தொல்காப்பிய உரைத்தொகை எழுத்ததிகாரம் -1 இளம்பூரணம் வ.உ. சிதம்பரனார் (பதவுரை) (பதிப்பு - 1928) மீள்பதிப்பு - 2018 பதிப்பாசிரியர் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் தமிழ்மண் பதிப்பகம் நூற்குறிப்பு தொல்காப்பிய உரைத்தொகை - 1 எழுத்ததிகாரம் - இளம்பூரணம் முதற்பதிப்பு(1928) வ.உ. சிதம்பரனார் பதிப்பாசிரியர் மீள்பதிப்பு (2018) முதுமுனைவர் இரா. இளங்குமரனார் பதிப்பாசிரியர்கள் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் பக்கம் : 32+504 = 536 விலை : 835/- பதிப்பு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: நடயஎயணாயபயவேஅ@பஅயடை.உடிஅ  தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 536  கட்டமைப்பு : இயல்பு  படிகள் : 500   நூலாக்கம் : கோ. சித்திரா   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ழயசசiளா)   அச்சு : மாணவர் நகலகம், பிராசசு இந்தியா, ரியல் இம்பேக்ட் சொல்யூசன்ஸ், தூரிகை பிரிண்ட்ஸ், வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.  தொல்காப்பிய உரைத்தொகை தொல்காப்பியம் நம் வாழ்வியல் ஆவணம்; நம் முந்தையர் கண்ட மொழியியல் வளங்கள் அனைத்தையும் திரட்டித் தந்த தேன் தேட்டு! அத்தேட்டைச் சுவைத்த கோத்தும்பிகள் பழைய உரையாசிரியர்கள். அவர்கள் உரைகளையெல்லாம் ஒன்று திரட்டி, வரிசையுறத் தமிழுலகம் கொள்ள வைத்த உரைத்தொகுதிகள் இவையாம்! முன்னைப் பதிப்பாசிரியர்கள் தெளிவுறுத்தும் மணிக்குவைகள் எல்லாமும், அவர்கள் வைத்த வைப்புப்படி வைத்த செப்பேடுகள் இத் தொல்காப்பிய உரைத் தொகையாம். மேலும், இவை கிடைத்தற்கு அரிய கருவூலமுமாம்! ***** ***** ***** இளம்பூரணர், சேனாவரையர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், தெய்வச் சிலையார், கல்லாடர் ஆகிய பழைய உரையாசிரியர்கள், உரை விளக்கம் பல காலங்களில் எழுதியுளர். எழுத்து, சொல், பொருள் ஆகியவற்றின் பதிப்புகள் ஒரே காலத்தில் ஒருவரால் வெளியிடப்பட வில்லை. அவற்றையெல்லாம் ஓரிடத்தில் ஒரே வேளையில் ஒட்டு மொத்தமாக முன்னைப் பதிப்பாசிரியர்கள் உரை - விளக்கம் - குறிப்பு - இணைப்பு ஆகியவற்றுடன் பெற வெளியிடும் அரிய பெரிய முயற்சியில் வெளியிடப்படுவது தமிழ்மண் பதிப்பகத்தின் இப்பதிப்பாகும். தொல்காப்பியத்திற்குக் கிடைத்த உரைகள் அனைத்தையும் ஒருமொத்தமாகத் தருவதால் இது, தொல்காப்பிய உரைத்தொகை எனப்பட்டது. தொகையாவது தொகுக்கப்பட்டது. இரா. இளங்குமரன் அறிமுகவுரை வ.உ. சிதம்பரனார் வள்ளி நாயக - உலகநாத - சிதம்பரனார், `வ.உ.சி.’ என மூன்றெழுத்தில் முத்தமிழ்ப் புகழும் கொண்டவர் அவர்! “நாடும் மொழியும் நமிம்ரு கண்கள் என்று கொண்ட பெருமக்களை விரல் விட்டு மடக்கக எண்ணின் - அவற்றுக்கே தம்மை ஈகம் செய்தவரை எண்ணின் - அடுத்த விரலைல மடக்க - ஆழமாக எண்ணித் தானே ஆக வேண்டும்! ஓட்டப்பிடாரத்தில், உலகநாதர் - பரமாயியர் மகனாராக 05.09.1892 இல் பிறந்தவர் வ.உ.சி. தந்தையார் வழக்கறிஞர்: தாம்பிறந்த ஊரி இருந்த `வீரப் பெருமாள் அண்ணாவி’ என்பாரிடம் தமிழ் இலக்கிய இலக்கணங்கரளைக் கற்றார். தூத்துக்குடி கிறித்தவ உயர்பள்ளி, திருநெல்வேலி மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி உயர்பள்ளி ஆயவற்றில் கற்றார். தந்தையார் கால்டுவெல் கல்லூரியில் சேர்த்துப் பயிலச் செய்தும், கல்வி நாட்டம் இல்லாராய் ஊர்க்கு வந்து வட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எழுத்தர் பணி செய்தார். அதுவும் ஏற்காமல் சட்டம் படிக்கத் திருச்சிராப்பள்ளி வந்து சட்டக் கல்லூரியில் பயின்று கி.பி. 1895இல் வழக்கறிஞரானார். படிக்கும் போதே 1894இல் திருமணமும் ஆயது. மணமகனார் வள்ளியம்மை. வறியவர்க்கு வாதாடலும், காவலரைத் திணறவைக்க வினாவலும் கொண்ட வ.உ.சி.யின்மேல், அரசின்பகை மளையிடத் தொடங்கிவிட்டது. தந்தையார் தூத்துக்குடிக்குச் செல்ல வைத்தார். வள்ளியம்மை 1900இல் இயற்கை எய்த, அவர் உறவினராய மீனாட்சியம்மையை மணக்கவும் நேர்ந்தது. சிதம்பரனார் தூத்துக்குடிக்குச் சென்றால் என்ன? அவர் ஈகமும் துணிவும் அவருடன் தானே இருக்கும்! தூத்துக்குடி பெருநகர்! தொண்டுக்கும் வாய்ப்பு! எகிப்து கொலை வழக்கு! விடுவிடுப்பு முடிபு! ஏழைமையர் தோழமை யரானார்! தமிழில் தொய்வும், சைவ சமய ஈடுபாடும் பெருகப் பெருவாய்ப்பு ஏற்பட `விவேகபானு’ என்னும் இதழ் நடத்தினார். இது மாதிகை இதழ். சென்னைக்குச் சென்று திரும்பும் ஒரு சூழல் ஏற்பட்டது. அப்பொழுது சிதம்பர்க்கு ஓர் எழுச்சி உண்டாயது; வணிகத்தால் நேர்ந்த அயலாராட்சியை ஒழிக்க, அவ்வணிகமே வழி என்று திட்டம் தோன்றிக் கப்பல் இயக்குதலில் முனைந்தாதர். மும்பை சென்று கப்பல் வாங்கி, தூத்துக்குடிக்கும் கெழும்புக்கும் இடையே செலுத்தினார். `சுதேசிக் கப்பல்’ ஆங்கிலரைக் கொதிக்க வைக்காதா? சுதேசி பண்டசாலை, நெய்தல் சாலை, என்பவற்றை நிறுவினார். ஆலைப் போராட்டங்களில் முன்னின்றார். திலகரைத் தலைவராகக் கொண்டார். சூரத்தில் நிகழ்ந்த மாநாட்டில் பங்குகொண்டு (1907) மீண்டு மேடைகளில் அரசியல் முழக்கமிட்டார். சுப்பிரமணியே சிவா உடனானார்! மாவட்ட ஆட்சியர் விஞ்சு என்பார் சிதம்பரனார், சிவா இருவர் மீதும் குற்றங்கள் பல சாற்றி, நாடுகடத்தவும் திட்டமிட்டார். முறைமன்றம் 20 ஆண்டு, கடுங்காவல் தண்டம் விதிக்க, அதனை `இறைவன் அருள்’ என்றா. மேல் முறையீடுகளால், ஆறாண்டுகள் ஆகிக் கணல்பொறி இயக்கி, செக்கிழுத்து 1912இல் விடுதலை பெற்றார். சிறையில் சேம்சு ஆலன் நூல்களை மொழி பெயர்த்தார். விடுதலைக்குப்பின் தமிழ்த் தொண்டில் ஆழமாக இறங்கினார். தொல்காப்பிய இளம்பூரணர் உரையை 1936இல் பதிப்பித்தார். திருக்குறள் அறத்துப்பால் விரிவுரை 1935இல் வெளியிடப்பட்டது. அவர்தம் ஆய்வும் துணிவும் திருக்குறள் உரையில் வெளிப்பட்டது. அவர் எண்ணியவாறு முழுதுரை கண்டும் முழுதுற வெளிப்படவில்லை! சிறையில் அவர் எழுதிய `சுயசரிதை’யின் அருமை படிப்பார் நெஞ்சை உருக்கும்! அச்சரிதை 1946இல் பாரி நிலையத்தினரால் வெளியிடப்பட்டுப் பல பதிப்புகள் கண்டது. திருக்குறள் அறத்துப்பால் உரை, சிங்கப்பூர் தமிழ்த்திரு. கோவலங் கண்ணனாரால் வெளியிடப்பட்டு குறள் கூறிய ஒவ்வொருவருக்கும் இலவயமாக வழங்கியது. வ.உ.சி. யின் வண்மைக் கதிரெihளி எனத் தோன்றியது. 14ஆம் மாடியில் வெளியிட்டு அவ்வுரை நயம் எளியேன் கூற, அவ்வுரைப் பெருமை அவையைத் திளைக்கச் செய்தது! கப்பரேலாட்டிய தமிழர் - தமிழ்க் கப்பலும் ஓட்டிய தோன்றல் - தம் நிலைகுறித்து ஒருவெண்பாவில் தாமே ஓடுகிறார்; ஓட்டப்பிடாரத்தார் அல்லரோ! “வந்தகவி ஞர்க்கெல்லாம் மாரியெனப் பல்பொருளும் தந்த சிதம்பரன் தாழ்ந்தின்று- சந்தமிழ் வெண் பாச் சொல்லிப் பிச்சைக்குப் பாரெல்லாம் ஓடுகின்றான் நாச் சொல்லும் தோலும் நலிந்து” “ஏ! தாழ்ந்த தமிழகமே! என்றது மெய்தானே! இரா. இளங்குமரன். தொல்காப்பியம் அரிய பதிப்புகளும் தேவைகளும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் தமிழின் பண்டை இலக்கண/ இலக்கிய நூல்கள் அச்சிடப் பெற்றன. அவ்வகையில் தமிழில் அச்சடிக்கப்பட்ட முதல் இலக்கண நூலாக இன்று அறியப்படுவது நன்னூலே. காரணம் தமிழக மடங்கள் நன்னூலைப் பயிற்றிலக்கணமாகவும் பயன் பாட்டு இலக்கணமாகவும் கொண்டிருந்தன. 1835 -இல் திருத்தணிகை விசாகப் பெருமாளையர் தாமே உரையெழுதி நன்னூல் மூலமும் காண்டிகையுரையும் என்னும் தலைப்பில் வெளியிட்டார். தொடர்ந்து தாண்டவராய முதலியாரும், அ. முத்துச்சாமி பிள்ளையும் இணைந்து இலக்கணப் பஞ்சகம் என்னும் தலைப்பில் நன்னூல், நம்பியகப் பொருள், புறப்பொருள் வெண்பாமாலை ஆகியவற்றின் மூலங்களை வெளிக் கொணர்ந் தனர். இதன் தொடர்ச்சியாக 1838 -இல் வீரமா முனிவரின் தொன்னூல் விளக்கம் அச்சாக்கம் பெற்றது. 1847 -இல் தான் மழவை மகாலிங்கையரால் தமிழின் தொல் இலக்கணம் தொல்காப்பிய எழுத்ததிகாரம் உரையோடு அச்சிடப்பட்டது. தொடர்ந்து யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலர், யாழ்ப்பாணத்து சி.வை. தாமோதரம் பிள்ளை, கோமளபுரம் இராசகோபாலபிள்ளை, சோடசாவதானம் சுப்பராய செட்டியார், போன்றோர் 19 -ஆம் நூற்றாண்டில், தொல்காப்பியத்தைக் கிடைத்த உரைகளோடு பதிப்பித்தனர். 1935 - இல் தொல்காப்பியத் திற்கு எழுதப்பட்ட உரைகள் (இன்று கிடைத்துள்ள அனைத்து உரைகளும்) பதிப்பிக்கப்பட்டு விட்டன. 1847 - 2003 வரை தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரை எட்டுப் பதிப்புகளும், 1885-2003 வரை தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் முன்னைந்தியல் எட்டுப் பதிப்புகளும், செய்யுளியல் நச்சினார்க்கினியர் தனித்து மூன்று பதிப்புகளும் வெளிவந்துள்ளன. 1892 - 2003 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை ஐந்து பதிப்புகளும், 1868 - 2006 வரை எழுத்து இளம்பூரணம் ஏழு பதிப்புகளும், 1920 - 2005 வரை தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணம் பத்துப் பதிப்புகளும், 1927 - 2005 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் இளம்பூரணம் ஆறு பதிப்புகளும், 1885 - 2003 வரை தொல்காப்பியம் பொருளதிகாரம் பேராசிரியம் ஏழு பதிப்புகளும், 1929 - 2003 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் மூன்று பதிப்புகளும், 1964 - 2003 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடம் மூன்று பதிப்புகளும் வெளிவந்துள்ளன என முனைவர் பா. மதுகேஸ்வரன் தமது தொல்காப்பியம் பதிப்பு ஆவணம் நூலில் குறிப்பிட்டுள்ளார். 2003 -இல் தமிழ்மண் பதிப்பகத்தின் வாயிலாகத் தொல்காப்பிய உரைகள் (இளம்பூரணம், நச்சினார்க்கினியம், பேராசிரியம், சேனாவரையம், கல்லாடம், தெய்வச்சிலையம்) பண்டித வித்வான் தி.வே. கோபாலையர், முனைவர் ந. அரணமுறுவல் ஆகியோரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, முதுமுனைவர் இரா. இளங்குமரனாரின் வாழ்வியல் விளக்கத்துடன் வெளிவந்துள்ளன. இருப்பினும் அச்சில் இன்று கிடைக்காத அரிய பதிப்புகளை மீள் பதிப்பாகப் பதிப்பிக்க வேண்டும் என்னும் நோக்கத்தில், சி.வை. தாமோதரம் பிள்ளை பதிப்பு, கா. நமச்சிவாய முதலியார் பதிப்பு, வ.உ. சிதம்பரம் பிள்ளை பதிப்பு, இரா. வெங்கடாசலம் பிள்ளை பதிப்பு, சி. கணேசையர் பதிப்பு, தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் பதிப்பு ஆகியோரின் பதிப்புகளுடன் தொல்காப்பியம் தொடர்பாக அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரைகளும் இணைத்து தமிழ்மண் பதிப்பகத்தின் வழி மீள் பதிப்புகளாகப் பதிப்பிக்கப் படுகின்றன. மீள் பதிப்பில் பின்பற்றியுள்ள பொது நெறிகள் முதுமுனைவர் இரா. இளங்குமரனாரின் தொல்காப்பியம் குறித்த விளக்கம், ஒவ்வோர் அதிகாரம் பற்றிய வாழ்வியல் விளக்கம், உரையாசிரியர் விவரம் ஆகியவை நூலின் தொடக்கத் தில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. முன்னைப் பதிப்புகளின் முகப்புப் பக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முன்னைப் பதிப்பாசிரியர் பற்றிய விவரங்கள் கால அடிப்படையில் தொகுத்தளிக்கப் பட்டுள்ளன. ஒவ்வோர் இயலின் தொடக்கத்தில், பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் தொல்காப்பியம் தொகுப்பில் எழுதி யுள்ள தொல்காப்பிய இயல் பற்றிய விளக்கம் தரப்பட்டுள்ளன. முன்னைப் பதிப்பில் அடிக்குறிப்புகள் அந்த அந்தப் பக்கத்தில் தரப்பட்டிருந்தன. இப்பதிப்பில் ஒவ்வோர் இயலுக்கும் தொடர் இலக்கமிட்டு, அந்தந்த இயலின் இறுதியில் தொகுத்து வழங்கப் பட்டுள்ளன. முன்னைப் பதிப்புகளில் நூற்பாக்களைக் கையாண்டுள்ள முறையையே இப் பதிப்பிலும் பின்பற்றப்பட்டுள்ளது. நூற்பாக் களுக்குத் தமிழ் எண் கொடுக்கப்பட்டிருப்பின் அவை நடை முறையில் இப்போது உள்ள எண்களாக மாற்றப்பட்டுள்ளன. நூற்பா அகரமுதலி, மேற்கோள் அகரமுதலி போன்றவற்றிற்குப் பக்க எண்கள் கொடுக்கப்பட்டிருப்பின் அவை நூற்பா எண்களாக மாற்றப்பட்டுள்ளன. பின்னிணைப்பாகத் தொல்காப்பியம் தொடர்பாக அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ள கட்டுரைகள் இணைக்கப் பட்டுள்ளன. நூற்பா முதற் குறிப்பு அகராதி மட்டும் கொடுக்கப் பட்டுள்ள பதிப்புகளில் அவற்றோடு, 2003 தமிழ்மண் பதிப்பகத்தின் வழியே பண்டித வித்துவான் தி.வே. கோபாலையர் முனைவர் ந. அரணமுறுவல் ஆகியோரைப் பதிப்பாசிரியர்களாகக் கொண்டு வெளிவந்த இலக்கணப் பதிப்பில் இணைக்கப் பட்டிருந்த, - நூற்பா நிரல் - மேற்கோள் சொல் நிரல் - மேற்கோள் சொற்றொடர் நிரல் - செய்யுள் மேற்கோள் நிரல் - கலைச் சொல் நிரல்( நூற்பாவழி) - கலைச்சொல் நிரல் (உரைவழி) ஆகியவை எடுத்துப் பயன்படுத்தப்பட்டுள்ளன. - பாடவேறுபாடுகள் சுட்டப்பட்டுள்ளன. - முன்னைப் பதிப்பில் வடமொழிச் சொற்கள் பயன் படுத்தப்பட்டிருப்பின் அவை அப்படியே கையாளப் பட்டுள்ளன. - தொல்காப்பியப் பதிப்புகள் குறித்த விவரம் தொகுக்கப்பட்டுள்ளன. சி.வை. தாமோதரம் பிள்ளை பதிப்பு - 1892 சொல்லதிகாரம் - நச்சினார்க்கினியர் 1868 - இல் தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரை யருரையைப் பதிப்பித்த சி.