புகொள்பெயரும் அவ்வீற்றுத் தொழிற்பெயர்போல ஈரோடு சிவணியுஞ்சிறுபான்மை ஈரோடு ஏகாரம் பெற்றும் ஈர் பெறாது ஏகாரம் பெற்றும் விளியேற்கும், எ-று. (உ-ம்.) கரியர் - கரியீர் இளையர் - இளையீர் எனவும், கரியீரே இளையீரே எனவும், கரியவரே இளையவரே, எனவும் வரும். இனி, ‘தன்னின முடித்தலென்பதனாற் சீவகசாமி யென்னும் இருபெயரொட்டுப் பண்புத்தொகை, ‘சீவக சாமியாரென ஆரீறாய்ச் சீவக சாமியீரே! என ஈரோடு ஏகாரம் பெறுதல் கொள்க. (23) 143. அளபெடைப் பெயரே யளபெடை யியல. இஃது, எய்தாதது எய்துவித்தது. (இ-ள்.) அளபெடைப் பெயரே அளபெடை இயல - ரகார ஈற்று அளபெடைப்பெயர் னகார ஈற்று அளபெடைப் பெயர்போல மாத்திரை மிக்கு இயல்பாய் விளியேற்கும், எ-று. (உ-ம்.) சிறாஅஅர் துடியே பாடுவன் மகாஅஅர்!’ என வரும். அவ்வளபெடைகள் செய்யுளுள் குறைந்து வந்தன, சந்த இன்பம் நோக்கி விகாரத்தாற் குறைந்து வந்தன என்று கொள்க. (24) 144. சுட்டுமுதற் பெயரே முற்கிளந் தன்ன. இது, விளியேலாதன கூறுகின்றது. (இ-ள்.) சுட்டு முதற்பெயரே முற் கிளந்தன்ன - அவர், இவர், உவரென்னும் ரகார ஈற்றுச் சுட்டு முதற்பெயர் னகார ஈற்றுச் சுட்டு முதற்பெயர் போல விளி கொள்ளா, எ-று. (25) 145. நும்மின் றிரிபெயர் வினாவின் பெயரென் றம்முறை யிரண்டு மவற்றியல் பியலும். இதுவும் அது. (இ-ள்.) நும்மின் திரிபெயர் - ‘நுமென்னும் சொல்லினது திரிபாகிய ‘நீயிரென்னுஞ் சொல்லும், வினாவின் பெயர் - வினாப் பொருளை உணரநின்ற ‘யாவரென்னுஞ் சொல்லும், என்று அம்முறை இரண்டும் அவற்றியல்பு இயலும் - என்று சொல்லப்பட்ட அம்முறைமையினையுடைய இரண்டு சொல்லும் முற்கூறிய சுட்டுப்பெயர்போல விளியேலா, எ-று. ஏனைப் புள்ளி’ என்பதனுள் ‘இர்’ ஈறு கோடலின், ஈண்டு ‘நீயிரென்பதனை எடுத்தோதி விலக்கினார். (26) 146. எஞ்சிய விரண்டி னிறுதிப் பெயரே நின்ற வீற்றய னீட்டம் வேண்டும். இது, லகார ளகார ஈறு விளியேற்குமாறு கூறுகின்றது. (இ-ள்.) எஞ்சிய இரண்டின் இறுதிப் பெயரே - உணர்த்தாது நின்ற லகார ளகாரமென்னும் இரண்டு புள்ளியை இறுதியாகவுடைய பெயர், ஈற்றயல் நின்ற நீட்டம் வேண்டும் - ஈற்றெழுத்துக்கு அயனின்ற எழுத்து நீண்டு விளியேற்றல் வேண்டும், எ-று. (உ-ம்.) குரிசில் - குரிசீல்; ஏந்தல் - ஏந்தால், தோன்றல் - தோன்றால், குழையள் - குழையாள், அணியள் - அணியாள்! மக்கள் - மக்காள்! என வரும். (27) 147. அயனெடி தாயி னியற்கை யாகும். இஃது, எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது. (இ-ள்.) அயல் நெடிதாயின் இயற்கையாகும் - அவ்விரண்டீற்றுப் பெயரும் ஈற்றயலெழுத்து நெட்டெழுத்தா யின் இயல்பாய் விளியேற்கும், எ-று. (உ-ம்.) ஆண்பால் பெண்பால் ஏமாள் கோமாள் கடியாள் என வரும். நமர்காள்ளென்பதும் அது. ‘நமரங்காள்! அறிமினெனப் பெயர்த்திரிசொல்லாய்த் திரிந்து நின்று விளி யேற்றலுங் கொள்க. (28) 148. வினையினும் பண்பினு நினையத் தோன்று மாளெ னிறுதி யாயா கும்மே விளிவயி னான. இஃது, அவ்விரண்டனுள் ளகர ஈற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது. (இ-ள்.) வினையினும் பண்பினும் நினையத் தோன்றும் ஆள் என் இறுதி - வினைச்சொல்லின்கண்ணும் பண்புச் சொல்லின் கண்ணும் ஆராயத் தோன்றும் ‘ஆளீற்றுப்பெயர், விளிவயினான ஆயாகும்மே - விளிக்குமிடத்து இயல்பாகாது ‘ஆயாய் விளி யேற்கும், எ-று. (உ-ம்.) உண்டாள் - உண்டாய் கரியாள் - கரியாய், என வரும். ‘விளிவ யினான’ என்பதனை யாண்டுங் கூட்டுக. (29) 149. முறைப்பெயர்க் கிளவி முறைப்பெய ரியல. இஃது, எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது. (இ-ள்.) முறைப்பெயர்க் கிளவி முறைப்பெயர் இயல - ளகார ஈற்று முறைப்பெயர் னகார ஈற்று முறைப்பெயர் போல ஏகாரம் பெற்று விளியேற்கும், எ-று. (உ-ம்.) மகள் - மகளே மருமகள் - மருமகளே என வரும். (30) 150. சுட்டுமுதற் பெயரும் வினாவின் பெயரு முற்கிளந் தன்ன வென்மனார் புலவர். இது ளகார ஈற்றுள் விளியேலாதன கூறுகின்றது. (இ-ள்.) சுட்டு முதற்பெயரும் வினாவின் பெயரும் முற்கிளந்தன்ன என்மனார் புலவர் - ‘அவள், இவள், உவளென்னும் ளகார ஈற்றுச் சுட்டு முதற்பெயரும் ‘யாவளென்னும் வினாப்பெயரும் முற்கூறிய ஏகார ஈற்றுச் சுட்டு முதற்பெயரும் (144) வினாப்பெயரும் (145) போல விளி கொள்ளா, எ-று. (31) 151. அளபெடைப் பெயரே யளபெடை யியல. இஃது, எய்தாதது எய்துவித்தது. (இ-ள்.) அளபெடைப் பெயரே யளபெடை இயல - லகார ளகார ஈற்று அளபெடைப்பெயர் முற்கூறிய னகார ஈற்றள பெடைப்பெயர் போல அளவு நீண்டு இயல்பாய் விளி ஏற்கும், எ-று. ‘மாஅஅன்னிறம்போல் மழையிருட் பட்டதே, கோஒஒள் கொளக்கோடு கொண்டு’ என்பதனுள் மாஅஅல் கோஒஒள் என வந்தவாறு காண்க. (32) 152. கிளந்த விறுதி யஃறிணை விரவுப்பெயர் விளம்பிய நெறிய விளிக்குங் காலை. இது, விரவுப்பெயர் விளியேற்குமாறு கூறுகின்றது. (இ-ள்.) கிளந்த இறுதி அஃறிணை விரவுப்பெயர் - மேல் உயர் திணைக்கண் விளியேற்குமென்ற எட்டு ஈற்றினையுமுடைய, உயர் திணையோடு அஃறிணை விரவும் விரவுப்பெயர்; விளம்பிய நெறிய விளிக்குங்காலை - அவ் வீறுகளின் எடுத்து ஓதிய முறைமையினையுடைய விளிக்கும் இடத்து. எ-று. (உ-ம்.) சாத்தீ பூண்டே தந்தாய் எனவும், சாத்தா கூந்தால் மக்காள் எனவும் வரும். சாத்தி பூண்டு தந்தை சாத்த என அண்மை விளியுங் கொள்க. இனி, ‘விளிக்குங்காலை’ என்றதனாற் பிணா வாராய், அழிதூவாராய், என எடுத்தோதாத ஆகார ஊகார ஈற்று விரவுப்பெயர் இயல்பாய் விளியேற்றலும், சாத்தன் வாராய், மகள் வாராய், தூங்கல் வாராய் என எடுத்தோதிய ஈறுகள், கூறியவாறன்றி, இயல்பாய் விளியேற்றலும், இப்பெயர்கள் ஏகாரம் பெற்றுச் சாத்தனே மகளே தூங்கலே என விளியேற்றலுங் கொள்க. உயர்திணையோடு அஃறிணை விரவுமாறு, ‘அஃறிணை விரவுப் பெயரியல்புமா ருளவே’ என்புழிக் கூறினாம். (33) 153. புள்ளியு முயிரு மிறுதி யாகிய வஃறிணை மருங்கி னெல்லாப் பெயரும் விளிநிலை பெறூஉம் காலந் தோன்றிற் றெளிநிலை யுடைய வேகாரம் வரலே. இஃது, அஃறிணைப்பெயர் விளியேற்குமாறு கூறுகின்றது. (இ-ள்.) புள்ளியும் உயிரும் இறுதியாகிய - புள்ளியீறும் உயிரீறுமாகிய, அஃறிணை மருங்கின் எல்லாப் பெயரும் - அஃறிணையிடத்து வரும் எல்லாப் பெயர்களும், விளி நிலை பெறூஉங் காலந் தோன்றின் - விளி கொள்ளுங் காலந் தோன்றில் ஏகாரம் வரல் தெளிநிலையுடைய - ஏகாரம் பெறுதலைத் தெற்றென உடைய, எ-று. (உ-ம்.) மரம் - மரமே, அணில் - அணிலே, புலி - புலியே கிளி - கிளியே என வரும். ‘தெளிநிலையுடைய’ என்றதனான், ‘வருந்தினை வாழியென் னெஞ்சம் ‘கருங்கால் வெண்குருன்று கேண்மதி.’ ‘திங்களுட்டோன்றியிருந்த குறுமுயால்! என்றாற்போலப் பிறவாற்றான் விளியேற்பனவுங் கொள்க. இனி உயர்திணைப் பெயருள் ஏகாரம் பெறாமல் விளி யேற்று நின்றன வற்றையும் வழக்குச் சொல்லாற் தெரியப் பொருள்கூற வேண்டியக்கால் இவ்வேகாரமே விரித்துக் கூறல் வேண்டுதலும் இதனாற் கொள்க. ‘தொண்டையோர் மருக! செருமேம் படுந மள்ளர் மள்ள மறவர் மறவ! ‘பைம்பூண் சேஎய்!’ என்றாற்போல்வன ஏகாரத்தாற் பொருள் கூறுமாறு உணர்க. ‘விளிநிலைபெறூஉங் காலந் தோன்றினென்றார், முன்னிலை யாக்கலுஞ் சொல்வழிப்படுத்தலும்’ வேண்டுழியே விளியேற்குமென்றற்கு. (34) 154. உளவெனப் பட்ட வெல்லாப் பெயரு மளபிறந் தனவே விளிக்குங் காலைச் சேய்மையி னிசைக்கும் வழக்கத் தான. இது முற்கூறிய மூவகைப்பெயர்க்கும் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது. (இ-ள்.) உள எனப்பட்ட எல்லாப் பெயரும் - இரு திணைக்கண்ணும் விளியேற்பனவாகச் சொல்லப்பட்ட எல்லாப் பெயரும், விளிக்குங்காலை அளபு இறந்தன - விளிக்குமிடத்துத் தம் மாத்திரையின் இறந்து இசைத்தனவாம், சேய்மையின் இசைக்கும் வழக்கத்தான - சேய்மைக்கண் ஒலிக்கும் வழக்கின்கண், எ-று. (உ-ம்.) நம்பீஇ சாத்தாஅ என வரும். சேரமாஅன் மலையமாஅன் என்பன அளபிறந்திசைக்கும்வழி இயல்பன்றி ஈற்றயல் நீண்டன வாம். (35) 155. அம்ம வென்னு மசைச்சொ னீட்ட மம்முறைப் பெயரொடு சிவணா தாயினும் விளியொடு கொள்ப தெளியு மோரே. இஃது, ‘அம்ம’ என்னும் இடைச்சொல் விளியேற்குமாறு கூறுகின்றது. (இ-ள்.) அம்ம என்னும் அசைச்சொல் நீட்டம் - அம்ம வென்று கூறப்படும் முறைப்பொருட் கிளவியினது நீட்டமாகிய அம்மா வென்னுஞ் சொல், அம்முறைப் பெயரொடு சிவணாது ஆயினும் - முற்கூறிய விளியேற்கும் முறைமையினையுடைய பெயர்களோடு பொருந்தாது இடைச்சொல்லாய் நிற்பினும், விளியொடு கொள்ப தெளியுமோரே - விளியேற்கும் பெயர்க ளோடு இதனையும் விளிநிலைமைத்தாகக் கொள்வர் தெளிந்த அறிவினை உடையோர், எ-று. (உ-ம்.) ‘அம்மா கொற்றா’ என வரும். ‘கொற்றாவென்பதே எதிர்முகமாக்கும் ஆயினுங்கேளா யென்பதும் அதனோடு கூடி எதிர்முகமாக்கி நின்றவாறு காண்க. ‘அம்ம கேட்பிக்கும்’ எனவும், ‘அம்மன்னுமுரைப் பொருட் கிளவியும்’ எனவும், ‘உரைப்பொருட் கிளவி நீட்டமும் வரையார்’ எனவும் ஆசிரியர் இதனைப் பொருள் தந்து நிற்குமென்றே சூத்திரஞ் செய்தலின், ஈண்டு ‘அசைச்சொல் நீட்டமென்றதற்கு ‘யாவென் சினைமிசையுரையசைக்கிளவிக்கு’ என்றாற்போல, ‘எதிர்முக மாக்குஞ் சொல்லின் நீட்டமென்று பொருளுரைத்துக் கொள்க. (36) 156. தநநு எஎன வவைமுத லாகித் தன்மை குறித்த னரளவெ னிறுதியு மன்ன பிறவும் பெயர்நிலை வரினே யின்மை வேண்டும் விளியொடு கொளலே. இஃது, உயர்திணைப்பெயருள் விளியேலாதன கூறுகின்றது. (இ-ள்.) த ந நு எ என அவை முதலாகி - த ந நு என்னும் உயிர்மெய்யையும் எ என்னும் உயிரையும் முதலாக வுடையவாய், தன்மை குறித்த ன ர ள என் இறுதியும் - ஒருவனது கிழமைப் பொருண்மையைக் குறித்து நின்ற ன ர ள என்னும் மூன்று புள்ளியை இறுதியாகவுடைய சொல்லும், அன்ன பிறவும் பெயர் நிலை வரினே- அவைபோல்வன பிறவு மாகிய பெயராகிய நிலைமையையுடைய சொற்கள் வரின், விளியொடுகொளல் இன்மை வேண்டும் - மேல் விளியேற்குமென்னப்பட்ட பெயரொடு கோடலை இல்லாமை வேண்டும் ஆசிரியன், எ-று. (உ-ம்.) தமன், தமர், தமள்; நமன், நமர், நமள்; நுமன், நுமர், நுமள்; எமன், எமர், எமள் எனவும், தம்மான், தம்மார், தம்மாள்; நம்மான், நம்மார், நம்மாள்; நும்மான், நும்மார், நும்மாள்; எம்மான், எம்மார், எம்மாள் எனவும் வரும். ‘பிறவுமென்றதனான், மற்றையான், மற்றையார், மற்றையாள்; பிறன், பிறர், பிறள் என வரும். ‘வேண்டு மென்றதனான், எம்பீ ‘எம்மானே தோன்றினாயென்னை யொளித்தியோ என்றாற்போலச் சிறுபான்மை விளியேற்பனவும், ‘தமர்’ முதலியன ‘கள்ளென்னுமிடைச் சொல்லோடு கூடியவழி, ளகார ஈறுபோல ஈற்றயல் நீண்டு, ‘தமர்காள் நமர்காளெனவும் ‘நமரங்காள்’ எனப் பெயர்த்திரி சொல்லாய்த் திரிந்து நின்று விளி யேற்பனவுங் கொள்க. ‘எம்பி’யென்னுங் கிளைமுதற் பெயரைத் தன்னினம் முடித்த லாற் கொள்க. (37) விளிமரபு முற்றும் பெயரியல் இதுகாறும் அல்வழி வேற்றுமையாகிய தொடர்மொழி யிலக்கணங் கூறிய ஆசிரியர், இனி அத்தொடர்மொழிக்கு உறுப் பாகிய தனிமொழி யிலக்கணங் கூறத் தொடங்கி முதற்கண் பெயரிலக்கண முணர்த்துகின்றார். அதனால் இது பெயரிய லென்னும் பெயர்த்தாயிற்று. இதன்கண் 43-சூத்திரங்கள் உள்ளன. இவற்றை 41-சூத்திரங்களாக அடக்குவர் தெய்வச் சிலையார். எல்லாச் சொற்களும் பொருள் குறித்து வருவனவே. சொல்லாற் குறிக்கப்பட்ட பொருளைத் தெரிந்துகொள்ளுதற்கும் சொல்லைத் தெரிந்து கொள்ளுதற்கும் அச்சொல்லே கருவியாகும். சொல் பொருளுணர்த்தும் முறை வெளிப்படுநிலை, குறிப்புநிலை யென இருவகைப்படும். சொல்லெனச் சிறப்பித்துரைக்கத்தக்கன பெயரும் வினையும் என இரண்டேயாம். இடைச் சொல்லும் உரிச்சொல்லும் பெயர் வினைகளைச் சார்ந்து தோன்றுவன என்பர் ஆசிரியர். பெயர் என்பது பொருள். பொருளை யுணர்த்துஞ் சொல் பெயர்ச்சொலெனப்பட்டது. பொருளது புடைபெயர்ச்சியாகிய தொழிற் பண்பின் காரியம் வினையாகும். அவ்வினையை யுணர்த்துஞ்சொல் வினைச்சொலெனப் பட்டது. பெயருமாகாது வினையுமாகாது அவ்விரண்டற்கும் நடு நிகரனவாய் நிற்பன இடைச்சொற்களாம். இடை-நடு. குணப்பண்பும் தொழிற்பண்பு மாகிய பொருட்பண்பை யுணர்த்துஞ் சொற்கள் உரிச்சொற்களாம். பொருட்குப் பண்பு உரிமைபூண்டு நிற்றலின் அப்பண்பினை யுணர்த்துஞ்சொல் உரிச்சொலெனப்பட்ட தென்பர் சிவஞான முனிவர். உயர்திணைப் பெயரும், அஃறிணைப் பெயரும், அவ்விரு திணைக்கும் ஒத்த உரிமையுடைய விரவுப்பெயரும் எனப் பெயர்ச் சொல் மூன்று வகைப்படும். அவன், பெண்மகன், சாத்தன் என னகரவீறும், அவள், மக்கள், மகள் என ளகரவீறும் நம்பி, பெண்டாட்டி, முள்ளி என இகரவீறும், ஆடூஉ, மகடூஉ, அழிதூஉ என உகரவீறும் உயர்திணை ஆண்பால் பெண்பால் களுக்கும் அஃறிணைக்கும் உரியவாய் வந்தன. இப்பெயர்ச் சொற்களை வினைச் சொற்போல இன்னஈறு இன்ன பாலுக்குரித்து என ஈறு பற்றிப் பகுத்துணர்த்துதலாகாமையின் இருதிணைப் பிரிந்த ஐம்பாலுணர்த்துஞ் சொல்லாதற்குப் பெயருள் உரியன உரியவாம் என்றார் தொல்காப்பியனார். இவ்வியலில் 8-முதல் 12-வரையுள்ள சூத்திரங்களால் உயர் திணைப் பெயர்களையும், 13-முதல் 14-வரையுள்ள சூத்திரங்களால் அஃறிணைப் பெயர்களையும், 17-முதல் 19-வரையுள்ள சூத்திரங்களால் விரவுப்பெயர் பால் விளங்க நிற்றலையும், 20-முதல் 36-வரையுள்ள சூத்திரங்களால் இரு திணைப் பொதுப்பெயர்களையும் அவற்றின் வகையினையும் விரித்துக் கூறுவர் ஆசிரியர். அருவாளன், சோழியன் என்றாங்கு நிலம்பற்றி வழங்கும் பெயர் நிலப்பெயர். சேரன், சோழன், பாண்டியன் என்றாற்போல ஒருவன் பிறந்த குடி பற்றி வழங்குவன குடிப்பெயர். அவையத்தார், அத்திகோசத்தார் என்றாங்கு ஒரு துறைக்கண் உரிமை பூண்ட பலரையுங் குறித்து வழங்குவன குழுவின்பெயர். தச்சன், கொல்லன் என்றாற்போலத் தொழில்பற்றி வழங்கும் பெயர் வினைப்பெயர். அம்பர்கிழான், பேரூர்கிழான் என்றாற்போல உடைமைப் பொருள்பற்றி அதனையுடையார்க்கு வழங்கும் பெயர் உடைப்பெயரெனப்படும். கரியன் செய்யன், நல்லன் தீயன் என்றாற்போல நிற முதலிய குணம் பற்றி அப்பண்புடையார்க்கு வழங்கும் பெயர் பண்புகொள் பெயராகும். தந்தையர், தாயர், தன்னையர் என அம்முறையுடையார் பலர்க்கும் வழங்கும் பெயர் பல்லோர்க் குறித்த முறைநிலைப் பெயராம். பெருங்காலர், பெருந்தோளர் என்றாற்போலச் சினையுடைமைபற்றி அச்சினை யுடையார் பலர்க்கும் வழங்கும் பெயர் பல்லோர்க்குறித்த சினை நிலைப் பெயராம். ஆயர், வேட்டுவர் முதலாகத் திணைபற்றிப் பலர்க்கும் வழங்கும் பெயர் பல்லோர்க் குறித்த திணை நிலைப் பெயராம். பட்டி புத்திரர் கங்கை மாத்திரர் என்றாற்போல விளையாட்டுக் குறித்து இளைஞர்கள் பகுதிபடக் கூடித் தமக்குப் படைத்திட்டுக்கொள்ளும் பெயர் கூடிவரு வழக்கின் ஆடியற் பெயரெனப்படும். ஒருவர், இருவர், மூவர் என எண்ணாகிய இயல்புபற்றி இவ்வளவினர் என்னும் பொருளில் வழங்கும் பெயர் இன்றிவரென்னும் எண்ணியற் பெயராம். இங்கெடுத்துக் காட்டிய பெயர் விகற்பமெல்லாம் தம் காலத்தே தமிழகத்தில் வழங்கப்பெற்றனவாதலின் இவற்றைப் பால் விளங்க வந்த உயர்திணைப் பெயர்களில் அடக்கிக் கூறினார் ஆசிரியர். ஆ, யானை, தெங்கு, பலா என்றாற்போன்று ஒருமைக்கும் பன்மைக்கும் பொதுவாய் வழங்கும் அஃறிணைப் பெயர்களை ‘அஃறிணையியற்பெயர்’ எனக் குறியிட்டு வழங்குவர் தொல் காப்பியர். இவற்றை நன்னூலாரும் பிறரும் பால்பகா அஃறிணைப் பெயர் என வழங்குவர். ஒருவர்க்குக் காரணங் கருதாது சாத்தன், கொற்றன் என்றாங்கு இயல்பாக இட்டு வழங்கும் பெயர் இயற்பெயரெனப்படும். பெருங்காலன், முடவன் என்றாற்போன்று சினையுடைமைபற்றி முதற்பொருளுக்கு வழங்கும் பெயர் சினைப் பெயராம். சீத்தலைச் சாத்தன், கொடும் புறமருதி என்றாற்போன்று சினைப்பெயரொடு தொடர்ந்துவரும் முதற்பெயர் சினைமுதற் பெயராம். பிறப்பால் ஒருவரோடொருவர்க்குளதாகிய முறை பற்றித் தந்தை, தாய் முதலாக வழங்கும் பெயர்கள் முறைப் பெயர்களாம். இயற்பெயர், சினைப்பெயர், சினைமுதற்பெயர், முறைப்பெயர் ஆகிய இவiயும் தாம், தான், எல்லாம், நீயிர், நீ என்பனவும் இருதிணைக்கும் உரியனவாய் வழங்கும் பொதுப் பெயர்களாகும். இவற்றை விரவுப்பெயர் என வழங்குதலும் உண்டு. மேற்கூறிய இயற்பெயர், சினைப்பெயர், சினைமுதற் பெயர் ஆகிய மூன்றும் ஆண்மை பெண்மை ஒருமை பன்மை என இந்நான்குங் காரணமாக இருதிணைக்கும் பொதுவாகி வழங்குங் கால் முந்நான்கு பன்னிருண்டுவகைப்படுமென்றும், முறைப்பெயர் ஆண்மை முறைப்பெயர் பெண்மை முறைப்பெயர் என இரு வகைப்படுமென்றும், இவை பெண்மை சுட்டிய பெயர், ஆண்மை சுட்டிய பெயர், ஒருமை சுட்டிய பெயர், பன்மை சுட்டிய பெயர் என நான்காயடங்கமென்றும், இவற்றுள் பெண்மை சுட்டிய பெயர் உயர்திணையில் பெண்ணொருத்தியையும் அஃறிணையில் பெண்ணொன்றையம் உணர்த்துதலும், ஆண்மை சுட்டிய பெயர் உயர்திணையுள் ஒருவனையும் அஃறிணையில் ஆண் ஒன்றையும் உணர்த்துதலும் ஒருமை சுட்டிய பெயர் உயர்திணையுள் ஒருவன் ஒருத்தி என்னும் இருபாலும் அஃறிணையில் ஒன்றன் பாலுமாகிய மூன்று பால்களை யுணர்த்துதலும், பன்மை சுட்டிய பெயர் இருதிணைப் பன்மையும் உணர்த்தி வருதலோடு அவற்றுள் ஒரு சாரன அஃறிணையொருமை அஃறிணைப் பன்மை உயர்திணையில் ஆண்மை பெண்மை ஆகிய இந்நான்கு பால்களையுணர்த்துதலும் உடையன என்றும் விரித்துரைப்பர் தொல்காப்பியர். பன்மை சுட்டிய பெயர் என்பதற்கு இருதிணையிலும் பன்மைப் பாலைச் சுட்டிவரும் பொதுப் பெயரென்பதே பொருள். இதுவே ஆசிரியர் கருத்தென்பது தாமென் கிளவி பன்மைக்குரித்தே’ (தொல்-சொல். 181) ‘ஏனைக்கிளவி பன்மைக்குரித்தே’ (தொல்-சொல். 187) எனவருஞ் சூத்திரங்களால் உயர்திணைப் பலர்பாற்கும் அஃறிணைப் பலவின் பாற்கும் பொதுவாகிய நிலையினைப் பன்மையென்ற சொல்லால் அவர்கூறுதலால் நன்கு புலனாம். பன்மை சுட்டிய பெயர்கள் தமக்குரிய இருதிணைப் பன்மையையுஞ் சுட்டி வழங்குதலே முறையாகவும் அவற்றுள் ஒருசாரன அஃறிணையில் ஒன்றன்பால் பலவின்பால் உயர்திணையில் ஆணொருமை பெண்ணொருமை ஆகிய இந்நான்கு பால்களையும் குறித்து வருதலுண்டென்பார், ‘பன்மை சுட்டிய எல்லாப் பெயரும் ஒன்றே பலவே ஒருவ ரென்னும் என்றிப் பாற்கும் ஓரன் னவ்வே’ எனச் சூத்திரஞ் செய்தார் தொல்காப்பியனார். இதன்கண் என்றிப்பாற்கும் என்ற உம்மையால் பன்மை சுட்டிய பெயர் தனக்குரிய இருதிணைப் பன்மையையும் ஏற்றுவருதலை ஆசிரியர் தழீஇக் கூறினாராதல்வேண்டும். இவ்வுண்மை ‘தன்பாலேற்றலை உம்மையால் தழீஇயினார்’ எனவரும் சிவஞானமுனிவர் உரைக் குறிப்பினால் இனிது புலனாதல் காண்க. இங்கே “பன்மை சுட்டிய பெயரென்பது வெண்குடைப் பெருவிறல் என்பதுபோல ஒருமையியைபு நீக்காது இயைபின்மை மாத்திரை நீக்கிப் பன்மை சுட்டும் என்பதுபட நின்றது” என்பர் சேனாவரையர். இச்சூத்திரத்திற் கூறியவாறு பன்மை சுட்டிய பெயர் உயர்திணைப் பன்மையையுணர்த்தா தொழிதலும் ஏனைபொருமைகளை யுணர்த்துதலும் பொருந்தா வென்பது கருதி இத்தொல்காப்பியச் சூத்திரக் கருத்தை மறுத்தல் என்னும் மதம்பட ‘அவற்றுள்’ ஒன்றேயிரு, திணைத் தன்பாலேற்கும்’ என நன்னூலார் சூத்திரஞ் செய்தாரென்பர் சங்கர நமச்சிவாயர், பன்மை சுட்டிய பெயரென்றது உயர்திணை ஆணொருமை பெண்ணொருமை அஃறிணையொருமை பன்மை ஆகிய பல பால்களையும் சுட்டி நிற்றலின் இனமுள்ள அடைமொழியே யென்பதும் எவ்வகையால் நோக்கினும் ஆசிரியர் தொல் காப்பியனார் கருத்து மறுக்கத்தக்கதன்றென்பதும் சிவஞான முனிவர் கருத்தாகும். ஒருவரென்னும் பெயர்ச்சொல் ஒருவன் ஒருத்தி யென்னும் இருபாற்கும் பொதுவாய் வழங்கும். அச்சொல் பொருளால் ஒருமையைக் குறிப்பதாயினும் பலர்பாற் சொல்லோடு தொடரும் இயல்புடையதாகும். பெண் மகன் என்னும் பெயர் பெண்பால் வினைகொண்டு முடியும். பெயர்களின் ஈற்றயலிலுள்ள விகுதி ஆகாரம் செய்யுளுள் ஓகாரமாகத் திரியும். செய்யுளிலே கருப் பொருள்களின்மேல் வழங்கும் இருதிணைப் பொதுப் பெயர்களுள் அவ்வந்நிலத்து மக்களால் அஃறிணைப் பொருளுக்கே யுரிமை யுடையனவாய் வழங்கும் பெயர்கள் உயர்திணையை யுணர்த்தா வென்பர் ஆசிரியர். - க. வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 204-208 ஐந்தாவது பெயரியல் 157. எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே. என்பது சூத்திரம். இவ்வோத்து, பெயர்க்கு இலக்கணம் உணர்த்தினமையாற் பெயரியலென்னும் பெயர்த்தாயிற்று. இது முதல் ஐந்து சூத்திரமும் பொது இலக்கணங் கூறுதலின், வேற்றுமை இலக்கணத்தைச் சேர முன் வைத்தார். இச்சூத்திரம், நால்வகைச் சொற்கும் பொதுஇலக்கணங் கூறுகின்றது. (இ-ள்.) எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே - பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் இடைச்சொல்லும் உரிச்சொல்லுமாகிய எல்லாச் சொல்லும் பொருளுணர்த்து தலைக் கருதியே நிற்கும்; பொருளுணர்த்துதலைக் கருதாது நிற்பன இல்லை, எ-று. ‘எல்லாச் சொல்லும் பொருள்குறித்தனவே’ என்றது, இவ்வாள் வெட்டுதலைக் கருதியேயிருக்கும் என்றாற்போலக் கருவிக்கருத்தாவாய் நின்றது. ‘ஆயிரு திணையினிசைக்குமன் சொல்லே’ என்புழி இருதிணைப் பொருளையுஞ் சொற்களு ணர்த்துமென்பதன்றித் தமிழ்ச்சொல்லெல்லாம் ஒரு தலையாகப் பொருளுணர்த்துமென்னுந் துணிபு விதி ஆண்டின்மையின், இச்சூத்திரங் கூறினார். தாஞ் சார்ந்த சொற்களின் பொருளை யுணர்த்தியும் அச்சொற்களை அசைத்தும் நிற்றலின், அசைநிலையும் பொருள் குறித்தனவேயாம் சொற்கள் ஓசை நிறைந்துநின்றே பொருளுணர்த்த வேண்டுதலின், இசைநிறையும் பொருளுணர்த்திற்றேயாம். முயற்கோடு, பொய்ப்பொருள் குறித்ததாம், இல்லையென வருதலின். (1) 158. பொருண்மை தெரிதலுஞ் சொன்மை தெரிதலும் சொல்லி னாகு மென்மனார் புலவர். இதுவும், அச்சொற்கள் பொருளுணர்த்துமாறு கூறுகின்றது. (இ-ள்.) பொருண்மை தெரிதலும் - சொல்லின் வேறாகிய பொருட்டன்மை அறியப்படுதலும், சொன்மை தெரிதலும் - பொருட்டன்மை அறியப்படாது அச்சொற்றன்மை அறியப் படுதலுமென்ற இரண்டும், சொல்லின் ஆகும் என்மனார் புலவர் - சொல்லானாம் என்று சொல்லுவர் புலவர், எ-று. (உ-ம்.) சாத்தன் வந்தான், பண்டு காடுமன், உறுகால் - இவை பொருட்டன்மை தெரிந்தன. ‘செய்தெனெச்சம்’ ‘தஞ்சக் கிளவி’ ‘வேறென் கிளவி’ செய்கென் கிளவி’ ‘கடியென் கிளவி’ இவை சொற்றன்மை தெரிந்தன, அச்சொற்றன்மையே அறியப்படுதலின். ‘ஈறுபெயர்க்காகுமியற்கைய வென்ப’ என்றாற் போல்வன, பெயர்ச் சொல்லை உணர்த்தலிற் சொற்றன்மை தெரிதலும், உருபேற்றுழிச் செயப்படுபொருள் முதலிய பொருள்களை உணர்த்தலிற் பொருண்மை தெரிதலும் உடனின்றனவாம். பிறவும் இவ்வாறு உடன்வருவன உணர்ந்து கொள்க. (2) 159. தெரிபுவேறு நிலையலுங் குறிப்பிற் றோன்றலு மிருபாற் றென்ப பொருண்மை நிலையே. இதுவும் அது. (இ-ள்.) பொருண்மை நிலையே - மேற்கூறப்பட்ட பொருட்டன்மை தெரிதல், தெரிபு வேறு நிலையலும் - சொன்மை மாத்திரத்தான் விளங்கி வேறு நிற்றலும், குறிப்பிற் தோன்றலும் - சொன்மை மாத்திரத்தாற்தோன்றாது சொல்லொடு கூடிய குறிப்பாற் தோன்றலுமாகிய, இருபாற்று என்ப - இரண்டு கூற்றைடைத்து என்று கூறுவர் ஆசிரியர், எ-று. (உ-ம்.) அவன், இவன், உவன்; வந்தான், சென்றான் - இவை தெரிந்தன. ஒருவர் வந்தாரென்றாற்போல்வனவும் ஆகுபெயராய் வருவனவுங் குறிப்பிற் தோன்றலாம். சேனாவரையர் காட்டிய, ‘இளைதாக முண்மரங் கொல்க களையுநர் - கைகொல்லுங் காழ்த்த விடத்து.’என்னும் உதாரணஞ் செய்யுளாதலின், செய்யுளியலில் ‘சொல்லொடுங் குறிப்பொடும் முடிவுகொள்ளி யற்கை - புல்லிய கிளவியெச்சமாகும், என்னுஞ் சூத்திரத்துள் ஆசிரியர் குறிப்பெச்சமெனக் கூறியவாறு காண்க. (3) 160. சொல்லெனப் படுப பெயரே வினையென் றாயிரண் டென்ப வறிந்திசி னோரே. இஃது, அந்நால்வகைச் சொல்லினுள் சிறந்தவற்றிற்குப் பெயரும் முறையுந் தொகையும் உணர்த்துகின்றது. (இ-ள்.) சொல்லெனப் படுப - ‘சொல்லென்று சிறப்பித்துச் சொல்லப்படுவன, பெயரே வினையென்று ஆயிரண்டு என்ப அறிந்திசினோரே - பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லுமென அவ்விரண்டென்று கூறுவர் அறிந்தோர், எ-று. பொருளும் பொருளினது புடைபெயர்ச்சியுமாகிய முறைமை பற்றிப் பெயரை முற்கூறினார். (4) 161. இடைச்சொற் கிளவியு முரிச்சொற் கிளவியு மவற்றுவழி மருங்கிற் றோன்று மென்ப. இஃது, இறந்தது காத்தது. (இ-ள்.) இடைச்சொற் கிளவியும் உரிச்சொற் கிளவியும் அவற்றுவழி மருங்கிற் தோன்றும் என்ப - இடைச்சொல்லாகிய சொல்லும் உரிச்சொல்லாகிய சொல்லும் பெயர்வினைகளது தாந் தோன்றுதற்கு இடமாகிய இடத்தே தோன்றுமென்று கூறுவர் ஆசிரியர், எ-று. உ-ம் தாந்தோன்றுதற்கு இடமாவன, அவன், அவள், உண்டான், உண்டாள்; துவைத்தல், துவைக்கும் என்றாற்போல்வன. தாந் தோன்றுதற்கு இடமல்லாதன, மரம், மான் என்றாற்போல்வன வாகிய பெயரும், உண், தின் என்றாற் போல்வனவாகிய முதனிலைப்பெயர் தானே நிற்பனவுமென்று உணர்க. (5) 162. அவற்றுட், பெயரெனப் படுபவை தெரியுங் காலை யுயர்திணைக் குரிமையும் மஃறிணைக் குரிமையு மாயிரு திணைக்குமோ ரன்ன வுரிமையு மம்மூ வுருவின தோன்ற லாறே. இது, நிறுத்தமுறையானே பெயர்ச்சொற்குப் பெயரும் முறையுந் தொகையுங் கூறுகின்றது. (இ-ள்.) அவற்றுள் - மேற்கூறப்பட்ட நான்கு சொல்லுள்ளும், பெயரெனப்படுபவை தெரியுங் காலை - பெயர்ச்சொல்லென்று சொல்லப்படுவனவற்றை ஆராயுங் காலை, தோன்றல் ஆறே - அவை தோன்றும் நெறிக்கண், உயர்திணைக்கு உரிமையும் - உயர்திணைக்கு உரிமையுடைமையும், அஃறிணைக்கு உரிமையும் - அஃறிணைக்கு உரிமையுடைமையும், ஆயிருதிணைக்கும் ஓர் அன்ன உரிமையும் - அவ்விருதிணைக்கும் ஒத்த உரிமை யுடைமையும், அம்மூவுருவின - அம்மூன்று வேறுபாட்டை யுடையவாம், எ-று. ‘ஓரன்ன உரிமைய’ என்றதற்கு ஒரு சொல் சொல்லுதற் கண்ணே இரண்டினையுமுணர்த்தாவென்று உணர்க. (6) 163. இருதிணைப் பிரிந்த வைம்பாற் கிளவிக்கு முரியவை யுரிய பெயர்வயி னான. இதுவும் பெயர்க்கண்ணதோர் இலக்கணங் கூறுகின்றது. (இ-ள்.) பெயர்வயினான - ஒருபாற்பெயரிடத்து முடிபாக வந்த வினைகள், இரு திணைப் பிரிந்த ஐம்பாற் கிளவிக்கும் - இருதிணையினின்றும் பிரிந்த ஐம்பாற்பொருட்கும், உரியவை உரிய - தனித்தனிக் கூறாமல் தானே சென்று உணர்த்தற்கு உரியன உரியவாம், எ-று. உம்மையானே, ‘ஐம்பாலையுஞ் சேர உணர்த்தாது சில பாலை உணர்த்துதற்கு உரியன உரியவாம்,’ என்றுங் கொள்க. (உ-ம்.) ‘நஞ்சுண்டான் சாமென்றவழி, நஞ்சுண்டல் சாதற்குக் காரணமென்பான், ஒரு பால்மேல் வைத்துக் கூறினானாயினும், அஃது ஒழிந்த நான்கு பாற்குஞ் சாதல் எய்தினமையை உணர்த்தினவாறு காண்க. ‘பார்ப்பான் கள்ளுண்ணானென்பது, ஏனை இருபாற்கும் எய்துவித்து நின்றது. இனிச் சேனாவரையர், ‘இரு திணைப் பிரிந்த ஐம்பாற் கிளவியாதற்கும் பெயருள் உரியன உரியவாமென்று பொருள் கூறி, ‘அவன், பெண் மகன், சாத்தன் என னகர ஈறு ஆடூஉவிற்கும் மகடூஉவிற்கும் அஃறிணைப்பாற்கும் உரித்தாய் வருதலின், ‘உரியவை உரிய’ என்றார் என்பது இச்சூத்திரத்திற்குக் கருத்து,’ என்றாராலெனின், ஆசிரியர் வினைச்சொல்லை ஈற்றான் அடங்கு மென்று கருதி ஈறுபற்றி ஓதிப், பெயர்ச்சொல்லை ஈற்றானடங் காது பல்வேறு வகையவாய் வருமென்று கருதிச் சொல்லாகத் தனித்தனியே எடுத்தோதினாராதலின், இவ்வெடுத்தோதிய சொற்களான் இவர் கூறிய பொருள் விளங்குதலின், இச்சூத்திரத்திற்கு இதுவே பொருளென்று உணர்க. அன்றியும் ‘ஒருபாற் கிளவியேனைப்பாற் கண்ணும் - வருவன தானே வழக்கென மொழிப.’ (28) என்னும் பொருளியற்சூத்திரத்தான் ‘நஞ்சுண்டான் சாமென்பது அடங்குமென்று கூறல் அச்சூத்திரத்தின் கருத்து அறியாது கூறிற்றாம்; என்னை? அஃது, ‘ஒத்த கிழவனுங் கிழத்தியும்’ என்ற களவியற் சூத்திரத்திற் பன்மை கூறா வழுவை அமைத்தற்கு எழுந்த சூத்திரமாதலின். (7) 164. அவ்வழி, அவனிவ னுவனென வரூஉம் பெயரு மவளிவ ளுவளென வரூஉம் பெயரு மவரிவ ருவரென வரூஉம் பெயரும் யான்யாம் நாமென வரூஉம் பெயரும் யாவன் யாவள் யாவ ரென்னு மாவயின் மூன்றோ டப்பதி னைந்தும் பாலறி வந்த வுயர்திணைப் பெயரே. இது, முறையானே உயர்திணைப்பெயரை உணர்த்து கின்றது. (இ-ள்.) அவ்வழி - மூன்று கூற்றாக முற்கூறிய பெயருள், அவன் இவன் உவன் என வரூஉம் பெயரும் அவள் இவள் உவள் என வரூஉம் பெயரும் அவர் இவர் உவர் என வரூஉம் பெயரும் - அவனென்பது முதலாகிய சுட்டுப்பெயர் ஒன்பதும், யான் யாம் நாம் என வரூஉம் பெயரும் - யானென்னுந் தனித்தன்மைப் பெயர் ஒன்றும் யானென்னும் படர்க்கையுளப் பாட்டுத் தன்மைப் பெயர் ஒன்றும் ‘நாமென்னும் முன்னிலை உளப்பாட்டுத் தன்மைப் பெயர் ஒன்றும், யாவன் யாவள் யாவர் என்னும் ஆவயின் மூன்றோடு அப்பதினைந்தும் - ‘யாவன்’ முதலிய வினாப்பொரு ளிடத்துப் பெயர் மூன்றுமாயுள்ள அப்பதினைந்து பெயரும், பால் அறிவந்த உயர் திணைப்பெயரே - ஒருவன், ஒருத்தி, பலர் என்னும் மூன்று பாலினையும் அறியவந்த உயர்திணைப் பெயராம், எ-று. ‘யான், யாம், நாம்’ என்பன இருபாற்கும் பொதுவேனுங் குறிப்பான் உணர்ந்துழி ஒரு பாலுணர்த்தியே நிற்றலிற் பால் அறிய வந்த உயர்திணைப் பெயராயிற்று. ‘நம்பி, பெண்டாட்டி’ என இகர ஈறும், ‘ஆடூஉ, மகடூஉ’ என ஊகார ஈறு, பிற ஈறுகளும் இருபாற்கும் உரியவாய் வருதலின், ஈறுபற்றி ஓதாது இச்சூத்திரம் முதலாகப் பெயர்பற்றி ஓதினார். (8) 165. ஆண்மை யடுத்த மகனென் கிளவியும் பெண்மை யடுத்த மகளென் கிளவியும் பெண்மை யடுத்த விகர விறுதியு நம்மூர்ந்து வரூஉ மிகரவை காரமு முறைமை சுட்டா மகனு மகளு மாந்தர் மக்க ளென்னும் பெயரு மாடூஉ மகடூஉ வாயிரு கிளவியுஞ் சுட்டுமுத லாகிய வன்னு மானு மவைமுத லாகிய பெண்டென் கிளவியு மொப்பொடு வரூஉங் கிளவியொடு தொகைஇ யப்பதி னைந்து மவற்றோ ரன்ன. இதுவும் இது. (இ-ள்.) ஆண்மை அடுத்த மகனென் கிளவியும் - ஆளுந் தன்மை அடுத்த ஆண்மகனென்னுஞ் சொல்லும், பெண்மை அடுத்த மகளென் கிளவியும் - கட்புலனாயதோர் அமைதித் தன்மை அடுத்த பெண்மகளென்னுஞ் சொல்லும், பெண்மை அடுத்த இகர இறுதியும் - கட்புலனாயதோர் அமைதித் தன்மை அடுத்த இகர ஈற்றுப் பெண்டாட்டியென்னுஞ் சொல்லும், நம் ஊர்ந்து வரூஉம் இகர ஐகாரமும் - நம்மென்னும் முதனிலையை ஊர்ந்து நமக்கின்னாரென வரூஉம் இகர ஐகார ஈற்று நம்பி, நங்கை என்னுஞ் சொல்லும், முறைமை சுட்டா மகனும் மகளும் - முறைப் பொருண்மை கருதாத மகன், மகளென்னுஞ் சொல்லும், மாந்தர் மக்கள் என்னும் பெயரும் - மாந்தர், மக்கள் என்னும் பன்மைச் சொல்லும், ஆடூஉ மகடூஉ ஆயிரு கிளவியும் - ஆடூஉ, மகடூஉ ஆகிய அவ்விரு வகைச் சொல்லும், சுட்டு முதல் ஆகிய அன்னும் ஆனும் - சுட்டெழுத்தை முதலாக உடைய அவ்வாளன், இவ்வாளன், உவ்வாளன், அன்னன், அனையன் என்னும் அன் ஈற்றுச் சொல்லும், அம்மாட்டான், இம்மாட்டான், உம்மாட்டான், அன்னான், அனையான் என்னும் ஆனீற்றுச் சொல்லும், அவை முதலாகிய பெண்டு என் கிளவியும் - அச் சுட்டெழுத்தினை முதலாகவுடைய அப்பெண்டு, இப்பெண்டு, உப்பெண்டு என்னுஞ் சொல்லும், ஒப்பொடு வரூஉங் கிளவியொடு தொகைஇ - ஒப்புமைப் பொருள்பற்றி வரும் பொன் அன்னான், பொன் அன்னாள், பொன் அன்னார் என வருஞ் சொல்லொடு தொக்கு, அப்பதினைந்தும் அவற்றோ ரன்ன - அப் பதினைந்து பெயர்ச்சொல்லும் முற்கூறிய பெயர் போலப் பால் அறிய வந்த உயர்திணைப் பெயராம், எ-று. ‘ஆண்மை, பெண்மை’ என்பனவற்றிற்கு இவ்வாறு பொருளுரையாக்காற் கூறியது கூறலாம். இவை, ‘ஆளும் மகன் - ஆண்மகன், பெண்ணாகிய மகள் - பெண்மகள்’ என விரியும். பெண்டாட்டி - பெண்மை ஆள்கின்றவள். நம்பி, நங்கை - உயர் சொல். ‘மகளென்பது, பிறிதொரு சொல்லாயே நின்று பெண்மை யுணர்த்திற்று. ‘பெண்டன் கிளவி’யென்று பாடம் ஓதி, ‘அவ்வாட்டி, இவ்வாட்டி, உவ்வாட்டி’ என்பாரும் உளர். ‘ஊரார் பெண்டென மொழிய’ ‘என்னைநின், பெண்டெனப் பிறர்கூறும் பழிமாறப் பெறுகற்பின்’ எனச் சான்றோர் கூறலிற், ‘பெண்டென்பதே பாடம். ‘அப்பெண்டென்னுஞ் சுட்டு, ‘கடி சொல்லில்லை’ என்பதனாற் ‘பெண்டென நின்றது. (9) 166. எல்லாரு மென்னும் பெயர்நிலைக் கிளவியு மெல்லீரு மென்னும் பெயர்நிலைக் கிளவியும் பெண்மை யடுத்த மகனென் கிளவியு மன்ன வியல வென்மனார் புலவர். இதுவும், உயர்திணை ஒருபாற்பெயருணர்த்துகின்றது. (இ-ள்.) எல்லாருமென்னும் பெயர்நிலைக் கிளவியும் - எல்லாருமென்று சொல்லப்படுகின்ற படர்க்கைப் பெயர்ச் சொல்லும், எல்லீருமென்னும் பெயர்நிலைக் கிளவியும் - எல்லீருமென்று சொல்லப்படுகின்ற முன்னிலைப் பெயர்ச் சொல்லும், பெண்மை அடுத்த மகனென் கிளவியும் - கட்புலனெயதோர் அமைதித்தன்மை அடுத்து நாணு வரை யிறந்து புறத்து விளையாடும் பருவத்தாற் பால் திரிந்த பெண்மகனென்னும் பெயர்ச்சொல்லும், அன்ன இயல என்மனார் புலவர் - இவை மூன்றும் அவை போலப் பால் அறிய வந்த உயர்திணைப் பெயராம், எ-று. ‘பெண்மகனென்பது, அத்தன்மையாரை அக்காலம் அவ்வாறே வழங்கினாராயிற்று, இங்ஙனங் கூறலின். (10) 167. நிலப்பெயர் குடிப்பெயர் குழுவின் பெயரே வினைப்பெய ருடைப்பெயர் பண்புகொள் பெயரே பல்லோர்க் குறித்த முறைநிலைப் பெயரே பல்லோர்க் குறித்த சினைநிலைப் பெயரே பல்லோர்க் குறித்த திணைநிலைப் பெயரே கூடிவரு வழக்கி னாடியற் பெயரே யின்றிவ ரென்னு மெண்ணியற் பெயரோ டன்றி யனைத்து மவற்றியல் பினவே. இதுவும் அது. (இ-ள்.) நிலப்பெயர் - ஒருவன் தான் பிறந்த நிலத்தினாற் பெற்ற பெயர்களுங், குடிப்பெயர் - ஒருவன் தான் பிறந்த குடியினாற் பெற்ற பெயர்களும், குழுவின் பெயரே - தாம் திரண்டு ஒரு துறைக்கண் உரிமைபூண்ட பல்லோர்மேல் எக்காலத்தும் நிகழும் பெயர்களும், வினைப்பெயர் - தாஞ்செய்யும் தொழிலினாற் பெற்ற பெயர்களும், உடைப்பெயர் - தன் உடைமையாற் பெற்ற பெயர்களும், பண்புகொள் பெயரே - தனது பண்பினாற் பெற்ற பெயர்களும், பல்லோர்க் குறித்த முறை நிலைப் பெயரே - பல்லோரைக் கருதின தமது முறைமையாற் பெற்ற பெயர்களும், பல்லோர்க் குறித்த சினை நிலைப் பெயரே - பல்லோரைக் கருதின சினை நிலைமையாற் பெற்ற பெயர்களும், பல்லோர்க் குறித்த திணைநிலைப் பெயரே - பல்லோரைக் கருதின குறிஞ்சி முதலிய ஐந்திணை நிலைமையாற் பெற்ற பெயர்களும், கூடி வரு வழக்கின் ஆடு இயல் பெயரே - இளந்துணை மகார் தம்மிற்கூடி விளையாடல் குறித்த பொழுதைக்குத் தாமே படைத் திட்டுக் கொண்ட பெயர்களும், இன்று இவரென்னும் எண்ணிய பெயரொடு - இத்துணை யாரெனத் தமது வரையறை உணர நின்ற எண்ணாகிய இயல்பு பற்றிப் பொருளுணர்த்தும் பெயருடனே, அன்றி அனைத்தும் அவற்றி இயல்பினவே - அவ்வனைத்துப் பெயர்களும் மேற்கூறிய பெயர்கள் போலப் பால் அறியவந்த உயர்திணைப் பெயராம், எ-று. (உ-ம்.) ‘அருவாளன், சோழியன்’ எனவும்; ‘சேரமான், மலையமான், பார்ப்பார், அரசர், வாணிகர், வேளாளர், எனவும்; ‘அவையத்தார், அத்திகோசத்தார், வணிக கிராமத்தார், மாகத்தார் எனவும்; ‘வருவார், செல்வார், தச்சர், கொல்லர், தட்டார், வண்ணார்’ எனவும்; ‘அம்பர் கிழான், பேரூர் கிழான், குட்டுவன், பூழியன், வில்லவன், வெற்பன், சேர்ப்பன்’ எனவும்; ‘கரியான், கரியாள், செய்யான், செய்யாள்’ எனவும்; ‘தந்தையர், தாயர்’ எனவும்; ‘பெருங்காலர், பெருந்தோளர், அலைகாதர்’ எனவும்; ‘குறவர், இறவுளர், வேட்டுவர், ஆயர், பொதுவர், நுளையர், திமிலர், பரதவர், களமர், உழவர், எயினர், மறவர்’ எனவும்; ‘பட்டி புத்திரர், கங்கை மாத்திரர்’ எனவும்; ‘ஒருவர், இருவர் முப்பத்து மூவர்’ எனவும்; ‘அருவாட்டி, சோழிச்சி, மலையாட்டிச்சி, பார்ப்பனி, அரசி, வாணிச்சி, வெள்ளாட் டிச்சி, கொல்லிச்சி, தட்டாத்தி, வண்ணாத்தி, அம்பருடைச்சி, பேரூர் கிழத்தி’ எனவும் வரும். மகடூஉப் பெயர்கள், டகரவொற்று இரட்டியும், ‘இச்சு’ப் பெற்றுந், தகர வொற்று இரட்டியும், இரண்டு இடைநிலை யெழுத்துக்களைப் பெற்றும், பெறாதும் வருமாறு உணர்க. இவை இங்ஙனம் இடைநிலையெழுத்துக் களும் பெற்றுப் பால் உணர்த்துதற்கு உரிய இகரமும் பெற்று நிற்குமென்பது, ‘சொல்வரைந் தறியப் பிரித்தனர் காட்டல்’ என்னும் அதிகாரப் புறனடையாற் கொள்க. (11) 168. அன்ன பிறவு முயர்திணை மருங்கிற் பன்மையு மொருமையும் பாலறி வந்த வென்ன பெயரு மத்திணை யவ்வே, இஃது, உயர்திணைப் பெயர்க்குப் புறனடை கூறுகின்றது. (இ-ள்.) அன்ன பிறவும் - மேற்கூறிய பெயர் போல்வன பிறவுமா யுள்ள, உயர்திணை மருங்கின் பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த என்ன பெயரும் - உயர்திணைக்கட் பன்மையும் ஒருமையுமாகிய பால்களை அறிய வந்த எல்லாப் பெயர்களும், அத்திணையவ்வே - அவ்வுயர்திணைப் பெயராம், எ-று. (உ-ம்.) அன்னள், அனையாள், அவ்வாட்டி, ஏனாதி, காவிதி, எட்டி, வாயிலான், பூயிலான், வண்ணத்தான், சுண்ணத்தான், பெண்டிர், பெண்டுகள், அடியான், அடியாள், அடியார், வேனிலான், பிறன், பிறள், பிறர், மற்றையான், மற்றையாள், மற்றையார் என்னுந் தொடக்கத்தனவெனக் கொள்க. இன்னும், ‘எல்லேம் பிரியற்கெஞ் சுற்றமொ டொருங்கே’ ‘வல்லே மிருந்தேமே வாய்ந்தமன் றிதுவென.’ ‘இருவேமும் வல்லேம் இருவர்நம் படர்தீர.’ என்னும் பெயர்களுங் கொள்க. (12) 169. அதுஇது வுதுவென வரூஉம் பெயரு மவைமுத லாகிய வாய்தப் பெயரு மவையிவை யுவையென வரூஉம் பெயரு மவைமுத லாகிய வகரப் பெயரும் யாதுயா யாவை யென்னும் பெயரு மாவயின் மூன்றோ டப்பதி னைந்தும் பாலறி வந்த வஃறிணைப் பெயரே. இது, முறையானே அஃறிணைப்பெயர் கூறுகின்றது. (இ-ள்.) அது இது உது என வரூஉம் பெயரும் - அது, இது உது என்று சொல்லப்பட்டு வருஞ் சுட்டு முதற்பெயர்களும், அவை முதலாகிய ஆய்தப் பெயரும் - அப்பெயர்க்கு முதலாகிய சுட்டெழுத்தே தனக்கு முதலாக ஆய்தத்தோடு கூடி அஃது, இஃது, உஃது என்று சொல்ல வரும் ஆய்தத் தொடர்மொழிக் குற்றுகர ஈற்றுப் பெயர்களும், அவை இவை உவை என வரூஉம் பெயரும் - அவை, இவை, உவை என வருஞ் சுட்டு முதற் பெயர்களும், அவை முதலாகிய வகரப் பெயரும் - அப்பெயர்க்கு முதலாகிய சுட்டெழுத்தே தனக்கு முதலாக வகர ஒற்றொடு கூடி அவ், இவ், உவ் என்று சொல்லப்படும் வகர ஈற்றுப் பெயர்களும், யாது யா யாவை என்னும் ஆவயின் மூன்றோடு அப் பதினைந்து பெயரும் - யாது? யா? யாவை? என்று சொல்லப்படுகின்ற அவ் வினாப் பொருளிடத்து மூன்று பெயர்களொடுங் கூடிய அப் பதினைந்து பெயர்களும், பால் அறி வந்த அஃறிணைப்பெயரே - ஒருமை பன்மைப்பால் அறிய வந்த அஃறிணைப் பெயராம், எ-று. (13) 170. பல்ல பலசில வென்னும் பெயரு முள்ள வில்ல வென்னும் பெயரும் வினைப்பெயர்க் கிளவியும் பண்புகொள் பெயரு மினைத்தெனக் கிளக்கு மெண்ணுக்குறிப் பெயரு மொப்பி னாகிய பெயர்நிலை யுளப்பட வப்பா லொன்பது மவற்றோ ரன்ன. இதுவும், அஃறிணை ஒருசார்ப் பெயர்களைக் கூறுகின்றது. (இ-ள்.) பல்ல பல சில என்னும் பெயரும் - பல்ல, பல, சில என்று சொல்லப்படுகின்ற பெயர்களும், உள்ள இல்ல என்னும் பெயரும் - உள்ள, இல்ல என்று சொல்லப்படுகின்ற பெயர்களும், வினைப்பெயர்க் கிளவியும் - வருவது, வருவன என்றாற்போலும் வினைப்பெயராகிய சொற்களும், பண்பு கொள் பெயரும் - கரியது, கரியன என்றாற்போலும் பண்பினைக் கொண்ட பெயர்களும், இனைத்தெனக் கிளக்கும் எண்ணுக்குறிப் பெயரும் - ஒன்று, பத்து, நூறு என்றாற்போலச் சொல்லப்படுகின்ற இத்துணையென வரையறை உணர்த்தி எண்ணப்படும் பொருண்மேல் நிற்கும் பெயர்களும், ஒப்பினாகிய பெயர்நிலை உளப்பட - பொன்னன்னது, பொன்னன்ன என்றாற்போல உவமத்தினான் பெற்ற பெயர்ச்சொல் உட்பட, அப்பால் ஒன்பதும் அவற்றோரன்ன - அக்கூற்று ஒன்பதும் மேற்கூறிய பெயர் போலப் பால் அறிய வந்த அஃறிணைப் பெயர்களாம், எ-று. (14) 171. கள்ளொடு சிவணு மவ்வியற் பெயரே கொள்வழி யுடைய பலவறி சொற்கே. இதுவும், அஃறிணை இயற்பெயர் கூறுகின்றது. (இ-ள்.) கள்ளொடு சிவணும் அவ்வியற்பெயரே - கள் ளென்னும் வாய்பாட்டொடு பொருந்தும் அவ்வஃறிணை இயற் பெயர்கள், பல அறி சொற்குக் கொள்வழி உடைய - பலவற்றை அறியுஞ் சொல்லாதற்குக் கொள்ளும் இடமுடைய, எ-று. (உ-ம்.) ஆ, நாய், குதிரை, ஒட்டகம், புலி, புல்வாய். தெங்கு, பலா, மலை, கடல் என்னுந் தொடக்கத்துச் சாதிப்பெயர் இருபாற்கும் பொதுவாய் நின்றன. கள்ளொடு சிவணி, ஆக்கள், குதிரைகள், கடல்கள், மலைகள் எனப் பன்மை விளக்கி நின்றன. ‘வெறியுறு கமழ்கண்ணி வேந்தர்கட் காயினும்’ எனவும், ‘பிறந்த வர்களெல்லாமவாப்பெரியராகி’ எனவும், ‘கற்றனங்கள் யாமுமுடன் கற்பனகளெல்லாம்’ எனவும், ‘எங்கள்வினை யாலிறைவன் வீடியவந்நாளே எனவுங் ‘கள்’ ஈறு பலரை உணர்த்திநின்றனவாலெனின், இவற்றுள் பலரை உணர்த்துதற்கு ஓதிய ஈறுகளே பலரையுணர்த்தி நின்றன; ‘கள்ளென்பது இசை நிறைத்து நின்றது எனப்படும். அவ்வீறுகளை ஒழியத் தானே பலரை உணர்த்துவன உளவேற், ‘கடிசொல்லில்லைக் காலத்துப் படினே’ (452) என்றதனாற் கொள்க. அஃது, இக்காலத்துப் ‘பெண்டுகள்’ என்றாற்போல வருவனபோலும். (15) 172. அன்ன பிறவு மஃறிணை மருங்கிற் பன்மையு மொருமையும் பாலறி வந்த வென்ன பெயரு மத்திணை யவ்வே. இஃது, அஃறிணைப்பெயர்க்குப் புறனடை கூறுகின்றது. (இ-ள்.) அன்ன பிறவும் அஃறிணை மருங்கின் - முற்கூறிய பெயர் போல்வன பிறவுமாகிய அஃறிணைக்கட் பன்மையும் ஒருமையும் பால் அறிவந்த - பன்மையும் ஒருமையுமாகிய பால் விளங்கவந்த, என்ன பெயரும் அத்திணையவ்வே - எல்லாப் பெயரும் அவ்வஃறிணைக்கு உரிய பெயராம். எ-று. (உ-ம்.) பிறிது, பிற; அனையது, அனையன; மற்றையது, மற்றையன; பல்லவை, சில்லவை; உள்ளது, இல்லது; உள்ளன, இல்லன; அன்னது, அன்னன என வரும். நிலம், நீர், தீ, வளி, ஆகாயம், உண்டல், தின்றல், கருமை, செம்மை என்பனவும் அப்பாற்படும். (16) 173. தெரிநிலை யுடைய வஃறிணை யியற்பெய ரொருமையும் பன்மையும் வினையொடு வரினே. இஃது, அஃறிணை இயற்பெயர் பால் உணர்த்துமாறு கூறுகின்றது. (இ-ள்.) அஃறிணை யியற்பெயர் - கள்ளொடு சிவணாத அஃறிணை இருபாற்கும் உரிய பெயர், ஒருமையும் பன்மையுந் தெரிநிலை உடைய - ஒருமைப்பாலும் பன்மைப்பாலும் விளங்கும் நிலையுடைய, வினையொடு வரினே - அதற்கு ஏற்ற வினையோடு தொடர்ந்த வழி, எ-று. (உ-ம்.) ஆ வந்தது, ஆ வந்தன; யானை வந்தது, யானை வந்தன; குதிரை வந்தது, குதிரை வந்தன என வரும். கள்ளொடு சிவணிய இயற்பெயரை வேறு கூறினார், வினையானன்றிப் பெயர் தாமே பன்மை விளக்கலின். (17) 174. இருதிணைச் சொற்குமோ ரன்ன வுரிமையிற் றிரிபுவேறு படூஉ மெல்லாப் பெயரும் நினையுங் காலைத் தத்த மரபின் வினையோ டல்லது பாறெரி பிலவே. இது, நிறுத்தமுறையானே விரவுப்பெயர் கூறுகின்றது. (இ-ள்.) இருதிணைச் சொற்கும் ஓரன்ன உரிமையின் - இருதிணைச் சொல்லாதற்கும் ஒத்த உரிமைய வாதலிற் திரிபு வேறுபடூஉம் எல்லாப் பெயரும்- உயர்திணைக்கட் சென்றுழி உயர்திணைப் பெயராயும் அஃறிணைக்கட் சென்றுழி அஃறிணைப் பெயராயும் வேறுபடூஉம் விரவுப்பெயரெல்லாம், நினையுங்காலை - ஆராயுங்காலத்து, தத்தம் மரபின் வினையோடல்லது பால் தெரிபிலவே - அவ்வத்திணையை உணர்த்துதற்கு உரிய முறைமையினை உடைய வினைச் சொல்லோடு இயைந்தல்லது திணை விளங்க நில்லா, எ-று. (உ-ம்.) சாத்தன் வந்தான், சாத்தன் வந்தது; முடவன் வந்தது முடவன் வந்தான், என வரும். ‘நினையுங்காலை’ என்றதனாற் சாத்தனொருவன், சாத்தனொன்று எனப் பெயரோடு வந்து பால் விளக்கலுங் கொள்க. இன்னும் இதனானே, முற்கூறிய அஃறிணை யியற்பெயர்களும் ஆவொன்று, ஆ பல எனப் பெயராற் பாலறியப்படுதலுங் கொள்க. இன்னும் இதனானே, முலை யெழுந்தது, மோவாயெழுந்தது என்றாற்போல்வன தன் சினைவினையாற் பால் தெரியாமையுங் கொள்க. (18) 175. நிகழூஉ நின்ற பால்வரை கிளவியி னுயர்திணை யொருமை தோன்றலு முரித்தே யன்ன மரபின் வினைவயி னான. இஃது, அவ்விரவுப்பெயர், விரவு வினையானுந் திணை யறியப்படும் என்கின்றது. (இ-ள்.) நிகழூஉ நின்ற பால்வரை கிளவியின் - நிகழ்காலமே பற்றி வருஞ் செய்யுமென்னும் முற்றுச்சொல்லான், உயர்திணை யொருமை தோன்றலும் உரித்தே - உயர்திணை யொருமைப்பால் தோன்றலும் உரித்து, அன்ன மரபின் வினைவயினான - அவ்வொருமைப் பால் தோன்றுதற்கு ஏற்ற வினையிடத்து, எ-று. (உ-ம்.) சாத்தன் யாழெழூஉங், குழலூதும், பாடும் எனவும்; சாத்தி சாந்தரைக்கும், பூத்தொடுக்கும் எனவும் வரும். இனி, ‘ஒன்றென முடித்தலென்பதனான், வியங்கோளானும் உயர்திணை யொருமை தோன்றுதலுங் கொள்க. சாத்தன் யாழெழூக சாத்தி சாந்தரைக்க என வரும். சாத்தன் புற்றின்னும், சாத்தி கன்றீனும் என அஃறிணையும் வருமாலெனின், ‘சாத்தன் புல் தின்னுமென்பது, ‘புல்லரிசிச் சோற்றைத் தின்னுலென்று உயர்திணைக்கும் ஏற்றலின், அஃறிணைக்கே அஃது ஆகாமையின், அது கொள்ளார். ‘சாத்தி கன்றீனுமென்பது, ‘கன்றென்னுஞ் சார்பான் அஃறிணை தோன்றிற்று; அதனாற் கொள்ளார். (19) 176. இயற்பெயர் சினைப்பெயர் சினைமுதற் பெயரே முறைப்பெயர்க் கிளவி தாமே தானே யெல்லா நீயிர் நீயெனக் கிளந்து சொல்லிய வல்ல பிறவு மாஅங் கன்னவை தோன்றி னவற்றொடுங் கொளலே. இது, விரவுப்பெயர்க்குப் பெயரும் முறையுந் தொகையுங் கூறுகின்றது. (இ-ள்.) இயற்பெயர் - சாத்தன் கொற்றன் என வழங்குதற் பயத்தவாய் நிமித்தமின்றிப் பொருள்பற்றி வரும் இயற்பெயர், சினைப்பெயர் - பெருங் காலன், முடவன் எனச் சினையுடைமை யாகிய நிமித்தம்பற்றி முதல்மேல் வரும் பெயர், சினைமுதற் பெயரே - சீத்தலைச்சாத்தன், கொடும்புற மருதி எனச் சினைப் பெயரோடு தொடர்ந்தல்லது பொருள்ளுணர்த்தாது வரும் இயற்பெயராகிய முதற்பெயர், முறைப்பெயர்க்கிளவி - தந்தை, தாய் எனப் பிறவியான் ஒருவரோடு ஒருவற்கு வரும் இயைபுபற்றி வரும் பெயராய் முறையுடைப் பொருண்மேல் வரும் பெயர், தாமே தானே எல்லாம் நீயிர் நீ எனக் கிளந்து சொல்லிய வற்றோடும் - தாம், தான், எல்லாம், நீயிர், நீ என்று தொல்லா சிரியராலே விதந்து ஓதப்பட்டவற்றோடே, அல்ல அன்னவை பிறவும் ஆங்குத் தோன்றின் கொளல் - எடுத்தோதாதனவாய் அவை போல்வன பிறவும் அவ்விரவுதலிடத்தே தோன்றுமாயின் அவற்றை யுங் கொள்க, எ-று. ‘அன்ன பிறவாவன, ‘மக, குழவி’ போல்வனவுங், ‘காடன், காடி, நாடன், நாடி, தரையன், திரையன், மலையன்’ போல்வனவும், ‘முதியானெனப் பிராயம்பற்றி வருவனவுஞ் ‘சுமையன்’ எனத் தொழில்பற்றி வருவனவும், பிறவுமாம். (20) 177. அவற்றுள், நான்கே யியற்பெயர் நான்கே சினைப்பெயர் நான்கென மொழிமனார் சினைமுதற் பெயரே முறைப்பெயர்க் கிளவி யிரண்டா கும்மே யேனைப் பெயரே தத்த மரபின. இது, தொகுத்தனவற்றை விரிக்கின்றது. (இ-ள்.) அவற்றுள் - முற்கூறிய விரவுப்பெயருள், நான்கே இயற்பெயர் - இயற்பெயர் நான்கு வகைப்படும்; நான்கே சினைப்பெயர் - சினைப்பெயர் நான்கு வகைப்படும்; நான்கு சினைமுதற் பெயரே - சினைமுதற் பெயர் நான்கு வகைப்படும்; முறைப்பெயர்க் கிளவி இரண்டாகும்மே - முறைப் பெயராகிய சொல் இரண்டு வகைப்படும்; ஏனைப் பெயரே தத்தம் மரபின - ஒழிந்த ஐந்து பெயரும் பொருண்மை சுட்டாது ஒரோவொன்றாய் நின்ற பெயரைச் சுட்டிநிற்கும் இலக்கணத்தன; என மொழிமனார் - என்று கூறுவர் ஆசிரியர், எ-று. (21) 178. அவைதாம், பெண்மை யியற்பெய ராண்மை யியற்பெயர் பன்மை யியற்பெயர் ரொருமையியற் பெயரென் றந்நான் கென்ப வியற்பெயர் நிலையே. இஃது, ‘இயற்பெயர் நான்கு’ என்றவற்றின் பெயரும் முறையுங் கூறுகின்றது. (இ-ள்.) அவைதாம் - அவ்வாறு பகுக்கப்பட்டனதாம் யாவை எனின், இயற்பெயர் நிலையே - இயற்பெயரது நிலைமையை, பெண்மையியற் பெயர் ஆண்மையியற்பெயர் பன்மையியற்பெயர் ஒருமையியற்பெயரென்று அந்நான்கு என்ப - பெண்மையியற்பெயரும் ஆண்மை யியற் பெயரும் பன்மை யியற்பெயரும் ஒருமை யியற்பெயருமென்று கூறப்பட்ட அந்நான்குமென்று சொல்லுவர் ஆசிரியர், எ-று. (22) 179. பெண்மைச் சினைப்பெய ராண்மைச் சினைப்பெயர் பன்மைச் சினைப்பெய ரொருமைச்சினைப் பெயரென் றந்நான் கென்ப சினைப்பெயர் நிலையே. இது, சினைப்பெயர் நான்கு என்றவற்றின் பெயரும் முறையுங் கூறுகின்றது. (இ-ள்.) சினைப்பெயர் நிலை - சினைப்பெயரது நிலைமையை, பெண்மைச் சினைப்பெயர் ஆண்மைச் சினைப்பெயர் பன்மைச் சினைப் பெயர் ஒருமைச் சினைப்பெயரென்று அந்நான்கு என்ப - பெண்மைச் சினைப் பெயரும் ஆண்மைச் சினைப்பெயரும் பன்மைச் சினைப் பெயரும் ஒருமைச் சினைப்பெயருமென்று கூறப்பட்ட அந்நான்குமென்று சொல்லுவர் ஆசிரியர், எ-று. (23) 180. பெண்மை சுட்டிய சினைமுதற் பெயரே யாண்மை சுட்டிய சினைமுதற் பெயரே பன்மை சுட்டிய சினைமுதற் பெயரே யொருமை சுட்டிய சினைமுதற் பெயரென் றந்நான் கென்ப சினைமுதற் பெயரே. இது, சினை முதற்பெயர் நான்கு என்றவற்றின் பெயரும் முறையுங் கூறுகின்றது. (இ-ள்.) சினை முதற்பெயரே - சினை முதற்பெயரது நிலைமையை, பெண்மை சுட்டிய சினைமுதற்பெயரே ஆண்மை சுட்டிய சினைமுதற் பெயரே பன்மை சுட்டிய சினைமுதற்பெயரே ஒருமை சுட்டிய சினைமுதற் பெயரென்று அந்நான்கு என்ப - பெண்மை சுட்டிய சினைமுதற்பெயரும் ஆண்மை சுட்டிய சினைமுதற்பெயரும் பன்மை சுட்டிய சினைமுதற் பெயரும் ஒருமை சுட்டிய சினைமுதற்பெயருமென்று கூறப்பட்ட அந்நான்குமென்று சொல்லுவர் ஆசிரியர், எ-று. (24) 181. பெண்மை முறைப்பெய ராண்மை முறைப்பெயரென் றாயிரண் டென்ப முறைப்பெயர் நிலையே. இது, முறைப்பெயர் இரண்டு என்று அவற்றது பெயரும் முறையும் கூறுகின்றது. (இ-ள்.) முறைப்பெயர் நிலையே - முறைப்பெயரது நிலைமையை, பெண்மை முறைப்பெயர் ஆண்மை முறைப்பெயர் என்று ஆயிரண்டு என்ப - பெண்மை முறைப்பெயரும் ஆண்மை முறைப்பெயரும் என்று கூறப்பட்ட அவ்விரண்டுமென்று கூறுவர் ஆசிரியர், எ-று. (25) 182. பெண்மை சுட்டிய வெல்லாப் பெயரு மொன்றற்கு மொருத்திக்கு மொன்றிய நிலையே. இது, பெண்மைப் பெயரெல்லாந் தொகுத்துத்திணைக்கு உரிமை கூறுகின்றது. (இ-ள்.) பெண்மை சுட்டிய எல்லாப் பெயரும் - பெண்மை இயற்பெயரும் பெண்மைச் சினைப்பெயரும் பெண்மைச் சினைமுதற் பெயரும் பெண்மை முறைப்பெயரும், ஒன்றற்கும் ஒருத்திக்கும் ஒன்றிய நிலையே - அஃறிணைப் பெண்ணொன்றற்கும் உயர்திணை யொருத்திக்கும் பொருந்திய நிலைமையை யுடையனவாம், எ-று. (உ-ம்.) சாத்தி வந்தது; சாத்தி வந்தாள். முடத்தி வந்தது; முடத்தி வந்தாள் - முடக்கொற்றி வந்தது; முடக்கொற்றி வந்தாள். தாய் வந்தது; தாய் வந்தாள். என வரும். முடஞ்சினையாகிய காலை உணர்த்திற்று. ‘ஆய்’ என்பதும் அது. ‘யாய்’யென்பது தன்மையோடு ஒட்டுதலின், முறைப்பெயரெனினும், உயர்திணை யாம். (26) 183. ஆண்மை சுட்டிய வெல்லாப் பெயரு மொன்றற்கு மொருவற்கு மொன்றிய நிலையே. இஃது, ஆண்மைப்பெயரெல்லாந் தொகுத்துத் திணைக்கு உரிமை கூறுகின்றது. (இ-ள்.) ஆண்மை சுட்டிய எல்லாப் பெயரும் - ஆண்மை யியற்பெயரும் ஆண்மைச் சினைப்பெயரும் ஆண்மைச் சினைமுதற் பெயரும் ஆண்மை முறைப்பெயரும், ஒன்றற்கும் ஒருவற்கும் ஒன்றிய நிலையே - அஃறிணை யாணொன்றற்கும் உயர்திணையொருவற்கும் பொருந்திய நிலைமையை உடையனவாம், எ-று. (உ-ம்.) சாத்தன் வந்தது, சாத்தன் வந்தான்; முடவன் வந்தது, முடவன் வந்தான்; முடக்கொற்றன் வந்தது, முடக்கொற்றன் வந்தான்; தந்தை வந்தது, தந்தை வந்தான் என வரும். ‘நுந்தை’ என்பதும் அது. ‘எந்தை’ என்பது தன்மையோடு ஒட்டுதலின், உயர்திணையாம். (27) 184. பன்மை சுட்டிய வெல்லாப் பெயரு மொன்றே பலவே யொருவ ரென்னு மென்றிப் பாற்கு மோரன் னவ்வே. இது, பன்மைப்பெயரெல்லாந் தொகுத்துத்திணைக்கும் உரிமை கூறுகின்றது. (இ-ள்.) பன்மை சுட்டிய எல்லாப் பெயரும் - பன்மை யியற்பெயரும் பன்மைச் சினைப்பெயரும் பன்மைச் சினைமுதற் பெயரும், ஒன்றே பலவே ஒருவன் என்னும் என்றிப்பாற்கும் ஓரன்னவ்வே - அஃறிணை யொருமையும் அத்திணைப் பன்மையும் உயர்திணையொருமையுமென்று சொல்லப்படும் அம்மூன்று பாற்கும் ஒரு தன்மைய எ-று. ‘ஒன்றென்பதனை அஃறிணையாணொன்றனையும் பெண் ஒன்றனையும், ‘ஒருவரென்பதனை உயர்திணை யாணொருமை யும் பெண்ணொருமையுமாகக் கொள்க. (உ-ம்.) யானை வந்தது, யானை வந்தன, யானை வந்தான், யானை வந்தாள்; நெடுங்கழுத்தல்வந்தது - வந்தன - வந்தான் - வந்தாள்; பெருங்கால் யானை வந்தது - வந்தன - வந்தான் - வந்தாள் என வரும். ‘வெண்குடைப் பெருவிறலென்பது, செங்குடை முதலியவற்றோடு இயைபு நீக்காது, வெண்குடையோடு இயைபின்மை மாத்திரை நீக்கி நின்றாற் போலப் ‘பன்மை சுட்டியவென்பதும் ஒருமையியைபு நீக்காது பன்மை சுட்டுத லோடு இயைபின்மை மாத்திரை நீக்கி நின்றது. இஃது, இயைபின்மை நீக்கமாம். ‘கருங்குவளையென்பது, செம்மை எனவே பலபால்களையும் உணர்த்தி நிற்றலிற் ‘பன்மைசுட்டிய என்றலாரென்று உரையாசிரியர் கூறியதே சேனாவரையர்க்குங் கருத்தாயிற்று. முதலியவற்றோடு இயைபு நீக்குதலின், பிறிதினியைபு நீக்கமாம். எனவே, விசேடித்தல் இரு வகைய வாயின. (28) 185. ஒருமை சுட்டிய வெல்லாப் பெயரு மொன்றற்கு மொருவற்கு மொன்றிய நிலையே. இஃது, ஒருமைப்பெயர் எல்லாவற்றையுந் தொகுத்துத் திணைக்கு உரிமை கூறுகின்றது. (இ-ள்.) ஒருமை சுட்டிய எல்லாப் பெயரும் - ஒருமையைக் கருதி வரும் ஒருமையியற்பெயரும் ஒருமைச் சினைப்பெயரும் ஒருமைச் சினை முதற்பெயரும், ஒன்றற்கும் ஒருவற்கும் ஒன்றிய நிலையே - அஃறிணையொருமைக்கும் உயர்திணை யொருமைக்கும் பொருந்திய நிலைமையை உடையனவாம், எ-று. (உ-ம்.) கோதை வந்தது - வந்தான் - வந்தாள்; செவியிலி வந்தது - வந் தான் - வந்தாள்; கொடும்புற மருதி வந்தது - வந்தான் - வந்தாள் என வரும். பெண்மைப்பெயரும் ஆண்மைப்பெயரும் ஒருமையும் உணர்த்து மாயினும், இவை பெண்மை ஆண்மை என்னும் வேறுபாடு உணர்த்தாது ஒருமையுணர்த்தலின், இவற்றை ‘ஒருமைப்பெயரென்றார். (29) 186. தாமென் கிளவி பன்மைக் குரித்தே. இது, தாமென்னும் பெயர் இருதிணைக்கும் உரித்தாமாறு உணர்த்துகின்றது. (இ-ள்.) தாம் என் கிளவி பன்மைக்கு உரித்தே - தாமென்னும் பெயர் இருதிணைக்கண்ணும் பன்மைப்பாற்கு உரித்து, எ-று. (உ-ம்.) தாம் வந்தார், தாம் வந்தன என வரும். (30) 187. தானென் கிளவியொருமைக் குரித்தே. இது, தானென்பது இருதிணைக்கும் உரித்தாமாறு கூறுகின்றது. (இ-ள்.) தான் என் கிளவி ஒருமைக்கு உரித்தே - தானென்னும் பெயர் இருதிணைக்கண்ணும் ஒருமைப்பாற்கு உரித்து, எ-று. (உ-ம்.) தான் வந்தான், தான் வந்தாள், தான் வந்தது என வரும். (31) 188. எல்லா மென்னும் பெயர்நிலைக் கிளவி பல்வழி நுதலிய நிலைத்தா கும்மே. இஃது, எல்லாமென்பது இரு திணைக்கு உரித்தாமாறு கூறுகின்றது. (இ-ள்.) எல்லாமென்னும் பெயர்நிலைக் கிளவி - எல்லாமென்னும் பெயராகிய நிலைமையையுடைய சொல், பல் வழி நுதலிய நிலைத்தாகும்மே-இருதிணைக்கண்ணும் பன்மை யிடத்தைக் கருதின நிலைமைத்தாய் வரும், எ-று. (உ-ம்.) எல்லாம் வந்தேம் வந்தீர் வந்தார் வந்தன என வரும். ‘மேனியெல்லாம் பசலை யாயிற்றென்பது, எஞ்சாப் பொருட்டா யதோர் உரிச்சொல். (32) 189. தன்னு ளுறுத்த பன்மைக் கல்ல துயர்திணை மருங்கி னாக்க மில்லை. இஃது எய்தியது ஒரு மருங்கு மறுக்கின்றது. (இ-ள்.) உயர்திணை மருங்கின் தன் உள்ளுறுத்த பன்மைக்கு அல்லது ஆக்கம் இல்லை - எல்லாம் என்னுஞ் சொல் உயர்திணைக்கண் வருங்கால் தன்மைப்பன்மைக்கு அல்லது பெரும்பான்மை வாராது, எ-று. எனவே, சிறுபான்மை முன்னிலைப் பன்மைக்கும் படர்க்கைப் பன்மைக்கும் வருமாயிற்று. (உ-ம்.) ‘கண்டனில்லாங் கதுமென வாங்கே -பண்டறியா தீர்போல நோக்குதிர்’ ‘ஊடினி ரெல்லாருவிலான் முன்னாணை கூடினிரென்று குயில்சாற்ற’ என முன்னிலைக்கண்ணும், ‘நெறிதாழிருங்கூந்தனின்பெண்டிரெல்லாஞ் - சிறுபாக ராக’ எனப் படர்க்கைக்கண்ணும் வந்தன. (33) 190. நீயிர் நீயென வரூஉங் கிளவி பாறெரி பிலவே யுடன்மொழிப் பொருள. இது, நீயிர், நீ என்பனவற்றைத் திணைக்கு உரிமை கூறுகின்றது. (இ-ள்.) நீயிர் நீ என வரூஉங் கிளவி - நீயிரெனவும் நீயெனவும் வரும் பெயர்ச்சொற்கள், பால் தெரிபு இலவே; உடன் மொழிப் பொருள - திணைப்பகுதி தெரிய நில்லா; இரு திணைப் பொருளும் ஒருங்கு தோன்றுதலைப் பொருண்மையாக உடைய, எ-று. (உ-ம்.) நீயிர் வந்தீர், நீ வந்தாய், என வினையானுந் திணை தெரியாமை காண்க. இவற்றிற்குத் தத்தம் மரபின் வினையின்று. (34) 191. அவற்றுள், நீயென் கிளவி யொருமைக் குரித்தே. இது, நீ என்பது பாற்கு உரித்தாமாறு கூறுகின்றது. (இ-ள்.) அவற்றுள் நீ என் கிளவி ஒருமைக்கு உரித்தே - முற்கூறிய இரண்டு பெயருள் நீ யென்னும் பெயர் ஒருவன் ஒருத்தி ஒன்றென்பனவற்றிற்கெல்லாம் பொதுவாகிய ஒருமைக்கு உரித்தாம். எ-று. (உ-ம்.) நீ வந்தாய் என வரும். (35) 192. ஏனைக் கிளவி பன்மைக் குரித்தே. இது, நீயிரென்பது பாற்கு உரித்தாமாறு கூறுகின்றது. (இ-ள்.) ஏனைக் கிளவி பன்மைக்கு உரித்தே - ஒழிந்த நீயிரென்னும் பெயர் பல்லோர்க்கும் பலவற்றிற்கும் பொதுவாகிய பன்மைக்கு உரித்தாம், எ-று. (உ-ம்.) நீயிர் வந்தீர் என வரும். (36) 193. ஒருவ ரென்னும் பெயர்நிலைக் கிளவி யிருபாற்கு முரித்தே தெரியுங் காலை. இஃது, உயர்திணை யதிகாரத்தின் ஒழிபு கூறுகின்றது. இது பொதுவாய் நிற்றலின், ஈண்டுக் கூறினார். (இ-ள்.) ஒருவர் என்னும் பெயர்நிலைக் கிளவி - மேல் இன்றிவர் என்னும் எண்ணியற் பெயர் என்றவற்றுள் ஒருவ ரென்னும் பெயர் நிலைமையை உடைய சொல், தெரியும் காலை இருபாற்கும் உரித்தே - ஆராயுங் காலத்து உயர்திணைப்பாலுள் ஒரு பால் உணர்த்தாது ஒருவன், ஒருத்தி என்னும் இருபாற்கும் பொதுவாய் நிற்கும், எ-று. (உ-ம்.) ஒருவர் வந்தார் என வரும். (37) 194. தன்மை சுட்டிற் பன்மைக் கேற்கும் இஃது, ஒருவரென்பதன் முடிபு கூறுகின்றது. (இ-ள்.) தன்மை சுட்டின் - முற்கூறிய ஒருவரென்னுஞ் சொல் முடியுந் தன்மையைக் கருதில், பன்மைக்கு ஏற்கும் - தான் சுட்டுகின்ற பொருண்மைக்கு ஏற்ப ஒருமைச்சொல்லொடு முடியாது, ரகர ஈற்றதாய் நின்ற சொற்றன்மைக்கு ஏற்பப் பன்மைச்சொல் பெற்று முடியும், எ-று. (உ-ம்.) ஒருவர் வந்தார், ஒருவர் அவர். இது பால் பற்றிய மரபு வழுவமைதி. (38) 195. இன்ன பெயரே யிவையெனல் வேண்டின் முன்னஞ் சேர்த்தி முறையி னுணர்தல். இது, நீயிர், நீ, ஒருவர் என்பனவற்றிற்கு இலக்கணங் கூறுகின்றது. (இ-ள்.) இன்ன பெயரே இவை எனல் வேண்டின் - நீயிர், நீ, ஒருவர்’ என்பன இன்ன பாற்பெயரென்று அறியலுறின், முன்னஞ் சேர்த்தி முறையின் உணர்தல் - இடமுங் காலமும்பற்றிச் சொல்லுவான் குறிப்போடு கூட்டி மேல் ஓதின முறையானே திணையும் பாலும் உணர்க, எ-று. (உ-ம்.) விலங்கு வாராததோர் இடத்திருந்து நீயிர் வந்தீர், நீ வந்தாய், என்றால் உயர்திணை யெனவும், மக்கள் வாராததோர் இடத்திருந்து அங்ஙனங் கூறினால் அஃறிணை எனவும் உணரப்படும். ‘நீயும் தவறிலை நின்னைப் புறங்கடை’ என்றவழிப் பெண்பாலென்பதூஉம், ‘நீயே பிறர்நாடு கொள்ளுங் காலை’, என்றவழி ஆண்பாலென்பதூஉம், ‘இணைப் பிரிந்தாரை உடைமையோ நீ’, (கலி. 129 : 15) என்றவழி அஃறிணை யென்பதூஉம் உணரப்படும். ‘ஒருவர் ஒருவரைச் சார்ந்தொழு கலாற்றின்,’என்றவழிச் சொல்லுவானோடு கேட்டான் ஆடூஉ ஒருமை குறித்தானென்பது விளங்கும். (39) 196. மகடூஉ மருங்கிற் பாறிரி கிளவி மகடூஉ வியற்கை தொழில்வயி னான. இஃது உயர்திணையொழிபு கூறுகின்றது. இ-ள். மகடூஉ மருங்கிற் பால் திரி கிளவி - மகடூஉப் பொருண்மைக்கட் பால் திரிந்து வரும் பெண்மகனென்னும் பெயர், தொழில்வயினான மகடூஉ இயற்கை - தொழில் கொள்ளு மிடத்து மகடூஉவிற்கு உரிய தொழில் கொள்ளும், எ-று. (உ-ம்.) பெண்மகன் வந்தாள் என வரும். பொருள்பற்றி முடிபு கூறிற்று. (40) 197. ஆவோ வாகும் பெயருமா ருளவே; யாயிட னறிதல் செய்யு ளுள்ளே. இது, பெயரீறு செய்யுளுட் திரியுமென்கின்றது. (இ-ள்.) ஆ ஓ வாகும் பெயருமாருள - ஆகாரம் ஓகாரமாய்த் திரியும் பெயரும் உள; ஆயிடன் அறிதல் செய்யுளுள்ளே - அத் திரியும் இடம் அறிக செய்யுளுள், எ-று. (உ-ம்.) ‘வில்லோன் காலன கழலே தொடியோண் மெல்லடி மேலவுஞ் சிலம்பே நல்லோர், யார்கொலளியர் தாமே!’ ‘கழனி நல்லூர் மகிழ்நர்க் கெனிழைநெகிழ பருவரல் செப்பா தோயே! என வரும். ‘அழாஅன், கிழாஅன்’ என்னும் அளபெடைப் பெயர் அளபெடுத்தால் ஆ ஓவாகா. (41) 198. இறைச்சிப் பொருள்வயிற் செய்யுளுட் கிளக்கு மியற்பெயர்க் கிளவி யுயர்திணை சுட்டா நிலத்துவழி மருங்கிற் றோன்ற லான. இது, விரவுப்பெயர் செய்யுளுள் வரும் முறைமை கூறுகின்றது. (இ-ள்.) செய்யுளுள் இறைச்சிப் பொருள்வயின் கிளக்கும் இயற்பெயர்க் கிளவி - செய்யுளுட் கருப்பொருள் கூறும்வழிக் கிளக்கப்படும் இருதிணைக்கும் உரிய பெயர், நிலத்துவழி மருங்கிற் தோன்றலான - நால்வகை ஒழுக்கங்களின் இடமாகிய இடத்தே அவற்றிற்கு உறுப்பாய்த் தோன்றலின், உயர்திணை சுட்டா - உயர்திணையை உணர்த்தாது அஃறிணையை உணர்த்தும், எ-று. (உ-ம்.) ‘கடுவன் முதுமகன் கல்லா மூலற்கு, வதுவை வந்த வன் பறழ்க் குமரி’ என்புழிக் ‘கடுவன், மூலன்’ என்பன உயர் திணை யாண்பால் உணர்த்தும் அன்னீற்றுப்பெயர் அஃறிணை யாண்பாலையும் உணர்த்தி நிற்றலின் விரவுப்பெயராயினும், ஈண்டுப் பொருட்கு உபகாரப்படும் இறைச்சிப்பொருளாய் நிற்றலின், அஃறிணைப்பெயராம். ‘குமரியென்பதூஉம் விரவுப் பெயர். (42) 199. திணையொடு பழகிய பெயரலங் கடையே. இஃது, எய்தியது விலக்கிற்று. (இ-ள்.) திணையொடுபழகிய பெயரலங்கடையே - கருப்பொருளுணர்த்தும் விரவுப்பெயர் உயர்திணை சுட்டாது அஃறிணை சுட்டுவது திணைதோறும் உரிமை பூண்டு வழங்கப்பட்டு வரும் பெயரல்லாத இடத்து, எ-று. எனவே, திணைதோறும் உரிமைபூண்டு வழங்கப்பட்டு வரும் பெயர், உயர்திணையுஞ் சுட்டி வருமென்பதாம். (உ-ம்.) ‘அவளுஞ்செருமிகு மொய்ம்பிற் கூர்வேற் காளையொடு’ ‘திருந்துவேல் விடலை வருமெனத் தாயே’ என வரும். ஓரெருத்தையுங் ‘காளை, விடலை’ எனப்படுதலின் விரவுப் பெயராயின. (43) பெயரியல் முற்றும் வினையியல் வினையென்பது பலபொருளொருசொல்லாய்த் தொழிற் பண்பினையும் அதன் காரியமாகிய வினைநிகழ்ச்சியையும் உணர்த்தும், தொழிற்பண்பை யுணர்த்துஞ் சொல்லை உரிச்சொல்லெனவும் அதன் காரியமாகிய வினைநிகழ்ச்சியை யுணர்த்துஞ்சொல்லை வினைச்சொல்லெனவும் கூறுதல் மரபு. வினைச்சொல்லாவது வேற்றுமையுருபேலாது வெளிப் படையாகவும் குறிப்பாகவும் காலத்தோடு விளங்குவதாகும். இறந்தகாலம், நிகழ்காலம் எதிர்காலம் எனக் காலம் மூன்றாம். தொழில் முற்றுப்பெற்றநிலை இறந்தகாலம். தொழில் தொடங்கி முடிவுபெறாது தொடர்ந்து நிகழும்நிலை நிகழ்காலம். தொழிலே தொடங்கப்பெறாதநிலை எதிர்காலம். இம்முக்காலங்களுள் ஒன்றை வெளிப்படையாகக் காட்டு வனவற்றை வினையென்றும் இவற்றைக் குறிப்பாக உணர்த்துவன வற்றைக் குறிப்பு என்றும் கூறுவர். தொல்காப்பியனார். பிற் காலத்தார் இவற்றை முறையே தெரிநிலை வினையென்றும் குறிப்பு வினையென்றும் வழங்குவர். இவ்வினைச்சொற்கள் முற்று, வினையெச்சம், பெயரெச்சம் என மூவகைய. பாலுணர்த்தும் ஈறுகளாகிய விகுதிகளோடுகூடி நிறைந்து நிற்பன வினைமுற்றுக்களாம். ஐம்பாலவாகிய வினைமுதலைத் தரும் விகுதியுறுப்புக் குறைந்த குறைச்சொற்களாய் மற்றொரு வினைச்சொல்லோடல்லது முற்றுப்பெறாது நிற்பன வினையெச்சங்களாம். பாலுணர்த்தும் விகுதியின்றிக் குறைத்த குறைச்சொற்களாய்ப் பெயரை எச்சமாகவுடைய வினைச்சொற்கள் பெயரெச்சம் எனப்படும். வினைச்சொற்களின் இலக்கண முணர்த்தினமையால் இது வினையியலென்னும் பெயர்த்தாயிற்று. இவ்வியலிலுள்ள சூத்திரங்களை 49-ஆக இளம்பூரணரும் 51-ஆகச் சேனாவரையரும் நச்சினார்க்கினியரும் 54-ஆகத் தெய்வச்சிலையாரும் பகுத்து உரை கூறியுள்ளார்கள். எச்சவியலிலுள்ள ‘இறப்பின் நிகழ்வின்’, ‘எவ்வயின் வினையும்’, ‘அவைதாம் தத்தங்கிளவி’ எனவரும் மூன்று சூத்திரங்களையும் வினையிலக்கணமாதல் பற்றி இவ்வியலின் இறுதியில், தெய்வச்சிலையார் சேர்த்துரைத்தமையால் அவர் கருத்துப்படி இவ்வியலின் சூத்திரங்கள் 54-ஆயின. வினைச்சொற்களெல்லா வற்றையும் உயர்திணைக்குரியன, அஃறிணைக்குரியன, இரு திணைக்குமுரியன என மூன்று வகையாக இவ்வியலில் ஆசிரியர் பகுத்துக் கூறியுள்ளார். உயர்திணைக்குரியன உயர்திணைவினை தன்மைவினை படர்க்கைவினை என இடத்தால் இருவகைத்து. அவற்றுள் தன்மைவினை பன்மைத் தன்மையும் தனித்தன்மையும் என இருவகைப்படும். அம், ஆம், எம், ஏம், கும், டும், தும், றும் என்னும் இவ்வெட்டு விகுதிகளையும் இறுதியாகவுடைய வினைச்சொற்கள் பன்மையுணர்த்துந் தன்மைச் சொற்களாம். தன்மைக் குறித்துப் பேசுதற்கேற்ற மொழிவளம் உயர்திணை மாந்தர்க்கே யுரியதாகலின் தன்மைச் சொற்கள்யாவும் உயர்திணைச் சொல்லேயாம். ஒருவனோ ஒருத்தியோ தன்னைக் குறித்துப் பேசுங்கால் தனக்கு ஒருமையல்லது பன்மை சொல்லுதற்கிடமில்லை. எனினும் தனக்கு முன்னும் அயலிலும் உள்ள பிறரையும் தன்னோடு உளப்படுத்துக் கூறும் வழக்கமுண் மையால் தன்மைப் பன்மையும் கொள்ள வேண்டியதாயிற்று. ஆகவே பன்மைத் தன்மை யென்றது உளப்பாட்டுத் தன்மையேயாம். தன்னொடு முன்னின்றாரை யுளப்படுத்தலும் படர்க்கையாரை யுளப்படுத்தலும் அவ்விரு திறத்தாரையும் ஒருங்கு உளப்படுத்தலும் என உளப்படுத்தல் மூவகைப்படுமெனவும், அம், ஆம் என்ற விகுதிகள் முன்னிலையாரையும் தமராயவழிப் படர்க்கையாரையும், எம், ஏம் என்பன படர்க்கையாரையும், கும், டும், தும், றும் என்பன அவ்விருதிறத்தாரையும் உளப்படுத்துமெனவும், அம், ஆம், எம், ஏம் என்பன மூன்று காலமும் பற்றி வருதலும் கும், டும், தும், றும் என்பன எதிர்காலம்பற்றி வருதலும் உடைய வெனவும் கூறுவர் சேனாவரையர். கு, டு, து, று என், ஏன், அல் என்பவற்றை இறதியாகவுடைய ஏழும் ஒருமையுணர்த்தும் தனித்தன்மை (தன்மையொருமை) வினைச்சொற்களாம். அவற்றுள் செய்கு என்னும் வாய்பாட்டு வினைமுற்று வினைகொண்டு முடியுமாயினும் முற்றுச் சொல்லாகிய இலக்கணத்திற் சிறிதும் மாறுபாடது. அன், ஆன், அள், ஆள் என்னும் ஈற்றையுடைய நால்வகைச் சொற்களும் உயர்திணை யொருமை யுணர்த்தும் படர்க்கை வினைச்சொற்களாம். அர், ஆர், ப என்னும் ஈற்றையுடைய மூவகைச் சொற்களும் பலர்பாற் படர்க்கையாம். மார் என்பதும் உயர்திணைப் பலர்பாற் படர்க்கை வினைக்கீறாதலையுடைத்து. அது முடியுங்கால் பெயர்கொள்ளாது வினைகொண்டு முடியும். இவ்வாறு அம் விகுதி முதலாக மார் விகுதி யீறாகச் சொல்லப்பட்ட இருபத்துமூன்றீற்று வினைச்சொற்களும் உயர்திணைக்கே யுரியனவாம். மேற்சொல்லப்பட்டவற்றுள் பன்மையுணர்த்தும் தன்மைச் சொல் திணைவிரவி யெண்ணுங்கால் அஃறிணையை யுளப்படுத்துத்திரிதலும் உண்டு. யார் என்னும் வினாவினைக் குறிப்பு உயர்திணை மூன்று பாலுக்கும் ஒப்பவுரியதாகும். பாலுணர்த்தும் ஈறுகளாகிய ன, ள, ர, என்னும் இறுதியையுடைய ஆகாரமும் முன்னிலையில் வரும் ஆய் என்பதன் ஆகாரமும் செய்யுளுள் ஓகாரமாய்த் திரியும். ஆறாம் வேற்றுமைக்குரிய உடைமைப்பொருள், ஏழாம் வேற்றுமைக்குரிய நிலப்பொருள், ஒப்புப்பொருள், பண்பு என்னுமிவற்றை நிலைக்களமாகக் கொண்டும் அன்மை, இன்மை, உண்மை, வன்மை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டும் வினைக்குறிப்புத் தோன்றுமென்பர் ஆசிரியர் குறிப்பாற் கால முணர்த்தலின் இது குறிப்பெனப்பட்டது. முன்னர்க் கூறிய இருபத்துமூன்றீற்று வினைச்சொற்களுக்கீறாகிய எழுத்துக்களையே (விகுதிகளையே) இவ்வினைச்குறிப்புச் சொற்களும் பெற்றுப் பாலுணர்த்துவனவாம். அஃறிணைக்குரியன ஆ, ஆ, வ என்னும் இறுதியையுடைய மூவகை வினைச் சொற்களும் அஃறிணைப்பன்மைப் படர்க்கையாம். து, று, டு என்பவற்றை யிறுதியாக உடையன அஃறிணை ஒருமைப்பாற்குரிய வினைச்சொற்களாம். இங்கெடுத்துக் காட்டிய அறுவகையீற்றுச் சொற்களே அஃறிணைக்குரிய வினைச்சொற்களாம். வினாப் பொருளையுடைய எவன் என்னும் வினைக் குறிப்புச்சொல் அஃறிணையிருபாலுக்கும் ஒப்பவுரியதாகும். இன்று, இல உடைய, அன்று, உடைத்து, அல்ல, உள என்பனவும் பண்புகொள் கிளவியும் பண்பினாகிய சினைமுதற் கிளவியும் ஒப்புப்பற்றி வருஞ்சொல்லும் ஆகிய இப்பத்தும் அஃறிணை வினைக்குறிப்புச் சொற்களாம். மேல் அஃறிணை வினைச்சொற்கீறாய் நின்று பாலுணர்த்து மெழுத்துக்களே அஃறிணை வினைக் குறிப்புச் சொற்கண்ணும் ஈறாய் நின்று பால் விளக்குவன. இருதிணைக்குமுரியன முன்னிலை வினைமுற்று, வியங்கோள் முற்று, வினையெச்சம், இன்மையையுணர்த்தும் இல்லை, இல் என்பன. வேறு என்னும் சொல், செய்ம்மன் என்னும் வாய்பாட்டு முற்று, முற்றும் பெயரெச்சமுமாகிய செய்யுமென்னும் வாய்பாட்டு வினைச்சொல், செய்த என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம் ஆகிய எண்வகை வினைச்சொற்களும் இருதிணைச் சொல்லாதற்கும் ஒத்த உரிமை யுடையனவாம். மேற்கூறப்பட்ட விரவு வினைகளுள் இ, ஐ, ஆய் என்னும் இறுதியையுடைய முன்னிலை வினைச்சொற்கள் ஒருவன், ஒருத்தி, ஒன்று என்னும் இருதிணை முக்கூற்றெருமைக்கும் ஒப்பவுரியன. இர், ஈர், மின் என்னும் இறுதியையுடைய முன்னிலை வினைச் சொற்கள் உயர்திணைப் பலர்பாலுக்கும அஃறிணைப் பலவின் பாலுக்கும் ஒப்பவுரியன. முன்னிலை வினையல்லாத ஏனை எழுவகை வினைச்சொற்களும் இருதிணை ஐம்பால் மூவிடத்திற்கும் பொதுவாய் வருவன. அவற்றுள் வியங்கோள், வினை முன்னிலை தன்மையென்னும் இரண்டிடத்திலும் நிலைபெறாது. நிகழ்கால முணர்த்தும் செய்யுமென்னும் மூன்று பலர்பாற் படர்க்கையிலும் தன்மை முன்னிலைகளிலும் வருதலில்லை. மற்றொரு வினைச்சொல்லோடு கூடியல்லது முற்றுப்பெறாத, குறைச்சொல் வினையெச்சமாகும். செய்து, செய்யூ, செய்பு, செய்தென, செய்யியர், செய்யிய, செயின், செய் செயற்கு எனவரும் இவ்வொன்பது வாய்பாட்டுச் சொற்களும் பின், முன், கால், கடை, வழி, இடத்து என்பவற்றை யிறுதியாக வுடையனவும் இவைபோலக் காலமுணர்த்தி வருவன பிறவும் வினையெச்ச வினைகளாம். இவற்றுள் முதலிலுள்ள செய்து, செய்யூ, செய்பு என வரும் மூன்றும் தனக்குரிய வினை முதல் வினையையே கொண்டு முடிவன. அவை மூன்றும் சினை வினையாங்கால் தமக்குரிய முதல் வினையைக்கொண்டு முடியுனும் தம்தொழிலைக் கொண்டு முடிந்தனவே. இம்மூன்றுமல்லாத பிற வினையெச்சங்கள் தம் வினை முதல் வினையையேனும் அன்றி அங்கு வந்து இயையும் பிற வினைமுதல் வினையையெனும் வரையறையின்றிக் கொண்டு முடியுமியல்பினவாம். வினையெச்சங்கள் பல வாய்பாட்டான் அடுக்கிவரினும் முன்னின்ற எச்சம் முடிய ஏனையவும் பொருளால் முடிந்தனவேயாம். பெயரை ஒழிபாகவுடைய வினைச்சொல் பெயரெச்சம் அது செய்யும், செய்த எனவரும் இரு வாய்பாடுகளில் அடங்கும் நிலப்பெயர், பொருட்பெயர், காலப்பெயர், கருவிப்பெயர், வினை முதற்பெயர், வினைப்பெயர் எனவரும் அறுவகைப் பெயர்களையும் கொண்டு முடிதற்கேற்ற பொருள் நிலைமையையுடைய இப்பெயரெச்சம் இருதிணை யைம்பாற்கு முரிய பொது வினையாகும். செய்யும் என்னும் வாய்பாட்டுச் சொற்கள் பெயரெச்சமாங்கால் முன் செய்யுமென்னும் முற்றிற்கு விலக்கப்பட்ட பல்லோர் படர்க்கை முன்னிலை, தன்மை என்னும் இவ்விடங்களுக்கும் உரியனவாம். பெயரெச்சமும் வினையெச்சமும் வினை நிகழ்ச்சியை யுணர்த்தாது அதனை எதிர்மறுத்துச் சொல்லினும் பெயரெஞ்ச நிற்றலும் வினையெஞ்ச நிற்றலுமாகிய தம் பொருள் நிலைமையில் வேறுபடா. இவ்வெச்சங்களுக்கும் இவற்றை முடிக்குஞ் சொற்களாய் வரும் பெயர் வினைகளுக்குமிடையே முடிக்குஞ்சொல்லொடு தொடர்புடைய வேறு சொல் வந்து நிற்றலுமுண்டு. செய்யுமென்னும் பெயரெச்ச வாய்பாடுகளின் ஈற்றயலெழுத் தாகிய உகரம் தான் ஊர்ந்துநின்ற மெய்யொடுங் கெட்டு முடிதலும் உண்டு. செய்து என்னும் வாய்ப்பாட்டு இறந்தகால வினையெச்சம் ஏனைக் காலச் சொல்லோடு இயைதலும், விரைவின்கண் எதிர்காலமும் நிகழ்காலமும் இறந்தகாலத்தோடு மயங்குதலும், மிக்கது ஒன்றின்கண்ணே இறந்தகாலமும் எதிர்காலமும் நிகழ்காலத்தோடு மயங்குதலும், இது செயல் வேண்டும் என்னும் பொருளில் வரும் வினைச்சொல் தானும் பிறருமாகிய ஈரிடத்தும் பொருள் தருதலும், வற்புறுத்தலில் வரும் வினாப் பொருளையுடைய வினைச்சொல் எதிர்மறைப் பொருள் தருதலும், இயற்கை பற்றியும் தெளிவுபற்றியும் காலம் மயங்குதலும், செயப்படுபொருள் வினைமுதல்போல வருதலும், இவ்வாறே வேறிடங்களில் முக்காலமு மயங்குதலும் ஆகிய விதிகளை இவ்வியல் 40-முதல் 49-வரையுள்ள சூத்திரங்களால் ஆசிரியர் விரித்துக் கூறியுள்ளார். - க. வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 208-213 ஆறாவது வினையியல் 200. வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது நினையுங் காலைக் காலமொடு தோன்றும். என்பது சூத்திரம். இது, நிறுத்தமுறையானே வினை யிலக்கணம் உணர்த்தினமையின், இவ்வோத்து வினையியலெனக் காரணப்பெயர் பெற்றது. இச்சூத்திரம், வினைச்சொற் கெல்லாம் பொதுஇலக்கணம் உணர்த்துகின்றது. (இ-ள்.) வினையெனப்படுவது வேற்றுமை கொள்ளாது - வினைச்சொல்லென்று சொல்லப்படுவது வேற்றுமையோடு பொருந்தாது, நினையுங் காலைக் காலமொடு தோன்றும் - ஆராயுங்காற் காலத்தோடு புலப்படும், எ-று. ‘வினை’ என்றது, முதனிலையை. இஃது ஆகுபெயராய்த் தன்னாற் பிறக்கின்ற சொல்லையுணர்த்திற்று. உண், தின், கரு, செய் என்பன வினை. உண்டல், தின்றல், கருமை, செம்மை என்பன அம் முதல்நிலையாற் பிறந்த வினைப்பெயர். உண்டான், தின்றான், கரியன், செய்யன் என்பன அம்முதனிலையாற் பிறந்த வினைச்சொல். இங்ஙனம் வினையாற் பிறத்தலின், ‘வினையியலென்றார். (1) 201. காலந் தாமே மூன்றென மொழிப. இது, முற்கூறிய காலம் இனைத்தென்கின்றது. (இ-ள்.) காலந்தாமே மூன்று என மொழிப - மேற் தோற்றுவாய் செய்யப்பட்ட காலந்தாம் மூன்று என்று கூறுவர் புலவர், எ-று. (2) 202. இறப்பி னிகழ்வி னெதிர்வி னென்றா வம்முக் காலமுங் குறிப்பொடுங் கொள்ளு மெய்ந்நிலை யுடைய தோன்ற லாறே. இஃது, அக்காலத்திற்குப் பெயரும் முறையுந் தொகையுங் கூறி, அது தான் குறிப்பிற்கும் உண்டென்கின்றது. (இ-ள்.) இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றா அம்முக் காலமும் - இறப்பும் நிகழ்வும் எதிர்வுமென்று சொல்லப்படும் அம்மூன்று காலமும், குறிப்பொடுங் கொள்ளும் மெய்ந்நிலை உடைய - வினைக்குறிப்போடும் பொருந்தும் உண்மை நிலைமையையுடைய, தோன்றலாறே - வினைச் சொல்லான் அக்காலங்கள் தோன்றும் நெறிக்கண், எ-று. (உ-ம்.) உண்டான், உண்ணாநின்றான், உண்பான், எனக் காலம் மூன்றுந் தோன்றிநின்றவாறு காண்க. கரியன், செய்யன் என்பன வினைக்குறிப்பு. இறப்பாவது, தொழிலது கழிவு; நிகழ்வாவது, தொழில் தொடங்கி முற்றுப்பெறாமல் நடக்கின்ற நிலைமை; எதிர்வாவது, தொழில் பிறவாமை. தொழிலாவது, பொருளினது புடைபெயர்ச்சி. இஃது இரண்டு கணங்காலத்தின்கண் நில்லாமையின், நிகழ்ச்சி யென்பது ஒன்று இன்றாயினும், ‘உண்ணாநின்றானெனப் பஃறொழிற்றொகுதிபற்றி நிகழ்ச்சியும் உடைத்தாயிற்று. இதனானே, ‘நிகழ் காலம் இன்றென்பாரும், ‘நிகழ்காலம் ஒன்றுமே உண்டென்பாருமெனப் பல பகுதியர் ஆசிரியரென்பது கொள்க. (3) 203. குறிப்பினும் வினையினு நெறிப்படத் தோன்றிக் காலமொடு வரூஉம் வினைச்சொல் லெல்லா முயர்திணைக் குரிமையு மஃறிணைக் குரிமையு மாயிரு திணைக்குமோ ரன்ன வுரிமையு மம்மூ வுருபின தோன்ற லாறே. இது, வினைச்சொற்களது பாகுபாடு கூறுகின்றது. (இ-ள்.) குறிப்பினும் வினையினும் நெறிப்படத் தோன்றிக் காலமொடு வரூஉம் வினைச்சொலெல்லாம் - குறிப்புப் பொருண்மைக்கண்ணுந் தொழிற்பொருண்மைக்கண்ணும் முறைமைப்படத் தோன்றிக் காலத்தோடு வரும் எல்லா வினைச்சொல்லும், உயர்திணைக்கு உரிமையும் அஃறிணைக்கு உரிமையும் ஆயிருதிணைக்குமோரன்ன உரிமையும் - உயர் திணைக்கு உரிமையுடைமையும் அஃறிணைக்கு உரிமை யுடைமையும் அவ்விரண்டு திணைக்கும் ஒப்ப உரிமை யுடைமையுமென, அம்மூஉருவின தோன்றலாறே - அம்மூன்று கூற்றினையுடையவாந் தோன்று நெறிக்கண், எ-று. (உ-ம்.) உண்டான், கரியன்; சென்றது, செய்யது; வந்தனை, வெளியை என வரும். ‘காலமொடு வருமெனப் பின்னுங் கூறினார், குறிப்பிற்குங் காலம் உண்டு என்பது வலியுறுத்தற்கு. இம்முக்காலத்தும் வருதற்கு உரிய காலங் காட்டும் எழுத்துக்களை ஆசிரியர் எடுத்தோதாராயினார், பின்னுள்ளோர் காலங்கட்கு உரியவாக எடுத்தோதிய எழுத்துக்கள் தம்முள் மயங்கியும் வருதலின். ஆசிரியர், அங்ஙனம் மயங்குதல்பற்றி எடுத்தோதாமையின், உரையாசிரியரும் அவ்வெழுத்துக்களைச் சிறிதே காட்டினார். இனிப் பின்னுள்ளோர் கூறினாரென்பதுபற்றியும், மாணாக்கர்க்கு உய்த்துணரும் உணர்வு இன்று என்பதுபற்றியும், யாமும் அவ்வெழுத்துக்களைப் பிரித்துக் காட்டுதும். சேனாவரையர் அவ்வாறு பிரித்துக் காட்டுகின்றவர், ‘நெறிப்படத்தோன்றி’ என்பதனாற் காட்டுவர். அது பொருந்தாது, ஆசிரியர் எடுத்தோதாமல் ‘மயங்குமெ என்று போதலின், இதனைச் ‘செய்யுண் மருங்கினும்’ என்னும் அதிகாரப் புறனடையிற் ‘பிரித்தனர் காட்டல்’ என்பதனாற் பிரித்துக் காட்டுதும். அது மேற்கண்டு கொள்க. (4) 204. அவைதாம், அம்மா மெமே மென்னுங் கிளவியு மும்மொடு வரூஉங் கடதற வென்னு மந்நாற் கிளவியொ டாயெண் கிளவியும் பன்மை யுரைக்குந் தன்மைச் சொல்லே. இது, முறையானே உயர்திணை முற்றுவினை கூறுகின்றது. (இ-ள்.) அவைதாம் - மேல் பகுக்கப்பட்ட வினையின் முப்பாற் பாகுபாடுமாகிய அவைதாம் ஆகுமாறு இனிச்சொல்லுவல் அம் ஆம் எம் ஏம் என்னுங் கிளவியும் - அம், ஆம், எம், ஏம் என்னும் ஈற்றவாகிய சொல்லும், உம்மொடு வரூஉம் க ட த ற என்னும் அந்நாற் கிளவியொடு - உம் என்னும் இறுதியிடைச்சொல்லின் உகரங் க, ட, த, ற என்னும் ஒற்றின்மேல் ஏறிய கும்மும் டும்மும் தும்முந் றும்மும் என்னும் ஈற்றவாகிய அந்நான்கு சொல்லும், ஆயெண் கிளவியும் - ஆகிய அவ்வெட்டுச் சொல்லும் பன்மை உரைக்குந் தன்மைச் சொல்லே - சொல்லுவான் தன்னொடு பிறரையுங் கூட்டிப் பன்மையினைச் சொல்லுந் தன்மைக்கு உரிய சொல்லாம், எ-று. இச்சூத்திரம் முதலாக, ‘முன்னிலை வியங்கோள்’ ஈறாக, முற்று உணர்த்துகின்றார், வினையெச்சமும் பெயரெச்சமும் ஒழித்து. இச்சூத்திரத்தாற் பன்மைத்தன்மையும் மேலைச் சூத்திரத்தான் ஒருமைத் தன்மையும் உணர்த்துகின்றார். முன்னர் நின்ற நான்கும் இறந்தகாலம்பற்றி வருங்கால் ‘அம், ஆம்’ என்பன தன்னோடு முன்னின்றாரையுந் தமராயவழிப் படர்க்கையாரையும் உளப்படுத்தி, கடதற என்னுங் கால எழுத்தின்முன் அம் ‘அன்’ பெற்றும், ஆம் ‘அன்’ பெறாதும் வரும். ‘எம், ஏம்’ என்பன, படர்க்கையாரை உளப்படுத்தி, அக்கால எழுத்தின்முன்னர் எம் ‘அன்’ பெற்றும் ஏம் ‘அன்’ பெற்றும் பெறாதும் வரும். (உ-ம்.) நக்கனம், உண்டனம், உரைத்தனம், தின்றனம்; நக்கிலம், உண்டிலம், உரைத்திலம், தின்றிலம்; நக்கனமல்லம், உண்டனமல்லம், உரைத்தனமல்லம், தின்றனமல்லம் எனவும், நக்காம், உண்டாம், உரைத் தாம், தின்றாம்; நக்கிலாம், உண்டிலாம், உரைத்திலாம், தின்றிலாம்; நக்காமல்லாம், உண்டாமல்லாம், உரைத்தாமல்லாம், தின்றாமல்லாம் எனவும் நக்கனெம், உண்டனெம், உரைத்தனெம், தின்றனெம்; நக்கிலெம், உண்டிலெம், உரைத்திலெம், தின்றிலெம் : நக்கனெமல்லெம், உண்டனெ மல்லெம், உரைத்தனெமல்லெம், தின்றனெமல்லெம் எனவும், நக்கனேம், நக்கேம்; உண்டனேம், உண்டேம், உரைத்தனேம், உரைத்தேம்; தின்றனேம், தின்றேம்; நக்கிலேம், உண்டிலேம், உரைத்திலேம், தின்றிலேம்; நக்கேமல்லேம், உண்டேமல்லேம், உரைத்தேமல்லேம், தின்றேமல்லேம் எனவும் வரும். இனி, ‘அம், ஆம்’ என்பனவற்றிற்கு, நீயும் யானு முண்டனம்; நீயும் யானும் உண்டாம்; நீயும் யானுமவனும் உண்டனம்; நீயும்யானும் அவனுமுண்டாம் என வரும். ஏனையவற்றோடும் ஒட்டுக. ‘எம், ஏம்’ என்பனவற்றிற்கு, யானும் அவனுமுண்டனெம்; யானுமுவனுமுண்டனேம், யானுமுவனும் உண்டேம் என வரும். ஏனையவற்றோடும் ஒட்டுக. அந்நான்கு ஈறும் ஏனையெழுத்தின்முன் ஙகாரமும் ழகாரமும் ஒழித்து ‘இன்’ பெற்று வரும். அஞ்சினம், தப்பினம் எனவும்; உரிஞினம், எண்ணினம், பொருநினம், திருமினம், பன்னினம் எனவும், போயினம்; வாரினம், சொல்லினம், மேவினம், எள்ளினம் எனவும் வரும். ஒழிந்த மூவீற்றோடும் ஒட்டுக. கலக் கினம், தெருட்டினம், அருத்தினம், அரற்றினம் என்பன, ககர ஈறும் டகர ஈறும் தகர ஈறும் றகர ஈறும் முதனிலைச் சொல்லாய் நின்று ‘இன்’ பெற்றன. இனி, இவை நிகழ்காலம் பற்றி வருங்கால் ‘நில், கின்று’ என்பவற்றோடு வந்து, முற்கூறியவாறே நிற்கும். ‘நில்லென்பது லகரம் னகரமாய்த் தனக்கேற்ற றகரம் பெற்று நிற்கும். இனி, ‘நின், கின்’ என நிற்குமென்றுமாம். உண்ணாநின்றனம், உண்கின்றனம்; உண்ணாநின்றிலம், உண் கின்றிலம் எனவும், உண்ணாநின்றாம், உண்கின்றாம்; உண்ணாநின்றிலாம், உண்கின்றிலாம் எனவும், உண்ணாநின்றனெம், உண்கின்றனெம்; உண்ணா நின்றிலெம், உண்கின்றிலெம் எனவும், உண்ணாநின்றனேம், உண்கின்றனேம் உண்ணாநின்றேம், உண்கின்றேம்; உண்ணாநின்றிலேம், உண்கின்றிலேம் எனவும் வரும். உண்ணாகிடந்தான், உண்ணாவிருந்தான் எனக் ‘கிட, இரு’ வென்பனவும் நிகழ்காலத்து வரும். உண்கிறேனெனக் ‘கிறு’ என்பது நிகழ்காலம் உணர்த்துதல் இக்கால வழக்கு. இனி, இவை எதிர்காலம் பற்றி வருங்காற் பகரமும் வகரமும் பெற்று வரும். வகரம் ஏற்புழிக் குகரமும் உகரமும் அடுத்தும் நிற்கும். உண்பம், உண்குவம், உரிஞுவம், திருமுவம், உண்ணலம் எனவும்; ‘உண்பாம், உண்குவாம், உண்ணாம் எனவும்; உண்பேம் உண்குவேம், உண்ணலேம் எனவும்; உண்பேம், உண்ணேம் எனவும் வரும். இனி, ‘அம்’ ஈறு வருங்கால், அந்தணாளனை நகுகம் யாமே.’ எனவும், ‘பாடுகம் வம்மின் போதுகம்.’ எனவும், ‘பாடுகம் வாவாழி தோழி,’ எனவும் ககரம் எதிர்காலமும் உணர்த்தி வரும். கூறுவன், சொல்லுவன், போதுவன் என வரும் வகரமும் எதிர்காலம் உணர்த்தும். ‘இனி, ‘உம்மொடு வரூஉங் கடதற,’ உண்கும், உண்டும், வருதும், சேறும் என வரும். யானும் நீயுமுண்கும்; யானு மவனுனியுமுண்கும் என எல்லாவற்றோடுமொட்டுக. இக் க ட த ற க்கள் முதனிலையை அடுத்து வருங்கால் இறப்பும், ஈற்றினை அடுத்து வருங்கால் எதிர்வும் உணர்த்தும். இனி, இவற்றுட் சிறுபான்மை நிகழ்காலம் உணர்த்துவனவும் உள. அது, ‘சிறுகண் யானையொடு பெருந்தேரெய்தி, யாமவ ணின்றும் வருதும்’ என வரும். இனி, ‘உரிஞுதும், திருமுதும்’ என ஏனை எழுத்தின்முன் உகரம் பெற்று வரும். (5) 205. கடதற வென்னு மந்நான் கூர்ந்த குன்றிய லுகரமோ டென்னே னல்லென வரூஉ மேழுந் தன்வினை யுரைக்குந் தன்மைச் சொல்லே. இது, தனித்தன்மையாகிய முற்றுக் கூறுகின்றது. (இ-ள்.) க ட த ற என்னும் அந்நான்கு ஊர்ந்த குன்றிய லுகரமொடு - க, ட, த, ற என்னும் அந்நான்கு மெய்யையும் ஊர்ந்து வந்த குற்றியலுகரத் தினை ஈறாகவுடைய அந்நான்கு சொல்லும், என் ஏன், அல் என வரூஉம் ஏழும் - என், ஏன், அல் என்று சொல்ல வருகின்ற மூன்று ஈற்றுச்சொல்லு மாகிய அவ்வேழுந் தன் வினை உரைக்குந் தன்மைச்சொல்லே - பிறரை உளப்படுத்தாது தன் வினையை உணர்த்துந் தன்மைச்சொல்லாம், எ-று. குற்றுகரம் நான்கும், பெரும்பான்மையும் எதிர்காலத்துஞ் சிறுபான்மை ஏனைக்காலத்தும் வரும். (உ-ம்.) உண்கு, உண்டு, வருது, சேறு, உரிஞுகு, திருமுகு என ‘உம்மீறு போல எதிர்காலங் காட்டின. ‘கழிந்தது பொழிந்தென வான்கண் மாறினும், தொல்லது விளைந்தென நிலம்வளங் காப்பினும்’ என்புழிப் ‘பொழிந்தெனவும், ‘விளைந்தெனவும் இறந்தகாலம் உணர்த்தின. நிகழ்காலம் வந்துழிக் காண்க. ‘அழாஅற்கோ வினியே நோய் நொந்துறைவி’ என்னுங் குறுந்தொகைப் பாட்டினுள் அழுதென்னும் உடம்பாட்டிற்கு அழாஅற்கென எதிர்மறை வந்தது. இனி, ஓசை வேற்றுமையாற், ககர உகரமும் றகர உகரமும் வியங்கோண் முற்றாயும் நிற்கும். ‘நெடுந்தேர் தாங்குமதி வலவ! வென்றி ழிந்தனன்’ எனவும் ‘தாங்குநின்னிவலமென்றீர்’ எனவும் ‘நீகூறும் பொய்ச்சூளணங்காயின் மற்றிது, யார்மேல் விளியுமோ? கூறு’ எனவும் வரும். ‘என், ஏன்’ என்பன, மூன்றுகாலமும் பற்றி வரும். இவை கால எழுத்துப் பெறுங்கால் ‘என்’ ஈறு ‘எம்’ ஈற்றோடும், ‘ஏன்’ ஈறு ‘ஏம்’ ஈற்றோடும் ஒக்கும். உண்டனென், உண்டிலென், உண்டனெனல்லென்; உண்ணாநின்றனென், உண்கின்றனென், உண்ணாநின்றிலென், உண்கின்றிலென்; உண்பென், உண்குவென், உண்ணலென் எனவும், உண்டனேன், உண்டேன், உண்டிலேன், உண்டனேனல்லேன்; உண்ணா நின்றனேன், உண்ணாநின்றேன், உண்கின்றனேன், உண்கின்றேன், உண்ணாநின்றிலேன், உண்கின்றிலேன்; உண்பேன், உண்குவேன், உண்ணேன் எனவும் வரும். இனிப் பகர வகரங்கள் நிகழ்காலத்தும் வரும். ‘கூடநீர் நின்ற பெற்றி கண்டிப்பானோக்குவேற்கு’ என்புழிப் ‘பார்க்கின்றேற்கு’ எனப் பொருள் தந்தவாறு காண்க. பகரம் வந்துழிக் காண்க. ‘அல்’ ஈறு, பகர வகரம் பெற்று, எதிர்காலத்து வரும். உண்பல், வருவல் என வரும்; உண்ணாநிற்பலெனச் சிறுபான்மை நிகழ்காலமும் பெறும். ஒழிவல், தவிர்வல் என வரும் மறை வாய்பாடும் அறிக. வினைகொண்டு முடியுஞ் செய்கு என்பதனை உம் ஈற்றோடு இயைய வைத்தமையாற் செய்குமென்பதூஉங் காண்கும் வந்தேமென வினை கொண்டு முடியும். (6) 206. அவற்றுட், செய்கென் கிளவி வினையொடு முடியினு மவ்விய றிரியா தென்மனார் புலவர். இஃது, அவற்றுட் ககர உகர ஈற்றிற்கு முடிபு வேற்றுமை கூறுகின்றது. (இ-ள்.) அவற்றுள் - முற்கூறிய ஒருமைத்தன்மை வினை ஏழனுள், செய்கென் கிளவி வினையொடு முடியினும் - செய்கென்னும் முற்றுச் சொற் பெயரோடு முடியாது வினையோடு முடியினும், அவ்வியல் திரியாது என்மனார் புலவர் - அம்முற்றுச் சொல்லாந் தன்மையிற் திரியாது என்று கூறுவர் புலவர், எ-று. (உ-ம்.) ‘காண்கு வந்திசின் பெரும! என வரும். ‘நோகோ யானே’ எனப் பெயர் கோடல் சிறுபான்மையாம். (7) 207. அன்னா னள்ளா ளென்னு நான்கு மொருவர் மருங்கிற் படர்க்கைச் சொல்லே. இது, படர்க்கை யொருமை முற்று உணர்த்துகின்றது. (இ-ள்.) அன் ஆன் அள் ஆள் என்னும் நான்கும் - அன், ஆன், அள், ஆள் என்னும் ஈற்றையுடைய நான்கு சொல்லும், ஒருவர் மருங்கிற் படர்க்கைச் சொல்லே - ஒருவன், ஒருத்தியென்னும் உயர்திணை யொருமைப் பாலிடத்துப் படர்க்கையை உணர்த்துஞ் சொல்லாம், எ-று. இந்நான்கு ஈறும் மூன்றுகாலமும் பற்றி வருங்கால் அன்னும் அள்ளும் அமீற்றோடும், ஆனும் ஆளும் ஆமீற்றோடும் ஒக்கும். (உ-ம்.) உண்டனன், உண்டிலன்; உண்ணாநின்றனன், உண்கின்றனன், உண்ணாநின்றிலன், உண்கின்றிலன்; உண்பன், உண்குவன், உண்ணலன் எனவும், உண்டான், உண்டிலான்; உண்ணாநின்றான், உண்கின்றான், உண்ணாநின்றிலான், உண்கின்றிலான்; உண்பான், உண்குவான், உண் ணான் எனவும், உண்டனள், உண்டிலள்; உண்ணாநின்றனள், உண்கின்றனள், உண்ணாநின்றிலள், உண்கின்றிலள்; உண்பள், உண்குவள், உண்ணலள் எனவும், உண்டாள், உண்டிலாள்; உண்ணா நின்றாள், உண்கின்றாள், உண்ணாநின்றிலாள், உண்கின்றிலாள்; உண்பாள், உண்குவாள், உண்ணாள் எனவும் வரும், உண்டன னல்லன், உண்டானல்லன்; உண்டனளல்லள், உண்டானல்லள் எனப் பிற வாய்பாட்டான்வரும் மறையும் அறிக. (8) 208. அர்ஆர் ப என வரூஉம் மூன்றும் பல்லோர் மருங்கிற் படர்க்கைச் சொல்லே. இது, படர்க்கைப்பன்மை முற்று உணர்த்துகின்றது. (இ-ள்.) அர்ஆர் ப என வரூஉம் மூன்றும் - அர், ஆர், ப என்னும் ஈற்றெழுத்தினையுடையவாய் வரும் மூன்று சொல்லும், பல்லோர் மருங்கிற் படர்க்கைச் சொல்லே - பல்லோரிடத்துப் படர்க்கைப் பன்மையை உணர்த்துஞ் சொல்லாம், எ-று. அர், ஆர் என்னும் இரண்டும், மூன்று காலமும் பற்றி வரும். இவை காலஎழுத்துப் பெறுங்கால் அன் ஈற்றோடு அர் ஈறும், ஆன் ஈற்றோடு ஆர் ஈறும் ஒக்கும். (உ-ம்.) உண்டனர், உண்டிலர்; உண்ணாநின்றனர், உண்கின்றனர், உண்ணாநின்றிலர், உண்கின்றிலர்; உண்பர், உண்குவர் உண்ணலர் எனவும், உண்டார், உண்டிலார்; உண்ணா நின்றார், உண்கின்றார், உண்ணாநின்றிலார், உண்கின்றிலார்; உண்பார், உண்குவார், உண்ணார் எனவும் வரும். உண்டனரல்லர், உண்டாரல்லர் என வரும் மறை விகற்பமும் அறிக. பகரம் எதிர்காலம் பற்றி வருங்கால் உகரமுங்குகரமும் அடுத்தும் அடாதும் நிற்கும். உரிஞுப வருகுப எனவும், உண்ப எனவும் வரும். ஒழிப, தவிர்ப என மறையும் வரும். உண்ணா தொழிப என்பது எல்லாவற்றிற்கும் பொது. இஃது, உண்ணாநிற்ப என நிகழ்காலத்தும் வரும். (9) 209. மாரைக் கிளவியும் பல்லோர் படர்க்கை காலக் கிளவியொடு முடியு மென்ப. இதுவும், பன்மைக்கு உரிய ஈறும் அதன் முடிபு வேற்றுமையுங் கூறுகின்றது. (இ-ள்.) மாரைக் கிளவியும் பல்லோர் படர்க்கை - முன்னையனவேயன்றி, மார் ஈற்றுச் சொல்லும் பல்லோரை உணர்த்தும் படர்க்கைச்சொல்லாம்; காலக் கிளவியொடு முடியும் என்ப - அஃது அவைபோலப் பெயர் கொள்ளாது வினைகொண்டு முடியும், எ-று. ‘மார்’ உகரம் அடுத்தும் அடாதும் நிற்கும். (உ-ம்.) ‘எள்ளுமார் வந்தாரேயீங்கு,’ (கலி. 81 : 24) ‘ஆர்த்தார் கொண்மார் வந்தார்’ என வரும். இஃது எதிர்காலம். ‘நிலவன் மாரே புலவர்’ ‘பாடின் மன்னரைப் பாடன்மாரெமரே’‘நோய்மலி வருத்தங் காணன்மாரெமரே’என்பன, ‘நிலவுக, பாடுக, காண்க,’ என்னும் வியங்கோட்கு எதிர்மறை யென்று உணர்க. இனி, ‘நிலவுவார், பாடுவார், காண்பார்’ என்பன சில வியங்கோண் முற்றென்று கூறி, அதற்கு எதிர்மறையாய், நிலவாதொழிவார், பாடாதொழிவார், காணாதொழிவார் என ஏவற் பொருண்மையை உணர்த்தி நின்றன என்றலும் ஒன்று. (10) 210. பன்மையு மொருமையும் பாலறி வந்த வந்நா லைந்து மூன்றுதலை யிட்ட முன்னுறக் கிளந்த வுயர்திணை யவ்வே. இது, ‘விரிந்தது தொகுத்துத்’ தெரிநிலை வினைகள் உயர்திணைக்கு உரிய என்கின்றது. (இ-ள்.) பன்மையும் ஒருமையும் பால் அறிவந்த மூன்று தலையிட்ட அந்நாலைந்தும் - பன்மையும் ஒருமையுமாகிய பால் அறிய வந்த இருபத்து மூன்று ஈற்று வினைச்சொல்லும், முன்னுறக்கிளந்த உயர்திணைய - கிளவியாக்கத்துக் கூறப்பட்ட உயர்திணையை உடையனவாம், எ-று. ஈண்டுக் கூறியதனாற் பயன், அன், ஆன் முதலிய இடைச்சொற்பற்றி உயர்திணைப்படர்க்கை வினைமுற்று உணர்த்துதல்; ஆண்டுக் கூறியதனாற் பயன், வழுக்காத்தற்கு அவற்றின் ஈறுகளைத் தொகுத்து இலக்கண வழக்கு உணர்த்துதல் என்றுணர்க. (11) 211. அவற்றுள், பன்மை யுரைக்குந் தன்மைக் கிளவி யெண்ணியன் மருங்கிற் றிரிபவை யுளவே. இஃது, உளப்பாட்டுத் தன்மைக்குத் திரிபு கூறுகின்றது. (இ-ள்.) அவற்றுள் பன்மை உரைக்குந் தன்மைக் கிளவி - முற்கூறப்பட்ட இருபத்துமூன்று சொற்களுட் பன்மையை உணர்த்துந் தன்மைச் சொல், எண் இயல் மருங்கிற் திரிபவை உள - எண்ணுதல் நடக்கும் இடத்து அஃறிணையை உளப்படுத்தித் திரிவன உள, எ-று. (உ-ம்.) ‘யானுமென் னெஃகமுஞ் சாறும். இஃது அஃறிணையை உளப்படுத்தல் ‘தன்மைச்சொல்’ என்னுஞ் சூத்திரத்தான் வந்தது. (12) 212. யாஅ ரென்னும் வினாவின் கிளவி யத்திணை மருங்கின் முப்பாற்கு முரித்தே. இஃது, உயர்திணை வினைக்குறிப்பினுள் ஒன்று கூறுகின்றது. (இ-ள்.) யாஅர் என்னும் வினாவின் கிளவி அத்திணை மருங்கின் முப்பாற்கும் உரித்தே - யாரென்னும் வினாப்பொருளை உணர்த்துஞ் சொல் உயர்திணை மருங்கின் மூன்று பாற்கும் உரித்து, எ-று. (உ-ம்.) அவன் யார்? அவள் யார்? அவர் யார்? இது, வினைக் குறிப்பாயினும், பல்லோர் படர்க்கையை உணர்த்தும் ஆர் ஈற்றான் மூன்று பாலையும் உணர்த்துதலின், அவற்றொடு வையாது ஈண்டு வைத்தார். ‘உயர் திணைக்கு உரித்தெனவே, அஃறிணைக்கு உரித்தன்றிச் சிறுபான்மை வருதல் கொள்க. அஃது, ‘ஊதைகூட்டுண்ணுமுகுபனி யாமதெங் - கோதைகூட் டுண்ணிய தான்யார்மன் - போதெலாந் - தாதொடு தாழுந்தார்க் கச்சி வளநாடன் - றூதொடு வாராத வண்டு?’ என உண்ணிய வண்டுதான் யாரென அஃறிணைக்கண் வந்தது. இது திணை வழுவமைதி என்றலும் ஒன்று. (13) 213. பாலறி மரபி னம்மூ வீற்று மாவோ வாகுஞ் செய்யு ளுள்ளே. இஃது, அவ்விருபத்துமூன்று ஈற்றினுள் மூன்றீறு செய்யுளுட் திரியுமாறு கூறுகின்றது. (இ-ள்.) பால் அறி மரபின் அம்மூவீற்றும் - பால் விளங்க வரும் இயல்பையுடைய ஆன், ஆள், ஆர் என்னும் மூன்று ஈற்றின்கண்ணும், ஆ ஓ ஆகுஞ் செய்யுளுள்ளே - ஆகாரம் ஓகாரமாஞ் செய்யுளிடத்து, எ-று. (உ-ம்.) ‘வினவி நிற்றந்தோனே’ நல்லை மன்னென நகூஉப்பெயர்ந் தோளே’ ‘வாடா வள்ளியங் காடிறந் தோரே’ என வரும். வந்தோம், சென்றோம் என்னும் வழக்கு ஏம் ஈற்றின் சிதைவென மறுக்க. (14) 214. ஆயென் கிளவியு மவற்றொடு கொள்ளும். இது, விரவுவினையும் அம்முடிபு பெறும் என்கின்றது. (இ-ள்.) ஆய் என் கிளவியும் அவற்றொடு கொள்ளும் - முன்னிலை யீற்றுள் ஆயென்னும் ஈறும் மேற்கூறப்பட்டனபோல ஆகாரம் ஓகாரமாஞ் செய்யுளுள், எ-று. (உ-ம்.) வந்தோய் மன்ற தண்கடற் சேர்ப்ப என வரும். இவ்விரவுவினை உயர்திணைமேல் வந்தால் ஆ ஓ வாமெ என்றற்கும், ஆ ஓ ஆதல் அதிகாரப்படுதலானும் ஈண்டுக் கூறினார். இவை தொழிற்பெயராயின், பெயரியலுள் அடங்கும். (15) 215. அதுச்சொல் வேற்றுமை யுடைமை யானும் கண்ணென் வேற்றுமை நிலத்தி னானும் மொப்பி னானும் பண்பி னானுமென் றப்பாற் காலங் குறிப்பொடு தோன்றும். இது, நிறுத்தமுறையானே உயர்திணை வினைக்குறிப்பு உணர்த்துகின்றது. (இ-ள்.) அதுச்சொல் வேற்றுமை உடைமையானும் - ஆறாம் வேற்றுமையது உடைமைப்பொருட்கண்ணும், கண் என் வேற்றுமை நிலத்தினானும் - ஏழாம் வேற்றுமையது நிலப் பொருண்மைக்கண்ணும், ஒப்பினானும் - உவமத்தின்கண்ணும், பண்பினானும் - பண்பின்கண்ணும், என்று அப்பாற்காலங் குறிப்பொடு தோன்றும் - என அப்பொருட்பகுதி பற்றி வருஞ் சொல்லகத்துக் காலங் குறிப்பாற் தோன்றும், எ-று. ‘உடைமையென்பது, உடைமைத்தன்மையும் உடைமைப் பொருளுமென இருவகைப்படும். உடைமைத்தன்மையாவது, தன் செல்வத்தை நினைந்து இன்புறுதற்கு ஏதுவாகிய பற்றுள்ளம். அஃது, ‘ஆங்கவையொருபாலாக’ என்னும் மெய்ப்பாட்டியற் சூத்திரத்து ‘உடைமை யின்புறல்’ என்பதனான் உணர்க. உடைமைப் பொருளாவது, ஒன்றற்கு ஒன்றை உரிமை செய்து நிற்பது. அஃது, இப்பொருளினுடையது இப் பொரு ளென்றும், ‘இப்பொருள் இப்பொருளினுடைமை யாயிருந்த தென்றும், இப்பொருளையுடையதாயிருந்தது இப்பொருள் என்றும் மூன்று வகைப்படும். அவை முறையே ‘சாத்தனது ஆடை’ யென ஆறனுருபாயும், ‘ஆடை சாத்தனதெனவுங்குழையன், கச்சின னெனவும் வினைக்குறிப்பாயும் நிற்கும். உருபு உணர்த்தும்வழி ஆடை முதலியன பின் னிற்குமாறும், குறிப்பு உணர்த்தும் வழி ஆடை முதலியன முன் னிற்குமாறும் உணர்க. ‘குழையனென்புழி, மேல்வந்து முடிக்கும் வினைமுதற் பெயரைத்தோற்றுவித்து நிற்கும் ‘அன்’னென்னும் பால் காட்டும் ஈறு நின்று உடைமைப் பொருளைத் தனக்கு உரிமைசெய்யும் உடைமையை விரித்து நிற்குமென்று உணர்க. இனி, ‘இல்லத்தன், புறத்தன்’ எனவும், ‘பொன்னன்னன், புலி போல் வான்’ எனவும், ‘கரியன், செய்யன்’ எனவும் வரும். ‘கரியனென்பது, ‘இவ்வண்ணமாய் இருப்பனென்னும் பொருள் உணர்த்தி முதனிலையாய் நிற்றலிற், பண்பாம். ‘கருமைய னென்பது, பண்புப்பெயர் உடைமைப்பொருளாய் நின்று ‘கருமையையுடையன்’ என உருபேற்று நிற்றலின், உடைமைப் பொருளாம். ‘இவ்வாறன் உடைமைப்பொருட்கு இரண்டாவது விரியுமாறென்னையெனின், ‘வனைந்தான்’ என்னுந் தெரிநிலை முற்றுச்சொல் ‘செய்தானென்னுங் காரியத்தினை நிகழ்த்தும் காரணங்கள் எட்டினையும் உள்ளடக்கி வினைமுதலோடு அமைந்து மாறிநின்று அவாய்நிலை தோன்றிய காலத்துச் செயப்படுபொருள் முதலிய ஏழினையும் விரித்து நிற்குமாறு போல, ‘உடையனென்னும் வினைக்குறிப்பு முற்றுச்சொல்லும், உடையனாயிருந்தான்’ என விரிந்துழி, உணரப்படுங் காரியத் தினை நிகழ்த்தும் காரணங்கள் எட்டினையும் உள்ளடக்கி வினைமுதலோடு அமைந்து மாறி நின்று அவாய்நிலை தோன்றிய காலத்துச் செயப்படுபொருள் முதலிய ஏழினையும் விரித்துநிற்கும் ஆதலான், ‘உடையனென்பதனுள் அடங்கி நின்ற செயப்படுபொருள் ‘குழையை’ என உருபை விரித்தல் அதற்கு இயல்பென்று உணர்க. இட்தெரிநிலையும் குறிப்பும் இங்ஙனம் உருபை விரித்து நிற்றலினன்றே ஆசிரியர், ‘ஐயெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி - யெவ்வழி வரினும் வினையே வினைக் குறிப்பவ்விரு முதலிற் றோன்றுமதுவே’ என்றது. தெரிநிலைவினைத் தொழிற்பெயர் காலந் தோன்றி நின்றாற்போலக் ‘கச்சினான், இல்லத்தான்’ என்றாற்போலுங் குறிப்புப்பெயருங் காலந் தோன்றிநிற்குமென்றுணர்க. ‘தன்னினம் முடித்தலென்பதனால், ‘ஐயாட்டையன், துணங்கையன்’ எனச் சிறுபான்மை காலமும் வினைசெய்யிடமும் பற்றி வருவனவுங் கொள்க. ‘ஒப்பினானும்’ என்பதற்கு உதாரணமாகிய ‘பொன் னன்னானென்பது, ஒப்புமைக் குணப்பண்பாதலின், வினைக் குறிப்பிற்கும் குணப்பண்பிற்கும் உரியவாக மேற்கூறுகின்ற ‘வன்மை’ முதலியவற்றோடு வைக்க.’ எனின், இக் குணம் உவமைக்கும் உவமிக்கும் பொருட்கும் ஒப்பநிற்றலின் ஈண்டு வைத்தார், அவற்றின் வேறென்று கருதி. (16) 216. அன்மையி னின்மையி னுண்மையின் வன்மையி னன்ன பிறவுங் குறிப்பொடு கொள்ளு மென்ன கிளவியுங் குறிப்பே காலம். இதுவும் அது. (இ-ள்.) அன்மையின் இன்மையின் உண்மையின் வன்மையின் - அன்மை இன்மை உண்மை வன்மை என்னும் பொருள்பற்றி வருவனவும், அன்ன பிறவுங் குறிப்பொடு கொள்ளும் என்ன கிளவியும் - அவை போல்வன பிறவுமாய்க் குறிப்புப் பொருண்மை யொடு பொருந்தும் எல்லாச் சொல்லும், காலங் குறிப்பு - காலங் குறிப்பான் உணரப்படும் சொல்லாம், எ-று. பண்பாவது, ஒரு பொருள் தோன்றுங் காலத்து உடன்றோன்றி அது கெடுந்துணையும் நிற்பது. குறிப்பாவது, பொருட்குப்பின் றோன்றிச் சிறிது பொழுது நிகழ்வது. அன்மையாவது, ‘எப்பொருளுமல்லனிறைவன்,’ என்றாற் பண்பை உணர்த்தியும், ‘அவன்தான் இவன் அல்லன்,’ என்றாற் குறிப்பை உணர்த்தியும் நிற்கும். இதற்கு உடம்பாடு ‘ஆவன்’ என்பதாம். இனி, உண்மைக்கு இன்மை மறை என்று உணர்க. உண்மைதான் மூவகைய: அவை, ‘ஆவுண்டென உண்மையை உணர்த்தியும், ‘எவ்வுயிர்க் கண்ணும் இறைவனுளன்’ எனப் பண்பை உணர்த்தியும், ‘ஆற்றருந் துப்பின் மாற்றோர் பாசறைஉளன்.’ எனக் குறிப்பை உணர்த்தியும் நிற்கும். இன்மையாவது, ‘பொய்யர் நெஞ்சிற் புனிதயிலன்,’ எனப் பண்பை உணர்த்தியும். ‘மாற்றோர் பாசறை யிலன்’ எனக் குறிப்பை உணர்த்தியும் நிற்கும். இவ்வின்மைதான், ‘குழை யிலன்; கச்சி யிலன்’ என உடைமைக்கு மறையாயும் நிற்கும். இவற்றிற்குப் பொருள் உரைக்குங்காற் ‘குழையை உடையன் அல்லன்’, என அன்மை வருமாறும் உணர்க. ‘வன்மை’ என்றது, வலியும் ஒன்றனை வல்லுதலுமாம். அது ‘மெய் வலி யன்னெனப் பண்பை உணர்த்தியுஞ் சொலல் வல்லனெனக் குறிப்பை உணர்த்தியும் நிற்கும். இதற்கு மறை, ‘வல்லனலனென்பதாம். ‘அல்லள், அல்லர், இல்லள், இல்லர், உளள், உளர், வல்லள், வல்லர்’ எனவும் ஒட்டுக. இவ்வன்மை முதலிய நான்கனது பண்பையுங் குறிப்பையும் ஈண்டுங் கொள்க. ‘அன்ன பிறவும்’ என்றதனால், ‘நல்லன், நல்லள், நல்லர், தீயன், தீயள், தீயர், உடையன், உடையள், உடையர் என்னுந் தொடக்கத்தனவுங் கொள்க. இவ்விரண்டு சூத்திரத்தாற் கூறியவற்றை ‘அம் ஆம்’ என்பன முதலியவற்றுள் ஏற்பனவற்றொடு படுத்து ஒட்டிக்கொள்ளுமாறு மேற்கூறுப. (17) 217. பன்மையு மொருமையும் பாலறி வந்த வன்ன மரபிற் குறிப்பொடு வரூஉங் காலக் கிளவி யுயர்திணை மருங்கின் மேலைக் கிளவியொடு வேறுபா டிலவே. இது, முற்கூறிய வினைக்குறிப்பிற்கு ஈறாமாறு கூறுகின்றது. (இ-ள்.) பன்மையும் ஒருமையும் பால் அறிவந்த - பன்மையும் ஒருமையுமாகிய பால்களை அறிய வந்த, அன்ன மரபிற் குறிப்பொடு வரூஉம் காலக்கிளவி - அத்தன்மைத்தாகிய முறைமையினையுடைய காலங் குறித்துக் கோடலொடு வரும் வினைச்சொற்கள், உயர்திணை மருங்கின் மேலைக் கிளவி யொடு வேறுபாடு இல - உயர்திணையிடத்து மேற்கூறிய தெரிநிலை வினையின் ஈறுகளோடு ஈறு வேறுபாடின்றித் தமக்கு ஏற்பனவற்றைக் கொள்ளும், எ-று. அவை ‘அம், ஆம், எம், ஏம், என், ஏன்’ என்னுந் தன்மை ஈறு ஆறும், அன், ஆன், அள், ஆள், அர், ஆர்’ என்னும் படர்க்கை யீறு ஆறுமாம். கரியம், கரியாம்; கரியெம், கரியேம்; கரியென், கரியேன் எனவும், கரியன் கரியான்; கரியள், கரியாள்; கரியர், கரியார் எனவும் வரும். ‘உடையம், நிலத்தம், பொன்னன்னம், அல்லம்’ என ஒழிந்தவற்றோடும் ஒட்டுக. (18) 218. அஆ வ என வரூஉ மிறுதி யப்பான் மூன்றே பலவற்றுப் படர்க்கை. இது, முறையானே அஃறிணைத் தெரிநிலைவினை கூறுகின்றது. (இ-ள்.) அ ஆ வ என வரூஉம் இறுதி அப்பால் மூன்றே - அகரமும் ஆகாரமும் வகர உயிர்மெய்யுமாகிய ஈற்றையுடைய அக்கூற்று மூன்று சொல்லும், பலவற்றுப் படர்க்கை - அஃறிணைப் பன்மைப் படர்க்கை வினையாம், எ-று. அகரம் இறந்தகாலம்பற்றி வருங்கால் ‘க, ட, த, ற’ என்னும் அந்நான்கன்முன் ‘அன்’ பெற்றும் பெறாதும், ஏனை யெழுத்தின்முன் ஙகார ழகாரம் ஒழித்து ‘இன்’ பெற்றும், யகரத்தின்முன் சிறுபான்மை இன்னேயன்றி ‘அன்’னும் பெற்றும் பெறாதும் வரும். (உ-ம்.) தொக்கன, தொக்க, தொக்கில; உண்டன, உண்ட, உண்டில; வந்தன, வந்த, வந்தில; சென்றன, சென்ற, சென்றில எனவும்; அஞ்சின, தப்பின எனவும், உரிஞின, நண்ணின, பொருநின, செருமின, துன்னின எனவும், போயின, சேரின, சொல்லின, மேவின, துள்ளின எனவும், போயன, போய எனவும் வரும். இனி, அகரம் நிகழ்காலம் பற்றி வருங்கால் ‘நில், கின்று’ என்பனவற்றோடு ‘அன்’ பெற்றும் பெறாதும் வரும். உண்ணாநின்றன, உண்ணாநின்ற, உண்ணாநின்றில; உண்கின்றன, உண்கின்ற, உண்கின்றில என வரும். இனி, அகரம் எதிர்காலம்பற்றி வருங்காற் பகர வகரத்தோடு ‘அன்’ பெற்றும் பெறாதும் வரும். உண்பன, உண்ப, உண்ணல; வருவன, வருவ என வரும். உரிஞுவன, உரிஞுவ என உகரம் பெற்று ஏனை எழுத்தின்கண் வருதலும் ஏற்புழிக் கொள்க. இனி, ஆகாரம் காலஎழுத்துப் பெறாது எதிர்காலத்துப் பயின்று மறையாய் வரும். உண்ணா, தின்னா என வரும். இனி, வகரம் எதிர்காலத்திற்கு உரித்தாய்க் குகரம் பெற்றும் பெறாதும், ஏற்றவழி உகரம் பெற்றும் வரும். உண்குவ, தின்குவ உண்ணல எனவும், ஓடுவ, தாவுவ எனவும், உரிஞுவ, செருமுவ எனவும் வரும். உண்டனவல்ல, உண்டனவில்லை எனப் பிற வாய்பாட்டு மறையும் அறிக. (19) 219. ஒன்றன் படர்க்கை த ற ட வூர்ந்த குன்றிய லுகரத் திறுதி யாகும். இஃது, ஒருமை வினை கூறுகின்றது. (இ-ள்.) ஒன்றன் படர்க்கை - ஒன்றனை யுணர்த்தும் படர்க்கை வினையாவது, த ற ட ஊர்ந்த குன்றியலுகரத்து இறுதி ஆகும் - த, ற, ட என்னும் ஒற்றுக்களை ஊர்ந்து நின்ற குன்றிய லுகரத்தினை ஈறாகவுடைய சொல்லாம், எ-று. தகர உகரம் இறந்தகாலத்து வருங்கால் ‘க, ட, த, ற’ க்கள் முன் அகரம் பெற்றும், ஏனை யெழுத்தின்முன் இகரமும் யகர உயிர்மெய்யும் பெற்றும், யகர உயிர்மெய்யே பெற்றும் வரும். (உ-ம்.) புக்கது, புக்கிலது; உண்டது, உண்டிலது; வந்தது, வந்திலது; சென்றது, சென்றிலது எனவும், எஞ்சியது, தப்பியது எனவும், உரிஞியது, நண்ணியது, பொருநியது, செருமியது, துன்னியது எனவும், போயது, கூறியது, சொல்லியது, மேவியது, துள்ளியது எனவும் வரும். இனி, நில், கின்று என்பனவற்றோடு நிகழ்காலத்தின்கண் அகரம் பெற்று வரும். நடவாநின்றது, நடவாநின்றிலது; நடக்கின்றது, நடக்கின்றிலது; உண்ணாநின்றது, உண்ணா நின்றிலது; உண்கின்றது, உண்கின்றிலது என வரும். இனி, எதிர்காலத்தின்கண் உயிர்மெய்யான பகர வகரம் பெற்று, உண்பது, செல்வது என வரும். றகர உகரம், ‘க, ட, த, ற’ என்பனவற்றின்முன் அன்னும் இன்னும் பெற்றும், ஏனையெழுத்தின்முன் ‘இன்’ பெற்றும், அவ்வின்னின் னகரம் திரிந்தும் இறந்தகாலம் பற்றி வரும். புக்கன்று, புக்கின்று; உண்டன்று, உண்டின்று; வந்தன்று, வந்தின்று; சென்றன்று, சென்றின்று என வரும். ‘கூயின்று, கூயிற்று, போயின்று, போயிற்று’ என ஏனை எழுத்தோடும் ஒட்டிக்கொள்க. ‘வந்தின்று’ என்பது இல்லினது லகரம் னகரமாய்த் திரிந்த எதிர்மறை வினையாதல், வந்தில, வந்திலன், வந்திலள், வந்திலர் என்னும் ஏனைப்பாற் சொல்லான் அறிக. இந்த றகர உகரம், ‘தாலி களைந்தன்று மிலனே’ எனவும், ‘வியந்தன்று மிழிந்தன்று மிலனே’எனவும் உயர்திணைக் கண்ணும் வந்ததாலெனின், அவை ‘களைந்தான், வியந்தான், இழிந்தான்’ என்பனவற்றிற்கு மறையாய்க் ‘களைந்திலன், வியந்திலன், இழிந்திலன்’ என நிற்கின்றவை ‘களைந்தன்றுமிலன், வியந்தன்றுமிலன், இழிந்தன்றுமிலன்’ என முற்று வினைத் திரிசொல்லாய் நின்றன. இனி, டகர உகரம் மூன்று காலத்திற்கும் உரிய வினைக்குறிப்பாய்க் குண்டுகட்டு, குறுந்தாட்டு என வரும். மேல் குறிப்பினைத் தெரிநிலைவினையோடு மாட்டெறி மாதலின், இத்தெரிநிலைவினையுள் டகர உகர ஈறு இல்லது கண்டு ஆண்டு மாட்டேறு ஏலாதென ஈண்டுக் கூறினாரென உணர்க. கிளவியாக்கத்துத் திணையும் பாலும் அறிவிப்பான் இவ்வீறுகளை விதந்தோதினார்; ஈண்டு இவை இன்ன இடம்பற்றி உணர்த்துமென்றார். (20) 220. பன்மையு மொருமையும் பாலறி வந்த வம்மூ விரண்டு மஃறிணை யவ்வே. இது, விரிந்தது தொகுத்துத் திணைக்கு உரிமை கூறுகின்றது. (இ-ள்.) பன்மையும் ஒருமையும் பால் அறிவந்த - பன்மையும் ஒருமையுமாகிய பால் அறிய வந்த, அம்மூவிரண்டும் அஃறிணையவ்வே - அவ்று ஆறீற்றுச் சொல்லும் அஃறிணை யுடையனவாம், எ-று. (21) 221. அத்திணை மருங்கி னிருபாற் கிளவிக்கு மொக்கு மென்ப வெவனென் வினாவே. இஃது, அஃறிணை இருபாற்கும் உரியதோர் வினைக் குறிப்புக் கூறுகின்றது. (இ-ள்.) எவன் என் வினா - ‘எவனென்னும் வினாச்சொல் அத்திணை மருங்கின் இருபாற்கிளவிக்கும் ஒக்கும் என்ப - அஃறிணையிடத்து ஒருமை பன்மையாகிய இருபாற் பொருண்மைக்கும் மிகுதி குறைவின்றி ஒக்கும் என்று கூறுவர் ஆசிரியர், எ-று. (உ-ம்.) அஃதெவன்? அவை யெவன்? என வரும். னகர ஈறாய் இருபாற்கும் பொதுவாய் வருதலின், வேறே கூறினார். நுமக்கு இவன் எவனாம்? என்பது, முறைபற்றி நிற்றலின், அஃறிணைக்கண் வந்ததாம். படுத்தலோசையால் ‘எவனென்பது பெயருமாம். அஃது இக் காலத்து ‘என்னென்றும், ‘என்னையென்றும் மருவிற்று. (22) 222. இன்றில வுடைய வென்னுங் கிளவியு மன்றுடைத் தல்ல வென்னுங் கிளவியும் பண்புகொள் கிளவியு முளவென் கிளவியும் பண்பி னாகிய சினைமுதற் கிளவியு மொப்பொடு வரூஉங் கிளவியொடு தொகைஇ யப்பாற் பத்துங் குறிப்பொடு கொள்ளும். இஃது, அஃறிணை வினைக்குறிப்புக் கூறுகின்றது. (இ-ள்.) இன்று இல உடைய என்னுங் கிளவியும் - இன்று, இல, உடைய என்னுஞ் சொற்களும், அன்று உடைத்து அல்ல என்னும் கிளவியும் - அன்று, உடைத்து, அல்ல என்னுஞ் சொற்களும், பண்பு கொள் கிளவியும் - நிறப் பண்பைத் தனக்கு அடியாகக்கொண்ட சொல்லும், உள என் கிளவி யும் - உள என்னுஞ் சொல்லும், பண்பின் ஆகிய சினைமுதற் கிளவியும் - நிறப்பண்பாலுங் குணப்பண்பாலும் உளதாகிய சினையொடு முதலை உணர்த்துஞ் சொல்லும், ஒப்பொடு வரூஉங் கிளவி யொடு தொகைஇ - உவமப் பொருள்பற்றி வருஞ் சொல்லோடே தொக்கு, அப்பாற் பத்தும் குறிப்பொடு கொள்ளும் - அக்கூற்றுப் பத்துச் சொல்லுங் காலங் குறித்துக்கோடலொடு வரும் வினைச்சொல்லாகக் கொள்ளப்படும், எ-று. (உ-ம்.) இன்று, இல; உடைத்து, உடைய; அன்று, அல்ல; உள என்பன ஒருமையும் பன்மையுமாகிய வாசகத்தை உணர்த்தி நின்றன. அல்லன பொருளுணர்த்தி நின்றன. ‘உண்டென்னுஞ் சொல் உண்மையை உணர்த்துங்கால் ‘இன்றென்னுஞ் சொல்லும் அதற்கு மறையாய், ‘முயற்குக் கோடின்றெனப் பொய்ம்மை யொருமை உணர்த்தியும், அவ் ‘உண்டென்னுஞ் சொற் பண்பை உணர்த்துங்கால் அவ் ‘இன்றென்னுஞ் சொல்லும் அதற்கு மறையாய், இக்குதிரைக்கெக்காலமும் நடையின்றெனப் பண்பை ‘உணர்த்தியும், அவ் உண்டென்னுஞ் சொல் குறிப்பை உணர்த்துங்கால் இன்றென்னுஞ் சொல்லும் அதற்கு மறையாய்க்குதிரைக்கு யீண்டு நடையின்றெனக் குறிப்பை உணர்த்தியும் நிற்கும்.’ ‘பொருண்மை சுட்டல்’ என்பதனான் உண்மை உணர்த்திலும், ‘உண்டென் கிளவியுண்மை செப்பின் என்பதனான் வினைக்குறிப்பும் பண்பும் உணர்த்தினமையும் பெற்றாம். இனி, ‘உளவென்னும் பன்மைக்கு ‘இல’ என்னும் பன்மை மறையாம். இதற்கு ‘உளதென்னும் ஒருமை ஈறு சிறுபான்மை யாதலிற், கூறிற்றிலர். அதுதான், ‘மாவுள’ எனப் பண்பு உணர்த்தியும், ‘ஈண்டு நெல்லுள,’ எனக் குறிப்பு உணர்த்தியும் நிற்கும். இனி, ‘அறம் செய்வார்க்குத் துன்பங்களில,’ எனப் பண்பு உணர்த்தியும் ‘ஈண்டு உழுந்தில,’ எனக் குறிப்பு உணர்த்தியும் நிற்கும். இனி, ‘உடைத்து, உடைய’ என்னும் ஒருமையும் பன்மையும் பெரும்பான்மை உறுப்பின்கிழமையும் பிறிதின்கிழமையும் பற்றி வரும். இவ்வெருது கோடுஉடைத்து; இவ்வெருதுகள் கோடுடைய எனப் பண்பு உணர்த்தியுங், ‘குருதி படிந்துண்ட காகங் குக்கிற்புறமுடைத்து, உடைய எனக் குறிப்பு உணர்த்தியும் நிற்கும். இன்று, இலவென்பன, இவ்வுடைமைக்கு மறுதலையாய்க் ‘கோடின்று; கோடில,’ என நிற்கும். இவற்றிற்குப் பொருள் உரைக்குங்காற்கோடுடைத்தன்று; கோடுடையதல்ல,’ என ‘அன்று, அல்ல’ என்னும் வாசக வருமாறும் உணர்க. இனி, ‘அன்று, அல்ல’ என்பன ஒருமையும் பன்மையும் உணர்த்தும். ‘உழுந்தன்று பயறு; உழுந்தல்ல பயறு,’ எனப் பண்பு உணர்த்தியும், ‘வேலன்று வென்றி தருவது’ எனவும், ‘படையல்ல வென்றி தருவன,’ எனவுங் குறிப்பு உணர்த்தியும் நிற்கும். ‘ஒன்றென முடித்தலான், ‘நன்று, தீது; நல்ல, தீய’ என்பனவுங் கொள்க. பண்பு கொள் கிளவி: கரிது, கரிய. பண்பின் ஆகிய சினை முதற் கிளவி: வெண்கோட்டது, வெண்கோட்டன; நெடுஞ் செவித்து, நெடுஞ் செவிய. ஒப்பொடு வரூஉங் கிளவி: பொன்னன்னது, பொன்னன்ன என வரும். இனி, ‘அறிந்த மாக்கட் டாகுக தில்ல’ ‘மெல்விரன் மந்தி குறை கூறும் செம்மற்றே’ மேற்று, வைகற்று. ‘அணித்தோ சேய்த்தோ கூறுமின் எமக்கே’ என்பன பிறிதின்கிழமையாகிய உடைமைப்பொருள் பட நின்றன. ‘வடாஅது தெனாஅது’ என்பன ஏழனுருபின் பொருள்பட வந்தன. மூவாட்டையது, செலவிற்று என்பன காலமுந் தொழிலும்பற்றி வந்தன. இவை எல்லாம் உரையிற் கோடலாம். (23) 223. பன்மையு மொருமையும் பாலறி வந்த வன்ன மரபிற் குறிப்பொடு வரூஉங் காலக் கிளவி யஃறிணை மருங்கின் மேலைக் கிளவியொடு வேறுபா டிலவே. இஃது, அவ்வினைக்குறிப்பிற்கு ஈறாமாறு கூறுகின்றது. (இ-ள்.) பன்மையும் ஒருமையும் பால் அறிவந்த - பன்மையும் ஒருமையுமாகிய பால்களை அறிய வந்த, அன்ன மரபிற் குறிப்பொடு வரூஉம் காலக் கிளவி - அத்தன்மைத்தாகிய முறைமையினையுடைய காலங் குறித்துக்கோடலொடு வரும் வினைச்சொற்கள், அஃறிணை மருங்கின் மேலைக் கிளவியொடு வேறுபாடு இலவே - அஃறிணையிடத்து மேற்கூறிய தெரிநிலைவினையின் ஈறுகளோடு ஈறு வேறுபாடு இல, எ-று. அகரமுந் தகர றகர உகரமும் பெரும்பான்மை அவ்வீறு பற்றிப் பாலும் இடமும் உணர்த்துதல் முற்காட்டியவற்றுட் காண்க. இனி ஆகாரம் ‘இம்மணி நல்ல, என்னும் உடம்பாட்டுக் குறிப்பிற்கு இம்மணி பொல்லா, என வரும். இனி, வகரங், ‘கதவவாற் றக்கவோ காழ்கொண்ட வனமுலை? என்புழிக் கதத்தினையுடைய என வரும். இனித் தெரிநிலையுடன் கூடிய டகர உகரம் பூணை யுடைத்தென்னும் பொருண்மைக்கண் பூட்டு எனவும்; இடத்தது என்னும் பொருண்மைக்கண், ‘வகைதெரிவான் கட்டே யுலகு’ எனவும்; எந்நாளதென்னும் பொருண்மைக்கண், எந்நாட் டாகுநும் போரே? எனவும்; விளைவினையுடைத்தெ என்னும் பொருண்மைக்கண், ‘வேலி, ஆயிரம் விளையுட்டாக எனவும்; குழிவினையுடைய கண்ணை யுடைத்தென்னும் பொருண்மைக் கட், குண்டு கட்டு எனவும்; பொருளிடம் காலம் தொழிலுறுப்பென்னும் ஐவகைப்பெயரும் அடியாக வரும். ஓட வற்று, ஓட வல்ல; ஓட வல்லாது, ஓட வல்லா என்பனவுங் கொள்க. (24) 224. முன்னிலை வியங்கோள் வினையெஞ்சு கிளவி யின்மை செப்பல் வேறென் கிளவி செய்ம்மன செய்யுஞ் செய்த வென்னு மம்முறை நின்ற வாயெண் கிளவியும் பிரிபுவேறு படூஉஞ் செய்திய வாகி யிருதிணைச் சொற்குமோ ரன்ன வுரிமைய. இது, நிறுத்தமுறையானே விரவுவினை உணர்த்து கின்றவற்றின் பெயரும் முறையுந் தொகையுங் கூறுகின்றது. (இ-ள்.) முன்னிலை - எதிர்முகமாக நின்ற பொருளினது தொழிலுணர்த்தும் முற்றுச்சொல்லும், வியங்கோள் - படர்க்கைப் பொருள்மேல் ஏவற்பொருண்மையைக் கொண்டுவரும் முற்றுச் சொல்லும், வினை எஞ்சு கிளவி - முடிக்கும் வினையை ஒழிபாக உடைய வினைச்சொல்லும், இன்மை செப்பல் - இன்மை என்னும் பண்பினை உணர்த்தும் இல்லை என்னும் வினைக்குறிப்பு முற்றுச் சொல்லும், வேறு என் கிளவி - வேறு என்னும் வேறுபாடுதன்னை உணர்த்திநிற்கும் வினைக்குறிப்பு முற்றுச் சொல்லும், செய்ம்மன - மன ஈற்றுப் பெயர் எச்சமாய் எதிர்காலம் உணர்த்தும் செய்ம்மன என்னுஞ் சொல்லும், செய்யும் - முற்றும் எச்சமுமாய் உம் ஈற்றால் நிகழ்காலம் உணர்த்துஞ் செய்யும் என்னுஞ் சொல்லும், செய்த - அகர ஈற்று எச்சமாய் இறந்த காலம் உணர்த்தும் செய்த என்னுஞ் சொல்லும், என்னும் அம்முறை நின்ற அ எண் கிளவியும் - என்று சொல்லப்படுகின்ற அவ்வடைவின்கண் நின்ற அவ்வெட்டுச் சொல்லும், பிரிபு வேறுபடூஉம் செய்திய ஆகி - பொதுமையிற் பிரிந்து ஒருகால் உயர்திணையையும் ஒருகால் அஃறிணையையும் உணர்த்தி வேறுபடுந் தொழிலை உடையவாய், இருதிணைச் சொற்குமோரன்ன உரிமைய - இருதிணையை உணர்த்துஞ் சொல்லாதற்கும் ஒத்த உரிமையவாம், எ-று. என் செய்யாநின்றானென்று வினாயவழி, உண்ணா நின்றானெனச் செப்புதலின், செய்யென்னும் வாசகம் எல்லாத் தொழிலினையும் அகப்படுத்தி நிற்றல்பெற்றாம். இருதிணைக்கும் பொதுவாயதோர் பொருளின்மையான், அதனான் நிகழும் விரவுத்தொழிலென்பது ஒன்றின்றா லெனின், அவ்விரவுத் தொழிலைக் கூறுகின்றவன் அதனை நிகழ்த்திய வினைமுதல் உயர்திணை அஃறிணையென்பது உணர்ந்தே கூறுமாயினும், பால்காட்டும் ஈறின்மை காரணத் தாற் கேட்டோர் உணர்வு இருதிணை வினைமுதன்மேலும் ஒருங்கு சேறலான், அவ்வினைமுதற் பொதுமையான் நிகழும் விரவுத் தொழிலும் உளவாயின. (25) 225. அவற்றுள், முன்னிலைக் கிளவி இஐ ஆயென வரூஉ மூன்று மொப்பத் தோன்று மொருவற்கு மொன்றற்கும். இது முறையானே முன்னிலையொருமைவினை கூறுகின்றது. (இ-ள்.) அவற்றுள் முன்னிலைக் கிளவி - அவ்வெட்டனுள் முன்னிலைச் சொல் இ ஐ ஆய் என வரூஉம் மூன்றும் - ‘இ, ஐ, ஆய்’ என்று சொல்ல வருகின்ற மூன்று ஈற்றுச்சொல்லும், ஒருவர்க்கும் ஒன்றற்கும் ஒப்பத் தோன்றும் - உயர்திணை யாண்பாலும் பெண்பாலுமாகிய ஒருமைப்பாற்கும் அஃறிணை ஒருமைப்பாற்கும் மிகுதி குறைவின்றி ஒப்பத் தோன்றும், எ-று. இகரம், ட, த, ற ஊர்ந்து எதிர்காலம் பற்றி வரும். (உ-ம்.) உண்டி, உரைத்தி, தின்றி. இவற்றை உண்பை, உரைப்பை, தின்பை என விரிக்க. இனி, உரைக்கிற்றி, ‘நன்றுமன் நாடாய் கூறி’ என நிகழ்வு பற்றியும் வரும். இவைதாம் எடுத்தல் ஓசையாற் கூறும்வழி, உண்பாய், உரைப்பாய், தின்பாய் என ஏவற்பொருண்மையும் உணர்த்தும். இனி, ‘ஐய! சிறிதென்னை யூக்கி’எனவும், ‘ஈதன்மாட் டொத்தி பெரும!’ எனவுங் ககரமுந் தகரமும் பெற்ற இகரம் ஏவல் கண்ணியே நிற்கும். இதற்குப் ‘பிரிந்துறை சூழாதி’ என்பது மறை. இனி, ஐகாரம் அம் ஈற்றுக்கு உரிய எழுத்துப் பெற்றும், ஆயீறு ஆமீற்றுக்கு உரிய எழுத்துப் பெற்றும், மூன்று காலத்தும் வரும். உண்டனை, உண்ணாநின்றனை, உண்பை, உண்குவை, கரியை எனவும்; உண்டாய், உண்ணாநின்றாய், உண்பாய், கரியாய் எனவும் வரும். உரிஞினை. உரிஞினாய் என ஏனை எழுத்தோடும் ஒட்டுக உரை என்றால், ஏவல் கண்ணுமாறும் உணர்க. உண்ணாநிற்றி என்பது, எதிர்காலத்துப் பிறந்த நிகழ்காலம். இனி, உண்டிலை உண்ணாநின்றிலை, உண்ணலை எனவும், உண்டிலாய், உண்ணாநின்றிலாய், உண்ணலாய் எனவும் மறை வரும். (26) 226. இர்ஈர் மின்னென வரூஉ மூன்றும் பல்லோர் மருங்கினும் பலவற்று மருங்கினுஞ் சொல்லோ ரனைய வென்மனார் புலவர். இது, முன்னிலைப் பன்மை கூறுகின்றது. (இ-ள்.) இர் ஈர் மின் என வரூஉம் மூன்றும் - இர், ஈர், மின் என்று சொல்ல வருகின்ற மூன்று ஈற்றுச் சொல்லும், பல்லோர் மருங்கினும் பல வற்று மருங்கினும் - உயர்திணைக்கண் பல்லோரிடத்தினும் அஃறிணைக் கண் பலவற்றிடத்தினும், சொல் ஓர் அனைய என்மனார் புலவர் - சொல்லுதலை ஒருதன்மையாக உடைய என்று சொல்லுவர் ஆசிரியர், எ-று. இர் ஈறு அர் ஈற்றுக்கு உரிய எழுத்தும், ஈர் ஈறு ஆர் ஈற்றுக்கு உரிய எழுத்தும் பெற்று மூன்றுகாலத்தும் வரும். (உ-ம்.) உண்டனிர், உண்ணாநின்றனிர், உண்பிர், உண்குவிர் எனவும், உண்டீர், உண்ணாநின்றீர், உண்பீர், உண்குவீர் எனவும் வரும். மின் பிற எழுத்துப் பெறாது, ஏற்றுழி உகரம்பெற்று எதிர்காலத்து வரும். ‘உண்மின் கள்ளே, அடுமின் சோறே’ உரிஞுமின் என வரும். இதற்கு, உண்பீர்,அடுவீர், உரிஞுவீர் என விரிக்க. ‘கானம் கடத்திர் எனக் கேட்பின்’ என்புழிக் கடவாநின்றீரென நிகழ்காலத்துத் தகரம் வந்தது. இஃது எதிர்காலத்தும் வரும். இனி, முன்னிலை வினைக்குறிப்பு, உயர்திணை வினைக்குறிப்பிற்கு ஓதிய பொருள்பற்றி ஐயும் ஆயும் இருவும் ஈரும் என நான்கு ஈற்றவாய் கழலினை, நாட்டை, பொன்னன்னை, கரியை; கழலினாய், நாட்டாய், பொன்னன்னாய், கரியாய்; கழலினிர், நாட்டினிர், பொன்னன்னிர், கரியிர்; கழலினீர், நாட்டினீர், பொன்னன்னீர், கரியீர் என வரும். போறி என்பது போன்றனன், போன்றான் என்பதுபோல வந்த தெரிநிலைவினை. இனி, உண்டிலிர், உண்ணாநின்றிலிர், உண்ணலிர்; உண்டிலீர். உண்ணாநின்றிலீர், உண்ணலீர்; உண்ணன்மின் என மறை வரும். மேல் எச்சவியலுள் ‘முன்னிலை முன்னர்’ (451) சூத்திரத்தாற் பெற்ற முன்னிலைகளுள் மொழிக்கு ஈறாமெனப் பட்ட நட, வா, விரி, ஈ, கொடு, கூ, மே, கை, நொ, போ, வெள என்னும் உயிரீறு பதினொன்றும், உரிஞ், மண், பொருந், திரும், தின், தேய், பார், செல், தெவ் (வவ்), தாழ், கொள் என்னும் புள்ளியீறு பதினொன்றும், போக்கு, பாய்ச்சு, ஊட்டு, நடத்து, எழுப்பு, தீற்று, வெஃகு என எழு வகையவாகிய குற்றியலுகர ஈறு ஒன்றுமாக எழுத்துவகை இருபத்துமூன்றும் எடுத்தலோசையான் முன்னிலை யேவலொருமை முற்றாய் நிற்கும். இவைதாமே படுத்தலோசை யான் அச் செய்கைமேல் பெயர்த்தன்மை பட முதனிலையாயும் நிற்கும். அங்ஙனம் முதனிலையாய் நிற்குங்கால் நடந்தான், வந்தான், விரிந்தான், ஈந்தான், கொடுத்தான், கூவினான், மேவினான், கைத்தான், நொந்தான், போயினான், வெளவினான் என உயிரீறு பதினொன்றும்; உரிஞினான், மண்ணினான், பொருநினான், திருமினான், தின்றான், தேய்த்தான், பார்த்தான், சென்றான், வவ்வினான், தாழ்ந்தான், கொண்டான் எனப் புள்ளிறு பதினொன்றும்; போக்கினான், பாய்ச்சினான், ஊட்டினான், நடத்தினான், எழுப்பினான், தீற்றினான், வெஃகினானெனக் குற்றியலுகர வீறு ஒன்றுமாக முற்றுச்சொல் விரிந்து நின்றவாறு காண்க. நடந்து வந்தான், வந்து போனான், விரிந்து கிடந்தான், ஈத்து வந்தான் எனவும்; நடந்த சாத்தன், வந்த சாத்தன், விரிந்த சாத்தன், ஈத்த சாத்தன் எனவும்; உரிஞி வந்தான், பொருநி வந்தான் எனவும்; உரிஞின சாத்தன், பொருநின சாத்தன் எனவும்; வினையெச்சத்திற்கும் பெயரெச்சத்திற்கும் இவ்வாறே ஒழிந்த முதனிலைகளையும் விரித்துக்கொள்க. முற்காட்டிய முன்னிலை யேவலொருமை முற்றுக்கள் ஒருவனை நோக்கி, ஒன்றனை ஒரு தொழிலைச் செய்வியென்னும் பொருண்மைக்கண் நடத்துவி, நடப்பி, வருவி, விரிவி, விரிப்பி, ஈப்பி, கொடுப்பி, கூவுவி, மேவுவி, கைப்பி, நொவ்வுவி, போக்குவி, வெளவுவி, உரிஞுவி, மண்ணுவி, பொருநுவி, திருமுவி, தின்பி, தேய்ப்பி, பார்ப்பி, செலுத்துவி, தெவ்வுவி, தாழ்த்துவி, கொள்ளுவி, வெஃகுவி என எதிர்காலத்திற்கு உரிய வகரமும் பகரமும் முன்னிலைக்கு உரிய இகரம் ஏறி இடைநிலைக்கு உரிய எழுத்துக்களும் பெற்று எடுத்தலோசையான் நிற்குமென்று உணர்க. இன்னும் அவைதாம், படர்க்கையிடத்துப் பால்காட்டும் முற்றாய், நடத்துவித்தான், நடப்பித்தான், வருவித்தான், விரிவித்தான், விரிப்பித்தான், ஈப்பித்தான், கொடுப்பித்தான், கூவுவித்தான், மேவுவித்தான், கைப்பித்தான், நொவ்வுவித்தான், போக்குவித்தான், வெளவுவித்தான், உரிஞுவித்தான், மண்ணு வித்தான், பொருநுவித்தான், திருமுவித்தான், தின்பித்தான், தேய்ப்பித்தான், பார்ப்பித்தான், செலுத்துவித்தான், தெவ்வு வித்தான், தாழ்த்துவித்தான், கொள்வித்தான், வெஃகுவித்தான் என வருங்கால் இடைநிலையாகிய எழுத்துக்களும் பெற்று முன்னர் எடுத்தலோசையாய் இடைநின்ற ஈறாகிய இகரம் படுத்தலோசைப்பட்டு இடைநிலையாய் நிற்கு மென்று உணர்க. இனி, நடத்துவிப்பி, வருவிப்பி, நடப்பிப்பி எனவும் வருமென்று கூறி, இவற்றை இருமடி யேவலேன்பாரும் உளர். இவற்றை இருகாலேவுதல் கூறியது கூறலாமாதலின், இவை இழிவழக்கென மறுக்க. இனி, உண்ணுந் தின்னுமெனப் பன்மைக்கண் வரும் உம் ஈறும், உண்ணலென வரும் அல்லீற்று மறையும், மறாலென வரும் ஆலீறும், ‘அகையேல் மாதோழியழேல்,’ என வரும் ஏலீறும், உண்டுகாண், சொல்லிக்காண் என வரும் காண் ஈறுமாகிய சொல்வகை ஐந்தும் முன்னிற் சூத்திரத்து எதிர்காலமொன்றினும் வரும் இகரம் முற்கூறிய முறையன்றிக் கூற்றினாற் கொள்க. முற்கூறிய எழுத்துவகை இருபத்துமூன்றும் சொல்வகை ஐந்துமாகிய இருபத்தெட்டும் முன்னிலையேவலொருமை முற்றென்று உணர்க. நடவாய், வாராய், உண்ணாய், தின்னாய் என்னுஞ் சொற்கள், ஆயீறு கெட்டு, நட, வா, உண், தின் என நிற்குமென்று சேனாவரையர் கூறினாரா லெனின், அது பொருந்தாமை எச்சவியலுட் செய்யாயென்னும் முன்னிலை வினைச்சொல்’ என்னுஞ் சூத்திரத்துள் கூறுதும். (27) 227. எஞ்சிய கிளவி யிடத்தொடு சிவணி யைம்பாற்கு முரிய தோன்ற லாறே. இது, முன்னிலை யொழிந்தவற்றின் இலக்கணங் கூறுகின்றது. (இ-ள்.) எஞ்சிய கிளவி - முன்னிலை வினையொழித்து ஒழிந்த ஏழு வினைச்சொல்லும், இடத்தொடு சிவணி ஐம்பாற்கும் உரிய - மூன்றிடத்தொடும் பொருந்தி ஐந்துபாற்கும் உரியவாம், தோன்றலாறே - அவை தத்தம் பொருட்கண் தோன்றும் இடத்து, எ-று. மேல் விலக்குவன ஒழிந்தன ஈண்டுக் காட்டுதும்: அவன் செல்க, அவள் செல்க, அவர் செல்க, அது செல்க, அவை செல்க எனவும்; உழுது வந்தேன். உழுது வந்தேம்; உழுது வந்தாய், உழுது வந்தீர்; உண்டு வந்தான், உண்டு வந்தாள், உண்டு வந்தார், உழுது வந்தது, உழுது வந்தன எனவும்; யான் இல்லை, யானும் நீயுமில்லை யானுமவனுமில்லை யானுநீயுமவனுமில்லை நாமில்லை யாமில்லை நீயில்லை நீயிரில்லை அவனில்லை அவளில்லை அவரில்லை அதுவில்லை அவையில்லை எனவும், யான்வேறு யானுநீயும் வேறு யானுமவனும்வேறு யானுநீயுமவனும்வேறு நாம்வேறு யாம் வேறு நீவேறு நீயிர்வேறு அவன்வேறு அவள்வேறு அவர்வேறு அது வேறு அவைவேறு எனவும், யானுண்மன யானுநீயுமுண்மன யானுமவனுமுண்மன யானுநீயுமவனு முண்மன நாமுண்மன யாமுண்மன நீயுண்மன நீயிருண்மன அவனுண்மன அவளுண்மன அவருண்மன அதுவுண்மன அவையுண்மன எனவும். யானுண்ணுமூண் யானுநீயு முண்ணுமூண் யானுமவனுமுண்ணுமூண் அவருண்ணு மூண் அதுவுண்ணுமூண் அவையுண்ணுமண் எனவும், அவன் வரும் அவள் வரும் அதுவரும் அவைரும் எனவும், யானுண்டவூண் யானுநீயுமுண்டவூண் யாமுண்டவூண் நீயுண்டவூண் நீயீருண்ட வூண் அவனுண்டவூண் அவளுண்டவூண் அவருண்வூண் அதுவுண்டவூண் அவையுண்டவூண் எனவும் வரும். வியங்கோளும், மன ஈறும் எதிர்காலம் உணர்த்தும். இன்மை செப்பலும், வேறு என்பதும் மூன்று காலமும் உணர்த்தும். உண்மன என்பது, யானுண்ணும், நீயுண்ணும், அவனுண்ணும் என்னும் பொருண்மை உணர்த்தி, பெயர்எச்ச நீர்மைத்தாய், இறந்த வழக்கிற்றாய் வரும். இச்செய்யுமென்னும் வாசகத்துக்கு அக்காலத்து மனென்னும் வாசகத்தாலும் வழங்கு தலின், ஆசிரியர் மன என்பதனை ஈண்டு வேறாக ஓதி, எழுத்தோத்தி னுள்ளுஞ்செய்ம்மன என்னுந் தொழிலிறு சொல்லும் என்றார். யாம் நாம் என்பதனை இன்மை செப்பன் முதலியவற்றோடும் ஒட்டுக. (28) 228. அவற்றுள், முன்னிலை தன்மை யாயீ ரிடத்தொடு மன்னா தாகும் வியங்கோட் கிளவி. இஃது, எய்தியது விலக்கிற்று. (இ-ள்.) அவற்றுள் - மேல் எஞ்சிய கிளவியென்னப்பட்ட ஏழனுள், வியங்கோட்கிளவி - ஏவற்பொருண்மையை முற்ற முடித்தலை வுணர்த்துஞ் சொல், முன்னிலை தன்மை ஆயீரிடத்தொடும் மன்னாதாகும் - முன்னிலையுந் தன்மை யுமாகிய அவ்விரண்டிடத்துப் பொருளோடும் அஃறிணைக் கட் பெரும்பான்மையும் நிலைபெறாது; உயர்திணைக்கட் பெரும் பான்மையும் நிலைபெறும், எ-று. எனவே, படர்க்கைப் பொருட்கண் ‘இருதிணைச் சொற்குமோரன்னரிமைய’ ஆம். இதற்கு உதாரணம் முன்னர்க் காட்டினாம். ‘நோயுமின்பமும்’ என்னும் பொருளியற்சூத்திரத்திற் ‘சொல்லா மரபினவற்றொடு கெழீஇச்- செய்யா மரபிற் றொழிற்படுத்தடக்கியும்’ என்றும், ‘ஞாயிறு திங்கள்’ என்னுஞ் செய்யுளியற் சூத்திரத்து, ‘சொல்லியாங் கமையுமென்மனார் புலவர்’ என்றும் அஃறிணை ஏவற்பொருண்மையை முற்ற முடியாமையைக் கூறுகின்ற ஆசிரியர், அவற்றிற்கு ஏற்ப ஈண்டும் முன்னிலைக்கண் வரும் அஃறிணை ஏவற்பொருண்மையை முற்ற முடியாது என்பது உணர்த்துதற்கு ‘மன்னாதாகும்’ என்றார். எனவே, ‘அஃறிணைக்கண் வரும் முன்னிலை வியங்கோட்கு ஓரன்ன உரிமை இன்றென்றாராயிற்று. தன்மை யஃறிணைக்கு இன்மை கூறல்வேண்டாவாயினும், உயர்திணைக்கட் சிறுபான்மை வழங்குதல்பற்றி உடனோதினார். முற்கூறிய நட, வா முதலிய இருபத்துமூன்று ஈற்று முன்னிலையேவலொருமையும் அஃறிணைக்கண் வருங்கால் ஏவல்வினையை உணர்ந்து அவை முற்ற முடியா என்பதனை உணர்ந்து அதனை ஏவுதல் மரபன்றென்று கருதி ஆசிரியர் இங்ஙனம் ஓதினார். அவைதாங் கூறுகின்றவர் கருத்தான், ஏவல் கண்ணியே வரும். உயர்ந்தான் இழிந்தானை இன்னது செய்கவென விதித்தல் ஏவல் கண்ணியது. இழிந்தான் உயர்ந்தானை ‘இன்னது செய்யவேண்டுமென வேண்டிக் கோட லும் ஏவல் கண்ணிற்று. இனி, உயர்திணைப் பொருளாகிய முன்னிலைக்கண் வாழ்க, வாழிய என வாழ்த்துப் பொருண்மைக்கண் வந்ததும் ஏவல் கண்ணிற்று. ‘கடாவுக பாக! நின் கால்வனெடுந்தேர்’ என வேண்டிக் கோடற் பொருண்மைக்கண் வந்ததும் ஏவல் கண்ணிற்று. இனி, உயர் திணைத் தன்மைக்கண், ‘யானும் நின்னோ டுடனுறைக.’ என வேண்டிக் கோடற் பொருண்மைக் கண் வந்ததும் ஏவல் கண்ணிற்று. இது சிறுபான்மையென்பது உணர்த்துதற்கு முன்னிலையை முற்கூறினார். இனி, எழுத்தோத் தினுள், ‘ஏவல் கண்ணிய வியங்கோட் கிளவியும்’ என அகர ஈற்றுள் எடுத்து ஓதினமையாற் பொருந்திய மெய்யை ஊர்ந்து அகர ஈறாய் வருதலும்; உடம்பொடு புணர்த்தலென்பதனால், ‘வழாஅல் ஓம்பல்’ எனவும், ‘இற்றெனக் கிளத்தல்’ எனவும், ‘ஆக்க மொடு கூறல்’ எனவும் வந்த அல் ஈறும், ‘மரீஇய தொராஅல்’ என வரும் ஆலீறுமாய் வருதலும், ஒன்றென முடித்தலென்ப தனான் வாழியரென்னும் அர் ஈறுமறைக்கட் ‘காணன்மா ரெமர்’என்னும் ஆர் ஈறும், ‘வாழ்தல் வேண்டுமிவண் வரைந்த வைகல்’என உம்மீறும், ‘அஞ்சாமையஞ்சுவதொன்றின்’ என ஐகார ஈறுமாய் வருதலுங் கொள்க. இன்னும் இதனானே, ‘மகனெனல் மக்கட் பதடியெனல்’ என உடம்பாடும் மறையுமாய் வருதலுங் கொள்க. இன்னும் இதனானே, ‘நாடாகொன்றோ, காடா கொன்றோ என்பனவற்றையும் நாடேயாக, காடேயாக என இதன்பாற்படுத்துக. இவற்றுள் ஏவல் கண்ணாதது இதுவென உணர்க. (29) 229. பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை யவ்வயின் மூன்று நிகழுங் காலத்துச் செய்யு மென்னுங் கிளவியொடு கொள்ளா. இதுவும் அது. (இ-ள்.) பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை அவ்வயின் மூன் றும் - பல்லோரது படர்க்கையும் முன்னிலையும் தன்மையு மாகிய அவ் வெஞ்சிய கிளவிக்கண் வரும் மூன்றும், நிகழும் காலத்துச் செய்யும் என்னும் கிளவியொடு கொள்ளா - நிகழுங் காலத்து வருஞ்செய்யும் என்னும் முற்றுச் சொல்லொடு பொருந்தா, எ-று. (உ-ம்.) ஓஒதல் வேண்டுமொளிமாழ்குஞ் செய்வினை, ஆஅதும் என்னுமவர்.’ ‘நீயே என்குறை சொல்லல் வேண்டுமால் அலவ!’ ‘யான் பொருதல் வேண்டும்’ என வருவனவற்றிற்குத் தவிர்வாராக எனவும், சொல்வாயாக எனவும், பொருவேனாக எனவும் பொருள் உரைக்க. (30) 230. செய்து செய்யூச் செய்பு செய்தெனச் செய்யியர் செய்யிய செயின்செயச் செயற்கென வவ்வகை ஒன்பதும் வினையெஞ்சு கிளவி. இது, முறையானே வினையெச்சம் உணர்த்து கின்றவற்றுள் சிறந்தன தொகுத்து உணர்த்துகின்றது. (இ-ள்.) செய்து செய்யூ செய்பு செய்தென செய்யியர் செய்யிய செயின் செய செயற்கு என அவ்வகை ஒன்பதும் வினையெஞ்சு கிளவி - செய்தென்பது முதலாகச் சொல்லப்பட்ட அக்கூற்று ஒன்பது வாய்பாடும் முற்கூறிய வினையெச்சமாம், எ-று. இது, ‘தொகுத்த மொழியின் வகுத்தனர் கோடல்.’ செய் யென்னும் வாய்பாட்டினை உகரமும், ஊகாரமும், புகரமும், எனவும், இயரும், இயவும், இன்னும், அகரமும் குகரமும் என்னும் இறுதி இடைச்சொல் லான் வேறுபடுத்தினார். செய்து என்பது இறந்தகாலம் பற்றி வருங்கால் குற்றுகரத்தான் ஊரப்பட்ட, க, ட, த, ற, என்னும் நான்கும், இகர ஈறும், யகர ஈறும் என அறுவகைத்தாமேனும், இகர ஈறும் யகர ஈறும் செய்து என்னும் வாசகத்தைத் தந்தே நிற்றலிற், பொருண்மையான் ஒன்றாக அடக்கப்பட்டன. (உ-ம்.) நக்கு, உண்டு, வந்து, சென்று; எஞ்சி, தப்பி, உரிஞி, ஓடி; ஆய், போய் என வரும். இவற்றுள் உகரம் இகரமாய்த் திரிந்ததெனின், உரிஞி என்பதனை ‘ஞகாரையொற்றிய’ என்னுஞ் சூத்திரத்தான் உரிஞ் என நிறுத்தி, நிலை மொழித் தொழிலாகிய உகரம் பெறுமென விதித்தலின், உரிஞு என்னும் முற்றுகரந் திரிந்து உரிஞி என நின்றதென்றல் பொருந்தாமை உணர்க. இனி, ஆகு, போகு எனக் குற்றுகர ஈற்றான் முதனிலை யாயிற்றெனில், ஆகினான், போகினான் என முற்றும் அதன்கண்ணே தோன்றுதல் வேண்டும். அங்ஙனம் வழங்காமையின் ஆ, போ என்பன முதல்நிலையாய்க் காலங் காட்டும் யகர ஒற்றுப் பெற்று ஆயினான், போயினான் என முற்றும் அதன்கண்ணே தோன்றுதலின் ஆகு, போகு எனக் குற்றுகர ஈற்று முதனிலை இன்றாமென்று உணர்க. இதனானே வினையெச்சம் முற்றாய்த் திரியும் என்பதும் உணர்க. அவை தூயினான், தாயினான், மேயினான், ஏயினான், சினைஇயினான், முனைஇயினான், உரைஇயினான், மரீஇயி னான், உடீஇயினான், கடைஇயினான், தழீஇயினான், குழீஇயினான், பராயினான். விராயினான், நிலாயினான், கலாயினான் என வரும். இவை இங்ஙனம் முற்றாய்த் திரிதலின், பெயர்கொண்டு முடிவன ஆயின. ஆய், போய் என்பன, ‘வினையெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய’ என்பதனாற் திரிந்து நிற்குமென்பது கோடலின், திரிந்து நின்றன. அச்சூத்திரத்து வினையெச்சம் முற்றுவினை கொள்ளுமாறுங் காட்டுதும். முன்னர்க் காட்டிய உதாரணங்களுள் உகரம் இகரமாய்த் திரியாமையும் இவ்வாறே பிரித்து உணர்ந்து கொள்க. ‘விருந்தின்றி யுண்ட பகலும்’ எனவும், ‘நாளன்று போகி’ எனவும் வருவன செய்தென் எச்சக்குறிப்பு. செய்து என்பதற்கு, ஓடாநின்று போயினான் எனவும், ‘அகலிரு விசும்பிற் பாயிருள் பருகிப், பகல்கான் றெழுதரு’ எனவும், ‘தலைப்பெயற் கரும்பீன்று, முளிமுதற் பொதுளிய முட்புறப் பிடவமும்’ எனவும் நிகழ்கால வாய்பாடும் சிறுபான்மை உளதென்று உணர்க. நக்கு என்பது நகு என்னும் முதனிலைக்கண் விரிந்த நகுதலென்னும் வினைப் பெயரடியாகச் செய்தென்னும் வினையெச்சந் தோன்றி, நகுதலைச் செய்தென்னும் பொருள்தந்து நின்றது. இனி, ஊகாரம், உண்ணூ வந்தான்; எனவும், ‘படுமகன் கிடக்கை காணூஉ’ எனவும், ‘நிலம்புடையூவெழுதரும் வலம்படு குஞ்சரம்’ எனவும் பின்வரும் தொழிற்கு இடையின்றி விரைவு உணர்த்தி முன்வருந் தொழின்மேல் இறந்தகாலம்பற்றி வரும். ஆகாரம் உண்ணா எனவும், ‘கல்லாக் கழிப்பர்’எனவும், ‘நிலங்கிளையா நாணிநின்றோள்’ எனவும் வரும். ஆகாரம் வினையெச்சமாய் வருதல், ‘செய்யா என்னும் வினையெஞ்சு கிளவியும், அவ்வியல் திரியா தென்மனார் புலவர்’ என்பதனான் பெறப்படும். இனிப் பகர உகரம் ‘பல்கால்வாக்குபுதரத்தர வருத்தம்வீடவாரவுண்டு’ எனவும் “புலராப்பச்சிலையிலையிடையிடுபுதொடுத்த” எனவும் பெரும்பான்மை இறந்தகாலத்துவரும். அப்புகரம் நகுபுவந்தான் என்புழி நகா நின்றுவந்தானென்று முடிக்குஞ்சொல்லால் உணரப்படுந் தொழிரோடு உடனிகழ்ந்து நிகழ்காலத்தும் வரும். அது “வாடுபுவனப் போடி” எனவும் வரும். உரிஞபு என உகரமுங் கற்குபு எனக்குகரமும் ஏற்புழி வரும். இனி என என்பது “க ட த ற ஊர்ந்து இறந்தகாலம்பற்றி முடிக்குஞ் சொல்லால் உணரப்படுந் தொழிற்குத் தன் முதனிலைத்தொழில் காரணமாய விரைவு பொருளுணர்த்தும். சோலைபுக்கெனவெப்புநீக்கிற்று உண்டெனப் பசிகெட்டது உரைத் தெனவுணர்ந்தான் மருந்துதின்றெனப் பிணிநீங்கிற்று எனவரும். எஞ்சியென எனவும் உரிஞியென எனவும் எனையெழுத்தோடும் ஒட்டுக. இனி இயர் இய என்பன உண்ணியர் தின்னியர் எனவும் உண்ணிய திண்ணிய எனவும் எதிர்காலம்பற்றிவரும். போகியர் போகிய என ஏற்புழிக் ககரமும்பெறும். இனி இன் எதிர்காலம் பற்றிக் காரணப் பொருட்டாய் வரும். மழைபெய்யிற்குளநிறையும் மெய்யுணரின் விடெளிதாம் எனவரும். நடப்பின் உரைப்பின் என ஏற்புழிப் பகரமும்பெறும். இது “நனவிற்புணர்ச்சி நடக்கலுமாங்கே” என உம்மீறாதலும் “அற்றாலளவறிந்துண்க” என ஆலீறாதலும் “வினை யெஞ்சுகிளவியும் வேறுபல்குறிய” என்பதனாற் பெறப்படும், “அவாவுண்டேலுண்டாம்” என்னும் ஏலும் “அவளெள்ளுமேனும்வரும்” என்னும் ஏனும் இதன் குறிப்பு. “ஒன்றானுந்தீச்சொல்” என்புழி ஆயினுமென்பது ஆனுமெனக் குறைந்துநின்றது. “நுணங்கியகேள்வியா லாலென்பதன்றி” என்னுஞ் செய்தெனெச்சக்குறிப்பு உணர்த்துவ தோர் வாய்பாடு அல்லாவாயினென்று பொருளாயின் இதன்குறிப்பாம். இனி அகரம் இறந்தகாலத்துக்கண் மழைபெய்யக்குளநிறைந்தது எனக் காரணப் பொருளாயுங் குளநிறையமழை பெய்தது எனக் காரியப் பொருளாயும் வரும். இனி நிகழ்காலத்துக்கண் நாயிறுபட வந்தா னென்பது நிகழாநிற்கவந்தானென்னும் பொருட்டாய் வரும். “வாழச் செய்த நல்வினையுலகம்” என்பதும் அது. இனி எதிர்காலத்துக்கண் உண்ணவந்தான் என அதற்பொருட்டாய் வரும். இனித் “துன்னிப் பெரியவோதினுஞ்சிறியவுணரா” என அகரம் வினைக்குறிப்புப் பற்றி வருவனவுஞ் “செவ்வன்றெரி கிற்பான்” எனவும் “புதுவதினியன்றவணியன்” எனவும் “புதுவதுபுனைந்தவெண்கையாப்ப” எனவும் “பொய்கைப் பூப்புதிதீன” எனவும் “பெருங்கையற்றவென் புலம்பு” எனவும் “சிறுநனிநீ துஞ்சியேற்பினும்” எனவும் “ஒல்லைக் கொண்டான்” எனவும் அகர ஈறன்றிப் பிற ஈறுகளான் முடிக்குஞ் சொல்லை விசேடித்துவருவனவும் “வினையெஞ்சுகிளவியும்வேறுபல்குறிய” என்பதனாற் பெறப்படும். இது மறைக்கட் “கூறாமற் குறித்ததன் மேற் செல்லுங்கடுங்கூளி” என அல்லீறாயும் “கூறாமை நாக்கிற்குறிப்பறிவான்” என மகர ஐகார ஈறாயும் வரும். இனிக் குகரம் உணற்குவந்தான் என எதிர்காலத்து வரும். உண்டான் உண்டவன் என்னுந் தொழிற்பெயர்கள் உண்டாற்கு உண்டவற்கு என நான்கனுருபைபேற்றுழிச் செயற்கு எனும் எச்சப்பொருள் தரும் மயக்கமின்மையும் உணவென்னும் வினைப்பெயர் குகரம் அடுத்துழி உண்டலைச்செய்தற்கென்னும் பொருள் தந்து எச்சப் பொருட்டாயே நிற்றலின் வினைப்பெயர் நான்கனுருபு பெற்று நின்றதென்னும் மயக்கம் இதற்கு இன்மையும் உணர்க. எற்றுக்குவந்தானென்பது எக்காரியஞ்செய்தற்குவந்தானென்னும் பொருட்டாய் இவ்வெச்சக்குறிப்பாய் நிற்கும். எவற்றுக்கு என்பதும் அது. இவ்வினையெச்சங்கட்கு எஞ்சி நிற்கும் வினைகளும் அறுவகைப்படும் அவை, தெரிநிலைமுற்றுங் குறிப்புமுற்றும், பெயரெச்சமும், பெயரெச்சக் குறிப்பும், வினையெச்சமும், வினையெச்சக் குறிப்புமாம். ஓதிவந்தான் - இது தெரிநிலை முற்று; ஓதி நல்லன் - இது குறிப்பு முற்று; ஓதிப் பெற்ற பொருள் - இது பெயரெச்சம்; ஓதி நல்ல சாத்தன் - இது பெயரெச்சக் குறிப்பு; உழுது பயன்கொண்டு - இது வினையெச்சம்; உழுது அன்றி உண்ணான் - இது வினையெச்சக் குறிப்பு. (31) 231. பின்முன் கால்கடை வழியிடத் தென்னு மன்ன மரபிற் காலங் கண்ணிய வென்ன கிளவியு மவற்றியல் பினவே. இதுவும் ஒருசார் வினையெச்சம் உணர்த்துகின்றது. (இ-ள்.) பின் முன் கால் கடை வழிஇடத்து என்னுங் கிளவியும் - பின்னும் முன்னும் காலும் கடையும் வழியும் இடத்தும் என்னும் ஈற்றவாகிய சொற்களும், அன்ன மரபிற் காலம் கண்ணிய என்ன கிளவியும் - அம் முறைமைபோலக் காலத்தைக் குறித்த எல்லாச் சொற்களும், அவற்று இயல்பின - முற்கூறிய ஒன்பதும் போல வினையெச்சத்திற்கு வாய்பாடாம் இயல்பையுடைய, எ-று. (உ-ம்.) பின் : நீயிர் பொய் கூறியபின் மெய் கூறுவார் யார்? ‘இளமையுந் தருவதோ விறந்த பின்னே?’ என இறப்பும், நீ யிவ்வாறு கூறுகின்றபின் உரைப்பது உண்டோ? என நிகழ்வும்பற்றி வரும். முன்: ‘வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை’ என இறப்புப்பற்றி வரும். இவை, பின்னர், பின்னை, முன்னர், முன்னை எனத் திரிந்தும் வரும். கால்: ‘வலனாக வினையென்று வணங்கிநாம் விடுத்தக்கால்’யென இறப்பும், ‘அகன்றவர் திறத்தினி நாடுங்கால்’ என நிகழ்வும் எதிர்வும்பற்றி வரும். கடை: ‘தொடர்கூரத் துவ்வாமை வந்தக் கடை’யென இறப்புப்பற்றி வரும். வழி: ‘விடுவழி விடுவழிச் சென்றாங்கவர், தொடுவழித் தொடுவழி நீங்கின்றாற் பசப்பே’யென இறப்பும், ‘அவள் ஆடுவழி ஆடுவழி அகலேன் மன்னே!’யென நிகழ்வும், உரைக்கும் வழியென நிகழ்வும் எதிர்வும்பற்றி வரும். இடம்: ‘களையுநர் கைகொல்லுங் காழ்த்த விடத்து’யென இறப்பும், உரைக்குமிடத்து என நிகழ்வும் எதிர்வும்பற்றி வரும். அன்னமரபின் என்றதனாற் பான், பாக்கு, வான், வாக்கு என்பனவுங் கொள்க. ‘அலைப்பான் பிறிதுயிரை ஆக்கலும் குற்றம்’ ‘திருவிற்றான் மாரி கற்பான் துவலைநாட் செய்வதே போல்’ ‘புணர்தரு செல்வம் தருபாக்குச் சென்றார்’ ‘கொள்வான் கொடித்தானை கொண்டெழுந்தான்’ கொள்வாக்கு வந்தான் என வரும். அல்லது, அல்லால் என வருங் குறிப்பெச்சமுங் கொள்க. இவை பெயர்த்தன்மையும் உடையவாய் நின்று முன்வந்த வினையின் காலத்தை உணர்த்தி நிற்றலின், வேறு ஓதினார். ‘வேபாக்கறிந்து’ என்பது வேதலை அறிந்தென்னும் பொருள் தருதலின், எச்சமன்று. இவற்றைக் ‘கால கண்ணிய’ என்றது, கூதிர் போயபின் வந்தானெனவும், நின்ற விடத்து நின்றான், எனவும் பின் முதலியன பெயரெச்சத்தோடு வந்துழி இறப்பு முதலியன கண்ணாமையின். (32) 232. அவற்றுள், முதனிலை மூன்றும் வினைமுதன் முடிபின. இது, முதல் நின்ற மூன்றற்கும் முடிபு கூறுகின்றது. (இ-ள்.) அவற்றுள் முதனிலை மூன்றும் - முற்கூறிய பதினைந்தினுள் முதற்கண் நின்ற ‘செய்து, செய்யூ, செய்பு’ என்னும் மூன்றும், வினைமுதல் முடிபின - அவ்வெச்ச வினையை நிகழ்த்தின கருத்தாவினது வினையினை உணர்த்துஞ் சொல்லினையே முடிபாகக் கொண்டு முடிதலையுடைய, எ-று. (உ-ம்.) உண்டு வந்தான்; உண்ணூ வந்தான்; உண்குபு வந்தான் எனவும், கற்று வல்லனயினான்; கல்லூ வல்லனாயினான்; கற்குபு வல்லனாயினான் எனவும் வரும். ஒன்றென முடித்தல் என்பதனான், செய்யா என்பதற்கும் உண்ணா வந்தான், என இம்முடிபு கொள்க. இனி, செய்தெனெச்சக் குறிப்பாகிய இன்றி, அன்றி என்பனவுந் ‘தம்மின் றமையா நந்நயந் தருளி’‘தொல்லெழில் வரைத்தன்றி வயவு நோய் நலிதலின்’ என வினைமுதல் வினையான் முடியும். (33) 233. அம்முக் கிளவியுஞ் சினைவினை தோன்றிற் சினையொடு முடியா முதலொடு முடியினும் வினையோ ரனைய வென்மனார் புலவர். இதுவும் அம்மூன்றற்கும் முடிபுவேற்றுமை கூறுகின்றது. (இ-ள்.) அம்முக்கிளவியும் - ‘வினைமுதல் முடிபின’ என்ற அம்மூன்று சொல்லும், சினைவினை தோன்றிற் சினையொடு முடியா - சினைப்பொருளிடத்து வினையெச்சமாய்த் தோன்றின் தமக்கு உரிய சினைவினை கொண்டு முடியா; முதல்வினை கொண்டே முடியும்; (வினை) முதலொடு முடியினும் - அவ்வெச்சங்கள் தாம் தத்தமக்கு உரிய வினைமுதலான் அன்றிப் பிற வினைமுதலான் முடியினும் பிறவாற்றான் முடியினும், ஓரனைய என்மனார் புலவர்- தத்தமக்கு உரிய வினைமுதல் கொண்ட தன்மையோடு ஒரு தன்மையை உடைய என்று கூறுவர் புலவர், எ-று. சினையொடு முடியா எனவே, முதலொடு முடிதல் பெற்றாம். உம்மை எதிர்மறை. (உ-ம்.) கண்ணொந்து கிடந்தான்; வயிறு நொந்து கிடந்தான் எனவும், கண் வலியூக் கிடந்தான் எனவும், வயிறு குத்துபு கிடந்தான் எனவும், ‘கண்டுயின்று முன்றிற்போகா முதிர்வினள் யாயும்’ ‘தாளொற்றித் தப்பி வீழ்ந்தார் தறிவலை மானிற் பட்டார்’ எனவுஞ் சினைப்பொருட்கண் வந்த வினையெச்சம் காரண காரியப் பொருளவாய் வினைமுதலோடு முடிந்தன. ‘அகனமர்ந்து செய்யாளுறையும் முகனமர்ந்து, நல்விருந் தோம்புவானில்’ ‘காமன் கணையொடு கண்சிவந்து புலந்தாள்’ என்பன காரண காரிய மின்றி அங்ஙனம் வந்தன. இனி, தலைவன் பிரிந்து வருந்தினாள் எனவும், ‘மாஅல் யானை யொடு மறவர் மயங்கித் தூறதர் பட்டவாறுமயங் கருஞ்சுரம்’ எனவும், ‘உடம்புயங்கி யானை, கடுந்தாம் பதிபாங்குக் கைதெறப் பட்டு, வெறிநிரை வேறாகச் சாரச்சாரடி, நெறிமயங்குற்ற’ எனவுங் காரண காரியப்பொருளவாய்த் தமக்கு உரிய வினை முதலானன்றிப் பிற வினைமுதலான் முடிந்தன. ஞாயிறு பட்டு வந்தான்; ஞாயிறு படூஉ வந்தான்; ஞாயிறு படுபு வந்தான் என்பன காரண காரியமின்றி அங்ஙனம் வந்தன. ‘உரற்கால் யானையொடித் துண்டெஞ்சிய யா’ என்பதுயாது. இனி, ஆ கிடந்து செறு விளைந்தது என்றது, இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்திற்கேற்றிச் செறுவின் வினையொடு முடிந்தது. இதற்கு வினைமுதல் தானே செயப்படுபொருளாயிற்று. ‘பூணணிந்து விளங்கிய புகழ்சான்மார்பு என அணிந்தென்னும் முதல்வினை சினைவினை கொண்டது. உண்டு பசி கெட்டதும் அது. இவை காரண காரியப் பொருட்டாய்ப் பிறவாற்றான் முடிந்தன. ஏனை வினையெச்சங்கட்கு வினைமுதல் வினையும் பிறவினையும் ஒப்ப உரியவாய் வருதலின், ஒரு சூத்திரத்தாற் கூறினார். இம்மூவகையெச்சமும் வினைமுதல் கொள்ளுங்காற் காரணகாரியப் பொருட்டாகாது வருதலின், அதனையும் வேறு கூறி, சினைவினை முதல்வினையோடு முடியுங்கால் பெரும்பான்மை காரண காரியப் பொருட்டாயே வருத லானும், முதல்வினை தான் பிற வினைமுதலான் முடியும்வழிப் பெரும் பான்மை காரண காரியப் பொருட்டாயே வருதலானும், அவற்றை இரண்டு சூத்திரத்தாற் கூறினார். ‘வினையெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய’என்ற சூத்திரத்தான் வினையெச்சங்கள் எல்லாம் பெயர் வேறுபட்டும் ஈறு வேறுபட்டுஞ் சிறுபான்மை வருமென்று பொதுவாகக் கூறினாராதலின், அதன்கண்ணே பிற வினைமுதல் கொண்டனவற்றையும் அடக்குதல் பொருந்தாது. என்னை? அவை வழக்கிடத்துஞ்செய்யுளிடத்தும் பெரும் பான்மை வருதலானும், ‘வினைமுதல் முடிபின’ என்ற விதி பிற வினைமுதல் கொள்ளாமையை வலியுறுத்து நிற்றலிற் கொள்ளுதற்குச் சூத்திரவிதி வேண்டு மாதலானும் என்பது. (34) 234. ஏனை யெச்சம் வினைமுத லானு மானவந் தியையும் வினைநிலை யானுந் தாமியன் மருங்கின் முடியு மென்ப. இஃது, ஒழிந்த எச்சங்கட்கு முடிபு கூறுகின்றது. (இ-ள்.) ஏனை எச்சம் - முதனிலை மூன்றும் அல்லாத பிற வினை யெச்சம், வினைமுதலானும் - வினைமுதல் வினையானும், ஆன்வந்து இயையும் வினைநிலையானும் - ஆண்டு வந்து பொருந்தும் பிற வினையானும், தாம் இயல் மருங்கின் முடியும் என்ப - வரையறையின்றித் தாம் இயலுமாற் றான் முடியுமென்று சொல்லுவர் ஆசிரியர், எ-று. (உ-ம்.) மழை பெய்தெனப் புகழ் பெற்றது; மழை பெய்தென மரம் குழைத்தது எனவும், மழைபெய்யியரெழுந்தது; மழை பெய்யியர் பலி கொடுத்தனர் எனவும், மழை பெய்யிய முழங்கும்; மழை பெய்யிய வான் பழிச்சுதும் எனவும், மழை பெய்யிற் புகழ் பெறும்; மழை பெய்யிற் குளம் நிறையும் எனவும், மழை பெய்யப் புகழ் பெற்றது; மழை பெய்ய மரங் குழைத்தது எனவும், மழை பெய்தற்கு முழங்கும்; மழை பெய்தற்குக் கடவுள் வாழ்த்துதும் எனவும், இறந்தபினிளமை வாராது; கணவனினிது உண்ட பின் காதலி முகம் மலர்ந்தது எனவும், கடுத் தின்னாமுறுவர்த்தது; மருந்துதின்னாமுன் நோய் தீர்ந்தது எனவும், உரைத்தக்காலுரை பல்கும்; ‘வலனாக வினையென்று வணங்கிநாம் விடுத்தக்காற் சுடரிழாய் நமக்கவர் வருதுமென் றுரைத்ததை’ எனவும், நல்வினைதானுற்றக்கடை உதவும்; நல்வினைதானுற்றக்கடை தீவினை வாரா எனவும், நல்வினை தானுற்றவழி உதவும்; நல்வினைதாயுற்றவழித் தீவினை வாரா எனவும், நல்வினைதானுற்ற விடத்து உதவும்; நல்வினைதானுற்றவிடத்துத் தீவினை வாரா எனவும் வரும். கற்பானூல் செய்தான்; செல்வம் தருபாக்கு யாம் விரும்புதும்; நமது நலன் நுகர்வான் யாம் விரும்புதும் இவை பிற வினை கொண்டன. இவை வினைமுதல் வினைகொண்டவாறு, முன்னர்க் காட்டினாம். (35) 235. பன்முறை யானும் வினையெஞ்சு கிளவி சொன்முறை முடியா தடுக்குந வரினு முன்னது முடிய முடியுமன் பொருளே. இஃது, அவ்வெச்சங்கள் அடுக்கியவழிப் படுவதொரு முறைமை கூறுகின்றது. (இ-ள்.) வினையெஞ்சு கிளவி சொன்முறை முடியாது - வினையெச்சமாகிய சொற்கள் ஒன்றற்கொன்று முடிக்கும் வினைவந்து முடியாது, பன்முறையானும் அடுக்குந வரினும் - ஒரு வாய்பாட்டானன்றிப் பல வாய்பாட்டானும் அடுக்கிவரினும், முன்னது முடிய முடியும் மன் பொருளே - முன்னின்ற எச்சம் முடிய ஏனையவும் பொருள் முடிந்தனவாம், எ-று. (உ-ம்.) உண்டு தின்றோடிப் பாடி வந்தான்; உண்டு பருகூஉத் தின்குபு வந்தான்; உழுதுண்பானொடு விரைஇ வந்தான் என வரும். ‘பசந்த மேனியொடு படரட வருந்தி - மருங்கிற் கொண்ட பல்குறு மாக்கள் - பிசைந்துதின வாடிய முலையள் பெரிதழிந்து - குப்பைக் கீரை கொய்தனணகைத்த - முற்றா விளந்தளிர் கொய்துகொண் டுப்பின்று - நீருலையாகவேற்றிறோரின் - றவிழ்ப்பதம் மறந்து பாசடகு மிசைந்து - மாசொடு குறைந்த உடுக்கையவுறம்பழியாத் - துவ்வா ளாகிய ளன்வெய் யோளும்’ எனச் செய்தெனெச்சத்திடையே அவ்வினையெச்சமுற்றும் அதன் குறிப்பெச்சமும் உடன் அடுக்கி முடிந்தனவும் பிறவும் ‘பன்முறை யானும்’ என்ற தனாற் கொள்க. வினையெச்சம் பன்முறையான் அடுக்கி ஒரு சொல்லான் முடியுமெனவே, பெயரெச்சம் ஒரு முறையான் அடுக்கி ஒரு சொல்லான் முடியுமென்பதாம். ‘நெல்அரியுமிருந்தொழுவர்’ என்னும் புறப்பாட்டினுட் பாயுந்து, தூங்குந்து, தரூஉந்து, பாயுமென்னும் பெயரெச்சம் அடுக்கி மிழலை என்னும் ஒருபெயர்கொண்டு முடிந்தன. ஆண்டு நல்லூர் கெழீ இய என்னும் பெயரெச்சம் இடைநிலையாய் வந்தது. (36) 236. நிலனும் பொருளுங் காலமுங் கருவியும் வினைமுதற் கிளவியும் வினையு முளப்பட வவ்வறு பொருட்குமோ ரன்ன வுரிமைய செய்யுஞ் செய்த வென்னுஞ் சொல்லே. இது செய்யுஞ்செய்த என்னும் பெயரெச்சத்திற்குப் பொருண்முடிபு கூறுகின்றது. (இ-ள்.) செய்யுஞ்செய்த என்னுஞ்சொல்லே - செய்யு செய்த என்னுஞ் சொற்கள் இன்னதற்கு, இது பயன் என்னும் இரண்டொழித்து நிலனும் பொருளும் காலலும் கருவியும் வினைமுதற்கிளவியும் வினையும் உளப்பட அவ்வறு பொருட்குங் ஓரன்ன உரிமைய - நிலப்பொருளுமோ செயப்படுபொருளும் காலப்பொருளும் கருவிப் பொருளும் வினைமுதற் பொருளு மென்ற ஐந்துடனே வினைப்பொருளுங்கூடச் சொல்லப்பட்ட அவ்வறு வகைப் பொருட்கும் ஒத்த உரிமையினை உடையவாம், எ-று. (உ-ம்.) வாழுமில், கற்குங் நூல், துயிலுங் காலம், வனையுகோல், ஓதும் பார்ப்பான், உண்ணுமுண் என உம் ஈறு கால எழுத்துப் பெறாது ஆறுபொருட்கும் உரித்தாய் வந்தது. புக்க வில், உண்ட சோறு, வந்த நாள், வென்ற வேல், ஆடிய கூத்தன், போயின போக்கு என அகரஈறு க, ட, த, ற வும் யகர னகரமும் ஊர்ந்து, ஆறு பொருட்கும் உரித்தாய் வந்தது. இவற்றுள் வினைமுதற்கிளவி ஒழிந்தனவற்றிற்கு வினைமுதற் பொருள் முன் வந்தே பின்வரும் வினையோடு முடிந்து பொருள் தருதலும், வினைமுதற் கிளவியாயின் பின்வரும் வினையொடு முடிந்தே பொருள்தருதலுங் கொள்க. இவற்றிற்குச் செய்யாநிற்கும் எனவும் செய்யாநின்ற எனவும் வரும் வாய்பாட்டு வேற்றுமை ‘ஒன்றென முடித்தலாற் கொள்க. ‘மற்றிந்நோய் தீருயொ மருந்தருளாயொண் டொடீ நின்முக காணு மருந்தினென்னுமால்’ என்புழி, நோய் தீர்தற்குக் காரணமாகிய மருந்து என வருங் காரணத்தைக் கருவிக்கண்ணும், நின் முகத்தைக் காண்டல் காரணமாக அதன் காரியமாகப் பிறந்த அருளை மருந்தாதல் தன்மையாக உடையனென வருங்காரியத்தை ஒன்றென முடித்தற்கண்ணும் அமைத்துக்கொள்க. ‘தேரொடும் புறங்காணேனேன் என்பதூஉங் ‘நிலம்பூத்த மரமாயின்’ என்பதூஉம் காரணத்தின்கண்ணும், ‘ஆறுசென்ற வியர்’ என்றதனை ஆறு சேறலான் வந்த வியர் எனக் காரியத்தின்கண்ணும் அடக்குக. ‘ஆர்களிறு மிதித்த நீர்’ எள் ளாட்டின எண்ணெய்; உண்ட எச்சில் என்பனவுங் காரியத்தின்கண் அடக்குக. ‘குண்டு சுனைப் பூத்த வண்டு படு கண்ணி’ ‘நூலாக் கலிங்கம் வாலரைக் கொளீஇ’ என்பன, ‘பூத்த பூவான் இயன்ற கண்ணி, நூலாத நூலான் இயன்ற கலிங்கம் என ஒற்றுமைநயம் பற்றிச் செயப்படுபொருண்மேல் நின்றன. ‘பொச்சாவாக் கருவியான் போற்றிச் செயின்.’ என்பது கருவிக்கண் அடங்கும். அரசன் ஆ கொடுக்கும் பார்ப்பான், அரசன் ஆ கொடுத்த பார்ப்பான் எனவும், ஆடை ஒலிக்குங்கூலி; ஆடை ஒலித்த கூலி எனவும் ஒத்த உரிமைய அன்றிச் சிறுபான்மை இன்னதற்கு, இதுபயன், என்பனவற்றின்கண்ணும் வரும். இன்னும், பழம் உதிருங் கோடு, பழம் உதிர்ந்த கோடு எனச் சிறு பான்மை தீர்தற் பொருண்மை பற்றி வருதலுங் கொள்க. இனி, செய்த என்பதன் குறிப்பாய், இன்ன, அன்ன, என்ன எனவும், கரிய, செய்ய எனவும் வருவனவும் கொள்க. அவை, ‘இன்ன தன்மையி னருமையின்’ ‘அன்ன தன்மையும் அறிந்தீயார்’ எனவும், ‘என்ன கிளவியும் பண்பின் தொகையே’ எனவும், கரிய மலர் நெடுங்கண் எனவும், ‘செய்ய கோலை எனவும் வந்தவாறு காண்க. (37) 237. அவற்றொடு வருவழிச் செய்யுமென் கிளவி முதற்கண் வரைந்த மூவீற்று முரித்தே. இது, செய்யுமென்பதற்கோர் முடிபு வேற்றுமை கூறுகின்றது. (இ-ள்.) அவற்றொடு வருவழி - அந்நிலம் முதலிய பொருள்களொடு வருங்கால், செய்யும்என் கிளவி - செய்யும் மென்னுஞ் சொல், முதற்கண் வரைந்த மூவீற்றும் உரித்து - மேல் விலக்கப்பட்ட பல்லோர் படர்க்கை, முன்னிலை, தன்மை என்னும் மூவகைக்கும் உரித்து, எ-று. அவை ‘எஞ்சிய கிளவி’ என்பதனுட் காட்டினாம். ஈண்டுக் கூறிய விதி எச்சத்திற்கும் ஆண்டு விலக்கியது முற்றிற்குமென்று உணர்க. இனி, அவற்றிற்கு வேறுபாடு கூறுதும்: இருதிணைக்கும் பொதுவாகிய செய்யுமென்னுஞ் சொல், உண்ணும் என நின்றுழித் தானே தன் தொடர்ப்பொருளு உணர்த்தலாற்றாது நின்றான்னை அவன், அது என்னும் வினைமுதல் வந்து திணையும் பாலும் விளக்கத் தன் தொடர்ப்பொருள் உணர்த்தி, எடுத்தறோசையான் மற்றோரு சொல் நோக்காது, செப்பு மூயினாற்போல அமைந்து மாறி நிற்றல் முற்றிற்கு இலக்கணம். அச்செய்யுமென்னுஞ் சொல் வாழுமில் எனப் படுத்தலோசையாற் கூறியவழி, அம்முடிக்குஞ் சொல்லான் அமையாது, நன்றென மற்றுமோரு சொல் நோக்கி நிற்றல் எச்சத்திற்கு இலக்கணம். இனி, அம்மீறு முதலிய முற்றுச் சொற்கள் எங்ஙனம் முற்றி நிற்குமெனின், ‘எத்திறத் தானும் பெயர்முடி பினவே’ என்பதனான் வினைமுதலோடு முடிந்து, ஈண்டுக் கூறியவாறே முற்றி நிற்குமென்க. பெயர்பற்றி நில்லாது, ‘தாமேயும் தொடர்ப்பொருளுணர்த்தி முற்றிநிற்குமெனச் சேனாவரையர் கூறினாராலெனின், ‘சாத்தற்குச்சோறு இடுக!’ என ஒருவன் ஏவிய வழி அவ்வேவப்பட்டான் அவற்கு அதனை ஈத்துவந்து உண்டானென்ற வழி, யான்கூறிய சாத்தனுண்டான் என வினைமுதற் தொடர்ப் பொருள் அவன் மனத்தின்கண் உணர்த்திநிற்பதல்லது, நன்மக்கள் குழீஇயவழி ஒருவன் வந்துநின்று உண்டானென்றவழி அவ்வினைமுதறொடர்ப் பொருளுணர்த்தாது பால்மாத்திரம் உணர்த்தி நிற்குமென்பது கருதி, ‘எத்திறத் தானும் பெயர்முடி பினவே’ என்றார் ஆகலின், அது பொருத்தமின்று என்க. (38) 238. பெயரெஞ்சு கிளவியும் வினையெஞ்சு கிளவியு மெதிர்மறுத்து மொழியினும் பொருணிலை திரியா. இஃது, இருவகை எச்சத்திற்கும் எதிர்மறை வினையும் முடிவாமென்கின்றது. (இ-ள்.) பெயரெஞ்சு கிளவியும் வினையெஞ்சு கிளவியும் - பெயரெச்சமாகிய சொல்லும் வினையெச்சமாகிய சொல்லும், எதிர்மறுத்து மொழியினும் - செய்தல் தொழிலினை எதிர் மறுத்துச் சொல்லினும், பொருள் நிலை திரியா - தத்தம் எச்சமாகிய பெயரையும் வினையையுங் கொண்டு அல்லது அமையாத நிலைமையின் வேறுபடா, எ-று. (உ-ம்.) உண்ணாவில்லம், உண்ணாச் சோறு, உண்ணாக் காலம், வளையாக் கோல், ஓதாப் பார்ப்பான்; உண்ணாவூண் என வரும். உண்ணா என்பது, உண்ணும், உண்ட என்னும் இரண்டற்கும் மறை. உண்ணாத என்பது, உண்ட என்பதற்கு மறை. உண்ணாது என்பது, உண்டு, உண்ணூ, உண்ணா, உண்குபு என்பனவற்றிற்கு மறை. இதனானே, செய்பு என்பது இறந்தகாலம் உணர்த்துதல் பெற்றாம். இனி, செய்தென என்பது வினை முதலோடு வருவழி, ‘மழை பெய்யாதறம் பெறாதாயிற்று,’ எனச் செய்தென்பதன் மறையே வருதலும், அது பிறவினையோடு வருவழி, ‘மழை பெய்யாமல் மரங் குழையாதாயிற்று’, என இறந்த காலம் உணர்த்துஞ் செய்தெனெச்சத்து எதிர்மறையே தனக்கு மறையாய் வருதலுங் கொள்க. இவ்விரண்டு எச்சத்திற்கும் செய்யாமை என்பதூஉம் மறை. இனி, உண்ணாமைக்கு என்பது, உண்ணியர், உண்ணிய, உண்ணற்கு என்பனவற்றிற்கும், உண்ண என எதிர்காலம் உணர்த்துஞ் செயவென் எச்சத்திற்கும் மறையாம். இனி, செயினென்பதற்கு, மழை பெய்யாவிடினறம் பெறாது, மழை பெய்யாவிடின் மரம் குழையாது எனப் பிற சொல்லான் மறை வரும். இனி, உண்ணாதபின், உண்ணாதமுன், உண்ணாக்கால், உண்ணாக் கடை, உண்ணாவழி, உண்ணா விடத்து எனவும் வரும். இனி, கொள்ளாதொழிவான் என ஏனையவற்றிற்கும் வரும். இனி, கரியசாத்தற்குச் செய்ய சாத்தன் எனவும், நல்ல சாத்தற்குப் பொல்லாச் சாத்தன் எனவும் வரும் பெயரெச்சக் குறிப்பு மறை விகற்பமும் அறிக. இனி, சோறு உண்டாயிருந்தது, சோறாவதாயிருந்தது, என்பனவற்றிற்குச் சோறின்றி, சோறான்றி என வினையெச்சக் குறிப்பு மறையாதலுங் கொள்க. ‘எதிர்மறுத்து மொழியினும் தத்தம் மரபிற், பொருள்நிலை திரியா வேற்றுமைச் சொல்லே’ என்று வேற்றுமையினை எதிர்மறுத்து வருமெனவே, அவ்வேற்றுமை ஏற்ற சொல் முற்றுச்சொல்லும் ஆதலின், முற்றுச்சொற்கும் மறை வருமென்பது கூறினாராயிற்று. இனி, செய்யுமென்னும் முற்றிற்கும் உண்ணாளவள், உண்ணாதது என வரும் மறை, ஒன்றென முடித்தலாற் கொள்க. (39) 239. தத்த மெச்சமொடு சிவணுங் குறிப்பி னெச்சொல் லாயினு மிடைநிலை வரையார். இஃது, அவ்வெச்சங்களின் இடைநிகழும் முடிபு வேற்றுமை கூறுகின்றது. (இ-ள்.) தத்தம் எச்சமொடு சிவணுங் குறிப்பின் எச்சொல்லாயினும்- தத்தம் எச்சமாகிய வினையொடும் பெயரொடும் பொருள் இயையுங் கருத்தினையுடைய எவ்வகைச் சொல்லாயினும், இடைநிலை வரையார் - அவ் வெச்சத்திற்கும் அவற்றான் முடிவனவாகிய தமக்கும் இடைநிற்றலை நீக்கார் கொள்வர் ஆசிரியர், எ-று. (உ-ம்.) உழுது சாத்தன் வந்தான்; உழுதேரொடு வந்தான்; கொல்லுங் காட்டுள் யானை; கொன்ற காட்டுள் யானை என வரும். ஒருதலையாக எச்சத்தோடு இயையாது, முடிக்கப்படுஞ் சொல்லோடும் இயைந்து கவர்பொருள்படுவன சிவணாக் குறிப்பினவாம். அவை, உண்டு விருந்தொடு வந்தான்; வல்லமெறிந்த நல்லிளங்கோசர் தந்தை மல்லல் யானைப் பெருவழுதி என்புழி, விருந்தோடு உண்டெனவும், வல்லமெறிந்த கோசர் எனவுங் கவர்பொருட் பட்டு வரும். ‘எச்சொல் லாயினும்’ என்றதனால், உழுதோடி வந்தான்; கவளம் கொள்ளாகளித்த யானை என எச்சம் இடைநிலையாதல் கொள்க. அறத்தையரசன் விரும்பினான்; உண்டான் பசித்த சாத்தன் என ஏனைத் தொடர்க்கண்ணும் பிறசொல் இடைநிற்றல் ஒன்றென முடித்தலாற் கொள்க. (40) 240. அவற்றுள், செய்யு மென்னும் பெயரெஞ்சு கிளவிக்கு மெய்யொடுங் கெடுமே யீற்றுமிசை யுகர மவ்விட னறித லென்மனார் புலவர். இது, செய்யுமென்பதற்கு ஈறுகெடுமாறு கூறுகின்றது. (இ-ள்.) அவற்றுள் - முற்கூறிய இருவகையெச்சங்களுள், செய்யுமென்னும் பெயரெஞ்சு கிளவிக்கு - செய்யுமென்னும் பெயரெச்சத்திற்கு, ஈற்றுமிசை உகரம் மெய்யொடுங்கெடும் - ஈற்றெழுத்தின்மேல் நின்ற உகரந் தன்னான் ஊரப்பட்ட மெய்யொடுங் கெடும்; அவ்விடன் அறிதல் என்மனார் புலவர் - அக் கெடுமிடம் அறிக, என்று கூறுவர் புலவர், எ-று. (உ-ம்.) ‘வாவும் புரவி வழுதியோ டெம்மிடை’ ‘யான் போகும் புழை’ என்பன வாம்புரவி, போம்புழை என நின்றன. ‘செய்யுமென்னும் பெயரெஞ்சு கிளவிக்கு, ஈற்றுமிசை உகரம் மெய்யொடுங் கெடும்,’ எனவே, செய்யுமென்னும் முற்றுச்சொற்கு ஈற்றுமிசை உகரம் மெய்யொடுங் கெடும், மெய் யொழித்துங் கெடுமென்பது பெறுதும். (உ-ம்.) ‘அம்பலுரும் அவனொடு மொழிமே.’ (குறுந். 51) ‘சாரம நாடவென் தோழியும் கலுழ்மே’ என வரும். (41) 241. செய்தெ னெச்சத் திறந்த கால மெய்திட னுடைத்தே வாராக் காலம். இஃது, இறந்தகாலச் சொல் ஏனைக்காலச் சொல்லோடு இயையு மென்கின்றது. (இ-ள்.) செய்தெனெச்சத்து இறந்த காலம் - செய்தெனென்னும் வினையெச்சத்தினது இறந்தகாலந் தன் இறந்த காலத்தினை நீங்காது நின்று, வாராக் காலம் எய்திடன் உடைத்து - முடிக்குஞ் சொல்லின் எதிர் காலத்தைப் பொருந்தும் இடமுடைத்து, எ-று. (உ-ம்.) நீ உண்டு வருவாய் என்பது நாளை உண்டு வருவாய் என்னும் பொருள் உணர்த்தவும், வருதற்றொழிற்கு உண்டற் றொழில் முன் நிகழ்ந்து, ஆண்டும் தன் இறந்த காலமே உணர்த்திற்றாம். கொடியாடித் தோன்றும் என்புழித் தோற்றமும் ஆட்டமும் உடனிகழ்தலின், செய்தென்பது நிகழ்காலத்திற்கும் உரித்தாதல் வாராக்காலமெனவே அடங்கும், ‘வறிதினீந்தி நீசெல்லும் நீளிடை நினைப்பவும்’ (கலி. 3 : 2) என்பதும் அது. ஒன்றென முடித்தலாற் செய்யூ, செய்பு, என்பனவற்றிற்கும் ஒழிந்த எச்சங்கட்கும் இம்மயக்கங் கொள்க. (42) 242. முந்நிலைக் காலமுந் தோன்று மியற்கை யெம்முறைச் சொல்லு நிகழுங் காலத்து மெய்ந்நிலைப் பொதுச்சொற் கிளத்தல் வேண்டும். இது, நிகழ்காலச் சொல் ஏனைக் காலங்களையும் உணர்த்துமென்கின்றது. (இ-ள்.) முந்நிலைக் காலமும் தோன்றும் இயற்கை எம்முறைச் சொல்லும் - மூன்று வகைப்பட்ட நிலைமையினை யுடைய காலத்தும் உளதாம் இயல்பையுடைய எவ்வகைப்பட்ட பொருள்களையும், நிகழுங் காலத்து மெய்ந்நிலைப் பொதுச்சொற் கிளத்தல் வேண்டும் - நிகழ்காலத்திற்கு உரித்தாய் நின்றும் ஏனைக் காலங்களையும் உள்ளடக்கி நிற்கும்பொருள் நிலைமையினை யுடைய செய்யும் என்னுஞ் சொல்லாற் சொல்லுதலை விரும்பும் ஆசிரியன், எ-று. முக்காலத்திற்கும் பொதுவாய் முற்றும் எச்சமுமாய் நிற்றலை நோக்கிப் ‘பொதுச்சொல்லென்றார். (உ-ம்.) மலை நிற்கும்; தீச் சுடும்; ஞாயிறியங்கும்; திங்களியங்கும் எனவும், ‘வெங்கதிர்க் கனலியொடு மதிவலந் திரிதரும், தண்கடல் வரைப்பு’ எனவும் வரும். ‘தீச்சுடுமென்றால், பண்டும் இன்றும் மேலுஞ் சுடும் என்பதனை ஒப்ப விளக்கியவாறு காண்க. ‘மெய்ந்நிலை’யென்றது, ஏனை நிகழ்காலச் சொல்லோடு ஒவ்வாமையை உணர்த்துதற்கு. (43) 243. வாராக் காலத்து நிகழுங் காலத்து மோராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி யிறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் விரைந்த பொருள வென்மனார் புலவர். இது விரைவின்கண் எதிர்வும் நிகழ்வும் இறப்பொடு மயங்கும் என்கின்றது. (இ-ள்.) வாராக் காலத்தும் நிகழுங் காலத்தும் ஓராங்கு வரூஉம் வினைச்சொற்கிளவி - எதிர்காலத்தும் நிகழ்காலத்தும் ஒரு படியாக வருகின்ற வினைச்சொல்லாகிய சொல்லின் பொருண்மையை, இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் - தொழில் இறந்திலவேனுஞ் சொல்லுவான் கருத்து வகையாற் தொழில் இறந்தனவாகக் கருதிக் கூறல், விரைந்த பொருள என்மனார் புலவர் - விரைவு பொருண்மையை உடைய என்று சொல்லுவர் ஆசிரியர், எ-று. (உ-ம்.) சோறு பாணித்தவழி உண்ணாதிருந்தானைப் போதல் வேண்டுங் குறையுடையானொருவன், ‘இன்னும் உண்டிலையோ?’ என்றவழி, ‘உண்டேன், போந்தேன்’ என்னும். உண்ணாநின்றானும், ‘உண்டேன், போந்தேன்’ என்னும். (44) 244. மிக்கதன் மருங்கின் வினைச்சொற் சுட்டி யப்பண்பு குறித்த வினைமுதற் கிளவி செய்வ தில்வழி நிகழுங் காலத்து மெய்பெறத் தோன்றும் பொருட்டா கும்மே. இது, மிக்கதொன்றன்கண்ணே இறப்பும் எதிர்வும் நிகழ்வோடு மயங்குமென்கின்றது. (இ-ள்.) மிக்கதன் மருங்கின் வினைச்சொற் சுட்டி - இரு வினைகள் பலவற்றுள்ளுஞ் சிறந்த இருவினைக்கண்ணே நிகழும் வினைச்சொல்லை நோக்கி, அப்பண்பு குறித்த வினைமுதற்கிளவி - திரிவின்றிப் பயக்கும் அம்மிக்க தனது பண்பைக் குறித்து வரும் வினைமுதற் சொல், செய்வது இல்வழி - சுட்டிச் சொல்லப்படுவ தோர் வினைமுதல் இல்லாத இடத்து, நிகழுங்காலத்து மெய்பெறத் தோன்றும் பொருட்டு ஆகும்மே - நிகழ்காலத்தான் யாப்புறத் தோன்றும் பொருளையுடைத்தாம், எ-று. (உ-ம்.) தவஞ் செய்தான், செய்வான்; தாயைக் கொன்றான், கொல் வான்; என்பன முதலியன மிக்க வினைச்சொல். சுவர்க்கம் புகாநிற்பன், நிரயம் புகாநிற்பன் என்பன அவ்வப்பண்பு குறித்த வினை முதற்கிளவி. இவை சுட்டியொருவர் பெயர் கொள்ளாமல், யாவன் தவஞ்செய்தான் அவன் சுவர்க்கம் புகும்; யாவன் தாயைக் கொன்றான் அவன் நிரயம் புகும் எனவும், ஒருவன் தவஞ் செய்யிற், துறக்கம் புகும் தாயைக் கொல்லின், நிரயம் புகும் எனவும் வரும். இங்ஙனம் பொதுவகையாற் கூறாது, சாத்தன் தவஞ்செய்து துறக்கம் புக்கான் தவம் செய்யிற் துறக்கம் புகுவனெனச் சுட்டி யொருவர் பெயர் கொண்டவழி ஏனைக் காலங்களாற் கூறப்படுதலிற் ‘செய்வதில் வழி’ என்றார். வினைச்சொல் என்றாரேனும், தவஞ் செய்தான்; தாயைக் கொன்றான் என வினைப்பெயராய் வருதலுங் கொள்க. (45) 245. இதுசெயல் வேண்டு மென்னுங் கிளவி யிருவயி னிலையும் பொருட்டா கும்மே தன்பா லானும் பிறன்பா லானும். இது, முற்றுச்சொற் பொருள்தரும் வேறுபாடு கூறுகின்றது. (இ-ள்.) இது செயல்வேண்டுமென்னுங்கிளவி - இக் காரியத்தினைச் செயல் வேண்டுமென்று சொல்லப்படும் முற்றுச்சொல், தன்பாலானும் பிறன்பாலானும் இருவயினிலை யும் பொருட்டு ஆகும்மே - அக்காரியத்தினைச் செய்வான் தன்னிடத்தும், அவன் செயலை வேண்டியிருப்பான் பிறனொரு வனிடத்துமென்ற இரண்டிடத்தும் நிலைபெறும் பொருண் மையை உடையதாம், எ-று. (உ-ம்.) சாத்தன் ஓதல் வேண்டும் என்புழி, வேண்டு மென்னும் முற்றுச் சொல் ஒருவழிச் சாத்தனென்பது எழுவாயாய் வேண்டுனென்னும் பயனிலையோடு முடிந்துழி அவ்வேண்டுதல் சாத்தனதாயுஞ் சாத்தனென்னும் எழுவாய், ஓதுதலேன்னும் வினைப்பெயர் கொண்டவழி இவ் வேண்டுதல் தந்தை தாய்மேலும் நின்றவாறு காண்க. (46) 246. வன்புற வரூஉம் வினாவுடை வினைச்சொ லெதிர்மறுத் துணர்த்துதற் குரிமையு முடைத்தே. இதுவும் வினைச்சொற் பொருள்படும் வேறுபாடு கூறுகின்றது. (இ-ள்.) வன்புற வரூஉம் வினாவுடை வினைச்சொல் - ஒருவன் இன்னாங்கு உரைத்தானென்று ஒருவன் மனங் கொண்டிருந்தவழித் தான் அவ்வின்னாங்கு உரையாமையை அவன் மனத்து வலியுறுத்துதற்கு வரும் வினாவினையுடைய வினைச்சொல், எதிர்மறுத்து உணர்த்துதற்கு உரிமையும் உடைத்து - அவ்வுரையாமையை உணர்த்துகின்ற நிலைமையை மறுத்துத்தான் உரைத்தானாக உடம்பட்டமையை அவற்கு உணர்த்துதற்கு உரிமையினையும் உடைத்து, எ-று. உம்மை எதிர்மறையாகலான், மறுத்தல் பெரும்பான்மை; நேர்தல் சிறுபான்மையாம். ஆ, ஏ, ஓ என்பன வினா. ஒருவன் கதத்தானாக களியானாக மயங்கி இன்னாங்கு உரைத்துப் பின் தெருண்டவழி, அவ்வின்னாங்கு உரைக்கப்பட்டான், நீ என்னை வைதாயென்றக் கால், யான் வைதேனோ? எனத் தான் வையாமையை வலியுறுத்துதற்குக் கூறியதுதானே, அப்பொழுது வைதேன்; நோகாதே என நேர்ந்தமைபடவும் நிற்கும். இனி, தான் வைதமையை வலியுறுத்துதற்கு வரும் ‘வைதேனே?’ என்னுஞ் சொல் வைதிலேனென்னும் எதிர்மறையை உணர்த்திநிற்கும் என்றலுமாம். (47) 247. வாராக் காலத்து வினைச்சொற் கிளவி யிறப்பினு நிகழ்வினுஞ் சிறப்பத் தோன்று மியற்கையுந் தெளிவுங் கிளக்குங் காலை. இஃது எதிர்வு, இறப்போடும் நிகழ்வோடும் மயங்கும் என்கின்றது. (இ-ள்.) வாராக் காலத்து வினைச்சொற்கிளவி - எதிர்காலத்திற்கு உரிய வினைச்சொல்லாகிய சொல்லின் பொருண்மை, இறப்பினும் நிகழ்வினும் சிறப்பத் தோன்றும் இயற்கையும் தெளிவுங் கிளக்குங்காலை - வழங்கலாற்றான் இஃது இப்பெற்றித்து எனப் பெற்றியான் அறிந்திருந்த இயல்பாகலும், இது நிகழின் அது நிகழுமென நூல்நெறியான் தெளியப் படுதலுஞ் சொல்லுமிடத்து இறந்தகாலச் சொல்லானும் நிகழ்காலச் சொல்லானும் விளங்கத் தோன்றும், எ-று. (உ-ம்.) இக்காட்டுட் போகின் கூறை கோட்படுவன் எனற்பாலது, கூறை கோட்பட்டான், கூறை கோட்படுகின்றான் எனக் கூறுதல் இயற்கை. எறும்பு முட்டை கொண்டு திட்டை யேறியது கண்டுழி மழை பெய்வதாம் என்னாது, மழை பெய்தது, மழை பெய்கின்றது எனக் கூறுதல் தெளிவு. (48) 248. செயப்படு பொருளைச் செய்தது போலத் தொழிற்படக் கிளத்தலும் வழக்கியன் மரபே. இது, வினைச்சொற்கண் மரபுவழுவமைதி கூறுகின்றது. (இ-ள்.) செயப்படுபொருளை - ஒரு வினைமுதல் ஒரு தொழில் செய்வதனை உறுவதாகிய பொருளை, செய்தது போலத் தொழிற்படக் கிளத்தலும் - தான் அத்தொழிலினைச் செய்த வினைமுதல் போல அத் தொழில் அதன்மேற்படக் கூறுதலும், வழக்கியல் மரபே - வழக்கின்கண்ணே நடக்கும் முறைமை, எ-று. எனவே, இலக்கணம் அன்றாயிற்று. (உ-ம்.) இல்லம் மெழுகப்பட்டது என்னாது, இல்லம் மெழுகிற்றென்றலாம். இங்ஙனம் வினைமுதல்வாய்பாட்டாற் கிளத்தலேயன்றி, எளிதின் அடப்படுவதனை நோக்கி, அரிசிதானே அட்டது எனச் செயப்படுபொருளை வினை முதலாகக் கூறலும் அடங்குதற்குத் ‘தொழிற்பட கிளத்தலும்’ என்றார். இவை கருமக்கருத்தா. இனி, ஒன்றென முடித்தலான், இவ்வாளெறியும் எனக் கருவியைத் தானே செய்வதாகக் கூறுங் கருவிக்கருத்தாவும், அரசன் எடுத்த ஆலயம் என ஏவினானைக் கருத்தாவாகச் கூறும் ஏதுக்கருத்தாவுங் கொள்க. (49) 249. இறப்பே யெதிர்வே யாயிரு காலமுஞ் சிறப்பத் தோன்று மயங்குமொழிக் கிளவி. இஃது, ஒரு பொருண்மை குறியாது இறப்பும் எதிர்வும் மயங்குமென்கின்றது. (இ-ள்.) இறப்பே எதிர்வே ஆயிரு காலமும் - இறப்பும் எதிர்வுமாகிய இரண்டு காலமும், மயங்கும் மொழிக்கிளவி சிறப்பத் தோன்றும் - தம்முள் மயங்கும் மொழிப்பொருளாய் விளங்கத் தோன்றும், எ-று. (உ-ம்.) இவர் பண்டு இப்பொழிலிடத்து விளையாடுவர்; நாளை அவன் வாளொடு வெகுண்டு வந்தான், பின் நீ என் செய்குவை? என வரும். அவை வினைப்பெயரும் வினையுமாய் மயங்குதலின், மயங்கும் வினைச்சொற் கிளவி என்னாது, பொதுப்பட ‘மயங்கும் மொழிக்கிளவி’ என்றார். (50) 250. ஏனைக் காலமு மயங்குதல் வரையார். இது, நிகழ்வு ஏனையவற்றொடு மயங்குமென்கின்றது. (இ-ள்.) ஏனைக் காலமும் மயங்குதல் வரையார் - நிகழ்காலமும் இறப்போடும் எதிர்வொடும் மயங்குதலை நீக்கார் கொள்வர் ஆசிரியர், எ-று. (உ-ம்.) இவள் பண்டு இப்பொழிலிடத்து விளையாடும்; நாளை வரும் என வரும். மூன்று காலமும் வினைப்பெயரொடு மயங்கும் என்றாரேனும், ஏற்றனவே கொள்க. (51) வினையியல் முற்றும் இடையியல் இடைச்சொற்களின் இலக்கணமுணர்த்தினமையால் இடையியலென்னும் பெயர்த்தாயிற்று. பெயரையும் வினையையும் சார்ந்து தோற்றுதலின் அவற்றின்பின் கூறப்பட்டது மொழிக்கு முன்னும் பின்னும் வருமாயினும் பெரும்பான்மையும் இடைவருதலின் இடைச்சொல்லாயிற்று என்பர் சேனாவரையர். இடைச்சொல்லாவது பெயரும் வினையும்போலத் தனித்தனியே பொருளுணர உச்சரிக்கப்படாது பெயர் வினைகளைச் சார்ந்து புலப்படுமென்றும் பெயரும் வினையும் இடமாகநின்று பொருளுணர்த்தலின் இடைச்சொல்லாயிற்றென்றும் கூறுவர் தெய்வச்சிலையார். பொருளையும் பொருளது புடை பெயர்ச்சியையுந் தம்மாலன்றித் தத்தங்குறிப்பாலுணர்த்துஞ் சொற்கள் பெயர்ச்சொல் வினைச்சொற்களுமாகாது அவற்றின் வேறுமாகாது இடைநிகரனவாய் நிற்றலின் இடைச்சொல்லெனப் பட்டன என்பர் சிவஞான முனிவர். இவ்வியலிலுள்ள சூத்திரங்கள் 48. இவற்றை 47-ஆகக் கொள்வர் தெய்வச்சிலையார். இடைச்சொல்லென்று சொல்லப்படுவன பெயரும் வினையும் உணர்த்தும் பொருளைச் சார்ந்துநின்று அவற்றையே வெளிப்படுத்து நிற்றலல்லது தமக்கென வேறு பொருளில்லாதன் என்பர் ஆசிரியர். எனவே அவை பொருளுணர்த்தும்வழிப் பெயர்ப் பொருண்மை யுணர்த்தியும் வினைப்பொருண்மை யுணர்த்தியும் வருவன என்பது பெறப்படும். ஒரு சொல்லோடு ஒரு சொல் புணர்ந்தியலும் வழி அப்பொருள் நிலைக்கு உதவியாகி வருவனவும், வினைச் சொற்களை முடிக்குமிடத்து அச்சொல்லகத்துக் காலங்காட்டும் உறுப்பு முதலியனவாய் நிற்பனவும், வேற்றுமையுருபுகளாய் வருவனவும், தமக்கெனப் பொருளின்றிச் சார்த்திச் சொல்லப்படும் அசைநிலைகளாய் நிற்பனவும், இசை நிறைக்க வருவனவும், தத் தங்குறிப்பாற் பொருளுணர்த்துவனவும். ஒப்புமையுணர்த்தும் உவமவுருபுகளாய் வருவனவும் என இடைச்சொற்கள் எழுவகைப்படுமென்பர் தொல்காப்பியர். அவற்றுள் ‘புணரியல் நிலையிடைப் பொருள் நிலைக்குதவுந’ என்றது அல்வழிப் பொருளுக்கு உரியன இவை வேற்றுமைப் பொருளுக்கு உரியன இவையென எளிதில் உணர்ந்து கொள்ளுதற்கு அறிகுறியாகிய இன், வற்று, முதலிய சாரியைகளை இவை எழுத்ததிகாரத்திற் சொல்லப்பட்டன. ‘வினை செயல் மருங்கிற் காலமொடு வருந’ என்றது வினைச்சொல் முடிவுபெறுமிடத்துக் காலங்காட்டியும் பால்காட்டியும் வினைச்சொல்லகத்து உறுப்பாய் நிற்பனவற்றை. இவை வினையியலுட் கூறப்பட்டன வேற்றுமைப் பொருளிடத்து உருபாய் வரும் ஐ, ஒடு, கு, இன், அது, கண் எனவரும் வேற்றுமையுருபுகள் வேற்றுமையியலிற் கூறப்பட்டன. அசைநிலையும் இசைநிறையும் தத்தங் குறிப்பிற் பொருள் செய்வனவும் ஆகிய மூவகையிடைச் சொற்களும் இவ்வியலின் கண்ணே உணர்த்தப்படுகின்றன. ஒப்புமையுணர்த்தும் இடைச் சொற்களாகிய அன்ன, ஆங்கு முதலிய உவம உருபுகள் பொருளதிகாரத்து உவம இயலில் விரித்துரைக்கப்படும். இவ்விடைச்சொற்கள் தம்மாற் சாரப்படும் சொற்கு முன்னும் பின்னும் வருதலும் தம்மீறுதிரிதலும் பிறிதோரிடைச் சொல் தம்முன்வந்து சாரப்பெறுதலும் ஆகிய இயல்பினவாம். இவ்வியலின்கண் உணர்த்தப்படும் அசைநிலை, இசைநிறை தத்தங்குறிப்பிற் பொருள்செய்வன என்னும் மூவகையிடைச் சொற்களுள் பொருள்புணர் இடைச்சொல்லாகிய தத்தங்குறிப்பிற் பொருள் செய்வனவற்றை முதற்கண்ணும், பொருள்புணரா இடைச்சொற்களாகிய அசைநிலை இசைநிறைகளை அதன் பின்னரும் உணர்த்துகின்றார். தத்தங்குறிப்பிற் பொருள்செய்யும் இடைச் சொற்களுள் பலபொருள் குறித்த இடைச்சொற்களை 4-முதல் 12-வரையுள்ள சூத்திரங்களிலும், ஒருபொருள் குறித்த இடைச்சொற்களை 13-முதல் 21-வரையுள்ள சூத்திரங்களிலும் ஆசிரியர் எடுத்தோதுகின்றார். அவர் எடுத்தோதிய இடைச்சொற்களுள் எல் என்னும் சொல் இலங்குதல் என்னும் ஒரு பொருள் குறித்த இடைச்சொல்லாகும். “எல்லென்பது உரிச்சொல் நீர்மைத்தாயினும் ஆசிரியர் இடைச்சொல்லாக ஒதினமையான் இடைச்சொல் லென்று கோடும்” என்றார் சேனாவரையர். ‘உரிச்சொல் குறைச் சொல்லாகி நிற்கும், இது குறையின்றி நிற்றலின் இடைச் சொல்லாயிற்று’ என்றார் தெய்வச்சிலையார். அசைநிலையாகவும் இசைநிறையாகவும் வரும் இடைச்சொற்களை 22-முதல் 32-வரையுள்ள சூத்திரங்களால் எடுத்துரைத்தார். உயிரெழுத்துக்களுள் ஒளகாரமல்லாத நெடில்கள் ஆறும் இரட்டித்தும் அளபெடுத்தும் தனித்தும் இடைச்சொற்களாய் நின்று ஓசையாலும் குறிப்பாலும் பொருளுணர்த்தும் முறையினை 38-ஆம் சூத்திரத்திலும், நன்றே, அன்றே, அந்தோ, அன்னோ என்பவற்றின் இறுதி நின்ற ஏகாரமும் ஓகாரமும் குறிப்பாற் பொருளுணர்த்து முறையினை 34-ஆம் சூத்திரத்திலும், மேற்கூறிய இடைச் சொல்லின்கண் இலக்கண வேறுபாடுகளையெல்லாம் 35-முதல் 46-வரையுள்ள சூத்திரங் களிலும் ஆசிரியர் விரித்துக் கூறியுள்ளார். மேற்கூறப்பட்ட இடைச்சொற்களில் இச்சொல்லுக்கு இது பொருள் என நிலைபெறச் சொல்லப்பட்டனவாயினும் அச்சொற்களின் முன்னும் பின்னும் நின்ற வினையோடும் பெயரோடும் இயைத்து நோக்க அச்சொற்கள் முற்கூறியவாறன்றி வேறு பொருளவாயும் அசைநிலையாயும் திரிந்து வேறுபடினும் அவற்றின் பொருள் நிலையை ஆராய்ந்துணர்தல் வேண்டு மெனவும், இங்கெடுத்துரைத்த இடைச்சொற்களேயன்றி இவைபோல்வன பிற வரினும் அவற்றையும் இங்குச் சொல்லிய வற்றின் இலக்கணத்தால் உணர்ந்து வகைப்படுத்துக் கொள்ளுதல் வேண்டுமெனவும் இவ்வியலிறுதியிலுள்ள புறனடைச் சூத்திரங்களால் ஆசிரியர் அறிவுறுத்துகின்றார். இதனால் ஆசிரியர் காலத்து வழங்கிய தமிழ்ச்சொற்களின் பரப்பும் இருவகை வழக்கினும் சொற்கள் பொருளுணர்த்தும் நெறியின் விரிவும் இனிது புலனாதல் காணலாம். - க. வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 214-216 ஏழாவது இடைச்சொல்லியல் 251. இடையெனப் படுப பெயரொடும் வினையொடு நடைபெற் றியலுந் தமக்கியல் பிலவே. என்பது சூத்திரம். நிறுத்த முறையானே இடைச்சொல் உணர்த்துகின்றமையின் இவ்வோத்து இடைச்சொல்லோத் தென்னும் பெயர்த்தாயிற்று. இச்சூத்திரம், இடைச்சொற்கெல்லாம் பொதுஇலக்கணங் கூறுகின்றது. (இ-ள்.) இடையெனப்படுப - ‘இடைச்சொல்’ என்று சொல்லப்படுவன, பெயரொடும் வினையொடும் நடைபெற்று இயலும் - பெயரும் வினையும் உணர்த்தும் பொருளைச் சார்ந்து நின்று அவற்றையே வெளிப் படுத்து நடக்கும்; தமக்கு இயல்பு இல - தமக்கென வேறோர் பொருளை உணர்த்தும் இலக்கணமுடைய அல்ல, எ-று. முன்னும் பின்னும் நிற்குமேனும், பெரும்பான்மையும் இடையே நிற்றலின் இடைச்சொல் லென்றார். (உ-ம்.) ‘அதுகொறோழி! காம நோயே?’ ‘வருகதில் அம்மவெஞ் சேரி சேர’ எனப் பெயரும் வினையுஞ் சார்ந்துநின்று, அவற்றின் பொருளை விளக்கின. தமக்கு இயல்பில எனப் பொதுப்படக்கூறிய அதனாற், சாரப்படுஞ் சொல்லின் வேறாய் நிற்றலேயன்றி, உண்டான், என்றிசினோரே, ‘அருங் குரைத்து’ என அவற்றிற்கு உறுப்பாய் வருதலுங் கொள்க. (1) 252. அவைதாம், புணரிய னிலையிடைப் பொருணிலைக் குதநவும் வினைசெயன் மருங்கிற் காலமொடு வருநவும் வேற்றுமைப் பொருள்வயி னுருபா குநவு மசைநிலைக் கிளவி யாகி வருநவு மிசைநிறைக் கிளவி யாகி வருநவுந் தத்தங் குறிப்பிற் பொருள்செய் குநவு மொப்பில் வழியாற் பொருள்செய் குநவுமென் றப்பண் பினவே நுவலுங் காலை. இஃது, அவ்விடைச்சொற்களின் பாகுபாடு கூறுகின்றது. (இ-ள்.) அவைதாம் - முற்கூறிய இடைச்சொற்கள் தாம், புணரியல் நிலையிடைப் பொருள் நிலைக்கு உதநவும் - இரு மொழி தம்மில் புணர்தல் இயன்ற நிலைமைக்கண் அவற்றின் பொருணிலைக்கு உதவிசெய்து வருவனவும், வினைசெயல் மருங்கிற் காலமொடு வருநவும் - முதனிலை நின்று காரியத் தினைத் தோற்றுவிக்கும் இடத்துக் காலங்காட்டும் இடைச்சொற் களோடே பாலும் இடமுங் காட்டும் இடைச்சொற்களாய் வருவனவும், வேற்றுமைப்பொருள்வயின் உருபு ஆகுநவும் - வேறுபடச் செய்யுஞ் செயப்படுபொருள் முதலாயவற்றின்கண் உருபென்னுங் குறியவாய் வருவனவும், அசைநிலைக் கிளவி ஆகி வருநவும் - தமக்கோர் பொருளின்றித் தாஞ் சார்ந்த பெயர் வினைகளை அசையப்பண்ணும் நிலைமையவாய் வருவனவும், இசைநிறைக் கிளவி ஆகி வருநவும் - செய்யுட்கண் இசை நிறைத்தலே பொருளாக வருவனவும், தத்தங்குறிப்பிற் பொருள் செய்குநவும் - கூறுவார் தாந்தாங் குறித்த குறிப்பினாலே அவர் குறித்த பொருளை விளக்கி நிற்பனவும், ஒப்பு இல் வழியாற் பொருள் செய்குநவும் - நாடகவழக்கினான் உய்த்துணரினன்றி உலகியல் வழக்கினாற் காட்டப்படுவதோர் ஒப்பின்றி நின்ற ஒப்புமைப் பொருண்மையை உணர்த்தி வரும் உவமவுருபுகளும், என்று அப்பண்பினவே நுவலுங்காலை - என்று சொல்லப்பட்ட அவ்வேழியல்பினை யுடைய சொல்லுமிடத்து, எ-று. பொருணிலைக்குதவுவன, எல்லாம் என்பதனை வற்றுச் சாரியை அஃறிணை யாக்கியும், நம்முச் சாரியை உயர்திணை யாக்கியும் நிற்பன போல்வன. இதனானே, காரம், கரம் முதலிய எழுத்துச் சாரியையுங் கொள்க. (உ-ம்.) உண்டான் என்புழி, உண்ணென்னும் முதனிலை, காலங் காட்டுகின்ற டகரத்தினையும், பாலும் இடமுங் காட்டும் ஆனினையும் விரித்து நின்றவாறு காண்க. உண்டு என்னும் எச்சம் முதலியனவும் பாலும் இடமும் உணர்த்துமென்பது, வந்தான் வந்தது என்னும் வினைகளாற் பெறுதல், ‘பிரிபுவேறு படூஉஞ் செய்தியவாகி’ என்பதனாற் கொள்க. தன்னின முடித்த லென்பதனான், உண்டவனென்றாற்போலுஞ் தொழிற்பெயரும், நம்பி, நங்கை என்னும் பெயர்ப்பெயரும், இவ்விடைச்சொற் பெற்று வருதல் கொள்க. ‘கண்ணகன் ஞாலம்’ என்புழிக் கண் இடப் பொருளுணர்த்துதலும், ‘ஊர்க்கால்’ என்புழிக் கால் உருபாகலும் முற்கூறினாம். ‘அனையை யாகன்மாறே’ ‘சிறந்தோன் பெயரன் பிறந்த மாறே’ என்புழி மாறென்னும் இடைச்சொல் வினையை அடுத்துக் காரணப்பொருள் உணர்த்தி நிற்றலின், மூன்றாம் வேற்றுமைப்பொருள் உணர்த்தி நின்றதல்லாமை உணர்க. அது மூன்றாவதன் பொருள் உணர்த்திற்றேல், ‘கூறாய் தோழி! யாம் வாழுமாறே’ என்புழி வாழுமாற்றை என இரண்டாவது விரியாதாம். ‘மந்திர விதியின் மரபுளி வழாஅ’ என்புழி, முறைமையின் வழுவாத அந்தணரென ஐந்தாவது விரிதலானும், ‘இயல்புளிக் கோலோச்சு மன்னவன்’ என்புழி முறைமையிலே செங்கோல் நடாத்தும் என ஏழனுருபு விரிதலானும், உளி யென்பது மூன்றனுருபின் பொருள்பட வந்த தன்று; பகுதிப்பொருள் விகுதியாய் நின்று, தனக்கேற்ற உருபை ஏற்று நின்றது. இம்மூன்றும் புணரியலுள்ளும் வினையிய லுள்ளும் வேற்றுமை ஓத்தினுள்ளுங் கூறி, இடைநின்ற மூன்றும் ஈண்டுக் கூறினார். இறுதிநின்ற ஒப்பில் வழியாற் பொருள் செய்யும் உவம வுருபுகள், ‘அன்ன ஏய்ப்ப’ என்னுஞ் சூத்திரத்தான் உவம இயலுட் கூறுப. அவை ஒப்பின்றி ஒப்புணர்த்துதல், ‘ஒப்பு முருவும் வெறுப்பு மென்றா’ என்னும் பொருளியற் சூத்திரத்தான் உணர்க. (2) 253. அவைதாம், முன்னும் பின்னு மொழியடுத்து வருதலுந் தம்மீறு திரிதலும் பிறிதவ ணிலையலு மன்னவை யெல்லா முரிய வென்ப. இஃது, இன்னும் அவற்றுக்கோர் பொதுவிதி கூறுகின்றது. (இ-ள்.) அவைதாம் - முற்கூறிய இடைச்சொற்கள் தாம் இடை வருதலே யன்றி மொழி முன்னும் பின்னும் அடுத்து வருதலும் - தம்மாற் சாரப்படுஞ் சொற்களை முன்னும் பின்னும் தாம் அடைந்து வருதலும், தம் ஈறு திரிதலும் - தம் ஈற்றெழுத்து வேறுபட்டு வருதலும், பிறிது அவண் நிலையலும் - ஓர் இடைச்சொல் நிற்கின்ற இடத்தே மற்றோர் இடைச்சொல் நிற்றலுமாகிய, அன்னவை எல்லாம் உரிய என்ப - அத்தன்மையை உடைய இலக்கணங்களெல்லாம் இடைச்சொற்கு உரிய என்று சொல்லுவர் ஆசிரியர், எ-று. (உ-ம்.) அதுமன், கேண்மியா-இவை முன் அடுத்தன. ‘கொன்னூர் துஞ்சினும்’ ‘ஓஓ இனிதே!’ இவை பின் அடுத்தன. ‘உடனுயிர் போகுகதில்ல’ இது திரிந்தது. ‘வருகதில்லம்மவெஞ் சேரி சேர’, ‘பண்டறியா தீர்போற் படர்கிற்பீர் மற்கொலோ!’ இவை பிறிது நின்றன. ‘அன்னவை யெல்லாம்’ என்றதனான், ‘மன்னைச்சொல்லே’ ‘கொன்னைச்சொல்லே’ எனத் தம்மை உணரநின்றவழி ஈறு திரிதலும், ‘னகாரை முன்னர்’ என எழுத்துச் சாரியை ஈறுதிரிதலுங் கொள்க. (3) 254. கழிவே யாக்க மொழியிசைக் கிளவியென் றம்மூன் றென்ப மன்னைச் சொல்லே. இது, தத்தங் குறிப்பிற் பொருள் செய்வனவற்றுள் ஒன்றன் பொருட் பாகுபாடு கூறுகின்றது. (இ-ள்.) மன்னைச்சொல் கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவி என்று அம்மூன்று என்ப - மன்னைச்சொல் கழிவுப் பொருண்மையும் ஆக்கப் பொருண்மையும் எச்சமாய் ஒழிந்து நின்ற சொற் பொருண்மையும் என்று சொல்லப்பட்ட அம் மூன்று கூற்றையுடையதென்று கூறுவர் ஆசிரியர், எ-று. (உ-ம்.) ‘சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே!’ “பொதுமலரணி யவின் றுவரின துமன்னே” “பரிசிலராவியாகிய கோவே - கூரியதோர்வாண்மன் திட்பமின்று” என வரும். (4) 255. விழைவே கால மொழியிசைக் கிளவியென் றம்மூன் றென்ப தில்லைச் சொல்லே. இதுவும் அது. (இ-ள்.) தில்லைச்சொல் விழைவே காலம் ஒழியிசைக்கிளவி என்று அம்மூன்று என்ப - தில்லைச்சொல் விருப்பமுங் காலமும் ஒழிந்துநின்ற பொருண்மையுமென்று சொல்லப்பட்ட அம்மூன்று கூற்றையுடைய தென்று கூறுவர் ஆசிரியர், எ-று. (உ-ம்.) ‘வார்ந்திலங்குவையெயிற்றுச் சின்மொழி யரிவையைப், பெறுகதில்லம்மயானே’ எனப் பெறுதற்கண் உளதாகிய விருப்பங் கூறிற்று. “வருகதில்லம்மவல்லேவருக தில்லம்மவல்லே” என வேந்துவிடு விழுத்தூது ஆங்கு இசைப்ப, நூலரி மாலைசூடிக் காலிற் தமியன் வந்த இது காலங் குறித்தது. “வருகதில்லம்மவெஞ்சேரிசேர” என வந்தக்கால், இன்னது செய்வலென ஒழியிசை குறித்தது. (5) 256. அச்சம் பயமிலி காலம் பெருமையென் றப்பா னான்கே கொன்னைச் சொல்லே. இதுவும் அது. (இ-ள்.) கொன்னைச்சொல் அச்சம் பயமிலி காலம் பெருமை யென்று அப்பால் நான்கே = கொன்னைச்சொல் அச்சப்பொருள் பயமின்மைப் பொருள் காலப்பொருள் பெருமைப்பொரு ளென்று கூறப்பட்ட அக்கூற்று நான்கேயாம், எ-று. (உ-ம்.) “கொன்முனை யிரவூர் போல” என அச்சமுங் “கொன்னே கழிந்தன் றிளமையும்” எனப் பயமின்மையுங், “கொன்வரல் வாடை” எனக் காதலன் நீங்கிய காலம் அறிந்து வருதலையுடைய வாடை எனக் காலமுங், “கொன்னூர் துஞ்சினும்” எனப் பெருமையும் உணர்த்திற்று. (6) 257. எச்சஞ் சிறப்பே யைய மெதிர்மறை முற்றே யெண்ணே தெரிநிலை யாக்கமென் றப்பா லெட்டே யும்மைச் சொல்லே. இதுவும் அது. (இ-ள்.) உம்மைச்சொல் எச்சஞ் சிறப்பே ஐயம் எதிர்மறை முற்றே எண்ணே தெரிநிலை ஆக்கமென்று அப்பால் எட்டே = உம்மென்னுஞ் சொல், எச்சத்தைக் குறிப்பதுஞ் சிறப்பைக் குறிப்பதும் ஐயத்தைக் குறிப்பதும், எதிர்மறையைக் குறிப்பதும், முற்றைக் குறிப்பதும் எண்ணைக் குறிப்பதுந், தெரிநிலையைக் குறிப்பதும், ஆக்கத்தைக் குறிப்பதுமென அக்கூற்று எட்டாம், எ-று. எச்சம் இறந்தது தழீஇயதும் எதிரது தழீஇயதுமென இரு வகைத்து. சாத்தனும் வந்தான் என்னும் உம்மை, கொற்றனும் வந்தான், என எதிரது தழீஇயிற்று. பின் வந்த கொற்றனும் வந்தான் என்பதூஉம், முன் நின்ற சாத்தனும் வந்தான் என்பதனைத் தழுவுதலின், இறந்தது தழீஇயிற்று. இனி, இவ்விரண்டனையும் எதிர்காலந் தழீஇ யினவாக்கி இன்று சாத்தனும்வரும் நாளைக் கொற்றனும் வரும் என்பன எதிரதுதழீஇயின் என்றுமாம். இன்னும் இவ்வெச்சந்தான் யான் கருவூர்க்குச் செல்வல் என்றாற்கு, யானும் அவ்வூர்க்குப் போதுவலென முழுவதூஉந் தழுவுவதும், அவ்வாறு கூறினாற்கு, யானும் உறையூர்க்குப் போதுவலென ஒருபுடை தழுவுவதுமென இருவகைத்தாம். சிறப்பு, உயர்வுசிறப்பும் இழிவுசிறப்புமென இருவகைத்து. “உப்பொடு நெய்பாறாயிர்காயம் பெய்தடினுங், கைப்பறா பேய்ச்சுரையின் காய்” “குறவரு மருளுங்குன்றத்துப் படினே” “ஊர்க்கு மணித்தே பொய்கை” என்பன உயர்வு. அவ்வூர்ப் பூசையும் புலால் தின்னாது என்பது இழிவு. ‘ஒன்று, இரப்பான்போல் எளிவந்தும் சொல்லு முலகம் - புரப்பான் போல்வதோர் மதுகையு முடையன் - வல்லாரை வழிபட் டொன்றறிந் தான் போல் - நல்லார் கட்டோன் றுமடக்கமு முடையன் - னில்லோர் புன்கணி கையிற் றணிக்க - வல்லான் போல்வதோர் வன்மையு முடைய - னன்னா னொருவன்” என்புழி, இன்னானொன்று துணியாமைக்கண் வருதலின் ஐயம். “பொய்கைக்குச் - சேய்த்து மன்றேசிறுகான் யாறே” என்பதும் அது. சாத்தன் வருதற்கு முரியன் என்பது, வாராமைக்கும் உரியனென எதிர்மறையை ஒழிபாக உடைத்தாய் நிற்றலின், எதிர்மறை. இஃது, “அஃறிணை விரவுப்பெய ரியல்புமாருளவே” எனப் பண்புபற்றியும் வரும். இது பிறிதோர் பொருளினைத் தழுவாது ஒரு பொருளின் வினையை மறுத்து நிற்றலின், எச்சத்தின் வேறாயிற்று. மேல் ஆசிரியர், “எதிர்மறை யெச்சம்” என்றமையின் இஃது எச்சத்தின் கூறாம். தமிழ்நாட்டு மூவேந்தரும் வந்தார். ‘யாதுமூரே’ ‘நாளு மன்னான் புகழு மன்னை’ என்பன முற்றும்மை. “நிலனுநீருந்தீயும் வளியும் - மாகாயமுமெனப் பூதமைந்து” என்பது எண். “மண்டிணிந்த நிலனுநிலனேந்திய விசும்பும், விசும்பு தைவரு வளியும்” என்பதும் அது. ‘இருநில மடிதோய்தலிற் றிருமகளுமல்ல - ளரமகளு மல்லளிவள் யாராகும்” என்பது திருமகளோ அரமகளோ! என ஐயுறாது ஆராய்தற்கண் வருதலிற் தெரிநிலை. “ஐதேய்ந்தன்று பிறையுமன்று - மைதீர்ந்தன்று மதியுமன்று - வேயமன் றன்று மலையுமன்று - பூவமன் றன்று சுனையுமன்று’ என்பதும் அது. நெடியனும் வலியனு மாயினான் என்பது ஆக்கம். “செப்பே வழீஇயினும் வரைநிலை யின்றே” என்பது, இலக்கண மாக்கிக்கோடல் குறித்தமையின் ஆக்கமுமாம். (7) 258. பிரிநிலை வினாவே யெதிர்மறை யொழியிசை தெரிநிலைக் கிளவி சிறப்பொடு தொகைஇ யிருமூன் றென்ப வோகா ரம்மே. இதுவும் அது. (இ-ள்.) பிரிநிலை வினாவே எதிர்மறை ஒழியிசை தெரிநிலைக் கிளவி சிறப்பொடு தொகைஇ இரு மூன்று என்ப ஓகாரம்மே - பிரிநிலைப் பொருண்மை, வினாப்பொருண்மை, எதிர்மறைப்பொருண்மை, எஞ்சி நின்ற சொற்பொருண்மை, ஆராயும் நிலைமையை உடைய பொருண்மை என்கின்ற இவற்றை மிகுதிப் பொருண்மையோடே தொகுத்து, ஓகாரப் பொருண்மை ஆறு என்று கூறுவர் ஆசிரியர், எ-று. (உ-ம்.) ‘யானோ தேறேனவர் பொய்வழங் கலரே.’ இது தேறுவார் பிறரிற் பிரித்தலிற், பிரிநிலை. சாத்தனுண்டானோ இது வினா. யானோ கொள்வேன் இஃது எதிர்மறை. கொளலோ கொண்டான்-இது, கொண்டுய்யப் போகலானாயினான் என்றலின், ஒழியிசை. திருமகளோ அல்லள்; அரமகளோ அல்லள் இவள் யார் என்பது தெரிநிலை. “ஓஒ வுவமை யுற்றழ்வின்றி யொத்ததே!” இது மிகுதி உணர்த்தலிற் சிறப்பு. “மாறுகொளெச்சமும் வினாவுமையமும்” என்னுஞ் சூத்திரத்தால் ஐயமுங் கொண்டார். அது, பத்தோ, பதினொன்றோ! என வரும். (8) 259. தேற்றம் வினாவே பிரிநிலை யெண்ணே யீற்றசை யிவ்வைந் தேகா ரம்மே. இது பெரும்பான்மை பொருள்படுமாறுஞ் சிறுபான்மை அசை நிலையாமாறுங் கூறுகின்றது. (இ-ள்.) தேற்றம் வினாவே பிரிநிலை எண்ணே ஈற்றசை இவ்வைந்து ஏகாரம்மே - தெளிவுப் பொருண்மை, வினாப் பொருண்மை, பிரிநிலைப் பொருண்மை, எண்ணுப்பொருண்மை, ஈற்றசையாதலென இவ்வைந்து வகைப்படும் ஏகாரம், எ -று. (உ-ம்.) உண்டே மறுமை! நீயேயுண்டாய் அவருளிவனே கள்வன். ‘நிலனே நீரே தீயே வளியே’. ‘கடல்போ றோன்றல் காடிறந் தோரே’ என வரும். ஈற்றசை என்றதனைச் செய்யுள் ஈற்றிற்கணன்றி, ‘வாடா வள்ளியங் காடிறந் தோரே’ எனச் சொல்லின் ஈற்றினுங் கொள்க. யானே கொண்டேன் என்புழி, நீயே கொண்டாயென்னும் எதிர்மறைப் பொருள் தருதல், ‘மாறுகொளெச்சமும் வினாவும்’ என்பதனாற் கொள்க. (9) 260. வினையே குறிப்பே யிசையே பண்பே எண்ணே பெயரோ டவ்வறு கிளவியுங் கண்ணிய நிலைத்தே யெனவென் கிளவி. இது பொருள்படுமாறு கூறுகின்றது. (இ-ள்.) வினையே குறிப்பே இசையே பண்பே எண்ணே பெயரோடு அவ்வறு கிளவியுங் கண்ணிய நிலைத்தே என என் கிளவி - வினைச் சொல்லின் பொருண்மையும், குறிப்பாய் வரும் உரிச்சொல்லின் பொருண்மையும், இசைக்கண் வரும் உரிச்சொல்லின் பொருண்மையும், பண்பின்கண் வரும் உரிச்சொல்லின் பொருண்மையும், எண்ணுப் பொருண்மையும், பெயர்ப் பொருண்மையோடே கூடி அவ்வாறு பொருண்மையுந் தான் இடைநின்று கருதிப் பின்வருஞ் சொல்லோடு இயைவிக்கும் நிலைமையை யுடைத்து என என்னுஞ் சொல், எ-று. (உ-ம்.) கார் வருமெனக் கருதி நொந்தாள் “துண்ணெனத் துடித்தது மனம்” ஒல்லென வொலித்து வெள்ளென விளர்த்தது; நிலனென நீரெனத் தீயென வளியென; ‘அழுக்கா றெனவொரு பாவி’ என வரும். ‘நெடு நீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து’ என்பதும் இசை. (10) 261. என்றென் கிளவியு மதனோ ரற்றே. இதுவும் அது. (இ-ள்.) என்று என் கிளவியும் அதனோரற்றே - என்று என்னும் இடைச்சொல்லும் என என்பதுபோல அவ்வாறு பொருளுங் குறித்து வரும், எ-று. (உ-ம்.) ‘நரைவருமென் றெண்ணி’ `விண்ணென்று விசைத்தது’ ‘ஒல்லென் றொலிக்கு மொலிபுன லூரற்கு’ பச்சென்று பசத்தது, நிலனென்று நீரென்று, பாரியென் றொருவனுளன், என வரும். (11) 262. விழைவின் றில்லை தன்னிடத் தியலும். இது, முற்கூறிய தில் லென்பதற்குப் புறனடை கூறுகின்றது. (இ-ள்.) விழைவின் தில்லை தன்னிடத்து இயலும் - ‘அம்மூன்றென்ப தில்லைச் சொல்லே’ என்ற மூன்றனுள் விழைவின்கண் வரும் தில்லை தன்மைக்கண் அல்லது வாராது, எ-று. (உ-ம்.) முற்காட்டியது. எனவே, ஏனைய, எல்லா விடத்திற்கும் உரியவாயின. (12) 263. தெளிவி னேயுஞ் சிறப்பி னோவு மளபி னெடுத்த விசைய வென்ப. இஃது, ஏகார ஓகாரங்கட்குப் புறனடை கூறுகின்றது. (இ-ள்.) தெளிவின் ஏயுஞ் சிறப்பின் ஓவும் அளபின் எடுத்த இசைய என்ப - முற்கூறிய தெளிவின்கண் வரும் ஏகாரமுஞ் சிறப்பின்கண் வரும் ஓகாரமும் இரண்டு மாத்திரையின் மிக்கு மூன்று மாத்திரையினை யுடைய என்று கூறுவர் ஆசிரியர், எ-று. (உ-ம்.) முற்காட்டின. (13) 264. மற்றென் கிளவி வினைமாற் றசைநிலை யப்பா லிரண்டென மொழிமனார் புலவர். இது, பொருள்படுமாறும் அசைநிலையாமாறுங் கூறுகின்றது. (இ-ள்.) மற்று என் கிளவி வினைமாற்று அசைநிலை அப்பால் இரண்டென மொழிமனார் புலவர் - மற்று என்னுஞ் சொல் முன் சொல்கின்றது ஒழிய இனி வேறுறொன்று என்னும் பொருண்மையும், அசைநிலையாதலும் என்னும் அக்கூற்று இரண்டாம் என்று கூறுவர் புலவர், எ-று. (உ-ம்.) இனி மற்றொன்றுரை, ‘மற்றறிவா நல்வினை யாமிளையம்’ ‘மற்றுங் கூடும் மனைமடி துயிலே’ எனத் தொழிலுங் காலமும் இடமும்பற்றி வரும். ‘அதுமற் றவலங் கொள்ளாது’ என்பது அசைநிலை. உரையாடாநின்றுழிப் பொருள் குறியாது மற்றோ எனவும் அசை நிலை வரும் என்பாரும் உளர். (14) 265. எற்றென் கிளவி யிறந்த பொருட்டே. இது, பொருள்படுமாறு கூறுகின்றது. (இ-ள்.) எற்று என் கிளவி இறந்த பொருட்டே - எற்று என்னுஞ் சொல் ஒன்றனிடத்து நின்றும் ஒன்று போயிற்று என்னும் பொருண்மை உணர்த்துதலுடைத்து, எ-று. (உ-ம்.) ‘எற்றெனுடம்பினெழினலம்.’ இஃது, என் நலம் இறந்ததென நின்றது. ‘எற்றேற்றமில்லாருள் யானேற்ற மில்லாதேன்’ என்பதூஉம், இதுபொழுது துணிவில்லாருட் துணிவில்லாதேன் யான், என்று துணிவிறந்ததென்பது பட நின்றது. (15) 266. மற்றைய தென்னுங் கிளவி தானே சுட்டுநிலை யொழிய வினங்குறித் தன்றே. இதுவும் அது. (இ-ள்.) மற்றையது என்னும் கிளவிதானே - மற்றையது என்ற பெயர்க்கு முதனிலையாய் வரும் மற்றை என்னும் ஐகார ஈற்று இடைச்சொல், சுட்டுநிலை ஒழிய இனம் குறித்தன்றே - ஒருவன் முன்னர்க் கருதப்பட்ட பொருளொழிய அதன் இனப்பொருளைக் கருதி நிற்கும், எ-று. (உ-ம்.) ஆடை கொணர்ந்தவழி, அவ்வாடை வேண்டாதார், மற்றையது கொண்டு வா என்றால், அதற்கு இனமாகிய பிற ஆடை குறித்து நிற்கும். இனிச் சிறுபான்மை மற்றையாடை எனத் தானேயும் வரும். அஃது, அவன் என்னுந் தொடக்கத்தனவற்றிற்கு மற்றையஃது, மற்றையவன் என அவ்விடைச்சொல் முதனிலையாய் வருதலின், மற்றை என இடைச்சொல்லைப் பிரித்தோதாது, மற்றையதென ஒன்றாக ஓதினார். (16) 267. மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும். இதுவும் அது. (இ-ள்.) மன்ற என் கிளவி தேற்றஞ் செய்யும் - மன்ற என்னுஞ் சொல் தெளிவுப்பொருண்மை உணர்த்தும், எ-று, (உ-ம்.) ‘மடவை மன்ற வாழிய முருகே!’ என மன்ற அறியாமையையே தெளிவித்தது. (17) 268. தஞ்சக் கிளவி யெண்மைப் பொருட்டே. இதுவும் அது. (இ-ள்.) தஞ்சக் கிளவி எண்மைப் பொருட்டே - தஞ்சம் என்னுஞ் சொல் எளிது என்னும் பொருண்மையை உடைத்து எ-று. (உ-ம்.) ‘முரசுகெழு தாயத் தரசே தஞ்சம்’ எனத் தஞ்சம் அரசு கொடுத்தல் எளிதென நின்றது. (18) 269. அந்தி லாங்க வசைநிலைக் கிளவியென் றாயிரண் டாகு மியற்கைத் தென்ப. இது, பொருள்படுமாறும் அசைநிலையுங் கூறுகின்றது. (இ-ள்.) அந்தில் ஆங்கு அசைநிலைக் கிளவி என்று ஆயிரண்டு ஆகும் இயற்கைத்து என்ப - அந்தில் என்னுஞ் சொல் ஆங்கு என்னும் இடப்பொருள் உணர்த்துதலும் அசைநிலைச் சொல்லாதலும் என்னும் அவ்விரண்டு கூறாம் இயற்கையை யுடைத்து என்று கூறுவர் புலவர், எ-று. (உ-ம்.) ‘வருமே சேயிழையந்தில்,’ ‘அந்திற் கச்சினன் கழலினன்’ என இடமும் அசைநிலையுமாய் நின்றது. (19) 270. கொல்லே யையம். இது, பொருள்படுமாறு கூறுகின்றது. (இ-ள்.) கொல்லே ஐயம் - கொல் என்னுஞ் சொல் ஐயப் பொருண்மையை உணர்த்தும், எ-று. (உ-ம்.) ‘யாதுகொன் மற்றவர் நிலையே!’ ‘.தனள வுண்டுகொன் மதிவல் லோர்க்கே!’ எனத்துணி வின்கண் ஐயஞ் சிறிது நினைத்தலும் ஒன்றென முடித்தலாற் கொள்க. (20) 271. எல்லே யிலக்கம். இதுவும் அது (இ-ள்.) எல்லே இலக்கம் - எல் என்னுஞ் சொல் விளங்குதற் பொருண்மை உணர்த்தும், எ-று. (உ-ம்.) ‘எல்வளை யெம்மொடு நீ வரின்’ என வரும். (21) 272. இயற்பெயர் முன்ன ராரைக் கிளவி பலர்க்குரி யெழுத்தின் வினையொடு முடிமே. இஃது, ஆர் என்னும் இடைச்சொன் முடிபு கூறுகின்றது. (இ-ள்.) இயற்பெயர் முன்னர் ஆரைக்கிளவி - இரு திணைக்கும் இயலும் பெயர்க்கும் அஃறிணை இருபாற்கும் இயலும் பெயர்க்கும் முன்னர் வரும் ஆர் என்னும் இடைச்சொல், பலர்க்கு உரி எழுத்தின் வினை யொடு முடிமே - ரஃகான் ஒற்றினை ஈறாக உடைய வினைச்சொல்லான் முடியும், எ-று. (உ-ம்.) பெருஞ்சேந்தனார் வந்தார்; முடவனார் வந்தார்; முடத்தாமக் கண்ணியார் வந்தார்; தந்தையார் வந்தார் எனவும், கிளியார் வந்தார் எனவும் வரும். பெரும்பான்மை இயற்பெயர் கூறவே, நம்பியார் வந்தார்; நங்கையார் வந்தார் எனச் சிறுபான்மை உயர்திணைப்பெயர் முன்னரும் வருதல் ஒன்றென முடித்தலாற் கொள்க. இவை தாம் ரகர ஈற்றுப் பெயரன்மையின், விளியேற்கும் இடத்து இகர ஈறும் ஐகார ஈறுமாய் நின்றே விளியேற்கு மென்று உணர்க. ஒருமைப்பெயர்நின்று ஆரைக்கிளவியை ஏற்றலின், இவை ஒருவரைக் கூறும் பன்மைக்கிளவியின் வேறாயின. (22) 273. அசைநிலைக் கிளவி யாகுவழி யறிதல். இது, மேலதற்குப் புறனடை. (இ-ள்.) அசைநிலைக் கிளவி ஆகுவழி அறிதல் - அவ் ஆரென்னுஞ் சொல் அசைநிலைச் சொல்லாம் இடம் அறிக, எ-று. `ஆகுவழியறிதல்’ என்றதனான், உம்மை முன்னரும் உம் ஈற்று வினை முன்னரும் வருதல் கொள்க. (உ-ம்.) ‘பெயரினாகிய தொகையுமாருளவே.’ ‘எல்லா வுயிரொடுஞ் செல்லுமார் முதலே’ என வரும். (23) 274. ஏயுங் குரையு மிசைநிறை யசைநிலை யாயிரண் டாகு மியற்கைத் தென்ப. இஃது, இசைநிறையும் அசைநிலையுங் கூறுகின்றது. (இ-ள்.) ஏயுங் குரையும் இசைநிறை அசைநிலை ஆயிரண்டு ஆகும் இயற்கைத்து என்ப - ஏ என்னும் இடைச்சொல்லுங் குரை என்னும் இடைச்சொல்லும் இசைநிறையும் அசைநிலையுமென ஓரோவொன்று அவ்விரண்டு இயல்பினை யுடைத்து என்று கூறுவர் ஆசிரியர், எ-று. (உ-ம்.) ‘ஏஎ யிஃதொத்தன் நாணிலன் தன்னொடு’ இஃது இசைநிறை. ஏஎ யெனச்சொல்லியது - இஃது அசைநிலை. ‘அளிதோ தானே யதுபெறலருங் குரைத்தே’ இஃது இசைநிறை. ‘பல்குரைத் துன்பங்கள் சென்று படும்.’ இஃது அசைநிலை. தேற்றேகாரம் முதலியன போலச் சார்ந்த மொழியோடு ஒன்றுபட்டு இசையாது தொடர்மொழி முதற்கட் பிரிந் திசைத்தலின் வேறு கூறினார். (24) 275. மாவென் கிளவி வியங்கோ ளசைச்சொல் இஃது, அசைநிலை கூறுகின்றது. (இ-ள்.) மா என் கிளவி வியங்கோள் அசைச்சொல் - மா என்னும் இடைச்சொல் பெரும்பான்மை வியங்கோளைச் சார்ந்து அசைநிலையாய் வரும், எ-று. (உ-ம்.) ‘புற்கை யுண்கமா கொற்கை யோனே!’ என வரும். (25) 276. மியாயிக மோமதி யிகுஞ்சின் னென்னு மாவயி னாறு முன்னிலை யசைச்சொல். இதுவும் அது. (இ-ள்.) மியா இக மோ மதி இகுஞ் சின் என்னும் ஆவயின் ஆறும் - மியா, இக, மோ, மதி, இகும், சின் என்று சொல்லப்பட்ட அவ்விடத்து இடைச்சொல் ஆறும், முன்னிலை அசைச் சொல் - முன்னிலைப் பொருளை உணர்த்தும் அசைச்சொல்லாம் எ-று. (உ-ம்.) கேண்மியா, சென்மியா எனவும், ‘கண்பனி யான்றிக வென்றி தோழி!’ எனவும், ‘காமம் செப்பாது கண்டது மொழிமோ.’ எனவும், ‘உரைமதி வாழியோ வலவ!’ எனவும், ‘மெல்லம் புலம்ப கண்டிகும்’ எனவும் (இது காணென்றவாறு), ‘காப்பும் பூண்டிசின் கடையும் போகல்.’ எனவும் வரும். (26) 277. அவற்றுள், இகுமுஞ் சின்னு மேனை யிடத்தொடுந் தகுநிலை யுடைய வென்மனார் புலவர். இது, மேலதற்குப் புறனடை கூறுகின்றது. (இ-ள்.) அவற்றுள் இகுமுஞ் சின்னும் - முற்கூறிய ஆறனுள் இகுமுஞ் சின்னும், ஏனை இடத்தொடுந் தகுநிலை உடைய என்மனார் புலவர் - ஒழிந்த தன்மைச்சொல்லொடும் படர்க்கைச் சொல்லொடும் பொருந்தும் நிலைமையுடைய என்று கூறுவர் புலவர், எ-று. (உ-ம்.) ‘கண்டிகுமல்லமோ!’ ‘கண்ணும் படுமோ வென்றிசின் யானே, எனத் தன்மைக்கண்ணும், ‘புகழ்ந்திகு மல்லரோ பெரிதே’. ‘யாரஃ தறிந்திசி னோரே’ எனப் படர்க்கைக்கண்ணும் வந்தன. முருகாற்றுப்படையுள், ‘விளிவின், றிருணிற முந்நீர் வளைஇய வுலகத், தொருநீ யாகித் தோன்ற விழுமிய, பெறலரும் பரிசினல்குமதி பலவுடன்........ மலைகிழ வோனே!’ என மதி படர்க்கைக்கண்ணும் வந்ததனைத் ‘தகுநிலை யுடைய’ என்றதனானாதல், ‘அவ்வச் சொல்லிற் கவையவை’ என்னுஞ் சூத்திரத்தானாதல் அமைத்துக் கொள்க. அன்றி மதியை அறிவாக்கிப் பல அறிவுடனே நீயொருவனேயாகப் பரிசில் நல்கும் எனப் பொருள் கூறுவாரும் உளர். ‘ஊனு மூணு முனையின்’ என்னும் புறப்பாட்டினுள், ‘சென்மோ பெரும வெம்விழைவுடை நாட்டென’ என்பதனையுந் தன்மைக்கண் மோவருமென இவ்வாறு அமைத்தலும் ஒன்று. அன்றிப் பெரும, எம் விழைவுடை நாட்டே நீ செல்லென்று சுற்றத்தார் தலைவனை நோக்கிக் கூற, அப் பொருநனும் பாட்டுடைத் தலைவனை நோக்கிப் பின்னுங் கூறினானாகப் பொருள் கூறுதலும் ஒன்று. (27) 278. அம்ம கேட்பிக்கும். இது, பொருள்படுமாறு கூறுகின்றது. (இ-ள்.) அம்ம கேட்பிக்கும் - அம்ம என்னுஞ் சொல் யான் கூறுகின்றதனைக் கேளென்று ஒருவர்க்குக் கேட்பிக்கும் பொருண்மையினை உணர்த்தி நிற்கும், எ-று. சொல்லொடு பொருட்கு ஒற்றுமை கருதிக் கேட்பிக்கும் என்றார். (உ-ம்.) ‘அம்ம வாழி தோழி!’ (ஐங்குறு. 31: குறுந். 77) ‘அம்மவென்னு மசைச்சொனீட்டம்’ என்புழியும் பொருள் தந்தே நிற்குமாறு கூறியவாறு ஆண்டு உணர்க. (28) 279. ஆங்க வுரையசை. இதுவும் அது. (இ-ள்.) ஆங்க உரையசை - ஆங்க என்னும் இடைச்சொல் கட்டுரைக் கண்ணே அசைத்த நிலையாய் வரும், எ-று. கட்டுரை-புனைந்துரை. அசைத்தல் - சேர்த்துதல். (உ-ம்.) ‘ஆங்கக் குயிலும் மயிலுங் காட்டிக், கேசவனை விடுத்துப் போக்கி யோளே’. என்புழி அங்ஙனேயெனப் புனைந்துரைத்து நின்றது. சிறிது பொருளுணர்த்துவனவற்றை உரையசையென்றும் பொருளுணர்த்தாது சொற்களை அசைத்து நிற்பனவற்றை அசைநிலையென்றுங் கூறுதல் ஆசிரியர் கருத்தாதலை இரண்டு அதிகாரத்துங் கண்டு கொள்க. (29) 280. ஒப்பில் போலியு மப்பொருட் டாகும். இதுவும் அது. (இ-ள்.) ஒப்பில் போலியும் அப்பொருட்டு ஆகும் - ஒன்றற்கொன்று ஒக்குமென்னும் பொருள் தன்கணின்றி வரும் ‘போலி’ யென்னுஞ் சொல்லும் அக்கட்டுரைக்கண்ணே அசைத்த நிலையாகிய பொருளையுடைத்தாய் வரும், எ-று. அப்பொருட்டு எனவே, ஆங்கவும் பொருள் தருதல் பெற்றாம். (உ-ம்.) ‘மங்கல மென்பதோரூருண்டு போலும்!’ ‘நெருப்பழற் சேர்ந்தக்கா னெய்போல்வதூஉ, மெரிப்பச்சுட் டெவ்வநோயாக்கும்’ எனப் போலும் என்னும் இடைச்சொல் ஊரையும் நெய்யையும் புனைந்து நின்றவாறு காண்க. (30) 281. யாகா, பிறபிறக் கரோபோ மாதென வரூஉ மாயேழ் சொல்லு மசைநிலைக் கிளவி. இஃது, அசைநிலை கூறுகின்றது. (இ-ள்.) யா கா பிற பிறக்கு அரோ போ மாது என வரூஉம் ஆயேழ் சொல்லும் அசைநிலைக் கிளவி - யா, கா, பிற, பிறக்கு, அரோ, போ, மாது என்று சொல்லவருகின்ற அவ்வெழு சொல்லுந் தாஞ் சார்ந்த சொல்லை அசைத்துநிற்கும் நிலைமையை யுடைய சொல்லாம், எ-று. (உ-ம்.) யாபன்னிருவர் மாணாக்கர் உளர் அகத்தியனார்க்கு எனவும், இன்னுந், ‘தோழியா சுவாகதம் போது கவீங்கென’ என்று பாடமாயின் அதுவும் இதற்குதாரணம். ‘புறநிழற் பட்டாளோ விவளிவட் காண்டிகா’ எனவும், ‘தான்பிற வரிசை யறிதலிற்றன்னுந் தூக்கி’ எனவும், ‘நசைதர வந்தோர் நசைபிறக் கொழிய’ எனவும், ‘நோதக விருங்குயி லாலுமரோ’ எனவும், ‘பிரியின் வாழா தென்போ தெய்ய’ எனவும், ‘விளிந்தன்று மாதவர்த் தெளிந்தவென் நெஞ்சே’ எனவும் வரும். (31) 282. ஆக வாக லென்ப தென்னு மாவயின் மூன்றும் பிரிவி லசைநிலை. இது, தாஞ் சார்ந்து நின்ற சொல்லின் பொருண்மையை உணர்த்திநிற்கும் இடைச்சொற்களைக் கூறுகின்றது. (இ-ள்.) ஆக ஆகல் என்பது என்னும் ஆவயின் மூன்றும் - ஆக, ஆகல், என்பது என்று சொல்லப்படுகின்ற அவ்விடத்து மூன்றும், பிரிவில் அசைநிலை - தாஞ் சார்ந்த சொற்களின் பொருள்களைப் பிரிதலின்றி உணர்த்தும் அசைநிலையாம். (உ-ம்.) ‘காரெதிர் கானம் பாடினே மாக’ ‘இனைத லானாளாக’ ‘சொல்லற் பாணி நின்றன்னாக’ எனச் செயவெ னெச்சம் முற்றாய்த் திரிவுழி ஆகவென்னும் இடைச்சொல் வந்து அவற்றின் பொருளே உணர்த்திச் செயவெனெச்சமாய் நின்றது. இவ்வினையெச்சமுற்று வினைமுதலைக் கொள்ளும்வழி, ஆகலென்னும் இடைச் சொல்லைப் பெற்று நிற்கும். ‘அருளா யாகலோ கொடிதே’ ‘தன் பெய ராகலினாணி’ ‘அனையை யாகன் மாறே’ என ஆகலென்னும் வினைக்குறிப்புச்சொல் சார்ந்து நின்ற சொற்பொருளையே உணர்த்தி நின்றன. தெரிநிலைக்குங் குறிப்பிற்கும் உரிய இவ்விரண்டு இடைச்சொற்களுஞ் சிறுபான்மையாகலின், வினையியற்கண் எடுத்து ஓதாராயினார். ‘நடுங்குநோய் தீர்க்குநின் குறிவாய்த்தா ளென்பதோ துறந்ததை’ ‘ஏறிதிரை யிமிழ்கான லெதிர்கொண்டா ளென்பதோ துறந்ததை’ என்புழி என்பதென்றது, என்று சொல்லப்படுவதென்னும் பொருள் தந்து நில்லாது, வாய்த்தாள். எதிர் கொண்டாள் என்னுஞ் சொற்கள் உணர்த்திய செய்ந்நன்றியைத் தானும் உணர்த்திநின்றவாறு காண்க. இவை தாஞ் சார்ந்த சொல்லை அசைத்தே நிற்கு மென்றலிறி பிரிவிலசைநிலை என்றார். இங்ஙனம் நில்லாது, வழக்கின்கண் ஆக ஆக என அடுக்கி வந்து, உடம்படாமையும் ஆதரமின்மையுமாகிய பொருள் தந்து நிற்குமென்றல் அசைநிலைக்கு ஆகாமையின், அவ்வாறு கூறுதல் பொருளன்மை உணர்க. (32) 283. ஈரள பிசைக்கு மிறுதியி லுயிரே யாயிய னிலையுங் காலத் தானு மளபெடை நிலையுங் காலத் தானு மளபெடை யின்றித் தான்வரு காலையு முளவென மொழிப பொருள்வேறு படுதல் குறிப்பி னிசையா னெறிப்படத் தோன்றும். இது, பொருள் வேறுபடுமாறு கூறுகின்றது. (இ-ள்.) ஈரளபு இசைக்கும் இறுதியில் உயிரே - இரண்டு மாத்திரையை இசைக்கும் ‘உயிர்ஒள வெஞ்சிய விறுதியாகும்,’ என்றதனான் மொழிக்கு ஈறாகாதென்ற ஒளகாரம், ஆயியல் நிலையும் காலத்தானும் ‘கவவோ டியையின் ஒளவு மாகும்,’ என்ற இயல்பின் கண்ணே கௌ, வெள என மொழிக்கு ஈறாய் நிற்குங் காலத்துக்கண்ணும் எவ்வாறு நிற்குமெனின்; அளபெடை நிலையும் காலத்தானும் அளபெடை இன்றித் தான் வரு காலையும் உள என மொழிப பொருள் வேறுபடுதல் - அவை அளபெடுத்து நிற்குங் காலத்தினும் அவை அளபெடாது தானே வந்துநிற்குங் காலத்தினும் பொருள் வேறுபடுதல் உள என்று கூறுவர் ஆசிரியர்; குறிப்பின் இசையான் நெறிப்படத் தோன்றும் - அப்பொருள் வேறுபாடுதான் சொல்லுவான் குறிப்பினான் உளதாம் ஓசை வேறுபாட்டான் வழிப்படப் புலப்படும், எ-று. முன்னர்நின்ற உம்மை சிறப்பும்மை. பின்னர் நின்ற இரண்டும் எண்ணும்மை. ஆசிரியர் முன்னர்க் கூறியதனை ஈண்டும் இறுதியிலுயிரே என்று ஒருதலைமொழியென்னும் உத்தியாகக் கூறினமையானும், உரையாசிரியரும், ‘நெட்டெழுத் தேழே யோரெழுத் தொரு மொழி’ என்புழி ஒளகாரத்தினை உதாரணங் காட்டாது, ‘கவவோடியையின்’ என்பதனாற் கௌ வெள என உதாரணங் காட்டினமையானும், ஈண்டு, ‘ஆயியனிலையுங்காலத் தானுமள பெடையின் றித்தான் வருகாலையும்’ என்னும் இரண்டற்கும் ஒளஉ, ஒள என்று உயிரையே உதாரணமாகக் காட்டுதல் மாறுகொளக் கூறலாமென்று உணர்க. (உ-ம்.) கௌஉ என அளபெடுத்தவழிக் கைக்கொண்டேவிடு எனத் துணிவுங், கௌ என அளபெடாதவழி நினக்குக் கருத்தாயின், கைக்கொள்ளென ஐயமும் உணர்த்தும். இது வெள என்பதற்கும் ஒக்கும். இனி, ஒளகாரம் அளபெடுத்துழி உகர ஈறாயே நிற்றலின், ஒளஉ என உகர ஈறாகிய ஒளகாரமும் ஈண்டுக்கோடும். இது வியப்புணர்த்தும் அளபெடா ஒளகார மாகாதென்று உணர்க. (33) 284. நன்றீற் றேயு மன்றீற் றேயு மந்தீற் றோவு மன்னீற் றோவு மன்ன பிறவுங் குறிப்பொடு கொள்ளும். இதுவும் அது. (இ-ள்.) நன்று ஈற்று ஏயும் - நன்றினது ஈற்றின்கண் வந்த ஏயும், அன்று ஈற்று ஏயும் - அன்றினது ஈற்றின்கண் வந்த ஏயும், அந்து ஈற்று ஓவும் - அந்தினது ஈற்றின்கண் வந்த ஓவும், அன் ஈற்று ஓவும் - அன்னினது ஈற்றின்கண் வந்த ஓவும், அன்ன பிறவுங் குறிப்பொடு கொள்ளும் - அவை போல்வன பிறவுஞ் சொல்லுவான் குறிப்பொடு பொருள் உணர்த்தி நிற்கும், எ-று. ஒருவன், ‘கொலை, களவு கட் காமம் பொய் என்பனவற்றை விரும்புக’, என்றவழி, அவற்றை விரும்புதல் நன்றே என்றால், மேவாமைக் குறிப்பு உணர்த்தும். ‘நின்றே யெறிப பறையினை-நன்றேகாண்’ என்பது, தீதென்னுங் குறிப்பு உணர்த்தும். இஃதூ ழன்றே! என்றால், அஃது இங்ஙன் நுகர்வியாதொழியுமோ என்னுங் குறிப்பு உணர்த்தும். ‘அந்தோவெந்தை யடையாப் பெயரில்’ ‘அன்னோ! என்னாவதுகொல் தானே!’ என்பன இரக்கக்குறிப்பு உணர்த்தும். இவ்வேகார ஓகாரங்கள் பல சொல்லோடு அடுத்துவாராது இச்சொற்களையே அடுத்துப் பொருள்வேறுபட்டு நிற்றலின், அவற்றைப் பெயர் தந்து வேறு கூறினார். அன்னபிறவும் என்றதனான், ‘அன்னாவலமரு மாருயிரும்’ என்புழி அன்னா இரக்கக்குறிப்பு உணர்த்துதல் கொள்க. இதனை ஓகாரம் ஆகாரமாய்த் திரிந்ததென்றலுமாம். ‘ஏஎயிவ ளொருத்தி பேடியோ வென்றார்’ என ஏகாரத்தின் பின்வந்த ஏ இழிபுணர்த்துதலும் ‘அஆ விழந்தான்!’ எனவும், ‘ஐயாவென்னையா வெனையாவகன்றனையே!’ எனவும், ஆவம்மா வம்மாவென் னம்மாவகன்றனையே! எனவும் ஆகாரம் இரக்கக்குறிப்பு உணர்த்துதலும், பிறவுங் கொள்க. (34) 285. எச்ச வும்மையு மெதிர்மறை யும்மையுந் தத்தமுண் மயங்கு முடனிலை யிலவே. இது, முற்கூறிய உம்மைகள் மயங்கும் என்கின்றது. (இ-ள்.) எச்ச உம்மையும் - எச்சப் பொருண்மையினை யுடைய உம்மையும், எதிர்மறை உம்மையும் - அதனை முடிக்கவரும் எதிர்மறைப் பொருண்மையினையுடைய உம்மையும், தத்தமுள் மயங்கும்; - தொடராய் வந்து தம்முள் மயங்கும்; உடனிலை இலவே - அங்ஙனம் மயங்கிற்றேனும் தன்வினையொன்றிய முடிபு கொள்ளா, எ-று. (உ-ம்.) ‘சாத்தனும் வந்தான்; இனிக் கொற்றனும் வரினும் வரும்,’ என்புழிச் ‘சாத்தனுங் கொற்றனும்’ என்னும் எச்ச வும்மைகள் வரினுமென்னும் எதிர்மறையும்மையொடு தொடர்ந்து நின்று ஒரு வினைகொள்ளாது, இறப்பும் எதிர்வும் பற்றி வரும் வேறு வினை கொண்டவாறு காண்க. இங்ஙனம் உலக வழக்கு உண்மையானும், ஆசிரியர் ‘மயங்கியுடனிலையில,’ என்னாது, ‘மயங்குமுடனிலையில,’ எனச் சூத்திரஞ் செய்தமை யானும், இதுவே பொருளென்று உணர்க. இவ்விரண்டு உம்மையும் எச்சமாதலின், இவற்றிற்கே மயக்கம் உளதென்று கூறினார். ‘ஒன்றென முடித்தல்’ என்பதனான், ‘வடுகரசரும் வந்தார்; இனித் தமிழ்நாட்டு மூவேந்தரும் வரினும் வருவர்,’ என எச்ச வும்மையொடு முற்றும்மை தொடர்ந்து வேறு வினைகோடலுங் கொள்க. (35) 286. எஞ்சுபொருட் கிளவி செஞ்சொ லாயிற் பிற்படக் கிளவார் முற்படக் கிளத்தல். இஃது, எச்சவும்மைக்கட் சொல்லுதல் வகைமை கூறுகின்றது. (இ-ள்.) எஞ்சு பொருட்கிளவி - எச்ச வும்மையாற் தழுவப்படும் எஞ்சுபொருட் கிளவி, செஞ்சொல் ஆயிற் பிற்படக் கிளவார் முற்படக் கிளத்தல் - உம்மையில் சொல்லாயின் அவ்வும்மையில் சொல்லை அவ்வும்மைத் தொடர்க்குப் பின்சொல்லாது முன்சொல்லுக, எ-று. (உ-ம்.) சாத்தன் வந்தான் கொற்றனும் வந்தான். ‘அடகுபுலால் பாகு பாளிதமுமுண்ணான், கடல்போலுங் கல்வி யவன்.’ எனவரும். பிற்படக் கிளப்பிற் பொருள் கொள்ளாமை காண்க. ‘செஞ்சொலாயின் முற்படக் கிளக்க, எனவே, ‘உம்மையோடு வரிற் பிற்படக் கிளக்க,’ என்றவாறாம். (36) 287. முற்றிய வும்மைத் தொகைச்சொன் மருங்கி னெச்சக் கிளவி யுரித்து மாகும். இது, முற்றும்மை எச்சவும்மையாம் பொருளும் தருமென வழுவமைக்கின்றது. (இ-ள்.) முற்றிய உம்மைத் தொகைச்சொல் மருங்கின் - முற்றும்மை அடுத்து நின்ற பெயரும் வினையுஞ் சார்ந்த சொல்லிடத்து, எச்சக்கிளவி உரித்து மாகும் - எச்சச்சொல் உரித்துமாகும், எ-று. எனவே எச்சப்பொருள் குறியாது நிற்றலே பெரும்பான்மை. ஏற்புழிக் கோடலால் இஃது எதிர்மறைக்கண்ணதெனக் கொள்க. (உ-ம்.) பத்துங் கொடால் அனைத்துங் கொடால் என்னும் முற்றும்மைகள், சிலகிடக்கக் கொடு என எச்சப்பொருள் உணர்த்தி நின்றவாறு காண்க. தொகைச்சொல்’ என்றதனானே, ‘எல்லாரும் வாராரெனப் பொருட்பெயர்க்கண்ணுங் கொள்க. ‘பத்துங் கொடு; பிறவுங் கொடு,’ என்பது கருத்தாயின், அஃது எச்ச வும்மையாம். (37) 288. ஈற்றுநின் றிசைக்கு மேயெ னிறுதி கூற்றுவயி னோரள பாகலு முரித்தே. இஃது, ஈற்றசை யேகாரத்திற்கு வேறோர் இலக்கணங் கூறுகின்றது. (இ-ள்.) ஈற்று நின்று இசைக்கும் ஏ என் இறுதி - செய்யு ளிறுதிக்கண் நின்று இசைக்கும் ஈற்றசையேகாரம், கூற்றுவயின் - அச்செய்யு ளிடத்துப் பாவென்னும் உறுப்பினை நிலைபெறக் கூறுமிடத்து, ஓரு அளபு ஆகலும் உரித்தே - தனக்கு உரிய இரண்டு மாத்திரையே யன்றிப் பின்னரும் ஒருமாத்திரை உண்டாய் வருதலும் உரித்து, எ-று. உம்மையான், மூன்று மாத்திரை பெறாது இரண்டு மாத்திரை பெற்று வருதலும் உரித்தாயிற்று. பாவென்னும் உறுப்பினை நிலைபெறக் கூறுமிடத்து மூன்று மாத்திரை பெறுவது செய்யுளிறுதிக்கண் நிற்கும் ஈற்றசையே என்பது அறிவித்தற்கு ஏயெனிறுதியென்று மீட்டுங் கூறினார். (உ-ம்.) ‘கடல்போ றோன்றல் காடிறந் தோரே’ ‘அகில்படு கள்ளியங்காடிறந் தோரே’, ‘தண்கடல் வேலிநின் குடநா டற்றே’ இவை போல்வன பிறசான்றோர் செய்யுட்களெல்லாம் மூன்று மாத்திரை பெற்றுப் பாவென்னும் உறுப்பை விளக்கி நிற்குமாறு காண்க. இனி, ‘அவரேஎஎ, கேடில் விழுப்பொரு டருமார் பாசிலை, வாடா வள்ளியங் காடிறந் தோரே’ எனச் செய்யுளிடைக்கண் வரும் ஈற்றசை யேகாரம் இரண்டு மாத்திரை பெற்றுப் பா வென்னும் உறுப்பை விளக்கி நின்றவாறு காண்க. இஃது ஈற்றசையாகலிற், செய்யுளியலிற் கூறும் மாத்திரையென்னும் உறுப்பின்கண் அடங்காதென்று ஈண்டுக் கூறினார், அது பெரும்பான்மை பொருள்தருஞ் சொற்கே விதியாகலின். (38) 289. உம்மை யெண்ணு மெனவெ னெண்ணுந் தம்வயிற் றொகுதி கடப்பா டிலவே. இஃது, எண்களுக்கு முடிபுவேற்றுமை கூறுகின்றது. (இ-ள்.) உம்மை எண்ணும் என என் எண்ணும் - உம்மையான் வரும் எண்ணும் எனவான் வரும் எண்ணும், தம்வயிற் தொகுதி கடப்பாடு இலவே - தத்தம் இறுதிக்கட் தொகைச்சொற் பெறுதலை முறைமையாக உடையவல்ல, எ-று. எனவே, தொகைபெற்றும் பெறாதும் வருமென்பதாம். ‘உயர்திணைக் குரிமையும் மஃறிணைக் குரிமையும் - மாயிரு திணைக்குமோ ரன்ன வுரிமையு மம்மூவுருபின’ ‘இசையினுங் குறிப்பினும் பண்பினுந் தோன்றி’ ‘நிலனென நீரெனத் தீயென வளியென நான்கும்’ ‘உயிரென உடலென வின்றியமையா’ என வரும். தொகையெனப் பொதுப்படக் கூறிய வதனான், எண்ணுப்பெயரே யன்றி, ‘அனைத்தும், எல்லாம்’ என்னுந் தொடக்கத்தனவுங் கொள்க. (39) 290. எண்ணே கார மிடையிட்டுக் கொளினு மெண்ணுக்குறித் தியலு மென்மனார் புலவர். இஃது, எண்ணிடத்து வழு அமைக்கின்றது. (இ-ள்.) எண் - உம்மையும் ஏகாரமும் எனவும் என்றும் எனாவும் என்றாவுஞ் செவ்வெண்ணுமாகிய ஏழுவகை யெண்களுள் ஒன்று முதல் நின்று, ஏகாரம் இடையிட்டுக் கொளினும் - ஏகார வெண்ணைத் தன்னிடத்தே அழைத்துக் கொண்டு நிற்பினும், பிற எண்களைத் தன்னிடத்தே அழைத்துக் கொண்டு நிற்பினும்; எண்ணுக் குறித்து இயலும் என்மனார் புலவர் - பல எண் வந்தனவென்று குற்றமாகா, தான் உணர்த்தும் எண்ணுப் பொருளையே அப்பலவுங் குறித்து நடக்கும் என்று கூறுவர் புலவர், எ-று. (உ-ம்.) ‘மலைநிலம் பூவே துலாக்கோலென் றின்ன - ருலைவிலுணர் வுடையோர்.’ ‘தோற்றமிசையே நாற்றஞ் சுவையே, யுறலோ டாங்கைம் புலனென மொழிப.’ இவை செவ்வெண் நின்று ஏகார எண்ணை இடை யிட்டன. ‘மாத்திரை யெழுத்திய லசைவகையெனாஅ’ என்பது, செவ்வெண் நின்று எனா வெண்ணை இடையிட்டது. ‘வண்ணம் வடிவே யளவே சுவையே’ என்னுஞ் சூத்திரம் ஏகாரவெண் நின்று செவ்வெண்ணையும் என்றா என்னும் எண்ணையும் இடையிட்டது. யாத்த சீரே யடியாப் பெனாஅ’ என்பது ஏகார வெண் செவ்வெண்ணை யும் எனாவையும் இடையிட்டது. ஒழிந்த எண்களும் இவ்வாறு வருமாறு சூத்திரங்களுள்ளுஞ் செய்யுட்களுள்ளுங் காண்க. (40) 291. உம்மை தொக்க வெனாவென் கிளவியு மாவீ றாகிய வென்றென் கிளவியு மாயிரு கிளவியு மெண்ணுவழிப் பட்டன. இஃது, எண்ணும்மை பிற எண்ணொடு மயங்குங்காற் சிறந்துவரும் என்கின்றது. (இ-ள்.) உம்மை தொக்க எனா என் கிளவியும் - முன்னர் எண்ணும்மை அடுக்கி நின்ற எனா என்னும் இடைச்சொல்லும், ஆ ஈறு ஆகிய என்று என் கிளவியும் - முன்னர் எண்ணும்மை அடுக்கி நின்ற ஆகாரத்தை ஈறாகவுடைய என்று என்னும் இடைச் சொல்லும், ஆயிரு கிளவியும் எண்ணு வழிப்பட்டன - அவ்விரண்டு சொல்லும் எண்ணுமிடத்தே சிறந்துவரும், எ-று. (உ-ம்.) ‘ஒப்புமுருவும் வெறுப்புமென்றா’ என்னுஞ் சூத்திரம், உம்மை தொக்க எனா வந்துழிக் காண்க. இனி, ‘உம்மை தொக்க’ என்பதற்கு ‘நிலனெனாவும்’ என ஈற்று நின்ற உம்மை தொக்கு ‘நிலனெனா’ என்றல் வழக்க மின்மையானும், எனாவும் என்றாவும் எண்ணிடைச் சொல்லாதல் மேலிற்சூத்திரத்தாற் பெறப்படுதலானும், இதுவே ஆசிரியர் கருத்து. (41) 292. அவற்றின் வரூஉ மெண்ணி னிறுதியும் பெயர்க்குரி மரபிற் செவ்வெ ணிறுதியு மேயி னாகிய வெண்ணி னிறுதியும் யாவயின் வரினுந் தொகையின் றியலா. இஃது, எண்ணிடைச் சொற்கட்கு முடிபு வேற்றுமை கூறுகின்றது. (இ-ள்.) அவற்றின் வரூஉம் எண்ணின் இறுதியும் - முற்கூறிய எனா, என்றா என்பனவற்றான் வரும் எண்ணுச் சொற்களின் இறுதியும், பெயர்க்கு உரி மரபிற் செவ்வெண் இறுதியும் - இடைச் சொல்லானன்றிப் பெயரான் எண்ணப்படுஞ் செவ்வெண்ணின் இறுதியும், ஏயினாகிய எண்ணின் இறுதியும் - ஏகாரத்தான் வரும் எண்ணுச் சொற்களின் இறுதியும், யாவயின் வரினுந் தொகை யின்று இயலா - யாதானும் ஓரிடத்துவரினும் தொகையின்றி நடவா, எ-று. (உ-ம்.) நிலனெனா நீரெனா விரண்டும், நிலனென்றா நீரென்றா விரண்டும், நில நீரென விரண்டும், நிலனே நீரேயென விரண்டும் என வரும். இறுதியுமென்றது, அவ்வெண்ணுக்கண் இறுதி தொகை பெறும், என்றற்கு. பெயர்க்குரி மரபினென்றது, மற்றைய எல்லாம் இடைச் சொல்; செவ்வெண்ணுப் பெயர் தம்மாலே ஆமென்றற்கு. (42) 293. உம்மை யெண்ணி னுருபுதொகல் வரையார். இஃது, உம்மையும் உருபுந்தொக்கவழியும் உருபுதொகை எனப்படும் என வழு வமைத்தது. (இ-ள்.) உம்மை எண்ணின் - உம்மையான் வரும் எண்ணின்கண், உருபு தொகல் வரையார் - இரண்டாவதும் ஏழாவதுந் தொக்கு நிற்றலை நீக்கார் ஆசிரியர், எ-று. உம்மை யெண்னெனப் பொதுப்படக் கூறுதலின், உம்மை தொக்குழியும் விரிந்துழியும் உருபு தொகுதல் கொள்க. (உ-ம்.) புலிவிற்கெண்டை, யானைதேர்குதிரைகாலாள் என்னும் பலபெயர் உம்மைத் தொகைகள் ஒருசொல் நடையவாய்க் கிடந்தன வந்தன என்னுந் தன்வினையாகிய பயனிலைகளைக் கொள்ளும்வழியும், புலியும் வில்லுங் கெண்டையுங் கிடந்தன, யானையுந் தேருங் குதிரையுங் காலாளும் வந் தன, என உம்மை விரிந்து நின்ற பொருளைத் தந்தே நிற்குமாறு போல இவ் வும்மைத் தொகைகள், புலிவிற்கெண்டை வைத்தான், யானை தேர் குதிரை காலாளெறிந்தான், என உருபு ஏற்று நின்றவழியும், புலியும் வில்லுங் கெண்டையும் வைத்தான், யானையுந் தேருங் குதிரையுங் காலாளுமெறிந்தான் என உம்மை விரிந்து நின்ற பொருளைத் தந்தே நிற்றல் வேண்டும். அங்ஙனம் உம்மை விரிந்துநிற்கும் இடத்து வைத்தானென்னும் வினை முதல்வினைக்குப் புலியும் வில்லுங் கெண்டையுஞ் செயப்படு பொருளாய் இரண்டாமுருபே விரிந்து நிற்றலும், எறிந்தானெ என்னும் வினைமுதல்வினைக்கு யானை முதலியன செயப்படு பொருளாய் இரண்டாமுருபே விரிந்துநிற்றலும் உணர்க. ‘குன்றி கோபங்கொடிவிடு பவளம் - ஒண்செங் காந்தள் ஒக்கும் நின்னிறம்’ என்னும் பலபெயர் உம்மைத்தொகைக்கும் உம்மையும் உருபும் விரித்தே பொருள் உரைக்க. இக்குன்றி முதலியவற்றைச் செவ்வெண்ணொக்கி, இவற்றைத் எனத் தொகை கொடுத்து உருபு விரித்துழியும் அச்சுட்டு அக்குன்றி முதலியவற்றையே சுட்டுதலின், அக்குன்றி முதலியன செயப்படுபொருளாயே நிற்குமாறு முணர்க. அன்றி அவை செவ்வெண் ஆயின், ‘நிலநீர் வளிவிசும் பென்ற நான்கின் அளப்பரியை’ என்றாற்போல உம்மையும் உருபும் விரித்தற்குப் பொருந்தாது எழுவாயாய், நான்கென்னும் தொகைச்சொற் பயனிலை கொண்டு நிற்றல் வேண்டுமென்று உணர்க. இவை உம்மைத் தொகைக்கண் உருபு தொக்கன. இங்ஙனம் இரண்டு தொக்கனவற்றை என்ன தொகை வென்று கோடுமோயெனின், புலியையும் வில்லையுங் கெண்டையை யும் வைத்தானென விரித்துழி எண்ணுப் பொருள் தந்து நிற்கும் உம்மையினுஞ் சொற்றொடர்ப்பொருளை உணர்த்தி நிற்பது உருபாதலின், அச்சிறப்பு நோக்கி உருபு தொகை என்றே கோடும். இனி, ‘பாட்டுங்கோட்டியுமறியாப் பயமில்றேக்கு மரம்போனீடிய வொருவன்’ ‘இசையினுங் குறிப்பினும் பண்பினுந் தோன்றி’ என்னும் இவை, உம்மை விரிந்து நின்று, உருபு தொக்கன. (43) 294. உம்முந் தாகு மிடனுமா ருண்டே. இஃது, உம் என்னும் இடைச்சொல் திரியும் என்கின்றது. (இ-ள்.) உம் உந்து ஆகும் இடனுமாருண்டே - ‘வினைசெயல் மருங்கிற் காலமொடு வருவனவற்றுள்’ உம் ஈறு உந்தாய்த் திரிதலும் உடைத்து, எ-று. (உ-ம்.) ‘நீர்க்கோழி கூப்பெயர்க் குந்து’ ‘நாரரி நறவி னாண்மகிழ் தூங்குந்து’ என வரும்; இடனுமாண்டே, என்றதனான், இத்திரிபு பெயரெச்சத்திற்கே கொள்க. (44) 295. வினையொடு நிலையினு மெண்ணுநிலை திரியா நினையல் வேண்டு மவற்றவற் றியல்பே. இஃது எண்ணிடைச்சொற்கள் வினைச்சொற்கண்ணும் வரும் என்கின்றது. இ-ள். எண்ணு வினையொடு நிலையினும் நிலை திரியா - எண்ணிடைச் சொற்கள் பெயர்ச்சொல்லோடு அன்றி வினைச்சொல்லொடு நிற்பினுந் தத்தம் நிலைமையின் திரியா; அவற்றவற்று இயல்பு நினையல் வேண்டும் - அவற்றவற்று இலக்கணங்களை ஆராய்ந்து அறிதலை வேண்டும் ஆசிரியன், எ-று. (உ-ம்.) ‘உண்டுந் தின்றுமூர்ந்தும் ஆடுகம், செல்வத்தயாமே உண்ணவெனத் தின்னவெனப் பாடவென வந்தான் என வரும். ஒழிந்த எண் வினையொடு வந்தன உளவேற் காண்க. உண்டு தின்றோடி வந்தான் என்பது தொகையின்றேனும், செவ்வெண்ணாஞ், சிறுபான்மை முற்றுந் தொகை பெற்று வருதலின், ‘சாத்தன் வந்தான்; கொற்றன் வந்தான்; வேடன் வந்தான்; மூவரும் வந்தமையாற் கலியாணம் பொலிந்தது’ என முற்றுச்செவ்வெண் தொகை பெற்று வரும். இவை எழுவாயும் பயனிலையுமாய் நிற்றலின் எண்ணப்படாவெனின், ஒரு பொருள் வேறுபாட்டான் எண்ணினார். இதனை, ‘இம்மூவரும் வரின் கலியாணம் பொலியும்’ என்று இருக்கின்றான் கூற்றாகக் கொள்க. என்னை? முன்னர்ச் சாத்தன் வந்தான் பின்னர்க் கொற்றன் வந்தான்; அதன் பின்னர் வேடன் வந்தான். இவர்கள் ஒருங்கு வந்திலரேனும் முடிவில் வந்து நிற்றலின், இது முடிவு போயிற்று என்று கூறினானாதலின். இம்மூவர் என்றமையான் பெயர் தொகை பெற்றதேனும் வந்தமையானென்றதனான் வினையுந் தொகை பெற்று, அவ்வினையாற் கலியாணம் முடிந்தவாறும் உணர்க. இம்முற்று அடுக்கி வந்தனவும் செவ்வெண்ணாம். இனி, யாங் கண்டபொழுது இம்மாடத்துமேல் நின்றானும் இருந்தானும் கிடந்தானும் இவன் என முற்றுச்சொற்கண்ணும் எண்ணும்மை வருதல் கொள்க. பெயரெச்சத்தில் எண்ணிடைச்சொல் வாரா. (45) 296. என்று மெனவு மொடுவுந் தோன்றி யொன்றுவழி யுடைய வெண்ணினுட் பிரிந்தே. இஃது, எண்ணிடைச்சொற்கள் பிரிந்து சென்று ஒன்றும் என்கின்றது. (இ-ள்.) என்றும் எனவும் ஒடுவுந் தோன்றி - என்றும் எனவும் ஒடுவும் என்பன ஒருவழித் தோன்றி, எண்ணினுட்பிரிந்து ஒன்றுவழி உடைய - எண்ணுட் பிறவழியும் பிரிந்து சென்று ஒன்றும் இடமுடைய, எ-று. (உ-ம்.) ‘வினைபகை யென்றிரண்டினெச்சம்’ ‘கண்ணிமை நொடி யென’ ‘பொருள்கருவி காலம் வினையிடனோ டைந்தும்’ என்புழி, வினையென்று, பகையென்று, கண்ணிமை யென, நொடியென பொருளொடு கருவியொடு காலத்தொடு வினையோடு என்று பிறவழிச் சென்று ஒன்றியவாறு காண்க. ஒன்றுவழி உடைய என்றதனாற் சொற்றொறும் நிற்றல் பெரும் பான்மை. அஃது இக்காலத்து அரிது. (46) 297. அவ்வச் சொல்லிற் கவையவை பொருளென மெய்பெறக் கிளந்த வியல வாயினும் வினையொடும் பெயரொடு நினையத் தோன்றித் திரிந்துவேறு படினும் தெரிந்தனர் கொளலே. இஃது, எழுவகை இடைச்சொற்கும் பொருட்புறனடை கூறு கின்றது. (இ-ள்.) அவ்வச்சொல்லிற்கு அவையவை பொருளென மெய்பெறக் கிளந்த இயலவாயினும் - முற்கூறிய இடைச் சொற்கள் தாம் அவ்வச் சொற்குக் கூறிய அவையே அவையே பொருளென நிலைபெறச் சொல்லப்பட்ட இயல்பையுடைய வாயினும், வினையொடும் பெயரொடும் நினையத் தோன்றித் திரிந்து வேறுபடினும் - தாம் அடைந்து வரும் வினையொடும் பெயரொடும் ஆராய்ந்து உணரத் தோன்றி வேறு பொருளவாயும் அசை நிலையாயுந் திரிந்துவரினும், தெரிந்தனர் கொளல் - ஆராய்ந்து கொள்க. எ-று. வேறு பொருவென்று உணர்தற்குச் சார்பு, வினையும் பெயரும். (உ-ம்.) ஓகாரஞ் : ‘சென்றீ பெருமநிற் றகைக்குநர் யாரோ?’ என ஈற்றசையாயுங், ‘கலக்கொண்டன கள்ளென்கோ காழ்க் கொண்டன சூடென்கோ’ என எண்ணாயும், ‘நீங்கின ளோவென் பூங்க ணோளே!’ என இரக்கக் குறிப்பாயும் வந்தது. என என்பது : ‘ஊரெனப் படுவ துறையூர்’ எனச் சிறப்பின்கண் வந்தது. அவர் நமக்குத் தஞ்சம் அல்லர் எனத் தஞ்சக் கிளவி, பற்றலர் என்கின்றது. மா : ‘ஓர்கமா தோழியவர் தேர்மணிக் குரலே’ என முன்னிலைக்கண் அசைச்சொல்லாயும், ‘ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே’ என முன்னிலையன்றி அசைச்சொல்லாயும் வந்தது. ‘அதுமற் கொண்கன் தேரே’ என மன் அசைநிலையாய் வந்தது. சாரியை இன் : ‘காப்பின் ஒப்பின்’ என அசை நிலையாயும் வந்தது. இனி, உருபு பொருண்மை நோக்கிய ஐகாரமும், ‘நேரை நோக்க நாரரி பருகி’ எனவும், ‘வரும் முனையுண்டவ ருருகும் பசுந்தினைப் பிண்டியும்’ எனவும் அசைநிலையாய் வருதலுங் கொள்க. ‘தண்ணென் றிசினே பெருந்துறைப் புனலே’ ‘விசும்பிழி தோகைச் சீர்போன் றிசினே’ என்பன தண்ணென்றது, போன்றது என முற்றுச்சொற்கண் சின் அசைநிலைப்படுதலுங் கொள்க. பிறவுஞ் செய்யுட்கண் வேறுபடுவன எல்லாம் இதனான் அமைத்துக்கொள்க. (47) 298. கிளந்த வல்ல வேறுபிற தோன்றினுங் கிளந்தவற் றியலா னுணர்ந்தனர் கொளலே. இஃது, அவற்றிற்குச் சொற்புறனடை கூறுகின்றது. இ-ள். கிளந்த அல்ல வேறுபிற தோன்றினும் - மேல் சார்பும் இடமுங் குறிப்பும்பற்றிச் சொல்லப்பட்டன அன்றி வேறு பிற வரினும், கிளந்தவற்று இயலான் உணர்ந்தனர் கொளல் - அவற்றையும் அச்சொற்களின் மூவகையவாகக் கூறிய இலக்கணத்தான் உணர்ந்துகொள்க, எ-று. (உ-ம்.) ‘சிறிது தவிர்ந்தீக மாளநின் பரிசிலர் உய்ம்மார்’ என மாளவும், ‘சொல்லேன் தெய்ய நின்னொடு பெயர்ந்தே’ எனத் தெய்யவும், ‘அறிவார் யாரஃ திறுவுழி யிறுகென’ என எனவும், ‘அஞ்சுவ தோருமறனே’ என ஓரும், ‘சொல்லீய அத்தைநின் வெகுளி’ என அத்தையும், ‘செழுந்தேரோட்டியும் வென்றீ’ என ஈகாரமும், ‘காத னன்மா நீமற் றிசினே’ என இசினும், ‘பணியுமாமென்றும் பெருமை’ என ஆமும், ‘ஈங்கா யினவால்லென்றிசின் யானே’ என ஆலும், ‘புனற் கன்னிகொண் டிழிந்த தென்பவே’ என என்பவும், ‘சேவடி சேர்துமன்றே’ என அன்றும் அசைநிலையாய் வந்தன. குன்றுதொ றாடலும் நின்றதன் பண்பே’ எனத் தொறு, தான் சார்ந்த மொழிக்குப் பன்மையும் இடமும் உணர்த்திற்று. இது, ‘நாடோறும் நாடி’ என நீண்டும் நிற்கும். ஆ என்பது, வியப்பு உள்வழியும் மறுத்தல் உள்வழியும் பொரு ளுணர்த்துதலும், ஐ என்றது, இசை உள்வழியும் வருத்தம் உள்வழியும் பொருளுணர்த்துதலுங் கொள்க. பொள்ளென, பொம்மென, கதுமென - இவை விரைவு உணர்த்தின. கொம்மென என்பது பெருக்கமென்னுங் குறிப்பு உணர்த்திற்று. ஆனம், ஏனம், ஓனம் என்பன எழுத்துச் சாரியை. ‘எப்பொருள் எத்தன்மைத்தாயினும்’ என வரும் எகர வினாவுங் கொள்க. அங்கு, இங்கு, உங்கு, எங்கு என எழுத்தினுள் ‘இடப்பொருள் உணர்த்துமென்றனவும் இவை நீண்டு வருவனவும், பிறவாற் றான் வருவனவும் இதனாற் கொள்க. (48) இடைச்சொல்லியல் முற்றும் உரியியல் உரிச்சொற்களின் இலக்கண முணர்த்தினமையால் உரியிய லென்னும் பெயர்த்தாயிற்று. இசை, குறிப்பு, பண்பு என்னும் பொருளை யுடையனவாகிப் பெயர் வினகளைப் போன்றும் அவற்றிற்கு முதனிலையாகியும் வருவன உரிச்சொற்களாம். இசை செவியால் உணரப்படுவது, குறிப்பு மனத்தாற் குறித் துணரப்படுவது, பண்பு ஐம்பொறிகளால் உணரப்படுங் குணம். இசை குறிப்பு பண்பு என்னும் பொருட்குத் தாமே யுரியவாதலின் உரிச்சொல்லாயினவென்றும் பெரும்பான்மையும் செய்யுட்குரிய வாய் வருதலின் உரிச்சொல்லாயிற்றென் பாருமுளரென்றும் கூறுவர் சேனாவரையர், ஈறுபற்றிப் பல பொருள் விளக்கலும் உருபேற்றலுமின்றிப் பெயரையும் வினையையுஞ்சார்ந்து பொருட்குணத்தை விளக்கலின் உரிச்சொல் பெயரின் வேறென்பர் நச்சினார்க்கினியர். ஒரு வாய்பாட்டாற் சொல்லப்படும் பொருட்குத் தானும் உரித்தாகி வருவது உரிச்சொல்லென்றும், ‘ஒரு சொல் பல பொருட்குரிமை தோன்றினும் பல சொல் ஒரு பொருட்குரிமை தோன்றினும்’ என ஆசிரியர் கூறுதலால் இவ்வியல்பு புலனாமென்றும், எழுத்ததிகாரத்துள் இதனைக் குறைச் சொற்கிளவியென்று ஓதினமையால் வடநூலாசிரியர் தாது எனக் குறியிட்ட சொற்களே உரிச்சொற்களாமென்றும், தொழிற் பொருண்மை யுணர்த்தும் சொற்கள்யாவும் உரிச்சொல்லாயினும் வழக்கின்கட் பயிற்சியில்லாத சொற்கள் ஈண்டு எடுத்தோதப்படுகின்றனவென்றும், தொழிலாவது வினையுங் குறிப்புமாதலின் அவ்விருவகைச் சொற்கும் அங்கமாகி வெளிப்படாதன இவ்வியலிற் கூறப்படுகின்றனவென்றும், ஈண்டுக் கூறப்படுகின்ற உரிச்சொல் சொல்லானும் குறிப்பானும் குணத்தானும் பொருள் வேறுபடுமென்றும், அவை பெயர் வினைகளைச்சார்ந்தும் அவற்றிற்கு அங்கமாகியும் வருமென்றும் கூறுவர் தெய்வச்சிலையார். இசை, குறிப்பு, பண்பு என்னும் மூன்றும் குணப் பண்புந் தொழிற் பண்புமென இரண்டா யடங்கு மென்றும், இவ்விருவகைப் பண்பும் பொருட்கு உரிமை பூண்டு நிற்றலின் அப்பண்பை யுணர்த்துஞ்சொல் உரிச்சொல்லெனப் பட்டதென்றும், நடவா முதலிய முதனிலைகளும் தொழிற் பண்பை யுணர்த்துஞ் சொற்களாதலின் அவையெல்லாம் உரிச்சொல்லேயா மென்றுங் கூறுவர். சிவஞான முனிவர். இதுகாறும் எடுத்துக்காட்டிய உரைக் குறிப்புக்களால் உரிச்சொல்லென்பன வினையும் குறிப்புமாகிய சொற்களுக் கெல்லாம் பகுதியாகிய வேர்ச் சொற்களென்பதும் குறைச் சொற்களாகிய இவற்றை முதனிலையாகக்கொண்டே எவ்வகை வினைச்சொற்களும் தோன்றுவனவென்பதும் இனிது புலனாதல் காண்க. இவ்வியலிலுள்ள சூத்திரங்களை 99-ஆக இளம்பூரணரும் 100-ஆகச் சேனாவரையரும் தெய்வச்சிலையாரும், 98-ஆக நச்சினார்க்கினியரும் பகுத்து உரை கூறியுள்ளார்கள். இசை, குறிப்பு, பண்பு என்னும் பொருளை யுணர்த்துவனவாய்ப் பெயர் வினைபோன்றும் அவற்றிற்கு முதனிலையாயும் தடுமாறி ஒருசொல் ஒருபொருட் குரித்தாதலேயன்றி ஒருசொல் பலபொருட்கும் பல சொல் ஒருபொருட்கும் உரியவாய் வருவன உரிச்சொல்லென்றும், அவை பெயரும் வினையும்போல ஈறுபற்றிப் பொருளுணர்த்த லாகாமையின் பொருள் வெளிப்படாத சொல்லைப் பொருள் வெளிப்பட்ட சொல்லோடு சார்த்தி அச்சொற்களையே யெடுத்தோதிப் பொருளுணர்த்தப்படு மென்றும் இவ்வியல் முதற் சூத்திரத்தால் உரிச்சொற்குப் பொதுவிலக்கணமும் அவற்றிற்குப் பொருளுணர்த்து முறைமையும் உணர்த்தினார் ஆசிரியர். நால்வகைச் சொற்களுள்ளும் பண்புணர்த்துவனவாகிய உரிச்சொற்களே பலவாதலின் அவற்றுள் வெளிப்படப் பொரு ளுணர்த்தும் சொற்களை எடுத்துரையாது வெளிப்பட வாராத உரிச்சொற்களுள் உறுஎன்பது முதல் எறுழ் என்பதீறாக நூற்றிருபது உரிச்சொற்களை இவ்வியல் 3-முதல் 91-வரையுள்ள சூத்திரங்களால் எடுத்தோதிப் பொருளுணர்த்துகின்றார். மேற்சொல்லப்பட்ட உரிச்சொல் எல்லாவற்றிற்கும் முன்னும் பின்னும் வந்த மொழியையறிந்து அதற்கேற்பப் பொருளுரைத்தல் வேண்டு மெனவும் மேல் ஓதப்பட்ட உரிச்சொற்கு முற்கூறிய பொருணிலையல்லது பிற பொருள் தோன்றினும் கூறப்பட்ட வற்றோடு அவற்றையுஞ் சேர்த்துக்கொள்ளுதல் வேண்டுமெனவும் வெளிப்பட வழங்காத சொற்களுக்கு வெளிப்படப் பழகிய சொற்களைக் கொண்டு பொளுணர்த்துங்கால் அங்ஙனம் பொருளுணர்த்த வந்த சொற்கும் பொருள் யாது எனப் பொருளுக்குப் பொருள் வினவுவானாயின் அவ்வினா எல்லையின்றிச் செல்லுமாதலால் பொருளுக்குப் பொருள் கூறுதலியலாதெனவும் மாணாக்கன் உணர்தற்குரிய வழிமுறை யறிந்து உணர்த்தவல்லனாயின் தான் சொல்ல எடுத்துக்கொண்ட பொருள் திரிபின்றி விளங்குமெனவும், சொற்பொருளை உணர்தற்குரிய வாயில் இதனை யுணர்வோனது அறிவைப் பற்றுக்கோடாக வுடையதாகலான் ஒருவாற்றானும் உணருந்தன்மை யொருவற்கில்லையாயின், அவனுக்குப் பொருளுணர்த்தும் வழியில்லை யெனவும் 92-முதல் 96-வரையுள்ள சூத்திரங்களால் உரிச்சொற்குப் பொருளுணரும் முறைமையும் கூறிப்போந்தார் ஆசிரியர். பொருளோடு சொல்லுக்குத் தொடர்புடைமையின் பொருளுணர்த்தும் நெறியில் எல்லாச் சொற்களும் காரணமுடைய வென்பதும், இப்பொருட்கு இச்சொல் என நியமித்தற்குரிய காரணம் நுண்ணுணர்வுடையோர்க்கன்றி ஏனையோர்க்கு விளங்கத் தோன்றாவென்பதும் மொழிப் பொருட்காரணம் விழிப்பத்தோன்றா’ என்ற சூத்திரத்தால் அறிவுறுத்தப்பட்டன. எழுத்துக்கள் முதல் நிலையும் இறுதிநிலையுமாகப் பிரிந்து பொருட் காரணத்தை யுணர்த்துதல் இவ்வுரிச்சொல்லிடத்து இயல்பிலை யென்பார் ‘எழுத்துப் பரிந்திசைத்தல் இவணியில் பின்றே’ என்றார். இவ்வுரிச்சொற்கள் குறைச்சொற்களாதலின் நின்றாங்கு பிரிப்பின்றி நின்று பொருளுணர்த்துவனவன்றி முதல்நிலையும் இறுதிநிலையுமாகப் பிரிந்து பொருளுணர்த்தா வென்பது ஆசிரியர் கருத்தாதல் புலனாம். எழுத்துப் பிரிந்திசைத்தல் இவ்வுரிச் சொல்லிடத்தில்லையேனவே, ஏனைப் பெயர்ச் சொல்லிடத்தும் வினைச்சொல்லிடத்தும் முதனிலையும் இறுதிநிலையுமாக எழுத்தக்கள் பிரிந்து பொருளுணர்த்தல் உண்டென்பது பெறப்படும். பெயர் பிரிந்தன பெயரியலுள்ளும் வினை பிரிந்தன வினையியலுள்ளும் ஈறுபற்றிப் பிரித்துரைக்கப் பட்டமை காண்க. இடைச்சொல் தனித்து நின்று பொருளுணர்த் தாமையின் பிரிதலும் பிரியாமையும் அதற்கில்லையென்பர் நச்சினார்க்கினியர். - க. வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 216-219 எட்டாவது உரிச்சொல்லியல் 299. உரிச்சொற் கிளவி விரிக்குங் காலை யிசையினுங் குறிப்பினும் பண்பினுந் தோன்றிப் பெயரினும் வினையினு மெய்தடு மாறி யொருசொற் பலபொருட் குரிமை தோன்றினும் பலசொல் லொருபொருட் குரிமை தோன்றினும் பயிலா தவற்றைப் பயின்றவை சார்த்தித் தத்த மரபிற் சென்றுநிலை மருங்கி னெச்சொ லாயினும் பொருள்வேறு கிளத்தல். என்பது சூத்திரம். இது, தமக்கு இயல்பில்லா இடைச்சொற் போலாது, இசை குறிப்புப் பண்பென்னும் பொருட்கு உரியவாய் வருதலின், ‘உரிச்சொல்லோத்தென்னும் பெயர்த்தாயிற்று. ஈறுபற்றிப் பலபொருள் விளக்கலும் உருபேற்றலுமின்றிப் பெயரையும் வினையையுஞ் சார்ந்து பொருட் குணத்தை விளக்கலின், உரிச்சொல், பெயரின் வேறென்றுணர்க. இச் சூத்திரம், உரிச்சொற்கெல்லாம் பொது இலக்கணங் கூறுகின்றது. (இ-ள்.) உரிச்சொற்கிளவி விரிக்குங்காலை - உரிச்சொல்லாகிய சொல்லை விரித்துணர்த்துமிடத்து, ஒருசொற் பல பொருட்கு உரிமை தோன்றினும் பலசொல் ஒருபொருட்கு உரிமை தோன்றினும் - அஃது ஒருசொல் ஒருபொருட்கு உரித்தாய் வாராது பல பொருட்கு உரித்தாய் மயங்கிவரினும் பலசொல் ஒருபொருட்கு உரியவாய் மயங்கிவரினும், இசையினுங் குறிப்பினும் பண்பினுந்தோன்றிப் பெயரினும் வினையினும் மெய்தடுமாறித் தத்தம் மரபிற் சென்று நிலைமருங்கின்-இசைப் பொருண்மைக்கண்ணும் மனத்தாற் குறித்து உணரும் பொருண்மைக்கண்ணும் பண்புப் பொருண்மைக்கண்ணும் வெளிப்பட்டுப் பெயர் வினைகள் போன்றும் அவற்றிற்கு முதனிலையாயுந் தம்முருவு தடுமாறித் தத்தமக்கு உரிய முறைமையாற் சென்று நிற்கும் நிலைக்களங்களாலே, எச்சொல்லாயினும் பயிலாதவற்றைப் பயின்றவை சார்த்திப் பொருள் வேறு கிளத்தல் - கேட்போனாற் பொருளுணரப்படாத எவ்வகைப்பட்ட சொல்லாயினும் பயிலப்படாத சொல்லைப் பயின்றவற்றொடு சேர்த்திப் பொருளை வேறுவேறு சொல்லுக, எ-று. ‘அது மயங்கிவரினும், நிலைக்களங்களானே சேர்த்தி வேறுவேறு கிளத்தல்,’ என வினைமுடிபு செய்க. பண்பு, பொறியான் அறியப்படுங் குணம். கறுப்பு, பெயர்ப்போலி. தவ, வினைப்போலி. துவைத்தல், பெயர்க்கு முதனிலை. தாவாத, வினைக்கு முதனிலை. பலவும் ஓதினாரேனும், உரிச்சொற்கு இலக்கணம் மூவகைப் பொருளும்பற்றி வருதலேயாம். (1) 300. வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா; வெளிப்பட வாரா வுரிச்சொல் மேன. இஃது, உரிச்சொற்களுள் யான் கூறப்படுவன இவை யென்கின்றது. (இ-ள்.) வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா - பொருள் புலப்பட்ட உரிச்சொற்கள் எல்லாரும் அறிதலின் எடுத்தோதிப் பொருளுணர்த்துதல் வேண்டா; வெளிப்பட வாரா உரிச்சொல் மேன - பொருள் புலப்பட வாராத உரிச்சொல் மேற்று யான் பொருள் புலப்பட ஓதுதல், எ-று. (2) 301. அவைதாம், உறுதவ நனியென வரூஉ மூன்று மிகுதி செய்யும் பொருள வென்ப. இது, குறிப்புப்பற்றி வரும் உரிச்சொற் பொருள்படுமாறு கூறுகின்றது. (இ-ள்.) அவைதாம் - வெளிப்பட வாராத உரிச்சொற்கடாம் (யாவை? எனின்) உறு தவ நனி என வரூஉம் மூன்றும் - உறுவெனத் தவவென நனியென வருகின்ற மூன்று உரிச்சொற்களும், மிகுதி செய்யும் பொருள என்ப - மிகுதின்னும் உரிச்சொல் காட்டுங் குறிப்புப் பொருளையுடைய என்று கூறுவர் ஆசிரியர், எ-று. குறிப்புச்சொல் பரப்புடைமையின், முற்கூறினார். (உ-ம்.) ‘உறுகாலொற்ற வொல்கி யாம்பல்’ ‘ஈயாது வீயுமுயிர் தவப் பலவே’ ‘வந்துநனி வருந்தினை வாழி நெஞ்சே என வரும். (3) 302. உருவுட் காகும் புரையுயர் வாகும். இதுவும் அது. (இ-ள்.) உரு உட்கு ஆகும் - உருவென்னும் உரிச்சொல் உட்குதலென்னும் உரிச்சொல்லது குறிப்புப்பொருட்டாம்; புரை உயர்வு ஆகும் - புரையென்னும் உரிச்சொல் உயர்வென்னும் உரிச்சொல்லது குறிப்புப் பொருட்டாம், எ-று. (உ-ம்.) ‘உருகெழு ஞாயிற் றொண்கதிர் மிசைந்த’ ‘புரைய மன்ற புரையோர் கேண்மை என வரும். ‘உருவக் குதிரை மழவரோட்டிய’ ‘உருவமென் றுரைத்தி யாயின்’ என உரு வடிவழகையும், ‘புரைதீர் கேள்விப் புலவ ரான’ எனப் புரை குற்றத்தையும் உணர்த்துதல், ‘கூறிய கிளவிப் பொருணிலை அல்ல’ என்னுஞ் சூத்திரத்தாற் கொள்க.(4) 303. குருவுங் கெழுவு நிறனா கும்மே. இது பண்பு. (இ-ள்.) குருவும் கெழுவும் நிறன் ஆகும்மே - குருவென்னும் உரிச்சொல்லுங் கெழுவென்னும் உரிச்சொல்லும் நிறனென்னும் உரிச்சொல்லது பண்புப் பொருளாம், எ-று. (உ-ம்.) ‘குருமணித் தாலி’. ‘நறுஞ்சாந்து புலர்ந்த கேழ்கிளரகலம்’ என வரும். ‘குரூஉத்துளி பொழிந்த’, ‘குரூஉக்கணிறடிப் பொம்மல்’ எனக் குரு நீடலும், ‘செங்கேழ் மென்கொடி ஆழிஅறுப்ப’ எனக் கெழு கேழென நீடலும் ஈறு கெடுதலும், ‘எழுத்துப்பிரிந் திசைத்தயாவணியல் பின்றே.’ என்பதனாற் கொள்க. கெழுவென்று வரும் இடம் உளதாயிற் கொள்க. இக்கெழு பொருத்தத்தை உணர்த்துதலுங் கெழுமுதலென்னும் வழக்கிற்கு முதனிலையாய் நிற்றலுங் ‘கூறிய கிளவி’ என்பதனாற் கொள்க. மேல்வருஞ் சூத்திரங்கட்கும் இவ்வாறே பொருள் கூறுக.(5) 304. செல்ல லின்ன லின்னா மையே. இது குறிப்பு. (இ-ள்.) செல்லல் இன்னல் இன்னாமையே - செல்லலும் இன்னலும் இன்னாமை என்னுங் குறிப்பு உணர்த்தும், எ-று. (உ-ம்.) ‘மணங்கமழ் வியன்மார் பணங்கிய செல்லல்’ ‘வெயில்புறந் தரூஉமின்னலியக்கத்து’ (மலைபடு. 374) என வரும். (6) 305. மல்லல் வளனே யேபெற் றாகும். இதுவும் அது. இ-ள். மல்லல் வளனே - மல்லல் செல்வமென்னும் குறிப்பினையும், ஏ பெற்று ஆகும் - ஏ என்பது பெருக்கமென்னுங் குறிப்பினையும் உணர்த்தும், எ-று. பெற்று அடுக்குதலுமாம். (உ-ம்.) ‘மல்லன்மார் படுத்தனன் புல்லுமா றெவனோ’. ‘ஏகலடுக்கத் திருளளைச் சிலம்பின்’ என வரும். (7) 306. உகப்பே யுயர்த லவப்பே யுவகை. இதுவும் அது. (இ-ள்.) உகப்பே உயர்தல் உவப்பே உவகை - உகப்பு உயர்வென்னுங் குறிப்பினையும் உவப்பு உவகையென்னுங் குறிப்பினையும் உணர்த்தும், எ-று. (உ-ம்.) ‘விசும்புகந் தாடா திரைதேர்ந் துண்ணாது.’ ‘உவந்துவந்’தார்வ நெஞ்சமோ டாய்நலன் அளைஇ’ என வரும். (8) 307. பயப்பே பயனாம். இதுவும் அது. (இ-ள்.) பயப்பே பயனாம் - பயப்புப் பயனென்னுங் குறிப்பு உணர்த்தும், எ-று. எ-டு. ‘பயவாக், களரனையர் கல்லா தவர்.’ என வரும். (9) 308. பசப்பு நிறனாகும். இது பண்பு. (இ-ள்.) பசப்பு நிறனாகும் - பசப்பு நிறனென்னும் பண்பு உணர்த்தும், எ-று. (உ-ம்.) ‘மையில் வாண்முகம் பசப்பூ ரும்மே.’ எனவரும்.(10) 309. இயைபே புணர்ச்சி. இது குறிப்பு. (இ-ள்.) இயைபே புணர்ச்சி - இயைபு கூட்டமென்னும் குறிப்பு உணர்த்தும், எ-று. (உ-ம்.) ‘வளன்வலி யுறுக்குமுளமி லாளரொ டியைந்த கேண்மைலா கியரோ என வரும். (11) 310. இசைப்பிசை யாகும். இஃது இசை கூறுகின்றது. (இ-ள்.) இசைப்பு இசையாகும் - இசைப்பு இசைப் பொருண்மையை உணர்த்தும், எ-று. (உ-ம்.) ‘வாயிற் றோன்றி யாழிசையூப் புக்கு’ என வரும். (12) 311. அலமர றெருமர லாயிரண்டுஞ் சுழற்சி. இது குறிப்பு. (இ-ள்.) அலமரல் தெருமரல் ஆயிரண்டுஞ் சுழற்சி - அலமரல் தெருமரலாகிய அவ்விரண்டும் மனத்தடுமாற்ற மாகிய குறிப்பு உணர்த்தும், எ-று. (உ-ம்.) ‘அலமரலாயம்’ ‘தெருமரலுள்ளமோ டன்னையுந் துஞ்சாள்’ என வரும். உலமரல் சொற்புறனடையாற் (389) கொள்க. (13) 312. மழவுங் குழவு மிளமைப் பொருள. இதுவும் அது, (இ-ள்.) மழவுங் குழவும் இளமைப் பொருள - மழவுங் குழவும் இளமை என்பதன் குறிப்புப் பொருண்மையை உடைய, எ-று. (உ-ம்.) ‘வரைபுரையு மழகளிற்றின்மிசை யுருவக் குதிரை மழவரோட்டிய’ ‘தடமருப் பெருமை மடநடைக் குழவி.’ என வரும். (14) 313. சீர்த்தி மிகுபுகழ் மாலை யியல்பே. இதுவும் அது. (இ-ள்.) சீர்த்தி மிகுபுகழ் மாலை இயல்பே - சீர்த்தி மிகு புகழும், மாலை இயல்புமாகிய குறிப்பு உணர்த்தும், எ-று. (உ-ம்.) ‘வயக்கஞ்சால் சீர்த்தி’. ‘இரவரன் மாலையனே என வரும். (15) 314. கூர்ப்புங் கழிவு முள்ளது சிறக்கும். இதுவும் அது. (இ-ள்.) கூர்ப்புங் கழிவும் உள்ளது சிறக்கும் - கூர்ப்புங் கழிவும் முன்சிறவாது உள்ளதொன்று சிறத்தலாகிய குறிப்பு உணர்த்தும், எ-று. (உ-ம்.) ‘இயங்கா வையத்து வள்ளியோர் நசைஇத் துனிகூரெவ்வ மொடு’ ‘சினனே காமம் கழிகண் ணோட்டம்’ என வரும். (16) 315. கதழ்வுந் துனைவும் விரைவின் பொருள. இதுவும் அது. (இ-ள்.) கதழ்வுந் துனைவும் விரைவின் பொருள - கதழ்வும் துனைவும் விரைவென்னுஞ் சொல்லினது குறிப்புடைய, எ-று. (உ-ம்.) ‘அண்டர், கயிறிரி யெருத்திற் கதழுந் துறைவன்.’ ‘துனைபரி துரக்குந் துஞ்சாச் செலவின்’ (அகம். 9. 16) என வரும். (17) 316. அதிர்வும் விதிர்ப்பு நடுக்கஞ் செய்யும். இதுவும் அது. (இ-ள்.) அதிர்வும் விதிர்ப்பும் நடுக்கஞ் செய்யும் - அதிர்வும் விதிர்ப்பும் நடுக்கமாகிய குறிப்பு உணர்த்தும், எ-று. (உ-ம்.) ‘அதிர வருவதோர் நோய்’ ‘விதிர்ப்புற லறியா வேமக் காப்பினை’என வரும். (18) 317. வார்தல் போக லொழுகன் மூன்றும் நேர்பு நெடுமையுஞ் செய்யும் பொருள. இது பண்பு. (இ-ள்.) வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையுஞ் செய்யும் பொருள-வார்தல், போகல், ஒழுகலென்னும் மூன்று சொல்லும் நேர்மையும் நெடுமையும் உணர்த்தும் பண்பினைத் தமக்குப் பொருளாக உடைய, எ-று. (உ-ம்.) ‘வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி யரிவையை’ ‘தெள்ளற்றழீஇய வார்மணல் லடைகரை’ எனவும், ‘போகுகொடி மருங்குல்’. ‘திரிகாய விடத்தரோடு காருடை போகி’ எனவும், ‘ஒழுகு கொடி மருங்குல்’. ‘மால்வரை ஒழுகிய வாழை’ எனவும் வரும். (19) 318. தீர்தலுந் தீர்த்தலும் விடற்பொருட் டாகும். இது குறிப்பு. (இ-ள்.) தீர்தலும் தீர்த்தலும் விடற்பொருட்டு ஆகும் - தீர்தலும் தீர்த்தலும் விடல் என்னும் உரிச்சொல்லது குறிப்புப் பொருண்மை யுடைத்தாம், எ-று. (உ-ம்.) ‘துணையிற் றீர்ந்த கடுங்கண் யானை’ ‘நங்கையைச் செற்ற தீங்குத் தீர்த்துநீர் கொண்மின்’ என வரும். இதனானே, விடலென்னும் உரிச்சொலடியாகப் பிறக்கும் பெயரும் வினையுந் தன்வினையும் பிறவினையும் பற்றிப் பிறக்குமென்பது உணர்த்தற்கு விடற்பொருட்டு என்றார். இயைபென்பதற்கு இயைப்பென வழங்காது, இயைக்க, இயைவிக்க என வேறுபட்டு வழங்குதலிற், தன்வினை பிறவினை ஓதாராயினார் ஒன்றென முடித்தலாற் பிளத்தல், அணங்கல் என்றாற் போலத் தன்வினை பிறவினைக்குப் பொதுவாய் வருவனவுங் கொள்க. இப்பிற வினை, தீர்வித்தல் தீர்ப்பித்தலென வாய்பாடு வேறுபட்டு இக்காலத்து வழங்குமாறும் உணர்க. (20) 319. கெடவரல் பண்ணையா யிரண்டும் விளையாட்டு. இதுவும் அது. (இ-ள்.) கெடவரல் பண்ணை ஆயிரண்டும் விளையாட்டு - கெட வரல், பண்ணை என்னும் அவ்விரண்டும் விளையாட்டாகிய குறிப்பு உணர்த்தும், எ-று. (உ-ம்.) ‘கெடவரல் ஆயமொடு’. ‘பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும்’ என வரும். விளையாட்டு என்றது, விளையாட்டுக் கருத்தினை. (21) 320. தடவுங் கயவு நளியும் பெருமை. இது பண்பு. (இ-ள்.) தடவுங் கயவும் நளியும் பெருமை - தடவும் கயவும் நளியும் பெருமையாகிய பண்பு உணர்த்தும், எ-று. (உ-ம்.) ‘வலிதுஞ்சு தடக்கை வாய்வாட் குட்டுவன்’ ‘இரும்பிடி கன்றொடுரை கயவாய்ப், பெருங்கை யானை’ ‘நளிமலை நாடனெளியவனெனவே’ என வரும். ‘கயவரென்பது வழக்கு. (22) 321. அவற்றுள், தடவென் கிளவி கோட்டமுஞ் செய்யும். இஃது, எய்தியதன் மேல் சிறப்பு விதி. (இ-ள்.) அவற்றுள் தட என் கிளவி கோட்டமுஞ் செய்யும் - முற்கூறிய மூன்றனுட் தட வென்னுஞ் சொல் கோட்டமென்னும் பண்பினையும் உணர்த்தும், எ-று. (உ-ம்.) ‘தடமருப் பெருமை’ என வரும். (23) 322. கயவென் கிளவி மென்மையுஞ் செய்யும். இதுவும் அது. (இ-ள்.) கய என் கிளவி மென்மையுஞ் செய்யும் - கய வென்னுஞ் சொல் மென்மை யென்னும் பண்பினையும் உணர்த்தும், எ-று. (உ-ம்.) ‘கயந்தலை மடப்பிடி’ என வரும். (24) 323. நளியென் கிளவி செறிவு மாகும். இதுவும் அது. (இ-ள்.) நளி என் கிளவி செறிவும் ஆகும் - நளியென்னுஞ் சொல் செறிவென்னுங் குறிப்பினையும் உணர்த்தும், எ-று. (உ-ம்.) ‘சிலைப்புவல் லேற்றித் தலைக்கை தந்துநீ, நளிந்தனை வருதலுடன்றன ளாகி’ என வரும். (25) 324. பழுது பயமின்றே. இது குறிப்பு. (இ-ள்.) பழுது பயமின்றே - பழுது பயமின்மை யாகிய குறிப்பு உணர்த்தும், எ-று. (உ-ம்.) ‘பழுதுகழி வாழ்நாள்’ என வரும். பழுது குற்றத்தை உணர்த்துதல் வழக்கு. (26) 325. சாயன் மென்மை. இது பண்பு. (இ-ள்.) சாயல் மென்மை - சாயலென்னுஞ் சொல் மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறியான் நுகரும் மென்மையை உணர்த்தும், எ-று. (உ-ம்.) ‘மயிற்சாயன் மகள் வேண்டிய’ ‘சாயன் மார்பு நனியலைத் தன்றே’ என இவை ஒளியானும் ஊற்றானும் பிறந்த மென்மை உணர்த்தின. ‘அமிர்தன்ன சாயல்’ என்பது, தன்னை நுகர்ந்தார் பிறிது நுகராமற் தடுக்கும் மென்மையை உணர்த்தவே, பல மென்மையும் அடங்கின ஒழிந்தன, வந்துழிக் காண்க. (27) 326. முழுதென் கிளவி யெஞ்சாப் பொருட்டே. இது குறிப்பு. (இ-ள்.) முழுதென் கிளவி எஞ்சாப் பொருட்டே - முழு தென்னுஞ் சொல் எஞ்சாமையாகிய குறிப்பு உணர்த்தும் எ-று. (உ-ம்.) ‘மண்முழு தாண்டநின் முன்னோர் போல’ என வரும். (28) 327. வம்புநிலை யின்மை. இதுவும் அது. (இ-ள்.) வம்பு நிலையின்மை - வம்பு நிலையின்மையாகிய குறிப்பு உணர்த்தும், எ-று. (உ-ம்.) வம்பு மாரியைக் காரென மதித்தே’ என வரும். (29) 328. மாதர் காதல். இதுவும் அது. (இ-ள்.) மாதர் காதல் - மாதர் காதலென்னுங் குறிப்பினை உணர்த்தும், எ-று. (உ-ம்.) ‘மாதர்கொண் மானோக்கின் மடநல்லாய்’ என வரும். (30) 329. நம்பு மேவு நசையா கும்மே. இதுவும் அது. (இ-ள்.) நம்பும் மேவும் நசை ஆகும்மே - நம்பும் மேவும் நசை யென்னுங் குறிப்பினை உணர்த்தும், எ-று. (உ-ம்.) ‘நயந்துநாம் விட்ட நன்மொழி நம்பி’ (அகம். 198 : 3) எனவும், ‘பேரிசை நவிரம் மேஎய் உறையும், காரி யுண்டிக்கடவுள்’ (மலைபடு. 82, 83) எனவும் வரும். (31) 330. ஓய்த லாய்த னிழத்தல் சாஅ யாவயி னான்கு முள்ளத னுணுக்கம். இதுவும் அது. (இ-ள்.) ஓய்தல், ஆய்தல், நிழத்தல், சாஅய் ஆவயின் நான்கும் - ஓய்தல், ஆய்தல், நிழத்தல், சாஅயென்னும் உரிச்சொல் முதனிலையாகிய அவ்விடத்து வந்த குறிப்புப் பெயர் நான்கும், உள்ளதன் நுணுக்கம் - பண்டு உள்ளதொன்றது நுணுகுதலை உணர்த்தும், எ-று. சாய்தல் விகாரப்பட்டது. (உ-ம்.) ‘வேனிலுழந்த வறிதுயங் கோய்களிறு’ ‘பாய்ந்தாய்ந்த தானைப் பரிந்தானா மைந்தினை’ ‘நிழத்த யானை மேய்புலம் படாஅ’ ‘கயலறலெதிரக் கடும்புனல் சாஅய்’ என வரும். ஆயந்த தானை யென்றது, பொங்குதல் அவிதலான் நொசிந்த துகிலென்றவாறு. (32) 331. புலம்பே தனிமை. இதுவும் அது. (இ-ள்.) புலம்பே தனிமை - புலம்பு தனிமையென்னுங் குறிப்பு உணர்த்தும், எ-று. (உ-ம்.) ‘புலிப்பற் கோத்த புலம்புமணித் தாலி’ என வரும். தமியென்பது சொற் புறனடையாற் கொள்க. (33) 332. துவன்று நிறைவாகும். இதுவும் அது. (இ-ள்.) துவன்று நிறைவு ஆகும் - துவன்று நிறைவென்னுங் குறிப்பு உணர்த்தும், எ-று. எ-டு. ‘ஆரியர் துவன்றிய பேரிசையிமயம்’ என வரும். (34) 333. முரஞ்சன் முதிர்வே. இதுவும் அது. (இ-ள்.) முரஞ்சல் முதிர்வே - முரஞ்சல் முதிர்வென்னுங் குறிப்பு உணர்த்தும், எ-று. (உ-ம்.) ‘கோடுபல முரஞ்சிய கோளியாலத்து’ என வரும். (35) 34. வெம்மை வேண்டல். இது பண்பு. (இ-ள்.) வெம்மை வேண்டல் - வெம்மை விரும்புதலாகிய பண்பை உணர்த்தும், எ-று. (உ-ம்.) ‘எம்வெங் காமமியைவ தாயினும் என வரும். இது ‘குழைமாணொள்ளிழை நீவெய் யோளொடு’ எனத் திரிந்தும் நிற்கும். வெம்மை வெப்பம் உணர்த்துதல் வழக்கு. (36) 335. பொற்பே பொலிவு. இது குறிப்பு, (இ-ள்.) பொற்பே பொலிவு - பொற்புப் பொலிவு என்னுங் குறிப்பு உணர்த்தும், எ-று. எ-டு. ‘பெருவரை யடுக்கம் பொற்பச் சூர்மகள்’ என வரும். (37) 336. வறிது சிறிதாகும். இதுவும் அது. (இ-ள்.) வறிது சிறிதாகும் - வறிது சிறிதென்னுங் குறிப்பு உணர்த்தும், எ-று. (உ-ம்.) ‘வறிதுவடக் கிறைஞ்சிய சீர்சால் வெள்ளி’ என வரும். (38) 337. ஏற்ற நினைவுந் துணிவு மாகும். இதுவும் அது. (இ-ள்.) ஏற்றம் நினைவுந் துணிவும் ஆகும் - ஏற்றம் நினைவுந் துணிவுமாகிய குறிப்பு உணர்த்தும், எ-று. (உ-ம்.) ‘கானலஞ் சேர்ப்பன் கொடுமையேற்றி’ ‘எற்றமி லாட்டியென்னேமுற்றாள்’ என வரும். (39) 338. பிணையும் பேணும் பெட்பின் பொருள. இது, குறிப்பும் பண்பும் உணர்த்துகின்றது. (இ-ள்.) பிணையும் பேணும் பெட்பின் பொருள - பிணையும் பேணும் பெட்பென்னும் உரிச்சொல்லினது பொருளை யுடையவாம், எ-று. பெட்பு என்பது, புறந்தருதலும் விரும்புதலுமாகிய குறிப்பும் பண்பும் உணர்த்துமென்றறிக சிறுபான்மை, ‘பெட்ப நகும்,’ எனப் பெருமையும் உணர்த்தும். (உ-ம்.) ‘அரும்பிணை யகற்றி வேட்ட ஞாட்பினும்’. ‘யானும் பேணினெ னல்லனோ மகிழ்ந இவை புறந்தருதல் உணர்த்தின. ‘பெற்றோற் பெட்கும் பிணையை யாகென’ என்புழிக் கணவனைப் புறந்தரும் விருப்பத்தை யுடையை யாவாய், எனப் பிணை விருப்பத்திற்கு வந்தது. ‘அமரர்ப் பேணியுமாவுதி யருத்தியும்’ இது விருப்பம் உணர்த்திற்று. ‘பெட்ட வாயில்பெற் றிரவுவலி யுறுப்பினும்’ ‘காய்தலுமுவத்தலும் பிரித்தலும் பெட்டலும்’ என ஆசிரியர் பெட்பின் பகுதியாகிய பெட்டென்னும் உரிச்சொல்லை உடம்பொடு புணர்த்து ஓதியவாறுங் காண்க. (40) 339. பணையே பிழைத்தல் பெருப்பு மாகும். இது குறிப்பு. (இ-ள்.) பணையே பிழைத்தல் பெருப்பும் ஆகும் - பணை பிழைத்தலாகிய குறிப்பு உணர்த்துதலேயன்றிப் பெருப்பாகிய குறிப்பும் உணர்த்துதற்கும், எ-று. பெருமையாகிய பண்பு உணர்த்தாது பெருத்தலாகிய குறிப்பு உணர்த்துதற்குப் பெருப்பு என்றார். (உ-ம்.) ‘அமர்க்கண்ணாமா னருநிற மூழ்ளுகாது பணைத்துவீழ் பகழிப் போக்குநினைந்து- கானவன்’ ‘வேய்மருள் பணைத்தோணெகிழச் சேய் நாட்டு’ என வரும். இப்பணை மூங்கிலினை உணர்த்தல் உரிச்சொலன்மை உணர்க. (41) 340. படரே யுள்ளல் செலவு மாகும். இதுவும் அது. (இ-ள்.) படரே யுள்ளல் செலவும் ஆகும் - படர் உள்ளுத லென்னுங் குறிப்பு உணர்த்துதலே யன்றிச் செலவென்னுங் குறிப்பும் உணர்த்தும், எ-று. உள்ளல், வருத்தக் குறிப்பான் உள்ளுதலும் வருத்தக் குறிப்பின்றி உள்ளுதலும் என இருவகைத்தாகலிற், செலவுப் பொருட்டாகிய படரும் இவ்விரு வகையுமுடைத்து. (உ-ம்.) ‘வள்ளியோர்ப் படர்குவர் புலவர் யானும்’ ‘பசந்த மேனியொடு படரட வருந்தி’ எனவும், ‘கறவை கன்றுவயிற் படர’ எனவும் வரும். (42) 341. பையுளுஞ், சிறுமையு நோயின் பொருள. இதுவும் அது. (இ-ள்.) பையுளுஞ் சிறுமையும் நோயின் பொருள - பையுளுஞ் சிறுமையும் நோயாகிய குறிப்பு உணர்த்தும், எ று. (உ-ம்.) ‘பையுண் மாலைப் பழுமரம் படரிய’ ‘சிறுமையுறுப செய்பறி யலரே’ என வரும். (43) 342. எய்யா மையே யறியா மையே இதுவும் அது. (இ-ள்.) எய்யாமையே அறியாமையே - எய்யாமை அறியாமையாகிய குறிப்பு உணர்த்தும், எ-று. (உ-ம்.) எய்யா மையல்லை நீயும் வருந்துதி என வரும். அறிதலென்னும் உடம்பாட்டிற்கு மறையாகிய அறியாமை யென்னும் உரிச்சொல்லான் எய்யாமையை உணர்த்தவே, அவ்வெய்யாமை மறைச் சொலென்பதூஉம், அதற்கு எய்த்தலென்னும் உடம்பாட்டுச் சொல் உளதென்பதூஉம் பெற்றாம். அவ்வுடம்பாட்டை ஓதாது மறையை ஓதினார், மறைச்சொல்லும் உரிச்சொல்லாய் வருமென்றற்கு. ‘எய்த்து நீர்ச்சிலம்பின்குரை மேகலை, என்புழி, எய்த்தென்பது அறிந் தென்னும் பொருளுணர்த்திற்று. (44) 343. நன்றுபெரி தாகும். இதுவும் அது. (இ-ள்.) நன்று பெரிதாகும்-நன்று பெரிதென்னுங் குறிப்பு உணர்த்தும், எ-று. (உ-ம்.) ‘நன்றுமரிதுற் றனையாற் பெரும’ என வரும். பெருமையென்னாது பெரிதென்றதனான், நன்று என்பது வினை யெச்சமாயிற்று. (45) 344. தாவே வலியும் வருத்தமு மாகும். இதுவும் அது. (இ-ள்.) தாவே வலியும் வருத்தமும் ஆகும் - தா வலியும் வருத்தமுமாகிய குறிப்பு உணர்த்தும், எ-று. (உ-ம்.) ‘தாவினன்பொன் றைஇய பாவை’ ‘தாவாக் கொள்கைத் தகைசால் சிறப்பின்’தாவாக் கொள்கை, வருத்தமில்லாத விரதம். இனி, ‘கருங்கட் டாக்கலை பெருமபிறி துற்று என’ எனத் தாவுதலும், ‘தாவாத வில்லை வலிகளும்’ எனக் கேடும் உணர்த்துதல் ‘கூறிய கிளவி’ என்பதனாற் கொள்க. (46) 345. தெவுக்கொளற் பொருட்டே. இதுவும் அது. (இ-ள்.) தெவு கொளற் பொருட்டே - தெவு கொள்ளுத லாகிய குறிப்பு உணர்த்தும், எ-று. (உ-ம்.) ‘நீர்த் தெவு நிரைத்தொழுவர்’ என வரும். (47) 346. தெவ்வுப்பகை யாகும். இதுவும் அது. (இ-ள்.) தெவ்வு பகையாகும் - தெவ்வு பகையாகிய குறிப்பு உணர்த்தும், எ-று. (உ-ம்.) ‘தெவ்வுப்புலஞ் சிதைய வெய்கணை சிதறி’ என வரும். (48) 347. விறப்பு முறப்பும் வெறிப்புஞ் செறிவே. இதுவும் அது. (இ-ள்.) விறப்பும் உறப்பும் வெறுப்புஞ் செறிவே - விறப்பும் உறப்பும் வெறுப்புஞ் செறிவு என்னுங் குறிப்பு உணர்த்தும், எ-று. (உ-ம்.) ‘விறந்த காப்போ டுண்ணின்று வலியுறுத்து’ ‘உறந்த விஞ்சி யுயர்நிலை மாடத்து’ ‘வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்’என வரும். (49) 348. அவற்றுள், விறப்பே வெரூஉப் பொருட்டு மாகும். இஃது எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது. (இ-ள்.) அவற்றுள் விறப்பே வெரூஉப் பொருட்டும் ஆகும் - அம்மூன்றனுள் விறப்புச் செறிவே யன்றி வெருவுதற் குறிப்பும் உணர்த்தும், எ-று. (உ-ம்.) ‘அவலெறி யுலக்கைப் பாடுவிறந் தயல’ என வரும். (50) 349. கம்பலை சும்மை கலியே யழுங்க லென்றிவை நான்கு மரவப் பொருள. இஃது இசை. (இ-ள்.) கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்று இவை நான்கும் அரவப்பொருள - கம்பலை, சும்மை, கலியே அழுங்கனென்று சொல்லப்பட்ட இந்நான்கும் அரவமாகிய இசைப் பொருண்மையை உணர்த்தும், எ-று. (உ-ம்.) ‘களிறுகவர் கம்பலை போல’ ‘துளிமழை தண்பரங் குன்றிற் தோயுந் கலிகொள் சும்மை யொலிகொளாயம்’ ‘கலிகொள் ஆயம் மலிதொகுபெடுத்த’ ‘உயவுப்புணர்ந் தன்றிவ் வழுங்கலூரே’ என வரும். ‘கலிகொள் சும்மை’ என்பதனுள் கலி செருக்கினை யுணர்த்துதல் ‘கூறிய கிளவி’ என்பதனாற் கொள்க.(51) 350. அவற்றுள், அழுங்க லிரக்கமுங் கேடு மாகும். இஃது, எய்தியதன்மேற் சிறப்பு விதி. (இ-ள்.) அவற்றுள் அழுங்கல் இரக்கமுங் கேடும் ஆகும் - அந்நான்கனுள், அழுங்கல் அரவமேயன்றி இரக்கமுங் கேடுமாகிய குறிப்பும் உணர்த்தும், எ-று. (உ-ம்.) ‘பழங்க ணோட்டமுதலிய - வழுங்கினெ னல்லனோ வயர்ந்தனன் மனே, ‘குணனழுங்கக், குற்ற முழைநின்று கூறுஞ் சிறியவர்கட்கு’ என வரும். (52) 351. கழுமென் கிளவி மயக்கஞ் செய்யும். இது குறிப்பு. (இ-ள்.) கழுமு என் கிளவி மயக்கஞ் செய்யும் - கழுமு என்னுஞ் சொல் மயக்கமாகிய குறிப்பு உணர்த்தும், எ-று. (உ-ம்.) ‘கழுமிய ஞாட்பினுண் மைந்திழைத்தாரி இட்ட’ என வரும். இது, ‘கழும முடித்துக் கண்கூடு கூழை’ எனத் திரட்சியை உணர்த்துதல், ‘கூறிய கிளவி’ (390) என்பதனாற் கொள்க. (53) 352. செழுமை வளனுங் கொழுப்பு மாகும். இதுவும் அது. (இ-ள்.) செழுமை வளனுங் கொழுப்பும் ஆகும் - செழுமை வளனுங் கொழுப்புமாகிய குறிப்பு உணர்த்தும், எ-று. (உ-ம்.) ‘செழுஞ்செந் நெல்லின் சேயரிப் புனிற்றுக்கதிர்’. ‘செழுந்தடி தின்ற செந்நாயேற்றை’ என வரும். ‘வளத்தொடு கொழுப்பிடை வேற்றுமை யென்னை?’ யெனின், வளமென்பது, ஆக்கம்; கொழுப்பென்பது, ஊன் றொடக்கத்தன வற்றது நிணங்கோடலிழுதிருப்பு. (54) 353. விழுமஞ் சீர்மையுஞ் சிறப்பு மிடும்பையும். இதுவும் அது. (இ-ள்.) விழுமஞ் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் - விழுமஞ் சீர்மையுஞ் சிறப்பும் இடும்பையுமாகிய குறிப்பு உணர்த்தும், எ-று. (உ-ம்.) ‘விழுமியோர் காண்டொறுஞ் செய்வர் சிறப்பு’ ‘வேற்றுமையில்லா விழுத்திணைப் பிறந்து’ ‘நின்னுறு விழுமங் களைந்தோன்’ என வரும். (55) 354. கருவி தொகுதி. இதுவும் அது. (இ-ள்.) கருவி தொகுதி - கருவி தொகுதியாகிய குறிப்பு உணர்த்தும், எ-று. உணர்த்துங்கால் பலவற்றது கூட்டத்தை விளக்கும். (உ-ம்.) ‘கருவி வானங் கதழுறை சிதறி’என வரும். ஆண்டு மின்னும் முழக்குங் காற்றுமென்பன இத்தொகுதி. (56) 355. கமநிறைந் தியலும். இதுவும் அது. (இ-ள்.) கமம் நிறைந்து இயலும் - கமம் நிறைவாகிய குறிப்பு உணர்த்தும், எ-று. சொல்லொடு பொருட்கு ஒற்றுமை கருதி நிறைந்தியலும், எனப் பொருளின் தொழிலைச் சொன்மேல் ஏற்றினார். உ-ம்.. ‘கார்கோண் முகந்த கமஞ்சூன் மாமழை’ என வரும். (57) 356. அரியே யைமை. இதுவும் அது. (இ-ள்.) அரியே ஐமை - அரி ஐம்மையாகிய குறிப்பு உணர்த்தும், எ-று. (உ-ம்.) ‘அரிமயிர்த் திரண்முன்கை’ என வரும். (58) 357. கவவகத் திடுமே. இதுவும் அது. (இ-ள்.) கவவு அகத்திடுமே - கவவு அகத்தீடாகிய குறிப்பு உணர்த்தும், எ-று. (உ-ம்.) ‘கவவுக்கடுங் குரையள் காமர் வனப்பினள்’ என வரும். இது, ‘கழுவிளங்காரம் கவைஇய மார்பே’ என எச்சமாங்கால திரிந்து நிற்கும். (59) 358. துவைத்தலுஞ் சிலைத்தலு மியம்பலு மிரங்கலு மிசைப்பொருட் கிளவி யென்மனார் புலவர். இஃது இசை. (இ-ள்.) துவைத்தலுஞ் சிலைத்தலும் இயம்பலும் இரங்கலும் இசைப் பொருட்கிளவி என்மனார் புலவர் - துவைத்தல் முதலிய நான்கும் இசைப்பொருளை உணர்த்துஞ் சொல்லாமென்று கூறுவர் புலவர், எ-று. (உ-ம்.) ‘முரசுகடிப் பிகுப்பவும் வால்வளை துவைப்பவும்’ ‘ஆமா நல்லேறு சிலைப்ப’ ‘கடிமரந் தடியுமோசை தன்னூர்- நெடுமதில் வரைப்பிற் கடிமனை யியம்ப’ ‘ஏறிரங் கிருளிடை இரவினிற் பதம்பெறாஅன்’ என வரும். (60) 359. அவற்றுள், இரங்கல் கழிந்த பொருட்டு மாகும். இஃது, எய்தியதன்மேற் சிறப்பு விதி. இ-ள். அவற்றுள் இரங்கல் கழிந்த பொருட்டும் ஆகும் - அந்நான்கனுள் இரங்கல் இசையேயன்றி ஒரு பொருளது கழிவாற் பிறந்த வருத்தமாகிய குறிப்பும் உணர்த்தும், எ-று. (உ-ம்.) ‘செய்திரங் காவினைச் சேண்விளங்கும்புகழ்’ என வரும். இஃது, ‘இனிநினைந் திரக்க மாகிநின்று’ என இரக்கமெனவும் நிற்கும். உம்மை, இறந்தது தழீஇயிற்று. (61) 360. இலம்பா டொற்கமா யிரண்டும் வறுமை. இதுவும் அது. (இ-ள்.) இலம்பாடு - இலமென்னுஞ் சொற் குறிப்புச்சொல் றன்மைப்பட்டு இன்மையென்னும் உரிச்சொல்லாய் நின்றதுவும், ஒற்கம் - ஒற்கமென்னும் உரிச்சொல்லும், ஆ இரண்டும் வறுமை - ஆகிய அவ்விரண்டும் வறுமை என்னும் உரிச்சொற்பெயரது குறிப்பு உணர்த்தும், எ-று. (உ-ம்.) ‘இலம்படு புலவரேற்றகை நிறைய’ ‘ஒக்கலொற்கஞ் சொலிய தனூர்’ என வரும். இலம்படு புலவரென்பதற்கு இல்லாமை உண்டாகின்ற புலவரென அல்வழியாகப் பொருளுரைக்க. இதற்கு உரையாசிரியர், இலத்தாற் பற்றப்படும் புலவரென வேற்றுமையாகப் பொருள் கூறினாராலெனின், ஆசிரியர், ‘அல்வழி யெல்லாம் மெல்லெழுத் தாகும்’என அல்வழியே கூறத் தொடங்கி, ‘அகமென் கிளவிக்குக் கைமுன் வரின்’ எனப் பண்புத் தொகையும், ‘இலமென் கிளவிக்கு’ என அல்வழிக்கண் வரும் உரிச்சொல்லுங் கூறிப், பின்னர் எண்ணுப்பெயரும் அளவுப் பெயரும் நிறைப்பெயருங் கூறிப், ‘படர்க்கைப் பெயரும்’ என்னுஞ் சூத்திரத்தின் வேற்றுமையாயின் என மீட்டும் வேற்றுமையை எடுத்து ஓதினமையின், இலமென்பதனை வேற்றுமை யென்றல் பொருந்தாமை உணர்க. இலமென்னுஞ் சொல், யாம் பொருளில மென முற்றுச் சொல்லாயும், ஒருகால் உரிச்சொல்லாயும் நிற்கு மென்பது உணர்த்துதற்கு இலத்திற்கு உரிச்சொற் றன்மைப்பட்டு நிற்குமிடத்து என்றார். ‘இலமென் கிளவிக்குப் படுவருகாலை’ என நிலைமொழி வருமொழி செய்து முன்னர் ஆசிரியர் புணர்த்தமையின், இலம்பாடென ஒரு சொல்லாக ஓதாமை உணர்க. ‘இலம்பாடு நாணுத் தரும்’ என்றதோ மெனின், இல்லாமை உண்டாதல் நாணுத்தரு மெனப் பொருள் கூறிக் கொள்க. (62) 361. ஞெமிர்தலும் பாய்தலும் பரத்தற் பொருள. இதுவும் அது. (இ-ள்.) ஞெமிர்தலும் பாய்தலும் பரத்தற்பொருள - ஞெமிர்தலும் பாய்தலும் பரத்தலாகிய குறிப்புப் பொருண்மையை உடைய, எ-று. (உ-ம்.) ‘கருமணன் ஞெமிரிய திருநகர் முற்றத்து’ ‘புண்ணுமிழ் குருதி முகம்பாய்ந் திழிதர’ என வரும். (63) 362. கவர்வுவிருப் பாகும். இதுவும் அது. (இ-ள்.) கவர்வு விருப்பாகும் - கவர்வு விருப்பாகிய குறிப்பு உணர்த்தும், எ-று. (உ-ம்.) ‘கவர்நடைப் புரவி’ என வரும். இனி, ‘கொள்ளை மாந்தரின் னாது கவரும்’ என கைக்கொள்ளுதல், ‘கூறிய கிளவி’ என்பதனாற் கொள்க. ‘கருமறிக் காரத்திற் கவையடிப் பேய்மகள்’ எனக் கவைத்தல் சொற்புறனடை யாற் கொள்க. (64) 363. சேரே திரட்சி. இதுவும் அது. (இ-ள்.) சேரே திரட்சி - சேர் திரட்சியாகிய குறிப்பு உணர்த்தும், எ-று. (உ-ம்.) ‘சேர்ந்துசெறி குறங்கின்’ என வரும். (65) 364. வியலென் கிளவி யகலப் பொருட்டே. இதுவும் அது. (இ-ள்.) வியல் என் கிளவி அகலப் பொருட்டே - வியல் என்னுஞ் சொல் அகலமாகிய குறிப்பு உணர்த்தும், எ-று. (உ-ம்.) ‘இருங்கல் வியலறைக் கிடப்பி வயிறுதின்று’ என வரும். இது, ‘வியன்றானை விறல்வேந்தே!’ (புறம். 38 : 4) எனத் திரிந்தும் நிற்கும். (66) 365. பேநா முருமென வரூஉங் கிளவி யாமுறை மூன்று மச்சப் பொருள. இதுவும் அது. (இ-ள்.) பே நாம் உரும் என வரூஉங்கிளவி ஆமுறை மூன்றும் அச்சப்பொருள - பே, நாம், உருமென்று சொல்ல வருகின்ற கிளவியாகிய அம்முறைமையினையுடைய மூன்றும் அச்ச மென்னும் உரிச்சொல்லது குறிப்புப் பொருண்மையை உடைய, எ-று. (உ-ம்.) ‘மன்ற மார்த்த பேஎம்முதிர் கடவுள்’ ‘நாம நல்லராக் கதிர்பட வுமிழ்ந்த’ ‘உருமில் சுற்றமொடு’ என வரும். நாம் நாமமெனத் திரிந்து வழங்கிற்று. (67) 366. வயவலி யாகும். இதுவும் அது. (இ-ள்.) வய வலி ஆகும் - வய வலியாகிய குறிப்பு உணர்த்தும், எ-று. (உ-ம்.) ‘துன்னருந் துப்பின் வயமான் றோன்றல்’ என வரும். (68) 367. வாளொளி யாகும். இது பண்பு. (இ-ள்.) வாள் ஒளியாகும் - வாள் ஒளியாகிய பண்பு உணர்த்தும், எ-று. (உ-ம்.) ‘கண்ணே, நோக்கி வாளிழந் தனவே’ என வரும். (69) 368. துய்வென் கிளவி யறிவின் றிரிபெ இது குறிப்பு. (இ-ள்.) துய்வு என் கிளவி அறிவின் திரிபே - துயவு என்னுஞ் சொல் அறிவினது திரிதலாகிய குறிப்பு உணர்த்தும். எ-று. (உ-ம்.) ‘துயவுற்றேம் யாமாக’ என வரும். (70) 369. உயாவே யுயங்கல். இதுவும் அது. (இ-ள்.) உயாவே உயங்கல் - உயா வருத்தமாகிய குறிப்பு உணர்த்தும், எ-று. (உ-ம்.) ‘பருந்திருந் - துயாவிளி பயிற்று மியாவுயர் நனந்தலை’ என வரும். (71) 370. உசாவே சூழ்ச்சி. இதுவும் அது. (இ-ள்.) உசாவே சூழ்ச்சி - உசா சூழ்ச்சியாகிய குறிப்பு உணர்த்தும், எ-று. (உ-ம்.) ‘உசாத்துணை’ என வரும். (72) 371. வயாவென் கிளவி வேட்கைப் பெருக்கம். இதுவும் அது. (இ-ள்.) வயா என் கிளவி வேட்கைப் பெருக்கம் - வயா என்னுஞ் சொல் வேட்கையினது பெருக்கமாகிய குறிப்பு உணர்த்தும், எ-று. (உ-ம்.) ‘வயாவும் வருத்தமு மீன்றக்கா னோவும்’ என வரும். இது, ‘வயவுறு மகளிர்’ எனத் திரிந்தும் நிற்கும். ஈண்டு வேட்கை யென்றது, கருப்பந் தங்கி வருத்தமுற்று நுகரப்படும் பொருண்மேற் செல்லும் வேட்கையை. (73) 372. கறுப்புஞ் சிவப்பும் வெகுளிப் பொருள. இதுவும் அது. (இ-ள்.) கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள - கறுப்புஞ் சிவப்பும் வெகுளியாகிய குறிப்புப் பொருண்மையை யுடைய, எ-று. (உ-ம்.) ‘நிற்கறுத் தோரருங் குடிமுனை யாள்போல்’. ‘நீசிவந் திறுத்த நீரழி பாக்கம்’ என வரும். கருமை, செம்மை என்னாது, கறுப்பு, சிவப்பெனத் தொழிற்படுத்தினார், அவை வெகுளியை உணர்த்தினமையின். (74) 373. நிறத்துரு வுணர்த்தற்கு முரிய வென்ப. இஃது, எய்தியதன்மேற் சிறப்பு விதி. (இ-ள்.) நிறத்து உரு உணர்த்தற்கும் உரிய என்ப - கறுப்பு, சிவப்பெனத் தொழிற்படுத்துக் கூறிய சொற்கள் வெகுளியே யன்றி நிற வேறுபாடாகிய பண்பு உணர்த்துதற்குமுரிய வென்று கூறுவர் ஆசிரியர், எ-று. இவை தொழிற்பட்டுழியும் பண்பு உணர்த்துமென வெளிப்படு சொல்லையுங் கூறினார், ஐயம் அகற்றுதற்கு. (உ-ம்.) ‘கறுத்த காயா’ ‘சிவந்த காந்தள் முதல்சினைமுதல்’ என வரும். (75) 374. நொசிவு நுழைவு நுணங்கு நுண்மை. இதுவும் அது. (இ-ள்.) நொசிவும் நுழைவும் நுணங்கும் நுண்மை - நொசிவு முதலியன நுண்மையாகிய பண்பு உணர்த்தும், எ-று. (உ-ம்.) ‘நொசிபடு மருங்குல் கசிவு றக்கைதொழா’ ‘இழைமருங் கறியா நுழைநூற் கலிங்கம்’ ‘நுணங்குதுகினுடக்கம் போல’ என வரும். ‘நுணங்கு நுண்கொடி மின்னார் மழைமிசை’ என நுணங்கு நுடக்கத்தை உணர்த்துதல், ‘கூறிய கிளவி’ என்பதனாற் கொள்க. (76) 375. புனிறென் கிளவியீன் றணிமைப் பொருட்டே. இது குறிப்பு. (இ-ள்.) புனிறு என் கிளவி ஈன்றணிமைப் பொருட்டே - புனிறென் னுஞ் சொல் ஈன்றணிமையாகிய குறிப்புப் பொருளை உடைத்து, எ-று. (உ-ம்.) ‘புனிறுதீர் குழவிக் கிலிற்றுமுலை போல்’ ‘புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி’ என வரும். (77) 76. நனவே களனு மகலமுஞ் செய்யும். இதுவும் அது. (இ-ள்.) நனவே களனும் அகலமுஞ் செய்யும் - நனவு களனும் அகலமுமாகிய குறிப்புப் பொருண்மையை உணர்த்தும், எ-று. (உ-ம்.) ‘நனவுப்புகு விறலியிற் றோன்று நாடன்’ ‘நனந்தலை யுலகம் வளைஇய’ என வரும். (78) 377. மதவே மடனும் வலியு மாகும். இதுவும் அது. (இ-ள்.) மதவே மடனும் வலியும் ஆகும் - மத, மடனும் வலியுமாகிய குறிப்பு உணர்த்தும், எ-று. (உ-ம்.) ‘பதவு மேய்ந்த மதவுநடை நல்லான்’ ‘கயிற்றிடு கதச்சேப் போல மதமிக்கு’ என வரும். மதவு நடை என்பதில் மத மதவு என ஈறு திரிந்து நின்றது. (79) 378. மிகுதியும் வனப்பு மாகலு முரித்தே. இஃது, எய்தியதன்மேற் சிறப்பு விதி. (இ-ள்.) மிகுதியும் வனப்பு மாகலும் உரித்தே - மத, மடனும் வலியுமே யன்றி, மிகுதியும் வனப்புமாகிய குறிப்புஞ் சிறுபான்மை உணர்த்தும், எ-று. (உ-ம்.) ‘போராராவேற்றின் பொருநா கிளம்பாண்டி - றேருரச்செம் மாந்ததுபோல் மதைஇயினள்’ ‘மாதர் வாண்முகம் மதைஇய நோக்கே’ என வரும். இவையும் ஈறு திரிந்தன. (80) 379. புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி. இதுவும் அது. (இ-ள்.) யாணர்க் கிளவி புதிதுபடற் பொருட்டே - யாணர் என்னுஞ் சொல், வருவாய் புதிதாகப் படுதலாகிய குறிப்பை உடைத்து, எ-று. (உ-ம்.) ‘வீகொடு சென்ற வட்டிற் பற்பல, மீனொடு பெயரும் யாணர் ஊர!’ என வரும். (81) 380. அமர்தன் மேவல். இதுவும் அது. (இ-ள்.) அமர்தல் மேவல் - அமர்தல் மேவுதலாகிய குறிப்பு உணர்த்தும், எ-று. (உ-ம்.) ‘அகனமர்ந்து செய்யாளுறையும்’ என வரும். (82) 381. யாணுக் கவினாகும். இதுவும் அது. (இ-ள்.) யாணு கவினாகும் - யாணென்னுஞ் சொல் கவினாகிய குறிப்பு உணர்த்தும், எ-று. (உ-ம்.) ‘யாண துபசலையென்றனென்’ என வரும். (83) 382. பரவும் பழிச்சும் வழுத்தின் பொருள. இதுவும் அது, (இ-ள்.) பரவும் பழிச்சும் வழுத்தின் பொருள - பரவும் பழிச்சும் வழுத்துதலென்னுஞ் சொல்லினது குறிப்புப்பொருளை உடைய, எ-று. (உ-ம்.) ‘கல்லே பரவினல்லது, நெல்லுகுத்துப் பரவுங் கடவுளு மிலவே’ ‘செறிவளை விறலியர் கைதொழூஉப் பழிச்சி, வறிதுநெறி ஒரீஇ’ என வரும். (84) 383. கடியென் கிளவி வரைவே கூர்மை காப்பே புதுமை விரைவே விளக்க மிகுதி சிறப்பே யச்ச முன்தேற் றாயீ ரைந்து மெய்ப்படத் தோன்றும் பொருட்டா கும்மே. இது, பெரும்பான்மை குறிப்புஞ் சிறுபான்மை பண்பும் உணர்த்துகின்றது. (இ-ள்.) கடி என் கிளவி வரைவே கூர்மை காப்பே புதுமை விரைவே விளக்கம் மிகுதி சிறப்பே அச்சம் முன்றேற்று ஆயீரைந்தும் மெய்ப்படத் தோன்றும் பொருட்டு ஆகும்மே - கடி யென்னுஞ் சொல் வரைவு, கூர்மை, காப்பு, புதுமை, விரைவு, விளக்கம், மிகுதி, சிறப்பு, அச்சந், தெய்வ முதலியவற்றை முன்னின்று தெளிவித்தல் என்று கூறப்படுகின்ற அப்பத்துச் சொல்லும் மெய்ம்மைப்படத் தோன்றும் பொருண்மையினை யுடைத்து, எ-று. (உ-ம்.) ‘கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு’ ‘கடிநுனைப் பகழி’ ‘கடிமரந்தடியுமோசை’ ‘கடியுண் கடவுட் கிட்ட சில்குரல்’ ‘கடுந்தேர் குழித்த ஞெள்ளலாங்கண்’ ‘கடும்பகல் ஞாயிறு’ ‘கடுங்கா லொற்றலிற் சுடர்சிறந்துருத்து’ ‘அம்பு துஞ்சுங் கடியரணால்’ ‘கடியுருமினு ரறிக்கடிப்புச் சேர்பு, கடிய மன்றநின் றழங்குகுரன் முரசம்’ ‘கொடுஞ்சுழிப் புகார்த் தெய்வநோக்கிக், கடுஞ்சூடருகுவனினக்கேகானல்’ என வரும். இவ்வுரிச்சொல், பெரும்பான்மை திரிந்து நிற்கும். (85) 384. ஐயமும் கரிப்பு மாகலு முரித்தே. இஃது, எய்தியதன்மேல் சிறப்பு விதி. (இ-ள்.) ஐயமுங் கரிப்பும் ஆகலும் உரித்தே - கடி யென்னுஞ் சொல் முற்கூறிய பத்துமே யன்றிச் சிறுபான்மை ஐயமாகிய குறிப்புங் கரிப்பாகிய பண்பும் உணர்த்துதற்கும் உரித்து, எ-று. (உ-ம்.) : ‘கடுத்தனளல்லளோ வன்னை’ ‘கடிமிளகு தின்ற கல்லா மந்தி’ என வரும். (86) 385. ஐவியப் பாகும். இது குறிப்பு. (இ-ள்.) ஐ வியப்பு ஆகும் - ஐ வியப்பாகிய குறிப்பு உணர்த்தும், எ-று. (உ-ம்.) ‘ஐதேயம்மயானே’ என வரும். (87) 386. முனைவுமுனி வாகும். (இ-ள்.) முனைவு முனிவாகும் - முனைவென்னுஞ் சொல் முனிவாகிய குறிப்பு உணர்த்தும், எ-று. முனை என்றும் பாடம். (உ-ம்.) ‘சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான்’ என வரும். (88) 387. வையே கூர்மை. இதுவும் அது. (இ-ள்.) வையே கூர்மை - வை கூர்மையாகிய குறிப்பு உணர்த்தும், எ-று. (உ-ம்.) ‘வைநுனைப் பகழி மூழ்கலிற் செவிசாய்த்து’ என வரும். (89) 388. எறுழ்வலி யாகும். இதுவும் அது. (இ-ள்.) எறுழ் வலி ஆகும் - எறுழ் வலியாகிய குறிப்பு உணர்த்தும், எ-று. (உ-ம்.) ‘சிலைநவிலெறுழ்த்தோ ளோச்சிவலன் வளையூ’ என வரும். (90) 389. மெய்பெறக் கிளந்த வுரிச்சொல் லெல்லா முன்னும் பின்னும் வருபவை நாடி யொத்த மொழியாற் புணர்த்தன ருணர்த்த றத்த மரபிற் றோன்றுமன் பொருளே. இஃது, உரிச்சொற்கெல்லாம் புறனடை கூறுகின்றது. (இ-ள்.) மெய் பெறக் கிளந்த உரிச்சொல் எல்லாம் - ஒரு சொற் பலபொருட்கு உரிமை தோன்றியும், பலசொல் ஒரு பொருட்கு உரிமை தோன்றியும் வருமென இரு கூறு செய்து பொருள் பெறக் கூறப்பட்ட உரிச்சொல் எல்லாவற்றையும், முன்னும் பின்னும் வருபவை நாடி - தத்தமக்கு முன்னும் பின்னும் வரும் மொழிகளை ஆராய்ந்து, ஒத்த மொழியாற் புணர்த்தனர் உணர்த்தல் - அம்மொழிகளுட் தமக்குப் பொருந்தின மொழி யோடு கூட்டிப் பொருளுணர்த்துக; மரபின் - ஆங்ஙனம் உணர்த்திய வரலாற்று முறைமையானே, தத்தம் பொருள் மன் தோன்றும் - தத்தமக்கு உரிய பொருள் விளங்கித் தோன்றும், எ-று. எனவே, உரிச்சொல் ஆணையாற் பொருளுணர்த்தாது, வரலாற்று முறைமையாற் பொருளுணர்த்து மென்றார், (உ-ம்.) போகுகொடி மருங்குல் என்பதிற் போகல் என்பது முன்வருஞ் சொல்லான் நேர்மையை உணர்த்திற்று. ‘திரிகாய் விடத்தேரோடு காருடை போகி’ என்பதிற் போகலென்பது பின் வருஞ்சொல்லான் நெடுமையை உணர்த்திற்று. ‘உறுகால்’ என்பது முன்வருங் காலென்னுஞ் சொல்லான் மிகுதியை உணர்த்திற்று. ‘அணங்கிய செல்லல்’ என்பது பின்வரும் அணங்கிய என்னுஞ் சொல்லான் இன்னாமையை உணர்த்திற்று. இங்ஙனங் கூறவே, ‘முன்னும் பின்னு மொழியடுத்து வருதலும்’ என இடைச்சொற்கு ஓதிய விதி இதற்குங் கூறினாராயிற்று. (91) 390. கூறிய கிளவிப் பொருள்நிலை யல்ல வேறுபிற தோன்றினு மவற்றொடு கொளலே. இதுவும் அது. (இ-ள்.) கூறிய கிளவிப் பொருணிலை அல்ல வேறு பிற தோன்றினும் - முன்னும் பின்னும் வருபவை நாடியவழி முற்கூறிய உரிச்சொற்களின் பொருணிலைமை யல்லாத வேறு பிற பொருள் தோன்றுமாயினும், அவற்றொடு கொளல் - அக் கூறப்பட்டன வற்றோடே அவற்றையும் உரிச்சொல்லாகக் கொள்க, எ-று. (உ-ம்.) கடிநாறும் பூந்துணர் என்றால், முற்கூறியவற்றிற்கு ஏலாது மணப்பொருட்டு ஆயிற்று. ‘மரம் புரைபட்டது’ என்பது உயர்வு பொருள் குறித்ததென்று கொள்ளற்க; பொந்துபட்ட தென்னும் பொருட்டு ஆயிற்று. இவையே யன்றி, வேறுபிற தோன்றினவை அவ்வச்சூத்திரங்களுட் காட்டிப் போந்தாம்; அவற்றான் உணர்க. (92) 391. பொருட்குப்பொரு டெரியி னதுவரம் பின்றே. இச்சூத்திரம் முதல் ‘எழுத்துப்பிரிந் திசைத்தல்’ என்னுஞ் சூத்திரத்தளவும் முற்கூறிய நால்வகைச் சொல்லையும் உணருமாறும், உணர்த்துமாறும், அவற்றின் தன்மையும் உணர்த்துகின்றார், மேற்கூறுகின்ற பொது இலக்கணமாகிய எச்ச இயற்கு ஏற்ப அதிகாரப்பட்டமை கருதி. (இ-ள்.) பொருட்குப் பொருள் தெரியின் - ஒரு சொல்லை ஒரு சொல்லானும் பல சொல்லானும் உணர்த்தியவழிப் பொருள் உணர்த்த வந்த சொற்கும் பொருள் யாது எனப் பொருள் தெரியுமாயின், அது வரம்பு இன்று - அங்ஙனம் தெரிதல் வரம்பின்றோடும்; அதனால், பொருட்குப் பொருள் தெரியற்க, எ-று. ஒரு சொற்கு ஒரு சொல்லானும் பல சொல்லானும் பொருளுணர்த்தினாலும் உணரும் உணர்வில்லாதானை உணர்த்துமாறு மேற்கூறுகின்றார். (93) 392. பொருட்குத்திரி பில்லை யுணர்த்த வல்லின். இதுவும் அது. (இ-ள்.) உணர்த்த வல்லின் பொருட்குத் திரிபு இல்லை - மாணாக்கன் உணருமாறு அறிந்து ஆசிரியன் உணர்த்த வல்லனாயின், ‘இச்சொல் இப்பொருட்டு’ என்று தான் கூறியபொருட்குத் திரிபின்றாம், எ-று. யாம் என்பது படர்க்கை யுளப்பாட்டுத் தன்மைப் பெய ரென்றால் உணராதானை, அது சேய்மைக்கண் நின்றாரைத் தன்னோடு கூட்டிக் கூறப்பட்டுப் புடைபெயர்ச்சியின்றி நின்றதோர் பொருளை உணர்த்திற்றுக் காணெனத் தொடர்மொழி கூறியானுஞ் சேய்மைக்கண் நின்றாரைத் தன்னோடு சேர்த்துக் காட்டியானும் பொருளுணர்த்துக. ‘உண்டேமென்பது பன்மைத்தன்மை’ மென்றாற் பொரு ளுணராதானை, ‘இது யானும் இவனும் அவனும் உண்டல் தொழிலைச் சேய்தேம் என்னும் பொருளுணர்த்திற்றுக்கா,’ ணெனத் தொடர்மொழி கூறியானும், அவரைத் தன்னொடு சேர்த்தித் தொழினிகழ்த்திக் காட்டியானும் பொருளுணர்த்துக. ‘சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே’ என்புழி மன்னைச்சொல், ‘இனியது கழிந்ததென்னும் பொருள் குறித்து நின்றதுகா ணென்றால் பொருளுணராதானை, ‘அரிதாகப் பெற்ற கள்ளை எக்காலமும் எமக்குத் தருகின்றவன் துறக்கத்துச் சேறலின், எமக்குக் கள்ளுண்டல் போயிற்றென்றல் இதன் பொருளெனத் தொடர்மொழி கூறிப் பொருளுணர்த்துக. ‘உறுகால்’ என்புழி ‘உறு’ என்பது மிகுதியென்றால் உணராதானை, ‘கடுங்காலினது வலி கண்டாய், ஈண்டு ‘உறு’ வென்பதற்குப் பொருள்’ அஃதென்று தொடர்மொழி கூறியானுங் கடுங்கால் உள்வழிக் காட்டியானும் உணர்த்துக. இங்ஙனம் நால்வகைச் சொல்லையும் மாணாக்கன் உணருமாறு அறிந்து உணர்த்தவே பொருட்குத் திரிபின்றாம். இங்ஙனம் உணர்த்தவும் உணராதானை உணர்த்தற் பாலனல்லன் என்கின்றது மேல் வருகின்ற சூத்திரம். (94) 393. உணர்ச்சி வாயி லுணர்வோர் வலித்தே. இதுவும் அது. (இ-ள்.) உணர்ச்சி வாயில் - நால்வகைச் சொல்லையும் மாணாக்கன் உணர்தற்குக் கூறிய இவ்விலக்கணம், உணர்வோர் வலித்து - தன்னை உணர்வோரது உணர்வைத் தனக்கு வாயிலாக உடைத்து, எ-று. எனவே, தன்னை உணரும் உணர்வில்லாதாற்குத் தான் சொல்வது பயன்படாதாகலின், அதனை அவற்கு உணர்த்தற்க வென்பது பொருளாயிற்று. இத்துணையும் உணருமாறும் உணர்த்துமாறும் உணர்த்தினார். (95) 394. மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா. இது, சொற்பொருள் உணர்த்துங் காரணம் ஆசிரியர்க்கே புலப்படுமென்கிறது. (இ-ள்.) மொழிப்பொருட் காரணம் - நால்வகைச் சொல்லுக்கும் பொருளை அறிவித்து நிற்கின்றதோர் காரணம் உண்டாந் தன்மை, விழிப்பத் தோன்றா - நுண்ணுணர்வு வில்லாதோருக்கு மரபு என்று கொள்வது அல்லது விளங்கத் தோன்றா, எ-று. எனவே, நுண்ணுணர் வுடையோர்க்குக் காரண முண்டாந் தன்மை விளங்கத் தோன்று மென்பது பொருளாயிற்று. இது மரபென்று கோடல், ‘நிலந்தீ நீர்வளி’ என்னும் மரபியற் சூத்திரத்தினானும் ஆசிரியர் உணர்த்தினார். உலகத்துப் பொருள்களின் நிகழ்ச்சிக்குச் சொல் காரண மாதலின், ‘மொழிப்பொருட் காரண மென்றார். இக்காரணம் அக்காரியங்களோடு இயைந்து நிற்கின்ற தன்மை ஆசிரியர்க் கல்லது புலப்படாமையின், ‘விழிப்பத்தோன்றா’ என்றார். (96) 395. எழுத்துப்பிரிந் திசைத்த லிவணியல் பின்றே. இஃது, உரிச்சொற்கு எழுத்துப் பிரிந்திசைத்தல் இன்று என்கின்றது. (இ-ள்.) எழுத்துப் பிரிந்திசைத்தல் இவண் இயல்பு இன்று - எழுத்துக்கள் முதனிலையும் இறுதிநிலையுமாகப் பிரிந்து வேறு வேறு பொருள் உணர்த்துதல் உரிச்சொல்லிடத்து இயல்புடைத்தன்று, எ-று. எனவே, எழுத்துக்கள் திரிந்து பொருளுணர்த்துதல் உரிச்சொல் லிடத்து இயல்புடைத் தென்றவாறாம். எழுத்துக்கள் பிரிந்திசைத்தன வினைச்சொல்லும் ஒட்டுப்பெயரும். அவற்றுள், வினை பிரிந்தன வினையியலுள் ஈறுபற்றி ஓதிப் பிரித்துக் காட்டினார்; பெயர் பிரிந்தன ‘நம்மூர்ந்து வரூஉமிகரஐகாரமும்’ என்பன முதலியவற்றாற் காட்டினார். ‘வெற்பன், பொருப்பன்’ என்பன முதனிலை பிரிப்பப் பிரியுமேனும், அவையும் ஒட்டுப்பெயரென்று உணர்க. தாமாகப் பொருளுணர்த்தாமையின், பிரிதலும் பிரியாமையும் இடைச்சொற்கு இன்று. இனி, உரிச்சொல் எழுத்துத் திரிந்திசைத்தன எல்லாம் இவ்வோத் தினுட் காட்டிப் போந்தவற்றானுணர்க. (97) 396. அன்ன பிறவுங் கிளந்த வல்ல பன்முறை யானும் பரந்தன வரூஉ முரிச்சொ லெல்லாம் பொருட்குறை கூட்ட வியன்ற மருங்கி னினைத்தென வறியும் வரம்புதமக் கின்மையின் வழிநனி கடைப்பிடித் தோம்படை யாணையிற் கிளந்தவற் றியலாற் பாங்குற வுணர்த லென்மனார் புலவர். இஃது, உரிச்சொற்கெல்லாம் புறனடை கூறுகின்றது. (இ-ள்.) கிளந்த அல்ல அன்ன பிறவும்-சொல்லப்பட்டனவே யன்றி அவை போல்வன பிறவுமாய், பன்முறையானும் பரந்தன வரூஉம் உரிச்சொல் எல்லாம் - ஈறுபற்றி உணர்த்தற்கு அடங்காது பலவாற்றானும் பரந்து வரும் உரிச்சொல் லெல்லாம், பொருட்குறை கூட்ட - பொருளைச் சொல்லின்றியமையாக் குறைபாடு தீரப் பொருளை அதனோடு கூட்டி உணர்த்த,இயன்ற மருங்கினோ இனைத்தென அறியும் வரம்பு தமக்கு இன்மையின் - இசை, குறிப்பு, பண்பு பற்றித் தாம் இயன்ற நிலத்து இத்துணை யென வரையறுத்து உணரும் எல்லை தமக்கு இன்மையான் எஞ்சாமற் கிளத்தல் அரிதாகலின், வழி நனி கடைப்பிடித்து - அவற்றை அறிவதற்கு ஓதிய வழிகளைச் சோராமல் மிகவுங் கடைப்பிடித்து, ஓம்படை ஆணையிற் கிளந்தவற்று இயலாற் பாங்கு உற உணர்தல் என்மனார் புலவர் - பாதுகாவலாகிய ஆணையிற் கிளந்தவற்றின் இயல்பாலே அவற்றையும் பகுதியுற உணர்க என்று சொல்லுவர் புலவர், எ-று. ‘ஆதலால் யானும் அவ்வாறே கூறினேனென்றார் எனக் குறிப்பெச்சமாக உரைக்க. எனவே, ‘பெயரினும் வினையினும் மெய்தடு மாறி’ எனவும், ‘முன்னும் பின்னும் வருபவை நாடி’ எனவும் யான் கூறிய நெறியைச் சோராமற் கடைப்பிடித்து, ‘எச்சொல் லாயினும் பொருள்வேறு கிளத்தல்’ எனவும், ‘ஒத்த மொழியாற் புணர்த்தன ருணர்த்தல், தத்த மரபிற் றோன்றுமன் பொருளே’ எனவும் என்னாற் தரப்பட்ட பாதுகாவ லாணையாற் கிளந்தவற்று இயலாற் பாங்குற உணர்க, என்பது இதன் கருத்தாயிற்று. ‘உரிச்சொலெல்லாங் கூட்ட வரம்பு தமக்கு இன்மையிற், கடைப்பிடித்து, இயல்பாகவே அவற்றை உணர்க,’ என வினைமுடிபு செய்க. இருமையென்பது கருமையும் பெருமையாகிய குறிப்புஞ், சேணென்பது சேய்மையாகிய குறிப்புந், தொன்மை யென்பது பழமையாகிய குறிப்பும் உணர்த்துதலும்; இவறல் உலோபமும், ‘நொறிலியற் புரவியதியர் கோமான்’ என நொறில் நுடக்கமும், ‘நொறிலியற் புரவிக் கழற்காலிளையோர்’ என நொறில் விரைவுந், தெவிட்டுதல் அடைதலும், மலிதல் நெருங்குதலும், மாலை குற்றமும் உணர்த்துதலும்; பிறவுங் ‘கிளந்த அல்ல’ என்பதனாற் கொள்க. (98) உரிச்சொல்லியல் முற்றும் எச்சவியல் கிளவியாக்கம் முதலாக உரியியல் இறுதியாகவுள்ள இயல் களுள் உணர்த்துதற்கு இடமில்லாமையாற் கூறப்படாது எஞ்சி நின்ற சொல்லிலக்கணமெல்லாவற்றையுந் தொகுத்துணர்த்துவது இவ்வியலாதலின் எச்சவியலென்னும் பெயர்த்தாயிற்று. பத்துவகையெச்சம் உணர்த்தலால் எச்சவியல் எனப் பெயராயிற்றென்பாருமுளர். பலபொருட்டொகுதிக்கு அத் தொகுதியைச் சேர்ந்த ஒரு பொருளைப்பற்றிப் பெயரிடுங்கால் அத்தொகுதியுள் தலைமையான பொருளைப்பற்றியோ பெரும்பான்மையாகிய பொருளைப்பற்றியோ பெயரிடுதல் மரபு. அத்தகைய தலைமையாகிய பொருளாகவோ பெரும்பான்மை யாகிய பொருளாகவோ இவ்வெச்சங்களைக் கொள்ளுதற் கில்லாமையால் அவர் கூற்றுப் பொருந்தாதென்பர் சேனாவரையர். இவ்வியலிலுள்ள சூத்திரங்களை 66-ஆக இளம்பூரணரும், 67-ஆகச் சேனாவரையரும் நச்சினார்க்கினியரும் பகுத்துப் பொருளுரைப்பர். இவ்வியலிலுள்ள ‘இறப்பின் நிகழ்வின்’ (31) ‘எவ்வயின் வினையும், (32) ‘அவைதாந்தத்தங்கிளவி’ (33) என்னும் மூன்று சூத்திரங்களையும் வினையிலக் கணமாகிய இயைபு நோக்கி வினையியலிறுதியில் வைத்து உரை கூறினார் தெய்வச்சிலையார். அவருரையின்படி இவ்வியற் சூத்திரங்கள் அறுபத்தொன்றாம். இவ்வியலின்கண் 1-முதல் 15-வரையுள்ள சூத்திரங்களால் செய்யுட்குரிய சொல்லும் அவற்றது இலக்கணமும் அவற்றாற் செய்யுள் செய்யும் வழிப்படும் விகாரமும் செய்யுட் பொருள் கோளும் ஆகியவற்றையுணர்த்துகின்றார் 16-முதல் 25-வரையுள்ள சூத்திரங்களால் வேற்றுமைத்தொகை, உவமத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை ஆகிய அறுவகைத் தொகைச்சொற்களின் இயல்பினை விரித்துரைக்கின்றார். 26-முதல் 30-வரை சொல் மரபுபற்றிய வழுக்காக்கின்றார். 31-முதல் 33-வரை முற்றுச் சொற்கு இலக்கணங்கூறுகின்றார். 34-முதல் 45-வரை மேல் வினையியலுள்ளும் இடைச்சொல்லுள்ளும் முடிபு கூறப்படா தெஞ்சிநின்ற பிரிநிலையெச்சம், வினையெச்சம், பெயரெச்சம், ஒழியிசையெச்சம், எதிர்மறையெச்சம், உம்மையெச்சம், என வென்னெச்சம், சொல்லெச்சம், குறிப்பெச்சம், இசையெச்சம் ஆகிய பத்துவகை யெச்சங்களுக்கும் முடிபு கூறுகின்றார். 46- முதல் 65-வரையுள்ள சூத்திரங்களால் ஒருசார் மரபுவழுக்காத்தலும், கிளவியாக்கத்துக் கூறப்படாதெஞ்சிநின்ற மரபிலக்கணமும், ஒருசார் வழுக்காத்தலும், வினையியலுள்ளும் இடையியலுள்ளும் சொல்லாது ஒழிந்துநின்ற ஒழிபு, புதியன புகுதலும், தலைக்குறை, இடைக்குறை; கடைக்குறையாகிய விகாரமும், வேறுபடுத்தலும் வேறு பகுக்கப்படுதலுமாகிய சொல்வகையுள் இடைச்சொல் லெல்லாம் பொருளை வேறுபடுத்தும் சொல்லாதலும், உரிச்சொல்லுள்ளும் சில அவ்வாறு பொருள் வேறுபடுத்துஞ் சொல்லாதலும், வினையெச்சத்திரிபும், பொருளால் மாறுபட்ட இருசொற்கள் ஒருங்கு வருதலும்’ குறிப்பாற் பொருளுணரப் படுவனவும், ஒரு பொருள்மேல் வரும் இரண்டு சொற்கள் பிரிவின் நிற்றலும், ஒருமைக்குரிய பெயர்ச்சொல் பன்மை யுணர்த்தலும். ஆற்றுப்படைச் செய்யுளில் முன்னிலை குறித்து நின்ற ஒருமைச் சொல் பன்மையொடு முடிதலும் உணர்த்தப் படுகின்றன. இவ்வியலிறுதியிலுள்ள 66-ஆம் சூத்திரம் இச் சொல்லதிகாரத் திற்குப் புறனடையாக அமைந்துளது. செய்யுளாக்குதற்குரிய சொல்லாவன இயற்சொல், திரி சொல், திசைச்சொல், வடசொல் என நான்காம். அவற்றுள் இயற்சொல்லாவன செந்தமிழ் நிலத்தார் வழங்கும் வழக்கத்திற்குப் பொருந்தித் தத்தம் பொருளின் வழுவாமல் நடக்குஞ் சொல்லாம். ஒரு பொருளைக் கருதிய பலசொல், பல பொருளைக் கருதிய ஒருசொல் எனத் திரிசொல் இருவகைப்படும். திசைச்சொல்லாவன செந்தமிழ் வழக்கைப் பொருந்திய பன்னிரு நிலங்களினும் அவ்வந்நிலத்து வாழ்வார்தம் குறிப்பினையே பொருளாகக் கொண்டு வழங்குவன. வடசொல்லாவன வட மொழிக்கே யுரிய எழுத்தினை நீங்கி இருமொழிக்கும் பொதுவாகிய எழுத்தினையுறுப்பாகவுடைய சொற்களாம். சிறப்பெழுத்தாலாகிய வடசொற்கள் சிதைந்துவந்தனவாயினும் தமிழொலிக்கு ஏற்புடையவாயின் அறிஞர் அவற்றை விலக்கார் எனக் கூறுவர் தொல்காப்பியர். பெயர், வினை, இடை உரி யென மேற்கூறப்பட்ட நால்வகைச் சொற்களே செய்யுட் சொல்லாவன எனத் தெரிதல் வேண்டி இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என நால்வகையாகப் பகுத்துரைக்கப்பட்டன. வடசொல்லென்பது ஆரியச்சொற்போலுஞ்சொல் என்பர் இளம்பூரணர். எனவே வடசொல் யாவும் ஆரியச் சொற்களாகவே இருக்கவேண்டும் மென்ற நியதியில்லையென்பது உரையாசிரியர் கருத்தாதல் பெறப்படும். அன்றியும் ஆசிரியர் தொல்காப்பியனார் வடசொல் எனத் திசைபற்றிப் பெயர்கூறியதல்லது இன்னமொழியெனக் கூறாமையானும் வடசொற்கிளவியில் வடவெழுத்தொடு பொருந்திய ஆரியச்சொல்லும் ஏனைப்பொதுவெழுத்தான் அமைந்த தமிழ்திரி சொற்களும் உளவென்பது “வடசொற்கிளவி வடவெழுத்தொரீஇ, எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே” என ஆசிரியர் கூறுதலாற் பெறப்படுதலின், வடவெழுத்தானமைந்த ஆரியச்சொற்களும் பொதுவெழுத்தானமைந்த தமிழ் திரிசொற்களுமாக வடநாட்டில் வழங்கிய இருவகைச் சொற்களையுமே ஆசிரியர் வடசொல்லெனத் தழுவிக்கொண் டாராதல் வேண்டும். ஆரியச்சிறப்பெழுத்தால் வருவன தமிழொலிக்கேலாமையின் ‘வடவெழுத்தொரீ இ எழுத்தோடு புணர்ந்தசொல் வடசொல், என்றும் ஆரியச் சிறப்பெழுத்தாலாகிய சொற்களும் தமிழொலிக்கு இயைந்தனவாகச் சிதைந்துவரின், அவற்றையும் வடசொல்லெனத் தழுவிக்கொள்ளலாமென்றும் ஆசிரியர் கூறுதலால் தமிழோடு தொடர்பில்லாத வேற்றுமொழி யொலிகள் கலத்தல் கூடாதென்னும் வரையறை இனிது புலனாதல் காண்க. செந்தமிழ நாடாவது: வையையாற்றின் வடக்கும் மருத யாற்றின் தெற்கும் கருவூரின் கிழக்கும் மருவூரின் மேற்கும் என்பர் இளம்பூரணர் முதலியோர். இவ்வாறு உரைத்தற்குத்தக்க ஆதாரங் காணாமையானும் வையையாற்றின் தெற்காசிய கொற்கையும் கருவூரின் மேற்காகிய கொடுங்கோளூரும் மருதயாற்றின் வடக்காரிய காஞ்சியும் ஆன்றோர் கருத்துப்படி தமிழ்திரி நிலமாதல் வேண்டுமாதலானும் அவர் கூற்றுப் பொருந்தாது. “வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து வழக்குஞ் செய்யுளுமா யிருமுதலின் எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி” எனவரும் சிறப்புப் பாயிரத்துள் வடவேங்கடத்திற்கும் தென் குமரிக்கும் இடைப்பட்ட நிலப்பகுதி முழுவதையும் ‘தமிழ்கூறும் நல்லுலகம்’ எனப் பனம்பாரனார் சிறப்பித்தமையானும், கிழக்கும் மேற்கும் எல்லைகூறாது தென்குமரியெனத் தெற்கெல்லை கூறியவதனாற் குமரியின் தெற்கேயுள்ள நாடுகளையொழித்து வேங்கடமலையின் தெற்கும் குமரியின் வடக்கும் குணகடலின் மேற்கும் குடகடலின் கிழக்குமாகிய தமிழகம் முழுவதையுமே செந்தமிழ் நிலமெனத் தொல்காப்பியர் காலத் தமிழ் மக்கள் வழங்கினர் எனக் கொள்ளுதலே பொருத்தமுடையதாகும். வடவேங்கடந் தென்குமரியிடைப்பட்ட தமிழகம் ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்துப் பன்னிரு நிலங்களாகப் பகுக்கப்பட்டிருந்ததென்பது “செந்தமிழ்சேர்ந்த பன்னிரு நிலத்தும்” (எச்ச-ச) என அவ்வாசிரியர் கூறுதலால் இனிது விளங்கும். இப்பன்னிரு நிலங் களாவன: பொங்கர்நாடு, ஒளிநாடு, தென்பாண்டிநாடு, குட்டநாடு, குடநாடு, பன்றிநாடு, கற்காநாடு, சீதநாடு, பூழிநாடு, மலைநாடு, அருவாநாடு, அருவாவடதலை என்பன என்றும் இவற்றைத் தென்கீழ்பால் முதலாக வடகீழ்பாலிறுதியாக எண்ணிக்கொள்க வென்றும் கூறுவர் சேனாவரையர். ‘செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்’ என்ற தொடர்க்குச் ‘செந்தமிழ் வழங்கும் தமிழ்நாட்டின் பகுதிய வாகிய பன்னிரு நிலங்களினும்’ எனப் பொருள் கொள்ளுதலே ஆசிரியர் கருத்துக்கு ஏற்புடையதாகும். இவ்வாறுகொள்ளாது ‘செந்தமிழ்நாட்டைச் சூழ்ந்த பன்னிரண்டு நிலத்தும்’ எனப் பழைய வுரையாசிரியர்கள் பொருள்கொண்டு, செந்தமிழ் நிலம் வேறாகவும் அதனைச் சூழ்ந்த பன்னிரு நிலங்களும் வேறாகவும் கூறுப. ‘தென்பாண்டிகுட்டம்’ எனத்தொடங்கும் பழைய வெண் பாவிலும் ‘செந்தமிழ்சேர் ஏதமில் பன்னிருநாடு’ எனக் கூறப் படுதலால் இப்பன்னிரு நாடுகளும் செந்தமிழ் வழக்கினை மேற் கொண்டவை யென்பது நன்கு விளங்கும் எனவே. இப்பன்னிரண்டின்வேறாகச் செந்தமிழ் நிலமெனத் தனியே ஒரு நாடிருந்ததென்றும் அஃதொழிந்த பன்னிரு நாடுகளும் கொடுந் தமிழ் நாடுகளாமென்றுங் கூறுதல் ஆசிரியர் தொல்காப்பியனார்க்கு முரணாதல் தெளிக. செய்யுளகத்து மொழிகள் தம்முட்புணரும்முறைநிரல் நிறை, சுண்ணம், அடிமறி, மொழிமாற்று என நால்வகைப் படுமென்றார் தொல்காப்பியனார். பிற்காலத்தார் கூறும் யாற்று நீர்ப் பொருள்கோளும். அளைமறிபாப்புப் பொருள் கோளும் திரிவின்றிப் பொருள் விளக்குதலின் இயல்பாயடங்கும். கொண்டு கூட்டு சுண்ணமொழிமாற்றிலும், பூட்டுவிற் பொருள்கோள் மொழிமாற்றிலும் அடங்குமென்றும், தாப்பிசைப் பொருள்கோளில் முன்னொருசொல் வருவிக்க வேண்டுதலின் அது ‘பிரிநிலைவினையே’ என்னுஞ் சூத்திரத்துளடங்குமென்றுங் கூறுவர் தெய்வச்சிலையார். அறுவகைத் தொகை சொற்களின் இலக்கண முணர்த்துங் கால், வேற்றுமை யுருபும் உவமவுருபும் உம்மையும் வினைச்சொல் லீறும் பண்புச்சொல்லீறும் தொகுதலின் தொகையாயின வென்றும், அவ்வப் பொருள்மேல் ஒன்றும் பலவுமாகிய சொற்கள் பிளவுபாடது ஒற்றுமைப்படத் தம்முள் இயைதலின் தொகை யாயினவென்றும் உரையாசிரியர்கள் இருவகைப் பெயர்க்காரணங் கூறியுள்ளார்கள். ‘ஐம்பாலறியும் பண்புதொகு மொழியும்’ எனவும் ‘செய்யுஞ் செய்தவென்னுங் கிளவியின் மெய்யொருங்கியலுந் தொழில் தொகு மொழியும்’ எனவும் ‘உருபுதொக வருதலும்’ எனவும் ‘மெய்யுருபுதொகா விறுதியான’ எனவும் ‘பண்புதொக வரூஉங்கிளவியானும்’ எனவும் ‘உம்மைதொக்க பெயர்வயினானும்’ எனவும் வேற்றுமை தொக்க பெயர்வயினானும் எனவும் ‘உம்மையெஞ்சிய இருபெயர்த் தொகைமொழி’ எனவும் ஆசிரியர் தொக்கே நிற்குமெனச் சூத்திரஞ் செய்தலின், வேற்றுமை யுருபும், உவம வுருபும், உம்மும், வினைச்சொல்லீறும், பண்புணர்த்தும் ஈறும், இத்தொகைச் சொற்கள் அல்லாததோர் சொல்லும் தொக்கு நிற்றலின் தொகைச் சொல்லென்பதே அவர் கருத்தாயிற்று” என நச்சினார்க்கினியர் தொகைமொழிபற்றிய தொல்காப்பியனார் கருத்தை நன்கு விளக்கியுள்ளார். முற்றுச் சொல்லாவது இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் மூன்று காலத்தாலும், தன்மை முன்னிலை படர்க்கையென்னும் மூன்றிடத்தாலும், தொழிலாலும் குறிப்பாலும் இவ்விரண்டாய் வரும் அவ்வறுவகைச் சொல்லாம் என்பர் ஆசிரியர். மூவிடத்தும் தொழிலும் குறிப்புப்பற்றி இவ்விரண்டாய் வருதலின் அறுவகைச் சொல்லாயின. செய்கையும், பாலும், காலமும், செயப்படு பொருளும் தோன்றி முற்றி நிற்றலானும், பிறிதோர் சொல் நோக்காது முடிந்து நிற்றலானும், எப்பொழுது அவை தம் எச்சம் பெற்று நின்றனவோ அப்பொழுதே பின் யாதும் நோக்காவாய்ச் செப்பினை மூடினாற்போன்று பொருள் முற்றி அமைந்து மாறுதலானும் முற்றாயின எனக் காரணங் கூறுவர் உரையாசிரியர். பின் ‘பிரிநிலை வினையே பெயரே’ (எச்-34) என்புழிப் பெயரெச்சமும் என்புழிப் பெயரெச்சமும் வினையெச்சமுங் கூறுதலின் அவற்றோடியைய முற்றுச் சொல்லிலக்கணமும் ஈண்டுக் கூறினார். கூறவே முற்றும் பெயரெச்சமும் வினையெச்சமும் என வினைச்சொல் மூவகைத்தாதல் இனிதுணரப்படும். எஞ்சி நிற்பதோர் பொருளையுடைய சொல் எச்சச் சொல் லாகும். பிரிக்கப்பட்ட பொருளையுணர்த்துஞ் சொல் எஞ்ச நிற்பது பிரிநிலையெச்சம். வினைச்சொல் எஞ்ச நிற்பது வினையெச்சம். பெயர்ச்சொல் எஞ்ச நிற்பது பெயரெச்சம். சொல்லொழிந்த சொற்பொருண்மை யெஞ்ச நிற்பது ஒழியிசையெச்சம். தன்னின் மாறுபட்ட பொருண்மை யெஞ்ச நிற்பது எதிர்மறையெச்சம். உம்மையுடைத்தாயும் உம்மையின்றியும் வருஞ்சொற்றொடர்ப் பொருளை எச்சமாகக் கொண்டு முடிய நிற்பது உம்மையெச்சமாகும். எனவென்னும் ஈற்றையுடையதாய் வினையெஞ்ச நிற்பது எனவென்னெச்சமாகும். இவையேழும் தமக்குமேல் வந்து முடிக்கும் எச்சச் சொற்களையுடையனவாகும். சொல்லெச்சம், குறிப்பெச்சம், இசையெச்சம் என்னும் மூன்றும் ஒருதொடர்க்கு ஒழிபாய் எஞ்சிநிற்பன. எனவே இவை பிற சொற்களை விரும்பி நில்லாது சொல்லுவார் குறிப்பால் எஞ்சி நின்ற பொருளை யுணர்த்துவன வென்பர் ஆசிரியர். ஒரு சொல்லளவு எஞ்சி நிற்பன சொல்லெச்சமென்றும், தொடரா யெஞ்சுவன இசையெச்சமென்றும் இங்ஙனம் சொல்வகை யானன்றிச் சொல்லுவான் குறிப்பினால் வேறு பொருளெஞ்ச நிற்பன யாவும் குறிப்பெச்சமென்றும் கூறுப. இப்பத்தெச்சங்கட்கும் வேறு பொருள் கூறுவாருமுளர். எச்சமாவன ஒருசார் பெயரும் வினையும் இடைச்சொல்லு மாதலின் பெயரியல் முதலாயினவற்றுள் இப்பத்தையும் ஒருங் குணர்த்துதற் கிடமின்மையால் எஞ்சி நின்ற இலக்கணங்களைக் கூறும் இவ்வியலின்கண்ணே தொகுத்துக் கூறினார் ஆசிரியர். இவ்வாறே இவ்வியலிற் கூறிய ஏனையவற்றையும் பகுத்துணர்தல் கற்போர் கடனாகும். - க. வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 219-225 ஒன்பதாவது எச்சவியல் 397. இயற்சொற் றிரிசொ றிசைச்சொல் வடசொலென் றனைத்தே செய்யு ளீட்டச் சொல்லே. என்பது சூத்திரம். முற்கூறிய எண்வகை ஓத்தினுள்ளும் உணர்த்துதற்கு இடமின்றி எஞ்சிநின்ற சொல்லிலக்கணங் களைத் தொகுத்து உணர்த்துதலின், இஃது எச்ச வியலென்னும் பெயர்த்தாயிற்று. செய்யுட்கு உரிய சொல்லும், அவற்றி லக்கணமும், அவற்றின் விகாரமும், அச் செய்யுட் பொருள் கோளும் முதலுணர்த்துகின்றார். இச்சூத்திரம், செய்யுள் விதி யொழிபு பெரும்பான்மைத்தாதலிற், செய்யுட் செய்தற்கு உரிய சொற்கள் இவையென அவற்றின் வரையறை கூறுகின்றது. (இ-ள்.) இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்று அனைத்தே - இயல்பாகிய சொல்லும் அதுதான் திரிந்து வருஞ் சொல்லுந் திசைக்கண் வழங்குஞ் சொல்லும் ஆரியச் சொல்லும் என்று கூறிய அத்துணையே, செய்யுள் ஈட்டச் சொல்லே - ஒரு பொருண்மேல் நிகழுஞ் செய்யுளை ஈட்டுதற்கு உரிய சொல்லாவன, எ-று. எனவே, பிற பாடைச்சொற்கள் ஈட்டுதற்கு உரியவன்றிச் சிறுபான்மை வருமாயின. அவை, செப்பு, குளிரு, சிக்கு, அந்தோ என்றாற் போல்வன, பிறவுமாம். இயல்பாகிய சொல், முற்கூறிய நால்வகைச் சொல்லேயாய் நின்று, செய்யுட்கு உரித்தாம். அவ்வியற்சொல், திரிசொல்லாங்காற் பெரும்பான்மை பெயராகவுஞ் சிறுபான்மை தொழிற்பெயராகவும் வருதலன்றி ஏனையவாய் வாரா. (1) 398. அவற்றுள், இயற்சொற் றாமே செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித் தம்பொருள் வழாமை யிசைக்குஞ் சொல்லே. இது, நிறுத்தமுறையானே இயற்சொற்கு இலக்கணங் கூறுகின்றது. (இ-ள்.) அவற்றுள் இயற்சொற்றாமே - அந்நான்கனுள் ‘இயற்சொல்லென்று கூறிய சொற்றாம், செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி - செந்தமிழ் நிலத்தின்கண்ணே வழங்குத லோடு பொருந்தி, தம் பொருள் வழாமை இசைக்குஞ் சொல்லே - அச்செந்தமிழ் நிலத்துங் கொடுந்தமிழ் நிலத்துங் கேட்டோர்க்குத் தத்தம் பொருள் வழுவாமல் ஒலிக்குஞ் சொல்லாம், எ-று. திரிபின்றி இயல்பாகிய சொல்லாவன, நிலம், நீர், தீ, வளி, சோறு, கூழ், பால், மக்கள், மரம், தெங்கு, கமுகு என்னுந் தொடக்கத்தன. செந்தமிழ் நிலமாவது, வையை யாற்றின் வடக்கும், மருத யாற்றின் தெற்கும், கருவூரின் கிழக்கும், மருவூரின் மேற்குமாம். (2) 399. ஒருபொருள் குறித்த வேறுசொல் லாகியும் வேறுபொருள் குறித்த வொருசொல் லாகியு மிருபாற் றென்ப திரிசொற் கிளவி. இது, திரிசொற்கு இலக்கணங் கூறுகின்றது. (இ-ள்.) திரிசொற் கிளவி - அவ்வியற்சொல் திரிந்த திரி சொல்லாகிய சொல்லை, ஒரு பொருள் குறித்த வேறு சொல்லாகியும் வேறு பொருள் குறித்த ஒரு சொல்லாகியும் இருபாற்று என்ப - ஒரு பொருளைக் குறித்து வரும் பல சொல்லாயும் பல பொருளைக் குறித்து வரும் ஒரு சொல்லாயும் இரு வகைப்படுமென்று கூறுவர் ஆசிரியர், எ-று. அவ்வியற்சொல்லைத் திரிக்குங்காற் தம் எழுத்துச் சிறிது நிற்பத்திரிப்பனவும், அவ்வியற்சொற் றம்மையே பிறசொற் கொணர்ந்து முழுவதூஉந் திரிப்பனவுமென இருவகையாம். (உ-ம்.) கிளி, மயில் என்பவற்றைக் கிள்ளை, மஞ்ஞை எனச் சிறிது நிற்பத் திரித்தும், அவற்றைத் தத்தை, பிணிமுகம் எனப் பிற சொற் கொணர்ந்து முழுவதூஉந் திரித்துங் கூறுதல். மலைக்கு வெற்பு, விலங்கல் விண்டு என்பன முழுவதூஉந் திரித்தன. இவை ஒரு பொருள் குறித்த வேறு சொல். உந்தி யென்பது யாழ்ப்பத்தலும், கொப்பூழுந், தேர்த்தட்டுங் கானியாற்றிடையும் உணர்த்துதல் முழுவதூஉம் திரித்தது. இது, வேறு பொருள் குறித்த ஒரு சொல். அளகென்பது கோழி, கூகை, மயிலென்னும் மூன்று சாதியிற் பெண்பாற்கும் பெயராதலின் இதுவும் வேறு பொருள் குறித்ததாம். இதுவும் முழுவதூஉந் திரித்தன. இவை யெல்லாம் பெயர்த் திரிசொல். ‘கேட்டீவாயாயின், செப்பீமன், ஈங்குவந்தீத்தாய், புகழ்ந்திகு மல்லரோ, என்மனார், என்றிசினோரே, பெறலருங்குரைத்து’ என்பன போல்வன வினைத்திரிசொல். இவை சிறிது நிற்பத் திரித்தன. பைங்கண், பைந்தார், பச்சிழை; காரா; சேதா என்றாற் போலும் பண்புத்தொகையாகிய சொற்களைப் பசுமை, கருமை, செம்மை எனப் பண்புப் பெயராக நிறுத்தி, ஈற்றுயிர் மெய்யும் ஈற்றயல் உயிருங் கெட்டு வருமொழிக்கேற்ப ஒற்றுத் திரிந்தும் திரியாதும் ஆதி நின்ற அகரம் ஐகாரமாகியும் திரிந்தனவென்றும், ஈற்றுயிர் மெய்யும் ஈற்றயல் உயிருங் கெட்டு ஆதிநீண்டதெ ன்றும், ஈற்றுயிர் மெய்யும் இடையிலொற்றுங் கெட்டு ஆதிநீண்டதென்றும் பின்னுள்ளோர் சந்தி முடிக்கின்றது பொருந்தாது. என்னை? பைங்கணென்புழிப் பசியதாகிய கண் னெனப் பண்புணர்த்தும் ஈற்றை விரித்தலன்றிப் பசுமைக்கண் ணெனத் தாந்தொகுத்த பண்புப் பெயரை விரித்தலாகாமையின். இவை செய்யுட்குப் புலவர் சிறிது நிற்பத் திரித்துக் கொண்ட பெயரெச்ச வினைக்குறிப்புப் பெயரென்று உணர்க. எழுத்ததிகாரத்துச் செய்யுட்கு இவ்வாறு முடிகவென ஆசிரியர் முடிபு கூறியவற்றை யெல்லாம் செய்யுன்முடிபென்று கூறலும், வழக்குச் சொல் இவ்வாறு திரிந்து வந்தனவற்றை வினைத் திரிசொல்லென்று பெயர் கூறலும் ஆசிரியர் கருத்தாம். இடையும் உரியுந் திரிசொல்லாய் வருமேனும் உணர்க. (3) 400. செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்துந் தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி. இது, திசைச்சொற்கு இலக்கணங் கூறுகின்றது. (இ-ள்.) திசைச்சொற்கிளவி - திசைச்சொல்லாகிய சொல், செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்துந் தங் குறிப்பினவே - செந்தமிழ் நாட்டைச் சூழ்ந்த பன்னிரண்டு நிலத்தும் பன்னிரண்டையும் புறஞ் சூழ்ந்த பன்னிரண்டு நிலத்துந் தாந் தாங் குறித்த பொருளையே விளக்குந் தன்மையை உடையன, எ-று. உம்மையை எச்சஉம்மையாக்கிப் பொருளுரைக்க. எனவே, இயற்சொற்போல எந்நிலத்துந் தம் பொருள் விளக்காவாயின. பன்னிரு நிலமாவன : பொங்கர் நாடு, ஒளி நாடு, தென்பாண்டி நாடு, குட்டநாடு, குடநாடு, பன்றி நாடு, கற்கா நாடு, சீத நாடு, பூழி நாடு, மலையமாநாடு, அருவா நாடு, அருவாவடதலை நாடு எனத் தென்கீழ்பால் முதலாக வடகீழ்பா லீறாக எண்ணுக. இனிப் பன்னிரண்டையுஞ் சூழ்ந்த பன்னிரண்டாவன : சிங்களமும், பழந்தீவும், கொல்லமுங் கூபமுங் கொங்கணமுந் துளுவும், குடகமுங் கருநடமும், கூடமும், வடுகுந் தெலுங்கும், கலிங்கமுமாம். தென்பாண்டி நாட்டார் ஆ, எருமை, என்பனவற்றைப் பெற்றமென்றுங், குட்ட நாட்டார் தாயைத் தள்ளையென்றும், நாயை ஞெள்ளை யென்றுங், குடநாட்டார் தந்தையை அச்சனெ ன்றுங், கற்கா நாட்டார் வஞ்சரைக் கையரென்றுஞ், சீத நாட்டார் ஏடா வென்பதனை எலுவனென்றுந், தோழியை இகுளை யென்றும் தம்மாமி என்பதனைத் தந்துவையென்றுந் பூழி நாட்டார் நாயை ஞமலி யென்றும் சிறுகுளத்தைப் பாழியென்றும், அருவா நாட்டார் செய்யைச் செறு வென்றும் சிறுகுளத்தைக் கேணி யென்றும், அருவாவடதலைநாட்டார் குறுணியைக் குட்டை என்றும் வழங்குப. இனிச் சிங்களம், அந்தோ வென்பது. கருநடம், கரைய, சிக்க, குளிர என்பன. வடுகு, செப்பென்பது. தெலுங்கு, எருத்தைப் பாண்டிலென்பது. துளு மாமரத்தைக் கொக்கென்பது. ஒழிந்தவற்றிற்கும் வந்துழிக் காண்க. (4) 401. வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ யெழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே. இது, வடசொற்கு இலக்கணங் கூறுகின்றது. (இ-ள்.) வடசொற்கிளவி - வடசொல்லாகிய சொல், வடவெழுத்து ஒரீஇ - உரப்பியும் எடுத்துங் கனைத்துங் கூறும் வடவெழுத்துக்களின் நீங்கி, எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும் - இருசார் மொழிக்கும் பொதுவாகிய எழுத்தான் இயன்ற சொல்லாம் எ-று. அவை, வாரி, மேரு, குங்குமம், மணி, மானம், மீனம், வீரம், வேணு, காரணம், காரியம், நிமித்தம், காரகம் என்றாற்போலச் சான்றோர் செய்யுட்கண் வருவன. இனி, ஒழிந்தோர் செய்யுட்கண் வருவன, கமலம், அமலம், மூலம், கோபம், ஞானம், ஞேயம், தமாலம், தாரம், திலகம், நாமம், யானம், யோனி, உற்பலம் இவையும், இவை போல்வன பிறவுமாம். (5) 402. சிதைந்தன வரினு மியைந்தன வரையார். இதுவும் அது. (இ-ள்.) சிதைந்தன வரினும் - பொது எழுத்தான் இயன்றனவே யன்றி வடவெழுத்தான் இயன்ற வடசொற் சிதைந்து வரினும், இயைந்தன வரையார் - பொருத்தமுடையன செய்யுளிடத்து நீக்கார், எ-று. (உ-ம்.) ‘அரமியம் வியலகத் தியம்பும்’ ‘தசநான் கெய்திய பணை மருள் நோன்றாள்’ வாதிகை யன்ன கவைக்கதிரிறைஞ்சி’ ‘கடுந்தேரிராமனுடன்புணர் சீதையை’ ‘பேதை யெல்லை மேதையங் குறுமகள்’ ‘தைப்பமை சருமத்து’ என்றாற் போல்வன சான்றோர் செய்யுட்கட் சிதைந்து வந்தன. இனி, தந்திரம், சூத்திரம், விருத்தி, அருத்தாபத்தி, உத்தி என்றாற் போல்வன, நூலுட் சிதைந்து வந்தன. பங்கயம், இடபம், விசயம், இருடிகள், மேகம், பந்தம், மயானம், விடம், துங்கம், பலம், பாரம், சர்ச்சரை, சாதி, சேனை, சித்தி, சாதனம், அயன், அரி, அரன், ஆரம், அருகம், சிங்கம், மோக்கம், காமம், பக்கம், சூலம், சதம், போதகம், போகம், சுத்தம், சலம், மோகம், யோகம், வந்தனை, வேலை, சாலை, மாலை, உவமை, வனிதை, புரி, மேதினி, குமரி, நதி, அரங்கம், இலங்கை, இயக்கன், உலோபம், உலோகம், நிருத்தம், கீதம், வாச்சியம், வச்சிரம், அருத்தம், கருமம், கருப்பம், காப்பியம், பருப்பதம் என்றாற்போல்வன பின்னுள்ளோர் செய்யுட்கண் திரிந்து ஏற்கும் எழுத்துக்களான் மருவி வந்தன. இனி, சிதைந்தனவரினும் எனப் பொதுப்படக் கூறியவதனால், ஆணை, வட்டம், நட்டம், கண்ணன் எனப் பாகதமாகச் சிதைந்தனவுங் கொள்க. (6) 403. அந்நாற் சொல்லுந் தொடுக்குங் காலை வலிக்கும்வழி வலித்தலு மெலிக்கும்வழி மெலித்தலு விரிக்கும்வழி விரித்தலுந் தொகுக்கும்வழித் தொகுத்தலு நீட்டும்வழி நீட்டலுங் குறுக்கும்வழிக் குறுக்கலு நாட்டல் வலிய வென்மனார் புலவர். இது செய்யுள் விகாரமாமாறு கூறுகின்றது. (இ-ள்.) அந்நாற்சொல்லுந் தொடுக்குங்காலை - முற்கூறிய நான்கு சொல்லையுஞ் செய்யுளாகத் தொடுக்குங்கால், வலிக்கும் வழி வலித்தலும் - மெல்லொற்றை வல்லொற்றாக்க வேண்டும் வழி வல்லொற்றாக்கலும், மெலிக்கும்வழி மெலித்தலும் - வல்லொற்றை மெல்லொற்றாக்க வேண்டும் வழி மெல்லொற் றாக்கலும், விரிக்கும்வழி விரித்தலும் - சந்தி நிரம்புதற்கு ஒரு சொல்லை விரிக்கவேண்டும்வழி விரித்தலும், தொகுக்கும்வழித் தொகுத்தலும் - சந்தம் உளவாதற்கு ஒரு சொல்லைத் தொகுக்க வேண்டும்வழித் தொகுத்தலும், நீட்டும்வழி நீட்டலும் - குற்றெழுத்தினை நீட்ட வேண்டும் வழி நீட்டலும், குறுக்கும்வழி குறுக்கலும் - நெட்டெழுத்தினைக் குறுக்க வேண்டும் வழிக் குறுக்கலுமாகிய அறுவகை விகாரமும், நாட்டல் வலிய என்மனார் புலவர் - செய்யுள்இன்பம் பெறச் செய்வார் நாட்டுதலை வலியாக வுடைய என்று கூறுவர் புலவர், எ-று. (உ-ம்.) ‘முத்தை வரூஉங் காலந் தோன்றின்’. ‘குன்றிய லுகரத்திறுதி யாகும்’. ‘தண்ணந் துறைவன் கொடுமை’. ‘இடை யெனப் படுப’. ‘வெள்வளை நல்காள் வீடுமென்னுயிரே’. ‘திருத்தார்நன் றென்றேன் தியேன்.’ என முறையே காண்க. ‘பாசிலை, ‘அழுந்துபடு விழுப்புண்’ என்றாற்போல இரண்டு விகாரம் வருவனவற்றை ‘நாட்டல் வலிய’ என்றதனாற் கொள்க. (7) 404. நிரனிறை சுண்ண மடிமறி மொழிமாற் றவைநான் கென்ப மொழிபுண ரியல்பே. இது, செய்யுள் செய்வழி அதன் பொருட்கிடை கூறுகின்றது. (இ-ள்.) இயல்பு புணர்மொழி - இயற்கையாகவே தம்முட் கூடிய பொருளுணர்த்தும் சொற்கள் அங்ஙனம் இயற்கையாகக் கூடிப் பொருளுணர்த்தாது விகாரப்பட்டுப் பொருளுணர்த்துங் கால், அவை - அவ்விகாரவகை, நிரனிறை சுண்ணம் அடிமறி மொழிமாற்று நான்கு என்ப - நிரநிறையுஞ் சுண்ணமும் அடிமறியும் மொழிமாற்று மென நான்கென்று கூறுவர் ஆசிரியர். எ-று. நிரனிறையுஞ் சுண்ணமும், நிரலே நிறுத்தலுந் துணித்துக் கூட்டுதலுமாகிய வேறுபாடுடைமையின், மொழிமாற்றின் வேறாயின. (8) 405. அவற்றுள், நிரனிறை தானே வினையினும் பெயரினும் நினையத் தோன்றிச் சொல்வேறு நிலைஇப் பொருள்வேறு நிலையல். இது, நிறுத்தமுறையானே நிரனிறை கூறுகின்றது. (இ-ள்.) அவற்றுள் நிரனிறைதானே - அந்நான்கனுள் நிரனிறை யாவது, வினையினும் பெயரினும் நினையத் தோன்றி - வினையானும் பெயரானும் ஆராயத் தோன்றி, சொல் வேறு நிலைஇப் பொருள் வேறு நிலையல் - முடிக்கப்படுஞ் சொல்லும் வேறே நிலைபெற்று முடிக்குஞ் சொல்லும் வேறே நிற்றலாம். எ-று. தொடர்மொழிப் பொருள் முடிக்குஞ் சொற்கண் ணாகலான், முடிக்குஞ் சொல்லைப் பொருளென்றார். ‘வினையினும் பெயரினும்’ என்றதனான், வினைச் சொல்லான் வருவதூஉம் பெயர்ச்சொல்லான் வருவதூஉம் அவ்விரு சொல்லான் வருவதூஉம் என நிரனிறை மூன்றாம். (உ-ம்.) ‘மாசு போகவும் காய்பசி நீங்கவும், கடிபுனல் மூழ்கி யடிசில் கைதொட்டு’ என்புழி, முடிவனவும் முடிப்பனவுமாகிய வினைச்சொல் வேறு வேறு நிற்றலின், வினைநிரனிறை. ‘கொடிகுவளை கொட்டை நுசுப்புண்கண் மேனி’ என முடிவனவும் முடிப்பனவுமாகிய பெயர்ச்சொல் வேறுவேறு நிற்றலிற், பெயர் நிரனிறை. ‘உடலும் உடைந்தோடும் மூழ்மலரும் பார்க்கும் - கடலிருளாம்பல்பாம் பென்ற - கெடலருஞ்சீர்த் - திங்கடிருமுகமாச் சேத்து.’ என்புழி, முடிவனவாகிய பெயரும் முடிப்பனவாகிய வினையும் வேறுவேறு நிற்றலிற், பொது நிரனிறை. நினைய என்றதனாற் சொல்லும் பொருளும் நிரல்பட நில்லாது, ‘களிறுங் கந்தும் போல - நளிகடற் கூம்பும் கலனுந் தோன்றும்’ என மயங்கி வருதலுங்கொள்க. (9) 406. சுண்ணந் தானே பட்டாங் கமைந்த வீரடி யெண்சீ ரொட்டுவழி யறிந்து துணித்தன ரியற்றல். இது, சுண்ணமாமாறு கூறுகின்றது. (இ-ள்.) சுண்ணந்தானே - சுண்ணமாவது, பட்டாங்கு அமைந்த ஈரடி எண்சீர் - இயல்பாக அமைந்த ஈரடிக்கண் உளவாகிய எண்சீரை, துணித்தனர் ஒட்டுவழி அறிந்து இயற்றல் - துணித்து இயையும்வழி அறிந்து கூட்டி இயற்றப்படுவதாம், எ-று. ஈரடி எண்சீர் அளவடி யல்லா விகார அடியானும் பெறப்படுதலின், அவற்றை நீக்குதற்கு ‘அளவடியான் அமைந்த’ என்பார், ‘பட்டாங்கமைந்த ஈரடி’ என்றார். (உ-ம்.) சுரையாழ வம்மி மிதப்ப வரையனைய - யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப - கானக நாடன் சுனை’ சுரை மிதப்ப, அம்மி ஆழ, யானைக்கு நிலை, முயற்கு நீத்தெனத் துணித்துக் கூட்ட இயையும். சுண்ணம்போலச் சிதர்ந்து கிடத்தலின், சுண்ணமாயிற்று. இதனுள், ஆழ அம்மி, நீத்து முயற்கு என ஒட்டிப் பொருள் தந்து நின்றனவேனும், சுரைக்கும் யானைக்குஞ் சொன்முடிபு நோக்குப்பட நின்று பொருளுணர்த்தாமையின், மாற வேண்டிற்று. (10) 407. அடிமறிச் செய்தி யடிநிலை திரிந்து சீர்நிலை திரியாது தடுமா றும்மே. இஃது, அடிமறி யாமாறு கூறுகின்றது. (இ-ள்.) அடிமறிச் செய்தி - அடிமறி யென்பதன் செய்தி, சீர் நிலை திரியாது அடி நிலை திரிந்து தடுமாறும் - சீர் நின்றாங்கு நிற்ப அடிகள் தத்தம் நிலையிற் திரிந்து ஒன்றன்நிலைக்களத்து ஒன்று சென்று நிற்கும், எ-று. (உ-ம்.) ‘மாறாக் காதலர் மலைமறந் தனரே - யாறாக் கட்பனி வரலா னாவே - யேறா மென்றோள் வளைநெகி ழும்மே- கூறாய் தோழி! யான் வாழு மாறே.’ இது சீரும் பொருளுந் திரியாது, அடி திரிந்தவாறு காண்க. இது நான்கடிச் செய்யுட்கல்லது பெரும்பான்மை வாராது. (11) 408. பொருடெரி மருங்கி னீற்றடி யிறுசீர் ரெருத்துவயிற் றிரியுந் தோற்றமும் வரையா ரடிமறி யான. இது, மேலதற்கு ஓர் புறனடை. (இ-ள்.) அடிமறியான - அவ்வடிமறிச் செய்யுளிடத்து, பொருள் தெரி மருங்கின் - பொருள் முடிவை ஆராயுமிடத்து, ஈற்றடி - அப்பொருள் முடிவினை உடைய அடியில், எருத்துவயின் இறுசீர் - முடிக்கின்ற சீர்க்கு முதற்சீரிடத்துப் பொருளே தன் பொருளாய் இறுஞ்சீர், திரியுந் தோற்றமும் வரையார் - ஏனை அடிகள் போல நேராய் முடியாது மீண்டு சென்று முன் நின்றதோர் சொல்லோடே பொருண்முடியுந் தோற்றரவும் நீக்கார் ஆசிரியர். எ-று. ‘கூறாய் தோழி! யாம் வாழு மாறே.’ என்பது, யாண்டு நிற்பினும் பாட்டின் பொருள் முடிக்கின்ற அடி. அதில் வாழு மென்பது, எருத்துச் சீர். மாறு என்னும் இடைச்சொல்லாகிய இறுதிச்சீர் தான் பிரிந்து நின்று உணர்த்துதற்குத் தனக்கோர் பொருளின்றி வாழும்படியை என எருத்துச்சீரின் பொருளையே யுணர்த்தி, உருபையேற்றுக் கூறாய் என முன் நின்ற சொல்லொடு முடிந்தவாறு காண்க. உம்மையான், இங்ஙனம் முடிதல் சிறுபான்மையாயிற்று. (12) 409. மொழிமாற் றியற்கை சொன்னிலை மாற்றிப் பொருளெதி ரியைய முன்னும் பின்னுங் கொள்வழிக் கொளாஅல். இது, மொழிமாற்றாமாறு கூறுகின்றது. (இ-ள்.) மொழிமாற்று இயற்கை - மொழிமாற்றினது இயல்பாவது, சொல் நிலைப் பொருள் எதிர் இயைய முன்னும் பின்னும் மாற்றி - செய்யுட்கட் பா வென்னும் உறுப்பிற்கு ஏற்பச் சொல் நின்ற நிலை, பொருள் தாராதவழிச் சொல் நின்ற நிலைக்குப் பொருள் எதிரே வந்து பொருந்தும்படி அச்சொல்லின் முன்னின்ற சொல்லைப் பின்னேயும் பின்னின்ற சொல்லை முன்னேயும் மாற்றி, கொள்வழிக் கொளாஅல் - பொருள் கொள்ளுமிடத்தே கொளுத்துதலாம், எ-று. (உ-ம்.) ‘குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி - நரம்பார்ப்பன்ன வாங்குவள் பரிய’ ‘புரவியினது வாங்குவள் நரம்பார்ப்பன்ன பரிய’ என முன்னின்ற சொல்லைப் பின்னே மாற்றியவாறு காண்க. இச்சூத்திரமும் அது. ‘இடைமுலைக் கிடந்து’ என்பது, ‘முலையிடை’ யெனப் பின்னின்ற மொழியை முன்னே மாற்றியவாறு காண்க. ‘கடற்படை குளிப்ப மண்டி’ என்பதும் அது. ‘இரும்பு திரித்தன்ன மாயிரு மருப்பிற், பரலவலடைய விரலை தெறிப்ப’ என்பதும் அது. பொன்னோடைப் புகரணிநுதற் - றுன்னருந்திறற் கமழ்கடாஅத் - தெயிறுபடை யாக வெயிற்கத விடாக் - கயிறுபிணிக் கொண்ட கவிழ்மணி மருங்கிற் - பெருங்கை யானை யிரும்பிடர்த் தலையிருந்து - மருந்தில்கூற்றத்தருந்தொழில் சாவா என்றாற் போல வருவன வெல்லாம் அணுகிவந்த மாட்டென்னும் உறுப்பு. ‘ஆரிய மன்னர் பறையினெழுந்தியம்பும்’ என்பதும் அது. ‘அகன்று வந்த மாட்டு’ முருகாற்றுப்படை முதலியவற்றுட் காண்க. மொழிமாற்றாவது, கேட்டோர் கூட்டி உணருமாற்றான் ஈரடிக் கண்ணே வருவ தென்றும், மாட்டென்னுமுறுப்பாவது, இரண்டிறந்த பல அடிக்கண்ணும் பல செய்யுட் டொடரின்கண்ணும் அகன்றும் அணுகியும் வருமென்றும் உணர்க. அஃது, ‘அகன்றுபொருள் கிடப்பினுமணுகிய நிலையினு - மியன்றுபொருண் முடியத் தந்தனருணர்த்தன் - மாட்டென மொழிப பாட்டியல் வழக்கின்.’ (210) என்னுஞ் செய்யுளியற்சூத்திரத்தான் உணர்க. உதாரணங்கள் ஆண்டுக் காட்டுதும். பூட்டுவிற் பொருள்கோளும், அளைமறி பாப்புப் பொருள் கோளும், தாப்பிசைப் பொருள்கோளுங், கொண்டு கூட்டுப் பொருள் கோளும் மாட்டு என்னும் உறுப்பின்கண் அடங்குமாறும்; யாற்றொழுக்குப் பொருள்கோள் யாப் பென்னும் உறுப்பின்கண் அடங்குமாறும் உணர்க. (13) 410. தநநு எஎனு மவைமுத லாகிய கிளைநுதற் பெயரும் பிரிப்பப் பிரியா. இது, மேற் தொகைச்சொற்கூறுவான் தொகைபோல இருபொருள் படுவன இவை யென்கின்றது. (இ-ள்.) த ந நு எ எனும் அவை முதலாகிய கிளை நுதற் பெயரும் - ‘த, ந, நு, எ’ என்கின்ற எழுத்துக்களை முதலாக வுடைய ஒருவரோடு ஒருவர்க்கு உள்ள தொடர்ச்சிக்கிழமையைக் கருதின ஒட்டுப் பெயர்களும், பிரிப்பப் பிரியா - தொகைச்சொற் போல இரு பொருள்பட்டு நிற்பினும் அவைபோலப் பின்வருஞ் சொல் தம் பொருள் உணர்த்தாமையின் பிரிக்கப்படா, ஒரு சொல்லேயாய் நிற்கும், எ-று. (உ-ம்.) தமன், தமள், தமர் ; நமன், நமள், நமர்; நுமன், நுமள், நுமர்; எமன், எமள், எமர் என வரும். விளிமரபில் முதலும் ஈறும் பற்றி ஓதி இடையின் விகற்பங் கூறாமையிற், தம்மான், நம்மான், நும்மான், எம்மான் என்றாற்போலும் வாய்பாட்டு விகற்பமுங் கொள்க. சேனாவரையர், தங்கிளை, நங்கிளை, நுங்கிளை, எங்கிளை என்பனவற்றை ஒருமைக்கும் பன்மைக்கும் பொதுவாய் நிற்கு மென்றாரா லெனின், ஆசிரியர், ‘தாமென் கிளவி பன்மைக் குரித்தே’ ‘யாம் நாமென வரூஉம் பெயரும்’ என இவ்வதிகாரத்து எடுத்தோதிய பன்மைச் சொற்களை எழுத்ததிகாரத்துள் அவை எழுவாயும் பயனிலையுமாய் நிற்கும்வழித் திரியாது புணருமென்று கூறி, ‘தாம்நாமென்னு மகர விறுதியும்’ என்னுஞ் சூத்திரத்தான் உருபேற்கும்வழித் திரிந்து புணருமென்று கூறி, ‘நும்’ மென்பதனை, ‘நும்மென் ஒரு பெயர்’ என்னுஞ் சூத்திரத்தான் உருபேற்குமாறு கூறி, ‘அல்லதன் மருங்கின்’ என்னுஞ் சூத்திரத்தான் அஃது எழுவாயும் பயனிலையுமாய் நிற்கும்வழி நீயிரெனத் திரிந்து பன்மையாயே நிற்குமெனவுங் கூறிப்போந்தாராதலின், ஈண்டும் அதற்கேற்பத் தம்முடைய கிளை, எம்முடைய கிளை எனப் பன்மை யுணர்த்துத லன்றி ஒருமை யுணர்த்தாமை உணர்க. ஏனையவும் அன்ன, ‘தம்பொரு ளென்பதம் மக்கள்’ எனவும், ‘நம்ம னோர்க்கே’ எனவும். ‘நும்ம னோருமற் றினைய ராயினெம்ம னோரிவண் பிறவலர் மாதோ’ எனவும் இந்நான்கு சொல்லும் அம் முடிபுபெற்று, முதனிலை திரிந்து நின்று, பன்மைப்பொருள் உணர்த்தியவாறு காண்க. ஈண்டு இவை வெற்பன், பொருப்பன் போலத் தம், நம், நும், எம் என்பன பிரிந்து நின்று பொருள் உணர்த்திப் பின்வருகின்ற அன், அள், அர் என்பன பொருளுணர்த்தாது இடைச் சொல்லாயே நிற்றலின், பிரிப்பப் பிரியா, என்றார். இனி, உம்மையை எச்சப்படுத்திப் பிற ஒட்டுப்பெயர்களும் பிரிப்பப் பிரியா எனப் பொருள் கூறி, இம்பர், உம்பர், இம்மை, உம்மை, எம்மை என்றாற்போல்வன பிறவும் இவ்விடம், உவ்விடம், இப்பிறப்பு, உப்பிறப்பு, எப்பிறப்பு என்னும் பொருளுணர்த்தி நிற்குமென்று கொள்க. (14) 411. இசைநிறை யசைநிலை பொருளொடு புணர்தலென் றவைமூன் றென்ப வொருசொல் லடுக்கே. இதுவுந் தொகைச்சொற் போல அடுக்கி வருவன கூறுகின்றது. (இ-ள்.) ஒரு சொல் அடுக்கே - ஒரு சொல்லை அடுக்கும் அடுக்கு, இசைநிறை அசைநிலை பொருளொடு புணர்தலென்று அவை மூன்று என்ப - இசைநிறையும் அசைநிலையும் பொருளொடு புணர்தலுமென்று சொல்லப்பட்ட அவை மூன்றுமென்று சொல்லுவர் ஆசிரியர், எ-று. (உ-ம்.) ‘ஏஏ ஏஏ யம்பன் மொழிந்தனள்’-இஃது இசைநிறை. ‘மற்றோ மற்றோ’ இஃது அசைநிலை. ‘வந்தது வந்தது கூற்று’ அவன் அவன், வைதேன் வைதேன், போம் போம் என்பன விரைவுற், துணிவும், உடம்பாடும், ஒரு தொழில் பலகால் நிகழ்தலுமாகிய பொருள் வேறுபாடு உணர்த்தலிற், பொருளொடு புணர்தல். (15) 412. வேற்றுமைத் தொகையே யுவமத் தொகையே வினையின் றொகையே பண்பின் றொகையே யும்மைத் தொகையே யன்மொழித் தொகையென் றவ்வா றென்ப தொகைமொழி நிலையே. இது, தொகைச்சொற்குப் பெயரும் முறையுந் தொகையுங் கூறுகின்றது. (இ-ள்.) வேற்றுமைத் தொகையே - வேற்றுமை யுருபுகள் தொக்க தொகை, உவமத் தொகையே - உவம உருபுகள் தொக்க தொகை, வினையின் றொகையே - வினைச்சொல் ஈறுகள் தொக்க தொகை, பண்பின் றொகையே - பண்பு உணர்த்தும் ஈறுகள் தொக்க தொகை, உம்மைத் தொகையே - ‘உம்’ மென்னும் இடைச் சொல் தொக்க தொகை, அன்மொழித் தொகை - இத் தொகைச் சொற்களின் இறுதிக்கண் வந்து பொருள் தரும் வேறோர் சொல் தொக்க தொகை, என்று அவ்வாறு என்ப - என்று சொல்லப் பட்ட அவ் வாறுமென்று சொல்லுவர் ஆசிரியர், தொகை மொழி நிலையே - தொகைச் சொல்லினது நிலைமையை, எ-று. ‘ஐம்பாலறியும் பண்புதொகு மொழியும்’ எனவும், ‘செய்யுஞ் செய்த வென்னுங் கிளவியின், மெய்யொருங்கியலுந் தொழி றொகு மொழியும்’ எனவும், ‘உருபுதொக வருதலும்’ (105) எனவும், ‘மெய்யுருபு தொகாவிறுதியான’ எனவும், ‘பண்புதொக வரூஉங் கிளவி யானும்’ எனவும், உம்மை தொக்க பெயர்வயினானும்’ எனவும், ‘வேற்றுமை தொக்க பெயர்வயினானும்’ எனவும், ‘உம்மை யெஞ்சிய விருபெயர்த் தொகைமொழி’ எனவும் ஆசிரியர் தொக்கே நிற்குமெனச் சூத்திரஞ் செய்தலின், வேற்றுமை யுருபும் உவம வுருபும் உம்மும் வினைச்சொல் லீறும் பண்புணர்த்தும் ஈறும் இத் தொகைச் சொற்கள் அல்லாததோர் சொல்லும் தொக்குநிற்றலிற், தொகைச் சொல் லென்பதே அவர் கருத்தாயிற்று. ஆயிற், ‘கேழற்பன்றி’ ‘வேழக்கரும்பு’ என்பனவற்றிற்குத் தொக்கன இன்மையிற், தொகைச் சொல் லாமாறு என்னை? யெனின், அவற்றிற்கும் ஒன்றை யொன்று விசேடித்து நிற்கின்ற தன்மையை உணர்த்துதற்கு வரும் ஆகிய என்னும் வாசகந் தொக்கு நின்ற தென்றே கோடும். அன்றித் ‘தன்கட் தொக்கன இன்றி அங்ஙனம் வாசகந் தொக்கு நின்றது தொகை யென்றற்குச் சாலாமையின், அதனை ஒட்டி ஒரு சொல்லாய் நின்று தம் பொருள் உணர்த்து மென்று கொண்டு ஏனையவற்றையும் அவ்வாறே கோடு மெனின், எடுத்தோத்தினும் இலேசு சிறத்தல் யாண்டும் இன்மையின், அது பொருந்தாது. என்னை? அவ்விரு பெயரொட்டுப் பண்புத் தொகை அறுவகைத் தொகைச் சூத்திரங்களுள் எடுத்தோத்தின்றி ‘என்ன கிளவியும்’ என்ற இலேசினாற் கொண்டதாகலின். ஆயின், ‘வண்ணத்தின் வடிவின்’ என்பதன்கண் இருபெயரொட்டாய் ஐம்பால் அறியாத வடிவினையும் எடுத்தோதினாராலெனின், வடிவு முதலியவற்றிற்கும் அறுவகைத் திரிபினுள் ஏற்பன கொணர்ந்து முடித்தலிற், குன்றலுந் தொகையாமென்று உணர்க. ‘என்ன கிளவியும்’ என்றதனாற் கொள்வன வருமொழி யின்றி நிலைமொழியும் பொருளுணர்த்தி நிற்குமென்பது ஆண்டுக் கூறுதும். அன்றியுஞ், ‘செய்தான் பொருள், இருந்தான் குன்றத்து’ என வழங்குவன ஒட்டி ஒரு சொல் லாகாமையுஞ்; செய்யுட்கட் ‘கழூஉ விளங்காரங்கவைஇய மார்பே’ எனவும், ‘ஒற்றுமைக் கொண்ட வழி’ எனவும் இறுதிக்கண் இரண்டாவது தொக்கன, ‘முயங்கினெ னல்லனோ’ எனவும், ‘போற்றாய்’ எனவும் வரும் முடிக்குஞ் சொற்களோடு ஒட்டி ஒரு சொல் லாகாமையுந்; ‘தோன்றன் மறந்தோர் துறைகெழு நாட்டே’ எனவுஞ் ‘சிறுகுர லெய்தலெம் பெருங்கழி நாட்டே’ எனவும் இறுதிக்கண் ஏழாவது தொக்கன, ‘தோன்றும்’ எனவும் ‘சேர்ந்தனை செலினே’ எனவும் வரும் முடிக்குஞ் சொற்கள் ஒட்டி ஒருசொல் லாகாமையும் உணர்க. இன்னும், ‘வல்லே மறவலோம்புமதி எம்மே,’ என இடைக்கட் தொக்கனவும், ‘பொன்னோடைப் புகரணிநுதற் - றுன்னருந்திறற் கமழ்கடாஅத் - தெயிறுபடையாக வெயிற்கத விடாக் - கயிறுபிணிக் கொண்ட கவிழ்மணி மருங்கிற் - பெருங்கை யானை’ என அடுக்கி வருவனவும் ஒட்டி ஒருசொல் லாகாமையும் உணர்க. ‘அதுவென் வேற்றுமை’ என்னுஞ் சூத்திரத்து ‘அதுவெ னுருபுகெட’ என்றதனால், அது வெனுருபு நின்றாலல்லது கெடுதலின்மையின், அது நின்று கெட்டதென்னும் பொருள் தரல் ஆண்டுக் கூறிப் போந்தாம். அதனால், ஈண்டுச் சேனாவரையர் கூறிய பொருட்கு விடையின்மை உணர்க. இவற்றுள் வினைத்தொகையும் பண்பின்தொகையுஞ் சிறிது தொக்குத் தொகை யாதலும், ஏனைய முழுவதூஉந் தொக்குத் தொகை யாதலும் உணர்க. (16) 413. அவற்றுள், வேற்றுமைத் தொகையே வேற்றுமை யியல. இது, முறையானே வேற்றுமைத்தொகை கூறுகின்றது. (இ-ள்.) அவற்றுள் - முற்கூறிய ஆறனுள், வேற்றுமைத் தொகை - வேற்றுமை யுருபுகள் தொக்க தொகைச்சொற்கள், வேற்றுமை இயல - அவ் வுருபுகள் தொக்கனவேனுந் தொகாது நின்றாற்போலப் பொருளுணர்த்தும் இயல்பின, எ-று. (உ-ம்.) ‘பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க’ ‘ஒருகுழை யொருவன் போல’ எனவும், ‘வல்லவர், செதுமொழி சீத்த செவி’ எனவும், ‘பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும்’ எனவும், ‘வரையிழி மயிலி னொல்குவள்’ எனவும், ‘நின், மைந்துடை மார்பிற் சுணங்கு’ எனவும், ‘மன்ற வேம்பினொண்குழை மலைந்து’ எனவும் வரும். வழக்கு உதாரணம் வேற்றுமை மயங்கியலுட் காட்டினாம். சாத்தனொடு வந்தான், சாத்தற்குக் கொடுத்தான் என்றாற்போல்வன தொக்காற் தொகைப்பொருள் உணர்த்தாது எழுவாயும் பயனிலையுமாய் நிற்றலின் இந்நிகரன தொகா வென்று உணர்க. (17) 414. உவமத் தொகையே யுவம வியல. இஃது, உவமத்தொகை கூறுகின்றது. (இ-ள்.) உவமத் தொகையே - உவம உருபுகள் தொக்க தொகைச் சொற்கள், உவம இயல - அவ்வுவம உருபுகள் தொக்கனவேனுந் தொகாது நின்றாற்போலப் பொருளுணர்த்தும் இயல்பின, எ-று. மேல் உவமவியலுள் ‘வினைபயன் மெய்யுரு’ என்னுஞ் சூத்திரத்தான் ‘உவமை நால்வகைய,’ வென்றும், ‘அவைதாம், அன்ன ஏய்ப்ப’ என்னுஞ் சூத்திரத்தான் ‘அவற்றின் உருபு முப்பத்தாறென்றுங் கூறுகின்ற ஆசிரியர், ஈண்டு அவ்வுருபுகள் தொக்கு நிற்குமாறு கூறுகின்றார். ஒப்பில்வழியாற் பொருள் செய்யும் அவ்வுவமஉருபுகள் தாம் முதனிலையாய் நின்றும், பெயரெச்சங்கட்கும் முற்றிற்கும் வினையெச்சங் கட்கும் உரிய ஈறுகளை ஏற்ற சொல்லாயே நின்று, அவற்றிற்கு ஏற்ற முடிபு கொள்ளுமென்று உணர்க. ஆசிரியர் செய்யுளின்பம் நோக்கி அவ்வுவம உருபுகளைப் பெரும்பான்மை செயவெனெச்ச வாய்பாட்டானுஞ் சிறுபான்மை செய்த வென்னும் பெயரெச்ச வாய்பாட்டானும் ஓதினாரேனும், ஏனை வாய்பாடுகளும் அம் முதனிலைக்கண் விரியுமாறு ஆண்டு உணர்க. புலிப்பாய்த்துள், மழைவண்கை, துடிநடுவு, பொன்மேனி என வினை பயன் மெய்யுருவின்கண் வந்த இவ்வுவமத் தொகைகள் விரிந்துழிப் போலு மென்னும் உருபானும் அன்ன வென்னும் உருபானும் பிற உருபானும் விரிந்து, செய்யுஞ், செய்த என்னும் பெயரெச்சக் குறிப்பாமாறு உணர்க. அவற்றுட் போலுமென்பது, செய்யுமென்னுங் குறிப்பு முற்றாமாறும் உணர்க. உணர்த்துங்காற் புலிபோலும் பாய்த்துள், புலி யன்ன பாய்த்துளென விரித்தால் உணராதானை, ‘இதன்பொருள் புலியினது பாய்த்துளை ஒத்த பாய்த்துள் என்றவாறு காணென ஒப்பென்னும் வழக்கு வாசகத்தாற் செய்யும், செய்த என்னும் பெயரெச்சக் குறிப்பு வாசகந் தோன்ற உணர்த்துக. ‘முறிமேனி முத்த முறுவல் வெறிநாற்றம் - வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு’ என்புழி, வேய்த்தோளாட்கு முறிபோலும் மேனி; முத்தம் போலும் முறுவல், தெய்வ மணம்போலுமியற்கை நாற்றம்; வேல்போலுங் கண்ணென விரித்தால் உணராதானை, ‘இதன் பொருள், வேய்த்தோளாட்குத் தளிரினது நிறத்தை யொக்கும் நிறம்; முத்தினது நிறத்தை யொக்கும் பல்லு; தெய்வ மணத்தை யொக்கு மியல்பான நாற்றம்; வேலினது கொலைத்தொழிலை யொக்குங் கண், என்றவாறுகாணென ஒப்பென்னும் வழக்கு வாசகத்தாற் செய்யும் என்னுங் குறிப்பு முற்று வாசகந் தோன்ற உணர்த்துக. ‘கண் மலர்ந்த காவி’ என்புழிக் ‘கண் போல மலர்ந்த காவி’ யென்றால் உணராதானை, ‘இதன் பொருள், ‘கண்ணை யொக்க மலர்ந்த காவி’ யென்றவாறுகாணென ஒப்பென்னும் வழக்கு வாசகத்தாற் செயவெனெச்ச வாசகந்தோன்ற உணர்த்துக. இங்ஙனம் கூறிய இருவகை யெச்சத்தையும் முற்றையும் இவ்வுவம உருபுகள் தருமாறு காண்க. இனி, முறிமேனி முதலியன உருவகமாமெனின் ஆசிரியர்க்கு உருவகமும் உவமையாமாறு ஆண்டு உணர்க. ‘இங்ஙனம் வேற்றுமை யுருபும் உவம வுருபும் விரிந்துழி, வேற்றுமைத் தொகை யென்று கோடுமோ, உவமத்தொகை யென்று கோடுமோ?’ வெனின். ஆசிரியர் தாம் மேற்கூறும் உவமஉருபுகளிற் சில இரண்டாவதற்கு முடிபா மென்பது உணர்த்துதற்கு உவம உருபிற்கெல்லாம் பொதுவாய் வழக்குவாசகமாய் நிற்கும் ஒப்பென்னும் உருபினைக் ‘காப்பி னொப்பின்’ என எடுத்து ஓதினாராதலின், அவ்விரண்டாவது அவ்வுவம உருபுகளான் முடிந்து நின்றுழி உவமத் தொடர்மொழி ஒப்புமைப் பொருளே தந்து நிற்றலின், உவமத்தொகை யென்று கோடும். ‘ஆயின், எடுத்து ஓதிய ஒப்பு என்பதனோடன்றி ஏனை யுருபுகளோடும் இரண்டாவது முடியுமோ? வெனின் முடியும்; ‘தீயினன்ன வொண் செங் காந்தள்’ எனவும், ‘கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும்’ எனவும், ‘மானோக்கு நோக்கு மடநடை யாயத்தார்’ எனவும், ‘எழிலி வானமெள்ளினன் றரூஉங், கவிகை வண்கைக் கடுமான் றோன்றல்’ எனவும், ‘வீங்கு சுரை நல்லான் வென்ற வீகை’ எனவும் வருவனவற்றின்கண் ‘அன்ன, மானும், நோக்கி, எள்ளி, வென்ற’ என்னும் உவம உருபுகளை இரண்டாவது கொண்டு முடித்தவாறு காண்க. இவற்றுள் எள்ளி என்பது, செய்தெனெச்ச மாகிய உவம உருபு. இங்ஙனம் உவம உருபு விரிந்துழி நின்று உவமப் பொருள் தருகின்ற இரண்டாவது தொக்குழியும் அவ்வுவமப் பொருள் தந்தே நிற்கும் என்றுணர்க. ‘என்போற் பெருவிதுப் புறுக.’ என்புழிப் போலென்பது ‘போல’ வென்னுஞ் செயவெனெச்சக் குறிப்பாகிய உவம உருபு. ‘நும்ம னோருமற் றினைய ராயின்’ என்புழி, அன்னோ ரென்பது உவம உருபாகிய இடைச் சொன் முதனிலையாகப் பிறந்த பெயர். இனிச் சிறுபான்மை ஏனை யுருபுகள் இத்தொகைக்கண் விரியுமாறு உவம இயலுட் காண்க. சேனாவரையர் இவற்றை உவம வுருபன் றென்றும், உவம வுருபுகளை இரண்டாவது கொண்டு முடியா தென்றுங் கூறினாராலெனின், அவர் ஆசிரியர் கருத்துஞ் சான்றோர் செய்யுள் வழக்கமும் உணராமற் கூறினாரென்பது இக்கூறியவாற்றான் உணர்க. (18) 415. வினையின் றொகுதி காலத் தியலும். இது, வினைத்தொகை கூறுகின்றது. (இ-ள்.) வினையின் தொகுதி - வினைச்சொல்லினது ஈறாய்த் தொக்கு நிற்கும் எழுத்துக்கள், காலத்து இயலும் - காலத்தின் கண்ணே தொக்கு நிற்கும், எ-று. வினை யென்றது ‘உண், தின்’ முதலிய முதனிலைகளை. அவை ஈண்டும் ஆகுபெயராய்த் தன்னாற்பிறந்த பெயரெச்சத்தை உணர்த்தின. தொகுதி யாவன, அகரமும் ‘நில், கின்று என்பனவும் உம்முமாம். அவை காலத்தியலுதலாவது, ‘கொல் யானை’ யெனத் தொகுத்துக் ‘கொன்ற யானை’ என விரித்தாற், ‘செய்த’ என்னும் பெயரெச்ச வாய்பாட்டுத் தகர ஈறு இறந்த காலம் உணர்த்துதலுங், கொல்லாநின்ற யானை, கொல்கின்ற யானை’ என விரித்தாற், ‘நின்ற, கின்ற’ என்னும் பெயரெச்சம் நிகழ்காலம் உணர்த்துதலுங், ‘கொல்லும் யானை’ என விரித்தாற், செய்யு மென்னும் பெயரெச்சத்து உம் ஈறு நிகழ்வும் எதிர்வும் உணர்த்துதலுமாம். ஆயின், உம் ஈறு எதிர்காலம் உணர்த்துதல் யாண்டுப் பெறுதுமெனின், காலத்தியலுமென மூன்று காலத்திற்கும் பொதுவாகக் கூறியவதனாற் பெறுதும். இக்கருத்தானே பின்பு நூல் செய்தவர்கள் எல்லாரும் உம் மீறு எதிர்காலமே உணர்த்து மென்றார். சேனாவரையரும் இக் கருத்தானே ‘அகன்றவர் திறத்தினி கடுங்கால்’ என்பதே நிகழ்விற்கும் எதிர்விற்கும் காட்டினார். ‘கொல் யானை’ என்பது, அக்காலத்து அஃது உதிரக் கோட்டோடு வந்ததேல் இறப்பும், அதன் தொழிலைக் கண்டுநின்றுழி நிகழ்வும், அது கொல்ல ஓடுவதனைக் கண்டுழி எதிர்வும் விரியும். இனி, ‘கொல் யானை’ என்பதன்கண் இரண்டு ஈறும் ஒருங்கு தொக்கு நின்றதென்றற்கு விதி, ‘செய்யுஞ் செய்த வென்னுங் கிளவியின், மெய்யொருங் கியலுந்தொழில்றொகு மொழியும்’ என்றதாம். என்றதன் பொருள், ‘செய்யுஞ் செய்த’ என்னும் பெயரெச்சச் சொற்களினுடைய காலங் காட்டும் உம்மும் அகரமும் ஒரு சொற்கண்ணே சேர நடக்கும் புடைபெயர்ச்சி தொக்கு நிற்குஞ் சொற்களென்றவாறு. இங்ஙனம் இரண்டு பெயரெச்ச வாசகமுஞ் சேரத் தொக்கு நிற்றலான் ஆசிரியர் ஒரு சொல்லாக்கிப் புணர்க்கலாகாதென்று, ‘புணரிய னிலையிடை யுணரத்தோன்றா’ என்றார். இவ்வெழுத்ததிகாரச் சூத்திரத்தானே பெயரெச்சம் நின்று தொக்கதென்னாது, ‘பெயரெச்சப் பொருளவாய் நின்று இரண்டு சொற் தொகும்,’ மென்று சேனாவரையர் கூறியது பொருந்தாமை உணர்க. அவை தொகுங்காற் தத்தமக்கு உரிய வாறு பொருட் கண்ணுந் தொகும். (உ-ம்.) ஆடரங்கு, செய்குன்று, புணர்பொழுது, அரிவாள், கொல்யானை, செல்செலவு எனவும், ‘உறைபதி யன்றித் துறைகெழுசிறுகுடி’ ‘செய்பொருட் சிறப்பெண்ணி’ ‘வான்மடி பொழுதினி னீர்நசைஇக் குறித்த’, ‘வெல் வேலண்ணற் காணா வாங்கே’ ‘நெல்லரி தொழுவர் கூர்வாண் மழுங்கின்’ வெல்போர்ச் சோழன் எனவும் வரும். இவற்றிற்குப் பொருட்கு ஏற்ற காலங்களை விரிக்க. (19) 416. வண்ணத்தின் வடிவி னளவிற் சுவையினென் றன்ன பிறவு மதன்குண நுதலி யின்ன திதுவென வரூஉ மியற்கை யென்ன கிளவியும் பண்பின் றொகையே. இது பண்புத்தொகை கூறுகின்றது. (இ-ள்.) இன்னது இது என - ஒரு பொருட்குப் பொதுமை உள்வழி இப்படி யிருப்பது இப்பொருளென்று அதனை விசேடித்துக் கூறும்படியாக, அதன் குணம் நுதலி - பின் வருகின்ற அப்பொருளின் குணத்தைத் தான் கருதி, வண்ணத்தின் வடிவின் அளவின் சுவையின் வரூஉம் இயற்கைக் கிளவியும் - அப்பொருட் குணமாகிய வண்ணத்தின்கண்ணும் வடிவின்கண்ணும் அளவின் கண்ணுஞ் சுவையின்கண்ணும் வரும் இயல்பாகிய கிளவியும், அன்ன பிறவுமென்று வரூஉங் கிளவியும் - அவை போல்வன பிறவுமென்று சொல்லப்பட்டு வருங் கிளவியும், என்ன கிளவியும் - எத்தன்மையவாகிய சொற்களும், பண்பின் தொகை - பண்புச் சொல் தொக்க தொகையாம், எ-று. பண்பெனப் பண்புச்சொல்லை உணர்த்திற்று, ஆகுபெயராய். எழுத்ததிகாரத்து, ‘உயர்திணை யஃறிணை யாயிரு மருங்கின், னைம்பாலறியும் பண்பு தொகு மொழியும்’ என்புழிப் பண்புத்தொகை ஐந்து பாலையும் உணர நிற்றலின், அங்ஙனம் நின்றன பிரித்துப் புணர்த்தற்கு இயையா வென்றமையான், ஈண்டும் அதற்கு ஏற்ப இயற்கை யென்றார். ‘ஐம்பாலறியும் பண்புதொகு மொழியும்’ என்றதன் பொருள், ஐந்து பாலையும் ஒருவன் அறிதற்குக் காரணமாகிய பண்புச்சொல் தொக்க தொகைச் சொல்லும் என்றவாறாம். பண்பு உணர்த்துகின்ற ஐம்பால் ஈறுகள் தொக்கு நின்றே விரியுமென்பது உணர்த்துதற்கு அவ்வாசகந் தோன்ற இன்னதென்றார். ஐம்பாலும் பொரு ளென்றால், அஃறிணையாய் அடங்கு மாதலிற், பொருளாக்கி இது வென்று அஃறிணையாற் கூறினார். இந்நான்கனுள் வண்ணமும் அளவுஞ் சுவையும் ஐம்பாற்கண்ணும் வரும். (உ-ம்.) வண்ணம் : ‘கரும்பார்ப்பான், கரும்பார்ப்பனி, கரும்பார்ப்பார், கருங்குதிரை, கருங்குதிரைகள்’ என்னும் பண்பு உணர்த்தும் ஈறுகள் தொக்கனவற்றை விரிப்புழிக் ‘கரியனாகிய பார்ப்பான், கரியளாகிய பார்ப்பனி, கரியராகிய பார்ப்பார், கரியதாகிய குதிரை, கரியனவாகிய குதிரைகள்’ எனப் பண்பு உணர்த்தும் ஐம்பால் ஈற்றினையும் விரித்தவாறு காண்க. ‘கரிய பார்ப்பானென்பது ஈறு தோன்றாத பெயரெச்சக் குறிப்பாய் நிற்கும். இனி, ‘வெம்மை’ முதலியவற்றிற்கும் இவ்வாறே ஒட்டுக. இவற்றுட் ‘கரு’ ஒழிய ஏனைய தொக்கவாறு காண்க. இவற்றுள் அஃறிணைக்கண் வரும் ஈறுகள் பண்புகொள் பெயராய் நிற்குமாறும் உணர்க. இனி, அளவு : ‘குறுமுனி குறுமகளாடிய, ஊர்க் குறுமாக்கள்’ குறுந்தாட் கூதலிர், குறுங்கோட்டன’ என்பனவற்றையும் அவ்வாறே விரிக்க. இனி, ‘நெடும்மை’ முதலியவற்றிற்கும் இவ்வாறே ஒட்டுக. இனி, சுவை : ஐம்பொறியான் நுகர்தற்கு உரிய இனிமைகளை உணர்த்துஞ் ‘சாயன் மார்பிற் கமழ்தார் குழைத்த’ எனவும், ‘தீங்கரும்ப னுக்கிய’ எனவும், ‘தீம்புகை கமழ வூட்டி’ எனவும், ‘உடைதிரைத் திவலை யரும்புந் தீநீர்’ எனவும், ‘தீந்தொடை நரம்பின்’ எனவும் மெய்யானும் நாவானும் மூக்கானும் கண்ணானுஞ் செவியானும் நுகரும் இனிமையை உணர்த்தின. இவற்றை விரிப்புழி அஃறிணை இருபாற்கும் ஏற்ப ‘இனிதாகிய மார்பு, தீவியனவாகிய கரும்புகள், தீவிதாகிய புகை, தீவிதாகிய நீர், தீவியனவாகிய நரம்புகள்’ என விரிக்க, இனி, ‘கட்கின்புதல்வன், கட்கின்புதல்வி, கட் கின்புதல்வர்’ எனக் கண்ணால் நுகரும் இனிமைக்கண் உயர்திணை முப்பாற்கும் ஏற்ப ‘இனியனாகிய புதல்வன், இனியளாகிய புதல்வி, இனியராகிய புதல்வர்’ என விரிக்க. இனி, வடிவு : இது வட்டஞ், சதுரங், கோணம் முதலியனவாம். ‘வட்டப் பலகை’ யென்பது, ‘வட்டமாகிய பலகை’ யென விரிந்து, தனக் கேற்ற ஒருமை பன்மையை உணர்த்தும் ஈறுகளின்றி நிற்றலின், இஃது ஐம்பால் அறியாத பண்புத்தொகை ஆயிற்று. இங்ஙனம் ஐம்பால் அறியாத பண்புத்தொகையை ஆசிரியர். எழுத்தின்கண் நிலைமொழி வருமொழி செய்து புணர்த்தார். அவை ‘அகங்கை’ முதலியனவாம். கரும்பார்ப்பானென்புழிக் கருமையும் பார்ப்பானுந் தம்மின் வேறின்றி நின்று மகனாகிய பொருளையே உணர்த்தியவாறுங், ‘கருமை’ பார்ப்பான் பொதுமையை விசேடித்தவாறும், ‘பார்ப்பான்’ கருமையின் பொதுமையை விசேடியாதவாறுங் காண்க. இவை தொகுங்காற், ‘கரு’ வென்னும் பண்பு மாத்திரம் நின்று பண்புப் பெயராங்காற் பெற்று நிற்குங் ‘கருமை’ யென்னும் மகர ஐகாரந் தொக்கு நிற்குமென்றாற், ‘கரியது, வெளியது, கரியன, வெளியன’ என்னும் பண்பு உணர்த்தும் ஈறுகளின் கண்ணும் அவை தொக்கு இவையுந் தொகைச் சொல்லாவான் சேறலின், அது பொருந்தாது; ‘கரியன், கரியள், கரியர், கரியது, கரியன’ என்னும் பண்பு உணர்த்தும் ஈறுகளே தொக்கு நிற்பன என்று உணர்க. என்னை? ஆசிரியர், இப்படி இருப்பது இப் பொருளென்று வினைக்குறிப்பிற்கு ஏற்ற விரிவு தோன்றச் சூத்திரஞ் செய்தாராகலின். ‘இன்னதிது,’ வென ஒரு பொருண் மேல் நிற்றலின், இப்பண்புத் தொகைகளெல்லாம் பெயரெச்ச வினைக் குறிப்பாய் நிற்பதோர் பெயரென்று உணர்க, அஃது உருபு ஏற்றும் பயனிலை கொண்டு நிற்றலின். ‘உயர்திணை’ யென்பது வினைத்தொகையோ, பண்புத்தொகையோ? எனின், உயரென்னும் முதனிலை நின்று, ‘உயர்ந்த திணை’ யென அகர ஈற்றுப் பெயரெச்சமாய் இறந்தகாலந் தொக்கு நிற்றலின், வினைத்தொகை யாம். இதற்கு ஏனைக்காலமுந் தொகுமாறு அறிக. இதனைப் பண்புத் தொகையாக்கி விரிக்குங்காற், ‘கரியதாகிய குதிரை’ யென விரிந்தாற்போல விரியாது ‘உயர்ந்ததாகிய திணை’ யென விரிக்க வேண்டும். அங்ஙனம் விரிந்துழி, அஃது ‘உயரென்னும் முதனிலைப்பின் வந்த தகர அகரம் இறந்த காலம் உணர்த்தியே நிற்றலிற், பண்புத்தொகை யாகாமை உணர்க. என்னை? பண்பும் வினைக்குறிப்பும் முக்காலமும் புலப்படாமை நிற்கு மென்றே முற்கூறலின். அன்றியுங் காலம் புலப்பட நின்றதன்மேற் பண்பு கொள் பெயர் விரியாமை உணர்க. இனி, ‘அன்ன பிறவும்’ என்றதனான் நுண்ணூல், பராரை, நல்லாடை, வெந்தீ, தண்ணீர், நறும்பூ என்னுந் தொடக்கத்தன கொள்க. ‘மெல்லிலை’ வினைத்தொகையுமாம் (சீவக. 62). இத்தொகையை வேற்றுமைத்தொகை யென்பார், ‘கருமையை யுடைய பார்ப்பான்’ னென்று பண்புப் பெயராக்கி விரிப்பர். அது பொருந்தாது. கருவென்னும் முதனிலை பண்பினை உணர்த்தி, இதனை யுடையது இது வென நில்லாது, கரியதெனப் பண்புடைய பொருளை நோக்கி நிற்றலின், வேற்றுமைப் பொருண்மை ஆண்டு இன்று என உணர்க. ‘என்ன கிளவியும்’ என்றதனாற், ‘சாரைப்பாம்பு, கேழற்பன்றி வேழக் கரும்பு, இடைச்சொற் கிளவி உரிச்சொற்கிளவி என்றாற் போலப் பண்பு உணர்த்தும் ஈறுகள் தொகாது தம்பொருள் உணர்த்தும் பெயர்ப்பெயர் இரண்டு கூடி நின்று விசேடித்தலை உணர்த்தும் இரு பெயரொட்டுப் பண்புத் தொகையுங் கொள்க. அவை ‘சாரை’ எனவுங், ‘கேழலுழுத கரிப்புனக் கொல்லை’ எனவும், வேழந் தீவியது எனவும், ‘இடைச்சொலெல்லாம்’ எனவும், ‘உரிச்சொன் மருங்கினும்’ எனவும் பின்வருஞ் சொல்லின்றியுந் தம் பொருள் உணர்த்துதல் பற்றி எடுத்தோத்தினுள் முடியாமையின், இலேசாற் கொண்டார். ‘வட்டப் பலகை’ ‘அகங்கை’ முதலியன பின்வருஞ் சொல்லோடு அன்றித் தம் பொருள் உணர்த்தாமையின், நிறுத்த சொல்லுங் குறித்து வருகிளவியுமாய் நிற்குமென்று அவற்றை முடித்தார். இவற்றிற்குப் பின் வருஞ் சொல், முன் வரும் மொழியை விசேடியாது நிற்கும். இங்ஙனம் வரும் என்றற்கு அன்றே ஆசிரியர் ‘இன்னதிது,’ வென்று முன் மொழியை விசேடிப்பதாகவும், பின் மொழியை விசேடிக்கப்படுவதாகவும் கூறுவா ராயிற்றென்று உணர்க. (20) 417. இருபெயர் பலபெய ரளவின் பெயரே யெண்ணியற் பெயரே நிறைப்பெயர்க் கிளவி யெண்ணின் பெயரோ டவ்வறு கிளவியுங் கண்ணிய நிலைத்தே யும்மைத் தொகையே. இஃது, உம்மைத்தொகை கூறுகின்றது. (இ-ள்.) உம்மைத்தொகை - உம்மை தொக்கு நிற்குந் தொகை, இரு பெயர் - இரண்டாகிய பெயரும், பல பெயர் - பலவாகிய பெயரும், அளவின் பெயர் - அளத்தலால் உளதாகிய பெயரும், எண்ணியற் பெயர் - எண்ணியலானாகிய உயர்திணைப் பெயரும், நிறைப்பெயர்க்கிளவி - நிறுத்த லானாகிய பெயர்ச் சொல்லும், எண்ணின் பெயரொடு-எண்ணினான் உளதாகிய அஃறிணைப் பெயரோடே கூடப்பட்ட, அவ்வறு கிளவியுங் கண்ணிய நிலைத்து - அவ்வாறு சொல்லையுங் கருதின நிலைமையை உடைத்து, எ-று. (உ-ம்.) உவாஅப் பதினான்கு, புலிவிற்கெண்டை, தூணிப் பதக்கு, முப்பத்து மூவர், தொடியரை, பதினைந்து இவற்றை உம்மை விரித்துக் கொள்க. பல பெயரெனவே இரு பெயரும் அடங்குமேனும், இரண்டாகிய பல பெயரினும் இரண்டிறந்த பல பெயரினுந் தொகுமென்றற்கு ‘இரு பெயர், பல பெயர்’ என்றார். அளவுப் பெயர் முதலியன இரு பெயர்க்கண் அடங்குமெனினும், முன்னர் யாண்டும் பொருள் வேற்றுமையே பற்றி வேறாக ஓதுதலின், ஈண்டும் எடுத்து ஓதினார். (21) 418. பண்பு தொகவரூஉங் கிளவி யானு மும்மை தொக்க பெயர்வயி னானும் வேற்றுமை தொக்க பெயர்வயி னானு மீற்றுநின் றியலு மன்மொழித் தொகையே. இஃது, அன்மொழித் தொகை கூறுகின்றது. (இ-ள்.) அன்மொழித்தொகை - ஒருவன் கூறுஞ் சொற்க ணன்றிப் பின்னர் வேறோர் சொற் தொக்கு நிற்குந் தொகை, பண்பு தொக வரூஉம் கிளவியானும் - பண்புச்சொற் தொக வருந் தொகைப்பெயர்க்கண்ணும், உம்மைதொக்க பெயர்வயினானும் - உம் மென்னும் இடைச்சொல் தொக்க தொகைப் பெயர்க் கண்ணும், வேற்றுமை தொக்க பெயர்வயினானும் - வேற்றுமை யுருபுகள் தொக்க தொகைப்பெயர்க்கண்ணும், ஈற்றுநின்று இயலும் - இறுதிச் சொற்கண்ணே நின்று நடக்கும், எ-று. முன்னர் அன்மொழியான் உணரும் பொருள்களை மனத்தான் உணர்ந்து தான் பின்னர்ப் பண்புத்தொகை முதலியனவற்றாற் கூறக் கருதியவழி அத்தொகைகளின் இறுதிச்சொற்கண் எழுந்து, படுத்தல் ஓசையான் அத்தொகைச் சொற்றோன்றிப் பொருள் விளக்குதலின், ஈற்று நின்று இயலு மென்றார். (உ-ம்.) வெள்ளாடை, தகர ஞாழல், பொற்றொடி என வரும். இவை ‘வெள்ளாடை யுடுத்தாள். தகர ஞாழலணிந்தாள், பொற்றொடி தொட்டாள்,’ என இறுதிச்சொற்கண் எழுந்து, படுத்தலோசையாற் தொகை தோன்றியவாறு காண்க. பெரும்பான்மை வரும் பண்புத்தொகைப் பின்னர் அங்ஙனம் வரும் வேற்றுமைத்தொகையை வையாது, முந்து மொழிந்ததன் றலைதடுமாற்றான் உவமத்தொகைக் கண்ணும் வினைத்தொகைக்கண்ணும் அன்மொழித் தொகை வருதல் கொள்க. ‘வினையின் றொகையினு முவமத் தொகையினு மன்மொழி தோன்று மென்மனார் புலவர்’ என்பது அவிநயம். ‘அறற்கூந்தல், திரிதாடி’ என்பனவற்றை ‘அறல் போலுங் கூந்தலை யுடையாள், திரிந்த தாடியை யுடையான்’ என விரிக்க. (22) 419. அவைதாம், முன்மொழி நிலையலும் பின்மொழி நிலையலு மிருமொழி மேலு மொருங்குட னிலையலு மம்மொழி நிலையா தன்மொழி நிலையலு மந்நான் கென்ப பொருணிலை மரபே. இது, தொகைச்சொற் பொருணிலை கூறுகின்றது. (இ-ள்.) அவைதாம் பொருணிலை மரபு - அத்தொகைச் சொற்றாம் பொருள் பெற்று நிற்கும் நிலைமையினது முறைமையினை, முன் மொழி நிலையலும் - முன்மொழிக் கண்ணே பொருள் சிறந்து நிற்றலும், பின் மொழி நிலையலும் - பின் மொழிக்கண்ணே பொருள் சிறந்து நிற்றலும், இரு மொழி மேலும் ஒருங்கு உடன் நிலையலும் - இருமொழிக் கண்ணும் பொருள் ஒருங்கு சிறந்து நிற்றலும், அம்மொழி நிலையாது அன்மொழி நிலையலும் - அவ்விரு மொழிக்கண்ணும் பொருள் சிறந்து நில்லாது மற்றோர் மொழிக்கண்ணே பொருள் சிறந்து நிற்றலும், அந் நான்கு என்ப - என்று சொல்லப்பட்ட அந் நான்கு கூறென்று சொல்லுவர் ஆசிரியர், எ-று. (உ-ம்.) வேங்கைப்பூ - முன்மொழி நிலையல், அது நறி தென்பதனோடு கூட்ட வேங்கைக்கட் பொருள் சிறவாது பூவின்கட் பொருள் சிறத்தலின். ஆரமாலை - பின் மொழி நிலையல். இவை வேற்றுமைத்தொகை. வேற்கண் - முன்மொழி நிலையல். ‘பெண்ணணங்கு’ என்பது ‘அணங்கு போலும் பெண்’ ணென்பதாகலிற், பின்மொழி நிலையலாம். இவை உவமத் தொகை. கொல் யானை - முன்மொழி நிலையல். இவ்வினைத் தொகைக்குப் பின் மொழி நிலையலின்று. தீந்தேன் - முன்மொழி நிலையல். அடை கடல் - பின்மொழி நிலையல், இது ‘கடலாகிய கரை’ எனக் ‘கரை’ கூறுதலே கருத்தாகலின். இவை பண்புத்தொகை. இவை இடம் பற்றி வந்த முன்னும் பின்னுமாம். காலம் பற்றி வருவனவும் வந்துழிக் காண்க. பண்புத்தொகையே யன்றி ஏனைத் தொகைக்கும் விசேடித்தல் சிறுபான்மை வருதலின், ஒன்றன் கண்ணது பொருட்சிறப்பென்றார். ‘உவாஅப் பதினான்கு’ இரு மொழிமேலும் நின்றது. ‘உடனென்றதனாற், ‘புலிவிற்கெண்டை’ எனப் பன்மொழிமேல் நிற்றலுங் கொள்க. ‘வெள்ளாடை’ யென்பது இருமொழிமேலும் நில்லாது, உடுத்தாள்மேற் பொருள் நின்றது. (23) 420. எல்லாத் தொகையு மொருசொன் னடைய. இது, தொகைச்சொற்களெல்லாம் ஒருசொல்லாய் நிற்கு மென்கின்றது. (இ-ள்.) எல்லாத் தொகையும் - இருமொழித் தொடரின் கண்ணும் பன்மொழித் தொடரின்கண்ணுந் தொக்கு நிற்கும் எல்லாத் தொகைச் சொற்களும், ஒரு சொல் நடைய - ஒருசொல் நின்று தன்னை முடிக்குஞ்சொற்களோடு முடியுமாறு போலத் தாமுந் தம்மை முடிக்குஞ் சொற்களோடு முடிதலை உடைய, எ-று. அங்ஙனம் முடியுங்காற் ‘பெயரி னாகிய தொகையுமா ருளவே’ என்னுஞ் சூத்திரத்தாற், தொகைச்சொல் இரு வகைய என்றும், அவற்றுட் பெயரும் பெயருந் தொக்கன ஒருசொல் நீர்மையவாய்ப் பயனிலை கொள்ளு மென்றுங் கூறிய விதியொழிந்த இலக்கணங்க ளெல்லாம் ஈண்டுக் கொள்க. அவை, யானைக்கோடென்னும் பெயரினாகிய தொகை. யானைக் கோட்டைக் குறைத்தானென உருபு ஏற்றலும், நிலங் கடந்தான், குன்றத்திருந்தானென்னும் வினையினாகிய தொகைகளும் ஒரு முற்றுச் சொல்லாய்ச் சாத்தனென்னும் பெயர் கோடலும், மா வூர்ந்து போயினான், குன்றத்திருந்து போயினான் என வினை யெச்சச் சொல்லாய் நிற்றலும், மாவூர்ந்த சாத்தன், குன்றத்திருந்த சாத்தன் எனப் பெயரெச்சச் சொல்லாய் நிற்றலுமாம். இவ்வினையினாகிய தொகை, படுத்தலோசையாற் பெயராகிய வழிப் பயனிலை கோடலுங் கொள்க. எழுத்தினுட் பெயருந் தொழிலும் என்னுஞ் சூத்திரத்துட் பெயருந் தொழிலும் பிரிந்திசைத்த வழியுந் பெயரும் பெயரும் ஒருங்கிசைத்த வழியும் வேற்றுமை தொக்கு நிற்குமென்றலின், நிலங்கடந் தான், குன்றத்திருந்தான், எனப் பெயருந் தொழிலும் பிரிந் திசைத்தவழியுந் தொகையாதல் ஆசிரியர்க்குக் கருத்தாயிற்று. இப்பெயரும் வினையுந் தொகுதல் உவமத் தொகைக்கும் வினைத்தொகைக்குங் கொள்க. இவை இருமொழித் தொடர். ‘உயர்சொற்கிளவி’ ‘இடைச்சொற்கிளவி’ ‘உரிச்சொற் கிளவி’ என்புழி, உயர்சொல், இடைச்சொல், உரிச்சொல் என்னுந் தொகைச் சொற்கள் ஒரு சொல் நடையவாய், அவை கிளவி யென்பதனோடு தொக்கு ஒரு சொல் நடையவாய், மேல் வந்து முடிப்பனவற்றோடு முடிந்தன. கற்சுனைக்குவளை யிதழ் என்றாற்போல்வனவும் அது. இனி, ‘கரியமலர் நெடுங்கட் காரிகைமுன்’ ‘முட்புற முதிர்கனி’ ‘பெடை மயிலுருவிற் பெருந்தகு பாடினி’ ‘கன்னிப் பெண்ணாரமுதின்’ எனச் செய்யுட்கட் பல தொகையும் விராய் வந்து, ஒரு சொல் நடையவாய், தம்மை முடிப்பனவற்றோடு முடிந்தன. ‘துடியிடை நெடுங்கட் துணைமுலைப் பொற்றொடி’ - இஃது அறு வகைத் தொகையும் ஒருங்கு தொக்கது. இனி, ‘கலனே தூணிப் பதக்கு, தொடியே கஃசரை, பதினொன்றரை’ என அளவும் நிறையும் எண்ணும் ஒரு சொல் நடையவாய் நின்றன. இப்பன்மொழித் தொகைக்கு முற்கூறிய முடிபுகளுங் கொள்க. இனி, உம்மை எச்சவும்மை யாகலிற், தொகையல் தொடர்மொழி களினும் ஒரு சொல் நடையவாய் முடிவன உள வெனக் கொள்க. அவை, ‘யானை கோடுகூரிது, இரும்பு பொன்னாயிற்று, மன்று பாடவிந்தது, மக்களை யுயர்திணை என்ப,’ என வரும். (24) 421. உயர்திணை மருங்கி னும்மைத் தொகையே பலர்சொன் னடைத்தென மொழிமனார் புலவர். இஃது, உம்மைத் தொகைக்கு வழுவமைக்கின்றது. (இ-ள்.) உயர்திணை மருங்கின் உம்மைத்தொகை - உயர்திணைப் பெயரிடத்துத் தொக்க உம்மைத்தொகையின் ஈறு, பலர் சொல் நடைத்தென மொழிமனார் புலவர் - பலரைச் சொல்லுஞ் சொல்லின் இறுதிபோலப் பன்மை உணர்த்தி நிற்கு மென்று கூறுவர் ஆசிரியர், எ-று. (உ-ம்.) கபிலபரணர், கபிலன் பரணன் என்பதிற் கபில னென்னும் னகர ஈறு சந்தியாற் கெட்டுக் கபிலபரணனென நின்றவழி இருவராய் நின்றமையின், வந்தாரென்னும் பன்மையொடு முடிதல் வேண்டுதலின், ஆண்டு நின்ற ஒருமை யீறு பன்மையொடு முடிதல் வழு வென்று கருதி, னகர ஈறு ரகர ஈறாய் நிற்குமென வழுவமைத்தார். ‘கல்லாட மாமூல சீத்தலைச் சாத்தர்’ என்றாற்போல்வனவும் அது. இவை ஓசை பகுத் திசைத்தலின், ஒரு சொல் லாய் ஒட்டாமை காண்க. உயர்திணைப்பெயர் என்னாது, மருங்கி னென்றார், உயர்திணை விரவுப் பெயரும் அடங்குதற்கு. (25) 422. வாரா மரபின வரக்கூ றுதலு மென்னா மரபின வெனக்கூ றுதலு மன்னவை யெல்லா மவற்றவற் றியல்பா னின்ன வென்னும் குறிப்புரை யாகும். இது, தொகை யதிகாரம் விட்டு, மரபுவழுக் காக்கின்றது. (இ-ள்.) வாரா மரபின வரக் கூறுதலும் - இயங்காதனவற்றை இயங்குவனவாகக் கூறுதலும், என்னா மரபின எனக் கூறுதலும் - சொல்லாதனவற்றைச் சொல்லுவனவாகச் சொல்லுதலுமாகிய, அன்னவை எல்லாம் - அத் தன்மையன எல்லாம், அவற்றவற்று இயல்பான் - அவ்வவ பொருள்களின் இயல்பு காரணத்தான், இன்ன என்னுங் குறிப்புரை ஆகும் - ‘இத் தன்மைய,’ என்று சொல்லுங் குறிப்பு மொழியாம், எ-று. (உ-ம்.) அந்நெறி யீண்டு வந்து கிடந்தது, அம்மலை வந் திதனோடு பொருந்திற்று எனவும், அவலவலென்கின்றன நெல். மழை மழை யென்கின்றது பைங்கூழ், எனவும் வரும். இவை வரவுஞ் சொல்லும் உணர்த்தாது, இன்ன என்பதனைக் குறிப்பான் உணர்த்தியவாறு காண்க. இனி, ஒன்றென முடித்த லென்பதனாற் ‘கவவகத்திடும்’ என்றாற் போல அச்சொல்லின் பொருட்டொழிலை அச்சொல்மேல் ஏற்றிக் கூறுவனவும், ‘ஆயிரங் காணம் வந்தது,’ என்றாற்போல ஒருவனால் இயக்கப்பட்டதனைத் தான் இயங்கிற்றாகப் பொருள் கூறுவனவும், ‘நீலுண்துகிலிகை’ என்றவழி நீலம் பற்றியதனை நீலம் உண்டதாக்கிப் பொருள் கூறுதலும், இப் பொருளை யிச்சொற் சொல்லும்’ என்றாற் போல வருவனவுங் கொள்க. (26) 423. இசைப்படு பொருளே நான்குவரம் பாகும். இது, முற்கூறிய இசைநிறை யடுக்கிற்கு வரையறை கூறுகின்றது. (இ-ள்.) இசைப்படு பொருளே நான்கு வரம்பு ஆகும் - முற்கூறிய ஒரு சொல் அடுக்கினுள் இசை நிறைத்தலாற் படும் பொருண்மைக்கு வரும் அடுக்கு நான்காகிய எல்லை யுடைத்தாம், எ-று. (உ-ம்.) ‘பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ’ என வரும். (27) 424. விரைசொ லடுக்கே மூன்றுவரம் பாகும். இது, முற்கூறிய பொருளொடு புணர்தலடுக்கிற்கு வரையறை கூறுகின்றது. (இ-ள்.) விரைசொல் அடுக்கே மூன்று வரம்பாகும் - முற்கூறிய ஒரு சொல் அடுக்கினுட் பொருளொடு புணர்தற்கண் விரைவு பொருட்பட அடுக்குவது மூன்றாகிய வரம்பை உடைத்து, எ-று. (உ-ம்.) தீ தீ தீ என வரும். அசைநிலை இரு முறை யல்லது அடுக்காமையின், அதற்குப் பெயரெல்லை கூறாராயினார். ஒரு முறை வருவது அடுக்கன்மையின், ஒருசொல்லடுக்கெனவே இருமுறை அடுக்கினமை பெறுதும். அவை பெறவே, தீதீ, படைபடை என விரைவு பொருளின் சிற்றெல்லை இருகால் அடுக்குதல் கொள்க. இஃது இசைப்படு பொருளுக்கும் ஒக்கும். விரைவிக்குஞ் சொல், விரை சொல். (28) 425. கண்டீ ரென்றா கேட்டீ ரென்றா சென்ற தென்றா போயிற் றென்றா வன்றி யனைத்தும் வினாவொடு சிவணி நின்றவழி யிசைக்குங் கிளவி யென்ப. இது, வினைச்சொற்களுள் ஒரு சாரன அசையா மென்கின்றது. (இ-ள்.) கண்டீர் என்றா கேட்டீர் என்றா சென்றது என்றா போயிற்று என்றா அன்றி அனைத்தும் - கண்டீரெனவும் கேட்டீ ரெனவுஞ் சென்றதெனவும் போயிற்றெனவும் வரும் அவ்வினைச்சொல் நான்கும், வினாவொடு சிவணி நின்றவழி அசைக்குங் கிளவி என்ப - வினாவொடு பொருந்தி நின்றவழி அசைநிலை யடுக்காம் என்று கூறுவர் புலவர், எ-று. எனவே, வினாவொடு சிவணாதவழி வினைச்சொல்லே யாம். ஒருவன் கூறிய கூற்றிற்கு உடம்படாதான், கண்டீரே கண்டீரே, கேட்டீரே கேட்டீரே என்றால், வினைச்சொற் பொருண்மையும் வினாப் பொருண்மையும் இன்றி நிற்கும். இது, வரையாது கூறினமையின், அடுக்காதும் வரும். ஏனையவும் ஏற்புழி அடுக்கியும் அடுக்காதும் வருமாயினும், அவை இக்காலத்து அரிய. (29) 426. கேட்டை யென்றா நின்றை யென்றா காத்தை யென்றா கண்டை யென்றா வன்றி யனைத்து முன்னிலை யல்வழி முன்னுறக் கிளந்த வியல்பா கும்மே. இதுவும் அது. (இ-ள்.) கேட்டை என்றா நின்றை என்றா காத்தை என்றா கண்டை என்றா அன்றி அனைத்தும் - கேட்டை யெனவும் நின்றை எனவுங் காத்தை எனவுங் கண்டை எனவும் வரும் அம்முன்னிலை வினைச்சொல் நான்கும், முன்னிலை அல்வழி - முன்னிலைப் பொருளை உணர்த்தி நில்லாக்கால், முன்னுறக் கிளந்த இயல் பாகும்மே - மேற்சொல்லப்பட்ட அசைநிலை யாம், எ-று. இவையுங் கட்டுரைக்கண் அடுக்கியுஞ் சிறுபான்மை அடுக்காதும் வந்து, ஏற்புழி அசைநிலையாய் நிற்கும். இவையும் இக்காலத்து அரிய. இவை சிறுபான்மை வினாவொடு வருதலுங் கொள்க. (30) 427. இறப்பி னிகழ்வி னெதிர்வி னென்ற சிறப்புடை மரபி னம்முக் காலமுந் தன்மை முன்னிலை படர்க்கை யென்னு மம்மூ விடத்தான் வினையினுங் குறிப்பினு மெய்ம்மை யானு மீரிரண் டாகு மவ்வா றென்ப முற்றியன் மொழியே. இது, வினைச்சொற்களுள் ஒரு சாரனவற்றிற்கு ஆட்சி வேண்டி அதன் குணங் காரணமாகக்கொண்டு ஓர் குறியிடுதல் கூறுகின்றது. (இ-ள்.) தன்மை முன்னிலை படர்க்கை என்னும் அம்மூவிடத்தான் - தன்மை, முன்னிலை, படர்க்கை யென்று சொல்லப்பட்ட அம்மூன்றிடத்தின் கண்ணும் வரும், மெய்ம்மையானும் - உயர்திணை அஃறிணை, விரவுத்திணை யென்னும் மூவகைப் பொருள்டோறும், வினையினுங் குறிப்பினும் ஈரிரண்டு ஆகுமென்ற அவ்வாறு மொழி - தெரிநிலை வினையானுங் குறிப்பு வினையானும் இவ்விரண்டாய் வருமென்று யான் முற்கூறிய அவ்வாறு வகைச் சொல்லை, இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்ற சிறப்பு உடை மரபின் அம்முக்காலமும் இயல் முற்று என்ப - இறப்பு ஒன்றானும் நிகழுஞ் சிறப்புடை மரபானும் நிகழ்வு ஒன்றானும் நிகழுஞ் சிறப்புடை மரபானும் எதிர்வு ஒன்றானும் நிகழும் சிறப்புடை மரபானும் அம்முக்காலத்தும் நிகழும் சிறப்புடை மரபானும் இயலும் முற்றுச்சொல்லென்று பெயர் கூறுவர் ஆசிரியர், எ-று. ‘அம்மாம்’ என்னுஞ் சூத்திரம் முதலாகப் ‘பல்லோர் படர்க்கை’ என்னுஞ் சூத்திரம் இறுதியாக, மூவகை யிடமும் மூவகைப் பொருளும் இருவகை வினையும் எடுத்தோதியவற்றை ஈண்டும் ஓதியது அனுவாதமாயிற்று. ஆண்டு ஓதாது எஞ்சிநின்ற காலமுங் குறியீடும் ஈண்டு ஓதியது இலக்கண மாயிற்று. முன்னர்க் ‘குறிப்பினும் வினையினும்’ என்னுஞ் சூத்திரத்திற் காலமொடு வரூஉம் வினைச்சொல் எல்லாம், என்றது, மூவகை வினைக்கும் பொதுவாய் நின்று ஒரோவொரு முற்று வினையும் முக்காலமும் பெற்றே வருமென்னும் ஐயம் நிகழ்த்திற்றதனை ஒரோவோர் காலம் பெற்று வருவனவும் முக்காலமும் பெற்று வருவனவுமாய் நிற்கும் முற்றென ஐயம் அகற்றினார் இச்சூத்திரத்தான். எச்சங்கட்கு மேலிற் சூத்திரத்தான் ஐயம் அகற்றுப. மேற் ‘பிரிநிலை வினை’ என்னுஞ் சூத்திரத்தான் எச்சங்கட்குக் குறியீடு கூறுகின்றாராதலின், அதற்கு ஏற்ப முற்றிற்கும் குறியீடு கூறினார். இனி, அவை காலத்தொடு வருங்கால், றகர உகரம் இறந்த காலத்தாற் சிறந்தது. உம்மொடு வரூஉங் கடதறவும், கடதற வென்னும் அந்நான்கு ஊர்ந்த குன்றிய லுகரமும், அல்லும் பகரமும் ஆரும் ஆவும் வவ்வுமாகிய பதின்மூன்றும் எதிர்காலத் தாற் சிறந்தன. அம், ஆம், எம், ஏம், என், ஏனும், அன், ஆனும், அள், ஆளும், அர், ஆரும், அகரமும், தகர உகரமும் ஆகிய பதினான்கும் முக்காலத்தாற் சிறந்தன. முற்று இருபத்தொன்பதின்கண் டகர உகரம் வினைக்குறிப்பாதலின், அதுவும் முக்காலத்தாற் சிறந்ததாம். ஆகத் தெரிநிலைமுற்று இருபத்தெட்டுங் காண்க. யார் எவன் என்பனவோ வெனின், அவையும் முப்பாற்கும் இருபாற்கும் பொதுவாகி இடம் உணர்த்தாவேனும், வினைக்குறிப்பாலின், முக்காலமும் உடைய வென்று உணர்க. இரு திணைக்கும் ஓதிய குறிப்புவினை பதினெட்டும் முக்காலமும் உடைய. இனி, பொருள் உணர்த்தாது இடம் உணர்த்தும் முன்னிலையும் வியங்கோளுமாகிய விரவு வினைமுற்றுக்களும், இடமும் பொருளும் உணர்த்தா விரவு வினைமுற்றுக்களும், பிரிவு வேறுபடூஉஞ் செய்தியவாய் நிற்றலின், இடமும் பொருளும் உணர்த்திக் காலங் கொண்டே நிற்குமென்று உணர்க. இவை ஐயும் ஆயும் இரும் ஈரும் முக்காலத்தாற் சிறந்தன. இகரமும் இன்னும் வியங்கோளுஞ் செய்மனவும் எதிர்காலத்தாற் சிறந்தன. செய்யுமென்பது நிகழ்காலத்தாற் சிறந்தது. இன்மை செப்பலும் வேறென் கிளவியும் வினைக்குறிப்பாதலின், முக்காலத்தாற் சிறந்தன. இனி, விரவுவினையுள் வினையெச்சமும் பெயரெச்சமும் மேற் கூறுதும். இவை ஈரிரண்டாங்கால் ஓரீற்றின்கண்ணே கொள்க. (உ-ம்.) சென்றனன், கரியன் எனவும், சென்றது கரிது எனவும், சென்றனை கரியை எனவும் வரும். ஈண்டுக் காலமுங் குறியீடுங் கூறினா ரேனும், ‘வந்தது கொண்டு வாராத துணர்த்த லென்னும் உத்தி பற்றி வினையி யலுட் காலமும் குறியீடும் விரித்து ஆசிரிய ரெல்லாரும் உரையுங் காண்டிகையும் கூறினாரென்று உணர்க. இவை முற்றி நிற்குமாறு ‘அவற்றொடு வருவழி என்னுஞ் சூத்திரத்துட் கூறினார். மெய்ம்மையானு மென்றது, ஊரானோர் தேவகுலம் என்றாற் போலத் தொறு வென்பதன் பொருட்டாய் நின்றது. இச்சூத்திரத்திற் கூறியன எல்லாம் முற்றப்பெறுவனவுங் குறையப் பெறுவனவும் வினையியலுள் விரித்து ஓதியவற்றான் உணர்க. (31) 428. எவ்வயின் வினையு மவ்வயி னிலையும். இது, மேலதற்கோர் புறனடை. (இ-ள்.) எவ்வயின் வினையும் - மூன்றிடத்து வரும் வினையெச்சமும் பெயரெச்சமும், அவ்வயின் நிலையும் - அம்முற்றியல்பிலே நிற்கும், எ-று. என்றது, இறப்புப்பற்றி வருவனவும், இறப்பும் நிகழ்வும் பற்றி வருவனவும், எதிர்வுபற்றி வருவனவும், முக்காலமும் பற்றி வருவனவுமாம் என்றவாறு. வினையெச்சங்களுள் உகரமும் ஊகாரமும் எனவும் முன்னுங் கடையும் இறப்பும், புகரமும் பின்னும் இறப்பும் நிகழ்வும், இயரும் இயவும் இன்னுங் குகரமும் எதிர்வும், அகரமுங் காலும் வழியும் இடமும் முக்காலமும் பற்றி வந்தவாறும்; பெயரெச்சங்களுள் உம் ஈறு நிகழ்வும் எதிர்வும், அகர ஈறு இறப்பும்பற்றி வந்தவாறுங் காண்க. இருவகை எச்சத்திற்குங் ‘காலமொடு வரூஉம் வினைச் சொல் லெல்லாம் (203) என்ற பொதுவிதியான் முக்காலமும் ஒன்றற்கு வருமோ என்னும் ஐயம் நிகழ்ந்ததனை இச்சூத்திரத்தான் அகற்றினார். ஆசிரியர் அவற்றிற்கு ஓதிய வாசகங்களான் அவற்றிற்கு உரிய காலங்களும் உணர்த்தினாராலெனின், அவ்வாசகங்களாற் காலம் உணராதவையும் உளவாகலின் அவையும் விளங்குதற்கு ஈண்டுக் கூறினார் என்று உணர்க. சேனாவரையர், வினை யென்றது முதனிலையென்று பொருளுரைத்து, அவையும் முற்றுச்சொற்போல முற்றி நிற்கும் என்றாராலெனின், அம் முதனிலை படுத்தலோசையாற் பெயர்த்தன்மைப்பட நிற்குமாறும், எடுத்தலோசையான் முன்னிலை யேவலொருமை வினைமுற்றாய் நிற்குமாறும் ‘இர் ஈர் மின் என்னுஞ் சூத்திரத்துள் கூறினாம். முற்று இலக்கணங் கூறுதற்கு இடையே இச்சூத்திரத்தான் எச்ச இலக்கணத்தைக் கூறினார், ‘பருந்து விழுக்காடாக மாட்டேறிற்று என்று கருதி. (32) 429. அவைதாம், தத்தங் கிளவி யடுக்குந வரினு மெத்திறத் தானும் பெயர்முடி பினவே. இது, முற்றுச்சொற்கு முடிபு கூறுகின்றது. (இ-ள்.) அவைதாம் - முற்கூறிய முற்றுச்சொற்கடாம், தத்தங்கிளவி அடுக்குந வரினும் - தத்தமக்கு உரிய வாய்பாடுகள் பலவாய் அடுக்கி வரினும் (உம்மையான், அடுக்காது ஒன்றே வரினும்), எத்திறத்தானும் பெயர் முடிபின - எவ்வற்றானும் பெயர்ச் சொல்லை முடிபாக உடைய, எ-று. (உ-ம்.) உண்டானின்றா னோடினான் பாடினான் சாத்தன், நல்லனறிவுடையன் செவ்வியன் சான்றோர்மகன் எனவும், வந்தான் வழுதி, கரியன் மால் எனவும் வரும். எத்திறத்தானும் என்றதனால், உண்டான் சாத்தன், சாத்த னுண்டான் என முன்னும் பின்னும் பெயர் நிற்றலும், ‘நின்றா னிருந்தான் கிடந்தான்றதன் கேளலறச் சென்றான் என அடுக்கிப் பெயர் வெளிப்படாது நிற்றலும், ‘முப்பஃதென்ப’ என அடுக்காது பெயர் வெளிப்படாது நிற்றலுங் காண்க. ஈண்டு இலேசாற் கொண்டது முடிக்கும் பெயர் வெளிப்படாது நின்ற தற்கென்றும், ‘எவ்வயிற் பெயரும்’ என்னுஞ் சூத்திரத்தான் கொண்டது முடிக்கப்படும் பெயர் வெளிப்படாது நின்றதற் கென்றும் உணர்க. வேற்றுமைச் சொல்லென வேறு ஒரு சொல்லின்றி முற்றும் எச்சமும் வேற்றுமையை விரிக்குமாறுபோல, எழுவாயும் பயனிலையுமென வேறோர் சொல்லின்றி எச்சமும் முற்றும் எழுவாயும் பயனிலையுமாய் நிற்குமென்றும் உணர்க. முற்றுப் பெயர் கொண்டல்லது தாமாக முற்றி நில்லாமைக்குக் காரணம் ‘அவற்றொடு வருவழி’ என்னுஞ் சூத்திரத்துட் கூறினாம். (33) 430 பிரிநிலை வினையே பெயரே யொழியிசை யெதிர்மறை யும்மை யெனவே சொல்லே குறிப்பே யிசையே யாயீ ரைந்து நெறிப்படத் தோன்று மெஞ்சுபொருட் கிளவி. இது, முற்கூறிய எச்சச்சொற்கட்கு முடிபு கூறுவான், அவற்றின் பெயரும் முறையுந் தொகையுங் கூறுகின்றது. (இ-ள்.) நெறிப்படத் தோன்றும் - முன்னர் எடுத்து ஓதிய இடங்களிலே முறைமைப்படத் தோன்றும், பிரிநிலை வினையே பெயரே ஒழியிசை எதிர்மறை உம்மை எனவே சொல்லே குறிப்பே இசையே ஆயீரைந்தும் - பிரிநிலை முதல் இசை ஈறாகிய அப்பத்தும், எஞ்சு பொருட்கிளவி - எச்சச்சொல் லென்று பெயராம், எ-று. எஞ்சி நிற்பதோர் பொருளையுடைய சொல்லெனவே, எச்சச் சொல்லென்று பெயராயிற்று. இப்பத்தோடும் எச்ச மென்பதனைக் கூட்டுக. இவற்றுட் பிரிநிலை எச்சம் முதலிய ஏழும் எச்சச்சொல் வந்து முடித்தலை யுடைய; ஏனைய மூன்றும் அச்சொல் வந்து முடியா வென்று உணர்க. வினையெச்சமும் பெயரெச்சமும் வினைச்சொல் லொழிபு; ஏனைய இடைச்சொல் லொழிபாம். (34) 431 அவற்றுட், பிரிநிலை யெச்சம் பிரிநிலை முடிபின. இது, முறையே பிரிநிலை எச்சத்திற்கு முடிபு கூறுகின்றது. (இ-ள்.) அவற்றுள் - முற்கூறிய பத்தனுள், பிரிநிலை யெச்சம் - ஏகாரமும் ஓகாரமுமாகிய பிரிநிலை யெச்சங்கள், பிரிநிலை முடிபின - பிரிக்கப்பட்ட பொருண்மேல் வருஞ் சொல்லையே தமக்கு முடிபாக உடையவாம், எ-று. (உ-ம்.) அவனே கொண்டான், அவனோ கொண்டான், எனப் பிரிக்கப்பட்ட சுட்டுப்பெயரின் வினைகொண்டு முடிந்தன. இடைச்சொற்குத் தமக்கு இயல்பின்மையிற், சோற்றைப் பசித்துண்டான் என்றாற்போல அவனென்னுஞ் சுட்டுப்பெயரும் இடை நின்ற ஏகார ஓகாரமுங் கொண்டா னென்பதனோடு முடிந்தன. அன்றி, அவனென்பது கொண்டான் என்பதனோடு முடிய, ஏகார ஓகாரங்கள் பிறர்கொண்டில ரென்பதனோடு முடிந்தன என்றல் பொருத்த முடைத்தெனின், வினை யெச்சமும் பெயரெச்சமும் ஒழித்து இடைச்சொல்லான் வரும் எச்சங்கள் பொருள் தருமாறு இடைச்சொல் லோத்தினுட் கூறி, ஈண்டு அவற்றிற்கு முடிபுசொற் கூறுகின்றாராதலிற், கொண்டா னென்னுஞ் சொல் வந்து அவ்வெச்சங்களை முடித்தாலல்லது பிறர் கொண்டிலரென்னும் பொருண்மை முடிபு தோன்றா தாதலிற், கொண்டானென்பதே முடிக்குஞ் சொல்லாய் நிற்பப் பிறர் கொண்டிலரென்னும் பொருண்மை முடிபு தோன்றிற் றென்றலே பொருத்தமுடைத்தென்று கோடும். அன்றியும், மும்மை யெச்சத்திற்கு உள்நின்ற பொருண்மை முடிபு முன்னர்க் கூறி, அதனை நீக்கிச் சொன்மை முடிபு ஈண்டுக் கூறுகின்ற தனானும், இஃதே ஆசிரியர் கருத்தென்று உணர்க. (35) 432 வினையெஞ்சு கிளவிக்கு வினையுங் குறிப்பும் நினையத் தோன்றிய முடிபா கும்மே ஆவயிற் குறிப்பே ஆக்கமொடு வருமே. இது, வினையெச்சத்திற்கு முடிபு கூறுகின்றது. (இ-ள்.) வினையெஞ்சு கிளவிக்கு வினையும் குறிப்பும் நினையத் தோன்றிய முடிபாகும் - வினையெச்சத்திற்குத் தெரிநிலை வினையுங் குறிப்பு வினையும் ஆராயத் தோன்றிய முடிபுசொல்லாம்; ஆவயின் குறிப்பே ஆக்கமொடு வருமே - ஆண்டுக் குறிப்புமுற்று ஆக்கவினையொடு வரும், எ-று. (உ-ம்.) உழுது வந்தான், மருந்து உண்டு நல்லன் ஆயினான் என வரும். நினையென்றதனான், உழுது வந்தவன், உழுது வருதல் எனத் தொழிற்பெயரோடும், வினைப்பெயரோடும் முடிதலுங் கொள்க. ‘ஈண்டு இவ்வினையெச்ச முடிபு கூறுகின்றவர், வினையியற்கண் ‘முதனிலை மூன்றும்’ என்னுஞ் சூத்திரம் முதலிய மூன்று சூத்திரத்தான் வினையெச்சத்திற்கு முடிபு கூறியது என்னை யெனின், ஈண்டுக் கூறிய பொது விதிக்கு ஆண்டு மூன்று சூத்திரத்தானும் மூவகையாகச் சிறப்பு விதி கூறினார், ‘எதிரது போற்றல்’ என்னுந் தந்திர உத்தியான் என்க. இனி, ‘வேங்கையுங் காந்தளும் நாறி - ஆம்பல் மலரினும் தான்தண் ணியளே.’வில்லக விரலிற் பொருந்தியவன் - நல்லகம் சேரின் ஒருமருங் கினமே.’ என்றாற் போல்வன பிறவும் ஆக்கம் விரிந்தலது பொருளுணர்த் தாமை உணர்க. (36) 433. பெயரெஞ்சு கிளவி பெயரொடு முடிமே. இது, பெயரெச்சத்திற்கு முடிபு கூறுகின்றது. (இ-ள்.) பெயரெஞ்சு கிளவி பெயரொடு முடிமே - பெயரெச்சம் பெயர்ச்சொல்லொடு முடியும், எ-று. (உ-ம்.) உண்ணும் சாத்தன், உண்ட சாத்தன் என வரும். ஈண்டுப் பெயரொடு முடியும் என்ற பொது விதிநோக்கி, ‘நிலனும் பொருளும்’ என்னுஞ் சூத்திரத்தான் இப்பெயர் தாம் பொருள் வகையான் ஆறு வகையவாம் என்று ‘எதிரது போற்றல்’ என்னும் உத்தியாற் கூறினார். (37) 434. ஒழியிசை எச்சம் ஒழியிசை முடிபின. இஃது, ஒழியிசை எச்சத்திற்கு முடிபு கூறுகின்றது. (இ-ள்.) ஒழியிசை எச்சம் ஒழியிசை முடிபின - மன்னுந் தில்லும் ஓகாரமுமாகிய ஒழியிசை எச்சம் மூன்றும் அவ்வொழியிசைப் பொருள் மேல் வருஞ் சொல்லையே தமக்கு முடிபாக உடைய, எ-று. (உ-ம்.) கூரியதொரு வாள்மன், என்பது திட்பம் இன்று என்பத னொடும், ‘வருகதில் அம்ம’ என்பது வந்தால் இன்னது செய்வேன் என்பதனொடும் முடியும். ஆண்டுப் பொருண்மை முடிபு கூறினார், ஈண்டுப் பொருண்மையை உணர்த்தும் சொன்மை முடிபு கூறினார். கொளலோ கொண்டானென்பது கொண்டான் என்பதனோடு முடியும். அது, கொண்டுய்யப்போமாறு அறிந்திலன் என்பதனோடு முடிந்ததெனின், கொண்டான் என்பது வந்து முடியாக்கால் அப் பொருண்மை முடிபு தோன்றாமை உணர்க. (38) 435. எதிர்மறை எச்சம் எதிர்மறை முடிபின. இஃது, எதிர்மறை எச்சத்திற்கு முடிபு கூறுகின்றது. (இ-ள்.) எதிர்மறை எச்சம் எதிர்மறை முடிபின - ‘மாறுகோள் எச்சம்’ என்ற ஏகாரமும் ஓகாரமும் உம்மையுமாகிய எதிர்மறை எச்சம் மூன்றும் எதிர்மறைப் பொருளை உணர்த்துஞ் சொல்லை முடிபாக உடைய, எ-று. (உ-ம்.) யானே கொள்வேன், யானோ கொள்வேன், சாத்தன் வரலும் உரியயென அவ்விடைச் சொற்களின் பின்னர் நின்ற சொற்கள் அவற்றை முடித்தலாற் கொள்ளேன், கொள்ளேன், வாராமையும் உரியன் என்னும் பொருண்மை முடிபு தோன்றியவாறு காண்க. (39) 436. உம்மை எச்சம் இருவீற் றானும் தன்வினை ஒன்றிய முடிபா கும்மே. இஃது, உம்மை எச்சத்திற்கு முடிபு கூறுகின்றது. (இ-ள்.) இரு வீற்றானும் - ஒன்றற்கொன்று முடிவனவும் முடிப்பனவு மாகிய இரண்டு கூற்றின்கண்ணும் வரும், உம்மை எச்சம் தன் வினை - உம்மை எச்சங்களை முடிக்குந் தன்னுடைய வினைச்சொற்கள், ஒன்றிய முடிபாகும் - ஓர் உம்மைக்குப் பொருந்திய வினையே மற்றை யும்மைக்கும் முடிபாய் வரும், எ-று. (உ-ம்.) ‘சாத்தனும் வந்தான் கொற்றனும் வந்தான்,’ என எதிரது தழீஇய உம்மைக்கு முடிபாய வினையே இறந்தது தழீஇயதற்கும் முடிபு ஆயிற்று. ‘சாத்தனும் வந்தான்; கொற்றனும் வரும்,’ என்பதூஉம் ஒன்றிய முடிபாம்; கொற்றனும் உண்டா னென்றால், ஒன்றிய முடிபாகாதெனவே, எச்சப்பொருட்கும் உம்மையை முடிபாகக் கூறாது அதனோடு தொடர்ந்த வினை முடிபாமாறு கூறவே, உண்ணின்ற பொருண் முடிபு கூறாது சொன் முடிபு கூறுதலே ஆசிரியர் கருத்தாயிற்று. எனவே, முற் கூறியவற்றிற்குஞ் சொன்முடிபே கூறினாராயிற்று. ‘வேங்கையு மொள்ளிணர் விரிந்தன, நெடுவெண் டிங்களு மூர்கொண் டன்றே.’ என்பது, இணர் விரிதலும் ஊர்கோடலும் மணஞ் செய்யுங் காலங் குறித்தலின், அவை ஒரு வினையே ஆம். இனி, எஞ்சுபொருட்கிளவி செஞ்சொ லாயவழியுந் தன்வினை கோடல் தன்னின முடித்தலாற் கொள்க. அது, ‘சாத்தன் வந்தான் கொற்றனும் வந்தான், வரும்’ என்பதாம். (40) 437. தன்மேற் செஞ்சொல் வரூஉங் காலை நிகழுங் காலமொடு வாராக் காலமு மிறந்த காலமொடு வாராக் காலமு மயங்குதல் வரையார் முறைநிலை யான. இதுவும் அவ்வெச்சவும்மையது கால மயக்கம் கூறுகின்றது. தன்மேற் செஞ்சொல் வரூஉங்காலை - அவ்வும்மை யெச்சத்தின் முன்னர் முடிக்குஞ் சொல் உம்மையில் சொல்லாய் வருங்காலத்து, நிகழுங் காலமொடு வாராக் காலமும் - நிகழ்காலத்தோடு எதிர்காலமும், இறந்த காலமொடு வாராக் காலமும் - இறந்த காலத்தோடு எதிர்காலமும், மயங்குதல் வரையார் முறைநிலையான - மயங்குதலை நீக்கார் அவ்வாறு மயங்கும் முறைமைக்கண், எ-று. (உ-ம்.) கூழுண்ணாநின்றான் சோறுமுண்பன், கூழுண்டான் சோறுமுண்பன் என வரும். ‘முறை நிலை’ யென்றதனாற், சிறுபான்மை நிகழ்வோடு இறப்பும் மயங்குதல் கொள்க. கூழுண்ணாநின்றான் சோறுமுண்டான் என வரும். (41) 438. எனவெ னெச்சம் வினையொடு முடிமே. இஃது, எனவெ னெச்சமாமாறு கூறுகின்றது. (இ-ள்.) எனவென் எச்சம் - முன்னர் வினையுங் குறிப்பும் இசையும் பண்பும் எனக் கூறிய நால்வகையவாகிய எனவெ னெச்சம், வினையொடு முடிமே - தெரிநிலைவினையோடுங் குறிப்புவினையோடும் முடியும், எ-று. செய்தென என்னும் ‘வினையெச்ச என’ வினைகோடல் முற் கூறினார். எண் எனவும் பெயர் எனவும் வினை கொள்ளா. எனவே, என வென்னும் இடைச்சொல் எழு வகையதாயிற்று. (உ-ம்.) கார் வருமெனக் கருதி நொந்தாள், துண்ணெனத் துடித்தது, ஒல்லென வொலித்தது, காரெனக் கறுத்தது என நான்கனுள் இருவகை வினையுங் காண்க. என்றென்பதற்கும் இவ்விதி ஒக்கும். கொள்ளென்று கொண்டான், ‘மலைவான் கொள்ளென் றுயர்பலி தூஉய்’ என்பன, கொள் ளென்று சொல்லிக்கொண்டானெனவும், ‘மலைவான் கொள்ளவேண்டு மென்று சொல்லி’ எனவும் பொருடருதலிற், சொல்லெச்சமுமாம். (42) 439. எஞ்சிய மூன்று மேல்வந்து முடிக்கு மெஞ்சுபொருட் கிளவி யிலவென மொழிப. இஃது, ஏனை எச்சங்கட்கு முடிபுவேற்றுமை கூறுகின்றது. (இ-ள்.) எஞ்சிய மூன்றும் - ஒழிந்த சொல் லெச்சமுங் குறிப் பெச்சமும் இசை யெச்சமுமாகிய மூன்றும், மேல் வந்து முடிக்கும் எஞ்சு பொருட் கிளவி இல என மொழிப - ஒழிந்த எச்சங்கள் போலத் தமக்குமேல் வேறாய் வந்து தம்மை முடிக்கும் எஞ்சிய பொருட்கிளவியை உடைய வல்ல என்று கூறுவர் ஆசிரியர், எ-று. எனவே, பிற சொல்லை அவாவி நின்றாலும், அவை வந்து முடியாமற், தாமே அவற்றைக் கூறி நிற்குமாயின. அவை மேற் காட்டுதும். சொல்லை எச்சமாகவுடைய சொல்லெனவுங் குறிப்பின்கட் தோன்றிய எச்சமெனவும், இசையின்கண் தோன்றிய எச்சமெனவும் விரிக்க. (43) 440. தத்தங் குறிப்பி னெச்சஞ் செப்பும். இது, குறிப்பெச்சமும் இசையெச்சமும் முடியுமாறு கூறுகின்றது. (இ-ள்.) எச்சம் - சொல்லெச்சம் ஒழிந்த இருவகை எச்சங்கள், தத்தங் குறிப்பிற் செப்பும் - தம்மைக் கூறுவோர் தம்முடைய குறிப்புக்களாலே தம்முடைய எஞ்சு பொருளைத் தாமே கூறி நிற்கும், எ-று. (உ-ம்.) ‘கற்கறிக்க நன்கட்டான்,’ என்றாற், தீங்கட்டா னென்னுங் குறிப்பு, தோன்றிய எஞ்சு பொருளினைத் தானே கூறி நின்றது. ‘வயிறு மொடுமொடுத்தது,’ என்றால், இசையிற் குறிப்பாகிய ‘உண்ண வேண்டா,’ மென்னும் எஞ்சு பொருளினைத் தானே கூறி நின்றது. இவ்விசையிற் குறிப்பு வயிற்றின்கண்ணும் கொள்க. இனி, பிற சொல் வாராது தம்மைத்தாமே முடிக்குமென்று, ‘விண்ணென விணைத்தது, ஒல்லென வொலித்தது,’ என்பன காட்டினாரால் உரையாசிரிய ரெனின், அவை தம்மைத் தாமே முடியாமல், ‘அது விண்ணென வீங்கிற்று, ஒல்லென வோடிற்று,’ எனப் பிறசொல் வந்து முடித்தலும் அவற்றிற்கு ஏற்குமாகலானும், அவை என வென்னும் இடைச்சொல்லாகலானும், அவற்றைக் கொண்டால், ‘காரெனக் கறுத்தது,’ என்னும் பண்புங் கோடல் வேண்டுமாகலானும் அது போலியுரையாம். இனி, சேனாவரையர் குறிப்பெச்சத்திற்கு ‘இளைதாக முண்மரங் கொல்க’ என்னுங் குறள் வெண்பாவும், இசையெச்சத்திற்கு ‘அகர முதல’ என்னுங் குறள் வெண்பாவும் காட்டினாராலெனின், அவர் காட்டின குறிப்பெச்சஞ் செய்யுளிலக்கணங் கூறுகின்ற செய்யுளியற் ‘சொல்லொடுங் குறிப்பொடும்’ என்னுஞ் சூத்திரத்தாற் பல சொல் தொடர்ந்ததோர் செய்யுள் முடிந்தக்கால் வருமென்று கொண்ட குறிப்பெச்சமாகலின், அதனைச் சொல்லிலக்கணத்திற் கூறுகின்ற குறிப்பெச்சத்திற்குக் காட்டினால் ஆண்டைக் குறிப்பெச்சத்திற்கு வேறு பொருள் இன்றாமாகலானும், அவர் இசையெச்சமென்ற ‘அகர முதல’ என்பதன்கண் ‘அதுபோல’ என விரிந்த உவமச்சொற் துணியுமாறு விரியாது, இரண்டற்கும் பொதுவாய் வேறுபட வந்த உவமத்தின் பாற்படுதல் அல்லது இசையாற் பிறவாமையானும் அவை பொருந்தாமை உணர்க. (44) 441. சொல்லெ னெச்ச முன்னும் பின்னுஞ் சொல்லள வல்ல தெஞ்சுத லின்றே. இது, சொல்லெச்சத்திற்கு முடிபு கூறுகின்றது. (இ-ள்.) என் எச்சம் - என் என்கின்ற எச்சமானது, சொல் அளவு அல்லது - சொல் லென்னும் முதனிலை மாத்திரை தன்னுள்ளேயே எஞ்சி நிற்றலல்லது, சொல் முன்னும் பின்னும் எஞ்சுதலின்று - செய்யுளியலிற் கூறுஞ் சொல்லெச்சம்போல ஒரு சொல் செய்யுட்கு முன்னும் பின்னும் எஞ்சி நிற்றல் இல்லை, எ-று. என் னென்னும் இடைச்சொற்கண்ணே சொல் லென்பது தோன்றுதலின். ‘என் னெச்சம்’ மென்றார். என்னென்பது சொல்லை ஒழிபாக நிற்றலின், முன்னர்ச் ‘சொல்லெச்சம்’ என்றார். ‘வினையெனப் படுவதென்றது, ‘வினை யென்று சொல்லப்படுவது’ என்று பொருள் தந்த இடத்து என்னென்னும் எச்சந்தான் அவாவுதலின், இடையே நின்ற ‘சொல்’ லென்னும் முதனிலைக்குத் தன் ஈற்றில் நின்ற செயவெனெச்சத்தை உணர்த்தும் அகரத்தை ஏற்பித்து நின்றவாறு காண்க. ‘நளியென் கிளவி’ என்றது, நளியென்று சொல்லுஞ் சொல்லென்று பொருள்தந்த இடத்தும் என்னென்னும் எச்சந் தான் அவாவுதலின், இடைநின்ற சொல்லென்னும் முதனிலைக்குத் தன் ஈற்றில் நிற்குஞ் செய்யுமென்னும் எச்சத்தை உணர்த்தும் உம் மென்பதனை ஏற்பித்து நின்றவாறு காண்க. ‘தாவென நின்றான்,’ என்பது, ‘தாவென்று சொல்லி நின்றானென எனவெனெச்சம் சொல்லி யென்னும் வினைகொண்டு நின்றது. இது சொல் லெச்சமன்று. இங்ஙனம் எச்ச ஈறுகளை ஏற்றலிற், சொல் லென்பது முதனிலை யாயிற்று. என்னென்பதற்குஞ் சொல் என்பதற்கும் இடைநின்ற றகர உகரம் அவ்விரண்டனையுங் கூட்டுதற்கு வந்து நின்றது. ‘எழுத்தெனப் படுப’ ‘பெய ரெனப் படுப’ ‘இடையெனப் படுப’ எனவும், ‘இலமென் கிளவி’ ‘முழுதென் கிளவி’ ‘கடியென்கிளவி’ ‘மீனென்கிளவி’ ‘தேனென் கிளவி’ எனவும் வருவனவெல்லாம் இக்கூறியவாறே வந்த சொல்லெச்சம். இனி, செய்யுட்கண் வருஞ் சொல் எச்சமாயின், ‘எமக்கு’ என, ‘கல்கெழு கானவர் நல்குறூஉ மகண் - மருந்தெனின் மருந்து; வைப்பெனின் வைப்பு.’ என்புழி முன்னும், ‘குன்றங் குருதிப் பூவின் குலைக்காந் தட்டே’ என்புழி, யாங் காந்தட்பூவாற் குறைவிலமெனப் பின்னுங் கூற்றுச் சொல் எச்சமாய் நிற்குமாறு உணர்க. இதற்கு விதி, ‘சொல்லொடுங் கூறிப்பொடு முடிவுகொளியற்கை - புல்லிய கிளவி யெச்ச மாகும்.’ என்னுஞ் சூத்திரமென்று உணர்க. இனி, ‘உயர்திணை யென்மனார்’ என்பதற்கு ஆசிரியரென வரும் பெயர் சொல்லெச்ச மென்று உதாரணங் காட்டினால், அது பொருந்தாது. சூத்திரஞ் செய்யுளாதலானும், அதுதான் முற்றுச்சொற்குப் பெயர் தோன்றாமலும் நிற்கு மென்று முற்கூறிய தாகலானும் இது சொல்லெச்சம் ஆகாமை உணர்க. (45) 442. அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல். இது, மரபு வழுக் காக்கின்றது. (இ-ள்.) அவையல் கிளவி - நன்மக்களிடைக் கூறப்படுவ தல்லாத சொல்லினை, மறைத்தனர் கிளத்தல் - அவ்வாய்பாடு மறைத்துப் பிற வாய்பாட்டாற் கூறுக, எ-று. (உ-ம்.) ‘ஆன்முன் வரூஉ மீகார பகரம்’ கண்கழீஇ வருதும், கருமுக மந்தி, செம்பினேற்றை, புலிநின்றிறந்த நீர லீரத்து’ என வரும். ஈகார பகர மென்றது, ஓருயிர்மெய் யெழுத்தாகக் கூறின் அவையல் கிளவியா மென்று உயிரும் மெய்யுமாகப் பிரித்து அவ்வுயிர்மெய் எழுத்தையே கூறியது. ஒழிந்தன, அவ்வாறன்றி, அவையல் கிளவிப் பொருளைப் பிற சொல்லான் உணர்த்திற்றேனும் அப்பொருளையே உணர்த்தி நிற்றலின், அதனைப் பிறிதோராற்றான் மறைத்தனவேயாம். தகுதியாவது, செத்தானெனப் பெரும்பான்மை வழங்கப்பட்டன, தகுதி நோக்கித் துஞ்சினானெனச் சிறுபான்மை வழங்கப்பட்டு நிற்கும் : அவையல் கிளவியாவது, இழிந்தோர் கூறும் இழிசொற்களை நன்மக்க ளிடை மறைத்துக் கூறப்படும். இஃது, இரண்டற்கும் வேற்றுமை; இங்ஙனம் மறைத்துக் கூறாக்கால் வழுவாதல் கருதி, வழுவமைத்தார். இது, பொருளிடையிடுத லென்னுந் தந்திரவுத்தி (46) 443. மறைக்குங் காலை மரீஇய தொராஅல். இது, மேலதற்கோர் புறனடை. இ-ள். மறைக்குங்காலை - அவ்வவையல் கிளவியை மறைத்துக் கூறுங் கால், மரீஇயது ஒராஅல் - மேற்றொட்டு மரீஇ வழங்கியதனை மறைத்தலை நீக்குக, எ-று. (உ-ம்.) ‘மெழுகு மாப்பிதன்கண் கலுழ்நீ ரானே,’ (புறம். 249 : 14) ‘ஆப்பி நீரெங்குந் தெளித்துச் சிறுகாலை’, யானை யிலண்டம், யாட்டுப் பிழுக்கை என வரும். தன் பொருள்மேல் நில்லாது அணிகுறித்து நின்ற ‘பகல்கான் றெழுதரும் பல்கதிர்ப் பரிதி’ என்றாற் போல்வன தம் பொருளை உணர்த்துங்கால் மறைத்துக் கூறப்படுமாறு உணர்க. (47) 444. ஈதா கொடுவெனக் கிளக்கும் மூன்று மிரவின் கிளவி யாகிட னுடைய. இஃது, ஒரு பொருண்மேல் வரும் ஈ, தா, கொடு என்னும் பல சொற்கு மரபு வேறுபாடு கூறுகின்றது. (இ-ள்.) ஈ தா கொடு எனக் கிளக்கும் மூன்றும் - ஈ, தா, கொடு என்று முன்னின்றானை நோக்கிக் கூறுஞ் சொற்கள் மூன்றும், இரவின் கிளவி ஆகுஇடன் உடைய - ஒருவன் ஒன்றை இரத்தற்கண் வருஞ் சொல்லாம் இடமுடைய, எ-று. ‘ஈச்சிறகு’ எனவும், ‘தாவினன்பொன்’ எனவும், ‘கொடுங் கோல்’ எனவும் இவை பிற பொருளையும் உணர்த்துதலின், ஆகிடனுடைய என்றார். இவை மூன்றும் இல்லென இரப்போர்க்கும், இடனின்று இரப்போர்க்குந் தொலைவாகி இரப்போர்க்கும் உரிய என்று உணர்க. (48) 445. அவற்றுள், ஈயென் கிளவி யிழிந்தோன் கூற்றே. இது, முதலதன் மரபு கூறுகின்றது. (இ-ள்.) அவற்றுள் ஈ என் கிளவி - முற்கூறிய மூன்றனுள் ஈ யென்னுஞ் சொல், இழிந்தோன் கூற்று - இரக்கப்படுவானின் இழிந்த இரவலன் அவனை இரக்குங்கால் கூறுங் கூற்றாம், எ-று. (உ-ம்.) ‘பெருமா! வெனக்கொரு பிடிசொறீ’ எனவும், ‘ஈயென விரத்தலோ வரிதே நீயது’ எனவும் இவ்விரண்டுந் தன்மையும் முன்னிலையும் பற்றி வந்தன. ‘சிறியகட்பெறினே யெமக்கீயும் மன்னே!’ என்றது உளப்பாட்டுத் தன்மையும் படர்க்கையும் பற்றி வந்தது. ‘இவற்கீத் துண்மதிகள்ளே.’ என் புழியும் இவனென்பது முன்னிலையும் படர்க்கையுமென்று உணர்க. (49) 446. தாவென் கிளவி யொப்போன் கூற்றே. இஃது, இரண்டாவதன் மரபு கூறுகின்றது. (இ - ள்) தாவென் கிளவி - தன்மை முன்னிலைக்கு உரிய தா வென்னுஞ் சொல், ஒப்போன் கூற்று - இரக்கப்படுவானோடு ஒக்கும் இரவலன் அவனை இரக்குங்காற் கூறுங் கூற்றாம், எ-று. (உ-ம்.) எனக்குச் சோறு தா என வரும். ‘மாணலந் தாவென வருந்தற் கண்ணும்’ எனவும், ‘என்னலந் தாராய்’ எனவுங் கொடு போல வருவன, கொடுப்பான் பொருளாய்க் கொள்வான்கட் செல்லாதனவற்றை இரந்தன வாம். ‘ஒப்போன் கூற்று என்றாரேனுஞ் சிறுபான்மை வலியாற்கொள்ளு மிடத்துந் தா வென்பது வருமெனக் கொள்க. ‘நின்னது தாவென நிலைதளரக் - குரங்கன்னபுன் குறுங்கூளியர் - பரந்தலைக்கும் பகையொன்றென்கோ!’ (புறம். 