தொல்காப்பிய உரைத்தொகை எழுத்ததிகாரம் -3 நச்சினார்க்கினியம் -2 சி. கணேசையர் உரைவிளக்கக் குறிப்புக்களுடன் - 1937 மீள்பதிப்பு - 2018 பதிப்பாசிரியர் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் தமிழ்மண் பதிப்பகம் நூற்குறிப்பு தொல்காப்பிய உரைத்தொகை - 3 எழுத்ததிகாரம் - நச்சினார்க்கினியம் - 2 முதற்பதிப்பு - 1937 சி. கணேசையர் (உரைவிளக்கக் குறிப்புக்களுடன்) மீள்பதிப்பு - 2018 முதுமுனைவர் இரா. இளங்குமரனார் பதிப்பாசிரியர்கள் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் பக்கம் : 24+320 = 344 விலை : 535/- பதிப்பு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. bjh.ng.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்:  தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 536  f£lik¥ò : இயல்பு  படிகள் : 500   நூலாக்கம் : கோ. சித்திரா   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (Harrish)   அச்சு : மாணவர் நகலகம், பிராசசு இந்தியா, ரியல் இம்பேக்ட் சொல்யூசன், தூரிகை பிரிண்ட், வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.  தொல்காப்பிய உரைத்தொகை தொல்காப்பியம் நம் வாழ்வியல் ஆவணம்; நம் முந்தையர் கண்ட மொழியியல் வளங்கள் அனைத்தையும் திரட்டித் தந்த தேன் தேட்டு! அத்தேட்டைச் சுவைத்த கோத்தும்பிகள் பழைய உரையாசிரியர்கள். அவர்கள் உரைகளையெல்லாம் ஒன்று திரட்டி, வரிசையுறத் தமிழுலகம் கொள்ள வைத்த உரைத்தொகுதிகள் இவையாம்! முன்னைப் பதிப்பாசிரியர்கள் தெளிவுறுத்தும் மணிக்குவைகள் எல்லாமும், அவர்கள் வைத்த வைப்புப்படி வைத்த செப்பேடுகள் இத் தொல்காப்பிய உரைத் தொகையாம். மேலும், இவை கிடைத்தற்கு அரிய கருவூலமுமாம்! ***** ***** ***** இளம்பூரணர், சேனாவரையர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், தெய்வச் சிலையார், கல்லாடர் ஆகிய பழைய உரையாசிரியர்கள், உரை விளக்கம் பல காலங்களில் எழுதியுளர். எழுத்து, சொல், பொருள் ஆகியவற்றின் பதிப்புகள் ஒரே காலத்தில் ஒருவரால் வெளியிடப்பட வில்லை. அவற்றையெல்லாம் ஓரிடத்தில் ஒரே வேளையில் ஒட்டு மொத்தமாக முன்னைப் பதிப்பாசிரியர்கள் உரை - விளக்கம் - குறிப்பு - இணைப்பு ஆகியவற்றுடன் பெற வெளியிடும் அரிய பெரிய முயற்சியில் வெளியிடப்படுவது தமிழ்மண் பதிப்பகத்தின் இப்பதிப்பாகும். தொல்காப்பியத்திற்குக் கிடைத்த உரைகள் அனைத்தையும் ஒருமொத்தமாகத் தருவதால் இது, தொல்காப்பிய உரைத்தொகை எனப்பட்டது. தொகையாவது தொகுக்கப்பட்டது. இரா. இளங்குமரன் அறிமுகவுரை வ.உ. சிதம்பரனார் வள்ளி நாயக - உலகநாத - சிதம்பரனார், `வ.உ.சி. என மூன்றெழுத்தில் முத்தமிழ்ப் புகழும் கொண்டவர் அவர்! நாடும் மொழியும் நமிம்ரு கண்கள் என்று கொண்ட பெருமக்களை விரல் விட்டு மடக்கக எண்ணின் - அவற்றுக்கே தம்மை ஈகம் செய்தவரை எண்ணின் - அடுத்த விரலைல மடக்க - ஆழமாக எண்ணித் தானே ஆக வேண்டும்! ஓட்டப்பிடாரத்தில், உலகநாதர் - பரமாயியர் மகனாராக 05.09.1892 இல் பிறந்தவர் வ.உ.சி. தந்தையார் வழக்கறிஞர்: தாம்பிறந்த ஊரி இருந்த `வீரப் பெருமாள் அண்ணாவி என்பாரிடம் தமிழ் இலக்கிய இலக்கணங்கரளைக் கற்றார். தூத்துக்குடி கிறித்தவ உயர்பள்ளி, திருநெல்வேலி மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி உயர்பள்ளி ஆயவற்றில் கற்றார். தந்தையார் கால்டுவெல் கல்லூரியில் சேர்த்துப் பயிலச் செய்தும், கல்வி நாட்டம் இல்லாராய் ஊர்க்கு வந்து வட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எழுத்தர் பணி செய்தார். அதுவும் ஏற்காமல் சட்டம் படிக்கத் திருச்சிராப்பள்ளி வந்து சட்டக் கல்லூரியில் பயின்று கி.பி. 1895இல் வழக்கறிஞரானார். படிக்கும் போதே 1894இல் திருமணமும் ஆயது. மணமகனார் வள்ளியம்மை. வறியவர்க்கு வாதாடலும், காவலரைத் திணறவைக்க வினாவலும் கொண்ட வ.உ.சி.யின்மேல், அரசின்பகை மளையிடத் தொடங்கிவிட்டது. தந்தையார் தூத்துக்குடிக்குச் செல்ல வைத்தார். வள்ளியம்மை 1900இல் இயற்கை எய்த, அவர் உறவினராய மீனாட்சியம்மையை மணக்கவும் நேர்ந்தது. சிதம்பரனார் தூத்துக்குடிக்குச் சென்றால் என்ன? அவர் ஈகமும் துணிவும் அவருடன் தானே இருக்கும்! தூத்துக்குடி பெருநகர்! தொண்டுக்கும் வாய்ப்பு! எகிப்து கொலை வழக்கு! விடுவிடுப்பு முடிபு! ஏழைமையர் தோழமை யரானார்! தமிழில் தொய்வும், சைவ சமய ஈடுபாடும் பெருகப் பெருவாய்ப்பு ஏற்பட `விவேகபானு என்னும் இதழ் நடத்தினார். இது மாதிகை இதழ். சென்னைக்குச் சென்று திரும்பும் ஒரு சூழல் ஏற்பட்டது. அப்பொழுது சிதம்பர்க்கு ஓர் எழுச்சி உண்டாயது; வணிகத்தால் நேர்ந்த அயலாராட்சியை ஒழிக்க, அவ்வணிகமே வழி என்று திட்டம் தோன்றிக் கப்பல் இயக்குதலில் முனைந்தாதர். மும்பை சென்று கப்பல் வாங்கி, தூத்துக்குடிக்கும் கெழும்புக்கும் இடையே செலுத்தினார். `சுதேசிக் கப்பல் ஆங்கிலரைக் கொதிக்க வைக்காதா? சுதேசி பண்டசாலை, நெய்தல் சாலை, என்பவற்றை நிறுவினார். ஆலைப் போராட்டங்களில் முன்னின்றார். திலகரைத் தலைவராகக் கொண்டார். சூரத்தில் நிகழ்ந்த மாநாட்டில் பங்குகொண்டு (1907) மீண்டு மேடைகளில் அரசியல் முழக்கமிட்டார். சுப்பிரமணியே சிவா உடனானார்! மாவட்ட ஆட்சியர் விஞ்சு என்பார் சிதம்பரனார், சிவா இருவர் மீதும் குற்றங்கள் பல சாற்றி, நாடுகடத்தவும் திட்டமிட்டார். முறைமன்றம் 20 ஆண்டு, கடுங்காவல் தண்டம் விதிக்க, அதனை `இறைவன் அருள் என்றா. மேல் முறையீடுகளால், ஆறாண்டுகள் ஆகிக் கணல்பொறி இயக்கி, செக்கிழுத்து 1912இல் விடுதலை பெற்றார். சிறையில் சேம்சு ஆலன் நூல்களை மொழி பெயர்த்தார். விடுதலைக்குப்பின் தமிழ்த் தொண்டில் ஆழமாக இறங்கினார். தொல்காப்பிய இளம்பூரணர் உரையை 1936இல் பதிப்பித்தார். திருக்குறள் அறத்துப்பால் விரிவுரை 1935இல் வெளியிடப்பட்டது. அவர்தம் ஆய்வும் துணிவும் திருக்குறள் உரையில் வெளிப்பட்டது. அவர் எண்ணியவாறு முழுதுரை கண்டும் முழுதுற வெளிப்படவில்லை! சிறையில் அவர் எழுதிய `சுயசரிதையின் அருமை படிப்பார் நெஞ்சை உருக்கும்! அச்சரிதை 1946இல் பாரி நிலையத்தினரால் வெளியிடப்பட்டுப் பல பதிப்புகள் கண்டது. திருக்குறள் அறத்துப்பால் உரை, சிங்கப்பூர் தமிழ்த்திரு. கோவலங் கண்ணனாரால் வெளியிடப்பட்டு குறள் கூறிய ஒவ்வொருவருக்கும் இலவயமாக வழங்கியது. வ.உ.சி. யின் வண்மைக் கதிரெளி எனத் தோன்றியது. 14ஆம் மாடியில் வெளியிட்டு அவ்வுரை நயம் எளியேன் கூற, அவ்வுரைப் பெருமை அவையைத் திளைக்கச் செய்தது! கப்பரேலாட்டிய தமிழர் - தமிழ்க் கப்பலும் ஓட்டிய தோன்றல் - தம் நிலைகுறித்து ஒருவெண்பாவில் தாமே ஓடுகிறார்; ஓட்டப்பிடாரத்தார் அல்லரோ! வந்தகவி ஞர்க்கெல்லாம் மாரியெனப் பல்பொருளும் தந்த சிதம்பரன் தாழ்ந்தின்று- சந்தமிழ் வெண் பாச் சொல்லிப் பிச்சைக்குப் பாரெல்லாம் ஓடுகின்றான் நாச் சொல்லும் தோலும் நலிந்து ஏ! தாழ்ந்த தமிழகமே! என்றது மெய்தானே! இரா. இளங்குமரன். தொல்காப்பியம் அரிய பதிப்புகளும் தேவைகளும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் தமிழின் பண்டை இலக்கண/ இலக்கிய நூல்கள் அச்சிடப் பெற்றன. அவ்வகையில் தமிழில் அச்சடிக்கப்பட்ட முதல் இலக்கண நூலாக இன்று அறியப்படுவது நன்னூலே. காரணம் தமிழக மடங்கள் நன்னூலைப் பயிற்றிலக்கணமாகவும் பயன் பாட்டு இலக்கணமாகவும் கொண்டிருந்தன. 1835 -இல் திருத்தணிகை விசாகப் பெருமாளையர் தாமே உரையெழுதி நன்னூல் மூலமும் காண்டிகையுரையும் என்னும் தலைப்பில் வெளியிட்டார். தொடர்ந்து தாண்டவராய முதலியாரும், அ. முத்துச்சாமி பிள்ளையும் இணைந்து இலக்கணப் பஞ்சகம் என்னும் தலைப்பில் நன்னூல், நம்பியகப் பொருள், புறப்பொருள் வெண்பாமாலை ஆகியவற்றின் மூலங்களை வெளிக் கொணர்ந் தனர். இதன் தொடர்ச்சியாக 1838 -இல் வீரமா முனிவரின் தொன்னூல் விளக்கம் அச்சாக்கம் பெற்றது. 1847 -இல் தான் மழவை மகாலிங்கையரால் தமிழின் தொல் இலக்கணம் தொல்காப்பிய எழுத்ததிகாரம் உரையோடு அச்சிடப்பட்டது. தொடர்ந்து யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலர், யாழ்ப்பாணத்து சி.வை. தாமோதரம் பிள்ளை, கோமளபுரம் இராசகோபாலபிள்ளை, சோடசாவதானம் சுப்பராய செட்டியார், போன்றோர் 19 -ஆம் நூற்றாண்டில், தொல்காப்பியத்தைக் கிடைத்த உரைகளோடு பதிப்பித்தனர். 1935 - இல் தொல்காப்பியத் திற்கு எழுதப்பட்ட உரைகள் (இன்று கிடைத்துள்ள அனைத்து உரைகளும்) பதிப்பிக்கப்பட்டு விட்டன. 1847 - 2003 வரை தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரை எட்டுப் பதிப்புகளும், 1885-2003 வரை தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் முன்னைந்தியல் எட்டுப் பதிப்புகளும், செய்யுளியல் நச்சினார்க்கினியர் தனித்து மூன்று பதிப்புகளும் வெளிவந்துள்ளன. 1892 - 2003 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை ஐந்து பதிப்புகளும், 1868 - 2006 வரை எழுத்து இளம்பூரணம் ஏழு பதிப்புகளும், 1920 - 2005 வரை தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணம் பத்துப் பதிப்புகளும், 1927 - 2005 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் இளம்பூரணம் ஆறு பதிப்புகளும், 1885 - 2003 வரை தொல்காப்பியம் பொருளதிகாரம் பேராசிரியம் ஏழு பதிப்புகளும், 1929 - 2003 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் மூன்று பதிப்புகளும், 1964 - 2003 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடம் மூன்று பதிப்புகளும் வெளிவந்துள்ளன என முனைவர் பா. மதுகேவரன் தமது தொல்காப்பியம் பதிப்பு ஆவணம் நூலில் குறிப்பிட்டுள்ளார். 2003 -இல் தமிழ்மண் பதிப்பகத்தின் வாயிலாகத் தொல்காப்பிய உரைகள் (இளம்பூரணம், நச்சினார்க்கினியம், பேராசிரியம், சேனாவரையம், கல்லாடம், தெய்வச்சிலையம்) பண்டித வித்வான் தி.வே. கோபாலையர், முனைவர் ந. அரணமுறுவல் ஆகியோரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, முதுமுனைவர் இரா. இளங்குமரனாரின் வாழ்வியல் விளக்கத்துடன் வெளிவந்துள்ளன. இருப்பினும் அச்சில் இன்று கிடைக்காத அரிய பதிப்புகளை மீள் பதிப்பாகப் பதிப்பிக்க வேண்டும் என்னும் நோக்கத்தில், சி.வை. தாமோதரம் பிள்ளை பதிப்பு, கா. நமச்சிவாய முதலியார் பதிப்பு, வ.உ. சிதம்பரம் பிள்ளை பதிப்பு, இரா. வெங்கடாசலம் பிள்ளை பதிப்பு, சி. கணேசையர் பதிப்பு, தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் பதிப்பு ஆகியோரின் பதிப்புகளுடன் தொல்காப்பியம் தொடர்பாக அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரைகளும் இணைத்து தமிழ்மண் பதிப்பகத்தின் வழி மீள் பதிப்புகளாகப் பதிப்பிக்கப் படுகின்றன. மீள் பதிப்பில் பின்பற்றியுள்ள பொது நெறிகள் முதுமுனைவர் இரா. இளங்குமரனாரின் தொல்காப்பியம் குறித்த விளக்கம், ஒவ்வோர் அதிகாரம் பற்றிய வாழ்வியல் விளக்கம், உரையாசிரியர் விவரம் ஆகியவை நூலின் தொடக்கத் தில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. முன்னைப் பதிப்புகளின் முகப்புப் பக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முன்னைப் பதிப்பாசிரியர் பற்றிய விவரங்கள் கால அடிப்படையில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. ஒவ்வோர் இயலின் தொடக்கத்தில், பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் தொல்காப்பியம் தொகுப்பில் எழுதி யுள்ள தொல்காப்பிய இயல் பற்றிய விளக்கம் தரப்பட்டுள்ளன. முன்னைப் பதிப்பில் அடிக்குறிப்புகள் அந்த அந்தப் பக்கத்தில் தரப்பட்டிருந்தன. இப்பதிப்பில் ஒவ்வோர் இயலுக்கும் தொடர் இலக்கமிட்டு, அந்தந்த இயலின் இறுதியில் தொகுத்து வழங்கப் பட்டுள்ளன. முன்னைப் பதிப்புகளில் நூற்பாக்களைக் கையாண்டுள்ள முறையையே இப் பதிப்பிலும் பின்பற்றப்பட்டுள்ளது. நூற்பாக் களுக்குத் தமிழ் எண் கொடுக்கப்பட்டிருப்பின் அவை நடை முறையில் இப்போது உள்ள எண்களாக மாற்றப்பட்டுள்ளன. நூற்பா அகரமுதலி, மேற்கோள் அகரமுதலி போன்றவற்றிற்குப் பக்க எண்கள் கொடுக்கப்பட்டிருப்பின் அவை நூற்பா எண்களாக மாற்றப்பட்டுள்ளன. பின்னிணைப்பாகத் தொல்காப்பியம் தொடர்பாக அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ள கட்டுரைகள் இணைக்கப் பட்டுள்ளன. நூற்பா முதற் குறிப்பு அகராதி மட்டும் கொடுக்கப் பட்டுள்ள பதிப்புகளில் அவற்றோடு, 2003 தமிழ்மண் பதிப்பகத்தின் வழியே பண்டித வித்துவான் தி.வே. கோபாலையர் முனைவர் ந. அரணமுறுவல் ஆகியோரைப் பதிப்பாசிரியர்களாகக் கொண்டு வெளிவந்த இலக்கணப் பதிப்பில் இணைக்கப் பட்டிருந்த, - நூற்பா நிரல் - மேற்கோள் சொல் நிரல் - மேற்கோள் சொற்றொடர் நிரல் - செய்யுள் மேற்கோள் நிரல் - கலைச் சொல் நிரல்( நூற்பாவழி) - கலைச்சொல் நிரல் (உரைவழி) ஆகியவை எடுத்துப் பயன்படுத்தப்பட்டுள்ளன. - பாடவேறுபாடுகள் சுட்டப்பட்டுள்ளன. - முன்னைப் பதிப்பில் வடமொழிச் சொற்கள் பயன் படுத்தப்பட்டிருப்பின் அவை அப்படியே கையாளப் பட்டுள்ளன. - தொல்காப்பியப் பதிப்புகள் குறித்த விவரம் தொகுக்கப்பட்டுள்ளன. சி.வை. தாமோதரம் பிள்ளை பதிப்பு - 1892 சொல்லதிகாரம் - நச்சினார்க்கினியர் 1868 - இல் தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரை யருரையைப் பதிப்பித்த சி.வை. தாமோதரம் பிள்ளை, 1892 ஆம் ஆண்டு சொல்லதிகாரம் நச்சினார்கினியர் உரையைப் பதிப்பித்தார். சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை தொடர்ச்சியாகப் பதிப்பிக்கப்பட்டாலும், முதலில் பதிப்பித்த சி.வை. தாமோதரம் பிள்ளையின் பதிப்பு இன்று அச்சுவடிவில் புழக்கத்தில் இல்லை. அப்பதிப்பினை வெளியிடும் நோக்கத்தில் இப்பதிப்பு மீள் பதிப்பாக வெளிவருகிறது. இப்பதிப்பில் நூற்பா முதற்குறிப்பு அகராதி மட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் மற்ற இணைப்புகளும் இணைக்கப்பட்டு, முதுமுனைவர் இரா. இளங்குமரன் அவர்களின் வாழ்வியல் விளக்கமும், ஒவ்வோர் இயலின் தொடக்கத்தில் க. வெள்ளைவாரணனார் எழுதியுள்ள இயல் விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் சொல்லதிகாரம் தொடர்பாக அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரைகள் பின்னிணைப்பாக இணைக்கப் பட்டுள்ளன. கா. நமச்சிவாய முதலியார் பதிப்பு - 1927 சொல்லதிகாரம் - இளம்பூரணம் இளம்பூரணம் எழுத்ததிகாரம் பொருளதிகாரம் உரைகள் முன்பே வெளிவந்தன. சொல்லதிகாரம் இளம்பூரணர் உரை 1927 - இல் காவேரிப்பாக்கம் நமச்சிவாய முதலியாரின் ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் சென்னை ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸால் வெளியிடப்பட்டது. இதுவே சொல்லதிகாரம் இளம்பூரணர் உரையின் முதற் பதிப்பாகும். இப் பதிப்பில் அடிக்குறிப்புகள் அந்தந்தப் பக்கத்தில் கொடுக்கப்பட்டிருந்தன. இப்பதிப்பில் தொடர் இலக்கமிட்டு, ஒவ்வோர் இயலின் முடிவில் அடிக் குறிப்புகள் தரப்பட்டுள்ளன. இப் பதிப்பில் நூற்பாக்களுக்குத் தமிழ் எண்வரிசையும் நடைமுறை எண் வரிசையும் கொடுக்கப்பட்டிருந்தன. இப்பதிப்பில் நடைமுறை எண் முறை மட்டும் பின்பற்றப்பட்டுள்ளது. வ.உ. சிதம்பரம்பிள்ளை பதிப்பு - 1928 , 1931, 1933, 1935 எழுத்ததிகாரம், பொருளதிகாரம் - இளம்பூரணம் 1868 இல் திரிசிரபுரம் சோடசாவதானம் சுப்பராய செட்டியாரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு கன்னியப்ப முதலியாரால் பதிப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து 1928 -இல் தொல்காப்பியம் இளம்பூரணம் எழுத்ததிகாரம் பதவுரை என்னும் பெயரில் வ.உ. சிதம்பரம் பிள்ளை பதிப்பு வேலாயுதம் பிரிண்டிங் பிர, தூத்துக்குடியிலிருந்து வெளிவந்தது. அப்பதிப்பின் தொடக்கத்தில் கொடுக்கப்பட்டிருந்த நூற்பா அகராதி இப்பதிப்பின் நூலின் இறுதியில் கொடுக்கப் பட்டுள்ளது. அத்துடன் சொல் நிரல் (மேற்கோள்), சொற்றொடர் நிரல் (மேற்கோள்), செய்யுள் நிரல் (மேற்கோள்) கலைச் சொல் நிரல் (நூற்பா வழி) கலைச் சொல் நிரல் (உரைவழி) தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. 1920 -இல் கா. நமச்சிவாய முதலியார் பொருளதிகாரம் இளம்பூரணம் உரை முதல் பகுதியாகக் களவியல், கற்பியல், பொருளியல் மூன்று இயல்களையும் ஸி. குமாரசாமி நாயுடு ஸன் நிறுவனத்தார் வெளியிட்டுள்ளார். மற்ற பகுதிகள் வெளிவந்ததாக அறிய இயலவில்லை. இப்பதிப்பிற்குப் பின் வ.உ. சிதம்பரம் பிள்ளை தொல்காப்பியம் இளம்பூரணம் பொருளதிகாரம் அகத்திணையியல், புறத்திணையியல் ஆகிய இரு இயல்கள் இணைந்த பதிப்பு, சென்னைப் பிரம்பூரில் இருந்து வெளிவந்தது. இப்பதிப்பில் ஆண்டு குறிப்பிடப்படவில்லை. ஆனால் 1921- இல் வெளிவந்த குறிப்பினை, தொல்காப்பியம் இளம்பூரணம் எழுத்திகாரம் பதவுரை பதிப்பில் குறிப்பிடுகிறார். களவியல், கற்பியல், பொருளியல் 1933 - இல் வாவிள்ள இராமவாமி சாட்ருலு அண்ட் ஸன் மூலம் வெளி வந்துள்ளது. 1935 - இல் மேற்கண்ட பதிப்பாளர்களைக் கொண்டு மெய்ப்பாட்டியல், உவமையியல், செய்யுளியல், மரபியல் பதிப்பித்துள்ளார். மூன்று பகுதிகளாக வெளிவந்தாலும் அவற்றிற்கும் தொடர் எண் கொடுக்கப்பட்டுள்ளன. 1935 - இல் ஒருங்கிணைந்த பதிப்பாக வ.உ. சிதம்பரம் பிள்ளை எ. வையாபுரிப்பிள்ளை ஆகியோர் பதிப்பாசிரியர்களாக அமைந்து வெளிவந்துள்ளது. தனித்தனிப் பதிப்புகளாக மூன்று பகுதிகளாக வெளிவந்துள்ள பதிப்பினை அடிப்படையாகக் கொண்டு இம் மீள் பதிப்பு பதிப்பிக்கப்படுகின்றது. இரா. வெங்கடாசலம் பிள்ளை பதிப்பு - 1929 சொல்லதிகாரம் - தெய்வச் சிலையார் 1929 -இல் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தால் முதன் முதலில் பதிப்பிக்கப்பட்டது. பதிப்பாசிரியர் ரா. வேங்கடாசலம் பிள்ளை. இதன் நிழற்படிவம் 1984 -இல் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இப் பதிப்பில் சூத்திர முதற் குறிப்பு அகராதி மட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் சொல் நிரல் (மேற்கோள்), சொற்றொடர் நிரல் (மேற்கோள்), செய்யுள் நிரல் (மேற்கோள்) கலைச் சொல் நிரல் (நூற்பா வழி) கலைச் சொல் நிரல் ( உரைவழி) தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. சி. கணேசையர் பதிப்பு - 1937, 1938, 1943,1948 எழுத்து நச்சினார்க்கினார்கினியர், சொல்லதிகாரம் சேனாவரையர் பொருள் - நச்சினார்க்கினியர், பேராசிரியர் 1847 - இல் மழவை மகாலிங்கையரால் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியம் பதிப்பிக்கப்பட்டது. 1891 - இல் சி. வை. தாமோதரம் பிள்ளை பதிப்பும் 1923 - இல் த. கனகசுந்தரத்தின் பதிப்பும் கழகத்தின் மூலமும் வெளிவந்தன. 1937 - இல் நா. பொன்னையா அவர்களால் கணேசையர் எழுதிய உரைவிளக்கக் குறிப்புகளுடன் எழுத்ததிகாரம் மூலமும் நச்சினார்க்கினியருரையும் வெளியிடப்பட்டன. 1868 -இல் யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுக நாவலர் பதிப்பு, சென்னபட்டணம் ஊ. புஷ்பரதச் செட்டியாரது கலாரத்நாகர அச்சுக்கூடத்தில் சி.வை. தாமோரதம் பிள்ளையால் பதிப்பிக்கப்பட்டது. இதே ஆண்டு கோமளபுரம் இராசகோபால பிள்ளையின் பதிப்பும் தொல்காப்பியம் சேனாவரையம் என்ற பெயரில் வெளிவந்துள்ளது. 1923 - இல் கந்தசாமியார் திருத்திய திருத்தங்களோடும் குறிப்புரையோடும் கழகப் பதிப்பாக வெளிவந்தது. 1938 -இல் சி. கணேசையர் பதிப்பு அவர் எழுதிய உரைவிளக்கக் குறிப்புகளுடன் வெளியிடப்பட்டது. 1885 -இல் சி.வை. தாமோதரம் பிள்ளையால் தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் இயற்றிய உரையோடும் பலதேசப் பிரதிரூபங்களைக் கொண்டு பரிசோதித்து யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரரால் பதிப்பிக்கப்பட்டது என்னும் குறிப்புடன் பதிப்பு வெளிவந்தது. அப்பதிப்பில் உள்ள பின்னான்கியல் நச்சினார்க்கினியர் உரை அன்று என்று மறுத்து இரா. இராகவையங்கார் 1902 - 1905 வரையான செந்தமிழ் இதழில் ஆய்வுக்கட்டுரை எழுதித் தெளிவுபடுத்தினார். அதனைத் தொடர்ந்து பொருளதிகாரம் முழுதும் நான்கு பகுதியாக நச்சினார்க்கினியம், பேராசிரியம் எனப் பிரித்து 1916, 1917 - ஆம் ஆண்டுகளில் ச. பவனாந்தம் பிள்ளை பதிப்பித்தார். 1917 - இல் ரா. இராகவையங்கார் செய்யுளியலுக்கு நச்சினார்க்கியர் உரை இருப்பதை அறிந்து, நச்சினார்கினியர் உரை உரையாசிரியர் உரையுடன் என இரு உரைகளையும் இணைத்து வெளியிட்டார். 1934, 1935 -இல் எ. வையாபுரிப்பிள்ளை அவர்களால் ஓலைப் பிரதி பரிசோதிக்கப்பட்டு மா.நா. சோமசுந்தரம் பிள்ளை அவர்களது அரிய ஆராய்ச்சிக் குறிப்புகளுடனும் திருத்தங் களுடனும் தொல்காப்பியம் பொருளதிகாரம் முதற்பாகம் வெளிவந்தது. 1948 - இல் தொல்காப்பிய முனிவரால் இயற்றப் பட்ட தொல்காப்பியம் பொருளதிகாரம் (முதற்பாகம்) முன்னைந்தியலும் நச்சினார்க்கினியமும் என, சி. கணேசையர் எழுதிய ஆராய்ச்சிக் குறிப்புரையுடன் நா. பொன்னையா அவர்களால் பதிப்பிக்கப்பட்டது. 1943 -இல் தொல்காப்பியம் பொருளதிகாரம் (இரண்டாம் பாகம்) என்பதோடு பின்னான்கியலும் பேராசிரியமும் இவை புன்னாலைக் கட்டுவன் தமிழ் வித்துவான், பிரமரீ சி. கணேசையர் அவர்கள் ஏட்டுப் பிரதிகளோடு ஒப்புநோக்கித் திருத்திய திருத்தங்களோடும் எழுதிய உரை விளக்கக் குறிப்புகளோடும் ஈழகேசரி அதிபர் நா. பொன்னையா அவர்களால் தமது சுன்னாகம், திருமகள் அழுத்தகத்தில் பதிப்பிக்கபட்டன என வரையறுக்கப் பட்டிருந்தது. 2007-இல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மறுபதிப்பாக சி. கணேசையரின் பதிப்பைப் பதித்துள்ளது. அப்பதிப்பினைப் பின்பற்றியே இப்பதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சூத்திர அகராதி, சூத்திர அரும்பத விளக்கம் ஆகியவற்றிற்கு இப்பதிப்பில் பக்க எண் கொடுக்கப்பட்டிருந்தன. அவை இம் மீள்பதிப்பில் நூற்பா எண்களாக மாற்றப்பட்டுள்ளன. அனுபந்தமாக சி. கணேசைய்யர் சில கட்டுரைகளை அப்பதிப்பில் இணைத் திருந்தார் அவற்றோடு மேலும் அவருடைய சில கட்டுரைகள் இப்பதிப்பில் இணைக்கப்பட்டுள்ளன. தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் பதிப்பு 1971 சொல்லதிகாரம் கல்லாடம் சி.வை. தாமோதரம் பிள்ளை தொல்காப்பியம் பொருளதி காரம் நச்சினார்க்கினியர் உரை பதிப்புரையில் (1885) கல்லாடர் உரை பற்றிய குறிப்பினைத் தருகிறார். டி.என் அப்பனையங்கார் செந்தமிழ் இதழில் (1920, தொகுதி-19, பகுதி-1, பக்கம்-20) கல்லாடருரை என்னும் கட்டுரையில் ரீமான் எம் சேக்ஷகிரி சாதிரியார் (1893) கல்லாடர் உரை குறித்து ஆராய்ந்துள்ளதாகக் குறிப்பிடுகிறார். சோழவந்தான் அரசஞ்சண்முகனார் (1905) ரா. இராகவையங்கார் (1917) பெயர் விழையான், கா. நமச்சிவாய முதலியார்(1920) நவநீதகிருஷ்ண பாரதி(1920) பி. சிதம்பர புன்னைவனநாத முதலியார்(1922) கந்தசாமியார் (1923) வ.உ. சிம்பரம் பிள்ளை (1928) மன்னார்குடி தமிழ்ப் பண்டிதர் ம.நா. சோமசுந்தரம் பிள்ளை (1929) அரங்க. வேங்கடாசலம் பிள்ளை (1929) ஆகியோர் கல்லாடர் உரை குறித்த குறிப்புகளைத் தமது கட்டுரைகளில் குறிப்பிடுகின்றனர். பின்னங்குடி சா. சுப்பிரமணிய சாதிரியார் கல்லாடர் உரை ஓரியண்டல் கையெழுத்துப் புத்தக சாலையில் உள்ளது என்றும், அவ்வுரை எவ்வியல் வரை உள்ளது என்னும் குறிப்புரையும் தருகிறார். 1950 - 1952 வரை தருமபுர ஆதீனம் வெளியிட்ட ஞான சம்பந்தம் இதழில் அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகத்தின் இரண்டாம் பிரதியை ஒட்டிப் பதிப்பிக்கப்பட்டது. கிளவியாக்கம் தொடங்கி இடையியல் 10 - ஆவது நூற்பா வரை வெளிவந்தது. கல்லாடர் உரையைத் தம்முடைய திருத்தங்களுடன் வெளியிட்டவர் மகாவித்துவான் தண்டபாணி தேசிகர். 1963 -இல் தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரைக்கோவை என்னும் பெயரில் ஆபிரகாம் அருளப்பனும் வ.ஐ. சுப்பிரமணியமும் இணைந்து வெளியிட்டனர். இது நான்கு இயலுக்கான பதிப்பாக அமைந்திருந்தது. கழகப் பதிப்பாக 1964 -இல் கு. சுந்தரமூர்த்தி விளக்கவுரையுடன் கல்லாடம் வெளிவந்தது. 1971 -இல் தெ.பொ.மீ அவர்களால் ஒன்பது பிரதிகளைக் கொண்டு ஒப்பிட்டு அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகப் பதிப்பாக வெளிவந்தது. 2003 -இல் தி.வே. கோபாலையர், ந. அரணமுறுவல் ஆகியோரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு தமிழ் மண் பதிப்பகம் கல்லாடனார் உரையைப் பதிப்பித் துள்ளது. 2007 -இல் தி.வே. கோபாலையரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, சரசுவதி மகால் நூலகம் தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரைக்கொத்தில் கல்லாடர் உரையை வெளியிட்டுள்ளது. கல்லாடர் உரை முழுமையாக இதுவரை கிடைத்திலது. இம்மீள்பதிப்பில் செந்தமிழ் அந்தணர் அவர்களின் இலக்கண வாழ்வியல் விளக்கமும் கா. வெள்ளைவாரணனாரின் இயல் விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இவை தொல்காப்பியத்திற்குள் புகுவாருக்கு எளிதான மனநிலையை உருவாக்குவதுடன், ஆய்வாளர்களுக்கு மிகுந்த பயன் உடையதாக இருக்கும். பின்னிணைப்பாக இணைக்கப்பட்டுள்ள கட்டுரைகள், தொல்காப்பிய உரையாசிரியர், உரைகள் குறித்த நுட்பத்தைப் புலப்படுத்துவதுடன், தொல்காப்பியம் பற்றிய நுண்மையை அறியவும் துணை செய்யும். நூற்பா, உரை வழிக் கலைச்சொற்கள், உரையில் உள்ள மேற்கோள் அகராதி போன்றவை தொகுத்துத் தரப்பட்டுள்ளன. தொல்காப்பியத்தை அறிய விரும்புவாருக்கும், ஆய்வாளர்களுக்கும் இத் தொகுப்பு பயன் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியம் மூலமும், உரையோடும் பல பதிப்புகளைக் கண்டுள்ளது. இருப்பினும் தொடக்கத்தில் தமிழ் அறிஞர் பெருமக்களால் உரையோடு தொல்காப்பியத்தைப் பதிப்பித்த பதிப்புகள் இன்று கிடைக்கவில்லை. அந்நிலையைப் போக்கும் பொருட்டு, தமிழரின் பண்பாட்டை, மேன்மையை, உயர்வைப் பொதித்து வைத்துள்ள நூல்களைத் தேடித் தேடிப் பதிப்பிக்கும் தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் ஐயா கோ. இளவழகனார் அவர்கள் பழம் பதிப்புகளைப் பதிப்பிக்க வேண்டும் என்று விரும்பியதன் காரணமாக இப்பதிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பதிப்பிற்கு, தமிழின் மூத்த அறிஞர், செந்தமிழ் அந்தணர் முதுமுனைவர் ஐயா இரா. இளங்குமரனார் அவர்கள் பதிப்பாசிரியராக அமைந்து என்னையும் இப்பணியில் இணைத்துக்கொண்டார்கள். பழந்தமிழ் நூல்களைப் பாதுகாத்து வைத்துள்ள புலவர் பல்லடம் மாணிக்கம் அவர்களிடம் இருந்து தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடர் உரை பெறப்பட்டுப் பதிப்பிற்குப் பயன்படுத்தப்பட்டது. மற்ற உரைகள் அனைத்தும் தமிழ் இணையப் பல்கலைக்கழக நூலகம், உலகத் தமிழாராய்ச்சி இணையப் பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு இம் மீள்பதிப்பிற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. சி. கணேசையர் பதிப்பினை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வழி வெளிவந்த சி. கணேசைய்யரின் தொல்காப்பியப் பதிப்பிற்கு உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தின் மேனாள் இயக்குநர் (முழுகூடுதல் பொறுப்பு) முனைவர் திரு ம. இராசேந்திரன் அவர்கள் கணேசையர் பதிப்பிற்கு எழுதியுள்ள முகவுரை அவருடைய ஒப்புதலுடன் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. முனைவர் பா. மதுகேவரன் அவர்களின் தொல்காப்பியம் பதிப்பு ஆவணம் 7 என்னும் நூற்பகுதியில் இருந்து தொல் காப்பியப் பதிப்பு அடைவுகள் இப்பதிப்பில் இணைக்கப் பட்டுள்ளன. தொல்காப்பியம் தொடர்பான பல்வேறு அறிஞர் பெருமக்களின் ஆய்வுக் கட்டுரைகள் தொகுத்து வழங்கப் பட்டுள்ளன. தொல்காப்பியம் உரைகள் முழுதும் ஆய்வு செய்துள்ள பேராசிரியர் முனைவர் ச. குருசாமி அவர்களின் கட்டுரைகள் இப்பதிப்பில் இணைக்கப் பட்டுள்ளன. பதிப்பிற்குத் துணை செய்த மேற்கண்ட அனைவருக்கும் நன்றியினைப் புலப்படுத்திக் கொள்ளுகிறேன். முனைவர் ஸ்ரீ. பிரசாந்தன் அவர்கள் தொகுத்த இலக்கண வரம்பு நூலிலிருந்த கட்டுரைகள் கணேசையர் பதிப்பில் இணைக்கப்பட்டுள்ளன. செந்தமிழ், தமிழ்ப்பொழில், தமிழியல் முதலிய ஆய்விதழ்களிலிருந்து தொல்காப்பியம் தொடர்பான கட்டுரைகள் சேர்க்கப் பட்டுள்ளன. பதிப்புப் பணியில் ஈடுபடுத்திய ஐயா திரு கோ. இளவழகனார் அவர்களுக்கும் பதிப்பில் இணைந்து செயல்படப் பணித்த ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்களுக்கும், பதிப்பிற்குத் துணைபுரிந்த புலவர் செந்தலை கௌதமன் ஐயா அவர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றி. தட்டச்சுச் செய்து கொடுத்த திருமதி ப. கயல்விழி திருமதி கோ. சித்திரா. அட்டை வடிவமைத்த செல்வன் பா. அரி (ஹரிஷ்), மற்றும் பதிப்பகப் பணியாளர்கள் திரு இரா. பரமேசுவரன், திரு தனசேகரன், திரு கு. மருது, திரு வி. மதிமாறன், இப்பதிப்பிற்கு உதவிய என்னுடைய முனைவர் பட்ட மாணவர்கள் பா. மாலதி, கா. பாபு, சு. கோவிந்தராசு, கா. கயல்விழி ஆகிய அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப் பதிப்புப் பணியில் என்னை முழுவதாக ஈடுபடத் துணையாக நிற்கும் என் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார் அவர்களுக்கு என் நன்றியினை உரித்தாக்குகிறேன். கல்பனா சேக்கிழார் நுழைவுரை தமிழ்மண் பதிப்பகம் இதுகாறும் வெளியிட்டுள்ள அறிஞர் பெருமக்களின் உரைகள் யாவும் பழைய இலக்கிய இலக்கணக் கருவூலத்தின் வாயில்களைத் திறக்கின்ற திறவுகோல்கள்; தமிழரை ஏற்றிவிடும் ஏணிப்படிகள்; வரலாற்றுப் பாதையைக் கடக்க உதவும் ஊர்திகள். தமிழறிஞர்களின் அறிவுச்செல்வங்களை முழு முழு நூல் தொகுப்புகளாக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் பெரும் பங்களிப்பை எம் பதிப்பகம் செய்து வருவதை உலகத் தமிழர்கள் அனைவரும் அறிவர். தமிழகம் வேற்றினத்தவர் படையெடுப்பால் தாக்குண்டு அதிர்ந்து நிலைகுலைந்து தமிழ்மக்கள் தம் மரபுகளை மறந்தபோதெல்லாம் பழம்பெரும் இலக்கியச் செல்வங்களை எடுத்துக்காட்டி விளக்கித் தமிழ் மரபை வாழச் செய்த பெருமை உரையாசிரியர்களுக்கு உண்டு. தமிழ்மொழியின் நிலைத்த வாழ்விற்கும் வெற்றிக்கும் காரணமாக இருப்பவர்கள் உரையாசிரியர்களே ஆவர். இலக்கணக் கொள்கைகளை விளக்கி மொழிக்கு வரம்பு கட்டி இலக்கியக் கருத்துகளை விளக்கி காலந்தோறும் பண்பாட்டை வளர்த்து, தமிழ் இனத்திற்குத் தொண்டு செய்த பெருமை உரையாசிரியர்களையே சாரும். ஒவ்வொரு உரையாசிரியரும் தமிழினம் உறங்கிக் கொண்டிருந்தபோது விழித்தெழுந்து, எழுச்சிக்குரல் கொடுத்த முற்போக்குச் சிந்தனையாளர்கள். அவர்கள் எழுதியுள்ள உரைகள் யாவும் காலத்தின் குரல்கள்; சமுதாயத்தின் எதிர்பார்ப்புகள்; தமிழ் இன வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவைகள்; நெருக்கடியின் வெளிப்பாடுகள் ஆகும். - உரையாசிரியர்கள், (மு.வை. அரவிந்தன்). தொல்காப்பியம் இலக்கணநூல் மட்டுமன்று; தமிழரின் அறிவுமரபின் அடையாளம். தமிழரின் வாழ்வியலை, மெய்யியலைப் பாதுகாத்த காலப்பேழை. இதில் பொதிந்துள்ள தருக்கவியல் கூறுகள் இந்தியத் தருக்கவியல் வரலாற்றின் மூல வடிவங்கள் - அறிஞர்களின் பார்வையில் பேரறிஞர் அண்ணா, (முனைவர் க. நெடுஞ்செழியன்) மேற்கண்ட அறிஞர்களின் கூற்று, தொல்காப்பியத்தின் இன்றியமை யாமையையும், உரையாசிரியர்களின் கருத்துச் செறிவையும் உழைப்பையும் உணர்த்த வல்லவை. சி.வை. தாமோதரம் பிள்ளை, கா. நமச்சிவாய முதலியார், வ.உ. சிதம்பரனார், சி. கணேசையர், இரா. வேங்கடாசலம் பிள்ளை, தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் போன்ற பெருந்தமிழ் அறிஞர்களின் உழைப்பால் உருவான இவ் வாழ்வியல் கருவூலம் தொல்காப்பிய உரைத்தொகை எனும் பெயரில் தமிழ்மண் பதிப்பகம் மீள் பதிப்பு செய்துள்ளது. 2003 -ஆம் ஆண்டில் எம் பதிப்பகம் தொல்காப்பியத்தை (எழுத்து - சொல் - பொருள்) முழுமையாக வெளியிட்டுள்ளது. இதுகாறும் வெளிவந்துள்ள தொல்காப்பிய நூல் பதிப்புகளில் இடம் பெறாத அரிய பதிப்புச் செய்திகள் இவ்வுரைத் தொகையில் சேர்க்கப்பட்டுள்ளன. இவ்வுரைத் தொகை எல்லா நிலையிலும் சிறப்பாக வெளிவருவதற்கு தோன்றாத் துணையாக இருந்தவர்களைப் பற்றி தனிப்பக்கத்தில் பதிவு செய்துள்ளோம். இவ்வாழ்வியல்நூல் பிழையற்ற செம்பதிப்பாக வெளிவருவதற்கு முதன்மைப் பதிப்பாசிரியர் முதுமுனைவர் ஐயா இரா. இளங்குமரனார், இணை பதிப்பாசிரியர் அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் ஆகியோரின் உழைப்பும் பங்களிப்பும் என்றும் மறக்க முடியாதவை. எம் தமிழ் நூல் பதிப்பிற்கு எல்லா நிலையிலும் தொடர்ந்து ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் இனிய நண்பர் புலவர் செந்தலை ந. கவுதமன் அவர்களின் தன்னலம் கருதா தமிழ்த் தொண்டிற்கு என்றும் நன்றி உடையேன். தமிழர்கள் தம் இல்லம்தோறும் பாதுகாத்து வைக்க வேண்டிய இவ்வருந்தமிழ்ப் புதையலைத் தமிழ் கூறும் உலகிற்கு வழங்குவதைப் பெருமையாகக் கருதி மகிழ்கிறோம். இப்பதிப்பைத் தமிழ்க்கூறும் நல்லுலகம் ஏற்றிப்போற்றும் என்று நம்புகிறோம். கோ. இளவழகன் நூலாக்கத்திற்கு உதவியோர் முதன்மைப்பதிப்பாசிரியர்: முதுமுனைவர் இரா. இளங்குமரனார் இணைப்பதிப்பாசிரியர்: முனைவர் கல்பனா சேக்கிழார் நூல் வடிவமைப்பு: திருமதி. கயல்விழி, கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (Harrish) திருத்தத்திற்கு உதவியோர்: புலவர் பனசை அருணா புலவர் மு. இராசவேலு முனைவர் அரு. அபிராமி முனைவர் ஜா. கிரிசா நூலாக்கத்திற்கு உதவியோர்: திருமிகு. இரா. பரமேசுவரன், திருமிகு. வே. தனசேகரன், திருமிகு. கு. மூர்த்தி, திருமிகு. வி. மதிமாறன் கணினியில் நூலாக்கம்:  மாணவர் நகலகம்,  பிராசசு இந்தியா,  ரியல் இம்பேக்ட் சொல்யூசன்,  தூரிகை பிரிண்ட் உள்ளடக்கம் புள்ளி மயங்கியல் 3 குற்றியலுகரப் புணரியல் 73 பின்னிணைப்புகள் 128 1. அளபெடை 129 2. போலி எழுத்து 137 3. இலக்கணக் கொள்கைக் கட்டுரைகளிலே கணேசையரின் அணுகுமுறை 144 4. மகாவித்துவான் மறைத்திரு. சி. கணேசையர் அவர்கள் 194 5. உரை நெறியும் விளக்கமும் 224 - நூற்பா நிரல் 262 - சொல் நிரல் 268 - சொற்றொடர் நிரல் 280 - செய்யுள் நிரல் 298 - விஷய (பொருள்) அகராதி 300 - அருஞ்சொல் விளக்கம் முதலியன 312 எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியம் -2 சி. கணேசையர் - பதிப்பு (1937, 1952) முதற் பதிப்பு 1937லும், இரண்டாம் பதிப்பு 1952லும் சுன்னாகம் திருமகள் அழுத்தகத்திற் அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளன. 2007இல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்பதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு மீள் பதிப்பாக இந்நூல் வெளிவருகிறது. புள்ளி மயங்கியல் மெய்யீறு வன்கணத்தோடும் பிறகணத்தோடும் புணருமாறு கூறுவது புள்ளி மயங்கியலாகும். மெய்யீறெல்லாம் புள்ளியொடு நிற்குமாதலின் புள்ளியென்றார். மெய்யீற்றுள் உகரம்பெறுவன, இறுதி கெட்டு வல்லெழுத்து மிகுவன மெல்லெழுத்து மிகுவன, இறுதிகெடாது வல்லெழுத்து மிகுவன மெல்லெழுத்து மிகுவன, வல்லெழுத்தும் மெல்லெழுத்தும் உறழ்ந்து முடிவன, இயல்பாய் வருவன, சாரியை பெறுவன, திரிந்து முடிவன என்னும் இவ்வகையினுள் இவ்வியலிற் கூறப்பட்ட விதிகள்யாவும் அடங்கு வனவாம். ஞ, ந, ண, ம, ல, ள என்னும் மெய்களை இறுதியாகவுடைய தொழிற்பெயர் முன்னர் வல்லெழுந்து முதன்மொழி வரின் இரு வழியும் வருமொழி வல்லெழுத்து மிக நிலைமொழியீறு உகரம் பெற்று முடியும். நகர வீற்றுத் தொழிற்பெயர் வேற்றுமைக்கண் உகரம்பெறாது அகரம்பெற்று முடியும், ஈம், கம், உரும், மின், பின், கன், வல், தெவ், புள், வள் என எடுத்தோதிய பெயர்களும் தொழிற்பெயர்போல இருவழியும் உகரம்பெற்று வல்லெழுத்து மிகுவனவாம். அவற்றுள் கன் என்னுஞ்சொல் வேற்றுமைக்கண் அகரம் பெற்று வல்லெழுத்து மிகப்பெறும். வல் என்னுஞ் சொல்லின்முன் நாய், பலகை என்பன வருமொழியாய்வரின் அவ்வழி உகரமின்றி அகரம்பெற்று முடியும். வெரிந் என்ற சொல், இறுதி நகரவொற்றும் அச்சொல் பெற்ற அகரமும்கெட வல்லெழுத்து வரும்வழி அவ்வல்லெழுத் தாயினும் அதன் கிளையெழுத்தாகிய மெல்லெழுத்தாயினும் மிக்கு முடியும், மகரவீற்றுப் பெயர் வேற்றுமைக்கண் இறுதி மகரம்கெட வல்லெழுத்து மிக்கு முடியும். இங்ஙனம் மகர வீறுகெட்ட விடத்து வருமொழி வல்லெழுத்தோடு மெல்லெழுத்து உறழ்ந்து முடியும் மொழிகளும் சில உள. ஆயிரம் என்பதன்முன் அளவுப்பெயர் வந்து புணருமிடத்து வேற்றுமையிற்போல இறுதி மகரங்கெட்டு வல்லெழுத்து மிகும். இல்லம் என்னும் மரப்பெயர் இறுதி மகரங்கெட்டு மெல்லெழுத்து மிகும். அழன் என்பதன் இறுதிகெட வருமொழி வல்லெழுத்து மிக்குமுடியும். வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண்வரும் யரழ வீற்றுப் பெயர்கள் வல்லெழுத்து முதன்மொழி வருமிடத்து அவ்வல் லெழுத்து மிக்கு முடிவன. தாய் என்னுஞ்சொல்முன் மகன் வினைவரின் வல்லெழுத்து மிகும். ஆர், வெதிர், சார், பீர், குமிழ் என்னுஞ் சொற்கள் வல்லெழுத்து வருவழி மெல்லெழுத்து மிக்கு முடிவன. வேற்றுமைக்கண் யகர வீற்றுட் சிலவும் சார், பாழ் என்பனவும் வல்லெழுத்தோடு மெல்லெழுத்துப்பெற்று உறழ்வனவாம். கீழ் என்னுஞ்சொல் வல்லெழுத்துப்பெற்றும் பெறாதும் உறழும். ஆண், பெண், உமண், முரண், குயின், எகின், தான், பேன், கோன் என்பனவும் நெட்டழுத்தின் பின்வரும் லகார, ளகார வீற்றுப்பெயர்கள் சிலவும் திரியாது இயல்பாவனவாம். தாய் என்னும் பெயரும் அல்வழிக்கண்வரும் யகார வீற்றுப் பெயர்களும் வல்லெழுத்து மிகாது இயல்பாவன. அல்வழிக் கண்வரும் எல்லாரும், தாம், நாம், யாம், தான் என்பன குறுகலுந் திரிதலுமின்றி இயல்பாவன. நூறாயிரம், தாமரை, வெள்ளம், ஆம்பல் என்பவற்றோடும் ஏனை உயிர் முதன்மொழிகளோடும் புணரும் ஏழ் என்னும் எண்ணுப்பெயரும், உயிர் முதன் மொழிகளோடும் யகர வகர முதன்மொழிகளோடும் புணரும் வகர வீற்றுச் சுட்டுப்பெயர்களும் குறுகலுந் திரிதலுமின்றி இயல்பாவனவாம். ஆண், எகின், பீர், பூல், வேல், ஆல், குமிழ் என்பன அம்சாரியையும், வேற்றுமைக்கண்வரும் ஈம், கம் என்பனவும் கோல் என்பதனோடு புணரும் தாழ் என்னுஞ் சொல்லும், தமிழ் என்னும் சொல்லும் அக்குச்சாரியையும், வெயில், இருள் என்பன அத்துச்சாரியையும் இன்சாரியையும், மகரவீற்று நாட்பெயர் இகர வீற்று நாட்பெயர்போல ஆன்சாரியையும் அதன்மேல் அத்துச் சாரியையும், செய்யுளிடத்துவரும் விண் என்னுஞ்சொல் வினைச் சொல் வருமொழியாக வருமிடத்து அத்துச்சாரியையும், தனித்தும் அடையடுத்தும் வரும் ஆயிரம் என்ற எண்ணுப்பெயர் பிற எண்களோடு புணருமிடத்து அத்துச்சாரியையும் பெறுவன என்பர் ஆசிரியர். எல்லாரும் என்னும் படர்க்கைப்பெயரும், எல்லீரும் என்னும் முன்னிலைப்பெயரும், நெடுமுதல் குறுகி முடியுமியல் புடைய தாம், நாம், யாம் என்னும் பெயர்களும், னகர வீற்றுள் தான், யான் என்னும் பெயர்களும் சாரியைபெறுவன ஈறுகெட்டு இடையிலும் இறுதியிலும் சாரியைபெற்றும், நெடுமுதல் குறுகுவன நெடுமுதல் குறுகியும், உருபு புணர்ச்சிக்கண் முடிந்தவாறே வேற்றுமைப் பொருட் புணர்ச்சியினும் முடியும்என ஆசிரியர் மாட்டேற்று முறையான் விதிகூறியுள்ளார். எல்லாம் என்னும் விரவுப்பெயர் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் இடையே வற்றுச்சாரியையும் இறுதியில் உம்சாரியையும் பெறும். அப்பெயர் அல்வழிக்கண் சாரியை பெறாது. உயர்திணைக்கண் இடையே நம் சாரியையும் இறுதியில் உம்சாரியையும்பெறும். வகர வீற்றுச் சுட்டுப்பெயர் வற்றுச்சாரியைபெறும். ஏழ் என்னும் எண்ணுப்பெயர் அன்சாரியை பெறும். ணகர ளகர வீறுகள் வல்லெழுத்து முதன்மொழி வருங்கால் டகரமாகவும், னகர லகர வீறுகள் றகரமாகவும் திரிவன. எள்ளை யுணர்த்தும் எண் என்னும் பெயரின் ணகரம் அல்வழியிலும் டகர மாகத்திரியும். நெல், செல், கொல், சொல் என்பவற்றின் லகரம் அல்வழியிலும் றகரமாய்த்திரியும். அல்வழிக்கண்வரும் ளகரவீறு திரிந்தும் திரியாதும் உறழ்ந்து முடியும். வேற்றுமையிற்போல அல்வழியிலும் டகரமாகத்திரியும் ளகர வீறுகள் சிலவுள. மன், சின், ஆன், ஈன், பின், முன் என்பனவும் செயின் என்னும் வினையெச்சமும் அவ்வயின், இவ்வயின், உவ்வயின் எவ்வயின் எனவரும் ஏழாம் வேற்றுமை யிடப்பொருளுணர்த்தும் இடைச் சொற்களும் ஆகியவற்றின் னகரம் றகரமாகத்திரியும். மீன் என்பதன் னகரம் றகரமாகத்திரிந்தும் திரியாதும் உறழும். லகர ளகர வீற்றுச்சொற்கள் தகரமுதன்மொழி வருமிடத்து லகர ளகரங்கள் ஆய்தமாகத்திரியும். மெல்லெழுத்து முதன் மொழி வருங்கால் முறையே லகரம் னகரமாகவும் ளகரம் ணகரமாகவும் திரிவன. மகரவீறு அல்வழிக்கண் வலிவரின் ஏற்றமெல்லெழுத்தாகத் திரியும். அகம் என்னுஞ் சொல்லின்முன் கை என்பது வருமொழியாய்வரின் நிலைமொழியின் நடுவெழுத்தாகிய ககரவுயிர் மெய்கெட மெல்லெழுத்து மிக்கு முடியும். நும் என்பதனை அல்வழிக்கண் கூறுங்கால் நகரவொற்றின்மேல் நின்ற உகரம் கெட அவ்வொற்றின்மேல் ஈகாரம் ஊர்ந்து நீ என்றாகி ஓர் இகரம் இடையில்வர இறுதி மகரங்கெட்டு ரகர வொற்றுத் தோன்றி நீயிர் எனத்திரியுமென்பர் தொல்காப்பியர். எனவே நும் என்பதே திரிபில் சொல்லென்றும் நீயிர் என்பது அதன் திரிபென்றுங் கொள்ளுதல்வேண்டும். தேன் என்னுஞ்சொல், வலிவரின் னகரம் றகரமாகத் திரிந்தும் திரியாதும் உறழ்தலும், இறுதி னகரங்கெட்டு வலிமெலி மிகுதலும், மெலிவரின் இறுதிகெட்டும் கெடாதும் உறழ்தலும் பெறும். இறால் என்பது வருமொழியாகவரின் தேன் என்பதன் னகரம் கெட்டுத் தகரம் இரட்டித்து முடியும். சாத்தன், கொற்றன் முதலிய இயற்பெயர் முன்னர்த் தந்தையென்பது வருமொழியாய்வரின், தந்தை யென்பதன் முதலிலுள்ள தகரங்கெட்டு, அதன்மேலேறிய அகரங்கெடாது நிற்ப, நிலைமொழியியற்பெயரிலுள்ள அன்கெட்டு, அங்கு நின்ற மெய்யின்மேல் வருமொழி முதலிலுள்ள அகரம் ஏறிமுடியும். முற்கூறிய இயற்பெயருள் ஆதன், பூதன் என்னும் இருபெயர்களும் வருமொழியாகிய தந்தையென்னும் முறைப்பெயரொடு புணருங்கால் இவ்வியற் பெயர்களின் இறுதிநின்ற அன்கெட எஞ்சிய தகரவொற்றும், தந்தை என்பதில் முன்கூறியபடி தகரங்கெட எஞ்சிய அகரவுயிரும் சேரக்கெட்டு, ஆந்தை, பூந்தை என முடிவனவாம். இப்பெயர்கள் சிறப்புப் பண்படுத்துவருங்கால் அங்ஙனந்திரிதலின்றி இயல்பாவன என்பர். மேற்கூறிய இயற்பெயர்கள் இன்னாற்கு மகன் இன்னான் என்னும் முறையில் ஒட்டி நிற்குங்கால் நிலைமொழிப் பெயரீற்றின் அன்கெட்டு அம்சாரியை பெற்றுப் புணர்தலுமுண்டு. முன் என்னும் சொல்முன் இல் என்னுஞ்சொல் வந்து புணரின் இடையே றகரவொற்றுத் தோன்றி முன்றில் எனமுடிதல் தொன்று தொட்டு மருவிவழங்கும் இலக்கண முடிபாம். பொன் என்னுஞ்சொல், ஈற்றில் னகரம்கெட லகரவுயிர்மெய்யும் மகர மெய்யும்பெற்றுப் பொலம் எனத் திரிந்துவழங்கும். இல் என்னும் சொல், வீட்டை யுணர்த்தாது இல்லாமையென்னும் பொருளை யுணர்த்துங்கால், ஐகாரம் பெற்று வருமொழி வல்லெழுத்து மிகுதலும், மிகாமையும், இயல்பாதலும், ஆகாரம்பெற்று வல்லெழுத்து மிகுதலும் ஆகிய நான்குமுடிபினை யுடையதாகும். - க. வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 181-185 எட்டாவது புள்ளிமயங்கியல் 296. ஞகாரை யொற்றிய தொழிற்பெயர் முன்ன ரல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும் வல்லெழுத் தியையி னவ்வெழுத்து மிகுமே யுகரம் வருத லாவயி னான என்பது சூத்திரம். நிறுத்த முறையானே உயிரீறு புணர்த்துப் புள்ளியீறு வன் கணத்தோடுஞ் சிறுபான்மை ஏனைக் கணத்தோடும் புணருமாறு கூறலின் இவ்வோத்துப் புள்ளிமயங்கியல் என்னும் பெயர்த் தாயிற்று. இச்சூத்திரம் - ஞகார ஈறு வன்கணத்தோடு இருவழியும் புணருமாறு கூறுகின்றது. இதன் பொருள்:ஞகாரை ஒற்றிய தொழிற்பெயர் முன்னர் - ஞகாரம் ஈற்றின்கண் ஒன்றாக நின்ற தொழிற்பெயரின் முன்னர், அல்லது கிளப்பினும் வேற்றுமைக்கண்ணும் - அல்வழியைச் சொல்லுமிடத்தும் வேற்றுமையைச் சொல்லுமிடத்தும், வல்லெழுத்து இயையின் அவ்வெழுத்துமிகும்-வல்லெழுத்து முதன்மொழி வரு மொழியாய் வரின் அவ்வல்லெழுத்து வருமொழிக்கண் மிக்கு முடியும், ஆவயின் ஆன உகரம் வருதல் - அவ்விடத்து உகரம் வருக என்றவாறு. உதாரணம்: உரிஞுக்கடிது சிறிது தீது பெரிது எனவும், உரிஞுக் கடுமை சிறுமை தீமை பெருமை எனவும் வரும். (1) 297. ஞநமவ வியையினு முகர நிலையும். இஃது அவ்வீறு மென்கணத்தோடும் இடைக்கணத்து வகரத்தோடும் முடியுமென எய்தாத தெய்துவித்தது. இதன் பொருள்:ஞநமவ இயையினும் உகரம் நிலையும் - அஞ்ஞகர ஈறு வன்கணமன்றி ஞ ந ம வ முதன்மொழி வருமொழியாய் வரினும் நிலைமொழிக்கண் உகரம் நிலைபெற்று முடியும். என்றவாறு. உதாரணம்: உரிஞுஞான்றது நீண்டது மாண்டது வலிது எனவும், ஞாற்சி நீட்சி மாட்சி வலிமை எனவும் வரும். யகரத்தோடும் உயிரோடும் புணருமாறு தொகைமரபினுள் 1உகர மொடு புணரும் (எழு. 163) என்பதனாற் கூறினார். (2) 298. நகர விறுதியு மதனோ ரற்றே. இது, நகர ஈறு முற்கூறிய கணங்களோடு அல்வழிக்கண் முடியுமாறு கூறி எய்தாத தெய்துவிக்கின்றது. இதன் பொருள்: நகர இறுதியும் - நகர ஈற்றுப்பெயரும் முற்கூறிய கணங்களொடு புணரும்வழி, அதனோரற்று - அஞ்ஞகர ஈற்றுத் தொழிற் பெயர் இயல்பிற்றாய் வல்லெழுத்து வந்துழி அவ்வெ ழுத்து மிக்கு உகரம் பெற்றும் ஞ ந ம வ வந்துழி உகரம் பெற்றும் முடியும் என்றவாறு. உதாரணம்: பொருநுக்கடிது வெரிநுக்கடிது சிறிது தீது பெரிது எனவும், ஞான்றது நீண்டது மாண்டது வலிது எனவும் வரும். முடிபு ஒப்புமை நோக்கி நகரஈறு ஈண்டுப் புணர்த்தார். 2ஈண்டு வேற்றுமை யொழித்து மாட்டேறு சென்றதென்று உணர்க. (3) 299. வேற்றுமைக் குக்கெட வகர நிலையும். இது, நிலைமொழி உகரம் விலக்கி அகரம் வகுத்தலின் எய் தியது விலக்கிப் பிறிதுவிதி வகுக்கின்றது. இதன் பொருள்: வேற்றுமைக்கு - அந்நகர ஈறு வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கு, உக்கெட அகரம் நிலையும் - மேலெய்திய உகரங் கெட அகரத்தோடு நிலைபெற்றுப் புணரும் என்றவாறு. உதாரணம்: பொருநக்கடுமை வெரிநக்கடுமை சிறுமை தீமை பெருமை ஞாற்சி நீட்சி மாட்சி வன்மை என வரும். அகர நிலையும் என்னாது உகரங்கெட என்றதனான் உரு பிற்குச் சென்ற சாரியை பொருட்கட் சென்றுழி இயைபு வல்லெழுத்து வீழ்வுஞ் சிறுபான்மை உகரப்பேறுங் கொள்க. வெரிநின்குறை பொருநின்குறை உரிஞின்குறை எனவும், உயவல் யானை வெரிநுச் சென்றன்ன (அகம். 658) எனவும் வரும். யானையினது முதுகின்மேற் சென்றன்ன என விரிக்க. 3பொருந் என்பது ஒரு சாதிப்பெயரும், பொருந்துதல் லென்னும் வினைப்பெயருமாம். (4) 300. வெரிநெ னிறுதி முழுதுங் கெடுவழி வருமிட னுடைத்தே மெல்லெழுத் தியற்கை. இஃது அந்நகர ஈற்றுள் ஒருமொழிக்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது. இதன் பொருள்: வெரிந் என் இறுதி - வெரிந் என்று சொல்லப்படும் நகர ஈற்றுமொழி, முழுதுங் கெடுவழி - தன்ஈற்று நகரம் முன்பெற்ற உகரத்தோடு எஞ்சாமைக் கெட்ட இடத்து, மெல்லெழுத்து இயற்கை வரும் இடன் உடைத்து - மெல்லெழுத்துப் பெறும் இயல்பு வந்து முடியும் இடனுடைத்து என்றவாறு. உதாரணம்: வெரிங்குறை செய்கை தலை புறம் என வரும். மெல்லெழுத்து வருமொழி நோக்கி வந்தது. வெயில்வெரி நிறுத்த பயிலிதழ்ப் பசுங்குடை என்பதில் 4நகர இகரமே இட்டெழுதுப. (5) 301. ஆவயின் வல்லெழுத்து மிகுதலு முரித்தே. இஃது - அதற்கு எய்தாதது எய்துவித்தது. இதன் பொருள்: ஆவயின் - அவ்வெரிந் என்னுஞ் சொல் அவ்வாறு ஈறு கெட்டு நின்ற இடத்து, வல்லெழுத்து மிகுதலும் உரித்து – மெல்லெழுத்தே யன்றி வல்லெழுத்து மிக்கு முடிதலும் உரித்து என்றவாறு. உதாரணம்: வெரிக்குறை செய்கை தலை புறம் என வரும். (6) 302. ணகார விறுதி வல்லெழுத் தியைபின் டகார மாகும் வேற்றுமைப் பொருட்கே. இது, நிறுத்த முறையானே ணகார ஈறு வேற்றுமைப் பொருட்கட் புணருமாறு கூறுகின்றது. இதன் பொருள்: ணகார இறுதி - ணகார ஈற்றுப்பெயர், வல்லெழுத்து இயையின் - வல்லெழுத்து முதன்மொழி வந்து இயையின், டகார மாகும் வேற்றுமைப் பொருட்கு - டகாரமாகத் திரிந்து முடியும் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் என்றவாறு. உதாரணம்: மட்குடம் சாடி தூதை பானை என வரும். மண்கை புண்கை என்பன 5இரண்டாவதன் திரிபின் முடிந்தன. கவண்கால் பரண்கால் என்பன மேல் முடித்தும். (7) 303. ஆணும் பெண்ணு மஃறிணை யியற்கை. இஃது - இவ்வீற்று விரவுப்பெயருட் சிலவற்றிற்கு, எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது. இதன் பொருள்: ஆணும் பெண்ணும் - ஆணென்னும் விரவுப்பெயரும் பெண்ணென்னும் விரவுப்பெயரும், அஃறிணை இயற்கை - தொகை மரபினுள் மொழி முதலாகும் (எழுத். 147) என்பதன்கண் அஃறிணைப் பெயர் முடிந்த இயல்புபோலத் தாமும் வேற்றுமைக்கண் இயல்பாய் முடியும் என்றவாறு. உதாரணம்: ஆண்கை பெண்கை செவி தலை புறம் என வரும். இது தொகைமரபினுள் அஃறிணை விரவுப்பெயர் (எழு. 155) என்பதனுள் முடிந்த இயல்பன்றோவெனின், இவை ஆண்டு முடிந்தன போலத் தத்தம் மரபின் வினையாற் பாலறியப் படுவன அன்றி 6இரு திணைக்கண்ணும் அஃறிணையாய் முடிதலின், அஃறிணைப் பெயரது இயல்போடு மாட்டெறிந்து முடித்தா ரென்க. ஆண்கடிது பெண்கடிது என்னும் அல்வழி முடிபு மொழி முதலாகும் (எழு. 147) என்பதன்கண் வருமொழி முற்கூறியவத னான் முடிக்க. (8) 304. ஆண்மரக் கிளவி யரைமர வியற்றே. இது, திரிபு விலக்கிச் சாரியை வகுத்தலின், எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது. இதன் பொருள்: ஆண்மரக் கிளவி - ஆண்பாலை உணர்த்தாது ஆணென்னும் மரத்தினை உணரநின்ற சொல், அரை மர இயற்று - அரையென்னும் மரம் அம்முப்பெற்ற இயல்பிற்றாய்த் தானும் அம்முப் பெற்று முடியும் என்றவாறு. உதாரணம்: ஆணங்கோடு செதிள் தோல் பூ என வரும். ஒன்றென முடித்தலான் இயல்புகணத்துங் கொள்க. ஆண நார் இலை என வரும். 7விரவுப்பெயரன்றென்றற்கு மரமென்றார். (9) 305. விண்ணென வரூஉங் காயப் பெயர்வயி னுண்மையு முரித்தே யத்தென் சாரியை செய்யுண் மருங்கிற் றொழில்வரு காலை. இது, செய்யுளுள் திரிபு விலக்கிச் சாரியை வகுத்தது. இதன் பொருள்: விண் என வரூஉங் காயப் பெயர்வயின் - விண்ணென்று சொல்லவருகிற ஆகாயத்தை உணர நின்ற பெயர்க்கண், அத்து என் சாரியை மிகுதலும் உரித்து - அத்தென்னுஞ் சாரியை உண்டாதலும் உரித்து இல்லையாதலும் உரித்து; செய்யுள் மருங்கின் தொழில் வருகாலை - செய்யுளிடத்துத் தொழிற்சொல் வருங் காலத்து என்றவாறு. உதாரணம்: விண்ணத்துக் கொட்கும் வண்ணத் தமரர் விண்ணத்துக் கொட்கும் விரைசெல் லூர்தியோய் எனவும், விண்குத்து நீள் வரை வெற்ப களைபவோ (நாலடி. 226) எனவும் வரும். விண்ணென்னும் குறிப்பினை நீக்குதற்குக் காயம் என்றார். விண்வத்துக் கொட்கும் என உடம்படுமெய் புணர்ந்து நிற்றலுங் கொள்க. 8அதிகார வல்லெழுத்தின்மையிற் சாரியை வல்லெழுத்துக் கொடுக்க. (10) 306. தொழிற்பெய ரெல்லாந் தொழிற்பெய ரியல. இஃது - இவ்வீற்றுட் சிலவற்றிற்குத் திரிபு விலக்கி உகரமும் வல்லெழுத்தும் விதிக்கின்றது. இதன் பொருள்: தொழிற்பெயர் எல்லாம் தொழிற் பெயர் இயல - அல்வழிக் கண்ணும் வேற்றுமைக்கண்ணும் ஞகார ஈற்றுத் தொழிற் பெயரது இயல்பினவாய் வன்கணம் வந்துழி வல்லெழுத்தும் உகரமும் பெற்றும், மென்கணத்தும் இடைக்கணத்து வகரத்தும் உகரம் பெற்றும் முடியும் என்றவாறு. உதாரணம்: 9மண்ணுக்கடிது பண்ணுக்கடிது சிறிது தீது பெரிது ஞான்றது நீண்டது மாண்டது வலிது எனவும், மண்ணுக்கடுமை சிறுமை தீமை பெருமை ஞாற்சி நீட்சி மாட்சி வன்மை எனவும் வரும். எல்லா மென்றதனால் தொழிற்பெயரல்லனவும் உகரமும் வல்லெழுத்தும் பெற்றும் இன்சாரியை பெற்றும் புணர்வன கொள்க. உதாரணம்: வெண்ணுக்கரை, தாழ்பெயல் கனைகுரல் கடுப்பப் பண்ணுப் பெயர்த்து எண்ணுப்பாறு, வெண்ணின்கரை என வரும். (11) 307. கிளைப்பெய ரெல்லாங் கொளத்திரி பிலவே. இஃது இவற்றுட் சிலவற்றிற்குத் திரிபு விலக்கி இயல்பு கூறுதலின், எய்தியது விலக்கிப் பிறிதுவிதி கூறுகின்றது. இதன் பொருள்: கிளைப் பெயரெல்லாம் - ணகார ஈற்றுள் ஓரினத்தை உணரநின்ற பெயரெல்லாம், கொளத் திரிபு இல - திரிபுடைய வென்று கருதும்படியாகத் திரிதலிலவாய் இயல்பாய் முடியும் என்றவாறு. உதாரணம்: உமண் என நிறுத்திக் குடி சேரி தோட்டம் பாடி எனத் தந்து முடிக்க. இனி, எல்லா மென்றதனாற், பிற சாரியை பெற்று முடிவன வும், இயல்பாய் முடிவனவும் கொள்க. 10மண்ணப்பத்தம் எண்ண நொலை எனவும், கவண்கால் பரண்கால் எனவுங் கொள்க. கொள என்றதனால், ஏழாம் வேற்றுமை பொருண்மை உணர நின்ற இடைச்சொற்கள் திரிந்து முடிவனவுங் கொள்க. அங்கட் கொண்டான் இங்கட்கொண்டான் உங்கட் கொண் டான் எங்கட்கொண்டான் எனவும், ஆங்கட்கொண்டான் ஈங்கட்கொண்டான் ஊங்கட்கொண்டான் யாங்கட் கொண் டான் எனவும், அவட்கொண்டான் இவட்கொண்டான் உவட்கொண் டான் எவட்கொண்டான் எனவும் ஒட்டுக. (12) 308. வேற்றுமை யல்வழி யெண்ணெ னுணவுப்பெயர் வேற்றுமை யியற்கை நிலையலு முரித்தே. இஃது அவ்வீற்றுள் ஒன்று அல்வழியுள் வேற்றுமை முடிபு போலத் திரிந்து முடியுமாறு கூறுகின்றது. இதன் பொருள்: வேற்றுமை அல்வழி - வேற்றுமையல்லாத இடத்து, எண்ணென் உணவுப்பெயர் - வரையறைப் பொருண்மை உணர்த்தாது எண்ணென்று சொல்லப்படும் உணவினை உணர்த்தும் பெயர், வேற்றுமை இயற்கை நிலையலும் உரித்து - வேற்றுமையது திரிந்து முடியும் இயல்பின் நிற்றலும் உரித்து என்றவாறு. உதாரணம்: எட்கடிது சிறிது தீது பெரிது என வரும். உம்மை யால், தொகைமரபினுள் 11மொழிமுதலாகும் (எழு. 147) என்றதனாற் கூறிய இயல்பு பெரும்பான்மையாயிற்று. அஃது எண்கடிது என வரும். (13) 309. முரணென் றொழிற்பெயர் முதலிய னிலையும். இஃது - இவ்வீற்றுட் தொழிற்பெயருள் ஒன்றற்குத் தொழிற் பெயர்க்கு எய்திய உகரமும் வல்லெழுத்தும் விலக்கி இவ்வீற்று அல்வழி முடிபும் வேற்றுமைமுடிபும் எய்துவித்தது. இதன் பொருள்: முரண் என் தொழிற்பெயர் - மாறுபாடு உணர்த்தும் முரணென்னுந் தொழிற்பெயர், முதலியல் நிலையும் - 12தொகை மரபிற் கூறிய அல்வழிக்கண் திரியாது முடிந்த இயல்பின்கண்ணும் ஈண்டு வேற்றுமைக்கண் திரிந்து முடிந்த இயல்பின்கண்ணும் நிலைபெற்று முடியும் என்றவாறு. உதாரணம்: முரண்கடிது சிறிது தீது பெரிது ஞெகிழ்ந்தது நீண்டது மாண்டது வலிது எனவும், முரட்கடுமை சேனை தானை பறை எனவும், முரண்ஞெகிழ்ச்சி நீட்சி மாட்சி வலிமை எனவும் வரும். இதனைத் தொழிற்பெயரெல்லாம் (எழுத். 306) என்றதன் பின் வையாத முறையன்றிக் கூற்றினான், முரண்கடுமை முரட்கடுமை, அரண்கடுமை அரட்கடுமை என்னும் உறழ்ச்சியுங் கொள்க. (14) 310. மகர விறுதி வேற்றுமை யாயிற் றுவரக் கெட்டு வல்லெழுத்து மிகுமே. இது, முறையானே மகர ஈற்றுப்பெயர் வேற்றுமைக்கட் புணரு மாறு கூறுகின்றது. இதன் பொருள்: மகர இறுதி வேற்றுமை ஆயின் - மகர ஈற்றுப் பெயர் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண்ணாயின், துவரக் கெட்டு வல்லெழுத்து மிகும் - அந்நிலைமொழி மகரம் முற்றக் கெட்டு வருமொழி வல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு. உதாரணம்: மரக்கோடு செதிள் தோல் பூ என வரும். முண்டகக் கோதை எனவும் வரும். துவர என்றதனான், இயல்பு கணத்துக் கண்ணும் உயர் திணைப் பெயர்க்கண்ணும் 13விரவுப்பெயர்க்கண்ணும் மகரக்கேடு கொள்க. மரஞாண் மரநூல் இவற்றிற்கு நான்கனுருபு விரிக்க. மர மணி யாழ் வட்டு அடை ஆடை என ஒட்டுக. நங்கை எங்கை செவி தலை புறம் எனவும், தங்கை செவி தலை புறம் எனவும் வரும். ஈண்டு மகரக்கேடே கொள்க; முடிபு மேற்கூறுப (எழு. 320). (15) 311. அகர ஆகாரம் வரூஉங் காலை யீற்றுமிசை யகர நீடலு முரித்தே. இஃது அவ்வீற்று முடிபு வேற்றுமையுடையன கூறுகின்றது. இதன் பொருள்: அகர ஆகாரம் வரூஉம் காலை - அகர முதன்மொழியும் ஆகார முதன்மொழியும் வருமொழியாய் வருங்காலத்து, ஈற்று மிசை அகரம் நீடலும் உரித்து - மகர ஒற்றின் மேல் நின்ற அகரம் நீண்டு முடிதலும் உரித்து நீடாமையும் உரித்து என்றவாறு. உதாரணம்: மரம் குளம் என நிறுத்தி, மகரங்கெடுத்து, அடி ஆம்பல் எனத் தந்து, ரகர ளகரங்களில் நின்ற அகரம் ஆகார மாக்கி, மராஅடி குளாஅம்பல் என முடிக்க. மேற் செல்வழி யறிதல் வழக்கத் தான (எழு. 312) என்பத னாற், குளாஅம்பல் என்புழி ஆம்பல் என்பதன் ஆகாரத்தை அகர மாக்குக. உம்மையான், மரவடி குளவாம்பல் என நீடாமையுங் கொள்க. வருமொழி முற்கூறியவதனான், இவ்வீற்றுப் பிறவும் வேறுபட முடிவன கொள்க. கோணாகோணம் கோணாவட்டம் என வரும். இவற்றிற்கு உள்ளென்னும் உருபு விரிக்க. கோணாகோணத்திற்கு வல்லெழுத்துக்கேடு 14மேலைச் சூத்திரத்து இலேசாற் கொள்க. (16) 312. மெல்லெழுத் துறழு மொழியுமா ருளவே செல்வழி யறிதல் வழக்கத் தான. இது, மகரங்கெட்டு வல்லெழுத்து மிகுதலோடு மெல்லெ ழுத்தும் உறழ்க என்றலின், எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது. இதன் பொருள்:மெல்லெழுத்து உறழும் மொழியுமாருள - மகர ஈற்றுள் வல்லெழுத்தினோடு மெல்லெழுத்துப் பெற்று உறழ்ந்து முடியும் மொழிகளும் உள, வழக்கத்து ஆன செல்வழி அறிதல் - வழக்கத்தின் கண் வழங்கும் இடம் அறிக என்றவாறு. உதாரணம்: குளங்கரை குளக்கரை சேறு தாது பூழி என வரும். இவற்றுட் குளங்கரை குளக்கரைபோல அல்லன ஒத்த உறழ்ச் சியாய் வழங்கா வென்றற்குச் செல்வழியறிதல் என்றார். வழக்கத்தான என்றதனான், குளத்துக் கொண் டான் ஈழத்துச் சென்றான் குடத்துவாய் பிலத்துவாய் என்றாற்போல்வன, மகரங் கெட்டு அத்துப்பெற்றன. இவை அத்தே வற்றே (எழு. 133) என்பதனான் 15ஒற்றுக் கெடாவாயின, அஃது அல்வழிக்குக் கூறுதலின். மழகளிறு என்பது மழவுங் குழவு மிளமைப் பொருள என்ற உரிச்சொல். அது மகர ஈறன்று. சண்பகங்கோடு என்பது வழக்கிடத்துச் செல்லாது. இன்னும் இதனானே, மகரங்கெடாது நிற்பனவுங் கொள்க. புலம்புக் கனனே (புறம். 258) கலம்பெறு கண்ணுள ரொக்கற் றலைவ (மலைபடு. 50) என வரும். (17) 313. இல்ல மரப்பெயர் விசைமர வியற்றே. இஃது இவ்வீற்றுள் ஒன்றற்கு வல்லெழுத்து விலக்கி மெல்லெ ழுத்து விதித்தது. இதன் பொருள்: இல்ல மரப்பெயர் - புக்கு உறையும் இல்லன்றி இல்ல மென்னும் மரத்தினை உணரநின்ற சொல், விசை மர இயற்று - விசை யென்னும் மரத்தின் இயல்பிற்றாய் மெல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு. உதாரணம்: இல்லங்கோடு செதிள் தோல் பூ என வரும். மேலைச் சூத்திரத்து வழக்கத்தான (எழு. 312) என்றதனான், மகரக்கேடு கொள்க. (18) 314. அல்வழி யெல்லா மெல்லெழுத் தாகும். இது, மகரம் அல்வழிக்கண் திரிக என முற்கூறாமையின் எய்தாத தெய்துவித்தது. இதன் பொருள்:அல்வழி யெல்லாம் மெல்லெழுத் தாகும் - மகர ஈறு அல்வழிக்கணெல்லாம் மெல்லெழுத்தாய்த் திரிந்து முடியும் என்றவாறு. உதாரணம்: மரங்குறிது சிறிது தீது பெரிது என வரும். மரம் பெரிது என்புழித் திரிபின்றென்பது 16ஆணை கூறலென்னும் உத்தி. இனி எல்லா மென்றதனால், அல்வழிக்கண் மகர ஈறு பிற வாற்றான் முடிவனவெல்லாம் முடிக்க. வட்டத்தடுக்கு, சதுரப் பலகை, ஆய்தப் புள்ளி, வேழக்கரும்பு, கலக்கொள், சுக்கு, தோரை, பயறு; நீலக்கண் என்னும் பண்புத் தொகைக்கண் மகரங் கெட்டு வல்லெழுத்து மிக்கு முடிந்தன. ஆயுத வுலக்கை, அகர முதல 17இவை இயல்புகணத்துக்கண் மகரங் கெட்டு முடிந்தன. எல்லாருங் குறியர் நாங்குறியேம்: இவை உயர்திணைப் பெயர் மகரந் திரிந்து மெல்லெழுத்தாய் முடிந்தன. கொல்லுங் கொற்றன், உண்ணுஞ் சாத்தன், கவள மாந்து மலைகெழு நாடன், பொரு மாரன், தாவுபரி, பறக்குநாரை, ஓடுநாகம், ஆடுபோர், வருகாலம், கொல்லும் யானை, பாடும்பாணன் என இவை மகரந் திரிந்தும் கெட்டும் நிலை பெற்றும் வந்த பெயரெச்சம். இன்னும் இதனானே, இயல்புகணத்துக்கண்ணும் மகரங் கெடுதலுங் கெடாமையுங் கொள்க. மரஞான்றது நீண்டது மாண்டது எனவும், மரம்யாது வலிது அடைந்தது எனவும் வரும். இன்னும் இதனானே, பவளவாயென உவமத்தும், நிலநீரென எண்ணிடத்தும் கேடு கொள்க. (19) 315. அகமென் கிளவிக்குக் கைமுன் வரினே முதனிலை யொழிய முன்னவை கெடுதலும் வரைநிலை யின்றே யாசிரி யர்க்க மெல்லெழுத்து மிகுத லாவயி னான. இது, மகர ஈற்று அல்வழிக்கண் இம்மொழி இம்முடிபு எய்துக என்றலின், எய்தாததெய்துவித்தது. இதன் பொருள்:அகம் என் கிளவிக்குக் கை முன்வரின் - அகமென்னுஞ் சொல்லிற்குக் கையென்னுஞ் சொல்முன்னே வருமாயின், முதனிலை ஒழிய முன்னவை கெடுதலும் - முன்னின்ற அகரங் கெடாது நிற்ப அதன் முன் நின்ற ககரமும் மகரவொற்றுங் கெட்டு முடிதலும் கெடாது நின்று முடிதலும், வரை நிலை இன்றே யாசிரியர்க்க - நீக்கு நிலைமையின்று ஆசிரியர்க்கு, ஆவயினான் மெல்லெழுத்து மிகுதல் - அவை கெட்டவழி மெல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு. உதாரணம்: அங்கை என வரும். அகங்கை எனக் கெடாது முடிந்தவழி 18அல்வழி எல்லாம் (எழு. 314) என்றதனான், மகரந் திரிந்து முடிதல் கொள்க. இது பண்புத்தொகை. 19அதிகாரத்தானும் பொருணோக்கானும் வேற்றுமைத் தொகையன்மை உணர்க.(20) 316. இலமென் கிளவிக்குப் படுவரு காலை நிலையலு முரித்தே செய்யு ளான. இஃது இலமென்பது முற்றுவினைச் சொல்லாகாது குறிப்பாகிய உரிச்சொல்லாய் நிற்குங்கால் அல்வழிக்கண் முடியு மாறு கூறுகின்றது. இதன் பொருள்: இலம் என் கிளவிக்கு - இல்லாமை யென்னும் குறிப்பாகிய உரிச்சொற்கு, படு வரு காலை - உண்டாதலென்னும் பொருள்படும் 20வினைக் குறிப்புப்பெயர் வருமொழியாய் வருங் காலத்து, செய்யுளான நிலையலும் உரித்து - செய்யுளிடத்து மகரக், கேடுந் திரிபுமின்றி நிற்றலும் உரித்து என்றவாறு. எனவே, உம்மையாற் பிறசொல் வருங்காலத்துக் கேடுந் திரிபும் பெற்று நிற்றலும் உரித்தெனக் கொள்க. உதாரணம்: இலம்படு புலவ ரேற்றகை நிறைய என வரும். இதற்கு இல்லாமை உண்டாகின்ற புலவரெனப் பொருள் கூறுக. இலம்பாடு நாணுத் தரும் என்கின்றதோ வெனின், இல்லாமை உண்டாதல் நாணுத்தரு மென்று பொருள் கூறுக. இதனை நெற்பாடு பெரிதென்றாற் போலக் கொள்க. இது பொருளிலமென முற்றுவினைச் சொல்லாமாறும் உணர்க. இல நின்றதெனக் கெட்டவாறும், இலங்கெட வியந்தான் இலஞ்சிறிதாக இலந்தீதென்று எனக் கசதக்கள் வரும்வழித் திரிந்தவாறுங் காண்க. எல்லா (எழு. 314) மென்றதனான் இலம் வருவது போலும், இலம் யாரிடத்து என வகர யகரங்களின் முன்னர்க் கெடாது நிற்றல் கொள்க. இதனை இலத்தாற் பற்றப்பட்ட புலவரென வேற்றுமை யென்றாரால் உரையாசிரியர் எனின், பற்றப்பட்ட புலவரென்பது பெயரெச்சமாத லிற் பற்றவென்னுந் தொழில் தோற்றுவிக்கின்ற முதனிலைச் சொல்லைச் சூத்திரத்து ஆசிரியர் எடுத்தோதிற்றி லராதலானும், படுவென்பது தானும் புலவரென்னும் பெயரோடு முடியுங்கால் காலம் காட்டும் ஈறுகள் தொக்க முதனிலைச் சொல்லாய் நிற்றலின், அதனை எடுத்தோதி னாராதலானும், ஆசிரியர்க்கு அங்ஙனம் கூறுதல் கருத்தன்மை உணர்க. அன்றியும் பற்றப்பட்ட என்புழி இரண்டு முதனிலை கூடி ஒன்றாய் நின்று பற்றுதலைச் செய்யப்பட்ட எனப் பொருள் தாராமையானும், அல்வழி யதிகாரமாதலானும் அது பொருளன்மை உணர்க. (21) 317. அத்தொடு சிவணும் மாயிரத் திறுதி யொத்த வெண்ணு முன்வரு காலை. இஃது இவ்வீற்று எண்ணுப் பெயருள் ஒன்றற்குத் தொகை மரபினுள் உயிரும் புள்ளியும் இறுதி யாகி (எழுத். 164) என்பதனான் எய்திய ஏயென் சாரியை விலக்கி அத்து வகுக்கின்றது. இதன் பொருள்: ஆயிரத்து இறுதி - ஆயிரமென்னும் எண்ணுப் பெயரின் மகரம், ஒத்த எண்ணு முன்வருகாலை - தனக்கு அகப்படும் மொழியாய்ப் பொருந்தின எண்ணுப்பெயர் தன் முன் வரும் காலத்து, அத்தொடு சிவணும் - தொகைமரபிற் கூறிய ஏயென் சாரியை ஒழித்து அத்துச் சாரியையொடு பொருந்தி முடியும் என்றவாறு.. உதாரணம்: ஆயிரத்தொன்று, ஆயிரத்தொன்பது என ஒன்று முதல் ஒன்பதின்காறும் ஒட்டுக. மகரத்தை அத்தின்மிசை யொற்றென்று கெடுத்து அத்தி னகர மகரமுனை யில்லை (எழுத். 125) என்று முடிக்க. ஆயிரத் தொருபது என்றாற் போல்வனவற்றிற்கும் ஒட்டுக. நிலைமொழி முற்கூறாததனான், ஆயிரத்துக்குறை கூறு முதல் என்பனவுங் கொள்க இன்னும் இதனானே, ஆயிரப்பத்தென்புழிம கரங்கெடுத்து வல்லொற்று மிகுத்து முடிக்க.(22) 318. அடையொடு தோன்றினு மதனோ ரற்றே. இஃது அடையொடு தோன்றினும் புணர்நிலைக் குரிய 110) என்றமையின், அவ்வண்ணுப் பெயரை அடைகின்றது. இதன் பொருள்: அடையொடு தோன்றினும் - அவ்வாயிர மென்னும் எண்ணுப்பெயர் அடையடுத்த மொழியோடு வரினும், அதனோரற்று - முற்கூறியதனோடு ஒருதன்மைத்தாய் அத்துப் பெற்று முடியும் என்றவாறு. உதாரணம்: பதினாயிரத்தொன்று இரண்டு, இருபதினா யிரத்தொன்று, ஆறாயிரத்தொன்று, நூறாயிரத்தொன்று, முந்நூறாயிரத் தொன்று, ஐந்நூறாயிரத்தொன்று என ஒட்டுக. முன்னர் இலேசினான் முடிந்தவற்றையும் அடையடுத்து ஒட்டுக. பதினாயிரத்துக்குறை கூறு முதல் எனவும், நூறாயிரப்பத்து எனவும் வரும். (23) 319. அளவு நிறையும் வேற்றுமை யியல. இஃது - அவ்வெண்ணின் முன்னர் அளவுப்பெயரும் நிறைப் பெயரும் வந்தால் முடியுமாறு கூறுதலின், எய்தாத தெய்துவித்தது. இதன் பொருள்: அளவும் நிறையும் - அதிகாரத்தால் Mயிரந்தானேÃன்றுழியும்mடையடுத்துÃன்றுழியும்mளவுப்bபயரும்Ãறைப்bபயரும்tந்தால்,nவற்றுமைïயல- kகர<ற்றுnவற்றுமையோடுxத்துtல்லெழுத்துtந்துழிkகரங்கெட்டுtல்லெழுத்துÄக்கும்,ïயல்புகணம்tந்துழி‘துவர(எழு.310) என்னும் இலேசான் எய்திய மகரங்கெட்டும் புணரும் என்றவாறு. உதாரணம்: ஆயிரம் பதினாயிரம் üறாயிரம் என நிறுத்திக்கலம் சடிதூதைபனைநழிமண்டைவட்டி அகல் உழக்கு எனவும் ,கஃசுகழஞ்சு தொடிதுலாம்பலம் எனவுந் தந்து ஒட்டுக .வேற்றுமை யியல’ எனவே, தாம் வேற்றுமையல்லவாயின.(24) 320. படர்க்கைப் பெயரு முன்னிலைப் பெயருந் தொடக்கங் குறுகும் பெயர்நிலைக் கிளவியும் வேற்றுமை யாயி னுருபிய னிலையு மெல்லெழுத்து மிகுத லாவயி னான. இஃது உயர்திணைப்பெயரும் விரவுப்பெயரும் உருபியலுள் முடிந்தவாறே ஈண்டுப் பொருட்புணர்ச்சிக்கண்ணும் முடிகவென எய்தாதது எய்துவித்தது. இதன் பொருள்: படர்க்கைப் பெயரும் முன்னிலைப் பெயரும் - எல்லாருமென்னும் படர்க்கைப் பெயரும் எல்லீரு மென்னும் முன்னிலைப் பெயரும், தொடக்கங் குறுகும் பெயர்நிலைக் கிளவியும் - கிளைத் தொடர்ச்சிப் பொருளவாய் நெடுமுதல் குறுகி முடியுந்தாம் நாம் யாமென்னும் பெயராகிய நிலைமையுடைய சொல்லும், வேற்றுமை யாயின் உருபியல் நிலையும் - வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக் மேகண்ணாயின் உருபு புணர்ச்சிக்குக் கூறிய இயல்பின் கண்ணே நின்று முடியும், Mவயினான்bமல்லெழுத்துÄகுதல்- மேல் bநடுமுதல் குறுகும் மொழிக்கண் மெல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு உதாரணம்: எல்லாரு மென்பதனை மகர ஒற்றும் உகரமுங் கெடுத்து, ரகரப் புள்ளியை நிறுத்திக், கை செவி தலை புறம் எனத்தந்து, இடையிலே தம்முச்சாரியையும் இறுதியிலே உம்முச் சாரியையும் கொடுத்து, எல்லார் தங்கையும் செவியும் தலையும் புறமும் என முடிக்க. இதற்கு, அம்மினிறுதி (எழு. 129) என்னும் சூத்திரத்துள் தன்மெய் என்றதனாற் பிற சாரியைக்கண் மகர ஒற்றுத் திரிந்து ஙஞநவாகும் எனச் செய்கை செய்து முடிக்க. எல்லீரு மென்பதற்கு, இடையிலே நும்முச் சாரியையும் இறுதியிலே உம்முச்சாரியையும் கொடுத்து, முற்கூறிய செய்கை களெல்லாஞ் செய்து, எல்லீர் நுங்கையும் செவியும் தலையும் புறமும் என முடிக்க. தாம், நாம் என்பனவற்றை ஏனை யிரண்டும் நெடுமுதல் குறுகும் (எழு. 188) எனக் குறுக்கி, மகரவிறுதி (எழு. 310) என்பதன்கண் துவர என்பதனான் மகரங்கெடுத்துத், தங்கை நங்கை செவி தலை புறம் என முடிக்க. யாம் என்பதனை ஆகாரத்தை எகரமாக்கி யகர ஒற்றைக் கெடுத்து மகரவிறுதி (எழு. 310) என்பதன்கண் துவர என்றத னான் மகரங் கெடுத்து, எங்கை செவி தலை புறம்vனமுடிக்f. தொடக்கங் குறுகுவனவற்றிற்கு இச்சூத்திரத்தான் மெல்லெழுத்து மிகுக்க. உருபியல் நிலையும் என்பதனான் வேற்றுமையாதல் பெறா நிற்கவும், பின்னும் வேற்றுமையாயின் என்ற மிகையானே, படர்க்கைப் பெயரும் முன்னிலைப் பெயரும் இயல்பு கணத்து ஞகாரமும் நகாரமும் வந்துழித் தம்முச் சாரியையும், நும்முச் சாரியையும் பெறுதலும், ஆவயினான என்றதனான், மகரங்கெட்டு உம்முப் பெறுதலும் ஒற்று இரட்டுதலும் கொள்க. எல்லார் தஞ்ஞாணும், எல்லீர் நுஞ்ஞாணும் நூலும் என வரும். இனித் தொடக்கங் குறுகுவனவற்றிற்கும் 21அவ்விரண்டு இலேசானும் மகரங்கெடுதலும் ஒற்று இரட்டுதலும் கொள்க. தஞ்ஞாண், நஞ்ஞாண், எஞ்ஞாண் நூல் என வரும். இன்னும் ஆவயினான என்றதனானே, எல்லார்தம் எல்லீர் நும் என நின்றவற்றின் முன்னர் ,ஏனை மணியழ்வட்டு அடை என்பன வந்துழி மகரங் bகடாமையும் உம்முப்பெறுதலுங் கொள்க. இன்னும் இதனானே, தொடக்கங் குறுகுவனவற்றிற்குந் தம்மணி யாழ் வட்டு அடை என மகரங் கெடாமையுங் கொள்க. இன்னும் இதனானே, 22தமகாணம் நமகாணம் எமகாணம் நுமகாணம் என உருபீற்றுச் செய்கைகளுங் கொள்க. இன்னும் இதனானே, 23நும் என்பதற்கு மகரத்தை மெல்லொற்றாக்கி நுங்கை செவி தலை புறம் என வருதலும், நுஞ்ஞாண் என ஒற்றிரட்டுதலும், நும்வலி என மகரம் கெடாது நிற்றலுங் கொள்க. இன்னும் இதனானே, எல்லார்கையும் எல்லீர்கையும் எனத் தம்மும் நும்மும் பெறாது நிற்றலுங் கொள்க. (25) 321. அல்லது கிளப்பி னியற்கை யாகும். இது, முற்கூறிய மூன்று பெயர்க்கும் அல்வழி முடிபு கூறு கின்றது. இதன் பொருள்:அல்லது கிளப்பின் இயற்கையாகும் - அம்மூன்று பெ யரும் அல்வழியைச் சொல்லுமிடத்து இயல்பாய் முடியும் என்றவாறு. ஈண்டு இயற்கை யென்றது சாரியை பெறாமை நோக்கி. இவற்றின் ஈறுதிரிதல் அல்வழி யெல்லாம் (எழு. 314) என்பதனுள் எல்லா மென்றதனாற் கொள்க. உதாரணம்: எல்லாருங்குறியர் சிறியர் தீயர் பெரியர் எனவும், எல்லீருங் குறியீர் சிறியீர் தீயீர் பெரியீர் எனவும், தாங்குறியர் சிறியர் தீயர் பெரியர் எனவும், தாங்குறிய சிறிய தீய பெரிய எனவும், நாங்குறியம் சிறியம் தீயம் பெரியம் எனவும், யாங்குறியேம் சிறியேம் தீயேம் பெரியேம் எனவும் வரும். இன்னும் எல்லா மென்றதனானே, இவற்றின் முன்னர் ஞகார நகாரம் வந்தால் அவை அவ்வொற்றாய்த் திரிதல் கொள்க. எல்லாருஞ் ஞான்றார் நீண்டார், எல்லீருஞ் ஞான்றீர் நீண்டீர் எனவும், தாஞ்ஞான்றார் நீண்டார் எனவும், நாஞ்ஞான்றாம் நீண்டாம் எனவும், யாஞ் ஞான்றேம் நீண்டேம் எனவும் வரும். இனி, எல்லாரும் வந்தார் யாத்தார் அடைந்தார், எல்லீரும் வந்தீர் யாத்தீர் அடைந்தீர் எனவும், தாம் வந்தார் யாத்தார் அடைந்தார் எனவும், நாம் வருதும் யாத்தும் அடைதும் எனவும், யாம் வருவேம் யாப்பேம் அடைவேம் எனவும் ஏனைக்கணங்களின் முன்னர் மகரந்திரியாது நிற்றல், உயிரீறாகிய உயர்திணைப் பெயரும் (எழு. 153) என்பதனான் முடியும் .(26) 322. அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணு மெல்லா மெனும்பெய ருருபிய னிலையும் வேற்றுமை யல்வழிச் சாரியை நிலையாது. இஃது இவ்வீற்று விரவுப்பெயருள் ஒன்றற்கு அல்வழிக் கண்ணும் வேற்றுமைக்கண்ணும் உருபியலோடு மாட்டெறிந்து எய்தாததெய்து வித்தது. இதன் பொருள்: அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும் - அல்வழிக்கட் சொல்லினும் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கட் சொல்லினும், எல்லாமெனும் பெயர் உருபியல் நிலையும் - எல்லா மென்னும் விரவுப் பெயர் உருபுபுணர்ச்சியின் இயல்பிலே நின்று முடியும், வேற்றுமை யல்வழிச் சாரியை நிலையாது - அப்பெயர் வேற்றுமைப் பொருட் புணர்ச்சியல்லாத இடத்து வற்றுச் சாரியை நில்லாதாய் முடியும் என்றவாறு. உருபிய னிலையும் என்ற மாட்டேறு, அல்வழிக்கண் உம்முப் பெற்று நிற்றலும், பொருட் புணர்ச்சிக்கண் வற்றும் உம்மும் பெற்று நிற்றலும் உணர்த்திற்று. உம்முச்சாரியை ஒன்றுமே பெற்று முடிகின்ற அல்வழியினை யும், வற்றும் உம்மும் பெற்று முடிகின்ற வேற்றுமையோடு உடனோதி, அதுவும் வற்றுப் பெறுமாறு போல மாட்டெறிந்த மிகையானே, வன்கணத்து அல்வழிக்கண் நிலைமொழி மகரக் கேடும், வருமொழி வல்லெழுத்துப் பேறும், ஈற்றும்மைப் பேறும், மென்கணத்து மகரங் கெட்டு உம்முப் பெற்றும் பெறாதும் வருதலும், ஏனைக்கணத்து மகரங்கெட்டு உம்முப் பெற்றும், மகரங் கெடாது உம்முப் பெறாதும் வருதலுங் கொள்க. உதாரணம்: எல்லாக்குறியவும் சிறியவும் தீயவும் பெரியவும் எனவும், எல்லா ஞாணும் நூலும் மணியும் எனவும், எல்லா ஞான்றன நீண்டன மாண்டன எனவும், எல்லா யாழும் வட்டும் அடையும் எனவும், எல்லாம் வாடின ஆடின எனவும் வரும். இனி, வேற்றுமைக்கண் எல்லாவற்றுக் கோடும் செவியும் தலையும் புறமும் என இவை வற்றும் உம்மும் பெற்றன. இவற்றிற்கு மகரம் வற்றின் மிசை யொற்றென்று கெடுக்க. இனி, மென்கணத்துக்கண் எல்லாவற்று ஞாணும் நூலும் மணியும் எனவும், ஏனைக் கணத்துக்கண்எல்லாவற்¿யாப்பு«வழியு«அடையு«எனவு«வரும். ஏனைக் கணமும் வற்றும் உம்மும் பெற்றன. (27) 323. மெல்லெழுத்து மிகினு மான மில்லை. இஃது ஒருசார் வல்லெழுத்தை விலக்கி மெல்லெழுத்து விதித்தலின், எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுகின்றது. இதன் பொருள்: மெல்லெழுத்து மிகினும் மானமில்லை - அவ்வெல்லா மென்பது அல்வழிக்கண் மேல் இலேசினாற் கூறிய வல்லெழுத்தேயன்றி மெல்லெழுத்து மிக்கு முடியினுங் குற்ற மில்லை என்றவாறு. எனவே, வல்லெழுத்து மிகுதலே பெரும்பான்மையாயிற்று. முற்கூறிய செய்கைமேலே இது கூறினமையின், மகரக் கேடும் உம்முப்பேறுங் கொள்க. எல்லாங் குறியவும் சிறியவும் தீயவும் பெரியவும் என வரும். மானமில்லை என்றதனான், உயர்திணைக்கண் வன்கணத்து மகரங்கெட்டு வல்லெழுத்து மிக்கு இறுதி உம்முப் பெற்று முடிதலும், இயல்பு கணத்துக்கண் மகரங்கெட்டு உம்முப் பெற்று முடிதலுங் கொள்க. எல்லாக் கொல்லரும் சான்றாரும் தச்சரும் பார்ப்பாரும் குறியரும் சிறியரும் தீயரும் பெரியரும் எனவும், எல்லா ஞான்றாரும் நாய்கரும் மணியகாரரும் வணிகரும் அரசரும் எனவும் வரும். இன்னும் இதனானே, உயர்திணைக்கண் எல்லாங்குறியரும் சிறியரும் தீயரும் பெரியரும் என மகரங்கெட்டு மெல்லெழுத்து மிக்கு உம்முப் பெறுதலும், எல்லாங் குறியர் சிறியர் தீயர் பெரியர் எனவும், 24குறியீர் குறியம் எனவும் உம்முப் பெறாது வருதலுங் கொள்க. இன்னும் இதனானே, இடைக்கணத்தும் உயிர்க்கணத்தும் மகரங் கெடாது உம்மின்றி வருதலுங் கொள்க. எல்லாம் வந்தேம் அடைந்தேம் என வரும். (28) 324. உயர்திணை யாயி னுருபிய னிலையும். இஃது - எல்லா மென்பதற்கு உயர்திணை முடிபு கூறுகின்றது. இதன் பொருள்:உயர்திணையாயின் உருபியல் நிலையும் - எல்லா மென்பது உயர்திணையாய் நிற்குமாயின் உருபு புணர்ச்சியின் இயல்பிற்றாய் இடைக்கண் நம்மும் இறுதிக்கண் உம்மும் பெற்று முடியும் என்றவாறு.. உருபியலுள் எல்லா மென்னு மிறுதி முன்னர் - வற்றென் சாரியை (எழு. 