தொல்காப்பிய உரைத்தொகை சொல்லதிகாரம் – இளம்பூரணம் - 4 இளம்பூரணம் கா. நமச்சிவாய முதலியார் (பதிப்பு - 1927) மீள்பதிப்பு - 2018 பதிப்பாசிரியர் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் தமிழ்மண் பதிப்பகம் நூற்குறிப்பு தொல்காப்பிய உரைத்தொகை - 4 சொல்லதிகாரம் – இளம்பூரணம் முதற்பதிப்பு (1927) கா. நமச்சிவாய முதலியார் பதிப்பாசிரியர் மீள்பதிப்பு (2018) முதுமுனைவர் இரா. இளங்குமரனார் பதிப்பாசிரியர்கள் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் பக்கம் : 24+496 = 520 விலை : 810/- பதிப்பு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. bjh.ng.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்:  தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 520  f£lik¥ò : இயல்பு  படிகள் : 500   நூலாக்கம் : கோ. சித்திரா   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (Harrish)   அச்சு : மாணவர் நகலகம், பிராசசு இந்தியா, ரியல் இம்பேக்ட் சொல்யூசன், தூரிகை பிரிண்ட், வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.  தொல்காப்பிய உரைத்தொகை தொல்காப்பியம் நம் வாழ்வியல் ஆவணம்; நம் முந்தையர் கண்ட மொழியியல் வளங்கள் அனைத்தையும் திரட்டித் தந்த தேன் தேட்டு! அத்தேட்டைச் சுவைத்த கோத்தும்பிகள் பழைய உரையாசிரியர்கள். அவர்கள் உரைகளையெல்லாம் ஒன்று திரட்டி, வரிசையுறத் தமிழுலகம் கொள்ள வைத்த உரைத்தொகுதிகள் இவையாம்! முன்னைப் பதிப்பாசிரியர்கள் தெளிவுறுத்தும் மணிக்குவைகள் எல்லாமும், அவர்கள் வைத்த வைப்புப்படி வைத்த செப்பேடுகள் இத் தொல்காப்பிய உரைத் தொகையாம். மேலும், இவை கிடைத்தற்கு அரிய கருவூலமுமாம்! ***** ***** ***** இளம்பூரணர், சேனாவரையர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், தெய்வச் சிலையார், கல்லாடர் ஆகிய பழைய உரையாசிரியர்கள், உரை விளக்கம் பல காலங்களில் எழுதியுளர். எழுத்து, சொல், பொருள் ஆகியவற்றின் பதிப்புகள் ஒரே காலத்தில் ஒருவரால் வெளியிடப்பட வில்லை. அவற்றையெல்லாம் ஓரிடத்தில் ஒரே வேளையில் ஒட்டு மொத்தமாக முன்னைப் பதிப்பாசிரியர்கள் உரை - விளக்கம் - குறிப்பு - இணைப்பு ஆகியவற்றுடன் பெற வெளியிடும் அரிய பெரிய முயற்சியில் வெளியிடப்படுவது தமிழ்மண் பதிப்பகத்தின் இப்பதிப்பாகும். தொல்காப்பியத்திற்குக் கிடைத்த உரைகள் அனைத்தையும் ஒருமொத்தமாகத் தருவதால் இது, தொல்காப்பிய உரைத்தொகை எனப்பட்டது. தொகையாவது தொகுக்கப்பட்டது. இரா. இளங்குமரன் அறிமுகவுரை கா. நமச்சிவாயர் காஞ்சிபுரத்திற்கு மேற்கே, 30 கல் தொலைவில் உள்ள, காவிரிப்பாக்கம் என்னும் ஊரில் கி.பி. 20.2.1876இல் தோன்றியவர். இவர் பெற்றோர். இராமசாமி - அகிலாண்டேசுவரி, தந்தையார் ஆசிரியர். அவரிடமும் திருமயிலை சண்முகனாரிடமும் 1892 முதல் 1905 வரை பயின்று, தமிழில் தேர்ச்சி பெற்றுத் தொடக்கப் பள்ளி ஆசிரியராகி, கிறித்தவ உயர் நிலைப்பள்ளிகளில் ஆசிரியராகி, சென்னை இராணி மேரிக் கல்லூரி ஆசிரியராகித் திகழ்ந்தவர். பின்னர் மாநிலக் கல்லூரியில் தமிழாசிரியரானார். தமிழாசிரியராகியதுடன், சிறந்த நூலாசிரியராகவும் விளங்கினார். முதல் வகுப்பு முதல் கல்லூரித் தமிழ்நூல் வரை பாட நூல் எழுதியதால் பெருவருவாய் பெற்றார். தொல்காப்பியத்தை இளம்பூரணர் உரையோடும் பதிப்பித்தார். தமிழ்ப்பாட நூல்குழுவில் 1920 முதல் 1934 வரை அமர்ந்து அரும்பணி செய்தார். மயிலை சாந்தோம் பகுதியில் `கடலகம்’ என மாளிகை அமைத்து, வரும் புலவர்களுக்கு எல்லாம் புரவலராகிச் சிறந்தார். தனித்தமிழ்ப் புலவர் பட்டம் உருவாக்கிப் பல்கலைக் கழகத்தின்(வித்துவான்) தேர்வாக்கியவர் இவர் (1928) தமிழர் விழாவாம். தைப்பொங்கல் விழாவை முதற்கண் கொண்டாட வழிகாட்டியவரும் வாழ்த்து விடும் முறை உருவாக்கி நடைப்படுத்தியவரும் இவரே! இவர்க்கு மணிவிழா எடுக்கப் பல்வேறு மன்றங்களும் அவைகளும் ஏற்பாடு செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாரா வகையில் 1936இல் இயற்கை எய்தினார். பல்கலைக் கழகத்தின் புலவர் பட்டம் எய்திய புலமையர் அனைவரும் நமச்சிவாயர்க்கு மிக நன்றிக் கடன் பட்டவர் ஆவர். அதற்கு முன்னோடியாக இருந்தது மதுரை நான்காம் தமிழ்ச்சங்கப் பண்டிதப் பட்டமேயாகும். இரா. இளங்குமரன்.இரா. இளங்குமரன். தொல்காப்பியம் அரிய பதிப்புகளும் தேவைகளும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் தமிழின் பண்டை இலக்கண/ இலக்கிய நூல்கள் அச்சிடப் பெற்றன. அவ்வகையில் தமிழில் அச்சடிக்கப்பட்ட முதல் இலக்கண நூலாக இன்று அறியப்படுவது நன்னூலே. காரணம் தமிழக மடங்கள் நன்னூலைப் பயிற்றிலக்கண மாகவும் பயன் பாட்டு இலக்கணமாகவும் கொண்டிருந்தன. 1835 -இல் திருத்தணிகை விசாகப் பெருமாளையர் தாமே உரையெழுதி நன்னூல் மூலமும் காண்டிகையுரையும் என்னும் தலைப்பில் வெளியிட்டார். தொடர்ந்து தாண்டவராய முதலியாரும்,அ. முத்துச்சாமி பிள்ளையும் இணைந்து இலக்கணப் பஞ்சகம் என்னும் தலைப்பில் நன்னூல், நம்பியகப் பொருள், புறப்பொருள் வெண்பாமாலை ஆகியவற்றின் மூலங்களை வெளிக் கொணர்ந் தனர். இதன் தொடர்ச்சியாக 1838 -இல் வீரமா முனிவரின் தொன்னூல் விளக்கம் அச்சாக்கம் பெற்றது. 1847 -இல் தான் மழவை மகாலிங்கையரால் தமிழின் தொல் இலக்கணம் தொல்காப்பிய எழுத்ததிகாரம் உரையோடு அச்சிடப்பட்டது. தொடர்ந்து யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலர், யாழ்ப்பாணத்து சி.வை. தாமோதரம் பிள்ளை, கோமளபுரம் இராசகோபாலபிள்ளை, சோடசாவதானம் சுப்பராய செட்டியார், போன்றோர் 19 -ஆம் நூற்றாண்டில், தொல்காப்பியத்தைக் கிடைத்த உரைகளோடு பதிப்பித்தனர். 1935 - இல் தொல்காப்பியத் திற்கு எழுதப்பட்ட உரைகள் (இன்று கிடைத்துள்ள அனைத்து உரைகளும்) பதிப்பிக்கப்பட்டு விட்டன. 1847 - 2003 வரை தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரை எட்டுப் பதிப்புகளும், 1885-2003 வரை தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் முன்னைந்தியல் எட்டுப் பதிப்புகளும், செய்யுளியல் நச்சினார்க்கினியர் தனித்து மூன்று பதிப்புகளும் வெளிவந்துள்ளன. 1892 - 2003 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை ஐந்து பதிப்புகளும், 1868 - 2006 வரை எழுத்து இளம்பூரணம் ஏழு பதிப்புகளும், 1920 - 2005 வரை தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணம் பத்துப் பதிப்புகளும், 1927 - 2005 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் இளம்பூரணம் ஆறு பதிப்புகளும், 1885 - 2003 வரை தொல்காப்பியம் பொருளதிகாரம் பேராசிரியம் ஏழு பதிப்புகளும், 1929 - 2003 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் மூன்று பதிப்புகளும், 1964 - 2003 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடம் மூன்று பதிப்புகளும் வெளிவந்துள்ளன என முனைவர் பா. மதுகேவரன் தமது தொல்காப்பியம் பதிப்பு ஆவணம் நூலில் குறிப்பிட்டுள்ளார். 2003 -இல் தமிழ்மண் பதிப்பகத்தின் வாயிலாகத் தொல்காப்பிய உரைகள் (இளம்பூரணம், நச்சினார்க்கினியம், பேராசிரியம், சேனாவரையம், கல்லாடம், தெய்வச்சிலையம்) பண்டித வித்வான் தி.வே. கோபாலையர், முனைவர் ந. அரணமுறுவல் ஆகியோரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, முதுமுனைவர் இரா. இளங்குமரனாரின் வாழ்வியல் விளக்கத்துடன் வெளிவந்துள்ளன. இருப்பினும் அச்சில் இன்று கிடைக்காத அரிய பதிப்புகளை மீள் பதிப்பாகப் பதிப்பிக்க வேண்டும் என்னும் நோக்கத்தில், சி.வை. தாமோதரம் பிள்ளை பதிப்பு, கா. நமச்சிவாய முதலியார் பதிப்பு, வ.உ. சிதம்பரம் பிள்ளை பதிப்பு, இரா. வெங்கடாசலம் பிள்ளை பதிப்பு, சி. கணேசையர் பதிப்பு, தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் பதிப்பு ஆகியோரின் பதிப்புகளுடன் தொல்காப்பியம் தொடர்பாக அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரைகளும் இணைத்து தமிழ்மண் பதிப்பகத்தின் வழி மீள் பதிப்புகளாகப் பதிப்பிக்கப் படுகின்றன. மீள் பதிப்பில் பின்பற்றியுள்ள பொது நெறிகள் முதுமுனைவர் இரா. இளங்குமரனாரின் தொல்காப்பியம் குறித்த விளக்கம், ஒவ்வோர் அதிகாரம் பற்றிய வாழ்வியல் விளக்கம், உரையாசிரியர் விவரம் ஆகியவை நூலின் தொடக்கத் தில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. முன்னைப் பதிப்புகளின் முகப்புப் பக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முன்னைப் பதிப்பாசிரியர் பற்றிய விவரங்கள் கால அடிப்படையில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. ஒவ்வோர் இயலின் தொடக்கத்தில், பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் தொல்காப்பியம் தொகுப்பில் எழுதி யுள்ள தொல்காப்பிய இயல் பற்றிய விளக்கம் தரப்பட்டுள்ளன. முன்னைப் பதிப்பில் அடிக்குறிப்புகள் அந்த அந்தப் பக்கத்தில் தரப்பட்டிருந்தன. இப்பதிப்பில் ஒவ்வோர் இயலுக்கும் தொடர் இலக்கமிட்டு, அந்தந்த இயலின் இறுதியில் தொகுத்து வழங்கப் பட்டுள்ளன. முன்னைப் பதிப்புகளில் நூற்பாக்களைக் கையாண்டுள்ள முறையையே இப் பதிப்பிலும் பின்பற்றப்பட்டுள்ளது. நூற்பாக் களுக்குத் தமிழ் எண் கொடுக்கப்பட்டிருப்பின் அவை நடை முறையில் இப்போது உள்ள எண்களாக மாற்றப்பட்டுள்ளன. நூற்பா அகரமுதலி, மேற்கோள் அகரமுதலி போன்றவற்றிற்குப் பக்க எண்கள் கொடுக்கப்பட்டிருப்பின் அவை நூற்பா எண்களாக மாற்றப்பட்டுள்ளன. பின்னிணைப்பாகத் தொல்காப்பியம் தொடர்பாக அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ள கட்டுரைகள் இணைக்கப் பட்டுள்ளன. நூற்பா முதற் குறிப்பு அகராதி மட்டும் கொடுக்கப் பட்டுள்ள பதிப்புகளில் அவற்றோடு, 2003 தமிழ்மண் பதிப்பகத்தின் வழியே பண்டித வித்துவான் தி.வே. கோபாலையர் முனைவர் ந. அரணமுறுவல் ஆகியோரைப் பதிப்பாசிரியர்களாகக் கொண்டு வெளிவந்த இலக்கணப் பதிப்பில் இணைக்கப் பட்டிருந்த, - நூற்பா நிரல் - மேற்கோள் சொல் நிரல் - மேற்கோள் சொற்றொடர் நிரல் - செய்யுள் மேற்கோள் நிரல் - கலைச் சொல் நிரல்( நூற்பாவழி) - கலைச்சொல் நிரல் (உரைவழி) ஆகியவை எடுத்துப் பயன்படுத்தப்பட்டுள்ளன. - பாடவேறுபாடுகள் சுட்டப்பட்டுள்ளன. - முன்னைப் பதிப்பில் வடமொழிச் சொற்கள் பயன் படுத்தப்பட்டிருப்பின் அவை அப்படியே கையாளப் பட்டுள்ளன. - தொல்காப்பியப் பதிப்புகள் குறித்த விவரம் தொகுக்கப்பட்டுள்ளன. சி.வை. தாமோதரம் பிள்ளை பதிப்பு - 1892 சொல்லதிகாரம் - நச்சினார்க்கினியர் 1868 - இல் தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரை யருரையைப் பதிப்பித்த சி.வை. தாமோதரம் பிள்ளை, 1892 ஆம் ஆண்டு சொல்லதிகாரம் நச்சினார்கினியர் உரையைப் பதிப்பித்தார். சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை தொடர்ச்சியாகப் பதிப்பிக்கப்பட்டாலும், முதலில் பதிப்பித்த சி.வை. தாமோதரம் பிள்ளையின் பதிப்பு இன்று அச்சுவடிவில் புழக்கத்தில் இல்லை. அப்பதிப்பினை வெளியிடும் நோக்கத்தில் இப்பதிப்பு மீள் பதிப்பாக வெளிவருகிறது. இப்பதிப்பில் நூற்பா முதற்குறிப்பு அகராதி மட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் மற்ற இணைப்புகளும் இணைக்கப்பட்டு, முதுமுனைவர் இரா. இளங்குமரன் அவர்களின் வாழ்வியல் விளக்கமும், ஒவ்வோர் இயலின் தொடக்கத்தில் க. வெள்ளைவாரணனார் எழுதியுள்ள இயல் விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் சொல்லதிகாரம் தொடர்பாக அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரைகள் பின்னிணைப்பாக இணைக்கப் பட்டுள்ளன. கா. நமச்சிவாய முதலியார் பதிப்பு - 1927 சொல்லதிகாரம் - இளம்பூரணம் இளம்பூரணம் எழுத்ததிகாரம் பொருளதிகாரம் உரைகள் முன்பே வெளிவந்தன. சொல்லதிகாரம் இளம்பூரணர் உரை 1927 - இல் காவேரிப்பாக்கம் நமச்சிவாய முதலியாரின் ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் சென்னை ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸால் வெளியிடப்பட்டது. இதுவே சொல்லதிகாரம் இளம்பூரணர் உரையின் முதற் பதிப்பாகும். இப் பதிப்பில் அடிக்குறிப்புகள் அந்தந்தப் பக்கத்தில் கொடுக்கப்பட்டிருந்தன. இப்பதிப்பில் தொடர் இலக்கமிட்டு, ஒவ்வோர் இயலின் முடிவில் அடிக் குறிப்புகள் தரப்பட்டுள்ளன. இப் பதிப்பில் நூற்பாக்களுக்குத் தமிழ் எண்வரிசையும் நடைமுறை எண் வரிசையும் கொடுக்கப்பட்டிருந்தன. இப்பதிப்பில் நடைமுறை எண் முறை மட்டும் பின்பற்றப்பட்டுள்ளது. வ.உ. சிதம்பரம்பிள்ளை பதிப்பு - 1928 , 1931, 1933, 1935 எழுத்ததிகாரம், பொருளதிகாரம் - இளம்பூரணம் 1868 இல் திரிசிரபுரம் சோடசாவதானம் சுப்பராய செட்டியாரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு கன்னியப்ப முதலியாரால் பதிப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து 1928 -இல் தொல்காப்பியம் இளம்பூரணம் எழுத்ததிகாரம் பதவுரை என்னும் பெயரில் வ.உ. சிதம்பரம் பிள்ளை பதிப்பு வேலாயுதம் பிரிண்டிங் பிர, தூத்துக்குடியிலிருந்து வெளிவந்தது. அப்பதிப்பின் தொடக்கத்தில் கொடுக்கப்பட்டிருந்த நூற்பா அகராதி இப்பதிப்பின் நூலின் இறுதியில் கொடுக்கப் பட்டுள்ளது. அத்துடன் சொல் நிரல் (மேற்கோள்), சொற்றொடர் நிரல் (மேற்கோள்), செய்யுள் நிரல் (மேற்கோள்) கலைச் சொல் நிரல் (நூற்பா வழி) கலைச் சொல் நிரல் (உரைவழி) தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. 1920 -இல் கா. நமச்சிவாய முதலியார் பொருளதிகாரம் இளம்பூரணம் உரை முதல் பகுதியாகக் களவியல், கற்பியல், பொருளியல் மூன்று இயல்களையும் ஸி. குமாரசாமி நாயுடு ஸன் நிறுவனத்தார் வெளியிட்டுள்ளார். மற்ற பகுதிகள் வெளிவந்ததாக அறிய இயலவில்லை. இப்பதிப்பிற்குப் பின் வ.உ. சிதம்பரம் பிள்ளை தொல்காப்பியம் இளம்பூரணம் பொருளதிகாரம் அகத்திணையியல், புறத்திணையியல் ஆகிய இரு இயல்கள் இணைந்த பதிப்பு, சென்னைப் பிரம்பூரில் இருந்து வெளிவந்தது. இப்பதிப்பில் ஆண்டு குறிப்பிடப்படவில்லை. ஆனால் 1921- இல் வெளிவந்த குறிப்பினை, தொல்காப்பியம் இளம்பூரணம் எழுத்திகாரம் பதவுரை பதிப்பில் குறிப்பிடுகிறார். களவியல், கற்பியல், பொருளியல் 1933 - இல் வாவிள்ள இராமவாமி சாட்ருலு அண்ட் ஸன் மூலம் வெளி வந்துள்ளது. 1935 - இல் மேற்கண்ட பதிப்பாளர்களைக் கொண்டு மெய்ப்பாட்டியல், உவமையியல், செய்யுளியல், மரபியல் பதிப்பித்துள்ளார். மூன்று பகுதிகளாக வெளிவந்தாலும் அவற்றிற்கும் தொடர் எண் கொடுக்கப்பட்டுள்ளன. 1935 - இல் ஒருங்கிணைந்த பதிப்பாக வ.உ. சிதம்பரம் பிள்ளை எ. வையாபுரிப்பிள்ளை ஆகியோர் பதிப்பாசிரியர்களாக அமைந்து வெளிவந்துள்ளது. தனித்தனிப் பதிப்புகளாக மூன்று பகுதிகளாக வெளிவந்துள்ள பதிப்பினை அடிப்படையாகக் கொண்டு இம் மீள் பதிப்பு பதிப்பிக்கப்படுகின்றது. இரா. வெங்கடாசலம் பிள்ளை பதிப்பு - 1929 சொல்லதிகாரம் - தெய்வச் சிலையார் 1929 -இல் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தால் முதன் முதலில் பதிப்பிக்கப்பட்டது. பதிப்பாசிரியர் ரா. வேங்கடாசலம் பிள்ளை. இதன் நிழற்படிவம் 1984 -இல் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இப் பதிப்பில் சூத்திர முதற் குறிப்பு அகராதி மட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் சொல் நிரல் (மேற்கோள்), சொற்றொடர் நிரல் (மேற்கோள்), செய்யுள் நிரல் (மேற்கோள்) கலைச் சொல் நிரல் (நூற்பா வழி) கலைச் சொல் நிரல் ( உரைவழி) தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. சி. கணேசையர் பதிப்பு - 1937, 1938, 1943,1948 எழுத்து நச்சினார்க்கினார்கினியர், சொல்லதிகாரம் சேனாவரையர் பொருள் - நச்சினார்க்கினியர், பேராசிரியர் 1847 - இல் மழவை மகாலிங்கையரால் எழுத்ததிகாரம் நச்சினார்க் கினியம் பதிப்பிக்கப்பட்டது. 1891 - இல் சி. வை. தாமோதரம் பிள்ளை பதிப்பும் 1923 - இல் த. கனகசுந்தரத்தின் பதிப்பும் கழகத்தின் மூலமும் வெளிவந்தன. 1937 - இல் நா. பொன்னையா அவர்களால் கணேசையர் எழுதிய உரைவிளக்கக் குறிப்புகளுடன் எழுத்ததிகாரம் மூலமும் நச்சினார்க்கினியருரையும் வெளியிடப்பட்டன. 1868 -இல் யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுக நாவலர் பதிப்பு, சென்னபட்டணம் ஊ. புஷ்பரதச் செட்டியாரது கலாரத்நாகர அச்சுக்கூடத்தில் சி.வை. தாமோரதம் பிள்ளையால் பதிப்பிக்கப்பட்டது. இதே ஆண்டு கோமளபுரம் இராசகோபால பிள்ளையின் பதிப்பும் தொல்காப்பியம் சேனாவரையம் என்ற பெயரில் வெளிவந்துள்ளது. 1923 - இல் கந்தசாமியார் திருத்திய திருத்தங்களோடும் குறிப்புரையோடும் கழகப் பதிப்பாக வெளிவந்தது. 1938 -இல் சி. கணேசையர் பதிப்பு அவர் எழுதிய உரைவிளக்கக் குறிப்புகளுடன் வெளியிடப்பட்டது. 1885 -இல் சி.வை. தாமோதரம் பிள்ளையால் தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் இயற்றிய உரையோடும் பலதேசப் பிரதிரூபங்களைக் கொண்டு பரிசோதித்து யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரரால் பதிப்பிக்கப்பட்டது என்னும் குறிப்புடன் பதிப்பு வெளிவந்தது. அப்பதிப்பில் உள்ள பின்னான்கியல் நச்சினார்க்கினியர் உரை அன்று என்று மறுத்து இரா. இராகவையங்கார் 1902 - 1905 வரையான செந்தமிழ் இதழில் ஆய்வுக்கட்டுரை எழுதித் தெளிவுபடுத்தினார். அதனைத் தொடர்ந்து பொருளதிகாரம் முழுதும் நான்கு பகுதியாக நச்சினார்க்கினியம், பேராசிரியம் எனப் பிரித்து 1916, 1917 - ஆம் ஆண்டுகளில் ச. பவனாந்தம் பிள்ளை பதிப்பித்தார். 1917 - இல் ரா. இராகவையங்கார் செய்யுளியலுக்கு நச்சினார்க்கியர் உரை இருப்பதை அறிந்து, நச்சினார்கினியர் உரை உரையாசிரியர் உரையுடன் என இரு உரைகளையும் இணைத்து வெளியிட்டார். 1934, 1935 -இல் எ. வையாபுரிப்பிள்ளை அவர்களால் ஓலைப் பிரதி பரிசோதிக்கப்பட்டு மா.நா. சோமசுந்தரம் பிள்ளை அவர்களது அரிய ஆராய்ச்சிக் குறிப்புகளுடனும் திருத்தங் களுடனும் தொல்காப்பியம் பொருளதிகாரம் முதற்பாகம் வெளிவந்தது. 1948 - இல் தொல்காப்பிய முனிவரால் இயற்றப் பட்ட தொல்காப்பியம் பொருளதிகாரம் (முதற்பாகம்) முன்னைந்தியலும் நச்சினார்க்கினியமும் என, சி. கணேசையர் எழுதிய ஆராய்ச்சிக் குறிப்புரையுடன் நா. பொன்னையா அவர்களால் பதிப்பிக்கப்பட்டது. 1943 -இல் தொல்காப்பியம் பொருளதிகாரம் (இரண்டாம் பாகம்) என்பதோடு பின்னான்கியலும் பேராசிரியமும் இவை புன்னாலைக் கட்டுவன் தமிழ் வித்துவான், பிரமரீ சி. கணேசையர் அவர்கள் ஏட்டுப் பிரதிகளோடு ஒப்புநோக்கித் திருத்திய திருத்தங்களோடும் எழுதிய உரை விளக்கக் குறிப்புகளோடும் ஈழகேசரி அதிபர் நா. பொன்னையா அவர்களால் தமது சுன்னாகம், திருமகள் அழுத்தகத்தில் பதிப்பிக்கபட்டன என வரையறுக்கப் பட்டிருந்தது. 2007-இல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மறுபதிப்பாக சி. கணேசையரின் பதிப்பைப் பதித்துள்ளது. அப்பதிப்பினைப் பின்பற்றியே இப்பதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சூத்திர அகராதி, சூத்திர அரும்பத விளக்கம் ஆகியவற்றிற்கு இப்பதிப்பில் பக்க எண் கொடுக்கப்பட்டிருந்தன. அவை இம் மீள்பதிப்பில் நூற்பா எண்களாக மாற்றப்பட்டுள்ளன. அனுபந்தமாக சி. கணேசைய்யர் சில கட்டுரைகளை அப்பதிப்பில் இணைத் திருந்தார் அவற்றோடு மேலும் அவருடைய சில கட்டுரைகள் இப்பதிப்பில் இணைக்கப்பட்டுள்ளன. தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் பதிப்பு 1971 சொல்லதிகாரம் கல்லாடம் சி.வை. தாமோதரம் பிள்ளை தொல்காப்பியம் பொருளதி காரம் நச்சினார்க்கினியர் உரை பதிப்புரையில் (1885) கல்லாடர் உரை பற்றிய குறிப்பினைத் தருகிறார். டி.என் அப்பனையங்கார் செந்தமிழ் இதழில் (1920, தொகுதி-19, பகுதி-1, பக்கம்-20) கல்லாடருரை என்னும் கட்டுரையில் ரீமான் எம் சேக்ஷகிரி சாதிரியார் (1893) கல்லாடர் உரை குறித்து ஆராய்ந்துள்ளதாகக் குறிப்பிடுகிறார். சோழவந்தான் அரசஞ்சண்முகனார் (1905) ரா. இராகவையங்கார் (1917) பெயர் விழையான், கா. நமச்சிவாய முதலியார்(1920) நவநீதகிருஷ்ண பாரதி(1920) பி. சிதம்பர புன்னைவனநாத முதலியார்(1922) கந்தசாமியார் (1923) வ.உ. சிம்பரம் பிள்ளை (1928) மன்னார்குடி தமிழ்ப் பண்டிதர் ம.நா. சோமசுந்தரம் பிள்ளை (1929) அரங்க. வேங்கடாசலம் பிள்ளை (1929) ஆகியோர் கல்லாடர் உரை குறித்த குறிப்புகளைத் தமது கட்டுரைகளில் குறிப்பிடுகின்றனர். பின்னங்குடி சா. சுப்பிரமணிய சாதிரியார் கல்லாடர் உரை ஓரியண்டல் கையெழுத்துப் புத்தக சாலையில் உள்ளது என்றும், அவ்வுரை எவ்வியல் வரை உள்ளது என்னும் குறிப்புரையும் தருகிறார். 1950 - 1952 வரை தருமபுர ஆதீனம் வெளியிட்ட ஞான சம்பந்தம் இதழில் அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகத்தின் இரண்டாம் பிரதியை ஒட்டிப் பதிப்பிக்கப்பட்டது. கிளவியாக்கம் தொடங்கி இடையியல் 10 - ஆவது நூற்பா வரை வெளிவந்தது. கல்லாடர் உரையைத் தம்முடைய திருத்தங்களுடன் வெளியிட்டவர் மகாவித்துவான் தண்டபாணி தேசிகர். 1963 -இல் தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரைக்கோவை என்னும் பெயரில் ஆபிரகாம் அருளப்பனும் வ.ஐ. சுப்பிரமணியமும் இணைந்து வெளியிட்டனர். இது நான்கு இயலுக்கான பதிப்பாக அமைந்திருந்தது. கழகப் பதிப்பாக 1964 -இல் கு. சுந்தரமூர்த்தி விளக்கவுரையுடன் கல்லாடம் வெளிவந்தது. 1971 -இல் தெ.பொ.மீ அவர்களால் ஒன்பது பிரதிகளைக் கொண்டு ஒப்பிட்டு அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகப் பதிப்பாக வெளிவந்தது. 2003 -இல் தி.வே. கோபாலையர், ந. அரணமுறுவல் ஆகியோரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு தமிழ் மண் பதிப்பகம் கல்லாடனார் உரையைப் பதிப்பித் துள்ளது. 2007 -இல் தி.வே. கோபாலையரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, சரசுவதி மகால் நூலகம் தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரைக்கொத்தில் கல்லாடர் உரையை வெளியிட்டுள்ளது. கல்லாடர் உரை முழுமையாக இதுவரை கிடைத்திலது. இம்மீள்பதிப்பில் செந்தமிழ் அந்தணர் அவர்களின் இலக்கண வாழ்வியல் விளக்கமும் கா. வெள்ளைவாரணனாரின் இயல் விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இவை தொல்காப்பியத்திற்குள் புகுவாருக்கு எளிதான மனநிலையை உருவாக்குவதுடன், ஆய்வாளர்களுக்கு மிகுந்த பயன் உடையதாக இருக்கும். பின்னிணைப்பாக இணைக்கப்பட்டுள்ள கட்டுரைகள், தொல்காப்பிய உரையாசிரியர், உரைகள் குறித்த நுட்பத்தைப் புலப்படுத்துவதுடன், தொல்காப்பியம் பற்றிய நுண்மையை அறியவும் துணை செய்யும். நூற்பா, உரை வழிக் கலைச்சொற்கள், உரையில் உள்ள மேற்கோள் அகராதி போன்றவை தொகுத்துத் தரப்பட்டுள்ளன. தொல்காப்பியத்தை அறிய விரும்புவாருக்கும், ஆய்வாளர்களுக்கும் இத் தொகுப்பு பயன் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியம் மூலமும், உரையோடும் பல பதிப்புகளைக் கண்டுள்ளது. இருப்பினும் தொடக்கத்தில் தமிழ் அறிஞர் பெருமக்களால் உரையோடு தொல்காப்பியத்தைப் பதிப்பித்த பதிப்புகள் இன்று கிடைக்கவில்லை. அந்நிலையைப் போக்கும் பொருட்டு, தமிழரின் பண்பாட்டை, மேன்மையை, உயர்வைப் பொதித்து வைத்துள்ள நூல்களைத் தேடித் தேடிப் பதிப்பிக்கும் தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் ஐயா கோ. இளவழகனார் அவர்கள் பழம் பதிப்புகளைப் பதிப்பிக்க வேண்டும் என்று விரும்பியதன் காரணமாக இப்பதிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பதிப்பிற்கு, தமிழின் மூத்த அறிஞர், செந்தமிழ் அந்தணர் முதுமுனைவர் ஐயா இரா. இளங்குமரனார் அவர்கள் பதிப்பாசிரியராக அமைந்து என்னையும் இப்பணியில் இணைத்துக்கொண்டார்கள். பழந்தமிழ் நூல்களைப் பாதுகாத்து வைத்துள்ள புலவர் பல்லடம் மாணிக்கம் அவர்களிடம் இருந்து தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடர் உரை பெறப்பட்டுப் பதிப்பிற்குப் பயன்படுத்தப்பட்டது. மற்ற உரைகள் அனைத்தும் தமிழ் இணையப் பல்கலைக்கழக நூலகம், உலகத் தமிழாராய்ச்சி இணையப் பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு இம் மீள்பதிப்பிற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. சி. கணேசையர் பதிப்பினை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வழி வெளிவந்த சி. கணேசைய்யரின் தொல்காப்பியப் பதிப்பிற்கு உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தின் மேனாள் இயக்குநர் (முழுகூடுதல் பொறுப்பு) முனைவர் திரு ம. இராசேந்திரன் அவர்கள் கணேசையர் பதிப்பிற்கு எழுதியுள்ள முகவுரை அவருடைய ஒப்புதலுடன் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. முனைவர் பா. மதுகேவரன் அவர்களின் தொல்காப்பியம் பதிப்பு ஆவணம் 7 என்னும் நூற்பகுதியில் இருந்து தொல் காப்பியப் பதிப்பு அடைவுகள் இப்பதிப்பில் இணைக்கப் பட்டுள்ளன. தொல்காப்பியம் தொடர்பான பல்வேறு அறிஞர் பெருமக்களின் ஆய்வுக் கட்டுரைகள் தொகுத்து வழங்கப் பட்டுள்ளன. தொல்காப்பியம் உரைகள் முழுதும் ஆய்வு செய்துள்ள பேராசிரியர் முனைவர் ச. குருசாமி அவர்களின் கட்டுரைகள் இப்பதிப்பில் இணைக்கப் பட்டுள்ளன. பதிப்பிற்குத் துணை செய்த மேற்கண்ட அனைவருக்கும் நன்றியினைப் புலப்படுத்திக் கொள்ளுகிறேன். முனைவர் ஸ்ரீ. பிரசாந்தன் அவர்கள் தொகுத்த இலக்கண வரம்பு நூலிலிருந்த கட்டுரைகள் கணேசையர் பதிப்பில் இணைக்கப்பட்டுள்ளன. செந்தமிழ், தமிழ்ப்பொழில், தமிழியல் முதலிய ஆய்விதழ்களிலிருந்து தொல்காப்பியம் தொடர்பான கட்டுரைகள் சேர்க்கப் பட்டுள்ளன. பதிப்புப் பணியில் ஈடுபடுத்திய ஐயா திரு கோ. இளவழகனார் அவர்களுக்கும் பதிப்பில் இணைந்து செயல்படப் பணித்த ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்களுக்கும், பதிப்பிற்குத் துணைபுரிந்த புலவர் செந்தலை கௌதமன் ஐயா அவர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றி. தட்டச்சுச் செய்து கொடுத்த திருமதி ப. கயல்விழி திருமதி கோ. சித்திரா. அட்டை வடிவமைத்த செல்வன் பா. அரி (ஹரிஷ்), மற்றும் பதிப்பகப் பணியாளர்கள் திரு இரா. பரமேசுவரன், திரு தனசேகரன், திரு கு. மருது, திரு வி. மதிமாறன், இப்பதிப்பிற்கு உதவிய என்னுடைய முனைவர் பட்ட மாணவர்கள் பா. மாலதி, கா. பாபு, சு. கோவிந்தராசு, கா. கயல்விழி ஆகிய அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப் பதிப்புப் பணியில் என்னை முழுவதாக ஈடுபடத் துணையாக நிற்கும் என் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார் அவர்களுக்கு என் நன்றியினை உரித்தாக்குகிறேன். கல்பனா சேக்கிழார் நுழைவுரை தமிழ்மண் பதிப்பகம் இதுகாறும் வெளியிட்டுள்ள அறிஞர் பெருமக்களின் உரைகள் யாவும் பழைய இலக்கிய இலக்கணக் கருவூலத்தின் வாயில்களைத் திறக்கின்ற திறவுகோல்கள்; தமிழரை ஏற்றிவிடும் ஏணிப்படிகள்; வரலாற்றுப் பாதையைக் கடக்க உதவும் ஊர்திகள். தமிழறிஞர்களின் அறிவுச்செல்வங்களை முழு முழு நூல் தொகுப்புகளாக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் பெரும் பங்களிப்பை எம் பதிப்பகம் செய்து வருவதை உலகத் தமிழர்கள் அனைவரும் அறிவர். தமிழகம் வேற்றினத்தவர் படையெடுப்பால் தாக்குண்டு அதிர்ந்து நிலைகுலைந்து தமிழ்மக்கள் தம் மரபுகளை மறந்தபோதெல்லாம் பழம்பெரும் இலக்கியச் செல்வங்களை எடுத்துக்காட்டி விளக்கித் தமிழ் மரபை வாழச் செய்த பெருமை உரையாசிரியர்களுக்கு உண்டு. தமிழ்மொழியின் நிலைத்த வாழ்விற்கும் வெற்றிக்கும் காரணமாக இருப்பவர்கள் உரையாசிரியர்களே ஆவர். இலக்கணக் கொள்கைகளை விளக்கி மொழிக்கு வரம்பு கட்டி இலக்கியக் கருத்துகளை விளக்கி காலந்தோறும் பண்பாட்டை வளர்த்து, தமிழ் இனத்திற்குத் தொண்டு செய்த பெருமை உரையாசிரியர்களையே சாரும். ஒவ்வொரு உரையாசிரியரும் தமிழினம் உறங்கிக் கொண்டிருந்தபோது விழித்தெழுந்து, எழுச்சிக்குரல் கொடுத்த முற்போக்குச் சிந்தனையாளர்கள். அவர்கள் எழுதியுள்ள உரைகள் யாவும் காலத்தின் குரல்கள்; சமுதாயத்தின் எதிர்பார்ப்புகள்; தமிழ் இன வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவைகள்; நெருக்கடியின் வெளிப்பாடுகள் ஆகும். - உரையாசிரியர்கள், (மு.வை. அரவிந்தன்). தொல்காப்பியம் இலக்கணநூல் மட்டுமன்று; தமிழரின் அறிவுமரபின் அடையாளம். தமிழரின் வாழ்வியலை, மெய்யியலைப் பாதுகாத்த காலப்பேழை. இதில் பொதிந்துள்ள தருக்கவியல் கூறுகள் இந்தியத் தருக்கவியல் வரலாற்றின் மூல வடிவங்கள் - அறிஞர்களின் பார்வையில் பேரறிஞர் அண்ணா, (முனைவர் க. நெடுஞ்செழியன்) மேற்கண்ட அறிஞர்களின் கூற்று, தொல்காப்பியத்தின் இன்றியமை யாமையையும், உரையாசிரியர்களின் கருத்துச் செறிவையும் உழைப்பையும் உணர்த்த வல்லவை. சி.வை. தாமோதரம் பிள்ளை, கா. நமச்சிவாய முதலியார், வ.உ. சிதம்பரனார், சி. கணேசையர், இரா. வேங்கடாசலம் பிள்ளை, தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் போன்ற பெருந்தமிழ் அறிஞர்களின் உழைப்பால் உருவான இவ் வாழ்வியல் கருவூலம் தொல்காப்பிய உரைத்தொகை எனும் பெயரில் தமிழ்மண் பதிப்பகம் மீள் பதிப்பு செய்துள்ளது. 2003 -ஆம் ஆண்டில் எம் பதிப்பகம் தொல்காப்பியத்தை (எழுத்து - சொல் - பொருள்) முழுமையாக வெளியிட்டுள்ளது. இதுகாறும் வெளிவந்துள்ள தொல்காப்பிய நூல் பதிப்புகளில் இடம் பெறாத அரிய பதிப்புச் செய்திகள் இவ்வுரைத் தொகையில் சேர்க்கப்பட்டுள்ளன. இவ்வுரைத் தொகை எல்லா நிலையிலும் சிறப்பாக வெளிவருவதற்கு தோன்றாத் துணையாக இருந்தவர்களைப் பற்றி தனிப்பக்கத்தில் பதிவு செய்துள்ளோம். இவ்வாழ்வியல்நூல் பிழையற்ற செம்பதிப்பாக வெளிவருவதற்கு முதன்மைப் பதிப்பாசிரியர் முதுமுனைவர் ஐயா இரா. இளங்குமரனார், இணை பதிப்பாசிரியர் அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் ஆகியோரின் உழைப்பும் பங்களிப்பும் என்றும் மறக்க முடியாதவை. எம் தமிழ் நூல் பதிப்பிற்கு எல்லா நிலையிலும் தொடர்ந்து ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் இனிய நண்பர் புலவர் செந்தலை ந. கவுதமன் அவர்களின் தன்னலம் கருதா தமிழ்த் தொண்டிற்கு என்றும் நன்றி உடையேன். தமிழர்கள் தம் இல்லம்தோறும் பாதுகாத்து வைக்க வேண்டிய இவ்வருந்தமிழ்ப் புதையலைத் தமிழ் கூறும் உலகிற்கு வழங்குவதைப் பெருமையாகக் கருதி மகிழ்கிறோம். இப்பதிப்பைத் தமிழ்க்கூறும் நல்லுலகம் ஏற்றிப்போற்றும் என்று நம்புகிறோம். கோ. இளவழகன் நூலாக்கத்திற்கு உதவியோர் முதன்மைப்பதிப்பாசிரியர்: முதுமுனைவர் இரா. இளங்குமரனார் இணைப்பதிப்பாசிரியர்: முனைவர் கல்பனா சேக்கிழார் நூல் வடிவமைப்பு: திருமதி. கயல்விழி, கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (Harrish) திருத்தத்திற்கு உதவியோர்: புலவர் பனசை அருணா புலவர் மு. இராசவேலு முனைவர் அரு. அபிராமி முனைவர் ஜா. கிரிசா நூலாக்கத்திற்கு உதவியோர்: திருமிகு. இரா. பரமேசுவரன், திருமிகு. வே. தனசேகரன், திருமிகு. கு. மூர்த்தி, திருமிகு. வி. மதிமாறன் கணினியில் நூலாக்கம்:  மாணவர் நகலகம்,  பிராசசு இந்தியா,  ரியல் இம்பேக்ட் சொல்யூசன்,  தூரிகை பிரிண்ட் உள்ளடக்கம் தொல்காப்பியம் ...... 1 இயலமைதி ...... 27 வாழ்வியல் விளக்கம் ...... 31 இளம்பூரணர் ...... 64 முன்னுரை ...... 85 இளம்பூரண அடிகள் உரைத்திறம் ...... 87 1. கிளவியாக்கம் ...... 89 2. வேற்றுமையியல் ...... 135 3. வேற்றுமை மயங்கியல் ...... 158 4. விளிமரபு ...... 183 5. பெயரியல் ...... 199 6. வினையியல் ...... 222 7. இடையியல் ...... 256 8. உரியியல் ...... 280 9. எச்சவியல் ...... 314 - நச்சினார்க்கினியர் உரையாசிரியரை மேற்கொண்டும் மறுத்துங் கூறுமிடங்கள் ...... 367 - நச்சினார்க்கினியர் உரையாசிரியரை மேற்கொண்டும் மறுத்துங் கூறுமிடங்கள் ...... 391 பின்னிணைப்புகள் - சொல்லதிகாரம் உரையிற் காணும் அரும்பொருள் ...... 438 - வரலாற்றுக் கட்டுரைச் சொற்றொடர் ...... 441 - நூற்பா நிரல் ...... 460 - சொல் நிரல் ...... 466 - சொற்றொடர் நிரல் ...... 470 - செய்யுள் நிரல் ...... 480 - கலைச்சொல் நிரல் ...... 484 - கலைச்சொல் நிரல் ...... 490 தொல்காப்பியம் பழந்தமிழ் நூல்களின் வழியே நமக்குக் கிடைத்துள்ள முழு முதல் இலக்கண நூல் தொல்காப்பியமே. ஆசிரியர், தொல்காப்பியம் என்னும் நூலை இயற்றியமையால்தான் தொல்காப்பியன் எனத் தம் பெயர் தோன்றச் செய்தார் என்பதைப் பாயிரம்’ “தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றி” என்று தெளிவாகக் கூறுகிறது. தொல்காப்பியம் ‘பழமையான இலக்கண மரபுகளைக் காக்கும் நூல்’ என்பதற்குப் பலப்பல சான்றுகள் இருப்பவும், ‘பழமையான காப்பியக்குடியில் தோன்றியவரால் செய்யப் பட்டது’ என்னும் கருத்தால், “பழைய காப்பியக்குடியில் உள்ளான்” என நச்சினார்க்கினியர் கூறினார். பழைய காப்பியக்குடி என்னும் ஆட்சியைக் கண்டு ‘விருத்த காவ்யக்குடி’ என்பது ஒரு வடநாட்டுக்குடி என்றும், பிருகு முனிவர் மனைவி ‘காவ்ய மாதா’ எனப்படுவாள் என்றும் கூறித் தொல்காப்பியரை வடநாட்டுக் குடி வழியாக்க ஆய்வாளர் சிலர் தலைப்படலாயினர். இம்முயற்சிக்கு நச்சினார்க்கினியர் உரையின் புனைவையன்றி நூற் சான்றின்மை எவரும் அறியத்தக்கதே. இவ்வாய்வுகளையும் இவற்றின் மறுப்புகளையும் தமிழ் வரலாறு முதற்றொகுதி1 (பக். 255 - 257) தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி2 (பக். 2, 3) தமிழிலக்கிய வரலாறு - தொல்காப்பியம்3 (பக். 17-23) என்பவற்றில் கண்டு கொள்க. காப்பியர் தொல்காப்பியர் சிறப்பால் அவர் வழிவந்தவரும், அவரை மதித்துப் போற்றியவரும் அவர் பெயரைத் தம் மக்கட்கு இட்டுப் பெருக வழங்கினராதல் வேண்டும். இதனால் காப்பியாற்றுக் காப்பியன், வெள்ளூர்க் காப்பியன் என ஊரொடு தொடர்ந்தும், காப்பியஞ் சேத்தன், காப்பியன் ஆதித்தன் எனக் காப்பியப் பெயரொடு இயற்பெயர் தொடர்ந்தும் பிற்காலத்தோர் வழங்கலாயினர். இனிப் பல்காப்பியம் என்பதொரு நூல், என்றும் அதனை இயற்றியவர் பல்காப்பியனார் எனப்பட்டார் என்றும் கூறுவார் உளர். அப்பெயர்கள் ‘பல்காயம்’ என்பதும் பல்காயனார் என்பதுமேயாம்; படியெடுத்தோர் அவ்வாறு வழுப்படச் செய்தனர் என்று மறுப்பாரும் உளர். தொல்காப்பியர் தமிழ் நாட்டாரே “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகத்து வழக்கும் செய்யுளும்” ஆய்ந்து, தமிழியற்படி “எழுத்தும் சொல்லும் பொருளும்” ஆகிய முப்பகுப்பு இலக்கணம் செய்தவரும், “போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவையும்” (1006) “வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் நாற்பெய ரெல்லை அகத்தவர் வழங்கும் யாப்பின் வழியையும்” (1336) “தமிழென் கிளவியும் அதனோ ரற்றே” (385) எனத் தமிழமைதியையும், “வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே” (884) என வடவெழுத்துப் புகாது காத்தலையும் கூறிய தொல்காப்பியரை வலுவான அகச்சான்று வாய்த்தால் அன்றி வடநாட்டவர் என்பது வரிசை இல்லை என்க. இனி, சமதக்கினியார் மகனார் என்பதும் திரணதூமாக் கினியார் இவர் பெயர் என்பதும் பரசுராமர் உடன் பிறந்தார் என்பதும் நச்சினார்க்கினியர் இட்டுக் கட்டுதலை அன்றி எவரும் ஒப்பிய செய்தி இல்லையாம். தொல்காப்பியப் பழமை சங்க நூல்களுக்குத் தொல்காப்பியம் முற்பட்டதா? பிற்பட்டதா? ஆய்தல் இன்றியே வெளிப்பட விளங்குவது முற்பட்டது என்பது. எனினும் பிற்பட்டது என்றும் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு அளவினது என்றும் குறித்தாரும் உளராகலின் இவ்வாய்வும் வேண்டத் தக்கதாயிற்று. தொல்காப்பியர் பரிபாடல் இலக்கணத்தை விரிவாகக் கூறுகிறார். அவ்விலக்கணத்துள் ஒன்று, கொச்சகம் அராகம் சுரிதகம் எருத்து என்னும் நான்கு உறுப்புகளையுடையது அது என்பது. மற்றொன்று, காமப் பொருள் பற்றியதாக அது வரும் என்பது. இப்பொழுது கிடைத்துள்ள பரிபாடல்கள் இருபத்திரண் டனுள் “ஆயிரம் விரித்த” என்னும் ஒரே ஒரு பாடல் மட்டும் பலவுறுப்புகளை யுடையதாக உள்ளது. எஞ்சிய பாடல்கள் இருபத்து ஒன்றும் உறுப்பமைதி பெற்றனவாக இல்லை. பரிபாடல் திரட்டிலுள்ள இரண்டு பாடல்களுள் ஒரு பாடல் பலவுறுப்புகளை யுடையதாக உள்ளது. மற்றது உறுப்பற்ற பாட்டு. பரிபாடல் காமப் பொருள் பற்றியே வரும் என்பது இலக்கணமாக இருக்கவும் கடவுள் வாழ்த்துப் பொருளிலேயே பதினைந்து பாடல்கள் வந்துள்ளன. பரிபாடல் உயர் எல்லை நானூறடி என்பார். கிடைத்துள்ள பரிபாடல்களில் ஒன்றுதானும் சான்றாக அமையவில்லை. இவற்றால் அறியப்படுவது என்ன? தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ள இலக்கணங்களையுடைய பரி பாடல்கள் இவையில்லை. அவ்விலக்கணங்களையுடைய பரிபாடல்கள் இறந்தொழிந்தன. தலைச்சங்கத்தார் பாடியதாக வரும் ‘எத்துணையோ பரிபாடல்களின்’ அமைதியைக் கொண்டது தொல்காப்பிய இலக்கணம். ஆதலால், பாடலமைதி யாலும் பொருள் வகையாலும் இம்மாற்றங்களையடைய நெடிய பலகாலம் ஆகியிருக்க வேண்டும் என்பதே அது. தொல்காப்பியர் குறளடி சிந்தடி அளவடி நெடிலடி கழிநெடிலடி என்பவற்றை எழுத்தளவு வகையால் சுட்டுகிறார். அவ்வடிவகை கட்டளை யடி எனப்படும். அவ்வாறாகவும் சங்கப் பாடல்கள் சீர்வகை அடியைக் கொண்டனவாக உள்ளனவே யன்றிக் கட்டளை யடிவழி யமைந்தவையாக இல்லை. முற்றாக இம்மாற்றம் அமைய வேண்டுமானால் நெட்ட நெடுங்கால இடைவெளி ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது தெளிவு. தொல்காப்பியர் நேர், நிரை அசைகளுடன் நேர்பசை, நிரைபசை என்பவற்றையும் குறிக்கிறார். இந்நேர்பசை நிரை பசையை வேறு எவ் விலக்கண ஆசிரியரும் கொண்டிலர்; நேர் நிரை என்னும் இருவகை அசைகளையே கொண்டனர். கட்டளையடி பயிலாமை போலவே, இவ்வசைகளும் பயிலாமை தொல்காப்பியப் பழமையை விளக்குவதேயாம். யாப்பருங் கலத்திற்கு முற்பட்டது காக்கைபாடினியம். அந்நூலிலும் அவிநயம் முதலிய நூல்களிலும் இவ்விருவகை அசைகளும் இடம் பெறாமையால் இவற்றுக்கு மிகமுற்பட்ட நூல் தொல்காப்பியம் என்பது விளங்கும். காக்கைபாடினிய வழிவந்ததே யாப்பருங்கலம் ஆதலின் அதன் பழமை புலப்படும். பாட்டுயாப்பு, உரையாப்பு, நூல்யாப்பு, வாய்மொழியாப்பு, பிசியாப்பு, அங்கதயாப்பு, முதுசொல்யாப்பு என எழுவகை யாப்புகளை எண்ணுகிறார் தொல்காப்பியர் (1336). இவற்றுள் பாட்டுயாப்பு நீங்கிய எஞ்சிய யாப்புகள் எவையும் சான்றாக அறியுமாறு நூல்கள் வாய்த்தில. ஆகலின் அந்நிலை தொல்காப்பியத்தின் மிகுபழமை காட்டும். பேர்த்தியரைத் தம் கண்ணெனக் காக்கும் பாட்டியரைச் ‘சேமமட நடைப் பாட்டி’ என்கிறது பரிபாட்டு (10:36-7). பாட்டி என்பது பாண்குடிப் பெண்டிரைக் குறிப்பதைச் சங்கச் சான்றோர் குறிக்கின்றனர். ஆனால், தொல்காப்பியம் “பாட்டி என்பது பன்றியும் நாயும்” என்றும் “நரியும் அற்றே நாடினர் கொளினே” என்றும் (1565, 1566) கூறுகின்றது. பாட்டி என்னும் பெயரைப் பன்றி நாய் நரி என்பவை பெறும் என்பது இந் நூற்பாக்களின் பொருள். முறைப்பெயராகவோ, பாடினியர் பெயராகவோ ‘பாட்டி’ என்பது ஆளப்படாத முதுபழமைக்குச் செல்லும் தொல்காப்பியம், மிகு நெட்டிடைவெளி முற்பட்டது என்பதை விளக்கும். இவ்வாறே பிறவும் உள. சங்கச் சான்றோர் நூல்களில் இருந்து சான்று காட்டக் கிடையாமை யால் உரையாசிரியர்கள் “இலக்கணம் உண்மை யால் இலக்கியம் அவர் காலத்திருந்தது; இப்பொழுது வழக்கிறந்தது” என்னும் நடையில் பல இடங்களில் எழுதுவா ராயினர். ஆதலால், சங்கச் சான்றோர் காலத்திற்குப் பன்னூற் றாண்டுகளுக்கு முற்பட்டவர் தொல்காப்பியர் என்பது வெள்ளிடைமலையாம்! “கள் என்னும் ஈறு அஃறிணைக்கு மட்டுமே தொல்காப்பியர் காலத்தில் வழங்கியது. அது திருக்குறளில் ‘பூரியர்கள்’ ‘மற்றையவர்கள்’ எனவும் கலித்தொகையில் ‘ஐவர்கள்’ எனவும் வழங்குகின்றது. ‘அன்’ ஈறு ஆண்பாற் படர்க்கைக்கே உரியதாகத் தொல்காப்பியம் கூறுகின்றது. இரப்பன், உடையன், உளன், இலன், அளியன், இழந்தனன், வந்தனன் எனத் தன்மையில் பெருவரவாகச் சங்கநூல்களில் இடம் பெற்றுள்ளன. “தொல்காப்பியத்தில் வழங்காத ஆல், ஏல், மல், மை, பாக்கு என்னும் இறுதியுடைய வினையெச்சங்கள் சங்கநூல்களில் பயில வழங்குகின்றன. “தொல்காப்பியத்தில் வினையீறாக வழங்கப்பட்ட ‘மார்’, ‘தோழிமார்’ எனப் பெயர்மேல் ஈறாக வழங்கப்பட்டுள்ளது. “வியங்கோள்வினை, முன்னிலையிலும் தன்மையிலும் வாராது என்பது தொல்காப்பிய விதி. அவற்றில் வருதலும் சங்கப் பாடல்களில் காணக்கூடியது. “கோடி என்னும் எண்பற்றித் தொல்காப்பியத்தில் குறிப்பு இல்லை. தாமரை, வெள்ளம், ஆம்பல் என்பனபோல எண்ணுப் பெயர்கள் (ஐ அம் பல் என்னும் இறுதியுடையவை) வழங்கு வதைச் சுட்டும் அவர், கோடியைக் குறித்தார் அல்லர். சங்கப் பாடல்களில் கோடி, ‘அடுக்கியகோடி’ என ஆளப் பெற்றுள்ளது. ஐ, அம், பல் ஈறுடைய எண்ணுப் பெயர்கள் அருகுதலும் சங்க நூல்களில் அறிய வருகின்றன. “சமய விகற்பம் பற்றிய செய்திகள், சமணம் புத்தம் பற்றிய குறிப்புகள் தொல்காப்பியத்தில் இல்லை. ஆனால் சங்க நூல்களில் இவற்றைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. எழுத்து சொல் ஆகிய அளவில் நில்லாமல் வாழ்வியலாகிய பொருள் பற்றி விரித்துக் கூறும் தொல்காப்பியர் காலத்தில் இவை வழக்கில் இருந்திருந்தால் இவற்றைக் கட்டாயம் சுட்டியிருப்பார். ஆகலின் சமண, பௌத்தச் சமயங்களின் வரவுக்கு முற்பட்டவரே தொல் காப்பியர். ஆதலால் தொல்காப்பியர் காலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதே யன்றிப் பிற்பட்டதாகாது.” இக்கருத்துகளைப் பேரா. க. வெள்ளைவாரணரும் (தமிழிலக்கிய வரலாறு - தொல்காப்பியம், பக். 87 - 96), பேரா.சி. இலக்குவனாரும் (தொல்காப்பிய ஆராய்ச்சி, பக். 12 - 14) விரித்துரைக்கின்றனர். சிலப்பதிகாரத்தால் இலங்கை வேந்தன் கயவாகு என்பான் அறியப்படுகிறான். அவன் காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டு என்பர். அச் சிலப்பதிகாரத்தில் ‘திருக்குறள்’ எடுத்தாளப்பட்டுள்ளது. ஆகலின் திருக்குறள் சிலப்பதிகாரக் காலத்திற்கு முற்பட்டது என்பது வெளிப்படை. இளங்கோவடிகள் காலத்து வாழ்ந்தவரும், மணிமேகலை இயற்றியவரும், சேரன் செங்குட்டுவன் இளங்கோவடிகள் ஆகியோருடன் நட்புரிமை பூண்டவரும், ‘தண்டமிழ் ஆசான் சாத்தன்’ என இளங்கோவடிகளாரால் பாராட்டப்பட்டவருமாகிய கூலவாணிகன் சாத்தனார், திருவள்ளுவரைப் ‘பொய்யில் புலவன்’ என்றும், திருக்குறளைப் ‘பொருளுரை’ என்றும் குறித்துக் கூறிப் பாராட்டுகிறார். ஆகலின், சிலப்பதிகார மணிமேகலை நூல்களுக்குச் சில நூற்றாண்டுகளேனும் முற்பட்டது திருக்குறள் எனத் தெளியலாம். அத் திருக்குறளுக்கு முப்பால் கொள்கை அருளியது தொல்காப் பியம். ‘அறமுதலாகிய மும்முதற் பொருள்’ என்பது தொல்காப்பியம். ‘இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு’ என வருவதும் தொல்காப்பியம். அது வகுத்தவாறு அறம் பொருள் வழக்காறுகள் திருக்குறளில் இடம் பெற்றுள்ளதுடன், இன்பத்துப்பாலோ, புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் எனத் தொல்காப்பியர் சொல்லும் உரிப்பொருள் ஐந்தற்கும் முறையே ஐந்தைந்து அதிகாரங்களாக 25 அதிகாரங்கள் கொண்டு முற்றாகத் தொல்காப்பிய வழியில் விளங்க நூல் யாத்தவர் திருவள்ளுவர். ஆகலின் அத்திருக்குறளின் காலத்திற்குப் பன்னூற்றாண்டு முற்பட்ட பழமையுடையது தொல்காப்பியம் என்பது தெளிவுமிக்க செய்தியாம். திருக்குறள் ‘அறம்’ என்று சுட்டப்பட்டதுடன், குறள் தொடர்களும் குறள் விளக்கங்களும் பாட்டு தொகை நூல்களில் இடம் பெற்ற தொன்மையது திருக்குறள். அதற்கும் முற்பட்டது தொல்காப்பியம். இனித் தொல்காப்பியத்தில் வரும் ‘ஓரை’ என்னும் சொல்லைக் கொண்டு தொல்காப்பியர் காலத்தைப் பின்னுக்குத் தள்ள முயன்றவர் உளர். ஓரை அவர் கருதுமாப்போல ‘ஹோரா’ என்னும் கிரேக்கச் சொல் வழிப்பட்டதன்று. அடிப்பொருள் பாராமல் ஒலி ஒப்புக் கொண்டு ஆய்ந்த ஆய்வின் முடிவே அஃதாம். ‘யவனர் தந்த வினைமாண் நன்கலம்’ இவண் வந்ததும், அது ‘பொன்னொடு வந்து கறியொடு (மிளகொடு)’ பெயர்ந்ததும், ‘யவன வீரர் அரண்மனை காத்ததும்’ முதலாகிய பல செய்திகள் சங்க நூல்களில் பரவலாக உள. அக்காலத்தில் அவர்கள் ‘தோகை’ ‘அரி’ முதலிய சொற்களை அறிந்தது போல அறிந்து கொண்ட சொல் ‘ஓரை’ என்பது. அச்சொல்லை அவர்கள் அங்கு ‘ஹோரா’ என வழங்கினர். கிரேக்க மொழிச் சொற்கள் பல தமிழ்வழிச் சொற்களாக இருத்தலைப் பாவாணர் எடுத்துக் காட்டியுள்ளார். ஓரை என்பது ஒருமை பெற்ற - நிறைவு பெற்ற - பொழுது. திருமணத்தை முழுத்தம் என்பதும், திருமண நாள் பார்த்தலை முழுத்தம் பார்த்தல் என்பதும், திருமணக் கால்கோளை ‘முழுத்தக்கால்’ என்பதும், ‘என்ன இந்த ஓட்டம்; முழுத்தம் தவறிப்போகுமா?’ என்பதும் இன்றும் வழக்கில் உள்ளவை. முழுமதி நாளில் செய்யப்பட்ட திருமணமே முழுத்தம் ஆயிற்று. இன்றும் வளர்பிறை நோக்கியே நாள் பார்த்தலும் அறிக. ஆராய்ந்து பார்த்து - நாளும் கோளும் ஆராய்ந்து பார்த்து - ‘நல்லவையெல்லாம் ஒன்றுபட்டு நிற்கும் பொழுதே நற்பொழுது’ என்னும் குறிப்பால் அதனை ஓரை என்றனர். இத்திறம் அந்நாள் தமிழர் உடையரோ எனின், “செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப் பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும் வளிதிரிதரு திசையும் வறிது நிலைஇய காயமும் என்றிவை சென்றளந் தறிந்தோர் போல, இனைத்தென்போரும் உளரே” என்னும் புறப்பாடலை அறிவோர் ஓரையைப் பிறர்வழியே நம் முன்னோர் அறிந்தனர் என்னார். உண்கலத்தைச் சூழ வைத்திருந்த பக்கக் கலங்களை, “நாள்மீன் விரவிய கோள்மீனுக்கு” உவமை சொல்லும் அளவில் தெளிந்திருந்த அவர்கள், ஓரையைப் பிறர் வழியே அறிந்தனர் என்பது பொருந்தாப் புகற்சியாம். தொல்காப்பியர் சமயம் தொல்காப்பியனார் சமயம் பற்றியும் பலவகைக் கருத்துகள் உள. அவர் சைவர் என்பர். சைவம் என்னும் சொல் வடிவம் மணிமேகலையில் தான் முதற்கண் இடம் பெறுகிறது. பாட்டு தொகைகளில் இடம் பெற்றிலது. சேயோன், சிவன் வழிபாடு உண்டு என்பது வேறு. அது சைவ சமயமென உருப்பெற்றது என்பது வேறு. ஆதலால் தொல்காப்பியரைச் சைவரெனல் சாலாது. இனி, முல்லைக்கு முதன்மையும் மாயோனுக்குச் சிறப்பும் தருதல் குறித்து ‘மாலியரோ’ எனின், குறிஞ்சி முதலா உரிப்பொருளும் காலமும் குறித்தல் கொண்டு அம் முதன்மைக் கூறும் பொருள்வழி முதன்மை எனக் கொள்ளலே முறை எனல் சாலும். தொல்காப்பியரை வேத வழிப்பட்டவர் என்னும் கருத்தும் உண்டு. அஃதுரையாசிரியர்கள் கருத்து. நூலொடுபட்ட செய்தியன்றாம். சமயச் சால்பில் ஓங்கிய திருக்குறளை - வேத ஊழியைக் கண்டித்த திருக்குறளை - வேத வழியில் உரை கண்டவர் இலரா? அது போல் என்க. தொல்காப்பியரைச் சமணச் சமயத்தார் என்பது பெருவழக்கு. அவ்வழக்கும் ஏற்கத்தக்கதன்று. அதன் சார்பான சான்று தொல்காப்பியத்தில் இல்லை. ஆனால் அச்சமயம் சார்ந்தார் அல்லர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. சமணச் சமய நூல்களாக வழங்குவன அருக வணக்கம் சித்த வணக்கம் உடையவை. அவ்வாறு பகுத்துக் கூறாவிடினும் அருக வணக்கம் உடையவை. சமணச் சமய நூல்களாகக் கிடைப்பவற்றை நோக்கவே புலப்படும். தொல்காப்பியர் காலத்தில் கடவுள் வாழ்த்து நூன் முகப்பில் பாடும் மரபில்லை எனின், அவர் சமணச் சமயத்தார் என்பதும் இல்லை என்பதே உண்மை. என்னெனின் சமணர் தம் சமயத்தில் அத்தகு அழுந்திய பற்றுதல் உடையவர் ஆதலால். சமணச் சமயத்தார் உயிர்களை ஐயறிவு எல்லை யளவிலேயே பகுத்துக் கொண்டனர். ஆறாம் அறிவு குறித்து அவர்கள் கொள்வது இல்லை. “மாவும் மாக்களும் ஐயறிவினவே” என்னும் தொல்காப்பியர், “மக்கள் தாமே ஆறறி வுயிரே” என்றும் கூறினார். நன்னூலார் சமணர் என்பதும் வெளிப்படை. அவர் ஐயறிவு வரம்பு காட்டும் அளவுடன் அமைந்ததும் வெளிப்படை. சமணச் சமயத்தார் இளமை, யாக்கை, செல்வ நிலையாமை களை அழுத்தமாக வலியுறுத்துவர். துறவுச் சிறப்புரைத்தலும் அத்தகையதே. ஆகவும் நிலையாமையையே கூறும் காஞ்சித் திணையைப் பாடுங்காலும், “நில்லா உலகம் புல்லிய நெறித்தே” என ‘உலகம் நிலையாமை பொருந்தியது’ என்ற அளவிலேயே அமைகிறார். “காமஞ் சான்ற கடைக்கோட் காலை ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே” (1138) என அன்பு வாழ்வே அருள் வாழ்வாம் தவவாழ்வாக வளர்நிலையில் கூறுகிறார். இல்லற முதிர்வில் தவமேற்கும் நிலை சமணம் சார்ந்ததன்று. அஃது இம்மண்ணில் தோன்றி வளர்ந்து பெருகிய தொல் பழந்தமிழ் நெறி. தொல்காப்பியர் சமணச் சமயத்தார் எனின் அகத்திணையியல் களவியல் கற்பியல் பொருளியல் என அகப் பொருளுக்குத் தனியே நான்கு இயல்கள் வகுத்ததுடன் மெய்ப்பாட்டியல் செய்யுளியல் உவம இயல் என்பனவற்றிலும் அப்பொருள் சிறக்கும் இலக்கணக் குறிப்புகளைப் பயில வழங்கியிரார். காமத்தைப் ‘புரைதீர்காமம்’ என்றும் (1027) ‘காமப் பகுதி கடவுளும் வரையார்’ என்றும் (1029) கூறியிரார். “ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது தேனது வாகும்” என்பது போலும் இன்பியல் யாத்திரார். கிறித்துவத் துறவு நெறிசார் வீரமாமுனிவரின் தொன்னூல் விளக்கப் பொருளதி காரம் காண்பார் இதனை நன்கு அறிவார். சிந்தாமணியாம் பாவிகத்தை எடுத்துக்காட்டுவார் எனின் அவர், திருத்தக்கதேவர் பாடிய நரிவிருத்தத்தையும் கருதுதல் வேண்டும். பாட இயலாது என்பதை இயலுமெனக் காட்ட எழுந்தது அந்நூல் என்பதையும், காமத்தைச் சூடிக் கழித்த பூப்போல் காவிய முத்திப் பகுதியில் காட்டுவதையும் கருதுவாராக. கடவுள் நம்பிக்கை தொல்காப்பியர் கடவுள் வாழ்த்துக் கூறவில்லை எனினும், “கொடிநிலை கந்தழி வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே” என்றும் (1034), புறநிலை வாழ்த்து, “வழிபடு தெய்வம் நிற்புறம் காப்பப் பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து பொலிமின்” என்பது என்றும் ஆளும் இடங்களில் தெளிவாகக் கடவுள் வாழ்த்து என்பதையும் ‘வழிபடு தெய்வம்’ என்பதையும் குறிக்கிறார். மேலும் கருப்பொருள் கூறுங்கால் ‘தெய்வம் உணாவே” என உணவுக்கு முற்படத் தெய்வத்தை வைக்கிறார். உலகெலாம் தழுவிய பொதுநெறியாக இந்நாள் வழங்கும் இது, பழந்தமிழர் பயில்நெறி என்பது விளங்கும். ஆதலால் பழந்தமிழர் சமய நெறி எந்நெறியோ அந்நெறியே தொல்காப்பியர் நெறி எனல் சாலும். வாகைத் திணையில் வரும், ‘கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமை’, ‘அருளொடு புணர்ந்த அகற்சி’, ‘காமம் நீத்தபால்’ என்பனவும், காஞ்சித் திணையில் வரும் தபுதார நிலை, தாபத நிலை, பலர் செலச் செல்லாக் காடு வாழ்த்து என்பனவும் பழந்தமிழர் மெய்யுணர்வுக் கோட்பாடுகள் எனக் கொள்ளத்தக்கன. கொற்றவை நிலை, வேலன் வெறியாட்டு, பூவைநிலை, காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல், சீர்த்தகு சிறப்பில் பெரும்படை வாழ்த்தல் என வரும் வெட்சிப் பகுதிகள் பழந்தமிழர் வழிபாட்டியலைக் காட்டுவன. சேயோன் மாயோன் வேந்தன் வண்ணன் என்பார், குறிஞ்சி முதலாம் திணைநிலைத் தெய்வங்களெனப் போற்றி வழிபடப் பட்டவர் என்பதாம். ஆசிரியர் திருவள்ளுவர் கடவுள் வாழ்த்துப் பாடினாலும், அவர் இன்ன சமயத்தவர் என்பதற்குரிய திட்டவட்டமான அகச்சான்று இல்லாமை போலத் தொல்காப்பியர்க்கும் இல்லை. ஆகவே சமயக் கணக்கர் மதிவழிச் செல்லாத பொதுநெறிக் கொள்கையராம் வள்ளுவரைப் போன்றவரே தொல்காப்பியரும் என்க. தொல்காப்பியக் கட்டொழுங்கு தொல்காப்பியம் கட்டொழுங்கமைந்த நூல் என்பது மேலோட்டமாகப் பார்ப்பவர்க்கும் நன்கு விளங்கும். இன்ன பொருள் இத்தட்டில் என்று வைக்கப்பட்ட ஐந்தறைப் பெட்டியில் இருந்து வேண்டும் பொருளை எடுத்துக் கொள்வதுபோல் எடுத்துக்கொள்ள வாய்த்தது தொல்காப்பியம். அதனையே பாயிரம் ‘முறைப்பட எண்ணிப் புலம் தொகுத்த’தாகக் குறிக்கின்றது. எழுத்து சொல் பொருள் என்னும் மூன்றதிகாரங்களைக் கொண்ட தொல்காப்பியம் ஒவ்வோர் அதிகாரத்திற்கும் ஒன்பது ஒன்பது இயல்களைக் கொண்டிருத்தல் அதன் கட்டமைதிச் சிறப்புக் காட்டுவதாம். “ஆயிரத்தின் மேலும் அறுநூற்றுப் பஃதென்ப பாயிரத்தொல் காப்பியங்கற் பார்” என்பது தொல்காப்பிய நூற்பா அளவினைக் கூறுவதொரு வெண்பா. ஆனால் உரையாசிரியர்களின் அமைப்புப்படி 1595 முதல் 1611 நூற்பா வரை பல்வேறு எண்ணிக்கையுடையவாய் அமைந்துள்ளன. இக்கணக்கீடும், தொல்காப்பியர் சொல்லியதோ, பனம்பாரனார் குறித்ததோ அன்று. உரையாசிரியர்களின் காலத்தவரோ அவர்களின் காலத்திற்கு முன்னே இருந்த மூல நூற்பா எல்லையில் கணக்கிட்டறிந்த ஒருவரோ கூறியதாகலாம். தொல்காப்பிய அடியளவு 3999 என்று அறிஞர் வ.சுப. மாணிக்கனார் (தொல்காப்பியக்கடல் பக். 95) எண்ணிக் கூறுவர். ஏறக்குறைய 5630 சொல் வடிவங்கள் தொல்காப்பியத்தில் உள்ளமையையும் கூறுவர். அவர் “தொல்காப்பிய இலக்கணத்தைக் காண்பதற்குத் தொல்காப்பியத்தையே இலக்கியமாகக் கொள்ளலாம். தன்னைத் தானே விளக்கிக் காட்டுதற்குரிய அவ்வளவு பருமனுடையது தொல்காப்பியம்” என்று வாய்மொழிகின்றார். முப்பகுப்பு தனியெழுத்துகள், சொல்லில் எழுத்தின் நிலை, எழுத்துப் பிறக்கும் வகை, புணர் நிலையில் எழுத்தமைதி என்பவற்றை விரித்துரைப்பது எழுத்ததிகாரம். நூன் மரபு, மொழி மரபு, பிறப்பியல், புணரியல், தொகை மரபு, உருபியல், உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல் என்பன எழுத்ததிகார இயல்கள். எழுத்துகள் சொல்லாம் வகை, பெயர்கள் வேற்றுமையுருபேற்றல், விளிநிலை எய்தல், பெயர் வினை இடை உரி என்னும் சொல் வகைகள் இன்னவற்றைக் கூறுவது சொல்லதிகாரம். கிளவியாக்கம், வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, பெயரியல், வினையியல், இடையியல், உரியியல், எச்சவியல் என்பன சொல்லதிகார இயல்கள். இன்ப ஒழுக்க இயல்பு, பொருள் அற ஒழுக்க இயல்பு, களவு கற்பு என்னும் இன்பவியற் கூறுகள், பொருளியல் வாழ்வில் நேரும் மெய்ப்பாடுகள், பொருளியல் நூலுக்கு விளக்காம் உவமை, செய்யுளிலக்கணம், உலக வழக்கு செய்யுள் வழக்கு என்பவற்றின் மரபுகள் ஆகியவற்றைக் கூறுவது பொருளதிகாரம். அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் என்பன பொருளதிகார இயல்கள். எடுத்துக்கொண்ட பொருளின் அடிக்கருத்தை முதற்கண் கூறி, பின்னர் வித்தில் இருந்து கிளரும் முளை இலை தண்டு கிளை கவடு பூ காய் கனி என்பவை போலப் பொருளைப் படிப்படியே வளர்த்து நிறைவிப்பது தொல்காப்பியர் நடைமுறை. எழுத்துகள் இவை, இவ்வெண்ணிக்கையுடையன என்று நூன் மரபைத் தொடங்கும் ஆசிரியர், குறில் நெடில் மாத்திரை, உயிர் மெய் வடிவு உயிர்மெய், அவற்றின் ஒலிநிலைப்பகுப்பு, மெய்ம்மயக்கம், சுட்டு வினா எழுத்துகள் என்பவற்றைக் கூறும் அளவில் 33 நூற்பாக்களைக் கூறி அமைகிறார். முப்பத்து மூன்றாம் நூற்பாவை, “அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் உளவென மொழிப இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர்” என்கிறார். இயலிலக்கணம் கூறும் ஆசிரியர் இசையிலக்கணம் பற்றிய நூல்களில் இவ்வெழுத்துகளின் நிலை எவ்வாறாம் என்பதையும் சுட்டிச் செல்லுதல் அருமையுடையதாம். அவ்வாறே ஒவ்வோர் இயலின் நிறைவிலும் அவர் கூறும் புறனடை நூற்பா, மொழிவளர்ச்சியில் தொல்காப்பியனார் கொண்டிருந்த பேரார்வத்தையும் காலந்தோறும் மொழியில் உண்டாகும் வளர்நிலைகளை மரபுநிலை மாறாவண்ணம் அமைத்துக் கொள்வதற்கு வழிசெய்வதையும் காட்டுவனவாம். “உணரக் கூறிய புணரியல் மருங்கின் கண்டுசெயற் குரியவை கண்ணினர் கொளலே” (405) என்பது குற்றியலுகரப் புணரியல் புறனடை “கிளந்த அல்ல செய்யுளுள் திரிநவும் வழங்கியல் மருங்கின் மருவொடு திரிநவும் விளம்பிய இயற்கையின் வேறுபடத் தோன்றின் வழங்கியல் மருங்கின் உணர்ந்தனர் ஒழுக்கல் நன்மதி நாட்டத்து என்மனார் புலவர்” (483) என்பது எழுத்ததிகாரப் புறனடை. “அன்ன பிறவும் கிளந்த அல்ல பன்முறை யானும் பரந்தன வரூஉம் உரிச்சொல் எல்லாம் பொருட்குறை கூட்ட இயன்ற மருங்கின் இனைத்தென அறியும் வரம்புதமக் கின்மையின் வழிநனி கடைப்பிடித் தோம்படை ஆணையிற் கிளந்தவற் றியலாற் பாங்குற உணர்தல் என்மனார் புலவர்” (879) என்பது உரியியல் புறனடை. இன்னவற்றால் தொல்காப்பியர் தொன்மையைக் காக்கும் கடப்பாட்டை மேற்கொண்டிருந்தவர் என்பதுடன் நிகழ்கால எதிர்கால மொழிக் காப்புகளையும் மேற்கொண்டிருந்தவர் என்பது இவ்வாறு வரும் புறனடை நூற்பாக்களால் இனிதின் விளங்கும். தொல்காப்பியம் இலக்கணம் எனினும் இலக்கியமென விரும்பிக் கற்கும் வண்ணம் வனப்பு மிக்க உத்திகளைத் தொல்காப்பியர் கையாண்டு நூலை யாத்துள்ளார். இலக்கிய நயங்கள் எளிமை : சிக்கல் எதுவும் இல்லாமல் எளிமையாகச் சொல்கிடந்தவாறே பொருள் கொள்ளுமாறு நூற்பா அமைத்தலும், எளிய சொற்களையே பயன்படுத்துதலும் தொல்காப்பியர் வழக்கம். “எழுத்தெனப் படுவ, அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப” “மழவும் குழவும் இளமைப் பொருள” “ஓதல் பகையே தூதிவை பிரிவே” “வண்ணந் தானே நாலைந் தென்ப” ஓரியல் யாப்புரவு ‘ஒன்றைக் கூறுங்கால் அதன் வகைகளுக்கெல்லாம் ஒரே யாப்புரவை மேற்கொள்ளல்’ என்பது தொல்காப்பியர் வழக்கம். “வல்லெழுத் தென்ப கசட தபற” “மெல்லெழுத் தென்ப `ஞண நமன” “இடையெழுத் தென்ப யரல வழள” சொன்மீட்சியால் இன்பமும் எளிமையும் ஆக்கல் ஓரிலக்கணம் கூறுங்கால் சிக்கல் இல்லாமல் பொருள் காண்பதற்காக வேண்டும் சொல்லைச் சுருக்காமல் மீளவும் அவ்விடத்தே சொல்லிச் செல்லுதல் தொல்காப்பியர் வழக்கம். “அவற்றுள், நிறுத்த சொல்லின் ஈறா கெழுத்தொடு குறித்துவரு கிளவி முதலெழுத் தியையப் பெயரொடு பெயரைப் புணர்க்குங் காலும் பெயரொடு தொழிலைப் புணர்க்குங் காலும் தொழிலொடு பெயரைப் புணர்க்குங் காலும் தொழிலொடு தொழிலைப் புணர்க்குங் காலும் மூன்றே திரிபிடன் ஒன்றே இயல்பென ஆங்கந் நான்கே மொழிபுணர் இயல்பே” என்னும் நூற்பாவைக் காண்க. இவ்வியல்பில் அமைந்த நூற்பாக்கள் மிகப் பல என்பதைக் கண்டு கொள்க. நூற்பா மீட்சியால் இயைபுறுத்தல் ஓரிடத்துச் சொல்லப்பட்ட இலக்கணம் அம்முறையிலேயே சொல்லப்படத் தக்கதாயின் புதிதாக நூற்பா இயற்றாமல், முந்தமைந்த நூற்பாவையே மீளக்காட்டி அவ்வவ் விலக்கணங்களை அவ்வவ்விடங்களில் கொள்ளவைத்தல் தொல்காப்பிய ஆட்சி. இது தம் மொழியைத் தாமே எடுத்தாளலாம். “அளபெடைப் பெயரே அளபெடை இயல” “தொழிற்பெய ரெல்லாம் தொழிற்பெய ரியல” என்பவற்றைக் காண்க. எதுகை மோனை நயங்கள் எடுத்துக் கொண்டது இலக்கணமே எனினும் சுவைமிகு இலக்கிய மெனக் கற்குமாறு எதுகை நயம்பட நூற்பா யாத்தலில் வல்லார் தொல்காப்பியர். “வஞ்சி தானே முல்லையது புறனே எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்றே”. “ஏரோர் களவழி அன்றிக் களவழித் தேரோர் தோற்றிய வென்றியும்”. இவை தொடை எதுகைகள். இவ்வாறே ஐந்தாறு அடிகளுக்கு மேலும் தொடையாகப் பயில வருதல் தொல்காப்பியத்துக் கண்டு கொள்க. “மாற்றருங் கூற்றம் சாற்றிய பெருமையும் கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும்”. இவை அடி எதுகைகள். “விறப்பும் உறப்பும் வெறுப்பும் செறிவே” “நொசிவும் நுழைவும் நுணங்கும் நுண்மை”. முன்னதில் முழுவதும் எதுகைகளும், பின்னதில் முழுவதும் மோனைகளும் தொடைபடக் கிடந்து நடையழகு காட்டல் அறிக. முன்னது முற்றெதுகை; பின்னது முற்றுமோனை. “வயவலி யாகும்” “வாள்ஒளி யாகும்” “உயாவே உயங்கல்” “உசாவே சூழ்ச்சி” இவை மோனைச் சிறப்பால் அடுத்த தொடரைக் கொண்டு வந்து நிறுத்துகின்றன. இதனை எடுத்து வருமோனை எனலாம். அடைமொழி நடை மரம்பயில் கூகை, செவ்வாய்க் கிளி, வெவ்வாய் வெருகு, இருள்நிறப் பன்றி, மூவரி அணில், கோடுவாழ் குரங்கு, கடல்வாழ் சுறவு, வார்கோட்டி யானை என அடைமொழிகளால் சுவைப்படுத்துதல் தொல்காப்பியர் உத்திகளுள் ஒன்று. “இழுமென் மொழியால் விழுமியது பயிலல்” “எண்ணு வண்ணம் எண்ணுப் பயிலும்” இவ்வாறு ஒலி நயத்தால் கவர்ந்து பொருளை அறிந்துகொள்ளச் செய்வதும் தொல்காப்பியர் உத்திகளுள் ஒன்று. “மாத்திரை முதலா அடிநிலை காறும் நோக்குதற் காரணம் நோக்கெனப் படுமே” “ஒரூஉ வண்ணம் ஒரீஇத் தொடுக்கும்” என எடுத்த இலக்கணத்தை அச்சொல்லாட்சியாலேயே விளக்கிக் காட்டுவதும் தொல்காப்பிய நெறி. ‘மாற்றருஞ் சிறப்பின் மரபியல்’ என இயலின் பெயர் குறிக்கும் மாற்றானே இலக்கணமும் யாத்துக் காட்டியமை நூற்பாவுள் தனி நூற்பாவாகிய பெற்றிமையாம். வரம்பு இளமைப் பெயர், ஆண்மைப் பெயர், பெண்மைப் பெயர் என்பவற்றை முறையே கூறி விளக்கிய ஆசிரியர் “பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே” என நிறைவித்தல் நூல் வரம்புச் சான்றாம். செய்யுளியல் தொடக்கத்தில் செய்யுள் உறுப்புகள் மாத்திரை முதலாக முப்பத்து நான்கனை உரைத்து அவற்றை முறையே விளக்குதலும் பிறவும் திட்டமிட்ட நூற்கொள்கைச் சிறப்பாக அமைவனவாம். “வகரக் கிளவி நான்மொழி ஈற்றது” “அம்மூன் றென்ப மன்னைச் சொல்லே” இன்னவாறு வருவனவும் வரம்பே. விளங்க வைத்தல் விளங்கவைத்தல் என்பதொரு நூலழகாகும். அதனைத் தொல்காப்பியனார் போல விளங்க வைத்தவர் அரியர். “தாமென் கிளவி பன்மைக் குரித்தே” “தானென் கிளவி ஒருமைக் குரித்தே” “ஒருவர் என்னும் பெயர்நிலைக் கிளவி இருபாற்கும் உரித்தே தெரியுங் காலை” இவ்வளவு விளங்கச் சொன்னதையும் எத்தனை எழுத்தாளர்கள் இந்நாளில் புரிந்துகொண்டுளர்? நயத்தகு நாகரிகம் சில எழுத்துகளின் பெயரைத்தானும் சொல்லாமல் உச்சகாரம் (சு), உப்பகாரம் (பு), ஈகார பகரம் (பீ) இடக்கர்ப் பெயர் என்பவற்றை எடுத்துச் சொல்லும் நாகரிகம் எத்தகு உயர்வு உடையது! இஃது உயர்வெனக் கருதும் உணர்வு ஒருவர்க்கு உண்டாகுமானால் அவர் தம் மனம்போன போக்கில் எண்ணிக்கை போன போக்கில் கிறுக்கிக் கதையெனவோ பாட்டெனவோ நஞ்சை இறக்கி ‘இளையர்’ உளத்தைக் கெடுத்து எழுத்தால் பொருளீட்டும் சிறுமை உடையராவரா? தொல்காப்பிய நூனயம் தனியே ஆய்ந்து வெளிப்படுத்தற் குரிய அளவினது. தொல்காப்பியக் கொடை முந்து நூல் வளங்கள் அனைத்தும் ஒருங்கே பெறத்தக்க அரிய நூலாகத் தொல்காப்பியம் விளங்குவதுடன், அவர்கால வழக்குகளையும் அறிந்துகொள்ளும் வண்ணம் தொல்காப்பியர் தம் நூலை இயற்றியுள்ளார். அன்றியும் பின்வந்த இலக்கியப் படைப்பாளிகளுக்கும் இலக்கணப் படைப்பாளிகளுக்கும் அவர் வழங்கியுள்ள கொடைக்கு அளவே இல்லை. தொட்டனைத் தூறும் மணற்கேணியென அது சுரந்துகொண்டே உள்ளமை ஆய்வாளர் அறிந்ததே. பொருளதிகார முதல் நூற்பா ‘கைக்கிளை முதலா’ எனத் தொடங்குகின்றது. அக் கைக்கிளைப் பொருளில் எழுந்த சிற்றிலக்கியம் உண்டு. முத்தொள்ளாயிரப் பாடல்களாகப் புறத்திரட்டு வழி அறியப் பெறுவன அனைத்தும் கைக்கிளைப் பாடல்களே. “ஏறிய மடல் திறம்” என்னும் துறைப்பெயர் பெரிய மடல், சிறியமடல் எனத் தனித்தனி நூலாதல் நாலாயிரப் பனுவலில் காணலாம். ‘மறம்’ எனப்படும் துறையும் ‘கண்ணப்பர் திருமறம்’ முதலாகிய நூல் வடிவுற்றது. கலம்பக உறுப்பும் ஆயது. ‘உண்டாட்டு’ என்னும் புறத்துறை, கம்பரின் உண்டாட்டுப் படலத்திற்கு மூலவூற்று. ‘தேரோர் களவழி’ களவழி நாற்பது கிளர்வதற்குத் தூண்டல். ‘ஏரோர் களவழி’ என்பது பள்ளுப்பாடலாகவும், ‘குழவி மருங்கினும்’ என்பது பிள்ளைத் தமிழாகவும் வளர்ந்தவையே. “காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்த மரபின் பெரும்படை வாழ்த்தலென் றிருமூன்று மரபின்கல்” என்னும் புறத்திணை இயல் நூற்பா தானே, சிலப்பதிகார வஞ்சிக் காண்டத்திற்கு வைப்பகம். பாடாண் திணைத் துறைகள் சிற்றிலக்கிய வளர்ச்சிக்கு வழங்கியுள்ள கொடை தனிச்சிறப்பினவாம். “அறம் முதலாகிய மும்முதற் பொருட்கும்” என நூற்பாச் செய்து முப்பாலுக்கு மூலவராகத் தொல்காப்பியனார் திகழ்வதைச் சுட்டுவதே அவர்தம் கொடைப் பெருமை நாட்டுவதாகலாம். இவை இலக்கியக் கொடை. இலக்கணக் கொடை எத்துணைக் கொடை? இலக்கண நூல்கள் அனைத்துக்கும் நற்றாயாயும், செவிலித் தாயாயும், நல்லாசானாயும் இருந்து வளர்த்து வந்த - வளர்த்து வருகின்ற சீர்மை தொல்காப்பியத் திற்கு உண்டு. இந்நாளில் வளர்ந்துவரும் ‘ஒலியன்’ ஆய்வுக்கும் தொல்காப்பியர் வித்திட்டவர் எனின், அவர் வழி வழியே நூல் யாத்தவர்க்கு அவர் பட்டுள்ள பயன்பாட்டுக்கு அளவேது? “தொல்காப்பியன் ஆணை” என்பதைத் தலைமேற் கொண்ட இலக்கணர், பின்னைப் பெயர்ச்சியும் முறை திறம்பலுமே மொழிச்சிதைவுக்கும் திரிபுகளுக்கும் இடமாயின என்பதை நுணுகி நோக்குவார் அறிந்து கொள்ளக்கூடும். இலக்கணப் பகுப்பு விரிவு இனித் தொல்காப்பியம் பிற்கால இலக்கணப் பகுப்பு களுக்கும் இடந்தருவதாக அமைந்தமையும் எண்ணத் தக்கதே. தமிழ் இலக்கணம் ஐந்திலக்கணமாக அண்மைக் காலம் வரை இயன்றது. அறுவகை இலக்கணமென ஓரிலக்கணமாகவும் இது கால் விரிந்தது. இவ் விரிவுக்குத் தொல்காப்பியம் நாற்றங்காலாக இருப்பது அறிதற்குரியதே. எழுத்து சொல் பொருள் என முப்பகுப்பால் இயல்வது தொல்காப்பியம் ஆகலின் தமிழிலக்கணம் அவர் காலத்தில் முக் கூறுபட இயங்கியமை வெளி. அவர் கூறிய பொருளிலக்கணத்தைத் தனித்தனியே வாங்கிக் கொண்டு அகப்பொருள், புறப்பொருள் என இலக்கணங் கூறும் நூல்கள் கிளைத்தன. அது பொருளிலக்கணத்தைப் பகுத்துக் கொண்டதே. அவர் கூறிய செய்யுளியலை வாங்கிக் கொண்டு, ‘யாப்பருங்கலம்’ முதலிய யாப்பு இலக்கண நூல்கள் தோன்றித் தமிழ் இலக்கணத்தை நாற்கூறுபடச் செய்தன. அவர் கூறிய உவமையியலையும் செய்யுளியலில் சில பகுதிகளையும் தழுவிக்கொண்டு வடமொழி இலக்கணத் துணையொடு அணியிலக்கணம் என ஒரு பகுதியுண்டாகித் தமிழ் இலக்கணம் ஐங்கூறுடையதாயிற்று. இவ்வைந்துடன் ஆறாவது இலக்கணமாகச் சொல்லப்படுவது ‘புலமை இலக்கணம்’ என்பது. அது தமிழின் மாட்சி தமிழ்ப் புலவர் மாட்சி முதலியவற்றை விரிப்பது. “தமிழ்மொழிக் குயர்மொழி தரணியில் உளதென வெகுளியற் றிருப்போன் வெறும்புல வோனே” என்பது அவ்விலக்கணத்தில் ஒரு பாட்டு. ஆக மூன்றிலக்கணத்துள் ஆறிலக்கணக் கூறுகளையும் மேலும் உண்டாம் விரிவாக்கங்களையும் கொண்டிருக்கின்ற மொழிக் களஞ்சியம் தொல்காப்பியம் என்க. தொல்காப்பியரின் சிறப்பாகப் பாயிரம் சொல்வனவற்றுள் ஒன்று, ‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்’ என்பது. ஐந்திரம் இந்திரனால் செய்யப்பட்டது என்றும், பாணினியத்திற்குக் காலத்தால் முற்பட்டது என்றும், வடமொழியில் அமைந்தது என்றும் பாணினியத்தின் காலம் கி.மு. 450 ஆதலால் அதற்கு முற்பட்ட ஐந்திரக் காலம் அதனின் முற்பட்ட தென்றும், அந் நூற்றேர்ச்சி தொல்காப்பியர் பெற்றிருந்தார் என்றும், அந்நூற் பொருளைத் தம் நூலுக்குப் பயன்படுத்திக் கொண்டார் என்றும் ஆய்வாளர் பலப்பல வகையால் விரிவுறக் கூறினர். சிலப்பதிகாரத்தில் வரும் ‘விண்ணவர் கோமான்’ விழுநூல், ‘கப்பத் திந்திரன் காட்டிய நூல்’ என்பவற்றையும் ‘இந்திரன் எட்டாம் வேற்றுமை என்றனன்’ என்னும் ஒரு நூற்பாவையும் காட்டி அவ்வைந்திர நூலைச் சுட்டுவர். விண்ணவர் கோமான் இந்திரன் வடமொழியில் நூல் செய்தான் எனின், தேவருலக மொழி வடமொழி என்றும், விண்ணுலக மொழியே மண்ணில் வடமொழியாய் வழங்குகின்றது என்றும் மண்ணவர் மொழி யுடையாரை நம்பவைப்பதற்கு இட்டுக் கட்டப்பட்ட எளிய புனைவேயாம். அப்புனைவுப் பேச்சுக் கேட்டதால்தான் இளங்கோ தம் நூலுள்ளும் புனைந்தார். அவர் கூறும் “புண்ணிய சரவணத்தில் மூழ்கி எழுந்தால் விண்ணவர் கோமான் விழுநூல் எய்துவர்” என்பதே நடைமுறைக் கொவ்வாப் புனைவு என்பதை வெளிப்படுத்தும். அகத்திய நூற்பாக்களென உலவ விட்டவர்களுக்கு, இந்திரன் எட்டாம் வேற்றுமை சொன்னதாக உலவவிட முடியாதா? இவ்வாறு கூறப்பட்டனவே தொன்மங்களுக்குக் கைம் முதல். இதனைத் தெளிவாகத் தெரிந்தே தொல்காப்பியனார், “தொன்மை தானே உரையொடு புணர்ந்த பழமை மேற்றே” என்றார். தொன்மை என்பது வழிவழியாக உரைக்கப்பட்டு வந்த பழஞ்செய்தி பற்றியதாம் என்பது இந்நூற்பாவின் பொருள். இவ்வாறு தொல்காப்பியர் கேட்ட தொன்மச் செய்திகளைப் பனம்பாரனார் கேட்டிரார் என்ன இயலாதே. “இந்திரனாற் செய்யப்பட்டதொரு நூல் உண்டு காண்; அது வடமொழியில் அமைந்தது காண்; அதன் வழிப்பட்டனவே வடமொழி இலக்கண நூல்கள் காண்” என்று கூறப்பட்ட செய்தியைப் பனம்பாரர் அறிந்தார். ‘அறிந்தார் என்பது இட்டுக் கட்டுவதோ’ எனின் அன்று என்பதை அவர் வாக்கே மெய்ப்பிப்பதை மேலே காண்க. திருவள்ளுவர் காலத்திலும், “தாமரைக் கண்ணானின் உலக இன்பத்திலும் உயரின்பம் ஒன்று இல்லை” என்று பேசப் பட்டது. இவ்வாறு பிறர் பிறர் காலத்தும் பிறபிற செய்திகள் பேசப்பட்டன என்பவற்றை விரிப்பின் பெருகுமென்பதால் வள்ளுவர் அளவில் அமைவாம். திருவள்ளுவர் கேட்ட செய்தி, அவரை உந்தியது. அதனால் “தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல், தாமரைக் கண்ணான் உலகு?” என்றோர் வினாவை எழுப்பி இவ்வுலகத் தெய்தும் இன்பங்களுள் தலையாய காதலின்பத்தைச் சுட்டினார். அடியளந்தான் கதையை மறுத்து, மடியில்லாத மன்னவன் தன் முயற்சியால் எய்துதல் கூடும் முயல்க; முயன்றால் தெய்வமும் மடிதற்று உன்முன் முந்து நிற்கும் என்று முயற்சிப் பெருமை யுரைத்தார். இன்னதோர் வாய்பாட்டால் பனம்பாரனார் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியரைச் சுட்டினார். ‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்’ என்று வாளா கூறினார் அல்லர் பனம்பாரனார். “மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” என்றார். அவர் கேள்வியுற்றது ‘விண்ணுலக ஐந்திரம்!’ அவ்விண்ணுலக ஐந்திரத்தினும் இம்மண்ணுலகத்துத் தொல்காப்பியமே சிறந்த ஐந்திரம் என்னும் எண்ணத்தை யூட்டிற்றுப் போலும்! “ஆகாயப்பூ நாறிற்று என்றுழிச் சூடக்கருதுவாருடன்றி மயங்கக் கூறினான் என்னும் குற்றத்தின் பாற்படும்” என்பதை அறியாதவர் அல்லரே பனம்பாரர். அதனால் நீர்நிறைந்த கடல் சூழ்ந்த நிலவுலகின்கண் விளங்கும் ஐந்திரம் எனத்தக்க தொல்காப்பியத்தை முழுதுற நிரம்பத் தோற்றுவித்ததால் தன் பெயரைத் தொல்காப்பியன் எனத் தோன்றச் செய்தவன் என்று பாராட்டுகிறார். இனி ‘ஐந்திரம்’ என்பது சமண சமயத்து ஐந்தொழுக்கக் கோட்பாடு. அவற்றை நிறைந்தவர் தொல்காப்பியர் என்றும் கூறுவர். ஒழுக்கக் கோட்பாடு ‘படிமையோன்’ என்பதனுள் அடங்குதலால் மீட்டுக் கூற வேண்டுவதில்லையாம். அன்றியும் கட்டமை நோற்பு ஒழுக்கம் அவ்வாதனுக்கு உதவுதலன்றி, அவனியற்றும் இலக்கணச் சிறப்புக்குரிய தாகாது என்பதுமாம். ஆயினும், தொல்காப்பியர் சமண சமயச் சார்பினர் அல்லர் என்பது மெய்ம்மையால், அவ்வாய்வுக்கே இவண் இடமில்லை யாம். இனி ‘ஐந்திறம்’ என்றாக்கி ஐங்கூறுபட்ட இலக்கணம் நிறைந்தவர் என்பர். அவர் தமிழ் இலக்கணக் கூறுபாடு அறியார். தமிழ் இலக்கணம் முக்கூறுபட்டது என்பதைத் தொல்காப்பியமே தெளிவித்தும் பின்னே வளர்ந்த ஐந்திலக்கணக் கொள்கையை முன்னே வாழ்ந்த ஆசிரியர் தலையில் சுமத்துவது அடாது எனத் தள்ளுக. ‘ஐந்திரம்’ எனச் சொன்னடை கொண்டு பொருளிலாப் புதுநூல் புனைவு ஒன்று இந்நாளில் புகுந்து மயக்க முனைந்து மயங்கிப்போன நிலையைக் கண்ணுறுவார் ஏட்டுக் காலத்தில் எழுதியவர் ஏட்டைக் கெடுத்ததும் படித்தவர் பாட்டைக் கெடுத்ததும் ஆகிய செய்திகளைத் தெளிய அறிவார். எழுதி ஏட்டைக் காத்த - படித்துப் பாட்டைக் காத்த ஏந்தல்களுக்கு எவ்வளவு தலை வணங்குகிறோமோ, அவ்வளவு தலை நாணிப் பிணங்கவேண்டிய செயன்மையரை என் சொல்வது? தொல்காப்பிய நூற்பாக்கள் இடமாறிக் கிடத்தல் விளங்குகின்றது. தெய்வச்சிலையார் அத்தகையதொரு நூற்பாவைச் சுட்டுதலை அவர் பகுதியில் கண்டு கொள்க. மரபியலில் “தவழ்பவை தாமும் அவற்றோ ரன்ன” என்னும் நூற்பாவை அடுத்துப் “பறழ்எனப் படினும் உறழாண் டில்லை” என்னும் நூற்பா அமைந்திருத்தல் வேண்டும். அவ்வாறு அமைந்தால் எடுத்துக்காட்டு இல்லை என்பனவற்றுக்கு இலக்கியம் கிடைத்தல் இயல்பாக அமைகின்றது. “இக்காலத்து இறந்தன” என்னும் இடர்ப்பாடும் நீங்குகின்றது. இடப் பெயர்ச்சிக்கு இஃதொரு சான்று. இடையியலில் “கொல்லே ஐயம்” என்பதை அடுத்த நூற்பா “எல்லே இலக்கம்” என்பது. இவ்வாறே இருசீர் நடை நூற்பா நூற்கும் இடத்தெல்லாம் அடுத்தும் இருசீர் நடை நூற்பா நூற்றுச் செல்லலும் பெரிதும் எதுகை மோனைத் தொடர்பு இயைத்தலும் தொல்காப்பியர் வழக்காதலைக் கண்டு கொள்க. இத்தகு இருசீர் நடை நூற்பாக்கள் இரண்டனை இயைத்து ஒரு நூற்பாவாக்கலும் தொல்காப்பிய மரபே. “உருவுட் காகும்; புரைஉயர் வாகும்” “மல்லல் வளனே; ஏபெற் றாகும்” “உகப்பே உயர்தல்; உவப்பே உவகை” என்பவற்றைக் காண்க. இவ்விருவகை மரபும் இன்றி “நன்று பெரிதாகும்” என்னும் நூற்பா ஒன்றும் தனித்து நிற்றல் விடுபாட்டுச் சான்றாகும். அகத்திணையியல் இரண்டாம் நூற்பா, ‘அவற்றுள்’ என்று சுட்டுதற்குத் தக்க சுட்டு முதற்கண் இன்மை காட்டி ஆங்கு விடுபாடுண்மை குறிப்பர் (தொல். அகத். உரைவளம். மு. அருணாசலம் பிள்ளை). இனி இடைச் செருகல் உண்டென்பதற்குத் தக்க சான்று களும் உள. அவற்றுள் மிகவாகக் கிடப்பது மரபியலிலேயேயாம். தொல்காப்பியரின் மரபியல் கட்டொழுங்கு மரபிய லிலேயே கட்டமைதி இழந்து கிடத்தல் திட்டமிட்ட திணிப்பு என்பதை உறுதிப் படுத்துகின்றது. ‘மாற்றருஞ் சிறப்பின் மரபியல்’ என்று மரபிலக்கணம் கூறி மரபியலைத் தொடுக்கும் அவர் இளமைப் பெயர், ஆண்பாற் பெயர், பெண்பாற் பெயர் ஆகியவற்றைக் குறிக்கிறார். அக்குறிப்பொழுங்குப் படியே இளமைப் பெயர்கள் இவை இவை இவ்விவற்றுக்குரிய என்பதை விளக்கி முடித்து, “சொல்லிய மரபின் இளமை தானே சொல்லுங் காலை அவையல திலவே” என நிறைவிக்கிறார். அடுத்து ஓரறிவு உயிரி முதல் ஆறறிவுடைய மாந்தர் ஈறாக ஆண்பால் பெண்பால் பெயர்களை விளக்க வரும் அவர் ஓரறிவு தொடங்கி வளர்நிலையில் கூறி எடுத்துக்காட்டும் சொல்லி ஆண்பாற் பெயர்களையும் பெண்பாற் பெயர்களையும் இவை இவை இவற்றுக்குரிய என்பதை விளக்கி நிறைவிக்கிறார். ஆண்பால் தொகுதி நிறைவுக்கும் பெண்பால் தொகுதித் தொடக்கத்திற்கும் இடையே “ஆண்பா லெல்லாம் ஆணெனற் குரிய பெண்பா லெல்லாம் பெண்ணெனற் குரிய காண்ப அவையவை அப்பா லான” என்கிறார். பின்னர்ப் பெண்பாற் பெயர்களைத் தொடுத்து முடித்து, “பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே” என்று இயல் தொடக்கத்தில் கூறிய பொருளெல்லாம் நிறைந்த நிறைவைச் சுட்டுகிறார். ஆனால் இயல் நிறைவுறாமல் தொடர்நிலையைக் காண்கி றோம். எப்படி? “நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய” என்பது முதலாக வருணப் பாகுபாடுகளும் அவ்வவர்க் குரியவையும் 15 நூற்பாக்களில் தொடர்கின்றன. கூறப்போவது இவையென்று பகுத்த பகுப்பில் இல்லாத பொருள், கூற வேண்டுவ கூறி முடித்தபின் தொடரும் பொருள், ‘மரபியல்’ செய்தியொடு தொடர்பிலாப் பொருள் என்பன திகைக்க வைக்கின்றன. நூலும் கரகமும் முக்கோலும் மணையும் படையும் கொடியும் குடையும் பிறவும் மாற்றருஞ்சிறப்பின் மரபினவோ? எனின் இல்லை என்பதே மறுமொழியாம். “வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை” என்னும் நூற்பா நடை தொல்காப்பியர் வழிப்பட்டதென அவர் நூற்பாவியலில் தோய்ந்தார் கூறார். “வாணிகன் பெறுமே வாணிக வாழ்க்கை” என நூற்கத் தெரியாரோ அவர்? இளமை, ஆண்மை, பெண்மை என்பன மாறா இயலவை. பிறவியொடு வழி வழி வருபவை. நூல், கரகம் முதலியன பிறவியொடு பட்டவை அல்ல. வேண்டுமாயின் கொள்ளவும் வேண் டாக்கால் தள்ளவும் உரியவை. முன்னை மரபுகள் தற்கிழமைப் பொருள; பிரிக்க முடியாதவை. பின்னைக் கூறப்பட்டவை பிறிதின் கிழமைப் பொருளவை. கையாம் தற்கிழமைப் பொருளும் கையில் உள்ளதாம் பிறிதின் கிழமைப் பொருளும் ‘கிழமை’ என்னும் வகையால் ஒருமையுடையவை ஆயினும் இரண்டும் ஒருமையுடையவை என உணர்வுடையோர் கொள்ளார். இவ்வொட்டு நூற்பாக்கள் வெளிப்படாதிருக்க ஒட்டியிருந்த ‘புறக்காழ்’ ‘அகக்காழ்’ ‘இலை முறி’ ‘காய்பழம்’ இன்னவை பற்றிய ஐந்து நூற்பாக்களைப் பின்னே பிரித்துத் தள்ளி ஒட்டாஒட்டாய் ஒட்டி வைத்தனர். இதனை மேலோட்டமாகக் காண்பாரும் அறிவர். “நிலம்தீ நீர்வளி விசும்போ டைந்தும்” என்னும் நூற்பாவே மரபியல் முடிநிலை நூற்பாவாக இருத்தல் வேண்டும். பின்னுள்ள ‘நூலின் மரபு’ பொதுப் பாயிரம் எனத்தக்கது. அது சிறப்புப் பாயிரத்தைத் தொடுத்தோ, நூன் முடிவில் தனிப்பட்டோ இருந்திருக்க வேண்டும். அதுவும் நூலாசிரியர் காலத்திற்குப் பிற்பட்டுச் சேர்த்ததாக இருத்தல் வேண்டும். அதிலும் சிதைவுகளும் செறிப்புகளும் பல உள. “அவற்றுள், சூத்திரந்தானே” என வரும் செய்யுளியல் நூற்பாவை யும் (1425) “சூத்திரத்தியல்பென யாத்தனர் புலவர்” என வரும் மரபியல் நூற்பாவையும் (1600) ஒப்பிட்டுக் காண்பார் ஒரு நூலில் ஒருவர் யாத்த தெனக் கொள்ளார். மரபியல் ஆய்வு தனியாய்வு எனக் கூறி அமைதல் சாலும். இவ்வியல் நூற்பாக்கள் அனைத்திற்கும் இளம்பூரணர் உரையும் பேராசிரியர் உரையும் கிடைத்திருத் தலால் அவர்கள் காலத்திற்கு முன்னரே இம்மாற்றங்கள் நிகழ்ந்திருக்க வேண்டும் என்பது தெளிவான செய்தி. மேலும் சில குறிப்புகளும் செய்திகளும் ‘வாழ்வியல் விளக்க’த்தில் காணலாம். - இரா. இளங்குமரன் தமிழ்வளம் -19, தமிழர் வாழ்வியல் இலக்கணம் எனும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது சொல்லதிகாரம் இயலமைதி சொல்லதிகாரம் கிளவியாக்கம் (சொல்லாக்கம்) முதலாக எச்சவியல் இறுதியாக ஒன்பது இயல்களை உடையது. அவ்வியல்கள் முறையே கிளவியாக்கம், வேற்றுமைஇயல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, பெயரியல், வினையியல், இடையியல், உரியியல், எச்சவியல் என்பன. இவை ஒன்றற் கொன்று தொடரிபோல் - சங்கிலிபோல் - தொடர்புடையன. சொல் சொல் என்பது பொருளுணர்த்தும் கருவி; மாந்தர் தம் நெஞ்ச ஊர்தி; உலகத்தை நெருக்கி வைக்க வல்ல இயக்கி. சொல் என்பது மாந்தர்தம் குறிப்பு உணர்த்துவதற்கும் தேவை நிறைவேற்றத்திற்கும் தம் பட்டறிவால் இயற்கையின் துணை கொண்டு படைக்கப்பட்ட செய்நேர்த்தியுடையது. சொல்லின் ஆற்றல் பெரிது. “ஆவதும் சொல்லால்; அழிவதும் சொல்லால்” என்பது பழமொழி. சொல் ஆக்கத்திற்கே அன்றி அழிவுக்கும் ஆதலுண்டு என்பதே அதற்குக் ‘கூற்று’ என்றொரு பெயரைத் தந்தது கூறுபடுத்துவது அழிப்பது கூற்றெனப்படுதல் அறியத்தக்கது. சொல் எதுவும் பொருளற்றதில்லை என்பது தொல்காப்பியர் தெளிவு. அதனால், “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்றார் (640). அப்பொருள் பார்த்த அளவில் புலப்படல் உண்டு. ஆழ்ந்து பார்த்து அதன்பின் கண்டு கொள்ளத்தக்கனவும் உண்டு என்பதால், “மொழிப் பொருட் காரணம் விழிப்பத்தோன்றா” என்றார் (877). நெல் மணி இல்லாத நெல்லை ‘நெல்’ என்பது வழக்கில்லை. பதர், பதடி என்பனவே வழக்கு. நெல் மணி பிடித்தலைப் ‘பலன்’ பிடித்தல் என்பர்;ஆடு மாடு கருக் கொள்ளுதல் ‘பலப்படுதல்’ எனப்படும். மக்கள் வாழ்வில் கொள்ளும் பயன்மற்றை உயிரிகளின் வாழ்வில் பலன் எனப்படுகின்றது. பலன் இல்லா நெல்லும் பயன் இல்லாச் சொல்லும் ஒத்தவை என்பதால் ‘சொல்’ என்பதற்கு நெல் என ஒரு பொருள் உண்டாயிற்று. சொல் தரும் உணவு சோறு என்றும் சொன்றி என்றும் வழக்கில் ஆயது. “பயனில் சொல் பாராட்டு வானை மகனெனல் மக்கட் பதடி எனல்” என்னும் வள்ளுவ உவமை எண்ணின், உண்மை விளக்கமாம். சொல்லதிகார முதலியலின் பெயர் ‘கிளவியாக்கம்’. ஆக்கம் என்பது என்ன? ஆக்குவது ஆக்கம். ‘ஆக்குப் புரை’ என்பது சமையல் அறை. சொல்லை ஆக்குதல், நெல்லைச் சோறாக்கும் செயல் போல்வது என்பதை, உரையாசிரியர் சேனாவரையர், “வழுக்களைந்து சொற்களை ஆக்கிக் கொண்டமையான் இவ்வோத்துக் கிளவியாக்க மாயிற்று. ஆக்கம், அமைத்துக் கோடல், நொய்யும் நுறுங்கும் களைந்து அரிசியமைத் தாரை அரிசியாக்கினார் என்ப ஆகலின்” என்றது எண்ணத்தக்கது. கிளவி சொல்லாதல், இரட்டைக் கிளவி என்பதால் வெளிப்பட விளங்கும். கிளத்தல் வழியாவது கிளவி. கிளத்தல் சொல்லுதல். இனி, உயர்திணை, அஃறிணை என்னும் இருதிணை; ஆண், பெண், பலர், ஒன்று, பல என்னும் ஐம்பால், வினா விடை; இயல்பு வழக்கு தகுதி வழக்கு, தன்மை முன்னிலை படர்க்கை என்னும் மூவிடம்; ஒருமை பன்மையாகிய எண்; இவற்றுள் வரும் வழு - வழா நிலை என்பனவெல்லாம் கிளவியாக்கத்தில் இடம் பெறுகின்றன. வேற்றுமை அடுத்துள்ள வேற்றுமையியலில் வேற்றுமை வகை, வேற்றுமை உருபு, பொருள் நிலை என்பவை கூறப்பட்டுள்ளன. வேற்றுமை உருபுகள் மயங்குதல் வேற்றுமை மயங்கியலாக விரிகின்றது. விளி நான்காவது இயல் விளி மரபு என்பது. விளி என்பதன் இலக்கணம், உயர்திணைப் பெயர் விளியேற்கும் முறை, முறைப் பெயர் விரவுப் பெயர், அஃறிணைப் பெயர் ஆயவை விளியேற்கும் முறை பற்றியது அது. பெயர் அடுத்த இயல் பெயரியல், சொற்களின் இயல்பு, பெயர்ச் சொல்லின் இலக்கணம், உயர்திணைப் பெயர்கள், அஃறிணைப் பெயர்கள், விரவுப் பெயர்கள் என்பவை பற்றிய விதிகள் விளக்கங்கள் பற்றியது அது. வினை ஆறாம் இயல் வினை இயல். வினைச் சொல் என்பதன் இலக்கணம் கூறி, உயர்திணை வினை அஃறிணைவினை, விரவுவினை, வியங்கோள், வினை, எச்சம் பற்றியது அது. இடை ஏழாம் இயல் இடை இயல். இடைச் சொல் என்பதன் பொது இலக்கணம் சிறப்பிலக்கணம் பற்றிக் கூறியது அது. எண்ணிடைச் சொல் விளக்கமும் உடையது. உரி உரியியல் என்பது எட்டாவது இயல். இடைச் சொல் போலவே உரிச்சொல்லும் பொது இலக்கணம் சிறப்பிலக்கணம் என்பவற்றைக் கொண்டுளது. உரிச் சொல்லுக்குப் பொருள் காண் முறையும் கூறுகிறது. அகராதி எனவும் நிகண்டு எனவும் பின்னே எழுந்த வரவுகளுக்கு இவ்விடையியலும் உரியியலும் மூலவைப்பகம் ஆகும். எச்சம் ஒன்பதாவது எச்சவியல். நால்வகைச் சொற்கள், பொருள்கோள் வகை, தொகைகள் வினைமுற்று வகை, சில மரபுக் குறிப்புகள் ஆகியவற்றைக் கூறி நிறைகின்றது அது. இச் சொல்லதிகாரம் உரைவல்லார் பலரைத் தன்பால் ஈர்த்துளது என்பது இதற்குக் கிடைத்துள்ள உரையாசிரியர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், கல்லாடனார், தெய்வச்சிலையார் ஆகியோர் உரைகளால் புலப்படும். - இரா. இளங்குமரன் தமிழ்வளம் -19, தமிழர் வாழ்வியல் இலக்கணம் எனும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது சொல்லதிகாரம் வாழ்வியல் விளக்கம் திணை திணை பால் எண் இடம் காலம் ஆகிய பொதுவகுப்பு உலகப் பொதுமையது. எனினும் தமிழர் கண்ட திணை பால் வகுப்பு அருமையும் பெருமையும் மிக்கவை. சொல்லதிகார முதலியலாகிய கிளவியாக்க முதல் நூற்பாவே, “உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே அஃறிணை என்மனார் அவரல பிறவே” என்கிறது. ‘திணை’ என்பது திண்மை என்னும் பண்பு வழியில் அமைந்த சொல். திண்மை உடலுக்கும் உளத்திற்கும் உண்டேனும், இவண் உளத்திண்மை குறித்ததேயாம். உளத்திண்மையாவது உறுதியான கட்டொழுங்கு. அதனை ஆசிரியர் மேலே விளக்கியுரைப்பார். பெண்மைக்குத் திண்மை வேண்டும் என்னும் வள்ளுவம் ஆண்மைக்கு நிறையும் துறவர்க்கு நோன்பும் வேண்டும் என்பதையும் வலியுறுத்தும். உயர்ந்த ஒழுக்கம் உடையவர் எவரோ அவர் உயர்திணையர்; அவ்வுயர் ஒழுக்கம் இல்லாரும் மற்றை உயிரிகளும் உயிரில்லாதனவும் அல்திணையாம் (அஃறிணை யாம்) என்கிறார் தொல்காப்பியர். மக்களெல்லாரும் உயர்திணையர் என்னாமல் உயர் ஒழுக்கம் உடையாரே உயர்திணையர் என்றார், “அவ்வுயர் ஒழுக்கம் இல்லார் மாந்தரே எனினும் அவர்கள் மக்கள் அல்லர்; மாக்கள் எனப்படுவர். விலங்கொடும் இணைத்துச் சொல்லப் படுவர்” என்பதை, “மாவும் மாக்களும் ஐயறி வினவே” என்பார் மேலே. திணை இரண்டும் ஐம்பாலாகப் பகுக்கப்படுதலை அடுத்து உரைக்கிறார் (485, 486). பால் பால் என்பது தூய்மை; வால் என்பதும் அதுவே. பட்டொளி வீசும் பகல் ‘பால்’ ஆகும். இரவு பகல் எனப் பகுத்தலால் பால் என்பது பகுதி, பக்கம் என்னும் பொருள்களைக் கொண்டது. எ-டு: மேல்பால், கீழ்பால். பக்கங்களை இணைப்பது ‘பாலம்’ எனப்பட்டது. இவ்வாறும் மேலும் விரிபொருள் கொண்டது பால். ஓர் உயிரின் தோற்றம், வளர்வு, வீவு என்பனவும் உலகத்தியற்கை எனப்பட்டது. அதனால் உகலத்தியற்கை யாம் ஊழுக்குப் ‘பால்’ என்பதொரு பெயரும் உண்டாயிற்று. திணையை இரண்டாகக் கண்ட நம் முன்னோர் பால் என்பதை ஐந்து எனக் கண்டனர். அவை ஆண், பெண், பலர், ஒன்று, பல என்பன. உயர்திணைப்பால் மூன்றாகவும், அஃறிணைப்பால் இரண்டாகவும் கொண்டனர். திணை பால் என்பவற்றைச் சொல்லமைதி கொண்டு வகுக்காமல் சொல் சுட்டும் பொருள் அமைதியைப் பண்பாட்டு வகையால் வகுத்த அருமை நினைந்து மகிழத் தக்கதாம். ஆண்பால் சொல் அடையாளம் என்ன? பெண்பால் சொல் அடையாளம் என்ன? “னஃகான் ஒற்றே ஆடூஉ அறிசொல்” “ளஃகான் ஒற்றே மகடூஉ அறிசொல்” என்கிறார் தொல்காப்பியர் (488, 489) இவ்வாறே பிறவும் தொடர்கிறார். நெடிய தொலைவில் இருந்து உருண்டுவரும் கல், தேய்வுறும்; தேய்ந்து தேய்ந்து சுருங்கி நிற்கும். அதுபோல் நெட்ட நெடுங்காலத்தின் முன் தோன்றிப் பெருக வழங்கும் சொற்கள் தேய்தல் இயற்கை. அவன், அவள்,அவர், அது, அவை என்பனவற்றின் இறுதி எழுத்து ஒன்றுமே நின்று அச்சொல்லமைதியைக் குறித்த வகை இது. வந்த+அவன் = வந்தவன்; எனத் தேய்தல் இல்லையா? மக்கள் வழக்கில் எப்படி வழங்கப்படுகிறதோ, அதனைத் தக்க வகையில் புலமையாளர் போற்றிக் கொண்ட முறை இன்னதாம். பால் திரிபு ‘அரவானி’ என்பார் உளர். அரவான் இறப்போடு தம்மைப் புனைந்து தாலியறுக்கும் சடங்காக நடத்தி வருகின்றனர். அது வரவரப் பெருக்கமும் ஆகின்றது. முழுதுறு ஆண்மையோ, முழுதுறு பெண்மையோ அமையாதவர் அவர். ஓர் எருமையின் கொம்பைப், “பேடிப் பெண் கொண்டு ஆடுகை கடுப்ப” என உவமை காட்டுகின்றது கலித்தொகை. போர்க்களம் புக விலக்கப்பட்டவராக இருந்தனர் அவர். ஆனால் களியாட்டத்தில் பங்கு கொண்டனர். பதினோராடல்களுள் ஒன்று பேடு. ஆண்மை இயல்பு மாறியவரையும் பெண்மை இயல்பு மாறியவரை யும் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். “ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி” என்கிறார். ஆண் தன்மை மாறிப் பெண் தன்மை மிக்கார் பேடியர் என்றும், பெண் தன்மை மாறி ஆண் தன்மை மிக்கார் அலியர் என்றும் கூறப் படுகின்றனர். இலக்கணம் கூறவந்த ஆசிரியர் பால்திரி தன்மையரை எப்பால் வகுப்பில் சேர்த்தல் வேண்டும் என்னும் ஐயம் பயில்வார்க்கு எழாவாறு, “இப்பால் படுத்திக் கூறுக” என இலக்கணம் வகுத்தார் என்க. செப்பும் வினாவும் “செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்” என்பதொரு கிளவியாக்க நூற்பா (496). ‘வினா விடை’ மலிந்த காலம் இது. வினாவுதலும் விடை தருதலும் வழக்கு. ஆனால், ஆசிரியர் தொல்காப்பியர் பார்வை ஆழமானது. வினாவுதற்கு உரிய பொருள் ஒன்று இல்லாமல் வினாவுதல் என்பது இல்லையே என எண்ணியவராய் விடை என்பதனைக் குறிக்கும் ‘செப்பு’ என்னும் சொல்லை முன்வைத்துச் “செப்பும் வினாவும்” என்றார். செப்பல் ஓசையமைந்த வெண்பா, வினாவுக்கும் விடைக்கும் பொருந்தி வரக் கண்ட புலமையர், அதனைப் போற்றி வளர்த்த இலக்கியப் பரப்பு பேரளவினதாம். வினா விடை வெண்பா, சேதுவேந்தர் அவையில் சிறக்க வளர்ந்தது. இரட்டையர், காளமேகர் முதலியோர் பாடியவை தனிப்பாடல் திரட்டில் இடம் பெற்றன. வினாவே விடை “படிப்பாயா” என வினாவுகிறார் ஒருவர். வினாவப் பட்டவர், “படியேனோ? (படிக்க மாட்டேனோ?)” என அவரும் வினாத் தொடுக் கிறார். இவ்வினாவும் விடையே என்பதை மக்கள் வாழ்வியல் வழக்குக் கண்டு உரைத்துள்ளார் தொல்காப்பியர் அது, “வினாவும் செப்பே வினாஎதிர் வரினே” என்பது (497). தகுதி சட்ட மன்றத்திலோ, நாடாளுமன்றிலோ பயன்படுத்தக் கூடாத சொல் என்று அவைக் குறிப்பில் இருந்து விலக்கக் கூறுதல் மக்களாட்சி நடைமுறை. இம்முறை பெரியவர் முன்பிலும், பெரு மக்கள் அவை முன்பிலும் பண்டே பயன்படுத்தப்பட்ட செம்முறை ஆகும். மாண்டார், இறந்தார், துஞ்சினார், செத்தார் என்பன வெல்லாம் ஒரு பொருள் தருவனவே எனினும், ‘செத்தார்’ என்பது மதிப்புக் குறைவாகக் கருதப்படுகின்றது. விடுக்கப்படுவது, ‘ஓலை’ என்றாலும் அது ‘திருமுகம்’ எனப் பட்டது. ‘விளக்கை அணை’ என்னாமல், ‘விளக்கை அமர்த்து’, ‘குளிரவை’ என்பவை மின் காலத்திலும் பின்பற்றல் உண்டு. இவற்றை அவையல்கிளவி, (இடக்கரடக்கு) என்றும், மங்கல வழக்கு என்றும் கூறப்பட்டன. “இதனை இவ்வாறு கூறுதலே தகுதி” எனச் சான்றோரால் வகுக்கப்பட்டது ’தகுதி வழக்கு’ என்பதாம் இதனைத், “தகுதியும் வழக்கும் தழீஇயின ஒழுகும் பகுதிக் கிளவி வரைநிலை இலவே” என்கிறார் (500). இனச் சுட்டு ஞாயிறு என்பதற்கும் செஞ்ஞாயிறு என்பதற்கும் வேறுபாடு உண்டா? உண்டு. ஞாயிறு என்பதைப் பொது வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் கொள்ளலாம். ஆனால், செஞ்ஞாயிறு என்பது பொது வழக்குச் சொல் அன்று; அது, செய்யுள் வழக்குச் சொல். ஏனெனில், இனச்சுட்டு இல்லாச் சொல் செஞ்ஞாயிறு என்பது கரு ஞாயிறு என ஒன்று இல்லையே; அதனால் ‘செந்தாமரை’ என்பது பொது வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் உண்டே எனின், அது இனச் சுட்டுடைய பண்பினது. வெண்டாமரை உள்ளதே! “இனச்சுட் டில்லாப் பண்புகொள் பெயர்க்கொடை வழக்கா றல்ல செய்யு ளாறே” என்பது நூற்பா (501). இயற்கை செயற்கை இயற்கைப் பொருளை இவ்வாறு கூறவேண்டும் செயற்கைப் பொருளை இவ்வாறு கூறவேண்டும் என்னும் நெறிமுறைகள் உண்டு. ‘மண்திணிந்த நிலம்’ என அதன்செறிவு கூறப்படும். மக்கள் வழக்கிலும் நிலம் வலிது; நீர் தண்ணிது எனப்படும். ஆனால் செயற்கைப் பொருளுக்குக் கூறும் முறை வேறானது. ‘பயிர் செழுமையானது’ எனஆக்கச் சொல் தந்து கூறுதல் வேண்டும். ஆக்கச் சொல்லொடு காரணம் கூறலும் வழக்கு. “நீர் விட்டு களைவெட்டி உரமிட்டு வளர்த்ததால் பயிர் செழுமை யானது” என ஆக்கம் காரணம் பெற்று வருதல் உண்டு. ஆக்கம் காரணம் அறிவிக்காமல் அறியத்தக்கது எனின், காரணம் இல்லாமலும் ஆக்கம் வரும். உழவர் முதலோர் வழக்குகளில் ஊன்றிய ஊன்றுதலே இவ்விலக்கண ஆட்சி முறையாம் (502 - 505). ஒருவர் அவர், பலர்பால் சொல், ஆனால் ஒருவரை அவர் எனச் சிறப்பு வகையால் கூறல் உண்டு. அம்முறை இலக்கண முறை ஆகாது; மக்கள் வழக்கு முறையாகும். வேந்தனே எனினும் அவனைப் பாடிய புலவரை அவன் என்னாது அவர் எனல் உரையாசிரியர் மரபு. அதனால் ‘அவனை அவர் பாடியது’ என்றே நெறியாக வழங்கினர். “கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது” என்று சிறப்பு வகையாலே பாடல் தொகுத்தவர்கள் போற்றி உரைத்தனர். ஆர் இறுதி வரும் பெயரோடு சாதிப் பெயர் ஒட்டுதல் இல்லை என்பதை உணர்வார் அதனைப் போற்றத் தவறார். ஆனால் செய்யுளில் ஒரு புலவரை ஒரு புலவர் “பரணன் பாடினன்”, “கபிலன் பாடிய மையணி நெடுவரை” என ஒருமைப் பெயராகவே குறித்தனர். இவை எண்ணிப் போற்றத்தக்கவையாம். தாய்ப்பசு வரும் என்பதை, “இன்னே வருகுவர் தாயர்” என்கிறது முல்லைப் பாட்டு. இஃது அஃறிணையை உயர்திணை ஆக்கிக் கூறியது ஆகும். இவ் விலக்கணத்தைத் தொல்காப்பியர் சுட்டியுள்ளார் (510). யாது எவன் யாது என்றோ எவன் என்றோ வினாவின் வினாவப் பட்ட பொருள் முன்னர் அறியப்படாத பொருளாக இருத்தல் வேண்டும் என்பது மரபு. வரையறை இடக்கண் வலிக்கிறது; வலக்கண் வலிக்கிறது எனத் தனித் தனியே கூறல் உண்டு. ஒரு கண் வலிக்கிறது எனலும் வழக்கே. இரண்டு கண்களும் வலித்தால், இரண்டு கண்கள் வலிக்கின்றன எனல் மரபு ஆகாது. இரண்டு கண்களும் வலிக்கின்றன” என்பதே மரபு. ஏனெனின், கண்கள் இரண்டே ஆதலால் உம்மை இட்டுச் சொல்லல் வேண்டும். இவ்வளவே என வரம்புடையவற்றை உம்மையிட்டுக் கூறாமை பிழையாகும். ‘முத்தமிழ் வல்லார்’ என்னாமல் ‘முத்தமிழும் வல்லார்’ எனலே முறை. ஏனெனின் தமிழ் மூன்றே ஆகலின். இதனை, “இனைத்தென அறிந்த சினைமுதல் கிளவிக்கு வினைப்படு தொகையின் உம்மைவேண்டும்” என்கிறார் (516). எங்குமே இல்லாத பொருளைச் சொன்னாலும் அவ்வாறு உம்மை தந்தே சொல்ல வேண்டும் (517). எ-டு: “எந்த முயலுக்கும் கொம்பு இல்லை” அல்லது இல்லது துவரம் பயறு உள்ளதா என்று ஒரு வணிகரிடம் வினாவினால் உள்ளது எனின் உள்ளது என்பார். இல்லை எனின் இல்லை என்று கூறார். ஆனால், துவரம் பயறு போன்ற ஒரு பயறு வகையைச் சுட்டிக் கூறுவார். பாசிப்பயறு உள்ளது; மொச்சைப் பயறு உள்ளது என்பார். ‘இல்லை’ என்று சொல்லுதல் தம் வணிக மரபுக்கு ஆகாது என அவர் கொண்டுரைக்கும் உரை வழக்கு இன்றும் நடைமுறையில் காண்பதேயாம். இதனை, “எப்பொருள் ஆயினும் அல்லது இல்எனின் அப்பொருள் அல்லாப் பிறிதுபொருள் கூறல்” என்கிறார் தொல்காப்பியர் (618). இன்னும், ‘இருந்ததுதான்;’ ‘நாளை வரும்’ என்பதும் இவ்வழிப்பட் டதே. இல்லை என்பது இல்லை என்னும் மக்கள் வழக்கைச் சுட்டுவது இது. பெயர்; சுட்டு ஒளவையார் வந்தார்; அவர், அரண்மனையை அடைந்தார். இதில் ஒளவையார் என்பது இயற் பெயர். அவர், சுட்டுப்பெயர். இயற்பெயரைச் சொல்லிய பின்னரே சுட்டுப் பெயரைச் சொல்லுதல் வழக்கம். ஆனால், செய்யுளில் சுட்டுப் பெயரை முதற்கண் சொல்லிப் பிற்பட இயற்பெயர் கூறலும் உண்டு. பெயர்களுள் சிறப்புப் பெயர், இயற்பெயர் என இரண்டும் வருவதாயின் சிறப்புப் பெயரை முற்படக் கூறி, இயற்பெயரைப் பிற்படக் கூறவேண்டும் என்பதும் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையாகும். எ-டு: ‘தெய்வப் புலவர் திருவள்ளுவர்’ சிறப்புப் பெயரைப் பின்னே வைத்து, இயற்பெயரை முற்பட வைத்தல் ஆகாது என்பதை வலியுறுத்தவே இதனைக் கூறினாராம் (524). ஒரு சொல் பலபொருள் கால் என்பது பல பொருள் ஒரு சொல். உறுப்பு, சக்கரம், காற்று, கால்பங்கு, கால்வாய் முதலாய பலபொருள்களை யுடையது. இவ்வொரு சொல், இப் பல பொருளுக்கு இடமாகி வருதலை அறிய வகை என்ன? கால், கை, தலை என்னும் இடத்து உறுப்பு என்றும், ‘கால் பார் கோத்து’ என்னும் இடத்துச் சக்கரம் என்றும், புனல் அனல் கால் என எண்ணுமிடத்துக் காற்று என்றும், ஒன்றே கால் என்றும் இடத்துக் கால் பங்கு என்றும், கண்வாய் கால்வாய் என்னும் போது நீர் வருகால் என்றும் அறிய முடிகின்றது. இவ்வாறு அறியும் முறையை ஆசிரியர் கிளவியாக்கத்தில் சுட்டுகிறார். பொருள் மயக்கம் உண்டாகா வகையில் பொருள் காண வழிகாட்டுகிறார். “அவற்றுள், வினைவேறு படூஉம் பலபொருள் ஒருசொல் வேறுபடு வினையினும் இனத்தினும் சார்பினும் நேரத் தோன்றும் பொருள்தெரி நிலையே” என்பது அது (535). வேற்றுமை தொல்காப்பியர்க்கு முன்னர் வேற்றுமை ஏழாக எண்ணப் பட்டுள்ளது. முதல் வேற்றுமையாகிய எழுவாய் வேற்றுமை விளியாகும் நிலையையும் முதல் வேற்றுமையின் திரிபாகவே கொண்டு அதனைத் தனித்து எண்ணாமல் இருந்துளர். ஆனால் தொல்காப்பியர், “வேற்றுமை தாமே ஏழென மொழிப” என்று கூறி, “விளிகொள் வதன்கண் விளியோடு எட்டே” எனத் தனித்து எண்ணியுள்ளார் என்பது அவர்தம் நூற்பாக்களின் அமைதியால் விளக்கம் ஆகின்றது. வேற்றுமை எட்டு என எண்ணப்பட்ட வகை அது. பெயர், விளி வேற்றுமையை ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு என எண்ணாமல், “அவைதாம், பெயர் ஐ ஒடு கு இல் அது கண் விளி என்னும் ஈற்ற” என எண்ணியுள்ளார். ஐ என்றால் இரண்டாம் வேற்றுமை என்றும்... கு என்றால் நான்காம் வேற்றுமைஎன்றும்... கண் என்றால் ஏழாம் வேற்றுமை என்றும்... அறியச் செய்துள்ளார். ஒன்று இரண்டு என எண்ணிக்கையால் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உண்டு எனினும் பெயர், ஐ, ஒடு என உருபுகளைக் கொண்டு எண்ணும் வகையால் சிக்கல் ஏற்பட வாய்ப்பு இல்லை. ஏனெனில் பொருள் வேறுபடுத்தும் சொல்லே பெயராகி விடுகின்றதே. ஆதலால் இந்நெறி மேற்கொண்டனர் நம்முன்னோர். ஐ என்னும் உருபு வெளிப்பட்டோ மறைந்தோ வரக் கண்டதும் அதன் பொருள் புலப்பட்டு விடும். ஆதலால் உருபையும் அவ்வுருபு வழியாக ஏற்படும் பொருளையும் தெளிவாக அறிந்துகொள்ள வேற்றுமை உருபு-பொருள்களைப் படைத்துளர். முருகன் என்னும் பெயர் எழுவாய் நிலையில் நின்று உருபுகளை ஒட்டும்போது முருகனை, முருகனால், முருகனுக்கு, முருகனின், முருகனது, முருகன்கண், முருகா என வேறுபடுகின்றது. உருபு மாற மாறப் பொருளும் மாறுபடுதலால் வேற்றுமை என்றனர். “முருகன் வாழ்த்தினான்” “முருகனை வாழ்த்தினான்” என்பவற்றில் வாழ்த்தியவனும் வாழ்த்துப் பெற்றவனும் வேற்றுமையாகிவிட வில்லையா! இவ் வேறுபாட்டை உருபு ஆக்குதலால் வேற்றுமை உருபு எனப்பட்டது. உருபு என்பது வடிவம் அடையாளம். அரசுத்தாள் என்பதன் அடையாளம் உருபா. வினை, பண்பு, உவமை, உம்மை இன்னவற்றின் அடையாளச் சொற்களையும் உருபு என்றது இதனால்தான். மரம் நட்டினான்; மரத்தை நட்டினான் மரம் வெட்டினான் ; மரத்தை வெட்டினான் ஊரை அடைந்தான். ஊரை நீங்கினான் ‘காளையைப் போன்றான்’ இப்படியெல்லாம் வருவனகொண்டு இன்ன உருபு இன்ன பொருளில் வரும் எனக் கண்டு அம்மரபு போற்றுமாறு காத்தனர். ஆயினும் சில உருபு மயக்கங்களும் உண்டாயின. சிலவற்றை ஏற்கவும் சிலவற்றை மறுக்கவும் ஆயின. என் வீடு என்பது, எனதுவீடு என ஆறாம் வேற்றுமை யாகும். என் மகள் என்று வரும்போது எனது மகன் எனக் கூடாது. ஏன்? வீடு உடைமைப் பொருள். மகள் உடைமைப் பொருள் அன்று. உறவுப் பெயர்; உரிமைப்பெயர். எனக்கு மகள் என உறவுரிமை தருதலே முறையாகும் (578). இந்நாளில் அடிக்கப் படும் திருமண அழைப்பிதழ்களில் பல இவ்வேறுபாடு அறியாமல் அடிக்கப்படுவதைக் காணலாம். எவ்வளவோ நுண்ணிய அறிவால் கண்டு வைத்த கட்டுக் கோப்பான நம் மொழி அக்கறை இல்லாத மக்களால் அழிக்கப்படுவதற்கு இஃதொரு சான்றாம். உருவாக்கிக் காத்த உயர்ந்த அறிவாளர் வைத்துள்ள மொழிச் சுரங்கம் இலக்கணம் என்னும் உணர்வு மக்களுக்கு ஏற்பட்டால் இத்தகு குறைகள் ஏற்படா. வேற்றுமை வரிசை சொற்கள் பெயர் வினை இடை உரி என நான்காக எண்ணப்படினும் பெயர், வினை என்னும் இரண்டனுள் அடங்கும். அப்பெயரே முதல் வேற்றுமை; அப்பெயராகிய எழுவாய் வினைபுரிதல் விளக்கமே வாழ்வியலாகும். அவற்றை முறையே வைப்பு முறையால் வைத்த அருமையது இரண்டாம் வேற்றுமை முதலியனவாம். இவ்வருமையை முதற்கண் கண்டுரைத்தவர் உரையாசிரியர் தெய்வச்சிலையார். அவர் கூறுமாறு: “யாதானும் ஒருதொழிலும், செய்வான் உள்வழி யல்லது நிகழாமையின் அது செய்து முடிக்கும் கருத்தா முன் வைக்கப்பட்டான். அவன் ஒரு பொருளைச் செய்து முடிக்குங்கால் செய்யத் தகுவது இதுவெனக் குறிக்க வேண்டுதலின் செயப்படு பொருள் இரண்டாவது ஆயிற்று. அவ்வாறு அப்பொருளைச் செய்து முடிக்குங்கால் அதற்கு ஆம் கருவி தேடுதலின் அக்கருவி மூன்றாவதாயிற்று. அவ்வாறு செய்து முடித்த பொருளைத்தான் பயன்கோடலே அன்றிப் பிறர்க்கும் கொடுக்கும்ஆதலின் அதனை ஏற்றுநிற்பது நான்காவது ஆயிற்று. அவ்வாறு கொடுப்புழி அவன் கையினின்றும் அப்பொருள் நீங்கி நிற்பது ஐந்தாவதுஆயிற்று. அவ்வாறு நீங்கிய பொருளைத் தனது என்று கிழமை செய்தலின் அக்கிழமை ஆறாவது ஆயிற்று. ஈண்டுக் கூறப்பட்ட எல்லாவற்றிற்கும் இடமும் காலமும் பொதுவாகி நிற்றலின் அவை ஏழாவது ஆயின.” மணிமாலை போல வேற்றுமையமைவு விளக்கம் சிறத்தல் எண்ணி மகிழத் தக்கதாம். நூலாசிரியர் கண் கொண்டு உரையாசிரியர் நோக்கி யுரைக்கும் இன்னவை நூற்பெருமையை மேலும் பெருமை செய்வதாம். ஒடு “ஊராட்சித்தலைவரொடு உறுப்பினர்கள் கூடினர்” இது செய்தித் தாளில் வரும் செய்தி. உறுப்பினர்கள் பலர்; தலைவரோ ஒருவர். ஆயினும் தலைவரோடு என அவர்க்கு முதன்மை கொடுப்பது ஏன்? “ஒருவினை ஒடுச்சொல் உயர்பின் வழித்தே” என்பது தொல்காப்பிய நாள் தொட்ட நடைமுறை வழக்கம் (575). விளி மரபு அம்மை அன்னை தந்தை தங்கை அக்கை தம்பி முதலான முறைப்பெயர்கள் விளிக்கப்படும் பெயர்களாக வழக்கில் மாறாமல் உள்ளன. விளித்தல் அழைத்தல், கூப்பிடுதல். அம்மா, அம்மே, அம்மோ என்றெல்லாம் வழங்குதல் பழமையும், ‘அம்ம’ என்று அண்மை விளியாம் பழமையும் இவ்வியலால் நன்கு அறியப்படும். “அண்மைச் சொல்லே இயற்கையாகும்” என்றும் விளியேலாமை குறிப்பார் (612). இம் மரபு தமக்கு முற்றொட்டே வரும் வகையை உணர்த்துமாறே ‘விளிமரபு’ என்று பெயரிட்டு வழங்கினார் என்பதும் அறியத்தக்கது. கோமான், பெருமாள் என்பன ஈற்றயல் நெடிலாகியவை. இவை விளியாம்போது இயற்கையாய் அமையும் என்கிறார். பெருமானே, பெருமாளே, கோமானே எனவருதல் இருவகை வழக்கிலும் உண்டு. “உளவெனப் பட்ட எல்லாப் பெயரும் அளபிறந் தனவே விளிக்கும் காலைச் சேய்மையின் இசைக்கும் வழக்கத் தான” என விளியை விரிவாக்கிப் போற்றுகிறார் (637). குழந்தை தொட்டுப் பெருமுதுமை வரை மக்கள் வாழ்வில் மட்டுமா? இறையடியாரும் “அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே” என்று விளிக்கும் விளிமரபு மாறாமரபு அல்லவா! சொல்லும் பொருளும். பெயர் வினை இடை உரி என முறையே சொற்களை எண்ணும் ஆசிரியர் அவற்றின் இலக்கண அடிமூலம் கூறுவாராய், “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்கிறார். தமிழ்ச் சொற்களில் இடுகுறி என்பதொரு சொல் இல்லை என்பதைச் சொல்லி எல்லாச் சொற்களும் பொருள்புணர்ந்தனவே என உறுதி மொழிகிறார் (640). பெயர், வினை சொற்கள் இரண்டே என்பாராய், “சொல்எனப் படுப பெயரே வினைஎன்று ஆயிரண் டென்ப அறிந்திசி னோரே” என்பது (643) குடிக்கணக்கு எடுப்பார் தலைக் கட்டு எண்ணுவது போன்றதாம். தலைக்கட்டு வரி ஊர்ப்பொதுப் பணிக்கு ஊரவர் மதிப்பிட்டுப் பெறும் தொகையாகும். ஆள் எண்ணிக்கையில் இருந்து வரிதண்டலுக்கு விலக்கப்பட்ட முறை போல்வது அது. பொருளை உணர்த்துவது பெயர். பொருளின் பெயர்ச்சி (புடை பெயர்தல்) வினை. என இரண்டன் பொருந்துதலும் நோக்கத் தக்கது. இடைச் சொல்லும் உரிச் சொல்லும் சொல்லென ஆகாவோ எனின், “இடைச்சொல் கிளவியும் உரிச்சொல் கிளவியும் அவற்றுவழி மருங்கில் தோன்றும் என்ப” என்பார் (644). பெண்மகன் ஆண், பெண், பிள்ளை எனவும்; ஆண்பிள்ளை, பெண் பிள்ளை எனவும்; வழங்கல் உண்டு. ஆண்மகன்; பெண்மகள் என்பனவும் வழங்குவனவே. பெருமகள் பெருமாள் ஆகும்; பெருமகன் பெருமான் ஆவது போல. ‘பெண் பெருமாள்’ என்பார் வரலாற்றில் இடம் பெற்றுளார். தொல்காப்பியர், “பெண்மை அடுத்த மகன் என் கிளவி” என்பதைக் குறிக்கிறார். அதனால், ‘பெண்மகன்’ என வழங்கப் பெற்றமை அறியவரும். உரையாசிரியர் சேனாவரையர், “புறத்துப் போய் விளையாடும் பேதைப் பருவத்துப் பெண் மகளை மாறோக்கத் தார் இக்காலத்துப் பெண்மகன் என்று வழங்குப” என்கிறார். கல்வி அறிவாற்றலால் தக்கோர் அவையில் முந்தி யிருக்கச் செய்யும் கடமை யமைந்த பெற்றோரை நோக்க, மகற் காற்றல் என்பது இருபாலையும் தழுவியபேறும் உண்டெனக் கொள்ளத் தகும். இனி இந்நாளிலும் பெண்மகவை ‘வாடா’ ‘போடா’ என்பதும், ஆண்பெயராக்கி அழைப்பதுடன் ஆணுடையுடுத்து மகிழ்தலும் காணக் கூடியனவேயாம். குறிப்பாகப் பெண்பிள்ளை இல்லார் அவ்வாறு செல்வமாகப் போற்றி மகிழ்தல் அறியலாம். தொல்காப்பியர் நாளை எச்சமாக அதனை எண்ணலாம். பெயர்வகை உயர்திணைப் பெயர் அஃறிணைப் பெயர் என விரிவாகப் பட்டிய லிட்டுக் காட்டும் ஆசிரியர் நூற்பாக்களொடு சங்கத்தார் பெயர்களை ஒப்பிட்டு ஆய்ந்தால் மொழித் தூய்மை பேணும்வழி தானே புலப்படும். நிலப் பெயர், குடிப் பெயர், குழுவின்பெயர், வினைப் பெயர், உடைப்பெயர், பண்பு கொள் பெயர், முறைநிலைப் பெயர், சினை நிலைப் பெயர், திணை நிலைப் பெயர், ஆடியற்பெயர், எண்ணியற் பெயர் என்னும் இவை இடைக்கால பிற்கால வேந்தர் முதலோரால் கொண்டு போற்றப் படாமையால் இந்நாளில் முறை நிலைப் பெயர் (அம்மா, அப்பா, அண்ணா, அக்கை) தாமும் ஒழிந்துபடும் நிலைமை எண்ணத் தகும். சிறுநுண் நச்சுயிரியினால் பேருயிரியாம் மாந்தர் அழிந்து படுதல் ஆகாது என அறிவியலாளரும் அரசியலாளரும் எடுக்கும் நலத்துறை அக்கறையில் ஒரு சிறிதளவு தானும் மொழித்துறை, பண்பாட்டுத் துறையில் கருத்துச் செலுத்த வில்லையே என்னும் ஏக்கம் உண்டாக்கு வது தொல்காப்பியர் சுட்டிக் காட்டும் பெயர் வகைகள் ஆகும் (647-650). அவர்கள் அவன் அவள் அவர் அது அவை என்பன ஐம்பாற் பெயர்கள். இந்நாளில் ‘அவர்கள்’ எனப் பலர்பால் வழங்கப்படுகிறது. ‘ஆசிரியர் அவர்கள்’ எனச் சிறப்பொருமைப் பெயராகவும் வழங்கப்படுகிறது. ‘கள்’ என்பது அஃறிணைப் பன்மைப் பெயர் ஈறு. அது மக்கட் பெயரொடு ஆண்கள் பெண்கள் அவர்கள் என வருதல் ஆகாது. ஆடுகள் மாடுகள் மலைகள் எனவரும் என்பது பழைய மரபு. “கள்ளொடு சிவணும் அவ்வியற் பெயரே கொள்வழி யுடைய பல அறி சொற்கே” என்பது தொல்காப்பியம் (654). பலவின் பாலுக்குரிய ‘கள்’ பலர்பாலுக்கும் வருதல் சங்கத்தார் காலத்திலேயே தோற்றமுற்று வரவரப் பெருக்கமாகி விட்டது. அவர்கள் எனக் கள்ளீறு இல்லாமல் ஒருவரைச் சொன்னால் அவர் பார்வையே வேறாகிப் ‘பண்போடு பேசத் தெரியவில்லை’ எனப் பழிப்புக்கும் ஆளாகிவிடுதல் இந்நாளில் கண்கூடு. தாம், தான் தாம் என்பது பன்மைக்குரிய சொல் (669). எ-டு: அவர்தாம் கூறினார்; அவர் தம்முடைய பணிக்குச் சென்றார். தான் என்பது ஒருமைக்குரிய சொல் (670). எ-டு: அவன்தான் கூறினான்; அவன் தன்னுடைய பணிக்குச் சென்றான். எல்லாம் என்பது பன்மைச் சொல் (671). எ-டு: அவர் எல்லாம்; அவை எல்லாம். இப்படித் தெளிவாகத் தொல்காப்பியம் கூறியும் இந்நாளை இதழாசிரியர் நூலாசிரியர் தாமும் கண்டு கொள்வதில்லை. அவர் தன்னுடைய வேலையுண்டு தானுண்டு என்றிருப்பார் - என அச்சிட்ட செய்தி படிப்பார் அப்பிழையைக் கற்றுக் கொண்டு பரப்பாளரும் ஆகிவிடுகிறாரே! வினை வினை என்பதன் இலக்கணம் ‘காலத்தொடு தோன்றும்’ என்பது. அது ‘வேற்றுமை கொள்ளாது’ என்பதும் அதன் இலக்கண மே. இதனைச் சொல்லியே வினையியலைத் தொடங்குகிறார். மெய்யியல் வல்லாராகிய அவர், செயல் வழியாம் வினையைச் சொல்வதை அன்றித் ‘தலைவிதி’ என்னும் பொருளில் ஆளவில்லை. 