வை. தாமோதரம் பிள்ளை, 1892 ஆம் ஆண்டு சொல்லதிகாரம் நச்சினார்கினியர் உரையைப் பதிப்பித்தார். சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை தொடர்ச்சியாகப் பதிப்பிக்கப்பட்டாலும், முதலில் பதிப்பித்த சி.வை. தாமோதரம் பிள்ளையின் பதிப்பு இன்று அச்சுவடிவில் புழக்கத்தில் இல்லை. அப்பதிப்பினை வெளியிடும் நோக்கத்தில் இப்பதிப்பு மீள் பதிப்பாக வெளிவருகிறது. இப்பதிப்பில் நூற்பா முதற்குறிப்பு அகராதி மட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் மற்ற இணைப்புகளும் இணைக்கப்பட்டு, முதுமுனைவர் இரா. இளங்குமரன் அவர்களின் வாழ்வியல் விளக்கமும், ஒவ்வோர் இயலின் தொடக்கத்தில் க. வெள்ளைவாரணனார் எழுதியுள்ள இயல் விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் சொல்லதிகாரம் தொடர்பாக அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரைகள் பின்னிணைப்பாக இணைக்கப் பட்டுள்ளன. கா. நமச்சிவாய முதலியார் பதிப்பு - 1927 சொல்லதிகாரம் - இளம்பூரணம் இளம்பூரணம் எழுத்ததிகாரம் பொருளதிகாரம் உரைகள் முன்பே வெளிவந்தன. சொல்லதிகாரம் இளம்பூரணர் உரை 1927 - இல் காவேரிப்பாக்கம் நமச்சிவாய முதலியாரின் ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் சென்னை ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸால் வெளியிடப்பட்டது. இதுவே சொல்லதிகாரம் இளம்பூரணர் உரையின் முதற் பதிப்பாகும். இப் பதிப்பில் அடிக்குறிப்புகள் அந்தந்தப் பக்கத்தில் கொடுக்கப்பட்டிருந்தன. இப்பதிப்பில் தொடர் இலக்கமிட்டு, ஒவ்வோர் இயலின் முடிவில் அடிக் குறிப்புகள் தரப்பட்டுள்ளன. இப் பதிப்பில் நூற்பாக்களுக்குத் தமிழ் எண்வரிசையும் நடைமுறை எண் வரிசையும் கொடுக்கப்பட்டிருந்தன. இப்பதிப்பில் நடைமுறை எண் முறை மட்டும் பின்பற்றப்பட்டுள்ளது. வ.உ. சிதம்பரம்பிள்ளை பதிப்பு - 1928 , 1931, 1933, 1935 எழுத்ததிகாரம், பொருளதிகாரம் - இளம்பூரணம் 1868 இல் திரிசிரபுரம் சோடசாவதானம் சுப்பராய செட்டியாரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு கன்னியப்ப முதலியாரால் பதிப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து 1928 -இல் தொல்காப்பியம் இளம்பூரணம் எழுத்ததிகாரம் பதவுரை என்னும் பெயரில் வ.உ. சிதம்பரம் பிள்ளை பதிப்பு வேலாயுதம் பிரிண்டிங் பிரஸ், தூத்துக்குடியிலிருந்து வெளிவந்தது. அப்பதிப்பின் தொடக்கத்தில் கொடுக்கப்பட்டிருந்த நூற்பா அகராதி இப்பதிப்பின் நூலின் இறுதியில் கொடுக்கப் பட்டுள்ளது. அத்துடன் சொல் நிரல் (மேற்கோள்), சொற்றொடர் நிரல் (மேற்கோள்), செய்யுள் நிரல் (மேற்கோள்) கலைச் சொல் நிரல் (நூற்பா வழி) கலைச் சொல் நிரல் (உரைவழி) தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. 1920 -இல் கா. நமச்சிவாய முதலியார் பொருளதிகாரம் இளம்பூரணம் உரை முதல் பகுதியாகக் களவியல், கற்பியல், பொருளியல் மூன்று இயல்களையும் ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ் நிறுவனத்தார் வெளியிட்டுள்ளார். மற்ற பகுதிகள் வெளிவந்ததாக அறிய இயலவில்லை. இப்பதிப்பிற்குப் பின் வ.உ. சிதம்பரம் பிள்ளை தொல்காப்பியம் இளம்பூரணம் பொருளதிகாரம் அகத்திணையியல், புறத்திணையியல் ஆகிய இரு இயல்கள் இணைந்த பதிப்பு, சென்னைப் பிரம்பூரில் இருந்து வெளிவந்தது. இப்பதிப்பில் ஆண்டு குறிப்பிடப்படவில்லை. ஆனால் 1921- இல் வெளிவந்த குறிப்பினை, தொல்காப்பியம் இளம்பூரணம் எழுத்திகாரம் பதவுரை பதிப்பில் குறிப்பிடுகிறார். களவியல், கற்பியல், பொருளியல் 1933 - இல் வாவிள்ள இராமஸ்வாமி சாஸ்ட்ருலு அண்ட் ஸன்ஸ் மூலம் வெளி வந்துள்ளது. 1935 - இல் மேற்கண்ட பதிப்பாளர்களைக் கொண்டு மெய்ப்பாட்டியல், உவமையியல், செய்யுளியல், மரபியல் பதிப்பித்துள்ளார். மூன்று பகுதிகளாக வெளிவந்தாலும் அவற்றிற்கும் தொடர் எண் கொடுக்கப்பட்டுள்ளன. 1935 - இல் ஒருங்கிணைந்த பதிப்பாக வ.உ. சிதம்பரம் பிள்ளை எஸ். வையாபுரிப்பிள்ளை ஆகியோர் பதிப்பாசிரியர்களாக அமைந்து வெளிவந்துள்ளது. தனித்தனிப் பதிப்புகளாக மூன்று பகுதிகளாக வெளிவந்துள்ள பதிப்பினை அடிப்படையாகக் கொண்டு இம் மீள் பதிப்பு பதிப்பிக்கப்படுகின்றது. இரா. வெங்கடாசலம் பிள்ளை பதிப்பு - 1929 சொல்லதிகாரம் - தெய்வச் சிலையார் 1929 -இல் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தால் முதன் முதலில் பதிப்பிக்கப்பட்டது. பதிப்பாசிரியர் ரா. வேங்கடாசலம் பிள்ளை. இதன் நிழற்படிவம் 1984 -இல் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இப் பதிப்பில் சூத்திர முதற் குறிப்பு அகராதி மட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் சொல் நிரல் (மேற்கோள்), சொற்றொடர் நிரல் (மேற்கோள்), செய்யுள் நிரல் (மேற்கோள்) கலைச் சொல் நிரல் (நூற்பா வழி) கலைச் சொல் நிரல் ( உரைவழி) தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. சி. கணேசையர் பதிப்பு - 1937, 1938, 1943,1948 எழுத்து நச்சினார்க்கினார்கினியர், சொல்லதிகாரம் சேனாவரையர் பொருள் - நச்சினார்க்கினியர், பேராசிரியர் 1847 - இல் மழவை மகாலிங்கையரால் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியம் பதிப்பிக்கப்பட்டது. 1891 - இல் சி. வை. தாமோதரம் பிள்ளை பதிப்பும் 1923 - இல் த. கனகசுந்தரத்தின் பதிப்பும் கழகத்தின் மூலமும் வெளிவந்தன. 1937 - இல் நா. பொன்னையா அவர்களால் கணேசையர் எழுதிய உரைவிளக்கக் குறிப்புகளுடன் எழுத்ததிகாரம் மூலமும் நச்சினார்க்கினியருரையும் வெளியிடப்பட்டன. 1868 – -இல் யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுக நாவலர் பதிப்பு, சென்னபட்டணம் ஊ. புஷ்பரதச் செட்டியாரது கலாரத்நாகர அச்சுக்கூடத்தில் சி.வை. தாமோரதம் பிள்ளையால் பதிப்பிக்கப்பட்டது. இதே ஆண்டு கோமளபுரம் இராசகோபால பிள்ளையின் பதிப்பும் தொல்காப்பியம் சேனாவரையம் என்ற பெயரில் வெளிவந்துள்ளது. 1923 - இல் கந்தசாமியார் திருத்திய திருத்தங்களோடும் குறிப்புரையோடும் கழகப் பதிப்பாக வெளிவந்தது. 1938 -இல் சி. கணேசையர் பதிப்பு அவர் எழுதிய உரைவிளக்கக் குறிப்புகளுடன் வெளியிடப்பட்டது. 1885 -இல் சி.வை. தாமோதரம் பிள்ளையால் தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் இயற்றிய உரையோடும் பலதேசப் பிரதிரூபங்களைக் கொண்டு பரிசோதித்து யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரரால் பதிப்பிக்கப்பட்டது என்னும் குறிப்புடன் பதிப்பு வெளிவந்தது. அப்பதிப்பில் உள்ள பின்னான்கியல் நச்சினார்க்கினியர் உரை அன்று என்று மறுத்து இரா. இராகவையங்கார் 1902 - 1905 வரையான செந்தமிழ் இதழில் ஆய்வுக்கட்டுரை எழுதித் தெளிவுபடுத்தினார். அதனைத் தொடர்ந்து பொருளதிகாரம் முழுதும் நான்கு பகுதியாக நச்சினார்க்கினியம், பேராசிரியம் எனப் பிரித்து 1916, 1917 - ஆம் ஆண்டுகளில் ச. பவனாந்தம் பிள்ளை பதிப்பித்தார். 1917 - இல் ரா. இராகவையங்கார் செய்யுளியலுக்கு நச்சினார்க்கியர் உரை இருப்பதை அறிந்து, நச்சினார்கினியர் உரை உரையாசிரியர் உரையுடன் என இரு உரைகளையும் இணைத்து வெளியிட்டார். 1934, 1935 -இல் எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்களால் ஓலைப் பிரதி பரிசோதிக்கப்பட்டு மா.நா. சோமசுந்தரம் பிள்ளை அவர்களது அரிய ஆராய்ச்சிக் குறிப்புகளுடனும் திருத்தங் களுடனும் தொல்காப்பியம் பொருளதிகாரம் முதற்பாகம் வெளிவந்தது. 1948 - இல் தொல்காப்பிய முனிவரால் இயற்றப் பட்ட தொல்காப்பியம் பொருளதிகாரம் (முதற்பாகம்) முன்னைந்தியலும் நச்சினார்க்கினியமும் என, சி. கணேசையர் எழுதிய ஆராய்ச்சிக் குறிப்புரையுடன் நா. பொன்னையா அவர்களால் பதிப்பிக்கப்பட்டது. 1943 -இல் தொல்காப்பியம் பொருளதிகாரம் (இரண்டாம் பாகம்) என்பதோடு பின்னான்கியலும் பேராசிரியமும் இவை புன்னாலைக் கட்டுவன் தமிழ் வித்துவான், பிரமஸ்ரீ சி. கணேசையர் அவர்கள் ஏட்டுப் பிரதிகளோடு ஒப்புநோக்கித் திருத்திய திருத்தங்களோடும் எழுதிய உரை விளக்கக் குறிப்புகளோடும் ஈழகேசரி அதிபர் நா. பொன்னையா அவர்களால் தமது சுன்னாகம், திருமகள் அழுத்தகத்தில் பதிப்பிக்கபட்டன என வரையறுக்கப் பட்டிருந்தது. 2007-இல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மறுபதிப்பாக சி. கணேசையரின் பதிப்பைப் பதித்துள்ளது. அப்பதிப்பினைப் பின்பற்றியே இப்பதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சூத்திர அகராதி, சூத்திர அரும்பத விளக்கம் ஆகியவற்றிற்கு இப்பதிப்பில் பக்க எண் கொடுக்கப்பட்டிருந்தன. அவை இம் மீள்பதிப்பில் நூற்பா எண்களாக மாற்றப்பட்டுள்ளன. அனுபந்தமாக சி. கணேசைய்யர் சில கட்டுரைகளை அப்பதிப்பில் இணைத் திருந்தார் அவற்றோடு மேலும் அவருடைய சில கட்டுரைகள் இப்பதிப்பில் இணைக்கப்பட்டுள்ளன. தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் பதிப்பு 1971 சொல்லதிகாரம் கல்லாடம் சி.வை. தாமோதரம் பிள்ளை தொல்காப்பியம் பொருளதி காரம் நச்சினார்க்கினியர் உரை பதிப்புரையில் (1885) கல்லாடர் உரை பற்றிய குறிப்பினைத் தருகிறார். டி.என் அப்பனையங்கார் செந்தமிழ் இதழில் (1920, தொகுதி-19, பகுதி-1, பக்கம்-20) கல்லாடருரை என்னும் கட்டுரையில் ஸ்ரீமான் எம் சேக்ஷகிரி சாஸ்திரியார் (1893) கல்லாடர் உரை குறித்து ஆராய்ந்துள்ளதாகக் குறிப்பிடுகிறார். சோழவந்தான் அரசஞ்சண்முகனார் (1905) ரா. இராகவையங்கார் (1917) பெயர் விழையான், கா. நமச்சிவாய முதலியார்(1920) நவநீதகிருஷ்ண பாரதி(1920) பி. சிதம்பர புன்னைவனநாத முதலியார்(1922) கந்தசாமியார் (1923) வ.உ. சிம்பரம் பிள்ளை (1928) மன்னார்குடி தமிழ்ப் பண்டிதர் ம.நா. சோமசுந்தரம் பிள்ளை (1929) அரங்க. வேங்கடாசலம் பிள்ளை (1929) ஆகியோர் கல்லாடர் உரை குறித்த குறிப்புகளைத் தமது கட்டுரைகளில் குறிப்பிடுகின்றனர். பின்னங்குடி சா. சுப்பிரமணிய சாஸ்திரியார் கல்லாடர் உரை ஓரியண்டல் கையெழுத்துப் புத்தக சாலையில் உள்ளது என்றும், அவ்வுரை எவ்வியல் வரை உள்ளது என்னும் குறிப்புரையும் தருகிறார். 1950 - 1952 வரை தருமபுர ஆதீனம் வெளியிட்ட ஞான சம்பந்தம் இதழில் அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகத்தின் இரண்டாம் பிரதியை ஒட்டிப் பதிப்பிக்கப்பட்டது. கிளவியாக்கம் தொடங்கி இடையியல் 10 - ஆவது நூற்பா வரை வெளிவந்தது. கல்லாடர் உரையைத் தம்முடைய திருத்தங்களுடன் வெளியிட்டவர் மகாவித்துவான் தண்டபாணி தேசிகர். 1963 -இல் தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரைக்கோவை என்னும் பெயரில் ஆபிரகாம் அருளப்பனும் வ.ஐ. சுப்பிரமணியமும் இணைந்து வெளியிட்டனர். இது நான்கு இயலுக்கான பதிப்பாக அமைந்திருந்தது. கழகப் பதிப்பாக 1964 -இல் கு. சுந்தரமூர்த்தி விளக்கவுரையுடன் கல்லாடம் வெளிவந்தது. 1971 -இல் தெ.பொ.மீ அவர்களால் ஒன்பது பிரதிகளைக் கொண்டு ஒப்பிட்டு அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகப் பதிப்பாக வெளிவந்தது. 2003 -இல் தி.வே. கோபாலையர், ந. அரணமுறுவல் ஆகியோரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு தமிழ் மண் பதிப்பகம் கல்லாடனார் உரையைப் பதிப்பித் துள்ளது. 2007 -இல் தி.