189) வகுத்ததனான், வற்றின்மிசை யொற் றென்று மகரங் கெடுத்த அதிகாரத்தான் உயர்திணை யாயி னம்மிடை வரும் (எழு. 190) என நம்மின் முன்னும் மகரங் கெடுத்தார்; அத னோடு ஈண்டு மாட்டெறிதலின். அது கொண்டு ஈண்டும் மகரங் கெடுக்க. அம்மினிறுதி (எழு. 129) என்புழித் தன்மெய் என்றதனான் நம்முச்சாரியையினது மகரந் திரிதல் கொள்க. உதாரணம்: எல்லா நங்கையும் செவியும் தலையும் புறமும் என ஒட்டுக. வருமொழி வரையாது கூறலின், எல்லா நஞ்ஞாற்சியும் நீட்சி யும் என ஏற்பனவற்றோடு முடிபு அறிந்து ஒட்டுக. (29) 325. நும்மெ னொருபெயர் மெல்லெழுத்து மிகுமே. இது, மகர ஈற்றிற்கு வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்து விதித்தது. இதன் பொருள்: நும்மென் ஒரு பெயர் மெல்லெழுத்து மிகும் - நும்மென்று சொல்லப்படுகின்ற விரவுப்பெயர் பொருட் புணர்ச்சிக் கண் மெல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு. உதாரணம்: நுங்கை செவி தலை புறம் என வரும். மகரவிறுதி (எழு. 310) என்பதான் மகரங்கெடுக்க. ஒன்றென முடித்த லென்பதனான், உங்கை என வருவதூஉங் கொள்க. துவர (எழு. 310) என்றதனான், ஞகர நகரங்கள் வந்துழி மகரங் கெடுதலும், ஒரு பெயர் என்றதனான், ஒற்று மிகுதலுங் கொள்க. உதாரணம்: நுஞ்ஞாண் நூல் என வரும். இன்னும் ஒரு பெயர் என்றதனான், நும்மணி யாழ் வட்டு அடை என மகரங் கெடாமையும் கொள்க. (30) 326. அல்லதன் மருங்கிற் சொல்லுங் காலை யுக்கெட நின்ற மெய்வயி னீவர இடை நிலைஇ யீறுகெட ரகர நிற்றல் வேண்டும் புள்ளியொடு புணர்ந்தே யப்பான் மொழிவயி னியற்கை யாகும். இது, நும்மென்பதற்கு அல்வழி முடிபு கூறுகின்றது. இதன் பொருள்:அல்லதன் மருங்கிற் சொல்லுங்காலை - நும்மென்ப தனை அல்வழிக்கண் கூறுமிடத்து, உ கெட நின்ற மெய்வயின் ஈ வர - நகர வுகரத்துள் உகரங்கெட்டுப் போக ஒழிந்து நின்ற நகர வொற்றிடத்தே ஈகாரம் வந்து நிற்ப, இ இடைநிலைஇ ஈறுகெட - ஓர் இகரம் இடையிலே வந்து நிலைபெற்று மகரமாகிய ஈறு கெட்டுப்போக, புள்ளியொடு புணர்ந்து ரகரம் நிற்றல் வேண்டும் - ஆண்டுப் புள்ளி பெற்று ஒரு ரகரம் வந்து நிற்றலை விரும்பும் ஆசிரியன், அப்பால் மொழிவயின் - அக் கூற்றினை யுடைய நிலை மொழியிடத்து, இயற்கையாகும் - வருஞ்சொல் இயல்பாய் முடியும் என்றவாறு. உதாரணம்: நீயிர் குறியீர் சிறியீர் தீயீர் பெரியீர் என வரும். சொல்லுங்காலை யென்றதனானே, நீயிர் ஞான்றீர்; நீண்டீர், மாண்டீர், யாத்தீர், வாடினீர், அடைந்தீர் என ஏனைக்கணத்திலும் ஒட்டுக. (31) 327. தொழிற்பெய ரெல்லாந் தொழிற்பெய ரியல. இது, வேற்றுமைக்கண் மகரங்கெட்டு வல்லெழுத்து மிக்கும் அல்வழிக்கண் மெல்லெழுத்தாய்த் திரிந்தும் வருமென எய்தியதனை விலக்கி ஞகர ஈற்றுத் தொழிற்பெயர் போல நிற்குமெனப் பிறிதுவிதி வகுத்தது. இதன் பொருள்: தொழிற்பெயரெல்லாம் - மகர ஈற்றுத் தொழிற் பெயரெல்லாம், தொழிற்பெயர் இயல - ஞகார ஈற்றுத் தொழிற் பெயர் போல அல்வழியினும் வேற்றுமையினும் வன்கணத்து உகரமும் வல்லெழுத்தும், இயல்புகணத்து உகரமும் பெற்று முடியும் என்றவாறு. உதாரணம்: 25செம்முக் கடிது சிறிது தீது பெரிது ஞான்றது நீண்டது மாண்டது வலிது எனவும், செம்முக்கடுமை சிறுமை தீமை பெருமை ஞாற்சி நீட்சி மாட்சி வலிமை எனவும் வரும். தும்முச் செறுப்ப என்பதும் அது. இவை குறியதன் முன்னர்த் தன்னுரு விரட்டல் (எழு. 160) எல்லா மென்றதனான், உகரம் பெறாது 26நாட்டங்கடிது ஆட்டங் கடிது என மெல்லெழுத்தாய் அல்வழிக்கண் திரிதலும், நாட்டக்கடுமை ஆட்டக்கடுமை என வேற்றுமைக்கண் வல்லெ ழுத்து மிகுதலுங் கொள்க. (32) 328. ஈமுங் கம்மு முருமென் கிளவியு மாமுப் பெயரு மவற்றோ ரன்ன. இது, பொருட்பெயருட் சில, தொழிற் பெயரோடு ஒத்து முடிக என எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது. இதன் பொருள்:ஈமுங் கம்மும் உருமென் கிளவியும் ஆ முப்பெயரும் - ஈமென்னுஞ் சொல்லுங் கம்மென்னுஞ் சொல்லும் உருமென்னுஞ் சொல்லுமாகிய அம்மூன்று பெயரும், அவற்றோ ரன்ன - முற்கூறிய தொழிற் பெயரோடு ஒரு தன்மையவாய் வன்கணத்து உகரமும் வல்லெழுத்தும், இயல்புகணத்து உகரமும் பெற்று முடியும் என்றவாறு. ஈம் என்பது சுடுகாடு; கம் என்பது தொழில். உதாரணம்: ஈமுக்கடிது, கம்முக் கடிது, உருமுக்கடிது, சிறிது தீது பெரிது ஞான்றது நீண்டது மாண்டது வலிது எனவும், ஈமுக்கடுமை, கம்முக்கடுமை, உருமுக்கடுமை, சிறுமை தீமை பெருமை ஞாற்சி நீட்சி மாட்சி வலிமை எனவும் ஒட்டுக. கிளவி யென்றதனான், வேற்றுமைக்கண்ணும் அல்வழிக் கண்ணும் உயிர் வருவழி உகரம் பெறாது, ஈமடைவு, ஈமடைந்தது என நிற்றலுங் கொள்க. தன்னினமுடித்த லென்பதனான், அம்மு தம்மு நம்மு எனச் சாரியைக் கண்ணும் உகரம் வருதல் கொள்க. (33) 329. வேற்றுமை யாயி னேனை யிரண்டுந் தோற்றம் வேண்டு மக்கென் சாரியை. இது, மேல் முடிபு கூறிய மூன்றனுள் இரண்டற்கு வேற்று மைக்கண் வேறோர் முடிபு கூறுகின்றது. இதன் பொருள்: வேற்றுமையாயின் - வேற்றுமைப் பொருட் புணர்ச்சியாயின், ஏனை இரண்டும் தோற்றம் வேண்டும் அக்கென் சாரியை - இறுதியில் உருமொழிந்த இரண்டும் அக்கென்னுஞ் சாரியை தோன்றி முடிதலை வேண்டும் ஆசிரியன் என்றவாறு. உதாரணம்: ஈமக்குடம் கம்மக்குடம் சாடி தூதை பானை எனவும், ஞாற்சி நெருப்பு மாட்சி விறகு எனவும் ஒட்டுக. அக்கு வகுப்பவே, நிலைமொழித் தொழிலாகிய உகரங் கெட்டு, 27முற்கூறிய வல்லெழுத்து விலக்கப்படாமையின் நின்று முடிந்தது. வன்கணத்திற்கு முன்னின்ற சூத்திரத்திற் கூறியது 28குண வேற்றுமைக் கென்றும், ஈண்டுக் கூறியது பொருட்புணர்ச்சிக் கென்றுங் கொள்க. (34) 330. வகார மிசையு மகாரங் குறுகும். இது, முன்னர் அரையளவு குறுகல் (எழு. 13) எனவும் னகாரை முன்னர் (எழு. 52) எனவுங் கூறிய மகரம் இருமொழிக் கண்ணுங் குறுகுமென, அதன் ஈற்றகத்து எய்தாத தெய்துவிக் கின்றது. இதன் பொருள்: வகாரமிசையும் மகாரங் குறுகும் - மகாரம் ஒரு மொழிக் கண்ணேயன்றி வகாரத்தின் மேலுங் குறுகும் என்றவாறு. உதாரணம்: நிலம் வலிது, வரும் வண்ணக்கன் என வரும். (35) 331. நாட்பெயர்க் கிளவி மேற்கிளந் தன்ன வத்து மான்மிசை வரைநிலை யின்றே யொற்றுமெய் கெடுத லென்மனார் புலவர். இஃது இவ்வீற்று நாட்பெயர்க்கு வேற்றுமை முடிபு கூறுகின்றது. இதன் பொருள்: நாட்பெயர்க்கிளவி மேற் கிளந்தன்ன - மகர ஈற்று நாட்பெயர் இகர ஈற்று நாட்பெயர்போல ஆன் சாரியை பெற்று முடியும், அத்தும் ஆன்மிசை வரைநிலை இன்று - அத்துச் சாரியை ஆன்சாரியை மேலும் பிற சாரியை மேலும் வருதல் நீக்கு நிலைமையின்று, ஒற்று மெய்கெடுதல் என்மனார் புலவர் - ஆண்டு நிலைமொழி மகர ஒற்றுக் கெடுக என்று கூறுவர் புலவர் என்றவாறு. உம்மையை ஆன்மிசை மென மாறுக. உதாரணம்: மகத்தாற் கொண்டான், ஓணத்தாற் கொண்டான் சென்றான் தந்தான் போயினான் என்க. ஏனை நாள்களோடும் ஒட்டுக. மகர ஒற்றுக்கெடுத்து அத்தி னகர மகரமுனை யில்லை (எழு. 125) என அகரங்கெடுத்துக், குற்றிய லுகரமு மற்றென (எழு. 105) என ஆனேற்றி, ஆனி னகரமும், (எழு. 124) என்றதனான் றகரமாக்கி முடிக்க. மகத்துஞான்று கொண்டான், சென்றான் தந்தான் போயி னான் என ஞான்றென்னுஞ் சாரியைமேல் அத்து வந்தது. வரையாது கூறினமையின், இம்முடிபு நான்கு கணத்துங் கொள்க. உதாரணம்: மகத்தான் ஞாற்றினான் நிறுத்தினான் மாய்ந்தான், வந்தான், அடைந்தான் என வரும். (36) 332. னகார விறுதி வல்லெழுத் தியையின் றகார மாகும் வேற்றுமைப் பொருட்கே. இது, நிறுத்த முறையானே னகர இறுதி வேற்றுமைக்கட் புணருமாறு கூறுகின்றது. இதன் பொருள்: னகார இறுதி வல்லெழுத்து இயையின் றகார மாகும் - னகார ஈற்றுப் பெயர் வல்லெழுத்து முதன்மொழி வருமொழியாய் வந்து இயையின் றகாரமாகும், வேற்றுமைப் பொருட்கு - வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் என்றவாறு. உதாரணம்: பொற்குடம் சாடி தூதை பானை என வரும் (37) 333. மன்னுஞ் சின்னு மானு மீனும் பின்னு முன்னும் வினையெஞ்சு கிளவியு மன்ன வியல வென்மனார் புலவர். இஃது அவ்வீற்று அசைநிலை . ஏழாம் வேற்றுமை இடப்பொருள்உணர நின்ற இடைச் சற்களும், வினையெச்சமும் முடியுமாறு கூறுகின்றது. இதன்பொருள்: மன்னுஞ் சின்னும் ஆனும் ஈனும் பின்னும் முன்னும் வினையெஞ்சு கிளவியும் - மன்னென்னுஞ் சொல்லும் சின்னென்னுஞ் சொல்லும் ஆனென்னுஞ் சொல்லும் ஈனென்னுஞ் சொல்லும் பின்னென்னுஞ் சொல்லும் முன்என்னுஞ் சொல்லும் வினையெச்சமாகிய சொல்லும், அன்ன இயல என்மனார் புலவர் - முற்கூறிய இயல்பினை யுடையவாய் னகரம் றகரமாய் முடியு மென்று சொல்லுவர் புலவர் என்றவாறு. உதாரணம்: அதுமற் கொண்கன் றேரே காப்பும் பூண்டி சிற் கடையும் போகல் (அகம். 7) எனவும், ஆற்கொண்டான் ஈற்கொண்டான் பிற்கொண்டான் முற்கொண்டான் சென்றான் தந்தான் போயினான் எனவும், வரிற் கொள்ளும் செல்லும் தரும் போம் எனவும் வரும். பெயராந்தன்மையவாகிய 29ஆன் ஈன் என்பனவற்றை முற் கூறாததனான், ஆன் கொண்டான் ஈன் கொண்டான் எனத் திரியாமையுங் கொள்க. பின் முன் என்பன, பெயரும் உருபும் வினையெச்சமுமாய் நிற்றலின் பெயர் ஈண்டுக் கூறினார். ஏனைய, உருபியலுள்ளும் வினையெஞ்சு கிளவி யென்பதன் கண்ணும் முடியும். 30அப்பெயரை முற்கூறாததனாற், பின்கொண்டான் முன் கொண்டான் எனத் திரியாமையுங் கொள்க. இயலவென்றதனான் ஊனென்னுஞ் சுட்டு ஊன் கொண்டா னென இயல்பாய் முடிதல் கொள்க. (38) 334. சுட்டுமுதல் வயினு மெகரமுதல் வயினு மப்பண்பு நிலையு மியற்கைய வென்ப. இஃது - இவ்வீற்றுள் ஏழாம் வேற்றுமை இடப்பொரு ளுணர்த்தும் இடைச்சொற்கு முடிபு கூறுகின்றது. இதன் பொருள்: சுட்டு முதல் வயினும் - சுட்டெழுத்தினை முதலாக வுடைய வயினென்னுஞ் சொல்லும், எகரமுதல் வயினும் - எகர மாகிய முதல் வினாவினையுடைய வயினென்னுஞ் சொல்லும், அப் பண்பு நிலையும் இயற்கை என்ப - மேல் னகரம் றகரமா மென்ற தன்மை நிலைபெற்று முடியும் இயல்பையுடைய வென்று கூறுவார் ஆசிரியர் என்றவாறு. உதாரணம்: அவ்வயிற்கொண்டான், இவ்வயிற் கொண்டான், உவ்வயிற் கொண்டான், எவ்வயிற் கொண்டான்; சென்றான் தந்தான் போயினான் என வரும். இயற்கைய என்றதனால், திரியாது இயல்பாய் முடிவனவுங் கொள்க. (39) 335. குயினென் கிளவி யியற்கை யாகும். இது, னகாரந் திரியாது இயல்பாக என்றலின் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது. இதன் பொருள்: குயினென் கிளவி இயற்கையாகும் - குயினென்னுஞ் சொல் திரியாது இயல்பாய் முடியும் என்றவாறு. உதாரணம்: குயின்குழாம் செலவு தோற்றம் பறைவு என வரும். குயினென்பது மேகம். அஃது அஃறிணைப் பெயர். தொகை மரபினுள் உயர்திணைப் பெயரும் விரவுப் பெயரும் இயல்பாக வென்றார். 31குயின் வினையுமாம். இயற்கை என்றதனாற், கான்கோழி கோன்குணம் வான் கரை என வருவனவுங் கொள்க. (40) 336. எகின்மர மாயி னாண்மர வியற்றே. இது, திரிபு விலக்கி அம்மு வகுத்தலின் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது. இதன் பொருள்: எகின் மரமாயின் - எகினென்பது புள்ளன்றி மரப் பெயராயின், ஆண்மர இயற்று - ஆண்மரத்தின் இயல்பிற்றாய் அம்முப்பெற்று முடியும் என்றவாறு. உதாரணம்: எகினங்கோடு செதிள் தோல் பூ என வரும். (41) 337. ஏனை யெகினே யகரம் வருமே வல்லெழுத் தியற்கை மிகுதல் வேண்டும். இதுவும் அது, திரிபு விலக்கி அகரம் விதித்தலின். இதன் பொருள்: ஏனை எகினே அகரம் வரும் - மரமல்லாத எகின் நிலை மொழிக்கண் அகரம்பெற்று முடியும், வல்லெழுத்தியற்கை மிகுதல் வேண்டும் - ஆண்டு வருமொழி வல்லெழுத்தியல்பு மிக்கு முடிதலை வேண்டும் ஆசிரியன் என்றவாறு. உதாரணம்: எகினக்கால் செவி தலை புறம் என வரும். மேலைச் சூத்திரத்தோடு இதனை ஒன்றாக ஓதாததனான், இயல்பு கணத்தும் அகரப்பேறு கொள்க. எகினஞாற்சி நீட்சி மாட்சி வலிமை யாப்பு அடைவு என வரும். இயற்கை யென்றதனான், அகரத்தோடு மெல்லெழுத்துப் பேறுங் கொள்க. எகினங்கால் செவி தலை புறம் என வரும். இனிச் சிறுபான்மை எகின்சேவல் எகினச்சேவல் பெடை என்பன ஆறனுருபு விரிவுழி ஈண்டை இலேசான் முடிக்க. 32பண்பு கருதிய வழி இவ்வோத்தின் புறனடையான் முடிக்க. (42) 338. கிளைப்பெய ரெல்லாங் கிளைப்பெய ரியல. இது, னகரந் திரிதலை விலக்கி இயல்பாக என்றலின் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது. இதன் பொருள்: கிளைப் பெயரெல்லாம் - னகர ஈற்றுக் கிளைப்பெய ரெல்லாம், கிளைப்பெயர் இயல - ணகர ஈற்றுக் கிளைப்பெயர் போலத் திரியாது இயல்பாய் முடியும் என்றவாறு. உதாரணம்: எயின்குடி சேரி தோட்டம் பாடி என வரும். எயின் வந்தது என்று அஃறிணைக்கும் எய்துதலின், தொகை மரபினுள் முடியாதாயிற்று, ஆண்டு உயர்திணைக்கே கூறுதலின். இனி எல்லா மென்றதனானே, எயினக்கன்னி பிள்ளை என அக்கும் வல்லெழுத்தும் பெறுதலும், எயின வாழ்வு என வல்லெ ழுத்துப் பெறாமையும் கொள்க. இன்னும் இதனானே, பார்ப்பனக் கன்னி குமரி சேரி பிள்ளை என ஆகாரம் குறுக்கி அக்கும் வல்லெழுத்துங் கொடுத்தும், பார்ப்பன வாழ்க்கை என வல்லெழுத்துக் கொடாதும் முடிக்க. இன்னும் இதனானே நான்கு கணத்துக் கண்ணும் வெள்ளாளனென நின்றதனை அன்கெடுத்துப் பிரித்து ளகார வொற்றினை ணகார வொற்றாக்கி, வெள்ளாண் குமரி பிள்ளை மாந்தர் வாழ்க்கை ஒழுக்கம் என முடிக்க. இன்னும் இதனானே, முதலெழுத்தை நீட்டி ளகார வொற்றினைக் கெடுத்து வேளாணென முடிக்க. இதனானே, பொருந வாழ்க்கையும் முடிக்க. 33வேட்டுவக் குமரி என்பது மரூஉ வழக்கு. (43) 339. மீனென் கிளவி வல்லெழுத் துறழ்வே. இதுவும் அது, தன் திரிபு வல்லெழுத்தினோடு உறழ்க என்றலின். இதன் பொருள்: மீனென் கிளவி வல்லெழுத்து உறழ்வு - மீனென்னுஞ் சொல் திரிபு வல்லெழுத்தினோடு உறழ்ந்து முடியும் என்றவாறு. உதாரணம்: மீன்கண் மீற்கண், மீன்சினை மீற்சினை, மீன்றலை மீற்றலை, மீன்புறம் மீற்புறம் என வரும். (44) 340. தேனென் கிளவி வல்லெழுத் தியையின் மேனிலை யொத்தலும் வல்லெழுத்து மிகுதலு மாமுறை யிரண்டு முரிமையு முடைத்தே வல்லெழுத்து மிகுவழி யிறுதி யில்லை. இதுவும் அது, மேலதனொடு மாட்டெறிதலின். இதன் பொருள்:தேன் என் கிளவி வல்லெழுத்து இயையின் - தே னென்னுஞ் சொல் வல்லெழுத்து முதன்மொழி வருமொழி யாய் வரின், மேல்நிலை ஒத்தலும் - மீனென்பதற்குக் கூறிய திரி புறழ்ச்சி நிலை ஒத்து முடிதலும், வல்லெழுத்து மிகுதலும் - வரு மொழி வல்லெழுத்து மிக்கு முடிதலுமாகிய, ஆமுறை இரண்டும் உரிமையும் உடைத்து - அம்முறைமை யினையுடைய இரண்டனையும் உரித்தாதலையும் உடைத்து, வல்லெழுத்து மிகுவழி இறுதியில்லை - வல்லெழுத்து மிக்கு வருமிடத்து இறுதியில் நின்ற னகரங் கெடும் என்றவாறு. உரிமையு மென்னும் உம்மை, மெல்லெழுத்து மிகினும் (எழு. 341) என மேல்வருகின்றதனை நோக்கிற்று. உதாரணம்: தேன்குடம் தேற்குடம், சாடி தூதை பானை என மேனிலை ஒத்தன. தேக்குடம் சாடி தூதை பானை என னகரங் கெட்டு வல்லெழுத்து மிக்கன. (45) 341. மெல்லெழுத்து மிகினு மான மில்லை. இதுவும் அது; உறழ்ச்சியும் வல்லெழுத்தும் விலக்கி மெல்லெழுத்தும் விதித்தலின். இதன் பொருள்: மெல்லெழுத்து மிகினும் மானமில்லை - முற்கூறிய தேனென் கிளவி வல்லெழுத்து வந்தால் அவ்வல் லெழுத்து மிகுதலேயன்றி மெல்லெழுத்து மிகினுங் குற்றமில்லை என்றவாறு. னகரக்கேடு அதிகாரத்தாற் கொள்க. உதாரணம்: தேங்குடம் சாடி தூதை பானை என வரும். (46) 342. மெல்லெழுத் தியையி னிறுதியொ டுறழும். இது, தொகை மரபினுள் வேற்றுமைக் கண்ணும் வல்லெ ழுத்தல் வழி (எழு. 148) என்பதனாற் கூறிய இயல்பை விலக்கி உறழுமென்றலின், எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது. இதன் பொருள்: மெல்லெழுத்து இயையின் - அத்தேனென் கிளவி மெல்லெழுத்து முதன்மொழி வந்து இயையின், இறுதியொடு உறழும் - நிலை மொழி யிறுதியின் னகர வொற்றுக் கெடுதலுங் கெடாமையுமாகிய உறழ்ச்சி யாய் முடியும் என்றவாறு. உதாரணம்: தேன்ஞெரி தேஞெரி, தேனுனி தேநுனி, தேன்மொழி தேமொழி என வரும். மேல் ஆமுறை (எழு.. 340) என்றதனால், தேஞெரி தேஞ்ஞெரி, தேநுனி, தேந்நுனி, தேமொழி தேம்மொழி என னகரங் கெட்டுத் தத்தம் மெல்லெழுத்து மிக்கும் மிகாதும் முடிந்தனவுங் கொள்க. இனி 34மேல் மானமில்லை (எழு. 341) என்றதனான், ஈறு கெட்டு மெல்லெழுத்து மிகாது இயல்பாய் முடிவனவுங் கொண்டு தேஞெரி தேநுனி தேமொழி என்பன காட்டின் அவை முற்கூறிய வற்றுள் அடங்கு மென்க. (47) 343. இறாஅற் தோற்ற மியற்கை யாகும். இஃது அத்தேனென்பதற்கு உயிர்க்கணத்து ஒருமொழி முடிபு வேற்றுமை கூறுகின்றது. இதன் பொருள்: இறாஅற் றோற்றம் - தேனென்னுஞ் சொல் இறா லென்னும் வருமொழியது தோற்றத்துக்கண், இயற்கை யாகும் - நிலைமொழியின் னகரங் கெடாதே நின்று இயல்பாய் முடியும் என்றவாறு. (48) உதாரணம்: தேனிறால் என வரும். 344. ஒற்றுமிகு தகரமொடு நிற்றலு முரித்தே. இதுவும் அதற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது. இதன் பொருள்: ஒற்றுமிகு தகரமொடு நிற்றலும் உரித்து - அத்தே னென்பது இறாலொடு புணருமிடத்துப் பிறிதுமோர் தகரத்தோடு நின்று முடிதலும் உரித்து என்றவாறு. வல்லெழுத்து மிகுவழி யிறுதியில்லை (எழுத். 340) என்றத னான், நிலைமொழி ஈறு கெடுக்க. தகரம்மிகு மென்னாது ஒற்றுமிகு தகர மென்றதனான், ஈரொற்றாக்குக. உதாரணம்: தேத்திறால் என வரும். மேலைச் சூத்திரத்தோடு இதனை யொன்றாக ஓதாததனாற், பிற வருமொழிக்கண்ணும் இம்முடிபு கொள்க. தேத்தடை, தேத்தீ என வரும். தோற்ற மென்றதனான், தேனடை, தேனீ என்னும் இயல்புங் கொள்க. (49) 345. மின்னும் பின்னும் பன்னும் கன்னு மந்நாற் சொல்லுந் தொழிற்பெய ரியல. இஃது அல்வழிக்கண் இயல்பாயும் வேற்றுமைக்கண் திரிந்தும் வருக என எய்துவித்த முடிபை விலக்கித் தொழிற் பெயரி யல்பாமெனப் பிறிது விதி வகுத்தது. இதன் பொருள்: மின்னும் பின்னும் பன்னும் கன்னும் அந்நாற் சொல்லும் - மின்னென்னுஞ் சொல்லும் பின்னென்னுஞ் சொல்லும் பன்னென்னுஞ் சொல்லும் கன்னென்னுஞ் சொல்லுமாகிய அந்நான்கு சொல்லும், தொழிற்பெயர் இயல - அல்வழியினும் வேற்றுமையினுங் ஞகார ஈற்றுத் தொழிற் பெயர்போல வன்கணத்து உகரமும் வல்லெழுத்தும், மென் கணத்தும் இடைக் கணத்து வகரத்தும் உகரமும் பெற்று முடியும் என்றவாறு. உதாரணம்: மின்னுச்செய் விளக்கத்து (கலி. 41: 6) பின்னுப் பிணி யவிழ்ந்த எனவும், பன்னுக்கடிது கன்னுக்கடிது சிறிது தீது பெரிது ஞான்றது நீண்டது மாண்டது வலிது எனவும், மின்னுக்கடுமை பின்னுக் கடுமை பன்னுக் கடுமை கன்னுக் கடுமை சிறுமை தீமை பெருமை ஞாற்சி நீட்சி மாட்சி வலிமை எனவும் வரும். தொழிற்பெய ரெல்லாந் தொழிற்பெய ரியல என்று ஓதாது கிளந்தோதினார், இவை தொழினிலைக்கண்ணன்றி வேறு தம் பொருளுணர நின்றவழியும் இம்முடிபு எய்து மென்றற்கு. 35மின் னென்பது மின்னுதற்றொழிலும், மின்னுநிமிர்ந் தன்ன (புறம். 57) என மின்னெனப்படுவதோர் பொருளும் உணர்த்தும். ஏனைய வும் அன்ன. (50) 346. வேற்றுமை யாயி னேனை யெகினொடு தோற்ற மொக்குங் கன்னென் கிளவி. இது, நிலைமொழிக்கண் உகரம் விலக்கி அகரம் வகுத்தலின், எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது. இதன் பொருள்: வேற்றுமையாயின் ஏனை எகினொடு தோற்றம் ஒக்கும் - வேற்றுமைப்பொருட் புணர்ச்சியாயின் ஒழிந்த மரமல்லாத எகினொடு தோற்றம் ஒத்த அகரமும் வல்லெழுத்தும் பெற்று முடியும், கன் என் கிளவி - கன்னென்னுஞ்சொல் என்றவாறு. உதாரணம்: கன்னக்குடம் சாடி தூதை பானை ஞாற்சி நீட்சி மாட்சி வலிமை என வரும். கன்னக்கடுமை எனக் குண வேற்றுமை யுஞ் சிறுபான்மை கொள்க. தோற்ற மென்றதனான், அல்வழிக்கண் வன்கணத்து அகரமும் மெல்லெழுத்தும் ஏனைக்கணத்து அகரமுங் கொள்க. கன்னங்கடிது சிறிது தீது பெரிது எனவும், கன்னஞான்றது நீண்டது மாண்டது வலிது எனவும் வரும். கன்னங்கடுமை எனக் 36குண வேற்றுமைக்கண்ணும் இவ்விதி கொள்க. பொன்னகர் வரைப்பிற் கன்னந் தூக்கி (ஐங்குறு. 247) என்பதோ வெனின், அது மகர ஈற்றுப் பொருட் பெயர். (51) 347. இயற்பெயர் முன்னர்த் தந்தை முறைவரின் முதற்கண் மெய்கெட வகர நிலையு மெய்யொழித் தன்கெடு மவ்வியற் பெயரே. இஃது அஃறிணை விரவுப்பெய ரியல்புமா ருளவே (எழு. 155) என்றதற்கு ஈண்டுத் திரிபு கூறலின், எய்தாத தெய்துவித்தது. இதன் பொருள்: இயற்பெயர் முன்னர்த் தந்தை முறைவரின் - இவ் வீற்று விரவுப்பெயருள் இயற்பெயரின் முன்னர்த் தந்தை யென்னும் முறைப்பெயர் வருமொழியாய் வருமாயின், முதற்கண் மெய்கெட அகரம் நிலையும் - அத்தந்தை யென்பதன் முதற்கணின்ற தகரவொற் றுக்கெட அதன்மேலேறி நின்ற அகரங் கெடாது நிற்கும், அவ்வியற் பெயர் மெய்யொழித்து அன்கெடும் - அந்நிலைமொழியாகிய இயற்பெயர் அன் னென்னுஞ் சொல்லின் அகரம் ஏறிநின்ற மெய் யை ஒழித்து அவ்வன்தான் கெட்டு முடியும் என்றவாறு. உதாரணம்: சாத்தந்தை, கொற்றந்தை என வரும். முதற்கண்மெய் யென்றதனால், சாத்தன்றந்தை கொற்றன் றந்தை என்னும் இயல்பு முடிபுங் கொள்க. (52) 348. ஆதனும் பூதனுங் கூறிய வியல்பொடு பெயரொற் றகரந் துவரக் கெடுமே. இது, மேலதற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது. இதன் பொருள்: ஆதனும் பூதனும் - முற்கூறிய இயற் பெயருள் ஆதனும் பூதனும் என்னும் இயற்பெயர்கள் தந்தை யென்னும் முறைப்பெயரொடு முடியுங்கால், கூறிய இயல் பொடு - முற் கூறிய நிலைமொழி அன் கெடுதலும் வருமொழித் தகர வொற்றுக் கெடுதலுமாகிய செய்கைகளுடனே, பெயரொற்று அகரந் துவரக் கெடும் - நிலைமொழிப் பெயரில் அன்கெட நின்ற தகரவொற்றும் வருமொழியில் தகர வொற்றுக்கெட நின்ற அகரமும் முற்றக் கெட்டு முடியும் என்றவாறு. உதாரணம்: ஆந்தை, பூந்தை என வரும். இயல்பு என்றதனாற், பெயரொற்றும் அகரமும் கெடாதே நிற்றலுங் கொள்க. ஆதந்தை பூதந்தை என வரும். இனித் துவர வென்றதனால், அழான் புழான் என நிறுத்தித் தந்தை என வருவித்து, நிலைமொழி னகரமும் வருமொழித் தகர மும் அகரமுங் கெடுத்து, அழாந்தை புழாந்தை என முடிக்க. (53) 349. சிறப்பொடு வருவழி யியற்கை யாகும். இஃது - எய்தியது விலக்குகின்றது. இதன் பொருள்: சிறப்பொடு வருவழி - அவ்வியற் பெயர் பண்பு அடுத்து வரும்வழி, இயற்கையாகும் - முற்கூறிய இருவகைச் செய்கை யும் தவிர்த்து இயல்பாய் முடியும் என்றவாறு. உதாரணம்:பெருஞ்சாத்தன்றந்தை, பெருங்கொற் றன்றந்தை என வரும். கொற்றங்கொற்றன்றந்தை, சாத்தங் கொற்றன்றந்தை என்றாற் போல்வன பண்பன்றி அடை அடுத்தனவாதலிற் புறனடையான் முடிக்க.(54) 350. அப்பெயர் மெய்யொழித் தன்கெடு வழியு நிற்றலு முரித்தே யம்என் சாரியை மக்கண் முறைதொ கூஉ மருங்கி னான. இது, மேலதற்கு வேறோர் வருமொழிக்கண் எய்தாத தெய்துவித்தது. இதன் பொருள்: அப்பெயர் மக்கள் ஆன முறை தொகூஉம் மருங் கினும் - அவ்வியற்பெயர் முன்னர்த் தந்தையன்றி மகனாகிய முறைப் பெயர் வந்து தொகுமிடத்தினும், மெய்யொழித்து அன் கெடுவழி அம்மென் சாரியை நிற்றலும் உரித்து - அவ்வியற் பெயரின் தான் ஏறிய மெய் நிற்க அன் கெட்டு அம்முச்சாரியை வந்து நிற்றலும் உரித்து என்றவாறு. ஆன என்பதனை மக்களோடும், உம்மையை மருங்கி னோடுங் கூட்டுக. முறை தொகூஉ மருங்கி னென்றது, இன்னாற்கு மகனென்னும் முறைப்பெயராய்ச் சேருமிடத் தென்றவாறு. உதாரணம்: கொற்றங்கொற்றன், சாத்தங்கொற்றன் என நிலை மொழி அன் கெட்டுழி அம்மு வந்தது. இவற்றிற்கு, அது வெனுருபு விரியாது அதன் உடைமைப் பொருள் விரிக்க. இது முறைப்பெயர். இனி உம்மையாற், 37கொற்றங்குடி சாத்தங்குடி எனப் பிற பெயர் தொக்கனவுங் கொள்க. மெய்யொழித் தென்றதனானே, கொற்றமங்கலம் சாத்த மங்கலம் என்பனவற்றின்கண் அம்மின் மகரங் கெடுதலும், வேட்ட மங்கலம், வேட்டன்குடி என்பனவற்றின் நிலைமொழி யொற்று இரட்டுதலுங் கொள்க. (55) 351. தானும் பேனுங் கோனு மென்னு மாமுறை யியற்பெயர் திரிபிட னிலவே. இது, மேலதற்கு ஒருவழி எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது. இதன் பொருள்: தானும் பேனும் கோனும் என்னும் ஆ முறை இயற் பெயர் - அவ்வியற்பெயருள் தானும் பேனுங் கோனுமென்னும் அம்முறை யினை யுடைய இயற்பெயர்கள், தந்தையொடும் மக்கள் முறைமை யொடும் புணரும் வழி, திரிபிடனில - முற்கூறிய திரிபுகளின்றி இயல்பாய் முடியும் என்றவாறு.. உதாரணம்: தான்றந்தை பேன்றந்தை கோன்றந்தை எனவும், தான்கொற்றன் பேன்கொற்றன், கோன்கொற்றன் எனவும் வரும். பேன் கோன் என்பன முற்காலத்து வழக்கு. இவை தொகை மரபினுள் அஃறிணை விரவுப்பெயர் (எழு. 155) என்புழி இயல்பாயினவேனும் ஈண்டு இவ்வீற்றிற்குத் திரிபு கூறுதலின், . விலக்கி இயல்பாமென்ப தூஉங் கூறினார். (56) 352. தான்யா னெனும்பெய ருருபிய னிலையும். இஃது - எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது, தொகை மரபினுள் அஃறிணை விரவுப் பெயர் (எழு. 155) என்பதனானே இயல்பாய் நின்ற தான் என்பதனையும், உயிரீறாகிய (எழு. 153) என்பதனால் இயல்பாய் நின்ற யா னென்பதனையும் அவ்வியல்பு விலக்கி உருபியலொடு மாட்டெறிதலின். இதன் பொருள்: தான் யான் எனும் பெயர் - தானென்னும் விரவுப் பெயரும் யானென்னும் உயர்திணைப் பெயரும், உருபியல் நிலையும் - உருபியலிற் கூறிய இயல்பிலே நிலைபெற்றுத் தானென்பது நெடுமுதல் குறுகித் தனென்றும், யானென்பது ஆகாரம் எகரமாய் யகரங் கெட்டு என் என்றும் முடியும் என்றவாறு.. உதாரணம்: தன்கை, என்கை செவி தலை புறம் என வரும். வருமொழி வரையாது கூறினமையின், இயல்பு கணத்துக் கண்ணுந் தன்ஞாண் என்ஞாண் நூல் மணி யாழ் வட்டு அடை ஆடை என வரும். (57) 353. வேற்றுமை யல்வழிக் குறுகலுந் திரிதலுந் தோற்ற மில்லை யென்மனார் புலவர். இஃது - அல்வழிக்கண் இயல்பாக என்றலின் எய்தாத தெய்து வித்தது. இதன் பொருள்: வேற்றுமை அல்வழி - முற்கூறிய தான் யான் என்பன வேற்றுமைப் புணர்ச்சி யல்லாதவிடத்து, குறுகலுந் திரிதலுந் தோற்றமில்லை என்மனார் புலவர் - தானென்பது நெடுமுதல் குறுகுதலும் யானென்பது அவ்வாறு திரிதலுந் தோற்றமின்றி இயல்பாய் முடியுமென்று கூறுவர் புலவர் என்றவாறு. உதாரணம்: தான்குறியன் சிறியன் தீயன் பெரியன் ஞான்றான் நீண் டான் மாண்டான் வலியன் எனவும்; யான் குறியேன் சிறியேன் தீயேன் பெரியேன் ஞான்றேன் நீண்டேன் மாண்டேன் வலியேன் எனவும் வரும். தோற்ற மென்றதனான், வேற்றுமைக்கண் அவ்வாறன்றி னகரம் திரிதலுங் கொள்க. 38தற்புகழ் தற்பாடி, எற்புகழ் எற்பாடி என வரும். (58) 354. அழனெ னிறுதிகெட வல்லெழுத்து மிகுமே. இது, வேற்றுமைக்கண் அகரந் திரியாது கெடுக என்றலின், எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது. இதன் பொருள்: அழன் என் இறுதிகெட - அழனென்னுஞ் சொல் தன் ஈற்று னகரங் கெட, வல்லெழுத்து மிகும் - வல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு. உதாரணம்: அழக்குடம் சாடி தூதை பானை என வரும். அழக்குட மென்பது பிணக்குடத்தை. (59) 355. முன்னென் கிளவி முன்னர்த் தோன்று மில்லென் கிளவிமிசை றகர மொற்ற றொல்லியன் மருங்கின் மரீஇய மரபே. இது, மருவின்றொகுதி (எழு. 111) என்பதனாற் கூறிய இலக்கண மரூஉக்களின் ஒன்றற்கு முடிபு கூறுகின்றது. இதன் பொருள்: முன் என் கிளவி முன்னர்த் தோன்றும் இல் என் கிளவி மிசை - முன்னென்னுஞ் சொல்லின் முன்னே வரும் இல் லென்னுஞ் சொல்லின் மேலே, றகரம் ஒற்றல் - ஒரு றகர வொற்று வந்து நின்று முடிதல், தொல்லியல் மருங்கின் மரீஇய மரபு - பழையதாகிய இயல்பினையுடைய வழக்கிடத்து மருவி வந்த இலக்கண முடிபு என்றவாறு. உதாரணம்: முன்றில் என வரும். இல்முன் என நிற்கற்பாலது, முன்றில் என்று தலைதடு மாறுதலின் மரூஉவாயிற்று. முன்னென்பதற்கு 39ஒற்றிரட்டுதல் இலக்கணமேனும், அதுவன்றித் தனக்கு இனமாயதொரு றகர வொற்றுப் பெறுதலின் வேறு முடிபாயிற்று. (60) 356. பொன்னென் கிளவி யீறுகெட முறையின் முன்னர்த் தோன்றும் லகார மகாரஞ் செய்யுண் மருங்கிற் றொடரிய லான. இஃது அவ்வீற்றுப் பெயரொன்றற்குச் செய்யுள் முடிபு கூறுதலின் எய்தாத தெய்துவித்தது. இதன் பொருள்: பொன் என் கிளவி ஈறு கெட - பொன் என்னுஞ் சொல் தன் ஈறாகிய னகரங் கெடாநிற்க, முன்னர் லகார மகாரம் முறையில் தோன்றும் - அதன்முன்னர் லகரமும் மகரவொற்றும் முறையானே வந்து நிற்கும், செய்யுள் மருங்கின் தொடரியலான - அங்ஙனம் நிற்பது செய்யுளிடத்துச் சொற்கள் தம்முள் தொடர்ச்சிப் படும் இயல்பின்கண் என்றவாறு. முறையி னென்றதனான், மகரம் ஒற்றாதல் கொள்க. உதாரணம்: பொலம்படைப் பொலிந்த கொய்சுவற் புரவி (மலைபடு. 574) என வரும். தொடரியலான என்றதனானே, வன்கணத்துக்கண்ணும் லகரம் நிற்க, மகரம் வல்லெழுத்திற்கேற்ற மெல்லெழுத்தாகத் திரிதல் கொள்க. பொலங்கலஞ் சுமந்த பூண்டாங் கிளமுலை (அகம். 19), பொலஞ்சுட ராழி பூண்ட தேரே, பொலந்தார்க் குட்டுவன் என வரும். இன்னும் இதனானே, பொல நறுந்தெரியல் (புறம். 29) பொலமல ராவிரை என்றாற் போல மகரங் கெட்டுப் பிறகணத்து முடிதலுங் கொள்க. (61) 357. யகர விறுதி வேற்றுமைப் பொருள்வயின் வல்லெழுத் தியையி னவ்வெழுத்து மிகுமே. இது, முறையானே யகர ஈற்றிற்கு வேற்றுமை முடிபு கூறு கின்றது. இதன் பொருள்: யகர இறுதி வேற்றுமைப் பொருள்வயின் - யகர ஈற்றுப் பெயர் வேற்றுமைப்பொருட் புணர்ச்சிக்கண், வல்லெழுத்து இயையின் அவ்வெழுத்து மிகும் - வல்லெழுத்து முதன் மொழி வந்து இயையின் அவ்வல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு. உதாரணம்: நாய்க்கால் செவி தலை புறம் என வரும். (62) 358. தாயென் கிளவி யியற்கை யாகும். இது, விரவுப்பெயருள் ஒன்றற்கு எய்திய வல்லெழுத்து விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது. இதன் பொருள்: தாயென் கிளவி இயற்கையாகும் - தாயென்னுஞ் சொல் வல்லெழுத்து மிகாது இயல்பாய் முடியும் என்றவாறு.. உதாரணம்: தாய்கை செவி தலை புறம் என வரும். மேலைச் சூத்திரத்தான் மிகுதியுங் கூறுதலின், அஃறிணை விரவுப் பெயருள் (155) அடங்காதாயிற்று. (63) 359. மகன்வினை கிளப்பின் முதனிலை யியற்றே. இஃது - எய்தாத தெய்துவித்தது; தாயென்பது அடை யடுத்துழி வல்லெழுத்து மிகுக என்றலின். இதன் பொருள்: மகன் வினை கிளப்பின் - தாயென்னுஞ் சொல் தனக்கு அடையாய் முன்வந்த மகனது வினையைப் பின்னாக ஒருவன் கூறுமிடத்து, முதல் நிலை இயற்று - இவ்வீற்றுள் முதற்கட் கூறிய நிலைமையின் இயல்பிற்றாய் வல்லெழுத்து வந்துழி அவ்வல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு. உதாரணம்: மகன்றாய்க்கலாம் செரு துறத்தல் பகைத்தல் என வரும். மகன் தாயோடு கலாய்த்த கலாம் என விரியும். ஏனைய வற்றிற்கும் ஏற்கும் உருபு விரிக்க. Éid, <©L¥ gifnk‰W.(64) 360. மெல்லெழுத் துறழு மொழியுமா ருளவே. இஃது - எய்தாத தெய்துவித்தது. இதன் பொருள்: மெல்லெழுத்து உறழும் மொழியுமாருள - யகர ஈற்றுள் அதிகார வல்லெழுத்தினோடு மெல்லெழுத்து மிக்கு உறழ்ந்து முடிவனவும் உள என்றவாறு. உதாரணம்: வேய்க்குறை வேய்ங்குறை செய்கை தலை புறம் எனவரும். (65) 361. அல்வழி யெல்லா மியல்பென மொழிப. இஃது - அவ்வீற்று அல்வழிக்கு எய்தாத தெய்துவித்தது. இதன் பொருள்: அல்வழி எல்லாம் இயல்பென மொழிப - யகர ஈற்று அல்வழி எல்லாம் இயல்பாய் முடியும் என்று கூறுவர் புலவர் என்றவாறு. உதாரணம்: நாய்கடிது சிறிது தீது பெரிது என வரும். எல்லா மென்றதனான், அவ்வாய்க்கொண்டான் இவ்வாய்க் கொண்டான் உவ்வாய்க்கொண்டான் எவ்வாய்க் கொண்டான் சென்றான் தந்தான் போயினான் என உருபின் பொருள்பட முடி வனவும், தாய்க் கொண்டான் தூய்ப்பெய்தான் என்றாற்போலும் வினையெச்சமும், பொய்ச்சொல் மெய்ச்சொல் எய்ப்பன்றி என்றாற்போலும் பண்புத் தொகையும், வேய்க்கடிது வேய்கடிது என்னும் அல்வழி யுறழ்ச்சி முடிவுங் கொள்க. (66) 362. ரகார விறுதி யகார வியற்றே. இது, நிறுத்த முறையானே ரகார ஈற்று வேற்றுமை முடிபு கூறுகின்றது. இதன் பொருள்: ரகார இறுதி - ரகார ஈற்றுப் பெயர் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண், யகார இயற்று-யகார ஈற்று இயல்பிற்றாய் வல்லெழுத்து வந்துழி அவ்வல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு. உதாரணம்: தேர்க்கால் செலவு தலை புறம் என வரும். இம்மாட்டேற்றினை, யகர ஈற்று வேற்றுமை அல்வழி யென்னும் இரண்டையும் கருதி மாட்டெறிந்தாரென்பர், அல்வழி முடிபும் ஈண்டுக் காட்டுவர். யாம் இவ்வோத்தின் புறனடையாற் காட்டுதும். இது ழகர ஈற்றிற்கும் ஒக்கும். மாட்டேற்றான் உறழ்ச்சியுங் கொள்க. வேர்க்குறை வேர்ங் குறை என வரும். (67) 363. ஆரும் வெதிருஞ் சாரும் பீரும் மெல்லெழுத்து மிகுதன் மெய்பெறத் தோன்றும். இஃது இவ்வீற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது. இதன் பொருள்:ஆரும் வெதிருஞ் சாரும் பீரும் - ஆரென்னுஞ் சொல்லும் வெதிரென்னுஞ் சொல்லும் சாரென்னுஞ் சொல்லும் பீரென்னுஞ் சொல்லும், மெல்லெழுத்து மிகுதல் மெய்பெறத் தோன்றும் - மெல்லெழுத்து மிக்கு முடிதல் மெய்ம்மை பெறத் தோன்றும் என்றவாறு. உதாரணம்: ஆர்ங்கோடு, வெதிர்ங்கோடு, சார்ங்கோடு, பீர்ங் கொடி, செதிள் தோல் பூ என வரும். 40பீர் மரமென்பார் பீர்ங்கோடென்பர். பீர்வாய்ப் பிரிந்தநீர் நிறை முறை செய்து என்றாற்போலச் சான்றோர் பலருஞ் செய்யுள் செய்தவாறு காண்க. மெய்பெற என்றதனான், ஆரங் கண்ணி யடுபோர்ச் சோழர் (அகம். 93) என ஆர் அம்முப்பெறுதலும், மாரிப் பீரத் தலர்சில கொண்டே (குறுந். 98) எனப் பீர் அத்துப் பெறுதலுங் கொள்க. இதனை அதிகாரப் புறனடையான் முடிப்பாரும் உளர். இன்னும் இதனானே, கூர்ங்கதிர்வேல் ஈர்ங்கோதை என்றாற் போலவும், குதிர்ங்கோடு விலர்ங் கோடு அயிர்ங்கோடு துவர்ங் கோடு சிலிர்ங்கோடு என்றாற் போலவும் மெல்லெழுத்து மிகுவன கொள்க. இன்னும் இதனானே, துவரங்கோடு என அம்முப் பெறு தலுங் கொள்க. (68) 364. சாரென் கிளவி காழ்வயின் வலிக்கும். இஃது - எய்தியதன்மேற் சிறப்புவிதி வகுத்தது. இதன் பொருள்: சார் என் கிளவி காழ்வயின் வலிக்கும் - சார் என்பது காழ் என்பதனோடு புணருமிடத்து வல்லெழுத்து மிக்குப் புணரும் என்றவாறு. உதாரணம்: சார்க்காழ் என வரும். சாரினது வித்தென்பதே பொருள். 41இதனை வயிரமெனிற் கிளந்தோதுவாரென்று உணர்க. (69) 365. பீரென் கிளவி யம்மொடுஞ் சிவணும். இஃது - எய்தியதன்மேற் சிறப்புவிதி வகுத்தது. இதன் பொருள்: பீர் என் கிளவி அம்மொடுஞ் சிவணும் - பீர் என்னுஞ் சொல் மெல்லெழுத்தேயன்றி அம்முப் பெற்றும் முடியும் என்றவாறு. உதாரணம்: பீரங்கொடி செதிள் தோல் பூ எனவும், பொன் போற் பீரமொடு பூத்த புதன்மலர் (நெடுநல்வாடை. 14) எனவும் வரும். உம்மை இறந்தது தழீஇயிற்று. (70) 366. லகார விறுதி னகார வியற்றே. இது, முறையானே லகார ஈற்றை வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கட் புணர்க்கின்றது. இதன் பொருள்:லகார இறுதி னகார இயற்று - லகார ஈற்றுப்பெயர் வன்கணம் வந்துழி னகார ஈற்று இயல்பிற்றாய் லகரம் றகரமாய்த் திரிந்து முடியும் என்றவாறு. உதாரணம்: கற்குறை சிறை தலை புறம், நெற்கதிர் சோறு தலை புறம் எனவரும். (71) 367. மெல்லெழுத் தியையி னகார மாகும். இது, னகாரமா மென்றலின் அதற்கு எய்தாத தெய்துவித்தது. இதன் பொருள்: மெல்லெழுத்து இயையின் னகார மாகும் - அவ்வீறு மென்கணம் வந்து இயையின் னகரமாகத் திரிந்து முடியும் என்றவாறு. உதாரணம்: கன்ஞெரி நுனி முரி என வரும். இச்சூத்திரத்தினை வேற்றுமை யிறுதிக்கண் அல்வழியது எடுத்துக் கோடற்கண் சிங்கநோக்காக வைத்தமையான், அல்வழிக்கும் இம்முடிபு கொள்க. கன்ஞெரிந்தது நீண்டது மாண்டது என வரும். (72) 368. அல்வழி யெல்லா முறழென மொழிப. இஃது - அவ்வீற்று அல்வழி முடிபு கூறுகின்றது. இதன் பொருள்: அல்வழியெல்லாம் உறழென மொழிப - இவ்வீற்று அல்வழிகளெல்லாந் தந்திரிபு வல்லெழுத்தினோடு உறழ்ந்து முடியு மென்று கூறுவர் புலவர் என்றவாறு. உதாரணம்: கல்குறிது கற்குறிது சிறிது தீது பெரிது என வரும். எல்லா மென்றதனாற், கல்குறுமை கற்குறுமை சிறுமை தீமை பெருமை எனக் குணம்பற்றிவந்த வேற்றுமைக்கும் உறழ்ச்சி கொள்க. இன்னும் இதனானே வினைச்சொல்லீறு திரிந்தனவும் உருபு திரிந்தனவுங் கொள்க. வந்தானாற்கொற்றன் பொருவானாற் போகான் எனவும் 42அத்தாற்கொண்டான் இத்தாற்கொண் டான் உத்தாற் கொண்டான் எத்தாற் கொண்டான் எனவும் வரும். 43அக்காற் கொண்டான் என்றாற்போலப் பிறவும் முடிபு உள்ளன வெல்லாம் இதனான் முடித்துக் கொள்க. (73) 369. தகரம் வருவழி யாய்த நிலையலும் புகரின் றென்மனார் புலமை யோரே. இது லகரம் றகரமாய்த் திரிதலேயன்றி ஆய்தமாகவும் திரியு மென்ற லின், எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது. இதன் பொருள்: தகரம் வருவழி ஆய்தம் நிலையலும் - தகரம் முதலாகிய மொழி வந்தால் லகரம் றகரமாய்த் திரிதலேயன்றி ஆய்தமாகத் திரிந்து நிற்றலும், புகர் இன்று என்மனார் புலமையோர் - குற்றமின்றென்று சொல்லுவார் ஆசிரியர் என்றவாறு. உதாரணம்: கஃறீது கற்றீது என வரும். புகரின்றென்றதனால், நெடியதனிறுதி (எழு. 370) என்ப தனுள் வேறீது வேற்றீது என்னும் உறழ்ச்சி முடிபுங் கொள்க. (74) 370. நெடியத னிறுதி யியல்புமா ருளவே. இஃது அல்வழியெல்லாமுறழ் (எழு. 368) என்றதனை விலக்கி இயல்பாக என்றலின், எய்தியதன்மேல் சிறப்புவிதி வகுத்தது. இதன் பொருள்: நெடியதன் இறுதி இயல்புமாருள - நெட்டெழுத்தின் ஈற்று லகார ஈறு குறியதன் இறுதிக்கண் நின்ற லகாரம் போலத் திரிந்து உறழ்தலே யன்றி இயல்பாய் முடிவனவும் உள என்றவாறு. உதாரணம்: பால்கடிது தீது பெரிது எனவரும். இயல்பாகாது திரிந்தன வேற்கடிது என்றாற்போல்வன. (75) 371. நெல்லுஞ் செல்லுங் கொல்லுஞ் சொல்லு மல்லது கிளப்பினும் வேற்றுமை யியல. இஃது அல்வழிக்கண் உறழ்ந்து முடிக என்றதனை வேற்றுமை முடி பென்றலின், எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது. இதன் பொருள்: நெல்லுஞ் செல்லுங் கொல்லுஞ் சொல்லும் - நெல்லென்னுஞ் சொல்லும் செல்லென்னுஞ் சொல்லும் கொல்லென்னுஞ் சொல்லும் சொல்லென்னுஞ் சொல்லுமாகிய இந் நான்கு சொல்லும், அல்லது கிளப்பினும் வேற்றுமை இயல - அல் வழியைச் சொல்லுமிடத்துந் தாம் வேற்றுமை முடிபின் இயல்பின வாய் லகரம் றகரமாய்த் திரிந்து முடியும் என்றவாறு. உம்மை சிறப்பு. உதாரணம்: நெற்காய்த்தது. செற்கடிது, கொற்கடிது, சொற்கடிது; சிறிது தீது பெரிது என வரும். (76) 372. இல்லென் கிளவி யின்மை செப்பின் வல்லெழுத்து மிகுதலு மையிடை வருதலு மியற்கை யாதலு மாகாரம் வருதலுங் கொளத்தகு மரபி னாகிட னுடைத்தே. இஃது - இவ்வீற்று வினைக்குறிப்புச் சொல்லுள் ஒன்றற்கு எய்தாத தெய்துவித்தது. இதன் பொருள்: இல்லென் கிளவி இன்மை செப்பின் - இல்லென்னுஞ் சொல் இருப்பிடமாகிய இல்லை உணர்த்தாது ஒரு பொருளினது இல்லாமையை உணர்த்தும் இடத்து, வல்லெழுத்து மிகுதலும் - வல்லெழுத்து முதன் மொழி வந்துழி அவ்வல்லெழுத்து மிக்கு முடிதலும், ஐ இடை வருதலும் - ஐகாரம் இடையே வருதலும், இயற்கையாதலும் - இரண்டும் வாராது இயல்பாய் முடிதலும், ஆகாரம் வருதலும் - ஆகாரம் வந்து முடிதலுமாகிய இந் நான்கு முடிபும், கொளத்தகு மரபின் - சொற்குமுடிபாகக் கொளத்தகும் முறையானே, ஆகிடனுடைத்து - தன் முடிபாம் இடன் உடைத்து என்றவாறு. கொளத்தகு மரபி னென்றதனான் வல்லெழுத்து முதன் மொழி வந்துழி ஐகாரம் வருதலும், ஐகாரம் வந்துழி வல்லெழுத்து மிகுதலும் மிகாமையும், ஆகாரம் வந்துழி வல்லெழுத்து மிக்கு முடிதலுங் கொள்க. உதாரணம்: இலென நிறுத்திக், கொற்றன் சாத்தன் தெளிவு பொருள் எனத் தந்து வல்லெழுத்தும் ஐகாரமுங் கொடுத்து இல்லைக் கொற்றனென ஏனையவற் றோடும் ஒட்டுக. இன்னும் அவ்வாறே நிறுத்தி, ஐகாரமே கொடுத்து இல்லைகொற்றன், சாத்தன் தெளிவு பொருள் என வல்லெழுத்து மிகாது முடிக்க. இன்னும் கொளத்தகு மரபி னென்றதனான், ஏனைக் கணத்தின் முன்னும் ஐகாரமே கொடுத்து இல்லை ஞாண் நூல் மணி வானம் ஆடை என ஒட்டுக. இஃது, இலென்பதொரு முதனிலை நின்று வருமொழி யோடு இங்ஙனம் புணர்ந்ததென்பது உணர்தற்கு இல்லென் கிளவி என்றும், இயற்கையாதலும் என்றும் கூறினார். இம்முடிபு வினை யியலுள் விரவு வினைக்கண் இன்மைசெப்பல் என்புழி இல்லை இல் (சொல். 222) என்று உரை கூறியவத னானும், அவனில்லை என்றாற்போல்வன உதாரணமாக எல்லா ஆசிரியருங் காட்டிய வாற்றானும் உணர்க. இதனானே, இங்ஙனம் புணர்த்த சொல்லன்றி இல்லை என ஐகார ஈறாய் நிற்பதொரு சொல் இன்மையும் உணர்க. ஆயின், இன்மை முதலியவற்றையும் இவ்வாறே புணர்க்க எனின், அவை வருமொழியின்றி ஒரு சொல்லாய் நிற்றலின் புணர்க்காராயினார். இனி, இயல்பு வருமாறு:- எண்ணில்குணம் செய்கை துடி பொருள் எனவும், பொய்யில்ஞானம், மையில்வாண்முகம் (கலி.7) எனவும் வரும். இனி, ஆகாரம் வருமாறு:-இல்லாக்கொற்றன் சாத்தன் தேவன் பொருள் என ஆகாரம் வல்லெழுத்துப் பெற்று வரும். 44பிற்கூறிய இரண்டும் இல்லென்னும் வினைக்குறிப்பு முதனிலை யடியாகத் தோன்றிய பெயரெச்ச மறை தொக்கும் விரிந்தும் நின்றன. இயல்பு முற்கூறாததனான், இம்முடிபிற்கு 45வேண்டுஞ் செய்கை செய்க. தாவினீட்சி என்றாற்போல் வேறுபட வருவன வற்றிற்கும் வேண்டுஞ் செய்கை செய்து முடிக்க. (77) 373. வல்லென் கிளவி தொழிற்பெய ரியற்றே. இஃது இருவழியுந் திரிந்தும் உறழ்ந்தும் வருமென எய்திய தனை விலக்கித் தொழிற்பெயரோடு மாட்டெறிதலிற் பிறிதுவிதி வகுத்தது. இதன் பொருள்: வல் என் கிளவி - வல்லென்னுஞ் சொல் அல்வழிக் கண்ணும் வேற்றுமைக்கண்ணும், தொழிற்பெயர் இயற்று - ஞகார ஈற்றுத் தொழிற் பெயர் இயல்பிற்றாய் வன்கணத்து உகரமும் வல் லெழுத்தும், மென்கணத்தும் இடைக் கணத்து வகாரத்தும் உகரமும் பெற்று முடியும் என்றவாறு. உதாரணம்: வல்லுக்கடிது சிறிது தீது பெரிது ஞான்றது நீண்டது மாண்டது வலிது எனவும், வல்லுக்கடுமை சிறுமை தீமை பெருமை ஞாற்சி நீட்சி மாட்சி வன்மை எனவும் வரும். (78) 374. நாயும் பலகையும் வரூஉங் காலை யாவயி னுகரங் கெடுதலு முரித்தே யுகரங் கெடுவழி யகர நிலையும். இஃது எய்தியது ஒருவழி விலக்கிப் பிறிது விதி வகுத்தது. இதன் பொருள்: நாயும் பலகையும் வரூஉங் காலை - வல்லென்பதன் முன் நாயென்னுஞ் சொல்லும் பலகையென்னுஞ் சொல்லும் வருமொழியாய் வருங்காலத்து, ஆவயின் உகரங் கெடுதலும் உரித்து - அவ்விடத்து உகரம் கெடாது நிற்றலே யன்றிக் கெட்டு முடியவும் பெறும், உகரங்கெடுவழி அகரம் நிலையும் - அவ்வுகரங் கெடு மிடத்து அகரம் நிலைபெற்று முடியும் என்றவாறு. உதாரணம்: வல்ல நாய், வல்லப்பலகை என வரும். உம்மை எதிர்மறையாகலான் உகரங் கெடாதே நின்று, வல்லுநாய் வல்லுப்பலகை என வருதலுங் கொள்க. அகரம் நிலை யும் என்னாது உகரங் கெடும் என்றதனாற் பிற வருமொழிக் கண்ணும் இவ்வகரப்பேறு கொள்க. வல்லக் கடுமை சிறுமை தீமை பெருமை என வரும். (79) 375. பூல்வே லென்றா வாலென் கிளவியொ டாமுப் பெயர்க்கு மம்மிடை வருமே. இஃது - எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது. இதன் பொருள்: பூல் வேல் என்றா ஆலென் கிளவியோடு ஆமுப் பெயர்க்கும் - பூலென்னுஞ் சொல்லும் வேலென்னுஞ் சொல்லும் ஆலென்னுஞ் சொல்லுமாகிய அம்மூன்று பெயர்க்கும், அம் இடை வரும் - வேற்றுமைக்கண் திரிபின்றி அம்முச்சாரியை இடைவந்து முடியும் என்றவாறு. உதாரணம்: பூலங்கோடு, வேலங்கோடு, ஆலங்கோடு, செதிள் தோல் பூ என வரும். வருமொழி வரையாது கூறினமையின், இயல்புகணத்தும் ஒட்டுக. பூலஞெரி, வேலஞெரி, ஆலஞெரி, நீழல் விறகு எனவரும். என்றா என எண்ணிடை யிட்டமையாற், 46பூலாங்கோடு பூலாங்கழி என ஆகாரம் பூலுக்குக்கொள்க. (80) 376. தொழிற்பெய ரெல்லாந் தொழிற்பெய ரியல. இஃது - இவ்வீற்றுத் தொழிற்பெயர்க்கு அல்வழிக்கண்ணும் வேற்றுமைக்கண்ணுந் திரிபும் உறழ்ச்சியும் விலக்கி ஞகாரஈற்றுத் தொழிற் பெயரோடு மாட்டெறிதலின், எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது. இதன் பொருள்: தொழிற்பெயரெல்லாம் - லகார ஈற்றுத் தொழிற் பெயரெல்லாம், தொழிற்பெயர் இயல - ஞகார ஈற்றுத் தொழிற் பெயரின் இயல்பினவாய் இருவழியும் வன்கணத்து உகரமும் வல்லெழுத்தும், மென்கணத்தும் இடைக்கணத்து வகரத்தும் உகரமும் பெற்றுமுடியும் என்றவாறு. உதாரணம்: புல்லுக்கடிது, கல்லுக்கடிது, வல்லுக்கடிது, சிறிது தீது பெரிது ஞான்றது நீண்டது மாண்டது வலிது எனவும், வல்லுக்கடுமை சிறுமை தீமை பெருமை ஞாற்சி நீட்சி மாட்சி வன்மை எனவும் வரும். இவற்றிற்குப் புல்லுதல், கல்லுதல், வல்லுதல் எனப் பொரு ளுரைக்க, இனி, எல்லா மென்றதனான், தொழிற்பெயர்விதி எய்தாது பிறவிதி எய்துவனவுங் கொள்க. கன்னல்கடிது, பின்னல்கடிது, கன்னற்கடுமை, பின்னற் கடுமை எனவும் வரும். இதனானே, மென்கணம் வந்துழிப் பின்னன் ஞான்றது நீண் டது மாண்டது, பின்னன் ஞாற்சி நீட்சி மாட்சி என ஒட்டுக. இனி, ஆடல் பாடல் கூடல் நீடல் முதலியனவும் அல்வழிக்கண் இயல்பாயும் வேற்றுமைக்கண் திரிந்தும் முடிதல் இதனாற் கொள்க. (81) 377. வெயிலென் கிளவி மழையிய னிலையும். இது, திரிபுவிலக்கி அத்தும் இன்னும் வகுத்தலின், எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது. இதன் பொருள்: வெயில் என் கிளவி மழையியல் நிலையும் - வெயிலென்னுஞ் சொல் மழையென்னுஞ் சொற் போல அத்தும் இன்னும் பெற்று முடியும் என்றவாறு. மழை யென்பதனை வளியென வரூஉம் (எழு. 242) என்பதனுடனும், வளியென்பதனைப் பனியெனவரூஉம் (எழு.241) என்பதனுடனும் மாட்டெறிந்தவாறு காண்க. உதாரணம்: வெயிலத்துக்கொண்டான் வெயிலிற் கொண்டான்; சென்றான், தந்தான், போயினான் என வரும். இஃது, அத்துமிசை யொற்றுக் கெடாது நின்ற இடம். இஃது, அவற்றுமுன் வரூஉம் வல்லெழுத்து (எழு. 133) மிக்கது, அதிகார வல்லெழுத்தின்மையின். இயல்பு கணத்துங் கொள்க, 47சாரியை வருமொழி வரையாது கூறினமையின். (82) 378. சுட்டுமுத லாகிய வகர விறுதி முற்படக் கிளந்த வுருபிய னிலையும். இது, முறையானே வகர ஈறு வேற்றுமைக்கண் புணருமாறு கூறுகின்றது. இதன் பொருள்: சுட்டு முதலாகிய வகர இறுதி - வகர ஈற்றுப் பெயர் நான்கனுள் சுட்டெழுத்தினை முதலாகவுடைய வகர ஈற்றுப் பெயர் மூன்றும், முற்படக் கிளந்த உருபியல் நிலையும் - முற்படக் கூறிய உருபு புணர்ச்சியின் இயல்பிற்றாய் வற்றுப் பெற்று முடியும் என்றவாறு. உதாரணம்: அவற்றுக்கோடு, இவற்றுக்கோடு, உவற்றுக் கோடு, செவி தலை புறம் என வரும். முற்படக் கிளந்த என்றதனானே, வற்றினோடு இன்னும் பெறுதல் கொள்க. அவற்றின் கோடு இவற்றின் கோடு உவற்றின் கோடு செவி தலை புறம் என ஒட்டுக. இஃது ஏனைக் கணத்தோடு ஒட்டுக. (83) 379. வேற்றுமை யல்வழி யாய்த மாகும். இது, மேலனவற்றிற்கு அல்வழிமுடிபு கூறுகின்றது. இதன் பொருள்:வேற்றுமையல்வழி ஆய்தமாகும் - அச்சுட்டுமுதல் வகரம் வன்கணத்துக்கண் வேற்றுமை யல்லாத இடத்து ஆய்தமாய்த் திரிந்து முடியும் என்றவாறு. உதாரணம்: அஃகடிய இஃகடிய உஃகடிய சிறிய தீய பெரிய என வரும். இவ்வழக்கு இக்காலத்து அரிது. (84) 380. மெல்லெழுத் தியையி னவ்வெழுத் தாகும். இஃது எய்தாத தெய்துவித்தது. இதன் பொருள்: மெல்லெழுத்து இயையின் அவ்வெழுத் தாகும் - அவ்வகர ஈறு மென்கணம் வந்து இயையுமாயின் அவ்வகர வொற்று அவ்வம் மெல்லெழுத்தாய்த் திரிந்து முடியும் என்றவாறு. உதாரணம்: அஞ்ஞாண் இஞ்ஞாண் உஞ்ஞாண், நூல் மணி எனவரும். (85) 381. ஏனவை புணரி னியல்பென மொழிப. இதுவும் அது, அவ்வீறு ஏனைக் கணங்களோடு புணருமாறு கூறுதலின். இதன் பொருள்:ஏனவை புணரின்-அச்சுட்டுமுதல் வகர ஈற்றோடு இடைக்கணமும் உயிர்க்கணமும் வந்து புணருமாயின், இயல்பென மொழிப - அவ்வகரந் திரியாது இயல்பாய் முடியு மென்று கூறுவர் புலவர் என்றவாறு. உதாரணம்: அவ்யாழ் இவ்யாழ் உவ்யாழ், வட்டு அடை ஆடை என ஒட்டுக. ஈண்டுக் கூறியது நிலைமொழிக்கென்றும், ஆண்டு நின்ற சொன்முனியல்பாகும் (எழுத். 144) என்றது வருமொழிக் கென்றும் உணர்க. (86) 382. ஏனை வகரந் தொழிற்பெய ரியற்றே. இஃது எய்தாத தெய்துவித்தது. இதன் பொருள்: ஏனை வகரம் - வகரக்கிளவி நான்மொழி யீற்றது (எழுத். 81) என்றதனுள் ஒழிந்து நின்ற உரிச்சொல்லாகிய வகரம் இருவழியும், தொழிற்பெயர் இயற்று - ஞகார ஈற்றுத் தொழிற் பெயர் இயல்பிற்றாய் வன்கணத்து உகரமும் வல்லெழுத்தும், மென்கணத்தும் இடைக்கணத்து வகரத்தும் உகரமும் பெற்று முடியும் என்றவாறு. உதாரணம்: 48தெவ்வுக்கடிது, சிறிது தீது பெரிது ஞான்றது நீண்டது மாண்டது வலிது எனவும், தெவ்வுக்கடுமை சிறுமை தீமை பெருமை ஞாற்சி நீட்சி மாட்சி வன்மை எனவும் வரும். உரையிற் கோட லென்பதனான், தெம்முனை என வகர வொற்று மகர வொற்றாகத் திரிதல் கொள்க. (87) 383. ழகார விறுதி ரகார வியற்றே. இது நிறுத்த முறையானே ழகார ஈற்று வேற்றுமை முடிபு கூறுகின்றது. இதன் பொருள்: ழகார இறுதி ரகார இயற்று - ழகார ஈற்றுப்பெயர் வன்கணம் வந்தால் வேற்றுமைக்கண் ரகார ஈற்றின் இயல்பிற்றாய் வல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு. உதாரணம்: பூழ்க்கால், சிறகு தலை புறம் என வரும். (88) 384. தாழென் கிளவி கோலொடு புணரி னக்கிடை வருத லுரித்து மாகும். இஃது - இவ்வீற்றுள் ஒன்றற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது, வல்லெழுத்தினோடு அக்கு வகுத்தலின். இதன் பொருள்: தாழ் என் கிளவி கோலொடு புணரின் - தாழென்னுஞ் சொல் கோலென்னுஞ் சொல்லோடு புணரும் இடத்து, அக்கு இடை வருதலும் உரித்தாகும் - வல்லெழுத்து மிகுதலேயன்றி அக்குச்சாரியை இடையே வந்து நிற்றலும் உரித்து என்றவாறு. எனவே, அக்குப்பெறாது வல்லெழுத்து மிகுதல் வலியுடைத் தாயிற்று. உதாரணம்: தாழக்கோல், தாழ்க்கோல் என வரும். இது தாழைத் திறக்குங்கோல் என விரியும். (89) 385. தமிழென் கிளவியு மதனோ ரற்றே. இதுவும் அது. இதன் பொருள்: தமிழ் என் கிளவியும் - தமிழென்னுஞ் சொல்லும், அதனோரற்று - வல்லெழுத்து மிக்கு முடிதலேயன்றி அக்குச் சாரியை பெற்றும் முடியும் என்றவாறு. அதனோரற்றே என்றதனால், இதற்குத் தமிழ்க் கூத்தென வல்லெழுத்து மிகுதலே வலியுடைத்து. உதாரணம்: தமிழக்கூத்து, சேரி தோட்டம் பள்ளி என வரும். தமிழையுடைய கூத்து என விரிக்க. தமிழ் வரையர் என்றாற்போல, வல்லெழுத்துப் பெறாது அக்குப் பெற்றன, உணரக்கூறிய (எழு. 405) என்னும் புறனடை யாற் கொள்க. தமிழநாடு தமிழ்நாடு என ஏனைக் கணத்து முடிபு, எப்பெயர் முன்னரும் (எழு. 128) என்பதனுள், முற்ற என்றதனான் முடித்தாம். (90) 386. குமிழென் கிளவி மரப்பெய ராயிற் பீரென் கிளவியோ டோரியற் றாகும். இது, வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்தும் அம்மும் வகுத்தலின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி கூறுகின்றது. இதன் பொருள்: குமிழ் என் கிளவி மரப்பெயர் ஆயின் - குமிலேன்னும் சொல் குமிழ்த்தல் என்னுந் தொழிலன்றி மரப்பெயராயின், பீர் என் கிளவியோடு ஓர் இயற்று ஆகும் - பீர் என்னும் சொல்லோடு ஓரியல் பிற்றாய் ஒருவழி மெல்லெழுத்தும் ஒருவழி அம்மும் பெற்று முடியும் என்றவாறு. உதாரணம்: குமிழ்ங்கோடு, குமிழங்கோடு, செதிள் தோல் பூ என வரும். ஓரியற்று றென்றதனான், பிறவற்றிற்கும் இம்முடிபு கொள்க. மகிழ்ங்கோடு, மகிழங்கோடு என ஒட்டுக. (91) 387. பாழென் கிளவி மெல்லெழுத் துறழ்வே. இது, வல்லெழுத்தினோடு மெல்லெழுத்துப் பெறுக என்றலின், எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது. இதன் பொருள்: பாழ் என் கிளவி மெல்லெழுத்து உறழ்வு - பாழென்னுஞ் சொல்லீறு வல்லெழுத்தினோடு மெல்லெ ழுத்துப் பெற்று உறழ்ந்து முடியும் என்றவாறு. உதாரணம்: பாழ்க்கிணறு பாழ்ங்கிணறு சேரி தோட்டம் பாடி என ஒட்டுக. இது பாழுட்கிணறு என விரியும், பாழ்த்தகிணறு என வினைத் தொகை முடியாமையின். (92) 388. ஏழென் கிளவி யுருபிய னிலையும். இஃது - எண்ணுப்பெயர் இவ்வாறு முடிக என்றலின், எய்தா தது எய்துவித்தது. இதன் பொருள்: ஏழ் என் கிளவி - ஏழென்னும் எண்ணுப் பெயர் இறுதி, உருபியல் நிலையும் - உருபு புணர்ச்சிக்கண் கூறிய இயல்பின் கண்ணே நிலைபெற்று அன்பெற்று முடியும் என்றவாறு. அஃது அன்னென் சாரியை யேழ னிறுதி (எழு. 194) என்பதாம். உதாரணம்: : ஏழன்காயம், சுக்கு தோரை பயறு என வரும். இயைபு வல்லெழுத்து ஓத்தின் புறனடையான் வீழ்க்க. இஃது ஏழனாற்கொண்ட காயம் என விரியும். (93) 389. அளவு நிறையு மெண்ணும் வருவழி நெடுமுதல் குறுகலு முகரம் வருதலுங் கடிநிலை யின்றே யாசிரி யர்க்க. இது, மேலதற்கு எய்தாத தெய்துவித்தது. இதன் பொருள்: அளவும் நிறையும் எண்ணும் வருவழி - அவ்வே ழென்பதன் முன்னர் அளவுப்பெயரும் நிறைப்பெயரும் எண்ணுப் பெயரும் வருமொழியாய் வருமிடத்து, நெடுமுதல் குறுகலும் உகரம் வருதலுங் கடிநிலையின்றே ஆசிரியற் - முன்னின்ற நெட்டெழுத்தின் மாத்திரை குறுகுதலும் ஆண்டு உகரம் வருதலும் நீக்கு நிலைமையின்று ஆசிரியற்கு என்றவாறு. உதாரணம்: எழுகலம், சாடி தூதை பானை நாழி மண்டை வட்டி எனவும்; எழுகழஞ்சு, தொடி பலம் எனவும், எழுமூன்று எழுநான்கு எனவும் வரும். நிலை யென்றதனான், வன்கணத்துப் பொருட்பெயர்க்கும் இம்முடிபு கொள்க. எழுகடல், சிலை திசை பிறப்பு எனவரும். ‘(94) 390. பத்தென் கிளவி யொற்றிடை கெடுவழி நிற்றல் வேண்டு மாய்தப் புள்ளி. இது, மேலதற்கு எய்தியதன் மேற் சிறப்புவிதி வகுத்தது, வருமொழி நோக்கி விதித்தலின். இதன் பொருள்: பத்து என் கிளவி ஒற்றிடை கெடுவழி - அவ்வேழ னோடு பத்தென்பது புணருமிடத்து அப்பத்தென் கிளவி இடை யொற்றுக் கெடுவழி, ஆய்தப்புள்ளி நிற்றல் வேண்டும் - ஆய்தமாகிய புள்ளி நிற்றலை விரும்பும் ஆசிரியன் என்றவாறு. உதாரணம்: எழுபஃது என வரும். (95) 391. ஆயிரம் வருவழி யுகரங் கெடுமே. இது, நெடுமுதல் குறுகி நின்று உகரம் பெறாது என்றலின், எய்தியது ஒரு மருங்கு மறுத்தது. இதன் பொருள்: ஆயிரம் வருவழி-ஏழென்பதன் முன் ஆயிரமென்னும் எண்ணுப்பெயர் வருமொழியாய் வருமிடத்து, உகரங் கெடும்-நெடு முதல் குறுகிநின்று உகரம்பெறாது முடியும் என்றவாறு. உதாரணம்: எழாயிரம் என வரும். (96) 392. நூறூர்ந்து வரூஉ மாயிரக் கிளவிக்குக் கூறிய நெடுமுதல் குறுக்க மின்றே. இஃது - எய்தியது முழுவதூஉம் விலக்கிற்று, உகரங்கெட்டு அதன் மேலே நெடுமுதல் குறுகாது என்றலின். இதன் பொருள்: நூறு ஊர்ந்து வரூஉம் ஆயிரம் கிளவிக்கு - அவ்வே ழென்பது நூறென்னுஞ் சொல்மேல் வரும் ஆயிர மென்னுஞ் சொல்லிற்கு, கூறிய நெடுமுதல் குறுக்கமின்று - முற்கூறிய நெடுமுதல் குறுகி உகரம் பெறுதலின்று என்றவாறு. உதாரணம்: ஏழ் நூறாயிரம் எனவரும். கூறிய என்றதனான், நெடுமுதல் குறுகி 49உகரம் பெற்று எழு நூறாயிரம் எனவும் வரும். இதனானே, ஏழாயிரமென மேல் முதனிலை குறுகாமை யுங் கொள்க. இதனானே, எழுஞாயிறு எழு நாள் எழுவகை என இயல்பு கணத்து நெடுமுதல் குறுகி உகரம் பெறுதலும் கொள்க. (97) 393. ஐயம் பல்லென வரூஉ மிறுதி யல்பெய ரெண்ணினு மாயிய னிலையும். இதுவும் அது. இதன் பொருள்: 50ஐ அம் பல் என வரூஉம் இறுதி - அவ்வேழன் முன்னர் ஐயென்றும் அம்மென்றும் பல்லென்றும் வருகின்ற இறுதிகளை யுடைய, அல்பெயர் எண்ணினும் - பொருட் பெயரல்லாத எண்ணுப் பெயராகிய தாமரை வெள்ளம் ஆம்பல் என்பன வந்தாலும், ஆ இயல் நிலையும் - நெடுமுதல் குறுகாது உகரம் பெற்றாது அவ்வியல்பின் கண்ணே நின்று முடியும் என்றவாறு. உதாரணம்: ஏழ்தாமரை, ஏழ்வெள்ளம், ஏழாம்பல் என வரும். (98) 394. உயிர்முன் வரினு மாயிய றிரியாது. இதுவும் அது. இதன் பொருள்: உயிர்முன் வரினும் - அவ்வேழென்பதன் முன்னர் அளவுப் பெயரும் எண்ணுப் பெயருமாகிய உயிர் முதன்மொழி வரினும், ஆ இயல் திரியாது - நெடுமுதல் குறுகி உகரம் பெற்று வாராது முடியும் இயல்பிற் றிரியாது முடியும் என்றவாறு. உதாரணம்: ஏழகல், ஏழுழக்கு, ஏழொன்று, ஏழிரண்டு என வரும். (99) 395. கீழென் கிளவி யுறழத் தோன்றும். இஃது இவ்வீற்றுள் ஒன்றற்கு வேற்றுமைக்கண் உறழ்ச்சி கூறுகின்றது. இதன் பொருள்:கீழ் என் கிளவி உறழத் தோன்றும் - கீழென்னுஞ் சொல் உறழ்ச்சியாய்த் தோன்றி முடியும் என்றவாறு. தோன்று மென்றதனான், நெடுமுதல் குறுகாது வல்லெ ழுத்துப் பெற்றும் பெறாதும் வருமென்ற இரண்டும் உறழ்ச்சியாய் வருமென்று கொள்க. இயைபு வல்லெழுத்து அதிகாரத்தாற் கொள்க. உதாரணம்: கீழ்க்குளம் கீழ்குளம், சேரி தோட்டம் பாடி என வரும். (100) 396. ளகார விறுதி ணகார வியற்றே. இது, நிறுத்தமுறையானே ளகார ஈற்றுச்சொல் வேற்றுமைக் கண் புணருமாறு கூறுகின்றது. இதன் பொருள்: ளகார இறுதி ணகார இயற்று - ளகார ஈற்றுப் பெயர் ணகார ஈற்றின் இயல்பிற்றாய் வன்கணம் வந்துழி டகார மாய்த் திரிந்து முடியும் என்றவாறு. உதாரணம்: முட்குறை, சிறை தலை புறம் என வரும். (101) 397. மெல்லெழுத் தியையின் ணகார மாகும். இது, மேலதற்கு மென்கணத்து முடிபு கூறுகின்றது. இதன் பொருள்: மெல்லெழுத்து இயையின் ணகார மாகும் - ளகார ஈறு மெல்லெழுத்து முதன்மொழி வருமொழி யாய் வந்து இயையின் ணகரமாய்த் திரிந்து முடியும் என்றவாறு. உதாரணம்: முண்ஞெரி, நுனிமரம் என வரும். இதனை வேற்றுமையிறுதிக்கண் அல்வழியது எடுத்துக் கோடற்கண் சிங்கநோக்காக வைத்தலின், அல்வழிக்கும் இம் முடிபு கொள்க. முண்ஞெரிந்தது நீண்டது மாண்டது என வரும். (102) 398. அல்வழி யெல்லா முறழென மொழிப. இது, மேலதற்கு அல்வழி முடிபு கூறுகின்றது. இதன் பொருள்: அல்வழியெல்லாம் - ளகார ஈறு அல்வழிக் கணெல்லாம், உறழென மொழிப - திரியாதும் டகாரமாய்த் திரிந்தும் உறழ்ந்து முடியு மென்று சொல்லுவர் புலவர் என்றவாறு. உதாரணம்: முள்கடிது முட்கடிது, சிறிது தீது பெரிது என வரும். எல்லாமென்றதனான், குணவேற்றுமைக்கண்ணும் இவ் வுறழ்ச்சி கொள்க. முள்குறுமை முட்குறுமை, சிறுமை தீமை பெருமை எனவும், கோள்கடுமை கோட்கடுமை வாள்கடுமை வாட் கடுமை எனவும் ஒட்டுக. இதனானே, அதோட்கொண்டான் இதோட்கொண்டான் உதோட் கொண்டான் எதோட் கொண்டான், சென்றான் தந்தான் போயினான் என உருபு வாராது உருபின் பொருள்பட வந்தனவும் கொள்க. (103) 399. ஆய்த நிலையலும் வரைநிலை யின்றே தகரம் வரூஉங் காலை யான. இது, மேலதற்கு எய்தியதது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது, தகரம் வருவழி உறழ்ச்சியேயன்றி ஆய்தமாகத் திரிந்தும் உறழ்க என்றலின். இதன் பொருள்: தகரம் வரூஉங் காலையான - தகர முதன்மொழி வருமொழியாய் வருங்காலத்து, ஆய்தம் நிலையலும் வரைநிலை யின்று - ளகாரம் டகாரமாகத் திரிதலே யன்றி ஆய்தமாகத் திரிந்து நிற்றலும் நீக்கும் நிலைமையின்று என்றவாறு. உதாரணம்: முஃடீது, முட்டீது என வரும். (104) 400. நெடியத னிறுதி யியல்பா குநவும் வேற்றுமை யல்வழி வேற்றுமை நிலையலும் போற்றல் வேண்டு மொழியுமா ருளவே. இது, மேலதற்கு, எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது. இதன் பொருள்: நெடியதன் இறுதி இயல்பு ஆகுநவும் - அவ்வீற்று நெடியதன் இறுதி திரியாது இயல்பாய் முடிவனவற்றையும், வேற்றுமை அல்வழி வேற்றுமை நிலையலும் - வேற்றுமை யல்லாத விடத்து வேற்றுமையின் இயல்பை யுடையனவாய்த் திரிந்து முடிதலையும், போற்றல் வேண்டும் மொழியுமாருள - போற்றுதல் வேண்டுஞ் சொற்களும் உள என்றவாறு.. உதாரணம்: கோள்கடிது, வாள்கடிது, சிறிது, தீது, பெரிது எனவும், புட்டேம்பப் புயன்மாறி (பட்டினப்பாலை. 89) எனவும் வரும். போற்றல் வேண்டும் என்றதனால், உதளங்காய் செதிள் பூ தோல் என அம்முப் பெறுதலுங் கொள்க. உதளென்பது யாட் டினை உணர்த்துங்கால் முற்கூறிய முடிபுகள் இருவழிக்கும் ஏற்ற வாறே முடிக்க. உதட் கோடு, உதள்கடிது, உதணன்று என ஒட்டுக. ‘nkh¤ijíª jfU KjS k¥gU«’ v‹wh® kuãaÈš (47).(105) 401. தொழிற்பெய ரெல்லாந் தொழிற்பெய ரியல. இஃது - இவ்வீற்றுத் தொழிற்பெயர்க்கு இருவழியும் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது. இதன் பொருள்: தொழிற் பெயரெல்லாம் - ளகார ஈற்றுத் தொழிற் பெயரெல்லாம் இருவழியும், தொழிற்பெயர் இயல - ஞகார ஈற்றுத் தொழிற் பெயர் போல வன்கணத்து உகரமும் வல்லெழுத்தும், மென்கணத்தும் இடைக்கணத்து வகரத்தும் உகரமும் பெற்று முடியும் என்றவாறு. உதாரணம்: துள்ளுக்கடிது சிறிது தீது பெரிது ஞான்றது நீண்டது மாண்டது வலிது எனவும், துள்ளுக்கடுமை சிறுமை தீமை பெருமை ஞாற்சி நீட்சி மாட்சி வன்மை எனவும் வரும். எல்லா மென்றதனானே, இருவழியுந் தொழிற்பெயர்கள் உகரமும் வல்லெழுத்தும் பெறாது திரிந்துந் திரியாதும் முடிவனவுங் கொள்க. கோள்கடிது கோட்கடிது, கோள்கடுமை கோட்கடுமை என்பன போல்வன பிறவும் வரும். இனி, வாள்கடிது வாட்கடிது, சிறிது தீது பெரிது எனவும், வாள்கடுமை வாட்கடுமை எனவுங் காட்டுக. வாள்-கொல்லுதல். (106) 402. இருளென் கிளவி வெயிலிய னிலையும். இது, திரிபு விலக்கி அத்தும் இன்னும் வகுத்தலின் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது. இதன் பொருள்:இருள் என் கிளவி - இருளென்னுஞ் சொல் வேற்று மைப் பொருட் புணர்ச்சிக்கண், வெயிலியல் நிலையும் - வெயிலென் னுஞ் சொற்போல அத்தும் இன்னும் பெற்று முடியும் என்றவாறு. உதாரணம்: இருளத்துக் கொண்டான் இருளிற் கொண்டான், சென்றான் தந்தான் போயினான் என வரும். சாரியை வரையாது கூறினமையின், இயல்புகணத்தும் ஒட்டுக. இருளத்து ஞான்றான், நீண்டான் மாண்டான்; இருளின் ஞான்றான் நீண்டான் மாண்டான் என வரும். (107) 403. புள்ளும் வள்ளுந் தொழிற்பெய ரியல. இதுவும் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது, திரிபும் உறழ்வும் விலக்கித் தொழிற்பெயர்விதி வகுத்தலின். இதன் பொருள்: புள்ளும் வள்ளும் - புள்ளென்னுஞ் சொல்லும் வள்ளென்னுஞ் சொல்லும் இருவழிக்கண்ணும், தொழிற் பெயர் இயல - ஞகார ஈற்றுத் தொழிற்பெயர் போல வன்கணத்து உகரமும் வல்லெழுத்தும், மென்கணத்தும், இடைக்கணத்து வகரத்தும் உகரமும் பெற்று முடியும் என்றவாறு. உதாரணம்: புள்ளுக்கடிது வள்ளுக்கடிது, சிறிது தீது பெரிது ஞான்றது நீண்டது மாண்டது வலிது எனவும், புள்ளுக் கடுமை வள்ளுக் கடுமை சிறுமை தீமை பெருமை ஞாற்சி நீட்சி மாட்சி வன்மை எனவும் வரும். இதனைத் தொழிற் பெயரெல்லாம் (எழுத். 401) என்பதன் பின் வையாததனால், இருவழியும் வேற்றுமைத்திரிபு எய்தி முடிவனவுங் கொள்க. புட்கடிது வட்கடிது சிறிது தீது பெரிது எனவும், புட் கடுமை வட்கடுமை சிறுமை தீமை பெருமை எனவும், புண் ஞான்றது நீண்டது மாண்டது எனவும், புண் ஞாற்சி நீட்சி மாட்சி எனவும் வரும். புள்ளுவலிது புள்வலிது, புள்ளுவன்மை புள்வன்மை என வகரத்தின் முன்னர் உகரம் பெற்றும் பெறாதும் வருதலின், நின்ற சொன்மு னியல் பாகும் (எழுத். 144) என்றதனான் முடியாமை உணர்க. இது வள்ளிற்கும் ஒக்கும். (108) 404. மக்க ளென்னும் பெயர்ச்சொ லிறுதி தக்கவழி யறிந்து வலித்தலு முரித்தே. இஃது - எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது, உயிரீறாகிய உயர்திணைப்பெயர் (எழு. 153) என்பதனுட் கூறிய இயல்பு விலக்கித் திரிபு வகுத்தலின். இதன் பொருள்: மக்கள் என்னும் பெயர்ச்சொல் இறுதி - மக்க ளென்னும் பெயர்ச்சொலிறுதி இயல்பேயன்றி, தக்கவழி அறிந்து வலித்தலும் உரித்து - தக்க இடம் அறிந்து வல்லொற்றாகத் திரிந்து முடிதலும் உரித்து என்றவாறு. தக்கவழி யென்றார், பெரும்பான்மை மக்கள் உடம்பு உயிர் நீங்கிக் கிடந்த காலத்தின் அஃது இம்முடிபுபெறும் என்றற்கு. உதாரணம்: மக்கட்கை, செவி தலை புறம் என வரும். இக்கிடந்தது மக்கட்டலை என்பதனான் அவ்வாறாதல் கொள்க. 51மக்கள்கை, செவி, தலை, புறம் எனத் திரியாது நின்றது, உயிருண்மை பெற்றது. இனிச் சிறுபான்மை, மக்கட்பண்பு, மக்கட் சுட்டு எனவும் வரும். (109) 405. உணரக் கூறிய புணரியன் மருங்கிற் கண்டுசெயற் குரியவை கண்ணினர் கொளலே. இஃது இவ்வோத்தின்கண் எடுத்தோத்தானும் இலேசானும் முடியாது நின்றவற்றிற்கெல்லாம் இதுவே ஓத்தாகக் கொண்டு, சாரியை பெறுவனவற்றிற்குச் சாரியையும், எழுத்துப் பெறுவனவற்றிற்கு எழுத்துங் கொடுத்து முடித்துக்கொள்க என்கின்றது. இதன் பொருள்: உணரக் கூறிய புணரியல் மருங்கின் - உணரக்கூறப்பட்ட புள்ளியீறு வருமொழியொடு புணரும் இயல் பிடத்து, கண்டு செயற்கு உரியவை - மேல் முடித்த முடிபன்றி வழக் கினுட் கண்டு முடித்தற்கு உரியவை தோன்றியவழி, கண்ணினர் கொளல் - அவற்றையுங் கருதிக் கொண்டு ஏற்றவாறே முடிக்க என்றவாறு. உதாரணம்: மண்ணப்பத்தம் என அல்வழிக்கண் ணகர ஈறு அக்குப் பெற்றது. மண்ணங்கட்டி என அம்முப் பெற்றது. பொன்னப்பத்தம் என னகர ஈறு அக்குப் பெற்றது. பொன்னங் கட்டி என அம்முப் பெற்றது. கானங்கோழி என வேற்றுமைக்கண் அம்முப் பெற்றது. மண்ணாங்கட்டி கானாங்கோழி என்பன மரூஉ. வேயின்றலை என யகர ஈற்று உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட் சென்றுழி வல்லெழுத்துக் கெடுக்க. நீர்குறிது என ரகர ஈறு அல்வழிக்கண் இயல்பாயிற்று. வேர் குறிது வேர்க்குறிது இது ரகர ஈறு அல்வழி உறழ்ச்சி. வடசார்க்கூரை மேல்சார்க் கூரை இவை வல்லெழுத்து மிக்க மரூஉ முடிபு. அம்பர்க் கொண்டான் இம்பர்க்கொண்டான் உம்பர்க்கொண்டான் எம்பர்க் கொண்டான் என இவ்வீறு ஏழனுருபின் பொருள்பட வந்தன வல்லொற்றுப் பெற்றன. தகர்க்குட்டி புகர்ப்போத்து என்பன பண்புத்தொகை கருதிற்றேல் ஈண்டு முடிக்க; வேற்றுமை யாயின் முன்னர் முடியும். விழலென்னும் லகர ஈறு வேற்றுமைக்கண் றகரமாகாது னகரமாய் முடிதல் கொள்க. விழன்காடு; செறு தாள் புறம் எனவரும். கல்லம்பாறை, உசிலங் கோடு, எலியாலங்காய், புடோலங்காய் என அவ்வீறு அம்முப் பெற்றது. கல்லாம்பாறை என்பது மரூஉ. அழலத்துக் கொண்டான் என அவ்வீறு அத்துப் பெற்றது. அழுக்கற் போர், புழுக்கற்சோறு என்பன அவ்வீற்று அல்வழித்திரிபு. யாழ்குறிது என்பது ழகர ஈற்று அல்வழி யியல்பு. வீழ்குறிது வீழ்க்குறிது என்பன அவ்வீற்று அல்வழியுறழ்ச்சி. தாழப்பாவை என்பது அவ்வீற்று அல்வழி அக்குப் பெற்றது. யாழின்கோடு செய்கை தலை புறம் என அவ்வீற்று உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட் சென்றுழி வல்லெழுத்து வீழ்க்க. முன்னாளை வாழ்வு, முன்னாளைப் பரிசு, ஒரு நாளைக்குழவி, ஒரு திங்களைக்குழவி என்றாற் போல்வன ளகார ஈறு ஐகாரமும் அதனோடு வல்லெழுத்தும் பெறுதல் கொள்க. பிறவும் இவ்வோத்தின் வேறுபட வருவன வெல்லாம் கொணர்ந்து இதனான் முடிக்க. குளத்தின் புறம், மரத்தின்புறம் என உருபிற்கு எய்திய அத்தோடு இன்பெறுதலுங்கொள்க. இனிக் கடிசொல் லில்லை (சொல். 452) என்பதனான், வழக்கின்கண்ணுஞ் செய்யுட்கண்ணும் வந்து திரிந்து முடியுஞ் சொற்களும் உள. அவற்றைக் கண்ணினர் கொளலே என்பதனான், மண்ணுக்குப் போனான், பொன்னுக்கு விற்றான், பொருளுக்குப் போனான், நெல்லுக்கு விற்றான், கொள்ளுக்குக் கொண்டான், பதினேழு என்றாற்போல வழக்கின்கண் உகரம் பெறுவனவும்; விண்ணுக்குமேல், மண்ணுக்கு நாப்பண் (திருக். 162), பல்லுக்குத் தோற்ற பனிமுல்லை பைங்கிளிகள் சொல்லுக்குத் தோற்றின்னந் தோன்றினவா-னெல்லுக்கு நூறோஒஒ நூறென்பா ணுடங்கிடைக்கும் வன்முலைக்கு மாறோமா லன்றளந்த மண் என்றாற்போலச் செய்யுட்கண் உகரம்பெறுவனவும், பிறவும் முடிக்க. பற்கு நெற்கு என்பன முதலியனவுங் கொள்க. இவை உருபின் பொருள்படவாராது உருபின்கண் வந்தனவேனும் ஈண்டுக் காட்டினாம்; ஆண்டுப் புள்ளியிறுதியும் (எழு. 202) என்னும் உருபியற் சூத்திரத்து இலேசு கோடற்கு இடனின்றென்று கருதி. இனி, அச்சூத்திரத்துத் தேருங் காலை என்றதனான் முடித்தலும் ஒன்று. (110) புள்ளி மயங்கியல் முற்றிற்று. கணேசய்யர் அடிக்குறிப்புகள்: 1. உகரமொடு புணரும் என்பது. தொகைமரபு 21-ம் சூத்திரத்து யகரமும் உயிரும் வருவழி உகரம் பெறாவென்று விதித்ததை. 2. ஈண்டு வேற்றுமை ஒழித்து மாட்டேறு சென்றதென்றது. நகரவிறுதி வல்லினம் வருங்கால் வேற்றுமையினும் அல்வழியினும் உகரம் பெற்று வல்லெழுத்து மிக்கும். ஞ ந ம வ வந்தால் உகரம்பெற்றும் முடியுமென்று மாட்டேற்றாற் கொள்ள நிற்றலின். அங்ஙனங் கொள்ளாது அல்வழிக்கு மாத்திரம் மாட்டேற்றைக் கொள்க என்றபடி. நகரவிறுதிக்கு வேற்றுமை முடிபு வருஞ் சூத்திரத்தாற் கூறுப. 3. பொருந் என்பது சாதிப்பெயர் என்றது. பொருநர் என்னுஞ் சாதியை யுணர்த்தி நின்றதென்றபடி. வினைப்பெயர் - தொழிற்பெயர். 4. நகர இகரமே இட்டெழுதுப என்றது என்னையெனின்? வெரின் என னகர விகரமிட்டு எழுதுவாரை விலக்குதற்கு. 5. இரண்டாவதன்றிரிபு என்றது. தொகைமரபு 15-ம் சூத்திரத்தாற் கூறிய இரண்டாம் வேற்றுமைத் திரிபை. 6. இருதிணைக்கண்ணும் அஃறிணையாய் முடிதல் என்றது. ஆண்வந்தான் ஆண் வந்தது என முடியாமல் இருதிணைக்கண்ணும் ஆண்வந்தது என முடிதலை. 7. விரவுப்பெயரென்றது - ஆண் என்னும் பொதுப்பெயரை. 8. அதிகார வல்லெழுத்தின்மை என்றது - உயிரீற்றுக்காயின் அதிகார வல்லெழுத்து உண்டு; இது மெய்யீறானபடியால் அதிகார வல்லெழுத் தின்று என்றபடி. ஆதலின் வல்லெழுத்துக் கொடுத்து முடிக்க என்றபடி. உயிரீற்றின் முன்னன்றி ய ர ழ வொழிந்த மெய்யீற்றின்முன் வல்லினம் மிகாதென்க. 9. மண்ணுதல் - கழுவுதல். வெண் - ஓராறு. எண்ணுப்பாறு - எண்ணின் கட்பாறு எனவிரியும். எண் - எள். பாறு - பருந்து. 10. மண்ணப்பத்தம் - மண்ணாலாகியபத்தம். பந்தம் - பத்தம் என்றாயிற்று. பந்தம் - திரள். எண்ணாலாகிய நொலை. நோலை - அப்பவகை. மண்ணப்பத்தம், எண்ணநொலை இவை அக்குப்பெற்றன. 11. `மொழிமுதலாகும்' என்றது. தொகைமரபு 5-ம் சூத்திரத்தை. 12. தொகைமரபிற் கூறிய..... இயல்பின் கண்ணுமென்றது. தொகை மரபு 5-ம் சூத்திரத்தின்கட் கூறிய இயல்பு முடிபை. ஈண்டு வேற்றுமைக்கட் டிரிந்து முடிந்த இயல்பின் என்றது. இப்புள்ளி மயங்கியல் 6-ம் சூத்திரத்துக் கூறிய திரிபு முடிபையும் தொகைமரபு 6=ம் சூத்திரத்துக் கூறிய இயல்பு முடிபையும். 13. நும் - விரவுப்பெயர். 14. மேல் என்றது - வருஞ்சூத்திரத்தை. இலேசு என்றது - வழக்கத்தான் என்பதை. 15. ஒற்றென்றது - நிலைமொழி மகரத்தை. 16. ஆணைகூறலாவது - இவ்வாசிரியனது கருத்து இதுவெனக் கொள்ள வைத்தல். பகரத்திற்கு இனம் மகரமாதலிற் றிரியாது என்பது கருத்து. 17. இவை இயல்புகணத்துக்கண் மகரங்கெட்டு முடிந்தன என்றது - உலக்கை என்பதில் உகரமும் முதல என்பதில் மரகமும் இயல்புகணமாதல் பற்றி. மென்கணம், இடைக்கணம், உயிர்க்கணம் என்னும் இவைகள் இயல்பு கணங்கள். இயல்புகணமென்றது - ஈண்டு உகர மகரங்களை. கொல்லுங் கொற்றன், உண்ணுஞ்சாத்தன் மகரந் திரிந்தன. கவளமாந்து மலைகெழு நாடன் முதலியன மகரங்கெட்டு நின்றன. கொல்லும் யானை முதலியன மகரம் நிலைபெற்றன. 18. `அல்வழியெல்லாம்' என்றது - இதற்கு முதற்சூத்திரத்தை. 19. அதிகாரத்தானும் என்றது - அல்வழி அதிகாரப்பட்டு நின்றமையை. பொருள் என்றது - உள்ளங்கையெனப் பொருள் தருதலை. 20. வினைக்குறிப்புப் பெயரென்றது. குறிப்பாகக் காலங்காட்டும் முதனிலைத் தொழிற்பெயரை. படு என்பது உண்டாகின்ற எனக் குறிப்பாகக் காலங்காட்டடல் பற்றிக் குறிப்புஎன்றார். இலத்தாற் பற்றப்பட்ட என்று பொருளுரைக்குங்கால் பற்றுதற்கு முதனிலை யின்றென்பது நச்சினார்க்கினியர் கருத்து. படு என்பதை வினைத் தொகையாகக் கொள்ளின் இரண்டு காலத்துக்கும் பொதுவாகும். இரண்டு காலம் என்றது இறப்பு நிகழ்வினை. படு என்பது இரண்டுகாலமும் பற்றி விரியுங்கால் பட்டபடும் என விரியும். அவ்விரண்டுந் bjக்கமுjனிலைபLஎ‹பது.பL என்பதை முதனிலைத் தொழிற் பெயராக வைத்து வருமொழியாக ஆசிரியர் எடுத்தோதினாரன்றி வினைத் தொகையாயின் படுபுலவர் என்பதில் படு என்பதைப் பிரித்து வருமொழியாகக் கூறாரென்பது கருதிமுதனிலையாய்நிற்றலின்அதனைஎடுத்தோதினாரென்றார்.பL என்பது பட்ட என்பதற்கு முதனிலையாகுமேயன்றி பற்ற என்பதற்கு முதனிலையாகாதென்பார். இரண்டு முதனிலை கூடி ஒன்றாய்நின்று gற்றுதலைச்bசய்யப்பட்டvனப்bபாருள்jராமையானும்vன்றார்.ï§nf பற்றுதற்குரிய முதனிலை யில்லை. ஆதலின் படு என்பது பட்ட எனப் பொருள் தருமன்றிப் பற்றப்பட்ட எனப் பொருள்தராமையின் ciரயாசிரியர்கUத்துப்gருந்தாjன்பதுகUத்து. 21. அவ்விரண்டு இலேசு என்றது - வேற்றுமையாயின் என்றதையும் ஆவயினான என்றதையும். 22. தமகாணம் - ஆறாம் வேற்றுமை அகர உருபு. 23. நும் தொடக்கங் குறுகும் மொழியன்மையின் இலேசினால் முடித்தார். 24. குறியீர், குறியம் என்பவற்றை, எல்லாங் குறியீர் எல்லாங் குறியம் என ஒட்டுக. குறியீர் என்பது முன்னிலையைக் காட்டவும், குறியயம் என்பது தன்மையைக் காட்டவும் வந்த வருமொழிகள். 25. செம், தும் என்பன முதனிலைத் தொழிற்பெயர். 26. நாட்டம், ஆட்டம் என்பன விகுதிபெற்ற தொழிற்பெயர். 27. முற்கூறிய வல்லெழுத்தென்றது. 32-ம் சூத்திரத்தாற் பெற்ற வல்லெழுத்தை. 28. குணவேற்றுமை என்றது - கடுமை முதலிய குணச் சொற்கள் வந்து புணரும் வேற்றுமைப் புணர்ச்சியை. 29. ஆன் -அவ்விடம். ஈன் - இவ்விடம். ஊன் - உவ்விடம். 30. அப் பெயரை என்றது - பின் முன் என்பவற்றை. 31. குயின் வினை என்றது - குயினுதலை யுணர்த்தும் முதனிலைத் தொழிற் பெயரை. குயினுதல் - துளைசெய்தல்; அழுத்துதல். 32. பண்பு - பண்புத்தொகை. பண்புத்தொகையாங்கால் எகினாகிய சேவலென விரியும். 33. வேட்டுவக்குமரி, இதில் வேடன், வேட்டுவன் என மரீஇயிற்று. 34. மேல் என்றது 46-ம் சூத்திரத்தை. அதிலுள்ள `மானமில்லை' என்றதனான் ................. என்பன காட்டின் அவை இச்சூத்திரத்து `இறுதியோடுறழும்' என்ற உறழ்ச்சி இயல்பில் அடங்குமென்றபடி. 35. மின் என்பது. மின்னுதற் றொழிலன்றி மின்னலை உணர்த்து மிடத்துப் பெயராம். அதுபற்றிப் பொருள் என்றார். பின் - பின்னுதலையும், பின்னிய கூந்தலையு முணர்த்தும். பன் - சொல்லுதலையும் சொல்லையு முணர்த்தும். கன் - கன்னான்தொழிலையும் கன்னானையுமுணர்த்தும். 36. குணவேற்றுமை என்றது - கன்னக்கடுமை என்பதிற் போல வேற்றுமைக் கட் பண்புச்சொல் வந்து புணர்தலை. கடுமை - பண்பு. 37. கொற்றங்குடி - இது அன்கெட்டு அம்முப்பெற்றுத் திரிந்து முடிந்தது. வேட்டமங்கலம் - `வேடன்' அன்கெட்டு அம்முப்பெற்று மகரங்கெட்டு டகரமிரட்டி வேட்டமங்கலமென்றாயிற்று. 38. தற்புகழ் முதலியன - ஆறாம் வேற்றுமை. 39. ஒற்றிரட்டல் என்றது - முன்னில் என வருதலை. 