49 நூற்பாக்கள் அதற்கென வகுத்தும் அவ்வாறு ஆளாமை தாம் கூற எடுத்துக் கொண்ட பொருளமைதியை விடுத்து வேறு வகையில் செல்லார் என்பது நாட்டும். ‘செய்வினை’ செய்தல்; அதனை நீக்க ‘வினைக் கழிவு’ செய்தல் அறிவியல் பெருகிவருவது போலப் பெருகி வருதலை நினைக்க ஏதோ மூளைச் சலவைக்கு ஆட்பட்ட மக்கள் போலத் தோன்றுதல்தானே உண்மை. விரைவு வாரான் ஒருவனும் வருவான் ஒருவனும் விரைவுக் குறிப்பில் வந்தேன் வந்தேன் எனல் உண்டே! உண்ணப் போவான் ஒருவன் உண்டேன் எனலும் உண்டே! இது குற்ற மல்லவோ எனின், “வாராக் காலத்தும் நிகழும் காலத்தும் ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் விரைந்த பொருள என்மனார் புலவர்” என அமைதி காட்டுகிறார் ஆசிரியர் (726). நிகழ் காலம் மலை நிற்கும் எனவும், கதிர் இயங்கும் எனவும் வழங்குகிறோம். மலை நின்றதும், நிற்கின்றதும், நிற்பதும் ஆகிய முக்காலத்திற்கும் உரியதாக இருந்தும் நிகழும் காலத்துச் சொல்லுதல் வழு இல்லையா? கதிர் இயங்கியது; இயங்குகிறது; இயங்கும்; இவ்வாறு இருந்தும், நிகழ்காலத்தில் சொல்லுதல் வழுத்தானே! ஆசிரியர் தெளிவிக்கிறார்: “முந்நிலைக் காலமும் தோன்றும் இயற்கை எம்முறைச் சொல்லும் நிகழும் காலத்து மெய்ந்நிலைப் பொதுச்சொல் கிளத்தல் வேண்டும்” என்பது அவர்காட்டும் அமைதி (725). முக்காலத்திற்கும் ஒத்தியலும் அவற்றைச் ‘செய்யும்’ என்னும் வாய்பாட்டால் சொல்ல வேண்டும் என வழிகாட்டுகிறார். தெளிவு இச் சுழலுள் போவான் செத்தான் எனின் வழுவாகும் அல்லவோ! அப்படிச் சொல்லுதல் வழக்கில் உண்டே எனின், நிகழப் போவதை உறுதியாகக் கொண்டு நிகழ்ந்ததாகக் கூறியது அது என்கிறார். “வாராக் காலத்து வினைச்சொற் கிளவி இறப்பினும் நிகழ்வினும் சிறப்பத் தோன்றும் இயற்கையும் தெளிவும் கிளக்கும் காலை” என்பது நூற்பா (730). இடைச் சொல் ‘நான்’ என்பது தன்மைப் பெயர். ‘நீ’ என்பது முன்னிலைப் பெயர். ‘நான் நீ’ என்று நின்றால் பொருள் விளக்கம் பெறுவது இல்லை. “நானும் நீயும்” என்னும் போது பொருள் விளக்கம் பெற வாய்க்கின்றது; ‘செல்வோம்’ எனச் சேர்த்தால் பொருள் முடிபு கிட்டுகின்றது. சொற்கள் பெயர், வினை எனப் பகுக்கப் பட்டாலும், இத்தகு (உம்) இணைப்புகளும் வேண்டியுள. இவ்விணைப்புச் சொற்களே இடைச் சொற்கள் எனப்படுகின்றன. இடைச் சொல் என்பதால் சொல்லுக்கு இடையே மட்டும் வரும் சொல் என்பதாகாது. சொல்லுக்கு முன்னும் பின்னும் இடையும் வேண்டும் இடத்தால் வருவது இடைச் சொல் எனப்பட்டது என்க. “இடைச் சொல் தான் சார்ந்த பெயரின் பொருளையும் வினையின் பொருளையும் தழுவி நிற்றல் அன்றித் தனித்து நடக்கும் தன்மையது அன்று” என்று ஆசிரியர் கூறுகிறார் (734). எலும்புகளை இணைக்கவும் இயங்க வைக்கவும் இணைப்பு மூட்டுகள் உடலில் இடம் பெற்றிருப்பன போலச் சொற்பொருள் விளக்கத் திற்கு இடைச்சொற்கள் உதவுகின்றன எனல் தகும். “யான் அரசன்; யான் கள்வன்” இடைச் சொல் பெறா நிலையில் இத் தொடர்கள் தரும் பொருளுக்கும், “யானோ அரசன்; யானே கள்வன்” என இடைச் சொல் இணைதலால் வரும் தொடர்கள் தரும் பொருளுக்கும் உள்ள வேறுபாடு பளிச்சிட்டுத் தோன்றவில்லையா? இடைச் சொற்கள் சொல்லுறுப்புகளே எனினும் சொல்லுக்கும் பொருளுக்கும்; தொடர்புப் பாலமாக இருப்பவை அவையே. இனி, இடைச் சொல் தானும் பொருளின்றி வாரா என்பதன் விளக்கமே, “கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவியென்று அம்மூன் றென்ப மன்னைச் சொல்லே” என வருவது முதலான நூற்பாக்கள். உரிச்சொல் இயற்றப்படும் செய்யுள் சுவையும் தெளிவும் உறுதியும் அழகும் கொண்டு விளங்குமாறு இதற்கு இதுவே உரிய சொல் எனத் தேர்ந்து வைக்கப்படும் சொல் உரிச் சொல்லாகும். பெயர் வினை இடை என்னும் முச்சொற்களைக் கொண்டே எடுத்த பொருளைக் கூறிவிட முடியும். ஆனால் உரிச் சொல் தரும் சுவை முதலிய நலங்கள் ஏற்பட்டு ஆழ்ந்து எண்ணவும் மீள மீளக் கற்கவும் வாய்க்காமல் அமையும். அவையறிந்து பேசுவார் தம்மைச், சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர், சொல்லின் நடையறிந்த நன்மையவர், சொல்லின் வகை யறிவார் (711 - 713) என்று வள்ளுவர் தொகுத்துக் கூறும் இலக்கணம் அமைந்த சொல் உரிச் சொல் ஆகும். உரிச்சொல் உணர்வில் நின்று சுவை யாக்குதல், உரிப்பொருள் ஒப்பது எனப் பெயரீடு கொண்டு உணரலாம். நிகண்டு படைப்பாளி கொண்ட பொருள் நயம் படிப்பாளியும் கொள்ளல் வேண்டும் எனின் புரிதல் வேண்டும். காட்சிப் பொருள் போலக் குருத்துப் பொருளை அறிதலின் அருமை நோக்கியே உரிச்சொல் விளக்கமாக நிகண்டு நூல்கள் தோற்றமுற்றன. அந்நிகண்டு நூல்களில் ஒன்றன் பெயர் உரிச்சொல் நிகண்டு என்பது. வழக்காற்றில் நிகழ்கின்றவற்றைக் கொண்டு திரட்டி வைக்கப்பட்ட சொல்லடைவே நிகண்டு என்னும் பொருட் (காரணப்) பெயராகும். உரிச்சொல் இயல் இத்தகு செய்யுட் சொல்லைப் பொருள் உணர்ந்து ஓதிச் சுவைக்கும் வகையில் வழிகாட்டியவர் தொல்காப்பியர். அவர் வகுத்த உரிச் சொல் இயல் அதன் விளக்கமாகும். வேண்டும் வேண்டும் சொல்களை உருவாக்கிக் கொள்ள அடிச் சொல்லாகத் திகழும் அருமை உரிச் சொல்லுக்கு உண்டு. தொல்காப்பியர், ‘உறு தவ நனி’ என்னும் உரிச் சொற்களைக் கூறி, மூன்று என்னும் எண் தந்து, மிகுதி என்னும் பொருள் தருவன அவை என்கிறார். “சால உறு தவ நனி கூர் கழிமிகல்” (நன். 455) என ஆறு எண்ணுகிறார் நன்னூலார். உரிச் சொற்கள் எல்லாவற்றையும் எடுத்து ஓத வேண்டுவது இல்லை; அவற்றுள் பொருள் வெளிப்பாடு உடைய சொல் பொருள் வெளிப் பாடு அரிய சொல் என்பவற்றுள் பின்னதையே கூறினேம் என்கிறார். அவ்வாறானால் வெளிப்பட வாராச் சொல்லென அவர் எண்ணுவன வற்றையே கூறுகிறார் என்பது தெளிவாகும். மிகுதி மிகுதிப் பொருள் தரும் உறு என்னும் உரிச்சொல் ‘உறுபசி’ என வள்ளுவத்தில் ஆளப்படுகிறது; ‘உறுதுயர்’ என்பதும் அது. உறு என்பது உறுதல், உறுதி, உற்றார், உறவு, உறக்கம், உறிஞ்சுதல் உறுவலி முதலிய சொல்லாக்க அடிச் சொல்லாக அமைந்திருத்தலும் நெருக்கம் கட்டொழுங்கு மிகுதி என்னும் பொருள்களைச் சார்ந்தே நடை யிடுதலும் அறியத் தக்கதாம். மிகுதிப் பொருள் தரும் ‘தவ’ என்பது, தவப்பிஞ்சு தவச் சிறிது என மக்கள் வழக்கிலும் இடம் பெற்றுள்ளது. இது, தவம், தவசம், தவசி, தவசு எனச் சொல்லாக்கம் பெற்று வழங்குதலும் காணலாம். நல், நன், நன்று, நனவு, நனி, நனை என்பன வாழ்வியல் வளச் சொற்களேயாம். மழ, குழ மழலை, மதலை, குழந்தை, குதலை என்னும் சொற்களை எண்ணிய அளவில் இளமை மின்னலிடல் எவர்க்கும் இயற்கை. தொல்காப்பியர், “மழவும் குழவும் இளமைப் பொருள” என்கிறார். உள்ளங்கள் ஒன்றிப் போகிய வகையால் உண்டாகிய பொருள் அல்லவோ இது. அலமரல் அலமரல் என்பது தொல்காப்பியர் நாளில் வெளிப்படப் பொருள் வாராச் சொல்லாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இந்நாளில் ‘அல மருதல்’ மக்கள் வழக்குச் சொல்லாகி விட்டது. அலமருதல் சுழற்சிப் பொருளிலேயே வழங்குகின்றது. தெருமரல் என்பதும் அப்பொருளதே. சீர்த்தி சீர் சீர்மை சீர்த்தி சீரை என்பன வெல்லாம் இலக்கிய வழக்கில் உள்ளவை. முன்னிரண்டு சொற்களும் மக்கள் வழக்கிலும் உள்ளவை. சீர்த்தி என்ன ஆயது? ‘கீர்த்தி’ ஆகிவிட்டது. வேற்றுச் சொல் எனவும் கொள்ளப் பட்டது. சீரை ‘சீலை’யாகிவிட்டது. சீரை என்னும் துலைக்கோல் பொருள் இலக்கிய அளவில் நின்று விட்டது. குரு ‘குரு’ என்பது ஒளி என்னும் பொருள் தரும் உரிச்சொல். உள்ளொளி பெருக்குவான் ‘குரு’. குருந்து, குருந்தம், குருமணி, குருதி என்பன ஒளிப்பொருள் - நிறப் பொருள் - தருவன. குருத்து என்பது மக்கள் வழக்குச் சொல். ஒளியுடன் வெளிப்படுவது அது. குருத்தோலையும் குருத்திலையும் மிக வெளிறித் தோன்றுதல் ‘குரு’ வின் பொருள் காட்டுவன. குருந்தத்துக் குருமணி நினைவில் எழலாமே! அதிர்வு “அதிர்வும் விதிர்வும் நடுக்கம் செய்யும்” என்பது அப்படியே நடையில் வழங்கும் உரிச்சொற்களாக உள்ளனவே. “அதிர்ந்து போனார்” “விதிர் விதிர்த்துப் போனேன்” வழக்கிலும், செய்தித் தாள்களிலும் இடம் பெறும் சொற்கள் தாமே இவை. தொல்காப்பியர் நாளில் அருஞ் சொற்களாக இருந்ததால்தானே விளக்கம் தந்தார். கம்பலை கண்ணீரும் கம்பலையும் என்பதோர் இணைமொழி. கண்ணீர் விட்டு அழுவதே அது. அழுகையால் உண்டாகும் ஒலி கம்பலை. “கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்றிவை நான்கும் அரவப் பொருள” என்கிறார் தொல்காப்பியர். அரவம் - ஒலி; நீ இருக்கும் அரவமே இல்லையே என்பது வழக்கில் உள்ளது. பாம்புக்கு அரவம் எனப் பெயர் வந்தமை இதனால் அறியலாம். ‘கமலை’ கம்பலை என்பதன் தொகுப்பே. அழுங்கல் அழுகையால் அறியலாம். கலித்தல் துள்ளல்; அலை ஒலியால் கலித்தல் விளங்கும். ‘சும்’ என்பது மூச்சின் ஒலிக்குறிப்பு. புலம்பு ஆற்றுவார் இல்லாமல் புலம்புதல் உண்டு. தானே பேசுதலை ‘ஏன் புலம்புகிறாய்?’ என்பதும் வழக்கே. “புலம்பே தனிமை” என்பது தொல்காப்பியம். புலம்பல் உரிப்பொருளுக்கு உரிய நெய்தல் நிலப் பெயர் ‘புலம்பு’ எனப்படும். அதன் தலைவன் புலம்பன்! வெம்மை கோடைக் காலத்தில் தமிழகத்து வாழும் வளமைமிக்கார் கோடைக் கானைலை நாடி உறைவர். கோடைமலை சங்கச் சான்றோர் பாடு புகழ் பெற்றது. கோடைக்கு அதனை நாடும் இக் காலநிலைபோல், தொல்காப்பியர் காலத்தே வெப்பத்தைத் தேடி உறையும் குளுமை மிக்க நிலையும் இருந்திருக்கும் போலும் அதனால், “வெம்மை வேண்டல்” என ஓர் உரிச் சொல்லையும் பொருளையும் சுட்டுகிறார். நாம் நம் அன்பர்களைக் குளுமையாக வரவேற்க; குளிர்நாட்டார் ‘வெம்மையாக வரவேற்றல்’ காண்கிறோமே! பேம், நாம் குழந்தைகள் அழுமானால் அச்சம் காட்டி அடக்குதல் இன்றும் சிற்றூர் வழக்கம். அவ்வச்சக் குறிப்பு ‘பே பே’ என ஒலி எழுப்புதலும் தொண்டையைத் தட்டுதலும் ஆகும். ‘பே’ (பேம்) என்னும் குறிப்பு அச்சப் பொருள் தருதல் தொல் காப்பியர் நாளிலேயும் இருந்தது. ‘பேய்’ என்பதன் மூலம் இப் பேம் ஆகும். ‘ஓர் ஆளும் கருப்புடையும் பேய்’ என்பார் பாவேந்தர். ‘நா’ (நாம்) என்பதும் அச்சப் பொருள் தருதல் ‘நாமநீர்’ என்னும் கடலலைப்பால் புலப்படும். நாயும் அச்சப் பொருளாதல் அறிந்தது. உரும் உரும் அச்சமாதல் விலங்குகள் உருமுதலால் விளங்கும். உரும் இடியும் ஆகும். உரும் வழியே உண்டாகிய ‘உருமி’க் கொட்டு, கேட்ட அளவால் அசைப்பது தெளிவு. இவற்றைத் தொகுத்து “பேம் நாம் உரும் என வரூஉம் கிளவி ஆமுறை மூன்றும் அச்சப் பொருள” என்றார். ‘உரு’ என்பதை மட்டும் தனியே எடுத்து “உரு உட்கு (அச்சம்) ஆகும்” என்றும் கூறினார். கண்டறியாத் தோற்றங்களும் விலங்குகளும் பாம்பு முதலியனவும் அஞ்சச் செய்தலை எண்ணி ‘உரு’ எனத் தனித்துக் கூறினார். அவர்தம் விழிப்புணர்வு வெளிப்பாடு இன்னவையாம். ஆய்தல் ‘ஆய்தம்’ என்னும் எழுத்து முப்பாற்புள்ளி வடிவினது; ஆய்தப் புள்ளி என்பதும் அது; அஃகேனம் என்பதும் அதற்கொரு பெயர்; என்பவற்றைக் கூறும் ஆசிரியர், ஆய்தம் என்பதன் பொருள் ‘நுணுக்கம்’ என்கிறார். “ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்” என்பது அது. ‘ஆய்வுப் பட்டறை’ எனப் பெயரிட்டு ஆய்வாளர் பலர் கூடித் திட்ட மிட்டுச் செய்து வரும் தொடர் நிகழ்வாகிய அதன் பெயர் தானும் பிழையாயது என்பது அறியாமலே ஆய்வுகள் நிகழ்கின்றன. ‘பட்டடை’ என்னும் சொல் தொழிலகப் பெயர். ‘பட்டடை’ என்பது “சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு” என வள்ளுவரால் ஆளப்பட்ட சொல் (821) ஆய்தல் என்பது நாட்டுப்புறப் பெருவழக்குச் சொல். கீரை ஆய்தல், கொத்தவரை ஆய்தல் என்று கூறுதல் இந்நாள் வரை மாறியதில்லை. முற்றல் அழுகல் பூச்சி முதலியவை போக்கித் தக்கவற்றைத் தேர்ந்து கொள்ளுதலே ஆய்தல் பொருளாக அமைகின்றது. ஆய்தலினும் நுணுக்க ஆய்வு ‘ஆராய்தல்’ (ஆர் ஆய்தல்). ஆய்வும், ஆராய்வும் கொள்ளுவ கொண்டு தள்ளுவ தள்ளும் நுண்ணிய நோக்குடைய சொற்கள். ஒன்றின் ஒன்று நுணுகியவையாக, ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் என்பவற்றைச் சுட்டும் இவ்வுரிச் சொல் விளக்கம் அரிய வாழ்வியல் விளக்கமாம். ஓயா உழைப்பாளி, ஓயாப் போராளி, ஓயாச் சிந்தனையாளர், ஓயாப் பொருளீட்டாளர் ஓய்வு கொள்ளும் நிலை என்பது யாது? தம் ஓயாப் பாட்டின் பயன்பாட்டை மீள் பார்வை பார்க்க வேண்டும் அல்லவா! அவ்வாய்வு தானே ஓய்வின்பயன்! ஓய்வு என்பது சிந்தித்தலும் அற்றுப் போன நிலை அன்றே! அச் சும்மா இருக்கும் நிலை கோடியர்க்கு ஒருவர் இருவர் அல்லரோ தேடிக் கண்டு கொள்வது! அச் ‘சும்மா’ அரும் பொருளுள் அரும் பொருள். ஓய்வு கொள்வார்க் கெல்லாம் பொதுப் பொருளாகக் கைவர வல்லது ஆய்தலேயாம். ஆதலால் ஓய்தலில் நுண்ணியது ஆய்தல். ஆய்ந்து கண்ட பொருளை அடக்கிவைத்துக் கொள்வதால் ஆய்ந்து கண்ட பயன் தான் என்ன? அதனால் ஆய்ந்து கண்ட பயன் கருத்துகளைப் பலருக்கும் பல விடத்தும் சென்று கூறுதல் நிழத்தல் ஆகும். குடை நிழற்றல் என்பது நாடு தழுவுதல் போல் இந்நிழத்தல் ஆய்தலினும் நுண்மை யுடையதாம். இருந்தும் நடந்தும் நுவலும் நிலையும் இயலாமையாயின் அந்நிலையிலும் தாம் கண்ட அரும்பயன் பொருள் - நுவன்று நுவன்று வந்த பொருள் - பின் வருவோர்க்குக் கிட்டும் வகையால் நுவன்றதை நூலாக்கி (நுவல் - நூல்) வைத்தல் வேண்டும். அக்கொடை உயர்கொடை என்பதை ஒளவையார் “தாதா கோடிக்கு ஒருவர்” என்று பாராட்டுகிறார். ஓய்தல் முதல் சாய்த்தல் (வடித்தல்) வரைப்பட்டவை ஒன்றில் ஒன்று நுண்ணியவை ஆதலின் “உள்ளதன் நுணுக்கம்” என்றார். எவ்வொரு கடப்பாட்டில் ஊன்றியவரும் தம் ஊன்றுதல் கடனாக உயர்கொடை புரியலாம் என்னும் அரிய வழிகாட்டுதல், உரிச்சொல் வழியாகத் தரப்பெற்றதாம். வை வையே கூர்மை என்பதோர் உரிச்சொல் விளக்கம் (870). வை என்பதற்குக் கூர்மைப் பொருள் எப்படி வாய்த்தது? ‘வை’ என்னும் நெல்லைப் பார்த்தால் - நெல் நுனியாம் மூக்கைப் பார்த்தால் கூர்மை நன்கு புலப்படும். மழிதகடு போலும் கூர்மையுடையது நெல் மூக்காகும். வெகுளி “கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள” (855) என்பது வண்ணத்தை விலக்கி எண்ணத்தை வெளிப்படுத்தும் உரிச் சொல் விளக்கம். சினங் கொண்டார் கண்நிறம் என்ன? அவர் முகத்தின் நிறம் என்ன? - இவற்றை நோக்கின் வெகுண்டாரின் முகமும் கண்ணும் காட்டிவிடும். “முகத்தின் முதுக்குறைந்த துண்டோ உவப்பினும் காயினும் தான்முந் துறும்” என்பது குறள். கறுப்பும் சிவப்பும் நிறம் குறித்து வாராவோ எனின், “நிறத்துரு உணர்த்தற்கும் உரிய என்ப” என்று கூறுவார் (856). எறுழ் காளையை அடக்க விரும்புவார் அதன் கொம்பை வளைத்துத் திமிலைப் பற்றித் தாவி ஏறி அடக்குதல் வழக்கம். திமிலுக்கு ‘எறுழ்’ என்பது பெயர். எறுழ் என்பதன் பொருள் வலிமை என்பதாம். எறுழ் என்னும் உரியொடு எறும்பு, எறும்பி (யானை) என்பவற்றை எண்ணினால் வலிமை விளக்கமாம். “எறுழ் வலியாகும்” என்பது நூற்பா (871). கலியாணர் உண்ணாட்டு வாணிகரன்றி அயல் நாட்டு வாணிகராகப் பெரும் பொருள் ஈண்டியவர் கலியாணர் எனப்பட்டனர். கலி=மிகுதி; யாணர் = வருவாயினர். யாணர் என்பதன் பொருள் புதிதுபடல் (புதிய வளம் பெறுதல்) என்பார் தொல்காப்பியர் (862) யாணர் என்பதை யன்றி ‘யாண்’ என்னும் உரிச் சொல்லைக் காட்டி, “யாணுக் கவினாம்” என்றும் கூறுவார் (864). புதுவருவாயும் கவினும் பெருக்குவதாய திருமணம் ‘கலியாணம்’ எனவும் வழங்கப்படுதல் விளக்கமாக வில்லையா? வேற்றுச் சொல்லென மயங்காதீர் என்கிறது உரிச் சொற் பொருள். உணர்தல் உள்ளது உள்ளவாறு உணரும் உணர்ச்சி எவர்க்கு உண்டு என்று வினாவின், “உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே” என்கிறார் (876). சொல்லும் பொருளும் சொல்வோன் குறிப்பும் வெளிப்படப் புலப்பட்டு விடுமா? என வினாவின், உணர்வோர்க்கும் உடனே வெளிப்படப் புலப்படுதல் அரிது. ஆனால் அவரே ஆழ்ந்து நோக்கின் பொருள் புலப்படுதல் இல்லாமல் போகாது என்பதை, “மொழிப்பொருட் காரணம் விழிப்பத்தோன்றா” என்பதனால் தெளிவுபடுத்துகிறார் (877). இது முன்னரும் சுட்டப்பட்டது. எச்சம் ஒரு தொகையை ஒருவரிடம் தந்து செலவு கணக்குக் கேட்பார் எச்சம் எவ்வளவு என வினாவுவார். எச்சமாவது எஞ்சியிருப்பது. ஒருவர் தம் வாழ்வின்பின் வைப்பாக வைத்துச் செல்லுவன வெல்லாம் எச்சம் என்பதால், “தக்கார் தகவிலர் என்ப தவரவர் எச்சத்தால் காணப் படும்” என்றார் பொய்யாமொழியார். எச்சம் என்பதற்கு மக்கள் எனச் சொல்லை மாற்றினாரும் பொருள் கண்டாரும் உண்டு. ஆனால் தொல்காப்பிய எச்ச இயல் எஞ்சியது என்னும் தெளிபொருள் தந்து விளக்குகிறது. இவ்வதிகாரத்தில் சொல்லியவைபோகச் சொல்ல வேண்டி நிற்கும் எச்சத்தைச் சொல்வதால் எச்சவியல் எனப்பட்டது. எச்சம் மக்கள் வாழ்வில் மாறாது வழங்கும் விளக்க மிக்க சொல்லாம். நால்வகைச் சொற்கள் தமிழ்கூறும் நல்லுலகச் செய்யுள் வழக்கிலே பயிலும் சொற்களை இயற்சொல், திரிசொல், திசைச் சொல், வடசொல் என நான்காக எண்ணி இயலைத் தொடங்குகிறார். தமிழுலகத்து வழங்கும் வழுவிலாச் சொல் இயற்சொல் என்றும், ஒரு பொருள் குறித்த பல சொல்லும் பலபொருள் குறித்த ஒரு சொல்லுமாகிய தமிழ்ச் சொல் திரிசொல் என்றும், தமிழ் வழங்கும் நிலப் பரப்பின் அப்பாலாய் வழங்கிய சொல் திசைச் சொல் என்றும், வடக்கிருந்து வந்து வழங்கிய வேற்றுச் சொல் வடசொல் என்றும் இலக்கணம் கூறினார். தொல்காப்பியர் காலத்திற்கு முற்படவே தமிழர் கடல் வணிகம் செய்தமையும் அயல் வணிகர் இவண் வந்து சென்றமையும் உண்டாகிச் சொற்கலப்பு நேர வாய்ப்பிருந்தும் அச் சொற்களைச் செய்யுட் சொல்லாக ஏற்றார் அல்லர். வட சொல்லையும் தமிழியல்புக்கு ஏற்ப அமைத்துக் கொண்டு தமிழ்நெறிச் சொல்லாக வருவதையே வற்புறுத்தி ஏற்றுக் கொண்டார். திசைச் சொல்லும் திரிசொல்லும் தமிழியற் சொல் போலவே தமிழ் எழுத்து வடிவு கொண்டிருந்தமையால் அவ்வெழுத்தை விலக்கிச் சொல்லாட்சி செய்யுமாறு சொல்ல அவர்க்கு நேரவில்லை. ஆதலால் வடசொல் ஒன்று மட்டுமே தமிழுக்கு வேற்றுச் சொல்லாகவும் வேற்றெழுத்துச் சொல்லாகவும் தொல்காப்பியர் நாளில் இருந்தமை விளங்கும். அச்சொல்லை அப்படியே கொள்ளாமல் தமிழ் மரபுக்குத் தகுமாறு கொள்ளவேண்டும் என்னும் உறுதியால், “வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே” (884) என நெறிகாட்டினார். இவ்வாணை எந்த அயல் மொழிக்கும் உரிய பொது ஆணையெனப் போற்றுதல் மொழிக்காப்பாளர் கட்டாயக் கடமையாம். ஓர் அயற்சொல்லைக் கொள்ள வேண்டும் நிலை எப்படி உண்டாகும்? ஓர் அயற் சொல்லுக்கு ஒத்த அல்லது ஏற்ற சொல், அதனைக் கொள்ள விரும்புவார் மொழியில் இல்லாமல் இருக்க வேண்டும். சொல் இல்லை எனினும், ஏற்ற சொல்லை ஆக்கிக் கொள்ள முடியாத அரிய சொல்லாக அஃது இருத்தல் வேண்டும். அச்சொல்லை எடுத்துக் கொள்ளவில்லை என்றால், அப்பொருளை விளக்கிக் கூற முடியாத இடர் எடுத்துக் கொள்வார் மொழியில் இருத்தல் வேண்டும். இத்தகு நிலைகளிலேயே அயற் செல்லைத் தம் மொழியியற் கேற்பக் கொள்ள வேண்டும் என்பனவே இந் நூற்பாவின் கருத்துகளாம். வளமான செல்வமும் வாய்ப்பான வாழ்வும் உடையான் கடன் கொண்டு வாழ விரும்பான். கடன் கொள்ளல் இழிவெனவும் கொள்வான். அந் நிலையில், கடனாளன் என்னும் பெயர் கொள்வதற்காகக் கடன் கொள்ளுதலை அருவறுப் பாகவும் கொள்வான். அப் பொருட்கடன் போன்றதே வேண்டாச் சொற்கடனுமாம். பொருட்கடன் வேண்டாது பெற்றுக் கொண்டே போனால், உள்ளவை உரியவை அனைத்தும் அக் கடனாலேயே இழந்து எல்லாமும் இல்லாமல் ஒழிந்து போவான். இந்நிலையை எண்ணுவார் வேண்டாச் சொற்கடனைக் கொள்ளார். ஒரு சொல்லைக் கட்டாயம் எடுத்தாகவேண்டும் நிலை இருந் தாலும், மகப்பேறு வாயாதவர் ஒரு குழந்தையை மகவாகக் கொள்ளும் போது தம் குடும்பத்துக் குழந்தை என்பதை முற்றிலும் காக்கும் வகையால், அக் குழந்தையின் முன்னைத் தொடர்பை விலக்கித் தம் குடும்பத்திற்குத் தகுபெயர் சூட்டித் தம் குடிமை உறுப்பாகவே வளர்த்து வருதல் போல் அயற் சொல்லைத் தம்மொழிக்குத்தகக் கொண்டு ஆளவேண்டும் இதனைக் கூறுவதே, “எழுத்து ஒரீஇ, எழுத் தொடு புணர்ந்த சொல்லாகும்மே” என்னும் ஆணையாம். இவ்வாணையை மொழிக் காவலர் காலம் காலமாகப் போற்றினர். ஆனால் நாட்டுக் காவலர் போற்றத் தவறினர். அயன்மொழியார் வழியில் சாய்ந்தனர். மொழிக் காவலும் நாட்டுக் காவலும் ஒப்பப் போற்றிய மன்னர் காலத்தில் அயலெழுத்துப் புகவில்லை. அவர்கள் நம்பிக்கைக்கு இடமான வட மொழியார், படிப்படியே ஊர்கள் பெயர்கள் முதலியவற்றை மாற்றி வழங்க இடந்தந்தனர். மெய்க் கீர்த்தியில் மிக இடந் தந்தனர். அயன் மொழி வழிபாடு சடங்கு என்பவற்றை ஏற்றனர். அதனால் பொது மக்கள் வாழ்விலும் இந் நிலை புகுந்தது. கட்டிக் காத்த மொழிக் காவலர்களும், அயற் சொற்களேயன்றி அயலெழுத்துகளும் கொள்ளத் தலைப் பட்டனர். பின்னே வந்த அயன் மொழியாகிய ஆங்கிலம் பிரெஞ்சு போர்த்துக்கேசியம் உருது இந்தி ஆகிய மொழிச் சொற்களும் புகுந்து மொழியழிப்புப் பணியை முழு வீச்சாக செய்தன. தமிழால் வாழ்வாரும் இதற்குப் பங்காளர் ஆயினர். “தொல்காப்பிய ஆணை மீறிய இக்குற்றம் காட்டுத்தீயாகப் பரவி இந்நாளில் மொழியை அழிக்கின்றது” என்பதை இன்று உணர்ந்தாலும் பயனுண்டு. இல்லையேல் அயலார் கணக்குப்படி தமிழும் விரைவில் ‘இருந்த மொழி’ என்னும் நிலையை அடைதல் ஆகவும் கூடும். “தொல்காப்பியப் புலவோர் தோன்ற விரித்துரைத்தார்” எனச் சான்றோர் ஒருவர் பெருமிதம் கொண்டார்! தோன்ற விரித்துரைத்தாலும் போற்றிக் கொள்வார் இல்லாக்கால் என்ன பயனாம்? உரைநடைக்கு இல்லாத சில இடர்கள் செய்யுள் நடைக்கு உண்டு. அதற்கென அமையும் கட்டொழுங்குகள் சில; சுவை, நயம், ஒலி, பொருள் என்பவை கருதி வழங்கு சொற்கள் சற்றே மாற்றமாய் அமைத்துப் போற்றுதற்கு இடனாகும். அதனால் சில சொற்களில் மெல்லெழுத்து வல்லெழுத்தாகவும், வல்லெழுத்து மெல்லெழுத்தாகவும், சில எழுத்துகளை விரிக்கவும், சில எழுத்துகளைத் தொகுக்கவும், சில எழுத்துகளை நீட்டவும், சில எழுத்துகளைக் குறுக்கவும் ஆகும். ஆனால் இம்மாற்றங்களால் சொல்லின் பொருள் மாற்றமாவது இல்லை என்றும் செய்யுள் நயம் மிகும் என்றும் அறிய வேண்டும் என்று இலக்கியக் கல்விக்கு நெறிகாட்டுகிறார் (886). பாடலுக்குப் பொருள்கண்டு சுவைக்கத் தக்க வகையைப் ‘பொருள்கோள்’ எனக் கூறி அவ் விளக்கமும் தருகிறார் (887). இவை பயில்வார்க்குப் பயின்று சிறந்தார் காட்டும் வழியாகத் திகழ்கின்றன. ஆக்கிவைத்த உணவை உண்ண அறிந்தான் ஆக்கும் வகையையும் அறிந்துகொள்ளல் இரட்டை நலமாதல் போல் நலம் செய்வன இத்தகு துய்ப்பு நெறி காட்டலாகும். ஈ, தா, கொடு ‘ஈ’ என்றோ ‘தா’ என்றோ ‘கொடு’ என்றோ கூறுவதில் பொதுவாக நோக்குவார்க்கு வேறுபாடு இல்லை. ஆனால் நுணுகி நோக்கின் வேறுபாடு உண்டு. இதனை விளக்குகிறார் தொல்காப்பியர். கொடுப்பவனினும் அவனிடம் ஒன்றைப் பெற வருவோன் தாழ்வுடையன் எனின், ‘ஈ’ என்று கூறுவான். இருவரும் ஒப்புடையவர் எனின் பெறுவோன் ‘தா’ என்று கூறுவான். கொடுப்போனினும் பெறுவோன் உயர்ந்தவன் எனின் ‘கொடு’ என்று கூறுவான் என்று அக்கால மக்கள் வழக்கினை உரைக்கிறார். இரப்பவர் அனைவரும் இழிந்தாரும் அல்லர் கொடுப்பவர் அனைவரும் உயர்ந்தாரும் அல்லர். இரு நிலைகளிலும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் உண்டு. உயர்வு தாழ்வு என்பவை வயது அறிவு பண்பு உதவி நன்றிக் கடன் தொண்டு ஆளுரிமை என்பவற்றால் ஆவனவேயாம். பிறவிக் குல வேற்றுமை இல்லாததும் கருதப்படாததுமாம் காலநிலை தொல் காப்பியர் கால நிலையாம். வாராதனவும் பேசாதனவும் இந்தச் சாலை சென்னையில் இருந்து வருகிறது. கன்னி வரை செல்கிறது. என்று கூறுதல் உண்டு. இச் சாலை எங்கே போகிறது என வினாவுதலும் உண்டு. எறும்பு அணில் மலை முதலியவை பேசுவதாகக் கதைகள் உண்டு. இம்முறை உலகளாவியதாகவும் பெருவரவினதாகவும் உள. குழந்தையர் கல்விக்கு ஏற்றது இம் முறை எனப் போற்றவும் படுகிறது இதனைத் தொல்காப்பியர், “வாரா மரபின வரக்கூ றுதலும் என்னா மரபின எனக்கூ றுதலும் அன்னவை எல்லாம் அவற்றவற் றியல்பான் இன்ன என்னும் குறிப்புரை யாகும்” (905) என்கிறார் (என்னா = என்று சொல்லாத). அடுக்கு அடுக்கு என்றாலே ஒன்றற்கு மேற்பட்டது என்பது பொருள். அடுக்குச் சட்டி, அடுக்குப் பானை என்பவை அன்றி அடுக்கு மல்லி அடுக்குப் பாறை என இயற்கை அடுக்கும் உண்டு. பாடலில் இசை கருதி அடுக்கு வரும் எனின், நான்கு முறை அடுக்கலாம் என்றும், விரைவு கருதிய அடுக்கு மும்முறை வரலாம் என்றும் ஓர் எல்லை வகுத்துக் காட்டுகிறார் (906, 907). எந்த ஒன்றிலும் அளவீடு இருத்தல் வேண்டும் என்னும் ஆசிரியர் மொழிக் காவல் நெறி இஃதாம். ஒரு பொருள் இருசொல் உயர்தலும் ஓங்குதலும் ஒன்று தானே! மீயும் மிசையும் ஒன்று தானே! ஒருபொருள் தரும் இரு சொற்களை இணைத்தல் ஆகுமா எனின் ஆகுமென மக்கள் வழக்குக் கொண்டு தொல்காப்பியர் சொல்கிறார். அது, “ஒரு பொருள் இரு சொல் பிரிவில வரையார்” என்பது. வரையார் = நீக்கார், விலக்கார். புதுவரவு பழைய சொற்கள் காலவெள்ளத்தில் அழிந்துபடுவது போலப் புதுப்புதுச் சொற்கள் தோற்றமும் ஆகின்றனவே எனின் வாழும் மொழி என்பதன் அடையாளம் அதுவே என்பர் மொழியறிஞர். இதனைக் “கடிசொல் இல்லைக் காலத்துப் படினே” (935) என்கிறார். கடிசொல் லாவது விலக்கும் சொல் நாட்காட்டி, எழுதுகோல், செய்தித்தாள் என்பன வெல்லாம் காலம் தந்த புதுவரவுகள் அல்லவா! மொழிவளம் செய்யும் சொற்களின் பெருக்கமும் தொடர் வரவுமே மொழிவளம் ஆதலால், அவற்றைப் போற்றிக் காக்க ஏவினார். - இரா. இளங்குமரன் தமிழ்வளம் -19, தமிழர் வாழ்வியல் இலக்கணம் எனும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது இளம்பூரணர் உரையாசிரியர் உரையாசிரியர் என்ற அளவானே, `இளம்பூரணர்` என அறியப் பெறும் பெருமையுடையவர் இவர். தொல்காப்பியத் திற்கு முதற்கண் உரை கண்டவராதலுடன், முதன்மையான உரை கண்டவரும் இவரே. மற்றொரு சிறப்பு இவருரையே நூன் முழுமைக்கும் கிடைத்துள்ளமை. உரையாசிரியர் புலமை நலத்தையும், பேரருள் பேருள்ளத்தையும், உரையெழுதுதற்கே தம் தவவாழ்வைச் செலவிட்ட தமிழ்ப்பற்றையும் எத்துணை விரித்துச் சொல்லினும் குறைவுடையதாகவே அமையும். அத்தகும் உயர்வற உயர்ந்த உயர்வர் இவர். “சென்னபட்டணத்தில் இற்றைக்கு ஐம்பதறுபது வருடத்தின் முன்னிருந்த வரதப்ப முதலியாரின் பின், எழுத்துஞ் சொல்லுமேயன்றித் தொல்காப்பியப் பொருளதிகாரத்தை உரை உதாரணங்களோடு பாடங் கேட்டவர்கள் மிக அருமை. முற்றாய் இல்லை என்றே சொல்லலாம். வரதப்ப முதலியார் காலத்திலும் தொல்காப்பியம் கற்றவர்கள் அருமை என்பது, அவர் தந்தையார் வேங்கடாசலம் முதலியார் அதனைப் பாடங்கேட்கும் விருப்பமுடையராயின பொழுது பறையூரில் திருவாரூர் வடுகநாத தேசிகர் ஒருவரே தொல்காப்பியம் அறிந்தவர் இருக்கிறார் என்று கேள்வியுற்றுத் தமது ஊரைவிட்டு அதிகத் திரவியச் செலவோடு அவ்விடம் போய் இரண்டு வருடமிருந்து பாடங்கேட்டு வந்தமையாலும் வரதப்ப முதலியார் ஒருவரே பின்பு அதனைத் தந்தைபாற் கேட்டறிந்தவர் என்பதனாலும் அது காரணமாக அவருக்குத் தொல்காப்பியம் வரதப்ப முதலியார் என்று பெயர் வந்தமையாலும் பின்பு அவர் காலத்திருந்த வித்துவான்கள் தமக்கு யாதாயினும் இலக்கணச் சமுச்சயம் நிகழ்ந்துழி அவரையே வினவி நிவாரணஞ் செய்தமையாலும் நிச்சயிக்கலாம்.” - என்பது தொல். பொருள். நச்சினார்க்கினியப் பதிப்பில் (1885) சி. வை. தாமோதரம்பிள்ளை எழுதியுள்ள பதிப்புரை. பார்த்திப ஆண்டு ஆவணித் திங்கள் வந்த இப்பதிப்பில் தொல்காப்பியப் பின்னான்கியல் உரைகளே உள. இவை நச்சினார்க்கினியம் அன்று, பேராசிரியம் எனச் செந்தமிழ்த் தொகுதி 1. பகுதி 1; தொகுதி 2 பகுதி 11 ஆகியவற்றிலும், தொல். செய்யுளியல் நச்சினார்க்கினியர் உரையுடன் வெளிவந்த தமிழ்ச் சங்கப் பதிப்பிலும் பெரும்புலவர் இரா. இராகவ ஐயங்கார் எழுதினார். தொல்காப்பியம் வரதப்பர் வரலாறும், தாமோதரனாரின் நச்சினார்க்கினியர் உரைப்பதிப்புக் குறிப்பும் மேல் ஆய்வும் நமக்கு என்ன சொல்கின்றன? இளம்பூரணரும் பிறரும் உரை வரைந்து நூலைப் பொருளுடன் காத்த பின்னரும் அஃதறிஞரும் அறியா நிலையில் இருந்தது என்றால், இளம்பூரணர் உரை வரைதலை மேற்கொள்ளா திருந்திருந்தால் தொல்காப்பியத்தின் நிலைமை என்ன ஆகியிருக்கும், என்பதே! தொல். பொருள். இளம்பூரணத்தை 1920இல் வெளியிட்ட கா. நமச் சிவாய முதலியார் 1924இல் தொல். பொருள். மூலத்தை முதற்கண் வெளியிட் டுள்ளார், உரையொடு கூடிய மூலத்தில் இருந்து தனியே மூலத்தைப் பெயர்த்துப் பதிப்பித்த பதிப்பே மூலப்பதிப்பு என்பதை எண்ணிப் பார்த்தால், நாம் இளம்பூரணர்க்குப் பட்டுள்ள நன்றிக் கடனுக்கு அளவுண்டோ? இவர்தம் உரைச்சுவடி இல்லாக்கால், மற்றையர் உரைவரையும் வாய்ப்பும் ஏற்பட்டிராதே! தொல்காப்பியம் நமக்குக் கிட்டியமை இளம்பூரணர் உரைகொண்ட நலத்தாலேயே என்பதை எண்ணும் போதே இவர் தொண்டு மலை விளக்கென இலங்குவதாம். இளம்பூரணர் இளம்பூரணர் என்னும் பெயரால், “இவர் இளமை யிலேயே முழுதறிவு பெற்றுச் சிறந்தமை கண்ட சான்றோர் இச்சிறப்புப் பெயரால் இவரை வழங்கினர்” என்பது விளங்கும். இஃதவர் இயற்பெயராக இருத்தற்கு இயலாது. கண்ணகியார் `சிறுமுதுக்குறைவி` எனப்பட்டதும், நம்மாழ்வார் `சிறுப்பெரியார்` எனப்பட்டதும் அறிவார் இதனைத் தெளிவார். `இளங்கோ வேந்தர்` `இளங்கோவடிகளா`ராகப் பெயர் பெற்றமை போல் இளம்பூரணரும் தம் துறவினால் `இளம்பூரண வடிகளார்` எனப் பட்டார் என்பது விளங்குகின்றது. இவர் துறவோர் என்பதை நமக்கு வெளிப்படக் கூறுபவர் நன்னூல் முதலுரையாசிரியர் மயிலைநாதர். அவர் எச்சங்களின் வகையை எடுத்துக் காட்டுங்கால்(359) இளம்பூரணர் உரையை உரைத்து “இஃது ஒல்காப் புலமைத் தொல்காப்பியத்துள் உளங்கூர் கேள்வி இளம்பூரண ரென்னும் ஏதமில் மாதவர் ஓதியவுரையென் றுணர்க” என்கிறார். இதில் இளம்பூரணரை `ஏதமில் மாதவர்` என்ற செய்தி, இவர் துறவோர் என்பதைக் காட்டும் புறச்சான்றாம். அகச்சான்று உண்டோ எனின் உண்டு என்பது மறுமொழியாம். “கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய் முற்படக் கிளந்த எழுதிணை என்ப” என்னும் நூற்பா அகத்திணையின் முதற்கண் உள்ளது. இதில் அகத்திணை ஏழும் முறை பெற நிற்கும் வகையைக் கூறுகிறார் ஆசிரியர். இதற்கு உரைவிளக்கம் வரையும் இளம்பூரணர், “இந்நூலகத்து ஒருவனும் ஒருத்தியும் நுகரும் காமத்திற்குக் குலனும் குணனும் செல்வமும் ஒழுக்கமும் இளமையும் அன்பும் ஒருங்கு உளவழி இன்பம் உளதாம் எனவும், கைக்கிளை ஒருதலை வேட்கை எனவும், பெருந்திணை ஒவ்வாக் கூட்ட மாய் இன்பம் பயத்தல் அரிது எனவும் கூறுதலான் இந்நூலுடையார் காமத்துப் பயனின்மை உய்த்துணர வைத்தவாறு அறிந்து கொள்க” என்கிறார். `காமம் நீத்தபால்`, `கட்டில் நீத்தபால்`, `தாபத நிலை`, `தபுதாரநிலை`, `சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயன்` எனவரும் இடங்களில் இத்தகு கருத்து உரைக்கப் பெறின் பருந்தும் நிழலுமென நூலாசிரியர் சொல்லொடு பொருள் பொருந்திச் செல்வதாகக் கொள்ள வாய்க்கும். இவ்விடத்தில் அக்குறிப்பு இல்லையாகவும் `இந்நூலுடையார் காமத்துப் பயனின்மை உய்த்துணர வைத்தவாறு` என்பது இளம்பூரணர் உட்கோளேயாம் என்பதை வெளிப்படுத்தும். இவரையன்றி இப்பகுதிக்கு உரைகண்ட பழைய உரையாசிரியர் நச்சினார்க்கினியரே. அவர் தாமும் இவர்க்குப் பின் உரை கண்டவர். இவரை ஏற்றும் மறுத்தும் உரைப்பவர். அவர் பொருளதிகாரத்தில், “இல்லறம் உணர்த்திப் பின் துறவறமும் சிறுபான்மை கூறுப” என்றும், “அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும் என்னும் சூத்திரத்தான் இல்லறமும் துறவறமும் கூறினார். இந்நிலையானும் பிறவாற்றானும் வீட்டிற்குக் காரணங் கூறினார்” என்றாரே யன்றிக் காமத்துப் பயனின்மை உய்த்துணரவைத்தாரெனக் கூறினாரல்லர். அவ்வாறு ஆசிரியர் கூறக் கருதியிருந்தால் உய்த்துணர்வில் லாமலே வெளிப்பட விளங்க உரைப்பார் என்பது இளம்பூரணரோ அறியார்? இவர் கொண்டிருந்த துறவுநிலை உந்துதலால் வந்த மொழி ஈதெனக் கொள்ளல் தகும். “இனி மாறுகொளக் கூறல்,” என்பதற்குத் “தவம் நன்று என்றவன் தான்தவம் தீதென்று கூறல்” என்பதும் (பொ.654) குறிப்பாகலாம். இவர் துறவர் என்பது `இளம்பூரண அடிகள்` என்னும் அடியார்க்கு நல்லார் குறிப்பாலும் (சிலப். 11 : 18 -20) புலப்படும். மயிலைநாதர் வரைந்த தொடரிலே இளம்பூரணர்க்குரிய தனிப் பெருஞ் சிறப்பொன்றைச் சுட்டுதலறிந்தோம். அஃது, `உளங்கூர் கேள்வி` என்பது. “செவி வாயாக நெஞ்சு களனாகப்” பாடம் கேட்பதும் கேட்ட வற்றை உளத்தமைத்துக் கொள்வதும் பண்டைப் பயின்முறை. அம்முறையில் பல்கால் பலரிடைச் சென்று கேட்டுக் கருவூலமெனத் தேக்கி வைத்துக் கொண்ட முழுதறிவாளர் இளம்பூரணர் என்பதை நாம் அறிய வைக்கிறது. இதற்கு அகச்சான்று என்னை எனின், பலப்பலவாம்; முதல் உரையாசிரிய ராகிய இவர் பலரிடைக் கேட்ட உரைகளைக் கொண்டே, ‘ஒரு சார் ஆசிரியர் உரைப்பர்’ என்றும், ‘உரையன் றென்பார்’ என்றும், ‘ஒருவன் சொல்லுவது’ என்றும் கூறிச் செல்கிறார் என்பது கொள்ளக் கிடக்கின்றது என்க. இளம்பூரணர் தொல்காப்பியர்மேல் கொண்டிருந்த பேரன்பும், பெருமதிப்பும் அவரைத் தொல்காப்பியரெனவே மதிக்கத் தூண்டுகின்ற தாம். அகத்திணை ஏழாதல் போலப் புறத்திணையும் ஏழே என்பதை வலியுறுத்திக் கூறும் இளம்பூரணர், புறப்பொருள் பன்னிரண்டு என்பாரை மறுத்து அவ்வாறு கொள்வது, “முனைவன் நூலிற்கும் கலி முதலாகிய சான்றோர் செய்யுட்கும் உயர்ந்தோர் வழக்கிற்கும் பொருந்தாது என்க” என்கிறார். ஆசிரியர் தொல்காப்பியனார், “வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதனூல் ஆகும்” என்றதை உளங் கூர்ந்து, அதனை அவர்க்கே ஆக்கி வழிபட்ட சான்றாண்மை இளம்பூரணர் வழியே புலப்படுதல் கண்டு கொள்க. “அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் உளவென மொழிப இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர்” என்பதன் விளக்கத்தில் (எழுத்.33), “இசை நூலாசிரியரும் முதனூலாசிரியர் தாமே யெனினும், ‘மொழிப’ என வேறொருவர் போலக் கூறியது, அதுவும் வேறொரு நூலாகச் செய்யப்படும் நிலைமை நோக்கிப் போலும்” என்று வரைகின்றார். தொல்காப்பியரை இளம்பூரணர் முதனூலாசிரியராகக் கொண்டார் என்பது இதனால் விளங்கும். முன்னிலையாக்கல் எனவரும் பொருளதிகார நூற்பா விளக்கத்தில் (98),“உலகத்துள்ளார் இலக்கணமெல்லாம் உரைக் கின்றாராகலின் இவ்வாசிரியர் உரைக்கின்றவாற்றான் நிகழ்தல் பெரும்பான்மை” எனத் தொடர்கின்றார். தொல்காப்பியர் பற்றி இளம்பூரணர் குறித்த மதிப்பீடு எத்தகு பெருமைக்குரியது! பொருளதிகாரத் தொடக்கத்திலே, “பிற நூலாசிரியர் விரித்துக் கூறினாற்போல அறமும் பொருளும் விரித்துக் கூறாதது என்னையோ எனின், உலகத்தில் நூல் செய்வார் செய்கின்றது அறிவிலாதாரை அறிவு கொளுத்த வேண்டியன்றே; யாதானும் ஒரு நூல் விரித்தோதிய பொருளைத் தாமும் விரித்து ஓதுவா ராயின் ஓதுகின்றதனாற் பயன் இன்றாமாதலால் முதனூலாசிரியர் விரித்துக் கூறின பொருளைத் தொகுத்துக் கூறலும் தொகுத்துக் கூறின பொருளை விரித்துக் கூறலும் நூல் செய்வார் செய்யும் மரபு என்றுணர்க. அஃதேல் இந்நூலகத்து விரித்துக் கூறிய பொருள் யாதெனின் காமப்பகுதியும் வீரப்பகுதியும் என்க. இன்பம் காரணமாகப் பொருள் தேடும் ஆகலானும் பொருளானே அறஞ் செய்யும் ஆகலானும் இன்பமும் பொருளும் ஏற்றம் என ஓதினார் என உணர்க,” என்று வரையும் எழுத்தால் தொல்காப்பிய நூலோட்ட நுணுக்கத்தை நுவல்கிறார். உழிஞைத் துறையை, “அதுவே தானும் இருநால் வகைத்தே” என்னும் ஆசிரியர் (பொ.67) அடுத்த நூற்பாவில் அத்துறைகளைக் கூறி “நாலிரு வகைத்தே” (பொ.68) என்றும் கூறுகிறார். இதனைக் கூறியது கூறல் என எவரும் எண்ணி விடுவரோ என்னும் எண்ணம் “கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை” இளம்பூரணர்க்குத் தோன்றிற்றுப் போலும். அதனால், “பதினெட்டு இருபத்தொன்பது என்பார் மதம் விலக்கியமை தோன்றப் பெயர்த்துந் தொகை கூறினார். இது கூறியது கூறலன்று; தொகை” என்றார். ‘ஆசிரியன் ஓதினான்’ என்பது போலக் கூறுதலே பண்டை உரை யாசிரியர் மரபு (எழுத்.469). “குறிப்பு என்றார்”, “கூறினார்” (பொருள்.104) என இளம்பூரணத்துள் வருதல் பதிப்பாசிரியர் கருத்துப்போலும்! மிகைபடக் கூறல் என்னும் நூற்குற்றம் விளக்கும் இளம்பூரணர், “மிகைபடக் கூறலாவது அதிகாரப் பொருளன்றிப் பிறபொருளும் கூறுதல். அஃதாவது தமிழிலக்கணஞ் சொல்லு வான் எடுத்துக்கொண்டான் வடமொழி இலக்கணமும் கூறல்” என்கிறார். இக்குற்றம் செய்யாத சீருரையாளர் செந்தமிழ் இளம்பூரணர். இக்குற்றம் செய்தார், ‘இவர் வடமொழி யறியார்’ என்பர். எழுத்து. 42, 45, 75, சொல். 443, பொருள். 30, 151, 656 ஆகிய நூற்பாக்களின் உரைகளைக் காண்போர் இவர் வடமொழி அறியார் எனக் கருதார். இளம்பூரணர் சமணர் என்றும் சைவர் என்றும் கூறுவாருளர். படிமையோன் என்பதற்குத் ‘தவவொழுக்கத்தை யுடையோன்’ என உரைவரைந்ததையும் (பாயிரம்) படிமை என்பது சமண சமயத் துறவிகளின் தவவொழுக்கத்தைக் குறிக்கும் சொல் என்பதையும் குறித்துச் சமணர் என்பர். படிமை என்பது கட்டமை ஒழுக்கத்தைச் சுட்டுவது என்பதைப் பதிற்றுப்பத்துள் கண்டு கொள்க (74). படிவம் என்பதும் அப்பாடல் ஆட்சியில் உண்டு என்பதும் அறிக. “னகரம் வீடுபேற்றிற்குரிய ஆண்பாலை உணர்த்துதற் சிறப்பான் பின்வைக்கப்பட்டது” (எழுத். 1) என்று இவர் எழுதுவது கொண்டு சமணர் என்பர். முற்பட வைக்கப்பட்ட அகரத்தின் சிறப்புக் கூறியவர் பிற்பட வைக்கப்பட்ட னகரத்தின் சிறப்புக் கூறுவாராய் இது கூறினர். முற்படக் கூறலும் சிறப்பே; பிற்படக் கூறலும் சிறப்பே என்பது நூன்முறை. அம்முறைக்கேற்ப னகரச் சிறப்பாகக் கூற இதனைக் கூறினாரேயன்றி `மகளிர் வீடு பேறு எய்தார்` என்னும் குறிப்பு அதில் இல்லை எனக் கொள்க. இனிச் சமணர் அல்லர் என்பதற்கு, “நிலம், தீ, நீர், வளி, விசும்போடு ஐந்தும், கலந்த மயக்கம் உலகம்” எனவரும் தொல்காப்பிய (பொ.635) நூற்பாவில் விசும்பும் ஒரு பூதமெனக் கொண்டதைக் காட்டுவர். நூற்பாவிற் கிடந்தாங்கு உரை விரிக்கும் மரபுடைய இளம்பூரணரை அதனைக் காட்டி ஒரு சார்பிற் கூட்டல் சாலாது. “குமர கோட்டம் குமரக்கோட்டம், பிரமகோட்டம் பிரமக் கோட்டம்” என்பவர் “அருக கோட்டம் அருகக் கோட்டம்” எனக் காட்டாமையால் சமணச் சார்பினர் அல்லர் என்பர். காட்டாமையால் அச்சார்பினர் அல்லர் என்பது ஏற்காமை போல, காட்டியமையால் அச் சார்பினர் என்பதும் ஆகாதாம். எடுத்துக்கொண்ட பொருளுக்கு எடுத்துக்காட்டுப் பொருந்துவதா என்பதே உரை நோக்கு. குமரகோட்டம் காட்டியதற்கு முற்றொடரிலேயே ‘ஆசீவகப்பள்ளி’ என்பதைக் காட்டுகிறாரே; அவர் அருகக் கோட்டம் காட்டாமையால் சமணர் அல்லர் என்று கொண்டால், ஆசீவகப் பள்ளியை முற்படக் காட்டல் கொண்டு சமணர் எனக் கொள்ள வேண்டுமன்றோ! ஆகலின் பொருளில என்க. இனி, ‘இளம்பூரணர்’ என்பது முருகன் பெயர்களுள் ஒன்றாகலின் சைவர் என்பர். ‘இளையாய்’ என்பதிலும் ‘இளம்’ என்பதிலும் கண்ட சொல்லொப்புமையன்றிப் பொரு ளொப்புமை காட்ட முடியாக் குறிப்பு ஈதெனல் தெளிவு. “ஆறு சூடி நீறு பூசி ஏறும் ஏறும் இறைவனைக் கூறு நெஞ்சே குறையிலை நினக்கே” என்பதை `இவர் திருவுள்ளத் தூறிய பெரும் பொருட் சிறுபாடல் எனக் கூறிச் சைவராக்கினால், அடுத்தாற் போலவே (தொ.பொ. 359), “போது சாந்தம் பொற்ப வேந்தி ஆதி நாதர்ச் சேர்வோர் சோதி வானந் துன்னு வோரே” என்பது கொண்டு சமணரெனக் கொண்டாடல் தவிர்க்க முடியாததாகி விடும். “தன்தோள் நான்கின்” எனவரும் பாடலை இளம்பூரணர் மேற்கோள் காட்டுகிறார் (தொல். பொருள். 50). இதனைச் சேனாவரையர் தம் நூலில் முதற்காப்புப் பாடலாக அமைத்துக் கொள்கிறார். இதனால் இவர் சிவச் சார்பினர் எனின், சேனாவரையர் போலவே தாமும் காப்புச் செய்யுளாக வைத்திருப்பார். சேனாவரையர் சிவநெறியர் என்பதற்கு இது சான்றாமேயன்றி இளம்பூரணரைச் சாராதாம் என்க. “இசை திரிந்திசைப்பினும்” என்னும் பொருளியல் முதல் நூற்பா உரையில் மேற்கோளாகக் “கார்விரிகொன்றை” என்னும் அகநானூற்றுக் கடவுள் வாழ்த்துப் பாடலைக் காட்டும் இளம்பூரணர், ‘சிவானுபூதியிற் பேருலகம் தங்கிற்று’ என்று உரை யெழுதுவது கொண்டு இவரைச் சிவநெறியர் என உறுதிப் படுத்துவர். அஃதாயின், அப்பாடல் தொடரொடு தொடர்பிலாத அச்செறிப்பும், ‘தாவில்தாள் நிழல்’ என்பதன் பொருள் விடுப்பும் கொண்டு ஐயுறவு கொள்ளற்கு இடமுண்டு! பாடல் தொடரையே இசைத்துத் தொடர்புறுத்தும் அவ்வுரையில் அஃதொன்று மட்டும் ஒட்டா ஒட்டாக இருத்தலும், தாவில்தாள் நிழல் விடுபாடும் பிறிதொருவர் கைச்சரக்கோ என எண்ணவே வைக்கின்றது. இளம்பூரணர் வள்ளுவர் வாய்மையில் நெஞ்சம் பறிகொடுத்த தோன்றல் என்பது இவர் எடுத்துக்காட்டும் மேற்கோள் விளக்கப் பெருக்கத்தானே நன்கு புலப்படும். அதிகாரங்கள் பலவற்றை அடுக்கிக் கூறுதலாலும் விளங்கும். இத்தகையர் வள்ளுவரைப் போலச் சமயக் கணக்கர் மதிவழிச் செல்லாத சமனிலைச் சால்பினர் என்பதே தெளிவாம். சமயச் சார்பினர் வெளிப்படக் காட்டும் வலிந்த பொருளாட்சி, மேற்கோள் ஆயவை இவரிடத்துக் காணற்கில்லாமல் எச்சமயமும் ஒப்பநினைத்துப் போற்றும் ஒரு பெருந்தகைமையே காணப்படுகின்றது என்க. தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணரும் திருக்குறள் உரையாசிரியர் மணக்குடவரும் ஒருவரே என்பர். ஒருவர் ஒரு நூற்கு ஒரு பெயரும், மற்றொரு நூற்கு ஒரு பெயரும் கொண்டு உரை வரைந்தனர் என்றல் மரபு நிலைப்படாது. ஒருவர், இருவர், மூவர் பெயர் கொண் டெழுதிப் பிழைக்கும் ‘வணிக நோக்கர்’ அச்சடிப்புக் காலத்தே காண லாமே யன்றிப் பயில்வார் பயன்பாடு என்னும் ஒன்றே குறியாக் கொண்ட ஏட்டுக்காலத்துத் தூயரை அக்கூட்டிற் சேர்க்க வேண்டுவதில்லையாம். உரையாசிரியர் நச்சினார்க்கினியர் பல நூல்களுக்கு உரை கண்டவர். அவர் தம் பன்னூல் உரையொப்பைச் சுட்டிச் செல்கிறார். அத்தகு குறிப்பொன்றும் இளம்பூரணர் உரையில் இன்மை, இக்கருத்தின் அகச்சான்றின்மைச் சான்றே. ஒரு தனிப்பாடல் செய்தி கொண்டு இம் முடிவுக்கு வருதல் சாலாது. `மணக் குடி புரியான்` என்பது `மணக்குடவர்` பெயராகலாம். ஆனால் `மணக்குடி புரியராம் அவரே இளம்பூரணர்` என்பதற்கு அப்பாடல் சான்றாகாது. மற்றும் உரையாசிரியராகிய இளம்பூரண அடிகள் எனக் கூறும் அடியார்க்கு நல்லார் மணக்குடவ ராகிய இளம்பூரண அடிகள் என்று கூறத் தவறார். ஏனெனில் உரையாசிரி யர் என்னும் பொதுப்பெயரினும் அவர் குடிப்பெயர் விளக்கமானதன்றோ! தொல்காப்பிய இளம்பூரணருரை முற்றாகக் கிடைத்துளது. அதில் அச்சிறப்புப் பாயிரம் இல்லை. திருக்குறள் மணக்குடவ ருரையும் முற்றாக வாய்த்துளது. அதிலும் அச்சிறப்புப் பாயிரம் இல்லை. சிதைவுற்ற நூலாயின் தனித்துக் கிடைக்க - பிறர் உரைக்கண் கண்டெடுக்க - முறை யுண்டு. அன்னவகை எதுவும் இல்லாச் சிறப்புப் பாயிரங் கொண்டு முடிவுக்கு வருதல் தகுவது அன்று. இளம்பூரணர் திருக்குறள் அதிகாரத் தலைப்புக்குத் தரும் பொருளுரை மணக்குடவ ருரையொடும் பொருந்தி நிற்பதைக் காட்டி ஈருரையும் அவருரையே என்பர். ஈருரையும் பொருந்தாவுரையும் உண்மை யால் வேறுரையாம் என்பார்க்கு மறுமொழி இல்லாமை கண்கூடு. துறவாவது தன்னுடைய பொருளைப் பற்றறத் துறத்தல் என்பது தொல்காப்பியம் (பொ. 75). துறவாவது ஒருவன் தவம் பண்ணாநின்ற காலத்து யாதாயினும் ஒரு தொடர்ப்பாடு உளதாயினும் அதனைப் பற்றறத் துறத்தல் என்பது திருக்குறள் மணக்குடவருரை (அதி.துறவு). ஒப்பியவுரையை அப்படி அப்படியே ஏற்றுக்கொண்டு போற்றுவ தும், ஒப்பா இடத்து மட்டும் தம் உரையும் விளக்கமும் தருதலும் உரை மரபு ஆகலின் இளம்பூரணத்தைக் கற்ற மணக்குடவர் தம் உரையில் அவ்வுரையைப் போற்றிக் கொண்டார் என்பது பொருந்துவதாம். இளம்பூரணர் உரையில் காணும் எடுத்துக்காட்டுகளைத் தொகை யிட்டுக் காண்பவர் திருக்குறள் மணக்குடவர் உரையை இவருரையெனக் கொள்ளார் என்பது தெளிவு. இளம்பூரணர் உரை வழியே நன்னூலார் பலப்பல நூற்பாக்களை இயற்றியுள்ளார். ஆகுபெயர் என்ற அளவானே குறித்தார் தொல்காப் பியர்(சொ.110). அதனை “ஆகுபெயர் என்ற பொருண்மை என்னையெனின் ஒன்றன்பெயர் ஒன்றற்காய் நிற்றல் என்றவாறு” என்றார் இளம்பூரணர். அதனையே நன்னூலார் “ஒன்றன் பெயரான் அதற்கியை பிறிதைத் தொன்முறை யுரைப்பன ஆகு பெயரே” என நூற்பாவாக்கிக் கொண்டார் (பெயர். 33). இவ்வாறு இளம்பூரணக் கொடை மிகக் கொண்டு விளங்கியது நன்னூலாகலின், அந்நூலார் காலத்துக்கு முன்னவர் இளம்பூரணராவர். நன்னூலாரைப் புரந்த சீயகங்கன் காலம் கி.பி. 13ஆம் நூற்றாண்டு என்பர். எனவே அக்காலத்திற்கு முற்பட்டவர் இளம்பூரணர் என்க. புறப்பொருள் வெண்பா மாலையில் இருந்து இளம்பூரணர் மேற்கோள் காட்டியுள்ளார். ஆகலின் அம்மாலை தோன்றிய 9ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர் ஆகிறார் இளம்பூரணர். மேலும் பரணியாற் கொண்டான், (எழுத். 125, 248) என வருவது கொண்டு கூடல் சங்கமத்துப் பரணி கொண்ட வீரராசேந்திரன் காலத்திற்குப் பிற்பட்டவர் எனத் தேர்ந்து 11ஆம் நூற்றாண்டு என்பர். இளம்பூரணர் சோணாட்டைச் சேர்ந்தவர் என்றும், வேளாண் குடியினர் என்றும் கூறுவர். இவர் சோணாட்டைச் சொல்வதுடன் மலாடு மழநாடு முதலிய நாடுகளையும் சேரமான் மலையமான் பாண்டியன் சேரன் செங்குட்டுவன் முதலிய வேந்தர்களையும் குறிக்கிறார். உறையூரைக் கூறும் இவர் கருவூர், மருவூர், குழிப்பாடி, பொதியில் என்பவற்றையும் குறிக்கிறார். இவர் பார்வை தமிழகப் பார்வையாக இருந்தது மிகத் தெளிவாக உள்ளது. கைவாய்க்கால் என்பது சோணாட்டு வழக்கு; இன்றும் வழங்குவது என்பர். அது பாண்டிநாட்டும் இன்றும் வழக்கில் உள்ளதே. ‘கோடின்று செவியின்று’ என்பது கொண்டு இந்நாளிலும் அங்கு அவ்வழக் குண்மையைக் குறிப்பர். ஆனால் அதனைக் கூறுமிடத்தேயே (சொல். 216) ‘கோடின்று செவியின்று’ ‘கோடில செவியில’ ‘கோடுடைய செவியுடைய’ ‘கோடுடைத்து செவியுடைத்து’ என உண்மையும் இன்மையும் அடுக்கிக் கூறுவர். இவரை உண்மைப் பாற்படுத்துவதும், இன்மைப்பாற்படுத்துவதும் வேண்டிற்றன்று. தமிழ்நாட்டு வழக்கு முழுதுற அறிந்த இவர்க்கு எவ்வெடுத்துக்காட்டு முந்து நிற்கிறதோ அதனைக் கூறுவர் எனக் கொள்ளலாம். ‘நும் நாடு யாது என்றால் தமிழ்நாடு என்றல்’ எனச் செப்பும் வினாவும் வழுவாது வருவதற்குக் கூறுவதும் (சொல். 13) ‘தமிழ்நாட்டு மூவேந்தரும் வந்தார்’ என்பதும் (சொல். 33) ‘தமிழ்நாட்டு மூவரும் வந்தார்’ என்பதும் (சொ.250) ‘புலிவிற் கெண்டை’ என்பதும்(சொல். 411) இளம்பூரணரின் தமிழ் நில முழுதுறு பார்வையையே சுட்டுகின்றன. மேலும், “நாயை ஞமலி என்ப பூழி நாட்டார் என்றக்கால் அச்சொல் எல்லா நாட்டாரும் பட்டாங் குணரார்; நாய் என்பதனையாயின் எவ்வெத் திசை நாட்டாரும் உணர்ப என்பது”, என்று கூறும் இவர் உரையால் (சொல். 392) நாடு தழுவிப் பட்டாங்குணரச் செய்தலே இவர் பெரும் பார்வை என்க. இளம்பூரணர் உரைநயங்கள் அருஞ்சொல்லுக்குப் பொருள் கூறுதல் : ‘குயின் என்பது மேகம்’ (எ. 336), ‘மின் என்பது ஓர் தொழிலுமுண்டு பொருளுமுண்டு’ (எ. 346), ‘அழனென்பது பிணம்’ (எ. 355) ‘மூங்கா என்பது கீரி’ (பொ. 550) நவ்வி என்பது புள்ளிமான் (பொ. 556) ‘கராகமென்பது கரடி’ (பொ. 56) இவ்வாறு அருஞ்சொற்பொருள் வேண்டுமிடத்துரைக் கின்றார். கோயில் என்பதா? கோவில் என்பதா? எனின் இரண்டும் சரியே என்பார் உளர். அவற்றுள் `கோயில்` என்பதே சரியானது என்பதை ‘இல்லொடு கிளப்பின் இயற்கையாகும்’ என்னும் நூற்பாவில் (எ. 294) தெளிவாக்குகிறார். ‘கஃறு’ என்பது உருவு. ‘சுஃறு’ என்பது இசை என்பதைத் தேர்ந்து சொல்கிறார் (எ. 40). ‘தபு’ என்பது படுத்துச் சொல்ல `நீசா` எனத் தன்வினையாம் எனவும், அதனை எடுத்துச் சொல்ல `நீ ஒன்றனைச் சாவி` எனப் பிறவினையாம் எனவும் அசையழுத்தம் (யஉஉநவே) காட்டி விளக்குகிறார் (எ. 76). அஃறிணை என்பது அல்திணை. அல்லதும் அதுவே, திணையும் அதுவே எனப் பிரித்துக் காட்டி விளக்குகிறார் (சொ. 2). சேரி என்பது பலர் இருப்பதுமன். ஆயினும் ஆண்டுச் சில பார்ப்பனக்குடி உளவேல் அதனைப் பார்ப்பனச்சேரி என்பது; இஃது உயர்திணைக்கண் தலைமை பற்றி வந்தது என்கிறார் (சொ. 49). “பல பொத்தகம் கிடந்த வழி ஒருவன் ஏவலாளனைப் பார்த்து, பொத்தகங் கொண்டு வா’ என்றால், அவன் ஒரு பொத்தகங் கொண்டு வந்த விடத்துத் தான் கருதிய பொத்தகம் அன்றெனில் ‘மற்றையது கொணா’ என்னும்; என்றக்கால் இக் கொணர்ந்ததனை ஒழிக்கும் சொல் இக் கொணர்ந்த பொத்தகம் சுட்டிற்றாகலான் கொணர்ந்ததனை ஒழிக்குஞ் சுட்டு நிலை அதனை ஒழித்து ஒழிந்ததென்று அவ்வினத் தல்லது பிறிதொன்று குறித்தது கொல்லோ எனிற் குறியா; மற்று அப் பொத்த கத்துள் ஒன்றே பின்னும் குறித்தது எனப்படும்” என்பதன் வழியாக ஓரிலக்கணம் கூறுவதுடன் புத்தகம் என்பதன் செவ்விய வடிவத்தையும் நிலைப்படுத்துகிறார். சங்கத்தார் நாளில் ‘உளறுதல்’ என்பது கூந்தலை உலர்த்துதல் பொருள் தந்தது. அப்பொருளை இளம்பூரணர் காலத்தில் ‘உலறுதல்’ என்பது தரலாயிற்று என்பதை, “உலற்றத் திறமின்றிப் பயின்றார் ஒரு சான்றார் மயிர் நீட்டி உலறி நின்றாரைக் கண்டு ஒருவன், எம்பெருமான் உலறி நின்றீரால் என்றக்கால் வாளாதே உலறினேன் என்னற்க, இது காரணத்தால் உலறினேன் என்க. இது தனக்கு உற்றதுரைத்தது” என்பதன் வழியாக அறிய வைக்கிறார் (சொ. 56). பிறரொடு தொடர்பு இல்லானைக் ‘கெழீஇயிலி’ என்பதும் (சொ. 57) தொழில் செய்யும் ஏவலாட்டியைத் ‘தொழீஇ’ என்பதும் (சொ. 122) அரிய சொல்லாட்சியாம். ‘அண்ணாத்தேரி’ என்பதை இவர் எடுத்துக்காட்டுவதைத் திருவண்ணாமலையகத்து ஏரி எனக் கருத்துரைத்தார் உளர். அது ‘வானம் பார்த்த ஏரி’ என்பதாம். ஆறு, கால் ஆயவற்றின் நீர் வரத்தின்றி வானம் பார்த்து இருக்கும் ஏரியே அப்பெயரியதாம் (எ. 134). ‘அண்ணாத்தல்’ ‘அண்ணாந்து நீர் குடித்தல்’ என்னும் வழக்குகளைக் கொண்டு அறிக. “அண்ணாத்தல் செய்யா தளறு” என்றார் வள்ளுவர். திட்டாத்துக்குளம் என்று பிறர் கூறுவது மேடுபட்ட குளம் என்றாதல் கருதுக. “காமப்புணர்ச்சி எனினும், இயற்கைப்புணர்ச்சி எனினும், முன்னுறு புணர்ச்சி எனினும் தெய்வப்புணர்ச்சி எனினும் ஒக்குமென” ஒரு பொருட் பலபெயரைச் சுட்டி ஐயமகற்றுகிறார் (களவியல் முன்னுரை). செங்கடுமொழி என்பதைக் “கொடிய கடுமொழியேயன்றி மனத்தினால் இனியளாகிக் கூறும் கடுமொழி” என நயமுற விளக்குகிறார் (பொ. 112). ஒத்ததெனப் பொதுவில் தோன்றும் இரண்டன் நுண்ணிய வேறுபாட்டையும் அரிதாக விளக்கிச் செல்கிறார். “மடம் என்பதற்கும் பேதைமை என்பதற்கும் வேறுபாடு என்னை எனின் மடம் என்பது பொருண்மை அறியாது திரியக்கோடல்; பேதைமை என்பது கேட்டதனை உய்த்துணராது மெய்யாக் கோடல்” (பொ. 248). ‘ஐவகை யடியும்’ (செய். 48) என்பது ஆசிரியப்பாவிற்குரிய இலக்கண முடைத்தாயினும் ஓசையின்மையான் ஆசிரியம் எனப்படாது நூலெனப் படும் என்று கொள்க (பொ. 391). “கலத்தலாவது முத்தும் பவளமும் நீலமும் மாணிக்கமும் விரவினாற் போறல். மயக்கமாவது பொன்னும் வெள்ளியும் செம்பும் உருக்கி ஒன்றாதல் போறல்” என்பவற்றைக் காண்க. எடுத்துக்கொண்ட ஒன்றை உவமையால் விளக்கும் நயத்தையும் அரிதாக மேற்கொள்கிறார் இளம்பூரணர். சிறப்புப் பாயிரத்தில் “பாயிரமென்பது புறவுரை. அறநூற்குப் புறவுரையேல் அது கேட்டு என்னை பயனெனின் கற்று வல்ல கணவற்குக் கற்புடையாள் போல இன்றியமையாச் சிறப்பிற்றாயும் திருவமைந்த மாநகரத்திற்கு உருவமைந்த வாயின் மாடம் போல அலங்காரமாதற் சிறப்பிற்றாயும் வருதலானும் பாயிரம் கேளாதே நூல் கேட்குமேயெனில் குறிச்சி புக்கமான்போல மாணாக்கன் இடர்ப்படுமாகலானும் பாயிரம் கேட்டல் பயனுடைத்தாயிற்று” என ஓரிடத்தே மூன்றுவமைகள் வைத்து விளக்குகிறார். இகர உகரங்களுக்கும் குற்றியலிகர குற்றியலுகரங்களுக்கும் ஒலியளவையால் வேறுபாடு உண்டாயினும் உயிர் என்னும் பெயரீட்டில் வேறுபாடு இல்லை என்பாராய், “சந்தனக்கோல் குறுகினவிடத்துப் பிரப்பங்கோல் ஆகாது. அதுபோல இகர உகரங்கள் குறுகினவிடத்தும் அவை உயிர் ஆகற்பாலன” என்கிறார் (எ. 2). உயிர்மெய் ஒலிக்கும் வகையை விளக்கும்போது “மெய்யும் உயிரும் முன்னும் பின்னும் பெற நிற்கும் என்றமையால் அக்கூட்டம் பாலும் நீரும் போல உடன் கலந்ததன்றி விரல் நுனிகள் தலைப்பெய்தாற்போல வேறு நின்று கலந்தன அல்ல என்பது பெறுதும்” என்கிறார் (எ. 18). ‘இதழ் போறலான் வாய் இதழ் எனப்பட்டது’ என வாய்க்கு இதழ் எனப் பெயர் வந்த பொருத்தத்தை உவமையால் விளக்குகிறார் (எ. 83). கலிப்பாவிற்குரிய துள்ளலோசை பற்றிக் கூறும்போது, “துள்ளுத லாவது ஒழுகுநடைத்தன்றி இடையிடையுயர்ந்து வருதல்; கன்று துள்ளிற் றென்றாற்போலக் கொள்க” என்கிறார் (பொ. 387). இவ்வாறே பிறவும் வரும் உவமைகளும் உள. உவமையின் பயன், “புலன் அல்லாதன புலனாதலும், அலங்கார மாகிக் கேட்டார்க்கின்பம் பயத்தலும்”, என்று உவமையியல் முகப்பில் கூறும் அவர்தம் உவமைகளால் தம் கருத்தை மெய்ப்பிக்கிறார் என்க. உரைவளம் இளம்பூரணர் உரைவளம், வேண்டுமிடத்து வேண்டுமள வான் விளங்கி நலம் சேர்க்கின்றது. எழுத்தை எட்டுவகையாலும் எட்டிறந்த பலவகையாலும் உணர்த்தி னார் என அவற்றைக் குறிப்பதும் (எ. முகப்பு) செப்புவகை ஆறு என்பதும், வினாவகை ஐந்து என்பதும் (சொ. 13) தகுதி, வழக்கு ஆகியவற்றைப் பற்றிப் பகுத்துரைப்பதும் (சொ. 17) முதலியவை நன்னூலார் முதலிய பின்னூ லோர்க்கு உதவிய உரைவளங்களாம். “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்னும் நூற்பாவுக்கு (சொ. 152) “பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் இடைச்சொல்லும் உரிச்சொல்லும் ஆகிய எல்லாச் சொல்லும் பொருள் குறியாது நில்லா” என உரை கூறுகின்றார். ‘பொருள் குறித்து நிற்கும்’ என்னாமல், பொருள் குறியாது நில்லா என்று ஈரெதிர் மறைகளால் உடன் பாட்டுக் கருத்தை வலியுறுத்துவது, “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே; அவ்வாறு குறியாதது சொல்லன்று” என்பதை உறுதிபடக் கூறுவதற்கே யாம். முக்காலங்களையும் சுட்டும் இளம்பூரணர், “இறப்பாவது தொழிலது கழிவு; நிகழ்வாவது தொழில் தொடங்கப்பட்டு முற்றுப் பெறாத நிலைமை; எதிர்வாவது தொழில் பிறவாமை” என்கிறார். எளிமையும் அருமையும் மிக்க குறிப்புகள் இவை. கைக்கிளை ‘சிறுமை உறவு’ என்று கூறவேண்டுமெனக் கருதுகிறார் உரையாசிரியர். அதனை, “கை என்பது சிறுமை பற்றி வரும்; அது தத்தம் குறிப்பிற் பொருள் செய்வதோர் இடைச்சொல்; கிளை என்பது உறவு; பெருமையில்லாத தலைமக்கள் உறவு என்றவாறு, கைக்குடை, கையேடு, கைவாள், கைஒலியல், கைவாய்க்கால் எனப் பெருமையில்லாதவற்றை வழங்குபவாகலின்” என விளக்கியமைகிறார் (பொ. 1). கை சிறுமைப் பொருட்டாதலை நிறுவுதற்கு நடைமுறைச் சான்றுகள் பலவற்றை அடுக்குகிறாரே! பொருள் விளக்கம் செய்தலிலும் அவர்க்கிருந்த பற்றுதலின் விளைவு தானே இது! பிரிவு என்னும் உரிப்பொருளைக் கூறும் தொல்காப்பியர், ‘கொண்டு தலைக் கழிதலும், பிரிந்தவண் இரங்கலும்’ என இரண்டாகப் பகுத்துக் கூறுகின்றார். இதனை, “கொண்டுதலைக் கழிதலாவது உடன் கொண்டு பெயர்தல். அது, நிலம் பெயர்தலின் புணர்தலின் அடங்காமை யானும், உடன் கொண்டு பெயர்தலின் பிரிதலின் அடங்காமையானும் வேறு ஓதப்பட்டது” என நூலாசிரியர் கருத்தைத் தெளிவு செய்கிறார் (பொ. 17). “இளமை தீர் திறம்” என ஆசிரியர் கூறினாராயினும் அதனை, “இளமை தீர் திறமாவது; இளமை நீங்கிய திறத்தின்கண் நிகழ்வது. அது மூவகைப்படும்: தலைமகன் முதியனாகித் தலைமகள் இளையளாதலும், தலைமகள் முதியளாகித் தலைமகன் இளையனாதலும், இவ்விருவரும் இளமைப் பருவம் நீங்கிய வழி அறத்தின்மேல் மனம் நிகழ்தலின்றிக் காமத்தின் மேல் மனம் நிகழ்தலும் என” என்கிறார். “எண்ணி உரைகாரர் ஈவார்” என்பதை மெய்ப்பிப்பவை இத்தகையவை (பொ. 54). “கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தல்” என்பதன் விளக்கமும் காண்க (பொ. 87). ‘ஏறிய மடற்றிறம்’ முதலாக ஆசிரியர் சொல்லும் உடன்பாடுகளை ‘ஏறா மடற்றிறம்’ முதலாக எதிர்மறையாக்கிக் கொண்டு இளம்பூரணர் கூறுவது வியப்பு மிக்கது (பொ. 55). “மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்” என்பதற்கு, “குற்றமற்ற செயலையுடைய மழையும் பனியும் வெயிலுமாகிய மூவகைக் காலத்தினையும் நெறியினாற் பொறுத்த அறிவன் பக்கமும்” எனப் பொருள் வரைந்து, “இறந்த காலம் முதலாகிய மூன்று காலத்தினையும் நெறியினால் தோற்றிய அறிவன் பக்கம் என்றாலோ எனின், அது முழுதுணர்ந்தோர்க்கல்லது புலப்படாமையின் அது பொருளன் றென்க” என விளக்குகிறார். தாம் சுட்டிய பொருளே பொருளெனப் பன்னிருபடலச் சான்று காட்டுகிறார். “அறிவன் என்றது கணியனை. மூவகைக் காலமும் நெறியினால் ஆற்றுதலாவது பகலும் இரவும் இடை விடாமல் ஆகாயத்தைப் பார்த்து ஆண்டு நிகழும் வில்லும் மின்னும் ஊர்கோளும் தூமமும் மீன் வீழ்வும் கோள் நிலையும் மழை நிலையும் பிறவும் பார்த்துப் பயன்கூறல்” என மேல் விளக்கம் செய்கிறார் (பொ. 74). எத்தகு நாகரிகமாக மறுக்கிறார். அவருரை முதலுரையாகலின் மறுப் புரை மிகக் கூறவேண்டும் நிலையில்லை. எனினும் பல்வேறு பாடங் களும் உரைகளும் பற்பலரிடத்துக் கேட்டிருக்கக்கூடும். அவற்றை உட்கொண்டு ஒரு விளக்கம் கூறுகிறார். “பன்னிரு படலத்துள் கரந்தைக்கண் புண்ணொடு வருதல் முதலாக வேறுபடச் சிலதுறைகள் கூறினாராதலின், புண்படுதல் மாற்றோர் செய்த மறத்துறையாகலின் அஃது இவர்க்கு மாறாகக் கூறலும் மயங்கக் கூறலு மாம். ஏனையவும் இவ்வாறு மயங்கக் கூறலும் குன்றக் கூறலும் மிகைபடக் கூறலும் ஆயவாறு எடுத்துக்காட்டின் பெருகுமாதலின் உய்த்துணர்ந்து கண்டு கொள்க” என அமைதி காட்டுகின்றார். ஆகலின் மறுப்புக் கூறுதலில் இளம்பூரணர் பெரிதும் மனங் கொண்டிலர் என்பதும், கற்பார் தம் ‘நுண்மாண் நுழைபுலத்தால்’ கண்டுகொள்வார் என அமைந்தார் என்பதும் விளங்கும். தலைவிக்குக் களவில் கூற்று நிகழுமிடங்கள் என்பது குறிக்கும் துறைகளுள் ஒன்று ‘கட்டுரை இன்மை’ என்பது. அதற்குச் சான்று வேண்டுமோ? ‘கட்டுரை இன்மைக்குக் கூற்று நிகழாது’ என்பதும் கூறுகின்றார். எவரேனும் அதற்குச் சான்று இல்லையே என ஐயுறுவரோ என்பதை உன்னித்த குறிப்பு இது (பொ. 109). ‘சிற்றாறு பாய்ந்தாடும்’ எனப் பன்னீரடிப் பஃறொடை வெண்பா ஒன்றைக் காட்டுகிறார் இளம்பூரணர் (பொ. 123). அதில், “இது பன்னிரண் டடியான் பெருவல்லத்தைக் கூற வந்த இன்னிசைப் பஃறொடை வெண்பா” என்று குறிப்பு வரைகிறார். ‘பெருவல்லம்’ என்ற பெயர் இல்லாக்கால் இப் பாடற் பொருள் எவ்வாற்றானும் காணற்கரிது. ஆதலால் ‘திறவு’ வேண் டுங்கால் தந்து செல்லும் `திறம்` இளம்பூரணர் உடைமையாக இருந்துளது எனலாம். அவரே, ‘சூத்திரத்தாற் பொருள் விளங்கும்’ எனவும் (பொ. 585) விடுத்துச் செல்கிறார். சில வழக்காறுகள் இளம்பூரணர் காலத்து வழக்காறுகள் சில அவர் உரை வழியே அறிய வாய்க்கின்றன. எட்டி, காவிதி என்னும் பட்டங்கள் வழங்குவதுபோல் ‘நம்பி’ என்னும் பட்டம் வழங்குதல் (எ. 155), மகப்பாலுக்காக ஆடு வளர்த்தல் (எ. 220), புளிச்சோறு ஆக்குதல் (எ. 247), பேயோட்டுதல் (சொ. 312), வெள்ளாடை மகளிர் உடுத்தல் (சொ. 412), தைந்நீராடல் (சொ. 50), குறித்ததொரு நாளில் கறந்தபால் முழுவதையும் அறத்திற்கென ஆக்குதல் (சொ. 50), ஆடு மாடுகள் தினவுதீரத் தேய்த்துக் கொள்ள `ஆதீண்டு குற்றி` நடுதல் (சொ. 50), சேவற் சண்டை நடத்துதல் (சொ. 61), ஒற்றிக்கலம் (ஆவணம்) எழுதுதல் (சொ. 76), நெல்லடித்துத் தூற்றும் களத்திற்குத் ‘தட்டுப்புடை’ எனப்பெயர் வழங்குதல் (சொ. 77), வெற்றிலையும் பூஞ்செடியும் நடுதல் (சொ. 110), பொழுதின் ஒரு பகுதியைக் கூறு எனக் கூறுதல் (பொ. 9) முதலிய வழக்காறுகள் ஆங்காங்கு அறிய வருகின்றன. பல்துறைப் புலமை நிறுத்தளத்தல், பெய்தளத்தல், நீட்டியளத்தல், தெறித்தளத்தல் தேங்கமுகந்தளத்தல், சாத்தியளத்தல், எண்ணியளத்தல் என எழுவகை அளவைகளைக் கூறுவதும் (எ. 7), “கடுவும் கைபிழி யெண்ணெயும் பெற்றமையான் மயிர் நல்ல ஆயின” என்றும், “எருப்பெய்து இளங்களை கட்டு நீர் கால் யாத்தமையால் பைங்கூழ் நல்ல” என்றும் கூறுவதும் (சொ. 21, 22) “விலங்கும் மரனும் புள்ளும் உள்ள நோய் உற்றாற்கு மனக்குறைக்கு மறுதலை மாற்றம் கூறுவன போலும் குறிப்பின” எனலும் (சொ. 416) வாளானும் தோளானும் வேறலன்றி, “சொல்லான் வேறலும் பாட்டான் வேறலும் கூத்தான் வேறலும் சூதான் வேறலும் தகர்ப்போர் பூழ்ப்போர் என்பனவற்றான் வேறலும்” எனப் போர்வகை அடுக்குதலும் (பொ. 74) (அடியர்) “அகத்திணைக்கு உரியரல்லரோ எனின், அகத்திணை யாவன அறத்தின் வழாமலும் பொருளின் வழாமலும், இன்பத்தின் வழாமலும், இயலல் வேண்டும்; அவையெல்லாம் பிறர்க்குக் குற்றேவல் செய்வார்க்குச் செய்தல் அரிதாகலானும், அவர் நாணுக் குறைபாடுடைய ராகலானும், குறிப்பறியாது வேட்கை வழியே சாரக்கருதுவராகலானும், இன்பம் இனிது நடத்துவார் பிறரேவல் செய்யாதார்” என்பதனானும் “இவர் புறப் பொருட் குரியராயினார் என்க” என்பதனானும் பிறவற்றாலும் இளம்பூரணர் பல்துறைப் புலமை நன்கறிய வருகின்றது. “சாத்தன் கையெழுதுமாறு வல்லன்; அதனால் தன் ஆசிரியன் உவக்கும்; தந்தை உவக்கும்” என்பதால் உரையாசிரியர் கையெழுத்தழகை எவ்வளவு விரும்பினார் என்பது விளங்கும் (சொ. 40). “மனைவியைக் காதலிக்கும்; தாயை உவக்கும்” என்பவற்றால் வாழ்வியல் நுணுக்கத்தை எவ்வளவு தேர்ந்திருந்தார் இளம்பூரணர் என்பது விளங்கும் (சொ. 72). மணந்தபின்னரும் மனைவியைக் காதலிக்கலாம் எனவும், ஒருத்தியை மணந்த பின்னரும் தன் தாயை உவந்து பாராட்டலாம் எனவும் கூறல் அத்தகைய தூய துறவர் இல்லறம் நல்லறமாகத் திகழ வழிகாட்டவும் வல்லார் என்பதை மெய்ப்பிப்பதாம். - இரா. இளங்குமரனார் தமிழ்வளம் -19, தமிழர் வாழ்வியல் இலக்கணம் எனும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது சொல்லதிகாரம் - இளம்பூரணம் கா. நமச்சிவாய முதலியார் - (1927) 1927இல் `கடலகம்’ மயிலை, சென்னையில் கா. நமச்சிவாய முதலியார் அவர்களால் பதிப்பிக்கப்பட்ட நூலினை மூலமாகக் கொண்டு தொல்காப்பிய உரைத்தொகை மீள்பதிப்பாக வெளிவருகிறது) முன்னுரை தொல்காப்பியம் என்னும் நூல், எழுத்து சொல் பொருள் ஆகிய முப்பெரும் பகுதியினை யுடையது இதனை, எழுத்ததிகாரம் சொல்லதிகாரம் பொருளதிகாரம் எனப் பிற்பட வழங்கலாயினர். இறையனார் களவியல் உரையுள், `இதனைப் பொருட்பாலிற் கண்டு கொள்க’ எனக் காணப்படுதலின், மேற்கூறிய பகுதிகள் எழுத்துப்பால், சொற்பால், பொருட்பால் என வழங்கி யிருந்ததுங் கூடுமென ஊகித்தற்கு இடமுண்டு. தொல்காப்பியம் முழுமைக்கும் உரை கண்டார் இருவர் ஆசிரியர், அவருள் முதன் முதலில் உரைகண்டவர் இளம்பூரண அடிகள். இறுதியிற் கண்டவர் நச்சினார்க்கினியர். பேராசிரியர் என்பார் ஒருவரும் இவ்வாறே நூல் முழுமைக்கும் உரை கண்டனர் என்ப அவற்றுள் மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் ஆகிய இந் நான்கிற்கும் உரை கிடைத்திருக்கின்றது. தொல்காப்பியம் சொல்லதிகாரத்திற்குப் பல்லோர் பலதிறப்பட உரை வகுத்துள்ளார், அவருள்ளும் முதற்கண் உரை கண்டவர் இளம்பூரணரே யாவர்; பின்னர், கல்லாடனார், சேனாவரையர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார் என்பவர்களும் உரை வகுத்தனர், இவற்றுக்கெல்லாம் முதன்மையாக நிற்பது இளம்பூரணர் எழுதிய உரையேயாம். எழுத்ததிகாரத்திற்கும் இரண்டு உரைகள் உண்டு; ஒன்று இளம்பூரணரும் மற்றொன்று நச்சினார்க்கினியரும் எழுதியவை. இச் சொல்லதிகாரம் நலம்பெற முடிவுபெறக் காரணமா யிருந்தவர் என்னுடன் தமிழ் பயின்றவராகிய அறிஞர் சே. சிவஞானம் பிள்ளை யவர்கள்; இவர் நல்ல ஏடு ஒன்றைத் தேடித் தந்து, என்னை அடிக்கடி ஊக்கிவந்தனர். இந்நூலை யான்அச்சிட முயன்ற காலத்து என்னுடனிருந்து சுவடிகளை ஒப்பிட்டுத் தூய்மைசெய்யத் தொடங்கினவர் செந்தமிழறிஞர் தி.த. கனகசுந்தரம் பிள்ளை யவர்கள்; இந்நூல் 64 பக்கங்கள் முடியுமுன்னரே அவர் காலஞ்சென்றனர்; அதன் பொருட்டு யான் பெரிதும் கவல்கின்றேன். பின்னர் இந்நூல் வெளிவர என்னைப் பெரிதும் ஊக்கி வந்தவர் செந்தமிழறிஞர் எஸ். அநவரதவிநாயகம் பிள்ளை யவர்கள், அதன் பொருட்டு அன்னார்க்கு நன்றி கூறுகின்றேன். மற்றும், இந்நூல் அச்சிடத் தொடங்கியதுமுதல் முடிவு காறும் என்னுடனிருந்து, ஏடுகளை ஒப்புநோக்குதல் முதலிய செயல்களைச் சோர்வுபடாது செய்து வந்தவராகிய செல்வச் சிரஞ்சீவி, மு. எத்திராஜுலு நாயுடு அவர்கள் திறம் நன்கு பாராட்டற்பாலதாம். ஏதும் அறியாத இச் சிறியேனை இந் நன்முயற்சிக்கண் புகுத்தித் தோன்றாத துணையாக விருந்து அருள்புரியும் தணிகைப் பெருமானை என் மன மொழி மெய்களால் வாழ்த்தி வணங்குகின்றேன். `கடலகம்’ கா. நமச்சிவாயன். மயிலை, சென்னை 1927 இளம்பூரண அடிகள் உரைத்திறம் இவ் வுரையாசிரியராகிய இளம்பூரணரை இளம்பூரண அடிகள் என்றும் கூறுவது வழக்கு. இவர் தொல்காப்பியத்திற்கு முதற்கண் உரைகண்டவர் என்பதுபற்றிச் சேனாவரையர் முதலியோரும் இவரை உரையாசிரியர் என்றே சிறப்பித்துக் கூறுவர். இவரைப்பற்றிய செய்தி வேறு யாதும் புலப்படவில்லை. இளம்பூரணர் நூலுக்கு உரை வகுக்குங்கால், முதலில் சூத்திரம் நுதலியதைத் தொகுத்துச் சுட்டி, பின்னர், சொற்களையும் சொற்றொடர்களையும் பிரித்துக்காட்டி, என்பது என்று தொடங்கி, உரைவகுத்து, ஈற்றில் என்றவாறு என முடிப்பது பெருவழக்கு, சிறுபான்மை வேறு வகையாகவும் உரைப்பர். சில சூத்திரங்கள் நுதலியது இன்னதெனக் கூறாதுஞ் செல்லுவர். சில சூத்திரங்களுக்குப் பொழிப்புரையுங் கூறுவர். சிற்சில இடங்களில் சூத்திரங்களுக்கு முடிபு காட்டி, இலக்கணங் கூறுவர்; இன்றியமையாத சில சொற்களுக்குத் தனிப்பட உரையும் விரிப்பர். சில இடங்களில் கருத்துரை கூறிச்செல்வர்; சில சூத்திரங் களின் பகுதியைப் பிரித்துக்காட்டி வரலாற்று முறையால் விளக்குவர்; சில இடங்களில் மிகப் பெருக்கமாகவும் உரை விரிப்பர். சில சூத்திரங்களுக்கு வரலாறு காட்டி உரை விரிப்பர்; சில சூத்திரங்களுக்கு முடிவிடங்களைத் தொகுத்துக்கூறி, மற்றப் பகுதிகட்கு வரலாற்றின் மூலமாக உரை விளக்குவர். சில இடங்களில் சில சூத்திரங்களை உடன்கூட்டி, `உரையியைபு நோக்கி இவ்வாறு கூறப்பட்டது’ என்பர். சில சூத்திரங்களில் மொழிகளை மாற்றியமைத்து முடிவிடங் கூறுமாற்றால் மற்றொருவர் கருத்தையுங் காட்டுவர். சில சூத்திரங்களின் ஒரு பகுதிக்குப் பொழிப்புக்கூறி மற்றையவற்றிற்கு சொல்லாற்றல் தோன்றப் பொருள்விரிப்பர். சில சூத்திரங்களுக்கு வரலாறு காட்டி அதனையே உரையாகச் செய்வர். இனி,`கல்வியினாகிய காரணம் வந்தவழிக் கண்டுகொள்க’ (சூத். 31) எனவும், `அது பாடமறிந்து திருத்திக்கொள்க’ (சூத். 35) எனவும், `வழக்குப் பெற்றுழிக் கொள்க’ (சூத். 44) எனவும், `முதல் சினையாவது வந்தவழிக் கண்டுகொள்க’ (சூத் 70) எனவும், `வழக்குப் பெற்றவழிக் கண்டுகொள்க.’ (சூத் 83) எனவும், `ஓகார ஈறும் ஏகார ஈறுமாய் வருவன விரவுப் பெயர் உளவேற் கண்டுகொள்க’ (சூத். 101) எனவும், `இன்றிவர் என்பது இத்துணைவர் என்னும் பொருட்டுப் போலும்’ (சூத். 110) எனவும், `செய்ம்மன என்பது இப்போது வழக்கரிது’ (சூத். 138) எனவும், `உண்ணு வந்தான் என்பது இப்பொழுது வழக்கினுள் உண்ணாவந்தான் என நடக்கும்’ (சூத். 143) எனவும், `இனிப் பலவினத்து எச்சம் அடுக்கி வருமாறு வழக்கினகத்துக் கண்டுகொள்க’ (சூத். 145) எனவும், `அன்னவாங்கு உள்வழி’ (சூத். 155) எனவும், `அதற்கு மெய்யுடை வல்லோர்வாய்க் கேட்டுணர்க’ (சூத். 223) எனவும், `இதுவும் மெய்யுரை போலும் என்பது’ (சூத். 250) எனவும், அழான், புழான் என்பன அக்காலத்து அவை உண்மையான ஆசிரியன் ஓதி முடிபு காட்டப்பட்டன’ (சூத். 257) எனவும் இவ்வுரையாசிரியரே கூறுவதனால், இவர் காலத்திலேயே ஐயப்பாட்டிற்கு இடமான செய்திகள் பல இருந்திருத்தல் வேண்டுமெனத் தோன்றுகின்றது. அன்றியும் ஒருவன் (4, 20, 29) ஒரு திறத்தார் (4, 41, 45, 259), ஒருவன் சொல்லுவது (6, 17), ஒருசார் ஆசிரியர் (17, 33, 43) என்பாரும் உளர் (24, 26), ஒரு கருத்து (51, 53, 252), இருதிறத்தார் ஆசிரியர் (92), ஒரு சாரார் (222, 259, 261), இப்பகுதியர் ஆசிரியர் (236), எனக்கூறுவதை நோக்கின், இவ்வுரையாசிரியருக்கு முன்பே தொல்காப்பியத்திற்குப் பல்லோர் உரை வழங்கிவந்ததென்பது நன்கு விளங்கும். கிளவியாக்கம் கிளவி-சொல் ஆக்கம்-ஆதல். சொற்கள் பொருள் மேல் ஆமாறுணர்த்தினமையின் கிளவியாக்கமென்னும் பெயர்த் தாயிற்று என இளம்பூரணரும், வழுக்களைந்து சொற்களை அமைத்துக் கொண்டமையால் கிளவியாக்கமாயிற்று எனச் சேனாவரையரும் நச்சினார்க்கினியரும், சொற்கள் ஒன்றோ டொன்று தொடர்ந்து பொருள்மேல் ஆகும் நிலைமையைக் கூறுவது இவ்வியலாதலின் கிளவியாக்கம் என்னும் பெயர்த்தாயிற்று எனத் தெய்வச்சிலையாரும் இவ்வியலுக்குப் பெயர்க்காரணங் கூறினர். கிளவியது ஆக்கத்தைக்கூறுவது கிளவியாக்கம் என வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையாகக்கொண்டார் தெய்வச்சிலையார். இவ்வியலின் சூத்திரங்கள் அறுபத்திரண்டென இளம்பூரணர் நச்சினார்க்கினியரும், அறுபத்தொன்றெனச் சேனாவரையரும், ஐம்பத்தொன்பதெனத் தெய்வச்சிலையாரும் பகுத்து உரை கூறியுள்ளார்கள். சொல் உயர்திணைச்சொல், அஃறிணைச்சொல் என இரண்டு வகைப்படும். அவற்றுள் உயர்திணைச்சொல் ஆடூஉ வறிசொல், மகடூஉ வறிசொல், பல்லோரறிசொல் என மூவகைப்படும். இம்மூன்றினையும் முறையே ஆண்பாற்சொல், பெண்பாற்சொல், பலர்பாற்சொல் எனப் பிற்காலத்தார் வழங்குவர். அஃறிணைச் சொல் ஒன்றறிசொல், பலவறிசொல் என இரு வகைப்படும். இவற்றை முறையே ஒன்றன்பாற்சொல், பலவின்பாற்சொல் எனப் பிற்காலத்தார் வழங்குவர். அறிவார்க்குக் கருவியாகிய சொல் அறிசொல்லாயிற்று. உயர்திணையென்பது மற்றுள்ள பொருளெல்லாவற்றினும் உயர்வாகியபொருள் என விசேடித்து நின்றமையின் பண்புத் தொகையாமென்றும், உயர்ந்த மக்கள் உயராநின்ற மக்கள் உயரும் மக்கள் என மூன்று காலமுங் கொள்வார்க்கு வினைத் தொகையுமாமென்றும், மக்களாவார் ஒருதன்மையரன்றி ஆண், பெண், அலியென்னும் வடிவு வேற்றுமையுடையராகலின் அவரெல்லாரிடத்தும் பொதுவாக அமைந்துள்ள மக்கட்டன் மையைக் குறித்து மக்கள் இவர் என்னும் பொதுப் பொருண்மை உயர்திணையாமென்பதறிவித்தற்கு மக்களென்னாது மக்கட் சுட்டென்றாரென்றும், மக்களல்லாத உயிருடையனவும் உயிரில் லனவும், அஃறிணையாமென்பதறிவித்தற்கு அவரல பிற என்றரென்றும் கூறுவர் தெய்வச்சிலையார். உயர்திணையல்லாத திணை அஃறிணையாதலின் அல்திணை அஃறிணை யென்றாயிற்று. உயிர்பொருள், உயிரில்பொருள் என்னும் அஃறிணைப் பொருள்வகை யிரண்டனுள் உயிர்ப்பொருள் வகையுள் ஆண் பெண் வேறுபாடு காணப்படுமேனும் அவ்வேறுபாடு உயிருள்ள வற்றுள் சிலவற்றிற்கும் உயிரில்லாத பொருள்களுக்கும் இயையா மையால் உயிருள்ளன இல்லனவாகிய எல்லாவற்றிற்கும் பொருந்த ஒன்றறிசொல், பலவறிசொல் என்னும் இருவகைச் சொன் முடிபுகளே வகுக்கப் பெறுவனவாயின. மக்கட் பிறப்பிலே தோன்றிப் பெண்தன்மை மிகுந்தும் ஆண் தன்மை குறைந்தும் ஆண் பெண் என்னும் இருவகையுங் கலந்து நிற்கும் பேட்டினைக்குறித்த பெயர்ச்சொல்லும் தெய்வத்தைக் குறித்த பெயர்ச்சொல்லும் இருதிணை ஐம்பால்களுள் இன்னபால் எனத்தெரிந்து கொள்ளுதற்குக் கருவியாகிய ஈற்றெழுத்தினை (விகுதியினை) உடையன அல்ல. அவைதாம் உயர்திணைப் பெயராய் நின்று ஆண்பாற்சொல் முதலியவற்றின் விகுதியினையே தம் வினைக்கீறாகப்பெற்று இன்னபால் என விளங்கி நிற்பனவாம். இவற்றின் இயல்பினை இவ்வியல் 7ஆம் சூத்திரத்தால் ஆசிரியர் தெளிவுபடுத்துகின்றார். னகரமாகிய மெய்யெழுத்தை இறுதியாகவுடையது ஆண் பாற் சொல்லாம். ளகரமெய்யை இறுதியாகவுடையது பெண் பாற் சொல்லாம். ரகரமெய்யும் பகரவுயிர்மெய்யும் மார் என்னும் சொல்லும் ஆகிய இம்மூன்றனுள் ஒன்றை யிறுதியாகவுடைய சொல் பலர்பாற் சொல்லாம். து, று, டு எனவரும் மூன்றெழுத் துக்களுள் ஒன்றையிறுதியாகப்பெற்றசொல் ஒன்றன்பாற் சொல்லாம். அ, ஆ, வ என்பவற்றுள் ஒன்றை யிறுதியாகப்பெற்றது பலவின் பாற் சொல்லாம். இவ்வாறு இருதிணைக்கண்ணும் ஐந்துபாலும் விளங்க இறுதியில் நின்றொலிக்கும் இப்பதினோ ரெழுத்தும் வினைச் சொல்லிடத்தேதான் தெளிவாகப் புலப்படுவன. இவை பெயரொடு வருவழித் திரிபின்றி ஐம்பாலை விளக்கும் ஆற்றலுடையன அல்ல. எனவே “இருதிணைமருங்கின் ஐம்பாலறிய ஈற்றில்நின்று இசைக்கும் பதினோரெழுத்தும் தோற்றந்தாமே வினையொடு வருமே” என்றார் தொல்காப்பியனார். இதனால் இருதிணை ஐம்பால்களையும் ஒருவன் சொல்லகத்து அறியுமாறு இவ்வாறென ஆசிரியர் விளக்கினமை காண்க. இருதிணையுள் ஒருதிணைச்சொல் ஏனைத் திணைச் சொல்லொடு முடிவது திணைவழு, ஒருதிணையுள் ஒருபாற்சொல் அத்திணையிலுள்ள ஏனைப் பாற்சொல்லொடு முடிவது பால்வழு. தன்மை, முன்னிலை, படர்க்கையாகிய மூவிடச் சொற்களுள் ஓரிடச்சொல் பிறவிடச் சொல்லொடு முடிவது இடவழு. இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்னும் மூன்று காலங்களுள் ஒரு காலத்தினைக் குறித்த சொல் ஏனைக் காலச்சொல்லொடு முடிவது காலவழு. வினாவுக்கு ஏற்ற விடையாகாதது செப்புவழு. வினாவுதற்குரியதல்லாத பொருளைப்பற்றி வருவது வினாவழு. ஒருபொருட்குரிய வழக்குச் சொல் மற்றொரு பொருள்மேற் சென்றது மரபுவழு. இங்ஙனம் திணை, பால், இடம், காலம், செப்பு, வினா, மரபு என்னும் இவ்வேழு வகையாலும் சொற்கள் வழுவாமற் காத்தலே வழுக்காத்தலெனப்படும். வழுவற்கவென்றலும், வழுவமைத்தலும் என வழுக்காத்தல் இருவகைப்படும். குறித்த பொருளை அதற்குரிய சொல்லாற் சொல்லுகவென்றல் வழுவற்க வென்றலாம். குறித்த பொருளுக்குரிய சொல்லன்றாயினும் ஒருவாற்றால் அப்பொருள் தருதலின் அமைத்துக்கொள்க என அமைதிகூறுதல் வழுவமைத்தலாகும். இவ்வியலின் 11-ஆம் சூத்திர முதலாகவுள்ள சூத்திரங்கள் மேற்கூறிய இருவகையானும் வழுக்காப்பனவாம். - க. வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 191-194 முதலாவது கிளவியாக்கம் 1. உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே அஃறிணை யென்மனா ரவரல பிறவே ஆயிரு திணையி னிசைக்குமன் சொல்லே என்பது சூத்திரம். இவ்வதிகாரம், சொல்லிலக்கணம் உணர்த்தினமை காரணத்தாற் சொல்லதிகாரம் என்னும் பெயர்த்து. சொல் என்பது, எழுத்தொடு புணர்ந்து பொருள் அறிவுறுக்கும் ஓசை. அதிகாரம் என்பது முறைமை. மற்று, அச் சொல் எனைத்து வகையான் உணர்த் தினானோ வெனின், எட்டு வகைப்பட்ட இலக்கணத்தான் உணர்த்தினான் என்க. அவையாவன: இரண்டு திணை வகுத்து, அத்திணைக்கண் ஐந்து பால் வகுத்து, எழுவகை வழு வகுத்து, எட்டு வேற்றுமை வகுத்து, அறுவகை ஒட்டு வகுத்து, மூன்று இடம் வகுத்து, மூன்று காலம் வகுத்து, இரண்டு இடத்தான் ஆராய்தல். இரண்டு திணையாவன1: உயர்திணையும், அஃறிணையும். ஐந்து பாலாவன: ஒருவன், ஒருத்தி, பலர், ஒன்று, பல என்பன.2 எழுவகை வழுவாவன: திணைவழு, பால்வழு, இடவழு, காலவழு, செப்புவழு, வினாவழு, மரபுவழு என்பன. எட்டு வேற்றுமையாவன: பெயர், ஐ, ஒடு, கு, இன், அது, கண், விளி என்பன. அறுவகை ஒட்டாவன: வேற்றுமைத்தொகை, உவமத் தொகை, வினையின்றொகை, பண்பின்றொகை, உம்மைத் தொகை, அன்மொழித் தொகை என்பன. மூன்று இடமாவன: தன்மை, முன்னிலை, படர்க்கை என்பன. மூன்று காலமாவன: இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்பன. இரண்டு இடமாவன: வழக்கிடம், செய்யுளிடம் என்பன. இனி, இவ்வதிகாரத்து முதற்கண்ணோத்து என்ன பெயர்த்தோவெனின், கிளவிகள் பொருண்மேலாமாறு உணர்த்தினமையின் கிளவியாக்கம் என்னும் பெயர்த்து; என்னை? ஒருவன் மேலாமாறிது, ஒருத்தி மேலாமாறிது, பலர் மேலாமாறிது, ஒன்றன் மேலாமாறிது, பலவற்றின் மேலாமாறிது, வழுவாமாறிது, வழுவமைதியாமாறிது எனப் பொருள்கண்மேல் ஆமாறு உணர்த்தினமையின் இப்பெயர்த்தாயிற்று. இவ்வோத்தின் தலைக்கட் கிடந்த சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், சொல்லும் பொருளும் வரையறுத்து உணர்த்துதல் நுதலிற்று. உரை: உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டு என்பது - உயர்திணையென்று சொல்லுவர் ஆசிரியர் மக்களென்று சுட்டப்படும் பொருளை யென்றவாறு; அஃறிணை யென்மனார் அவரல பிற என்பது - அஃறிணை யென்று சொல்லுவர் ஆசிரியர் மக்களல்லாத பிறபொருளை யென்றவாறு; ஆயிருதிணையின் இசைக்குமன் சொல்லே என்பது - அவ்விருதிணையையும் இசைக்குஞ் சொல் என்றவாறு. எனவே, உயர்திணைச் சொல்லும், உயர்திணைப் பொருளும், அஃறிணைச் சொல்லும், அஃறிணைப் பொருளும் எனச் சொல்லும் பொருளும் அடங்கின. உலகத்தின் மக்கள் என்ற பொருளை உயர்திணை யென்றது கூறுபாடின்மையின். அஃறிணை கூறுபாடுடைமையின், `அஃறிணை யென்மனார் அவரல’ என்னாது, `பிற’ என்றான்; அவை, உயிருடை யனவும் உயிரில்லனவும் என இரண்டு கூற்றன என்றற்கு அவற்றது கூறுபாடெல்லாம் அறிந்துகொள்க. மற்று, உயர் என்னுஞ் சொல் முன்னர்த் திணை என்னுஞ் சொல் வந்து இயைந்தவாறியாதோவெனின், ஒரு சொல் முன் ஒரு சொல் வருங்கால், தொகைநிலை வகையான் வருதலும், எண்ணுநிலை வகையான் வருதலும், பயனிலை வகையான் வருதலும் என மூன்று வகையான் அடங்கும். அவற்றுள், தொகைநிலை வகையான் வந்தது `யானைக்கோடு’ என்பது. எண்ணுநிலை வகையான் வந்தது `நிலனும் நீரும்’ என்பது. பயனிலை வகையான் வந்தது `சாத்தன் உண்டான்’ என்பது. அவற்றுள் இஃது உயர்திணையென இறந்தகாலந்தொக்க வினைத்தொகை. இனி, என்மனார் என்பது, என்ப என்னும் முற்றுச் சொல்லைக் 3குறைக்கும்வழிக் குறைத்தல் (தொல். சொல். எச்ச. 7) என்பதனாற் பகரங் குறைத்து, விரிக்கும்வழி விரித்தல் (தொல். சொல். எச்ச. 7) என்பதனால் மன்னும் ஆரும் என்பன இரண்டிடைச்சொற் பெய்து விரித்தான். என்மனார் ஆசிரியர் என்று முடியற்பாற்று, முற்றுச்சொல் எச்சப்பெயர் கொண்டு முடியும் என்பவாகலின். இது செய்யுணோக்கித் தொகுத்துக் கூறினான் என்பது. இனி, மக்கட் சுட்டே யென்பது, மக்கள் என்று வரைந்து சுட்டுதற்குக் காரணமாகிய தன்மை யென்னும் ஒருவன். இனி, மக்கள் எனினுஞ் சுட்டு எனினும் அவரையே சொல்லியவா றென்ப ஒரு திறத்தார். சுட்டென்பது கருத்து; அக்கருதற்பா டுடைமையிற் சுட்டெனவும்படும் மக்கள் என்பது. இனிச் சுட்டே யென்புழி ஏகாரம் ஈற்றசை ஏகாரம். அஃறிணை யென்பது அல்திணை யென்றவாறு அல்லதும் அதுவே, திணையும் அதுவே. மேற்சொல்லப்பட்ட உயர்திணை யல்லாத திணை அஃறிணை யெனக் கொள்க. ஈண்டும் என்மனார் என்பதற்கு மேற் சொல்லியவாறே சொல்லுக. இனி, அவர் என்னுஞ் சொல்லின் முன்னர் அல்ல என்னுஞ் சொல் வந்து இயைந்தவா றியாதோவெனின், அவரினல்ல என்பான் அவரல்ல என்றான், ஐந்தாம் வேற்றுமைப் பொருளென்பது. இனி, அல்ல பிற என்பது, அல்லவும் பிறவும் என உம்மைத் தொகை யென்றலும் ஒன்று. இனி, அவ் வுயர்திணை யல்லன வெல்லாம் அவ் வுயர்திணை போல ஓரினத்த அல்ல; தத்தம் வகையான் வேறுபட்டன உயிருடையனவும் உயிரில்லனவும் என்பது. ஏகாரம் ஈற்றசை யேகாரம். ஆயிரு திணையி னிசைக்கும் என்புழி, ஆயிரு திணையையும் என ஐகார வேற்றுமை விரித்துரைக்க. இன் சாரியை. இசைக்கும் என்பது செய்யும் என்னும் பெயரெச்சம். மன் என்பது இடைச் சொல். ஏகாரம் ஈற்றசை யேகாரம். (1) 2. ஆடூஉ வறிசொல் மகடூஉ வறிசொல் பல்லோ ரறியுஞ் சொல்லொடு சிவணி அம்முப் பாற்சொல் லுயர்திணை யவ்வே. இச்சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், மேல் திணைகூறு செய்தெனத் திணையுட் பால்கூறு செய்தல் நுதலிற்று. உரை: ஆடூஉவினை யறியுஞ் சொல்லும், மகடூஉவினை யறியுஞ் சொல்லும் பல்லோரை அறியுஞ் சொல்லொடு பொருந்தி அம் முப்பாலை யறிவிக்குஞ் சொல் உயர்திணை யுடையன என்றவாறு. ஆடூஉ என்றது ஆண்மகனை; மகடூஉ என்றது பெண் மகளை; பல்லோர் என்றது அவர் தொக்க பன்மையை. இனி, அப்பொருள் மூன்று கூறுபடவே, அவற்றை யுணர்த்துஞ் சொல் மூன்று கூறுபடும் என்பது இது தந்திரவுத்தி வகைமை கூறல். (2) 3. ஒன்றறி சொல்லே பலவறி சொல்லென்று ஆயிரு பாற்சொ லஃறிணை யவ்வே. இச்சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், மேல் அஃறிணை யென்றான், அதனை யினைத்துப் பால்படும் என்று அது படும் பாலை விரித்துணர்த்துதல் நுதலிற்று. உரை: ஒன்று, பல என்னும் இருபாலையும் உணர்த்துஞ் சொல் அஃறிணையுடையன என்றவாறு. (3) 4. பெண்மை சுட்டிய வுயர்திணை மருங்கின் ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியும் தெய்வஞ் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும் இவ்வென வறியுமந் தந்தமக் கிலவே உயர்திணை மருங்கிற் பால்பிரிந் திசைக்கும். இச் சூத்திரம் என்நுதலிற்றோவெனின், ஐயமறுத்தல் நுதலிற்று. உரை: பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின் என்பதனை மொழிமாற்றி, உயர்திணை மருங்கின் பெண்மை சுட்டிய எனக் கொள்க. தெய்வஞ் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும் என்பது - தெய்வத்தைச் சுட்டிய பெயர்ப் பொருளும் என்றவாறு; இனிப் பெயர்நிலைக் கிளவியென்பதற்கு ஒருவன் சொல்லுவது: பெயர் என்பதனை ஆகுபெயராற் பொருளாக்கி, பொருண்மேல் நிலை பெற்ற கிளவி யென்னும்; இவ்வென அறியும் அந்தந் தமக்கிலவே என்பது - தம்மை வேறுபாலறிய நிற்கும் ஈற்றெழுத்தினை யில என்றவாறு; உயர்திணை மருங்கிற் பால்பிரிந்து இசைக்கும் என்பது - உயர்திணை மருங்கின் முப்பாலினையும் புலப்படுக்கும் எழுத்தினைத் தமக்கு ஈறாக இசைக்கும் என்றவாறு (வரலாறு) பேடி வந்தான், பேடி வந்தாள், பேடியர் வந்தார் எனவும்; வாசுதேவன் வந்தான், திருவினாள் வந்தாள், முப்பத்து மூவரும் வந்தார் எனவும் வரும். `இவ்வென அறியும் அந்தந் தமக்கிலவே’என்னும் இலேசினால், நரகன் வந்தான், நரகி வந்தாள், நரகர் வந்தார் என்பன கொள்க. (4) 5. னஃகா னொற்றே யாடூஉ வறிசொல். இச்சூத்திரம் என்நுதலிற்றோவெனின், ஆடூஉ அறிதற்கு ஈற்றெழுத்து உணர்த்துதல் நுதலிற்று. உரை: னஃகானாகிய வொற்று ஆடூஉவினை யறிவார்க்குக் கருவியாஞ் சொல் என்றவாறு வரலாறு: உண்டான் என்னும் இறந்தகாலத்தானும், உண்ணா நின்றான் என்னும் நிகழ்காலத்தானும், உண்பான் என்னும் எதிர்காலத்தானும்; கரியன், செய்யன் என்னும் வினைக் குறிப்பினானும், இங்ஙனம் னகர விறுதியாய படர்க்கை வினைமுற்றுச் சொல்லான் உயர்திணை யாண்பால் உணர்த்தப்படும். `படர்க்கையிடம்’ என்பது முன்னர் வினையியலுட் பெறுதும் `வினை’ யென்பது, `இருதிணை மருங்கின் ஐம்பா லறிய’ (தொல். சொல். கிளவி. 10) என்னுஞ் சூத்திரத்தாற் பெறுதும். உண்டான் என்றவிடத்து நான்கெழுத்து உளவே யாயினும், னகரத்தை ஆடூஉவறியுஞ் சொல்லென்றார், அதன் கட்டலைமை நோக்கி. ஏகாரம் பிரிநிலை. (5) 6. ளஃகா னொற்றே மகடூஉ வறிசொல். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், மகடூஉ அறிதற்கு ஈற்றெழுத்து உணர்த்துதல் நுதலிற்று. உரை: ளஃகானாகிய வொற்று மகடூஉவினை யறிவார்க்குக் கருவியாஞ் சொல், என்றவாறு. வரலாறு: உண்டாள், உண்ணாநின்றாள், உண்பாள் எனவும்; கரியள், செய்யள் எனவும் வரும் வினையாலும் வினைக் குறிப்பாலும் மகடூஉவை விளக்கியவா றறிக. (6) 7. ரஃகா னொற்றும் பகர விறுதியும் மாரைக் கிளவி யுளப்பட மூன்றும் நேரத் தோன்றும் பலரறி சொல்லே. இச்சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், பல்லோரை யறியுஞ் சொற்கு ஈறாம் எழுத்து உணர்த்துதல் நுதலிற்று. உரை: ரஃகானும் அதுவே, ஒற்றும் அதுவே; பகரமும் அதுவே, இறுதியும் அதுவே; மாரைக்கிளவி யுளப்பட மூன்றும் என்பது - மார் என்னுஞ் சொல் அகப்பட மூன்றும் என்றவாறு; நேரத்தோன்றும் என்பது - நிரம்பத்தோன்றும் என்றவாறு; பலரறி சொல்லே என்பது - பலரை யறிதற்குக் கருவியாஞ் சொல் என்றவாறு. `நேரத் தோன்றும் பலரறி சொற்கு’ என்பான், உருபு தொகுத்துச் `சொல்லே’யென்றான் என்பது. ஏகாரம் ஈற்றசை யேகாரம். (வரலாறு) உண்டார், உண்ணாநின்றார், உண்பார் எனவும்; கரியர், செய்யர் எனவும் ரகர இறுதியாகி நின்ற படர்க்கை வினைமுற்றுச் சொல்லால் உயர்திணைப் பன்மைப்பால் உணர்த்தப்படும். இனி, உண்ப, தின்ப என எதிர்காலத்துப் பகரவிறுதி முற்றுச் சொல்லான் உயர்திணைப் பன்மைப்பால் உணர்த்தப் படும். `ஆர்த்தார் கொண்மார் வந்தார், பூக்குழா லென்னையர்க ணில்லாத தீது’ என மார் இறுதியாக நின்ற எதிர்காலத்துப் படர்க்கை வினைமுற்றுச் சொல்லால் உயர்திணைப் பன்மைப் பால் உணர்த்தப்படும். (7) 8. ஒன்றறி கிளவி தறட வூர்ந்த குன்றிய லுகரத் திறுதி யாகும். இச்சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், அஃறிணை யொருமைப் பாற்குரிய எழுத்து உணர்த்துதல் நுதலிற்று. உரை: ஒன்றனை யறிவிக்குஞ் சொல் த, ற, டக்களை யூர்ந்த குற்றியலுகரத்து ஈறாகும், என்றவாறு (வரலாறு) உண்டது, உண்ணாநின்றது, உண்பது எனவும்; கரியது, செய்யது எனவும் வினையானும் வினைக்குறிப்பானும் தகரமூர்ந்த குற்றுகரத்தான் அஃறிணை யொருமைப்பால் விளங்கும். கூயிற்று, தாயிற்று எனவும்; கோடின்று, குளம்பின்று எனவும் வரும் றகரம். குண்டுகட்டு, குறுந்தாட்டு என வரும் டகரம். (8) 9. அ ஆ வஎன வரூஉ மிறுதி அப்பான் மூன்றே பலவறி சொல்லே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின்; அஃறிணைப் பன்மைப் பாற்கு ஈறாமாறு உணர்த்துதல் நுதலிற்று. உரை: அ, ஆ, வ என்று சொல்லப்படுகிற இறுதிகளை யுடைய அக் கூற்று மூன்று சொல்லும் பலவற்றை யறியுஞ்சொல், என்றவாறு (வரலாறு) அகாரம் - உண்டன, உண்ணாநின்றன, உண்பன எனவும்; கரிய, செய்ய எனவும் வரும். ஆகாரம் - உண்ணா, தின்னா எனவரும்; இது மூன்று காலத்தையும் எதிர்மறுக்கும் எதிர்மறைக்கண் அல்லது பால் விளங்கி நில்லா. வகாரம் - உண்குவ, தின்குவ என எதிர்காலம் பற்றி வரும். `வரூஉம் இறுதி யப்பால் மூன்று’ என்பது இறுதியை யுடைய அக்கூற்று மூன்று என்றவாறு. (9) 10. இருதிணை மருங் கினைம்பா லறிய ஈற்றுநின் றிசைக்கும் பதினோ ரெழுத்தும் தோற்றந் தாமே வினையொடு வருமே. இச்சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், மேல் பாலுணர்த்தப்பட்ட எழுத்து இனைத்து என்பதூஉம், அவை வினைக்கணின்று உணர்த்தும் என்பதூஉம் உணர்த்துதல் நுதலிற்று. உரை: இரு திணையிடத்து ஐந்து பாலையும் அறிய இறுதிக்கண் நின்று உணர்த்தும் பதினோரெழுத்தும் வினை யொடு வந்து புலப்படும், என்றவாறு. `வினையொடு வருமே’ என்றார் பெயர்க்கண் திரியவு நிற்கும், திரியாமையு நிற்கு மாகலான் என்பது. உண்டான் என்றக்கால் திரிவில்லை. கொற்றன் என்பது இருதிணை யொருமைப்பாற்கும் ஏற்கும் என்பது. மற்றுப் பதினோரெழுத்தும் என்றது என்னை? னஃகா னொற்றும், ளஃகானொற்றும், ரஃகானொற்றும், குற்றுகரமும், அவ்வும் ஆவும் என அவை ஆறெழுத்தான் அடங்கும் பிறவெனின், அடங்கும்; அடங்குமே யெனினும், ஈண்டுப் பதினொன்றென்று வேண்டினான். என்னை? பளிங்கு செம்பஞ்சி யடுத்தாற் செம்பளிங்கு எனப்படும்; கரும்பஞ்சி யடுத்தாற் கரும்பளிங்கு எனப்படும்; அதுபோலச் சார்ந்து வந்தவற்றது வேற்றுமை பற்றி வேறு பெயர் கொள்ளப்பட்டது என்பது. (10) 11. வினையிற் றோன்றும் பாலறி கிளவியும் பெயரிற் றோன்றும் பாலறி கிளவியும் மயங்கல் கூடா தம்மர பினவே. இச் சூத்திரம் என்நுதலிற்றோவெனின், வழுக்காத்தல் நுதலிற்று. வழுக்காக்குமிடத்து வழுவற்க என்று காத்தலும், வழீஇயமைக என்று காத்தலும் என இரண்டு: அவற்றுள் இது வழுவற்க என்று காத்தது. உரை: வினையிற் றோன்றும் பாலறி கிளவியும் என்பது - வினையிற் பாலறியப்படும் பொருளும் என்றவாறு; ஈண்டுப் பொருளைக் கிளவி யென்றாரென வுணர்க. பெயரிற் றோன்றும் பாலறி கிளவியும் என்பது - பெயரினாற் பாலறியப்படும் பொருளும் என்றவாறு; தம் மரபினவே என்பது - தத்தம் இலக்கணத்தனவேயாகும், என்றவாறு அவை தம் மரபினான் வருமாறு: உண்டான் அவன், உண்டாள் அவள், உண்டார் அவர், உண்டது அது, உண்டன அவை என இவை வினை நின்று பெயர்மேற் றத்தம் மரபினான் வந்தன. இனிப் பெயரை முன் நிறீஇ வினையைப் பின்னே கொணர்ந்து காட்டினும் அமையும். இனி, `மயங்கல் கூடா’ எனவே, மயக்கமும் உண்டு என்பது சொல்லப்பட்டதாம். அம் மயக்கம் எழுவகைப்படும். திணை மயக்கம், பான் மயக்கம், இட மயக்கம், கால மயக்கம், மரபு மயக்கம், செப்பு மயக்கம், வினா மயக்கம் என. மயக்கம் எனினும் வழு எனினும் ஒக்கும். அவை வருமாறு: அவன் வந்தன, அவன் வந்தது; அவள் வந்தன, அவள் வந்தது; அவர் வந்தன, அவர் வந்தது. இவை உயர்திணை அஃறிணைமேற் சென்று வழீஇயின. இனி, அஃறிணை உயர்திணைமேற் சென்று வழீஇயின வருமாறு: அது வந்தான், அது வந்தாள், அது வந்தார் எனவும்; அவை வந்தான், அவை வந்தாள், அவை வந்தார் எனவும் வரும். இவை பன்னிரண்டும் திணைவழூஉ. இனி, பால் வழூஉ வருமாறு: அவன் வந்தாள், அவன் வந்தார், அவள் வந்தான், அவள் வந்தார் என இவை உயர்திணைப் பால் வழூஉ. அது வந்தன, அவை வந்தது என இவை அஃறிணைப் பால் வழூஉ. இவையெல்லாம் பெயர் நின்று வினைமேல் வழீஇய. இவ்வாறு வினை நின்றுபெயர்மேல் வழீஇயன வினைமுன் நிறீஇப் பெயர் பிற்றந்து கூட்டியுரைத்துக் கொள்க. இச்சூத்திரம் பொருண்மேன் மயங்கற்க என்றானாதலான், அவற்றுக்கட் கிடந்த எல்லா மயக்கமும் வேண்டினமை கூறினானாம் என்பது. அவை திணை பற்றியும் பால் பற்றியுமன்றி வருமாறில்லை. செப்பு வழூஉ, வினா வழூஉ முன்னர்ச் சொல்லுதும்; ஒழிந்தது ஈண்டுக் காட்டுதும். இடவழூஉ வருமாறு: உண்டேன் நீ, உண்டேன் அவன், உண்டாய் யான், உண்டாய் அவன், உண்டான் யான், உண்டான் நீ என இவை. இனி, கால வழூஉ வருமாறு: செத்தானைச் சாம் என்றலும், குளம் நீர் புகுந்து நிறையும் எனற்பாலதனை நிறைந்தது என்றலுமாம். இனி, மரபு வழூஉ வருமாறு: மேய்த்தல் ஒப்புமையான், யானை மேய்ப்பானை இடையன் என்றும், ஆடு மேய்ப்பானைப் பாகன் என்றுஞ் சொல்லுதல். (11) 12. ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி ஆண்மை யறிசொற் காகிட னின்றே. இச்சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், எய்தியது விலக்குதல் நுதலிற்று. உரை: ஆண்மையிற்றிரிந்து பெண்மை நோக்கி நின்ற பெயர்ப் பொருள் ஆண்மகனை யறிவிக்கும் ஈற்றெழுத்தினாற் சொலற்பாட்டிற்கு ஏலாது என்றவாறு; ஒழிந்த இரண்டு பெயர்க்கும் ஒக்கும் என்பதாம். `ஆகிடனின்றே’ என்பதனாற் சிறுபான்மை, `பேடி வந்தான்’ என ஆண்பாற்கும் ஏற்கும். (12) 13. செப்பும் வினாவும் வழாஅ லோம்பல். இச்சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், செப்பு வழுவும் வினா வழுவும் காத்தல் நுதலிற்று. உரை: செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல் என்பது- செப்பினையும் வினாவினையும் இழுக்குதலைப் போற்றுக, என்றவாறு அவை வழுவாது வருமாறு `நுந்நா டியாது? என்றால், `தமிழ்நாடு’ என்றல். இச் செப்புத்தான் ஆறு வகைப்படும். வினாவெதிர் வினாதலும், ஏவுதலும், மறுத்தலும், உற்றது உரைத்தலும், உறுவது கூறலும், உடம்படுதலும் என. அவற்றுள் மறுத்தலும், உடம்படுதலுமே ஈண்டுச் செப்பிலக்கண மாவன. ஒழிந்தனவற்றை முன்னமைத்துக் கூறுக என்றவாறு. வினா ஐந்து வகைப்படும். அறியான் வினாதல், அறிவொப்புக் காண்டல், ஐயமறுத்தல், அவனறிவு தான் கோடல், மெய்யவற்குக் காட்டல் என. அவை வழுவாமற் சொல்லுக எனவே வழுவுதலும் உண்டென்ப தாம். அவை வருமாறு `கருவூர்க்கு வழியெது?’ என்றாற்குப், `பருநூல் பன்னிருதொடி’ என்பது செப்பு வழூஉ. ஒரு விரல் காட்டி, `நெடிதோ? குறிதோ?’ என்பது வினா வழூஉ. இதுவும் ஒரு சொற்றொகை யுணர்த்தியவாறு. (13) 14. வினாவுஞ் செப்பே வினாவெதிர் வரினே. இச்சூத்திரம் என்நுதலிற்றோவெனின், வினாவும் இறையாகும் ஒரோவழியென்பது உணர்த்துதல் நுதலிற்று. உரை: வினாவுஞ் செப்பே வினாவெதிர் வரினே என்பது - வினாவும் இறையாகும் அதற்கு இறைபட வரின், என்றவாறு அது வினாவெதிர் வினாதல் என்னுங் குற்றப்படாததன் கருத்து. (வரலாறு) சாத்தா வுண்ணாயோ? என்று வினாயினாற்கு உடம்படுதல், மறுத்தல் என்றிரண்டினுள் ஒன்று ஏற்றற்பாலது. உண்ணேனோ? என்று வினாவினான் வினா உண்பதென்னும் பொருள்பட்டமையின் வினாத்தானுஞ் செப்பு ஆயிற்று. (14) 15. செப்பே வழீஇயினும் வரைநிலை யின்றே அப்பொருள் புணர்ந்த கிளவி யான. இச் சூத்திரம் என்நுதலிற்றோவெனின், இதுவும் அவ்வழியமையு மாறு உணர்த்துதல் நுதலிற்று. உரை: செப்பே வழீஇயினும் வரைநிலை யின்றே என்பது - செப்புத்தான் வழீஇயினவிடத்தும் வரைந்து மாற்றப்படாது என்றவாறு; ஏகாரம் பிரிநிலை யேகாரம். வழீஇயினும் என்ற உம்மை சிறப்பும்மை. எனவே, வினா வழீஇயினவிடத்து அமையாது என்பது. அப் பொருள் புணர்ந்த கிளவியான என்பது - அப் பொருட்கு இயைபுபட வரின், என்றவாறு அவ்வாறு வழீஇ யமையுஞ் செப்பாவன: உற்றது உரைத்தலும், உறுவது கூறலும், ஏவுதலும் என இவை. அவற்றுள், உற்றது உரைத்தல் என்பது `சாத்தன், உறையூர்க்குச் செல்லாயோ? எனின், `கான் முட் குத்திற்று. தலை நோகின்றது’ என்பது இனி உறுவது கூறல் என்பது `சாத்தா, உறையூர்க்குச் செல்லாயோ?’ எனின், `கடமுடையார் வளைப்பர்; பகைவர் எறிவார்’ என்பது இனி, ஏவுதல் என்பது: `சாத்தா, உறையூருக்குச் செல்லாயோ’ எனின், `நீ செல்’ என்பது. இவை மூன்றும் வழீஇ யமைவன; வழூஉவேயெனினும் அப் பொருள் பட வந்தமையின் அமைக என்பது. மற்றுள்ளனவும் மேலே யடங்கின. (15) 16. செப்பினும் வினாவினுஞ் சினைமுதற் கிளவிக் கப்பொரு ளாகு முறழ்துணைப் பொருளே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், செப்புவானொடு வினாவுவா னிடைக் கிடந்ததோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. உரை: செப்பினும் வினாவினும் என்பது- செப்புமிடத்தும் வினாவு மிடத்தும் என்றவாறு; சினைமுதற் கிளவிக்கு என்பது - சினைக் கிளவிக்கும் முதற் கிளவிக்கும் என்றவாறு; அப் பொருளாகும் உறழ் துணைப் பொருளே என்பது - முதலொடு முதலே பொரூஉக; சினையொடு சினையே பொரூஉக என்றவாறு (வரலாறு) `கொற்றன் மயிர் நல்லவோ? சாத்தன் மயிர் நல்லவோ?’ என்று வினாவினவிடத்து, `கொற்றன் மயிரிற் சாத்தன் மயிர் நல்ல; சாத்தன் மயிரிற் கொற்றன் மயிர் நல்ல’ என்றிறுக்க. இது சினையொடு சினை பொரீஇயினவாறு. இனி, `கொற்றன் நல்லனோ? சாத்தன் நல்லனோ?’ என்று கூறியவிடத்து, `கொற்றனிற் சாத்தன் நல்லன்; சாத்தனிற் கொற்றன் நல்லன்’ என்றிறுக்க. இதுமுதலொடு முதல் பொரீஇயினவாறு. `அப் பொருளாகும்’ என்றதனான், அவ்வச் சினைக்கு அவ்வச் சினையே பொரூஉக என்பது. இது முதற்கும் ஒக்கும். இனி, சினை முதற்கூறிய முறையன்றிக் கூற்றினான் முதலுஞ் சினையும் உறழ்ந்து வருவனவும் உள, குண மருங்குபற்றி. (வரலாறு) `இம் மகள் கண் நல்லவோ? இக் கயல் நல்லவோ?’ என்பன போல்வன. இனி, அப் பொருளாகும் உறழ்பொருள் என அமையும். துணை யென்பது மிகையெனில், துணைக்கும் என்பது உவமித்தல்; அவ் வுவமத்துக் கண்ணும் அவ்வினப் பொருளேயாக என்பது. உவமம் நாலு வகையாகிய வினை, பயன், மெய், உரு என. `புலி பாய்ந்தாங்குப் பாய்ந்தான்’ என்பது வினையுவமம். `மழை போலும் வண்கை’ என்பது பயனுவமம். `துடிபோலும் நடு’ என்பது மெய்யுவமம். `பொன்போலும் மேனி’ என்பது உருவுவமம். இன்னும், `துணை’யென்றதனான் எண்ணுமிடத்தும் இனமொத்தனவே யெண்ணுக, முத்தும் மணியும் பொன்னும் என. (16) 17. தகுதியும் வழக்குந் தழீஇயின வொழுகும் பகுதிக் கிளவி வரைநிலை யிலவே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இதுவும் வழீ இயமையுமாறு உணர்த்துதல் நுதலிற்று. உரை: தகுதிபற்றியும் வழக்குப்பற்றியும் பொருந்தி நடக்கும் இலக்கணத்திற் பக்கச் சொற் கடியப்படா, என்றவாறு தகுதியென்பது மூன்று வகைப்படும். மங்கல மரபினாற் கூறுத லும், இடக்கரடக்கிக் கூறுதலும், குழுவின் வந்த குறிநிலை வழக்கும் என. செத்தாரைத் துஞ்சினார் என்றலும், சுடுகாட்டை நன்காடு என்றலும் மங்கல மரபினாற் கூறுதல். இடகக் கரடக்கிக் கூறுதல் வருமாறு: கண் கழீஇ வருதும், கண் குறியராயிருந்தார், பொறை யுயிர்த்தார் எனவும் வரும். இனி, குழுவின் வந்த குறிநிலை வழக்கு: பொற்கொல்லர் பொன்னைப் பறி என்றும், வண்ணக்கர் காணத்தை நீலம் என்றும் வரும். வழக்காறு இரு வகைப்படும்: இலக்கண வழக்கும், இலக்கணத்தொடு பொருந்தின மரூஉ வழக்கும் என. இல்முன் என்பதனை முன்றில் என்று தலைதடுமாறச் சொல்லுதல் இலக்கணத்தொடு பொருந்திய மரூஉ வழக்கு. இனி, சோழனாடு என்பதனைச் சோணாடு என்பது மரூஉ வழக்கு. வழக்காறு இத்துணை யென்பதில்லை, சிதைந்தும் சிதையாதும் பொருந்தி நடப்பன வெல்லாம் அவை யெனப்படும் என்றலும் ஒன்று. (17) 18. இனச்சுட் டில்லாப் பண்புகொள் பெயர்க்கொடை வழக்கா றல்ல செய்யு ளாறே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், செய்யுட்காவ தோர் முடிபு கூறுதல் நுதலிற்று. உரை: தமக்கு இனஞ்சுட்டாவாகிப் பண்புகொண்டு நின்ற பெயர்ச் சொற்களவை வழக்கினது நெறியல்லன, செய்யுட்கு நெறி, என்றவாறு (வரலாறு) `மாக்கடனிவந் தெழுதரு செஞ்ஞாயிற்றுக் கவினை மாதோ’ (புறம். 4) எனவும், `வெண்கோட்டியானை சேனை படியும்’4 எனவும் வரும். `வழக்காறல்ல’ என்ற விதப்பினான், `வடவேங்கடம் தென்குமரி’ என்பன கொள்க. இதுவும் ஒருசார் ஆசிரியன் உரை. இனி, ஒருவன் சொல்லுவது: `வழக்கா றல்ல’ என்பதனை, `வழக்காற்றின் அல்ல’ என ஐந்தா முருபு விரித்து `அல்ல’ என்பதனைப் பெயர்ப்படுத்துக் கூறும்; கூறவே, வழக்கிற்கும் இனமில் பண்புகொள் பெயர்கள் உள என்பது போந்ததாம். (வரலாறு) பெருங்கொற்றன், பெருங் கூத்தன் என்பன போல்வன, வழக்கிடைப் பண்புப்பெயர் வருங்கால் குணமின்றி விழுமிதாகச் சொல்லுதற்கு வந்து நிற்கும். (18) 19. இயற்கைப் பொருளை யிற்றெனக் கிளத்தல். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், உலகத்துப் பொருளெல்லாம் இரு வகைப்படும், இயற்கைப் பொருளும் செயற்கைப் பொருளும் என; அவற்றுள், இயற்கைப் பொருண் மேற் சொல் நிகழற்பாலவாமாறு உணர்த்துதல் நுதலிற்று. உரை: உலகத்து இயல்பாகி வாராநின்ற பொருளைச் சொல்லுமிடத்து இத்தன்மைய என்று சொல்லுக, என்றவாறு (வரலாறு) நிலம் வலிது; நீர் தண்ணிது என வரும். (19) 20. செயற்கைப் பொருளை யாக்கமொடு கூறல். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், செயற்கைப் பொருண்மேற் சொல் நிகழற்பாலவாமாறு உணர்த்துதல் நுதலிற்று. உரை: செயற்கையினாகிய பொருள்களையெல்லாம் ஆக்கம் கொடுத்துச் சொல்லுக, என்றவாறு (வரலாறு) மயிர் நல்ல ஆயின; பயிர் நல்ல ஆயின என வரும். ஆயின என்பது ஆக்கம். (20) 21. ஆக்கந் தானே காரண முதற்றே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், மேலதற்கோர் புறனடை யுணர்த்துதல் நுதலிற்று. உரை: அவ் வாக்கந்தனைச் சொல்லுமிடத்துக் காரணம் முன் வைத்துச் சொல்லுக, என்றவாறு (வரலாறு) `கடுவும் கைபிழி யெண்ணெயும் பெற்றமையான் மயிர் நல்ல ஆயின’ என வரும். (21) 22. ஆக்கக் கிளவி காரண மின்றியும் போக்கின் றென்ப வழக்கி னுள்ளே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், எய்தியது விலக்குதல் நுதலிற்று. உரை: ஆக்கக் கிளவி காரணமின்றியுஞ் சொல்லப்படும் வழக்கினுள், என்றவாறு போக்கு என்பது குற்றம். (வரலாறு) மயிர் நல்ல ஆயின. உம்மை எதிர்மறை. மற்று, வாளாதோதுஞ் சூத்திரமெல்லாம் வழக்கே நோக்கும், செய்யுட்காயிற் கிளந்தே யோதும்; அதனான், `வழக்கினுள்’ எனல் வேண்டா; அம் மிகுதியான் ஆக்கமும் காரணமும் இன்றி வருதலும், காரணம் கொடுத்து ஆக்கமின்றி வருதலும் என இரண்டுங் கொள்ளப்படும். (வரலாறு) `பைங்கூழ் நல்ல’ எனவும், `எருப்பெய்து இளங்களை கட்டு நீர் கால்யாத்தமையாற் பைங்கூழ் நல்ல’ எனவும் வரும். (22) 23. பான்மயக் குற்ற வையக் கிளவி தானறி பொருள்வயிற் பன்மை கூறல். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், உயர்திணைப் பால் ஐயத்துக் கட் சொல் நிகழுமாறு உணர்த்துதல் நுதலிற்று. உரை: திணை யறிந்து பால் ஐயந் தோன்றியவதனை அத்திணைப் பன்மைமேல் வைத்துச் சொல்லுக என்றவாறு (வரலாறு) `ஒருவன் கொல்லோ, ஒருத்தி கொல்லோ தோன்றா நின்றார்’ என வரும். இனி, உயர்திணைப் பாலையம் என்பதோர் ஒப்பிற் கொள்க. (23) 24. உருவென மொழியினும் அஃறிணைப் பிரிப்பினும் இருவீற்று முரித்தே சுட்டுங் காலை. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், திணை ஐயத்துக் கண்ணும், அஃறிணைப் பாலையத்துக்கண்ணும் சொல் நிகழுமாறு உணர்த்துதல் நுதலிற்று. உரை: திணையையம் தோன்றினவழி ஒரு வடிவு சொல்லக் கருதினும், அஃறிணையை ஒன்று பல என்று பிரித்துச் சொல் லினும் மேலடுத்த போலப் பொதுவினானே சொல்லுக என்றவாறு (வரலாறு) `குற்றிகொல்லோ மகன்கொல்லோ தோன்றுகின்ற உருவு’ என வரும்; இது திணை ஐயம். `ஒன்றுகொல்லோ பலகொல்லோ செய்புக்க பெற்றம்’ என வரும்; இஃது அஃறிணைப் பாலையம். உருவு எனவே திணையையம் என்பதோர் ஒப்பிற் பெற்றாம். பால் ஐயமாயின் தத்தம் பகுதியொடு முடியும் என்பது. (24) 25. தன்மை சுட்டலு முரித்தென மொழிப அன்மைக் கிளவி வேறிடத் தான. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், ஐயப்பட்ட அப்பொருளைத் துணிந்தவழிச் சொல் நிகழுமாறு உணர்த்துதல் நுதலிற்று. உரை: அன்மைத் தன்மையைச் சொல்லுதலும் உரித்து, ஐயத்திற்கு வேறாய்த் துணிபொருளிடத்து என்றவாறு ஒருத்தி யெனத் துணிந்தவழி, `ஒருவனல்லள் ஒருத்தி’ எனவரும்; ஒருவன் எனத்துணிந்தவழி, `ஒருத்தியல்லன் ஒருவன்’ என வரும். இஃது உயர்திணைப் பாலையத்துக்கண் துணிபு தோன்றினவழிச் சொல் நிகழுமாறு. மற்றையனவும் அன்ன. இனி, ஒருவன், `வேறிடம்’ என்பதனைத் `துணியப்படும் பொருட்கு வேறாகி நிற்கும் பொருள்’ என்னும். அவன் உதாரணங் காட்டுமாறு: `குற்றி கொல்லோ? மகன் கொல்லோ?’ என ஐய முற்றான், மகன் என்று துணியின், `குற்றியன்று மகன்’ எனவும், குற்றி என்று துணியின், `மகன் அல்லன் குற்றி’ எனவும் வரும், என்னும். இனி, அல்லாத தன்மையையுடையது துணியப்படும் பொரு ளன்றே, அதனான், அதன்கண்ணே அன்மையை வைத்துச் சொல்லுக என்ப, முன்னையுதாரணங் காட்டுவார். `குற்றியல்லன் மகன்’ என்புழிக் `குற்றியின் அல்லன்’ என்று, ஐந்தன் உருபு விரித்து உரைக்க. (25) 26. அடைசினை முதலென முறைமூன்று மயங்காமை நடைபெற் றியலும் வண்ணச் சினைச்சொல். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இதுவும் ஒரு சொல்லுதல் வன்மையுணர்த்துதல் நுதலிற்று. உரை: அடை, சினை, முதல் எனப்பட்ட மூன்றும் முறை மயங்காது வருவன வண்ணச் சினைச்சொல் என்றவாறு அடை என்பது ஒரு பொருளது குணம். சினை என்பது உறுப்பு. முதல் என்பது அவ்வுறுப்பினை யுடையது. (வரலாறு) பெருந்தலைச் சாத்தன், செங்கால் நாரை எனவரும். அடை சினை முதல் என வரூஉ மூன்றும் - என்னாது, முறை என்றதனான் இருகுணம் அடுக்கி முதலொடு வருதலும், இருகுணம் அடுக்கிச் சினையொடு வருதலும் கொள்க. `முதலொடு குணமிரண் டடுக்குதல் வழக்கியல் சினையொ டடுக்கல் செய்யு ளாறே’ என்பது புறச் சூத்திரம்.5 உதாரணம் - இளம் பெருங் கூத்தன் என வரும் வழக்கினுள். `சிறுபைந் தூவிச் செங்காற் பேடை’ (அகம். 57) என வரும் செய்யுட்கண். `இளம் பெருங் கூத்தன்’ என்றக்கால், இளமை பெருமையை நோக்கி நின்றதன்று, கூத்தன் என்னும் பெயரையே நோக்கி நின்ற தெனவுணர்க. `நடைபெற்று இயலும்’ எனல் வேண்டா எனின், நடை என்பது வழக்கு, வழக்கினுள் மயங்காது வரும் என்பதாம்; என்னவே, செய்யுளுள் மயங்க வரும் என்பதாம். (வரலாறு) `பெருந்தோட் சிறுமருங்குற் பேரமர்க்கட் பேதை’ எனவரும். (26) 27. ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும் ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும் வழக்கி னாகிய வுயர்சொற் கிளவி இலக்கண மருங்கிற் சொல்லா றல்ல. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், வழீஇ யமையுமாறு உணர்த்துதல் நுதலிற்று. உரை: உயர்திணையொருவரைப் பன்மையாற் சொல்லு தலும், அஃறிணை ஒன்றினைப் பன்மையாற் சொல்லுதலும் வழக்கினகத்து உயர்த்துச் சொல்லப்படும்; இலக்கண முறைமை யாற் சொல்லுமிடத்து நெறியல்ல என்றவாறு ஒருவனையும், `தாம் வந்தார்’ என்ப, ஒன்றனையும், `தாம் வந்தனர்’ என்ப. மற்று, `இலக்கண மருங்கிற் சொல்லா றல்ல’ எனல் வேண்டாவாம். அங்ஙனம் வேண்டாது கூறியவதனான் உயர் திணையை அஃறிணை போலச் சொல்லுதலும் அஃறிணையை உயர்திணை போலச் சொல்லுதலும் கொள்க. (வரலாறு) `என் பாவை வந்தது, போயிற்று’ என ஒருத்தியையும், `என் அன்னை வந்தாள், போயினாள்’ என ஓர் ஆவினையும், காதன் மிகுதியான் இவ்வாறு கூறுக எனக் கொள்க. இனி, `வழக்கினாகிய’ என்றதனான், `கன்னி யெயில், கன்னி ஞாழல்’என்பன கொள்க. (27) 28. செலவினும் வரவினுந் தரவினுங் கொடையினும் நிலைபெறத் தோன்று மந்நாற் சொல்லுந் தன்மை முன்னிலை படர்க்கை யென்னும் அம்மூ விடத்து முரிய வென்ப. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இட வழுக்காத்தல் நுதலிற்று. உரை: செல்லும், வரும், தரும், கொடுக்கும் என நிலைபெற்றுப் புலப்பட்டு நின்ற இந் நான்கு சொல்லும் தன்மை, முன்னிலை, படர்க்கை என்னும் மூன்றிடத்திற்கும் உரிய என்றவாறு அவையாமாறு முன்னர்ச் சொல்லுதும். (28) 29. அவற்றுள், தருசொல் வருசொல் ஆயிரு கிளவியும் தன்மை முன்னிலை ஆயீ ரிடத்த. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், எய்தியது விலக்குதல் நுதலிற்று. உரை: தரும், வரும், என்னுஞ் சொல் தன்மைக்கும், முன்னிலைக்கும் உரியவாம்; படர்க்கைக்கு ஆகா என்றவாறு (வரலாறு) எனக்குத் தருங்காணம், எனக்கு வருங்காணம்; நினக்குத் தருங்காணம், நினக்கு வருங்காணம் என வரும். (29) 30. ஏனை யிரண்டும் ஏனை யிடத்த. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இதுவும் மேல் எய்தியது விலக்குதல் நுதலிற்று. உரை: செல்லும், கொடுக்கும் என ஒழிந்து நின்ற இரண்டும் படர்க்கைக்காம்; தன்மைக்கும், முன்னிலைக்கும் ஆகா என்றவாறு (வரலாறு) அவற்குச் செல்லுங்காணம், அவற்குக் கொடுக்குங் காணம் என வரும். இனிச், செலவும் கொடையும் தரவும் வரவும் என்று சூத்திரம் செய்யற்பாலான் எற்றுக்கு? செல்லுங் காணம், கொடுக்குங் காணம் என்பன இரண்டும் படர்க்கைக்குரிய; தரும், வரும் என்பன இரண்டுந் தன்மைக்கும் முன்னிலைக்கும் உரிய; ஆகலான், அவ்வாறு கூறாது மயக்கங் கூறியவதனான், செல்லும் என்னும் சொல்லாற் சொல்லப்படுவதனை வரும் என்னும் சொல்லானும் சொல்லுப; கொடுக்கும் என்னுஞ் சொல்லாற் சொல்லப்படுவதனைத் தரும் என்னும் சொல்லினானும் சொல்லுப என்றலைக் குறித்தற்கு, என்க. (வரலாறு) `தூண்டில் வேட்டுவன் வாங்க வாரா’ (அகம். 36) `புனறரு பசுங்காய் தின்ற’ (குறுந். 292) எனவும் வரும். இனி, இச்சூத்திரம் கொடுத்தல் கோடற் பொருண்மை மூன்றிடத்துஞ் சொல் நிகழுமாறு கூறியது என்பாரும் உளர். (30) 31. யாதெவ னென்னு மாயிரு கிளவியும் அறியாப் பொருள்வயிற் செறியத் தோன்றும். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், அறியாத பொருளை அறியுங்காற் சொலற்பாலவாறு இது என்ப துணர்த்துதல் நுதலிற்று. உரை: யாது, எவன் என்ற இரண்டு சொல்லும் தன்னால் அறியப்படாத பொருட்கண் வினாவாய்த் தோன்றும் என்றவாறு (வரலாறு) நுந் நாடி யாது? இப் பண்டி யுள்ளது எவன்? என வரும். செறிய என்பது யாப்புறுத்தல். இஃது யாப்புறத் தோன்றும் எனப், பிற யாப்புறாமற் றோன்றுவனவும் உள என்பதாகும். (வரலாறு) யாவன், யாவள், யாவர், யாது, யாவை என்பன. இவை ஐந்து பாலும் அறியலுற்று வாரா: வினா மாத்திரத்திற்கு6 வரும். (31) 32. அவற்றுள் யாதென வரூஉம் வினாவின் கிளவி அறிந்த பொருள்வயின் ஐயந் தீர்தற்குத் தெரிந்த கிளவி யாகலு முரித்தே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இறந்தது காத்தல் நுதலிற்று. உரை: அவற்றுள், யாது என்பது தன்னான் அறியப்பட்ட பொருட்கண் ஐயப்பட்டதனைத் தெளிதற்குச் சொல்லவும் பெறும் என்றவாறு. (வரலாறு) நம் எருது ஐந்தனுள் யாது கெட்டது? என வரும். உம்மை எதிர்மறை. மற்று, இதுவும் அறியாப் பொருளாதல் ஒக்கும் பிறவெனின், முன் யாதும் உணராததன்கட் சொல்லினான்; அது முற் சூத்திரத்தோடு இதனிடை வேற்றுமை. முன்னர்ச் சூத்திரம், `எவன் யாது’ என்று கூறற் பாலன், எற்றுக்கு? யாது எவன் எனக் கூறினான் என்னின், `யாது’ என்பதனைப் பின்னரும் இங்குக் கொணர்ந்து ஆராய்தலின் என்க. அவ்வாறு கூறாது குறிப்புக் கொண்டதனான், `நமருள் யாவர் போயினார்?’ `அவற்றுள் எவ்வெருது கெட்டது?’ என்பன கொள்க. (32) 33. இனைத்தென வறிந்த சினைமுதற் கிளவிக்கு வினைப்படு தொகையி னும்மை வேண்டும். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், வரையறைப் பொருட்கண் சொல் நிகழுமாறு உணர்த்துதல் நுதலிற்று; மரபு வழுக் காத்தது எனினும் அமையும். உரை: இத்துணை என்று வரையறுக்கப்பட்ட சினைக் கிளவிக்கும் முதற் கிளவிக்கும் வினைப்படுத்துச் சொல்லு மிடத்து இறுதி உம்மை கொடுத்துச் சொல்லுக என்றவாறு (வரலாறு) நம்பி கண்ணிரண்டும் நொந்தன; நங்கை முலையிரண்டும் வீங்கின என வரும். சினைக்கிளவி உம்மை கொடாவிடிற் பிற கண்ணும் முலையும் உளவாவன செல்லுமாகலான், உம்மையின்றிக் கூறுதல் மரபன்று. இனி, முதற்கிளவி வருமாறு: தமிழ் நாட்டு மூவேந்தரும் வந்தார் என வரும். `இருதிணை மருங்கின் ஐம்பாலும் அறிய’ - என்னாது, `இருதிணை மருங்கின் ஐம்பால் அறிய’ (தொல். சொல். கிளவி 10) என்று சூத்திரஞ் செய்தானாலாசிரியனேனும், செய்யுட்கண் உம்மையின்றி வருதற்கு உடம்பொடு புணர்த்தான் என்றலும் ஒன்று. இனிச் சூத்திரத்திற் சினை முதற் கூறிய முறையன்றிக் கூற்றினுள் உம்மை யின்றி வருவனவும் உள என்பது பற்றி, உம்மையைத் தொகுத்துக் கூறினான் என்பாரும் உளர். (33) 34. மன்னாப் பொருளு மன்ன வியற்றே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இதுவும் மரபுவழுக் காத்தல் நுதலிற்று. உரை: மன்னாப் பொருள் என்பது - இல்லாப் பொருள் என்ப; அதனையும் சொல்லுமிடத்து உம்மை கொடுத்துச் சொல்லுக என்றவாறு (வரலாறு) `பவளக்கோட்டு நீலயானை சாதவாகனன் கோயிலுள்ளும் இல்லை’ எனவரும். உம்மை பெறுத லொப்புமை நோக்கியே, முதற் சூத்திரத்தொடு மாட்டெறிந்ததெனக் கொள்க. (34) 35. எப்பொரு ளாயினு மல்ல தில்லெனின் அப்பொரு ளல்லாப் பிறிதுபொருள் கூறல். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், மறித்துச் சொற் பல்காமைத் தொகுத்திறுக்கும் இலக்கணம் இஃதென்பது உணர்த்துதல் நுதலிற்று. உரை: எவ்வகைப்பட்ட பொருளாயினும், தன்னுழையுள்ள தல்லதனை இல்லை யெனலுறுமே யெனின், அவன் கூறிய பொரு ளல்லாத பிறிது பொருள்கூறி, இல்லை என்க என்றவாறு தன்னுழை உள்ளதன் உண்மை கூறி, இல்லை என்க என்பது கருத்து. (வரலாறு) `பயறுளவோ வணிகீர்?’ என்றால், `உழுந்தல்ல தில்லை’ என்க; தன்னுழை யவை உளவாயின். இதன் கருத்து, அவன் வினாவப்பட்ட பொருட்கு இனமாய பிறிது பொருளே கூறுக என்பது. இச் சூத்திரம், `செப்பும் வினாவும்’ (தொல். சொல். கிளவி. 13) என்பதனுள் அடங்காதாயிற்று; அவன் வினாவிற்குச் செவ் வனிறை யாகவன்றிப் பிறிதுமொன்று கொணர்ந்து இறுத் தமையின். (35) 36. அப்பொருள் கூறிற் சுட்டிக் கூறல். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இதுவும் ஓர் இறுத்தல் வகைமை யுணர்த்துதல் நுதலிற்று: மேலதற்கு ஒரு புறனடையும் என்பது. உரை: அவன் வினாயின அப் பொருளையே சொல்லலுறுமே யெனிற் சுட்டிக் கூறுக என்றவாறு (வரலாறு) இவையல்லது பயறில்லை, இப் பயறல்லது இல்லை என வரும். (36) 37. பொருளொடு புணராச் சுட்டுப்பெய ராயினும் பொருள்வேறு படாஅ தொன்றா கும்மே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இதுவும் ஒரு சொல்லுதல் வகைமை யுணர்த்துதல் நுதலிற்று. மேலதற்கோர் புறனடை எனவுமாம். உரை: பொருளொடு புணராது நின்ற சுட்டுப் பெயராமே யெனினும், அப் பொருட்கு இயைபுபட வருமேயெனின் அமையும் என்றவாறு (வரலாறு) `இவை யல்லது பயறில்லை’ என்புழிப் `பயறு’ என்னுஞ் சொல்லாற் பொருள் உணரப்பட்டது: `அல்லது’ என்னுஞ் சொல்லே எதிர் மறுத்து நின்றது. `இல்லை’ யென்னும் சொல்லான் இன்மை உணரப்பட்டது. இனி, இவை என்னும் சொல் பொருளின்றால், அஃது என் செய்யும் என்றார்க்கு, அதுவும் பயற்றினையே சுட்டிற்றாகலான், அமைக என்பது கருத்து. இஃது, ஒரு பொருண்மேல் இருபெயர் வழுக்காத்தவாறு. (37) 38. இயற்பெயர்க் கிளவியுஞ் சுட்டுப்பெயர்க் கிளவியும் வினைக்கொருங் கியலுங் காலந் தோன்றிற் சுட்டுப்பெயர்க் கிளவி முற்படக் கிளவார் இயற்பெயர் வழிய வென்மனார் புலவர். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இதுவும் ஒரு பொருண்மேல் இரு பெயர் வழுக்காத்தல் நுதலிற்று. உரை: இயற்பெயர் என்பன இரண்டு திணைக்கும் உரிய பெயர்; சுட்டுப்பெயர் - மூன்று சுட்டு முதலாக வரும் பெயர்: அவ் விரண்டும் வினைக்கண் ஒருங்கு நடப்பதோர் காலந்தோன்றுமே யெனின், இயற்பெயர் முன்கூறிச் சுட்டுப் பெயரதனைப் பின் வைத்துக் கூறுக என்றவாறு (வரலாறு) `கொற்றன் வந்தான், அவற்குச் சோறு கொடுக்க’ என வரும். மற்றுச் `சுட்டுப் பெயர்க் கிளவி முற்படக் கிளவார்’ எனவே, இயற்பெயர் வழியே கிளப்ப என்பது முடிந்தது. பின்னை, `இயற்பெயர் வழிய’ எனல் வேண்டா; அதனால், உயர்திணைப் பெயர்வழியும், அஃறிணைப் பெயர்வழியும் வைத்துக் கூறுக அச்சுட்டுப் பெயர்களை என்றதாம். (வரலாறு) `நம்பி வந்தான், அவற்குச் சோறிடுக’ `எருது வந்தது, அதற்குப் புல்லுக் கொடுக்க’ என வரும். இனி, `வினைக்கியலுங் காலந் தோன்றின்’ என அமையும், `ஒருங்கு’ என்ற மிகையதனான், அகர, இகரச் சுட்டே கொள்க. இனி, `வினைக்கொருங் கியலுங் காலந் தோன்றிற் சுட்டே கிளக்க’ என்பதனான், பெயர்க்கு யாது முன் கூறினும் அமைக என்பதாம். (வரலாறு) சாத்தன் அவன், அவன் சாத்தன் என வரும். இனி, ஒருவன் `இயற்பெயர்’ எனவே, உலகத்து இயன்று வரும் பெயர் எல்லாம் அடங்கும் என்னும். (38) 39. முற்படக் கிளத்தல் செய்யுளு ளுரித்தே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இஃது எய்தியது விலக்குதல் நுதலிற்று. உரை: செய்யுளகத்தாமே யெனிற் சுட்டுப் பெயர் முன் சொல்லி, இயற்பெயர் பின் வைத்துக் கூறினும் அமையும் என்றவாறு. (வரலாறு) அவனணங்கு நோய்செய்தா னாயிமாய் வேலன் விறன்மிகுதார்ச் சேந்தன்பேர் வாழ்த்தி - முகனமர்ந் தன்வன யலர்கடப்பந் தாரணியி லென்னைகொல் பின்வன யதன்கண் விளைவு என வரும். இதனுள், `அவன்’ என்பது சுட்டு, `சேந்தன்’ என்பது இயற் பெயர். (39) 40. சுட்டுமுத லாகிய காரணக் கிளவியுஞ் சுட்டுப்பெய ரியற்கையிற் செறியத் தோன்றும். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், ஒரு பொருண்மேல் இருபெயர் வழுக்காத்தல் நுதலிற்று. உரை: மேற் சுட்டுப்பெயர் இயற்பெயரின் வழியே கிளக்க எனப்பட்டது போலச் சுட்டு முதலாகிய காரணப் பெயரையும் இயற் பெயர்க்கு வழியே வைத்துச் சொல்லுக என்றவாறு (வரலாறு) `சாத்தன் கையெழுதுமாறு வல்லன், அதனான், தன் ஆசிரியன் உவக்கும்; தந்தை யுவக்கும்’ எனவரும். அதிகாரத்தான், வழிக்கிளத்தல், `வினைக்கொருங்கு இயலும்’, (தொல். சொல். கிளவி. 38) வழிக் கொள்க. எழுதுமாறு என்பது வினை. முதற்சூத்திரம் பொருள்வழி வந்தது; இது பொருளது குணத்துவழி வந்தது. (40) 41. சிறப்பி னாகிய பெயர்நிலைக் கிளவிக்கும் இயற்பெயர்க் கிளவி முற்படக் கிளவார். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இதுவும் ஒரு பொருண்மேல் இருபெயர் வழுக்காத்தல் நுதலிற்று. உரை: சிறப்புப் பெயரும் இயற்பெயரும் ஒருவற்கு உளவாயின், அவ்விடத்து அவனைப் பெயர்கொடுக்குங்கால், அவன் சிறப்புப் பெயரை முன்கூறி, இயற்பெயரைப் பின் கூறுக என்றவாறு (வரலாறு) ஏனாதி நல்லுதடன்; சோழன் நலங்கிள்ளி என வரும். 7உம்மையாற் பிறப்பினாகிய பெயர்க்கும், தொழிலினாகிய பெயர்க்கும், கல்வியினாகிய பெயர்க்கும் இயற்பெயர்களை வழியே வைத்துச் சொல்லுக. (வரலாறு) பார்ப்பான் கண்ணன்; வண்ணான் சாத்தன் என வரும், கல்வியினாகிய காரணம் வந்தவழிக் கண்டு கொள்க. சிறப்புப் பெயர் என்பன சிறப்புடைய மன்னராற் பெறுவன. (41) 42. ஒருபொருள் குறித்த வேறுபெயர்க் கிளவி தொழில்வேறு கிளப்பி னொன்றிட னிலவே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், ஒரு பொருண்மேற் பல பெயர் வழுக்காத்தல் நுதலிற்று; மரபுவழுக் காத்ததூஉமாம். உரை: ஒருபொருளைக் கருதி வேறு வேறு பெயர் வருமெனின், அப்பெயர் வேறு வேறு தொழில்கோடற்கு வரும் பெயரெல்லாஞ் சொல்லிய பின்னைத் தொழில் கொடுக்க. அங்ஙனம் கொடுப்ப வந்த பெயரெல்லாம் அதற்கு ஒன்றும்; அல்லாக்கால் அதற்கு ஒன்றிடனில என்றவாறு (வரலாறு) `ஆசிரியன் பேரூர்கிழான் செயிற்றியன் இளங்கண்ணன் சாத்தன் வந்தான்’ எனவரும். மற்று, `எந்தை வருக, எம்பெருமான் வருக, மைந்தன் வருக’ எனவும் ஒருபொருட்கு ஒன்றுமாலெனின், அதனை `ஞாபகங் கூறல்’ (தொல். பொருள். மரபியல் 110) என்னும் உத்திவகையான் உணர்க; என்னை `தொழில் வேறு கிளப்பின் ஒன்றிட னிலவே’ என்றார். அத் தொழில் வேறு கிளத்தல்தான் இருவகைப்படும். பெயர்தொறும் ஒரு தொழில் கிளத்தலும், வேறு கிளத்தலும் ஆம். அதனான் இச் சூத்திரத்துப் பெயர்தொறும் வேறாய்த் தொழில் கிளத்தலைத் `தொழில் வேறு கிளப்பின் ஒன்றிடனில’ என்றது. அங்ஙனம் ஞாபகத்தாற் கொள்வதனையும் ஒரு பொருட்கு ஒன்றுமென்று, மற்று வரும் பெயரெல்லாஞ் சொல்லிப் பின்னைத் தொழில் கிளப்பதனை எடுத்தோத்தினாற் கூறி, அவ்வப் பெயர்தொறும் ஒரு தொழில் கிளப்பதனை உத்திவகையாற் கொண்டது என்னையெனின், - `எந்தை வருக, எம்பெருமான் வருக, மைந்தன் வருக’ என்றவிடத்து, ஒரு பொருண்மேலும் நிற்கும்; மற்றையதாயின் ஒரு பொருட்கே திரிபுபடாது ஒன்றும். அதனான், அதனை எடுத்தோத்தினானும், இதனை யுத்திவகை யானும் கொண்டான் என்பது. (42) 43. தன்மைச் சொல்லே யஃறிணைக் கிளவியென் றெண்ணுவழி மருங்கின் விரவுதல் வரையார். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இது திணை வழுவாமை யுணர்த்துதல் நுதலிற்று. உரை: தன்மைச் சொல்லும் அஃறிணைச் சொல்லும் அவை எண்ணுமிடத்து விராஅய் வரப் பெறும் எனக் கொள்க என்றவாறு `தன்மைச் சொல்’ எனவே, உயர்திணைச் சொல் எனப்பெறும். (வரலாறு) `யானும் என் எஃகமுஞ் சாறும்’ என வரும். `மருங்கு’ என்ற மிகையான், `நீயும் நின் படைக்கலமுஞ் சாறீர்’ `அவனும் தன் படைக்கலமுஞ் சாலும்’ எனவும் வருதல் கொள்க. (43) 44. ஒருமை யெண்ணின் பொதுப்பிரி பாற்சொல் ஒருமைக் கல்ல தெண்ணுமுறை நில்லாது. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், மரபுவழுக்காத்தல் நுதலிற்று. உரை: ஒருமை எண்ணின் பொதுப் பிரிபாற் சொல் என்பது ஓர் எண்ணாய், இரண்டு பாற்கும் பொதுவாய், ஒருவன் ஒருத்தி எனப் பிரிந்து நின்று, பால் வேறுபடுவதாயிற்று; அஃது யாதோ வெனின், ஒருவர் என்பது. அஃது இருபாற்கும் பொதுவாய் நிற்பினும், ஒருவர் இருவர் என்று எண்ணும்பொழுதாயின் ஒரு பாற்கே உரித்தாம் என்றவாறு. அப் பொதுமையிற் பிரிந்த பாற் சொல் ஒருவன் ஒருத்தி என்பது; அவை தத்தம் ஒருமை விளங்கி நிற்குந் துணை யல்லது அப்பால்மேல் எண்ணுமுறை யோடா என்பது. இனி, எண்ணுதல் களைந்து, ஒருவர் என்றக்கால் இரு பாலையும் தழீஇ நிற்கும்; இதுவும் ஒருசார் ஆசிரியர் உரைப்ப. இனி, ஒருமை எண்ணின் பொது என்ப ஒருவர் என்பது.(44) 45. வியங்கோ ளெண்ணுப்பெயர் திணைவிரவு வரையார். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இதுவும் திணை வழுக்காத்தல் நுதலிற்று. உரை: வியங்கோளுடைய எண்ணுப்பெயர் திணை விரவுதல் கடியப்படா என்றவாறு (வரலாறு) `ஆவும் ஆயனும் செல்க’ என வரும். இஃது இனமல் லதனோடு எண்ணினமையின் வழுவாயிற்று. இனி, `ஆவும் ஆயனும் செல்க’ என்றவிடத்துச் `செல்க’ என்னும் வியங்கோள் வினை இரு திணைக்கும் முடிபு ஏற்றமையின் திணைவழுவமைதி யாம்9. மற்று, இன்ன எண் என்பது சூத்திரத்துப் பெற்றிலாமையின் `உய்த்துணரவைத்தல்’ என்னும் உத்திவகையான், உம்மை யெண்ணும் எனவென் னெண்ணும் எனக் கொள்க. என்னை, இவ்விரண் டெண்ணும் தொகை பெற்றும் பெறாதும் முடியும்; மற்றை யெண்ணுக்க ளெல்லாம் தொகை பெற்றே முடியும்; ஈண்டுத் தொகை பெறும் எண்ணினாற் கூறிற்றிலர், திணைவழூஉம் ஆகலான் என்பது. (45) 46. வேறுவினைப் பொதுச்சொ 10லொருவினை கிளவார். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இதுவும் மரபு வழுக்காத்தல் நுதலிற்று. உரை: வேறு வேறு வினையையுடையவாய் நின்ற சொற்களை ஒரு வினையாற் சொல்லற்க என்பது; எனவே, பொது வினையாற் கிளக்க என்பதாம். இனி, ஒருவும் வினை என்பது ஒரூஉவினை என்றாயிற்று என்றலும் ஒன்று; ஒரூஉதல் என்பது நீங்குதல். அவை; அடிசில், அணிகலம், இயமரம் என்பன; அவற்றைப் பொது வினையாற் கூறுமாறு: அடிசில் அயின்றார், அணிகலம் அணிந்தார், இயமரம் இயம்பினார் என்னுந் தொடக்கத்தன கொள்க. மற்று, `ஊன்றுவை கறிசோ றுண்டு வருந்தும்’ (புறம். 14) என வந்ததால் எனின், அது பாட மறிந்து திருத்திக்கொள்க. (46) 47. எண்ணுங் காலு மதுவதன் மரபே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இதுவும் மரபு வழுக் காத்தலை நுதலிற்று. உரை: வேறு வேறு வினையையுடைய சொற்களை யெண்ணுங் காலும் பொதுவினையாற் சொல்லுக என்றவாறு (வரலாறு) `யாழுங் குழலும் பறையும் இயம்பினார்’ என வரும். (47) 48. இரட்டைக் கிளவி யிரட்டுப்பிரிந் திசையா. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இதுவும் மரபு வழுக்காத்தல் நுதலிற்று. உரை: இரட்டித்துச் சொல்லும் சொற்கள் அவ்விரட்டுதலிற் பிரித்துச் சொல்லப்படா என்றவாறு (வரலாறு) சுருசுருத்தது, சுறுசுறுத்தது, கறுகறுத்தது என, இசையுங் குறிப்பும் பண்பும் பற்றி வரும். (48) 49. ஒருபெயர்ப் பொதுச்சொ லுளபொரு ளொழியத் தெரிபுவேறு கிளத்த றலைமையும் பன்மையும் உயர்திணை மருங்கினு மஃறிணை மருங்கினும். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இதுவும் மரபு வழுக்காத்தல் நுதலிற்று. உரை: ஒரு பெயர்ப்பட நின்ற பொதுச் சொற்களைச் சொல் லுங்கால் ஆண்டுள்ள பொருள் எல்லாம் எடுத்துச் சொல்லாது, தெரிபு வேறுகிளந்து தலைமையானும் பன்மையானும் கூறுக, இரு திணைக் கண்ணும் என்றவாறு (வரலாறு) சேரி என்பது பலர் இருப்பதுமன்; ஆயினும், ஆண்டுச் சில பார்ப்பனக் குடி உளவேல், அதனைப் பார்ப்பனச் சேரி என்பது; இஃது உயர்திணைக்கண் தலைமை பற்றி வந்தது. அத் திணைக்கண் பன்மைபற்றி வருமாறு: எயின நாடு, குற்றிளை நாடு என வரும். இனி, அஃறிணைக்கண் தலைமைபற்றி வருமாறு: கமுகந்தோட்டம் என வரும்; மற்றைய பொருள் பயின்று, கமுகு ஒன்றிரண்டு உண்மை நோக்கிச் சொன்னாரேல் தலைமையாம். இனிக் கமுகு ஆண்டு நெருங்கி மற்றைய சிலவாதல் கண்டு சொன்னாரேல், அதுவே பன்மையாற் பெற்ற பெயர். ஒடுவங் காடு, காரைக் காடு என்பன பன்மையாற் பெற்ற பெயர். (49) 50. பெயரினுந் தொழிலினும் பிரிபவை யெல்லா மயங்கல் கூடா வழக்குவழிப் பட்டன. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இதுவும் மரபு வழுக்காத்தல் நுதலிற்று. உரை: மேனின்ற அதிகாரத்தால் உயர்திணைக்கண்ணும் அஃறிணைக்கண்ணும் பெயரினானும் தொழிலினானும் பிரிந்து வருமவை யெல்லாம் மயங்குதற்குச் செல்லா; வழக்கு வழிப்பட்டன ஆகலான் என்பது, என்றவாறு அவைதாம் பெண்ணொழி மிகுசொல்லும், ஆணொழி மிகுசொல்லும் என இருவகைப்படும். (வரலாறு) உயர்திணைக்கண் பெயரிற் பிரிந்த பெண்ணொழி மிகு சொல் வருமாறு: `வடுகரசர் ஆயிரவர் மக்களை யுடையர்’ என வரும். அத்திணைக்கண் பெயரிற் பிரிந்த ஆணொழி மிகுசொல் வருமாறு; `பெருந்தேவி பொறையுயிர்த்த கட்டிற்கண் நால்வர் மக்கள் உளர்’ என வரும். இனி, அத்திணைக்கண் தொழிலிற் பிரிந்த பெண்ணொழி மிகு சொல் வருமாறு: `அரசர் ஆயிர மக்களொடு தாவடி போயினார்’ என வரும். அத்திணைக்கண் தொழிலிற் பிரிந்த ஆணொழி மிகுசொல் வருமாறு: `இன்று இவ்வூரெல்லாம் தைநீர் ஆடுப’ என வரும். இனி, அஃறிணைக்கண் வருமாறு: `நம்மரசன் ஆயிரம் யானை யுடையன்’ என வரும். இஃது அத் திணையிற் பெயரிற் பிரிந்த பெண்ணொழி மிகு சொல்: `நம்பி நூறு எருமை யுடையன்’ என வரும்; இஃது அத் திணையிற் பெயரிற் பிரிந்த ஆணொழி மிகு சொல். இனி, அத் திணைக்கண் தொழிலிற் பிரிந்து வருமாறு: `இன்று இவ்வூர்ப் பெற்ற மெல்லாம் உழவொழிந்தன’ என வரும்; இஃது அத் திணைக்கண் தொழிலிற் பிரிந்த பெண்ணொழி மிகுசொல். `இன்று இவ்வூர்ப் பெற்றமெல்லாம் அறங் கறக்கும்’ எனவரும்; இஃது அத் திணைக்கண் தொழிலிற் பிரிந்த ஆணொழி மிகுசொல். இனி, `எல்லாம்’ என்றதனான், ஆணொழி மிகுசொல்லும், பெண்ணொழி மிகுசொல்லும் அன்றிச் சிறப்புப் பற்றி நிற்பனவும், பொதுவாய் நிற்பனவும், மிகுதி வகையான் நிற்பனவும் கொள்க. அவை வருமாறு: `அரசர் பெருந் தெரு’ என்பது சிறப்புப்பற்றி வந்தது. `ஆ தீண்டு குற்றி’, `ஆனதர்’ என்பன பொதுவாய் நிற்பன. இனி, மிகுதி வகையாற் சொல்லுவன வருமாறு: `இவர் பெரிதுங் கால்கொண் டோடுப’, `இவர் பெரிதுஞ் சோறுண்ப’ எனவரும் உயர் திணைக்கண். இனி, அஃறிணைக்கண், `இவ்வெருது புற்றின்னும்’ எனவரும். இவையெல்லாம் மிகுதி வகையான் விளக்கினவாறு. (50) 51. பலவயி னானு மெண்ணுத்திணை விரவுப்பெயர் அஃறிணை முடிபின செய்யு ளுள்ளே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இது திணைவழு அமையுமாறு கூறுதல் நுதலிற்று. உரை: பலவிடத்தினானும் உயர்திணையும் அஃறிணையும் விரவி எண்ணப்படும் பொருள் அஃறிணை முடிபினவாம் செய்யுளகத்து என்றவாறு (வரலாறு) `வடுக ரருவாளர் வான்கரு நாடர் சுடுகாடு பேயெருமை யென்றிவை யாறும் குறுகா ரறிவுடை யார்’ என வரும். இனிப் `பலவயினானும் அஃறிணை முடிபின செய்யுளுள்ளே’ எனவே, சிலவயினான் அஃறிணை விரவாது உயர்திணையான் எண்ணி, அஃறிணை முடிபிற்றாகலும் உண்டு செய்யுளகத்து என்றவாறாம். அது வருமாறு: `பாணன் பறையன் துடியன் கடம்பனென் றந்நான் கல்லது குடியு மில்லை’ (புறம். 335) எனவரும். (51) 52. வினைவேறு படூஉம் பலபொரு ளொருசொல் வினைவேறு படாஅப் பலபொரு ளொருசொலென் றாயிரு வகைய பலபொரு ளொருசொல். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், பல பொருள் ஒரு சொல்லின் வகைமை உணர்த்துதல் நுதலிற்று. உரை: வினையான் வேறுபடும் பலபொருள் ஒரு சொல்லும், வினையான் வேறுபடாத பல பொருள் ஒரு சொல்லும் என அவ்விரண்டு வகைப்படும் பல பொருள் ஒரு சொல் என்றவாறு மற்றொரு பிரதியிற் கண்ட உரை: இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், ஒரு சொல்லான் வரும் பலபொருள் வகை கூறுதல் நுதலிற்று. உரை: பலபொருள் குறிக்கும் ஒரு சொல், வினை வேறுபடு கின்ற பலபொருள் ஒரு சொல் என, வினை வேறுபடாஅப் பலபொருள் ஒரு சொல் என இருவகைப்படும் என்றவாறு பலபொருள் குறிக்கும் ஒரு சொல்லினைப் பிறவகைப் படுத்திப் பகுத்தல் ஒல்லுமெனினும் வேறுபடுத்திக் கோடற்கண் வினையே சிறப்புடைமையின் இங்ஙனம் வகுத்தோதினார். (52) 53. அவற்றுள் வினைவேறு படூஉம் பலபொரு ளொருசொல் வேறுபடு வினையினு மினத்தினுஞ் சார்பினுந் தேறத் தோன்றும் பொருடெரி நிலையே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், வினை வேறுபடூஉம் பலபொருளாமாறு உணர்த்துதல் நுதலிற்று. உரை: முற்படப் பகுத்தோதியவற்றுள், வினை வேறுபடூஉம் பலபொரு ளொருசொல்லை அறியுமிடத்து, வேறுபடு வினை யினானும் இனத்தினானும் சார்பினானும் அறியப்படும் என்றவாறு வேறுபடு வினையான் அறிய வருமாறு. மா தளிர்த்தது, மா பூத்தது, மா காய்த்தது எனவரும்; இவ்வினை மர மாவிற் கல்லது ஏலாது. பிறவும் அன்ன. `மாவும் மருதும் ஓங்கின’ என்பது, இனத்தான் மாமரம் என விளங்கும். `மாவும் மரையும் புலம்படர்ந்தன’ என்றால், விலங்கு மா என்பது அறியப்படும். இனிச் சார்பினான் அறியவருமாறு: விற்பற்றி நின்று, `கோல் தா’ என்றால், கணைக்கோலின்மேல் நிற்கும், அதற்குச் சார்பு அதுவாகலான். குதிரைமேலிருந்து, `கோல் தா’ என்றால் மத்திகைக் கோலாம் ஆகலானும், சுள்ளற்கோலாம் ஆகலானும் செல்லும்; அதற்குச் சார்பு அதுவாகலான். பிறவும் அன்ன. (53) 54. ஒன்றுவினை மருங்கி னொன்றித் தோன்றும். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், அம்மூன்று வகையான் உணர்ந்தவாறு போலாது, உணராமை நிற்குமாறுடைத்து இச்சொல் என்பது உணர்த்துதல் நுதலிற்று. உரை: ஒன்று வினை என்பது - பொது வினை; பொது வினையாயிற் பகுதியுணராமற் றோன்றும் என்றவாறு அது வருமாறு: `மா வீழ்ந்தது’ என்றவிடத்து, இன்ன மா என்பது உணர்த்தல் ஆகாது; பொதுவாய் நிற்கும். (54) 55. வினைவேறு படாஅப் பலபொரு ளொருசொல் நினையுங் காலைக் கிளந்தாங் கியலும். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், வினை வேறுபடா அப் பல் பொருள் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. உரை: வினை வேறுபடாஅப் பல பொருள் ஒரு சொல்லை ஆராயுமிடத்து இன்னதென்று அறியக் கிளந்தே சொல்லுக என்றவாறு. (வரலாறு) `ஆன் கன்று நீரூட்டுக’ என வரும். நினைதல் என்பது ஆராய்தல். ஆராயுமிடத்துக் கிளந்து கூறுக எனவே, ஆராய்ச்சியில்லாத இடைத்தாயிற் கிளவாதே கூற அமையும் என்பதே அமையும். ஆராய்ச்சியுடைய நிலம் என்பது எருநிலம்; யாதோவெனின், `கன்று நீரூட்டுக’ என்றவிடத்து, ஆன் கன்றும், எருமைக் கன்றும், பூங்கன்றும் எனப் பலவும் ஆங்கு உளவாயின், அவன் சொன்ன கன்று நிற்பப், பிறிதொரு கன்று நீரூட்டல் வழுவாம். அதனான், இன்னுழி இன்ன கன்று என்று கிளந்து சொல்லுக; அல்லாக்கால், இன்ன கன்று என்று கிளவாதே சொல்ல அமையும். மேற்சூத்திரத்தின் துணிபும் இதுவே. வேறுபடு வினையும் இனமும் சார்பும் வேண்டாமை உணர்புழியாயின் அவையின்றியும் அமையும் என்பது. (55) 56. குறித்தோன் கூற்றந் தெரித்துமொழி கிளவி. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், மரபு வழுக்காத்தல் நுதலிற்று. உரை: தான் ஒரு பொருளைச் சொல்லக்கருதுமேல், அதனை இற்றென்று தெரித்துச் சொல்லுக என்றவாறு (வரலாறு) உலற்றற் றிறமின்றிப் பயின்றார் ஒரு சான்றார் மயிர் நீட்டி உலறிநின்றாரைக் கண்டு, ஒருவன், எம்பெருமான் உலறி நின்றீரால் என்றக்கால், வாளாதே உலறினேன் என்னற்க, இது காரணத்தான் உலறினேன் என்க; இது தனக்கு உற்றதுரைத்தது. பிறவும் அன்ன. இது செப்பு வழுவற்க என்று காத்தவாறு என்ப ஒரு திறத்தார். இனித் தெரித்துச் சொல்லாக்கால் வழுவேயாயினும் அமைக எனக் காத்தவாறு. இனி, ஒரு கருத்து: உலகினுள் ஒப்பமுடிந்த பொருளை ஒருவன் ஒவ்வாமை சொல்லுமே எனின், இது காரணத்தின் ஒவ்வாமை நோக்கிச் சொல்லினன் என்று தெரித்துச் சொல்லுக என்றவாறு. `பல்லோர்தோ டோய்ந்து வருதலாற் பூம்பொய்கை நல்வய லூரரின் றார்புலாஅல் - புல்லெருக்க மாசின் மணிப்பூணெம் மைந்தன் மலைந்தமையாற் காதறறாய் நாறு மெமக்கு.’ என வரும். (56) 57. குடிமை யாண்மை யிளமை மூப்பே அடிமை வன்மை விருந்தே குழுவே பெண்மை யரசே மகவே குழவி தன்மை திரிபெய ருறுப்பின் கிளவி காதல் சிறப்பே செறற்சொல் விறற்சொலென் றாவறு மூன்று முளப்படத் தொகைஇ அன்ன பிறவு மவற்றொடு சிவணி முன்னத்தி னுணருங் கிளவி யெல்லாம் உயர்திணை மருங்கி னிலையின வாயினும் அஃறிணை மருங்கிற் கிளந்தாங் கியலும். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், திணை வழுக்காத்தல் நுதலிற்று. உரை: குடிமை யாண்மை தொடக்கத்தனவும், பிறவும் அந் நிகரன எல்லாம் உயர்திணையல்லவும், உயர்திணைப் பொருளைச் சார்ந்து நிகழுங்குணங்களும், உயர்திணைப் பொருளைப் பற்றுக் கோடாக நிகழ்தலின், உயர்திணையைப் போல வழங்கல் வேண்டுமே யெனினும், அஃறிணையைச் சொல்லியாங்குச் சொல்லுக என்றவாறு (வரலாறு) அவர்க்குக் குடிமை நன்று: ... ... குடிமை, அவர்க்கு ஆண்மை நன்று: ... ... ஆண்மை, அவர்க்கு இளமை நன்று: ... ... இளமை, அவர்க்கு மூப்பு நன்று: ... ... மூப்பு, அவர்க்கு அடிமை நன்று: ... ... அடிமை, அரசு வன்மை நன்று: ... ... வன்மை, விருந்து வந்தது: ... ... விருந்து, அக்குழு நன்று: ... ... குழூஉ, பெண்மை அடங்கிற்று: ... ... பெண்மை, அரசு நிலைத்தது: ... ... அரசு, மகவு நலிந்தது: ... ... மகவு, குழவி யழுதது: ... ... குழவி என வரும். அலி வந்தது - இது தன்மை திரிபெயர். குருடு வந்தது - இஃது உறுப்பின் கிளவி. `என் காதல் பொலிவாயிற்று’ `என் யானை வந்தது’ இவை முறையே காதலும் சிறப்பும் கெழீஇ வந்தன. காதல் கிள்ளையினையும், யானை மகவினையும் பற்றி வந்தன. கெழீஇயிலி வந்தது - இது செறற்சொல். விறற்சொல் விறலை யுணர்த்துதல்; அது, `பெருவிறல் வந்தது’ என வரும். பேடி வந்தது, குரிசில் வந்தது என்னுந் தொடக்கத்தனவும் அறிந்துகொள்க. இதுவும் ஒருசார் ஆசிரியன் உரைப்பது: இனிக் குடிமை யாண்மை என்றித்தொடக்கத்தன ஒருவன், ஒருத்தி, பலர் என்னும் மூன்று பாற்கும் பொதுவாய்ப் பின் முடியுங்கால் அஃறிணை முடிபிற்றாக என்பது. வன்மை என்பது மூன்று பாற்கும் பொதுவாய் நிற்பது யாண்டுப் பெறுதுமோ எனின், வழக்குப் பெற்றுழிக் கொள்க. (57) 58. கால முலக முயிரே யுடம்பே பால்வரை தெய்வம் வினையே பூதம் ஞாயிறு திங்கள் சொல்லென வரூஉம் ஆயீ ரைந்தொடு பிறவு மன்ன ஆவயின் வரூஉங் கிளவி யெல்லாம் பால்பிரிந் திசையா வுயர்திணை மேன. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இதுவும் உயர்திணையான் முடியாது, அஃறிணையான் முடியும் என்பது உணர்த்துதல் நுதலிற்று. உரை: காலம், உலகம் என்றித் தொடக்கத்தனவும் உயர்திணை யெனினும் உயர்திணைப் பால் பிரிந்து இசையா; அஃறிணையான் இசைக்கும் என்றவாறு (வரலாறு) இவற்குக் காலம் ஆயிற்று: ... ... காலம், உலகம் பசித்தது: ... ... உலகம், உயிர் போயிற்று: ... ... உயிர், உடம்பு நன்று: ... ... உடம்பு, 11இவற்குத் தெய்வம் ஆயிற்று ... ... தெய்வம், இவ் வினை நன்று: ... ... வினை, இவனைப் பூதம் புடைத்தது: ... ... பூதம், ஞாயிறு எழுந்தது: ... ... ஞாயிறு, திங்கள் எழுந்தது: ... ... திங்கள், சொல் நன்று: ... ... சொல் என வரும். `பிறவும்’ என்றதனான், `வெள்ளி எழுந்தது, செவ்வாய் எழுந்தது’ என்பன கொள்க. இச் சூத்திரந் தெய்வஞ் சுட்டிய பொருள் அஃறிணையான் முடிபேற்றல் கூறினார் என்ப ஒரு திறத்தார். அற்றன்று, ஈண்டுத் தெய்வமும் உள, மக்களும் உளர். இனி, மேற் சூத்திரம், `முன்னத் தான் உணரப்படும்’ என்றவாறு கூறினார், இச்சூத்திரம் உயர் திணைப் பொருளே அஃறிணை முடிபு ஏற்பனவற்றிற்குக் கூறினார் என்பது. உலகம் என்பது உலகத்தார் மேற்று; உடம்பு என்பது உடம் புடையார் மேற்று என்பது. (58) 59. நின்றாங் கிசைத்த லிவணியல் பின்றே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், `குடிமை யாண்மை’ (கிளவி. 57) என்பதற்குப் புறனடை கூறுதல் நுதலிற்று. உரை: இச் சொல்லப்பட்டவையிற்றுக்கு நின்றாங்கு இசைத்தல் இயல்பின்று என்பது. எனவே, மேற் சூத்திரத்திற் சொல்லப்பட்டவையிற்றுக்கு நின்றாங்கு இசைத்தல் இயல்புமாம் என்பது. (வரலாறு) குடிமை நல்லன், வேந்து செங்கோலன் எனவரும். (59) 60. இசைத்தலு முரிய வேறிடத் தான. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இது, `காலம் உலகம்’ (கிளவி. 58) என்பதற்குப் புறனடை உணர்த்துதல் நுதலிற்று. உரை: வேறிடம் என்பது வேறு வாய்பாடு; வேறு வாய்பாட்டாற் சொல்ல இசைக்கும்; ஓதிய வாய்பாட்டாற் சொல்ல இசையாது என்பது. (வரலாறு) காலன் கொண்டான், உலகத்தார் பசித்தார் எனவரும். (60) 61. எடுத்த மொழியினஞ் செப்பலு முரித்தே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், `இனச் சுட்டில்லாப் பண்பு கொள் பெயர்க்கொடை’ (கிளவி. 18) என்னுஞ் சூத்திரத்திற்குப் புறனடை உணர்த்துதல் நுதலிற்று. உரை: மேற் `பண்புகொள் பெயர்க் கொடை’ (கிளவி. 18) வழக்கினுள் இனம்பெற்றே நிற்க என்றான், இனி இனமின்றியும் நிற்கும் வழக்கினுள் என்றவாறு. (வரலாறு) பெருங்கொற்றன், பெருஞ்சாத்தன் எனவரும். அற்றன்று, அவையும் ஆண்டே யடங்கும்; மற்றென்னை கருதியது எனின், இஃது அருத்தாபத்தி பெற்றது என்ப. `விதந்த மொழியினம் வேறுஞ் செப்பும்’ என்பது பரிமாண சூத்திரம். இதுவும் அப்பொருட்டு. (வரலாறு) `மேலைச்சேரிக் கோழி அலைத்தது’ என, `கீழைச் சேரிக் கோழி அலைப்புண்டமை’ சொல்லாமையே முடிந்ததாம்; `குடங் கொண்டான் வீழ்ந்தான்’ என்றவழிக் குடம் வீழ்ந்தமை சொல்லாமையே முடிந்ததாம். இந்நிகரன இனஞ் செப்பின. `செப்பலும் உரித்து’ எனவே செப்பாதன, `ஆ வாழ்க, அந்தணர் வாழ்க’ என்றவழி, ஒழிந்தனவும், ஒழிந்தாரும் சாக என்றவாறு அன்று என்பதாம். (61) 62. கண்ணுந் தோளு முலையும் பிறவும் பன்மை சுட்டிய சினைநிலைக் கிளவி பன்மை கூறுங் கடப்பா டிலவே தம்வினைக் கியலு மெழுத்தலங் கடையே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், திணைவழுக் காத்தல் நுதலிற்று. உரை: கண்ணும் தோளும் முலையும் பிறவும் பன்மைப் பாலாற் கூறுதல் கடப்பாடில; தம் வினைக்கியலும் எழுத்தல்லாத விடத்து என்றவாறு (வரலாறு) கண் நல்லள், தோள் நல்லள், முலை நல்லள் எனவரும். `பிறவும்’ என்றதனால், புருவம் நல்லள், காது நல்லள் என்பன போல்வன கொள்க. இனி, ஒருமை சுட்டிய சினைக்கிளவி ஒருமை கூறும் கடப்பா டில்லன. அவற்றிற்கு ஓத்து என்னை பிறவெனின், மேற் `கால முலகம்’ (கிளவி. 58) என்று திணைவழுக்காத்து வாராநின்ற அதிகாரத்திடையே `எடுத்த மொழியினஞ் செப்பலு முரித்தே’ (கிளவி. 61) என்னுஞ் சூத்திரத்தை இடனன்றி வைத்தார்; அது நிலமாகத் தந்து உரைத்தவற்றையும் கொள்க என்பது. (வரலாறு) மூக்கு நல்லள், கொப்பூழ் நல்லள் எனவரும். (62) முதலாவது கிளவியாக்கம் முற்றிற்று. அறிக்குறிப்புகள் 1. என்பன என்றும். 2. என இவை என்றும் பிரதிபேதம். 3. `குறுக்கும்வழிக் குறுக்கல்’ - பாடபேதம். 4. `வெண்கோட் டியாவனச் சேரவனப் பாடியும்’ - கல்லாடர் உரை. 5. பரிமாணச் சூத்திரம் - பிரதிபேதம். 6. வினாவு மாத்திரத்திற்கு வந்த சூத்திரம் - பிரதிபேதம். 7. உம்மையால் உறுப்பினாகிய பெயர்க்கும் கல்வியினாகிய பெயர்க்கும் கொள்க. 8. உதாரணம் வந்தவழிக் கண்டுகொள்க - பிரதிபேதம். 9. அமைதியாமாயிற்றுமென்க - பிரதிபேதம். 10. ஒரூஉவினை - என்றும் பாடம். 11. `இவற்குப் பால் ஆயிற்று’ எனவுமாம். வேற்றுமையியல் வேற்றுமை யிலக்கணம் உணர்த்தினமையால் இது வேற்றுமை யியலென்னும் பெயருயடையதாயிற்று. கிளவியாக் கத்துள் பெயர், வினை, இடை, உரியென்னும் நான்கு சொற்கும் பொதுவிலக்கணமுணர்த்தினார். அப்பொதுவிலக்கணத்தினைத் தொடர்ந்து அவற்றது சிறப்பிலக்கணங்கூறுதல் முறை. ஆயினும் வேற்றுமையென்பன ஒருசார் பெயரும் இடைச்சொல்லுமா தலின் அவற்றின் இலக்கணமும் பொதுவிலக்கணமாதல் கருதிக் கிளவியாக்கத்திற்கும் பெயரியலுக்குமிடையே வேற்றுமை யிலக்கணம் உணர்த்த எடுத்துக்கொண்டார். வேற்றுமை யிலக்கணமென்பது ஒன்றாயினும் சிறப்புடைய எழுவகை வேற்றுமைகளும் அவற்றது மயக்கமும் எட்டாவதாகிய விளிவேற்றுமையும் தனித்தனி யியல்களால் உணர்த்துதற்குரிய பொருள்வேறுபாடுடைமையின் அவற்றை முறையே வேற்றுமை யியல், வேற்றுமை மயங்கியல் விளிமரபு என மூன்றியல்களால் உணர்த்தினார். வேற்றுமையியற் பகுதியைப் பதினேழு சூத்திரங்களாக இளம்பூரணரும், இருபத்திரண்டு சூத்திரங்களாகச் சேனாவரை யரும் நச்சினார்க்கினியரும், இருபத்தொரு சூத்திரங்களாகத் தெய்வச்சிலையாரும் பகுத்து உரைகூறியுள்ளார்கள். பெயர்ப்பொருளை வேறுபடுத்தும் உருபுகள் வேற்றுமை யெனப்பட்டன. செயப்படுபொருள் முதலியனவாகப் பெயர்ப் பொருளை வேறுபடுத்துணர்த்தலின் வேற்றுமையாயின எனவும் செயப்படுபொருள் முதலாயினவற்றின் வேறுபடுத்துப் பொருள் மாத்திர முணர்த்தலின் எழுவாயும் வேற்றுமையாயிற்று எனவும் கூறுவர் சேனாவரையர். “பொருண்மை சுட்டல் முதலிய ஆறு பொருளையுங் குறித்து அவற்றால் தான் வேறுபட நிற்றலானும் முடிக்குஞ்சொல்லைத் தான் விசேடித்து நிற்றலானும் எழுவாயும் வேற்றுமையாயிற்று” என்பர் நச்சினார்க்கினியர். ஒரு பொருளை ஒருகால் வினைமுதலாக்கியும் ஒருகாற் செயப்படு பொருளாக்கியும் ஒருகால் ஏற்பது ஆக்கியும் ஒருகால் நீங்க நிற்பது ஆக்கியும் ஒருகால் உடையது ஆக்கியும் ஒருகால் இடமாக்கியும் இவ்வாறு தம்மையேற்ற பெயர்ப்பொருளை வேறுபடுத்தினமையால் வேற்றுமையெனப்பட்டன என்றும், மேல் கிளவியாக்கத்தால் அல்வழித்தொடர் கூறி இனி வேற்றுமைத்தொடர் கூறுகின்றா ரென்றும் கூறுவர் தெய்வச்சிலையார். பெயர், ஐ, ஒடு, கு, இன், அது, கண், விளிஎன வேற்றுமை யெட்டென்றார் தொல்காப்பியனார். வேற்றுமை ஏழெனக் கொள்வோர் விளிவேற்றுமையை எழுவாயுள் அடக்குவர். பிறிதோர் இடைச்சொல்லையேலாது இயல்பாகியும் தானே திரிந்தும் நிற்கும் பெயரின் இறுதி விளியெனப்படும். படர்க்கைச் சொல்லையும் பொருளையும் முன்னிலைச் சொல்லும் பொருளுமாக வேற்றுமை செய்வது விளி வேற்றுமையாதலின் இதனை எழுவாயுள் அடக்காது வேறாகக் கொள்வதே தமது துணிபென்பார், ‘வேற்றுமைதாமே ஏழெனமொழிப’ ‘விளிகொள்வதன்கண் விளியோடெட்டே’ என்றார் தொல்காப்பியனார். எத்தகைய தொழிலும் கருத்தா இல்லாமல் நடைபெறாது. ஆதலின் அதனைச்செய்து முடிக்கும் வினை முதற்பொருளைத் தருவதாய்த் திரிபில்லாது நின்றபெயர் எழுவாய் வேற்றுமையென முதற்கண் வைக்கப்பட்டது. வினைமுதல் ஒருதொழிலைச் செய்யுங்கால் அச்செயலாற் றோன்றிய பொருள் செயப்படு பொருளெனப்படும். இத்தகைய செயப்படுபொருளாகப் பெயர்ப்பொருளை வேறுபடுத்துவது ஐயுருபாதலின் அஃது இரண்டாம் வேற்றுமையெனப்பட்டது. வினைமுதல் ஒரு காரியத்தைச்செய்து முடித்தற்கு இன்றியமையாது வேண்டப் படுவது கருவி. இத்தகைய கருவிப்பொருளாகப் பெயர்ப்பொருளை வேறுபடுத்துவது ஒடுவுருபாதலின் அது மூன்றாம் வேற்றுமை யெனப்பட்டது. ஒருவன் ஒரு காரியத்தைக் கருவியாற் செய்வது தனக்கும் பிறர்க்கும் உதவுதற் பொருட்டேயாம். இவ்வாறு தரப்படும் எவ்வகைப் பொருளையும் ஏற்றுக்கொள்வதாகப் பெயர்ப்பொருளை வேறுபடுத்துவது குவ்வுருபாதலின் அது நான்காம் வேற்றுமை யெனப்பட்டது. ஒருவன் ஒரு பொருளைப் பிறர்க்குக் கொடுக்குங்கால் அப்பொருள் அவனை விட்டு நீங்குதலைக் காண்கின்றோம். இவ்வாறு நீங்க நிற்கும் பொருளாகப் பெயர்ப்பொருளை வேறுபடுத்துவது இன்னுரு பாதலின் அஃது ஐந்தாம் வேற்றுமையாயிற்று. ஒருவனிடத்து நீங்கிய பொருளை யேற்றுக்கொண்டவன் அப்பொருளைத் தன் னுடையது எனக் கிழமை (உரிமை) பாராட்டக் காண்கிறோம், இத்தகைய கிழமைப் பொருளாகப் பெயர்ப் பொருளை வேறு படுத்துவது அது வுருபாதலின் அஃது ஆறாம் வேற்றுமையாயிற்று. மேற்கூறிய எல்லா நிகழ்ச்சிக்கும் இடம் இன்றியமையாதது. தன்னையேற்ற பெயர்ப்பொருளை இடப்பொருளாக வேறுபடுத்துவது கண்ணுருபாதலின் அஃது ஏழாம் வேற்றுமை யாயிற்று. இவற்றின் வேறாகப் பெயர்ப்பொருளை எதிர் முகமாக்குவது விளி வேற்றுமையாதலின் அஃது எட்டாம் வேற்றுமையென இறுதிக் கண் வைக்கப்பட்டது. மேற்கூறிய எட்டு வேற்றுமைகளையும் முறையே பெயர் வேற்றுமை, ஐகார வேற்றுமை, ஒடு வேற்றுமை, குவ்வேற்றுமை, இன் வேற்றுமை, அது வேற்றுமை, கண் வேற்றுமை, விளி வேற்றுமை எனப் பெயர் தந்து வழங்குதலும், இவற்றுள் ஐகார வேற்றுமை முதல் கண் வேற்றுமை ஈறாகவுள்ள ஆறையும் முறையே இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது, ஆறாவது, ஏழாவது என எண் முறையாற் பெயரியிட்டு வழங்கு தலும் ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்தும் அவர்க்கு முன்னும் வழங்கிய தமிழியற் குறியீடுகளாகும். இவ்வுண்மை இவ்வேற்றுமையியற் சூத்திரங்களால் நன்கு விளங்குகின்றது. இவ்வியலில் எழுவாய் வேற்றுமை முதலாக ஏழாம் வேற்றுமையீறாகவுள்ள ஏழு வேற்றமைகளின் இலக்கணங்கள் விரித்துரைக்கப்பட்டுள்ளன. ஏழுவேற்றுமையின் உருபும் உருபுநிற்கும் இடமும் அதன் பொருளும் அப்பொருளின் வகைகளும் ஆகியவற்றை இவ்வியலில் ஆசிரியர் முறையே விளக்கிச் செல்கின்றார். இங்ஙனம் ஏழு வேற்றுமைகளின் இலக்கணங் கூறுமுகமாகப் பயனிலை கோடலும், உருபேற்றலும், காலந்தோன்றாமையும் ஆகிய இம்மூன்றும் பெயர்க்குரிய இலக்கணங்கள் என்பதனை ஆசிரியர் உய்த்துணர வைத்துள்ளார். மேற்கூறிய வேற்றுமைகளின் பொருள்வகையை விரித் துரைக்குங்கால் ‘காப்பின் ஒப்பின் ஊர்தியின் இழையின்’ என்பன முதலாக இவ்வியலிற்கூறிய பொருள்களேயன்றி இப்பொருளோடு பொருந்தித்தோன்றும் எல்லாச் சொற்களும் கொள்ளுதற்குரியன என்பதை இவ்வியலின் புறனடைச் சூத்திரத்தால் ஆசிரியர் தெளிவுபடுத்துகின்றார். - க. வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 194-197 இரண்டாவது வேற்றுமையியல் 63. வேற்றுமை தாமே யேழென மொழிப என்பது சூத்திரம். இவ்வோத்து என்ன பெயர்த்தோ வெனின், வேற்றுமை எனப்பட்ட சிலபொருள் உணர்த்தினமையின், வேற்றுமையியல் என்னும் பெயர்த்து. மேல் ஓத்தினுள் நால்வகைப்பட்ட சொற்களையும் பொருள்கள் மேலாமாறு கூறிப் போந்தான்; அவற்றுள் முதலது பெயர்ச்சொல்; அதனது இலக்கணம் உணர்த்திய எடுத்துக் கொண்டான். இது மேலோத்தினோடு இயைபு. எங்ஙனம் உணர்த்தினானோ எனின், பயனிலை செப்பலும், உருபேற்றலும், காலந்தோன்றாமையும் பெயரது இலக்கணம் என உணர்த்தினான் என்பது. மற்று, இத்தலைச்சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், தன்னால் உணர்த்தப்படும் பொருளை இனைத்து என்று வரையறுத்தல் நுதலிற்று. உரை: வேற்றுமை என்று சொல்லப்படுவன எழுவகைய என்றவாறு இவ்வேற்றுமைகள் பொருள்களை வேற்றுமை செய்யு மாறு, அவற்றவற்றுச் சிறப்புச் சூத்திரத்தான் அறிக. (1) 64. விளிகொள் வதன்கண் விளியோ டெட்டே. இச் சூத்திரம் என்நுதலிற்றோவெனின், ஒழிந்த வேற்றுமை உணர்த்துதல் நுதலிற்று. உரை: விளிகொள்வதன்கண் விளியோடு எட்டு வகைப்படும் என்றவாறு வேற்றுமை விளிகொள்வது என்பது பெயரதன்கண் விளி என்றவாறு. விளித்தல் என்பது கூவுதல். இதுவும் மேலவற்றோடு ஒத்த சிறப்பின்றாகலான் வேறு போந்து கூறினான் என்பது. என்னை ஒவ்வாவாறு எனின், இதனை ஏற்கும் பெயரும் ஏலாப்பெயரும் உள என்க. அஃதாமாறு விளிமரபினிற் கூறுதும். (2) 65. அவைதாம் பெயர் ஐ ஒடு கு இன் அது கண் விளி யென்னு மீற்ற. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், வேற்றுமைகளின் பெயரும் முறையும் உணர்த்துதல் நுதலிற்று. உரை: அப்பெயரே பெயர், அம்முறையே முறை; ஈற்ற என்பது இவ் விளிவேற்றுமை ஈறாகவுடைய என்றவாறு. அவைதாம் என்பது மேற் சொல்லப்பட்டன என்றவாறு (3) 66. அவற்றுள் எழுவாய் வேற்றுமை பெயர்தோன்று நிலையே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், நிறுத்த முறையானே முதற்கண் நின்ற பெயர் வேற்றுமை உணர்த்துதல் நுதலிற்று. உரை: எழுவாய் வேற்றுமைப்பெயர் முதல்வேற்றுமைப் பெயர் என்றவாறு. இனித் `தோன்றுநிலை’ என்றதனான், மேற் சூத்திரத்துக் கூறப்படும் அறுவகைப் பயனிலையும் தோன்ற நிற்கும் பெயர் எழுவாய் வேற்றுமையாவது என்றவாறாம். என்னை, `ஆயன் சாத்தன் வந்தான்’ என்புழி, ஆயன் என்பதூஉம் பெயர், சாத்தன் என்பதூஉம் பெயர்; ஆயினும், இரண்டற்கும் இரண்டு பயனிலை தோன்ற நில்லாமையாற் சாத்தன் என்பதூஉம் வந்தான் என்பதூஉம் ஆயன் என்பதற்கே பயனிலை; அதனால் சாத்தன் என்பது ஆண்டு எழுவாய் வேற்றுமையாயிற்று என்பது. இனி, பெயரை எழுவாய் வேற்றுமை யென்றும் விளிவேற் றுமை யென்றும் உரைத்தீரால், இரண்டனுக்கும் தம்முள் வேற்றுமையென்னெனில், ஈறு திரியாது உருபேற்றல் எழுவாய் வேற்றுமையது இலக்கணம்; ஈறு திரிந்து உருபேற்றல் விளி வேற்றுமைய திலக்கணம் என்பது அறிக. (4) 67. பொருண்மை சுட்டல வியங்கொள வருதல் வினைநிலை யுரைத்தல் வினாவிற் கேற்றல் பண்புகொள வருதல் பெயர்கொள வருதலென் றன்றி யனைத்தும் பெயர்ப்பய னிலையே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், மேற் சொல்லப்பட்ட எழுவாய் வேற்றுமை என்பது இவ் வறுவகைப் பட்ட பயனிலையும் ஏற்பது என்பது உணர்த்துதல் நுதலிற்று. `ஆ உண்டு’ என்பது பொருண்மை சுட்டல். `ஆ செல்க’ என்பது வியங்கொள வருதல். `ஆ கிடந்தது’ என்பது வினைநிலை யுரைத்தல். `ஆ எவன்?’ என்பது வினாவிற் கேற்றல். `ஆ கரிது’ என்பது பண்புகொள வருதல். `ஆ பல’ என்பது பெயர்கொள வருதல். இவை எல்லாம் பெயர்வேற்றுமைப் பொருள் என்பது. `அன்றி அனைத்தும்’ என்பது அத்துணைப் பொருள் எல்லாம் என்றவாறு. (5) 68. பெயரி னாகிய தொகையுமா ருளவே யவ்வு முரிய வப்பா லான. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், தொகைச் சொல்லும் பயனிலை ஏற்கும் என்பது உணர்த்துதல் நுதலிற்று. உரை: அறுவகைத் தொகைச் சொல்லும் எழுவாய் வேற்றுமைப் பயனிலைப்பாடு பிழையாது வரும் என்றவாறு (வரலாறு) யானைக் கோடு உண்டு, யானைக் கோடு செல்க, யானைக் கோடு வீழ்ந்தது, யானைக் கோடு யாது, யானைக் கோடு வெளிது, யானைக் கோடு பத்து எனவரும். பிறவுமன்ன. இனி ஒரு கருத்து - `பெயரினாகிய தொகையுமா ருளவே’ என்பது, பெயரும் பெயருந் தொக்க தொகையும் என்றவாறு. உம்மையான் வினையும் பெயருந் தொக்க தொகையும் எழுவாய் வேற்றுமைப் பயனிலைப் பாடு பிழையாது வரும் என்று கொள்க. அது, `கொல் யானை’ என்பது. (6) 69. எவ்வயிற் பெயரும் வெளிப்படத் தோன்றி யவ்விய னிலையல் செவ்வி தென்ப. இச்சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இதுவும் எழுவாய் வேற்றுமைக் காவதொரு திறமுணர்த்துதல் நுதலிற்று. உரை: எல்லாப் பெயரும் பயனிலைப்பட நிற்றற்றன்மையில் திரியாமை அதற்குச் செவ்விது என்ப; பிறிது அதற்குச் செவ்விய தாகாமையும் உடையது என்றவாறு யாதோ எனின், உருபேற்றலும் பெயரதிலக்கணம். அவ்வுரு பேற்றலை ஒரோ பெயர் உடையதாகாது எனலுமாம். ஒரோ பெயரென்பது என்னை? நீயிர் என்பது பெயர்; பெயராயினும், நீயிரை என்று உருபேலாது. பிறவும் அன்ன. (7) 70. கூறிய முறையி னுருபுநிலை திரியா தீறுபெயர்க் காகு மியற்கைய வென்ப. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், உருபேற்றலும் பெயரதிலக்கணம் என உணர்த்துதல் நுதலிற்று. உரை: மேல் அவைதாம், ஐ ஒடு கு இன் அது கண் என்றோதிய முறையாற் கிடந்த உருபு, முறைமையின் திரியாதே பெயரது ஈற்றுக்கண் வந்து 1நிற்கும் இயல்பினையுடைய என்றவாறு (வரலாறு) சாத்தனை, சாத்தனொடு, சாத்தற்கு, சாத்தனின், சாத்தனது, சாத்தன்கண் எனவரும். `நிலைதிரியாது’ என்றது, இவை இடைச்சொல்லாகலான், தம்மீறு திரிதல் என்னும் இலக்கணமுடைய கொல்லோ எனின், அவை இல என்றற்குக் கூறினான் என்பது. அன்றியும் முன்னர் வேற்றுமை மயங்கியலுள், `கு ஐ ஆன் என வரூஉம் இறுதி அவ்வொடு சிவணும்’ (வேற். மயங். 25) என்று செய்யுட்கண் திரிபு கூறுபவாகலானும் அது சொல்லி னான் என்பது. (8) 71. பெயர்நிலைக் கிளவி காலந் தோன்றா தொழினிலை யொட்டு மொன்றலங் கடையே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இதுவுமது, பெயர்க்கண்ணே கிடந்ததோர் இலக்கணம் நுதலிற்றாகலின். உரை: பெயர்ச் சொல் காலந்தோன்றா; தொழிற் பெயராயிற் காலம் தோன்றும் என்றவாறு (வரலாறு) சாத்தன் என்பது காலந்தோன்றாது, உண்டான் என்பது காலந்தோன்றிற்று. மற்றுத் தொழிற்பெயரெல்லாங் காலந்தோன்றும். பெயர்ச்சொல் காலந் தோன்றா எனவே, தொழிற் பெயர் காலந் தோன்றுதலும் தோன்றாமையும் உடைய என்பதாம். இனி ஒரு கருத்து: தொழில் நிலைப் பெயர்ச்சொல் காலந் தோன்றா, காலம் ஒட்டுந் தொழிற்பெயர் அல்லாதவிடத்து என்றவாறு. காலந்தோன்றாதன: உண்டல், தின்றல் என்பன; இவை அத் தொழின்மேல் நின்ற பெயர். இனிக் காலம் ஒட்டும் தொழிற் பெயராவன: உண்டான், தின்றான் என்பன; இவை அத்தொழில் செய்வான்மேல் நின்ற பெயர். (9) 72. இரண்டா குவதே ஐயெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி யெவ்வழி வரினும் வினையே வினைக்குறிப் பவ்விரு முதலிற் றோன்று மதுவே காப்பி னோப்பி னூர்தியி னிழையி னொப்பிற் புகழிற் பழியி னென்றா பெறலி னிழவிற் காதலின் வெகுளியிற் செறலி னுவத்தலிற் கற்பி னென்றா வறுத்தலிற் குறைத்தலிற் றொகுத்தலிற் பிரித்தலி னிறுத்தலி னளவி னெண்ணி னென்றா வாக்கலிற் சார்தலிற் செலவிற் கன்றலி னோக்கலி னஞ்சலிற் சிதைப்பி னென்றா வன்ன பிறவு மம்முதற் பொருள வென்ன கிளவியு மதன்பால வென்மனார். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இஃது இரண்டாம் வேற்றுமையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. உரை: இரண்டாம் எண்ணு முறைமைக்கண்ணது ஐ என்னும் பெயரையுடைய வேற்றுமைச் சொல்; அது யாண்டு வரினும் வினையும் வினைக்குறிப்பும் என அவ் விரண்டையும் தனக்குத் தோற்று நிலமாக உடைத்து என்றவாறு அவ்விரண்டும் நிமித்தமாகத் தோன்றும் எனினும் அமையும். `மரத்தைக் குறைத்தான்’ என்பது வினைபற்றி வந்தது. `குழையை யுடையன்’ என்பது வினைக்குறிப்புப் பற்றி வந்தது. `அதுவே’ என்பது அவ்விரண்டாம் வேற்றுமை தானே என்று தெரித்தவாறு. இனி, அவ் வினையும் வினைக்குறிப்பும் பற்றி, அது வருமாற்றுக்கு உதாரணப் பகுதி காட்டுதும்: ஊரைக் காக்கும், கிளியை யோப்பும், யானையை யூரும், எயிலை யிழைக்கும், தாயை ஒக்கும், ஊரைப் புகழும், நாட்டைப் பழிக்கும். என்றா என்பது எண்ணிடைச்சொல். ஊரைப் பெறும், ஊரை யிழக்கும், மனைவியைக் காதலிக்கும், படையை வெகுளும், ஊரைச் செறும், தாயை உவக்கும், நூலைக் கற்கும். ஞாணை யறுக்கும், மரத்தைக் குறைக்கும், நெல்லைத் தொகுக்கும், வேலியைப் பிரிக்கும், பொன்னை நிறுக்கும், அரிசியை அளக்கும், அடைக்காயை எண்ணும், ஊரை யாக்கும், வாய்க்காலைச் சாரும், நெறியைச் செல்லும், சூதினைக் கன்றும், செய்யை நோக்கும், கள்ளரை யஞ்சும், நாட்டைச் சிதைக்கும் எனவரும். என்றா என்பன எண்ணிடைச் சொற்கள். ஈண்டு நின்ற `இன்’களெல்லாஞ் சாரியை ஆயின. ‘பிறவும்’ என்றது இவையல்ல பிறவும் என்றவாறு. வினையும் வினைக்குறிப்பும் பற்றி வருவனவெல்லாம் இரண் டாம் வேற்றுமைப் பொருள. அவை: விரலை மடக்கும், நாவினை வளைக்கும் என்பன போல்வன வினை. ஊரை யின்புடையான் என்பது போல்வன வினைக்குறிப்பு. ‘அம் முதற்பொருள என்ன கிளவியும் அதன்பால என்மனார்’ என்பது - அவ் வினையும் வினைக்குறிப்பும் பற்றி வருவனவெல்லாம் முதலாய் வரூஉம் எவ்வகைப்பட்ட சொல்லும் இவ்விரண்டாம் வேற்றுமைக் கூற்றன என்ப என்றவாறு. (10) 73. மூன்றாகுவதே ஒடுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி வினைமுதல் கருவி யனைமுதற் றதுவே யதனி னியற லதற்றகு கிளவி யதன்வினைப் படுத லதனி னாத லதனிற் கோட லதனொடு மயங்க லதனோ டியைந்த வொருவினைக் கிளவி யதனோ டியைந்த வேறுவினைக் கிளவி யதனோ டியைந்த வொப்ப லொப்புரை யின்னா னேது வீங்கென வரூஉ மன்ன பிறவு மதன்பால வென்மனார். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், முறையானே மூன்றாம் வேற்றுமை உணர்த்துதல் நுதலிற்று. உரை: மூன்றாம் எண்ணு முறைமைக்கண்ணது ஒடு என்னும் பெயரையுடைய வேற்றுமைச் சொல்; அது வினை முதலும் கருவியும் என இரண்டனையும் தனக்குப் பொருளாக உடையது என்றவாறு. (வரலாறு) ‘நாயாற் கோட்பட்டான்’ என்பது வினை முதல்பற்றி வந்தது. ‘வேலான் எறிந்தான்’ என்பது கருவிபற்றி வந்தது. இனி, அவ் வினைமுதலும் கருவியும் பற்றி வருமாற்றை விரிக்கின்றார்: அதனினியறல், ‘தச்சன் செய்த சிறுமா வையம்’ (குறுந். 61) இது தச்சனாற் செய்யப்பட்டது என்பதாம். அதற்றகு கிளவி: ‘வாயாற்றக்கது வாய்ச்சி’ என்பது. அதன் வினைப்படுதல்: `நாயாற் கோட்பட்டான்’ என்பது. அதனினாதல்: ‘வாணிகத்தானாயினான்’ என்பது. அதனிற் கோடல்: `காணத்தாற் கொண்ட அரிசி’ என்பது. அதனொடு மயங்கல்: `எள்ளொடு விராஅய அரிசி’ என்பது. அதனோடு இயைந்த ஒருவினைக் கிளவி: `சாத்தனொடு வந்தான் கொற்றன்’ என்பது. அதனோடியைந்த வேறுவினைக் கிளவி: `மலையொடு பொருத மாஅல் யானை’ என்பது. அதனொடியைந்த வொப்பல் ஒப்புரை: `முத்தொடு முழாக் கோத்து’ என்பது. ஒவ்வாததனை ஒப்பித்தல் ஒப்பலொப்புரை. இன்னான் என்புழியும் ஏது வினைகண்ணும் வரும் மூன்றாம் வேற்றுமை. இன்னான் என்பது, ‘கண்ணாற் கொத்தை, காலான் முடவன்’ என்பன. ஏது என்பது, ‘முயற்சியாற் பிறத்தலான் சொல்லு நிலையாது’ என்பது. அன்ன பிறவும் என்றதனான், பிறவும் வருவன எல்லாம் கொள்க. (11) 74. நான்கா குவதே கு எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி யெப்பொரு ளாயினுங் கொள்ளு மதுவே யதற்குவினை யுடைமையி னதற்குடம் படுதலி னதற்குப்படு பொருளி னதுவாகு கிளவியி னதற்கியாப் புடைமையி னதற்பொருட் டாதலி னட்பிற் பகையிற் காதலிற் சிறப்பினென் றப்பொருட் கிளவியு மதன்பால வென்மனார். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், முறையானே நான்காம் வேற்றுமை உணர்த்துதல் நுதலிற்று. உரை: நான்காம் எண்ணுமுறைமைக்கண்ணது கு என்னும் பெயரை யுடைய வேற்றுமைக் கிளவி; ஈவதோர் பொருளை ஏற்க நிற்கும் அதுவே என்பது. (வரலாறு) `சாத்தற்குச் சோறு’ என வரும். ‘எப்பொருளாயினும்’ என்றார், மூன்றிடத்துப் பன்மையும் நோக்கி. அதற்கு வினையுடைமை: `கரும்பிற்கு வேலி’ என்பது. அதற்குடம்படுதல்: `சாத்தற்கு மகளுடம்பட்டார் சான்றோர்’ என்பது. அதற்குப் படுபொருள்: `சாத்தற்குப் படுபொருள் கொற்றன்’என்பது. அதுவாகு கிளவி: `கடி சூத்திரத்திற்குப் பொன்’ என்பது. அதற்கியாப்புடைமை: ‘கைக்கியாப் புடையது கடகம்’ என்பது. அதன் பொருட்டாதல்: ‘கூழுக்குக் குற்றேவல் செய்யும்’என்பது. நட்பு: `நாய்க்கு நட்புடையன’ என்பது. பகை: `மக்கட்குப் பகை பாம்பு’என்பது. காதல்: ‘தாய்க்குக் காதலன்’ என்பது. சிறப்பு: `வடுகரசர்க்குச் சிறந்தார் சோழியவரசர்’என்பது. `அப்பொருட் கிளவி’ என்பது, ஈண்டு ஏற்ற பொருளல் லனவும் வேற்றுமைக்கு உரிமை காட்டுவான் சொல்லினான் என்பது. ஏற்ற பொருண்மை விதந்து கூறினான் என்பது சிறப்பு நோக்கி. பிறவும் அதன்பால ஆவன: `பண்ணுக்குத் தக்கது பாடல்’ `பூவிற்குத் தக்கது வண்டு’ என்பன போல்வன. இன்னெல்லாஞ் சாரியை. (12) 75. ஐந்தாகுவதே இன் னெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி யிதனி னிற்றிது வென்னு மதுவே வண்ணம் வடிவே யளவே சுவையே தண்மை வெம்மை யச்ச மென்றா நன்மை தீமை சிறுமை பெருமை வன்மை மென்மை கடுமை யென்றா முதுமை யிளமை சிறத்த லிழித்தல் புதுமை பழமை யாக்க மென்றா வின்மை யுடைமை நாற்றந் தீர்தல் பன்மை சின்மை பற்று விடுதலென் றன்ன பிறவும் மதன்பால வென்மனார். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், முறையானே ஐந்தாம் வேற்றுமை உணர்த்துதல் நுதலிற்று. உரை: ஐந்தாம் எண்ணு முறைமைக்கண்ணது இன் என்னும் பெயரையுடைய வேற்றுமைக் கிளவி; இப்பொருளின் இத் தன்மைத்து இப்பொருள் என்பதனைப் பயப்பவரும் அது என்றவாறு (வரலாறு) `காக்கையிற் கரிது களம்பழம்’ என வரும். இதனின் என்பது காக்கையின் என்பது; இற்று என்பது கரிது என்பது; இது என்பது களம்பழம் என்பது. எனவே, பொரூஉப் பொருளைத் தனக்குப் பொருளாக உடைத்து என்றவாறு. ஐந்தாம் வேற்றுமை நான்கு பொருள் உடைத்து; பொரூஉப் பொருளும் நீக்கமும் எல்லையும் ஏதுவும் என. அவற்றுள், பொரூஉப் பொருளை எடுத்துக் கூறினார் சிறப்புடைமையின்; ஒழிந்தனவற்றைப் போக்கிச் சொல்லுதும். வண்ணம்: `காக்கையிற் கரிது களம்பழம்’ என்பது. வடிவு: `இதனின் வட்டம் இது’ என்பது. அளவு: `இதனின் நெடிது இது’என்பது. சுவை: `இதனிற் றீவிது இது’ என்பது. தண்மை: `இதனிற் றண்ணிது இது’ என்பது. வெம்மை: `இதனின் வெய்யது இது’ என்பது. அச்சம்: `கள்ளரின் அஞ்சும்’ என்பது. (இஃது ஏது) `என்றா’ என்பது எண்ணிடைச் சொல். நன்மை: `இதனின் நன்று இது’ என்பது. தீமை: `இதனிற் றீது இது’ என்பது. சிறுமை: `இதனிற் சிறிது இது’என்பது. பெருமை: `இதனிற் பெரிது இது’என்பது. வன்மை: `இதனின் வலிது இது’என்பது. மென்மை: `இதனின் மெலிது இது’என்பது. கடுமை: `இதனிற் கடிது இது’என்பது. `என்றா’ என்பது எண்ணிடைச் சொல். முதுமை: `இவனின் மூத்தான் இவன்’என்பது. இளமை: `இவனின் இளையான் இவன்’என்பது. சிறத்தல்: `இவனிற் சிறந்தான் இவன்’ என்பது. இழித்தல்: `இவனின் இழிந்தான் இவன்’ என்பது. புதுமை: `இவனிற் புதியன் இவன்’ என்பது. பழமை: `இவனின் பழையன் இவன்’ என்பது. ஆக்கம்: `இவனின் ஆயினான் இவன்’ என்பது. `என்றா’ என்பது எண்ணிடைச் சொல். இன்மை: `இவனின் இலன் இவன்’என்பது. உடைமை: `இவனின் உடையன் இவன்’என்பது. நாற்றம்: `இதனின் நாறும் இது’என்பது. இவையெல்லாம் பொரூஉப் பொருள். தீர்தல்: `ஊரிற் றீர்ந்தான்’என்பது; இது நீக்கம். பன்மை: `இவரிற் பலர் இவர்’என்பது. சின்மை: `இவரிற் சிலர் இவர்’என்பது. இவையும் பொரூஉப் பொருள். பற்றுவிடுதல்: `ஊரிற் பற்றுவிட்டான்’. இதுவும் நீக்கம் என்பது. `அன்ன பிறவும்’ என்றதனால் எல்லைப் பொருளும், ஏதுவும், கொள்க. எல்லை: `கருவூரின் கிழக்கு’ `மருவூரின் மேற்கு’ என்பன. ஏது: `முயற்சியிற் பிறத்தலின் ஒலி நிலையாது’ என்பது. (13) 76. ஆறாகுவதே அதுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி தன்னினும் பிறிதினு மிதன திதுவெனு மன்ன கிளவிக் கிழமைத் ததுவே யியற்கையி னுடைமையின் முறைமையிற் கிழமையிற் செயற்கையின் முதுமையின் வினையினென்றா கருவியிற் றுணையிற் கலத்தின் முதலி னொருவழி யுறுப்பிற் குழூஉவி னென்றா தெரிந்துமொழிச் செய்தியி னிலையின் வாழ்ச்சியிற் றிரிந்துவேறு படூஉம் பிறவு மன்ன கூறிய மருங்கிற் றோன்றுங் கிளவி யாறன் பால வென்மனார் புலவர். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், முறையானே ஆறாம் வேற்றுமை உணர்த்துதல் நுதலிற்று. உரை: ஆறாம் எண்ணுமுறைமைக்கண்ணது அது என்னும் பெயரையுடைய வேற்றுமைச் சொல்; தன்னொடு தொடர்ந்த தோர் பொருளையும் தன்னின் வேறாயதோர் பொருளையும் இதனது இது என்று கிழமை செப்பிநிற்றல் ஆறாம் வேற்றுமையது இலக்கணம் என்றவாறு அதுவே என்பது அப்பொருளை விரிப்பான் தெரித்தவாறு. `இதனதிது’என்னுங் கிளவிக்கிழமைத்து என்னாது, `அன்ன’ என்றதனான், இதற்குப் பிறிதுமோர் உருபு உண்டு என்க. அஃது யாதோ வெனின், அவன அவள என்னும் ஈற்றகரம். தன்னினும் என்புழித் தற்கிழமை ஐந்து வகைப்படும். ஒன்று பல குழீஇய தற்கிழமையும், வேறு பல குழீஇய தற்கிழமையும், ஒன்றியற் கிழமையும், உறுப்பின் கிழமையும், மெய்திரிந்தாய கிழமையும் என. ஒன்று பலகுழீஇய தற்கிழமையது: `எட்குப்பை’என்பது. வேறு பலகுழீஇய தற்கிழமையது: `படையது குழாம்’என்பது. ஒன்றியற் கிழமையது: `நிலத்தினது அகலம்’என்பது. உறுப்பின் கிழமையது: `யானையது கோடு’என்பது. மெய்திரிந்தாகிய கிழமையது: `எள்ளினது சாந்து’என்பது. பிறிதின் கிழமை இது போலப் பகுதிப்படாது. இனி, அவ்விரண்டு கிழமையும் ஒட்டுமாறு காட்டுதும். இயற்கை: `சாத்தன தியற்கை’என்பது. உடைமை: `சாத்தன துடைமை’என்பது. முறைமை: `ஆவினது கன்று’என்பது. கிழமை: `சாத்தனது கிழமை’என்பது. செயற்கை: `சாத்தனது செயற்கை’ என்பது. முதுமை: `அவனது முதுமை’என்பது. வினை: `அவனது வினை’என்பது. கருவி: `சாத்தனது வாள்’என்பது. துணை: `அவனது துணை’என்பது. கலம்: `சாத்தனது கலம்’ என்பது. கலம் என்பது ஒற்றிக் கலத்தை. முதல்: `சாத்தனது முதல்’என்பது. ஒருவழியுறுப்பு: `யானையது கோடு’என்பது. குழூஉ: `படையது குழூஉ’என்பது. தெரிந்து மொழிச்செய்தி: `கபிலரது பாட்டு’என்பது. நிலை: `சாத்தனது நிலை’ என்பது. வாழ்ச்சி: `சாத்தனது வாழ்ச்சி’என்பது. திரிந்து வேறுபட்டது: `எள்ளினது சாந்து’என்பது. `சாத்தனது சொல்’என்பதும் அது. பிறவும் என்பது புறனடை. கூறிய மருங்கிற் றோன்றும் கிளவி ஆறன்பால என்பது இரு கிழமையும் பற்றி வருவனவும் பிறவும் அதன்பால என்றவாறு. (14) õ77. ஏழாகுவதே கண்ணெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி வினைசெய் யிடத்தி னிலத்திற் காலத்தி னனைவகைக் குறிப்பிற் றோன்று மதுவே கண்கால் புறமக முள்ளுழை கீழ்மேல் பின்சா ரயல்புடை தேவகை யெனாஅ முன்னிடை கடைதலை வலமிட மெனாஅ வன்ன பிறவு மதன்பால வென்மனார். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், முறையானே ஏழாம் வேற்றுமை உணர்த்துதல் நுதலிற்று. உரை: ஏழாம் எண்ணு முறைமைக்கண்ணது கண் என்னும் பெயரையுடைய வேற்றுமைச் சொல்; வினைசெய் இடமும் நிலமும் காலமும் என்ற மூன்று பொருட்கண்ணும் வரும் அது என்றவாறு வினை செய்யிடம்: `தட்டுப்புடைக்கண் வந்தான்’என்பது. நிலம்: `மாடத்துக்கண் இருந்தான்’ என்பது. காலம்: `மாரியுள் வந்தான்’என்பது. இனி, அவ் வேற்றுமையுருபு பலவாகலின். அவற்றை விரிக் கின்றார். அவை வருமாறு: ஊர்க்கண்ணிருந்தான், ஊர்க்காலிருந்தான், ஊர்ப்புறத் திருந்தான், ஊரகத்திருந்தான், ஊருளிருந்தான், சான்றோருழைச் சென்றான், மாடத்தின் கீழிருந்தான், மாடத்தின் மேலிருந்தான், ஏர்ப்பின் சென்றான், `காட்டுச்சா ரோடும்’, ஊரய லிருந்தான், ஊர்ப்புடை யிருந்தான். தேவகை என்பது திசைக்கூற்று: அது, `வடக்கண் வேங்கடம், தெற்கண் குமரி’ என வரும். எனாஅ என்பது இடைச்சொல். தேர்முன் சென்றான், சான்றோரிடையிருந்தான், கோயிற் கடைச் சென்றான், தந்தைதலைச் சென்றான், கைவலத்துள்ளது கொடுக்கும், கையிடத்திருந்தான் எனவும் வரும். `அன்ன பிறவும்’ என்றதனால் `கிழவோ டேத்து’ என்னுந் தொடக்கத்தன கொள்க. (15) 78. வேற்றுமைப் பொருளை விரிக்குங் காலை யீற்றுநின் றியலுந் தொகைவயிற் பிரிந்தே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், வேற்றுமைக் கெல்லாம் கிடந்ததோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. உரை: அக் கூறிய வேற்றுமைகள் தொக்கு முடியவும் வேண்டும்; அத் தொக்க வேற்றுமையுருபு விரியுங்கால் யாண்டு நின்று புலப்படுமோ வெனின், மொழியீற்றுக்கண்ணே புலப்படும் என்றவாறு மற்று, `ஈறு பெயர்க்காகும்’ (வேற்றுமை 8) என்புழி விளங்காதோ வெனின், விளங்காது; ஆண்டு, உருபு பெயரதிறுதி வந்து நிற்கும் என்றார்; அங்ஙனம் நின்ற உருபு தொகும். தொகுத்தல் என்பது புலப்படாமை யன்றே; மற்று அது பின்பு புலப்படுங்கால் தான் நின்ற ஈற்றே புலப்படும் என்பது சொல்ல வேண்டும் என்பது. (16) 79. பல்லா றாகப் பொருள்புணர்ந் திசைக்கு மெல்லாச் சொல்லு முரிய வென்ப. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இதுவும் வேற்றுமைக்கண்ணே கிடந்ததோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. உரை: உருபு தொக்கும் விரிந்தும் நிற்கும் என்றார், அவ்வுருபேயும் அன்று, ஆண்டுப் பிற சொற்களும் உள, அவ்வுருபே போல வந்து ஒட்ட நிற்பன; அவையெல்லாம் அவ் வுருபேபோல ஆண்டே தொகுத்தலும் விரித்தலும் உடையன என்றவாறு குதிரைத் தேர் என்பது, குதிரையாற் பூட்டப்பட்ட தேர்; ஆன் என்பது ஆண்டு உருபு; பூட்டப்பட்டது என ஆண்டு உருபல்லது. அஃது ஆண்டு உருபு தொக்கு நின்றாங்கே நிற்கவும் அமையும், விரித்துக் காட்டவும் அமையும் என்பது. `பல் ஆறாகப் பொருள் புணர்ந்து இசைக்கும்’ என்பது, பலவாற்றானும் பொருள் ஏற்ப வந்து ஒட்டுவன என்றவாறு. (17) இரண்டாவது வேற்றுமையியல் முற்றிற்று. அடிக்குறிப்பு 1. நிற்றல் இயல்பு - எனவும் பாடம். வேற்றுமை மயங்கியல் ஒரு வேற்றுமைக்குரிய உருபு மற்றொரு வேற்றுமையோடு மயங்குவது உருபு மயக்கம், ஒரு வேற்றுமைக்குரிய பொருள் மற்றொரு வேற்றுமையிற் சென்று மயங்குவது பொருள் மயக்கம். இவ்விருவகை மயக்கத்தினையுங் கூறுவது இவ்வியல். அதனால் இது வேற்றுமை மயங்கியலென்னும் பெயர்த்தாயிற்று. வேற்றுமைக்குச் சொல்லிய இலக்கணத்திற் பிறழ்ந்து வழுவாய் அமைத்துக்கொள்ளப்படுவனவும் பிறவுமாக வேற்றுமையொடு தொடர்புடைய விதிகள் சில ஈண்டுக்கூறப்படுதலின் வேற்றுமை மயங்கியலென்னும் இப்பெயர் பன்மை நோக்கிச் சென்ற குறி யென்றும் இதன்கண் “யாதனுருபிற் கூறிற்றாயினும்” என்ற சூத்திரத்தால் உருபு மயக்கமுணர்த்தி ஏனைச் சூத்திரங்களாற் பொருள் மயக்கமுணர்த்தினாரென்றுங் கூறுவர் சேனாவரையர். இவ்வியலிலுள்ள சூத்திரங்களை 35-ஆக இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும், 34-ஆகச் சேனாவரையரும், 33-ஆகத் தெய்வச்சிலையாரும் பகுத்து உரை கூறியுள்ளார்கள். இவ்வியலின் தொடக்கத்தே ‘கருமமல்லாச் சார்பென் கிளவி’ (1) என்பது முதல் ‘அச்சக் கிளவிக்கு’ (17)என்னும் சூத்திர முடிய வேற்றுமைப் பொருள் மயக்கம் உணர்த்தி ‘அன்னபிறவும்’ (18) என்பதனால் அதற்குப் புறனடையுங்கூறி முடித்தார். பொருள் மயக்கமாவது ஒவ்வொரு வேற்றுமைக்கும் உரியனவாக வேற்றுமையியலிற் சொல்லப்பட்ட காத்தல் ஒத்தல் முதலிய அவ்வவ்வேற்றுமையின் பொருட் பகுதிகள் தமக்குரிய வேற்றுமைப் பொருளைவிட்டு நீங்காது பிறிதொரு வேற்றுமையின் பொருளின் கண்ணே சென்று மயங்குதலாம். எடுத்துக்காட்டாக ஒன்றை நோக்குவோம். இரண்டாம் வேற்றுமைக்குச் சொல்லப்பட்ட ‘காப்பின் ஒப்பின்’ எனவரும் பொருட் பகுதிகளுள் சார்பு பொருண்மையும் ஒன்றாகும். அது கருமச் சார்பும் கருமமல்லாச் சார்பும் என இரண்டு வகைப்படும். அவற்றுள் கருமச் சார்பாவது தூணைச்சார்ந்தான் என்றாற்போல ஒன்றையொன்று மெய்யுற்றுச் சார்தலாகும். கருமமல்லாச் சார்பென்பது அரசரைச் சார்ந்தான் என்றாற்போல ஒன்றையொன்று மெய்யுறுதலின்றி வருவதாகும். இவற்றுள் கருமமல்லாத சார்புபொருண்மை தனக்குரிய இரண்டாம் வேற்றுமையாகிய செயப்படு பொருளில் நீங்காது அரசர்கட் சார்ந்தான் என ஏழாம் வேற்றுமைக்குரிய இடப் பொருளிலும் மயங்கினமை காணலாம். இவ்வாறே தொல்காப்பியனார் கூறிய ஏனைய வேற்றுமைப் பொருள் மயக்கங்களையும் பகுத்துணர்ந்து கொள்ளுதல் பயில்வோர் கடனாகும். இனி உருபு மயக்கமாவது ஒரு வேற்றுமைக்குரிய உருபு தனக்குரிய வேற்றுமைப் பொருளை விட்டுப் பிறிதொரு வேற்றுமைப் பொருளிற் சென்று மயங்குதல் ‘நாணற் கிழங்கு மணற்கு ஈன்ற முளை’ என்புழி நாணற் கிழங்கு மணலிடத்தே தோற்றுவித்த முளையென்பது பொருளாதலால், மணற்கண் எனக் கண்ணுருபு நிற்க வேண்டிய ஏழாம் வேற்றுமைப் பொருளிடத்தே மணற்கு என நான்காம் வேற்றுமை யுருபு மயங்கியதெனக் கொள்ளுதல் வேண்டும். இவ்வாறு ஒரு தொடர் எந்த வேற்றுமை யுருபினாற் சொல்லப்பட்டாலும் அவ்வுருபிற் கேற்பப் பொருளை மாற்றாமல் பொருளுக்கேற்ப உருபினை மாற்றிக் கொள்ளுதல் வேண்டுமென்பார், ‘யாதனுருபிற் கூறிற்றாயினும் பொருள் செல்மருங்கின் வேற்றுமைசாரும்’ என்றார் ஆசிரியர், வேற்றுமை யுருபுகள் ஒன்றும் பலவுமாகத் தொடர்ந்து அடுக்கி, முடிக்குஞ் சொல்லொன்றால் முடிதலும், அவ்வுருபுகள் ஒரு தொடரின் இடையிலே யன்றி இறுதியிலும் நிற்றலும், இங்ஙனம் இறுதியிலும் இடையிலும் விரிந்து நின்ற எல்லா வுருபுகளும் முடிக்குஞ் சொல்லொன்றினால் முடிதலேயன்றித் தனித்தனி முடிக்குஞ் சொல்லைப் பெற்று முடிதலும், விரிந்து நிற்பதாகிய தொகாநிலைத் தொடரின்கண்ணே நின்ற அவ்வுருபுகள் மறைந்து நிற்றலும் உளவென்பதும், தொடரிறுதியிலே மறைந்து நிற்றற்குரிய உருபுகள் ஐயுருபும் கண்ணுருபுமேயன்றி ஏனைய அல்லவென்பதும், கு, ஐ, ஆன் என்னும் இவ்வுருபுகள் அகரம் பெற்றுத் திரிவனவென்பதும், ஒரு வேற்றுமையின் பொருள் சிதையாமல் அதன்கண் பிறிதொரு வேற்றுமையின் உருபு மயங்கி நிற்றல் கூடுமென்பதும், அவ்வாறு நான்காம் வேற்றுமை யுருபு பிறவேற்றுமைகளின் பொருள் சிதையாமல் மயங்கி நிற்கும் இடங்கள் இவை யென்பதும், இங்ஙனமே ஏனையுருபுகளும் வழக்கு நடையை யொட்டி மயங்கி வருதலால் அவை குற்றமுடையன அல்லவென்பதும் ஆகிய உருபு மயக்கம்பற்றிய விதிகளை இவ்வியலில் 19 முதல் 28 வரையுள்ள சூத்திரங்களால் ஆசிரியர் தெளிவுபடுத்துகின்றார். இவ்வேற்றுமைகளை முடிக்குஞ் சொல்லாயும் ஏற்குஞ் சொல்லாயும் வருவன வினையும் பெயருமாதலின் வினைச் சொல்லால் அறியப்படுந் தொழிற்காரணங்களையும் பெயர்ச்சொல்லால் அறியப்படும் பொருள் வேறுபாட்டினையும் ஆசிரியர் இவ்வியலிற் கூறுகின்றார். வினை, செய்வது, செயப்படுபொருள், நிலம், காலம், கருவி என்னும் ஆறுடனே இன்னதற்கு, இது பயன் எனவரும் இரண்டினையுங் கூட்டத் தொழிலுக்குரிய காரணங்கள் எட்டாமென்றும், எல்லாத் தொழிற்கும் இவ்வெட்டும் வருமென்னும் இன்றியமையாமை யில்லை; இவற்றுள் சில தொழிற்கண் ஒன்றிரண்டு குறையத்தக்கன வழக்கின்கண் குறைந்துவரு மென்றும் வினைக்குரிய முதனிலை களைக் குறித்து ஆசிரியர் விளக்கியுள்ளார். ஒரு பொருளின் இயற்பெயர் மற்றொரு பொருளுக்கு ஆகி வருவது ஆகுபெயராம். முதலுக்குரிய இயற்பெயரால் சினைப் பொருளும், சினைக்குரிய பெயரால் முதற்பொருளும், இடத்தின் பெயரால் அவ்விடத்து நிகழ் பொருளும், பண்பின் பெயரால் பண்பு கொள்பொருளும், காரணப் பெயரால் அக்காரணத்தால் இயன்ற காரியப் பொருளும், இரண்டுபெயர்தொக்கு ஒருசொல் நீர்மைப்பட்டு நிற்றலால் மற்றொரு பொருளும், செயப்படு பொருளை யுணர்த்தும் பெயரால் வினைமுதலாகிய பொருளும் விளங்க நிற்பன ஆகுபெயர்களாம். அளவுப்பெயரும் நிறைப் பெயரும் அளக்கப்படுவதும் நிறுக்கப்படுவதுமாகிய பொருளை யுணர்த்தின் அவையும் ஆகுபெயரேயாம். எனவே ஒரு பொருளின் இயற்பெயர் அப்பொருளோடு தொடர்புடைய பிறிதொரு பொருளின் மேல் ஆகிவருங்கால் ஆகுபெயரெனப்படுமென்பது நன்கு புலனாம். இவ் வாகுபெயர்கள் இயற்பெயராய் நின்ற காலத்துத் தமக்குரிய பொருளின் நீங்காது நின்று தம் பொருளைவிட்டுப் பிரியாத தொடர்புடைய பொருளை யுணர்த்துதலும், அவ்வாறு நெருங்கிய தொடர்பின்றி அச்சொற்பொருளோடு ஒருவாற்றான் தொடர்புடைய வேறொ ரு பொருளையுணர்த்துதலும் என இவ்விரண்டியல்பினையுடையன என்பர் தொல்காப்பியர். எனவே இவ்வாகுபெயர்களெல்லாம் நின்றாங்கு நின்று தம் இயற்பெயர்ப் பொருளையும் வேறுணர்த்தி நிற்கும் ஆற்றலுடையன வென்பது பெறப்படும். இவ்வாறு இயற்பெயர்கள் தம் பொருளோடு தொடர்புடைய வேறொரு பொருள்மேல் ஆகிவருங்கால் அங்ஙனம் ஆதற்குரிய பொருட்டொடர்பு ஐ முதலிய அறுவகை வேற்றுமைகளின் இடமாக நின்று தோற்றுமியல்பினதாகும். இவ்வாறு ஆகுபெயர்களெல்லாம் வேற்றுமைப் பொருள்களுடன் நெருங்கிய தொடர்புடையன என்பதை ஆராய்ந்தறிதல் வேண்டு மென்பார் வேற்றுமை மருங்கிற் போற்றல் வேண்டும்’ என்றார் தொல்காப்பியனார். இங்ஙனம் ஆசிரியர் கூறியதனையுளங் கொண்டு “இவ்வாகுபெயர்கள் எழுவாய் வேற்றுமை மயக்கமென்றுணர்க” என நச்சினார்க்கினியரும், “முதலிற் கூறுஞ் சினையறி கிளவியும் சினையிற்கூறும் முதலறிகிளவியும் பண்புகொள் பெயரும் இருபெயரொட்டும் ஆறாம் வேற்றுமைப் பொருள் மயக்கம். பிறந்தவழிக் கூறல் ஏழாம் வேற்றுமைப்பொருள் மயக்கம். இயன்றது மொழிதலும் வினை முதலுரைக்குங் கிளவியும் மூன்றாம் வேற்றுமைப்பொருள் மயக்கம்” எனத் தெய்வச்சிலையாரும் கூறியவை இவண் கருதத் தக்கனவாம். ஆகவே வேற்றுமைப் பொருண்மயக்கமாகிய ஒப்புமைகருதி ஆகுபெயரிலக்கணம் இவ்வியலின் இறுதிக்கண் கூறப்பட்ட தென்பது பழைய உரையாசிரியர்களின் கருத்தாதல் நன்கு பெறப்படும். ஆகுபெயர்ச் சூத்திரத்தின்கண்வரும் இருபெயரொட் டென்பதற்குப் ‘பொற்றொடி’ யென உதாரணங்காட்டினர் இளம்பூரணர். அதனையுணர்ந்த சேனாவரையர் இருபெயரொட் டென்பதற்கு “அன்மொழித் தொகைமேல்வரும் இருபெயரொட்டு” எனப்பொருள் கூறியதோடு தொகையாத லுடைமையால் எச்சவியலுளுணர்த்தப்படும் அன்மொழித் தொகை இயற்கைப் பெயர் ஆகுபெயர் என்னும் இருவகைப் பெயருள் ஆகுபெயரென ஒன்றாயடங்குதல் பற்றி ஈண்டுக் கூறப்பட்டது என விளக்கமுங் கூறியுள்ளார். ‘பொற்றொடி’ யென்பது அன்மொழித் தொகையாவதன்றி ஆகுபெயராகாதெனக்கண்டுணர்ந்த நச்சினர்க்கினியர் இருபெயரொட்டென்பதற்கு ‘அன்மொழிப் பொருள்மேல் நில்லாத இரு பெயரொட்டு’ எனப் பொருள்கூறி மக்கட்சுட்டு, என அதற்கு உதாரணமுங் காட்டினார். மக்கள்+சுட்டு என்னும் இருபெயரும் ஒட்டி நின்று மக்களாகிய சுட்டப்படும் பொருள் என்னும் பொருளைத்தந்தன. இதன்கண் சுட்டு என்னும் பெயர் சுட்டப்படும் பொருளையுணர்த்தி ஆகுபெயராய் நிற்ப, மக்கள் என்னும் முதன்மொழி அவ் வாகுபெயர்ப் பொருளை விசேடித்து நிற்க இங்ஙனம் இருபெயரும் ஒட்டிநின்றனவாதலின் இருபெயரொட்டென்றார் ஆசிரியர். இதன்கண் பின்னுள்ள மொழியே ஆகுபெயராய் நின்றதாதலின் இதனைப் பின்மொழி யாகுபெயரென்பாருமுளர். இனி ‘பொற்றொடி’ என்னும் தொடரின்கண் பொன் என்னும் முதல்மொழி இவ்வாறு அன்மொழித் தொகைப்பொருளை விசேடித்து நில்லாது தொடி யென்னும் இயற்பெயர்ப் பொருளையே விசேடித்து நிற்க அவ்விரு சொற்களின் தொகையாற்றலால் அவ்விரண்டுமல்லாத மற்றொரு மொழியின் பொருள் தோன்றக் காண்கின்றோம். எனவே மக்கட்சுட்டு என ஆகுபெயராய்வரும் இருபெயரொட்டும் பொற்றொடியென அன்மொழித் தொகைமேல் வரும் இருபெயரொட்டும் தம்முள் வேறெனவே உணர்தல் வேண்டும். இருபெயரொட்டென்பது, ‘இரண்டு பெயர் தொக்கு ஒரு சொல் நீர்மைப்பட்டு மற்றொரு பொருள் தரு பெயராகி வருவது’ எனக்கூறித் துடியிடை யென்பது துடிபோன்ற இடையினை யுடையாளை யுணர்த்தி ஆகுபெயராயிற்று என உதாரணங்காட்டி விளக்கிய தெய்வச்சிலையார், ஆகுபெயராவது ஒட்டுப்பட்ட பெயரோடு ஒற்றுமைப்பட்டுவரும் என்றும் அன்மொழித் தொகையாவது அப்பொருளின் வேறுபட்டு வருமென்றும் அத்தன்மை யுடையதாதல் அன்மொழி என்ற சொல்லாலேயே விளங்கு மென்றும் அவ்விரண்டிற்கும் வேறுபாடு காட்டினார். எனினும் அவர் இருபெயரொட்டாகு பெயர்க்குக்காட்டிய துடியிடை யென்பதும் சேனாவரையர் காட்டிய பொற்றொடி யென்பதுபோல இரண்டு பெயருந்தொக்க தொகையாற்றலால் அதனையுடையாளை யுணர்த்திய அன்மொழி தொக்கு நின்றதெனக் கொள்ளுதற்கும் இடமுண்டாதலின் அதனை ஒருதலையாக ஆகுபெயரெனத் துணிதற்கில்லை. ஆகுபெய ரென்றும் அன்மொழித்தொகையென்றும் வேறுவேறு இலக்கணமுடையனவாக ஆசிரியர் கூறுதலால் ஆகுபெயரும் அன்மொழித் தொகையும் தம் பொருளுணர்த்தாது பிறிது பொருளுணர்த்தலான் ஒக்குமாயினுங் ஆகுபெயர் ஒன்றன் பெயரான் அதனோடு தொடர்புடைய பிறிது பொருளையுணர்த்தி ஒருமொழிக் கண்ணதாய் வருமென்றும் அன்மொழித்தொகை அத்தகைய தொடர்பெதுவும் வேண்டாது இருமொழியுந் தொக்க தொகையாற்றலால் பிறிது பொருளுணர்த்தி இருமொழிக்கண் வருமென்றும் இவையே இரண்டிற்கும் வேறுபாடென்றும் சிவஞானமுனிவர் கூறுங் கொள்கையே ஆசிரியர் தொல்காப்பியனார்க்கு உடன்பாடாதல் பெற்றாம். - க. வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 197-202 மூன்றாவது வேற்றுமை மயங்கியல் 80. கரும மல்லாச் சார்பென் கிளவிக் குரிமையு முடைத்தே கண்ணென் வேற்றுமை என்பது சூத்திரம். இவ்வோத்து என்ன பெயர்த்தோ வெனின், வேற்றுமை தம்மின் மயங்கினமை உணர்த்தினமையின், வேற்றுமை மயங்கியல் என்னும் பெயர்த்து. இத்தலைச்சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இரண்டாவ தனொடு ஏழாவது மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. உரை: இரண்டாவது கருமச்சார்பும் கருமமல்லாச் சார்பும் என இரு பொருள் உடைத்து: தூணைச் சார்ந்தான் என்பது, கருமச் சார்பாவது; அதனையுறச் சாருமாதலால். இனி, அரசரைச் சார்ந்தான் என்பது கருமமில் சார்பு. அக் கருமமில் சார்ச்சிப் பொருண்மைக்கண் ஏழாவது வருதல் உரிமை யுடைத்து என்பது. வரலாறு: அரசரைச் சார்ந்தான் என்புழி அரசர்கட் சார்ந்தான் என்பதும் ஆக என்பது. (1) 81. சினைநிலைக் கிளவிக் கையுங் கண்ணும் வினைநிலை யொக்கு மென்மனார் புலவர். இச்சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இதுவும் இரண்டாவதனோடு ஏழாவதன் மயக்கமே கூறுதல் நுதலிற்று. உரை: சினைப்பொருட்கு இரண்டாம் வேற்றுமையும் ஏழாம் வேற்றுமையும் ஒத்த கிழமையவாம் என்றவாறு (வரலாறு) கண்ணைக்குத்தினார், கண்ணுட்குத்தினார் என வரும். (2) 82. கன்றலுஞ் செலவு மொன்றுமார் வினையே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இதுவும் அவ் விரண்டன் மயக்கமே யுணர்த்துதல் நுதலிற்று. உரை: கன்றல் செலவு என்னும் பொருட்கு இரண்டாவதும் ஏழாவதும் தொழிலான் ஒக்கும் என்றவாறு (வரலாறு) சூதினைக் கன்றினான், சூதின்கட் கன்றினான்; நெறியைச் சென்றான், நெறிக்கட் சென்றான் எனவரும். (3) 83. முதற்சினைக் கிளவிக் கதுவென் வேற்றுமை முதற்கண் வரினே சினைக்கை வருமே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், `சினைநிலைக் கிளவிக் கையுங் கண்ணும்’ (சூத்தி. 2) என்னுஞ் சூத்திரத்திற்குப் புறனடை யுணர்த்துதல் நுதலிற்று. உரை: முதலும் சினையும் தொடருங்கால் முதற் பொருட்கண் ஆறாவது வருமேயெனின், சினைப்பொருட்கு இரண்டாவது வருக என்றவாறு (வரலாறு) `யானையது கோட்டைக் குறைத்தான்’ என வரும். (4) 84. முதன்முன் னைவரிற் கண்ணென் வேற்றுமை சினைமுன் வருத றெள்ளி தென்ப. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இதுவும் அதற்கே புறனடை யுணர்த்துதல் நுதலிற்று. உரை: முதற்பொருட்கு இரண்டாவது வருமேயெனின், சினைப் பொருட்கண் ஏழாவது வருதல் தெளிவுடைத்து என்றவாறு (வரலாறு) `யானையைக் கோட்டுக்கட் குறைத்தான்’ என வரும். `தெள்ளிது’ என்றதனால், `யானையைக் கோட்டைக் குறைத்தான்’ எனலுமாம். (5) 85. முதலுஞ் சினையும் பொருள்வேறு படாஅ நுவலுங் காலைச் சொற்குறிப் பினவே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், ஐயமறுத்தல் நுதலிற்று. உரை: இதுதான் சொல்லுவான் குறிப்பொடு படுத்த விடத்துச் சினைதான் முதலுமாம் என்றவாறு (வரலாறு) கோட்டது நுனியைக் குறைத்தான்; கோட்டை நுனிக்கண் குறைத்தான்; கோட்டை நுனியைக் குறைத்தான் எனச் சொல்லுவான் குறிப்பொடு படுத்தவிடத்துச் சினைதான் முதலு மாயிற்று. முதல் சினையாவது வந்தவழிக் கண்டுகொள்க. (6) 86. பிண்டப் பெயரு மாயிய றிரியா பண்டியன் மருங்கின் மரீஇய மரபே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இதுவும் ஐயமறுத்தல் நுதலிற்று. உரை: பிண்டப் பெயரும் அதுவே; தெரியில் அப் பொருளின் வேறு பிண்டம் ஒன்றில்லை என விலக்கப்பட்டுக் கிடந்தது. வழங்கு மாற்றால் உண்டு போலுமாம் என்பது பிண்டப் பெயர் என்றவாறு உறுப்பின் கிழமை ஒழித்து ஒழிந்த தற்கிழமையினாயிற்று. (வரலாறு) எட்குப்பை, நெற்குப்பை என்றால், எள்ளின் வேறு குப்பை, நெல்லின் வேறு குப்பை என்பதொன்றில்லை. எட்சாந்து, கோட்டுநூறு என்பனவும் அவை. (7) 87. ஒருவினை யொடுச்சொல் லுயர்பின் வழித்தே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இது மூன்றாம் வேற்றுமைப் பொருட்கண்ணதோர் சொல்வன்மை யுணர்த்துதல் நுதலிற்று. உரை: மூன்றாம் வேற்றுமைப் பொருள் விரிப்புழி, `அதனோ டியைந்த ஒருவினைக் கிளவி’ (வேற்றுமை 11) என்றான். அஃதாவது, ஒருவினையினுழை ஒடுக்கொடுத்துச் சொல்லுக என்றவாறு; ஆகலான் இவ்வாறு இச்சொல்லினான் இயைபுடைத்தாய் ஒருவினை கொண்டு வருங்கால் அவ்வொடு உயர்வுபற்றி வரும் என்றவாறு (வரலாறு) `அரசனொடு வந்தார் சேவகர்’எனவரும். மற்று, `நாயொடு நம்பி வந்தான்’ என இழிவுபற்றி வருமால் எனின், உயர்வுதாம் பல: குலத்தால் உயர்தலும், தவத்தால் உயர்தலும், நிலையால் உயர்தலும், உபகாரத்தால் உயர்தலும் என; அவ்விழிந்தவழி ஒடு வைத்துச் சொல்லியது அந்நிலைக்கண் அது சிறப்புடைத்தாகலின் என்பது. (8) 88. மூன்றனு மைந்தனுந் தோன்றக் கூறிய வாக்கமொடு புணர்ந்த வேதுக் கிளவி நோக்கோ ரனைய வென்மனார் புலவர். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், மூன்றாவதும் ஐந்தாவதும் ஏதுப் பொருட்கு ஒத்த கிழமைய என்பது உணர்த்துதல் நுதலிற்று. உரை: மூன்றாம் வேற்றுமையானும், ஐந்தாம் வேற்றுமை யானும் எடுத்தோதப்பட்ட ஆக்கமொடு புணர்ந்த ஏதுப் பொருண்மை ஆராயுங்கால் ஒருதன்மைய என்றவாறு (வரலாறு) வாணிகத்தான் ஆயினான்; வாணிகத்தின் ஆயினான் என வரும். (9) 89. இரண்டன் மருங்கி னோக்க னோக்கமவ் விரண்டன் மருங்கி னேதுவு மாகும். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இதுவும் மேற் சூத்திரத்திற்குரிய முடிவே சார்ந்தது என்றவாறு உணர்த்துதல் நுதலிற்று. உரை: இரண்டாம் வேற்றுமை, நோக்கிய நோக்கமும், நோக்கல் நோக்கமும் என இரண்டு பொருளும் உடைத்து. மேற்றான், `நோக்கலின்’ (வேற்றுமை. 10) என்றான்; என்புழி, `நோக்கலின்’ எனவே அவ்விரண்டு நோக்கமும் அடங்கின. நோக்கிய நோக்கம் என்பது பொறியான் நோக்குதல்; அது பூணை நோக்கினான் எனவரும். `நோக்கல் நோக்கம்’என்பது, `வானோக்கி வாழும்’ (குறள்.செங்கோ.2)) என்பது. இது கண்ணான் நோக்கியது அன்மையின் நோக்கல் நோக்கம் ஆயிற்று. அப் பொருண்மைக்கண்ணாயின் முன்னர்ச் சொல்லிய இரண்டு வேற்றுமைப் பொருளும் ஆம் என்றவாறு. (வரலாறு) `வானோக்கி வாழும்’ (குறள். செங்கோ.2) என்றக்கால், வானை நோக்கி வாழும் என்பது; இனி, வானானாய உபகாரம் நோக்கி வாழும் என்பது; வானினாய உபகாரம் நோக்கி வாழும் என்பதூஉமாம். (10) 90. அதுவென் வேற்றுமை உயர்திணைத் தொகைவயின் அதுவென் உருபுகெடக் குகரம் வருமே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், ஆறாவது நான்காவதனொடு மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. உரை: மேல், இயற்கையின் உடைமையின் முறைமையின் (வேற்றுமை. 14) என, ஆறாவதனை முறைமைப் பொருட்கு உரித்தென்று ஓதினான்; அம் முறைமைப் பொருள் உயர் திணைக்காயின் அது என் உருபு கெடக் குகரம் வரும் என்றவாறு (வரலாறு) நம்பிக்கு மகன் எனவரும். நம்பியது மகன் என்புழி இழுக்குள்ளது கண்டு, அது காத்தவாறு. (11) 91. தடுமாறு தொழிற்பெயர்க் கிரண்டும் மூன்றும் கடிவரை இலவே பொருள்வயி னான. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இரண்டாவதும் மூன்றாவதும் மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. உரை: தடுமாறு தொழிற்பெயர்க்கு இரண்டாம் வேற்றுமைப் பொருளும் மூன்றாம் வேற்றுமைப் பொருளும் ஒக்கும் என்றவாறு (வரலாறு) புலி கொல் யானை என்பது. அது விரிப்புழிப், புலியைக் கொன்ற யானை - புலி கொல் யானை; புலியாற் கொல்லப்பட்ட யானை - புலி கொல் யானை; என இரண்டற்கும் ஒக்கும். தடுமாறுதல் என்பது இரண்டிற்கு உரித்தாய்ச் சென்று வருதல். ஈண்டுக் கோறற்றொழில் இரண்டற்கும் ஒக்கும். (12) 92. ஈற்றுப்பெயர் முன்னர் மெய்யறி பனுவலின் வேற்றுமை தெரிப வுணரு மோரே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், மேல் எடுத்தோதப் பட்ட தடுமாறு தொழிற்பெயரை உணரும் ஆறு இது என்பது உணர்த்துதல் நுதலிற்று. உரை: புலி கொல் யானை என்பது; அத் தொகைக்கு யானை என்பது ஈற்றது. அவ் வீற்றுப் பெயர் முன்னர்ப் பொருளறிய வருஞ் சொல், `மெய்யறி பனுவல்’ என்பதனான், அவ் விரண்டன் வேற்றுமையும் தெரியப்படும் என்றவாறு (வரலாறு) புலி கொல் யானைக்கோடு வந்தது எனின், புலியாற் கொல்லப்பட்டது யானை என விளங்கும். இனிப் புலிகொல் யானை ஓடுகின்றது எனின், புலியைக் கொன்றது யானை என விளங்கும். இனி, ஈற்றுப் பெயர் முன்னர்ப் பொருளறிய வந்த சொல்லான் அவ்வேற்றுமை தெரிப எனவே, பொருளறிய வாராத சொல்லான் அவ் வேற்றுமை தெரியலாகா என்பதாம். (வரலாறு) புலி கொல் யானை கிடந்தது, தோன்றும் என்பது. (13) 93. ஓம்படைக் கிளவிக் கையு மானுந் தாம்பிரி விலவே தொகைவரு காலை. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இதுவும் அவற்றுக் கண்ணே ஆவதொரு முறைமை உணர்த்துதல் நுதலிற்று. உரை: ஓம்படைப் பொருட்கு ஐயும் ஆனும் ஒத்த கிழமைய என்றவாறு. ஓம்படுத்தல் என்பது போற்றுதல். `தொகைவரு காலை’ என்பது, தொகையினிலைக்கண்ணே இம் மயக்கம் ஆவது என்றவாறு. (வரலாறு) `புலி போற்றிவா வாழியைய’ என்புழிப் புலியைப் போற்றிவா என்றும், புலியினான் ஆய ஏதம் போற்றிவா என்றும் ஆக என்பது. `தொகைவரு காலை’ என்பதனை யாண்டும் ஒட்டிக் கொள்க என்பது. (14) 94. ஆறன் மருங்கின் வாழ்ச்சிக் கிழமைக் கேழு மாகு முறைநிலத் தான. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், ஆறாவதனோடு ஏழாவதன் மயக்கம் உணர்த்துதல் நுதலிற்று. உரை: ஆறாவதனோடு எடுத்தோதப்பட்ட வாழ்ச்சிப் பொருட்கு ஏழாவதும் ஆம், உறையும் நிலமாகலான் என்றவாறு (வரலாறு) காட்டது யானை என்புழிக் காட்டுள் யானை என்றுமாக என்பது. (15) 95. குத்தொக வரூஉங் கொடையெதிர் கிளவி யப்பொரு ளாறற் குரித்து மாகும். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், நான்காவதன் பொருள் ஆறாவதற்குச் செல்லுமாறு உணர்த்துதல் நுதலிற்று. உரை: நான்காம் வேற்றுமை தொக்குக் கொடை யெதிர்ந்து நின்றவழி ஆறாவது சொல்லவும் அமையும் என்றவாறு (வரலாறு) நாகர்பலி என்பது ஆண்டு நாகர்க்குப் பலி என நான்காவது தொக்கு நின்றது; அந் நிலைக்கண் நாகரது பலி என ஆறாவதும் ஆக என்றவாறு. கொடை எதிர்தல் என்பது - விழுப்ப முடையாரை நுதலியக்காற் கொண்டுவைத்து விரும்பிக் கொடுத்தல். நாகர்பலி என்பது அவர்க்குத் திரிபில்லாமையினான் நாகரது பலி என உடைமைக்கிழமை செப்ப லாயிற்று என்பது கருத்து. (16) 96. அச்சக் கிளவிக் கைந்து மிரண்டு மெச்ச மிலவே பொருள்வயி னான. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், ஐந்தாவதனோடு இரண்டாவதன் மயக்கம் உணர்த்துதல் நுதலிற்று. உரை: அச்சப் பொருண்மைக்கு ஐந்தாம் வேற்றுமையும் இரண்டாம் வேற்றுமையும் ஒத்த கிழமைய என்றவாறு. (வரலாறு) புலியின் அஞ்சும், புலியை அஞ்சும் என வரும். புலியை அஞ்சும் என்புழிப் புலி காரணமாக அஞ்சும் எனு மாறுகொள்க. (17) 97. அன்ன பிறவுந் தொன்னெறி பிழையா துருபினும் பொருளினும் மெய்தடு மாறி யிருவயி னிலையும் வேற்றுமை யெல்லாந் திரிபிட னிலவே தெரியு மோர்க்கே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், சொல்லப்பட்ட மயக்கத்திற்குப் புறனடை யுணர்த்துதல் நுதலிற்று. உரை: அவை போல்வனவும் பிறவும் மேற்கொண்டு அடிப்பட வழங்கும் வழக்கொடு மலையாது உருபும் பொருளும் தம்முள் ஒன்றனோடொன்று தடுமாறி அவ்விரண்டிடத்தும் நிலைபெற்ற வேறுபாடு வழு என்று களையப்படா ஆராயு மிடத்து என்றவாறு `உருபினும் பொருளினும் மெய்தடுமாறி’ என்பது, யாண்டு உருபு சென்றது ஆண்டுப் பொருள் சென்றது எனப்படும்; யாண்டுப் பொருள் சென்றது ஆண்டு உருபு சென்றது எனப்படும் என்பது. `பிறவும்’ என்றதனால், முறைக் குத்துக, குத்தினார் என்புழி, முறையிற் குத்தினார் என்றும், முறையாற் குத்தினார் என்றும். `கடலொடு காடொட்டாது’ என்புழிக் `கடலைக் காடொட்டாது’ என்றும் வருவன கொள்க. (18) 98. உருபுதொடர்ந் தடுக்கிய வேற்றுமைக் கிளவி யொருசொன் னடைய பொருள்சென் மருங்கே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், பல உருபு தொடர்ந்து அடுக்கி நின்றவழிப் படுவதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. உரை: பல உருபு தொடர்ந்து அடுக்கி நின்றவிடத்து இறுதி யுருபு முடிந்த முடிவே ஒழிந்தனவற்றிற்கும் முடிபாக என்றவாறு (வரலாறு) யானையது கோட்டை நுனிக்கட் குறைத்தான் என வரும். இரண்டாம் வேற்றுமையும் ஏழாம் வேற்றுமையும் குறைத்தான் என்னும் ஒரு வினையானே முடிந்தவாறறிக. `தினையிற் கிளியைக் கடியும்’ என்பதும் அது. (19) 99. இறுதியு மிடையு மெல்லா வுருபு நெறிபடு பொருள்வயி னிலவுதல் வரையார். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், உருபு நிற்கும் இடவேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. இறுதி: கடந்தான் நிலத்தை; வந்தான் சாத்தனொடு; கொடுத்தான் சாத்தற்கு; வலியான் சாத்தனின்; ஆடை சாத்தனது; இருந்தான் குன்றத்துக் கண்; என வரும். இனி, இடை வருமாறு: நிலத்தைக் கடந்தான்; சாத்தனொடு வந்தான்; சாத்ததற்குக் கொடுக்கும்; சாத்தனின் வலியன்; சாத்தனது ஆடை; குன்றத்துக்கண் இருந்தான் என வரும். இனி, நெறிபடுத்துதல் என்பது வழக்குப்படுத்துதல்; வழக்குப் படு வழியே அவை நிலையுடைத்தாவது; அல்லாத வழி அவை நில்லா என்பது. அவ்வழிக் கொண்டான் என்புழி அவ்வழிக்கட் கொண்டான் என வேண்டுவது என்றவாறு. பிறவும் அன்ன. (20) 100. பிறிதுபிறி தேற்றலு முருபுதொக வருதலு நெறிபட வழங்கிய வழிமருங் கென்ப. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இதுவும் அவ் வேற்றுமை மயக்கத்துட் புறத்துப்படுவதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. உரை: ஓர் உருபு ஓர் உருபினை யேற்றலும், உருபுகள் புலப்படாது நிற்றலும் இலக்கணத்துப் பட்டன என்றவாறு பிறிதுபிறிதேற்றல் என்பது, ஆறாம் வேற்றுமை உருபு தானல்லாத உருபுகளை ஏற்பது. அது வருமாறு: சாத்தனதனை, சாத்தனதனொடு என ஆறாவது ஒழித்து, ஏழாவதன்காறும் ஒட்டுக. இனி, உருபு தொக வருதல்: நிலத்தைக் கடந்தான் என்புழி, வேற்றுமை யுருபு தொக்கு, நிலங்கடந்தான் என வரும். இறுதிக்கண், `கடந்தான் நிலத்தை’ என்புழிக் `கடந்தான் நிலம்’ என வரும். மற்றையனவும் அவ்வாறே தொகும் என்பது. (21) 101. ஐயுங் கண்ணு மல்லாப் பொருள்வயின் மெய்யுருபு தொகாஅ விறுதி யான. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், மேல் உருபுகள் தொக வருவன என்றான், அத் தொக வருவனவற்றது நிலைமை ஒவ்வாதது கண்டு அஃது உணர்த்துதல் நுதலிற்று. உரை: இரண்டாம் வேற்றுமைப் பொருளும், ஏழாம் வேற் றுமைப் பொருளும் அல்லாதவழி இறுதிக்கண் தொகவாரா என்றவாறு அது சொல்லவே, மற்றைய உருபெல்லாம் இறுதிக்கண் விரிந்தே வருகுவ என்பதாம். (வரலாறு) கடந்தான் நிலம், கடந்தான் நிலத்தை; இருந்தான் குன்றத்து, இருந்தான் குன்றத்துக்கண் எனத் தொக்கும் விரிந்தும் வந்தவாறு. வந்தான் சாத்தனொடு என்பது வந்தான் சாத்தன் என ஒடு தொகுநிலைப்படுங்கொலோ எனிற் படாது என்பது. மற்றையனவும் அன்ன. (22) 102. யாத னுருபிற் கூறிற் றாயினும் பொருள்சென் மருங்கின் வேற்றுமை சாரும். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், உருபுகள் ஒரோ வழித் தத்தம் பொருண்மை யின்றியும் மயங்குதற்குரிய என்பது உணர்த்துதல் நுதலிற்று. உரை: யாதானும் ஓர் உருபிற் கூறப்பட்டதே ஒரு சொல் லெனினும், கூறிய அவ் வுருபின் பொருள் படுங்கொல்லோ எனின், படாது என்பது. அக் கூறப்படாத பிற உருபு உளவன்றே; அவற்றதுமாகும், அச் சொல் அவற்றுப் பொருள்படச் சொல்லின் என்றவாறு வரலாறு: `கிளையரி நாணற் கிழங்குமணற் கீன்ற முளையோ ரன்ன முள்ளெயிற்றுத் துவர்வாய்’ (அகம். 212) என்னும் பாட்டினுள், `மணற்கீன்ற’ என நான்காவதன் உருபு வந்ததேனும், மணலுள் ஈன்ற என ஏழாவதன் உருபே கொள்க, அதற்கேற்ற பொருட்டாகலின். இது, வழக்கினுள் ஒன்றன் பொருண்மைக்கட் பிறிதோர் உருபு பொருளொடு படாது சென்று நிற்ப வழங்குதலும் உண்மை கண்டு அது காத்தவாறு. (23) 103. எதிர்மறுத்து மொழியினுந் தத்த மரபிற் பொருணிலை திரியா வேற்றுமைச் சொல்லே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், வேற்றுமை யுருபுகள் தம்பொருள் மாறுபட நின்றுழியும் தம்பொருள் என்பது உணர்த்துதல் நுதலிற்று. உரை: வேற்றுமை உருபுகள் எதிர் மறுத்துச் சொல்லிற்றுழி யும் தம் பொருண்மை மரபு திரியா என்றவாறு. (வரலாறு) மரத்தைக் குறையான் என்புழி, இரண்டாவதன் பின் அப்பொருள் இல்லைமன்; இல்லையெனினும் அப் பொருட்டாக என்பது. பிற வேற்றுமைப் பொருள்களையும் அவ்வாறே எதிர் மறுத்து ஒட்டிக் கொள்க. (24) 104. கு ஐ ஆன்என வரூஉ மிறுதி அவ்வொடுஞ் சிவணுஞ் செய்யு ளுள்ளே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், அவ்வுருபுகளுள் ஒருசார் செய்யுளுள் திரிபுபட நிற்றல் கண்டு, அஃது உணர்த்துதல் நுதலிற்று. உரை: கு ஐ ஆன் என வரூஉம் மூன்றுருபின் இறுதியுஞ் செய்யுளுள் அகர ஈறாகி நிற்கும் என்றவாறு வரலாறு முன்னர்ச் சூத்திரத்துட் காட்டுதும். (25) 105. அவற்றுள் அஎனப் பிறத்த லஃறிணை மருங்கிற் குவ்வு மையு மில்லென மொழிப. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், எய்தியது விலக்குதல் நுதலிற்று. உரை: அவற்றுள் குவ்வும் ஐயும் அஃறிணைக்கண் அகர வீறாகல் எய்தா என்றவாறு. மற்றை ஆன் உருபாயின் அஃறிணைக்கண்ணும் உயர் திணைக் கண்ணும் எய்தும் என்பது. இனி, உயர்திணைக்கண் குவ்வும் ஐயும் வருமாறு: `கடிநிலை யின்றே யாசிரியற்கு’ எனற்பாலது, `ஆசிரியற்க’ (தொல். எழுத்து. புள்ளிமயங். 94) என்றாயிற்று. `காவலோனைக் களிறஞ்சும்மே எனற்பாலது, `காவலோனக் களிறஞ் சும்மே’ என்றாயிற்று. இனி, ஆன் இருதிணைக்கண்ணும் வருமாறு: `புள்ளினான’ `புலவரான’ என இருவழியுங் கண்டுகொள்க. (26) 106. இதன திதுவிற் றென்னுங் கிளவியு மதனைக் கொள்ளும் பொருள்வயி னானு மதனாற் செயற்படற் கொத்த கிளவியு முறைக்கொண் டெழுந்த பெயர்ச்சொற் கிளவியும் பால்வரை கிளவியும் பண்பி னாக்கமுங் காலத்தி னறியும் வேற்றுமைக் கிளவியும் பற்றுவிடு கிளவியுந் தீர்ந்துமொழிக் கிளவியு மன்ன பிறவு நான்க னுருபிற் றொன்னெறி மரபின தோன்ற லாறே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், நான்காம் வேற்றுமை ஏனைய வேற்றுமைக்கண் எல்லாஞ் சென்று மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. உரை: இதனது இதுவிற்று என்பது - யானையது கோடு கூரிது என்புழி, ஆண்டு நான்காவது சென்று, யானைக்குக் கோடு கூரிது என்றாக என்பது. அதனைக் கொள்ளும் பொருள் என்பது - இவளைக் கொள்ளும் இவ்வணி என்புழி, இவட்குக் கொள்ளும் இவ்வணி என்றாக என்பது; அதனாற் செயற்படற்கொத்த கிளவி என்பது - வாயாற் தக்கது வாய்ச்சி என்புழி, வாய்க்குத் தக்கது வாய்ச்சி என்றாக என்பது; முறைக்கொண் டெழுந்த பெயர்ச்சொற் கிளவி என்பது - ஆவினது கன்று என்புழி, ஆவிற்குக் கன்று என்றாக என்பது; பால்வரை கிளவி என்பது - கருவூரின் கிழக்கு என்புழிக் கருவூர்க்குக் கிழக்கு என்றாக என்பது. பண்பின் ஆக்கம் என்பது - சாத்தனின் நெடியன் என்புழிச் சாத்தற்கு நெடியன் என்றாக என்பது. காலத்தின் அறியுங் கிளவி என்பது - மாரியுள் வந்தான் என்புழி, மாரிக்கு வந்தான் என்றாக என்பது. பற்றுவிடு கிளவி என்பது - ஊரிற் பற்றுவிட்டான் என்புழி, ஊர்க்குப் பற்றுவிட்டான் என்றாக என்பது. தீர்ந்து மொழிக் கிளவி என்பது - ஊரிற் றீர்ந்தான் என்புழி, ஊர்க்குத் தீர்ந்தான் என்றாக என்பது. அன்ன பிறவும் என்றதனால் - ஊரிற் சேயன், ஊர்க்குச் சேயன் என்றாக என்பதும், உறையூரிற் பெரிது கருவூர் என்புழி, உறையூர்க்குப் பெரிது கருவூர் என்றாக என்பதும் பிறவும் இவ்வாறாக வருவன கொள்க. இவையெல்லாம் நான்கனுருபின் தோன்றுதல் மேற்கொண்டு அடிப்பட்டு வந்த வழக்கு என்றவாறு. (27) 107. ஏனை யுருபு மன்ன மரபின மான மிலவே சொன்முறை யான. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இதுவும் மயக்கமே உணர்த்துதல் நுதலிற்று. உரை: நான்காம் வேற்றுமை உருபல்லன பிறவும் ஒன்றன் பொருண்மைக்கண் அது சென்றாங்குச் செல்வன உளவேல் குற்ற மில்லை என்றவாறு (வரலாறு) வழக்குப் பெற்றவழிக் கண்டுகொள்க. (28) 108. வினையே செய்வது செயப்படு பொருளே நிலனே காலங் கருவி யென்றா வின்னதற் கிதுபய னாக வென்னு மன்ன மரபி னிரண்டொடுந் தொகைஇ யாயெட் டென்ப தொழின்முத னிலையே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், வினைச்சொல் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. உரை: இவ் வெட்டொடுந் தோன்றநிற்கும் வினைச்சொல் என்றவாறு (வரலாறு) வனைந்தான் என்ற சொல்லாலே அவ்வெட்டும் பெறும் என்பது. பெறுமாறு: வனைந்தான் என்ற வினை விளங்கிற்று; அதனால் வனைதற்றொழின்மை விளங்கும். செய்வது என்பது - செய்தான் ஒருவன் என்பது விளங்கும். செயப்படு பொருள் என்பது - குடந் தொடக்கத்தன என்பது விளங்கும். நிலம் என்பது - ஓரிடத்திருந்த தென்பது விளங்கும். காலம் என்பது - இரவானும் பகலானும் என்பது விளங்கும். கருவி என்பது - கோலும் திரிகையும் என இத் தொடக்கத்தன விளங்கும். இன்னதற்கு என்பது - ஒருவற்கு என்பது விளங்கும். இது பயன் என்பது - அறமானும் பொருளானும் ஒரோ வொன்று பயக்கும் என்பது விளங்கும். இஃது அவ் வெட்டிலக்கணமும் தோன்ற நிற்குமாறு; பிறவும் அன்ன. (29) 109. அவைதாம் வழக்கியன் மருங்கிற் குன்றுவ குன்றும். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், மேற் சொல்லப்பட்ட வினைத்திறம் படுவதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. உரை: மேற் சொல்லப்பட்ட எட்டும் உடன் விளங்காது குறைய நிற்பனவும் உள வழக்கினுள் வினைச்சொற்கள் என்றவாறு (வரலாறு) கொடியாடிற்று என்புழிச் செயப்படு பொருளும் இன்னார்க்கு என்பதும் இன்னது பயக்கும் என்பதும் இல்லை. பிறவும் அன்ன. (30) 110. முதலிற் கூறுஞ் சினையறி கிளவியுஞ் சினையிற் கூறு முதலறி கிளவியும் பிறந்தவழிக் கூறலும் பண்புகொள் பெயரு மியன்றது மொழிதலு மிருபெய ரொட்டும் வினைமுத லுரைக்குங் கிளவியொடு தொகைஇ யனைமர பினவே யாகுபெயர்க் கிளவி. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், ஆகுபெயர் உணர்த்துதல் நுதலிற்று. உரை: முதலிற் கூறுஞ் சினையறி கிளவித் தொடக்கத்தன ஏழ் கூறிய பின்னை அனைய மரபினவே என்றார், அவ்விலக்கணத்தன அவை என்றவாறு. முதலிற் கூறுஞ் சினையறி கிளவி என்பது - முதலாற் சினையைச் சொல்லுதல் என்றவாறு. அது, தெங்கு தின்றான்; கடுத் தின்றான் என வரும். சினையிற் கூறும் முதலறி கிளவி என்பது - சினையின் பெயர்கூற முதல் விளங்குவது என்றவாறு. அது, இலைநட்டு வாழும்; பூநட்டு வாழும் என வரும். பிறந்தவழிக் கூறல் என்பது - ஓரிடங் கூற அவ்விடத்தாயின பொருண்மையி னிற்றல் என்றவாறு. அது, குழிப்பாடி என வரும். பண்புகொள் பெயர் என்பது - ஒருகுணங்கூற அக்குணமடைந்த பொருள் விளங்கி நிற்றல்; அது வருமாறு: நீலம் என்பதோர் பண்பு; அப்பண்புச் சொல் கூற அப்பண்பினையடைந்த ஆடையானும் பிறவாற்றானும் விளங்கும் என்பது. இயன்றது மொழிதல் என்பது - இயன்றது என்பது செய்கை; அச் செய்கை சொல்ல அச் செய்கை நிகழ்ச்சியினாய வேறுபாடும் அப் பெயர்த்தாய் விளங்கும். அது வருமாறு: ஏறு, குத்து என, எறியவும் குத்தவுமாயின அத் தொடக்கத்தன விளங்கி நிற்கும் என்பது. இருபெயரொட்டு என்பது - இரண்டு பெயர் ஒட்டி நிற்பது: அது சொல்லப் பிறிதுபொருள் விளங்கும். அது வருமாறு: பொற்றொடி என்பது, இருபெயர் நின்று ஒட்டிற்று; அது சொல்லப் பொற்றொடி தொட்டாளை விளக்கும் என்பது. வினைமுதலுரைக்குங் கிளவி என்பது - வினைசெய்தான் பெயர் சொல்ல, அவன் செய்பொருளை யறிய நிற்றல் என்றவாறு. அது, தொல்காப்பியம், கபிலம் என்பன. ஆகுபெயர் என்ற பொருண்மை யென்னையெனின், ஒன்றன் பெயர் ஒன்றற்காய் நிற்றல் என்றவாறு. (31) 111. அவைதாம் தத்தம் பொருள்வயிற் றம்மொடு சிவணலு மொப்பில் வழியாற் பிறிதுபொருள் சுட்டலு மப்பண் பினவே நுவலுங் காலை. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இதுவும் ஆகுபெயர்க் கண்ணே யாவதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. உரை: அவ் வாகுபெயர்கள் முதற்கண் ஆங்காலம், அம் முதற்கே யன்றி அம் முதலொடு தொடர்ந்த பொருண்மேல் நிற்றலும், முதற்கே எவ்வியைபு மில்லாதனமேல் நிற்றலும் என இரண்டிலக்கணம் உடைய என்றவாறு தத்தம் பொருண்மையிற் றம்மொடு சிவணல் - தெங்கு, கடு என்னுந் தொடக்கத்தன; தெங்கு என்றவிடத்து தெங்கின்காய் எனல் கொள்க; கடுவும் அன்னதே. ஒப்பில் வழியாற் பிறிதுபொருள் சுட்டல் - நீலம் என்றது நீலமுண்ட ஆடையெனின், அவ்விடத்து நீலத்திற்கு எவ் வியைபுமின்றி நின்றது ஆடை என்க. பிறவும் அன்ன. இங்ஙனம் தத்தம் பொருட்கு இயைந்தனவற்று மேலனவும், இயையாதவற்று மேலனவும் என இருவகையவாய் நிற்கும் அவ் வாகுபெயர்கள் என்றவாறு (32) 112. வேற்றுமை மருங்கிற் போற்றல் வேண்டும். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இதுவும் ஆகுபெயர்க் கண்ணே கிடந்ததோர் பகுதி யுணர்த்துதல் நுதலிற்று. ஆகுபெயர்க்கு ஆவதோர் வேறுபாடு தெரிந்துணர்க. ஆவதோர் வேறுபாடு என்னெனின், தொல்காப்பியனாற் சொல்லப்பட்டது தொல்காப்பியம் என ஈறு திரிந்தது. அன்றியும், `வேற்றுமை மருங்கில் போற்றல் வேண்டும்’ என்றல் அவ் வாகுபெய ரெல்லாம் வேற்றுமையொடு தொடர்ந்த மருங்கினைப் போற்றியறிக என்றவாறு. யாதோ எனின், தெங்கினதுகாய் தெங்கு என ஆறாவது தொடர்ந்தது. நீலத்தையுடைய ஆடை நீலம் என இரண்டாவது தொடர்ந்தது. பிறவும் இவ்வாறே தொடர்ந்தவாறு போற்றியறிக என்றவாறு. இனி, அல்லதூஉம் ஆகுபெயர்கள் தத்தம் பொருள்வயிற் றம்மொடு சிவணின என்றும், ஒப்பில் வழியாற் பிறிதுபொருள் சுட்டின என்றும் போற்றி யுணர்க என்றவாறு. (33) 113. அளவு நிறையு மவற்றொடு கொள்வழி யுளவென மொழிப வுணர்ந்திசி னோரே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், அளவும் நிறையும் ஆகுபெயராவன உள என்பது உணர்த்துதல் நுதலிற்று. உரை: அளவும் நிறையும் ஆகுபெயர் ஆயினவளவு மேற்கூறிய போல உள என்றவாறு (வரலாறு) நாழி, உழக்கு என அளக்கப்படும் பொருளையும்; தொடி, துலாம் என நிறுக்கப்படும் பொருளையும் உணர்த்தும் என்பது. பிறவும் அன்ன. (34) 114. கிளந்த வல்ல வேறுபிற தோன்றினுங் கிளந்தவற் றியலா னுணர்ந்தனர் கொளலே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இஃது ஆகு பெயர்க்குப் புறனடை கூறுதல் நுதலிற்று. உரை: மேற் சொல்லப்பட்டனவன்றி வரும் ஆகுபெயரும் உள; அவற்றையும் சொல்லப்பட்ட இலக்கணத்தான் உணர்ந்து கொள்க என்றவாறு அவை வருமாறு: யாழ் கேட்டான்; குழல் கேட்டான் என்ப, அவற்றினாகிய ஓசை கேட்டாரை. பசுப் போல்வானைப் பசு என்ப; பாவை போல்வாளைப் பாவை என்ப. இனி, எண்ணிற் கேதுவாகிய இடங்களையும் ஒன்று, பத்து, நூறு என்ப. இனி, `எழுத்து’ (தொல். எழுத்து. நூன்மரபு 1) என்பதும் அது. பிறவும் அன்ன. இனிக் `கிளந்தவல்ல பிற’ என்னாது, `வேறு’ என்றதனால், ஆகுபெயர்கள் ஈறு திரியும் என்பது காட்டுக. (35) மூன்றாவது வேற்றுமை மயங்கியல் முற்றிற்று. விளிமரபு விளி வேற்றுமையது இலக்கணம் உணர்த்தினமையின் விளிமரபென்னும் பெயர்த்தாயிற்று. இதன்கண் உள்ள சூத்திரங்கள் 37. தெய்வச்சிலையார் 36-ஆகப் பகுத்து உரை கூறியுள்ளார். விளி வேற்றுமையாவது படர்க்கைப் பெயர்ப்பொருளை எதிர் முகமாக்குதலைப் பொருளாகவுடையதாகும். ஈறுதிரிதல், ஈற்றயல் நீடல், பிறிது வந்தடைதல், இயல்பாதல் என்பன விளி வேற்றுமையின் உருபுகளாகக் கொள்ளத்தக்கன. விளி கொள்ளும் பெயர்கள் இவையெனவும் விளி கொள்ளாப் பெயர்களிவையெனவும் ஆசிரியர் இவ்வியலில் உணர்த்துகின்றார். இ, உ, ஐ, ஓ, ன, ர, ல, ள என்பவற்றை யிறுதியாகவுடைய உயர்திணைப் பெயர்கள் விளி கொள்ளும் பெயர்களாம். ஏனைப் பெயர்கள் விளியேலா. தான், யான், நீயிர் என்பனவும் சுட்டுவினப் பெயர்களும் த, ந, நு, எ என்பவற்றை முதலாகவுடைய கிளைப் பெயர்களும் இவைபோல்வன பிறவும் விளிவேற்றுமையோடு பொருந்தாத பெயர்களாம். ஈறுதிரிதல் இகரவீறு ஈகாரமாகவும் ஐகாரவீறு ஆய் எனவும் முறைப் பெயரீற்று ஐகாரம் ஆகாரமாகவும் அண்மை விளியாயின் அகர மாகவும் திரியுமென்றும், தொழிற் பெயர் பண்புகொள்பெயர் என்பவற்றின் இறுதியிலுள்ள ஆன் விகுதியும் ஆள் விகுதியும் ஆய் விகுதியாகத் திரியுமென்றும், அர், ஆர் என்பன ஈர் எனத் திரியுமென்றும் கூறுவர் ஆசிரியர். ஈற்றயல் நீடல் லகர ளகர வீற்று உயர்திணைப் பெயர்கள் ஈற்றயல் நீண்டு விளியேற்பன. பிறிது வந்தடைதல் ஓகாரவீற்றுப் பெயரும் குற்றியலுகரவீற்றுப் பெயரும் லகர ளகரவீற்று முறைப் பெயரும் ரகரவீற்றுத் தொழிற் பெயரும் பண்புகொள் பெயரும் இறுதியில் ஏகாரம் பெற்று விளிப்பன. இயல்பாதல் இகரவீற்று அளபெடைப் பெயரும் அண்மையிலுள்ளாரை யழைக்கும் பெயரும் ஆனீற்றுப் பெயரும் ன, ர, ல, ள என்பவற்றை யிறுதியாகவுடைய அளபெடைப் பெயர்களும் இயல்பாய் நின்று விளியேற்பனவாம். இ, உ, ஐ, ஓ, ன, ர, ல, ள என்னும் எழுத்துக்களை யிறுதியாக வுடைய அஃறிணை விரவுப் பெயர்கள் மேல் உயர்திணைப் பெயர்க்குச் சொல்லிய முறையால் விளியேற்பன வென்றும், அஃறிணைக்கண் வரும் எல்லா வீற்றுப் பெயர்களும் ஏகாரம் பெற்று விளியேற்பன வென்றும் இங்குக்கூறப்பட்ட இருதிணைப் பெயர்களும் சேய்மை விளிக்கண் வருங்கால் தத்தம் மாத்திரையில் நீண்டொலிப்பன வென்றும் கூறுவர் ஆசிரியர். - க. வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 203-204 நான்காவது விளிமரபு 115. விளியெனப் படுப கொள்ளும் பெயரொடு தெளியத் தோன்று மியற்கைய வென்ப என்பது சூத்திரம். இவ்வோத்து என்ன பெயர்த்தோ வெனின், விளி வேற்றுமையது இலக்கணம் உணர்த்தினமையின், விளிமரபு என்னும் பெயர்த்து. இனி, இத் தலைச்சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், விளி வேற்றுமையது இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. உரை: விளி என்பன தம்மை ஏற்கும் பொருளொடு யாப்புறத் தோன்றும் தன்மைய என்றவாறு தன்மைய என்றான், விளி பெயரொடு கொள்ளும் என்பதூஉம், கொள்ளுங்கால் ஏற்கும் என்பதூஉம் சொல்லப் பட்டவாம். `தெளியத் தோன்றும்’ என்றது, விளியை வேற்றுமை அன்றென்பாரும் உளர்; அது மறுத்து வேற்றுமையே எனற்கு என்பது. `எனப்படுப’என்று பன்மை கூறினார், ஈறு திரிதல், ஈற்றயல் நீடல், பிறிது வந்தடைதல், இயல்பாதல் என நான்கு பகுதியவாகலான் என்பது. (1) 116. அவ்வே இவ்வென வறிதற்கு மெய்பெறக் கிளப்ப. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், மேற்சொல்லப் பட்டனவற்றை இனிச் சொல்லுப என்பது உணர்த்துதல் நுதலிற்று. உரை: அவை, இவையென அறிதற்கு வழக்குப்பெற இனிச் சொல்லப்படும், என்றவாறு (2) 117. அவைதாம் இ உ ஐ ஓ என்னு மிறுதி யப்பா னான்கே யுயர்திணை மருங்கின் மெய்ப்பொருள் சுட்டிய விளிகொள் பெயரே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், விளி என்பன தாம் இவை என்பது உணர்த்துதல் நுதலிற்று. உரை: உயிரெழுத்தினுள் உயர்திணைப் பெயர்க்கு விளியேற்கும் எழுத்தாவன இவை என்றவாறு. `உயர்திணை மருங்கின் மெய்ப்பொருள் சுட்டிய’- எனவே, மற்றைத் திணைக்கண்ணும் உள, சிறு வரவின எனக் கொள்க. அவை வருமாறு: `குறையறப் பூத்த கொடி முல்லாய்’ என்புழி, முல்லை - முல்லாய் எனவும், `செங்கான் நாராய்’ என்புழி, செங்கால் நாரை செங்கால் நாராய் எனவும் வரும். பிறவும் அன்ன. (3) 118. அவற்றுள் இ ஈ யாகும் ஐ ஆ யாகும். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின்; இகர ஐகாரங்கள் விளியேற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. நம்பி - நம்பீ என, இ - ஈயாய் விளியேற்றது. நங்கை - நங்காய் என, ஐ - ஆயாய் விளியேற்றது. இங்ஙனமா தல், `ஈறு திரிதல்’. (4) 119. ஓவும் உவ்வு மேயொடு சிவணும். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், ஓகார ஈறும் உகர ஈறும் விளியேற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. கோ - கோவே என, ஓகார ஈறு ஏகாரமொடு சிவணிற்று. வேந்து - வேந்தே என, உகரம் ஏயோடு சிவணிற்று. இம் முடிபு, `பிறிது வந்தடைதல்’ ஆம். (5) 120. உகரந் தானே குற்றிய லுகரம். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், ஐயமறுத்தல் நுதலிற்று: மேலதற்கோர் புறனடையெனினும் அமையும். உரை: கூறப்பட்ட நான்கனுள், உகரம் குற்றியலுகரம் என்பது அறியாது நின்றவழி, முற்றுகரம் அன்று; குற்றுகரம் என்பது கருத்து என்றவாறு (6) 121. ஏனை யுயிரே யுயர்திணை மருங்கிற் றாம்விளி கொள்ளா வென்மனார் புலவர். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், எய்தாதது எய்துவித்தல் நுதலிற்று; ஐயமறுத்தது எனினும் அமையும். உரை: சொல்லப்பட்ட நான்கு உயிரெழுத்துமல்லால் மற்றையன உயர்திணைக்கண் விளியேலா என்றவாறு. மற்று, கொள்வன இவை யெனவே, ஒழிந்தன கொள்ளா என்பது யானே உணரேனோ, இது சொல்லவேண்டியது என்னையெனின், ஏனை உயிர் உயர்திணைக்கண் விளிகொள்ளா என, இன்னும் மேற்சொல்லப்பட்டன மேல் ஓதியவாறன்றிப் பிறவாற்றானும் விளியேற்கும் என்றற்குச் சொல்லப்பட்டது என்றவாறு. கணி - கணியே என, இகர ஈறு ஈகாரப் பேறன்றி ஏகாரமும் பெற்று விளியேற்கும் என்பது. (7) 122. அளபெடை மிகூஉ மிகர விறுபெய ரியற்கைய வாகுஞ் செயற்கைய வென்ப. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், எய்தியது விலக்கல் நுதலிற்று. உரை: அளபெடை இகரம் ஈறாயின் இயல்பாயே விளி ஏற்கும் என்றவாறு (வரலாறு) தொழீஇ என வரும். பெயர்நிலையும் விளிநிலையும் அதுவே நிற்குமாறு. `இனிச் செயற்கைய’ என்றதனான், இரண்டு மூன்று மாத்திரைபெற எழுதுவாரும், ஐந்து மாத்திரைபெற எழுது வாரும் என இருதிறத்தார் ஆசிரியர் என உணர்க. (8) 123. முறைப்பெயர் மருங்கி னையெ னிறுதி யாவொடு வருதற் குரியவு முளவே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இஃது இறந்தது காத்தல் நுதலிற்று. உரை: மேல் ஐ ஆய் ஆகும் என்றார்; இனி, முறைப் பெயர்க் கண்ணாயின் ஐ யீறு ஆவொடு வருவனவும் உள என்றவாறு (வரலாறு) அன்னை - அன்னா என்றும், அத்தை - அத்தா என்றும் ஆக என்பது. (9) 124. அண்மைச் சொல்லே யியற்கை யாகும். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இதுவும் இறந்தது காத்தல் நுதலிற்று. உரை: அணியாரைக் கூவுமிடத்து அவை இயல்பேயாய் விளியேற்கும் என்றவாறு (வரலாறு) நம்பி வாழி, நங்கை வாழி, வேந்து வாழி என வரும். (10) 125. ன ர ல ள வென்னு மந்நான் கென்ப புள்ளி யிறுதி விளிகொள் பெயரே. இச்சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், உயர்திணைக்கட் புள்ளியீறு விளியேற்பன இவை யென உணர்த்துதல் நுதலிற்று. வரலாறு முன்னர்க் காட்டுதும். (11) 126. ஏனைப் புள்ளி யீறுவிளி கொள்ளா. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், எய்தாதது எய்துவித்தல் நுதலிற்று; ஐயமறுத்தது எனினும் அமையும். உரை: மேற் சொல்லப்பட்ட நான்கல்லாப் புள்ளியீறு விளி யேலா உயர்திணைக்கண் என்றவாறு மற்று, ஆவன கூற அமையாதோ வெனின், `ஏனைப் புள்ளியீறு விளி கொள்ளா’ என, இன்னும் மேற்கூறிய புள்ளியீறு அவ்வாறன்றிப் பிறவாறு விளியேற்றலுமுடைய என்றற்குக் கூறினார் என்பது. (வரலாறு) பெண்டிர் - பெண்டிரே எனவும், தம்முன் - தம்முனே எனவும் வரும். பிறவும் அன்ன. ஏனைப் புள்ளியும் ஆவதுண்டு. `விளங்குமணிக் கொடும்பூண் ஆய்’ என்பதும் (புறம். 130) பிறவும் இவ்வாறு வருவன கொள்க. (12) 127. அன்னென் னிறுதி யாவா கும்மே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், நிறுத்த முறையானே னகரவீறு விளியேற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. உரை: அன் என்னும் பெயரிறுதி ஆவாய் விளியேற்கும் என்றவாறு (வரலாறு) சோழன் - சோழா, சேர்ப்பன் - சேர்ப்பா எனவரும். (13) 128. அண்மைச் சொல்லிற் ககரமு மாகும். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், எய்தியது ஒரு மருங்கு மறுத்தல் நுதலிற்று. உரை: அணியாரைக் கூவுமிடத்து அன் ஈறு திரிந்து அகரமாயும் விளியேற்கும் என்றவாறு. (வரலாறு) ஊரன் - ஊர, சேர்ப்பன் - சேர்ப்ப என வரும். (14) 129. ஆனென் னிறுதி யியற்கை யாகும். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இதுவும் னகரவீறு விளியேற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. உரை: ஆன் என் னகரவீறு இயல்பாய் விளியேற்கும் என்றவாறு. (வரலாறு) சேரமான், மலையமான் என இருநிலைமைக் கண்ணும் அதுவே நிற்குமாறு என்பது. (15) 130. தொழிலிற் கூறு மானென் னிறுதி யாயா கும்மே விளிவயி னான. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், எய்தியது ஒரு மருங்கு மறுத்தல் நுதலிற்று. உரை: ஆன் என் இறுதி தொழிற் பெயராயின் ஆயாய் விளியேற்கும் என்றவாறு (வரலாறு) உண்டான் - உண்டாய் என வரும். இனி, `விளிவயினான’ என்றதனான், வாயிலான்- வாயிலாய், பூயிலான் - பூயிலாய் என, இவ்வாறு பெயரினாகிய பெயரும் ஆயாய் விளியேற்கும் என்பாரும் உளர். (16) 131. பண்புகொள் பெயரு மதனோ ரற்றே. இச்சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இதுவும் எய்தியது ஒரு மருங்கு மறுத்தல் நுதலிற்று. உரை: அவ்வான் இறுதி பண்புகொள் பெயராயின் ஆயாய் விளியேற்கும் என்றவாறு (வரலாறு) கரியான் - கரியாய், செய்யான் - செய்யாய் என வரும். (17) 132. அளபெடைப் பெயரே யளபெடை யியல. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், னகரவீற்று அளபெடைக்குரிய இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. உரை: னகரவிறுதி அளபெடைப்பெயரும் மேல் இகரவீற்று அளபெடை யேற்றவாறு ஏற்க என்றவாறு (வரலாறு) அழாஅன், புழாஅன் என வரும். (18) 133. முறைப்பெயர்க் கிளவி யேயொடு வருமே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இறந்தது காத்தல் நுதலிற்று. உரை: னகாரவீற்று முறைப் பெயராமே யெனின் ஏகாரம் பெற்று விளியேற்க என்றவாறு (வரலாறு) மகன் - மகனே, மருமகன் - மருமகனே என வரும். மற்று இவை இருதிணைக்கும் உரியவாம் பிறவெனின், உரிய வாயினும் முன்னர், `விளம்பிய நெறிய விளிக்குங் காலை’ (விளி. 33) என்னும் மாட்டேறு செல்லாமையான் னகரவீற்று ஒற்றுமை பற்றி வைத்துணர்த்தினார் என்பது. (19) 134. தானென் பெயருஞ் சுட்டுமுதற் பெயரும் யானென் பெயரும் வினாவின் பெயரு மன்றி யனைத்தும் விளிகோ ளிலவே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், னகரவீற்றுள் விளியேலாதன இவை என்பது உணர்த்துதல் நுதலிற்று. உரை: அவைதாம், தான் அவன் இவன் உவன் யான் யாவன் என்பன இவ்வாறு பெயரும் மேல் எவ் விளியும் ஏலா என்றவாறு (20) 135. ஆரு மருவு மீரொடு சிவணும். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், நிறுத்த முறையானே ரகரவீறு விளியேற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. உரை: ஆர் என்னும் ஈறும் அர் என்னும் ஈறும் திரிந்து ஈர் ஆகும் என்றவாறு (வரலாறு) பார்ப்பார் - பார்ப்பீர், கூத்தர் - கூத்தீர் எனவரும். (21) 136. தொழிற்பெய ராயி னேகாரம் வருதலும் வழுக்கின் றென்மனார் வயங்கி யோரே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், எய்தியதன்மேற் சிறப்புவிதி யுணர்த்துதல் நுதலிற்று. உரை: ரகரவீறு தொழிற்பெயராமே யெனின் மேல் எய்திய ஈறே யன்றி, அதனோடு ஏகாரம்பற்றி யேற்க என்றவாறு (வரலாறு) உண்டார் -உண்டீரே, சான்றார் -சான்றீரே எனவரும். `வழுக்கின்று’ என்பதனால், நம்பியார் - நம்பியீரே, கணியார் - கணியீரே என்பன போல்வன கொள்க. (22) 137. பண்புகொள் பெயரு மதனோ ரற்றே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இதுவும் எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுதல் நுதலிற்று. உரை: பண்புகொள வந்த ஆர் ஈற்றோடு ஏகாரம் பெற்று விளியேற்கும் என்றவாறு (வரலாறு) செய்யார் - செய்யீரே எனவரும். (23) 138. அளபெடைப் பெயரே யளபெடை யியல. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், ரகரவீற்று அளபெடைக்குரிய இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. உரை: ரகரவீற்று அளபெடைப் பெயர் இகரவீற்று அளபெடைப் பெயர்போல் விளி யேற்கும், இயல்பாய் என்றவாறு (வரலாறு) மகாஅர், சிறாஅர் எனவரும். (24) 139. சுட்டுமுதற் பெயரே முற்கிளந் தன்ன. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், எய்தியது விலக்குதல் நுதலிற்று. உரை: மேல் னகரவீற்றுச் சுட்டுப் பெயர் விளி யேலா என்றான்; அவையேபோல ரகரவீற்றுச் சுட்டுப் பெயரும் விளியேலா என மாட்டெறிந்தவாறு. அவையாவன: அவர், இவர், உவர் என்பன. (25) 140. நும்மின் றிரிபெயர் வினாவின் பெயரென் றம்முறை யிரண்டு மவற்றியல் பியலும். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், மேல் எய்தியது விலக்கல் நுதலிற்று. உரை: நும்மின் திரிபெயர் - நீயிர் என்பது; வினாவின் திரிபெயர் - யாவர் என்பது; இவையிரண்டு பெயரும் விளியேலா என்றவாறு மற்று, இர் ஈறு விளியேற்கும் என்றதின்மையின், நும்மின் றிரிபெயர் விளியேலாது என்று விலக்கியது என்னை யெனின், அற்றன்று; பெண்டிர் - பெண்டீரே என, இர் ஈறும் விளியேற்கும் என்று மேல் இலேசினான் எய்துவித்துப் போந்தாமாகலின் (சூ. 12) விலக்க வேண்டும் என்பது. (26) 141. எஞ்சிய விரண்டி னிறுதிப் பெயரே நின்ற வீற்றய னீட்டம் வேண்டும். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், மேல் நிறுத்த முறையானே ஒழிந்த இரண்டு புள்ளியீறும் விளியேற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. உரை: ஒழிந்துநின்ற புள்ளிகளை யீறாகவுடைய பெயர்கள் தம் இறுதி யெழுத்தின் அயலெழுத்து நீண்டு விளியேற்க என்றவாறு. (வரலாறு) குரிசில் - குரிசீல்; தோன்றல் - தோன்றால்; மக்கள் - மக்காள் எனவரும். (27) 142. அயனெடி தாயி னியற்கை யாகும். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், எய்தாதது எய்துவித்தல் நுதலிற்று. உரை: அவ்விரண்டு ஈறும், ஈற்றெழுத்தின் அயலெழுத்து நீண்டு நிற்பின், இயற்கையாய் விளியேற்கும் என்றவாறு (வரலாறு) பெண்பால், ஆண்பால்; எம்மாள், கோமாள், கடியாள், பெரியாள் என வரும் (28) 143. வினையினும் பண்பினு நினையத் தோன்று மாளெ னிறுதி யாயா கும்மே விளிவயி னான. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், எய்தியது ஒரு மருங்கு மறுத்தல் நுதலிற்று. உரை: ஆள் என்னிறுதி வினைப்பெயரும் பண்புப் பெயரும் ஆயின், ஆயாய் விளியேற்கும் என்றவாறு (வரலாறு) உண்டாள் - உண்டாய் எனவும்; கரியாள் - கரியாய் எனவும் வரும். (29) 144. முறைப்பெயர்க் கிளவி முறைப்பெய ரியல. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இதுவும் எய்தியது ஒர் மருங்கு மறுத்தல் நுதலிற்று. உரை: மேல் னகரவீற்று முறைப்பெயர் ஏகாரம் பெற்று விளியேற்றது; இதுவும் ஏகாரம் பெற்று விளியேற்க என்றவாறு மகள் - மகளே, மருமகள் - மருமகளே எனவரும். மற்று, இவை இருதிணைக்கும் உரிய பெயர் பிறவெனின், முன்னர் (சூ. 19) விடுத்தாங்கே விடுக்க. (30) 145. சுட்டுமுதற் பெயரும் வினாவின் பெயரு முற்கிளந் தன்ன வென்மனார் புலவர். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், எய்தியது விலக்கல் நுதலிற்று. உரை: மேல் னகரவீற்றுச் சுட்டுப்பெயரும் வினாவின் பெயரும் விளியேலா என்றார்; அவைபோல இவையும் விளியேலா என்பது உணர்த்துதல் ஆயிற்று. அவையாவன: அவள், இவள், உவள்; யாவள் என்பன. (31) 146. அளபெடைப் பெயரே யளபெடை யியல. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், அளபெடைக்கு உரிய இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. உரை: மாட்டேற்றுவகையான், உயர்திணை னகர ஈற்று அளபெடை விளியேற்றவாறே இவையும் விளியேற்க என்பது உணர்த்தியவாறு. வரலாறு: `மாஅனின் னிறம்போன் மழையிருளிற் பட்டதே கோஒள் குளக்கோடு கொண்டு’ என்பதனுள், மாஅல், கோஒள் என விளிநிலைக் கண்ணும் நின்றாங்கே நிற்கும் என்பது. (32) 147. கிளந்த விறுதி யஃறிணை விரவுப்பெயர் விளம்பிய நெறிய விளிக்குங் காலை. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், அஃறிணை விரவுப் பெயர்க்குரிய இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. உரை: கிளந்த இறுதியாவன - உயிரீறு நான்கும் புள்ளியீறு நான்குமாயவற்றை யிறுதியாகவுடைய அஃறிணைக்கண் வரும் விரவுப் பெயர், மேற்கூறிய நெறியான் விளியேற்கும், என்றவாறு (வரலாறு) சாத்தி - சாத்தீ, பூண்டு - பூண்டே, தந்தை - தந்தாய் எனவும்; சாத்தன் - சாத்தா, கூந்தல் - கூந்தால், மகள் - மகளே எனவும் வரும். ஓகார ஈறும், ரகார ஈறுமாய் வருவன விரவுப் பெயர் உளவேற் கண்டுகொள்க. பிறவும் அன்ன. (33) 148. புள்ளியு முயிரு மிறுதி யாகிய வஃறிணை மருங்கி னெல்லாப் பெயரும் விளிநிலை பெறூஉங் காலந் தோன்றிற் றெளிநிலை யுடைய வேகாரம் வரலே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், புள்ளியீறும் உயிரீறுமாகிய அஃறிணைப் பெயர்க்கு உரிய இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. உரை: புள்ளியீறும் உயிரீறும் ஆகிய அஃறிணைப் பெயரெல்லாம் விளிகொள்ளுங் காலந்தோன்றின் ஏகாரம் பெறுதலைத் தெற்றென வுடைய, என்றவாறு (வரலாறு) மரம் - மரமே, அணில் - அணிலே, நரி - நரியே, புலி - புலியே என வரும். `தெளிநிலையுடைய’ என்று விதந்து ஓதினமையான், ஏகாரம் ஒழியச் சிறுபான்மை இயல்பாய் விளியேற்பனவும் உள. (வரலாறு) `வருந்தினை வாழியென் நெஞ்சம்’ எனவும், `கருங்கால் வெண்குருகு’ எனவும், `நெடுவெண் மதி எனவும், ‘காட்டுச் சாரோடுங் குறுமுயால்’ எனவும், ‘ஒண்டூவி நாராய்’ எனவும் வரும். (34) 149. உளவெனப் பட்ட வெல்லாப் பெயரு மளபிறந் தனவே விளிக்குங் காலைச் சேய்மையி னிசைக்கும் வழக்கத் தான. 1இச் சூத்திரம், உயர்திணைக் கண்ணும் அஃறிணைக் கண்ணும் விளி யேற்பனவாகச் சொல்லப்பட்டன எல்லாப் பெயரும் விளிக்குமிடத்துத் தத்தம் மாத்திரையி னிறந்து இசைத்தனவாம், சேய்மைக்கண் ஒலிக்கும் வழக்கத்தின்கண் என்றவாறு. (வரலாறு) நம்பீ, சாத்தா என வரும். ‘அளபெடை மிகூஉம்’ (சூ. 8) என்றமையின், அளபெடைப் பெயர் ஒழித்துக் கொள்க. (35) 150. அம்ம வென்னு மசைச்சொ னீட்ட மம்முறைப் பெயரொடு சிவணா தாயினும் விளியொடு கொள்ப தெளியு மோரே. இச் சூத்திரம், அம்ம என்னும் அசைச் சொல்லினது நீட்டம் விளி கொள்ளும் பெயரொடு தோன்றாது, இடைச் சொல்லொடு தோன்றிற்றாயினும் விளியாகக் கொள்வர் தெளிவோர் என்றவாறு. (வரலாறு) அம்மா சாத்தா என்பது. சாத்தா என்பதே எதிர்முகமாக்குமாயினும், அம்ம என்பதும் அவ்வெதிர்முகமே குறித்து நிற்றலின் விளியாகக் கொள்ளப்படும் என்பார், ‘விளியொடு கொள்ப’ என்றார். (36) 151. த ந நு எயென வவைமுத லாகித் தன்மை குறித்த னளரவென் னிறுதியு மன்ன பிறவும் பெயர்நிலை வரினே யின்மை வேண்டும் விளியொடு கொளலே. இச் சூத்திரம், த, ந, நு என்னும் உயிர்மெய்யையும், எ என்னும் உயிரையும் முதலாகவுடையவாய் ஒருவனது கிளைமைப் பொருண்மையைக் குறித்து நின்ற, ன, ள, ர என்னும் மூன்று புள்ளியையும் இறுதியாகவுடைய சொல்லும், அவை போல்வன பிறவுமாகிய பெயர்ச் சொல்லும் வருமாயின் விளியொடு பொருந்துதல் இல என்றவாறு. (வரலாறு) தமன் - தமள்- தமர்; நமன் - நமள், நமர்; நுமன் - நுமள் - நுமர்; எமன் - எமள் - எமர்; தம்மான் - தம்மாள் - தம்மார்; நம்மான் - நம்மாள் - நம்மார்; நும்மான் - நும்மாள் - நும்மார்; எம்மான் - எம்மாள் - எம்மார் என வரும். `அன்ன பிறவும்’ என்றதனான், மற்றையான் - மற்றையாள் - மற்றையார் எனவும் வருவன கொள்க. (37) நான்காவது விளிமரபு முற்றிற்று. அடிக்குறிப்பு 1. இச் சூத்திரமுதல் மேல்வருஞ் சூத்திரங்கள் சிலவற்றிற்குக் கருத்துரை காணப்படவில்லை. பெயரியல் இதுகாறும் அல்வழி வேற்றுமையாகிய தொடர்மொழி யிலக்கணங் கூறிய ஆசிரியர், இனி அத்தொடர்மொழிக்கு உறுப் பாகிய தனிமொழி யிலக்கணங் கூறத் தொடங்கி முதற்கண் பெயரிலக்கண முணர்த்துகின்றார். அதனால் இது பெயரிய லென்னும் பெயர்த்தாயிற்று. இதன்கண் 43-சூத்திரங்கள் உள்ளன. இவற்றை 41-சூத்திரங்களாக அடக்குவர் தெய்வச்சிலையார். எல்லாச் சொற்களும் பொருள் குறித்து வருவனவே. சொல்லாற் குறிக்கப்பட்ட பொருளைத் தெரிந்துகொள்ளுதற்கும் சொல்லைத் தெரிந்துகொள்ளுதற்கும் அச்சொல்லே கருவியாகும். சொல் பொருளுணர்த்தும் முறை வெளிப்படுநிலை, குறிப்புநிலை யென இருவகைப்படும். சொல்லெனச் சிறப்பித்துரைக்கத்தக்கன பெயரும் வினையும் என இரண்டேயாம். இடைச் சொல்லும் உரிச்சொல்லும் பெயர் வினைகளைச் சார்ந்து தோன்றுவன என்பர் ஆசிரியர். பெயர் என்பது பொருள். பொருளை யுணர்த்துஞ் சொல் பெயர்ச்சொலெனப் பட்டது. பொருளது புடைபெயர்ச்சியாகிய தொழிற் பண்பின் காரியம் வினையாகும். அவ்வினையை யுணர்த்துஞ்சொல் வினைச்சொலெனப்பட்டது. பெயருமாகாது வினையுமாகாது அவ்விரண்டற்கும் நடு நிகரனவாய் நிற்பன இடைச்சொற்களாம். இடை-நடு. குணப்பண்பும் தொழிற்பண்பு மாகிய பொருட்பண்பை யுணர்த்துஞ் சொற்கள் உரிச்சொற்களாம். பொருட்குப் பண்பு உரிமைபூண்டு நிற்றலின் அப்பண்பினை யுணர்த்துஞ்சொல் உரிச்சொலெனப் பட்டதென்பர் சிவஞான முனிவர். உயர்திணைப் பெயரும், அஃறிணைப் பெயரும், அவ்விரு திணைக்கும் ஒத்த உரிமையுடைய விரவுப்பெயரும் எனப் பெயர்ச் சொல் மூன்று வகைப்படும். அவன், பெண்மகன், சாத்தன் என னகரவீறும், அவள், மக்கள், மகள் என ளகரவீறும் நம்பி, பெண்டாட்டி, முள்ளி என இகரவீறும், ஆடூஉ, மகடூஉ, அழிதூஉ என உகரவீறும் உயர்திணை ஆண்பால் பெண்பால் களுக்கும் அஃறிணைக்கும் உரியவாய் வந்தன. இப்பெயர்ச் சொற்களை வினைச் சொற்போல இன்னஈறு இன்ன பாலுக்குரித்து என ஈறு பற்றிப் பகுத்துணர்த்துதலாகாமையின் இருதிணைப் பிரிந்த ஐம்பாலுணர்த்துஞ் சொல்லாதற்குப் பெயருள் உரியன உரியவாம் என்றார் தொல்காப்பியனார். இவ்வியலில் 8-முதல் 12-வரையுள்ள சூத்திரங்களால் உயர் திணைப் பெயர்களையும், 13-முதல் 14-வரையுள்ள சூத்திரங்களால் அஃறிணைப் பெயர்களையும், 17-முதல் 19-வரையுள்ள சூத்திரங்களால் விரவுப்பெயர் பால் விளங்க நிற்றலையும், 20-முதல் 36-வரையுள்ள சூத்திரங்களால் இரு திணைப் பொதுப்பெயர்களையும் அவற்றின் வகையினையும் விரித்துக் கூறுவர் ஆசிரியர். அருவாளன், சோழியன் என்றாங்கு நிலம்பற்றி வழங்கும் பெயர் நிலப்பெயர். சேரன், சோழன், பாண்டியன் என்றாற்போல ஒருவன் பிறந்த குடி பற்றி வழங்குவன குடிப்பெயர். அவையத்தார், அத்திகோசத்தார் என்றாங்கு ஒரு துறைக்கண் உரிமை பூண்ட பலரையுங் குறித்து வழங்குவன குழவின்பெயர். தச்சன், கொல்லன் என்றாற்போலத் தொழில்பற்றி வழங்கும் பெயர் வினைப்பெயர். அம்பர்கிழான், பேரூர்கிழான் என்றாற்போல உடைமைப் பொருள்பற்றி அதனையுடையார்க்கு வழங்கும் பெயர் உடைப்பெயரெனப்படும். கரியன் செய்யன், நல்லன் தீயன் என்றாற்போல நிற முதலிய குணம் பற்றி அப்பண்புடையார்க்கு வழங்கும் பெயர் பண்புகொள் பெயராகும். தந்தையர், தாயர், தன்னையர் என அம்முறையுடையார் பலர்க்கும் வழங்கும் பெயர் பல்லோர்க் குறித்த முறைநிலைப் பெயராம். பெருங்காலர், பெருந்தோளர் என்றாற்போலச் சினையுடைமைபற்றி அச்சினை யுடையார் பலர்க்கும் வழங்கும் பெயர் பல்லோர்க்குறித்த சினை நிலைப் பெயராம். ஆயர், வேட்டுவர் முதலாகத் திணைபற்றிப் பலர்க்கும் வழங்கும் பெயர் பல்லோர்க் குறித்த திணை நிலைப் பெயராம். பட்டி புத்திரர் கங்கை மாத்திரர் என்றாற்போல விளையாட்டுக் குறித்து இளைஞர்கள் பகுதிபடக் கூடித் தமக்குப் படைத்திட்டுக்கொள்ளும் பெயர் கூடிவரு வழக்கின் ஆடியற் பெயரெனப்படும். ஒருவர், இருவர், மூவர் என எண்ணாகிய இயல்புபற்றி இவ்வளவினர் என்னும் பொருளில் வழங்கும் பெயர் இன்றிவரென்னும் எண்ணியற் பெயராம். இங்கெடுத்துக் காட்டிய பெயர் விகற்பமெல்லாம் தம் காலத்தே தமிழகத்தில் வழங்கப்பெற்றனவாதலின் இவற்றைப் பால் விளங்க வந்த உயர்திணைப் பெயர்களில் அடக்கிக் கூறினார் ஆசிரியர். ஆ, யானை, தெங்கு, பலா என்றாற்போன்று ஒருமைக்கும் பன்மைக்கும் பொதுவாய் வழங்கும் அஃறிணைப் பெயர்களை ‘அஃறிணையியற்பெயர்’ எனக் குறியிட்டு வழங்குவர் தொல் காப்பியர். இவற்றை நன்னூலாரும் பிறரும் பால்பகா அஃறிணைப் பெயர் என வழங்குவர். ஒருவர்க்குக் காரணங் கருதாது சாத்தன், கொற்றன் என்றாங்கு இயல்பாக இட்டு வழங்கும் பெயர் இயற்பெயரெனப்படும். பெருங்காலன், முடவன் என்றாற்போன்று சினையுடைமைபற்றி முதற்பொருளுக்கு வழங்கும் பெயர் சினைப் பெயராம். சீத்தலைச் சாத்தன், கொடும் புறமருதி என்றாற்போன்று சினைப்பெயரொடு தொடர்ந்துவரும் முதற்பெயர் சினைமுதற் பெயராம். பிறப்பால் ஒருவரோடொருவர்க்குளதாகிய முறை பற்றித் தந்தை, தாய் முதலாக வழங்கும் பெயர்கள் முறைப் பெயர்களாம். இயற்பெயர், சினைப்பெயர், சினைமுதற்பெயர், முறைப்பெயர் ஆகிய இவையும் தாம், தான், எல்லாம், நீயிர், நீ என்பனவும் இருதிணைக்கும் உரியனவாய் வழங்கும் பொதுப் பெயர்களாகும். இவற்றை விரவுப்பெயர் என வழங்குதலும் உண்டு. மேற்கூறிய இயற்பெயர், சினைப்பெயர், சினைமுதற் பெயர் ஆகிய மூன்றும் ஆண்மை பெண்மை ஒருமை பன்மை என இந்நான்குங் காரணமாக இருதிணைக்கும் பொதுவாகி வழங்குங் கால் முந்நான்கு பன்னிருண்டுவகைப்படுமென்றும், முறைப்பெயர் ஆண்மை முறைப்பெயர் பெண்மை முறைப்பெயர் என இரு வகைப்படுமென்றும், இவை பெண்மை சுட்டிய பெயர், ஆண்மை சுட்டிய பெயர், ஒருமை சுட்டிய பெயர், பன்மை சுட்டிய பெயர் என நான்காயடங்கமென்றும், இவற்றுள் பெண்மை சுட்டிய பெயர் உயர்திணையில் பெண்ணொருத்தியையும் அஃறிணையில் பெண்ணொன்றையும் உணர்த்துதலும், ஆண்மை சுட்டிய பெயர் உயர்திணையுள் ஒருவனையும் அஃறிணையில் ஆண் ஒன்றையும் உணர்த்துதலும் ஒருமை சுட்டிய பெயர் உயர்திணையுள் ஒருவன் ஒருத்தி என்னும் இருபாலும் அஃறிணையில் ஒன்றன்பாலுமாகிய மூன்று பால்களை யுணர்த்துதலும், பன்மை சுட்டிய பெயர் இருதிணைப் பன்மையும் உணர்த்தி வருதலோடு அவற்றுள் ஒரு சாரன அஃறிணையொருமை அஃறிணைப் பன்மை உயர்திணையில் ஆண்மை பெண்மை ஆகிய இந்நான்கு பால்களையுணர்த்துதலும் உடையன என்றும் விரித்துரைப்பர் தொல்காப்பியர். பன்மை சுட்டிய பெயர் என்பதற்கு இருதிணையிலும் பன்மைப் பாலைச் சுட்டிவரும் பொதுப் பெயரென்பதே பொருள். இதுவே ஆசிரியர் கருத்தென்பது தாமென் கிளவி பன்மைக்குரித்தே’ (தொல்-சொல். 181) ‘ஏனைக்கிளவி பன்மைக்குரித்தே’ (தொல்-சொல். 187) எனவருஞ் சூத்திரங்களால் உயர்திணைப் பலர்பாற்கும் அஃறிணைப் பலவின் பாற்கும் பொதுவாகிய நிலையினைப் பன்மையென்ற சொல்லால் அவர்கூறுதலால் நன்கு புலனாம். பன்மை சுட்டிய பெயர்கள் தமக்குரிய இருதிணைப் பன்மையையுஞ் சுட்டி வழங்குதலே முறையாகவும் அவற்றுள் ஒருசாரன அஃறிணையில் ஒன்றன்பால் பலவின்பால் உயர்திணையில் ஆணொருமை பெண்ணொருமை ஆகிய இந்நான்கு பால்களையும் குறித்து வருதலுண்டென்பார், ‘பன்மை சுட்டிய எல்லாப் பெயரும் ஒன்றே பலவே ஒருவ ரென்னும் என்றிப் பாற்கும் ஓரன் னவ்வே’ எனச் சூத்திரஞ் செய்தார் தொல்காப்பியனார். இதன்கண் என்றிப்பாற்கும் என்ற உம்மையால் பன்மை சுட்டிய பெயர் தனக்குரிய இருதிணைப் பன்மையையும் ஏற்றுவருதலை ஆசிரியர் தழீஇக் கூறினாராதல்வேண்டும். இவ்வுண்மை ‘தன்பாலேற்றலை உம்மையால் தழீஇயினார்’ எனவரும் சிவஞானமுனிவர் உரைக் குறிப்பினால் இனிது புலனாதல் காண்க. இங்கே “பன்மை சுட்டிய பெயரென்பது வெண்குடைப் பெருவிறல் என்பதுபோல ஒருமையியைபு நீக்காது இயைபின்மை மாத்திரை நீக்கிப் பன்மை சுட்டும் என்பதுபட நின்றது” என்பர் சேனாவரையர். இச்சூத்திரத்திற் கூறியவாறு பன்மை சுட்டிய பெயர் உயர்திணைப் பன்மையையுணர்த்தா தொழிதலும் ஏனைபொருமைகளை யுணர்த்துதலும் பொருந்தா வென்பது கருதி இத்தொல்காப்பியச் சூத்திரக் கருத்தை மறுத்தல் என்னும் மதம்பட ‘அவற்றுள்’ ஒன்றேயிரு, திணைத் தன்பாலேற்கும்’ என நன்னூலார் சூத்திரஞ் செய்தாரென்பர் சங்கர நமச்சிவாயர், பன்மை சுட்டிய பெயரென்றது உயர்திணை ஆணொருமை பெண்ணொருமை அஃறிணையொருமை பன்மை ஆகிய பல பால்களையும் சுட்டி நிற்றலின் இனமுள்ள அடைமொழியே யென்பதும் எவ்வகையால் நோக்கினும் ஆசிரியர் தொல் காப்பியனார் கருத்து மறுக்கத்தக்கதன்றென்பதும் சிவஞான முனிவர் கருத்தாகும். ஒருவரென்னும் பெயர்ச்சொல் ஒருவன் ஒருத்தி யென்னும் இருபாற்கும் பொதுவாய் வழங்கும். அச்சொல் பொருளால் ஒருமையைக் குறிப்பதாயினும் பலர்பாற் சொல்லோடு தொடரும் இயல்புடையதாகும். பெண் மகன் என்னும் பெயர் பெண்பால் வினைகொண்டு முடியும். பெயர்களின் ஈற்றயலிலுள்ள விகுதி ஆகாரம் செய்யுளுள் ஓகாரமாகத் திரியும். செய்யுளிலே கருப் பொருள்களின்மேல் வழங்கும் இருதிணைப் பொதுப் பெயர்களுள் அவ்வந்நிலத்து மக்களால் அஃறிணைப் பொருளுக்கே யுரிமை யுடையனவாய் வழங்கும் பெயர்கள் உயர்திணையை யுணர்த்தா வென்பர் ஆசிரியர். - க. வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 204-208 ஐந்தாவது பெயரியல் 152. எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே. என்பது சூத்திரம். இவ்வோத்து என்ன பெயர்த்தோவெனின், பெயர்ச்சொல் உணர்த்துகின்றா ராகலின் இது பெயரியல் என்னும் பெயர்த் தாயிற்று. உரை: எல்லாச் சொல்லும் - பெயர்ச் சொல்லும் வினைச் சொல்லும் இடைச்சொல்லும் உரிச்சொல்லும் ஆகிய எல்லாச் சொல்லும், பொருள் குறித்தனவே - பொருள் குறியாது நில்லா, என்றவாறு (1) 153. பொருண்மை தெரிதலுஞ் சொன்மை தெரிதலுஞ் சொல்லி னாகு மென்மனார் புலவர். உரை: தன்னின் வேறாகிய பொருள் தெரியப்படுதலும், பொருள் அறியப்படாத சொல் தன்னையறியப்படுதலும் இரண்டும் சொல்லான் ஆம் என்று சொல்லுவர் புலவர், என்றவாறு (வரலாறு) சாத்தன்; வந்தான்; பண்டு காடுமன்; உறுகால் (நற்றிணை - 300) என்பனவற்றாற் பொருள் உணர்த்தப்பட்டவாறு. `நீயென்கிளவி’ (தொல். சொல். பெயரியல். 35) `செய்தெ னெச்சம்’ (தொல். சொல். வினையியல். 42) `தஞ்சக் கிளவி’ (தொல். சொல். இடையியல். 18) `கடியென் கிளவி” (தொல். சொல். உரியியல். 85) என்பனவற்றால் பொருள் உணரப்படாது, அச் சொற்றாமே உணரப்பட்டவாறு கண்டுகொள்க. (2) 154. தெரிபுவேறு நிலையலுங் குறிப்பிற் றோன்றலு மிருபாற் றென்ப பொருண்மை நிலையே. உரை: மேற் கூறப்பட்ட பொருண்மை தெரிதல், சொன் மாத்திரத்தால் விளங்கி நிற்றலும், சொன்மாத்திரத்தாற் றோன்றாது சொல்லொடு கூறிக் குறிப்பாற் றோன்றலும் என இரண்டு கூற்றையுடையது, என்றவாறு. (வரலாறு) அவன், இவன், உவன் - வந்தான், சென்றான் என்புழிப் பொருள்தெரிபு வேறுநின்றன. `ஒருவர் வந்தார்’ என்புழி, ஆண்பால் பெண்பால் என்பதூஉம், உண்ணாநின்றான் கற்கறித்து, `நன்கட்டாய்’ என்புழித் `தீங்கட்டாய்’ என்பதூஉம் குறிப்பிற்றோன்றின. பிறவும் அன்ன. (3) 155. சொல்லெனப் படுப பெயரே வினையென் றாயிரண் டென்ப வறிந்திசி னோரே. உரை: சொல்லாவன, பெயர்ச் சொல்லும் வினைச் சொல்லும் என இரண்டென்று சொல்லுவர் அறிவோர், என்றவாறு. பெயர்ச்சொற்கு இலக்கணம் வேற்றுமை ஓத்தினுட் கூறினார்; வினைச் சொற்கு இலக்கணம் வினையியலுட் கூறுப; பிறசொல்லும் உளவாயினும், இவற்றது சிறப்பு நோக்கிப் `பெயரே வினையென் றாயிரண்டு’ என்றார். (4) 156. இடைச்சொற் கிளவியு முரிச்சொற் கிளவியு மவற்றுவழி மருங்கிற் றோன்று மென்ப. உரை: இடைச்சொல்லும் உரிச்சொல்லும் பெயரையும் வினையையும் சார்ந்து தோன்றும் என்றவாறு சார்ந்து தோன்றும் எனவே, அவற்றது சிறப்பின்மை பெறப்படும். வழக்குப் பயிற்சி நோக்கி இடைச்சொல் முற்கூறினார். (5) 157. அவற்றுட் பெயரெனப் படுபவை தெரியுங் காலை யுயர்திணைக் குரிமையு மஃறிணைக் குரிமையு மாயிரு திணைக்குமோ ரன்ன உரிமையு மம்மூ வுருபின தோன்ற லாறே. உரை: மேற்கூறப்பட்ட நான்கனுள், பெயரென்று சொல்லப்படுவன, உயர்திணைக்கு உரிமையவாய் வருவனவும், அஃறிணைக்கு உரிமையவாய் வருவனவும், இரண்டு திணைக்கும் ஒத்த உரிமையவாய் வருவனவும் என மூன்று வேறு வாய் பாட்டான வகுத்துத் தோன்றும் நெறிக்கண், என்றவாறு (6) 158. இருதிணைப் பிரிந்த வைம்பாற் கிளவிக்கு முரியவை யுரிய பெயர்வயி னான. உரை: இருதிணைப் பிரிந்த ஐம்பாற் கிளவியாதற்குப் பெயருள் உரியன உரியவாம், என்றவாறு (வரலாறு) அவன், பெண்மகன், சாத்தன் என னகார ஈறு ஆடூஉ விற்கும் மகடூஉவிற்கும், அஃறிணை யாண்பாற்கும் உரித்தாய் வருதலானும், அவள், மக்கள், மகள் என ளகார ஈறு மகடூஉவிற்கும் பல்லோர்க்கும், அஃறிணைப் பெண்பாற்கும் உரித்தாய் வருதலானும், பெண்டாட்டி, நம்பி எனவும், ஆடூ, மகடூ எனவும் வரும் இகாரவீறும் ஊகாரவீறும் இருபாற்கும் உரியவாய் வருதலானும், வினைச்சொற்போல இன்ன ஈறு இன்ன பாற்கு உரித்து என்னப் பெயர்ச்சொல் ஈறுபற்றியுணர்த்த லாகாமையின், `உரியவை யுரிய’ என்றார். பிறவும் அன்ன. (7) 159. அவ்வழி அவனிவ னுவனென வரூஉம் பெயரு மவளிவ ளுவளென வரூஉம் பெயரு மவரிவ ருவரென வரூஉம் பெயரும் யான்யாம் நாமென வரூஉம் பெயரும் யாவன் யாவள் யாவ ரென்னு மாவயின் மூன்றோ டப்பதி னைந்தும் பாலறி வந்த வுயர்திணைப் பெயரே. உரை: மூவீற்றதாக மேற்சொல்லப்பட்ட பெயருள், அவன் என்பது முதலாக யாவர் என்பது ஈறாகச் சொல்லப்பட்ட பதினைந்தும் பால் விளங்கநிற்கும் உயர்திணைப்பெயர், என்றவாறு (8) 160. ஆண்மை யடுத்த மகனென் கிளவியும் பெண்மை யடுத்த மகளென் கிளவியும் பெண்மை யடுத்த விகர விறுதியும் நம்மூர்ந்து வரூஉ மிகரவை காரமு முறைமை சுட்டா மகனு மகளு மாந்தர் மக்க ளென்னும் பெயரு மாடூஉ மகடூஉ வாயிரு கிளவியுஞ் சுட்டுமுத லாகிய வன்னு மானு மவைமுத லாகிய பெண்டென் கிளவியு மொப்பொடு வரூஉங் கிளவியொடு தொகைஇ யப்பதி னைந்து மவற்றோ ரன்ன. உரை: இப்பெயர் பதினைந்தும் மேற் கூறப்பட்டன போலப் பாலறியவந்த உயர்திணைப் பெயராம், என்றவாறு ஆண்மகன் என்பதும் பெண்மகள் என்பதும், பெண்டாட்டி என்பதும் நம்பி என்பதும் நங்கை என்பதும், முறைமைப் பெயரல்லாத மகன் மகள் என்பனவும், மாந்தர் மக்கள் என்பனவும், ஆடூஉ மகடூஉ என்பனவும், சுட்டு முதலாகிய அவ்வாளன் இவ்வாளன் உவ்வாளன் என்பனவும், அம்மாட்டான் இம்மாட்டான் உம்மாட்டான் என்பனவும், சுட்டு முதலாகிய அப்பெண்டு இப்பெண்டு உப்பெண்டு என்பனவும், பொன்னன்னான், பொன்னன்னாள், பொன்னன் னார் என வரும் உவமக் கிளவியும் உயர்திணைப் பெயராம் என்றவாறு. (9) 161. எல்லாரு மென்னும் பெயர்நிலைக் கிளவியு மெல்லீரு மென்னும் பெயர்நிலைக் கிளவியும் பெண்மை யடுத்த மகனென் கிளவியு மன்ன வியல வென்மனார் புலவர். உரை: எல்லாரும் எனவும் எல்லீரும் எனவும் பெண்மகன் எனவும் வரும் மூன்றும் மேற்கூறப்பட்டன போலப் பாலறியவந்த உயர்திணைப் பெயராம், என்றவாறு புறத்துப்போய் விளையாடும் பேதைப் பருவத்துப் பெண் பாலாரைப் `பெண்மகன்’ என்று வழங்குப. பிறவும் அன்ன. (10) 162. நிலப்பெயர் குடிப்பெயர் குழுவின் பெயரே வினைப்பெயர் உடைப்பெயர் பண்புகொள் பெயரே பல்லோர்க் குறித்த முறைநிலைப் பெயரே பல்லோர்க் குறித்த சினைநிலைப் பெயரே பல்லோர்க் குறித்த திணைநிலைப் பெயரே கூடிவரு வழக்கி னாடியற் பெயரே யின்றிவ ரென்னு மெண்ணியற் பெயரோ டன்றி யனைத்து மவற்றியல் பினவே. உரை: நிலப்பெயர் முதலாகச் சொல்லப்பட்டனவும் மேலனபோலப் பாலறியவந்த உயர்திணைப் பெயராம், என்றவாறு நிலப்பெயர் - அருவாளன், சோழியன் என்பன. குடிப்பெயர் - மலையமான், சேரமான் என்பன. குழுவின் பெயர் - அவையத்தார், அத்திகோசத்தார் என்பன. வினைப்பெயர் - தச்சன், கொல்லன் என்பன. உடைப்பெயர்- அம்பர் கிழான், பேரூர் கிழான் என்பன; வெற்பன், சேர்ப்பன் என்பனவும் அவை. பண்புகொள் பெயர் - கரியான், செய்யான் என்பன. பல்லோர்க் குறித்த முறைநிலைப் பெயர் - தந்தையர், தாயர் என்பன. பல்லோர்க் குறித்த சினைநிலைப்பெயர் - பெருங்காலர், பெருந்தோளர் என்பன. பல்லோர்க் குறித்த திணைநிலைப் பெயர் - பார்ப்பார், அரசர், வணிகர், வேளாளர், ஆயர், வேட்டுவர் என்பன. “பல்லோர்க் குறித்த’ என்று விசேடித்தலான், இம் மூவகைப் பெயருள் ஒருமைப் பெயர் இரண்டு திணைக்கும் உரியவாம். கூடிவரு வழக்கின் ஆடியற் பெயர் - பட்டி புத்திரர், சங்கிராமத்தார் என்பன. இன்றிவர் என்னும் எண்ணியற் பெயர் - ஒருவர், இருவர், மூவர், முப்பத்து மூவர் என்பன. ‘இன்றிவர்’ என்பது, ‘இத்துணையர்’ என்னும் பொருட்டுப் போலும். (11) 163. அன்ன பிறவும் உயர்திணை மருங்கிற் பன்மையும் ஒருமையும் பாலறி வந்த வென்ன பெயரு மத்துணை யவ்வே. உரை: மேற் சொல்லப்பட்ட பெயர் போல்வன பிறவும் உயர்திணைக்கட் பன்மையும் ஒருமையுமாகிய பாலறியவந்த எல்லாப் பெயரும் உயர்திணைப் பெயராம், என்றவாறு அன்ன பிறவும் ஆவன: ஏனாதி, காவிதி, எட்டி, வாயிலான், பூயிலான், வண்ணத்தான், சுண்ணத்தான், பிறன், பிறள், பிறர், மற்றையான், மற்றையாள், மற்றையார் என்னுந் தொடக்கத்தன (12) 164. அதுவிது வுதுவென வரூஉம் பெயரும் அவைமுத லாகிய வாய்தப் பெயரு மவையிவை யுவையென வரூஉம் பெயரு மவைமுத லாகிய வகரப் பெயரும் யாதுயா யாவை யென்னும் பெயரு மாவயின் மூன்றோ டப்பதி னைந்தும் பாலறி வந்த வஃறிணைப் பெயரே. உரை: நிறுத்த முறையானே உயர்திணைப் பெயர் உணர்த்தி, அஃறிணைப் பெயர் உணர்த்துகின்றார். அது, இது, உது என வருஞ் சுட்டுமுதற்பெயரும், அச் சுட்டுப்பெயர்க்கு முதலாகிய சுட்டு முதலாக ஆய்தத்தொடு கூடி அஃது, இஃது, உஃது என வரும் பெயரும், அவை, இவை, உவை என வரும் பெயரும், சுட்டு முதலாக அவ், இவ், உவ் என வரும் வகர ஈற்றுப் பெயரும், யாது, யா, யாவை என்னும் வினாப்பெயரும் என அப் பதினைந்தும் பால் விளங்க வரும் அஃறிணைப் பெயராம் என்றவாறு. சுட்டு முதலாகிய ஆய்தப் பெயரும், அவை முதலாகிய வகர ஈற்றுப்பெயரும் அவையல்லது இன்மையின் இவ்வாறு கூறினார். (13) 165. பல்ல பலசில வென்னும் பெயரு முள்ள வில்ல வென்னும் பெயரும் வினைப்பெயர்க் கிளவியும் பண்புகொள் பெயரு மினைத்தெனக் கிளக்கு மெண்ணுக்குறிப் பெயரு மொப்பி னாகிய பெயர்நிலை யுளப்பட வப்பா லொன்பது மவற்றோ ரன்ன. உரை: பல்ல என்பது முதலாகக் கூறப்பட்ட ஒன்பது பெயரும் மேற்கூறிய அஃறிணைப் பெயர்போலப் பாலுணர்த்தி நிற்கும், என்றவாறு பல்ல, பல, சில, உள்ள, இல்ல என்னும் ஐந்தும் தம்மை யுணர்த்தி நின்றன. வினைப்பெயர்க் கிளவி யாவது: வருவ, செல்வ என்பன. பண்புகொள் பெயர்: கரியது, கரிய என்பன. எண்ணுக்குறிப் பெயர்: ஒன்று, பத்து என்பன. ஒப்பினாகிய பெயர்: பொன்னன்னது, பொன்னன்ன என்பன. (14) 166. கள்ளொடு சிவணு மவ்வியற் பெயரே கொள்வழி யுடைய பலவறி சொற்கே. உரை: கள் என்னும் ஈற்றோடு பொருந்தும் அஃறிணை இயற்பெயராவன: ஆ, நாய், குதிரை, கழுதை, தெங்கு, பலா, மலை, கடல் என்னுந் தொடக்கத்துச் சாதிப்பெயர் ஒருமைக்கும் பன்மைக்கும் பொதுவாய் நிற்றலின், இயற்பெயர் என்றார். இவை, கள் என்னும் ஈற்றவாய் ஆக்கள், குதிரைகள் என நின்றவழிப் பன்மை விளக்கலின் பலவறி சொல்லாயினவாறு கண்டுகொள்க. (15) 167. அன்ன பிறவு மஃறிணை மருங்கிற் பன்மையு மொருமையும் பாலறி வந்த வென்ன பெயரு மத்திணை யவ்வே. உரை: மேற்கூறப்பட்ட பெயர் போல்வன பிறவும் அஃறிணைக்கட் பன்மையும் ஒருமையும் ஆகிய பால் விளங்க வந்த எல்லாப் பெயரும் அத்திணைக்கு உரிய, என்றவாறு `அன்ன பிறவும்’ என்றதனாற் பெறுவன பிறிது, பிற, மற்றையது, மற்றையவை, பல்லவை, சில்லவை, உள்ளது, இல்லது, உள்ளன, இல்லன என்னுந் தொடக்கத்தன. (16) 168. தெரிநிலை யுடைய வஃறிணை யியற்பெய ரொருமையும் பன்மையும் வினையொடு வரினே. உரை: கள்ளொடு சிவணாத அஃறிணை யியற்பெயர் ஒருமையும் பன்மையும் விளங்குநிலையுடைய, அதற்கேற்ற வினையொடு தொடர்ந்த வழி என்றவாறு ஆ வந்தது - ஆ வந்தன; குதிரை வந்தது - குதிரை வந்தன என, ஏற்ற வினையாற் பால் விளங்கியவாறு கண்டுகொள்க. (17) 169. இருதிணைச் சொற்குமோ ரன்ன வுரிமையிற் றிரிபுவேறு படூஉ மெல்லாப் பெயரு நினையுங் காலைத் தத்த மரபின் வினையோ டல்லது பாறெரி பிலவே. உரை: இருதிணைச் சொல்லாதற்கும் ஒத்த உரிமைய வாகலின் உயர்திணைக்கட் சென்றுழி உயர்திணைப் பெயராயும், அஃறிணைக்கட் சென்றுழி அஃறிணைப் பெயராயும் வேறுபடு பெயரெல்லாம் ஆராயுங்கால் தத்தம் மரபின் வினையொடு இயைந்தல்லது திணை விளங்கி நில்லா என்றவாறு (வரலாறு) சாத்தன் வந்தான், சாத்தன் வந்தது; முடவன் வந்தான், முடவன் வந்தது எனக்கொள்க. (18) 170. நிகழூஉ நின்ற பால்வரை கிளவியி னுயர்திணை யொருமை தோன்றலு முரித்தே யன்ன மரபின் வினைவயி னான. உரை: நிகழ்காலம் பற்றிவரும் பால்வரை கிளவியால் உயர்திணை ஒருமைப்பால் தோன்றுதலும் உரித்து, அவ் வொருமைப்பாற் தோன்றுதற்கேற்ற வினையிடத்து என்றவாறு ‘பால்வரை கிளவி’ என்பது, செய்யும் என்னும் முற்றுச் சொல்லை. சாத்தன் யாழ் எழூஉம், சாத்தி சாந்து அரைக்கும் என்றவழி, யாழ் எழுதலும், சாந்து அரைத்தலும் ஆகிய அஃறிணைக்கு ஏலாது, ஒருவற்கும் ஒருத்திக்கும் ஏற்றலின், உயர்திணை ஒருமைப்பால் விளங்கியவாறு கண்டுகொள்க. `நிகழூஉநின்ற’ என்பது, நிகழா நின்ற என்றவாறு. (19) 171. இயற்பெயர் சினைப்பெயர் சினைமுதற் பெயரே முறைப்பெயர்க் கிளவி தாமே தானே யெல்லா நீயிர் நீயெனக் கிளந்து சொல்லிய அல்ல பிறவு மாஅங் கன்னவை தோன்றி னவற்றொடுங் கொளலே. இச்சூத்திரம், விரவுப் பெயர் பால்தெரிய நிற்குமாறு உணர்த்தி, இனி, அவைதம்மை யுணர்த்துவான் எடுத்துக் கொண்டார். உரை: இயற்பெயர் முதலாக நீ என்பது ஈறாக எடுத்துச் சொல்லப்பட்ட வல்லாத அன்னபிறவும் ஆண்டுவருமாயிற் சொல்லப்பட்டவற்றொடு கூட்டுக, என்றவாறு (வரலாறு) இயற்பெய ராவன - சாத்தன், கொற்றன் என்னும் இரண்டு பெயர். சினைப்பெய ராவன - பெருங்காலன், முடவன் என்பன. சினைமுதற்பெய ராவன - சீத்தலைச் சாத்தன், கொடும் புறமருதி எனச் சினைப்பெயரொடு தொடர்ந்து வரும் முதற்பெயர். முறைப்பெய ராவன - தந்தை, தாய் என முறை பற்றி முறையுடைய பொருண்மேல் வருவன. அல்லன ஐந்தும் தம்மை உணர்த்தி நின்றன வாதலின் தாம் என்பது முதலாகிய சொல்லேயாம். அன்ன பிறவும் என்பதனால் மக, குழவி என்பனவுங் கொள்க. `குழவியு மகவு வாயிரண் டல்லன கிழவ வல்ல மக்கட் கண்ணே’ (தொல். மரபியல் 23) என்று உயர்திணைக்கும் எய்துவித்தார். (20) 172. அவற்றுள் நான்கே யியற்பெயர் நான்கே சினைப்பெயர் நான்கென மொழிமனார் சினைமுதற் பெயரே முறைப்பெயர்க் கிளவி யிரண்டா கும்மே யேனைப் பெயரே தத்த மரபின. உரை: மேற்கூறிய விரவுப்பெயருள் இயற்பெயரும் சினைப் பெயரும் சினைமுதற் பெயரும் ஒரோவொன்று நான்காம்; முறைப் பெயர் இரண்டாம்; ஒழிந்த ஐந்து பெயரும் தத்தம் இலக்கணத்தனவாம், என்றவாறு. தத்தம் இலக்கணம் என்றது, அவை ஓரொன்றாகி நிற்கும் என்றவாறாம். தனிப்பெயர் ஐந்தும் விரவுப்பெயர் பதினான்கும் ஆக விரவுப்பெயர் பத்தொன்பது என்றவாறாம். (21) 173. அவைதாம் பெண்மை யியற்பெய ராண்மை யியற்பெயர் பன்மை யியற்பெய ரொருமையியற் பெயரென் றந்நான் கென்ப வியற்பெயர் நிலையே. (22) 174. பெண்மைச் சினைப்பெய ராண்மைச் சினைப்பெயர் பன்மைச் சினைப்பெய ரொருமைச்சினைப் பெயரென் றந்நான் கென்ப சினைப்பெயர் நிலையே. (23) 175. பெண்மை சுட்டிய சினைமுதற் பெயரே யாண்மை சுட்டிய சினைமுதற் பெயரே பன்மை சுட்டிய சினைமுதற் பெயரே யொருமை சுட்டிய சினைமுதற் பெயரென் றந்நான் கென்ப சினைமுதற் பெயரே. (24) 176. பெண்மை முறைப்பெய ராண்மைமுறைப் பெயரென் றாயிரண் டென்ப முறைப்பெயர் நிலையே. இவை இயற்பெயர் முதலாகிய நான்கன் விரியாகிய பதினான்கும் இது என உணர்த்தியவாறு. இவற்றுக்கு உதாரணம் முன்னர்க் காட்டுதும். (25) 177. பெண்மை சுட்டிய வெல்லாப் பெயரு மொன்றற்கு மொருத்திக்கு மொன்றிய நிலையே. மேற் கூறிய பதினான்கு பெயரும் இருதிணையும் பற்றிப் பால் உணர்த்துமாறு உணர்த்திய எடுத்துக் கொண்டார். உரை: அவை பெண்மைப்பெயர் நான்கும், ஆண்மைப் பெயர் நான்கும், பன்மைப்பெயர் மூன்றும் ஒருமைப்பெயர் மூன்றும் ஆம். பெண்மைபற்றி வரும் நான்கு பெயரும், அஃறிணைப் பெண் ஒன்றற்கும் உயர்திணை ஒருத்திக்கும் உரிய என்றவாறு. அந் நான்கும் ஆவன: பெண்மை இயற்பெயரும், பெண்மைச் சினைப்பெயரும், பெண்மைச் சினைமுதற்பெயரும், பெண்மை முறைப்பெயரும் என்பன. (வரலாறு) சாத்தி வந்தது, சாத்தி வந்தாள் எனவும்; முடத்தி வந்தது, முடத்தி வந்தாள் எனவும்; முடக்கொற்றி வந்தது, முடக்கொற்றி வந்தாள் எனவும்; தாய் வந்தது, தாய் வந்தாள் எனவும் அவ்வம் முறையானே அஃறிணைப் பெண் ஒன்றற்கும், உயர்திணை ஒருத்திக்கும் வந்தவாறு கண்டு கொள்க. பிறவும் அன்ன. (26) 178. ஆண்மை சுட்டிய வெல்லாப் பெயரு மொன்றற்கு மொருவற்கு மொன்றிய நிலையே. இதுவும் மேற் சூத்திரத்தோடு இயைபு. (வரலாறு) சாத்தன் வந்தது, சாத்தன் வந்தான் எனவும்; முடவன் வந்தது, முடவன் வந்தான் எனவும்; முடக்கொற்றன் வந்தது, முடக் கொற்றன் வந்தான் எனவும்; தந்தை வந்தது, தந்தை வந்தான் எனவும் அவை முறையானே அஃறிணை ஒன்றற்கும், உயர்திணை ஆண்பாற்கும் உரியவாய் வந்தவாறு கண்டுகொள்க. பிறவும் அன்ன. (27) 179. பன்மை சுட்டிய வெல்லாப் பெயரு மொன்றே பலவே யொருவ ரென்னு மென்றிப் பாற்கு மோரன் னவ்வே. உரை: பன்மை சுட்டிய மூன்று பெயரும், அஃறிணை ஒருமையும், அத்திணைப் பன்மையும், உயர்திணை ஒருமையும் எனச் சொல்லப்பட்ட அம்மூன்று பாற்கும் உரிய, என்றவாறு அவையாவன: பன்மை யியற்பெயர், பன்மைச் சினைப்பெயர், பன்மைச் சினைமுதற் பெயர் என்பனவாம். (வரலாறு) யானைவந்தது - யானை வந்தன, யானை வந்தான் - யானை வந்தாள் எனவும்; நெடுங்கழுத்தல் வந்தது - நெடுங் கழுத்தல் வந்தன, நெடுங்கழுத்தல் வந்தான் - நெடுங்கழுத்தல் வந்தாள் எனவும்; பெருங்கால் யானை வந்தது - பெருங்கால் யானை வந்தன, பெருங்கால் யானை வந்தான், பெருங்கால் யானை வந்தாள் எனவும் முறையானே அஃறிணை ஒருமைக்கும், அத்திணைப் பன்மைக்கும், உயர்திணை ஒருமைக்கும் உரியவாய் வந்தவாறு கண்டுகொள்க. (28) 180. ஒருமை சுட்டிய வெல்லாப் பெயரு மொன்றற்கு மொருவற்கு மொன்றிய நிலையே. உரை: ஒருமை சுட்டி வரும் மூன்று பெயரும் அஃறிணை ஒருமைக்கும், உயர்திணை ஒருமைக்கும் உரிய, என்றவாறு அம் மூன்றுமாவன: ஒருமையியற்பெயர், ஒருமைச் சினைப் பெயர், ஒருமைச் சினைமுதற் பெயருமாம். (வரலாறு) கோதை வந்தது, கோதை வந்தான், கோதை வந்தாள் எனவும்; செவியிலி வந்தது, செவியிலி வந்தான், செவியிலி வந்தாள் எனவும்; கொடும்புற மருதி வந்தது, கொடும்புற மருதி வந்தான், கொடும்புற மருதி வந்தாள் எனவும்; முறையே அஃறிணை ஒருமைக்கும், உயர்திணை ஒருமைக்கும் உரியவாய் வந்தவாறு கண்டுகொள்க (29) 181. தாமென் கிளவி பன்மைக் குரித்தே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், `தத்தம் மரபின’ (தொல். பெயர். 21) எனப்பட்ட பெயர் இருபாற்கும் உரியவாய் வருமாறு உணர்த்துதல் நுதலிற்று. உரை: தாம் என்னும் பெயர் இரு திணைக்கும் பன்மைப் பாற்கு உரித்து, என்றவாறு தாம் வந்தார், தாம் வந்தன என வரும். (30) 182. தானென் கிளவி யொருமைக் குரித்தே. உரை: தான் என்னும் பெயர் இருதிணைக்கண்ணும் ஒருமைப் பாற்கு உரித்து, என்றவாறு. (வரலாறு) தான் வந்தான், தான் வந்தாள், தான் வந்தது என வரும். (31) 183. எல்லா மென்னும் பெயர்நிலைக் கிளவி பல்வழி நுதலிய நிலைத்தா கும்மே. உரை: எல்லாம் என்னும் பெயர் இரண்டு திணைக் கண்ணும் பன்மை குறித்து வரும், என்றவாறு வழி என்பது இடம். (வரலாறு) எல்லாம் வந்தேம், எல்லாம் வந்தீர், எல்லாம் வந்தார், எல்லாம் வந்தன என வரும். (32) 184. தன்னு ளுறுத்த பன்மைக் கல்ல துயர்திணை மருங்கி னாக்க மில்லை. உரை: எல்லாம் என்னும் சொல் உயர்திணைக்கு ஆங்கால் தன்மைப்பன்மைக்கல்லது முன்னிலைப் பன்மைக்கும் படர்க்கைப் பன்மைக்கும் ஆகாது, என்றவாறு `ஆக்கமில்லை’ எனவே சிறுபான்மை வரப்பெறும். (33) 185. நீயிர் நீயென வரூஉங் கிளவி பாறெரி பிலவே யுடன்மொழிப் பொருள. உரை: நீயிர் நீ என்னும் இரண்டு பெயர்ச்சொல்லும் திணைப் பகுதி தெரிய நில்லா; இரு திணையும் உடன்றோன்றும் பொருள, என்றவாறு நீயிர் வந்தீர், நீ வந்தாய் என இரு திணைக்கும் பொதுவாய் நின்றவாறு கண்டுகொள்க. (34) 186. அவற்றுள் நீயென் கிளவி யொருமைக் குரித்தே. உரை: மேற்சொல்லப்பட்ட இரண்டு பெயருள் நீ என்னும் பெயர் ஒருமைக்கு உரித்து, என்றவாறு ஒருமையாவது: ஒருவன், ஒருத்தி, ஒன்று என்பனவற்றிற் கெல்லாம் பொதுவாகிய ஒருமை. நீ வந்தாய் எனக் கண்டு கொள்க. (35) 187. ஏனைக் கிளவி பன்மைக் குரித்தே. உரை: நீயிர் என்னும் பெயர் பன்மைக்கு உரித்து, என்றவாறு பன்மையாவது: பல்லோர்க்கும் பலவற்றிற்கும் பொது வாகிய பன்மை. நீயிர் வந்தீர் எனக் கண்டு கொள்க. (36) 188. ஒருவ ரென்னும் பெயர்நிலைக் கிளவி யிருபாற்கு முரித்தே தெரியுங் காலை. உரை: ஒருவர் என்னும் பெயர்ச்சொல் உயர்திணைப் பாலுள் ஒருபால் விளக்கா; ஒருவன், ஒருத்தி என்னும் இருபாற்கும் பொதுவாய் நிற்கும், என்றவாறு (வரலாறு) ஒருவர் வந்தார் என்பது, பொதுவாய் நின்றவாறு கண்டு கொள்க. இருபாற்கும் உரித்து என்னும் உம்மை முற்றும்மை. (37) 189. தன்மை சுட்டிற் பன்மைக் கேற்கும். உரை: ஒருவர் என்னும் பெயரது இயல்பு கருதின் அஃது ஒருமைப் பெயராயினும் பல்லோரறியுஞ் சொல்லொடு தொடர் தற்கு ஏற்கும், என்றவாறு (வரலாறு) ஒருவர் வந்தார், ஒருவர் அவர் என வரும். (38) 190. இன்ன பெயரே யிவையெனல் வேண்டின் முன்னஞ் சேர்த்தி முறையி னுணர்தல். உரை: நீயிர் நீ ஒருவர் என்பனவற்றை இன்னபாற் பெயரென்று அறியலுறின் சொல்லுவான் குறிப்பொடுங் கூட்டி முறையால் உணர்க, என்றவாறு (வரலாறு) ஒரு சாத்தன், ஒருவனானும் ஒருத்தியானும் பலரானும் ஒன்றானும் பலவானும் தன்னுழைச் சென்றவழி, `நீ வந்தாய், நீயிர் வந்தீர்’ என்னுமன்றே; ஆண்டு அது கேட்டான், இவன் இன்னபால் கருதிக் கூறினான் என்பது உணரும். இனி, ‘ஒருவ ரொருவரைச் சார்ந்தொழுக லாற்றி’ (நாலடி. 309) என்பது சொல்லுவான் ஆடூஉ ஒருமை குறித்தான் என்பது விளங்கும். ஏகாரம் தேற்றேகாரம். ‘முறையி னுணர்தல்’ என்பது பாதுகாவல். (39) 191. மகடூஉ மருங்கிற் பாறிரி கிளவி மகடூஉ வியற்கை தொழில்வயி னான. என் நுதலியவாறோ வெனின், இனி ஒருசார் உயர்திணைப் பெயர்க்கும் விரவுப் பெயர்க்கும் எஞ்சி நின்ற இலக்கணங் கூறுகின்றார். உரை: மகடூஉப் பொருண்மைக்கண் பால்திரிந்து வரும் பெண்மகன் என்னும் பெயர் வினைகொள்ளுமிடத்து மகடூஉவிற் குரிய வினைகொள்ளும், என்றவாறு (வரலாறு) பெண்மகன் வந்தாள் என வரும். பொருண்மைபற்றி மகடூஉ வினை கொள்ளுமோ, ஈறுபற்றி ஆடூஉ வினை கொள்ளுமோ என்று ஐயுற்றார்க்கு ஐயம் அகற்றியது. (40) 192. ஆவோ வாகும் பெயருமா ருளவே யாயிட னறிதல் செய்யு ளுள்ளே. உரை: ஆகாரம் ஓகாரமாய்த் திரியும் பெயருமுள, அத்திரியும் இடமறிக செய்யுளுள்ளே, என்றவாறு வரலாறு: ‘வில்லோன் காலன கழலே தொடியோண் மெல்லடி மேலவுஞ் சிலம்பே நல்லோர் யார்கொல் லளியர் தாமே’ (குறுந்தொகை. 7) என வரும். (41) 193. இறைச்சிப் பொருள்வயிற் செய்யுளுட் கிளக்கு மியற்பெயர்க் கிளவி யுயர்திணை சுட்டா நிலத்துவழி மருங்கிற் றோன்ற லான. உரை: செய்யுளுள் கருப்பொருண்மேற் கிளக்கப்படும் இரு திணைக்குமுரிய விரவுப்பெயர்கள், உயர்திணை யுணர்த்தா; அவ்வந் நிலத்துவழி அஃறிணைப் பொருளாய் வழங்கப்பட்டு வருதலான், என்றவாறு வரலாறு: ‘கடுவன் முதுமகன் கல்லா மூவற்கு வதுவை வந்த வன்பறழ்க் குமரி’ என்புழிக் கடுவன் முதுமகன் குமரி என, அஃறிணைப் பொருளவாயல்லது நிலத்துவழிமருங்கிற்றோன்றாமையின் உயர்திணை சுட்டாதவாறு கண்டுகொள்க. நிலமாவன, முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என்பன. (42) 194. திணையொடு பழகிய பெயரலங் கடையே. உரை: கருப்பொருள் உணர்த்தும் விரவுப்பெயர் உயர் திணை சுட்டாது, அஃறிணை சுட்டுவது அவ்வத் திணைக்குரிய வாய் விளங்கப்பட்டு வரும் பெயரல்லாத விடத்து, என்றவாறு எனவே, திணைக்குரியவாய் வழங்கப்பட்டு வரும் பெயர் இரு திணையுஞ் சுட்டி வரும் என்பதாம். (வரலாறு) காளை விடலை என்பன உயர்திணையினும் அஃறிணையினும் வருமாதலின் விரவுப்பெயராயின. பிறவுமன்ன. (43) ஐந்தாவது பெயரியல் முற்றிற்று. வினையியல் வினையென்பது பலபொருளொருசொல்லாய்த் தொழிற் பண்பினையும் அதன் காரியமாகிய வினைநிகழ்ச்சியையும் உணர்த்தும், தொழிற்பண்பை யுணர்த்துஞ் சொல்லை உரிச்சொல்லெனவும் அதன் காரியமாகிய வினைநிகழ்ச்சியை யுணர்த்துஞ்சொல்லை வினைச்சொல்லெனவும் கூறுதல் மரபு. வினைச்சொல்லாவது வேற்றுமையுருபோலாது வெளிப் படையாகவும் குறிப்பாகவும் காலத்தோடு விளங்குவதாகும். இறந்தகாலம், நிகழ்காலம் எதிர்காலம் எனக் காலம் மூன்றாம். தொழில் முற்றுப்பெற்றநிலை இறந்தகாலம். தொழில் தொடங்கி முடிவுபெறாது தொடர்ந்து நிகழும்நிலை நிகழ்காலம். தொழிலே தொடங்கப்பெறாதநிலை எதிர்காலம். இம்முக்காலங்களுள் ஒன்றை வெளிப்படையாகக் காட்டு வனவற்றை வினையென்றும் இவற்றைக் குறிப்பாக உணர்த்துவன வற்றைக் குறிப்பு என்றும் கூறுவர். தொல்காப்பியனார். பிற் காலத்தார் இவற்றை முறையே தெரிநிலை வினையென்றும் குறிப்பு வினையென்றும் வழங்குவர். இவ்வினைச்சொற்கள் முற்று, வினையெச்சம், பெயரெச்சம் என மூவகைய. பாலுணர்த்தும் ஈறுகளாகிய விகுதிகளோடுகூடி நிறைந்து நிற்பன வினைமுற்றுக்களாம். ஐம்பாலவாகிய வினைமுதலைத் தரும் விகுதியுறுப்புக் குறைந்த குறைச்சொற்களாய் மற்றொரு வினைச்சொல்லோடல்லது முற்றுப்பெறாது நிற்பன வினையெச்சங்களாம். பாலுணர்த்தும் விகுதியின்றிக் குறைத்த குறைச்சொற்களாய்ப் பெயரை எச்சமாகவுடைய வினைச்சொற்கள் பெயரெச்சம் எனப்படும். வினைச்சொற்களின் இலக்கண முணர்த்தினமையால் இது வினையியலென்னும் பெயர்த்தாயிற்று. இவ்வியலிலுள்ள சூத்திரங்களை 49-ஆக இளம்பூரணரும் 51-ஆகச் சேனாவரையரும் நச்சினார்க்கினியரும் 54-ஆகத் தெய்வச்சிலையாரும் பகுத்து உரை கூறியுள்ளார்கள். எச்சவியலிலுள்ள ‘இறப்பின் நிகழ்வின்’, ‘எவ்வயின் வினையும்’, ‘அவைதாம் தத்தங்கிளவி’ எனவரும் மூன்று சூத்திரங்களையும் வினையிலக்கணமாதல் பற்றி இவ்வியலின் இறுதியில், தெய்வச்சிலையார் சேர்த்துரைத்தமையால் அவர் கருத்துப்படி இவ்வியலின் சூத்திரங்கள் 54-ஆயின. வினைச்சொற்களெல்லா வற்றையும் உயர்திணைக்குரியன, அஃறிணைக்குரியன, இரு திணைக்குமுரியன என மூன்று வகையாக இவ்வியலில் ஆசிரியர் பகுத்துக் கூறியுள்ளார். உயர்திணைக்குரியன உயர்திணைவினை தன்மைவினை படர்க்கைவினை என இடத்தால் இருவகைத்து. அவற்றுள் தன்மைவினை பன்மைத் தன்மையும் தனித்தன்மையும் என இருவகைப்படும். அம், ஆம், எம், ஏம், கும், டும், தும், றும் என்னும் இவ்வெட்டு விகுதிகளையும் இறுதியாகவுடைய வினைச்சொற்கள் பன்மையுணர்த்துந் தன்மைச் சொற்களாம். தன்மைக் குறித்துப் பேசுதற்கேற்ற மொழிவளம் உயர்திணை மாந்தர்க்கே யுரியதாகலின் தன்மைச் சொற்கள்யாவும் உயர்திணைச் சொல்லேயாம். ஒருவனோ ஒருத்தியோ தன்னைக் குறித்துப் பேசுங்கால் தனக்கு ஒருமையல்லது பன்மை சொல்லுதற்கிடமில்லை. எனினும் தனக்கு முன்னும் அயலிலும் உள்ள பிறரையும் தன்னோடு உளப்படுத்துக் கூறும் வழக்கமுண் மையால் தன்மைப் பன்மையும் கொள்ள வேண்டியதாயிற்று. ஆகவே பன்மைத் தன்மை யென்றது உளப்பாட்டுத் தன்மையேயாம். தன்னொடு முன்னின்றாரை யுளப்படுத்தலும் படர்க்கையாரை யுளப்படுத்தலும் அவ்விரு திறத்தாரையும் ஒருங்கு உளப்படுத்தலும் என உளப்படுத்தல் மூவகைப்படுமெனவும், அம், ஆம் என்ற விகுதிகள் முன்னிலையாரையும் தமராயவழிப் படர்க்கையாரையும், எம், ஏம் என்பன படர்க்கையாரையும், கும், டும், தும், றும் என்பன அவ்விருதிறத்தாரையும் உளப்படுத்துமெனவும், அம், ஆம், எம், ஏம் என்பன மூன்று காலமும் பற்றி வருதலும் கும், டும், தும், றும் என்பன எதிர்காலம்பற்றி வருதலும் உடைய வெனவும் கூறுவர் சேனாவரையர். கு, டு, து, று என், ஏன், அல் என்பவற்றை இறதியாகவுடைய ஏழும் ஒருமையுணர்த்தும் தனித்தன்மை (தன்மையொருமை) வினைச்சொற்களாம். அவற்றுள் செய்கு என்னும் வாய்பாட்டு வினைமுற்று வினைகொண்டு முடியுமாயினும் முற்றுச் சொல்லாகிய இலக்கணத்திற் சிறிதும் மாறுபாடது. அன், ஆன், அள், ஆள் என்னும் ஈற்றையுடைய நால்வகைச் சொற்களும் உயர்திணை யொருமை யுணர்த்தும் படர்க்கை வினைச்சொற்களாம். அர், ஆர், ப என்னும் ஈற்றையுடைய மூவகைச் சொற்களும் பலர்பாற் படர்க்கையாம். மார் என்பதும் உயர்திணைப் பலர்பாற் படர்க்கை வினைக்கீறாதலையுடைத்து. அது முடியுங்கால் பெயர்கொள்ளாது வினைகொண்டு முடியும். இவ்வாறு அம் விகுதி முதலாக மார் விகுதி யீறாகச் சொல்லப்பட்ட இருபத்துமூன்றீற்று வினைச்சொற்களும் உயர்திணைக்கே யுரியனவாம். மேற்சொல்லப்பட்டவற்றுள் பன்மையுணர்த்தும் தன்மைச் சொல் திணைவிரவி யெண்ணுங்கால் அஃறிணையை யுளப்படுத்துத்திரிதலும் உண்டு. யார் என்னும் வினாவினைக் குறிப்பு உயர்திணை மூன்று பாலுக்கும் ஒப்பவுரியதாகும். பாலுணர்த்தும் ஈறுகளாகிய ன, ள, ர, என்னும் இறுதியையுடைய ஆகாரமும் முன்னிலையில் வரும் ஆய் என்பதன் ஆகாரமும் செய்யுளுள் ஓகாரமாய்த் திரியும். ஆறாம் வேற்றுமைக்குரிய உடைமைப்பொருள், ஏழாம் வேற்றுமைக்குரிய நிலப்பொருள், ஒப்புப்பொருள், பண்பு என்னுமிவற்றை நிலைக்களமாகக் கொண்டும் அன்மை, இன்மை, உண்மை, வன்மை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டும் வினைக்குறிப்புத் தோன்றுமென்பர் ஆசிரியர் குறிப்பாற் கால முணர்த்தலின் இது குறிப்பெனப்பட்டது. முன்னர்க் கூறிய இருபத்துமூன்றீற்று வினைச்சொற்களுக்கீறாகிய எழுத்துக்களையே (விகுதிகளையே) இவ்வினைக்குறிப்புச் சொற்களும் பெற்றுப் பாலுணர்த்துவனவாம். அஃறிணைக்குரியன ஆ, ஆ, வ என்னும் இறுதியையுடைய மூவகை வினைச் சொற்களும் அஃறிணைப்பன்மைப் படர்க்கையாம். து, று, டு என்பவற்றை யிறுதியாக உடையன அஃறிணை ஒருமைப்பாற்குரிய வினைச்சொற்களாம். இங்கெடுத்துக் காட்டிய அறுவகையீற்றுச் சொற்களே அஃறிணைக்குரிய வினைச்சொற்களாம். வினாப் பொருளையுடைய எவன் என்னும் வினைக் குறிப்புச்சொல் அஃறிணையிருபாலுக்கும் ஒப்பவுரியதாகும். இன்று, இல உடைய, அன்று, உடைத்து, அல்ல, உள என்பனவும் பண்புகொள் கிளவியும் பண்பினாகிய சினைமுதற் கிளவியும் ஒப்புப்பற்றி வருஞ்சொல்லும் ஆகிய இப்பத்தும் அஃறிணை வினைக்குறிப்புச் சொற்களாம். மேல் அஃறிணை வினைச்சொற்கீறாய் நின்று பாலுணர்த்து மெழுத்துக்களே அஃறிணை வினைக் குறிப்புச் சொற்கண்ணும் ஈறாய் நின்று பால் விளக்குவன. இருதிணைக்குமுரியன முன்னிலை வினைமுற்று, வியங்கோள் முற்று, வினையெச்சம், இன்மையையுணர்த்தும் இல்லை, இல் என்பன. வேறு என்னும் சொல், செய்ம்மன் என்னும் வாய்பாட்டு முற்று, முற்றும் பெயரெச்சமுமாகிய செய்யுமென்னும் வாய்பாட்டு வினைச்சொல், செய்த என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம் ஆகிய எண்வகை வினைச்சொற்களும் இருதிணைச் சொல்லாதற்கும் ஒத்த உரிமை யுடையனவாம். மேற்கூறப்பட்ட விரவு வினைகளுள் இ, ஐ, ஆய் என்னும் இறுதியையுடைய முன்னிலை வினைச்சொற்கள் ஒருவன், ஒருத்தி, ஒன்று என்னும் இருதிணை முக்கூற்றெருமைக்கும் ஒப்பவுரியன. இர், ஈர், மின் என்னும் இறுதியையுடைய முன்னிலை வினைச் சொற்கள் உயர்திணைப் பலர்பாலுக்கும அஃறிணைப் பலவின் பாலுக்கும் ஒப்பவுரியன. முன்னிலை வினையல்லாத ஏனை எழுவகை வினைச்சொற்களும் இருதிணை ஐம்பால் மூவிடத்திற்கும் பொதுவாய் வருவன. அவற்றுள் வியங்கோள், வினை முன்னிலை தன்மையென்னும் இரண்டிடத்திலும் நிலைபெறாது. நிகழ்கால முணர்த்தும் செய்யுமென்னும் மூன்று பலர்பாற் படர்க்கையிலும் தன்மை முன்னிலைகளிலும் வருதலில்லை. மற்றொரு வினைச்சொல்லோடு கூடியல்லது முற்றுப்பெறாத, குறைச்சொல் வினையெச்சமாகும். செய்து, செய்யூ, செய்பு, செய்தென, செய்யியர், செய்யிய, செயின், செய் செயற்கு எனவரும் இவ்வொன்பது வாய்பாட்டுச் சொற்களும் பின், முன், கால், கடை, வழி, இடத்து என்பவற்றை யிறுதியாக வுடையனவும் இவைபோலக் காலமுணர்த்தி வருவன பிறவும் வினையெச்ச வினைகளாம். இவற்றுள் முதலிலுள்ள செய்து, செய்யூ, செய்பு என வரும் மூன்றும் தனக்குரிய வினை முதல் வினையையே கொண்டு முடிவன. அவை மூன்றும் சினை வினையாங்கால் தமக்குரிய முதல் வினையைக்கொண்டு முடியுனும் தம்தொழிலைக் கொண்டு முடிந்தனவே. இம்மூன்றுமல்லாத பிற வினையெச்சங்கள் தம் வினை முதல் வினையையேனும் அன்றி அங்கு வந்து இயையும் பிற வினைமுதல் வினையையெனும் வரையறையின்றிக் கொண்டு முடியுமியல்பினவாம். வினையெச்சங்கள் பல வாய்பாட்டான் அடுக்கிவரினும் முன்னின்ற எச்சம் முடிய ஏனையவும் பொருளால் முடிந்தனவேயாம். பெயரை ஒழிபாகவுடைய வினைச்சொல் பெயரெச்சம் அது செய்யும், செய்த எனவரும் இரு வாய்பாடுகளில் அடங்கும் நிலப்பெயர், பொருட்பெயர், காலப்பெயர், கருவிப்பெயர், வினை முதற்பெயர், வினைப்பெயர் எனவரும் அறுவகைப் பெயர்களையும் கொண்டு முடிதற்கேற்ற பொருள் நிலைமையையுடைய இப்பெயரெச்சம் இருதிணை யைம்பாற்கு முரிய பொது வினையாகும். செய்யும் என்னும் வாய்பாட்டுச் சொற்கள் பெயரெச்சமாங்கால் முன் செய்யுமென்னும் முற்றிற்கு விலக்கப்பட்ட பல்லோர் படர்க்கை முன்னிலை, தன்மை என்னும் இவ்விடங்களுக்கும் உரியனவாம். பெயரெச்சமும் வினையெச்சமும் வினை நிகழ்ச்சியை யுணர்த்தாது அதனை எதிர்மறுத்துச் சொல்லினும் பெயரெஞ்ச நிற்றலும் வினையெஞ்ச நிற்றலுமாகிய தம் பொருள் நிலைமையில் வேறுபடா. இவ்வெச்சங்களுக்கும் இவற்றை முடிக்குஞ் சொற்களாய் வரும் பெயர் வினைகளுக்குமிடையே முடிக்குஞ்சொல்லொடு தொடர்புடைய வேறு சொல் வந்து நிற்றலுமுண்டு. செய்யுமென்னும் பெயரெச்ச வாய்பாடுகளின் ஈற்றயலெழுத் தாகிய உகரம் தான் ஊர்ந்துநின்ற மெய்யொடுங் கெட்டு முடிதலும் உண்டு. செய்து என்னும் வாய்ப்பாட்டு இறந்தகால வினையெச்சம் ஏனைக் காலச் சொல்லோடு இயைதலும், விரைவின்கண் எதிர்காலமும் நிகழ்காலமும் இறந்தகாலத்தோடு மயங்குதலும், மிக்கது ஒன்றின்கண்ணே இறந்தகாலமும் எதிர்காலமும் நிகழ்காலத்தோடு மயங்குதலும், இது செயல் வேண்டும் என்னும் பொருளில் வரும் வினைச்சொல் தானும் பிறருமாகிய ஈரிடத்தும் பொருள் தருதலும், வற்புறுத்தலில் வரும் வினாப் பொருளையுடைய வினைச்சொல் எதிர்மறைப் பொருள் தருதலும், இயற்கை பற்றியும் தெளிவுபற்றியும் காலம் மயங்குதலும், செயப்படுபொருள் வினைமுதல்போல வருதலும், இவ்வாறே வேறிடங்களில் முக்காலமு மயங்குதலும் ஆகிய விதிகளை இவ்வியல் 40-முதல் 49-வரையுள்ள சூத்திரங்களால் ஆசிரியர் விரித்துக் கூறியுள்ளார். - க. வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 208-213 ஆறாவது வினையியல் 195. வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது நினையுங் காலைக் காலமொடு தோன்றும் என்பது சூத்திரம். என்நுதலிற்றோ வெனின், நிறுத்த முறையானே வினைச்சொல் ஆமாறு உணர்த்திய எடுத்துக்கொண்டார், அதனால் இவ் வோத்து வினையியல் என்னும் பெயர்த்தாயிற்று. உரை: வினையென்று சொல்லப்படுவது வேற்றுமையொடு பொருந்தாது, ஆராயிற் காலத்தொடு புலப்படும், என்றவாறு ஈண்டு வேற்றுமை என்பது உருபை. (வரலாறு) உண்டான், கரியன் என வேற்றுமை கொள்ளாது காலமொடு தோன்றியவாறு கண்டுகொள்க. (1) 196. காலந் தாமே மூன்றென மொழிப. உரை: மேல் தோற்றுவாய் செய்யப்பட்ட காலம் மூன்று என்று சொல்லுவர் புலவர், என்றவாறு (2) 197. இறப்பி னிகழ்வி னெதிர்வி னென்றா வம்முக் காலமுங் குறிப்பொடுங் கொள்ளு மெய்ந்நிலை யுடைய தோன்ற லாறே. உரை: இறப்பும் நிகழ்வும் எதிர்வும் என்று சொல்லப்படும் மூன்று காலமும் குறிப்புவினையொடும் பொருந்தும் மெய்ந்நிலை யுடைய, வினைச்சொல் லானவை தோன்றுநெறிக்கண், என்றவாறு எனவே, காலம் மூன்றாவன இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்பதூஉம், வெளிப்படக் காலம் விளங்காதன குறிப்புவினை யென்பதூஉம் பெற்றாம். (வரலாறு) உண்டான், உண்ணா நின்றான், உண்பான் எனவரும். இறப்பாவது, தொழிலது கழிவு; நிகழ்வாவது, தொழில் தொடங்கப்பட்டு முற்றுப் பெறாத நிலைமை; எதிர்வாவது தொழில் பிறவாமை. (3) 198. குறிப்பினும் வினையினு நெறிப்படத் தோன்றிக் காலமொடு வரூஉம் வினைச்சொல் லெல்லா முயர்திணைக் குரிமையு மஃறிணைக் குரிமையு மாயிரு திணைக்குமோ ரன்ன வுரிமையு மம்மூ வுருபின தோன்ற லாறே. உரை: குறிப்புப் பொருண்மைக்கண்ணும் தொழிற் பொருண்மைக் கண்ணும் தோன்றிக் காலத்தொடு வரூஉம் எல்லாச் சொல்லும் உயர் திணைக்குரியனவும், அஃறிணைக் குரியனவும், இரண்டு திணைக்கும் ஒப்ப உரியனவும் என மூன்று கூற்றனவாம் தோன்று நெறிக்கண் என்றவாறு (4) 199. அவைதாம், அம்மா மெம்மே மென்னுங் கிளவியு மும்மொடு வரூஉம் கடதற வென்னு மந்நாற் கிளவியோ டாயெண் கிளவியும் பன்மை யுரைக்குந் தன்மைச் சொல்லே. என்நுதலிற்றோ வெனின், நிறுத்த முறையானே உயர்திணைவினை யுணர்த்துகின்றார்; அவைதாம் இருவகைய, தன்மை வினையும் படர்க்கை வினையும் என. தன்மை வினையும் இருவகைத்து, பன்மைத் தன்மையும், ஒருமைத் தன்மையுமென; இச் சூத்திரத்தாற் பன்மைத் தன்மை உணர்த்துகின்றார். உரை: மேல் மூன்றுவகை எனப்பட்ட வினைச்சொற்றாம், அம் - ஆம், எம்- ஏம் என்னும் ஈற்றவாகிய சொல்லும், உம்மொடு வரூஉம் க-ட-த-ற வாகிய கும்மும், டும்மும், தும்மும், றும்மும் என்னும் ஈற்றவாகிய சொல்லும் என அவ்வெட்டும் பன்மை யுணர்த்துந் தன்மைச் சொல்லாம், என்றவாறு அம், ஆம் என்பன முன்னின்றாரை யுளப்படுக்கும்; தமராய வழி படர்க்கையாரையும் உளப்படுக்கும். எம், ஏம் என்பன படர்க்கையாரை உளப்படுக்கும். உம்மொடு வரூஉங் க-ட-த-ற அவ்விருவரையும் ஒருங்கு உளப்படுத்தலும் தனித்து உளப்படுத்தலும் உரிய. அம் - ஆம், எம் - ஏம் என்பன மூன்று காலமும் பற்றி வரும். உம்மொடு வரூஉங் க-ட-த-ற எதிர்காலம் பற்றி வரும். வரலாறு: அம் - உண்டனம், உண்ணாநின்றனம், உண்குவம் எனவும்; ஆம் - உண்டாம், உண்ணாநின்றாம், உண்பாம் எனவும்; எம் -உண்டனெம், உண்ணாநின்றனெம், உண்குவெம் எனவும்; ஏம் - உண்டேம், உண்ணாநின்றேம், உண்பேம் எனவும் வரும். உம்மொடு வரூஉங் கடதற - உண்கும், உண்டும், வருதும், சேறும் எனவும்; உரிஞுதும், திருமுதும் என ஏற்றவழி உகரம் பெற்றும் வரும். இவை நான்கும் எதிர்காலம் பற்றி வரும். உம்மை யடைந்து வந்த க-ட-த-றக்கள், ‘உம்மொடு வரூஉம் க-ட-த-ற’ ஆயின. இக் காட்டிய எட்டு வினைச்சொல்லும் உயர்திணைப் பன்மை வினைச்சொல்லை யுணர்த்துந் தன்மைச் சொல் என்றவாறு. இவை தன்னொடு முன்னின்றானையும் உளப்படுக்கும், படர்க்கையானையும் உளப்படுக்கும், அவ்விருவரையும் உளப்படுக்கு மென்பது, `அவற்றுள், பன்மை யுரைக்கும் தன்மைக் கிளவி’ (தொல்.சொல். வினையியல். 12) என்னுஞ் சூத்திரத்துட் சொல்லுதும். (5) 200. கடதற வென்னும் அந்நான் கூர்ந்த குன்றிய லுகரமொ டென்னே னல்லென வரூஉ மேழுந் தன்வினை யுரைக்குந் தன்மைச் சொல்லே. என்நுதலிற்றோ வெனின், மேல் உளப்பாட்டுத் தன்மை கூறினார்; இது தனித்தன்மை வினைச்சொல் இவை என்பது உணர்த்துதல் நுதலிற்று. உரை: க-ட-த-ற என்னும் அந் நான்கு ஊர்ந்த குற்றியலுகரம் என்றான் அவையிற்றின் ஈறு பற்றி. அவை வருமாறு: உண்கு, உண்டு, வருது, சேறு என வரும். என், ஏன் என்பன மூன்று காலமும் பற்றி வரும். அவை உண்டனென், உண்ணாநின்றனென், உண்குவென் எனவும்; உண்டேன், உண்ணா நின்றேன், உண்குவேன் எனவும் வரும். அல் - உண்பல், தின்பல் என எதிர்காலம் பற்றி வரும். இப் பொழுது அதனை உண்பன், தின்பன் என அன் ஈறாக வழங்குப என்ப. (6) 201. அவற்றுட் செய்கென் கிளவி வினையொடு முடியினு மவ்விய றிரியா தென்மனார் புலவர். உரை: அவ்வேழனுட் செய்கு என்னும் சொல் வினைகொண்டு முடியினும் அமையும், என்றவாறு. (வரலாறு) உண்கு வந்தேன் என வரும். செய்கென் கிளவி வினையொடு முடியினும் அமைக எனவே செய்கும் என்னும் கிளவியும் வினையொடு முடியினும் அமைக என்பது போந்ததாம். (வரலாறு) உண்கும் வந்தேம் என வரும். இனி அவை வினையொடு முடியினும் அமையும் எனவே, பெயர்கொண்டு முடிதலே வலியுடைத்து என்பதே போந்ததாம். அவை: உண்கு யான், உண்கும் யாம் என வரும். `அவ்வியல் திரியா’ என்பது அவையும் முற்றுச்சொல் இயல்பிற் றிரியா என்றவாறு. (7) 202. அன்னா னள்ளா ளென்னு நான்கு மொருவர் மருங்கிற் படர்க்கைச் சொல்லே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், உயர்திணைத் தன்மைச் சொல் உணர்த்தி, அத்திணைப் படர்க்கை வினைச்சொல் உணர்த்துதல் நுதலிற்று. உரை: அன் என்பதனைத் தொடக்கமாக வுடைய நான்கு ஈற்றுச் சொல்லும் உயர்திணைக்கண் ஒருமைப்பாலை உணர்த்தும் படர்க்கை வினைச்சொல், என்றவாறு. அவை வருமாறு: அன் - உண்டனன், உண்ணாநின்றனன், உண்குவன் எனவரும். ஆன் - உண்டான், உண்ணாநின்றான், உண்பான் எனவரும். அள் - உண்டனள், உண்ணாநின்றனள், உண்குவள் எனவரும். ஆள் - உண்டாள், உண்ணாநின்றாள், உண்பாள் எனவரும். (8) 203. அர்ஆர் பஎன வரூஉ மூன்றும் பல்லோர் மருங்கிற் படர்க்கைச் சொல்லே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், உயர்திணைப் படர்க்கைப் பன்மை வினைச்சொல் இவை என்பது உணர்த்துதல் நுதலிற்று. உரை: அம் மூவகைச் சொல்லும் பலராய புறத்தாரை யுணர்த்துஞ் சொல், என்றவாறு வரலாறு: அர் - உண்டனர், உண்ணாநின்றனர், உண்குவர் எனவரும். ஆர் - உண்டார், உண்ணாநின்றார், உண்பார் எனவரும். ப - உண்ப, தின்ப என எதிர்காலங்கொண்டு வரும். (9) 204. மாரைக் கிளவியும் பல்லோர் படர்க்கை காலக் கிளவியொடு முடியு மென்ப. உரை: மார் என்பதூஉம் உயர்திணைப் படர்க்கைப் பன்மை வினைக்கு உரித்து; அது பின்னை முடியுங்காலை வினைச் சொல்லொடு முடிதல் உடைத்து, என்றவாறு (வரலாறு) ஆர்த்தார் கொண்மார் வந்தார் எனவரும். இது முற்றுச்சொல் லாகலான் வினைச்சொல்லொடு முடிதல் வேற்றுமை கண்டு அஃதுணர்த்தியவா றென்பது. (10) 205. பன்மையு மொருமையும் பாலறி வந்த வந்நா லைந்து மூன்றுதலை யிட்ட முன்னுறக் கிளந்த வுயர்திணை யவ்வே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், மேல் விரித்தவற்றை யெல்லாம் தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று. உரை: பன்மைப்பாலும் ஒருமைப்பாலும் தோன்ற நின்ற இருபத்து மூன்றுமே உயர்திணை மூன்றுபாற்கும் உரிய என வரை யறுத்தவாறு. இது, ‘விரித்துத் தொகுத்தல்’ என்னும் நூற்புணர்ப்புப்பட வைத்தவாறு. (11) 206. அவற்றுட் பன்மை யுரைக்குந் தன்மைக் கிளவி யெண்ணியன மருங்கிற் றிரிபவை யுளவே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், அத்தொகுக்கப் பட்டனவற்றுள் ஒருசாரவற்றது வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. உரை: பன்மைத் தன்மைச் சொற்கள் ஆராயுமிடத்து அவை திரிபுடைய, என்றவாறு யாதோ திரிபு எனின், அம் ஆம் என்னும் இரண்டும் தன்னொடு முன்னின்றானை உளப்படுக்கும். எம் ஏம் என்பன இரண்டும் தன்னொடு படர்க்கையானை உளப்படுக்கும். உம்மொடு வரூஉம் கடதறக்கள் முன்னின்றானையும் படர்க்கையானையும் உளப்படுக்கும் என்பது. இவ்வுளப்படுதற்குத் திரியுந் திரிபு அவையுடைய; வழூஉத் திரிபன்று ஈண்டுக் கருதியது என்பது. (12) 207. யாஅ ரென்னும் வினாவின் கிளவி அத்திணை மருங்கின் முப்பாற்கு முரித்தே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், உயர்திணை மூன்றுபாற்கும் பொதுவாகியதொரு வினைக்குறிப்புச்சொல் உணர்த்துதல் நுதலிற்று. உரை: யார் என்னும் வினாவின்பாற்றாய் வருகின்ற சொல் உயர்திணை மூன்றுபாற்கும் உரித்து, என்றவாறு (வரலாறு) யார் அவன், யார் அவள், யார் அவர் எனவரும். மற்றிது வினைக்குறிப்பே யெனின், முன்னர், `அதுச்சொல் வேற்றுமை யுடைமை யானும்’ (தொல். சொல். 210) என்று உயர்திணைக்குறிப்பு ஓதும்வழியே வைக்க எனின், உயர்திணை முப்பாற்கும் தன் ஈறு திரியாது நிற்றற் சிறப்புநோக்கி ஈண்டு வைத்துணர்த்தினார் என்பது. (13) 208. பாலறி மரபி னம்மூ வீற்று மாவோ வாகுஞ் செய்யு ளுள்ளே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், உயர்திணைப் பாற்குப் படுவதோர் செய்யுண்முடிபு கூறுதல் நுதலிற்று. உரை: பாலறி மரபின் அம்மூவீற்றும் என்பன - மேல் உணர்த்திப் போந்த னஃகான் ஒற்றும், ளஃகான் ஒற்றும், ரஃகான் ஒற்றும் ஆயின அவை மூன்றீற்றுக்கண்ணும்; ஆஓஆகும் செய்யுளுள்ளே என்பன - நின்ற ஆகாரம் ஓகாரமாம் செய்யுளுள், என்றவாறு (வரலாறு) ‘வினவிநிற் றந்தான்’ என்பது, `வினவி நிற்றந்தோன்’ (அகம். 48) எனவும், `நகூஉப் பெயர்ந்தாள்’ என்பது, `நகூஉப் பெயர்ந்தோள்’ (அகம். 248) எனவும், `சென்றா ரன்பிலர்’ என்பது, `சென்றோ ரன்பிலர்’ (அகம். 31) எனவும் வரும். செய்யுளுள் எங்கும் ஆ ஓவாகா என்றவாறு ஆவாகக் கொள்ளாதவிடத்தாயின் ஓவாகத் திரிவது; அல்லாக்கால் வேண்டா என்பது. (14) 209. ஆயென் கிளவியு மவற்றொடு கொள்ளும். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இதுவும் ஆ ஓவாகல் ஒப்புமை கண்டு விரவுவினைச்சொல் ஈறு செய்யுளுட் டிரியுமாறு உணர்த்துதல் நுதலிற்று. உரை: ஆய் என்னும் சொல்லின் ஆகாரமும் ஓவாகும் செய்யுளுள், என்றவாறு (வரலாறு) ‘வந்தாய் மன்ற தண்கடற் சேர்ப்ப’ என்பது, ‘வந்தோய் மன்ற தண்கடற் சேர்ப்ப’ (அகம். 80) என்றவாறு. (15) 210. அதுச்சொல் வேற்றுமை யுடைமை யானுங் கண்ணென் வேற்றுமை நிலத்தி னானு மொப்பி னானும் பண்பி னானுமென் றப்பாற் காலங் குறிப்பொடு தோன்று மன்மையி னின்மையி னுண்மையின் வன்மையி னன்ன பிறவுங் குறிப்பொடு கொள்ளு மென்ன கிளவியுங் குறிப்பே காலம். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், நிறுத்த முறையானே உயர்திணைக்குரிய வினைக்குறிப்புச் சொல் உணர்த்துதல் நுதலிற்று. இக்கூறப்பட்ட எட்டுப் பொருண்மையும் பற்றித் தோன்றுங்கால் வினைக்குறிப்புச் சொல்லொடு தோன்றும் என்றவாறு. உரை: அதுச்சொல் வேற்றுமை - ஆறாம் வேற்றுமை. அதன் பொருள் பல; அவற்றுள் அவ்வுடைமைப் பொருள்பற்றி உயர்திணை வினைக் குறிப்புச்சொல் பிறக்கும், என்றவாறு (வரலாறு) உடையன், உடையள், உடையர் எனவரும். கண்ணென் வேற்றுமை நிலத்தினானும் பற்றிப் பிறந்தன: நிலத்தன், நிலத்தள், நிலத்தர் என்பன. உவமைப் பொருள் பற்றிப் பிறந்தன: பொன்னன்னன், பொன்னன்னள், பொன்னன்னர் என்பன. பண்புபற்றிப் பிறந்தன: கரியன், கரியள், கரியர் என்பன. அப்பாற் காலங் குறிப்பொடு தோன்றும் என்பது - அக்கூறப்பட்ட சொல் குறிப்பாய்த் தோன்றும் என்றவாறு. அன்மை பற்றிப் பிறந்தன: அல்லன், அல்லள், அல்லர் என்பன. இன்மை: இல்லன், இல்லள், இல்லர் என்பன. உண்மை: உளன், உளள், உளர் என்பன. வன்மை: வல்லன், வல்லள், வல்லர் என்பன. இனிப், ‘பிறவும்’ என்றதனான், நல்லன் நல்லள் நல்லர் எனவும், தீயன் தீயள் தீயர் எனவும், மூவாட்டையான், நாலாட்டையான், ஏழாட்டையான் எனவும், பிறவும் இவ்வாறு வருவனவெல்லாங் கொள்க. ஈண்டுக் காட்டினவெல்லாம் படர்க்கை வினைக்குறிப்புச் சொல். இனி, ஈண்டு எடுத்தோத்தினானுங் கூறிய பொருளைப் பற்றித் தன்மை வினைக்குறிப்புச் சொல் வருமாறு ஒட்டிக்கொள்க. தன்மை வினைக்குறிப்புச் சொல் உடையென், உடையேம், உடையாம் என வரும். பிறவும் அன்ன. (16) 211. பன்மையு மொருமையும் பாலறி வந்த வன்ன மரபிற் குறிப்பொடு வரூஉங் காலக் கிளவி யுயர்திணை மருங்கின் மேலைக் கிளவியொடு வேறுபா டிலவே. உரை: பன்மைப்பாலும் ஒருமைப்பாலும் ஆகிய பெண் ஆண் என்று வேறுபாடு தோன்ற வந்த வினைக்குறிப்புச் சொற்களெல்லாம் மேற்சொல்லிப்போந்த இருபத்து மூன்று வினைச்சொற்கு ஈறாய எழுத்துக்களிலுள்ளனவே தமக்கும் ஈறாவன, பிறிதில்லை என்றவாறு ‘அன்ன மரபின்’ என்றதனான், ஈண்டு உயர்திணைக்கு ஓதிய பொருள் பற்றி அஃறிணை வினைக்குறிப்புந் தோன்றும் என்று கொள்க. (வரலாறு) ‘வடாது வேங்கடம் தெனாது குமரி’ என்புழி, வடாது தெனாது என்பன; இது வினைக்குறிப்புப் பெயர். பிறவும் அன்ன. (17) 212. அஆ வஎன வரூஉ மிறுதி யப்பான் மூன்றே பலவற்றுப் படர்க்கை. இச்சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், அஃறிணைப் பன்மைப் பாற்கு உரிய வினைச்சொல் உணர்த்துதல் நுதலிற்று. அ - உண்டன, உண்ணாநின்றன, உண்பன என வரும். ஆ - உண்ணா, தின்னா என வரும். வ - உண்குவ, தின்குவ என வரும். வரூஉம் இறுதி அப்பான் மூன்று என்பது - இறுதி இயைபுடைய அப்பான் மூன்று என்றவாறு. இவை மூன்றுமே அஃறிணைப் பன்மைப்படர்க்கை வினைச் சொற்கு ஈறாம் எழுத்துக்கள் என்றவாறு (18) 213. ஒன்றன் படர்க்கை தடற வூர்ந்த குன்றிய லுகரத் திறுதி யாகும். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், அஃறிணை ஒருமைப்பாற்கு உரிய வினைச்சொல் உணர்த்துதல் நுதலிற்று. உரை: ஒன்றனை யறியும் படர்க்கை வினைச்சொல்லாவன த-ட-றக்களை ஊர்ந்த குன்றியலுகர ஈற்றுச்சொல், என்றவாறு (வரலாறு) உண்டது, உண்ணாநின்றது, உண்பது எனவும்; கூயிற்று, தாயிற்று எனவும்; குண்டுகட்டு, குறுந்தாட்டு எனவும் வரும். இனிக் கிளவியாக்கத்துப் பாலுணர்த்தும் எழுத்துக்களைப் படர்க்கை வினைச்சொல் ஈற்றவாகக் காட்டியது இவ்வோத்தினுட் கூறப்பட்ட இலக்கணம் வலித்தாயிற்று என்பது. (19) 214. பன்மையும் ஒருமையும் பாலறி வந்த அம்மூ விரண்டும் அஃறிணை யவ்வே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், விரித்தது தொகுத்தவாறு நுதலிற்று. உரை: பன்மைப்பாலும் ஒருமைப்பாலும் அறிய வந்த அவ்வாறு ஈற்றுச் சொற்களும் அஃறிணைக்கு உரிய வினைச் சொல் என்றவாறு (20) எவன் என்பது அஃறிணை இருபாற்கும் உரித்தெனல் 215. அத்திணை மருங்கின் இருபாற் கிளவிக்கும் ஒக்கும் என்ப எவன்என் வினாவே. உரை: அஃறிணை இருபாற்கும் பொதுவேயாகி நிற்கும், எவன் என்னும் வினாவினை யுணர நின்ற வினைக்குறிப்புச்சொல் என்றவாறு (வரலாறு) எவன் அது, எவன் அவை என வரும்; பெயருமாம் படுத்துச் சொல்லின். (21) 216. இன்றில உடைய என்னுங் கிளவியும் அன்றுடைத் தல்ல என்னுங் கிளவியும் பண்புகொள் கிளவியும் உளயென் கிளவியும் பண்பி னாகிய சினைமுதற் கிளவியும் ஒப்பொடு வரூஉங் கிளவியொடு தொகைஇ அப்பாற் பத்துங் குறிப்பொடு கொள்ளும் பன்மையும் ஒருமையும் பாலறி வந்த அன்ன மரபின் குறிப்பொடு வரூஉங் காலக் கிளவி அஃறிணை மருங்கின் மேலைக் கிளவியொடு வேறுபா டிலவே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், அஃறிணை வினைக் குறிப்பு உணர்த்துதல் நுதலிற்று. உரை: சொல்லப்பட்ட பத்துப் பொருண்மைக்கண்ணும் அஃறிணை வினைக்குறிப்புப் பிறக்கும் என்றவாறு இன்று என்பது - கோடின்று, செவியின்று என வரும். இல என்பது - கோடில, செவியில என வரும். உடைய என்பது - கோடுடைய, செவியுடைய என வரும். அன்று என்பது - நாயன்று, நரியன்று என வரும். உடைத்து என்பது - கோடுடைத்து, செவியுடைத்து என வரும். அல்ல என்பது - உழுந்தல்ல, பயறல்ல என வரும். பண்புகொள் கிளவி - கரியது, கரிய என வரும். உளவென் கிளவி - உழுந்துள, பயறுள என வரும். பண்பினாகிய சினைமுதற் கிளவி - குறுங்கோட்டது, குறுங் கோட்டன என வரும். ஒப்பொடு வரூஉங் கிளவி - பொன்னன்னது, பொன்னன்னன என வரும். இக் கூறப்பட்ட பத்துப் பொருண்மைக்கண்ணும் வினைக் குறிப்புச் சொற்கள் கொள்ளப்படும் என்றவாறு. பன்மைப்பாலும் ஒருமைப்பாலும் தோன்றிநிற்கும் இலக்கணமுடைய வினைக்குறிப்புச் சொற்கள் மேற்கூறப்பட்ட அஃறிணை வினைச் சொற்கு ஈறாய்நின்று பாலுணர்த்தும் எழுத்துக்களின் உள்ளனவே தமக்கும் ஈறாவன, பிறிதில என்றவாறு (22) 217. முன்னிலை வியங்கோள் வினையெஞ்சு கிளவி யின்மை செப்பல் வேறென் கிளவி செய்ம்மன செய்யுஞ் செய்த வென்னு மம்முறை நின்ற வாளென் கிளவியும் பிரிவுவேறு படூஉஞ் செய்திய வாகி யிருதிணைச் சொற்குமோ ரன்ன வுரிமைய. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இருதிணைக்கும் உரிய வினைச் சொற்களைப் பெயரும் முறையும் தொகையும் உணர்த்துதல் நுதலிற்று. உரை: முன்னிலை என்பது - முன்னின்றான் தொழின்மை கூறுவது; வியங்கோள் என்பது - ஏவநிற்பது; வினையெஞ்சு கிளவி என்பது - வினைச்சொல்லை ஒழிபாகி நிற்பது; இன்மை செப்பல் என்பது - இல்லையென்பது; ஒழிந்தன அவ்வாய்பாடே. அவற்றுள், செய்ம்மன என்பது இப்பொழுது வழக்கரிது. பிரிவு வேறுபடூஉஞ் செய்தியவாய் என்பது - உயர்திணைக் கண் வரின் உயர்திணைக்கே உரிய என்றும், அஃறிணைக் கண்வரின் அஃறிணைக்கே உரிய என்றும் பிரித்துச் செய்யப்படும் என்றவாறு (23) 218. அவற்றுள் முன்னிலைக் கிளவி இஐ யாயென வரூஉ மூன்று மொப்பத் தோன்று மொருவற்கு மொன்றற்கும். இச் சூத்திரம் என்நுதலிற்றோவெனின், முன்னிலை யொருமைச் சொற்கள் திணைக்கு உரியவாமாறு உணர்த்துதல் நுதலிற்று. உரை: முன்னிலைக் கிளவிகளில் இ, ஐ, ஆய் என்னும் மூன்று திறத்தனவும் இரண்டுதிணை யொருமைப்பான் மூன்றற்கும் ஒப்ப வுரியவாம், என்றவாறு உயர்திணை ஆண்பாற்கும் பெண்பாற்கும், அஃறிணை யொருமைப்பாற்கும் என்பது. (வரலாறு) உண்டி, தின்றி என இறந்த காலத்திற்கே பொருத்த முடைத்தாய் இகரம் வரும். இனி, ஐ வருமாறு - உண்டனை, உண்ணாநின்றனை, உண்குவை என மூன்று காலமும் வரும். ஆய் - உண்டாய், உண்ணாநின்றாய், உண்பாய் என மூன்று காலமும் வரும். இனி, ஒரு காலத்திற்கே யேற்கும் இகரம் முற்கூறினமையின் உண், தின், கிட, நட, வா, போ என்னுந் தொடக்கத்தனவும் கொள்க. 24) 219. இர்ஈர் பின்னென வரூஉ மூன்றும் பல்லோர் மருங்கினும் பலவற்று மருங்கினுஞ் சொல்லோ ரனைய வென்மனார் புலவர். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், முன்னிலைப் பன்மை வினைச்சொல் இவையென்று உணர்த்துதல் நுதலிற்று. உரை: இக்கூறப்பட்ட மூன்றும் பல்லோர்க்கும் பலவற்றிற்கும் ஒப்ப வுரியவாஞ் சொல் என்றவாறு இர் - உண்டனிர், உண்ணாநின்றனிர், உண்குவிர் எனவும்; ஈர் - உண்டீர், உண்ணாநின்றீர், உண்பீர் எனவும் வரும். இவை மூன்று காலமும் பற்றி வரும். மின் - உண்மின், தின்மின் என எதிர்காலம் பற்றி வரும். (25) 220. எஞ்சிய கிளவி யிடத்தொடு சிவணி ஐம்பாற்கு முரிய தோன்ற லாறே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், ஒழிந்து நின்றவற்றைத் தொகுத்து உரியவாறு உணர்த்துதல் நுதலிற்று. உரை: அவற்றுள், முன்னிலைக்கு உரியவாகக் கூறப்பட்ட வற்றை ஒழித்து ஒழிந்தவெல்லாம் மூன்றிடத்தும் நின்று இருதிணை ஐம்பாற்கும் உரிய, என்றவாறு 221. அவற்றுள் முன்னிலை தன்மை யாயீ ரிடத்தொடு மன்னா தாகும் வியங்கோட் கிளவி. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், எய்தியது விலக்குதல் நுதலிற்று. உரை: முன்னிலை, தன்மை இரண்டிடத்துஞ் செல்வன வாகிய வியங்கோள் வினைச்சொல் சிறு வரவின, என்றவாறு (வரலாறு) நீயிர் செல்க, நீ செல்க, யான் செல்க என வரும். இனி, அவன் செல்க, அவள் செல்க, அவர் செல்க, அது செல்க, அவை செல்க என்பன பெருவரவினவாம். (27) 222. பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை யவ்வையின் மூன்று நிகழுங் காலத்து செய்யு மென்னுங் கிளவியொடு கொள்ளா. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இதுவும் எய்தியது விலக்குதல் நுதலிற்று. உரை: செய்யும் என்னுஞ் சொல், உயர்திணைப் பல்லோர் படர்க்கையும் முன்னிலையும் தன்மையுங்கொண்டு முடிதல் இல்லை, என்றவாறு எனவே, ஒருவன் படர்க்கை, ஒருத்தி படர்க்கை, ஒன்றன் படர்க்கை, பலவற்றுப் படர்க்கை என நான்குமே அஃது உரித்தாவது என்றவாறு (வரலாறு) அவன் உண்ணும், அவள் உண்ணும், அது உண்ணும், அவை உண்ணும். இவ்வாறு விலக்கப்பட்ட வியங்கோட் சொல்லும், செய்யும் என்னும் முற்றுச் சொல்லும் ஒழித்தொழிந்தன வெல்லாம் இருதிணை ஐம்பாற்கும் மூன்றிடத்தும் உரிய வழக்கினகத்துக் கண்டு கொள்க. 1 அவை வருமாறு: இன்மை செப்பல்: யானில்லை, நீயில்லை, அவனில்லை, அவளில்லை, அவரில்லை, அதுவில்லை, அவை யில்லை என வரும். 2வேறு என் கிளவி யான்வேறு, நீ வேறு, அவன் வேறு, அவள் வேறு, அவர் வேறு, அது வேறு, அவை வேறு என வரும். 3செய்ம்மன- யான் செய்ம்மன: நீ செய்ம்மன, அவன் செய்ம்மன, அவள் செய்ம்மன, அவர் செய்ம்மன, அது செய்ம்மன, அவை செய்ம்மன என வரும். (28) 223. செய்து செய்யூச் செய்பு செய்தெனச் செய்யியர் செய்யிய செயின்செயச் செயற்கென வவ்வகை யொன்பதும் வினையெஞ்சு கிளவி. 224. பின்முன் கால்கடை வழியிடைத் தென்னு மன்ன மரபிற் காலங் கண்ணிய என்ன கிளவியு மவற்றியல் பினவே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், வினையெச்சங் களைப் பெயரும் முறையும் தொகையும் உணர்த்துதல் நுதலிற்று. இவ் விரண்டு சூத்திரம் உடன் எழுதப்பட்டது உரையியைபு நோக்கி. உரை: செய்து, செய்யூ என்பன முதலாக ஒன்பதும், பின் முன் என்னுந் தொடக்கத்தன ஆறும், ஆக இவை பதினைந்தும் வினையெச்ச வினைச்சொல், என்றவாறு வினையை ஒழிபாக நிற்றலின் வினையெச்சம் எனப்பட்டது. இனி, ‘என்ன கிளவியும்’ என்றதனான், உண்பான் வந்தான், உண்பாக்கு வந்தான் எனப் பிறவும் இவ்வாறு வருவன கொள்க. செய்தெனெச்சம் முன்வைத்தார் இறந்த காலத்ததாத லானும் பல வீற்றதாகலானும் என்பது. (29, 30) 225. அவற்றுள் முதனிலை மூன்றும் வினைமுதல் முடிபின. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், முதற்கணின்ற மூன்றெச்சத்திற்கும் முடிபு கூறுதல் நுதலிற்று. உரை: அம்முதற்கண் நின்ற மூன்றும் அவ்வினை யாக்கிய அம் முதல்கொண்டு முடியும், என்றவாறு (வரலாறு) உழுது வந்தான், உண்ணூ வந்தான், நகுபு வந்தான் எனத் தத்தம் வினைமுதல்கொண்டு முடிந்தவாறு. உண்ணூ வந்தான் என்பது இப்பொழுது வழக்கினுள் உண்ணா வந்தான் என நடக்கும். (31) 226. அம்முக் கிளவியுஞ் சினைவினை தோன்றிற் சினையொடு முடியா முதலொடு முடியினும் வினையோ ரனைய வென்மனார் புலவர். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், அம் மூன்றன் றிறத்துப் படுவதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. உரை: அவை மூன்றும் ஏற்ற வினைமுதலானே முடியு மெனப்பட்டன; சினைப்பொருளது வினையெச்சமாயக்காலச் சினைச்சொற் பொருணிற்ப, அச்சினைப் பொருளது முதல்கொண்டு முடியினும் அமையும், என்றவாறு (வரலாறு) கையிற்று வீழ்ந்தான், கையிறூ வீழ்ந்தான், கையிறுபு வீழ்ந்தான் எனவரும். ‘முதலொடு முடியினும்’ என்ற உம்மை சிறப்பும்மை; அதனால், சினையொடு முடிதலே வலியுடைத்து என்பதூஉமாம். அது, கையிற்று வீழ்ந்தது, கையிறூ வீழ்ந்தது, கையிறுபு வீழ்ந்தது என வரும். (32) 227. ஏனை யெச்சம் வினைமுத லானு மான்வந் தியையும் வினைநிலை யானுந் தாமியன் மருங்கின் முடியு மென்ப. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், ஒழிந்து நின்ற வினையெச்சத்திற்கு முடிபு உணர்த்துதல் நுதலிற்று. உரை: அக்கூறப்பட்ட மூன்றுமன்றி, ஒழிந்து நின்ற வினையெச்சமாயின வெல்லாம், அம்மூன்று போலத் தம்தம் வினைமுதல் கொண்டு முடிதலும் அவ்விடத்தின் வந்து பொருந்திய பிறவினையான் முடிதலும் உடைய, என்றவாறு இனி, அவை வினைமுதலானே முடியுமாறு; மழை பெய்தென வளம் பெற்றது; மழை பெய்ய பயிர் எழுந்தது எனவரும். பிறவும் அன்ன. இனி ஆன்வந்து இயையும் வினைநிலையான் முடிவன வருமாறு: மழை பெய்தென வுலக மார்ந்தது, மரங் குழைத்தது என வரும். பிறவும் அன்ன. இனித் ‘தாமியன் மருங்கின்’ என்றதனால், உழுது வருதல், உழுது வந்தென என வினையெச்சம் தொழிற்பெயரொடு முடிதலும் முடிக என்று கொள்க. மற்று, ஏனை யெச்சங் கொடாதே ஈண்டு இலேசு காட்டுவ தெனின், ‘தானியன் மருங்கின்’ என்னாது, ‘தாமியன் மருங்கின்’ என்றதனான், அது முதனிலை மூன்றெச்சங்களும் தொழிற் பெயரொடு முடிதலும் முடிக என்றற்குச் சொல்லப்பட்டது. (33) 228. பன்முறை யானும் வினையெஞ்சு கிளவி சொன்முறை முடியா தடுக்குந வரினு முன்னது முடிய முடியுமன் பொருளே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இன்னும் அவ்வெச்சங்கடிறத்தே படுவதொரு முடிபுகூறுதல் நுதலிற்று. உரை: பல எச்சம் உடனடுக்கிவந்து பின் இறுதிக்கண் ஒன்றற்கேற்ற முடிபு ஏற்றக்கால் அதனால் அவ்வெச்சமெல்லாம் முடிந்த பொருளவாகி முடிபுகொள்ளும் என்றவாறு (வரலாறு) உழுதுண்டு தின்றோடிப் பாடி வந்தான் என வரும். இஃது ஓரினத்து எச்சம் பல அடுக்கி வந்தது. அவற்றுள், பாடி என்பது வந்தான் என்னும் முடிபுகொண்டு முடிந்தது; அம்முடிபே அவ் வடுக்கி நின்ற பிறவெச்சங்கட்கும் முடிபாயிற்று என்றவாறு. எனவே, அது முடியாக்கால் ஒழிந்த எச்சங்கள் முடியா என்பதாம். இனிப் பலவினத்து எச்சம் அடுக்கிவருமாறு வழக்கினகத்துக் கண்டு கொள்க. (34) 229. நிலனும் பொருளுங் காலமுங் கருவியும் வினைமுதற் கிளவியும் வினையு முளப்பட வவ்வறு பொருட்குமோ ரன்ன வுரிமைய செய்யுஞ் செய்த வென்னுஞ் சொல்லே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், செய்யும் செய்த எனப்பட்ட இரண்டு பெயரெச்சத்திற்கும் முடிபு உணர்த்துதல் நுதலிற்று. உரை: சொல்லப்பட்ட ஆறு சொல்லொடு முடியும் அவ் விரண்டெச்சம் என்பது. அவற்றுள் செய்யும் என்பது பல்லோர் படர்க்கை, முன்னிலை, தன்மை யொழித்தொழிந்த நான்குபாற்கண் வருமாறு ஈண்டுக் காட்டுதும். ஒழிந்தனவும் மேல்வருகின்ற சூத்திரத்தாற் பெறுதும். நிலன்: அவன் உண்ணும் இல்லம், அவள் உண்ணும் இல்லம், அது உண்ணும் இல்லம், அவை உண்ணும் இல்லம் என வரும். பொருள்: அவன் செய்யும் பொருள், அவள் செய்யும் பொருள், அது செய்யும் பொருள், அவை செய்யும் பொருள் என வரும். காலம்: அவன் ஓதுங் காலை, அவள் ஓதுங் காலை, அது ஓதுங் காலை, அவை ஓதுங் காலை என வரும். கருவி: அவன் எறியுங் கல், அவள் எறியுங் கல், அது எறியுங் கல், அவை எறியுங் கல் எனவரும். வினைமுதற்கிளவி: உண்ணும் அவன், உண்ணும் அவள், உண்ணும் அது, உண்ணும் அவை என வரும். வினை: அவன் உண்ணும் ஊண், அவள் உண்ணும் ஊண், அது உண்ணும் ஊண், அவை உண்ணும் ஊண் என வரும். இனிச் செய்த என்பது மூன்றிடத்தொடுஞ் சிவணி, ஐந்து பாற்கும் உரித்து. அது வருமாறு: அவன் உண்ட இல்லம், அவள் உண்ட இல்லம், அவர் உண்ட இல்லம், அது உண்ட இல்லம், அவை உண்ட இல்லம் என வரும். ஒழிந்த பொருளும் காலமும் கருவியும் வினைமுதற் கிளவியும் வினையும் இவ்வாறு ஒட்டிக் கொள்க. மற்று, மேற்செய்த என்பது முடிபு கூறப்படாமையின், அதற்கே கூறுக; செய்யும் என்பதற்கு முடிபு ஈண்டுக் கூறியது என்னை யெனின், செய்யும் என்பது மேல் முற்றுச் சொல்லாய் நின்ற நிலைமை நோக்கிக் கூறினார்; ஈண்டு எச்சமாய் நின்ற நிலைமை நோக்கிக் கூறுகின்றார் என்பது. மற்று, முற்றுச் சொல்லாய் நின்ற நிலைமையும், எச்சமாய் நின்ற நிலைமையும் தம்முள் வேற்றுமை யறியுமாறு என்னை? இரு நிலைமைக் கண்ணும் பெயர்கொண்டு முடிதல் ஒக்கும் பிறவெனின், செய்யும் என்பது முற்றாய நிலைமைக்கண், பல்லோர் படர்க்கை, முன்னிலை, தன்மை ஒழித்தொழிந்த நான்கு பாலையும் தன் ஈற்றகத்துக்கண் ஒருவாற்றாற் கொண்ட அப் பெயரானே யமைந்து முடிபு மாறும்; அஃது எச்சமாய நிலைமைக்கண் முடிபாய் வரும் பெயர்க்கு அடையாய் நிற்கும். எனவே, எச்சமான நிலைமைக்கண் முடிபாக வரும் பெயர் பயனிலை செப்பலும் உருபேற்றலும் உடையவாயிற்று. (35) 230. அவற்றொடு வருவழிச் செய்யுமென் கிளவி முதற்கண் வரைந்த முவீற்று முரித்தே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், செய்யும் என நின்றதற்கு வேறோர் முடிபு தெரிந்து உணர்த்துதல் நுதலிற்று. உரை: செய்யும் என்னுஞ்சொல் மேற்சொல்லப்பட்ட நிலத் தொடக்கத்து ஆறனொடு வருவழி மேல்வரைந் தோதப்பட்ட பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மைகளையுங் கொண்டு முடியும் என்றவாறு மேல் முற்றாய் நின்ற நிலை விலக்கினார் ஆண்டு; ஈண்டு எச்சமாய் நின்ற நிலைமைக்கண்ணாயின் அவ்விடங்கட்கு உரித் தென்றே யெய்துவித்தார் என்பது. (வரலாறு) நிலம் - யான் உண்ணும் இல்லம், யாம் உண்ணும் இல்லம், நீ யுண்ணும் இல்லம், நீயிர் உண்ணும் இல்லம், அவர் உண்ணும் இல்லம் என வரும். ஒழிந்த பொருள் முதலாயின ஐந்தையும் இவ்வாறே ஒட்டிக் கொள்க. (36) 231. பெயரெஞ்சு கிளவியும் வினையெஞ்சு கிளவியும் எதிர்மறுத்து மொழியினும் பொருணிலை திரியா. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், எய்தியதன்மேல் சிறப்புவிதி உணர்த்துதல் நுதலிற்று. உரை: பெயரெச்சம் வினையெச்சம் என்று கூறப்பட்ட இரு திறத்தவும் எதிர்மறுத்துச் சொல்லினும் தம் பொருணிலைமையிற் றிரியா என்றவாறு (வரலாறு) உண்ணுஞ் சாத்தன் என்பது; உண்ணாச் சாத்தன் என்பதற்கும் அதுவே; பிறிதில்லை. இனி வினையெச்சம்: உண்டுவந்தான் என்பது, உண்ணாது வந்தான் என வரும். பிறவும் இவ்வாறே எதிர் மறுப்பன ஒட்டிக் கொள்க. மற்று, முற்றுச் சொல், உண்பன் சாத்தன் என்புழி, உண்ணான் சாத்தன் என எதிர்மறுப்பினும், முற்றுச்சொல் லியல்பிற்றிரியா தாகலின், அதற்கும் கூறுக எனின், அற்றன்று, முற்றுச் சொற்களை யெல்லாம் ஈறுபற்றி ஓதினாராகலின் எதிர்மறையும் ஆண்டே யடங்கும். பெயரெச்ச வினையெச்சங்களையாயின் செய்து செய்யூ எனவும், செய்யும் செய்த எனவும் அவை தம்மை யெடுத்தோதினான். அவற்று மறை பிறவா கொல்லோ என்று கருதினுங் கருதற்க என்றற்கு இது கூறப்பட்டது என்பது. (37) 232. தத்த மெச்சமொடு சிவணுங் குறிப்பி னெச்சொல் லாயினு மிடைநிலை வரையார். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இன்னும் அவ்வெச்சங்கட்கு முடிபு வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. உரை: இவ்விருவகை யெச்சத்திடையும் பிறசொற்களும் புகுதப் பெறும், அவ்வெச்சத்திற்கு வழிப் பொருத்தமுடையன தாம் எச்சமல்லாதன என்பது. (வரலாறு) ‘உப்பின்று புற்கை யுண்கமா கொற்கையோனே’ என்புழி, இன்றி என்னும் வினையெச்சத்திற்கு முடிபு உண்க என்னும் வியங்கோட் சொல்; இனிப் புற்கை யென்பது இடைநிலை. இனிப் பெயரெச்சத்திற்கு உதாரணம்: அடுஞ் செந்நெற் சோறு, அட்ட செந்நெற்சோறு என்புழி, செந்நெல் என்பது இடைநிலை. பிறவும் அன்ன. ‘சிவணுங் குறிப்பின் எச்சொல்லாயினும் இடைநிலை வரை யார்’ எனவே, சிவணாக் குறிப்பின் வரையப்படும் என்பதாம். (38) 233. அவற்றுட் செய்யு மென்னும் பெயரெஞ்சு கிளவிக்கு மெய்யொடுங் கெடுமே யீற்றுமிசை யுகர மவ்விட னறித லென்மனார் புலவர். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், அவ் வெச்சங்களுள் செய்யும் என்னும் பெயரெச்சத்திற்குப் படுவதோர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. உரை: செய்யும் என்னும் பெயரெச்சத்திற்கு ஈற்று மிசை உகரம் மெய்யொடுங் கெடுமிடம் அறிக வழக்கினகத்து, என்றவாறு (வரலாறு) ‘வாவும் புரவி’ என்பது ‘வாம் புரவி’ என்றாயிற்று. ‘அவ்விடனறிதல்’ என்றதனான், ‘அம்ப லூரு மவனொடு மொழிமே’ (குறுந். 51) என்புழி, மொழியும் என்பது மொழிம் என்றாயிற்று. மெய்யொழிந்து கெடுதலும் உடைத்து; அது, ‘சார னாடவென் றோழியுங் கலுழ்மே’ - என்புழிக் கலுழும் என்பது கலுழ்ம் என்றாயிற்று. பிறவும் அன்ன. (39) 234. செய்தெ னெச்சத் திறந்த கால மெய்திட னுடைத்தே வாராக் காலம். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், காலவழுக் காத்தல் நுதலிற்று. உரை: இறந்த காலத்துச் செய்தெனெச்சம் ஒழிந்த நிகழ் காலமும் எதிர் காலமும் கொள்வழியுடைத்து, என்றவாறு (வரலாறு) செய்தெனெச்சம் நிகழ்காலத்திற்கு ஏற்றது, கொடியாடித் தோன்றும் என்பது; என்னை? தோற்றமும் ஆட்டமும் உடனிகழுமாகலின் என்பது. இனி, உழுதுவருஞ் சாத்தன், உண்டுவருஞ் சாத்தன் என் புழிச் செய்தெனெச்சம் எதிர்காலத்திற்கு ஏற்றது. பிறவும் அன்ன. (40) 235. முந்நிலைக் காலமுந் தோன்று மியற்கை யெம்முறைச் சொல்லு நிகழுங் காலத்து மெய்ந்நிலைப் பொதுச்சொற் கிளத்தல் வேண்டும். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், ஒருசார் வினைச் சொற்கெல்லாம் பொதுவாயதோர் காலமுடிபு உணர்த்துதல் நுதலிற்று. உரை: மூன்று காலமும் புலப்படச் சொல்லாப் பாட்டியல் பினவாகிய எவ்வகைப் பொருள்களையும் நிகழுங்காலத்துப் பயின்று மூன்று காலத்திற்கும் பொதுவாகிய செய்யும் என்னுஞ் சொல்லாற் சொல்லுக, என்றவாறு (வரலாறு) மலை நிற்கும், யாறொழுகும் எனவரும். (41) 236. வாராக் காலத்து நிகழுங் காலத்து மோராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி யிறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் விரைந்த பொருள வென்மனார் புலவர். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இதுவும் வினைச் சொற்குப் பொதுவாயதோர் முடிபுணர்த்துதல் நுதலிற்று. உரை: எதிர்காலத்துப் பொருளையும் நிகழ்காலத்துப் பொருளையும் இறந்தகாலத்துப் பொருளவாகச் சொல்லுக; விரைவு நிலைமைக்கண், என்றவாறு (வரலாறு) சோறு வேவவிருந்து பாணியா நின்றுழிப் புறத்தா னொருவன் போகவேண்டுங் குறைப்பொருட்டாக, ‘இன்னும் உண்டிலையோ? போதாயோ?’ என்றக்கால், ‘உண்டேன், போந்தேன்’ என்னும் உண்ணாதிருந்தானே யெனினும்; ‘உண்டேன், போந்தேன்’ என்னும் உண்ணா நின்றானே யெனினும். பிறவும் அன்ன. (42) 237. மிக்கதன் மருங்கின் வினைச்சொற் சுட்டி யப்பண்பு குறித்த வினைமுதற் கிளவி செய்வ தில்வழி நிகழுங் காலத்து மெய்பெறத் தோன்றும் பொருட்டா கும்மே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இதுவும் காலவழுஉக் காத்தல் நுதலிற்று. உரை: மிக்கதன் மருங்கின் என்பது - உலகத்தாராற் சிறந்த தென்று மதிக்கப்பட்டதன்கண் என்றவாறு: வினைச்சொற் சுட்டி என்பது - வினையாகிய சொல்லைச் சுட்டி என்றவாறு; அப்பண்பு குறித்த என்பது - ஆண்டை வினையது பயனாகிய குணத்தைக் குறித்த என்றவாறு; வினைமுதற் கிளவி என்பது - அச் செய்கை செய்தானை நுதலின சொல் என்றவாறு; செய்வதில்வழி என்பது - செய்கை முடியாத நிலைமைக்கண் என்றவாறு; நிகழுங் காலத்து மெய்பெறத் தோன்றும் பொருட்டாகும்மே என்பது - அது நிகழுங் காலத்துச் சொல்லுஞ் சொற் பிழையாது, என்றவாறு (வரலாறு) அறஞ்செய்தான் சுவர்க்கம் புகும்; தாயைக் கொன்றான் நிரயம் புகும் எனவரும். அறம் என்பது மிக்க தொன்று; அதனை யாக்கினான் அவ்வுழிச் சேறல் ஒருதலையாக லாற் புகுகின்றாரைக் கண்டான் போலப் ‘புகும்’ என்று நிகழுங் காலத்தாற் சொல்ல அமையும் என்பது. (43) 238. இதுசெயல் வேண்டு மென்னுங் கிளவி யிருவயி னிலையும் பொருட்டா கும்மே தன்பா லானும் பிறன்பா லானும். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், முற்றுச்சொற் பொருள் படும் முறைமை யுணர்த்துதல் நுதலிற்று. உரை: இது செயல் என்னும் வாய்பாட்டுச் சொல், சொல்லப்படும் ஒருவன்மேல் நிற்கற்பாலது; அது பிறவயின் நோக்கியும் நிற்கும், என்றவாறு (வரலாறு) சாத்தன் ஓதல்வேண்டும் என்றக்கால், ஓதற்றொழில் வேண்டுவான் சாத்தன் என்று மன்னாகற்பாலது. அவ்வாறன்றிச் சாத்தன் ஓதல்வேண்டும்; யார்? தந்தை தாய் எனவும் நிற்கும் என்பது. (44) 239. வன்புற வரூஉம் வினாவுடை வினைச்சொ லெதிர்மறுத் துணர்த்தற் குரிமையு முடைத்தே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இதுவும் வினைச் சொற்படும் பகுதி வேற்றுமை உணர்த்துதல் நுதலிற்று. உரை: வன்புற வரூஉம் என்பது - திட்பஞ் செய்தற்கு வரூஉம் என்றவாறு; வினாவுடை வினைச்சொல் என்பது - ஆ, ஏ, ஓ என்னும் வினாயினை யுடைத்தாய் வருஞ் செய்கைச்சொல் என்றவாறு; எதிர்மறுத்து உணர்த்தற்கு உரிமையும் உடைத்தே என்பது - மறுதலைப்பட உணர்த்துதற்கு உரிமையும் உடைத்து என்றவாறு (வரலாறு) ஒருவனை ஒருவன், ‘வைதேனோ?’ என்று வையாமையை வலியுறுத்தற்கு வினாயக்கால், அது, ‘வைதேன்’ என்றும் நேர்வுபடும் என்றவாறு உம்மை யெதிர்மறை யாகலான், வைதிலேன் என்றும் நேர்வுபடும் சிறுபான்மை. (45) 240. வாராக் காலத்து வினைச்சொற் கிளவி இறப்பினு நிகழ்வினுஞ் சிறப்பத் தோன்றும் இயற்கையுந் தெளிவுங் கிளக்குங் காலை. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இதுவும் காலவழூஉக் காத்தல் நுதலிற்று. உரை: எதிர்காலத்துச் செயற்கைச்சொல் இறந்த காலத்தையும் நிகழ் காலத்தையுங் கொள்ளும், இயற்கைக் கண்ணும் தெளிவின் கண்ணும் சொல்லுமிடத்து என்றவாறு இயற்கை என்பது அதன் மேற் றீமை. தெளிவு என்பது ஒரு நூன் முடிபானும் பிறிதானும் கண்டு தெளிதல். (வரலாறு) இக்காடு போகிற் கூறைகோட்பட்டான்; கூறை கோட்படும். இஃது இயற்கை. இனித் தெளிவு: எறும்பு முட்டை கொண்டு தெற்றியேறின் மழை பெய்தது; மழை பெய்யும் என்பது. ‘சிறப்பத் தோன்றும்’ என்பது, அவ்விரு காலத்தானுஞ் சொல்லப் பிழையாது, யாப்புற்றுப் புலப்படும் என்றவாறு. (46) 241. செயப்படு பொருளைச் செய்தது போலத் தொழிற்படக் கிளத்தலும் வழக்கியன் மரபே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இதுவும் ஒருவகை வழூஉச் சொல் அமைந்தமை நுதலிற்று. உரை: வினைக்கட் செய்கையீறாச் செய்யப்பட்ட பொருளைத் தான் செய்கை செய்ததுபோல அதற்குத் தொழிற் கூறலும் உண்டு, வழக்கடிப்பட்ட மரபிலக்கணம் என்றவாறு. (வரலாறு) இல்லம் மெழுகிற்று, சோறு அட்டது என வரும். (47) 242. இறப்பே யெதிர்வே யாயிரு காலமுஞ் சிறப்பத் தோன்று மயங்குமொழிக் கிளவி. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இதுவும் காலவழுக் காத்தல் நுதலிற்று. உரை: இறந்த காலமும் எதிர்காலமும் தம்முள் மயங்கி வரப்பெறும் என்றவாறு (வரலாறு) யாம் பண்டு விளையாடுவது இக்கா; பண்டு என்பது இறந்த காலம், விளையாடுவது என்பது எதிர்காலம். விளையாடிற் றென்றுமன் ஆகற்பாலது; அஃது எதிர்காலமும் கொண்டது, விளையாடுவது என்று, முன்னும் இறந்தகாலமும் எதிர்காலமும் நிகழ்காலமும் எல்லாம் மயங்குமாறு சொல்லி வைத்தான், இனி உடன்றொகையாக வுணர்த்தியவாறு. ‘சிறப்பத் தோன்றும்’ என்பது சாலவுள்ள வழக்கென்பது. (48) 243. ஏனைக் காலமு மயங்குதல் வரையார். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இனி ஒழிந்த காலமும் இறப்பினொடு மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. உரை: ஏனைக்காலமும் என்பது - ஒழிந்த காலமும் என்றவாறு; மயங்குதல் வரையார் என்பது - மயங்கிவரு மரபினை வரையார் இவ்விறப்புக் காலத்தோடு, என்றவாறு (வரலாறு) யாம் பண்டு விளையாடுங்கா; பண்டு என்பது இறந்த காலம், விளையாடும் என்பது செய்யும் என்னும் நிகழ்காலச் சொல் வந்து முடிந்தது. ‘வரையார்’ என்பது மற்றாசிரியர் என்றவாறு. மூன்று காலமும் மயங்கும் தம்முள் என்பது நேர்ந்தானாம் ஆசிரியன். அஃதேயெனின், மூன்று காலமும் அல்லது காலமில்லை; அவை மூன்றும் தம்முண் மயங்கு மென்றக்கால், வழூஉவென்ற தில்லையாம் பிற வெனின், அற்றன்று, எவ்வாற்றானும் மயங்கா மூன்று காலமும்; மேற் காட்டின உதாரண முடிபுபோல்வன படுவழி வழக்கிற்கு ஏற்றவாறு மயங்கும்; அன்ன வழக்கு உள்வழி என்பது. (49) ஆறாவது வினையியல் முற்றிற்று. அடிக்குறிப்புகள் 1. இப்பகுதிகள் சில ஏடுகளில் காணப்படவில்லை. 2. இப்பகுதிகள் சில ஏடுகளில் காணப்படிவல்லை. 3. இப்பகுதிகள் சில ஏடுகளில் காணப்படவில்லை. இடையியல் இடைச்சொற்களின் இலக்கணமுணர்த்தினமையால் இடையியலென்னும் பெயர்த்தாயிற்று. பெயரையும் வினையையும் சார்ந்து தோற்றுதலின் அவற்றின்பின் கூறப்பட்டது மொழிக்கு முன்னும் பின்னும் வருமாயினும் பெரும்பான்மையும் இடைவருதலின் இடைச்சொல்லாயிற்று என்பர் சேனாவரையர். இடைச்சொல்லாவது பெயரும் வினையும்போலத் தனித்தனியே பொருளுணர உச்சரிக்கப்படாது பெயர் வினைகளைச் சார்ந்து புலப்படுமென்றும் பெயரும் வினையும் இடமாகநின்று பொருளுணர்த்தலின் இடைச்சொல்லாயிற் றென்றும் கூறுவர் தெய்வச்சிலையார். பொருளையும் பொருளது புடை பெயர்ச்சியையுந் தம்மாலன்றித் தத்தங்குறிப்பாலுணர்த்துஞ் சொற்கள் பெயர்ச்சொல் வினைச்சொற்களுமாகாது அவற்றின் வேறுமாகாது இடை நிகரனவாய் நிற்றலின் இடைச்சொல்லெனப் பட்டன என்பர் சிவஞான முனிவர். இவ்வியலிலுள்ள சூத்திரங்கள் 48. இவற்றை 47-ஆகக் கொள்வர் தெய்வச்சிலையார். இடைச்சொல்லென்று சொல்லப்படுவன பெயரும் வினையும் உணர்த்தும் பொருளைச் சார்ந்துநின்று அவற்றையே வெளிப்படுத்து நிற்றலல்லது தமக்கென வேறு பொருளில்லாதன் என்பர் ஆசிரியர். எனவே அவை பொருளுணர்த்தும்வழிப் பெயர்ப் பொருண்மை யுணர்த்தியும் வினைப்பொருண்மை யுணர்த்தியும் வருவன என்பது பெறப்படும். ஒரு சொல்லோடு ஒரு சொல் புணர்ந்தியலும் வழி அப்பொருள் நிலைக்கு உதவியாகி வருவனவும், வினைச் சொற்களை முடிக்குமிடத்து அச்சொல்லகத்துக் காலங்காட்டும் உறுப்பு முதலியனவாய் நிற்பனவும், வேற்றுமையுருபுகளாய் வருவனவும், தமக்கெனப் பொருளின்றிச் சார்த்திச் சொல்லப்படும் அசைநிலைகளாய் நிற்பனவும், இசை நிறைக்க வருவனவும், தத் தங்குறிப்பாற் பொருளுணர்த்துவனவும். ஒப்புமையுணர்த்தும் உவமவுருபுகளாய் வருவனவும் என இடைச்சொற்கள் எழுவகைப்படுமென்பர் தொல்காப்பியர். அவற்றுள் ‘புணரியல் நிலையிடைப் பொருள் நிலைக்குதவுந’ என்றது அல்வழிப் பொருளுக்கு உரியன இவை வேற்றுமைப் பொருளுக்கு உரியன இவையென எளிதில் உணர்ந்து கொள்ளுதற்கு அறிகுறியாகிய இன், வற்று, முதலிய சாரியைகளை இவை எழுத்ததிகாரத்திற் சொல்லப்பட்டன. ‘வினை செயல் மருங்கிற் காலமொடு வருந’ என்றது வினைச்சொல் முடிவுபெறுமிடத்துக் காலங்காட்டியும் பால்காட்டியும் வினைச்சொல்லகத்து உறுப்பாய் நிற்பனவற்றை. இவை வினையியலுட் கூறப்பட்டன வேற்றுமைப் பொருளிடத்து உருபாய் வரும் ஐ, ஒடு, கு, இன், அது, கண் எனவரும் வேற்றுமையுருபுகள் வேற்றுமையியலிற் கூறப்பட்டன. அசைநிலையும் இசைநிறையும் தத்தங் குறிப்பிற் பொருள் செய்வனவும் ஆகிய மூவகையிடைச் சொற்களும் இவ்வியலின் கண்ணே உணர்த்தப்படுகின்றன. ஒப்புமையுணர்த்தும் இடைச் சொற்களாகிய அன்ன, ஆங்கு முதலிய உவம உருபுகள் பொருளதிகாரத்து உவம இயலில் விரித்துரைக்கப்படும். இவ்விடைச்சொற்கள் தம்மாற் சாரப்படும் சொற்கு முன்னும் பின்னும் வருதலும் தம்மீறுதிரிதலும் பிறிதோரிடைச் சொல் தம்முன்வந்து சாரப்பெறுதலும் ஆகிய இயல்பினவாம். இவ்வியலின்கண் உணர்த்தப்படும் அசைநிலை, இசைநிறை தத்தங்குறிப்பிற் பொருள்செய்வன என்னும் மூவகையிடைச் சொற்களுள் பொருள்புணர் இடைச்சொல்லாகிய தத்தங்குறிப்பிற் பொருள் செய்வனவற்றை முதற்கண்ணும், பொருள்புணரா இடைச்சொற்களாகிய அசைநிலை இசைநிறைகளை அதன் பின்னரும் உணர்த்துகின்றார். தத்தங்குறிப்பிற் பொருள்செய்யும் இடைச் சொற்களுள் பலபொருள் குறித்த இடைச்சொற்களை 4-முதல் 12-வரையுள்ள சூத்திரங்களிலும், ஒருபொருள் குறித்த இடைச்சொற்களை 13-முதல் 21-வரையுள்ள சூத்திரங்களிலும் ஆசிரியர் எடுத்தோதுகின்றார். அவர் எடுத்தோதிய இடைச்சொற்களுள் எல் என்னும் சொல் இலங்குதல் என்னும் ஒரு பொருள் குறித்த இடைச்சொல்லாகும். “எல்லென்பது உரிச்சொல் நீர்மைத்தாயினும் ஆசிரியர் இடைச்சொல்லாக ஒதினமையான் இடைச்சொல் லென்று கோடும்” என்றார் சேனாவரையர். ‘உரிச்சொல் குறைச் சொல்லாகி நிற்கும், இது குறையின்றி நிற்றலின் இடைச் சொல்லாயிற்று’ என்றார் தெய்வச்சிலையார். அசைநிலையாகவும் இசைநிறையாகவும் வரும் இடைச்சொற்களை 22-முதல் 32-வரையுள்ள சூத்திரங்களால் எடுத்துரைத்தார். உயிரெழுத்துக்களுள் ஒளகாரமல்லாத நெடில்கள் ஆறும் இரட்டித்தும் அளபெடுத்தும் தனித்தும் இடைச்சொற்களாய் நின்று ஓசையாலும் குறிப்பாலும் பொருளுணர்த்தும் முறையினை 38-ஆம் சூத்திரத்திலும், நன்றே, அன்றே, அந்தோ, அன்னோ என்பவற்றின் இறுதி நின்ற ஏகாரமும் ஓகாரமும் குறிப்பாற் பொருளுணர்த்து முறையினை 34-ஆம் சூத்திரத்திலும், மேற்கூறிய இடைச் சொல்லின்கண் இலக்கண வேறுபாடுகளையெல்லாம் 35-முதல் 46-வரையுள்ள சூத்திரங் களிலும் ஆசிரியர் விரித்துக் கூறியுள்ளார். மேற்கூறப்பட்ட இடைச்சொற்களில் இச்சொல்லுக்கு இது பொருள் என நிலைபெறச் சொல்லப்பட்டனவாயினும் அச்சொற்களின் முன்னும் பின்னும் நின்ற வினையோடும் பெயரோடும் இயைத்து நோக்க அச்சொற்கள் முற்கூறியவாறன்றி வேறு பொருளவாயும் அசைநிலையாயும் திரிந்து வேறுபடினும் அவற்றின் பொருள் நிலையை ஆராய்ந்துணர்தல் வேண்டு மெனவும், இங்கெடுத்துரைத்த இடைச்சொற்களேயன்றி இவைபோல்வன பிற வரினும் அவற்றையும் இங்குச் சொல்லிய வற்றின் இலக்கணத்தால் உணர்ந்து வகைப்படுத்துக் கொள்ளுதல் வேண்டுமெனவும் இவ்வியலிறுதியிலுள்ள புறனடைச் சூத்திரங்களால் ஆசிரியர் அறிவுறுத்துகின்றார். இதனால் ஆசிரியர் காலத்து வழங்கிய தமிழ்ச்சொற்களின் பரப்பும் இருவகை வழக்கினும் சொற்கள் பொருளுணர்த்தும் நெறியின் விரிவும் இனிது புலனாதல் காணலாம். - க. வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 214-216 ஏழாவது இடையியல் 244. இடையெனப் படுப பெயரொடும் வினையொடும் நடைபெற் றியலுந் தமக்கியல் பிலவே என்பது சூத்திரம். இவ் வோத்து என்ன பெயர்த்தோ வெனின், இடையியல் என்னும் பெயர்த்து. இச் சூத்திரம் இடைச் சொற்கெல்லாம் பொதுவாயதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. ‘அது மன்’ (புறம். 147) என்பது பெயரொடு நடைபெற்றது. ‘தமக்கியல்பிலவே’ என்றதனான், இடைச் சொற்கள் பகவின்றியே நின்றிசைப்பனவும் உள என்றவாறு (வரலாறு) உண்டான் என்னுந் தொடக்கத்தன. (1) 245. அவைதாம் புணரிய னிலையிடைப் பொருணிலைக் குதநவும் வினைசெயன் மருங்கிற் காலமொடு வருநவும் வேற்றுமைப் பொருள்வயி னுருபா குநவு மசைநிலைக் கிளவி யாகி வருநவு மிசைநிறைக் கிளவி யாகி வருநவுந் தத்தங் குறிப்பிற் பொருள்செய் குநவு மொப்பில் வழியாற் பொருள்செய் குநவுமென் றப்பண் பினவே நுவலுங் காலை. (வரலாறு) புணரியல் நிலையிடைப் பொருள்நிலைக் குதவுவன: ‘இன்னே வற்றே’(எழுத்து. புணரி. 17) என்னுந் தொடக்கத்தன. வினைசெயல் மருங்கில் காலமொடு வருவன: ‘அன் ஆன்’ - ‘அம் ஆம்’ - (சொல். வினை. 8, 5) என்னுந் தொடக்கத்தன. வேற்றுமைப் பொருள்வயின் உருபாவன: ஐ, ஒடு, கு, இன், அது, கண், விளி (சொல். வேற்றுமை. 3) என்னுந் தொடக்கத்தன. அசை நிலைக் கிளவி: ‘கேண்மியா’, ‘கண்டிகும்’ (புறம். 251) என்னுந் தொடக் கத்தன. மற்றையன முன்னே விரிக்கின்றார். (2) 246. அவைதாம் முன்னும் பின்னு மொழியடுத்து வருதலுந் தம்மீறு திரிதலும் பிறிதவ ணிலையலு மன்னவை யெல்லா முரிய வென்ப. (வரலாறு) பெயரை முன்னும் பின்னும் அடுத்து வருவன: ‘அதுமன்’ - ‘கொன்னூர்’ (குறுந். 138) என்பன. வினையை முன்னும் பின்னும் அடுக்குமாறு: ‘வருகதில் லம்மவெஞ் சேரி சேர’ (அகம். 276) ‘ஓ தந்தார், ஓ கொண்டார்’என்பன. தம்மீறு திரிந்தவை: ‘கொன்னை’, ‘மன்னை’ (சொல். இடை. 6, 4) என்பன. பிறிதவணிலையிற்று: ‘மகவினை’ என்பது. (3) 247. கழிவே யாக்க மொழியிசைக் கிளவியென் றம்மூன் றென்ப மன்னைச் சொல்லே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இடைச் சொற்களை எழு வகையென விரித்தார்; அவற்றுள் மூன்று வகை மேலே யுணர்த்தி, ஒழிந்த நான்கு வகையும் தத்தங் குறிப்பிற் பொருள் செய்குநவற்றை விரிப்பான் றொடங்கினார் அது கருத்து. (வரலாறு) ‘சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே’ (புறம். 235) எனக் கழிவின்கண் வந்தது. `பண்டு காடுமன், இனிக் கயல் பிறழும் வயலாயிற்று’ என ஆக்கத்தின்கண் வந்தது. ‘கூரியதோர் வாண்மன்’ - இனி ‘இற்றென்றானும்’ ஒரு சொல்லை ஒழிவுபட வந்தமையின் ஒழியிசை என்பது. (4) 248. விழைவே கால மொழியிசைக் கிளவியென் றம்மூன் றென்ப தில்லைச் சொல்லே. (வரலாறு) ‘வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி யரிவையைப் பெறுகதில் லம்ம யானே’ (குறுந். 14) இது விழைவின்கண் வந்தது. ‘பெற்றாங் கறிகதில் லம்மவிவ் வூரே’ (குறுந். 14) இது காலம்பற்றி வந்தது. `வருகதில் லம்மவெஞ் சேரி சேர’ (அகம். 276) என்பது, வந்தக்கால் இன்னதொன்று செய்வல் என்னும் சொல் ஒழிந்து நின்றமையான் ஒழியிசைக்கண் வந்தது. யாதானும் ஒருசொல் ஒழிவுபட வரின் அஃது ஒழியிசை எனப்படும் என்றவாறு. (5) 249. அச்சம் பயமிலி காலம் பெருமையென் றப்பா னான்கே கொன்னைச் சொல்லே. (வரலாறு) `கொன்முனை யிரவூர் போலச் சிலவா குகநீ துஞ்சு நாளே’ (குறுந். 91) என்பது அச்சத்தின்கண் வந்தது. `கொன்னே வந்தது, கொன்னே போயினார்’ என்பன பயமின்றி வந்தன. `கொன்வரல் வாடை நினதெனக் கொண்டேனோ’ என்று, நலியுங்காலை யறிந்து வந்த வாடை என்றவாறு; இது காலத்தின்கண் வந்தது. `கொன்னூர் துஞ்சினு மியாந்துஞ் சலமே’ (குறுந். 138) என்பது பெருமைக்கண் வந்தது. (6) 250. எச்சஞ் சிறப்பே யைய மெதிர்மறை முற்றே யெண்ணே தெரிநிலை யாக்கமென் றப்பா லெட்டே யும்மைச் சொல்லே. (வரலாறு) `சாத்தனும் வந்தான்’ என்றால், அவனை யன்றிப் பிறரையும் வரவு விளக்குமாகலின், அஃது எச்சவும்மை. ‘தேவரே தின்னினும் வேம்பு கைக்கும்’ (நாலடி. மெய்ம்மை. 2) என்பது சிறப்பும்மை. `குறவரும் மருளுங் குன்றத்துப் படினே’ (மலைபடு. 275) என்பதும் அது. ‘பத்தானும் எட்டானும்’ என்பது துணியாமைமேல் நின்றமையான், ஐயத்தின்கண் வந்தது. ‘கொற்றன் வருவதற்கும் உரியன்’ என்பது, வாராமையும் செப்பி நிற்குமாகலின் எதிர்மறையும்மையாயிற்று. `தமிழ்நாட்டு மூவரும் வந்தார்’ என்பது முற்றும்மை. `நிலனும் நீரும் தீயும் வளியும்’ என்பது எண்ணும்மை. `நன்றும் அன்று, தீதும் அன்று, இடைநிகர்த்தாயிற்று’ என்பது தெரிநிலையும்மை. இடைநிகர்த்தாயினமை தெரிந்தொழிந்தனம்; அவ்விரண்டும் அத்துணைத்து ஒழிய நின்றிலாமையின். ‘நெடியனும், வலியனும்’ என்பது ஆயினான் என்னும் ஆக்கத்துக் கண் வந்தது ஆக்கவும்மை. (7) 251. பிரிநிலை வினாவே யெதிர்மறை யொழியிசை தெரிநிலைக் கிளவி சிறப்பொடு தொகைஇ யிருமூன் றென்ப வோகா ரம்மே. (வரலாறு) பிரிநிலை: அவனோ கொண்டான் என்பது. வினா: அவன் அலனோ என்பது. எதிர்மறை: யானோ கொண்டேன் என்பது. ஒழியிசை: கொளலோ கொண்டான் என்பது. கோடற்குத் தகுமாயினுங் கொண்டுய்யப் போயினானல்லன் என ஒழிவுபட வந்தமையின் ஒழியிசையாயிற்று. தெரிநிலை: ‘நன்றோ? அன்று; தீதோ? அன்று. இடை நிகர்த்ததாயிற்று’ என்பது. சிறப்பு: `ஓஒ பெரியன்’ என்பது. (8) 252. தேற்றம் வினாவே பிரிநிலை யெண்ணே யீற்றசை யிவ்வைந் தேகா ரம்மே. (வரலாறு) தேற்றம்: ‘அவனே கொண்டான்’ என்பது. வினா: ‘நீயே கொண்டாய்?’ என, வினாவிச் சொல்வது. பிரிநிலை: `அவனே கொண்டான்’ என்பது; பலருள் ஒருவனைப் பிரித்துச் சொல்வது. எண்: ‘நிலனே, நீரே, தீயே, வளியே, ஆகாயமே’ எனவரும். ஈற்றசை: ‘கடல்போற் றோன்றல காடிறந் தோரே’ (அகம். 1) எனவரும் ஈற்றின்கண் என்றவாறு (9) 253. வினையே குறிப்பே யிசையே பண்பே யெண்ணே பெயரோ டவ்வறு கிளவியுங் கண்ணிய நிலைத்தே யெனவென் கிளவி. (வரலாறு) வினை: ‘கொள்ளெனக் கொண்டான்’ என்பது. குறிப்பு: ‘விண்ணென விசைத்தது’ என்பது. ‘துண்ணெனத் துடித்தது’ என்பதும் அது. இசை: ‘ஒல்லென ஒலித்தது’ என்பது. பண்பு: ‘வெள்ளென விளர்த்தது’ என்பது. எண்: ‘நிலனென வளியென’ எனவரும். பெயர்: ‘ஊரெனப்படுவது உறையூர்’ எனவரும்; ‘நாடெனப்படுவது சோணாடு’ என்பதும் அது. (10) 254. என்றென் கிளவியு மதனோ ரற்றே. (வரலாறு) வினை: `கொள்ளென்று கொண்டான்’ என்பது. குறிப்பு: `விண்ணென்று விசைத்தது’ என்பது; `துண்ணென்று துடித்தது’ என்பதும் அது. இசை: `ஒல்லென்று ஒலிக்கும்’ (ஐந்.திணையம். 28) என்பது. பண்பு: `வெள்ளென்று விளர்த்தது’ என்பது. எண் : `நிலனென்று வளியென்று’ எனவரும். பெயர்: `ஊரென்று சொல்லப்படுவது உறையூர்’ என்பது. (11) 255. விழைவின் றில்லை தன்னிடத் தியலும். இச்சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், மேல் தில் என்னும் இடைச் சொல் மூன்றன் பொருட்கும் உரித்தென்று போந்தார்; அவற்றுள் விழைவின் றில்லை தன்மை யிடத்திற்கே ஆவது. (வரலாறு) `பெறுகதில் லம்ம யானே’ (குறுந். 14) எனவரும். எனவே, மற்றைய இரண்டும் எல்லாவிடத்துக்கும் உரிய என்றவாறாம். (12) 256. தெளிவி னேயுஞ் சிறப்பி னோவு மளபி னெடுத்த விசைய வென்ப. இச்சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், மேற் கூறிப் போந்த ஏகார ஓகாரங்களின் வேறுபாடு கண்டு, ஈண்டு உணர்த்துதல் நுதலிற்று. (வரலாறு) `நீயேஎ கொண்டாய்’ `ஓஒ பெரியன்’ எனவரும். (13) 257. மற்றென் கிளவி வினைமாற் றசைநிலை யப்பா லிரண்டென மொழிமனார் புலவர். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், மேல் தத்தங் குறிப்பிற் பொருள் செய்குவன உணர்த்தினார்; இனி மற்று என்பதோர் இடைச்சொல் வினைமாற்றும் அசைநிலையுமாய் வரும் என்பது உணர்த்துகின்றார். (வரலாறு) `இஃது உண்’ என்றாற்கு, `மற்று உண்பல்’ என வினைமாற்று ஆயிற்று. யாவரோடாயினுஞ் சொல்லாடா நின்று `மற்றோமற்று’ என்னும் இடையே; அஃது அசைநிலைக் கட்டுரை. (14) 258. எற்றென் கிளவி யிறந்த பொருட்டே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இதுவும் தத்தங் குறிப்பிற் பொருள் செய்குவனவற்றின்மேல் உணர்த்துதல் நுதலிற்று. உரை: எற்று என்பது இறந்தபொருள் விளங்கி நிற்கும், என்றவாறு (வரலாறு) `எற்றென் னுடம்பி னெழினலம்’ என வரும். `எற்றேற்ற மில்லாருள் யானேற்ற மில்லாதேன்’ என்பதும் அது. இஃது இரக்கப் பொருள் மேற்று என்பது. (15) 259. மற்றைய தென்னுங் கிளவி தானே சுட்டுநிலை யொழிய வினங்குறித் தன்றே. பல பொத்தகம் கிடந்தவழி, ஒருவன் ஏவலாளனைப் பார்த்துப் ‘பொத்தகங் கொண்டுவா’ என்றால், அவன் ஒரு பொத்தகங் கொண்டுவந்த விடத்துத் தான் கருதிய பொத்தகம் அன்றெனில், ‘மற்றையது கொணா’ என்னும்; என்றக்கால், இக்கொணர்ந்ததனை யொழிக்குஞ் சொல் இக் கொணர்ந்த பொத்தகம் சுட்டிற்றாகலான், கொணர்ந்ததனை ஒழிக்குஞ் சுட்டுநிலை அதனை யொழித்து ஒழிந்த தென்று அவ்வினத்தல்லது பிறிதொன்று குறித்தது கொல்லோ எனிற் குறியா; மற்று அப் பொத்தகத்துள் ஒன்றே பின்னுங் குறித்தது எனப்படும். (16) 260. மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (வரலாறு) `கார்மன்ற என்பவள் கண்ணுள்ளே காதலர் தேர்மன்றத் தோன்றிய’ என்றக்கால், தெளிந்தாள் அவள் என்றவாறு (17) 261. தஞ்சக் கிளவி யெண்மைப் பொருட்டே. (வரலாறு) `ஏனோரோ தஞ்சம் இருபிறப்பி னோர்க்கும் வாழ்தல் அரிது’ (18) 262. அந்தி லாங்க வசைநிலைக் கிளவியென் றாயிரண் டாகு மியற்கைய வென்ப. இதுவும் தத்தங் குறிப்பிற் பொருள் செய்குவனவற்றையும் அசை நிலையையும் உணர்த்துதல் நுதலிற்று. (வரலாறு) இடஞ்சுட்டி வந்தது: `வருமே சேயிழை யந்திற், கொழுநற் காணிய’ (குறுந். 293) எனவரும். அசைநிலை: `அந்தில் கச்சினன் கழலினன்’ (அகம்.76) என வரும். (19) 263. கொல்லே யையம் (வரலாறு) இது, ‘குற்றி கொல்லோ, மகன் கொல்லோ; நாய் கொல்லோ, நரி கொல்லோ’ என வரும். (20) 264. எல்லே விளக்கம் (வரலாறு) இது, `எல்வளை’ (புறம். 24) என வரும். (21) 265. இயற்பெயர் முன்ன ராரைக் கிளவி பலர்க்குரி யெழுத்தின் வினையொடு முடிமே. உரை: இது, ஆர் என்னும் இடைச்சொல் பெயர்முன் அல்லது வாரா என்பது. (வரலாறு) ‘அரசனார் வந்தார்; பார்ப்பார் வந்தார்’ என வரும். இனி விலங்கின் மேலும், ‘யானையார் வந்தார்; நாயார் வந்தார்’ என வரும். `பெயர்முன்னர் ஆரைக்கிளவி பலர்க்குரி எழுத்தின் வினையொடு முடித்தல் இயபல’ என எல்லாப் பெயரும் அடங்க மொழி மாற்றி உரைக்க. (22) 266. அசைநிலைக் கிளவி யாகுவழி யறிதல். (வரலாறு) இது, `செல்ல மன்னார் நெடுந்தகை’ எனவரும். (23) 267. ஏவுங் குரையு மிசைநிறை யசைநிலை யாயிரண் டாகு மியற்கைய வென்ப. உரை: ஏ - இசைநிறை; குரை - அசைநிலை என நிரனிறை யாகக் கொள்க, என்றவாறு (வரலாறு) `ஏஎ வம்பல் மொழிந்தனம் யாமே’ ஏ - இசைநிறை யாயினவாறு. `பல்குரைத் துன்பங்கள் சென்று படும்’ (குறள். நல்குரவு. 5) எனக் குரை அசைநிலை. (24) 268. மாவென் கிளவி வியங்கோ ளசைச்சொல். (வரலாறு) இது, `மாயக் கடவுட் குயர்கமா வலனே’ உயர்க என்னும் வியங்கோட்கண் மா என்னுஞ் சொல் அசைநிலையாய் வந்தது. (25) 269. மியாயிக மோமதி யிகுஞ்சின் வென்னு மாவயி னாறு முன்னிலை யசைச்சொல். உரை: முன்னிலைக்கண் அசைச் சொல்லாய் வருவன இவை, என்றவாறு (வரலாறு) மியா : `கேண்மியா’ இக: `தண்டுறை யூரயாங் கண்டிக’ மோ: `காமஞ் செப்பாது கண்டது மொழிமோ’ (குறுந். 2) மதி: `சென்மதி பெரும’ இகும்: `மெல்லம் புலம்ப கண்டிகும் யாமே’ சின்: `காப்பும் பூண்டிசிற் கடையும் போகலை’ (அகம். 7) (26) 270. அவற்றுள் இகுமுஞ் சின்னு மேனை யிடத்தொடுந் தகுநிலை யுடைய வென்மனார் புலவர். (வரலாறு) இகும், தன்மைக்கண் வருமாறு: `கண்டிகு மல்லமோ கொண்க’ (ஐங்குறு. 121) என வரும். படர்க்கை: `புகழ்ந்திகு மல்லளோ பெரிதே’ என வரும். சின், தன்மைக்கண் வருமாறு: `கண்ணும் படுமோ வென்றிசின் யானே’ (நற். 61) என வரும். படர்க்கைக்கண் வருமாறு: `யாரஃ தறிந்திசி னோரே’ (குறுந். 18) என வரும். (27) 271. அம்ம கேட்பிக்கும். (வரலாறு) `அம்ம வாழி தோழி’ (ஐங்குறு. 31) என்றவழி, அது கேளாய் வாழி தோழி என்றவாறாம். (28) 272. ஆங்க வுரையசை. உரை: ஆங்க என்னும் இடைச் சொல்லதோர் கட்டுரைத் தொடர்பினிடை அசைப்பொருள் படவரும், என்றவாறு (வரலாறு) `ஆங்கக் குயிலு மயிலுங் காட்டிக்கொள லிவனை விடுத்துப் போக்கி யோள்’ என வரும். (29) 273. ஒப்பில் போலியு மப்பொருட் டாகும். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், மேல் இடைச் சொல் எழுவகைய என்று நிறுத்தவற்றுள் ஒப்பில்போலி என்னும் இடைச் சொல் உணர்த்துதல் நுதலிற்று. ஒப்பில்போலி யாவது, ஒப்பில்லாதவழி ஒப்பித்த வாசகம் பட வருவது என்பது. (வரலாறு) `மங்கலம் என்பதோர் ஊருண்டுபோலும் மழ நாட்டுள்’ என ஒப்பில்லாதவழிப் போலும் என்னும் இடைச் சொல் வந்தவாறு. (30) 274. யாகா பிறபிறக் கரோபோ மாதென வரூஉ மாயேழ் சொல்லு மசைநிலைக் கிளவி. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், அசைக்கும் இடைச்சொற்களைத் தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று. (வரலாறு) `யா பன்னிருவர் உளர்போலும் மாணாக்கர் அகத்திய னார்க்கு’ என, யா வந்தவாறு காண்க. கா: `உதுகா’ என வரும். பிற; `அதுபிற, இதுபிற, உதுபிற’ எனப் பிற வந்தவாறு. `அது பிறக்கு’ எனப் பிறக்கு வந்தவாறு. `கொடியுவணத்தவரோ’ என அரோ வந்தவாறு. `பிரியேன் வாழேன் போதெய்ய’ எனப் போ வந்தவாறு; `நீர்போ நேரிகை புகன்’ என்பதும் அது. `விளிந்தன்று மாதவத் தெளிந்தவென் னெஞ்சம்’ (நற். 178) என மாது வந்தவாறு. (31) 275. ஆக வாக லென்ப தென்னு மாவயின் மூன்றும் பிரிவி லசைநிலை. (வரலாறு) `நீ இன்னை, இனையை’ என்று ஒருவனை யொருவன் ஒன்று சொல்லுமிடத்து, அமையும் அமையும், `ஆக வாக’ என்னும்; அவ்விடத்து, ஆக என்னும் இடைச்சொல் பிரிவின்றி இரட்டித்து நின்றவாறு கண்டு கொள்க. ‘யான் உனக்கியாதும் ஆகேனோ?’ ‘என்றக்கால்’ ‘ஆகலாகல்’ என்னும் அவ்விடத்து, ஆகல் என்னும் இடைச்சொல் பிரிவின்றி வந்தவாறு காண்க: ஒருவனை யொருவன் ஒன்று சொன்னால், கேட்டு நின்றான் ஒருவன், ‘என்பதென்பது’ என்னும்; அது புகழ்ச்சி யிடத்துப் பயிற்சி உடைத்து; அறிந்து கொள்க. (32) 276. ஈரள பிசைக்கு மிறுதியி லுயிரே யாயிய னிலையுங் காலத் தானு மளபெடை நிலையுங் காலத் தானு மளபெடை யின்றித் தான்வருங் காலையு முளவென மொழிப பொருள்வேறு படுதல் குறிப்பி னிசையா னெறிப்படத் தோன்றும். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், ஒள என்னும் இடைச்சொல் மூன்று வகையாற் பொருள்படும் என்பது உணர்த்துதல் நுதலிற்று. (வரலாறு) ஆயியல் நிலையுங் காலத்தால் வருதலாவது, மேற்கூறிய மூன்றும் போல் வருதல். ஒன்று உரைக்குங்கால் இரட்டித்து, ‘ஒள, ஒள’ என வரும். அளபெடை நிலையுங்காலத்தால் வந்து, அது பொருள் படுமாறு: ‘ஒளஉ’ என வரும். யாதானும் ஒரு துன்புறவின்கண் அளபெடையின்றித் தான் வருமாறு: ‘ஒள’ என ஒரு குறிப்புப் பொருட்கண் வருவது என்றவாறு. இம் மூன்றுபொருட் பகுதியும் குறிப்பினான் வேறுபடுத்து அறிந்து கொள்க. (33) 277. நன்றீற் றேயு மன்றீற் றேயு மந்தீற் றோவு மன்னீற் றோவு மன்ன பிறவுங் குறிப்பொடு கொள்ளும். இதுவும் சொல்லுதற் குறிப்பினால் பொருள் வேறுபடும் இடைச்சொற்களை உணர்த்துதல் நுதலிற்று. (வரலாறு) நன்றீற்று ஏ: `நன்றே நன்றே’ என வரும். அன்றீற்று ஏ :`அன்றே அன்றே’ என வரும். அந்தீற்று ஓ :`அந்தோ அந்தோ’ என வரும். அன்னீற்று ஓ :`அன்னோ அன்னோ’ என வரும். (34) 278. எச்ச வும்மையு மெதிர்மறை யும்மையுந் தத்தமுண் மயங்கு முடனிலை யிலவே. உரை: எச்ச வும்மையும் எதிர்மறை யும்மையும்; தத்தமுள் மயங்கும் உடனிலையிலவே என்பது - தம்முள் மயங்கி உடனிற்குந் தன்மையில, என்றவாறு (வரலாறு) `சாத்தனும் வந்தான், கொற்றனும் வரும்’ என்பது எச்சவும்மை; அதனைச் சாத்தனும் வந்தான். கொற்றனும் வரலு முரியன் என எதிர்மறை யும்மையொடு கூட்டிச் சொல்லப்படாது என்றவாறு (35) 279. எஞ்சுபொருட் கிளவி செஞ்சொ லாயிற் பிற்படக் கிளவார் முற்படக் கிளத்தல். உரை: எஞ்சுபொருட் கிளவி என்பது - எச்சவும்மை என்றவாறு; செஞ்சொல் ஆயின் என்பது - செவ்வெண்ணாயின் என்றவாறு; பிற்படக் கிளவார் முற்படக் கிளத்தல் என்பது - கால முன்னாகச் சொல்லார்; இடமுன்னாகச் சொல்லுவார், என்றவாறு (வரலாறு) `அடகுபுலால் பாகு பாளிதமு முண்ணான் கடல்போலுங் கல்வி யவன்’ என்பதனுள், அடகு புலால் பாகு என்று செவ்வெண்ணாலே எண்ணிப் பின்னைப் பாளிதமும் என்று எச்சவும்மையை இட முன்னாக்கி வைத்து எண்ணினவாறு கண்டுகொள்க. (36) 280. முற்றிய வும்மைத் தொகைச்சொன் மருங்கி னெச்சக் கிளவி யுரித்து மாகும். (வரலாறு) ‘பத்தும் கொடான்’ என்றக்கால், எல்லாம் கொடான் என்றுமாம். `தொகைச்சொல்’ என்றதனான், எல்லாங்கொண்டாம், கொண்டார் என்றும்; எல்லாரும் வாரார் (என்றும்,) வருவர் என்றும் கொள்ளப்படும். எச்சவும்மை ஒழிவுப்பொருளை உடைத்தானதுபோல, முற் றும்மையும் ஒழிவுப் பொருள்பட வரும் என்று கொள்க. (37) 281. ஈற்றுநின் றிசைக்கு மேயெ னிறுதி கூற்றுவயி னோரள பாகலு முரித்தே. உரை: மேற்சொல்லப்பட்ட ஐந்து ஏகாரத்துள்ளும் ஈற்றசை ஏகாரம், ஓரளபாம், என்றவாறு (வரலாறு) `கடல்போற் றோன்றல காடிறந் தோரே’ (அகம். 1) என வரும். உம்மை எதிர்மறையாகலின் குறையாது நிற்றலே பெரும் பான்மை. (38) 282. உம்மை யெண்ணு மெனவெ னெண்ணுந் தம்வயிற் றொகுதி கடப்பா டிலவே. (வரலாறு) `நிலனும் நீரும் தீயும் வளியும் வெளியும் நல்ல’ எனினும் அமையும்; தொகை கொடுத்து எண்ணினும் ஆம். எனவென் எண்ணிற்கும் தொகை கொடுத்தும் கொடாதும் சொல்லி உம்மையெண்போல ஒட்டிக் கொள்க. (39) 283. எண்ணே கார மிடையிட்டுக் கொளினு மெண் ணுக்குறித் தியலு மென்மனார் புலவர். உரை: எண்ணேகாரம் இடை நின்று ஒழிந்த எண்ணால் வந்தனவற்றையும், ஏகாரவெண்ணால் எண்ணினவே என்றவாறு ஏகாரம் எண்ணிடையே நின்றது எனினும், எண்ணி வருகின்ற எண்ணேயாம் என்றுமாம் எனக் கொள்க. (வரலாறு) `தோற்ற மிசையே நாற்றஞ் சுவையே உறலோ டாங்கைம் புலனென மொழிப’ இதனுள், செவ்வெண் ஓடாநின்றே ஏகாரவெண் இடையே புகுந்தவாறு கண்டுகொள்க. (40) 284. உம்மை தொக்க வெனாவென் கிளவியு மாவீ றாகிய வென்றென் கிளவியு மாயிரு கிளவியு மெண்ணுவழிப் பட்டன. (வரலாறு) உம்மைதொக்க எனா என் கிளவி வருமாறு: `நிலனெனா, நீரெனா, தீயெனா, காலெனா’ என வரும். ஆவீறாகிய என்றென் கிளவி: `நிலனென்றா, நீரென்றா, தீயென்றா, வளியென்றா’ என வரும். (41) 285. அவற்றின் வரூஉ மெண்ணி னிறுதியும் பெயர்க்குரி மரபிற் செவ்வெ ணிறுதியு மேயி னாகிய வெண்ணி னிறுதியும் யாவயின் வரினுந் தொகையின் றியலா. (வரலாறு) எனா: `சாத்தனெனா, கொற்றனெனா, பூதனெனா, அம் மூவரும் வந்தார்’ என, எனா என்னும் எண்ணினிறுதிக்கண் மூவரும் எனத் தொகை கொடுத்து எண்ணினவாறு கண்டு கொள்க. ‘சாத்தன், கொற்றன், பூதன் என மூவரும் வந்தார்’ என வரும் செவ்வெண். `சாத்தன் என்றா, கொற்றன் என்றா, பூதன் என்றா என மூவரும் வந்தார்’ என வரும் என்றா எண். `சாத்தனே, கொற்றனே, பூதனே என மூவரும் வந்தார்’ என வரும் ஏகார எண். தொகைபெற்று முடிந்தவாறு கண்டுகொள்க. (42) 286. உம்மை யெண்ணி னுருபுதொகல் வரையார். (வரலாறு) `யானையும் தேரும் ஆளும் எறிந்தார்’ என்பது, யானையை யும் தேரையும் ஆளையும் எறிந்தார் என்றவாறு; உம்மை யெண்ணின் கண் உருபு தொக்கவா றாயிற்று. (43) 287. உம்முந் தாகு மிடனுமா ருண்டே. (வரலாறு) `நீர்க்கோழி கூய்ப் பெயர்க் குந்து’ (புறம். 395) என்பது. எட்டு வகைப்பட்ட உம்மையும் ஓரும்மை எனப்படாது, வினை செய மருங்கிற் காலமொடு வந்தது. (44) 288. வினையொடு நிலையினு மெண்ணுநிலை திரியா நினையல் வேண்டு மவற்றவற் றியல்பே. என்பது, எண் மேலே யெண்களைக் காட்டின வழியெல்லாம் பெயரொடுபடுத்தே காட்டினார்; இனி, வினையோடு அவ்வெண்களைக் காட்டுகின்றார்: (வரலாறு) `அறுத்துக் குறைத்துச் சுகிர்ந்து வகிர்ந்து இட்டான்’ எனச் செவ்வெண் வினையான் எண்ணினவாறு, அறுத்தும் குறைத்தும் சுகிர்ந்தும் வகிர்ந்தும் இட்டான் என உம்மையெண் வினையொடு கூட்டி எண்ணினவாறு. பலவெண்ணும் வினைக்கு வாரா; வருமிடத்து இத் தொடக்கத்தனவே வருவன கொள்க. `மண்டில மழுங்க மலைநிறங் கிளர வண்டின மலர்பாய்ந் தூத மீமிசைக் கண்டற் கானற் குருகின மொலிப்ப’ (அகம். 260) என, வினையொடுகூடிச் செவ்வெண் வந்தவாறு. `நினையல் வேண்டும்’ என்பது, அவ்வெண்களெல்லாம் தொகை பெற்றே நடக்கும் என்றவாறு. `சாத்தன் வந்தான், கொற்றன் வந்தான், வேடன் வந்தான், அம் மூவரும் வந்தார்; அம்மூவரும் வந்தமையாற் கலியாணம் பொலிந்தது’ எனத் தொகைபெற்று வந்தவாறு. (45) 289. என்று மெனவு மொடுவுந் தோன்றி யொன்றுவழி யுடைய வெண்ணினுட் பிரிந்தே. (வரலாறு) `உயர்திணைப் பெயரே யஃறிணைப் பெயரென் றாயிரண் டென்ப’ (தொல். எழுத். புணரியல். 15) என்புழி என்று என்பதனை முன்னுங் கூட்டி யுரைக்க. `கண்ணிமை நொடியென வவ்வே மாத்திரை’ (தொல். எழுத்து. நூன்மரபு.7) என்புழி, என என்பதனை முன்னுங் கூட்டி யுரைக்க. `நிலனே நீரே தீயே வளியே யாகா யத்தோ டைந்தே பூதம்’ என்புழி, ஒடுவினை எங்கும் கூட்டி யுரைக்க. (46) 290. அவ்வச் சொல்லிற் கவையவை பொருளென மெய்பெறக் கிளந்த வியல வாயினும் வினையொடும் பெயரொடும் நினையத் தோன்றித் திரிந்துவேறு வரினுந் தெரிந்தனர் கொளலே. மேல் ஓதப்பட்ட சொற்கள் கூறப்பட்ட இலக்கணத்த வன்றிப் பிற பொருள்பட்டு வருப வுளவேனும் கொள்க. (வரலாறு) `சென்றீ பெருமநிற் றகைக்குநர் யாரோ’ (அகம். 46) என்புழி, ஓகாரம் ஈற்றசையும் ஆயிற்று. கலங்கொண்டன கள்ளென்கோ காழ்க்கொண்டன சூடென்கோ’ என, ஓகாரம் எண்ணோகாரம் ஆயிற்று. `ஓர்கமா தோழியவர் தேர்மணிக் குரலே’ (அகம். 273) மா முன்னிலை அசைச்சொல் ஆயிற்று, வியங்கோட்கு ஓதிய அசைச்சொல். `அதுமற் கொண்கன் றேரே’ என்புழி, மன் அசைச்சொல் ஆயிற்று. (47) 291. கிளந்த வல்ல வேறுபிற தோன்றினுங் கிளந்தவற் றியலா னுணர்ந்தனர் கொளலே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இவ்வோத்திற் கெல்லாம் புறனடை உணர்த்துதல் நுதலிற்று. உரை: இது மேற் சொல்லப்பட்டன அன்றி வரும் இடைச் சொல்லும் கொள்ளப்படும், என்றவாறு அவை: காரம், கரம், கான், ஆனம், ஏனம், ஓனம் எனவும்; மாள, ஆம், மார், ஆல், தெய்ய எனவும் வரும். புறனடை என்பது நூலுள்ளே தொகாதவற்றைப் பாதுகாத்து நூற்கு முட்டாகாமை உணர்தற்பொருட்டாக வைத்து உரைப்பது. (48) ஏழாவது இடையியல் முற்றிற்று. உரியியல் உரிச்சொற்களின் இலக்கண முணர்த்தினமையால் உரியிய லென்னும் பெயர்த்தாயிற்று. இசை, குறிப்பு, பண்பு என்னும் பொருளை யுடையனவாகிப் பெயர் வினைகளைப் போன்றும் அவற்றிற்கு முதனிலையாகியும் வருவன உரிச்சொற்களாம். இசை செவியால் உணரப்படுவது, குறிப்பு மனத்தாற் குறித் துணரப்படுவது, பண்பு ஐம்பொறிகளால் உணரப்படுங் குணம். இசை குறிப்பு பண்பு என்னும் பொருட்குத் தாமே யுரியவாதலின் உரிச்சொல்லாயினவென்றும் பெரும்பான்மையும் செய்யுட்குரிய வாய் வருதலின் உரிச்சொல்லாயிற்றென் பாருமுளரென்றும் கூறுவர் சேனாவரையர், ஈறுபற்றிப் பல பொருள் விளக்கலும் உருபேற்றலுமின்றிப் பெயரையும் வினையையுஞ்சார்ந்து பொருட்குணத்தை விளக்கலின் உரிச்சொல் பெயரின் வேறென்பர் நச்சினார்க்கினியர். ஒரு வாய்பாட்டாற் சொல்லப்படும் பொருட்குத் தானும் உரித்தாகி வருவது உரிச்சொல்லென்றும், ‘ஒரு சொல் பல பொருட்குரிமை தோன்றினும் பல சொல் ஒரு பொருட்குரிமை தோன்றினும்’ என ஆசிரியர் கூறுதலால் இவ்வியல்பு புலனாமென்றும், எழுத்ததிகாரத்துள் இதனைக் குறைச் சொற்கிளவியென்று ஓதினமையால் வடநூலாசிரியர் தாது எனக் குறியிட்ட சொற்களே உரிச்சொற்களாமென்றும், தொழிற் பொருண்மை யுணர்த்தும் சொற்கள்யாவும் உரிச்சொல்லாயினும் வழக்கின்கட் பயிற்சியில்லாத சொற்கள் ஈண்டு எடுத்தோதப்படுகின்றனவென்றும், தொழிலாவது வினையங் குறிப்புமாதலின் அவ்விருவகைச் சொற்கும் அங்கமாகி வெளிப்படாதன இவ்வியலிற் கூறப்படுகின்றனவென்றும், ஈண்டுக் கூறப்படுகின்ற உரிச்சொல் சொல்லானும் குறிப்பானும் குணத்தானும் பொருள் வேறுபடுமென்றும், அவை பெயர் வினைகளைச்சார்ந்தும் அவற்றிற்கு அங்கமாகியும் வருமென்றும் கூறுவர் தெய்வச்சிலையார். இசை, குறிப்பு, பண்பு என்னும் மூன்றும் குணப் பண்புந் தொழிற் பண்புமென இரண்டா யடங்கு மென்றும், இவ்விருவகைப் பண்பும் பொருட்கு உரிமை பூண்டு நிற்றலின் அப்பண்பை யுணர்த்துஞ்சொல் உரிச்சொல்லெனப் பட்டதென்றும், நடவா முதலிய முதனிலைகளும் தொழிற் பண்பை யுணர்த்துஞ் சொற்களாதலின் அவையெல்லாம் உரிச்சொல்லேயா மென்றுங் கூறுவர். சிவஞான முனிவர். இதுகாறும் எடுத்துக்காட்டிய உரைக் குறிப்புக்களால் உரிச்சொல்லென்பன வினையும் குறிப்புமாகிய சொற்களுக் கொல்லாம் பகுதியாகிய வேர்ச் சொற்களென்பதும் குறைச் சொற்களாகிய இவற்றை முதனிலையாகக்கொண்டே எவ்வகை வினைச்சொற்களும் தோன்றுவனவென்பதும் இனிது புலனாதல் காண்க. இவ்வியலிலுள்ள சூத்திரங்களை 99-ஆக இளம்பூரணரும் 100-ஆகச் சேனாவரையரும் தெய்வச்சிலையாரும், 98-ஆக நச்சினார்க்கினியரும் பகுத்து உரை கூறியுள்ளார்கள். இசை, குறிப்பு, பண்பு என்னும் பொருளை யுணர்த்துவனவாய்ப் பெயர் வினைபோன்றும் அவற்றிற்கு முதனிலையாயும் தடுமாறி ஒருசொல் ஒருபொருட் குரித்தாதலேயன்றி ஒருசொல் பலபொருட்கும் பல சொல் ஒருபொருட்கும் உரியவாய் வருவன உரிச்சொல்லென்றும், அவை பெயரும் வினையும்போல ஈறுபற்றிப் பொருளுணர்த்த லாகாமையின் பொருள் வெளிப்படாத சொல்லைப் பொருள் வெளிப்பட்ட சொல்லோடு சார்த்தி அச்சொற்களையே யெடுத்தோதிப் பொருளுணர்த்தப்படு மென்றும் இவ்வியல் முதற் சூத்திரத்தால் உரிச்சொற்குப் பொதுவிலக்கணமும் அவற்றிற்குப் பொருளுணர்த்து முறைமையும் உணர்த்தினார் ஆசிரியர். நால்வகைச் சொற்களுள்ளும் பண்புணர்த்துவனவாகிய உரிச்சொற்களே பலவாதலின் அவற்றுள் வெளிப்படப் பொரு ளுணர்த்தும் சொற்களை எடுத்துரையாது வெளிப்பட வாராத உரிச்சொற்களுள் உறுஎன்பது முதல் எறுழ் என்பதீறாக நூற்றிருபது உரிச்சொற்களை இவ்வியல் 3-முதல் 91-வரையுள்ள சூத்திரங்களால் எடுத்தோதிப் பொருளுணர்த்துகின்றார். மேற்சொல்லப்பட்ட உரிச்சொல் எல்லாவற்றிற்கும் முன்னும் பின்னும் வந்த மொழியையறிந்து அதற்கேற்பப் பொருளுரைத்தல் வேண்டு மெனவும் மேல் ஓதப்பட்ட உரிச்சொற்கு முற்கூறிய பொருணிலையல்லது பிற பொருள் தோன்றினும் கூறப்பட்ட வற்றோடு அவற்றையுஞ் சேர்த்துக்கொள்ளுதல் வேண்டுமெனவும் வெளிப்பட வழங்காத சொற்களுக்கு வெளிப்படப் பழகிய சொற்களைக் கொண்டு பொளுணர்த்துங்கால் அங்ஙனம் பொருளுணர்த்த வந்த சொற்கும் பொருள் யாது எனப் பொருளுக்குப் பொருள் வினவுவானாயின் அவ்வினா எல்லையின்றிச் செல்லுமாதலால் பொருளுக்குப் பொருள் கூறுதலியலாதெனவும் மாணாக்கன் உணர்தற்குரிய வழிமுறை யறிந்து உணர்த்தவல்லனாயின் தான் சொல்ல எடுத்துக்கொண்ட பொருள் திரிபின்றி விளங்குமெனவும், சொற்பொருளை உணர்தற்குரிய வாயில் இதனை யுணர்வோனது அறிவைப் பற்றுக்கோடாக வுடையதாகலான் ஒருவாற்றானும் உணருந்தன்மை யொருவற்கில்லையாயின், அவனுக்குப் பொருளுணர்த்தும் வழியில்லை யெனவும் 92-முதல் 96-வரையுள்ள சூத்திரங்களால் உரிச்சொற்குப் பொருளுணரும் முறைமையும் கூறிப்போந்தார் ஆசிரியர். பொருளோடு சொல்லுக்குத் தொடர்புடைமையின் பொருளுணர்த்தும் நெறியில் எல்லாச் சொற்களும் காரணமுடைய வென்பதும், இப்பொருட்கு இச்சொல் என நியமித்தற்குரிய காரணம் நுண்ணுணர்வுடையோர்க்கன்றி ஏனையோர்க்கு விளங்கத் தோன்றாவென்பதும் மொழிப் பொருட்காரணம் விழிப்பத்தோன்றா’ என்ற சூத்திரத்தால் அறிவுறுத்தப்பட்டன. எழுத்துக்கள் முதல் நிலையும் இறுதிநிலையுமாகப் பிரிந்து பொருட் காரணத்தை யுணர்த்துதல் இவ்வுரிச்சொல்லிடத்து இயல்பிலை யென்பார் ‘எழுத்துப் பரிந்திசைத்தல் இவணியில் பின்றே’ என்றார். இவ்வுரிச்சொற்கள் குறைச்சொற்களாதலின் நின்றாங்கு பிரிப்பின்றி நின்று பொருளுணர்த்துவனவன்றி முதல்நிலையும் இறுதிநிலையுமாகப் பிரிந்து பொருளுணர்த்தா வென்பது ஆசிரியர் கருத்தாதல் புலனாம். எழுத்துப் பிரிந்திசைத்தல் இவ்வுரிச் சொல்லிடத்தில்லையேனவே, ஏனைப் பெயர்ச் சொல்லிடத்தும் வினைச்சொல்லிடத்தும் முதனிலையும் இறுதிநிலையுமாக எழுத்துக்கள் பிரிந்து பொருளுணர்த்தல் உண்டென்பது பெறப்படும். பெயர் பிரிந்தன பெயரியலுள்ளும் வினை பிரிந்தன வினையியலுள்ளும் ஈறுபற்றிப் பிரித்துரைக்கப் பட்டமை காண்க. இடைச்சொல் தனித்து நின்று பொருளுணர்த் தாமையின் பிரிதலும் பிரியாமையும் அதற்கில்லையென்பர் நச்சினார்க்கினியர். - க. வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 216-219 எட்டாவது உரியியல் 292. உரிச்சொற் கிளவி விரிக்குங் காலை யிசையினுங் குறிப்பினும் பண்பினும் தோன்றிப் பெயரினும் வினையினு மெய்தடு மாறி யொருசொற் பல்பொருட் குரிமை தோன்றினும் பலசொல் லொருபொருட் குரிமை தோன்றினும் பயிலா தவற்றைப் பயின்றவை சார்த்தித் தத்த மரபிற் சென்றுநிலை மருங்கி னெச்சொல் லாயினும் பொருள்வேறு கிளத்தல் என்பது சூத்திரம். இவ் வோத்து என்ன பெயர்த்தோ வெனின் உரிச்சொல் உணர்த்தினமையின் உரிச்சொல் ஓத்து என்னும் பெயர்த்து. இத் தலைச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், உரிச்சொற் கெல்லாம் பொதுவாயதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. உரை: உரிச்சொற்கள் தோன்றுமிடத்து இசையும் குறிப்பும் பண்பும் பற்றிப் பெயர்க்கண்ணும் வினைக்கண்ணும் சென்று பொருள்களை விளக்கும், என்றவாறு மெய் என்பது பொருள்; தடுமாறுதல் என்பது பெயர் பற்றியும் வினை பற்றியும் வரும் வரவினை நோக்கி; அவ்வாறு தடுமாறுங்கால் ஒரு சொல் பல்பொருட்கு உரிமைப்பட்டுத் தடுமாறுதலும், பல சொல் ஒரு பொருட்கு உரிமைப்பட்டுத் தடுமாறுதலும் உடைய. அவை அவ்வாறு தடுமாறித் தோன்றுதல் அவற்றிற்கு இலக்கணம்; அவ்வாறு தோன்றுங்கால் பயிலாத உரிச்சொற்களைப் பயின்ற உரிச்சொல்லோடு சார்த்தி உணரப்படும். அவ்வாறு சார்த்திச் சொல்லவே எவ்வகைப்பட்ட சொல்லாயினும் பொருள் விளங்கும். `உறுகால்’ (நற். 300) என்றக்கால், உறு என்பதனை வழக்கி னுள்ளார் பயிலாமையின், `மிகுகால்’ என்று சொல்லுப. மிகு என்பதூஉம் உரிச்சொல், அதனை நடையுள்ளார் பயின்றிராத லான், அந்நிகரனவற்றாற் பொருத்திச் சொல்ல அவை விளங்கித்தோன்றும் என்பது. இசைபற்றி நிற்பனவற்றிற்கு, `இசை சென்று நிலைமருங்கு’ எனவும், குறிப்புப்பற்றித் தோன்றுவனவற்றிற்குத் `தத்தங் குறிப்புச் சென்று நிலைமருங்கு’ எனவும் படும் என்பது. இசை பற்றித் தோன்றின, `துவைத்தலும் சிதைத்தலும்’ (தொல். உரியியல். 61) என்னுந் தொடக்கத்தன. குறிப்புப்பற்றி வந்தன, `கறுப்புஞ் சிவப்பும்’ (தொல். உரியியல். 75) என்னுந் தொடக்கத்தன. `நிறத்துரு வுரைத்தற்கு முரிய’ (உரியியல். 76) என்றாராகலின், ஆண்டுப் பண்பெனவும் வரும். ஒரு சொல்லாகப் பல பொருட்கு உரியன, `கடியென் கிளவி’ (உரியியல். 86) என்னுந் தொடக்கத்தன. பல சொல் ஒரு பொருட்கு உரியன, `உறு தவ நனி’ (உரியியல். 3) என்னுந் தொடக்கத்தன. முன், `இடைச்சொற் கிளவியு முரிச்சொற் கிளவியு மவற்றுவழி மருங்கிற் றோன்று மென்ப’ (பெயரியல். 5) என்புழி, நிரனிறை வாய்பாட்டதாகலான், அது நீக்குதற்குப் `பெயரினும் வினையினும் மெய்தடு மாறி’ என்றார் என்பது. (1) 293. வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா வெளிப்பட வாரா வுரிச்சொன் மேன. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இருவகைய உரிச்சொல், வெளிப்படுவன எனவும் வெளிப்படாதன எனவும் என, அவற்றுள் வெளிப்பட்ட உரிச்சொற்களது பொருள் சொல்ல வேண்டா; அறிந்த பொருட் பெற்றியான் பொருட் செல்லுதலில் என்பது உணர்த்தியவாறு. அவ்வாறு வெளிப்பட்ட உரிச்சொற்களாவன: கலித்தது, குழைத்தது என்னுந் தொடக்கத்தன. வெளிப்பட வாராதனவற்றை விரிக்கின்றார். (2) 294. அவைதாம் உறுதவ நனியென வரூஉ மூன்று மிகுதி செய்யும் பொருள வென்ப. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், குறிப்புப்பற்றித் தோன்றும் உரிச்சொற்கள் பலவாகலான் அவற்றுப் பகுதி முற்கூறிய தொடங்கினார். உரை: இக் கூறப்பட்ட மூன்று உரிச் சொல்லும் மிகுதிப் பொருண்மையை விளக்கும், என்றவாறு. (வரலாறு) `உறுகா லொற்ற வொல்கி’ (நற். 300) என்பது, மிகுகாலொற்ற வொல்கி என்பதாம். `தவச்சேய் நாட்டா ராயினும்’ (நற். 115) என்பது, மிகச்சேய நாட்டார் என்பதாம். `நனிசேய்த் தன்றவன் பழவிறன் மூதூர்’ (மலைபடு. 487) என்பது, மிகச்சேய்த் தன்றவன் பழவிறன் மூதூர் என்பதாம். (3) 295. உருவுட் காகும் புரையுயர் பாகும். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இதுவும் குறிப்பு. (வரலாறு) `உருவக் குதிரை’ (அகம். 1) என்றக்கால், உட்கத்தக்க குதிரை என்பதாம். `புரைய மன்ற புரையோர் கேண்மை’ (நற்றிணை. 1) என்பது, உயர உயர்ந்தோர் கேண்மை என்பதாம். (4) 296. குருவுங் கெழுவும் நிறனா கும்மே. (வரலாறு) `குருத்துளி பொழிந்தது’ `கேழ்கிள ரகலத்து’ (மதுரைக்காஞ்சி. 493) என்றக்கால், அவையிரண்டினும் நிறம் சொன்னவாறு. (5) 297. செல்ல லின்ன லின்னா மையே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இதுவும் குறிப்பு. உரை: இவை இரண்டும் நோய்ப் பொருண்மைய ஆகும், என்றவாறு (வரலாறு) `மணங்கமழ் வியன்மார் பணங்கிய செல்லல்’ (அகம். 22) என்புழி, நோய் என்பதாம்; `வெயில்புறந் தரூஉ மின்ன லியக்கம்’ (மலைபடு. 374) என்றவிடத்தும் அதுவாம். (6) 298. மல்லல் வளனே யேபெற் றாகும். (வரலாறு) `மல்லன் மாமலை’ என்றக்கால், வளனுடைய மாமலை என்பதாம். `ஏகல டுக்கம்’ (அகம். 52) என்றக்கால், பெற்றிய கல்லடுக்கம் என்பதாம். (7) 299. உகப்பே யுயர்த லுவப்பே யுவகை. (வரலாறு) `நாடுகாண மேன்மே லுகமின்’ என்பது நாடு காணக் கன்மே லேறினால் மேன்மேல் உயர்மின் என்பதாம். `உவக்குந ளாயினும் ஊடின ளாயினும்’ (அகம். 203) என்புழி, உவந்தனளாயினும் என்பதாம். (8) 300. பயப்பே பயனாம். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இவை யெல்லாங் குறிப்பு. (வரலாறு) `ஆண்பயமுந் தூக்கினென” என்புழிப் பயன் கூறியவாறு. (9) 301. பசப்பு நிறனாகும் இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இது பண்புபற்றி வந்தது. (வரலாறு) `பசப்பித்துச் சென்றார்’ என்புழி, நிறம் கூறியவாறு. (10) 302. இயைபே புணர்ச்சி இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இதுவுங் குறிப்பு. (வரலாறு) `இயைந்தொழுகும்’ என்றக்கால், பொருந்தி யொழுகும் என்பதாம். (11) 303. இசைப்பிசை யாகும். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இஃது இசைபற்றி வந்தது. (வரலாறு) `இசைந்தொழுகும்’ என்றக்கால், இசையத் தோன்றிவிடும் என்பதாம். (12) 304. அலமர றெருமர லாயிரண்டுஞ் சுழற்சி இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இதுவுங் குறிப்பு. (வரலாறு) `அலமர லாயம்’ (ஐங்குறு. 64) என்றக்கால், சுழன்றுவரல் ஆயம் என்பதாம். `தெருமர லுள்ளம்’ என்பது, சுழன்று வரும் உள்ளம் என்பதாம். (13) 305. மழவுங் குழவு மிளமைப் பொருள. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இதுவுங் குறிப்பு. (வரலாறு) `குழக்கன்று கடிதியாத்தாள்’ என்றக்கால், இளங்கன்று கடிதியாத்தாள் என்றதாம். `மழகளிறு’ (புறம். 38) என்றக்கால், இளங்களிறு என்றவாறாம். (14) 306. சீர்த்தி மிகுபுகழ். (வரலாறு) `வயக்கஞ்சால் சீர்த்தி’ என்றக்கால், மிக்கபுகழ் என்பதாம். (15) 307. மாலை யியல்பே. (வரலாறு) `இரவரன் மாலையன்’ (குறிஞ்சிப்பாட்டு. 239) என்றவழி, இரவின் வரும் இயல்பினன் என்றதாம். (16) 308. கூர்ப்புங் கழிவு முள்ளது சிறக்கும். (வரலாறு) `உப்புக் கூர்ந்தது’ `உப்புக் கழிந்தது’ என்பன, சிறப்புச் சொல் லாயவாறாம். (17) 309. கதழ்வுந் துனைவும் விரைவின் பொருள. (வரலாறு) `அண்டர், கயிறிரி யெருத்திற் கதழ்ந் துறைவன்’ (குறுந். 117) என்றக்கால், விரைந்து உறைவன் என்பதாம். `துனைபறை நிவக்கும் புள்ளின் மான’ (மலைபடு. 55) என்றக்கால், விரைந்து பறக்கும் என்றவாறாம். (18) 310. அதிர்வும் விதிர்ப்பு நடுக்கஞ் செய்யும். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இவை யெல்லாங் குறிப்பு. (வரலாறு) `அதிர்கண் முரசம்’ என்றக்கால், நடுங்குகண் முரசம் என்பதாம். `விதிர்ப்புற்றுக் கண்ணிமையார்’ என்றக்கால், நடுக்குற்று என்பதாம். (19) 311. வார்தல் போக லொழுகன் மூன்று நேர்பு நெடுமையுஞ் செய்யும் பொருள. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இது பண்புபற்றி வந்தது. (வரலாறு) `வார் கயிற் றொழுகை’ (அகம். 173) என்றக்கால், நேர் கயிற்றொழுகை என்பதூஉம், நெடுங்கயிற் றொழுகை என்பதூஉமாம். `போகு கொடி’ `ஒழுகு கொடி’ என்புழியும், அவ்விரு பொருளும் படும். (20) 312. தீர்தலுந் தீர்த்தலும் விடற்பொருட் டாகும். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இதுவுங் குறிப்பு. (வரலாறு) `ஊரிற் றீர்ந்தான்’ என்றக்கால், ஊரிற் பற்றுவிட்டான் என்பதாம். `பேய் தீரத்தான்’ என்றக்கால், பேய் விடுவித்தான் என்பதாம். (21) 313. கெடவரல் பண்ணை யாயிரண்டும் விளையாட்டு (வரலாறு) `கெடவர லாயம்’ என்றக்கால், விளையாட் டாயம் என்பதாம். `பண்ணைத் தோன்றிய வெண்ணான்கு பொருளும்’ (தொல். மெய்ப்பாட்டு. 1) என்றக்கால், விளையாட்டுள் தோன்றிய பொருள் என்பதாம். (22) 314. தடவுங் கயவும் நளியும் பெருமை. (வரலாறு) `தடந்தோள்’ `கயவெள் ளருவி’ (அகம். 38) `நளிமலை நாடன்’ (புறம். 150) எனவரும். (23) 315. அவற்றுள் தடவென் கிளவி கோட்டமுஞ் செய்யும். உரை: தட என்பது பெருமையே யன்றிக் கோட்டப் பொருளினையும் விளக்கும், என்றவாறு (வரலாறு) `தடமருப் பெருமை’ (நற். 120) என வரும். (24) 316. கயவென் கிளவி மென்மையுஞ் செய்யும். (வரலாறு) `கயந்தலை மடப்பிடி’ (நற்றிணை. 137) என வரும். (25) 317. நளியென் கிளவி செறிவு மாகும். உரை: நளி என்னும் சொல் பெருமையே யன்றிச் செறிவுப் பொருளும் படும், என்றவாறு (வரலாறு) `நளியிருள்’ என்றக்கால், செறியிருள் என்பதாம். மூன்றிடத்து உம்மையும் இறந்தது தழீஇயின. (26) 318. பழுது பயமின்றே. (வரலாறு) `பழுதே வந்தார்’ என்றக்கால் பயமின்றியே வந்தார் என்பதாம். (27) 319. சாயன் மென்மை. (வரலாறு) `சார னாடன் சாயன் மார்பு’ (பதிற்றுப். 16) என்றக்கால், மெல்லிய மார்பு என்பதாம். (28) 320. முழுதென் கிளவி யெஞ்சாப் பொருட்டே. (வரலாறு) முழுக்கறை பெய்தான்’ என்றக்கால் எஞ்சாமை பெய்தான் என்பதாம். (29) 321. வம்பு நிலையின்மை (வரலாறு) `வம்ப வடுகர்’ (அகம். 375) `வம்ப நாரை’ (அகம். 190) என்றக்கால், நிலையில்லாமை கூறியவாறாம். (30) 322. மாதர் காதல். (வரலாறு) `மாதர் வண்டொடு சுரும்பிசைத்தது’ என்றக்கால், காதல் வண்டு என்பதாம். (31) 323. நம்பு மேவு நசையா கும்மே. (வரலாறு) `நயந்துநாம் விட்ட நன்மொழி நம்பி’ (அகம். 198) என்றக்கால், நச்சி என்பதாம். `பேரிசை நவிர மேஎ யுறையும்’ (மலைபடு. 82) என்றக்கால், நயந்து உறையும் என்பதாம். (32) 324. ஓய்த லாய்த னிழத்தல் சாஅ யாவயி னான்கு முள்ளத னுணுக்கம். (வரலாறு) `ஓய்கலை யொருத்தல்’ என்றக்கால், நுணுகிய கலை யொருத்தல் என்பதாம். `கையு மெய்யு மாய்ந் திருந்தார்’ என்றக்கால், சுருங்கியிருந்தார் என்பதாம். `நிழத்த யானை மேய்புலம் படர” (மதுரைக்காஞ்சி 303) என்றக்கால், மெலிந்து நுணுகிய என்பதாம். `கயலற லெதிரக் கடும்புனற் சாஅய்’ (நெடுநல். 18) என்றக்கால், சுருங்கி என்பதாம். (33) 325. புலம்பே தனிமை. (வரலாறு) `புலம்புவிட் டிருந்தார்’ (மலைபடு. 49) என்றக்கால், தனிமை துறந்திருந்தார் என்பதாம். (34) 326. துவன்று நிறைவாகும். (வரலாறு) `ஆரியர் துவன்றிய பேரிசை யிமயம்’ (பதிற்றுப். 11) என்றக்கால், நிறைந்த மூதூர் என்பதாம். (35) 327. முரஞ்சன் முதிர்வே. (வரலாறு) `கோடுபல முரஞ்சிய கோளி யாலம்’ (மலைபடு. 268) என்றக்கால், முதிர்ந்த ஆலம் என்பதாம். (36) 328. வெம்மை வேண்டல். (வரலாறு) `நீ வெம்மையள்’ என்றக்கால், நீ வேண்டப்படுவாள் என்பதாம். (37) 329. பொற்பே பொலிவு. (வரலாறு) `அணிகலம் பொற்ப’ என்றக்கால், பொலிய என்பதாம். (38) 330. வறிது சிறிதாகும். (வரலாறு) `வறிது நெறியொரீஇ’ என்றக்கால், சிறிது நெறி ஒரீஇ என்பதாம். (39) 331. ஏற்ற நினைவுந் துணிவு மாகும். (வரலாறு) `ஏற்றத் திருந்தார்’ என்றக்கால், நினைத்திருந்தார் என்பதூஉம், துணிந் திருந்தார் என்பதூஉம் ஆம். (40) 332. பிணையும் பேணும் பெட்பின் பொருள. உரை: பெட்டல் என்பது புறந்தருதல் (வரலாறு) `அரும்பிணை பயக்கற்ற வேட்ட ஞான்று’ என்றக்கால், அரும்புறந்தரு வரவிற்றாகி வேட்ட போழ்து என்பதாம். `பேணினே னல்லனோ மகிழ்ந’ (அகம். 16) என்றக்கால், பெட்டேனல்லனோ மகிழ்ந என்பதாம். (41) 333. பணையே பிழைத்தல் பெருப்பு மாகும். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இவையெல்லாங் குறிப்புச் சொல். (வரலாறு) `பணைத்துப்போய் வீழ்ந்தது’ என்றக்கால், பிழைத்துப் போய் வீழ்ந்தது என்பதாம். `பணைத்தோள்’ (அகம். 1) என்றக்கால், பெருந்தோள் என்பதாம். (42) 334. படரே யுள்ளல் செலவு மாகும். (வரலாறு) `படர்மலி வெற்பர்’ என்றக்கால், உள்ளமலி வெற்பர் என்பதாம். (43) `ஆறு படர்ந்தார்’ என்றக்கால், சென்றா என்பதாம். 335. பையுளுஞ் சிறுமையும் நோயின் பொருள. (வரலாறு) `பையு ணல்யாழ்’ (அகம். 216) என்றக்கால், நோய் செய்யும் நல்யாழ் என்பதாம். `சிறுமை யுறுப செய்பறி யலர்’ (நற்றிணை. 1) என்றக்கால், நோயுறுப செய்யார் என்பதாம். (44) 336. எய்யாமை யறியாமை. (வரலாறு) `எய்யாமையலை’ (குறிஞ்சிப். 8) என்றக்கால், அறியா மையலை என்றவாறாம். (45) 337. நன்று பெரிதாகும். 338. தெவுக்கொளற் பொருட்டே. இரண்டு சூத்திரமும் உரைநோக்கி ஒன்றா யெழுதப்பட்டன. (வரலாறு) `நன்றுமரிது துற்றனையாற் பெரும’ (அகம். 10) என்றக்கால், பெரிதுற்றனையால் என்பதாம். `நீர்த்தெவு நிரைத்தொழுவர்’ (மதுரைக்காஞ்சி. 89) என்றக்கால், நீர்கொள்ளும் நிரைத்தொழுவர் என்பதாம். (46, 47) 339. தாவே வலியும் வருத்தமு மாகும். (வரலாறு) `கருங்கட் டாக்கலை’ (குறுந். 69) என்றவழி, வருந்திய கலை என்பதாம். `தாவி னன்பொன்’ (அகம். 212) என்றக்கால், வலியி னன்பொன் என்பதாம்; பொன்னுக்குப் போக்குடைமை வலியது. (48) 340. தெவ்வுப் பகையாகும். (வரலாறு) `தெவ்வர் தேயத்து’ (புறம். 6) என்றக்கால், பகைவர் தேயத்து என்பதாம். (49) 341. விறப்பு முறப்பும் வெறுப்புஞ் செறிவே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இவையெல்லாங் குறிப்பு. (வரலாறு) `விறந்த காப்பொடு’ என்றக்கால், செறிந்த காப்பொடு என்பதாம். `உறந்த விஞ்சி யுயர்நிலை மாடம்’ என்புழி, செறிந்த இஞ்சி என்பதாம். `வெறுத்தார்’ (புறம். 53) என்றக்கால், செறிந்தார் என்பதாம். (50) 342. அவற்றுள் விறப்பே வெரூஉப் பொருட்டு மாகும். (வரலாறு) `கோடுமுற்றி யளந்த காரொடு விறந்தே’ என்றக்கால், வெரீஇ என்பதாம். (51) 343. கம்பலை சும்மை கலியே யழுங்க லென்றிவை நான்கு மரவப் பொருள. இவை இசைபற்றி வந்தன. (வரலாறு) `ஊர் கம்பலை யுடைத்து’ என்றக்கால், அரவமுடைத்து என்பதாம்; `ஊர் சும்மை யுடைத்து’ என்பதும் அது; `கலிகெழு மூதூர்’ (அகம். 11) `அழுங்கன் மூதூர்’ (நற். 203) என்பனவும் ஒக்கும். (52) 344. அவற்றுள் அழுங்க லிரக்கமுங் கேடு மாகும். (வரலாறு) `மகனையிழந் தழுங்கினார்’ என்றக்கால், இரங்கினார் என்பதாம். `செலவ ழுங்கினார்’ என்றக்கால், செலவு கெடுத்தார் என்பதாம். இவை குறிப்புப்பற்றி வந்தன. (53) 345. கழுமென் கிளவி மயக்கஞ் செய்யும். (வரலாறு) `கழுமிய ஞாட்பு’ (களவழி. 11) என்றக்கால், மயங்கிய ஞாட்பு என்பதாம். (54) 346. செழுமை வளனுங் கொழுப்பு மாகும். (வரலாறு) `செழுஞ் செந்நெல்’ என்றக்கால், வளஞ் செந்நெல் என்பதாம். வளம் என்பது ஆக்கம். `செழுந்தடி தின்ற செந்நா யேற்றை’ என்பது, கொழுந்தடி தின்ற என்பதாம்; கொழுப்பு என்பது ஊன்பற்றிய நிணம். (55) 347. விழுமஞ் சீர்மையு மிடும்பையுஞ் செய்யும். (வரலாறு) `விழுமியர்’ என்றக்கால், சீரியர் என்பதாம். `விழுமமுற் றிருந்தார்’ என்றக்கால், இடும்பையுற் றிருந்தார் என்பதாம். (56) 348. கருவி தொகுதி. (வரலாறு) `கருவி வானம் கதழுறை சிதறி’ (அகம். 4) என்றக்கால், ஈண்டு, மின்னும் முழக்கும் காற்றும் என இத்தொடக்கத்தனவாயிற்று. (57) 349. கமநிறைந் தியலும். (வரலாறு) `கமஞ்சூன் மாமழை’ (திருமுருகு. 7) என்றக்கால், நிறைந்த சூன் மாமழை என்பதாம். (58) 350. அரியே யைம்மை. (வரலாறு) `அரிமயிர்த் திரண்முன்கை’ (புறம். 11) என்றக்கால், ஐம்மயிர்த் திரண் முன்கை என்றவாறாம். (59) 351. கவவகத் திடுமே. இவையெல்லாங் குறிப்பு. (வரலாறு) `கொடும்பூண் கவைஇய கோல மார்பு’ என்றக்கால், கொடும் பூண் அகத்திட்ட கோல மார்பு என்பதாம். (60) 352. துவைத்தலுஞ் சிலைத்தலு மியம்பலு மிரங்கலு மிசைப்பொருட் கிளவி யென்மனார் புலவர். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இவை நான்கும் இசைபற்றி வந்தன. (வரலாறு) `வரிவளை துவைப்ப’ (புறம். 158) என்றக்கால், சங்கு இசைப்ப என்பதாம். `கலையினிரலை சிலைப்ப’ என்றக்கால், அதனது குரலிசைப்பைச் சொல்லிற்றாம்: `சிலைக்கும்’ என்பதும் அது. `இயமர மியம்பும்’ எனவே, ஒலிக்கும் என்பதாம். `முரசிரங்கு முற்றம்’ என்றக்கால், இசைக்கும் என்பதாம். (61) 353. அவற்றுள் இரங்கல் கழிந்த பொருட்டு மாகும். உம்மை இறந்தது தழீஇயிற்று. `உடையதிழந் துயிரிரங்கி யிருந்தார்’ என்றக்கால், கழிவினை விளக்கும், ஈண்டு இரக்கம். (62) 354. இலம்பா டொற்க மாயிரண்டும் வறுமை. (வரலாறு) `இலம்படு புலவர்’ (மலைபடு. 576) என்றக்கால், வறுமைப்படும் என்பதாம். `ஊரை யொற்கந் தீர்க்கும்’ என்றக்கால், வறுமை தீர்க்கும் என்பதாம். (63) 355. ஞெமிர்தலும் பாய்தலும் பரத்தற் பொருள. (வரலாறு) `தண்பெரும் பந்தர்த் தருமணல் ஞெமிரிய’ (நற்றிiணை 143) என்றக்கால், பரப்பிய என்பதாம். `புண்ணுமிழ் குருதிப் புனல் பாய்ந்து’ (குறிஞ்சிப். 172) என்றக்கால், பரந்து என்பதாம். (64) 356. கவர்வுவிருப் பாகும். (வரலாறு) `கொள்ளை மாந்தரி னானாது கவரும்’ (அகம். 3) என்றக்கால், விரும்பும் என்பதாம். (65) 357. சேரே திரட்சி. (வரலாறு) `சேர்ந்துசெறி குரங்கு’ (நற். 170) என்றக்கால், திரண்டு செறி குரங்கு என்பதாம். (66) 358. வியலென் கிளவி யகலப் பொருட்டே. (வரலாறு) `வியலிரு வானம்’ என்றக்கால், அகலிரு வானம் என்பதாம். (67) 359. பேநா முருமென வரூஉங் கிளவி யாமுறை மூன்று மச்சப் பொருள. (வரலாறு) `மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள்’ (குறுந். 87) என்பது, அச்சமுதிர் கடவுள் என்பதாம். `நாம்வருந் துறைசேர்ந்து’ (அகம். 18) என்பது, அச்சமுடைய துறை போந்து என்பதாம். `உருமில் சுற்றம்’ (பெரும். 447) என்பது, அச்சமில் சுற்றம் என்பதாம். இவையெல்லாங் குறிப்பு. (68) 360. வயவலி யாகும். (வரலாறு) `வாள்வரி வேங்கை வயப்புலி’ என்பது, வலியுள்ள புலி என்பதாம். (69) 361. வாளொளி ஆகும். (வரலாறு) `கண்ணே, நோக்கி நோக்கி வாளிழந் தனவே’ (குறுந். 44) என்பது, ஒளி யிழந்தன என்பதாம். (70) 362. துயவென் கிளவி யறிவின் றிரிவே. (வரலாறு) `அறிவு துயவுறுத்தார்’ என்பது, அறிவு திரிவுறுத்தார் என்பதாம். (71) 363. உயாவே யுயங்கல். (வரலாறு) `பருந்திருந் துயாவிளி பயிற்று மியாவுயர் நனந்தலை’ (அகம். 19) என்றக்கால், உயங்கு விளி பயிற்றி என்பதாம். (72) 364. உசாவே சூழ்ச்சி. (வரலாறு) `நாமுசாக் கொள்ளாமோ’ என்பது, நாம் சூழ்ந்துகொள்ளாமோ என்பதாம். இவை குறிப்பு. (73) 365. வயாவென் கிளவி வேட்கைப் பெருக்கம். (வரலாறு) `கூழ்கண்டு வயாவினார்’ என்றவழி, வேட்கை யாயினார் என்பதாம். (74) 366. கறுப்புஞ் சிவப்பும் வெகுளிப் பொருள. (வரலாறு) `கறுத்து வந்தார்’ என்பது, வெகுண்டு வந்தார் என்பதாம். `சிவந்து நோக்கினார்’ என்பது, வெகுண்டு நோக்கினார் என்பதாம். (75) 367. நிறத்துரு வுணர்த்தற்கு முரிய வென்ப. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், அதுவே யன்றிப் பண்புப் பொருளும் படும் என்றவாறு. `உடம்பு கறுத்தது’ `கண் சிவந்தன’ என்பன, நிறத்தின் மேலும் செல்லும். (76) 368. நொசிவு நுழைவு நுணங்கு நுண்மை. இச்சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இவை பண்புபற்றி வந்தன. `நொசி மருங்குல்’ என்பது, நுண்மருங்குல் என்பதாம்; `நுழை மருங்குல்’ என்பதும் அது; `நுணங்கு மருங்குல்’ என்பதும் அது. (77) 369. புனிறென் கிளவியீன் றணிமைப் பொருட்டே. (வரலாறு) `புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி’ (அகம். 56) என்பது, ஈன்றணியவாயப் பாய்ந்தென என்பதாம். (78) 370. நனவே களனு மகலமுஞ் செய்யும். (வரலாறு) `நனவுப்புகு விறலியிற் றோன்று நாடன்’ (அகம். 82) என்றால், களம்புகு விறலியிற் றோன்று நாடன் என்பதாம். `நனந்தலை யுலகு’ (குறுந். 6) என்றக்கால், அகன்றலை யுலகு என்பதாம். (79) 371. மதவே மடனும் வலியு மாகும். (வரலாறு) `மாதர் வாண்முக மதைஇய நோக்கே’ (அகம். 130) என்பது, மடம்பட்ட நோக்கு என்பதாம். `மதகளிறு’ என்றக்கால், வலியகளிறு என்பதாம். (80) 372. மிகுதியும் வனப்பு மாகலு முரித்தே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், அவையேயன்றி இவ்விரு பொருளும் படும் என்றவாறு `மதகளிறு’ என்றக்கால், மிகுகளிறு என்பதாம். `இளம்பாண்டில், தேரூரச் செம்மாந் ததுபோல் மதைஇனள்’ (கலி. 109) என்பது, வனப்புடையள் ஆயினள் என்பதாம். (81) 373. புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி. (வரலாறு) `அறாஅ யாண ரகன்றலை நன்னாடு’ (அகம். 44) என்றக்கால், அறாத புது வருவாயை யுடைய நாடு என்பதாம். (82) 374. அமர்தன் மேவல். (வரலாறு) `கூழமர்ந் துண்டாள்’ என்பது, கூழைமேவி யுண்டாள் என்பதாம். (83) 375. யாணுக் கவினாம். (வரலாறு) `யாணது பசலை’ (நற்றிணை 50) என்றக்கால், வனப்பின்கண்ணது பசலை என்பதாம். (84) 376. பரவும் பழிச்சும் வழுத்தின் பொருள. (வரலாறு) `கடவுட் பரவினார்’ என்றக்கால், வழுத்தினார் என்பதாம். `கைதொழூஉப் பழிச்சி’ (மதுரைக். 694) என்றக்கால், வழுத்தி என்பதாம். (85) 377. கடியென் கிளவி வரைவே கூர்மை காப்பே புதுமை விரைவே விளக்க மிகுதி சிறப்பே யச்ச முன்றேற் றாயீ ரைந்து மெய்ப்படத் தோன்றும் பொருட்டா கும்மே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இதுவும் குறிப்பு. உரை: கடி என்பது இப் பத்துப் பொருளும் படும், என்றவாறு (வரலாறு) `ஊர் கடிந்தார்’ என்றக்கால், ஊரை வரைந்தார் என்பதாம். `கடி கா’ (களவழி. 29) என்பது, காப்புடைய கா என்பதாம். `கடித் தளிர்’ என்பது, புதுத் தளிர் என்பதாம். `கடிது வந்தார்’ என்றக்கால், விரைந்து வந்தார் என்பதாம். `கடும் பகல்’ (கலி. நெய். 28) என்றக்கால், விளங்கு பகல் என்பதாம். `கடும் புனல்’ (குறுந். 103) என்றக்கால், மிக்க புனல் என்பதாம்; அது சிறந்த புனல் என்பதூஉ மாம். `கடுங்கண் யானை’ (அகம். 63) என்றக்கால், அஞ்சத்தக்க யானை என்பதாம். `கடுஞ்சூ டருகுவன்’ (அகம். 110) என்றக்கால், முன்னின்று தேற்றந்தருவன் என்பதாம். (86) 378. ஐயமும் கரிப்பும் ஆகலும் உரித்தே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இவ்விரு பொருளும் படுதற்கும் உரித்து என்றவாறு. (வரலாறு) `கடுத்தன ளல்லளோ வன்னை’ என்றக்கால், ஐயுற்றனள் என்பதாம். `கடிமிளகு தின்ற கல்லா மந்தி’ என்றக்கால், கரிப்புஆர் மிளகு தின்ற என்பதாம். (87) 379. ஐவியப் பாகும். (வரலாறு) `ஐதே காமம் யானே’ (நற். 143) என்றக்கால், வியக்கத்தக்கது என்பதாம். ( 88) 380. முனைவு முனிவு ஆகும். (வரலாறு) `சேற்றுநிலை முனைஇய’ (அகம். 46) என்றக்கால், சேற்றுநிலை முனிந்த என்பதாம். (89) 381. வையே கூர்மை. (வரலாறு) `வையிலை நெடுவேல்’ என்றக்கால், கூரிலைவேல் என்பதாம். (90) 382. எறுழ்வலி ஆகும். (வரலாறு) `வாளுடை யெறுழ்த்தோள்’ (அகம். 24) என்றக்கால், வலியுடைய தோள் என்பதாம். (91) 383. மெய்பெறக் கிளந்த உரிச்சொல் எல்லாம் முன்னும் பின்னும் வருபவை நாடி ஒத்த மொழியான் புணர்த்தனர் உணர்த்தல் தத்த மரபின் தோன்றுமன் பொருளே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இது புறனடை. உரை: பொருண்மேற் சொல்லப்பட்ட உரிச்சொல் எல்லா வற்றையும் முன்னைச்சொல் பின்னைச் சொல் நோக்கி, அதற்கு இயைந்த மொழி நாடி, அவற்றொடு புணர்த்து உணர்த்துக. அவ்வாறு உணர்த்தவே தத்தம் மரபிற் றிரியாப் பொருளவாய்த் தோன்றும்; அவ்வாறு தெரிந்து உணராக்கால் கொள்ளாதாம் கருதிய பொருள் என்பது. யாதோ கொள்ளாத வாறெனின், `கடியுடை வியனகர்’ (புறம். 95) என்றக்கால், கடியென்பது கூர்மையும் விரைவும் படுமால் என்று, நகரத்துக்கண் அவை யேற்றற்க; காப்புடை நகர் என்று கொள்க, அதற்கு ஒத்த மொழியாகலின் என்பது. (92) 384. கூறிய கிளவிப் பொருணிலை யல்லது வேறுபிற தோன்றினு மவற்றொடு கொளலே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இதுவும் புறனடை. உரை: சொல்லிப் போந்த உரிச்சொற்கள் அவ்வுரியவெனப் பட்ட பொருளின ஆகாது வேறுவேறுபட்ட பொருளினவாய்த் தோன்றினும் அச் சொல்லப்பட்ட பொருளொடு படுத்துப் பொருள்படுமாறு அறிந்து கொள்க என்பதாம். `புரைப்பட்ட’ என்புழிப் புரை என்பது ஈண்டுப் பிளவுப் பொருண்மையை விளக்கிற்றாகலின், இதனையும் உயர்வுப் பொருண்மையொடு புணர்த்து இருபொருளும் அச்சொற்குப் பொருள் என்று கொள்க என்பதாம். இனிக் `கண்கதழ வெழுதினார்’ என்புழி, ஆண்டு விரைந்து எழுதினார் என்று விரைவிற் பொருள் கொள்ளற்க; சிறப்ப எழுதினார் என்று கொள்க. பிறவும் அன்ன. (93) 385. பொருட்குப்பொரு டெரியி னதுவரம் பின்றே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இதுவும் புறனடை. உரை: மேற்கூறப்பட்ட உரிச்சொல்லுள் உளவன்றே; அப் பொருட்கும் இப்பொருட்கும் உரியவென்று ஓதப்பட்டன; அவை, `உறு தவ நனி’ (தொல். உரிச். 3) என்னுந் தொடக்கத்தன. மற்று, அவற்றை மிகுதிப் பொருள் என்றார். அதுபற்றி மிகுதி யென்னை? என்றாற்கு, ஒன்றுவிடப் பெரிதாக என்பவால், எனின் அதனைக் கேட்டு ஒழியான்; பெரிது எனப்படுவது என்னை? என்றான்; எனச் சாலவாதல் என்றான்; என்பதனானும் ஒழியான், சாலவாதல் எனப்படுவது என்னை? என்றான்; என, எத்துணையும் இறங்குதல் என்றான்; என, அத் துணையும் என்னை? என்று இவ்வாறு பிரித்துச் சொற்களால் தெரிபு கூறுமேல் அது வேண்டா என விலக்கினவாறு. (94) 386. பொருட்குத் திரிபில்லை யுணர்த்த வல்லின். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இது மேற் சூத்திரத்திற்குப் புறனடை. உரை: உரிச்சொல் பிறிதலது, அது பொருள் உணருமாறு வல்லாற்குப் பிறசொற்கொணர்ந்து பொருள் உணர்த்தல் வேண்டா; திரிபின்றி அச் சொல்லினானே உணரப்படும், என்றவாறு என்னை, `உறு’ என்ற பதம் மிகுதிப் பொருட்டு என்றக்கால், அம் மிகுதியையும் அதனானே யுணரலாம்; உணருமாறு வல்லாற்குப் பிறசொற் கொணர்ந்து உரைத்தல் வேண்டா என்பது. (95) 387. உணர்ச்சி வாயி லுணர்வோர் வலித்தே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இதுவும் புறனடை. யாஞ் சொல்லிய சொல்வாயிலே பற்றி யுணர்த்துக, அத்துணை யால் உணர்வார்க்கு அதுவே உணர்ச்சி வாயிலாம்; அல்லாக்கால் அவ்வுணர்வோரை வலித்தாமாற்றால் உணர்த்துக என்பதாம். என்னை, `பரவும் பழிச்சும் வழுத்தின் பொருள’ (தொல். உரிச். 85) என்பதனால், உணராத மடவோரை மற்றொரு வாய் பாட்டால் உணர்த்துக. அல்லாக்கால், மேல் நோக்கிச் சில மலர் கொடு தூவிக் காட்ட வுணருமேல் அஃதே உணர்ச்சி வாயிலாக அறிக என்பது. (96) 388. மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இதுவும் புறனடை. உரை: மொழிப்பொருள்கள் என்பன அச்சொல்லப்பட்ட பொருள்கள் அப்பொருட்கட்டே என்றவாறாம். (97) 389. எழுத்துப்பிரிந் திசைத்த லிவணியல் பின்றே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், புறனடை போல்வதொரு விதி கூறுதல் நுதலிற்று. உரை: எழுத்துக்கள் பிரிந்திசைக்கப்படா, என்றவாறு உரிச்சொல் என்றவை பிறிதிலக்கணமும் உடைய என்பது போந்ததாம். என்னை பிறிதிலக்கணமெனின், `தம்மீறு திரிதலும் பிறிதவ ணிலையலும்’ (சூ. 246) உடைய இவையும் என்பது. யாதோவெனின், கடியென் கிளவி, `கடும்புனல்’ (குறுந். 103) என்றாயிற்று. நம்பு எனப்பட்டது, `நம்பி’ என்றாயிற்று. பிறவும் அன்ன. இனி, `உருகெழு தோற்றம்’ என்புழி, உரு என்பதூஉம் கெழுஉ என்பதூஉம் உரிச்சொல். (98) 390. அன்ன பிறவுங் கிளந்த வல்ல பன்முறை யானும் பரந்தன வரூஉ முரிச்சொ லெல்லாம் பொருட்குறை கூட்ட வியன்ற மருங்கி னினைத்தென வறியும் வரம்புதமக் கின்மையின் வழிநனி கடைப்பிடித் தோம்படை யாணையிற் கிளந்தவற் றியலாற் பாங்குற வுணர்த லென்மனார் புலவர். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின்; இதுவும் ஒரு புறனடை. உரை: அச் சொல்லிப்போந்த உரிச் சொற்களன்றி அவை போல்வன பிறவும் உலகத்துப் பலவாற்றானும் பரந்து வரும் உரிச்சொல் எல்லாவற்றையும் இசையும் குறிப்பும் பண்பும் என்னும் மூன்று வகைப்பட்ட பொருளையுஞ் சார்த்தி யுணர்த்துதற் குறை கூட்ட அம் மூன்று பொருண்மைக்கண்ணும் அவை யித்துணையே என்று வரையறுக்கும் வரையறை யின்மையின் முன்னர் உரிச்சொற்கு ஓதப்பட்ட இலக்கணத்திற் பிழையாமல் ஓம்படை யாணையிற் கிளந்தவற் றியலான் உணர்க, என்றவாறு `ஓம்படையாணை’ என்பது பாதுகாவல்பற்றிய ஆணை. `அருமை, இருமை, கருமை, சேண்மை’ என்னுந் தொடக்கத்தனவற்றைப் பிறநூலார், `இருமை பெருமையுங் கருமையுஞ் செய்யும்’ என்றும், `தொன்றென் கிளவி தொழிற்பயில் வாகும்’ என்றும் எடுத்தோதுப என்பதும் அது. (99) எட்டாவது உரியியல் முற்றிற்று. எச்சவியல் கிளவியாக்கம் முதலாக உரியியல் இறுதியாகவுள்ள இயல் களுள் உணர்த்துதற்கு இடமில்லாமையாற் கூறப்படாது எஞ்சி நின்ற சொல்லிலக்கணமெல்லாவற்றையுந் தொகுத்துணர்த்துவது இவ்வியலாதலின் எச்சவியலென்னும் பெயர்த்தாயிற்று. பத்துவகையெச்சம் உணர்த்தலால் எச்சவியல் எனப் பெயராயிற்றென்பாருமுளர். பலபொருட்டொகுதிக்கு அத் தொகுதியைச் சேர்ந்த ஒரு பொருளைப்பற்றிப் பெயரிடுங்கால் அத்தொகுதியுள் தலைமையான பொருளைப்பற்றியோ பெரும்பான்மையாகிய பொருளைப்பற்றியோ பெயரிடுதல் மரபு. அத்தகைய தலைமையாகிய பொருளாகவோ பெரும்பான்மை யாகிய பொருளாகவோ இவ்வெச்சங்களைக் கொள்ளுதற் கில்லாமையால் அவர் கூற்றுப் பொருந்தாதென்பர் சேனாவரையர். இவ்வியலிலுள்ள சூத்திரங்களை 66-ஆக இளம்பூரணரும், 67-ஆகச் சேனாவரையரும் நச்சினார்க்கினியரும் பகுத்துப் பொருளுரைப்பர். இவ்வியலிலுள்ள ‘இறப்பின் நிகழ்வின்’ (31) ‘எவ்வயின் வினையும், (32) ‘அவைதாந்தத்தங்கிளவி’ (33) என்னும் மூன்று சூத்திரங்களையும் வினையிலக் கணமாகிய இயைபு நோக்கி வினையியலிறுதியில் வைத்து உரை கூறினார் தெய்வச்சிலையார். அவருரையின்படி இவ்வியற் சூத்திரங்கள் அறுபத்தொன்றாம். இவ்வியலின்கண் 1-முதல் 15-வரையுள்ள சூத்திரங்களால் செய்யுட்குரிய சொல்லும் அவற்றது இலக்கணமும் அவற்றாற் செய்யுள் செய்யும் வழிப்படும் விகாரமும் செய்யுட் பொருள் கோளும் ஆகியவற்றையுணர்த்துகின்றார் 16-முதல் 25-வரையுள்ள சூத்திரங்களால் வேற்றுமைத்தொகை, உவமத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை ஆகிய அறுவகைத் தொகைச்சொற்களின் இயல்பினை விரித்துரைக்கின்றார். 26-முதல் 30-வரை சொல் மரபுபற்றிய வழுக்காக்கின்றார். 31-முதல் 33-வரை முற்றுச் சொற்கு இலக்கணங்கூறுகின்றார். 34-முதல் 45-வரை மேல் வினையியலுள்ளும் இடைச்சொல்லுள்ளும் முடிபு கூறப்படா தெஞ்சிநின்ற பிரிநிலையெச்சம், வினையெச்சம், பெயரெச்சம், ஒழியிசையெச்சம், எதிர்மறையெச்சம், உம்மையெச்சம், என வென்னெச்சம், சொல்லெச்சம், குறிப்பெச்சம், இசையெச்சம் ஆகிய பத்துவகை யெச்சங்களுக்கும் முடிபு கூறுகின்றார். 