136 : 12 - 14)என வரும். (50) 447. கொடுவென் கிளவி யுயர்ந்தோன் கூற்றே. இது, மூன்றாவதன் மரபு கூறுகின்றது. (இ-ள்.) கொடு என் கிளவி - கொடு வென்னும் படர்க்கை யாகிய முதனிலைச்சொல், உயர்ந்தோன் கூற்று - இரக்கப் படுவோனின் உயர்ந்த இரவலன் அவனை இரக்குங்கால் கூறும் கூற்றாம், எ-று. (51) 448. கொடுவென் கிளவி படர்க்கை யாயினுந் தன்னைப் பிறன்போற் கூறுங் குறிப்பிற் றன்னிடத் தியலு மென்மனார் புலவர். இது, கொடு வென்பதற்கு இடவழு அமைக்கின்றது. (இ-ள்.) தன்னைப் பிறன்போலாயினுங் கூறுங் குறிப்பிற் கொடு என் கிளவியும் - இரப்போர் பலருந் தம்மிலொருவனைக் காட்டி இவற்குக் கொடு எனத் தம்மைப் பிறரைப் போலாயினுங் கூறி இரக்குங் கருத்தினாற் கூறப்படுங் கொடு என்னுஞ் சொல்லும், தன்னைப் பிறன்போலாயினுங் கூறும் குறிப்பிற் படர்க்கைக் கிளவியும் - கூறுகின்றார் பலருந் தம்மைப் பிறரைப் போலாயினுங் கூறுங் கருத்தினாற் கூறப்படும் படர்க்கைச் சொற்களும், தன்னிடத்து இயலும் என்மனார் புலவர் - இவ்விரண்டுந் தன்மை யிடத்திற்கு உரியவாய் நடக்குமென்று கூறுவர் புலவர், எ-று. (உ-ம்.) இவற் கூண் கொடு என வரும். அங்ஙனஞ் சொல்லுவானோ, பெருஞ்சாத்தன் றந்தை; சொல்லப்படு வாளோ, பெருஞ்சாத்தன் றாய். இந்நான்கு சூத்திரத்தானும் ஆண்பா லுரிமையாற் கூறினாரேனும், அது முப்பாற்கும் உரித்தாமாறு மேலே உணர்க. சேனாவரையர், கொடு வென்பது தானே தன்னைப் பிறன்போற் கூறுங் குறிப்பினையும் உணர்த்துமென்று, அவற்குச் சாந்து கொடு, என்பது உதாரணங் காட்டினாராலெனின், கொடு வென்பது கொடுப்பதோர் பொருளை ஏற்றற்குரிய நான்கனுருபு வந்தால் அதனை முடித்தற்கு வந்த சொல்லாதலின், அவற்கு, இவற்கு, உவற்கு என்னுஞ் சொற்களை அவாய், அவற்றை முடித்தே நிற்றல்வேண்டும்; வேண்டவே, அவற்குக் கொடு வென்பது ‘ஏனை யிரண்டும்’ என்புழிக் கூறியதாம். எனக்குக் கொடு, வென்பது தன்னைப் பிறன்போற் கூறுங் குறிப்பு இல்லாததாயிற்று. ஆதலாற், தன்னைப் பிறன்போற் கூறுங் குறிப்பிற்றாய் வழுவமைதியும் ஏற்று நிற்பது இவற்குக் கொடு என்னும் உதாரணமே ஆயிற்று என்க. (52) 449. பெயர்நிலைக் கிளவியி னாஅ குநவுந் திசைநிலைக் கிளவியி னாஅ குநவுந் தொன்னெறி மொழிவயி னாஅ குநவு மெய்ந்நிலை மயக்கி னாஅ குநவு மந்திரப் பொருள்வயி னாஅ குநவு மன்றி யனைத்துங் கடப்பா டிலவே. இதுவும் ஒருசார் வழுவமைக்கின்றது. (இ-ள்.) பெயர்நிலைக் கிளவியின் ஆஅகுநவும் - தத்தம் பொருளுணர்த்தாது பெயர்ந்த நிலைமையை யுடைய சொல்லான் வருஞ் செய்யுளும், திசைநிலைக் கிளவியின் ஆஅகுநவும் - திசையான் நிலைபெற்ற பெயரான் வருஞ் சொல்லும், மொழிவயிற் தொன்னெறி ஆஅகுநவும் - சொல்லிடத்துப் பழைய நெறியான் ஆய் வருஞ் சொல்லும், மெய்ந்நிலை மயக்கின் ஆஅகுநவும் - ஒருமைப் பொருளாற் கூறவே பன்மைப் பொருள் தோன்றி மயங்கும் மயக்கினான் ஆகுஞ் செய்யுள்களும், மந்திரப் பொருள் வயின் ஆஅகுநவும் - மந்திரத்தை உடைய தெய்வங்களிடத்தே அம்மந்திர மாய் வருஞ் சொற்களும், அன்றி யனைத்தும் - ஆகிய அவ்வனைத்தும், கடப்பாடு இல - வழங்கியவாறே கொள்வதல்லது இலக்கணத் தான் யாப்புறவு உடையவல்ல, எ-று. (உ-ம்.) ‘ஒள்வாள் -கறையடி யானைக் கல்ல - துறைகழிப் பறியா வேலோனூரே.’ என்புழி, வேலோனென்பது ‘வேலையுடையோன்’ என்னும் பொருள் பெயர்ந்து ஒரு பெயர்த்தன்மையாய் நின்றது. ‘செழுந்தா மரையன்ன வாட்கண்’ என்பதூஉம் அது. ‘தென்னன், வடமன், குடக்கோ, தென்பாண்டி’ என இவை திசை நிலைக் கிளவி. முதுமொழி, பொரு ளுடையனவும் பொருளில்லனவு மென இருவகைப்படும். ‘யாட்டுளா னின்னுரை தாரான்,’ என்றது, ‘இடையன் எழுத்தொடு புணராது பொருள் அறிவுறுக்கும் மொழியைக் கூறுதலன்றி, எழுத்தொடு புணர்ந்து பொருள் அறிவுறுக்கும் மொழியைக் கூறான்,’ என்னும் பொருள் தந்து நின்றது. ‘யாற்றுட்செத்த வெருமை யீர்த்த லூர்க் குயவர்க்குக் கடன்,’ என்பது, ‘குயவன் சுள்ளையி னெழுந்த புகையா யாயம் மேகந்தந்த நீரான் எருமை சாதலின், அதனை இழுத்தல் குயவர்க்குக் கடனாயிற்றென ஒரு காரணம் உள்ளதுபோலக் கூறுகின்றது. உண்மைப் பொருளன்றி, ஒருவன் இயைபின்றிக் கூறிய சொற்கு எடுத்துக்காட்டாகக் கூறப்படுதலின், பொருள் உணர்த்தா தாயிற்று. ‘இல்வாழ்வா னென்பான்’ ‘தினைத்துணையுந் தேரான் பிறனில் புகல்’ ‘நட்பரணாறு முடையான்’ ‘வறியவளிளமை போல்’ என்றாற் போல்வன எல்லாம் ஒருமைப்பொருள் கூறினவேனும் பன்மைப்பொருளை உணர்த்தலின், மெய்ந்நிலை மயக்கம் ஆயிற்று. மெய் - பொருள். மந்திரச் சொல், மந்திர நூல்களிற் கேட்டு உணர்க. ‘நம்பி, நங்கை’ என அஃறிணையைக் கூறுவனவும், ‘எழுதுவரிக் கோலத்தார்’ என்னும் பிரேளிகைச் செய்யுளிற் திணை வழுவும், ‘ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும்’ என்னுஞ் சூத்திரத்துள் அடங்குமாறும், ‘புலி யான், பூசையான்’ என்பன திசைச்சொற்கண் அடங்குமாறும் உணர்க. வெண் கொற்றப் படைத்தலைவனுஞ் சிறப்பினாகிய பெயர்க்கண் அடங்கும். (53) 450. செய்யா யென்னு முன்னிலை வினைச்சொற் செய்யென் கிளவி யாகிட னுடைத்தே. இஃது, ஓசை வேறுபாட்டான் ஒரு சொல் ஒரு சொல்லா மென்கின்றது. (இ-ள்.) செய்யாய் என்னும் முன்னிலை வினைச்சொல் - ஒரு தொழிலினை மேற்செய்யாயென்னும் மறையாகிய முன்னிலை வினைச்சொல், செய் என் கிளவி ஆகு இடன் உடைத்து - ‘அத் தொழிலினைச் செய்’ யென்னும் உடம்பாட்டு முன்னிலை வினைச்சொல்லாம் இடத்தினை யுடைத்து, எ-று. ‘இடனுடைத்து,’ என்றதனான், ‘உண்ணாய்’ என்பது மறையாய் வரு தலே பெரும்பான்மை ஆயிற்று. அது சிறுபான்மை உடம்பாட்டின்கண் வருங்கால் வேண்டிக்கோடற் பொருண்மைக்கண் வருமென்று உணர்க. உண், தின் என்பன முதலிய முன்னிலை யேவல், உயர்ந்தான் இழிந்தானை ஏவுதற்கண் வரும். ‘அறியாய் வாழி தோழி! - . . . . . பொருளே காதலர் காத - லருளே காதலரென்றி நீயே.’ என்னும் அகப்பாட்டினுள் அறியா யென்றது, ‘காதலர் அருளே காதலித் திருப்பார்’ என்று நீ கூறுகின்றமையாற் காதலர் கருத்தினை நீ அறியாயென முன்னிலை மறையாய் நின்றவாறும், ‘அறியாய் வாழி தோழி! பொறிவரிப் - பூநுதல் யானையொடு’ என்னும் அகப்பாட்டினுள் அறியாயென்றது, ‘காமங் கலந்த காத லுண்டெனி - னன்றுமனதுநீ நாடாய் கூறுதி’ என்றதனோடு இயையுங்கால், ‘அவனோடு கூட்டம் உண்டெனின், அது மிக நன்று! அதனை நீ ஆராயாமற் கூறுகின்றாய்; அதனை நின் மனத்தான் ஆராய்ந்து பாராயென வேண்டிக்கோடற்பொருள் தந்து முன்னிலை யேவ லுடம்பாடாய் நின்றவாறும் உணர்க. இங்ஙனம் மறைச்சொல் உடம்பாட்டுப் பொருளைப் படுத்தலோசையாய் உணர்த்திநிற்றல் சான்றோர் செய்யுளுட் பெரும்பான்மையென்று உணர்க. இனி, வழக்கினுள்ளும், ‘இந்நாள் எம் இல்லத்து உண்ணாய் இப் பொழுது சொல்லாய்’ என்றாற்போலப் பெரும்பான்மையும் வழங்குமாறு உணர்க. உண்பா யென்னுஞ் சொல், ஓசை வேற்றுமையான் முற்றுந் தொழிற் பெயரும் வினையெச்சமும் வியங்கோளுமாய் நின்றாற்போலவும், தபு என்பது, ஓசை வேற்றுமையான் ஒன்றனைக் கொலென்றும், ‘நீ சா,’ வென்றும் நின்றாற்போலவும், மறைச்சொல் ஓசை வேற்றுமையான் உடம்பாடு உணர்த்திற் றென்று உணர்க. ‘அங்ஙனம் உணர்த்திற்றேனும், மறை உணர்த்தும் ஆகாரம் உடம்பாடு உணர்த்துமோ’ வெனின், அதனை ஏகாரம் ‘உண்பேனே, உண்ணேனே’ என விதிக்கும் மறைக்கும் வந்தாற்போலக் கொள்க. மறை என்பது செய்யாய் என்னும் வாசகத்தாற் சூத்திரஞ் செய்தமையாற் பெற்றாம். செய் யென்பது விதிவினையே உணர்த்துதல் பற்றிச் ‘செய்யென் கிளவி’ என்றார். இனி, சேனாவரையர், செய்யாய் என்னும் முன்னிலை முற்றுச்சொல் ஆயென்னும் ஈறுகெடச் செயென்னும் முன்னிலை யேவல் முற்றாய் நிற்கும்,’ என்று பொருள் கூறி, ‘உண்ணாய், தின்னாய், நடவாய், கிடவாய்’ என்பன ஈறு கெட்டு, ‘உண், தின், நட, கிட’ என நிற்கு’ மென்றாராலெனின், உண்ணா மென்பதும் உண் என்பதுந் தம்மிற் பொருள்வேறுபாடு உடைமையின், உண்ணாய் என்பதன் பொருளை உண் ணென்பது உணர்த்தி ஈறுகெட்டு நிற்கும் என்றல் பொருந்தாதாம். ‘நீ கலாய்த்திராது உண்ணா,’ யென்ற பொருளை உண் என்றது தாராது ஏவற்பொருட்டாய் நின்றவாறு காண்க. அன்றியும், இவ் ‘உண், தின், நட, கிட’ என்பனவற்றை முதனிலை என்றே தாமுங் கூறிப் போந்தாராதலின், இவை முதனிலையாய் நிற்கு மிடத்துக் ‘கரு, செய், வெள்’ என்னும் முதனிலைகள் பண்பு மாத்திரையே உணர்த்தி, ஈறு கெடுதலும் பொருள் உணர்த்துதலுமின்றி நின்றாற்போல, இவையும் வினைமாத்திரையே உணர்த்தி, ஈறு கெடுதலும் பொருள் உணர்த்துதலுமின்றி நிற்றல் வேண்டும். இவை அங்ஙனம் நில்லாது, ஆய் என்னும் ஈறு கெட்டு முன்னிலை யேவற் பொருண்மையே உணர்த்தி நிற்கும் என்றலின், ‘முதனிலை’ என்றல் பொருந்தாதாம். ஆகவே, வினைச்சொற்கு முதனிலைகள் ‘உண், தின், நட, கிட’ முதலிய என்றாம். இவர் பிறர் மதமே கூறினார்; இஃது ஆசிரியர்க்குக் கருத்தன்மை உணர்க. அன்றியும், ‘உண், தின், நட, கிட’ முதலியன முன்னிலை உணர்த்தி நிற்குமேல், ‘உண்டான், உண்டேன் என உண்ணென்னும் முதனிலையில் விரிந்துநின்ற ஈற்றான் உணர்த்தும் படர்க்கைக்குந் தன்மைக்கும் வழுவாமாறு காண்க. (54) 451. முன்னிலை முன்ன ரீயு மேயு மந்நிலை மரபின் மெய்யூர்ந்து வருமே. இது, பொருள் தரும் இடைச்சொற்களுட் சில நிலை வேறுபடுமாறு கூறுகின்றது. (இ-ள்.) முன்னிலை முன்னர் ஈயும் ஏயும் - முன்னிலை வினைச்சொல் முன் வரும் ஈகாரமும் ஏகாரமும், அந்நிலை மரபின் மெய் ஊர்ந்து வருமே - அம் முன்னிலைச் சொற்கட் தாம் நிற்றற்கு உரிய முறைமையை உடைய மெய்களை ஊர்ந்து வரும், எ-று. முன்னிலைச் சொல்லாவன, ‘செல், நில், புகு, உண், தின், உரை என்றாற் போல வருவனவாம். (உ-ம்.) ‘சென்றீ பெரும!நிற் றகைக்குநர் யாரோ.’ ‘அட்டி லோலை தொட்டனை நின்மே.’ என வரும். இவற்றுள் ஈகாரம், ‘புக்கீ, உண்டீ, உரைத்தீ, சென்றீ’ எனக் கடதறவை ஊர்ந்துவரும் என்பது தோன்ற, ‘அந்நிலை மரபின் மெய்’ என்றார். ஏகாரம் மகரம் ஊர்ந்துவரும். இவை நிலைமொழி வருமொழி செய்து புணர்க்கப்படாமையிற், புணர்ச்சி விகாரமின்றி, முன்னிலைச் சொல் விகாரமாயிற்று. உண்பா யென்பதற்கு மறையாகிய உண்ணா யென்னுஞ் சொல், படுத்த லோசையான் ‘உண்டலைச் செய்,’ என்னும் பொருள்தந்து நிற்றலிற், ‘செய் யென் கிளவி யாகிட னுடைத்து.’ என்று சூத்திரஞ் செய்ததன் பின்னர், ‘செல்லுதலைச் செய்; நிற்றலைச் செய்,’ என இச்சூத்திரத்தின் முதனிலைகளுஞ் செய் யென்னும் வாசகத்தினையே உணர்த்தி நிற்குமென்பது கருதிச் ‘செய் யென் கிளவி யாகிடனுடைத்தே.’ என்றதன்பின் இதனை வைத்தார். (55) 452. கடிசொ லில்லைக் காலத்துப் படினே. இது காலந்தோறும் புதியவாகத் தோன்றிய சொற்களுங் கொள்க என்கின்றது. (இ-ள்.) கடிசொல் இல்லை - ‘இவை தொன்றுதொட்டு வந்தன வல்ல,’ என்று கடியப்படும் சொற்களில்லை, காலத்துப் படினே - அவ்வக்காலத்துத் தோன்றி நன்மக்கள் வழக்கினுள்ளும் செய்யுளுள்ளும் வழங்கப்பட்டு வருமாயின், எ-று. (உ-ம்.) சட்டி, சள்ளை, சமை எனவும், ‘சான்றோர் சமழ்த்தனர் நிற்பவே.’ ‘தையலாய்! சமழாதுரை என்றதே.’ எனவும் சகரம் மொழிக்கு முதலாய் வந்தவாறு காண்க. இவை, ‘சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே, அஐ ஒள எனும் மூன்றலங் கடையே.’ என ஆசிரியர் விலக்கலின், அக்காலம் மொழிக்கு முதலாகாது விலக்கிய சகரம், பிற்காலத்து வழங்கியதாயிற்று, ‘ஞெண்டு’ என்பது ‘ஞண்டு’ ஆய்ப் பின்னர் ‘நண்டு’ என மரீஇயிற்று. இச்சூத்திரம், ‘எதிர்பொருளுணர்த்தல்’ என்னும் உத்தியாம். இவ்வாறு பின்னர் வழங்குவன எல்லாவற்றிற்கும் இதுவே விதி. இனி, ஒன்றென முடித்தலாற், புதியன தோன்றினாற் போலப் பழையன கெடுவனவும் உள. அவை, ‘அழன், புழன்’ முதலியனவும், எழுத்திற்புணர்ந்த சொற்கள் இக்காலத்து வழங்காதனவுமாம். (56) 453. குறைச்சொற் கிளவி குறைக்கும்வழி யறிதல். இது, செய்யுள் விகாரங் கூறுகின்றது. (இ-ள்.) குறைச்சொற்கிளவி - குறைக்கப்படுஞ் சொல்லாகிய சொற்கள், குறைக்கும்வழி அறிதல் - குறைக்குமிடம் அறிந்து குறைக்க, எ-று. குறைக்கும் வழி யறிதலென்றது, ஒரு சொற்குத் தலை, இடை, கடையென இடம் மூன்றே; அவற்றுள் இன்னுழிக் குறைக்கப்படும் இச்சொல்லென்று அறிந்து குறைக்க என்றவாறாம். (உ-ம்.) மரையிதழ் புரையுமஞ்செஞ் சீறடி’ எனவும், ‘வேதின வேவரிநினோதிமுது போத்து’ எனவும், ‘நீலுண் டுகிலிகை கடுப்பப் பலவுடன்’ எனவும் மூன்று இடத்துங் குறைத்தவாறு காண்க. ஈது, ஒரு சொல்லின்கட் சிறிது நிற்பச் சிறிது கெடுத்த லாதலின், முழுவதுங் கெடுத்தலாகிய ‘தொகுக்கும்வழித் தொகுத்த’லின் வேறாதல் அறிக. குறைச்சொற் கிளவியெனவே, இவ்விதி செய்யுட்கண் ணென்பது பெறுதும். இது, பொருளிடையிடுத லென்னும் உத்தியாம். (57) 454. குறைத்தன வாயினு நிறைப்பெய ரியல. இது, மேலதற்கோர் புறனடை. (இ-ள்.) குறைத்தன ஆயினும் - செய்யுளகத்துச் சொற்கள் குறைக்கப்பட்டன ஆயினும், நிறைப்பெயர் இயல - அவை பொருளுணர்த்தும் வழி நிறைந்து நின்ற பெயரின் இயல்பை யுடையவாம், எ-று. என்றது, முற்கூறிய உதாரணங்கள் தாமரை, ஓந்தி, நீலமென நிறைந்த பெயரின் பொருள்களைத் தந்தே நிற்கும் என்றவாறாம். ‘கண் டிரள் முத்தங் கொண்டு வந்து’ என்புழி, வந்தன் றென்னும் வினையுஞ், ‘சென்றா ரென்பிலர் தோழி!’ என்புழி, ‘என்பாரில ரென்னும் வினையுஞ் சிறுபான்மை குறைத்தல் ‘தன்னினம் முடித்த’லாற் கொள்க. (58) 455. இடைச்சொ லெல்லாம் வேற்றுமைச் சொல்லே. இது, விசேடிக்குஞ் சொல் இவ்வாறு நிற்குமென்கின்றது. (இ-ள்.) வேற்றுமைச்சொல் எல்லாம் - முடிக்குஞ் சொல்லை விசேடித்து நிற்குஞ் சொற்களெல்லாம், இடைச்சொல் - முடிக்கப்படுஞ் சொற்கும் முடிக்குஞ் சொற்கும் நடுவே வருஞ் சொல்லாய் நிற்கும், எ- று. வேற்றுமைச் சொல், வேறுபாட்டினைச் செய்யுஞ் சொல் என விரியும். எழுவாயை முடிக்கும் பயனிலைக்கும், முற்றை முடிக்கும் பெயரிற்கும், வினையெச்சத்தை முடிக்கும்வினைக்கும் பெயரெச்சங்களை முடிக்கும் பெயர்கட்கும் இடையே வருதலின், இடைச்சொல் என்றார். (உ-ம்.) ‘கண்ணி கார்நறுங் கொன்றை யூர்தி வால்வெள் ளேறே.’ என்புழி, கொன்றையையும் ஏற்றையும் இடை வந்த சொற்கள் விசேடித்து வந்தன. ‘ஈர்ந்தை யோனே பாண்பசிப் பகைஞன்,’ என்புழி, ஈர்ந்தையோன் என்னும் முற்றிற்கு முடிபாகிய பகைஞனென்னும் பெயரை இடையில் நின்ற சொல் விசேடித்து நின்றது. ‘இழிபிறப்பினோ னீயப்பெற்று, நிலங்கலனாக விலங்குபலி மிசையும்’ என்புழி, பெற்று என்னும் செய்தெனெச்சத்திற்கு முடிபாகிய மிசையும் என்னும் வினையை இடை நின்ற சொற்கள் விசேடித்து நின்றன. ஏந்தெழின் மழைக்கண் இளையோள் மடுப்பத் - தேம்பாய் தேறல் நீசிறி துணினே’ என்புழி, மடுப்ப என்னும் செயவெனெச்சத்திற்கு முடிபாகிய உணின் என்னும் வினையை இடைநின்ற சொற்கள் விசேடித்து நின்றன. வெற்ப ராடும் வெற்புச்சேர் பிருக்கை, பயம்பிற் கொள்ளாப் பைங்கண் யானை’ என்புழி, செய்யுமென்னும் பெயரெச்சத்திற்கும் அதன் மறைக்கும் முடிபாகிய இருக்கையையும் யானையையும் இடை வந்த சொற்கள் விசேடித்து நின்றன. ‘குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி’ ‘நின்னொடு தூக்கிய வென்வேற் செழியன்!’ என்புழி, செய்த வென்னும் பெயரெச்சங்கட்கு முடிபாகிய புரவியையுஞ் செழியனையும் இடைவருஞ் சொற்கள் விசேடித்து நின்றன. சான்றோர் செய்யுட்கண் இங்ஙனம் அச்சொற்களை விசேடித்து வருதல் பெரும்பான்மையென்று உணர்க. பண்பும் உடைமையும் முதலிய இடை வந்தால், அவை விசேடித்து நிற்குமாறும் உணர்க. இனி, இடைச்சொற்கள் எல்லாந் தாம் அடைந்த பெயர் வினைகளின் பொருள்களை வேறுபடுத்தி நிற்றலின், வேற்றுமைச் சொல் என்று சொல்லப்படும், என்று பொருள் கூறினாரால் உரையாசிரியரெனின், அவை வேறுபாடு செய்தல் அவ்வோத்திற் கூறிய சூத்திரங்களின் பொருளால் ஆண்டுப் பெறப்படுதலின், ஈண்டுக் கூறல் கூறியது கூறலாமாகலின், அது பொருந்தா தென்க. கூரியதோர் வாண்மன் என்புழி, திட்ப மின்றென்பது வாளை வேறுபடுத்தினவாறு அச்சூத்திரத்தாற் பெற்றாம். பிறவற்றையும் இவ்வாறே கொள்க. இனி, சேனாவரையர், இடைச்சொல் லெல்லாம் விசேடித்து நிற்குமென்றாராலெனின், ‘கொன்னூர் துஞ்சினும்’ ‘கொன்னே கழிந்தன்றிளமையும்’ என்றாற்போல்வன சில இடைச்சொற்கள் விசேடித்தலன்றி, எல்லா இடைச்சொற்களும் விசேடித்து நில்லாமை ஆண்டு அவர் காட்டிய உதாரணங்களை நோக்கி உணர்க. (59) 456. உரிச்சொன் மருங்கினு முரியவை யுரிய. இஃது, உரிச்சொற்கும் விசேடித்தல் உண்டென்கின்றது. (இ-ள்.) உரிச்சொல் மருங்கினும் - உரிச்சொல்லிடத்தும், உரியவை உரிய - விசேடிக்குஞ் சொல்லாதற்கு உரியன உரியவாம், எ-று. எல்லாம் உரியனவாகா எனவே, உரிச்சொற்கள் விசேடித்தும் விசேடிக்கப்பட்டும் நிற்பன உளவென்பது பெற்றாம். (உ-ம்.) உறுகால், தவப்பல, நனிசேய்த்து, ஏகல்லடுக்கம் என்பன ஒன்றை விசேடித்தல்லது வாரா. குருமணி, விளங்கு குரு, கேழ்கிளரகலம், செங்கேழ், செல்லனோய், அருஞ்செல்லல், இன்னற்குறிப்பு, பேரின்னல் இவை தாம் ஒன்றனை விசேடித்தும், பிற தம்மை விசேடிக்கப்பட்டும் நின்றன. குரு விளங்கிற்று; செல்லறீர்கம் எனத் தாமே நின்று வினை கொள்வன விசேடிக்கப்படுந் தன்மை யுடையன என்று உணர்க. பிறவும் இவ்வாறு வருவன உளவேற், கண்டுகொள்க. மருங்கினுமென்ற உம்மையை எச்ச வும்மையாக்கி, இடைச்சொற்களினும் விசேடித்து நிற்றற்கு உரியன சில உள; எல்லாம் உரியன வாகாவெனப் பொருளுரைத்து, ‘கொன்னூர் துஞ்சினும்’ ‘கொன்முனை யிரவூர் போல’ ‘கொன்னே கழிந்தன் றிளமையும்’ என்றாற்போல வருவன பிறவும் கொள்க. முன்னிற்சூத்திரத்தாற் கூறிய விசேடித்தல் உரிச்சொற்கும் இடைச்சொற்கும் ஏற்றலின், அவற்றையும் ஈண்டுக் கூறினார். விசேடித்தல் இடைச்சொற்குச் சிறுபான்மையாகலின். அதை உம்மையால் தழீஇயினார். (60) 457. வினையெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய. இது, வினையெச்சம் முதலியன வேறு பெயர் பெறும் என்கின்றது. (இ-ள்.) வினையெஞ்சு கிளவியும் - வினையெச்சமாகிய சொற்களும் உம்மையாற் பெயரெச்சமாகிய சொற்களும் முற்றுச்சொற்களும், வேறு பல் குறிய - முற்கூறிய பெயர்களொடு வேறு வேறாகப் பல பெயர்களையும் உடையவாம், எ-று. (உ-ம்.) பெயர்த்தனென் `முயங்கயானே’ (குறுந். 84) - இது வினையெச்சத் தன்மைத் தெரிநிலை முற்று. ‘வந்தனை சென்மோ வளைமெய் பரப்ப’ - இது வினையெச்ச முன்னிலைத் தெரிநிலை முற்று. ‘முகந்தனர் கொடுப்ப’ ‘மோயினளுயிர்த்த காலை’ இவை வினையெச்சப் படர்க்கைத் தெரிநிலை முற்று. ‘ஒலிசினை வேங்கை கொய்குவஞ் சென்றுழி’ - இது வினையெச்ச உளப்பாட்டுத் தன்மைத் தெரிநிலை முற்று. ‘வறுவியென் பெயர்கோ வாள்மேம் படுந’ - இது வினையெச்சத் தன்மை வினைக்குறிப்பு முற்று. ‘நன்னர் நறுநுதல்னயந்தனை நீவி’ ‘வெள்வேல் வலத்திர்’ - இவை வினையெச்ச முன்னிலை வினைக்குறிப்பு முற்று. ‘சுற்றமை வில்லர் சுரிவளர் பித்தையர் அற்றம்பார்த் தல்குங் கடுங்கண் மறவர்’ - இவை வினையெச்சப் படர்க்கை வினைக்குறிப்பு முற்று. இன்னும் வேறு வேறு பெயர் பெற்று வருவனவுங் கொள்க. ‘எல்வளை நெகிழ்த்தோர்க் கல்ல லுறீஇயர்’ ‘உள்ளேன் றோழி படீஇய ரென் கண்ணே’ ‘கேட்டீவா யாயின்’ என்பன வினையெச்ச வினைத் திரிசொல். இங்ஙனம் வினையெச்சந் திரிந்து நிற்கும் எனவே, ஈறு திரிந்து நிற்குமென வினையியலுட் காட்டியவற்றிற்கும் இதுவே விதியாயிற்று. இனி, பெயரெச்சம் வேறுபெயர் பெறுமாறு, ‘அவர் தம்முளான், றரும தத்த னென்பான்’ எனவும், ‘கச்சினன் கழலினன் றேந்தார் மார்பினன், வகையமைப் பொலிந்த வனப்பமை தெரியற் சுரியலம் பொருநனைக் கா ரோ’ எனவும் ‘குவளை யேயள வுள்ள கொழுங்கண்ணாள், வளையே’ எனவும், புரிமாலையர் பாடினியரும் எனவும் வந்தன உயர்திணை முப்பாற்கண்ணும் வந்த பெயரெச்சப் படர்க்கை வினைக்குறிப்பு முற்று. ‘பெருவரை மிசையது நெடுவெள் ளருவி’ ‘தெரிநடைய மாகளிறு - தன்தாள் பாடுநர்க்கு நன்கருளியும்’ இவை அஃறிணை இரு பாற்கண்ணும் வந்த பெயரெச்சப் படர்க்கை வினைக்குறிப்பு முற்று. ‘பெருவேட்கையேனற்பிரிந்து’ இது பெயரெச்சத் தன்மை ஒருமை வினைக்குறிப்பு முற்று. ‘கண்புரை காதலேமெம்முள்ளாள்.’ இது பெயரெச்சத் தன்மை உளப்பாட்டுப் பன்மை வினைக்குறிப்பு முற்று. ‘உலங்கொ டோளினை யொருநின்னால்’ இது பெயரெச்ச முன்னிலை ஒருமை வினைக்குறிப்பு முற்று. ‘வினைவேட்கையிர் வீராவம்மின்’ இது பெயரெச்ச முன்னிலைப் பன்மை வினைக்குறிப்பு முற்று. இன்னும் வேறு வேறு பெயராய் வருவனவுங் கொள்க. பின்பு நூல் செய்தோர் வினையெச்ச முற்றென்று பெயர் கூறாமல், முற்று வினையெச்சமென்று பெயர் கூறினாரேனும், பெயரெச்ச வினைக் குறிப்பு முற்றென்று பெயரெச்சத்திற்குக் குறியிட்டு ஆள வேண்டுதலின், அதற்கும் அப்பெயரே கொள்ள வேண்டுமென்று உணர்க. இனி, ‘பாயுந்து, தூங்குந்து’ எனவும், ‘சினைஇய வேந்தன் எயிற் புறத்திறுத்த’ எனவும், ‘கடைஇய நின்மார்பு’ எனவும் வருவன பெயரெச்ச வினைத்திரிசொல். இனி, ‘கண்ணும் படுமோ வென்றிசின் யானே.’ இது தன்மை முற்றுவினைத் திரிசொல். ‘ஈங்குவந் தீத்தந்தாய்.’ இது முன்னிலை முற்று வினைத்திரிசொல். ‘புகழ்ந்திகு மல்லரோ?’ இது படர்க்கை முற்று வினைத் திரிசொல். இவ்வாறு மூவகைப் பெயர்களும் வேறு வேறு பெயர் பெற்று நிற்றல் கூற வேண்டுதலின், இதனை இவ்வோத்தினுட் கூறினார். இங்ஙனம் பெயர்கள் கூறவே, அவற்றிற்கு உரிய இலக்கணமுங் கூறினாராயிற்று. இனி, ஓரெச்சம் ஓரெச்சமாய்த் திரிந்து வருவனவும் வேறே பெயர் பெறுதலின், அவற்றிற்கும் இதுவே இலக்கணமாம். ‘இவற்றுள்ளும் விசேடித்து நிற்பனவும் உள’ என்பது உணர்த்துதற்கு ‘உரிச்சொன் மருங்கின்’ என்னுஞ் சூத்திரத்தின்பின் இதனை வைத்தார். ‘இதனை விரவு வினையாகிய வினையெச்சமும் பெயரெச்சமும், பாலும் இடமுங் காட்டி நிற்றலின், முற்று எச்சமாய்த் திரிந்ததென்னாமோ?’ வெனின், என்னாம்; ‘அளிநிலை பொறாஅது’ என்னும் அகப்பாட்டினுள், ‘ஒண்ணுதல், குறுக வந்து, முகமாறிக் கொள்ளாது, தனித்து, வடுக் கொளுத்தி, நக்கு, முகத்தினுரைத்து, ஒற்றி, மோந்து, உயிர்த்த காலை’ என வினையெச்ச அடுக்காகச் செய்யுள் செய்கின்றவர், தம் பேரறிவுடைமை தோன்ற, எழுவாய்க்கும் பயனிலைக்கும் இடையே கிடந்து பயனிலையை விசேடிக்கும் எச்சங்களுட் சிலவற்றைத் திரித்துப் பாலும் இடமுங் காட்டி நிற்பச் செய்யுள் செய்தாராகலின். இனிப் பெயரெச்ச வினைக்குறிப்பு முற்றிற்கும் ‘அவர் தம்மிடத்தே நின்ற தருமதத்தன்’, ‘புரிமாலை யணிந்த பாடினியர்’ எனப் பெயரெச்சம் விரிந்தவாறு காண்க. பெரும்பான்மை இங்ஙனஞ் செய்யுள் செய்தற்குக் காரணம் விரவுவினை பிரிவு வேறுபடூஉம் செய்தியவாய்ப் பிரிந்து நிற்குங்கால் பாலும் இடமுங் காட்டும் தன்மையுந் தம்முள்ளே உடைய வாயினமையின், அவ்வெச்சம் முற்றாய்த் திரிந்த தென்பது உணர்த்துதற்கன்றே இடையிடை வினையெச்ச வாய்பாடும் உடனோதி எல்லாவற்றிற்கும் ஒரு வினையே முடிபு கூறிற்றென்று உணர்க. அன்றியும், முற்று எச்சமாய்த் திரிந்து அடுக்கியுந் தனித்தும் வந்து வினைகோடல் ஆசிரியர்க்குக் கருத்தாயிற், சிறுபான்மையாய் வினை கொள்ளும் முற்றிற்குச் சூத்திரம் செய்தாற் போல, முற்றுச்சொல் அடுக்கியும் அடுக்காதும் வந்து பெயரொடு முடிதற்கு ‘அவைதாந், தத்தங்கிளவி’ என்று சூத்திரஞ் செய்தாற்போல, முற்றுச் சொல்லே எச்சமாகி அடுக்கியுந் தனித்தும் வந்து வினைகொள்ளுமென்றாற் போல ஒரு சூத்திரஞ் செய்திருக்க வேண்டும்; அங்ஙனம் பெரும்பான்மையும் வழங்குவதோர் இலக்கணத்திற்குச் சூத்திரஞ் செய்யாமையின், அவர்க்கு அது கருத்தன்மை உணர்க. அன்றியும், வினையெச்சம் முற்றாய்த் திரிந்து பின்னும் அதன் பொருளுணர்த்தி நிற்றல் ‘இன்றி என்னும் வினையெஞ் சிறுதி’ என்னுஞ் சூத்திரத்தானும் உணர்க. இவ்விலக்கணத்தினது நுண்மையை உணர்தலாற்றாப் பின்னுள்ளோர், ‘முற்றே எச்சம் ஆகலும் உரித்தே’ எனச் சூத்திரஞ் செய்தார். அவர் கருத்தைப்பற்றிச் சேனாவரையரும் முற்றெச்சமாமென்றார். அது பொருந்தாமை, இக்கூறிய வாற்றானும் சான்றோர் செய்யுட்கு முன்னுள்ளோர் கூறிய உரைகளானும் உணர்க. இனி, ஞாயிறு பட என்னுஞ் செயவெனெச்சத்து அகர ஈறு, பட்டு என உகர ஈறாய்த் திரிந்து நின்றது என்றாரால் உரையாசிரியரெனின், ‘ஞாயிறு பட வந்தான்’ என்பது, ‘ஞாயிறு படாநிற்க வந்தான்’ என நிகழ்காலம் உணர்த்துதல் வழக்காதலின், அது திரிந்து இறந்த காலம் உணர்த்துமென்றல் பொருந்தாமை உணர்க. (61) 458. உரையிடத் தியலு முடனிலை யறிதல். இது, தொடர்மொழிப் பொருள் வேறுபாடு கூறுகின்றது. (இ-ள்.) உரையிடத்து இயலும் - ஓரெச்ச வாய்பாடாகக் கூறும் இடத்ததுதானே மற்றோர் எச்ச வாய்பாட்டிற்கும் ஏற்று நடக்கும், உடனிலை அறிதல் - கூட்டத்தினை அறிந்து தொடர்மொழிக்கு ஏற்ப வெவ்வேறாகப் பொருள் உரைக்க, எ-று. (உ-ம்.) ‘பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கி னாண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியும்’ என்புழி, ‘பெண்மை சுட்ட வேண்டி ஆண்மை திரிந்த’ என வினையெச்ச வாய்பாடாயும், பெண்மை சுட்டிய பெயர்நிலைக் கிளவி’ எனப் பெயரெச்ச வாய்பாடாயும் நின்றவாறு காண்க. ‘ஆடிய கூத்தனும் வந்தா னவனோடு - கூடிய கூத்தியையுங் கொண்டு.’ என்றாற் போல்வனவுஞ், சான்றோர் செய்யுட்கண் இவ்வாறு வருவனவும் பிறவும் இதனான் முடித்துக்கொள்க. இன்னும் உடனிலை என்றதனானே, ‘ஓடி வந்தான், விரைந்து போயினான்’ என முடிக்கும் வினையோடு உடனிகழ்வனவும் கொள்க. இச்சூத்திரத்திற்கு, ‘வழக்கிடத்து உடனிற்கற்பால அல்லனவற்றது உடனிலை போற்றுக’ என்று பொருள் கூறி, ‘இந்நாழிக்கு இந்நாழி சிறிது பெரிது’ என்பது காட்டினாரால் உரையாசிரியரெனின், அது சிறப்பின்கண் வரும் நான்காம் வேற்றுமைப்பொருளாய் அடங்குதலானும், சிறிது என்பது பெருமையை விசேடித்து நிற்றலானும், அதுதான் முன்னர்ப் பெறப்பட்டமையானும், இவ்வெச்ச மயக்கம் கூறுதலே ஆசிரியர் கருத்தென்று உணர்க. (62) 459. முன்னத்தி னுணருங் கிளவியு முளவே யின்ன வென்னுஞ் சொன்முறை யான. இது, வினைக்குறிப்புச் சொல் பொருள் தரும் வேறுபாடு கூறுகின்றது. (இ-ள்.) இன்ன என்னுஞ் சொல் முறையான - ‘இத்தன்மைய’ என்று சொல்லப்படும் வினைக்குறிப்புச் சொற்கள் பொருள் தரும் முறைமை யிடத்து, முன்னத்தின் உணருங் கிளவியும் உள - அவற்றுட் சில நுண் ணுணர்வுடையோர்க்குக் குறிப்பினாற் தெரிநிலைப் பொருள் உணரப்படுஞ் சொற்களும் உள, அவற்றை உணர்க. எ-று. உம்மையாற், தெரிநிலைப்பொருள் உணரப்படாத சொற்களும் உள என்று உணர்க. தெரிநிலைப் பொருள் உணர்த்துவன, வினையெச்ச வினைக்குறிப்பு முற்றும் பெயரெச்ச வினைக்குறிப்பு முற்றுமாம். தெரிநிலைப் பொருள் உணர்த்தாதன, ஏனை வினைக்குறிப்பு முற்றாம். முருகாற்றுப்படையுட், ‘கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன் - குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன் - தகரன் மஞ்ஞையன் புகரில் சேவலங் - கொடியன் நெடியன் தொடியணி தோள - னரம்பார்த் தன்ன வின்குரற் றொகுதியொடு -குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயந் - மருங்கிற் கட்டிய நிலனேர்பு துகிலினன் - முழவுறழ் தடக்கையினியல வேந்தி - மென்றோட் பல்பிணை தழீஇத் தலைத்தந்து - குன்றுதொ றாடலும் நின்றதன் பண்பே.’ என்புழி வந்த வினையெச்ச வினைக்குறிப்பு முற்றுக்கள் ஆக்கம் பெற்றுப் பொரு னுணர்த்துங்கால், ‘கச்சைக்கட்டிக் கழலை யணிந்து, கண்ணியைச் சூடி, குழலை யுதி, கோட்டைக் குறைத்து, பல்லியங்களை யெழுப்பி, தகரைப் பின்னிட்டு, மயிலை யேறி, கொடியை யுயர்த்து, வளர்ந்து, தோளிலே தொடியை யணிந்து, துகிலை யுடுத்து, ஏந்தித் தழீஇ, தலைக்கை கொடுத்து ஆடலும் அவற்கு நிலை நின்ற பண்பெனச் செய்தெனெச்சப் பொருளை உணர்த்தி நின்றவாறு காண்க. முன்னர்க் காட்டிய பெயரெச்ச வினைக்குறிப்பு முற்றுக்கட்கும் தெரிநிலை வாசகமாக விரித்துப் பொருள் கூறுதற்கேற்பனவற்றை உணர்ந்து, அவற்றிற்கு ஏற்கத் தெரிநிலையாகப் பொருள் கூறிக்கொள்க. ‘நல்லன் அறிவுடையன் செவ்வியன் சான்றோர் மகன்’ எனக் குறிப்பு முற்று அடுக்கிப் பெயரொடு முடிவுழி, ‘நல்லனாயிருப்பன், அறிவுடைய னாயிருப்பன், செவ்வியனாயிருப்பன் சான்றோர் மகன்,’ என விரித்துப் பொருள் கூறியக்காலும் அத்தெரிநிலைப் பொருள் உணர்த்தாதவாறு காண்க. இச்சூத்திரத்திற்கு உரையாசிரியர், ‘சொல்லுவான் குறிப்பான் பொருளுணரப்படும் சொற்களும் உள, ‘இப்பொருள் இத்தன்மையது,’ என்று கூறுதற்கெனப் பொருள் கூறி, ‘செஞ்செவி வெள்ளொக்கலர்’ என்பது காட்டினாரா லெனின், அது குறிப்பின் தோன்றலினது வேறுபாடா மென மறுக்க. (63) 460. ஒருபொரு ளிருசொற் பிரிவில வரையார். இஃது, ஒரு சொல் இரு பொருள் உணர்த்துவதோர் மரபு வழு அமைக்கின்றது. இதனை, ஒரு சொல் இரு பொருள் பிரிவில வரையாரென மாறுக. (இ-ள்.) இரு பொருள் ஒரு சொல் பிரிவில வரையார் - ஒரு சொல் ஒருகால் கூறுதற்கண்ணே இரண்டு பொருளைப் புலப்படுத்தி இரண்டற் கும் பிரிவிலவாய் நிற்றலைச் சிறப்புடைய வென்று கொள்வர் ஆசிரியர், எ-று. பிரிவில என்றது, இரண்டற்கும் ஒப்ப நிற்றலை. (உ-ம்.) ‘குழல்வளர் முல்லையிற் கோவலர் தம்மொடு - மழலைத் தும்பி வாய்வைத் தூத’ என்புழி, ‘குழல் வளர் முல்லை’ யென்று கூறியபொழுதே ஆயர் ஊதும் குழலிலே எழுந்த ‘முல்லை’ யென்னும் பண்ணையும், மயிரிலே கிடந்த முல்லை யென்னும் பூவையும் ஒருகாலத்தே புலப்படுத்தி இரண்டற்கும் பிரிவிலவாய் நின்றவாறு காண்க. இஃது, ஒரு சொல் ஒருகால் கூறுதற்கண் இரண்டு பொருளை உணர்த்துதல் வழுவேனும், அமைக’வென அமைத்தார். இதனை உவமவியலுள் ‘ஒரீஇக் கூறலும்’ என்னுஞ் சூத்திரத்துச் செய்யுட்கு இலக்கணமாகக் கூறுமாறும் உணர்க. இங்ஙனம் சான்றோர் செய்யுட்களுட் பல இடத்தும் வருமாறு உணர்க. வரையாரென்றதனான், இவை விகாரப்பட்டு நிற்பனவுங் கொள்க. ‘பாடுதும் பாவை பொற்பே.’ என்றவழி, ஒருகாற் ‘பொலிவே’ என்று ஏகார ஈறாயும், ஒருகால் ‘பொன்னாற் செய்த பேய்’ என்று யகர ஈறாயும் விகாரமாயும் நின்றவாறு காண்க. இவ்வாறு வருவன பிறவும் உணர்க. இன்னும் ‘உய்த்துக்கொண்டுணர்தல்’ லென்னுந் தந்திர வுத்தியான் இச் சூத்திரத்திற்குச் செவ்வனே கிடந்தவாறும் பொருள் கொள்க. ‘ஒரு பொருளையே உணர்த்தி நிற்கும் இரண்டு சொற்கள் தம்மிற் பிரிதலின்றி நிற்பனவற்றை நீக்கார் கொள்வர் ஆசிரியர்’ (எ-று.) (உ-ம்.) ‘நிவந்தோங்கு பெருமலை’ ‘துறுகன் மீமிசை’ என்றாற்போல ஒரு சொல் இடை வாராமல் அடுக்கி நிற்பனவாம். (64) 461. ஒருமை சுட்டிய பெயர்நிலைக் கிளவி பன்மைக் காகு மிடனுமா ருண்டே. இது, பால் வழு அமைக்கின்றது. (இ-ள்.) ஒருமை சுட்டிய பெயர்நிலைக் கிளவி - ஒருமையைக் கருதிய பெயராகிய நிலைமையை உடைய சொல், பன்மைக்கு ஆகும் இடனுமாருண்டே - பன்மைக்குப் பொருந்தி நிற்கும் இடமும் உண்டு, எ-று. எனவே, பன்மை சுட்டிய பெயர்ச்சொல் ஒருமைக்குப் பொருந்தி நிற்கும் இடமும் உண்டு என்னும் பொருள் அருத்தாபத்தியாற் தந்தது. (உ-ம்.) ‘அஃதை தந்தை - அண்ணல் யானை அடுபோர்ச் சோழர்’ என்புழி, சோழர் எல்லாரும் அஃதைக்குத் தந்தையாம் முறையராய் நிற் றலின், ‘தந்தை’ என்னும் ஒருமை ‘சோழர்’ என்னும் பன்மையோடு தனித்தனி சென்று கூடுதலின் வழுவின்றேனும், ஈற்றுப் பன்மை பற்றி வழுவமைத்தார். ‘புலைய னெறிந்த பூசற்றண்ணுமை - ஏவல் இளையர் தாய்வயிறு கரிப்ப’ என்புழி, இளையர் என்னும் பன்மை தாயென்னும் ஒருமையோடு பொருந்தும்வழி ஒருவற்கு ஒருத்தி தாயாம் தன்மையான் வழுவின்றேனும், ஈற்றுப் பன்மை பற்றி வழுவமைத்தார். இவை ‘பொருளிடையிடுதலென்னும் உத்தியாம். இன்னும் இதனானே, ‘தினைத்தா ளன்ன சிறுபசுங் கால - ஒழுகுநீராரல் பார்க்கும் - குருகும் உண்டுதாம் மணந்த ஞான்றே.’ எனப் பன்மை சுட்டிய பெயர்ச்சொல் ஒருமையோடு இயைபின்றி இயைதலின், வழுவாய் அமைவதூஉங் கொள்க. குருகென்பது இயற்பெயராதலின், அதன்கட் பன்மையோடு காலவென்பது இயைந்து, ‘காலனவாகிய குருகுகள்’ என நிற்பின், அஃது உண்டு என்னும் ஒருமைக்கு ஏலாமையின் குருகு என்பது ஒருமையாயே நின்றதாதலின், வழுவேயாம்; ‘கள்வறா னொருவனுமே; வேறு சிலராண்டில்லை’ என்று கூறுகின்றாள், ‘இரை தேரும் மனக்குறிப்புடைமையிற் கேளாது; சிறிது கேட்டதாயினும், கொலை சூழ் குருகாதலிற் கூறுவதுஞ் செய்யாது; இத் தன்மைத் தாயதோர் குருகும் உண்டென்று கூறுதலின், உண்டென்று ஒருமை வாசகத்தாற் கூறினார். இனி, ‘இவ்விரண்டனுட் கூர்ங்கோட்ட காட்டுவல்’ என்புழி, இரண்டனுமென ஒன்றை வகுத்தமையாற் கூர்ங்கோட்டது என ஒருமையாகற் பாலது கோட்டவெனப் பன்மையாய் நிற்றலும் இதனாற்கொள்க. ‘என்னீர் அறியாதீர் போல இவை கூறின்’ என ஒருவனைப் பன்மையான் கூறிப்பின்னர், ‘நின்னீர அல்ல நெடுந்தகாய்!’ என அவனை ஒருமையாற்கூறுவன போல்வனவும், ‘இறப்பத் துணிந்தனிர் கேண்மின் மற்றைஇய!’ என்றாற் போல்வனவும் இதனாற் கொள்க. இன்னும் இதனானே, ‘நம்பிமார், நங்கைமார், அன்னைமார்’ என்றாற் போல்வன ஒருமைப்பெயர் அடுத்து நின்று மார் ஈறு பன்மை உணர்த்து தலுங் கொள்க. ‘யான் எம்மூர் புகுவென்; நீ நும்மூர் புகுவை,’ என்பன ஒருமை முடிபொடு முடிந்து நிற்ப, ‘எம்மூர், நும்மூர்’ என்பன வேறோர் முடிபாய் நின்றனவென்று கொள்க. இனி, ‘மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள்’ என்பது, மராத்துக் கடவுளென நிற்கும். இவை போல்வன அன்றி, முன்னர்க் காட்டிய உதாரணங்கள் போல மயங்கி வருவன உளவேல், அவற்றையும் இச் சூத்திரத்தான் அமைத்துக்கொள்க. (65) 462. முன்னிலை சுட்டிய ஒருமைக் கிளவி பன்மையொடு முடியினும் வரைநிலை யின்றே யாற்றுப்படை மருங்கிற் போற்றல் வேண்டும். இஃது, ஆற்றுப்படைக்கண் முன்னிலை ஒருமை பன்மையொடு முடிக வென்கின்றது. (இ-ள்.) முன்னிலை சுட்டிய ஒருமைக் கிளவி - முன்னிலை இடத்தைக் கருதின ஒருமைப் பெயர், பன்மையொடு முடியினும் வரை நிலை இன்று - பன்மைச் சொல்லோடு முடியினும் நீக்கும் நிலையின்று, ஆற்றுப்படை மருங்கிற் போற்றல் வேண்டும் - அம்முடிபு ஆற்றுப்படைச் செய்யுளிடத்துச் சுற்றத்தார் தலைவனை ஆற்றுப்படுத்தற்கண்ணதாகப் பாதுகாத்து உணர்த்தல் வேண்டும், எ-று. (உ-ம்.) கூத்தராற்றுப்படையுட் ‘கலம்பெறு கண்ணுள ரொக்கற் றலைவ!’ என நின்ற ஒருமைச்சொல் முடிவுழி, ‘இரும்பே ரொக்க லொடு பதமிகப் பெறுகுவிர்’ என்னும் பன்மையோடு முடிந்தவாறு காண்க. இவ்விரண்டு சூத்திரத்தானுங் கூறிய மயக்கஞ் சிறுவரவிற்றாய்இலக்கண வழக்கு உண்மையிற் ‘பால் மயக்குற்ற’ என்னுஞ் சூத்திரத்தாற் கூறிய ஒருமை பன்மை வழுவமைதியாகிய இலக்கண வழக்கோடு உடன் வையாது ஈண்டு வைத்தார். (66) 463. செய்யுண் மருங்கினும் வழக்கியன் மருங்கினு மெய்பெறக் கிளந்த கிளவி யெல்லாம் பல்வேறு செய்தியி னூனெறி பிழையாது சொல்வரைந் தறியப் பிரித்தனர் காட்டல். இஃது, ‘யான் விரித்துக் கூறாதனவற்றை விரித்துக் கூறிக்கொள்க,’ என அதிகாரப் புறனடை கூறுகின்றது. (இ-ள்.) செய்யுள் மருங்கினும் வழக்கியல் மருங்கினும் - இவ்வதிகாரத் தின்கண் செய்யுளிடத்தும் வழக்கிடத்தும், மெய் பெறக் கிளந்த கிளவி எல்லாம் - சிலவற்றிற்கு ஞாபகமாகப் பொருள் பெறச் சொல்லப்பட்ட சொற்களெல்லாவற்றையும், பல்வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது - செம்பொருள வாய்ப் பலவாக வேறுபடுத்திய விரிவுகளையுடைய அகத்தி யத்திற் கூறிய நெறியிற் தப்பாமல், சொல் வரைந்து அறியப் பிரித்தனர் காட்டல் - சொல்லை வேறுபடுத்து மாணாக்கன் உணருமாறு நுண்ணுணர்வுடையோர் உரையானுங் காண்டிகையானும் பிரித்துக் காட்டுக, எ-று. ‘அங்ஙனம் உணரப் பிரித்துக் காட்டுமாறு என்னை?’ யெனின், இரண்டாவது, ‘வினையே வினைக்குறிப் பவ்விரு முதலிற் றோன்றும்,’ என்றதற்கு, மூவகையவாகிய வினைச்சொல்லினும் வினைக்குறிப்புச் சொல்லினும் பிறக்கும் காரணங்கள் எட்டனுள் செயப்படுபொருட்கண்ணே இரண்டாவது தோன்றுமென்றும், அச் செயப்படுபொருள்கள் தாம் மூவகைய வென்றும், மூன்றாவதற்கு ஓதிய வினைமுதல் இயற்றும் வினை முதலும் ஏவும் வினைமுதலுமென இரு வகையவென்றும், கருவி முதற் காரணமுந் துணைக்காரணமுமென இரு வகையவென்றும், நான்காவதற்கு ஓதிய கொடைப்பொருள் இரு வகையவென்றும், ஐந்தாவதற்குப் பொருள் நால்வகையவென்றும், அதன்கட் பொருள் உறழ் பொருவும் உவமப் பொருவுமா மென்றும், ஏது காரக வெதுவும் ஞாபகவேதுவுமாம் என்றும், ஆறாவதற்குத் தற்கிழமை ஐவகைய பிறிதின்கிழமை மூவகையவென்றும், பிறவும் வேற்றுமை யோத்தினுட் பிரித்துக் காட்டினாம். இனி, வினையெனப்படுவதெனப் பொதுப்படக் கூறிய முதனிலைகளை இன்னவாறு வருமெனப் பிரித்துக் காட்டியும், அவை எடுத்த லோசையான் முன்னிலை யேவலொருமை முற்றாய் நிற்குமென்றும், கடதறக்கள் முதனிலையை அடுத்து வருங்கால் இறப்பும் ஈற்றினை அடுத்து வருங்கால் எதிர்வும் உணர்த்து மென்றும், நில், கின்று என்பன நிகழ்காலம் உணர்த்து மென்றும், பகர வகரம் எதிர்காலம் உணர்த்துமென்றும், ஏனை யெழுத்துக் கள் இன் பெற்றும் பெறாதும் உகரம் பெற்றும் பெறாதும் வருமென்றும், வினைக் குறிப்புக்கள் பண்பாங் காலத்தும் வினைக்குறிப்பாங் காலத்தும் வேறு வேறு பொரு ளுணர்த்துமென்றும், விரவுவினைகள் பிரிவு வேறுபடூஉம் செய்தியவாங் காலத்து முடிக்குஞ் சொல்லானுமன்றித் தம் முள்ளே பாலும் இடமுங் குறித்துக்கொள்ளுந் தன்மையை யுடையவென்றும், வினைஎச்சங்கள் காலங் காட்டும் எழுத்துக்கள் பெறுமென்றும், அவை திரியுமென்றும், அவை காரண காரியம் பெறுமென்றும், பெயரெச்சங்களுட் காரணப் பொருட்டாய் வருவன கருவிக்கண் அடங்கு மென்றும், பிறவும் வினையியலுட் பிரித்துக் காட்டினாம். இனி, அறுவகைத் தொகையுந் தொகுங்கால் இன்ன சொற்கண்ணே இன்ன தொகை தொகுமென்றும், முற்கூறிய வினைச்சொற்கடாமுஞ் சில முக்காலமுஞ் சில ஒரோவோர் காலமும் உணர்த்துமென்றும், அவை பெயர்கள் பெறுங்கால் இன்னவாறே பெயர்கள் பெறுமென்றும், பிறவும் எச்சவியலுட் பிரித்துக் காட்டினாம். இனி, ‘சொல்வரைந் தறியப் பிரித்தனர் காட்டல்,’ என்பதனாற், திரையனூரென்பது, திரையனாற் செய்யப்பட்ட ஊரெனவும், திரையனது ஊரெனவும் மூன்றாவதும் ஆறாவதும் விரிந்தது. ‘கடிப்பகை’ என்பது, நான்காவதும், ஆறாவதுங், ‘கடியாகிய பகை’ யெனப் பண்பும் விரிந்தது. ஏழேகால் என்பது, ஏழுங் காலுமென உம்மையும், ஏழேகால் நிலமான ஊரென அன்மொழியும் விரிந்தது. சொல்லிலக்கணமென்பது, ஆறாவதும், நான்காவதும், ஏழாவதும் விரிந்தது; சொல்லிலக்கணங் கூறிய நூலென ஆகுபெயருமாய் நின்றது. பொன்மணி யென்பது, மூன்றாவதும், ஐந்தாவதும் ஏழாவதும், பொன்னும் மணியுமென உம்மையும் விரிந்தது. கருப்பு வேலி யென்பது, நான்காவதும், ஆறாவதும், ஏழாவதும், மூன்றாவதும், ஐந்தாவதும் விரிந்தது. இயலிசை யென்பது, ஆறாவதும், ஏழாவதும், இயலுமிசையு மென உம்மையும், இயல்கின்ற இசை என வினையும், இயலாகிய இசை யெனப் பண்பும் விரிந்தது. உரைவிரி என்பது, ஆறாவதும், ஏழாவதும், நான்காவதும், இரண்டாவதும், உரைக்கும் விரியென வினையும், உரை விரியையுடையதென அன்மொழியும் விரிந்தது. கருத்துப்பொருள் என்பது, இரண்டாவதும், மூன்றாவதும், ஐந்தாவதும், நான்காவதும், ஆறாவதும், ஏழாவதும், கருத்தும் பொருளுமென உம்மையும் விரிந்தது. சொற்பொருளென்பது, மூன்றாவதும், நான்காவதும், ஐந்தாவதும், ஆறாவதும், சொல்லும் பொருளுமென உம்மையும், சொல்லாகிய பொரு ளெனப் பண்பும் விரிந்தது. இவ்வாறே பிற சொற்களும் தொக்கு விரியுமாறு அறிந்து பிரித்துக் காட்டுக. ‘இவன் யாரென்குவை யாயினிவனே’ என்னும் புறப்பாட்டினுள் சேரனை முன்னிலையாக்கி முடமோசியார் கூறுகின்ற காலத்து, இவனென்பது முன்னிலைப் படர்க்கையாய் நின்றது. இவ்வாறு வருவனவும் பிறவும் பிரித்துக் காட்டுக. கொல், செல், வெல் என்பன, லகரம் னகரமாய்த் திரிந்து தமக்கேற்ற றகர ஒற்றுப் பெற்று, பாலும் இடமும் காட்டும் ஆன் ஏறி, கொன்றான், சென்றான், வென்றான் என நின்றன. கோறு, கோறும்; சேறு, சேறும்; வேறு வேறும் என்பன, முதனிலை நீண்டு, லகர ஒற்றுக் கெட்டு, தமக்கு உரிய ஒருமைத் தன்மை யீறும் பன்மைத்தன்மை யீறும் பெற்று நின்றன. வா என்பது, வந்தான், வருகின்றான் என முதனிலை குறுகி, கால எழுத்திற்கு ஏற்ற இடைநிலை எழுத்துப் பெற்று வந்தது. கொள் என்பது, ‘கொண் டான், கோடு, கோடும் என ளகாரம் ணகாரமாயுங், கெட்டும், முதனிலை நீண்டும் வந்தது. கைவாரம் கொள்வானைக் கைவாரி யெனவுந், திருவில்லாதானைத் திருவிலி யெனவும், அறிவு இல்லாதானை அறிவிலியெனவும், நூலோதினானை நூலோதி யெனவும், இவ்வாறே ஈறு திரிந்து வருவனவும், பிறவும் பிரித்துக் காட்டுக. வில்லி, வாளி - வினைக்குறிப்பு முற்று ஈறு திரிந்த பெயர். வலைச்சி, பனத்தி, வெள்ளாட்டி முதலியன, சகரமுந் தகரமும் டகரமுமாகிய இடைநிலை பெற்றன. செட்டிச்சி, கணக்கச்சி முதலியன, இச்சென்னும் இடைநிலை பெற்றன. ‘கணவாட்டி - இவ்வினைப்பெயர் டகரம் பெற்றது. இன்னும் இவ்வாறே வருவன பிறவும் பிரித்துக் காட்டுக. கிள்ளி குடி - கிள்ளியுடைய குடிமக்கள் இருக்கும் ஊரெனவுங், கீழ் வயிற்றுக் கழலை - கீழ் வயிற்றின்கண் எழுந்த கழலை போல்வானெனவும் அன்மொழித் தொகையாம். வடுகக் கண்ணன், வல்லொற்று அடுத்தால், வடுக நாட்டிற் பிறந்த கண்ணன் என்றாம்; வடுகங்கண்ணனென மெல்லொற்று அடுத்தால், வடுகனுக்கு மகனாகிய கண்ணன் என்றாம். ‘நனிநீ டுழந்தன்று மன்னே இனியே’ என்பது, பின் வருங்காலம் உணர்த்திற்று. ‘இனி எம் எல்லை’ எனப் பின் னென்னும் இடம் உணர்த்திற்று. ஏனோன் என்பது, ஒழிபொருள் உணர்த்திற்று. ஏதிலனென்பது, அயலானென்னும் பொருள் உணர்த்திற்று. உண்ணாநின்றான் னென்புழி, ஆ என்பது இடை நிலை யெழுத் தென்று உணர்க. வா, தா, என்றாற் போல்வன, மறை உணர்த்துங்கால், வாரான், தாரான்; வாராது போயினான், தாராது போயினான்; வாராத சாத்தன், தாராத சாத்தன் என முதனிலை குறுகாது நிற்கும் என்று உணர்க. நன், தீ, சிறு, பெரு, வன், மென், கடு, முது, இள, புது, பழ, இன், உடை, அன் என்பன முதலிய முதனிலைகள், மகர ஐகாரம் பெற்று, நன்மை, தீமை, சிறுமை, பெருமை என வினைக்குறிப்புப் பெயராய் நிற்குமாறும், இவைதாம் நன்று, தீது, சிறிது, பெரிது, வலிது, மெலிது, கடிது, முதிது, இளைது, புதிது, பழைது, இன்று, உடைத்து, அன்று என அஃறிணை வினைக்குறிப்பு முற் றாய் நிற்குமாறும், ‘நல்லன், தீயன், சிறியன், பெரியன், வலியன், மெலியன், கடியன், முதியன், இளையன், புதியன், பழையன், இல்லன், உடையன், அல்லன்’ என அன் பெற்று உயர்திணை வினைக்குறிப்பாய் நிற்குமாறும், இவைதாம் ஆனென்னும் ஈறு பெற்று முற்றாயும், படுத்த லோசையான் வினைக் குறிப்புப் பெயராய் உருபு ஏற்றும், பயனிலை கொண்டும் நிற்குமாறும் பிரித்துக் கொள்க. இவ்வாறே ஏனைப் பால்களோடும் ஒட்டுக. இவை பண்பாய் நிற்குமாறும் உரிய என்று உணர்க. இவைதாமே நன்றாய் வளர்ந்தான், வளர்ந்தது; தீதாய்ப் போயினான், போயிற்று என வினையெச்சக் குறிப்பாமாறும், நல்ல சாத்தன், தீய சாத்தன் எனப் பெயரெச்சக் குறிப்பாமாறும் காண்க. சிற, இழி, தீர், என்னும் முதல் நிலைகள் அல்லீறுபெற்றும் அன்னீறும் ஆன்னீறும் பெற்றும் முற்கூறியவாறே நிற்குமாறும், சிறந்து இழிந்து, தீர்ந்தெனவுஞ், சிறந்த, இழிந்த, தீர்ந்தெனவும் வினையெச்ச வினைக் குறிப்பும் பெயரெச்ச வினைக்குறிப்பும் ஆமாறும் உணர்க. இவ்வாறு வருவன பிறவும் பிரித்துக் கொள்க. ‘சுடரிழாய்! பன்மாணும்’ என்புழி, மாண் என்னும் இடைச்சொல் பலபடியுமென்னும் பொருட்டாய் நின்றவாறு காண்க. ‘பிரிதல் வல்லியார் ஈதும் துறந்தோர்’ என்புழி, வல்லாராயென வினையெச்சமாய் நின்றவாறு காண்க. ‘கால் பொர நுடங்கல கறங்கிசை அருவி’ என்புழி, நுடங்குதலை யுடைய அருவியென நிற்குமாறு உணர்க. இவை போல்வன ஓசை வேற்றுமையான் வேறுபடுவனவும் உணர்ந்துகொள்க. ‘நில்லாது பெயர்ந்த பல்லோ ருள்ளும்’ என்புழி, முன்னர் எல்லாரும் உளப்பாடாகக் கூறிய தோழி ஈண்டும் பல்லேமுள்ளும் என்னாது தன்னை நீக்கிக் கூறியது என்னை?’ எனின், தலைமகன் தன்னை நோக்கி அழிவு தகக் கூறி ஆற்றானாகி நின்ற நிலைமையைக் கண்டும் அருள் பிறவாது ஆயமும் தலைவியும் போயவாறும் அதற்குத் தான் அழிவு தக்கு நிற்றலின் அவரோடு போதல் ஆற்றாது பின்னர்ப் போயவாறும் தோன்றக் கூறுகின்றா ளாதலின், பல்லோருள்ளும் எனக் கூறினாள் என்று பொருள் கூறுக. ‘முரசுமுழங்கு தானை மூவ ருள்ளும், அரசெனப் படுவது நினதே பெரும!’ என்புழி, மூவிர் என்னாதது என்னை? எனின், புலவன் கூறுகின்ற இவனை ஒழிந்த இரு வகைக் குலத்தோரும் இவன் முன்னுள்ளோரும் படர்க்கையர் ஆதலின், அம் மூவகைக் குலத்து உள்ளோரையும் கூட்டி, முரசு முழங்கு தானை மூவர் அரசுள்ளும் அரசு என்று ஈண்டுச் சிறப்பித்துச் சொல்லப்படுவது அச்சோழன்வழித் தோன்றிய நின் அரசே, என்றான் எனப் பொருள் கூறுக. இங்ஙனஞ் சான்றோர் செய்யுட்கள் இவ்வாசிரியர் கூறிய இலக்கணங்களுள் அடங்காதன போன்று கிடப்பன பிறவும் உளவேனும், நுண்ணுணர்வு உடையோர் அவற்றின் பொருட் பயனை நோக்கி, ஒருவாற்றான் இக் கூறிய இலக்கணங்களுள் அடக்கிக் கொள்க. இச்சூத்திரத்தின் கருத்து, இவ்வதிகாரத்துட் சிலவற்றிற்கு விரித்துக் கூறாது, நுண்ணுணர்வு உடையார் உணருமாறு கூறிய இலக்கணங்களும் உள; அவற்றிற்கு முதனூலானும் விரித்துi ரயானுங் காண்டிகையானும் உணர்த்துக வென்று கூறுதலாம். இங்ஙனங் கூறினார், முடிந்தது காட்டலென்னுந் தந்திர வுத்திக்கு இனமாக வென்று உணர்க. இங்ஙனங் கூறாது. யான் கூறப்படும் இலக்கணங்களை முதனூல்களாற் கூறிக் கொள்க, வெனின், அது குன்றக் கூறலென்னுங் குற்றமாமென்று உணர்க. (67) எச்சவியல் முற்றும். சொல்லதிகாரம் முற்றும். ‘கிளவியோ ரறுபா னிரண்டுவேற் றுமையிற் கிளரிரு பஃதிரண் டேழைந் துளமயங் கியலாம் விளியின்முப் பானே ழுயர்பெயர் நாற்பதின் மூன்று தெளிவினை யியலைம் பானுட னொன்று செறியிடை யியலினாற் பானெட் டொளிருரி யியலொன் பதிற்றுப்பத் துடனெட் டொழிபறு பானின்மே லேழே.’ பின்னிணைப்புகள் 1. தொல்காப்பியர் தொல்பெரும் மொழிநூற் புலவர் மொழிநூல் ஆராய்ச்சி பதினெட்டாம் நூற்றாண்டில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் முகிழ்ந்து இருபதாம் நூற்றாண்டில் மலரத் தொடங்கியுள்ளது என்பர். ஒரு மொழியைப் பிற மொழிகளுடன் ஒப்பிட்டும் ஒரு மொழி, நூற்றாண்டுகள் தோறும் எவ்வாறு வளர்ந்து மாறிவருகின்றது என்பதைக் கணித்தும் ஆராய்வதே மொழி ஆராய்ச்சியாகும். பேரறிஞர் கால்டுவெல் அவர்கள் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூலை வெளியிட்டபிறகுதான் தமிழகத்தில் மொழியாராய்ச்சி வளரத் தொடங்கியது என்பர். ஆகவே, கால்டுவெல் அவர்களை மொழி ஒப்புமை ஆராய்ச்சித் தந்தை என்று அழைப்பர். ஆங்கில மொழியனராம் அவர் இந்தமட்டில் நிலவும் பல மொழிகளையும் கற்று ஆராய்ந்து அவ்வரிய நூலை வெளியிட்டுத் தமிழின் தொன்மையையும் வளத்தையும் உலகுக்கு வெளிப்படுத்தினார். அப் பெரியார்க்குத் தமிழர்கள் என்றுங் கட்டுப்பாடுடையவர்கள் ஆவார்கள். ஆனால், தமிழகத்தில் மொழி ஆராய்ச்சி தோன்றியது அறிஞர் கால்டுவல் அவர்கட்குப் பின்னர்தான் என்று கூறுதல் பொருந்தாது. பன்னூறு ஆண்டுகட்கு முன்பே – கி.மு. ஏழாம் நூற்றாண்டி லேயே, தமிழகத்தில் மொழிநூற் புலவர் தோன்றியுள்ளார்; மொழிநூல் உண்மைகளை வெளிப்படுத்தி யுள்ளார். அவர்தாம் தொல்காப்பியர். ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியரை இலக்கண நூலார் என்றுமட்டுமே கருதி வருகின்றனர். அவர் இலக்கண நூலார் மட்டுமன்று; மொழிநூற் புலவருமாவர். இன்று வெளிவந்துள்ள மேலைநாட்டாரின் மொழி யாராய்ச்சி நூல்களைக் கற்றபின்னர் தொல்காப்பியத்தை மீண்டும் கற்பவர்கள் தொல்காப்பியரைத் தொல்பெரும் மொழிநூற் புலவர் என்றே மதித்துப் போற்றுவர். மொழிநூற் புலவர்கள் மொழியாராய்ச்சியை ஒலியியல், இலக்கணம், அகராதி, மொழி வகைகள் என்று பகுத்து ஆராய்ந்துள்ளனர். தொல்காப்பியர் நூலை நோக்கின் தொல்காப்பியரும் அவ்வாறே பகுத்துள்ளமையை நன்கு அறியலாம். அவர் பகுப்புமுறை, எழுத்து, சொல், பொருள் எனும் முப்பிரிவுக்குட்பட்டது என்பதை யாவரும் அறிவர். அவற்றுள் இறுதியாய் ‘பொருள்’ என்ற பகுப்பு வேறு எம்மொழியிலும் காணப்படாத ஒன்று. அப்பொருள் அதிகாரம் மக்கள் வாழ்க்கையைப் பற்றிக் கூறிவருவதாகப் பலர் எண்ணி வந்துள்ளனர். ஓரளவு உண்மைதான். ஆனால், அவர் கூறுவது இலக்கியத்திற் பயிலும் மக்கள் வாழ்க்கை என்று அறிதல் வேண்டும். இலக்கியமே மக்கள் வாழ்க்கையை வெளிப்படுத்தும் கண்ணாடிதானே (டுவைநசயவரசந ளை வாந ஆசைசடிச டிக டுகைந). இலக்கியம் எவ்வாறு இயற்றப்படல் வேண்டும் என்றே பொருளதிகாரத்திற் புகல்கின்றார். ஆகவே, பொருளதிகாரத்தை இலக்கிய விளக்க நுல் (ளுஉநைnஉந டிக டுவைநசயவரசந) என்று கருதுதல் வேண்டும். மேலைநாட்டு மொழிகளிலே இலக்கிய ஆராய்ச்சி நூல்தான் உண்டே தவிர இலக்கிய விளக்கநூல் இல்லை என்பதை அறிதல் வேண்டும். மொழியும் இலக்கியமும் ஒன்றொடொன்று தொடர்பு டையன. மொழியின் பயன் இலக்கியமாகும் (டுவைநசயவரசந ளை வாந யீசடினரஉவ டிக வாந டுயபேரயபந –வாந கiநேளவ கடடிறநச டிக வை). அறம் பொருள் இன்பம் அடைதல் இலக்கியத்தின் பயன். இலக்கியத்தைப் பயில மொழிப் பயிற்சி இன்றியமையாதது. “எழுத்தறியத் தீரும் இழிதகைமை; இழிதகைமை தீர்ந்தான் மொழித்திறத்தின் முட்டறுப்பானாகும்; மொழித்திறத்தின் முட்டறுத்த நல்லோன் முதல் நூற் பொருள் உணர்ந்து கட்டறுத்து வீடுபெறும்.” ஆகவே, தொல்காப்பியர் மொழிநூலையும் இலக்கிய விளக்க நூலையும் இணைத்து ஒன்றுபடுத்தினார். பிறநாட்டார் போன்று வெவ்வேறாகக் கருதினாரிலர். இனி, அவர் மொழியை ஆராய்கின்ற வகையை நோக்குவோம். அவர் தமிழ்மொழியிலே தமிழர்க்காகவே தாம் அறிந்த உண்மைகைளக் கூறியிருப்பினும், அவை பொது நோக்குடையன வாக அமைந்திருக்கும் புதுமை வியத்தற்குரியது. பிறமொழி நூல்களிற் கூறப்பட்டுள்ள உலகப் பொது உண்மைகளை உலகோர் அறிந்திருக்கவும், தொல்காப்பியர் கூறியுள்ளன தமிழரே அறியாதிருக்கவும் உள்ள நிலைமை மிக மிக வருந்துதற் குரியது அன்றோ? தமிழர்கள் ‘ஊமையராய்ச் செவிடராய்’ ‘நாமமது தமிழர்’ எனக் கொண்டு பொழுதைக் கழிக்கின்றனர். பிறமொழியாளர் கூற்றே பெரிதெனப் போற்று கின்றனர். ஒலியியலை(ஞாடிநேவiஉள)த் தொல்காப்பியர் ‘எழுத்து’ என அழைத்துள்ளார். தமிழில் ‘எழுத்து’ என்பது ஒலிவடிவையும் வரி வடிவையுங் குறிக்கும். தொல்காப்பியர் கூற்றுப்படி தமிழில் ஒலிவடிவ எழுத்துக்கள் முப்பத்து மூன்றேதாம். வரிவடிவம் முப்பத்தொன்றேதாம். குற்றியலிகரத்திற்கும் குற்றியலுகத் திற்கும் தனி வரிவடிவங்கள் இல்லை. சிலர், தமிழ் நெடுங்கணக்கு வரிவடிவக் குறைபாடுடையது என்பர். உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் ஒலிவடிவங்களுக்கேற்ப வரிவடிவங்கள் அமைந்திரா. ஆங்கிலம், பிரஞ்சு, செர்மன் முதலிய மொழி களிலும் இவ்வாறே வரிவடிவங்கள குறைவாகவேயுள்ளன. ஒரு மேல்நாட்டு மொழிநூற் புலவர் பின்வருமாறு கூறுவதை நோக்குமின்:– கூhந ரேஅநெச டிக யீhடிநேஅநள in ய டயபேரயபந உயnnடிவ, டிக உடிரசளந நெ உயடஉரடயவநன லெ வாந ரேஅநெச டிக ளபைளே in வைள யடயீhயநெவ. டுயபேரயபந பநநேசயடடல, hயஎந அடிசந ளடிரனேள வாயn ளபைளே. கூhளை ளை வாந உயளந in குசநnஉh ஐவயடயைn, நுபேடiளா யனே ழுநசஅயn. ஆகவே, தமிழ் வரிவடிவக் குறைபாடுடையது என்று வருந்துவதிற் பொருளின்று. ஆங்கிலத்தினும் ஐந்தினை மிகுதியாகப் பெற்றுள்ளது. அதனால், ஆங்கிலத்திற் காணப்படும் சொல் உச்சரிப்பு வேறுபாடுகள் தமிழிற் காணப்படா. எழுத்துக்கள் பிறக்கும் ஆற்றைத் தொல்காப்பியர் அறிவிக்கும் முறைகள் இற்றைய மொழிநூற் புலவர்களின் கூற்றோடு ஒப்புமை உடையனவாய் உள்ளன. சொற்றொடர் களிற் சொற்கள் பயிலுங்கால் உண்டாகும் ஒலி மாற்றங்களையும் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். எழுத்தியல் (ஞாடிநேவiஉள –ஒலியியல்) பற்றி இவ்வளவு விரிவாக எந்த மொழிநூற் புலவரும் கூறினாரிலர் என்பத மிகையாகாது. இனி, ‘சொல்லியல்’ பற்றி ஆராய்வோம். தொல்காப்பியர் ‘சொல்’ பற்றிக் கூறும் உண்மைகளிற் சில எல்லா மொழிகட்கும் பொருந்துவனவாம். “எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே.” “பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும் சொல்லி னாகும் என்மனார் புலவர்.” “தெரிபுவேறு நிலையலும் குறிப்பிற் றோன்றலும் இருபாற் றென்ப பொருண்மை நிலையே.” “சொல்லெனப் படுப பெயரே வினையென்று ஆயிரண் டென்ப அறிந்திசி னோரே.” “இடைச்சொற் கிளவியும் உரிச்சொற் கிளவியும் அவற்றுவழி மருங்கில் தோன்றும் என்ப.” இக்கூற்றுக்கள் எம்மொழிக்குப் பொருந்தா? 1. சொற்கள் எல்லாம் பொருளைக் குறிக்கவே தோன்றி யுள்ளன. 2. சொல்லால் பொருள் தெரிவதோடு சொல்லைப் பற்றியும் அறியமுடியும். 3. சொல் வெளிப் படையாகவும் குறிப்பாகவும் பொருளினை உணர்த்தும். 4. சொற்கள் பெயர் என்றும் வினை என்றும் பாகுபாடு செய்யப்படும். 5. இடைச் சொல், உரிச்சொல் என்பன அவற்றினிடையே பின்னே தோன்றின. இவ்வுண்மைகள் தமிழ்மொழிக்கு மட்டும் உரியனவா இராமல் எல்லா மொழிகட்கும் பொருந்துவனவாய் உள்ளன அன்றோ? பெயர் வினைப் பாகுபாடுபற்றி மேனாட்டு அறிஞர் கூறுவது தொல்காப்பியர் கூற்றை அப்படியே ஒத்துளது. ஞரசளரiபே வாளை யீசடிஉநளள டிக நடiஅiயேவiடிn,றந நனே லெ டநயஎiபே in வயஉவ டிடேல வறடி யீயசவள டிக ளயீநநஉh வாந nடிரn யனே வாந எநசசb. கூhந டிவாநச யீயசவள டிக ளயீநநஉh யடட கயடட றiவா in வாநளந வறடி கரனேயஅநவேயட உடயளளநள. மொழிநூற் புலவர்கள் மொழியை, நூன்மொழி (டுவைநசயசல னயைடநஉவ) என்றும் வழக்குமொழி (ளுயீநநஉh னயைடநஉவ) என்றும் பாகுபாடு செய்து ஆராய்ந்துள்ளனர். தொல்காப்பியரும் அவ்வாறு பாகுபாடு செய்து ஆராய்ந்துள்ளார். “இனச்சுட் டில்லாப் பண்புகொள் பெயர்க்கொடை வழக்கா றல்ல, செய்யு ளாறே” என்ற நூற்பாவில் வழக்காறு என்றும் செய்யுளாறு என்றும் குறிப்பிட்டுள்ளமை அவ்விரண்டின் போக்கு களையேயாம். அன்றியும் வழக்குமொழி தோன்றியதன் பின்னரே நூன்மொழி தோன்றியது என்பது மொழிநூற் கொள்கையாகும். தமிழில் ‘மொழி’ என்ற பெயரும் அவ்வுண்மையையே உரைக்கின்றது. மொழியப்படுதலின் மொழியெனல் ஆயிற்று. ஒரு மொழி பரந்த இடத்தில் வழங்கும்போது ஒரு மூலைக்கு ஒரு மூலை தொடர்பு குறைந்து வழக்குமொழி வேறுபடுதலுண்டு. அவ்வாறு வேறுபடும் மொழிப் பகுதிகளையே அவ்வவ்விடங்களில் உள்ள மக்கள் மொழிந்துவருவார்களேயானால் ஒருபகுதி மொழிக்கும் இன்னொரு பகுதி மொழிக்கும் வேறுபாடு உண்டாகி ஒன்றுக் கொன்று அயல்மொழிபோலத் தோன்றும். அம்மொழி கிளை மொழி என்று அழைக்கப்படும். பின்னும் காலப்போக்கில் மிகுதியாக வேறுபாடு அடைந்து வேறு மொழியாகிவிடும். அது இனமொழி (ஊடிபயேவந டுயபேரயபந) எனப் பெயர்பெறும். தெலுங்கும் மலையாளமும் கன்னடமும் அவ்வாறு உருப்பெற்றனவே. தொல்காப்பியர் அவ்வாறு தோன்றியன வற்றைத் திசை மொழிகள் என அழைத்துள்ளார். இன்று நம்மிற் சிலர், “மொழியின் உயிர் வழக்கு மொழியிலே தான் உள்ளது. வாக்கு மொழியேதான் எழுத்து மொழியாகவும் கொள்ளப்படல் வேண்டும்” என்று கூறிக் கொச்சை வழக்குகளை எழுதி மொழியைச் சிதைத்து வருகின்றனர். வழக்குமொழி என்பது இலக்கணம் அற்றது அன்று. அதுவும் திருத்தமுடைய தாகவே இருக்கவேண்டும் என்பது தொல்காப்பியர் கொள்கை. அன்றியும் “பேசுவதுபோல எழுதவேண்டுமா, எழுதுவதுபோல் பேசவேண்டுமா” என்ற ஆராய்ச்சியும் இன்று நிலவுகின்றது. பேச்சு வழக்கு வேறு; எழுத்துவழக்கு வேறு. என்றாவது இரண்டும் இலக்கண நெறிக்குக்கட்டுப்பட்டன என்பதே தொல்காப்பியர் கூற்று. மொழியை உருவாக்குவதிற் கற்றோர்க்கும் கல்லார்க்கும் பங்குண்டு (“டுயபேரயபந ளை ய உவைல வடி வாந ரெடைனiபே டிக றாiஉh நஎநசல hரஅயn நெiபே செடிரபாவ ய ளவடிநே”). கற்றவர்கள் தொகை குறைவு; கல்லாதவர் தொகை மிகுதி. இது பெரும்பான்மையோர் காலம். ஆதலின் கல்லாரைப் பின்பற்றிக் கற்றார் மொழியை வளர்த்தல் வேண்டும் என்பர் சிலர். ஆனால், தொல்காப்பியர் கருத்தோ அற்றன்று. எல்லாத்துறைகளிலுங் கற்றோர் வழியே மற்றோர் செல்லவேண்டும் என்பது. “உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே, நிகழ்ச்சி அவர்கட்டாகலான” என்று கூறியுள்ளார். கற்றோர் கையாளும் நூன்மொழிதான் இனிமை, தூய்மை, வளமை, செம்மை, ஒண்மை, நுண்மை முதலிய பண்புகளைக் கொள்ள முடியும். ‘செந்தமிழ்’ என்னும் பெயரே சான்று பகரும். எழுத்து மொழி தான் பேச்சு மொழியைத் திருத்திச் செம்மைப் படுத்தி இனிமையாக்கி வளமுறச்செய்து நிலைக்கச்செய்யும், * “ளுயீநநஉh பiஎநள சளைந வடி றசவைiபே பசயவேநன. க்ஷரவ டிnஉந றசவைiபே hயள உடிஅந iவேடி நெiபே, வாந றசவைவநn கடிசஅ நெiபேள வடி யககநஉவ வாந ளயீடிமநn வடிபேரந, ளவயbடைணைந வை, றடிரடன வை, உhயபேந வை, பiஎந வை ய அடிசந யநளவாநவiஉயடடல யீடநயளiபே கடிசஅ, நனேடிற வை றiவா ய சiஉhநச எடிஉயரெடயசல”. நம் மொழிக்குத் தமிழ் என்ற பெயர் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே உண்டு என்று அவர் நூலால் அறிகின்றோம். “தமிழென் கிளவியும் அதனோ ரற்றே” ஆதலின், அவர் காலத்திற்கு சில நூற்றாண்டுகட்குப் பின்னர்த் தோன்றி வழங்கிய ‘திராவிடம்’ என்ற சொல்லின் சிதைவு அன்று ‘தமிழ்’ என்னும் சொல் என அறியலாம். ஆகவே, இதுகாறும் கூறியவற்றால் தொல்காப்பியர், தொல் பெரும் மொழிநூற் புலவர் எனத் தெள்ளிதின் அறியலாகும். அவர் வழிநின்று நம் தமிழைப் போற்றி வளர்ப்பது நம்மனோர் கடனாகும். - பேராசிரியர் சி. இலக்குவனார் சி. கணேசையர் நினைவு மலர் 2. தொல்காப்பியம் - நன்னூல் சொல்லதிகாரம் `எழுத்துஞ் சொல்லும் பொருளும்நாடி’ என மேற் பாயிரத்துள் நிறுத்தமுறையானே எழுத்திலக்கணங் கூறிய தொல்காப்பியனார், இப்படலத்தாற் சொல்லிலக்கணங் கூறுகின்றார். அதனால் இது சொல்லதிகாரம் என்னும் பெயர்த் தாயிற்று. சொல் என்பது முற்கூறிய எழுத்தினான் ஆக்கப்பட்டு இருதிணைப் பொருட்டன் மையையும் ஒருவர் உணர்ந்து கொள்ளுதற்குக் கருவியாகிய ஓசையாகும். கிளவி, சொல், மொழி என்பன எழுத்தினாலாகிய ஓசையையே குறிப்பன. கடலொலி, சங்கொலி, இடி யொலி முதலியன எழுத்தியல் தழுவா ஓசைகளாதலின் இவை சொல்லெனப் படா. இவற்றை அரவம், ஒசை, இசை என்ற சொற்களால் வழங்குதல் மரபு. சொல்லென்பது எழுத்தினாலாக்கப்பட்டு இருதிணைப் பொருள் களையும் அறிவிக்கும் ஓசையென்றும், தன்னையுணர நின்றவழி எழுத்தெனவும், பிற பொருளையுணர்த்திய வழிச் சொல்லெனவும் கூறப்படுமென்றும் கூறுவர் உரையாசிரியர். ஒருவர் தாம் பொருளை உணர்தற்கும் பிறர்க்கு உணர்த்தற்கும் கருவியாய் நிற்பது சொல். தானே ஒரு பொருளைக் கருதி யுணர்த்தும் உணர்வு சொல்லுக்கு இல்லை. பொருளையுணர்த்துவா னொருவன் சொல்லின் துணைகொண்டன்றிப் பொருளை யறிவுறுத்த லாகாமையின் அவனது தொழிலைச் சொல்லாகிய கருவிமேலேற்றிச் சொல் உணர்த்துமெனக் கருவிக் கருத்தாவாகக் தொல்காப்பியர். சொற்களைப் பாகுபடுத்து விளக்கக் கருதிய ஆசிரியர், இருதிணை, ஐம்பால், எழுவகை வழு, எட்டு வேற்றுமை, அறுவகைத் தொகை, மூன்றிடம், மூன்று காலம், இருவகை வழக்கு என்னும் இவ்வெட்டு வகையான் ஆராய்ந்துணர்த்தினா ரென்பர் இளம்பூரணர். இவ்வெட்டினோடு சொல் நான்கு வகைய என்றலும், அவற்றையே பலவாகப் பகுத்தலும், விகாரவகையும், பொருள்கோள் வகையும், செய்யுட்குரிய சொல் நான்கென்றலும், என இவையுங் கூட்டி எட்டிறந்த பலவகையான் ஆராய்ந்துணர்த் தினாரென்பர் நச்சினார்க்கினியர். சொல் தனிமொழி, தொடர் மொழி என இருவகைப்படும். மொழிகள் யாங்கணுந் தனித்து நில்லாவேனும் இப்பொருட்கு இச்சொல் என அறிவுடையோர் வரையறுத்துக் கூறிய படைப்புக் காலத்தும், தொடர்மொழிச் சொற்களுள் ஒன்று நிற்ப மற்றைய எஞ்சிய வழியும் தனித்து நிற்றலுண்டு. அதனால் தனி மொழியென்ற பிரிவும் கொள்ளப்படுவதாயிற்று. தனிமொழி, பொருண்மை மாத்திரம் உணர்த்துவதல்லது கேட்டார்க்கொரு பயன்பட நிற்பதன்று. கேட்டார்க்குப் பொருளினிது விளக்கிப் பயன்பட நிற்பன தொடர் மொழிகளேயாம். ஆகவே தொடர் மொழிகளின் இயல்பினை முன்னுணர்த்தி அவற்றுக்குக் கருவியாகிய தனிமொழி யிலக்கணத்தினைப் பின்னுணர்த்துதலே முறையாகும். இம் முறையினை யுளத்துட்கொண்ட தொல்காப்பியர், இப்படலத்துள் அல்வழி வேற்றுமையாகிய தொடர்மொழிகளின் இலக்கணத்தை முன்னுணர்த்தி, அத்தொடர் மொழிகளைப் பகுத்துக்காணும் முறையால் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் ஆகிய தனிமொழிகளின் இலக்கணங் களைப் பின்னர் உணர்த்துவர். சொற்கள் ஒன்றோடொன்று தொடருங்கால் பயனிலை வகையானும் தொகைநிலை வகையானும், எண்ணுநிலை வகையானும் தொடருமென்பது தமிழிலக்கண மரபாகும். சாத்தன் வந்தான் என்றாற்போல எழுவாயும் பயனிலையுமாகத் தொடர்ந்து நிற்பது `பயனிலைவகை’ எனப்படும். வேற்றுமை யுருபும் உவம உருபும் எண்ணும்மையாகிய இடைச்சொல்லும் வினைச் சொல்லீறும் பண்புணர்த்தும் ஈறும் இவையல்லாத பிறிதோர் சொல்லும் மறைந்து நிற்கத் தொடரும் சொல்லினது தொடர்ச்சி `தொகை நிலைவகை’ யெனப்படும். பொருள்களை ஒன்றோடொன்று சேர்த்து எண்ணும் முறையில் அமைந்த சொற்களது தொடர்ச்சி `எண்ணுநிலைவகை’ யெனப்படும். இவ்வாறு மூவகையால் தொடரும் தொடர்மொழிகளெல்லாவற்றையும் பொருள் நிலைமை நோக்கி அல்வழித் தொடரென்றும் வேற்றுமைத் தொடரென்றும் இருவகையாகப் பகுத்துரைப்பர் தொல்லாசிரியர். பொருளையிடமாகக் கொண்டு நிகழ்வது சொல்லாகும். சொல்லிலக்கணங் கூறக்கருதிய ஆசிரியர், அச்சொல் நிகழ்ச்சிக்கு நிலைக்களனாகிய பொருள்களெல்லாவற்றையும் உயர்திணை யெனவும் அஃறிணையெனவும் இருதிறனாக வரையறுத்து, அப்பொருள் வகைபற்றி நிகழுஞ் சொற்களையும் உயர்திணைச் சொல்லென்றும் அஃறிணைச் சொல்லென்றும் இருவகையாகப் பகுத்துரைத்தார். திணையென்னும் சொல்லுக்கு ஒழுக்கம் என்பது பொருளாகும். மக்களது நல்லறிவின் பயனாயமைவது ஒழுக்கம். விலங்கு முதலிய சிற்றுயிர்களினின்றும் பிரித்து மக்கட் குலத்தாரை உயர்திணையெனச் சிறப்பித்து உயர்த்துவது, மனவுணர்வின் பாற்பட்ட நல்லொழுக்கமேயாம். உலக வாழ்வில் மேன்மேல் உயர்ச்சியடைதற்குக் காரணமாகிய இவ்வொழுக்க உணர்வு மக்கட் குலத்தாரிடமே சிறப்பாக அமைந்து வளர்தல் கருதி அவர்களை உயர்திணையெனத் தனிச் சிறப்புடைய தொகுதி யாகவும், நன்றுந் தீதும் பகுத்துணர்ந்தொழுகும் நல்லறிவு வாய்க்கப் பெறாத மற்றைய உயிர்களையும் உயிரல் பொருள்களையும் ஒழுக்க வுணர்ச்சிக் குரியவல்லாத அஃறிணையெனச் சிறப்பில் தொகுதியாகவும் முன்னைத் தமிழாசிரியர் பகுத்துள்ளார்கள். இங்ஙனம் உலகப் பொருள்ளெல்லாவற்றையும் உயர்திணை, அஃறிணை என இரண்டாக அடக்கி அவற்றை ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் என ஐந்து பால்களாகப் பகுத்து இப்பொருள் வேறுபாட்டினை விளங்க அறிந்து கொள்ளுதற்குரிய சொல்லமைப்பினையுடையதாக நம் முனனோர் தம் தாய் மொழியாகிய தமிழ்மொழியை உருவாக்கி வளர்த்தார்கள். இவ்வாறு சொற்களின் வாயிலாகத் திணை பால்களை விளங்க அறிவிக்கும் முறை தமிழிலன்றி வேறெம் மொழியிலுங் காணப்படாத சிறப்பியல்பாகும். சொல்லிலக்கண வகை முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிய தொல்காப்பியனார், சொற்களைப் பொருள் நிலைமை நோக்கித் தொடர்மொழி, தனிமொழி யென இருவகைப்படுத்து, அத்தொடர்மொழியை அல்வழித்தொடர், வேற்றுமைத் தொடர் என இருவகைப் படுத்து, அவ்விருவகைத் தொடரும் செப்பும் வினாவுமாக நிகழ்தலால் அவற்றை வழுவாமற் கூறுதற்காக முற்படச் சொன்னிலைமையாற் பொருளை உயர்திணை, அஃறிணையென இருவகைப்படுத்தார். அவற்றுள் உயர்திணையுணர்த்துஞ் சொற்களை ஒருவனை யறியுஞ்சொல், ஒருத்தியை யறியுஞ்சொல், பலரை யறியுஞ்சொல் என மூவகைப்படுத்தார். அஃறிணை யுணர்த்துஞ் சொல் என இருவகைப்படுத்தார். இங்ஙனம் இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாமல் இருவகை வழக்கிலும் அமைக்க வேண்டுஞ் சொற்களை யெடுத்தோதினார். அதன்பின் வேற்றுமைத் தொடர் கூறுவார், மயங்கா மரபினவாகி வருவன எழுவகை வேற்றுமையுணர்த்தினார்; அதன்பின் எட்டாவதாகிய விளி வேற்றுமையுணர்த்தினார்; அதன்பின் தனிமொழிப் பகுதியாகிய பெயர்ச்சொல், வினைச் சொல், இடைச்சொல், உரிச்சொல் என்பவற்றின் பாகுபாடு உணர்த்தினார்; அதன்பின் சொற்கள் விகாரப்படுமாறும் ஒட்டுமாறும் எஞ்சுமாறும் பிறவும் உணர்த்தினார். எழுத்ததி காரத்துள் எழுவாய் வேற்றுமையையும் அதன் திரிபாகிய விளிவேற்றுமையையும் அல்வழிக் கண்ணே முடித்த ஆசிரியர் இவ்வதிகாரத்தே வேற்றுமை களுடன் இயைத்து இலக்கணங் கூறியுள்ளார். இச்சொல்லதிகாரம் ஒன்பது இயல்களால் இயன்றதாகும். கிளவியாக்கத்துள் அல்வழித்தொடரும், வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு என்னும் மூன்றியல்களிலும் வேற்றுமைத் தொடரும் உணர்த்தப்பெற்றன. பெயரியலில் பெயரிலக்கணமும், வினையியலில் வினையிலக்கணமும், இடையியலில் இடைச் சொல்லிலக்கணமும், உரியியலில் உரிச் சொல்லிலக்கணமும், எச்சவியலுள் எஞ்சியன பிறவும் உணர்த்தப் பட்டுள்ளன. இவ்வகையினால் இவ்வதிகாரத்தின் இயல்களும் ஒன்பதாயின. இனி, தொல்காப்பியத்தை முதனூலாகக் கொண்டு நன்னூல் என்னும் வழிநூல் செய்த பவணந்தி முனிவர், தாம் கூற எடுத்துக் கொண்ட சொல்லிலக்கணத்தினைப் பெயரியல், வினையியல், பொதுவியல், இடைச் சொல்லியல், உரிச் சொல்லியல் என்னும் ஐந்தியல்களாற் கூறுகின்றார். பெயர்ச்சொற்களது இயல்பு பெயரியலிலும், வினைச் சொற்களதியல்பு வினையியலிலும், பெயர், வினை, இடை, உரி, என்னும் நால்வகைச் சொற்களின் இயல்புகள் சிங்கநோக்காகப் பொதுவியலிலும், இடைச் சொற்களதியல்பு இடைச் சொல்லியலிலும், உரிச்சொற்களது இயல்பு உரிச்சொல் லியலிலும் உணர்த்தப்பட்டன என்பர் நன்னூலுரையாசிரியர் மயிலைநாதர். தொல்காப்பியச் சொல்லதிகாரத்தில் முதலியலாகிய கிளவி யாக்கத்திலும் ஒன்பதாம் இயலாகிய எச்சவியலிலும் கூறப்பெற்ற சொல்லிலக்கணங்களை நால்வகைச் சொற்களுக்குரிய பொது விலக்கணமாத லொப்புமைபற்றி நன்னூலாசிரியராகிய பவணந்தியார் பொதுவியல் என ஒரியலாக அடக்கி, அதனைப் பெயரியல் வினையியல்களுக்கும் இடைச்சொல் உரிச் சொல்லியல் களுக்கும் நடுவே சிங்க நோக்காக அமைத்துள்ளார். தொல்காப்பியத்துள் வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு என மூன்றியல் களால் விரித்துரைக்கப்பட்ட வேற்றுமை யிலக்கணங்களைப் பெயரிலக்கணமாதல் ஒப்புமைபற்றிப் பெயரியலோடு இணைத்துப் பெயரியல் என ஓரியலாகவும், வினைச் சொல்லிலக்கணத்தினை வினையியல் என ஓரியலாகவும் அமைத்துக் கூறியுள்ளார். இவ்வகையால் நன்னூலிற் சொல்லதி காரம் பெயரியல். வினையியல், பொதுவியல், இடைச் சொல்லியல், உரிச் சொல்லியல் என்னும் ஐந்தியல்களையுடையதாயிற்று. அருகதேவனை வழிபடும் சமண சமயச் சான்றோராகிய பவணந்தி முனிவர், தம்மால் இயற்றப்பெறும் நூல் இனிது நிறை வேறுதல் வேண்டித் தெய்வ வணக்கமும் செயப்படு பொருளும் எய்தவுரைக்கும் தற்சிறப்புப் பாயிரமாக இவ்வதி காரத்தின் தொடக்கத்திற் கூறியது, முச்சக நிழற்று முழுமதி முக்குடை அச்சுத னடிதொழு தறைகுவன் சொல்லே. என்னும் நூற்பாவாகும். இது கடவுள் வணக்கமும் அதிகாரமும் உணர்த்துவது. இதன் பொருள் :- மூன்றுலகத்திலுமுள்ள உயிர்கட் கெல்லாம் நிழலைச் செய்யும் நிறைந்த மதியைப் போலும் மூன்று குடையையுடைய அழிவில்லாதவனுடைய அடிகளை வணங்கிச் சொல்லிலக்கணத்தை யான் கூறுவேன், என்றவாறு. எல்லாச் சமயத்தோரானும் வணங்கப்படும் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய தொழில்களுக்குரிய எல்லாக் கடவுளாகியும் நின்றான் ஒருவனே என்னும் பொது நோக்குடன் அருகதேவனை வணங்கும் பவணந்தி முனிவர் அம்முதல்வனை எழுத்ததிகாரத்தில் பூமலி யசோகின் புனைநிழ லமர்ந்த நான்முகற் றொழுதுநன் கியம்புவ னெழுத்தே. எனப் படைத்தற்றொழில் பற்றி நான்முகன் எனப் போற்றியது போன்று காத்தற்றொழில் பற்றி இவ்வதிகாரத்தில் அச்சுதன் என்ற பெயராற் போற்றியுள்ளமை ஒப்புநோக்கி யுணரத் தகுவதாகும். - க. வெள்ளைவாரணனார், நூல்வரிசை - 12,பக்.1-6 3. தொல்காப்பியத் தமிழர் தொல்காப்பிய காலம் தொல்காப்பியம் எப்பொழுது தோன்றியது? அது தோன்றி எத்தனை ஆண்டுகள் இருக்கலாம்? இன்ன ஆண்டில்தான் தொல்காப்பியம் தோன்றியதென்று திட்டமாக வைரயறுத்துச் சொல்ல முடியாது. இத்தனை ஆண்டுகளுக்கு முன்னே தோன்றி யிருக்கலாம் என்று ஒரு உத்தேசமாகத்தான் உரைக்க முடியும். தொல்காப்பியம் தோன்றிய காலத்தைப் பற்றிக் கருத்து வேறுபாடுகள் பலவுண்டு. ஆண்டிலே முற்பட்டதென்று கூறுவோர் பலர்; பிற்பட்டதென்று கூறுவோர் சிலர். 1. வேத வியாசர் காலத்திற்கு முன்னே தொல்காப்பியம் செய்யப்பட்டது. இன்றுள்ள இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களும் எழுதப்படுவதற்கு முன்னே தொல் காப்பியம் எழுதப்பட்டது. தொல்காப்பியத்தில் குறிக்கப்படும் வேதங்கள் இப்பொழு துள்ள இருக்கு, எசுர், சாமம், அதர்வண வேதங்கள் அல்ல. இவ்வாறு நான்காக வகுத்தெழுதியவர் வேத வியாசர். வேத வியாசருக்கு முன்னிருந்த நான்கு வேதங்கள் தைத்திரியம், பௌடிகம், தலவகாரம், சாமம் என்பன. இந்த நான்கு வேதங்களையே தொல்காப்பியனார் கற்றவர். இதனைத் தொல்காப்பியச் சிறப்புப்பாயிரத்தில் உள்ள நான்மறை என்ற தொடருக்கு நச்சினார்க்கினியர் எழுதியிருக்கும் உரையினால் உணர்ந்து கொள்ளலாம். ஆகவே “இன்றுள்ள நான்கு வேதங்களுக்கும் முற்பட்டது தொல்காப்பியம்” என்பது உரையாசிரியர் நச்சினார்க்கினியரின் கருத்து. 2. முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்ற மூன்று தமிழ்ச் சங்கங்கள் இருந்தன. இந்த முத்தமிழ்ச் சங்க வரலாற்றை இறையனார் அகப்பொருள் உரையிலே காணலாம். அந்த வரலாற்றைக் கொண்டு கணக்கிட்டால் ஏறக்குறைய 7300 ஆண்டுகளுக்கு முன்னே தோன்றியது தொல்காப்பியம் என்று முடிவு கட்டலாம். தொல்காப்பியம் இடைச்சங்ககாலத்து இலக்கணம், இடைச்சங்கம் 3700 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்றது. கடைச்சங்கம் 1850 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்றது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரையிலும் கடைச்சங்கம் நின்று நிலவியதாக நம்புகின்றனர். முச்சங்க வரலாறு உண்மையென்று ஒப்புக் கொள்ளப்பட்டால், இந்தக் கணக்கின்படி தொல் காப்பியம் தோன்றிய காலம் 7300 ஆண்டுகளுக்கு முன்பு என்றே முடிவு செய்யப்படும். 3. தொல்காப்பியம் 5000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது என்று கூறுவோர் உள்ளனர். தமிழ்நாட்டின் பருவகாலத்தை ஆறாக வகுத்துக் கூறினர் முன்னோர். அவை கார்காலம், கூதிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக்காலம், இளவேனிற்காலம், முதுவேனிற்காலம் என்பன. ஆவணியும், புரட்டாசியும் கார்காலம். ஐப்பசியும், கார்த்தி கையும் கூதிர்காலம். மார்கழியும், தையும் முன்பனிக்காலம். மாசியும், பங்குனியும் பின்பனிக்காலம். சித்திரையும், வைகாசியும் இளவேனிற்காலம். ஆனியும், ஆடியும் முதுவேனிற்காலம். கூதிர்-குளிர்: வேனில்-கோடை. தொல்காப்பியர் கார்காலத்தையே முதலில் கூறியுள்ளார். இதனை காரும் மாலையும் முல்லை-குறிஞ்சி கூதிர் யாமம் என்மனார் புலலர். (தொல். பொருள் அகம். 6) என்ற சூத்திரத்தால் காணலாம். “ஆவணி, புரட்டாசி மாதங் களாகிய கார்காலமும், மாலைக்காலமும் முல்லை நிலத்திற்குரிய பொழுதாகும். ஐப்பசி, கார்த்திகை மாதங்களாகிய குளிர் காலமும், யாமம் என்னும் நள்ளிரவும் குறிஞ்சி நிலத்திற்குரிய பொழுதாகும்”. ஒரு காலத்திலே ஆண்டின் முதல் மாதம் ஆவணியாகவும் இறுதி மாதம் ஆடியாகவும் வைத்து எண்ணப்பட்டு வந்தது. இதனை “காலவுரிமை யெய்திய ஞாயிற்றுக்குரிய சிங்கவோரை முதலாகத் தண்மதிக்குரிய கற்கடகவோரையீறாக வந்து முடியுந் துணை ஓர் யாண்டாமாதலின், அதனை இம்முறையானே அறுவகைப்படுத்து, இரண்டு திங்கள் ஒருகால மாக்கினார்.’’ என்று நச்சினார்க்கினியர் மேலே காட்டிய சூத்திரத்தின் உரையிலே குறிப்பிட்டுள்ளார். சிங்கஓரை-ஆவணி மாதம், கற்கடகஓரை-ஆடிமாதம். பிற்காலத்திலேதான் சித்திரையை முதல் மாதமாக வைத்து எண்ணினர். ஆவணி, ஆண்டின் முதல் மாதமாக இருந்த காலம் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாகுமாம். இவ்வாறு வானநூல் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். தொல்காப்பியத்தில் கார்காலம் முதலில் கூறப்பட்டி ருக்கின்றது. ஆதலால் இந்நூல் ஆவணி மாதத்தை ஆண்டின் முதல் மாதமாக வழங்கிய காலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இதுவே தொல்காப்பியம் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது என்போர் காட்டும் காரணமாகும். 4. மக்கள், இரும்பு பொன் முதலிய உலோக வகைகளைக் கண்டுபிடித்தகாலம் கி.மு. ஐயாயிரத்திற்குப் பின் என்பர். தொல்காப்பியத்திலே உலோகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆதலால் அதன் காலம் கி.மு. ஐயாயிரத்திற்குப் பிற்பட்டதுதான் என்பதில் ஐயமில்லை என்பர். 5. தொல்காப்பிய காலம் 2400 ஆண்டுகளுக்கு முன்னென்று மொழிவோரும் உள்ளனர். இவர்கள் காட்டும் காரணங்களைக் காண்போம். “ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” என்ற சொற்றொடர் தொல்காப்பியச் சிறப்புப்பாயிரத்திலே காணப்படுகின்றது. “ஐந்திரம் என்ற இலக்கண நூலறிவு நிரம்பிய தொல்காப்பியன்” என்பதே இதன் பொருள். ஐந்திரம் என்பது இந்திரனால் இயற்றப்பட்ட ஓர் இலக்கணம். தமிழிலே இப்பெயர்கொண்ட ஓர் இலக்கணம் இருந்ததாக எண்ண இடமில்லை இப்பெயர் கொண்ட இலக்கணம் வடமொழியிலே இருந்திருக்கலாம். பாணினி இலக்கணம் தோன்றுவதற்கு முன் இந்த ஐந்திரம் வடமொழியில் இருந்திருக்க வேண்டும் பாணினிக்கு முன்னே இதுவே வடமொழியிலக்கணமாக இருந்திருக்கலாம். பாணினி இலக்கணத்திற்கு முன்னேயிருந்த ஐந்திர இலக்கணத்தைப் படித்தவர் தொல்காப்பியர். ஆகவே, தொல்காப்பியர் பாணினி காலத்திற்கு முன்னே வாழ்ந்தவர். பாணினியின் காலம் கி.மு. நான்காம் நூற்றாண்டு. தொல் காப்பியர் கி.மு. நான்காம் நூற்றாண்டுக்கு முன்னிருந்தவர். இந்தக் கணக்கு உண்மையானால் தொல்காப்பியம் 2400 ஆண்டுகளுக்கு முன்னே தோன்றியதாகும். 6. “தொல்காப்பியம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில்தான் தோன்றியது. 1800 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய நூல்தான் தொல்காப்பியம்; இதற்கு ஆதரவு உண்டு என்போரும் உள்ளனர். இவ்வாறு கூறுவோர் சிறுபான்மையினர். 7. தொல்காப்பியர் காலம் கி.பி.5-ஆம் நூற்றாண்டு என்போரும் உண்டு. தொல்காப்பியம் ஒரு தனி ஆசிரியரால் செய்யப்பட்டதன்று; அது ஒரு தொகுப்பு நூல் என்போரும் உண்டு. 8. எந்த வகையில் பார்த்தாலும், தொல்காப்பியம் கி.மு. 