40. பீர், கொடி யென்பது இவர் கருத்துப்போலும். மரமென்பாருமுளர் என்றமையின். குதிர் முதலியன மரம். 41. இதனை என்றது - காழை. 42. அதனால் என்பது - அத்தால் என நின்றதுபோலும். ஏனையவுமன்ன. 43. அக்கால் - அப்பொழுது. இவற்றின் ஈறுகள் திரியும் என்றபடி. 44. பிற்கூறிய இரண்டும் என்றது - எண்ணில் குணம் என்பதையும் இல்லாக் கொற்றன் என்பதையும். எண்ணில் குணம் என்பது - எண்ணில்லாத குணமென விரிதலின் பெயரெச்சமறை தொக்க தென்றார். இல்லாக்கொற்ற‹(இல்லாjகொற்றன்)என்பJவிரிந்Jவந்தது;தகuஅகர«தொக்கது. 45. வேண்டும் செய்கை என்பது ஐ வருமிடத்து லகர மிரட்டித்தலும், தாவில் - நீட்சி என்பதில் லகரங் கெடுதலும் நகரம் திரிதலுமாம். லகரம் கெடுதற்கு விதி தொகைமரபு 18-ம் சூத்திரத்து மிகையாற் கொள்க. 46. பூலாங்கோடு - ஆகாரமும் மெல்லெழுத்தும் பெற்று வந்தது. 47. சாரியை இயல்பு கணத்துக்கொள்க என மாற்றுக. 48. தெவ் - பகை; உரிச்சொல். அஃது ஈண்டுப் பகைவனை யுணர்த்திப் பெயராய் நின்றது. 49. ஆசிரியர், குறுக்கமின்றே என்று கூற உரைகாரர் வருமெனல் பொருந்தாது. அவ்வாறு வருவது பிற்கால வழக்காம். 50. தாமரை - ஐ இறுதி; வெள்ளம் - அம் இறுதி. ஆம் பல் - பல் இறுதி. 51. உயிருள்ள மக்களையுணர்த்தும்மக்கள்என்னுஞ்சொல்திரியாதுஎன்றபடி. குற்றியலுகரப் புணரியல் குற்றியலுகரவீறு நின்று வருமொழியோடு புணரும் இயல் பினை யுணர்த்துவது இவ்வியலாகும். நெட்டெழுத்தின் பின்னும் தொடர்மொழி யீற்றும் குற்றியலுகரம் வரும் என மொழிமரபிற் கூறினார். தொடர்மொழியீற்றுக் குற்றுகரத்தை அயலிலுள்ள எழுத்து வகையால் உயிர்த்தொடர், இடைத்தொடர், ஆய்தத் தொடர், வன்றொடர், மென்றொடர் என ஐந்தாகப்பகுத்து, அவற்றொடு நெட்டெழுத்தின் பின்வருங் குற்றுகரத்தையுங் கூட்டி அறுவகைப்படுத்து விளக்குகின்றார். யரழ முன்னர்க் கசதபஙஞநம ஈரொற்றாகி வருங் குற்றுகரங்கள் ஒருவாற்றான் இடையொற்றுக்களோடு தொடர்ந்துவரினும் குற்றியலுகரத்தையடுத்து நேரே தொடர்ந்தன அல்லவாதலின் அவை இடைத்தொடராகக் கொள்ளப்படாவென்றும், ஆறீற்றுக் குற்றியலுகரமும் இருவழியிலும் கெடாது நிறைந்தே நிற்கு மென்றும், வன்றொடர்க் குற்றியலுகரம் வல்லெழுத்து முதன் மொழி வருமிடத்து முன்கூறிய (அரைமாத்திரையினுங் குறுகும்) இயல்பில் நிற்றலுமுரித்தென்றும், குற்றியலுகர வீற்றின்முன் யகர முதன்மொழி வருமிடத்து ஈற்றிற் குற்றியலுகரங்கெட அங்கு ஓர் இகரம் வந்து குறுகி நிற்குமென்றும் இவ்வியலின் முதல் ஐந்து சூத்திரத்தானும் குற்றியலுகரத்தியல்பினை ஆசிரியர் பொதுவகையாற் கூறிப்போந்தார். 6-முதல் 17-வரையுள்ள சூத்திரங்களால் குற்றுகரவீற்று வேற்றுமைப் பொருட்புணர்ச்சி கூறினார். 18-முதல் குற்றுகரவீற்று அல்வழிப்புணர்ச்சியினைத் தொடங்கிக் கூறுகின்றார். உண்மைத் தன்மையை யுணர்த்தும் உண்டு என்னுஞ்சொல் வல்லெழுத்து முதன்மொழிவரின் இறுதிநின்ற உகரம் மெய் யொடுங்கெட ணகரம் ளகரமாகத் திரியுமென்றும், குற்றுகர வீற்றுத் திசைப்பெயர்களுள் இரண்டு பெருந்திசையும் தம்மிற் புணருமிடத்து ஏயென்னுஞ்சாரியை இடையே வந்துமுடியு மென்றும், குற்றுகரவீற்றுப் பெருந்திசைகளோடு கோணத் திசைகள் புணருமிடத்து இறுதியுகரம் மெய்யொடுங் கொடு மென்றும் அவ்வழி தெற்கு என்பதன் றகரம் னகரமாகத்திரியு மென்று«கூறுவ®ஆசிரியர். குற்றுகர வீற்று எண்ணுப் பெயரியல்பினை 28-ஆம் சூத்திர முதலாகத்தொடங்கி¡கூறுகின்றார். பத்து என்னும் எண்ணின் முன் ஒன்றுமுதல் எட்டுவரையுள்ள எண்களும் ஆயிரமென்னும் எண்ணும் நிறைப்பெயரும் அளவுப்பெயரும் வந்து புணரு முறையினை 28-முதல் 30-வரையுள்ள சூத்திரங்கள் உணர்த்துவன ஒன்று முதல் எட்டுவரையுள்ள குற்றுகர வீற்று எண்ணும் பெயர்களின்முன் பத்து வந்து புணர்தலை 31-முதல் 38-வரையுள்ள சூத்திரங்கள் குறிப்பிடுவன. ஒன்பது என்னும் சொல்லின்முன் பத்து வந்து புணருங்கால் நிலைமொழியாகிய ஒன்பதில் ஒகரத்திற்கு மேலாகத் தகர மெய்தோன்றித் தொன்பது என்றாகிப் பது கெட்டு னகரம் ணகரமாகத் திரிந்து இரட்டித்துத் தொண்ண் என நிற்குமென்றும், வருமொழியாகிய பஃதென்பதில் பகரவுயிர்மெய்யும் ஆய்தமும்கெட்டு ஊகாரம் தோன்றி இறுதியிலுள்ள து என்பதன் தகரம் றகரமாகத் திரிந்து ஊறு என்றாகித் தொண்ணுறு என முடியுமென்றும், இவ்வியல் 39-ஆம் சூத்திரத்தால் ஆசிரியர் விரித்துரைப்பர். மேற்கூறிய ஒன்றுமுதல் ஒன்பது வரையுள்ள எண்ணுப்பெயர்களோடு அளவுப்பெயரும் நிறைப் பெயரும் வந்து புணரு முறையினை 40-முதல் 53-வரையுள்ள சூத்திரங்களாலும், நூறென்னுஞ்சொல் வருமொழியாய் வந்து புணர்வதனை 54, 55, 56, 57-ஆம் சூத்திரங்களாலும், ஆயிரம் என்னும் எண் தனித்தும் நூறென்னும் அடையடுத்தும் புணர்தலை 58-முதல் 65-வரையுள்ள சூத்திரங்களாலும் கூறுவர் ஆசிரியர். ஒன்பது என்னும் எண்ணின்முன் நூறு என்னும் எண் வந்துபுணரின் முற்கூறியவாறு நிலைமொழியாய் நின்ற ஒன்பது என்னும் சொல்லின் ஒகரத்தின் முன்னே தகரமெய் ஒன்று தோன்றித் தொன்பது என்றாகிப் பதுகெட்டு னகரமெய் ளகர மெய்யாக இரட்டித்துத் தொள்ள் என நிற்குமென்றும், வருமொழியாகிய நூறென்பதன் முதலில் நின்ற நகரமெய் கெட அம்மெய்யின் மேலேறிய ஊகாரம் ஆகாரமாகத்திரிந்து அதனையடுத்து இகரவுயிரும் ரகரவுயிர் மெய்யும் இடையேதோன்றி ஈற்றிலுள்றறகர வுகரங்கெட்டு மகரமெய்தோன்றி ஆயிரம் என்றாகித் தொள்ளாயிரம் என முடியுமென்றும் 57-ஆம் சூத்திரத்தால் தொல்காப்பியனார் விரித்துக் கூறியுள்ளார். தொண்ணுறு, தொள்ளாயிரம் என்னும் புணர்மொழிகளுக்கு ஆசிரியர் தொல்காப்பியனார் கூறும் புணர்ச்சி முறைகள் வலிந்து கூறுவனவாகவே அமைந்துள்ளன வென்றும் ஒன்பது என்னும் பொருள்படத் தொல்காப்பியரே தொண்டு என்னும் எண்ணுப் பெயரைத் தம் நூலில் ஆண்டிருத்தலால் தொண்டு+பத்து = தொண்ணுறு என்றும், தொண்டு+ஆயிரம் = தொள்ளாயிரம் என்றும் நிலைமொழி வருமொழி செய்து புணர்ச்சிவிதி கூறுவதே மொழியியல்புக்கு ஒத்ததாகுமென்றும் பரிதிமாற்கலைஞர் கூறும் கொள்கை இங்கு சிந்திக்கத் தக்கதாகும். நூறு என்பது நிலைமொழியாக அதன் முன் ஒன்று முதல் ஒன்பதும் அவையூர் பத்தும் அளவும் நிறையும் வந்து புணரும் முறையினை 66-முதல் 68-வரையுள்ள சூத்திரங்கள் விளக்கு வனவாம். ஓன்று முதல் எட்டினையூர்ந்த பஃதென்னும் எண்ணுப் பெயருடன் ஒன்று முதல் ஒன்பதெண்களும் ஆயிரமும் அளவும் நிறையும் புணரு முறையினை 69, 70, 71-ஆம் சூத்திரங்கள் குறிப்பிடுகின்றன. ஒன்று முதல் ஒன்பான்களோடு பொருட் பெயர்கள் புணருமியல்பினை 72, 73-ஆம் சூத்திரங்களாலும் இரண்டு முதல் ஒன்பது வரையுள்ள எண்களின்முன் அளவு, நிறை, எண் என்பவற்றுக்குரிய மா என்னுஞ்சொல் புணர்தலை 74-ஆம் சூத்திரத்தாலும் ஆசிரியர் குறிப்பிடுவர். எண்ணுப்பெயர் களுள் மிக்க எண்ணோடு குறைந்த எண் வந்து புணர்தலை உம்மைத் தொகையாகவும், குறைந்த எண்ணோடு மிக்க எண் வருதலைப் பண்புத் தொகையாகவும்கொண்டு ஆசிரியர் விதி கூறியுள்ளமை இவண் கருதற்குரியதாகும். லகார னகார வீற்றுச் செய்யுள் முடிபு கூறுவது 75-ஆம் சூத்திரம். இவ் வதிகாரத்து நிலைமொழி வருமொழி செய்து புணர்க்கப்படா மொழிகள் இவையெனத் தொகுத்துரைப்பது 76-ஆம் சூத்திரமாகும். இவ்வியலின் இறுதியிலுள்ள 77-ஆம் சூத்திரம் எழுத்ததிகாரத்தின் புறனடையாகும். - க. வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 161-166 ஒன்பதாவது குற்றியலுகரப் புணரியல் 406. ஈரெழுத் தொருமொழி யுயிர்த்தொட ரிடைத்தொட ராய்தத் தொடர்மொழி வன்றொடர் மென்றொட ராயிரு மூன்றே யுகரங் குறுகிடன். என்பது சூத்திரம். இவ்வோத்துக் குற்றியலுகரமென்று கூறப்பட்ட எழுத்துப் பொருட்பெயரோடும் எண்ணுப்பெயர் முதலியவற் றோடும் புணரும் முறைமை உணர்த்தினமையிற் குற்றியலுகரப் புணரியல் என்னும் பெயர்த் தாயிற்று. இது மெய்யே யுயிரென் றாயீ ரியல (எழு. 103) என்றவற்றுள், உயிரினது விகாரமாய் நின்ற குற்று கரத்தை இருவழிக்கண்ணும் புணர்க்கின்றமையின், மேலை ஓத்தினோடு இயைபுடைத் தாயிற்று. இத்தலைச் சூத்திரம் - மொழிமரபினகத்து இருவழிய என்ற குற்றுகரம், இதனகத்து இனைத்து மொழியிறுதி வருமென்று அவற்றிற்குப் பெயரும் முறையும் தொகையும் உணர்த்துகின்றது. அப்பெயர் பெயர், அம்முறை முறை, அத்தொகை தொகை. தொடர் மொழி யீற்று (எழு. 36) வருமென்று ஆண்டுக் கூறியவதனை ஈண்டு ஐந்து வகைப்படுத்தி, அதனொடு நெட்டெழுத் திம்பரும் (எழு. 36) என்றது ஒன்றே யாதலின் அதனையுங் கூட்டி அறுவகைத் தென்றார். இதன் பொருள்: ஈரெழுத்தொருமொழி - இரண் டெழுத்தானாகிய ஒரு மொழியும், உயிர்த்தொடர் - உயிர்மேல்வரும் மெய்யைத் தொடர்ந்து நின்ற சொல்லும், இடைத்தொடர் - இடையொற்று மேல்வரும் மெய்யைத் தொடர்ந்து நின்ற சொல்லும், ஆய்தத் தொடர்மொழி-ஆய்தமாகிய எழுத்து மேல்வரும் மெய்யைத் தொடர்ந்து நின்ற சொல்லும், வன்றொடர்-வல்லொற்று மேல்வரும் மெய்யைத் தொடர்ந்து நின்ற சொல்லும், மென்றொடர் - மெல்லொற்று மேல்வரும் மெய்யைத் தொடர்ந்து நின்ற சொல்லும், ஆயிரு மூன்றே-ஆகிய அவ்வாறு சொல்லுமே, உகரங் குறுகு இடன் - உகரங் குறுகிவரும் இடம் என்றவாறு. உதாரணம்: நாகு, வரகு, தெள்கு, எஃகு, கொக்கு, குரங்கு என வரும். 1இதனை ஏழென்று கொள்வார்க்குப் பிண்ணாக்கு, சுண்ணாம்பு, ஆமணக்கு முதலியன முடியாமை உணர்க. (1) 407. அவற்றுள் ஈரொற்றுத் தொடர்மொழி யிடைத்தொட ராகா. இஃது - அவ்வாறனுள் ஒன்றற்கு, எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது. இதன் பொருள்: அவற்றுள்-அவ்வாறனுள், ஈரொற்றுத் தொடர் மொழி-இரண்டொற்று இடைக்கண் தொடர்ந்து நிற்குஞ் சொல்லிற்கு இடையின ஒற்று முதல் நின்றால், இடைத் தொடராகா - மேல் இடையினந் தொடர்ந்து நில்லா, வல்லினமும் மெல்லினமுந் தொடர்ந்து நிற்கும் என்றவாறு. உதாரணம்: ஆர்க்கு, ஈர்க்கு, நொய்ம்பு, மொய்ம்பு என வரும். (2) 408. அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணு மெல்லா விறுதியு முகர நிலையும்.2 இஃது - இடைப்படிற் குறுகு மிடனுமா ருண்டே (எழு. 37) என்றதனாற் புணர்மொழிக்கண் அரைமாத்திரையினுங் குறுகு மென எய்தியதனை விலக்கி அவ்வியல் நிலையு மேனை மூன்றே (எழு. 12) என்ற விதியே பெறுமென்கின்றது. இதன் பொருள்: அல்லது கிளப்பினும் - அல்வழியைச் சொல்லுமிடத்தும், வேற்றுமைக் கண்ணும் - வேற்றுமைப் புணர்ச்சிக் கண்ணும், எல்லா இறுதியும் உகரம் 3நிலையும் - ஆறு ஈற்றின் கண்ணும் உகரந் தன் அரை மாத்திரையைப் பெற்று நிற்கும் என்றவாறு. வருமொழியானல்லது அல்வழியும் வேற்றுமையும் விளங் காமையின், அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும் எனவே இருமொழிப் புணர்ச்சி என்பது பெற்றாம். இவ்விரு மொழிக்கண் பழைய அரைமாத்திரை பெற்றே நிற்குமென்றார். அன்றி இருமொழிப் புணர்ச்சிக்கண் ஒரு மாத்திரை பெறுமென் றார்க்குப் பன்மொழிப் புணர்ச்சியாகிய செய்யுளிலக் கணத்து குற்றுகரத்தான் நேர்பசை நிரைபசை கோடலும், அவற்றான் அறுபது வஞ்சிச்சீர் கோடலும், பத்தொன்பதினா யிரத் திருநூற்றுத் தொண்ணூற்றொரு தொடை கோடலும் இலவாய் முற்றியலுகரமாகவே கொள்ள வேண்டுதலின் மாறுகொளக் கூறலென்னுங் குற்றந் தங்குமென்று உணர்க. உதாரணம்: நாகுகடிது, வரகுகடிது, நாகுகடுமை, வரகுகடுமை என வரும். இவை, தம் அரைமாத்திரை பெற்றன. ஏனைய வற்றோடும் ஒட்டுக. இனி, இது மால்யாறுபோந்து கால்சுரந்துபாய்ந்து எனத் தொடர்மொழிக்கண்ணும் அரைமாத்திரை பெற்றது என்னாக்கால் வஞ்சிச்சீரின்றாமாறு உணர்க. (3) 409.வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து வருவழித் தொல்லை யியற்கை நிலையலு முரித்தே. இது, முன்னின்ற சூத்திரத்தான் அரைமாத்திரை பெறும் என்றதனை விலக்கி இடைப்படிற் குறுகு மிடனும் (எழு. 37) என்றதனான் அரை மாத்திரையினும் குறுகுமென்று ஆண்டு விதித்தது ஈண்டு வல்லொற்றுத் தொடர்மொழிக்கண்ணே வருமென் கின்றது. இதன் பொருள்: வல்லொற்றுத் தொடர் மொழி - வல் லொற்றுத் தொடர் மொழிக்குற்றுகரம், வல்லெழுத்து வருவழி-வல்லெழுத்து முதன்மொழி வருமொழியாய் வருமிடத்து, தொல்லை இயற்கை நிலையலும் உரித்து- இடைப்படிற் குறுகும் (எழு. 37) என்பத னாற் கூறிய அரைமாத்திரையினுங் குறுகி நிற்கும் என்ற இயல்பிலே நிற்றலும் உரித்து என்றவாறு. உம்மை எதிர்மறை. உதாரணம்: கொக்குக்கடிது கொக்குக்கடுமை என அரை மாத்திரை யிற் குறைந்தவாறு, குரங்குகடி தென்பது முதலிய வற்றொடு படுத்துச் செவிகருவியாக உணர்க. முன்னின்ற சூத்திரத்து 4உகர நிறையு மென்று பாடம் ஓதி, அதற்கு உகரம் அரைமாத்திரையிற் 5சிறிது மிக்கு நிற்குமென்று பொருள் கூறி, இச்சூத்திரத்திற்குப் பழைய அரைமாத்திரை பெற்று நிற்குமென்று கூறுவாரும் உளர். (4) 410. யகரம் வருவழி யிகரம் குறுகு முகரக் கிளவி துவரத் தோன்றாது. இது, குற்றியலிகரம் புணர்மொழியகத்து வருமாறு கூறு கின்றது. இதன் பொருள்: யகரம் வருவழி உகரக்கிளவி துவரத் தோன்றாது - யகர முதன்மொழி வருமொழியாய் வருமிடத்து நிலைமொழிக் குற்றுகர வெழுத்து 6முற்றத் தோன்றாது, இகரங் குறுகும் - ஆண்டு ஓர் இகரம் வந்து அரைமாத்திரை பெற்று நிற்கும் என்றவாறு. உதாரணம்: நாகியாது, வரகியாது, தெள்கியாது, எஃகியாது, கொக்கியாது, குரங்கியாது எனவரும். ‘துவர’ என்றார், ஆறு ஈற்றின் கண்ணும் உகரங் கெடுமென்றற்கு .(5) 411. ஈரெழுத்து மொழியு முயிர்த்தொடர் மொழியும் வேற்றுமை யாயி னொற்றிடை யினமிகத் தோற்றம் வேண்டும் வல்லெழுத்து மிகுதி. இது, முற்கூறிய ஆறனுள் முன்னர் நின்ற இரண்டற்கும் வேற்றுமைப் பொருட்புணர்ச்சி முடிபு கூறுகின்றது. இதன் பொருள்: ஈரெழுத்து மொழியும் உயிர்த்தொடர் மொழியும் - ஈரெழுத் தொருமொழிக் குற்றுகர ஈற்றிற்கும் உயிர்த்தொடர் மொழிக் குற்றுகர ஈற்றிற்கும், வேற்றுமையாயின் - வேற்றுமைப் பொருட் புணர்ச்சியாயின், இனஒற்று இடைமிக - இனமாகிய ஒற்று இடையிலே மிக, வல்லெழுத்து மிகுதி தோற்றம் வேண்டும் - வல்லெழுத்து மிகுதி தோன்றி முடிதலை விரும்பும் ஆசிரியன் என்றவாறு. உதாரணம்: யாட்டுக்கால், செவி தலை புறம் எனவும், முயிற்றுக் கால் சினை தலை புறம் எனவும் வரும். கயிற்றுப்புறம், வயிற்றுத்தீ என்பனவுமாம். தோற்றம் என்றதனான், ஏனைக்கணத்தும் இம்முடிபு கொள்க. எ-டு: யாட்டுஞாற்சி நிணம் மணி வால் அதள் எனவும், முயிற்று ஞாற்சி நிணம் முட்டை வலிமை அடை ஆட்டம் எனவும் வரும். (6) 412. ஒற்றிடை யினமிகா மொழியுமா ருளவே யத்திறத் தில்லை வல்லெழுத்து மிகலே. இஃது - எய்தியது ஒரு மருங்கு மறுக்கின்றது. இதன் பொருள்: ஒற்று இடை இனம் மிகா மொழியு மாருள - முற்கூறிய இரண்டனுள் இனவொற்று இடை மிக்கு முடியாத மொழிகளும் உள, வல்லெழுத்து மிகல் அத்திறத்தில்லை - வல்லொற்று மிக்கு முடிதல் அக்கூற்று ளில்லை என்றவாறு. உதாரணம்: நாகுகால் செவி தலை புறம் எனவும், வரகுகதிர்; சினை தாள் பதர் எனவும் வரும். அத்திற மென்றதனான், உருபிற்கு எய்திய சாரியை பொருட்கட் சென்றவழி, இயைபு வல்லெழுத்து வீழ்க்க. யாட்டின்கால், முயிற்றின்கால், நாகின்கால் வரகின்கதிர் என வரும். அத்திற மென்றதனான் ஏனைக்கணத்தும் ஒற்றிடை மிகா மை கொள்க. நாகுஞாற்சி; நீட்சி, மாட்சி, வலிமை என ஒட்டுக. (7) 413. இடையொற்றுத் தொடரு மாய்தத் தொடரு நடையா யியல வென்மனார் புலவர். இஃது இடைநின்ற இரண்டற்கும் (406) முடிபு கூறுகின்றது. இதன் பொருள்:இடையொற்றுத் தொடரும் ஆய்தத் தொடரும் - இடையொற்றுத் தொடர்மொழிக் குற்றுகர ஈறும் ஆய்தத் தொடர் மொழிக் குற்றுகர ஈறும், நடை ஆ இயல என்மனார் புலவர் - நடை பெற நடக்கு மிடத்து முற்கூறிய அவ் வியல்பு முடிபினையுடைய என்று கூறுவர் புலவர் என்றவாறு. உதாரணம்: தெள்குகால்; சிறை தலை புறம் எனவும், எஃகு கடுமை; சிறுமை தீமை பெருமை எனவும் வரும். (8) 414. வன்றொடர் மொழியு மென்றொடர் மொழியும் வந்த வல்லெழுத் தொற்றிடை மிகுமே மெல்லொற்றுத் தொடர்மொழி மெல்லொற் றெல்லாம் வல்லொற் றிறுதி கிளையொற் றாகும். இது, பின்னின்ற இரண்டற்கும் முடிபு கூறுகின்றது. இதன் பொருள்: வன்றொடர் மொழியும் மென்றொடர் மொழியும் - வன்றொடர்மொழிக் குற்றுகரஈறும், மென்றொடர் மொழிக் குற்றுகர ஈறும், வந்த வல்லெழுத்து ஒற்று இடைமிகும் - வருமொழி யாய் வந்த வல்லெழுத்தினது ஒற்று இடையிலே மிக்கு முடியும், மெல்லொற்றுத் தொடர்மொழி மெல்லொற் றெல்லாம் - அவ் Éuண்டனுள்kல்லொற்றுத்jடர்kழிக்கண்நின்றkல்லொற்றெல்லாம்,இWதிலšலொற்றுஇWதிக்கண்நி‹றவšலொற்றும்கிiளயொற்றுஆகும்- கிiளயாகியவšலொற்றுமhய்முoயும்எ‹றவாறு. 7 இறுதி வல்லொற்று வருதலாவது, குற்றுகரம் ஏறிநின்ற வல்லொற்றுத் தானே முன்னர்வந்து நிற்றலாம். 8கிளைவல் லொற்று வருதலாவது, ணகாரத்திற்கு டகாரமும், னகாரத்திற்கு றகாரமும், புணர்ச்சியும் பிறப்பும் நோக்கிக் கிளையாமாதலின், அவை முன்னர் வந்து நிற்றலாம். உதாரணம்: கொக்குக்கால்; சிறகு தலை புறம்; குரங்குக்கால்; செவிதyபுறம்;குரக்குக்கால்;செÉதyபுறம்;எட்கு¡குட்டி;செÉதyபுறம்;எற்புக்காடு;சுர«தyபுறம்;எdவரும். அற்புத்தளை என்பது, அன்பினாற் செய்த தளையென வேற்றுமையும், அன்பாகிய தளையென அல்வழியுமாம். வந்த என்றதனான், இவ்விரண்டற்கும் உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட் சென்றவழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க.. கொக்கின்கால், குரங்கின்கால் என வரும். எல்லா மென்றதனாற் பறம்பிற்பாரி, குறும்பிற்சான்றார் என மெல்லொற்றுத் திரியாமையுங் கொள்க. ஒற்றென்ற மிகுதியான், இயல்புகணத்துக்கண்ணும் குரக்கு ஞாற்சி நிணம் முகம் விரல் உகிர் என மெல்லொற்றுத் திரிந்து வருமாறு கொள்க. சிலப்பதிகாரம் என்பதும் அது. வன்றொடர்மொழி இயல்புகணத்துக்கண் வருதல், ஞநமயவ (எழு. 144) என்பதனான் முடியும். (9) 415. மரப்பெயர்க் கிளவிக் கம்மே சாரியை. இஃது எய்தியது விலக்கிப் பிறிதுவிதி கூறுகின்றது; வல்லெழுத்Jவிலக்»அம்Kவகுத்தலின். இதன் பொருள்: மரப்பெயர்க் கிளவிக்கு அம்மே சாரியை - குற்றியலுகர ஈற்று மரப்பெயர்க்கு வருஞ் சாரியை அம்முச் சாரியை என்றவாறு.. உதாரணம்: தேக்கங்கோடு, செதிள், தோல், பூ என வரும். கமுகங்காய், தெங்கங்காய், சீழ்கம்புல், கம்பம்புல், பயற்றங்காய் என்றாற் போலும் புல்லினையும் மரமென அடக்கி, மாறுகொளக் கூறலெனத் தழீஇக்கொண்ட சிதைவென்பதாம் இச் சூத்திர மென்று உணர்க. (10) 416. மெல்லொற்று வலியா மரப்பெயரு முளவே. 9இது, மென்றொடர் மொழிக்கு எய்தியது ஒருமருங்கு மறுக் கின்றது. இதன் பொருள்: மெல்லொற்று வலியா மரப்பெயரும் உள - மெல்லொற்று வல்லொற்றாகத் திரியாது மெல்லொற்றாய் முடியும் மரப்பெயரும் உள என்றவாறு. உதாரணம்: புன்கங்கோடு; செதிள் தோல் பூ எனவும், குருந்தங்கோடு; செதிள் தோல் பூ எனவும் வரும். வலியா மரப்பெயருமுள எனவே, வலிக்கும் மரப்பெயரும் உளவென்று கொள்க. வேப்பங்கோடு, கடப்பங்காய், ஈச்சங்குலை எனவரும். (11) 417. ஈரெழுத்து மொழியும் வல்லொற்றுத் தொடரு மம்மிடை வரற்கு முரியவை யுளவே யம்மர பொழுகு மொழிவயி னான. இஃது ஈரெழுத்தொருமொழிக்கும் வன்றொடர் மொழிக்கும் எய்தாத தெய்துவித்தது, முன்னர் எய்தியதனை விலக்கி அம்மு வகுத்தலின். இதன் பொருள்: ஈரெழுத்து மொழியும் வல்லொற்றுத் தொடரும் – ஈரெழுத்தொரு மொழிக்குற்றியலுகர ஈறும் வன்றொடர் மொழிக் குற்றியலுகர ஈறும், அம் இடைவரற்கும் உரியவைஉள- முன்முடித்துப் போந்த முடிபுகளன்றி அம்முச்சாரியை இடையே வந்து முடிதற்கு உரியனவும் உள; யண்டெனின், அம்மரபு ஒழுகும் மொழிவயினான- அவ்விலக்கணம் நடக்கும் மொழியிடத்து என்றவாறு. உதாரணம்: ஏறங்கோள் சூதம்போர், வட்டம்போர், புற்றம் பழஞ்சோறு என வரும். உம்மை எதிர்மறையாதலின், அம்முப் பெறாதன நாகுகால், கொக்குக்கால் என முன்னர்க் காட்டினவேயாம். அம்மரபொழுகும் என்றதனால், 10அரசக்கன்னி, முரசக் கடிப்பு என அக்கும் வல்லெழுத்துங் கொடுத்தும்; அரச வாழ்க்கை, முரச வாழ்க்கை என அக்குக் கொடுத்தும் முடிக்க. இன்னும் அதனானே இருட்டத்துக் கொண்டான், விளக்கத்துக் கொண்டான் என அத்தும் வல்லெழுத்துங் கொடுத்தும்; மயிலாப்பிற் கொற்றன், பறம்பிற்பாரி என இன் கொடுத்தும்; கரியதன்கோடு, நெடியதன் கோடு என அன் கொடுத்தும் முடிக்க. (12) 418. ஒற்றுநிலை திரியா தக்கொடு வரூஉ மக்கிளை மொழியு முளவென மொழிப. இது, மென்றொடர்மொழியுட் சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுக்கின்றது. இதன் பொருள்: ஒற்று நிலை திரியாது அக்கொடும் வரூஉம் - ஒற்று முன்னின்ற நிலைதிரியாது அக்குச்சாரியை யோடும் பிற சாரியையோடும் வரும், அக்கிளை மொழியும் உள என மொழிப - அக்கிளையான சொற்கள் உள என்று சொல்லுவர் ஆசிரியர் என்றவாறு. இதற்கு உம்மையை என முன்னர் மாறுக. உதாரணம்: குன்றக்கூகை, மன்றப்பெண்ணை எனவரும். உம்மையாற் கொங்கத்துழவு, வங்கத்துவாணிகம் என அத்தும் பெற்றன. நிலை யென்றதனான், ஒற்று நிலைதிரியா அதிகாரத்துக் கண் வருஞ் சாரியைக்கு இயைபு வல்லெழுத்து வீழ்க்க. அக்கிளை யென்றார், இரண்டு சாரியை தொடர்ந்து முடிவன வும் உளவென்றற்கு. பார்ப்பனக்குழவி, சேரி, தோட்டம், பிள்ளை என அன்னும் அக்கும் வந்தன. இவற்றிற்கு உடைமை விரிக்க. பார்ப்பினுட்குழவி என்று மாம். பார்ப்பானாகியகுழவி என்றால் 11ஈண்டு முடியாதென்று உணர்க. பார்ப்பன மகன், பார்ப்பன வனிதை என்பனவும் 12பார்ப் பான் சாதி உணர்த்தின. (13) 419. எண்ணுப்பெயர்க் கிளவி யுருபிய னிலையும். இது, குற்றுகர ஈற்று எண்ணுப்பெயரோடு பொருட்பெயர் முடிக்கின்றது. இதன் பொருள்: எண்ணுப் பெயர்க் கிளவி - எண்ணுப் பெயராகிய சொற்கள் பொருட்பெயரோடு புணருமிடத்து, உருபியல் நிலையும் - உருபு புணர்ச்சியின் இயல்பின்கண்ணே நின்று அன்பெற்றுப் புணரும் என்றவாறு. உதாரணம்: ஒன்றன்காயம், இரண்டன்காயம், சுக்கு, தோரை பயறு என ஒட்டுக. 13ஒன்றனாற்கொண்ட காய மென விரியும். வருமொழி வரையாது கூறினமையின், இயல்பு கணத்துக் கண்ணுங் கொள்க. ஒன்றன்ஞாண்; நூல் மணி யாழ் வட்டு அடை என வரும். மேலைச் சூத்திரத்து நிலை (எழு. 418) என்றதனான், இயைபு வல்லெழுத்து வீழ்க்க.(14) 420. வண்டும் பெண்டு மின்னொடு சிவணும். இது, மென்றொடர் மொழியுட் சிலவற்றிற்குப் பிற முடிபு கூறுகின்றது. இதன் பொருள்: வண்டும் பெண்டும் இன்னொடு சிவணும் - வண் டென்னுஞ் சொல்லும் பெண்டென்னுஞ் சொல்லும் இன் சாரியையோடு பொருந்திமுடியு«என்றவாறு. உதாரணம்: வண்டின்கால் பெண்டின்கால் என வரும். இதற்கு முற் கூறிய நிலை என்ற இலேசினால் வல்லெழுத்து வீழ்க்க. (15) 421. பெண்டென் கிளவிக் கன்னும் வரையார். இது, மேற்கூறியவற்றுள் ஒன்றற்கு எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுகின்றது. இதன் பொருள்: பெண்டு என் கிளவிக்கு அன்னும் வரையார் - பெண்டென்னுஞ் சொற்கு இன்னேயன்றி அன்சாரியை வருதலையும் நீக்கார் ஆசிரியர் என்றவாறு. உதாரணம்: பெண்டன்கை, செவி தலை புறம் என வரும். (16) 422. யாதெ னிறுதியுஞ் சுட்டுமுத லாகிய வாய்த விறுதியு முருபிய னிலையும். இஃது - ஈரெழுத்தொருமொழிக் குற்றியலுகரத்துள் ஒன் றற்கும், சுட்டு முதலாகிய ஆய்தத் தொடர்மொழிக் குற்றியலுகரத் திற்கும் வேறுமுடிபு கூறுகின்றது. இதன் பொருள்: யாது என் இறுதியுஞ் சுட்டு முதலாகிய ஆய்த இறுதி யும் - யாதென்னும் ஈறுஞ் சுட்டெழுத்து முதலாகிய ஆய்தத்தொடர் மொழிக்குற்றியலுகர ஈறும் ,உருபியல் நிலையும் –உருபு புணர்ச்சியின் இயல்பின்கண்ண நின்று அன்பெற்றுச் சுட்டுமுதலிறுதி ஆய்தங்கெட்டு முடியும் என்றவாறு. உதாரணம்: யாதன்கோடு, அதன்கோடு, இதன்கோடு, உதன் கோடு; செவி, தலை, புறம் என வரும். ஆய்தங்கெடா முன்னே அன்னின் அகரத்தைக் குற்றுகரத்தின் மேல் ஏற்றுக; ஆய்தங்கெட்டால் அது முற்றுகரமாய் நிற்றலின். (17) 423. முன்னுயிர் வருமிடத் தாய்தப் புள்ளி மன்னல் வேண்டு மல்வழி யான. இது, முற்கூறியவற்றுட் சுட்டு முதலாகிய ஆய்த இறுதிக்கு ஒருவழி அல்வழி முடிபு கூறுகின்றது. இதன் பொருள்: முன்னுயிர் வருமிடத்து - சுட்டு முதலாகிய ஆய்தத் தொடர் மொழிக் குற்றுகர ஈற்றின்முன்னே உயிர்முதன்மொழி வருமிடத்து, ஆய்தப் புள்ளி மன்னல் வேண்டும் - ஆய்தவொற்று முன்போலக் கெடாது நிலை பெற்று முடிதலை விரும்பும் ஆசிரியன், அல்வழியான - அல்வழிக்கண் என்றவாறு. உதாரணம்: அஃது, இஃது, உஃது என நிறுத்தி; அடை ஆடை இலை ஈயம் உரல் ஊர்தி எழு ஏணி ஐயம் ஒடுக்கம் ஓக்கம் ஔவியம் என ஒட்டுக. முன்னென்றதனான் வேற்றுமைக்கண்ணும் இவ்விதி கொள்க. 14அஃதடைவு, அஃதொட்டம் என ஒட்டுக. இவற்றிற்கு இரண்டா முருபு விரிக்க. இன்னும் இதனானே, ஏனை இலக்கணம் முடியுமாறு அறிந்து முடிக்க. (18) 424. ஏனைமுன் வரினே தானிலை யின்றே. இது, மேலவற்றிற்குப் பிறகணத்தோடு அல்வழி முடிபு கூறுகின்றது. இதன் பொருள்: ஏனை முன்வரின் - முற்கூறிய ஈறுகளின் முன்னர் உயிர்க்கண மல்லன வருமாயின், தான் நிலையின்று - அவ்வாய்தங் கெட்டு முடியும் எ-று. உதாரணம்: அதுகடிது இதுகடிது உதுகடிது; சிறிது, தீது பெரிது ஞான்றது நீண்டதுமாண்டJயாதுவÈதுvனஒட்டுf. (19) 425. அல்லது கிளப்பி னெல்லா மொழியுஞ் சொல்லிய பண்பி னியற்கை யாகும். இஃது ஆறு ஈற்றுக்குற்றுகரத்திற்கும் அல்வழி முடிபு கூறுகின்றது. இதன் பொருள்: அல்லது கிளப்பின் - அல்வழியைச் சொல்லுமிடத்து, எல்லா மொழியும் - ஆறு ஈற்றுக் குற்றுகரமும், சொல்லிய பண்பின் இயற்கையாகும் - மேல் ஆசிரியன் கூறிய குணத்தையுடைய இயல்பாய் முடியும் என்றவாறு. உதாரணம்: நாகுகடிது, வரகுகடிது, தெள்குகடிது, எஃகுகடிது, குரங்கு கடிது; சிறிது, தீது, பெரிது என வரும். ஏனைக் கணத்துக் கண் நின்ற சொன்மு னியல் பாகும் (எழுத். 144) என்றதனாற் கொள்க. எல்லாமொழியும் என்றதனான், வினைச்சொல்லும் வினைக் குறிப்புச் சொல்லும் இயல்பாய் முடிதல் கொள்க. கிடந்தது குதிரை, கரிது குதிரை என வரும். சொல்லிய என்றதனான், இருபெயரொட்டுப் பண்புத் தொகை வன்கணத்துக்கண் இனவொற்றுமிக்கு வல்லெழுத்துப் பெற்று முடிதலும், இயல்புகணத்துக்கண் இனவொற்று மிக்கு முடிதலும் கொள்க. கரட்டுக்காணம், குருட்டுக்கோழி, திருட்டுப் புலையன், களிற்றுப்பன்றி, வெளிற்றுப்பனை, எயிற்றுப்பல் எனவும்; வரட்டாடு, குருட்டெருது எனவும் வரும். பண்பினென்றதனான், மெல்லொற்று வல்லொற்றாய் ஐகாரம் பெற்று முடிவனவும், மெல்லொற்று வல்லொற்றாய் ஐகாரமும் வல்லெழுத்தும் பெற்று முடிவனவும், மெல்லொற்று வல்லொற்றாகாது ஐகாரமும் வல்லெழுத்தும் பெற்று முடிவனவும் கொள்க.. ஓர் யாட்டை யானை, ஐயாட்டை யெருது எனவும்; அற்றைக் கூத்தர், இற்றைக்கூத்தர் எனவும்; மன்றைத் தூதை மன்றைப் பானை, பண்டைச் சான்றார் எனவும் வரும். (20) 426. வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து மிகுமே. இஃது அவ்வாறு ஈற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது. இதன் பொருள்: வல்லொற்றுத் தொடர் மொழி வல்லெழுத்து மிகும் - வல்லொற்றுத் தொடர்மொழிக் குற்றுகர ஈறு வல்லெழுத்து வருவழி வல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு. உதாரணம்: கொக்குக்கடிது, பாக்குக்கடிது, பட்டுக்கடிது; சிறிது, தீது, பெரிது என வரும். (21) 427. சுட்டுச்சுனை நீடிய மென்றொடர் மொழியும் யாவினா முதலிய மென்றொடர் மொழியு மாயிய றிரியா வல்லெழுத் தியற்கை. இஃது - அவ் ஆறு ஈற்றுள் ஒன்றன்கண் ஏழாம் வேற்றுமை இடப் பொருள் உணர நின்ற இடைச்சொற்கு முடிபு கூறுகின்றது. இதன் பொருள்: சுட்டுச் சினை நீடிய மென்றொடர் மொழியும் - சுட்டாகிய சினையெழுத்து நீண்ட மென்றொடர்க் குற்றுகர ஈறும், யாவினா முதலிய மென்றொடர் மொழியும் - யாவென்னும் வினா முதலாகிய மென்றொடர் மொழிக் குற்றுகர ஈறும், வல்லெழுத்தி யற்கை ஆ இயல் திரியா - வல்லெழுத்துப் பெற்று முடியுந் தன்மை யாகிய அவ்வியல்பின் திரியாது முடியும் என்றவாறு. உதாரணம்: ஆங்குக்கொண்டான், ஈங்குக்கொண்டான், ஊங்குக் கொண்டான், யாங்குக்கொண்டான்; சென்றான், தந்தான், போயினான் என வரும். இயற்கை யென்றதனான், மென்றொடர்மொழிக் குற்றியலுகர ஈற்று வினையெச்சம் இயல்பாயும், வன்றொடர் மொழிக் குற்றியலுகர ஈற்று வினையெச்சம் மிக்கும் முடிவன கொள்க. இருந்துகொண்டான், ஆண்டுசென்றான், தந்து தீர்ந்தான், வந்துபோயினான் எனவும்; செத்துக் கிடந்தான், செற்றுச் செய்தான், உய்த்துக் கொண்டான், நட்டுப் போனான் எனவும் வரும். (22) 428. யாவினா மொழியே யியல்பு மாகும். இது, மேலனவற்றுள் ஒன்றற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது, வல்லெழுத்துப் பெறுதலே அன்றி இயல்பா மென்றலின். இதன் பொருள்: யாவினா மொழியே இயல்புமாகும் - அவற்றுள் யாவென்னும் வினாவையுடைய சொல் முற்கூறிய வாறன்றி இயல் பாயும் முடியும் என்றவாறு. உதாரணம்:யாங்குகொண்டான்,சென்றான்,தந்தான்,போயினான் எனவரும். இஃது எப்படியென்னும் வினாப் பொருளை உணர்த்திற்று. உம்மையான் மிக்குமுடிதலவலியுடைத்து. ஏகாரம் பிரிநிலை. (23) 429. அந்நான் மொழியுந் தந்நிலை திரியா. இது, மேலனவற்றிற்கு நிலைமொழிச் செய்கை கூறுகின்றது. இதன் பொருள்: அந்நான்மொழியும் - சுட்டுமுதன் மூன்றும் யாமுதன் மொழியுமாகிய அந்நான்கு மொழியும், தம் நிலை திரியா - தம் மெல்லொற்றாய தன்மை திரிந்து வல்லொற்றாகாது முடியும் என்றவாறு. உதாரணம்: முற்காட்டியவே. தந்நிலை யென்றதனான், மெல்லொற்றுத் திரியாது வல்லெ ழுத்து மிக்கு முடிவன பிறவுங் கொள்க. அங்குக்கொண்டான், இங்குக் கொண்டான், உங்குக் கொண் டான், எங்குக்கொண்டான்; சென்றான், தந்தான், போயினான் என வரும். இனிமுன்ன®யாமொÊயென்னாJவினhவென்றjனான்,ஏழாவத‹கால¥பொருட்டாகிaபிறவு«இயல்பாŒமுடிவdகொள்க. முந்து கொண்டான், பண்டு கொண்டான், இன்று கொண்டான், அன்று கொண்டான், என்று கொண் டான் என வரும். (24) 430. உண்டென் கிளவி யுண்மை செப்பின் முந்தை யிறுதி மெய்யொடுங் கெடுதலு மேனிலை யொற்றே ளகார மாதலு மாமுwயிரண்Lமுரிமைíமுடைத்j வல்லெழுத்து வரூஉங் காலையான. இது, மென்றொடர் மொழியுள் வினைக்குறிப்பாய் நின்ற தோர் சொற்பண்பை உணர்த்துங்கால் வேறுமுடிபு பெறுதல் கூறு கின்றது. இதன் பொருள்: உண்டென் கிளவி உண்மைசெப்பின்- உண்டென்னுஞ் சொல்வினைக்குறிப்பை யுணர்த்தாது ஒருbபாருள் தோன்றுங்கால் தோன்றி அதுகெடுந்துணையும் உண்டாய் நிற்கின்றதன்மையாகிய பண்பை உணர்த்தி நிற்குமாயின், முந்தை இறுதி மெய்யொடுங் கெகடுதலும்- முன்னர்நின்ற குற்றுகரம் தன் ஏறிநின்றbமய்யொடுங் கெகடுதலும், மேனிலை ஒற்றேளகாரமதலும்- அதற்கு nமல்நின்றணகார ஒற்றுளகார ஒற்றாதலுமகிய, ஆ முறை இரண்டும்உரிமையும் உடைத்து-அம்முறையினையுடைய இரண்டுநிலையும் உரித்து; அஃது உரித்தன்றி முன்னர் நின்றநிலையிலே கேடுந்திரிபும் இன்றி நிற்றலும் உடைத்து, வல்லெழுத்து வரூஉங்கலையான- வல்லெழுத்து முதன் மொழியாய் வருங்காலத்து என்றவாறு. வல்லெழுத்து அதிகாரத்தால் வாரா நிற்ப வல்லெழுத்து வரூஉங் காலை என்றதனான், அவ்விருமுடிபும் உளது பண்பை யுணர்த்தும் பகரம் வருமொழிக்கண்ணே யென்பதூஉம், ஏனைக் கசதக்களிலும் இயல்புகணத்திலும் உண்டென நின்று வினைக் குறிப்பாயுஞ் சிறுபான்மை பண்பாயும் நிற்குமென்பதூஉங் கொள்க. உதாரணம்: உள்பொருள், உண்டுபொருள் என வரும். இது பொருளைச் சுட்டாது உண்மைத் தன்மைப் பண்பை ஈண்டு உணர்த்திற்று. இனி, உண்டுகாணம், உண்டு சாக்காடு, உண்டு தாமரை, உண்டுஞானம்; நூல், மணி, யாழ், வட்டு, அடை, ஆடை என வருவனவெல்லாங் கேடுந் திரிபுமின்றி வினைக்குறிப்பாயுஞ் சிறுபான்மை பண்பாயும் நின்றன. இவற்றின் வேறுபாடு வினை யியலுள் வினைக்குறிப்பு ஓதும்வழி உணர்க. உள் பொருளென்பது பண்புத்தொகை முடிபன்றோ வெனின், அஃது, ஓசை ஒற்றுமைபடச் சொல்லும் வழியது போலும். இஃது ஓசை இடையறவுபடச் சொல்லும் வழியதென்க. (25) 431. இருதிசை புணரி னேயிடை வருமே. இது, குற்றுகர ஈற்றுத் திசைப்பெயர்க்கு அல்வழி முடிபு கூறுகின்றது. இதன் பொருள்: இரு திசை புணரின் - இரண்டு பெருந்திசையுந் தம்மிற் புணரின், ஏ இடை வரும் - ஏயென்னுஞ் சாரியை இடை நின்று புணரும் என்றவாறு. உதாரணம்: தெற்கேவடக்கு, வடக்கேதெற்கு இவை உம்மைத் தொகை. (26) 432. திரிபுவேறு கிளப்பி னொற்று முகரமுங் கெடுதல் வேண்டு மென்மனார் புலவ ரொற்றுமெய் திரிந்து னகார மாகும் தெற்கொடு புணருங் காலை யான. இது, பெருந்திசைகளொடு கோணத்திசைகளைப் புணர்த் தலின், எய்தாத தெய்துவித்தது. இதன் பொருள்:திரிபு வேறு கிளப்பின் - அப்பெருந் திசைகளோடு கோணத் திசைகளை வேறாகப் புணர்க்கு மிடத்து, ஒற்றும் உகரமுங் கெடுதல் வேண்டும் என்மனார் புலவர் - அவ்வுகரம் ஏறி நின்ற ஒற்றும் அவ்வீற்று உகரமுங் கெட்டுமுடிதல் வேண்டுமென்று சொல்லுவர் புலவர், தெற்கொடு புணருங் காலை - அவை தெற் கென்னுந் திசையொடு புணருங்காலத்து, ஆன ஒற்று மெய் திரிந்து னகாரமாகும் - அத்திசைக்குப் பொருந்தி நின்ற றகார ஒற்றுத் தன் வடிவுதிரிந்து னகர ஒற்றாய் நிற்கும் என்றவாறு. திரிந்தென்றதனான், வடக்கு என்பதன்கண் நின்ற ககர ஒற்றுக் கெடுத்து முடித்துக் கொள்க. உதாரணம்: வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு என வரும். வேறென்றதனால், âir¥bgயரோடுபொUட்பெய®வரினும் இம்முடிபு கொள்க,. வடகடல், வடசுரம், வடவேங்கடம், தென்குமரி தென்சுரம், தென்னிலங்கை என வரும். மெய்யென்றதனான், உயிர் கெட்டுந் திரிந்தும் மெய் கெட்டும் முடிவனவும் உள, திசைப்பெயர் முன்னர்ப் பொருட்பெயர் வந்துழி யென்று உணர்க. கிழக்கு என்பது, கரை கூரை என்பவற்றோடு புணருமிடத்துக் கீழ்கரை கீழ்கூரை என நிலைமொழியிறுதி உகரம் மெய்யொடுங் கெட்டு அதன்மேல் நின்ற ககர ஒற்றும் ழகரத்தின் அகரமுங்கெட்டு முதலெழுத்து நீண்டு முடிந்தன. மேற்குகரை, கூரை, மீகரை மீகூரை என நிலைமொழி ஈற்று உகரம் மெய் யொடுங் கெட்டு அதன்மேல் நின்ற றகர ஒற்றுங் கெட்டு ஏகாரம் ஈகாரமாகி முடிந்தன. இன்னும் இதனானே. மேன்மாடு மேல்பால் மேலைச்சேரி என்றாற் போல்வனவுஞ் செய்கையறிந்து முடிக்க. (27) 433. ஒன்றுமுத லாக வெட்ட னிறுதி யெல்லா வெண்ணும் பத்தன் முன்வரிற் குற்றிய லுகர மெய்யொடுங் கெடுமே முற்ற வின்வரூஉ மிரண்டலங் கடையே. இது, நிறுத்தமுறையானே ஆறு ஈற்றுக் குற்றுகரமும் பொருட் பெயர்க்கண் புணருமாறு உணர்த்தி, இனி அவ்வீற்று எண்ணுப் பெயர் முடிக்கின்றார். இஃது அவற்றுட் பத்தென்னும் எண்ணுப் பெயரோடு எண்ணுப்பெயர் வந்து புணருமாறு கூறுகின்றது. இதன் பொருள்: ஒன்று முதலாக எட்டன் இறுதி எல்லா எண்ணும் - ஒன்றென்னும் எண் முதலாக எட்டென்னும் எண்ணீறாயுள்ள எல்லா எண்ணுப் பெயர்களும், பத்தன்முன் வரின் - பத்தென்னும் எண்ணுப் பெயரின் முன்வரின், குற்றியலுகரம் மெய்யொடுங் கெடும் - அப்பத் தென்னுஞ் சொல்லிற் குற்றியலுகரந் தான் ஏறி நின்ற மெய்யொடுங் கெடும், இரண்டலங்கடை முற்ற இன்வரூஉம் - ஆண்டு இரண்டல்லாத எண்ணுப் பெயர்களிடத்து முடிய இன் சாரியை இடைவந்து புணரும்என்றவாறு. உதாரணம்: பதினொன்று, பதின்மூன்று, பதினான்கு, பதினைந்து, பதினாறு, பதினேழு, பதினெட்டு என வரும். நிலைமொழி முற்கூறாததனாற், பிறவெண்ணின் முன்னர்ப் பிற பெயர் வந்துழியும் இன்பெறுதல் கொள்க. ஒன்பதின்கூறு, ஒன்பதின்பால் என வரும். முற்ற வென்பதனாற், பதினான் கென்புழி வந்த இன்னின் னகரம் வருமொழிக்கட் கருவிசெய்து கெடுத்து முடிக்க. (28) 434. பத்த னொற்றுக்கெட னகார மிரட்ட லொத்த தென்ப விரண்டுவரு காலை. இது, மேல் இன் பெறாதென்று விலக்கிய இரண்டற்குப் பிறிது விதி கூறுகின்றது. இதன் பொருள்: பத்தன் ஒற்றுக் கெட னகாரம் இரட்டல் - பத்தென் னுஞ் சொல்லின் நின்ற தகர ஒற்றுக்கெட னகர ஒற்று இரட்டித்து வருதல், இரண்டு வருகாலை ஒத்ததென்ப - இரண்டென்னும் எண் வருங்காலத்திற் பொருந்திற் றென்பர் ஆசிரியர் என்றவாறு. உதாரணம்: பன்னிரண்டு என வரும். குற்றிய லுகர மெய்யொடுங் கெடும் (எழு. 433) என்ற விதி இதற்கும் மேலனவற்றிற்குங் கொள்க. (29) 435. ஆயிரம் வரினு மாயிய றிரியாது. இஃது ஆயிரமென்னும் எண்ணுப்பெயர் வரின் வரும் முடிபு கூறுகின்றது. இதன் பொருள்: ஆயிரம் வரினும் ஆயியல் திரியாது - முற்கூறிய பத்தன் முன்னர் ஒன்று முதலியனவேயன்றி ஆயிர மென்னு மெண் வந்தாலும் ஈறுகெட்டு இன்பெற்று முடியும் இயல்பில் திரியாது என்றவாறு. உதாரணம்: பதினாயிரம் என வரும். உம்மை இறந்தது தழீஇயிற்று. (30) 436. நிறையு மளவும் வரூஉங் காலையுங் குறையா தாகு மின்னென் சாரியை. இஃது எண்ணுப்பெயரோடு நிறைப்பெயரும் அளவுப் பெயரும் புணர்கின்ற புணர்ச்சி கூறுகின்றது. இதன் பொருள்: நிறையும் அளவும் வரூஉங் காலையும் - முற்கூறிய பத்தென் பதன் முன்னர் நிறைப்பெயரும் அளவுப் பெயரும் வருங் காலத்தும், இன்னென் சாரியை குறையாதாகும் - அவ்வின்னென் னுஞ் சாரியை குறையாது வந்து முடியும் என்றவாறு. உதாரணம்: பதின்கழஞ்சு; தொடி, பலம் எனவும்; பதின்கலம்; சாடி, தூதை, பானை, நாழி, மண்டை, வட்டி எனவும்; பதிற்றகல், பதிற்றுழக்கு எனவும் வரும். குறையாதாகு மென்பதனாற், பொருட்பெயரும் எண்ணுப் பெயரும் நிறைப்பெயரும் வந்துழியும் இன் கொடுத்து வேண்டுஞ் செய்கை செய்து முடிக்க. பதிற்று வேலி, யாண்டு, அடுக்கு, முழம் எனவும், பதின் திங்கள் எனவும், பதிற்றுத்தொடி எனவும் வரும். பதிற் றொன்று என்பதுபோல இரண்டுமுதற் பத்தளவும் ஒட்டுக. இவ்வீற்றின் னகரம் றகரமாதல் 15அளவாகுமொழிமுதல் (எழு. 121) என்பதனுள் நிலைஇய என்றதனால் முடிக்க, இவற்றிற்கு ஒற்றிரட்டுதலும் உகரம் வருதலும் வல்லெழுத்துப் பெறுதலும் ஒன்று முதலாக (எழு. 433) என்பதனுள் முற்ற என்றதனாற் கொள்க. (31) 437. ஒன்றுமுத லொன்பா னிறுதி முன்னர் நின்ற பத்த னொற்றுக்கெட வாய்தம் வந்திடை நிலையு மியற்கைத் தென்ப கூறிய வியற்கை குற்றிய லுகர மாற னிறுதி யல்வழி யான. இஃது எண்ணுப்பெயரோடு பத்தென்னும் எண்ணுப் பெயர்க்கு முடிபு கூறுகின்றது. இதன் பொருள்: ஒன்றுமுதல் ஒன்பான் இறுதிமுன்னர் - ஒன்று முதல் ஒன்பது ஈறாகக் கூறுகின்ற எண்ணுப் பெயர்களின் முன்னர், நின்ற பத்தன் ஒற்றுக்கெட - வருமொழியாக வந்துநின்ற பத்தென்னுஞ் சொல்லினது தகர ஒற்றுக்கெட, ஆய்தம் வந்து இlநிலையும் இயற்கைத்தென்g –ஆய்தமானது வந்து இடைய நிலைபெறும் இயல்யையுடைத்தென்று கூறுவர் ஆசிரியர், ஆறன் இறுதி அல்வழியான –அவற்றுள் ஆறென்னும் ஈறல்லாத விடத்து, குற்றியலுகரம் கூறியஇயற்க் –குற்றியலுகரம் முற்கூறிய இயற்கையாய்மெய்யொடுங்கெட்டு முடியும் என்றவாறு. இங்ஙனம் வருமாறு மேற்சூத்திரங்களுட் காட்டுதும். வந்தென்றதனால், ஆய்தமாகத் திரியாது தகர ஒற்றுக் கெட்டு ஒருபது என்று நிற்றலுங் கொள்க. (32) 438. முதலீ ரெண்ணினொற்று ரகர மாகு முகரம் வருத லாவயி னான. இது, மேற்கூறியவற்றின் சிலவற்றிற்கு நிலைமொழிச் செய்கை கூறுகின்றது. இதன் பொருள்: முதலீ ரெண்ணி னொற்று ரகரம் ஆகும் - அவற்றின் முதற்கண் நின்ற இரண்டெண்ணினுடைய னகர ஒற்றும் ணகர ஒற்றும் ரகர ஒற்றாகத் திரிந்து நிற்கும், ஆவயினான உகரம் வருதல் - அவ்விடத்து உகரம் வருக என்றவாறு. உதாரணம்: ஒருபஃது என வரும். ஒன்றென்பதன் ஈற்றுக் குற்றுகரம் மெய்யொடுங் கெடுத்து, னகர ஒற்றினை ரகர ஒற்றாக்கி, உகரமேற்றி, ஒருவென நிறுத்தி, நின்ற பத்தென்பதன் தகர ஒற்றுக் கெடுத்து, ஆய்தமாக்கிப், பஃதென வருவித்து, ஒருபஃது என முடிக்க. மேல் வருவன வற்றிற்குஞ் சூத்திரங்களாற் கூறுஞ் சிறப்புவிதி ஒழிந்த வற்றிற்கு இதுவே முடிபாகக் கொள்க. (33) 439. இடைநிலை ரகர மிரண்டெ னெண்ணிற்கு நடைமரு§கின்wபொருள்வÆனான. இதுவும் அது. இதன் பொருள்: இரண்டெ னெண்ணிற்கு இடைநிலை ரகரம் - இரண்டென்னு மெண்ணிற்கு இடைநின்ற ரகரம், பொருள் வயினான - அம்மொழி பொருள்பெறும் இடத்து, நடைமருங் கின்று - நடக்கும் இடமின்றிக் கெடும் என்றவாறு. உதாரணம்: இருபஃது என வரும். இதற்கு ரகர வுயிர்மெய் இதனாற்கெடுத்து ஏனைய கூறிய வாறே கூட்டி முடிக்க. பொருளெனவே, எண்ணல்லாப் பெயருங் கொள்க. இருகடல், இருவினை, இருபிறப்பு என வரும். (34) 440. மூன்று மாறு நெடுமுதல் குறுகும். இதுவும் அது. இதன் பொருள்: மூன்றும் ஆறும் நெடுமுதல் குறுகும் - மூன்றென்னு மெண்ணும் ஆறென்னு மெண்ணும் நெடுமுதல் குறுகி முடியும் என்றவாறு. அறு எனக் குறுக்கிப் பஃது என வருவித்து, அறுபஃது என முடிக்க. (35) 441. மூன்ற னொற்றே பகார மாகும். இதுவும் அது. இதன் பொருள்: மூன்றன் ஒற்றே பகாரமாகும் - மூன்றென்னும் எண்ணின்கண் நின்ற னகர ஒற்றுப் பகர ஒற்றாய் முடியும் என்றவாறு. உதாரணம் முப்பஃது என வரும். (36) 442. நான்க னொற்றே றகார மாகும். இதுவும் அது. இதன் பொருள்: நான்கன் ஒற்றே றகாரமாகும் - நான்கென்னும் எண்ணின்கண் நின்ற னகர ஒற்று றகர ஒற்றாய் முடியும் என்றவாறு. உதாரணம்: நாற்பஃது என வரும். (37) 443. ஐந்த னொற்றே மகார மாகும். இதுவும் அது. இதன்பொருள்:ஐந்தனொற்wமகாரமாகும் -ஐந்தென்னு மெண்ணின் கண் நின்றநகர ஒற்று மகர ஒற்றாய் முடியும் என்றவாறு. உதாரணம்: ஐம்பஃது என வரும். ஏழு குற்றியலுகர ஈறன்மை உருபியலுட்காண்க. (38) 444. எட்ட னொற்றே ணகார மாகும். இதுவும் அது. இதன் பொருள்: எட்ட னொற்றே ணகாரமாகும் - எட்டென்னு மெண்ணின்கண் நின்ற டகர ஒற்று ணகர ஒற்றாய் முடியும் என்றவாறு. உதாரணம்: எண்பஃது என வரும். (39) 445. ஒன்பா னொகரமிசைத் தகர மொற்று முந்தை யொற்றே ணகார மிரட்டும் பஃதென் கிளவி யாய்தபக ரங்கெட நிற்றல் வேண்டு முகாரக் கிளவி யொற்றிய தகரம் றகர மாகும். இஃது - எய்தாத தெய்துவித்தது. இதன் பொருள்:ஒன்பான் ஒகரமிசைத் தகரம் ஒற்றும் - ஒன்பது என நிறுத்திப் பஃது என வருவித்து முடிக்குங்கால், நிலைமொழி யாகிய ஒன்பதென்னும் எண்ணினது ஒகரத்திற்கு முன்னாக ஒரு தகர ஒற்றுத் தோன்றி நிற்கும், முந்தைஒற்wணகார«இரட்டு« -மு‹சொன்dஒகரத்திற்Fமுன்ன®நின்wனகuஒற்Wணகuஒற்றாŒஇரட்டித்Jநிற்கும்,பஃதெ‹கிளÉஆய்jபகரங்கெl -வருமொÊயாகிaபஃதென்னுŠசொšதன்க©ஆய்தமு«பகரமு§கெட்டு¥போக,ஊகார¡கிளÉநிற்றšவேண்டு« -நிyமொழியி‹இரட்டிaணகரத்தி‹பின்ன®ஊகாரமாகிaஎழுத்Jவந்Jநிற்றyஆசிரிய‹விரும்பும்,ஒற்றிaதகர«றகuமாகும் -வருமெhழியா»யபத்தென்பjன்ஈற்றின்மேலே¿யஉகuங்கெடhதுபிரிந்துநி‰பஒற்றhய்நி‹றதகuம்றfரஒற்றhய்நிற்Fம்என்றவாW. உதாரணம்: தொண்ணூறு என வரும். இதனை ஒற்றாய் வந்து நின்ற தகர ஒற்றின்மேல் நிலைமொழி ஒகரத்தை ஏற்றித் தொவ்வாக்கி, ணகர ஒற்று இரட்டி அதன்மேல் வருமொழிக்கட் பகரமும் ஆய்தமுங்கெட வந்த ஊகார மேற்றித் தொண்ணூ றாக்கிப், பகரவாய்தம் என்னாத முறையன்றிக் கூற்றி னான், நிலைமொழிக் கட் பகரமும் ஆய்தமுங் கெடுத்துக், குற்றிய லுகரம் மெய்யொடுங் கெடுத்து, வருமொழி இறுதித் தகர ஒற்றுத் திரிந்து நின்ற றகர ஒற்றின்மேல் நின்ற உகரமேற்றித் தொண்ணூ றென முடிக்க. (40) 446. அளந்தறி கிளவியு நிறையின் கிளவியுங் கிளந்த வியல தோன்றுங் காலை. இது, மேற்கூறிய ஒன்றுமுதல் ஒன்பானெண்களோடு அளவுப் பெயரும் நிறைப்பெயரும் முடியுமாறு கூறுகின்றது. இதன் பொருள்: அளந்தறி கிளவியும் நிறையின் கிளவியுந் தோன்றுங் காலை - முற்கூறிய ஒன்றுமுதல் ஒன்பான்களின் முன்னர் அளந்தறியப்படும் அளவுப் பெயரும் நிறைப்பெயரும் வந்துதோன்று§காலத்து,கிளந்jஇயல-ஆற‹ஈWஅல்வழி¡குற்றுகர«மெŒயொடு§கெட்டு,முதலீரெண்ணினொற்WரகாரமாŒஉகர«வந்து,இடைநிyரகuமிரண்டிற்கு¡கெட்Lமூன்று«ஆறு«நெLமுதšகுறுகி,நான்கனொற்Wவன்கணத்Jறகரமாய்,எட்ட©ஒற்WணகரமாŒமுடியு«என்றவாறு. உதாரணம்: ஒருகலம், இருகலம்; சாடி, தூதை, பானை, நாழி, மண்டை, வட்டி எனவும்; ஒருகழஞ்சு, இருகழஞ்சு, கஃசு, தொடி, பலம் எனவும் வரும். அகல் உழக்கு என்பன முன்னர் முடித்தும். இவை முதலீரெண்ணின் செய்கை. தோன்றுங் காலை யென்றதனான், இவ்வெண்ணின் முன்னர் எடுத்தோத்தானும் இலேசானும் முடியாது நின்ற எண்ணுப் பெயர்க ளெல்லாம் இவ்விதியும் பிறவிதியும் எய்துவித்து முடித்துக் கொள்க. ஒரு மூன்று ஒருநான்கு, இருமூன்று இருநான்கு, ஒருகால் இருகால், ஒரு முந்திரிகை இருமுந்திரிகை, ஒருமுக்கால் இரு முக்கால் என்பன பிறவுங் கொணர்ந்து ஒட்டுக. இனிப் பிறவிதி எய்துவன: ஓரொன்று, ஓரிரண்டு, ஓரைந்து, ஓராறு, ஓரேழு, ஓரெட்டு, ஓரொன்பது எனவும்; ஈரொன்று, ஈரிரண்டு, ஈரைந்து, ஈராறு, ஈரேழு, ஈரெட்டு, ஈரொன்பது எனவும்; மூவொன்று, மூவிரண்டு, மூவைந்து, மூவாறு, மூவேழு, மூவெட்டு, மூவொன்பது எனவும்; 16முதலீ ரெண்ணின்முன் உயிர் (எழு. 455) என்னுஞ் சூத்திரத்தான் உயிர்க்கு எய்திய பிறவிதியும், மூன்றன் முதனிலை நீடலு முரித்து (எழு. 457) என்ற பிறவிதியும் பெற்றுப், பிறசெய்கைகளும் பெற்று முடிந்தன. நாலொன்று, நாலிரண்டு, நாலைந்து, நாலாறு, நாலேழு, நாலெட்டு, நாலொன்பது என்பன நான்க னொற்றே லகார மாகும் (எழு. 453) என்ற விதிபெற்று முடிந்தன. பிறவும் இவ்வாறேயன்றி அளவும் நிறையுமன்றி வருவனவெல்லாம் இவ்விலேசான் முடிக்க. (41) 447. மூன்ற னொற்றே வந்த தொக்கும். இது,மேšமாட்டேற்றோLஒவ்வாததற்FவேWமுடிòகூறுகின்றது. இதன் பொருள்: மூன்றனொற்றே வந்ததொக்கும் - மூன்றா மெண்ணின்க ணின்ற னகர ஒற்று வருமொழியாய் வந்த அளவுப் பெயர் நிறைப்பெயர்களின் முன்னர் வந்த வல்லொற்றோடு ஒத்த ஒற்றாய்த் திரிந்து முடியும் என்றவாறு. உதாரணம்: முக்கலம்; சாடி, தூதை, பானை எனவும்; முக் கழஞ்சு; கஃசு, தொடி, பலம் எனவும் வரும். நான்க னொற்றே றகார மாகும் (எழு. 442) என்ற முன்னை மாட்டேறு நிற்றலின், நாற்கலம்; சாடி, தூதை, பானை எனவும்; நாற் கழஞ்சு; தொடி, பலம், எனவும் வரும். (42) 448. ஐந்த னொற்றே மெல்லெழுத் தாகும். இதுவும் அது. இதன் பொருள்: ஐந்தனொற்றே மெல்லெழுத்தாகும் - ஐந்தாவதன் கண் நின்ற நகர ஒற்று வருமொழி வல்லெழுத்துக்கு ஏற்ற மெல்லெழுத்தாகத் திரிந்து முடியும் என்றவாறு. உதாரணம்: ஐங்கலம்; சாடி, தூதை, பானை எனவும்; ஐங்கழஞ்சு; தொடி; பலம் எனவும் வரும். ஏகாரம் ஈற்றசை. (43) 449. கசதப முதன் மொழி வரூஉங் காலை. இது முற்கூறிய மூன்றற்கும் ஐந்தற்கும் வருமொழி வரையறுக் கின்றது. இதன் பொருள்: கசதப முதன்மொழி வரூஉங் காலை - மூன்றனொற்று வந்ததொப்பதூஉம் ஐந்தனொற்று மெல்லெழுத் தாவதூஉம் அவ்வளவுப் பெயர் நிறைப்பெயர் ஒன்பதினும் வன்கணமாகிய கசதபக்கள் முதன்மொழி யாய் வந்த இடத்து என்றவாறு. அது முன்னர்க் காட்டினாம். ஆறு நெடுமுதல் குறுகும் (எழு. 440) என்ற மாட்டேற் றானே ஆறு நெடுமுதல் குறுகி நின்றது. உதாரணம்: அறுகலம்; சாடி, தூதை, பானை, நாழி, மண்டை, வட்டி எனவும்; அறுகழஞ்சு; தொடி, பலம் எனவும் வரும். அகல் உழக்கு என்பன மேற் காட்டுதும். குற்றுகர ஈறன்மையின் மாட்டேறு ஏலாதாயிற்று. (44) 450. நமவ வென்னு மூன்றொடு சிவணி யகரம் வரினு மெட்டன்மு னியல்பே. இது, வேண்டாது கூறி 17வேண்டியது முடிக்கின்றது, ஞநமயவ (எழு. 144) என்னுஞ் சூத்திரத்துட் கூறியவற்றைக் கூறுதலின். இதன் பொருள்: எட்டன்முன் - எட்டென்பதன் முன்னர், நமவ என்னும் மூன்றொடு சிவணி அகரம் வரினும் - அளவுப் பெயர்களின் முன்னர் மென்கணத்து இரண்டும் இடைக்கணத்து ஒன்றுமாகிய ந ம வ என்னும் மூன்றனோடு பொருந்தி உயிர்க்கணத்து அகரம் வரினும், உம்மையான் உயிர்க்கணத்து உகரம் வரினும் கூறாத வல்லெழுத்துக்கள் வரினும், இயல்பு - முற்கூறியவாறே டகாரம் ணகாரமாய் வேறோர் விகாரமின்றி இயல்பாய் முடியும் என்றவாறு. ந ம வ வென்னும் மூன்றும் வந்தாற்போல, அகரம் வரினு மென்பது பொருள். உதாரணம்: எண்ணாழி; மண்டை வட்டி எனவும்; எண்ணகல்; எண் ணுழக்கு எனவும், எண்கலம்; சாடி தூதை பானை எனவும் வரும். ஒன்றென முடித்தலான் வன்கணத்து நிறைப்பெயருங் கொள்க. எண்கழஞ்சு; தொடி, பலம் என வரும். இவ்வேண்டா கூறலான், எண்ணகல் எனக் குற்றுகர ஈறாய்க் கேடுந்திரிவும் பெற்று உயிர்வருமொழியான தொடர் மொழிக்கண் ஒற்றிரட்டுதல் கொள்க. (45) 451. ஐந்து மூன்று நமவரு காலை வந்த தொக்கு மொற்றிய னிலையே. இதுவும் மேல் மாட்டேற்றோடு ஒவ்வா முடிபு கூறுகின்றது. இதன் பொருள்: ஐந்தும் மூன்றும் நம வருகாலை - ஐந்தென்னு மெண்ணும் மூன்றென்னு மெண்ணும் நகர முதன்மொழியும் மகர முதன்மொழியும் வருமொழியாய் வருங்காலத்து, ஒற்றியல் நிலை - நிலைமொழிக்கண் நின்ற ஒற்று நடக்கும் நிலைமை கூறின், வந்தது ஒக்கும் - மேற்கூறியவாறே மகரமும் பகரமும் ஆகாது வருமொழி முதல் வந்த ஒற்றோடு ஒத்த ஒற்றாய் முடியும் என்றவாறு. உதாரணம்: ஐந்நாழி, ஐம்மண்டை,முந்நாழி,மும்மண்lஎdவரும். மூன்றும் ஐந்தும் என்னாத முறையன்றிக் கூற்றினால், நானாழி நான்மண்டை என்புழி நிலைமொழி னகரம் றகரமாகாது நின்றவாறே நின்று முடிதலும், வருமொழி முதனின்ற நகரம் னகரமாகத் திரிய நிலைமொழி னநகரங் கெடுதலுங் கொள்க. (46) 452. மூன்ற னொற்றே வகரம் வருவழித் தோன்றியவகர¤துருவhகும்மே. இதுவும் அது. இதன் பொருள்: மூன்றனொற்று - மூன்றா மெண்ணின் கணின்ற னகர ஒற்று, வகரம் வருவழி - வகரமுதன்மொழி வருமிடத்து, தோன்றிய வகரத்து உருவாகும் - அவ்வரு மொழி யாய்த் தோன்றிய வகரத்தின் வடிவாய் முடியும் என்றவாறு. உதாரணம்: முவ்வட்டி என வரும். தோன்றிய என்றதனானே, முதல் நீண்டு வகர ஒற்றின்றி மூவட்டி என்றுமாம். (47) 453. நான்க னொற்றே லகார மாகும். இதுவும் அது. இதன் பொருள்: நான்கனொற்று - நான்கா மெண்ணின்கணின்ற னகர ஒற்று, லகாரமாகும் - வகர முதன்மொழி வந்தால் லகர ஒற்றாகத் திரிந்து முடியும் என்றவாறு. உதாரணம்: நால்வட்டி என வரும். (48) 454. ஐந்த னொற்றே முந்தையது கெடுமே. இதுவும் அது. இதன் பொருள்: ஐந்தனொற்று-ஐந்தா மெண்ணின் கணின்ற நகர ஒற்று,முந்தையJகெடும்-வகuமுதன்மொÊவந்தாšமுன்னின்wவடிîகெட்Lமுடியு«என்றவாறு. உதாரணம்: ஐவட்டி என வரும். முந்தை யென்றதனால், நகர ஒற்றுக் கெடாது வகர ஒற்றாகத் திரிந்து ஐவ்வட்டியெனச் சிறுபான்மை வரும். (49) 455. முதலீ ரெண்ணின்மு னுயிர்வரு காலைத் தவலென மொழிப வுகரக் கிளவி முதனிலை நீட லாவயி னான. இது, 18மாட்டேற்றான் எய்திய உகரத்திற்குக் கேடு கூறி முதல் நீள்க என்றலின், எய்தியது விலக்கிப் பிறிதுவிதி கூறுகின்றது. இதன் பொருள்: முதலீரெண்ணின்முன் உயிர் வருகாலை - ஒரு இரு என முடிந்து நின்ற இரண்டெண்ணின் முன்னர் உயிர் முதன் மொழி வருமொழியாய் வருங்காலத்து, உகரக்கிளவி தவலென மொழிப - நிலைமொழியுகர மாகிய எழுத்துக் கெடுதலா மென்று சொல்லுவர் புலவர், ஆவயினான முதனிலை நீடல் - அவ்விரண் டெண்ணின்கணின்ற முதலெழுத்துக்கள் நீண்டு முடியும் என்றவாறு. உதாரணம்: ஓரகல், ஈரகல், ஓருழக்கு, ஈருழக்கு என வரும். (50) 456. மூன்றும் நான்கு மைந்தென் கிளவியுந் தோன்றிய வகரத் தியற்கை யாகும். இதுவும் அது. இதன் பொருள்: மூன்றும் நான்கும் ஐந்தென் கிளவியும் - மூன்றென் னும் எண்ணும், நான்கென்னு மெண்ணும் ஐந்தென்னு மெண்ணும், தோன்றிய வகரத்து இயற்கையாகும் - முன்னர்த் தோன்றி நின்ற வகரம் வருமொழிக்குக் கூறிய இயல்பாக மூன்றின்கண் வகர ஒற்றாயும், நான்கின்கண் லகர ஒற்றாயும், ஐந்தின்கண் ஒற்றுக் கெட்டும் முடியும் என்றவாறு. உதாரணம்: முவ்வகல், முவ்வுழக்கு என வரும். இதற்குத் தோன்றிய என்றதனால், ஒற்றிரட்டுதல் கொள்க. நாலகல், நாலுழக்கு, ஐயகல், ஐயுழக்கு என வரும். தோன்றிய என்றதனான், மேல் மூன்றென்பது முதல் நீண்ட இடத்து நிலைமொழி னகர ஒற்றுக் கெடுத்துக்கொள்க. இயற்கை என்றதனான், தொடர்மொழிக்கண் ஒற்றிரட்டுதல் கொள்க. மூன்ற னொற்றே (எழுத். 452) முதலிய மூன்று சூத்திரமுங் கொணர்ந்து முடிக்க. (51) 457. மூன்றன் KதனிலைÚடலுKரித்தே யுழக்கென் கிளவி வழக்கத் தான. இது, முன்னர்க் குறுகுமென்றதனை நீண்டு முடிக என்றலின் எய்தியது விலக்கிற்று. இதன் பொருள்: மூன்றன் முதனிலை நீடலும் உரித்து - மூன்றென்னு மெண்ணின் முதனின்ற எழுத்து நீண்டு முடிதலும் உரித்து, அஃதி யாண் டெனின், உழக்கு என் கிளவி வழக்கத்தான - உழக்கென்னுஞ் சொன் முடியும் வழக்கிடத்து என்றவாறு. உதாரணம்: மூவுழக்கு என வரும். வழக்கத்தான என்பதனான், அகலென் கிளவிக்கு முதனிலை நீடலுங் கொள்க. மூவகல் என வரும். இன்னும் அதனானே, நிலை மொழி னகர ஒற்றுக் கெடுக்க. மூழக்கு மூழாக்கென்னும் மரூமுடிவு இவ்வோத்தின் புறனடையான் முடிக்க. (52) 458. ஆறென் கிளவி முதனீ டும்மே. இதுவும் அது. இதன் பொருள்: ஆறென் கிளவி - ஆறென்னு மெண்ணுப் பெயர் அகல் உழக்கு என்பன வரின், முதல் நீடும் - முன்னர்க் குறுகி நின்ற முதலெழுத்து நீண்டு முடியும் என்றவாறு. அறுவென்னாது ஆறென்றார், திரிந்ததன்றிரிபது என்னும் நயத்தால். உதாரணம்: ஆறகல், ஆறுழக்கு என வரும். (53) 459. ஒன்பா னிறுதி யுருபுநிலை திரியா தின்பெறல் வேண்டுஞ் சாரியை மொழியே. இது, குற்றுகரம் மெய்யொடுங் கெடாது நின்று இன் பெறுக என்றலின், எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுக்கின்றது. இதன் பொருள்: ஒன்பான் இறுதி உருவுநிலை திரியாது - அளவும் நிறையும் வருவழி ஒன்பதென்னும் எண்ணின் இறுதிக் குற்றுகரந் தன் வடிவு நிலை திரியாது நின்று, சாரியை மொழி இன்பெறல் வேண்டும் - சாரியைச் சொல்லாகிய இன்பெற்று முடிதலை விரும்பும் ஆசிரியன் என்றவாறு. உதாரணம்: ஒன்பதின்கலம்; சாடி, தூதை, பானை, நாழி, மண்டை, வட்டி, அகல், உழக்கு எனவும்; கழஞ்சு, தொடி, பலம் எனவும் வரும். சாரியை மொழி யென்றதனான், இன்னோடு உகரமும் வல்லெழுத்துங் கொடுத்துச் செய்கை செய்து முடிக்க. ஒன்பதிற்றுக் கலம், சாடி என எல்லாவற்றோடும் ஒட்டுக. உருவு பென்பதனான், ஒன்பதிற்றென 19ஒற்றிரட்டுதல் எல்லாவற் றிற்குங் கொள்க. இன்னும் இதனானே, ஒன்பதினாழி யென்புழி வந்த இன்னின் னகரக் கேடுங் கொள்க. அளவாகு மொழி முதல் (எழு. 121) என்பதன்கண், நிலைஇயஎன்னும் இலேசானும் இன்னின் னகரம் றகரமாதல் கொள்க. (54) 460. நூறுமுன் வரினுங் கூறிய வியல்பே. இஃது - ஒன்றுமுதல் ஒன்பான்களோடு நூறென்பதனைப் புணர்க்கின்றது. இதன் பொருள்: முன் - ஒன்றுமுதல் ஒன்பான்களின் முன்னர், நூறுவரினும் - நூறென்னு மெண்ணுப்பெயர் வந்தாலும், கூறிய இயல்பு - மேற் பத்தென்பதனோடு புணரும்வழிக் கூறிய இயல்பு எய்தி முடியும் என்றவாறு. அது குற்றுகரம் மெய்யொடுங் கெட்டு மூன்றும் ஆறும் நெடுமுதல் குறுகி, முதலீரெண்ணி னொற்று ரகரமாய் உகரம் பெற்று, இடைநிலை ரகரம் இரண்டன்கட் கெட்டு முடிதலாம். உதாரணம்: ஒருநூறு, இருநூறு, அறுநூறு, எண்ணூறு என வரும். இவை மாட்டேற்றான் முடிந்தன. 20மாட்டேறு ஒவ்வாதன மேற்கூறி முடிப்ப. (55) 461. மூன்ற னொற்றே நகார மாகும். இது, மாட்டேற்றோடு ஒவ்வாததற்கு வேறுமுடிபு கூறு கின்றது. இதன் பொருள்: மூன்ற னொற்றே நகாரமாகும் - மூன்றா மெண் ணின்கணின்ற னகரவொற்று நகரவொற்றாகும் என்றவாறு. உதாரணம்: முந்நூறு என வரும். (56) 462. நான்கு மைந்து மொற்றுமெய் திரியா. இதுவும் அது. இதன் பொருள்: நான்கும் ஐந்தும் ஒற்று மெய் திரியா-நான்கென்னு மெண்ணும் ஐந்தென்னு மெண்ணும் தம்மொற்றுக்கள் நிலை திரி யாது முடியும் என்றவாறு. உதாரணம்: நானூறு, ஐந்நூறு என வரும். மெய் யென்றதனான், நானூறு என்புழி வருமொழி நகரத்துள் ஊகாரம் பிரித்து, லனவென வரூஉம் (எழு. 149) என்பதனான் னகர வொற்றாக்கி, ஊகாரமேற்றி, நிலைமொழி னகரங்கெடுத்துக் கொள்க. (57) 463. ஒன்பான் முதனிலை முந்துகிளந் தற்றே முந்தை யொற்றே ளகார மிரட்டு நூறென் கிளவி நகார மெய்கெட ஊவா வாகு மியற்கைத் தென்ப வாயிடை வருத லிகார ரகார மீறுமெய் கெடுத்து மகர மொற்றும். இதுவும் அது. இதன் பொருள்: ஒன்பான் முதனிலை முந்து கிளந்தற்று - ஒன்ப தென்னு மெண்ணின் முதனின்ற ஒகரம் மேற் பத்தென்பதனோடு புணரும்வழிக் கூறியவாறு போல ஒரு தகரம் ஒற்றி அதன்மேல் ஏறிமுடியும், முந்தை ஒற்றே ளகாரம் இரட்டும் - அவ்வொகரத்தின் முன்னின்ற னகர ஒற்று ளகர ஒற்றாய் இரட்டித்து நிற்கும், நூறென்கிளவி நகார மெய்கெட ஊ ஆவாகும் இயற்கைத் தென்ப - வருமொழியாகிய நூறென்னு மெண்ணுப் பெயர் நகாரமாகிய மெய்கெட அதன்மேல் ஏறிய ஊகாரம் ஆகாரமாம் இயல்பை யுடைத்தென்பர் புலவர், ஆயிடை இகார ரகாரம் வருதல் - அம் மொழியிடை ஓர் இகரமும் ரகரமும் வருக, ஈறு மெய் கெடுத்து மகரம் ஒற்றும் - ஈறாகிய குற்றுகரத்தினையும் அஃது ஏறிநின்ற றகர ஒற்றினையும் கெடுத்து ஒரு மகர ஒற்று வந்து முடியும் என்றவாறு. மெய் யென்பதனான், நிலைமொழிக்கட் பகரங் கெடுக்க. உதாரணம்: தொள்ளாயிரம் என வரும். இதனை ஒன்பதென்னும் ஒகரத்தின் முன்னர் வந்த தகர ஒற்றின் மேலே ஒகரத்தையேற்றிப், பகரங் கெடுத்துக் குற்றியலுகரம் மெய்யொடுங் கெடுத்து, நின்ற னகர ஒற்றினை இரண்டு ளகர ஒற்றாக்கி, நூறென்பதன் நகரங்கெடுத்து, ஊகாரம் ஆகாரமாக்கி ளகரத்தின் மேலேற்றி, இகரமும் ரகரமும் வருவித்து, விகாரப்பட்ட உயிராகிய ஆகாரத்தின்முன் உடம்படு மெய் யகாரம் வருவித்து, றகர உகரங் கெடுத்து, மகர ஒற்று வருவித்து முடிக்க. (58) 464. ஆயிரக் கிளவி வரூஉங் காலை முதலீ ரெண்ணி னுகரங் கெடுமே. இஃது, அவ்வொன்றுமுதல் ஒன்பான்களோடு ஆயிரம் முடியு மாறு கூறுகின்றது. இதன் பொருள்: ஆயிரக்கிளவி வரூஉங் காலை - ஆயிரமென்னுஞ் சொல் ஒன்றுமுதல் ஒன்பான்கள் முன் வருங்காலத்து, முதல் ஈரெண்ணின் உகரம் கெடும் - ஒரு இரு என்னும் இரண்டெண்ணின்கட் பெற்று நின்ற உகரங் கெட்டு முடியும் என்றவாறு. உகரங் கெடு மெனவே, ஏனையன முன்னர்க் கூறியவாறே நிற்றல் பெற்றாம். உதாரணம்: ஒராயிரம், இராயிரம் என வரும். (59) 465. முதனிலை நீடினு மான மில்லை. இஃது, எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது. இதன் பொருள்: முதனிலை நீடினும் மானமில்லை - அம்முதலீரெண்ணின் முதற்கணின்ற ஒகார இகாரங்கள் நீண்டுமுடியினுங் குற்றமில்லை என்றவாறு. உதாரணம்: ஓராயிரம், ஈராயிரம், என வரும். (60) 466. மூன்ற னொற்றே வகார மாகும். இது, மூன்றென்னு மெண் ஆயிரத்தோடு புணருமாறு கூறுகின்றது. இதன் பொருள்: மூன்றனொற்றே வகாரமாகும் - மூன்றென்னு மெண்ணின் கணின்ற னகர ஒற்று வகர ஒற்றாகத் திரிந்து முடியும் என்றவாறு. உதாரணம்: முவ்வாயிரம் என வரும். முன்னிற் சூத்திரத்து நிலை என்றதனான், இதனை முதனிலை நீட்டி வகர ஒற்றுக் கெடுத்து மூவாயிரம் எனவும் முடிக்க. (61) 467. நான்க னொற்றே லகார மாகும். இது, நான்கென்னுமெண் அதனொடு புணருமாறு கூறுகின்றது. இதன் பொருள்: நான்கனொற்றே லகாரமாகும் - நான்கென்னு மெண்ணின் கணின்ற னகர ஒற்று லகர ஒற்றாகத் திரிந்து முடியும் என்றவாறு. உதாரணம்: நாலாயிரம் என வரும். (62) 468. ஐந்த னொற்றே யகார மாகும். இஃது - ஐந்தென்னும் எண் அதனொடு புணருமாறு கூறு கின்றது. இதன் பொருள்: ஐந்தனொற்றே யகாரமாகும் - ஐந்தென்னும் எண்ணின் கணின்ற நகர ஒற்று யகர ஒற்றாகத் திரிந்து முடியும் என்றவாறு. உதாரணம்: ஐயாயிரம் என வரும். (63) 469. ஆறன் மருங்கிற் குற்றிய லுகர மீறுமெய் யொழியக் கெடுதல் வேண்டும். இஃது ஆறென்னு மெண் அதனோடு புணருமாறு கூறு கின்றது. இதன் பொருள்: ஆறன் மருங்கிற் குற்றியலுகரம் - ஆறென்னு மெண்ணின் கணின்ற குற்றியலுகரம் நெடுமுதல் குறுகி அறுவென முற்றுகரமாய் நிற்றலின், மெய் ஒழிய ஈறுகெடுதல் வேண்டும் - அது தானேறிய மெய்யாகிய றகர ஒற்றுக்கெடாது நிற்ப முற்றுகரமாகிய ஈறு தான் கெட்டுப் புணர்தலை விரும்பும் ஆசிரியன் என்றவாறு. உதாரணம்: அறாயிரம் என வரும். முன்னர் நெடுமுதல் குறுகும் (எழு. 440) என்றவழி அறுவென நின்ற முற்றுகரத்திற்கே ஈண்டுக் கேடு கூறினா ரென்பது பெற்றாம். என்னை? குற்றியலுகரமாயின் ஏறிமுடிதலின். இது குற்றுகரந் திரிந்து முற்றுகரமாய் நிற்றலின் ஈண்டு முடிபு கூறினார். முற்றியலுகரம் ஈறுமெய்யொழியக் கெடும் எனவே, குற்றுகரங் கெடாது ஏறிமுடியு மென்பது அருத்தாபத்தியாற் பெறுதும். உதாரணம்: 21ஆறாயிரம் என வரும். மருங் கென்றதனாற் பிற பொருட்பெயர்க்கண்ணும் நெடு முதல் குறுகாது நின்று முடிதல் கொள்க. ஆறாகுவதே (சொல். 80) என வரும். (64) 470. ஒன்பா னிறுதி யுருவுநிலை திரியா தின்பெறல் வேண்டுஞ் சாரியை மரபே. இஃது ஒன்பதென்னும் எண் அதனொடு புணருமாறு கூறு கின்றது. இதன் பொருள்: ஒன்பான் இறுதி - ஒன்பதென்னு மெண்ணின் இறுதிக் குற்றுகரம், உருவுநிலை திரியாது - தன் வடிவுநிலை திரிந்து கெடாதே, சாரியை மரபு இன் பெறல் வேண்டும் - சாரியையாகிய மரபினையுடைய இன்பெற்று முடிதலை விரும்பும் ஆசிரியன் என்றவாறு. உதாரணம்: ஒன்பதினாயிரம் என வரும். உருவென்றும் நிலை யென்றுஞ் சாரியைமரபு யென்றுங் கூறிய மிகையான், ஆயிரமல்லாத பிறவெண்ணின்கண்ணும் பொருட் பெயரிடத்தும் இன்னும் உகரமும் வல்லெழுத்தும் பெற்று முடியும் முடிபு கொள்க. ஒன்பதிற்றுக் கோடி, ஒன்பதிற்றொன்பது, ஒன்பதிற்றுத் தடக்கை ஒன்பதிற்றெழுத்து என வரும். இன்னும் இவ்விலேசானே, வேறொரு முடிபின்மையிற் 22கூறா தொழிந்த எண்ணாயிர மென்றவழி ஒற்றிரட்டுதலும், ஈண்டுக் கூறியவற்றிற்கு ஒற்றிரட்டுதலுங் கொள்க. அளவாகு மொழி முதல் (எழு. 121) என்பதனுள், நிலைஇய என்றதனான் 23னகரம் றகரமாதல் கொள்க. (65) 471. நூறா யிரமுன் வரூஉங் காலை நூற னியற்கை முதனிலைக் கிளவி. இஃது - ஒன்றுமுதல் ஒன்பான்களோடு நூறென்னு மெண் அடையடுத்த ஆயிரம் முடியுமாறு கூறுகின்றது. இதன் பொருள்: நூறாயிரம் முன் வரூஉங் காலை - நூறாயிரம் என்னும் அடையடுத்தமொழி ஒன்றுமுதல் ஒன்பான்கள் முன் வருமொழியாய் வருங் காலத்து, முதனிலைக் கிளவி நூறன் இயற்கை - ஒன்றென்னும் முதனிலைக்கிளவி ஒன்றுமுன் நூறென்னு மெண்ணொடு முடிந்தாற் போல விகாரமெய்தி முடியும் எனவே வழிநிலைக் கிளவியாகிய இரண்டு முதலிய எண்கள் விகாரமெய்தியும், எய்தாது இயல்பாயும் முடியும் என்றவாறு. உதாரணம்: ஒரு நூறாயிரம் என வரும். ஏனையன இருநூறாயிரம் இரண்டுநூறாயிரம், முந்நூறாயிரம் மூன்று நூறாயிரம், நானூறாயிரம் நான்குநூறாயிரம், ஐந்நூறா யிரம் ஐந்து நூறாயிரம் அறுநூறாயிரம் ஆறுநூறாயிரம், எண்ணூ றாயிரம் எட்டுநூறாயிரம், ஒன்பது நூறாயிரம் என வரும். இவ்விகாரப்பட்டனவற்றிற்குக் குற்றுகரம் மெய்யொடுங் கெடுத்து, முதலீரெண்ணி னொற்று ரகரமாக்கி உகரம் வருவித்து, மூன்றும் ஆறும் நெடுமுதல் குறுக்கி, மூன்றனொற்று நகாரமாக்கி, நான்கும் ஐந்தும் ஒற்று மெய் திரியா வாக்கி, எட்டனொற்று ணகார மாக்கி, இலேசுகளாற் கொண்ட செய்கைகளில் வேண்டு வனவுங் கொணர்ந்து முடிக்க. ஏற்புழிக்கோட லென்பதனாற், 24தொள்ளாயிரமென்ற முடிபி னொடு மாட்டேறு சென்றதேனும் அவ்வாறு முடியா தென்று கொள்க. முன் என்பதனான், இன்சாரியை பெற்று ஒன்பதி னூறாயிரம் என்றுமாம். நிலை என்பதனான், மூன்றும் ஆறும் இயல்பாக முடிவுழி நெடுமுதல் குறுகாமை கொள்க. (66) 472. நூறென் கிளவி யொன்றுமுத லென்பாற் கீறுசினை யொழிய வினவொற்று மிகுமே. இது, நூறென்பதனோடு ஒன்று முதல் ஒன்பான்களைப் புணர்க்கின்றது. இதன் பொருள்: நூறு என் கிளவி - நூறென்னு மெண்ணுப் பெயர், ஒன்று முதல் ஒன்பாற்கு - ஒன்றுமுதல் ஒன்பான்களோடு புணருமிடத்து, ஈறு சினையொழிய - ஈறாகிய குற்றுகரந் தன்னாற் பற்றப்பட்ட மெய்யொடுங் கெடாதுநிற்ப, இன ஒற்று மிகும் - அச்சினைக்கு இனமாகிய றகர ஒற்று மிக்கு முடியும் என்றவாறு. உதாரணம்: நூற்றொன்று என வரும். இரண்டு முதல் ஒன்பது அளவுஞ் செய்கை யறிந்து ஒட்டுக. 25ஈறுசினை என்று ஓதிய மிகையான், நூறென்பதனோடு பிற எண்ணும், பிறபொருட்பெயரும், இவ்விதியும், பிறவிதியும் எய்தி முடிதல் கொள்க. நூற்றுப்பத்து, நூற்றுக்கோடி, நூற்றுத் தொண்ணூறு எனவும்; நூற்றுக்குறை, நூற்றிதழ்த்தாமரை (ஐங்குறு. 20), நூற்றுக்காணம், நூற்றுக்கான்மண்டபம் எனவும் இன ஒற்று மிக்கன கொள்க. இன்னும் இதனானே, இருநூற் றொன்று இரண்டுநூற்றொன்று என நூறு அடையடுத்த வழியுங் கொள்க. (67) 473. அவையூர் பத்தினு மத்தொழிற் றாகும். இஃது - அந்நூறென்பதனோடு ஒன்றுமுதல் ஒன்பான்கள் அடையடுத்தவழிப் புணருமாறு கூறுகின்றது. இதன் பொருள்: அவை ஊர்பத்தினும் - அந்நூறு என்பது நின்று முற்கூறிய ஒன்றுமுதல் எட்டு எண்களை ஊர்ந்து வந்த பத்தென்பத னோடு புணரு மிடத்தும், அத்தொழிற்றாகும் - ஈறு சினையொழிய இன ஒற்று மிக்கு முடியும் என்றவாறு. உதாரணம்: நூற்றொருபஃது; இருபஃது, முப்பஃது, நாற்பஃது, ஐம்பஃது, அறுபஃது, எழுபஃது, எண்பஃது என வரும். மற்று, நூற்றொன்பது அவை ஊரப்பட்டு வந்தது அன்மை உணர்க. ஆகுமென்றதனான், ஒருநூற்றொருபஃது இருநூற் றொருபஃது என நிலைமொழி அடையடுத்து முடியும் முடிபுங் கொள்க. (68) 474. அளவு நிறையு மாயிய றிரியாது குற்றிய லுகரமும் வல்லெழுத் தியற்கையு முற்கிளந் தன்ன வென்மனார் புலவர். இது, நூறென்பதனோடு அளவுப்பெயரும் நிறைப் பெயரும் முடியுமாறு கூறுகின்றது. இதன் பொருள்:அளவும் நிறையும் ஆயியல் திரியாது - நூறென்பத னோடு அளவுப்பெயரும் நிறைப்பெயரும் புணருமிடத்து முற்கூறிய இயல்பின் திரியாது இன ஒற்று மிக்கு முடியும், குற்றியலுகரமும் வல்லெழுத் தியற்கையும் - அவ்விடத்துக் குற்றியலுகரங் கெடா மையும் இன ஒற்று மிக்கு வன்றொடர்மொழியாய் நிற்றலின் வரு மொழி வல்லெழுத்து மிகும் இயல்பும், முற்கிளந்தன்ன என்மனார் புலவர் - வல்லொற்றுத் தொடர் மொழி வல்லெழுத்து மிகுமே (எழுத். 426) என வன்றொடர் மொழிக்குக் கூறிய தன்மையவாய் முடியுமென்று கூறுவர் புலவர் என்றவாறு. உதாரணம்: நூற்றுக்கலம்; சாடி, தூதை, பானை, நாழி, மண்டை, வட்டி, அகல், உழக்கு எனவும்; கழஞ்சு, தொடி, பலம் எனவும் வரும். திரியா தென்றதனான், நூறென்பது அடையடுத்த வழியும் இவ்விதி கொள்க. அஃது ஒருநூற்றுக்கலம் இருநூற்றுக்கலம் என வரும். (69) 475. ஒன்றுமுத லாகிய பத்தூர் கிளவி யொன்றுமுத லொன்பாற் கொற்றிடை மிகுமே நின்ற வாய்தங் கெடுதல் வேண்டும். இஃது ஒன்று முதல் எட்டு ஈறாகிய எண்கள் அடையடுத்த பத்தனோடும் ஒன்று முதல் ஒன்பான்களைப் புணர்க்கின்றது. இதன் பொருள்: ஒன்று முதலாகிய பத்து ஊர் கிளவி - ஒன்று முதல் எட்டு ஈறாகப் பத்தென்னும் எண் ஏறி ஒருசொல்லாகி நின்ற ஒருபஃது முதலிய எண்கள், ஒன்றுமுதல் ஒன்பாற்கு - ஒன்றுமுதல் ஒன்பான்கள் வருமொழியாய் வந்து புணரும் இடத்து, நின்ற ஆய்தங் கெடுதல் வேண்டும்-பஃதென்பதன்கண் நின்ற ஆய்தங் கெட்டு முடிதலை விரும்பும் ஆசிரியன், ஒற்று இடைமிகும் - ஆண்டு இன ஒற்றாகிய ஒரு தகர ஒற்று இடைமிக்கு முடியும் என்றவாறு. உதாரணம்: ஒருபத்தொன்று, இருபத்தொன்று, ஒருபத்திரண்டு, இருபத் திரண்டு என எல்லாவற்றோடும் ஒட்டுக. இவற்றுள் 26ஒருபத்தொன்று ஒருபத்திரண்டு என்னும் எண்கள் அதிகாரத்தால் நின்ற நூறென்பதனோடு அடுத்து வருமென்று உணர்க. (70) 476. ஆயிரம் வரினே யின்னென் சாரியை யாவயி னொற்றிடை மிகுத லில்லை. இஃது ஒருபஃது முதலியவற்றோடு ஆயிரத்தைப் புணர்க் கின்றது. இதன் பொருள்: ஆயிரம் வரின் இன்னென் சாரியை - அவ்வொன்று முதலாகிய பத்து ஊர் கிளவி ஆயிரத்தோடு புணரும் இடத்து இன் சாரியை பெறும், ஆவயின் ஒற்று இடை மிகுதல் இல்லை - அவ் விடத்துத் தகர ஒற்று இடை வந்து மிகாது என்றவாறு. உதாரணம்: ஒருபதினாயிரம் இருபதினாயிரம் என எண்பதின் காறும் ஒட்டுக. இவை நூற்றொருபதினாயிரம் எனவும் வரும். ஆவயின் என்றதனால், நூறாயிரத்தொருபத்தீராயிரம் என்றாற் போல அத்துப் பெறுதலும் பிறவுங் கொள்க. (71) 477. அளவு நிறையு மாயிய றிரியா. இஃது - ஒன்று முதலாகிய பத்து ஊர் கிளவி முன்னர் அளவுப் பெயரும் நிறைப்பெயரும் புணர்க்கின்றது. இதன் பொருள்: அளவும் நிறையும் ஆயியல் திரியா - ஒருபஃது முதலிய எண்களின் முன்னர் அளவுப்பெயரும் நிறைப்பெயரும் வந்தால் ஒற்று இடைமிகாது இன்சாரியை பெற்று முடியும் என்றவாறு. உதாரணம்: ஒருபதின்கலம்; சாடி, தூதை, பானை, நாழி, மண்டை, வட்டி, அகல், உழக்கு எனவும்; ஒருபதின்கழஞ்சு; தொடி, பலம் எனவும் வரும். இவற்றிற்கு நூறு அடை யடுத்து ஒட்டுக. திரியா என்றதனான், ஒருபதிற்றுக்கலம் இருபதிற்றுக்கலம் என்னுந் தொடக்கத்தனவற்றின்கண் இன்னின் அகரம் றகரமாகத் திரிந்து இரட்டுதலும், உகரமும் வல்லெழுத்துப் பெறுதலுங் கொள்க. இன்னும் இதனானே, ஒருபதினாழி என்றவழி வருமொழி நகரந் திரிந்துழி நிலைமொழி னகரக்கேடுங் கொள்க. அளவு நிறையு மதனோ ரன்ன என்று பாடம் ஓதுவார், முன்னர்ச் சூத்திரத்து ஆவயின் என்றதனானும், அதன் முன்னர்ச் சூத்திரத்து நின்ற என்றதனானும் இவற்றை முடிப்பார். (72) 478. முதனிலை யெண்ணின் முன் வல்லெழுத்து வரினு ஞநமத் தோன்றினும் யவவந் தியையினு முதனிலை யியற்கை யென்மனார் புலவர். இஃது - ஒன்றுமுதல் ஒன்பான்களோடு பொருட் பெயரைப் புணர்க்கின்றது. இதன் பொருள்:முதனிலை எண்ணின்முன் வல்லெழுத்து வரினும் - ஒன்றென்னும் எண்ணின்முன் வல்லெழுத்து முதன்மொழி வரினும், ஞநம தோன்றினும் - ஞ ந ம க்களாகிய மெல்லெழுத்து முதன்மொழிவரினும், யவ வந்து இயையினும் - ய வ க்களாகிய இடையெழுத்து முதன்மொழி வரினும், முதனிலை இயற்கை என்மனார் புலவர் - அவ்வொன்று முதல் ஒன்பான்கள் முன்னெய் திய முடிபு நிலைமை எய்தி முடியுமென்று கூறுவர் புலவர் என்றவாறு. எனவே, வழிநிலையெண்ணாகிய இரண்டு முதலாகிய எண்கள் அம்மூன்று கணமும் முதன்மொழியாய்வரின், முதனிலை முடிபாகி விகாரம் எய்தியும், எய்தாது இயல்பாயும் முடியும். உதாரணம்: ஒருகல்; சுனை துடி பறை ஞாண் நூல் மணி யாழ் வட்டு எனவும்; இருகல்; இரண்டுகல் சுனை துடி பறை ஞாண் நூல் மணி யாழ் வட்டு எனவும் ஒட்டுக. இவ்வெண்களிற் குற்றியலுகரம் மெய்யொடுங் கெட்டு, முதலீரெண்ணின் ஒற்று ரகாரமாக உகரம் வந்தது. இருகல் முதலிய வற்றிற்கு இடைநிலை ரகாரங் கெடுக்க. முக்கல் மூன்றுகல்; சுனை துடி பறை ஞாண் நூல் மணி யாழ் வட்டு என ஒட்டுக. இதற்கு நெடு முதல் குறுக்கி மூன்ற னொற்றே வந்த தொக்கும் (எழுத். 447) என்பத னான் முடிக்க. முன்னர், எண்ணுப்பெயரும் அளவுப்பெயரும் நிறைப் பெயரும் வருவழிக்கூறிய விகாரங்களிற், பொருட் பெயர்க்கும் ஏற்பன கொணர்ந்து முடித்து, எல்லா வற்றிற்கும் நிலை யென்றத னான், 27ஒற்றுத்திரித்து முடிக்க. அவை, மூன்றற்கும் ஐந்தற்கும் ஞகரம் வருவழி ஞகர ஒற்றாதலும், மூன்றற்கு யகரம் வருவழி வகர ஒற்றாதலுமாம். உதாரணம்: நாற்கல் நான்குகல்; சுனை துடி பறை; நான்ஞாண்; நான்குஞாண் நூல் மணி யாழ் வட்டு; ஐங்கல் ஐந்துகல் சுனை துடி பறை; ஐஞ்ஞாண் ஐந்துஞாண்; நூல் மணி; ஐயாழ் ஐந்துயாழ் ஐவட்டு ஐந்துவட்டு; அறுகல் ஆறுகல்; சுனை துடி பறை ஞாண் நூல் மணி யாழ் வட்டு; எண்கல் எட்டுக்கல்; சுனை துடி பறை; எண் ஞாண் எட்டுஞாண்; நூல் மணி யாழ் வட்டு; ஒன்பது கல்; சுனை துடி பறை ஞாண் நூல் மணி யாழ் வட்டு என ஒட்டுக. ஒன்பதின்கல் எனச் சென்றதேனும் வழக் கின்மையின் ஒழிக்க. இன்னும் மாட்டேறின்றி வருவனவற்றிற் கெல்லாம் முடிபு நிலை யென்றதனான் முடிக்க. (73) 479. அதனிலை யுயிர்க்கும் யாவரு காலை முதனிலை யொகர மோவா கும்மே ரகரத் துகரந் துவரக் கெடுமே. இஃது - ஒன்று முதல் ஒன்பான்களோடு, பொருட்பெயருள் உயிர் முதல்மொழி முடியுமாறும், மேற்கூறிய யகாரம் வேறுபட முடியுமாறுங் கூறுகின்றது. இதன் பொருள்: முதனிலைக்கு - ஒன்றென்னும் எண்ணின் திரிபாகிய ஒரு என்னும் எண்ணிற்கு, உயிரும் யாவும் வருகாலை - உயிர் முதன் மொழியும் யாமுதன்மொழியும் வருமொழியாய் வருங்காலத்து, அதன் நிலை - அம்முதனிலையின் தன்மை இவ்வாறாம்; ஒகரம் ஓவாகும் - ஒகரம் ஓகாரமாய் நீளும்; ரகரத்து உகரந் துவரக் கெடும் - ரகரத்து மேனின்ற உகரம் முற்றக் கெட்டு முடியும் என்றவாறு. நான்காவதனை முதனிலையோடு கூட்டி, அதன்கண் நின்ற உம்மையை உயிரோடும் யாவோடுங் கூட்டுக. எனவே வழிநிலை யெண்கள் உயிர் முதன்மொழி வந்த இடத்து முற்கூறியவாறே இரு வாற்றானும் முடியும். உதாரணம்: ஓரடை, ஓராகம், ஓரிலை, ஓரீட்டம், ஓருலை, ஓரூசல், ஓரெழு, ஓரேடு, ஓரையம், ஓரொழுங்கு, ஓரோலை ஓரௌவியம் என வரும். குற்றியலுகரம் மெய்யொடுங் கெடுத்து, முதலெண்ணி னொற்று ரகரமாக்குக. ஓர்யாழ், ஓர்யானை என வரும். துவர என்றதனான், இரண்டென்னும் எண்ணின் இகரத்தை நீட்டி, ரகரத்துள் உகரத்தைக் கெடுத்து, ஈரசை ஈர்யானை எனவும், மூன்றென்னும் எண்ணின் னகரவொற்றுக் கெடுத்து, மூவசை மூயானை எனவும் முடிக்க. இவை செய்யுண் முடிபு. இன்னும் இதனானே, இங்ஙனம் வருவன பிறவும் அறிந்து முடித்துக் கொள்க. (74) 480. இரண்டுமுத லொன்பா னிறுதி முன்னர் வழங்கியன் மாவென் கிளவி தோன்றின் மகர வளவொடு நிகரலு முரித்தே. இஃது - இரண்டு முதல் ஒன்பான்களின் முன்னர் அளவு முதலிய மூன்றற்கும் உரிய மாவென்பது புணருமாறு கூறுகின்றது. இதன் பொருள்: இரண்டு முதல் ஒன்பான் இறுதி முன்னர் - இரண் டென்னு மெண் முதலாக ஒன்பதென்னுமெண் ஈறாக நின்ற எண்ணுப் பெயர்களின் முன்னர், வழங்கு இயல் மா என் கிளவி தோன்றின் - வழக்கின்கண்ணே நடந்த அளவு முதலியவற்றிற்கு உரிய மா வென்னுஞ் சொல் வருமொழியாய் வரின், மகர அளவொடு நிகரலும் உரித்து - அவ்வெண்ணுப் பெயர்களின் முன்னர்த் தந்து புணர்க்கப்படும் மண்டை யென்னும் அளவுப் பெயரோடு ஒத்து விகாரப்பட்டு முடிதலும் உரித்து; உம்மையான் விகாரப் படாது இயல்பாய் முடிதலும் உரித்து என்றவாறு. வழக்கியல் வழங்கியலென விகாரம். மகரஅளவு மகர முதன் மொழியாகிய அளவுப் பெயரெனப் பண்புத்தொகை. அஃது அளந்தறி கிளவியும் (எழு. 446) என்பதனுள், ஒரு மண்டை என முடித்ததாம். உதாரணம்: இருமா, மும்மா, நான்மா, ஐம்மா, அறுமா, எண்மா, ஒன்பதின்மா என முன்னர்க் கூறிய சூத்திரங் களான் விகாரப் படுத்தி முடிக்க. இனி, உம்மையான் விகாரப்படுத்தாது இரண்டுமா மூன்றுமா நான்குமா ஐந்துமா ஆறுமா எட்டுமா ஒன்பதுமா எனவும் முடிக்க. புள்ளிமயங்கியலுள் அளவு நிறையும் (எழு. 389) என்னுஞ் சூத்திரத்தான், ஏழ்நெடுமுதல் குறுகி உகரம் வந்து புணருமாறு கூறினார். அதனான், ஈண்டு எழுமா என முடிக்க. ஏழ்மாவென முடிதல் வழக்கின்று. இரண்டுமுதல் ஒன்பா னென்று எடுத்தோதினமையின், ஒன்றற்கு ஒருமா வென்னும் முடிபேயன்றி, ஒன்றுமா வென்னும் முடிபு இல்லை யாயிற்று. வழங்கியன் மா என்றார், விலங்கு மாவை நீக்குதற்கு. (75) 481. லனவென வரூஉம் புள்ளி யிறுதிமுன் னும்முங் கெழுவு முளப்படப் பிறவு மன்ன மரபின் மொழியிடைத் தோன்றிச் செய்யுட் டொடர்வயின் மெய்பெற நிலையும் வேற்றுமை குறித்த பொருள்வயி னான. இது, புள்ளிமயங்கியலுள் ஒழிந்து நின்ற செய்யுண்முடிபு கூறு கின்றது. இதன் பொருள்: லன என வரூஉம் புள்ளி இறுதி முன் - லகார னகார மென்று கூற வருகின்ற புள்ளி ஈற்றுச் சொற்களின் முன்னர், உம்முங் கெழுவும் உளப்பட - உம்மென்னுஞ் சாரியையும் கெழுவென்னும் சாரியையும் உட்பட, பிறவும் அன்ன மரபின் மொழியிடைத் தோன்றி - பிறசாரியையும் அப்பெற்றிப் பட்ட மரபினையுடைய மொழியிடத்தே தோன்றி, செய்யுள் தொடர்வயின் மெய் பெற நிலையும் - செய்யுட் சொற்களைத் தொடர்பு படுத்திக் கூறுமிடத்துப் பொருள்பட நிற்கும், வேற்றுமை குறித்த பொருள் வயினான - வேற்றுமையைக் குறித்த பொருட் புணர்ச்சிக்கண் என்றவாறு. உதாரணம்: வானவரி வில்லுந் திங்களும் போலும். இதற்கு உம்மென்னுஞ் சாரியையின் மகரத்தை அம்மினிறுதி (எழு. 