வே. கோபாலையரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, சரசுவதி மகால் நூலகம் தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரைக்கொத்தில் கல்லாடர் உரையை வெளியிட்டுள்ளது. கல்லாடர் உரை முழுமையாக இதுவரை கிடைத்திலது. இம்மீள்பதிப்பில் செந்தமிழ் அந்தணர் அவர்களின் இலக்கண வாழ்வியல் விளக்கமும் கா. வெள்ளைவாரணனாரின் இயல் விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இவை தொல்காப்பியத்திற்குள் புகுவாருக்கு எளிதான மனநிலையை உருவாக்குவதுடன், ஆய்வாளர்களுக்கு மிகுந்த பயன் உடையதாக இருக்கும். பின்னிணைப்பாக இணைக்கப்பட்டுள்ள கட்டுரைகள், தொல்காப்பிய உரையாசிரியர், உரைகள் குறித்த நுட்பத்தைப் புலப்படுத்துவதுடன், தொல்காப்பியம் பற்றிய நுண்மையை அறியவும் துணை செய்யும். நூற்பா, உரை வழிக் கலைச்சொற்கள், உரையில் உள்ள மேற்கோள் அகராதி போன்றவை தொகுத்துத் தரப்பட்டுள்ளன. தொல்காப்பியத்தை அறிய விரும்புவாருக்கும், ஆய்வாளர்களுக்கும் இத் தொகுப்பு பயன் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியம் மூலமும், உரையோடும் பல பதிப்புகளைக் கண்டுள்ளது. இருப்பினும் தொடக்கத்தில் தமிழ் அறிஞர் பெருமக்களால் உரையோடு தொல்காப்பியத்தைப் பதிப்பித்த பதிப்புகள் இன்று கிடைக்கவில்லை. அந்நிலையைப் போக்கும் பொருட்டு, தமிழரின் பண்பாட்டை, மேன்மையை, உயர்வைப் பொதித்து வைத்துள்ள நூல்களைத் தேடித் தேடிப் பதிப்பிக்கும் தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் ஐயா கோ. இளவழகனார் அவர்கள் பழம் பதிப்புகளைப் பதிப்பிக்க வேண்டும் என்று விரும்பியதன் காரணமாக இப்பதிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பதிப்பிற்கு, தமிழின் மூத்த அறிஞர், செந்தமிழ் அந்தணர் முதுமுனைவர் ஐயா இரா. இளங்குமரனார் அவர்கள் பதிப்பாசிரியராக அமைந்து என்னையும் இப்பணியில் இணைத்துக்கொண்டார்கள். பழந்தமிழ் நூல்களைப் பாதுகாத்து வைத்துள்ள புலவர் பல்லடம் மாணிக்கம் அவர்களிடம் இருந்து தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடர் உரை பெறப்பட்டுப் பதிப்பிற்குப் பயன்படுத்தப்பட்டது. மற்ற உரைகள் அனைத்தும் தமிழ் இணையப் பல்கலைக்கழக நூலகம், உலகத் தமிழாராய்ச்சி இணையப் பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு இம் மீள்பதிப்பிற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. சி. கணேசையர் பதிப்பினை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வழி வெளிவந்த சி. கணேசைய்யரின் தொல்காப்பியப் பதிப்பிற்கு உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தின் மேனாள் இயக்குநர் (முழுகூடுதல் பொறுப்பு) முனைவர் திரு ம. இராசேந்திரன் அவர்கள் கணேசையர் பதிப்பிற்கு எழுதியுள்ள முகவுரை அவருடைய ஒப்புதலுடன் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. “முனைவர் பா. மதுகேஸ்வரன் அவர்களின் தொல்காப்பியம் பதிப்பு ஆவணம் 7 என்னும் நூற்பகுதியில் இருந்து தொல் காப்பியப் பதிப்பு அடைவுகள் இப்பதிப்பில் இணைக்கப் பட்டுள்ளன. தொல்காப்பியம் தொடர்பான பல்வேறு அறிஞர் பெருமக்களின் ஆய்வுக் கட்டுரைகள் தொகுத்து வழங்கப் பட்டுள்ளன. தொல்காப்பியம் உரைகள் முழுதும் ஆய்வு செய்துள்ள பேராசிரியர் முனைவர் ச. குருசாமி அவர்களின் கட்டுரைகள் இப்பதிப்பில் இணைக்கப்பட்டுள்ளன. பதிப்பிற்குத் துணை செய்த மேற்கண்ட அனைவருக்கும் நன்றியினைப் புலப்படுத்திக் கொள்ளுகிறேன். முனைவர் ஸ்ரீ. பிரசாந்தன் அவர்கள் தொகுத்த இலக்கண வரம்பு நூலிலிருந்த கட்டுரைகள் கணேசையர் பதிப்பில் இணைக்கப்பட்டுள்ளன. செந்தமிழ், தமிழ்ப்பொழில், தமிழியல் முதலிய ஆய்விதழ்களிலிருந்து தொல்காப்பியம் தொடர்பான கட்டுரைகள் சேர்க்கப் பட்டுள்ளன. பதிப்புப் பணியில் ஈடுபடுத்திய ஐயா திரு கோ. இளவழகனார் அவர்களுக்கும் பதிப்பில் இணைந்து செயல்படப் பணித்த ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்களுக்கும், பதிப்பிற்குத் துணைபுரிந்த புலவர் செந்தலை கௌதமன் ஐயா அவர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றி. தட்டச்சுச் செய்து கொடுத்த திருமதி ப. கயல்விழி திருமதி கோ. சித்திரா. அட்டை வடிவமைத்த செல்வன் பா. அரி (ஹரிஷ்), மற்றும் பதிப்பகப் பணியாளர்கள் திரு இரா. பரமேசுவரன், திரு தனசேகரன், திரு கு. மருது, திரு வி. மதிமாறன், இப்பதிப்பிற்கு உதவிய என்னுடைய முனைவர் பட்ட மாணவர்கள் பா. மாலதி, கா. பாபு, சு. கோவிந்தராசு, கா. கயல்விழி ஆகிய அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப் பதிப்புப் பணியில் என்னை முழுவதாக ஈடுபடத் துணையாக நிற்கும் என் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார் அவர்களுக்கு என் நன்றியினை உரித்தாக்குகிறேன். கல்பனா சேக்கிழார் நுழைவுரை தமிழ்மண் பதிப்பகம் இதுகாறும் வெளியிட்டுள்ள அறிஞர் பெருமக்களின் உரைகள் யாவும் பழைய இலக்கிய இலக்கணக் கருவூலத்தின் வாயில்களைத் திறக்கின்ற திறவுகோல்கள்; தமிழரை ஏற்றிவிடும் ஏணிப்படிகள்; வரலாற்றுப் பாதையைக் கடக்க உதவும் ஊர்திகள். தமிழறிஞர்களின் அறிவுச்செல்வங்களை முழு முழு நூல் தொகுப்புகளாக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் பெரும் பங்களிப்பை எம் பதிப்பகம் செய்து வருவதை உலகத் தமிழர்கள் அனைவரும் அறிவர். தமிழகம் வேற்றினத்தவர் படையெடுப்பால் தாக்குண்டு அதிர்ந்து நிலைகுலைந்து தமிழ்மக்கள் தம் மரபுகளை மறந்தபோதெல்லாம் பழம்பெரும் இலக்கியச் செல்வங்களை எடுத்துக்காட்டி விளக்கித் தமிழ் மரபை வாழச் செய்த பெருமை உரையாசிரியர்களுக்கு உண்டு. தமிழ்மொழியின் நிலைத்த வாழ்விற்கும் வெற்றிக்கும் காரணமாக இருப்பவர்கள் உரையாசிரியர்களே ஆவர். இலக்கணக் கொள்கைகளை விளக்கி மொழிக்கு வரம்பு கட்டி இலக்கியக் கருத்துகளை விளக்கி காலந்தோறும் பண்பாட்டை வளர்த்து, தமிழ் இனத்திற்குத் தொண்டு செய்த பெருமை உரையாசிரியர்களையே சாரும். “ஒவ்வொரு உரையாசிரியரும் தமிழினம் உறங்கிக் கொண்டிருந்தபோது விழித்தெழுந்து, எழுச்சிக்குரல் கொடுத்த முற்போக்குச் சிந்தனையாளர்கள். அவர்கள் எழுதியுள்ள உரைகள் யாவும் காலத்தின் குரல்கள்; சமுதாயத்தின் எதிர்பார்ப்புகள்; தமிழ் இன வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவைகள்; நெருக்கடியின் வெளிப்பாடுகள் ஆகும்.” - உரையாசிரியர்கள், (மு.வை. அரவிந்தன்). “தொல்காப்பியம் இலக்கணநூல் மட்டுமன்று; தமிழரின் அறிவுமரபின் அடையாளம். தமிழரின் வாழ்வியலை, மெய்யியலைப் பாதுகாத்த காலப்பேழை. இதில் பொதிந்துள்ள தருக்கவியல் கூறுகள் இந்தியத் தருக்கவியல் வரலாற்றின் மூல வடிவங்கள்” - அறிஞர்களின் பார்வையில் பேரறிஞர் அண்ணா, (முனைவர் க. நெடுஞ்செழியன்) மேற்கண்ட அறிஞர்களின் கூற்று, தொல்காப்பியத்தின் இன்றியமையாமையையும், உரையாசிரியர்களின் கருத்துச் செறிவையும் உழைப்பையும் உணர்த்த வல்லவை. சி.வை. தாமோதரம் பிள்ளை, கா. நமச்சிவாய முதலியார், வ.உ. சிதம்பரனார், சி. கணேசையர், இரா. வேங்கடாசலம் பிள்ளை, தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் போன்ற பெருந்தமிழ் அறிஞர்களின் உழைப்பால் உருவான இவ் வாழ்வியல் கருவூலம் தொல்காப்பிய உரைத்தொகை எனும் பெயரில் தமிழ்மண் பதிப்பகம் மீள் பதிப்பு செய்துள்ளது. 2003 -ஆம் ஆண்டில் எம் பதிப்பகம் தொல்காப்பியத்தை (எழுத்து - சொல் - பொருள்) முழுமையாக வெளியிட்டுள்ளது. இதுகாறும் வெளிவந்துள்ள தொல்காப்பிய நூல் பதிப்புகளில் இடம் பெறாத அரிய பதிப்புச் செய்திகள் இவ்வுரைத் தொகையில் சேர்க்கப்பட்டுள்ளன. இவ்வுரைத் தொகை எல்லா நிலையிலும் சிறப்பாக வெளிவருவதற்கு தோன்றாத் துணையாக இருந்தவர்களைப் பற்றி தனிப்பக்கத்தில் பதிவு செய்துள்ளோம். இவ்வாழ்வியல்நூல் பிழையற்ற செம்பதிப்பாக வெளிவருவதற்கு முதன்மைப் பதிப்பாசிரியர் முதுமுனைவர் ஐயா இரா. இளங்குமரனார், இணை பதிப்பாசிரியர் அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் ஆகியோரின் உழைப்பும் பங்களிப்பும் என்றும் மறக்க முடியாதவை. எம் தமிழ் நூல் பதிப்பிற்கு எல்லா நிலையிலும் தொடர்ந்து ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் இனிய நண்பர் புலவர் செந்தலை ந. கவுதமன் அவர்களின் தன்னலம் கருதா தமிழ்த் தொண்டிற்கு என்றும் நன்றி உடையேன். தமிழர்கள் தம் இல்லம்தோறும் பாதுகாத்து வைக்க வேண்டிய இவ்வருந்தமிழ்ப் புதையலைத் தமிழ் கூறும் உலகிற்கு வழங்குவதைப் பெருமையாகக் கருதி மகிழ்கிறோம். இப்பதிப்பைத் தமிழ்க்கூறும் நல்லுலகம் ஏற்றிப்போற்றும் என்று நம்புகிறோம். கோ. இளவழகன் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் பிறப்பு : 30. 1. 1930 பெற்றோர் : இராமு - வாழவந்தம்மை (உழவர்குடி) ஊர் : சங்கரன்கோவில் வட்டம், வாழவந்தாள்புரம் கல்வி : தொடக்கக் கல்வி - உள்ளூரில் நடுநிலைக் கல்வி - பாவாணர் பயின்ற முறம்பு பள்ளி வித்துவான் - தமிழ்த் தேர்வு - தனித் தேர்வர் ஆசிரியர் பணி : தொடக்கப் பள்ளி - 16ஆம் அகவையில் தொடக்கம் உயர்நிலைப் பள்ளி - தமிழாசிரியப்பணி ஆய்வுப்பணி : பாவாணருடன் - செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டம், மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தில் - கலைச் சொல் விளக்கம் தொகுப்புப் பணி, தமிழக வட்டார வழக்குச் சொல் தொகுப்புப் பணி. தமிழ்ப்பணி : கட்டுரை, கவிதை, கதை, நாடகம், காப்பியம், இலக்கண - இலக்கிய உரை - தமிழ்ச் சொல்லாய்வு - பழந்தமிழ்நூல் பதிப்புகள் - தனிமனித - இலக்கண - இயக்க, இசை, வரலாறு. தமிழ்ச் சொற்பொருள் களஞ்சியம் - நாடகம். குழந்தைப் பாடல்கள் - ஆய்வுப் பொழிவு - தொகுப்பு நூல்கள் நாளொன்றுக்கு 18 மணிநேர எழுத்துப் பணி திருவள்ளுவர் தவச்சாலை நிறுவி இயக்குதல். செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம் ... நூல்கள் : சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், மணிவாசகர் பதிப்பகம், ஈரோடு குறளாயம், திருவள்ளுவர் தவச்சாலை, தமிழ்மண் பதிப்பகம் வழி 420க்கும் மேல் வெளிநாட்டுப் பயணம் : தமிழீழம், சிங்கப்பூர், மலேயா, அமெரிக்கா முதலிய நாடுகளில் தமிழைப்புகளில் பொழிவுகள். திருமணம் நிகழ்த்துதல் : தமிழகம், சிங்கப்பூர், மலேயாவில் 4000க்கும் மேற்பட்ட தமிழ்நெறித் திருமணங்கள் நிகழ்த்துநர். இயக்கப்பணி : தமிழகத் தமிழாசிரியர் கழகம், உலகத் தமிழ்க் கழகம், தமிழ்ப் பாதுகாப்புக் கழகம், திருக்குறள் பேரவை, ஈரோடு குறளாயம், தமிழ்ச்சான்றோர் பேரவை விருது : இலக்கியச் செம்மல், செந்தமிழ் அந்தணர், முதுமுனைவர் முதலியன. வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கக் கூட்டமைப்பு வாழ்நாள் சாதனையாளர் விருது. கனடா இலக்கியத் தோட்ட விருது. முனைவர் கல்பனா சேக்கிழார் பிறந்த நாள் : 5.6.1972 பிறந்த ஊர் : ஒக்கநாடு கீழையூர் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : முதுகலை (தமிழ், மொழியியல், கணினியியல்) முனைவர் இப்போதைய பணி : உதவிப் பேராசிரியர், தமிழியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம். ஆற்றியுள்ள கல்விப்பணிகள் - அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் 12 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி. - திருக்குறள் பரிதியார் உரைப் பதிப்பு, பரிதி உரை ஆய்வு. - புறநானூற்றில் தமிழர் வாழ்வியல், ஐங்குறுநூற்று உருபனியல் பகுப்பாய்வு, சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள் பாடல் கள் மொழிநடை - மதிப்பீடு (தொகுப்பு), சங்க இலக்கிய ஊர்ப்பெயர் ஆய்வுகள், அப்பாத்துரையம் - 40 தொகுதிகள் (பதிப்பாசிரியர்) ஆகிய நூல்களின் ஆசிரியர். - பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலம் ஆய்வுத்திட்டங்கள் பெற்று ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார். - பல்கலைக்கழக மானியக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள மேலாய்வினை (ஞனுகு) மேற்கொண்டு வருகிறார். - 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். - மலேசியாவில் நிகழ்ந்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார். - இலங்கையில் நடைபெற்ற உரைநடை மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வழங்கியுள்ளார். - செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப் பட்ட குடியரசு தலைவரின் இளம் அறிஞர் விருதினைப் பெற்றுள்ளார். கோ. இளவழகன் பிறந்த நாள் : 3.7.1948 பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு இப்போதைய தொழில்: புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல் ஆற்றியுள்ள பொதுப்பணிகள் 1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர். பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் `ஊர்நலன் வளர்ச்சிக் கழகம்’ எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர். உரத்தநாட்டில் `தமிழர் உரிமைக் கழகம்’ என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர். பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் `உரத்தநாடு திட்டம்’ என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர். தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத் திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர். பொதுநிலை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கைகளை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர். பெற்ற விருதுகளும், பாராட்டுகளும்: - முறம்பு பாவாணர் கோட்டம், ‘பாவாணர் பதிப்பர்’ - மலேசியத் தமிழ்நெறிக் கழகம், ‘பதிப்பியல் வேந்தர்’ - திருச்சிராப்பள்ளி பாவாணர் தமிழியக்கம், ‘பாராட்டுச் சான்றிதழ்’ - பெங்களூர் உலகத்தமிழ்க் கழகம், ‘பாராட்டுப் பா’ - சென்னை சோமசுந்தரர் ஆகமத் தமிழ்ப்பண்பாட்டு ஆராய்ச்சி மன்றம், ‘பதிப்புச் செம்மல்’ - அமெரிக்க உலகத் தமிழ் அமைப்பு, ‘பாராட்டுச் சான்றிதழ்’ - நாகர்கோயில் பன்மொழிப் புலவர் நூற்றாண்டு விழா, ‘பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் விருது’ - சென்னை திருவள்ளுவர் வாழ்வியல் மன்றம், ‘தனித்தமிழ் பதிப்புச் செம்மல்’ - மூதறிஞர் செம்மல் வ.சுப.மாணிக்கனார் நூற்றாண்டு நினைவுக் குழு, ‘பாராட்டுச் சான்றிதழ்’ - குவைத்து பொங்கு தமிழ் மன்றம், ‘பதிப்பரசர்’ - குவைத்து தமிழ்நாடு பொறியாளர் குழுமம், ‘பாராட்டுச் சான்றிதழ்’ உள்ளடக்கம் தொல்காப்பியம் .... 1 இயலமைதி .... 23 வாழ்வியல் விளக்கம் .... 26 இளம்பூரணர்- உரையாசிரியர் .... 48 பாயிரம்- தெளிவுரை .... 64 தொல்காப்பியம் -முதல் பதிப்புரை .... 75 எழுத்ததிகாரம் .... 79 இளம்பூரணருரை- சிறப்புப் பாயிரம் .... 