46- முதல் 65-வரையுள்ள சூத்திரங்களால் ஒருசார் மரபுவழுக்காத்தலும், கிளவியாக்கத்துக் கூறப்படாதெஞ்சிநின்ற மரபிலக்கணமும், ஒருசார் வழுக்காத்தலும், வினையியலுள்ளும் இடையியலுள்ளும் சொல்லாது ஒழிந்துநின்ற ஒழிபு, புதியன புகுதலும், தலைக்குறை, இடைக்குறை; கடைக்குறையாகிய விகாரமும், வேறுபடுத்தலும் வேறு பகுக்கப்படுதலுமாகிய சொல்வகையுள் இடைச்சொல் லெல்லாம் பொருளை வேறுபடுத்தும் சொல்லாதலும், உரிச்சொல்லுள்ளும் சில அவ்வாறு பொருள் வேறுபடுத்துஞ் சொல்லாதலும், வினையெச்சத்திரிபும், பொருளால் மாறுபட்ட இருசொற்கள் ஒருங்கு வருதலும்’ குறிப்பாற் பொருளுணரப் படுவனவும், ஒரு பொருள்மேல் வரும் இரண்டு சொற்கள் பிரிவின் நிற்றலும், ஒருமைக்குரிய பெயர்ச்சொல் பன்மை யுணர்த்தலும். ஆற்றுப்படைச் செய்யுளில் முன்னிலை குறித்து நின்ற ஒருமைச்சொல் பன்மையொடு முடிதலும் உணர்த்தப் படுகின்றன. இவ்வியலிறுதியிலுள்ள 66-ஆம் சூத்திரம் இச் சொல்லதிகாரத்திற்குப் புறனடையாக அமைந்துளது. செய்யுளாக்குதற்குரிய சொல்லாவன இயற்சொல், திரி சொல், திசைச்சொல், வடசொல் என நான்காம். அவற்றுள் இயற்சொல்லாவன செந்தமிழ் நிலத்தார் வழங்கும் வழக்கத்திற்குப் பொருந்தித் தத்தம் பொருளின் வழுவாமல் நடக்குஞ் சொல்லாம். ஒரு பொருளைக் கருதிய பலசொல், பல பொருளைக் கருதிய ஒருசொல் எனத் திரிசொல் இருவகைப்படும். திசைச்சொல்லாவன செந்தமிழ் வழக்கைப் பொருந்திய பன்னிரு நிலங்களினும் அவ்வந்நிலத்து வாழ்வார்தம் குறிப்பினையே பொருளாகக் கொண்டு வழங்குவன. வடசொல்லாவன வட மொழிக்கே யுரிய எழுத்தினை நீங்கி இருமொழிக்கும் பொதுவாகிய எழுத்தினையுறுப்பாகவுடைய சொற்களாம். சிறப்பெழுத்தாலாகிய வடசொற்கள் சிதைந்துவந்தனவாயினும் தமிழொலிக்கு ஏற்புடையவாயின் அறிஞர் அவற்றை விலக்கார் எனக் கூறுவர் தொல்காப்பியர். பெயர், வினை, இடை உரி யென மேற்கூறப்பட்ட நால்வகைச் சொற்களே செய்யுட் சொல்லாவன எனத் தெரிதல் வேண்டி இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என நால்வகையாகப் பகுத்துரைக்கப்பட்டன. வடசொல்லென்பது ஆரியச்சொற்போலுஞ்சொல் என்பர் இளம்பூரணர். எனவே வடசொல் யாவும் ஆரியச் சொற்களாகவே இருக்கவேண்டும் மென்ற நியதியில்லையென்பது உரையாசிரியர் கருத்தாதல் பெறப்படும். அன்றியும் ஆசிரியர் தொல்காப்பியனார் வடசொல் எனத் திசைபற்றிப் பெயர்கூறியதல்லது இன்னமொழியெனக் கூறாமையானும் வடசொற்கிளவியில் வடவெழுத்தொடு பொருந்திய ஆரியச்சொல்லும் ஏனைப்பொதுவெழுத்தான் அமைந்த தமிழ்திரி சொற்களும் உளவென்பது “வடசொற்கிளவி வடவெழுத்தொரீஇ, எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே” என ஆசிரியர் கூறுதலாற் பெறப்படுதலின், வடவெழுத்தானமைந்த ஆரியச்சொற்களும் பொதுவெழுத்தானமைந்த தமிழ் திரிசொற்களுமாக வடநாட்டில் வழங்கிய இருவகைச் சொற்களையுமே ஆசிரியர் வடசொல்லெனத் தழுவிக்கொண் டாராதல் வேண்டும். ஆரியச்சிறப்பெழுத்தால் வருவன தமிழொலிக்கேலாமையின் ‘வடவெழுத்தொரீ இ எழுத்தோடு புணர்ந்தசொல் வடசொல், என்றும் ஆரியச் சிறப்பெழுத்தாலாகிய சொற்களும் தமிழொலிக்கு இயைந்தனவாகச் சிதைந்துவரின், அவற்றையும் வடசொல்லெனத் தழுவிக்கொள்ளலாமென்றும் ஆசிரியர் கூறுதலால் தமிழோடு தொடர்பில்லாத வேற்றுமொழி யொலிகள் கலத்தல் கூடாதென்னும் வரையறை இனிது புலனாதல் காண்க. செந்தமிழ நாடாவது: வையையாற்றின் வடக்கும் மருத யாற்றின் தெற்கும் கருவூரின் கிழக்கும் மருவூரின் மேற்கும் என்பர் இளம்பூரணர் முதலியோர். இவ்வாறு உரைத்தற்குத்தக்க ஆதாரங் காணாமையானும் வையையாற்றின் தெற்காசிய கொற்கையும் கருவூரின் மேற்காகிய கொடுங்கோளூரும் மருதயாற்றின் வடக்காரிய காஞ்சியும் ஆன்னோர் கருத்துப்படி தமிழ்திரி நிலமாதல் வேண்டுமாதலானும் அவர் கூற்றுப் பொருந்தாது. “வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து வழக்குஞ் செய்யுளுமா யிருமுதலின் எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி” எனவரும் சிறப்புப் பாயிரத்துள் வடவேங்கடத்திற்கும் தென் குமரிக்கும் இடைப்பட்ட நிலப்பகுதி முழுவதையும் ‘தமிழ்கூறும் நல்லுலகம்’ எனப் பனம்பாரனார் சிறப்பித்தமையானும், கிழக்கும் மேற்கும் எல்லைகூறாது தென்குமரியெனத் தெற்கெல்லை கூறியவதனாற் குமரியின் தெற்கேயுள்ள நாடுகளையொழித்து வேங்கடமலையின் தெற்கும் குமரியின் வடக்கும் குணகடலின் மேற்கும் குடகடலின் கிழக்குமாகிய தமிழகம் முழுவதையுமே செந்தமிழ் நிலமெனத் தொல்காப்பியர் காலத் தமிழ் மக்கள் வழங்கினர் எனக் கொள்ளுதலே பொருத்தமுடையதாகும். வடவேங்கடந் தென்குமரியிடைப்பட்ட தமிழகம் ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்துப் பன்னிரு நிலங்களாகப் பகுக்கப்பட்டிருந்ததென்பது “செந்தமிழ்சேர்ந்த பன்னிரு நிலத்தும்” (எச்ச-ச) என அவ்வாசிரியர் கூறுதலால் இனிது விளங்கும். இப்பன்னிரு நிலங் களாவன: பொங்கர்நாடு, ஒளிநாடு, தென்பாண்டிநாடு, குட்டநாடு, குடநாடு, பன்றிநாடு, கற்காநாடு, சீதநாடு, பூழிநாடு, மலைநாடு, அருவாநாடு, அருவாவடதலை என்பன என்றும் இவற்றைத் தென்கீழ்பால் முதலாக வடகீழ்பாலிறுதியாக எண்ணிக்கொள்க வென்றும் கூறுவர் சேனாவரையர். ‘செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்’ என்ற தொடர்க்குச் ‘செந்தமிழ் வழங்கும் தமிழ்நாட்டின் பகுதிய வாகிய பன்னிரு நிலங்களினும்’ எனப் பொருள் கொள்ளுதலே ஆசிரியர் கருத்துக்கு ஏற்புடையதாகும். இவ்வாறுகொள்ளாது ‘செந்தமிழ்நாட்டைச் சூழ்ந்த பன்னிரண்டு நிலத்தும்’ எனப் பழைய வுரையாசிரியர்கள் பொருள்கொண்டு, செந்தமிழ் நிலம் வேறாகவும் அதனைச் சூழ்ந்த பன்னிரு நிலங்களும் வேறாகவும் கூறுப. ‘தென்பாண்டிகுட்டம்’ எனத்தொடங்கும் பழைய வெண் பாவிலும் ‘செந்தமிழ்சேர் ஏதமில் பன்னிருநாடு’ எனக் கூறப் படுதலால் இப்பன்னிரு நாடுகளும் செந்தமிழ் வழக்கினை மேற் கொண்டவை யென்பது நன்கு விளங்கும் எனவே. இப்பன்னிரண்டின்வேறாகச் செந்தமிழ் நிலமெனத் தனியே ஒரு நாடிருந்ததென்றும் அஃதொழிந்த பன்னிரு நாடுகளும் கொடுந் தமிழ் நாடுகளாமென்றுங் கூறுதல் ஆசிரியர் தொல்காப்பியனார்க்கு முரணாதல் தெளிக. செய்யுளகத்து மொழிகள் தம்முட்புணரும்முறைநிரல் நிறை, சுண்ணம், அடிமறி, மொழிமாற்று என நால்வகைப் படுமென்றார் தொல்காப்பியனார். பிற்காலத்தார் கூறும் யாற்று நீர்ப் பொருள்கோளும். அளைமறிபாப்புப் பொருள்கோளும் திரிவின்றிப் பொருள் விளக்குதலின் இயல்பாயடங்கும். கொண்டு கூட்டு சுண்ணமொழிமாற்றிலும், பூட்டுவிற் பொருள்கோள் மொழிமாற்றிலும் அடங்குமென்றும், தாப்பிசைப் பொருள்கோளில் முன்னொருசொல் வருவிக்க வேண்டுதலின் அது ‘பிரிநிலைவினையே’ என்னுஞ் சூத்திரத்துளடங்குமென்றுங் கூறுவர் தெய்வச்சிலையார். அறுவகைத் தொகை சொற்களின் இலக்கண முணர்த்துங் கால், வேற்றுமை யுருபும் உவமவுருபும் உம்மையும் வினைச்சொல் லீறும் பண்புச்சொல்லீறும் தொகுதலின் தொகையாயின வென்றும், அவ்வப் பொருள்மேல் ஒன்றும் பலவுமாகிய சொற்கள் பிளவுபாடது ஒற்றுமைப்படத் தம்முள் இயைதலின் தொகை யாயினவென்றும் உரையாசிரியர்கள் இருவகைப் பெயர்க்காரணங் கூறியுள்ளார்கள். ‘ஐம்பாலறியும் பண்புதொகு மொழியும்’ எனவும் ‘செய்யுஞ் செய்தவென்னுங் கிளவியின் மெய்யொருங்கியலுந் தொழில் தொகு மொழியும்’ எனவும் ‘உருபுதொக வருதலும்’ எனவும் ‘மெய்யுருபுதொகா விறுதியான’ எனவும் ‘பண்புதொக வரூஉங்கிளவியானும்’ எனவும் ‘உம்மைதொக்க பெயர்வயினானும்’ எனவும் வேற்றுமை தொக்க பெயர்வயிறானானும் எனவும் ‘உம்மையெஞ்சிய இருபெயர்த் தொகைமொழி’ எனவும் ஆசிரியர் தொக்கே நிற்குமெனச் சூத்திரஞ் செய்தலின், வேற்றுமை யுருபும், உவம வுருபும், உம்மும், வினைச்சொல்லீறும், பண்புணர்த்தும் ஈறும், இத்தொகைச் சொற்கள் அல்லாததோர் சொல்லும் தொக்கு நிற்றலின் தொகைச் சொல்லென்பதே அவர் கருத்தாயிற்று” என நச்சினார்க்கினியர் தொகைமொழிபற்றிய தொல்காப்பியனார் கருத்தை நன்கு விளக்கியுள்ளார். முற்றுச் சொல்லாவது இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் மூன்று காலத்தாலும், தன்மை முன்னிலை படர்க்கையென்னும் மூன்றிடத்தாலும், தொழிலாலும் குறிப்பாலும் இவ்விரண்டாய் வரும் அவ்வறுவகைச் சொல்லாம் என்பர் ஆசிரியர். மூவிடத்தும் தொழிலும் குறிப்புப்பற்றி இவ்விரண்டாய் வருதலின் அறுவகைச் சொல்லாயின. செய்கையும், பாலும், காலமும், செயப்படு பொருளும் தோன்றி முற்றி நிற்றலானும், பிறிதோர் சொல் நோக்காது முடிந்து நிற்றலானும், எப்பொழுது அவை தம் எச்சம் பெற்று நின்றனவோ அப்பொழுதே பின் யாதும் நோக்காவாய்ச் செப்பினை மூடினாற்போன்று பொருள் முற்றி அமைந்து மாறுதலானும் முற்றாயின எனக் காரணங் கூறுவர் உரையாசிரியர். பின் ‘பிரிநிலை வினையே பெயரே’ (எச்-34) என்புழிப் பெயரெச்சமும் என்புழிப் பெயரெச்சமும் வினையெச்சமுங் கூறுதலின் அவற்றோடியைய முற்றுச் சொல்லிலக்கணமும் ஈண்டுக் கூறினார். கூறவே முற்றும் பெயரெச்சமும் வினையெச்சமும் என வினைச்சொல் மூவகைத்தாதல் இனிதுணரப்படும். எஞ்சி நிற்பதோர் பொருளையுடைய சொல் எச்சச் சொல் லாகும். பிரிக்கப்பட்ட பொருளையுணர்த்துஞ் சொல் எஞ்ச நிற்பது பிரிநிலையெச்சம். வினைச்சொல் எஞ்ச நிற்பது வினையெச்சம். பெயர்ச்சொல் எஞ்ச நிற்பது பெயரெச்சம். சொல்லொழிந்த சொற்பொருண்மை யெஞ்ச நிற்பது ஒழியிசையெச்சம். தன்னின் மாறுபட்ட பொருண்மை யெஞ்ச நிற்பது எதிர்மறையெச்சம். உம்மையுடைத்தாயும் உம்மையின்றியும் வருஞ்சொற்றொடர்ப் பொருளை எச்சமாகக் கொண்டு முடிய நிற்பது உம்மையெச்சமாகும். எனவென்னும் ஈற்றையுடையதாய் வினையெஞ்ச நிற்பது எனவென்னெச்சமாகும். இவையேழும் தமக்குமேல் வந்து முடிக்கும் எச்சச் சொற்களையுடையனவாகும். சொல்லெச்சம், குறிப்பெச்சம், இசையெச்சம் என்னும் மூன்றும் ஒருதொடர்க்கு ஒழிபாய் எஞ்சிநிற்பன. எனவே இவை பிற சொற்களை விரும்பி நில்லாது சொல்லுவார் குறிப்பால் எஞ்சி நின்ற பொருளை யுணர்த்துவன வென்பர் ஆசிரியர். ஒரு சொல்லளவு எஞ்சி நிற்பன சொல்லெச்சமென்றும், தொடரா யெஞ்சுவன இசையெச்சமென்றும் இங்ஙனம் சொல்வகை யானன்றிச் சொல்லுவான் குறிப்பினால் வேறு பொருளெஞ்ச நிற்பன யாவும் குறிப்பெச்சமென்றும் கூறுப. இப்பத்தெச்சங்கட்கும் வேறு பொருள் கூறுவாருமுளர். எச்சமாவன ஒருசார் பெயரும் வினையும் இடைச்சொல்லு மாதலின் பெயரியல் முதலாயினவற்றுள் இப்பத்தையும் ஒருங் குணர்த்துதற் கிடமின்மையால் எஞ்சி நின்ற இலக்கணங்களைக் கூறும் இவ்வியலின்கண்ணே தொகுத்துக் கூறினார் ஆசிரியர். இவ்வாறே இவ்வியலிற் கூறிய ஏனையவற்றையும் பகுத்துணர்தல் கற்போர் கடனாகும். - க. வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 219-225 ஒன்பதாவது எச்சவியல் 391. இயற்சொற் றிரிசொற் றிசைச்சொல் வடசொலென றனைத்தே செய்யு ளீட்டச் சொல்லே என்பது சூத்திரம். இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின், எல்லா வோத்தினுள்ளும் எஞ்சிய பொருள்களை யுணர்த்தினமையின் எச்சவியல் என்னும் பெயர்த்து. இனி, இத் தலைச்சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இத் துணைப்பட்ட சொல்லினாற் செய்யுள் செய்யப்பெறும் என்பது உணர்த்துதல் நுதலிற்று. உரை: இயற்சொல்லும் திரிசொல்லும் திசைச்சொல்லும் வடசொல்லும் என நான்கும் செய்யுள் செய்தற்குரிய சொல்லாதல் உடைய, என்றவாறு இயற்சொல் என்பது தமிழ் வழங்கு நாட்டு விகாரமின்றித் தமிழியற்கை யிலக்கணப்பாடு செவ்வனுடைய சொல்; அவை முன்னர் உணர்த்துப. திரிசொல் என்பது செய்யுளின்ப நோக்கி அவ்வியற் சொற்களை அவ்வாய்பாடு திரித்து வேறு வாய்பாட்ட வாக்குஞ் செய்யுளுடைய சொல். என்னை, `சேரிச் சொல்லின் முட்டுற லஞ்சிச் செய்யுட்குப் புலவர் செய்துகொண் டன்றே’ என்பது1 புறச் சூத்திரம். அவைதாம் வழக்கினுள் இன்மை காரணம் அமைதல் என்ப வாகலின், அவையும் முன்னர் உணர்த்துப. திசைச்சொல் என்பது செந்தமிழ்நாட்டை அடையும் புடையுங் கிடந்த திசைநாட்டார் வழங்குஞ் சொல்; அவையும் முன்னர் உணர்த்துப. வடசொல் என்பது ஆரியச் சொற்போலுஞ் சொல்; அவை முன்னர் விரித்துரைப்ப. பெயர், வினை, இடை, உரி எனப்பட்ட நான்கு சொல்லுமே இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் எனப்பட்டன; பிறவில்லை. திரிசொல் செய்யுட்கே உரிய. ஒழிந்த மூன்றும் வழக்கிற்குரியவாகிச் செய்யுட்கும் புகும் என்றவாறு (1) 392. அவற்றுள் இயற்சொற் றாமே செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித் தம்பொருள் வழாஅமை யிசைக்குஞ் சொல்லே. இச்சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், மேல் நிறுத்த முறையானே இயற்சொல்லை யின்னவென்று இலக்கண முறைமையாற் பகுத்து உணர்த்துதல் நுதலிற்று. உரை: மேற் சொல்லப்பட்ட நான்கு சொல்லுள்ளும் இயற்சொல் என்று கூறப்படுவன செந்தமிழ் நிலத்தார் வழங்கும் வழக்கத்திற்குப் பொருந்தித் தத்தம் பொருளின் வழாமல் நடக்குஞ் சொல், என்றவாறு. அவை: சோறு, கூழ், பால், பாளிதம் என்னுந் தொடக்கத்தன. செந்தமிழ் நிலம் என்பது வையையாற்றின் வடக்கு, மருத யாற்றின் தெற்கு, கருவூரின் கிழக்கு, மருவூரின் மேற்கு. மற்று, இவற்றைத் தம் பொருள் வழாஅமை யிசைக்கும் என்பது என்னை? ஒழிந்தன தம் பொருள் வழுவுமோ எனின், அற்றன்று, நாயை ஞமலி என்ப பூழி நாட்டார், என்றக்கால் அச் சொல் எல்லா நாட்டாரும் பட்டாங்குணரார்; நாய் என்பதனை யாயின் எவ்வெத் திசை நாட்டாரும் உணர்ப என்பது. (2) 393. ஒருபொருள் குறித்த வேறுசொல் லாகியும் வேறுபொருள் குறித்த வொருசொல் லாகியு மிருபாற் றென்ப திரிசொற் கிளவி. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், முறையானே திரிசொல் இவை என்று இலக்கணத்தாற் பகுத்து உணர்த்துதல் நுதலிற்று. உரை: ஒரு பொருளைக் கருதிப் பலசொல்லான் வருதலும், பலபொருளைக் கருதி ஒருசொல்லான் வருதலும் என இருகூற்றன வாகும் திரிசொற்கள், என்றவாறு ஒரு பொருளைக் குறித்த வேறு சொல்லாகி வருவன, அடுக்கல், பிறங்கல், விண்டு, ஓங்கல் என இவை. வேறு பொருள் குறித்த ஒருசொல், உந்தி என்பது; ஆற்றிடைக் குறையும், கொப்பூழும், தேர்த்தட்டும், யாழகத்த தோர் உறுப்பும் (மனஞெழிலும்) என இவையெல்லாம் விளங்கி நிற்கும். இனி, கிள்ளை, மஞ்ஞை என்னுந் தொடக்கத்தன ஒருகூறு நிற்ப ஒருகூறு திரிந்தன; உந்தி அடுக்கல் என்னுந் தொடக்கத்தன முழுவதூஉம் வேறுபடத் திரிந்தன. பிறவும் அன்ன. (3) 394. செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தினுந் தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், நிறுத்த முறையானே திசைச் சொல் இவை என இலக்கணத்தால் பகுத்து உணர்த்துதல் நுதலிற்று. உரை: செந்தமிழ் நாட்டை அடையும் புடையுங்கிடந்த பன்னிரு நிலத்தார், தங்குறிப்பினையே இலக்கணமாகவுடைய, திசைச்சொற் கிளவிகள், என்றவாறு (வரலாறு) தாயைத் தள்ளை என்ப குடநாட்டார். நாயை ஞமலி என்ப பூழிநாட்டார். பிறவும் அன்ன. செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலமாவன: 1. பொதுங்கர் நாடு 7. சீதநாடு 2. தென்பாண்டி நாடு 8. பூழிநாடு 3. ஒளிநாடு 9. மலைநாடு 4. குட்டநாடு 10. அருவாநாடு 5. பன்றிநாடு 11. அருவாவடதலைநாடு 6. கற்காநாடு 12. குடநாடு2 என இவை. `தங்குறிப்பினவே’ என்றது அவை ஒருவாய்பாட்டவேய ல்ல; தத்தம் மரபினும் பின் வேறு வேறு வாய்பாட்ட என்றற்கும், அவர் எவ்வாறு குறித்து வழங்கினாரோ அஃதே அவற்றிற்கு இலக்கணம் என்றற்கும் என்பது. (4) 395. வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ யெழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே. இச் சூத்திரம் நிறுத்த முறையானே வடசொல் இவை என்றவற்றிற்கு இலக்கணத்தான் அறிய உணர்த்துதல் நுதலிற்று. உரை: வடசொற் கிளவி என்று சொல்லப்படுவது ஆரியத்திற்கே உரிய எழுத்தினை ஒரீஇ இருதிறத்தார்க்கும் பொதுவாய எழுத்தினை யுறுப்பாக வுடையவாகுஞ் சொல், என்றவாறு அவை, உலகம் குங்குமம் நற்குணம் என்னுந் தொடக்கத்தன. குங்குமம் என்றவிடத்து இருசாரார்க்கும் பொது எழுத்தினான் வருதலுடைமையும் ஆரியத்தானும் தமிழானும் ஒருபொருட்கே பெயராகி வழங்கி வருதலுடைமையும் அறிக. (5) 396. சிதைந்தன வரினு மியைந்தன வரையார். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இதுவும் வட சொற்கிளவி யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. உரை: இருசார் எழுத்திற்கும் ஒத்த வழக்கினான் வாராது சிதைந்து வந்தனவாயினும் பொருந்தி வந்தன வரையப்படா வடசொல் லாதற்கு என்பது. அவை, `நிதியந் துஞ்சும்’ (அகம். 227) எனவும், `தசநான் கெய்திய பணைமருள் நோன்றாள்’ (நெடுநல். 11) எனவும் வரும். (6) 397. அந்நாற் சொல்லுந் தொடுக்குங் காலை வலிக்கும்வழி வலித்தலு மெலிக்கும்வழி மெலித்தலும் விரிக்கும்வழி விரித்தலுந் தொகுக்கும்வழித் தொகுத்தலும் நீட்டும்வழி நீட்டலும் குறுக்கும்வழிக் குறுக்கலும் நாட்டல் வலிய வென்மனார் புலவர். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், அந் நான்கு வகைச் சொல்லானும் செய்யுட் செய்யுமிடத்து இவ்வறுவகைப்பட்ட விகாரமும்படச் செய்யுட் செய்யப்பெறுப என்பது உணர்த்தியவாறு. உரை: நாட்டல் வலிய என்றது - ஒருவன் நாட்டுதல் வன்மை யிலக்கணத்தினை அவை உடைய, என்றவாறு வலிக்கும்வழி வலித்தல்: குறுந்தாட் கோழி என்பதனைக் `குறுத்தாட் கோழி’ என வலித்தல். மெலிக்கும்வழி மெலித்தல்: தட்டை எனற்பாலதனை, `தண்டை’ என மெலித்தல். விரிக்கும்வழி விரித்தல்: தண்டுறைவன் எனற்பாலதனைத் `தண்ணந் துறைவன்’ (குறுந். 296) என விரித்தல். தொகுக்கும்வழித் தொகுத்தல்: மழவரை யோட்டிய எனற்பாலதனை, `மழவரோட்டிய’ (அகம். 1) எனத் தொகுத்தல். நீட்டும்வழி நீட்டல்: பச்சிலை எனற்பாலதனைப் `பாசிலை’ (புறம். 54) என நீட்டல். குறுக்கும்வழிக் குறுக்கல்: உண்டார்ந்து என்பதனை, `உண்டருந்து’ எனக் குறுக்கல். பத்து வகை விகாரத்துள் அறுவகை விகாரம் ஈண்டுக் கூறினார். இனமில்லதனை இனமுள்ளது போலச் சொல்லுதலும், இனமுள்ளதனை இனமில்லது போலச் சொல்லுதலும், `இனச்சுட் டில்லாப் பண்புகொள் பெயர்க்கொடை’ (தொல். கிளவி. 18) என்பதனுட் சொல்லிப்போந்தாம். இனி, இடைச்சொற் போக்கல், புடைச்சொற் புகுத்தல் என இரண்டும், `நிரனிறை சுண்ண மடிமறி மொழிமாற்று’ (தொல். எச்ச. 8) எனப்பட்டு அடங்கும். ( 7) 398. நிரனிறை சுண்ண மடிமறி மொழிமாற் றவைநான் கென்ப மொழிபுண ரியல்பே. என்பது, நிரனிறை, சுண்ணம், அடிமறி, மொழிமாற்று என நான்கு வகையான மொழிகள் தம்முள் புணருஞ் செய்யுளகத்து என்பது உணர்த்தியவாறு. அவையாமாறு அவற்றவற்றுச் சிறப்புச் சூத்திரங்களால் அறிக. (8) 399. அவற்றுள் நிரனிறை தானே வினையினும் பெயரினும் நினையத் தோன்றிச் சொல்வேறு நிலைஇப் பொருள்வேறு நிலையல். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், நிரனிறைப் பொருள்கோள் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. உரை: இச் சொல்லப்பட்டவற்றுள் நிரனிறையென்று சொல்லப்படுவதியாதோவெனின், வினையினானும் பெயரி னானும் ஆராயத் தோன்றிச் சொல் வேறு வேறு நிற்பப் பொருள் வேறு வேறு நின்று உணரப்படும், என்றவாறு அவற்றுள் வினையிற் றோன்றியது: `உடலு முடைந்தோடு மூழமலரும் பார்க்குங் கடலிருளாம் பல்பாம் பென்னக் கெடலருஞ்சீர்த் திங்க3 டிருமுகமாய்ச் சேர்ந்து’ என்பது, உடலும் உடைந்தோடும் பார்க்கும் மலரும் என்ற வினைச் சொற்கள் தம்முள் பொருளியைபு இன்றி வேறு நின்றன. இனிக் கடல் இருள் ஆம்பல் பாம்பு என நின்ற பெயர்ச் சொல்லும் அவ்வாறே நின்றமை யறிக. அவை தம்முள் பொருளியையுமாறு: உடலுங் கடல், உடைந்தோடும் இருள், மலரும் ஆம்பல், பார்க்கும் பாம்பு எனக் கூட்டுக. இனிப் பெயர் நிரனிறை வருமாறு: `கொடிகுவளை கொட்டைநுசுப் புண்கண் மேனி’ என வரும். இனி, அவை பொருள் கொள்ளுங்கால், கொடி நுசுப்பு, குவளை உண்கண், கொட்டை மேனி என வரும். `நினையத் தோன்றும்’ என்றதனான், மொழிமாற்றுப் போல நிற்கும் நிரனிறையும் உள என்பது. `களிறுங் கந்தும் போல நளிகடற் கூம்புங் கலனுந் தோன்றும்’ என வரும். களிறும் கந்தும் முறையானே கலனும் கூம்பும் எனற்பால; அவ்வாறு கூறாது, `கூம்பும் கலனும்’ என்றமையான், மயக்க நிரனிறை யாயிற்று என்பது. (9) 400. சுண்ணந் தானே பட்டாங் கமைந்த வீரடி யெண்சீ ரொட்டுவழி யறிந்து துணித்தன ரியற்றல். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், நிறுத்த முறையானே சுண்ணம் என்னும் பொருளாமாறு உணர்த்துதல் நுதலிற்று. உரை: சுண்ணம் எனப்படுவது இரண்டடியால் எட்டுச் சீராற் பொருந்துமாறு அறிந்து துணித்து இயற்ற வரும், என்றவாறு. (வரலாறு) `சுரையாழ வம்மி மிதப்ப வரையனைய யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப கானக நாடன் சுனை’ என வரும். இதனை ஒட்டுமாறு: மொழிகளை, `சுரை மிதப்ப, அம்மி யாழ, யானைக்கு நிலை, முயற்கு நீத்து’ எனத் துணித்து இயற்றுக. `பட்டாங் கமைந்த’ என்பது, இயைபுடைய செய்யுள் நடைக் கொத்த அடியாகல் வேண்டும் என்றற்கு என்பது. (10) 401. அடிமறிச் செய்தி யடிநிலை திரிந்து சீர்நிலை திரியாது தடுமா றும்மே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், அடிமறிப் பொருள்கோள் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. உரை: அடிமறி என்று சொல்லப்படுவது சீர் கிடந்துழியே கிடப்ப, அடிகள் முதலும் இடையும் கடையும் படச் சொல்லிக் கண்டுகொள்க. (11) 402. பொருடெரி மருங்கி னீற்றடி யிறுசீ ரெருத்துவயிற் றிரியுந் தோற்றமும் வரையா ரடிமறி யான. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், எய்தியது விலக்குதல் நுதலிற்று. உரை: அடிமறிப் பொருள்கோள், ஆராயுமிடத்து, ஈற்றடியின் இறுதிச்சீர் எருத்தத்துச் சீராய்க் கிடந்தும் வரையப்படாது என்றவாறு (வரலாறு) சார னாட நீவர லாறே வார லெனினே யானஞ் சுவலே என்புழி, அஞ்சுவல் யான் என இறுதிச் சீர் எருத்துவயிற் றிரிந்தவாறு கண்டுகொள்க. இவ்வாறு எங்கும் மாற்றுக. (12) 403. மொழிமாற் றியற்கை சொன்னிலை மாற்றிப் பொருளெதி ரியைய முன்னும் பின்னுங் கொள்வழிக் கொளாஅல். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், ஒழிந்து நின்ற மொழி மாற்றுப் பொருள்கோள் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. உரை: மொழிமாற்றினது தன்மையாவது, நின்ற சொல்லை மொழிமாற்றி, முன்னும் பின்னும் கொள்ளுமிடம் அறிந்து கொள்க, என்றவாறு (வரலாறு) `குன்றத்து மேல குவளை குளத்துள செங்கோடு வேரி மலர்’ என வரும். இதனைக் குவளை குளத்துள, செங்கோடு வேரிமலர் குன்றத்துமேல என மொழிமாற்றுக. மற்றுச் சுண்ணத்தோடு இதனிடை வேற்றுமை யென்னை யெனின், சுண்ணம் ஈரடி எண்சீருள் அவ்வாறு செய்யப்படும்; இதற்கு அன்னதோர் வரையறை யில்லை என்றவாறாம். (13) 404. த ந நு எஎனு மவைமுத லாகிய கிளைநுதற் பெயரும் பிரிப்பப் பிரியா. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், ஐயமறுத்தல் நுதலிற்று. உரை: த - ந - நு - எ எனச் சொல்லப்பட்ட நான்கு எழுத்தினையும் முதலாகவும், ன - ள- ர என்னும் மூன்று எழுத்தினையும் ஈறாகவும் உடையவாகிய தொடர்ச்சிக்கிழமை கருதிவரும் பெயரவற்றைப் பிரித்து இடையறுத்து உணரலாங் கொல்லோ எனின், அவை பிரிப்பப் பிரியா, நின்றவாற்றானே நின்று பொருள்படினன்றி என்பது. (வரலாறு) தமன் - தமள் - தமர்; நமன் - நமள் - நமர்; நுமன் - நுமள் - நுமர்; எமன் - எமள் - எமர் என வரும். உம்மையாற் பிறவும் பிரிப்பப் பிரியாதன உள; அவை, தாய் ஞாய் யாய் என வரும். வில்லி வாளி என்பனவும் பிறவும் அவ்வாறு வருவன பிரிப்பப் பிரியா என்று கொள்க. இவை ஒட்டுச் சொற் பொருளொடு நிற்பன என்றும், இவற்றை ஒருசொல் அன்று என்றும் மயங்கற்க. ஒரு சொல்லே என்பது கருத்து. (14) 405. இசைநிறை யசைநிலை பொருளொடு புணர்தலென் றவைமூன் றென்ப வொருசொல் லடுக்கே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இதுவும் வழக்கிற்கும் செய்யுட்கும் பொதுவாயதோர் முடிபு கூறுதல் நுதலிற்று. உரை: ஒருசொல் பலகால் அடுக்கி மூன்று காரணமும்படச் சொல்லப்படும், என்றவாறு. இசைநிறை எனவே, அது செய்யுள் இலக்கணம் என்பது போந்தது. (வரலாறு) `ஏஎ எஎ வம்பன் மொழிந்தனள்’ என வரும். ஒழிந்தன இரண்டும் வழக்கினுள் அடுத்து வரும். அசைநிலை: `ஒக்குமொக்கும்’ எனவும், `மற்றோ மற்றோ’ எனவும் வரும். பொருளொடு புணர்தல்: பாம்பு பாம்பு, கள்ளர் கள்ளர், படை படை, தீத்தீ எனவரும். அவற்றை இனைத்தா லடுக்கிவரும் என்பதனை முன்னர்ச் சொல்லும். (15) 406. வேற்றுமைத் தொகையே வுவமத் தொகையே வினையின் றொகையே பண்பின் றொகையே யும்மைத் தொகையே யன்மொழித் தொகையென் றவ்வா றென்ப தொகைமொழி நிலையே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், தொகைச் சொற்களைப் பெயரும் முறையும் தொகையும் உணர்த்துதல் நுதலிற்று. பெயரும் முறையும் தொகையும் அதுவே. வேற்றுமைத் தொகையை முன்வைத்தார் அது பகுதிப் படுமாகலான்; அன் மொழித் தொகையைப் பின்வைத்தார் அஃது எல்லாவற்றையும் பற்றிப் பிறக்குமாகலான். (16) 407. அவற்றுள் வேற்றுமைத் தொகையே வேற்றுமை யியல. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், நிறுத்த முறையானே வேற்றுமைத் தொகையது இலக்கணம் கூறுதல் நுதலிற்று. உரை: வேற்றுமையுருபு தொக்குநின்ற தொகைச் சொற்கள் அவ்வுருபு இருந்தாங்கே பொருள்படும், என்றவாறு அவையாவன: நிலங் கடந்தான், தாய் மூவர், கருப்பு வேலி, வரை வீழருவி, யானைக்கோடு, குன்றக் கூகை என இவை. இவற்றையும் அவ் வுருபு விரிந்தாங்கே பொருள் படுமாறு அறிந்து கொள்க. அத்தொகுதிக்கண் உருபுகள் பலவகையும் புலப்படாதே நின்றன என்ப ஒரு சாரார்; ஒரு சாரார் இல்லை என்ப. (17) 408. உவமத் தொகையே யுவம வியல. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், நிறுத்த முறையானே உவமத் தொகை யுணர்த்துதல் நுதலிற்று. உரை: உவமத் தொகைக்கண் அவ் வுருபு தொக்கு நின்றாலும் அவ் வுருபு விரிந்தாங்கே பொருள்படும், என்றவாறு உவமம் தொகுங்கால் வினை, பயன், மெய், உரு என்ற நான்கும் பற்றித் தொகும். வினையுவமம்: புலிப் பாய்த்துள் என்பது. பயவுவமம்: மழை வண்கை என்பது. மெய்யுவமம்: துடி நடு என்பது. உருவுவமம்: முத்த முறுவல் என்பது. `முத்துப் போலும் முறுவல்’ என்று உவம உருபு விரிந்து நின்றாங்கே அவ்வுருபு தொக்கநிலைமைக் கண்ணும் பொருள் ஒக்கும் என்பது. மற்று, இவ் வுவமத்தொகை யென்று காட்டின வெல்லாம் வேற்றுமை யுருபுபற்றி யன்றி வாரா. என்னை, `துடி நடு’ என்றவிடத்து, துடியை ஒக்கும் நடு, துடி நடு என்று இரண்டனுருபு பற்றி வருமாகலின், உவமத் தொகை என்றது என்னையெனின், அதற்கு ஒரு சாரார் சொல்லுவது: துடி நடு என்புழி, உவமவுருபும் வேற்றுமையுருபும் என இரண்டும் தொக்கவேனும், துடி போலும் நடு எனத் தொகைக்கு உவமப் பொருளே சிறப்புடைத்தாகலின் அது தொகை யென்பது; ஐகார வுருபு அவ்வுவம வுருபினை நோக்கி வந்தது என்ப; என்னை, துடியை நடுவாகக் கொள்ளாதாகலின் என்பது. இனி, அதற்கு மெய்யுரை வல்லார்வாய்க் கேட்டுணர்க. (18) 409. வினையின் றொகுதி காலத் தியலும். உரை: வினைச்சொல் தொகுங்கால், காலந்தோன்றத் தொகும், என்றவாறு `காலத்தியலும்’ என்றது எக்காலும் காலமுடையவாய் இயலும் என்றவாறு (வரலாறு) கொல் யானை என்பது கொன்ற யானை; கொல் யானை - கொல்லாநின்ற யானை; கொல் யானை - கொல்லும் யானை என மூன்று காலத்திற்கும் அதுவே வாய்பாடு; பிறிதில்லை. மற்றுக் கொல்யானை என்றானேல், நிகழ்காலமும் அறியலாம்; கொல்லிய ஓடுவதனைக் கண்டு, `கொல் யானை’ என்றானேல், எதிர்காலம் என்பது அறியலாம், பிறவும் அன்ன. (19) 410. வண்ணத்தின் வடிவி னளவிற் சுவையினென் றன்ன பிறவு மதன்குண நுதலி யின்ன திதுவென வரூஉ மியற்கை யென்ன கிளவியும் பண்பின் றொகையே. உரை: பண்பு தொகுமிடத்து இந் நான்கும்பற்றித் தொகும் என்பது கருத்து. வண்ணம்பற்றித் தொக்கது: கருங் குதிரை என்பது; இது விரியுங்காலை, கரியது குதிரை என விரியும். கரியதும் அதுவே, குதிரையும் அதுவே; கருமையுடைமை யிற் குதிரை கரியது எனப்பட்டது. இன்னது இது என நிற்றல் அதற்கு இலக்கணம். இன்னது என்பது கரியது என்றல்; இது என்பது குதிரை என்றல். இனி, வடிவுபற்றித் தொகுத்தல்: வட்டப் பலகை என்பது; அது விரியுங்கால், வட்டமாகியது பலகை என விரியும். ஆண்டும் இன்னது இது என்னுங் குணம் நுதலி நிற்கும். இனி, அளவுபற்றித் தொக்கது: குறுங்கோல் என்பது; அது விரியுங்கால், குறியது கோல் என விரியும். ஆண்டும் இன்னது இது என நிற்கும். இனிச் சுவைபற்றித் தொக்கது: தீங் கரும்பு என்பது; அது விரியுங்கால், தீவியது கரும்பு என விரியும். ஆண்டும் இன்னது இது என்னும் குணம் நுதலிற்று. இனி, `அன்ன பிறவும்’ என்றதனால், தண்ணீர், நறும்பூ, நன்னுதல், பருநூல் மெல்லிலை, நல்லாடை என எத்துணை யுளமன் அப்பொருள் குணம்; அக்குணம் நுதலி இன்னது இது என வருமவை யெல்லாம் பண்புத் தொகையே யென்று கொள்க என்பதாம். இனி, `என்ன கிளவியும்’ என்றதனால், கேழற்பன்றி, வேழக் கரும்பு, சகரக்கிளவி, அகரமுதல், மாமரம் என இவையுங் கொள்க. இவை ஒரு பொருட்கண் இருபெயர் பட வரும். இவற்றுக் கண்ணும் இன்னது இது என நிற்றல் ஒக்கும். கேழல் எனப்பட்டதுவும் அதுவே, பிறவும் அன்ன. மற்று, வேற்றுமைத் தொகையும் உவமத் தொகையும், வேற்றுமை யுருபும் உவம வுருபும் தொக்கமையால் தொகை யென்றல் அமையும்; ஒழிந்த வினைத்தொகையும், பண்புத் தொகையும் அவ்வாறு தொக்கு நின்றிலவால் எனின், அவ்வாறு தொகுதலேயன்று தொகையாவது. கொல் யானை என்புழிக் கொல்லும் என்னும் வினைச் சொல் ஒருகூறு நிற்ப, ஒருகூறு தொக்கமையின் வினைத்தொகை ஆயிற்று. கருங் குதிரை என்புழிக் கரியது என்னும் பண்புப் பெயர் ஒரு கூறு நிற்ப ஒருகூறு தொக்கமையின் பண்புத் தொகை ஆயிற்று. (20) 411. இருபெயர் பலபெய ரளவின் பெயரே யெண்ணியற் பெயரே நிறைப்பெயர்க் கிளவி யெண்ணின் பெயரோ டவ்வறு கிளவியுங் கண்ணிய நிலைத்தே யும்மைத் தொகையே. என்பது, இவ்வாறிடத்தும் உம்மை தொகற்பாலது என்று உணர்த்தியவாறு. இருபெயர்க்கண் தொக்கது: உவாப் பதினான்கு என்பது; அது விரியுங்கால், உவாவும் பதினான்கும் என விரியும். பலபெயர்க்கண் தொக்கது: புலி விற் கெண்டை என்பது; அது விரியுங்கால், புலியும் வில்லும் கெண்டையும் என விரியும். அளவுபற்றித் தொக்கது: தூணிப் பதக்கு என்பது; அது விரியுங்கால், தூணியும் பதக்கும் என விரியும். எண்ணியற்பெயர்பற்றித் தொக்கது: பதினைவர் என்பது; அது விரியுங்கால், பதின்மரும் ஐவரும் என விரியும். நிறைப்பெயர்பற்றித் தொக்கது: தொடியரை என்பது; அது விரியுங்கால், தொடியும் அரையும் என விரியும். எண்ணின் பெயர்பற்றித் தொக்கது: பதினொன்று என்பது; அது, பத்தும் ஒன்றும் என விரியும். மற்றும், `பலபெயர்’ என அமையாதே, `இருபெயர்’ என வேண்டியது என்னை, இரண்டையும் பல என்பவால் எனின், அற்றன்று; இரண்டனையும் பன்மையென்று வேண்டான் இவ்வாசிரியன் என்பது. ஆயின், மேல், `ஒன்றறி சொல்லே பலவறி சொல்’ (தொல். கிளவி. 3) என்புழி, இரண்டையும் பல என்று வேண்டினானா லெனின், அது விகாரம்; என்னை, இரண்டும் இரண்டிறந்த பன்மையும், `வந்தன, போயின’ என, ஒரு பன்மைச் சொல்லே யேற்குமாகலின், ஆண்டு இரண்டினைப் பலவற்றுள் அடக்கிக் கூறினார் என்பது. (21) 412. பண்புதொக வரூஉங் கிளவி யானு மும்மை தொக்க பெயர்வயி னானும் வேற்றுமை தொக்க பெயர்வயி னானு மீற்றுநின் றியலு மன்மொழித் தொகையே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், மேல் நிறுத்த முறையானே ஒழிந்துநின்ற அன்மொழித்தொகை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. உரை: அக் கூறப்பட்ட மூன்று தொகைச் சொல்லீற்றுக் கண்ணே நின்று நடக்கும் அன்மொழித்தொகை, என்றவாறு பண்புத்தொகைப் புறத்துப் பிறந்தது. வெள்ளாடை என்பது; அதனைப் படுத்தலோசையாற் சொல்ல, வெண்மைமேலும் ஆடைமேலுங் கிடவாது, அவ்வாடை யுடுத்தாள் மேல் கிடக்கும் என்பது; அந்நிறைமொழி யோசை யன்றிப் பிறிதோர் மொழி யோசைபட்டுப் பொருள்கொள்ளு மாகலான், அம் மொழி அன்மொழி யாயிற்று என்பது. அன்மொழித் தொகை யாயக்காலும் வெளியதாடை என்றே விரியும்; பிறிதில்லை. உம்மைத்தொகைபற்றிப் பிறந்தது. தகர ஞாழல் என்பது; அது விரியுங்கால், தகரமும், ஞாழலும் என விரியும். அன்னதன் றொகைக்கண் ஓசை வேறுபடச் சொல்லத் தகரத்தின் மேலும் ஞாழலின் மேலும் கிடவாது, அவை யுடையாள் மேல் கிடக்கும். இனி, வேற்றுமைத் தொகை பற்றிப் பிறந்தது: பொற்றாலி என்பது; அது விரியுங்கால், பொன்னானாய தாலி, பொற்றாலி என்பதாம். பிறிதானும் விரியும்; பின்னர், அத்தொகை பொன்மேலும் தாலிமேலும் கிடவாது. பொற்றாலி யுடையாள்மேல் நிற்கும், ஓசை வேறுபாட்டான் என்பது. இம் மூன்று தொகையும் பற்றிப் பிறத்தலின் ஒரு மிகுதிக்குறை யில்லை, ஒக்கும் என்றவாறு. மற்று தொகையதிகாரத்தின் முன் வைக்கப்பட்டதூஉம் சிறப்புடையதூஉம் வேற்றுமைத் தொகையாதலின், ஈண்டு இதனை முற் கூறாது, பண்புத்தொகை முற்கூறியது என்னை யென்னின், அதனாற் பிறவும் உள கொள்ளப்படுவன; அவை யாவையோ எனின், ஒழிந்துநின்ற உவமைத்தொகையும் வினைத் தொகையும் பற்றிப் பிறக்கும் அன்மொழித் தொகை என்பது. உவமைத்தொகை பற்றிப் பிறந்தது: அறற்கூந்தல் என்பது; அது விரியுங்கால், அறல்போலுங் கூந்தல் என விரியும். வினைத்தொகை பற்றிப் பிறந்தது: திரிதாடி என்பது; அது விரியுங்கால், திரித்த தாடி என விரியும்; அது தொக்குழி திரிவின் மேலும் தாடியின் மேலும் கிடவாது, திரித்த தாடியுடையான்மேல் நிற்கும். இவை இரண்டும் வழக்குப் பயிற்சி அவைபோல அக்காலத்து இன்மையின், இலேசுபற்றி யெடுத்துக்கொண்டார் என்பது. (22) 413. அவைதாம் முன்மொழி நிலையலும் பின்மொழி நிலையலு மிருமொழி மேலு மொருங்குட னிலையலு மம்மொழி நிலையா தன்மொழி நிலையலு மந்நான் கென்ப பொருணிலை மரபே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இதுவும் அத்தொகைக்கண்ணே கிடந்ததோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. உரை: தொகுவன இருவகை மொழிகளான், அவ்விருவகை மொழியும் இருபொருளின்பின் தொக்கவிடத்து அவற்றைச் சொல்லுவான், அத்தொகைக்கண் முன்னதன் பொருளுணர் தலுற்றுச் சொல்லுதல், பின்னதன் பொருளுணர்தலுற்றுச் சொல்லுதல், இரண்டுடன் பொரு ளுணர்தலுற்றுச் சொல்லுதல், இரண்டின் மேலும் நில்லாது பிறிதோர் பொருளுணர்தலுற்றுச் சொல்லுதல் என நால்வகை யிலக்கணத்தாற் பொருளுணர நிற்கும், என்றவாறு அவற்றுள், முன்மொழிப் பொருளுணர நின்றது, `வேங்கைப்பூ’ என்பது. முன்மொழி பின்மொழி யாதல், இடமும் காலமும் என இருவகையால் உணரப்படும். அவற்றுள் இடத்தான் முன்மொழிப் பொருளாயிற்று; காலவகை நோக்கிப் பின்மொழிப் பொருளாம். வேங்கை என்பதும் பொருள் இல்லாததன்றுமன்; அப் பொருளுடன் அறியலுற்ற பூவினை, அதனைச் சிறப்பிப்பான் வந்தது வேங்கை என்னுஞ் சொல் என்பது. இருமொழிப் பொருள் உணர நின்றது உவாப் பதினான்கு என்பது. பிறவும் உம்மைத் தொகையான் வருவனவெல்லாம் இருமொழிப் பொருள்பட நிற்கும் என உணர்க. அம் மொழிநிலையாது அன்மொழிப் பொருட்பட நின்றன, முன் அன்மொழித் தொகைப்படக் காட்டினவெல்லாம் என்பது. அவை, வெள்ளாடை என்னுந் தொடக்கத்தன. மற்று இன்னுழிப் பொருள்நிற்கும் எனின், ஒழிந்துழி யெல்லாம் பொருளில்லையாமாகாதே, ஆகவே, `எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ (தொல். பெயரி. 1) என்பதனொடு மலைக்கும் பிற எனின் மலையாது; என்னை, மற்றை யுழிப் பொருள் இல்லை என்பது அன்று; அவன் உணர்தலுறவு நோக்கி இது சொல்லினார் என்பது. (23) 414. எல்லாத் தொகையு மொருசொன் னடைய. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இதுவும் ஒட்டுச் சொற்கண்ணே கிடந்ததோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. உரை: அறுவகைத் தொகைச்சொல்லும் எழுவாய் வேற்றுமை யியல்பாம் என்று ஈண்டு எய்துவித்தார், என்பது. மற்று, ஒட்டுச் சொற்களை, `ஒருசொல் நடையன’ எனப் போந்த இலேசு என்னை யெனின், அவை பல சொன்மைப்படப் பொருளிசையா; ஒருசொல் விழுக்காடு படத் திரண்டிசைக்கும் என்பது கருத்து. அஃதினை, யானைக்கோடு, வேங்கைப்பூ என்பனவற்றான் அறிக. கற்சுனைக் குவளையிதழ் என்பதும் அது. (24) 415. உயர்திணை மருங்கி னும்மைத் தொகையே பலர்சொன் னடைத்தென மொழிமனார் புலவர். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், உம்மைத் தொகையுள் ஒருசாரனவற்றுக்கண் படுவதோர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. உரை: உயர்திணை மருங்கின் உம்மைத் தொகைச் சொல்லுக்கு இறுதி பலரைச் சொல்லுஞ் சொன்னடைத்தாக என்று சொல்லுப ஆசிரியர், என்றவாறு (வரலாறு) கபிலபரணர் என வரும். இவ்வாறு அத்தொகைச்சொல் லிறுதி பலர் சொன்னடைத் தன்றிக் கபிலன் பரணன் என னகரவீறாய் நிற்பின், அது, `வந்தான், போயினான்’ என்னும் ஒருமை வினையேற்பினல்லது, `வந்தார், போயினார்’ என்னும் பன்மைவினை ஏலா. இனிப் `பலர் சொன்னடைத்து’ எனவே அவ்விருவர் மேலும் வினையேற்கும்; அதனான் இது சொல்லினான் என்பது. மற்றுத் தொகைச் சொற்கண் தொகுவது தொக்கு நின்றக்கால், தம்மீறு கருதின பொருட்கேற்கும் முடிவினை நின்றாங்கே நின்று கொள்ளும்; இதுவாயின் இறுதி நின்றாங்கே நிற்பப் பொருட் கேற்ப முடிபு ஏலாமையான், இறுதிபோதல் வேண்டிற்று என்பது. (25) 416. வாரா மரபின வரக்கூ றுதலு மென்னா மரபின வெனக்கூ றுதலு மன்னவை யெல்லா மவற்றவற் றியலா னின்ன வென்னுங் குறிப்புரை யாகும். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், மேல் தொகை யதிகாரங் கூறினான்; அவையெல்லாம் விட்டு, இனி ஒரு சொன்மரபு வழூஉக் காத்தல் நுதலிற்று. உரை: இயங்காதவற்றை இயங்குவது போலச் சொல்லுதலும், சொன்னிகழாதவற்றைச் சொன்னிகழ்த்துவன போலச் சொல்லுதலும், அவ்வப் பொருளியல்பு பற்றி அவை அன்ன செய்கை யுடையவற்றைப் போலச் சொல்லலுற்றான்; அது மனக் குறிப்பினான் ஆய்ந்து, அவற்றது உரை அன்று என்பது கொள்க. `அன்னவை எல்லாம்’ என்பது, அவ் வாராமரபினவும் பல்வகைய, ஒரோவொன்றேயல்ல என்றற்கு என்பது. வாராமரபின வரக்கூறுதல் வருமாறு: மலை வந்து கிடந்தது, நெறி வந்து கிடந்தது என வரும்; மலைக்கும் நெறிக்கும் அன்ன செய்கை யின்றாகலின் என்பது. இனி, என்னா மரபின எனக்கூறுதல் வருமாறு: நிலம் வல்லென்றது, இலை பச்சென்றது எனவும், `செங்கானாராய்’ எனவும் வரும். விலங்கும் மரனும் புள்ளும் உள்ள நோய் உற்றாற்க்கு மனக் குறைக்கு மறுதலை மாற்றம் கூறுவனபோலுங் குறிப்பினவாகப் புலப்படுதலால் இது சொல்லப்பட்டது என்பது. (26) 417. இசைபடு பொருளே நான்குவரம் பாகும். 418. விரைசொல் லடுக்கே மூன்றுவரம் பாகும். இவை இரண்டு சூத்திரமும் உரையியைபு நோக்கி யுடனெழுதப் பட்டன. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், மேல், இசைநிறை அசைநிலை, பொருளொடு புணர்தல் என்றவை மூன்றென்ப ஒரு சொல் அடுக்கு என்புழி; மூன்று வகையான் அடுக்கிவரப்பெறும் என்றவை எல்லையின்மையான், அவை யித்துணை யென்னும் வரையறை கூறினார் ஈண்டு என்பது. உரை: அம் மூன்றனுள் இசைநிறைத்தற்கு அடுக்கப்படும் பொருள் நான்கு வரம்பாகும், என்றவாறு இரண்டும் அடுக்கும், மூன்றும் அடுக்கும், நான்கும் அடுக்கும், நான்கிறந்து அடுக்கா என்பது கருத்து. அது, `பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ’ என வரும். இது, நான்கு அடுக்கி வந்தது. இசைநிறையெனவே, அது செய்யுட் கென்பது முடிந்தது. இனி, அம் மூன்றுடன் பொருளொடு புணர்தலை விரை சொல்லடுக்கு என்பது; அதுதான் மூன்று வரம்பு இறவாது என்பது. `பாம்பு, பாம்பு, பாம்பு’, `தீத் தீத் தீ’ என வரும்; இரண்டு மூன்றிறவாது. மற்று, அசைநிலை யினைத்தால் அடுக்கும் என்பது எற்றாற் பெறுதும் எனின், மூன்றடுக்கும் பொருளொடு புணர்தலை முற்கூறற் பாலார், என்னை மூன்று நான்கு என்னும் எண்ணு முறைமை நோக்கி; அவ்வாறு சொல்லாது மயக்கங் கூறியவதனான், மூன்றின் கீழ்க்கு முதல் இரண்டல்லது இல்லையன்றே; அவ்விரண்டெண்ணினான் அடுக்கப்படும் அசைநிலை என்பது கொள்க என்றவாறு. (வரலாறு) `மற்றோ மற்றோ’ `அஃதே அஃதே’ என வரும். இரண்டிறவாது என்பதனை இலேசினாற் கொண்டான், இடைச் சொல்லடுக்காதலின் என்பது. ஒழிந்த நால்வகைச் சொல்லும் அடுக்கும். (27, 28) 419. கண்டீ ரென்றா கொண்டீ ரென்றா சென்ற தென்றா போயிற் றென்றா வன்றி யனைத்தும் வினாவொடு சிவணி நின்றவழி யிசைக்குங் கிளவி யென்ப. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இவை வினையிய லொழித்து நின்ற ஒழிபு கட்டுரை யெடுத்தது. வினைச்சொற்கள், இங்`னம், வினாவொடுபட்டு நின்ற வழி யாயக்கால் அசைச் சொல்லாய் நிற்கும் என்பது கருத்து. (வரலாறு) `கண்டீரோ, கண்டீரோ’ `கொண்டீரோ, கொண்டீரோ’ `சென்றதே, சென்றதே’ `போயிற்றே, போயிற்றே’ என வினாவொடுபட்டவழி அடுக்கி அசைநிலையாய் நிற்கும். அவ் வினாவொடு சிவணாக்கால் வினைச்சொல்லேயாம் என்பது, `அன்றி யனைத்தும்’ என்பது, அவையிற்றைத் தொகை கொடுத்துக் கூறினவாறு. `வினாவொடு சிவணி’ என்பது, ஆ ஓ என்னும் வினாக்களைக் கடையாத்து நின்றவழி என்றவாறு (29) 420. கேட்டை யென்றா நின்றை யென்றா காத்தை யென்றா கண்டை யென்றா வன்றி யனைத்து முன்னிலை யல்வழி முன்னுறக் கிளந்த வியல்பா கும்மே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இவை முன்னைய நான்கும் போல வினாவொடுபடாது வாளாதே நின்றுழி, இவையும் அசைச் சொல்லாய் நிற்கும் என்பது கருத்து. முன்னின்றவற்று நிலைமையல்வழி யென்பான், `முன்னிலை யல்வழி’ என்றான் என்பது. (வரலாறு) `கேட்டை, கேட்டை’ `நின்றை, நின்றை’ `காத்தை, காத்தை’ `கண்டை, கண்டை’ என வரும். இவையும் கட்டுரைக்கண் வருமிடம் அறிந்து கொள்க. இனி, இவை வினாவொடு பட்டுழியாயக்கால் அசைநிலை யாகா என்பது. (30) 421. இறப்பி னிகழ்வி னெதிர்வி னென்றச் சிறப்புடை மரபி னம்முக் காலமுந் தன்மை முன்னிலை படர்க்கை யென்னு மம்மூ விடத்தான் வினையினுங் குறிப்பினு மெய்ம்மை யானு மிவ்விரண் டாகு மவ்வா றென்ப முற்றியன் மொழியே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இவை வினையியலுள் ஓதப்பட்டன சில சொற்கள், முற்றுச் சொல் என்னும் குறியெய்துதல் நுதலிற்று. அதனாற் பயந்தது என்னை எனின், அச் சொற்கு முன்பு முடிபு கூறி, ஈண்டுக் குறியிட்டான் என்பது பயன் என்பது. இதன் பொழிப்பு: இறந்தகாலம் எதிர்காலம் நிகழ்காலம் என்னும் மூன்று காலமும் உடையவாய்த் தன்மை முன்னிலை படர்க்கை யென்னும் மூன்றிடத்தும் வினையும் வினைக்குறிப்பும் பற்றி, அம் மூன்றிடங்க டோறும் வினையும் வினைக்குறிப்பும் என இரண்டாம் அவ்வறுகூற்றுச் சொற்களை முற்றுச்சொல் என்று கூறுப ஆசிரியர் என்றவாறு. `அவ் வாறு’ என்றது, தன்மை இரண்டுகுப்பையவாயும், முன்னிலை இரண்டுகுப்பையவாயும், படர்க்கை இரண்டு குப்பையவாயும் வருதல் நோக்கி என்பது. (வரலாறு) `உண்டேன், கரியென்’ எனவும்; `உண்டாய், கரியை’ எனவும்; `உண்டான், கரியன்’ எனவும் வரும். பிறவும் அன்ன. `முற்றுச்சொல்’ என்றது, செய்கையும் பாலும் காலமும் செயப்படு பொருளும் தோன்றிநிற்றலின் முற்றுச் சொல் என்பாரும், மற்றோர் சொல் நோக்காது முடிந்து நிற்றலின் முற்றுச்சொல் என்பாரும், எக்கால் அவை தம் எச்சம்பெற்று நின்றன அக்கால் பின் யாதும் நோக்காவாய்ச் செப்பு மூயிற்றுப் போல, அமைந்து மாறுதலின் முற்றுச்சொல் என்பாரும் என இப்பகுதியர் ஆசிரியர் என்பது. (31) 422. எவ்வயின் வினையு மவ்விய னிலையும். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இது முற்றுச் சொல் லொழித்து ஒழிந்த பெயரெச்ச வினையெச்சங்கட்கு ஆவதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. உரை: மேற் கூறப்பட்ட முற்றுச்சொல்லே யன்றிப் பெயரெச்சமும் வினையெச்சமும் மூன்று காலமும் மூன்றிடமும் உடையவாய் வினையும் வினைக்குறிப்பும் பற்றி வரும் என்பான்; `எவ்வயின் வினையும் அவ்வியனிலையும்’ என்றார் என்பது. மற்று, `வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது நினையுங் காலைக் காலமொடு தோன்றும்’ (தொல். வினை.1) என்புழி, எல்லா வினைச்சொல்லும் மூன்று காலத்திற்கும் உரிய எனப்பட்டது. இனி, `எஞ்சிய கிளவி யிடத்தொடு சிவணி யைம்பாற்கு முரிய’ (தொல். வினை. 26) என்புழி, எவ்விடத்திற்கும் உரிமையுங் கூறப்பட்டது பிறவெனின், மேல் அங்`னங் கூறினாரேனும், அது விலக்குப் பட்டது; ஈண்டுப் போதந்து முற்றுச் சொல்லையே விதந்து மூன்றிடத்திற்கும் உரிய என்றமையான், அது நோக்கி ஈண்டு இது கூறினார் என்பது. (32) 423. அவைதாந் தத்தங் கிளவி யடுக்குந வரினு மெத்திறத் தானும் பெயர்முடி பினவே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இது முற்றுச் சொல் என்று மேற்கூறப்பட்டனவற்றிற்கு முடிபு கூறுதல் நுதலிற்று. உரை: மேற் சொல்லப்பட்ட முற்றுச்சொற்கடாம் எத்துணைச் சொல்லையும் அடுக்கிப் பலவாய் வரினும் பெயர் கொண்டு முடிதல் இலக்கணத்தன, என்றவாறு (வரலாறு.) `உண்டான், தின்றான், ஓடினான், பாடினான் சாத்தன்’ எனவரும்; இது வினை. `நல்லறிவுடையன், செவ்வியன் சான்றார் மகன்’ என வரும்; இது வினைக்குறிப்பு. மற்று, `எத்திறத்தானும்’ என்றது என்னை யெனின், உண்டான் சாத்தன் என்பது பெயரை முன்னடுத்து, சாத்தன் உண்டான் என்பது பெயரைப் பின்னடுத்து வரும் என்பது அறிவித்தற்கு, `எத்திறத்தானும்’ என்றான் என்பது. பிறவுஞ் சொல்லுப; `முன்னுமுரிய முற்றுச் சொல்லென’ என்பது. (33) 424. பிரிநிலை வினையே பெயரே யொழியிசை யெதிர்மறை யும்மை எனவே சொல்லே குறிப்பே யிசையே யாயீ ரைந்து நெறிப்படத் தோன்று மெஞ்சுபொருட் கிளவி. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், மேல் வினை யியலுள்ளும் இடையியலுள்ளும் முடிபு கூறப்படாது நின்ற எச்சங்கட்கு முடிபு உணர்த்துவான் தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று. உரை: எல்லாவற்றையும் எச்சம் என்பதனைக் குறைத்துப் பின்னைப் பெயரெஞ்சு கிளவி யென்றார், இறுதி விளக்காக. பிரிநிலையெச்சம் முதலாகக் கூறப்பட்ட பத்து வகை யெச்சங்களும் முன்பு முடிவு கூறப்படாது நின்றனவேனும், இனி நெறிப்படத் தோன்றும் அவை, என்றவாறு (34) 425. அவற்றுள் பிரிநிலை யெச்சம் பிரிநிலை முடிபின. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், நிறுத்த முறையானே பிரிநிலை யெச்சத்திற்கு முடிபு உணர்த்துதல் நுதலிற்று. உரை: பிரிநிலையென்ப இருவகைய, ஏகாரப் பிரிநிலையும் ஓகாரப் பிரிநிலையும் என; அவை பிரிக்கப்பட்ட பொருடன்னையே கொண்டு முடிக, என்றவாறு (வரலாறு) `அவனே கொண்டான்’ `அவனோ கொண்டான்’ என வரும். அவனே யெனப் பிரிநிலையெச்சம் ஏகாரந் தானின்றுமன், அவனேயெனப் பிரிக்கப்பட்டானையே கொண்டு முடிதல்; இவை அவற்றுக்கு முடிபாவன என்றவாறு (35) 426. வினையெஞ்சு கிளவிக்கு வினையுங் குறிப்பு நினையத் தோன்றிய முடிபா கும்மே யாவயிற் குறிப்பே யாக்கமொடு வருமே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், நிறுத்த முறையானே வினையெச்சத்திற்கு முடிபு கூறுதல் நுதலிற்று. உரை: வினையெச்சம் முடியுங்கால் வினையும் வினைக் குறிப்புங் கொண்டு முடியும்; அவ்விடத்துக் குறிப்புவினைச் சொல் ஆக்கச் சொல்லொடு வரும், என்றவாறு (வரலாறு) `உழுது வந்தான்’ என்பது, வினையெச்சம் தெரிநிலை வினைகொண்டு முடிந்தது. `மருந்து உண்டு நல்லனாயினான்’ என்பது, வினையெச்சம் வினைக்குறிப்புக் கொண்டு முடிந்தது; அவ்விடத்து வினைக்குறிப்பு ஆக்கமொடு வந்தவாறு கண்டு கொள்க. இனி, `நினையத் தோன்றிய’ என்றதனான், `உழுது வருதல்’ `உழுது வந்தான்’ எனத் தொழிற்பெயரானும் முடியும் என்றவாறு. மற்று, இச் சூத்திரத்தால் வினையெச்சத்திற்கு முடிபு கூற வேண்டியது என்னை? வினையியலுள், `முதனிலை மூன்றும் வினைமுதல் முடிபின’ (தொல். வினை. 31) என்றும், மொழிந்தனவற்றுக்கு, `ஏனை யெச்சம் வினைமுத லானும் ஆன்வந் தியையும் வினைநிலை யானும்’ (தொல். வினை. 33) முடியுமென்று கூறியதே அமையும் பிறவெனின், அதற்கு விடை, ஆண்டு, வினைமுதலானும் முடியுமென்புழிப் பெயர் வினை முதலானும் முடியும் என்பது பட்டது; என்னை, வினை வினைமுத லென்றும், பெயர் வினைமுதல் என்றும் பகராது, பொதுவகையாற் கூறினாராகலின் இச் சூத்திரம் வேண்டும்; இது கூறாக்கால், உழுது சாத்தன் எனப் பெயர் முதல் வினை முதலானும் முடிவான் செல்லும் என்பது. அன்றியும், வினையெச்சத்திற்கு வினைக்குறிப்பு முடிபாங்கால், ஆக்கமொடு வருதல் எடுத்தோத வேண்டும் என்பது. (36) 427. பெயரெஞ்சு கிளவி பெயரொடு முடிமே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், நிறுத்த முறையானே பெயரெச்சத்திற்கு முடிபுகூறுதல் நுதலிற்று. உரை: பெயரெச்சம் பெயர்கொண்டு முடியும், என்றவாறு. (வரலாறு) `உண்ணுஞ் சாத்தன்’ `உண்ட சாத்தன்’ என வரும். உண்ணும், உண்ட என்பன பெயரெச்சம்; மற்று இது கூற வேண்டிய தென்னை? `நிலனும் பொருளுங் காலமுங் கருவியும் வினைமுதற் கிளவியும் வினையும்’ (தொல். வினை. 35) பெயர்கொண்டு முடிதல் கூறப்பட்டது பிறவெனின், அதற்கு விடை, ஆண்டு வினைமுதற் கிளவியும் வினையும் எனவே, வினைச் சொல்லும் முடியும் என்பது பட்டது என்றது வினை முதற்கிளவி என்றக்கால் வினை வினை முதலும் வினைமுதலாக லானும், இனி வினை யென்றக்கால் வினைப் பெயரேயன்றி வினைச்சொல்லு மாகலானும் இச் சூத்திரம் வேண்டும் என்பது. 37) 428. ஒழியிசை யெச்ச மொழியிசை முடிபின. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், நிறுத்த முறையானே ஒழியிசையெச்சம் உணர்த்துதல் நுதலிற்று. உரை: ஒழியிசை யெச்சமாவன மூன்று; அவை, மன்னை ஒழியிசையும், தில்லை ஒழியிசையும், ஓகார ஒழியிசையும் என; அவை மூன்றும், ஒழியிசைப் பொருள்கொண்டு முடியும், என்றவாறு (வரலாறு) `கூரியதோர் வாண்மன்’ வாள் கோடிற்று, இற்றது எனப் பின்னும் வாள்மேலே முடிபு சென்றது. இனி, `வருகதில் கொண்கன்’ என, வருக எனப்பட்டானும் அவனே, கொண்கன் எனப்பட்டானும் அவனே, அதனால், அதுவும் அப்பொருள் கொண்டு முடிந்தது. இனிக், `கொளலோ கொண்டான்’ என்புழிக் கொளலோ எனப்பட்டானையே கொண்டான் என்பது. அதனால், அதுவும் அவ் வொழியிசைப் பொருள் கொண்டு முடிந்தது. (38) 429. எதிர்மறை யெச்ச மெதிர்மறை முடிபின. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், நிறுத்த முறையானே எதிர்மறை யெச்சத்திற்கு முடிபு உணர்த்துதல் நுதலிற்று. உரை: எதிர்மறை யெச்சம் என்பன இரண்டு, ஓகார எதிர்மறையும் உம்மை எதிர்மறையும் என; அவை, அவைதம் எதிர் மறைப்பொருள் கொண்டு முடியும், என்றவாறு. (வரலாறு) `யானோ கொண்டேன்’ என்பது; யானோவன்றே கொண்டேன் என்றாலும்; அதனால் அப்பொருள் கொண்டு முடிந்தது எனப்படும். `நீயே கொண்டாய்’ என்றாற்கு எதிர் மறுத்தவாறு, `யான் கொண்டிலென்’ என என்பது. இனி, உம்மையெதிர்மறை, `வரலும் உரியன்’ என்பது. ஆண்டு `வரலும்’ எனப்பட்ட உம்மை யெதிர்மறை, உரியன் எனப் பின்னும் அவனையே கொண்டு முடிந்தது. வாராமையும் உரியன் என்பதற்கு எதிர்மறை, அவை ஒன்றொன்றனை நோக்க எதிர்மறை யென்றவாறாயிற்று. (39) 430. உம்மை யெச்ச மிருவீற் றானுந் தன்வினை யொன்றிய முடிபா கும்மே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இது முறையானே உம்மையெச்சத்திற்கு முடிபு கூறுதல் நுதலிற்று. உரை: உம்மை யெச்சம் என்பது எச்சவும்மையாயிற்று; `இருவீற்றானும்’ என்றது, தானும் தன்னாற் றழுவப்பட்டதுமான இரண்டனையும் ஆயிற்று; அவை யிரண்டும் ஒன்றிய வினையே கொண்டு முடியும், என்றவாறு (வரலாறு) `சாத்தனும் வந்தான்’ என்றக்கால், பின்னைக் கொற்றனும் வந்தான் என்றானும், கொற்றனும் வரும் என்பதானும் ஒன்றிய வினையே கொண்டு முடிக என்பது; `சாத்தனும் வந்தான்’ என்றக்கால், `கொற்றனும் போயினான்’ என்றுவிடின் அமையாது என்பதாம். (40) 431. தன்மேற் செஞ்சொல் வரூஉங் காலை நிகழுங் காலமொடு வாராக் காலமு மிறந்த காலமொடு வாராக் காலமு மயங்குதல் வரையார் முறைநிலை யான. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இஃது அவ்வெச்ச வும்மையது மயக்கங் கூறுதல் நுதலிற்று. உரை: தன் என்பது எச்ச வும்மை; செஞ்சொல் என்பது உம்மையில் சொல்; எச்சவும்மைச் சொல்லின்மேல் உம்மையில் சொல் வந்தக்கால் நிகழ்காலமும் எதிர்காலமும் மயங்கும், இறந்த காலமும் எதிர்காலமும் மயங்கப்படும் முறை யிலக்கண மாகலான் என்பது. (வரலாறு) `கூழுண்ணாநின்றான்; சோறும் உண்பன்’ என வரும். `கூழுண்ணாநின்றான்’ என்பது செஞ்சொல்; `சோறும் உண்பன்’ என்னும் உம்மைச் சொல்லின்மேல் வந்தது. உண்ணாநின்றான் என்னும் நிகழ்காலம் தன்னிகழ்காலமே கொள்ளாது. `சோறும் உண்பன்’ என்னும் எதிர்காலங் கொண்டமையின் வழுவாயிற்றாயினும், அமைக என்பது. இறந்தவும் எதிர்வும் மயங்குமாறு: `கூழுண்டான்; சோறுமுண்பான்’ என வரும். இனி, `முறை நிலையான’ என்றதனான், இறந்ததனொடு நிகழா நின்றதூஉம் மயங்கும்; எதிர்வதனோடு இறந்ததுவும் மயங்கும் என்றவாறு. (வரலாறு) `கூழுண்டான், சோறும் உண்ணாநின்றான்’ என வரும்; `சோறுண்பான், கூழுமுண்டான்’ என வரும்; பரிமாறிக் கொள்க. (41) 432. எனவெ னெச்சம் வினையொடு முடிமே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், நிறுத்த முறையானே எனவென் னெச்சத்திற்கு முடிபு உணர்த்துதல் நுதலிற்று. உரை: எனவென நின்ற எச்சம் பெயர்கொண்டு முடியாது வினைகொண்டு முடியும், என்றவாறு. (வரலாறு) `கொள்ளெனக் கொண்டான்’ என வரும். பிறவும் அன்ன. தன்வினையையோ பிறவினையையோ எனின், இன்ன வினை யென்பதில்லை, ஏற்ற வினையான் முடியும் என்ப. (42) 433. எஞ்சிய மூன்று மேல்வந்து முடிக்கு மெஞ்சுபொருட் கிளவி யிலவென மொழிப. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், ஒழிந்து நின்ற எச்சங்கடிறத்துப் படுவதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. உரை: எஞ்சிய மூன்றும் என்பன, அவை மூன்றும் முந்தைய வற்றைப்போலத் தம்மை யின்னவந்து முடிப்பன என்று காட்டப்படும் எச்சச்சொல் இல்லை, என்றவாறு மூன்றும் மேல்வந்து முடிக்கும் எச்சச்சொல் இல என, ஒன்று உடைத்தென்பதாம். அஃதியாதோவெனின் சொல் லெச்சம்; அதனை முன்னர்ச் சொல்லுதும். (43) 434. அவைதாம் தத்தங் குறிப்பி னெச்சஞ் செப்பும். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இது `குறிப்பே இசையே’ (தொல். சொல். எச்சவி. 34) யென்று கூறப்பட்ட இரண்டெச்சமும் தங்குறிப்பிற்பற்றிய எச்சத்தானே முடிபு கூறப்படும், பிறிதில்லை என்பது. (வரலாறு) `விண்ணென விசைத்தது’ குறிப்பெச்சம்; அது தன் குறிப்பினையே கொண்டு முடிந்தது. விண்ணென்றதே விசைத்தது எனப்பட்டது. அதனால் தத்தங் குறிப்பின் எச்சத்தானே முடிந்தது என்பது. இனி, இசையெச்சம், ஒல்லென வொலித்தது. இடைச்சொல்லோத்துள் அறுபகுதிய என்று ஓதப்பட்ட, என விகற்பித்து இரண்டு முடிபு கூறப்பட்ட தென்பது. மற்று ஆண்டுச் சொல்லெச்சம் என்பதில்லையால் எனின், விடை. `எனவெ னெச்சம் வினையொடு முடிமே’ (தொல்.சொல்.எச்சவி. 42) என்று முடித்தார். வினையென வினை பின்னுந் தன்கண்ணதே சொல்லெச்சம், அதுகொண்டு முடிதல் இவ்வாய்பாடு, அவ் வேற்றுமை நோக்கி வேறு சொல்லெச்சம் என வேண்டினார் என்பது. முன்னர் மூன்று மேல்வந்து முடிக்கும் எஞ்சு பொருட் கிளவியில என, ஒன்று உடைத்து என்பது பட்டுநின்றது, அஃதியாதோவெனின் சொல் லெச்சம் என்பது. இனி, அதற்கு முடிபு கூறுகின்றார். (44) 435. சொல்லெ னெச்ச முன்னும் பின்னுஞ் சொல்லள வல்ல தெஞ்சுத லிலவே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், சொல்லெச்சத்திற்கு முடிபு கூறுதல் நுதலிற்று. உரை: சொல்லெனெச்சம் முன்னாயினும் பின்னாயினும் சொல்லென்னுஞ் சொற்கொண்டு முடிதலல்லது பிறிதில்லை, என்றவாறு (வரலாறு) `பசித்தேன் பழஞ்சோறு தா என நின்றாள்’ மற்றுத் தா என நின்றாள் பிறளே யெனின், தா எனச் சொல்லி நின்றாள் என்பதாம். அவற்றுட் சொல்லி என்றானும் சொல்ல என்றானும் ஆக, இரண்டனுள் ஒன்றனான் முடியும் அது என்பது. `முன்னும்’ என்றது, தா எனச் சொல்லி நின்றாள் என்று கொணர்ந்து முடிப்பின், அது பின் முடிவுபட நின்றதாம் என்பது. (45) 436. அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல் இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இது `தகுதியும் வழக்கும்’ (தொல். சொல். கிளவி. 17) என்பதனுட் கூறப்படாது ஒழிந்து நின்றதோர் மரபு வழூஉக் காத்தல் நுதலிற்று. உரை: நன்மக்களுட் கூறப்படாத சொல்லைக் கிடந்தவாறே சொல்லற்க; பிறிது வாய்பாட்டான் மறைத்துச் சொல்லுக என்றவாறு (வரலாறு) `கான்மே னீர்பெய்துவருதும்’ `வாய்பூசி வருதும்’ எனவரும். (46) 437. மறைக்குங் காலை மரீஇய தொரால். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இறந்தது காத்தது. உரை: மேல் அவைக்குரியவல்லனவற்றை மறைத்தே சொல்லுக என்றார், இனி அவைதாம் மரீஇயடிப்பட்ட வழியாயக்கால் மறைக்க வேண்டுவதன்று; அவை யொழித்து ஒழிந்தன மறைத்தே சொல்லுக என்றது என்பது. இனி, அவ்வாறு மரீஇ வந்தன: `ஆட்டுப் பிழுக்கை’, `ஆப்பீ” என வரும். (47) 438. ஈதா கொடுவெனக் கிளக்கு மூன்று மிரவின் கிளவி யாகிட னுடைத்தே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இதுவும் கிளவி யாக்கத்துக் கூறப்படாது ஒழிந்துநின்றதோர் மரபிலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. உரை: இக் கூறப்பட்ட மூன்றும் இரப்போர் சொல்லு தற்குரிய, என்றவாறு ஒருவரையொருவர் இரக்குங்கால் இம் மூன்றனுள் ஒன்று சொல்லி யிரப்பது என்றவாறு (48) 439. அவற்று ளீயென் கிளவி யிழிந்தோன் கூற்றே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், மேற்கூறப்பட்ட மூன்றனுள், ஈ என்னுஞ்சொல் இரக்கப்படுவோரை இழிந்தோர் கூறி யிரக்குஞ்சொல் என்றவாறு. (வரலாறு) `உடுக்கை ஈ’, `மருந்து ஈ’ என வரும். (49) 440. தாவென் கிளவி யொப்போன் கூற்றே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இரக்கப்படுவானை ஒப்பான் இரக்குங்கால் தா என்னுஞ் சொற் சொல்லி இரக்கும் என்பது உணர்த்தியவாறு. (வரலாறு) `சோறு தா’, `ஆடை தா’ என வரும். (50) 441. கொடுவென் கிளவி யுயர்ந்தோன் கூற்றே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், கொடு என்னுஞ் சொல் உயர்ந்தோனாற் கூறப்படுஞ் சொல் என்றவாறு (வரலாறு) `இவற்கு ஊண் கொடு, ஆடை கொடு’ என வரும். (51) 442. கொடுவென் கிளவி படர்க்கை யாயினுந் தன்னைப் பிறன்போற் கூறுங் குறிப்பிற் தன்னிடத் தியலு மென்மனார் புலவர். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், மேற் சூத்திரத்துக்குப் புறனடையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. உரை: கொடு என்றது தன்மைக்கு ஏற்றதன்று, படர்க்கைக்கு உரியதோர் சொல்லாயிற்று; உயர்ந்தோன் இழிந்தோனை யிரக்குங்கால், தமனொருவனைக் காட்டி, இவற்குக் கொடு, என்பது; ஆண்டுப் படர்க்கையிடத்திற்கு உரித்தாகக் கூறினான்மன்; ஆயினும், அது தன்மையிடத்தே யியல்பு காட்டப் படர்க்கையிடத்தாற்கு உரித்தாகாது, அவ் விரக்கப்படு பொருளும் அக் கொடு என்ற சொல்லும் என்பது. தன்னைப் பிறன்போற் கூறுங் குறிப்பில் தன்னைக் கொடு என்றது வாய்பாடென்றதேனும் அது தனக்கே சொல்லியவாறு. உம்மையாற் பிற கிளவியும் படர்க்கையாயினும் தன்னைப் பிறன் போற் கூறுங் குறிப்பிற் றன்னிடத்து இயலும் என்றவாறு; ஆண்டு இரவின் கிளவி யல்வழி யென்பது. `அங்ஙனஞ் சொல்லு வானோ பெருஞ்சாத்தன் தந்தை, சொல்லப்படுவாளோ பெருஞ்சாத்தன் தாய்’ என்னும்; தன்னைப் பிறன் போல்வானும், அது தன்னிடத்து இயலும் என்றவாறு (52) 443. பெயர்நிலைக் கிளவியிற் னாஅ குநவுஞ் சினைநிலைக் கிளவியி னாஅ குநவுந் தொன்னெறி மொழிவயி னாஅ குநவு மெய்ந்நிலை மயக்கி னாஅ குநவு மந்திரப் பொருள்வயி னாஅ குநவு மன்றி யனைத்துங் கடப்பா டிலவே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், ஒருசார் வழுக்காத்தல் நுதலிற்று. உரை: இவை மேற்கூறப்பட்ட இலக்கணத்தினை யன்றி யாகாமையில, என்றவாறு. `பெயர்நிலைக் கிளவியின்’ என்பது, ஈண்டு உயர்திணைப் பெயரை யாயிற்று. அவ்வுயர்திணைப் பெயர் உயர்திணைப் பெயர்மேல் வழங்கப் படுதலின்றியும் அமையுமென்றவாறு. நம்பி என்னும் உயர்திணைப் பெயர் ஒரு யானை மேலானும், ஒரு கோழி மேலானும், பிறவற்றின் மேலானும் நிற்கும். நங்கை என்ப ஒரு கிளியையும் என்பது. இனிச் சினைநிலைக் கிளவியினாவன கடப்பாடின்றி வருமாறு: `வெண்கொற்றப் படைத்தலைவன்’ `வெள்ளேறக் காவிதி’ என்பன. இவற்றை முன்னர்க் கிளவியாக்கத்துச் சிறப்புப் பெயர் நின்ற வழி இயற்பெயர் வைத்துக் கூறுப என்றார்; இனிச் சினைச் சொற்கணாயின் அது வேண்டுவதன்று என்பது கருத்து. `தொன்னெறி மொழிவயி னாஅகுநவும்’ என்பது முற்றுச் சொல், அவற்றையும் இவ்வாறே சொல்லப்படுதலின் இப்பொருள என்றோர் கடப்பாடில என்றார். (வரலாறு) `ஆற்றுட் செத்த வெருமை ஊர்க்குயவற் கிழுத்தல் கடன்’ எனவும், `யாட்டுளா னின்னுரை தாரான்’ எனவும் வரும். பிறவும் அன்ன. `மெய்ந்நிலை மயக்கி னாஅ குநவும்’என்பது, மேல், `தகுதியும் வழக்குந் தழீஇயின வொழுகும்’ (தொல்.சொல்.கிளவி.17) என்புழி, மங்கல மரபினானும் குழூவின்வந்த குறிநிலை வழக்கி னானும் கூறப்படுமென்றாரன்றே, இனி, அவை அவ்வாறன்றித் தத்தம் இலக்கணத்தானுஞ் சொல்லப்படும் என்றவாறு. (வரலாறு) சுடுகாட்டை நன்காடு என்னாது சுடுகாடு என்றும், செத்தாரைத் துஞ்சினார் என்னாது செத்தார் என்றும் கூறவும் அமையும் என்றவாறு. இனி, `மந்திரப் பொருள்வயி னாஅ குநவும்’ என்பது: `நிறைமொழி மாந்த ராணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திர மென்ப’ (தொல்.பொருள். செய்யு. 171) அவை, கூறப்பட்ட எழுவகை வழுவிற் றீர்ந்து வருக என்ற கடப்பாடில என்றவாறு. அவை, `திரிதிரி சுவாகா கன்று கொண்டு கறவையும் வத்திக்க சுவாகா’ என்றாற்போல வரும். இச் சூத்திரத்திற்குப் பிறிதுமோர் பொருள் உரைப்பாரும் உளர். இதுவும் மெய்யுரை போலும் என்பது. (53) 444. செய்யா யென்னு முன்னிலை வினைச்சொல் செய்யென் கிளவி யாகிட னுடைத்தே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இது வினையியலுள் ஒழிந்துநின்ற ஒழிபு உணர்த்துதல் நுதலிற்று. உரை: செய்யாய் என நின்ற முன்னிலை வினைச்சொல் செய்யென்னுஞ் சொல்லும் ஆமிடன் உடைத்து, என்றவாறு `இந்நாள் எம்மில்லத்து உண்ணாய்’ என்பது; அது செய்யாய் என்பது, அது செய் இனி என்றுமாம். (54) 445. முன்னிலை முன்ன ரீயு மேயு மந்நிலை மரபின் மெய்யூர்ந்து வருமே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இடைச் சொல்லோத்தினுள் ஒழிந்து நின்ற ஒழிபு உணர்த்துதல் நுதலிற்று. உரை: முன்னிலைக்கண்ணான ஈகார ஏகார இடைச் சொற்கள் முன்னிலைக்குப் பொருந்திய மெய்யை யூர்ந்து வரும், என்றவாறு (வரலாறு) `சென்றீ பெருமநிற் றகைக்குநர் யாரே’ (அகம். 46) எனவும், `அட்டி லோலை தொட்டனை நின்மே’ (நற். 300) எனவும், இவையிரண்டும் தத்தங் குறிப்பிற் பொருள் செய்யும் இடைச்சொல் என்பது; ஈண்டு எப்பொருளை விளக்கி நின்றனவோ எனின், புறத்துறவு நீர்மைப் பொருள்பட வந்த என்றவாறு. (55) 446. கடிசொல் லில்லைக் காலத்துப் படினே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், மேற் கூறப்பட்ட அவற்றுக்கெல்லாம் பொதுவாயதோர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று. (வரலாறு) அழான், புழான் என்பன; அக்காலத்து அவையுண்மையான் ஆசிரியன் ஓதி முடிபு கூறப்பட்டன. இனிச் சுட்டுச்சினை நீடிய ஐகாரவீற்றுப் பெயர் (தொல். எழுத்து. தொகைமரபு 17) உறழ்ந்து முடிக என்றான் ஆசிரியன், அக்காலத்து அவை யுண்மையான்; இப்பொழுது அவற்றிற்கு உதாரணமில்லை. பிறவும் அன்ன. இனி, ஆசிரியனால் ஆகா என ஓதப்பட்டன தோன்றுவ உள; அவை, ஞெண்டு என்றும், நீர்கண்டக என்றும், சம்பு, சள்ளை என்றும் வரும். (56) 447. குறைச்சொற் கிளவி குறைக்கும்வழி யறிதல் குறைத்தன வாயினு நிறைப்பெய ரியல. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், செய்யுட்கு ஆவதோர் முடிபு கூறுதல் நுதலிற்று. உரை: முன் செய்யுளீட்டம் தன்மையானே கடியப்படு மென்றே யறியக்கிடந்தது; இனி, அவற்றை முழுவதூஉங் கிடை கடாவாது குறைத்துக் கடாவப்படுதலும் உடைய ஒரோவழி, அங்ஙனங் குறைக்கப்பட்டதேனுங் குறையாது நின்றவிடத் தியலு மாறே புலப்பட்டு இயலுஞ் செவிக்கு, என்றவாறு இனி, அவை குறைக்குமிடத்துத் தலைக்குறைத்தலும் இடைக் குறைத்தலும் கடைக்குறைத்தலும் என மூன்று வகையாற் குறைக்கப்படும் என்பது. அவற்றுள் தலைக்குறைத்தது: `மரையிதழ் புரையு மஞ்செஞ் சீறடி’ என்பது ஆண்டுத் தாமரை எனற்பாலார் மரை என்று தலைக்குறைத்தார் என்பது. இடைக்குறைத்தல் என்பது: `வெரிநி னோதி வெருக்கண் டன்ன’ என்பது; ஆண்டு, ஓந்தி எனற்பாலார் ஓதி என்று இடைக்குறைத்தார் என்பது. இனிக் கடைக்குறைத்தல் என்பது: `நீலுண் டுகிலிகை கடுப்ப’ என்பது; நீலமுண் டுகிலிகை எனற்பாலார், நீலுண் டுகிலிகை என்றார் என்பது. `குறைக்கும்வழி யறிதல்’ என்பது, குறைக்கைக்குத் தகக் குறைக்கப்படுவது என்றற்கு என்பது. `நிறைப்பெயரியல’ எனவே, இவ் விகாரம் பெயர்க் கண்ணதே யென்பது பெற்றாம். மற்றுச், `சென்றா ரென்பிலர் தோழி’ என, அன்பிலர் எனற்பாலார், அன்பிலர் என்றார்; எனவே, வினைச் சொல்லுங் குறைக்கப்பட்டதெனின், `நிறைப்பெயரியல’ என்றது, பெயர்ச்சொல் என்றவாறு. அக் குறைக்கப்பெறுவன அம் மூன்றிடத்துள் எவ்விடத்துங் குறைக்கப்பெறினும் பெறுக. பெற்றன குறையாதபோது நின்ற தத்தம் நிறைபு நிலைப் பெயரவேயாக வுணரப்படும் என்பார், `நிறைப் பெயரியல’ என்றான் என்பது; இதுவும் ஒரு கருத்து. (57) 448. இடைச்சொல் லெல்லாம் வேற்றுமைச் சொல்லே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இடைச்சொல் எனப்பட்டன அவற்றுக்கட் படுவதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. உரை: முன்னர் வேற்றுமை யோத்தினுள் ஐ ஒடு கு இன் அது கண் என்னும் உருபுகளையன்றே வேற்றுமைச் சொல் லென்று உணர்த்தியது. இனி அவையன்றி ஒழிந்த இடைச் சொற்களையும் வேற்றுமைச்சொல் என அமையும், என்றவாறு என்னை, அவையும் தாமாக நில்லா, பெயரும் தொழிலும் அடைந்து நின்றும் அவற்றையே பொருள்வேற்றுமைப் படுக்குமாகலின் என்பது. (58) 449. உரிச்சொன் மருங்கினு முரியவை யுரிய. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், உரிச்சொற்க டிறத்துப் படுவதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. உரை: இடைச்சொல் லெல்லாம் வேற்றுமைச் சொல்லாதற்கு எவ்வாறுரியவாயினமன், அவ்வுரிமை உரிச்சொற்கண்ணும் எய்தும், என்றவாறு உம்மை இறந்தது தழீஇயிற்று. உரிச்சொல் லெல்லாம் வேற்றுமைச் சொல் என்றது மேற்கூறிய இடைச்சொல்லேபோல உரிச்சொல்லும் தாமாக நில்லா, பெயரும் வினையும் அடைந்து பொருள் வேறுபடுதலுடைய, அது நோக்கி யென்பது. இருதலையாக அவற்றை வேற்றுமைச் சொல் என்றவாறு (59) 450. வினையெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், முன்னர் வினையியலுள் வினையெச்சம் என்று ஓதப்பட்டனவற்றுக்கண் ஆவதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. உரை: வினையெச்சம் என்று கூறப்பட்டன செய்யுட்கட்டாம் வந்து முடிபு கொண்டதன் றன்மைப்பாலே நில்லா; நின்றாற் பொருளிசை யாவாதலால், ஓர் எச்சந் திரிந்து ஓர் எச்சமாகியும் நிற்கும் இலக்கணத்தினை யுடைய, என்றவாறு (வரலாறு) ஞாயிறு பட்டு வந்தான், ஞாயிறு பட வந்தான் என்பதுமன் ஆகற்பாலது. பட என்பது செயவெனெச்சம்; அது திரிந்து பட்டு என்னுஞ் செய்தெனெச்சமாகி நின்றதென்பது. `கோழிகூவிப் புலர்ந்தது’ என்பதூஉம் செயவெனெச்சஞ் செய்தெனெச்சமாகித் திரிந்து நின்றது என்பது. அங்ஙனம் நின்றவேனும், அவற்றைச் செயவெனெச்சமாக வுணர்ந்து கொளல் வேண்டும். அல்லாக்காற் சொன்முடிபு எய்தாது. என்னை, `ஞாயிறு பட்டு’ என்றக்கால், வந்தான் என்றலும் முடியற்பாலது. பின்னும் ஞாயிற்றின்மேல் வினை கொண்டு முடியற்பாற்று, `முதனிலை மூன்றும் வினைமுதல் முடியும்’ (தொல். சொல். வினை. 31) என்று உரைத்தாராகலின் என்பது. கோழி கூவப் புலர்ந்தது என்பதற்கும் அஃது ஒக்கும். இனி, `மோயின ளுயிர்த்த காலை’ (அகம். 5) என்புழி, மோந்து என்னும் வினையெச்சம், மோயினள் என முற்றுச்சொல் வாய்பாட்டாற் றிரிந்து நின்றதேனும், வினை யெச்சமே யாகல்வேண்டும். பிறவும் அன்ன. பிற என்றதனால், `ஏரி னுழாஅ ருழவர் புயலென்னும் வாரி வளங்குன்றிக் கால்’ (குறள். 14) என்பது, குன்றியக்கால் என்னும் வினையெச்சம் குன்றிக்கால் என நின்றது. (60) 451. உரையிடத் தியலு முடனிலை யறிதல். இச்சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், உலகத்து மாறுகொண்டு வேறுபட்டியலுஞ் சொற்களவை அமைக என்பது உணர்த்துதல் நுதலிற்று. உரை: கட்டுரை யுரைக்குமிடத்து நடக்கும் ஒருங்கு நிலையும் என்றவாறு ஒன்று உரைக்கு மிடத்து இயைபில்லாத இரண்டு சொல் ஒரு பொருட்கண் நிற்பச் சொல்லுதலுண்டு, உண்டேனும் அஃது அமைக என்றவாறு. (வரலாறு) `இந்நாழிக்கு இந்நாழி சிறிது பெரிது’ என்பது; சிறிதென்ற சொல்லும் பெரிதென்ற சொல்லும் தம்முண் மாறு கோளுடைய; அந்நாழி மேலே நின்றனவேனும் அமையும் என்பது. என்னை அமையுமாறெனின், சிறிது என்று நின்றதன் சிறுமையே பெரிதென்பான் சொல்லினானல்லன், அந் நாழிக்கு இந்நாழி பெரிய துணை மிகுதியில்லை, பெருமை சிறிதெண்ணிய சொல்லினான்; அமையும் என்பது. (61) 452. முன்னத்தி னுணருங் கிளவியு முளவே யின்ன வென்னுஞ் சொன்முறை யான. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இதுவும் சொற் கண்ணதோர் பொருள்படுதல் வேற்றுமை யுணர்த்துதல் நுதலிற்று. உரை: சொல்லினவிடத்துச் சொற்கிடந்தவாறே குறிப்பினாற் கொண்டு உணரப்படும் பொருளும் உள; சொற்கள் தியாண்டாயினும் மற்று இன்னவென்று தன்மை வேறுபாடு சொல்லுதன் முறைக்கண், என்றவாறு (வரலாறு) `செஞ்செவி வெள்ளொக்கலர்’ எனவும், `குழைகொண்டு கோழியெறியும் வாழ்க்கையர்’ எனவும் வரும். செஞ்செவி வெள்ளொக்கலர் என்றால், உதிரஞ் சொரியுஞ் செவியர், வெளிய சுற்றத்தார் என்பது அன்று; செவியெல்லாஞ் சாலச்செம்பொன் அணிந்து, முட்டில் செல்வத்துக் கிளை யுடையர் என்றவாறு. `குழைகொண்டு கோழி யெறியும்’ என்றக்காலும், கோழி யெறிதலென்று உணரற்பாலது, முட்டில் செல்வத்தார் என்பது உணரற்பாற்று. (62) 453. ஒருபொரு ளிருசொற் பிரிவில வரையார். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இதுவும் மரபுவழுக் காத்தது. உரை: ஒரு பொருண்மேற் கிடந்த இருசொற் பிரிவின்றி நின்றன, வரையப்படா என்றவாறு வரலாறு: `வையைக் கிழவன் வயங்குதார் மாணகலந் தையலா யின்றுநீ நல்குதி நல்காயேற் கூடலார் கோவொடு நீயும் படுதியே நாடறியக் கவ்வை யொருங்கு.’ வையைக்கு இறை யெனப்பட்டானும், கோ எனப் பட்டானும் அவனாதலால், அவ்விருசொல்லும் ஒரு பொருட் கண்மேலே நின்றன; பிற பொருட்குப் பிரியா, அங்ஙனம் நிற்பன அமையும் என்பதாம். இனிப் `பிரிவில வரையப்படா’ எனவே, பிரிவுடையன வரையப்படும் என்பதாம்; அஃதியாதோ வெனின், `கொய்தளிர்த் தண்டலைக் கூற்றப் பெருஞ்சேந்தன் வைகலு மேறும் வயக்களிறே - கைதொழுதேன் காலேக வண்ணனைக் கண்ணாரக் காணவெஞ் சாலேகஞ் சார நட.’ இதனுள், `கூற்றப்பெருஞ் சேந்தன்’ என்றார், பின்னைக் `காலேக வண்ணன்’ என்றார்; அவையிரண்டு சொல்லும் பிரிவுடைய, அதனான் அமையா; யாதோ பிரிவெனின், `காலேக வண்ணம்’ என்பது சாந்து, கூற்றப்பெருஞ் சேந்தற்கே யுரித்தாய் நிற்பதொன்றன்று. `காலேக வண்ணம்’ என்னுஞ் சாந்து பூசினார்க் கெல்லாங் காலேகவண்ணர் என்று பெயராம், அதனாற் பிரிவுடைத்து; ஆதலால், அமையாது என்பது. மேற் கிளவியாக்கத்து, `இயற்பெயர்க் கிளவியுஞ் சுட்டுப்பெயர்க் கிளவியும்’ (தொல். சொல். கிளவி. 38) என்றும், `சிறப்பி னாகிய பெயர்நிலைக் கிளவிக்கு’ (தொல். சொல். கிளவி. 41) என்றும், `ஒருபொருள் குறித்த வேறுபெயர்க் கிளவி’ (தொல். சொல். கிளவி. 42) என்றும் ஒருபொருண்மேல் இருபெயர் வழுவும், பல பெயர் வழுவும் கூறிப் போந்தான்; அவற்றோ டிதனிடை வேற்றுமை தெரிந்து கொள்க. (63) 454. ஒருமை சுட்டிய பெயர்நிலைக் கிளவி பன்மைக் காகு மிடனுமா ருண்டே. இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இதுவும் பால்வழு அமைக்கின்றது. உரை: ஒருமை சுட்டி நின்ற பெயர்ச் சொல்லும் பன்மை கொண்டு முடியும் இடனும் உடைத்து, என்றவாறு (வரலாறு) `அங்கலுழ் மாமை யகுதை தந்தை யண்ணல் யானை யடுபோர்ச் சோழர்’ என வரும். இதனுள், `தந்தை’ எனநின்ற ஒருமை முறைப்பெயர், `சோழர்’ என்னும் பன்மைகொண்டு முடிந்தமையின், வழூஉவே யெனினும் அமையும் என்பது. `யானெம் மூர்புகுவல்’ என்பதும் அது. (64) 455. முன்னிலை சுட்டிய வொருமைக் கிளவி பன்மையொடு முடியினும் வரைநிலை யின்றே யாற்றுப்படை மருங்கிற் போற்றல் வேண்டும். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இது செய்யுட்கு உரியதோர் முடிபு உணர்த்துதல் நுதலிற்று. உரை: முன்னிலை சுட்டிய வொருமைச்சொல் பன்மை கொண்டு முடியினும் வரைந்து மாற்றப்படாது ஆற்றுப்படைச் செய்யுளிடத்து, அதனை ஆண்டுப் போற்றியுணர்க, என்றவாறு `கலம்பெறு கண்ணுள ரொக்கற் றலைவ’ (மலைபடுகடாம். 50) என்புழித் `தலைவ’ என்பது ஒருமைப் பெயர்; அது, பின்னை, `ஒருவி ரொருவி ரோம்பினிர் கழிமின்’ (மலைபடுகடாம். 218) எனப் பன்மைகொண்டு முடிந்தது. முடிந்ததே யெனினும் அமைக என்பது; மற்று இதுவும் ஒருமைப்பெயர் பன்மை கொண்டு முடிதலொக்குமாகலின், முன்னர், `ஒருமை சுட்டிய பெயர்நிலைக் கிளவி’ (தொல். சொல். எச்ச. 64) என்னுஞ் சூத்திரத்துள் அடங்கும் பிறவெனின், அற்றன்று, முன் செய்யுணோக்கிச் சொல்லினார் அல்லர்; இனிச் செய்யுள் நோக்கிச் சொல்லினார். எங்ஙனம்? முன்னிலையொருமை பன்மைகொண்டு முடிதல் ஆற்றுப்படைச் செய்யுட்கு முன்னிலைக் கட்டுரை பயின்றமையினும் மேலதனைக் கொண்டும் அச்செய்யுள் விதியுடைத் தொன்றாதலானும் அதனை யமைக்க வேண்டும், அதனாற் சொல்லினார் அதற்கே வரைந்து என்பது. மற்று, ஆற்றுப்படை மருங்கினானே யமையாது `போற்றல் வேண்டும்’ என்பதனாற் பிறவும் உள ஈண்டுப் போற்றி யுணரப் படுவன என்பது. `நில்லாது பெயர்ந்த பல்லோ ருள்ளு மென்னையே குறித்த நோக்கமொடு’ (அகம். 110) என்புழித் தானும் அன்னாருள்ளாராகலின் பல்லே முள்ளேம் எனற்பாற்று மன்; ஆயினும் அஃது அமைக என்பது. இனி, `ஏவ லிளையர் தாய்வயிறு கரிக்கும்’ எனற்பாற்றுமன், ஆயினும் அமைக என்பது. மற்று இளையர் பல்லாரையுமுடைய தாயைச் சொல்லிற்றாகப் பெறாதோ எனின், அற்றன்று. ஆண்டர் பூசலாட்களாகலான் அவர்க்கெல்லாம் ஒருதாயாத லியைபின்று என்பது. இனி, ஒரு சாரார், `கறையணி மிடற்றினை’ என்னும் முன்னிலையொருமை, கறையணி மிடற்றினவை என்னும் அஃறிணைப் படர்க்கைப் பன்மையானும் முடிந்த தென்று காட்டுப. இனிக் `கறையணி மிடற்றினவை’ என்றது, அத்தேவனார் கூளிகளை என்ப ஒரு திறத்தார்; அற்றன்று. பின்னையனையை யாதலின் அத்தேவனார் தம்மேலேறு மாகலின் அமைக்கவேண்டுமென்பர் முன்னை யுரைப்பார்; பிறவுமிவ்வாறு வருவன போற்றி யுணரப்படும் என்றவாறு. (65) 456. செய்யுள் மருங்கினும் வழக்கியன் மருங்கினு மெய்பெறக் கிளந்த கிளவி யெல்லாம் பல்வேறு செய்தியி னூனெறி பிழையாது சொல்வரைந் தறியப் பிரித்தனர் காட்டல். இச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், இவ்வதிகாரத்து எடுத்தோத்தே, இலேசேயன்றி இவ்வாற்றான் முடியாது நின்றனவற்றுக் கெல்லாம் புறனடை உணர்த்துதல் நுதலிற்று. உரை: செய்யுளிடத்தும் வழக்கிடத்தும் முன்னரே முடிபு கூறப்படாது நின்ற சொற்கள் இவை என்று தெரிந்து அவற்றை உத்திவகை இலக்கணத்தோடு படுத்திக் காட்டுக, என்றவாறு. (வரலாறு) `தினைத்தா ளன்ன சிறுபசுங் கால ஒழுகுநீ ராரல் பார்க்குங் குருகு முண்டுதா மணந்த ஞான்றே’ (குறுந். 25) என்புழிச் `சிறுபசுங்கால’ என்று பன்மையாற் கூறிப் பின்னைக் `குருகுமுண்டு’ என்று ஒருமையாற் கூறுதல் வழுவாயிற்று; ஆயினும் அமைக என்பது. `இரண்டனுட் கூர்ங்கோட்ட காட்டுவல்’ என்புழிக் கூர்ங்கோட்டது எனற்பாற்று. என்னை, இரண்டனுள் ஒன்றாற் பின்னை ஒன்றேயாகலின் என்பது. ஆயினும் அமைக என்பது. இனி, வழக்கினுள் எம்முளவனல்லன் நும்முளவனல்லன் என்னும். பிறவும் இவ்வாறு இடவழுப்பட வருவன அமைத்துக் கொள்க. இனி, ஒரு சாரார், சம்பு சள்ளை சத்தி என்பன ஈண்டுக் காட்டுவாரும் உளர். பிறவும் முடியாது நின்றனவெல்லாம் இதுவே விதியோத்தாக முடித்துக்கொள்க என்பது. (66) ஒன்பதாவது எச்சவியல் முற்றிற்று. சொல்லதிகாரமும் உண்மைப்பொருளும் வரலாறும் முடிந்தன. அடிக்குறிப்புகள் 1. `பரிமாணச் சூத்திரம்’ பிரதி பேதம். 2. சில பிரதிகளில் இது வெற்றிடமாக விடப்பட்டுள்ளது. 3. `டிருமுகமாச் செத்து’ பிரதிபேதம் சொல் வேற்றுமை யெட்டுத் திணையிரண்டு பாலைந்து மாற்றுதற் கொத்த வழுவேழும் - ஆறொட்டும் ஏற்றமுக் காலம் இடமூன்றோ டீரிடத்தும் ஆற்ற வருவதாஞ் சொல். சேனாவரையர் உரையாசிரியரை மேற்கொண்டும் மறுத்தும் கூறுமிடங்கள் (சேனா: 1-இளம் :1) உரையாசிரியரும் எழுத்தாதற்றன்மையொடு புணர்ந்து என்பார், `எழுத்தொடு புணர்ந்து’ என்றாராகலின், ஒருபுடை யொற்றுமையே கூறினார். (சேனா: 1-இளம்: 1) `என்’ என்னும் முற்றுச்சொல்லினது பகரங்குறைத்து மன்னும் ஆரும் என இரண்டு இடைச்சொற்பெய்து விரித்தார் என்று உரையாசிரியர் கூறினால் எனின் - என்மனார் என்பது இடர்ப்பட்டுழிச் சிறுபான்மை வாராது, நூலுள்ளும் சான்றோ செய்யுளுள்ளும் பயின்று வருதலானும், இசைநிறை யென்பது மறுத்துப் பொருள் கூறுகின்றார் பின்னும் இசைநிறை யென்றல் மேற்கோண்மலைவாதலானும், அவர்க்கு அது கருத்தன்று என்க. மாணார்க்கு உணர்வு பெருகல் வேண்டி வெளிப்படக் கூறாது உய்த்துணர வைத்தல் அவர்க்கு இயல்பாகலாற் செய்யுள் முடிபு என்பது கூறாராயினார். (சேனா : 1-இளம்: 1) இன்சாரியை வேற்றுமையுருபு பற்றியும் பற்றாதும் நிற்கும் என்று உரையாசிரியர் இரண்டாவது விரித்தாரால் எனின் - `சாரியை யுள்வழிச் சாரியை கெடுதலுஞ் - சாரியை யுள்வழித் தன்னுருபு நிலையிலும்’ என்று இரண்டாவதற்குத் திரிபோதினமை யானும், `செலவினும் வரவினுந் தரவினுங் கொடையினும்’ என்புழியும் பிறாண்டுமெல்லாம் ஏழாவது விரித்தற்கேற்பப் பொருளுரைத்தமையானும் அவ்வுரை போலியுரை யென்க. (சேனா: 2 - இளம்: 2) உரையாசிரியரும் உயர்ணையெனப்பட்ட பகுப்பை விரிப்புழி இத்துணையல்லது விரிபடாது என்பது ஈண்டுக் கூறியது என்று உரைத்ததூஉம் என்க. (சேனா: 4 - இளம் :4) சுட்டிய என்பது செய்யிய என்னும் வினையெச்சம் என்றும், ஆண்மைதிரிதல் சொற்கு இன்மையின் பெயர்நிலைக்கியாவி என்பது ஆகுபெயராய்ப பொருண்மேல் நின்றது என்றும் உரையாசிரியர் கூறினாரால் எனின் - ஆண்மைதிரிதல் பெண்மைத் தன்மை யெய்துதற்பொருட்டன்றிப் பேடிக்கியல் பாகலின் பெண்மை சுட்டவேண்டி ஆண்மைதிரிந்த என்றல் பொருந்தாமையானும், பொருளே கூறலுற்றாராயின், ஆசிரியர் பேடியும் தெய்வமும் என்று தாம் கருதிய பொருள் இனிது விளங்கச் சுருங்கிய வாய்பாட்டாற் சூத்திரரிப்பராகலானும், அவர்க்கு அது கருத்தன்மையான், உரையாசிரியர்க்கும் அது கருத்தன்று என்க. (சேனா: 5 - இளம் :5) ஏகாரம் அசைநிலை, உரையாசிரியர் பிரிநிலை யென்றாரால் எனின் - பிரிநிலையாயின், ஆடூஉவறி சொற்கு இலக்கணங் கூறுதலன்றிப் பிரித்து அதன் சிறப்புணர்த்துதலே கருத்தாமாகலின், அவ்வுரை போலியுரை என்க. (சேனா: 13- இடம்: 13) வினாவெதிர் வினாதல், ஏவனமறுத்தல், உற்றதுரைத்தல், உறுவதுகூறல், உடம்படுதல் எனச் செப்பு அறுவகைப்படும் என்று உரையாசிரியர் கூறினாரால் எனின் - உயிர் எத்தன்மைத்து என்றவழி உணர்த்தற்றன்மைத்து என்றல் முதலாயின அவற்றுள் அடங்காமையானும், மறுத்தலும் உடம்படுதலும் ஏவப்பட்டார் கண்ணவாகலானும், அறுவகைப்படும் என்று பிறர்மதம் மேற்கொண்டு கூறினார் என்பது. (சேனா: 13 - இளம் :13) உரையாசிரியர் அறிபொருள்வினாவை - அறிவொப்புக் காண்டலும், அவனறிவு தான்காண்டலும், மெய்யவாக்குக நாட்டலும் என விரித்து, ஏனைய கூட்டி ஐந்து என்றார். (சேனா : 13 - இளம்: 15) `வினா வழீஇயினவிடத்து அமையாது’ என்று உரையாசிரியர் கூறினாரால் எனின் - அற்றன்று, `யாதென வருவும் வினாவின் கிளவி’ எனவும், `வன்புற வரூஉம் வினாவுடை வினைச்சொல்’ எனவும் முன்னர் வழுவமைப்பராகலான, அது போலியுரை என்க. (சேனா : 17-இளம்: 17,18) பொற்கொல்லர் பொன்னைப் பறி யென்றலும், வண்ணக்கர் காணத்தை நீலம் என்றலும் முதலாகிய குழுவின் வந்த குறிநிலை வழக்கும், கண்கழீஇ வருதும் கானமேல நீர்பெய்து வருதும் என்னுந் தொடக்கத்து இடக்கரடக்குந் தகுதி யென்றும், மரூஉமுடிபை வழக்காறு என்றும் உரையாசிரியர் அமைத்தாரால் எனின் - குழு - வினவந்த குறிநிலைவழக்குச் சான்றோர் வழக்கின்கண்ணும் அவர் செய்யுட்கண்ணும் வாராமையின் அமைக்கப்படாவாகலானும், இடக்கரடக்கு, `அவையல கிளவி’எனவும், `மறைக்குங் காலை’எனவும் முன்னர் அமைக்கப்படுதலானும், மரூஉமுடிபு எழுத்ததிகாரத்துக் கூறப்பட்டமையானும், அவர்க்கு அது கருத்தன்று என்பது. கருமை முதலாயின ஒரு நிகரன அன்மையிற் காக்கையொடு சார்த்திக் களம் பழத்தை விதந்ததுணையல்லது, காக்கைக்கு வெண்மை நேராமையிற் காக்கையிற்கரிது களம்பழம் என்புழிக் கரிது வெளிதாயிற்றன்று கிழக்கு மேற்கு என்பன வரையறையின்றி ஒன்றனொடு சார்த்திப் பெறப்படுவன வாதலின், ஒன்றற்குக் கீழ்ப்பாலதனைப் பிரிதொன்றற்கு மேல்பாலது என்றலும் வழுவன்று சிறுவெள்வாய் என்பது இடுகுறி அதனான் இவை வழக்காறு என அமைக்கப்படாவாயினும், உரையாசிரியர் பிறர்மதம் உணர்த்திய கூறினார் என்பது. (சேனா: 24 - இளம்: 23,24) பன்மைகூறல் உயர்திணைப்பாலையத்திற்கு உரித்து என்றும், உருபென மொழிதல் திணையையத்திற்கு உரித்து என்றும் உரையாசிரியர் கூறினாரால் எனின் - அவை அவற்றிற்கே உரியவாயின், அஃறிணைப் பிரிப்பென்றாற்போல உயர்திணைப் பான்மயக்குற்ற என்றும், திணையைத்தென்றும் விதந்தோதுவர் ஆசிரியர், அவ்வாறு ஓதாமையானும், நடையுள் அவை பொதுவாய வருதலானும், அவை போலியுரை என்க. (சேனா : 26 - இளம்: 26) `பெருந்தோட் சிறுநுசுப்பிற் பேரமர்க்கட் பேதை’ என்புழி, மூன்றாம்வழி முதல் கிடவாது பின்னும் அடையும் சினையும் புணர்த்தமையான் வண்ணச்சினைச்சொல் செய்யுளுண்மயங்கி வந்தது என்று உரையாசிரியர் கூறினாரால் எனின் - மூன்றாம்வழிப் புணர்க்கப்படும் பேதை யென்னும் முதற்சொல் பேரமர்க்கண் என்னுந் தொகையோடு வேற்றுமைப் பொருள்படத் தொக்கு, அத்தொகை சிறுநுசுப்பு என்னுந் தொகையோடும் அப் பொருள்படத் தொக்கு, ஒரு சொல்லாய, `பெருந்தோட் பலயாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி’ என்றாற்போல, மூன்றாம்வழிப் பிறசொல்லடுத்துப் பேதை யென்னும் முதல் கிடந்ததெனவேபடுதலின், மயக்கம் இன்மையான, அவர்க்கு அது கருத்தன்று என்க அன்றிப் பொருந்தோள் முதலாகிய மூன்றும் பலபெயர் உம்மைத் தொகைப்படத் தம்முட்டொக்கு ஒரு சொல்லாய்ப் பின் பேதை யென்பதனோடு வேற்றுமைத் தொகைபடத் தொக்கன் எனினும், அவை உம்மைத் தொகைபடத் தொகாது நின்று பேதை யென்பதனோடு வேற்றுமைத் தொகைபட ஒருங்கு தொக்கன் எனினும், தம்முள் இயையாது பேதை யென்பதனோடு இயைதலின், ஆண்டும் மயக்கமின்மை யறிக. அஃதேல், இவ்வாறு வருதல் வழக்கிற்கும் உரித்தோ எனின், அடுக்கிய அடையும் சினையும் பொதுமை நீக்குதற்கன்றி அணிகுறித்து நிற்றலிற் செய்யுட்கே உரித்து என்பது `சிறுபைந்தூவி’ எனச் சினையொடு குணமிரண்டடுக்கி வருதல் செய்யுட்கு உரித்தென்றும், `இளம்பெருங் கூத்தன்’ என முதலொடு குணமிரண்டடுக்கி வருதல் வழக்கிற்கு உரித்தென்று, பிறர்மதம் மேற்கொண்டு கூறினார். ஒன்றாகப் பலவாக இனஞ்சுட்டாதன செய்யுட்கு உரியவாம், இனஞ்சுட்டி நின்றன வழக்கிற்கு உரியவாம் என்பதே உரையாசிரியர் கருத்து என்க அன்றிப, `பிரிநூன் முடிந்தது தானுடன் படுதல்’ என்பதனாற் சினையொடு குணமிரண்டடுக்கல் செய்யுளாறென்று கொள்ளினும் அமையும், `முதலொடு குணமிரண் டடுக்கல் வழக்கியல் - சினையோ -டடுக்கல் செய்யு ளாறே’ என்றாராகலின். (சேனா : 29 - இளம் :30) `இந்நான்கும் கொடைப்பொருளன’ என்று உரையாசிரியர் கூறினாரால் எனின்- `தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது’ என்பதனை அமைத்தாராகலின், அவர்க்கு அது கருத்தன்று என்க. (சேனா: 35 - இளம்: 35) `அல்லதில’ என்பதற்குத் தன்னுழை யுள்ளதல்லது என்றும், `அப்பொருளல்லாப் பிரிதுபொருள் கூறல்’ என்பதற்கு இனப்பொருள் கூறுக என்றும் உரைத்தாரால் உரையாசிரியர் எனின் - பயறுளவோ என்று வினாயவழிப் பயறில்லை யென்றாற்படும் வழுவின்மையானும், உள்ளதல்லது என்றல கருத்தாயின் ஆசிரியர் அல்லது எனக் குறித்த பொருள் விளங்காமையின் அகப்படச் சூத்திரியாராகலானும், பாம்புணிக் கருங்கல்லும் பயறும் விற்பானொருவனுழைச் சென்று, `பயறுளவோ’ என்றவழிப் `பாம்புணிக் கருங்கலல்லது இல்லை’ என்றால் இனப்பொருள் கூறாமையாற்பட்ட இழுக்கின்மை யானும், அவை போலியுரை யென்க அல்லதூஉம், இனப் பொருள் கூறுக என்பதே கருத்தாயின், அப்பொருளல்லா இனப்பொருள் கூறல் என்னாது, `பிறிது பொருள் கூறல்’ என்னா ஆசிரியர், அதனானும் அஃது உரையன்மை யுணர்க. (சேனா: 40 - இளம்: 40) பொருள்பற்றாது பண்பு முதலாயினபற்றி வந்த சுட்டாதலின் வேறு ஓதப்பட்டது என்று உரையாசிரியர் கூறினாரால் எனின் `சாத்தன் வந்தான் அஃது அரசர்ற்குத் துப்பாயிற்று’ என்றும் கிழவன் பிரிந்தான் அதனைக் கிழத்தி யுணர்ந்திலன்’ என்றும் எழுவாயாயும் ஏனைவேற்றுமை யேற்றும் அச்சுட்டுப் பயின்று வருதலாற் பண்பு முதலாயினவற்றைச் சுட்டுஞ் சுட்டெனப் பொதுவகையாற் கூறாது காரணக்கிளவி யென ஒருசார் வேற்றுமைக்குரிய வாய்பாடுபற்றி ஓதுதல் குறைக்கூறல் ஆகலானும், சுட்டுப் பெயராயிற் சுட்டு முதலாகிய காரணக்கிளவி என்றும் சுட்டுப்பெயர் இயற்கையிற் செறியத்தோன்றும் என்றும் கூறுதல் பொருந்தாமையானும், அது போலியுரை யென்க (சேனா: 45 - இளம்: 43,45) `எண்ணென்றா வுறழென்றா வாயிரண்டுமின்னொன்றல் வேண்டும்’ என்பது இலக்கணமாகலான, `யானுமென் னெஃகமுஞ் சாறும் என்புழியும்,`ஆவும் ஆயனுஞ் செல்க’ என்புழியும் இன்னல்லன் உடனெண்ணப்படுதலின் வழுவென் றாரால் உரையாசிரியர் எனின் - திணைவேறுபாடு உண்டேனும், `யானுமென் னெஃகமும்’ என்புழி வினைமுதலுங் கருவியுமாகிய இயைபும், `ஆவும் ஆயனும்’ என்புழி மேய்ப்பானும் மேய்க்கப் படுவனவுமாகிய இயைபும் உண்மையான் உடனெண்ணப் படுதலானும், `யானை தேமா குதிரை காலாள் எறிந்தான்’ என முன்னர் உதாரணங்காட்டுபவாகலானும், பிறாண்டும், `எண்ணுத்திணை விரவுப்பெய ரஃறிணை முடிபின’ என ஆசிரியருக்கு ஆராய்ச்சி முடிபுகோடற்கண்ணதாகலானும், அவர்க்கு அது கருத்தன்று என்க அல்லதூஉம், திணைவிரா யெண்ணல் வழுவென்பதே கருத்தாயின், `நெடுநல் யானையுந் தேரு மாவும் - படையமை மறவருமுடையமயாம்’ என்றும், `இருமனப் பெண்டிருங் கள்ளும் கவரும்’ என்றும், படர்க்கைச் சொல்லும் அஃறிணைக்கிளவியும் விராயெண்ணுதல் வழக்குப்பயிற்சி யுடைமையான் அவையும் அடங்க உயர்திணைச் சொல்லே யஃறிணைக்கிளவி என்ப பொதுப்பட ஓதாது, `தன்மைச் சொல்லே யஃறிணைக் கிளவி’ எனத் தன்மைச் சொல்லையே விதந்தோதல் குன்றக்கூறலா மாகாலானும், அவர்க்கு அது கருத்தன்மை யறிக. (சேனா: 50-இளம்: 50) `இன்றிவ்வூர்ப் பெற்றமெல்லாமறங்கறக்கும், உழவொழிந்தன’ என உரையாசிரியர் காட்டினாராலோ எனின் - பெற்றம் என்னும் பொதுப்பெயர் கறத்தலும் உழுதலும் ஆகிய சிறப்புவினையாற் பொதுமை நீங்குதல் வழுவன்மையான் ஈண்டைக்கு எய்தாமையின், அவர்க்கு அது கருத்தன்று என்பது. (சேனா: 51-இளம்; 51) `பாணன் பறையன் றுடியன் கடம்பனென் - றந்நான் கல்லது குடியுமில்லை’ என இருதிணைப்பெயரும் விரவிவாராது உயர்திணைப் பெயரே வந்து செய்யுளுள் அஃறிணைமுடிபு கொண்டன என்று உரையாசிரியர் கூறினாரால் எனின் - பாணன் முதலாயினாரைக் குடியென்று சுட்டியவழிக் குடிக்கேற்ற தொகை கொடுத்தல் வழுவன்மையான், அவ்வுரை போலியுரை யென்க. (சேனா: 54-இளம் :54) `ஒன்றுவினை மருங்கி னொன்றித் தோன்றும்’ என ஒரு சூத்திரமாக உரையாசிரியர் பிரித்தாரால் எனின்- அங்ஙனம் பிரிப்பின ஒன்றுவினை மருங்கி னொன்றித் தோன்றுதலும் வினைவேறுபடூஉம் பலபொரு ளொருசொற்கே இலக்கணமாய் மாறுகோடலானும், வினைவேறுபடுவன தாமே பொதுவினை கொண்டவழி வினைவேறு படாதனவாம் என்பது அதனாற் பெறப்படாமையானும், அது போலியுரை யென்க. (சேனா: 60-இளம்: 61) அஃதேல், `மேற்சேரிக் கோழி யலைத்தது’எனக் கீழ்ச்சேரிக் கோழி யலைப்புண்டது என்றும், `குடங்கொண்டான் வீழ்ந்தான்’ எனக் குடம் வீழ்ந்தது என்றும், இவை யினஞ்செப்பும் என்றும், `ஆவாழ்க அந்தணர் வாழ்க’ என்பன இனஞ்செப்பா என்றும் உரையாசிரியர் கூறினாரால் எனின் - அற்றன்று, கீழ்ச்சேரிக் கோழியலைப்புண்டலின்றி மேற்சேரிக் கோழி யலைத்தல் அமையாமையானும், குடம் வீழ்தலின்றிக் குடங்கொண்டான் வீழ்தல் அமையாமையானும், கீழ்ச்சேரிக்கோழி யலைப் புண்டலும் குடம்வீழ்தலும் சொல்லானன்றி இன்றியமையாமை யாகிய பொருளாற்றலாற் பெறப்படு மாகலான் ஈண்டைக்கு எய்தா, இது சொல்லாராய்ச்சி யாகலான் என்பது. இன்னோரன்ன சொல்லாற்றலாற் பெறப்பட்டன எனின், புகையுண்டு என்றவழி எரியுண்மை பெறுதலுஞ் சொல்லாற்றலாற் பெறப்பட்டதாம் என்பது இனி, `ஆவாழ்க அந்தணர் வாழ்க’ என்புழிச் சொல்லுவான் ஒழிந்த விலங்கும் ஒழிந்த மக்களும் சாக என்னுங் கருத்தினனாயின் இவையும் இனஞ் செப்புவனவன்றோ என்பது; அதனான் அவை போலியுரை யென்க. (சேனா: 62-இளம்: 63) பொதுவிலக்கணம் உணர்த்திச் சிறப்பிலக்கணம் உணர்த்துதல் முறையாகலின், முதற்கண்ணதாகிய பெயர்ச் சொற்குப் பயனிலை கோடலும் உருபேற்றலும் காலந்தோன் றாமையும் ஆகிய இலக்கணம் உணர்த்துவார் இயைபுபட்டமை யான வேற்றுமையிலக்கணம் உணர்த்தினாரென மேலோத்தி னோடு இவ்வோத்திடை யியைபுகூறினாரால் உரையாசிரியர் எனின் - அற்றன்று, இவ்வோத்துப் பெயரிலக்கண நுதலி யெடுத்துக்கொள்ளப்பட்டதாயின், உருபேற்றலும் பயனிலை கோடலும் காலந்தோன்றாமையும் ஆகிய பெயரிலக்கணம் முன்னோதி, இயைபுபடுதலான் வேற்றுமையுணர்த்துங் கருத்தினராயின் அவற்றையும் இன்ன இலக்கணத்த என உணர்த்திப் பின்னும் எடுத்துக்கொண்ட பெயரிலக்கணமே பற்றி யோதிப் பெயரியல் என ஓரோத்தான் முடியற்பாற்றன்றே, அவ்வாறன்றி, வேற்றுமை யிலக்கணமே முன் கூறி, `அன்றி யனைத்தும் பெயர்ப் பயனிலையே’ எனவும், `ஈறுபெயர்க் காகு மியற்கைய வென்ப’ எனவும் வேற்றுமையில்க்கணங் கூறி, அச்சூத்திரத்தாற் பயனிலைகோடலும் உருபேற்றலும் பெயர்க்கிலக்கணம் என்பது உய்த்துணர வைத்துப் பின்னும் வேற்றுமையிலக்கணமே யுணர்த்தி, இதனை, `வேற்றுமை யோத்து’ என்றும், அவற்றது மயக்க முணர்த்திய வோத்தை, `வேற்றுமை மயங்கியல்’ என்றும், சிறப்பில்லா விளி வேற்றுமை யுணர்த்திய வோத்தை, `விளிமரபு’ என்றும் நுதலியதனாற் பெயர்கொடுத்து, மூன்றோத்தாக வைத்து, `பெயரியல்’ என வேறோர் ஓத்திற்குப் பெயர் கொடுத்தமையானும், `எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்பது முதலாகிய ஐந்து சூத்திரமும் பெயரிலக்கணமுணர்த்தும் ஒத்தின்முன் வையாது, இடைவைத்தல் பொருந்தாமையானும், இவ்வோத்துப் பெயரிலக்கண நுதலி யெடுத்துக் கொள்ளப்பட்டது அன்று, வேற்றுமை யிலக்கணமே நுதலியெழுந்ததெனவே படும், அதனான் அவர்க்கு அது கருத்தன்று என்க. (சேனா: 67-இளம் 68) `பெயரினாகிய தொகையும்’ என்ற உமையான் வினாயினாகிய வினைத்தொகை தழுவப்பட்டது என்றும், `எல்லாத் தொகையு மொருசொன் னடைய’ என்பதனால் தொகைச்சொல் லெல்லாம் எழுவாய் வேற்றமையாதல் பெறப்படுதலின், ஈண்டு, `அவ்வுமூரிய வப்பாலான’ என்றது தொகைச்சொற்குப் பயனிலை கோடன் மாத்திரம் எய்துவித்துற்கு என்றும், உரையாசிரியர் கூறினாரால் எனின் - அற்றன்று, வினைத்தொகைக்கு நிலைமொழி வினையென்பது உரையாசிரியர்க்குக் கருத்தன்மை, `வினையின் றொகுதி காலத் தியலும்’ எனலுஞ் சூத்திரத்திற் சொல்லுதும் `இனி, `எல்லாத் தொகையு மொருசொன் னடைய’ என்பதற்கு ஒரு சொன்னடையவாம் என்பதல்லது எழுவாய்வேற்றுமையாம் என்னுங் கருத்தினமையானும், அக் கருத்து உண்டாயின் அவையும் எழுவாய் வேற்றுமையாய் நின்று, `அன்றி யனைத்தும் பெயர்ப்பயனிலையே’ என்றதனாற் பயனிலை யெய்துமாகலின், `அவ்வு முரிய வப்பா லான’ என்றல், கூறியது கூறிற்றா மாகலானும், அதுவும் உரையாசிரியர் கருத்தன்று என்க. (சேனா: 68-இளம்: 69) எவ்வயிற்பெயரும் பயனிலைகோடல் செவ்விதென உருபேற்றல் செவ்வின்றாம் என வுரைத்து, அவ்வாய நீயிர் என்பன உருபேலா என்று காட்டினாரால் உரையாசிரியர் எனின் - அவ்வாய என்பது இடைச்சொல்லாய ஆண்டு என்னும் பொருள்பட நின்ற வழி உருபேயன்றிப் பயனிலையும் ஏலாதாம் இனி, அல்வழிக்கண் நும் என்பது திரிந்து நீயிர் என நின்ற திரிபைப் பெயரெனக் கொண்டு உருபேலாதென்றாராயின், நீ யென்பதன் திரிபாகிய நின் என்பதனையும் பெயராகக் கொண்டுபயனிலை கொள்ளாது என்றுங் கூறல்வேண்டும்; அன்றி, நும்மின் திரிபாகிய நீயிர் என்பதனை, `எல்லா நீயிர் நீயெனக் கிளந்து’ என இயற்கைப்பெயரோடு ஒருங்கு வைத்து நீயிர் என்னும் திரிபே இயல்பாக வேற்றுமைக்கண் நும் எனத் திரிபினும் அமையும் என்னுங் கருத்தினராயன்றே அதனான் இயல்பாகக் கொள்ளப்பட்ட நிலைமைக்கண் நீயிர் என்பதனை உருபேலாதென்றாராயின் நும்மெனத் திரிந்து உருபேற்பதனை உருபேலாது என்றல் பொருந்தாதாம், அதனான் அது போலியுரை யென்க. (சேனா: 74- இளம்: 73) `அதனினியறல்’ என்பதற்குத், `தச்சன் செய்த சிறுமா வையம்’ என்றும் இன்னான் என்பதற்குக், `கண்ணாற் கொத்தை, காலான் முடவன்’ என்றும், உதாரணங்காட்டினாரால் உரையாசிரியர் எனின் - அற்றன்று, தச்சன் செய்த சிறுமாவையம் என்பது, `வினைமுதல் கருவி யனைமுதற்று’ என்புழி அடங்குதலான், ஈண்டுப் பாற்படுக்க வேண்டாமையானும், சினைவிகாரத்தை முதன்மேலேற்றிக் கூறும் பொருண்மை இன்னான் என்பதனாற் பெறப்படாமையானும், அது போலியுரை யென்க. (சேனா: 82 - இளம்; 77) கண் முதலாயின எல்லாம் உருபென்றாரால் உரையாசிரியர் எனின் - உருபாயின், ஏழாவதற்குக் கண் என்பது உருபாதல் மேலே பெறப்பட்டமையாற் பெயர்த்துங் கண் கால் என்றல் கூறியது கூறிற்றாம் ஆகலானும், ஊர்ப்புறத்திருந்தான், ஊரகத்திருந்தான், கைவலத்துள்ளது கொடுக்கும் எனப் புறம் அகம் வலம் என்பனவற்றுவழி அத்துச்சாரியை கொடுத்து உதாரணங் காட்டினமை யானும், அவர்க்கது கருத்தன்று என்க. (*சேனா: 83 - இளம் 78,79) உரையாசிரியர் இரண்டு சூத்திரமாக அறுத்து ஆசிரியர்மத விகற்பங்கூறித் தம் மதம் இது என்பது போதர, ஒன்றாகவுரைப்பாருமுளர் என்றா இரண்டாய் ஒன்றாயவழிப பிறிதுரை யின்மையின், உரையாசிரியர் கருத்து இதுவேயாம். (சேனா: 102-இளம்: 98) சாத்தன் றயைக் காதலன், நாய் தேவன் ஆயிற்று என்புழி, தாயை, தேவன் என்பன, காதலன், ஆயிற்று என்னும் பயனிலைக்கு அடையாய இடைநின்றாற்போல, கோட்டை நுனிக்கட் குறைத்தான்; தினையிற் கிளியைக் கடியும் என்புழி, நுனிக்கண், கிளியை என்பன, குறைத்தான், கடியும் என்னும் முடிக்குஞ் சொல்லிற்கு அடையாய் இடைநின்றவாகலான், அவை அடுக்கன்மையின், அவை யுதாரணமாதல் உரையாசிரியர் கருத்தன்று என்க. (சேனா: 114-இளம்: 110) தொல்காப்பியனானும் கபிலனானும் செய்யப்பட்ட நூலைத் தொல்காப்பியம் கபிலம் என்றல் வினைமுதலுரைக்குங் கிளவியென்றாரால் உரையாசிரியர் எனின் - அற்றன்று, ஒருமொழி இலக்கணம் ஈண்டுக் கூறாராயினும், வெற்புச் சேர்ப்பு என்னும் பெயரிறுதி இதனையுடையான் என்னும், பொருடோன்ற அன் என்ப தோரிடைச்சொல் வந்து வெற்பன சோப்பன் என நின்றாற்போல, தொல்காப்பியன் கபிலன் என்னும் பெயரிறுதி இவனாற் செய்யப்பட்டது என்னும் பொருடோன்ற அம் என்பதோர் இடைச்சொல் வந்து அன கெடத் தொல்கிhப்பியம் கபிலம் என நின்றன என்பது ஆசிரியர் கருத்தாம், அதனான் அவை உதாரணமாதல் உரையாசிரியர் கருத்தன்று என்க. `அனையமரபின’ என்றது அவ்வாறியாதானும் ஓரியையு பற்றி ஒன்றன்பெயர் ஒன்றற்காதல் என ஆகுபெய ரிலக்கணத் திற்குத் தோற்றுவாய் செய்தவாறு. ஒன்றன்பொருட்கண் ஒன்று சேறல் என்னும் ஒப்புமையான் இவற்றை யீண்டுக் கூறினார். அஃதேல், ஆகுபெயர் எழுவாய் வேற்றுமை மயக்க மாதலான் ஈண்டுக் கூறினார் என்றாரால் உரையாசிரியர் எனின் - ஆகுபெயர் ஏனைவேற்றுமையும் ஏற்று நிற்றலானும், எழுவாய் வேற்றுமையாய நின்றவழியும் அது பிறிதோர் வேற்றுமைப் பொருட்கட் சென்று