129) என்னுஞ் சூத்திரத்துள் தன்மெய் என்றதனாற் பிற சாரியையுந் திரியுமென நகர ஒற்றாக்கி நிலைமொழி லகர ஒற்றின்மேல் உயிரேற்றி முடிக்க. வில்லுந் திங்களும் போலு மென்பதற்கு, வில்லிடைத் திங்கள் போலுமென ஏழனுருபு விரித்துப் பொருளுரைக்க. கல்கெழு கானவர் நல்குறு மகளே (குறுந். 71); இதற்குக் கல்லைக் கெழீஇயின என உரைக்க. மா நிதிக்கிழவனும் போன்ம் (அகம். 66); இதற்குக் கிழவனைப் போன்மென உரைக்க. இவ்வும்மை சிறப்பன்று. கான்கெழு நாடன் (அகம். 98) இதற்குக் கானைக்கெழீஇய என உரைக்க. இனி அன்னமரபின் மொழியிடை என்றதனாற், கெழு என்றது பிற சொல்லிடத்தே பணைகெழு பெருந்திறற் பல்வேன் மன்னர் (மதுரைக். 234), துறைகெழு மாந்தை (நற். 35) என இயல் பாக வருவனவும்; 28வளங்கெழு திருநகர் (அகம். 17) பயங்கெழு மா மழை (புறம். 266) என நிலைமொழி யீற்றெழுத்துத் திரிய வருவனவுங் கொள்க. இன்னும் இதனானே, இச்சாரியையது உகரக்கேடும் எகர நீட்சியுங் கொள்க. பூக்கேழ் தொடலை நுடங்க வெழுந்து (அகம். 28) துறை கேழூரன் கொடுமை நாணி (ஐங்குறு. 11) இவற்றிற்கு, இரண்டாவதும் ஏற்புழி மூன்றாவதும் விரிக்க. செங் கேழ் மென்கொடி (அகம். 80) என்புழிக் கெழு வென்னும் உரிச் சொல் எழுத்துப் பிரிந்திசைத்தல் (சொல். 395) என்பதனான் நீண்டதென்று உணர்க. மெய் யென்றதனாற், பூக்கேழென் (நற். 10) புழி வல்லொற்று மிகுதல் கொள்க. இன்னுஞ் சான்றோர் செய்யுட்கட் பிறசாரியை பெற்று விகாரங்கள் எய்தி முடிவனவற்றிற்கெல்லாம் இச்சூத்திரமே விதியாக முடித்துக் கொள்க.29 (76) 482. உயிரும் புள்ளியு மிறுதி யாகிக் குறிப்பினும் பண்பினு மிசையினுந் தோன்றி நெறிப்பட வாராக் குறைச்சொற் கிளவியு முயர்திணை யஃறிணை யாயிரு மருங்கி னைம்பா லறியும் பண்புதொகு மொழியுஞ் செய்யுஞ் செய்த வென்னுங் கிளவியின் மெய்யொருங் கியலுந் தொழிறொகு மொழியும் தம்மியல் கிளப்பிற் றம்முற் றாம்வரூஉ மெண்ணின் றொகுதி யுளப்படப் பிறவு மன்னவை யெல்லா மருவின் பாத்திய புணரிய னிலையிடை யுணரத் தோன்றா. இஃது - இவ்வதிகாரத்தாற் புணர்க்கப்படாத சொற்கள் இவை யென அவற்றை எடுத்து உணர்த்துகின்றது. இதன் பொருள்: உயிரும் புள்ளியும் இறுதியாகி - கூறுங்கால் உயிரும் புள்ளியும் ஈறாக நிற்கும் சொல்லாகி, குறிப்பினும் பண்பினும் இசையினும் தோன்றி - குறிப்பினானும் பண்பினானும் இசை யினானும் பிறந்து, நெறிப்படவாராக் குறைச் சொற்கிளவியும் - ஒருவழிப்பட வாராத சொற்றன்மை குறைந்த சொற்களாகிய உரிச்சொற்களும், உயர்திணை அஃறிணை ஆயிரு மருங்கின் - உயர்திணை அஃறிணையென்னும் அவ்விரண்டிடத்தும் உள வாகிய, ஐம்பாலறியும் பண்புதொகு மொழியும் - ஒருவன் ஒருத்தி பலர் ஒன்று பல என்னும் ஐந்து பாலினையும் அறிதற்குக் காரணமாகிய 30பண்பு கொள்பெயர் தொகுந் தொகைச்சொல்லும், செய்யுஞ் செய்த என்னும் கிளவியின் - செய்யும் செய்த என்னும் பெயரெச்சச் சொற்களி னுடைய, மெய் ஒருங்கு இயலுந் தொழில் தொகுமொழியும் - காலங்காட்டும் உம்மும் அகரமும் ஒரு சொற் கண்ணே சேர நடக்கும் புடைபெயர்ச்சி தொக்கு நிற்குஞ் சொற் களும், தம் இயல் கிளப்பின்-தமது தன்மை கூறுமிடத்து, தம்முன் தாம்வரூஉம் எண்ணின் தொகுதி உளப்பட - நிறுத்த சொல்லுங் குறித்து வருகிளவியுமாய் வாராது தம்முன்னர்த் தாமே வந்து நிற்கும் எண்ணுப் பெயரினது தொகுதியும் உளப்பட, அன்ன பிறவும் எல்லாம் - அத்தன்மையாகிய பிறவுமெல்லாம், மருவின் பாத்திய - உலகத்து மருவி நடந்த வழக்கினது பகுதியைத் தம் இலக்கணமாக வுடைய, புணரியல் நிலை இடை யுணரத் தோன்றா - ஒன்றனோ டொன்று புணருதல் நடந்த தன்மை இடம் விளங்கத் தோன்றா என்றவாறு. உதாரணம்: கண் விண்ண விணைத்தது, விண்விணைத்தது இவை குறிப்புரிச்சொல்; ஆடை வெள்ளவிளர்த்தது, வெள்விளர்த்தது இவை பண்புரிச்சொல்; கடல் ஒல்ல வொலித்தது, ஒல்லொலித்தது இவை இசையுரிச் சொல். ஒல்லொலிநீர் பாய்வதே போலுந் துறைவன் என்றார் செய்யுட்கண்ணும். இவை, உயிரீறாயும் புள்ளியீறாயும் நிற்றலின் ஒன்றன்கண் அடக்க லாகாமையின் நெறிப்படவாரா என்றார். விண்ண விணைத்தது தெறிப்புத்தோன்றத் தெறித்ததென்றும், விண் விணைத்தது தெறிப்புத் தெறித்ததென்றும் ஆம். ஏனையவற்றிற்கும் இவ்வாறே உணர்க. இங்ஙனம் நிற்றலின் தன்மை குறைந்த சொல்லா யிற்று. வினையே குறிப்பே (சொல். 258) என்னுஞ் சூத்திரத்திற் கூறிய என என்பதனை இவற்றொடு கூட்டியவழி இடைச் சொல்லாதலின், விண்ணென விணைத்தது எனப் புணர்க்கப்படு மாறு உணர்க. இனிக் கரும்பார்ப்பான், கரும்பார்ப்பனி, கரும்பார்ப்பார், கருங் குதிரை, கருங்குதிரைகள் என வரும். இவற்றுட் கரியனாகிய பார்ப்பான், கரியளாகிய பார்ப்பனி, கரியராகிய பார்ப்பார், கரியதாகிய குதிரை, கரியனவாகிய குதிரைகள் என ஐம்பாலி னையும் உணர்த்தும் பண்பு கொள்பெயர் தொக்கவாறு காண்க. இவற்றுட் கருமை என்னும் பண்புப் பெயர் தொக்கதேற் கருமை யாகிய பார்ப்பானென விரித்தல் வேண்டும்; அங்ஙனம் விரியா மையிற் பண்புகொள்பெயர் தொக்கதென்று உணர்க. வெற்றிலை, வெற்றுப்பிலி, வெற்றடி, வெற்றெனத் தொடுத்தல் என்றாற்போல்வனவற்றுள், வெறுவிதாகியஇலை யென்பது, பாக்குங் 31கோட்டுநூறுங் கூடாததாய பண்புணர்த்திய ஈறு தொகுதலின் மருவின் பாத்தியதாய் நின்று ஒற்றடுத்தது. வெறுவிதாகிய உப்பிலி யென்றது, சிறிதும் உப்பிலியென நின்றது. ஏனையவும் அன்ன. இங்ஙனம் ஐம்பாலுந் தொகுத்தற்கு உரிய முதனிலை யாதலிற் புணர்த்தலாகாமை கூறினார். இனி, ஆடரங்கு, செய்குன்று, புணர்பொழுது, அரிவாள், கொல் யானை, செல்செலவு என, நிலம் முதலாகிய பெயரெச்சந் தொக்க வினைத் தொகைகளை விரிக்குங்கால், ஆடினவரங்கு எனச் செய்த என்னும் பெயரெச்சத்து ஈறு விரிந்த அகர ஈறு இறப்பு உணர்த்தியும், ஆடா நின்றவரங்கு, ஆடுமரங்கு எனச் செய்யும் என்னும் பெயரெச்சத்து ஈறு விரிந்த உம்மீறு நிகழ்வும் எதிர்வும் உணர்த்தியும், அவற்றானாய புடை பெயர்ச்சியைத் தோற்றுவித்து இரண்டு பெயரெச்சமும் ஒரு சொற்கண் ஒருங்கு தொக்கு நிற்றலின், அதனை ஒரு பெயரெச்சத்தின்கண் அடக்கிப் புணர்க்கலாகாமையிற், புணர்க்கலாகாதென்றார். உம்மிறுதி நிகழ்வும் எதிர்வும் உணர்த்துமாறு, வினையின் தொகுதி (சொல். 415) என்னும் எச்சவியற் சூத்திரத்துட் கூறுதும். இவ் உம் ஈறு இரண்டு காலமும் ஒருங்குணர்த்துதற் சிறப்பு நோக்கிச் செய்த என்பதனை ஆசிரியர் முற்கூறாராயினர். இனிப் பத்து என நிறுத்திப், பத்தெனத் தந்து புணர்க்கப் படாது, பப்பத்தெனவும், பஃபத்தெனவும் வழங்குமாறு உணர்க. ஒரோவொன் றென்பதும் அது. அதுதானே ஓரொன்றோரொன் றாகக் கொடு என்றாற் புணர்க்கப்படும். இனி, அன்னபிறவும் என்றதனானே, உண்டான் என்புழி உண் என்னும் முதனிலையுங், காலங்காட்டும் டகரமும், இடனும் பாலும் உணர்த்தும் ஆனும் ஒன்றனோடொன்று புணர்க்கப்படா, அவை நிறுத்தசொல்லுங் குறித்துவருகிளவியும் அன்மையின். கரியன் என்புழிக், கரு என நிறுத்தி அன் எனத் தந்து புணர்க்கப் படாது, அஃது இன்ன னென்னும் பொருள் தருதலின். ஏனை வினைச்சொற்களும் இவ்வாறே பிரித்துப் புணர்க்க லாகாமை உணர்க. இன்னும் அதனானே, கொள்ளெனக் கொண்டான் என்புழிக் கொள் என்பதனை என என்பதனொடு புணர்க்கப் படாமையும், ஊரன் வெற்பன் முதலிய வினைப் பெயர்களும், பிறவும் புணர்க்கப்படாமையும் கொள்க. இவ்வாசிரியர் புணர்க்கப்படா வென்ற இச் சொற்களையும், வடநூற்கண் முடித்த அனகன் அனபாயன் அகளங்கன் முதலிய வடசொற்களையும் 32பின்னுள்ளோர் முடித்தல் முதனூலொடு மாறுகொளக் கூறலா மென்று உணர்க. (77) 483. கிளந்த வல்ல செய்யுளுட் டிரிநவும் வழங்கியன் மருங்கின் மருவொடு திரிநவும் விளம்பிய வியற்கையின் வேறுபடத் தோன்றின் வழங்கியன் மருங்கி னுணர்ந்தன ரொழுக்க னன்மதி நாட்டத் தென்மனார் புலவர். இஃது - இவ்வதிகாரத்து எடுத்தோத்தானும் இலேசானும் முடியாது நின்றவற்றை யெல்லாம் இதனானே முடிக்க என அதிகாரப் புறனடை கூறுகின்றது. இதன் பொருள்: கிளந்த அல்ல செய்யுளுள் திரிநவும் - முன்னர் எடுத்தோதப்பட்டன அல்லாத சொற்கள் செய்யுளிடத்துத் திரிந்து முடிவனவும், வழங்கியல் மருங்கின் மருவொடு திரிநவும்-நால்வகை வழக்கும் நடக்கு மிடத்து மருவுதலோடு திரிந்து முடிவனவும், விளம்பிய இயற்கையின் வேறுபடத் தோன்றின்-முன்னர்க் கூறிய இலக்கண முறைமை யினின்றும் வேறுபடத் தோன்றுமாயின் அவற்றை, நன்மதி நாட்டத்து-நல்ல அறிவினது ஆராய்ச்சியானே, வழங்கியன் மருங்கின்-வழக்கு முடிந்து நடக்கு மிடத்தே, உணர்ந்தனர் ஒழுக்கல் என்மனார் புலவர்-முடிபு வேறுபாடுகளை அறிந்து நடாத்துக என்று கூறுவர் புலவர் என்றவாறு. உதாரணம்: தடவுத்திரை என உகரமும் வல்லெழுத்தும் பெற்றும் தடவுநிலை (புறம். 140) என உகரம் பெற்றும் அகர ஈற்று உரிச்சொல் வந்தது. அதவத்தங்கனி என வேற்றுமைக்கண் அகர ஈறு அத்துப் பெற்றது. 33கசதபத் தோன்றின் என அகர ஈற்றின் முன்னர்த் தகரங் கொடுக்க. 34நறவங் கண்ணி நற்போர்ச் செம்பியன் குரவ நீடிய கொன்றையங் கானல் என ஆகார இறுதி குறியதனிறுதிச் சினைகெட்டு இருவழியும் அம்முப் பெற்றன. முளவுமாத் தொலைச்சிய பைந்நிணப் பிளவை பிணவுநாய் முடுக்கிய தடியொடு விரைஇ (மலைபடு - 176) என அவ்வீறு அல்வழிக்கண் அம்முப் பெறாத முடிபுபெற்றன. திண்வார் விசித்த முழவொ டாகுளி (மலைபடு. 3), சுறவெறி மீன், இரவழங்கு சிறுநெறி (அகம். 318) இவை உகரம் பெறாமல் வந்தன. கள்ளியங் காட்ட புள்ளியம் பொறிக்கலை (அகம். 97) என இகர ஈறு வேற்றுமைக்கண் அம்முப் பெற்றன. தீயினன்ன வொண் செங் காந்தள் (மலைபடு. 145) என ஈகார ஈறு வேற்றுமைக்கண் இன் பெற்றது. நல்லொழுக்கங் காக்குந் திருவத்தவர் (நாலடி. 457) என உகர ஈறு வேற்றுமைக்கண் அத்துப்பெற்றது. ஏப்பெற்ற மான்பிணை போல் (சீவக. 2945) என ஏகார ஈறு வேற்றுமைக்கண் எகரம் பெறாது வந்தது. கைத் துண்டாம் போழ்தே (நாலடி. 19), கைத்தில்லார் நல்லர் (நான்மணிக். 69) எனவும், புன்னையங் கானல் (அகம். 80), முல்லையந் தொடையல் எனவும், ஐகார ஈறு வேற்றுமைக்கண் அத்தும் அம்மும் பெற்றன. அண்ணல் கோயில் வண்ணமே (சீவக. 126) என ஓகார ஈறு யகர உடம்படுமெய் பெற்றது. இனி 35அஞ்செவி நிறைய வாலின (முல்லைப். 89) என அல் வழிக்கட் ககரமும் அகரமுங்கெட்டன. மரவம் பாவை வயிறாரப் பருகி மரவநாகம் வணங்கி மாற்கணம் என இருவழியும் மகரம் விகாரப்பட்டு அம்முப் பெற்றன. காரெதிர் கானம் பாடினேமாக (புறம். 144), பொன்னந் திகிரி முன்சமத் துருட்டி (புறம். 368) பொன்னங் குவட்டிற் பொலிவெய்தி என னகர ஈறு இருவழியும் அம்முப்பெற்றன. வேர்பிணி வெதிரத்துக் கால்பொரு நரலிசை (நற். 62) என ரகர ஈறு வேற்றுமைக்கண் அத்துப் பெற்றது. நாவலந் தண்பொழில் (பெரும்பாண். 465), கானலம் பெருந்துறை (ஐங்குறு. 158) என லகர ஈறு வேற்றுமைக்கண் அம்முப் பெற்றன. நெய்தலஞ் சிறுபறை இஃது அல்வழிக்கண் அம்முப் பெற்றது. ஆயிடை யிருபே ராண்மை செய்த பூசல் (குறுந். 43) என்புழி ஆயிடை யென்பது உருபாதலின் நீடவருதல் (எழுத். 208) என்பதனான் முடியாது நீண்டு வகர ஒற்று வேறுபட முடிந்தது. தெம்முனை எனத் தெவ்வென்புழி வகரங் கெட்டு மகர ஒற்றுப் பெற்று முடிந்தது. அ என்னுஞ் சுட்டு அன்றியனைத்தும் எனத் திரிந்தது. முதிர்கோங்கின் முகை (குறிஞ்சிக்கலி. 20) எனவும், காய்மாண்ட தெங்கின் பழம் (சீவக. 31) எனவும், குற்றுகர ஈறு இன் பெறுதலுங் கொள்க. 36தொண்டு தலையிட்ட பத்துக்குறை (தொல். பொருள். 413) என ணகரம் இரட்டாது தகர ஒற்று டகர ஒற்றாய்க் குற்றியலுகரம் ஏறி முடிந்தது. இங்ஙனஞ் செய்யுளுட் பிறவும் திரிவன உளவேனும் இப் புறனடையான் முடிக்க. அருமருந்தானென்பது - ரகரவுகரங் கெட்டு அருமந்தானென முடிந்தது. சோழனாடு - சோணாடு என அன் கெட்டு முடிந்தது. பாண்டி நாடும் அது. தொண்டை மாநாடு - தொண்டை நாடென ஈற்றெழுத்துச் சில கெட்டு முடிந்தது. மலையமானாடு - மலாடு என முதலெழுத் தொழிந்தன பலவுங் கெட்டு முடிந்தது. பொதுவில் என்பது - பொதியிலென உகரந் திரிந்து இகரமாய் யகர உடம்படு மெய் பெற்று முடிந்தது. பிறவும் இவ்வாறே திரிந்து மருவி வழங்குவன எல்லாம் இப்புறனடையான் அமைத்துக் கொள்க. (78) குற்றியலுகரப் புணரியல் முற்றிற்று. கணேசய்யர் அடிக்குறிப்புகள்: 1. இதனை ஏழென்று கொள்வது அசைபற்றி. அசைகளாவன நேரசை நான்கும் நிரையசை நான்கும். அவையாவன:- 1. அது - குறில் தனியேவந்த நேரசை. 2. கொக்கு - குறில் ஒற்றோடு வந்த நேரசை. 3. காடு - நெடில் தனியே வந்த நேரசை. 4. பாட்டு - நெடில் ஒற்றோடு வந்த நேரசை. 5. மரபு - குறிலிணை தனியே வந்த நிரையசை. 6. வரம்பு - குறிலிணை ஒற்றோடு வந்த நிரையசை. 7. பலாசு - குறில் நெடில் இணைந்த நிரையசை. 8. கராம்பு - குறில் நெடில் ஒற்றோடு வந்த நிரையசை என்பனவாம். இவற்றுள் குற்றெழுத்துக்குப் பின்வந்த உகரம் முற்றியலுகரமாகலின் அதனை நீக்கி ஏனைய ஏழசைப்பின்னும் வந்தன குற்றியலுகரமாதல் காண்க. இதனை `நெடிலே குறிலிணை குறினெடி லென்றிவை - ஒற்றொடு வருதலொடு குற்றொற் றிறுதியென் - றேழ்குற்றுகரக் கிடனென மொழிப' என்னுஞ் சூத்திரத்தானறிக. இங்ஙனம் ஏழசைபற்றிக் குற்றியலுகரங் கொள்வார்க்குப் பிண்ணாக்கு. சுண்ணாம்பு, பட்டாங்கு முதலியனவும், வருவது போவது முதலிய னவும் ஏழசையுளடங்காவாதலின் அசைகொள்ளப்படாவென மறுப்பர் நன்னுல் விருத்தியுரைகாரரும். (நன்னூல் - சூ. 94.) 2. நிறையும் எனவும் பாடம். 3. இச் சூத்திரத்தில் `நிலையும்' என்பதை `நிறையும்' என்று பாடங் கொள்பவர் இளம்பூரணர். பேராசிரியரும் அங்ஙனமே பாடங் கொள்வர். பேராசிரியர் செய்யுளியலுள் ஞாயிறு முதலியன முற்றியலுகரம்போலக் கொள்ளப்படுமன்றிக் குற்றியலுகரம் முற்றியலுகரமாகாதென்றும் அங்ஙனம் கொள்ளின் குற்றியலுகரப் புணரியலில் நிறையும் என்று ஆசிரியர் பாடங் கொண்டதற்கு ஒருபயனின்றாமென்றும் (செய். 4-5-12) கூறியதை நோக்கும்பொழுது ஈண்டும் பேராசிரியர்க்கு நிறைவது போல வைத்துப் புணர்க்கப்படும் என்பதே கருத்தாதல் பெறப்படும். ஏனெனில் குற்றியலுகரம் மாத்திரை குறைந்தமை பற்றி மெய்யாக வைத்துப் புணர்க்கப்படுமோ உயிராக வைத்துப் புணர்க்கப்படுமோ என மாணாக்கருக்கு ஓரையம் வரும். அவ்வையத்தை நீக்க உயிர்போல நிறைவதாக வைத்துப் புணர்க்கப்படும் என்பது பொருத்தமாதலின். 4. சீர்நிலை கோடற்கண் இவ்வாசிரியரும் நிறையும் என்றாளுப. 5. சிறிது மிக்கு நிற்கும் என்பது. குற்றியலுகரம் என்பதனோடு மாறுபடுமாத லிற் பொருந்தாது. 6. கெடும் என்பது கருத்து. குறுகும் என்பது இருபொருள் பட நின்றது; என்னை? தோன்றும் எனவும் மாத்திரையிற் குறுகும் எனவும் இரு பொருள் தரலின். 7. இறுதி வல்லொற்றென்றது - உகரமூர்ந்த இறுதி வல்லொற்றை. அவ்வல் லொற்றாக இடையில் நின்ற மெல்லொற்றுத் திரியுமென்றபடி. உதாரணமாகக் குரங்கு என்பதிலுள்ள மெல்லொற்று, குரக்கு என இறுதிநின்ற வல்லொற்றாய்த் திரிதல் காண்க. 8. கிளையொற்றென்றது - மெல்லொற்றுக்கினமாகிய வல்லொற்றை. உதாரணமாக - எண்கு என்புழி ணகரம் எட்கு எனத் தனக்கினமாகிய டகரமாகத் திரிதல் காண்க; பிறவுமன்ன. சிலப்பதிகாரம் என்புழிச் சிலம்பு சிலப்பு என்றாயிற்று. 9. இச் சூத்திரம். 414ஆம் சூத்திரத்தால், மென்றொடர்மொழிக்கு எய்திய விதியை ஒருமருங்கு மறுக்கின்றது. 10. அரசக்கன்னி, முரசச்கடிப்பு இவற்றில் அரசு முரசு என்பன குற்றுகரவீறு. 11. ஈண்டு முடியாதென்றது னகரவீறாதலின். பார்ப்பான் சாதி என்றார்; பார்ப்பன மகன் என்பதற்கு பார்ப்பு என்பது நிலைமொழியென அறிவித் தற்கு பார்ப்பினுடைய மகன் என விரிக்க. 12. பார்ப்பாரச் சாதி எனவும் பாடம். 13. ஒன்று - ஒரு காசு. காயம் - சரக்கு. 14. அஃதடைவு - அதனை அடைதல் என விரியும். அஃதொட்டம் - அதனை ஒட்டல் என விரியும். 15. அளவாகும் என்பது அளவுப் பெயருக்கே கூறிய விதியாதலினால் நிறைப்பெயர் முதலியவற்றிற்கு `நிலைஇய' என்ற இலேசினாற் கொள்ளப்பட்டது. பதிற்று என்பதில் இற்று சாரியை யென்பர் நன்னூலார். 16. முதலீரெண்ணின் முன் உயிர் (குற்-50-ம் சூ) மூன்றன் முதனிலை நீடலுமுரித்தே. (குற்-52-ம் சூ). 17. வேண்டியது உயிர்முதன் மொழிவருதற்கண் ஒற்றிரட்டுதல். 18. இங்கே மாட்டேறு என்றது `அளந்தறிகிளவியும்' என்ற 41-ம் சூத்திரத்துக் கூறிய மாட்டேற்றை. 19. ஒற்றிரட்டுதல் என்றது இன்னி னகரவொற்று றகரமாய் இரட்டுதலை. 20. மாட்டேறு ஒவ்வாதன மேற்கூறி முடிப்ப என்றது. மாட்டேற்றினாற் பெற்ற முன்னை விதிகளுக்குப் பொருந்தாது வருவனவற்றிற்கு இனி விதி சொல்லப்படும் என்பதை. 21. ஆறாயிரம் என்புழி ஆறு குற்றியலுகரம்; அருத்தாபத்தி விதியால் வருமொழியாகிய ஆயிரம் ஏறி முடிந்தது. 22. கூறாத எண்ணாயிரம் என்றது - எட்டோடு ஆயிரம் புணருங்கால் ணகர மிரட்டுதற்கு விதி சூத்திரத்தாற் கூறாமையை. 23. னகரம் றகரமாதல் என்றது ஒன்பதிற்றுக்கோடி முதலியவற்றில் னகரம் றகரமாதலை. 24. நூறனியற்கை என்று மாட்டியதால் ஒன்பதனோடு நூறு புணருங்கால் தொள்ளாயிரம் என வந்தாற்போல ஒன்பதன்முன் நூறாயிரம் வருங் காலும் தொள்ளாயிர ஆயிரம் எனத்திரிந்து முடியுமென்பது பட்டதேனும் அங்ஙனம் முடியாதென்பது கருத்து. 25. ஈறு என்பதே அமையவும் சினையென்றது மிகையென்க. 26. ஒருபத்தொன்று ஒருபத்திரண்டு என்னும் எண்கள் அதிகாரத்தால் நின்ற நூறென்பதனோடு அடுத்துவருமென்றது. நூற்றொருபத்தொன்று. நூற் றொருபத்திரண்டு என நூறோடு அடுத்துவருதலை. அதிகாரமென்றது 67ஆம் சூத்திரம் முதலாக நூறு அதிகாரப்பட்டு வருதலை. 27. ஒற்று என்றது மூன்று ஐந்து என்பவற்றின் னகர நகர ஒற்றுக்களை ஏனைய வற்றிற்கு ஒற்றுத் திரிதற்கு முன் விதி சொல்லப்பட்டது. 28. வளங்கெழு என்பதில் மகரம் ஙகரமாகத் திரிந்தது. 29. குற்றியலுகரவிடைச் சொல்லாகிய ஞான்று என்பது. `அவா வென்ப வெல்லா வுயிர்க்குமெஞ் ஞான்றுந் தவா' எனவும் `இல் வாழ்க்கை வழியெஞ்ச லெஞ்ஞான்று மில்லை' எனவும் வரும். இதற்கு என்றும் எனக் கொள்க. `ஒழுகு நீராரல் பார்க்குங் குருகுமுண்டு தாமணந்த ஞான்றே' என்பது, தாமணந்த வன்றே எனக் கொள்க. இது காலத்தின்கண் வரும். இப்பகுதி சில பிரதிகளிற் காணப்படுகின்றது. 30. பண்புப்பெயர் - கருமை. பண்பு கொள்பெயர் - கரியன் முதலிய ஐம்பாற் சொற்கள். 31. கோட்டு நூறு - சுண்ணாம்பு. 32. பின்னுள்ளோர் என்றது - சின்னூலாரையும். நன்னூலாரையும். வீரசோழியக் காரரையும் போலும். 33. கசதப - அகரவீறு 34. நறா - ஆகாரவீறு; முளா, பிணா, இரா ஆகாரவீறு. 35. அகஞ்செவி அஞ்செவியெனச் ககர உயிர் மெய்கெட்டு நின்றது என்றபடி. 36. ஒன்பது தலையிட்ட - தொண்டுதலையிட்ட எனத்திரிந்து புணர்ந்த தென் பது நச்சினார்க்கினியர் கருத்து. ஒன்பதோடு தகரம் நிறீஇ னகரத்தை ணகர மாக்கித் தொண்பது என வைத்துப் பது என்பதிற் பகர அகரங் கெடுத்துத் தகர உகரத்திலுள்ள தகரத்தை டகர மாக்கி உகர மேற்றித் தொண்டு என முடிக்க. தொண்டு என்பது ஒன்பது என்றாயிற் றென்பர் சிலர். குற்றியலுகரப் புணரியல் முற்றிற்று. எழுத்ததிகாரம் முற்றிற்று நூலின் மரபு மொழிமரபு நுண்பிறப்பு மேலைப் புணர்ச்சி தொகைமரபு - பாலா முருபியலின் பின்னுயிர் புள்ளி மயக்கந் தெரிவரிய குற்றுகரஞ் செப்பு. எழுத்ததி காரத்துச் சூத்திரங்க ளெல்லா மொழுக்கிய வொன்பதோத் துள்ளும் - வழுக்கின்றி நானூற் றிருநாற்பான் மூன்றென்று நாவலர்கண் மேனூற்று வைத்தார் விரித்து. பின்னிணைப்புகள் 1. அளபெடை அளபெடை - அளபெடுப்பது; என்றது அளபெடுத்தலை யுடையதாய எழுத்தை. அளபெடுக்குங்கால் நெட்டெழுத்தேழும் அளபெடுக்குமென்றும், அவை இவ்வளவுமாத்திரை நீண்டன வென்பதை அவ்வவற்றிற் கினமாகிய குற்றெழுத்துக்கள் காட்டி அவற்றின்பின்னே நிற்குமென்றும் நன்னூலார் கூறுவர். தொல்காப்பிய உரையாசிரியர்களாய இளம்பூரணர், நச்சினார்க்கினியர் என்னு மிருவரும் நெடிலுங் குறிலுஞ் சேர்ந்து நின்று அளபெடுக்குமென்னும் பொருள்பட, நீட்டம் வேண்டின் அவ்வள புடைய கூட்டி யெழூஉத லென்மனார் புலவர் என்னுஞ் சூத்திரத்திற்கு, முறையே "நீண்டமாத்திரையை யுடைய அளபெடையெழுத்துப் பெறவேண்டின், மேற்கூறிய ஓரளவும் இரண்டளவுமுடைய குறிலையும் நெடிலையும் பிளவு படாமற் கூட்டியெழூஉக என்று கூறுவர் ஆசிரியர்" என்றும், "வழக்கிடத் துஞ் செய்யுளிடத்தும் ஓசையும் பொருளும் பெறுதல் காரணமாக இரண்டுமாத்திரைபெற்ற வெழுத்து அம்மாத்திரை யின் மிக் கொலித்தலை விரும்புவாராயின், தாங்கருதிய மாத்திரையைத் தருதற்குரிய எழுத்துக்களைக்கூட்டி அம்மாத் திரையை எழுப்புக; என்று கூறுவாராசிரியர்" என்றுங் கூறுவர். இவ்விருகூற்றுள் எக் கூற்றுப் பொருத்தமுடைத் தென்பதே யாம் ஈண்டு ஆராய்வது. அளபெடையென்பது குறில் நெடில் என்பது போல அள பெடுத்தலையுடையதாய ஓரெழுத்தையே யுணர்த்தும். ஆதலின், ஓரெழுத்தே தன்னளபினும் எழுந்தொலிக்கு மென்பது துணிபாம். ஏனெனில், இரண்டெழுத்துக் கூடி ஒலிக்குங்கால் எவ்வள வொலிக்குமென்றும், எவ்வாறொலிக்குமென்றும் தெரியவாரா மையின். அன்றியும், இரண்டுகூடியொலிக்குங்கால் மூன்று மாத்திரையின் மிக்கொலிக்குமென்பதூஉம் படும் ஆதலானும், அது பொருந்தாதென்பதே துணிபாம். இன்னும், நீட்டம் வேண்டி ஓரெழுத்தை நீட்டுங்கால் அதனையே வேண்டிய அளபு நீட்டலா மாதலின், மற்றோரெழுத்துக் கூட்டி நீட்டவேண்டு மென்னும் யாப்புறவின்மையானும், இன்னிசை யளபெடையிற் குற்றெழுத் தொன்றே நெடிலாக நீண்டு பின்னளபெடுத்தல் கண்கூடாதலானும் ஈரெழுத்துக்கூடி நீளுமென்றல் பொருந்தாமை துணிபாம். மேலும், எழுத்துக்களே சேர்ந்தொலிக்கு மென்பது கருத்தாயின் நெடிலுங் குறிலுங் கூடி எழுமென விளங்கக் கூறுவார்மன்; அங்ஙனங் கூறாமையானும் ஆசிரியர்க்கது கருத்தன்மை துணியப்படும். ஆதலின் "நீட்டம் வேண்டின்" என்னுஞ் சூத்திரத்துக்கு அவ்விரு வருரையும் பொருத்தமுடைய வல்லவென்பதே துணிபாம். அற்றேல் அச்சூத்திரத்துக்குப் பொருள் யாதோவெனின், கூறுதும். அவ்வுரை வருமாறு:- நீட்டம் வேண்டின் - (ஓரெழுத்து முன்னையினும்) மாத்திரை மிக்கொலித்தலை விரும்பின், அவ்வளபுடைய கூட்டி - விரும்பிய மாத்திரையையுடைய எழுத்துக்களை (அளவின் பொருட்டு) அவ்வெழுத்தோடுகூட்டி, எழூஉதல் - (அவ்வளபாக) அவ்வெழுத் தினிசையை எழுப்புக. என்மனார்புலவர் - என்று சொல்லுவர் புலவர் என்பதே. நீட்டம் - நீளல். அஃது "உரைப்பொருட் கிளவி நீட்டமும் வரையார்" என ஆசிரியர் பின்னுங் கூறுமாற்றான் அறியப்படும். இங்கே நீட்டம்வேண்டின் என்று கூறியதனையும், எழூஉதலென்ப தனையும் உற்றுநோக்குமிடத்து ஒன்றே தன்னிசை நீண்டு ஒலித்த லன்றி இரண்டுகூடி நீண்டிசைத்தலென்பது பொருந்தாமை பெறப்படும். பிறாண்டும், "அளபிறந்துயிர்த்தலும்" எனவும், "ஒற்றிசைநீடலும்" எனவும், "நீட வருதல் செய்யுளு ளுரித்தே" எனவும், "உரைப்பொருட் கிளவி நீட்டமும் வரையார்" எனவும், "யகார வுகாரம் நீடிடனுரித்தே" எனவும், "ஆறன் கிளவி முதனீ ளும்மே" எனவும், "முதனிலை நீடினுமான மில்லை" எனவும் ஆசிரியர் கூறிய சூத்திரங்களை நோக்கும் போது ஓரெழுத்தே நீளு மென்பதன்றி, இரண்டெழுத்துக்கூடி நீளுமென்பது ஆசிரியர் கருத் தன்மை துணியப்படும். படவே, அவ்வளபுடைய கூட்டுதல் அளவின் பொருட்டென்பது துணிபாம். துணியவே அவ்வெழுத் துக்கள் வரிவடிவில் அறிகுறியாய் வருமென்பதூஉம் பெற்றாம். அவை குறியாமாறு; வெண்பா இயற்ற விரும்பிய புலவன் ஓதல் வேண்டு மென இருசீரை எடுத்துக்கொண்டு அச்சீரிலுள்ள தளையை நோக்கியவிடத்து, ஓதல் என்பதன் இறுதியசையும், வேண்டுமென்பதன் முதலசையும் நேரசையும் நேரசையுமா யியைந்து நேரொன் றாசிரியத்தளையாக முடிந்தமைகண்டு, அதனை வெண்டளை யாக்குமாறு ஓதல் என்னுஞ் சொல்லிலுள்ள ஓகாரத்தின்பின் ஓகரத்தைச் சேர்த்து அவ்வளபாக அவ்வோகாரத்தை யெழுப்பி இறுதியசையை நிரையசையாக்கி வெண்டளை கோடலானும், `செறா அ அய்வாழிய' என்றவிடத்து ஈரெழுத்துக் கூட்டி அவ்வள பாக எழுப்பித் தளைசெய்து கோடலானும் அறிந்துகொள்க. ஈரெழுத்தும் அளவாகக் கொள்ளப்படும் என்பதற்கே அவ்வளபு டைய எனப் பன்மையாகக் கூறினார். இன்னும், இசைகுன்றியமொழியினிடத்து நெட்டெழுத் துக்குப் பின்னே அதனோடொத்த குற்றெழுத்து நின்று அவ் விசையை நிறைக்குமென்னும் பொருளமைய, குன்றிசை மொழிவயி னின்றிசை நிறைக்கும் நெட்டெழுத் திம்ப ரொத்தகுற் றெழுத்தே என ஆசிரியர் கூறியதனானும், குற்றெழுத்து இசைநிறைப்பதன்றி நெட்டெழுத்தோடுகூடி அளபெடாதென்பது நன்கு போதரும். அளபெடுக்குமேல் நெட்டெழுத்திம்பர் என்னாது நெட்டெழுத் துங் குற்றெழுத்துங்கூடி இசையை நிறைக்குமென விளங்கச் சூத்திரிப்பார்மன்; அங்ஙனஞ் சூத்திரியாமையானும் அவர்க்கது கருத்தன்றென்பது. அற்றேல், குற்றெழுத்து இசை நிறைக்கு மென்ற மையாற் குறியென்பது போதராதெனின், அது குறியாமாறு பின்னர்க் காட்டுதும். இனி, குற்றெழுத்துக்கள் குறியாயின் ஆகாரத்துக்கு அகர மன்றி இகரமுங் குறியாய் இடலாமே? அகர மேனிடுவா னெனின்; அறியாது கடாயினாய். என்னை? ஆகாரம் ஒருமாத்திரை நீளுங் கால் அகரவடிவாயே நீடலின், அவ்வடிவையுங் குறித்துக் காட்டு வதற்கே அகரம் வரிவடிவில் எழுதுவதாயிற்று. நச்சினார்க்கினியர் சந்தனகோல் குறுகினாற் பிரப்பங்கோலாகாது; அதுபோல உயிரதுகுறுக்கமும் உயிரேயாம் என்று கூறிய மறுதலை யுவமையை நோக்கும்போது ஓரொலி வேறோ ரொலியாகக் குறுகலும் நீடலும் அடையாதென்பது பெறப்படும். அற்றேல், இரண்டு மாத்திரை நீட்சிக்கு இரண்டுமாத்திரைபெறும் எழுத்தைக் குறியாக இடாது இரண்டு குற்றெழுத்தையிடுவது என்னை யோவெனின்? ஒரு மாத்திரையுடைய எழுத்து நீளுங்காற் பின்னும் ஒருமாத்திரை மிக்கு இரண்டு மாத்திரையாய் நீண்டு நெடிலாயவாறுபோல நெடிலும் நீளுங்கால் ஒவ்வோர் மாத்திரைமிக்கே நீளுமாதலின் இரண்டு குறில் குறியாக இட்டு ஆளப்படுமென்க. இக்கருத்து, "அளபெடை மிகூஉ மிகர விறுபெய - ரியற்கையவாகுஞ் செயற்கைய வென்ப" என்னுஞ் (சொல் - 125ம்) சூத்திரத்துக்குச் சேனாவரையருரைத்த உரை யானும் நன்குபுலப்படும். இன்னும், நச்சினார்க்கினியரும் ஒன்றுநின்று அதனொடு பின்னரும் ஒன்று கூடியே இரண்டாவ தன்றி இரண்டென்பது ஒன்று இன்றாகலின் என்றதனானும் அஃது உணரத்தக்கது. ஆகாரம் என்னும் நெட்டெழுத்து நீளுங் கால் ஒரு மாத்திரை நீண்டு அகரமாய் நின்று ஒலிக்குமென்பது பற்றியே. குன்றிசை மொழிவயின் நின்றிசை நிறைக்கும் நெட்டெழுத் திம்பர் ஒத்தகுற் றெழுத்தே. என்று ஆசிரியர் கூறுவாராயினர். இச்சூத்திரத்தில் ஆசிரியர் குற்றெ ழுத்து இசைநிறைக்குமென்றதினால் அக்குற்றெழுத்து எழுத்தாகக் கொள்ளப்படாதென்பதூஉம். ஒலிவடிவில் அவ்வளபெடை யோசை அவ்வவ் வினவெழுத்தாய் நீண்டொலிக்கு மென்பதூஉம் கூறினாராயிற்று. ஆகவே, குற்றெழுத்து ஒலி வடிவில் நெட்டெழுத்தின்பின் நின்று இசைநிறைக்கு மென்பதூஉம், வரிவடிவில் நெட்டெழுத்து அவ்வவ்வினமாய் நீண்டொலிக்கு மென்பதற்கு, மாத்திரைக்கும் குறியாய்நிற்கு மென்பதூஉம் தானேபோதருதலின் இசை நிறைக்கும் என்றதூஉம், குறி என்றதூஉம் தம்முள முரணாமை உணர்ந்துகொள்க. இக்கருத்தமையவே சிவஞானமுனிவரும் தாம் திருத்திய நன்னூல் விருத்தியுரையுள் "இசைகெடின்" என்னுஞ் சூத்திரத்து வரும் `குறியே' என்பதற்கு வரிவடிவில் அறிகுறியாம் என்றும், "குற்றுயிர் அளபினீறாம்" என்பதற்கு ஒலி வடிவினீறாமென்றும் உற்றுநோக்கிப் பொருந்தக் கூறியதூஉம் என்க. அற்றேல், நெட்டெழுத்துக்கள் நீளுங்கால் நீண்ட அவற்றை யும் ஓரெழுத்தாகக் கொள்ளலாமேயெனின், அவை மொழிக்குக் காரணமாய் வேறு எழுத்தோடு சேர்ந்தாயினும் தனித்தாயினும் பொருடாராமையின் அவை எழுத்தாகக் கொள்ளப்படா என்க. இக்கருத்தமையவே சிவஞானமுனிவரும், "இந் நெட்டெழுத் துக்கள் மொழிக்காரணமாய் வேறு பொருடந்து நிற்றலின், அதுபற்றி வேறெடுத்தெண்ணி உயிர் பன்னீரெழுத்தெனப் பட்டன. அளபெடை அந்நெட்டெழுத்தோடு குற்றெழுத் தொத்துநின்று நீண்டிசைப்ப தொன்றாயினும், மொழிக் காரணமாய் வேறு பொருடாராது இசைநிறைத்தன்மாத்திரைப் பயத்ததாய் நிற்றலின் வேறெழுத்தென வைத்தெண்ணப்படா தாயிற்றென்பது, நுண்ணுணர்வானோர்ந்துணர்க. `குன்றிசை மொழிவயின் நின்றிசை நிறைக்கும் - நெட்டெழுத்திம்ப ரொத்தகுற் றெழுத்தே' என்றதூஉம் இக்கருத்துப் பற்றி யென்க." எனச் சூத்திரவிருத்தியிற் கூறுதல் காண்க. இன்னும், நெடிலையும் குறிலையுஞ் சேர்த்துச் சொல்லுங் கால் இரண்டுஞ்சேர்ந்து பிளவுபட் டொலிக்குமேயன்றிப் பிளவு படா தொலிக்கமாட்டா. இதுபற்றியே சங்கரநமச்சிவாயரும் "இசைகெடின்" என்னும் நன்னூற் சூத்திரவுரையில் "எழுத்துப் பலவாயின ஒலிவேற்றுமையானன்றே அங்ஙனமான நெடிலது விகாரமாய் ஓரொலியாகப் பிறக்கும் அளபெடையை இரண் டெழுத்துக்கூடி மூன்று மாத்திரையாயிற்றெனக் கொள்ளின் இரண்டெழுத்தொலி யங்ஙனமின்மையானும், அளபெடை யென்னும் பெயர் ஏலாமையானும் அவ்வாறு கொள்ளாது அறிகுறியே என்று கோடற்குக் குறியே என்றார்" என்றுங் கூறினார். இனி, நெட்டெழுத்தே யளபெடுக்குமென்பது நச்சினார்க் கினியர்க்குங் கருத்தாதல், "நீட்டம் வேண்டின்" என்பதற்கு. "இரண்டுமாத்திரை பெற்ற வெழுத்து அம்மாத்திரையின் மிக்கு ஒலித்தலை விரும்புவாராயின்" என்றும், "அந்நெட்டெழுத்துக் களே யளபெடுத்தலிற் சொல்லாதலெய்தின" என்றும் கூறு மாற்றானும் அவர்க்கது கருத்தாதல் பெறப்படும். அங்ஙனேல், நெடிலுங் குறிலும் கூடியகூட்டத்துப் பிறந்து பின்னர்ப் பிளவுபடா ஓசையை அளபெடையென்று ஆசிரியர் வேண்டினாரெனக் கூறியது என்னையோவெனின், குறில் நெடிலுக்குப் பின்னே நின்று ஒலிவடிவையும், அளவையும் காட்டிக் கூடி நின்றாலன்றி அவ்வளபெடை தோன்றாமையின் அவ்வொற்றுமை பற்றி அவ்வாறு கூறினார்போலும். அவர் "இவைகூட்டிச் சொல்லிய காலத்தல்லது பெறப்படா. எள்ளாட்டியவழியல்லது எண்ணெய் புலப்படாவாறுபோல" எனக் கூறியதூஉம் இக் கருத்து நோக்கிப் போலும். இனி, "அவ்வளபுடையகூட்டி" யென்பதற்கு அவ்வளபுடைய ஓசைகளை அதிகப்படுத்தி எனப் பொருள் கூறலும் பொருந்தும். ஓசைகள் என்றது எழுத்தொலிகளை நான்குமாத்திரையுங் கோடற்குப் பன்மையாகக் கூறினார். இங்ஙனம் இச்சூத்திரத்திற்குப் பொருள்கூறாது நெடிலுங் குறிலுமாகிய இரண்டெழுத்துங்கூடியொலிக்குமெனப் பொருள் கூறின் ஆசிரியர் கருத்தொடு முரணுவதன்றி ஆசிரியரையும் பிழைபடுத்துவதாக முடியும். இரண்டெழுத்துக் கூடியொலிக்கு மென்றல் தமது கருத்துக்கு முரணுவதாற்றான் சிவஞான முனிவரும் "எழுத்துப்பலவாயின ஒலிவேற்றுமையானன்றே, அங்ஙன மாதலின், நெடிலது விகாரமாய் ஓரொலியாய்ப் பிறப்பதே யளபெடையென்பார் நெடி லளபெழுமென்றும், `அவற்றவற் றினக்குறில் குறியே' என்றுங் கூறினார்" என நன்னூலார் கருத்தை முற்கூறிப் பின் "ஆசிரியர் தொல்காப்பியனாரும் நீரு நீருஞ் சேர்ந்தாற்போல நெட்டெழுத் தோடு குற்றெழுத்து ஒத்து நின்று நீண்டிசைத்தலே யளபெடையென்பார், `குன்றிசை........ குற்றெழுத்தே' யென்றும், நெடிலுங் குறிலும் என்றும். நெடிலுங் குறிலும் விரலும் விரலும் சேரநின்றாற் போல இணைந்துநின்று அளபெடுக்கு மென்றல் பொருந்தாமைக்கு எழுத்தெடை யென்னாது அள பெடையென்னுங் குறியீடே சான்றாதலறிக" என்றும் கூறினார். இக்கருத்தை நாம் உற்று நோக்கும்பொழுது முனிவர் உரையாசிரி யர்களுடைய உரைக்கியைய அவ்வாறு கூறினாரன்றித், தமது கருத்தொடுபடக் கூறினாரல்லர் என்பது நன்கு தெளிவாம். இன் னுஞ் சூத்திரவிருத்தியின்கண் வடநூலார் `அ' என்னும் ஓரெழுத்தே ஒருமாத்திரையாய் உச்சரிக்குங்கால், குற்றெழுத் தென்றும், இரண்டு மாத்திரையாய்க் கூட்டி யுச்சரிக்குங்கால் நெட்டெழுத்தென்றும், மூன்று மாத்திரையாய் உச்சரிக்குங்கால் அளபெடையெழுத் தென்றும், மூவகைப்படு மெனக் கூறியதனாலும் இரண்டெழுத்துக் கூடி அளபெடுக்க மென்றல் தங்கருத்தொடு பட்ட உரையன் றென்பது நன்கு தெளியப்படும். அங்ஙனேல், "மூவள பிசைத்த லோரெழுத் தின்றே" என்றதனோடு மாறுபடுமேயெனில், மாறுபடாது. என்னை? அச் சூத்திரத்திற்குநெடிலுங் குறிலும்போல இயல்பாய வோரெழுத்து மூவளபிசைத்தலின்று என்பது பொருளாமன்றி, ஈரெழுத்துக் கூடி யொலித்தல் பொருளன்றாமாதலின். எனவே, விகாரமாய ஓரெழுத்து மூவளபிசைத்தலுண்டென்பது. விகாரம் என்றது ஈண்டு நீடலை. இந்நீடலை அனுவதித்தே பின் "நீட்டம்வேண்டி" னென ஆசிரியர் கூறினார். இதனானும் ஓரெழுத்தே நீடும் என்பது தெற்றெனப்படும். எழுத்துப் பேறள பெடைகளைப் புலுதசங்கு என்று வடநூலார் கூறுவர். இனி, பாணினியார் கூறிய "..........................................." என்னுஞ் சூத்திர வுரையில், குறிலும் நெடிலும் அளபெடையும் முறையே ஒருமாத்தி ரையும் இரண்டுமாத்திரையும் மூன்று மாத்திரையும் உடையன வென்றும், இவற்றிற்கு மாத்திரை வரையறுக்குங்கால் உ, ஊ, ஊஉ என்னுமெழுத்துக்களின் மாத்திரையே அளவாகக் கொள்ளப்படு மென்றும், இவற்றை யளவுகருவியாகக் கொண்டது. (முறையே) ஒன்று இரண்டு மூன்று என்னும் மாத்திரைகளை யுடைய கு, கூ, கூஉ என்னும் கோழியினுடைய அனுகரண வோசைபோலிருத்தல் பற்றியென்றும் கூறுமாற் றானும் ஓரெழுத்தே நீண்டொலிக்கு மென்பது வட நூலார்க்குங் கருத்தாதல் காண்க. இனிச் சேனாவரையர்க்கும் நெட்டெழுத்தொன்றே நீளு மென்பது கருத்தாதல். சொல்லதிகாரத்து 452-ம் சூத்திரவுரையில், "அளபிறந்தன வென்றது நெட்டெழுத்து அளபெடை யாயும், அளபெடை மூன்று மாத்திரையினிறந்தும் சேய்மைக்குத் தக்கவாறு நீண்டிசைக்கு மென்றவாறு" என்பதனாலறிந்து கொள்க. இதுகாறுங் கூறியவாற்றானே அளபெடுக்குங்கால் நெடிலுங் குறிலுங் கூடிநின்று அளபெடுக்குமென்றல் பொருந்தா தென்பதூஉம் நெட்டெழுத்தேழே அளபெடுக்குமென்பதூஉம், குற்றெழுத்துக்கள் குறியாய்வரும் என்பதூஉம் துணிபாதல் காண்க. "செந்தமிழ்" தொகுதி 26; பகுதி 7. 2. போலி எழுத்து பன்னருஞ் சிறப்பிற் பவணந்தியார் செய்த நன்னூற்குரை யுரைத்த உரையாளருட் சிலர், அம்மு னிகரம் யகர மென்றிவை எய்தி னையொத் திசைக்கு மவ்வோ டுவ்வும் வவ்வு மெளவோ ரன்ன என்னுஞ் சூத்திரத்தாற் பவணந்தியார் போலி எழுத்துணர்த் தினாரல்லர் எனவும், சந்தியக்கரமே யுணர்த்தினாரெனவும் உரைத்தனர். அவருரை பொருந்துமா? என்பதே ஈண்டு யாம் ஆராய்வது. அவருரைத்தவாறு பவணந்தியார் சந்தியக்கரமே யுணர்த் தினாராயின், `அம்முன் யகர மிகர' மென்றும், `அவ்வொடு வவ்வும் உவ்வும்' என்றும், `ஒத்துஎய்தின்' என்றும், `ஐயிசைக்கும்' என்றுந் தாங்குறித்த பொருள் இனிது விளங்கச் சூத்திரித்திருப்பார்மன்; அவ்வாறு சூத்திரியாமையின் அவர்க்கது கருத்தன் றென்பது பெறப்படும். அங்ஙனமன்று; `இவை' என்னுந் தொகைச்சொல்லானே இரண்டுங் கூடிவருமென்பது பெறப்படுதலின். ஏற்றவாறு மாற்றிப் பொருள் கோடலாமாகலானும் `ஒத்து' என்பதை `எய்தின்' என்ப தனோடு கூட்டிப் பொருளுரைக்கலாமாகலானும், சந்தியக்கர மென்பதே யாசிரியர் கருத்தெனின், என்முன் சாத்தன் கொற்றனி ருவரும் வந்தாரென்றால், இருவரும் வந்தாரென்பதல்லது கூடியே வந்தாரென்பது பெறப்படாமைபோல், இவை என்னுந் தொகைச் சொல்லானும் இரண்டும் வருமென்பது பெறப்படுமன்றிக் கூடியே வருமென்பது பெறப்படாமையின் மாற்றிப் பொருள் கோடலா மென்பது பொருந்தாமையானும், எய்தின் என்பதனோடு ஒத்து என்பதைக் கூட்டிப் பொருள்கோடல் வலிந்து கோடலாமாக லானும், அஃதவர் கருத்தாகாது. ஆகுமெனின், ஆசிரியர் சூத்திரம் யாத்தற்கறியாரென்பதுபடும்; ஆதலின் ஆகாதென்பதே துணிபாம். ஆகையால், ஆரிய மொழியிற் கூறிய சந்தியக்கரத்தைத் தமிழ் மொழிக்கண்ணும் புகுத்தவேண்டி நன்னூலார் போலியுணர்த்திய சூத்திரத்தைச் சந்தியக்கர முணர்த்தியதெனக் கொண்டு வலிந்து பொருள் கோடல் உண்மைப் பொருளும் பொருத்தமுமன்றாம். பின் இதன் உண்மைப்பொருள் யாதெனிற் கூறுதும்:- அகரத்தின் முன இகரமும் யகரமுமென்று சொல்லப்பட்ட இவைகள் தனித்தனி வந்தால் (அஃதாவது அ இ; எனவும், அ ய்; எனவும் வந்தால்) ஐ போன்று ஒலிக்கும் என்பதும்; அகரத்தின் முன் உகரமும் வகரமும் வந்தால் (அஃதாவது அ உ) எனவும், அ வ்; எனவும் வந்தால்) ஔகாரம் போன்று ஒலிக்கும் என்பதுமே ஆசிரியர் கூறிய சூத்திரமுறைக்கேற்ற உண்மைப்பொருளாம். எனவே போலி எழுத்தே கூறினாராயிற்று; இதுவே நன்னூற் பழைய வுரையாசிரியர் மயிலைநாதர்க்குங் கருத்தாதல் அவருரை நோக்கி யுணர்க. அன்றியும், சந்தியக்கரமே கூறினாராயின் எகர ஒகரங் களையுமுடன் கூறியிருப்பார். அங்ஙனங் கூறாமையானும் போலி யுணர்த் தினாரென்பதே துணிபாம். அங்ஙனேல், இங்ஙனங் கூறிய போலியெழுத்தால் வரும் பயன் யாதோவெனின், செய்யுளில் வரும் எதுகைக்கண் இவ்வாறு கொள்ள நிற்றலே. அதனை, "ஐயெ னெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்" என்பதன்கண்ணும், "கையகத் ததுவது பொய்யா காதே" என்பதன் கண்ணும், "கையது வேலே காலன புனைகழன் - மெய்யது வியரே மிடற்றது பசும்புண்" என்பதன் கண்ணும், "ஔவிய நெஞ்சத்தா னாக்கமுஞ் செவ்வியான் - கேடும் நினைக்கப் படும்" என்பதன் கண்ணும் வருமெதுகைத் தொடைகளில், `மெய்பெற' என்பதற் கியைய, `ஐயென்' என்பதை `அய்யென்' எனவும், `பொய்' என்பதற் கியையக் `கை' என்பதைக் `கய்' எனவும், `மெய்' என்பதற்கியையக் `கை' யென்பதைக் `கய்' எனவும், `செவ்வியான்' என்பதற்கியைய, `ஔவியம்' என்பதை `அவ்வியம்' எனவும் கொள்ள நிற்றல் காண்க. இவ்வாறு எதுகைக்கட் போலியாகக்கொள்ள நிற்றல் பற்றியே, "ஆயிரு தொடைக்குங் கிளையெழுத் துரிய" என்னுஞ் சூத்திர வுரையின்கண் நச்சினார்க்கினியரும் "ஐகார ஔகாரங்கள் போலிவகையாற் கிளையெழுத்தெனப்படு" மென்றார். இனி, ஆசிரியர் தொல்காப்பியரும் "அகர விகர மைகார மாகு" மென்றும், "அகர வுகர மௌகார மாகும்" என்றும், இகர உகரங்களை முன்னர்க் கூறிப், பின்னர் "அகரத் திம்பர் யகரப் புள்ளியு - மையெ னெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்" என யகரத்தை வேறுவைத்துக் கூறியதும் போலியெழுத்தாமாற்றை நன்கு புலப்படுத்தற்கேயாம். அன்றி, நன்னூலுரையாளர் சிலர் கூறியவாறு அகரவிகரங்களுக்கிடை யகரங்கலந்து ஐகாரமாகும் என்பதே தொல்காப்பியர் கருத்தாயின் `அகர விகரநடுவண் யகரம் கலந்து ஐகாரந் தோன்றும்' என்பதமையச் சூத்திரித்திருப்பார்; அங்ஙனஞ் சூத்திரியாமையின் அவர்க்கது கருத்தன்றாதல் தெள்ளிதிற் பெறப்படும்; அன்றியும் யரகப் புள்ளியும் என இறந்தது தழீஇய எச்சவும்மை கொடுத்துக் கூறினமையானு மது தெளிவாம். இன்னும், `ஐயெ னெடுஞ்சினை' என்றதனானும் சந்தியக் கரமென்பார் கருத்து முழுதும் தூரம்போய்த் துச்சமாமாறுணர லாம். எங்ஙனமெனின், அஃது அதன் பொருளை ஆராயவே பெறப்படும். `ஐயெ னெடுஞ்சினை' என்பதற்கு உரையாசிரியரும் நச்சி னார்க்கினியரும் கூறிய பொருள் ஐ யென்னு நெட்டெழுத்து தென்பது. சினை என்பது எழுத்துக்குப் பரியாயப் பெயராகாது. ஆதலால், சினையென்பது உறுப்பென்னும் பொருளை யுணர்த்தி, ஆகுபெயராய் எழுத்தை யுணர்த்தும். எனவே சினை என்பதற்கு உறுப்பெழுத்தென்பது பொருளாம். அது:- தொல்காப்பியர், குற்றிய லிகர நிற்றல் வேண்டும் யாவென் சினைமிசை யுரையசைக் கிளவிக் காவயின் வரூஉ மகர மூர்ந்தே (34) என்றும், சுட்டுச்சினை நீடிய வையெ னிறுதியும் (159) என்றும், குறியத னிறுதிச் சினைகெடவுகர மறிய வருதல் செய்யுளு ளுரித்தே (234) என்றும், நூறென் கிளவி யொன்றுமுத லொன்பாற் கீறுசினை யொழிய வினவொற்று மிகுமே (472) என்றும் கூறிய சூத்திரங்களில் வரும் `சினை' என்னுஞ் சொற்களின் பொருளை ஆராயவே நன்கு விளங்கும். சுட்டுச்சினை என்பதற்குச் சுட்டாகிய சினையெழுத்தென்று நச்சினார்க்கினியர் பொருளு ரைத்தமையானு மஃதுணரலாம். அங்கே சினை எழுத்தென்றுரைத்தவர், இங்கே எழுத்தெனப் பொருளுரைத்த தென்னையெனின், சந்தியக்கர முணர்திய திதுவெனப் பிறர் கூறுவார் என்பதுணர்த் தியதெனப் பிறருரைப்பாரென்ப துணர்ந்திராமையின் அவ்வாறு சுருக்கிக் கூறினார். உணர்ந்திருப்பாராயின் சினையெழுத்தென்றே விரித்துரைத்திருப்பார். உரையாசிரியருமவ்வாறே கூறியிருப்பார். சினை எழுத்தென்பதே அவர்கள் கருத்தாதல் அவர்கள் காட்டிய உதாரணங்களாலுணரலாம். ஆகையால் `ஐயெ னெடுஞ்சினை' என்பதற்கு, ஐயென்னும் நெடிய உறுப்பெழுத்தென்பதே பொரு ளாகி, ஐயன் கையன் என்பன போன்ற சொற்களின் முதற்கண். அவற்றிற் குறுப்பாக நிற்கும் ஐ யென்னும் நெட்டெழுத்தென்பது போதருமன்றித் தனி ஐ என்பது போதராது. போதராமையின் அகரமும் யகரமுஞ் சேர்ந்து சந்தியக்கரமாமா றுணர்த்தினா ரல்லர் என்பது நன்கு உணரக்கிடத்தல் காண்க. அற்றேல், ஐ என்பது பலவெழுத்துக் கூடியதாதலின், சினை என்பதற்கு ஐயின் சினை என்றாலென்னையெனின், அவ்வா றுரைத்தற்கு `ஐயெனெடிலின்சினை' என்றிருத்தல் வேண்டும். அவ்வாறின்மையின் அதன் சினையென உரைக்கலாகாதென்பது. அற்றேல், மொழிக்குறுப்பாதல்பற்றிச் சினையென எழுத் தைக் கூறினாரென்றா லென்னையெனின், "ஐஔ வென்று மாயீ ரெழுத்திற்" கெனவும், "நெட்டெழுத் திம்ப ரொத்த குற்றெழுத்தே" எனவும், "வல்லெழுத் தென்ப கசட தபற" எனவும், இவ்வாறே யாண்டும் எழுத்தென்றே ஆசிரிய ராளுவராதலின் அதுவும் பொருந்தாதென்பது. இன்னும் ஆசிரியர் தொல்காப்பியர் "இகர யகர மிறுதி விரவும்" என இறுதிப்போலி கூறியதனானே, இது முதற்கண் வரும் போலியெழுத்தென்பது கொள்ள வைத்தமையானும், இது சந்தியக்கரமுணர்த்திய தன்மை தெளியலாம். "இகர யகர மிறுதி விரவு" மென்ற சூத்திரம் இறுதிப்போலி என்றல் பொருந்தாது. அது `அகரத் திம்பர் யகரப்புள்ளியு' மென்புழி இம்பர் என்பது பின் எனப் பொருள்படுமேனும், காலம் பற்றிவந்த பின்னோ இடம் பற்றி வந்தபின்னோ என்பது தெளியப்படாமையின் அதனை விளக்கிய வந்ததென்றா லென்னையெனின், நெட்டெழுத் திம்பருந் தொடர்மொழி யீற்றும் (36) என்றும், நெட்டெழுத் திம்ப ரொத்தகுற் றெழுத்தே (41) என்றும், நெட்டெழுத் திம்பர் (196) என்றும், குற்றெழுத் திம்பரும் (267) என்றும் ஆசிரியர் கூறியவிடங்களிலெல்லாம் அவ்வாறு விளக்கல் வேண்டுமென்பதுபட்டு ஆசிரியர்மேற் குற்றம்பற்றுமாத லானும், ஆசிரியர் இம்பர் என்று கூறிய இடங்களிலெல்லாம் அச்சொல் காலம் பற்றிய பின்னாகவே பொருள்படுதலானும் அது பொருந்தா தென்பது. இனி, `அகரத்திம்பர்..... தோன்றும்' என்னுஞ் சூத்திரத்து வரும் `மெய்பெறத் தோன்று' மென்பதனால் அகர யகரம்போல, அகர இகரம் ஐயின்வடிவு நன்கு புலப்பட வாராதென்பது பெறப்படுத லினாலும், செய்யுட்கட் பயின்றுவாராமையானும், நச்சினார்க்கினியர் `அகரவிகர மைகாரமாகும்' `அகரவுகர மௌகார மாகும்' என்னும் இரண்டு சூத்திரவுரையின் கண்ணும் அது கொள்ளற்க என விலக்கி, செய்யுட்கட்பயின்று வருதலானே, `அகரத்திம்பர்........ தோன்றும்', என்பதனுரையின்கண் `அது கொள்ளற்க' என விலக்காது பின் இறுதிப்போலிகூறும் `இகர யகர மிறுதி விரவும்' என்னுஞ் சூத்திரவுரையின்கண் செய்யுள் வழக்கன்மையின், அது கொள்ளற்க என விலக்கினாரெனினும், ஆசிரியர் கூறியதனால் அவை அக்காலத்துப் போலி யெழுத்தாகப் பயின்றுவந்தன வென்பதே துணிபாம். இனி, அகர இகரம் அகர உகரம் இகரம் என்னும் மூன்றும், முறையே ஐ ஔ ய் என்னும் மூன்றற்கும் போலி யாக, இக்காலத்துப் பயின்று வாராமையின் அவற்றை நச்சினார்க்கினியர் விலக்கினா ரெனினுமமையும்; பிரயோக விவேகநூலார்க்கு மிதுவே கருத்தாதல், "அ இ, அ உ என்பனவும், இக்காலத்துப் பயன் படாமலே நின்ற வெனினுமமையும்" என வுரைத்தமை யானறிக. இனி உரையாசிரியர், `அகர விகர மைகார மாகும்' என்பத னுரையின் கண்மாத்திரம் விலக்கி ஏனையவற்றினுரையிற் கூறாது ஒன்றற்குக் கூறியதே ஏனையவற்றிற்கும் அமையுமென விடுத்தா ராதலின், அவ்வாறே நச்சினார்க்கினியரும் விடுத்தாரெனல் அமையுமெனின், அங்ஙனமன்று; `உரையாசிரியர் அது கொள்ளற்க' என விலக்காமை அவருரையிற் காண்க எனப் பிரயோக விவேக நூலார் கூறினமையானே உரையாசிரியர் அது கொள்ளற்க எனக் கூறினாரல்லர் என்பது பெறப்படுதலினாலும், நச்சினார்க்கினியர் முன்னும் பின்னும் விலக்கினமையானும், அவர் அகர யகரத்தையும் அகர வகரத்தையும் செய்யுட்கண் வழங்கல் பற்றி விளக்கா தொழிந்தனர் என்பதே துணிபாம். அங்ஙனேல் உரையாசிரியருரையில் ஓரிடத்திற் காணப்படுத லென்னையெனின், அது எழுதுவோரால் இடைச்செருகலாய் நேர்ந்தே வழுவாகும். மேலும், முதியோர் சிலர், ஐயன் என்பதற்கு அய்யன் என்றும், ஔவை என்பதற்கு அவ்வை என்றும் எழுதலை யாம் இக்காலத்துக் கண்கூடாகக் கண்டிருக்கின்றேம். ஆதலின் அக்காலத்தும் அவ்வாறு எழுதி வழங்கினமை கண்டு ஆசிரியர் தொல்காப்பியர் சூத்திரஞ் செய்தாரென்பதே துணிபாம். அவர் வழி பாத்தமையின் நன்னூலாரும் அவ்வாறே செய்தார். நன்னூலார் வடமொழி மதத்தை மேற்கொண்டவராதலின், இச் சூத்திரத்தையுமவ்வாறே கொண்டு கூறினாரென்றா லென்னை யெனின், அவ்வாறு கொண் டிலரென்பது யாங்கூறிய சூத்திரப் பொருளானும் இது சந்தியக்கர முணர்த்தியதெனப் பிறர்கூறுங் கூற்றை யாம் மறுத்துரைத்தமை யானு மினிதுணரலாமாதலின் அது பொருந்தாதென்பது. இனி, வடமொழியில் வரும் எ, ஒ, ஐ, ஔ என்னும் எழுத்துக் களையும் சந்தியக்கரமென்று கூறுவதினும், அவை போல அகர விகர முதலிய எழுத்துக்கள் சேர்ந்து ஒலிக்கு மென்பதே பொருத்தம் போலும். எங்ஙனமெனின்:- சந்தியிலே (புணர்ச்சியிலே) பதத்தினிறுதியில் வரும் அகரத்திற்கும், பதமுதலில் வருமிகரத்திற்கும் அவ் விரண்டன் பிறப்பிடத்தையும் தனக்குப் பிறப்பிடமாகக் கொண்ட ஏ என்னுமெழுத்து ஆதேசமாக வருதலின், அவ்விரண்ட னொ லியும் அமைந்தமை பெறப்படுமாதலின், ஏனையவுமிவ்வாறே யமைந்தமை வடமொழிச் சந்தியிலக்கணம் நோக்கியுணர்க. அன்றி, இரண்டெழுத்துக் கூடியவெனில், அவற்றைத் தனி எழுத்தாக வைத்து மகேசுரர் சூத்திரஞ் செய்யார். அவ்வாறே தமிழிலக்கண நூலாசிரியர்களாகிய தொல்காப்பியர் முதலியோரும் ஐ ஔ என்பவைகள் சந்தி எழுத்தாயின் அவற்றைத் தனியெழுத்தாக வைத்துச் சூத்திரஞ் செய்யார். ஆதலின், ஐ ஔ என்பவை போல. அ இ, அய்; அஉ, அவ் என்பவை ஒலிக்குமென்பதே அவ்வா சிரியர்கள் கருத்தென்பது துணிவாதல் காண்க. - இலக்கணவரம்பு "செந்தமிழ்" தொகுதி 22, பகுதி-3. 3. இலக்கணக் கொள்கைக் கட்டுரைகளிலே கணேசையரின் அணுகுமுறை இருபதாம் நூற்றாண்டு முற்பாதியிலே இலங்கை யாழ்ப்பாணத்தி லிருந்து ஆறுமுகநாவலர் மரபிலே. தமிழ்க் கல்விமான்களாகப் பிரிகாசித்த பலருள், சுன்னாகம் குமாரசாமிப்புலவரும், மகாவித்துவான் கணேசையரும ஈடிணையற்றவர்கள், ஆறுமுகநாவலலின் மருகரான வித்துவசிரோன்மணி பொன்னம்பலபிள்ளையின் மாணவராக இருந்த கணேசையர் (1878 - 1955) பொன்னம்பலபிள்ளையின் மறைவின் பின் சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரின் மாணவரானார். உரையாசிரியர் மட்டுவில் க.வேற்பிள்ளை. காசிவாசி செந்திநாதையர் முதலியோரும் ஆசிரியராக விளங்கியவர்கள், இராகவையங்கார் என்ற பெயர் தாங்கிய அறிஞர்கள் இருவரும் வேண்டிக் கொண்டபடி, செந்தமிழ் என்னும் மதுரைத் தமிழ்ச சங்க வெளியீட்டுக்கு. கணேசையர் நீண்டகாலமாக ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதி வந்தார், கணேசையரின் அறிவு வளர்ச்சியில்., அவருக்குச் சுன்னாகம் பிராசீன பாடசாலையிலே. தலைமைத் தமிழாசிரியராகக் கிடைத்த பதவிக்காலம் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது, மதுரைத் தமிழ்ச் சங்கத்தை ஒத்ததாக இலங்கையிலும் ஓர் அமைப்பு வேண்டுமென்ற அபிலாசை 1921 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம், என்ற அமைப்பு வித்தியாதரிசி யா, கி, சதாசிவ ஐயர் முயற்சியில் உருவாக லாயிற்று, அச்சங்கம் நடத்திய பண்டித. பாலபண்டித பிரவேசபண்டிதத் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார் செய்வதற்காகப் பிராசீன பாடசாலை யொன்று அதே ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது, அப் பாடசாலையி லே கணேசையர் தலைமைத் தமிழாசிரியராகக் கடமையாற்றிய காலம் எட்டாண்டுகளா பதினோராண்டுகளா என்பதிலே கருத்து வேறுபாடு காணப்படுகிறது, கணேசையர் பதவி விலகிய பின்பும் தனிப்பட்ட முறையிலே, திண்ணைப் பள்ளிக்கூட அமைப்பிலே மாணவர்களுக்குத் தொடர்ந்து பாடஞ் சொல்லி வந்தாராதலின், அவர் கல்வி வளர்ச்சி தடைப்படவில்லை, பிராசீன பாடசாலை யிலே. பாலக்காட்டிலிருந்து வந்த வேதசிவாசரதர் சிதம்பர சாஸ்திரியுங் கடமையாற்றியதால், கணேசையர் சங்கதமொழி அறிவையும் விருத்தி செய்து கொண்டார், கணேசையர் தமிழ்ப்பணிகள் பரந்து பட்டன. புலவர். வாழ்க்கை வரலாற்றாசிரியர். இலக்கிய உரையாசிரியர். இலக்கண ஆராய்ச்சியாளர் என்று பலவாறு வருணிக்கப்படத்தக்க முறையிலே. அவர் பணிகள் அமைந்தன. இலக்கண ஆராய்ச்சியாளர் என்ற முறையிலேயே, அவர் பெருஞ் சிறப்புப் பெறுகிறாரெனலாம், பிராசீன பாடசாலையிற் கற்பித்துவந்த காலத்திலே அவர் தாம் முன்னர் கற்றனவற்றைப் பீடிகையாகக் கொண்டு. விசேடமான இலக்கணத் துறையில் ஆர்வத்துடன் ஆராய்ச்சி செய்தார். தொல்காப்பியம். நன்னூல் என்பன வற்றுக்குப் பல்வேறு ஆசிரியர்கள் கண்ட உரைகளையெல்லாம் நன்கு ஒப்புநோக்கி ஆராய்ந்ததன் பயனாக. எத்தனையோ புதிய விளக்கங்கள். திருத்தங்கள் என்பனவற்றைக் கண்டு கொள்ளக் கூடியவராயினார். அவர் பிராசீன பாடசாலையிற் கடமை யாற்றிய காலத்திலும் அக்காலத்திற்கு வெகு அண்மையிலுமே. அவருடைய இலக்கண ஆராய்ச்சி முடிபுகள் கட்டு உருவத்திலே வெளிவந்தன, கணேசையர் இலக்கண ஆராய்ச்சிக் கட்டுரைகளிலே காட்டிய திறமை, தொல்காப்பியம் முழுவதையும் தம்முடைய உரைவிளக்கக் குறிப்புகளோடு வெளியிடும் சந்தர்ப்பத்தை. அவருக்குப் பெற்றுக் கொடுத்தது, ஈழகேசரிப் பத்திராதிபர் பொன்னையாவின் வேண்டுகோட்படி, தொல்காப்பியம் எழுத்ததிகாரம், நச்சினார்க்கினியம் தாமோதரம்பிள்ளை பதிப்பு. கணேசையரின் உரைவிளக்கக் குறிப்புகளோடு கணேசையர் பதிப்பாக 1937 இல் வெளிவந்தது, கணேசையர் பதிப்பு என்ற பெயருடள் வெளியான எழுத்ததிகாரத்துக்கு இருந்த வரவேற்பு அடுத்த ஆண்டிலேயே தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையத்தைக் கணேசையர் தம்முடைய உரைவிளக்கக் குறிப்புகளோடு வெளியிட வழிவகுத்தது. இவ்விரு பதிப்புகளும் வெளிவரமுன்பு கணேசையரின் இலக்கண நுண்ணறிவு, அவர் கட்டுரைகள் வெளியான சஞ்சிகைகளை வாசித்த தமிழ் அறிஞர்களுக்கிடையே மட்டும் பிரபலமெய்தியிருந்தது, இப்பதிப்புகள் வெளியான பின்னர், தமிழ் நாட்டறிஞர் ஐயரின் அறிவின் பெருமையையும். ஆற்றலையும் உள்ளவாறுணர்ந்து மதிக்கலாயினர். ஈழகேசரிப் பத்திராதிபர பொன்னயாவின் தூண்டுதலில். அண்மையில் மறைந்த முதுபெரும் தமிழறிஞர் பண்டிதமணி சி. கணிபதிப்பிள்ளையின் உதவியுடன் பொருளதிகாரத்துக்கு உரைவிளக்கக் குறிப்புகள் எழுதத் தொடங்கிய கணேசையர் பொருளதிகாரம் பேராசிரியம் கடைசி நான்கு இயல்களை 1943 இலும்,. நச்சினார்க்கினியம் முதல் ஐந்து இயல்களை 1948 இலும் வெளியிட்டனர், சென்னை இந்துப் பத்திரிகையில் ஐயரின் தொல்காப்பியப் பிரசுரங்களை விமர்சனங் செய்த சுப்பிரமணிய சாஸ்திரி எழுதிய கட்டுரைகள் ஐயரின் ஆழ்ந்த அறிவு, ஆராய்ச்சித் திறமை நுண்ணிய விளக்கம் என்பனவற்றிற்கு மிக்க சான்று பகருந் தன்மையின, தொல்காப்பியம் முழுவதற்குமான கணேசையரின் உரைவிளக்கக் குறிப்புகளை ஒரு சிறுகட்டுரையிலே ஆய்வு பூர்வமான மதிப்பீடு செய்ய இயலாது. கணேசையரின் இலக்கணக் கட்டுரைகளிலே தெரிந்தெடுத்த சிலவற்றை அவரின் உரை விளக்கக் குறிப்புகளோடு வெளிவந்த தொல்காப்பியப் பதிப்புகளிலே அனுபந்தங்களாகச் சேர்த்துள்ளனர், எழுத்ததிகாரப் பதிப்பின் இறுதியிலே போலி எழுத்து. அளபெடை என்னும் இரு கட்டுரைகளையும் சொல்லதிகாரப் பதிப்பின் இறுதியிலே தொல்காப்பியச் சூத்திரப் பொருளாராய்ச்சி, பிறிது பிறிதேற்றல், ஆறனுருபு பிறிதேற்றல், இருபெயரொட்டாகுபெயரும் அன்மொழித் தொகையும், தொகைநிலை என்னும் ஐந்து கட்டுரைகளையும். பொருளதிகாரம் நச்சினார்க்கினியப் பதிப்பின் இறுதியிலே சிறுபொழுதாராய்ச்சி என்னும் ஒரு கட்டுரையையும் தொகுத்துள்ளனர். இக்கட்டுரைகள் யாவும் செந்தமிழ் என்ற சஞ்சிகையிலே வெளியாகியவை. கணேசையருடைய மாணவரான பண்டித வித்துவான் க. கி. நடராஜன். இக்கட்டுரைகளைப் பற்றிப் பின்வருமாறு கூறியுள்ளார். இவ்வாராய்ச்சிகளிற் சிவஞான முனிவரின் இலக்கணக் கொள்கைகளை மறுத்து வேறு கொள்கைகளை இவர்கள் நிறுவியிருக்கிறார்கள். இதனை இவர்கள் தமது கூர்த்த மதிகொண்டு செய்தமை இவர்தம் நுண்ணறிவைக் காட்டும் சிவஞான முனிவரும் அவர் அணுகுமுறையும் சிவஞான முனிவருடைய திறமையையும் பெருமையையும் அறிந்து கொண்டால் மட்டுமே, அந்தப் பின்னணியிலே கணேசையரின் பணியை மதிப்பீடு செய்யலாம். பதினெட்டாம் நூற்றாண்டு பிற்பாதியிலே, சிவஞான முனிவர் வடநூற்கடலும் தென்னூற் கடலும் நிலைகண்டுணர்ந்து இலக்கியம், இலக்கணம், தத்துவம், தர்க்கம் முதலிய துறைகளிலே ஒப்பாரும் மிக்காருமில்லாமல் விளங்கிச் செய்யுள் நூல்களும் உரைநடை நூல்களும் பலவாக இயற்றியவர். சிவஞான முனிவரின் இலக்கண ஆராய்ச்சித் திறன் பற்றிப் பேராசிரியர் கா. சுப்பிரமணியபிள்ளை (சுவாமி விபுலானந்தர், சோமசுந்தர பாரதியார் ஆகியோரைத் தொடர்ந்து அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே தமிழ்ப் பேராசிரியராக விளங்கியவர்) சிவஞான முனிவர் வரலாறும் நூலாராய்ச்சியும் என்ற நூலிலே கூறியுள்ள மேல்வரும் பகுதிகள் நோக்கத்தக்கன. வடமொழியிலே மாபாடியம் என்ற பெயர் ஆசிரியர் பதஞ்சலியார் பாணினியின் இலக்கண நூற்கியற்றிய பேருரைக்கே அமைந்தள்ளது. ஆசிரியர் சிவஞான சுவாமிகள் தமிழ்ப் பேரிலக்கணமாய தொல்காப்பியப் பாயிரத்துக்கும் முதற் சூத்திரத்திற்கும் பாடியம் உரைத்தனர். பிற சூத்திரங்களுக்கு அவர் உரைகாண்டற்குரிய தவம் தமிழ்நாட்டினர்க்கு வாய்த்திலது மொழித்திறத்தின் முட்டறுத்தற் பொருட்டுத் தொல்காப்பியமாகிய இலக்கண நூலிற்கு விருத்தியுரை எழுதுவான் புகுந்து பாயிரத்திற்கும் முதற் சூத்திரத்திற்குமே அகலம் எழுதி முடித்தனர், பிறவற்றிற்கு எழுவதன்முன் முதல் நூலாகிய சிவஞான போதப் பொருள் விரிப்பக் கருதி, அதனையே முற்றிலும் எழுதி முடித்துப் பெரும்பயன் விளைத்தனர். வீட்டு நூலாகிய இதன் கண் கருத்தூன்றிப் பெற்ற பின் கருவி நூலின்கண் அது செல்லாமையின் தொல்காப்பியத்துக்கு முழுப்பேருரை எழுதும் பேறுயாம் பெற்றிலம் சிவஞான முனிவரைப் பற்றி மேலும் சில பேராசிரியர்கள் கூறியுள்ளவற்றைப் பார்க்கலாம். தமிழ் உரைநடை வரலாறு என்னும் நூலிலே பேராசிரியர் வி. செல்வநாயகம் கூறியுள்ளமை வருமாறு: உரையாசிரியர்களுட் சேனாவரையர் கையாண்ட தர்க்க முறையாக அமையும் உரைநடையைப் பின்பற்றிக் கம்பீரமாகச் செல்லும் ஒரு உயர்ந்த நடைவகையினைக் கையாண்டு சிவஞானபோதமாபாடியம். இலக்கண விளக்கச் சூறாவளி, தொல்காப்பியச் சூத்திர விருத்தி முதலிய சிறந்த உரைநடை நூல்களை இயற்றினர். பிறரைக் கண்டிப்பதற்குத் தமிழுரைநடை ஒரு சிறந்த கருவியாக அக்காலத்தில் விளங்கிற்று என்பதற்கு அவ்விலக்கண அவ்விலக்கண விளக்கச் சூறாவளி ஒர் எடுத்துக்காட்டாகும். அச்சூறாவளியிற் பறவாத உரையாசிரியர்கள் மிகச் சிலர் என்றே கூறலாம். இக்கண்டன நூலிலும் பிற கண்டன நூல்களிலும் அவர் கையாண்ட உரைநடை பழைய உரையாசிரியர்கள் கையாண்ட செந்தமிழ் நடையாக இருந்தபோதும், பிறரைத் தாக்கிக் கூறும் வகையிலே ஒர் உணர்ச்சிக் கலப்புள்ள நடையாகவும் ஒரு புதுச் சோபையுள்ள நடையாகவும் விளங்குகிறது. பேராசிரியர் மு. வரதராசன் தம்முடைய தமிழ் இலக்கிய வரலாறு என்னும் நூலிலே கூறியிருப்பதாவது: வடமொழியிலும் தருக்கத்திலும் இலக்கணத்திலும் அவர் பெற்றிருநத புலமையை அவருடைய உரை நூல்கள் காட்டும்.... புலவர்கள் அஞ்சத்தக்க வகையில் மறுப்பு நூல்கள் எழுதியவர் அவர். பேராசிரியர் சி, பாலசுப்பிரமணியன் தம்முடைய தமிழ் இலக்கிய வரலாறு என்னும் நூலிலே, சோழவந்தான் அரசஞ்சண்முகனார், திருமயிலை சண்முகம்பிள்ளை, சோமசுந்தரம்பிள்ளை, மறைமலையடிகள், சுன்னாகம் குமாரசாமிப்பிள்ளை ஆகியோர் பல இலக்கணக் கட்டுரைகள் வரைந்துள்ளனர் என்று கூறும்போது, கணேசையரைக் குறிப்பிடவில்லையென்பதைக் கவனிக்கலாம். சிவஞான முனிவர் பாரதூரமான கண்டனத்துக்கு ஆளாகியமையை எடுத்துக் காட்டவும் விரும்பாமையே, கணேசையர் விடுபட்டதற்குக் காரணமாக இருக்கவேண்டுமென்று ஊகிக்கலாம். சிவஞான முனிவரின் இலக்கணப் பங்களிப்புகளாக, தொல்காப்பியச் சூத்திர விருத்தி, இலக்கண விளக்கச் சூறாவளி, நன்னூல் விருத்தியுரை என்பனவற்றைக் கூறலாம். நன்னூல் விருத்தியுரையிலே பிற உரையாசிரியர் பற்றிய கண்டனம் குறைவு. சங்கரநமச்சிவாயர் எழுதிய விருத்தியுரையைத் திருத்தியும் புதுக்கியும் ஆக்கப்பட்டது அது. இலக்கண விளக்கச் சூறாவளி வைத்தியநாத நாவலர் இயற்றிய இலக்கண விளக்கத்தைக் கண்டனஞ் செய்து ஒதுக்குவது நோக்கமாக இயற்றப்பட்டது. அந்த நூல் ஐந்திலக்கணமாயபோதும், முனிவர் மறுப்பு எழுத்துக்கும் சொல்லுக்கும் மட்டுமே காணப்படுகிறது. இலக்கண விளக்கச் சூறாவளியிலே, சிவஞான முனிவர் கண்ட குறைகள் சிலவற்றுக்கான விளக்கங்களுக்குத் தம்முடைய தொல்காப்பியச் சூத்திர விருத்தியைப் பார்க்கும்படி, முனிவரே கூறியுள்ளார். புலவர்கள் அஞ்சத்தக்க வகையிலான மறுப்புகள் அந்த நூலிலேயே காணப்படுகின்றன. தொல்காப்பியச் சூத்திர விருத்தியிலே உரையாசிரியர் பிறர் எவ்வெவ்வாறு கண்டிக்கப்பட்டுள்ளனர் என்பதற்கு மாதிரிக்குச் சில: இஃதறியாதார்..... இடர்ப்படுப. இக்கருத்தறியாத நச்சினார்க்கினியர் நச்சினார்க்கினியர்.... இடர்ப்படுத்தி நலிந்து பொருள்கொண்டு..... தமக்கு வேண்டியவாறே கூறினார். இக்கருத்தறியாத உரையாசிரியரை யுள்ளிட்டோ ரெல்லாரும் இனி உரையாசிரியரும் நச்சினார்க்கினியரும்..... ஆகுபெயர் பற்றி யறிந்திலர் போலு மென்க இப் பெற்றியறியாத உரையாசிரியர் முதலியோர் இனி உரையாசிரியரும் நச்சினார்க்கினியரும்.... உரைத்தாராலெனின்..... அவருரை போலியுரை யெனவறிக. தமிழ் நூலொன்றே வல்லவுரையாசிரியரை யுள்ளிட்டோருரையை, ஆசிரியர் கருத்தாகக் கொண்டு பின்னுள்ளோரு மயங்குவாயினாரென்பது? அங்ஙன முரைப்பனவெல்லாம் போலியென்றொழிக. இங்ஙனங்கூறிய வாசிரியர் கருத்து நோக்காது. யாம் பிடித்ததே சாதிப்போ மென்னுங் கருத்தாற்..... தாங்கண்மாட் டெறிந்ததற்கேற்பவே பொருளுரைத்தார் மாட்டேற்று முறைமை யுணராத உரையாசிரியரை உள்ளிட்டோரெனவுணர்க. இஃதறியாதார் தத்தமக்கு வேண்டியவாறே யுரைப்ப இதனானே உரையாசிரியர் நச்சினார்க்கினியருரைகளு மறுக்கப்பட்டன இங்ஙனஞ் செம்பொருள் கொள்ள மாட்டாதார்.... கூறியது கூறலென்னுங் குற்றப்பட விடர்பட்டுப் பொருளுரைத்தார். இவ்வாறே யாண்டு முரைசெய்த லவரியல் பென்க. பிறிது பிறிதேற்றலும் என்பதற் குரையாசிரியரை யுள்ளிட்டோருரைத்தவை போலியுரை என்பது மேற்கூறினோம். சிவஞான முனிவர் வடமொழி இலக்கணப் புலமையை எடுத்துக்காட்டிப் புலவர்களை அஞ்சுவித்தமைக்கும் சூத்திர விருத்தயிலிருந்தே உதாரணங்கள் வருமாறு: இங்ஙனம் வருவனவற்றை வடநூலார் அத்தர்ப்பாவிதணிச் சென்பர். இக்கருத்தேபற்றி வடநூலாரும் யாப்பு முதலிய நான்கும் உணர்த்துவதே பாயிரமெனக் கொள்ப. வடநூலார் யாப்பை ஆனந்தரியமென்றும். நுதலிய பொருளை விடயமென்றும். கேட்போரை அதிகாரிகளென்றும், பயனைப் பிரயோசன மென்றுங் கூறுப இப்பாயிரத்தை வடநூலார் உபோற்த மென்ப வடமொழிதற்கு முன்னர்ப் பெறப்பட்டதனைப் புரோவாதமென்பர் வடநூலார். இன்னுமிக கடாவிடைகளெல்லாம் மாபாடியத்துங் கையடத்தும் இரண்டாமானிகத்திற் கண்டு கொள்க. கையடனார் நரமடங்கல் போலென் றுவமையுங் கூறினார். வடநூ லுணர்ந்தார்க்கன்றித் தமிழியல்பு விளங்காதென்பது முணர்ந்து கோடற்கன்றே பாயிரத்துள் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என்றதூஉமென்க. வடநூலாரும் இலகூச்சாரண மென்பர் இதனை வடநூலார் ஆற்பனே பதமென்ப வடநூலார் தன்னைப் பற்றுதலென்னுங் குற்றத்தை இதரேதராச்சிரய மென்றுங் கூறுப வடமொழிமதம்பற்றிக் கூறினார். சிவஞான முனிவருடைய மதிப்பிற்கு பாத்திரரான உரையாளர் சேனாவரையர் ஒருவரே. சூத்திரவிருத்தியிலே, இரண்டிடங்களில் அமைந்துள்ள முனிவர் கூற்றுகள் இவ்வுண்மையைத் தெளிவாக்குகின்றன- வடநூற் கடலை நிலைகண்டறிந்த சேனாவரையர் எழுத்ததிகாரத்திற் குரைசெய்தாராயின், இன்னோரன்ன பொருளனைத்துந் தோன்ற ஆசிரியர் கருத்துணர்ந்துரைப்பர் அது வடநூல் விதியோடு முரணுதலானும், வடநூலோடு மாறு கொள்ளாமற் கூறலே ஆசிரியர் மேற்கோளென ஆதனினியறல் என்னுஞ் சூத்திரத்துத் தாமுங் (= சேனா வரையருங்) கூறினாராகலானும், அவர்க்கது (= சேனா வரையர்க்கது) கருத்தன்றென்க. இன்னுமெரொவிடங்களிலே யிவ்வாறே (=சேனா வரையர்) மயங்கிக் கூறுவர். அங்ஙனமொரோவழி மயங்குதல் பற்றி அவரையிகழற்க, நச்சினார்க்கினியர் முதலியோர்போல யாம் பிடித்ததே சாதிப்போ மென்னுஞ் செருக்கால் யாண்டு மயங்காமையின், முக்குணங்களு மாறி மாறி வருதலின், அதுபற்றி யெனைத்துணை நுண்ணறிவாளரு மொரோவழி மயங்குதலியல்பென்க. இவ்வாறு ஒரோவழி மயங்குபவர்களிலிருந்து அகத்தியர், தொல்காப்பியர், பதஞ்சலி முதலியவர்கன் தவத்தால் மனந்தூயராய், முக்குணங்களையுங் கடந்து இறைவனருள் பெற்றுடையராகலின் சிவஞான முனிவரால் விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளார்கள். இத்தகைய விலக்குப் பெற்றவர் களுள்ளே தமக்கும் ஓரிடம் கிடைக்கவேண்டுமென்று முனிவர் விரும்பியிருக்கலாமென்று ஊகிக்க இடமிருக்கிறது. அது எவ்வாறாயினும், கணேசையருக்குச் சேனாவரையர்மேல் சிவஞான முனிவருக்கிருந்ததிலும் கூடிய மதிப்பு இருந்திருக்கிறது. சிவஞான முனிவர் சேனாவரையரிலிருந்து வேறுபடுமிடங்கள் பலவற்றிலே. சேனாவரையருரையே பொருத்தமானதெனக் கணேசையர் நிறுவமுயன்றுள்ளார். தொல்காப்பியப் பதிப்புகளிலே அனுபந்தங்களாக வெளியிடப்பட்ட கணேசையரின் எட்டுக் கட்டுரைகளுக்கும் அவை முதலில் வெளியான செந்தமிழ் என்ற சஞ்சிகையின் தொகுதி, பகுதி என்ற விபரங்கள் காணப்படுவதால். அக்கட்டுரைகளைக் காலமுறையிலே மேல்வருமாறு வகுக்கக்கூடியதாயுள்ளது. 1. போலி எழுத்து (22 - 3) 2. ஆறனுருபு பிறிதேற்றல் (25 - 9) 3. தொகைநிலை (26 - 1) 4. அளபெடை (26 - 7) 5. பிறிதுபிறிதேற்றல் (27 - 1) 6. தொல்காப்பியச் சூத்திரப் பொருளாராய்ச்சி (27 - 7,9) 7. இருபெயரொட்டாகுபெயரும் அன்மொழித் தொகையும் (28 - 12) 8. சிறுபொழுதாராய்ச்சி (29 - 10) இக்கட்டுரைகள் யாவும் 1923 ஆம் ஆண்டுக்கும் 1931 ஆம் ஆண்டுக்கு மிடையில் வெளிவந்தவை. இக்கட்டுரைகளிலே கணேசையரின் அணுகுமுறையின் போக்கினை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். கணேசையரின் அணுகுமுறை முதலிலே வெளியான நான்கு கட்டுரைகளிலும் ஒரு பொதுத்தன்மையைக் காணலாம். கட்டுரைகளைத் தொடங்கும் போது, கணேசையர் நேரடியாகத் தொல்காப்பிய ஆராய்ச்சியாகத் தொடங்கவில்லை. தொல்காப்பியக் கடலுள் இறங்க, அவருக்குத் தயக்கமாக இருந்திருக்க வேண்டும். போலி, ஆறனுருபு பிறிதேற்றல், அளபெடை என்ற மூன்றும் நன்னூலார் கருத்துகளை ஆராய்வதற்காக எழுந்த கட்டுரைகள் போல அமைந்துள்ளன. அகத்தியம் முதனூலெனவும், தொல்காப்பியம் வழி நூலெனவும், நன்னூல் புடைநூலெனவும் முனிவர் கொண்டுள்ளார். ஐயர் நன்னூலை வழிநூலெனக் கொள்வதால், தொல்காப்பியத்தை முதனூலெனக் கொண்டிருக்க வேண்டும். நன்னூல் எழுந்த காலத்திலிருந்தே அது வழிநூலா அல்லது தொல்காப்பியத்துக்குஎதிர்நூலhஎன்Wவினhஎழுந்திருக்கிறது. இளம்பூரணர் உரையோடு கூடிய தொல்காப்பியத்தையும் இராசபவித்திரப் பல்லவதரையரின் உரையோடு கூடிய அவிநயத்தையும் நன்கு பயன்படுத்தியே, பவணந்தி நன்னூலை எழுதியுள்ளார். குறிப்பு : செந்தமிழில் வெளிவந்த இக்கட்டுரைத் தலைப்பு ஆறனுருபு பிறிதுருபேற்றல் என்பதாகும். தொல்காப்பியம் ஒர் ஆசிரயரால் ஒரு காலத்திலே செய்யப்பட்ட நூல்தானா என்பது இன்று பிரச்சினையாகி யுள்ளது. இந்த நிலை ஏற்பட்டதற்கு இரண்டு காரணிகளுள. தொல்காப்பியர் காலம் இன்று காணப்படும் சங்க நூல்களின் காலத்துக்கு முற்பட்ட தென்று நம்பப்படும் வலுவான மரபு உண்டு. அது இடைச்சங்க நூலென இறையனாரகப் பொருளுரை கூறியுள்ளமையை மறுத்து, அது கி.பி. நான்காம் நூற்றாண்டு வரையிலேயே தோன்றியிருக்க வேண்டுமென்ற முடிபுக்கு ஆதரவாகப் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அகச்சான்றுகள் பல காட்டியுள்ளார். தொல்காப்பியருக்கு முற்பட்டவரெனக் கூறப்படும் அகத்தியரைப் பற்றித் தொல்காப்பியத்திலோ, சங்க இலக்கியங்களிலோ எவ்வித குறிப்புமில்லை. அகத்தியர் மாணவர் பன்னிருவருள்ளே தொல்காப்பியர், அவிநயர், பனம்பாரனார் முதலியோர் அடங்குவரெனவும், அவரே பன்னிரு படலத்தைப் பாடினரெனவும் அப்பன்னிரு படலத்தின் வழிநூலாகவே புறப் பொருள் வெண்பாமாலை தோன்றியதெனவும் புறப்பொருள் வெண்பாமாலையிலே கூறப்பட்டு, இடைக்காலத்திலிருந்து வலுவுடன் காணப்படும் மரபு ஒன்று உண்டு. தொல்காப்பியர் என்ற பெயரிலே இருவ இருந்தனர். ஒருவர் சங்க இலக்கியங்களுக்கு முற்பட்டவர். மற்றவர் அகத்தியரின் மாணவராகச் சுமார் கி.பி ஆறாம் நூற்றாண்டு வரையில் வாழ்ந்தவர். இளம்பூரணர் தொல்காப்பியத்துக்கு உரை யெழுதுவதற்கு முன்பு தொல்காப்பியர் இருவர் கதைகளும் கலந்து, தொல்காப்பியம் இரண்டன் மரபுகளும் கலந்து விட்டனவெனப் பேராசிரியர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் முடிவு கட்டியுள்ளார். பவணந்தி அவிநயத்தைப் பயன்படுத்தியுள்ள போதும், நன்னூல் தொல்காப்பியத்தின் அழிநூல் அல்ல, வழிநூலே என்ற மயிலைநாதரின் முடிபைக் கணேசையர் ஏற்றுள்ளார். இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் நன்னூலைத் தூற்றியும் போற்றியும் கண்டனங்களும் கண்டன மறுப்புகளும் செந்தமிழ் என்ற சஞ்சிகையிலே வெளிவந்தமை கவனிக்கத் தக்கது. இலங்கை இராமநாதன், தொல்காப்பியரும் பிற்காலத்தாரும் என்னும் தலைப்பிலே தொல்காப்பியரைப் புகழ்ந்தும், பவணந்தியாரை இகழ்ந்தும் தொடர் கட்டுரை எழுதி வந்தனர். இதற்கு மறுப்பாக, யாழ்ப்பாணத்து க. வைத்தியலிங்கம்பிள்ளை கட்டுரை எழுதினர். இம்மறுப்புக்கும் மறுப்பு யாழ்ப்பாணம் ஆர். ஆர். குணரத்தினம் என்பவரால், நன்னூல் என்னும் இயைபில் பெயர்ச் சொற்றொடர் மறுப்பு என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. கணேசையர் நன்னூலை மதித்தவரென்பது தெளிவு. 1. போலி எழுத்து போலி எழுத்து என்னும் முதற் கட்டுரையிலே நன்னூற் சூத்திரம் தரப்பட்டு, உரையாளர் ஒருசாரார் கருத்து ஆராயப்பட்டுள்ளது. அம்முனிகரம் யகர மென்றிவை எய்தினையொத்திசைக்கு மவ்வொ டுவ்வும் வவ்வு மெளவோ ரன்ன - நன். 125 பவணந்தியார் போலி எழுத்து உணர்ந்தினாரல்ல ரெனவும், சந்தியக்கரமே யுணர்த்தினாரெனவும் உரையாளர் சிலர் கூறினரென மொழிந்தது. உரைப் பொருத்தத்தை ஆராயத் தொடங்கும் கணேசையர், குறிப்பிட்ட உரையாளர்களின் பெயர்களைச் சுட்டிக் கூறவும் விரும்பவில்லை. சந்தியக்கரமே கூறப்படுகிறதென்ற கருத்தைச் சங்கரநமச்சிவாயர் முதலிலே வெயியிட்டார். அக்கருத்தை விளக்கிப் போலி எழுத்து என்று உரை கூறியோரைச் சிவஞான முனிவர் கண்டித்துள்ளார். தொல்காப்பியச் சூத்திரவிருத்தியிலும் முனிவரின் கருத்து இடம்பெற்றுள்ளது. பவணந்தியார் கூறியது சந்தியக்கரமன்று என்பதற்குக் கணேசையர் கூறும் நியாயங்களாவன: 1. சந்தியக்கரம் உணர்த்தியிருந்தால், தாம் குறித்த பொருள் இனிது விளங்கத்தக்க முறையிலே அம்முன்யகரமிகாமென்றும் அவ்வொடுவவ்வும் உவ்வுமென்றும், ஒத்து எய்தினென்றும் ஐயிசைக்கு மென்றும் சூத்திரித்திருப்பர். 2. மாற்றிப் பொருள் கொள்வதாலும் கூட்டிப் பொருளுரைத்தலாலும் சந்தியக்கரங் கூறுவதாகக் கொள்வாருக்கு, இவையென்னுந் தொகைச் சொல்லாலே இரண்டும் வருமென்பது பொருளேயன்றி இரண்டுங்கூடி யென்பது பொருளாகாது. 3. ஆரியமொழியிற் கூறிய சந்தியக்கரத்தை தமிழ்மொழிக் கண்ணும் புகுத்த வேண்டி, நன்னூலார் போலியுணர்த்திய சூத்திரத்தைச் சந்தியக்கரமுணர்த்தியதெனக் கொண்டு வலிந்து பொருள் கோடல் உண்மைப் பொருளும் பொருத்தமுமன்று 4. நன்னூற் சூத்திரத்தின் நேர்பொருளை எடுத்துக்கூறும் கணேசையர், பவணந்தியார் சந்தியக்கரங் கூறியிருந்தால், வடமொழியில் உள்ளவாறு ஏகரஓகரங்களையும் கூறியிருப்பா ரென்பர். போலியெழுத்தால் வரும் பயன் செய்யுளில் வரும் எதுகைக்கண் இவ்வாறு கொள்ள நிற்றலாம். நன்னூற் சூத்திர விருத்தியிலே, சிவஞான முனிவர் கொடுத்துள்ள மேல்வரும் விளக்கத்தைப் பார்த்தால், கணேசையர் அளித்துள்ள பதில் புரியும் - ...... அகரக்கூறும் இகரக்கூறும் தம்முளொத்து எகரமொலிக்கும், அகரக்கூறும் உகரக்கூறுந் தம்முளொத்து ஒகரமொலிக்கு மெனவுங் கொள்க. இச்சூத்திரத்திற்கு இவ்வாறு பொருள் கொள்ளாது தமிழ் நூற் பயிற்சியொன்றுமேயுடையார். எழுத்துப் போலியுணர்த்திற்றென்று பொருள்கொண்டு.... உதாரணங்காட்டுவர். அவ்வாறு பொருள் கொண்டு உதாரணங்காட்டுமாற்றாற் பெறும் பயனின்மை யானும், வடநூலொடு மாறுபடுதலாலும், அது பொருந்தாதென்க. தொல்காப்பியருடைய கருத்தைக்கணேசையர்ஆராயமுற்படுகின்றார்.அகரவிகரமைகாரமாகுமென்றும்அகரவுகரமௌகாரமாகுமென்றும்இகரஉகரங்களைமுன்னர்க்கூறிப்பின்னர்அகரத்திபர்யகரப்புள்ளியுமையெனெடுஞ்சினைமெய்பெறத்தோன்றுமெனயகரத்தைவேறுவைத்துக்கூறியதுபோலியெழுத்தாமாற்றைநன்குபுலப்படுத்துவதற்கேஅகரவிகரங்களுக்கிடையேயகரங்கலந்துஐகாரமாகுமென்பதேஅவர்கருத்தாயின்,அதுதெளிவாகஅமையுமாறுசூத்திரிப்பார்.ஐயெனெடுஞ்சினை என்ற தொல்காப்பியத் தொடர் சந்தியக்கரம் என்று கோட்பாட்டுக்கு எதிரானதெனக் கணேசையர் வாதிப்பர். சினையென்பது உறுப்பென்னும் பொருளையுணர்த்தி, ஆகுபெயராய் எழுத்தை யுணர்த்தும். தொல்காப்பியம் எழுத்ததிகாரச் சூத்திரங்கள் நான்கில், சினை vன்னுஞ்bசால்mதேbபாருளிற்gயன்படுத்தப்gட்டுள்ளமையைக்fnணசையர்கhட்டியுள்ளார். கnzira® தர்க்கமுறையிலே தம்முடைய கொள்கையை நிறுவுவதற்குச் சில தடைகளைத் தோற்றுவித்து அவற்றுக்கேற்ற விடைகளையுந் தந்துள்ளார். சினையென்பதற்கு, ஐயின் சினையென்றால் என்னஎன்பது ஒரு தடை. அவ்வாறாயின் சூத்திரத்திலே ஐயெனெடிலின் சின்ன என்றிருக்க வேண்டுமென்பதுவிடை, மொழிக்கு உறுப்பாதல் பற்றிச் சினையென எழுத்தைக் கூறினாரென்றால் என்ன என்பது ஒரு தடை. எங்கும் எழுத்தென்றே தொல்காப்பியர் ஆளுவர் என்பது அதற்குவிடை. அகரத்திம்பர் யகரப் புள்ளி என்ற சூத்திரத்தி லுள்ள இம்பர் என்பது காலப்பின்னா, இடப்பின்னா என்பது தடை. எழுத்ததிகாரச் சூத்திரங்களில் இம்பர் என்று வருமிடங்கள் அனைத்திலும் இம்பர் என்பது காலப்பின்னாக வருகிறது என்பது விடை. போலியெழுத்து வழக்குப் பற்றி இலக்கணகாரர், உரையாளர், முதியோர் நிலைபற்றிக் கணேசையர் தொடர்ந்து கூறுகிறார். அகரவிகரமையாகரமாதலுக்கும் அகரவுகர மௌகார மாதலுக்கும் நச்சினார்க்கினியர் அது கொள்ளற்க எனவும் பிரயோகவிவேகத்தார் இக்காலத்துப் பயன்படாமலே நின்றன வெனினுமமையும் எனவும் கூறியுள்ளமையைக் கணேசையர் குறிப்பர். போலியெழுத்து எதுகைக்கு மட்டுமல்லாது அளபெடைக்கும் பயன்படுவதாகக் கொண்டால், இந்தச் சிக்கல் தீர இடமிருக்கிறது. ஐ என்ற நெட்டெழுத்துக்கு அதன் இனக்குறிலாக இகரமும் ஔ என்ற நெட்டெழுத்துக்கு அதன் இனக்குறிலாக உகரமும் வழங்குவ தாலேதான் இவை போலியெழுத்துக்களாகக் கொள்ளப்பட வேண்டிய தேவை யேற்பட்டிருக்கிறது. கணேசையர் இத்தகைய விளக்கந்தராத போதும். முதியோர் ஐயன் என்பதை அய்யன் எனவும் ஔவை என்பதை அவ்வை எனவும் எழுதிவந்ததை எடுத்துக் காட்டியது பாராட்டத்தக்கது. மொழியமைப்புப் பற்றிய சிக்கல்கள் வழக்குமொழியை ஆராய்வதாலேயே தீர்க்கப்படத்தக்கன என்பது இன்றைய மொழியியலாளர் கருத்து. தமிழ்நாட்டிலே அமுல் நடத்தப்பட்ட எழுத்து சீர்திருத்தத்திலே ஐ, ஔ என்னும் ஈரெழுத்துக்களும் தமிழ் நெடுங்கணக்கிலிருந்து விலக்கப்பட்டு விட்டதால், இலக்கணகாரர் இந்தப் பிரச்சினையை இனி ஒதுக்கிவிடலாம். 2. ஆறனுருபு பிறிதேற்றல் ஆறனுருபு மேற்குமவ்வுருபே என்ற நன்னூல் - 293 உடன் கட்டுரையைத் தொடங்கும் கணேசையர், மயிலை நாதருரையைத் தந்து, அதற்குச் சிவஞானமுனிவரின் மறுப்பைக்கூறி, அம் மறுப்புப் பொருத்தமுடையதன்றெனக் காட்டுகின்றார். சிவஞான முனிவரைப் பெயர் சொல்லிக் கண்டிப்பதற்குக் கணேசையர் துணிந்துவிட்டமையை இக்கட்டுரையிலே காணலாம். ஆறாம் வேற்றுமையுருபு மற்றையுபுகளை ஏற்று வருமெனப் பொருளுரைத்த மயிலைநாதர் சாத்தனது, சாத்தனதனை. சாத்தனதனால் முதலியனவாக எடுத்துக் காட்டுக்கள் தந்துள்ளார். உருபு இடைச்சொல்லாதலாலும். சாத்தனதனை என்னும் போது சாத்தனது என்பது துவ்விகுதியும் அகரச் சாரியையும் பெற்று நின்ற பெயராதலினால். அதுவென்பதை ஆறனுருபென்றல் பொருந்தாது என்பது முனிவரின் மறுப்பு. முனிவர் காட்டியுள்ளவாறே பிரிக்கப் படினும். உமையைப் பொருளிலேயே வருதலால், ஆறனுருபென வழங்கப்பட்டுள்ள தென ஐயர் கூறுகிறார். மயிலைநாதருரை சேனாவரையர், இளம்பூரணர் கருத்துகளோடு ஒத்துப் போகுமாற்றையும் ஐயர் குறிப்பிட்டுள்ளார். மயிலைநாதர், சாத்தனது ..... எழுவாயுருபும் ஏற்குமென்றும்..... வினையும் வினைக்குறிப்புங் கொண்டு முடியு மென்றும் உரைத்தமையை உற்று நோக்கும்போது, ஆறாம் வேற்றுமையுருபு ஏற்றுநின்ற சொல்லே வினைக்குறிப்புப் பெயராய்நின்று பிறிதுருபு ஏற்குமென்பதும். ஏற்குங்காலும் உடைமைப் பொருளும் காணப்படுதலால் ஆறனுருபென்றே வழங்கி வந்தனரென்பதும் தெளிவாகின்றன. பிறிது பிறிதேற்றலும் என்னுந் தொல்காப்பியச் சூத்திரத்துக்குச் சேனாவரையரும் இளம்பூரணரும் இக்கருத்தமையவே பொருள் கூறினர். சிவஞானமுனிவர் இவ்வுரையை மறுத்து. இதற்கு முதற்சூத்திரத்திற்கு, உருபு இடையிலும் இறுதியிலம் விரிந்து வருமென்றும் அது வடநூலார் மதமென்றும் பொருள் கூறினர். தமிழ் இலக்ணங் கூறவந்த தொல்காப்பியர் வடமொழி யிலக்கணங் கூற வந்தாரென்றல் பொருத்தமில்லையென்றும். கூறினும் அளபிற்கோடல் அந்தணர் மறைத்தே என்பது போலச் சூத்திரித்திரிப்பாரென்றும், வடநூலார் மதம் இதுவென எடுத்துக் காட்டும் வழக்கு தொல்காப்பியத்தில் இல்லையென்றும். வரையார் எனத் தொல்காப்பியத்தில் வருமிடங்கள்தோறும் வரையாரென்பதற்குத் தமிழ் நூலாசிரியர் என்பவன்றி வடநூலார் என்பது பெருந்தாதென்றும் வடநூலார் மதம் இதுவென வேறுபாடறிதற்குக் கூறினாரெனில், அதனாற் போந்த பயன் எதுவுமில்லையென்றும் கணேசையர் வாதிப்பர். இவ்வுரை மறுப்பை நிறுவுவதற்குக் கணேசையர் தடைவிடைகள் மூலமாக மேலும் சில ஆதாரங்கள் தருவர். ஐயுங்கண்னுமல்லாப் பொருள்வயின் என்ற தொல்காப்பியச் சொல்லதிகாரச் சூத்திரத்தில் வரும் தொகாவிறுதியான என்னும் எதிர்மறை, வேற்றுமைத் தொடரில் வருதலில், அத்தொடரிலேயே உடன்பாட்டுப் பொருளும் வரவேண்டு மல்லவா என்பது தடை. அவ்வாறு வருதல் முனிவர் உரைக்கு இல்லாமையால், அவருரை பொருந்தாதென்பது விடை. பிறிது பிறிதேற்றலும் என்னுஞ் சூத்திரத்தில், இனமல்லவற்றை உடனெண்ணுதல் மரபன்று என்று சூத்திரவிருத்தி கூறியுள்ளதே என்பது தடை. சேனாவரையர் இச்சூத்திரம் வழுவமைதியென்று கூறுதலினால், வழு அமைத்தற்கண் வழுவாவனவற்றை உடனெண்ணுதல் பொருந்துமாதலினால் முனிவர் கூற்று மறுக்கப்படுகிறது என்பது விடை. உருபு பிறிதேற்றலும் என விளங்கச் சூத்திரியாது. பிறிதுபிறிதேற்றலும் எனச் சூத்திரித்தது ஏன் என்பது அடுத்த தடை. அதனாலும் ஒரு நயம் தோன்றுவதற்கு என்று கூறும் கணேசையர், உருபு இடைச் சொல்லாதலாற் பிறிதுருபை ஏற்காதாதலால், உருபு தன்னையேற்ற சொல்லோடு கூடிப் பெயர்த்தன்மையெய்தி நின்ற என்ற வேற்றுமை நயமென மேலும் அதனை விளக்குவர். தாம் நிறுவ எடுத்துக்கொண்ட மயிலைநாதருரைக்குச் சார்பாகக் கணேசையர் மேலும் சில சான்றுள் தருவர். சாத்தனது என்பது போல வேற்றுமைப் பொருள் பற்றிக்குறிப்புவிdமுற்று¥பிறத்தšஉண்டென்பJஅதுச்சொல்வேற்றுkயுடைமையானும்’என்னுªதொல்காப்பிய¢சொல்லதிகார¢சூத்திரத்தாyதெரியவருதலால். சாத்தனது என்பது உடையதுமுன்னு«உடைமை¥பொருŸபின்னுமாfவந்jகுறிப்òவினைமுற்றாகி¢சாத்தனுடையதாயிற்Wஎன¥பொருŸதந்துஉருபே‰றசாத்தdதுபேhலநிற்குமென்பது«,ãன்mதுபெயரhŒநின்Wஉருபேற்Fமென்பது« அக்காலத் துரையாசிரியர்களுக்கு மட்டுமன்றி, நூலாசிரியர்க்குங் கருத்தாதல் துணியப்படும். பிரயோக விவேக நூலாரும் இக்கருத்தினரே. சாத்தனது, சாத்தன என வினைக்குறிப்பு முற்றுகள் ஒருமை பன்மையீறாக அமைவது போல உருபேற்ற ஆறாம் வேற்றுமைப் பெயர்கள் ஒருமை பன்மையீறாக அமைவது. இரண்டுக்குமுள்ள ஒற்றுமையை வலியுறுத்துவதாகக் கணேசையர் காட்டுவர். கட்டுரையின் ஈற்றிலே சிவஞான முனிவர் நன்னூற் சூத்திரத்துக்குக் கூறிய உரையைத் தந்து, அதன் பொருந்தாமையைக் காட்டுவர். எழுவாயாய் நின்ற அவ்வுருபே ஐ முதலிய ஆறுருபுகளையும் ஏற்றுவருமென்பது முனிவருரை. அவ்வுருவு என்பது vழுவாயுருபைமட்டும்Rட்டாதென்பதும்,vழுவாயுருபுãறஉருபேற்குமென்பதுbபாருத்தாதென்பதும்.bga® வடிவம் உருபேற்றலே கூறப்பட்டதெனில், அது கூறியது கூறலாமென்றும் ஐயர் வாதிக்கிறார், ஆறனுருபு என்பதற்கு ஆறாம் வேற்றுமையுருபென்பது பொருளே தவிர ஆறுருபு என்பது பொருளல்ல என்பதை நிறுவ, ஐயர் தொல்காப்பியரதும் நன்னூலாரதும் சொல்லாட்சிகளைச் சான்றாகக் காட்டுவர், மயிலைநாதருரையே பொருத்தமாதல் தெளிக எனக் கட்டுரை முடிவு பெறுகின்றது. கணேசையர் தம்முடைய கருத்தை நிறுவுவதிலே வெற்றி பெற்றுள்ளாரென்பது தெளிவு. தொல்காப்பியரும பிழைவிட்டு விட்டார். நன்னூலார் அதே பிழையை ஏற்று விட்டாரென்று கொண்டால் மட்டுமே, கணேசையர் இலக்கணக்கொள்fபொருந்தாதென¡கூறலாம். 