80 இளம்பூரணம்- எழுத்ததிகாரம் .... 87 1. நூன்மரபு .... 89 2. மொழிமரபு .... 106 3. பிறப்பியல் .... 130 4. புணரியல் .... 142 5. தொகை மரபு .... 169 6. உருபியல் .... 193 7. உயிர் மயங்கியல் .... 211 8. புள்ளி மயங்கியல் .... 259 9. குற்றியலுகரப் புணரியல் .... 318 பின்னிணைப்புகள் .... 361 - பாயிரம் .... 441 - நூற்பா நிரல் .... 442 - சொல் நிரல் .... 448 - சொற்றொடர் நிரல் .... 455 - செய்யுள் நிரல் .... 489 - கலைச்சொல் நிரல் (நூற்பாவழி) .... 491 - கலைச்சொல் நிரல் (உரைவழி) .... 496 தொல்காப்பியம் பழந்தமிழ் நூல்களின் வழியே நமக்குக் கிடைத்துள்ள முழு முதல் இலக்கண நூல் தொல்காப்பியமே. ஆசிரியர், தொல்காப்பியம் என்னும் நூலை இயற்றியமையால்தான் தொல்காப்பியன் எனத் தம் பெயர் தோன்றச் செய்தார் என்பதைப் பாயிரம்’ “தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றி” என்று தெளிவாகக் கூறுகிறது. தொல்காப்பியம் ‘பழமையான இலக்கண மரபுகளைக் காக்கும் நூல்’ என்பதற்குப் பலப்பல சான்றுகள் இருப்பவும்,‘பழமையான காப்பியக்குடியில் தோன்றியவரால் செய்யப்பட்டது’ என்னும் கருத்தால், “பழைய காப்பியக்குடியில் உள்ளான்” என நச்சினார்க்கினியர் கூறினார். பழைய காப்பியக்குடி என்னும் ஆட்சியைக் கண்டு ‘விருத்த காவ்யக்குடி’ என்பது ஒரு வடநாட்டுக்குடி என்றும், பிருகு முனிவர் மனைவி ‘காவ்ய மாதா’ எனப்படுவாள் என்றும் கூறித் தொல்காப்பியரை வடநாட்டுக் குடி வழியாக்க ஆய்வாளர் சிலர் தலைப்படலாயினர். இம்முயற்சிக்கு நச்சினார்க்கினியர் உரையின் புனைவையன்றி நூற் சான்றின்மை எவரும் அறியத்தக்கதே. இவ்வாய்வுகளையும் இவற்றின் மறுப்புகளையும் தமிழ் வரலாறு முதற்றொகுதி1 (பக். 255 - 257) தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி2 (பக். 2, 3) தமிழிலக்கிய வரலாறு - தொல்காப்பியம்3 (பக். 17-23) என்பவற்றில் கண்டு கொள்க. காப்பியர் தொல்காப்பியர் சிறப்பால் அவர் வழிவந்தவரும், அவரை மதித்துப் போற்றியவரும் அவர் பெயரைத் தம் மக்கட்கு இட்டுப் பெருக வழங்கின ராதல் வேண்டும். இதனால் காப்பியாற்றுக் காப்பியன், வெள்ளூர்க் காப்பியன் என ஊரொடு தொடர்ந்தும், காப்பியஞ் சேத்தன், காப்பியன் ஆதித்தன் எனக் காப்பியப் பெயரொடு இயற்பெயர் தொடர்ந்தும் பிற்காலத்தோர் வழங்கலாயினர். இனிப் பல்காப்பியம் என்பதொரு நூல் 1. இரா. இராகவ ஐயங்கார் 2. மு. இராகவ ஐயங்கார் 3. க. வெள்ளைவாரணனார் என்றும் அதனை இயற்றியவர் பல்காப்பியனார் எனப்பட்டார் என்றும் கூறுவார் உளர். அப்பெயர்கள் ‘பல்காயம்’ என்பதும் பல்காயனார் என்பதுமேயாம்; படியெடுத்தோர் அவ்வாறு வழுப்படச் செய்தனர் என்று மறுப்பாரும் உளர். தொல்காப்பியர் தமிழ் நாட்டாரே “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகத்து வழக்கும் செய்யுளும்” ஆய்ந்து, தமிழியற்படி “எழுத்தும் சொல்லும் பொருளும்” ஆகிய முப்பகுப்பு இலக்கணம் செய்தவரும், “போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவையும்” (1006) “வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் நாற்பெய ரெல்லை அகத்தவர் வழங்கும் யாப்பின் வழியையும்” (1336) “தமிழென் கிளவியும் அதனோ ரற்றே” (385) எனத் தமிழமைதியையும், “வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே” (884) என வடவெழுத்துப் புகாது காத்தலையும் கூறிய தொல்காப்பியரை வலுவான அகச்சான்று வாய்த்தால் அன்றி வடநாட்டவர் என்பது வரிசை இல்லை என்க. இனி, சமதக்கினியார் மகனார் என்பதும் திரணதூமாக் கினியார் இவர் பெயர் என்பதும் பரசுராமர் உடன் பிறந்தார் என்பதும் நச்சினார்க்கினியர் இட்டுக் கட்டுதலை அன்றி எவரும் ஒப்பிய செய்தி இல்லையாம். தொல்காப்பியப் பழமை சங்க நூல்களுக்குத் தொல்காப்பியம் முற்பட்டதா? பிற்பட்டதா? ஆய்தல் இன்றியே வெளிப்பட விளங்குவது முற்பட்டது என்பது. எனினும் பிற்பட்டது என்றும் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு அளவினது என்றும் குறித்தாரும் உளராகலின் இவ்வாய்வும் வேண்டத் தக்கதாயிற்று. தொல்காப்பியர் பரிபாடல் இலக்கணத்தை விரிவாகக் கூறுகிறார். அவ்விலக்கணத்துள் ஒன்று, கொச்சகம் அராகம் சுரிதகம் எருத்து என்னும் நான்கு உறுப்புகளையுடையது அது என்பது. மற்றொன்று, காமப் பொருள் பற்றியதாக அது வரும் என்பது. இப்பொழுது கிடைத்துள்ள பரிபாடல்கள் இருபத்திரண்டனுள் “ஆயிரம் விரித்த” என்னும் ஒரே ஒரு பாடல் மட்டும் பலவுறுப்புகளை யுடையதாக உள்ளது. எஞ்சிய பாடல்கள் இருபத்து ஒன்றும் உறுப்பமைதி பெற்றனவாக இல்லை. பரிபாடல் திரட்டிலுள்ள இரண்டு பாடல்களுள் ஒரு பாடல் பலவுறுப்புகளை யுடையதாக உள்ளது. மற்றது உறுப்பற்ற பாட்டு. பரிபாடல் காமப் பொருள் பற்றியே வரும் என்பது இலக்கணமாக இருக்கவும் கடவுள் வாழ்த்துப் பொருளிலேயே பதினைந்து பாடல்கள் வந்துள்ளன. பரிபாடல் உயர் எல்லை நானூறடி என்பார். கிடைத்துள்ள பரிபாடல்களில் ஒன்றுதானும் சான்றாக அமையவில்லை. இவற்றால் அறியப்படுவது என்ன? தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ள இலக்கணங்களையுடைய பரிபாடல்கள் இவையில்லை. அவ்விலக்கணங்களையுடைய பரிபாடல்கள் இறந்தொழிந்தன. தலைச்சங்கத்தார் பாடியதாக வரும் ‘எத்துணையோ பரிபாடல்களின்’ அமைதியைக் கொண்டது தொல்காப்பிய இலக்கணம். ஆதலால், பாடலமைதியாலும் பொருள் வகையாலும் இம்மாற் றங்களையடைய நெடிய பலகாலம் ஆகியிருக்க வேண்டும் என்பதே அது. தொல்காப்பியர் குறளடி சிந்தடி அளவடி நெடிலடி கழிநெடிலடி என்பவற்றை எழுத்தளவு வகையால் சுட்டுகிறார். அவ்வடிவகை கட்டளை யடி எனப்படும். அவ்வாறாகவும் சங்கப் பாடல்கள் சீர்வகை அடியைக் கொண்டனவாக உள்ளனவேயன்றிக் கட்டளை யடிவழி யமைந்தவையாக இல்லை. முற்றாக இம்மாற்றம் அமைய வேண்டுமானால் நெட்ட நெடுங்கால இடைவெளி ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது தெளிவு. தொல்காப்பியர் நேர், நிரை அசைகளுடன் நேர்பசை, நிரைபசை என்பவற்றையும் குறிக்கிறார். இந்நேர்பசை நிரைபசையை வேறு எவ் விலக்கண ஆசிரியரும் கொண்டிலர்; நேர் நிரை என்னும் இருவகை அசைகளையே கொண்டனர். கட்டளையடி பயிலாமை போலவே, இவ்வசைகளும் பயிலாமை தொல்காப்பியப் பழமையை விளக்குவதேயாம். யாப்பருங்கலத்திற்கு முற்பட்டது காக்கைபாடினியம். அந்நூலிலும் அவிநயம் முதலிய நூல்களிலும் இவ்விருவகை அசைகளும் இடம் பெறாமையால் இவற்றுக்கு மிகமுற்பட்ட நூல் தொல்காப்பியம் என்பது விளங்கும். காக்கைபாடினிய வழிவந்ததே யாப்பருங்கலம் ஆதலின் அதன் பழமை புலப்படும். பாட்டுயாப்பு, உரையாப்பு, நூல்யாப்பு, வாய்மொழியாப்பு, பிசியாப்பு, அங்கதயாப்பு, முதுசொல்யாப்பு என எழுவகை யாப்புகளை எண்ணுகிறார் தொல்காப்பியர் (1336). இவற்றுள் பாட்டுயாப்பு நீங்கிய எஞ்சிய யாப்புகள் எவையும் சான்றாக அறியுமாறு நூல்கள் வாய்த்தில. ஆகலின் அந்நிலை தொல்காப்பியத்தின் மிகுபழமை காட்டும். பேர்த்தியரைத் தம் கண்ணெனக் காக்கும் பாட்டியரைச் ‘சேமமட நடைப் பாட்டி’ என்கிறது பரிபாட்டு (10:36-7). பாட்டி என்பது பாண்குடிப் பெண்டிரைக் குறிப்பதைச் சங்கச் சான்றோர் குறிக்கின்றனர். ஆனால், தொல்காப்பியம் “பாட்டி என்பது பன்றியும் நாயும்” என்றும் “நரியும் அற்றே நாடினர் கொளினே” என்றும் (1565, 1566) கூறுகின்றது. பாட்டி என்னும் பெயரைப் பன்றி நாய் நரி என்பவை பெறும் என்பது இந் நூற்பாக்களின் பொருள். முறைப்பெயராகவோ, பாடினியர் பெயராகவோ ‘பாட்டி’ என்பது ஆளப்படாத முதுபழமைக்குச் செல்லும் தொல்காப்பியம், மிகு நெட்டிடைவெளி முற்பட்டது என்பதை விளக்கும். இவ்வாறே பிறவும் உள. சங்கச் சான்றோர் நூல்களில் இருந்து சான்று காட்டக் கிடையாமை யால் உரையாசிரியர்கள் “இலக்கணம் உண்மையால் இலக்கியம் அவர் காலத்திருந்தது; இப்பொழுது வழக்கிறந்தது” என்னும் நடையில் பல இடங்களில் எழுதுவா ராயினர். ஆதலால், சங்கச் சான்றோர் காலத்திற்குப் பன்னூற்றாண்டு களுக்கு முற்பட்டவர் தொல்காப்பியர் என்பது வெள்ளிடைமலையாம்! “கள் என்னும் ஈறு அஃறிணைக்கு மட்டுமே தொல்காப்பியர் காலத்தில் வழங்கியது. அது திருக்குறளில் ‘பூரியர்கள்’ ‘மற்றையவர்கள்’ எனவும், கலித்தொகையில் ‘ஐவர்கள்’ எனவும் வழங்குகின்றது. ‘அன்’ ஈறு ஆண்பாற் படர்க்கைக்கே உரியதாகத் தொல்காப்பியம் கூறுகின்றது. இரப்பன், உடையன், உளன், இலன், அளியன், இழந்தனன், வந்தனன் எனத் தன்மையில் பெருவரவாகச் சங்கநூல்களில் இடம் பெற்றுள்ளன. “தொல்காப்பியத்தில் வழங்காத ஆல், ஏல், மல், மை, பாக்கு என்னும் இறுதியுடைய வினையெச்சங்கள் சங்கநூல்களில் பயில வழங்குகின்றன. “தொல்காப்பியத்தில் வினையீறாக வழங்கப்பட்ட ‘மார்’, ‘தோழிமார்’ எனப் பெயர்மேல் ஈறாக வழங்கப்பட்டுள்ளது. “வியங்கோள்வினை, முன்னிலையிலும் தன்மையிலும் வாராது என்பது தொல்காப்பிய விதி. அவற்றில் வருதலும் சங்கப் பாடல்களில் காணக்கூடியது. “கோடி என்னும் எண்பற்றித் தொல்காப்பியத்தில் குறிப்பு இல்லை. தாமரை, வெள்ளம், ஆம்பல் என்பனபோல எண்ணுப் பெயர்கள் (ஐ அம் பல் என்னும் இறுதியுடையவை) வழங்குவதைச் சுட்டும் அவர், கோடியைக் குறித்தார் அல்லர். சங்கப் பாடல்களில் கோடி, ‘அடுக்கியகோடி’ என ஆளப் பெற்றுள்ளது. ஐ, அம், பல் ஈறுடைய எண்ணுப் பெயர்கள் அருகுதலும் சங்க நூல்களில் அறிய வருகின்றன. “சமய விகற்பம் பற்றிய செய்திகள், சமணம் புத்தம் பற்றிய குறிப்புகள் தொல்காப்பியத்தில் இல்லை. ஆனால் சங்க நூல்களில் இவற்றைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. எழுத்து சொல் ஆகிய அளவில் நில்லாமல் வாழ்வியலாகிய பொருள் பற்றி விரித்துக் கூறும் தொல்காப்பியர் காலத்தில் இவை வழக்கில் இருந்திருந்தால் இவற்றைக் கட்டாயம் சுட்டியிருப்பார். ஆகலின் சமண, பௌத்தச் சமயங்களின் வரவுக்கு முற்பட்டவரே தொல்காப்பியர். ஆதலால் தொல்காப்பியர் காலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதேயன்றிப் பிற்பட்டதாகாது.” இக்கருத்துகளைப் பேரா. க. வெள்ளைவாரணரும் (தமிழிலக்கிய வரலாறு - தொல்காப்பியம், பக். 87 - 96), பேரா.சி. இலக்குவனாரும் (தொல்காப்பிய ஆராய்ச்சி, பக். 12 - 14) விரித்துரைக்கின்றனர். சிலப்பதிகாரத்தால் இலங்கை வேந்தன் கயவாகு என்பான் அறியப்படுகிறான். அவன் காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டு என்பர். அச்சிலப்பதிகாரத்தில் ‘திருக்குறள்’ எடுத்தாளப்பட்டுள்ளது. ஆகலின் திருக்குறள் சிலப்பதிகாரக் காலத்திற்கு முற்பட்டது என்பது வெளிப்படை.. இளங்கோவடிகள் காலத்து வாழ்ந்தவரும், மணிமேகலை இயற்றியவரும், சேரன் செங்குட்டுவன் இளங்கோவடிகள் ஆகியோருடன் நட்புரிமை பூண்டவரும், ‘தண்டமிழ் ஆசான் சாத்தன்’ என இளங்கோவடிகளாரால் பாராட்டப்பட்டவருமாகிய கூலவாணிகன் சாத்தனார், திருவள்ளுவரைப் ‘பொய்யில் புலவன்’ என்றும், திருக்குறளைப் ‘பொருளுரை’ என்றும் குறித்துக் கூறிப் பாராட்டுகிறார். ஆகலின், சிலப்பதிகார மணிமேகலை நூல்களுக்குச் சில நூற்றாண்டுகளேனும் முற்பட்டது திருக்குறள் எனத் தெளியலாம். அத் திருக்குறளுக்கு முப்பால் கொள்கை அருளியது தொல்காப் பியம். ‘அறமுதலாகிய மும்முதற் பொருள்’ என்பது தொல்காப்பியம். ‘இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு’ என வருவதும் தொல்காப்பியம். அது வகுத்தவாறு அறம் பொருள் வழக்காறுகள் திருக்குறளில் இடம் பெற்றுள்ளதுடன், இன்பத்துப்பாலோ, புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் எனத் தொல்காப்பியர் சொல்லும் உரிப்பொருள் ஐந்தற்கும் முறையே ஐந்தைந்து அதிகாரங்களாக 25 அதிகாரங்கள் கொண்டு முற்றாகத் தொல்காப்பிய வழியில் விளங்க நூல் யாத்தவர் திருவள்ளுவர். ஆகலின் அத்திருக்குறளின் காலத்திற்குப் பன்னூற்றாண்டு முற்பட்ட பழமையுடையது தொல்காப்பியம் என்பது தெளிவுமிக்க செய்தியாம். திருக்குறள் ‘அறம்’ என்று சுட்டப்பட்டதுடன், குறள் தொடர்களும் குறள் விளக்கங்களும் பாட்டு தொகை நூல்களில் இடம் பெற்ற தொன்மையது திருக்குறள். அதற்கும் முற்பட்டது தொல்காப்பியம். இனித் தொல்காப்பியத்தில் வரும் ‘ஓரை’ என்னும் சொல்லைக் கொண்டு தொல்காப்பியர் காலத்தைப் பின்னுக்குத் தள்ள முயன்றவர் உளர். ஓரை அவர் கருதுமாப்போல ‘ஹோரா’ என்னும் கிரேக்கச் சொல் வழிப்பட்டதன்று. அடிப்பொருள் பாராமல் ஒலி ஒப்புக் கொண்டு ஆய்ந்த ஆய்வின் முடிவே அஃதாம். ‘யவனர் தந்த வினைமாண் நன்கலம்’ இவண் வந்ததும், அது ‘பொன்னொடு வந்து கறியொடு (மிளகொடு)’ பெயர்ந்ததும், ‘யவன வீரர் அரண்மனை காத்ததும்’ முதலாகிய பல செய்திகள் சங்க நூல்களில் பரவலாக உள. அக்காலத்தில் அவர்கள் ‘தோகை’ ‘அரி’ முதலிய சொற்களை அறிந்தது போல அறிந்து கொண்ட சொல் ‘ஓரை’ என்பது. அச்சொல்லை அவர்கள் அங்கு ‘ஹோரா’ என வழங்கினர். கிரேக்க மொழிச் சொற்கள் பல தமிழ்வழிச் சொற்களாக இருத்தலைப் பாவாணர் எடுத்துக் காட்டியுள்ளார். ஓரை என்பது ஒருமை பெற்ற - நிறைவு பெற்ற - பொழுது. திருமணத்தை முழுத்தம் என்பதும், திருமண நாள் பார்த்தலை முழுத்தம் பார்த்தல் என்பதும், திருமணக் கால்கோளை ‘முழுத்தக்கால்’ என்பதும், ‘என்ன இந்த ஓட்டம்; முழுத்தம் தவறிப்போகுமா?’ என்பதும் இன்றும் வழக்கில் உள்ளவை. முழுமதி நாளில் செய்யப்பட்ட திருமணமே முழுத்தம் ஆயிற்று. இன்றும் வளர்பிறை நோக்கியே நாள் பார்த்தலும் அறிக. ஆராய்ந்து பார்த்து - நாளும் கோளும் ஆராய்ந்து பார்த்து - ‘நல்லவையெல்லாம் ஒன்றுபட்டு நிற்கும் பொழுதே நற்பொழுது’ என்னும் குறிப்பால் அதனை ஓரை என்றனர். இத்திறம் அந்நாள் தமிழர் உடையரோ எனின், “செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப் பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும் வளிதிரிதரு திசையும் வறிது நிலைஇய காயமும் என்றிவை சென்றளந் தறிந்தோர் போல, இனைத்தென்போரும் உளரே” என்னும் புறப்பாடலை அறிவோர் ஓரையைப் பிறர்வழியே நம் முன்னோர் அறிந்தனர் என்னார். உண்கலத்தைச் சூழ வைத்திருந்த பக்கக் கலங்களை, “நாள்மீன் விரவிய கோள்மீனுக்கு” உவமை சொல்லும் அளவில் தெளிந் திருந்த அவர்கள், ஓரையைப் பிறர் வழியே அறிந்தனர் என்பது பொருந்தாப் புகற்சியாம். தொல்காப்பியர் சமயம் தொல்காப்பியனார் சமயம் பற்றியும் பலவகைக் கருத்துகள் உள. அவர் சைவர் என்பர். சைவம் என்னும் சொல் வடிவம் மணிமேகலையில் தான் முதற்கண் இடம் பெறுகிறது. பாட்டு தொகைகளில் இடம் பெற்றிலது. சேயோன், சிவன் வழிபாடு உண்டு என்பது வேறு. அது சைவ சமயமென உருப்பெற்றது என்பது வேறு. ஆதலால் தொல்காப்பியரைச் சைவரெனல் சாலாது. இனி, முல்லைக்கு முதன்மையும் மாயோனுக்குச் சிறப்பும் தருதல் குறித்து ‘மாலியரோ’ எனின், குறிஞ்சி முதலா உரிப்பொருளும் காலமும் குறித்தல் கொண்டு அம் முதன்மைக் கூறும் பொருள்வழி முதன்மை எனக் கொள்ளலே முறை எனல் சாலும். தொல்காப்பியரை வேத வழிப்பட்டவர் என்னும் கருத்தும் உண்டு. அஃதுரையாசிரியர்கள் கருத்து. நூலொடுபட்ட செய்தியன்றாம். சமயச் சால்பில் ஓங்கிய திருக்குறளை - வேத ஊழியைக் கண்டித்த திருக்குறளை - வேத வழியில் உரை கண்டவர் இலரா? அது போல் என்க. தொல்காப்பியரைச் சமணச் சமயத்தார் என்பது பெருவழக்கு. அவ்வழக்கும் ஏற்கத்தக்கதன்று. அதன் சார்பான சான்று தொல்காப்பி யத்தில் இல்லை. ஆனால் அச்சமயம் சார்ந்தார் அல்லர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. சமணச் சமய நூல்களாக வழங்குவன அருக வணக்கம் சித்த வணக்கம் உடையவை. அவ்வாறு பகுத்துக் கூறாவிடினும் அருக வணக்கம் உடையவை. சமணச் சமய நூல்களாகக் கிடைப்பவற்றை நோக்கவே புலப்படும். தொல்காப்பியர் காலத்தில் கடவுள் வாழ்த்து நூன் முகப்பில் பாடும் மரபில்லை எனின், அவர் சமணச் சமயத்தார் என்பதும் இல்லை என்பதே உண்மை. என்னெனின் சமணர் தம் சமயத்தில் அத்தகு அழுந்திய பற்றுதல் உடையவர் ஆதலால். சமணச் சமயத்தார் உயிர்களை ஐயறிவு எல்லையளவிலேயே பகுத்துக் கொண்டனர். ஆறாம் அறிவு குறித்து அவர்கள் கொள்வது இல்லை. “மாவும் மாக்களும் ஐயறிவினவே” என்னும் தொல்காப்பியர், “மக்கள் தாமே ஆறறி வுயிரே” என்றும் கூறினார். நன்னூலார் சமணர் என்பதும் வெளிப்படை. அவர் ஐயறிவு வரம்பு காட்டும் அளவுடன் அமைந்ததும் வெளிப்படை. சமணச் சமயத்தார் இளமை, யாக்கை, செல்வ நிலையாமைகளை அழுத்தமாக வலியுறுத்துவர். துறவுச் சிறப்புரைத்தலும் அத்தகையதே. ஆகவும் நிலையாமையையே கூறும் காஞ்சித் திணையைப் பாடுங்காலும், “நில்லா உலகம் புல்லிய நெறித்தே” என ‘உலகம் நிலையாமை பொருந்தியது’ என்ற அளவிலேயே அமைகிறார். “காமஞ் சான்ற கடைக்கோட் காலை ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே” (1138) என அன்பு வாழ்வே அருள் வாழ்வாம் தவவாழ்வாக வளர்நிலையில் கூறுகிறார். இல்லற முதிர்வில் தவமேற்கும் நிலை சமணம் சார்ந்ததன்று. அஃது இம்மண்ணில் தோன்றி வளர்ந்து பெருகிய தொல் பழந்தமிழ் நெறி. தொல்காப்பியர் சமணச் சமயத்தார் எனின் அகத்திணையியல் களவியல் கற்பியல் பொருளியல் என அகப் பொருளுக்குத் தனியே நான்கு இயல்கள் வகுத்ததுடன் மெய்ப்பாட்டியல் செய்யுளியல் உவம இயல் என்பனவற்றிலும் அப்பொருள் சிறக்கும் இலக்கணக் குறிப்புகளைப் பயில வழங்கியிரார். காமத்தைப் ‘புரைதீர்காமம்’ என்றும் (1027) ‘காமப் பகுதி கடவுளும் வரையார்’ என்றும் (1029) கூறியிரார். “ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது தேனது வாகும்” என்பது போலும் இன்பியல் யாத்திரார். கிறித்துவத் துறவு நெறிசார் வீரமாமுனிவரின் தொன்னூல் விளக்கப் பொருளதிகாரம் காண்பார் இதனை நன்கு அறிவார். சிந்தாமணியாம் பாவிகத்தை எடுத்துக்காட்டுவார் எனின் அவர், திருத்தக்கதேவர் பாடிய நரிவிருத்தத்தையும் கருதுதல் வேண்டும். பாட இயலாது என்பதை இயலுமெனக் காட்ட எழுந்தது அந்நூல் என்பதையும், காமத்தைச் சூடிக் கழித்த பூப்போல் காவிய முத்திப் பகுதியில் காட்டுவதையும் கருதுவாராக. கடவுள் நம்பிக்கை தொல்காப்பியர் கடவுள் வாழ்த்துக் கூறவில்லை எனினும், “கொடிநிலை கந்தழி வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே” என்றும் (1034), புறநிலை வாழ்த்து, “வழிபடு தெய்வம் நிற்புறம் காப்பப் பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து பொலிமின்” என்பது என்றும் ஆளும் இடங்களில் தெளிவாகக் கடவுள் வாழ்த்து என்பதையும் ‘வழிபடு தெய்வம்’ என்பதையும் குறிக்கிறார். மேலும் கருப்பொருள் கூறுங்கால் ‘தெய்வம் உணாவே” என உணவுக்கு முற்படத் தெய்வத்தை வைக்கிறார். உலகெலாம் தழுவிய பொதுநெறியாக இந்நாள் வழங்கும் இது, பழந்தமிழர் பயில்நெறி என்பது விளங்கும். ஆதலால் பழந்தமிழர் சமய நெறி எந்நெறியோ அந்நெறியே தொல்காப்பியர் நெறி எனல் சாலும். வாகைத் திணையில் வரும், ‘கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமை’, ‘அருளொடு புணர்ந்த அகற்சி’, ‘காமம் நீத்தபால்’ என்பனவும், காஞ்சித் திணையில் வரும் தபுதார நிலை, தாபத நிலை, பலர் செலச் செல்லாக் காடு வாழ்த்து என்பனவும் பழந்தமிழர் மெய்யுணர்வுக் கோட்பாடுகள் எனக் கொள்ளத்தக்கன. கொற்றவை நிலை, வேலன் வெறியாட்டு, பூவைநிலை காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு சிறப்பில் பெரும்படை வாழ்த்தல் என வரும் வெட்சிப் பகுதிகள் பழந்தமிழர் வழிபாட்டியலைக் காட்டுவன. சேயோன் மாயோன் வேந்தன் வண்ணன் என்பார், குறிஞ்சி முதலாம் திணைநிலைத் தெய்வங்களெனப் போற்றி வழிபடப்பட்டவர் என்பதாம். ஆசிரியர் திருவள்ளுவர் கடவுள் வாழ்த்துப் பாடினாலும், அவர் இன்ன சமயத்தவர் என்பதற்குரிய திட்டவட்டமான அகச்சான்று இல்லாமை போலத் தொல்காப்பியர்க்கும் இல்லை. ஆகவே சமயக் கணக்கர் மதிவழிச் செல்லாத பொதுநெறிக் கொள்கையராம் வள்ளுவரைப் போன்றவரே தொல்காப்பியரும் என்க. தொல்காப்பியக் கட்டொழுங்கு தொல்காப்பியம் கட்டொழுங்கமைந்த நூல் என்பது மேலோட்ட மாகப் பார்ப்பவர்க்கும் நன்கு விளங்கும். இன்ன பொருள் இத்தட்டில் என்று வைக்கப்பட்ட ஐந்தறைப் பெட்டியில் இருந்து வேண்டும் பொருளை எடுத்துக் கொள்வதுபோல் எடுத்துக்கொள்ள வாய்த்தது தொல்காப்பியம். அதனையே பாயிரம் ‘முறைப்பட எண்ணிப் புலம் தொகுத்த’தாகக் குறிக்கின்றது. எழுத்து சொல் பொருள் என்னும் மூன்றதிகாரங்களைக் கொண்ட தொல்காப்பியம் ஒவ்வோர் அதிகாரத்திற்கும் ஒன்பது ஒன்பது இயல்களைக் கொண்டிருத்தல் அதன் கட்டமைதிச் சிறப்புக் காட்டுவதாம். “ஆயிரத்தின் மேலும் அறுநூற்றுப் பஃதென்ப பாயிரத்தொல் காப்பியங்கற் பார்” என்பது தொல்காப்பிய நூற்பா அளவினைக் கூறுவதொரு வெண்பா. ஆனால் உரையாசிரியர்களின் அமைப்புப்படி 1595 முதல் 1611 நூற்பா வரை பல்வேறு எண்ணிக்கையுடையவாய் அமைந்துள்ளன. இக்கணக்கீடும், தொல்காப்பியர் சொல்லியதோ, பனம்பாரனார் குறித்ததோ அன்று. உரையாசிரியர்களின் காலத்தவரோ அவர்களின் காலத்திற்கு முன்னே இருந்த மூலநூற்பா எல்லையில் கணக்கிட்டறிந்த ஒருவரோ கூறியதாகலாம். தொல்காப்பிய அடியளவு 3999 என்று அறிஞர் வ.சுப. மாணிக்கனார் (தொல்காப்பியக்கடல் பக். 95) எண்ணிக் கூறுவர். ஏறக்குறைய 5630 சொல் வடிவங்கள் தொல்காப்பியத்தில் உள்ளமையையும் கூறுவர். அவர் “தொல்காப்பிய இலக்கணத்தைக் காண்பதற்குத் தொல்காப்பியத்தையே இலக்கியமாகக் கொள்ளலாம். தன்னைத் தானே விளக்கிக் காட்டுதற்குரிய அவ்வளவு பருமனுடையது தொல்காப்பியம்” என்று வாய்மொழிகின்றார். முப்பகுப்பு தனியெழுத்துகள், சொல்லில் எழுத்தின் நிலை, எழுத்துப் பிறக்கும் வகை, புணர் நிலையில் எழுத்தமைதி என்பவற்றை விரித்துரைப்பது எழுத்ததிகாரம். நூன் மரபு, மொழி மரபு, பிறப்பியல், புணரியல், தொகை மரபு, உருபியல், உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல் என்பன எழுத்ததிகார இயல்கள். எழுத்துகள் சொல்லாம் வகை, பெயர்கள் வேற்றுமையுருபேற்றல், விளிநிலை எய்தல், பெயர் வினை இடை உரி என்னும் சொல் வகைகள் இன்னவற்றைக் கூறுவது சொல்லதிகாரம். கிளவியாக்கம், வேற்றுமை யியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, பெயரியல், வினையியல், இடையியல், உரியியல், எச்சவியல் என்பன சொல்லதிகார இயல்கள். இன்ப ஒழுக்க இயல்பு, பொருள் அற ஒழுக்க இயல்பு, களவு கற்பு என்னும் இன்பவியற் கூறுகள், பொருளியல் வாழ்வில் நேரும் மெய்ப் பாடுகள், பொருளியல் நூலுக்கு விளக்காம் உவமை, செய்யுளிலக்கணம், உலக வழக்கு செய்யுள் வழக்கு என்பவற்றின் மரபுகள் ஆகியவற்றைக் கூறுவது பொருளதிகாரம். அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் என்பன பொருளதிகார இயல்கள். எடுத்துக்கொண்ட பொருளின் அடிக்கருத்தை முதற்கண் கூறி, பின்னர் வித்தில் இருந்து கிளரும் முளை இலை தண்டு கிளை கவடு பூ காய் கனி என்பவை போலப் பொருளைப் படிப்படியே வளர்த்து நிறைவிப்பது தொல்காப்பியர் நடைமுறை. எழுத்துகள் இவை, இவ்வெண்ணிக்கையுடையன என்று நூன் மரபைத் தொடங்கும் ஆசிரியர், குறில் நெடில் மாத்திரை, உயிர் மெய் வடிவு உயிர்மெய், அவற்றின் ஒலிநிலைப்பகுப்பு, மெய்ம்மயக்கம், சுட்டு வினா எழுத்துகள் என்பவற்றைக் கூறும் அளவில் 33 நூற்பாக்களைக் கூறி அமைகிறார். முப்பத்து மூன்றாம் நூற்பாவை, “அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் உளவென மொழிப இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர்” என்கிறார். இயலிலக்கணம் கூறும் ஆசிரியர் இசையிலக்கணம் பற்றிய நூல்களில் இவ்வெழுத்துகளின் நிலை எவ்வாறாம் என்பதையும் சுட்டிச் செல்லுதல் அருமையுடையதாம். அவ்வாறே ஒவ்வோர் இயலின் நிறைவிலும் அவர் கூறும் புறனடை நூற்பா, மொழிவளர்ச்சியில் தொல் காப்பியனார் கொண்டிருந்த பேரார்வத்தையும் காலந்தோறும் மொழியில் உண்டாகும் வளர்நிலைகளை மரபுநிலை மாறாவண்ணம் அமைத்துக் கொள்வதற்கு வழிசெய்வதையும் காட்டுவனவாம். “உணரக் கூறிய புணரியல் மருங்கின் கண்டுசெயற் குரியவை கண்ணினர் கொளலே” (405) என்பது குற்றியலுகரப் புணரியல் புறனடை “கிளந்த அல்ல செய்யுளுள் திரிநவும் வழங்கியல் மருங்கின் மருவொடு திரிநவும் விளம்பிய இயற்கையின் வேறுபடத் தோன்றின் வழங்கியல் மருங்கின் உணர்ந்தனர் ஒழுக்கல் நன்மதி நாட்டத்து என்மனார் புலவர்” (483) என்பது எழுத்ததிகாரப் புறனடை. “அன்ன பிறவும் கிளந்த அல்ல பன்முறை யானும் பரந்தன வரூஉம் உரிச்சொல் எல்லாம் பொருட்குறை கூட்ட இயன்ற மருங்கின் இனைத்தென அறியும் வரம்புதமக் கின்மையின் வழிநனி கடைப்பிடித் தோம்படை ஆணையிற் கிளந்தவற் றியலாற் பாங்குற உணர்தல் என்மனார் புலவர்” (879) என்பது உரியியல் புறனடை. இன்னவற்றால் தொல்காப்பியர் தொன்மையைக் காக்கும் கடப்பாட்டை மேற்கொண்டிருந்தவர் என்பதுடன் நிகழ்கால எதிர்கால மொழிக் காப்புகளையும் மேற்கொண்டிருந்தவர் என்பது இவ்வாறு வரும் புறனடை நூற்பாக்களால் இனிதின் விளங்கும். தொல்காப்பியம் இலக்கணம் எனினும் இலக்கியமென விரும்பிக் கற்கும் வண்ணம் வனப்பு மிக்க உத்திகளைத் தொல்காப்பியர் கையாண்டு நூலை யாத்துள்ளார். இலக்கிய நயங்கள் எளிமை : சிக்கல் எதுவும் இல்லாமல் எளிமையாகச் சொல்கிடந்த வாறே பொருள் கொள்ளுமாறு நூற்பா அமைத்தலும், எளிய சொற் களையே பயன்படுத்துதலும் தொல்காப்பியர் வழக்கம். “எழுத்தெனப் படுவ, அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப” “மழவும் குழவும் இளமைப் பொருள” “ஓதல் பகையே தூதிவை பிரிவே” “வண்ணந் தானே நாலைந் தென்ப” ஓரியல் யாப்புரவு ‘ஒன்றைக் கூறுங்கால் அதன் வகைகளுக்கெல்லாம் ஒரே யாப்புறவை மேற்கொள்ளல்’ என்பது தொல்காப்பியர் வழக்கம். “வல்லெழுத் தென்ப கசட தபற” “மெல்லெழுத் தென்ப ஙஞண நமன” “இடையெழுத் தென்ப யரல வழள” சொன்மீட்சியால் இன்பமும் எளிமையும் ஆக்கல் ஓரிலக்கணம் கூறுங்கால் சிக்கல் இல்லாமல் பொருள் காண்பதற் காக வேண்டும் சொல்லைச் சுருக்காமல் மீளவும் அவ்விடத்தே சொல்லிச் செல்லுதல் தொல்காப்பியர் வழக்கம். “அவற்றுள், நிறுத்த சொல்லின் ஈறா கெழுத்தொடு குறித்துவரு கிளவி முதலெழுத் தியையப் பெயரொடு பெயரைப் புணர்க்குங் காலும் பெயரொடு தொழிலைப் புணர்க்குங் காலும் தொழிலொடு பெயரைப் புணர்க்குங் காலும் தொழிலொடு தொழிலைப் புணர்க்குங் காலும் மூன்றே திரிபிடன் ஒன்றே இயல்பென ஆங்கந் நான்கே மொழிபுணர் இயல்பே” என்னும் நூற்பாவைக் காண்க. இவ்வியல்பில் அமைந்த நூற்பாக்கள் மிகப் பல என்பதைக் கண்டு