மயங்காமையின் வேற்றுமைமயக்கம் எனப் படாமையானும், அது போலியுரை யென்க. (சேனா : 115-இளம்: 112) அஃதேல், இதனைப் பிரித்து ஒரு சூத்திரமாக உரைத்தாரால் உரையாசிரியர் எனின் - அங்ஙனம் பிரிப்பின், தம்மொடு சிவணலும் பிறிதுபொருள்சுட்டலும் ஆகிய இவற்றுது வேறுபாட்டின்கணென்பது இனிது பெறப்படாமை யானும், எழுத்தோத்தினுள், `புள்ளி யிறுதியு முயிரிறு கிளவியும்’ என்னுஞ் சூத்திரத்து இந்நிகர்ப் பாதுகாவலைப் பிரியாது ஒன்றாகவே யுரைத்தலானும், அவர்க்கது கருத்தன்று என்க. (சேனா: 120-இளம்: 133) விரவுப் பெயரை உயர்திணைப் பெயரோடு மாட்டெறிபவாக வின, மாட்டேற்றான் முறைப்பெயர் ஆகாரமும் ஏகாரமும் பெற்று விளியேற்ற லெய்தாமையின் ஈண்டுக் கூறினாரென்றாhரால் உரையாசிரியர் எனின் - அக்கருத்தினராயின் அஃறிணையென்னுஞ் சொல் லொழித்துக், `கிளந்த விறுதி விரவுப்பெயர், விளம்பிய நெறிய விளிக்குங் காலை’ எனவும், இதன்பின், `முறைப்பெயர் மருங்கினை யெனிறுதி - யாவொடு வருதற் குரியவு முளவே’ எனவும், இதன்பின் னகார ளகாரவீற்று இருவகை முறைப்பெயரும் அடங்குப, `புள்ளி யிறுதி யேயொடு வருமே’ எனவும் ஓதுவார்மண் ஆசிரியர்; என்னை? மயங்கக்கூறல் என்னுங் குற்றமும் நீங்கிச் சூத்திரமுஞ் சுருங்குமாதலான் அவ்வாறு ஓதாமையானும், முறைப்பெயரேயன்றித் தாம் நீயிர் என்பனுவும் ஈண்டுக் கூறப்பட்டமையானும், உரையாசிரியர்க்கு அது கருத்தன்று என்க. (சேனா: 161 - இளம்: ) மற்றும், நஞ்சுண்டான் சாம் என்பது ஒரு பாற்குரிய சொல்லாயினும், நஞ்சுண்டாள் சாம், நஞ்சுண்டார் சாவர், நஞ்சுண்டது சாம், நஞ்சுண்டன சாம் என ஏனைப் பாற்கும் உரித்தாம அச்சொல் என இப்பொருண்மை யுணர்த்துகின்றது இச்சூத்திரம் என்றாரால் உரையாசிரியர் எனின் - நஞ்சுண்டல் சாதற்குக் காரணமென்பான் ஒரு பான்மேல் வைத்து நஞ்சுண்டான் சாம் என்றதல்லது, ஆண்டுத்தோன்றும் ஆண்மையும் ஒருமையும் சாதற்குக் காரணமென்னுங் கருத்தினன் அல்லன்; அதனாற் சொல்லுவான் கருத்தொடு கூடிய பொருளாற்றலாற் சாதல் ஏனைப்பாற்கும் ஒக்கும் எனச் சேறல் சொல்லிலக்கணத்திற் கூறப்படாமையான், ஆசிரியர் `ஒருபாற் கிளவி யேனைப்பாற் கண்ணும் - வருவன தாமே வழக்கென மொழிப’ என இப்பொருண்மை பொருளியலிற் கூறினாராகலின், இச்சூத்திரத்திற்கு அஃது உரையாதல் உரையாசிரியர் கருத்தன்று என்க. அல்லதூஉம், பார்ப்பான் கள்ளுண்ணான் என்றவழிக் கள்ளுண்ணாமை சாதிபற்றிச் செல்வதொன்றாகலின் பார்ப்பனிக்கும் பார்ப்பார்க்கும் அல்லது பிற்சாதியார்க்கும் அஃறிணைக்கும் செல்லாமையின், ஐம்பாற்கிளவிக்கும் உரியவென்றல் பொருந்தாமையானும், அவர்க்கு அது கருத்தன்மை யறிக. (சேனா: 174 - இளம்: 171) பிறவும் என்றதனான், மக குழவீ போல்வன கொள்க. இவற்றை உயர்திணைப் பெயர் என்றாரால் உரையாசிரியர் எனின் - மரபியலுள், `மகவும் பிள்ளையும் பறழும் பார்ப்பு - மவையு மன்ன வப்பா லான’ எனவும், `குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க் கொடை’ எனவும், அவை அஃறிணைக்காதல் கூறி, `குழவியு மகவு மாயிரண் டல்லன் - கிழவ வல்ல மக்கட் கண்ணே” என உயர்திணைக்கும் ஓதிவைத்தாராகலின், அவை விரவுப்பெயரேயாம்; அதனான் அது போலியுரை யென்க. (சேகா: 182-இளம்: 179) அஃறிணை யொருமையும் அத்திணைப்பன்மையும் உயர்திணை யொருமையும் ஆகிய பலவற்றையும் உணர்த்தலாற் பன்மை சுட்டிய பெயர் என்பாரும் உளர், அஃது உரையாசிரியர் கருத்தன்மை அவ்வுரையான் விளங்கும். (சேனா: 187-இளம்: 184) எல்லாப் பார்ப்பாரும், எல்லாச் சான்றாரும் எனப் படர்க்கைக் கண் வருதலும் கோடற்குத் தன்னளுறுத்த பன்மைக்காங்கால் உயர்திணைமருங்கி னல்லது ஆகாதென மொழிமாற்றி யுரைத்தாரால் உரையாசிரியர் எனின் - படர்க்கைக்கண் வருதல் இடவழுவமைதி யென்றவழிப்படும் இழுக்கினமையானும், `தன்மைச் சொல்லே யஃறிணைக் கிளவி’ எனவும், `யான் யாம் நாமென வரூஉம் பெயர்’ எனவும், பிறாண்டும் ஓதியவாற்றால், தன்மைச்சொல் அஃறிணைக் கின்மை பெறப்படுதலின் ஈண்டுக் கூறல் வேண்டாமையானும், எழுத்ததிகாரத்துள், `உயர்திணை யாயி னம்மிடை வருமே’ எனத் தன்மைக்குரிய சாரியையே கூறலானும், அது போலியுரை யென்க. (சேனா: 225 - இளம்: 250) உரையாசிரியர் நெடியனும் வலியனும் ஆயினான் என்புழி உம்மை ஆக்கங்குறித்து நிற்றலின் ஆக்கவும்மை யென்றா. (சேனா: 272-இளம்: 267) அஃதேல், இதனை நிரனிறைப் பொருட்டாகக் கொண்டு ஏ இசைநிறை, குரை அசைநிலை யென்றாரால் உரையாசிரியர் எனின் - அற்றன்று, மற்று அந்தில் என்பனபோலப் பொருள் வகையான் வேறுபடுவனவற்றை இரண்டாமென்ப தல்லது, சொல்வகையான் இரண்டாகிய சொல்லை இரண்டாமென்ற தனான் ஓர் பயனின்மையின், அவர்க்கு அது கருத்தன்று என்க அல்லதூஉம், ஒருசொல்லே இசைநிறைவும் அசைநிலையுமாக லுடைமையான் அவற்றை உடன் கூறினாரென்னாக்கால் இசைநிறையும் அசைநிலையும் ஒருங்கு மயங்கக் கூறலாமாகலானும், அவர்க்கு அது கருத்தன்மை உணர்க. (சேனா: 288 - இளம்: 283) பிறவெண் ஓடாநின்றவழி ஏகாரவெண் இடைவந்த தாயினும் ஓடாநின்ற பிறவெண்ணேயாமென உரைத்தாரால் உரையாசிரியர் எனின் - அவ்வாறு விராயெண்ணியவழிப் பிறவெண்ணாற் பெயர் கொடுப்பின் அதனை ஏகார வெண்ணென்பாரையும் விலக்காமை யானும், பிறவெண்ணாம் என்றதனாற் பெறப்படுவதோர் பயனின்மையானும், அவர்க்கு அது கருத்தன்று என்க. (சேனா: 291-இளம்: 286) `யானை தோர் குதிரை காலாள், எறிந்தார்’ என உம்மையும் உருபும் உடன்றொக்கவழி உம்மைத்தொகை யென்னாது உருபு தொகையென்க என்பது இச்சூத்திரத்திற்குக் கருத்தாக உரைத்தாரால் உரையாசிரியர் எனின் - அஃது உம்மைத் தொகையாதலின் ஒருசொன்னடைத்தாய் உருபேற்றானும் பயனிலை கொண்டானும் நிற்கும், அத்தொகையிடை உருபின்மை சிற்றறிவினாக்கும் புலனாம், அதனான் அஃதாவக்குக கருத்தன்மை சொல்லவேண்டுமோ என்பது. (சேனா: 293-இளம் ;288) `சாத்தன் வந்தான், கொற்றன் வந்தான், வேடன் வந்தான் என மூவரும் வந்தமையாற் கலியாணம் பொலிந்தது எனச் செவ்வெண் தொகை பெற்றுவந்தது என்றாரால் உரையாசிரியர் எனின் - அவை எழுவாயும் பயனிலையுமாய் அமைந்து மாறுதலின் எண்ணப்படாமையானும், மூவரும் என்பது சாத்தன் முதலாயினோ தொகையாகலானும், அது போலியுரை என்க. *(சேனா: 294-இளம்: 289) இவைமூன்றும் பொருளிற்பிரிந்து எண்ணின்கண் அசையாய் வருதலுடைய என்பது உரையாசிரியர்க்குக் கருத்தென்பாரும் உளர். அசைநிலை என்பது இச்சூத்திரத்தாற் பெறப்படாமையானும் `கண்ணிமை கொடி’ என்னுஞ் சூத்திரத்து எனவைக் கண்ணிமை என்பதனோடுங் கூட்டு, என்றுரைத்தலானும், அவர்க்கு அது கருத்தன்று என்க. (சேனா: 401-இளம்: 391) வடசொல்லாவது வடசொல்லோடு ஓக்குந் தமிழ்ச்சொல் என்றாரால் உரையாசிரியர் எனின் - அற்றன்று, ஒக்கும் என்று சொல்லப்படுவன ஒருபுடையான் ஒப்புமையும் வேற்றுமையும் உடைமையான் இரண்டாகல் வேண்டும் இவை எழுத்தானும் பொருளானும் வேறுபாடு இன்மையாகிய ஒருசொல்லிலக்கணம் உடைமையான் இரண்டுசொல் எனப்படா, அதனான் ஒத்தல் யாண்டையது, ஒரு சொல்லேயாம் என்பது ஒரு சொல்லாயினும் ஆரியமும் தமிழுமாகிய இடவேற்றுமையான் வேறாயின எனின், அவ்வாறாயின், வழக்கும் செய்யுளும் ஆகிய இடவேற்றுமையாற் சோறு கூழ் என்னுந் தொடக்கத்தனவும் இரண்டு சொல்லாவான் செல்லும், அதனான் இடவேற்றுமை யுடையவேனும் ஒரு சொல்லிலக்கண முடைமையான் ஒரு சொல்லேயாம் ஒரு சொல்லாயவழித் தமிழ்ச்சொல் வடபாடைக்கட் செல்லாமை யானும், வட சொல் எல்லாத் தேயத்திற்கும் பொதுவாகலானும், இவை வடசொல்லாய ஈண்டு வழங்கப்பட்டன எனல்வேண்டும், அதனான் இது போலியுரை என்க அல்லதூஉம், அவை தமிழ்சசொல்லாயின வடவெழுத்தொரீஇ யென்றல் பொருந்தாமை யானும், வடசொல்லாhதல் அறிக. (சேனா: 408-இளம்: 402) எருத்துவயின் என்பதற்கு ஈற்றயற்சீர்வயின் என்று பொருளுரைத்து, `சூரல் பம்பிய சிறுகான் யாறே -சூரர மகளி ராரணங் கினரே - சார னாட நீவரு தீயே - வார லெனினே யானஞ் சுவலே’ என்புழி, அஞ்சுவல் யான் என இறுதிச்சீர் ஈற்றயற் சீர்வயிற் சென்று திரிந்ததென்று உதாரணங் காட்டினாரால் உரையாசிரியர் எனின் - யானஞ்சுவலென நின்றாங்கு நிற்பவும் பொருள் செல்லுமாகலின் இவ்வாறு திரிதல் பொருந்தாமையின், அவர்க்கு அது கருத்தன்று என்க. (சேனா: 415-இளம்: 409) பெயரெச்சம் நின்று தொக்கது என்றாரால் உரையாசிரியர் எனின் - அற்றன்று, ஆசிரியர் இவற்றைப் பிரித்துப் புணர்க்கப்படா, வழங்கியவாறே கொள்ளப்படும் என்றது, பிரித்தவழித் தொகைப்பொருள் சிதைதலானன்றே, கொன்றயானை என விரிந்தவழியும் அப்பொருள் சிதைவின்றேல், `புணரிய னிலையிடை யுணரத் தோன்றா’ எனற்கோர் காரணம் இல்லையாம் அதனாற் பெயரெச்சம் நின்று தொகுதல் ஆசிரியர் கருத்தன்மையின், உரையாசிரியர்க்கும் அது கருத்தன்று என்க அல்லதூஉம், ஆகுபெயர் உணர்த்தியவழி வினைத்தொகை யுளப்பட, `இருபெயரொட்டும்’ என்றாராகலானும், வினை நின்று தொகுதல் அவர்க்குக் கருத்தன்மை யறிக. (சேனா: 416 - இளம் :410) கரியது என்னும் பண்புகொள்பெயர் கருங்குதிரை யெனத் தொக்கதென்றாரால் உரையாசிரியர் எனின் - அதனைப் பெயரெச்சம் வினைத்தொகை நிலைமொழி யென்றதற்கு உரைத்தாங்கு உரைத்து மறுக்க பிறசொற்கொணர்ந்து விரிக்குங்கால், கரிய குதிரை/ கரிதாகிய குதிரை, கரியது குதிரை என அத்தொகைப் பொருளுணர்த்துவன எல்லாவற்றானும் விரிக்கப்படும். (சேனா: 422-இளம்: 416) நிலம் வல்லென்றது, நீர் தண்ணென்றது என்பன காட்டினாரால் உரையாசிரியர் எனின் - சொலற்பொருள் அன்மையின், அவை காட்டல் அவர் கருத்தன்று என்க. (சேனா: 426-இளம்: 420) முன்னிலையல்வழி யென்பதற்கு முன்னையபோல் வினாவொடு சிவணி நில்லாதவழி யென்றுரைத்தாரால் உரையாசிரியர் எனின் - அற்றன்று, வினாவொடு சிவணல் இவற்றிற் கொன்றான் எய்தாமையின் விலக்கவேண்டா; அதனான் அவர்க்கு அது கருத்தன்று என்க. (சேனா: 427 -இளம்: 421) உரையாசிரியர் வினையியலுள் ஓதப்பட்டன சில வினைச்சொற்கு முற்றுச்சொல்லென்று குறியிடுதல் நுதலிற்று இச்சூத்திரம் என்றாரால் எனின் - குறியீடு கருத்தாயின், `அவ்வாறென்ப முற்றியன் மொழியே’ என்னாது, அவ்வாறு முற்றியன்மொழி யெனல் வேண்டுமாகலான், அது போலியுரை யென்க முற்றியன்மொழி யென்ப என மொழிமாற்றவே குறியீடாம் எனின், குறியீடு ஆட்சிப் பொருட்டாகலின், குறியான் அதனை ஆளாமையான, மொழிமாற்றி யிடர்ப்படுவ தென்னையோ என்பது அல்லதூஉம், முற்றியன் மொழி யெனக் குறியிட்டாராயின், இவைபெயரெஞ்சு கிளவி எனவும், இவை வினையெஞ்சு கிளவி எனவும் குறியிடல் வேண்டும்; அவ்வாறு குறியிடாமையானும் அது கருத்தன்றாம். அதனான் வினைச்சொல்லுள் இருவகை எச்சமொழித்து ஒழிந்தசொன் முற்றி நிற்கும் என்றும், அவை இனைத்துப் பாகுபடும் என்றும் உணர்த்தல் இச்சூத்திரத்திற்குக் கருத்தாகக் கொள்க. (சேனா: 428 - இளம்: 422) முற்றுச்சொல்லே யன்றிப் பெயரெச்சமும் வினையெச்சமும் காலமும் இடமும் உணர்த்தும் என்பது இச்சூத்திரத்திற்குப் பொருளாக உரைத்தாரால் உரையாசிரியர் எனின் - அவை இடவேறுபாடு உணர்த்தாது மூவிடத்திற்கும் பொதுவாய் நிற்றலின், அது போலியுரை என்க. (சேனா: 431-இளம்: 425) பிரிநிலையோடு முடிதலாவது அவனே கொண்டான் என்றவழி, அவனே யென்பது கொண்டானெனப் பிரிக்கப்பட்டபொருளை வினையெனக்கொண்டு முடிதல் என்றாரால் உரையாசிரியர் எனின் - அற்றன்று, அவனே கொண்டான் என்புழி, அவன் என்னும் எழுவாய்வேற்றுமை கொண்டான் என்னும் பயனிலை கொண்டது; ஏகாரம் பிரிவுணர்த்திற்று; ஆண்டு எச்சமும் எச்சத்தை முடிக்குஞ் சொல்லும் இன்மையான், அவர்க்கு அது கருத்தன்று என்க. (சேனா: 440 - இளம்: 434) பசப்பித்துச் சென்றாரை யாமுடையேம் என்னுந் தொடக்கத்தன குறிப்பிற் றோன்றலா யடங்குதலின், விண்ணென விசைத்தது என்பது குறிப்பெச்சம் என்றும், அதுபோல என்னுந் தொடக்கத்தன விகாரவகையாற் றொக்குநின்றமையான், ஒல்லெனவொலித்தது என்பது இசையெச்சம் என்றும், இவை தத்தஞ்சொல்லான் முடித்தலல்லது பிறசொல்லான் முடியாமையின் இவற்றை மேல் வந்து முடிக்கும் எஞ்சுபொருட்கிளவியில் என்றா என்றும், உரைத்தாரால் உரையாசிரியர் எனின் - அற்றன்று,. `தெரிபுவேறு நிலையலுங் குறீப்பிற் றோன்றலும் `எனச் சொற்பொருட் பாகுபாடு உணர்த்தினார், குறிப்பிற்றோன்றும் பொருளை வெளிப்படுத்தும் எச்சமாதலுடைமையான் எச்சம் என்றார், அதனான் ஆண்டு அடங்காது இனி, விசைத்தது ஒலித்தது என்பன தஞ்சொல் எனப்படா; படினும், விண்ணென வீங்கிற்று, துண்ணெனத் துளங்கினான் எனவும், ஒல்லென வீழ்ந்தது எனவும் பிறசொல்லாnனும் முடிதலின் எஞ்சுபொருட்கிளவியில் என்றல் பொருந்தாதாம் என்னை? தஞ்சொலல்லாதன எஞ்சுபொருட் கிளவியாம் ஆகலின் இனி அதுபோலவென்பது தொகுக்கும் வழித் தொகுத்தல் என்பதனாற் சொற்கதாயின், அதனைச் சுட்டிக்கூறாவுவமை யென அணியியலுள் ஆசிரியர் ஒருவமை வேறுபாடாகக் கூறல் பொருந்தாது தொகுக்கும் வழித் தொகுத்தல் ஒருமொழிக்கண்ணதாகலிற் பலசொற்றொகும் என்றலும் பொருத்தமின்று , அதனான், அவர்க்கு அது கருத்தன்று விண்ணென விசைத்தது, ஒல்லெனவொலித்தது என்னுந் தொடக்கத்தனவற்றை எனவெனெச்சமென அடக்கிக் குறிப்பெச்சத்திற்கும் இசையெச்சத்திற்கும் வேறு உதாரணங் காட்டல் கருத்தென்க அல்லதூஉம், எனவெனெச்சமென அடக்காது இசையும் குறிப்பும் பற்றி வருவனவற்றை வேறோதின, வெள்ளென வெளுத்தது எனப் பண்புப்பற்றி வருவதனையும் வேறோதல் வேண்டும், அதனை வேறோதாமையானும் எனவெனெச்சமென அடக்குதலே கருத்தாகக் கொள்க குறிப்புப்பொருளைப், `பசப்பித்துச் சொன்றா ருடையையோ’, `இளைதாக முண்மரங் கொல்க’ என்பன முதலாகிய தொடர் மொழியே உணர்த்தலான் எஞ்சுபொருளெனப்படாவாயினும், அப்பொருள் பிறசொல்லானல்லது வெளிப்படாமையின், அச்சொல் எச்சமாயிற்று குறிப்புப்பொருளே யன்றி எஞ்சு பொருளுஞ் சொல்லுவான் குறிப்பொடு படுத்துணர்ந்து தமக்கேற்ற சொல்லால் உணர்த்தப்படுதலின், குறிப்பான் எச்சஞ்செப்பல் மூன்றற்கும் ஒத்தவாறறிக. (சேனா: 418-இளம்: 442) உயர்ந்தான் தமனொருவனைக் காட்டி, இவற்குக் கொடு என்னும் என்றாரால் உரையாசிரியர் எனின்- ஆண்டுப் படர்க்கைச்சொற் படர்க்கைச்சொல் லோடியிதலான் வழு வின்மையின் அமைக்கல் வேண்டாவாம், அதனான், அது போலியுரை என்க. (சேனா: 450-இளம்: 444) செய்யாய் என்னும் முன்னிலையெதிர்மறை எதிர்மறை படாது செய்யென விதிவினை யாதலுமுரித்து என்றுரைத் தாரால் உரையாசிரியர் எனின் - அற்றன்று, செய்யாய் என்னும் எதிர்மறைவினையும் செய்யாய் என்னும் விதிவினையும் முடிந்த நிலைமை ஒக்குமாயினும், எதிர்மறைக்கண் மறையுணர்த்தும் இடைநிலையும் உண்மையான, முடிக்குஞ்சொல் வேறெனவே படும் மறை உணர்த்தும் இடைநிலையாவன உண்ணலன், உண்டிலன், உண்ணாது, உண்ணேன் என்புழி வரும் அல்லும் இல்லும் ஆவும் ஏயும் பிறவுமாம். உண்ணாய உண்ணேன் என்புழி எதிர்மறை ஆகார ஏகாரங் கெட்டு நின்றன எனல்வேண்டும், அல்லாக்கால் மறைப்பொருள் பெறப்படாமையின் அதனான் எதிர்மறைச் சொல்லே விதிவினைச் சொல்லாகாமையின் அவர்க்கு அது கருத்தன்று என்க அல்லதூஉம், ஆசிரியர் அக்கருத்தினராயின், செய்யாய் என்னும் எதிர்மறை வினைச்சொல் என்றோதுவார்மன், அவ்வாறு ஓதாமையான், அவர்க்கு அது கருத்தன்மையான் உரையாசிரியர்க்கும் அது கருத்தன்மை அறிக. (சேனா: 457-இளம்: 450) `பெயர்த்தனென் முயங்க’ என்பது முதலாயின செய்தெனெச்சம் முற்றாடயத் திரிந்தன என்றும், `ஒடித்துண் டெஞ்சி’ என்பது முதலாயின செய்வெனெச்சம் செய்தெனெச்ச மாய்த் திரிந்தன என்றும், முன்னருரைத்தாரால் உரையாசிரியர் எனின் - பெயர்த்தெனன்முயங்க என்பது முதலாயின எச்சத்திரி பாயின் எச்சப் பொரு ளுணர்த்துவதல்லது இடமும் பாலும் உணர்த்தற்பாலவல்ல; எச்சப்பெருண்மையாவது மூன்றிடத்திற்கும் ஐந்து பாற்கும் பொதுவாகிய வினைநிகழ்ச்சி யன்றே, அவ்வாறன்றி முற்றுச் சொற்கு ஓதிய ஈற்றவாய் இடமும் பாலும் உணர்த்தலின், அவை முற்றுத் திரிசொல்லெனவேபடும். சொன்னிலையுணர்ந்து வினைகோடன்மாத்திரத்தான் வினையெச்சமெனின், மாரைக்கிளவியும் வினையொடு முடியும் வேற்றுமையும் பிறவுமெல்லாம் வினையெச்சமாவான் செல்லும்; அதனான் அவர்க்கு அது கருத்தன்றென்க. அல்லதூஉம், `கண்ணியன் வில்லன் வரும’ என வினைக்குறிப்பு முற்றாய்த் திரிதற்கேற்பதோர் வினையெச்சம் இன்மையானும், அது கருத்தன்மை அறிக. `ஒடித்துண்டெஞ்சிய’ என்பதூஉம், `ஞாயிறு பட்டு வந்தான்’ என்பதூஉம் பிறவினை கொண்டனவாயினும், செய்தெனெச்சத்திற்குரிய இறந்தகாலம் உணர்த்தலான், ஏனைக்காலத்திற்குரிய செயவெனெச்சத்தின் திரிபெனப்படா, செய்வெனெச்சத் திரிபாயின் செயவெனெச்சத்திற்குரிய காலம் உணர்த்தல் வேண்டும். `மழை பெய்ய மரம் குழைத்தது’ எனச் செயவெனெச்சத்திற்கு இறந்த காலமும் உரித்தெனின், காரண காரியப் பொருண்மை யுணர்த்தும் வழியல்லது செயவெனெச்சம் இறந்தகாலம் உணர்த்தாது; ஒடித்துண்டலும் ஞாயிறு படுதலும், எஞ்சுதற்கும் வருதற்கும் காரணமன்மையான் ஆண்டிறந்தகாலம் உணர்த்தாமையின், செய்தெனச்சமாய் நின்று தமக்குரிய இறந்தகாலம் உணர்த்தின் எனப்படும் அதனாற் செயவெனெச்சம் செய்தெனெச்சமாய்த் திரிந்தன என்றலும அவர் கருத்தன்று என்க. ஞாயிறு பட்டு வந்தான் என்பது ஞாயிறு பட்டபின் வந்தான் என இறந்தகாலம் உணர்த்தலும், ஞாயிறு பட வந்தான் என்பது ஞாயிறு படாநிற்க வந்தான் என நிகழ்காலம் உணர்த்தலும் வழக்கு நோக்கிக் கண்டுகொள்க. (சேனா: 460-இளம்: 453) `வைகைக் கிழவன் வயங்குதார் மாணகலந், தையலா யின்றுநீ நல்கினை நல்காயேற், கூடலார் கோவொடு நீயும் படுதியே, நாடறியக் கௌவை யொருங்கு’ என்புழி, வைகைக் கிழவன் கூடலார்கோ என்பன ஒருபொருளை வரைந்துணர்த்த லாற் பிரிவிவாகலின் வரையப்படா என்றும் `கொய்தளிர்த தண்டலைக் கூத்தப் பெருஞ்சேந்தன், வைகலு மேறும் வயக்களிறே - கைதொழுவல், காலேக வண்ணனைக் கண்ணாரக் காணவெஞ் சாலேகஞ் சார நட’ என்புழிக் காலேகவண்ணன் என்பது அச் சார்ந்து பூசினார் எல்லார்க்கும் பொதுவாய்க் கூத்தப்பெருஞ் சேந்தனையே வரைந்துணர்த்தாமையின், அவை பிரிவுடையவாம் என்றும் உரையாசிரியர் உரைத்தாரால் எனின் - அற்றன்று, `நாணிநின் றோணிலை கண்டியானும், பேணினே னல்லனோ மகிழ்ந வானத, தணங்கருங் கடவு ளன்னோன், மகன்றா யாதல் புரைவதா லெனவே’ என்புழி, வானத்தணங்கரு கடவுளன்னோள் என்பது மகளிர்க்கெல்லாம் பொதுவாய் நாணிநின்றோளை வரைந்து உணர்த்தாதாயினும் சொல்லுவான் குறிப்பான் அவளையே உணர்த்தினாற்போலக் காலேக வண்ணன் என்பதூஉம் பொதுவாயினும் சொல்லுவான் குறிப்பாற் கூத்தப் பெருஞ்சேந்தனையே உணர்த்திப் பிரிவிலவாய் நிற்றலான, அவர்க்கு அது கருத்தன்று என்க. - கா. நமச்சிவாய முதலியார் நச்சினார்க்கினியர் உரையாசிரியரை மேற்கொண்டும் மறுத்துங் கூறுமிடங்கள் (நச்: 1-இளம்: 1) உரையாசிரியரும், சொல் என்பது எழுத்தினான் ஆக்கப்பட்டுத் திணையறிவுறுக்கும் ஓசை யென்றும், தன்னை உணரநின்றவழி எழுத்து எனப்படும் தான் இடைநின்று பொருளுணர்த்தியவழிச் சொல் எனப்படும் என்றுங் கூறினார் இக்கருத்தேபற்றி. (நச்: 1-இளம்: 1) `மறங்கடிந்த வருங்கற்பின்’ எனவும், `சிலசொல்லிற் பல் கூந்தல்’ எனவும் பிறாண்டுஞ் சான்றோர் செய்யுளில் இன்சாரியை உருபுபற்றாது நிற்றல் நோக்கி உரையாசிரியரும், `ஆயிருதிணையினையும்’ என இரண்டாமுருபு விரித்துப் பொருள்கூறினார். (நச்: 184-இளம்: 179) வெண்குடைப் பெருவிறல் என்பது செங்குடை முதலியவற்றோடு இயைபு நீக்காது வெண்குடையோடு இயைபின்மை மாத்திரை நீக்கி நின்றாற்போலப் பன்மைசுட்டிய என்பதும் ஒருமையியைபு நீக்காது பன்மைசுட்டுதலோடு இயைபின்மை மாத்திரை நீக்கி நின்றது; இஃது இயைபின்மை நீக்கமாம். கருங்குவளை யென்பது செம்மை முதலியவற்றோடு இயைபு நீக்குதலிற் பிறிதினியைபு நீக்கமாம். எனவே விசேடித்தல் இருவகையவாயின்; எனவே, பல பால்களையும் உணர்த்திநிற்றலிற், `பன்மைசுட்டிய’ என்றாரென்று உரையாசிரியர் கூறியதே சேனாவரையர்க்குங் கருத்தாயிற்று. (நச்: 283-இளம்: 276) ஆசிரியர் முன்னர்க் கூறியதனை ஈண்டும் `இறுதியிலுயிரே’ என்று ஒருதலைமொழி யென்னும் உத்தியாகக் கூறினமையானும் உரையாசிரியரும், `நெட்டெழுத் தேழே யோரெழுத் தொருமொழி’ என்புழி, ஒளகாரத்தினை உதாரணங் காட்டாது. `கவவோடியையின்’ என்பதனாற் கௌ வெள என உதாரணங் காட்டினமையானும் ஈண்டு, `ஆயிய னிலையுங் காலத் தானு - மளபெடை யின்றித் தான்வரு காலையும்’ என்னும் இரண்டற்கும் ஒளஉ ஒள என்று உயிரையே உதாரணமாகக் காட்டுதல் மாறுகொளக் கூறலாமென்று உணர்க. (நச்: 360-இளம் :354) இதற்கு உரையாசிரியர் இல்லத்தாற் பற்றப்படும் புலவரென வேற்றுமையாகப் பொருள் கூறினாரால் எனின், ஆசிரியர், `அல்வழி யெல்லா மெல்லெழுத் தாகும்’ என அல்வழியே கூறத்தொடங்கி, `இலமென் கிளவிக்கு’ என அல்வழிக்கண் வரும் உரிச்சொல்லுங் கூறிப், பின்னர் எண்ணுப்பெயரும் அளவுப் பெயரும் நிறைய பெயருங் கூறிப், `படர்க்கைப்பெயரும்’ என்னுஞ் சூத்திரத்தின் `வேற்றுமையாயின்’ என மீட்டும் வேற்றுமையை எடுத்து ஓதினமையின் இலமென்பதனை வேற்றுமை யென்றல் பொருந்தாமை உணர்க. இலமென்னுஞ் சொல் யாம் பொருளிலம் என முற்றுச் சொல்லாயும் ஒருகால் உரிச்சொற்றனமைப்பட்டு நிற்குமிடத்து என்றா `இலமென கிளவிக்குப் படுவரு காலை’ என நிலைமொழி வருமொழி செய்து முன்னர் ஆசிரியர் புணர்த்தமையின் இலம்பாடு என ஒருசொல்லாக ஓதாமை உணர்க `இலம்பாடு நாணுத் தரும்’ என்றதோ எனின், இல்லாமை உண்டாதல் நாணுத்தரும் எனப் பொருள் கூறிக்கொள்க. (நச்: 440-இளம் 434) இனிப், பிறசொல் வாராது தம்மைத்தாமே முடிக்கு மென்று, விண்ணெனவிணைத்தது, ஒல்லெரன ஒலித்தது என்பன காட்டினாரால் உரையாசிரியர் எனின் - அவை தம்மைத் தாமே முடியாமல் அது விண்ணெனவீங்கிற்று ஒல்லெனவோடிற்று எனப் பிறசொல் வந்து முடித்தலும் அவற்றிற்கு ஏற்குமாகலானும் அவை என என்னும் இடைச்சொல்லாகலானும் அவற்றைக் கொண்டாற் காரெனக் கறுத்தது என்னும் பண்புங் கோடல் வேண்டுமாகலானும் அது போலியுரையாம். (நச்: 455-இளம்: 448) இனி, இடைச்சொற்களெல்லாந் தாம் அடைந்த பெயர்வினைகளின் பொருள்களை வேறுபடுத்தி நிற்றலின் வேற்றுமைச்சொல் என்று சொல்லப்படுமென்று பொருள் கூறினாரால் உரையாசிரியர் எனின் - அவை வேறுபாடுசெய்தல் அவ்வோத்திற் கூறிய சூத்திரங்களின் பொருளால் ஆண்டுப் பெறப்படுதலின் ஈண்டுக் கூறல் கூறியது கூறலாமாகலின் அது பொருந்தாது என்க. (நச்: 457-இளம்: 450) இனி, ஞாயிறுபட என்னுஞ் செயவெனெச்சத்து அகர ஈறு பட்டு என உகர ஈறாய்த் தீர்ந்து நின்றது என்றாரால் உரையாசிரியர் எனின் - ஞாயிறுபட வந்தான் என்பது ஞாயிறுபடாநிற்கவந்தான் என நிகழ்காலம் உணர்த்துதல் வழக்காதலின் அது திரிந்து இறந்த காலம் உணர்த்தும் என்றல் பொருந்தாமை உணர்க. (நக்: 458-இளம் 451) இச்சூத்திரத்திற்கு வழக்கிடத்து உடனிற்கற்பால் அல்லனவற்றது உடனிலை போற்றுக என்று பொருள்கூறி, `இந்நாழிக்கு இந்நாழி சிறிது பெரிது’ என்பது காட்டினாரால் உரையாசிரியர் எனின் - அது சிறப்பின்கண் வரும் நான்காம் வேற்றுமைப்பொருளாய் அடங்குதலானும் சிறிதென்பது பெருமையை விசேடித்து நிற்றலானும் அதுதான் முன்னர்ப் பெறப்பட்டமையானும் இவ்வெச்சமயக்கங் கூறுதலே ஆசிரியர் கருத்தென்று உணர்க. (நக்: 459-இளம்: 452) இச் சூத்திரத்திற்கு உரையாசிரியர், சொல்லுவான் குறிப்பாற் பொருளுணரப்படுஞ் சொற்களும் உள இப்பொருள் இத்தன்மையை என்று கூறுதற்கண் என்ப பொருள்கூறிச், `செஞ்செவி வெள்ளொக்கலர்’ என்பது காட்டினாரால் எனின், அது குறிப்பிற்றோன்றலினது வேறுபாடாம் என மறுக்க. - கா. நமச்சிவாய முதலியார் பின்னிணைப்புகள் 1. தமிழ் வேற்றுமை மரபு “தமிழில் முன் வேற்றுமை கிடையாது; பின் வடநூலி லிருந்து இரவல் வாங்கியது. அதனால், தமிழ் மொழியில் பொருளால் வேற்றுமை எட்டிறந்த பலவாகவும் வடமொழியிற் போலவே, தமிழிலும் வேற்றுமைகள் எட்டெனக் கொள்ளவும், அவற்றை எண் வரிசையாற் பெயரிடவும் நேர்ந்தது; அது பொருந்தாது;” எனத் தாமெழுதிய மொழி நூலில் பன்மொழி யறிஞர் “கால்டுவெல்” கண்காணிப் பாதிரியார் பகர்ந்தனர். அதைப் பின் பற்றி இன்றுவரை பலரும் வேற்றுமைவகை தமிழுக்கு வடமொழி தந்த நன்கொடை யென்ற கொள்கையை நம்பிப் பரப்புகின்றனர். விவிலிய மறை யோர் கால்டுவெல் அறிஞர் தாமே தென்மொழி, வடமொழி நூல் கற்றுத் தேறிய முற்றிய புலவரெனக் கருதுதற்கில்லை. அவர் தங்காலப் பண்டிதரும், பிற்காலச் சின்னூல்களும் பகர்ந்தன கொண்டு தன்னறிவிற் றோன்றியதைத் தொகுத்தெழுதியதே “திராவிட மொழி நூல்”. அது, மேலாராய்ச்சித் துணையாதற்குதவும். அதிற்காணும் கருத்தனைத்தும் முடிவடைந்த துணிபுகளாய்க் கொள்வது நம் குற்றமாகும். வேற்றுமைகள் தமிழுக்குத் தனியுடைமையாகா என்பதற்கு அவர் கூறும் ஏதுக்கள் இரண்டேயாம். வடமொழிபோல் தமிழிலும் வேற்றுமைகள் எட்டெனவே கொண்டது ஒன்று; மற்றொன்று வேற்றுமைப் பெயர் தமிழிலும் எண் வரிசையால் இயையக் கண்டது. இவ்வேதுக்களைச் சிறிதாராய்தல் பொருத்தமாகும். முதலில், ஒரு பெருநாட்டில் இரு தனித் தெமொழிகளிலே, வேற்றுமை எட்டென்று கொண்டதனால், ஒருமொழி மற்றதனிடத்து அதைப் பெற்றது எனத் துணியொணாது. பரந்தவுலகில் பண்டை மொழி பலவொடும் இனமில்லாப் பிற்கால மொழி பலவும் வேற்றுமைகள் எட்டாகக் கொள்ளக் காண்போம். அரபி, இலத்தீன், யவனம், எபிரேயம், பாரசீகம் போன்ற தம்முள் தொடர்பற்ற மொழிகளிலும் வேற்றுமைகள் எட்டேஎனக் காண்கிறோம். அவ்வாறான அவைகட்கெல்லாம் நாவல நாட்டு ஆரியமொன்றே வேற்றுமையை நல்கினதாய்க் கூறுதற்குத் திராவிடமொழி நூலுடையாரும் மொழியியல்கள் ஆராய்வார் யாவருமே துணியமாட்டார். அன்றியும், வடமொழி நூலார் எல்லோரும் வேற்றுமைகள் எட்டென்று கொள்ளவு மில்லை; பாணினிபோல் ஏழென்று கூறுபவர் பலராவர். வடமொழி நூற் கொள்கை யாதாயினுமாகுக; தமிழில் வேற்றுமைகள் ஏழேயாம். இதுவே முன் ஆன்ற தமிழ்ச் சான்றோர்கள் துணிந்த வுண்மை. “வேற்றுமை தாமே ஏழென மொழிப” (தொல். சொல்.சூ.62) எனத் தமிழ்த் தொன்னூலார் நன் மரபைத் தொல்காப்பியர் முன்னர்க் கூறினர். பின்னர், இந்திரன்றன் வடநூல் முடிபு தழுவி, எழுவாய்ப் பெயரை முதல் வேற்றுமை யென்று அவர் எண்ணியதால், விலக்கொணா விளி வேற்றுமையைக் கூட்டி “விளிகொள்வ தன்கண், விளியோ டெட்டே” என வேறு கூறல் நேர்ந்தது. “ஏழென மொழிப” என்றது “பிறர் மதங் கூறல்” என்பர் உரைகாரர்; அம்மதங் கூறும் பிறர் யாரென்று ஒருவருமே விளக்குகிலர். இதுபோது வழங்கும் தமிழ் நூல் எதுவும் ஏழென்று கூறாமையால், “மொழிப” எனத் தொல்காப்பியராற் சுட்டப் பெற்றோர், அவருக்கு முன்னிருந்த தமிழ்ச் சான்றோராதல் ஒருதலை. வேற்றுமை ‘ஏழியல் முறையது’ ... ... என்றோதிய பாணினியும், எட்டென்று எண்ணிய இந்திரனும், வடமொழி இலக்கணம் வகுத்தவராதலின், அவர் கூற்று, தமிழ் மரபு தழுவாது. ஆதலால், தமிழ் வேற்றுமை வகையைத் தமிழ் நூல் கொண்டே துணிதல் வேண்டும். அன்றியும், ஏழெனத் துணிந்த பாணினி, தொல்காப்பியருக்குப் பிந்தியவராதலானும் “ஏழென மொழிப”என்றது பாணினியைச் சுட்டாது. ‘ஏழென மொழிப’ வர் தொல்காப்பியருக்கு முந்திய பண்டைத் தமிழ் நூலாராவரன்றி வடநூலாசிரியராகார் என்பது தேற்றம். தொல்காப்பியர் ஐந்திரம் நிறைந்தவராதலின், அவ்விந்திரன் மதம் தழுவி “ விளியோடெட்டே” எனத் தங்கோள் கூறி, அதற்கியைய “அவைதாம், பெயரே-ஐ-ஒடு-கு-இன்-அது-கண்-விளி-என்னுமீற்ற” என்று எட்டையும் நிரலே ஒப்ப நிறுத்தி எண்ணிக் காட்டினர். அதற்கு மாறாக அவர் விளி வேற்றுமையின் சிறப்பின்மை விளக்கியதாயும். தனியுருபும் பல பொருளும் பிற வேற்றுமைபோற் கொள்ளாத விளியைப் பிரிப்பதற்கே “விளிமரபு” வேறு கூறப்பட்டதாயும் உரைகாரர் உரைக்கின்றார். விளிக்குப் பலவுருபும் பலவேறு பொருளும் பின் ஒரு இயலால் தொல்காப்பியர் விரிப்பதனால், அவர் விளிக்குச் சிறப்பின்மை அளிப்பதற்கு மாறாக அதன் சிறப்புடைமை விளக்குவது வெளிப்படை. பெயர் நிலையே தன்னிலையாய் உருபெதுவும் இன்றிப் பெயர்ப் பொருளன்றிப் பிறிது பொருள் யாதுமில்லாத எழுவாயை வேற்றுமையாய்ப் பழைய தமிழ் முதல் நூலால் கருதாமை கண்கூடு. பொருள் சுட்டலும் பயனிலை கோடலும் உருபேற்றலும் பெயர்களின் பொதுவியல்பு. அற்றன்றிப் பிறிதியல்பில்லாததும், பிற வேற்றுமை போல் தனக்குருபும் தனிப் பொருளும் கொள்ளாததுமானதைப் பெயரென்றும் எழுவாயென்றும் கூறுவதே தமிழ் மரபு. எவ்வகையானும் பெயரின் வேறுபடாததைப் பெயரென்பது முறை; வேற்றுமை என்பது பொருந்தாது. உருபாலும் பொருளா லும் பெயர்கள் வேறுபடுவதே வேற்றுமை எனப்பெறும். ‘பெயர் தோன்று நிலையே’ தன்னிலையாய்ப் பிறவுருபேற்றுப் பொருளும் வேறுபடுதற்கிடமாவதை “எழுவாய்” என்பது நன்மரபு. ஐ முதல் ஏழு வேற்றுமையும் எழுவதற்கிடமாவது எழுவாய்; அதுவே பெயர். எழுவாய்ப் பெயர்க்கென உருபில்லை; பொருள் வேறுபாடும் யாதுமில்லை. பெயர்ப்பொருளே எழுவாய்ப் பொருள். பொருண்மை சுட்டலும் பயனிலை கோடலும் உருபேற்றலும் காலந் தோன்றா மையும் பெயர்களின் பொதுவியல்பு; எழுவாயியல்பும் அந்நான்கே: (1) எழுவாய் பொருண்மை சுட்டல்... ... “அன்றியனைத்தும் பெயர்ப் பயனிலையே” (தொல்-பெயர்-சூ. 66) என்பதனாலும்; (2) உருபேற்றல் “உருபுநிலை திரியாது பெயர்க்கீறாகும்” (சூ. 70) என்பதனாலும், (3) காலந் தோன்றாமை ‘பெயர்நிலைக் கிளவி காலந்தோன்றா; (சூ. 70) என்பதனாலும் விளக்கமாகும். எனவே பெயரே எழுவாயும் எழுவாயே பெயருமாதலின், எழுவாயைப் பெயரின் வேறுபட்டதொரு வேற்றுமையாகக் கூறல் பொருந்தாமை ஒருதலை. இனி வடமொழியில் பெயர்ச்சொல், தமிழிற்போல, நின்றாங்கே வேற்றுமையாகாது; பெயர்ச்சொற்கள் தம் வடிவம் மாறியே, அதாவது உருபேற்றே எழுவாயாகும். அவ்வாறு எழுவாயும் பிற வேற்றுமை (விபக்தி)கள் போலவே இயற்பெயர் நிலையின் வேறுபடுதலால், ஆரிய நூலார் அதையும் வேற்றுமை எனக் கொண்டது தவறாகாது. அதனால், இந்திரன் முதலிய ஆரிய முன்னூலார் எழுவாய்ப் பெயரை முதல் வேற்றுமையாக்கி, அதனோடு பிற ஏழும் கூட்ட வேற்றுமை எட்டென்றெண்ணினர். ஏழு வேற்றுமை என்ற பாணினிபோல்வார் மதமும், விளியை எழுவாய்த் திரிபென விலக்கிற்றல்லால், எழுவாய்ப் பெயரை வேற்றுமை யென்றே கொண்டது கருதத்தக்கது. வட நூலார் எழுவாயையும் வேற்றுமை என்றது அம்மொழியியல் மரபுபற்றி எழுந்தது. தொல்காப்பியர் தமக்கு முந்துநூற் றமிழ்மரபு தழுவி ஏழென முதலிற் கூறினர். எனினும், தொல்காப்பியர் ஐந்திரம் நிறைந்த வராதலின் அந்நூலிற் சார்பால் எழுவாயை வேற்றுமையாகக் கொண்டதானும், தமிழில் விளியைப் பெயர்த் திரிபென விலக் கொணாமையானும், “விளியோடெட்டே” என்றதையும் சுட்டிக் கூறினர். தமிழில், விளி உருபாலும் பொருளாலும் பெயரின் வேறுபடுவதால், அது, வேற்மையாதல் தேற்றமாகும். மற்றெல்லா வேற்றுமைகளையும் இரு சிற்றியல்களில் விளக்கியமைத்த தொல்காப்பியரே விளியை வேற்றுமையெனக் கூறியதோடமையாமல், விளிக்குமட்டும் அதன் சிறப்பு நோக்கி “விளி மரபென” நெடிய தொரு வியல் வகுத்தனர். பிற வேற்றுமைகளுக்கெல்லாம் ஒவ்வோருருபே கூறியவர் விளிக்குப் பல வேறுருபும் அவற்றிற்குத் தனித்தனிக் குறிப்பும் விரித்து விளக்கினர். அதற்கு முரணாக, வடநூல் வல்ல உரைகாரர் “விளியின் சிறப்பின்மை விளக்க” அதற்கு வேறியல் வகுக்கப்பட்டதெ”னக் கூறியது அவர் பயின்ற பாணினி போன்ற பிற்கால வடநூலார் முறை தழுவி என்பது தெளிவாகும். ஆகவே, தமிழில் (1) பெயரே எழுவாய் என்பதும், (2) அதை வேற்றுமை என்றல் தொன் மரபன்றென்பதும், (3) ஐ முதல் விளியீறாக வேற்றுமை ஏழென்பதும் விளக்கமாகும். இம்முறையில் இயலடையில் தமிழ் வேற்றுமை ஏழேயாம். அவற்றின் பெயர் முறை “ஐ, ஒடு, கு, இன், அது, கண் விளி எனறேழாகும். ஆகையால், வேற்றுமை எட்டெனவும், அவை எண் முறையாற் பெயர் பெறுமெனவும் கூறும் ஆரிய நூற்கோளால், உருபாற் பெயர் பெறும் வேற்றுமை ஏழேயுடைய தமிழ்மரபு பிறந்ததெனும் மேற்புலப் புலவர் கால்டுவெல் ஐயர் கூற்றுப் பொருந்தாமை வெளிப்படை. இனித் தமிழ் முன் வேற்றுமை யில்லாதிருந்து பிறகு ஆரியரிடம் அதனைக் கொண்டதென்பது வரலாற்றுச் சான்று பெறாததோடு, மொழிநூல் முறையிலும் உண்மையில்லை. தம் கூற்றுக்குக் கால்டுவெல் ஐயர் சொல்லும் இரண்டாவது காரணம் முற்றும் தவறு. இந்திய ஆரியத்தில் வேற்றுமைகளை எண்முறையாற் பெயரிட்டு அமைத்திருப்பது உண்மை. பிரதமை (ஒன்றாவது) முதல் சப்தமி (ஏழாவது) வரை எண்களே அம்மொழியில் (விபக்தி) வேற்றுமைகளின் பெயராக வழங்கிவருவது யாவருமறிந்த செய்தி எனில், தமிழில் வேற்றுமைகள் எண்ணாற் பெயர் பெற்றன வென்பார் தமிழ் நூன் மரபு அறியார் என்பது தேற்றம். “ஐ, ஒடு, கு, இன், அது, கண், விளி” என்பன தமிழில் வேற்றுமை ஏழன் பெயர்களாகும். அவற்றை எண்ணுங்கால், எழுவாயை முதலிலும், ஐ முதல் விளியீறாக ஏழையும் இரண்டு முதல் எட்டுவரை எண்வரிசையில் வைத்தும் எண்ணுவர். அவ்வா றெண்ணுவதால் அவ்வெண்களே வேற்றுமைகளின் பெயரெனக் கொள்ளுதல் தவறாகும். மேனாட்டு யவனம், இலத்தீன், இடை நாட்டெபிரேயம், கீழ்நாட்டுச்சீன முதலிய பழைய மொழி களிலெல்லாம் தொன்று தொட்டின்று வரை வேற்றுமைப் பெயர் முறைகள் வெவ்வேறாயினும், அவற்றை எண்ணுமுறை இதுவாகவே இருக்கக் காண்போம். செய்பொருளை (செய்வதை) முதலிலும், செயப்படு பொருளை இரண்டாவதும், துணையல்லது கருவிப் பொருளை மூன்றாவதும், பொருட்டுப் பொருளை நான்காவதும், இன் அது கண் எனப்பெறும் நீக்கம் - உடைமை - இடப் பொருள்களை முறையே ஐந்து ஆறு ஏழாகவும் எண்ணுவதே எல்லா மொழிகளிலும் ஓராங்கு இயலும் நன்மரபாயமைந்துள்ளது. இதனால் அம்மொழிகளில் வேற்றுமைப் பெயர்கள் அவ்வெண்களே என மொழிநூன் மரபறிவார் யாருங் கொள்ளார். தொல்காப்பியர் நூலிலும், வேற்றுமைப் பெயர்கள் மேற் கூறியாங்கு எழுவாயோடு ஐ முதல் விளியீறாக எட்டேயாம். எண்ணுங்கால் அவற்றை ஒன்று முதல் எட்டு வரை வரிசையாய் எண்ணினர் தொல்காப்பியர். வேற்றுமையாக எழுவாய்ப் பெயர் முதல், “ஐ”யெனப் பெரிய வேற்றுமைக் கிளவி, “கண்”ணெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி, “விளியெனப்படுப” என வேற்றுமை யெல்லாம் அதனதன் உருபுக்குறியைப் பெயராய்க் கொண்டு வழங்குவதே பிறழாத பண்டைத் தமிழ் மரபென்பதைத் தொல் காப்பியர் தம் நூலில் விளக்கியுள்ளார். அவற்றை வரிசைப்படுத்து மிடத்து, ஐ முதல் கண் வரை ஆறும் முறையே இரண்டாகுவதே, மூன்றாகுவதே, நான்காகுவதே, ஐந்தாகுவதே, ஆறாகுவதே, ஏழாகுவதே, என்றெண்ணப் பெறும் எனவும் குறித்தனர். இவ் வெண்கள் வேற்றுமைகளின் பெயராகா; அவற்றிற் கின்றியமையாத் தொடர்புங் கொள்ளா. ஒடுவை ஐந்தாவதும், இன்னை மூன்றாவதுமாக எண்ணுவதெனத் தமிழ் நூலார் துணிவரேல், அதனால் மட்டும் அவ்வேற்றுமைகளினியல்பும் உருபும் பொருளும் திரியாதியலும். உருபுகளே வேற்றுமைகளின் பெயரும் விளக்க முமாய், அவற்றின் உயிராய் நின்றியக்குவன; எண் அவற்றிற்கு உறுப்பாகா; வரிசைக்குறியே. வேற்றுமைத் தொகுதியை ஏதாவ தொரு வரிசைப்படுத்தி யெண்ணல் வேண்டும். அதனால் எழுவாய் பெயரொடு ஏழுவேற்றுமைகளின் இயலியைபின் நெருக்கும் நெகிழ்வுங்கருதி வைப்புமுறை எண் வரிசையில், பிறமொழிபோல், தமிழிலும் அமைந்துள்ளது. முன்னைய தொன்னூல்களில் இவ்வுண்மையை ஐயந்திரிபறத் தெளித்திருக்கவும், நன்னூல், இலக்கண விளக்கம் போன்ற பின்னூல்களில் வேற்றுமையியல் விரிக்குமிடத்து நிறுத்தசொற் பெய்யாது நெகிழக் கூறியதனால், எண்களே வேற்றுமைப் பெயரென நினைக்க நேர்ந்தது போலும். நன்னூலார் “எட்டே வேற்றுமை” எனக் கூறிப் பிறகு “இரண்டாவதனுருபையே”, “மூன்றாவதனுரு பாலா னோடொடு” என்றிவ்வாறே தொடர்ந் தெண்ணி, எட்டனுருபே என முடித்துக் கூறியதால், தொன்னூல் களில் தோய்ந்து துருவி யாராய்ந்து பயிலாதார், எண்களே வேற்றுமைகளின் பெயரெனவும் ஐ முதலிய, அவற்றிற் குருபுகளாய் மட்டும் அமைவன எனவும் கருதலாயினர். எட்டே வேற்றுமை யென்ற பின்னூலாரும், வேற்றுமைகளின் பெயரு முறையுங் கூறுமிடத்து எண்கொண்டு சுட்டாமல், “பெயரே, ஐ, ஆல், கு, இன், அது, கண், விளி யென்றாகும் அவற்றின் பெயர் முறை” என்றே விளக்குதலானும், உருபால் வேற்றுமைக்குப் பெயரிடும் தமிழ் நன்மரபு வலியுறுதல் கண்கூடாம். இனி, முழுமுதலாய் வடித்தெடுத்த இயலமைந்து எழில் நிறைந்த பண்டைப் பெரு மொழிகளில், வேற்றுமைகள் பெயர் கொள்ளுமுறை முத்திறப்படுகின்றன : எண்ணாற் பெயர் கொளல், பொருளாற் பெயர்கொளல், உருபாற் பெயர்கொளல், எனுமிவை மூன்றே - ஆற்றல் நிறைந்த மக்கள் மொழிகளில் வேற்றுமைப் பெயர் முழு முறையாயிருக்கக் காண்பாம். எண்ணாற் பெயர் கொளல், வடமொழி போன்ற சில மொழியியல்பு; பொருளாற் பெயர்கொளல், இலத்தீன் முதலிய மேல்புல மொழிமுறை; உருபாற் பெயர்கொளல், அடிப்பட்ட தமிழ் மரபு. இவற்றுள் எண் முறை, வேற்றுமைப் பெயர்களுக்கு இன்றியமையாத இயற் றொடர்பு ஒருதலையன்மையால், சிறந்ததன்று. பொருண்முறை ஒருவகையால் முன்னதிற் சிறந்ததெனினும், வேற்றுமை யொவ் வொன்றும் பல்வேறு பொருளுடைத்தாதலின், அப்பொருள்களை விதப்பின் பற்பல வகைகளாய் விரிந்து விரவி வரையறுத்துப் பெயரிடுதல் கூடாமையின், அதுவும் ஒருதலையாய்ச் சிறந்த தெனத் துணியவொண்ணாது ஆதலின், தமிழ்ச் சான்றோர் அவ்விரு முறைகளினும் அடிப்பட்ட உருபுகளால் வேற்றுமைகளுக்குப் பெயரிடுதல் இயலடைவில் ஏற்றதெனக் கண்டு கொண்டார். தம்முட்டொடர்புடைய பல பொருட்குமொரு குறியாயமைந்து நிற்கும் ஒவ்வோருருபும் அவ்வப் பொருட்டொகுதி வேற்றுமைக்குப் பெயராயமைய, ஐயமும் மயக்கமும் அகன்று, எண்மையும் தெளிவும் ஒண்மையோடெளிவும் ஒருங்கியைந் தொளிரும். இச்செம்முறையால் வேற்றுமைப் பெயர்முறை யாப்புற வமைந்த நன்மரபுடைமை தமிழ்மொழியின் தனிச் சிறப்பாம். - நாவலர் பாரதியார் நற்றமிழ் ஆய்வுகள்-4 பக், 161-167 2. சுப்பிரமணிய சாத்திரியார் தொல்காப்பியச் சொல்லதிகார வாராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்பும் இனி, திசைச்சொல் என்பதன் இலக்கணம். இவ்விலக்கணத்தைப்பற்றி ஆசிரியர் தொல்காப்பியனார், ‘செந்தமிழ் நிலம்சேர் பன்னிரு நிலத்தினும் தங்குறிப்பினவே திசைச்சொற் கிளவி’ என்னும் சூத்திரத்தால் ஓதினார். இச்சூத்திரத்தின் பொருள் செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த பன்னிரு நிலத்தினும் தாம் குறித்த பொருளை விளக்கும் திசைச்சொல் எ-று. எனவே அவ்வந்நாட்டுத் திசைச்சொல் அவ்வந்நாட்டில் பொருள் விளங்குதல்போல ஏனை நாடுகளில் பொருள் விளங்கா என்பது பெறப்பட்டது. இச்சூத்திரத்தால் செந்தமிழ் நாடு எனச் சிறப்பித்துச் சொல்லப் படுவதொரு நாடு உண்டென்பதும் அதனை அடுத்து கொடுந் தமிழ்நாடு எனப்படுவன பன்னிரண்டு நாடுகள் உளவென்பதும், பெற்றாம். இச்சூத்திரத்தில் ஆசிரியர் செந்தமிழ் நிலம் என்று குறித்தது இன்னது, கொடுந்தமிழ் நாடு என்பன இவை என்பதுபற்றித் தொல்காப்பிய வுரையாசிரியர் பலரும் பலவாறாகக் கூறினர். செந்தமிழ் நாட்டின் எல்லை- வையை யாற்றிற்கு வடக்கு, மருத யாற்றிற்குத் தெற்கு, கருவூர்க்குக் கிழக்கு, மருவூர்க்கு மேற்கு என்பது இளம்பூரணர் உரை. சேனாவரையர் உரையும் நச்சினார்க்கினியர் உரையும் அதுவே. தெய்வச்சிலையார் உரையோ வேறு. அவர் ‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்’ என்று சிறப்புப்பாயிரத்தில் குறிக்கப்பட்ட நிலம் முழுவதும் செந்தமிழ் நாடு என்றார். கொடுந்தமிழ் நாடு பன்னிரண்டாவன: பொங்கர் நாடு, ஒளி நாடு, தென்பாண்டி நாடு, குட்ட நாடு, குடநாடு, பன்றி நாடு, கற்கா நாடு, சீத நாடு, பூழி நாடு, மழை நாடு, அருவா நாடு, அருவா வடதலை என்றார் இளம்பூரணர். அவ்வாறே சேனாவரையரும் கூறினார். இவ்வுரையாசிரியர் கூற்றினாலே, வையை ஆற்றிற்குத் தென்பால் உள்ள மதுரையைத் தலைநகராகக் கொண்ட பாண்டி நாடு, செந்தமிழ் நாடு அன்றெனவும், கொடுந்தமிழ் நாடுகளுள் ஒன்றெனவும் குறிக்கப்பட்டது. வையை ஆற்றிற்கும் மருதயாற்றிற்கும் இடையில் உள்ளதாகிய சோணாடே செந்தமிழ் நாடெனக் கொள்ளக் கிடந்தது. இனி, தெய்வச்சிலையார் என்பார் கொடுந்தமிழ் நாடு பன்னிரண்டும் முற்கூறியவற்றின் வேறாகக் குறித்தார். அவை, குமரியாறு கடல்கோட் படுவதன்முன் அதற்குத் தென்பால் உள்ளதாகிய பழந்தீபமும், கொல்லமும், கூபகமும், சிங்களமும், சையத்தின் மேற்குப்பட்ட கொங்கணமும், துளுவமும், குடகமும், குன்றகமும், கிழக்குப்பட்ட கருநடமும், வடுகும், தெலுங்கும், கலிங்கமும் ஆகும். இனி, நச்சினார்க்கினியாரோ, இருதலை நாகம்போல, இளம்பூரணர் கொள்கையையும் தெய்வச்சிலையார் கொள்கையையும் கவ்விக்கொண்டு, திசைச்சொற் சூத்திரத்து வந்த `செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும்’ என்னும் பகுதிக்கு நலிந்து பொருள்கொண்டு, இளம்பூரணர் குறித்த பன்னிருநாடுகளுடன் தெய்வச்சிலையார் குறித்த பன்னிரு நாடுகளையும் கூட்டி, அவ்விருபத்து நான்கு நாடுகளும் கொடுந்தமிழ் நாடெனக் குறித்தார், ஆயினும், செந்தமிழ் நாட்டின் எல்லையை இளம்பூரணர் கூறிவாறே கூறினார். இனிப், பிற்காலத்தார்க்கு இலக்கணமாக நன்னூலை இயற்றிய பவணந்தி முனிவர் திசைச்சொல் இலக்கணம்பற்றிக் கூறிய சூத்திரம். ‘செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும் ஒன்பதிற் றிரண்டினில் தமிழ்ஒழி நிலத்தினும் தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி’ என்பது, அந்நூற்குப் பின்பு இயற்றப்பட்ட இலக்கண விளக்கச் சூத்திரம் அதன்படியே, இச்சூத்திரத்தில குறிக்கப்பட்ட பன்னிரு நிலங்களின் பெயர். `தென்பாண்டி குட்டம் குடம்கற்கா வேண்பூழி பன்றி அருவா அதன்வடக்கு - நன்றாய சீதம் மலாடு புனனாடு செந்தமிழ்சேர் ஏதமில் பன்னிரு நாட்டெண். என்பதனால் அறிக. அச்சூத்திரத்தில் குறிக்கப்பட்ட பதினேழு நிலங்கள் இன்ன வென்பதை, `சிங்களம் சோனகம் சாவகம் சீனம் துளுக் குடகம் கொங்கணம் கன்னடம் கொல்லம் தெலுங்கம் கலிங்கம் வங்கம் கங்கம் மகதம் சவுடம் கடாரம் கடுங்குசலம் தங்கும்புகழ்த் தமிழ்சூழ் பதினேழ்புவி தாம்இவையே.’ என்பதனால் அறிக. ஆகவே இந்நூலார் மேற்குறித்த பன்னிரண்டும் பதினேழும் கூடிய இருபத்தொன்பது நாடுகளும் கொடுந்தமிழ் நாடெனவும் அந்நாட்டுச் சொற்கள் தமிழில் திசைச் சொல்லாக வழங்குதற்குரியன எனவும் கூறினார். இவ்விரு பிற்காலத்து நூலாருள்ளும் இலக்கண விளக்க நூலார், செந்தமிழ் நிலத்தின் எல்லையை இளம்பூரணர் கூறியவாறே கூறினார். நன்னூலார் செந்தமிழ் நிலத்தின் எல்லைபற்றி வேறொன்றும் வெளிப்படக் கூறாமையால் அவர்க்கும் அக்கருத்தின் வேறு இல்லைபோலும். ஆயினும், நன்னூல் உரையாசிரியருள் சிறந்தவராகிய சங்கர நமச்சிவாயப்புலவர் பாண்டி நாடே செந்தமிழ் நாடு என்றும், புனனாடு என்னும் சோணாடு கொடுந்தமிழ் நாடு பன்னிரண்டனுள் ஒன்றென்றும் நாட்டினார். அதற்கு அவரால் காட்டப்பட்ட மேற்கோள், `சந்தனப் பொதியச் செந்தமிழ் முனிவனும் சவுந்தர பாண்டியன் எனும் தமிழ் நாடனும் சங்கப் புலவரும் தழைத் தினிதிருந்த மங்கலப் பாண்டி வளநாடென்ப’. என்பது. இலக்கண விளக்க நூலார், முன்னரே செந்தமிழ் நாடென்பது புனனாடு என உய்த்துணரவைத்துப், பின்னர் அப்புனனாட்டை கொடுந்தமிழ்நாடு பன்னிரண்டனுள் ஒன்றாக வைத்து எண்ணியது மேற்கோள் மலைவாதல் அறிக. இத்துணையும் கூறியவாற்றால் செந்தமிழ்நிலம் என்பது பற்றி உரையாசிரியர் கொள்கை மூன்று வகையாதல் புலப்படும். முதலாவது - இளம்பூரணர் முதலியோர், அது வையை ஆற்றிற்கும் மருதயாற்றிற்கும் இடைப்பட்ட நாடு என்பது. இரண்டாவது - தெய்வச்சிலையார், அது வடவேங்கடம் தென்குமரி யிடைப்பட்ட நாடு முழுவதும் என்றது. மூன்றாவது - சங்கர நமச்சிவாயர், அது பாண்டிய நாடே என்றது. இம்மூவர்மாறுகோள் ஒருதலைதுணிபு, தொல்காப்பிய னாரோடு ஒருசாலை மாணாக்கர் ஆகிய பனம்பாரனார் கூறிய சிறப்புப் பாயிரத்துள்ளே, முன்னர் `வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து வழக்கும் செய்யுளும் ஆயிருமுதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி’ என்று கூறிப் பின்னர், `அந்நிலத்தொடு முந்து நூல்கண்டு முறைப்பட எண்ணி’ என்று கூறாது, `செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு முந்து நூல்கண்டு முறைப்பட வெண்ணி’ என்று கூறினமையாலும், ‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைச் செந்தமிழ் கூறும் நல்லுலகத்து’ என்று விதந்து கூறாமையாலும், `வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்’ என்றது பொதுவாகத் தமிழ்மொழி வழக்குள்ள நிலத்தின் எல்லை குறித்ததென்றும், செந்தமிழ் நிலம் என்றது அவ்வெல்லைக்குட் பட்ட ஏகதேசமான நிலம் ஒன்றைப் பிரித்துக் கூறியவாறென்றும் தெரிந்துகொள்ளலாம். ஆகவே தெய்வச்சிலையார் கூற்றுப் பொருந்தாமை உணர்க. இனி வையை ஆற்றிற்கும் மருதாயற்றிற்கும் இடைப்பட்ட நிலத்தில் பெரும் பகுதியைக்கொண்ட சோணாடே செந்தமிழ் நாடெனக் கொள்ளலாகாதோ எனின், அவ்வாறு ஓர் ஆசிரியரும் கூறினாரல்லர். சோணாடு `சாலி நெல்லின் சிறைகொள் வேலி’ ஆயிரம் விளையுட்டாகக் காவிரி புரக்கும் நாடு’ என்று சிறப்பித்து ஓதப்பட்டதே. சோழ மன்னருள் பலர் சைவ-வைணவ சமயங்களைப் பரவச்செய்து கோயில்கள் கட்டிப் புகழ்பெற்ற துண்டு. சோணாட்டின் தலைநகரங்களாகிய உறையூர் காவிரிப் பூம்பட்டினம் முதலியவற்றிலே சங்கப் புலவருள் பலர் தோன்றிச் சிறந்த தமிழ்ப்பாடல் பாடியதுண்டு. தொல்காப்பியனார் தமிழை மூவேந்தர்க்கும் உரியதாகவே கூறினார். ‘மண்டிணி கிடக்கைத் தண்டமிழ்க் கிழவர், முரசு முழங்குதானை மூவருள்ளும்’. என்பது புறம் 35. ஆயினும், சோழனையேனும், சோணாட்டையேனும், அதன் தலை நகரங்களையேனும் தமிழ் என்னும் அடைமொழி கூட்டி உரைத்ததனைக் காணோம். ஆசிரியர் நல்லூர் நத்தத்தனார், சிறுபாணாற்றுப்படையுள்ளே, `எழுவுறழ் திணிதோள் இயறேர்க்குட்டுவன் வருபுனல் வாயில் வஞ்சியும் வறிதே’ என்றும், `நாடா நல்லிசை நற்றேர்ச் செம்பியன், ஓடாப் பூட்கை உறந்தையும் வறிதே’. என்றும், கூறிவிட்டு `தமிழ் நிலைபெற்ற தாங்கரு மரபின் மகிழ் நனை மறுகின் மதுரையும் வறிதே’, என்று கூறினார். இதனால் அவர் பாண்டியனே மூவருள்ளும் தமிழ்ச் சிறப்புரிமை உள்ளவனென்று குறித்தார். `தமிழ் கெழுகூடல் தண்கோல் வேந்தே’ என்று பாண்டியனையே குறித்தது. (புற. 58). `சிறைவான் புனற்றில்லைச் சிற்றம்பலத்தும் என் சிந்தையுள்ளும் உறைவான் உயர்மதிற் கூடலின் ஆய்ந்த ஒண் தீந்தமிழின் துறைவாய் நுழைந்தனையோ’ என்பது திருக்கோவையார். சோணாட்டின் கீட்டிசையில் தோன்றி, மேனாடெல்லாம் ஒளிபரப்பிய ஒருகவி ஆழிவேந்தாகிய கம்பரும் பாண்டி நாட்டினையே தமிழ் நாடென்று புகழ்ந்து கூறினார். அதனை அடியில் காணும் பாட்டுக்களால் அறிக. `துறக்க முற்றார் மனமென்னத் துறைகெழுநீர் சோணாடு கடந்தால் தொல்லை, மறக்க முற்றார் அதனயலே மறைந்துறைவர் அவ்வழிநீர் வல்லைஏகி, உறக்க முற்றார் கனவுற்றார் எனும் உணர்வினொடும் ஒதுங்கி மணியால் ஓங்கல், பிறக்கமுற்ற மலைநாடுநாடி அகன் தமிழ்நாட்டில் பெயர்திர் மாதோ’. - (நாடவிட்ட படலம்) `அனைய பொன்னி அகன் புனல்நாடொரீஇ, மனையின் மாட்சி குலாம் மலைமண்டலம், வினையினீங்கிய பண்பினர் மேயினார், இனைய தென்றமிழ்நாடு சென்றெய்தினார்’. `அத்திருத்தகு நாட்டினை அண்டர் நாடு, ஒத்திருக்கும் என்றால்உரை ஒக்குமோ, எத்திறத்தினும் ஏழுலகும் புகழ் முத்தும் முத்தமிழும் தந்து முற்றுமோ.’ - (ஆறுசெல் படலம்) இனி, சோழமன்னரால் பெருஞ் சிறப்பெய்தி, பெரிய புராணம் பாடிய தொண்டை மண்டலத்துப் பெரியார் ஆகிய சேக்கிழாரும் பாண்டி நாட்டையே தமிழ் நாடென்று புகழ்ந்துரைத்தார். அதனை, `ஆங்கவர் விடமுன் போந்த அறிவுடை மாந்தர் அங்கண், நீங்கிவண் டமிழ்நாட் டெல்லை பிற்பட நெறியின் ஏகி, ஞாங்கர் நீர்நாடும் காடும் நதிகளும் கடந்து வந்து தேங்கமழ் கைதை நெய்தல் திருமறைக்காடு சேர்ந்தார். (மங்கையர்க் கரசியார்) `பூழியர் தமிழ் நாட்டுள்ள பொருவில் சீர்ப்பதிக ளெல்லாம் பாழியும் அருகர் மேவும் பள்ளிகள் பலவு மாகி’ என்னும் பாடல்களால் அறிக. இத்துணையும் காட்டிய மேற்கோள்களால், செந்தமிழ் நாடு என்பது பாண்டி நாடே எனவும் சோணாடு அன்றெனவும் துணிந்து கொள்க. இனி, பாண்டி நாட்டிற்போலவே, தமிழை யன்றி வேற்று மொழி பெரும்பான்மையாக வழங்காத சோணாட்டைக் கொடுந்தமிழ் நாட்டுள் ஒன்றாகவைத்து எண்ணுதல் சாலுமோ எனின், நன்று வினாயினீர்; சோணாட்டில் சான்றோரெல்லாம் செந்தமிழ்ப் பயிற்சியிற் சிறந்தார் ஆயினும், கல்லாதாரிடத்துக் காணப்படும் கொச்சைத் தமிழ் வழக்கு இன்னும் மாறாமலே இருக்கிறது. பாண்டி நாட்டில் கல்லாதாரிடத்திருந்தும் பல அரிய தமிழ் வழக்குச் சொற்களைச் சோணாட்டுப் புலவர் போற்றிக்கொள்ளலாகும். ஆதலின் அது ஓர் கடாவன்றென விடுக. இனிக், கொடுந்தமிழ் நாடு பற்றிய ஆசிரியர் கொள்கை வேறுபாடுகளும் நாலுவகையாம். முதலாவது - (இளம்பூரணர், சேனாவரையர்) பொங்கர் நாடு முதல் அருவா வடதலை ஈறாகவுள்ள பன்னிரண்டும் கொடுந் தமிழ்நாடு என்றது. இரண்டாவது - (தெய்வச்சிலையார்) அவை பழந்தீபம் முதலாகக் கலிங்கம் ஈறாகக்குறித்த பன்னிரண்டு என்றது. மூனன்றாவது - (நன்னூலர்) தென்பாண்டி முதலிய பன்னிரண்டும் சிங்களம் முதலிய பதினேழும் ஆக இருபத்தேழு என்றது. நான்காவது - (நச்சினார்க்கினியர்) இளம்பூரணரும் தெய்வச்சிலையாரும் குறித்தவற்றைக் கூட்டி இருபத்து நான்கு என்றது. நால்வர் மாறுகோள் ஒருதலை துணிபு - இதுபற்றியாம் புதுவதாகக் கூறவேண்டுவது ஒன்றுமில்லை. தெய்வப்புலமைச் சிவஞான முனிவர் இலக்கண விளக்கச் சூறாவளியில் முன்னமே துணிவு வெளிப்படுத்தினார். ஆண்டு அவர் கூறிய பொருள் ஒவ்வொன்றும் பொன்போலப் போற்றிக்கொளல் வேண்டும். அச் சூறாவளியுரை வருமாறு:- `தமிழொழி பதினேழ் நிலத்து மொழிகளையும் கொடுந் தமிழ் நாட்டுமொழியோடு ஒப்பத் திசைச் சொல்லெனக் கொண்டார் (இலக்கண விளக்க நூலார்). ஆசிரியர் தொல்காப்பியனார் அவ்வாறு கொள்ளாமையானும் உரையாசிரியர் சேனாவரையர் கூறாமையானும் வடசொற் போல ஏனை நிலத்துச் சொற்கள் சான்றோர் வழக்கினுள்ளும் செய்யுளினும் வாராமையானும், சிலசொற்கள் இக்காலத்து வரினும் இலக்கணமுறை யன்மையானும் அவை தமிழ்க்குரிய திசைச்சொல் ஆகாவென மறுக்க’ என்பது. திசைச்சொற்கு உதாரணம் ஒரோவொன்றே காட்டினர் இளம்பூரணர். பதிற்றுப்பத்து, புறநானூறு, சிலப்பதிகாரம் முதலியவற்றுள் ஒரு சில திசைச்சொல் வழங்கின கண்டு கொள்க. செப்பு என்பது வடுகநாட்டுத் திசைச்சொல் என்று தெய்வச்சிலையார் `நச்சினார்க்கினியர் முதலியோர் எடுத்துக் காட்டினார். அது ஓர் திசைச் சொல்லாயின், ஆசிரியர் தொல்காப்பியனார் தம் நூலுள்ளே `செப்பும் வினாவும் வழ hஅல் ஓம்பல்’. `செப்பினும் வினாவினும் சினைமுதற் கிளவிக்கு’ `செப்பே வழீஇயினும் வரைநிலையன்றே’. `எடுத்த மொழியினம் செப்பலும் உரித்தே’. `இன்மை செப்பல்”. உண்டென் கிளவி உண்மை செப்பின்’. என அம் மொழியைப் பயில வழங்கார். வடுகர், சொல்லுதற்பொருளில் செப்புதல் என வழங்குதலைக் கண்ட பிற்காலத்துத் தமிழாசிரியருட் சிலர், அது வடுகச் சொல்லே; தமிழில் திசைச்சொல்லாக வந்ததென்று மயங்கிக் கொண்டார். அதுபற்றி அவரும் அவ்வாறு கூறினார். அது பொருந்தாது, அச்செப்பு என்பது தமிழ்த் திரிசொல்லாய், வடுகநாட்டார் தமிழ்ச் சொற்களினின்று வாங்கி வழங்கிக் கொண்டே சொற்களுள்ளே ஒன்றாமென்று துணிந்துகொள்க. வடுகநாடு செந்தமிழ் நாட்டைச் சேர்ந்ததன்று ஆகலான், அச்செப்பு என்பது திசைச்சொல் என்பது ஆசிரியர் தொல்காப்பியனார்க்குக் கருத்தன்றென மறுக்க. இனி நன்னூலார்க்கும் `செப்பு’ என்பது திசைச்சொல் அன்றென்பதே கருத்தாதல், அவர் `மாற்றம் நுவற்சி செப்பு உரை கரை நொடி இசை’ என்னும் சூத்திரத்தால் அதனைத் தமிழ் உரிச்சொல்லாக வைத்து ஓதுமாற்றால் உணர்க. இனி, பிரயோக விவேகம் என்னும் நூலாசிரியர் தமிழும் ஓர் திசைச் சொல்லே யாம் என்றார். அது எம்மொழிக்குத் திசைச்சொல்லோ? இது வடமொழிப் பித்து தலைக்கேறிக்கூறிய பிதற்றுரையுள் ஒன்றெனத் தள்ளுக. திசைச் சொல்லிலக்கணம்பற்றிய உரை ஒருவாற்றான் முடிந்தது. `வடசொல்’ என்பதன் இலக்கணம்பற்றிய உரை முன்னமே பல வகையான் விரிக்கப்பட்டது. - திரு. ம.நா. சோமசுந்தரம் பிள்ளை, தமிழ்ப்பொழில் 3. குறிப்புவினை அறிவு படிப்படியே வளர்ந்துவருவது. முன் பெற்றுச் சேர்த்தவை கொண்டு, அவற்றிற்கு மேலும் சிலவற்றைத் தேடிக் கொள்ளுதல் அறிவுத் துறையில் இயற்கை. ஆதலின், நம் காலத்தைவிட, எதிர்காலத்தில் சில பொருள்களைப் பற்றித் தெளிவான அறிவு பிறத்தல் கூடும். அவ்வாறே முன்னோர் காலத்தைவிட, நம் காலத்தில் சில பொருள்கள் தெளிவு பெற்று விளங்குதலும் இயல்பே. முன்னோர் பெற்றிருந்த நலங்களுள் சிலவற்றை நாம் இழந்திருத்தல் கூடும். ஆயின், சில துறைகளில் முன்னோரைவிடத் தெளிவாக அறியும் வாய்ப்பு, நமக்கு உண்டு. இலக்கணத் துறையில் இது உண்மையாதல் காணலாம். முன்னோர் தமிழ் மொழிக்கு இலக்கணம் எழுதிய காலத்தில் இக்காலத்து உள்ளது போல் பல்வேறு மொழியாரின் கூட்டுறவு இருந்ததில்லை. வடமொழி ஒன்றனோடு மட்டும் ஒப்பிட்டு நோக்கும் வாய்ப்பு அக்காலத்தில் இருந்தது. இக்காலத்தில் உலகத்தில் உள்ள பல மொழிகளின் இலக்கணத்தோடும் ஒப்பிட்டு உண்மை காணும் வாய்ப்பு நமக்கு உள்ளது. கால்டுவெல் எழுதிய ஒப்பிலக்கணம் புதிய உண்மைகளை உணர்த்த முடிந்தது இதனாலேயே ஆகும். அவர்தம் ஒப்பிலக்கணம் போல் சென்ற நூற்றாண்டில் அறிஞர் பலர் முயன்று எழுதிய ஒப்பிலக்கணங்கள் பல; அவற்றைக் கொண்டு எழுந்த மொழியாராய்ச்சி நூல்கள் சில; அவற்றால் விளக்கம் பெற்று அமைந்த மொழிவரலாற்று நூல்கள் சில; அவை எல்லாவற்றின் துணையும் கொண்டு தமிழ்மொழியின் அமைப்பைப் பற்றி ஆராயும் வாய்ப்பு நமக்கு உள்ளது. ஆதலின், முன்னோர் காலத்தில் பெறுதற்கியலாத தெளிவு நம் காலத்தில் பெற முடிகிறது. அது நம் சிறப்பு அன்று; நம் காலத்தின் சிறப்பும், இக்காலத்துக் கிடைத்துள்ள அறிவுவளர்ச்சிக்குரிய வாய்ப்பின் சிறப்பும் ஆகும். தொல்காப்பியனார் வினைச் சொல்லைப் பற்றி விளக்குமிடத்து, அது வேற்றுமை ஏற்காது என்றும், காலம் உணர்த்தும் என்றும் இரு தன்மைகளைக் கூறுகிறார். பிறகு காலம் குறிப்பாகவும் உணர்த்தப்படும் என்கிறார். அவர்தம் கருத்துப்படி வினைச்சொற்கள் எல்லாம் இருவகைப்படுவன; அவை வினை என்றும் குறிப்பென்றும் வழங்குவன. பிற்காலத்தில், உரையாசிரியர்கள் அவ்விருவகையைத் தெரிநிலைவினை குறிப்புவினை என வழங்குவர். குறிப்புவினை என்பது, வினைக்குறிப்பு எனவும் குறிப்பு எனவும் கூறப்படும். காலத்தை வெளிப்படையாக உணர்த்தாமல் குறிப்பாக உணர்த்துவது குறிப்புவினைச்சொல் எனத் தொல்காப்பியத்தால் பெறப்படுமாயினும், “தொழின்மை தெற்றென விளங்காது குறித்துக்கொள்ளப்படுதலின் குறிப்பு என்றார்” எனச் சேனாவரையர் விளக்கம் தந்துள்ளார். தொழின்மை என்றது, காலத்தோடியைந்து தொழிற்படும் தன்மை எனக் கொள்ளத் தக்கது. அத் தன்மையைத் தெற்றென விளங்கவைக்கும் உறுப்பு ஒவ்வொரு தெரிநிலைவினையிலும் உள்ளது. அதுவே கால இடைநிலை என்றும், கால வெழுத்து என்றும் குறிக்கப்படுவது. தெரிநிலைவினை கால இடைநிலை பெற்று வருவது; குறிப்பு வினை அது பெறாதது; ஆதலின் வழங்குமிடத்தை ஒட்டிக் காலத்தைக் குறிப்பாக உணர்த்துவது. தொல்காப்பியனார் குறிப்புவினையைப் பற்றிப் பல இடங்களில் இக்கருத்தைப் புலப்படுத்தியுள்ளார். திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண ஆசிரியராகிய கால்டுவெல், குறிப்புவினை நிகழ்காலத்திற்கு உரியது என்றும், காலத்தை உணர்த்தும் தன்மை அதற்கு இல்லை என்றும் எழுதியுள்ளார். இனி, இப் பாகுபாடு பொருந்துமா எனக் காண்போம். தெரிநிலைவினைச் சொற்கள் எல்லாம், ஏவலொருமை வடிவாக உள்ள வினையடியாகப் பிறப்பன. குறிப்புவினைச் சொற்கள் வினையடியாகப் பிறவாமல், பெயரடியாகப் பிறப்பன; பொருள் இடம் காலம் சினை குணம் தொழில் என்னும் அறுவகைப் பெயர்களின் அடியாகப் பிறப்பன. அதுச்சொல் வேற்றுமை உடைமை யானும் கண்ணென் வேற்றுமை நிலத்தி னானும் ஒப்பி னானும் பண்பி னானுமென்று அப்பாற் காலம் குறிப்பொடு தோன்றும். அன்மையின் இன்மையின் உண்மையின் வன்மையின் அன்ன பிறவும் குறிப்பொடு கொள்ளும் என்ன கிளவியும் குறிப்பே காலம். இன்றில உடைய என்னும் கிளவியும் அன்றுடைத் தல்ல என்னும் கிளவியும் பண்புகொள் கிளவியும் உளஎன் கிளவியும் பண்பின் ஆகிய சினைமுதற் கிளவியும் ஒப்பொடு வரூஉம் கிளவியொடு தொகைஇ அப்பாற் பத்தும் குறிப்பொடு கொள்ளும். இந் நூற்பாக்களால் தொல்காப்பியனாரின் கருத்து அதுவாதல் பெறப்படும். ஆகவே, இவற்றிடையே இரண்டு வேறுபாடுகளைக் காண்கின்றோம். 1. தெரிநிலைவினை குறிப்புவினை என்பன அடிச்சொற்களிலேயே வேறுபடுகின்றன. 2. முன்னது கால இடைநிலை பெற்றுவர, பின்னது பெறாது வருகின்றது. இத்துணை வேறுபாடு இருக்கும்போது, இவை இரண்டும் வினைச் சொல்லின் வகைகளாகக் கருதப்படுதற்குக் காரணங்கள் யாவை? இனி இவ் விருவகைக்கும் பொதுவான தன்மைகள் உள்ளனவா எனக் காண்போம். 1. தெரிநிலைவினை திணைபால் காட்டும் விகுதிகளை ஏற்று வருதல் போலவே, குறிப்புவினையும் திணைபால் விகுதிகளை ஏற்றுவரும். அவன் சென்றான், வந்தனன் - தெரிநிலைவினை ஆன் அன் விகுதிகளை ஏற்றுவருதல். அவன் நாட்டான், பொன்னன் - குறிப்பு வினை அவ்விகுதிகளை ஏற்றுவருதல். 2. தெரிநிலைவினை வேற்றுமையுருபுகளை ஏலாமை போல், குறிப்பு வினையும் அவற்றை ஏற்பதில்லை. 3. தெரிநிலைவினை வாக்கியத்தில் பயனிலை யாதல்போல், குறிப்பு வினையும் பயனிலையாக வரும். 4. சிவஞான சுவாமிகளின் கருத்துப்படி, தெரிநிலை வினையில் பகுதியில் பொருள் சிறந்து நிற்றல் போல் குறிப்பு வினையிலும் பகுதியில் பொருள் சிறந்து நிற்கும். தெரிநிலைவினை குறிப்புவினை என வினைச் சொல்லின் இருவகைகளாக இவை பாகுபாடு செய்து கூறப்படினும், மேற்குறித்த வேறுபாடுகளை ஆராயினும், அல்லது பொதுத் தன்மைகளை ஆராயினும், குறிப்பு வினை எனப்படுவது வினைச்சொல் அன்று என்பது தெளிவாகும். இலக்கண நூலார் அதனை வினை என வழங்கினும், அது பெயரே என்பது பின்வரும் காரணங்களால் புலப்படும். 1. தமிழ்மொழியில் பெயர்க்கும் வினைக்கும் பொதுவான வினையடிகள் உண்டு (மலர்ந்தன, மலர்களை). வினையாக அமைந்துவிட்ட ஒரு சொல்லிலிருந்து பெயர்ச்சொல் அமைதலும் உண்டு (காட்சிகள், போனவன்). ஆயின், பெயர்ச்சொல்லாக வடிவு பெற்ற சொல்லிலிருந்து வினைச்சொல் அமைதல் இல்லை. தமிழ்மொழியின் இயல்பை ஆராய்வார்க்கு இவ் வுண்மை எளிதில் புலப்படும். ஜி.யு. போப், லாசரஸ் முதலான ஐரோப்பியர் தமிழ்பற்றி எழுதிய நூல்களில், சிலபெயர்ச் சொற்களிலிருந்து வினைச் சொற்கள் அமைந்தன எனக் காட்டுவர். அவர்கள் காட்டியுள்ள எடுத்துக்காட்டுக்கள் அனைத்தும் வடசொற்களாக இருத்தலின், அவ்வியல்பு தமிழ்க்கு இல்லை என்பது விளங்கும். அவர்கள் காட்டியுள்ள சொற்கள் சில: பெயர் வினை பிரகாசம் பிரகாசி தியானம் தியானி பிரசங்கம் பிரசங்கி நடம் - நடித்த, நடிக்கும் இவை தமிழ்ச் சொற்கள் அல்ல; போப் அவர்களே, இவ்வாறு வழங்குதல் அருகிய வழக்கு என்று குறிப்பிடுகிறார். இவை வட சொற்கள்; சிறுபான்மையாகப் பெயர்ச் சொல்லிலிருந்து வினைச்சொல் பிறத்தல் வடமொழியில் உண்டு; ஆங்கிலம் முதலிய மொழிகளிலும் உண்டு. அருகி வழங்கும் இவ் வடசொல்வழக்கினைப் பார்த்துத் தமிழிலும் சில வினைச்சொற்கள் பெயர்ச்சொற்களிலிருந்து அமைதல் உண்டு. ஒப்புமையாக்கமாக (யயேடடிபiஉயட கடிசஅயவiடிn) இவ்வாறு அமையும் சொற்கள் தமிழின் இயல்புக்கு மாறாக இருத்தலின், இவை மொழி வழக்கில் இடம் பெறுவதில்லை. பெயர் வினை முயற்சி முயற்சிக்கிறான் கவர்ச்சி கவர்ச்சித்தது இவை தவறு என்றே கடியப்படுதல் காணலாம். பெயர்ச்சொற்களிலிருந்து வினைச்சொற்களை அமைக்கும் தேவை ஏற்பட்டால், தமிழ் மொழி அதற்கு ஏற்ற வழியை வகுத்துக்கொள்கிறது. அதாவது, வேறொரு வினைச்சொல் சேர்த்தோ, துணைவினை (யரஒடையைசல எநசb) சேர்ததோ, பெயர்ச்சொற்களை அவ்வாறு பயன்படுத்துகிறது. வேறொரு வினை சேர்த்து அமைக்கும் முறை: முயற்சி - முயற்சி செய்தான் கவர்ச்சி - கவர்ச்சி தந்தது துணைவினை சேர்த்து அமைக்கும் முறை: கண் - கண்ணுற்றான் கேள்வி - கேள்விப்பட்டான் படு ஆகு முதலியவை சேர்ந்து பெயர்ச்சொல் வினைச்சொல்லாக அமையும் எனக் கூறி, லாசரஸ் பின்வரும் சொற்களைக் காட்டுகிறார். வறுமை - வறுமைப்படு வெண்மை - வெண்மையாகு ரேனியஸ் என்பவர், குணம் என்ற வட சொல்லிலிருந்து குணப்படுகிறது, குணப்படுத்துகிறது எனச் சொற்கள் அமைதலை எடுத்துக் காட்டுகிறார். ஆகவே, பொன், கருமை, நன்மை முதலான பெயர்ச் சொற்களோடு அன் முதலிய விகுதிகள் சேர்ந்து, பொன்னன், கரியர், நல்லது முதலான வினைச்சொற்கள் அமைந்தன என்பதும், அவை குறிப்பு வினை என்பதும், தமிழின் இயல்புக்குப் பொருந்தா. அவ்வாறு அமைந்த பொன்னன் முதலியவற்றைப் பெயர்ச் சொற்கள் எனக் கொள்ளுதலே ஏற்புடையதாகும். 2. பெயர் என்பது பொருளை உணர்த்துவது; ஆகவே காலத்தை உணர்த்த வேண்டிய கடப்பாடு இல்லாதது; இடத்தை ஒட்டிய வேறுபாடுகளை (திணை பால் எண் இடம் வேற்றுமைகளை) உணர்த்துவதற்கு உரியது. வினை என்பது தொழிலை உணர்த்துவது; அது காலத்தை ஒட்டி நிகழும் நிகழ்ச்சியாதலின், காலத்தை உணர்த்த வேண்டிய கடப்பாடு உடையது. எனவே, பெயர்ச்சொற்கள் கால இடை நிலை பெறாமல் வருதலும், வினைச்சொற்கள் திணைபால் விகுதிகள் பெறாமல் வருதலும் இயல்பாகும். உலகில் பெரும்பாலான மொழிகள் இவ்வாறு உள்ளன. தமிழிலும், வினையாலணையும் பெயரும் காலம் காட்டும் தொழிற் பெயரும் தவிர மற்றப் பெயர்ச்சொற்களில் கால இடைநிலை இல்லை; படர்க்கை ஒன்றன்பால் பலவின்பால் எதிர்கால வினைமுற்றுகளில் (அது செய்யும், அவை உண்ணும்) திணைபால் விகுதிகள் இல்லை. ஆகவே, பொன்னன், கரியர், நல்லது முதலாய சொற்களில் திணைபால் விகுதிகள் இருத்தல் கொண்டு, அவை குறிப்பு வினைகள் என்றும், உண்டனன், சென்றனர், இருந்தது முதலான தெரிநிலைவினைகளோடு ஒத்தன என்றும் கொள்ளல் பொருந்தாது. அண்ணன், புலவர், விழுது முதலாய பெயர்ச்சொற்களில் திணை பால் விகுதி இருந்தும் அவற்றைக் குறிப்பு வினையாகக் கொள்ளலாகாமையும் காண்க. 3. தெரிநிலை வினைச்சொற்களாகிய உண்டனன் முதலியன வேற்றுமையுருபுகளை ஏலாமைபோல், குறிப்பு வினைச்சொற்களும் ஏற்பதில்லை. ஆயின் தொழில் செய்தாரை உணர்த்தும் போதும், தொழிலையே உணர்த்தும் போதும் அவை வேற்றுமை யுருபுகளை ஏற்கும். உண்டவனைக் கண்டேன் உண்ணுதலைச் செய்தார் உண்பதைக் கண்டார் அந் நிலையில் அவை வினைமுற்றுகள் ஆவதில்லை; பயனிலையாக நிற்பதில்லை. ஆகவே, பயனிலையாக நிற்கும் தெரிநிலை வினைமுற்றுக்கள் வேற்றுமையுருபுகள் ஏற்பதில்லை எனலாம். வினையாலணையும் பெயராகவும் தொழிற் பெயராகவும் அமையும் சொற்கள் மட்டுமே வேற்றுமைகள் ஏற்பது காணலாம். அதனால் பயனிலையாக நிற்கும் சொற்கள் வேற்றுமை யுருபு ஏற்பதில்லை எனக் கொள்ளல் வேண்டும். அது பெயர்ச்சொற்களுக்கும் பொருந்துவது. பொன்னன், கரியர், நல்லது முதலான சொற்களும் பயனிலைகளாக நிற்குமிடத்து உருபு ஏற்பதில்லை; மற்ற இடங்களில் ஏற்கின்றன. அவர் கரியர், அது நல்லது. கரியர்க்குத் தந்தேன். நல்லதைக் கொண்டான். ஆதலின், பயனிலையாக நிற்குமிடத்து வேற்றுமை யுருபு ஏலாமை பற்றி, அவற்றைக் குறிப்புவினை எனக்கொண்டு வினைச்சொற்பாற்படுத்தல் பொருந்தாது. 4. எந்தச் சொல்லும் பயனிலையாக நிற்றல் உண்டு. இது உலக மொழிகள் பலவற்றிலும் காணப்படுவது. தமிழில் பெரும்பாலும் தெரிநிலை வினைமுற்றுக்கள் பயனிலையாக நிற்கின்றன. ஆயின், தமிழிலக்கணப்படி, வினைச்சொற்களே அல்லாமல் பெயர்ச்சொற்களும் பயனிலையாக வரலாம். பொருண்மை சுட்டல் வியங்கொள வருதல் வினைநிலை உரைத்தல் வினாவிற்கு ஏற்றல் பண்புகொள வருதல் பெயர்கொள வருதலென்று அன்றி அனைத்தும் பெயர்ப்பய னிலையே எழுவா யுருபு திரிபில் பெயரே வினைபெயர் வினாக்கொளல் அதன்பய னிலையே என்னும் விதிகள், பெயர்ப் பயனிலையாக வருதற்கு இடந்தருகின்றன. அகத்தியம் என மயிலைநாதர் காட்டும் நூற்பாவும் அவ்வாறே கூறுகிறது: வினைநிலை உரைத்தலும் வினாவிற்கு ஏற்றலும் பெயர்கொள வருதலும் பெயர்ப்பய னிலையே வினை போலவே பெயரும் பயனிலையாக வருதல் கிரேக்கம் முதலிய மொழியார்க்கும் உடன்பாடே ஆகும். ஆகவே, அவன் பொன்னன் அவர் கரியர் அது நல்லது முதலான வாக்கியங்களில் பயனிலையாக உள்ளவற்றைப் பெயர்ச் சொற்கள் என்றே கொள்ளலாம்; குறிப்பு வினைகள் எனக் கொள்ளத் தேவை இல்லை. 5. சிவஞான சுவாமிகள் கூறுவதன்படி பகுதியில் பொருள் சிறந்து நிற்றல் பற்றி அவற்றைக் குறிப்புவினை எனக் கொள்ளல் வேண்டுவதில்லை. அவன் அண்ணன் அவர் புலவர் அது விழுது அவற்றின் பயனிலைகளிலும், பகுதியில் பொருள் சிறந்து நிற்கிறது. அது பற்றி அவை குறிப்புவினையாமாறு இல்லை. ஆகவே, குறிப்புவினை என இலக்கண நூலார் கூறுவன வற்றை வினைச்சொற்கள் எனக் கொள்ளாமல், பெயர்ச்சொற்கள் என்றே கொள்ளுதல் பொருந்தும். அவர் கரியர் அவர் புலவர் முன்னதில் கரியர் என்பது குறிப்புவினை என்றும், பின்னதில் புலவர் என்பது பெயர்ச்சொல் என்றும் கொள்வதில் பொருள் இல்லை. கரியர், புலவர் என்னும் சொற்கள் இரண்டும் அர் விகுதிபெற்றுப் பெயரடியாக அமைந்த சொற்களே. அது நல்லது அது கல் என்பவற்றிலும், நல்லது என்பதைக் குறிப்புவினை என்றும், கல் என்பதைப் பெயர்ச்சொல் என்றும் கொள்ளல் பொருந்தாது. முன்னது திணைபால் காட்டும் விகுதியோடு அமைந்தது; பின்னது விகுதியின்றி அமைந்தது. இரண்டும் பெயர்ச் சொற்களே. இக்காலத்து மொழியாராய்ச்சியால் பெற்ற ஒரு தெளிவு, இத்தடுமாற்றத்தை அறவே போக்குகிறது. அதாவது: ஒரு சொல்லுக்குத் தனியே வடிவம் ஒன்று உண்டு அது வாக்கியத்தில் நின்று தரும் பயன்வகை வேறு ஒன்று உண்டு. ஒருவர் தனியே பெயரும் வடிவமும் உடையவராக இருக்கிறார். அவரே வாழ்க்கையில், சிலர்க்கு மகனாகவும், சிலர்க்குத் தந்தையாகவும், சிலர்க்கு அண்ணனாகவும், சிலர்க்குத் தம்பியாகவும், சிலர்க்கு நண்பராகவும், சிலர்க்குப் பகைவராகவும் இருக்கிறார். அதுபோல், ஒரு சொல்லே, வடிவத்தால் பெயராகவோ வினையாகவோ இருக்கலாம்; பயன்வகையால் அச் சொல்லே எழுவாயாகவோ, பயனிலையாகவோ, பெயரடையாகவோ, செயப்படு பொருள் முதலியனவாகவோ இருக்கலாம். கல் - பெயர்ச்சொல் கல் விழுந்தது - எழுவாய் அது கல் - பயனிலை கல் மனம் - பெயரடை கல் எறிந்தான் - செயப்படுபொருள் கல்லால் எறிந்தான் - கருவிப்பொருள் இவ்வாறே ஏனைய பயன்வகைகளும் ஆய்ந்து கொள்ளலாம். ஆகவே, ஒரு சொல், வடிவம் (கடிசஅ) பற்றியும், பயன்வகை (கரnஉவiடிn) பற்றியும் வெவ்வேறாக இருத்தல் இயல்பு எனக் கொள்ளல் வேண்டும். தெரிநிலைவினை குறிப்புவினை என்னும் பழைய குறியீடுகளால் மயங்குதல் கூடாது. அவன் வந்தனன் அவன் பொன்னன் என்னும் வாக்கியங்களில், வந்தனன் என்பது வடிவத்தால் வினைச் சொல்; பயன்வகையால் பயனிலை. பொன்னன் என்பது வடிவத்தால் பெயர்ச்சொல்; பயன்வகையால் பயனிலை. இரண்டு வாக்கியங்களும் ஒரே வகையானவை; ஆயின் இரண்டிலும் உள்ள பயனிலைகள் வடிவத்தால் ஒரே வகையான சொற்கள் அல்ல. வந்தனன் என்பது வினைச் சொல்லாதலால், பொன்னன் என்பதும் வினைச் சொல்லாக இருத்தல் வேண்டும் எனக் கருதலும், அது காலம் காட்டாமை பற்றிக் குறிப்புவினை எனக் கொள்ளலும் பொருந்தா. வினைச்சொல் பயன்படுதல் போலவே பெயர்ச்சொல்லும் பயன்படுதல் பற்றி, பெயர்ச்சொல் வினைச் சொல்லாகிவிடாது. வந்த நண்பன் அந்த நண்பன் இவற்றுள் வந்த என்பது வினைச்சொல்லாதலால், அந்த என்பதும் வினைச்சொல் ஆதல் இல்லை. இவை வடிவத்தால் வேறுபட்டு, பயன் வகையால் ஒத்து நிற்கும் சொற்கள். முன்னது வினைச்சொல்; பின்னது சுட்டு. இரண்டும் பெயர்க்கு அடையாகப் பயன்படுதல் காணலாம். கொல் யானை நல் யானை இவற்றுள் கொல் என்பது வினை. நல் என்பது பண்பு. இவையும் வடிவத்தால் வேறுபட்டு, பயன்வகையால் ஒரு தன்மையாக உள்ள சொற்கள். இவை போன்றவற்றை ஆய்ந்து தெளிந்தால், குறிப்புவினை என்பது ஒன்று இல்லை என்பதும், சில பெயர்ச் சொற்களே பயன்வகை நோக்கி அவ்வாறு கொள்ளப்பட்டன என்பதும் புலப்படும். தேங்கி நிற்காமல் முன்னேறிச் செல்லும் அறிவியல்துறை எதுவும், புதுக் குறியீடுகளையாவது அவ்வப்போது கையாள வேண்டும்; அல்லது, பழைய குறியீடுகளைத் திருத்திக்கொள்ள வேண்டும். மரபாக வழங்கிவரும் குறியீட்டுச் சொற்கள், புதிய ஆராய்ச்சியாளரின் மனங்களைக் குறுகச் செய்வதுடன், செழிப்புற்று வளராதபடி தடையாகவும் நிற்கின்றன என்று அறிஞர் யெஸ்பர்ஸன் கூறுவது இங்குக் கருதத்தக்கது. - டாக்டர் மு. வரதரசான் பக். 84-92 சொல்லதிகாரம் நூற்பா நுதலிய பொருள் (நூற்பா எண்) அஃறிணைக்குரியசொல் 3 அஃறிணைக்குரிய பொருள் 1 அஃறிணைக் குறிப்பு விணை பிறத்தற்குரிய இடம் 216 அஃறிணைப் பன்மைத் தெரிநிலை வினைமுற்று 212 அஃறிணைப்பால் நயம் 24 அஃறிணைப் பெயர்விளி யேற்குமாறு 148 அஃறிணை யியற்பெயர் பால் உணர்த்துமாறு 168 அஃறிணையொருமைத்தெரி நிலை வினைமுற்று 213 அஃறிணை வினைமுற்றின் தொகை 214 அகர பற்றுச்சொல் 9 அசைநிலையடுக்கு 405,419,420 அசை நிலையிடைச்சொல் 245,274 அடிமறிப்பொருள்கோள் 401, 402 அடை, சினை, முதல் அடுக்கி வருமாறு 26 அன்மை விளி 124 `அதிரங்’ என்னும் உரிச்சொல் லின் பொருள் 310 `அந்தில்’ என்னும் இடைச்சொல் லின் பொருள் 262 `அந்தோ’ என்னும் இடைச்சொல் லின் பொருள் 247 அமர்தல்’ என்னும் உரிச்சொல் லின் பொருள் 374 `அம்ம’ என்னும் அசைச் சொல் விளியேற்குமாறு 150 `அம்ம’ என்னும் இடைச்சொல் லின் பொருள் 350 `அரி’ என்னும் உரிச் சொல்லின் பொருள் 350 `அலமரல்’ என்னும் உரிச்சொல் லின் பொருள் 304 `அல்லதில்’ என்னும் வாய் பாட்டாற் செப்பு நிகழுழுமாறு 35 அவையல் கிளவி 436, 437 `அழுங்கல்’ என்னும் உரிச்சொல் லின் பொருள் 343, 344 அன் ஈற்றுப்பெயர் அண்மை விளி கொள்ளுமாறு 128 அன் ஈற்றுப்பெயர் விளியேற்குமாறு 127 அன்மொழித் தொகை 412 `அன்றே’ என்னும் இடைச் சொல் லின் பொருள் 277 `அன்னோ’ என்னும் இடைச் சொல்லின் பொருள் 277 `ஆ’ என்னும் எழுத்துச் செய்யுளில் ஓ ஆகுமாறு 192, 208, 209 ஆகார ஈற்றுச் சொல் 9 ஆபெயர் 110, 111 ஆகுபெயர்க்காகும் பெயர்கள் 113,114 ஆகுபெயர் வேற்றுமையொடு தொடருமாறு 112 ஆக்கச்சொல் பயிலுமாறு 21 ஆக்கச்சொல் வழக்கினுள் பயின்று வருமாறு 22 ஆக்கவேதுப் பொருள் மூன்றாம் வேற்றுமைக்கும் ஐந்தாம் வேற்றுமைக்கும் உரித்தாமாறு 88 `ஆங்க’ என்னும் உரையசைச் சொல் 272 ஆணொழி மிகுசொல் 50 ஆண்பாலை யுணர்த்தும் ஈற்றெழுத்து 5 ஆண்பாற் சொல் 2 ஆண்மை சுட்டும் விரவுப் பெயர் 178 ஆண்மை திரிந்த பெயர்(பேடி) ஆண்பாற்சொல் ஆகாமை 12 ஆண்மைதிரிந்த பெயர்ச் சொல் 4 `ஆய்தல்’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 324 ஆறாம் வேற்றுமைக்குரிய பொருள் 76 ஆறாம் வேற்றுமைப் பொருளில் ஏழாம் வேற்றுமை மயங்குமாறு 94 ஆறாம் வேற்றுமைப் பொருளொடு நான்காம் வேற்றுமை மயங்குமாறு 90 ஆறாம் வேற்றுமையும் இரண்டாம் வேற்றுமையும் மயங்குதல் 83 `ஆர்’ ஈறு பெற்ற இயற்பெயர் பலர் பால் வினையொடு முடியுமாறு 265 `ஆர்’ என்னும் இடைச்சொல் 265, 266 ஆன்றயற்றுப் பெயர் விளியோகுமாறு 129 ஆன் ய்ற்று வினையாலணையும் பெயர் வினையேற்குமாறு 130, 131 இகர ஈகார ஈற்றுப்பெயர் விகர யேற்குமாறு 118 இகர ஈற்று அளபெடைப் பெயர் விளியேற்குமாறு 122 இசைநிறை இடைச்சொல் 245 இசைநிறைச் சொல்லடுக்கின் எல்லை 417 இசைநிறையடுக்கு 405 `இசைப்பு’ என்னும் உரிச்சொல்லன் பொருள் 303 இசையெச்சம் 434 இடவழுக் காத்தல் 11 இடைச்சொல் தோன்று இடம் 246 இடைச்சொல்லின் இயல்பு 244, 448 இடைச்சொல்லின் பாகுபாடு 245 இடைச்சொல்லும் உரிச் சொல்லும் தோன்றுமாறு 156 இடைச்சொல் வேறுபடுமாறு 246 இடைச்சொற்கள் தமக்குரிய வல்லாத பொருளையும் உணர்த்துமாறு 290 `இது செயல்வேண்டும்’ என்பது யமரிடத்துப் பொருள் தருமாறு 238 `இயம்பல்’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 352 இயற்கைப் பொருள்மேல் சொல் நிகழற்பாலவாமாறு 19 இயற்சொல் 392 இயற்பெயரும் சுட்டுப்பெயரும் செய்யுட்கண் முறைமாறி வருமாறு 39 இயற்பெயரும் சுட்டுப்பெயரும் வினையொருமைப் பாட்டின்கண் இடம் பெற்று வருமாறு 38 இயற்பெயர் 173 `இயைபு” என்னும் உரிச்சொல்லின் பொருள் 302 `இளங்கல்’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 352, 353 இரட்டைக் கிளவி 48 இரண்டாம் வேற்றுமை ஏதுப் பொருள் பற்றி வருமாறு 89 இரண்டாம் வேற்றுமைக்குரிய பொருள் 72 இரண்டாம் வேற்றுமையில் ஏழாம் வேற்றுமை மயங்குமாறு 80, 81, 82 இரண்டாம் வேற்றுமையும் ஏழாம் வேற்றுமையும் மயங்குதல் 84 இரண்டாம் வேற்றுமையும் மூன்றாம் வேற்றுமையும் மயங்குமாறு 91, 92 இருத்தலை உணர்த்தும் சொற்கள் 438 இருதிணை ஐம்பாலை யுணர்த்தும் ஈற்றெழுத்து 10 இருதிணைக்கும் உரிய வினைச்சொற்கள் 217 இருதிணைப் பெயரும் விரவி செய்யுளகத்து அஃறிணை முடி பு கொள்ளுதல் 51 இருதிணைப் பெயர்களும் விரவி முடியுமாறு 45, 51 இருவகை யெச்சமும் எதிர்மறை வினைகொண்டு முடியுமாறு 231 `இலம்பாடு’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 354 இறந்தகாலமும் எதிர் காலமும் மயங்குதல் 242 இறந்தகாலம் எதிர்காலச் செய்கையின்கண் மயங்குதல் 240 இறுதிக்கண் தொகவரும் சில வேற்றுமை யுருபுகள் 101 இனஞ் சுட்டாது பண்படுத்துகின்ற பெயர்கள் செய்யுட்கண் பயின்று வருமாறு 18 `இன்னல்’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 297 உ என்னுஞ் சொற்குரியதோர் சிறப்புவிதி 439 உற்றசை ஏகாரம் ஓரளபு வருமாறு 281 `உகப்பு’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 299 உசா’என்னும் உரிச்சொல்லின் பொருள் 364 `உம்’ உந்து ஆகத்திரியுமாறு 287 `உம்’ என்னும் இடைச்சொல்லின் பொருள் 250 `உம்மை எண்ணின் கண் உருபு தொக்கு வருமாறு 286 உம்மைத்தொகை 411 உம்மையெச்சம் 430,431 உயர்திணை உம்மைத்தொகைமுடிபு 415 உயர்திணைக்குரிய சொல் 2 உயர்திணைக்குரிய பொருள் 1 உயர்திணைக் குறிப்புவினை பிறத்தற்குரிய இடம். 210, 211 உயர்திணை சுட்டா விரவுப் பெயர் 193, 194 உயர்திணைத் தன்மைப் பன்மை வினைமுற்று 199 உயர்திணைத் தன்மை யொருமை வினைமுற்று 200 உயர்திணைப் படர்க்கைப் பன்மை வினைமுற்று 203 உயர்திணைப் படர்க்கை யொருமை வினைமுற்று 202 உயர்திணைப் பால் ஐயம் 23 உயர்திணைப் பொருள்மேல் நின்ற பெயர்கள் அஃறிணை முடிபு கொள்ளுதல் 57,589 உயர்திணை வினைமுற்றின் தொகை 205 `உயர்’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 363 உரிச்சொல் இன்னதென்பது 292 உரிச்சொல்லின் பொருள் உணருமாறு 383,384,385,386,387, 390 உரிச்சொற்கள் எழுத்துப் பிரிந்திசையாமை 389 உரிச்சொற்குரியதோர் இயல்பு 449 உரியியலுட் பொருள் கூறப்படும் உரிச்சொற்கள் 293 `உரு’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 295 உருபிடைச் சொல் 245 உருபு தொக்கு வருமாறு 100 உருபு மயக்கம் 102 `உரும்’ என்னும் உரிச்சொலின் பொருள் 359 `உவப்பு’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 299 உவமத்தொகை 408 உளப்பாட்டுத் தன்மைப் பன்மை வினைமுற்று 206 `உறப்பு’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 341 `உறு’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 294 எச்சங்களுக்கும் கொண்டு முடியும் சொற்களுக்கும் இடையில் பிறசொற்கள் வருமாறு 232 எச்சத்தின் வகை 424 எண் ஏகாரம் இடையிட்டு வருமாறு 283 எண்ணிடைச்சொல் வினைச் சொல்லொடு ஒன்றுமாறு 289 எண்ணிடைச்சொல் விணைச் சொல்லொடு வருமாறு 288 எதிர்காலத்துப் பொருளையும் நிகழ் காலத்துப் பொருளையும் இறந்த காலத்தாற் கூறுமாறு 237 எதிர்மறை யெச்சம் 429 `எய்யாமை’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 336 `எல்’ என்னும் இடைச்சொல்லின் பொருள் 264 எல்லாப் பெயரும் பயனிலைப் படுங்கால் திரியாது என்பது. 69 `எல்லாம்’ என்னும் பெயர் உயர் திணைக்கண் பயின்று வருமாறு 184 `எல்லாம்’ என்னும் விரவுப் பெயர் 183 எவன் என்னும் குறிப்பு வினை முற்று 215 எழுவாய் வேற்றுமை இன்ன தென்பது 66 எழுவாய் ஏற்கும் பயனிலை 67 `எறுழ்’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 382 `எற்று’ என்னும் இடைச் சொல்லின் பொருள் 258 `என’ என்னும் இடைச் சொல்லின் பொருள் 253 `என’ என்னும் எச்சம் 432 `எனா’ என்னும் எண்ணிடைச் சொல் 284 `என்றா’ என்னும் எண்ணிடைச் சொல் 284 `என்றா’ என்னும் இடைச் சொல்லின் பொருள் 254 `எ’ என்னும் இடைச்bhல்லின் பொருள் 252, 256, 267 `ஏ’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 298 ஏழாம் வேற்றுமைக்குரிய பொருள் 77 ஏற்றம் என்னும் உரிச்சொல்லின் பொருள் 331 `ஐ’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 379 ஐகார ஈற்று முறைப்பெயர் விளியேற்குமாறு 123 ஐந்தாம் வேற்றுமைக்கும் இரண்டாம் வேற்றுமைக்கும் அச்சப் பொருள் உரித்தாமாறு 96 ஐந்தாம் வேற்றுமைக்குரிய பொருள் 75 ஐம்பாற்கும் மூவிடத்திற்கும் பொது வாங்கிய வினைச்சொற்கள் 220 ஐயப்பொருளைத் துணிந்த வழிச் சொல் நிகழுமாறு 25 ஓடு உருபு உயர் பொருளைப் பற்றி வருமாறு 87 ஒப்பில் போலி 245, 273 ஒருசொல்லடுக்கின் வகை 405 ஒருபொருட்குரிய பல பெயர்களின் மேல் ஒரு வினை நிகழுமாறு 42 ஒரு பொருள் மேல் இருசொல் வருமாறு 453 ஒருமை சுட்டும் விரிவுப்பெயர் 180 ஒருமைப் பெயர் பன்மை கொண்டு முடியுமாறு 454 ஒருவகை குறிக்கும் பலர் பாற்சொல் 27 ஒருவர் என்னும் பெயர் ஆண் பாற்கும் பெண்பாற்கும் உரித்தாமாறு 188 `ஒருவர்’ என்னும் பெயர் ஒருபாற்கே உரித்தாமாறு 44 `ஒருவர்’ என்னு மபெயர் பன்மைவினை யேற்குமாறு 189 `ஒருவன் `ஒருத்தி என்னும் பெயர்கட்காவதோர் மரபு 44 ஒருவினைப்படுத் துறைத்தற் கேற்கும் பல சொற்கள் 47 ஒரு வேற்றுமை யுருபு பிகறிதோர் உருபின் பொருளோடு மயங்குதல் 107 ஒழியிசை யெச்சம் 428 ஒழுகல் என்னும் உரிச்சொல்லின் பொருள் 311 `ஒறகம்’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 354 ஒன்றனைக் குறிக்கும் பலர் பாற்சொல் 27 ஒன்றன்பாலை யுணர்த்தும் ஈற்றெழுத்துக்கள் 8 ஒன்றன்பாற் சொல் 3 `ஓ’ என்னும் இடைச்சொல்லின் பொருள் 251, 256 ஓகார் உகர ஈற்றுப்பெயர்கள் விளி யேற்குமாறு 119, 120 ஓம்படைப் பொருட்கு இரண்டாம் வேற்றுமையும் மூன்றாம் வேற்றுமையும் உரியவாமாறு 93 `ஒய்தல்’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 324 ஓர் உருபூ பிறிதோர் உரூபினை யேற்குமாறு 100 `ஒள’ என்னும் இடைச்சொல்லின் பொருள் 276 `கடி’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 377, 378 `கதழவு’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 309 `கமம்’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 349 `கம்பலை’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 343 `கய’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 314, 316 `கருவி’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 348 `கலி’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 343 `கவாவு’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 356 `கவவு’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 351 `கழிவு’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 308 `கழும்’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 345 `கறுப்பு’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 366, 367 காரணச் சுட்டுப்பெயர் இயற்பெய ரோடு ஒன்றி வருமாறு 40 காலத்தின் வகை 197 காலமயக்கம் 242, 243 காலமுணர்த்தும் இடைச்b சால் 245 `காலம்’ முதலிய சொற்கள் உயர் திணைமுடிபு கொள்ளாமை 58 `காலம்’ முதலிய சொற்கள் உயர் திணை முடிபு கொள்ளுதல் 60 காலம் மூன்று என்பது 196 காலவழுக் காத்தல் 11, 234, 236, 237, 240 கிளைப்பெயர்கள் பிரிக்கப்படாமை 404 `குடிமை’ முதலிய சொற்கள் உயர் திணை முடிபு கொள்ளுதல் 59 `குரு’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 296 `குரை’ என்னும் இடைச்சொல்லின் பொருள் 267 `குழு’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 305 குறித்த பொருளைக் கூறுமாறு 56 குறிப்பாற் பொருளுணருமாறு 416, 452 குறிப்பிற் பொருள் தரும் இடைச்சொல் 245 குறிப்பு வினை 197,198 குறிப்பெச்சம் 434 `கூர்ப்பு’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 308 `கெடவரல்” என்னும் உரிச்சொல்லன் பொருள் 313 `கெழு’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 296 `கொடு’ என்னுஞ் சொற்கு உரியதோர் சிறப்புவிதி 441 `கொடு’ என்னும் சொல் தன்மை யிடத்தும் சொல்லுமாறு 442 `கொல்’ என்னும் இடைச்சொல்லின் பொருள் 263 `கொன்’ என்னும் இடைச்சொல்லின் பொருள் 249 `சாஅய்’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 324 `சாயல்’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 319 சாரியை இடைச்சொல் 245 `சிலைத்தல்’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 352 `சிவப்பு’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 366, 367 சிறப்புப் பெயரும் இயற்பெயரும் ஒன்றிவருமுறை 41 `சிறுமை’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 335 சினைப்பெயர் 174 சினைமுதல்கள் உம்மைபெறுமாறு 33 சினை முதற்பெயர் 175 சீர்த்திஎன்னும் உரிச்சொல்லின் பொருள் 306 சுட்டிக் கூறுமிடத்துச் செப்பு நிகழுமாறு 36 சுண்ணப் பொருள்கோள் 400 `சும்மை’ என்னும் வரிச்சொல்லின் பொருள் 343 செப்பினும் வினாவினும் தினை முதல்கள் உறழ்ந்து வருமாறு 16 செப்வுழுக் காத்தல் 13, 37, 56 செப்பு வழுவமைதி 15 செயப்படுபொருளை விணைமுதல் போலக் கூறுதல் 241 செயற்கைப் பொருள்மேல் சொல் நிகழுமா 20 `செயகு’ என்னும் வாய்பாட்டு வினைமுற்று 201 `செய்து’ என்னும் வினையெச்சம் நிகழ்காலமும் எதிர்காலமும் கொள்ளுதல் 234 `செய்து’ முதலிய வினையெச்ச பாய்பாடு 223 `செய்யாய’ என்பது செய் என நிற்குமாறு 444 செய்யுட்கண் சொற்கள் அடையும் வேறுபாடு 397 செய்யுட் சொற்களின் வகை 391 `செய்யும்’ என்னும் நிகழ்கால வினைமுற்று முக்காலத்திற்கும் பொது வாமாறு 235 `செய்யும்’ என்னும் பெயரெச்சத்திற்கு ஆவதோர் சிறப்பு விதி 230 `செய்யும்’ என்னும் பெயரெச்சத்து ஈற்று மயிர் மெய்தெடுதல் 233 `செய்யும்’ என்னும் வினைமுற்று 217, 222 `செய்யும்’ என்னும் வினை முற்று உயர்திணை ஒருமைப்பால் உணரத்துமாறு 170 `செல்லல்’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 297 `செல்’ `வா’ `தா’ `கொடு’ என்னும் சொற்கள் பயின்று வருமிடம் 28, 29, 30 செவ்வெண்ணின்கண் எச்ச உம்மை நிற்குமிடம் 279 `செழுமை’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 346 சேய்மை விடை 149 `சோ’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 357 சொல் இருதிணைப்பொருள் களமேலும் நிகழுமாறு 1 சொல் குறிப்பாற் பொருள் உணர்த்துதல் 154 சொல்லால் அறியப்படும் பொருள் 153 சொல்லின் இயல்பு 152 சொல்லின் வகை 155 சொல்லெச்சம் 435 சொல் வெளிப்படையாகப் பொருள் உணர்த்துதல் 154 சொற்களின் வழுவமைதி 443 சொற்களுக்குரியதோர் பாதுகாப்பு 446 சொற்களைக் குறைக்குமாறு 4547 சொற்களை நூல்நெறி பிழையாமல் பிரிக்குமாறு 456 சொற்பொருட் காரணம் வெளிப்படத் தோன்றாமை 388 `ஞெமிர்தல்’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 355 டுகர ஈற்றுச் சொல் 8 தகுதிபற்றி வழங்குஞ் சொல் 17 `தஞ்சம்’ என்னும் இடைச்சொல்லின்பொருள் 261 `தட’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 314, 315 தலைமையும் பன்மையும் பற்றி வழங்கும் பெயர்கள் 49 `தவ’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 294 தன்மைச் சொல்லும் அஃறிணைச் சொல்லும் விரவி வருதல் 43 `தா’ என்னுஞ் சொற்கு உரியதோர் சிறப்புவிதி 440 `தா’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 339 `தாம்’ என்னும் விரவுப்பெயர் 181 `தான்’ என்னும் விரவுப்பெயர் 182 திசைச்சொல் 394 திணை ஐயத்துக்கண்ணும் அஃறிணைப்பால் ஐயத்துக் கண்ணும் சொல் நிகழுமழறு 24 திணை ஐயம் 24 திணையறிந்து பால் அறியாத விடத்துச் சொல் நிகழுமாறு 23 திணைவழுக் காத்தல் 43, 45, 51, 57, 58, 62 திரிசொல் 393 `தில்’ என்னும் இடைச்சொல்லின் பொருள் 248, 255 `தீர்தல்’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 312 `தீர்த்தல்’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 312 துரக ஈற்றுச் சொல் 8 துய் என்னும் உரிச்சொல்லின் பொருள் 362 `துவன்று’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 326 `துவைத்தல்’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 352 `துனைவு’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 399 தெய்வம் சுட்டிய பெயர்ச்சொல் 4 தெரிநிலை வினை 197, 198 `தெருமால்’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 304 `தெவு’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 338 `தெவு’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 340 தெகைச்சொல் ஒருசொல் நீர்மையுடையவ்hதல் 414 தொகைச்சொல் பெற்றுவரும் எண்ணிடைச் சொல் 285 தொகைச் சொல்லின் வகை 406 தொகைச்சொல் வேண்டாது வரும் எண்ணிடைச்சொற்கள் 282 தொகைச் சொற்களில் பொருள் நிற்குமாறு 413 தொகைப்பெயர் பயனிலை கொள்ளுதல் 68 `நம்பு’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 323 `நனி’ என்னும்உரிச்சொல்லின் பொருள் 314, 317 `நன’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 370 `நனி’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 294 `நன்று’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 337 `நன்றே’ என்னும் இடைச்சொல்லின் பொருள் 277 `நாம்’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 359 நானகனுருபு மற்றை வேற்றுமைப் பொருளோடு சென்ளறு மயங்குதல் 106 நான்காம் வேற்றுமைக்குரிய பொருள் 74 நான்காம் வேற்றுமைப் பொருள் ஆறாம் வேற்றுமைக்கு உரித்தாமாறு 95 நிகழ்காலம் எதிர்காலச் செய்கையின்கண் மயங்குதல் 240 நிரனிறைப் பொருள்கோள் 399 `நிழ்த்தல்’ என்னும்உரிச்சொல்லின் பொருள் 324 நின்றமொழி தன் இனமாய பிறமொழிகளைக் குறிக்குமாறு (அருத்தாபத்தி) 61 `நீ’ என்னும் விரவுப் பெயர் 185, 186 `நீயிர்’ என்னும் விரவுப் பெயர் 185, 186 `நீயிர்’ `நீ’ `ஒருவர் என்பவற்றின் பால் தெரியுமாறு 190 `நுணங்கு’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 368 `நுழைவு’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 368 `நூலுட் கூறப்பெறாத இடைச்சொற்களைக் கண்டறியுமாறு 291 `நொசிவு’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 368 பகர ஈற்றுச் சொல் 7 `பசப்பு’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 301 `படா’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 334 `பணை’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 333 `பண்ணை’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 313 பண்புத் தொகை 410 `பயப்பு’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 300 `பரவு’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 376 பல உருபு தொடர்ந்து அடுக்கி முடியுமாறு 98 பல பொருட் பொதுச் சொல்லை வினைப்படுத்து உரைக்குமாறு 46 பலபொருளொருசொல் 52, 53, 54, 55 பலர்பாலை உணர்த்தும் ஈற்றெழுத்து 7 பலர்பாற் சொல் 2 பலவின்பாலை யுணர்த்தும் ஈற்றெழுத்து 9 பலவின்பாற் சொல் 3 பழஞ்சொல் வழக்கறுதல் 446 `பழிச்சு’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 376 `பழுது’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 318 பன்மை சுட்டும் விரவுப்பெயர் 179 பன்மைச் சினைப் பெயர்கள் பன்மை முடிபு கொள்ளாவிடம் 62 `பாய்தல்’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 355 பாலுணர்த்தும் இடைச்சொல் 245 பாலுணர்த்தும் எழுத்தின்றி உயர்திணையினை உணர்த்தும் சொல் 4 பாலுணர்த்தும் எழுத்துக்கள் வினையின் கண்ணே தோன்றுமாறு 10 பால் ஐயம் 24 பால் விளங்க நிற்கும் அஃறிணைப் பெயர் 164, 165, 166, 167 பால் விளங்க நிற்கும் உயர் திணைப்பெயர் 159 160,161, 162, 163 `பிணை’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 332 பிண்டப்பெயர் முதற்பொயர் சினைப் பெயர்களின் தன்மை பெறுமாறு 86 பிரிநிலை யெச்சம் 425 பிரிவிலசைநிலை 275 புதுச்சொல் தோன்றுமாறு 446 `புரை’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 295 `புலம்பு’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 325 `புனிறு’ என்`னும் உரிச்சொல்லின் பொருள் 369 பெண்ணொழி மிகுசொல் 50 பெண்பாலை யுணர்த்தும் ஈற்றெழுத்து 6 பெண்பாற் சொல் 2 `பெண்மகன் `என்னும் பெயர் மகடூ உவிற் குரியவினை கொள்ளும் என்பது 191 பெண்மை சுட்டும் விரவுப்பெயர் 177 பெயரெச்சத்திற்கு உரியதோர் இயல்பு 422 பெயரெச்சம் கொண்டு முடியும் சொற்கள் 229 பெயர்ச்சொல் காலம் தேன்றாதென்பது 71 பெயர்ச்சொல் தோன்றுதற்குரிய பொருள்கள் 157, 158 பெயர்ப்பயனிலை 67 `பே’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 359 `பேண்’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 332 `பையுள்’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 335 பொருளொடு புணராச் சுட்டுப் பெயரால் செப்புநிகழுமாறு 37 பொருள் கோள்வகை 398 பொருள் வெளிப்படா உரிச்சொல் 293 பொருள் வெளிப்படும் உரிச்சொல் 293 `பொற்பு’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 329 `போகல்’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 311 `மத’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 371, 32 மயங்கிவாரா உம்மைகள் 278 மரபுவழுக் காத்தல் 37, 38, 39, 41, 42, 44, 46, 47, 48, 49, 50, 56, 436, 443, 453 `மல்லல்ஞ என்னும் உரிச்சொல்லின் பொருள் 298 `மழ’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 305 `மற்று’ என்னும் இடைச்சொல்லின் பொருள் 257 `மற்றையது’ என்னும் இடைச்சொல்லின் பொருள் 259 `மன்’ என்னும் இடைச்சொல்லின் பொருள் 247 `மன்ற’ என்னும் இடைச்சொல்லின் பொருள் 260 மன்னாப் பொருள் (இல் பொருள்) உம்மை பெறுமாறு 34 `மாதா’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 322 `மார்ஞ ஈற்றுச் சொல் 7 `மார்’ என்னும் ஈறு பெற்ற உயர்திணைப் படர்க்கைப் பன்மை வினைமுற்று 204 `மாலை’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 307 முக்காலத்தும் ஒத்தியல் பொருளை நிகழ்காலத்தாற் கூறுமாறு 235 முடிக்குஞ் சொல் பெறா எச்சங்கள் 433, 434 முதலும் சினையும் அறியுமாறு 85 முதற் சொல்லொடு தொடர்ந்த சினைச்சொல் வேற்றுமை ஏற்குமாறு 83, 84 `முரஞ்சல்’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 327 `முழுது’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 320 முறைப்பெயர் 176 முற்றும்மை எச்சவும்மை- ஆமாறு 280 `முனைவு’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 380 முன்னிலைப் பன்மை வினைமுற்று 219 முன்னிலை யசைச்சொல் 269 முன்னிலை யொருமைப்பெயர் பன்மை வினையொடு முடியுமாறு 455 மூவிடத்திற்கும் பொதுவாகிய அசைச்சொல் 270 மூன்றாம் வேற்றுமைக்குரிய பொருள் 73 `மே’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 323 மொழிமாற்றுப் பொருள் கோள் 403 `யாணா’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 373 `யாணு’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 375 `யாது’ `எவன்’ என்னும் சொற்கள் பொருள்மேல் நிகழுமாறு 31, 32 `யார்’ என்னும் குறிப்பு வினைமுற்று 207 ரகர ஈற்று அளபெடைப் பெயர் விளி யேற்குமாறு 138 ரக ஈற்றுச் சொல் 7 ரகர ஈற்றுப் பெயர் விளியேற்குமாறு 135 ரகர ஈற்று வினையாலணையும் பெயர் விளி யேற்குமாறு 136, 137 லகார ளகார ஈற்றுப் பெயர் விளி யேற்குமாறு 141,142 வகர ஈற்றுச் சொல் 9 வடசொல் 395, 396 வண்ணச் சினைச்சொல் 26 `வம்பு’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 321 `வய’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 360 `வயா’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 365 வழக்கிடத்து முரண்மொழிகள் உடனிற்குமாறு 451 வழக்குப் பற்றிவழங்குஞ்சால் 17 `வறிது’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 330 `வராதல்’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 311 `வாள்’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 361 `விதிர்ப்பு’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 310 வியங்கோ ளசைச்சொல் 268 வியங்கோள் வினை திணை விரவி முடிதல் 45 வியங்கோள் வினைமுற்று 217, 221 `வியல்’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 358 விரவுப் பெயரின் பாகுபாடு 172 விரவுப் பெயர் 171 விரவுப்பெயர் பால் விளங்க நிற்குமாறு 169 விரவுப்பெயர் விளியேற்குமாறு 147 விரைசொல் அடுக்கின் எல்லை 418 விரைசொல் அடுக்கு 405 `விழுமம்’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 347 விளி யேற்காத உயர்திணைப் பெயர்கள் 121,126 விளி யேற்காத பெயர்கள் 151 விளி யேற்காத ரகர ஈற்றுப் பெயர்கள் 139, 140, 151 விளி யேற்காத ளகர ஈற்றுப் பெயர்கள் 145, 151 விளி யேற்கும் உயர்திணைப் பெயரின் ஈற்றெழுத்துக்கள் 117, 125 விளி வேற்றுமை 64 விளி வேற்றுமையின் இயல்பு 115, 116 `விறப்பு’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 341, 342 வினா செப்பாமாறு 14 வினாவழுக் காத்தல் 13 வினாவினைச்சொல் எதிர்மறைப்பொருள் உணர்த்துதல் 239 வினைச்சொல் இன்ன தென்பது 195 வினைச்சொல் ஈறும் பெயர்ச்சொல் ஈறும் மயங்காமை 11 வினைச்சொல் தோன்றுதற்குரிய இடம் 198 வினைத் தொகை 406 வினைமுதல்வினை கொண்டு முடியும் வினையெச்சங்கள் 225, 226 வினைமுதல் வினையும், சினைவினையும் கொண்டுமுடியும் எச்சங்கள் 227 வினைமுற்றின் இயல்பு 421 வினைமுற்று 108, 109 வினைமுற்றுக்கள் பெயரொடு முடியுமாறு 423 வினையாலணையும் பெயர் காலந்தோன்றும் என்பது 71 வினையெச்சங்கள் அடுக்கிமுடியுமாறு 228 வினைசெய்யத்திற்கு உரியதோர் இயல்பு 422 வினையெச்சத்தின் இறுதிநிலை 224 வினையெச்சம் 426 வினையெச்சம் திரிந்து நிற்குமாறு 450 வினைவேறுபடாப் பலபொருளொருசொல் பொருளுணர்த்துமாறு 55 வினை வேறுபடூஉம் பல பொருளொருசொல் பொருள் விளக்கும் வகை 53 வினை வேறுபடு உம்பல பொருளொரு சொல் பொருள் விளங்காது நிற்றல் 54 `வெம்மை’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 328 `வெறுப்பு’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 341 வேற்றுமைத் தொகை 407 வேற்றுமைத் தொகையில் உருபு புலப்படும் இடம் 78 வேற்றுமைத் தொகை விரியுங்க்hல உருபேயன்றி பிற சொற்களும் தோன்றுமாறு 79 வேற்றுமைமயக்கம் தொன்று தொட்டு வரும் வழக்கிற பிழையாது பயின்று வரும் என்பது 97 வேற்றுமையின் தொகை 63, 64 வேற்றுமையின் பெயரும் முறையும் 65 வேற்றுமை யுருபுகள் எதிர் மறைச் சொல்லான் முடியுமாறு 103 வேற்றுமை யுருபுகள் செய்யுட்கண் திரிந்து நிற்குமாறு 104, 105 வேற்றுமையுருபுகள் விரிந்து நிற்கும் இடம் 99 வேற்றுமையுருபு நிற்குமிடம் 70 `வை’ என்னும் உரிச்சொல்லின் பொருள் 381 ளகர ஈற்று அளபெடைப் பெயர் விளி யேற்குமாறு 146 ளகர ஈற்றுச் சொல் 6 ளகர ஈற்று முறைப்பெயர் விளி யேற்குமாறு 144 ளகர ஈற்று வினையாலணையும் பெயர் விளி யேற்குமாறு 143 றுகர ஈற்றுச்சொல் 8 னகர ஈற்று அளபெடைப் பயெர் விளி யேற்குமாறு 132 னகர ஈற்றுச் சொல் 5 னகர ஈற்று முறைப்பெயர் விளி யேற்குமாறு 133 சொல்லதிகாரம் உரையிற் காணும் அரும்பொருள் `அஃறிணை’என்னும் தொகைமொழிக்கு உரிய இலக்கணம் 1 அஃறிணையை உயர்திணைபோலச் சொல்லுதல் 22 அசைநிலைக் கட்டுரை 257 அசைநிலை யடுக்கின் வரம்பு 233, 418 அடிப்பட்டு வந்த வழக்கு 83, 106 அடை இன்னது என்பது 21, 26 `அதிகாரம்’ என்பதன் பொருள் 1 அருத்தாபத்தி 46, 61 அவனறிவு தான கோடல (வினா) 12, 13 அறியான் வினாதல் 12, 13 அறிவொப்புக் காண்டல (வினா) 12, 13 அறுவகை ஒட்டு 1, 2 அறுவகைச் செப்பு 12, 13 அறுவகை விகாரம் 215, 397 அன்மொழித் தொகையின் பொருள் தெரியுமாறு 227, 412 ஆகார ஈற்று முற்றுச் சொல் எதிர்மறை யுணர்த்துமாறு 9 `ஆகுபெயர்’ என்பதன் பொருள் 86, 110 ஆணொழி மிகுசொல் 37, 50 `ஆர்’ என்னும் இடைச்சொல் 177, 291 ஆறாம் வேற்றுமைக்கு உரிய அகர உருபு 63 `இசைக்குமரன்’ என்னும் சொற்குரிய இலக்கணம் 1,4 இசைபற்றிய இரட்டைக்கிளவி 35,48 இடக்காடக்கிக் கூறுதல் 16, 17 இடமயக்கம் 10, 11 இடமுன் 172,279 இடம் மூன்று 1,2 இயற்கைப் பொருள் 17,19 இயற்சொல் இன்னது என்பது 209,391 இயற்பெயர் இன்னது என்பது 29,38 இரண்டு இடம் 1,2 இரண்டு திணை 1,2 இருகுணம் அடுக்கிச் சினையொடு வருதல் 21,26 இருகுணம் அடுக்கி முதலொடு வருதல் 21 இருபெயர்த் தொகையைப் பலபெயர் தொகையுள் அடக்குதல்தொல்காப்பி யனார்க்கு உடன்பாடன்று என்பது 226,411 இலக்கணத்தொடு பொருந்திய மரூஉ வழக்கு 16,17 இலக்கண வழக்கு 16,17 இலேசு இறந்தகாலம் இன்னது என்பது இறந்தது காத்தல் `செய்யும்’ என்பது முற்றாயும் எச்சமாயும் நிற்குமாறு `செய்யு’ என்னும் வாய்பாடு `செய்யா’ என்னும் வாய்பாடாகத் திரிதல். செவ்வனிறை செறற்சொல் `சேரி’ என்னும் சொல்லின் பொருள் சொல் எட்டுவகை யிலக்கணத்தான் உணர்த்தப்படும் என்பது `சொல்’ என்பதன் பொருள் `சொல்லதிகாரம்’ என்பதன் பொருள் சொல்லொடு சொல் இயையுமாறு சொற்குப் பொருள் உணர்த்துமாறு சொற்பொருள் உணருங்கால் ஆசிரியர்க்கும் மாணவர்க்கும் நிகழும் கடாவிடை ஞாபகங்கூறல் என்னும் உத்தி ஞாபகத்தாற் கொள்வது தகுதிவழக்கு மூன்று வகைப்படும் என்பது ‘தடுமாற்றம்’ என்பதன் பொருள் தந்திரவுத்தி வகைமை கூறல் தலைமை பற்றிவரும் பெயர் தற்கிழமை ஐந்து வகைப்படும் என்பது தன்மை யொருமை ‘அல்’ ஈறு `அன் ஈறாகத் திரிதல் தன்மை திரிபெயர் தன்வினை தன்னைப் பிறன்போற் கூறுமாறு ‘திசைச்சொல்’ இன்னது என்பது திணை மயக்கம் ‘திணையினிசைக்கும்’ என்னும் தொகை மொழிக்கு உரிய இலக்கணம் ‘திரிசொல்’ இன்னது என்பது ‘துணைக்கும்’ என்பதன் பொருள் ‘தெய்ய’ என்னும் இடைச்சொல் ‘தெவகை’ என்பதன் பொருள் தேற்ற ஏகாரம் தொகைநிலை வகை தொழிலினாகிய பெயர் தொழில்வேறு கிளத்தல் இருவகை தொழிற் பெயர் தொழிற்பெயர் (வினையாலணையும் பெயர்) ‘நம்பு’ என்னும் சொல்லின் திரிபு நான்கு நிலம் நிகழ்காலம் இன்னது என்பது ‘நீயிர்’ என்னும் பெயர் உருபு ஏலாமை நூற்புணர்ப்பு இன்னது என்பது ‘நெறிபடுத்துதல் ‘என்பதன் பொருள் ‘நோக்கல் நோக்கம்’ என்பதன் பொருள் ‘நோக்கிய நோக்கம்’ என்பதன் பொருள் பகர ஈற்று முற்றுச் சொல் எதிர்காலம் உணர்த்துமாறு பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை பண்புத் தொகை விரியுமாறு பண்புபற்றிய இரட்டைக்கிளவி பத்துவகை விகாரம் பயனிலை வகை பயனுவமம், பயவுவமம் பளிங்கு அடுத்தது காட்டும் என்பது பன்மைபற்றி வரும் பெயர் ‘பாக்கு’ என்னும் வினையெச்ச ஈறு பாதுகாவல் பால் ஐந்து பால்பகா அஃறிணைப் பெயரை இயற்பெயர் என்றதற்கு நியாயம் ‘பான்’ என்னும் வினையெச்ச ஈறு பான் மயக்கம் பிரிநிலை ஏகாரம் பிறப்பினாகிய பெயர் பிறவினை பிறிதின் கிழமை பகுதிப் படாது என்பது ‘பின்’ என்பது காலமும் இடமும் பற்றி நிற்றல் புறத்துறவு நீர்மைப் பொருள் பெண்ணொழி மிகுசொல் ‘பெண்மகன்’ என்னும் பெயர்ப்பொருள் பெயர், வினை, இடை, உரி என்னும் நான்குமே இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்னும் நான்குமாம் என்பது பொதுமை பற்றி நிற்கும் பெயர் பொதுவினையாற் பொருள் விளங்காச் சொல் பொன்னுக்குரிய வன்மை ‘மக்கட் சுட்டு’ என்பதன் பொருள் மங்கல மரபினாற் கூறுதல் மயக்க நிரனிறை மயக்கமும வழுவும் ஒன்றே என்பது மயக்கம் எழுவகை மரபு மயக்கம் மரூஉ வழக்கு மறுத்தல் (செப்பு) ‘மற்றையது ‘என்பது பொருளுணர்த்துமாறு ‘மன’ எனும் இடைச்சொல் மன்னரால் பெறும்பெயர் மாட்டெறிதல் மாட்டேறு ‘மார்’ ஈற்று முற்றுச் சொல் எதிர்காலம் உணர்த்துமாறு ‘மாள’ என்னும் இடைச்சொல் மிகுதிபற்றி நிற்கும் பெயர் முதலொடுமுதல் பொரூஉதல் முதல் இன்னது என்பது முதற்கிளவி முற்றுச்சொல் எச்சப் பெயர் ஆமாறு `முற்றுச் சொல் என்பதன் பொருள் `முன்’ என்பது காலமும் இடமும் பற்றி நிற்றல் மூன்று இடம் மூன்று காலம் மெய்யுவமம் மெய்திரிந்தாய கிழமை மெய்யவற்குக் காட்டல் (வினா) வகர ஈற்று முற்றுச் சொல் எதிர்காலம் உணர்த்துமாறு ‘வடசொல்’ இன்னது என்பது வழக்காறு இருவகைப்படும் வழீஇயமையுஞ் செப்பு வழு எழுவகை ‘வளம்’ என்பதன் பொருள் விகாரம் அறுவகை விதந்து கூறல் விதி யோத்து வியங்கோளசைச்சொல் முன்னிலை யசைச்சொல் ஆமாறு விரித்துத் தொகுத்தல் விளிவேற்றுமை ஏனைய வேற்றுமையோடு ஒத்த சிறப்புடையது அன்று என்பது விளி வேற்றுமையது இலக்கணம் விறற்சொல் வினா ஐவகை வினாச் செப்பாதல் வினாமயக்கம் வினாவெதிர் வினாதல் (செப்பு) வினையுவமம் வினைக்குறிப்பு வினைக்குறிப்புப் பெயர் வினைத் தொகைபற்றிப் பிறக்கும் அன்மொழித் தொகை வினைத்தொகை விரியுமாறு வினையால் பொருள் விளங்கும் சொல் ‘வினையெச்சம்’ இன்னது என்பது வேறுபல குழீஇய தற்கிழமை வேற்றுமை எட்டு வேற்றுமைக்கும் பெயர்க்கும் உள்ள இயைபு வேற்றுமைத் தொகைபற்றிப் பிறந்த அன்மொழித் தொகை உரையிற் காணும் அரும்பொருள் முற்றிற்று சொல்லதிகாரம் வரலாற்றுக் கட்டுரைச் சொற்றொடர் அஃது அக்குழு நன்று அங்`னஞ் சொல்லுவானோ பெருஞ்சாத்தன் தந்தை, சொல்லப்படுவாளோ பெருஞ்சாத்தன் தாய் அடிசில் அயின்றார் அடுக்கல் அடுஞ் செந்நெற் சோறு அடைகாயை எண்ணும் அட்ட செந்நெற் சோறு அணிகலம் அணிந்தார் அணில் - அணிலே அது அது உண்ட இல்லம் அது உண்ணும் அது உண்ணும் இல்லம் அது உண்ணும் ஊண் அது எறியுங் கல் அது ஓதுங் காலை அது செய்யும் பொருள் அது செய்ம்மன அது செல்க அது பிற அது வந்தன அது வந்தார் அது வந்தாள் அது வந்தான் அதுவில்லை அது வேறு அத்திகோசத்தார் அத்தை - அத்தா அந்தணர் வாழ்க அந்தோ அந்தோ அப்பெண்டு அம்பாகிழான் அம்மா சாத்தா அம்மாட்டான் அரசரைச் சார்ந்தான்- அரசர்கட் சார்ந்தான் அரசர் அரசர் ஆயிரமக்களொடு தாவடிபோயினார் அரசர் பெருந்தெரு அரசனார் வந்தார் அரசனொடு வந்தார் சேவகர் அரசு நிலைத்தது அரசு வன்மை நன்று அரிசியை அளக்கும் அருவாளன் அலனோ அலி வந்தது அல்லர் அல்லள் அல்லன் அவரில்லை அவர் அவர் உண்ட இல்லம் அவர் உண்ணும் இல்லம் அவர்க்கு அடிமை நன்று அவர்க்கு ஆண்மை நன்று அவர்க்கு இளமை நன்று அவர்க்குக் குடிமை நன்று அவர்க்கு மூப்பு நன்று அவர் செய்ம்மன் அவர் செல்க அவர் வந்தது அவர் வந்தன அவர் வேறு அவள் அவளில்லை அவள் அவள் உண்ட இல்லம் அவள் உண்ணும் அவள் உண்ணும் இல்லம் அவள் உண்ணும் ஊண் அவள் எறியுங் கல் அவள் ஓதுங் காலை அவள் செய்யும் பொருள் அவள் செய்ம்மன அவள் செல்க அவள் வந்தது அவள் வந்தன அவள் வந்தார் அவள் வந்தான் அவள் வேறு அவற்குக் கொடுக்குங்காணம் அவற்குச் செல்லுங்காணம் அவற்றுள் எவ்வெருது கெட்டது அவன் அவனது துணை அவனது முதுமை அவனது வினை அவனில்லை அவனும் தன் படைக்கலமும் சாறும் அவனே கொண்டான் அவனோ அவனோ கொண்டான் அவன் உண்ட இல்லம் அவன் உண்ணும் அவன் உண்ணும் இல்லம் அவன் உண்ணும் ஊண் அவன் எறியுங் கல் அவன் ஓதுங் காலை அவன் சாத்தன் அவன் செய்ம்மன அவன் செய்யும் பொருள் அவன் செல்க அவன் வந்தது அவன் வந்தார் அவன் வந்தாள் அவன் வந்தன அவன் - வந்தான், சென்றான் அவன் வேறு அவை அவை உண்ட இல்லம் அவை உண்ணும் அவை உண்ணும் இல்லம் அவை உண்ணும் ஊண் அவை எறியுங் கல் அவை ஓதுங் காலை அவை செய்ம்மன அவை செய்யும் பொருள் அவை செல்க அவையத்தார் அவை யில்லை அவை வந்தது அவை வந்தார் அவை வந்தாள் அவை வந்தான் அவை வேறு அவ் அவ்வழிக் கொண்டான்- அவ்வழிக்கட் கொண்டான் அவ்வாளன் அழாஅன் அழான் அறஞ் செய்தான் சுவர்க்கம் புகும் அறுத்துக் குறைத்துச் சுகிர்ந்து வகிர்ந்து இட்டான் அன்றே அன்றே அன்னோ அன்னோ அன்னை - அன்னா ஆ ஆ உண்டு ஆ எவன் ஆ கரிது ஆ கிடந்தது ஆ செல்க ஆ பல ஆ வாழ்க ஆகலாகல் ஆகவாக ஆக்கள் ஆசிரியன் பேரூர்கிழான் செயிற்றியன் இளங்கண்ணன் சாத்தன் வந்தான் ஆடூஉ ஆடை சாத்தனது ஆடை தா ஆட்டுப் பிழுக்கை ஆண்பால் ஆண்மகன் ஆதீண்டு குற்றி ஆப்பீ ஆயா ஆயன் சாத்தன் வந்தான் ஆர் ‘ஆர்த்தார் கொண்மார் வந்தார்’ ஆர்த்தார் கொண்மார் வந்தார் பூக்குழா லென்னையர்கணில்லாத தீது ஆவந்தது ஆவந்தன ஆவினது கன்று ஆவினது கன்று - ஆவிற்குக் கன்று ஆவும் ஆயனும் செல்க ஆற்றுட் செத்த வெருமை ஊர்க்குயவற்கு இழுத்தல் கடன் ஆனதர் ஆனம் ஆன் கன்று நீருட்டுக இஃது இஃது உண் இக்காடு போகிற் கூறை கோட்பட்டான், கூறை கோட்படும். இடையன் இதனிற் கடிது இது இதனிற் சிறிது இது இதனிற் பெரிது இது இதனிற் றண்ணிது இது இதனிற் றீது இது இதனிற் றீவிது இது இதனின் நன்று இது இதனின் நாறும் இது இதனின் நெடிது இது இதனின் மெலிது இது இதனின் வட்டம் இது இதனின் வலிது இது இதனின் வெய்யது இது இது இது பிற இந்நாழிக்கு இந்நாழி சிறிது பெரிது இந்நாள் எம்மில்லதது உண்ணாய் இப்பண்டியுள்ளது எவன்? இப்பயறல்லது இல்லை இப்பெண்டு இம்மகள்கண் நல்லவோ இக்கயல் நல்லவோ இம்மாட்டான் இயமரம் இயம்பினார் இருந்தான் குன்றத்து இருந்தான் குன்றத்துக்கண் இருவர் இலை பச்சென்றது இலைநட்டு வாழும் இல்முன் - முன்றில் இல்ல இல்லது இல்லம் மெழுகிற்று இல்லா இல்லள் இல்லன இல்லன் இவரிற் சிலர் இவர் இவரிற் பலர் இவர் இவர் இவர் பெரிதுங் கால்கொண்டோடுப இவர் பெரிதுஞ் சோறுண்ப இவற்கு ஊண் கொடு, ஆடை கொடு இவற்குக் காலம் ஆயிற்று இவற்குத் தெய்வம் ஆயிற்று இவளைக் கொள்ளும் இவ்வணி - இவட்குக் கொள்ளும் இவ்வணி இவள் இவனிற் சிறந்தான் இவன் இவனிற் பழையன் இவன் இவனிற் புதியன் இவன் இவனின் ஆயினான் இவன் இவனின் இலன் இவன் இவனின் இழிந்தான் இவன் இவனின் இளையான் இவன் இவனின் உடையன் இவன் இவனின் மூத்தான் இவன் இவனைப் பூதம் புடைத்தது இவன் - வந்தான், சென்றான் இவை இவையல்லது பயறில்லை இவ் இவ்வாளன் இவ்வினை நன்று இவ்வெருது புற்றின்னும் இளம் பெருங் கூத்தன் இன்று இவ்வூரெல்லாம் தைநீர் ஆடுப இன்று இவ்வூர்ப் பெற்ற மெல்லாம் அறங்கறக்கும் இன்று இவ்வூர்ப் பெற்ற மெல்லாம் உழவொழிந்தன இன்னும் உண்டிலையோ? போதாயோ? உஃது உடம்பு கறுத்தது உடம்பு நன்று உடுக்கை ஈ உடையார் உடையள் உடையன் உடையாம் உடையென் உடையேம் உண் உண்கு உண்கும் உண்கு யான் உண்கும் யாம் உண்கும் வந்தேம் உண்குவ உண்கு வந்தேன் உண்குவம் உண்குவர் உண்குவள் உண்குவன் உண்குவிர் உண்குவெம் உண்குவென உண்குவேன் உண்குவேன் உண்குவை உண்ட சாத்தன் உண்டது உண்டது அது உண்டல் உண்டன உண்டன அவை உண்டனம் உண்டனர் உண்டனள் உண்டனன் உண்டனிர் உண்டனெம் உண்டனென் உண்டனை உண்டாம் உண்டாய் உண்டாய் அவன் உண்டாய் கரியை உண்டாய் யான் உண்டார் உண்டார் அவர் உண்டார் - உண்டீரே உண்டாள் உண்டாள் அவள் உண்டாள் - உண்டாய் உண்டான், உண்டான் அவன் உண்டான் - உண்டாய் உண்டான் கரியன் உண்டான், தின்றான், ஓடினான், பாடினான் சாத்தன் உண்டான் நீ உண்டான் யான் உண்டி உண்பை உண்டு உண்டும் உண்டு வந்தான் உண்டு வருஞ் சாத்தன் உண்டேம் உண்டேன் உண்டேன் அவன் உண்டேன் கரியன் உண்டேன் நீ உண்டேன் போந்தேன் உண்ணா உண்ணாச் சாத்தன் உண்ணாது வந்தான் உண்ணா நின்றது உண்ணா நின்றன உண்ணா நின்றனம் உண்ணாநின்றனர் உண்ணா நின்றனள் உண்ணா நின்றனன் உண்ணா நின்றனிர் உண்ணா நின்றனெம் உண்ணா நின்றனென் உண்ணாநின்றனை உண்ணாநின்றாம் உண்ணாநின்றாய் உண்ணாநின்றார் உண்ணாநின்றாள் உண்ணாநின்றான் உண்ணாநின்றீர் உண்ணாநின்றேம் உண்ணாநின்றேன் உண்ணா வந்தான் உண்ணுஞ் சாத்தன் உண்ணும் அது உண்ணும் அவள் உண்ணும் அவன் உண்ணும் அவை உண்ணூ வந்தான் உண்ணேனோ உண்ப உண்பது உண்பல் உண்பன உண்பன் உண்பாக்கு வந்தான் உண்பாம் உண்பாய் உண்பார் உண்பாள் உண்பான் உண்பான் வந்தான் உண்பீர் உண்பேம் உண்மின் உது உது பிற உந்தி உப்புக் கழிந்தது உப்புக் கூர்ந்தது உப்பெண்டு உம்மாட்டான் உயிர் போயிற்று உலகத்தார் பசித்தார் உலகம் உலகம் பசித்தது உவர் உவள் உவன் - வந்தான், சென்றான் உவை உவ் உவ்வாளன் உழக்கு உழுதுண்டு தின்றோடிப் பாடி வந்தான் உழுது வந்தன உழுது வந்தான் உழுது வருஞ் சாத்தன் உழுது வருதல் உழுந்தல்ல உழுந்தல்லதில்லை உழுந்துள உளர் உளள் உளன் உள்ள உள்ளது உள்ளன உறிஞுதும் உறையூரிற் பெரிது கருவூர்-உறையூர்க்குப் பெரிது கருவூர் ஊரகத்திருந்தான் ஊரயலிருந்தான் ஊரன் - ஊர ஊரிற் சேயன் -ஊர்க்குச் சேயன் ஊரிற் பற்றுவிட்டான் ஊரிற் பற்றுவிட்டான்-ஊர்க்குப் பற்றுவிட்டான் ஊரிற் றீர்ந்தான் ஊரிற் றீர்ந்தான் -ஊர்க்குத் தீர்ந்தான் ஊருளிருந்தான் ஊரெனப்படுவது உறையூர் ஊரென்று சொல்லப்படுவது உறையூர் ஊரை யாக்கும் ஊரை யிழக்கும் ஊரை யின்புடையான் ஊரைக் காக்கும் ஊரைச் செறும் ஊரைப் புகழும் ஊரைப் பெறும் ஊர்க் கண்ணிருந்தான் ஊர்க்காலிருந்தான் ஊர்ப்புடையிருந்தான் ஊர்ப்புறத்திருந்தான் எட்குப்பை எட்சாந்து எட்டி எந்தை வருக எம்பெருமான் வருக மைந்தன் வருக எமர் எமள் எமன் எம்மார் எம்மாள் எம்மான் எயிலை யிழைக்கும் எயின் நாடு எருது வந்தது அதற்குப் புல்லுக் கொடுக்க எருப்பெய்து இளங்களைகட்டு நீர்கால் யாத்தமையாற் பைங்கூழ் நல்ல எல்லாங் கொண்டாம், கொண்டார் எல்லாம் வந்தன எல்லாம் வந்தார் எல்லாம் வந்தீர் எல்லாம் வந்தோம் எல்லாரும் வாரார், வருவர் எவன் அது எவன் அவை எள்ளினது சாந்து எள்ளொடு விராஅய அரிசி எறும்பு முட்டைகொண்டு தெற்றியேறின் மழை பெய்தது, மழை பெய்யும் எனக்குத் தருங்காணம் எனக்கு வருங்காணம் என் அன்னை வந்தாள், போயினாள் என் காதல் பொலிவாயிற்று என்பதென்பது என்பாவை வந்தது, போயிற்று என் யானை வந்தது ஏர்ப்பின் சென்றான் ஏழாட்டையான் ஏறு ஏனம் ஏனாதி ஏனாதி நல்லுதடன் ஒக்குமொக்கும் ஒடுவங்காடு ஒருத்தியல்லன் ஒருவன் ஒருவர் ஒருவர் அவர் ஒருவர் வந்தார் ஒருவனல்லள் ஒருத்தி ஒருவன்கொல்லோ ஒருத்தி கொல்லோ தோன்றாநின்றார் ஒல்லென ஒலித்தது ஒல்லென வொலித்தது ஒன்று ஒன்று கொல்லோ பலகொல்லோ செய்புக்க பெற்றம் ஓஒ பெரியன் ஓ கொண்டார் ஓங்கல் ஓ தந்தார் ஓனம் ஒள ஒளஉ ஒள ஒள கடந்தான் நிலத்தை கடந்தான் நிலம் கடமுடையார் வளைப்பர் கடல் கடலோடு காடொட்டாது -கடலைக் காடொட்டாது கடவுட் பரவினார் கடிசூத்திரத்திற்குப் பொன் கடிது வந்தார் கடியாள் கடு கடுத்தின்றான் கடுவும் கைபிழி யெண்ணெயும் பெற்றமையான் மயிர் நல்ல ஆயின கணி - கணியே கணியார் - கணியீரே கண்கழீஇ வருதும் கண்குறியரா யிருந்தார் கண் சிவந்தன கண்டீரோ, கண்டிரோ கண்ணாற் கொத்தை கண்ணைக் குத்தினார் - கண்ணுட் குத்தினார் கண் நல்லள் கபில பரணர் கபிலம் கபிலரது பாட்டு கமுகந்தோட்டம் கரம் கரிய கரியது கரியர் கரியள் கரியன் கரியான் கரியான் - கரியாய் கரியாள் - கரியாய் கருங்குதிரை கருப்பு வேலி கரும்பிற்கு வேலி கருவூரின் கிழக்கு கருவூரின் கிழக்கு -கருவூர்க்குக் கிழக்கு கருவூர்க்கு வழி எது கலித்தது கழுதை கள்ளரின் அஞ்சும் கள்ளரை யஞ்சும் கள்ளர் கள்ளர் கறுகறுத்தது கறுத்து வந்தார் கன்னி ஞாழல் கன்னி யெயில் காக்கையிற் கரிது களம் பழம் காட்டது யானை - காட்டுள் யானை காட்டுச் சாரோடும் காணத்தாற் கொண்ட அரிசி காது நல்லள் காரம் காரைக்காடு காலன் கொண்டான் காலான் முடவன் காலேகவண்ணம் காவிதி காளை கான் கான் முட்குத்திற்று கான்மே னீர்பெய்தும் கிட கிளியை யோப்பும் கிள்ளை குங்குமம் குடங்கொண்டான் வீழ்ந்தான் குடிமை நல்லன குண்டுகட்டு குதிரை குதிரைகள் குதிரைத்தேர் குதிரை வந்தது - குதிரை வந்தன குத்து குரிசில் -குரிசீல் குரிசில் வந்தது குருடு வந்தது குழல் கேட்டான் குழவி குழவி யழுதது குழிப்பாடி குழைகொண்டு கோழி யெறியும் வாழ்க்கையர் குழைத்தது குழையை உடையன குளம் நீர் புகுந்து நிறையும் குளம்பின்று குறுங்கோட்டது குறுங்கோட்டன் குறுங்ககோல் குறுந்தாட்டு குற்றிகொல்லோ குற்றி கொல்லோ? மகன் கொல்லோ? குற்றிகொல்லோ மகன் கொல்லோ தோன்றுகின்ற உரு குற்றியல்லன் மகன் குற்றியன்று மகன் குற்றிளை நாடு குன்றக் கூகை குன்றத்துக்கண் இருந்தான் கூத்தர் - கூத்தீர் கூந்தல் - கூந்தால் கூயிற்று கூழுக்குக் குற்றேவல் செய்யும் கூழுண்டான் சோறு முண்பான் கூழுண்டான் சோறும் உண்ணாநின்றான் கூழுண்ணாநின்றான் சோறும் உண்பன் கூழ் கூற்றப் பெருஞ் சேந்தன் செழீஇயிலி வந்தது கைக்கியாப்புடையது கடகம் கையிடத்திருந்தான் கையிறுபு வீழ்ந்தது கையிறூ வீழ்ந்தது கையிறுபு வீழ்ந்தான் கையிறூ வீழ்ந்தான் கையிற்று வீழ்ந்தது கையிறூ வீழ்ந்தான் கைவலத்துள்ளது கொடுக்கும் கொடியாடித் தோன்றும் கொடியாடிற்று கொடுத்தான் சாத்தற்கு கொடும்புற மருதி கொடும்புற மருதி வந்தது கொடும்புற மருதி வந்தாள் கொடும்புற மருதி வந்தான் கொண்டீரோ, கொண்டீரோ கொப்பூழ் நல்லள் கொல்யானை கொல்லன் கொளலோ கொண்டான் கொள்ளெனக் கொண்டான் கொள்ளென்று கொண்டான் கொற்றனிற் சாத்தன் நல்லன், சாத்தனிற் கொற்றன் நல்லன் கொற்றன் கொற்றன் நல்லனோ சாத்தன் நல்லனோ கொற்றன் மயிரிற் சாத்தன் மயிர் நல்ல, சாத்தன் மயிரிற் கொற்றன் மயிர் கொற்றன் மயிர் நல்லவோ சாத்தன் மயிர் நல்லவோ கொற்றன் வந்தான் அவற்குச் சோறு கொடுக்க கொற்றன் வருதற்கும் உரியன் கொன்னே போயினார் கொன்னே வந்தது கோ - கோவே கோடில கோடின்று கோடுடைத்து கோடுடைய கோட்டது நுனியைக் குறைத்தான் - கோட்டை நுனிக்கட் குறைத்தான் - கோட்டை நுனியைக் குறைத்தான். கோட்டுநூறு கோதை வந்தது கோதை வந்தாள் கோதை வந்தான் கோமாள் கோயிற்கடைச் சென்றான் கோல் தா கோழி கூவிப் புலர்ந்தது சங்கிராமத்தார் சத்தி சம்பு சள்ளை சாத்தற்கு சாத்தற்குக் கொடுக்கும் சாத்தற்குச் சோறு சாத்தற்குப் படுபொருள் கொற்றன் சாத்தற்கு மகளுடம்பட்டார் சான்றோர் சாத்தனதனை சாத்தனதனொடு சாத்தனதியற்கை சாத்தனது சாத்தனது ஆடை சாத்தனது கலம் சாத்தனது கிழமை சாத்தனது செயற்கை சாத்தனது சொல் சாத்தனது துடைமை சாத்தனது நிலை சாத்தனது முதல் சாத்தனது வாழ்ச்சி சாத்தனது வாள் சாத்தனின் சாத்தனின் நெடியன் - சாத்தற்கு நெடியன் சாத்தனின் வலியன் சாத்தனும் வந்தான் சாத்தனும் வந்தான் கொற்றனும் வரலுமுரியன் சாத்தனும் வந்தான் கொற்றனும் வரும் சாத்தனெனா, கொற்றனெனா, பூதனெனா, அம்மூவரும் வந்தார் சாத்தனே, கொற்றனே, பூதனே என மூவரும் வந்தார் சாத்தனை சாத்தனொடு சாத்தனொடு வந்தான் சாத்தனொடுவந்தான் கொற்றன் சாத்தன் சாத்தன் அவன் சாத்தன் என்றா, கொற்றன் என்றா, பூதன் என்றா என மூவரும் வந்தார் சாத்தன் ஓதல் வேண்டும் சாத்தன்கண் சாத்தன் கையெழுதுமாறு வல்லன், அதனால் தன் ஆசிரியன் உவக்கும், தந்தை உவக்கும் சாத்தன், கொற்றன், பூதன் என மூவரும் வந்தார் சாத்தன் - சாத்தர் சாத்தன் யாழ் எழூஉம் சாத்தன் வந்தது சாத்தன் வந்தான் சாத்தன் வந்தான், கொற்றன் வந்தான்; வேடன் வந்தான்; அம்மூவரும் வந்தார்; அம்மூவரும் வந்தமையாற் கலியாணம் பொலிந்தது சாத்தன் வந்தான் - சாத்தன் வந்தது சாத்தா சாத்தா உண்ணாயோ? சாத்தா, உறையூர்க்குச் செல்லாயோ? சாத்தி - சாத்தீ சாத்தி சாந்து அரைக்கும் சாத்தி வந்தது சாத்தி வந்தாள் சாம் சான்றார் - சான்றீரே சான்றோரிடை யிருந்தான் சான்றோருழைச் சென்றான் சில சில்லவை சிவந்து நோக்கினார் சிறாஅர் சீத்தலைச் சாத்தன் சுடுகாடு சுண்ணத்தான் சுருசுருத்தது சுறுசுறுத்தது சூதினைக் கன்றினான்- சூதின்கட் கன்றினான் சூதினைக் கன்றும் செங்கால் நாரை செங்கானாராய் செய்தார் செய்ய செய்யது செய்யா செய்யள் செய்யன் செய்யார் - செய்யீரே செய்யான் செய்யான் - செய்யாய் செய்யை நோக்கும் செல்ல மன்னார் நெடுந்தகை செல்வ செவியில செவியிலி வந்தது செவியிலி வந்தாள் செவியிலி வந்தான் செவியின்று செவியுடைத்து செவியுடைய செவ்வாய் எழுந்தது சென்றதே சென்றதே சேரமான் சேர்ப்பான் சேர்ப்பன் - சேர்ப்ப சேறு சேறும் சொல் நன்று சோணாடு சோழனாடு சோழன்-சோழர் சோழன் நலங்கிள்ளி சோழியன் சோறு சோறு அட்டது சோறுண்பான் கூழுமுண்டான் சோறு தா ஞமலி ஞாணை யறுக்கும் ஞாயிறு எழுந்தது ஞாயிறு பட்டு வந்தான்- ஞாயிறு பட வந்தான் ஞாய் ஞெண்டு தச்சன் தட்டுப்புடைக்கண் வந்தான் தண்ணீர் தந்தை தந்தை - தந்தாய் தந்தைதலைச் சொன்றான் தந்தையர் தந்தை வந்தது தந்தை வந்தான் தமர் தமள் தமன் தமிழ்நாடு தமிழ்நாட்டு மூவரும் வந்தார் தமிழ் நாட்டு மூவேந்தரும் வந்தார் தம்மார் தம்மாள் தம்மான் தம்முன் - தம்முனே தலை நோகின்றது தள்ளை தாம் வந்தன தாம் வந்தார் தாயர் தாயிற்று தாயை ஒக்கும் தாயைக் கொன்றான் நிரயம் புகும் தாயை யுவக்கும் தாய் தாய்க்குக் காதலன் தாய் மூவர் தாய் வந்தது தாய் வந்தாள் தான் வந்தது தான் வந்தாள் தான் வந்தான் திங்கள் எழுந்தது திரிதாடி திருமுதும் திருவனாள் வந்தாள் தினையிற் கிளியைக் கடியும் தின் தின்குவ தின்ப தின்பல் தின்பன் தின்மின் தின்றல் தின்றி தின்னா தீங்கரும்பு தீத் தீத் தீ தீத்தீ தீயர் தீயள் தீயன் துஞ்சினார் துடிபோலும் நடு துண்ணெனத் துடித்து துண்ணென்று துடித்தது துலாம் தூணிப்பதக்கு தூணைச் சார்ந்தான் தெங்கினது காய் - தெங்கு தெங்கு தெங்கு தின்றான் தெய்ய தெற்கண் குமரி தேர்முன் சென்றான் தொடி தொடியரை தொல்காப்பியம் தொழீஇ தோள் நல்லள் தோன்றல் - தோன்றால் நகுபு வந்தான் நங்கை நங்கை - நங்காய் நங்கை முலை இரண்டும் வீங்கின நங்கை வாழி நட நமருள் யாவர் போயினார் நமர் நமள் நமன் நம் எருத்தைந்தனுள் யாது கெட்டது நம்பி நம்பி- நம்பீ நம்பி நூறு எருமையுடையன் நம்பி வந்தான் அவற்குச் சோறிடுக நம்பி வாழி நம்பி கண் இரண்டும் நொந்தன நம்பிக்கு மகன் நம்பியார் - நம்பியீரே நம்பீ நம்மரசன் ஆயிரம் யானையுடையன் நம்மார் நம்மாள் நம்மான் நரகர் வந்தார் நரகன் வந்தான் நரகி வந்தாள் நரி - நரியே நரியன்று நல்லறிவுடையன செவ்வியன் சான்றார் மகன் நல்லர் நல்லள் நல்லன் நல்லாடை நறும் பூ நற்குணம் நன்கட்டாய் நன்காடு நன்றும் அன்று தீதும் அன்று இடை நிகர்த்தாயிற்று நன்றே நன்றே நன்றோ அன்று தீதோ அன்று இடை நிகர்த்தாயிற்று நன்னுதல் நாகர்பலி நாடெனப்படுவது சோணாடு நாட்டைச் சிதைக்கும் நாட்டைப் பழிக்கும் நாயன்று நாயார் வந்தார் நாயாற் கோட்பட்டான் நாயொடு நம்பிவந்தான் நாய் நாய் கொல்லோ - நரி சொல்லோ நாய்க்கு நட்புடையன் நாலாட்டையான் நாவினை வளைக்கும் நாழி நிலங் கடந்தான் நிலத்தர் நிலத்தள் நிலத்தன் நிலத்தினது கலம் நிலத்தைக் கடந்தான் நிலம் வலிது நிலம் வல்லென்றது நிலனும் நீரும் நிலனும் நீரும் தீயும் வளியும் நிலனென வளியென நிலனென்றா, நீரென்றா, தீயென்றா, வளியென்றா நிலனென்று வளியென்று நிலனே, நீரே, தீயே, வளியே, ஆகாயமே நினக்குத் தருங்காணம் நினக்கு வருங்காணம் நீ செல் நீ செல்க நீ செய்ம்மன நீ யில்லை நீ யுண்ணும் இல்லம் நீயிர் நீயிர் உண்ணும் இல்லம் நீயிர் வந்தீர் நீயும் நின்படைக்கலமும் சாறீர் நீயே கொண்டாய் நீயேஏ கொண்டாய் நீரெனா, நிலனெனா, தீயெனா, காலெனா நீர் கண்டக நீர் செல்க நீர் தண்ணிது நீலத்தையுடைய ஆடை - நீலம் நீலம் நீ வந்தாய் நீ வேறு நுந்நாடியாது நுமர் நுமள் நுமன் நும்மார் நுமமாள் நும்மான் நூலைக் கற்கும் நூறு நெடிதோ? குறிதோ? நெடியனும் வலியனும் நெடுங்கழுத்தல் வந்தது நெடுங்கழுத்தல் வந்தன நெடுங்கழுத்தல் வந்தாள் நெடுங்கழுத்தல் வந்தான் நெல்லைக் தொகுக்கும் நெறியைச் செல்லும் நெறியைச் சென்றான் - நெறிக்கட் சென்றான் நெறிவந்து கிடந்தது நெற்குப்பை பகைவர் எறிவர் பசித்தேன் பழஞ்சோறு தா என நின்றாள் பசு படை படை படையது குழாம் படையது குழூஉ படையை வெகுளும் பட்டி புத்திரர் பண்டு காடுமன் `பண்டு காடுமன் இனிக் கயல் பிறழும் வயலாயிற்று’ பண்ணுக்குத் தக்கது பாடல் பதினைவர் பதினொன்று பத்தானும் எட்டானும் பத்து பத்தும் கொடான் பயறல்ல பயறுள பயறுளவோ வணிகீர் பயிர் நல்ல ஆயின பருநூல் பருநூல் பன்னிரு தொடி பல பல்ல பல்லவை பவளக் கோட்டு நீல யானை சாதவாகனன் கோயிலுள்ளும் இல்லை பறி பாகன் பாம்பு பாம்பு பாம்பு பாம்பு பாம்பு பார்ப்பார் பார்ப்பார்- பார்ப்பீர் பார்ப்பார் வந்தார் பார்ப்பனச் சேரி பார்ப்பான் கண்ணன் பால் பாவை பாளிதம் பிற பிறங்கல் பிறர் பிறள் பிறன் பிறிது புருவம் நல்லள் புலி - புலியே புலிகொல் யானை புலிகொல்யானை ஓடுகின்றது புலிகொல்யானை கிடந்தது, தோன்றும் புலிகொல்யானைக்கோடு வந்தது புலிபாய்ந்தாங்குப் பாய்ந்தான் புலிபோற்றிவர் வாழியைய் புலியின் அஞ்சும், புலியை அஞ்சும் புகழான் புழாஅன் பூ நட்டுவாழும் பூணை நோக்கினான் பூண்டு - பூண்டே பூயிலான் பூயிலான் - பூயிலாய் பூவிற்குத் தக்கது வண்டு பெண்டாட்டி பெண்டிர் - பெண்டிரே, பெண்பால் பெண்மகன் பெண்மகன் வந்தாள் பெண்மை யடங்கிற்று பெரியாள் பெருங்காலர் பெருங்காலன் பெருங்கால் யானை வந்தது பெருங்கால் யானை வந்தன பெருங்கால் யானை வந்தாள் பெருங்கால் யானை வந்தான் பெருங்கூத்தன் பெருங்கொற்றன் பெருஞ்சாத்தன் பெருந்தலைச் சாத்தன் பெருந்தேவி பொறை யுயிர்த்த கட்டிற்கண் நால்வர் மக்கள் உளர். பெருந்தோளர் பெருவிறல் வந்தது பேடி வந்தது பேடி வந்தாள் பேடி வந்தான் பேடியர் வந்தார் பேய் தீர்ந்தான் பேரூர் கிழான் பைங்கூழ் நல்ல பொத்தகம் கொண்டுவா போறை யுயிர்த்தார் பொற்றாலி பொற்றொடி பொன்னன்ன பொன்னன்னது பொன்னன்னர் பொன்னன்னள் பொன்னன்னன பொன்னன்னன் பொன்னன்னார் பொன்னன்னாள் பொன்னன்னான் பொன்போலும் மேனி பொன்னை நிறுக்கும் போ போயிற்றே போயிற்றே மக மகடூஉ மகவினை மகவு நலிந்தது மகள் மகள் - மகளே மகன் மகன் அல்லன் குற்றி மகன் -மகனே மகாஅர் மக்கட்குப் பகை பாம்பு மக்கள் மக்கள் - மக்காள் மங்கலம் என்பதோர் ஊருண்டு போலும் மழநாட்டுள் மஞ்ஞை மயிர் நல்ல ஆயின மரத்தைக் குறைக்கும் மரத்தைக் குறைத்தான் மரத்தைக் குறையான் மரம் - மரமே மருந்து ஈ மருந்து உண்டு நல்லனாயினான் மருமகள் - மருமகளே மருமகன் - மருமகனே மருவூரின் மேற்கு மலை மலை நிற்கும் மலையமான் மலைவந்து கிடந்தது மழை பெய்தென வுலக மார்த்தது, மரங்குழைத்தது மழை பெய்தென வளம் பெற்றது மழை பெய்யப் பயிர் எழுந்தது மழைபோலும் வண்கை மற்று உண்பல் மற்றையது மற்றையது கொணா மற்றையவை மற்றையார் மற்றையாள் மற்றையான் மற்றோ மற்று மனைவியைக் காதலிக்கும் மன் மாகாயத்தது மாதளிர்த்தது மாபூத்தது மாவீழ்ந்தது மாடத்தின்கீ ழிருந்தான் மாடத்தின்மே லிருந்தான் மாடத்துக்கண் இருந்தான் மாந்தர் மாமரம் மாரியுள் வந்தான் மாரியுள் வந்தான் -= மாரிக்கு வந்தான் மாவும் மருதும் ஓங்கின மாவும் மரையும் புலம்படாந்தன மாள் முடக்கொற்றி வந்தாள் முடக்கொற்றி வந்தது முடக்கொற்றன் வந்தது முடக்கொற்றன் வந்தான் முடத்தி வந்தாள் முடத்தி வந்தது முடவன் முடவன் வந்தான் முடவன் வந்தான் - முடவன் வந்தது முடவன் வந்தது முத்தும் மணியும் பொன்னும் முத்தொடு முழாக்கோத்து முப்பத்து மூவரும் வந்தார் முப்பத்து மூவர் முயற்சியாற் பிறத்தலான் சொல்லு நிலையாது முயற்சியிற் பிறத்தலின் ஒலி நிலையாது முலை நல்லள் முல்லை - முல்லாய் முறைக்குத்துக் குத்தினார் முன்றில் மூக்கு நல்லள் மூவர் மூவாட்டையான் மெல்லிலை மேலைச்சேரிக் கோழி அலைத்தது யா யாட்டுளா னின்னுரை தாரான் யாது யாபன்னிருவர் உளர்போலும் மாணாக்கர் அகத்தியனார்க்கு யாம் உண்ணும் இல்லம் யாம் பண்டு விளையாடுங் கா யாம் பண்டு விளையாடுவது இக்கா யாய் யார் அவர் யார் அவள் யார் அவன் யாவர் யாவள் யாவன் யாவை யாழுங் குழலும் பறையும் இயம்பினார் யாழ் கேட்டான் யாறொழுகும் யானில்லை யானும் என் எஃகமும் சாறும் யானைக் கோடு யானைக் கோடு உண்டு யானைக் கோடு செல்க யோனைக் கோடு பத்து யானைக் கோடு யாது யானைக் கோடு வீழ்ந்தது யானைக் கோடு வெளிது யானையது கோடு யானையது கோடு கூரிது-யானைக்குக் கோடு கூரிது. யானையது கோட்டைக் குறைத்தான் யானையது கோட்டை நுனிக்கட் குறைத்தான் யானையும் தேரும் ஆளும் எறிந்தார் யானையைக் கோட்டுக்கட் குறைத்தான் யானையைக் கோட்டைக் குறைத்தான் யானையை யூரும் யானை வந்தது யானை வந்தன யானை வந்தாள் யானை வந்தான் யானையார் வந்தார் யானோ கொண்டேன் யான் உண்ணும் இல்லம் யான் செய்ம்மன யான் செல்க யான் வேறு வடக்கண் வேங்கடம் வடுகரசர் ஆயிரவர் மக்களையுடையர் வடுகரசர்க்குச் சிறந்தார் சோழியவரசர் வட்டப் பலகை வணிகர் வண்ணத்தான் வண்ணான் சாத்தன் வந்தான் சாத்தனொடு வரலும் உரியன வருது வருதும் வருவ வரைவீழருவி வலியான் சாத்தனின் வல்லர் வல்லள் வல்லன் வனைந்தான் வா வாசுதேவன் வந்தான் வாணிகத்தானாயினான் வாணிகத்தான் ஆயினான் வாணிகத்தின் ஆயினான் வாம் புரவி வாயாற்றக்கது வாய்ச்சி வாயாற்றக்கது வாய்ச்சி - வாய்க்குத் தக்கது வாய்ச்சி வாயிலான் வாயிலான் - வாயிலாய் வாய்க்காலைச் சாரும் வாய்பூசி வருதும் வாளி விடலை விண்டு விண்ணென விசைத்தது விண்ணென்று விசைத்தது விரலை முடக்கும் விருந்து வந்தது வில்லி வெற்பன் வெள்ளாடை வெள்ளி எழுந்தது வெள்ளென விளர்த்தது வெள்ளென்று விளர்த்தது வேங்கைப்பூ வேட்டுவர் வேந்து செங்கோலன் வேந்து வாழி வேந்து - வேந்தே வேலால் எறிந்தான் வேலியைப் பிரிக்கும் வேளாளர் வைதேனோ வரலாற்றுக் கட்டுரைச் சொற்றொடர் முற்றிற்று நூற்பா நிரல் (எண் : நூற்பா எண்) அஆ வஎன சொல்லே 9 அஆ வஎன படர்க்கை 212 அச்சக் கிளவிக்கு 96 அச்சம் பயமிலி 249 அசைநிலைக் கிளவி 266 அடிமறிச் செய்தி 401 அடைசினை முதலென 26 அண்மைச் சொல்லிற்கு 128 அண்மைச் சொல்லே 124 அத்திணை மருங்கின் 215 அதிர்வும் விதிர்ப்பும் 310 அதுஇது உதுவென 164 அதுச்சொல் வேற்றுமை 210 அதுவென் வேற்றுமை 90 அந்திலாங்க 262 அந்நாற் சொல்லும் 397 அப்பொருள் கூறின் 36 அம்ம என்னும் 150 அம்ம கேட்பிக்கும் 271 அம்முக் கிளவியும் 226 அமர்தல் மேவல் 374 அயல்நெடி தாயின் 142 அர்ஆர் பஎன 203 அரியே ஐம்மை 350 அலமரல் தெருமரல் 304 அவ்வச் சொல்லிற்கு 290 அவ்வழி அவனிவன் 159 அவ்வே இவ்வென 116 அவற்றின் வரூஉம் 285 அவற்றுள் அஎனப் 105 அவற்றுள் அழுங்கல் 344 அவற்றுள் இஈ 118 அவற்றுள் இகுமும் 270 அவற்றுள் இயற்சொல் 392 அவற்றுள் இரங்கல் 353 அவற்றுள் ஈயென் கிளவி 439 அவற்றுள் எழுவாய் 66 அவற்றுள் செய்கென் கிளவி 201 அவற்றுள் செய்யும் 233 அவற்றுள் தடவென் கிளவி 315 அவற்றுள் தருசொல் 29 அவற்றுள் நான்கே 172 அவற்றுள் நிரல்நிறை 399 அவற்றுள் நீயென் கிளவி 186 அவற்றுள் பன்மை 206 அவற்றுள் பிரிநிலை 425 அவற்றுள் பெயரெனப் 157 அவற்றுள் முதனிலை 225 அவற்றுள் முன்னிலை 221 அவற்றுள் முன்னிலைக் 218 அவற்றுள் யாதென 32 அவற்றுள் விறப்பே 342 அவற்றுள் வினைவேறு 53 அவற்றுள் வேற்றுமைத் 407 அவற்றொடு வருவழிச் 230 அவைஅல் கிளவி 436 அவைதாம் அம் ஆம் 199 அவைதாம் இஉ 117 அவைதாம் உறுதவ 294 அவைதாம் தத்தம் கிளவி 423 அவைதாம் தத்தம் குறிப்பின் 434 அவைதாம் தத்தம் பொருள் 111 அவைதாம் புணரியல் 245 அவைதாம் பெண்மை 173 அவைதாம் பெயர் ஐ 65 அவைதாம் முன்மொழி 413 அவைதாம் முன்னும் 246 அவைதாம் வழக்கியல் 109 அளபெடைப் பெயரே 132, 138, 146 அளபெடை மிகூஉம் 122 அளவும் நிறையும் 113 அன் ஆன் 202 அன்ன பிறவும் 97, 163, 167, 390 அன்னென்னிறுதி 127 ஆஓ ஆகும் 192 ஆக்கக் கிளவி 22 ஆக்கந் தானே 21 ஆக ஆகல் 275 ஆங்கவுரையசை 272 ஆடூஉ வறிசொல் 2 ஆண்மை சுட்டிய 178 ஆண்மை திரிந்த 12 ஆண்மை யடுத்த 160 ஆரும் அருவும் 135 ஆறன் மருங்கின் 94 ஆறா குவதே 76 ஆனென் இறுதி 129 இசைத்தலும் உரிய 60 இசைநிறை அசைநிலை 405 இசைப்படு பொருளே 417 இசைப்பிசை யாகும் 303 இடைச்சொல் எல்லாம் 448 இடைச்சொற் கிளவியும் 156 இடையெனப் படுப 244 இதன திதுவிற்று 106 இதுசெயல் வேண்டும் 238 இயற்கைப் பொருளை 19 இயற்சொல் திரிசொல் 391 இயற்பெயர்க் கிளவியும் 38 இயற்பெயர் சினைப்பெயர் 171 இயைபே புணர்ச்சி 302 இர்ஈர் மின்னென 219 இரட்டைக் கிளவி 48 இரண்டன் மருங்கின் 89 இரண்டா குவதே 72 இருதிணைச் சொற்கும் 169 இருதிணைப் பிரிந்த 158 இருதிணை மருங்கின் 10 இருபெயர் பலபெயர் 411 இலம்பா டொற்கம் 354 இறப்பின் நிகழ்வின்...அ 197 இறப்பின் நிகழ்வின்...சி 421 இறப்பே யெதிர்வே 242 இறுதியும் இடையும் 99 இறைச்சிப் பொருள்வயின் 193 இன்றில வுடைய 216 இன்ன பெயரே 190 இனச்சுட் டில்லாப் 18 இனைத்தென வறிந்த 33 ஈதா கொடுவெனக் 438 ஈரள பிசைக்கும் 276 ஈற்றினின் றிசைக்கும் 281 ஈற்றுப்பெயர் முன்னர் 92 உகப்பே யுயர்தல் 299 உகரந் தானே 120 உசாவே சூழ்ச்சி 364 உணர்ச்சி வாயில் 387 உம்உந் தாகும் 287 உம்மை எச்சம் 430 உம்மை தொக்க 284 உம்மை யெண்ணின் 286 உம்மை யெண்ணும் 282 உயர்திணை மருங்கின் 415 உயர்திணை யென்மனார் 1 உயாவே யுயங்கல் 363 உரிச்சொற் கிளவி 292 உரிச்சொன் மருங்கினும் 449 உருபுதொடர்ந் தடுக்கிய 98 உருவுட் காகும் 295 உருவென மொழியினும் 24 உரையிடத் தியலும் 451 உவமத் தொகையே 408 உளவெனப் பட்ட 149 எச்சஞ் சிறப்பே 250 எச்ச வும்மையும் 278 எஞ்சிய இரண்டன் 141 எஞ்சிய கிளவி 220 எஞ்சிய மூன்றும் 433 எஞ்சுபொருட் கிளவி 279 எடுத்த மொழியினம் 61 எண்ணுங் காலும் 47 எண்ணே காரம் 283 எதிர்மறுத்து மொழியினும் 103 எதிர்மறை எச்சம் 429 எப்பொரு ளாயினும் 35 எய்யாமை யறியாமை 336 எல்லாச் சொல்லும் 152 எல்லாத் தொகையும் 414 எல்லாம் என்னும் 183 எல்லாரும் என்னும் 161 எல்லே விளக்கம் 264 எவ்வயிற் பெயரும் 69 எவ்வயின் வினையும் 422 எழுத்துப்பிரிந் திசைத்தல் 389 எற்றென் கிளவி 258 எறுழ்வலி ஆகும் 382 என்றுமெனவும் 289 என்றென் கிளவியும் 254 எனஎன் எச்சம் 432 ஏவுங் குரையும் 267 ஏழாகுவதே 77 ஏற்றம் நினைவும் 331 ஏனை உயிரே 121 ஏனைக் காலமும் 243 ஏனைக் கிளவி 187 ஏனைப் புள்ளி 126 ஏனை யிரண்டும் 30 ஏனை யுருபும் 107 ஏனை யெச்சம் 227 ஐந்தா குவதே 75 ஐயமும் கரிப்பும் 378 ஐயும் கண்ணும் 101 ஐவியப் பாகும் 379 ஒப்பில் போலியும் 273 ஒருபெயர்ப் பொதுச்சொல் 49 ஒருபொருள் இருசொல் 453 ஒருபொருள் குறித்த ...சொல் 393 ஒருபொருள் குறித்த ... கிளவி 42 ஒருமை சுட்டிய எல்லா 180 ஒருமை சுட்டிய பெயர் 454 ஒருமை யெண்ணின் 44 ஒருவர் என்னும் 188 ஒருவரைக் கூறும் 27 ஒருவினை ஒடுச்சொல் 87 ஒழியிசை எச்சம் 428 ஒன்றறி கிளவி 8 ஒன்றறி சொல்லே 3 ஒன்றன் படர்க்கை 213 ஒன்றுவினை மருங்கின் 54 ஓம்படைக் கிளவிக்கு 93 ஓய்த லாய்தல் 324 ஓவும் உவ்வும் 119 கடதற என்னும் 200 கடி சொல் லில்லைக் 446 கண்டீர் என்றா 419 கண்ணுந் தோளும் 62 கதழ்வுந் துனைவும் 309 கம்பலை சும்மை 343 கமம்நிறைந் தியலும் 349 கயவென் கிளவி 316 கரும மல்லாச் 80 கருவி தொகுதி 348 கவவகத் திடுமே 351 கழிவே யாக்கம் 247 கழுமென் கிளவி 345 கள்ளொடு சிவணும் 166 கறுப்பும் சிவப்பும் 366 கன்றலுஞ் செலவும் 82 காலந் தாமே 196 கால முலகம் 58 கிளந்த அல்ல 114, 291 கிளந்த இறுதி 147 குஐ ஆன்என 104 குடிமை யாண்மை 57 குத்தொக வரூஉங் 95 குருவுங் கெழுவும் 296 குறிப்பினும் வினையினும் 198 குறைச்சொற் கிளவி 447 கூர்ப்புங் கழிவும் 308 கூறிய கிளவிப் 384 கூறிய முறையின் 70 கெடவரல் பண்ணை 313 கேட்டை என்றா 420 கொடுஎன் கிளவி உயர்ந்தோன் 441 கொடுஎன் கிளவி படர்க்கை 442 கொல்லே ஐயம் 263 சாயன் மென்மை 319 சிதைந்தன வரினும் 396 சிறப்பி னாகிய 41 சினை நிலைக்கிளவிக்கு 81 சீர்த்தி மிகுபுகழ் 306 சுட்டுமுதலாகிய 40 சுட்டுமுதற் பெயரும் 145 சுட்டுமுதற் பெயரே 139 சுண்ணம் தானே 400 செந்தமிழ் சேர்ந்த 394 செப்பினும் வினாவினும் 16 செப்பும் வினாவும் 13 செப்பே வழீஇயினும் 15 செய்து செய்யூச் 223 செய்தெ னெச்சத்து 234 செய்யாய் என்னும் 444 செய்யுள் மருங்கினும் 456 செயப்படு பொருளைச் 241 செயற்கைப் பொருளை 20 செல்ல லின்னல் 297 செலவினும் வரவினுந் 28 செழுமை வளனுங் 346 சேரே திரட்சி 357 சொல்என் எச்சம் 435 சொல்லெனப் படுப 155 ஞெமிர்தலும் பாய்தலும் 355 தகுதியும் வழக்குந் 17 தஞ்சக் கிளவி 261 தடவுங் கயவும் 314 தடுமாறு தொழிற்பெயர்க்கு 91 தத்தம் எச்சமொடு 232 தநநு எஎனும் 404 தநநு எயென 151 தன்மேற் செஞ்சொல் 431 தன்மைச் சொல்லே 43 தன்மை சுட்டலும் 25 தன்மை சுட்டின் 189 தன்னுள் உறுத்த 184 தாம்என் கிளவி 181 தாவென் கிளவி 440 தானென் கிளவி 182 தானென் பெயருஞ் 134 திணையொடு பழகிய 194 தீர்தலுந் தீர்த்தலும் 312 துயவென் கிளவி 362 துவன்றுநிறை வாகும் 326 துவைத்தலும் சிலைத்தலும் 352 தெரிநிலை யுடைய 168 தெரிபுவேறு நிலையலும் 154 தெவ்வுப் பகையாகும் 340 தெவுக்கொளற் பொருட் 338 தெளிவி னேயும் 256 தேற்றம் வினாவே 252 தொழிலிற் கூறும் 130 தொழிற்பெயர் ஆயின் 136 நம்புமேவு 323 நளியென்கிளவி 317 நன்றீற் றேயும் 277 நன்று பெரிதாகும் 337 நனவே களனும் 370 நான்கா குவதே 74 நிகழூஉ நின்ற 170 நிரனிறை சுண்ணம் 398 நிலப்பெயர் குடிப்பெயர் 162 நிலனும் பொருளும் 229 நிறத்துரு வுணர்த்தற்கு 367 நின்றாங் கிசைத்தல் 59 நீயிர் நீயென 185 நும்மின் திரிபெயர் 140 நொசிவும் நுழைவு 368 பசப்புநிற னாகும் 301 படரேயுள்ளல் 334 பண்புகொள் பெயரும் 131, 137 பண்புதொக வரூஉம் 412 பணையே பிழைத்தல் 333 பயப்பே பயனாம் 300 பரவும் பழிச்சும் 376 பல்ல பலசில 165 பல்லா றாகப் 79 பல்லோர் படர்க்கை 222 பலவயி னானும் 51 பழுதுபய மின்றே 318 பன்முறை யானும் 228 பன்மை சுட்டிய 179 பன்மையும் ஒருமையும்5, 211, 214 பாலறி மரபின் 208 பான்மயக் குற்ற 23 பிண்டப் பெயரும் 86 பிணையும் பேணும் 332 பிரிநிலை வினாவே 251 பிரிநிலை வினையே 424 பிறிதுபிறி தேற்றலு 100 பின்முன் கால்கடை 224 புதிதுபடற் பொருட்டே 373 புலம்பே தனிமை 325 புள்ளியும் உயிரும் 148 புனிறென் கிளவி 369 பெண்மைச் சினைப்பெயர் 174 பெண்மை சுட்டிய 4, 175, 177 பெண்மை முறைப்பெயர் 176 பெயர்நிலைக் கிளவி 71 பெயர்நிலைக் கிளவியின் 443 பெயரின் ஆகிய 68 பெயரினுந் தொழிலினும் 50 பெயரெஞ்சு கிளவி 427 பெயரெஞ்சு கிளவியும் 231 பேநா முருமென 359 பையுளுஞ் சிறுமையும் 335 பொருட்குத் திரிபில்லை 386 பொருட்குப் பொருள் 385 பொருண்மை சுட்டல் 67 பொருண்மை தெரிதலும் 153 பொருள் தெரிமருங்கின் 402 பொருளொடு புணராச் 37 பொற்பே பொலிவு 329 மகடூஉ மருங்கின் 191 மதவே மடனும் 371 மழவுங் குழவும் 305 மற்றென் கிளவி 257 மற்றைய தென்னும் 259 மறைக்குங் காலை 437 மன்றஎன் கிளவி 260 மன்னாப் பொருளும் 34 மாதர் காதல் 322 மாரைக் கிளவியும் 204 மாலை யியல்பே 307 மாவென்கிளவி 268 மிக்கதன் மருங்கின் 237 மிகுதியும் வனப்பும் 372 மியாயிக மோமதி 269 முதலிற் கூறும் 110 முதலுஞ் சினையும் 85 முதற்சினைக் கிளவிக்கு 83 முதன்முன் னைவரின் 84 முந்நிலைக் காலமும் 235 முரஞ்சன் முதிர்வே 327 முழுதென் கிளவி 320 முற்படக் கிளத்தல் 39 முற்றிய வும்மைத் 280 முறைப்பெயர்க்கிளவி..ஏ 133 முறைப்பெயர்க்கிளவி..மு 144 முறைப்பெயர் மருங்கின் 123 முன்னத்தி னுணரும் 452 முன்னிலை சுட்டிய 455 முன்னிலை வியங்கோள் 217 முனைவு முனிவாகும் 380 மூன்றனும் ஐந்தனும் 88 மூன்றா குவதே 73 மெய்பெறக் கிளந்த 383 மொழிப்பொருட் காரணம் 388 மொழிமாற் றியற்கை 403 யாஅ ரென்னும் 207 யாகா பிறபிறக்கு 274 யாணுக் கவினாம் 375 யாதன் உருபின் 102 யாதெவன் என்னும் 31 ரஃகா னொற்றும் 7 வடசொற் கிளவி 395 வண்ணத்தின் வடிவின் 410 வம்பு நிலையின்மை 321 வயவலி யாகும் 360 வயாஎன் கிளவி 365 வறிதுசிறி தாகும் 330 வன்புற வரூஉம் 239 வார்தல் போகல் 311 வாராக் காலத்தும் நிகழும் 236 வாராக் காலத்து வினைச் 240 வாரா மரபின 416 வாளொளி யாகும் 361 வியங்கோ ளெண்ணுப் பெயர் 45 வியலென் கிளவி 358 விரைசொல் லடுக்கே 418 விழுமஞ் சீர்மையும் 347 விழைவின் றில்லை 255 விழைவே காலம் 248 விளிகொள் வதன்கண் 64 விளியெனப் படுப 115 விறப்பு முறப்பும் 341 வினாவுஞ் செப்பே 14 வினையிற் றோன்றும் 11 வினையின் தொகுதி 409 வினையினும் பண்பினும் 143 வினையெஞ்சு கிளவிக்கு 426 வினையெஞ்சு கிளவியும் 450 வினையெனப் படுவது 195 வினையே குறிப்பே 253 வினையே செய்வது 108 வினையொடு நிலையினும் 288 வினைவேறு படாஅப் 55 வினைவேறு படூஉம்..வி 52 வினைவேறு படூஉம்..வே 53 வெம்மை வேண்டல் 328 வெளிப்படு சொல்லே 293 வேற்றுமைத் தொகையே 406 வேற்றுமை தாமே 63 வேற்றுமைப் பொருளை 78 வேற்றுமை மருங்கின் 112 வேறுவினைப் பொதுச்சொல் 46 வையே கூர்மை 381 ளஃகா னொற்றே 6 னஃகா னொற்றே 5 னரலள என்னும் 125 சொல் நிரல் மேற்கோள் (நூற்பா எண்) அ அணிலே 148 அத்தா 123 அத்திகோசத்தார் 162 அது 245 அம் 245 அம்பர்கிழான் 162 அம்மா 150 அரசர் 162 அருமை 390 அருவாளன் 162 அல்லர் 210 அல்லள் 210 அல்லன் 210 அவர் 139 அவள் 145,158 அவன் 134,158 அழாஅன் 132 அன் 245 அன்னா 123 ஆ ஆடூஉ 158 ஆம் 245 ஆயர் 162 ஆன் 245 இ இருமை 390 இருவர் 162 இல்லது 167 இல்லர் 210 இல்லள் 210 இல்லன் 210 இல்லன 167 இவர் 139 இவள் 145 இவன் 134 இன் 245 உ உடையர் 210 உடையள் 210 உடையன் 210 உடையாம் 210 உடையேன் 210 உண் 218 உண்கு 200 உண்கும் 199 உண்குவம் 199 உண்குவர் 203 உண்குவள் 202 உண்குவன் 202 உண்குவிர் 219 உண்குவெம் 199 உண்குவென் 200 உண்குவேன் 200 உண்குவை 218 உண்டது 8,213 உண்டல் 71 உண்டன 9,212 உண்டனம் 199 உண்டனர் 203 உண்டனள் 202 உண்டனன் 202 உண்டனிர் 219 உண்டனெம் 199 உண்டனை 218 உண்டாம் 199 உண்டாய் 130, 143, 218, 218, 421 உண்டார் 7, 203 உண்டாள் 6, 143, 202 உண்டான் 5, 130, 195, 197, 202, 244 உண்டி 218 உண்டீர் 219 உண்டு 200 உண்டும் 199 உண்டேம் 199 உண்டேன் 200,236,421 உண்ணா 9,212 உண்ணாநின்றனர் 203 உண்ணாநின்றனள் 202 உண்ணாநின்றனன் 202 உண்ணாநின்றனிர் 219 உண்ணா நின்றனெம் 200 உண்ணாநின்றனை 218 உண்ணாநின்றார் 7,203 உண்ணாநின்றாள் 6,202 உண்ணாநின்றான் 5,197,202 உண்ணாநின்றீர் 219 உண்ணாநின்றேன் 200 உண்ணாநின்றோம் 199 உண்ப 7, 203 உண்பது 8, 213 உண்பல் 200 உண்பன 9, 212 உண்பாம் 199 உண்பார் 7, 203 உண்பாள் 6, 202 உண்பான் 5, 197, 202 உண்பீர் 219 உண்பேம் 199 உண்மின் 219 உரிஞுதும் 199 உவர் 139 உவள் 145 உவன் 134 உழக்கு 113 உள்ளது 167 உள்ளன 167 உளர் 210 உளள் 210 உளன் 210 ஊ ஊர 128 எ எட்டி 163 எம்மார் 151 எம்மாள் 142,151 எமமான் 151 எமர் 151,404 எமள் 151,404 எமன் 151,404 எழுத்து 114 ஏ ஏறு 110 ஏனாதி 163 ஒ ஒடு 245 ஒருவர் 162 ஒன்று 114, 165 க கடல் 166 கடியாள் 142 கடு 111 கண் 245 கண்டிகும் 245 கணியீரே 136 கணியே 121 கபிலம் 110 கரிய 9, 165, 216 கரியது 8, 165, 216 கரியர் 7, 210 கரியள் 6, 210 கரியன் 5, 195, 210 கரியாய் 131, 143 கரியாள் 143 கரியான் 162 கரியேன் 421 கழுதை 166 காவிதி 163 காளை 194 குண்டுகட்டு 8, 213 குத்து 110 குதிரை 166 குரிசீல் 141 குழவி 171 குழிப்பாடி 110 குறுங்கோட்டது 216 குறுங்கோட்டன 216 குறுங்கோல் 410 கூத்தீர் 135 கூந்தால் 147 கூயிற்று 8, 213 கேண்மியா 245, 269 கொல்லன் 162 கொற்றன் 171 கொன்னை 246 கோ கோமாள் 142 கோவே 119 ச சங்கிராமத்தார் 162 சாத்தற்கு 70 சாத்தன் 158, 171 சாத்தன்கண் 70 சாத்தனதனை 100 சாத்தனதனொடு 100 சாத்தனது 70 சாத்தனின் 70 சாத்தனை 90 சாத்தா 147, 149, 150 சாத்தீ 147 சில்லவை 167 சிறாஅர் 138 சீத்தலைசாத்தான் 171 சுண்ணத்தான் 163 சுருசுருத்தது 48 சுறுசுறுத்தது 48 செத்தார் 443 செய்ய 9 செய்யது 8 செய்யர் 7 செய்யள் 6 செய்யன் 5 செய்யாய் 131 செய்யான் 162 செய்யீரே 137 செல்வ 165 சென்றீரே 136 சேண்மை 390 சேர்ப்ப 128 சேர்ப்பன் 162 சேர்ப்பா 127 சேரமான் 129, 162 சேறு 200 சேறும் 199 சோ சோழா 127 சோழியன் 162 ஞ ஞமலி 394 ஞாய் 404 த தச்சன் 162 தண்டை 397 தந்தாய் 147 தந்தை 171 தந்தையர் 162 தம்மார் 151 தம்மாள் 151 தம்மான் 151 தமர் 151, 404 தமள் 151, 404 தள்ளை 394 தாய் 177, 404 தாயர் 162 தாயிற்று 8, 213 தான் 134 திருமுதும் 199 தின் 218 தின்குவ 9, 212 தின்ப 7, 203 தின்பல் 200 தின்மின் 219 தின்றல் 71 தின்றான் 71 தின்றி 218 தின்னா 9, 212 தீயர் 210 தீயள் 210 தீயன் 210 துலாம் 113 தெங்கு 110, 111, 166 தொடி 113 தொல்காப்பியம் 110 தொழீஇ 122 ந நங்காய் 118 நட 218 நம்பி 149, 158, 389 நம்பியீரே 136 நம்பீ 118 நம்மார் 151 நம்மாள் 151 நம்மான் 151 நமர் 151, 404 நமள் 151, 404 நமன் 151, 404 நரியே 148 நல்லர் 210 நல்லள் 210 நல்லன் 210 நன்காடு 443 நாய் 166 நாழி 113 நிலத்தர் 210 நிலத்தள் 210 நிலத்தன் 210 நீலம் 110, 111 நும்மார் 151 நும்மான் 151 நுமர் 151, 404 நுமள் 151, 404 நுமன் 151, 404 நூறு 114 ப பட்டி 162 பத்து 114, 165 பல்லவை 167 பலா 166 பாசிலை 397 பார்ப்பார் 162 பார்ப்பீர் 135 பிற 167 பிறர் 163 பிறள் 163 பிறன் 163 பிறிது 167 புத்திரர் 162 புலியே 148 புழாஅன் 132 பூண்டே 147 பெண்டாட்டி 158 பெண்டிரே 126 பெண்பால் 142 பெண்மகன் 158 பெரியாள் 142 பெருங்காலர் 162 பெருங்காலன் 171 பெருங்கூத்தன் 18 பெருங்கொற்றன் 18, 61 பெருஞ்சாத்தன் 61 பெருந்தோளர் 162 பேரூர்கிழான் 162 பொற்றொடி 110 பொன்னன்ன 165 பொன்னன்னது 165, 216 பொன்னன்னர் 210 பொன்னன்னள் 210 பொன்னன்னன் 210 பொன்னன்னை 216 போந்தேன் 236 ம மக்கள் 158 மக்காள் 141 மக 171 மகடூஉ 158 மகள் 158 மகளே 144, 147 மகனே 133 மகாஅர் 138 மரமே 148 மருமகளே 144 மருமகனே 133 மலையமான் 129, 162 மற்றையது 167 மற்றையவை 167 மற்றையார் 163 மற்றையாள் 163 மற்றையான் 163 மன்னை 246 முடவன் 171 முப்பத்துமூவர் 162 மூவர் 162 ய யாது 31 யாய் 404 யாவர் 31 யாவள் 31, 145 யாவன் 31, 134 யாவை 31 யான் 134 வ வண்ணத்தான் 163 வணிகர் 162 வருது 200 வருதும் 199 வருவ 165 வல்லர் 210 வல்லள் 210 வல்லன் 210 வனைந்தான் 108 வா 218 வாயிலான் 163 வாளி 404 விடலை 194 வில்லி 404 விழுமியர் 347 விளி 245 வெற்பன் 162 வெறுத்தார் 341 வேட்டுவர் 162 வேந்தே 119 வேளாளர் 162 வைதிலேன் 239 வைதேன் 239 சொற்றொடர் நிரல் மேற்கோள் (நூற்பா எண்) அ அஃதே அஃதே 418 அக்குழு நன்று 57 அங்கலுழ் மாமை 454 அட்ட செந்நெற் சோறு 232 அடிசில் அயின்றார் 46 அடுஞ் செந்நெற் சோறு 232 அடைக்காயை எண்ணும் 72 அணிகலம் 329 அணிகலம் பொற்ப 329 அதிர்கண் முரசம் 310 அது இல்லை 222 அது உண்ட இல்லம் 229 அது உண்ணும் 222 அது உண்ணும் இல்லம் 229 அது உண்ணும் ஊண் 229 அது எறியுங் கல் 229 அது ஓதுங் காலை 229 அது கையிற்று வீழ்ந்தது 226 அது கையிறுபு வீழ்ந்தது 226 அது கையிறூ வீழ்ந்தது 226 அது செய்யும் பொருள் 229 அது செல்க 221 அது பிற 274 அது பிறக்கு 274 அது வந்தன 11 அது வந்தார் 11 அது வந்தாள் 11 அது வந்தான் 11 அந்தோ அந்தோ 277 அரசர் ஆயிர மக்களொடு தாவடி போயினார் 50 அரசர் பெருந்தெரு 50 அரசு வன்மை நன்று 57 அரசரைச் சார்ந்தான் என்புழி அரசர்கட் சார்ந்தான் 80 அரசனார் வந்தார் 265 அரசனொடு வந்தார் சேவகர் 87 அரசு நிலைத்ததுது 57 அரிசியை அளக்கும் 72 அலி வந்தது 57 அவர் இல்லை 220 அவர் உண்ட இல்லம் 229 அவர் உண்ணும் இல்லம் 230 அவர்க்கு அடிமை நன்று 57 அவர்க்கு ஆண்மை நன்று 57 அவர்க்கு இளமை நன்று 57 அவர்க்குக் குடிமை நன்று 57 அவர்க்கு மூப்பு நன்று 57 அவர் செய்ம்மன 220 அவர் செல்க 221 அவர் வந்தன 11 அவர் வேறு 220 அவள் இல்லை 220 அவள் உண்ட இல்லம் 229 அவள் உண்ணும் 222 அவள் உண்ணும் ஊண் 229 அவன் எறியுங் கல் 229 அவள் ஓதுங்காலை 229 அவள் செய்ம்மன 220 அவள் செய்யும் பொருள் 229 அவள் செல்க 221 அவள் வந்தது 11 அவள் வந்தார் 11 அவள் வந்தான் 11 அவள் வேறு 220 அவற்குக் கொடுக்குங் காணம் 30 அவற்குச் செல்லுங் காணம் 30 அவன் இல்லை 220 அவன் உண்ட இல்லம் 229 அவன் உண்ணும் 222 அவன் உண்ணும் இல்லம் 229 அவன் எறியுங் கல் 229 அவன் ஓதும் காலை 229 அவன் செய்ம்மன 220 அவன் செய்யும் பொருள் 229 அவன் செல்க 221 அவன் வந்தது 11 அவன் வந்தன 11 அவன் வந்தார் 11 அவன் வந்தாள் 11 அவன் வேறு 220 அவனது செயற்கை 76 அவனது துணை 76 அவனது முதுமை 76 அவனது வினை 76 அவனுந்தன் படைக்கலமுஞ் சாலும் 43 அவனே கொண்டான் 252, 425 அவனோ அலனோ 251 அவனோ கொண்டான் 251,425 அவை இல்லை 220 அவை உண்ட இல்லம் 229 அவை எறியுங் கல் 229 அவை ஓதுங் காலை 229 அவை செய்ம்மன 222 அவை செய்யும் பொருள் 229 அவை வந்தது 11 அவை வந்தார் 11 அவை வந்தாள் 11 அவை வந்தான் 11 அவை வேறு 222 அறஞ்செய்தான் சுவர்க்கம் புகும் 237 அறிவு துயவுறுத்தார் 362 அறுத்துக் குறைத்துச் சுகிர்ந்து வகிர்ந்திட்டான் 288 அறுத்தும் குறைத்தும் சுகிர்ந்தும் வகிர்ந்தும் இட்டான் 288 அன்றே அன்றே 277 அன்னோ அன்னோ 277 ஆ ஆ உண்டு 67 ஆ எவன் 67 ஆ கரிது 67 ஆ கிடந்தது 67 ஆசிரியன் பேரூர் கிழான் செயிற்றிய னிளங் கண்ணன் சாத்தன் வந்தான் 42 ஆ செல்க 67 ஆடை கொடு 441 ஆடை சாத்தனது 99 ஆடை தா 440 ஆண் பால் 142 ஆதீண்டு குற்றி 50 ஆயன் சாத்தன் வந்தான் 66 ஆவிற்குக் கன்று 106 ஆவினது கன்று 76, 106 ஆவும் ஆயனும் செல்க 45 ஆன் கன்று நீரூட்டுக 55 ஆன பயமுந் தூக்கினென் 300 இ இக்காடு போகிற் கூறை கோட்பட்டான் 240 இக்காடு போகிற் கூறை கோட்படும் 240 இசைந் தொழுகும் 303 இதனின் கடிது இது 75 இதனிற் சிறிது இது 75 இதனிற் பெரிது இது 75 இதனிற் றீது இது 75 இதனிற் றீவிது இது 75 இதனின் தண்ணிது இது 75 இதனின் நன்று இது 75 இதனின் நாறும் இது 75 இதனின் நெடிது இது 75 இதனின் மெலிது இது 75 இதனின் வட்டம் இது 75 இதனின் வலிது இது 75 இதனின் வெய்யது இது 75 இது பிற 274 இந்நாழிக்கு இந்நாழி சிறிது பெரிது 451 இப்பண்டியுள்ளது எவன்? 31 இப் பயறல்ல தில்லை 36 இம் மகள் கண் நல்லவோ? இக் கயல் நல்லவோ? 16 இயமரம் இயம்பினார் 46 இயைந் தொழுகும் 302 இருந்தான் குன்றத்து 101 இருந்தான் குன்றத்துக்கண் 99,101 இல்லம் மெழுகிற்று 241 இலை நட்டு வாழும் 110 இவ்வெருது புற்றின்னும் 50 இவட்குக் கொள்ளும் இவ்வணி 106 இவர் பெரிதுஞ் சோறுண்ப 50 இவர் பெரிதும் கால்கொண் டோடுப 50 இவரின் சிலர் இவர் 75 இவரின் பலர் இவர் 75 இவற்கு ஊண் கொடு 441 இவற்குக் காலம் ஆயிற்று 58 இவற்குத் தெய்வம் ஆயிற்று 58 இவனிற் சிறந்தான் இவன் 75 இவனிற் பழையன் இவன் 75 இவனிற் புதியன் இவன் 75 இவனின் ஆயினான் இவன் 75 இவனின் இலன் இவன் 75 இவனின் இழிந்தான் இவன் 75 இவனின் உடையன் இவன் 75 இவனின் மூத்தான் இவன் 75 இவளைக் கொள்ளும் இவ்வணி 106 இவனைப் பூதம் புடைத்தது 58 இவை யல்லது பயறில்லை 36 இல்முன் என்பதனை முன்றில் என்பது 17 இன்று இவ்வூர்ப் பெற்றமெல்லாம் அறங் கறக்கும் 50 இன்று இவ்வூர்ப் பெற்றமெல்லாம் உழவொழிந்தன 50 இன்று இவ்வூரெல்லாம் தைநீர் ஆடுப 50 உ உடம்பு நன்று 58 உடுக்கை ஈ 439 உடைய திகழ்ந்து உயிரிரங்கி இருந்தார் 353 உண்கும் வந்தேம் 201 உண்கு வந்தேன் 201 உண்ட சாத்தன் 427 உண்டது 8, 213 உண்டருந்து 397 உண்டன 9,212 உண்டாய் அவன் 11 உண்டாய் யான் 11 உண்டார் 7,203 உண்டாள் 6,143,202 உண்டான் 5,130,195,197,202,244 உண்டான் தின்றான் ஓடினான், பாடினான், சாத்தன் 423 உண்டான் நீ 11 உண்டான் யான் 11 உண்டு வந்தான் 231 உண்டுவருஞ் சாத்தான் 234 உண்டேன் அவன் 11 உண்டேன் நீ 11 உண்ணாச் சாத்தன் 231 உண்ணாது வந்தான் 231 உண்ணா நின்றது 8,213 உண்ணா வந்தான் 225 உண்ணான் சாத்தன் 231 உண்ணுஞ் சாத்தான் 231, 427 உண்ணும் அது 229 உண்ணும் அவர் 229 உண்ணும் அவன் 229 உண்ணூ வந்தான் 225 உண்பாக்கு வந்தான் 224 உண்பான் வந்தான் 224 உதுகா 274 உது பிற 274 உப்புக் கழிந்தது 308 உப்புக் கூர்ந்தது 308 உயிர் போயிற்று 58 உலகத்தார் பசித்தார் 60 உலகம் பசித்தது 58 உவாப்பதினான்கு 411 உழுது உண்டு தின்று ஓடிப் பாடி வந்தான் 228 உழுது வந்தான் 225, 426 உழுது வந்தேன் 227 உழுது வருஞ் சாத்தன் 234 உழுந் தல்ல 216 உழுந்துள 216 உறையூர்க்குப் பெரிது கருவூர் 106 உறையூரிற் பெரிது கருவூர் 106 ஊ ஊர்க்கண் ணிருந்தான் 77 ஊர்க்கா லிருந்தான் 77 ஊர்க்குச் சேயன் 106 ஊர்க்குத் தீர்ந்தான் 106 ஊர்க்குப் பற்று விட்டான் 106 ஊர் கடிந்தார் 377 ஊர் கம்பலை யுடைத்து 343 ஊர் சும்மை யுடைத்து 343 ஊர்ப்புடை யிருந்தான் 77 ஊரகத் திருந்தான் 77 ஊரய லிருந்தான் 77 ஊரிற் சேயன் 106 ஊரின் பற்று விட்டான் 75, 106 ஊரிற் றீர்ந்தான் 75, 106, 312 ஊரு ளிருந்தான் 77 ஊரை ஆக்கும் 72 ஊரைச் செறும் 72 ஊரைப் புகழும் 72 ஊரைப் பெறும் 72 ஊரையிழக்கும் 72 ஊரையின்புடையன் 72 ஊரை யொற்கந் தீர்க்கும் 354 ஊரைக் காக்கும் 72 எ எட்குப்பை 76, 86 எட்சாந்து 86 எயிலை இழைக்கும் 72 எயின நாடு 49 எருப்பெய்து இளங்களை கட்டு நீர்கால் யாத்தமை யாற் பைங்கூழ் நல்ல 22 எல்லாம் கொண்டாம் 280 எல்லாம் கொண்டார் 280 எல்லாம் வந்தன 183 எல்லாம் வந்தீர் 183 எல்லாம் வந்தேம் 183 எல்லாரும் வருவர் 280 எல்லாரும் வாரார் 280 எவன் அது 215 எவன் அவை 215 எள்ளினது சாந்து 76, 76 எள்ளொடு விராய அரிசி 73 எற்றத்திருந்தார் 331 எறும்பு முட்டை கொண்டு தெற்றி ஏறின் மழைபெய்தது 240 எறும்பு முட்டை கொண்டு தெற்றி ஏறின் மழைபெய்யும் 240 என் காதல் பொலிவாயிற்று 57 என் பாவை போயிற்று 27 என் யானை வந்தது 57 எனக்குத் தருங்காணம் 29 எனக்கு வருங்காணம் 29 ஏ ஏர்ப்பின் சென்றான் 77 ஏழாட்டையான் 210 ஏனாதி நல்லுதடன் 41 ஒ ஒக்கும் ஒக்கும் 405 ஒடுவங்காடு 49 ஒருத்தி யெனத் துணிந்தவழி ஒருவன் அல்லன் ஒருத்தி 25 ஒருவர் அவர் 189 ஒருவர் வந்தார் 188 ஒருவன் எனத் துணிந்தவழி ஒருத்தி அல்லள் ஒருவன் 25 ஒரு விரல் காட்டி நெடிதோ குறிதோ என்பது வினா வழுஉ 13 ஒல்லென ஒலித்தது 434 ஒழுகு கொடி 311 ஒன்றுகொல்லோ பல கொல்லோ செய் புக்க பெற்றம் 24 ஓ ஓஓ பெரியன் 251, 256 ஓ கொண்டார் 246 ஓ தந்தார் 246 ஓர் ஆவினையும் எம் அன்னை போயினள் 27 ஓர் ஆவினையும் எம் அன்னை வந்தாள் என்ப 27 க கடந்தான் நிலத்தை 99, 101 கடந்தான் நிலம் 101 கடலொடு காடொட்டாது 97 கடவுள் பரவினார் 376 கடிசூத்திரத்திற்குப் பொன் 74 கடித் தளிர் 377 கடிது வந்தார் 377 கடுங்கண் யானை 377 கடுத் தின்றான் 110 கடுவன் முதுமகன் 193 கடுவுங் கைபிழி யெண்ணெயும் பெற்றமையான் மயிர் நல்லவாயின 21 கண் கதழ எழுதினார் 384 கண் கழீஇ வருதும் 17 கண் குறியரா யிருந்தார் 17 கண் சிவந்தன 367 கண்டை கண்டை 420 கண்ணாற் கொத்தை 73 கண்ணுட் குத்தினார் 81 கண்ணைக் குத்தினார் 81 கண் நல்லள் 62 கபில பரணர் 415 கபிலரது பாட்டு 76 கமுகந் தோட்டம் 49 கரும்பிற்கு வேலி 74 கரும்பு வேலி 407 கருவூர்க்குக் கிழக்கு 106 கருவூர்க்கு வழியெதென்றார்க்குப் பருநூல் பன்னிரு தொடியென்பது செப்பு வழுஉ 13 கருவூரின் கிழக்கு 106 கருவூரின் கிழக்கு மருவூரின் மேற்கு 75 கள்ளரின் அஞ்சும் 75 கள்ளரை யஞ்சும் 72 கறு கறுத்தது 48 கறுத்து வந்தார் 366 கன்னி எயில் 27 கன்னி ஞாழல் 27 காக்கையிற் கரிது களம்பழம் 75 காட்டது யானை 94 காட்டுச் சாரோடும் 77 காணத்தாற் கொண்டவரிசி 73 காத்தை காத்தை 420 காது நல்லள் 62 காரைக்காடு 49 காலன் கொண்டான் 60 காலெனா 284 கான்மேல் நீர்பெய்து வருதும் 436 கிளியை ஓப்பும் 72 குதிரைத்தேர் 79 குதிரை மேல் இருந்து கோல்தா என்றால் மத்திகைக் கோலாமாகலானும் சுள்ளற் கோலாமாகலானுஞ் செல்லும் 53 குதிரை வந்தது 168 குதிரை வந்தன 168 குரிசில் வந்தது 57 குருடு வந்தது 57 குருத்துளி பொழிந்தது 296 குழக்கன்று கடிதியாத்தாள் 305 குழல் கேட்டான் 114 குழவி அழுதது 57 குழைகொண்டு கோழி யெறியும் வாழ்க்கையர் 452 குழையை யுடையன் 72 குளம் பின்று 8 குற்றி கொல்லோ மகன் கொல்லோ தோன்றுகின்ற உரு 24 குற்றி யல்லன் மகன் என் புழிக் குற்றியின் அல்லன் என்று ஐந்தன் உருபு விரித்து உரைக்க 25 குற்றிளை நாடு 49 குறுந்தாட் கோழி 397 குன்றக் கூகை 407 குன்றத்துக்கண் ணிருந்தான் 99 கூழமர்ந் துண்டாள் 374 கூரியதொரு வாள்மன் 247, 428 கூழ் உண்டான் சோறும் உண்ணா நின்றான் 431 கூழ் உண்ணாநின்றான் சோறும் உண்பன் 431 கூழ்கண்டு வயாவினர் 365 கூழுக்குக் குற்றேவல் செய்யு மென்பது 74 கெழீஇயிலி வந்தது 57 கேட்டை கேட்டை 420 கைக்கு யாப்புடையது கடகம் 74 கையிற்று வீழ்ந்தான் 226 கையிறுபு வீழ்ந்தான் 226 கையிறூஉ வீழ்ந்தான் 226 கையும் மெய்யும் ஆய்ந்திருந்தார் 324 கொடி ஆடிற்று 109 கொடியாடித் தோன்றும் 234 கொடுத்தான் சாத்தற்கு 99 கொடும்புற மருது வந்தது 180 கொடும்புற மருது வந்தாள் 180 கொடும்புற மருது வந்தான் 180 கொப்பூழ் நல்லள் 62 கொல்யானை 68, 409 கொள்ளென்று கொண்டான் 254 கொள்ளெனக் கொண்டான் 253, 432 கொற்றன் என்றா 285 கொற்றன் நல்லனோ சாத்தன் நல்லனோ என்று கூறிய விடத்துக் கொற்றனிற் சாத்தன் நல்லன்; சாத்தனிற் கொற்றன் நல்லன் என்றிறுக்க 16 கொற்றன் மயிர் நல்லவோ சாத்தன் மயிர் நல்லவோ என்று வினாயினான் அவ் விடத்துக் கொற்றன் மயிரிற் சாத்தன் மயிர் நல்ல, சாத்தன் மயிரிற் கொற்றன் மயிர் நல்ல என்றிறுக்க 16 கொற்றன் வந்தான் அவற்குச் சோறு கொடுக்க 38 கொற்றன் வருதற்கும் உரியன் 250 கொற்றனெனா 285 கொன்னே வந்து கொன்னே போயினார் 249 கோட்டது நுனியைக் குறைத்தான் 85 கோட்டு நூறு 86 கோட்டை நுனிக்கண் குறைத்தான் 85 கோட்டை நுனியைக் குறைத்தான் 85 கோடில 216 கோடின்று 8, 216 கோடுடைத்து 216 கோதை வந்தது 180 கோதை வந்தாள் 180 கோதை வந்தான் 180 ச சாத்தற்குச் சோறு 74 சாத்தற்கு நெடியன் 106 சாத்தற்குப் படுபொருள் கொற்றன் 74 சாத்தற்கு மகளுடம்பட்டார் 74 சாத்தன் என்றா 285 சாத்தன் ஓதல் வேண்டும் 238 சாத்தன் கையெழுதுமாறு வல்லன், அதனான் தன் ஆசிரியன் உவக்கும் 40 சாத்தன் கையெழுதுமாறு வல்லன், அதனான் தன் தந்தை உவக்கும் 40 சாத்தன், கொற்றன், பூதன் என மூவரும் வந்தார் 285 சாத்தன் யாழ் எழூஉம் 170 சாத்தன் வந்தது 169, 178 சாத்தன் வந்தான் 153, 169, 178 சாத்தன், வந்தான், கொற்றன் வந்தான், வேடன் வந்தான், அம் மூவரும் வந்தார், அம்மூவரும் வந்தமை யான் கலியாணம் பொலிந்தது 288 சாத்தன தாடை 99 சாத்தன தியற்கை 76 சாத்தனது கலம் 76 சாத்தனது கிழமை 76 சாத்தனது சொல் 76 சாத்தன துடைமை 76 சாத்தனது நிலை 76 சாத்தனது வாழ்ச்சி 76 சாத்தனது வாள் 76 சாத்தனின் நெடியன் 106 சாத்தனும் வந்தான் 430 சாத்தனெனா 285 சாத்தனே, கொற்றனே பூதனே என மூவரும் வந்தார் 285 சாத்தனொடு வந்தான் கொற்றன் 73 சாத்தா உண்ணாயோ என்று வினாயி னாற்கு உடன்படுதல், மறுத்தல் என்று ஒன்றே இறுத்தற்பாலது 14 சாத்தா உறையூர்க்குச் செல்லாயோ வெனின் கடமுடையார் வளைப் பார் பகைவர் எறிவர் 15 சாத்தா உறையூர்க்குச் செல்லாயோ வெனின் கால் முள்குத்திற்று தலை நோகின்றது 15 சாத்தா உறையூர்க்குச் செல்லாயோ வெனின் நீசெல் 15 சாத்தி சாந்தரைக்கும் 170 சாத்தி வந்தது 177 சாத்தி வந்தாள் 177 சான்றார் மகன் 423 சான்றாருழைச் சென்றான் 77 சிவந்து நோக்கினார் 366 சுடுகாட்டை நன்காடென்றல் 17 சூதின்கட் கன்றினான் 82 சூதினைக் கன்றினான் 82 சூதினைக் கன்றும் 72 செஞ்செவிய வெள்ளொக்கலர் 452 செத்தாரை துஞ்சினார் என்றல் 17 செய்யை நோக்கும் 72 செலவழுங்கினார் 344 செவ்வாய் எழுந்தது 58 செவியிலி 216 செவியிலி வந்தது 180 செவியிலி வந்தாள் 180 செவியிலி வந்தான் 180 செவியின்று 216 செவியுடைத்து 216 செவியுடைய 216 செழுஞ் செந்நெல் 346 சென்மதி பெரும 269 சென்றதே சென்றதே 419 சொல் நன்று 58 சோழனா டென்பதைச் சோணாடு என்பது 17 சோழன் நலங்கிள்ளி 41 சோறு அட்டது. 241 சோறுண்பான் கூழுமுண்டான் 431 சோறுதா 440 ஞ ஞாணை அறுக்கும் 72 ஞாயிறு எழுந்தது 58 ஞாயிறு பட்டு வந்தான் 450 ஞாயிறு பட வந்தான் 450 த தட்டுப் புடைக்கண் வந்தான் 77 தடந்தோள் 314 தந்தை வந்தது 178 தந்தை வந்தான் 178 தம்முனே 126 தமிழ் நாட்டு மூவரும் வந்தார் 250 தமிழ் நாட்டு மூவேந்தரும் வந்தார் 33 தாம் வந்தன 181 தாம் வந்தார் 181 தாய்க்குக் காதலன் 74 தாய் மூவர் 407 தாய் வந்தது 177 தாய் வந்தாள் 177 தாயை ஒக்கும் 72 தாயைக் கொன்றான் நிரயம் புகும் 237 தான் வந்தது 182 தான் வந்தாள் 182 தான் வந்தான் 182 திங்கள் எழுந்தது 58 தினையிற் கிளியைக் கடியும் 98 தூணிப் பதக்கு 411 தெங்கினது காய் தெங்கு 112 தெங்கு தின்றான் 110 தொடியரை 411 தோள் நல்லள் 62 ந நகுபு வந்தான் 225 நங்கை முலையிரண்டும் வீங்கின 33 நங்கை வாழி 124 நம் அரசன் ஆயிரம் யானையுடையன் 50 நம் எருதுள் ஐந்தனுள் யாது கெட்டது? 32 நம்பிக்கு மகன் 90 நம்பி கண்ணிரண்டும் நொந்தன 33 நம்பி நூறு எருமையையுடையவன் 50 நம்பி வந்தான் அவற்குச்சோறு கொடுக்க 38 நம்பி வாழி 124 நரகர் வந்தார் 4 நரகன் வந்தான் 4 நரகி வந்தாள் 4 நரியன்று 216 நயார் வந்தார் 265 நளியிருள் 317 நன்றும் அன்று தீதும் அன்று 250 நன்றே நன்றே 277 நன்றோ, அன்று; தீதோ, அன்று 251 நாகர்க்குப் பலி 95 நாகர் பலி 95 நாகரது பலி 95 நாட்டைச் சிதைக்கும் 72 நாட்டைப் பழிக்கும் 72 நாமுசாக் கொள்ளாமோ 364 நாய்க்கு நட்புடையன் 74 நாய்கொல்லோ நரிகொல்லோ 263 நாயாற் கோட்பட்டான் 73 நாயொடு நம்பி வந்தான் 87 நாலாட்டையான் 210 நாவினை வளைக்கும் 72 நிலங்கடந்தான் 100, 407 நிலத்தின தகலம் 76 நிலத்தைக் கடந்தான் 99 நிலம் வலிது 19 நிலனும் நீரும் தீயும் வளியும் 250 நிலனும் நீரும் தீயும் வளியும் வெளியும் நல்ல 282 நிலனென்றா 284 நிலனெனா 284 நிலனே நீரே தீயே வளியே ஆகாயத் தோடைந்தே பூதம் 289 நிலனே நீரே தீயே வளியே ஆகாயமே 252 நின்றை நின்றை 420 நினக்குத் தரும் காணம் 29 நினக்கு வருங் காணம் 29 நீஇர் உண்ணும் இல்லம் 230 நீ இல்லை 220 நீ உண்ணும் இல்லம் 230 நீ செல்க 221 நீ செய்ம்மன 220 நீயும் நின் படைக்கலமுறீ சாரீஞ் 43 நீயேஎ கொண்டாய் 256 நீயே கொண்டாய் 252 நீஇர் செல்க 221 நீரென்றா 284 நீரெனா 284 நீலத்தையுடைய ஆடை நீலம் 112 நீ வந்தாய் 186 நீ வெம்மையள் 328 நீ வேறு 221 நுந் நாடி யாது? 31 நுந் நாடி யாது? என்றால் தமிழ் நாடென்றல் 13 நூலைக் கற்கும் 72 நெடியனும் வலியனும் 250 நெடுங்கழுத்தல் வந்தது 179 நெடுங்கழுத்தல் வந்தன 179 நெடுங்கழுத்தல் வந்தாள் 179 நெடுங்கழுத்தல் வந்தான் 179 நெடுவெண்மதி 148 நெல்லைத் தொகுக்கும் 72 நெற்குப்பை 86 நெறிக்கட் சென்றான் 82 நெறியைச் செல்லும் 72 நெறியைச் சென்றான் 82 ப பசப்பித்துச் சென்றார் 301 பசுப் போல்வானைப் பசு என்ப 114 படர்மலி வெற்பர் 334 படையது குழாம் 76 படையை வெகுளும் 72 பண்டு காடுமன் 153, 247 பண்ணுக்குத் தக்கது பாடல் 74 பணைத்துப்போய் வீழ்ந்தது 333 பத்தானும் எட்டானும் கொடு 250 பத்துங் கொடான் 280 பயறல்ல 216 பயறுள 216 பயறுளவோ வணிகீர் என்றால் உழுந்தல்ல தில்லை என்க 35 பயிர் நல்ல வாயின 20 பவழக்கோட்டு நீலயானை சாத வாகனன் கோயிலுள்ளும் இல்லை 34 பழுதே வந்தார் 318 பாம்பு பாம்பு 405 பாம்பு பாம்பு பாம்பு 418 பார்ப்பனச் சேரி 49 பார்ப்பார் வந்தார் 265 பார்ப்பான் கண்ணன் 41 பாவை போல்வாளைப் பாவை என்ப 114 புருவம் நல்லன் 62 புலிகொல் யானை 91 புலிகொல் யானைக் கோடு வந்தன 92 புலிகொல்யானை கிடந்தது 92 புலிகொல்யானை தோன்றும் 92 புலிபோற்றிவா வாழி ஐய 93 புலியின் அஞ்சும் 96 புலியை அஞ்சும் 96 புலிவிற் கெண்டை 411 பூதன் என்றா 285 பூதனே 285 பூ நட்டு வாழும் 110 பூவிற்குத் தக்கது வண்டு 74 பெண்மகன் வந்தாள் 191 பெண்மை அடங்கிற்று 57 பெருங்கால் யானை வந்தது 179 பெருங்கால் யானை வந்தன 179 பெருங்கால் யானை வந்தாள் 179 பெருங்கால் யானை வந்தான் 179 பெருந்தேவி பொறையுயர்த்த கட்டிற்கண் நால்வர் மக்கள் உளர் 50 பெருவிறல் வந்தது 57 பேடியர் வந்தார் 4 பேடி வந்தது 57 பேடி வந்தாள் 4 பேடி வந்தான் 4, 12 பேய்தீர்த்தான் 312 பைங்கூழ் நல்ல 22 பொற்கொல்லர் பொன்னைப் பறி என்றல் 17 பொறையுயிர்த்தார் 17 பொன்னை நிறுக்கும் 72 போயிற்றே போயிற்றே 419 ம மக்கட்குப் பகை பாம்பு 74 மங்கலம் என்பதோர் ஊர் உண்டு போலும் மழநாட்டுள் 273 மதகளிறு 371, 372 மயிர் நல்ல வாயின 20, 22 மரத்தைக் குறைக்கும் 72 மரத்தைக் குறைத்தான் 72 மரத்தைக் குறையான் 103 மரம் குழைத்தது 227 மருந்து உண்டு நல்லனாயினான் 426 மலை நிற்கும் 235 மலையொடு பொருத மாஅல்யானை 73 மழை பெய்தென உலகம் ஆர்ந்தது 227 மழை பெய்ய எழுந்தது 227 மற்றோ மற்றோ 405, 418 மனையிழந் தழுங்கினார் 344 மனைவியைக் காதலிக்கும் 72 மா காய்த்தது 53 மாடத்தின் கீழிருந்தான் 77 மாடத்தின் மேலிருந்தான் 77 மாடத்துக்கண் ணிருந்தான் 77 மாதர் வண்டொடு சுரும்பிசைத்தது 322 மா தளிர்த்தது 53 மா பூத்தது 53 மாரிக்கு வந்தான் 106 மாரியுள் வந்தான் 77, 106 மா வீழ்ந்தது 54 மாவும் மருதும் ஓங்கின 53 மாவும் மரையும் புலம்படர்ந்தன 53 முடக்கொற்றன் வந்தது 178 முடக்கொற்றன் வந்தான் 178 முடக்கொற்றி வந்தது 177 முடக்கொற்றி வந்தாள் 177 முடத்தி வந்தது 177 முடவன் வந்தது 169, 178 முடவன் வந்தான் 169, 178 முத்தொடு முழாக் கோத்து 73 முப்பத்து மூவரும் வந்தார் 4 முயற்சியிற் பிறத்தலின் ஒளி நிலையாது 75 முலை நல்லள் 62 முழுக்கறை பெய்தான் 320 முறைக் குத்தினார் 97 மூக்கு நல்லன் 62 மேற்சேரிக் கோழி அலைத்ததெனக் கீழ்ச்சேரிக் கோழி அலைப்புண்டமை சொல்லாமையே முடிந்ததாம். 61 மைந்தன் வருக 42 ய யாட்டுப் பிழுக்கை 437 யாட்டுளான் இன்னுரை தாரான் 443 யா பன்னிருவர் உளர் போலும் மாணாக்கர் அகத்தியனார்க்கு 274 யாம் உண்ணும் இல்லம் 230 யாம் பண்டு விளையாடும் கா 243 யாம் பண்டு விளையாடுவது இக்கா 242 யார் அவர் 207 யார் அவள் 207 யார் அவன் 207 யாழ் கேட்டான் 114 யாழும் குழலும் பறையும் இயம்பினார் 47 யாறு ஒழுகும் 235 யான் இல்லை 220 யான் உண்ணும் இல்லம் 230 யான் உனக்கியாதும் ஆகேனோ 275 யான் செய்ம்மன 220 யான் செல்க 221 யான் வேறு 220 யானைக்குக் கோடு கூரிது 106 யானைக் கோடு 407 யானைக் கோடு உண்டு 68 யானைக் கோடு செல்க 68 யானைக் கோடு பத்து 68 யானைக் கோடு யாது 68 யானைக் கோடு வீழ்ந்தது 68 யானைக் கோடு வெளிது 68 யானையது கோட்டைக் குறைத்தான் 83 யானையது கோட்டை நுனிக்கண் குறைத்தான் 98 யானையது கோடு 76 யானையது கோடு கூரிது 106 யானையார் வந்தார் 265 யானையும் தேரும் ஆளும் எறிந்தார் 286 யானையை ஊரும் 72 யானையைக் கோட்டுக்கட் குறைத்தான் 84 யானையைக் கோட்டைக் குறைத்தான் 84 யானை வந்தது 179 யானை வந்தன 179 யானை வந்தாள் 179 யானை வந்தான் 179 யானோ கொண்டேன் 251, 429 வ வட்டப்பலகை 410 வடாது வேங்கடம் 211 வடுகரசர் ஆயிரவர் மக்களை யுடையர் 50 வடுகரசர்க்குச் சிறந்தார் சோழிய வரசர் 74 வண்ணக்கர் காணத்தை நீலம் என்றல் 17 வண்ணான் சாத்தன் 41 வந்தான் சாத்தனொடு 101 வயக்கஞ் சால் சீர்த்தி 306 வலியான் சாத்தனின் 99 வரைவீழ் அருவி 407 வளியென்றா 284 வறிது நெறியொரீஇ 330 வாசுதேவன் வந்தான் 4 வாணிகத்தான் ஆயினான் 73, 88 வாணிகத்தின் ஆயினான் 88 வாம்புரவி 233 வாய்க்காலைச் சாரும் 72 வாய்க்குத் தக்கது வாய்ச்சி 106 வாய்பூசி வருதும் 436 வாயாற் றக்கது வாய்ச்சி 73 வாயான் தக்கது வாய்ச்சி 106 வார்கயிற் றொழுகை 311 வானானாய உபகாரம் நோக்கி வாழும் 89 விண்ணென விசைத்தது 433 வியலிரு வானம் 358 விரலை முடக்கும் 72 விழும முற் றிருந்தார் 347 விற்பற்றி நின்று கோல் தா என்றால் கணைக் கோலின் மேல் நிற்கும் 53 வெள்ளி எழுந்தது 58 வேந்து செங்கோலன் 59 வேந்து வாழி 124 வேலா லெறிந்தான் 73 வேலியைப் பிரிக்கும் 72 செய்யுள் நிரல் மேற்கோள் (நூற்பா எண்) அ அட்டி லோலை (நற். 300) 445 அடகு புலால் பாகு பாளிதமும் உண்ணான் 279 அண்டர் கயிறு அரி எருத்திற் (குறுந். 117) 309 அதிர்கண் முரசம் 310 அதுமற் கொண்கன் றேரே 290 அது மன் (புறம். 147) 244 அந்தில் கச்சினன் (அகம். 76) 262 அம்ப லூரு (குறுந். 51) 233 அம்ம வாழி தோழி (ஐங். 31) 271 அரிமயிர்த் திரண் முன்கை (புறம். 11) 350 அரும்பிணை அகற்றி வேட்ட ஞாட்பினும் 332 அலமர லாயம் (ஐங். 64) 304 அவனணங்கு நோய் 39 அழுங்கன் மூதூர் (நற். 203) 343 அறாஅ யாண ரகன்றலை (அகம். 44) 373 ஆ ஆங்கக் குயிலும் மயிலுங் காட்டி 272 ஆர்த்தர் கொண்மார் 7 ஆர்த்தர் கொண்மார் வந்தார் 204 ஆரியர் துவன்றிய (பதிற்றுப். 11) 326 ஆற்றுட் செத்த எருமை ஊர்க்குயவற்கு இழுத்தல் கடன் 443 ஆன் பயமுந் தூக்கினெ 300 இ இரவரன் மாலையன் (குறி. பாட்டு 239) 307 இலம்படு புலவர் (மலைபடு. 576) 354 இளம்பாண்டில் தேரூரச் செம்மாந்தது போல் மதைஇனள் (கலித். 109) 372 உ உப்பின்று புற்கை யுண்கமா 232 உருகெழு தோற்றம் (புறம். 58:17) 389 உருவக் குதிரை (அகம். 1) 295 உவக்குந ளாயினும் (அகம். 203) 299 உறந்த விஞ்சி யுயர்நிலை மாடம் 341 உறுகால் (நற். 300) 153 உறுகா லொற்ற வொல்கி (நற். 300) 292, 294 ஊ ஊன்றுவை கறிசோ (புறம். 14) 46 எ எய்யா மையலை (குறிஞ். 8) 336 எல்வளை (புறம். 24) 264 எற்றென்னுடம்பினெ ழினநலம் 258 எற்றேற்ற மில்லாருள் யானேற்ற மில்லாதேன் 258 ஏ ஏஎ வம்பல் மொழிந்தனள் யாயே 267 ஏஎ எஎ வம்பன் மொழிந்தனள் 405 ஏக லடுக்கம் (அகம். 52) 298 ஏரின்உழா அர் (குறள். 14) 450 ஏனோரோ தஞ்சம் இருபிறப்பினோர் வெகுளின் வானோர்க்கும் வாழ்தலரிது 261 ஐ ஐதே காமம் யானே (நற். 143) 379 ஒ ஒருவ ரொருவரைச் (நாலடி. 309) 190 ஒருவி ரொருவி (மலைபடு. 218) 455 ஓ ஓண்டூவி நாராய் 148 ஓய்கலை யொருத்தல் 324 ஓர்கமா தோழியவர் (நற். 145), (அகம். 273) 290 ஒல்லென்று ஒலிக்கும் (ஐந். 28) 254 க கடல்போற் றோன்றல காடிறந் தோரே (அகம். 1) 252, 281 கடிகா (களவழி. 29) 377 கடிமிளகு தின்ற கல்லா மந்தி 378 கடியுடை வியனகர் (புறம். 95) 383 கடுங்கண் யானை (அகம். 63) 377 கடுஞ்சூ டருகுவன் (அகம். 110) 377 கடுத்தன ளல்லளோ வன்னை 378 கடும்பகல் (கலி. நெய். 28) 377 கடும்புனல் (குறுந். 103) 377, 389 கடுவன் முதுமகன் 193 கண்டிகு மல்லமோ கொண்க (ஐங்குறு. 121) 270 கண்ணும் படுமோ வென்றிசின் யானே (நற். 61) 270 கண்ணே நோக்கி வாளிழந் தனவே (குறுந். 44) 361 கமஞ்சூன் மாமழை யிசைக்கும் (முருகு. 7) 349 கயந்தலை மடப்பிடி (நற். 137) 316 கயலற லெதிரக் கடும்புனற் சாஅய் (நெடு. 18) 324 கயவெள் ளருவி (அகம். 38) 314 கருங்கட் டாக்கலை (குறுந். 69) 339 கருங்கால் வெண்குருகு (நற். 54) 148 கருவி வானம் கதழுறை சிதறி (அகம். 4) 348 கலங்கொண்டனங் கள்ளென்கோ (யாப். விருத்தியுரை 93ஆம் நூற்பா) 290 கலம்பெறு கண்ணுள (மலைபடு. 50) 455 கலிகெழு மூதூர் (அகம்.11) 343 கழுமிய ஞாட்பினுள் மைந் திழந்தாரிட்ட (களவழி. 11) 345 காட்டுச் சாரோடுங் குறுமுயால் 148 காப்பும் பூண்டிசிற் கடையும் போகலை (அகம். 7) 269 காமஞ் செப்பாது கண்டது மொழிமோ (குறுந். 2) 269 கார்மன்ற என்பவள் கண்ணுள்ளே காதலர் தேர்மன்றத் தோன்றியது 260 காவ லோனைக் களிறஞ் சும்மே 105 கிளையரில் நாணற் கிழங்குமணற்கு ஈன்ற (அகம். 212) 102 கிழவோ டேஎத்து (இறை. கள. 8) 77 குறவரும் மருளும் குன்றத்துப் படினே (மலைபடு. 275) 250 குறையறப் பூத்த கொடிமுல்லாய் 117 குன்றத்து மேல குவளை 403 கெடவர லாயம் 313 கேழ்கிள ரகலத்து (மதுரைக். 493) 296 கைதொழூஉப் பழிச்சி (மதுரைக். 694) 376 கொடியுவணத்தவரரோ 274 கொடும்பூண் கவைஇய கோல மார்பு 351 கொய்தளிர்த் தண்டலை 453 கொள்ளை மாந்தரி னானது கவரும் (அகம். 3) 356 கொன் முனை யிரவூர் போலச் சிலவா குகநீ துஞ்சு நாளே(குறுந் . 91) 249 கொன்வரல் வாடை நின தெனக் கொண்டேனோ 249 கொன்னூர் துஞ்சினு மியாந் துஞ் சலமே (குறுந். 138) 246, 249 கோடுபல முரஞ்சிய கோளி யாலம் (மலைபடு. 268) 327 ச சாரல் நாட நீவர லாறே 402 சாரல் நாடன் சாயன் மார்பு (பதிற். 16) 319 சிறியகட் பெறினே எமக்கீயு மன்னே (புறம். 235) 247 சிறுபைந் தூவிச்(அகம். 57) 26 சிறுமை யுறுப செய்பறி யலரே (நற். 1) 335 செங்கால் நாராய் 117 செழுஞ் செந்நெல் 346 செழுந்தடி தின்ற செந்நா யேற்றை 346 சென்றீ பெருமநிற் 290 நகைக்குநர் யாரோ (அகம். 46) 445 சென்றோ ரன்பிலர் (அகம். 31) 208 சேர்ந்துசெறி குறங்கு (நற். 170) 357 சேற்றுநிலை முனைஇய (அகம் 46) 380 த தச்சன் செய்த சிறுமா வையம் (குறுந். 41) 73 தசநான் கெய்திய (நெடுநல். 11) 396 தடமருப் பெருமை (நற். 120) 315 தண்டுறை யூரயாங் கண்டிக 269 தண்ணந்துறைவன் (குறுந். 269) 397 தண்பெரும் பந்தர்த் தருமணல் ஞெமிரிய (நற். 143) 355 தவச்சேய் நாட்டா ராயினும் (நற். 115) 294 தாவி னன்பொன் (அகம். 212) 339 திரிதிரி சுவாகா 443 தினைத் தாளன்ன (குறுந். 25) 456 துனைபறை நிவக்கும் (மலைபடு. 55) 309 தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது (அகம். 36) 30 தெவ்வர் தேயத்து (புறம். 6) 340 தேவரே தின்னினும் வேம்பு கைக்கும் (நாலடி. 2) 250 ந நகூஉப் பெயர்ந்தோள் (அகம். 248) 208 நயந்துநாம் விட்ட நன்மொழி நம்பி (அகம். 198) 323 நல்லறிவுடையன், செவ்வியன் சான்றார் மகன் 423 நளிமலை நாடன் (புறம். 150) 314 நன்றும் அரி துதுற் றனையாற் பெறும (அகம். 10) 338 நனந்தலை யுலகு (குறுந். 6) 370 நனவுப்புகு விறலியிற் றோன்று நாடன் (அகம். 82) 370 நனிசேய்த் தன்றவன் (மலைபடு. 487) 294 நாடுகாண மேன்மே லுகமின் 299 நாமவருந்த துறைபேடந்து (அகம். 18) 359 நிதியந் துஞ்சும் (அகம். 227) 396 நில்லாது பெயர்ந்த (அகம். 110) 455 நிழத்த யானை (மதுரைக். 303) 324 நீர்க்கோழி கூய்ப் பெயர்க்குந்து (புறம். 395) 287 நீர்த்தெவு நிரைத்தொழுவர் (மதுரைக். 89) 338 நீலுண் டுகிலிகை கடுப்ப 447 நொசி மருங்குல் 368 ப பசித்தேன் பழஞ்சோறு தாவென நின்றாள் 435 பணைத்தோள் (அகம். 1) 333 பருந்திருந் துயாவிளி பயிற்று மியாவுயர் நனந்தலை (அகம். 19) 363 பல்குரைத் துன்பங்கள் சென்று படும் (குறள். 1045) 267 பாசிலை (புறம். 54) 397 பாணன் பறையன் (புறம். 335) 51 பிரியின் வாழாது என்போ தெய்ய 274 புண்ணுமிழ் குருதிப் புனல் பாய்ந்து (குறிஞ்சிப். 172) 355 புரைய மன்ற புரையோர் கேண்மை (நற். 1) 295 புலம்புவிட் டிருந்தார் (மலைபடு. 49) 325 புனறரு பசுங்காய் (குறுந். 292) 30 புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி (அகம். 56) 369 பெற்றாங் கறிகதில் லம்ம விவ்வூரே (குறுந் 14) 248 பெறுகதில் அம்ம யானே (குறுந். 14) 255 பேணினெ னல்லனோ மகிழ்ந (அகம். 16) 332 பேரிசை நவிர மேஎ யுறையும் (மலைபடு. 82) 323 பையு ணல்யாழ் (அகம். 216) 335 ம மண்டில மழுங்க மலைநிறங் கிளர (அகம். 260) 288 மணங்கமழ் வியன்மார்பு (அகம். 22) 297 மரையிதழ் புரையு 447 மழகளிறு (புறம். 38) 305 மழவரோட்டிய (அகம். 1) 397 மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள் (குறுந். 87) 359 மாக்கட னிவந்தெழுதரு (புறம். 4) 18 மாதர் வாண்முக மதைஇய நோக்கே (அகம். 130) 371 மாயக் கடவுட் குயர்கமா வலனே 268 மெல்லம் புலம்ப கண்டிகும் 269 மோயினள் உயிர்த்த காலை (அகம். 5) 450 ய யாட்டுளான் இன்னுரை தாரான் 443 யாணது பசலை என்றனன் (நற். 50) 375 யாரஃ தறிந்திசி னோரே (குறுந். 18) 270 யானுமென் னெஃகமுஞ் சாறும் 43 வ வடவேங்கடந் தென்குமரி 18 வடுக ரருவாளர் 51 வந்தாய் மன்ற (அகம். 80) 209 வம்ப நாரை (அகம். 190) 321 வம்ப வடுகர் (அகம். 375) 321 வயக்கஞ்சால் சீர்த்தி 306 வரிவளை துவைப்ப (புறம். 158) 352 வருகதில் அய்ய (அகம். 276) 244 வருகதில் லம்ம (அகம். 276) 246 வருகதில் லம்ம வெஞ்சேரி சேர (அகம். 276) 246 வருந்தினை வாழியென் நெஞ்சம் (அகம். 19) 148 வருமே சேயிழை அந்திற் (குறுந். 293) 262 வார் கயிற் (அகம். 173) 311 வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின் மொழி யரிவையைப் பெறுகதில் லம்ம யானே (குறுந். 14) 248 வாள்வரி வேங்கை வயப்புலி 360 வாளுடை யெறுழ்த்தோள் (அகம். 24) 382 வான் நோக்கி வாழும் (குறள். 542) 89 விதிர்ப்புற்றுக் கண்ணிமையார் 310 வில்லோன் காலன (குறுந். 7) 192 விளங்குமணிக் கொடும்பூண் ஆய் (புறம். 130) 126 விளிந்தன்று மாதவ (நற். 178) 274 வினவி நிற்றந்தோன் (அகம். 48) 208 வெண்கோட்டி யானை (குறுந். 75) 18 வெயில்புறந் தரூஉ (மலைபடு. 374) 297 வெரிநி னோதி 447 வெறுத்தார் (புறம். 53) 341 வையிலை நெடுவேல் 381 வையைக் கிறைவன் 453 கலைச்சொல் நிரல் நூற்பாவழி (நூற்பா எண்) அ அஃறிணை 1, 3 அஃறிணை இயற்பெயர் 168 அஃறிணைக் கிளவி 43 அஃறிணைக்கு உரிமை 198 அஃறிணை விரவுப்பெயர் 147 அச்சக் கிளவி 96 அசைக்குங் கிளவி 419 அசைச்சொல் நீட்டம் 150 அசைநிலைக் கிளவி 245, 262, 266, 274 அடிமறிச் செய்தி 401 அடிமறி மொழிமாற்று 398 அண்மைச் சொல் 124, 128 அதுச்சொல் வேற்றுமை 210 அதுவென் வேற்றுமை 83, 90 அதுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி 76 அவையல் கிளவி 436 அளபெடைப் பெயர் 132, 138, 146 அளவின் பெயர் 411 அறியாப் பொருள் 31 அன்மைக் கிளவி 25 அன்மொழித் தொகை 406, 412 ஆ ஆக்கக் கிளவி 22 ஆக்கமொடு கூறல் 20 ஆகுபெயர்க் கிளவி 110 ஆடியற் பெயர் 162 ஆடூஉ வறிசொல் 2, 5 ஆண்மை யறிசொல் 12 ஆண்மை இயற்பெயர் 173 ஆண்மைச் சினைப்பெயர் 174 ஆண்மை சுட்டிய சினைமுதற் பெயர் 175 ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி 4, 12 ஆண்மைமுறைப் பெயர் 176 ஆய்என் கிளவி 209 ஆய்தப் பெயர் 164 ஆரைக் கிளவி 265 ஆற்றுப்படை 455 இ இகர இறுபெயர் 122 இசைநிறைக் கிளவி 245 இசைப்படு பொருள் 418 இடைச்சொற் கிளவி 156 இடைநிலை 232 இதுசெயல் வேண்டும் என்னுங் கிளவி 238 இயற்கைப் பொருள் 19 இயற்சொல் 391, 392 இயற்பெயர் 171, 172 இயற்பெயர்க் கிளவி 38, 41, 193 இரட்டைக் கிளவி 48 இரவின் கிளவி 438 இருதிணை 10 இருதிணைக்கும் ஓரன்ன உரிமை 198 இருதிணைச் சொல் 169, 217 இருதிணைப் பிரிந்த ஐம்பால் கிளவி 158 இருபாற் கிளவி 215 இருபாற் சொல் 3 இருபெயர் 411 இருபெய ரொட்டு 110 இருமொழி மேலும் ஒருங்குடன் நிலையல் 413 இருவயின் நிலையும் வேற்றுமை 97 இற்றெனக் கிளத்தல் 19 இறைச்சிப் பொருள் 193 இன்எனனப் பெயரிய வேற்றுமைக் கிளவி 75 இனச்சுட் டில்லாப் பண்புகொள் பெயர் 18 ஈ ஈஎன் கிளவி 439 உ உடன்மொழிப் பொருள் 185 உடனிலை அறிதல் 451 உடைப் பெயர் 162 உம்மை எச்சம் 430 உம்மைச் சொல் 250 உம்மைத் தொகை 406, 411, 415 உம்மை தொக்க எனாவென் கிளவி 284 உம்மை தொக்க பெயர் 412 உயர்திணை 1, 2, 4 உயர்திணைக்கு உரிமை 198 உரிச்சொல் கிளவி 156, 292 உருபுதொக வருதல் 100 உருபுதொடர்ந்து அடுக்கிய வேற்றுமைக் கிளவி 98 உருபுநிலை 70 உவமத் தொகை 408 உள்ளதன் நுணுக்கம் 324 உளஎன் கிளவி 216 உறழ்துணைப் பொருள் 16 உறுப்பின் கிளவி 57 எ எச்சக் கிளவி 280 எஞ்சுபொருட் கிளவி 279, 424, 433 எடுத்த மொழி 61 எண்ணியற் பெயர் 162, 411 எண்ணின் பெயர் 411 எண்ணுக்குறிப் பெயர் 165 எண்ணுத்திணை விரவுப்பெயர் 51 எதிர்மறை எச்சம் 429 எழுத்துப்பிரிந் திசைத்தல் 389 எழுவாய் வேற்றுமை 66 எற்றென் கிளவி 258 என்றென் கிளவி 254 என்னா மரபு 416 எனஎன் எச்சம் 432 எனவென் கிளவி 253 ஏதுக் கிளவி 88 ஐ ஐம்பால் 10 ஐயெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி 72 ஒ ஒடுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி 73 ஒப்பல் ஒப்புரை 73 ஒப்பில் போலி 273 ஒப்பி னாகிய பெயர்நிலை 165 ஒப்பொடு வரூஉம் கிளவி 160, 216 ஒருசொல் அடுக்கு 405 ஒருசொல் பலபொருள் 292 ஒருபெயர்ப் பொதுச்சொல் 49 ஒருபொருள் இருசொல் 453 ஒருபொருள் குறித்த வேறுசொல் 393 ஒருமைஇயற் பெயர் 173 ஒருமைச்சினைப் பெயர் 174 ஒருமை சுட்டிய சினைமுதற் பெயர் 175 ஒருமை சுட்டிய பெயர்நிலைக் கிளவி 454 ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவி 27 ஒருவினை ஒடுச்சொல் 87 ஒருவினைக் கிளவி 73 ஒழியிசை எச்சம் 428 ஒன்றறி கிளவி 8 ஒன்றறி சொல் 3 ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவி 27 ஒன்றுமார் வினை 82 ஓ ஓம்படை ஆணை 390 ஓம்படைக் கிளவி 93 க கடிஎன் கிளவி 377 கடிசொல் 446 கண்எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி 77 கண்ணென் வேற்றுமை 80, 84, 210 கயவென் கிளவி 316 கழுமென் கிளவி 345 காரணக் கிளவி 40 காலக் கிளவி 204, 216 காலங் கண்ணிய என்ன கிளவி 224 காலமொடு வரூஉம் வினைச்சொல் 198 கிளைநுதற் பெயர் 404 குடிப்பெயர் 162 குரை 267 குழுவின் பெயர் 162 குற்றிய லுகரம் 120 குறிப்பொடு வரூஉங் காலக் கிளவி 211 குறுக்கும்வழிக் குறுக்கல் 397 குறைச்சொற் கிளவி 447 குன்றிய லுகரம் 8, 200, 213 கொடுஎன் கிளவி 441, 442 கொடையெதிர் கிளவி 95 கொன்னைச் சொல் 249 ச சார்பென் கிளவி 80 சினை நிலைக்கிளவி 81 சினைநிலைப் பெயர் 162 சினைப்பெயர் 171, 172 சினைமுதற் கிளவி 16, 33 சினைமுதற் பெயர் 171, 172 சினையறி கிளவி 110 சுட்டிக் கூறல் 36 சுட்டுப்பெயர் 40 சுட்டுப்பெயர்க் கிளவி 38 சுட்டுமுதற் பெயர் 134, 139, 145 சுண்ணம் 398, 400 செஞ்சொல் 279, 431 செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலம் 394 செந்தமிழ் நிலம் 392 செய்கென் கிளவி 201 செய்தென் எச்சம் 234 செய்யு என் கிளவி 230 செய்யும் என்னும் கிளவி 222 செய்யுள் ஈட்டச் சொல் 391 செய்யுள் மருங்கு 456 செய்யென் கிளவி 444 செயப்படு பொருள் 241 செயற்கைப் பொருள் 20 செயற்படற்கு ஒத்த கிளவி 106 செறற்சொல் 57 சேய்மையின் இசைக்கும் வழக்கம் 149 சொல்என் எச்சம் 435 சொல்வேறு நிலைஇப் பொருள்வேறு நிலையல் 399 சொற்குறிப்பு 85 சொன்மை தெரிதல் 153 த தகுதி 17 தஞ்சக் கிளவி 261 தடஎன் கிளவி 315 தடுமாறு தொழிற்பெயர் 91 தருசொல் 29 தன்மைச் சுட்டல் 25 தன்மைச் சொல் 43, 199 தன்மை திரிபெயர் 57 தன்வினை உரைக்குந் தன்மைச் சொல் 200 தன்னுள் உறுத்த பன்மை 184 தாஎன் கிளவி 181, 182 தாவென் கிளவி 440 தானென் பெயர் 134 திசைச் சொல் 391 திசைச்சொற் கிளவி 394 திணைநிலைப் பெயர் 162 திரிசொல் 391 திரிசொற்கிளவி 393 தில்லைச் சொல் 248 தீர்ந்துமொழிக் கிளவி 106 துயவென் கிளவி 362 தெய்வஞ் சுட்டிய பெயர்நிலைக் கிளவி 4 தெரிந்த கிளவி 32 தெரிந்துமொழி கிளவி 56 தெரிபுவேறு நிலையல் 154 தொகுக்கும்வழித் தொகுத்தல் 397 தொகைமொழி நிலை 406 தொழிற்படக் கிளத்தல் 241 தொழிற்பெயர் 136 தொழின்முதல் நிலை 108 தொன்னெறி மரபு 106 தொன்னெறி மொழி 443 ந நளிஎன் கிளவி 317 நிரல்நிறை 398, 399 நிலப்பெயர் 162 நிறைப் பெயர் 447 நிறைப்யெர்க் கிளவி 411 நின்றாங்கு இசைத்தல் 59 நீட்டும்வழி நீட்டல் 397 நும்மின் திரிபெயர் 140 நோக்கல் நோக்கம் 89 ப பகுதிக் கிளவி 17 பண்பின் தொகை 406, 410 பண்பினாகிய சினைமுதற் கிளவி 216 பண்புகொள் கிளவி 216 பண்புகொள் பெயர் 110, 131, 137, 162, 165 பண்புதொக வரூஉங் கிளவி 412 பதினோ ரெழுத்து 10 பல்லோர் அறியும் சொல் 2 பல்லோர் படர்க்கை 222 பலசொல் ஒருபொருள் 292 பலபெயர் 411 பலர்சொல் நடை 415 பலரறி சொல் 7 பலவற்றுப் படர்க்கை 212 பலவறி சொல் 3, 9, 166 பற்றுவிடு கிளவி 106 பன்மை இயற்பெயர் 173 பன்மை உரைக்கும் தன்மைக் கிளவி 206 பன்மைச் சினைப்பெயர் 174 பன்மை சுட்டிய சினைநிலைக் கிளவி 62 பன்மை சுட்டிய சினைமுதற் பெயர் 175 பால்திரி கிளவி 191 பால்பிரிந் திசையா உயர்திணை 58 பான்மயக்குற்ற வையக் கிளவி 23 பால்வரை கிளவி 106, 170 பால்வரை தெய்வம் 58 பாலறி மரபு 208 பாலறி வந்த அஃறிணைப் பெயர் 164 பாலறி வந்த உயர்திணைப் பெயர் 159 பாலறி வந்த என்ன பெயர் 163, 167 பிண்டப் பெயர் 86 பிரிநிலை எச்சம் 425 பிரிவில் அசைநிலை 275 பிறிதுபிறி தேற்றல் 100 பிறிதுபொருள் கூறல் 35 பிறிதுபொருள் சுட்டல் 111 பின்மொழி நிலையல் 413 புணரியல் நிலை 245 புனிறென் கிளவி 369 பெண்டென் கிளவி 160 பெண்மை இயற்பெயர் 173 பெண்மைச் சினைப்பெயர் 174 பெண்மை சுட்டிய வுயர்திணை 4 பெண்மை சுட்டிய சினைமுதற் பெயர் 175 பெண்மை முறைப்பெயர் 176 பெண்மை அடுத்த மகனென் கிளவி 161 பெயர்க்குரி மரபு 285 பெயர்ச்சொற் கிளவி 106 பெயர்தோன்று நிலை 66 பெயர்நிலைக் கிளவி 41, 71, 161, 183, 188, 443 பெயர்ப்பய னிலை 67 பெயரின் தோன்றும் பாலறி கிளவி 11 பெயரினாகிய தொகை 68 பெயரெஞ்சு கிளவி 231, 233, 427 பொதுப்பிரி பாற்சொல் 44 பொருட் கிளவி 74 பொருண்மை தெரிதல் 153 பொருண்மை நிலை 154 பொருள்செல் மருங்கு 102 பொருள்தெரி நிலை 53 பொருள்நிலை மரபு 413 பொருள் புணர்ந்த கிளவி 15 பொருளொடு புணர்தல் 405 பொருளொடு புணராச் சுட்டுப் பெயர் 37 ம மக்கட் சுட்டு 1 மகடூஉ வறிசொல் 2, 6 மகளென் கிளவி 160 மகனென் கிளவி 160 மந்திரப் பொருள் 443 மயங்குமொழிக் கிளவி 242 மற்றென் கிளவி 257 மற்றையது என்னும் கிளவி 259 மன்றஎன் கிளவி 260 மன்னா பொருள் 34 மன்னைச் சொல் 247 மாஎன் கிளவி 268 மாரைக் கிளவி 7, 204 மிகுதி செய்யும் பொருள் 294 முதலறி கிளவி 110 முதற்சினைக் கிளவி 83 முந்நிலைக் காலம் 235 முப்பால் 207 முப் பாற்சொல் 2 முழுதென் கிளவி 320 முற்படக் கிளத்தல் 39 முற்றிய உம்மைத் தொகை 280 முற்றியல் மொழி 421 முறைநிலைப் பெயர் 162 முறைப்பெயர் 123, 150, 171, 172, 176 முறைப்பெயர்க் கிளவி 133, 144 முன்மொழி நிலையல் 413 முன்னத்தின் உணருங் கிளவி 57, 452 முன்னிலை அசைச்சொல் 269 முன்னிலைக் கிளவி 218 முன்னிலை சுட்டிய ஒருமைக் கிளவி 455 முன்னிலை வினைச்சொல் 444 மூவிடம் 28 மெய்ந்நிலைப் பொதுச் சொல் 235 மெய்ந்நிலை மயக்கு 443 மெய்ப்பொருள் 117 மெய்பெறக் கிளந்த உரிச்சொல் 383 மெய்பெறக் கிளந்த கிளவி 456 மெய்யறி பனுவல் 92 மெலிக்கும்வழி மெலித்தல் 397 மேலைக் கிளவி 211 மொழிப்பொருட் காரணம் 388 மொழிபுணர் இயல்பு 398 மொழிமாற்று 398 மொழிமாற்று இயற்கை 403 ய யாணர்க் கிளவி 373 யானென் பெயர் 134 வ வடசொல் 391 வடசொற் கிளவி 395 வடவெழுத்து 395 வண்ணச் சினைச்சொல் 26 வயாஎன் கிளவி 365 வருசொல் 29 வலிக்கும்வழி வலித்தல் 397 வழக்கியன் மருங்கு 456 வழக்கி னாகிய வுயர்சொற் கிளவி 27 வழக்கு 17 வழக்குவழி 50 வழாஅல் ஓம்பல் 13 வாராக் காலம் 234, 236, 240 வாரா மரபு 416 வாழ்ச்சிக் கிழமை 94 வியங்கோள் 217 வியங்கோள் எண்ணுப் பெயர் 45 வியங்கோள் கிளவி 221 விரிக்கும்வழி விரித்தல் 397 விரைசொல் அடுக்கு 418 விரைந்த பொருள் 236 விளிகொள்பெயர் 125 விறற்சொல் 57 வினாவின் கிளவி 32, 207 வினாவின் பெயர் 134, 140, 145 வினாவுடை வினைச்சொல் 239 வினைக்குறிப்பு 72 வினைச்சொற் கிளவி 236, 240 வினைசெய் இடம் 77 வினைசெயல் மருங்கு 245 வினைப்படு தொகை 33 வினைப்பெயர் 162 வினைப்பெயர்க் கிளவி 165 வினைமாற்று 257 வினைமுதல் உரைக்குங் கிளவி 110 வினைமுதல் கருவி 73 வினைமுதற் கிளவி 229, 237 வினையின் தொகுதி 409 வினையின் தொகை 406 வினையிற் றோன்றும் பாலறி கிளவி 11 வினையெஞ்சு கிளவி 217, 223, 426, 231, 450 வினைவேறு படாஅப் பல பொருள் ஒருசொல் 52, 55 வினைவேறு படூஉம் பல பொருள் ஒருசொல் 52, 53 வெளிப்பட வாரா உரிச்சொல் 293 வெளிப்படு சொல் 293 வேட்கைப் பெருக்கம் 365 வேற்றுமைக் கிளவி 106 வேற்றுமைத் தொகை 406, 407 வேற்றுமை தொக்க பெயர் 412 வேற்றுமைப் பொருள் 78 வேறுபெயர்க் கிளவி 42 வேறுபொருள் குறித்த ஒரு சொல் 393 வேறுவினைக் கிளவி 73 வேறுவினைப் பொதுச்சொல் 46 வேறென் கிளவி 217 கலைச்சொல் நிரல் உரைவழி (நூற்பா எண்) அ அஃறிணை வினைக்குறிப்பு 211 அதனினியறல் 73 அருத்தாபத்தி 61 அவ்விடனறிதல் 233 அறுவகை ஒட்டு 1 ஆ ஆக்கமில்லை 184 ஆக்கமொடு வருதல் 426 ஆணொழிமிகுசொல் 50 ‘ஆ தீண்டு குற்றி’ 50 இ இசைக்குஞ் சொல் 1 இசைக்குமன் 1 இடைச் சொற்கள் 244 இதனது இது 76 இது வினைக்குறிப்புப் பெயர் 211 இருமொழிப் பொருள்பட 413 இருவீற்றானும் 430 இலக்கணத்துப் பட்டன 100 இலக்கணம் வலித்தாயிற்று 213 இலேசினான் 4 இலேசு என்னையெனின் 414 இலேசு காட்டுவதென்னெனின் 227 இலேசுபற்றி 412 இலேசேயன்றி 456 இற்றது 428 இறந்தது காத்தது 437 இறந்தது காத்தல் 123, 124 இறந்தது தழீஇயற்று 449 இறப்பு 197 இறப்பும் நிகழ்வும் எதிர்வும் 197 இன்னது இது என நிற்றல் 410 இன்னான் 73 உ உடம்பொடு புணர்த்தான் 33 உடைத்தென்பதாம் 433 உணர்ச்சி வாயில் 387 ‘உய்த்துணரவைத்தல்’ 45 உரியவை யுரிய 158 உருவக் குதிரை 295 உலகத்து இயல்பாகி வாராநின்ற பொருள் 19 உலகத்து மாறுகொண்டு வேறுபட்டியலுஞ் சொற்கள் 451 உளப்பாட்டுத் தன்மை 200 உறழ்ந்து முடிக 446 உறுப்பின் கிழமை எ எச்சம் 450 எடுத்தோத்து 456 எண்ணுநிலை 1 எதிர்மறை 281 எதிர்வு 197 எய்தாதது எய்துவித்தல் 121, 126, 142 எய்தியதன்மேல் சிறப்புவிதி 231 எய்தியதன் மேற்சிறப்பு விதி 136, 137 எய்தியது ஒரு மருங்கு மறுத்தல் 128, 130, 131, 144 எய்தியது விலக்கல் 122, 145 எய்தியது விலக்குதல் 39, 221, 222 எருத்தத்துச் சீராய் 402 எல்வகை 264 ஏ ஏகாரவெண் 283 ஏதுப் பொருட்கு ஒத்த கிழமை 88 ஐ ஐயம் அகற்றல் 191 ஐயமறுத்தது 121, 126 ஐயமறுத்தல் 404 ஒ ஒப்பில் வழியாற் பிறிதுபொருள் சுட்டின 112 ஒப்பொடு வரூஉங் கிளவி 216 ஒருங்கு உளப்படுத்தல் 199 ஒருசொல் நடையன 414 ஒரு சொன் மரபு 416 ஒருதலை 237 ஒரு பொருண்மேல் இருபெயர் வழுக்காத்தல் 40 ஒரோ பெயரென்பது 69 ஒழிந்த தற்கிழமை 86 ஒழிந்து நின்ற ஒழிபு 445 ஒழிபாகி நிற்பது 217 ஒழியிசை 247 ஒழிவுப் பொருளை 280 ஒன்றன் பெயர் ஒன்றற்காய் நிற்றல் 110 ஒன்று உடைத்தென்பதாம் 433 ஒன்றுபலகுழீஇய 76 ஓ ஓம்படுத்தல் 93 ஓம்படைப் பொருள் 93 க கடையாத்து நின்ற வழி 419 கணைக்கோல் 53 கருமச் சார்பு 80 கருமமல்லாச் சார்பு 80 கழிந்தது 308 கழிவின்கண் வந்தது 247 குணமருங்கு 16 குழுவின் வந்த குறிநிலை வழக்கு 17 குறிப்பாற் றோன்றலும் 154 குறிப்பிற்றோன்றின 154 குறிப்பொடு தோன்றும் 210 குறைக்கும் வழிக் குறைத்தல் 1 கொடை எதிர்தல் 95 ‘ஞாபகங் கூறல்’ 42 ச சார்ந்து தோன்றும் 156 சிவணும் 232 செலவழுங்கல் 344 த தகர ஞாழல் 412 தட்டுப்புடை 77 தடுமாறித் தோன்றுதல் 292 தடுமாறுதல் 91, 292 தடுமாறு தொழிற்பெயர் 91 தந்திரவுத்தி 2 தன்னின் வேறாகிய பொருள் தெரியப்படுதல் 153 தன்னையறியப்படுதல் 153 தனித்து உளப்படுத்தல் 199 திணை வழுக்காத்தல் 57 துணை 16 தெரித்துச் சொல்யாக்கல் 56 தெரிநிலையும்மை 250 தேவகை 77 தொடர்ச்சிக்கிழமை 404 ந நடை 26 நிகழ்வாவது 197 நிகழாநின்ற 170 நிகழூஉநின்ற 170 நிமித்தமாகத் தோன்றும் 72 நிறுத்த முறையானே 141 நினையத் தோன்றிய 426 நினையத் தோன்றும் 399 நூற்புணர்ப்புப்பட 205 நெறிப்படுத்துதல் 99 நேர்வுபடும் 239 நேரத்தோன்றும் 7 நொசி 368 நோக்கல் நோக்கம் 89 நோக்கிய நோக்கம் 89 ப பக்கச்சொற் கடியப் படா 17 பகந்திருந், துயாவிளி 363 படர்மலி வெற்பர் 334 பண்பினாகிய சினைமுதற்கிளவி 216 பணைத்துப்போய் 333 பணைமருள் 396 பரிமாண சூத்திரம் 61 பற்றுவிட்டான் 75 பால்வரை கிளவி 170 பாளிதம் 392 பிண்டப் பெயர் 86 பிரிப்பப் பிரியா 404 பிரிவில வரையப்படா 453 பிறவும் உள 455 பிறிதிலக்கணம் 389 பிறிதுமொன்று கொணர்ந்து இறுத்தமையின் 35 பின்னையனையை 455 புலிவிற்கெண்டை 411 புறனடை உணர்த்துதல் 456 புறத்துப்படுவதோர் இலக்கணம் 100 புறத்துறவு நீர்மை 445 பெண்ணொழி மிகுசொல் 50 பொரூஉப்பொருள் 75 பொருண்மையி னிற்றல் 110 போற்றியுணரப் படுவன 455 ம மத்திகைக் கோல் 53 மயக்க நிரனிறை 399 மயங்கல் கூடா 11 மயங்கிவரு மரபு 243 மரபு வழுக்காத்தல் 49 மலைக்கும் பிற எனின் மலையாது 413 மறித்துச் சொற் பல்காமைத் தொகுத்திறுக்கும் 35 மறைத்துச் சொல்லுக 436 மனக்குறைக்கு மறுதலை 416 மாட்டேற்று வகை 146 மாட்டேறு சொல்லாமை 133 முண்மாறுகோளுடைய 451 முதலே பொரூஉக 16 முறை நிலையான 431 முறையி னுணர்தல் 190 முன்மொழி பின்மொழியாதல் 413 முன்னத்தான் உணரப்படும் 58 மூயிற்றுப்போல 421 “முரசிரங்கு முற்றம்” 352 மூவகைச் சொல் 203 மெய்யறி பனுவல் 92 மேல் எய்தியது விலக்கல் நுதலிற்று 140 ய யாப்பறுத்தல் 31 வ வழக்குப்பெற 116 வழூஉக் காத்தல் 416 வழூஉத் திரிபன்று 206 வாராமரபின வரக் கூறுதல் 416 வாளா தோதுஞ் சூத்திர மெல்லாம் வழக்கே நோக்கும் 22 விண்ணென விசைத்தது 253 விதந்த மொழியினம் வேறுஞ் செப்பும் 61 விதந்து ஓதினமையான் 148 விதப்பினான் 18 விதியோத்தாக 456 விரித்தது தொகுத்தல் 205 விரவுப் பெயராயின 194 விரவுப் பெயர்கள் 193 விரைவு நிலைமைக்கண் 236 வினாவொடு சிவணி 419 வினை கொண்டு முடியும் 432 வினைத்திறம் படுதல் 109 வினையை ஒழிபாக நிற்றல் 224 வினையொடு முடித்தல் இயல் 265 வேறு பலகுழீஇ 76 தொல்காப்பியப் பதிப்புகள் கால வரிசையில் - சொல்லதிகாரம் வ. காலம் நூல் பகுதி, உரை பதிப்பாசிரியர் எண் 1. 1868 செப். சொல். சேனா. சி.வை. தாமோதரம் பிள்ளை (விபவ. புரட்டாசி) 2. 1868 நவ. ” இராசகோபால பிள்ளை (விபவ, கார்த்திகை) 3. 1892 சொல். நச்சர் ” 4. 1922 மார்ச் எழுத்து. சொல் (மூலம்) கா. நமச்சிவாய முதலியார் 5. 1923 மார்ச் சொல். சேனா. கந்தசாமியார் 6. 1927 சொல். இளம். ” 7. 1929 சொல். தெய்வ. ரா. வேங்கடாசலம் பிள்ளை 8. 1930 சொல். குறிப்புரை பி.சா.சு. சாஸ்திரியார் 9. 1934 சொல். சேனா. ஆறுமுக நாவலர் 10. 1938 சொல். சேனா. கணேசையர் 11. 1941 சொல். நச்சர் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை 12. 1945 சொல் (மொழி) பி.சா.சு. சாஸ்திரியார் 13. 1946 சொல். சேனா. தேவநேயப் பாவாணர் 14. 1952 சொல். நச்சர்* தி.த. கனகசுந்தரம் பிள்ளை 15. 1954 சொல். சேனா. ஆ. பூவராகம் பிள்ளை 16. 1962 சொல். நச்சர் கு. சுந்தரமூர்த்தி 17. 1962 சொல். நச்சர் இராம. கோவிந்தசாமி 18. 1963 சொல். இளம். கு. சுந்தரமூர்த்தி 19. 1963 சொல். தெய்வ. ” 20. 1963 சொல். வி.ஐ. சுப்பிரமணியன் 21. 1964 சொல். கல். பழைய கு. சுந்தரமூர்த்தி 22. 1966 சொல். சேனா. ” 23. 1971 செப். தொல். நன். சொல். வெள்ளைவாரணனார் 24. 1971 இ. தொகை (சொல்) ச.வே.சு. 25. 1984 மே வேற்றுமை மயங்கியல் ஆ. சிவலிங்கனார் 26. 1984 மே விளிமரபு ” 27. 1984 சூலை பெயரியல் ” 28. 1984 செப். வினையியல் ” 29. 1972 முதல் 1985 எழுத்து. சொல் (மொழி) கமில்சுவலபில் 30. 1985 எழுத்து. சொல் (மொழி) டி. ஆல்பர்ட் 31. 1988 அக். சொல் ” 32. 1989 சொல். சேனா. கு. சுந்தரமூர்த்தி தமிழ்மண் பதிப்பகம் வெளியீடு செய்துள்ள தொல்காப்பிய உரைத்தொகைப் பட்டியல் எழுத்ததிகாரம்: 1. உரைத்தொகை -1 இளம்பூரணம் - வ.உ. சிதம்பரனார் (1928 2. உரைத்தொகை -2 நச்சினார்க்கினியம்-1 - சி. கணேசையர் (1952) 3. உரைத்தொகை -3 நச்சினார்க்கினியம்-2 - சி. கணேசையர் (1952) சொல்லதிகாரம் 4. உரைத்தொகை -4 இளம்பூரணம் - க. நமச்சிவாய முதலியார் (1927) 5. உரைத்தொகை -5 நச்சினார்க்கினியம் - சி.வை. தாமோதரம் பிள்ளை (1892) 6. உரைத்தொகை -6 சேனாவரையம்-1 - சி. கணேசயைர் (1966) 7. உரைத்தொகை -7 சேனாவரையம்-2 - சி. கணேசயைர் (1966) 8. உரைத்தொகை -8 கல்லாடம் - 1 - தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் (1971) 9. உரைத்தொகை -9 கல்லாடம்-2 - தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் (1971) 10. உரைத்தொகை -10 தெய்வச் சிலையம் - இரா. வேங்கடாசலம் பிள்ளை (1929) பொருளதிகாரம்: 11. உரைத்தொகை -11 இளம்பூரணம்-1 - வ.உ. சிதம்பரனார் (1932, 35) 12. உரைத்தொகை -12 இளம்பூரணம்-2 - வ.உ. சிதம்பரனார் (1932, 35) 13. உரைத்தொகை -13 இளம்பூரணம்-3 - வ.உ. சிதம்பரனார் (1932, 35) 14. உரைத்தொகை -14 நச்சினார்க்கினியம்-1 - சி. கணேசையர் (1948) 15. உரைத்தொகை -15 நச்சினார்க்கினியம்-2 - சி. கணேசையர் (1948) 16. உரைத்தொகை -16 நச்சினார்க்கினியம்-3 - சி. கணேசையர் (1948) 17. உரைத்தொகை -17 பேராசிரியம்-1 - சி. கணோசையர் (1943) 18. உரைத்தொகை -18 பேராசிரியம்-2 - சி. கணோசையர் (1943) 19. உரைத்தொகை -19 பேராசிரியம்-3 - சி. கணோசையர் (1943) 20. தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - நக்கீரம் (2018)