3. தொகை நிலை கணேசையர் இக்கட்டுரையைச் சூத்திரப் பொருளாராய்ச்சியாகத் தொடங்கவில்லை. கட்டுரையின் தொடக்கத்திலே, அவையடக்கம் போன்ற குறிப்புக் காணப்படுகிறது. தொகைநிலை என்ற கட்டுரை அறிஞர்களை நோக்கி எழுந்ததன்று எனவும் மாணவர்களுக்கு விளக்கம் கருதியே எழுந்ததெனவும் Iயர்Tறியுள்ளார்.ï¡f£LiuÆny உரையாசிரியருக்கும் சேனாவரையருக்கும் தொகைவிளக்கம் பற்றிக் காணபடும் வேறுபாடுகளை எடுத்துக்காட்டி, அவர்களுள் எவர் கூற்றுப் பொருத்தமான தென ஆராயப்படுகிறது. தொகைநிலையாவது வேற்றுமை முதலிய பொருள்மேல் இரண்டும் பலவுமாகிய சொற்கள் பிளவுபடாது ஒன்றுபடத் தம்முள் இயைந்துநிற்றலென்றும், தொகுங்காற் பெயரும் பெயரும், பெயரும் வினையும் தொகுமென்றும் சேனாவரையர் கூறுவர். உரையாசிரியர் முதலியோர் பெயரும் பெயருமே தொகுமென்றும் பிளவுபட்டிசைத்தலாலே பெயரும் வினையுந் தொகாவென்றுங் கூறுவார்கள். உரையாசிரியருடைய கருத்து. பெயருந் தொழிலும் பிரிந்தொருங் கிசைப்ப என்னுந் தொல்காப்பிய எழுத்ததிகாரச் சூத்திரத்துக்கு அவர் பெயர்ச்சொல்லும் வினைச் சொல்லும் பெயரும் வினையுமாய்ப் பிரிந்தும் பெயரும் பெயருமாய்க்கூடிய வினையுமாய்ப் பிரிந்தும் பெயரும் பெயருமாய்க்கூடிய மிசைப்ப வேற்றுமையுருபு தொகாது நிலைபெற்றவிடத்தும் அவை தோற்றுதல் வேண்டாத தொகுதிக் கண்ணுமென உரைத்தவுரையானும், விளவினைக் குறைத்தான். விளவினைக்குறைத்தவன் எனவும், Ãலாத்துக் கொண்டா‹.நிலாத்துக் கொண்டவன் எனவுங் காட்டிய உதாரணத்தாலும் அறியப்படும். பெயரும் பெயருமே தொகுமென்னும் வடநூல் விதியை மேற்கொண்டவரென உரையாசிரியரைக் குறை கூறும் கணேசையர். தமிழ் வழக்கறிந்த பெயரும் வினையுந் தொகுமெனக் கொண்டவரெனச் சேனாவரையரைப் பாராட்டுகிறார். தமிழ்நூல் ஒன்றே வல்ல உரையாசிரியரெனவும் வடநூற்கடமைல நிலைகண்டுணர்ந்த சேனாவரையரெனவும் முனிவர் கூறுவன இங்கே ஒப்புநோக்கத்தக்கன. தொல்காப்பியரது கருத்து எதுவெனத் துணியமுயலும் ஐயர், மேற்காட்டப்பட்ட சூத்திரத்துக்குச் சரியான பொருள். பெயரும் பெயரும், பெயரும் தொழிலும் பிரிந்திசைப்ப வேற்றுமையுருபு நிலைபெறுவழியும் அவை ஒருங்கிசைப்ப அவ்வுருபுகள் நிலைபெறுதல் வேண்டாத தொகைச் சொற்கண்ணும் என்பர். தொல்காப்பியருக்கும் இதுவே கருத்தாதல், பிரிந்தொருங் கிசைத்தலைப் பெயருக்கும் வினைக்கும் பொதுவாகக் கூறினமையாலும் பின்வருதலையும் தொகுதலையும் முறைநிரனிறை வகையாலே விளங்க வைத்தமையினாலும் அறியப்படும். உரையாசிரியருக்கும் இக் கருத்து உடன்பாடெனக் கொள்ளும் ஐயர், அவர் நிறுத்த சொல்லுங் குறித்துவருகிளவியும் என்னும் எழுத்ததிகாரச் சூத்திரவுரையிலே, இனி ஒழிந்த வேற்றுமைத் தொகையும் உவமைத் தொகையும் தன்னினமுடித்தலென்பதனால், ஈண்டு ஒரு சொல்லெனப்படும். எனக் கூறியதைக் காட்டுகிறார். பெயரினாகிய தொகையுமாருளவே என்னும் சொல்லதிகாரச் சூத்திரத்தால், தொல்காப்பியர் கருத்து மேலும் தெளிவு பெறுகின்றது. முனிவர் இச்சூத்திரத்துக்கு வினையினாகிய பெயரும் உள என்று கூறியுள்ள உரை, உம்மைக்கு அவ்வாறு பொருள்கொள்ள இடமில்லையாதலால் ஐயரால் மறுக்கப் படுகிறது. நன்னூல் தொல்காப்பியர் கருத்துக்கே ஆதரவாக உள்ளது. சிவஞான முனிவருரையைச் சேனாவரையருரையோடு ஒப்பிடும் ஐயர், ஒருபுடை ஒப்புமையும் ஒருபுடை வேற்றுமையுங் கண்டு, வேற்றுமையாக அமைந்துள்ள பகுதி பொருந்தாதென நிறுவுகிறார். நிலங்கடந்தான், நாய்கோட்பட்டான் என்பவற்றுள் உருபு தொக்கனவாயினும் வினையோடு முடிதலில், எல்லாத் தொகையுமொரு சொன்டைய என்னுந் தொகையிலக்கணம் பெறாது பக்கிசைத்தலால், இவை தொகைநிலையென்பர் முனிவர். இதனால் இருசொற் பிளவுபடாது நிற்றல் தொகை யென்னுங் கருத்தளவில், முனிவர் சேனாவரையரோடு ஒப்பினும், பெயரும் வினையும் இயைவதுந் தொகையெனக் கொள்ளும் சேனாவரையரோடு மாறுபடுகின்றனரென்பது தெரியவருகிறது. நிலத்தைக் கடந்தான் என்பது பிளந்திசைக்கிறதே தவிர, நிலக்கடந்தான் என்பது பிளந்திசைக்கவில்லை என்பது ஐயர் விளக்கமாகும். வடநூலாரின் கருத்தும் இதுவே. வட நூலார் வினையோடு முடிதலைத் தொகையாகக் கொள்ளாததற்குக் காரணம், வட்மொழியில் தொகஅவ்வாறு வினையோடு ஒட்டி அமைவதில்லை. முனிவருரையின் பொருந்தாமை யினை எடுத்துக் காட்டுவதற்குக் கணேசையர் சில உதாரணங்களை ஆராய்வர். குன்றக்கூகை பறந்தது என்பதையும் குன்றத்தின்கண் கூகை பறந்து என்பதையும் ஒப்பிடும்போது, குன்றக்கூகை என்பது ஒரு சொல்லாய் எழுவாயாய் நிற்பது போல, குன்றத்தின் கண்கூகையென்பது ஒரு சொல்லாய்ப்பறந்Jஎன்னு«பயனிyகொண்Lநில்லாது,குன்றத்தின்க©என்பJகுன்றத்தி‹கண்பறந்jதெனவு«பொருŸமயக்க«படுவதால்,குன்றத்தி‹கண்ணுள்sஎdவிரித்Jமுடித்தால்,அங்கஉட்டொlர்பலவாயவிரியாகுமன்¿த்தொகையாகாJ. இவற்றைக்கொண்டு, உருபுதொகப் பெயரு பெயரும், பெயரும் வினையும் இயைவதே தொகையென ஐயர் நிறுவுகிறார். சேனாவரையரையும் தம்முடைய கருத்துக்கு ஆதரவாளர் போல முனிவர் கூறிச் செல்வது. ஐயராற் கண்டிக்கப்பட்டுள்ளது. சேனாவரையர் செய்தான் பொருள், இருந்தான் மாடத்து என்பவற்றைத் தொகாநிலையென்றது வினைமுன்னும் பெயர் பின்னுமாக மாறிப் பிளவுபட்டு நிற்றலாலன்றி, வினையோடுமுடிதல் பற்றியன்று என்பதை நன்கு அறிந்தும், தம்பிடித்ததையே சதிக்குமாறு, சேனாவரையர்க்கு அதுவே கருத்துப்nபாலு மென்று கூறியுள்ளாரென ஐயர் கண்டிப்பர். முனிவர் நச்சினார்க்கினியரைக் கண்டிப்பதற்குப் பயன்படுத்திய தொடர், முனிவரைக் கண்டிப்பதற்கு ஐயராற் பயன்படுத்தப்பட்டுள்ளது. சேனாவரையரையும் நச்சினார்க்கினியரையும் ஒப்பிடும் ஐயர், நச்சினார்க்கினியர் வேறுபடுமிடங்களின் பொருத்த மின்மையை எடுத்துக் காட்டுகிறர். செய்தான் பொருள், இருந்தான் மாடத்து என்பன பிளவுபட்டிசைத்தலால், இருசொற் றொகுதல் தொகையெனக் கொண்ட சேனாவரையர் கருத்து நிரம்பாதெனக் கொள்ளும் நச்சினார்க்கினியர் உருபுதொகுதலே தொகையென்றார். தொகைச்சொல்லாவது ஒட்டி ஒரு சொல்லாய் வரவேண்டுமென்பதே தொல்காப்பியர் கருத்தாதலில் செய்தான் பொருள், இருந்தான் மாடத்து என்பன தொகையே மாறிப்பிளவுபட்டு ஒட்டி ஒரு சொல்லாய் வாராமையின், சேனாவரையர் அவை தொகையன்று என்றார், தொகைமாறி நின்றதென்பதே, நன்னூற் பொதுவியல் 12 ஆம் சூத்திரத்திற்குச் சங்கரநமசிவாயர் கூறிய உரையிலிருந்தும் தெரியவருவதாம். எல்லாத் தொகையும் ஒரு சொன்னடைய எனத் தொல்காப்பியர் கூறியதை நுணுகிநோக்காத நச்சினார்க்கினியர்பெயரு«வினையு«பிரிந்திசைத்jவழியு«வேற்றுமையுருòதொகுதலி‹தொகையென¤தாங்கொண்lபொருளை¢சாதிக்குமாWஅச்சூத்திரத்திற்கு¥பொருந்தாவுuகூறினார். சொற்பிளவுபடினும் உருபு தொகுதலே தொகை யென்ற நச்சினார்க்கினயிர் கருத்தின் பொருந்தாமை. சங்கரநமசிவாயர் பெயரொடு பெயரும் என்னும் நன்னூற் பொதுவியற் சூத்திரத்துக்குக் கூறிய உரையாலும் புலப்படுவதை ஐயர் காட்டுவர். தொகைநிலை பற்றி, நச்சினார்க்கினியர் சேனா வரையரிலிருந்து வேறுபடுமிடங்களை ஐயர் தொடர்ந்து மறுப்பர். அதுவென் வேற்றுமையுயர்திணைத் தொகைவயின் என்னுஞ் சொல்லதிகாரச் சூத்திரத்திற்கு நச்சினார்க்கினியர் நேரேபொருள் கொள்ளாது. சொற்களை இயைபின்றி மாற்றியும் இல்லாத பொருளை வருவித்தும் தொல்காப்பியர் கருத்தோடு முரணப்பொருள் கொண்டு பலாவறு கூறுவர். நின் மகள் என்பத பயனிலை கொள்ளாது நின்ற வழிநினக்கு மகள் என்பது விரியுமாதலாலும் நம்பி மகன் என்பது பயனிலை கொள்ளுங்கால் நம்பிக்கு மகன் வந்தான் என முடியாமையின் நம்பியுடையமகன் அல்லது நம்பிக்குப் பிறந்த மகன் என்றாதல் விரித்தல் வேண்டுமாதலானும், நினக்கு மகனாயுள்ளவன் என்பது ஆக்கமெனில், இயற்கையைச் செயற்கையாகக் கூறிய இலக்கணையெனலாம். ஆதலாலும் நச்சினார்க்கினியர் கூறியன நிராகரிக்கத்தக்கன என்பர் ஐயர். சேனாவரையர் கருத்து பெயரொடுபெயரும் வினையும் வேற்றுமை எனத் தொடங்கும் இலக்கண விளக்கச் சூத்திரத் தாலும் அதன் உரையாலும் உறுதிப்படுவதையும் பிரயோக விவேகம் சமாசம் - 2 இன் உரையிலே தொகைநிலை, தொகாநி லையென்பன விளக்கப்படுமாற்றால் வலுப்படுவதையும் எடுத்துக் காட்டிக் கணேசையர் கட்டுரையை நிறைவு செய்துள்ளார். சேனாவரையர் இலக்கணக் கொள்கையின் சில கூறுகளுக்குச் சிலர் எற்படுத்திய தடைகளை ஐயர் தக்க முறையிலே விடுவித்துள்ளார். 4. அளபெடை அளபெடை என்ற பெயர்ச்சொல் விளக்கப்பட்டு, நன்னூலாரின் கூற்று கட்டுரையின் தொடக்கத்திலே தரப்பட்டுள்ளது. அளபெடுக்கும் போது, நெட்டெழுத்தேழும் அளபெடுக்கும்மென்றும், அவை இவ்வளவு மாத்திரை நீண்டனவென அவ்வவற்றுக்கும் இனமாகிய குற்றெழுத்துக்கள் காட்டி அவற்றின் பின்னே நிற்குமென்றும் நன்னூலார் கூறுவர். தொல்காப்பிய எழுத்ததிகார உரையாசிரியர்களாகிய இளம்பூரணர், நச்சினார்க்கினிய ரென்னு மிருவரும் நெடிலுங் குறிலுஞ் சேர்ந்துநின்று அளபெடுக்கு மென்னும் பொருள்பட, நீட்டம் வேண்டின் அவ்வளபுடைய என்னுஞ் சூத்திரத்திற்கு முறையே, நீண்ட மாத்திரையையுடைய அளபெடை யெழுத்துப் பெறவேண்டின். மேற்கூறிய ஒரளவும் இரண்டளபு முடைய குறிலையும் நெடிலையும் பிளவுபடாமற் கூட்டியெழூஉக என்று கூறுவர் ஆசிரியர் என்றும். வழக்கிடத்துஞ் செய்யுளிடத்தும் ஓசையும் பொருளும் பெறுதல் காரணமாக இரண்டு மாத்திரை பெற்ற எழுத்து அம்மாத்திரையின் மிக்கொலித்தலை விரும்புவாராயின், தாங்கருதிய மாத்திரையைத் தருதற்குரிய எழுத்துக்களைக் கூட்டி, அம்மாத்திரையை எழுப்புக என்று கூறுவாராசிரியர் என்றுங் கூறுவர். நன்னூலார் கூற்று, உரையாளர் கூற்று ஆகியவற்றுள் எது பொருத்தமுடைய தென்பதே கணேசையர் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட விடயம். உரையாளர் இருவரையும் பொருந்தாதெனக் கணேசையர் காட்டத் தொடங்குகிறார். அளபெடையென்பது அளபெடுத் தலையுடைய ஒரெழுத்தையே உணர்த்தும். ஆதலால் ஓரெழுத்தே மிக்கு ஒலிக்க வேண்டும். இரண்டெழுத்துக்கூடி ஒலிப்பதாயின் எவ்வளவொலிக்கும், எவ்வாறொலிக்கும், மூன்று மாத்திரை ஒலிக்குமா எனப் பல பிரச்சினைகள் தோன்றும். நீட்டம் வேண்டி ஓரெழுத்தை நீட்டுங்கால் அதனையே வேண்டிய அளவு நீட்டலாமாதலால், மற்றோரெழுத்துக் கூட்டி நீட்ட வேண்டிய தில்லை. இன்னிசையளபெடையில், குற்றெழுத் தொன்றே நெடிலாக நீண்டு பின்னளபெடுத்தல் கண்கூடு. எழுத்துக்களே சேர்ந்து ஒலிக்குமென்பது தொல்காப்பியருக்குக் கருத்தாயின். நெடிலுங் குறிலும் வருமெனச் சூத்திரித்திருப்பர். தொடர்ந்து, தொல்காப்பியர் சூத்திரத்துக்குக் கணேசையர் பொருளும் விளக்கமுங் கூறுவர். மாத்திரை மிக்கொலித்தலை விரும்பின், விரும்பிய மாத்திரையையுடைய எழுத்துக்களை அவ்வெழுத்தோடு கூட்டி, அவ்வவெழுத்தினிசையை எழுப்புக என்று சொல்லுவர் புலவர் என்பதே ஐயர்தரும் நேர்பொருள், தொல்காப்பியச் சூத்திரங்கள் ஏழை எடுத்துக் காட்டும் ஐயர் அவற்றை நோக்கும்போது ஓரெழுத்தே நீளுமென்பதன்றி இரண்டெழுத்துக்கூடி நீளுமென்பது ஆசிரியர் கருத்தன்மை யாகிறது. அளவின் பொருட்டு அவ்வளபுடைய கூட்டப்படும் எழுத்துக்கள் வரிவடிவில் அறிகுறியாய் வரும். குன்றிசை மொழிவயினின்றிசை நிறைக்கும் என்று தொல்காப்பியச் சூத்திரத்தினாலும், குற்றெழுத்து இசைநிறைப்பதன்றி, நெட்டெழுத்தோடு கூடி அளபெடுக்குமென்பது பெறப்படாது. குற்றெழுத்துகள் குறியாய் வரும். வரும்போது, அவ்வந்நெடில் அவற்றுக்கினமான குறிலையே குறியாகக் கொள்ளும். நெட்டெழுத்து நீளுங்கால், ஒவ்வொரு மாத்திரை மிக்கே நீளுமாதலினால், இரண்டு மாத்திரை நீட்சிக்கு, இரண்டு குற்றெழுத்துகளேயன்றி, ஒரு நெட்டெழுத்தைக் குறியாக எழுதார். அளபெடை மிகூகரவிறுபெயர் என்னுந் தொல்காப்பியச் சொல்லதிகாரச் சூத்திரத்துக்குச் சேனாவரையர் கூறிய உரையையும், ஒன்று நின்று இன்றாகலின் என்னும் நச்சினார்க் கினியர் கூற்றையும் தம் கருத்துக்குச் சார்பானவை யாகக் கணேசையர் காட்டுவர். தொல்காப்பியர் குற்றெழுத்து இசை நிறைக்குமென்றதானல், அக்குற்றெழுத்து எழுத்தாகக் கொள்ளப்படாதென்பது தெளிவு. கணேசையருடைய எட்டுக் கட்டுரைகளுள்ளும், சிவஞானமுனிவர் மறுப்புக்கு உள்ளாகாதது இந்தக் கட்டுரையுள் மட்டுமே. தம்முடைய கருத்துக் கணேசையரின் அறிவு வளர்ச்சியில்,கு ஆதரவாகச் சிவஞான முனிவருடைய கருத்துகள் சிலவற்றைக் கணேசையர் இக்கட்டுரையில் காட்டியுள்ளார். ஐயர் சிவஞானமுனிவரின் இலக்கணக் கொள்கைகளிலே குறைகளிருப்பனவாகத் தாம் கருதிய இடங்களையே கண்டிக்கிறாரே தவிர, முனிவர்மேல் வெறுப்புடையவரல்லர் என்பது இக்கட்டுரையி லிருந்து புலனாகிறது. முனிவர் நன்னூல் விருத்தியுரையுள், இசைகெடின் என்னுஞ் சூத்திரத்து வரும் குறியே என்பதற்கு வரிவடிவில் அறிகுறியாம் என்றும், குற்றுயிர் அளபீனீறாம் என்பதற்கு ஒலிவடிவின் ஈறாம் என்றும் பொருந்தக் கூறியுள்ளார். அளபெடை தனிஎழுத்தன்று என்ற ஐயரின் கருத்துக்கு ஆதரவாக, அளபெடை அந்நெட்டெழுத்தோடு குற்றழுத் தொத்து நின்று நீண்டிசைப்பதொன்றாயினும், மொழிக் காரணமாய் வேறுபொருடாராது இசை நிறைத்தல் மாத்திரைப் பயத்ததாய் நிற்றலின் வேறெழுத்தென வைத்தெண்ணப் படாதாயிற்று என்னும் தொல்காப்பியச் சூத்திரவிருத்திப் பகுதி எடுத்துக் காட்டப்படுள்ளது. ஒரே ஓரிடத்திலே முனிவருரையை உடன்படமுடியாதவிடத்திலே, உரையாளரின் உரைக்கு இயைய அவர் அவ்வாறு கூறினரேயன்றி, அவர் கருத்து அதுவல்ல வெனக் கூறியுள்ளார். அளபெடை பற்றிச் சங்கரநமசிவாயர், நச்சினார்க்கினியர், சேனாவரையர், பாணினியார் ஆகியோருடைய கருத்துக்கள் சிலவற்றைக் கணேசையர் தொடர்ந்து காட்டுகிறார். அளபெடை யை இரண்டெழுத்துங்கூடி மூன்று மாத்திரையாயிற்றெனக் கொள்ளில், இரண்டெழுத்தொலி அங்ஙனமின்மையாலும், அளபெடை யென்னும் பெயர் ஏலாமையாலும், அவ்வாறு கொள்ளாது. அறிகுறியே என்று இசைகெடின் என்னும் நன்னூற் சூத்திரவுரையிலே சங்கரநமச்சிவாயர் கூறியுள்ளமையால், நெடிலுங்குறிலுஞ் சேர்ந்து பிளவு பட்டொலிக்குமேயன்றிப் பிளவு படாதொலிக்க மாட்டா என்பர் ஐயர். நச்சினார்க்கினியர் கூற்றுகளிலே சிலவற்றைக் கணேசையர் ஏற்றுக் கொள்கிறார். நீட்டம் வேண்டின் என்பதற்கு இரண்டுமாத்திரை பெற்ற எழுத்து அம்மாத்திரையின் மிக்கு ஒலித்தலை விரும்புவாராயின் என்றும் அந்நெட்டெழுத்துக்களே யளபெடுத்தலிற் சொல்லாதலெய்தின என்றும் நச்சினார்க்கினியர் கூறுவதை ஏற்றுக் கொள்ளும் ஐயர் இரண்டு கூற்றுகளை ஏற்றுக்கொள்ள முடியாதவிடத்து, அவ்வாறு கூறினார் போலும் இக்கருத்து நோக்கிப் போலும் எனச்சமாளிப்பர். நெட்டெழுத்துதொன்றே நீண்டு அளபெடுக்குமென்பது சேனாவரையரது துணிவுமாம் என்று காட்டுவதற்கு அவர் சொல்லதிகாரம் 634 ஆம் சூத்திரத்துக்குக் கூறிய உரையை ஐயர் எடுத்துக்காட்டுவர். வடமொழி இலக்கணகாரர் பாணினியார் ஓரெழுத்தே நீண்டொலிக்குமென்ற கருத்துடையவராதலையுங் காட்டுகிறார். நன்னூலாரின் இலக்கணக் கொள்கை சிவஞான முனிவரின் இலக்கணக் கொள்கையாகிக் கணேசையரின் இலக்கணக் கொள்கையாகவும் ஆவதை இக்கட்டுரையிலே காணலாம். 5. பிறிது பிறிதேற்றல் இறுதிநான்கு கட்டுரைகளிலும் ஒரு பொதுத்தன்மை காணப்படுகின்றது கணேசையர் நேரடியாகவே தொல்காப்பிய ஆராய்ச்சியில் இறங்கி விடுகிறார். இவற்றுள் முதல் மூன்று கட்டுரைகளும் தொல்காப்பியச் சொல்லதிகார ஆராய்சியாக அமைகின்றன. இம் மூன்று கட்டுரைகளிலும் சிவஞான முனிவருக்கு மட்டுமல்லாது, கலாநிதி பி.எஸ். சுப்பிரமணிய சாஸ்திரி என்ற தம்முடைய சமகால அறிஞருக்கும் கணேசையர் பதிலிறுக்க வேண்டியவராகிறார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே வடமொழிப் பேராசிரியராக விளங்கிய கலாநிதி சுப்பிரமணிய சாஸ்திரி வடமொழியோடுதொடர்òபடுத்தி¤தமிœஇலக்கண¡கொள்கைகளி‹வரலாற்wஆராய்ந்தவர்,செந்தமிழ்’என்wசஞ்சிகையிyதொல்காப்பிய¢செல்லாதிகார¡குறிப்òஎன்wதலைப்பிyதொடர்கட்டுuஎழுâவந்தார். வடமொழி, தமிழ், ஆங்கிலம் என்பனவற்றிலே புலமை பெற்றிருந்த பல்கலைக்கழகப்பேராசிரியரோடு«கணேசைய®மோதியிரக்கிறாரென்பJகவனிக்கத்தக்கது,வடமொழியாளராdசாஸ்திÇசிவஞாdமுனிவ®இலக்கண¡கொள்கைகளிyஈடுபாடுடையவராக¡காணப்படுகிறார். பிறிதுபிறிதேற்றல் என்ற தலைப்பிலான கணேசையரின் கட்டுரை பொருளடக்கத்தில் இரண்டாவது கட்டுரையான ஆறனுருபு பிறிதேற்றல் என்பதனோடு தொடர்புடையது. கணேசையர் சிவஞான முனிவரின் கொள்கையைக் கண்டித்து, அந்தக் கட்டுரையை எழுதியபின். சுப்பிரமணிய சாஸ்திரி எழுதி வந்த சொல்லதிகாரக்குறிப்புகளிலே, ஐயருக்கு உடன்பாடில்லாத விடயங்களும் காணப்பட்டதால், அவற்றுக்கு விடையளிப்பதாக இக்கட்டுரை அமைகிறது. பிறிது பிறிதேற்றலு முருபுதொக வருதலு நெறிபட வழங்கிய வழிமருங் கென்ப தொல். சொல். 588 இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் என்னும் மூவரும், ஆறாம் வேற்றுமையுருபு மற்றைய உருபுகளை ஏற்றலும் எனப் பொருளுரைத்துச் சாத்தனதனை, சாத்தனதனால் சாத்தன் தன்கண் என உதாரணங் காட்டினார்கள். அப்பொருள்பற்றிச் சொல்லதிகாரக் குறிப்பாசிரியர் நிகழ்த்தியுள்ள இருதடைகளை ஐயர் சுட்டுகிறார். (சமகால அறிஞரைப் பெயர் சொல்லிக் கண்டிப்பது நாகரிகமன்று என்று குறிப்பிடாமல், குறிப்பாசிரியர் என்றே கூறியுள்ளார்.) சாத்தனதாடை என்பது சாத்தனது ஆடை எனப் பொருள்படுதலிற் பெயர் உருபேற்றதன்றி, உருபு உருபேற்றதன்று என்பது ஒன்று. மற்றொன்று, சாத்தனது என்பது பெயராயின் பெயர் உருபேற்றலின்கண் மாறுபாடொன்று மின்மையின், அது கூறல் வேண்டியதின்று என்பது. ஆறாம் வேற்றுமை அது உருபிற்கு அஃறிணையொருமைப் பொருளை இதனதிது என்பதனாலே குறிப்பித்துள்ளமை யினால் உரையாளர்கள் மூவரும் அது ஒருமையுருபென்று கூறினார்களென்றும், அகத்தியச்சூத்திரமும் நன்னூற் சூத்திரமும் ஆறாம் வேற்றுமையுருபு அஃறிணையொருமைப் பொருளை உணர்த்துவதைத்துணிய உதவுகின்றனவென்றும் ஐயர் கருதுகிறார். சாத்தனது என்பது சாத்தனுடையது எனப் பொருள் படுமன்றிச் சாத்தனுடைய எனப் பொருள்படாது. சாத்தனதாடை என்னும் போது, அது உருபு பெயராய் நின்றே ஆடையொடு தொடர்ந்தாற்போலச் சாத்தனதனை என்னும் போதும் அது உருபு பெயராய் நின்றே ஐ உருபோடு தொடரும், கணேசையர் இதனைக் கொண்டு முதலாவது தடையை நிராகரிக்கிறார். ஏனைப் பெயர்போலாது உருபே பெயராய் நின்று உருபேற்றலால், இரண்டாவது தடைக்குந் தடையுண்டாயிற்று. சாத்தனது என்பது சாத்தனுடைய எனப்பொருள்படுமாயின் ஒருமை, பன்மை, உயர்திணை, அஃறிணை என்ற நியதியின்றி எங்கும் அது உருபு வரலா மெனப்பட்டு நூலாசிரியர்கள் கருத்துகளோடு மாறுபடு மெனவும் உயர்திணைப் பொருளில் வரும் ஆறாம் வேற்றுமைத் தொகையில் அது உருபு விரிக்கப்படாதெனத் தொல்காப்பியர் கூறிய சூத்திரமும் வேண்டியதில்லையெனவும் உடைய என்பது ஆறாம் வேற்றுமைக்குரிய உடைமைப் பொருள் இது என்பதைக் காட்டற்கு விரிக்கப்படும் சொல்லுருபேயன்றி, அது வின் பொருளன்று எனவும் கணேசையர் வாதிக்கிறார். அதுச்சொல் வேற்றுமையுடைமையானும் என்னும் சொல்லதிகாரச் சூத்திரத்துக்கு நச்சினார்க்கினியர் கூறிய உரையைத் தம் கருத்துக்கு ஆதரவாகக் கணேசையர் எடுத்துக் காட்டுகிறார். நச்சினார்க்கினியர், உடைமைப் பொருளாவது ஒன்றற்கு ஒன்றை உரிமை செய்து நிற்பது. அஃது இப்பொருளி னுடையது இப்பொருளென்றும், இப்பொருள் இப்பொருளி னுடையதாயிருந்தது என்றும், இப்பொருளுடைத்தாயிருந்தது இப்பொருளென்றும் மூவகைப்படும். அவை முறையே, சாத்தன தாடை என ஆறனுருபாயும், ஆடைசாத்தனது எனவும், குழையன் கச்சினன் எனவும் வினைக்குறிப்பாயும் நிற்கும் என்று கூறியதைக் கணேசையர் காட்டியுள்ளார், இறுதியு மிடையும் என்னும் வேற்றுமை மயங்கியற் சூத்திரவுரையிலே, சாத்தனதாடை என்னும்போது அது வென்பது பெயராய் நிற்குமென நச்சினார்க்கினியர் கூறியதை நினைவுறுத்திய ஐயர் அதே சூத்திரவுரையிற் சேனாவரையர் ஆறனுருபேற்ற பெயர் உருபோடு கூடிப்பெயராயும் வினைக் குறிப்பாயும் நிற்றலுடைமை யால், அந்நிலைக்கண் ஆடை சாத்தனது என இறுதிக்கண் நிற்குமென்று கூறியதையும் உடன்பாடாக எடுத்துத் தந்தார், முற்று அது உருபிற்குக் கூறிய உடைமைப் பொருளுணர்த்தி வருவதாலினாலேதான், சாத்தனதாடை என்பது ஆடை சாத்தனது என நிற்குமென்று இளம்பூரணரும் விளக்கினார். தொடர்ந்து ஆறாம் வேற்றுமையின் சிறப்பியல்புகள் சிலவற்றைக் கணேசையர் புலப்படுத்தியுள்ளார். சாத்தனது ஆடை என்னும் போது வரும் அது தொக்கு, சாத்தனாடை என நின்றவழியும், சாத்தனுடைய பொருளாகிய ஆடை என்று விரிதற்கேற்புடைமை கண்டே, சாத்தனது ஆடை என்பதை விரியென்றும் சாத்தனாடை என்பதைத் தொகை யென்றும் வழங்குகின்றனர். வடநூலார் ஆறாம் வேற்றமை விரியை (ராமஸ்ய வஸ்திரம்) இராமனுடைய ஆடையென்றும், தமிழ் நூலார் இராமனது ஆடையென்றுங் கொள்ளுதலில், அது என்பதற்கு உடைய எனப் பொருள் கொண்டால், குழப்பம் ஒன்றும் வராதேயெனில், தமிழ் நூலார் உருபிற்கு ஒருமை பன்மை கூறியுள்ளமையில், வடமொழியில் வரும் ஆறாம் வேற்றுமைக்கும் தமிழில்வரும் ஆறாம் வேற்றுமைக்கும் சிறிது வேறுபாடுண்டு. சுப்பிரமணிய சாஸ்திரி சிவஞான முனிவரைப் பின்பற்றியே இரண்டு தடைகளையுங் கூறியிருக்கவேண்டுமெனக் கொள்ளும் ஐயர் உரையாளர் உரையில்யாதுந் தடையில்லையெனக் கூறிக் கட்டுரையை நிறைவு செய்கிறார். 6. தொல்காப்பியச் சூத்திரப் பொருளாராய்ச்சி இது செந்தமி ழின் இரண்டு பகுதிகளிலே வெளிவந்த நீண்ட கட்டுரையாகும். கட்டுரையின் முற்பகுதி சிவஞான முனிவரையும் பிற்பகுதி சுப்பிரமணிய சாஸ்திரியையும் கண்டிப்பனவாக அமைந்துள்ளது. ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்ட சூத்திரமாவது வேற்றுமைப் பொருளை விரிக்குங் காலை ஈற்றுநின் றியலுந் தொகைவயிற் பிரிந்து பல்லா றாகப் பொருள்புணர்ந் திசைக்கு மெல்லாச் சொல்லுமுரியவென்ப............ தொல். சொல். 567 இச்சூத்திரத்துக்குத் தொல் உரையாளர் மூவரும் ஒரே கருத்தினராக உரை வகுத்துள்ளனர். மூவர் உரையுள்ளே சேனாவரையர் உரை மிகவும் விளக்கமாக அமைந்துள்ளதனால், கணேசையர் அவ்வுரையைத் தந்துள்ளார். உரையாளரின் பொருளை மறுத்து முனிவர் தொல்காப்பியச் சூத்திர விருத்தியுள் வேறு உரை கூறியுள்ளதனால், ஐயர் அவ்வுரையினை யுந் தந்துள்ளார். இருதரப்பட்ட உரைகளுள்ளும் எது பொருத்தமானது என்பதே கட்டுரை முற்பகுதியிலே ஆராயப் படுகிறது. குறிப்பாசிரியர் முனிவருரையே பொருத்தமானதோ என்று கருதக்கூடிய முறையிலே சில குறிப்புகள் தந்துள்ளார். அக்குறிப்புகளை நிகரிப்பனவாகக் கட்டுரையின் பிற்பகுதி அமைகிறது. சேனாவரையரும் முனிவரும் கூறியுள்ளவற்றை முதலிலே நோக்கலாம். சேனாவரையர், வேற்றுமைத் தொகையை விரிக்குமிடத்து, வேற்றுமையுருபேயன்றி, அன்மொழித்தொகை விரிப்புழி, வேறுபட்டுப் பல்லாறாக அன்மொழிப் பொருளோடு புணர்ந்துவரும் எல்லாச் சொல்லும் விரித்தற்குரிய என்னுங் கருத்தமையப் பொருள் கூறிப் பொற்றொடியரிவை, மட்குடம் என்பன பொற்றொடியை அணிந்த அரிவையெனவும் மண்ணாலியன்ற குடம் எனவும் வருவதை உதாரணங்காட்டினார். முனிவர். (ஓத்தினிறுதிக்கட்புறனடை) காப்பினொப்பின் என்றற்றொடக்கத்தனவாக ஆண்டுக் கூறிய பொருளேயன்றி, இன்னும் வேற்றுமைப் பொருளை விரித்துக் கூறுங்கால், அக்காப்பினொப்பின் என்றற் றொடக்கத்துத் தொகைச் சொற்களின்வேறுபட்டு¥பொருளொLபுணர்ந்திசைக்கு«எல்லா¢சொற்களு«ஈண்Lகோட‰குரியவென்ப®என்றவாWமுடிக்கŠசொல்லை¥பொருŸஎன்கிறார்..... காப்பினொப்பின்.... முதலிய சொற்கள்.... தொகுத்த மொழியாய் நிற்றலின் அவற்றைத் தொகையென்றும்... தொடர் மொழிகளின் ஈற்றுச் சொற்களே ஈற்றினின்றியலுந் தொகை என்றும்.... கூறினார் என்பர். முனிவருரையை மறுத்துச் சேனாவரையருரையை நிறுவும் பகுதி தொல்காப்பியர் கருத்தை ஆராய்தல். முனிவர் கூறிய தடைக்குத்தடை. விரியிலக்கணங்கூறியJகூறலன்kஎdமூன்றாfவகுப்பதற்Fஇடந்தருகிறது. காப்பினொப்பின் என்பது பொருள் பற்றிக் கூறப்பட்டதாகலின் காவல் முதலிய பொருள்பற்றி வரும் சொல்லெல்லாங் கொள்ளப்படுமாகலின், அதற்கென வேறொரு சூத்திரம் வேண்டாம். தொல்காப்பியர் கருத்து அதுவானால் அக்கருத்துத் தெளிவாக அமையும்படி சூத்திரித்திருப்பார். முனிவர் தம் முறையுள் வேற்றுமைப் பொருளை விரிக்குங்காலை என்பதற்கு இன்னும் வேற்றுமைப் பொருளை விரிக்குமிடத்து என்று பொருளுரைத்து, ஈண்டுப் பொருளென்றது வருமொழியை என்றார். அவ்வுரை முன்னொடு பின்முரணுகிறது. தொகைமொழியென்பதே தொல்காப்பயிர் கருத்தானால், அதை விளங்கச் சொல்லியிருப்பர். முனிவர் சேனாவரையருரையின்மேல் நிகழ்த்திய தடை இரு கூறுகள் கொண்டுள்ளது. வேற்றுமைத் தொகையை விரிக்குங்காலை என்னாமையாலும், வேற்றுமைத் தொகை விரியுமாறு வேற்றுமையியலுட் கூற ஓரியைபு இன்மையாலும் வேற்றுமையியலுள் உருபும் பொருளும் உருபுநிற்குமிடமும் மட்டுமே கூறியொழிந்தாரன்றி, வேறொன்றுங் கூறாமையாலும், வேற்றுமைத்தொகை விரியுமாறு, வேற்றுமையியல என்பதனாற் பெறப்படுதலில் வேறுகூற வேண்டாமையாலும், வேண்டுமெனில் உவமைத் தொகை விரியுமாறுங் கூறவேண்டு மாதலானும், அச்சூத்திரத்திற்கு அது பொருள் அன்று என்பது முனிவரின் வாதமாகும். தொகையைப் பொருளென, வேறு நான்கு சூத்திரங்களிலும் தொல்காப்பியர் கூறியுள்ளமை ஐயராற் காட்டப்படுகிறது. தொகை விரிப்புழி மயங்கும் மயக்கம் அடுத்துவரும் வேற்றுமை மயங்கியலிற் கூறப்படுவதானல், அதற்கு இயைய இங்கே தொகை விரிக்குமாறு கூறினாரெனச் சேனாவரையர் இயைபு கூறியுள்ளார். வேற்றுமையியலுட் கூறியது விரியிலக்கணமேயாதலினால், அதனோடியைத் தொகைவிரியிலக்கணம் கூறுவதும் பொருந்தும். வேற்றுமையியல் என்பதனால் வேற்றுமைத் தொகை யில்க்கணமே உணர்த்தப்பட்டது. உவமைத் தொகையை விரிக்கும்போது, வேறுசொற் பெய்து விரித்தல் வேண்டா. அன்மொழித்தொகை பல்லாற் றானும் பொருள் புணர்ந்திருக்குஞ் சொல்லாலன்றி விரியாமையில், அதனை முதலிலே சொல்லி, அவ்விதியை இதற்குங் கொள்ள வைத்தார். விதி அநுவாதமுகத்தாற்கொள்ளவத்தšதொல்காப்பியருக்Fவழக்Fஎன்பjநிறுவ,ஐய®நான்Fசூத்திரங்களை¡காட்டியுள்ளார். முனிவர், வேற்றுமைத் தொகையே வேற்றுமையியல என்னுஞ் சூத்திரத்துக்குக் கூறிய உரையைத் தந்து, ஐயர் அதனை மறுத்துள்ளார். வேற்றுமைத் தொகை விரியும் போது, தொகாநிலை வேற்றுமையியல்பாய் விரியும். எனவே அங்ஙனம் விரியுமியல்பை உடையது வேற்றுமைத் தொகை என்றதாயிற்று என்பர் முனிவர். தொகை இவையெனக் கூறி, முறையே அவற்றின்இலக்கண§கூறப்புகுந்jஆசிரிய®இவ்வாWதொகுவJவேற்றுமை¤தொகையெdஅதனியல்òஉணர்த்தாது. அது விரியுமாறு கூறி, அவ்வழி வேற்றுமைத் தொகையிலக்கணங் கூறினாரென்றல் மலைவுகூற்று என்பர் ஐயர், அளபெடைப் பெயரே அளபெடையியல (தொல். 634) என்பதற்குப் போல,வேற்றுமைத்தொகைaவேற்றுமையியல’என்பதற்ககு«பொருŸகொள்sவேண்டும. அவ்வாறு கொள்ளச் சேனாவரையருரையே பொருத்தமென்பது தெளிவாகுமென ஐயர் முடிவு காட்டுகிறார். கட்டுரையின் பிற்பகுதியிலே, கணேசையர் குறிப்பாசிரியர் இச்சூத்திரம் பற்றிக் கூறிய சில விடயங்களை ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்கிறார். சேனாவரையர் இதனை வேற்றுமைத் தொகையேயுவமைத் தொகையே என்னுஞ் சூத்திரத்தின் பின் வைக்கவெனின் அதுவுமுறையேயாயினும் இனிவருஞ் சூத்திரங் களானவை வேற்றுமைத் தொகை விரிபற்றிய மயக்க முணர்த்த லான் ஆண்டுப் படுமுறையுணர்த்துதல் ஈண்டுமியைபுடைத் தென்க என்று கூறியுள்ளார். இது ஆராயத்தக்கது என்றும், வேற்றுமை மயங்கியலில் தொகை, தொக, தொகா என்று சொற்கொண்ட சூத்திரங்கள் ஐந்தே, அவைகளுள் ஓம்படைக் கிளவி என்னும் சூத்திரத்துள்ள தொகை என்னுஞ் சொல்லைத் தவிர, மற்றைச் சூத்திரங்களி லுள்ள தொகை, தொக, தொகா என்ற சொற்கள் சமாசனைக் குறிக்கின்றனவா அல்லவா என்பதை அவ்வச்சூத்திரங்களுட் கூறுவோம். எவ்வாறாயினும், இவ்வைந்து சூத்திரங்களுள் ஒன்றிலாவது, வேற்றுமைத்தொகையை விரிக்குமிடத்து வேற்றுமையேயன்றி அன்மொழிப்பொருளோடு புணர்ந்துவரும் எல்லாச் சொல்லும் உணர்த்தப்படவில்லை, ஆதலால் சிவஞான முனிவர் கூறிய பொருளே பொருத்தமான தாகத் தோன்று கின்றது என்றுங் கூறுவர். குறிப்பாசிரியரின் கூற்றினைத் தந்த கணேசையர், சூத்திரங்களிலுள்ள அச்சொற்கள் தொகைப் பொருளை உணர்த்துகின்றனவா அல்லவா என்பதை ஆராய்கிறார். சாஸ்திரியின் குறிப்புகளைப் பற்றிய மறுப்பு பொது வகையாகவும் சூத்திரம் சூத்திரமாகவும் அமைந்துள்ளது. தொல்காப்பியர் பொருள்மயக்கத்தைத் தொகையிலும் தொடரிலும் உருபுமயக்கத்தைத் தொடரிலும் உணர்த்தி யுள்ளார். இதுபற்றியே வேற்றுமை மயங்கியலிலே முதற் பதினேழு சூத்திரங்கள் தொடர்மொழிமயக்கமாகவும் காணப் படுகின்றன. இதனது இதுவிற்றென்னுங்கிளவியும் என்னுஞ் சூத்திரவுரையிற் சேனாவரையரும், ஓம்படைக்கிளவிக்கு என்னுஞ் சூத்திரவுரையில் இளம்பூரணரும் சூத்திரப் பொருள்வைப்பு முறை பற்றிக் கூறிய கருத்துக்களை நோக்கும் போது தொகை, தொக, தொகா என்பன சமாசனையே உணர்த்தின என்பது தெளிவு என்பர் கணேசையர். சூத்திர ரீதியான ஆராய்ச்சியிலே முதலிலே வருவது, அதுவென் வேற்றுமை உயர்திணைத் தொகைவயின் என்பது. உரையாசிரியர் மதப்படி சம்பந்தப்படுதல் என்னும் பொருளில் வருவதாகக் குறிப்பாசிரியர் கூறியுள்ளார். ஆறாம் வேற்றுமைக்குரிய முறைபொருள் என்று உரையாசிரியர் கூறியது கருத்துரையேயன்றிப் பதவுரையல்ல. குறிப்பாசிரியர் கூறியவாறு சம்பந்தப்படுதல் என்னும் பொருளிற் றொகையென்பது வந்ததாயின், அது விரியும்போது, உயர்திணையொடு தொகைவயி ணன் என விரிந்து நிற்றல் வேண்டும். அவ்வாறு நில்லாமையில், அது பொருந்தாது, குத்தொகவரூஉங் கொடை யெதிர்கிளிவி என்னுஞ் சூத்திரம் தொகைவரியன் றென்பதை மாற்றுதற்காக, நாகரது பலிகொடுத்தான் என்று வரலாமென்பதை இச்சூத்திரம் விதிக்கின்றது என்று குறிப்பாசிரியர் கூறினார். இச்சூத்திரத்தின் முதலடிக்கு குவ்வுருபு தொகும்படி வருகீன்ற கொடையெதிர் பொருண்மையை உணர்த்துந்தொகைச் சொல் என்று பொருள் கொள்ளப்படும். கொடையெதிர்கிளவி என்றது கொடுத்தலென்னும் வருமொழியைக் குறித்ததன்று. கொடை யெதிர்தல் என்பதிலே, எதிர்தல் நேர்தல் எனச்சேனாவரையர் பொருள் கூறுவர். நச்சினார்க்கினியர், உரையாசிரியர் முதலி யோருக்கும் சேனாவரையரின் பொருள் உடன்பாடென்பது. அவரவர் உரையாற் புலனாகும். பிரயோக விவேகநூலாரும் இக்கருத்துக்கு ஆதரவாளரே. ஆதலின் இதனுள்ளும் தொக என்பது சமாசனைக் குறித்தே வந்துள்ளது. இனி உருபு தொக வருதலும் என்பதில் வரும் தொக என்பதும், மெய்யுருபு தொகா விறுதியான என்பதில்வரும் தொகா என்பதும் சமாசனையே உணர்த்திவென்பது இரண்டாவது கட்டுரையாகிaதொகைநிலை’யிyகாட்டப்பட்டுள்ளது. உருபும் பொருளும் விரிவன ஒன்றுமின்றெனச் சாஸ்திரி கூறியதற்கு எதிரான உதாரணங்கள் சிலவற்றைக் காட்டுவதோடு, குறிப்பாசிரியர் கூறியது பொருந்தாதென ஐயர் கட்டுரையை நிறைவு செய்கின்றார். 7. இருபெயரொட்டாகுபெயரும் அன்மொழித்தொகையும் தமிழ் இலக்கணகாரருள் இன்னும் சர்ச்சைக்குரியதும் தீராதுதுமான பிரச்சினைகளுள் ஒன்று ஐயரால் ஆராய்ச்சிக்கு எடுக்கப்படுகிறது. கற்போர்க்கு உணர்ச்சி பெருகும்படி எழுதப்பட்டதாகக் கணேசையர் கட்டுரையின் தொடக்கத்திலே கூறிவிடுகின்றார். இருபெயரொட்டாகுபெயரும் அன்மொழித் தொகையும் ஒன்றா, வேறா என்பதே பிரச்சினை. இளம்பூரணரும் சேனாவரையரும் மேலன இரண்டும் ஒன்றே என்ற கருத்தைத் தெரிவித்துள்ளனர். பொற்றொடி என்பது இருபெயரொட்டிப் பொற்றொடி தொட்டாளை விளக்குமென உரைத்தனர். பொற்றொடி வந்தாள் என இருபெயரொட்டு, அன்மொழிப் பொருள் மேலும் வந்ததெனக்கூறும் சேனாவரையர் பெயர் இயற்பெயர் ஆகுபெயர் என இரண்டாய் அடங்குதலில், இயற்பெயரைப் பெயரியலிற்கூறி, அன்மொழித்தொகை தொகையாதலினால் எச்சவியலுள்ளும் இடையியலுள்ளும் கூறப்பட்டுள்ளமை கவனிக்கத்தக்கதென்றுங் கூறினார். நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார், சிவஞானமுனிவர் ஆகிய மூவரும் இருபெயரொட்டாகு பெயரும் அன்மொழித் தொகையும் வேறு என்ற கருத்தினர். மக்கட்சுட்டென இரண்டு மில்லாததோர் பொருளை யுணர்த்தாது, இரு பெயரொட்டு மக்களை உணர்த்திற்றெனக்கூறும் நச்சினார்க்கினியர் பொற்றொடி ஆகுபெயராகாது அன்மொழியாகும் என்றனர். இருபெயர் தொக்கு ஒரு சொன்னீர்மைப்பட்டு, மற்றொரு பொருள் தருபெயரே இரு பெயரொட்டாகு பெயரெனக் கொள்ளும் தெய்வச்சிலையார் துடிபோன்ற இடையினை யுடையாளைத் துடியிடை யென்பது ஆகுபெயரென்பர். அவர் அன்மொழித் தொகையை விளக்கும்போது, அல்லாதமொழி தொக்கு மூவகைத் தொகையிலும் முன்னும் பின்னும் என்னும் இரண்டிலும் உணரப்படும் பொருண்மையுடையதெனக் கூறினார். கடுங்கோல் என்னும்போது கடுமையுங்கோலும் அரசன்மேல் நிற்றலால், பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழி என்பர். சிவஞானமுனிவர் இரண்டும் ஒன்றென்பதிலே நச்சினார்க்கினியரையும் தெய்வச்சிலை யாரையும் ஆதரித்து நிற்கும் போதிலும் இருபெயரொட்டாகு பெயரென்று தெய்வச்சிலையார் கூறுவதை அன்மொழித் தொகையென்றும் அன்மொழித் தொகையென்று தெய்வச் சிலையார் விளக்குவதை இருபெயரொட்டாகு பெயரென்றும் மாற்றிக் கூறியுள்ளார். ஏதாவது வேறுபாடு இரண்டுக்குமிடையே கண்டு பிடித்துக் கூற வேண்டுமென்ற நோக்கத்தை முன்வைத்து இவ்விருவரும் உரை கூறியிருக்க வேண்டுமென்றும், இருவரும் தாங்காட்டிய உதாரணங்களையும் நுனித்து நோக்காது. ஆகுபெயர் பொருளோடு இயைபுடையதாய் வருமென்றும் அன்மொழி இங்ஙனமின்றியும் வருமென்றும் கூறினரெனக் கணேசையர் கண்டிப்பர். கணேசையர் தெய்வத்சிலையாரின் உரையை முதலிலே ஆய்கிறார். தகரஞாழல் என்பதிலே தகரமும் ஞாழலுமாகிய இரண்டும் சாந்தின் மேல் நிற்றலால், அன்மொழித்தொfயென்wதெய்வச்சிலையை®கருத்து. தகரமும் ஞாழலுங் கூடியதே சாந்தாதலாலே பொருந்தாதென்பர் ஐயர், கருங்குழல் முதுலிய பண்புத் தொகையில் வரும் அன்மொழியிலே குழலுக்கும் பெண்ணுக்கும் இயைபு காணப்படுகிறது. இதனை அன்மொழித் தொகையாகக் கொள்ளாமல் விடுவதாயின், பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகைக்குத் தொல்காப்பியர் கூறிய இலக்கணம் தவறுகிறது. பொன் தொடியையே அன்றி, உடையாளையும் விசேடித்துச் செல்வ முடையாளென்பதைக் காட்டி நின்றதனால், பொற்றொடி அன்மொழித் தொகை யென்று கொள்ளும் தெய்வச்சிலையார் துடியிடை, தாழ்குழல் முதலியவற்றை நிராகரிப்பது பொருத்த மில்லை. அதனாலே, தெய்வச்சிலையார் காட்டிய வேறுபாடு பொருந்தாதென்பர் ஐயர். இயைபு வேண்டாத பிறிது பொருளுணர்த்தி வருவது அன்மொழித் தொகையென்ற முனிவர் கூற்றின் மூலாதாரத்தைக் கணேசையர் அறிய முயல்கிறார். வடமொழியில் அன்மொழித் தொகைகள் சக்கிய சம்பந்தம் பெறவேண்டுமென்றுபிரயோகவிவேக«முன்gகூறியுள்ளjஐய®காட்டுகிறார். நுணுகி நோக்குவார்க்குத் தொகை யாற்றலாற் பெறப்படும் அன்மொழிப் பொருளும் சம்பந்தம் பெற்று வருகிறதென்பது புலப்படும். பாணினி ஆகுபெயரைத் தற்குணசம்விஞ்ஞான வெகுவிரீகி, அதற்குணசனம் விஞ்ஞான வெகுவிரீகி எனக் கூறுகூரென்பப் பிரயோகவிவேகங் கூறியுள்ளது, பாணினியின் சூத்திரஉரையை நோக்கும்போது, அன்மொழிப் பொருள் இயைபுடையதோர் மொழிபற்றியே பெறப்படுமெனத் தெரிய வருவதாகக் கூறும் ஐயர், ஆகுபெயர் விட்ட ஆகுபெயர், விடாத ஆகுபெயரென இரண்டாயவாறு போல், அன்மொழித் தொகையும் விட்ட அன்மொழித் தொகை (அதற்குண சம்விஞ்ஞான வெகுவிரீகி) விடாத அன்மொழித் தொக(தற்குணசம் விஞ்ஞான வெகுவிரீகி)என இருவகைப் படுமென்றும் இயைபு அங்கு உண்டு என்பது பெறப்படும் என்றுங் கூறுவர். முனிவர் தொழிற் சம்பந்தம் மட்டும் நோக்கிக் கூறினார் போலும். கணேசையர் சொல்லதிகாரக் குறிப்பாசிரியரை ஓரிடத்தில் மறுத்தும் ஓரிடத்தில் உடன்பட்டும் bசல்வதை இக்கட்டுரையிலே காணலாம். தொல்காப்பியர் ஆகுபெயர்பற்றிக் கூறிய சூத்திரத்தை நோக்கும்போது. அவர் தொழிலியைபை நோக்காது, ஆகுபெயர்க்கும் பொருளுக்குமே சம்பந்தங் கூறியதாகக் தெரியவருவதாகக் கூறும் ஐயர் சேனாவரையைர் கூறிய உரையை எடுத்துக் காட்டுவர். செந்தமிழ் தொகுதி 26, பகுதி 9, பக்கம் 24 இல் குறிப்பாசிரியர் சேனாவரையருரை பொருத்தமற்றதெனக் கூறியுள்ளதை ஐயர் நிராகரிக்கிறார். சேனாவரையரை முனிவர் கண்டித்தமைக்கு ஐயர் பதிலிறுக்கிறார். முனிவர் வடமொழியோடும் மாறுபடுதலாலும் எனக்கூறியதற்குக் காரணம் சக்கிய சம்பந்தம்வேண்டாJதொகையாற்றலா‰பெறப்படுமென்பJநோக்கியே,அன்மொழி¥பொருளு«சம்பந்தமுடைaமொழிகளிடத்தேaதோன்றும். வடமொழி யோடும் மாறுபடாமற் கூறல், வடமொழிக்கும் தமிழ்மொழிக்கும் ஒத்த வழிமட்டுமே பொருந்தும். வடமொழியில் வரும் அன்மொழித்தொகை தமிழில் வரும் அன்மொழித் தொகை போலன்றி, தாம் எந்தப் பொருள்மேல் வருகின்றதோ, அந்த அந்த லிங்க விகுதியைப் பெற்று வருதலினாலே, தமிழில்வரும் அன்மொழித் தொகையோடு வேறுபாடுடையதென உதாரணங்கள் தந்து ஐயர் விளக்குகிறார். இரண்டடித்தும் வரும் அன்மொழித் தொகைகளும் சிறிது வேறுபாடுடையவென்ற குறிப்பாசிரியர் கருத்தை ஐயர் உடன்படுகிறார். தொல்காப்பியர் இருபெயரெனக் கூறாது இருபெய ரொட்டு எனக் கூறியதனால், கணேசையர் தொகையும் ஒட்டும் ஒன்றென்கிறார். அன்மொழித்தொகை பிரிந்து நின்று ஆகுபெயர்ப்பொருளை உணர்த்த முடியாது. ஐயரின் இக்கட்டுரை ஒன்றிலேயே பிரயோகவிரைகேம் மறுக்கப்படுகிறது. வடமொழிநோககிப் பிரயோகவிவேக நூலாரி தந்த அன்மொழி எடுத்துக் காட்டுகளெனப் பாயினமேகலை முதலியன ஐயரால் நிராகரிக்கப்படுகின்றன. ஐயருடைய கொள்கை, அண்மையில் வெளிவந்த கட்டுரையொன்றிலே நிராகரிக்கப்பட்டுச் சிவஞான முனிவர் கொள்கை போற்றப்பட்டுள்ளமையை இவ்விடத்திலே எடுத்துக் காட்டலாம். இக்காலத்தொடரியல் இலக்கண முறையிலே, ஆகுபெயர் - அன்மொழித் தொகை என்பனவற்றை ஆராய்ந்த கலாநிதி பொன், கோதண்டராமன் பொற்றொடி வந்தாள் அன்மொழித் தொகையெனவும் கொள்ளைக்கூட்டம் வந்தது இரு பெயரொட்டாகு பெயரெனவும் இலக்கண உலகில் புதிய பார்வை என்ற நூலிலே விளக்கியுள்ளார். 8. சிறுபொழுதாராய்ச்சி இக்கட்டுரை மட்டுமே பொருளிலக்கணம் சம்பந்தமானது. இக்கட்டுரை கண்டன கண்டன வகையைச் சேர்ந்தது. செந்தமிழ் தொகுதி 26, பகுதி 2 இல், கணேசையர் சிறுபொழுது என்ற தலைப்பிலே ஒர் ஆராய்ச்சிக் கட்டுரைஎழுதினார். சிறுபொழுதுகள் ஐந்தே என்ற சிவஞானமுனிவரின் கருத்தை மறுத்துச் சிறுபொழுதுகள் ஆறு என்ற பழைய உரை யாசிரியர்களின் கருத்தை நிலைநாட்டுவதாக அக்கட்டுரை அமைந்தது. ஐயரின் கட்டுரைக்கு மறுப்பாக, செந்தமிழ் தொகுதி 29 பகுதி 5 இல், சி, வீரபாகுப்பிள்ளையவர்கள் சிறுபொழுதாராய்ச்சி என்ற கட்டுரை வெளியிட்டார். மறுப்புக்கு மறுப்பாக, தம்முடைய முந்திய கொள்கையை நிறுவுவதற்காக, ஐயர் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரையும் வீரபாகுப்பிள்ளை பயன்படுத்திய அதே தலைப்பிலே வெளிவந்தது. ஐயரின் கட்டுரை பிள்ளையின் கருத்துக்களைச் சான்றுகள் காட்டி மறுக்க வேண்டியிருந்ததனால், மிகநீண்டுஅச்சிš32பக்கங்களுக்கு¥போய்விட்டது. பிள்ளையின் ஆராய்ச்சி முனிவரின் கருத்தைத் தாபிக்க வந்ததனால் இக்கட்டுரை நேரல் வழியிலே முனிவரைக் கண்டிப்பதாகவும் அமைகிறது. கணேசையர் தம்முடைய கட்டுரை நீண்டு செல்லாமலிருப்பதற்காக, பிள்ளையின் ஆராய்ச்சியுள் வேண்டியவற்றை மாத்திரம் மறுத்து உண்மையை நிலைநாட்டுவதாகக் கூறுகிறார். கணேசையர் மறுப்புக்குரியன வாகக் காட்டும் பகுதிகளும், அவையொவ்வொன்றையும் நிராகரிக்கும் அணுகுமுறையும் சுவை பயப்பனவாயுள்ளன. பிள்ளை, இவ்விதம் ஸ்ரீ சுவாமிகள் இளம்பூரணரையும் நச்சினார்க்கினியரையும் மறுத்துச் சிறுபொழுது ஐந்து என்று கூறி விடவே சிறுபொழுதாறென்பது பழங்கதையாய்விட்டது என்கிறார்கள். முனிவரிலுள்ள உவப்போடு நோக்குவார்க்குச் சிறுபொழுதாறென்பது பழங்கதையாவன்றி, ஏனைய அறிஞர்க்கு அது பழங்கதையாகுமா என்ற வினாவினைக் கணேசையர் எழுப்புகிறார். வாதங்களும் பதில்களும் 1. நச்சினார்க்கினியர் கொண்ட பாடம் வைகுறுவிடியல் பழையபாடம் அதுவே என்கிறார் பிள்ளை. இளம்பூரணர் வைகறைவிடியல் மட்டுமே காட்டுகிறார். அகப்பொருள் விளக்கப் பழைய உரையிலும் அதே பாடம். தாமோதரம் பிள்ளையும் பொருளதிகார முதற்பதிப்பிலே அதே பாடத்தைக் கொடுத்துள்ளார். பிள்ளை நச்சினார்க்கினியரின் பாடத்தைக் கொண்டால் அதை வினைத் தொகையாக்கி தம்முடைய கருத்துக்குத்தக்த திரிக்கலாமென நம்பியிருக்கிறார். 2. இரவு நேரம் நான்கு யாமங்களைக் கொண்ட தெனவும் இரண்டாவது யாமத்துக்கும் நான்காவது யாமத்துக்கும் இடைப்பட்ட நடுயாமமே மதுரைக் காஞ்சயிலே பாடப் பட்டுள்ளதாக நச்சினார்க்கினியர் கூறுவரெனவும் பின்னை கூறுவர். இரவை நான்கு கூறாகக் கொள்வது வடநூல் வாக்கு மூன்று கூறாகக் கொள்வது தமிழ் வழக்கு நான்கு கூறாகக் கொளும் கனாநூல் வழக்கு வடநூல் வழக்கே. மாலை, யாமம், வைகறை என்று அகப்பொருள்விளக்கம் கூறுவதே தமிழ் வழக்கு. சங்ககால அகத்திணை நூல்களில், யாமம் ஒன்றே, தமிழ் வழக்கும்படி, பகல் மூன்று பிரிவு இரவு மூன்று பிரிவு பட்டினப் பாலையில் வரும் கடைக்கங்குல் வருணனை பின்னிரவு வருணனை சிலப்பதிகாரத்தில் அரையிருள் யாமம் இlயாமமாகும். மதுரைக் காஞ்சியிலே நச்சினார்க்கினியர் வலிந்தும் நலிந்தும் நான்கு யாமமாக்கினார். 3. கோவிற் பூசாகாலங்கள் ஆறிலே, gகற்gன்னிரண்டுkணியோடுeன்குfலங்கள்Kடிவதாகவும்kலைxன்று,ïரவுxன்றுïடம்bபறுவதாகவும்ïவைáறுபொழுதுகள்Mறுrமபிரிவுகள்vன்பதைvவ்வாறுtலியுறுத்துமெனப்ãள்ளைÉனவுவர்.ïy§if¡ கோவில்களிலே ஆறு சிறுபொழுதுகளுக்கும் ஆறு பூசா காலங்கள் உண்டு. பகலை ஐந்தாக வகுக்கும் வழக்குமுண்டு என்ற ஐயர் அது வடநூல் வழக்கு என்பர். 4. மாலைப்பொழுது ஆறு மணிக்கும் பத்து மணிக்கும் இடைப்பட்ட நேரமென்றும் ஐயர் கருத்திணை மறுக்கும் பிள்ளை சூரியாஸ்தமனத்திற்கும் இரவுக்கு மிடைப்பட்ட காலமே மாலையெனவும் செவ்வானமுடைமையும் சிறிது நேரமாதலும் அதன் இயல்புகளெனவுங் கூறுவர். சூரியன் மறைவுக்கும் சூரியோதயத்துக்கும் இடைப்பட்ட காலம் இரவு. இரவின் முற்பகுதியே மாலை. வருணிக்குங்காற் பெரும்பாலும் சிறப்பு நோக்கி, அந்திமாலையை எடுத்து வருணிப்பது ஆசிரியர் வழக்கு மாலை சிறுபோதென்றலும் இரவின் வேறு என்றலும் பொருந்தாது. 5. பிள்ளை, இருள்வரமாலை வாள்கொள் என வருணிக்கபட்டதென்றும் மயங்கிருட லைவரவெல் லைக்கு வரும்பாய இடும்பை கூர்மருள்மாலை என்று மாலையின் பின்னந்தியே பகலுக்கு வரவு என்றும் கூறியுள்ளார். ஆசிரியர் பகற்கு வரம்பு மாலையென, இவர் பின்னந்தியென்கிறார், முன் சூரியஸ்தமனத்தின் பின்மாலை என்பதை ஒப்புக் கொண்ட பிள்ளை முன்னுக்குப் பின்முரணுகிறார். மருள்மாலை - மயக்கத்தைத் தரும் மாலை. அந்தி மாலையிலேயே, ïருள் tரத்தொடங்கிவிடும்,“இருடலைtர¢ bசவ்வானந்nதான்றும்,mவ்வளவு,áவனுக்கும்cமைக்கும்eடுவிருக்கும்Fமரனுக்கும் உவமை கூறியது.அந்திமாலை இரவின் வேறன்று மாலையிற்றோன்று மதியம் என்பதனால் மாலை சிறு பொழுதாகிவிடாது. பூரணை காலத்திலே சந்திரன் பின் மாலையிலேயே தோன்றுகிறது. நளவெண்பாவிலே, மாலை உண்டுபோட்டவுயிரை, நடுயாமத்திலே ஊதை உருவிப்புக்க தெனவரும் வருணனை ஐயரது கருத்துக்குச் சான்றாக்கப் படுகிறது. பிள்ளையின் கருத்துப்படி 9 மணிவரை மாலை, ஒருமணி கூட்டினால் பொருந்தாதென்பது நகைப்புக் கிடமானது. 6. வைகறையும் விடியலும் ஒன்றெனப்பிள்ள பல உதாரணங்கள் காட்டுவர். வைகறைக்கு விடியல் என்று பெயருண்டு ஆனால், இரண்டும் வேறு. குறிஞ்சிக்கலியுள் விடியல் வெங்கதிர் காயும் விடியற் பின்னர்த்தாகிய வெங்கதிர் என முனிவர் புரட்டிப் பொருள் கூறுகிறார். வெங்கதிர் தோன்றி விடிந்ததையன்றே என்பதைப் பிள்ளை பெரும் புரட்டாகப் புரட்டி, இருள் தோன்றும்படி விடிந்தது என்கிறார். பிள்ளை முரணுறுதல் நன்கு விளங்கிவிட்டது. தொன்னூல் விளக்கத்திலும் வீரமாமுனிவர் விடியலை, எற்றோற்றம் என்பர். இராம வதாரத்து யுத்த காண்டத்திலே அநுமான் மேருவுக்கப்பாற் சென்றபோது சூரியனைக் கண்டு, உதயமாயிற்று விடிந்தது என மயங்கிப் பின் சூரியன் மேற்றிசையில் இருக்கின்றான் ஆதலால் விடிந்தது மன்று என்று கூறியதால் சூரியோதயமே விடியலாம். ஐயர் விடியல் சூரியோதயமெனக் கூறியது காக்கையை வெள்ளை போலுமென்று பிள்ளைக்குத் தோன்றியது வியக்கத்தக்கது வைகறையாமம் ஆனால் விடியல்யாமமென்ற வழக்கு இல்லை. 7. விடியல் நாள்வெயிற் காலைக்குப் பெயராதலை நோக்கியே, இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் வைகறையும் விடியலும் எனப்பொருள் கூறினார்கள். நச்சினார்க்கினியர் வைகுறு என்ற சொல்வடித்தை செவியறிவுறூஉ என்பதனோடு ஒப்பிடுகிறார். ஊடல் வைகறையோடு மட்டுமல்ல, விடியலோடும் சம்பந்தப்பட்டது. மருதத்தின் புறமாகிய உழிஞைக்கும் விடியலே உரியது. முனிவர் கூறியதே புதுப்பொருள். அதுவே பொருளாயின், தொல்காப்பியரின் புலமையை இழிவு படுத்துகிறது. ஏனைய பொழுதுகளும் அடையின்றிக் கூறப்பட்டுள்ளன. சூத்திரமல்லாது. செய்யுளாயின், அடை வரலாம். 8. அகப்பொருள் விளக்க நூலாரை இலக்கண விளக்க நூலார் மறுத்த மறுப்பை மனத்துள் வைத்துக் கொண்டு, சுவாமிகள் எழுதிய மறுப்பைப் பிள்ளை மெய்யென்று தாபிக்கப் புகுந்தது பெருந்துக்கமே என்பர் ஐயர். ஊடல் விடியற்காலத்தும் நிகழும் என்பதற்கு நச்சினார்க்கினியர் காட்டிய, காலை எழுந்து கடுந்தேர் பண்ணி என்பதில் வரும் காலை என்பது பற்றி, நச்சினார்க்கினியர் காலை வந்ததெனக் கூறினாரல்லர். ஐயர் அப்படிக் கூறாதபோதும், பிள்ளை வேண்டாத விரிவுரை நிகழ்த்தியுள்ளார். அப்பாட்டுள் வரும் எல்லினன் பெரிது என்றமை கொண்டே நச்சினார்க்கினியர் அவ்வாறு கூறுவர். குறிப்பாற் சிறுமையுடையன் பெரிதும் எனப் புதுப்பொருள் படைத்த பிள்ளை, ஐயர் புதுக்கருத்துத் தாபிக்க வந்துள்ளா ரென்கிறார். வைகறை, விடியலும் ஊடல் தீராத வழி, பாணன் விறலிவாயில்களாக அனுப்பவுதும், முடியா விட்டால், விருந்தோடு புக்கு ஊடல் உணர்த்துவானெனப் பொருளிலக்கண நூலார் கூறலின், மருதத்துக்குக் காலை இல்லை என்று எவ்வாறு கூறலாம்? 9. நக்கீரர் வைகறையுள் விடியலை அடக்கியும் குறுந்தொகை நூலார் எற்பாட்டை மாலையுள்ளடக்கியும் கூறினரென ஐயர் எழுதியது தவறென்கிறார் பிள்ளை, சங்கப்புலவர் வழக்கு அதுவல்ல. முருஞ்சியூர் முடிநாகராயர் மண்டிணிந்த நிலமும்.... நீரும் எனப் பஞ்சபூதங்களை எண்ணலால், அது அறியப்படும் - பிள்ளை. இவ்வைந்தும் தனித்தனி பொருள்கள். காலம் ஒரு தனிப்பொருள். அதன் பகுப்புகளை ஒன்றனுள் ஒன்று அடக்கலாம். நக்கீரனார் வைகறையாமம் சிறுபொழுதெனக் கூறிவிட்டு, விடியலுமடங்க, வைகறைவிடியலென உதாணங்காட்டினா ரென்றல் பொருந்தாது - பிள்ளை அவருரைக்கண் அச்சூத்திரங்கள் பிற்காலத்தாராற் சேர்க்கப்பட்டன. களவியலுரை நக்கீரருரையன்று எனச் சாமிநாதையர் சங்கத் தமிழும் பிற்காலத்தமிழும் என்ற நூலிலும் ஸ்ரீ நிவாசப்பிள்ளை தமிழ் வரலாறு என்ற நூலிலும் கூறியுள்ளனர். 10. சிலப்பதிகார உரையாசிரியர் நெய்தற்கு ஏற்பாடு கூறவுமில்லை வையமோ கண் புதைப்ப வந்தாய் மருண்மாலை என்பதை உதாரணங் காட்டவுமில்லை, பிள்ளையின் இக்கூற்று ஐயர் எழுதியதை விளங்கிக் கொள்ளாமையே, அடியார்க்கு நல்லார் பதிகவுரையில் எற்பாடும் அமையச் சிறுபொழுது ஆறு என்று கூறியமையால். ஐயர் அதை வருவித்துக் கொண்டார். பின் சிலப்பதிகாரத்துள் வந்த சிறுபொழுதுகளைக் கூறுமிடத்தே, அவர் மாலையைக் கூறியுள்ளார், பரிபாடலில் வந்த கிரகநிலை ஆவணி மாதத்துப் பூரணையிலன்று வந்த கிரகண நேரங்கூறியதாதலால் சூரியன் நிற்க என்றதனால், இது எற்றோற்றம் என்றார். ஆவணியிலே, சூரியன் சிங்கராசியில் உதயமாவதால், இது பொருத்தமே. 11. எற்பாடு என்பதற்குமுனிவ®கூறியவாறு,காyஎன்பjபொருத்த« -பிள்ளை. அகப்பொருளிலக்கணம் சொன்ன ஆசிரியர்கள் நெய்தற்கு சிறுபொழுது கூறும்போது, எற்பாடு என்று கூறுகின்றனரேயன்றிக் காலையென ஒருவரும் குறிக்கவில்லை. அகப்பொருள் விளக்க நூலார் எற்படுகாலை வெய்யோன்பாடு என்ற தொடர்களை வழங்கியுள்ளார் காலை என்பதைக் காலைநேரம் என்று கொள்ளும் பிள்ளை எற்பாடு என்பதை அடைமொழியாகக் கொள்கிறார். காலை என்பதற்குக் காலம் என்று பொருள் - ஐயர். பழைய உரைகாரரும் ஆதித்தன் படுகிறபொழுது என்றார். அகப்பொருள் விளக்கநூலார் வெய்யோன்றோற்ற மெனக் கூறாமல், வெய்யோன்பாடு என்றே கூறியிருத்தலால், பொழுது படுதலைய கூறினாரென்று துணியலாம். எற்பாடு என்பது சூரியோதயத்துக்குச் செய்யுளில் அரிய வழக்கு சங்க இலக்கியங்களிலே நெய்தற்கும் முல்லைக்கும் மாலை கூறுங்கால், அதற்குமுன் பொழுதுபடுதலை எற்பாடு என்ற சொல்லாலே கூறக்காணலாம். எற்பாடு காலையை அன்றி மாலையை உணர்த்துமா என்று பிள்ளை வினாவல் எவ்வாறு பொருந்தும்? எற்பாடே அன்றி மாலை முதலியனவும் நெய்தற்கு வருவது மயக்கமாகும். நடுப்பகலில் வரும் பிரிவின் பின்னர், அதனால் நிகழும் இரங்கல் வருதலே முறை. காமந்தணிவது காலை காமமிக்கு இரக்குங் காலமே எற்பாடு. 12. ஐயரின் படி, பிற்பகல் இரண்டு மணிமுதல் ஆறுமணிவரை எற்பாடு பிற்பகலை எற்பாடு என்ற வருணித்த ஆசிரியர்கள் முன்னுமில்லை பின்னுமில்லை.அகநானூற்றுச் செய்யுளில், உப்பின் குப்பையேறி எற்பட வருதிமிலெண்ணும் என மாலையில் வந்த திமிலையே எற்பட வருதிமில் என்கிறது. எற்பாடும் மாலையும் ஒரு பொருட் சொற்களே, இதனை, மாலை வந்தன்று என்ற ஐந்குநூற்றுச் செய்யுட்பகுதிக்கு அதனுரை யாசிரியர் எற்பாடு என்று பொருள் கூறுவதால் அறியலாம். இதுவரை பிள்ளையின் கருத்துக்கள். காலத்தை ஆறுசமகாலப் பிரிவுகளாக வகுத்தாலும், அவ்வக்காலப் பிரிவுக்குச் சிறந்த காலப்பகுதியையே புலவர்கள் எடுத்துப் பெரும்பாலும் வருணிப்பது வழக்கம். உதாரணமாக, வைகறைக்குக் கோழீ கூவும் நேரம் விடியலுக்குச் சூரியோதயம் நடுப்பகலுக்கு உச்சிகாலம் எற்பாட்டுக்குப் பொழுதுப்படும்நேரம் மாலைக்கு அந்திமாலை யாமத்துக்குப் பானாள். அது பற்றியே, புலவர்கள் சூரியாஸ்தமனம் வருணித்துப் பின் அந்தி மாலையை வருணிப்பது. மாலை ஆரிய அஸ்தமனத்துக்கும் இரவுக்கு மிடைப்பட்ட பொழுதே என்ற பிள்ளை, எற்பாடு மாலையுடன் ஒன்றெனல் பொருந்துமா? எற்படவருதிமில் என்பதற்கு பொழுது படவருந்திமில் என்பதே பொருள் 2 மணி தொடங்கி 6 மணிவரை எற்பாடு கூறி வருணித்த புலவர் இல்லையென்பர் பிள்ளை. அக்காலத்துத் தலைவி இரங்கல் கூறுவதன்றி, மணித்தியாலங் கூறி வருணிப்பதில்லை. திருக்கோவை, நாலடியார் உதயணன் கதை என்பனவற்றில் எற்பாட்டு வருணனையும் இரங்கலும்உள. சங்கத் காலத் தொகை நூல்களுள் இந்த மரபு காணப்படுவதை நன்குணர்ந்த இளம்பூரணர் மாலை வருவதற்கு ஏதுவாகிய எற்பாடு கண்டு காட்டினர். அதனாலும் எற்பாடு பொழுது படுநேரம் என்பது தெளிவு. 13. அகத்திணைக்குரிய காலைவரப் பாடினமையோடு நண்பகலும் மாலையும் நடுயாமமு«வர¥பாடியிருக்கிறார்கள். அப்படியிருக்கவும் நெய்தற்றிணை பாடினாரெல்லா ஞாயிறு படுங்காலமாகவே வைத்துப் பாடியிருத்தலினாலும் என ஐயர் கூறியது முழுப்பூசணிக்காயைச் சோற்றுட் புதைத்தது - இதுவரை பிள்ளை கூறியது. நெய்தற்றிணை பாடினாரெல்லாம் என்றது பெரும்பாலும் எற்பாடே பாடினமையாலாகும். தொல்காப்பியர் காலத்தின்பின், மாலையும் இரங்கல்பற்றியும் இயைபுபற்றியும் நெய்தற்குரியதாகக் கொள்ளப்பட்ட தென்று கருதுவாருமுளர். அது பற்றியே ஐயரும் இரங்கல் பற்றி, எற்பாட்டை மாலையுள டக்கினார் என்றார். பிற்பொழுது பாட்டி பழங்கதை படித்தலினாலும் விளையாட்டினாலும் கழியுமென்பர் பிள்ளை, தலைவனைப் பிரிந்து தனித்திருப்போருக்கு, விளையாட்டில் மனஞ்செல்லாது, பிள்ளை நெய்தற்குக் காலை வந்ததாகக் காட்டிய செய்யுட்கள் பலவும், நிலத்துக்கடையாயும் திணை மயக்கமாகவுமே வந்தன இரங்கலோடு சம்பந்தப்பட்டு வரவில்லை. 14. நெடுங்கயிறு வலந்த .... கோடுயர் தினிமணற்றுஞ் சுந்துறைவ என்னுஞ் செய்யுள், காலையிற் சென்று மீன் பிடித்ததைக் குறித்தது - பிள்ளை இதில் இளையரும் முதியருங் கூறியென்றதனால், இது ரைவலைபோட்டு இழுக்குத் தொழிலைலக் குறித்ததேயாம்.கடிரையை கடற்பதம் நோக்கிக் காலையிற் போடுவதுண்டு 2 மணிக்குமேற் போடுவதுமுண்டு, மணற்றுகந்துறைவ என்றதனாலே இது எற்பாட்டிலே போடப்பட்டதாம், இளம்பூரணர் புறத்திணையிலும் தும்பைத் திணை நெய்தற்கு உரித்தாமாறு கூறும்போது, நெய்தற்கு ஓதிய எற்பாடு போர்த்தொழிற்கு முடிவாதலாலும் என்று கூறுவதாலும் மீன்வேட்டையாஙர வருதலாலும் எற்பாடு நெய்தற்குரியதாவதாக ஐயர் முடிவு கட்டுகிறார். கணேசையரின் தொல், இலக்கியப் புலமைக்கும் தர்க்கவன்மைக்கும் சான்றாக விளங்குகிறது இக்கட்டுரை, தொல்காப்பியம் அகத்திணை யியலுக்கும் உரை வகுத்த அண்ணாமலைப் பல்கலைக்கழத்துத் தமிழ்ப்பேராசிரியர் சோமசுந்தர பாரதியார் சிறுபொழுதுக்கள் ஆறே என்ற கருத்தை ஏற்றுள்ளார். சிறுபொழுதுகள் ஐந்தே என்று வாதிப்பதற்கு, இனி இடமில்லை. சில முடிபுகள் கணேசையரும் பிற இலக்கணகாரரும் எட்டுக் கட்டுரைகளிலும் கணேசையர் பயன்படுத்திய முக்கியமான இலக்கண நூல்களும் பயன்படுத்தாத முக்கியமான இலக்கணநூல்களும் வருமாறு தொல்காப்பியம் இளம்பூரணம் (10 11 நூற்,) சேனாவரையம் (13 நூற்.) நச்சினார்க்கினியம் (14 நூற் பின்பு.) தெய்வச்சிலையார் (17 நூற்.) நன்னூல் (13 நூற்.) - மயிலைநாதருரை (14 நூற்.) - விருத்தியுரை - சங்கரநமச்சிவாயர் (17 - 18 நூற்.) - சிவஞான முனிவர் (18 நூற்.) தொல்காப்பிய முதற்சூத்திரவிருத்தி (18 நூற்.) இலக்கணவிளக்கச் சூறாவளி (18 நூற்.) இலக்கண விளக்கம் (17 நூற்.) பிரயோகவிவேகம் (17 நூற்.) தொன்னூல்விளக்கம் (18 நூற்) அகப்பொருள்விளக்கம் (13 நூற்.) அகத்தியம் (6 நூற்.) திருக்குறள் - பதிமேலழகருரை சிலப்பதிகாரம் - அடியார்க்குநல்லாருரை பயன்படுத்தாதவை வீரசோழியம் (11 நூற்.) நேமிநாதம் (13 நூற்.) இலக்கணக்கொத்து (17 நூற்.) முத்துவீரியம் (19 நூற்.) கணேசையர் கட்டுரை ஒவ்வொன்றிலும் உடன்பாடும் எதிர்ப்பும் பெறும் முக்கியமானஇலக்கணகாரuஇÅநோக்கலாம். போலியெழுத்து நன்னூலார் கருத்து நிறுவல் பெயர் குறிப்பிடாமல், சங்கர நமச்சிவாயரும் சிவஞான முனிவரும் கண்டிப்பு; கணேசையர் சார்பாகத் தொல்காப்பியர், இளம்பூரணர் நச்சினார்க்கினியர், பிரயோகவிவேகநூலா காட்டப் பட்டுள்ளனர். ஆறனுருபு பிறிதேற்றல் மயிலைநாதர் கருத்து நிறுவல்; சேனாவரையர், இளம்பூரணர் அதே கருத்தினர்; பிரயோக விவேகம் ஆதரவு; சிவஞான முனிவர் உரை மறுக்கப்படுகிறது. தொகைநிலை சேனாவரையர் கருத்து நிறுவல்; பிரயோகவிவேகம் ஆதரவு; இளம்பூரணர் கருத்து மறுப்பு; நச்சினார்க்கினியர், சிவஞான முனிவர் ஒரளவு உடன்பாடும் ஓரளவு எதிர்ப்பும். அளபெடை நன்னூலார் கருத்து நிறுவல்; இளம்பூரணர், நச்சினார்க்கினியர் கண்டனம்; சிவஞான முனிவர் கருத்து ஏற்றல்; சேனாவரையர், நச்சினார்க்கினியர் சங்கரநமச்சிவாயர் கருத்துகக்ளோடு உடன்பாடு. பிறிதுபிறிதேற்றல் சுப்பிரமணிய சாஸ்திரி கண்டனம்; சிவஞானமுனிவரைப் பின்பற்றுபவரெனக் கண்டனம்; மயிலைநாதர் கருத்தே இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் கருத்துமென ஆதரவு தொல்காப்பியச் சூத்திரப் பொருளாராய்ச்சி சேனாவரையர் கருத்து நிறுவல்; இளம்பூரணர், நச்சினார்க்கினியரும் அதே கருத்தினர்; சிவஞான முனிவர், சுப்பிரமணிய சாஸ்திரி கண்டனம். இருபெயரொட்டாகுபெயரும் அன்மொழித் தொகையும்; இளம்பூரணர், சேனாவரயர் கருத்து நிறுவல்; நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார், சிவஞானமுனிவர் கண்டனம், பிரயோக விவேகத்தின் கருத்து நிராகரிப்பு; சுப்பிரமணிய சாஸ்திரி உடன்பாடும் மறுப்பும். சிறுபொழுதாராய்ச்சி; இளம்பூரணர், நச்சினார்க்கினியர் கருத்து நிறுவல்; அகப்பொருள் விளக்கம், தொன்னூல் விளக்கம் என்பனவும் அதே கருத்தின; வீரபாகுப்பிள்ளையும் சிவஞான முனிவரும் கண்டனம். கணேசையருடைய ஆய்வு இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், சிவஞான முனிவர் என்போரின் இலக்கணக் கொள்கைகளைப் பற்றிய ஆய்வு என்று பொதுநோக்கிலே கூறலாம். மற்றவர்களின் கொள்கைகளிலே எது பொருத்தமானது என்று நிறுவுகிறாரே தவிர, புத்தம்புதிய கொள்கையாக, கணேசையர் எதையும் முன்வைக்கவில்லை. தொகைநிலை, அளபெடை என்ற இரண்டு கட்டுரைகளிலும் தவிர, ஏனைய ஆறு கட்டுரைகளிலும், ஐயர் இளம்பூரணரோடு உடன் படுகிறார், சோனவரையருரை சொல்லதிகாரத்துக்கு மட்டுமே காணப்படுவதால், போலியெழுத்து சிறுபொழுது என்பன சம்பந்தமாக, அவர் கருத்துகள் தெரியவரவில்லை, ஏனைய ஆறு கட்டுரைகளிலும், ஐயருக்குச் சேனாவரையரோடு பூரண கருத்து உடன்பாடு காணப்படுகிறது. போலியெழுத்து, பிறிதுபிறி தேற்றல், தொல்காப்பியச் சூத்திரப் பொருளாராய்ச்சி, சிறுபொழுதாராய்ச்சி என்னும் கட்டுரைகளிலே நச்சினார்க் கினியரோடு உடன்படும் கணேசையர் தொகைநிலை, அளபெடை, இருபெயரொட்டாகுபெயரும் அன்மொழித் தொகையும் என்னும் கட்டுரைகளிலே அவரைக் கண்டித் துள்ளார். ஆறனுபுரு பிறிதேற்றல் என்ற கட்டுரையிலே நச்சினார்க்கினியரோடு ஓரளவு உடன்படுகிறார். அளபெடை தவிர்ந்த ஏனைய ஏழு கட்டுரைகளிலும், சிவஞான முனிவர் கண்டனத்துக்குள்ளாகிறார். சுப்பிரமணிய சாஸ்திரியும் வீரபாகுப்பிள்ளையும் சிவஞான முனிவரின் ஆதரவாளர்கள். சாஸ்திரி சம்பந்தப்பட்ட மூன்று கட்டுரைகளிலே, இரண்டில் முழுவதாகக் கண்டிக்கப்படுகிறார் ஒன்றிலே ஒரு கருத்து உடன்பட்டு ஒரு காத்து மறுக்கப்படுகிறது. கணேசையர் சிவஞான முனிவரை இப்படிப் பல இடங்களிலே மறுத்தலால், சிவஞான முனிவர் தமிழ் இலக்கணக் கொள்கை வளர்ச்சியிலே குறிப்பிட்டுக் கூறக்கூடிய சில பங்களிப்புகளைச் செய்துள்ளாரென்பதை மறந்து விடலாகாது. வடநூலறிவிலே தாம் பெற்றிருந்த பாண்டித்தியம் பற்றி பெருமிதம் முனிவர், இலக்கணக் கொத்தாசிரியர் போல தமிழ் இலக்கணம் வடமொழி இலக்கணத்தின் வழிவந்ததென்று கூறுமளவுக்கு மயக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஐந்திரமென்பது வடநூலாதலின், அதன் வழிவந்ததென்று தொல்காப்பியத்தைக் கொள்வது தவறு என்று முனிவர் வாதிக்கும் போது, தமிழ் இலக்கணக்கூறுகள் சிலவற்றின் தனித்துவம் அவரால் நன்கு உணரப்பட்டமை தெளிவாகிறது. தொல்காப்பியம் படித்தான் என்றவிடத்தே முதற்சொல் ஆகுபெயர். ஆகுபெயர்கள் சொல்மாற்றஞ் சிறிதுமின்றி நின்றவாறே பொருள்தருவது. இந்தக் கருத்தைத் தெளிவாக முனிவரே முதன்முதலில் விளக்கினார். நூன்மரபு என்பதற்கு, எழுத்திலக்கணத்தை ஒருவாற்றாற் றொகுத்து உணர்த்துவதென்று பிற உரையாசிரியர்கள் பொருள் கொண்டனர். எழுத்துகளுக்கு இலக்கண நூலுள் மரபாக இடப்பட்ட பெயர்களாகிய குறில், நெடில், உயிர், மெய் முதலியவற்றையே நூன்மரபு உணர்த்துவதால், நூன்மரபென்பது நூலினது மரபு பற்றி பெயர் கூறுதலாமென்ற முனிவர் உரையே பொருத்தமானது. தொல்காப்பிய முதற்சூத்திரம். அகரமுதல் னகரமுடிவாயுள்ள முப்பதிற்கும் உள்ள பொதுப்பெயர் எழுத்தென்றும், இயங்காது சார்ந்து நிற்பன எழுத்தென்று சிறப்பிக்கப்படாவென்றும் குறிப்பால் உணர்த்தினமையால் அது அகரமுதலியவற்றிற்குப் பொதுப்பெயர் கூறுதல் நுதலிற்று என்ற முனிவரின் கருத்து. பிறஉரையாசிரியர்கள் அச்சூத்திரத்துக்குக் கூறிய உரையினும் சிறப்பானது. அகரமுதல் னகர இறுவாயாக எழுத்துகள் முறைப்படுத்தப்பட்டமைக்கு நுட்பமான ஏதுக்களை முனிவர் காட்டியதுபோல, வேறெவரும் காட்டவில்லை. சிவஞான முனிவரை அரசஞ் சண்முகனாரோடு ஒப்பிட்டு முனிவரின் பெருமைகள் சிலவற்றைச் சுப்பிரமணியபிள்ளை எடுத்துக்காட்டியுள்ளார். இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்திலே, தொல்காப்பியப் பாயிரங்களுக்கு மட்டும் விருத்தியுரை எழுதிச் சண்முகவிருத்தியென்ற பெயரிலே அரசஞ்சண்முகனார் வெளியிட்டார். முந்துநூல் என்பது அகத்தியமே என்பது முனிவர் கருத்து. அரசஞ்சண்முகனார் இறைவன் திருவாயினின்று தமிழிற்கு முதனூலாக முப்பத்துமூன்று சொற்கள் தோன்றினவெனவும், அவை நான்கு சூத்திரமாகப் பகுக்கப்பட்டனவெனவும், அவை நுட்பமாக முத்தமிழ் இலக்கணமும் முப்பொருளும் தெரிவிக்கும் இயல்பினவாகலின், அச்சூத்திரங்கட்கு இசை நுணுக்கமெனப் பெயர் வழங்கியதென்றுங் கூறுவர். அரசங்சண்முகனாரின் இத்தகைய கருத்துகள் கணேசையரின் ஏளனத்துக்குரியவாயின. அரசஞ்சண்முகனாரைக் கேலிசெய்து, கணேசையர் எழுதிய கட்டுரைகள், தொல்காப்பியப் பதிப்புகளிலே சேர்த்துக் கொள்ளப்படாததற்குச் சண்முகனாரின் தகுதியிலே யைருக்கு நம்பிக்கையின்மையே காரணமாமெனலாம். சிவஞான முனிவர் தகுதியுடையராதலினாலே, அவர் கொள்கைளை விமர்சனஞ் செய்த ஐயர் கட்டுரைகள், தொல்காப்பியப் பதிப்புகளிற் சேர்த்துக் கொள்ளப்பட்டன. சண்முகவிருத்தியைக் கண்டதனால் ஏற்பட்ட ஏமாற்றமே. அந்நூலுக்கு வழிகாட்டியாக இருந்த தொல்காப்பியச் சூத்திரவிருத்தியையும் முனிவருடைய பிறஇலக்கண ஆக்கங்களையும் விமர்சனக் கண்கொண்டு பார்க்க, ஐயரைத் தூண்டியிருக்கலாம். கணேசையர் வாதங்களில் வடமொழி இலக்கண மரபு பெறும் இடம் தற்காலத்திலே மொழியின் அமைப்பு மொழியியற் பின்னணியிலே வைத்து நோக்கப்படுவது போல், தமிழ் இலக்கணக் கொள்கைகளை வடமொழி இலக்கணப் பின்னணியிலே வைத்து நோக்கும் போக்கு அண்மைக்காலம் வரையிலே வேரூன்றிக் காணப்பட்டது தொல்காப்பியர் வடமொழி இலக்கணத்துக்கு எந்த அளவுக்குக் கடமைப் பட்டுள்ளாரென்பது பற்றிப் பலத்த கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. சோழப் பெருமன்னர் காலத்திலிருந்து தமிழ் இலக்கணகாரர் வெவ்வேறு அளவிலே வடமொழி இலக்கணத்தைத் தழுவியுள்ளனரென்பது தெளிவாகத் தெரிய வருகிறது. தொல்காப்பியம் சொல்லதிகாரத்துக்கு இரண்டாவது உரையாளாராகிய சேனாவரையர் வடமொழி இலக்கணக் கருத்துக்களை நன்கு பயன்படுத்தியுள்ளாரென்பது யாவரும் ஒப்ப முடிந்தது. வடஇந்தியாவில், முஸ்லீம்கள் ஆட்சி ஏற்பட்டதனால், அங்கிருந்த வடமொழி அறிஞர் பலர் வடமொழி நூல்களோடு தென்னிந்தியாவுக்கு ஓடிவந்தனர். தமிழ்நாட்டிலே ஆதீனங்கள் சமயப்பணி செய்ய முற்பட்டபோது, ஆங்கிருந்த துறவிகள் வடமொழியை ஆழமாகவும் அகலமாகவுங் கற்று, தம்முடைய அறிவுப் பெருமையைக் காட்டுவதற்காக, வடமொழியிலிருந்து தாம் பெற்ற ஞானத்தைப் பறைசாற்றினர். சிவஞான முனிவரும் இந்தப் போக்குக்கு விதிவிலக்கல்லர். தமிழ்நாட்டிலே காணப்பட்ட மேற்படிபோக்கு வடமொழி வெறுப்புக்கு வழிகோலியது. ஈழத்திலே வடமொழியின் ஆதிக்கம் இடம்பெறாததால்,குறிப்பிடத்தக்fவடமொÊவெறுப்òஇல்லை. கணேசையர் வடமொழி இலக்கணக் கொள்கைகளை ஆராய்ந்தே தம்முடைய எட்டுக் கட்டுரைகளையும் எழுதி யுள்ளார். சிவஞானமுனிவரிலிருந்து கணேசையருக்குள்ள வேறுபாடு, வடமொழி இலக்கணக் கொள்கைகள் தமிழ் இலக்கணமரபுக்கு ஏற்குமா என்பதை ஐயர் நுணுக்கமாக ஆராய்ந்துள்ளார். வடமொழியிற் கூறப்பட்ட சந்தியக்கரம் தொல்காப்பியரோ, நன்னூலாரோ கூறவில்லை என்று ஐயர் வாதிப்பது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. தமிழிலுள்ள ஆறாம் வேற்றுமையும் வடமொழியிலுள்ள ஆறாம் வேற்றுமையும் ஓரளவு வேறுபாடுடையனவெனவும் தமிழிலுள்ள தொகைநிலையு«வடமொழியிலுள்sதொகைநிலையு«ஓரளîவேறெனவு«மிழிலுள்sஆகுபெயரன்மொழி¤தொகைகளு«சிறிJவேறுபாடுடையdவெனவு«கணேசைய®நன்Fஎடுத்துக்காட்டியுள்ளார். சிறுபொழுதுகள் ஆறு என்பதே தமிழ்வழக்கெனவும் வேறு பல பகுப்புகள் வடமொழி வழக்கெனவுங் கூறிக் கணேசையர் தமிழ்மரபை நிறுவுகிறார். சிவஞானமுனிவர் இலக்கண விளக்கச் சூறாவளி எழுதியது போல, கண்டனத்துக்காகக் கண்டனம் செய்வது, கணேசையர் மரபல்ல, அளபெடை பற்றிய கட்டுரையிலே, பாணினியுடனும் முனிவருடனும் ஐயர் உடன்படுகிறார். தொல்காப்பியச் சூத்திரப் பொருளாராய்ச்சி என்ற கட்டுரையிலே வடமொழிச் சமாசனுக்குத் தமிழ்மொழித் தொகை இணையானதென்று காட்டியுள்ளார். கணேசையர் - ஈழத்துக் கல்விப் பாரம்பரியத்தின் விளைபொருள் கணேசையரின் இலக்கணக் கொள்கைகளை விளங்கிக் கொள்வதற்கு, ஈழத்துக் கல்விப் பாரம்பரியம் பற்றிய உணர்வு உதவும் போலத்தோன்றுகிறது. கி,பி, பதினான்கா நூற்றாண்டிலிருந்து ஈழத்திலே தமிழ்நூல்கள் தொடர்ச்சியாகத் தோன்றுகின்றன. தமிழ்நாட்டோடு ஈழத்துக்கு நெருங்கிய தொடர்பு நிலைபெற்று வந்தாலும், தமிழ்நாட்டிலேற்பட்டவந்த மாற்றங்கள், ஈழநாட்டை நேரடியாகப் பாதிக்கவில்லை. பதினான்காம் நூற்றாண்டுக்குப் பின்பு ஐரோப்பியர் காலம் வரையிலே, ஒருவகையிலே தமிழ்நாட்டு வரலாறு ஒரு வீழ்ச்சிக்காலம். தமிழ்மொழி பெரமைகொள்ளத்தக்க நூல்கள் பல, அக்காலத்திலே தோன்றின என்று கூறமுடியாது. கணேசசையரின் இலக்கணக் கொள்கைகளைப் பார்க்கும்போது, அவையாவும் பதினான்காம் நூற்றாண்டு அல்லது அதற்குமுன்பே தோன்றிவிட்டன என்பதைக்கவனிக்கவேண்டும். பிரயோகவிவேகம், இலக்கணவிளக்கம், தொன்னூல் விளக்கம் என்பன கூறும் கருத்துக்களைத்தாம் உடன்படுவதாக, அவர் எடுத்துக்காடடியுள்ளபோதும், அக்கருத்துக்கள்யாவும் பதினான்காம் நூற்றாண்டுக்கு முன்பு தமிழ் இலக்கணகாரர் களால் வெளியிடப்பட்ட கருத்துகளே என்பது அவதானிக்கத் தக்கது வடமொழி இலக்கணமரபை அளவுக்கு மீறிப் பின்பற்றுவது தமிழ்மொழி இலக்கண மரபை மழுங்கடித்து விடுகிறதென்பதே கணேசையர் கருத்தெனலாம். -பேரா. ஆ. வேலுப்பிள்ளை இலக்கண வரம்பு, பக். 170-215 4. மகாவித்துவான் மறைத்திரு. சி. கணேசையர் அவர்கள் தேசுமிக அடியேற்குச் செந்தமிழில் நூல்கள்பல கற்பித் தென்னை மாசகலக் கற்றவர்கள் அவைநடுவே வைத்தமகா வித்து வானைக் காசினியோர்கண்மணியை இலக்கணநற் சிரோமணியைக் கணேசையப்பேர்த் தேசிகனை யுரைமணியைக் கவிமணியைச் சிந்தையினி லிருத்து வோமே. தமிழ் கூறும் நல்லுலகம் நாவலர் பெருமானை நன்கறியும். யாழ்ப்பாணத்து நல்லூர், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரவர்கள் தமிழுக்குஞ் சைவத்துக்குந் தனித்தொண்டாற்றினார்கள். அன்றியும், தம் அரிய பணியைத் தொடர்ந்து செய்வதற்கு ஒரு மாணவ பரம்பரையையும் ஆக்கித் தந்தார்கள். நாவலரவர் களுடைய மாணாக்கர்களுள் அவர்களுடைய தமக்கையார் புதல்வனாகிய வித்துவசிரோமணி பொன்னம்பலப் பிள்ளையவர்கள் தலைசிறந்தவர்; நுண்மாண் நுழைபுலம் படைத்தவர். சங்க இலக்கியங்கள் அச்சில் வராத அக்காலத்திலேயே (அதாவது 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி யிலேயே) ஏட்டுப் பிரதிகள் மூலம் சங்க இலக்கியங்களைக் கற்றவர். சிந்தாமணி, சிலப்பதி காரம், மணிமேகலை, இராமாயணம் முதலிய இலக்கியங்களைத் துருவித் துருவி ஆராய்ந்தவர். தொல்காப்பியத்தைப் பல்காற் கற்று நிறைந்த அறிவுபடைத்தவர். ஒருகால் ஒன்றைக் கற்றாலே மனதில் நன்றாகப் பதித்துவைக்கும் நினைவாற்றல் சாலவும் படைத்தவர். இன்னிசை அறிவும் இனிது வாய்க்கப் பெற்றவர். பழைய உரையாசிரியர்களாகிய பரிமேலழகர், நச்சினார்க்கினியர், பேராசிரியர் முதலியோருடைய உரைகளை ஏற்ற ஏற்ற இடங்களில் எடுத்தாளும் ஆற்றலும் நுண்ணிய இலக்கண அறிவும் வாய்க்கப் பெற்றவர். இத்தகைய பேரறிஞர்பாற் கல்வி கற்றோர் பலராவர். அவர்களுள் தலைசிறந்தவர், மகாவித்துவான் மறைத்திரு. சி. கணேசையரவர்களாவர். யாழ்ப்பாணத்துச் சுன்னாகம், அ.குமாரசுவாமிப் புலவரவர்களின் தமிழ்த் தொண்டையும் பேரறிவையும் பெருந்திறனையும் தமிழறிந்தார னைவரும் அறிவர். அறியாதார் உளரேல், அவர் தமிழறியாதாரே. வித்துவசிரோமணி பொன்னம்பலப் பிள்ளையவர்களுக்குப் பின், குமாரசுவாமிப் புலவர் அவர்களிடங் கல்வி கற்றதோடு, பிற் காலத்திற் புலவர வர்களுக்கு உசாத்துணைவராகவும் விளங்கியவர் மகாவித்துவான் கணேசையரவர்கசளின் மாணவர்களுள் யானுமொருவனாகலாற் போலும் கணேசையர் வரலாற்றுச் சுருக்கம் ஒன்றை எழுது மாறு நண்பர்கள் பணித்தார்கள். அப் பணியைத் தலைமேற் கொண்டு எழுதப் பெற்றதே இக் கட்டுரை யாகும். அறிஞர் குற்றங் களைந்து குணங் கொள்வாராக. பிறப்பு யாழ்ப்பாணத்தின் வடபால் ஏறக்குறைய எட்டு மைல்களுக் கப்பால் சிவந்தநிறமண்ணு«தீஞ்சுtநீரு«பொருந்தி,இயற்fவளனெலாŠசெறிந்து,தாளாண்kமிக்fவேளா©டொழிலுக்FஉரியதாŒவிளங்குவJபுன்னாலைக்கட்டுவ‹என்னு«ஊர். இவ்வூரிலே சைவ அந்தணர் குலத்திலே காசிப கோத்திரத்திலே சின்னையர் என்னும் அந்தணச் செல்வருக்கும் அவர்தம் அருந்ததியன்ன வாழ்க்கைத் துணைவி . khS¡F«கணேசைaர்ஐந்தாவJபுதல்வரhகப்பிறந்தா®.