2000 ஆண்டுகளுக்கு முன்னே தோன்றியிருக்க வேண்டும். ஆகையால் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நூலேயன்றிப் பிற்பட்ட நூல், அன்று என்போர் பலர். இது தொல்காப்பியர் காலத்தைக் கணக்கிடும் பலராலும் ஒப்புக்கொள்ளப் படுகின்றதோர் முடிவு. தொல்காப்பியர் காலத்தைக் கணக்கிடும் இவ்வாராய்ச்சி களில் எது பொய்? எது மெய்? என்ற கவலை நமக்கு வேண்டாம். தமிழிலே இன்றுள்ள நூல்களிலே தொல்காப்பியந்தான் பழமையான நூல். இதற்கு முற்பட்ட நூல் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை, இது மட்டும் எவராலும் மறுக்கமுடியாத உண்மை. தமிழ் நூல் ஆராய்ச்சியாளர் அனைவராலும் ஒருமனதாக ஒப்புக்கொள்ளும் முடிவு. தொல்காப்பிய அமைப்பு ஐவகை இலக்கணம் தமிழ் இலக்கணம் ஐவகைப்படும் என்பது பிற்காலத்தினர் கொள்கை. எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம், பொருள் இலக்கணம், யாப்பிலக்கணம், அணியிலக்கணம் என்பவை அவை. இந்த ஐவகை முறையைப் பின் பற்றியே பிற்காலத்தில் இலக்கணநூல் எழுதப்பட்டன. நன்னூல், நம்பியகப்பொருள், புறப்பொருள்வெண்பாமாலை, யாப்பருங்கலக்காரிகை, தண்டி யலங்காரம் இவைகள் பிற்காலத்தினரால் ஆரம்பத்தில் படிக்கப்படும் ஐவகை இலக்கணங்கள். நன்னூலில் எழுத்திலக்கணமும், சொல்லிலக்கணமுமே நவிலப்படுகின்றன. நம்பியகப்பொருள் என்பது பொருள் இலக்கணத்தின் ஒரு பகுதியான அகப்பொருளைப் பற்றி மட்டும் கூறுகின்றது. அகப்பொருளை மட்டும் கூறும் இறையனார் அகப்பொருள் என்ற இன்னொரு நூலும் உண்டு. புறப்பொருள் வெண்பாமாலை என்பது பொருள் இலக்கணத்தின் மற்றொரு பகுதியான புறப்பொருளைப் பற்றி மட்டும் கூறுவது. யாப்பருங் கலக்காரிகை என்பது செய்யுள் இலக்கணத்தைப் பற்றி மட்டும் சொல்வது. தண்டியலங்காரம் என்பது அணியிலக்கணத்தைப் பற்றி மட்டும் அறிவிப்பது. யாப்பருங்கலம் என்ற பெயருடன் மற்றொரு செய்யுள் இலக்கண நூலும் உண்டு. இவ்வாறு எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணிகளைப் பற்றிப் பிற்காலத்தார் தனித்தனி இலக்கணங்களை எழுதி வைத்தனர். இத்தகைய தனித்தனியிலக்கணங்கள் எழுதப்பட்ட பிறகுதான் “தமிழ் இலக்கணம் ஐவகைப்படும் அவை எழுத்து சொற்பொருள் யாப்பணி” என்று கூறும் கொள்கை வழக்கத்தில் வந்திருக்க வேண்டும். மூவகையிலக்கணம் தொல்காப்பியர் தமிழ் இலக்கணத்தை மூன்று பிரிவாகவே பிரித்தார். அந்த முப்பிரிவைக் கொண்டதே தொல்காப்பியம். எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம், பொருளிலக்கணம் என்பவை தான் அம் முப்பிரிவுகள். எழுத்துக்களைப் பற்றி இயம்புவது எழுத்திலக்கணம். அந்த எழுத்துக்களால் ஆகிய சொற்களைப் பற்றிக் கூறுவது சொல்லி லக்கணம். அந்தச் சொற்களில் அடங்கியுள்ள பொருள்களைப் பற்றிக் கூறுவது பொருள் இலக்கணம். பொருள் இலக்கணம் என்பதிலே செய்யுள் இலக்கணமும், அணியிலக்கணமும் அடங்கியிருக்கின்றன. பொருளும் அணியும் அடங்கியிருப்பதே செய்யுள். எந்தப் பாடலை எடுத்துக் கொண் டாலும் அதில் அடங்கியிருக்கும் பொருள், அகப்பொருள் தழுவியதாக இருக்கும். அல்லது, புறப்பொருள் தழுவியதாக இருக்கும். அதில் அணியும் அமைந்திருக்கும். அணி-அழகு. அணியும் பொருளும் அமைந்ததே பாட்டு. அணியும் பொருளும் இல்லாவிட்டால் அது பாடலாகாது. ஏதேனும் ஒரு பொருளைப் பற்றிப் புகல்வதற்குத்தான் பாட்டு எழுதப்படும். அந்தப் பொருள் அகப்பொருளாகவோ, புறப்பொருளாகவோ தான் இருக்கும். அகப்பொருள் தழுவிய காதற்பாடல்களையும் புறப்பொருள் தழுவிய அரசியல், வாணிகம், அறிவுரை போன்ற செய்திகளைப் பற்றியுமே முன்னோர்கள் செய்யுட்களையும் நூல்களையும் செய்து வந்தனர். இந்தப் பாடல்களுடன், ஆடையும் இழையும் ஒன்றாக அமைந்திதிருப்பதுபோல் அணியும் பொருந்தியிருக்கும். ஆகையால் தான் யாப்பையும், அணியையும், பொருளையும், ஒன்றாகக் கருதியே அதற்குப் பொருள் இலக்கணம் என்று பெயர் வைத்தார் தொல்காப்பியர். தொல்காப்பியத்திலே எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று பகுதி உண்டு. பிற்காலத்திலே தோன்றிய இலக்கண விளக்கம் என்னும் நூல் தொல்காப்பியத்தைப் பின்பற்றி எழுதப்பட்டது. எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்ற மூன்று பகுதிகளையுடையதே இலக்கண விளக்கம் இதனைக் “குட்டித் தொல்காப்பியம்’’ என்று கூறுவர். தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தில் ஒன்பது இயல்கள் உண்டு. இவை எழுத்திலக்கணத்தை ஒன்பது வகையாகப் பிரித்துக் கூறுகின்றன. சொல்லதிகாரமும் ஒன்பது இயல்களைக் கொண்டது. இந்த ஒன்பது இயல்களும் சொல்லிலக்கணத்தை ஒன்பது வகையாகப் பிரித்துச் சொல்லுகின்றன. பொருளதி காரத்திலும் ஒன்பது இயல்கள் உண்டு. பொருளைப் பற்றி கூறுவதற்கான இலக்கணத்தை இந்த ஒன்பது இயல்களும் உரைக்கின்றன. ஆகவே தொல்காப்பியம் மூன்று அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரத்திலும் ஒன்பது ஒன்பது இயல்கள் உண்டு. தவறான கொள்கைகள் பண்டைத்தமிழர் நாகரிகம் பற்றி இன்று பலர் எழுதுகின்றனர்; பேசுகின்றனர். பண்டைத்தமிழர் நாகரிகத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற முயற்சியிலே இன்று இளைஞர் பலர் ஈடுபட்டிருக்கின்றனர். பண்டைத் தமிழர் பண்பாட்டைப் பற்றிக் கூறுவோர்க்குள் கருத்து வேற்றுமைகைள் காணப்படுகின்றன. இக்கருத்து வேற்றுமையுடையவர்களை இருவகையினராகப் பிரிக்கலாம். “பண்டைத் தமிழர்க்குத் தனி நாகரிகம் இல்லை. அவர் களைத் திருத்தி நாகரிகமுடைய மக்களாக வாழச் செய்தவர்கள் வடக்கிலிருந்து தெற்கே வந்த ஆரிய முனிவர்களும், அறிஞர்களுமே”. என்றுரைப்பர் ஒரு சிலர் தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சியை எழுதிய பெரும்புலவர் மு. ராகவய்யங்கார் அவர்கள் இக்கருத்தை வெளியிட்டிருக்கின்றார். “உலகிலே தமிழர் நாகரிகமே மிகப் பழமையானது. தலை சிறந்தது நாம் இக்காலத்தில் என்னென்ன வேண்டும் என்று நினைக்கின்றோமோ இவைகள் எல்லாம் பண்டைத் தமிழர் நாகரிகத்திலே படிந்து கிடந்தன. பழந்தமிழர்கள் சாதி வேற்றுமை பாராட்டாதவர்கள். கடவுள் நம்பிக்கை அற்றவர்கள். மூடப் பழக்க வழக்கங்களை அறியாதவர்கள். ஏழை பணக்காரன் என்ற வேற்றுமையில்லாதவர்கள். ஆணுக்குப் பெண் அடிமையென்ற கொள்கை அவர்களிடம் இருந்ததில்லை. ஆரியர்கள், இந்தியாவுக்கு வந்த பின்னர்தான் தமிழர் நாகரிகம் சிதைந்தது. அவர்கள் தமிழகத்தில் குடி புகுந்த பின்னர்தான் தமிழர் நாகரிகமே தலைகீழாகப் புரண்டுவிட்டது. பல தெய்வ வணக்கம், விக்கிரக வணக்கம், மூடநம்பிக்கைகள் மூட நம்பிக்கையை நிலைநாட்டும் சடங்குககள் எல்லாம் ஆரியர்களால் நுழைக்கப்பட்டவை’’. என்று இவ்வாறு சொல்லுகின்றனர், எழுதுகின்றனர் மற்றொரு பிரிவினர். இந்த இரு பிரிவினரும் எடுத்துக் கூறுகின்றனவைகளிலே உண்மை எவை? பொய்மை எவை? இவைகளைக் கண்டறிய வேண்டும். தொல்காப்பிய காலத்திலும், அதற்கு முன்னும் தமிழர் களின் வாழ்வு எவ்வாறு தழைத்திருந்தது? அவர்களிடையிலே படிந்திருந்த பழக்க வழக்கங்கள் யாவை? அவர்களுடைய அரசியல் வாழ்வும், சமுதாய வாழ்வும் எத்தகைய நிலையி லிருந்தன? இந்த உண்மைகளை நாம் தெரிந்து கொண்டால் போதும். தமிழர் நாகரிகத்தைப் பற்றி-திராவிடர் நாகரிகத்தைப் பற்றி-ஆரியர் நாகரிகத்தைப் பற்றி இன்று தலைவிரித்தாடும் ஆராய்ச்சிகளின் உண்மைகளை அறிந்து கொள்ளலாம். இவை களை அறிந்து கொள்ளுவதன் மூலம் இன்று தமிழரிடையிலே வளர்ந்து வரும் இன-மொழி-கலை வெறுப்புணர்ச்சிகள், வீழ்ந்து அன்பும் நண்பும் கூட்டுறவும் வளர வழியுண்டாகும். இந்த உண்மைகளை உணர்ந்து கொள்வதற்குத் தொல்காப்பியத்தின் மூன்றாம் பகுதியான பொருளதிகாரமே பெரிதும் துணை செய்வதாகும். ஆகையால், எத்தகைய விருப்பு வெறுப்பும் இன்றி அதனை ஆராய்வது தமிழர் கடமையாகும். மக்கள் வாழ்வும் ஒழுக்கமும் மக்கள் வாழ்வு அகவாழ்வு, புறவாழ்வு என இருவகைப்படும். இவ்வாறு இரண்டாகப் பகுத்துரைப்பதே தமிழ்நூல் முறை. அகவாழ்வைப் பற்றிக் கூறுவதே அகத்திணை அல்லது அகப்பொருள்; புறவாழ்வைப்பற்றி புகழ்வதே புறத்திணை அல்லது புறப்பொருள். ஆணும் பெண்ணும் அன்போடு ஒன்றுபட்டுக் கூடி வாழும் காதல் வாழ்வே அகவாழ்வாகும். ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதில் ஏற்படும் இன்பத்தை எவராலும் வெளிப் படையாக எடுத்துரைக்க முடியாது. அது அவர்கள் உள்ளத்தால் உணரும் ஒப்பற்ற இன்பமாகும். இவ்வாறு அகத்திலே நிகழும் இன்பத்தையே அகத்திணை என்றனர். திணை-ஒழுக்கம் அகத்திலே நிகழும் ஒழுக்கம் அகத்திணை. அகம்-மனம். அரசாட்சி, போராட்டம், விவசாயம், வாணிகம், மற்ற தொழில்கள் எல்லாம் புறத்திலே நிகழ்வன. இவைகளைப் பற்றியும், இவைகள் எப்படி நடைபெற வேண்டும் என்ற வழி துறைகளைப் பற்றியும் வாயினாற் சொல்ல முடியும். ஒவ்வொரு வரும் இவற்றைப் பற்றி புறத்தார் உணரும்படி உரைக்க முடியும். இவ்வாறு எல்லோரும் அறியும்படி சொல்லவும் செய்யவும் கூடிய செய்திகள் எல்லாம் புறப்பொருளாகும். புறத்திலே நிகழும் ஒழுக்கம் புறத்திணை. தமிழிலே உள்ள நூல்கள் எல்லாம் இருவகைப்படும். அவை அகப்பொருள் நூல், புறப்பொருள் நூல் என்பன. உலகிலே உள்ள எல்லா இலக்கியங்களும் இந்த இரண்டு வகையுள் அடங்கிவிடும். காதல் வாழ்வைப்பற்றிக் கூறும் நூல்கள் அகப்பொருள் நூல்கள். அரசியல் நூல், பொருளாதார நூல், நிலநூல், வரலாற்று நூல் விஞ்ஞான நூல், கணக்கு நூல், சிற்ப நூல், மருத்துவ நூல் போன்ற பலவகைக் கலைகளும் புறப் பொருள் நூல்கள். மக்கள் வாழ்க்கையும் அகத்திணை வாழ்வு, புறத்திணை வாழ்வு என்ற இந்த இரண்டினுள் அடங்கிவிடும். தொல்காப்பியப் பொருளதிகாரம் அகத்திணை இலக் கணத்தையும், புறத்திணை இலக்கணத்தையுமே விரிந்துரைக் கின்றது. அகவாழ்வு கைக்கிளைத்திணை, குறிஞ்சித்திணை, பாலைத்திணை, முல்லைத்திணை, மருதத்திணை, நெய்தல்திணை, பெருந்திணை என்று அகத்திணை ஏழு வகைப்படும். கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய் முற்படக் கிளந்த எழுதிணை என்ப (தொ.பொ.அக.1) “கைக்கிளைத்திணை முதல் பெருந்திணை இறுதியாக உள்ள முன்னே சொல்லப்பட்ட ஏழு திணைகளையே அகத்திணையென்று சொல்லுவார்கள்” தொல்காப்பியருக்கு முன்னிருந்த தமிழர்கள் தங்கள் அகவாழ்வு வகுத்துக் கொண்ட முறையிதுவாகும். இந்த ஏழுவகைத் திணையில் தமிழரின் காதல் வாழ்வு-குடும்ப வாழ்வு அடங்கும். கைக்கிளை என்பது ஒரு தலைக்காமம். அதாவது ஆண்-பெண் இருவருள் ஒருவரிடம் மட்டும் காதல் உணர்வு தோன்றுவது. காதல் உணர்ச்சி கொண்ட ஒருவன் பருவ மடையாத இளம்பெண் ஒருத்தியிடம் காதல் கொள்ளுவது. இதுவே கைக்கிளைத் திணையாகும். இதனால் பருவமடையாத பெண்களை மணந்து கொள்ளும் வழக்கமும் பண்டைத் தமிழகத்தில் இருந்ததென்று கொள்ளலாம். பெருந்திணை என்பது பொருந்தாக் காமம். பிறர் பழிக்கும் வகையிலே கணவனும் மனைவியும் காம வெறிகொண்டு வாழ்தல். இந்தக் கைக்கிளை, பெருந்திணைகளைப் பற்றிச் சுருக்கமாகவே கூறப்பட்டுள்ளது. ஆதலால் இந்த இரு திணைகளும் தொல் காப்பிய காலத் தமிழர்களால் அவ்வளவாகப் பாராட்டப்பட வில்லையென்பதை அறியலாம். குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல், என்ற ஒழுக்கங்கள் அந்தந்த நிலங்களிலே நடைபெறுவன. இவைகளைப் போலக் கைக்கிளைத்திணைக்கும், பெருந்திணைக்கும் தனித்தனி நிலங்கள் குறிக்கப்படவில்லை. இதுவும் குறிப்பிடத்தக்கதாகும். குறிஞ்சித்திணை: குறிஞ்சி நிலத்திலே நிகழும் ஒழுக்கத்தைப் பற்றி உரைப்பது. மக்கள் வாழும் மலையும், மலைச்சாரலும் குறிஞ்சி நிலம். சேயோன் என்பவன் குறிஞ்சி நிலத்தின் தெய்வம். சேயோனை முருகன் என்பர். ‘சேயோன் மேயாமைவரை உலகமும் (தொ.பொ.அக.5) என்பது தொல்காப்பியம். கண்ணுக்கினிய காட்சிகள் நிறைந்த மலையிலோ, மலைச் சாரலிலோதான் முதலில் காதலன் காதலிகளின் சந்திப்பு ஏற்படும். இருவரும் ஒருமனப்பட்டுக் கணவன் மனைவிகளாய் இணைந்து வாழ்வார்கள். இவர்களுடைய சந்திப்பைப் பற்றியும், இதற்கான காரணங்களைப் பற்றியும் எடுத்துரைப்பதே குறிஞ்சித்திணை. குறிஞ்சியொழுக்கம், தம்பதிகளாதல். பாலைத்திணை: பாலை நிலத்திலே நிகழும் ஒழுக்கத்தைப் பற்றி உரைப்பது பாலைத்திணை. நீரற்று வறண்டு போன நிலப்பகுதியே பாலைநிலம், தொல்காப்பியர் பாலைக்குத் தனி நிலம், குறிக்கவில்லை. முல்லையிலும் பாலை தோன்றலாம்; குறிஞ்சியிலும் பாலை தோன்றலாம்; மருதத்திலும் பாலை தோன்றலாம்; நெய்தலிலும் பாலை தோன்றலாம். வானம் பொய்த்து வறண்டுபோன எந்த நிலைத்திலும் பாலை தோன்றும். பாலைக்குத் தனித் தெய்வமும் கூறப்படவில்லை. எந்த நிலத்தில் பாலை தோன்றுகிறதோ அந்த நிலத்துத் தெய்வமே பாலைக்கும் தெய்வமாகும். காதலன் தன் காதலியை விட்டுப் பிரிந்து செல்வதைப் பற்றிச் சொல்லுவதும், பிரிவதற்கான காரணங்களைச் சொல்லுவதும் பாலைத்திணை. பாலைத்திணையின் ஒழுக்கம் பிரிவாகும். முல்லைத்திணை: முல்லை நிலத்திலே நிகழும் ஒழுக்கம் முல்லைத்திணை. காடும், காடுசார்ந்த நிலமும் முல்லை நிலம். முல்லை நிலத்தின் தெய்வம் மாயோன். மாயோனைத் திருமால் என்பர். “மாயோன் மேய காடுறை உலகமும்” (தொ.பொ.அக.5) என்பது தொல்காப்பியம். பிரிந்துபோன காதலன் திரும்பும்வரையிலும் காதலி தன் கற்பின் வலிமையால் தன் துயரத்தைப் பொறுத்துக் கொண்டி ருப்பது முல்லையொழுக்கம். அவள் ஆறுதலோடு இருப்பதற்கான காரணங்களைக் கூறுவதும் முல்லைத் திணையே. முல்லைத் திணையின் ஒழுக்கத்தை இருத்தல் என்று சுருக்கமாகக் கூறுவர். மருதத்திணை: மருத நிலத்திலே நடைபெறும் ஒழுக்கம் மருதத்திணையாகும். நீர்வளமும், செல்வங்கொழிக்கும் நில வளமும் அமைந்த நிலப்பகுதிகளும், ஊர்களும் மருதநிலமாகும். மருத நிலத்தின் தெய்வம் வேந்தன். மருதநிலத்தின் தெய்வம் வேந்தன் என்றதனால் நல்ல அரசும், நாகரிகமும் அமைந்த இடமே மருதநிலம் என்பதைக் காணலாம். வேந்தனை இந்திரன் என்றனர் பிற்காலத்தவர். “வேந்தன்மேய தீம்புனல் உலகமும்’’ (தொல்.பொ.அக.5) தொல்காப்பியம். காதலன் காதலிகளிடையே தோன்றும் ஊடல்; ஊடல் உண்டாவதற்கான காரணங்கள்; பாணன், கூத்தன், பாங்கன், தோழி, விறலி, பார்ப்பான் முதலியோர் தூதர்களாயிருந்து இவர்கள் ஊடலை நீக்கிக் கூடி வாழச் செய்யும் நிகழ்ச்சிகள் ஆகிய இவைகளைப் பற்றியெல்லாம் எடுத்துக் கூறுவது மருதத்திணை. மருதத்திணையின் ஒழுக்கம் ஊடல் ஆகும். நெய்தல்திணை: நெய்தல் நிலத்திலே நடைபெறும் ஒழுக்கத்தைப் பற்றிக் கூறுவது நெய்தல்திணை. கடற்கரையும் கடற்கரையைச் சேர்ந்த இடங்களும் நெய்தல்நிலம். நெய்தல் நிலத்திற்குத் தெய்வம் வருணன். ‘’வருணன்மேய பெருமணல் உலகமும்’’ (தொ.பொ.அக.5) என்பது தொல்காப்பியம். காதலன் பிரிவை எண்ணிக் காதலி மனம் வருந்துதலும், தன் உள்ளத் துயரத்தை வாய்விட்டு உரைப்பதும் நெய்தல் ஒழுக்கம். இதற்கான காரணங்களைக் கூறுவதும் நெய்தல் திணையே. இரங்கல் என்னும் செய்தியே நெய்தல் ஒழுக்கம். குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் இந்த ஐந்திணை நிகழ்ச்சிகளைப் பற்றியே தொல்காப்பியம் விரிவாகக் கூறுகின்றது. அகப்பொருளைப் பற்றிக் கூறும் நூல்கள் அனைத்தும் இந்த ஐந்திணை நிகழ்ச்சிகளையே அழகுபட எடுத்துரைக்கின்றன. ஒத்த பருவமும், ஒத்த உருவமும், ஒத்த குணமும், ஒத்த அறிவும், ஒத்த நிலைமையும் உடைய ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதே காதல் மணமாகும். இவ்விருவருள் பெண்ணைக் காட்டிலும் ஆணின் தரம் உயர்ந்ததாகவும் இருக்கலாம். இத்தகைய மனமொத்த இரு தம்பதிகளுக்குள் நடைபெறும் காதல் நிகழ்ச்சிகளைப் பற்றியே குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்து திணைகளும் கூறுகின்றன. பண்டைத் தமிழர் திருமணம், களவு, கற்பு என்று இருவகைப்படும். இதன் விரிவை `மணவாழ்க்கை’ என்ற பகுதியிலே விரிவாகக் காணலாம். இந்தக் களவு, கற்பு மணத் தம்பதிகளிடமே மேலே கூறிய ஐவகை ஒழுக்கமும் நடைபெறும். கைக்கிளையும், பெருந்திணையும் சிறந்த ஒழுக்கமல்ல ஆயினும் அவ்வொழுக்கங்களும் தமிழ் மக்களிடையிலே நடை பெற்று வந்தன. அவைகளும் வெளியில் சொல்ல முடியாத அகவொழுக்கங்களாகவே கருதப்பட்டன. ஆகையால் அவை களையும் அகத்திணையுடன் சேர்த்தனர் முன்னோர். அதைப் பின்பற்றியே தொல்காப்பியரும் கூறினார். புறவாழ்வு அகத்திணையை ஏழாக வகுத்தது போலவே புறத்திணை யையும் ஏழாக வகுத்துக் கூறியுள்ளார் தொல்காப்பியர். வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என்பனவே ஏழுவகைப் புறத்திணை. இந்தப் புறத்திணைகளிலே தமிழ்நாட்டில் பண்டைக் காலத்தில் நடைபெற்ற போர்முறை களைக் காணலாம்; போரிலே தமிழர் காட்டிய வீரச் செயல் களை அறியலாம்: தமிழரின் அரசியல், கொடை, புகழ் ஆகியவைகளையும் உணரலாம். உலக நிலையாமையும், அறிவுரைகளும் இவற்றுள் காணப்படுகின்றன. வெட்சித்திணை: போர்புரியக் கருதிய வேந்தன் எதிரியின் பசுமந்தையைக் கவர்வதும், கவர்ந்த பசு மந்தையை எதிரி மீட்டுக்கொள்வதும் வெட்சித்திணை. வஞ்சித்திணை: ஒரு மன்னன் தன் பகைவனுடைய நாட்டைக் கைப்பற்றிக் கொள்ளுவதற்குப் படையெடுத்துச் செல்வதும், பகை வேந்தன் அவனை எதிர்ப்பதும் வஞ்சித்திணை. உழிஞை: படையெடுத்துச் சென்ற வேந்தன் பகைவனுடைய கோட்டை மதிலை வளைத்துக் கொள்ளுவதும் உள்ளிருக்கும் வேந்தன் அம்மதிலைக் கைவிடாமல் காப்பாற்றுவதும் உழிஞைத்திணை. தும்பைத்திணை: ஒரு வேந்தன், தனது நாட்டின்மீது படையெடுத்து வந்த வேந்தனை எதிர்த்துப் போர் செய்து அவனுடைய வலிமையை அழிப்பது தும்பைத்திணை. வாகைத்திணை: பகைவரை வெல்லுதலும், ஒவ்வொரு வரும் தத்தம் செயல்களை வெற்றிபெறச் செய்தலும் வாகைத் திணை. காஞ்சித்திணை: உலகம், இளமை, செல்வம் இவைகளின் நிலையாமையைப் பற்றியும், மற்றும்பல அறிவுரைகளையும் கூறுவது காஞ்சித்திணை. பாடாண்திணை: மக்களைப் பற்றியோ. கடவுளைப் பற்றியோ, அவர்களுடைய ஒழுக்கம், வீரம், புகழ் கொடை முதலியவற்றைப் புகழ்ந்து பாடுவது பாடாண்திணையாகும். இவ்வாறு புறத்திணையை ஏழு பகுதியாகவும், அகத் திணையை மேலே கூறியபடி ஏழு பகுதிகளாகவும் வகுத்துக் கூறுகிறது தொல்காப்பியம். மக்களுடைய வாழ்க்கைச் செய்திகள் அனைத்தும் இவ்விரு திணைகளில் அடங்கிவிட்டது. - சாமி சிதம்பரனார் நூற்களஞ்சியம் - 16, பக். 177-193 நூற்பா நிரல் (நூற்பா எண்) அஆ வஎன... 9, 218 அ எனப் பிறத்தல் 110 அச்சக் கிளவிக்கு 101 அச்சம் பயமிலி 256 அசைநிலைக் கிளவி 273 அடிமறிச் செய்தி 407 அடைசினை முதலென 26 அண்மைச் சொல்லிற்கு 133 அண்மைச் சொல்லே 129 அத்திணை மருங்கின் 221 அதற்குவினை யுடைமையின் 77 அதனி னியறல் 75 அதிர்வும் விதிர்ப்பும் 316 அது இது உதுவென 169 அதுச்சொல் வேற்றுமை 215 அதுவென் வேற்றுமை 95 அந்தி லாங்க 269 அந்நாற் சொல்லும் 403 அப்பொருள் கூறின் 36 அம்ம என்னும் 155 அம்ம கேட் பிக்கும் 278 அம்முக் கிளவியும் 233 அமர்தல் மேவல் 380 அயல்நெடி தாயின் 147 அர்ஆர் பஎன 208 அரியே ஐம்மை 356 அலமரல் தெருமரல் 311 அவ்வச் சொல்லிற் 297 அவ்வழி, அவன் இவன் 164 அவ்வே, இவ்வென 121 அவற்றின் வரூஉம் 292 அவற்றுள், அழுங்கல் 350 அவற்றுள், அன்னென் இறுதி 132 அவற்றுள், இஈ ஆகும் 123 அவற்றுள், இகுமும் 277 அவற்றுள், இயற்சொல் 398 அவற்றுள், இரங்கல் 359 அவற்றுள், ஈயென் கிளவி 445 அவற்றுள், எழுவாய் 66 அவற்றுள், செய்கென் கிளவி 206 அவற்றுள், செய்யு மென்னும் 240 அவற்றுள், தடவென் கிளவி 321 அவற்றுள், தருசொல் வருசொல் 29 அவற்றுள், நான்கே இயற்பெயர் 177 அவற்றுள், நிரல்நிறை தானே 405 அவற்றுள், நீயென் கிளவி 191 அவற்றுள், பன்மை உரைக்கும் 211 அவற்றுள், பிரிநிலை 431 அவற்றுள், பெயரெனப் 162 அவற்றுள், முதனிலை 232 அவற்றுள், முன்னிலைக் கிளவி 225 அவற்றுள், முன்னிலை தன்மை 228 அவற்றுள், யாதென வரூஉம் 32 அவற்றுள், விறப்பே 348 அவற்றுள், வினைவேறு 53 அவற்றுள், வேற்றுமை 413 அவற்றொடு வருவழி 237 அவைதாம், அம் ஆம் 204 அவைதாம், இஉ ஐஓ 122 அவைதாம், உறுதவ 301 அவைதாம் தத்தங் கிளவி 429 அவைதாம் தத்தம் பொருள்வயின் 116 அவைதாம், புணரியல் 252 அவைதாம், பெண்மை இயற் 178 அவைதாம், பெயர் ஐ ஒடுகு 65 அவைதாம், முன்மொழி நிலை 419 அவைதாம், முன்னும் பின்னும் 253 அவைதாம், வழங்கியன் 114 அவையல் கிளவி 442 அளபெடைப் பெயரே 137, 143, 151 அளபெடை மிகூஉம் 127 அளவும் நிறையும் 118 அன்ஆன் அள்ஆள் 207 அன்மையின் இன்மையின் 216 அன்ன பிறவும் 396 அன்ன பிறவும் அஃறிணை 172 அன்ன பிறவும் உயர்திணை 168 அன்ன பிறவுந் தொன்னெறி 102 ஆஓ ஆகும் 197 ஆக ஆக லென்ப 282 ஆக்கக் கிளவி 22 ஆக்கந் தானே 21 ஆங்க உரையசை 279 ஆடூஉ அறிசொல் 2 ஆண்மை அடுத்த 165 ஆண்மை சுட்டிய 183 ஆண்மை திரிந்த 12 ஆயென் கிளவியும் 214 ஆரும் அருவும் 140 ஆறன் மருங்கின் 99 ஆறா குவதே 80 ஆனென் இறுதி 134 இசைத்தலும் உரிய 60 இசைநிறை அசைநிலை 411 இசைப்படு பொருளே 423 இசைப்பிசை ஆகும் 310 இடைச்சொல் எல்லாம் 455 இடைச் சொற் கிளவியும் 161 இடையெனப் படுப 251 இதன திதுவிற்று 111 இது செயல் வேண்டும் 245 இயற்கைப் பொருளை 19 இயற்கையின் உடைமையின் 81 இயற்சொல் திரிசொல் 397 இயற்பெயர்க் கிளவியும் 38 இயற்பெயர் சினைப்பெயர் 176 இயற்பெயர் முன்னர் 272 இயைபே புணர்ச்சி 309 இர்ஈர் மின்னென 226 இரட்டைக் கிளவி 48 இரண்டன் மருங்கின் 94 இரண்டா குவதே 72 இருதிணைச் சொற்கும் 174 இருதிணைப் பிரிந்த 163 இருதிணை மருங்கின் 10 இருபெயர் பலபெயர் 417 இலம்பா டொற்கம் 360 இறப்பின் நிகழ்வின்... 202, 427 இறப்பே எதிர்வே 249 இறுதியும் இடையும் 104 இறைச்சிப் பொருள்வயின் 198 இன்றில வுடைய 222 இன்ன பெயரே 195 இனச்சுட் டில்லாப் 18 இனைத்தென அறிந்த 33 ஈதா கொடுவெனக் 444 ஈரள பிசைக்கும் 283 ஈற்றுநின் றிசைக்கும் 288 ஈற்றுப்பெயர் முன்னர் 97 உகப்பே உயர்தல் 306 உகரந் தானே 125 உசாவே சூழ்ச்சி 370 உணர்ச்சி வாயில் 393 உம்முந் தாகும் 294 உம்மை எச்சம் 436 உம்மை எண்ணின் 293 உம்மை தொக்க 291 உம்மை யெண்ணும் 289 உயர்திணை என்மனார் 1 உயர்திணை மருங்கின் 421 உயாவே உயங்கல் 369 உரிச்சொல் மருங்கினும் 456 உரிச்சொற் கிளவி 299 உருபுதொடர்ந் தடுக்கிய 103 உருவுட் காகும் 302 உருவென மொழியினும் 24 உரையிடத்து 458 உவமத் தொகையே 414 உளவெனப் பட்ட 154 எச்சஞ் சிறப்பே 257 எச்ச வும்மையும் 285 எஞ்சிய இரண்டன் 146 எஞ்சிய கிளவி 227 எஞ்சிய மூன்றும் 439 எஞ்சுபொருட் கிளவி 286 எடுத்த மொழியினம் 61 எண்ணுங் காலும் 47 எண்ணே காரம் 290 எதிர்மறுத்து மொழியினும் 108 எதிர்மறை எச்சம் 435 எப்பொரு ளாயினும் 35 எய்யா மையே 342 எல்லாச் சொல்லும் 157 எல்லாத் தொகையும் 420 எல்லா மென்னும் 188 எல்லாரு மென்னும் 166 எல்லே இலக்கம் 271 எவ்வயிற் பெயரும் 69 எவ்வயின் வினையும் 428 எழுத்துப்பிரிந் திசைத்தல் 395 எற்றம் நினைவும் 337 எற்றென் கிளவி 265 எறுழ்வலி ஆகும் 388 என்றும் எனவும் 296 என்றென் கிளவியும் 261 எனவென் எச்சம் 438 ஏயுங் குரையும் 274 ஏழா குவதே 82 ஏனை இரண்டும் 30 ஏனை உயிரே 126 ஏனை உருபும் 112 ஏனை எச்சம் 234 ஏனைக் காலமும் 250 ஏனைக் கிளவி 192 ஏனைப் புள்ளி 131 ஐந்தா குவதே 78 ஐயமும் கரிப்பும் 384 ஐயுங் கண்ணும் 106 ஐவியப் பாகும் 385 ஒப்பில் போலியும் 280 ஒருபெயர்ப் பொதுச்சொல் 49 ஒருபொருள் இருசொல் 460 ஒருபொருள்...இலவே 42 ஒரு பொருள்...கிளவி 399 ஒருமை எண்ணின் 44 ஒருமை சுட்டிய எல்லாப் 185 ஒருமை சுட்டிய பெயர் 461 ஒருவ ரென்னும் 193 ஒருவரைக் கூறும் 27 ஒருவினை ஒடுச்சொல் 92 ஒழியிசை எச்சம் 434 ஒன்றறி கிளவி 8 ஒன்றறி சொல்லே 3 ஒன்றன் படர்க்கை 219 ஒன்றுவினை மருங்கின் 54 ஓம்படைக் கிளவிக் 98 ஓய்தல் ஆய்தல் 330 ஓவும் உவ்வும் 124 கடதற என்னும் 205 கடிசொல் இல்லை 452 கடியென் கிளவி 383 கண்கால் புறமகம் 83 கண்டீர் என்றா 425 கண்ணுந் தோளும் 62 கதழ்வும் துனைவும் 315 கம்பலை சும்மை 349 கமம் நிறைந்து 355 கயவென் கிளவி 322 கருமம் அல்லாச் 85 கருவி தொகுதி 354 கவர்வுவிருப் பாகும் 362 கவவகத் திடுமே 357 கழிவே ஆக்கம் 254 கழுமென் கிளவி 351 கள்ளொடு சிவணும் 171 கறுப்பும் சிவப்பும் 372 கன்றலுஞ் செலவும் 87 காப்பின் ஒப்பின் 73 காலந் தாமே 201 காலம் உலகம் 58 கிளந்த அல்ல... 119, 298 கிளந்த இறுதி 152 கு ஐ ஆன்என 109 குடிமை ஆண்மை 57 குத்தொக வரூஉம் 100 குருவுங் கெழுவும் 303 குறித்தோன் கூற்றம் 56 குறிப்பினும் வினையினும் 203 குறைச்சொற் கிளவி 453 குறைத்தன ஆயினும் 454 கூர்ப்பும் கழிவும் 314 கூறிய கிளவிப் 390 கூறிய முறையின் 70 கெடவரல் பண்ணை 319 கேட்டை என்றா 426 கொடுவென் கிளவி 447, 448 கொல்லே ஐயம் 270 சாயல் மென்மை 325 சிதைந்தன வரினும் 402 சிறப்பி னாகிய 41 சினைநிலைக் கிளவி 86 சீர்த்தி மிகுபுகழ் 313 சுட்டுமுத லாகிய 40 சுட்டுமுதற் பெயரும் 150 சுட்டுமுதற் பெயரே 144 சுண்ணந் தானே 406 செந்தமிழ் சேர்ந்த 400 செப்பினும் வினாவினும் 16 செப்பும் வினாவும் 13 செப்பே வழீஇயினும் 15 செய்து செய்யூச் 230 செய்தெ னெச்சத்து 241 செய்யாய் என்னும் 450 செய்யுள் மருங்கினும் 463 செயப்படு பொருளைச் 248 செயற்கைப் பொருளை 20 செல்லல் இன்னல் 304 செலவினும் வரவினுந் 28 செழுமை வளனும் 352 சேரே திரட்சி 363 சொல்என் எச்சம் 441 சொல்லெனப் படுப 160 ஞெமிர்தலும் பாய்தலும் 361 தகுதியும் வழக்கும் 17 தஞ்சக் கிளவி 268 தடவும் கயவும் 320 தடுமாறு தொழிற்பெயர்க்கு 96 தத்தங் குறிப்பின் 440 தத்தம் எச்சமொடு 239 தநநு எஎன 156 தநநு எஎனும் 410 தன்மேற் செஞ்சொல் 437 தன்மைச் சொல்லே 43 தன்மை சுட்டலும் 25 தன்மை சுட்டின் 194 தன்னுள் ளுறுத்த 189 தாமென் கிளவி 186 தாவென் கிளவி 446 தாவே வலியும் 344 தானென் கிளவி 187 தானென் பெயரும் 139 திணையொடு பழகிய 199 தீர்தலும் தீர்த்தலும் 318 துயவென் கிளவி 368 துவன்றுநிறை வாகும் 332 துவைத்தலுஞ் சிலைத்தலும் 358 தெரிநிலை உடைய 173 தெரிபுவேறு நிலையலுங் 159 தெவ்வுப்பகை ஆகும் 346 தெவுக்கொளற் பொருட்டே 345 தெளிவின் ஏயும் 263 தேற்றம் வினாவே 259 தொழிலிற் கூறும் 135 தொழிற்பெய ராயின் 141 நம்பும் மேவும் 329 நளியென் கிளவி 323 நன்றீற் றேயும் 284 நன்றுபெரி தாகும் 343 நனவே களனும் 376 நான்கா குவதே 76 நிகழூஉ நின்ற 175 நிரல்நிறை சுண்ணம் 404 நிலப்பெயர் குடிப்பெயர் 167 நிலனும் பொருளும் 236 நிறத்துரு உணர்த்தற்கும் 373 நின்றாங் கிசைத்தல் 59 நீயிர் நீயென 190 நும்மின் திரிபெயர் 145 நொசிவும் நுழைவும் 374 பசப்புநிறன் ஆகும் 308 படரே உள்ளல் 340 பண்புகொள் பெயரும் 136,142 பண்புதொக வரூஉம் 418 பணையே பிழைத்தல் 339 பயப்பே பயனாம் 307 பரவும் பழிச்சும் 382 பல்ல பலசில 170 பல்லோர் படர்க்கை 229 பலவயி னானும் 51 பழுதுபயம் இன்றே 324 பன்முறை யானும் 234 பன்மை சுட்டிய 184 பன்மையும்... இலவே 217, 223 பன்மையும்... யவ்வே 210, 220 பால்மயக் குற்ற 23 பாலறி மரபின் 213 பிண்டப் பெயரும் 91 பிணையும் பேணும் 338 பிரிநிலை வினாவே 258 பிரிநிலை வினையே 430 பிறிதுபிறி தேற்றலும் 105 பின்முன் கால்கடை 231 புதிதுபடற் பொருட்டே 379 புலம்பே தனிமை 331 புள்ளியும் உயிரும் 153 புனிறென் கிளவி 375 பெண்மை சுட்டிய உயர்திணை 4 பெண்மை சுட்டிய எல்லா 182 பெண்மை சுட்டிய சினை முதற் 180 பெண்மைச் சினைப்பெயர் 179 பெண்மை முறைப்பெயர் 181 பெயரி னாகிய 68 பெயரினுந் தொழிலினும் 50 பெயரெஞ்சு கிளவி பெயரொடு 433 பெயரெஞ்சு கிளவியும் 238 பெயர்நிலைக் கிளவி காலந் 71 பெயர்நிலைக் கிளவியின் 449 பேம் நாம் உருமென 365 பையுளுஞ் சிறுமையும் 341 பொருட்குத்திரி பில்லை 392 பொருட்குப் பொருள் 391 பொருண்மை சுட்டல் 67 பொருண்மை தெரிதலும் 158 பொருள்தெரி மருங்கின் 408 பொருளொடு புணராச் 37 பொற்பே பொலிவு 335 மகடூஉ மருங்கின் 196 மதவே மடனும் 377 மல்லல் வளனே 305 மழவும் குழவும் 312 மற்றென் கிளவி 264 மற்றைய தென்னும் 266 மறைக்குங் காலை 443 மன்றவென் கிளவி 267 மன்னாப் பொருளும் 34 மாதர் காதல் 328 மாரைக் கிளவியும் 209 மாவென் கிளவி 275 மிக்கதன் மருங்கின் 244 மிகுதியும் வனப்பும் 378 மியாஇக மோமதி 276 முதல்முன் ஐவரின் 89 முதலிற் கூறுஞ் 115 முதலுஞ் சினையும் 90 முதற்சினைக் கிளவிக்கு 88 முந்நிலைக் காலமும் 242 முரஞ்சல் முதிர்வே 333 முழுதென் கிளவி 326 முற்படக் கிளத்தல் 39 முற்றிய உம்மைத் 287 முறைப்பெயர்...இயல 149 முறைப்பெயர்...வருமே 138 முறைப்பெயர் மருங்கின் 128 முன்னத்தின் உணரும் 459 முன்னிலை சுட்டிய 462 முன்னிலை முன்னர் 451 முன்னிலை வியங்கோள் 224 முனைவுமுனி வாகும் 386 மூன்றனும் ஐந்தனும் 93 மூன்றா குவதே 74 மெய்பெறக் கிளந்த 389 மொழிப்பொருட் காரணம் 394 மொழிமாற் றியற்கை 409 யாஅர் என்னும் 212 யாகா பிறபிறக்கு 281 யாணுக் கவின் 381 யாதன் உருபின் 107 யாதெவன் என்னும் 31 ரஃகான் ஒற்றும் 7 வடசொற் கிளவி 401 வண்ணத்தின் வடிவின் 416 வண்ணம் வடிவே 79 வம்புநிலை யின்மை 327 வயவலி ஆகும் 366 வயாவென் கிளவி 371 வறிதுசிறி தாகும் 336 வன்புற வரூஉம் 246 வார்தல் போகல் 317 வாராக் காலத்து 247 வாராக் காலத்தும் 243 வாரா மரபின 422 வாள்ஒளி ஆகும் 367 வியங்கோள் எண்ணுப்பெயர் 45 வியலென் கிளவி 364 விரைசொல் அடுக்கே 424 விழுமம் சீர்மையும் 353 விழைவின் தில்லை 262 விழைவே காலம் 255 விளிகொள் வதன்கண் 64 விளியெனப் படுப 120 விறப்பும் உறப்பும் 347 வினாவும் செப்பே 14 வினையின் தொகுதி 415 வினையின் தோன்றும் 11 வினையினும் பண்பினும் 148 வினையெஞ்சு கிளவிக்கு 432 வினையெஞ்சு கிளவியும் 457 வினையெனப் படுவது 200 வினையே குறிப்பே 260 வினையே செய்வது 113 வினையொடு நிலையினும் 295 வினைவேறு படாஅப் 55 வினைவேறு படூஉம் 52 வெம்மை வேண்டல் 334 வெளிப்படு சொல்லே 300 வேற்றுமைத் தொகையே 412 வேற்றுமை தாமே 63 வேற்றுமைப் பொருளை 84 வேற்றுமை மருங்கின் 117 வேறுவினைப் பொதுச்சொல் 46 வையே கூர்மை 387 ளஃகான் ஒற்றே 6 னஃகான் ஒற்றே 5 னரலள என்னும் 130 சொல் நிரல் மேற்கோள் (நூற்பா எண்) அ அஃது 169 அங்கு 298 அச்சன் 400 அஞ்சின 218 அஞ்சினம் 204 அடிகள் 131 அடிகேள் 131 அடிசில் 46 அடியார் 168 அடியாள் 168 அடியான் 168 அடுவீர் 226 அணி 46 அணியள் 146 அணியாள் 146 அணில் 153 அணிலே 153 அத்தா 128 அத்தாய் 128 அத்திகோசத்தார் 167 அத்தை 128 அது 169 அந்தோ 397,400 அம்பர்கிழான் 167 அம்பருடைச்சி 167 அம்மாட்டான் 165 அமலம் 401 அமைச்சு 57 அயன் 402 அயின்றார் 46 அரங்கம் 402 அரசர் 167 அரசி 167 அரசு 57 அரற்றினம் 204 அரன் 402 அரி 402 அரிவாள் 415 அருகம் 402 அருங்குரைத்து 251 அருஞ்செல்லல் 456 அருத்தம் 402 அருத்தாபத்தி 402 அருத்தினம் 204 அருந்திறல் 57 அருவாட்டி 167 அருவாளன் 167 அல்ல 222 அல்லது 231 அல்லம் 217 அல்லர் 216 அல்லள் 216 அல்லன் 216 அல்லால் 231 அலி 57 அவ் 169 அவர் 164 அவள் 164 அவன் 164 அவை 169 அழன் 452 அழாஅன் 196 அளகு 399 அறிவிலி 463 அன்றி 232 அன்று 222 அன்ன 236 அன்னது 172 அன்னள் 168 அன்னன் 165 அன்னன 172 அன்னா 128 அன்னாய் 128 அன்னான் 165 அன்னை 128 அன்னைமார் 461 அனைத்தும் 289 அனையது 172 அனையன் 165 அனையன 172 அனையாள் 168 அனையான் 165 ஆ ஆ 171,230 ஆக்கள் 171 ஆகாயம் 172 ஆங்கு 28 ஆடரங்கு 415 ஆடூ 126 ஆடூவே 126 ஆண்பால் 147 ஆண்மக்கள் 57 ஆண்மகன் 145 ஆண்மை 57 ஆணை 402 ஆய் 182,230 ஆயர் 167 ஆயினான் 230 ஆயே 231 ஆரம் 402 ஆவன் 216 இ இஃது 169 இகுளை 400 இங்கு 298 இடத்து 231 இடபம் 402 இடையன் 11 இடையாய் 135 இது 169 இம்பர் 410 இம்மாட்டான் 165 இம்மை 410 இயக்கன் 402 இயம் 46 இருடிகள் 402 இருத்தி 44 இருமை 396 இருவர் 167 இருவன் 44 இல்ல 170 இல்லத்தன் 215 இல்லத்தான் 215 இல்லது 172 இல்லர் 216 இல்லள் 216 இல்லன் 216 இல்லன 172 இல்லை 224 இல 222 இலங்கை 402 இவ், 169 இவறல் 396 இவர் 164 இவள் 164 இவன் 164 இவை 169 இழிந்த 463 இழிந்தன்றுமிலன் 219 இழிந்தான் 219 இழிந்திலன் 219 இழிந்து 463 இளம்பெருங்கூத்தன் 26 இளைது 463 இளையவரே 142 இளையன் 463 இளையர் 142 இளையீர் 142 இளையீரே 142 இறவுளர் 167 இறைவரே 131 இன்மை 224 இன்றி 232 இன்று 222 இன்ன 236 ஈ ஈ 226 ஈங்கு 28 ஈந்தான் 226 ஈப்பி 226 ஈப்பித்தான் 226 உ உஃது 169 உங்கு 298 உடீஇயினான் 230 உடைத்து 222 உடைமை 215 உடைய 222 உடையம் 217 உடையர் 216 உடையள் 216 உடையன் 216 உண் 226 உண்கின்றேம் 204 உண்கின்ற 218 உண்கின்றது 219 உண்கின்றன 218 உண்கின்றனம் 104 உண்கின்றனர் 208 உண்கின்றனள் 207 உண்கின்றனன் 207 உண்கின்றனெம் 204 உண்கின்றனென் 205 உண்கின்றனேம் 204 உண்கின்றனேன் 205 உண்கின்றாம் 204 உண்கின்றார் 208 உண்கின்றாள் 207 உண்கின்றான் 207 உண்கின்றில 218 உண்கின்றிலது 219 உண்கின்றிலம் 204 உண்கின்றிலர் 208 உண்கின்றிலள் 207 உண்கின்றிலன் 207 உண்கின்றிலாம் 204 உண்கின்றிலார் 208 உண்கின்றிலாள் 207 உண்கின்றிலான் 207 உண்கின்றிலெம் 204 உண்கின்றிலென் 205 உண்கின்றிலேம் 204 உண்கின்றிலேன் 205 உண்கின்றேம் 204 உண்கின்றேன் 205 உண்கு 205 உண்கும் 204 உண்குவ 218 உண்குவம் 204 உண்குவர் 208 உண்குவள் 207 உண்குவன் 207 உண்குவாம் 204 உண்குவர் 208 உண்குவாள் 207 உண்குவான் 207 உண்குவிர் 226 உண்குவீர் 226 உண்குவெம் 204 உண்குவேம் 204 உண்குவேன் 205 உண்குவை 225 உண்ட 218 உண்டது 219 உண்டல் 172 உண்டவற்கு 230 உண்டவன் 252 உண்டன்று 219 உண்டன 218 உண்டனம் 204 உண்டனர் 208 உண்டனரல்லர் 208 உண்டனவல்ல 218 உண்டனவில்லை 218 உண்டனள் 207 உண்டனளல்லள் 207 உண்டனன் 207 உண்டனனல்லன் 207 உண்டனிர் 226 உண்டனெம் 204 உண்டனெமல்லெம் 204 உண்டனென் 205 உண்டனெனல்லென் 205 உண்டனேம் 204 உண்டனேன் 205 உண்டனேனல்லேன் 205 உண்டனை 225 உண்டாம் 204 உண்டாமல்லாம் 204 உண்டாய் 225,148 உண்டார் 208 உண்டாரல்லர் 208 உண்டாள் 207,148 உண்டாற்கு 230 உண்டான் 203,207 உண்டானல்லன் 207 உண்டி 225 உண்டியோ 13 உண்டில 218 உண்டிலது 219 உண்டிலேம் 204 உண்டிலர் 208 உண்டிலள் 207 உண்டிலன் 207 உண்டிலாம் 204 உண்டிலாய் 225 உண்டிலார் 208 உண்டிலாள் 207 உண்டிலான் 207 உண்டிலிர் 226 உண்டிலீர் 226 உண்டிலெம் 204 உண்டிலென் 205 உண்டிலேம் 204 உண்டிலேன் 205 உண்டிலை 225 உண்டின்று 219 உண்டீ 451 உண்டீர் 226 உண்டு 205 உண்டுகாண் 226 உண்டும் 204 உண்டேம் 204 உண்டேமல்லேம் 204 உண்டேன் 205 உண்ணல் 226 உண்ணல 218 உண்ணலம் 204 உண்ணலர் 208 உண்ணலள் 207 உண்ணலன் 207 உண்ணலாய் 225 உண்ணலிர் 226 உண்ணலீர் 226 உண்ணலெம் 204 உண்ணலென் 205 உண்ணலை 225 உண்ணன்மின் 226 உண்ணா 218 உண்ணாக்கடை 238 உண்ணாகிடந்தாம் 204 உண்ணாக்கால் 238 உண்ணாதொழிப 208 உண்ணாநிற்ப 208 உண்ணாநிற்பல் 205 உண்ணாநிற்றி 225 உண்ணாநின்ற 218 உண்ணாநின்றது 219 உண்ணாநின்றன 218 உண்ணாநின்றனம் 204 உண்ணாநின்றனர் 208 உண்ணாநின்றனள் 207 உண்ணாநின்றனன் 207 உண்ணாநின்றனிர் 226 உண்ணாநின்றனெம் 204 உண்ணாநின்றனென் 205 உண்ணாநின்றனேம் 204 உண்ணாநின்றனேன் 205 உண்ணாநின்றனை 225 உண்ணாநின்றாம் 204 உண்ணாநின்றாய் 225 உண்ணாநின்றார் 7, 208 உண்ணாநின்றாள் 207 உண்ணாநின்றான் 207 உண்ணாநின்றில 218 உண்ணாநின்றிலது 219 உண்ணாநின்றிலாம் 204 உண்ணாநின்றிலர் 208 உண்ணாநின்றிலள் 207 உண்ணாநின்றிலன் 207 உண்ணாநின்றிலாம் 204 உண்ணாநின்றிலாய் 225 உண்ணாநின்றிலார் 208 உண்ணாநின்றிலாள் 207 உண்ணாநின்றிலான் 207 உண்ணாநின்றிலிர் 226 உண்ணாநின்றிலீர் 226 உண்ணாநின்றிலெம் 204 உண்ணாநின்றிலென் 205 உண்ணாநின்றிலேம் 204 உண்ணாநின்றிலேன் 205 உண்ணாநின்றிலை 225 உண்ணாநின்றீர் 226 உண்ணாநின்றேம் 204 உண்ணாநின்றேன் 204 உண்ணாம் 204 உண்ணாய் 226 உண்ணார் 208 உண்ணாவழி 238 உண்ணாவிடத்து 238 உண்ணாள் 207 உண்ணான் 207 உண்ணாவிருந்தாம் 204 உண்ணிய 230 உண்ணியர் 230 உண்ணும் 226 உண்ணுமது 71 உண்ணேம் 204 உண்ணேன் 205 உண்ணேனே 209 உண்ணேனோ 14 உண்ப 208,218 உண்பது 219 உண்பம் 204 உண்பர் 208 உண்பல் 205 உண்பள் 207 உண்பன் 207 உண்பன 218 உண்பாம் 204 உண்பாய் 225 உண்பார் 208 உண்பாள் 207 உண்பான் 207 உண்பிர் 226 உண்பீர் 226 உண்பெம் 204 உண்பென் 205 உண்பேம் 204 உண்பேன் 205 உண்பேனே 450 உண்பை 225 உண்மன 127 உத்தி 402 உது 169 உந்தி 399 உப்பிறப்பு 410 உப்பெண்டு 165 உம்பர் 410 உம்மாட்டான் 165 உம்மை 410 உரிஞ் 226 உரிஞி 226 உரிஞியது 219 உரிஞியென 230 உரிஞின 218 உரிஞினம் 204 உரிஞினாய் 225 உரிஞினான் 226 உரிஞினை 225 உரிஞு 230 உரிஞுகு 205 உரிஞுவம் 204 உரிஞுப 208 உரிஞுபு 230 உரிஞுமின் 226 உரிஞுவ 218 உரிஞுவம் 204 உரிஞுவன 218 உரிஞுவி 226 உரிஞுவித்தான் 226 உரிஞுவீர் 226 உரைஇயினான் 230 உரைக்க 230 உரைக்கிற்றி 225 உரைக்கும்வழி 231 உரைக்குமிடத்து 231 உரைத்தனம் 204 உரைத்தனமல்லம் 204 உரைத்தனெம் 204 உரைத்தனெமல்லெம் 204 உரைத்தனேம் 204 உரைத்தாம் 204 உரைத்தாமல்லாம் 204 உரைத்தி 225 உரைத்திலம் 204 உரைத்திலாம் 204 உரைத்திலெம் 204 உரைத்திலேம் 204 உரைத்தீ 451 உரைத்தேம் 204 உரைத்தேமல்லேம் 204 உரைப்ப 230 உரைப்பாய் 225 உரைப்பின் 230 உரைப்பை 225 உலகம் 58 உலமரல் 34 உலோகம் 402 உலோபம் 402 உவ் 169 உவமை 402 உவன் 159 உவை 169 உழவர் 167 உழாஅஅன் 137 உள்ள 170 உள்ளது 172 உள்ளன 172 உள 222 உளது 222 உளர் 216 உளள் 216 உற்பலம் 401 உறுகால் 158,389,392,456 உறைபதி 96 ஊ ஊட்டினான் 226 ஊட்டு 226 ஊதினார் 47 ஊர்க்கால் 152 ஊர 133 ஊரன் 132 ஊரா 132 எ எங்கு 298 எஞ்சி 230 எஞ்சியது 219 எஞ்சியென 230 எட்டி 168 எண்ணினம் 204 எந்தை 183 எம்பி 156 எம்பீ 156 எம்பெருமா 131 எம்மார் 156 எம்மாள் 156 எம்மான் 156 எம்மை 410 எமர் 156 எமள் 156 எமன் 156 எயினர் 167 எருத்து 400 எருமை 400 எல்லாம் 289 எல்லாரும் 166 எல்லீரும் 166 எலுவன் 400 எவன் 34,221,427 எழுத்து 119 எழுப்பினான் 226 எழுப்பு 226 எள்ளினம் 204 என் 31 என்கணின்று 83 என்மனார் 399 என்றிசினோர் 251,399 என்ன 236 என்னை 31 ஏ ஏடா 131,400 ஏடீ 131 ஏதிலன் 463 ஏந்தல் 146 ஏந்தால் 146 ஏமாள் 147 ஏயினான் 230 ஏழேகால் 163 ஏறு 119 ஏனம் 309 ஏனாதி 168 ஏனோன் 463 ஒ ஒட்டகம் 61,171 ஒண்டொடி 37 ஒருத்தி 164 ஒருவர் 167 ஒருவன் 164 ஒருவேன் 44 ஒருவை 44 ஒழிப 208 ஒழிவல் 205 ஒன்று 170,184 ஓ ஓடி 230 ஓடுவ 218 ஓனம் 309 ஒள ஒளஉ 283 க கச்சினன் 215 கச்சினான் 215 கச்சுஇலன் 216 கடல் 171 கடல்கள் 171 கடவாநின்றீர் 226 கடவுள் 131 கடிசூத்திரம் 119 கடிது 463 கடிப்பகை 463 கடியன் 463 கடியாள் 147 கடு 119 கடை 231 கடைஇயினான் 230 கண்டை 426 கண்ணன் 402 கணக்கச்சி 463 கணவாட்டி 463 கணி 126 கணியார் 141 கணியீரே 141 கணியே 126 கதுமென 298 கபிலம் 119 கமலம் 401 கமுகு 398 கயவர் 320 கரி 126 கரிது 222 கரிய 9,222,236 கரியது 170,416 கரியம் 217 கரியர் 217 கரியவரே 142 கரியள் 217 கரியன் 203,215,217 கரியன 9,170,416 கரியாம் 217 கரியர் 217,142 கரியாய் 225,226,136,148 கரியாள் 167,217 கரியான் 167,217,136,148 கரியிர் 226 கரியீர் 226,42 கரியீரே 142 கரியெம் 217 கரியென் 217 கரியே 126 கரியேம் 217 கரியேன் 217 கரியை 225,226 கரு 200 கருங்களமர் 17 கருங்குதிரை 416 கருங்குதிரைகள் 416 கருங்குவளை 184 கருப்பம் 402 கரும்பார்ப்பனி 416 கரும்பார்ப்பார் 416 கரும்பார்ப்பான் 416 கருமம் 402 கருமை 172 கருமையன் 215 கரைய 400 கலக்கினம் 204 கலாயினான் 230 கழலாய் 135 கழலினாய் 226 கழலினிர் 226 கழலினீர் 226 கழலினை 226 களமர் 167 களைந்தன்றுமிலன் 219 களைந்தான் 219 களைந்திலன் 219 கற்குபு 230 கறுகறுத்தது 48 கறுப்பு 299,372 காடன் 176 காடி 176 காண்க 209 காண்பார் 209 காணாதொழிவார் 209 காத்தை 426 காது 62 காப்பியம் 402 காமம் 402 காரகம் 401 காரணம் 401 காரா 399 காரியம் 401 கால் 231 காலம் 58 காவிதி 168 காளை 199 கிழவி மாட்டு 83 கிழாஅன் 137,197 கிழாஅஅன் 137 கிள்ளை 399 கிளி 153 கிளியே 153 கீதம் 402 குங்குமம் 401 குட்டுவன் 167 குட்டை 400 குடிமை 57 குண்டுகட்டு 8,219 குத்து 119 குதிரை 171 குதிரைகள் 171 குமரி 402 குரிசில் 146 குரிசீல் 146 குருகு 53 குருடு 57 குருமணி 456 குழல் 119 குழவி 176 குழைஇலன் 216 குழையள் 46 குழையன் 215 குழையாள் 46 குளம் 400 குளம்பின்று 8 குளிர 400 குளிரு 397 குறவர் 167 குறுகுறுத்து 48 குறுங்கோட்டன 416 குறுணி 400 குறுந்தாட்டு 8, 219 குறுமுனி 416 கூ 226 கூகை 399 கூத்தர் 140 கூத்தீர் 140 கூந்தால் 152 கூயிற்று 219 கூயின்று 219 கூரியது 219 கூவினான் 226 கூவுவி 226 கூவுவித்தான் 226 கூழ் 398 கூறுப 7 கூறுவன் 204 கெழீஇயிலி 57 கெழுமுதல் 303 கேட்டை 426 கேண்மியா 253,276 கேணி 400 கை 226 கைத்தான் 226 கைப்பி 226 கைப்பித்தான் 226 கையர் 400 கைவாரி 463 கொக்கு 400 கொடு 226 கொடுங்கோல் 444 கொடுத்தான் 226 கொடுப்பி 226 கொடுப்பித்தான் 226 கொண்டான் 226 கொப்பூழ் 399 கொம்மென 298 கொல்லர் 167 கொல்லிச்சி 167 கொள் 226 கொள்வித்தான் 226 கொள்ளுவி 226 கொற்றன் 71, 176 கொறுகொறுத்தது 48 கோ 124, 129 கோஒஒள் 151 கோட்ட 9 கோடு 463 கோடும் 463 கோபம் 401 கோமாள் 147 கோவே 124 கோழி 399 கோறு 463 கோறும் 463 கௌ 283 கௌஉ 283 ச சட்டி 452 சதம் 402 சமை 452 சர்ச்சரை 402 சலம் 402 சள்ளை 452 சாத்த 152 சாத்தன் 1, 71, 163 சாத்தன்கண் 70 சாத்தன்றனது 105 சாத்தனதற்கு 105 சாத்தனதன்கண் 105 சாத்தனதனின் 105 சாத்தனதனை 105 சாத்தனதனொடு 105 சாத்தனது 104 சாத்தனின் 104 சாத்தனை 104 சாத்தா 152 சாத்தாஅ 154 சாத்தி 152 சாத்தீ 152 சாதனம் 402 சாதி 402 சாம் 11 சாலை 402 சிக்க 400 சிக்கு 397 சிங்கம் 402 சித்தி 402 சில்லவை 172 சில 170 சிவப்பு 373 சிறந்த 463 சிறந்து 463 சிறாஅஅர் 143 சிறிது 463 சிறியன் 463 சிறுமை 463 சுண்ணத்தான் 168 சுத்தம் 402 சுமையன் 176 சுருசுருத்தது 48 சூத்திரம் 402 சூலம் 202 செங்கேழ் 456 செஞ்செவி 459 செட்டிச்சி 463 செப்பீமன் 399 செப்பு 400 செம்மை 172 செய் 200 செய்கு 205 செய்கும் 205 செய்குன்று 96 செய்த 224 செய்ம்மன 224 செய்ய 236 செய்யது 203 செய்யன் 215 செய்யாள் 167 செய்யான் 167 செய்யும் 224 செருமியது 219 செருமின 218 செருமுவ 218 செல் 226 செல்வது 219 செல்வல் 69 செல்வார் 167 செலவிற்று 222 செலுத்துவி 226 செலுத்துவித்தான் 226 செறு 400 சென்மியா 276 சென்ற 218 சென்றது 203, 219 சென்றவரே 141 சென்றன்று 219 சென்றன 218 சென்றாய் 135 சென்றார் 141 சென்றான் 226,135 சென்றில 218 சென்றிலது 219 சென்றின்று 219 சென்றீ 451 சென்றீரே 141 சென்று 230 சென்றோம் 213 சேண் 396 சேதா 399 சேந்தன் 39 சேர்ப்பன் 167,132 சேர்ப்பா 132 சேரமாஅன் 154 சேரமான் 167,134 சேரின 218 சேறு 205 சேறும் 204 சேனை 402 சொல் 119 சொல்லியது 219 சொல்லின 218 சொல்லினம் 204 சொல்லுவன் 204 சொல்வ 10 சோழ 132 சோழா 131 சோழன் 132 சோழிச்சி 167 சோழியன் 167 சோறு 398 ஞ ஞண்டு 452 ஞமலி 400 ஞானம் 401 ஞெண்டு 452 ஞெள்ளை 400 ஞேயம் 401 த தகைத்த 9 தகைத்தன 9 தகைப்ப 9 தகைப்பன 9 தகையாநின்ற 9 தகையாநின்றன 9 தங்கினை 410 தச்சர் 167 தட்டாத்தி 167 தட்டார் 167 தண்டூண் 119 தண்ணீர் 416 தத்தை 399 தந்தாய் 152 தந்திரம் 402 தந்துவை 400 தந்தை 152 தந்தையர் 167 தப்பி 230 தப்பியது 219 தப்பின 218 தப்பினது 204 தபு 2450 தம்மார் 156 தம்மாள் 156 தம்மான் 156 தமர் 156 தமர்காள் 156 தமள் 156 தமன் 156 தமாலம் 401 தமி 331 தரூஉந்து 235 தரையன் 176 தவ 456 தவிர்ப 208 தவிர்வல 205 தழீஇயினான் 230 தள்ளை 400 தாம் 176 தாயர் 167 தாயிற்று 8 தாயினான் 230 தாரம் 401 தாரான் 463 தாவாத 299 தாவுவ 218 தாழ் 226 தாழ்குழல் 84 தாழ்குழலே 131 தாழ்த்துவி 226 தாழ்த்துவித்தான் 226 தாழ்ந்தான் 226 தான் 176 திமிலர் 167 திரிதாடி 418 திரு 125 திரும் 226 திருமாலே 131 திருமினம் 204 திருமினான் 226 திருமுகம் 17 திருமுகு 205 திருமுதும் 204 திருமுவம் 204 திருமுவி 226 திருமுவித்தான் 226 திருவிலி 463 திருவே 125 திரையன் 176 திலகம் 401 தின் 226,200 தின்குவ 218 தின்பாய் 225 தின்பி 226 தின்பித்தான் 226 தின்பை 225 தின்றல் 172,200 தின்றனம் 204 தின்றனமல்லம் 204 தின்றனனெம் 204 தின்றனெமல்லெம் 204 தின்றனேம் 204 தின்றாம் 204 தின்றாமல்லாம் 204 தின்றார் 47 தின்றான் 200 தின்றி 225 தின்றிலம் 204 தின்றிலாம் 204 தின்றிலெம் 204 தின்றிலேம் 204 தின்றேம் 204 தின்றேமல்லேம் 204 தின்னா 218 தின்னாய் 226 தின்னிய 230 தின்னியர் 230 தின்னும் 226 தீ 172,398 தீது 222 தீந்தேன் 419 தீமை 463 தீய 222 தீயர் 216 தீயள் 216 தீயன் 216 தீயாய் 136 தீயான் 136 தீர்ந்த 463 தீர்ந்து 463 தீற்றினான் 226 தீற்று 226 துங்கம் 402 துஞ்சினார் 17 துஞ்சினான் 442 துடியர் 143 துணங்கையன் 215 தும்பீ 122 துலாம் 118 துவைக்கும் 161 துவைத்தல் 161 துள்ளியது 219 துள்ளின 218 துறைவன் 132 துறைவ 133 துறைவா 132 துன்னியது 219 துன்னின 218 தூங்குந்து 235 தூணி 118 தூயினான் 230 தெங்கு 398 தெய்வம் 58 தெருட்டினம் 204 தெவ் 226 தெவ்வினான் 226 தெவ்வுவி 226 தெவ்வுவித்தான் 226 தெவிட்டுதல் 396 தென்பாண்டி 449 தென்னன் 419 தெனாஅது 222 தேய் 226 தேய்த்தான் 226 தேய்ப்பி 226 தேய்ப்பித்தான் 226 தொக்க 218 தொக்கன 218 தொக்கில 218 தொடி 118 தொல்காப்பியம் 119 தொழீஇஇ 127 தொழீஇஇஇ 127 தொன்மை 396 தோழி 118 தோன்றல் 146 தோன்றால் 146 ந நக்கனம் 204 நக்கனமல்லம் 204 நக்கனெம் 204 நக்கனெமல்லெம் 204 நக்கனேம் 204 நக்காம் 204 நக்காமல்லாம் 204 நக்கிலம் 204 நக்கிலாம் 204 நக்கிலெம் 204 நக்கிலேம் 204 நக்கு 230 நக்கேம் 230 நக்கேமல்லேம் 123 நகு 410 நகுதல் 123, 219 நங்காய் 123 நங்கை 410 நங்கைமார் 129 நட்டம் 219 நட 226 நடக்கின்றது 219 நடக்கின்றலது 226 நடத்தினான் 226 நடத்து 226 நடத்துவி 226 நடத்துவித்தான் 226 நடத்துவிப்பி 226 நடந்தான் 226 நடப்பி 226 நடப்பித்தான் 226 நடப்பிப்பி 226 நடப்பின் 230 நடவாநின்றது 219 நடவாநின்றிலது 219 நடவாய் 226 நண்டு 452 நண்ணியது 219 நண்ணின 218 நதி 402 நம்பான் 131 நம்பி 123 நம்பிமார் 461 நம்பியார் 141 நம்பியீரே 141 நம்பீ 123,129 நம்பீஇ 154 நம்மனோர்க்கே 410 நம்மார் 156 நம்மாள் 156 நம்மான் 156 நமர் 156,410 நமர்காள் 156 நமரங்காள் 156 நமள் 156,410 நமன் 156,410 நல்ல 222 நல்லர் 216 நல்லள் 216 நல்லன் 216 நல்லாடை 416 நறும்பூ 416 நன்காடு 17 நன்மை 463 நன்று 222 நனி 456 நாட்டாய் 226 நாட்டினிர் 226 நாட்டினீர் 226 நாட்டை 226 நாடன் 176 நாடி 176 நாம் 164 நாமம் 401 நாய் 171 நிமித்தம் 401 நிருத்தம் 402 நிலத்தம் 217 நிலம் 172,398 நிலவுக 209 நிலவுவார் 209 நிலவாதொழிவார் 209 நிலாயினான் 230 நீ 176 நீயிர் 176 நீர் 172,398 நீலம் 115 நுங்கிளை 410 நுண்ணூல் 416 நுந்தை 183 நும்மார் 156 நும்மாள் 156 நும்மான் 156 நுமர் 156 நுமள் 156 நுமன் 156 நுளையர் 167 நூறு 170 நெடுஞ்செவித்து 222 நெடுஞ்செவிய 222 நொ 226 நொந்தான் 226 நொவ்வுவி 226 நொவ்வுவித்தான் 226 நொறில் 396 ப பக்கம் 402 பங்கயம் 402 பச்சிழை 399 பசித்தேன் 15 படை 46 பத்து 170 பதக்கு 118 பதினைந்து 417 பந்தம் 402 பரதவர் 167 பராயினான் 230 பராரை 416 பருப்பதம் 402 பல்ல 170 பல்லவை 172 பல 170 பலம் 402 பலர் 164 பலா 171 பழுது 324 பழைது 463 பழையன் 463 பன்னினம் 204 பனத்தி 463 பாசிலை 403 பாடாதொழிவார் 209 பாடுக 209 பாடுவார் 209 பாண்டில் 400 பாய்ச்சினான் 226 பாய்ச்சு 226 பார் 226 பார்த்தான் 226 பார்ப்பனி 167 பார்ப்பார் 167,140 பார்ப்பி 226 பார்ப்பித்தான் 226 பார்ப்பீர் 140 பாரம் 402 பால் 398 பாழி 400 பிணிமுகம் 399 பிற 172 பிறர் 156, 168 பிறள் 156, 168 பிறன் 156, 168 பிறிது 172 பின் 231 பின்னர் 231 பின்னை 231 புக்கது 219 புக்கன்று 219 புக்கிலது 219 புக்கின்று 219 புக்கீ 451 புதிது 463 புதியன் 463 புரி 402 புருவம் 62 புரோசு 57 புல்வாய் 171 புலி 152 புலிப்பாய்த்துள் 414 புலியான் 449 புலியே 153 புறத்தன் 215 பூங்கன்று 55 பூசல் 71 பூசையான் 449 பூட்டு 223 பூண்டு 152 பூண்டே 152 பூயிலான் 168 பூழியன் 167 பெண்டாட்டி 164 பெண்டிர் 168, 131 பெண்டு 165 பெண்டுகள் 168 பெண்பால் 147 பெண்மக்கள் 57 பெண்மகள் 165 பெண்மகன் 166 பெண்மை 165 பெரிது 463 பெரியன் 463 பெருகிற்று 17 பெருங்காலர் 167 பெருங்காலன் 176 பெருங்கொற்றன் 27 பெருஞ்சாத்தன் 27 பெருந்தலைச்சாத்தன் 26 பெருந்தோளர் 167 பெருமை 463 பெருவழுதுணங்காய் 26 பெருவிறல் 57 பெற்றம் 24, 400 பேரின்னல் 456 பைங்கண் 399 பைந்தார் 399 பொதுவர் 167 பொம்மென 298 பொருந் 226 பொருநியது 219 பொருநின 218 பொருநினம் 204 பொருநினான் 226 பொருநுவி 226 பொருநுவித்தான் 226 பொருப்பன் 395 பொருள் 119 பொள்ளென 298 பொறியறை 57 பொன் 115 பொன்மணி 463 பொன்மேனி 414 பொன்னன்ன 222 பொன்னன்னது 222 பொன்னன்னம் 217 பொன்னன்னாய் 226 பொன்னன்னிர் 226 பொன்னன்னீர் 226 பொன்னன்னை 226 போ 226 போக்கினான் 226 போக்கு 226 போக்குவி 226 போக்குவித்தான் 226 போகம் 402 போகிய 230 போகியர் 230 போசீத்தை 57 போதகம் 402 போதுவன் 204 போந்தேன் 243 போய் 230 போய 218 போயது 219 போயன 218 போயிற்று 219 போயின்று 219 போயின 218 போயினம் 204 போயினான் 226 ம மக்கள் 146, 398 மக்காள் 146, 152 மக 176 மகடூஉ 165 மகண்மா 4 மகவு 57 மகவே 126 மகள் 131 மகளே 131 மகன் 131, 138 மகனே 131, 138 மஞ்ஞை 399 மட்குடம் 84 மண் 226 மண்ணினான் 226 மண்ணுவி 226 மண்ணுவித்தான் 226 மணி 401 மயானம் 402 மயில் 399 மரம் 153, 398 மரமே 153 மரீஇயினான் 230 மருமகள் 149 மருமகளே 149 மருமகன் 138 மருமகனே 138 மலிதல் 396 மலை 171 மலைகள் 171 மலையமாஅன் 154 மலையமான் 167, 134 மலையன் 176 மற்றையஃது 266 மற்றையது 172 மற்றையவன் 266 மற்றையன 172 மற்றையார் 156, 168 மற்றையாள் 156, 168 மற்றையான் 156, 168 மறவர் 167 மறால் 226 மன் 1 மா 54 மாஅஅல் 151 மாகத்தார் 167 மாந்தர் 165 மாலை 402 மான் 161 மானம் 401 மிசைந்தார் 46 மீனம் 401 முடத்தி 38, 57 முடவன் 38, 57 முத்தி 44 முதிது 463 முதியன் 463 முன் 231 முன்னர் 231 முன்னை 231 முனைஇயினான் 230 மூலம் 401 மூவர் 44 மூவன் 44 மூவாட்டையது 222 மெல்லிலை 416 மெலிது 463 மெலியன் 463 மே 226 மேகம் 402 மேதினி 402 மேயினான் 226, 230 மேரு 401 மேவியது 219 மேவின 218 மேவினம் 204 மேவினான் 226 மேவுவி 226 மேவுவித்தான் 226 மேற்று 222 மொடு மொடுத்தது 48 மொறு மொறுத்தார் 48 மோக்கம் 402 மோகம் 402 ய யா 31 யாங்கு 31 யாடு 11 யாண்டு 31 யாது 31 யாம் 164 யாய் 182 யாவர் 31 யாவள் 31 யாவன் 31 யாவை 31 யாழ் 119 யான் 164 யானம் 401 யோகம் 402 யோனி 401 வ வச்சிரம் 402 வட்டம் 402 வடமன் 449 வடாஅது 222 வண்ணத்தான் 168 வண்ணாத்தி 167 வண்ணார் 167 வந்த 218 வந்தது 219 வந்தவரே 141 வந்தன்று 219 வந்தன 218 வந்தனை 203, 402 வந்தாய் 135 வந்தார் 141 வந்தான் 135 வந்தில 218, 219 வந்திலது 219 வந்திலர் 219 வந்திலள் 219 வந்திலன் 219 வந்தின்று 219 வந்தீரே 141 வந்தோம் 213 வருகுப 208 வருது 205 வருதும் 204 வருப 7 வருவ 10, 218, வருவது 170 வருவல் 205 வருவன 170, 218 வருவி 226 வருவித்தான் 226 வருவிப்பி 226 வல்லர் 216 வல்லள் 216 வலிது 463 வலியன் 463 வலைச்சி 463 வழி 231 வளி 172 வன்மை 216 வனிதை 402 வனைந்தான் 113, 215 வா 226 வாச்சியம் 402 வாணிச்சி 167 வாயிலான் 168 வாராநின்றது 8 வாரான் 463 வாரி 401 வாரினம் 204 வாழ்க 228 வாழிய 228 வாழியர் 228 வாளி 119 விசயம் 402 விடம் 402 விடலை 199 விண்டு 399 வியந்தன்றுமிலன் 219 வியந்தான் 219 வியந்திலன் 219 விராயினான் 230 விரி 226 விரிந்தான் 226 விரிப்பி 226 விரிப்பித்தான் 226 விரிவி 226 விரிவித்தான் 226 விருத்தி 402 வில்லவன் 167 வில்லி 119 விலங்கல் 399 வீரம் 401 வெஃகினான் 226 வெஃகு 226 வெஃகுவி 226 வெஃகுவித்தான் 226 வெண்களமர் 17 வெண்கோட்டது 222 வெண்வோட்டன 222 வெந்தீ 416 வெள்யாடு 17 வெள்ளாட்டி 463 வெள்ளாட்டிச்சி 167 வெள்ளாடை 1, 418, 419 வெள்ளொக்கலர் 459 வெளியது 416 வெளியன 416 வெளியை 203 வெற்பன் 167 வெற்பு 399 வேட்டுவர் 167 வேட்டை 71 வேணு 401 வேந்து 57, 124, 129 வேந்தே 124 வேலை 402 வேழக்கரும்பு 416 வேள் 57 வேளாளர் 167 வேற்கண் 419 வேறு 224, 227, 463 வேறும் 463 வேனிலான் 168 வைகற்று 222 வெள 226 வெளவினான் 226 வெளவுவி 226 வெளவுவித்தான் 226 சொற்றொடர் நிரல் மேற்கோள் (நூற்பா எண்) அ அஃது எவன் 221 அகங்கை 416 அகத்தியனால் தமிழ் உரைக்கப்பட்டது 74 அடிசில் உண்டார்; கை தொட்டார் 46 அடைக்காயை எண்ணும் 73 அணி அணிந்தார், மெய்ப்படுத்தார் 46 அதனிற் சேய்த்து இது 79 அது அல்லது 35 அது இல்லை 227 அது உண்ட ஊண் 227 அது உண்ணும் ஊண் 227 அது உண்மன 227 அது செல்க 227 அது வந்தன 11 அது வந்தார் 11 அது வந்தாள் 11 அது வந்தான் 11 அது வரும் 227 அது விண்ணென வீங்கிற்று 440 அது வேறு 227 அந்தணர்க்கு ஆவைக் கொடுத்தான் 76 அந்நெறி ஈண்டு வந்து கிடந்தது 422 அப்பெண்டு 165 அம்மலை வந்து இதனோடு பொருந்திற்று 422 அம்மா கொற்றா 155 அரசர்கண் சார்ந்தான் 85 அரசர் பெருந்தெரு 49 அரசரைச் சார்ந்தான் 85 அரசன் ஆ கொடுக்கும் பார்ப்பான் 236 அரசன் ஆ கொடுத்த பார்ப்பான் 236 அரசன் எடுத்த ஆலயம் 248 அரசனது முதிர்வு 81 அரசனது முதுமை 81 அரசனான் இயற்றப்பட்ட தேவகுலம் 74 அரசனோடு இளையர் வந்தார் 92 அரிசி தானே அட்டது 248 அரிசியை அளக்கும் 73 அலியர் வந்தார் 4 அலி வந்தான் 4 அவ்வாட்டி 165 அவ்வாளன் 165 அவ்வாய்க் கொண்டான் 69 அவ்விரண்டனுள் கூர்ங்கோட்ட காட்டுவல் 461 அவ்வூர்க்கு இவ்வூர் காதம் 77 அவ்வூர்ப் பூசையும் புலால் தின்னாது 257 அவட்குக் குற்றேவல் செய்யும் 112 அவர் அல்லது 35 அவர் இல்லை 227 அவர் உண்ட ஊண் 227 அவர் உண்டார் 11 அவர் உண்ணும் ஊண் 227 அவர் உண்மன ஊண் 227 அவர்க்குக் கொடுத்தான் 30 அவர்க்குச் சோறு உண்டு 77 அவர் செல்க 227 அவர் நமக்குத் தஞ்சம் அல்லர் 297 அவர் யார் 212 அவர் வந்தது 11 அவர் வந்தன 11 அவர் வந்தாள் 11 அவர் வேறு 227 அவருள் இவனே கள்வன் 259, 35 அவள் இல்லை 11 அவள் உண்ட ஊண் 227 அவள் உண்டாள் 11 அவள் உண்ணும் ஊண் 227 அவள் உண்மன ஊண் 227 அவள் செல்க 227 அவள் யார் 212 அவள் வந்தது 11 அவள் வந்தன 11 அவள் வந்தார் 11 அவள் வந்தான் 11 அவள் வரும் 227 அவள் வேறு 227 அவற்குக் கொடு 448 அவற்குச் செய்யத் தகுமக்காரியம் 111 அவற்குத் தக்காள் இவள் 77 அவற்குத் தமன் 77 அவற்கு நட்டான் 77 அவற்குப் பகை 77 அவற்றுள் எவ்வெருது கெட்டது 32 அவன் அல்லது 35 அவன் அல்லது பிறன் இல்லை 35 அவன் அவன் 411 அவன் இல்லை 227 அவன் உண்ட ஊண் 227 அவன் உண்டான் 11 அவன் உண்ணும் ஊண் 227 அவன் உண்மன ஊண் 11 அவன் ஏறிற்றுக் குதிரை 71 அவன்கட் சென்றான் 30 அவன் சாத்தன் 38 அவன் செல்க 227 அவன் யார் 212 அவன் வந்தது 11 அவன் வந்தன 11 அவன் வந்தார் 11 அவன் வந்தாள் 11 அவன் வந்தான், சாத்தற்குச் சோறு கொடுக்க 38 அவன் வரும் 227 அவன் வேறு 227 அவனது இணங்கு 81 அவனது துணை 81 அவனின் அளியன் இவன் 79 அவனெள்ளுமேனும் வரும் 230 அவனே கொண்டான் 431 அவனோ கொண்டான் 431 அவை அல்லது 35 அவை இல்லை 227 அவை உண்ட ஊண் 227 அவை உண்டன 11 அவை உண்ணும் ஊண் 227 அவை உண்மன ஊண் 227 அவை எவன் 221 அவை செல்க 227 அவன்தான் இவன் அல்லன் 216 அவை வந்தது 11 அவை வந்தார் 11 அவை வந்தாள் 11 அவை வந்தான் 11 அவை வரும் 227 அவை வேறு 227 அழிதூ! வாராய் 152 அறத்தை அரசன் விரும்பினான் 239 அறத்தை ஆக்கும் 73 அறம் கறக்கும் 106 அறம் செய்தான் துறக்கம் புகும் 61 அறம் செய்து துறக்கம் புக்கான் 58 அறம் வேண்டி அரசன் உலகம் புரக்கும் 1 அறிவான் அமைந்த சான்றோர் 75 அனைத்துங் கொடால் 287 ஆ ஆ அல்ல 67 ஆ இல்லை 67 ஆ உண்டு 67 ஆ எவன் 67 ஆ ஒன்று 174 ஆ கரிது 67 ஆகாயத்துக்கண் பருந்து 83 ஆ கிடந்தது 67 ஆகிடந்து செறு விளைந்தது 233 ஆங்குச் சென்றான் 30 ஆசிரியன் பேரூர் கிழான் செயிற்றியன் இளங்கண்ணன் சாத்தன் வந்தான் 42, 67 ஆசிரியன் வந்தான் 42 ஆசிரியனொடு வந்த மாணாக்கன் 75 ஆ செல்க 67 ஆடற்கண் அழகு 83 ஆடிய கூத்தன் 236 ஆடூஉ! கூறாய் 126 ஆடை ஒலிக்குங் கூலி 236 ஆடை ஒலித்த கூலி 236 ஆண் மகன் அல்லன், பெண்டாட்டி - ஆண் மகன்கொல்லோ பெண்டாட்டி கொல்லோ இத்தோன்றா நின்ற உருவு 25 ஆண்மகன் கொல்லோ பெண்டாட்டி கொல்லோ தோன்றுகின்றவர் 23 ஆண்மை நல்லன் 59 ஆதீண்டு குற்றி 49 ஆயன்சாத்தன் வந்தான் 67 ஆயன் வந்தான் சாத்தன் 67 ஆயிரம் காணம் வந்தது 422 ஆரமாலை 419 ஆலின்கீழ்க் கிடந்த ஆ 83 ஆ வந்தது 173 ஆ வந்தன 173 ஆ வாழ்க! அந்தணர் வாழ்க 61 ஆவிற்குக் கன்று 111 ஆவும் ஆயனும் செல்க 45 ஆவும் ஆயனும் சென்ற கானம், செல்லும் கானம் 45 ஆறு சென்ற வியர் 236 ஆன் கன்று 55 இ இஃது ஊழன்றே 284 இஃது ஒத்தன் 37 இஃது ஒரு குத்து 119 இஃது ஓர் ஏறு 119 இக்காட்டுள் போகின் கூறை கோட் பட்டான் 247 இக்காட்டுள் போகின் கூறை கோட்படுகின்றான் 247 இக்காட்டுள் போகின் கூறை கோட்படுவன் 247 இக்குதிரைக்கு ஈண்டு நடை இன்று 222 இக்குதிரைக்கு எக்காலமும் நடை இன்று 222 இக்குதிரை நடை நன்று 67 இகழ்ச்சியிற் கெட்டான் 79 இச்சொற்குப் பொருள் இது 77 இச்சொற்குப் பொருள் எவன் 31 இச்சொற்குப் பொருள் யாது 31 இசையது கருவி 81 இடம் பூணி என் ஆவின் கன்று 13 இதனின் இழிந்தது இது 79 இதனின் இளைது இது 79 இதனின் ஊங்கு 78 இதனின் கடிது இது 79 இதனின் சில இவை 79 இதனின் சிறந்தது இது 79 இதனின் சிறிது இது 79 இதனின் தண்ணிது இது 79 இதனின் தீது இது 79 இதனின் தீவிது இது 79 இதனின் நன்று இது 79 இதனின் நாறும் இது 79 இதனின் நெடிது இது 79 இதனின் பல இவை 79 இதனின் பழைது இது 79 இதனின் புதிது இது 79 இதனின் பெரிது இது 79 இதனின் முதிது இது 79 இதனின் மெலிது இது 79 இதனின் வட்டம் இது 79 இதனின் வலிது இது 79 இதனின் வெய்யது இது 79 இது செய் 69 இந்நாழிக்கு இந்நாழி சிறிது பெரிது 458 இந்நாள் எம் இல்லத்து உண்ணாய் 450 இப்பயறு அல்லது இல்லை 36 இப்பிறப்பு 410 இப்பெண்டு 165 இப்பெற்றம் ஒன்று அல்ல, பல 25 இப்பெற்றம் பல அன்று, ஒன்று, 25 இப்பொருள் இத்தன்மையது 459 இப்பொருள் இப்பொருளினுடைய தாயிருந்தது 215 இப்பொருளினுடையது இப் பொருள் 215 இப்பொருளை உடையதாயிருந்தது இப்பொருள் 215 இப்பொழுது சொல்லாய் 450 இம்மணி நல்ல 223 இம்மணி நிறம் நன்று 67 இம்மணி பொல்லா 223 இம்மா வயிரம் 53 இம்மா வெளிறு 53 இயம் இயம்பினார்; படுத்தார் 46 இருந்தான் குன்றத்து 105 இருந்தான் குன்றத்துக்கண் 104 இரு நிலம் அடி தோய்தலின் திருமகளும் அல்லள்; அரமகளும் அல்லள்; இவர் யாராகும் 257 இரும்பு பொன்னாயிற்று 420 இல்லம் மெழுகிற்று 248 இலை நட்டு வாழும் 115 இவ்யாறு நீர் ஒழுகும் 67 இவ்வாட்டி 165 இவ்வாடை கோலிகன் 115 இவ்வாள் எறியும் 248 இவ்வாள் வெட்டுதலைக் கருதியே இருக்கும் 157 இவ்வாளன் 165 இவ்விடம் 416 இவ்வுரு மகன் அன்று, குற்றி 25 இவ்வுருவு ஆண் மகன் அல்லன் பெண்டாட்டி 25 இவ்வுருவு பெண்டாட்டி அல்லன் ஆண் மகன் 25 இவ்வெருது கோடு உடைத்து, இவ்வெருதுகள் கோடு உடைய 222 இவட்குக் கொள்ளும் இவ்வணி 111 இவர் கட்டில் ஏறினார் 50 இவர் பண்டு இப்பொழிலிடத்து விளையாடுவர் 249 இவர் பெரிதும் சொல்லுமாறு வல்லர் 50 இவர் வந்தார் 27 இவர் வாழ்க்கைப்பட்டார் 50 இவள் ஆண்மகன் அல்லள், பெண்டாட்டி 25 இவள் ஆண்மகன் அல்லன், பெண்டாட்டி 25 இவள் கண் ஒக்கும் இவள் கண், 16 இவள் கண்ஒக்குமோ இவள்கண், 16 இவள் கண்ணின் இவள் கண் பெரிய 16 இவள்கண்ணின் இவள் கண் பெரியவோ 16 இவள் நாளை வரும் 250 இவள் பண்டு இப்பொழிலிடத்து விளையாடும் 250 இவற்கு ஊண் கொடு 448 இவற்குக் கொடு 448 இவன் ஒருத்தன் 37 இவன் குற்றியல்லன், மகன் 25 இவன் பெண்டாட்டி அல்லள், ஆண்மகன் 25 இவன் பெண்டாட்டி அல்லன், ஆண்மகன் 25 இவன் யார் 69 இவனின் இலன் இவன் 79 இவை அல்லது இல்லை 36 இறந்தபின் இளமை வாராது 234 இறைவன் அருளல் எம்உயிர் காக்கும் 67 இறைவன் அருளலின் யாம் உயிர் வாழ்தும் 67 இன்னும் உண்டிலையோ 243 இனி எம் எல்லை 463 ஈ ஈண்டு உழுந்து இல 222 ஈண்டு நெல் உள 222 ஈத்த சாத்தன் 226 ஈத்து உவந்தான் 226 உ உடம்பு நுணுகிற்று 58 உண்கு நாளை 11 உண்குபு வந்தான் 232 உண்ட எச்சில் 236 உண்ட சாத்தன் 433 உண்ட சோறு 236 உண்டது அவர் 11 உண்டது அவள் 11 உண்டது அவன் 11 உண்டது அவை 11 உண்டன அது 11 உண்டன அவர் 11 உண்டன அவள் 11 உண்டன அவன் 11 உண்டன அவை 11 உண்டார் அது 11 உண்டார் அவள் 11 உண்டார் அவன் 11 உண்டார் அவை 11 உண்டாள் அது 11 உண்டாள் அவர் 11 உண்டாள் அவள் 11 உண்டாள் அவன் 11 உண்டாள் அவை 11 உண்டான் அது 11 உண்டான் அவர் 11 உண்டான் அவள் 11 உண்டான் அவன் 11 உண்டான் அவை 11 உண்டான் சாத்தன் 429 உண்டான் பசித்த சாத்தன் 239 உண்டு தின்று ஓடிப்பாடி வந்தான் 235 உண்டு தின்று ஓடி வந்தான் 295 உண்டு பருகூஉத் தின்குபு வந்தான் 235 உண்டு விருந்தொடு வந்தான் 239 உண்டெனப் பசி கெட்டது 230 உண்டேஎ மறுமை 259, 263 உண்டேன் நெருநல் 11 உண்ண வந்தான் 230 உண்ணவெனத் தின்னவெனப் பாடவென வந்தான் 295 உண்ணா இல்லம் 238 உண்ணா ஊண் 238 உண்ணாக் காலம் 238 உண்ணா கிடந்தாம் 204 உண்ணாச் சோறு 238 உண்ணாத பின் 238 உண்ணாத முன் 238 உண்ணாது அது 238 உண்ணா நின்றேன் இன்று 11 உண்ணா வந்தான் 232 உண்ணான் அவன் 238 உண்ணும் ஊண் 236 உண்ணும் சாத்தன் 433 உண்ணூ வந்தான் 230, 232 உண்பது நாழி 71 உணர்தல் தன்மைத்து 13 உண்ர்வினான் உணர்ந்தான் 74 உணற்கு வந்தான் 230 உயிர் உணரும் 19 உயிர் எத்தன்மைத்து 13 உயிர்நீத்து ஒரு மகன் கிடந்தான் 58 உயிர் போயிற்று 58 உயிரென உடலென இன்றியமையா 289 உரிஞி வந்தான் 226 உரிஞின சாத்தன் 226 உரைத்தக்கால் உரை பல்கும் 234 உரைத்தென உணர்ந்தான் 230 உலகம் பசித்தது 58 உலகர் பசித்தார் 60 உவாஅப் பதினான்கு கழிந்தன 68 உழுது அன்றி உண்ணான் 230 உழுது உண்பானொடு விரைஇ வந்தான் 235 உழுது ஏரொடு வந்தான் 239 உழுது ஓடி வந்தான் 239 உழுது வந்தது 227 உழுது வந்தவன் 432 உழுது வந்தன 227 உழுது வந்தாய் 227 உழுது வந்தான் 227 உழுது வந்தீர் 227 உழுது வந்தேம் 227 உழுது வந்தேன் 227 உழுது வருதல் 432 உழுந்து அல்லது இல்லை 35 உழுந்து அல்ல பயறு 222 உழுந்து அன்று பயறு 222 உழுந்து உள 35 ஊ ஊசியொடு குயின்ற தூசும் பட்டும் 74 ஊர்க்கட் சென்றான் 111 ஊர்க்கண் உற்றது செய்வான் 111 ஊர்க்கால் இருந்தான் 83 ஊர்க்குத் தீர்ந்தான் 111 ஊர்ப்புடை இருந்தான் 83 ஊர்ப்புறத்து இருந்தான் 83 ஊரயல் இருந்தான் 83 ஊரானோர் தேவ குலம் 427 ஊரிலே இருந்தான் 83 ஊரிற் சேயன் 111 ஊரின் தீர்ந்தான் 79 ஊருள் இருந்தான் 83 ஊரெனப் படுவ துறையூர் 297 ஊரைக் காக்கும் 73 ஊரைச் சாரும் 73 எ எங்கிளை 410 எட்சாந்து 81 எண்ணது குப்பை 81 எண்ணொடு விராய அரிசி 75 எந்தை வந்தான் 27 எப்பிறப்பு 410 எப்பொருள் 31 எப்பொருளும் அல்லன் இறைவன் 216 எம் அரசனின் நும் அரசன் முறை செய்யும் 16 எம் அரசனை ஒக்கும் நும் அரசன் 16 எம் அரசனை ஒக்குமோ நும் அரசன் 16 எம் அன்னை வந்தாள் 27 எம்பெருமா 131 எயிலை இழைத்தான் 72, 73 எயினர் நாடு 49 எருது இரண்டும் மூரி 33 எருது வந்தது, அதற்குப் புல் இடுக 38 எருப்பெய்து இளங்களை கட்டு நீர்கால் யாத்தமையான் பைங்கூழ் நல்லவாயின 21 எல்லாம் வந்தன 188 எல்லாம் வந்தார் 188 எல்லாம் வந்தீர் 188 எல்லாம் வந்தேம் 188 எல்லாரும் வாரார் 287 எவ்வுயிர்க்கண்ணும் இறைவன் உளன் 216 எள் ஆட்டின எண்ணெய் 236 எறும்பு முட்டை கொண்டு தெற்றி ஏறியது கண்டுழி மழை பெய்வதாம் 247 என்கணின்று 83 என் பாவை வந்தது 27 என்னுழை வந்தான் 29 என்னை கேளீர் 131 எனக்குக் கொடு 448 எனக்குச் சோறு தா 446 எனக்குத் தந்தான் 29 ஏ ஏஎயெனச் சொல்லியது 274 ஏர்ப்பின் சென்றான் 83 ஏழேகால் 463 ஏனாதி நல்லுதடன் 41 ஐ ஐந்தலை நாகம் உடன்றது 33 ஐம்பது விற்கும் கோசிகம் அல்லது இல்லை 35 ஐயாட்டையான் 215 ஒ ஒருத்திகொல்லோ பலர்கொல்லோ இக்குருக்கத்தி நீழல் வண்டல் அயர்ந்தார் 23 ஒருவர் அவர் 194 ஒருவர் வந்தார் 159, 194 ஒருவன்கொல்லோ பலர்கொல்லோ இக்கறவை உய்த்த கள்வர் 23 ஒருவன் தவம் செய்யின் சுவர்க்கம் புகும் 244 ஒருவன் தாயைக் கொல்லின் நிரயம் புகும் 244 ஒல்லென ஒலித்தது 260, 440 ஒல்லென ஓடிற்று 440 ஒல்லைக் கொண்டான் 230 ஒழுகுகொடி மருங்குல் 317 ஒற்றியது பொருள் 81 ஒற்றியது முதல் 81 ஒன்றுகொல்லோ பலகொல்லோ இச்செய் புக்க பெற்றம் 24 ஓ ஓட வல்ல 223 ஓடவல்லா 223 ஓட வல்லாது 223 ஓடவற்று 223 ஓடாநின்று போயினான் 230 ஓடி வந்தான் 458 ஓதாப் பார்ப்பான் 238 ஓதி நல்ல சாத்தன் 230 ஓதி நல்லன் 230 ஓதிப் பெற்ற பொருள் 230 ஓதி வந்தான் 230 ஓதும் பார்ப்பான் 236 க கங்கை மாத்திரர் 167 கட்கு இன்புதல்வர் 416 கட்கு இன்புதல்வன் 416 கட்கு இன்புதல்வி 416 கடந்தான் நிலத்தை 104 கடந்தான் நிலம் 105 கடம்பூர்க்கு வழி யாதோ 13 கடலைக் காடு ஒட்டாது 102 கடவுள்! வாழி 131 கடி சூத்திரத்திற்குப் பொன் 77 கடுக்கலந்த கைபிழி எண்ணெய் பெற்றமையான் மயிர் நல்ல வாயின 21 கடுத் தின்றான் 115, 116 கடுத்தின்னாமுன் துவர்த்தது 234 கடுவினது காய் 117 கண்கழீஇ வருதும் 442 கண்டீரே கண்டீரே 425 கண்ணாற் கொத்தை 75 கண்ணிரண்டும் குருடு 33 கண் நல்லர் 62 கண் நல்லள் 62 கண் நொந்தது 62 கண் நொந்தாள் 62 கண் நொந்து கிடந்தான் 233 கண் மலர்ந்த காவி 414 கண் வலியூக் கிடந்தான் 233 கணவன் இனிது உண்டபின் காதலி முகம் மலர்ந்தது 234 கணையை நோக்கும் 73 கதத்தினை யுடைய 223 கதி ஐந்தும் உடைத்து இக் குதிரை 33 கபில பரணர் 421 கபிலரது பாட்டு 81 கமுகந் தோட்டம் 49 கரிய பார்ப்பான் 416 கருங்குதிரை 416 கருங்குதிரை ஓடிற்று 68 கருங்குதிரைகள் 416 கருங்குழற் பேதை 84 கருத்துப் பொருள் 463 கருப்பு வேலி 105 கரும்பார்ப்பனி 416 கரும்பார்ப்பான் 416 கரும்பிற்கு வேலி 77 கருமுக மந்தி 442 கருவூர்க்குக் கிழக்கு 111 கருவூர்க்குச் செல்வையோ சாத்தா 69 கருவூரின் கிழக்கு இவ்வூர் 78 கல்லாட மாமூல சீத்தலைச் சாத்தர் 421 கல்லூ வல்லன் ஆயினான் 232 கலனே தூணிப் பதக்கு 420 கவவுக் கடியள் 62 கழிபேரிரையான் இன்பம் எய்தான் 61 கள்ளரான் அஞ்சும் 101 கள்ளரின் அஞ்சும் 79, 101 கள்ளரை அச்சும் 73 கற்கறிக்க நன்கு அட்டான் 440 கற்குபு வல்லன் ஆயினான் 232 கற்கும் நூல் 236 கற்பார்க்குச் சிறந்தது செவி 77 கற்பான் நூல் செய்தான் 234 கற்று வல்லன் ஆயினான் 232 கறக்கின்ற எருமை சினையோ பாலோ 13 கறக்கும் அறம் 106 கறுத்த காயா 373 கன்று நீர் ஊட்டுக 55 கன்னி எயில் 27 கன்னி நறு ஞாழல் 27 காக்கையிற் கரிது களம்பழம் 79 காட்டது யானை 81, 112 காட்டின்கண் யானை 112 காட்டுச்சார் ஓடும் களிறு 83 காண்கும் வந்தேம் 205 காணத்தாற்கொண்ட அரிசி 75 காணன்மார் எமர் 228 காமத்திற் பற்றுவிட்டான் 79 கார் வருமெனக் கருதி நொந்தாள் 438, 260 காரெனக் கறுத்தது 438 காலன் கொண்டான் 60 காலைக்கு வரும் 111 கானல் கூறாய் 131 கிழவன் பிரிந்தான்....உணர்ந்திலன் 40 கிள்ளிகுடி 463 கிளியை ஓப்பும் 73 கீழ்வயிற்றுக் கழலை 463 கீழைச்சேரிக்....அலைத்தது 61 குடத்தில் விளக்கு 83 குடத்தை வனைந்தான் 72 குடிமை நல்லன் 59 குதிரை வந்தது;.....கொடுக்க 38 குதிரை வந்தது, வந்தன 173 குப்பையது தலையைச் சிதறினான் 91 குப்பையைத் தலைக்கண் சிதறினான் 91 குப்பையைத் தலையைச் சிதறினான் 91 குமரி ஆடிப் போந்தேன்;....