இவருக்கு மூத்தோர் நால்வரும் பெண்களாவர். தந்தையும் தாயும் விநாயகப் பெருமானைக் குலதெய்வமாகக் கொண்டொழுகினவ ராதலின், கணேசரருளாற் பிறந்த தம் அருந்தவப் புதல்வருக்குக் கணேசன் என்று பெயரிட்டனர். பின்னாளிலே கணேசையர வர்கள் பெரிய கணேச பக்தனாகவே மாறிவிட்டார்கள். அவர்கள் பாடிய வருத்தலைவிளான் மருதடி விநாயகர் இருபா இருபஃது என்னும் இனிய செய்யுள் நூலின் கண்ணே, என்குலத் தந்தணர் நின்னடித் தொண்டினை வழிவழி செய்து வாழும் புன்னைமா நகரின் மேவிய நற்றளியிற் போல் வீயா மருதடி மேவு மூலத்தும் உற்றே யருள்செயும் உயர்பரம் பொருளே என்று, தம் தந்தை தாயர் முதலியோரும் விநாயகவழி பாட்டிற் சிறந்து விளங்கினார்கள் என்பதைக் குறிப்பிடுதல் காண்க. கணேசையரவர்கள் பிறந்தநாள் ஈசுர ஆண்டு பங்குனித் திங்கள் பதினைந்தாம் நாளாகும் (1-4-1878). இரகுவமித்துக்குக் கணேசையரவர்கள் எழுதிய உரைக்குச் சிறப்புப்பாயிரங் கொடுத்த சுன்னாகம், அ. குமாரசுவாமிப் புலவரவர்கள், காசிபகோத் திருமுடையோன் புன்னைநகர்ச் சின்னைய நாதன் மைந்தன் தேசிகன்வித் துவசூடா மணிபொன்னம் பலப்பெயர்கொள் செம்மல் பாங்கே பேசரியவிலக்கியKமிலக்கணமு«பிறநூலு«பெரிJகற்றோ‹ பூசுரர்கோன்கணேசனெனும் பெயருடையயோன் கவிபாடும் புலமிக்கோனே என்று கூறுதலும் ஐயரவர்களின் பிறப்பு, கல்வி, ஆற்றல் முதலியனவற்றைக் காட்டும். கல்வி கற்றல் கணேசையரவர்கள் குடும்பம் கற்றவர்களையும் ஆசிரியர் களையுங் கொண்டு விளங்கிற்று. அவர்களுடைய பெரிய தகப்பனாராகிய மறைத்திரு. கதிர்காம ஐயரவர்கள் புன்னாலைக் கட்டுவனில் ஒரு பள்ளிக்கூடம் நடத்திவந்தார்கள். அஃது அக்காலத்தில் ஒரு சைவப் பள்ளிக்கூடமாக விளங்கிற்று. (இப்போது அஃது அரசினர் பள்ளிக்கூடமாக மாறிவிட்டது.) அப் பள்ளியிலேயே கணேசையரவர்கள் மிக்க திறமையாகக் கல்வி கற்று வந்தார்கள். அரிச்சுவடி தொடக்கம் எட்டாம் வகுப்பு வரை அப்பள்ளியிலேயே கற்றுவந்த கணேசையரவர்கள் இலக்கணம், இலக்கியம், சரித்திரம், சமயம், கணிதம் முதலிய பாடங்களில் முதன்மை பெற்றார்கள். எட்டாம் வகுப்பிலே தேர்வு பெற்றால், மாணவ ஆசிரியராகப் பயிற்சி பெற்றுச் சம்பளம் பெறலாம். ஆதலால், இத்தேர்வு முடிந்ததும், மாணவ ஆசிரியன் (ஞரயீடை கூநயஉநச) ஆகப் பயிற்சி பெறுதற்குரிய பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று, கணேசையரவர்களுடைய சுற்றத்தார் விரும்பினார்கள். இந்த நிலையில், அக்காலத்திற் சைவப்பள்ளிகளிšதேர்îநிகழ்த்துவோருŸஒருவராfஇருந்jவித்துவசிரோமÂபொன்னக்கமபலப்பிள்ளையவர்கŸகணேசைய®கல்Éகற்wபள்ளிக்கு¤தேர்வாளராfவந்தார்கள். அவர்கள் தேர்வு நிகழ்த்துங்கால், மாணவராக இருந்த கணேசையரை நோக்கி திகட சக்கரச் செம்முக மைந்துளான் என்றற் றொடக்கத்துக் கந்தபுராணக் காப்புச் செய்யுளுக்குப் பொருள் விரிக்குமாறு பணித்தார்கள். சிறுவனாக இருந்த கணேசையர் தாம் படித்தபடி விளங்காநின்ற பத்துத் திருக்கரங்களையும் செவ்விய ஐந்து முகங்களையுமுடைய சிவபிரான் என்று முதலாம் அடிக்கு உரை கூறினார். உடனே வித்துவசிரோமணி அவர்கள் அதை நிறுத்திவிட்டு, பின்வருமாறு சொன்னார்கள்: உண்மைப் பொருள் உடைமைப் பொருள் எனப் பொருள்கள் இரண்டு வகைப்படும். உண்மைப் பொருளைக் கூறுமிடத்து, ஐ உருபை விரித்துப் பொருள் கூறலமையாது. சிவபிரானது முகங்களும் கரங்களும் உண்மைப் பொருள்களா தலின், ஐ உருபை விரியாது விளங்காநின்ற பத்துத் திருக்கரங்களும் ஐந்துதிருமுகங்களும் உள்ள சிவபிரான்’ என்று கூறல் வேண்டுமென்று விளக்கினார்கள். அதைக் கேட்ட சிறுவனாக இருந்த கணேசையரவர்களுக்கு வித்துவசிரோமணி பாற் பெருமதிப்பு ஏற்படலாயிற்று. அவர்தம் இலக்கண அறிவை வியந்து அத்தகையவரிடஞ் சில காலமாவது கல்வி கற்றல் வேண்டும் என்று ஆசை கொண்டார்கள். ஆகவே, தமது சுற்றத்தார் விருப்பத்துக்கிசைய மாணவ ஆசிரியனவதைக் கைவிட்டு, வித்துவசிரோமணிக்கு மாணாக்கராயினார் கணேசை யரவர்கள். இதனை அவர்கள், மாணவர்களாகிய எங்களுக்குப் பெருமிதத்தோடு சொல்வார்கள். வித்துவசிரோமணியவர் களிடம் மாணவனாக இருந்து கல்வி கற்றல் எளிதன்று. மிக்க அவதானமாகவும், அடக்கமாகவும் இருந்து கூர்த்த மதியோடு கற்றல் வேண்டும். இன்றேல், மாணவ நிலையினின்று நீங்கவும் நேரிடும் என்றெல்லாம் அவர்கள் சொல்வார்கள். அதுகாலை, கணேசையரவர்களிடங் கல்வி கற்றலும் அத்தகையதே என்று, மனத்துள் நினைத்துக் கொள்வோம் ; புறத்தே சொல்லத் துணியோம். திண்ணைப் பள்ளிக்கூடம் வித்துவசிரோமணி பொன்னம்பலப் பிள்ளயவர்கள் யாழ்ப்பாண நகரைச் சேர்ந்த வண்ணார்பண்ணையில் வசித்து வந்தார்கள். அவர்களிடஞ் சில மாணவர்கள் பாடங் கேட்டு வந்தார்கள். வண்ணார் பண்ணையிலுள்ள வைத்தீவரன் கோவில் அமைப்பிலும் அழகிலும் தென்னிந்தியாவில், சீகாழிப்பதியின் பக்கத்தேயுள்ள புள்ளிருக்குவேளூர் கோயிலை (இது வைத்தீவரன் கோயில் எனும் பெயரால் இப்போது வழங்கப்படுகின்றது) ஒத்தது. அதன் வடக்கு வீதியில் வடக்கு நோக்கி இருந்தது, கணேசையரவர்களின் தமக்கையாரை மணந்த அவர்தம் மைத்துனர் மறைத்திரு. சுந்தரையரவர்களின் இல்லம். இப்போதும் அவர் உறவினர் அதில் வதிகின்றனர். அதற்கு எதிரே தெற்கு நோக்கி இருந்தது, சிவன்கோவிற் குருக்களும் சிறந்த வடமொழி அறிஞருமாகிய மறைத்திரு, பிச்சுவையரவர்களின் இல்லம். இவ்வீட்டுத் திண்ணை விசாலமானது. இத் திண்ணை யிலேயே வித்துவசிரோமணி பொன்னம்பலப் பிள்ளை சில மாணவர்களுக்குப்பாடŠசொல்Èவந்தார். அவ்வாறு பாடம் நடைபெறும் ஒரு சமயத்திலேயே குணேசையரவர்கள் தமும் வித்துவ சிரோமணியவர்களிடம் மாணவனாக இருந்து பாடங்கேட்பதற்கு அனுமதியறச்சன்றார்கள். அப்போது கணேசையரவர்கள் தமது தகுதியைக்காட்டுதற்FஒUவாய்ப்òநேர்ந்தது. கணேசையரவர்கள் போன சமயத்தில் மற்றை மாணவர்களுக்கு வித்துவசிரோமணியர்கள் பாடஞ் சொல்லிக் கொண்டி ருந்தார்கள். அவர்கள் தம் மாணவர்களை நோக்கி உண்ப என்ற சொல்லுக்கு இலக்கணம் என்ன? என்று வினாவினார்கள். அவர்கள் சரியான விடை கூறாதிருக்கவே, பக்ககத்தில் நின்ற கணேசையரை நோக்கி, நீர் சொல்லுவீரா? என்று கேட்டார்கள். அதற்குக் கணேசையர் ஆம் என்று கூறி உண்ப என்னுஞ் சொல் உயர்திணைப் பலர்பால் வினைமுற்றாக வும், அஃறிணைப் பலவின்பால் முற்றாகவும் வரும் என்று விடை கூறினார். இதைக் கேட்டு மகிழ்ந்த வித்துவசிரோமணி யவர்கள் கணேசையரவர்களைத் தம் மாணவராக ஏற்றுக் கொண்டார்கள். அதுமுதல் கணேசையர் வித்துவசிரோமணியின் அன்புக்குரிய மாணவரானார். இத் திண்ணைப் பள்ளிக் கூடத்திலேயே மகாவித்துவான் கணேசையர் கல்வி கற்றுவந்தார். அக்காலத் திண்ணைப் பள்ளிக் கூடங்களின் பெருமைதான் என்னே! காலஞ் செல்லச் செல்ல மாணவர்கள் தொகையும் அதிகமாயிற்று. அது காரணமாக, வகுப்பும் அருகிலுள்ள நாவலர் சைவப் பிபரகாச வித்தியாசாலைக்கு மாற்றப்படலாயிற்று. வித்துவசிரோமணி யவர்கள் இவ்வுலக வாழ்வை ஓரீஇய பின், சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவரவர்களிடம் கணேசையரவர்கள் சிலகாலங் கற்று வந்தார்கள். அக்காலத்தில் அவர்களிடம் வடமொழி யறிவும் பெற்றார்கள். பிற்காலத்தில் இவர்கள் புலவரவர்களுக்கு ஓர் உசாத்துணைவராகவும் விளங்கினார்கள். ஆசிரியர் ஆனமை மகாவித்துவான் கணேசையரவர்கள் தமது இருபத்தோ ராம் ஆண்டளவிலேயே ஆசிரியராகக் கடனாற்றத் தொடங்கி னார்கள். இவர்கள் முதன்முதலில் இப்போதிருக்கும் வண்ணை வைத்தீவர வித்தியாலயத்துக்குப் பக்கத்தில் ஐக்கிய இலாப நிதிக் கட்டடத்தில் விவேகானந்தா வித்தியாசாலை என்னும் பெயரோடு திரு. வேலுப்பிள்ளை என்பவரால் நடாத்தப்பட்டு வந்த பள்ளிக்கூடத்தில் ஆசிரியராகக் கடனாற் றினார்கள். அதன்பின், வண்ணை நாவலர் சைவப் பிரகாச வித்தியா சாலைக் காவிய பாடசாலையிற் சிறிது காலமும், புன்னாலைக்கட்டுவன், வயாவிளான், குரும்பசிட்டி என்னுமிடங் களிற் சிற்சிலகாலமும் ஆசிரியராகக் கல்வி கற்ப்பித்துவந்தார். அக்காலத்திற்றான் இவர்கள் மாமனாராகிய மறைத்திரு. யோகவன சாதிரிகளின் ஒரே புதல்வியாகிய அன்னலக்குமியம் மையாருக்கும் இவர்களுக் கும் திருமணம் நடைபெறலாயிற்று. திருமணம் நிகழ்ந்த காலத்துக் கணேசையரவர்கள் முப்பத் திரண்டாண்டுப் பிராயத்தினரா யிருந்தார்கள். இதன்பின், இவர்கள் தமது மாமனாரால், தையிட்டி என்னுமூரில் நடாத்தப்பட்டு வந்த சைவப் பள்ளிக் கூடத்திற் சில காலம் ஆசிரியராக இருந்தார்கள். அதன்பின், இவர்கள் மணிபல்லவம் என்ற மணிமேகலையிற் குறிக்கப் பட்டுள்ள தீவகம் இதுவேயாம் என்று ஆராய்ச்சி யாளர்கள் கருதும் நயினார் தீவெனும் நீர்சூழ்ந்த திருநாட்டில் தமது வாழ்க்கைத் துணைவியாருடன் சென்றிருந்து ஏழாண்டுகள் வரை கல்வி கற்பித்து வந்தார்கள். இக்காலத்தில் நூல்களை ஆய்வதும் மாணவர்களுக்குக் கற்பிப்பதுமாக இன்பகரமாகவே இவர்கள் வாழ்க்கை கழியலாயிற்று. 1921ஆம் ஆண்டில் மதுரைத்தமிழ்ச்சங்கத்தை¥பின்பற்¿யாழ்¥பாணத்திšஆரிaதிராவிlபாஷாபிவிருத்தி¢சங்கம்’என்னு«பெயராšஒUசங்க«நிறுவ¥படலாயிற்று. 1921ஆம் ஆண்டில் அச் சங்கத்தை நிறுவினோரும், சங்கத்தின் செயலாளருமாகிய திரு. யா. தி. சதாசிவ ஐயரவர்கள் சங்கத்தாரால் நடாத்தப்படும் பண்டித, பாலபாண்டித, பரிவேசபண்டிதத் தேர்வுகளுக்குத் தோற்றும் மாணவர் களுக்குக் கல்வி பயிற்றுவதற்காகப் பிராசீன பாடசாலை என்னும் பெயரோடு ஒரு கல்விக்கழகத்தைச் சுன்னாகத்தில் நிறுவி நடாத்தினார்கள். அவர்கள் அழைப்பின் பேரில், 1921ஆம் ஆண்டில், மகாவித்துவான் கணேசையரவர்கள் அக் கழகத் துக்குத் தலைமைப் பேராசிரியராக அமர்ந்தார்கள். இக் கழகத்தில் ஏறக்குறையப் பதினோராண்டுகள் வரை (1932ஆம் ஆண்டு வரை) பேராசிரியராக விருந்து இவர்கள் ஆற்றிய பணி பெரியதொரு பணியாகும். இன்று யாழ்ப்பாணத்திற் பண்டிதர்களாக உள்ளோரிற் பலர் மகாவித்துவான் கணேசையரவர்களிடம் கல்வி கற்றவரேயாவர். மாணவராக இருந்துகல்லாதோரும் அவர்களிடம் தம்ஐயந்திரிபுகள் நீக்கிக்கொண்டவரேயாவர். இக் காலத்திலேயே தொல் காப்பியத்தைக் கற்பிக்கவும், அதனைத் தமது நுண்மதிகொண்டு துருவித் துருவி ஆராய்ந்து சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதவும் அவர்களுக்குப் பெரு வாய்ப்புக் கிடைத்தது. மாணவர்கள் ஐயங்களைக் கேட்டால், அதற்கு அப்போதைக்கு ஏதாவது சொல்லி மழுப்பிவிடும் வழக்கம் மகாவித்துவான் கணேசையரவர்களிடம் மருந்துக்குங் கிடையாது. உடனேயே அவ்வையத்தைத் தீர்த்துவிடுவார்கள். உடனே தீர்க்கமுடியாமற் சிறிது சிந்தித்தாவது, ஆராய்ந்தாவது சொல்ல வேண்டியிருந்தால், பார்த்துச் சொல்லுகிறேன் என்பார்கள். கேட்ட மாணவன் மறந்தாலும் அவர்கள் அதை மறக்கமாட்டார்கள். ஆராய்ந்து கண்டதும் அம் மாணவனைத் தேடிச்சென்று அதைத் தெரிவிக்க அவர்கள் தவறமாட்டார்கள். இஃது அவர்களிடம் மாணவனாக இருந்த யான் நேரில் அறிந்த தொன்றாகும். இந்த இயல்பே ஐயரவர்கள் தொல் காப்பியத் துக்கு மிகத் தெளிவான உரைவிளக்கக் குறிப்பு எழுதுவதற்கு அவர்களுக்கு உறுதுணையாக இருந்தது, என்று கூறின் அது மிகையாகாது. தம்முடைய ஆசிரியர்களிடம் நேரிற் கற்றதினும் பார்க்க அவர்கள் தாமாக முயன்று ஆராய்ந்து கண்ட முடிவுகளே பலவாம். கற்கண்டை மென்று சுவைத்துக் கொண்டே சிறிது நேரம் சிந்திப்பார்கள். உடனே பதிலைத் தெரிந்து கொள்வார்கள். அஃது இதுகாணும் என்று மலர்ந்த முகத்தோடு விளக்குவார்கள். அந்தக் கற்கண்டில் ஏதோ இருக்கிறதுபோலும், என்று எமக்கு நினைக்கத் தோன்றும். கற்கண்டில் அவர்களுக்கு நல்ல விருப்பம் உண்டு. பாடஞ் சொல்லும்போது கற்கண்டை வாயிற் போட்டுக் கொள்வார்கள். சிலவேளைகளில் மாணவருக்கு§கொடுப்பார்கள். பழவகைகளில் அன்னாசிப்பழத்திலும் திராட்சைப்பழத்திலும் அவர்களுக்கு விருப்பமுண்டு. கீரை வகைகளில் வல்லாரை அவர்களுக்குகந்தது, பொதுவாக மாணவர்களிடம் எதையும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் இவர்களை - மறுக்காமல் ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கு இவற்றுள்ஏதாவJஒன்றை¡கொண்டுசெல்லுதyவழி,என்பjமாணவ®களாகிaநா«அறிந்திருந்தோம். பொடிபோடும் வழக்கமும் அவர்களிடம் உண்டு. வருவாயைப் பெரிதாக மதித்து அவர்கள் ஆசிரியத் தொழிலை நடத்தியதே கிடையாது. பிராசீன பாடசாலையை விட்டு நீங்கிய பின், இவர்கள் நூல்கள் எழுதுவதிலும் தனிப்பட்ட முறையிற் சில மாணவர்களுக்குப் பாடஞ் சொல்லிக் கொடுப்பதிலும் கடவுள் வழிபாட்டிலுந் தம் காலத்தைக் கழித்தார்கள். அவர்கள் காலத்துப் புலவர்கள் மகாவித்துவான் கணேசையரவர்கள் காலத்தில் இந்தியா வில் சேது சமதான மகாவித்துவான் ரா. இராகவையங்காரவர் களும், அவர் மருகர் திரு. மு. இராகவையங்காரவர்களும், அறிஞர் திரு. அரசன்சண்முகனார் அவர்களும், திரு.நாராயணையங்கார் அவர்களும், மறைமலையடிகளும், ஈழத்தில்வித்துவசிரோமÂபொன்ன«பலப்பிள்ளையும்,சுன்னாகம்,குமாரசுவாமி¥புலவரவர்களும்,பிறரு«இருந்தார்கள். இத்தகைய பெரும் புலவர்கள் காலத்தில் அப்புலவர்களும் ஒப்பப் பல ஆராய்ச்சி முடிபுகளைக் கண்டவர்கள் மகாவித்துவான் கணேசையரவர்கள். இவர் தம் 25ஆம் ஆண்டளவிலேயே மகாவித்துவான் ரா. இராகவையங்கார் அவர்களும்,மு. இராகவையங்கார அவர்களும் வேண்டிக்கொண்டபடி அவர்களால் நடாத்தப்பட்டு வந்த மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடாகிய செந்தமிழ்’ இதழ்களில் அரிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதத் தொடங்கினார்கள். அக்காலத்திலேயே திரு. அரசன் சண்முகனாருக்கும் கணேசையரவர் களுக்குமிடையே கருத்துவேற்றுமை ஏற்படலாயிற்று. தொல்காப்பியப்பாயிரம், முதற் சூத்திரம் என்பவற்றிற்கு அரசன் சண்முகனார் அவர்கள் சண்முக விருத்தி என்னும் பெயரோடு எழுதிய விருந்தியுரையில் ஆகுபெயரும் வேறு, அன்மொழித் தொகையும் வேறு என்னுங் கொள்கையை நிறுவ முயன்றார்கள். முன்னையோர் கொள்கைக்கு இது முரண்பாடா தலைக் கண்ட கணேசையரவர்கள் தமது ஆராய்ச்சி வன்மையால் அரசன் சண்முகனார் கொள்கையை மறுத்தெழுதி, ஆகுபெயரும் அன்மொழித்தொகையும் ஒன்றேயாம் என்பதை நிறுவுவாரா யினர். இதனைச் செந்தமிழில் வெளிவந்த கட்டுரைகள் காட்டும். இன்னும் காலத்துக்குக் காலம் இவர்கள் செந்தமிழில் எழுதிவந்த இலக்கண ஆராய்ச்சிக் கட்டுரைகள் பலவாம். இவற்றை, பின் இவர்கள் உரைவிளக்கக் குறிப்போடும் பாடத் திருத்தத்தோடும் வெளியிட்ட தொல்காப்பியப் பதிப்புக்களில் அநுபந்தமாகச் சேர்த்திருக்கிறார்கள். எழுத்ததிகாரப் பதிப்பில் அளபெடை போலி எழுத்து என்பவையும், சொல்லதிகாரப் பதிப்பில் தொல்காப்பியச் சூத்திரப்பொருளாராய்ச்சி, பிறிது பிறிதேற்றல், ஆறனுருபு பிறிதேற்றல், இருபெயரொ£டாகுபெயரும் அன்மொழித் தொகையும், தொகைநிலை’ என்பவையும்,பொருளாதார¥பதிப்பிšசிறுபொழுதாராய்ச்சி’என்பதுŠசேர்க்கப்பட்டுள்ளன. அவற்றை ஆண்டுக் காண்க. இவ்வாராய்ச்சிகளிற் சிவஞான முனிவரின் இலக்கணக் கொள்கைகளை மறுத்து வேறு கொள்கைகளை இவர்கள் நிறுவியிருக்கிறார்கள். இதனை இவர்கள் தமது கூர்த்தமதி கொண்டு செய்தமை இவர்தம் நுண்ணறிவைக் காட்டும். இவர்கள் எழுதிவந்த கட்டுரைகள் செந்தமிழ்ப் பத்திராதி பராலும் பிறராலும் பெரிதும் மதிக்கப்பட்டன வென்பதற்கு 30-5-1906இல் இவர்களுக்கு அக் காலத்துப் பத்திராதிபராக இருந்த மறைத்திரு. மு. இராகவையங்காரவர்களிடமிருந்து கிடைத்த திருமுகம் ஒன்று சான்று பகரும். அது வருமாறு: மதுரைத் தமிழ்ச் சங்கம் 30-5-1906 அன்பார்ந்த ஐயா! தாங்கள் தொனி என்னும் அரிய விஷயம் அனுப்பிய பின்பு, வேறு விஷயம் அனுப்பாமைக்குப் பலர் (அவாவுடன்) வருந்துகிறார்கள். தயைசெய்து இராமாவாதாரச் செய்யுட் பாடாந்தரத்தின் தொடர்ச்சியை அனுப்பிவரின், உபகாரமா மென்பதை நாம் சொல்லல் மிகை. தாங்கள் நீண்ட நாளாகக் கடித மெழுதாதிருப்பதையிட்டுக் கவல்கிறேன். தங்கள் அன்பார்ந்த கடிதத்தை எதிர்நோக்கியுள்ளேன். இங்ஙனம், அன்பன், (ஒப்பம்) மு. இராவையங்கார் இதுபோலவே இன்னும் பல கடிதங்களுள. விரிவஞ்சி அவற்றைத் தாராதொழிகின்றேன். நிற்க, இலக்கண ஆராய்ச்சிக் கட்டுரைகள் மட்டுமன்று, இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகளும் பல இவர்களாற் செந்தமிழில் எழுதி வெளியிடப் பட்டுள்ளன. கவியின்பம் என்னும் தலைப்பில் அரசகேசரியார் இயற்றிய இரகுவமிசம்’என்னுங் காவியத்திலுள்ள சிறப்புக்களை எடுத்துக்காட்டிய கட்டுரைகளும், ஒரு செய்யுட் பொருளாராய்ச்சி ’என்னும் தலைப்பிற் சிறுபாணாற்றுப்படையில் ஒரு பகுதிக்கு (அo -15 -31) நச்சினார்க்கினியர் எழுதிய உரையை மறுத்து எழுதிமையும், நச்சினார்க்கினியர் உரைநயம் என்னும் தலைப்பில் சிந்தாமணிக்கு நச்சினார்க்கினியருரையிற் காணும் நயங்களை எடுத்துக்காட்டிய கட்டுரையும், கம்பர் கவிநயம்பற்றிய கட்டுரைகளும்,பிறவும் சிறந்த இலக்கிய ஆராய்ச்சிக்கட்டுரைகளாம். அவர்தம் கட்டுரைகளைத் தொகுப்பதில் ஈடுபட்டுள்ள என்முயற்சி வெற்றி பெருமாறு அறிஞர்கள் மேலும் தமக்குக் கிடைப்பனவற்றைத் தந்துதவுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். கணேசையர் அவர்கள் வித்துவசிரோமணி பொன்னம் பலப்பிள்ளை யவர்களிடம் பாடங்கேட்டபோது தாம் குறித்துவைத்த இராமாயணக் குறிப்புப் புத்தகம் (கையெழுத்துப் பிரதி) ஒன்றை என்னிடம் தந்து வைத்தார்கள். அதிலிருந்து எத்துணைச் சிரமமெடுத்துக் கொண்டு நு£பமாக இராமாயணம் முழுவதையும் மாணவனாக இருந்த அக்காலத்திலேயே அவர்கள் கற்றார்கள் என்பது நன்கு புலப்படுகின்றது. எடுத்துக்காட்டாக ஒரு செய்யுளின் குறிப்பை மட்டும் ïங்குத் தருகின்றேன். சுந்தரகாண்டத்தில் ஊர்தேடு படலத்தில் வரும். (146ஆம் செய்யுள்). தனிக் கடக்களி றெனவொரு துணையிலான் றாய பனிக் கடற்பெருங் கடவுடன் பரிபவந் துடைப்பான் இனிக்க டப்பதன் றேழ்கடல் கிடந்ததென் றிசைப்பான் கனிக்க டற்கதிர் தொடர்ந்தவ னகழியைக் கண்டான் என்னுஞ் செய்யுளுக்கு எழுதப்பெற்றுள்ள குறிப்பு வருமாறு: கடலின்கண்ணே தோன்றுகின்ற சூரியனை ஒரு பழமென்று கருதித் தொடர்ந்தவானாகிய ஒப்பற்ற மதத்தை யுடைய யானையைப் போன்ற ஒரு துணையுமில்லாத அனு மனானவன் அந் நகரின் அகழியைக் கண்டவனாய்க் குளிர்ந்த கடலுக்குத் தலைவனாகிய வருணனது அவமானத்தை நீக்கும்படி ஏழ்கடலும் இனி யவ்வனுமனால் கடத்தல் கூடாதென்று கருதிக் கிடந்தாற்போலும் என்று கூறினான். அனுமன் கடலைத் தாண்டியதனால் தம் யசமானனுக்கு வந்த அவமானத்தை நீக்கும்படி சத்த சமுத்திரங்களும் வந்து கிடந்தாற்போன்ற அகழியைக் கண்டான் என்பது கருத்து. அவமானம் - யாவராலுங் கடக்க முடியாத தன்னை ஒரு குரங்கு கடந்ததே என்றதால் வந்த அவமானம். இக் குறிப்பை யான் தெரிந்தெடுத்துத் தரவில்லை. அக் குறிப்புப் புத்தகத்தைப் புரட்டியபோதுமுதலில்என்கண்ணைக்கவர்ந்தசெய்யுளையேதந்துள்ளேன்.இப்படியே ஒவ்வொரு பாட்டுக்கும் அரிய குறிப்பெழுதிப் படித்திருக்கிறார்கள். இவ்வாறே சங்க இலக்கியங்களிலும் சிலப்பதிகாரம், மணிமேகலை, திருக் கோவையார், பெரியபுராணம், கந்தபுராணம், இராமாயணம் முதலிய நூல்களிலும் அவர்களுக்கு நிரம்பிய பயிற்சியுண்டு என்பதை அவர்கள் பாடஞ்சொல்லும்போதுநாம்நன்கறிந்துள்ளோம். கோவை யென்றால் திருக்கோவையே. மற்றையகோவைகளெல்லா«வேலியி‰படரு«கோவையே,”என்Wகூறி¤திருக்கோவையார்¢செய்யுள்களை¢சுவைப்பார்கள். அகநானூற்றை அவர்கள் எங்களுக்கு விளக்கிய சிறப்பை நாம் மறுத்தல்முடியாது. பதிற்றுப் பத்துக்கும் அவ்வாறே. தருக்க சங்கிரகத்தை அவர்கள் விளக்கியதைப் போலத் தெளிவாக விளக்கியவரை யான் கண்டிலேன். இவ்வாறே இலக்கிய அறிவிலும் mவர்கள்mறிவுnபரறிவாகÉளங்கிற்று.ɤJtánuhkÂ¥ பட்டம் கணேசையரவர்களின் தமிழ்மொழி யறிவின் பெருக்கத்தை நன்கறிந்த தமிழறிஞர்களும் அவர்தம் நண்பர்களும் மாணவர் களும் அவர்களுக்குத் தாமாகவே தகுதிநோக்கி அளித்த இயல்பான பட்டம் மகாவித்துவான் என்னும் பட்டமாகும். இதுபற்றியே மகாவித்துவான் என்று யாம் எஞ்ஞான்றும் அழைத்துவந்தோம். இதுவேயுமன்றி, அவர்களுக்கு யாழ்ப் பாணம், ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம் அளித்த பட்டமும் ஒன்று உண்டு. சென்ற நந்தன ஆண்டு கார்த்திகைத் திங்கள் 16ஆம் நாளன்று (1-12-52) யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தார் அச் சங்கத்தின் இருபத்தொன்பதா வது ஆண்டுவிழாவுடன் விசேட பட்டமளிப்பு விழா என்று ஒன்றையும் நடத்தினார்கள். இதுவே அவர்கள் நிகழ்த்திய முதலாவது விசேஷ பட்டமளிப்பு விழாவாகும். இவ் விழாவில் மகாவித்துவான் கணேசையர் அவர்களுக்கு வித்துவ சிரோமணி என்னும் பட்டத்தை வழங்கினார்கள். இவர்களே இச் சங்கத்தால் முதன் முதலாக இத்தகைய பட்டம் வழங்கப் பட்டவராவர். அதுகாலை அச் சங்கத்தார் வேறு சில அறிஞர்களுக்குஞ் சில பட்டங்களை வழங்கினர். அவர்களைப் பற்றிக் குறிப்பிடுவதும் ஈண்டைக்குப் பொருத்தமுடைய தாகலின், அவ்வாறு பட்டம் பெற்ற மற்றை மூவரையும்பற்றி ஒரு சிறிது கூறிவிடுவாம். 1. மறைத்திரு. க. சு. நவநீதகிருஷ்ணபாரதியார் அவர்களுக்கு இச் சங்கத்தாரால் புலவர்மணி பட்டம் வழங்கப்பட்டது. இவர் சுன்னாகத்திலுள்ள இராமநாதன் கல்லூரியிலும், திருநெல்வேலி யிலுள்ள பரமேசுவராக் கல்லூரியிலும், இராமநாதன் ஆசிரிய பயிற்சிக் கல்லூரியிலும் தலைமைத் தமிழாசிரியராகக் கடமையாற்றியவராவர். இவர் இயற்றிய நூல்கள் உலகியல் விளக்கம், பறம்புமலைப் பாரி, செழுங்கதிர்ச் செல்வம், திருவடிக் கதம்பம் என்பனவாம். இவர் மணிவாசகப் பெருமாள் இயற்றியருளிய திருவாச கத்துக்கும் ஓர் உரை கண்டுள்ளார். 2. திரு. ஏ. பெரியதம்பிப்பிள்ளை யவர்களுக்கு பண்டிதமணி என்னும் பட்டம் வழங்கப்பெற்றது. இவர் சுன்னாகம், அ. குமாரசுவாமிப் புலவரவர்களிடங் கல்வி கற்றவர். விபுலானந்த அடிகளின் தொடர்பு பெரிதும் உடையவர். அவர்களைப் போலவே மட்டக்களப்பைச் சனனவூராக வுடையவர். இயற்கையாகவே நல்ல கவி பாடுந் திறமை வாய்ந்தவர். இவர் இயற்றிய பகவத்கீதை வெண்பா யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தின் இருபத்தெட்டாவது ஆண்டு விழாவில் அரங்கேற்றப்பட்டது. 3. திரு. ந. சுப்பையபிள்ளை யவர்களுக்குப் பண்டிதமணி என்னும் பட்டம் வழங்கப்பெற்றது. இவர் மட்டுவில் உரையாசிரியர் திரு. ம. க. வேற்பிள்ளை அவர்களின் மாணவரா வார். சென்னைப் பல்கலைக் கழகத்தாரால் நடாத்தப்படும் வித்துவான் பரீட்சையில் தேறியவர். வண்ணார்பண்ணைச் சைவப்பரிகாச வித்தியாசாலைத் தலைமையாசிரியராகப் பல ஆண்டுகள் கடனாற்றியவர். வடமொழியறிவும் வாய்க்க பெற்றவர். இவர் தஞ்சைவாணன் கோவை சொக்கப்ப நாவலருரைக்கு ஆராய்ச்சிக் குறிப்புகள் எழுதியுள்ளார். நன்னூல் விருந்தியுரைக்கும் உரை விளக்கக் குறிப்புக்கள் எழுதியுள்ளார் என்ப. நிற்க. இவர்களேயன்றி, மகாவித்துவான் கணேசையரவர் களோடு நெருங்கிய தொடர்புள்ள மற்றோர் அறிஞர் பண்டிதமணி ணசி. கணபதிப் பிள்ளையவர்களாவர். இவர் திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலையில் தமிழ்ப் பேராசிரியராகப் பல்லாண்டுகள் கடனாற்றி இப்போது இளைப்பாறியுள்ளார். இவர்கள் மதுரைத் தமிழ்ச் சங்கத்தாரால் நடாத்தப்படும் பண்டித பரீட்சையில் மிகப் பழங்காலத்திலேயே சித்தியெய்தியவர். சுன்னாகம், அ. குமாரசுவாமிப் புலவரவர்களிடமும் சைவத் திருவாளர் த. கயிலாய பிள்ளையவர் களிடமும் கல்வி கற்றவர். பலருக்குக் கல்வி கற்பித்து அவர்களைப் பண்டிதர்களாக்கியவர். இவர்தம் நண்பர்களும் மாணவர்களும் மற்றைய அறிஞர்களும் இவருக்கு அளித்த பட்டமே பண்டிதமணி என்னும் பட்டமாம். இவர் களுக்கு இவருடைய மாணவரும் பிறரும் நிகழ்த்திய பாராட்டு விழா சென்ற 29, 30-8-59ஆம் திகதிகளில் மிக்க சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவர்கள் மகாவித்துவான் கணேசையர வர்களுக்கு நெடுங்காலமாக நல்ல உசாத்துணைவ ராக இருந்து வந்தவர்கள். ஏறக்குறைய எட்டு ஆண்டுகளுக்கு முன், 27-11-50இல் இவ்வுலக வாழ்வை நீத்த மறைத்திரு. யா. தி. சதாசிவ ஐயரவர் களும் மகாவித்துவான் கணேசையரவர்களோடு நெருங்கிய தொடர் புள்ளவர்கள். இவர், தமிழ், வடமொழி, ஆங்கிலம் என்னும் மும்மொழி அறிவும் உடையவர்; கல்கத்தாப் பல்கலைக் கழகத்தில் எப்.ஏ. (கு.ஹ.) பரீட்டையில் முதற் பிரிவில் தேறியவர்; மல்லாகம் ஆங்கில வித்தியா சாலையில் தலைமையா சிரியரா கவும், கந்தரோடை ஆங்கில வித்தியாசாலையில் ஆசிரியராகவும்,1910ஆ«ஆண்Lதொடக்க«பகுâவித்தியாதரிசியாகவும்,1927ஆ«ஆண்Lதொடக்க«பகுâவித்தியாதரிசியராகவு«கடனாற்றியவர். இவர்கள் ஆரம்பித்த இரு பெரிய தாபனங் களுள் ஒன்று ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கமாகும். மற்றையது சுன்னாகத்தில், மகாவித்துவான் கணேசையரவர்கள் தலைமையில் நடைபெற்ற பிராசீன பாடசாலை ஆகும். தேவி தோத்திர மஞ்சரி, இருது சங்கார காவியம், தேவிமானச பூசை அந்தாதி, பெருமாக் கடவைப் பிள்ளையார் இரட்டை மணிமாலை என்பன இவர் இயற்றிய நூல்களாகும். சுவாமி விபுலானந்தர் என்னுந் துறவுத் திருநாமத்தையும் பண்டித மயில்வாகனனார் என்னும் பூர்வாச்சிரமப் பெயரையும் உடையவராய் விளங்கிய பெரியாரும் இவர் காலத்திருந்த ஈழத்துப் புலவர் வரிசையில் குறிப்பிடத்தக்கவராவர். ït®fŸ M§»y¤âš ïy©l‹ B.Sc., பரீட்சையிலும் தமிழில் மதுரைத் தமிழ்ச் சங்கத்தாரால் நடாத்தப்படும் பண்டித பரீட்சையிலும் சித்தியெய்தியவர். துறவு பூணுவதற்கு முன் யாழ்ப்பாணம் செந். பத்திரிசியார் கல்லூரியில் ஆசிரியராகவும், மானிப்பாய் இந்துக் கல்லூரியிற் பிரதமாசிரியராகவும் கடனாற்றியவர். பிற்காலத்தில் இவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே தமிழ்ப் பேராசிரியராகவும், அதன்பின், இலங்கைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகவும் இருந்து அருங்கடனாற்றினார்கள். சில காலம் பிரபுத்தபாரதம் என்னும் ஆங்கிலத் திங்கள் இதழுக்கு ஆசிரியராகவும் விளங்கினார்கள். இவர்கள் இயற்றிய மதங்கசூளாமணி, யாழ்நூல் என்பன இவர்களுக்கு அழியாப் புகழை ஈட்டித் தந்தன. தென்கோவை கந்தையாபிள்ளை அவர்கள் மகாவித்துவான் கணேசையர் அவர்களோடு நெடுங் காலமாக மிக நெருங்கிய தொடர்பு பூண்டிருந்த மற்றொரு பெரியார் தென்கோவை பண்டிதர் திரு. ச. கந்தையாபிள்ளை அவர்களாவர். இவர் 1880ஆம் ஆண்டு ஆனி மாதம் கோப்பாயில் பரம்பரைப் பாண்டித்தியம் வாய்ந்த உயர்குடியில் திரு. சபாபதிப்பிள்ளைக்கும் காமாட்சி யம்மையாருக்கும் புதல்வராகப் பிறந்தவர். சுன்னாகம், திரு. அ. குமாரசுவாமிப் புலவரவர்களிடம் கல்வி கற்றவர். ஆங்கிலமுங் கற்றவர். பத்து ஆண்டுகளுக்கு மேலாகக் கொழும்பிலுள்ள ஆங்கில பயிற்சிக் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராக இருந்து தமிழாசிரியர்களைப் பயிற்றும் வகுப்புகளை நடத்திவந்தவர். அதற்குப் பின்னரும் கல்விப் பகுதியில் பல்லாண்டுகள் மொழி பெயர்ப்பாளராகவும் தமிழ்ப் பரீட்சகராகவும் கடனாற்றி வந்தவர். இவர் 1922ஆம் ஆண்டு தமது உத்தியோகத்தினின்றும் இளைப்பாறி இந்தியா சென்று சில ஆண்டுகள் வசித்தவர். புதுச்சேரியில் ஒரு குருவை அடைந்து அவர் விருப்பப்படி வித்திகம் என்னும் சிறந்த வாரப்பத்திரிகையை நடாத்தி வந்தவர். திருவாசக உண்மை, உண்மை முத்திநிலை ஆராய்ச்சி என்னும் நூல்களை இயற்றியவர். நல்ல செய்யுள் செய்யும் ஆற்றல் . kfhɤJth‹ கணேசையர் அவர்களோடு சகபாடியாகவும் நெடுங்கால நண்பராகவும் உசாத்துணைவரா கவும் வாழ்ந்த் இவர் 18-11-58இல் இவ்வுலக வாழ்வை ஒருவினர். இவ்வளவோடு மகாவித்துவான் அவர்கள் காலத்துப் புலவர்களைப்பற்றிக் கூறுவதை நிறுத்திக்கொண்டு, இனி மகாவித்துவானவர்களின் உரைகாணுந் திறனைப்பற்றிக் கூறுவாம்: உரையாசிரியர் 1915ஆம் ஆண்டில் (அப்போது கணேசையரவர்களுக்கு 37வயசு)அரசகேசரியா®இயற்றிaஇரகுவமிசம்’என்னு«காவியத்து¥பாயிரத்துக்கு«முதšஒன்பJபாடல்களுக்கு«(அவையாவன:பாயிரம்,ஆற்றுப்படலம்,நாட்டுப்படலம்,நகரப்படலம்,அரசிய‰படலம்,. குறைகூறு படலம்,. தேனுவந்தனப் படலம், இரகுவுற்பத்திப் படலம், யாகப் படலம், திக்குவிசயப்படலம் என்பவையாம்.) ஓர் அழகிய புத்துரை எழுதிக் கொக்குவில் சோதிட பரிபாலன் அச்சியந்திரசாலையிற் பதிப்பித்து வெளியிட்டார்கள். இவ்வுரை திட்பமும், நுட்பமும் வாய்ந்தது என்பதற்கு எடுத்துக்காட்டாக அதன் காப்புச் செய்யுளையும் அதன் உரையையும் ஈண்டுத் தருதும்: காப்புச் செய்யுள் உதயமா வலரி யெண்ணி லுதித்தன வொளியிற் றாய சிதைவிலா நிலவுச் செக்கர்ச் செவ்வந்தி மெய்யார் தந்த புதைகொண்மா மதத்த வாம்ப லானனப் புனிதப் பொற்றே னிதயவா ரிசத்த தானா லெக்கலை மணவா தெற்கே. இதன் பொருள்: மாஉதய அல்ரி எண்இல் உதித்தன ஒளியிற்று ஆய-பெரிய உதய ஞாயிறு அளவில்லாதன உதித்தாற் போன்ற ஒளியினை யுடைத்தாய், சிதைவு இல்லா நிலவுச் செக்கர் செம் அந்தி மெய்யார் தந்த - அழிவில்லாத நிலவினையுடைய செவ்வானம் போன்ற (விபூதியை யணிந்த) திருமேனியை யுடையவராகிய சிவபிரானார் தந்தருளிய, புதைகொள் மாமதத்த ஆம்பல் ஆனன புனித பொன்தேன் ஆழத்திற் கிடத்தலைக் கொண்ட கரிய மதத்தையுடைய யானை முகத்தைக் கொண்ட சுத்தமாகிய அழகிய தேன், இதய வாரிசத்ததானால் இதய கமலத்திருக்குமாயின், எற்கு எக்கலை மணவாது எனக்கு எந்தக் கலைஞானம் அடையாது என்றவாறு. ஏகாரம் அசைநிலை. இல, என்னும் வினைப் பெயரினீற்ற கரமும் இல்லாத என்னும் பெயரெச்சத் தீறும் விகாரத்தாற் றொக்கன. எண்ணில் அலரி என மாற்றிப் பொருள் கோடல் இத்துணைச் சிறப்பின்று. உதித்தல் என்பது உதித்து என விகாரமாய் நின்றது. ஒளியிற்றாய மெய், சிதைவிலா மெய், செவ்வந்தி மெய் எனத் தனித்தனி கூட்டி முடிக்க. ஆம்பலானனப் புனிதப் பொற்றேன் விநாயகக் கடவுள். செந்நிறமான மேனியின் மீது வெண்ணிறமான விபூதி பரந்திருத்தல், செவ்வானத்தின் மீது வெண்ணிலாப் பரந்திருத்தல் போலு மென்பார், நிலவுச் செக்கர்ச் செவ்வந்தி மெய்யார் என்றார். உவமை யடைக்கியையப் பொருளடை வருவிக்கப்பட்டது. செக்கர், செம் என்பன ஒரு பொருட் பன்மொழி. சிதைவிலா என்பதை அந்திக்கேற்றி இல்பொருளுவமை யாக்கினு மமையும். தந்ததேன் எனக் கூட்டுக. புதைகொள் மாமதம் என்பதற்கு விசையினால் விழுமிடத் திலுள்ள பொருளைப் புதைத்தலைக் கொண்ட மதம் எனினுமாம். ஆசிரியர் தாம் எடுத்துக்கெண்ட நூல் இனிது முடியுமாறு முதலில் விநாயகக் கடவுளுக்கு வணக்கங் கூறினார் என்க. இனி, இதன்கண் அலரிப் பூக்கள் அளவிறந்தன பூத்தாற்போன்ற ஒளியை யுடைத்தாய செவ்வந்திப் பூப்பூத்த ஆம்பற் பூவிலுள்ள தேன் தாமரையின்கண்ணதாயின் எப்பகுதியவான மணமுண் டாகாது என வேறுமொரு பொருள் தொனித்தல் காண்க என்பது. இவ்வுரைக்குப் பல அறிஞர்கள் சிறப்புப் பாயிரம் கொடுத்துள்ளார்கள். அவர்களுள், அக் காலத்துச் சென்னைப் பிரசிடென்சிக் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராயிருந்த மகாமகோபாத்தியாயர் மறைத்திரு. உ. வே. சாமிநாதை யரவர்கள்(அப்போJஅவருக்Fடாக்ட®பட்ட«கிடைக்fவில்லை)அளித்jசிறப்பு¥பாயிர«இதுவாகும்: உலம்பூத்த புயவரச கேசரியா ராய்ந்துமுன முரைத்த தாய நலம்பூத்த சுவையிரகு வங்கிசத்திற் கினியவுரை நன்கி யற்றிப் பலம்பூத்த தமிழ்வலவர் மதிப்பவெளிப் படுத்தினன்யாழ்ப் பாணமேயோன் குலம்பூத்த நலமுடையோன் கணேசையப் பெயராளன் குணமிக் கோனே என்பது. பின் 1932ஆம் ஆண்டில் (அப்போது இவர்கள் பிராசீன பாடசாலைத் தலைமைப் பேராசிரியராக இருந்தார்கள்.) இரகுவமிசத்தின் அடுத்த ஏழு படலங்களுக்கு (அவையாவன: அயனுதயப் படலம், அயனெழுச்சிப்படலம், மாலையீட்டுப் படலம், கடிமணப்படலம், மீட்சிப்படலம், இரகுகதியுறுபடலம், இந்துமதி பிறப்பு நீங்கு படலம் என்பனவாம்) முதற் பகுதிக்கு எழுதியதுபோலவே, இனிய உரை செய்து மேற்படி அச்சியந்திர சாலையிலேயே அச்சிடுவித்து வெளியிட்டார்கள். இப் பகுதியில் வரும் மாலையீட்டுப் படலம் நைடதம் முதலிய நூல்களில் வரும் மாலையீட்டுப் படலங்களிலும் பார்க்கச் சிறந்த சுவை பொருந்தியதாகும். கணேசையரவர்கள் எழுதிய உரை, இச் சிறப்பை மேலும் அழகுபடுத்துவதாகும். இப் பகுதியிலிருந்தும் ஒரு செய்யுளையும் உரையையும் ஈண்டுத் தருதும்: பழகிப் பயிலு மடநல்லார் கூடிக் காமா கமம்பயிலும் கழகத் தினைப்பே ராரமுதைக் காட்சித் திருவைக் கணையிரண்டை மழவிற் பிறைக்கீழ் வைத்தன்ன மடநோக் கிந்து மதியெனுமோர் அழகைப் புதுப்பித் தழகூட்டி யழகு காண்பா ராயினரால். – மாலையீட்டுப்படலம் : செய். 47 இதன் பொருள்: பழகிப் பயிலும் மடநல்லார் கூடி (அலங்கரிக்கும் தொழிலை நெடுநாட் செய்து) பழகிப் பயின்றுள்ள மடமையை யுடைய மகளிர் (தம்முட்) கூடி, காமாகமம் பயிலும் கழகத்தினை மதன நூலைப் பழகுதற்கேற்ற கழகத்தை, பேர் ஆர் அமுதை பெரிய அரிய அமுதத்தை, காட்சித் திருவை கட்புலமான திருவை, இரண்டு கணைமழவிற் பிறைக்கீழ் வைத்து அன்ன மடநோக்கு இந்துமதி என்னும் ஓர் அழகை இரண்டு அம்புகளை இரண்டு இளமையான விற் களையுடைய பிறையின்கீழ் வைத்தாற்போன்ற மடநோக்கினை யுடைய இந்துமதி என்று சொல்லப்படும் ஒப்பற்ற அழகை, புதுப்பித்து அழகு ஊட்டி அழகு காண்பாராயினர் புதுப்பித்து அழகு பெறச் செய்து அழகு பார்ப்பாராயினார்கள். கூடிப் புதுப்பித்து ஊட்டி அழகு காண்பாராயினார் என முடிக்க. கழகமும், அமுதமும், திருவும், அழகும் என்னும் பெயர்கள் ஒரு பொருள் மேல் வந்தன. கழகம், அமுதம், திரு, அழகு என்பன ஆகுபெயர்கள். புதுப்பித்தல் திருத்துதல், ஊட்டுதல் ஏற்றுதல் எனக்கொண்டு, காண்பாராயினார் என்பதறகுச் செய்வாராயினார் எனினுமாம். அழகைப் புதுப்பிக்கத் தொடங்கியது, மகளிரறியாமையை பிறிதல்ல வென்பார், மட நல்லார் ........... அழகைப் புதுப்பித்து என்றார். இங்ஙனமே: அழிழிமைத் துணைகள் கண்ணுக் கணியென இமைக்கு மாபோல் உமிழ்சுடர்க் கலன்க ணங்கை புருவினை மறைப்ப தோரார் அமிழ்தினைச் சுவைசெய் தென்ன அழகினுக் கழகு செய்தார் இமிழ்திரைப் பரவை ஞாலம் ஏழைமை யுடைத்து மாதோ. என்றார் கம்பரும் என்பது. இப் பாட்டுக்கும் இன்னும் பல பாட்டுக்களுக்கும் எழுதப் பெற்ற உரைகளிலிருந்து உரையாசிரியராகிய கணேசையரவர் களின் உரைகாணும் வன்மையும், கம்பராமாயணம் முதலிய இலக்கிய நூல்களிலுள்ள பயிற்சி மிகுதியும் நன்கு புலப்படு கின்றன. இரகுவமிசத்துக்குக் கணேசையரவர்கள் உரைகண்டிராவிட்டால்,கற்றோர்க்குkஅதி‰பyசெய்யுள்களுக்Fஉuகாzமுடியாது. இன்னும் இரகுவமிசச் செய்யுள்களின் அழகெல்லாமறிய விரும்புவோர் கணேசையரவர்கள் செந்தமிழில் எழுதிய கவியின்பம் என்னுங் கட்டுரையைப் படிப்பாராக. ஈண்டு விரிப்பிற் பெருகும். இனி, செந்தமிழ்க் கருவூலமாகிய தொல்காப்பியத்துக்கு அவர்கள் எழுதிய உரை விளக்ககமும் உரையின் பாற்பட்டதே யாகும். அவ்வுரைநடையின் சிறப்பையும் அருமையையும் அறிஞர்களனைவரும் அறிவர்; தொல்காப்பியங் கற்றார் அனைவரும் அறிவர். அவர்களது உரைநடையிலேயே பழைய உரையாசிரியர்களின் திட்பமும் நுட்பமும் அமைந்துள்ளன. அதே சமயத்தில், தெளிவும் இனிமையும் பயக்கும் ஓர் எளிமையும் அமைந்திருத்தலைக் காணலாம். அன்றியும் அவர்கள் முன்னைய உரையாசிரியர்களாகிய இளம்பூரணர், தெய்வச்சிலையார், கல்லாடர், சிவஞான முனிவர், இலக்கண விளக்க நூலுடையார் கொள்கைளையும் ஆராய்ந்து தாம் வந்த முடிபைத் தெரிவிக்கும் பகுதிகள் கற்றோர்க்குக் கழிபேருவகை பயப்பனவாம். தொல் காப்பியம் எழுத்ததிகாரப் பதிப்பைப்பற்றி டாக்டர் சாமிநாதையர் எழுதிய கடிதமொன்றையும் இங்குத் தருகின்றேன். உ சிவமயம் 22-12-1938 பிரும்மஸ்ரீ கணேசையரவர்களுக்கு ஸ்ரீநடராஜப் பெருமான் திருவருளால் எல்லா மங்களங்களும் மென்மேலும் பெருக உண்டாகுக. உபயகுசலோபரி. தாங்கள் அன்புடன் இம்மாதம் 15ஆம் தேதி அனுப்பிய கடிதமும் அதற்கு முன் அனுப்பச் செய்த தொல்காப்பியம் எழுத்ததிகாரமும் வரப் பெற்று மிக்க சந்தோஷமடைந்தேன். நூலிலே அன்புவைத்து அதன்பாலுள்ள விஷயங்களை வெளிப்படுத்துதலையே தனி இன்ப மாகக் கொண்டு பலகாலம் உழைத்து ஆராய்ந்து பதிப்பிக்கும் முயற்சி யுடையார் சிலரே. தாங்கள் அங்ஙனமே செய்து வருதலை மிகவும் பாராட்டுகின்றேன். தாங்கள் அவ்வப்போது எழுதிவந்த இலக்கணக் கட்டுரைகளையும் தங்கள் பதிப்புக்களிற் சேர்த்திருத்தல் தமிழாராய்ச்சியாளர்க்குப் பெரிதும் உபகாரப்படுவதாகும். தாங்கள் இப்பொழுது தொல்காப்பியம் பொருளதி காரத்தின் பிற்பகுதியைப் பேராசிரியர் உரையோடு வெளியிட வெண்ணியிருப்பது தெரிந்து மகிழ்ந்தேன். சிலகாலமாக நான் நோய்வாய்ப்பட்டுப் பெரும்பாலும் படுக்கையிலேயே இருத்தலின் தங்கள் விருப்பப்படி உடனே க்ஷ உரைச்சுவடியை எடுத்தனுப்ப இயலவில்லை. இன்னும் சில நாட்களில் தேடி எடுத்து அனுப்புவேன். சொல்லதிகாரம் நச்சினார்க்கினியத்தையும், பொருளதி காரம் முற்பகுதி நச்சினார்க்கினியருரையையும் முன்னர் வெளியிட்டுப் பின்னர்ப் பேராசிரியருரையை வெளியிடலாமே? தாங்கள் Éருப்பப்படியேbசய்தல்eலமே. இங்ஙனம், அன்புள்ள, வே. சாமிநாதையர் தொல்காப்பியப் பதிப்பை முன் எவரும் பதிப்பிக்காத முறையில், மிக அழகாக அச்சிட்டு வெளியிட்டுதவிய எம் அரிய நண்பர் ஈழகேசரி அதிபர் திரு. நா. பொன்னையா அவர்களின் பெரும் பணியும் எம்மாற் போற்றப்படத்தக்கதாகும். மகாவித்து வானவர்களை அடிக்கடி இப்பணியில் ஊக்கி உரைவிளக்கக் குறிப்புகளை எழுதுவித்தது மட்டுமன்றிப் பொருட்செலவையும் பாராமல், அதனைத் தம் திருமகள் அழுத்தகத்திற் கண்ணைக் கவரும் பொன்னெழுத்துக்களிற் சிறந்தவகையிšஅச்சிடுவித்Jவெளியிட்lபெருkஅவர்களை¢சார்ந்ததாகும். இப் பணியைச் செய்த அவவர்களுக்குத் தமிழுலகம் என்றும் கடப் பாடுடையதாகும். இத் தொல்காப்பியப் பதிப்புக்குச் சிறப்புப் பாயிரம் அளித்த புலவர்களுள் நவாலியூர், திரு. க. சோமசுந்தரப் புலவரவர்களும் ஒருவராவர். இவர்களும் மகாவித்துவான் கணேசையர வர்கள்பாற் பெருமதிப்பும் பேரன்பு முடையராய் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தொல்காப்பியத்துக்கு உரைவிளக்கக் குறிப்பு எழுதியது மட்டுமல்ல, உரைநடையிலமைந்த நூல்களாகவுஞ் சில எழுதி யிருக்கின்றார்கள், கணேசையரவர்கள். அவர்தம் 47ஆம் ஆண்டில் (அஃதாவது 1925ஆம் ஆண்டில்) தமது ஆசிரியருள் ஒருவராகிய சுன்னாகம், அ. குமாரசுவாமிப் புலவரவர்களைப் பற்றிக் குமாரசுவாமிப் புலவர் வரலாறு என்னும் பெயரோடு ஒரு வரலாற்று நூல் எழுதியிருக்கிறார்கள். இந் நூலிலிருந்து குமாரசுவாமிப் புலவரவர்களைப் பற்றி மட்டுமன்று, ஈழநாட்டுப் புலவர்களுக்கும் தமிழ்நாட்டுப் புலவர்களுக்கும் இடையேயிருந்த தொடர்பையும் நாம் நன்கு அறிந்து கொள்ளலாம். குசேலர் சரித்திரம் என்னும் உரைநடை நூலும் இவர்களால் எழுதப் பட்டது. இதில் ஒரு பகுதியை இவர்தம் உரைநடைக்கு எடுத்துக்காட்டாகத் தருதும்: மதியிலிகாள்! நீவிர் இத் தபோதனரை யாரென்று நினைத்தீர்கள். இவர் பொய்ம்மையில்லார். பொறுமை யுடையவர். அடக்கமுடையவர். பல விரதங் காத்தவர். மறை நான்கும் மற்றும் ஓதினவர். கண்ணன்பாலன்றிப் பிறர்பாற் செல்லார். இவர் அழுக்கற்ற மெய்ஞ்ஞானியாவர். மெய்ஞ் ஞானிகளாவார்: பொறிவழியில்போகார். மனத்தை ஒருவழிப் படுத்தி மெய்ப்பொருளையே யென்றுஞ் சிந்தித் திருப்பர். மற்று எப்பொருளையும் விரும்பார். ஓட்டையும் செம்பொன்னையும் ஒக்க நோக்குவார். அரசர்க்கும் அஞ்சார். யமனுக்கும் அஞ்சார். பிரளயத்துக்கும் அஞ்சார். அவர்க்கு எந்நாளும் இன்பமே யன்றித் துன்பமில்லை. அவர்க்குத் தம்மைப் புகழ்வதில் விருப்பும் இகழ்வதில் வெறுப்புமில்லை. அவர் வேர்த்தாற் குளிப்பர். பசித்தால் புசிப்பர். துயில்வந்தாற் றுயில்வர். ஒன்றையும் நாளைக்கு வேண்டுமென விரும்பார். அட்ட சித்திகளை விரும்பார். ஆடுவார்; பாடுவார்; சிரிப்பார்; பித்தர்போல் திரிவார். இன்றிருந்தவிடத்தில் நாளையிரார். கந்தையன்றியுடார். அம் மெய்ஞ்ஞானிகளின் பெருமையை மதிப்பவர் யாவர்? எடுத்துச் சொல்ல வல்லவர் யாவர்? ஆயிரங் கவை நாவுவடைய அரவத் தானும் முடியாது என்பது. 1931ஆம் ஆண்டில் வெளியிடப் பட்ட இந்நூலின் ஒன்பதாம் பதிப்புக்கு அணிந்துரை கொடுத்த முன்னாள் தபாற்பகுதி அமைச்சர் திரு. சு. நடேச பிள்ளையவர்கள் இவர்கள் உரைநடையைப் பற்றிக் கூறுவது இதுவாகும்: ......... மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் வெளியீடாகிய செந்தமிழ்ப் பத்திரிகையில் தமிழ் இலக்கண இலக்கியப் பொருள் பற்றி இவர்கள் அவ்வப்போது எழுதியுள்ள கட்டுரைகள் இவர்களது நுண்மாண் நுழைபுலத்தை விளக்கிப் பெரும்புகழை நாட்டுவன. இவர்களது கட்டுரைகள் தெள்ளிய தமிழுரைநடைக்கு எடுத்துக்காட்டாவன. இலகுவானதும் பொருட் செறிவுடையதும் வனப்புடையதுமான உரைநடை எழுதுதில் இவ்வாசிரியர்க் குள்ள ஆற்றல் பள்ளிக்கூட மாணவர்களுக்காக எழுதப்பட்ட இந்நூலினின்றும் நன்கு புலப்படும். சிறிய வாக்கியங்களாலாகிய மிகவினிய ஓசைநயம் அமைந்தொழுகுகின்றது. என்பதாம். 1939ஆம் ஆண்டில் இவர்கள் எழுதிய ஈழநாட்டுத் தமிழ்ப் (இந்நூலினை தமிழ்மண் பதிப்பகம் 2006ஆம் ஆண்டில் மீள் பதிப்பு செய்துள்ளது) புலவர் சரித்திரம் ஈழத்துப் புலவர் களுடைய வரலாறுகளை அறிய விரும்புவோர்க்குப் பெரிதும் பயன்படுவதாய்ச் சுவைமிக்கதாய் விளங்குவதொன்றாகும். இதனை இன்னும் விரிவாக எழுதி இரண்டாம் பதிப்பாக வெளியிடுவதற்கு எண்ணியிருந்தார்கள். அது கைகூடவில்லை. இவ்வாறே உரை நடை வல்லுநராகவும் இலக்கணப் பேரறிஞராகவு«விளங்»அரிaதமிழ்ப்பÂசெய்Jவந்தார்கள்,மகாவித்துவா‹கணேசையரவர்கள். பொற்கிழி விழா வெகுதானிய ஆண்டு, புரட்டாதித் திங்கள் 22ஆம் நாளன்று (8-10-38) யார்ப்பாணத்தில் முன் எஞ்ஞான்றும் நிகழாதவகையில் ஒரு சிறந்த பொற்கிழி விழா நிகழலாயிற்று. அன்று மகா வித்துவான் கணேசையரவர்களது அறுபதாம் ஆண்டு (சஷ்டியப்த பூர்த்தி) விழாவுமாகும். அன்று காலை 8.30 மணிக்கு யாழ்ப்பாணம் வண்ணை வைத்தீசுவரன் கோயில் முன்றிலிலிருந்து பல்வகை மங்கல வாத்தியங்கள் ஒலிப்ப, பன்னூற்றுக்கணக்கான தமிழன்பர்கள் மத்தியில் அலங்கரிக்கப் பட்ட இரதத்தில் மகா வித்துவானவர்கள் பல வரிசைகளுடனும் விழா நிகர்தற்கமைந்த வைத்தீசுவர வித்தியாலய மண்டபத்துக்கு அழைத்துச் செல்லப் பட்டார்கள். (இதற்கான படங்களை பின்னிணைப்பில் காண்க.) mங்கு அக்காலத்து அரசாங்கசபைத் தலைவராக இருந்த கௌரவ சேர்வை. துiuRthÄ அவர்கள் தலைமையில் விழா மிக்கச் சிறப்பாக நடைபெற்றது. சென்னை, டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்கள், திருப்பனந்தாள், மேன்மைதாங்கிய காசிவாசி சுவாமிநாதத்தம்பிரானவவர்கள், சென்னைச் சர்வகலா சாலைத் தமிழ் இலெக்சிகன் நிலையத் தலைமைப் தமிழ்ப் பண்டிதர் மு. இராகவையங்கார் அவர்கள், மயிலாப்பூர், கலைமகள் பத்திராசிரியர் கி.வா. ஜகந்நாதன் அவர்கள், கொழும்பு, முதலியார் செ. இராசநாயகம்அவர்கள் உட்படப் பல அறிஞர்களிடமிருந்து வாழ்த்துச் செய்திகள் வந்து குவிந்தன. உயர்திரு. விபுலானந்த அடிகள், வண. சுவாமி ஞானப் பிரகாசர் அவர்கள், திரு. சு. நடேசபிள்ளை அவர்கள், மறைத்திரு. வை. இராமசாமி சர்மா அவர்கள், பண்டிதர் திரு. ம. வே. மகாலிங்கசிவம் அவர்கள் ஆகியோரால் ஐயரவர்களுடைய கல்வித்திறனையும் ஆராய்ச்சி வன்மையையும் ஏனைய குணநலன்களையும் பற்றிச் சிறந்த சொற்பொழிவுகள் நிகழ்த்தப் பட்டன. மகாவித்துவான் அவர்களுக்கு ஏறக்குறைய 2000 வெண்பொற்காசுகளைக் கொண்ட ஒரு பொற்கிழி தலைவர வர்களால் வழங்கப்பட்டது. இவ்விழா கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. இதனை இத்துணைச் சிறப்பாக நிகழ்த்து தற்குக் காரணராயிருந்தவர்களுள் ‘ஈகேசரிப்gத்திராதிபர்âரு.eh. பொன்னையா அவவர்கள், பண்டிதமணி சி. கணபதிப் பிள்ளை அவர்கள், கலைப்புலவர் க. நவரத்தினம் அவர்கள், திரு. ச. அம்பிகைபாகன் அவர்கள் ஆகியவர்கள் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவர்களாவர். சென்னைத் தமிழ் வளர்ச்சிக் ககழகத்தார் 1951 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம், 30ஆந் திகதிகள், மே மாதம் 1ஆந் திகதி ஆகிய மூன்று நாட்களிலும் பாழ்ப்பாணத்தில், தமது நான்காவது ஆண்டு விழாவை மிக்க சிறப்பாகக் கொண்டாடினர். தமிழ் வளர்ச்சிக் கழகத்தார் நிகழ்த்திய விழாக்களுள் இவ்விழாவே தலைசிறந்ததாகும். இவ்விழா யாழ்ப்பாணம் திருநெல்வேலியி லுள்ள பரமேசுவரக் கல்லூரி முன்றிலில் நடைபெறலாயிற்று. இலக்கியப்பகுதி, சரித்திரப்பகுதி, கலைப்பகுதி என மூன்று பெரும்பிரிவுகளாக வகுத்துக்கொண்டு,இவ்விழாtஅவர்கŸநடாத்தினர். இவ்விழாவைப் பேராசிரியர் திரு. R.P.nrJ¥ ãŸisat®fŸ, B.A., B.L., புதுடில்லித் தேசீய பௌதிக ஆராய்ச்சித்துறைத் தலைவர் டாக்டர் K.S. கிருஷ்ணன் அவர்கள் F.R.S., சென்னைச் சுதேசமித்திரன் ஆசிரியர் திரு. C.R. ஸ்ரீநிவாசன் அவர்கள், திரு. சு. நடேசன் அவர்கள் B.A., B.L., F.P.F.P.S., முதலியோர் தலைமை தாங்கி நடத்தினார்கள். இவ்விழாவின் தொடர்பாகத் தமிழ்விழா மலர் என ஒரு மலரும் வெளியிடப் படலாயிற்று. இதற்குமுன், எவ்விழாவிலும் நடந்திராத ஒரு நிகழ்ச்சியை இவ்விழாவின் அலுவற் குழுவினர் செய்து முடித்தனர் என்று கூறலாம். ஈழத்துத் தமிழ் முனிவரும் இருபதாம் நூற்றாண்டுப் பெரும் புலவர்களுள் ஒருவருமாகிய மகாவிவத்துவான் மறைத்திரு. சி. கணேசையரவர்களுக்குப் பொன்னாடை போர்த்து அவர்களைக் கௌரவித்தமையே அச்செயலாகும். இத்தகைய பாராட்டுகளுக்கு உடம்படாது, அவற்றை வெறுத்து, மருதடியின் விநாயகப் பெருமானோடு ஏகாந்தமாக வீற்றிருக்கும் இன்பப் பேற்றை விரும்பி இருந்த ஐயரவர்களை வலிந்து கொணர்ந்து உலகப் புகழ்படைத்த விஞ்ஞான ஆராய்ச்சி வல்லுநரான டாக்டர் மு.ளு. கிருஷ்ணன் அவர்களைக் கொண்டு அவவர்களுக்குப் பொன்னாடை போர்த்துக் கௌரவித்மை சாலவுஞ் சாமர்த்தியமான செயலாகும். இச்சிறப்பை விழாவுக்கு வந்திருந்த பல்லாயிரக் கணக்கான (ஏறக்குறைய15,000)jமிழன்பர்கள்fண்ணாரக்fண்டுïறும்பூதெய்தினர்.ïJ, தமிழ்நாட்டில் எந்தப் புலவருக்கும் இதுவரை நடந்திராத ஒரு தனிச்சிறப்பாகும் என்பதை நாம் பெருமிதத்தோடு எடுத்துக்கூற விரும்புகின்றோம். இதனால் தமிழ் வளர்ச்சிக் கழகத்தார் தமக்கு எஞ்ஞான்றும் நிங்காத புகழைத் தேடிக் கொண்டார்கள் எனக கருதுகின்றோம். கவிபாடுந் திறன் கவிபாடும் புலமிக்கோனே என்று குமாரசுவாமிப் புலவரவர்கள் இவர்களைப் பாராட்டுகின்றார்கள். பெரும் புலமை படைத்த அவர்கள் அறியாது சொல்லமாட்டார்கள். கவிஞரின் பெருமையை மற்றொரு கவிஞரே நன்கறிவர். கணேசையரவர்களுடைய கவித்திறமையை அறிய வேண்டுமேல், அவர்கள் இயற்றியமருதoவிநாயக®பிரபந்தம்’என்wசெய்யுணூற்றொகுதியை¥படித்தšவேண்டும். இதில் கணேசையரவர்கள் தம் குல தெய்வமாகிய வருத்தலைவிளான் விநாயகப் பெருமான் மீது பாடி 1949ஆம் ஆண்டு வெளிட்ட மருதடி விநாயகர் இருபா இருபஃதும், 1951ஆம் ஆண்டில் வெளியிட்ட மருதடி விநாயகர் அந்தாதியும், அதனையடுத்து வெளியிட்ட வருத்தலைவிளான் மருதடி விநாயகர் கலிவெண்பா கலிநிலைத்துறை ஊஞ்சல் என்பனவும் அடங்கியுள்ளன. இவை தனித்தனியாக அச்சிடப்பட்டிருந்தவற்றை அவர்கள் 1956ஆம் ஆண்டில் தொகுத்து ஒன்றாக்கி வெளியிட்டார்கள். இந்நூல் களிலிருந்து வகைக்கோர் எடுத்துக்காட்டாகச் சில செய்யுள்களை ஈண்டுத் தருகின்றேன். இவற்றுள் வெண்பாவும் அகவற்பாவுமாக அமைந்த இருபது செய்யுள்களை யுடையது மருதடி விநாயகர் இருபா இருபஃது, இதில் வரும் அகவற்பாக்கள் சங்கச் செய்யுள்கள் போன்ற இறுக்கமும், பொருளாழமும், ஓசைநயமும், தன்மை நவிற்சியணியும் பொருந்தியவை. அவற்றுள் ஒன்றை எடுத்துக் காட்டுதும் : தாமுழந் தீட்டிய தோமில் பொருளுணும் வேளாண் மாந்தர் தாளிழந்து வருந்த 1ஆமும் புலர்ந்து 2கோளும் திரிந்து வானுந் 3தொலைந்த 4வறன்மிகு காலையும் தன்னிடத் தருவிச் சின்னீ ருதவி உலகம் புரக்கும் குலவரை போல உள்ளது கொடுத்துணும் வள்ளற்பெருk பெற்றே யறிகிலாப் பேதை மாந்தர்போல் உற்றன பேணும் பற்றுடை யிந்திரன் வாழ்க்கையு மிந்த மண்ணோர் வாழ்க்கையும் வேண்டலன் நின்பெரு மலரடி வேண்டுவன் குவளைக் கானந் துவளப் பகட்டினம் சென்றுபுல் லருந்து துன்றுபல் வயல்கள் சூழும் வருத்தலைத் தொன்மா நகரிடை ஏனற் கதிர்போ விலங்கு வெண் மலர்கள் விரிதருஞ் சினைகள் மேவு மருதடி போற்றிட வமரரும் வீற்றிருந் தருளும் மதமா முகத்தொரு வான்பெருங் கடவுளே. இச் செய்யுளில், நீர் வற்றுங் காலையின் நன்மையும், வள்ளற் றன்மைக்குக் குலவரையை உவமை கூறிய சிறப்பும், மருதின் வெண்மலர்கள்ஏன‰கதிர்போšவிளங்கு«என்wநயமும்,குவளை¡கானªதுவள,பகட்டின«சென்று’வயல்களி‰புல்லருந்து«பெற்றியும்,தன்மைநவிற்சியÂபொருந்jஒUசொல்லோவியமாக¤தீட்டப்பட்டிருத்தyநோக்குக. படிக்குங்கால், இந்தப் பாவில் உள்ள ஓசைநயத்தையும் செவிவாயிலாக ஓர்க. இச்செய்யுள் ஒன்றுமே இவர்தம் கவித்திறனைக் காட்ட அமையும்எனினும்,மற்றைaநூல்களிYமிருந்Jஒவ்வொன்Wகாட்டுதும். இந்த இருபா இருபஃதோடு அன்பர்கள் முக்கட் கரும்பாகிய விநாயக மூர்த்தியை வழிபட் டருள்பெற்றமையைக் கூறும் விருத்தப்பாக்கள் பத்தும், தைப்பூசச் சிறப்புப் பாக்கள் ஐந்துஞ் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றுள் வழிபட்டருள் பெற்றோர் பெற்றியைக் கூறுவனவற்றுள் ஒன்று வருமாறு: வாக்கிற் றுதித்துச் சிலர்பெற்றார் மனத்தா னினைந்து சிலர்பெற்றார் ஆக்குஞ் செம்பொற் கோவிறனை யடியாற் சூழ்ந்து சிலர் பெற்றார் தேக்கொ ளுன்றன் உருநோக்கிச் சீரோ டருளைச் சிலர்பெற்றார் உக்கி யொன்று மியற்றாதே னுறுவ துண்டோ மருதீசா. எனவருஞ் செய்யுளிற் பொருந்திய பக்திச் சுவையையும் இனிமையையும் நோக்குக. இனி விநாயகர் அந்தாதியின் கண்ணே வரும் பெருமிதச் சுவையோடு கூடிய பாட்டொன்றைக் காண்க. போற்றுவன் மாமரு தீசன் பதங்களைப் போற்றிமிக மாற்றுவ னென்றன் மனத்தி னிலையினை மாற்றியின்பந் தோற்றுறு மோன நிலையினைப் பெற்றுச் சுகமடைவன் கூற்றுவன் றன்னை யருளெனும் வாளாற் கொலைசெய்வனே என்பது அது. மருதடி விநாயகர் கலிவெண்பாவில் விநாயகப் பெருமான் திருவுருவத்தை மிக அழகாக ஒரு சொல்லோவிய மாகத் தீட்டி, அப் பெருமானுக்குப் பூசை செய்யுமாற்றையுங் கூறி, அவ்வாறு பூசை செய்வோர் அடையும் பெரும்பலனையும் எடுத்துச் சொல்லுகிறார்கள். காட்டுக்காக, அதிலுள்ள ஆறு அடிகளை மட்டும் அகழ்ந்தெடுத்துத் தருகின்றேன் : ...................... தஞ்சமென எத்திக்கும் போற்றியிடு மேரம்ப மூர்த்திதனைத் தித்திக்கும் மேலாய தெள்ளமுதை முத்திக்குங் காரணத்தை மெய்ஞ்ஞானக் கண்ணுக்குத் தோற்றியிடும் பூரணத்தை யெங்குறைகள் போக்கியிடுங் காரணத்தை ஏத்தவுயர் பூவா லினிமையொடு மர்ச்சனை செய் தாற்று முனையென்பா லாக்குவாய் என்பது. ஊர ராமுடிப் பிஞ்ஞக னுருவமே யுலகென் றாரு மோர்வுற வவன்றனை வலஞ்செய்தங் கையினிற் சேரு மாங்கனி வாங்கினோன் றனைத்தெரி சிக்க நேரிலாதியாŠசெய்திடுதவமெdநிலத்âš என்பது கலிநிலைத்துறையுள் ஒரு செய்யுளாகும். அவர்கள் பாடிய ஊஞ்சலிலும் ஒரு தனியழகுண்டு. ஒரு செய்யுளைப் பாருங்கள் : வடிதருமங் குசபாசங் கரமேல் வைத்தாய் வல்லபையங் குசபாச முரமேல் வைத்தாய் குடிலமிசை யுளமதிநின் சடைமேல் வைத்தாய் கொடுவினையே னுளமதிநின் புடைமேல் வைத்தாய் படியுகநீர் காகவடி வுன்பால் வைத்தாய் பணிபுரிதற் காகவடி வென்பால் வைத்தாய் வடிபுனலார் குளந்திகழ்வர்த் தலைமே லோங்கும் மருதடிவா ழைங்கரனே யாடீ ரூங்சல். இச்செய்யுளில் வரும் சொல்லணியும், பொருணயமும் பொருளுணர்ந்து படிபோர்க்குப் பேருவகை யூட்டுவனவாம். இவ்வாறே இவர்கள் பாடல்கள் மிக்க சுவை பொருந்தியனவாம். இன்னும், யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தினின்றும் கலையாக்கங்கருதி வெளிவந்த மும்மாத வெளியீடாகிய கலாநிதி என்னும் இதழுக்கு இவர்கள் அளித்த வாழ்த்துக் கவியின் அழகைப் பாருங்கள். அது வருமாறு: கலாநிதி யேநீ கவின்பெற் றெழீஇ வானோ ருண்ணக் கலையுடன் புணருபு தேயா தென்றும் நிறைவு தலைக்கொண்டு கறைவிர வாது தடைமரு வாது தமிழகந் தன்னி லிகழ்விலழா திலங்கி ஆங்குச் செறிதருஉம் மக்கட் கறிவு முதிர உரையாம் அமுதக் கதிரொளி பரப்பித் தயாநிதி யாம்இறை தண்ணரு ளதனால் என்று நின்று நிலவி வாழிபல் லூழி வாழிய இனிதே என்பது. இவற்றிலிருந்து கவிபாடும் புலமிக்கோனே என்று குமாரசுவாமிப் புலவரவர்கள் கூறிய கூற்று எத்துணை உண்மை வாய்ந்தது என்பதைக் கண்டோம். இங்ஙனம் ஒரு கவிமணி யாகவும் திகழ்ந்தவர்கள் மகாவித்துவான் கணேசையரவர்கள். சமய வாழ்க்கை கணேசையரவர்கள் ஒரு சிறந்த விநாயக பக்தர். பிற்காலத்தில் அவர்கள் கல்வி யென்னும் பல்கடற் பிழைத்தும் என்றும், கற்பனவும் இனியமையும் என்றும் மணிவாசகப் பெருமான் கூறிய வார்த்தைகளை அடிக்கடி சொல்லிக் கொள்வார்கள். கல்விச் செருக்கற்றவராகவே அவர்களது கடைசிக் காலம் கழியலாயிற்று. அவர்கள் பத்தியிற் சிறந்து அனுபூதிமானாக விளங்கினார்கள். 1938ஆம் ஆண்டில் தம் அறுபதாம் ஆண்டைக் கொண்டாடுமுகத்தான் யாழ்ப்பாணத் தமிழ் மக்கள் நிகழ்த்திய பெருவிழாவின்கண் அவர்களுக்கு ஈராயிரம் வெண் பொற் காசுகளைக்கொண்ட பொற்கிழி வழங்கியபோது, அதனையும் அவர்கள் விநாயகர் கோயிற்றிருப் பணிக்குப் பயன்படுத்தினார்க ளென்றால், அவர்கள் பத்தியையும் துறவுள்ளத்தையும் நாம் ஒருவாறு அறிந்து கொள்ளலாம். திருவாசகம், தாயுமானசுவாமி பாடல் ஆகியவற்றில் அவர்களுக்கு நிரம்பிய ஈடுபாடுண்டு. அவற்றைப் பாடிய பெரியார்கள் அடைந்த அனுபவத்தைத் தாமும் அடையவேண்டு மென்ற தாகமே அவர்களுக்குப் பெரிதும் இருந்தது. தாயுமான சுவாமிகளைப் போலவே அவர்கள் வேதாந்த சித்தாந்த சமரசக் கொள்கை யுடையவரா யிருந்தார்கள். கந்தை மிகயைங் கருத்தும் சிந்தையில் தைவரும் விநாயகப் பெருமான் திருவடியும், உயர்ந்த குறிக்கோளோடு கூடிய மிக எளிய வாழ்க்கையும் உடையவர்களாக இருந்து வாழ்வாங்கு வாழ்ந்து காட்டிய இத் தமிழ் முனிவர் அப்பர் சுவாமிகளையே எமக்கு நினைவூட்டு கின்றார்கள். வருத்தலை விளான் மருதடி விநாயகராலயத்தின் அருகேயுள்ள தமது ஆச்சிரமத்தில் அப் பெருமானோடு. நெஞ்சிற் பிறதே நினையேன் நினையன்றி அஞ்சல் மறலிக்கென் றைங்கரநீ தஞ்சவுரை தாராம லின்றளவுந் தானிருப்ப துன்னருட்கிங் காராயிற் சால்போ வறை என்றென்று உரையாடிக் கொண்டே இனிது இனிது ஏகாந்தமினிது என்றாங்கு ஏகாந்தமாக வாழ்ந்த இப் பெரியார் தமது எண்பதாவது வயசில் விளம்பி வருடம் ஐப்பசி மாதம் 23ஆம் நாளாகிய (8111958) சனிக்கிழமை யன்று காலை 630 மணியளவில் இவ்வுலக வாழ்வை நீத்தார். இந் நீத்தார் பெருமை நினைதொறும் நினைதொறும் நெஞ்சை உருக்குவதொன்றாம். இப் பெரியார் பெருமையைத் தமிழுலகம் ஏற்ற பெற்றி போற்றுமாக. இப் பெரியாரைப் பின்பற்றி வாழும் மதுகை எமக்குண்டாகுக. தமிழ் வாழ்க. தமிழன் ஓங்குக. திரு. க. நடராசன், சி. கணேசையர் நினைவு மலர் 5. உரை நெறியும் விளக்கமும் தொல்காப்பிய மரபுரை இளம்பூரணர் நூல் முழுமைக்கும்; பேராசிரியர் பொருளதிகாரப் பின்னான்கு இயல்களான மெய், உவமம், செய்யுளியல், மரபியல் ஆகியவற்றிற்கும்; சேனாவரையர் சொல்லதிகாரத்திற்கும்; நச்சினார்க்கினியர் எழுத்து, சொல் ஆகிய இரண்டற்கு முழுமையாகவும், பொருளதிகாரத்திற்கு அகத், புறத், களவு, கற்பு, பொருளியல், செய்யுளியல் ஆகியவற்றிற்கும்; தெய்வச்சிலையார் சொல்லதிகாரத்திற்கும், கல்லாடானர் சொல்லதிகாரம் இடையியல் 10ஆவது நூற்பா வரைக்கும்; பழையவுரைகாரர் சொல்லதிகாரம் கிளவி, வேற்றுமை, வேற்றுமை , மயங்கியல் 33ஆவது நூற்பா வரைக்கும் என அவர்கள் எழுதிய உரைகள் கிடைத்துள்ளன. தொல்காப்பிய உரையாசிரியர்களை இளம்பூரணர், பேராசிரியர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார், கல்லாடனார், பழையவுரைகாரர் எனக் கால வரிசையின் அடிப்படையில் முறைப்படுத்தலாம். நூலாசிரியர் பெயரால் நூல்கள் பெயர் பெற்றதைப் போன்று உரையாசிரியர் பெயரால் உரைநூல்களும் பெயர் பெற்றன. உளங்கூர் உரையாம் இளம்பூ ரணமும் ஆனா இயல்பின் சேனா வரையமும் உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க் கினியமும் என்று இலக்கணக் கொத்தின் பாயிரம் கூறுகிறது. உரையால் நூலிற்குப் பெருமை; நூலால் உரைக்குப் பெருமை ஆகிறது. தொல்காப்பியம் என்னும் பெருநூலால் உரையாசிரியரும் உரையாசிரியர் உரைத்திறத்தால் நூலும் சிறப்புற்று விளங்குகிறது. ஈண்டு நச்சினார்க்கினியர் உரைநெறியினைக் காண்போம். நச்சினார்க்கினியர், முன்னோர்தம் உரைநெறியைப் பின்பற்றியும், கொண்டுகூட்டிப் பொருள் கூறல், இடைச் சொற்களை இடம் மாற்றிப் பொருள் கூறல் என்னும் நெறிகளையும் கொண்டு உரை எழுதியிருக்கிறார். இவர்தம் உரைநெறி வருமாறு :- 1. பாயிர உரை எழுதுதல் 2. அதிகாரம், இயல் பெயர்க்காரணம் கூறல் 3. அதிகார முன்னுரை எழுதுதல் 4. இயல் விளக்கம் தருதல் 5. இயைபு (அதிகார இயைபு, இயல் இயைபு, நூற்பா இயைபு) 6. வைப்பு (இயல் வைப்பு, நூற்பா வைப்பு) 7. வகைமுறை வைப்பு (நூற்பா) 8. நூற்பா அமைப்பு முறையினை ஆராய்தல் (சேரக் கூறினார் - வேறு கூறினார்) 9. நூற்பா உரை அமைப்பு - 10. நூற்பா விளக்கம்: அ. வழக்கு, செய்யுள் மேற்கோள் களைக் கொண்டு விளக்குதல் ஆ. தொல்காப்பிய நூற்பாக்களைக் கொண்டு விளக்குதல் 11. மேற்கோள்களைப் பொருத்திக் காட்டுதல் 12. சொற்பொருள் விளக்கம் தரல் 13. வினா விடை 14. மூல பாடத்தை ஆராய்தல் : அ. நூற்பா இன்றியமையாமை ஆ. அடங்குமெனின் - அடங்காது. 15. நூற்பாச் சொற்றொடரை நிலைப்படுத்துதல்: அ. மிகையானே ஆ. இலேசு இ. என்றதனால் 16. பாட வேறுபாடு காணல் 17. பிறர் உரை ஏற்பும் மறுப்பும் 18. கூறியவாறே கூறுக. ஒக்கும் எனக் கூறல். 19. நூற்பா வரையறை கூறுதல் 20. வழிகாட்டுதல் 21. நினைவூட்டல் 22. ஐயம் அகற்றுதல் 23. உவமை, உத்தி, உரைக்குறியீடுகள் ஆகியன கொண்டு விளக்குதல் 24. எடுத்தோத்து, மாட்டேறு, இன்னும் இதனானே என்றுரைத்து விளக்கம் கூறல் 25. இலக்கணக் குறிப்பு, இலக்கண முடிபினைக் கூறல் 26. இலக்கணத்தைக் கணக்கிடுதல் 27. கொண்டுகூட்டிப் பொருள் காணுதல் 28. இறந்தொழிந்த சொற்களைக் கூறுதல் 29. வந்தவழிக் காண்க எனும் முறையைக் கையாளுதல் 30. சமுதாய நிலையினைக் கூறுதல் 31. நூலாசிரியர் கூறாது விடுத்ததை உரையாசிரியர் கூறுதல் உரை அமைப்பு நச்சினார்க்கினியர் தொல்காப்பியம் முழுமைக்கும் உரை கண்டிருப்பதால் இவரும் இளம்பூரணரைப் போன்று தமது உரையினைப் பாயிரவுரையில் தொடங்குகிறார். எனவே, இவர்தம் எழுத்ததிகார உரை அமைப்பு பாயிர உரை, அதிகார உரை, இயல் உரை, நூற்பா உரை என நான்கு பகுதிகளை உடையது. ஏனைய சொல், பொருளதிகார உரை அமைப்பு அதிகார உரை. இயல் உரை, நூற்பா உரை என மூன்று பகுதிகளை உடையது. பாயிர உரை பனம்பாரனாரின் சிறப்புப் பாயிரத்திற்கு எழுதும் உரையினைப் பொதுப்பாயிரம், சிறப்புப்பாயிரம் என இரு பிரிவாகப் பிரித்துக் கொண்டு நச்சினார்க்கினியர் பாயிர உரை எழுதுகின்றார். இப்பாயிர உரையில், வினா விடை, உவமை, பிறர் உரை ஏற்பும் மறுப்பும், வகைமுறை வைப்பு, கூறுதும் என்றுரைத்துப் பொருள் இருக்கும் இடத்தைக் காட்டுதல், மேற்கோள் காட்டல், மாட்டு, இலக்கணம், பதப்பொருள் கூறல் முதலான உரைநெறிகளை மேற்கொண்டிருக்கிறார். 'எந்நூல் உரைப்பினும் அந்நூற்குப் பாயிரம் உரைத்து உரைக்க என்பது இலக்கணம், என்னை? ஆயிர முகத்தான் அகன்ற தாயினும் பாயிர மில்லது பனுவ லன்றே என்றாராகலின், பாயிரம் என்பது புறவுரையை' என்று இளம்பூரணர் உரையினை ஏற்று எழுதுகின்றார். இளம்பூரணரும் இறையனார் அகப்பொருள் உரையைத் தழுவி எழுதினார் என்பதை அறிதல் வேண்டும். இங்ஙனம் பாயிர உரையில் இளம்பூரணர் மேற்கொண்ட 34 மேற்கோள்களுள் 28 மேற்கோள்களை எடுத்தாண்டிருக்கிறார். ஆறு நூற்பாக்களை விடுத்திருப்பினும், இளம்பூரணர் மேற்கொள்ளாத பதினேழு நூற்பாக்களை மேற்கொண்டிருக்கிறார். இவற்றுள் பதினான்கு நூற்பாக்களைமுழுமையாகவும்,ஏனைaமூன்றற்Fநூற்பாவி‹சொற்றொடuமட்டு«குறிப்பிட்டு«தந்திருக்கிறார். நச்சினார்க்கினியர் பொதுப்பாயிரத்தில் 26-உம், சிறப்புப் பாயிரத்தில் 19-உம் ஆக 45 மேற்கோள்களைக் கையாண்டிருக்கிறார். சிறப்புப் பாயிரத்தில் கூறப்படும் 19 மேற்கோள்களுள் 8 தொல்காப்பிய நூற்பாக்கள் ஆகும். அவையாவன : மரபு: 92; நூன்: 17,14,16,23; செய்: 78,106,215 ஆகும். இவற்றுள், உட்பெறு புள்ளி உருவா கும்மே' (நூன் 14) என்னும் நூற்பாவினை இருமுறை பயன்படுத்துகிறார். ஆயின், இளம்பூரணர். 'நேரின மணியை'என¤தொடங்கு«ஓத்து¥பற்றியதாdசெய்யுளியš(நூ:171)நூற்பhஒன்wமட்டு«எடுத்து¡கூறுவர். மாணாக்கன் பாடங் கொள்ளும் முறை பற்றிக் கொள்வோன் முறைமை கூறுங்காலை' என இளம்பூரணர் தொடங்கும் நூற்பாவை நச்சினார்க்கினியர், 'கோடன் மரபு கொள்ளுங் காலை' எனத் தொடங்கியும், 'அகலா னாகி அன்பொடு புணர்ந் தாங்கு' என்னும் அடியினை, 'அகலா னாகி அன்பொடு கெழீஇ' எனவும், 'சொல்லெனச் சொல்லிப் போவெனப் போகி' என்னும் அடியினை, 'சொல்லெனச் சொல்லிச் சொல்லெனச் சென்று' எனவும் மாற்றியுரைத்தும், குணத்தொடு பழகிக் குறிப்பின் வழிநின் பருகுவ னன்ன ஆர்வத்த னாகிச் சித்திரப் பாவையின் அத்தக அடங்கி என்னும் இம் மூன்று அடிகளைச் சேர்த்தும், 'நெஞ்சுகள னான செவிவா யாக' என்பதைச் 'செவிவா யாக நெஞ்சுகள னாக' என மொழி மாற்றியும் இந்நூற்பாவை அமைத்திருக்கிறார். இம்மேற்கோள்கள் யாவும் பாயிரம், பொதுப்பாயிரம், கற்கப்படுவோர், கற்கப்படாதோர், கற்பிக்கப்படுவோர், கற்பிக்கப்படாதோர், கோடல் மரபு, மாணாக்கன் முற்ற உணர்தல், சிறப்புப்பாயிரம், சிறப்புப்பாயிரத்து இலக்கணம், சிறப்புப் பாயிரத்திற்குக் கூறப்படும் பதப்பொருள், சிறப்புப் பாயிரத்திற்கான விளக்கம், உத்தி, சூத்திரம், பொழிப்பு, அகலம், நுட்பம், எச்சம், படைத்தற்குரிய திறம் எனும் கருத்துகளை விளக்குவனவாக அமைந்துள்ளன. பாயிரத்தின் இன்றியமை யாமையினைஇருவரு«தத்த«உவkநலத்தாšஎடுத்து¡கூறுகின்wவித«கற்பார்க்Fஇன்ப«தரக்கூடியது. கற்றுவல்ல கணவற்குக் கற்புடையாள் போல திருவமைந்த மாநகரத்திற்கு உருவமைந்த வாயின்மாடம் போல எனவும், பாயிரம் கேளாது நூல் கேட்போர், குறிச்சி புக்க மான் போல இடர்ப்படுவர் எனவும் பாயிரத்தின் சிறப்பினை இளம்பூரணர் எடுத்து இயம்புகிறார். நச்சினார்க்கினியர் பாயிரத்தின் சிறப்பினை, கொழுச் சென்றவழித் துன்னூசி இனிது செல்லுமாறு போல தலையமைந்த யானைக்கு வினையமைந்த பாகன் போல அளப்பரிய ஆகாயத்திற்கு விளக்கமாகிய திங்களும் ஞாயிறும் போல எனவும், பாயிரம் கேளாற்கு, குன்று முட்டிய குரீஇப் போல குறிச்சி புக்க மான் போல மாணாக்கன் இடர்ப்படும் என்க என்று இளம்பூரணரையும் விஞ்சுமளவிற்குஉவமை கூறிப் படிப்போரை இன்பத்தில் ஆழ்த்துகின்றார். இருவர்தம் உவமைச்சிறப்பிற்குப் பாயிரவுரை உவமைகளே போதுமானவை. இருவரது பாயிரவுரையால் பல அரிய வரலாற்று உண்மைகள் அறியமுடிகின்றன, பாயிரம் பாடிய பனம்பாரனார் தொல்காப்பியரொடு ஒருங்கு கற்ற ஒரு சாலை மாணாக்கர் எனவும், வடக்கும் கிழக்கும் மங்கலத் திசையாகலின் வடக்கு முற் கூறப்பட்டது எனவும், கடல்கொள்வதன் முன்பு பிறநாடும் உண்மையினாலும், (49நாடுகள்) தெற்கும் மேற்கும் நோக்கிக் காரியங்கள் செய்வதனாலும் தெற்குப் பிற் கூறினார் எனவும், கிழக்கும் மேற்கும் பிறநாடு இன்மையான் எல்லை கூறப்படாவாயின எனவுமாகப் பல கருத்துகளை இவ்வுரையால் அறியலாம். முந்துநூல் என்பது அகத்தியமும் மாபுராணமும் பூதபுராணமும் இசை நுணுக்கமும் ஆகும் என்று நச்சினார்க்கினியர் கூறுகிறார். ஆயின், இளம்பூரணர் செந்தமிழ் நிலத்து முதல் நூல் என்று பொதுப்படக் கூறுகின்றார். தொல்காப்பியத்திற்கு முந்து நூல் அகத்தியம் என்று ஒன்றனைக் கூறுவதும், நச்சினார்க்கினியர் மேற்கூறியது போன்று பல என்று கூறுவதுமாக இருவேறு பட்ட கருத்துகள் நிலவுகின்றன. தொல்காப்பியத்திற்கு முந்து நூல் அகத்தியம் எனின், அதனைப் பனம்பாரனார் சிறப்புப் பாயிரத்தில் குறிப்பிடாது முந்துநூல்' எனப் பொதுப்படக் கூறியது ஏன் எனும் வினா எழுகிறது. 'தொல்காப்பியத்துள், 'என்ப', 'என்மனார் புலவர்', 'மொழிப' என்றெல்லாம் வருதலின் அதற்கு முந்திய நூல் பல என்று கோடலே பொருத்தம் உடையது எனின், தாம் கொண்ட கருத்துக்கள் தம்மொடு ஒத்த காலத்தவர்க்கும் கருத்தாதல் பற்றியே அங்ஙனம் உரைத்தல்லது பிறிதில்லை என்க' என்று சிவஞான முனிவர் வினாவி விளக்கம் தருவர். அகத்தியமே முதல் நூலாகும் என்பதை, அகத்தியமே முற்காலத்து முதனூல்என்பதூஉ«அதன்வழித்தாகிaதொல்காப்பிய«அத‹வழிநூšஎன்பதூஉ«பெற்றா«(மரபு:94) என்று பேராசிரியர் பல்காப்பியம், பன்னிருபடலம், புறப்பொருள் வெண்பாமாலை ஆகிய நூல்களைக் கொண்டு வலியுறுத்துவர். இக்கருத்தே இன்றுகாறும் மரபாக விளங்குகிறது. இப்பாயிர உரையில் நச்சினார்க்கினியர், எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்றனுக்கும் பொருள் விளக்கம் தருகின்றார். 'அறம்பொரு ளின்பம் வீடடைதல் நூற்பயனே' என்பதனால் வீடுபேற்றினைப் பற்றியும் ஆராய்கிறார். 'அகத்தியனாரும் தொல்காப்பியனாரும் வள்ளுவனாரும் வீடுபேற்றிற்கான நிமித்தம்கூறுதலன்றி,அதற்காdஇலக்கணத்தை¡கூறா®என்Wஉணர்க'என்Wதெளிவுபடுத்துவர்,இத்துணையு«சிறப்பு¥பாயிரத்திšகூறப்படுகின்றன. 18ஆம் நூற்றாண்டில் சிவஞான முனிவர் 'பாயிர விருத்தி' என்னும் பெயரில் ஆராய்ச்சிப் பேருரை வழங்கியுள்ளார். இந்நூல் கா. ர. கோவிந்தராச முதலியார் (1874 - 1949) எழுதிய விளக்கத்துடன் கழகத்தின் வாயிலாக 1946 ஆம் ஆண்டு வெளிவந்தது. பின்னர்த் திருவாவடுதுறை ஆதீனம், ஆதீன வித்துவான் தண்டபாணி தேசிகர் எழுதிய விளக்கக் குறிப்பு களுடன் வெளியிட்டது. அடுத்துச் சோழவந்தான் அரசஞ்சண்முகனார் பாயிர விருத்தியுரை எழுதினார். இதனைச் சண்முக விருத்தி' எனவும் வழங்குவர். இந்நூல் 1905ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது (வித்தியா விநோதினி முத்திரசாலை, தஞ்சாவூர்), கா. நமச்சிவாய முதலியார் 'தொல்காப்பியப் பாயிரங்கள்' என்னும் ஓர் உரைத்தொகுப்பு நூலை 1921ஆம் ஆண்டில் வெளியிட்டார். ஆ. சிவலிங்கனாரின் சிறப்புப்பாயிரம் உரைவளம் 1980ஆம் ஆண்டு உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன வெளியீடாக வந்தது. எழுத்ததிகார உரை அமைப்பு நச்சினார்க்கினியர், பாயிரவுரையை அடுத்து அதிகார உரையினை எழுதுகிறார். இளம்பூரணரும் (எழுத்து, பொருள் மட்டும்), பழையவுரைகாரரும் (சொல்) மட்டுமே அதிகார உரையினைத்தனியாக¡கொடுத்திருக்கின்றனர். ஆயின், பிற உரையாசிரியர் எவரும் தனியாக அதிகார உரையினைத் தரவில்லை என்பது அறிதற்குரியது. இதனை நச்சினார்க் கினியரும் பிறரும் முதல் நூற்பாவை அடுத்துத் தந்திருக்கின்றனர். அதிகார உரையினை அடுத்து இயல் உரையும், அதனையடுத்து, நூற்பா உரையும் அமைந்திருக்கின்றன. நச்சினார்க்கினியர் அதிகார உரையினை, இவ்வதிகாரம் என்ன பெயர்த்தோ எனின் என்று வினா எழுப்பி, அதிகாரத்தினுள் கூறப்படும் கருத்துகளைத் தொகுத்துரைக்கின்றார். பொருளதிகாரத்தில் வினா எழுப்பாமல் விளக்கம் தருகின்றார். எழுத்ததிகார நூற்பா உரை அமைப்பு கருத்துரை, பொருளுரை, எடுத்துக்காட்டு, விளக்கம் என்று அமைந்திருக் கிறது. இவ்வுரை அமைப்பு எல்லா நூற்பாக்களிலும்பின்பற்ற¥படவில்லை. சில இடங்களில்கருத்துuஅல்லJவிளக்கவுuஇன்றி¡குறைந்து«இட«பெறுவJஉண்டு. சில நூற்பாக்களில் கருத்துரை. இதன்பொருள், விளக்கம், எடுத்துக்காட்டு (மொழி: 3) என விளக்கவுரை முன்னும் எடுத்துக்காட்டு பின்னுமாக இடம் மாறி உரையமைப்பு அமைவது உண்டு நூன் மரபு 33ஆம் நூற்பா உரையமைப்பு கருத்துரை, இதன்பொருள், விளக்கம், எடுத்துக்காட்டு, விளக்கம் என்று உள்ளது. இதில் விளக்கவுரை இடம் மாறியதோடு இருமுறை விளக்கவுரை வருவதைக் காணமுடிகின்றது. விளக்கவுரை இடம் மாறியதைப் போன்று கருத்துரையும் இடம் மாறியிருக்கின்றது. மொழி மரபு 31ஆம் நூற்பாவில் இதன் பொருள். இதுவும் அது, எடுத்துக்காட்டு, விளக்கம் என்று உரையமைப்பு உள்ளது. இதில், இதன் பொருள் என்று பொருளுரைத் தொடக்கமாகவும், இதுவும் அது எனக் கருத்துரை அதனையடுத்துமாக அமைந்திருக்கின்றன. பொதுவாகக் கருத்துரையே தொடக்கமாக அமைவது உண்டு. இருப்பினும், சேனாவரையர் உரையில் இதன் பொருள் என்று பொருளுரையே தொடக்கமாக அமைந்திருப்பது ஈண்டு நினைவுகூரத்தக்கது. காரணம், அவர் (சில இடங்களைத் தவிர) கருத்துரையே கூறுவதில்லை . பழையவுரைகாரரும் 'என்பது' எனக் குறிப்பிட்டுப் பொருளுரையினையே தொடக்கமாகக் கூறுவர். நச்சினார்க்கினியர் உரையிலும் சில இடங்களில் கருத்துரையின்றி இதன் பொருள், எடுத்துக்காட்டு, விளக்கம் (நூன்: 4,6) என்று உள்ளது. விளக்கவுரையின்றி இதுவும் அது, இதன் பொருள், எடுத்துக்காட்டு (நூன்: 25,26; கு. பு: 34-39;60-63) என்ற அளவிலும் உரை அமைவது உண்டு. 'இது' அல்லது'இஃது'என¤தொடங்»உணர்த்துதšநுதலிற்W(நூன்:1-3),உணர்த்துகின்றJ(நூன்:23),கூறுகின்றJ(நூன்:7-12;தொகை:16,17:பு. ம: 48; கு: பு: 64.65), கொள்கின்றது (நூன்: 33), என்கின்றது (மொழி: 2), விலக்குகின்றது (மொழி:38,39),ஐய«அகற்றியJ(நூன்:5)என்Wமுடித்து¡கருத்துரையினை¡கூறுகின்றார். எழுத்ததிகாரத்தில் பெரும்பான்மையான இடங்களில் 'கூறுகின்றது' என்னும் brhšiyக்கொ©டுகருத்துரையிiனமுடிக்கின்றா®. இதில், அளபு கூறுகின்றது, வேறோர் குறியீடு கூறுகின்றது, ஓர் FறியீடுTறுகின்றது(நூன்:7-9)முoபுகூWகின்றது,முoபுtறுகூWகின்றது,புzருமாறுகூWகின்றதுஎ‹றுநூ‰பாவின்நு£பத்தைக்கு¿யீடுfண்டுஉzர்த்துகின்றார்.சிy நூற்பாக்களில் எய்தாதது எய்துவித்தது, எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுகின்றது என்பது போன்ற உரைக்குறியீடுகளும் கருத்துரையாக வந்து அமைவது உண்டு. தொடர்புடைய நூற்பாவாக இருப்பின், 'இதுவும் அது' என்னும் குறியீடும், சில இடங்களில் உத்தியும் (எதிரது போற்றல் - மொழி: 24) கருத்துரையாக அமைகிறது. அடுத்து, 'இதன் பொருள்' என்று பதப்பொருள் தரப்படுகிறது. பொருளுரையின் இறுதி 'என்றவாறு' என்று முடிகிறது. எடுத்துக்காட்டு (வழக்கு, செய்யுள்), வினா விடை, உவமை,உத்âஆகியவற்றாšவிளக்கவுuஅமைகிறது. சில இடங்களில் கருத்துரையிலும் வினா விடை விளக்கம் கூறுவது குறிப்பிடத்தக்கது (நூன். 15; மொழி: 17). இளம்பூரணர் எழுத்ததிகார நூற்பா உரை அமைப்புப் போன்றே நச்சினார்க்கினியர் உரை அமைப்பு அமைந்திருக் கின்றது. கருத்துரை, விளக்கவுரை. எடுத்துக்காட்டு இன்றி இளம்பூரணர் உரை அமைப்பு அமைவது உண்டு . .. - சொல்லதிகார உரை அமைப்பு இளம்பூரணர், சேனாவரையர் ஆகியோரது சொல்லதிகார உரைபோன்WஇவரJஅதிகாuஉuகிளவியாக்கத்தி‹முதšநூற்பாவிšஅதுவு«நூற்பாtஅடுத்Jஇட«பெறுகின்றது. அதிகார முன்னுரை என்று தனியாகக் கூறப்படவில்லை. 'இவ்வதிகாரம் என்ன பெயர்த்தோ எனின்' என வினவி விளக்கம் தரப்படுகிறது. அதிகார உரையில் அதிகாரத்தினுள் கூறப்படும் ஒன்பது இயல்களின் கருத்துகள் தொகுத்துரைக்கப்படுகின்றன. இயல் உரை அதனதன் முதல் நூற்பாவில், அதுவும் நூற்பாவை அடுத்து அமைகின்றது. முதல் இயல் உரை மட்டும் அதிகார உரையினை அடுத்து உள்ளது, சொல்லதிகார உரை அமைப்பும் எழுத்ததிகார உரை அமைப்பைப் போன்று கருத்துரை, பொருளுரை, எடுத்துக் காட்டு, விளக்கம் என்று இருக்கிறது. இவ்வுரை அமைப்பே எல்லா இடங்களிலும் உள்ளதா எனில், இல்லை. கருத்துரை, இதன் பொருள், எடுத்துக்காட்டு என்ற நிலையிலும் (கிளவி: 39; விளி: 13-19; 21,24; இடை: 17-20; உரி: 10-19;29-31; எச்: 39), கருத்துரை. இதன் பொருள் மட்டும் என்ற நிலையிலும் (கிளவி: 4; விளி: 20; வினை: 2; உரி: 2) சொல்லதிகார உரை அமைப்பு குறைந்தும் காணப்படுகின்றது. 'இதுவும் அது' என்னும் உரைக்குறியீடு எல்லா இயல்களிலும் காணப்படினும், உரியியலில் அதிக அளவில் உள்ளது என்பது, அறிதற்குரியது. விளக்கவுரையின்றி, 'இதுவும் அது' என்னும் கருத்துரை, 'இதன் பொருள் என்னும் பொருளுரை, எடுத்துக்காட்டு என்ற நிலையில் அமைந்த உரை அமைப்பு உரியியலில் பெரும்பான்மையான அளவில் உள்ளது (உரி: 7-9;24,25;3339;43,45;46-49; 55-59;65-74;78,79;81-84:88-90), எழுத்ததிகாரத்தில் கண்டதைப் போன்று சொல்லதிகாரம் இடையியல் 21ஆம் நூற்பா உரை அமைப்பு இதன் பொருள், இதுவும் அது. எடுத்துக்காட்டு என்று அமைந்திருக்கிறது. இதில் 'இதுவும் அது' என்னும் கருத்துரை முதலாவதாக அமையாது இடம் மாறி இரண்டாவதாகவும், இதன் பொருள் என்னும் பொருளுரை முதலாவதாகவும் அமைந்திருப்பதைக் காணலாம். இஃது ஏடெழுதினோரால் ஏற்பட்ட பிழையாக இருக்கலாம். கருத்துரை, 'இது' அல்லது 'இஃது' எனத் தொடங்கிப் பகுக்கின்றது (கிளவி: 2.3), காக்கின்றது (கிளவி: 11,32,38), அமைக்கின்றது (கிளவி: 27; இடை. 40), ஆராய்கின்றது (வே.ம: 6) முடிக்கின்றது (விளி: 7,12), கூறுகின்றது (பெய: 12-18; வினை : 4-7;12-15:33-38; இடை 47,48; உரி: 1,98; எச்: 1-5;15-23;33-45;62), என்கின்ற து (பெய: 19.41; வினை : 2,11,39; உரி: 97; இடை : 44-46; எச்: 59-61;66), உணர்த்துகின்றது (பெய: 4,10.30; வினை : 1,8,9,16,32), விரிக்கின்றது (பெய: 21) என்று முடிகிறது. இவற்றுள் 'காக்கின்றது', 'கூறுகின்றது' என்னும் சொற்கள் அதிக அளவில் உள்ளன. முன் நூற்பாவிற்குத் தொடர்புடையதாய் இருப்பின், 'இதுவும் அது' எனவும், சில இடங்களில் 'இதுவும்' - எனவும் கூறப்படுகிறது. சொல்லதிகாரத்திலும் உரைக்குறியீடுகள் கருத்துரையாக அமைகின்றன. இளம்பூரணரது கருத்துரை, "இச்சூத்திரம் என்னுதலிற்றோ எனின்' ................. உணர்த்துதல் நுதலிற்று என்று பெரும்பான்மையான இடங்களில் இடம் பெற்றிருக்கிறது. ஆயின், நச்சினார்க்கினியர் அங்ஙனம் சொல்லதிகாரத்தில் கூறுவது இல்லை. பொருளுரை, இதன் பொருள் என்று பதவுரையாக அமைந்திருக்கிறது. ஆயின், இளம்பூரணர் சொல்லதிகாரப் பொருளுரை உரைஎன்றுகுறிப்பிட்டுப்பொழிப்புரையாகஅமைந்திருக்கிறது.தொல்காப்பிய உரையாசிரியர்கள் அனைவரும் பொருளுரையினை 'இதன் பொருள்' என்று குறிப்பிட்டு உரைஎழுது«நிலையில்,இளம்பூரண®மட்டு«பொருளுரையிdஉரை'என்Wகுறிப்பிடுகின்றார். இவரே, எழுத்து, பொருள் அதிகாரங்களில் பொருளுரையினை இதன் பொருள்' என்றே குறிப்பிட்டு எழுதுகிறார் என்பதும் நினைவுகூரத்தக்கது. இளம்பூரணர் எடுத்துக்காட்டினை 'வரலாறு' என்றும், 'வருமாறு' என்றும் குறிப்பிட்டு உரை எழுதுவது குறிப்பிடத்தக்கது. இளம்பூரணரை அடுத்துப் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் (பொருளதிகார உரை, வருமாறு மட்டும்) தத்தம் உரைகளில் இங்ஙனம் குறிப்பிட்டு உரை எழுதுகின்றனர், பொருளுரை அடுத்து விளக்கவுரை . வழக்கு, brய்யுள்,தொல்காப்பியநூற்பா,உவமை,உத்திஆகியவற்றுடன்இவ்வுரைஅமைகிறது. நச்சினார்க்கினியர் குடிமை ஆண்மை இளமை மூப்பே (கிளவி:57)vனவரும்üற்பாவிற்கு34nமற்கோள்களைvடுத்தாண்டிருக்கிறார்vன்பதுFறிப்பிடத்தக்கது.bghUsâfhu உரை அமைப்பு பொருளதிகாரத்தின் முதல் நூற்பாவுரை நூற்பா, அதிகார உரை, இயல் உரை, நூற்பா உரை என அமைந்திருக்கிறது. இளம்பூரணரைப் போன்று 'இவ்வதிகாரம் என்ன பெயர்த்தோ எனின்' என்று கூறவில்லை எனினும், எழுத்து, சொல் அதிகாரங்களில் இங்ஙனம் கூறுவது உண்டு. கருத்துரை, பொருளுரை, விளக்கம், உதாரணம், பொருத்திக் காட்டுதல் எனும் முறையில் பொருளதிகார உரை அமைப்புச் செல்லுகிறது. ஏனைய அதிகாரங்களில் உரை அமைப்பு மாறுபடுவதைப் போன்று பொருளதிகார உரை அமைப்பும் மாறுபடுகின்றது. கருத்துரை, இதன் பொருள், விளக்கம் (அகத்: 1,38; புறத்: 14,19; களவு: 25,28;33-35; 37,38) என்னும் நிலையிலும், சில இடங்களில் கருத்துரை, இதன் பொருள் என்னும் நிலையிலும் (புறத்: 11) உரை அமைப்பு அமைவது உண்டு. கருத்துரை, இது', 'இஃது', 'இதுவும்' எனத் தொடங்கிக் கூறுகின்றது, என்கின்றது, அமைக்கின்றது, உணர்த்துதல் நுதலிற்று என முடிகின்றது. நூற்பா நுவலும் பொருளைச் சுருக்கமாக எடுத்துரைப்பது கருத்துரையின் பயன் ஆகும். சில நூற்பாக்களில் நுவன்றதையும் நுவலுவதையும் தொகுத்துரைப்பது உண்டு. உரைக்குறியீடுகளும் கருத்துரையாக அமைவது உண்டு. பொருளதிகார உரை அமைப்பு ஏனைய அதிகார உரை அமைப்பினின்றும் வேறுபட்டு நிற்கின்றது. நூற்பா, அளவில் சிறியதாய் இருப்பின், கருத்துரை அடுத்து ஒரே இடத்தில் பொருளுரை அமைகின்றது; அளவில் பெரிதாய் இருப்பின் அல்லது அந்நூற்பா வகைப்பாடு உடையதாய் இருப்பின், வகைப்பாடு ஒவ்வொன்றையும் தனித்தனியாக எடுத்துரைத்துப் பொருளும் அதற்கு உதாரணமும் தந்து அதனைப் பொருத்தியும் காட்டி, உரை செல்கிறது. 'இயங்குபடை அரவம் - ........... , 'எரிபரந்து எடுத்தல்' - ....... என வரும் (புறம்: 8) வஞ்சித்திணைக்குரிய துறை பதின்மூன்று வகைப்பாட்டினையும் தனித்தனியாக எடுத்துரைத்துப் பொருளுரைப்பதைக் காணலாம். இஃது இளம்பூரணர், பேராசிரியர் உரைமுறை ஆகும். நச்சினார்க்கினியர் அங்ஙனம் பொருளுரைக்கும் போது, நாற்றமாவது, தோற்றமாவது, ஒழுக்கமாவது, உண்டியாவது (களவு: 22) என்று ஆவது என்னும் இணைப்புச் சொல்லைக் கொண்டு பொருள் உரைக்கிறார், கருத்துரை, பொருளுரை, எடுத்துக்காட்டு, விளக்கம் எனும் பொதுவானதொரு உரையமைப்பினின்று ஒன்றிரண்டு குறைந்து காணப்படுவதற்கு, நூற்பா நுவலும் பொருள், நூற்பா அளவு ஆகியவற்றைக் காரணமாகக் கூறலாம். நச்சினார்க்கினியர் மேற்கொண்ட முப்பத்தோர் உரைநெறிகளுள் முதலிடம் பெறுவனவற்றைப் பொதுநெறி, சிறப்பு நெறியினுள்ளும் ஏனையவை ஏனைய பகுதிகளிலும் கூறப்படுகின்றன. இளம்பூரணர் எழுத்ததிகாரப் பொருளுரை பதவுரையாகவும், சொல், பொழிப்புரையாகவும், பொருள். பதவுரை, பொழிப்புரையாகவும் என மூன்று நிலைகளில் அமைந்துள்ளது. சேனாவரையர் உரை பொழிப்புரையாகவும், பேராசிரியர் உரை பதவுரை, பொழிப்புரையாகவும்; தெய்வச். கல், பழையவுரைகாரர் ஆகியோரது உரை பொழிப்புரையாகவும் உள்ளது. நச்சினார்க்கினியர் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று அதிகாரங்களின் உரை பதவுரையாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதிகார விளக்கம் - எழுத்து 'எழுத்தென்றது யாதனை யெனின், கட்புலனாகா உருவும் (ஒலி வடிவம்), கட்புலனாகிய வடிவும் (வரிவடிவம்) உடைத்தாக வேறு வேறு வகுத்துக் கொண்டு தன்னையே உணர்த்தியும் சொற்கு இயைந்தும் நிற்கும் ஓசையையாம்' என்று நச்சினார்க்கினியர் தமது சிறப்புப் பாயிரவுரையில் எழுத்திற்குப் பொருள் விளக்கம் தருகின்றார். இஃது ஒலி வடிவம். வரி வடிவம் எனும் இருவகை வடிவங்களை உடையது எனவும், தன்னையும் உணர்த்திக் கொண்டு சொல்லுக்கும் துணையாய் நிற்பது எனவும் கூறியிருப்பது அழகானதொரு விளக்கமாகும். இளம்பூரணரும் தராததொரு விளக்கம் என்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. 