தம்மின் 15 குரிசில் கூறாய் 131 குரிசிலைப் புகழும் 73 குருடன் கொற்றன் 41 குருடு காண்டல் பகலும் இல்லை 34 குருமணி 456 குருமணித்தாலி 303 குருவிளங்கிற்று 456 குழல கேட்டான் 119 குழிப்பாடி நேரிது 115, 116 குழிப்பாடியுள் தோன்றியது 117 குழுவின் பெயர் 57 குழை இலன் 216 குழையை உடையன் 72, 73 குழையை உடையன் அல்லன் 216 குளம் நிறைய மழை பெய்தது 230 குளம்பு இன்று 8 குற்றிகொல்லோ..... உருவு 24 குற்றியோ மகனோ 25 குற்றியோ மகனோ தோன்றுகின்ற உரு 13 குறுத்தது குறுத்தது 48 குன்றத்தின்கண் குவடு 82 குன்றத்து இருந்தான் 68 குன்றத்துக்கண் இருந்தான் 104 கூதிர்க்கண் வந்தான் 82 கூதிர் போயபின் வந்தான் 231 கூரியதோர் வாள்மன், திட்பமின்று 455 கூழ் உண்டான் சோறும் உண்பன் 437 கூழ் உண்ணாநின்றான் சோறும் உண்டான் 437 கூழிற்குக் குற்றேவல் செய்யும் 77 கேட்டீரே கேட்டீரே 425 கைக்கியாப் புடையது 77 கைப்பொருளொடு வந்தான் 92 கையிடத்துப் பொருள் 83 கையின்கண் விரல் 83 கைவலத்து உள்ளது கொடுக்கும் 83 கைவாரி 463 கொடி ஆடித் தோன்றும் 241 கொடி ஆடிற்று 114 கொடியொடு துவக்குண்டான் 74 கொடுத்தான் சாத்தற்கு 104 கொடும்புற மருதி 176 கொடும்புற மருது வந்தது 185 கொடும்புற மருது வந்தாள் 185 கொடும்புற மருது வந்தான் 185 கொப்பூழ் நல்லன் 62 கொல்யானை 415, 419 கொல் யானை நின்றது 68 கொல்லும் காட்டுள் யானை 239 கொள் அல்லது இல்லை 35 கொள்வாக்கு வந்தான் 231 கொள்ளாது ஒழிவான் 238 கொள்ளென்று கொண்டான் 438 கொளலோ கொண்டான் 258 கொற்றனும் வந்தான் 257 கொன்வரல் வாடை 256 கொன்ற காட்டுள் யானை 239 கொன்ற யானை 415 கோட்டது நுனியைக் குறைத்தான் 90 கோட்டின்கண் குறைத்தான் 86 கோட்டு நூறு 81 கோட்டைக் குறைத்தான் 86 கோட்டை நுனிக்கண் குறைத்தான் 90 கோடு இல 222 கோடு இன்று 8, 222 கோடு உடைத்து அன்று 222 கோடு கூரிது கரி 62 கோதை வந்தது 185 கோதை வந்தாள் 185 கோதை வந்தான் 185 கோயிற்கடைச் சென்றான் 83 கோவாழி 129 ச சாத்தற்குக் கூறு கொற்றன் 77 சாத்தற்குக் கொடுத்தான் 104 சாத்தற்குச் சோறு இடுக 237 சாத்தற்கு நெடியன் 111 சாத்தற்கு நேர்ந்த சோறு 100 சாத்தற்கு மகள் உடம்பட்டார் 77 சாத்தன் அவன் 38 சாத்தன் உண்டான் 429 சாத்தன் உண்டானோ 258 சாத்தன் ஒருவன் 174 சாத்தன் ஒன்று 174 சாத்தன் ஓதல் வேண்டும் 245 சாத்தன் கண் நல்லன் 67 சாத்தன் குடத்தைக் கையால் வனைந்து கொற்றற்குக் கொடுத்தான் 66 சாத்தன் குழல் ஊதும் 175 சாத்தன் கை 105 சாத்தன் கை எழுதுமாறு வல்லன்; அதனால் தந்தை உவக்கும் 40 சாத்தன் தலைவன் ஆயினான் 67 சாத்தன் தவம் செய்து துறக்கம் புக்கான் 244 சாத்தன் தவம் செய்யின் துறக்கம் புகுவன் 244 சாத்தன் தன்னைக் குத்தினான் 73 சாத்தன் பாடும் 175 சாத்தன் புல் தின்னும் 175 சாத்தன் யாழ் எழூஉக 175 சாத்தன் யாழ் எழூஉம் 175 சாத்தன் வந்தது 174 சாத்தன் வந்தான் 174 சாத்தன் வந்தான், அஃது அரசற்குத் துப்பு ஆயிற்று 40 சாத்தன் வந்தான், அவற்குச் சோறு கொடுக்க 38 சாத்தன் வந்தான் கொற்றன் வந்தான் வேடன் வந்தான் மூவரும் வந்தமை யான் கலியாணம் பொலிந்தது 295 சாத்தன் வந்தான் கொற்றனும் வந்தான் 286 சாத்தன் வரலும் உரியன் 435 சாத்தன் வருதற்கும் உரியன் 257 சாத்தன்! வாராய் 152 சாத்தன ஆடை 80 சாத்தனது ஆடை 104 சாத்தனது இயற்கை 81 சாத்தனது இல்லாமை 81 சாத்தனது உடைமை 81 சாத்தனது ஒப்பு 81 சாத்தனது கற்றறிவு 81 சாத்தனது செயற்கை 81 சாத்தனது செலவு 81 சாத்தனது தோட்டம் 81 சாத்தனது நிலைமை 81 சாத்தனது விலைத்தீட்டு 81 சாத்தனது வினை 81 சாத்தனான் முடியும் இக்கருமம் 75 சாத்தனின் வலியன் 104 சாத்தனும் வந்தான் 257 சாத்தனும் வந்தான் கொற்றனும் வந்தான் 257 சாத்தனும் வந்தான் கொற்றனும் வரும் 257 சாத்தனை வெகுண்டான் 102 சாத்தனொடு கொற்றன் வந்தான் 92 சாத்தனொடு வந்தான் 104 சாத்தனொடு வெகுண்டான் 102 சாத்தா உண்டியோ 14 சாத்தி கன்று ஈனும் 175 சாத்தி சாந்தரைக்கும் 175 சாத்தி சாந்து அரைக்க 175 சாத்தி சாந்து அரைக்குமாறு வல்லள், அதனால் கொண்டவன் உவக்கும் 40 சாத்தி பூத்தொடுக்கும் 175 சாத்தி வந்தது 182 சாத்தி வந்தாள் 182 சாத்தி வந்தாள்; அவட்குப் பூக் கொடுக்க 38 சாந்து கொடு 448 சாரைப்பாம்பு 416 சான்றோர் கொலைக்கு உடம்பட்டார் 77 சான்றோரிடை இருந்தான் 83 சான்றோருழைச் சென்றான் 83 சீத்தலைச் சாத்தன் 176 சீவக சாமி 142 சீவக சாமியார் 142 சீவகசாமியீரே 142 சுவை ஆறும் உடைத்து இவ்வடிசில் 33 சூதின்கண் இவறினான் 87 சூதின்கண் கன்றினான் 87 சூதினை இவறினான் 87 சூதினைக் கன்றினான் 87 சூதினைக் கன்றும் 73 சூலொடு கழுதை பாரம் சுமந்தது 75 செங்கால் நாரை 26 செம்பின் ஏற்றை 442 செய்தான் பொருள் 412 செய்ய சாத்தன் 238 செயிற்றியன் சென்றான் 42 செல்க ஆ 67 செல்செலவு 415 செல்லல் நோய் 456 செல்வமும் நில்லாது 34 செல்வம் தருபாக்கு யாம் விரும்புதும் 234 செவியிலி வந்தது 185 செவியிலி வந்தாள் 185 செவியிலி வந்தான் 185 செற்றாரைச் செறும் 73 சென்றது கரிது 427 சென்றனன் கரியன் 427 சென்றனை கரியை 427 சேரமான் சேரலாதன் 41 சொல் நன்று 58 சொல்லது பொருள் 81 சொல்லிக்காண் 226 சொலல் வல்லன் 216 சொல்வன்மை நன்று 57 சொற்பொருள் 463 சோலை புக்கென வெப்பு நீங்கிற்று 230 சோழன் நலங்கிள்ளி 41 சோற்றை அட்டான் 73 சோற்றைக் குழைத்தான் 73 சோற்றைப் பசித்து உண்டான் 431 சோறு பெற்றேன் 119 சோறும் கறியும் நன்றென்று உண்டார் 47 ஞ ஞாயிறு இயங்கும் 242 ஞாயிறு பட்டது 58 ஞாயிறு பட்டு வந்தான் 233 ஞாயிறு பட 457 ஞாயிறு படுபு வந்தான் 233 ஞாயிறு படூஉ வந்தான் 233 த தகர ஞாழல் 418 தச்சக்கொற்றன் 41 தட்டுப்புடைக்கண் வந்தான் 82 தண்டூண் ஆதற்குக் கிடந்தது 117 தந்தைதலைச் சென்றான் 83 தந்தையார் வந்தார் 272 தந்தையை ஒக்கும் 73 தந்தையைச் சூளுற்றான் 102 தந்தையொடு சூளுற்றான் 102 தந்தை வந்தது 183 தந்தை வந்தான் 183 தம்மாமி 400 தம்முன் 131 தம்மூனே 131 தமிழ்நாட்டு மூவேந்தரும் வந்தார் 33 தலைமகனது செலவை அழுங்குவித்தல் 89 தலைமகனைச் செலவின்கண் அழுங்குவித்தல் 89 தலைமகனைச் செலவை அழுங்கு வித்தல் 89 தலைவன் பிரிந்து வருந்தினாள் 233 தவம் செய்தான் 244 தவம் செய்தான் சுவர்க்கம் புகா நிற்பன் 244 தாம் வந்தன 186 தாம் வந்தார் 186 தாம் வந்தார் தொண்டனார் 27 தாய் மூவர் 105 தாய் வந்தது 182 தாய் வந்தாள் 176, 182 தாயைக் கொல்வான் 244 தாயைக் கொல்வான் நிரயம் புகா நிற்பன் 244 தாயைக் கொன்றான் 244 தாயைக் கொன்றான் நிரயம் புகா நிற்பன் 244 தாராத சாத்தன் 463 தாராது போயினான் 463 தான் வந்தது 187 தான் வந்தாள் 187 தான் வந்தான் 187 திங்கள் இயங்கும் 242 திங்கள் எழுந்தது 58 திருமகளோ அல்லள்; அரமகளோ அல்லள்; இவள் யார் 258 திருவீரவாசிரியன் 41 திரையன் ஊர் 463 தினையிற் கிளியைக் கடியும் 103 தீச்சுடும் 242 தீத்தீ 424 தீத்தீத்தீ 424 தீதாய்ப் போயிற்று 463 தீதாய்ப் போயினான் 463 தீய சாத்தன் 463 தீ வெய்யது 19 துடி நடுவு 414 துண்ணெனத் துடித்தது மனம், 260 துயிலும் காலம் 236 தூங்கல்! வாராய் 152 தூணிப் பதக்கு 417 தூணின்கண் சார்ந்தான் 85 தூணினைச் சார்ந்தான் 85 தெங்கு தின்றான் 115 தெய்வப்புலவன் திருவள்ளுவன் 41 தெய்வம் செய்தது 58 தென்குமரி 18 தென்பாண்டி 449 தேர்த்தட்டு 399 தேர்முன் சென்றான் 83 தேரை ஊரும் 73 தொகையது விரி 81 தொடியரை 417 தொடியே கஃசரை 420 தொல்காப்பியனால் செய்யப்பட் டது 117 தோள் நல்லர் 62 தோள் நொந்தாள் 62 ந நகுபு வந்தான் 230 நங்கினை 402 நங்கையார் வந்தார் 272 நங்கை வந்தாள் அவட்குப் பூக் கொடுக்க 38 நங்கை வாழி 129 நஞ்சுண்டான் சாம் 163 நட்டார்க்குக் காதலன் 77 நட்டாரை உவக்கும் 73 நடந்த சாத்தன் 226 நடந்து வந்தான் 226 நம் அரசன் ஆயிரம் யானை உடையன் 50 நம் எருது ஐந்தனுள்கெட்ட எருது யாது 32 நம்பி கண் இரண்டும் நொந்தன 33 நம்பி நூறு எருமை உடையன் 50 நம்பி மகன் 95 நம்பியார் வந்தார் 272 நம்பிவந்தான், அவற்குச் சோறு கொடுக்க 38 நம்பி வாழி 129 நம்முன் 131 நம்முனா 131 நமது நலன் நுகர்வான் யாம் விரும்புதும் 234 நமருள் எவன் போயினான் 32 நமருள் யாவன் போயினான் 32 நரகர் வந்தார் 5 நரகன் வந்தான் 5 நரகி வந்தாள் 5 நல்ல சாத்தன் 238 நல்வினைதான் உற்றக்கடை உதவும் 234 நல்வினைதான் உற்றக்கடை தீவினை வாரா 234 நல்வினைதான் உற்றவிடத்து உதவும் 234 நல்வினைதான் உற்றவிடத்துத் தீவினை வாரா 234 நன்றாய் வளர்ந்தது 463 நன்றாய் வளர்ந்தான் 463 நாகர்க்கு நேர்ந்த பலி 100 நாகர் பலி 100 நாகரது பலி 100 நாட்டைச்சிதைக்கும் 73 நாட்டைப் பழிக்கும் 73 நாணை அறுக்கும் 73 நாம் இல்லை 227 நாம் உண்ட ஊண் 227 நாம் உண்ணும் ஊண் 227 நாம் உண்மன ஊன் 227 நாம் வேறு 227 நாயாற் கோட்பட்டான் 75 நாயிறு பட வந்தான் 230 நாயொடு நம்பி வந்தான் 92 நாளை அவன் வாளொடு வெகுண்டு வந்தான்; பின், நீ என் செய்குவை 249 நாளை உண்டு வருவாய் 241 நிரயப் பாலர் 4 நிரயம் புகாநிற்பன் 244 நிலத்தது அகலம் 81 நிலத்தது ஒற்றிக்கலம் 81 நிலத்தைக் கடந்தான் 104 நிலங் கடந்தான் 68,105 நிலம் நீர் 1 நிலம் நீரென இரண்டும் 292 நிலம் வலிதாயிற்று 19 நிலம் வலிது 19 நிலனும் நீரும் தீயும் வளியும் - ஆகாயமும் எனப் பூதம் ஐந்து 257 நிலனென்றா நீரென்றா இரண்டும் 292 நிலனென்று நீரென்று 260 நிலனென நீரெனத் தீயென வளியென 260 நிலனென நீரெனத் தீயென வளியென நான்கும் 289 நிலனெனா நீரெனா இரண்டும் 292 நிலனே நீரே தீயே வளியே 259 நிலனே நீரேயென இரண்டும் 292 நிறத்தின்கண் எழில் 83 நிறம் கரியள் 62 நின்றவிடத்து நின்றான் 231 நின்னுழை வந்தான் 29 நினக்குத் தந்தான் 29 நினக்கு வலி வாள் 77 நீ இல்லை 227 நீ இவ்வாறு கூறுகின்றபின் உரைப்பது உண்டோ 231 நீ உண் 15 நீ உண்ட ஊண் 227 நீ உண்டு வருவாய் 241 நீ உண்ணும் ஊண் 227 நீ உண்மன ஊண் 227 நீ என்னை வைதாய் 246 நீ நும்மூர் புகுவை 461 நீ வேறு 227 நீயிர் இல்லை 227 நீயிர் உண்ட ஊண் 227 நீயிர் உண்ணும் ஊண் 227 நீயிர் உண்மன ஊண் 227 நீயிர் பொய் கூறியபின் மெய்கூறுவார் யார் 231 நீயிர் வந்தீர் 192 நீயிர் வேறு 227 நீயும் அவனும் உண்மன ஊண் 227 நீயும் யானும் அவனும் உண்டனம் 204 நீயும் யானும் அவனும் உண்டாம் 204 நீயும் யானும் உண்டனம் 204 நீயும் யானும் உண்டாம் 204 நீயே உண்டாய் 259 நீர் தண்ணிது 19 நீலுண் துகிலிகை 453 நீ வந்தாய் 195 நீ வேறு 227 நுங்கிளை 410 நும் அரசனின் எம் அரசன் முறை செய்யும் 16 நுமக்கு இவன் எவனாம் 221 நூலது குற்றம் கூறினான் 112 நூலைக் கற்கும் 73 நூலைக் குற்றம் கூறினான் 112 நூறு விற்கும் பட்டாடை உளவோ 35 நெடிதோ குறிதோ 13 நெடியனும் வலியனும் ஆயினான் 257 நெடுங்கழுத்தல் வந்தது 184 நெடுங்கழுத்தல் வந்தன 184 நெடுங்கழுத்தல் வந்தாள் 184 நெடுங்கழுத்தல் வந்தான் 184 நெடுஞ்செவித்து 222 நெடுஞ்செவிய 222 நெல்லைத் தொகுக்கும் 73 நெறிக்கண் அடைந்தான் 87 நெறிக்கண் சென்றான் 87 நெறியை அடைந்தான் 87 நெறியைச் செல்லும் 73 நெறியைச் சென்றான் 87 நோயின் நீங்கினான் 102 நோயை நீங்கினான் 102 ப பகைவரைப் பணித்தான் 73 பகைவரை வெகுளும் 73 பச்சென்று பசத்தது 261 பசும்பயறு அல்லது இல்லை 36 படை அல்ல வென்றி தருவன 222 படைத் தலைவன் 69 படை படை 424 படையது குழாம் 81 படையினது யானை 90 படை வழங்கினார்; தொட்டார், 158 பண்டு காடுமன் 157 பத்தோ, பதினொன்றோ 258 பயறு அல்லது இல்லை 35 பயறு இல்லை, உழுந்து உள 36 பயறு உள; உழுந்து முதலிய இல்லை 35 பயறு உளவோ 35 பயறுளவோ வணிகீர் 22 பயிர் நல்ல ஆயின 22 பரணரது பாட்டியல் 34 பழம் உதிர்ந்த கோடு 236 பழம் உதிரும் கோடு 236 பழி அஞ்சும் 101 பழியின் அஞ்சும் 101 பழியை அஞ்சும் 101 பழுது கழி வாழ்நாள் 324 பாண் குடி 51 பாண்டியன் மாறன் 41 பாம்புணிக் கருங்கல் அல்லது இல்லை 35 பார்ப்பனச் சேரி 49 பார்ப்பான் கள் உண்ணான் 163 பாரியது பாட்டு 81 பாரியென்றொருவன் உளன் 261 பாவையினும் அழகியாள் 117 பாவை வந்தது 57 பாவை வந்தாள் 119 பிணா! வாராய் 152 புக்க இல் 236 புகழ்ந்திகும் அல்லரோ பெரிதே 277, 457 புகழ்ந்திகு மல்லரோ 399 புகழை உடைமை 72 புகழை நிறுத்தல் 72 புகையினான் எரியுள்ளது உணர்ந்தான் 74 புணர்பொழுது 415 புதல்வற்கு அன்புறும் 77 புதல்வனைப் பெறும் 73 புலிகொல் யானை 96 புலிகொல் யானை ஓடாநின்றது 97 புலிகொல் யானைக் கோடு வந்தன 97 புலிகொல் யானை கிடந்தது 97 புலி போல்வான் 215 புலி போற்றிவா 98 புலியது உகிர் 81 புலியால் கொல்லப்பட்ட யானை 96 புலியிற் போற்றிவா 98 புலியைக் கொன்ற யானை 96 புலியைப் போற்றிவா 98 புலிவிற்கெண்டை 417, 293 புலிவிற்கெண்டையை வைத்தான் 293 பூணை உடைத்து 223 பூதம் புடைத்தது 58 பூநட்டு வாழும் 115 பெண்டாட்டி அல்லள், ஆண் மகன் 25 பெண் மகன் வந்தாள் 196 பெருங்கால் யானை வந்தது 184 பெருங்கால் யானை வந்தன 184 பெருங்கால் யானை வந்தாள் 184 பெருங்கால் யானை வந்தான் 184 பெருஞ்சேந்தனார் வந்தார் 272 பெருந்தேவி பொறை உயிர்த்த கட்டிற்கீழ் நால்வர் மக்கள் உளர் 50 பெரும்பயறு அல்லது இல்லை 36 பெருமா! எனக்கொரு பிடி சோறீ 445 பேரூர்கிழத்தி 167 பேரூர்கிழான் 167 பேரூர்கிழான் உண்டான் 42 பைங்கூழ் நல்ல 21 பொருட்கண் உணர்வு 83 பொருநி வந்தான் 226 பொருநின சாத்தன் 226 பொருளது கேடு 73 பொருளை இலன் 73 பொருளை இழக்கும் 73 பொல்லாச் சாத்தன் 238 பொழுது ஆயிற்று 15 பொழுது நன்று 58 பொற்றொடி அரிவை 84 பொற்றொடி வந்தாள் 68 பொன் அன்னார் 165 பொன் அன்னாள் 165 பொன் அன்னான் 165 பொன்னை நிறுக்கும் 73 போம்புழை 240 போம் போம் 411 போயின போக்கு 236 ம மகண்மா வந்தாள் 4 மகள்! வாராய் 152 மகிழ்ச்சியின் மைந்து உற்றான் 79 மங்கலம் என்பதோர் ஊர் உண்டு போலும் 280 மட்காரணம் 84 மண்ணான் இயன்ற குடம் 75 மணியது நிறத்தைக் கெடுத்தான் 89 மணியின்கண் ஒளி 83 மணியை நிறத்தின்கண் கெடுத்தான் 89 மணியை நிறத்தைக் கெடுத்தான் 89 மதி நிறைந்தது 58 மதிமுகம் வெயர்த்தது 68 மதியொடு ஒக்கும் முகம் 75 மயிர் நல்ல 21 மயிர் நல்ல ஆயின 22 மரத்தின்மேல் இருந்த குரங்கு 83 மரத்தைக் குறைக்கும் 73 மரத்தைக் குறையான் 108 மரம் புரைபட்டது 390 மருந்து உண்டு நல்லன் ஆயினான், மருந்து தின்றெனப் பிணி நீங்கிற்று 230 மருந்து தின்னாமுன் நோய் தீர்ந்தது 234 மலர்க்கண் நாற்றம் 83 மலை நிற்கும் 242 மழை பெய்தற்குக் கடவுள் வாழ்த்துதும் 234 மழை பெய்தற்கு முழங்கும் 234 மழை பெய்தெனப் புகழ் பெற்றது 234 மழை பெய்தென மரம் குழைத்தது 234 மழை பெய்யக் குளம் நிறைந்தது 230 மழை பெய்யப் புகழ் பெற்றது 234 மழை பெய்ய மரம் குழைத்தது 234 மழை பெய்யாவிடின் அறம் பெறாது 238 மழை பெய்யாவிடின் மரம் குழையாது 238 மழை பெய்யிய முழங்கும் 234 மழை பெய்யியர் எழுந்தது 234 மழை பெய்யியர் பலி கொடுத்தனர் 234 மழை பெய்யிய வான் பழிச்சுதும் 234 மழை பெய்யின் குளம் நிறையும் 234 மழை பெய்யின் புகழ் பெறும் மழை மழை என்கின்றது பைங்கூழ் 422 மழை வண்வகை 414 மற்றை ஆடை 266 மற்றையது கொண்டுவா 266 மற்றோ மற்றோ 411 மறம் செய்தான் நிரயம் புகும் 61 மறியது தந்தை 81 மறியது தாய் 81 மனை வாழ்க்கைக்குப் பற்று விட்டான் 111 மனைவியைக் காதலிக்கும் 73 மா உள 222 மாக் கொணா 53 மாடத்தகத்து இருந்தான் 83 மாடத்தின்கண் இருந்தான் 82 மாடத்துக்கீழ் இருந்தான் 83 மாடத்துமேல் இருந்தான் 83 மாணாக்கற்கு அறிவு கொடுத்தான் 76 மாணாக்கற்கு நூற்பொருள் உரைத்தான் 76 மாந்தர்! கூறீர் 131 மா பூத்தது 53 மாமரம் வீழ்ந்தது 55 மா வீழ்ந்தது 54 மாவும் மருதும் ஓங்கின 53 மாற்றோர் பாசறை இலன் 216 முடக்கொற்றன் வந்தது 183 முடக்கொற்றன் வந்தான் 183 முடக்கொற்றி வந்தது 182 முடக்கொற்றி வந்தாள் 182 முடத்தாமக் கண்ணியார் வந்தார் 272 முடத்தி வந்தது 182 முடத்தி வந்தாள் 182 முடத்தி வந்தாள், அவட்குக் கூறை கொடுக்க 38 முடவன் வந்தது 174 முடவன் வந்தான் 174 முடவன் வந்தான், அவற்குச் சோறு கொடுக்க 38 முடவனார் வந்தார் 272 முத்தும் கருவிருந்தையும் கானங் கோழியும் பொன்னும் 16 முப்பத்து மூவர் 417 முயற்குக் கோடு இன்று 222 முயற்சியின் பிறத்தலான் ஒலி நிலையாது 75 முருகற்குக் கை பன்னிரண்டு 33 முருகனது குறிஞ்சி நிலம் 81 முலை எழுந்தது 62 முலை நல்லர் 62 முலை நல்லள் 62 முலை நொந்தாள் 62 முறைக்குத்துக் குத்தினான் 102 முறையாற் குத்தும் குத்து 102 முறையிற் குத்தும் குத்து 102 முனிவன் அகத்தியன் 41 மூக்கு நல்லள் 62 மூப்புத் தீயன் 59 மெய் உணரின் வீடு எளிதாம் 230 மெய் வலியன் 216 மேற்சேரிக் கோழி அலைப்புண்டது 61 மேனி எல்லாம் பசலை ஆயிற்று 188 மோவாய் எழுந்தது 174 ய யாக்கை தீது 58 யாக்கையும் நிலையாது 34 யாட்டுப் பிழுக்கை 443 யாட்டுளா னின்னுரை தாரான் 449 யா பன்னிருவர் மாணாக்கர் உளர் அகத்தியனார்க்கு 281 யாம் இல்லை 227 யாம் உண்ட ஊண் 227 யாம் உண்ணும் ஊண் 227 யாம் உண்மன ஊண் 227 யாம் கண்டபொழுது இம்மாடத்து மேல் நின்றானும் இருந்தானும் கிடந்தானும் இவன் 295 யாம் பொருள் இலம் 360 யாம் வந்தேம் 11 யாம் வேறு 227 யாழ் கேட்டான் 119 யாழ்ப்பத்தல் 399 யாழும் குழலும் பறையும் இயம்பினார் 47 யாற்றை நீரை விலக்கினான் 89 யான் இல்லை 227 யான் உண்ட ஊண் 227 யான் உண்டாய் 11 யான் உண்டான் 11 யான் உண்ணும் ஊண் 227 யான் உண்மன ஊண் 227 யான் எது செய்வல் 69 யான் எம்மூர் புகுவன் 463 யான் கருவூர்க்குச் செல்வல் 257 யான் சொன்னவன் 71 யான் பொருதல் வேண்டும் 229 யான் வந்தேன் 11 யான் வேறு 227 யானும் அவனும் இல்லை 227 யானும் அவனும் உண்ட ஊண் 227 யானும் அவனும் உண்டனெம் 204 யானும் அவனும் உண்டனேம் 204 யானும் அவனும் உண்ணும் ஊண் 227 யானும் அவனும் உண்மன ஊண் 227 யானும் அவனும் நீயும் உண்கும் 204 யானும் அவனும் வேறு 227 யானும் உறையூர்க்குப் போதுவல் 257 யானும் நீயும் அவனும் இல்லை 227 யானும் நீயும் அவனும் உண்கும் 204 யானும் நீயும் அவனும் உண்ட ஊண் 227 யானும் நீயும் அவனும் உண்னும் ஊண் 227 யானும் நீயும் அவனும் வேறு 227 யானும் நீயும் இல்லை 227 யானும் நீயும் உண்கும் 204 யானும் நீயும் உண்ட ஊண் 227 யானும் நீயும் உண்ணும் ஊண் 227 யானும் நீயும் உண்மன ஊண் 227 யானே கொண்டேன் 259 யானே கொள்வேன் 435 யானை இலண்டம் 443 யானை ஓடிற்று 50 யானைக் காடு 99 யானைக்குக் கோடு கூரிது 111 யானைக் கோடு 420 யானைக் கோடு கிடந்தது 68 யானைக்கோடு கூரிது 420 யானை தேர் குதிரை காலாள், 293 யானை தேர் குதிரை காலாள் எறிந்தான் 293 யானை நடந்தது 50 யானையது காடு 81 யானையது கோட்டைக் குறைத்தான் 88,89 யானையது கோட்டை நுனிக்கண் குறைத்தான் 103 யானையது கோடு 81 யானையைக் கோட்டின்கண் குறைத்தான் 89 யானையைக் கோட்டைக் குறைத்தான் 89 யானை வந்தது 173,184 யானை வந்தன 173,184 யானை வந்தாள் 184 யானை வந்தான் 184 யானை வளவன் கொல்லி மீமிசை, யானோ கொள்வேன் 435 வ வட்டப் பலகை 416 வடக்கண் வேங்கடம் 83 வடவேங்கடம் தென்குமரி தொல். பாயிரம் வடுகக்கண்ணன் 463 வடுகங்கண்ணன் 463 வடுகரசர் ஆயிரவர் மக்களை உடையர் 50 வடுகரசர்க்குச் சிறந்தார் சோழிய அரசர் 77 வடுகரசரும் வந்தார் இனித் தமிழ் நாட்டு மூவேந்தரும் வரினும் வருவர் 285 வணிக கிராமத்தார் 167 வந்த சாத்தன் 226 வந்த நாள் 236 வந்தான் சாத்தனொடு 104 வந்தான் வழுதி 429 வந்து போனான் 226 வயிரக்கடகம் 49 வயிறு குத்திற்று 13,15 வயிறு குத்துகின்றது 15 வயிறு குத்துபு கிடந்தான் 233 வயிறு குத்தும் 15 வயிறு நொந்து கிடந்தான் 233 வயிறு மொடுமொடுத்தது 440 வரைவீழ் அருவி 105 வல்லம் எறிந்த நல்லிளங்கோசர் தந்தை மல்லல் யானைப் பெருவழுதி 239 வலியன் சாத்தனின் 104 வழிபோயினார் எல்லாரும் கூறை கோட்பட்டார் 102 வளி உளரும் 19 வளி வழங்கிற்று 114 வாணிகத்தான் ஆயபொருள் 93 வாணிகத்தான் ஆயினான் 75,93 வாணிகத்தின் ஆய பொருள் 93 வாணிகத்தின் ஆயினான் 79,93 வாயான் தக்கது வாய்ச்சி 75 வாராத சாத்தன் 463 வாராது போயினான் 463 வாழும் இல் 236 விண்ணென்று விசைத்தது 261 விண்ணென விணைத்தது 440 விதி வலிது 58 வியாழம் நன்று 58 விரிந்த சாத்தன் 226 விரிந்து கிடந்தான் 226 விரைந்து போயினான் 458 வனையாக் கோல் 238 வனையும் கோல் 236 வனைக்கலத்தது திகிரி 81 வினை விளைந்தது 58 வெண்குடைப் பெருவிறல் 184 வெண்கொற்றப் படைத்தலைவன் 449 வெள்ளாடை 1,418,419 வெள்ளி எழுந்தது 58 வெள்ளியது ஆட்சி 81 வெள்ளென விளர்த்தது 260 வென்ற வேல் 236 வேங்கைப்பூ 419 வேந்து வாழி 429 வேலால் எறிந்தான் 74 வேலான் எறியான் 108 வேலியைப் பிரிக்கும் 73 வேழக் கரும்பு 412,416 வேழம் தீவியது 416 வைதேன் வைதேன் 411 செய்யுள் நிரல் மேற்கோள் (நூற்பா எண்) அ அஆ இழந்தான் (நாலடி. 9) 284 அஃதை தந்தை அண்ணல் யானை அடுபோர்ச் சோழர் (அகம். 96:12,13) 461 அகர முதல (குறள். 1) 440 அகலிரு விசும்பிற் பாயிருள் பருகிப் பகல்கான் றெழுதரு (பெரும்பாண். 1,2) 230 அகவல் மகளே! அகவல் மகளே (குறுந். 23) 131 அகன்றவர் திறத்தினி நாடுங்கால் (கலி. 16:3,4) 231, 415 அகனமர்ந்து செய்யாள் உறையும் (குறள். 84) 233, 280 அகில்படு கள்ளியங் காடிறந்த தோரேஎ (குறுந். 16) 288 அஞ்சுவ தோரும் அறனே (குறள். 366) 298 அட்டில் ஓலை தொட்டனை நின்மே (நற். 300) 451 அடிமை புகுத்தி விடும் (குறள். 608) 57 அடுமின் சோறே (பதிற். 18-1) 226 அண்கணாளனை நகுகம் யாமே 204 அண்டர் - கயிறரி எருத்தின் கதழும் துறைவன் (குறுந். 117) 315 அணங்கிய செல்லல் (அகம். 22:3) 389 அணித்தோ சேய்த்தோ கூறுமின் எமக்கே (புறம். 173: 12) 222 அதிர வருவதோர் நோய் (குறுள். 426) 316 அதுமற் றவலங் கொள்ளாது (குறுந். 12) 264 அதுமன் 253 அதுமன் கொண்கன் தேரே 297 அந்தணர் நூற்கும் அறத்திற்கும் குறள். 543) 103 அந்தில் கச்சினன் கழலினன் (அகம். 76:6,7) 269 அந்தோ! எந்தை அடையாப் போரில் (புறம். 261:1) 284 அம்பல் ஊரும் அவனொடு மொழிமே (குறுந். 51) 240 அம்ம வாழி தோழி (ஐங்குறு. 31: குறுந். 77) 278 அமர்க்க ணாமா னருநிற மூழ்காது (நற். 165) 339 அமரர்ப் பேணியும் ஆவுதி அருத்தியும் (புறம். 99:1) 338 அமிர்தன்ன சாயல் (சீவக. 8) 325 அரசுபடக் கடந்தட்டு (கலி. 105:1) 57 அரிதாரச் சாந்தம் கலந்தது போல 56 அரிமயிர்த் திரண்முன் கை (புறம். 11:1) 356 அரிமலர் ஆய்ந்தகண் அம்மா கடைசி 29 அரியகானம் சென்றோர்க் கெளிய (குறுந். 77) 22 அருங்குரைத்து 251 அருந்திறல் (சிலப். 13:65) 57 அரும்பிணை அகற்றி வேட்ட 338 அருளா யாகலோ கொடிதே (புறம். 144:1) 282 அலமரல் ஆயம் (ஐங்குறு. 64) 311 அலைப்பான் பிறிதுயிரை ஆக்கலும் குற்றம் (நான்மணி. 28) 231 அவர் தம்முளான், தருமதத்த னென்பான் (சீவக. 242) 457 அவரே, கேடில் விழுப்பொருள் (குறுந். 216) 288 அவலெறி உலக்கைப் பாடுவிறந் தயல (பெரும்பாண். 226) 348 அவள் ஆடுவழி ஆடுவழிஅகலேன் மன்னே (அகம். 49: 17,18) 231 அவன் அணங்கு...... விளைவு (நன்.சூ. 394 உரை) 39 அவாஉண்டேல் உண்டாம் (குறள். 107) 230 அழாஅற்கோ வினியே நோய்நொந் துறைவி (குறுந். 192) 205 அழுக்கா றெனவொரு பாவி (குறள். 168) 260 அழுந்துபடு விழுப்புண் (நற். 97) 403 அளிதோ தானேயது பெறலருங் குறைத்தே (புறம். 5:9) 274 அளிநிலை பொறாஅது(அகம். 5:1) 37, 457 அற்றால் அளவறிந் துண்க (குறள். 943) 230 அறிந்த மாக்கட் டாகுக தில்ல (அகம். 15:88) 222 அறியாய் வாழி தோழி! (அகம். 53:1,5,16) 450 அறியாய் வாழி தோழி....... நீயே (அகம். 268: 1,2) 450 அன்ன தன்மையும் அறிந்தீயார் (புறம். 136: 10) 236 அன்னோ! என்னா வதுகொல் தானே (புறம். 345: 18,19) 284 அனையை யாகன் மாறே (புறம். 4:17; 20:20) 252,282 ஆ ஆக்கமொடு கூறல் (20) 228 ஆங்க.... போகியோனே 279 ஆங்கவை விருந்தாற்றப் பகல்அல்கி (கலி. 66:4) 57 ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த (புறம். 242:4) 57 ஆப்பிநீர் எங்கும் தெளித்துச் சிறு காலை (பெரும்பாண். 2) 443 ஆமா நல்லேறு சிலைப்ப (முருகு. 315) 358 ஆயிடை இருபே ராண்மை செய்த பூசல் (குறுந். 43) 57 ஆர் களிறு மிதித்த நீர் (குறுந். 52) 236 ஆர்த்தா கொண்மார் வந்தார் 7, 209 ஆரியர் துவன்றிய பேரிசை இமயம் (பதிற். 11:23) 332 ஆலமர் செல்வன் அணிசால் பெருவிறல் (கலி. 81:9-10) 57 ஆவம்மா அம்மாவென் அம்மா அகன்றனையே (சீவக. 1804) 284 ஆறுஅறி அந்தணர் (கலி. 1:1) 119 ஆன்முன் வரூஉம் ஈகார பகரம் (எழுத். 233) 442 இ இஃது ஒத்தன் (கலி. 84:18) 37 இஃதோ செல்வற் கொத்தனம் யாமென (அகம். 26:19,20) 37 இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றி (299) 289, 293 இடம்படின், வீழ்களிறு மிசையாப் புலியினும் சிறந்த (அகம். 29:2-3) 46 இடைச்சொல் எல்லாம் (455) 416 இடைச்சொற் கிளவி (161) 416,420 இடைமுலைக் கிடந்து (குறுந். 178) 409 இடையெனப் படுப (சொல். 25) 403,441 அதனள வுண்டுகொல் மதிவல் லோர்க்கே (அகம். 48: 26) 270 இது நனி பயக்கும் இதனான் என்னும் (தொ. பொ. 515) 74 இரவரல் மாலையனே (குறிஞ்சி. 239) 313 இரும்பே ரொக்கலொடு பதமிகப் பெறுகுவிர் (மலைபடு. 157) 462 இல் வாழ்வான் என்பான் (குறள். 41) 449 இலம்படு புலவர் ஏற்றகைந் நிறைய (மலைபடு. 576) 360 இலம்பாடு நாணுத் தரும் (சிலப். 9:71) 360 இலமென் கிளவி (எழுத். 316) 360,441 இவற்கீத் துண்மதி கள்ளே(புறம். 290) 445 இவனியார் என்குவை யாயின் இவனே (புறம். 13:1) 463 இழிவிறப்பினோன்....மிசையும் (புறம். 363: 14,15) 455 இழிவறிந்து உண்பான்கண் இன்பம் எய்தும் (குறள். 946) 61 இழைமருங் கறியா நுழைநூற் கலிங்கம் (மலைபடு. 561) 374 இளமை கழிந்த பின்றை வளமை காமம் தருதலும் இன்றே (நற். 126: 9,10) 57 இளைதாக முள் மரம் கொல்க (குறள். 879) 440 இற்றெனக் கிளத்தல் (19) 228 இறப்பத் துணிந்தனிர் கேண்மின் (கலி. 2:10) 461 இன்துணைப் பிரிந்தாரை உடைமை (கலி. 243:1) 195 இன்ன தன்மையி னருமையின் (சீவக. 2754) 236 இனிநினைந் திரக்க மாகின்று (புறம். 243:1) 359 இனி யான் உண்ணலும் உண்ணேன் (கலி. 23:7) 113 ஈ ஈங்கா யினவால் என்றிசின் யானே (நற். 55) 298 ஈங்கு வந்தீத்தாய் 399,458 ஈதன்மாட்டொத்தி பெரும (கலி. 86:22) 225 ஈயாது வீயும் உயிர்தவப் பலவே (புறம். 235:20) 301 ஈயென இரத்தலோ அரிதே நீயது (புறம். 154:8) 445 ஈர்ந்தை யோனே பாண்பசிப் பகைஞன் (புறம். 180:7) 455 உ உசாத்துணை (தொ.பொ. 126) 370 உட்குடையாள் ஊராண் இயல்பினாள் (நாலடி. 384) 57 உடம்பு உயங்கி.... மயக்குற்ற (கலி. 12:47) 233 உடலும்........செத்து 405 உடனுயிர் போகுக தில்ல (குறுந். 57) 253 உடைதிரைத் திவலை அரும்புந் தீநீர் 416 உண்டி வெய்யோர்க் குறுபிணி எளிது (முதுமொழி. 77) 77 உண்மின் கள்ளே (பதிற். 18-1) 226 உப்பொடு.......காய் (நாலடி. 116) 257 உயர்சொற் கிளவி (27) 420 உயவுப்புணர்ந் தன்றிவ் வழுங்கல் ஊரே (நற். 203) 349 உயிரென உடலென இன்றியமையா 289 உரற்கால் யானை ஒடித்துண் டெஞ்சிய யா (குறுந். 232) 233 உரிச்சொல் மருங்கினும் (456) 416 உரிச்சொற் கிளவி (161) 416,420 உருகெழு ஞாயிற் றொண்கதிர் மிசைந்த (புறம். 160:1) 302 உருமில் சுற்றமொடு (பெரும்பாண். 447) 365 உருவக் குதிரை மழவர் ஓட்டிய (அகம். 1:2) 302,312 உருவமென் றுரைத்தி யாயின் (சீவக. 1585) 302 உருவுகிளர் ஒளிவினை (அகம். 142) 24 உலகத்தோடு ஒட்ட ஒழுகல்(குறள். 140) 74 உலங்கொள் தோளினை ஒரு நின்னால் 457 உவந்துவந் தார்வ நெஞ்சமோடு (அகம். 35: 11,12) 306 உள்ளம் போல உற்றுழி உதவும் (கற்.சூ. 53) 109 உள்ளேன் தோழி! படீஇயரென் கண்ணே (குறுந். 243) 457 உற்றார்க் குரியர் பொற்றொடி மகளிர் (இறை.சூ. 14 உரை) 77 உறந்த இஞ்சி உயர்நிலை மாடத்து 347 உறழ்மணியான் உயர் மருப்பின (புறம். 22:2) 75 உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா (நாலடி. 104) 34 உறுகால் 158 உறுகால் ஒற்ற ஒல்கி ஆம்பல் சிறுகுடி (நற். 300) 301 உறைபதி அன்றித் துறைகெழு சிறுகுடி (குறுந். 145) 415 ஊ ஊசியொடு குயின்ற தூசும் பட்டும் 74 ஊட்டியன்ன ஒண்டளிர்ச் செயலை (அகம். 68) 56 ஊடினீர்.... சாற்ற (சிலப். 8: இறுதி) 189 ஊதைகூட் டுண்ணும்.... வண்டு (நன்.சூ. 349 உரை) 212 ஊர்க்கும் அணித்தே பொய்கை (குறுந். 113) 257 ஊர்க்குறு மாக்கள் (புறம். 94-1) 416 ஊராண்மைக் கொத்த படிறுடைத்து (கலி. 89:2) 57 ஊரார் பெண்டென மொழிய (ஐங். 113) 165 ஊன் துவை கறிசோறு உண்டு வருந்து தொழில் அல்லது (புறம். 14: 13,14) 47 எ எங்கள்வினையா லிறைவன் வீடிய வஞ்ஞான்றே (சீவ. 1793) 171 எப்பொருள் எத்தன்மைத் தாயினும் (குறள். 355) 298 எம்ம னோரிவண் பிறவலர் மாதோ (புறம். 210: 3,4) 410 எம்மானே! தோன்றினாய் என்னை ஒளித்தியோ (சீவக. 1801) 156 எய்த்து நீர்ச்சிலம் பின்குரை மேகலை (சீவக. 2481) 342 எய்யா மையலை நீயும் வருந்துதி (குறிஞ்சிப். 8) 342 எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே (எழுத். 61) 273 எல்லேம் பிரியற்கெம் சுற்றமொ டொருங்கே (பரி. திரட்டு) 168 எல்வளை எம்மொடு நீவரின் (கலி. 13:10) 271 எல்வளை நெகிழ்த்தோர்க் கல்லல் உறீஇயர் (நற். 56) 457 எழுத்தெனப் படுப 441 எழுதுவரிக் கோலத்தார் 449 எள்ளுமார் வந்தாரே ஈங்கு (கலி. 81: 24) 209 எற்றமி லாட்டியென் ஏமுற்றாள் (கலி. 144:63) 337 எற்றென் உடம்பின் எழில் நலம் 265 எற்றேற்றம் இல்லாருள் யானேற்றம் இல்லாதேன் 265 எறிதிரை இமிழ்கானல் எதிர் கொண் டாள் என்பதோ....... (கலி. 127: 11,13) 282 என்குறை சொல்லல் வேண்டும் அலவ (அகம். 170) 229 என்போல் பெருவிதுப் புறுக (புறம். 83:4) 414 என்னீர் அறியாதீர் போல இவை கூறின் (கலி. 6:7) 461 என்னொடும் நின்னொடும் சூழாது (அகம். 128:7) 103 ஏ ஏஎ இஃதொத்தன் நாணிலன் (கலி. 62:1) 274 ஏஏ இவளொருத்தி பேடியோ என்றார் (சீவக. 652) 284 ஏஏ ஏஏ அம்பல் மொழிந்தனள் 411 ஏகல் அடுக்கத் திருளளைச் சிலம்பின் (அகம். 52:5) 305 ஏறிரங் கிருளிடை இரவினிற் பதம் பெறாஅன் (கலி. 46:10) 358 ஐ ஐம்பெருங் குழுவும் எண்பேராயமும் (சிலப். 5:157) 57 ஐய சிறிதென்னை ஊக்கி (கலி. 37:15) 225 ஐதே காமம் யானே (குறுந். 217) 385 ஐதேய்ந்தன்று....அன்று (கலி. 55: 9-12) 257 ஐயாவென் ஐயாவென் ஐயா அகன்றனையே (சீவக. 1802) 284 ஒ ஒக்கல் ஒற்கம் சொலியத் தன்னூர் (புறம். 327:5) 360 ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே (புறம். 193:4) 297 ஒண்குழை ஒன்றொல்கி எருத் தலைப்ப 33 ஒண்ணுதல்.......கடிந்தமை 37 ஒப்பும் உருவும் வெறுப்பும் என்றா (பொருளியல். 53) 291 ஒருகுழை ஒருவன் போல (கலி. 26:1) 413 ஒருவர் ஒருவரைச் சார்ந்தொழுகல் ஆற்றின் (நாலடி. 309) 195 ஒல்லென் றொலிக்கும் ஒலிபுனல் ஊரற்கு (ஐந்.ஐம். 28) 261 ஒலிசினை வேங்கை கொய்குவம் சென்றுழி (அகம். 48) 457 ஒழுக்கம் உடைமை குடிமை (குறள். 133) 57 ஒண்வாள்..... ஊரே (புறம். 323: 5-7) 449 ஒன்றானும் தீச்சொல் (குறள். 128) 230 ஓ ஓஒ இனிதே (குறள். 1176) 253 ஓஒ! உவமன் உறழ்வின்றி ஒத்ததே (களவழி. 36) 258,263 ஒன்று இரப்பான்...... ஒருவன் (கலி. 47: 1-7) 257 ஓஒதல் வேண்டும்.....மவர் (குறள். 623) 229 க கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன் (முருகு. 208-217) 459 கச்சினன் கழலினன் தேந்தார் மார்பினன் (அகம். 76: 7-9) 457 கடல்போல் தோன்றல காடிறந் தோரேஎ (அகம். 1:19) 259,288 கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு (குறள். 658) 383 கடிநிலை இன்றே ஆசிரியர்க்க (எழுத். 389) 109 கடிமிளகு தின்ற கல்லா மந்தி 384 கடியுண் கடவுட் கிட்ட செழுங்குரல் (குறுந். 105) 383 கடியுருமின் உரறிக் கடிப்புச் சேர்பு (அகம். 110:3) 383 கடிமரம் தடியும் ஓசை (புறம். 36:9) 383 கடியென்கிளவி (சொல். 383) 158,441 கடுங்கால் ஒற்றலின் சுடர் சிறந் துருத்து (பதிற். 25) 383 கடுஞ்சினத்த கொல் களிறும் (புறம். 55: 7-9) 51 கடுந்தேர் இராமன் உடன்புணர் சீதையை (புறம். 378: 18) 402 கடுந்தேர் குழித்த ஞெள்ள லாங்கண் (புறம். 15:1) 383 கடுவன் முதுமகன் கல்லா மூலற்கு 198 கடை இயநின் மார்பு (கலி. 77:21) 457 கண்டனிர் எல்லாம் கதுமென (கலி. 140:1,2) 189 கண்டிகும் அல்லமோ (ஐங்குறு. 121) 277 கண்ணி.... ஏறே (புறம். 1:1,3) 455 கண்ணகல் ஞாலம் (திரி. கடு. வாழ்த்து) 82,83,252 கண்ணிமை நொடியென (எழுத். 7) 296 கண்ணின்று கூறுதல் ஆற்றான் (கலி. 37:8) 83 கண்ணும் படுமோ என்றிசின் (நற். 61) 277,457 கண்ணே, நோக்கி நோக்கி (குறுந். 44) 367 கண் துயின்று, முன்றிற் போகா (புறம். 159: 4,5) 233 கதவவாற் றக்கதோ (கலி. 57:19) 223 கயந்தலை மடப்பிடி (நற். 137) 322 கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும் (குறுந். 9) 414 கயலறல் எதிரக் கடும்புனல் சாஅய் (நெடுநல். 18) 330 கயிறிடு கதச்சேப் போல மதமிக்கு (அகம். 36:7) 377 கரிய மலர் நெடுங்கண் (சிலப். 7-5) 236 கரிய மலர் நெடுங்கண் காரிகை முன் (சிலப். 7-5) 420 கருங்கண் தாக்கலை (குறுந். 69) 344 கருங்கால் வெண்குருகு! (நற். 54) 153 கருமறிக் காதிற் கவையடிப் பேய்மகள் (சிறுபாண். 197) 362 கருவி வானம் ககழுறை சிதறி (அகம். 4:6) 354 கல்கெழு கானவர் நல்குறூஉ மகள் (குறுந். 71) 441 கல்லாக் கழிப்பர் (நாலடி. 366) 230 கல்லே பரவின் அல்லது (புறம். 335: 11,12) 382 கலம்பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ (மலைபடு. 50) 462 கலிகொள் ஆயம் மலிதொகு பெடுத்த (அகம். 11:4) 349 கவவுக்கடுங் குரையள் காமர் (குறுந். 132) 357 கவளம் கொள்ளாச் சுளித்த யானை (சீவக. 1076) 239 கவிசெந் தாழிக் குவிபுறத் திருந்த (புறம். 238: 1-3) 26 கவிரம் பெயரிய (அகம். 198:15) 72 கழனி நல்லூர் மகிழ்நர்க்கென் இழை (நற். 70) 197 கழிந்தது பொழிந்தென(புறம். 203: 1,2) 205 கழிப்பூக் குற்றும் கானல் அல்கியும் (அகம். 330:1) 53 கழும முடித்துக் கண்கூடு கூழை (கலி. 56:3) 351 கழுமிய ஞாட்பினுள் மைந்திழந்தார் (களவழி. 11) 351 கழூஉவிளங் காரம் கவைஇய மார்பே (புறம். 19:18) 357 கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை (குறள். 290) 77 களிறு கவர் கம்பலை போல (அகம். 96:17) 349 களையுநர் (குறள். 879) 231 கற்றனங்கள் யாமுமுடன் (சீவக. 1795) 171 கறவை கன்றுவயின் படர (குறுந். 108) 340 கறைமிட றணியலும் அணிந்தன்று (புறம். 1:5) 113 கன்றாற்றுப் படுத்த புன்தலைச் சிறார் (குறுந். 241) 55 கன்னிப் பெண்ணா ரமுதின் (சீவக. 24) 420 காண்கு வந்திசின் பெரும (புறம். 17:33) 206 காப்பின் ஒப்பின் (73) 297 காப்பும் பூண்டிசின் கடையும் போகலை (அகம். 7:5) 276 காமம் செப்பாது கண்டது மொழிமோ (குறுந். 2) 276 காய்தலும் உவத்தலும் பிரித்தலும் (கற்.சூ. 6) 338 கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை (முருகு. 7) 355 காரெதிர் கானம் பாடினே மாக (புறம். 144:3) 282 கால்பொர நுடங்கல கறங்கிசை அருவி (கலி. 45:8) 463 காவ லோனக் களிறஞ் சும்மே 109 காவோடு அறக்குளம் தொட்டானும் (திரி. 70) 74 கானம் கடத்திர் எனக்கேட்பின் (கலி. 7:3) 226 கானம் தகைப்ப செலவு (கலி. 3:22) 9 கானலஞ் சேர்ப்பன கொடுமை எற்றி (குறுந். 145) 337 கிழவோள் தேஎத்து (இறை.சூ. 8) 83 கிளையரில் நாணற் கிழங்கு (அகம். 212: 4,5) 107 குண்டுசுனைப் பூத்த வண்டுபடு கண்ணி (முருகு. 199) 236 குணனழுங்கக், குற்றம் உழைநின்று (நாலடி. 353) 350 குரங்குளைப் பொலிந்த (அகம். 4: 8,9) 409,455 குருதி படிந்துண்ட காகம் (களவழி. 5) 22 குரூஉக்கண் இறடிப் பொம்மல் (மலைபடு. 169) 303 குவளை யேயள வுள்ள (சீவக. 243) 457 குழைமாண் ஒள்ளிழை நீ (அகம். 6) 334 குறவரும் மருளும் குன்றத்துப் படினே (மலைபடு. 275) 257 குறுமக ளாடிய, ஊர்க் குறுமாக்கள் (புறம். 94-1) 416 குன்றம், குருதிப்பூவின் (குறுந். 1) 441 குன்றுதொ றாடலும் நின்றதன் பண்பே (முருகு. 217) 298 கூடநீர் நின்ற பெற்றி (சீவக. 1751) 205 கூந்தல்மா கொன்று குடமாடிக் (முத்தொள்.) 131 கூறாமல் குறித்ததன்மேற் (கலி. 1:3) 230 கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் (குறள். 701) 230 கேழ்கிளர் அகலம் 456 கேழற் பன்றி (152-4) 416 கேளிர்! வாழியோ கேளிர் நாளும் (குறுந். 280) 131 கொக்கினுக் கொழிந்த தீம்பழம் (நற். 280) 107 கொடுங்கோல் கோவலர்(முல்லை. 15,16) 27 கொடுஞ்சுழிப் புகாஅர்த் தெய்வம் (அகம். 110: 3,4) 383 கொய்தளிர்த் தண்படலைக் கூத்தப் (நன். 397 உரை) 37 கொலைவர் கொடுமரம் தேய்த்தார் (கலி. 12; 1,2) 71 கொள்வான் கொடித்தானை(பு.வெ. 99) 231 கொள்ளை மாந்தநின் ஆனாது கவரும் (அகம். 3) 362 கொன்முனை இரவூர் போல (குறுந். 91) 256 கொன்வரல் வாடை 256 கொன்றாய்! குருந்தே! (திணை.நூற். 81) 122 கொன்னூர் துஞ்சினும் (குறுந். 138) 256 கொன்னே கழிந்தன் றிளமையும் (நாலடி. 55) 256 கொன்னைச் சொல்லை (256) 253 கோஒல் செம்மையிற் சான்றோர் பல்கி (புறம். 117:6) 67 கோட்டிற் செய்த கொடிஞ்சி நெடுந்தேர் (பொருந. 163) 79 கோடுபல முரஞ்சிய கோளி ஆலத்து (மலைபடு. 268) 333 ச சாயல்மார்பிற் கமழ்தார்குழைத்த 416 சாயல்மார்பு நனியலைத் தன்றே (பதிற். 16:20) 325 சாரல் நாட! என் தோழியும் கலுழ்மே 240 சான்றோர் ஈன்ற தகாத் தகா மகா (பரிபா. 8-57) 126 சான்றோர் என்பிலர் தோழி(அகம். 31) 454 சான்றோர் சமழ்த்தனர் நிற்பவே 452 சில்சொல்லிற் பல் கூந்தல் (புறம். 166:13) 1 சிலைப்பு.........ஆகி (பதிற். 52: 15,16) 323 சிவந்த காந்தள் முதல் சிதை முகில் (பதிற். 15:11) 373 சிறாஅஅர்! துடியர்! பாடுவல் (புறம். 291:1) 143 சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னே (புறம். 235:1) 254,392,445 சிறுகண் யானையொடு பெருந்தேர் (சிறுபாண். 142, 3) 204 சிறுகுரல் நெய்தலெம் பெருங்கழி (அகம். 120: 16) 412 சிறுநனி நீதுஞ்சி ஏற்பினும் (கலி. 12:8) 230 சிறுபைந்தூவி (அகம். 57) 26 சிறுமீன் கவுட்கொண்ட செந்தூவி (ஐந்.எழு, 68) 122 சிறுமை பெருமையிற் காணாது (நற். 50) 67 சிறுமை உறுபவோ செய்பறி யலரே (நற். 1) 341 சினனே காமம் கழிகண் ணோட்டம் (பதிற். 22:1) 314 சீவக சாமியீரே (சீவக. 1913) 142 சுடர்த்தொடீஇ! கேளாய் (கலி. 51:1) 122 சுடரிழாய்! பன்மாணும் (கலி. 47:8) 463 சுறறமை வில்லர் சுரிவளர் பித்தையர் (கலி. 4: 2,3) 457 செஞ்ஞாயிற்று நிலவு வேண்டினும் (புறம். 38) 18 செய்திரங் காவினைச் சேண்விளங்கும் (புறம். 10:11) 359 செய்பொருட் சிறப்பெண்ணி (கலி. 16:18) 415 செய்ய கோல் (சீவக. 264) 236 செலியர் அத்தைநின் வெகுளி (புறம். 6:23) 298 செழுந்தடி தின்ற செந்நாய் ஏற்றை 352 செழுந்தா மரையன்ன வாட்கண் (சீவக. 8) 449 சென்றீ பெரும! (அகம் 46:16) 297,451 சேர்ந்துசெறி குறங்கின் (நற். 170) 363 சேவடி சேர்தும் அன்றே (சீவக. 1) 298 சேற்றுநிலை முனைஇய செங்கண் (குறுந். 261) 386 சொல்லற் பாணி நின்றன னாத (குறிஞ்சிப். 152) 282 ஞ ஞாயிற் றுருவுகிளர் வண்ணங் கொண்ட (பதிற். 52: 29,30) 24 த தசநான் கெய்திய பணைமருள் (நெடுநல். 115) 402 தஞ்சக்கிளவி (268) 158 தடமருப் பெருமை (நற். 120) 321 தடமருப் பெருமை மடநடைக் குழவி (நற். 120) 312 தண்ணந் துறைவன் கொடுமை (குறுந். 9) 403 தண்ணென் றசினே பெருந்துறைப் (ஐங்குறு. 78) 297 தண்வரல் வாடையும் (குறுந். 35) 106 தம்பொருள் என்பதம்மக்கள் (குறள். 63) 410 தம்மின் றமையா நந்நயந் தருளி(நற். 1) 232 தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்து (நெடுநல். 90) 361 தலையின் இழிந்த மயிர்அனையர் (குறள். 964) 79 தளிமழை பொழியும்(மதுரைக். 263-4) 349 தன்சீ ரியல்நல்லாள் தானவற் கீன்ற (இறை.சூ. 14 உரை) 77 தன்பெய ராகலின் நாணி (புறம். 152:22) 282 தாலி களைந்தன்று மிலனே (புறம். 77:7) 219 தாவில் நன்பொன் தைஇயபாவை (அகம். 212:1) 344 தான்பிற, வரிசை அறிதலின் (புறம். 140: 5,6) 281 தானும் தேரும் பாகனும் வந்தென் (யா.வி.சூ. 28 உரை) 51 திங்களுள் தோன்றி யிருந்த குறுமுயால் (கலி. 144) 153 திரிகாய் விடத்தரொடு (பதிற். 13:14) 317,389 திருந்துவேல் விடலையொடு (அகம். 195:2) 199 திருவிற்றான்மாரி கற்பான் துவலை (சீவக. 2070) 231 தினைத்தா ளன்ன சிறுபசுங் கால... (குறுந். 25) 461 தினைத்துணையும் தேரான் (குறள். 144) 449 தீயின் அன்ன ஒண்செங் காந்தள் (மலைபடு. 145) 414 துகிரும் முத்தும் பொன்னும் 16 துடுப்பெனப் புரையுநின் (கலி 59: 4,6) 103 துணையிற் றீர்ந்த கடுங்கண் யானை (நற். 108) 318 துயவுற்றேம் யாமாக 368 துறந்துள்ளார் அவரெனத் (கலி. 35:8) 131 துன்னருந் துப்பின் வயமான் தோன்றல் (புறம். 44:10) 366 துன்னிப், பெரிய ஓதினும் (புறம். 375: 18,19) 230 துனைபரி துரக்கும் துஞ்சாச் செலவின் (அகம். 9:16) 315 தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது (அகம். 36:6) 29 தெள்ளறல் தழீஇய வார்மணல் (அகம். 34:7) 317 தேமலர் அங்கண் திருவே! புகுதக (சீவக. 2121) 57 தேனென் கிளவி (எழுத். 340) 441 தைப்பமை சருமத்து (பரி. 21-3) 402 தையலாய்! சம ழாதுரை என்றதே (சீவக. 1000) 452 தொடர்கூரத் துவ்வாமை வந்தக் கடை (கலி. 22: 21,22) 231 தொண்டையோர் மருக!..... (பெரும்பாண். 454-56) 153 தொல்லெழில் வரைத்தன்றி (கலி. 29:1) 232 ந நங்கையைச் செற்ற தீங்குத்(சீவக. 1275) 318 நசைதர வந்தோர் நசை பிறக்கொழிய (புறம். 15:15) 281 நட்டார்க்குத் தோற்றலை நாணாதோன் (கலி. 43: 10,11) 77 நட்பரண் ஆறும் உடையான் (குறள். 381) 449 நடுங்குநோய் தீரநின் (கலி. 127: 7,9) 282 நம்பன்! சிறிதே இடைதந் திது கேட்க (சீவக. 1975) 131 நரைவருமென் றெண்ணி (நாலடி. 11) 261 நல்லை மன்னென நகூஉப் (அகம். 248-16) 213 நளிபுகை கமழாது இறாயினிர் மிசைந்து (மலைபடு. 249) 46 நளிமலை நாடன் நள்ளியவன் எனவே (புறம். 150:28) 320 நளியென் கிளவி (323) 441 நறுஞ்சாந்து புலர்ந்த கேழ்கிளர் அகலம் (மதுரைக். 493) 303 நன்றும் அரிதுதுற் றனையாற் பெரும (அகம். 10: 6,7) 343 நன்றுமன் என்னிது நாடாய் கூறி (கலி. 21:6) 225 நன்னர் நறுநுதல் நயந்தனை நீவி 457 நனந்தலை உலகம் வளைஇ (முல்லைப். 1) 376 நனவிற் புணர்ச்சி நடக்கலு மாங்கே (கலி. 39:35) 230 நனவுப்புகு விறலியிற் றோன்று நாடன் (அகம். 82:10) 376 நனிநீ டுழந்தன்று மன்னே இனியே (குறுந். 149) 463 நாணி நின்றோள் நிலைகண் டியானும் 37 நாணும் நட்பும் இல்லார்த் தேரின் (அகம். 298: 8-9) 35 நாம நல்லராக் கதிர்பட வுமிழ்ந்த 365 நாயுடை முது நீர் (அகம். 16) 37 நாரரி நறவி னாண்மகிழ் தூங்குந்து (புறம். 400:14) 294 நாளன்று போகி (புறம். 124:1) 230 நாளும் அன்னான் புகழும் அன்னை 257 நில்லாது பெயர்ந்த பல்லோருள் (அகம். 110:20) 463 நிலங்கிளையா, நாணி நின்றோள் (அகம். 16: 15,16) 230 நிலத்துக் கணியென்ப நெல்லும் (நான்மணி. 9) 77 நிலநீர் வளிவீசும் பென்ற நான்கின் (பதிற். 14: 1,2) 293 நிலம்புடையூ எழுதரும் வலம்படு (பதிற். இலங்குதொடி) 230 நிலம் பூத்த மரம் (கலி. 27:9) 4 நிலவன் மாரே புலவர் (புறம். 375:18) 209 நிழத்த யானை மேய்புலம் படர (மதுரைக். 303) 330 நின்மகள், பாலும் உண்ணாள் (அகம். 48:1) 95 நின், மைந்துடை மார்பிற் சுணங்கு (கலி. 18: 3,4) 413 நின்றான் இருந்தான் கிடந்தான் 463 நின்றே எறிப பறையினை - நன்றே காண் (நாலடி. 24) 284 நின்னது தாவென....... என்கோ (புறம். 136: 12-14) 446 நின்னீர அல்ல நெடுந்தகாய் (கலி. 6:8) 461 நின்னுறு விழுமம் களைந்தோள் (அகம்.170:13) 353 நீங்கின ளோவென் பூங்க ணோளே (ஐங்குறு. 375) 297 நீ சிவந் திறுத்த நீரழி பாக்கம் (பதிற். 13:12) 372 நீயுறும் பொய்ச்சூள் அணங்காகின் (கலி. 88: 20,21) 205 நீயே பிறர்நாடு கொள்ளுங் காலை (புறம். 57:5) 195 நீர்க்கோழி கூப்பெயர்க் குந்து (புறம். 395-11) 294 நீர்தெவு நிரைத் தொழுவர் (மதுரைக். 89) 345 நுணங்கிய கேள்வியர் அல்லால் (குறள். 419) 230 நுணங்கு துகில் நுடக்கம்போல(நற். 15) 374 நும்ம னோருமற் றினைய ராயின் (புறம். 210:3) 410,414 நூலாக் கலிங்கம் வாலரைக் கொளீஇ (பதிற். 12:21) 236 நெடுந்தேர், தாங்குமதி வலவ! (அகம். 66:12,13) 205 நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் (புறம். 243:9) 260 நெருப்பழற் சேர்ந்தக்கால் நெய்போல் (நாலடி. 124) 280 நெல் அரியும் இருந்தொழுவர் (புறம். 24) 235 நெல்லரி தொழுவர் கூர்வாள் மழுங்கின் (புறம். 379:3) 415 நெறிதாழ் இருங்கூந்தல் நின் பெண்டிர் கலி. 97: 28,29) 189 நொறிலியல்....கோமான் 396 நோகோ யானே (ஐங்குறு. 205) 206 நோய்மலி வருத்தம் காணன்மார் (நற். 64) 209 ப பகடுநடந்தகூழ் பல்லாரோடுண்க (நாலடி. 2) 413 பகல்கான் றெழுதரு பல்கதிர்ப் பருதி (பெரும்பாண். 2) 443 பசந்த மேனியொடு (புறம். 159: 6-14) 235 படிவ உண்டிப் பார்ப்பன மகனே (குறுந். 156) 131 படுமகன் கிடக்கை காணூஉ (புறம். 278:8) 230 பண்டறியா தீர்போல் படர்கிற்பீர் (கலி. 39-38) 253 பதவு மேய்ந்த மதவுநடை நல்லான் (அகம். 14:9) 377 பயவாக் களரனையர் கல்லாதவர் (குறள். 406) 307 பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும் (புறம். 324:7) 413 பருந்திருந் துயாவிளி பயிற்று (அகம். 19: 2,3) 369 பல்கால் - வாக்குபு தரத்தர (பொருந. 86-88) 230 பல்குரைத் துன்பங்கள் சென்று படும் (குறள். 1045) 274 பல்லார்தோள் தோய்ந்து வருதலால் 56 பழங்க ணோட்டமும் நலிய (அகம். 66: 25-26) 350 பன்னிரு கையும் பாற்பட இயற்றி (முருகு. 118) 33 பாட்டுங் கோட்டியும் அறியாப் 293 பாடில் மன்னரைப் பாடன்மார் எமரே (புறம். 357:21) 209 பாடுகம்வம்மின் போதுகம் (கலி. 104:63) 204 பாடுகம் வாவாழி தோழி (கலி. 41:1) 204 பாடுதும் பாவை பொற்பே(சீவக. 2046) 460 பாய்ந்தாய்ந்த தானைப் (கலி. 96:2) 330 பார்ப்பார் அறவோர் பசுப்பத் தினிப் (சிலப். 21: 53,54) 51 பார்ப்பார் தவரே சுமந்தார் (ஆசாரக். 64) 51 பிணிக்கு மருந்து (குறள். 1102) 77 பிறந்தவர்கள் எல்லாம் அவாப் (சீவக. 2622) 171 புண்ணுமிழ் குருதி முகம்பாய்ந் திழிதர (குறிஞ்சிப். 172) 361 புணர்தரு செல்வம் தருபாக்குச் (கார். 11) 231 புதுமலர் கஞல இன்று பெயரின் (புறம். 147) 254 புதுவதின் இயன்ற அணியன் (அகம். 66) 230 புதுவது புனைந்த வெண்கை யாப்பு (மலைபடு. 28) 230 புரிமாலையார் பாடினியரும் 457 புரைதீர் கேள்விப் புலவ ரான 109 புரைய மன்ற புரையோர் கேண்மை (நற். 1) 302 புலராப் பச்சிலை இடையிடுபு தொடுத்த (புறம். 33:12) 230 புலிநின் றிறந்த நீரல் ஈரத்து (நற். 103) 442 புலிப்பல் கோத்த புலம்புமணித் தாலி (அகம். 7:18) 331 புறநிழற் பட்டாளோ இவளிவட் (கலித். 99:9) 281 புனல்தரு பசுங்காய் தின்ற (குறுந். 292:2) 29 புனற் கன்னிகொண் டிழிந்த தென்பவே (சீவக. 39) 298 புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி (அகம். 56:11) 375 புனிறுதீர் குழவிக் கிலிற்றுமுலை போல (புறம். 68:8) 375 பூணணிந்து விளங்கிய புகழ்சால் மார்ப (பதிற். 65:12) 233 பெட்ட வாயில்பெற் றிரவு (கள.சூ. 11) 338 பெட்ப நகும் (சீவக. 1662) 338 பெடைமயில் உருவிற் பெருந்தகு (பொருந. 47) 420 பெண்அவாய் ஆண் இழந்த பேடி (நாலடி. 251) 4 பெண்டகையாற் பேரமர்க் கட்டு (குறள். 1083) 75 பெண்ணரசி ஏந்தினள் (சீவக. 736) 57 பெயர்த்தனென் முயங்கயான் (குறுந். 84) 457 பெருங்கல் வைப்பின் நாடுகிழ வோயே (புறம். 202:21) 131 பெருங்கை யற்றவென் புலம்பு (புறம். 210-15) 230 பெருந்தோள் சிறுநுசுப்பின் 26 பெருவரை அடுக்கம் பொற்பச்(நற். 34) 335 பெருவரை மிசையது நெடுவெள் ளருவி (குறுந். 78) 457 பெருவிறல் அமரர்க்கு வென்றி தந்த (புறம். 553) 29 பெருவேட்கையேன் எற்பிரிந்து 457 பெற்றோற் பெட்கும் பிணையை (அகம். 86) 338 பெறலருங் குரைத்து 399 பேதை அல்லை மேதையங் குறுமகள் (அகம். 7:6) 402 பேரிசை நவிரம் மேஎய் உறையும் (மலைபடு. 82,83) 329 பைம்பூண் சேஎய் (பெரும்பாண். 458) 153 பையுள் மாலைப் பழுமரம் படரிய (குறுந். 195) 341 பொச்சாவாக் கருவியான் போற்றிச் (குறள். 537) 236 பொய்கைக்குச், சேய்த்தும் அன்றே (குறுந். 113) 257 பொய்கைபூப் புதிதீன (கலி. 31:5) 230 பொற்பூண் சுமந்த புணர்மென்(சீவக. 19) 37 பொன்னொடு இரும்பனையர் 75 பொன்னோடைப் புகரணிநுதல் (புறம். 3: 7-12) 409,412 போர்க்குப் புணைமன் (பு.வெ. 80) 77 போர்யானை வந்தீக ஈங்கு (கலி. 86:10) 57 போராரா ஏற்றின் பொருநா (கலி. 109: 4,5) 378 மகனெனல்; மக்கட் பதடி எனல் (குறள். 196) 228 மடவை மன்ற வாழிய முருகே (நற். 34) 267 மடிமை குடிமைக்கண் தங்கின் (குறள். 608) 57 மண் திணிந்த நிலனும் (புறம். 2: 1-3) 257 மணங்கமழ் வியன்மார் பணங்கிய (அகம். 22:3) 304 மந்திர விதியின் மரபுளி வழாஅ (முருகு. 45) 252 மயிற்சாயல் மகள்வேண்டிய (பு.வெ.மா.கொளு) 325 மரீஇய தொராஅல் (443) 228 மலைவான் கொள்ளென் றுயர்பலி (புறம். 143:1) 438 மற்றறிவாம் நல்வினையாமிளையம் (நாலடி. 19) 264 மற்றிந்நோய் தீரும் மருந்தருளாய் (கலி. 60: 18,19) 236 மற்றுங் கூடும் மனைமடி துயிலே (நற். 360) 264 மறங்கடிந்த அருங்கற்பின் (புறம். 166:13) 1 மன்ற மராஅத்த பேஎம்முதிர் (குறுந். 87) 365,461 மன்ற வேம்பின் ஒண்குழை மலைந்து (புறம். 79:2) 413 மன்று பாடவிந்தது 420 மன்னாப் பொருட்பிணி முன்னி(நற். 71) 34 மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் (புறம். 165:1) 34 மன்னைச் சொல்லே (254) 253 மன்னுக பெரும! நீ நிலமிசை யானே (புறம். 6:29) 34 மனத்தொடு வாய்மை மொழியின் (குறள். 295) 75 மனைக்குப்பாழ் வாள்நுதல் இன்மை (நான்மணி. 20) 77 மாஅல் யானையொடு மறவர் (கலி. 5: 2,3) 233 மாணலம் தாவென வகுத்தற் கண்ணும் (தொல்.பொ. 150) 446 மாதர்கொள் மானோக்கின் மட நல்லாய் (கலி. 56:17) 328 மாதர் வாண்முகம் மதைஇய நோக்கே (அகம். 130:14) 378 மால்வரை ஒழுகிய வாழை (சிறுபாண். 21) 317 மாற்றருந் துப்பின் மாற்றோர் பாசறை (புறம். 309: 5,6) 216 மீனென் கிளவி (எழுத். 339) 441 முகந்தனர் கொடுப்ப (புறம். 33:6) 457 முட்புற முதிர்கனி 420 முத்தை வரூஉம் காலம் தோன்றின் (எழுத். 164) 403 முயங்கினெ னல்லனோ (புறம். 19:7) 412 முரசுகடிப் பிகுப்பவும் வால்வளை (புறம். 158:1) 358 முரசுகெழு தாயத் தரசோ தஞ்சம் (புறம். 73:3) 268 முரசுமுழங்கு தானை மூவருள்ளும் (புறம். 35: 4,5) 463 முழுதென் கிளவி (சொல். 326) 441 முறிமேனி முத்தம் முறுவல்(குறள். 1113) 414 மூங்கில் மிசைந்த முழந்தாள் இரும்பிடி (கலி. 50:2) 46 மூப்புடை முதுபதி (அகம். 7) 57 மெல்விரல் மந்தி குறைகூறும் (கலி. 40:16) 222 மெழுகும் ஆப்பிகண் கலுழ்நீ ரானே (புறம். 249:14) 443 மையில் வாண்முகம் பசப்பூ ரும்மே (கலி. 7:8) 308 மோயினள் உயிர்த்த காலை (அகம். 5:24) 457 ய யாணது பசலை என்றனன் (நற். 50) 381 யாத்த சீரே அடியாப் பெனாஅ (செய். 1) 290 யாதுகொல் மற்றவர் நிலையே (அகம். 139:17) 270 யாதும் ஊரே (புறம். 192:1) 257 யாம்எம் மகனைப் பாராட்ட(கலி. 85:29) 95 யாரஃ தறிந்திசி னோரே (குறுந். 18) 277 யான் போகும் புழை (ஏலாதி, 11) 240 யானும் என் எஃகமும் சாறும் 43 யானும், பேணினெ னல்லனோ மகிழ்ந (அகம். 16) 338 யானோ தேறேனவர் பொய்வழங் கலரே (குறுந். 21) 258 வ வகைதெரிவான் கட்டே உலகு (குறள். 21) 223 வடுகர் அருவாளர் வான்கருநாடர் (நன்.சூ. 378 உரை) 51 வந்துநனி வருந்தினை வாழிய நெஞ்சே (அகம். 19:12) 301 வந்தோய் மன்ற தண்கடற் சேர்ப்ப (அகம். 80:3) 214 வம்பு மாரியைக் காரென மதித்தே (குறுந். 66) 327 வயவுறு மகளிர் (புறம். 20:14) 371 வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும் (நாலடி. 201) 371 வருகதில் அம்மவெம் சேரி (அகம். 276:7) 251,253,255 வருகதில் வல்லே வருகதில் (புறம். 284: 1-4) 255 வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை (குறள். 435) 231 வருமே சேயிழை அந்தில் (குறுந். 293) 269 வரைபுரையும் மழகளிற்றின்மிசை (புறம். 38:1) 312 வல்லம் எறிந்த நல்லிளங்கோசர் தந்தை 239 வல்லவர் செதுமொழி சீத்த செவி (கலி. 68: 2,3) 413 வலனாக வினையென்று வணங்கி (கலி. 35:15) 231 வலனாக வினையென்று வணங்கி நாம் (கலி. 35: 15,16) 234 வலிதுஞ்சு தடக்கை வாய்வாட் (புறம். 394:3) 320 வள்ளியோர்ப் படர்குவர் புலவர் யானும் (புறம். 154:5) 340 வளன்வலி யுறுக்கும் உளமி லாளரோ (புறம். 190: 4,5) 309 வறனீந்தி நீசெல்லும் நீளிடை(கலி. 3:2) 241 வறிதுவடக் கிறைஞ்சிய சீர்சால் வெள்ளி (பதிற். 24:24) 336 வறியவன் இளமைபோல் (கலி. 10:1) 449 வறுவியேன் பெயர்கோ வாள் (புறம். 209:12) 457 வாடுபு வனப்போடி (கலி. 16:2) 230 வாதிகை அன்ன கவைக்கதிர் இறைஞ்சி (மலைபடு. 112) 402 வார்ந்திலங்கு வையெயிற்றுச்(குறுந். 14) 255 வாழ்தல் வேண்டும்இவண் வரைந்த வைகல் (புறம். 367:6) 228 வாழச் செய்த நல்வினை அல்லால் (புறம். 367) 230 வான்மடி பொழுதினி னீர்நசைஇக் 415 வானோக்கி வாழும் (குறள். 542) 94 விசும்பிழி தோகைச் சீர்போன் றிசினே (ஐங்குறு. 74) 297 விசும்புகந் தாடா திரைதேர்ந் 306 விடுவழி விடுவழிச் சென்றாங் கவர் (கலி. 130: 20,21) 231 விதிர்ப்புற லறியா வேமக் காப்பினை (புறம். 20:19) 316 வியந்தன்று மிழிந்தன்று மிலனே (புறம். 77:10) 219 வியன்றானை விறல்வேந்தே (புறம். 38:4) 364 விருந்தின்றி உண்ட பகலும் (திரிகடுகம். 44) 230 விருந்தெதிர் கோடலும் (சிலப் 16:73) 57 வில்லக விரலிற் பொருந்தியவன் (குறுந். 370) 432 வில்லோன் காலன கழலே (குறுந். 7) 197 விழுமியோர், காண்டொறும் செய்வர் (நாலடி. 159) 353 விளங்குமணிக் கொடும்பூண் ஆஅய் (புறம். 130:1) 131 விளிந்தன்று மாதவர்த் தெளிந்த (நற். 178) 281 விளிவின்று..... நல்குமதி (முருகு. 292-295,315) 277 வினவி நிற்றந் தோனே (அகம். 48:14) 213 வீகொடு சென்ற வட்டிற் பற்பல (நற். 210) 379 வெங்கதிர்க் கனலியொடு மதிவலம் (பெரும்பாண். 17,18) 242 வெயில்புறந் தரூஉம் இன்னல் இயக்கத்து (மலைபடு. 374) 304 வெல்வேல் அண்ணல் காணா ஊங்கே (புறம். 141:7) 415 வெள்வளை நல்காள் வீடுமென் உயிரே 403 வெள்வேல் வலத்திர் (கலி. 4:7) 457 வெற்பர் ஆடும் வெற்புச்சேர் 455 வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் (புறம். 53:12) 347 வேங்கையும் ஒள்ளிணர் விரிந்தன (அகம். 2: 16,17) 436 வேங்கையும் காந்தளும் நாறி (குறுந். 84) 432 வேண்டுருவம் கொண்டதோர் (கலித். 56:9) 24 வேதின வெரிநின் ஓதிமுது போத்து (குறுந். 140) 453 வேபாக்கு அறிந்து (குறள். 1128) 231 வேய்மருள் பணைத்தோள் நெகிழச் (அகம். 1:8) 339 வேல் அன்று வென்றி தருவது (குறள். 546) 222 வேலி ஆயிரம் விளையுட் டாக (பொருந. 246-47) 223 வேளாண் எதிரும் விருந்தின் கண் ணும் (கள. 16) 57 வேளாண்மை செய்து விருந்தோம்பி (பழ. 151) 57 வேற்றுமை இல்லா விழுத்திணைப் (புறம். 27:3) 353 வேறென் கிளவி (224) 158 வேனில் உழந்த வறிதுயங் கோய்களிறு (கலி. 7:1) 330 வைந்நுனைப் பகழி மூழ்கலின் செவி (முல்லைப். 73) 387 வையைக் கிழவன் வயங்குதார் (ந. 397 மேற்.) 37 கலைச்சொல் நிரல் நூற்பாவழி (நூற்பா எண்) அ அஃறிணை 1, 3 அஃறிணை இயற்பெயர் 173 அஃறிணைக் கிளவி 43 அஃறிணைக்குரிமை 203 அஃறிணை விரவுப்பெயர் 152 அச்சக் கிளவி 101 அசைக்கும் கிளவி 425 அசைச்சொல் நீட்டம் 155 அசைநிலைக் கிளவி 252, 269, 273, 281 அடிமறிச் செய்தி 407 அடிமறி மொழிமாற்று 404 அண்மைச் சொல் 129, 133 அதுச்சொல் வேற்றுமை 215 அதுவென் வேற்றுமை 88, 95 அதுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி 80 அவையல் கிளவி 442 அளபெடைப் பெயர் 137, 143, 151 அளவின் பெயர் 417 அறியாப் பொருள் 31 அன்மைக் கிளவி 25 அன்மொழித் தொகை 412, 418 ஆ ஆக்கக் கிளவி 22 ஆக்கமொடு கூறல் 20 ஆகுபெயர்க் கிளவி 115 ஆடியற் பெயர் 167 ஆடூஉ அறிசொல் 2, 5 ஆண்மை அறிசொல் 12 ஆண்மை இயற்பெயர் 178 ஆண்மைச் சினைப்பெயர் 179 ஆண்மை சுட்டிய சினைமுதற் பெயர் 180 ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி 4, 12 ஆண்மை முறைப்பெயர் 181 ஆய்தப் பெயர் 169 ஆயென் கிளவி 214 ஆரைக் கிளவி 272 ஆற்றுப்படை 462 இ இகர இறுபெயர் 127 இசைநிறைக் கிளவி 252 இசைப்படு பொருள் 423 இடைச்சொற் கிளவி 161 இடைநிலை 239 இதுசெயல் வேண்டும் என்னுங் கிளவி 245 இயற்கைப் பொருள் 19 இயற்சொல் 397, 398 இயற்பெயர் 176, 177 இயற்பெயர்க் கிளவி 38, 41, 198 இரட்டைக் கிளவி 48 இரவின் கிளவி 444 இருதிணை 10 இருதிணைக்கும் ஓரன்ன உரிமை 203 இருதிணைச் சொல் 174, 224 இருதிணைப் பிரிந்த ஐம்பாற் கிளவி 163 இருபாற் கிளவி 221 இருபாற் சொல் 3 இருபெயர் 417 இருபெயரொட்டு 115 இருமொழி மேலும் ஒருங்குடன் நிலையல் 419 இருவயின் நிலையும் வேற்றுமை 102 இற்றெனக் கிளத்தல் 19 இறைச்சிப் பொருள் 198 இன்னெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி 78 இனச்சுட்டில்லாப் பண்புகொள் பெயர் 18 ஈ ஈயென் கிளவி 445 உ உடன்மொழிப் பொருள் 190 உடனிலை அறிதல் 458 உடைப்பெயர் 167 உம்மை எச்சம் 436 உம்மைச் சொல் 257 உம்மைத் தொகை 412, 417, 421 உம்மை தொக்க எனாவென் கிளவி 291 உம்மை தொக்க பெயர் 418 உயர்திணை 1, 2, 4 உயர்திணைக்குரிமை 203 உரிச்சொற் கிளவி 161, 299 உருபுதொக வருதல் 105 உருபு தொடர்ந்து அடுக்கிய வேற்றுமைக் கிளவி 103 உருபுநிலை 70 உவமத் தொகை 412, 414 உள்ளதன் நுணுக்கம் 330 உளவென் கிளவி 222 உறழ்துணைப் பொருள் 16 உறுப்பின் கிளவி 57 எ எச்சக் கிளவி 287 எஞ்சுபொருட் கிளவி 286, 430, 439 எடுத்த மொழி 61 எண்ணியற் பெயர் 167, 417 எண்ணின் பெயர் 417 எண்ணுக்குறிப் பெயர் 170 எண்ணுத்திணை விரவுப்பெயர் 51 எதிர்மறை எச்சம் 435 எழுவாய் வேற்றுமை 66 எழுத்துப்பிரிந் திசைத்தல் 395 எற்றென் கிளவி 265 என்றென் கிளவி 261 என்னா மரபு 422 எனவென் எச்சம் 438 எனவென் கிளவி 260 ஏ ஏதுக் கிளவி 93 ஐ ஐம்பால் 10 ஐயெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி 72 ஒ ஒடுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி 74 ஒப்பல் ஒப்புரை 75 ஒப்பில் போலி 280 ஒப்பி னாகிய பெயர்நிலை 170 ஒப்பொடு வரூஉங் கிளவி 165, 222 ஒருசொல் அடுக்கு 411 ஒருசொற் பலபொருள் 299 ஒருபெயர்ப் பொதுச்சொல் 49 ஒருபொருள் இருசொல் 460 ஒருபொருள் குறித்த வேறுசொல் 399 ஒருமைச்சினைப் பெயர் 179 ஒருமை சுட்டிய சினைமுதற் பெயர் 180 ஒருமை சுட்டிய பெயர்நிலைக் கிளவி 461 ஒருமையியற் பெயர் 178 ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவி 27 ஒருவழி யுறுப்பு 81 ஒருவினை ஒடுச்சொல் 92 ஒருவினைக் கிளவி 75 ஒழியிசை எச்சம் 434 ஒன்றறி கிளவி 8 ஒன்றறிசொல் 3 ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவி 27 ஒன்றுமார் வினை 87 ஓ ஓம்படை ஆணை 396 ஓம்படைக் கிளவி 98 க கடிசொல் 452 கடியென் கிளவி 383 கண்ணென் வேற்றுமை 85, 89, 215 கண்ணெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி 82 கயவென் கிளவி 322 கழுமென் கிளவி 351 காரணக் கிளவி 40 காலக் கிளவி 209, 223 காலங் கண்ணிய என்ன கிளவி 231 காலமொடு வரூஉம் வினைச்சொல் 203 கிளைநுதற் பெயர் 410 குடிப்பெயர் 167 குழுவின் பெயர் 167 குற்றிய லுகரம் 125 குறிப்பொடு வரூஉம் காலக் கிளவி 217 குறுக்கும்வழிக் குறுக்கல் 403 குறைச்சொற் கிளவி 453 குன்றிய லுகரம் 8, 205, 219 கொடுவென் கிளவி 447, 448 கொடையெதிர் கிளவி 100 கொன்னைச் சொல் 256 ச சார்பென் கிளவி 85 சினைநிலைக் கிளவி 86 சினைநிலைப் பெயர் 167 சினைப்பெயர் 176, 177 சினைமுதற் கிளவி 16, 33 சினைமுதற் பெயர் 176, 177 சினையறி கிளவி 115 சுட்டிக் கூறல் 36 சுட்டுப்பெயர் 40 சுட்டுப்பெயர்க் கிளவி 38 சுட்டுமுதற் பெயர் 139, 144, 150 சுண்ணம் 404, 406 செஞ்சொல் 286, 437 செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலம் 400 செந்தமிழ் நிலம் 398 செய்கென் கிளவி 206 செய்தென் எச்சம் 241 செய்யும் என்னும் கிளவி 229 செய்யுமென் கிளவி 237 செய்யென் கிளவி 450 செய்யுள் ஈட்டச் சொல் 397 செய்யுள் மருங்கு 463 செயப்படு பொருள் 248 செயற்கைப் பொருள் 20 செயற்படற்கு ஒத்த கிளவி 111 செறற்சொல் 57 சேய்மையின் இசைக்கும் வழக்கம் 154 சொல்லென் எச்சம் 441 சொல்வேறு நிலைஇப் பொருள்வேறு நிலையல் 405 சொற்குறிப்பு 90 சொன்மை தெரிதல் 158 த தகுதி 17 தஞ்சக் கிளவி 268 தடவென் கிளவி 321 தடுமாறு தொழிற்பெயர் 96 தருசொல் 29 தன்மைச் சொல் 43, 204 தன்மை திரிபெயர் 57 தன்மை சுட்டல் 25 தன்வினை உரைக்குந் தன்மைச் சொல் 205 தன்னுள் உறுத்த பன்மை 189 தாமென் கிளவி 186 தாவென் கிளவி 446 தானென் கிளவி 187 தானென் பெயர் 139 திசைச்சொல் 397 திசைச்சொற் கிளவி 400 திசைநிலைக் கிளவி 449 திணைநிலைப் பெயர் 167 திரிசொல் 397 திரிசொற் கிளவி 399 தில்லைச் சொல் 255 தீர்ந்துமொழிக் கிளவி 111 துயவென் கிளவி 368 தெய்வஞ் சுட்டிய பெயர்நிலைக் கிளவி 4 தெரித்துமொழி கிளவி 56 தெரிந்த கிளவி 32 தெரிபுவேறு நிலையல் 159 தொகுக்கும்வழித் தொகுத்தல் 403 தொகைமொழி நிலை 412 தொழிற்படக் கிளத்தல் 248 தொழிற்பெயர் 141 தொழின்முதல் நிலை 113 தொன்னெறி மரபு 111 தொன்னெறி மொழி 449 ந நளியென் கிளவி 323 நிரல்நிறை 404, 405 நிலப்பெயர் 167 நிறைப்பெயர் 454 நிறைப்யெர்க் கிளவி 417 நின்றாங்கு இசைத்தல் 59 நீட்டும்வழி நீட்டல் 403 நும்மின் திரிபெயர் 145 நோக்கல் நோக்கம் 94 ப பகுதிக் கிளவி 17 பண்பின் தொகை 412, 416 பண்பி னாகிய சினைமுதற் கிளவி 222 பண்புகொள் கிளவி 222 பண்புகொள் பெயர் 115, 136, 142, 167, 170 பண்புதொக வரூஉங் கிளவி 418 பதினோ ரெழுத்து 10 பல்லோர் அறியும் சொல் 2 பல்லோர் படர்க்கை 229 பலபெயர் 417 பலர்சொல் நடை 421 பலரறி சொல் 7 பலவற்றுப் படர்க்கை 218 பலவறி சொல் 3, 9 பற்றுவிடு கிளவி 111 பன்மை இயற்பெயர் 178 பன்மை உரைக்கும் தன்மைக் கிளவி 211 பன்மைச் சினைப்பெயர் 179 பன்மை சுட்டிய சினைநிலைக் கிளவி 62 பன்மை சுட்டிய சினைமுதற் பெயர் 180 பால்திரி கிளவி 196 பால்பிரிந் திசையா உயர்திணை 58 பால்மயக் குற்ற ஐயக் கிளவி 23 பால்வரை கிளவி 111, 175 பால்வரை தெய்வம் 58 பாலறி மரபு 213 பாலறி வந்த அஃறிணைப் பெயர் 169 பாலறி வந்த உயர்திணைப் பெயர் 164 பாலறி வந்த என்ன பெயர் 168, 172 பிண்டப் பெயர் 91 பிரிநிலை எச்சம் 431 பிரிவில் அசைநிலை 282 பிறிதுபிறி தேற்றல் 105 பிறிதுபொருள் கூறல் 35 பிறிதுபொருள் சுட்டல் 116 பின்மொழி நிலையல் 419 புணரியல் நிலை 252 புனிறென் கிளவி 375 பெண்டென் கிளவி 165 பெண்மை அடுத்த மகனென் கிளவி 166 பெண்மை இயற்பெயர் 178 பெண்மைச் சினைப்பெயர் 179 பெண்மை சுட்டிய உயர்திணை 4 பெண்மை சுட்டிய சினைமுதற் பெயர் 180 பெண்மை முறைப்பெயர் 181 பெயர்க்குரி மரபு 292 பெயர்ச்சொற் கிளவி 111 பெயர்தோன்றுநிலை 66 பெயர்நிலைக் கிளவி 41, 71, 166, 188, 193, 449 பெயர்ப்பய னிலை 67 பெயரின் தோன்றும் பாலறி கிளவி 11 பெயரி னாகிய தொகை 68 பெயரெஞ்சு கிளவி 238, 240, 433 பொதுப்பிரி பாற்சொல் 44 பொருட்கிளவி 77 பொருண்மை தெரிதல் 158 பொருண்மை நிலை 159 பொருள்செல் மருங்கு 107 பொருள்தெரி நிலை 53 பொருள்நிலை மரபு 419 பொருள் புணர்ந்த கிளவி 15 பொருளொடு புணர்தல் 411 பொருளொடு புணராச் சுட்டுப்பெயர் 37 ம மக்கட் சுட்டு 1 மகடூஉ அறிசொல் 2, 6 மகளென் கிளவி 165 மகனென் கிளவி 165 மந்திரப் பொருள் 449 மயங்குமொழிக் கிளவி 249 மற்றென் கிளவி 264 மற்றையது என்னும் கிளவி 266 மன்றவென் கிளவி 267 மன்னாப் பொருள் 34 மன்னைச் சொல் 254 மாரைக் கிளவி 7, 209 மாவென் கிளவி 275 மிகுதி செய்யும் பொருள் 301 முதல்சினைக் கிளவி 88 முதலறி கிளவி 115 முந்நிலைக் காலம் 242 முப்பால் 212 முப்பாற் சொல் 2 முழுதென் கிளவி 326 முற்படக் கிளத்தல் 39 முற்றிய உம்மைத் தொகை 287 முற்றியல் மொழி 243, 427 முறைநிலைப் பெயர் 167 முறைப்பெயர் 128, 155, 176, 177, 181 முறைப்பெயர்க் கிளவி 138, 149 முன்மொழி நிலையல் 419 முன்னத்தி னுணருங் கிளவி 57 முன்னிலை அசைச்சொல் 276 முன்னிலைக் கிளவி 225 முன்னிலை சுட்டிய ஒருமைக் கிளவி 462 முன்னிலை வினைச்சொல் 450 மூவிடம் 28 மெய்ந்நிலைப் பொதுச்சொல் 242 மெய்ந்நிலை மயக்கு 449 மெய்பெறக் கிளந்த உரிச்சொல் 389 மெய்பெறக் கிளந்த கிளவி 463 மெய்ப்பொருள் 122 மெய்யறி பனுவல் 97 மெலிக்கும்வழி மெலித்தல் 403 மேலைக் கிளவி 217 மொழிப்பொருட் காரணம் 394 மொழிபுணர் இயல்பு 404 மொழிமாற்று 404 மொழிமாற்று இயற்கை 409 ய யாணர்க் கிளவி 379 யானென் பெயர் 139 வ வடசொல் 397 வடசொற் கிளவி 401 வடவெழுத்து 401 வண்ணச் சினைச்சொல் 26 வயாவென் கிளவி 371 வருசொல் 29 வலிக்கும்வழி வலித்தல் 403 வழக்கியல் மருங்கு 463 வழக்கி னாகிய உயர்சொற் கிளவி 27 வழக்கு 17 வழக்குவழி 50 வழாஅல் ஓம்பல் 13 வாராக் காலம் 241, 243, 247 வாரா மரபு 422 வாழ்ச்சிக் கிழமை 99 வியங்கோட் கிளவி 228 வியங்கோள் 224 வியங்கோள் எண்ணுப்பெயர் 45 விரிக்கும்வழி விரித்தல் 403 விரைசொல் அடுக்கு 424 விரைந்த பொருள் 243 விளிகொள் பெயர் 122, 130 விறற்சொல் 57 வினாவின் கிளவி 32, 212 வினாவின் பெயர் 139, 145, 150 வினாவுடை வினைச்சொல் 246 வினைக்குறிப்பு 72 வினைச்சொற் கிளவி 243, 247 வினைசெய் இடம் 82 வினைசெயல் மருங்கு 252 வினைப்படு தொகுதி 33 வினைப்பெயர் 167 வினைப்பெயர்க் கிளவி 170 வினைமாற்று 264 வினைமுதல் உரைக்கும் கிளவி 115 வினைமுதல் கருவி 74 வினைமுதற் கிளவி 236, 244 வினையின் தொகுதி 415 வினையின் தொகை 412 வினையின் தோன்றும் பாலறி கிளவி 11 வினையெஞ்சு கிளவி 224, 230, 238, 432 வினைவேறு படாஅப் பலபொருள் ஒருசொல் 52, 55 வினைவேறு படூஉம் பலபொருள் ஒருசொல் 52, 53 வெளிப்பட வாரா உரிச்சொல் 300 வெளிப்படு சொல் 300 வேட்கைப் பெருக்கம் 371 வேற்றுமைக் கிளவி 111 வேற்றுமைத் தொகை 412, 413 வேற்றுமை தொக்க பெயர் 418 வேற்றுமைப் பொருள் 84 வேறுபெயர்க் கிளவி 42 வேறுபொருள் குறித்த ஒருசொல் 399 வேறுவினைக் கிளவி 75 வேறுவினைப் பொதுச்சொல் 46 வேறென் கிளவி 224 கலைச்சொல் நிரல் உரைவழி (நூற்பா எண்) அ அஃறிணை இயற்பெயர் 171 அஃறிணை ஏவற்பொருண்மை 228 அஃறிணை ஒருசார்ப் பெயர் 170 அஃறிணைத் தெரிநிலைவினை 218 அஃறிணைப்பெயர்க்குப் புறனடை 172 அஃறிணை வினைக்குறிப்பு 222 அகப்பாட்டு 450 அகர ஈற்றுப் பல அறிசொல் 9 அகன்று வந்த மாட்டு 409 அசைநிலை 157 அடுக்காது பெயர் வெளிப்படாது நிற்றல் 429 அடுக்கிப் பெயர் வெளிப்படாது நிற்றல் 429 அணுகிவந்த மாட்டு 409 அத்திணைக்கண் பன்மை பற்றிய வழக்கு 49 அதிகாரப் புறனடை 203 அருத்தாபத்தி 61, 402 அருவாவடதலை 400 அவ்வினாய பொருட்கு இயைபுபட்ட கிளவி 15 அறிபொருள் வினா 13 அறியப் பட்ட பொருள் 13 அறிவு ஒப்புக்காண்டல் 13 அறிவு தான் காண்டல் 13 அறுவகைத் திரிபு 412 அன்மொழித்தொகை 1 அனுவாதம் 10 ஆ ஆக்கம் வேறுபாடு குறித்து நிற்றல் 19 ஆசிரியர் கருத்து 414 ஆசிரியன் பேரூர்கிழான் செயிற்றியன் இளங்கண்ணன் சாத்தன் 42 ஆண்பாற்குரிய ஆளுந் தன்மை 4 ஆய்தத் தொடர்மொழிக் குற்றுகர ஈற்றுப் பெயர் 169 ஆறு ஒட்டு 1 இ இசைநிறை அடுக்கு 423 இசைப்பு ஒலி 1 இசையாற் பிறவாமை 440 இசையெச்சம் 440 இடத்தினை வரையறுத்து உணர்த்தாதுநிற்பதோர் இடைச்சொல் 83 இடப் பொருள் உணர்த்துதல் 252 இட மயக்கம் 11 இடனின்றி இரப்போர்க் 444 இடைச்சொற்பற்றி உயர்திணைப் படர்க்கை வினைமுற்று உணர்த்துதல் 210 இயங்குதிணை 1 இயற்பெயர் அல்லா உயர்திணைப் பெயர் 38 இயற்றும் வினைமுதல் 74 இயைபுஇன்மை நீக்கம் 184 இயைபுமில்லாத உருபு மயக்கம் 107 இரண்டு இடத்துப் பெயர்நிலைக் கிளவி 4 இருகால் ஏவுதல் 226 இருதிணைக்கும் பொதுவாகிய செய்யும் என்னுஞ் சொல் 237 இருதிணைக்கும் பொதுவாய தொரு பொருள் இன்மை 224 இருபெயரொட்டாகுபெயர் 1 இருமடி ஏவல் 226 இருமொழித்தொடர் 1, 420 இரு வகைக் குலத்தோர் 463 இல்லதனை உண்டாக்கல் 72 இல்லாமை உண்டாகின்ற புலவர் 360 இல்லென இரப்போர் 444 இலக்கணம் 56 இலக்கணம் ஆக்கிக்கோடல் 257 இலம்படு புலவர் 360 இழிவழக்கு 226 இறந்தகாலச் சொல் 241 இறந்தகால வினைத்தொகை 1 இன்மை செப்பல் 227 இனப்பொருள் 61 ஈ ஈறுகளைத் தொகுத்து இலக்கண வழக்கு உணர்த்துதல் 210 உ உடம்பாட்டுக் குறிப்பு 223 உடம்பொடு புணர்த்தல் 228 உடல் உயிர் கூட்டப் பொதுமை 24 உத்தி 402 உம் ஈற்றோடு இயைய வைத்தமை 205 உய்த்துக்கொண்டுணர்த்தல் 460 உயர் திணைக்கண் தலைமைபற்றிய வழக்கு 49 உயர்திணைப் பெயர்க்குப் புறனடை 168 உயர்திணைப் பொருள் 4 உயர்திணை யதிகாரத்தின் ஒழிபு 192 உயர்திணை வினைக்குறிப்பு 226 உயிர்கள் பிறவாறாயும்விளி ஏற்கும் என்றல் 126 உரிச்சொல் அடியாகப் பிறக்கும் பெயர் 318 உரிச்சொல்லின் பொருண்மை 260 உருபு நிற்கும் இடம் 70 உருபும் பொருளும் உடன் தொகுதலும், உருபு தானே தொகுதலும் 105 உருபு மயக்கம் 89 உருபு மயங்கிய மயக்கம் 89 உருபேற்ற சுட்டுப்பெயரோடு ஒப்பதோர் இடைச்சொல் 40 உரையாசிரியர் 1, 203, 360, 455, 457, 458, 459 உரையிற் கோடல் 222 உலமரல் சொற்புறநடை 311 உவம உருபாகிய இடைச் சொல் முதல்நிலையாகப் பிறந்த பெயர் 414 உள்ளதனைத் திரித்தல் 72 உளப்பாட்டுத்தன்மைக்குத் திரிபு 211 எ எச்சக் குறிப்பு 230 எச்சச்சொல் 430 எடுத்தல் ஓசை 226 எண்ணுநிலைத் தொடர் 1 எண்ணுநிலை வகை 1 எண்ணுப்பொருண்மை 260 எதிர்காலத்துப் பிறந்த நிகழ் காலம் 225 எதிர்பொருள் உணர்த்தல் 452 எதிரது போற்றல் 432 எதிரது போற்றல் என்னும் உத்தி 433 எய்தியதன்மேல் சிறப்பு விதி 348, 350, 359, 373, 378, 384, 441, 442 எய்தியது விலக்கிப் பிறிதுவிதி 127, 129, 133,135 எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் 147, 148, 149, 154 எருத்துச்சீர் 408 எழுத்திற்புணர்ந்த சொற்கள் 452 எழுத்தினானாகிய ஓசை 1 எழுத்துச் சாரியை 252 எழுத்துச் சாரியை ஈறுதிரிதல் 253 எழுவகை வழு 1 எழுவாய்க்கும் பயனிலைக்கும் இடையே கிடந்து பயனிலையை விசேடிக்கும் எச்சங்கள் 457 ஏ ஏதுக்கருத்து 248 ஏம் ஈற்றின் சிதைவு 213 ஏவலொருமை 228 ஏவும் வினைமுதலும் 74 ஐ ஐம்பாற்பொருள் 1 ஐம்பொறிகள் 1 ஐயத்ததாய் நிற்றல் 32 ஐயப்புலப் பொதுச்சொல் 25 ஒ ஒட்டுப் பெயர் 395 ஒப்பில் வழியாற் பொருள் செய்யும் உவம உருபுகள் 252 ஒருதொழிற் உறுவிக்கப்பட்டுத் தானே போதல் 73 ஒருபுடை தழுவுதல் 257 ஒருபொருளின் ஏகதேசம் 81 ஒருமை இயைபு நீக்காது பன்மை சுட்டுதல் 184 ஒழிந்தோர் செய்யுள் 401 ஒன்றுபல குழீஇய தற்கிழமை 81 ஒன்றென முடித்தல் 37, 272, 422 ஓ ஓசை வேற்றுமை 205 க கடலொலி 1 கண்ணழிவு 1 கபிலம் 119 கருத்துப் பொருள் 1 கருநடம் 400 கருப்பம் தங்கி வருத்தமுற்று நுகரப்படும் பொருள்மேல் செல்லும் வேட்கை 371 கருமக் கருத்தா 248 கருமச் சிதைவு 55 கருமையும் பெருமையாகிய குறிப்பும் 396 கருவிருந்தை 16 கலிங்கம் 400 களவியற் சூத்திரம் 163 காட்சிப்பொருள் 1 காண்டிகை 463 காமச்செவ்வி நிகழ்வதொரு காலம் 57 காரக ஏது 463 காரகக் கருவி 74 காரண காரியப் பொருட்டாயே வருதல் 233 காரணப் பொருட்பெயர் 119 காரிய வாசகம் 113 காலஎழுத்து 218 காலக் கடவு 58 கால மயக்கம் 11 குறிப்பான் பொருளுணர்த்தும் பெயர் 115 குறிப்பின்கண் தோன்றிய எச்சம் 439 குறிப்புச்சொல் பரப்புடைமை 301 குறிப்பு நிலை 27 குறிப்பு முற்று 230 குறிப்பு முற்று வாசகம் 414 குறிப்பெச்சம் 396 கைவாரம் கொள்வான் 463 கைவாரி 463 ச சான்றோர் செய்யுள் 35, 401, 458, 460, 463 சான்றோர் செய்யுள் வழக்கம் 414 சிறப்பு விதி 432 சிறந்தன தொகுத்து உணர்த்துகின்றது 230 சிறிது இழக்க வேறுபடுத்தல் 73 சிறிதும் இழவாமல் வேறுபடுத்தல் 73 சினைப்பொருட்கண் வந்த வினையெச்சம் 233 சுட்டு முதற்பெயர் 169 சூத்திரம் 402 செப்பு மயக்கம் 11 செய்தென் எச்சக்குறிப்பு 230 செய்யுட்கண் வழீஇ அமைதல் 18 செய்யுட்கு இலக்கணம் 460 செய்யுட்கு உரிய சொல் 1, 397 செய்யுட் செய்தற்கு உரிய சொற்கள் 397 செய்யுள் முடிபு 45 செய்யுள் விதி ஒழிபு 397 செய்யுளிலக்கணங் கூறுகின்ற செய்யுள் 440 சேய்மையாகிய குறிப்பு 396 சொல் புறநடை 331 சொல்லை உணர்த்திய முறைமை 1 சொல்லை எச்சமாக உடைய சொல் 439 சொற்புறநடை 362 சொன்முடிபு நோக்குப்பட நின்று பொருளுணர்த்தாமை 406 ஞ ஞாபக ஏது 75, 93, 463 ஞாபகக் கருவி 74 ஞாபகம் 10 த தந்திரம் 402 தம்முள் இயைபுடைய உருபு மயக்கம் 107 தன் பொருளின் தீர்ந்து பிறிது ஒன்றன் பொருட்கண் செல்லும் உருபு மயக்கம் 85 தன் பொருளின்தீராது பிறிது ஒன்றன் பொருட்கண் செல்லும் பொருள் மயக்கம் 85 தன் வினையும் பிறவினையும் 318 தன்னான் பிறக்கின்ற சொல் 200 தன்னினம் முடித்தல் 36, 38, 57, 215, 454 தன்னைப் பிறன்போற் கூறுங்குறிப்பு 448 தாவாக் கொள்கை 344 திணைதோறும் உரிமைபூண்டு வழங்கப்பட்டு வரும் பெயர் 199 திணை மயக்கம் 11 திணை மயங்காமை 11 திரட்சியை உணர்துதல் 351 திரித்துக் கொண்ட பெயரெச்ச வினைக்குறிப்பு 399 திரிபின்றி இயல்பாகிய சொல் 398 திருவிலி 463 தெரிநிலைப்பொருள் உணரப்படாத சொற்கள் 459 தெரிநிலை வாசகம் 459 தொகுத்தது விரித்தல் 73 தொகை நிலைத்தொடர் 1 தொகை நிலைவகை 1 தொகையல் தொடர்மொழி 420 தொடர்மொழி முதற்கட்பிரிந் திசைத்தல் 274 தொலைவாகி இரப்போர் 444 தொழிலிற் பிரிந்த ஆண் ஒழி மிகுசொல் 50 தொழிலிற் பிரிந்த பெண் ஒழி மிகுசொல் 50 தொழிற் சொல் படுத்தல் 71 தொழிற் பயன் உற்ற மாத்திரையாய் ஒருவன் கொண்டுபோகப் போதல் 73 தொழிற்பயனுறுந் துணையாய் நிற்றல் 72 துணைக் காரணம் 74 ந நம்முச் சாரியை 252 நால்வகைச் சொல் 392 நிகழ் காலச் சொல் 242 நிலைத் திணை 1 நுகரப்படும் பொருள் 47 நுண்ணுணர்வு உடையார் உணருமாறு கூறிய இலக்கணம் 463 நுண்ணுணர்வு உடையோர்க்குக் காரணம் உண்டாந்தன்மை 394 நூலது குற்றங் கூறல் 112 நூலோதி 463 ப பகர ஈற்றுப் பலர் அறிசொல் 9 படர்க்கை உளப்பாட்டுத் தன்மைப் பெயர் 392 படர்க்கைப் பன்மை முற்று 208 படுத்தல் ஓசை 221, 226 பண்டையார் வழக்கு 2 பண்பு ஒட்டு 67 பண்பு மாத்திரை 450 பண்புப் பொருள் 303 பயன் நோக்கி வினாதல் 13 பயனிலைத் தொடர் 1 பயனிலைவகை 1 பரணரது பாட்டியல் 81 பல உருபு தொடர்ந்து அடுக்கியவழிப் படுவதோர் இலக்கணம் 103 பலபொருள் தொகுதியை உணர்த்தும் பெயர் 91 பலபொருள் விளக்கல் 299 பலவற்றது கூட்டம் 354 பலவாகப் பகுத்தல் 1 பழமையாகிய குறிப்பு 396 பன்மைபற்றிய வழக்கு 49 பன்மை மறை 222 பன்மொழித் தொகை 420 பன்மொழித்தொடர் 1 பால் பற்றிய மரபு வழுவமைதி 194 பால் மயக்கம் 11 பிரேளிகைச் செய்யுள் 449 பிறசொல் இடைநிற்றல் 239 பிற பாடைச்சொற்கள் 397 பிறவினை 233 புடைபெயர்ச்சி தொக்கு நிற்கும் சொற்கள் 415 புறப்பாட்டு 235 புறனடை 167 பூ இரட்டை 48 பெயர் கோடல் 206 பெயர்த் திரிசொல் 147, 399 பெயர் நிரல் நிறை 405 பெயர்ப் பொருண்மை 260 பெயர்ப்பொருள் 4 பெயரிற் பிரிந்த ஆண் ஒழி மிகுசொல் 50 பெயரிற் பிரிந்த பெண் ஒழி மிகுசொல் 50 பெயரெச்சக் குறிப்பு 230 பெயரெச்சக் குறிப்பு மறை விகற்பம் 238 பெயரெச்ச வினைக் குறிப்பாய் நிற்பதொரு பெயர் 416 பெயரெச்ச வினைக்குறிப்பு முற்று 459 பெயரெச்ச வினைத் திரிசொல் 457 பெருத்தலாகிய குறிப்பு உணர்த்துதல் 339 பெருமையைச் சுருக்குதல் 73 பெருமையை விசேடித்து நிற்றல் 458 பெற்று அடுக்குதல் 305 பொது நிரல்நிறை 405 பொதுவாயதொரு பெயர் 37 பொதுவிதி 432 பொருண்மையைத்தான் அவாவிநிற்கும் நிலை 67 பொருளிடையிடுதல் என்னுந் தந்திரவுத்தி 442 பொருளியற் சூத்திரம் 163, 252 பொருளினது புடைபெயர்ச்சி 160 பொருளொடு புணர்தல் அடுக்கு 424 பொது நிரல்நிறை 405 பொதுவாயதொரு பெயரான் 37 பொதுவிதி 432 பொருண்மையைத்தான் அவாவிநிற்கும் நிலை 67 பொருளிடையிடுதல் என்னுந் தந்திரவுத்தி 442 பொருளியற் சூத்திரம் 163, 252 பொருளினது புடைபெயர்ச்சி 160 பொருளொடு புணர்தல் அடுக்கு 424 பொது நிரல்நிறை 405 ம மக்கட்டன்மை 1 மக்கள் இரட்டை 48 மந்திர நூல்கள் 449 மரபியற் சூத்திரம் 1 மரபு மயக்கம் 11 மரபு மயங்காமை 11 மறுதலைப்பாடு 61 மறை வாய்பாடு 205 மன என்னும் வாசகம் 227 மாட்டேறு 219 மீயெடுப்பு 17 முதல் நூல் 463 முதற் காரணம் 74 முழுவதூஉந் தொக்குத் தொகையாதல் 412 முற்று இலக்கணம் 428 முன்னிலை ஏவற் பொருண்மை 450 மூவகைக் குலத்து உள்ளோர் 463 மூன்று இடம் 1 மூன்று காலம் 1 மெய் அவற்குக் காட்டல் 13 மெய்பாட்டியற் சூத்திரம் 215 ய யாப்புடைமை 63 வ வகர ஈற்றுப் பெயர் 169 வடசொற்கு இலக்கணம் 401 வட மொழித்திரிபு 58 வருத்தக் குறிப்பான் உள்ளுதல் 340 வருத்தக் குறிப்பின்றி உள்ளுதல் 340 வருத்தம் இல்லாத விரதம் 344 வற்றுச் சாரியை 252 வாளி 119 விகார வகை 1 விசேடித்து நிற்றல் 63 வியங்கோட்கு எதிர்மறை 209 விரவுத் தொழில் 224 விரவுப்பெயர் செய்யுளுள்வரும் முறைமை 198 விரவு வினை பிரிவு 457 விரித்துரை 463 விரித்தது தொகுத்தல் 73 விரித்தி 402 வினை முடிபு 396 விரைவு பொருளின் சிற்றெல்லை 424 விலங்கு இரட்டை 48 விலைத் தீட்டு 81 விளியது பொதுஇலக்கணம் 120 வினா மயக்கம் 11 வினை இலக்கணம் 200 வினைச்சொற்களது பாகுபாடு 203 வினை பற்றிய அசைநிலை இடைச்சொல் 1 வினை தொகைப்பெயர் 33 வினை மாத்திரை 72 வினை முடிபு 396 வினைமுதல் தொடர்ப்பொருள் 237 வினைமுதல் வினை 232 வினைமுதற் கிளவி 236 வினைமுதற் பெயர் 215 வினையான் அன்றிப் பெயர் தாமே பன்iம் விளக்கல் 173 வினையானும் திணை தெரியாமை 190 வினையெச்சக் குறிப்பு 230 வினையெச்ச முற்று 457 வினையெச்ச வினைக்குறிப்பு முற்று 459 வினையெச்ச வினைத் திரிச்சொல் 457 வினைவேறுபடாத பல பொருள் ஒருசொல் 54 வேண்டா கூறி வேண்டியது முடிக்கின்றது 131 வேற்றுமை 1 வேறுபட நிற்றலானும் 63 வேறுபல குழீஇய தற்கிழமை 81 வேறுபாட்டினைச் செய்யுஞ் சொல் 455 தொல்காப்பியப் பதிப்புகள் கால வரிசையில் - சொல்லதிகாரம் வ. காலம் நூல் பகுதி, உரை பதிப்பாசிரியர் எண் 1. 1868 செப். சொல். சேனா. சி.வை. தாமோதரம் பிள்ளை (விபவ. புரட்டாசி) 2. 1868 நவ. ” இராசகோபால பிள்ளை (விபவ, கார்த்திகை) 3. 1892 சொல். நச்சர் ” 4. 1922 மார்ச் எழுத்து. சொல் (மூலம்) கா. நமச்சிவாய முதலியார் 5. 1923 மார்ச் சொல். சேனா. கந்தசாமியார் 6. 1927 சொல். இளம். ” 7. 1929 சொல். தெய்வ. ரா. வேங்கடாசலம் பிள்ளை 8. 1930 சொல். குறிப்புரை பி.சா.சு. சாஸ்திரியார் 9. 1934 சொல். சேனா. ஆறுமுக நாவலர் 10. 1938 சொல். சேனா. கணேசையர் 11. 1941 சொல். நச்சர் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை 12. 1945 சொல் (மொழி) பி.சா.சு. சாஸ்திரியார் 13. 1946 சொல். சேனா. தேவநேயப் பாவாணர் 14. 1952 சொல். நச்சர்* தி.த. கனகசுந்தரம் பிள்ளை 15. 1954 சொல். சேனா. ஆ. பூவராகம் பிள்ளை 16. 1962 சொல். நச்சர் கு. சுந்தரமூர்த்தி 17. 1962 சொல். நச்சர் இராம. கோவிந்தசாமி 18. 1963 சொல். இளம். கு. சுந்தரமூர்த்தி 19. 1963 சொல். தெய்வ. ” 20. 1963 சொல். வி.ஐ. சுப்பிரமணியன் 21. 1964 சொல். கல். பழைய கு. சுந்தரமூர்த்தி 22. 1966 சொல். சேனா. ” 23. 1971 செப். தொல். நன். சொல். வெள்ளைவாரணனார் 24. 1971 இ. தொகை (சொல்) ச.வே.சு. 25. 1984 மே வேற்றுமை மயங்கியல் ஆ. சிவலிங்கனார் 26. 1984 மே விளிமரபு ” 27. 1984 சூலை பெயரியல் ” 28. 1984 செப். வினையியல் ” 29. 1972 முதல் 1985 எழுத்து. சொல் (மொழி) கமில்சுவலபில் 30. 1985 எழுத்து. சொல் (மொழி) டி. ஆல்பர்ட் 31. 1988 அக். சொல் ” 32. 1989 சொல். சேனா. கு. சுந்தரமூர்த்தி