'இவ்வதிகாரம் என்ன பெயர்த்தோ எனின் எழுத்திலக்கணம் உணர்த்தினமை காரணத்தான் எழுத்ததிகாரம் என்னும் பெயர்த்து' எனவும், "எழுத்து உணர்த்துமிடத்து எனைத்து வகையான் உணர்த்தினாரோ வெனின் எட்டு வகையானும் எட்டிறந்த பலவகையானும் உணர்த்தினார் என்க' எனவும், 'இக் கூறிய இலக்கணங்கள் கருவியும் செய்கையும் என இருவகைய' எனவும் எழுத்ததிகாரத்தினுள் கூறப்படும் கருத்துகள் தொகுத்துக் கூறப்படுகின்றன, எட்டு வகை எழுத்து இனைத்து என்றலும், இன்ன பெயரின என்றலும், இன்ன முறையின என்றலும், இன்ன அளவின என்றலும், இன்ன பிறப்பின என்றலும், இன்ன புணர்ச்சியின என்றலும், இன்ன வடிவின என்றலும், இன்ன தன்னமையின என்றலுமாம். இவற்றுள் தன்மையும் வடிவும் நமக்கு உணர்த்தலாகாமையின் ஆசிரியர் ஈண்டு உரைத்திலர். ஏனைய இதனுள் பெறுதும் என்றுரைத்து இவையாறும் எங்ஙனம் பெறப்படுகின்றன என்பதை அவற்றிற்குரிய நூற்பாவைக் காட்டி விளக்கியிருப்பதுசிறப்பிற்குரியJஆகும். . எட்டிறந்த பல்வகை எழுத்துக்களது குறைவும், கூட்டமும், பிரிவும், மயக்கமும், மொழியாக்கமும், நிலையும், இனமும், ஒன்று பலவாதலும், திரிந்ததன்திரிபு அது என்றலும், பிறிதென்றலும், அதுவும் பிறிதும் என்றலும், நிலையிற்று என்றலும், நிலையாது என்றலும், நிலையிற்றும் நிலையாதும் என்றலும் இன்னோரன்ன பலவுமாம் என்று கூறி ஒவ்வொன்றற்கும் எழுத்ததிகார நூற்பாக்களை எடுத்துரைத்துப் பெற்றாம்' என்று குறிப்பிட்டு விளக்கியுள்ள திறம் போற்றுதற்கு உரியதாகும், மேற்கூறிய இலக்கணங்களைக் கருவி, செய்கை என இருவகைப்படுத்தி அவற்றுள் கருவி என்பது, புறப்புறக்கருவி, புறக்கருவி, அகப்புறக்கருவி, அகக்கருவி என நால்வகைப்படும் எனவும், செய்கை என்பது புறப்புறச்செய்கை, புறச்செய்கை, அகப்புறச்செய்கை, அகச்செய்கை என நால்வகைப்படும் எனவும் கூறியதோடு அவற்றை இலக்கணத்தோடு பொருத்தியும் காட்டுகிறார். சொல்லதிகார விளக்கம் 'இவ்வதிகாரம் என்ன பெயர்த்தோ எனின்' என்று வினவி, 'சொல் உணர்த்துகின்றார் ஆதலின், சொல்லதிகாரம் என்னும் பெயர்த்து. அது, 'சொல்லை உணர்த்திய முறைமை என விரியும்' எனச் சொல்லதிகாரத்தின் பெயர்க் காரணத்தைக் கூறுகின்றார். சொல் என்றது எழுத்தினான் ஆக்கப்பட்டு இருதிணைப் பொருட்டன்மையும் ஒருவன் உணர்தற்குக் கருவியாம் ஓசையை எனவும், 'கருவியாவது, அப்பொருட்டன்மையை ஒருவன் உணர்தற்குஅவ்வோrகருவியாŒநிற்றல். இதனை ஐம்பொறிகள் ஒருவன் பொருளை உணர்தற்குக் கருவியாய் நின்றாற் போலக் கருவியாய் நிற்குமென்றுணர்க' எனவும், 'இனி, ஓசையைச் சொல் என்றீரேல், கடலொலி சங்கொலி விண்ணொலி முதலியனவும் சொல்லாகாவோ? எனின், சொல்லு, இது முன்பு யான் உணர்ந்த எழுத்து, என்றே பின்பு கூறியக்காலும் உணர நிற்றலின் கேடின்றி நிலைபேறுடைய தாயிற்று. இவை அங்ஙனம் உணர்தல் ஆற்றாமையானும், எழுத்தினான் ஆக்கப்படாமையானும் நிலைபேறிலவாயின; ஆதலின் சொல்) எனப்புடா' (கிளவி: 1) எனவும் சொல்லுக்கு விளக்கம் தருகின்றார். மாணாக்கர்க்கு எழும் ஐயப்பாட்டினை இவரே எழுப்பி விளக்கம் தந்திருப்பது சிறப்புடைத்து. மேலும், இசைதிரிந் திசைப்பினும் (பொருளியல்: 1) என்பதில் 'இசை' என்பதற்கு சொல்லாவது எழுத்தினான் ஆக்கப்பட்டுப் பொருளறிவுறுக்கும் ஓசையாதலின் அதனை இசையென்றார் என்று மேற் சொல்லதிகாரத்துள் கூறப்பட்ட கருத்தினை மீண்டும் ஈண்டுக் கூறி வலியுறுத்துகின்றார். 'சொல்' vன்பதற்கு'இசை'vன்றுnவறொருbபயரினைüலாசிரியர்jந்துள்ளமையைeச்சினார்க்கினியர்vடுத்துரைக்கின்றார்.bghUsâfhu விளக்கம் 'நிறுத்த முறையானே பொருளினது இலக்கணம் உணர்த் தினமையின் இது பொருளதிகாரம் என்னும் பெயர்த்தாயிற்று. இது நாண்மீனின் bgaர்நாளிற்Fப்பெயராயினhற்போல்வதேhர்ஆகுபெய®'எ‹றுஉவiமநலத்தேhடுபெய®க்காரணத்jக்கூறுகின்றா®. 'பொருளாவன :- அறம் பொருள் இன்பமும், அவற்றதுநிலையின்மையும். அவற்றின் நீங்கிய வீடுபேறுமாம். பொருளெனப் bபாதுப்படக்Tறவே.mt‰¿‹ gகுதியாகியKதல்fருcரியும்,fட்சிப்bபாருளும்,fருத்துப்பொருளும்,mவற்றின்gகுதியாகியIம்பெரும்óதமும்,mவற்றின்gகுதியாகியïயங்குâணையும்Ãலைத்திணையும்,ãறவும்bபாருளாம்'vனவும்,'mf¤âiz¡f© இன்பமும், புறத்திணைக்கண் ஒழிந்த மூன்று பொருளும் உணர்த்தும். இது வழக்கு நூலாதலிற் பெரும்பான்மையும் நால்வகை வருணத்தார்க்கும் உரிய இல்லறம் உணர்த்திப் பின் துறவறமும் சிறுபான்மை கூறுப, அப்பொருள்கள் இவ்வதிகாரத்துட் காண்க' எனவும், இப்பொருளை எட்டு வகையான் ஆராய்ந்தார் என்ப; அவை அகத்திணை, புறத்திணை என இரண்டு திணை வகுத்து, அதன்கண் கைக்கிளை முதல் பெருந்திணை ஏழும் வெட்சி முதல் பாடாண்திணை இறுவாய் ஏழுமாகப் பதினான்கு பால் வகுத்து, ஆசிரியம், வஞ்சி, வெண்பா, கலி, பரிபாடல், மருட்பா என அறுவகைச் செய்யுள் வகுத்து. முல்லை ,குறிஞ்சி,மருதம்,நெய்தலெdநால்வfநில‹இயற்றிச்,சிறுபொழுதாறு«பெரும்பொழுதாறுமாக¥பன்னிரண்Lகால«வகுத்து,அகத்திzவழுவேழும்,புறத்திzவழுவேழுமென¥பதினான்Fவழுவமைத்து,நாடfவழக்கு«உலகியšவழக்குமெdஇருவfவழக்Fவகுத்து,வழக்கிடமு«செய்யுளிடமுமெdஇரண்Lஇடத்தா‹ஆராய்ந்தாராதலின். எட்டிறந்த பல்வகையான் ஆராய்ந்தார் என்பார் Kதல்fருcரியும்,âiணதொறுமßஇயgயரும்,திiணநிலைப்gயரும்,இUவகைக்fகோளும்,ப‹னிருவகைக்கூ‰றும்,ப¤துவகைக்fட்போரும்,எ£டுவiகkய்ப்பாடும்,நhல்வகைஉtமமும்,ஐtகைமuபும்எ‹பர்'எdவும்அâகாரத்தினுள்கூwப்படும்கUத்துஇ‹னஎ‹பதைஒUமு‹னுரைகூWவது.ghy¡ கூறுகின்றார். இயல் விளக்கம் இவரும் ஏனைய உரையாசிரியர்களைப் போன்று இயலை ஓத்து என்று குறிப்பிடுகின்றார். ஒவ்வோர் இயலுக்கும் இயல் விளக்கம் தந்திருக்கிறார். பெயர்க்காரணம், சொல் விளக்கம், இயைபு, வைப்பு, நுவலும் கருத்து ஆகியன இயல் விளக்கமாக அமைகின்றன. அதிகாரத்தின் முதல் இயல் விளக்கமாவது நூற்பா, அதிகார விளக்கம் அடுத்து இடம் பெறுகின்றது. ஏனைய இயல்களின் விளக்கம் அவ்வவ் இயலின் முதல் நூற்பாவுரையில் நூற்பாவை அடுத்து உள்ளது. அதிகாரத்தின் முதல் இயலை முதற்கண் ஓத்து என்று இளம்பூரணர் குறிப்பிடுவர். முதற்கண்ணது கிளவியாக்கம் என்று தெய்வச்சிலையாரும், இம்முதலோத்து என்று கல்லாடனாரும் கூறுவர். ஆயின், நச்சினார்க்கினியர் அங்ஙனம் குறிப்பிடார், முதற்கண் ஒவ்வோர் இயலுக்கும் பெயர்க்காரணம் கூறுவதைக் காணலாம். எழுத்ததிகாரம் நூன் மரபில் மட்டும், 'இவ்வோத்து என் நுதலிற்றோ எனின்', இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின்' என இருமுறை வினா எழுப்பிப் பெயர்க்காரணத்தைக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. இங்ஙனம் மற்ற இயல்களிலும் குறிப்பிடுகிறாரா எனில், இல்லை; வினாத் தொடுக்காமல் காரணம் மட்டும் தெரிவிக்கின்றார். மொழியது மரபு உணர்த்துகின்றமையின், இவ்வோத்து மொழி மரபு எனக் காரணப்பெயராயிற்று (எழுத்து. இயல்: 2) இவ்வோத்து, செயப்படுபொருள் முதலியனவாகப் பெயர்ப் பொருளை வேறுபடுத்தி உணர்த்தலின், வேற்றுமை ஓத்து என்று காரணப்பெயரா யிற்று (சொல். இயல்: 2) இவ்வோத்துப் பொருளிலக்கணம் உணர்த்தினமையில் பொருளியல் என்னும் பெயர்த்தாயிற்று. ஏனை ஓத்துக்களும் பொருளது இலக்கணமன்றே உணர்த்தின, இதற்கிது பெயராயிற்று என்னை எனின் ((பொருள். இயல்/5) என்பன இயல் பெயருக்குக் கூறும் விளக்கம் ஆகும். ஆதலின், இயல் பெயர்கள் அனைத்தும் காரணப்பெயர்கள் என்பதனை அவர் கூற்றால் அறிகின்றோம். பொருளதிகாரப் பொருளியலில், எல்லா இயல்களுக்கும் சொல்வது போன்று பெயர்க்காரணத்தைக் கூறியதோடு, இதற்கிது பெயராயிற்று என்னை எனின்' என வினா எழுப்பி விளக்கம் தருகின்றார். இதற்கடுத்து இயல் இயைபும், சில இடங்களில் இயல் வைப்பும், சில ïடங்களில்ïரண்டும்Tறிïயல்விளக்கம்Tறுகின்றார்.x›nth® அதிகாரத்தின் முதல் இயலில் விரிவாகவும், அடுத்து வருகின்ற இயல்களில் சுருக்கமாகவும் இயல் விளக்கம் தரப்படுகின்றது. எழுத்ததிகாரத்தில் நூன் மரபிற்கும், பொருளதிகாரத்தில்களவியலுக்கு«தந்துள்sஇயšவிளக்க«படித்Jஇன்புறத்தக்கதாகும்,பாலொLகலந்jதேன்போyஉவkநயத்தோLகூடிaவிளக்க«சுவைக்கத்தக்கதாகும். நூன் மரபியலில், இவ்வோத்து என் நுதலிற்றோ எனின், அதுவும் அதன் பெயர் உரைப்பவே அடங்கும். இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின், இத் தொல்காப்பியம் என்னும் நூற்கு மரபாம் துணைக்கு வேண்டுவனவற்றைத் தொகுத்து உணர்த்தினமையின்; 'நூன் மரபு' என்னும் பெயர்த்தாயிற்று. நூல் என்றது நூல் போறலின் ஓப்பினாயதோர் ஆகுபெயராம். அவ்வொப்பாயவாறு என்னை எனின், குற்றம் களைந்து எஃகிய பன்னுனைப் பஞ்சிகளை எல்லாம் கைவன் மகடூஉத் தூய்மையும் நுண்மையும் உடையவாக ஓரிழைப் படுத்தினாற் போல, 'வினையி னீங்கி விளங்கிய அறிவ' னாலே (மரபு: 94) வழுக்களைந்து எஃகிய இலக்கணங்களை எல்லாம் முதலும் முடிவும் மாறுகோளின்றாகவும், தொகையினும் வகையினும் பொருண்மை காட்டியும், உரையும் காண்டிகையும் உள்நின்று அகலவும், ஈரைங் குற்றமும் இன்றி ஈரைந்தழகு பெற முப்பத்திரண்டு தந்திர உத்தியொடு புணரவும், 'ஒருபொருள் நுதலிய சூத்திரத் தானும்' (செய். 166) ஒரு நெறிப்படப் புணர்க்கப்ப\டூஉந் தன்மை உடைமையான் என்க", என்று விரிவானதொரு விளக்கம் தரப்படுகிறது. இதனொடு நில்லாது, 'நூலென்றது மூன்று அதிகாரத்தினையும் அன்றே? இவ் வோத்து மூன்ற திகாரத்திற்கும் இலக்கணமாயவாறு என்னை? எனின் என வினா எழுப்பி விளக்கம் தந்திருக்கும் பகுதி சிறப்பிற்குரியதாகும். அதாவது. 'எழுத்துக்களது பெயரும் முறையும் இவ்வதிகாரத்திற்கும் செய்யுளியற்கும் ஒப்பக் கூறியது' எனவும், அம்மூவாறும் (நூன்: 22) என்னும் சூத்திரம் முதலியனவற்றான் எழுத்துக்கள் கூட்டிச் செல்லுமாறு கூறுகின்றமையின் சொல்லதிகாரத்திற்கும் இலக்கணம் ஈண்டுக் கூறினாராயிற்று எனவும் உரைத்து இங்ஙனம் மூன்றதிகாரத் திற்கும் இலக்கணம் கூறுதலின் இவ்வோத்து நூலினது இலக்கணம் கூறியதாயிற்று என நச்சினார்க்கினியர் விடை கூறுகின்றார். களவியலில், 'இவ்வோத்துக் களவு கற்பென்னும் கைகோள் இரண்டனுள் களவு உணர்த்தினமையிற் களவியல் என்னும் பெயர்த்தாயிற்று; பிறர்க்குரித்தென்று இருமுது குரவரால் கொடை யெதிர்ந்த தலைவியை அவர் கொடுப்பக் கொள்ளாது இருவரும் கரந்த உள்ளத்தோடு எதிர்ப்பட்டுப் புணர்ந்த களவாதலின் இது பிறர்க்குரிய பொருளை மறையிற் கொள்ளும் களவன்றாயிற்று. இது வேதத்தை மறைநூல் என்றாற் போலக் கொள்க' என்கிறார். மேலும், "இஃது உலகியல் எனப்படும்: உலகத்து மன்றலாவது குரவர் கொடுப்பதற்கு முன்னர் ஒருவற்கும் ஒருத்திக்கும் கண்ணும் மனமும் தம்முள் இயைவதேயென வேதமும் கூறிற்றாதலின்' (களவு: 1) எனச் சிறப்பித்துக் கூறுகிறார். இளம்பூரணர் களவினை அறம் என்றும், நச்சினார்க்கினியர் வேதம் என்றும் குறிப்பிடுகின்றனர். சொல் 'களவு' என்றிருப்பினும், இவர்கள் இருவரும் தம் விளக்கத்தால் இச்சொல்லிற்கு இருந்த இழிவினைத் துடைத்து உயர்வு தந்துள்ளனர். நச்சினார்க்கினியரின் உரிச்சொல் விளக்கம், பெயர், இடை, உரிச்சொற்களுக்கிடையே உள்ள வேறுபாட்டினைத் தெளிவுபடுத்துவதாக உள்ளது, இது, தமக்கு இயல்பில்லா இடைச்சொற் போலாது இசை குறிப்புப் பண்பென்னும் பொருட்கு உரியவாய் வருதலின், உரிச்சொல் ஓத்து என்னும் பெயர்த்தாயிற்று. ஈறுபற்றிப் பலபொருள் விளக்கலும், உருபேற்றலும் இன்றிப் பெயரையும் வினையையும் சார்ந்து பொருட்குணத்தை விளக்கலின், உரிச்சொல் பெயரின் வேறென்று உணர்க' (உரி: 1) என்பது இயல் விளக்கம். 'இடைச்சொற் போலாது' என்பதனால் இடைச்சொல்லினின்றுவேறுபடுத்தியு«,'உரிச்செhல்பெயÇன்வேறெ‹றுஉணர்f'என்பதனhல்பெயர்ச்சொல்லினி‹றுவேறுபடுத்திíம்காட்டியிருப்பiதந‹குஅறியலா«. இவ்வியல் விளக்கத்தின் முற்பகுதி சேனாவரையர்தம் கருத்தினைத் தழுவியதாகும்; பிற்பகுதி நச்சினார்க்கினியரின் கருத்து: சேனாவரையர் கூறாத கருத்து. இளம்பூரணர் இவ்விரு பகுதி விளக்கத்தில் எதனையும் கூறவில்லை , நூற்பா விளக்கம் இளம்பூரணர், பேராசிரியரைப் போன்று நச்சினார்க் கினியரும் இயலின் முதல் நூற்பாவைத் தலைச் சூத்திரம் என்று குறிப்பிடுகின்றார். இதனை எழுத்ததிகாரத்தில் நூன்மரபு, தொகைமரபு, குற்றியலுகரப் புணரியல் ஆகிய இயல்களிலும், சொல்லதிகாரத்தில் கிளவியாக்கத்திலும், பொருளதிகாரத்தில் செய்யுளியலிலும்காணலாம்,ஏனைaஇயல்களிšவரு«முதšநூற்பாtஇங்ஙன«குறிப்பிடுவJஇல்லை. இளம்பூரணர், தலைச்சூத்திரத்தை அடுத்துவரும் பெரும்பான்மையான நூற்பாக்களில் இச்சூத்திரம் என்னுதலிற்றோ எனின்' என்று வினவி நூற்பா உணர்த்தும் கருத்தினைக் கருத்துரையாக எடுத்துரைக்கின்றார். ஆனால், நச்சினார்க்கினியர் எழுத்ததிகாரம் புணரியல் முதல் நூற்பாவிலும், பொருளதிகார அகத்திணை யியல் முதல் நூற்பாவிலுமென இரண்டு நூற்பாக்களில் மட்டும் 'இச்சூத்திரம் என்னுதலிற்றோ எனின்' என்று வினவிப் பொருளினை உணர்த்துகின்றார். ஏனைய நூற்பாக்களில், இது, இஃது, இதுவும் அது என்று கூறியும் சில இடங்களில் இவை போன்று எதுவும் கூறாமலும் கருத்துரை வழங்குவது உண்டு. நூற்பா நுவலும் மையக்கருத்து இக்கருத்துரையில் இடம்பெறும். இதில் நூற்பா இயைபும் வைப்பும் கூறப்படுகின்றன. கருத்துரையை அடுத்துப் பதவுரையாகப் பொருளுரை அமைகிறது. இவர் எழுத்து, சொல், பொருள் (அகத், புறத், களவு, கற்பு, பொருளியல், செய்யுளியல்) ஆகிய மூன்று அதிகாரங் களுக்கும் 'பதவுரை' அடிப்படையில் உரையெழுதிச் செல்லுகிறார். இவரும் ஏனைய உரையாசிரியரைப் போன்று பாடம் சொல்லிக் கொடுத்த பேராசிரியராக விளங்கினமையால், மாணாக்கர் இயல்பினை நன்கு அறிந்தவர் ஆவார். மாணாக்கர்க்குச் சொல்லுக்குச் சொல் பொருள் கூறினாலன்றி அவர்கள் தெளிவாக உணர்ந்து கொள்ளமாட்டார் என்பதைக் கண்டவர். ஆகையினால் 'பொருளுரை' முழுவதையும் பதவுரையாகவே அமைத்திருக்கிறார். சொல்லதிகாரத்து வினையியலில் குறிப்பினும் வினையினும் (நூ: 4) எனத் தொடங்கும் நூற்பா உரையில், பின்னுள்ளோர் கூறினார் என்பது பற்றியும், மாணாக்கர்க்கு உய்த்துணரும் உணர்வன்று என்பது பற்றியும் யாமும் அவ்வெழுத்துக்களைப் பிரித்துக் காட்டுதும்' என நச்சினார்க்கினியர் கூறுகிறார். இவ்வுரை, மாணாக்கரது நிலையினை எந்த அளவிற்கு நன்கு புரிந்திருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. இவர்தம் பதவுரை தொல்காப்பியச் சொற்றொடர்களின் பொருளை அறிவதற்குப் பெரிதும் உதவுகின்றது. ஆயின். இளம்பூரணர் மாணாக்கருக்கு உய்த்துணர்வு பெருகல் வேண்டி, சிலவிடங்களில் குறிப்பாகத் தெரிவித்தல் அவரது இயல்பாகும். நச்சினார்க்கினியர் 'பதவுரை' என்னும் நிலையில் உரை எழுதிடினும். சிலவிடங்களில் (செய்: 153,155,162,200,204) பொழிப்புரையாகவும் கூறிச் செல்வது உண்டு. பொருளுரைக்குப் பின் பொருத்தமான மேற்கோள் தந்து பொருத்திக்காட்டி விளக்கியிருப்பது விளக்கவுரையாகும். நூற்பாவில் கூறப்படுவது வகைப்பாடுகளாயின், அவற்றை ஒவ்வொன்றாய் எடுத்துரைத்து அதற்குப் பொருளும் எடுத்துக்காட்டும் தந்து விளக்குவது உண்டு. அங்ஙனம் எடுத்துரைக்கும் போது, என்பது, என்றது, ஆவது, என்னும் இணைப்புச்சொல்லைக் கொண்டு கூறுவது உண்டு. இம் முறையினை இளம்பூரணரும் பிறரும் மேற்கொண்டிருக்கின்றனர். இவ்விளக்கவுரையில் நச்சினார்க்கினியர் மூலபாடத்தை நிலைப்படுத்துதல், நூற்பா வைப்பினை உறுதிப்படுத்துதல். வகைப்பாடுகள் முறையாகக் கூறப்பட்டிருக்கின்றனவா என ஆராய்ந்து கூறல், பிறரது உரையை ஏற்றும் மறுத்தும் கூறல், நூற்பாவில் கூறப்படும் சில சொற்றொடர்களை எடுத்துரைத்து 'என்றதனால்', 'என்பதனால்', 'இன்னும் அதனானே' என்றுரைத்துச் சிறப்பு விளக்கம் தருதல் ஆகியனவும் இடம்பெறுகின்றன. ஏனைய உரையாசிரியரைப் போன்று இவரும் வழக்கு, செய்யுளிலிருந்து எடுத்துக்காட்டு மேற்கொள்கிறார். எழுத்து, சொல் அதிகாரங்களில் பெரும்பாலும் வழக்கு எடுத்துக் காட்டுகளைக் காணலாம். பொருளதிகாரம் முழுமையும் இலக்கிய இலக்கண எடுத்துக்காட்டுகளையே காணலாம், நூற்பா நுவலும்பொருளிdநன்Fவிளக்குவதற்காக¤தொடர்புடைaதொல்காப்பிaநூற்பாக்கsஎடுத்தாளுவJஉண்டு. முன்பின் அதிகாரங்களிலிருந்தும், முன்பின் இயல்களிலிருந்தும் மேற்கோள்களாக எடுத்தாண்டு விளக்கம் தரும்போது கற்போர் தொல்காப்பியம் முழுமையும் அறிந்து கொள்ள ஏதுவாக அமைகின்றது. பிற இலக்கணங்களிலிருந்தும், நிகண்டுகளி லிருந்தும் எடுத்துரைப்பதும் உண்டு. சிலவிடங்களில் விளக்கவுரை யினை 'என்றது' (செய்:26,29,44)என்றும்,'எனவே'(செய்:50)என்று«தொடங்குகிறார். எழுத்ததிகாரத்து நூன்மரபு 33 ஆவது நூற்பாவிற்குப் பொருளதிகாரத்துச் செய்யுளியல் 2,3; மரபியல் 103ஆகிய நூற்பாக்களை மேற்கோள்களாகத் தந்து விளக்குகிறார், சொல்லதிகாரம் எச்சவியலில், அவைதாம், தத்தம் கிளவி அடுக்குந வரினும் (எச்: 33) என்னும் நூற்பாவிற்கு முன் அதிகாரத்திலிருந்தும் (நூன்: 1), முன் இயல்களிலிருந்தும் (வே: 7; வினை:38)நூற்பாக்கsஎடுத்தாண்Lவிளக்க«கொடுத்திருக்கிறார். கிளவியாக்கத்து முதல் நூற்பாவில் பொருளதிகாரத்து மரபியல் 91ஆவது நூற்பாவையும்; இடையியல் 8ஆவது நூற்பா உரையில், எழுத்ததிகாரத்து உயிர் மயங்கியல் 88 ஆவது நூற்பாவையும்; உரியியல் 96ஆவது நூற்பா உரையில், மரபியல் 89 ஆவது நூற்பாவையும்; அகத்திணையியல் 42 ஆவது நூற்பா உரையில், செய்யுளியல் 190,191 ஆகிய நூற்பாக்களையும்; அகத்திணையியல் 46ஆவது நூற்பா உரையில், பொருளியல் 48, உவம்: 28,27ஆகிய நூற்பாக்களையும் எடுத்தாண்டு நூற்பா விளக்கம் தருகிறார். செய்யுளியல் 2,3,4.5ஆகிய நூற்பாக்களில் எழுத்ததிகாரத்து நூற்பாக்களை எடுத்தாளுகிறார். சில இடங்களில் ஒன்றற்கு மேற்பட்ட நூற்பாக்களை (புறத்: 35 = செய்: 112,110; அகத்: 50,52), (புறத்: 22 = களவு: 14; அகத்: 51) எடுத்துரைத்து விளக்கம் தருவதும் உண்டு, வினையியல் 29ஆவது நூற்பா உரையில், பொருளியல்: 2; செய்:201; c.ம்:8;கிளவி:13,19,20;எச்:47எdஏGநூற்பாக்கsமேற்கோŸகாட்oவிளக்க«தருகிறார். பொருத்திக் காட்டுதல் எழுத்து, சொல் அகிய இரண்டு அதிகாரங்களில் எடுத்துக்காட்டினைப் பொருத்திக்காட்டுதšஎன்பதற்Fஇடமின்று. ஏனெனில் அவ்விரு அதிகாரங்களில் பெரும்பாலும் வழக்கும், தனிச்சொல்லும் சொற்றொடருமே எடுத்துக்காட்டாக மேற்கொள்ளப்படுகின்றன. செய்யுள் இடம்பெறுவது சிறுபான்மை. ஆதலின், பொருத்திக் காட்டாமலே எளிதில் அறிந்து கொள்ள இயலும். ஆயின், பொருளதிகாரத்தில் இடம்பெறுவது செய்யுள் ஒன்றேயாகும். ஆகையினால், உரையாசிரியர்கள் உதாரணச் செய்யுளைத் தருதலோடு, ஒவ்வொன்றும் எதற்குரியது என்று கூறியும், பொருத்திக் காட்டியும், உதாரணச் செய்யுளுக்குப் பொருள் விளக்கம் தந்து பொருத்திக் காட்டியும் செல்லுகின்றனர். இம்மணிமிடை பவளத்து முல்லையுள் முன்பனி வந்தது. நிலமும் கருவும் மயங்கிற்று. இக்குறுந்தொகையுள் குறிஞ்சியுள் வேனில் வந்தது. இவ் ஐங்குறுநூறு நெய்தற்கண் மாலை வந்தது. - அகத்: 12. என இலக்கியத்துள் இலக்கணத்தைப் புகுத்திக் காண்பிக்கிறார். நடுவண் ஐந்திணைக்குரிய முதல் கரு உரிப்பொருள் ஆகிய மூன்றும் கூறும் நூற்பாவிற்கு (அகத்: 3), 'முல்லை வைந்நுனை' (அகம்: 4) எனத் தொடங்கும் பாடலை எடுத்துரைத்து. 'இது குறித்த காலம் வந்ததும், அவரும் வந்தாரென ஆற்றுவித்தது. இக் களிற்றியானைநிரையுள், முல்லைக்கு முதலும் கருவும் வந்து உரிப்பொருளால் சிறப்பெய்தி முடிந்தது' எனப் பொருத்திக் காட்டுதலைக் காணலாம். வஞ்சித்திணைக்குரிய பதின்மூன்று துறைகளுள் பொருளின்று உய்த்த பேராண் பக்கமும் என்பதும் ஒன்றாகும். இதற்கு உதாரணம் தந்து, 'இஃது. அதிகமானால் சிறப்பெய்திய பெரும்பாக்கனை மதியாது சேரமான் முனைப்படை நின்றானைக் கண்டு அரிசில்கிழார் கூறியது' (தகடூர் யாத்திரை; புறத்: 8) என்று கூறுவர். உழிஞைத்திணையின் துறைகளுள் ஒன்று, கொள்ளார் தேஎம் குறித்த கொற்றமும் என்பது ஆகும். இராமன் இலங்கை கொள்வதன்முன் வீடணற்குக் கொடுத்த துறையும் அது என்று பாடல் தராது நிகழ்வினை மட்டும் கூறி விளக்குகிறார் (புறத்: 12). உழிஞைத்திணையின் துறைகளுள் ஒன்றான முரணிய புறத்தோன் அணங்கிய பக்கமும் என்பதற்குக் 'கலையெனப் பாய்ந்த' எனத் தொடங்கும் தகடூர் யாத்திரையின் பாடலை எடுத்துரைத்து, இது சேரமான், பொன்முடியாரையும் அரிசில்கிழாரையும் நோக்கித் தன் படைபட்ட தன்மை கூறக் கேட்டோற்கு அவர் கூறியது' (புறத்: 12) என்று கூறுகிறார். பாடாண் திணை எட்டு எனக் கூறுவர் நூலாசிரியர் (புறத்: 25). அவை, பொருட்பகுதி பலவும் கூட்டி ஒன்றும், இருவகை வெட்சி, பொதுவியல், வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சியுமாகிய பொருள்கள் ஏழுமாகிய எட்டுமாம் என்று நச்சினார்க்கினியர் விளக்கம் தருகிறார். அவற்றுள் வஞ்சிப்பொருள் வந்த பாடாண் திணைக்கு, 'அவலெறிந்த வுலக்கை' (பதிற்: 23) எனத் தொடங்கும் பாடலை எடுத்துக்காட்டி, 'இதில் இமையவரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பாலைக்கௌதமனார் துறக்கம் வேண்டினார் என்பது குறிப்பு வகையால் கொள்ள வைத்தலின் இது வஞ்சிப்பொருள் வந்த பாடாணாயிற்று' என்று பொருத்திக் காட்டுகிறார். காமப் பகுதி கடவுளும் வரையார் (புறத் 28) என்னும் நூற்பா உரையில், 'அடிபுனை தொடுகழல் மையணற் காளைக்கென்' எனவரும் புறப்பாட்டை (83) எடுத்துக்காட்டி, இது பெருங்கோழி நாய்கன் மகள் ஒருத்தி ஒத்த அன்பினாற் காமமுறாத வழியும் குணச்சிறப்பின்றித் தானே காமமுற்றுக் கூறியது. இதனான் அடக்குக என்று பொருத்திக் காட்டுகின்றார், செய்யுளியலுள் அங்கதச் செய்யுளைப் பற்றிக் குறிப்பிடுவர் ஆசிரியர். அது செம்பொருள் அங்கதம், பழிகரப்பு அங்கதம், செம்பொருள் செவியுறையங்கதம், பழிகரப்புச் செவியுறை யங்கதம் என நால்வகைப்படும். 'வள்ளியோர்ப் படர்ந்து' (புறம்: 47) எனத் தொடங்கும் பாடலை எடுத்துரைத்து, 'இது சோழன் நலங்கிள்ளியுழை நின்று உறையூர் புக்க இளந்தத்தன் என்னும் புலவனைக் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி ஒற்று வந்தான் என்று bகால்வுழிmவ்வரசற்குtருகின்றJகளினைக்nகாவூர்கிழார்òலப்படாமல்bசய்யுள்bசய்துjமதுbசால்லைmரசன்nகட்டு-அஞ்சினான்vன்னும்bபாருளைÃறுத்தலில்gழிகரப்புச்bசவியுறைmங்கதமாயிற்று'vன்றுரைத்துப்bபாருத்திக்fட்டுகிறார்(செய்:128).(JfŸ - படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்னும் இவற்றைப் பாதுகாவாதிருத்தல்) இவற்றால் பாடப்படுவோன், பாடுவோன் பெயர்களும் வரலாற்றுச் செய்திகளும் அறியப்படுகின்றன, பொருத்திக் காட்டுதலில் ஆய்வு இலக்கியத்தைக் கொண்டு இலக்கணத்தையும் இலக்கணத்தைக் கொண்டு இலக்கியத்தையும் ஆராய்கிறார். கொண்டுதலைக் கழியினும் பிரிந்தவண் இரங்கினும், உண்டென மொழிப ஓரிடத்தான் என்பது அகத்திணையியல் 15ஆவது நூற்பாவாகும், இதில் பாலைக்கண் குறிஞ்சியும் நெய்தலும் மயங்குமாறு கூறப்படுகின்றது. அதாவது பாலைக்குரிய பிரிதல் என்னும் உரிப்பொருளில் புணர்தலும் இரங்கலுமான உரிப்பொருள்கள் மயங்கி வரும் என்பதாகும். இதற்கு 'வான மூர்ந்த' (அகம்: 11) எனத் தொடங்கும் பாடலை எடுத்துக்காட்டி ஆய்வு நடத்துகிறார். 'வான மூர்ந்த' என்னும் அகப்பாட்டினுள், 'மெய்புகு வன்ன கைகவர் முயக்க - மவரும் பெறுகுவர் மன்னே ' எனக் கூறி, அழுதன் மேவாய்க் கண்ணும் துயிலுமென இரக்கமீக் கூறியவாறும் உணர்க, குன்றியன்ன' (அகம்: 133) என்னும் அகப்பாட்டும் அது. இவை பாலைக்கண் இரங்கல் நிகழ்ந்தன. இங்ஙனம் சூத்திர விதி உண்மையிற் சான்றோர் அகத்தினும் கலியினும் ஐங்குறு நூற்றினும் பாலைக்கண்ணே உடன்போக்கு நிகழ்ந்த செய்யுட்களைக் கோத்தார் என்று உணர்க' (அகத்: 15) என்னும் உரையால் அவர்தம் ஆராய்ச்சி நன்கு புலனாகும். உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே (அகத்: 13) என்னும் நூற்பா உரையில், 'ஊர்க்கா னிவந்த' என்னும் குறிஞ்சிக்கலியுள், 'ஆய்தூவி யனமென வணிமயிற் பெடை யெனத் ---- பேதுறூஉ மென்பதை யறிதியோ வறியாயோ' (கலி: 56) என அப்பாடல் பகுதியை எடுத்துரைத்து, இது நிலம் வரையாது வந்த கைக்கிளை. இதனைக் குறிஞ்சியுள் கோத்தார்; புணர்ச்சி எதிர்ப்பாடாகலின்' என்றுரைக்கிறார். உரிப்பொருள்என்Wஓதப்படு«ஐந்திணையு«அல்லாjகைக்கிளையு«பெருந்திணையு«நால்வfநிலத்து«மயங்கவு«பெறு«என்பJஇந்நூற்பாவி‹பொருளாகும். மேற்கூறிய நூற்பா உரையில், "புரிவுண்ட புணர்ச்சி' (கலி:142-147)vன்றதுKதலியMறுபாட்டும்nதறுதல்xழிந்தfமத்துÄகுதிறமாகியbபருந்திணை.ït‰iw நெய்தலுள் கோத்தார்; சாக்காடு குறித்த இரங்கல் பொருட்டாகலின். கூனும் குறளும் ஊமும் செவிடும் உறழ்ந்து கூறும் பெருந்திணையும் ஊடற்பகுதியவாகலின் மருதத்துள் கோத்தார் என்று கூறிச் சான்றோர் பாடல்களை உறுதிப்படுத்துகிறார். மேற்கூறிய நூற்பா உரையில், 'நடாஅக் கரும்பமன்ற தோளாரைக் காணின் (கலி:112) எனவரும் பாடலை எடுத்துரைத்து, இது பொதுவர் கூறலும் மிக்க காமத்து மிடலாகிய பெருந்திணையாகலின் முல்லையுட் கோத்தார்', 'நறவினை வரைந்தார்' (கலி: 99), 'ஈண்டு நீர்மிசை' (கலி: 100) என்னும் கலிகளும் காமத்துமிகுதிறத்தா‹அரசdநோக்கி¢சென்றோ®கூறியவாகலி‹மருதத்து¡கோத்தா®(அகத்:13)என்கிறார். வெறியறி சிறப்பின் வெவ் வாய் வேலன் (புறத்: 5) எனவரும் நூற்பா புறத்திணைக்குரிய வழுவேழும் உணர்த்துகிறது என்பர் நச்சினார்க்கினியர். இதில் இருபத்தொரு துறைகள் கூறப்படுகின்றன. இவ்விருபத்தொரு துறைகளையும் அகத்திற்கும் புறத்திற்கும் உரிய பொதுப்பகுதி எட்டெனவும், கரந்தைப்பகுதி ஏழெனவும், கற்பகுதி ஆறெனவும் மூன்று பகுதிகளாகப் பகுத்துரைக்கிறார். அவற்றுள் ஈற்றில் கூறப்படும் கற்பகுதியைக் காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுதல், பெரும்படை, வாழ்த்தல் என ஆறாக முறைப்படுத்திக்கூறுவ®நூலாசிரியர். ஈண்டுக் கூறப்படும் வகைப்பாடுகளின் முறைவைப்பினை இலக்கியத்தில் பொருத்திப் பார்க்கிறார். 'பரலுடை மருங்கை பதுக்கை' (264) என்னும் புறப்பாட்டினுள், 'அணிமயிற் பீலிசூட்டிப் பெயர் பொறித் தினிநட்டனரே கல்லும்', எனக் கல் நாட்டுதல் பெரும்படைக்குப் பின்னாகக் கூறிற்றால் எனின், நீர்ப்படுத்த பின்னர்க் கற்படுத்துப் பெயர் பொறித்து நாட்டுதல் காட்டு நாட்டோர் முறைமை என்பது சீர்த்தகு சிறப்பின் என்பதனால் கொள்க. என்கிறார். இப்பாடலில் கல்நாட்டுதல் என்பது பெரும்படைக்குப் பின்னர்க் கூறப்படுகிறது. தொல்காப்பியர் நடுதலுக்குப் பின்னர்ப் பெரும்படையை வைத்துள்ளார். செய்யுள் செய்த நல்லிசைப் புலவர் பெரும்படைக்குப் பின் கல்நாட்டுதலை வைத்து முறைமாறிப் பாடியிருக்கிறார். இதனைக் கண்ட நச்சினார்க்கினியர், இங்ஙனம் புரிவது காட்டு நாட்டோர்முறைkஎன¡காரண«கூறி¥பாடyநிலைப்படுத்துகிறார். இப் பதிற்றுப்பத்து நூறும் இவ்வாறே வருதலிற் பாடாண் திணையேயாயிற்று (புறத்: 25). இவ்வகையான ஆய்வு பிறர் எவரும் மேற்கொள்ளாதது. நச்சினார்க்கினயர் மேற்கொண்ட இவ்வாய்வு சிறப்பிற்குரியது ஆகும். நூற்பாவை எடுத்துக்காட்டாகத் தருதல் தொல்காப்பிய நூற்பாக்களை எடுத்தாண்டு நூற்பா நுவலும் பொருளினை விளக்குதல் உண்டு என்று முன்னர்க் கூறினோம். இது நூற்பாவையோ, நூற்பாவின் சொற்றொடரையோ எடுத்துக்காட்டாகத் தருதல் ஆகும், உரையாசிரியர்கள் நூலாசிரியர்தம் கூற்றை எடுத்துக்காட்டாகக் காட்டி உரை விளக்கம் செய்திருப்பது சிறந்த முறையாகும். இம்முறையால் அந்நூற்பாக்களையும் அறிந்து கொள்ள ஏதுவாகிறது. ஆசிரியர் ஓதிய காரம், கரம், கான் ஆகிய எழுத்துச் சாரியைகளுக்கு, "ஐகாரம் ஔகாரம்' (புணர்: 35; c.ம்: 78,93 எனச் சூத்திரங்களுள் வருமாறு காண்க (புணர்: 33) எனவும், 'வகார மிசையும்', 'அகர இகரம்', 'வஃகான் மெய்கெட' (பு,ம: 35; மொழி: 21; புணர்: 20) எனவும் பிறவும் சூத்திரங்களுள் காண்க' (புணர்:34) எனவும் அவர்தம் கூற்றினையே நச்சினார்க்கினியர் எடுத்துக்காட்டுகிறார். நீட வருதல் செய்யுளுள் உரித்தே (உம: 6) என்னும் நூற்பாவிற்கு, 'ஆயிரு திணையி னிசைக்குமன் சொல்லே', 'ஆயிருபாற் சொல்' (கிளவி: 1,3) என முறையே அடியையும் சொற்றொடரையும் தருகிறார். அசைநிலைக் கிளவி ஆகுவழி அறிதல் (இடை: 23) என்னும் நூற்பாவிற்கு, 'பெயரி னாகிய தொகையுமார் உளவே' (வே: 6), 'எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே' (மொழி: 28) எனச் சொல்லதிகாரத்திலிருந்தும் எழுத்ததிகாரத்திலிருந்தும் எடுத்துக்காட்டினைக் கூறுகிறார். இடையியல் 39 ஆவது நூற்பாவிற்கும் (பெய: 6; உரி: 1), 40ஆவது நூற்பாவிற்கும் (செய்: 1; வே: 12), 41ஆவது நூற்பாவிற்கும் (பொருளியல்: 53) வேறு வேறு இயல்களிலிருந்தும் அதிகாரங்களிலிருந்தும் தருகிறார், எச்சவியலுள் கூறப்படும் சொல்லெச்ச இலக்கணத்திற்கு (நூ: 45) 'எழுத்தெனப் படுப' (நூன்: 1), 'பெயரெனப் படுப' (பெய: 6), 'இடையெனப் படுப' (இடை: 1), 'இலமென் கிளவி' (பு.ம: 21), 'முழுதென் கிளவி' (உரி: 28), 'கடியென் கிளவி' (உரி: 85), 'மீனென் கிளவி' (பு.ம: 44), 'தேனென் கிளவி (பு.ம: 45) எனவும் வருவனவெல்லாம் இக்கூறியவாறே வந்த சொல்லெச்சம் என்று பல எடுத்துக்காட்டுகள் தந்திருப்பதன் மூலம் நன்கு அறியலாம். எண்ணேகார«(இடை:40)எனவரு«இடையியšநூற்பாவிற்Fமாத்திuஎழுத்தியšஅசைவfஎனாஅ'(செய்:1),'வண்z «வடிtஅளtசுவையே'(வே:17),யாத்jசீuஅடியா¥பெனாm(செய்:3)என்னு«மூன்Wநூற்பாக்கsஎடுத்துக்காட்டாக¤தந்jநச்சினார்க்கினியர், ஒழிந்த எண்களும் இவ்வாறு வருமாறு சூத்திரங்களுள்ளும் செய்யுட்களுள்ளும் காண்க என்று கூறியிருப்பதன் மூலம் இயன்றவரை தொல்காப்பிய நூற்பாக்களையே எடுத்துக்காட்டாகத் தருதல் வேண்டும் எனும் அவரது எண்ணத்தை நம்மால் அறியமுடிகிறது. தெவ்வினை, தெவ்வினொடு இவை உருபியலில், ஏனை வகரம் இன்னொடு சிவணும்(12)என்னு«நூற்பாவிற்கு¤தந்jஎடுத்துக்காட்டுகளாகும். சுட்டெழுத்தினை முதலாகக் கொண்ட வகர ஈற்றுச்சொல் அவ். இவ், உவ் எனும் மூன்றும் ஐகாரமும் அதனால் பற்றப்பட்ட மெய்யும் கெட்டு வற்றுச் சாரியை பெற்று முடியும் என்பர் ஆசிரியர் (உருபு: 11). எ-டு: அவற்றை, அவற்றொடு; இவற்றை, இவற்றொடு; உவற்றை, உவற்றொடு எனவரும். முன் நூற்பாவில் இடம்பெறாத வகர ஈற்றுச் சொல்லுக்கு 12ஆவது நூற்பாவில் இலக்கணம் கூறுகிறார். ஒழிந்த உரிச்சொல் வகரம் இன் சாரியையோடு பொருந்தி முடியும் என்பது பொருளாகும். எ-டு; தெவ்வினை, தெவ்வினொடு என ஓட்டுக. இவ்வுரையும் எடுத்துக்காட்டும் இளம்பூரணரது உரையை அடியொற்றி எழுதப்பட்டதாகும், இவ் எடுத்துக்காட்டு. நூலாசிரியர் உரியியலில் கூறும் கூற்றாகும். தெவ்வுப்பகை ஆகும் (நச்.நூ: 47,48) என்பது அக் கூற்று. எடுத்துக்காட்டுத் தந்த பிறகு இளம்பூரணருக்கு ஓர் ஐயம் எழுகிறது. இச் சொல் உரிச்சொல்லாயிற்றே; இதனை ஈண்டுக் காட்டுவது எங்ஙனம் பொருந்தும்? பெயர்ச்சொற்கள் உருபுகளோடு புணரும் இலக்கணத்தைக் கூறுவது உருபியல் ஆகும். பெயர் புணரும் இலக்கணத்திற்கு உரிச்சொல்லினை எடுத்துக்காட்டுவது முறையாகுமா? வேறு எடுத்துக்காட்டுக் கிடைக்காமையால், இதனையே தரவேண்டியதாகிறது. மற்றுஇது,உரிச்சொல்லன்றேhஎனின்,உரிச்சொல்yஎனினு«படுத்தšஓசையாšபெயராயிற்Wஎன¡கொள்f என்னும் உரையால் இளம்பூரணர் படும் இடர்ப்பாடும் எடுத்துக்காட்டுத் தந்து உரையெழுதுவதில் உரையாசிரியர் காட்டிய முனைப்பும் இன்றியமையாமையும் நன்கு புலனாகின்றன. உரிச்சொல் என்று அறிந்தே அக் காட்டினை அவர் தந்திருக்கிறார், அதற்கு அமைதியும் கூறுகிறார். நச்சினார்க்கினியர், இஃது உரிச்சொல்லாயினும் படுத்தல் ஓசையால் பெயராயிற்று என்று இளம்பூரணரது உரையை ஏற்றுரைத்துச் செல்லுகிறார். 'ஈறு பற்றிப் பலபொருள் விளக்கலும் உருபேற்றலும் இன்றிப் பெயரையும் வினையையும் சார்ந்து பொருட்குணத்தை விளக்கலின், உரிச்சொல் பெயரின் வேறென்று உணர்க' என்று உரியியல் இயல் விளக்கம் தந்த நச்சினார்க்கினியர், ஈண்டுப் பெயர்க்கேயன்றி உரிச்சொல் வகரத்திற்கு முடிபு கூறுகிறார் எனக் கருத்துரையும், ஏனை வகரம் என்பதற்கு ஒழிந்த உரிச்சொல் வகரம் எனப் பொருளுரையும் உரைத்துப் படுத்தல் ஓசையால் பெயராயிற்று என்று அமைதி காணுதலை உற்றுநோக்கத்தக்கது. ஆசிரியர் 'ஏனை வகரம்' என்று பொதுப்படையாகக் கூறினாரேயொழிய எதனை முதலெழுத்தாகக் கொண்டு வரும் வகரம் என்று கூறவில்லை. முன் நூற்பாவில் "சுட்டு முதல்' என்றவர் இந்நூற்பாவில் ஏதும் கூறாமையால் எவ்வகரம் என்று அறிதலில் உரையாசிரியர்கள் இருவரும் இடர்ப்பட்டு இறுதியில் பெயர்ச்சொல் தரவியலாது உரிச்சொல்லினைத் தந்து அதற்கு அமைதி காணுகின்றனர். உரியியலில் ஆசிரியர் 'எய்யா மையே அறியா மையே' (உரி: 44) என ஓரிடத்து எதிர்மறைச்சொல் ஓதிப் பொருள் கூறுகிறார். இதற்கு 'உடம்பாட்டை ஓதாது மறையை ஓதினார்; மறைச்சொல்லும் உரிச்சொல்லாய் வரும் என்றற்கு' என்று நச்சினார்க்கினியர் எழுதிய விளக்கத்தை ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது. இவர் இலக்கியத்திற்கும் உரை எழுதினமையால் இலக்கிய உரையினை இலக்கண உரையிலும், இலக்கண உரையை இலக்கிய உரையிலும் மேற்கொள்வது உண்டு. மாட்டிலக்கணத் திற்குச் செய்யுள், சிந்தாமணியுள் யாம் கூறிய உரைகள் பலவற்றானும் உணர்க (செய்: 210,211) என்று சிந்தாமணி உரையைக் காட்டுகிறார். இளம்பூரணர். சேனாவரையர் ஆகியோர் ஒரு நூற்பாவிற்கு ஈருரை எழுதுவது உண்டு. இவரும் கற்பு: 9,33 ஆகிய இடங்களில் இருபொருள் உரைத்து, இவை இரண்டும் பொருள் என்று குறிப்பிடுகின்றார். சிறப்பு விளக்கம் காரும் மாலையும் முல்லை (அகத்: 6) என்பதற்கு இவர் தந்துள்ள விளக்கம் படித்து இன்புறத்தக்கதாகும். 'முல்லைக்குக் காரும் மாலையும் உரியவாதற்குக் காரணம் என்னை? - யெனின், பிரிந்து மீளும் தலைவன் திறமெல்லாம் பிரிந்திருந்த கிழத்தி கூறுதலே முல்லைப் பொருளாயும், பிரிந்து போகின்றான் திறம் கூறுவன எல்லாம் பாலையாகவும் வருதலின், அம்முல்லைப் பொருளாகிய மீட்சிக்கும் தலைவி இருத்தற்கும் உபகாரப்படுவது கார்காலமாம்; என்னை? வினைவயிற் பிரிந்து மீள்வோன், விரைபரித் தேரூர்ந்து பாசறையினின்று மாலைக் காலத்து ஊர்வயின் வரூஉம் காலம் ஆவணியும் புரட்டாதியும் ஆதலின், அவை வெப்பமும் தட்பமும் மிகாது இடை நிகர்த்தவாகி ஏவல் செய்துவரும் இளையோர்க்கு நீரும் நிழலும் பெறுதலிற் களிசிறந்து மாவும் புள்ளும் துணையோடு இன்புற்று விளையாடுவன் கண்டு தலைவற்கும் தலைவிக்கும் காமக்குறிப்பு மிகுதலானும் என்பது. புல்லை மேய்ந்து கொல்லேற்றோடே புனிற்றாக் கன்றை நினைந்து மன்றில் புகுதரவும் தீங்குழல் இசைப்பவும் பந்தர்முல்லை வந்து மணங் கஞற்றவும் வருகின்ற தலைவற்கும் இருந்த தலைவிக்கும் காமக்குறிப்புச் சிறத்தலின், அக்காலத்து மாலைப்பொழுதும் உரித்தாயிற்று' (அகத்: 6) என்று விரிவானதொரு விளக்கத்தினைத் தருகின்றார், நூலாசிரியர் மருதத்திற்குச் சிறுபொழுது வைகுறு, விடியல் எனவும், நெய்தலுக்கு எற்பாடு எனவும் கூறுவர். இதற்குத் தந்துள்ள விளக்கமும் படித்து இன்புறத்தக்கது ஆகும். 'வைகுறுதலும் விடியலும் என்னும் உம்மை தொக்கு நின்றது, செவியறிவுறுத்தலைச் செவியறிவுறூஉ என்றாற் போல வைகுறுதலை வைகுறு என்றார். அது மாலையாமமும் இடையாமமும் fழியுந்துணைmக்கங்குல்iவகுறுதல்;mதுfங்குல்iவகியmறுதியாதல்nநாக்கிiவகறைvனவும்Tறுப.mJî« பாடம். நாள் வெயிற் காலையை விடியல் என்றார். 'விடியல் வெங்கதிர் காயும் வேயம் லகலறை' (கலி: 45) என்ப. 'விடியல் வைகறை இடூஉம் ஊரன்' (அகம்: 196) என்றது, விடியற்கு முன்னர்த்தாகிய வைகறை என உருபு தொக்கு முன்மொழி நிலையலாயிற்று. பரத்தையிற் பிரிந்த தலைவன் ஆடலும் பாடலும் கண்டும் கேட்டும் பொழுது கழிப்பிப் பிறர்க்குப் புலனாகாமல் மீளும் காலம் அதுவாதலானும், தலைவிக்குக் கங்குல் யாமம் கழியாது நெஞ்சழிந்து ஆற்றாமை மிகுதலான் ஊடல் உணர்த்தற்கு எளிதாவதோர்உபகார«உடைத்தாjலானு«வைகwகூறினார். இனித் தலைவி விடியற்காலம் சிறுவரைத்தாதலின் இதனால் ஜ்பெறும் பயன் இன்றென முனிந்து வாயிலடைத்து ஊடல் நீட்டிப்பவே அவ் வைகறை வழித்தோன்றிய விடியற்கண்ணும் அவன் மெய் வேறுபாடு விளங்கக் கண்டு வாயில் புகுத்தல் பயத்தலின்விடியšகூறினார். இனி வெஞ்சுடர் வெப்பந் தீரத் தண்ணறுஞ் சோலை தாழ்ந்து நீழற் செய்யவும், தண்பதம்பட்டது எண்கழி மேய்ந்து பல்வேறு வகைப்பட்ட புள்ளெல்லாம் குடம்பை நோக்கி உடங்கு பெயரவும், புன்னைமுதலிaபூவி‹நாற்ற« K‹Åன்றுகஞற்றîம்,நெடுந்âரைஅழுtத்துநிலாக்fதிர்பரப்gவும்கhதல்கைமி¡குக்கடல்கhனும்கானல்கhனும்நிறைகlந்துவேட்கைபுல¥படஉரைத்தÈன்,ஆ©டுக்காமக்கு¿ப்புவெளிப்gட்டுஇர§கல்பெhUள்சிறத்தÈன்எற்பhடுநெய்த‰குவந்தJ'(அக¤:8) என்னும் உரைbசாற்சுவையும்bபாருட்சுவையும்cவமைeயமும்fலந்ததொருbrய்யுளாகஉŸளது.இJngh‹w RவையானcரைÉளக்கங்களைப்bgருளதிகாரத்தில்கhzyh«. சொற்பொருள் விளக்கம் அகம் என்றால் என்ன என்பதற்கு நச்சினார்க்கினியர் கூறும் விளக்கம், எத்தனை முறை படித்தாலும் இன்னொரு முறை படித்துத் துய்க்கவேண்டும் என்ற ஆவல் எழும். கற்போர்க்கு இன்பம் தர வல்லதாகும். இளம்பூரணர், 'அகப்பொருளாவது, போகநுகர்ச்சியாகலான் அதனான் ஆய பயன்தானே அறிதலின், அகம் என்றார்' என்று ஒரு வரியில் சுருக்கமாக அதிகாரவுரையில் குறிப்பிடுகின்றார். ஆயின், நச்சினார்க்கினியர், 'ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம், அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவருக்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறிருந்தது எனக் கூறப்பட முடியாததாய், யாண்டும் உள்ளத்து உணர்வே நுகர்ந்து இன்பம் உறுவதோர் பொருளாதலின் அதனை அகம் என்றார் என்று இனம் புரியாத - சொல்ல இயலாத - உள்ளம் உணர்ந்த உணர்வினை எல்லார்க்கும் சொல்லால் உணர வைத்திருக்கும் நயம் போற்றுதற்குரியதாகும், சொல்லதிகாரம் உரியியலில், உருவுட் காகும் புரை உயர் வாகும் (உரி: 4) என்னும் நூற்பா அடி இடம் பெறுகின்றது. இதில் வரும் புரை என்னும் சொல்லுக்கு உரையாசிரியர் அனைவரும் புரைய மன்ற புரையோர் கேண்மை ' (நற்: 1) என்னும் நற்றிணைப் பாடலை எடுத்துக்காட்டி உயர்வு என்னும் பொருளைக் காட்டுகின்றனர். கூறிய கிளவிப் பொருள்நிலை அல்லது (உரி: இளம்: 93; நச்சி: 92) என்னும் நூற்பாவில், 'புரைப்பட்ட' என்னும் சொல்லைக் காட்டிப் பிளவு என்னும் பொருளை இளம்பூரணரும், 'புரைதீர் கேள்விப் புலவ ரான' என்னும் மேற்கோள் காட்டி, புரை குற்றத்தையும் உணர்த்துதல் (நூ: 4) எனவும், 'மரம் புரைபட்டது' என்பது, உயர்வு பொருள் குறித்தது என்று கொள்ளற்க; பொந்துபட்டது என்னும் பொருட்டு ஆயிற்று' (நூ: 92) எனவும் நச்சினார்க்கினியரும் பொருள் விளக்கம் தருகின்றனர். ! ஆதலின், புரை என்பதற்கு உயர்வு என்பதோடு குற்றம் என்னும் பொருளும் உண்டு என்பதனை இருவரும் உணர்த்துகின்றனர். ஆயின், புரைதீர் காமம் புல்லிய வகையானும் (புறத்: 26) என்பதற்குப் புரை, உயர்ச்சியாதலின் உயர்ச்சியில்லாத காமம் என்று பொருள் தருகின்றார் நச்சினார்க்கினியர். இதற்கு இளம்பூரணர், குற்றம் தீர்ந்த காமம் (புறத்: 21) என்று பொருள் கூறுகின்றார். இருவரும் இவ்விடத்துப் பொருள் மாறுபடுகின்றனர். களவியல் 16ஆவது நூற்பாவில், புரைதீர் கிளவி, புரைபட வந்த என்னும் சொற்றொடர்கள் இடம்பெறுகின்றன. இதற்கு முறையே இளம்பூரணர், குற்றம் தீர்ந்த கிளவி, குற்றம்பட வந்த எனும் பொருளைக் காணுகிறார். நச்சினார்க்கினியர் முறையே, தலைவன் உயர்பிற்கு ஏலாது இயற்பழித்து உரைக்கும் கிளவி, தலைவி தன்னுயர்வு உண்டாகத் தோன்றியது என் உயர்வுப் பொருளில் காணுகிறார். களவியல் 23 ஆவது நூற்பாவில், புரைதீர் கிளவி தாயிடைப் புகுப்பினும் என்னும் அடி உள்ளது. இதற்குக் குற்றம் தீர்ந்த கிளவி என இளம்பூரணரும், குற்றம் தீர்ந்த எதிர்ப்பாடு என நச்சினார்க்கினியரும் பொருள் காணுகின்றனர். இவ்விடத்து இருவரும் ஒரே பொருளைக் காணுகின்றனர். பொருளியல் 16 ஆவது நூற்பாவில், புரைபட வந்த அன்னவை பிறவும் என்னும் அடி உள்ளது. இதற்கு இளம்பூரணர், நச்சினார்க்கினியர் ஆகியோர் இருவரும் ) 'குற்றம்' என்னும் பொருள் தருகின்றனர். "brÉíiw jhnd, bgh§Fjš ï‹¿¥ òiunah® eh¥g©' (brŒ: 114) v‹D« ï›Él¤J ïs«, nguh., நச்சி. ஆகியோர் மூவரும் பெரியோர் என்று உயர்ந்தோர் பொருளில் கூறுகின்றனர். 'புரைதீர் இறுதி நிலைஉரைத் தன்றே' (செய் 137) என்பதில் இடம்பெறும் 'புரைதீர் என்பதற்குக் குற்றம் தீர்ந்த எனப் பொருள் தருவர்இளம்பூரணர். எனவே உரையாசிரியர் மூவரும் புரை என்பதற்குக் குற்றம் என்னும் பொருள் தந்ததைக் கண்டோம். 'குற்றம்' எனும் பொருள் ஒன்றிருக்க நூலாசிரியர் உயர்வு எனும் ஒரு பொருளை மட்டும் தந்தது ஏன்? யாவரும் அறிந்த பொருளை விடுத்து அறியாத பொருளை மட்டும் கூறிச் சென்றார் என்பதுதான் அதற்கு விடையாகும். தொல்காப்பியர் முக்காலத்தையும் அறிந்து நூலைச் செய்திருக்கிறார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. எதிர்காலத்தையும் மனத்துள் , (கொண்டு, 'கூறிய கிளவி பொருணிலை யல்லது, வேறு பிற தோன்றினும் அவற்றொடுங் கொளலே' (உரி: 92) என்னும் நூற்பாவைச் செய்திருக்கிறார். இவ்விடத்துப், புரைதீர்ந்த நன்மை பயக்கு மெனின் (குறள்: 292) என்பதற்குக் 'குற்றம் தீர்ந்த நன்மையைப் பயக்குமாயின்' என்னும் பரிமேலழகர் உரையை . ஒப்புநோக்குவது நலம், வெளிப் படு சொல் மட்டுமன்றி வெளிப்படு பொருளையும் கிளத்தல் வேண்டா என்பது ஆசிரியர் கருத்தாகும். 'கறுப்புஞ் சிவப்பும் வெகுளிப் பொருள்', நிறத்துரு உணர்த்தற்கும் உரிய என்ப' (உரி: 74,75) என ஆசிரியர் ஓதியிருக் கிறாரே; இவை வெளிப்படு சொற்கள் ஆயிற்றே; முன்னர் ஓதிய முடிவினின்று விலகிச் செல்லுகிறாரே, எங்ஙனம்? என வினவலாம். கறுப்பு, சிவப்பு ஆகியன வெளிப்படு சொற்களாகும்; நிறத்தை உணர்த்தும் என்பது வெளிப்படு பொருளாகும். எனினும் இவ்விரு சொற்களும் தொழிலாயவழி வெகுளிப் பொருளை உணர்த்தும் என்பது வெளிப்படு பொருளன்று. ஆதலின் வெளிப்படு சொல்லாயினும் கூறினார். அடுத்துத் தொழிலாயவழி வெகுளிப் பொருளை உணர்த்துவதோடு பண்பு பொருளையும் உணர்த்தும் என்பதை அறிவித்தல் பொருட்டு இரண்டாவது நூற்பாவை ஓதினார். எ.டு: கறுத்த காயா, சிவந்த காந்தள் (பதிற். 15) எனவரும். அதாவது, கறுப்பு, சிவப்பு என்னும் சொற்கள் கரும், செம் (கருங்கண், செவ்வாய்) எனப் பண்பு நிலையில் இருந்தால் நிறத்தை உணர்த்தும்; கறுத்த, சிவந்த எனத் தொழில் நிலையில் இருந்தால் நிறத்தை உணர்த்தாது; வெகுளி என்னும் பொருள் உணர்த்தும் எனக் கொள்ள நேரிடுமோ எனும் ஐயம் எழுகிறது. கறுத்த கண்,சிவந்jவாŒஎன¤தொழிšநிலையிšஇருந்தாலு«நிறத்jஉணர்த்து«எdஅவ்வையத்jஅகற்றுவத‹பொருட்டு¡கூறினா®என்பJவிளக்கமாகும். 'இவை தொழிற்பட்டுழியும் பண்பு உணர்த்தும் என வெளிப்படு சொல்லையும் கூறினார், ஐயம் அகற்றுதற்கு என்பது நச்சினார்க்கினியர் உரை. இது சேனாவரையர் உரையைத் தழுவி எழுதப்பட்டதாகும். ஞமலி(பெரும்பாண். 132) - திசைச் சொல் (மொழி : 31) உதி - இஃது இக்காலத்து ஒதி என மருவிற்று (உம் : 41) ஈம் - சுடுகாடு (பு. ம :33); கம் - தொழில் (பு, ம: 33) ஓ - மதகுநீர் தாங்கும் பலகை (உருபு: 8) குயின் - மேகம் (பு.ம: 40) அழக் குடம் - பிணக்குடம் (ò.ம்: 59) பெண்மை - ஒரு பொருள் தோன்றும் காலத்து உடன் தோன்றி அது கெடும் துணையும் நிற்பது (வினை: 17) பெண்மை - கட்புலனாயதோர், அமைதித் தன்மை (கிளவி: 57). செய் தி - தொழில் (அகத்: 18) கூத்தர் - 1. எண்வகை சுவையும் மனத்தின்கண் பட்ட குறிப்புகளும் புறத்துப்போந்Jபுலப்பlஆடுவா®(புறத்:90), 2. நாடக சாலையர். தொன்றுபட்ட நன்றும்தீது«கற்றறிந்தவற்wஅவைக்கண்,எல்லா«அறிய¡காட்டுதற்Fஉரியர்(க‰பு :27) கூற்று - வாழ்நாள் இடையறாது செல்லும் காலத்தினைப் பொருள், வகையான் கூறுபடுத்தும் கடவுள் (புறத்: 24) கற்பு - தன் கணவனைத் தெய்வமென்று உணர்வதோர் மேற்கோள் (பொருளியல்: 53) தொகைச்சொல் விளக்கம் நூலாசிரியர் சிலவிடங்களில் தொகைச் சொற்களைக் கூறுவது உண்டு. அத்தொகைச் சொற்களுக்கு உரையாசிரியர்கள் பொருள் கூறுவர். ஆறுவகைப் பார்ப்பியல் - ஓதல் ஓதுவித்தல்; வேட்டல்வேட்பித்தல்;கொடுத்தšகோடš ஐவகை மரபு (அரசர்) - ஓதல், வேட்டல், ஈதல், காத்தல், தண்டம் செய்தல், இருமூன்று மரபு (ஏனோர் - வாணிகர்) - ஓதல், வேட்டல், ஈதல், உழவு, நிரையோம்பல், வாணிகம். (வேளாளர்) - ஓதல், ஈதல், உழவு, நிரையோம்பல், வாணிகம், வழிபாடு நாலிரு வழக்கு (தவம் புரிவோர்) - ஊணசையின்மை, நீர்நசையின்மை, வெப்பம் பொறுத்தல், தட்பம் பொறுத்தல், இடம் வரையறுத்தல், ஆசனம் வரையறுத்தல், இடையிட்டு மொழிதல், வாய்வாளாமை ஆகியனவாகும். உணவினும் நீரினும் சென்ற மனத்தைத் தடுத்தல், ஐந்தீநாப்பண், நீர்நிலையில் நிற்றல், கடலும் காடும் மலையும் முதலியவற்றில் நிற்றல், தாமரை ஆம்பல்ஆkமுதலிaஆசனத்திருத்தல்,உண்டற்காyஉரையாடாமை,துறந்தகாšதொட்டு«வாய்வாளாkஎன்பdமுறைaஅவ்வெட்ட‹பொருளாகும். nahf« brŒnth® - ïak«, Ãak«, Mrd«, tË Ãš?, தொகை நிலை, பொறைநிலை, நினைதல், சமாதி. இயமம் - பொய் கொலை களவு காமம் பொருணசைஐந்து«அடக்குதல்;நியம« பெற்றதற்Fஉவத்தல்,பிழம்புநனி. வெறுத்தல், கற்பன கற்றல், கழிகடும் தூய்மை , பூசனைப் பெரும்பயம் ஆசாற்கு அளித்தல்; ஆசனம் - நிற்றல் இருத்தல் நடத்தல் ஒத்தல் எனும் இந்நான்கி னொடு இன்பம் பயக்கும் சமய முதலியன; வளிநிலை - உந்தி யொடு புணர்ந்த இருவகை வளியும் தந்தம் இயக்கம் தடுப்பது; தொகைநிலை - பொறியுணர்வை ஒருவழிப்படுத்துவது; பொறை நிலை - மனத்தினை ஒருவழிப்படுத்துவது; நினைதல் ) -நிறுத்jஅ«மனநிyதிரியாமšகுறித்jபொருளோLகொளுத்தல்;சமாதி',ஆங்கன«குறித்jவாய்முத‰பொருளொLதா‹பிறனாகத்தகையது. (புறத்: 20). அவையத்தாரது எண்வகைக்குணம் - குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், வாய்மை, தூய்மை, நடுவுநிலைமை, அழுக்காறின்மை , அவாவின்மை . (புறத்: 21) எடுத்துக்காட்டிற்குப் பொருள் விளக்கம் கூறல் சிலவிடங்களில் உரையாசிரியர்கள் தாம் தரும் எடுத்துக்காட்டிற்கும் விளக்கம் தருதல் உண்டு, உசு - உளுவின் பெயர்: முசு - இது குரங்கினுள் ஒரு சாதி - மொழி: 42. தபு - இது படுத்துக் கூற நீ சாவெனத் தன்வினையாம். எடுத்துக் கூற நீ ஒன்றனைச் சாவப்பண்ணெனப் பிறவினையாம் - மொழி: 43. சோ - அரண் - தொகை: 2 எட்டி, காவிதி - தேயவழக்காகிய சிறப்புப் பெயர். எட்டி மரம் அன்று. அஃது 'எட்டி குமரனிருந்தோன் தன்னை ' (மணி. 4: 58) என்பதனான் உணர்க - தொகை: 12. பாகு - பாக்கு (தொகை; 24) இரு Éளக்bகாற்றன்- 'இருவிள'vன்பதுXலை;nவணாட்டகத்துXரூர்;fருவூரினகத்துxருnசரியும்vன்ப.ïUÉsɉ கொற்றன் என விரிக்க - உ.ம: 14. இலம்படு புலவர் - இல்லாமை உண்டாகின்ற புலவர். இல்லத்தால் பற்றப்பட்ட புலவர் என வேற்றுமைப் பொருட் புணர்ச்சியாகக் கோடல் பொருந்தாது. இஃது அல்வழி அதிகாரம் ஆகலானும், படு என்ற சொல்லேயன்றிப் பற்று என்ற சொல் புணராமையானும் என்க - பு.ம: 21. இப்பகுதியில் உரைநெறி வகைப்பாடு, மூன்று அதிகார உரையமைப்பு, மூன்றுஅதிகாuவிளக்கம்,இயšவிளக்கம்,நூற்பhவிளக்கம்,சொற்பொருŸவிளக்க«ஆகியdகூறினோம். ச. குருசாமி நூற்பா நிரல் (நூற்பா எண்) அஆ உஊ 173 அஆ என்னும் 181 அஇ உஅம் 31 அஃறிணை விரவுப்பெயர் 155 அக்கென் சாரியை 270 அகமென் கிளவிக்கு 315 அகர ஆகாரம் 311 அகர இகரம்54 அகர இறுதி 203 அகர உகரம் 55 அகரத் திம்பர் 56 அடையொடு தோன்றினும் 318 அண்ணம் சேர்ந்த 99 அண்ணம் நண்ணிய 93 அணரி நுனிநா 94 அத்தவண் வரினும் 219 அத்திடை வரூஉங் 168 அத்தின் அகரம் 125 அத்தே வற்றே 133 அத்தொடு சிவணும் 317 அதனிலை உயிர்க்கும் 479 அந்நான் மொழியுந் 429 அப்பெயர் மெய்யொழித் 350 அம்மின் இறுதி 129 அம்மூ வாறும் 22 அரையளவு குறுகல் 13 அரையென tரூஉம்165mšyj‹ kருங்கிற்326mšyJ... இறுதியும் 408 அல்லது கிளப்பின் இயற்கை 321 mல்லது»ளப்பின்vல்லா425mšyJ... மெனும் 322 அல்வழி... இயல்பென 361 அல்வழி... உறழென 368, 398 அல்வழி... மெல்லெழுத் 314 அவ்வழிப் பன்னீருயிரும் 84 அவ்வா றெழுத்தும் 92 அவ்வியல் நிலையும் 12 அவற்றுவழி மருங்கிற் 118 அவற்றுள், அஆ ஆயிரண் 85 அவற்றுள் அஇ உஎ 3 அவற்றுள், இகர இறுபெயர் 154 அவற்றுள், இன்னின் இகரம் 120 அவற்றுள், ஈரொற்றுத் தொடர் 407 அவற்றுள், கரமுங் கானும் 135 அவற்றுள், ணனஃகான் 26 அவற்றுள், நிறுத்த சொல்லின் 108 அவற்றுள், மஃகான் 28 அவற்றுள், மெய்யீ றெல்லாம் 104 அவற்றுள், மெல்லெழுத் 145 அவற்றுள், ரகார ழகாரங் 49 அவற்றுள், லளஃகான்முன்னர் 24 அவைதாம், இயற்கைய வாகும் 197 அவைதாம், இன்னே வற்றே 119 அவைதாம், குற்றிய லிகரம் 2 அவைதாம், முன்னப் பொருள 142 அவைதாம், மெய்பிறி தாதல் 109 அவையூர் பத்தினும் 473 அழனென் இறுதிகெட 354 அழனே புழனே 193 அளந்தறி கிளவியும் 446 அளபிறந் துயிர்த்தலும் 33 அளவாகும் மொழி 121 அளவிற்கும் நிறையிற்கும் 170 அளவும்... ஆயியல் திரியா 477 அளவும்... ஆயியல் திரியாது 474 அளவும்... எண்ணும் 389 அளவும்... வேற்றுமை 319 அன்றுவரு காலை 258 அன்ன வென்னும் 210 அன்னென் சாரியை 194 ஆஈ ஊஏஐ 4 ஆஎ ஒஎனும் 64 ஆஏ ஓஅம் 32 ஆகார இறுதி 221 ஆடூ மகடூ 271 ஆண்மரக் கிளவி 304 ஆணும் பெண்ணும் 303 ஆதனும் பூதனும் 348 ஆய்தம் நிலையலும் 399 ஆயிரக் கிளவி 464 ஆயிரம் வரினும் 435 ஆயிரம் வரினே 476 ஆயிரம் வருவழி 391 ஆரும் வெதிரும் 363 ஆவயின் வல்லெழுத்து 301 ஆவும் மாவும் 224 ஆவோ டல்லது 65 ஆறன் உருபின் 115 ஆறன் உருபினும் 161 ஆறன் மருங்கிற் 469 ஆறென் கிளவி 458 ஆன்முன் வரூஉம் 233 ஆனின்னகரமு«124 ஆனொற் றகரமொடு 232 இஈ எஏ 86 இக்கின் இகரம் 126 இகர இறுதிப் 235 இகர யகரம் 58 இடம்வரை கிளவிமுன் 251 இடைநிலை ரகரம் 439 இடைப்படிற் குறுகும் 37 இடையெழுத் தென்ப 21 இடையொற்றுத் தொடரும் 413 இதழியைந்து பிறக்கும் 97 இயற்பெயர் முன்னர்த் 347 இரண்டுமுத லொன்பான் 480 இராவென் கிளவி 227 இருதிசை புணரின் 431 இருளென் கிளவி 402 இல்ல மரப்பெயர் 313 இல்லென் கிளவி 372 இல்லொடு கிளப்பின் 293 இலமென் கிளவிக்கு 316 இறாஅல் தோற்றம் 343 இன்றி என்னும் 237 இன்னிடை வரூஉம் 186 இன்னென வரூஉம் 131 இனிஅணி என்னும் 236 ஈகார இறுதி 249 ஈமுங் கம்மும் 328 ஈரெழுத்து... உயிர்த்தொடர் 411 ஈரெழுத்து... வல்லொற்று 417 ஈரெழுத் தொருமொழி 406 ஈறியல் மருங்கின் 171 ஈறியல் மருங்கினும் 39 உஊ... என்னும் 63 உஊ... ஔஎன 87 உஊ காரம் 74 உகர இறுதி 254 உகரமொடு புணரும் 163 உச்ச காரம் 75 உச்ச காரமொடு 79 உட்பெறு புள்ளி 14 உண்டென் கிளவி 430 உணரக் கூறிய 405 உதிமரக் கிளவி 243 உந்தி முதலா 83 உப்ப காரம் 76 உப்ப காரமொடு 80 உம்மை எஞ்சிய 223 உயர்திணைப் பெயரே 117 உயர்திணை யாயின் உருபியல் 324 உயர்திணை யாயின் நம்மிடை 190 உயிர்ஔ எஞ்சிய 69 உயிர்முன் வரினும் 207,394 உயிர்மெய் அல்லன 60 உயிர்மெய் ஈறும் 106 உயிரிறு சொல்முன் 107 உயிரீ றாகிய உயர்திணை 153 உயிரீ றாகிய முன்னிலை 151 உயிரும்... அளவும் 164 உயிரும்... குறிப்பினும் 482 உரிவரு காலை 240 உருபியல் நிலையும் 294 உருவினும் இசையினும் 40 உரைப்பொருட் கிளவி 212 ஊஎன் ஒருபெயர் 269 ஊகார இறுதி 264 எஎன வருமுயிர் 71 எகர ஒகரத் 16 எகர ஒகரம் 272 எகின்மர மாயின் 336 எஞ்சிய வெல்லாம் 77 எட்ட னொற்றே 444 எண்ணின் இறுதி 198 எண்ணுப்பெயர்க் கிளவி 419 எப்பெயர் முன்னரும் 128 எருவும் செருவும் 260 எல்லா எழுத்தும் 102 எல்லா மென்னும் 189 எல்லா மொழிக்கும் 140 எல்லாரு மென்னும் 191 எழுத்தெனப் படுப 1 எழுத்தோ ரன்ன 141 ஏஓ எனும் 73 ஏகார இறுதி 274 ஏயென் இறுதிக்கு 277 ஏழ னுருபிற்கு 201 ஏழென் கிளவி 388 ஏனவை புணரின் 381 ஏனவை வரினே 256 ஏனை எகினே 337 ஏனைப் புளிப்பெயர் 245 ஏனைமுன் வரினே 424 ஏனை வகரந் 382 ஏனை வகரம் 184 ஐஅம் பல்லென 393 ஐஒடு குஇன் 113 ஐஔ என்னும் 42 ஐகார இறுதி 280 ஐகார ஔகாரம் 137 ஐந்த... மகாரமாகும் 443 ஐந்த... முந்தையது 454 ஐந்த... மெல்லெழுத் 448 ஐந்த... யகாரமாகும் 468 ஐந்தும் மூன்றும் 451 ஐயின் முன்னரும் 127 ஒடுமரக் கிளவி 262 ஒவ்வும் அற்றே 72 ஒழிந்ததன் நிலையும் 291 ஒற்றிடை இனமிகா 412 ஒற்றுநிலை திரியா 418 ஒற்றுமிகு தகரமொடு 344 ஒன்பான் ஒகரமிசை 445 ஒன்பான் முதனிலை 463 ஒன்பா னிறுதி... மரபே 470 ஒன்பா னிறுதி... மொழியே 459 ஒன்றுமுத லாக எட்டன் 433 ஒன்றுமுத லாகப் 199 ஒன்றுமுத லாகிய 475 ஒன்றுமுத லொன்பான் 437 ஓகார இறுதி 289 ஓகார இறுதிக்கு 180 ஓரள பாகும் 57 ஓரெழுத் தொருமொழி 45 ஔகார இறுதி 295 ஔகார இறுவாய் 8 ஔவென வரூஉம் 152 ககார ஙகாரம் 89 கசதப முதலிய 143 கசதப முதன்மொழி 449 கண்ணிமை நொடியென 7 கதந பமஎனும் 61 கவவோ டியையின் 70 காரமுங் கரமும் 134 கிளந்த அல்ல 483 கிளைப்பெய... கிளைப் 338 கிளைப்பெய... கொளத் 307 கீழென் கிளவி 395 குமிழென் கிளவி 386 குயினென் கிளவி 335 குற்றிய லிகரம் 34 குற்றிய லுகரத் திறுதி 195 குற்றிய லுகரத் தின்னே 167 குற்றிய லுகரம் 67 குற்றிய லுகரமும் 105 குற்றெழுத் திம்பரும் 267 குற்றெழுத் தைந்தும் 44 குறியதன் இறுதி 234 குறியதன் முன்னர் 38 குறியதன் முன்னரும் 226 குறுமையும் நெடுமையும் 50 குறையென் கிளவி 166 குன்றிசை மொழிவயின் 41 கொடிமுன் வரினே 285 ஙஞண நமன 25 சகரக் கிளவியும் 62 சகார ஞகாரம் 90 சார்ந்துவரி னல்லது 101 சாரென் கிளவி 364 சாவ என்னும் 209 சிறப்பொடு வருவழி 349 சுட்டின் முன்னர் 205 சுட்டின் முன்னரும் 255 சுட்டி னியற்கை 238 சுட்டுச்சினை நீடிய 427 சுட்டுமுதல்... இயல்பா 257 சுட்டுமுதல்... ஒற்றிடை 263 சுட்டுமுதல்... நிலையும் 281 சுட்டுமுதல் வகரம் 183 சுட்டுமுதல் வயினும் 334 சுட்டுமுத லாகிய இகர 159 சுட்டுமுத லாகிய ஐயென் 177 சுட்டுமுத லாகிய வகர 378 சுட்டுமுத லுகரம் 176 செய்யா என்னும் 222 செய்யுள் இறுதிப் 51 செய்யுள் மருங்கின் 288 சேஎன் மரப்பெயர் 278 ஞகாரை ஒற்றிய 296 ஞணநம என்னும் 78 ஞநஎன் புள்ளிக் 182 ஞநம யவவெனும் 144 ஞநமவ இயையினும் 297 ஞநமவ என்னும் 27 டகார ணகாரம் 91 டறலள என்னும் 23 ணகார இறுதி 302 ணளவென்புள்Ë 150 ணனவென் புள்ளி 146 தகரம் வருவழி 369 தத்தம் திரிபே 88 தம்மியல் கிளப்பின் 47 தமிழென் கிளவி 385 தாம்நாம் என்னும் 188 தாயென் கிளவி 358 தாழென் கிளவி 384 தான்யான் என்னும் 192 தான்யா னெனும்பெயர் 352 தானும் பேனுங் 351 திங்கள் முன்வரின் 248 திங்களும் நாளும் 286 திரிபுவேறு கிளப்பின் 432 தேற்ற எகரமும் 273 தேனென் கிளவி 340 தொடரல் இறுதி 214 தொழிற் பெயரெல்லாம் 306, 327, 376, 401 நகர இறுதியும் 298 நமவ என்னும் 450 நாட்பெயர்க் கிளவி 331 நாயும் பலகையும் 374 நாவிளிம்பு வீங்கி 96 நாள்முன் தோன்றும் 247 நான்க னொற்றே லகார 453, 467 நான்க னொற்றே றகார 442 நான்கும் ஐந்தும் 462 நிலாவென் கிளவி 228 நிறுத்த சொல்லுங் 110 நிறையு மளவும் 436 நீஎன் ஒருபெயர் உருபியல் 253 நீஎன் பெயரும் 250 நீயென் ஒருபெயர் நெடுமுதல் 179 நீட்டம் வேண்டின் 6 நீட வருதல் 208 நும்மென் இறுதி 187 நும்மென் இறுதியும் 162 நும்மென் ஒருபெயர் 325 நுனிநா அணரி 95 நூறா யிரமுன் 471 நூறுமுன் வரினும் 460 நூறூர்ந்து வரூஉம் 392 நூறென் கிளவி 472 நெட்டெழுத் திம்பர் 196 நெட்டெழுத் திம்பரும் 36 நெட்டெழுத் தேழே 43 நெடியதன் இறுதி இயல்புமா 370 நெடியதன் முன்னர் 160 நெடியத னிறுதி இயல்பா 400 நெல்லுஞ் செல்லுங் 371 படர்க்கைப் பெயரும் 320 பத்தனொற் றுக்கெட 434 பத்தென் கிளவி 390 பதக்குமுன் வரினே 239 பல்லவை நுதலிய 174 பல்லிதழ் இயைய 98 பலரறி சொல்முன் 172 பலவற்றிறுâஉருபியš 220 பலவற் றிறுதி நீடுமொழி 213 பன்னீ ருயிரும் 59 பனியென வரூஉங் 241 பனையின் முன்னர் 284 பனையும் அரையும் 283 பனையென் அளவும் 169 பாழென் கிளவி 387 பீரென் கிளவி 365 புணரியல் நிலையிடை 35 புள்ளி ஈற்றுமுன் 138 புள்ளி யில்லா 17 புள்ளி யிறுதியும்... சொல்லிய 202 புள்ளி யிறுதியும்... வல்லெழுத் 156 புள்ளும் வள்ளும் 403 புளிமரக் கிளவிக்கு 244 பூஎன் ஒருபெயர் 268 பூல்வே லென்றா 375 பெண்டென் கிளவி 421 பெயருந் தொழிலும் 132 பெற்றம் ஆயின் 279 பொன்னென் கிளவி 356 மஃகான்... அத்தே 185 மக்க ளென்னும் 404 மகப்பெயர்க் கிளவி 218 மகர இறுதி 310 மகரத் தொடர்மொழி 82 மகன்வினை கிளப்பின் 359 மரப்பெயர்க் கிளவிக் கம்மே 415 மரப்பெயர்க் கிளவி மெல் 217 மருவின் தொகுதி 111 மழையென் கிளவி 287 மன்னுஞ் சின்னும் 333 மாமரக் கிளவியும் 231 மாறுகொள் எச்சமும் 290 மாறுகோள் எச்சமும் 275 மின்னும் பின்னும் 345 மீனென் கிளவி 339 முதலா ஏன 66 முதலீ ரெண்ணின்முன் 455 முதலீ ரெண்ணினொற்று 438 முதனிலை எண்ணின் 478 முதனிலை நீடினும் 465 முரணென் தொழிற்பெயர் 309 முற்றிய லுகரமொடு 68 முன்உயிர் வருமிடத் 423 முன்னென் கிளவி 355 மூவள பிசைத்தல் 5 மூன்றன் முதனிலை 457 மூன்ற னொற்றே நகார 461 மூன்ற னொற்றே பகார 441 மூன்ற னொற்றே வகரம் 452 மூன்ற னொற்றே வகார 466 மூன்ற னொற்றே வந்த 447 மூன்று தலையிட்ட 103 மூன்றும் நான்கும் 456 மூன்று மாறும் 440 மெய்உயிர் நீங்கின் 139 மெய்ந்நிலை சுட்டி 30 மெய்யின் அளபே 11 மெய்யின் இயக்கம் 46 மெய்யின் இயற்கை 15 மெய்யின் வழிய 18 மெய்யோ டியையினும் 10 மெல்லெழுத் தாறும் 100 மெல்லெழுத் தியையின் அவ் 380 மெல்லெழுத் தியையின் இறுதி 342 மெல்லெழுத் தியையின் ணகார 397 மெல்லெழுத் தியையின் னகார 367 மெல்லெழுத்து மிகினும் 323, 341 மெல்லெழுத்து மிகுவழி 157 மெல்லெழுத் துறழும்... உளவே 360 மெல்லெழுத் துறழும்... செல்வழி 312 மெல்லெழுத் தென்ப 20 மெல்லொற்று வலியா 416 மென்மையும் 130 மொழிப்படுத் திசைப்பினும் 53 மொழிமுத லாகும் 147 யகர இறுதி 357 யகரம் வருவழி 410 யரழ என்னும் புள்ளி 29 யரழ என்னும் மூன்றும் 48 யவமுன் வரினே 206 யாதென்... அன்னொடு 200 யாதென்... உருபியல் 422 யாமரக் கிளவியும் 229 யாவினா மொழியே 428 யாவென் வினாவின் 178 யாவென் வினாவும் 175 ரகார இறுதி 362 லகார இறுதி 366 லனவென... முன்னர் 149 லனவென... யிறுதி 481 வஃகான் மெய்கெட 122 வகரக் கிளவி 81 வகார மிசையும் 330 வடவேங்கடந் தென்குமரி சிறப்புப்பாயிரம் வண்டும் பெண்டும் 420 வரன்முறை மூன்றும் 136 வல்லெழுத் தியற்கை 215 வல்லெழுத்து... மில்லை 230 வல்லெழுத்து... மில்லை ஒல்வழி 246 வல்லெழுத்து முதலிய 114 வல்லெழுத் தென்ப 19 வல்லென் கிளவி 373 வல்லொற்றுத்... மிகுமே 426 வல்லொற்றுத்... வருவழி 409 வளியென வரூஉம் 242 வன்றொடர் மொழியும் 414 வாழிய என்னும் 211 விசைமரக் கிளவியும் 282 விண்ணென வரூஉம் 305 வினையெஞ்சு கிளவிக்கும் 265 வினையெஞ்சு கிளவியும் 204 வெயிலென் கிளவி 377 வெரிந்என் இறுதி 300 வேற்றுமைக்கண்... ஒகரம் 292 வேற்றுமைக் கண்ணும் 216, 225, 252, 259, 266, 276, வேற்றுமைக் கண்ணும் வல் 148 வேற்றுமைக்கு உக்கெட 299 வேற்றுமை குறித்த 112 வேற்றுமை யல்வழி ஆய்த 379 வேற்றுமை யல்வழி இ ஐ 158 வேற்றுமை யல்வழி எண்ணென் 308 வேற்றுமை யல்வழிக் குறுகலு 353 வேற்றுமை யாயின்... தோற்றம் 329 வேற்றுமை யாயின்... யெகினொடு 346 வேற்றுமை வழிய 116 ழகர உகரம் 261 ழகார இறுதி 383 ளகார இறுதி 396 னஃகான் றஃகான் 123 னகார இறுதி 332 னகார இறுவாய்ப் 9 னகாரை முன்னர் 52 சொல் நிரல் மேற்கோள் (நூற்பா எண்) அ அஃகம் 38 அஃகாமை 38 அஃகி 38 அஃது 38 அகங்கை 315 அகத்தியனார் 45 அங்கை 315 அச்சோ 75 அஞ்ஞாண் 205, 380 அஞ்ஞை 73 அடை 59, 320, 352 அடைந்தார் 321 அடைந்தான் 155 அடைந்தீர் 321, 326 அடைதும் 321 அடையும் 322 அடைவு 337 அடைவேம் 321 அத 77 அதவத்துக்கண் 133 அதள் 411 அதன்று 258 அதனை 176 அதினை 176 அது 77 அந்தை 170 அந்தோ 77 அப்பு 30 அம்மி 77 அம்மு 328 அம்மை 30 அரசரும் 323 அரவு 45 அவ் 81 அவற்றை 183 அவன் 117 அவன்கண் 114 அவையற்றிற்கு 177 அவையற்றை 122, 177 அழக்குடம் 354 அழகு 144, 155 அழத்தை 193 அழன் 82 அழாந்தை 348 அன்னை 77 அன்னோ 77 அனந்தா 163 அனை 22 ஆ ஆஅ 6 ஆஅங்கு 41 ஆஅவது 41 ஆக்கம் 144 ஆங்கண் 114 ஆடிக்கு 119 ஆடை 59 ஆதா 163 ஆந்தை 348 ஆப்பி 233 ஆம்பல் 22 ஆமணக்கு 406 ஆய்க 29 ஆய்ஞர் 29 ஆய்தல் 29 ஆய்நர் 29 ஆய்பவை29 ஆயிற்று 114 ஆர்க்கு 407 ஆர்க 29 ஆர்தல் 29 ஆர்நர் 29 ஆர்ப்பு 48 ஆர்பவை 29 ஆல் 53, 103 ஆவிற்கு 120 ஆவின்கண் 120 ஆவினது 120 ஆவினின் 120 ஆவினை 120 ஆவினொடு 120 ஆழ்க 29 ஆழ்ஞர் 29 ஆழ்தல் 29 ஆழ்பவை 29 ஆறாயிரம் 469 ஆன்கண் 120 ஆனது 120MÅ‹ 120 ஆனெய் 232 ஆனை 120 ஆனொடு 120ï இஃகடிய 379 இஃது 38 இகலா 163 இங்கு 36 இடா 170 இடையன் 57 இதன்று 258ïjid 176, 200 இது 117 இரவு 176 இருநூற்றொருபஃது 473 இருநூற்றொன்று 472 இருநூறாயிரம் 471 இருநூறு 460 இருபஃது 199 இருபத்திரண்டு 475 இருபத்தொன்று 475 இருபதினாயிரத்தொன்று 318 இருபதினாயிரம் 476 இல் 53 இல்லவற்றை 174 இல்லை 144 இலை 59, 103 இவ் 81 இவற்றை 183 இவன் 117 இவையற்றை 122, 177 இளமை 144 ஈ ஈஇ 6 . 114 ஈங்கே 77 ஈட்டம் 144 ஈண்டிற்று 144 ஈயம் 59 ஈயினை 202 ஈர் 53 ஈர்க்கு 407 ஈராயிரம் 465 உ உஃது 38 உகிர் 414 உங்கை 325 உசா 75 உசு 75 உடையான்53 உண் 53 உண்கா 32 உண்கு 153 உண்கே 32 உண்கோ 32 உண்டீர் 153 உண்டு 144, 153 உண்டேன் 153 உண்ணும் 33 உண்பல் 153 உண்புழி 140 உண்பேன் 153 உணவு 176 உணீ 77 உதன்று 258 உதனொடு 176, 200 உப்பு 76 உயர்வு 144 உரிஞ் 78, 80 உரிஞ 73 உரிஞா 73 உரிஞி 73 உரிஞினை 182 உரிஞீ 73 உரிஞு 73 உரிஞோ 73 உருமினை 186 உவ் 81 உவ 74 உவற்றை 183 உவன் 117 உவா 74 உவையற்றை 122, 177 உழக்கு 170 உழுந்தா 163 உள்ளவற்றை 174 உள்ளா 77 உள 77 உளு 77 உளை 59 உறி 77 உறீ 77 உறூ 77 ஊ ஊக்கத்தது 144 ஊங்கண் 114 ஊர்க்கண் 114 ஊர்க்கு 114 ஊர்தி 59 ஊர 210 ஊரா 163 ஊராகேள் 224 ஊவின்குறை 270 ஊற்றம் 144 ஊறிற்று 144 எ எஃகு 406 எகின் 82 எகினத்தை 193 எங்கண் 114, 188 எங்கை 310, 320 எங்கோ 37 எங்ஙனம் 30 எஞ்சா 75 எஞ்சி 75 எண் 53 எண்கு 26 எண்ணா 77 எண்ணாயிரம் 471 எண்ணூறு 460 எண்பஃது 444 எம்மை 161, 188 எயினா 163 எல்லார்க்கும் 191 எல்லாவற்றையும் 189 எல்லி 30 எவ்வி 30 எவற்றை 122 எவற்றொடு 122 எழு 59 எழுச்சி 144 எழுந்தது 144 எழுநூறாயிரம் 392 எழுபஃது 390 எள்ளூ 77 எற்றோ 77 என்னே 77 என்னை 161, 192 எனது 115 ஏ ஏஎ 6 ஏணி 59 ஏது 36 ஏய்ந்தது 144 ஏர் 53 ஏழாயிரம் 391, 392 ஏறா 63 ஐ ஐஇ 6 ஐது 144 ஐந்நூறு 462 ஐநூறாயிரம் 471 ஐப்பசி 57 ஐம்பஃது 443 ஐயம் 144 ஐயா 163 ஐயை 77 ஐயோ 77 ஒ ஒருபஃதனை 199 ஒருபஃது 438 ஒருபது 437 ஒருவர் 74 ஒருவா 74 ஒருவி 74 ஒருவீ 74 ஒருவேன் 153 ஒல் 53 ஒழிவு 144 ஒழுக்கா 163 ஒளி 59 ஒன்றனை 198 ஒன்று 144 ஓ ஓஒ 6 ஓக்கம் 144 ஓங்கிற்று 144 ஓடம் 59, 82 ஓதா 163 ஓய்வு 29 ஓய்வோர் 29 ஓர் 53 ஔ ஔஉ 6 ஔவித்தான் 155 ஔவியம் 59, 144, 155 ஔவியா 163 ஔவை 55, 57, 74 க கஃசு 38 கஃடு 38 கஃது 38 கஃபு 38 கஃறு 38 கங்கன் 25 கச்சு 75 கச்சை 75 கஞ்சன் 25 கட்க 23 கட்சி 23 கட்ட 77 கட்ப 23 கடம் 53, 82 கடா 77 கடாஅ 41 கடாம் 53 கடான் 82 கடிகா 158 கடு 144 கடுக்காய் 259 கண்டன் 25 கண்ணி 77 கணு 77 கத்து 68 கதவு 74, 176 கந்தன் 25 கப்பி 14 கம்பன் 25 கம்பி 14 கம்பு 25 கம 77 கரியதனை 195 கரியவற்றை 178 கரு 22, 27 கருது 22 கல் 53 கல்லை 202 கலம் 82; 120 கலரை 171 கலை 61, 77 கவ்வு 74 கழஞ்சு 170 கழையினை 202 கள்வன் 74 கள்ளி 30 களை 77 கற்க 23 கற்ப 23 கற்றா 77 கற்றை 77 கன்று 25 கன்னி 30 கனவு 176 கனா 77 கா 43, 69 காக்கை 22 காசு 196 காட்டின்கண் 210 காது 68 காய்ந்தனம் 48 காயா 77 கார் 49,61 கிழக்கின் 201 கிழக்கின்கண் 201 கிளி 69 கீரி 61 கீழ்மை 29 குச்சு 75 குட்டம் 82 குடி 161 குயின் 82 குரங்கு 406 குரவு 45 குரீஇ 77, 144 குலம் 82 குவவு 74 குவளை 57 குளம் 82 குறியரும் 323 குறியவற்றை 178 கூடு 61 கூழ் 210 கெண்டை 61 கேண்மியா 12, 34 கேழல் 61 கேள் 210 கை 57, 69, 144 கைதை 61 கைப்பை 57 கொக்கு 406 கொண்டல் 61 கொண்மூ 77 கொய்யூ 77 கொல்லூ 77 கொள்க 23 கொற்றன் 45, 17 கொற்றி 30, 117, 155 கொற்றிக்கு 114 கொற்றிகண் 114 கோ 43, 69 கோஒனை 180 கோடை 61 கோதைக்கு 114 கோதைகண் 114 கோள் 144 கோன் 53 கௌ 43, 70, 144 ச சகடம் 62 சட்டி 62 சமழ்ப்பு 62 சாடி 170 சாத்தற்கு 116 சாத்தன்கண் 116 சாத்தன்கை 108 சாத்தனது 116 சாத்தனின் 116 சாத்தனை 116 சாத்தனொடு 116 சாத்தி 155 சாந்து 62 சாமை 239 சாலை 273 சாறு 245 சான்றார் 153 சான்றீர் 353 சில 77 சிலச்சில 215 சிலசில 215 சிலப்பதிகாரம் 414 சிறிது 143 சிறியர் 323 சிறியரும் 323 சிறியவும் 233 சிறியன் 155 சிறியீர் 326 சிறியேன் 353 சிறுமை 296, 327, 368 சிறை 261, 366 சீரகம் 170 சீற்றம் 62 சுக்கு 240 சுண்ணாம்பு 406 சுரை 62 சூரல் 62 சூழ் 53 செக்கு 62 செகின் 82 செகு 77 செதிள் 129, 143 செம்மு 77 செய 77 செரு 359 செல் 53 செல்க 23 செல்ப 23 செல்லும் 333 செல்வம் 24 செலவு 176 செவ்வி 74 செவி 155 செவியும் 324 செறுத்தான் 157 செறுவின்கண் 210 சென்மியா 34 சென்றான் 287, 331, 334 சே 43, 69, 75, 144 சேர்ஞர் 29 சேர்வது 29 சேரி 338 சேவல் 62 சேவின் 131 சேறு 153 சேனை 214, 260 சொல் 53 சோ 75, 144 சோர்வு 9 சோர்வோர் 29 சோலை 268 சோறு 62 ஞ ஞாட்சி 144, 155 ஞாலம் 64, 382, 476 ஞாற்சி 298, 299, 329, 346 ஞான்றது 144 ஞான்றாள் 155 ஞான்றான் 155 ஞான்றேன் 353 ஞெகிழ்ந்தது 144 ஞெண்டு 64 ஞெள்ளா 151 ஞொள்கிற்று 64, 144 த தகர் 210 தகர்த்தான் 209 தங்கண் 114 தங்கை 310, 320 தச்சரும் 323 தத்தை 30 தந்தான் 187, 331, 334, 402 தந்தை 61,77 தம்மை 161, 188 தமது 115 தமிழ்நாடு 385 தயிர் 245 தரவு 176 தருக்கு 36 தரும் 333 தரூஉம் 260 தலை 115 தலையும் 322, 324 தழூஉவின் 131 தன்னை 161, 192 தனது 115 தா 210 தாது 260 தாமம் 268 தாய் 61 தார் 50 தாரா 77 தாழ்ச்சி 48 தாழ்த்தல் 48 தாழ்ப்பு 48 தானை 260, 261, 309 திருச்சிற்றம்பலம் 45 திரும் 78 திருமினை 185 திருவாரூர் 53 தினையினை 202 தீ 43, 69 தீக்கு 114 தீண்டப்பட்டான் 156 தீது 143 தீமை 61 தீய 321 தீயர் 321 தீயரும் 323 தீயவும் 322, 323 தீயள் 155 தீயன் 155 தீயினை 202 தீயீர் 321, 326 தீயேன் 353 து 44 துஞ்ச 75 துடி 372, 478 துணங்கை 22 துணி 61 துப்பா 76 துரவு 74 துலாத்தை 174 துலாம் 319 துளை 277 துறத்தல் 359 துன்னூ 77 துனீ 7 தூஉக்குறை 267 தூணி 61 தூதுணங்காய் 283 தூதை 170 தெங்கங்காய் 415 தெங்கு 25 தெய்வம் 29 தெருட்டு 68 தெவ் 78, 81, 144 தெள்கு 406 தெற்கண் 201 தெற்கின்கண் 201 தெற்றி 61 தென்கிழக்கு 432 தென்குமரி 432 தென்சுரம் 432 தென்புடை 201 தென்மேற்கு 432 தென்னிலங்கை 432 தேக்குடம் 340 தேங்குடம் 341 தேஞ்ஞெரி 342 தேஞெரி 342 தேத்தடை 344 தேத்திறால் 344 தேத்தீ 344 தேநுனி 342 தேமொழி 342 தேய்ஞ்சது 48 தேர்க்கால் 156 தேவன் 255 தேவா 151 தேற்குடம் 340 தேன் 53, 61 தேன்குடம் 340 தேன்ஞெரி 342 தேனடை 344 தேனிறால் 343 தேனீ 344 தை 43 தையல் 61 தொடி 170 தொண்டை 61 தொண்ணூறு 445 தொழ 77 தொள்ளாயிரம் 463 தோட்டம் 338, 395 தோடு 61 தோரை 239, 240, 314 தோல் 143 தோற்றம் 266, 335 தெளவை 61 ந நங்கண் 158 நங்கை 320 நண்ணூ 77 நந்து 61 நப்புணர்வு 157 நம்பி 76 நம்மை 161, 188 நமது 115 நலம் 82 நன 77 நா 45, 74 நாகணை 171 நாகா 151 நாகினை 195 நாகு 12 நாய் 58 நாரினை 202 நாரை 61, 77, 202 நாலாயிரம் 467 நாழி 77, 170 நாற்பஃது 472 நானூறாயிரம் 471 நானூறு 451 நிணம் 411 நிலம் 61 நிலாத்தை 174 நிறுத்தினான் 287, 331 நிறை 170 நின்கை 253 நின்னை 161, 179 நீட்சி 144 நீட்சியும் 324 நீட்டிப்பு 144 நீடிற்று 144 நீண்டது 344 நீண்டாம் 321 நீண்டார் 321, 326 நீண்டாள் 155 நீண்டான் 153 நீண்டீர் 321, 326 நீலம் 61 நுகத்தை 185 நுகம் 61 நுங்கண் 114, 187, நுங்கை 320, 325 நுந்தை 67 நுந்தையது 144 நும்மை 187 நுமக்கு 162 நுமது 115, 162 நுனி 130, 145 நூல் 61 நூலும் 322 நூற்றுத்தொண்ணூறு 472 நூற்றுப்பத்து 472 நூற்றொருபஃது 473 நூற்றொருபதினாயிரம் 476 நூற்றொன்று 472 நூறாயிரத்தொருபத்தீராயிரம் 476 நெடியவற்றை 178 நெய்தல் 61 நெய்யகல் 160 நெருப்பு 329 நெற்கதிர் 366 நே 74 நேர்மை 29 நைவளம் 61 நொ 44 நொச்சி 61 நொவ்வு 74 நோ 74 நோக்கம் 61 நௌவி 61 ப பகைத்தல் 359 பச்சை 30 பசு 75 பட்டை 30 படாஅகை 41 படூ 77 படூஉம் 260 படை 61, 77 பண்பு 26 பதி 77 பதிற்றொன்று 436 பதின்மூன்று 443 பதினாயிரத்திருபஃது 110 பதினாயிரத்தொன்று 110 பதினாயிரம் 485 பதினாறு 433 பதினான்கு 433 பதினெட்டு 433 பதினேழ் 433 பதினைந்து 433 பதினொன்று 433 பந்து 25 பப்பத்து 482 பயற்றங்காய் 415 பயறு 314 பயின் 82 பரசு 36 பரி 77 பருத்தி 158 பல்பல 215 பல்லவற்றிற்கு 177 பல்லவற்றின்கண் 177 பல்லவற்றை 174 பலப்பல 215 பலபல 215 பலம் 170 பலவற்றோடு 132 பலா 77, 144 பலாவினை 173 பற்பல 215 பறை 260, 309, 478, 214 பறைவு 335 பன்றி 210 பனங்காய் 283 பனாஅட்டு 284 பாடம் 82 பாடி 338 பாய்த்தல் 48 பாயப்பட்டான் 156 பார்ப்பார் 153 பார்ப்பாரும் 323 பார்ப்பீர் 153 பால் 61 பாலாழி 138 பாழ்க்கிணறு 387 பாழ்ங்கிணறு 387 பாளிதம் 239 பாளை 70 பிஞ்சு 25 பிடி 61 பிண்ணாக்கு 406 பிள்ளை 338 பீடு 61 பீர்க்கு 48 புகா 77 புகழ் 49, 61 புகாஅர்த்து 41 புகீ 77 புகூ 77 புடைத்தான் 209 புடோலங்காய் 405 புண்கை 302 புணர்வு 74, 176 புலம் 82 புலவர் 49 புலைக்கொற்றன் 158 புழுங்கற்சோறு 465 புழன் 82 புழனினை 193 புழாந்தை 348 புழை 277 புளியிலை 130 புன்கு 26 புன்செய் 26 புன்வரகு 26 பூக்கொடி 268 பூங்கொடி 268 பூ 43, 69 பூதன் 255 பூந்தை 348 பூமி 61 பூழ்க்கு 114 பூழனை 194 பூழி 260 பெடை 61 பெரிது 143 பெரிய 321 பெரியர் 321 பெரியரும் 323 பெரியவும் 322, 323 பெரியள் 155 பெரியன் 155 பெரியீர் 321, 326 பெரியேன் 353 பெருமை 296, 299, 327, 328 345, 368, 373, 374 376, 382, 398, 401 பே 76 பேடை 61 பைதல் 61 பொருள் 372 போது 61 போம் 333 போயினான் 287, 331, 334, 377, 402 போரின்கண் 210 போன்ம் 13, 51 பௌவம் 61 ம மகத்தை 174 மங்கை 77 மட்குடம் 109 மடி 61, 77 மடீ 77 மடு 77 மண் 78, 147 மண்டை 170 மண்ணினை 202 மண்ணை 30 மணி 45 மணிக்கண் 114 மணிக்கு 114 மணியகாரர் 323 மணியகாரரும் 323 மணியும் 322 மரத்தை 185 மரம் 103, 144 மழகளிறு 312 மன்றன் 25 மா 170 மாட்சி 297, 299, 328, 329 337, 345, 346, 373 376, 382, 401, 403 மாட்டினான் 287 மாடா 151 மாண்டது 144 மாண்டான் 155 மாண்டீர் 326 மாண்டேன் 353 மாந்தர் 338 மாய்ந்தான் 331 மாலை 61 மாவிற்கு 120 மாவின்கோடு 120 மாவினை 120 மாவினொடு 120 மாற்கு 120 மான்கோடு 231 மானை 120 மிடறு 61 மீ 77 மீளி 61 முகம் 61 முசு 75 முந்நூறாயிரம் 471 முந்நூறு 461 முப்பஃது 441 முயிற்றை 197 முரி 130, 145 முருக்கு 68 முவ்வாயிரம் 466 முள் 53 முள்ளினை 202 முன்றில் 111, 355 முன்னு 77 மூசி 75 மூசூ 75 மூப்பு 61 மூழக்கு 457 மூழாக்கு 457 மெலிவு 61 மேனி 61 மையல் 61 மொய்ம்பு 407 மோத்தை 61 மௌவல் 61 ய யவனர் 65 யாட்டை 196 யாடு 65 யாத்தார் 321 யாத்தான் 209 யாத்தீர் 326 யாதன்கோடு 422 யாதனை 200 யாது 144 யாப்பு 144, 155 யாமம் 65 யாமை 77 யாவது 172 யாவற்றோடு 230 யாவன் 155 யாழ் 130 யாழனை 194 யாழின்கோடு 405 யாற்றை 196 யானை 65 யுத்தி 65 யூபம் 65 வ வட்டம் 82 வட்டி 170 வட்டில் 319 வட்டு 130 வடக்கண் 201 வடக்கின்கண் 201 வடசார் 201 வடுகா 151 வண்டு 25 வதீ 77 வந்தான் 287, 331 வயான் 82 வர 77 வரகினை 195 வரகு 45 வரவு 176 வருக 77 வருது 153 வரூஉம் 260 வரை 170 வல்சி 23 வல்லே 77 வலம் 82 வலி 77 வலிது 144 வலிமை 328, 337, 345, 346 வலியன் 353 வலியேன் 353 வலீ 77 வலு 77 வழீ 77 வழுதுணை 285 வளம் 82 வளை 63 வன்மை 26 வன்னி 77 வாட்கு 114 வாடினீர் 326 வாய்ச்சி 48 வாய்ப்பு 48 வாய்மை 29 வார்த்தல் 48 வாழ்க்கை 48 வாழ்ந்தனம் 48 வாழ்வது 29 வாழ்வோர் 29 வாளி 63 வானம் 372 விரற்றீது 160 விராஅயது 41 வில் 22, 53 விழன் 82 விழன்காடு 405 விழா 77 விள 103, 144 விளரி 63 வீ 74 வீடு 63 வீழ் 49, 78 வீழ்ங்ஙனம் 29 வீழ்ந்தான் 209 வெஃகாமை 38 வெஃகி 38 வெண்மை 26 வெந்நெய் 30 வெய்யர் 30 வெரிந் 79, 144 வெரூ 77 வெள்ளி 63, 77 வெற்றடி 482 வெற்றிலை 482 வே 74 வேட்கை 63 வேய் 78, 144 வேய்க்கு 114 வேயை 202 வேர் 78, 144 வேல் 78, 144 வேளாண் 338 வேற்கு 114 வை 74 வையம் 63 வௌவின் 131 வௌவினை 173 வௌவுதல் 63 சொற்றொடர் நிரல் மேற்கோள் (நூற்பா எண்) அ அஃகடிய 379 அஃதடைவு 423 அஃதொட்டம் 423 அக்காற் கொண்டான் 368 அக் குறிது 203 அக்கொற்றன் 31 அங்கட் கொண்டான் 307 அங்காக் கொண்டான் 231 அங்குக் கொண்டான் 429 அண்ணணிக்கொண்டான் 246 அண்ணாஅத்தேரி 133 அணிக்கொண்டான் 236 அத்தாற்கொண்டான் 368 அதக் குறிது 203 அதங்கோடு 217 அதன்கோடு 263, 422 அதுகடிது 424 அதுகுறிது 257 அதுசெல்க 210 அதோட்கொண்டான் 398 அதோளிக்கொண்டான் 159 அந்நூல் 205 அம்பர்க்கொண்டான் 405 அம்மகொற்றா 210 அம்மணி 205 அமைங்கோடு 286 அயிர்ங்கோடு 363 அரசக்கன்னி 153 அரட்கடுமை 309 அரண்கடுமை 309 அரவுயர்கொடி 234 அராஅப்பாம்பு 223 அராக்குட்டி 223 அரையங்கோடு 283 அலிக்கொற்றன் 158 அவ்யாழ் 206, 381 அவ்வடை 160, 207 அவ்வயிற்கொண்டான் 334 அவ்வழகிது 207 அவ்வழிக்கொண்டான் 159 அவ்வழிகொண்டான் 159 அவ்வளை 206 அவ்வளைந்தது 206 அவ்வாடை 160, 207 அவ்வாய்க் கொண்டான் 361 அவ்விலை 207 அவ்வீயம் 207 அவ்வுரல் 207 அவ்வூர்தி 207 அவ்வெழு 207 அவ்வேணி 207 அவ்வையம் 207 அவ்வொழுக்கம் 207 அவ்வோடை 207 அவ்வௌவியம் 207 அவட்கொண்டான் 307 அவர்செல்க 210 அவர்யார் 172 அவர்யாவர் 172 அவருள் இவனேகொண்டான் 275 அவள்செல்க 210 அவற்றின்கோடு 378 அவற்றுக்கோடு 112, 133, 378 அவன் அழகியன் 153 அவன் ஆடினான் 153 அவன் உண்மன 210 அவன் ஔவியத்தான் 153 அவன் சிறியன் 153 அவன் செல்க 210 அவன் ஞான்றான் 153 அவன் நீண்டான் 153 அவன் பெரியன் 153 அவன் மாண்டான் 153 அவன் யாவன் 153 அவன் வலியன் 153 அவனில்லை 372 அவனோஓகொடியன் 273 அவைசெல்க 210 அவையத்துக்கொண்டான் 286 அவையற்றுக்கோடு 281 அவையிற்கொண்டான் 286 அழகிது 144 அழலத்துக்கொண்டான் 405 அளவினிற்றிரியாது 131 அற்றைக்கூத்தர் 425 அறாயிரம் 469 அறுகல் 478 அறுகலம் 449 அறுகழஞ்சு 449 அறுநூறாயிரம் 471 அறுநூறு 460 அறுமா 480 அன்றுகொண்டான் 429 அன்றைக்கூத்தர் 159 ஆ ஆகுறிது 224 ஆங்கட்கொண்டான் 307 ஆங்கவைக்கொண்டான் 159 ஆங்கவைகொண்டான் 159 ஆங்குக்கொண்டான் 427 ஆசீவகப்பள்ளி 153 ஆடரங்கு 482 ஆடிக்குக்கொண்டான் 126 ஆடுபோர் 314 ஆடூஉக்கை 267 ஆடூஉவின்கை 118 ஆடைவெள்ளவிளர்த்தது 482 ஆண்கடிது 303 ஆண்கை 303 ஆண்டுசென்றான் 427 ஆண்டைக்கொண்டான் 159 ஆணங்கோடு 231, 304 ஆணநார் 304 ஆதந்தை 348 ஆய்தப்புள்ளி 314 ஆய்தவுலக்கை 314 ஆயிடைக்கொண்டான் 159 ஆயிடைகொண்டான் 159 ஆயிரங்கலம் 319 ஆயிரத்துக்குறை 317 ஆயிரத்தொருபஃது 110 ஆயிரத்தொன்று 317 ஆயிரப்பத்து 317 ஆயிருதிணை 140, 208 ஆயிருபால் 208 ஆரங்கண்ணி 363 ஆல்வீழ்ந்தது 107 ஆலங்கோடு 375 ஆலஞெரி 375 ஆலிலை 107, 138 ஆவலிது 107 ஆவிரங்கோடு 283 ஆவிரையின்கோடு 285 ஆவின்கோடு 120 ஆழாக்கின்குறை 167 ஆறகல் 458 ஆறாகுவதே 469 ஆறுகல் 478 ஆறு நூறாயிரம் 471 ஆறுமா 480 ஆன்கொண்டான் 333 ஆன்கோடு 120 ஆன்பி 233 ஆன்மணி 232 ஆன்வால் 232 இ இஃதடை 423 இக்கிடந்தது மக்கட்டலை 404 இக்கொற்றன் 31 இங்கட்கொண்டான் 307 இங்காக்கொண்டான் 231 இங்குக்கொண்டான் 429 இஞ்ஞான்று 238 இடாஅவினுட்கொண்டான் 226 இத்தாற்கொண்டான் 368 இதழ்ஞெரி 145 இதன்கோடு 263, 422 இதுகடிது 424 இதுகுறிது 257 இதைமாற்றம் 258 இதோட்கொண்டான் 398 இதோளிக்கொண்டான் 159 இம்பர்க்கொண்டான் 405 இரண்டன்காயம் 419 இரண்டு நூற்றொன்று 472 இரண்டு நூறாயிரம் 471 இரண்டுமா 480 இராஅக்காக்கை 223, 227 இராஅக்கூத்து 227 இராஅக்கொடிது 223 இராஅப்பகல் 223 இராக்கொண்டான் 227 இராவிற்கொண்டான் 230 இருகடல் 439 இருகலம் 446 இருகழஞ்சு 446 இருகால் 446 இருந்துகொண்டான் 427 இருநாடுரி 240 இருநான்கு 446 இருநூற்றுக்கலம் 474 இருபதிற்றுக்கலம் 477 இருபிறப்பு 439 இருமா 480 இருமுக்கால் 446 இருமுந்திரிகை 446 இருமூன்று 446 இருவிளக்குறுமை 216 இருவிளக்கொற்றன் 216 இருவினை 439 இருவேநம்மையும் 191 இருளத்துக்கொண்டான் 133 இருளத்துஞான்றான் 402 இருளிற்கொண்டான் 402 இருளின்ஞான்றான் 402 இல்லகுதிரை 210 இல்லங்கோடு 313 இல்லாக்கொற்றன் 372 இல்லைக்கொற்றன் 372 இல்லைகொற்றன் 372 இல்லைஞாண் 372 இலம் யாரிடத்தது 316 இலம் வருவது போலும் 316 இவ்யாழ் 381 இவ்வயிற்கொண்டான் 334 இவ்வாய்க்கொண்டான் 361 இவட்கொண்டான் 307 இவற்றின்கோடு 378 இவற்றுக்கோடு 378 இவையற்றுக்கோடு 281 இற்றைக்கூத்தர் 425 இறவுப்புறம் 234 இறாஅ வழுதுணங்காய் 223 இறைவநெடுவேட்டுவர் 153 இன்யாழ் 26 இன்றுகொண்டான் 429 இன்னினிக்கொண்டான் 246 இனிக்கொண்டான் 236 ஈ ஈக்கடிது 249 ஈக்கால் 252 ஈங்கட்கொண்டான் 307 ஈங்குக்கொண்டான் 427 ஈச்சங்குலை 416 ஈண்டைக்கொண்டான் 159 ஈமக்குடம் 128 ஈமடைந்தது 328 ஈமடைவு 328 ஈர்க்கொற்றா 151 ஈர்கொற்றா 151 ஈர்ங்கோதை 363 ஈரகல் 455 உ உஃகடிய 379 உஃதடை 423 உக்கொற்றன் 31 உங்கட்கொண்டான் 307 உங்காக்கொண்டான் 231 உங்குக்கொண்டான் 429 உசிலங்கோடு 405 உஞ்ஞாண் 256, 380 உடூஉக்குறை 267 உடூஉவின்றலை 270 உடைங்கோடு 286 உண்காகொற்றா 224 உண்டகுதிரை 210 உண்ட சாத்தன் வந்தான் 110 உண்டனகுதிரை 210 உண்டனெஞ்சான்றேம் 153 உண்டுசாக்காடு 430 உண்டுஞானம் 430 உண்டுதாமரை 430 உண்டுபொருள் 430 உண்டு வந்தான் சாத்தன் 110 உண்டேநாம் 153 உண்ணாக்கொண்டான் 222 உண்ணாக்கொற்றன் 222 உண்ணாகுதிரைகள் 224 உண்ணாதகுதிரை 210 உண்ணியகொண்டான் 210 உண்ணுஞ்சாத்தன் 314 உண்ணூக்கொண்டான் 265 உண்மனகுதிரை 210 உணச்சென்றான் 204 உதட்கோடு 400 உதணன்று 400 உதள்கடிது 400 உதன்கோடு 263 உதுக்காண் 263 உதுகடிது 424 உதுகுறிது 257 உதைமற்றம்ம 258 உதோட்கொண்டான் 398 உதோளிக்கொண்டான் 159 உந்நூல் 256 உம்பர்க்கொண்டான் 405 உம்மணி 256 உமண்குடி 307 உய்த்துக்கொண்டான் 427 உரிக்காயம் 240 உரிக்குறை 166 உரிக்கூறு 166 உரிஞ் அடைவு 144 உரிஞ் அழகிது 144 உரிஞ் ஆக்கம் 144 உரிஞ் ஆயிற்று 144 உரிஞ்ஞெகிழ்ச்சி 144 உரிஞ்ஞெகிழ்ந்தது 144 உரிஞ் நீட்டிப்பு 144 உரிஞ் நீடிற்று 144 உரிஞ் யாது 163 உரிஞுக்கடிது 296 உரிஞுக்கடுமை 296 உரிஞுகொற்றா 152 உரிஞுஞான்றது 296 உரிஞுஞெள்ளா 171 உருமுக்கடிது 328 உருமுக்கடுமை 328 உவ்யாழ் 256, 381 உவ்வட்டு 256 உவ்வடை 256 உவ்வயிற்கொண்டான் 334 உவ்வாடை 256 உவ்வாய்க்கொண்டான் 361 உவட்கொண்டான் 307 உவற்றின்கோடு 378 உவற்றுக்கோடு 378 உவாஅத்துஞான்று கொண்டான் 226 உவாஅப்பட்டினி 223 உவாஅப்பதினான்கு 223 உவாஅதாற்கொண்டான் 226 உவையற்றுக்கோடு 281 உழக்கரை 165 உழக்கிற்குறை 167 உழக்கின்குறை 167 உழக்கேயாழாக்கு 164 உழைங்கோடு 286 உழையின்கோடு 285 உள்பொருள் 430 உள்ளகுதிரை 210 உள்ளுக்கொற்றா 171 உள்ளுகொற்றா 171 ஊங்கட்கொண்டான் 307 ஊங்குக்கொண்டான் 427 ஊண்டைக்கொண்டான் 159 ஊர்க்குச்சென்றான் 202 ஊன்குறை 269 ஊனக்குறை 270 எ எஃகியாது 35 எஃகுகடிது 425 எஃகுகடுமை 413 எகின்சேவல் 337 எகினக்கால் 337 எகினங்கால் 337 எகினங்கோடு 336 எகினச்சேவல் 337 எகினஞாற்சி 337 எங்கட்கொண்டான் 307 எங்காக்கொண்டான் 231 எங்குக்கொண்டான் 429 எஞ்ஞாண் 320 எட்கடிது 308 எட்குக்குட்டி 414 எட்டிப்பூ 154 எட்டுக்கல் 478 எட்டுஞாண் 478 எட்டுநூறாயிரம் 471 எட்டுமா 480 எண்கலம் 450 எண்கழஞ்சு 450 எண்ஞாண் 478 எண்ணகல் 450 எண்ணநோலை 307 எண்ணாழி 450 எண்ணில்குணம் 372 எண்ணுப்பாறு 306 எண்ணுழக்கு 450 எண்மா 480 எத்தாற்கொண்டான் 368 எதோட்கொண்டான் 398 எதோளிக்கொண்டான் 159 எப்பொருள் 31 எம்பர்க்கொண்டான் 405 எயின்குடி 338 எயின்வந்தது 338 எயினக்கன்னி 338 எயினவாழ்வு 338 எருக்குழி 260 எருங்குழி 260 எருவங்குழி 260 எருவஞாற்சி 260 எருவின்குறுமை 260 எல்லா அடையும் 322 எல்லாக்குறியவும் 322 எல்லாக்கொல்லாரும் 323 எல்லாங்குறியம் 323 எல்லாங்குறியர் 323 எல்லாங்குறியரும் 323 எல்லாங்குறியவும் 323 எல்லாங்குறியீர் 323 எல்லாஞாணும் 322 எல்லாஞான்றாரும் 323 எல்லாநங்கணும் 190 எல்லாநஞ்ஞாற்சியும் 324 எல்லாம்வந்தேம் 323 எல்லாம்வாடின 322 எல்லாயாழும் 322 எல்லார்கையும் 320 எல்லார்தங்கையும் 320 எல்லார்தஞ்ஞாணும் 320 எல்லார்தம்மணியும் 320 எல்லார்தம்மையும் 191 எல்லார்தமக்கும் 161 எல்லார்தமதும் 161 எல்லார்நமக்கும் 161 எல்லாருங்குறியர் 321 எல்லாருஞ்ஞான்றார் 321 எல்லாரும்வந்தார் 321 எல்லாவற்றுக்கோடும் 322 எல்லாவற்றுஞாணும் 322 எல்லாவற்றுயாப்பும் 322 எல்லீர்கையும் 320 எல்லீர்நுங்கையும் 320 எல்லீர்நுஞ்ஞாணும் 320 எல்லீர்நும்மணியும் 320 எல்லீர்நும்மையும் 191 எல்லீர்நுமக்கும் 161 எல்லீருங்குறியீர் 321 எல்லீருஞ்ஞான்றீர் 321 எல்லீரும்வந்தீர் 321 எலியாலங்காய் 405 எவ்வயிற்கொண்டான் 334 எவ்வாய்க்கொண்டான் 361 எவட்கொண்டான் 307 எழுகடல் 389 எழுகலம் 389 எழுகழஞ்சு 389 எழுஞாயிறு 392 எழுநாள் 392 எழுநான்கு 389 எழுமூன்று 389 எழுவகை 392 எழுவின்புறம் 263 எள்ளழகிது 160 எற்பாடி 353 எற்புக்காடு 414 எற்புகழ் 353 எற்புத்தலை 414 ஏ ஏஎக்கொட்டில் 277 ஏஎக்கொற்றா 272 ஏஎஞெகிழ்ச்சி 277 ஏக்கட்டினான் 157 ஏக்கடிது 274 ஏக்கடுமை 276 ஏவாடல் 140 ஏழகல் 394 ஏழன்காயம் 388 ஏழாம்பல் 393 ஏழிரண்டு 394 ஏழுமா 480 ஏழுழக்கு 394 ஏழொன்று 394 ஐ ஐங்கலம் 448 ஐங்கழஞ்சு 448 ஐந்துகல் 478 ஐந்துஞாண் 478 ஐந்துநூறாயிரம் 471 ஐந்துமா 480 ஐந்துயாழ் 478 ஐந்துவட்டு 478 ஐந்நாழி 451 ஐந்நாழியுழக்கு 164 ஐம்மண்டை 451 ஐம்மா 480 ஐயகல் 456 ஐயாட்டை எருது 425 ஐயாழ் 478 ஐயுழக்கு 456 ஐவ்வட்டி 454 ஐவட்டி 454 ஐவட்டு 478 ஐவனம் 54, 59 ஒ ஒடுங்கோடு 262 ஒடுவங்கோடு 262 ஒடுவின்குறை 263 ஒருகல் 478 ஒருகலம் 446 ஒருகழஞ்சு 446 ஒருகால் 446 ஒருஞார் 170 ஒருதிங்களைக்குழவி 159 ஒருதுவலி 170 ஒருநாளைக்குழவி 159 ஒருநான்கு 446 ஒருநூற்றுக்கலம் 474 ஒருநூற்றொருபஃது 473 ஒருநூறாயிரம் 471 ஒருநூறு 460 ஒருபத்திரண்டு 475 ஒருபத்தொன்று 475 ஒருபதிற்றுக்கலம் 477 ஒருபதின்கலம் 477 ஒருபதினாயிரம் 476 ஒருபதினாழி 477 ஒருபானை 199 ஒருமா 480 ஒருமுக்கால் 446 ஒருமுந்திரிகை 446 ஒருமூன்று 446 ஒல்லைக்கொண்டான் 158 ஒல்லொலித்தது 482 ஒல்லொலிநீர் 482 ஒன்பதிற்றுக்கோடி 470 ஒன்பதிற்றுத்தடக்கை 470 ஒன்பதிற்றெழுத்து 470 ஒன்பதிற்றொன்பது 470 ஒன்பதின்கூறு 433 ஒன்பதின்பால் 433 ஒன்பதின்பானை 459 ஒன்பதின்மா 480 ஒன்பதினாழி 459 ஒன்பதுகல் 478 ஒன்பது நூறாயிரம் 471 ஒன்பதுமா 480 ஒன்றன்காயம் 419 ஒன்றன்ஞாண் 419 ஒன்றின்குறை 167 ஓ ஓஒக்கடுமை 292 ஓஒக்கொற்றா 272 ஓக்கடிது 289 ஓடுநாகம் 109 ஓணத்தாற்கொண்டான் 331 ஓமைச்சினை 111 ஓர்யாட்டையானை 425 ஓர்யாழ் 479 ஓர்யானை 479 ஓரகல் 455 ஓரடை 170, 479 ஓராகம் 479 ஓராநயம் 284 ஓராயிரம் 465 ஓராறு 446 ஓரிரண்டு 446 ஓரீட்டம் 479 ஓரூசல் 479 ஓரெழு 479 ஓரெட்டு 446 ஓரேடு 479 ஓரேழு 446 ஓரைந்து 446 ஓரையம் 479 ஓரொழுங்கு 479 ஓரோலை 479 ஓரௌவியம் 479 ஓர்யாட்டையானை 425 ஓர்யாழ் 479 ஓர்யானை 479 ஓலம்போழ் 283 க கஃசரை 165 கஃசின்குறை 167 கஃறீது 38, 149 கட்சிறார் 23 கட்டகல் 246 கட்டிடி 246 கடப்பங்காய் 416 கடல் ஒல்லவொலித்தது 482 கடிசூத்திரத்திற்குப் பொன் 132 கடுக்குறிது 254 கடுக்குறைத்தான் 157 கடுவின் குறை 263 கடுவினை 173 கண்ணழகிது 160 கணவிரமாலை 246 கணவிரி 45 கதவு அழகிது 176 கதிர்ஞ்ஞெரி 145 கதிர்ஞெரி 145 கபிலபரணர் 153 கம்பம்புல் 415 கம்மக்குடம் 128, 329 கம்முக்கடிது 328 கம்முக்கடுமை 328 கமஞ்சூல் 203 கமுகங்காய் 415 கயிற்றுப்புறம் 411 கரட்டுக்கானம் 425 கரிது குதிரை 425 கரியதன்கோடு 417 கரியவற்றுக்கோடு 286 கரியன குதிரை 210 கரியார்தம்மையும் 191 கரியீர் நும்மையும் 191 கரியேம் நம்மையும் 191 கருங்குதிரை 482 கருங்குதிரைகள் 482 கரும்பார்ப்பனி 482 கரும்பார்ப்பார் 482 கரும்பார்ப்பான் 482 கல்குறிது 368 கல்குறுமை 368 கல்லம்பாறை 405 கல்லாம்பாறை 405 கல்லுக்கடிது 376 கலக்குறை 166 கலக்கொள் 314 கலத்துக்குறை 133, 168 கலப்பயறு 166 கலப்பாகு 166 கலனேபதக்கு 164 கலைக்கோடு 286 கலைங்கோடு 286 கவண்கால் 307 கவளமாந்தும் 314 கழஞ்சரை 165 கழஞ்சின்குறை 167 கழஞ்சேகுன்றி 164 கழுஉக்கடிது 264 கழுக்கொணர்ந்தான் 157 கழூஉக்கடுமை 266 களவில்லை 176 களிற்றுப்பன்றி 425 கற்குறுமை 368 கற்சிறார் 23 கற்றீது 369 கன்ஞெரி 367 கன்ஞெரிந்தது 367 கன்னக்கடுமை 346 கன்னக்குடம் 346 கன்னங்கடிது 346 கன்னங்கடுமை 346 கன்னஞான்றது 346 கன்னன்று 149 கன்னுக்கடிது 345 கன்னுக்கடுமை 345 கனங்குழாஅய் 50 காஅக்குறை 226 காக்குறை 169 காக்கையிற்கரிது 202 காணிக்காணி 239 காணிக்குறை 166 காணிக்கூறு 166 காணியேமுந்திரிகை 164 காய்ம்புறம் 48 காயாங்கனி 48 காயாங்கோடு 231 காலேகாணி 164 காவிதிப்பூ 154 காவின்குறை 169 காற்குறை 166 கான்கோழி 335 கானங்கோழி 405 கானாங்கோழி 405 கிளிக்கால் 156 கிளிக்குறிது 158 கிளிக்குறுமை 235 கிளியரிது 140 கிளியழகிது 140 கிளியின்கால் 246 கீழ்க்குளம் 395 கீழ்கரை 432 கீழ்க்குளம் 395 கீழ்கூரை 432 கீழ்சார் 201 கீழ்புடை 201 கீழைக்குளம் 201 குடத்துவாய் 312 குதிர்ங்கோடு 363 குமரகோட்டம் 153 குமிழ்ங்கோடு 386 குரக்குக்கால் 414 குரங்கியாது 35 குரங்குகடிது 409 குரங்குஞாற்சி 414 குரிசிறீயன் 160 குரீஇயோப்புவாள் 140 குருட்டுக்கோழி 425 குருட்டெருது 425 குருந்தங்கோடு 416 குவளைக்கண் 158 குழக்கன்று 203 குழுத்தோற்றம் 261 குழூஉக்களிற்று 261 குளக்கரை 312 குளங்கரை 312 குளத்தின்புறம் 405 குளத்துக்கொண்டான் 312 குளவாம்பல் 311 குளாஅம்பல் 311 குறணிமிர்ந்தது 160 குறுணிநானாழி 164 குறும்பரம்பு 141 குறும்பிற்கொற்றன் 124 குறும்பிற்சான்றார் 414 குன்றக்கூகை 128 குன்றேறாமா 141 கூட்டுக்கொற்றா 152 கூட்டுகொற்றா 152 கூதளநறும்பூ 246 கூதாளங்கோடு 246 கூர்ங்கதிர்வேல் 363 கூழிற்குக் குற்றேவல் செய்யும் 132 கேட்டையாற்கொண்டான் 286 கேட்டையினாட்டினான் 286 கேண்மியாகொற்றா 224 கைதூக்கொற்றா 265 கொக்கியாது 410 கொக்கின்கால் 414 கொக்குக்கடுமை 409 கொக்குக்கால் 414, 417 கொங்கத்துழவு 418 கொட்குறை 166 கொடாப்பொருள் 109 கொண்மூக்கடிது 264 கொண்மூக்குழாம் 266 கொண்மூவின்குழாம் 270 கொணாகொற்றா 151 கொல்யானை 24 கொல்லுகொற்றா 171 கொல்லுங்கொற்றன் 314 கொல்லும்யானை 314 கொழுவின்கூர்மை 263 கொள்ளரை 165 கொள்ளுக்குக்கொண்டான் 405 கொள்ளெனக்கொண்டான் 204 கொள்ளேயையவி 164 கொளலோகொண்டான் 291 கொற்கடிது 371 கொற்றங்குடி 350 கொற்றங்கொற்றன் 350 கொற்றங்கொற்றன்றந்தை 349 கொற்றந்தை 347 கொற்றமங்கலம் 350 கொற்றன்குளம்பு 117 கொற்றன்குறியன் 117 கொற்றன்செவி 117 கொற்றன்வந்தான் 109 கொற்றனைக்கொணர்ந்தான் 202 கொற்றிகுறிது 117 கொற்றிக்குறியன் 117 கொற்றிசெவி 117 கோஒக்கடுமை 292 கோஒன்கை 294 கோட்கடிது 401 கோட்கடுமை 398, 401 கோணிமிர்ந்தது 160 கோவந்தது 293 கோவழகிது 140 கோள்கடிது 401 கோள்கடுமை 401 கோறீது 160 கோன்குணம் 335 கோன்கொற்றன் 351 கோன்றந்தை 351 கௌவடைந்தது 140 கௌவுக்கடிது 295 கௌவுகொற்றா 152 கௌவுஞெமிர்ந்தது 295 ச சதுரப்பலகை 314 சாஞான்றான் 209 சாட்கோல் 147 சாத்தங்குடி 350 சாத்தங்கொற்றன் 350 சாத்தங்கொற்றன்றந்தை 349 சாத்தந்தை 347 சாத்தமங்கலம் 350 சாத்தன்உண்டான் 108 சார்க்காழ் 364 சார்ங்கோடு 363 சாரப்பட்டான் 156 சாவப்போயினான் 204 சித்திரைக்குக்கொண்டான் 127 சித்திரைத்திங்கள் 158 சில்காடு 214 சில்கேள்வி 214 சில்யானை 214 சில்லகுதிரை 210 சிலகுதிரை 210 சிலிர்ங்கோடு 363 சின்னூல் 215 சீரகரை 171 சீழ்க்கம்புல் 415 சுக்குக்கொடு 37 சுறவுக்கோடு 234 சுறவுயர்கொடி 234 சூதம்போர் 417 செக்குக்கணை 37 செட்டிக்கூத்தன் 154 செத்துக்கிடந்தான் 427 செந்நாய் 210 செம்பருத்தி 141 செம்பூ 76 செம்பொன்பதின்றொடி 141 செம்முக்கடிது 327 செம்முக்கடுமை 327 செய்குன்று 482 செய்யாறு 29 செருக்களம் 260 செருவக்களம் 260 செருவஞாற்சி 260 செருவின்கடுமை 260 செல்செலவு 482 செல்வுழி 140 செலலோசென்றான் 291 செவிட்டரை 165 செற்கடிது 371 செற்றுச் செய்தான் 427 சென்மதிபாக 158 சென்னிதந்தை 246 சேக்கடிது 274 சேங்கோடு 278 சேமணிக்கு 279 சேவின்கோடு 279 சேவினடை 279 சேவினலம் 279 சேவினிமில் 279 சேவினை 173 சேவினோட்டம் 279 சொல்லழகிது 160 சொல்லௌவியம் 138 சொற்கடிது 371 சொற்கேட்டான் 109 சோக்கடிது 289 சோதியாற்கொண்டான் 247 சோவினை 180 ஞ ஞெமைங்கோடு 282 ஞெமையின்கோடு 285 த தகர்க்குட்டி 405 தடக்கை 203 தடஞ்செவி 203 தடவுமுதல் 234 தடாவினுட்கொண்டான் 202 தந்துதீர்ந்தான் 427 தம்மணி 320 தம்மாடை 160 தமகாணம் 320 தமிழக்கூத்து 385 தமிழநூல் 128 தமிழயாழ் 128 தமிழவரையர் 128 தரலோதந்தான் 291 தவக்கொண்டான் 203 தழூஉவினை 173 தளாஅக்கோடு 230 தளாஅங்கோடு 229 தளாஅத்துக்கோடு 230 தற்பாடி 353 தற்புகழ் 353 தன்கை 352 தன்ஞாண் 352 தாங்குறிய 321 தாங்குறியர் 321 தாஞ்ஞான்றார் 321 தாநல்லர் 160 தாம்வந்தார் 321 தாமரைக்கணியார் 141 தாய்க்கொண்டான் 361 தாய்க்கொலை 157 தாய்கை 358 தாராக்கடிது 221 தாராக்கால் 225 தாவத்தந்தான் 204 தாவினீட்சி 372 தாவுபரி 314 தாழக்கோல் 384 தாழங்காய் 283 தான்குறியன் 353 தான்றந்தை 351 தானல்லன் 160 தானைக்கண் 210 திருட்டுப்புலையன் 425 திரும்யாது 27 திருமுகொற்றா 152 திருமுரசு 36 தில்லங்காய் 283 தில்லைச்சொல் 158 தினைக்குறிது 158 தீக்கடிது 249 தீக்கடுமை 252 தீக்கண் 114 துக்கொற்றா 151 துவர்ங்கோடு 363 துவரங்கோடு 363 துள்ளுக்கடிது 401 துள்ளுக்கடுமை 401 துளியத்துக்கொண்டான் 246 தூணிக்குத்தூணி 239 தூணிக்கொள் 239 தூணித்தூணி 239 தூணிப்பதக்கு 239 தூதுணையின்காய் 285 தூய்ப்பெய்தான் 361 தெய்வவரை 111 தெவ்வலன் 160 தெவ்வுக்கொற்றா 152 தெவ்வுகொற்றா 152 தெவ்வினை 184 தெவ்வுக்கடிது 382 தெவ்வுக்கடுமை 382 தெள்கியாது 35 தெள்குகடிது 425 தெள்குகால் 413 தெற்கேவடக்கு 431 தேக்கங்கோடு 415 தேன்றீது 160 தொடிக்குறை 166 தொடிக்கூறு 166 தொடித்தொடி 239 தொடியரை 165 தொடியேகஃசு 164 தோணன்று 160 தோற்றண்டை 171 ந நங்கைச்சானி 154 நங்கைதீயள் 153 நங்கைப்பெண் 154 நட்டுப்போனான் 427 நடக்கொற்றா 151 நடகொற்றா 151 நடஞெள்ளா 171 நம்பிகுறியன் 153 நம்பிச்சான்றார் 154 நம்பித்துணை 154 நம்பிப்பிள்ளை 154 நம்பிப்பேறு 154 நம்பியைக்கொணர்ந்தான் 157, 202 நமகாணம் 320 நமைங்கோடு 282 நமையின்கோடு 285 நல்லகுதிரை 210 நன்றோ தீதோ கண்டது 290 நாகரிது 138 நாகன்றேவன்போத்து 141 நாகியாது 35 நாகின்கால் 412 நாகுகடிது 408, 425 நாகுகடுமை 408 நாகுகால் 412, 417 நாகுஞாற்சி 412 நாங்குறியம் 321 நாங்குறியேம் 314 நாஞ்ஞான்றாம் 321 நாட்டக்கடுமை 327 நாட்டங்கடிது 327 நாடுரி 240 நாண்டீது 160 நாணோடிற்று 138 நாம்வருதும் 321 நாய்க்கால் 156 நாய்கடிது 361 நாய்கோட்பட்டான் 156 நாலகல் 456 நால்வட்டி 453 நாலாறு 446 நாலிரண்டு 446 நாலுழக்கு 456 நாலெட்டு 446 நாலேழு 446 நாலைந்து 446 நாலொன்பது 446 நாலொன்று 446 நாழிக்காயம் 240 நாழியேயாழாக்கு 164 நாளன்றுபோகி 237 நாற்கல் 478 நாற்கலம் 447 நாற்கழஞ்சு 447 நான்குகல் 478 நான்குஞாண் 478 நான்குநூறாயிரம் 471 நான்குமா 480 நான்மண்டை 451 நான்மா 480 நானாழி 451 நிக்கந்தக்கோட்டம் 453 நில்கொற்றா 151 நிலநீர் 314 நிலம்வலிது 330 நிலாஅக்கதிர் 228 நிலாஅத்துக்கொண்டான் 228 நிலாஅமுற்றம் 228 நிலாத்துக்கொண்டவன் 132 நிலாத்துக்கொண்டான் 132 நிலாஅத்து ஞான்றான் 228 நிலாவிற்கொண்டான் 230 நிற்கொற்றா 151 நீகுறியை 250 நீசெல்க 210 நீயிர் குறியீர் 326 நீயிர் ஞான்றீர் 326 நீயேகொண்டாய் 275 நீயோஒகொடியை 273 நீயோகொண்டாய் 290 நீலக்கண் 314 நீள்சினை 23 நுஞ்ஞாண் 320, 325 நுணக்குறிது 203 நுணாங்கோடு 231 நும்மடை 325 நும்மணி 325 நூற்றிதழ்த்தாமரை 472 நூற்றுக்கலம் 474 நூற்றுக்காணம் 472 நூற்றுக்குறை 472 நூற்றுக்கோடி 472 நெடியதன்கோடு 417 நெடியவற்றுக்கோடு 286 நெல்லுக்குவிற்றான் 405 நெற்காய்த்தது 371 நேர்ங்கல் 48 நேர்ஞ்சிலை 48 நேர்ஞெகிழி 29 நேர்ந்திலை 48 நேர்ம்புறம் 48 நொக்கொற்றா 151 ப பஃறாலி 215 பஃறாழிசை 215 பட்டுக்கடிது 426 பண்டுகொண்டான் 429 பண்ணுக்கடிது 306 பண்ணுப்பெயர்த்து 306 பண்டைச்சான்றோர் 159 பணைத்தோள் 158 பதக்கநானாழி 171 பதிற்றகல் 121, 436 பதிற்றுழக்கு 121, 436 பதிற்றுத்தொடி 436 பதிற்றுவேலி 436 பதின்கலம் 436 பதின்கழஞ்சு 436 பதின்திங்கள் 436 பதினாயிரத்துக்குறை 318 பத்தின்குறை 167 பத்தோ பதினொன்றோ 290 பரண்கால் 307 பரணியாற்கொண்டான் 124 பரணியிற்கொண்டான் 124 பருத்திக்குச்சென்றான் 246 பல்கடல் 214 பல்சங்கத்தார் 153 பல்சான்றோர் 153 பல்யானை 214 பல்லகுதிரை 210 பல்லரசர் 153 பல்லவற்றுக்கோடு 220 பல்வேள்வி 214 பலகுதிரை 210 பலவற்றுக்கோடு 118, 220 பலாஅக்கோடு 226 பலாஅநார் 226 பலாஅவிலை 226 பலாக்குறைத்தான் 109, 157 பலாவின் நீங்கினான் 131 பவளவாய் 314 பற்பலகொண்டார் 214 பறக்குநாரை 314 பறம்பிற்பாரி 124 பன்மலர் 215 பன்மீன்வேட்டத்து 215 பன்னுக்கடிது 345 பனந்திரள் 285 பனியத்துக்கொண்டான் 241 பனியிற்கொண்டான் 241 பனைக்குறை 169 பனைக்கொடி 285 பனைத்தடிந்தான் 157 பனைத்திரள் 285 பனையின்குறை 112, 169 பனையின்மாண்பு 286 பாக்குக்கடிது 426 பாடப்போயினான் 109 பாடும்பாணன் 314 பாம்பினிற்கடிதுதேள் 131 பாம்புகோட்பட்டான் 156 பாய்ஞெகிழி 29 பார்ப்பனக்கன்னி 338 பார்ப்பனக்குழவி 418 பார்ப்பனமகன் 418 பார்ப்பன வனிதை 418 பார்ப்பனவாழ்க்கை 338 பால் கடிது 370 பாலரிது 138 பாழ்க்கிணறு 387 பாழ்ங்கிணறு 387 பிடாஅக்கோடு 230 பிடாஅங்கோடு 229 பிடாஅத்துக்கோடு 230 பிடாவின்கோடு 230 பிலத்துவாய் 312 பிற்கொண்டான் 333 பின்கொண்டான் 333 பின்னல்கடிது 376 பின்னற்கடுமை 376 பின்னுக்கடுமை 345 பீகுறிது 250 பீர்ங்கோடு 363 புகர்ப்போத்து 405 புட்கடிது 403 புட்கடுமை 403 புண்ஞாற்சி 403 புண்ஞான்றது 403 புணர்பொழுது 482 புல்லுக்கடிது 376 புலிபோலக்கொன்றான் 204 புள்வலிது 403 புள்வன்மை 403 புள்ளுக்கடிது 403 புள்ளுக்கடுமை 403 புள்ளுவலிது 403 புள்ளுவன்மை 403 புளிக்குறைத்தான் 157 புளிக்கூழ் 246 புளியங்கோடு 129 புளியஞெரி 130 புளியின்கோடு 246 புற்றம்பழஞ்சோறு 417 புற்றோ புதலோ 290 புறவுப்புறம் 234 புன்கங்கோடு 416 பூஞாற்றினார் 145 பூணிப்பூணி 239 பூதந்தை 348 பூலங்கோடு 375 பூலஞெரி 375 பூலாங்கழி 375 பூவழகிது 140 பூவினொடு விரிந்த கூந்தல் 132 பூவொடு விரிந்த கூந்தல் 132 பூழ்க்கண் 114 பூழ்க்கால் 383 பூற்குறைத்தான் 157 பெண்டன்கை 421 பெண்டின்கால் 420 பெரும்பற்றப்புலியூர் 45 பெருமுரசு 36 பேன்கொற்றன் 351 பேன்றந்தை 351 பொய்ச்சொல் 361 பொய்யில்ஞானம் 372 பொருநக்கடுமை 299 பொருநின்குறை 299 பொருநுக்கடிது 298 பொருமாரன் 314 பொருவானாற்போகான் 368 பொருளுக்குப்போனான் 405 பொன்னங்கட்டி 405 பொன்னுக்கு விற்றான் 405 போதலோ போயினான் 291 போர்யானை 29 ம மக்கட்கை 404 மக்கட்சுட்டு 405 மக்கட்பண்பு 405 மகடூஉக்குறியள் 265 மகடூஉக்கை 267 மகடூஉவின்கை 118 மகத்தாற்கொண்டான் 109 மகத்தான் ஞாற்றினான் 331 மகத்துக்கை 125 மகத்துஞான்றுகொண்டான் 331 மகப்பால்யாடு 219 மகம்பால்யாடு 219 மகவின்கை 112 மகன்றாய்க்கலாம் 359 மகிழ்ங்கோடு 386 மடியுட்பழுக்காய் 202 மண்கை 302 மண்ஞாத்த 146 மண்ஞான்றது 146 மண்டீது 150 மண்ணங்கட்டி 405 மண்ணப்பத்தம் 307, 405 மண்ணன்று 150 மண்ணினைக்கொணர்ந்தான் 202 மண்ணுக்கடிது 306 மண்ணுக்கடுமை 306 மண்ணுக்குநாப்பண் 405 மண்ணுக்குப்போனான் 405 மண்ணுக்கொற்றா 171 மண்ணுகொற்றா 171 மண்மலை 109 மண்யாத்த 146 மண்யாமை 146 மண்யாறு 26 மத்திகையாற்புடைத்தான் 202 மயிலாப்பிற்கொற்றன் 417 மரக்கோடு 310 மரங்குறிது 143 மரங்குறைத்தான் 157 மரஞாண் 310 மரஞான்றது 314 மரத்துக்கட்கட்டினான் 132 மரத்துக்கட்குரங்கு 132 மரநட்டான் 109 மரநூல் 310 மரம்யாது 314 மரமணி 310 மரவடி 140 மரவேர் 109 மராவடி 311 மருத்துவமாணிக்கர் 153 மலைத்தலை 109 மலையொடு பொருதது 202 மழையத்துக்கொண்டான் 287 மழையத்துஞான்றான் 287 மழையிற்கொண்டான் 287 மழையின்ஞான்றான் 287 மன்றப்பெண்ணை 128, 418 மன்றைத்தூதை 425 மன்றைப்பானை 425 மன்னுக்கொற்றா 171 மன்னுகொற்றா 171 மாஅங்கோடு 231 மாகுறிது 224 மாசித்திங்கள் 158 மீக்கோள் 251 மீகண் 111 மீகரை 432 மீகூரை 432 மீப்பல் 251 மீற்கண் 339 மீற்சினை 339 மீற்புறம் 339 மீற்றலை 339 மீன்கண் 339 மீன்சினை 339 மீன்தலை 339 மீன்புறம் 339 முஃடீது 38, 150 முக்கலம் 447 முட்குறை 396 முட்டீது 399 முண்ஞெரி 397 முண்ஞெரிந்தது 397 முண்ணன்று 150 முந்துகொண்டான் 429 முந்நாடுரி 240 முந்நாழி 451 மும்மண்டை 451 மும்மா 480 முயிற்றின்கால் 412 முயிற்றுக்கால் 411 முயிற்றுஞாற்சி 411 முரசக்கடிப்பு 417 முரசவாழ்க்கை 417 முரட்கடுமை 309 முவ்வகல் 456 முவ்வட்டி 452 முவ்வுழக்கு 456 முள்கடிது 398 முள்குறுமை 398 முற்கொண்டான் 333 முன்கொண்டான் 333 முன்னாளைப்பரிசு 405 முன்னாளைவாழ்வு 405 மூங்கா இல்லை 140 மூங்காக்கால் 225 மூங்காவின்கால் 226 மூயானை 479 மூவகல் 457 மூவசை 479 மூவட்டி 452 மூவாறு 446 மூவிரண்டு 446 மூவுழக்கரை 165 மூவுழக்கு 457 மூவெட்டு 446 மூவேழு 446 மூவைந்து 446 மூவொன்பது 446 மூவொன்று 446 மூன்றுகல் 478 மூன்று நூறாயிரம் 471 மூன்றுமா 480 மெய்ச்சொல் 361 மென்ஞாண் 26 மேல்சார் 201 மேல்சார்க்கூரை 405 மேல்பால் 201 மேலைச்சேரி 201 மேற்கண் 201 மேற்கின்கண் 201 மேன்மாடு 432 ய யாஅக்கோடு 230 யாஅங்கோடு 229 யாஅத்துக்கோடு 230 யாகுறிய 224 யாங்கட்கொண்டான் 307 யாங்குக்கொண்டான் 427 யாங்குறியேம் 321 யாட்டின்கால் 412 யாட்டுக்கால் 411 யாட்டுஞாற்சி 411 யாரவர் 172 யாவதது 172 யானும் நின்னொடு உடன்வரும் 210 யானேஎகொண்டேன் 273 யானேகொண்டேன் 275 யானைக்கோடு 280 யானையைக்கொணர்ந்தான் 280 யானோஒகொடியன் 273 யானோகொண்டேன் 290 வ வங்காக்கால் 225 வட்கடிது 403 வட்கடுமை 403 வட்டத்தடுக்கு 314 வட்டம்போர் 417 வடகடல் 432 வடசுரம் 432 வடவேங்கடம் 432 வண்டின்கால் 420 வண்டுகொணர்ந்தான் 157 வண்ணாரப்பெண்டீர் 153 வந்தாற்கொள்ளும் 109 வந்தான்சாத்தன் 108,109 வந்தான்போயினான் 108 வந்தானாற்கொற்றன் 368 வந்தானாற்சாத்தன் 109 வந்துபோயினான் 427 வயக்களிறு 203 வயப்புலி 203 வயிற்றுத்தீ 411 வரகரிது 138 வரகியாது 35 வரகின்கதிர் 412 வரகுகடிது 408 வரகுகடுமை 408 வரகுகதிர் 412 வரகுஞாற்சி 144 வரகுஞான்றது 144 வராறீது 160 வரிற்கொள்ளும் 333 வருகாலம் 314 வரும் வண்ணக்கன் 13 வரைபாய் வருடை 157 வல்லக்கடுமை 374 வல்லநாய் 374 வல்லப்பலகை 374 வல்லுக்கடிது 373, 376 வல்லுக்கடுமை 374, 376 வல்லுநாய் 374 வல்லுப்பலகை 374 வழக்கத்தாற் பாட்டாராய்ந்தான் 195 வழுதுணையின்காய் 285 வழையின்கோடு 285 வள்ளுக்கடிது 403 வள்ளுக்கடுமை 403 வளங்கேழூரன் 129 வளிக்கோட்பட்டான் 156 வளியத்துக்கொண்டான் 242 வளியிற்கொண்டான் 124 வாட்கடிது 401 வாட்கடுமை 398, 401 வாட்கண் 114 வாட்டானை 171 வாணிகத்தெரு 153 வார்சிலை 29 வாராதகொற்றன் 210 வாழ்சேரி 29 வாழிகொற்றா 211 வாழிஞெள்ளா 211 வாள்கடிது 400, 401 வாள்கடுமை 401 வான்கரை 335 வானத்தின்வழுக்கல் 132 வானத்தின்வழுக்கி 132 வானத்துவழுக்கல் 132 வானத்துவழுக்கி 132 வானுலகு 138 வானூடு 138 விண்ணத்துக்கொட்கும் 305 விண்ணுக்குமேல் 405 விண்வத்துக்கொட்கும் 140 விண்விணைத்தது 482 விரனன்று 160 விளக்கத்துக்கொண்டான் 417 விளக்குறிது 203 விளக்குறுமை 143 விளக்குறைத்தான் 143 விளவத்துக்கண் 133 விளவழகிது 140 விளவின்கோடு 132 விளவின்வீழ்பழம் 131 விளவினதுகோடு 132 விளவினைக்குறைத்தான் 107, 132 வீழ்குறிது 405 வீழ்யானை 29 வெண்சாந்து 26 வெண்ஞாண் 26 வெண்ணின்கரை 306 வெண்ணுக்கரை 306 வெயிலத்துச்சென்றான் 133 வெரிங்குறை 300 வெரிஞ்செய்கை 300 வெரிநக்கடுமை 299 வெரிநின்குறை 299 வெரிநுக்கடிது 392 வெள்யாறு 24 வெள்விளர்த்தது 482 வெளிற்றுப்பனை 425 வெற்றுப்பிலி 482 வேக்குடம் 276 வேட்டங்குடி 350 வேட்டமங்கலம் 350 வேப்பங்கோடு 416 வேய்ங்ஙனம் 29 வேயின்றலை 405 வேர்க்குறிது 405 வேர்க்குறை 362 வேர்கடிது 29 வேர்குறிது 405 வேர்ங்குறை 362 வேர்ங்ஙனம் 29 வேலங்கோடு 375 வேலஞெரி 375 வேற்றீது 369 வேறீது 369 வேனன்று 160 வௌவு கொற்றா 152 வௌவு வலிது 295 செய்யுள் நிரல் (மேற்கோள்) (நூற்பா எண்) அகடு சேர்பு... (மலைபடு. 33) 131 அஞ்செவி... (முல்லைப். 89) 483 அண்ணல் கோயில்... (சிந்தா-நாமகள் 126) 483 அந்நூலை, முந்நூலாக்... (கலித். 103) 51 ஆயிடையிருபேராண்மை... (குறுந். 43) 483 ஆரங் கண்ணி... (அகம். 93) 363 இலம்படு புலவ... (மலைபடு. 576) 316 இலம்பாடு நாணுத்... (சிலப். 9-71) 316 இலாஅஅர்க்... (நாலடி. 283) 6 இறவுப்புறத் தன்ன... (நற். 19) 234 எழூஉத்தாங்கிய... (புறம். 97) 261 ஏப்பெற்ற மான்பிணை (சிந்தா. 2965) 483 ஒன்றாது நின்ற... (சிந்தா. 316) 180 கணவிரமாலை... (அகம். 31) 246 கல்கெழு கானவர்... (குறுந். 71) 481 கலம்பெறு கண்ணுள... (மலைபடு. 50) 312 கள்ளியங் காட்ட (அகம். 97) 483 கற்பினின் வழாஅ... (அகம் 86) 131 காய்மாண்ட தெங்கின் பழம்... (சிந்தா. 31) 483 காரெதிர் கானம்... (புறம். 145) 483 கானலம் பெருந்துறை (ஐயங்குறு. 158) 483 குன்றுறழ்ந்த களிறென்கோ... (புறம். 387) 290 கைத்தில்லார் நல்லர்... (நான்மணிக். 69) 483 கைத்துண்டாம்... (நாலடி. 19) 483 கெளவைநீர் வேலி... (பு.வெ.மா. - 23) 57 சிதையுங் கலத்தைப்... (பரி. 10-55) 51 சுறவெறிமீன்... இறவழங்கு... (அகம். 318) 483 செங்கேழ் மென்கொடி... (அகம். 80) 481 செறா அ அய்... (குறள். 1200) 7 தடிவுநிலை... (புறம். 140) 483 திண்வார் விசித்த... (மலைபடு. 3) 483 தீயினன்ன வொண்செங்... (மலைபடு. 145) 483 தும்முச் செறுப்ப... (குறள். 1318) 327 துறைகெழு... (நற். 35) 481 துறை கேழூரன்... (ஐங்குறு. 11) 481 நல்லொழுக்கங் காக்குந்... (நாலடி. 457) 483 நாவலந்தண் பொழில் (பெரும்பாண். 465) 483 பயங்கெழு... (புறம். 266) 481 பல்லுக்குத்தோற்ற... 405 பழூஉப்பல்... (குறுந். 59, 180) 261 பாடறியாதானையிரவு... கண்ணாரக் காணக்கதவு... (முத்தொள். 42) 176 புண்கண்... (குறள். 1152) 176 புலம்புக் கனனே... (புறம். 258) 157, 312 புறவுப் புறத்தன்ன... (குறுந். 264) 234 புன்னையங்கானல்... (அகம். 80) 483 பூக்கேழ் தொடலை... (அகம். 28) 481 பொலங்கலஞ் சுமந்த... (அகம். 16) 356 பொலஞ்சுட ராழி... பொலந்தார்க் குட்டுவன்... (புறம். 343) 356 பொலநறுந்தெரியல் (புறம். 29) 356 பொலம்படைப் பொலிந்த... (மலைபடு. 574) 356 பொலமல ராவிரை... (கலி. 138) 356 பொன்போற் பீரமொடு... (நெடுநல். 14) 365 பொன்னகர் வரைப்பிற்... (ஐங்குறு. 247) 346 பொன்னந் திகிரி... (புறம். 368) 483 பொன்னோடைப்... (புறம். 3) 111 மண்ணுக்கு நாப்பண்... (திருக்கோவை. 162) 405 மன்னிய பெரும நீ... (புறம். 91) 210 மாநிதிக்கிழவனும் போன்ம்... (அகம். 66) 481 மாரிப் பீரத்... (குறுந். 98) 363 மின்னுச் செய்... (கலி. 41) 345 மின்னுநிமிர்ந் தன்ன... (புறம். 57) 345 முதிர்கோங்கின் (குறிஞ்சிக்கலி. 20) 483 யாவது நன்றெனவுணரார்... (குறுந். 78) 172 யானோ தேறே... (குறுந். 21) 290 வரைபாய் வருடை... (மலைபடு. 503) 157 வளங்கெழு திருநகர்... (அகம். 17) 481 விண்குத்து நீள்வரை... (நாலடி. 226) 305 விளங்காய் திரட்டினா... (நாலடி. 103) 10 வெண் கூதாளத்து... (பட்டி. 85) 246 வெடிகொண் டெழுந்த... (திருநாட்டுப்படல்) 213 வேர்பிணிவெதிரத்துக்... (நற். 62) 483 விஷய (பொருள்) அகராதி (நூற்பா எண்) m அக்குச்சாரியையின் முதலொழிய ஏனைய கெடுதல் 128 அகக்கருவி 1 அகச்செய்கை 1 அகப்புறக்கருவி 1 அகப்புறச்செய்கை 1 அகம் என்னுஞ் சொல் கையென் பதனோடு புணருதல் 315 அகர ஆகார உகர ஊகார ஏகார ஔகாரவீற்று மொழிகள் வேற் றுமை யுருபுகளோடு புணருதல் 173 அகரச்சுட்டின் முன் இடை யெழுத்து முதன் மொழிவரின் வகரந் தோன்றல் 206 அகரச்சுட்டின் முன் உயிர் புணர்தல் 207 அகரச்சுட்டின் முன் வரும் மெல் லினம் மிகுதல் 205 அகரச்சுட்டுச் செய்யுளிடத்து நீளல் 208 அகரத்தின் பின் யகரமெய்நின்று ஐகாரம்போல ஒலிக்குமென்பது 56 அகர ஆகாரம் பிறக்குமியல்பு 85 அகரமும் இகரமும் ஐகாரம் போன் றொலித்தல் 54 அகரமும் உகரமும் ஔகாரம் போல ஒலித்தல் 55 அகரவீறு வல்லினம் வரின் வேற் றுமையில் மிகுமென்பது 215 அகரவீற்றுப் பெயர்ச்சொற்களின் முன் வல்லினம் மிகுதல் 203 அகரவீற்று மரப்பெயர் முன் வேற் றுமையில் மெல்லினம் மிகுதல் 217 அகரவீற்று வினைச்சொல் இடைச் சொற்களின் முன் வல்லினம் வரின் மிகுதல் 204 அகலவுரையின்ன தென்பது பெ.பா. அடையடுத்த ஆயிரம் புணருதல் 318 அத்துச்சாரியை முதல் கெடு 125 அதிகாரத்தின் பொருள் 125 அம்சாரியையி னீறு மென்கணத் தின் முன்னும் இடைக்கணத்தின் முன்னும் கெடுதல் 130 அம்சாரியையி னீறு வன்கணத்தின் முன் திரிதல் 129 அம்மவென்னு முரையசை யிடைச் சொல்லிறுதி நீளுமென்பது 212 அரையென்னுஞ் சொல் ஏயென் சாரியை பெறாமை 165 அழன் என்னுஞ் சொல் வல்லினத் தோடு புணருமாறு 354 அழன் புழன் என்பன உருபு வருங் காலடையும் முடிபு 193 அளத்தலின் வகை 7 அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் 33 அளபெடை 6 அளபெடையில் நெட்டெழுத்தின் பின் அவ்வவற்றிற் கினமான குற்றெழுத்து இசை நிறைத்தல் 41 அளவுக்கும் நிறைக்கு மொழிக்கு முதலா மெழுத்துக்களிவை யெனல் 190 அளவுப்பெயரும் எண்ணுப்பெய ரும் நிறைப்பெயரும் புணரு மாறு 164 அளவுப்பெயரும் நிறைப்பெயரும் வருங்கால் ஐந்தும் மூன்றும் அடை யுந்திரிபு 451 அறுவகைத் தொடர்க் குற்றுகரமும் அல்வழியில் வல்லினம் வரினி யல்பாதல் 459 அன்ன வென்னு முவமக் கிளவி முத லிய அகரவீற்றுச் சொற்களியல் பாதல் 210 ஆ ஆகாரவீறு அல்வழியில் முடியுமாறு 221 ஆகாரவீறு வேற்றுமைக்கண் முடியு மாறு 225 ஆகாரவீற்று உம்மைத் தொகை முடியுமாறு 215 ஆடூஉ மகடூஉ முதலியன வேற் றுமைக்கண் இன் சாரியை பெறுதல் 271 ஆண் என்னும் மரப்பெயர்முன் வல்லினம் புணர்தல் 304 ஆண் பெண் என்பனவற்றிற்கு முன் வல்லினம் புணர்தல் 303 ஆதனும் பூதனுந் தந்தையொடு புணர்தல் 348 ஆ-மா விளிப்பெயர் முதலிய ஆகார வீறுகள் அல்வழியில் முடியு மாறு 224 ஆய்தம் உருவினும் இசையினும் அளபெடுத்து வருமென்பது 40 ஆய்தம் புணர்மொழியகத்தும் வருமென்பது 39 ஆய்தம் வருமாறு 39 ஆயிரமும் - அடையடுத்த ஆயிரமும் அளவுப்பெயர் நிறைப் பெயர் களோடு புணருதல் 318 ஆயிரம் அத்துச்சாரியை பெறுதல் 317 ஆயிரம் வருங்கால் ஆறடையுந் திரிபு 469 ஆயிரம் வருங்கால் ஐந்தனொற்று அடையுந்திரிபு 468 ஆயிரம் வருங்கால் நான்கனொற்று அடையுந்திரிபு 467 ஆயிரம் வருங்கால் முதலீரெண் ணின் உகரங்கெடுதல் 464 ஆயிரம் வருங்கால் முதலீரெண்கள் முதனிலை நீடல் 465 ஆயிரம் வருங்கால் மூன்றனொற்ற டையுந்திரிபு 466 ஆர் முதலியவற்றின் முன் மெல் லெழுத்து மிகுதல் 363 ஆறனுருபி னகரங் கெடுதல் 115 ஆறனுருபிற்கும் நான்கனுருபிற்கும் முன்னிற்கும் குற்றொற்றிரட் டாமை 161 ஆறனுருபும் நான்கனுருபும் வரு மிடத்து நும்மெனிறுதி புணரு மாறு 162 ஆறன் முதனிலை அகலும் உழக்கும் வருங்காலடையுந் திரிபு 458 ஆனீறு பொருட்புணர்ச்சிக் கட்டி ரிதல் 124 ஆனொற்று அகரம் பெறுமென் பது 232 ஆனொற்றின் முன் ஈகார பகரம் குறுகுதல் 233 இ இ ஈ எ ஏ ஐ என்பவற்றின் பிறப்பு 86 இகரவிறுதிப் பெயர்கள் வேற் றுமைக்கண் மிகுதல் 235 இகரவீற்றின் முன் இக்குச்சாரியை முதல் கெடல் 126 இகரவீற் றுச் சுட்டுப்பெயர் முடியு மாறு 238 இகரவீற்றுயர் திணைப்பெயர் திரி தல் 154 இகரவைகாரவீறுகள் வல்லினம் வர முடியுமாறு 158 இடைத்தொடராகாமை 407 இடைத்தொடராய்தத் தொடர்க் குற்றுகரங்கள் முன் வல்லினம் வந்து புணர்தல் 413 இடைநிலை மயக்கம் 21 இடையின மெய்கள் 21 இயற்பெயர் அம்சாரியை பெறுதல் 350 இயற்பெயர் பண்படுத்து வருங் காலியல்பாதல் 340 இரண்டாம் வேற்றுமைத் திரிபு புணர்ச்சி 157 இரண்டு முதல் ஒன்பான் முன் 'மா' வென்னும் அளவுப்பெயர் புணர்தல் 480 இராவென் கிளவி வேற்றுமைக் கண் முடியுமாறு 227 இருமொழிகளில் மாத்திரம் சகர உகரம் ஈறாகுமென்பது 75 இருள் என்பது அத்துப் பெறுமாறு 402 இல்லம் என்னும் மரப்பெயர் வல் லினத்தோடு புணர்தல் 313 இல்லென்கிளவி வல்லினத்தொடு புணர்தல் 372 இலம் என்பது படுவென்பதனோடு புணர்தல் 316 இன்சாரியை ஈறுதிரிதல் 120 இன்சாரியை முதல் திரிதல் 119 இன்றியென்னும் வினையெச்சம் முடியுமாறு 237 இன்னுருபிற்கு இன்சாரியை வாராமை 131 இனவொற்றுமிகும் குற்றுகரம் இன்சாரியை பெறாது 195 இனி அணியென்னும் இடைச் சொற்கள் முடியுமாறு 236 ஈ ஈகாரவிறுதி அல்வழியில் பெறும் முடிவு 249 ஈகார விறுதி வேற்றுமையில் பெறும் முடிபு 252 ஈதலியல்பு சி.பா. ஈம், கம், உரு என்பன உகரம் பெறுதல் 328 ஈமும் கம்மும் அக்குச்சாரியை பெறுதல் 329 ஈரொற்றாய் மயங்கும் எழுத்துக்கள் 48 ஈவோரின் வகை சி.பா. ஈறாகாதஎழுத்துக்கள் ஈறாமிடம் 93 உ உ, ஊ, ஒ, ஓ, ஒள் பிறக்குமாறு 87 உகரத்தோடு சேர்ந்த புள்ளியிறுதி முன் உயிரும் யகரமும் வந்து புணர்தல் 163 உகரவிறுதி அல்வழியில் முடியு மாறு 254 உகரவீற்றுச்சுட்டின் முன் அல்வழி யில் வல்லினம் வந்து புணர்தல் 255 உகரவீற்றுச் சுட்டுப்பெயர் மெல் லினம் முதலியன வருங்கால் முடியுமாறு 256 உகரவீற்றுச் சுட்டுப்பெயர் செய் யுள் முடிபு பெறுமாறு 258 உகரவீற்றுப்பெயர் வேற்றுமையில் முடியுமாறு 259 உகரங் குறுகுமிடம் 406 உகரம் அரைமாத்திரை பெறல் 406 உகரவீற்றுச் சுட்டுப்பெயர் முடியு மாறு 263 உடம்படுமெய் தோன்றுதல் 138 உடம்பொடு புணர்த்தல் 01 உண்டு என்னும் குற்றியலுகரத்தின் முடிபு 430 உதிமரக்கிளவிவேற்றுமையில் முடியுமாறு 243 உயர்திணைப் பெயர்முன் நாற்கண மும் புணர்தல் 153 உயிரெழுத்துக்கள் 8 உயிர், மெய்யொடு கூடினும் அளவு திரியாமை 10 உயிர்கள் மொழிக்கு ஈறாமாறு 69 உயிர்மெய் ஒலிக்குமாறு 18 உயிர்மெய் மொழிக்கு முதலாத 59 உயிர்மெய்யீறு உயிரீறாகக் கொள் ளப்படுதல் 107 உயிர்மெய் வழங்குமாறு 17 உயிரெழுத்துக்களின் பிறப் 84 உரியென்கிளவி நாழியொடு புணர்தல் 240 உருபு வருங்கால் ஒற்றிரட்டுக் குற் றியலுகரவீறுகள் 196 உருபு வருங்கால் நீயென்பது திரியு மாறு 179 ஊ ஊகாரவிறுதி அல்வழியில் முடியு மாறு 264 ஊகாரவீற்று வினையெச்சமும் முன்னிலைமொழியும் அல்வழி யில் பெறும் முடிபு 265 ஊகாரவீற்று வேற்றுமைப் புணர்ச்சி 266 ஊவென்பெயர் வேற்றுமையில் முடியுமாறு 268 ஊவென்னும் பெயர் அக்குச் சாரியை பெறுதல் 270 எ எஃகுதல் 2 எகர ஒகரம் ஈறாகுமிடம் 272 எகர ஒகரம் புள்ளிபெறுதல் 17 எகின் என்பது புணருமாறு 336 எகின் என்னும் பறவைப்பெயர் புணருமாறு 337 எச்சவுரை பொ.பா எட்டுவகை 1 எடுத்தல் படுத்தல் நலிதல் விலங்கல் 88 எடுத்தோத்தானும் இலேசானும் முடியாதனவற்றை முடித்ததற்கு விதி 483 எண்என்னும் உணவுப்பெயர் அல் வழியிற் புணர்தல் 308 எண்ணுப்பெயர்க் குற்றுகரங்கள் பெறுஞ்சாரியை 194 எருவுஞ் செருவும் வேற்றுமைக்கண் முடியுமாறு 260 எல்லாம் என்னும் பெயர்பெறுஞ் சாரியை 191 எல்லாரும் எல்லீரும் என்பன வேற் றுமைக்கட் புணர்தல் 322 எல்லாரும் எல்லீரும் என்பன உருபு வருங்கால் முடியும் முடிபு 191 எல்லாமென்பது அல்வழிக்கண் மெல்லெழுத்து மிகப்பெறுமாறு 323 எல்லாமென்பது இருவழியிலும் புணருமாறு 322 எல்லாம் என்னுந் தன்மைப் பெயர் வேற்றுமைக்கண் புணருமாறு. 324 எழுத்துக்களின் பிறப்பிற்குப் புற னடை 102 எழுத்துக்களின் பிறப்பு 83 எழுத்துக்களுருவுடைய வென்பது 1 எழுத்துக்கள் பெறுஞ்சாரியை 134 ஏகாரவீறு வேற்றுமையில் முடியு மாறு 275 ஏகாரவீற்றுப் பெயர் அல்வழியில் முடியுமாறு 274 ஏயென் னிறுதி எகரம்பெறு 277 ஏழ், அன்சாரியை பெறுதல் 194 ஏழ், ஆயிரத்தொடு புணர்தல் 388 ஏழ், உயிர் முதன்மொழியொடு புணர்தல் 391 ஏழ், தாமரை முதலியவற்றொடு புணருமாறு 389 ஏழ், பத்தொடு புணருமாறு 390 ஏழனுருபுஅத்துச்சாரியை பெறும் 178 ஏழாம் வேற்றுமை இடப் பொரு ளுணரநின்ற இகர, ஐகார வீற் றிடைச் சொற்களின் முன் வல் லினம் புணர்தல் 159 ஏழென்னுஞ் சொல் வேற்றுமைக் கட் புணருமாறு 388 ஏழென்னுஞ் சொல்லின் அளவுப் பெயரும் நிறைப்பெயரு புணரு மாறு 389 ஏறிய உயிர் நீங்கிய வழி மெய்கள் புள்ளி. பெறுமென்பது 138 ஐ ஐகாரத்திற்கு இகரமும் ஔகாரத் திற்கு உகரமும் இசைநிறைக் கும் எழுத்துக்களாய் நிற்றல் 42 ஐகாரம் ஒரு மாத்திரை ஒலிக்கு மிடம் 57 ஐகார ஔகாரங்கள் கான்சாரியை பெறுதல் 137 ஐகாரவீற்றின் முன் இக்குச் சாரியை முதல் கெடுதல் 126 ஐகாரவீற்றுச் சுட்டுப்பெயர் முடியு மாறு 281 ஐகாரவீற்று நாட்பெயருந் திங்கட் பெயரும் முடியுமாறு 286 ஐகாரவீற்றுப் பெயர் முடியுமாறு 280 ஐந்திரம் இதுவென்பதுசி.பா. ஐ விலங்கலுடையது 87 ஒ ஒகரம் நகரத்தோடு ஈறாதல் 72 ஒடுமரக்கிளவி முடியுமாறு 262 ஒருபஃது இருபஃது முதலியன பெறுஞ் சாரியை 199 ஒரு மொழியில் மாத்திரம் பகரம் உகரத்தோடு கூடி ஈறாதல் 76 ஒழியிசை ஒகாரம் முடியுமாறு 291 ஒற்றிடை மிகப் பெறாத நெடிற் றொடர் உயிர்த்தொடர்களின் முன் வல்லினம் மிகாமை 413 ஒற்றிடை மிகப் பெறும் நெடிற் றொடர்உயிர்த்தொடர்களின் முன் வல்லினம் வந்து புணர்தல் 412 ஒன்பதன்முன் அளவுப்பெயரும் நிறைப்பெயரும் புணர்தல் 459 ஒன்பதன் முன் ஆயிரம் புணர்தல் 470 ஒன்பதன் முன் நூறு புணர்தல் 463 ஒன்பதன்முன் பஃதுப்புணர்தல் 445 ஒன்றின் முன் பெயர்களுள் உயிர் முதன்மொழியும் யா முதன் மொழியும் புணர்தல் 479 ஒன்று பலவாதலின் விளக்கம் 479 ஒன்று முதலாகிய பத்தூர் கிளவி யொடு அளவும் நிறையும் புணர் தல் 477 ஒன்று முதலாகிய பத்தூர் கிளவி யொடு ஆயிரம் புணர்தல் 477 ஒன்று முதலிய ஒன்பதெண்களோடு பொருட்பெயர் புணர்தல் 478 ஒன்று முதலிய பத்தூர் கிளவியொடு ஒன்று முதலிய எண்கள் புணரு மாறு 475 ஒன்று முதலியவற்றின் முன் நூறாயிரம் புணர்தல் 471 ஒன்று முதலியவற்றோடு பத்துப் புணர்தல் 438 ஒன்றுமுத லொன்பான்களோடு நூறு புணர்தல் 460 ஓகாரம் எதிர்மறைப் பொருளிலும் ஐயப்பொருளிலும் வினா பொரு ளிலும் வந்து முடிதல் 290 ஓகாரவிறுதி அல்வழிக்கண் முடியு மாறு 289 ஓகாரவிறுதி ஒன்சாரியை பெறுதல் 180 ஓகாரவிறுதி வேற்றுமையில் முடியு மாறு 292 ஓரெழுத்து மூன்று மாத்திரை இசையா தென்பது 5 ஔ ஔகாரம் ககரவகரங்களோடு மாத் திரம் கூடி ஈறாகு மென்பது 70 ஔகாரவீறு இருவழியும் முடியு மாறு 295 க கபார ஙகாரம் பிறக்குமியல்பு 89 க ச த பக்களின் முன் தோன்றும் ஒற்றுக்கள் 143 க ச த பக்களை முதலாகவுடைய அளவு பெயர் வருங்கால் மூன்ற னொற்றடையுந்திரிபு 447 க த ந ப ம என்னும் ஐந்து மெய் களும் மொழிக்கு முதலாதல் 61 கதம்பமுகுள நியாயம்பொ.பா கலமென்னு மளவுப்பெயர் பெறுஞ் சாரியை 166 கழற் பெய்குடம் சி.பா களங்கடியப்பட்டோர் சி.பா கற்கப் படாதோரின் வகை சி.பா கற்கப்படுவோரின் வகை சி.பா கற்பிக்கப் படாதோரினியல்பு சி.பா கற்பிக்கப் படாதோரின் வகைசி.பா கற்பிக்கப்படுவோரினியல்புசி.பா கற்பிக்கப்படுவோரின் வகை சி.பா கன் அகரச்சாரியை பெறுதல் 346 கீ கீழ், வல்லினத்தோடு புணருதல் 395 கு குண்டிகைப் பருத்தி சி.பா குமிழென்னும் மரப்பெயர் புணரு மாறு 386 குயின் என்பது புணருமா 335 குற்றியலிகர மிதுவென்பது 34 குற்றிய லிகரம் புணர்மொழி யிடத்தும் வருதல் 35 குற்றியலுகர மிதுவென்பது 36 குற்றியலுகர வீற்றளவுப் பெயர் இன்சாரியை பெறுதல் 164 குற்றியலுகரம் அரைமாத்திரையிற் குறுகல் 37 குற்றியலுகரம் இகரமாதல் 410 குற்றியலுகரம் இன்சாரியை பெறல் 195 குற்றியலுகரம் மொழி முதலாக 67 குற்றுகர எண்ணுப்பெயர்முன் அளவுப் பெயரும் நிறைப்பெய ரும் புணர்தல் 446 குற்றெழுத்தின் பின்வந்த ஊகார மும் ஓரெழுத் தொருமொழி ஊகாரமும் வேற்றுமைக்கண் முடியுமாறு 267 குற்றெழுத்துக்கள் 3 குற்றெழுத்துக்கள் தனித்து மொழி யாகாமை 44 குற்றெழுத்துக்கள் பெறுஞ்சாரியை 136 குறியதன் முன்னின்ற ஆகார வீறும் ஓரெழுத்து மொழியாய ஆகார வீறும் வேற்றுமைக்கண் முடியு மாறு 226 குறையென்பது அல்வழிக்கண் அளவுப்பெயர் முதலியவற்றின் முன் புணருமாறு 166 கொ கொள்வோரின் வகை சி.பா கொழுதுன்னூசி விளக்கம் சி.பா கோ கோடன் மரபு சி.பா கோவென் பெயர்முன் இல்வந்து புணர்தல் 293 ங ங, ஞ, ண, ந, ம, ன முன் மயங்கு வன. 25 ச சகரம் அ, ஐ, ஔ என்னும் மூன்று ம ல் ல த உ யி ர் க ளோடு மொழிக்கு முதலாதல் 62 சகார ஞகாரம் பிறக்குமியல்பு 90 சா சார், காழோடு புணருமாறு 364 சார்த்தியளத்தல் 7 சார்பெழுத்தின் வகை 2 சார்பெழுத்துக்களின் பிறப்பு 100 சார்பெழுத்துக்கள் பெறும் மாத் திரை 13 சாரியைகள் 167 சாரியை பெற்றும் பெறாதும் வருவன 241 சாவவென்னும் செயவெனெச்சத் திறுதி கெடுதல் 209 சி சிறப்புப்பாயிரத்திலக்கணம் சி.பா சிறப்புப்பாயிரத்தின் வகை சி.பா சிறப்புப்பாயிரம் செப்புமாறு சி.பா சு சுட்டுச்சினை நீடிய மென்றொடர்க் குற்றியலுகரமும் யாவினா முத லிய மென்றொடர்க் குற்றியலு கரமும், வல்லெழுத்து மிகப் பெறுதல் 427 சுட்டுச்சினை நீடிய மென்றொடர்க் குற்றுகரமும் யாவினா முதன் மொழிக் குற்றுகரமும் வன் றொடராகாமை 427 சுட்டு முதல் வகரம் அல்வழிக்கண் ஆய்தமாதல் 379 சுட்டுமுதல்வகரத்தின் முன் இடை யினமும் உயிரும் வந்து புணர் தல் 378 சுட்டுமுதல் வயினும் எகர முதல் வயினும் புணருமாறு 334 சுட்டுமுதலாகிய ஆய்தத் தொடர் மொழிக்குற்றுகரம் உயிர் வரு வழிக் கெடாமை 423 சுட்டுமுதலாகிய வையெனிறுதி வற்றுச்சாரியை பெறுதல் 176 சுட்டெழுத்துக்கள் 31 சுவைப்புளி உணரநின்ற பெயர் வேற்றுமையில் முடியுமாறு 241 சூ சூத்திர உரைவகை சி.பா செ செய்யாவெனும் வாய்ப்பாட்டு வினையெச்சம் முடியுமாறு 222 செய்யுளாவது இதுவென்பது சி.பா சே சேவென் மரப்பெயர் வேற்றுமை யில் முடியுமாறு 278 சொ சொற்சீரடியின்னதென்பது பொ.பா ஞ ஞகர நகர வீற்று மொழிகள் இன் - சாரியை பெறுதல் 111 ஞகரமெய் ஒருமொழிக்கே யிறாதல் 78 ஞகரவீற்றுத் தொழிற் பெயர் வல் லினம்வரின் முடியுமாறு 296 ஞகாரம் ஆ-எ-ஒ என்னும் மூன்று யிரொடு மொழிக்கு முதலாதல் 64 ஞகாரம் ஏகார ஒகாரங்களோ டீறாகாமை 73 ஞகாரவீற்றுத் தொழிற்பெயர் மெல் லினம்வரின் முடியுமாறு 297 ஞ, ந, ம, வ முன் யகர மயங்கு மென்பது 27 ட டகாரணகாரம் பிறக்குமியல்பு 91 டற ல ள வென்னும் புள்ளிமுன் மயங்குவன 23 ண ணகர வீற்றுக் கிளைப்பெயர்கள் புணருமாறு 307 ணகர வீற்றுத் தொழிற்பெயர்கள் புணருமாறு 306 ணகரம் வேற்றுமையில் டகரமாதல் 302 ண ள முன் வருந் தகர நகரத் திரிபு 151 ண ன முன் மயங்குவன 25 ணனக்களின்முன், மொழிக்கு முத லாமெழுத்து மொழிகள் வந்து புணர்தல் 147 ணனக்களின் முன் வல்லினமொழிந் தன வந்து புணர்தல் 147 த தகார நகாரம் பிறக்குமியல்பு 93 தம்பெயர் கூறுமிடத்து மெய்கள் முதலில் நின்று மயங்குமாறு 47 தமிழ் அக்குப் பெறுதல் 385 தனித்துக் கூறினும் மொழியாகச் சேர்த்துக் கூறினும் எழுத்தின் றன்மை திரியாதென்பது 53 தனிமெய்க ளகரத்தோடு கூடி இயங் குதல் 46 தா தாய் என்னுஞ் சொல் மகன் வினை யோடு புணர்தல் 358 தாய் என்னுஞ் சொல் வேற்றுமைக் கண் புணருமாறு 359 தாழ் கோலோடு புணருமாறு 384 தான் என்னும் விரவுபெயர் புணரு மாறு 352 தான் முதலிய இயற்பெயர் புணரு மாறு 351 தான் யான் என்பன முடியும் முடிபு 192 தி திங்களை யுணர நின்ற பெயர்கள் முன் தொழிற் பெயர் வந்து புணர்தல் 248 திசைப்பெயர்கள் ஏழனுருபோடு புணர்தல் 201 திரிந்ததன் திரிபு அது 201 திரிந்தன்றிரிபு அதுவும் பிறிதுமென் றல் 201 திரிந்ததன்றிரிபு பிறிது 201 திரிபு புணர்ச்சி மூன்று 109 து துலாக்கோலின்றன்மை சி.பா தூ தூணிக் கிளவி அல்வழியில் முடியு மாறு 239 தெ தெவ் இன் சாரியை பெறுதல் 184 தெவ்வென்னும் வகரவீற்றுச் சொற் புணர்ச்சி 382 தெறித்தளத்தல் 7 தே தேங்கமுகந்தளத்தல் 7 தேன், இறால் என்னும் வருமொழி யொடு புணருமாறு 343 தேன், இறாலோடு புணருங்கால் தேத்திறால் எனவரும் 344 தேன் என்பதன் ஈறுகெடுதல் 340 தேன் என்பதன்முன் மெல்லெழுத்து முதன்மொழி வந்து 342 தேன் என்னுஞ் சொல்லோடு வல்லினம் புணர்தல் 340 தொ தொல்காப்பியப் பாயிரஞ் செய்தவர் சி.பா தொல்காப்பிய மரங்கேற்றிய அரசசபை சி.பா தொல்காப்பிய மரங்கேற்றிய போது கேட்டவர் சி.பா தொல்காப்பியர் நூல் செய்த காலத்துவழங்கிய வேதங்களின் பெயர் சி.பா ந நகர வகரங்கள் உகர ஊகாரங் களோ டீறாகாமை 74 நகரமெய் ஈறாமாறு 78 நகாரவீற்று அல்வழிப்புணர்ச்சி 249 நகாரவீற்று வேற்றுமைப் புணர்ச்சிந 299 நா நாட்பெயர்கள் தொழிற் பெயர்க ளொடு புணர்தல் 247 நாயும் பலகையும் வருங்கால் வல் லென்கிளவி புணருமாறு 374 நி நிலத்தின்றன்மை சி.பா நிலாவென்கிளவி வேற்றுமையில் முடியுமாறு 228 நிலைமொழி யீற்றுமுன் மென் கணம்புணர்தல் 145 நிலைமொழி யீற்றுமெய் அத்தின் முன்னும் வற்றின் முன்னும் கெடு தல் 133 நிலைமொழி யீற்றுமுன் வன்கணம் ஒழிந்தன புணருதல் 144 நிலைமொழி வருமொழிகள் அடை யொடு நின்றுபுணர்தல் 110 நிலையாதென்றல் 110 நிலையிற்றும் நிலையாது மென்றல் 110 நிலையிற்றென்றல் 110 நிறுத்தளத்தல் 7 நீ நீ-பீ-ந என்பன முடியுமாறு 250 நீ, வேற்றுமைக்கண் முடியுமாறு 252 நு நுட்பவுரையின்னதென்பது சி.பா. நும்மென்பது அல்வழிக்கண் புண ருமாறு 326 நும்மென்பது வேற்றுமையிற் புணருமாறு 325 நும்மென்னும் மகரவீறு சாரியை பெறாமை 187 நூ நூல்செய்தான் பாயிரஞ் செய்த லாகாதென்பது சி.பா நூல்செய்வோனிலக்கணம் சி.பா நூறன்முன் அளவுப்பெயரும் நிறைப்பெயரும் புணர்தல் 474 நூறன்முன் ஒருபஃது முதலியன புணர்தல் 474 நூறன்முன் ஒன்றுமுதலிய எண் ணுப் பெயர்கள் புணர்தல் 472 நூறு வருங்கால் நான்கும் ஐந்தும் ஒற்று மெய் திரியாமை 460 நூறு வருங்கால் மூன்றனொற்றடை யுந்திரிபு 460 நெ நெட்டெழுத்தின் பின்னின்றலகரம் இயல்பாதல் 370 நெட்டெழுத்தின் பின்னின்ற ளகர விறுதி புணருமாறு 400 நெட்டெழுத்துக்கள் 4 நெட்டெழுத்துக்களின் முன்னர் மெய்கள் புணருமாறு 160 நெட்டெழுத்துப்பெறாத சாரியை கள் 134 நெடிற்றொடரும் வன்றொடரும் வல்லினத்தோடு புணருங்கால் அம்சாரியை பெறுதல் 417 நெல்-செல்-கொல் என்பன அல் வழியிற் புணருமாறு 371 ப பகார மகாரம் பிறக்குமியல்பு 97 பத்தின்முன் ஆயிரம் புணர்தல் 435 பத்தின் முன் இரண்டு புணர்தல் 434 பத்தின்முன் எண்ணுப் பெயர் புணர் தல் 433 பத்தின் முன் நிறைப்பெயரும் அளவுப்பெயரும் புணர்தல் 436 பத்துவரின் எட்டனொற்று ணகர மாதல் 444 பத்துவரின் ஐந்தனொற்று மகரா மாதல் 444 பத்துவரின் ஒன்று மிரண்டுமடை யுந் திரிபு 438 பத்துவரின் நான்கனொற்றடையுந் திரிபு 442 பல்ல பல முதலியன வற்றுச் சாரியை பெறுதல் 174 பலசிலவென்பன இறுதிநீளும் 213 பலசில வென்பன தம்முன்றாம் வந்து புணருதல் 214 பலபொருட்குப் பொதுவாகிய புணர்மொழிகள் புணர்க்கப் படுமாறு 142 பல, வேற்றுமையில் வற்றுப் பெறுதல் 220 பன்னீருயிரும் மொழிமுதலாகும் 59 பனியென்னுங் காலப்பெயர் வேற் றுமையில் முடியுமாறு 241 பனை அவரை ஆவிரை முதலியன முடியுமாறு 283 பனைமுன் அட்டுமுடியுமாறு 284 பனைமுன் கொடிபுணருமாறு 285 பனையென் னளவுப்பெயரும், காவெ ன் நிறைப்பெயரும் பெறுஞ் சாரியை 169 பா பாயிரத்தின் வகை சி.பா பாயிரம் இன்னதென்பது சி.பா பாயிரம் செய்வார் சி.பா பாழ்வல்லினத்தொடு புணருதல் 387 பீ பீர் அம்சாரியை பெறுதல் 365 பு புணர்க்கப்படாத சொற்கள் 482 புணர்ச்சி நான்குவகைப்படு மென் பது 107 புணர்மொழி யகத்துச் சாரியை வருமென்பதூஉம் வாராத மொழிகளும் உளவென்பதூ உம் 132 புள் - வள் என்பன உகரச்சாரியை பெறுதல் 403 புள்ளிமயங்கியலுள் முடிக்கப் படாத செய்யுள் முடிபு 481 புள்ளியீற்றின் புறனடை 405 புள்ளியீற்று முன்னும் குற்றுகர வீற்றுமுன்னும் உயிர்புணர்தல் 138 புளிமரக்கிளவி வேற்றுமையில் முடியுமாறு 246 புறக்கருவி 246 புறச்செய்கை 246 புறப்புறக்கருவி 246 புறப்புறச்செய்கை 246 பூ பூல்வேல் ஆல் என்பன புணரு மாறு 375 பூவின்றன்மை சி.பா பெ பெண்டு என்னுஞ்சொல் அன் சாரியை பெறுதல் 421 பெய்தளத்தல் 7 பெயர்களின் பின் சாரியை வரு மென்பது 118 பெயர்ச்சொல் இத்துணைய வென்பது 117 பெருந்திசை இரண்டு புணர்தல் 431 பெருந்திசையோடு கோணத்திசை புணர்தல் 432 பெற்றத்தை உணர்த்தும் சேவென் னும் பெயர் முடியுமாறு 278 பொ பொதுப்பாயிரத்தின் வகை சி.பா பொழிப்புரை யின்னதென்பது சி.பா பொன் என்பது செய்யுளிற் புணரு மாறு 356 ம மக்கள் என்பது வேற்றுமையிற் புணருமாறு 404 மகப்பெயர் அத்துச்சாரியை பெறல் 219 மகப்பெயர் இன்சாரியைபெற 218 மகரக்குறுக்கத்தின் மாத்திரை 13 மகரமுன் வகரம் மயங்குதல் 28 மகரவிறுதி வேற்றுமையிற் புணரு மாறு 310 மகரவீறு அல்வழிக்கண் புணரு மாறு 314 மகரவீறு இன்சாரியை பெறுதல் 186 மகரவீறுகெட்டு மெல்லெழுத் துறழுமிடம் 312 மகரவீறு பெறுஞ்சாரியைகள் 185 மகரவீறு வகரம் வரும் வழிக்குறு குதல் 330 மகரவீற்றுத் தொழிற்பெயர் புண ருமாறு 327 மகரவீற்றுநாட்பெயர் புணரு மாறு 331 மகரவீற்றோடு மயங்காத னகர வீறுகள் 82 மடற்பனை சி.பா. மகரப்பெயர்க் குற்றியலுகரங்கள் அம்சாரியை பெறுதல் 415 மரப்பெயருள் மென்றொடராகா தன 416 மரூஉ மொழிகளும் பொருளியை பில்லனவும் புணர்ச்சி பெறு மென்றல் 111 மலையின்றன்மை சி.பா மழையென்கிளவிமுடியுமாறு 287 மா மாத்திரையினளவு 7 மாணாக்கனுக்குரிய இலக்கண மில்லா த வ ன் ப ய ன் பெறா னென்பது சி.பா. மாமரக்கிளவி வேற்றுமைக்கண் முடியுமாறு 231 மி மிக்கபுணர்ச்சியினிருவகை 112 மின் பின் பன் கன் என்பன உகரம் பெறுதல் 345 மீ மீயென்னுஞ் சொல்லின் முன் வல் லெழுத்து மிகல் 250 மீன் என்னுபெயர் வல்லெழுத்து மு த ன் ம ழி ய டு புணர்தல் 339 மு முடத்தெங்கு சி.பா. முதலாகாதன தம் பெயர் கூறு மிடத்து முதலாதல் 66 முதலீரெண்ணின் முன் உயிர் முதன் மொழியாய அளவுப்பெயர் வந்து புணர்தல் 455 முந்து நூலிவையென்பது சி.பா. முந்து, பண்டு, அன்று, இன்று என் பன இயல்பாதல் 430 முரண் என்னுந் தொழிற்பெயர் அல்வழியிற் புணருமாறு 309 முற்றவுணர்தல் சி.பா. முன் என்னுஞ் சொல்முன் இல் புணர்தல் 355 முன்னிலை வினைச்சொல் வன் க ண ம் வ ரு மி ட த் து முடியு மாறு 151 மூ மூன்றன் முதனிலை உழக்குவருங் கால் நீளுமென்பது 456 மூன்றனொற்றுப் பகரமாதல் 441 மூன்றாம் வேற்றுமைத்திரிபு புணர்ச்சி 156 மூன்றும் ஆறும் முதல் குறுகு 440 மூன்றும் நான்கும் ஐந்தும் உழக்கு வருங்காலடையுந்திரிபு 456 மெ மெய்கள் இயல்பாகவே புள்ளி பெறுதல் 15 மெய்களுக்குரிய மாத்திரை 11 மெய்களுள் மகரம் புள்ளிபெற்று வழங்கியதென்பது 14 மெய்யெழுத்துக்கள் 9 மெல்லெழுத்துக்கள் 18 மெல்லெழுத்துக்களின் பிறப் பிடம் 100 மென்றொடர் மொழியுள் அக்குப் பெறுவன 418 மொ மொழிக்கீறாக வருந் தனி மெய் கள் 82 மொழிக்கு முதலிலும் இறுதியிலும் வருமெழுத்துக்கள் 103 மொழிகள் மூன்று வகையவென் 45 மொழிபுணரியல்புநான்கு என்பது 108 மொழிறுதி மெய்கள் புள்ளி பெறல் 104 மொழியீற்றுக் குற்றுகரம் புள்ளி பெற்று நிற்குமென்பது 105 ய யகரம் ஆகாரத்தோடு மாத்திரம் மொழிக்கு முதலாகும் என்பது 65 யகரமும் இகரமும் மொழியிறுதி யில் ஒத்துஒலிக்கும் என்பது 58 யகரவீறு அல்வழிக்கட் புணரு மாறு 362 யகரவீறு மெல்லெழுத்தோ டுறழ் தல் 360 யகரவீறு வேற்றுமைக்கண் புணர் தல் 357 யகாரம் பிறக்குமியல்பு 99 யா யாதென்பது பெறுஞ்சாரியை 200 யாதெனிறுதியும், ஈட்டுமுதலாய்த விறுதிக் குற்றுகரமும் அன் பெறு மென்பது 422 யாமரக்கிளவி முதலியன வேற்று மையில் மிகுதல் 229 யாமரக்கிளவியும், பிடாவுந் தடா வும் மெல்லெழுத்து மிகப் பெ றுதல் 229 யாவை என்பது வற்றுச்சாரியை பெறல் 177 ர ரகரவிறுதி வேற்றுமைக்கண் புணரு மாறு 362 ரகார ழகாரம் குறிற்கீழொற்றாய் மயங்காமை 49 ரகார ழகாரம் பிறக்குமியல்பு 95 ரழவல்லன தம்முன் தாம் மயங்கு மாறு 29 ல லகரவீற்றுத் தொழிற்பெயர் புணரு மாறு 377 லகாரவிறுதி அல்வழிக்கட் புணரு மாறு 368 லகாரவிறுதி ஆய்தமாகத்திரிதல் 369 லகாரவிறுதி மெல்லெழுத்தோடு புணர்தல் 367 லகாரவிறுதிவேற்றுமைக்கண் புணர்தல் 366 லகார ளகாரம் பிறக்குமியல்பு 96 லனமுன் வருந் தகர நகரத் திரிபு 149 வ வகரம் உ-ஊ-ஒ-ஓ என்னும் நான் கல்லாத உயிர்களோடு மொழிக்கு முதலாமென்பது 63 வகரமெய் நான்மொழிக்கண் மாத் திரம் ஈறாதல் 81 வகரவீற்றுச் சுட்டுப்பெயர் அற்றுச் சாரியை பெறுமென்பது 378 வகரவீற்றுச் சுட்டுப்பெயர்கள் பெறுஞ் சாரியை 188 வகாரம் பிறக்குமியல்பு 98 வட்டியென்னும் அளவுப் பெயர் வருங்கால் ஐந்தனொற்றடை யுந் திரிபு 454 வண்டும் பெண்டும் இன்சாரியை பெறல் 420 வல்லெழுத்துக்கள் 19 வல்லெழுத்தை முதலாக உடைய உருபுகள் புணருமாறு 114 வல்லென் கிளவி உகரம் பெறுதல் 373 வழக்கு இதுவென்பது சி.பா. வளியெனவரூஉம் பூதக்கிளவி முடியுமாறு 242 வற்றுச்சாரியை முதல்கெடு 122 வன்றொடர் அல்வழியில் இயல் பாகுமென்பது 425 வா வாழியவென்னும் வியங்கோள் முற்று ஈறுகெட்டுவருதல் 211 வி விசைமரக்கிளவி முடியுமாறு 282 விண்அத்துச்சாரியை பெறு 305 விதியீறாவந்த எகர ஒகரம் முடியு மாறு 278 விரவுப்பெயருட் சில இயல்பாய் முடியுமாறு 155 வினாவெழுத்துக்கள் 32 வீ வீசிதரங்கநியாயம் பொ.பா. வெ வெயில் அத்துப் பெறும் என்பது 377 வெரிந்" என்னும் நகர ஈற்று மொழி வல்லினம் வருங்கால் முடியு மாறு 300 வே வேட்கை என்னுஞ்சொல் அவா வரின் முடியுமாறு 288 வேற்றுமையுருபுகள் 113 வேற்றுமையுருபுகள் பெயரொடு புணருமாறு 116 ழ ழகரவிறுதி வேற்றுமைக்கண் புணருமாறு 383 ள ளகரவிறுதி அல்வழிக்கட் புணர் தல் 398 ளகரவிறுதி ஆய்தமாதல் 399 ளகரவிறுதி மெல்லெழுத்தொடு புணர்தல் 397 ளகரவிறுதி வேற்றுமைக்கட் புணர்தல் 396 ளகரவீற்றுத் தொழிற்பெயர் புணரு மாறு 401 ற றகார னகாரம் பிறக்குமியல்பு 94 ன னகரத்தின் முன் மகரம் குறுகுதல் 52 னகரமுற்று இடைச் சொற்களும் வினையெச்சச் சொற்களும் புணருமாறு 333 னகரமுற்று இயற்பெயர்களின் முன் தந்தையென்பது புணரு மாறு 347 னகரமுற்றுக் கிளைப் பெயர்கள் புணருமாறு 337 னகாரமுற்றுச் சாரியை திரியு மாறு 122 னகாரமும் மகாரமும் ஈரொற்றாய் மயங்குமிடம் 51 னகாரவீறு வேற்றுமைக்கண் புணருமாறு 332 அரும்பத (அருஞ்சொல்) விளக்கம் முதலியன நூற்பா எண் அ அஃகுதல் - சுருங்குதல் 40 அஃறிணை விரவுப்பெயர் - உயர் திணைப்பெயரோடு அஃறிணை சென்று விரவிய பெயர் 155 அகக்கருவி - அஃதாவது; செய்கைப் படுத்தற்குரிய நிலைமொழி யீறு பற்றியேனும் வருமொழி முதல் பற்றியேனும் வரும் எழுத்து விதி களைக் கூறுவது. 1 அகச்செய்கை - அஃதாவது; நிலை மொழியீறு இன்ன இன்ன வாறு முடியுமெனக் கூறுவது 1 அகத்தோத்து - அகச் செய்கைக் குரிய இயல். 143 அகப்பட - அடங்கும்படி பாயிரம் அகப்பாடு - உள்ளடங்கியது 8 அகப்புறக்கருவி - அஃதாவது; புணர்ச்சி யிலக்கணமும் புணர்ச் சிக்குரிய திரிபுகளிவையென்பதும், இயல்பும், புணர்ச்சிவகையும், நிலை மொழிகள் செய்கை விதியிற் பெறுஞ் சாரியைகள் வருமொழி யோடு புணருங் காலடையுந் திரி புகளுமாகிய இருமொழி களுஞ் செய்கை படுதற்கேற்றவாய் வரும் விதிகளைக் கூறுவது. 1 அகப்புறச்செய்கை - அஃதாவது; நிலை மொழியீறு பெறும் முடி பன்றி நிலைமொழியீறு பெற்று வரும் எழுத்து முதலியவற்றின் முடிபு கூறுவது. 1 அகல - விரிய 1 அங்கதம் - வசைச்சொல் பாயிரம் அங்காத்தல் - வாயைத்திறத்தல் 85 அசைத்தல் - எதிர்முகமாக்கல் 34 அசைநிலையாந்தன்மை - அசை நிலையாமியல்பு 40 அஞ்ஞை - தாய் 73 அடை - அடுத்துவருஞ் சொல் 110 அண்ணம் - மேல்வாய் 1 அண்பல் - மேல்வாய்ப்பல் 86 அணரி - மேனோக்கி 94,95 அணருதல் - மேனோக்கல் 96 அணல் - தாடி 157 அணி - அணியவிடம் 236 அத - ஒருமரம் 203 அதங்கோடு - ஓரூர் பாயிரம் அதிகாரம் - தலைமை, முறைமை 10 அதோளி - அவ்விடம் 159 அதோள் - அவ்விடம் 398 அப்பான்மொழி - அப்பகுதியான மொழி; என்றது, ஒற்று மிகத் தோன்றாதமொழிகளை அல்வழி என்றதனால், ஒற்று மிகத்தோன்றாதமொழி என்பது பெறப்படும். 196 அரா - பாம்பு 233 அரில் - குற்றம் 102 அருகல் - அரிதாய்வரல் (சிறு பான்மை) 13 அருத்தாபத்தி - பொருட்பேறு 214 அருவாளர் - அருவாள தேயத் தார் பாயிரம் அலகு - எண் 6 அலகுபெறல் - அசைக்குரிய எழுத் தாக எண்ணப்பெறல். 6 அவ் - அவை 7 அவயவி - அவயவத்தையுடை யது பாயிரம் அவா - ஆசை 288 அழன் - பிணம் 82 அழன் புழன் - வழக்கு வீழ்ந்த சொற்கள் 82 அழான் புழான் - அக்காலத்து வழங்கிய இயற்பெயர்கள் 348 அளவு - மாத்திரை 1 அன்றியனைத்தும் - அவ்வனைத் தும், அகரச்சுட்டுத் திரிந்து அன்றி என நின்றது 144 அனுவதித்தல் - வழிமொழிதல் அனையனல்லோன் - அத்தன்மை யனல்லோன் பாயிரம் ஆ ஆட்சி - ஆளுதல் 20 ஆண் - இருதிணைப் பொதுப் பெயர்; ஒருமரம் 303,304 ஆண்டு - அவ்விடம் (செய்யுளிய லில் என்றபடி) 1 ஆணை - கட்டளை (என்றது இந் நூலாசிரியன் கட்டளையை) 10 ஆர் - ஆத்தி 363 ஆர்க்கு - நெட்டு 407 ஆவயின் - அவ்விடம் 148 இ இகவாமை - கடவாமை, வழு வாமை 273 இசை - பண் 8 இசைமை - இசைக்குந்தன்மை 39 இடையறவு படாமை - பிளவு படாமை 108 இதோளி - இவ்விடம் 159 இதோள் - இவ்விடம் 398 இம்பர் - பின் 56 இயங்கல் - சஞ்சரித்தல் 46 இயலா - இயன்று 1 இரீஇ - இருத்தி பாயிரம் இருசொல் - தான்சேர்ந்த சொல் லும்,வருசொல்லும் 204 இருவிள - ஓலை; ஓரூருமாம் 216 இலேசு - மிகை முதலியன 144 இல்லம் - தேக்கு 313 இவ்விலேசு என்றது தத்தமொத்த என்ற இலேசினை 203 இனி - இப்பொழுது 236 இனைத்து - இவ்வளவினது 1 ஈ ஈர்க்கு - ஈக்கு (மரூஉமொழி) 407 ஈற்றுப் பொதுவிதி என்றது 264ம் சூத்திர விதியை 267 உ உசா - ஆராய்வி 75 உடம் பொடுபுணர்ந்தது என்றது மிகும் என்ற சொல்லில் உகரத்தை மிகூம் என நீட்டிக் கூறி உகரம் ஊகாரமாகும் என்னும் விதியை அதனுளமைத்தமையை 261 உதோளி - உவ்விடம் 204 உதோள் - உவ்விடம் 398 உந்தி - கொப்பூழ் 83 உமண் - உப்பமைக்குஞ்சாதி; உமணர் 307 உய்த்துணர்ச்சி - ஆராய்ந்துணர் தல் 163 உயிரில் எழுத்து என்றது மெய்யும், ஆய்தமும், குற்றுகரமாகிய இவற்றை 53 உயிர்க்கிழவன் - உயிராகிய கிழவன், கிழவன் - உரியோன் 85 உயிர்த்தல் - ஒலித்தல் 17 உரிஞ் - உரிஞ்சல் (உரோஞ்சல்) 78 உரு - மனத்தானுணரப்படுவது பாயிரம் உரு - நிறம் 40 உருபின் பொருள் படவந்த வேற் றுமை - வேற்றுமைப் பொருட் புணர்ச்சி 236 உரும் - இடி 186 உருவு - வடிவு 138 உரை - விரிவுரை 1 உரை - வாக்கியநடை பாயிரம் உரைச் செய்யுள் - வாக்கிய நடை யாலாகிய செய்யுள் 33 உலைவு - அசைவு 33 உவா - பூரணை 223 உழை - பெண்மான் 286 உறழ்தல் - மாறுதல் 102 ஊ ஊற்றம் - பற்றுக்கோடு 144 ஊறு - பரிசம் பாயிரம் எ எஃகு - கூர்மை 38 எஃகுதல் - தூய்மையாக்குதல், நொய்தாக்கல் 1 எக்கண்டு - எம்மைக்கண்டு. (எங் கண்டு எக்கண்டு என்றாயிற்று) பாயிரம் எகின் - அன்னம், புளியமரம் 82 எச்சம் - ஒழிதல் 174 எடுத்தல் - உயர்த்திக்கூறல் 88 எடுத்தோத்து - சூத்திரம் 144 எண் - எள் 308 எண்கு - கரடி 26 எல்லி - இரா 30 எவ்வி - ஒருவள்ளல் 30 எழூஉதல் - எழுப்புக 6 எறியப்படல் - வீசப்படல் பாயிரம் ஏ ஏ- அம்பு 274 ஏற்புழிக்கோடல் - ஏற்றவிடத்துக் கொள்ளுதல் - ஏற்றல் - இயைதல் 53 ஐ ஐம்பாலறியும் பண்பு தொகு மொழி - பண்புத்தொகை 178 ஒ ஒட்டல் - பொருந்தல் 130 ஒட்டுதற் கொழுகியவழக்கு - சாரியை பொருந்துற்கேற்ப நடந்த வழக்கு 165 ஒட்டுப்பட்டு நிற்றல் - சேர்ந்து நிற்றல் 160 ஒட்டுப்பெயர் - வினையாலனை யும் பெயர் 108 ஒப்பினாயதொராகு பெயர்- உவமஆகு பெயர் 1 ஒருநெறி - ஒருவழி 1 ஒருமருங்கு - ஒருபகுதி 49 ஒழுக்கல் - செல்லுதல் 112 ஒற்றியதகரம் - ஒற்றாய் நின்ற தகரம் 445 ஒற்றமை - வேற்றுமையின்மை (சமவாயம்) 67 ஒற்றுமை நயம் - வேறுபாடின்றி நிற்குநயம் 67 ஒன்றியற்கிழமை - தற்கிழமை 36 ஒன்று பலவாதல் - ஓரெழுத்தாக நின்றது பிரிந்து பலவாதல் 1 ஒன்றென முடித்தல் - ஒருத்தி 177 ஓ ஓ - மதகுநீர்தாங்கும் பலகை 43 ஓக்கம் - உயர்ச்சி 144 ஓத்து - சூத்திரம் 111 ஓரன்ன - ஒரு தன்மைய 2 ஔ ஔகாரவிறுவாய் - ஔகாரமாகிய இறுதி எழுத்து (பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை) 8 க கஃறு - ஒருவகை நிறம் 40 கடப்பாடு - முறைமை 37 கடா - வினா பாயிரம் கடான் - வழக்கிறந்தசொல் 82 கண்கூடு - பிரத்தியட்சம் ( காட்சி) 108 கண்ணழித்தல் - பதம்பிரித்துப் பொருள்கூறல் பாயிரம் கண்ணுதல் - கருதுதல் 210 கண்விரி - அலரி 248 கப்பி - அக்காலத் தேயவழக்குப் பெயர் 248 கபிலபரணர் - கபிலனும் பரணனும், இது னகரவீறு, ஈழவக்கத்தி முதலியன னகர வீற்றுக்கும் ரகர வீற்றுக்கும் பொது. ஈழவன்கத்தி ஈழவர் கத்தி என்று விரிக்கலாம் என்றபடி 153 கம - நிறவு 203 கருவித்திரிபுகள் - கருவித்திரிபுப் புணர்ச்சிகள் 144 கலம் - ஓரளவுப் பெயர் 133 கலி - கலிப்பா 6 கலை - ஆண்மான் 286 கழற்பெய்குடம் - கழற்காய் இட்ட குடம் பாயிரம் களங்கனி - களம்பழம் 10 கா காட்சி - அறிவு 83 காணம் - பொற்காசு பாயிரம் காந்தருவம் - இசைநூல் பாயிரம் காயம் - ஆகாயம் 305 கார் - கருநிறம் 10 காரணக்குறி - காரணப்பெயர் 4 கி கிடக்கைமுறை - ஒன்றன் பின் ஒன்று கிடக்குமுறை 1 கு குண்டிகைப்பருத்தி - பருத்திக் குண்டிகை - குண்டிகை - குடுக்கை பாயிரம் குணம் - பண்பு 329 குயின் - மேகம் 82 குரங்கெறி விளாங்காய் - குரங்குக் குக் கல்லா லெறிந்து கொள்ளும் விளாங்காயை யுடையவன் பாயிரம் குரீஇ - குருவி 144 குழ - இளமை 203 குழுவுபடல் - தன்னினத்தை யடை தல் பாயிரம் குறி - பெயர் 8 குறித்துவரு கிளவி - வருமொழி 108 குறியிட்டாளுதல் - பெயரிட் டாளுதல் 117 ஆளுதல் - வழங்கல் குறியீடு - பெயரிடல் 8 குன்றிய புணர்ச்சி - குன்றல் என் னும் திரிபுணர்ச்சி 114 குன்றுதல் - குறைதல் 6 கூ கூதாளி செடி - தூதுணை என் பாருமுளர் 246 கூறை - சீலை பாயிரம் கெ கெடுதல் - (ஈண்டு) மாத்திரை குறைதல் 234 கெரீஇ - பொருந்தி பாயிரம் கே கேழல் - பன்றி 61 கொ கொண்டல் - மேகம் 61 கொழு - கலப்பைக்கொழு; துன் னூசி செல்வதற்குக் குத்தி வழி யாக்குங்கருவி பாயிரம் கொற்றி - துர்க்கை 30 கோ கோட்டு நூறு - சுண்ணாம்பு 6 கோட்பட்டான் - இதில், கொள் ளுதல் - தந்தொழில்; படல், தம்மினாகியதொழில் 156 கோடு - கொம்பு 17 கோடை - மேல்காற்று 61 கோன் - அக்காலத்து வழங்கிய இயற்பெயர் 351 கௌ கௌ - கௌவுதல் 144 கெளவை - காரியம், பழிமொழி 61 ச சகடம் - பண்டி 62 சந்தம் - ஓசை 1 சமழ்ப்பு - ஒளிகெடல் 62 சா சார்ந்துவரல் - ஒன்றனைப் பற்றுக் கோடாகக் கொண்டுவரல் 1 சார்பிற்றோற்றத்தெழுத்து குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் 83 சி சிங்கநோக்கு - சிங்கம்போல முன்னும் பின்னும் நோக்குதல் 88 சிதைதல் - அழிதல்; குறைதல் 6 சிவணுதல் - பொருந்தல் 46 சிறப்புப்பெயர் - மன்னர் முதலி யோரால் அளிக்கப்படும் வரி சைப் பெயர் 154 சீ சீர்நிலையெய்தல் - சீராதல் 40 சீற்றம் - கோபம் 62 சு சுஃறு - ஒருவகையொலி 40 சூ சூரல் - பிரம்பு 62 செ செகின் - தோண்மேல் 82 செப்பலோசை - வெண்பாவுக்குரிய செப்பிக் கூறு மோசை 6 செய்கை - புணர்ச்சி 173 செய்கையொப்புமை - புணர்ச்சி யியைபு 119 செய்பாங்கு - செய்யவேண்டிய பகுதிகள் பாயிரம் செவ்வண்ணம் - செந்நிறம் 6 செவ்வன் - செவ்விது பாயிரம் செவிடு - ஓரளவு 165 செரு - போர் 260 செறித்தல் - புகுத்தல் பாயிரம் சென்னி - அக்காலத்து வழங்கிய தேயவழக்குப் பெயர் 246 சே சே - மாமரம்; எருது 274 சோ சோ - மதில் 289 ஞ ஞமலி - நாய் 64 ஞழீயிற்று - நழுவிற்று 64 ஞா ஞாண் - நாண் (-கயிறு) 26 ஞாபகம் - ஒருத்தி (முன் விளக்கப் பட்டது) 124 ஞாற்சி - தூங்குதல் 144 ஞெ ஞெரி - நெரிவு 145 ஞெமை - ஒரு மரம் 282 த தகர் - ஆட்டுக்கடா 210 தட்டல் - தளைத்தல் 6 தட - வளைவு 203 தடா - மிடா 202 தத்தை - கிளி 30 தந்திரவுத்தி - நூலோடு பொருந்து மாறு 1 தப - நீங்க பாயிரம் தலை - முடி 103 தலைச்சூத்திரம் - முதற்சூத்திரம் 1 தலைப்பெய்ய - சேர்க்க 155 தவ - மிக 204 தளா - ஒரு மரம் 229 தா தாழ் - தாழ்ப்பாள் 384 தான் - அக்காலத்து வழங்கியதோ ரியற்பெயர் 351 தி திங்கள் - மாதம் 248 தித்தி - தேமல் 61 திரிந்ததன்றிரிபு அது வென்றல் - அஃதாவது; நிலைமொழி வரு மொழிகளுள் யாங்காயினும் ஓரெழுத்திற்குத் திரிபுகூறி அம் மொழிக்கு மீளத் திரிவு கூறுங் கால், அத்திரிபு மொழியை எடுத்துக் கூறாமல் அத்திரிந்த எழுத்து மொழியையே எடுத்துக் கூறல் 1 திரிந்ததன்றிரிபு பிறிதாவது:- ஓரீற் றெழுத்து பிறிதோரெழுத் தீறா கத் திரிந்து அவ்வாறே நின்று புணருதல்,. ஈற்றிலன்றிப் பிறவிடங்களில் வருமேனுங் கொள்க 1 திரிந்ததன்றிரிபு அதுவும் பிறிது மாவது:- ஓரீறு வேறொரெழுத் துப் பெற்றுப் பிறிதீறாகநின்று புணருமெனக் கூறி, அத்திரிபீற் றிற்காயினும், அத்திரிபீற்றோடு புணரும் வருமொழிக்காயினும், மீளவும் ஒன்று விதிக்க வேண்டி அத்திரிபீற்றையே எடுத்துப் புணர்த்துதல் அஃது இயல்பீறும் பிறிதீறும் தோன்றநிற்றலின் அது வும் பிறிது மென்றலாயிற்று. இத் திரிபு பிறவிடங்களில் வருமேனுங் கொள்க. 1 திரிபுபுணர்ச்சி மூன்று - அவை; மெய் பிறிதாதல், மிகுதல், குன்றல் 109 திரும் - மாறுபாடு 186 தீ தீர்தல் - தவிர்தல் 36 து துன்னூசி - கலப்பைக் கொழுவின் கீழிருக்குங் கூரான மரம்; செருப்பு முதலிய தைக்கும் ஊசி என்பாரு முளர் பாயிரம் தூ தூணி - அம்புக்கூடு 61 தெ தெவ் - பகைமையை யுணர்த்தி வரும்போது உரிச்சொல்லாம் படுத்தலோசையால் பகைவனை யுணர்த்தும் போது பெயராம் 184 தெற்றெனல் - தெளிதல் 133 தென்புலத்தார் - பிதிரர் பாயிரம் தொ தொழிற்படுத்துவன - ஏவல் 151 தோ தோற்றரவு - தோற்றுதல் 83 தௌ தெளவை - முன்பிறந்தாள் 61 ந நடுவுவாங்கிவிட்டெழுதல் - உள் வளைத்தெழுதல் 2 நந்து - சங்கு 61 நப்புணர்வு - நம்புணர்வு (-நம்மைப் புணர்தல்) 157 நமை - ஒருமரம் 282 நரம்பின்மறை - யாழ்நூல் 33 நரம்பு - யாழ்; ஆகுபெயர் 33 நலிதல் - உயர்த்தியும் தாழ்த்தியுங் கூறல் 88 நன்னிறம் - நல்லநிறம் (வெண்ணிறம்) பாயிரம் நா நாள் - நாண்மீன் (நட்சத்திரம்) 331 நி நிலம் - இடம் பாயிரம் நிலங்கடந்தநெடுமுடியண்ணல் - மாயோன் பாயிரம் நிலை - நிற்பது; அது முதனிலையும், இறுதிநிலையும் என இரு வகைத்து 1 நிலைக்களம் - இடம் 83 நிலைத்திணை - அசரப்பொருள்; (-இயங்காத பொருள்) 46 நீ நீட்டம் - மிக்கொலித்தல் 6 நீட்டியளத்தல் - கோல் முதலிய வற்றைநீளவைத்தளத்தல் 7 நீட்டும்வழிநீட்டல் - செய்யுள் விகாரங்களுளொன்று 208 நு நுண் - ஒரு மரம் 203 நுண்பொருள் - நுணுகியறியும் பொருள் பாயிரம் நெ நெய்யரி - பன்னாடை பாயிரம் நே நேமி - சக்கரம் 61 நை நைவளம் - ஒரு பண் 61 நொ நொ - துன்பப்படு 72 நௌ நௌவி - ஒருசாதி மான் 61 ப பட்டாங்கு - உண்மை 156 படர்ச்சி - ஒழுகுதல் பாயிரம் படிமை - தவவேடம் பாயிரம் படிறு - பொய் பாயிரம் படுத்தல் - தாழ்த்திக்கூறல் 53 படுத்து - சேர்த்து 53 பண்புகொள்பெயர் - பண்பி 178 பண் - பண்ணுதல் (செய்தல்) 306 பயின் - அரக்கு 82 பருப்பொருள் - வெளிப்படைப் பொருள் பாயிரம் பழுக்காய் - பாக்கு 202 பள்ளி - இடம் 100 பற்றுக்கோடு - சார்பு 34 பா பா - பரந்துபட்டுச் செல்லு மோசை 33 பாகம் - சரிபாதி 7 பாகு - பாக்கு 166 பாடு - தகுதி 176 பால் - கூறு, பங்கு 165 பால்வரைகிளவி - பொருட் கூற்றை யுணரநின்ற சொல் 165 பாளிதம் - பாற்சோறு 246 பி பிசி - நொடியான சொற்றொடர் பாயிரம் பிடா - ஒரு மரம் 229 பிளந்து - பிரிந்து 110 பிளவுபடா - பிரியாத 6 பிறன்கோட்கூறல் - பிற ஆசிரியன் கொள்கையை எடுத்துக்கூறல் 13 பிறாண்டு - வேறிடம் 47 பீ பீர் - ஒரு கொடி, ஒருமரமென் பாருமுளர் 363 பு புடைபெயர்தல் - இடம் பெயர் தல், அசைதல் 11 புலப்படல் - தோன்றல் 83 புலம் - இலக்கணம் பாயிரம் புழன் - 82 புறக்கருவி - செய்கைக்குரிய நிலை மொழிவருமொழிகளாய் நிற்கும் மொழிகளின் மரபு கூறுவது 1 புறச்செய்கை - வருமொழிச் செய்கை கூறுவது 1 புறப்புறக்கருவி - மொழிகளாதற் குரிய எழுத்துக்களது இலக்கண மும் பிறப்புங் கூறுவது 1 புறப்புறச் செய்கை - நிலைமொழி யும் வருமொழியுஞ் செய்கை பெறாது நிற்ப அவ்விரண்டை யும் பொருத்த இடையில் ஓரெ ழுத்து வருவது போல்வது 1 புறனடை - புறனடுத்து வருவது 349 புன்கு - ஒரு மரம் 26 பூ பூல் - புல்லாந்தி 375 பூழ் - காடை 383 பெ பெய்து - சார்த்தி 11 பெயர்த்து - பெயரினை யுடையது 1 பெயரெச்சமறை - எதிர்மறைப் பெயரெச்சம் 223 பே பேன் - அக்காலத்து வழங்கியதோ ரியற்பெயர் பை பைதல் - துன்பம் 61 பொ பொச்சாப்பு - சோர்வு பாயிரம் பொதுப்பிறவி - பொதுப் பிறப்பு 83 பொருட்பெற்றி பொருட் டன்மை 10 பொருந் - பொருநுதல்; ஒத்தல் 298 பொருள் என்றது ஈண்டு வரு மொழியை 298 போ போக்கு - குற்றம் பாயிரம் போத்தந்து - போகத்தந்து (-பின்கொண்டுவந்து) 34 போய்ச்சார்ந்தோர் - உழவர் பாயிரம் போற்றல் - கொள்ளற்க 156 பௌ பௌவம் - கடல் 61 ம மகப்பால்யாடு - மகவுக்குரிய பாலாடு 219 மஞ்ஞை - மயில் 30 மடற்பனை - அடிதொங்கிமடல், விரிந்தபனை பாயிரம் மடி - சோம்பு பாயிரம் மண் - மண்ணுதல் (-கழுவல்) 306 மண்ணை - அறிவிலான்; பேய் 30 மத்திகை - சவுக்கு 202 மறை - எதிர்மறை 210 மனவு - அக்குமணி 64 மா மாட்டுறுப்பு - பொருளியைபு நோக்கிச் சொற்களைப் பிரித்துக் கூட்டல் பாயிரம்மாட்டேறு - வேறு சூத்திரத்தோடு மாட்டி விடுதல் 231 மாறுகோள் - மாறுபாடு 1 மானம் - குற்றம் ; இதனை ஆன மென்றுபிரிப்பாருமுளர் 44 மானி - அபிமானமுடையவன் பாயிரம் மி மிடறு - கண்டம் 83 மின் - மின்னுதல் (இது தொழில்) 345 மின் - மின்னாகிய பொருளை யுணர்த்தும்போது பெயர் 345 மு முடிந்ததுகாட்டல் - தொல்லா சிரியர் கூறினார் என்று சொல் லுதல் 7 முந்தை - முந்தை (-முன்) 164 முதலா - மொழிமுதலில் வாரா தன 65 முதலின் - அடியாகக் கொள் ளுகையினாலே பாயிரம் முதல் - அடி பாயிரம் முதனிலை எண் - ஒன்று 478 முதுசொல் - பழமொழி பாயிரம் முயலுக்கருத்தா - உயிர் 83 முரண் - மாறுபாடு 309 முற்கு - கர்ச்சனை; (முக்குதல் என்பாரு முளர்) பாயிரம் முறையன்றிக்கூற்று - முன் சொன்ன முறைப்படி கூறாது மாறிக் கூறல் 286 முன்னம் - குறிப்பு 5 முன்னின்றான் தொழிலுணர்த் துவது - முன்னிலைவினை 151 மூ மூங்கா - கீரி 221 மூவகைப்பொருள் - மூவகைப் பெயர், பொருள் - பெயர் 202 மூவகையோசை - வல்லோசை, மெல்லோசை, இடையோசை 18 மெ மெய்பெற்றன்று - பொருள்பெற்றது 27 மே மேலைச்சூத்திரம் - வருஞ்சூத்தி ரம். 358 மை மையல் - மயக்கம் 61 மோ மோத்தை - ஆடு 61 மௌ மௌவல் - முல்லை 61 யா யா - ஒருமரம் 229 யாப்பு - வலி 100 யூ யூபம் - வேள்வித்தறி 65 யௌ யௌவனம் - இளமை 65 வ வடிவு - கட்புலனாய்த் தோன்று வது பாயிரம் (வரிவடிவு) 1 வடிவு - ஒலிவடிவு 1 வய - வலி 203 வயான் - வழா 82 வருடல் - தடவல் 95 வருடை - ஆடு 157 வல் - சூதாடுகருவி 373 வழி - பின் 18 வழிநிலை எண் - இரண்டு முதலிய எண்கள் 478 வளி - காற்று 20 வளை - சங்கு 63 வா வாய்மொழி - மந்திரம் பாயிரம் வாரம் - கூறு 102 வி விகாரப்பட்டமொழி - விதியீறு 140 விசை - ஒருமரம் 282 விடுத்தல் - விடைகூறல் பாயிரம் விரவுப்பெயர் - இருதிணைப் பொதுப்பெயர் 117 விலங்கல் - நாவைக் குறுக்கிட்டுக் கூறல் 88 விலங்கு - வளைந்த கீறு 17 விழன் - 82 விளமி - ஒருபண் 63 வினையினுழப்பு - தொழில் வருத்தம் பாயிரம் வினையெஞ்சுகிளவி - வினை யெச்சச் சொல் 333 வினையோரனைய - ஒருவினை யனைய ஒரு வினைவந்த தன் மைய 146 வீ வீளை - சீழ்க்கை பாயிரம் வெ வெதிர் - மூங்கில் 363 வெதிர்ங்கோல் - மூங்கிற்றண்டு பாயிரம் வெரிந் - முதுகு 298 வே வேட்கை - விருப்பம் - பொருட் பற்று 63,288 வேண்டுதல் - விரும்புதல் 6 வேல் - ஒருமரம் 375 வேற்றுமை நயம் - வேறுபாட்டு நயம் 60 வேற்றுமையோத்து - வேற் றுமையியல் 116 வை வையம் - பூமி 63 வௌ வௌவுதல் - கவர்தல் 63