கொள்க. நூற்பா மீட்சியால் இயைபுறுத்தல் ஓரிடத்துச் சொல்லப்பட்ட இலக்கணம் அம்முறையிலேயே சொல்லப்படத் தக்கதாயின் புதிதாக நூற்பா இயற்றாமல், முந்தமைந்த நூற்பாவையே மீளக்காட்டி அவ்வவ் விலக்கணங்களை அவ்வவ்விடங் களில் கொள்ளவைத்தல் தொல்காப்பிய ஆட்சி. இது தம் மொழியைத் தாமே எடுத்தாளலாம். “அளபெடைப் பெயரே அளபெடை இயல” “தொழிற்பெய ரெல்லாம் தொழிற்பெய ரியல” என்பவற்றைக் காண்க. எதுகை மோனை நயங்கள் எடுத்துக் கொண்டது இலக்கணமே எனினும் சுவைமிகு இலக்கிய மெனக் கற்குமாறு எதுகை நயம்பட நூற்பா யாத்தலில் வல்லார் தொல் காப்பியர். “வஞ்சி தானே முல்லையது புறனே எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்றே”. “ஏரோர் களவழி அன்றிக் களவழித் தேரோர் தோற்றிய வென்றியும்”. இவை தொடை எதுகைகள். இவ்வாறே ஐந்தாறு அடிகளுக்கு மேலும் தொடையாகப் பயில வருதல் தொல்காப்பியத்துக் கண்டு கொள்க. “மாற்றருங் கூற்றம் சாற்றிய பெருமையும் கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும்”. இவை அடி எதுகைகள். “விறப்பும் உறப்பும் வெறுப்பும் செறிவே” “நொசிவும் நுழைவும் நுணங்கும் நுண்மை”. முன்னதில் முழுவதும் எதுகைகளும், பின்னதில் முழுவதும் மோனைகளும் தொடைபடக் கிடந்து நடையழகு காட்டல் அறிக. முன்னது - முற்றெதுகை; பின்னது - முற்றுமோனை. “வயவலி யாகும்” “வாள்ஒளி யாகும்” “உயாவே உயங்கல்” “உசாவே சூழ்ச்சி” இவை மோனைச் சிறப்பால் அடுத்த தொடரைக் கொண்டு வந்து நிறுத்துகின்றன. இதனை எடுத்து வருமோனை எனலாம். அடைமொழி நடை மரம்பயில் கூகை, செவ்வாய்க் கிளி, வெவ்வாய் வெருகு, இருள்நிறப் பன்றி, மூவரி அணில், கோடுவாழ் குரங்கு, கடல்வாழ் சுறவு, வார்கோட்டி யானை என அடைமொழிகளால் சுவைப்படுத்துதல் தொல்காப்பியர் உத்திகளுள் ஒன்று. “இழுமென் மொழியால் விழுமியது பயிலல்” “எண்ணு வண்ணம் எண்ணுப் பயிலும்” இவ்வாறு ஒலி நயத்தால் கவர்ந்து பொருளை அறிந்துகொள்ளச் செய்வதும் தொல்காப்பியர் உத்திகளுள் ஒன்று. “மாத்திரை முதலா அடிநிலை காறும் நோக்குதற் காரணம் நோக்கெனப் படுமே” “ஒரூஉ வண்ணம் ஒரீஇத் தொடுக்கும்” என எடுத்த இலக்கணத்தை அச்சொல்லாட்சியாலேயே விளக்கிக் காட்டுவதும் தொல்காப்பிய நெறி. ‘மாற்றருஞ் சிறப்பின் மரபியல்’ என இயலின் பெயர் குறிக்கும் மாற்றானே இலக்கணமும் யாத்துக் காட்டியமை நூற்பாவுள் தனி நூற்பாவாகிய பெற்றிமையாம். வரம்பு இளமைப் பெயர், ஆண்மைப் பெயர், பெண்மைப் பெயர் என்பவற்றை முறையே கூறி விளக்கிய ஆசிரியர் “பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே” என நிறைவித்தல் நூல் வரம்புச் சான்றாம். செய்யுளியல் தொடக்கத்தில் செய்யுள் உறுப்புகள் மாத்திரை முதலாக முப்பத்து நான்கனை உரைத்து அவற்றை முறையே விளக்குதலும் பிறவும் திட்டமிட்ட நூற்கொள்கைச் சிறப்பாக அமைவனவாம். “வகரக் கிளவி நான்மொழி ஈற்றது” “அம்மூன் றென்ப மன்னைச் சொல்லே” இன்னவாறு வருவனவும் வரம்பே. விளங்க வைத்தல் விளங்கவைத்தல் என்பதொரு நூலழகாகும். அதனைத் தொல் காப்பியனார் போல விளங்க வைத்தவர் அரியர். “தாமென் கிளவி பன்மைக் குரித்தே” “தானென் கிளவி ஒருமைக் குரித்தே” “ஒருவர் என்னும் பெயர்நிலைக் கிளவி இருபாற்கும் உரித்தே தெரியுங் காலை” இவ்வளவு விளங்கச் சொன்னதையும் எத்தனை எழுத்தாளர்கள் இந்நாளில் புரிந்துகொண்டுளர்? நயத்தகு நாகரிகம் சில எழுத்துகளின் பெயரைத்தானும் சொல்லாமல் உச்சகாரம் (சு), உப்பகாரம் (பு), ஈகார பகரம் (பீ) இடக்கர்ப் பெயர் என்பவற்றை எடுத்துச் சொல்லும் நாகரிகம் எத்தகு உயர்வு உடையது! இஃது உயர்வெனக் கருதும் உணர்வு ஒருவர்க்கு உண்டாகுமானால் அவர் தம் மனம்போன போக்கில் எண்ணிக்கை போன போக்கில் கிறுக்கிக் கதையெனவோ பாட்டெனவோ நஞ்சை இறக்கி ‘இளையர்’ உளத்தைக் கெடுத்து எழுத்தால் பொருளீட்டும் சிறுமை உடையராவரா? தொல்காப்பிய நூனயம் தனியே ஆய்ந்து வெளிப்படுத்தற்குரிய அளவினது. தொல்காப்பியக் கொடை முந்து நூல் வளங்கள் அனைத்தும் ஒருங்கே பெறத்தக்க அரிய நூலாகத் தொல்காப்பியம் விளங்குவதுடன், அவர்கால வழக்குகளையும் அறிந்து கொள்ளும் வண்ணம் தொல்காப்பியர் தம் நூலை இயற்றியுள்ளார். அன்றியும் பின்வந்த இலக்கியப் படைப்பாளிகளுக்கும் இலக்கணப் படைப்பாளிகளுக்கும் அவர் வழங்கியுள்ள கொடைக்கு அளவே இல்லை. தொட்டனைத் தூறும் மணற்கேணியென அது சுரந்துகொண்டே உள்ளமை ஆய்வாளர் அறிந்ததே. பொருளதிகார முதல் நூற்பா ‘கைக்கிளை முதலா’ எனத் தொடங்குகின்றது. அக் கைக்கிளைப் பொருளில் எழுந்த சிற்றிலக்கியம் உண்டு. முத்தொள்ளாயிரப் பாடல்களாகப் புறத்திரட்டு வழி அறியப் பெறுவன அனைத்தும் கைக்கிளைப் பாடல்களே. “ஏறிய மடல் திறம்” என்னும் துறைப்பெயர் பெரிய மடல், சிறியமடல் எனத் தனித்தனி நூலாதல் நாலாயிரப் பனுவலில் காணலாம். ‘மறம்’ எனப்படும் துறையும் ‘கண்ணப்பர் திருமறம்’ முதலாகிய நூல் வடிவுற்றது. கலம்பக உறுப்பும் ஆயது. ‘உண்டாட்டு’ என்னும் புறத்துறை, கம்பரின் உண்டாட்டுப் படலத்திற்கு மூலவூற்று. ‘தேரோர் களவழி’ களவழி நாற்பது கிளர்வதற்குத் தூண்டல். ‘ஏரோர் களவழி’ என்பது பள்ளுப்பாடலாகவும், ‘குழவி மருங்கினும்’ என்பது பிள்ளைத் தமிழாகவும் வளர்ந்தவையே. “காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்த மரபின் பெரும்படை வாழ்த்தலென் றிருமூன்று மரபின்கல்” என்னும் புறத்திணை இயல் நூற்பா தானே, சிலப்பதிகார வஞ்சிக் காண்டத்திற்கு வைப்பகம். பாடாண் திணைத் துறைகள் சிற்றிலக்கிய வளர்ச்சிக்கு வழங்கியுள்ள கொடை தனிச்சிறப்பினவாம். “அறம் முதலாகிய மும்முதற் பொருட்கும்” என நூற்பாச் செய்து முப்பாலுக்கு மூலவராகத் தொல்காப்பியனார் திகழ்வதைச் சுட்டுவதே அவர்தம் கொடைப் பெருமை நாட்டுவதாகலாம். இவை இலக்கியக் கொடை. இலக்கணக் கொடை எத்துணைக் கொடை? இலக்கண நூல்கள் அனைத்துக்கும் நற்றாயாயும், செவிலித் தாயாயும், நல்லாசானாயும் இருந்து வளர்த்து வந்த - வளர்த்து வருகின்ற சீர்மை தொல்காப்பியத்திற்கு உண்டு. இந்நாளில் வளர்ந்துவரும் ‘ஒலியன்’ ஆய்வுக்கும் தொல்காப்பியர் வித்திட்டவர் எனின், அவர் வழி வழியே நூல் யாத்தவர்க்கு அவர் பட்டுள்ள பயன்பாட்டுக்கு அளவேது? “தொல்காப்பி யன் ஆணை” என்பதைத் தலைமேற் கொண்ட இலக்கணர், பின்னைப் பெயர்ச்சியும் முறை திறம்பலுமே மொழிச்சிதைவுக்கும் திரிபுகளுக்கும் இடமாயின என்பதை நுணுகி நோக்குவார் அறிந்து கொள்ளக்கூடும். இலக்கணப் பகுப்பு விரிவு இனித் தொல்காப்பியம் பிற்கால இலக்கணப் பகுப்புகளுக்கும் இடந்தருவதாக அமைந்தமையும் எண்ணத் தக்கதே. தமிழ் இலக்கணம் ஐந்திலக்கணமாக அண்மைக் காலம் வரை இயன்றது. அறுவகை இலக்கணமென ஓரிலக்கணமாகவும் இது கால் விரிந்தது. இவ் விரிவுக்குத் தொல்காப்பியம் நாற்றங்காலாக இருப்பது அறிதற்குரியதே. எழுத்து சொல் பொருள் என முப்பகுப்பால் இயல்வது தொல் காப்பியம் ஆகலின் தமிழிலக்கணம் அவர் காலத்தில் முக் கூறுபட இயங்கியமை வெளி. அவர் கூறிய பொருளிலக்கணத்தைத் தனித்தனியே வாங்கிக் கொண்டு அகப்பொருள், புறப்பொருள் என இலக்கணங்கூறும் நூல்கள் கிளைத்தன. அது பொருளிலக்கணத்தைப் பகுத்துக் கொண்டதே. அவர் கூறிய செய்யுளியலை வாங்கிக் கொண்டு, ‘யாப்பருங்கலம்’ முதலிய யாப்பு இலக்கண நூல்கள் தோன்றித் தமிழ் இலக்கணத்தை நாற்கூறுபடச் செய்தன. அவர் கூறிய உவமையியலையும் செய்யுளியலில் சில பகுதிகளையும் தழுவிக்கொண்டு வடமொழி இலக்கணத் துணையொடு அணியிலக்க ணம் என ஒரு பகுதியுண்டாகித் தமிழ் இலக்கணம் ஐங்கூறுடையதாயிற்று. இவ்வைந்துடன் ஆறாவது இலக்கணமாகச் சொல்லப்படுவது ‘புலமை இலக்கணம்’ என்பது. அது தமிழின் மாட்சி தமிழ்ப் புலவர் மாட்சி முதலியவற்றை விரிப்பது. “தமிழ்மொழிக் குயர்மொழி தரணியில் உளதென வெகுளியற் றிருப்போன் வெறும்புல வோனே” என்பது அவ்விலக்கணத்தில் ஒரு பாட்டு. ஆக மூன்றிலக்கணத்துள் ஆறிலக்கணக் கூறுகளையும் மேலும் உண்டாம் விரிவாக்கங்களையும் கொண்டிருக்கின்ற மொழிக் களஞ்சியம் தொல்காப்பியம் என்க. தொல்காப்பியரின் சிறப்பாகப் பாயிரம் சொல்வனவற்றுள் ஒன்று, ‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்’ என்பது. ஐந்திரம் இந்திரனால் செய்யப்பட்டது என்றும், பாணினியத்திற்குக் காலத்தால் முற்பட்டது என்றும், வடமொழியில் அமைந்தது என்றும் பாணினியத்தின் காலம் கி.மு. 450 ஆதலால் அதற்கு முற்பட்ட ஐந்திரக் காலம் அதனின் முற்பட்ட தென்றும், அந் நூற்றேர்ச்சி தொல்காப்பியர் பெற்றிருந்தார் என்றும், அந்நூற் பொருளைத் தம் நூலுக்குப் பயன்படுத்திக் கொண்டார் என்றும் ஆய்வாளர் பலப்பல வகையால் விரிவுறக் கூறினர். சிலப்பதிகாரத்தில் வரும் ‘விண்ணவர் கோமான்’ விழுநூல், ‘கப்பத் திந்திரன் காட்டிய நூல்’ என்பவற்றையும் ‘இந்திரன் எட்டாம் வேற்றுமை என்றனன்’ என்னும் ஒரு நூற்பாவையும் காட்டி அவ்வைந்திர நூலைச் சுட்டுவர். விண்ணவர் கோமான் இந்திரன் வடமொழியில் நூல் செய்தான் எனின், தேவருலக மொழி வடமொழி என்றும், விண்ணுலக மொழியே மண்ணில் வடமொழியாய் வழங்குகின்றது என்றும், மண்ணவர் மொழி யுடையாரை நம்பவைப்பதற்கு இட்டுக் கட்டப்பட்ட எளிய புனைவேயாம். அப்புனைவுப் பேச்சுக் கேட்டதால்தான் இளங்கோ தம் நூலுள்ளும் புனைந்தார். அவர் கூறும் “புண்ணிய சரவணத்தில் மூழ்கி எழுந்தால் விண்ணவர் கோமான் விழுநூல் எய்துவர்” என்பதே நடைமுறைக் கொவ்வாப் புனைவு என்பதை வெளிப்படுத்தும். அகத்திய நூற்பாக்களென உலவ விட்டவர்களுக்கு, இந்திரன் எட்டாம் வேற்றுமை சொன்னதாக உலவவிட முடியாதா? இவ்வாறு கூறப்பட்டனவே தொன்மங்களுக்குக் கைம்முதல். இதனைத் தெளிவாகத் தெரிந்தே தொல்காப்பியனார், “தொன்மை தானே உரையொடு புணர்ந்த பழமை மேற்றே” என்றார். தொன்மை என்பது வழிவழியாக உரைக்கப்பட்டு வந்த பழஞ் செய்தி பற்றியதாம் என்பது இந்நூற்பாவின் பொருள். இவ்வாறு தொல் காப்பியர் கேட்ட தொன்மச் செய்திகளைப் பனம்பாரனார் கேட்டிரார் என்ன இயலாதே. “இந்திரனாற் செய்யப்பட்டதொரு நூல் உண்டு காண்; அது வடமொழியில் அமைந்தது காண்; அதன் வழிப்பட்டனவே வடமொழி இலக்கண நூல்கள் காண்” என்று கூறப்பட்ட செய்தியைப் பனம்பாரர் அறிந்தார். ‘அறிந்தார் என்பது இட்டுக் கட்டுவதோ’ எனின் அன்று என்பதை அவர் வாக்கே மெய்ப்பிப்பதை மேலே காண்க. திருவள்ளுவர் காலத்திலும், “தாமரைக் கண்ணானின் உலக இன்பத் திலும் உயரின்பம் ஒன்று இல்லை” என்று பேசப்பட்டது. இவ்வாறு பிறர் பிறர் காலத்தும் பிறபிற செய்திகள் பேசப்பட்டன என்பவற்றை விரிப்பின் பெருகுமென்பதால் வள்ளுவர் அளவில் அமைவாம். திருவள்ளுவர் கேட்ட செய்தி, அவரை உந்தியது. அதனால் “தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல், தாமரைக் கண்ணான் உலகு?” என்றோர் வினாவை எழுப்பி இவ்வுலகத்தெய்தும் இன்பங்களுள் தலையாய காதலின்பத்தைச் சுட்டினார். அடியளந்தான் கதையை மறுத்து, மடியில்லாத மன்னவன் தன் முயற்சியால் எய்துதல் கூடும் முயல்க; முயன்றால் தெய்வமும் மடிதற்று உன்முன் முந்து நிற்கும் என்று முயற்சிப் பெருமையுரைத்தார். இன்னதோர் வாய்பாட்டால் பனம்பாரனார் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியரைச் சுட்டினார். ‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்’ என்று வாளா கூறினார் அல்லர் பனம்பாரனார். “மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” என்றார். அவர் கேள்வியுற்றது ‘விண்ணுலக ஐந்திரம்!’ அவ்விண்ணுலக ஐந்திரத்தினும் இம்மண்ணுலகத்துத் தொல்காப்பியமே சிறந்த ஐந்திரம் என்னும் எண்ணத்தை யூட்டிற்றுப் போலும்! “ஆகாயப்பூ நாறிற்று என்றுழிச் சூடக்கருதுவாருடன்றி மயங்கக் கூறினான் என்னும் குற்றத்தின் பாற்படும்” என்பதை அறியாதவர் அல்லரே பனம்பாரர். அதனால் நீர்நிறைந்த கடல் சூழ்ந்த நிலவுலகின்கண் விளங்கும் ஐந்திரம் எனத்தக்க தொல்காப்பியத்தை முழுதுற நிரம்பத் தோற்றுவித்ததால் தன் பெயரைத் தொல்காப்பியன் எனத் தோன்றச் செய்தவன் என்று பாராட்டுகிறார். இனி ‘ஐந்திரம்’ என்பது சமண சமயத்து ஐந்தொழுக்கக் கோட்பாடு. அவற்றை நிறைந்தவர் தொல்காப்பியர் என்றும் கூறுவர். ஒழுக்கக் கோட்பாடு ‘படிமையோன்’ என்பதனுள் அடங்குதலால் மீட்டுக் கூற வேண்டுவதில்லையாம். அன்றியும் கட்டமை நோற்பு ஒழுக்கம் அவ்வாத னுக்கு உதவுதலன்றி, அவனியற்றும் இலக்கணச் சிறப்புக்குரிய தாகாது என்பதுமாம் ஆயினும், தொல்காப்பியர் சமண சமயச் சார்பினர் அல்லர் என்பது மெய்ம்மையால், அவ்வாய்வுக்கே இவண் இடமில்லையாம். இனி ‘ஐந்திறம்’ என்றாக்கி ஐங்கூறுபட்ட இலக்கணம் நிறைந்தவர் என்பர். அவர் தமிழ் இலக்கணக் கூறுபாடு அறியார். தமிழ் இலக்கணம் முக்கூறுபட்டது என்பதைத் தொல்காப்பியமே தெளிவித்தும் பின்னே வளர்ந்த ஐந்திலக்கணக் கொள்கையை முன்னே வாழ்ந்த ஆசிரியர் தலையில் சுமத்துவது அடாது எனத் தள்ளுக. ‘ஐந்திரம்’ எனச் சொன்னடை கொண்டு பொருளிலாப் புதுநூல் புனைவு ஒன்று இந்நாளில் புகுந்து மயக்க முனைந்து மயங்கிப்போன நிலையைக் கண்ணுறுவார் ஏட்டுக் காலத்தில் எழுதியவர் ஏட்டைக் கெடுத்ததும் படித்தவர் பாட்டைக் கெடுத்ததும் ஆகிய செய்திகளைத் தெளிய அறிவார். எழுதி ஏட்டைக் காத்த - படித்துப் பாட்டைக் காத்த ஏந்தல்களுக்கு எவ்வளவு தலை வணங்குகிறோமோ, அவ்வளவு தலை நாணிப் பிணங்கவேண்டிய செயன்மையரை என் சொல்வது? தொல்காப்பிய நூற்பாக்கள் இடமாறிக் கிடத்தல் விளங்குகின்றது. தெய்வச்சிலையார் அத்தகையதொரு நூற்பாவைச் சுட்டுதலை அவர் பகுதியில் கண்டு கொள்க. மரபியலில் “தவழ்பவை தாமும் அவற்றோ ரன்ன” என்னும் நூற்பாவை அடுத்துப் “பறழ்எனப் படினும் உறழாண் டில்லை” என்னும் நூற்பா அமைந்திருத்தல் வேண்டும். அவ்வாறு அமைந்தால் எடுத்துக்காட்டு இல்லை என்பனவற்றுக்கு இலக்கியம் கிடைத்தல் இயல்பாக அமைகின்றது. “இக்காலத்து இறந்தன” என்னும் இடர்ப்பாடும் நீங்குகின்றது. இடப் பெயர்ச்சிக்கு இஃதொரு சான்று. இடையியலில் “கொல்லே ஐயம்” என்பதை அடுத்த நூற்பா “எல்லே இலக்கம்” என்பது. இவ்வாறே இருசீர் நடை நூற்பா நூற்கும் இடத்தெல்லாம் அடுத்தும் இருசீர் நடை நூற்பா நூற்றுச் செல்லலும் பெரிதும் எதுகை மோனைத் தொடர்பு இயைத்தலும் தொல்காப்பியர் வழக்காதலைக் கண்டு கொள்க. இத்தகு இருசீர் நடை நூற்பாக்கள் இரண்டனை இயைத்து ஒரு நூற்பாவாக்கலும் தொல்காப்பிய மரபே. “உருவுட் காகும்; புரைஉயர் வாகும்” “மல்லல் வளனே; ஏபெற் றாகும்” “உகப்பே உயர்தல்; உவப்பே உவகை” என்பவற்றைக் காண்க. இவ்விருவகை மரபும் இன்றி “நன்று பெரிதாகும்” என்னும் நூற்பா ஒன்றும் தனித்து நிற்றல் விடுபாட்டுச் சான்றாகும். அகத்திணையியல் இரண்டாம் நூற்பா, ‘அவற்றுள்’ என்று சுட்டுதற்குத் தக்க சுட்டு முதற்கண் இன்மை காட்டி ஆங்கு விடுபாடுண்மை குறிப்பர். (தொல். அகத். உரைவளம். மு. அருணாசலம் பிள்ளை) இனி இடைச் செருகல் உண்டென்பதற்குத் தக்க சான்றுகளும் உள. அவற்றுள் மிகவாகக் கிடப்பது மரபியலிலேயேயாம். தொல்காப்பியரின் மரபியல் கட்டொழுங்கு மரபியலிலேயே கட்டமைதி இழந்து கிடத்தல் திட்டமிட்ட திணிப்பு என்பதை உறுதிப் படுத்துகின்றது. ‘மாற்றருஞ் சிறப்பின் மரபியல்’ என்று மரபிலக்கணம் கூறி மரபியலைத் தொடுக்கும் அவர் இளமைப் பெயர், ஆண்பாற் பெயர், பெண்பாற் பெயர் ஆகியவற்றைக் குறிக்கிறார். அக்குறிப்பொழுங்குப் படியே இளமைப் பெயர்கள் இவை இவை இவ்விவற்றுக்குரிய என்பதை விளக்கி முடித்து, “சொல்லிய மரபின் இளமை தானே சொல்லுங் காலை அவையல திலவே” என நிறைவிக்கிறார். அடுத்து ஓரறிவு உயிரி முதல் ஆறறிவுடைய மாந்தர் ஈறாக ஆண்பால் பெண்பால் பெயர்களை விளக்க வரும் அவர் ஓரறிவு தொடங்கி வளர்நிலையில் கூறி எடுத்துக்காட்டும் சொல்லி ஆண்பாற் பெயர்களையும் பெண்பாற் பெயர்களையும் இவை இவை இவற்றுக்குரிய என்பதை விளக்கி நிறைவிக்கிறார். ஆண்பால் தொகுதி நிறைவுக்கும் பெண்பால் தொகுதித் தொடக்கத்திற்கும் இடையே “ஆண்பா லெல்லாம் ஆணெனற் குரிய பெண்பா லெல்லாம் பெண்ணெனற் குரிய காண்ப அவையவை அப்பா லான” என்கிறார். பின்னர்ப் பெண்பாற் பெயர்களைத் தொடுத்து முடித்து, “பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே” என்று இயல் தொடக்கத்தில் கூறிய பொருளெல்லாம் நிறைந்த நிறைவைச் சுட்டுகிறார். ஆனால் இயல் நிறைவுறாமல் தொடர்நிலையைக் காண்கி றோம். எப்படி? “நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய” என்பது முதலாக வருணப் பாகுபாடுகளும் அவ்வவர்க் குரியவையும் 15 நூற்பாக்களில் தொடர்கின்றன. கூறப்போவது இவையென்று பகுத்த பகுப்பில் இல்லாத பொருள், கூற வேண்டுவ கூறி முடித்தபின் தொடரும் பொருள், ‘மரபியல்’ செய்தியொடு தொடர்பிலாப் பொருள் என்பன திகைக்க வைக்கின்றன. நூலும் கரகமும் முக்கோலும் மணையும் படையும் கொடியும் குடையும் பிறவும் மாற்றருஞ்சிறப்பின் மரபினவோ? எனின் இல்லை என்பதே மறுமொழியாம். “வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை” என்னும் நூற்பா நடை தொல்காப்பியர் வழிப்பட்டதென அவர் நூற்பா வியலில் தோய்ந்தார் கூறார். “வாணிகன் பெறுமே வாணிக வாழ்க்கை” என நூற்கத் தெரியாரோ அவர்? இளமை, ஆண்மை, பெண்மை என்பன மாறா இயலவை. பிறவியொடு வழி வழி வருபவை. நூல், கரகம் முதலியன பிறவியொடு பட்டவை அல்ல. வேண்டுமாயின் கொள்ளவும் வேண்டாக்கால் தள்ளவும் உரியவை. முன்னை மரபுகள் தற்கிழமைப் பொருள; பிரிக்க முடியாதவை. பின்னைக் கூறப்பட்டவை பிறிதின் கிழமைப் பொருளவை. கையாம் தற்கிழமைப் பொருளும் கையில் உள்ளதாம் பிறிதின் கிழமைப் பொருளும் ‘கிழமை’ என்னும் வகையால் ஒருமை யுடையவை ஆயினும் இரண்டும் ஒருமையுடையவை என உணர்வுடையோர் கொள்ளார். இவ்வொட்டு நூற்பாக்கள் வெளிப்படாதிருக்க ஒட்டியிருந்த ‘புறக்காழ்’ ‘அகக்காழ்’ ‘இலை முறி’ ‘காய்பழம்’ இன்னவை பற்றிய ஐந்து நூற்பாக்களைப் பின்னே பிரித்துத் தள்ளி ஒட்டாஒட்டாய் ஒட்டி வைத்தனர். இதனை மேலோட்டமாகக் காண்பாரும் அறிவர். “நிலம்தீ நீர்வளி விசும்போ டைந்தும்” என்னும் நூற்பாவே மரபியல் முடிநிலை நூற்பாவாக இருத்தல் வேண்டும். பின்னுள்ள ‘நூலின் மரபு’ பொதுப் பாயிரம் எனத்தக்கது. அது சிறப்புப் பாயிரத்தைத் தொடுத்தோ, நூன் முடிவில் தனிப்பட்டோ இருந்திருக்க வேண்டும். அதுவும் நூலாசிரியர் காலத்திற்குப் பிற்பட்டுச் சேர்த்ததாக இருத்தல் வேண்டும். அதிலும் சிதைவுகளும் செறிப்புகளும் பல உள. “அவற்றுள், சூத்திரந்தானே” என வரும் செய்யுளியல் நூற்பாவை யும் (1425) “சூத்திரத்தியல்பென யாத்தனர் புலவர்” என வரும் மரபியல் நூற்பாவையும் (1600) ஒப்பிட்டுக் காண்பார் ஒரு நூலில் ஒருவர் யாத்த தெனக் கொள்ளார். மரபியல் ஆய்வு தனியாய்வு எனக் கூறி அமைதல் சாலும். இவ்வியல் நூற்பாக்கள் அனைத்திற்கும் இளம்பூரணர் உரையும் பேராசிரியர் உரையும் கிடைத்திருத்தலால் அவர்கள் காலத்திற்கு முன்னரே இம்மாற்றங்கள் நிகழ்ந்திருக்க வேண்டும் என்பது தெளிவான செய்தி. மேலும் சில குறிப்புகளும் செய்திகளும் ‘வாழ்வியல் விளக்க’த்தில் காணலாம். - இரா. இளங்குமரன் தமிழ்வளம் -19, தமிழர் வாழ்வியல் இலக்கணம் எனும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது எழுத்ததிகாரம் - இயலமைதி தமிழ் முத்தலைவேல் போல முக்கூறுபட்டது. அது, இயல் இசை கூத்து (நாடகம்) என வழங்கப்பட்டது. ஆகலின், முத்தமிழ் எனப்படுவ தாயிற்று. தமிழின் முதற்பிரிவாம் இயலும் முக்கூறுபட்டு வழங்கியது. அம் முக்கூறும் எழுத்து சொல் பொருள் எனப்பட்டன. பின்னாளில் இலக்கணம் ஐந்தாகவும் ஆறாகவும் எண்ணப் பட்டவை இம் மூன்றன் விரிவாக்கமேயாகும். இன்னும் விரிவாக்கம் பெறவும் இடம்கொண் டவை இம்முப்பிரிவுகளும். ஆசிரியர் தொல்காப்பியர்க்கு முன்னரே எண்ணிலாத் தமிழ் இலக்கண இலக்கிய நூல்கள் விளங்கின. பல்கியும், பலவாகவும் கிடந்த அவற்றைத் தொகுத்து முறைப்படுத்தித் தந்தவர் தொல்காப்பியரே. அச் செயலைக் குறிக்கும் வகையாலேயே தொன்மையான தமிழ் மரபுகளை யெல்லாம் காக்கும் நூல் என்னும் பெயரில் தம் நூலை யாத்து, அதனை யாத்தமையால் தாமும் அப்பெயர் கொண்டும் விளங்கினார். தொல் + காப்பு + இயம் = பழமையான மொழிமரபு காக்கும் நூல் தொல்காப்பியம் ஆயிற்று. உலகத் தோற்றத்தில் உயிர்களின் வாழ்விடமாக அமைந்தது மண். மண்வெளிப்பட்டு வாழும் வகைக்குத் தக அமைந்தபின் உயிர்கள் தோன்றின; ஆறாம் அறிவுடைய மாந்தனும் தோற்றமுற்றான். அவன் கூடிவாழும் இயல்புடையவனாக இருந்தமையால் தன் கருத்தைப் பிறர்க்கு அறிவிக்க முயன்றான். அம்முயற்சி முகம் கை வாய் கண் குறிகளாக அமைந்தன. அக்குறிகளின் அளவு போதாமையால் வாய்ச்செய்கை ஒலிகளை மேற்கொண்டு பெருக்கினான். அதுவும் போதாமையால் எழுத்துக் குறிகளை உருவாக்கிப் பெருக்கினான். இவ்வகையால் பொருள், பொருளைக் குறிக்கும் சொல், சொல்லின் உறுப்பாகிய எழுத்து என்பவை முறைமுறையே தோன்றின. அவ்வகையில் பொருள், சொல், எழுத்து எனப் படிமுறையில் அமைந்தாலும் எழுத்து, சொல், பொருள் என்றே அமைந்தன - வழக்குற்றன. கருத்தை வெளிப்படுத்துதலில் முகத்தோற்றம் அசைவு முதலிய மெய்ப்பாடுகளே முதன்மை பெற்றன. பின்னர் இசை வழியாகவும் அதன் பின்னர் உரையாடல் வழியாகவும் அமைந்தன. எனினும் இயல் இசை கூத்து என்றே அமைந்தன. மண் தோன்றிய பின்னர் மக்கள் தோன்றி மக்கள் தோன்றியபின் மொழி தோன்றினாலும் அம்மொழியின் பெயரே, அதனைப் பேசிய மக்களுக்கும், அம்மக்கள் வாழ்ந்த மண்ணுக்கும் பெயராயின. அதனால் தமிழ், தமிழர், தமிழகம் என்னும் பெயரீடுகள் எழுந்தன. இனி மக்கள் வாழ்வியல் அடிப்படையில் துய்ப்பாகிய இன்பமும், இன்பத்திற்குத் தேவையாம் பொருளும், பொருளின் பயனாம் அறமும் என்னும் இன்பம், பொருள், அறம் என்பனவும் அறம் பொருள் இன்பம் எனவே வழக்குற்றன. இவையெல்லாம் அடிப்படையும் நிலைபேறும் பயனும் கருதிய அமைப்புகளாம். தொல்காப்பிய முதற்பகுதி எழுத்ததிகாரம் எனப்பட்டது. எழுத்து இலக்கணத்தைப் பகுத்தும் விரித்தும் கூறும் பகுதி ஆதலின் எழுத்து அதிகாரம் ஆயிற்று. அதிகாரம் என்பதற்கு விரிவு, ஆட்சி, ஆணைமொழி எனப் பொருள்கள் உள. இவ்வெல்லாப் பொருள்களும் அமைய அமைந்தது இவ்வதிகாரம். அதிகாரத்தின் உட்பிரிவு இயல் எனப்பட்டது. எழுத்திலக்கணப் பகுதி ஒன்றன் இயல்பைக் கூறுவது ஆகலின் இயல் எனப்பட்டது. இயல் கூறுவது எதற்காக? செயற்பாட்டுக்காகவே இயல் கூறல் வழக்கம். ஆதலால் `இயல் செயல்' என இணைமொழி வழக்கில் உண்டாயிற்று. ஆதலால், ஒவ்வோர் இயலும் `இயல் செயல்' என்பவற்றை இணைத்தே கூறுகின்றன. ஒவ்வோர் அதிகாரமும் ஓர் ஒழுங்குபெற ஒன்பது ஒன்பது இயல்க ளாகப் பகுக்கப்பட்டுள்ளன. அவ்வகையால் எழுத்ததிகாரம், நூன்மரபு, மொழி மரபு, பிறப்பியல், புணரியல், தொகைமரபு, உருபியல், உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல் என ஒன்பது இயல்களைக் கொண்டுளது. இவை திட்டமிட்டுக் கோக்கப்பட்ட கோவை போல் சங்கிலித் தொடர்போல் அமைந்தவை. எழுத்து என்பதன் முதனிலை எழு என்பது. எழு என்பது தோற்றம், எழுச்சி, உயர்ச்சி, அழகு, மிகுதி, உறுதி முதலிய பலபொருள் தரும் அடிச்சொல்லாகும். ஒலி எழுதலும், வரி எழுதலும் ஆகிய வகையாலும் எழுத்து ஒலி எழுத்து (ஒலி வடிவம்) வரி எழுத்து (வரி வடிவம்) என இருவகைக்கும் பொருந்தியது. அன்றியும் எழுத்தின் அளபு மிகுதற்கு அடையாளமாக வரும் அளபெடை என்பதையும் `எழூஉ'தல் என்பதற்கும் மூலமாயிற்று. எழுதுதல் பயன்பாடு எழுதலும் எழும்புதலும் எழுப்புதலும் ஆம் என்பதை விளக்கும் மூலமும் ஆயிற்று. இவ்வெழுத்து ஆராயப்பட்ட வகையை உரையாசிரியர் இளம் பூரணர் அருமையாக விளக்குவது இவண் அறியத்தக்கது. அதனை நூன்மரபு முதல் நூற்பாவின் தொடக்கத்தில் அவர் வரையும் உரையால் அறிக. - இரா. இளங்குமரனார் தமிழ்வளம் -19, தமிழர் வாழ்வியல் இலக்கணம் எனும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது எழுத்ததிகாரம் - வாழ்வியல் விளக்கம் பழந்தமிழர் மொழியியலை மட்டுமன்றி, நாகரிகம், பண்பாடு, கலை, வாழ்வியல் மரபுகளையும் தொகுத்து வைக்கப்பட்டுள்ள ‘வைப்புப் பெட்டகம்’ தொல்காப்பியமாகும். எழுவாய் முதல் இறுவாய் வரை ‘வாழ்வியல் வார்ப்’பாகவே அமைந்து, நம் முந்தையர் வாழ்வைக் காட்டுவதுடன், பிந்தை மாந்தர்க்கு வேண்டும் வாழ்வியல் கூறுகளையும் வகுத்துக் காட்டி உயிரோட்டமாகத் திகழ்வதும் தொல்காப்பியமாகும். தொல்காப்பியர் தம் நிலையைப் படம் பிடித்துக் காட்டுவது போல், “மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் தேயம்” என்கிறார் (1021). செய்வன வெல்லாம் மாசுமறுவில்லாச் செயல்களாக இருத்தல் வேண்டும். இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் மூவகைக் காலமும் நுணுகி நோக்கிச் செய்வதாக இருக்க வேண்டும். அச்செயலையும் செய்யத் தக்க நெறிமுறை தவறாது செய்தல் வேண்டும். - இவற்றைத் தன்னகத்துக் கொண்டது எதுவோ அது, அறிவர் (சித்தர்) நிலை என்பது என்னும் பொருளது இந்நூற்பா. மேலும், “வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல்நூல் ஆகும்” என்னும் நூற்பாவிற்கு (594) எடுத்துக்காட்டாக விளங்குவதும் தொல் காப்பியமாகும். “பிறரால் செய்தற்கு அரிய செயல்களைச் செய்தல் வேண்டும். அச்செயல்களை, ‘யாம் செய்தேம்’ என்னும் எண்ணம்தானும் தோன்றா தவராக இருத்தல் வேண்டும். அத்தகு மெய்யுணர்வு மிக்கோரால் செய்யப் பட்டது எதுவோ, அதுவே முதல்நூல் எனப்படும்” என்கிறார். முதல் முதல் என்பது பிற நூல்களுக்கு மூலமானது என்னும் பொருளது. மூலமாவது வித்து. ஒரு வித்து பல்வேறு வித்துகளுக்கு மூலமாவது போல் பல நூல்களுக்கு மூலமாக அமைந்த அருமையது அது. தொல்காப்பியம் தமிழ்ப்பரப்பில் முதல் நூல் அல்லது மூலநூல் அன்று. அதற்குரிய சான்று நூற்றுக்கணக்கில் அந்நூலிலேயே உண்டு. ஆனால், அந்நூல் வித்து நூல் எனப்படும் முதல் அல்லது மூலநூல் என்பதற்குரிய சான்றுகளோ அதனினும் மிகப்பலவாக உண்டு. என்ப, என்மனார் புலவர், என்மரும் உளரே என வருவன, தொல்காப்பியம் தனக்கு ‘முற்படு நூல்களைத் தொகுத்துக் காட்டும் பிற்படு நூல்’ என்பதற்குச் சான்றாம். ஆனால், தொல்காப்பிய வழியிலே தோற்ற முற்ற நூல்களைத் தொல்காப்பியமாகிய அளவுகோல் கொண்டு அளந்து பார்க்கும் போதுதான், அதன் ‘அளப்பரும் வளம் பெருங்காட்சி’ வெளிப்படும். முந்து நூல் தொல்காப்பியர்க்கு முந்துநூல்கள் மிகவுண்டு. இலக்கியம் இலக்கணம் துறைநூல் கலைநூல் என வகைவகையாய் உண்டு என்பதற்குச் சான்று தொல்காப்பியத்திலேயே உண்டு என்றோம். ஆனால், ‘அவற்றின் பெயர் என்ன?’ எனின் -‘தெரியாது’ என்பதே மறு மொழி. தொல்காப்பியம் அகத்தியத்தின் வழியது என்கின்றனரே; அஃது உண்மையா? உண்மை என்பதற்குச் சான்று தொல்காப்பியத்தில் இல்லை. ஆளும் வேந்தரைப் “போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர்” (1006) என்று சுட்டும் தொல்காப்பியர், தம் நூலுக்கு அகத்திய மென ஒரு முன்னூல் இருந்திருப்பின் அதனைச் சுட்டத் தவறியிரார். தொல்காப்பியத்திற்குப் பாயிரம் பாடிய பனம்பாரனாரும் குறிக்கத் தவறியிரார். ஏனெனில், அகத்தியர் மாணவருள் ஒருவர் பனம்பாரர் என்றும், தொல்காப்பியரின் ஒரு சாலை மாணவர் (உடன் பயின்றவர்) அவர் என்றும் சுட்டப்படுகிறார். ஆதலால், அவரேனும் பாயிரத்தில் சுட்டி யிருப்பார். அரங்கேற்றிய அவையம் ‘நிலந்தரு திருவிற் பாண்டியன் அவை யம்’ என்றும், அதற்குத் தலைமை தாங்கியவர் ‘அதங்கோட் டாசிரியர்’ என்றும் கூறும் அவர், அகத்தியர் பெயரைச் சுட்டிக் காட்டாமல் விட்டிரார். இனி, அகத்தியர் என்னும் பெயர் தொகை நூல் எதிலும் காணப் படாத ஒரு பெயர். அகத்தியர் என்னும் பெயர் மணிமேகலையில் ஒரு விண்மீன் பெயராக வருவதே முதல் வரவு. தொல்காப்பியர்க்கு ஏறத்தாழ ஓராயிரம் ஆண்டுக்குப் பிற்பட்டவர் சாத்தனார். அகத்தியர் புறப்பொருள் வெண்பாமாலை, நம்பி அகப்பொருள், பன்னிரு பாட்டியல் முதலிய பாட்டியல் நூல்கள், அகத்தியர் பெயரான் அமைந்த கணிய மருத்துவ நூல்கள், கம்பர் பரஞ்சோதியார் முதலோர் பாடல்கள் எல்லாம் பிற்பட இருந்த அகத்தியர் என்னும் பெயரினர் பற்றியும் அவர் தோற்றம், செயல்பற்றியும் புனைவு வகையால் கூறுவனவேயாம். ‘பேரகத்தியத் திரட்டு’ என்பதொரு நூல், முத்துவீரியம் என்னும் பத்தொன்பதாம் நூற்றாண்டு இலக்கண நூலுக்குப் பிற்பட அகத்தியர் பெயரில் கட்டி விடப்பட்ட நூல் என்பது வெளிப்படை. ஏனெனில் முத்து வீரியத்தில் காணப்படாத அளவு வடசொற்பெருக்கம் உடையது அது. ஆதலால், தொல்காப்பியம், அகத்தியம் என்னும் நூலின் வழிநூல் அன்று. தமிழ் முந்து நூற்பரப்பெல்லாம் ஒரு சேரத் திரட்டிச் செய்நேர்த்தி, செம்மை, மரபுக் காப்பு, புத்தாக்கம் என்பவற்றை முன்வைத்துத் தொகை யாக்கப்பட்டதும் நமக்குக் கிடைத்துள்ள நூல்களுள் எல்லாம் முந்து நூலாக இருப்பதும் தொல்காப்பியமே ஆகும். பாயிரம் “ஆயிர முகத்தான் அகன்ற தாயினும் பாயிரம் இல்லது பனுவல் அன்றே” என்னும் பாயிர இலக்கணச் சிறப்புக்கு, முழு முதல் மூலச் சான்றாக அமைந்தது தொல்காப்பியப் பாயிரமேயாம். அப்பாயிரம், நூலுள் நூலாக ஆய்வுசெய்யப்பட்டது உண்டு. நூலின் வேறாக நூலொடு சார்த்திச் சிவஞான முனிவராலும், அரசஞ் சண்முகனாராலும் ‘பாயிர விருத்தி’ எனச் சிறப்பொடு நுணுகி ஆயப்பெற்று நூலாயதும் உண்டு. அப்பாயிரம் ஒன்று மட்டுமேனும் தமிழ் மண்ணின் ஆள்வோர்க்கும் அறிவர்க்கும் ஊன்றியிருந்திருப்பின், பின் வந்துள்ள இழப்புகள் பற்பலவற்றை நேராமல் காத்திருக்க முடியும். நிலவரம்பு “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்” என்று அது கூறும் நிலவரம்பு, இன்று தமிழர்க்கு உண்டா? தமிழரால் அதனைக் காக்க முடிந்ததா? தோல் இருக்கச் சுளை விழுங்கிய சான்று அல்லவா அது! வடவேங்கடம் மலைதானே. தென்குமரியும் மலையாகத்தானே இருக்க வேண்டும். இப்பொழுதுள்ள தென்குமரி எல்லை இல்லையே அது. “பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள” என்று சிலப்பதிகாரத்தால் அறியப்படும் குமரிக்கோடு அல்லவோ அத் தென்குமரி. வடவேங்கடம் மொழித் திரிபால் நம்மை விட்டுப் போயது என்றால், கடல் கோளால் போயது அல்லவோ குமரிக்கோடு! (கோடு-மலை). எப்பொழுது ஒரு மண் தன்மொழியை இழக்கின்றதோ அப்பொழுதே தன் மண்ணையும் இழந்து போகின்றது. அதனால்தான் பரிபாடல் என்னும் தொகை நூல், “தண்தமிழ் வேலித் தமிழ் நாட்டகம்” என்றது. அதனையே முற்படக் கூறியது தொல்காப்பியப் பாயிரம். “தமிழ் கூறு நல்லுலகம்” என்பது அது. தமிழ் கூறுதல் இல்லாத மண் எப்படித் தமிழ் மண்ணாக இருக்கும்? தமிழ் கூறும் மண்ணாக இருந்ததன் தடமும் தெரியாமல் அழிக்க அண்டை மாநிலங்களாகிய ஆந்திரம் கருநாடகம் கேரளம் ஆய மூன்றும் முன்னரே திட்டமிட்டுச் செய்த மண்பறிப்பு, மேலும் தொடர்வதை அன்றி மீட்கப் பெற்றது உண்டா? அண்டை அயலார், “எடுத்தவை எல்லாம் போகக் கிடைத்தவை எம்பேறு” என்று கொள்ளப்பட்டதுதானே இத் தமிழ்நாடு? மொழியின் உயிர்ப்பு ஒரு மொழியின் வளர்ச்சியும் வாழ்வும் அதன் நூல்களிலே மட்டுமோ உள்ளது? அதன் உயிர்ப்பும் உரனும் பொதுமக்கள் வாயில் அல்லவோ உள்ளது. அதனைக் கருத்தில் கொள்ளாத மண், அம்மொழி யின் மண்ணாக இராமல் நூலின் அகத்தும், நூலகத்தும் ஒடுங்கிப் போய் விடும் அல்லவோ! எத்தனை ஊர்ப் பெயர்களைத் தெலுங்காக மாற்றினர்! எத்தனை எத்தனை தமிழ் அலுவலர்களைச் சென்னை இராச்சியமாக இருந்த போதே திட்டமிட்டுத் தெலுங்கு அலுவலராக மாற்றினர்! எத்தனை தமிழ்ப் பள்ளிக் கூடங்களை ஒழித்துத் தெலுங்குப் பள்ளிகளை உண்டாக்கினர்! அப்பொழுது ஆட்சியில் இருந்தவர்கள், “செய்தக்க அல்ல செயக்கெடும்; செய்தக்க செய்யாமை யானும் கெடும்” என்னும் இருவகைக் கேட்டுக்கும் சான்றாகத் தாமே இருந்தார்கள்! இன்று வரை அத்தடம் மாறாமல் தானே ஆட்சிக் கட்டில் ஏறியவர்கள் நடை முறைகள் உள்ளன! ஆயினும், ஆட்சிக் கட்டில் ஏறப் பொதுமக்கள் வாக்குகள் கிட்டுகின்றனவே ஏன்? பொதுமக்கள் வாழ்வுப் பொருளாக மொழி ஆக்கப்பட்டிலது. அதன் விளைவே இது என்பதை உணர்ந்து கடமை புரியாமல், வெறும் முழக்கத்தால் ஏதாவது பயன் உண்டா? ஆய்வு முறை தொல்காப்பியம், வழக்கு செய்யுள் என்னும் இரண்டு அடிப்படை களிலும் ஆய்ந்து செய்யப்பட்ட நூல் என்னும் பாயிரச் செய்தி, ஆயிரமுறை ஓதி உணர்ந்து செயற்படுத்த வேண்டிய செய்தி அல்லவா! தொல்காப்பியர் ஆய்ந்த முறையை, “வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி” என்கிறது பாயிரம். எழுத்தும் சொல்லும் சொற்றொடர் ஆக்கமும் தாம் இலக்கணமா? எழுத்தும் சொல்லும் ஆராய்வது பொருள் குறித்தது அல்லவோ! “பொருள் இல்லாக்கால் எழுத்தும் சொல்லும் ஆராய்வது எதற்கோ?” என்னும் இறையனார் களவியல் செய்தி பொருளின் மாண்பு காட்டும். பொருளிலக்கணமாவது வாழ்வியல் இலக்கணம்; தமிழ் மொழியில் மட்டுமே அமைந்த இலக்கணம்! பாயிரம் தொல்காப்பியர் எழுத்தும் சொல்லும் பொருளும் ஆராய்ந்தார். அவர் ஆய்ந்த வகை, 1. செந்தமிழ்நாட்டு மக்கள் வழக்கொடு ஆராய்ந்தார். 2. அவர்க்கு முன்னே ஆராய்ந்து நூலாக்கம் செய்த பெருமக்களின் நூல்களை ஆராய்ந்தார். 3. முறைமுறையே அவை ஒவ்வொன்றற்கும் முரணாவகையில் ஆராய்ந்தார். 4. புலமைத் திறத்தோடு ஆய்ந்து கொண்ட கருத்துகளை அடைவு செய்தார். 5. எவரும் குறை கூறா வகையில் யாத்தார். இவற்றைப் பனம்பாரனார் பாயிரம், “எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச் செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலம்தொகுத் தோனே போக்கறு பனுவல்” என்கிறது. செந்தமிழ் வழக்கு இதனால், செந்தமிழ் வழக்கே வழக்காகக் கொண்டு அச் செந்தமிழ் வழக்கைக் காக்குமாறே தொல்காப்பியம் செய்யப்பட்டது என்றும், அஃது அயல்வழக்குக் கொண்டு அமைக்கப்பட்டது அன்று என்றும், உரை காண்பாரும், உளங்கொண்டு வாழ்வாரும் அச் செந்தமிழ் வழக்குக் கொண்டே உரை காணவும் வாழ்வியல் நடை கொள்ளவும் வேண்டும் என்றும் தெளிவித்தாராம். ஆதலால், தொல்காப்பிய இலக்கணத்தையோ, வாழ்வியலையோ அயன்மைப் படுத்துவார், ‘தமிழியல் கெடுத்துத் தாழச் செய்வார்’ என்றும், அவர்வழி நிற்பாரும் அவர் போல் கேடு செய்வாரே என்றும் கொள்ள வேண்டும் என்றும் தெளிவு ஏற்படுத்தினாராம். அரங்கேற்றம் ஒரு நாடு அயலாராலும் அயன்மையாலும் கெடாமல் இருக்க ஒருவழி, நூல் ஆக்கி வெளிப்படுத்துவாரைக் கண்ணும் கருத்துமாக நோக்கி யிருக்க வேண்டும். கற்பவன் ஒருவன் செய்யும் தவற்றினும், கற்பிப்பவன் செய்யும் தவறு பன்னூறு மடங்கு கேடாம்; அவன் செய்யும் கேட்டினும், நூலாசிரியன் ஒருவன் செய்யும் கேடு பல்லாயிர மடங்கு கேடாம். அக்கேடு நாட்டுக்கு ஏற்படாமல் இருக்க வேண்டும் எனின், நூலாய்த லில் வல்ல தக்கோர் அவையத்தில் அந்நூல் அரங்கேற்றப்பட்டு, அவ்வவையோர் ஏற்புப் பெற்று, அரசின் இசைவுடன் வெளியிடப்பட வேண்டும் என்னும் கட்டாயத்திட்டத்தை வைத்தாக வேண்டும்! இல்லாக்கால், ‘காப்பார் இல்லாக் கழனி’ என நாடு கேடுறும் என்று கூறி வழிகாட்டுகிறது அப் பாயிரம். அதுவுமன்றி அரங்கத் தலைவன், ஒருவனையோ ஒருவகைக் கருத்தையோ சாராமல் நடுவு நிலைபோற்றும் நயன் மிக்கோனாகத் திகழவும் வேண்டும் என்றும் கூறுகிறது. அதனை, “அறங்கரை நாவின் நான்மறை முற்றிய அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி மல்குநீர் வரைப்பில் ஐந்திரம் நிறைந்த தொல்காப் பியன்எனத் தன்பெயர் தோற்றிப் பல்புகழ் நிறுத்த படிமை யோனே” என்கிறது. ஒரு புலவரோ, சில புலவர்களோ கூடியமைத்த அமைப்பு அன்று; ஓரூர் அல்லது ஒரு வட்டார அமைப்பு மன்று; அது நாடளாவிய அமைப்பு என்பாராய், “நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து” என்கிறார். ‘நூல் தணிக்கைக் குழு’, என ஓர் அமைப்பு இக் குடியரசு நாளில் தானும் உண்டா? எல்லாரும் இந்நாட்டு மன்னர்; ஒத்த உரிமையர்; பிறப்பால் வேறுபாடு அற்றவர் என்னும் குடியரசு நாளில், பிறப்புவழி வேறுபாடு காட்டும் ‘வருணாசிரம’-‘மநுநெறி’ நூல்கள் நாட்டில் நடமாட விடலாமா? அந்நூல்களை நடையிட விட்டுவிட்டு, அத்தகு குலப்பிரிவு நூல்களை மறுத்து எழுதிய நூல்கள் “நாட்டுக்குக் கேட்டு நூல்கள்” என்று தடை செய்யப்படலாமா? தணிக்கை திரைப்படத் தணிக்கை என ஒரு துறை இருந்தும், குப்பை வாரிக் கொட்டியும் கோடரி கொண்டு வெட்டியும் அழிவு செய்யும் பண்பாட்டுக் கேட்டுப் படங்களையும் பளிச்சிட விடும் தணிக்கைத் துறைபோல் இல்லாமல், மெய்யான “நூல் தணிக்கைத் துறை” ஒன்று வேண்டும் என்பதைத் தொல்காப்பிய முகப்பே காட்டுவது தானே பனம்பாரர் பாயிரம்! இவையெல்லாம் தொல்காப்பியம் வாழ்வியல் நூல் என்பதன் முத்திரைகள் அல்லவா! தீய நூல்களையும் வன்முறை நூல்களையும் வெறிநூல்களையும் உலாவவிட்டு விட்டு ‘ஐயோ! உலகம் கெட்டுவிட்டது; மக்கள் கெட்டு விட்டனர்’ என்னும் போலி ஒப்பாரி செய்தலால் என்ன பயன்? பண்படுத்தம் செய்ய விரும்புவார் சிந்திக்க வேண்டும் செய்தி இஃதாம். எழுத்து தமிழ்மொழியில் எழுத்துகள் எவ்வளவு? உயிர்-12, மெய்-18; உயிர்மெய்-216; ஆய்தம்-1 என்று 247 காட்டுவாரும்; அதற்கு மேலும் நடையிடுவாரும் உளரே! தொல்காப்பியர் என்ன சொல்கிறார்? “எழுத்தெனப் படுவ, அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே ” என எழுத்து 33 என்று தானே சொல்கிறார். இவ்வெழுத்து எண்ணிக்கை மிகையா? ஆங்கிலத்தைக் கொண்டு தானே தமிழ் எழுத்தின் எண்ணிக்கை ‘கூடுதல்’ எனப்படுகிறது. தமிழில் உள்ள குறில் நெடில் என்னும் இருவகையுள் ஒருவகை போதுமென ஆங்கிலம் போல் கொண்டால், ஆங்கிலம் போல் உயிரும் மெய்யும் தனித்தனியே எழுதினால் ஆங்கில எழுத்தினும் தமிழ் எழுத்து எண்ணிக்கை குறைந்து தானே இருக்கும். அன்றியும் ஆங்கிலம் 26 எழுத்துத்தானா? பெரிய எழுத்து, சின்ன எழுத்து , கையெழுத்து பெரியது சின்னது என எண்ணினால்! எண்ண வேண்டும் தானே! குறில் நெடில் என்னும் பகுப்போ, உயிர்மெய் என்னும் இணைப்போ இல்லாமையால், மூன்றெழுத்து நான்கெழுத்து என முடிவனவும் ஆறெழுத்து ஏழெழுத்து ஆகும் அல்லவோ! தமிழ் – Tamil, Thamil, Thamizh முருகன் = MURUGAN நெட்டெழுத்தெல்லாம் ‘சொற்கள்’ அல்லவா தமிழில்! ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ. கா, கீ, கூ, கே, கை,கோ. இவை பொருளமைந்த சொற்கள் அல்லவா! A, I என்னும் இரண்டையன்றி எழுத்துகள் சொல்லாதல் ஆங்கிலத்தில் உண்டா? எழுத்தைச் சொன்னால் சொல் வந்து நிற்குமே தமிழில்! எதனால்? ஓரெழுத்துக்கு ஓரொலியே உண்டு. எழுத்தொலிக் கூட்டே சொல்! அ-ம்-மா - அம்மா இந்நிலை ஆங்கிலத்தில் இல்லையே. எழுத்து வேறு; ஒலி வேறு; சொல் வேறு அல்லவா! F, X, Z இவற்றுக்கு, ஒலியெழுத்து இரண்டும் மூன்றும் நான்கும் அல்லவா! மெய்யியல் தமிழில் உள்ள எழுத்துகளின் பெயரே மெய்யியல் மேம்பாடு காட்டுவன! உயிர், மெய், உயிர்மெய், தனிநிலை, சுட்டு, வினா, குறில், நெடில், வல்லினம், மெல்லினம், இடையினம் - இவை எழுத்தின் பெயர்கள் மட்டுமா? மெய்யியல் பிழிவு தானே! இவற்றைக் குறிக்கும் பகுதிதானே நூன்மரபு என்னும் முதலியல். தமிழ், முத்தமிழ் எனப்படுமே. இசைப்பா வகைக்கு, இங்குச் சொல்லப்பட்ட இயல் இலக்கணம் மட்டும் போதுமா? “ இசை நூல் மரபு கொண்டே அதனை இசைக்க வேண்டும்; அதனை இந்நூலில் கூறவில்லை. அதனை இசைநூலில் காண்க ” என்கிறார் தொல்காப்பியர் நூன்மரபு நிறைவில். ஏன்? அந்நாளிலேயே இசைநூல்கள் இருந்தன; இசைக் கருவிகள் இருந்தன; இசை நூல்கள் ‘நரம்பின் மறை’ எனப்பட்டன. அவற்றைக் காண்க என்பாராய், “அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் உளவென மொழிப இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர்” என்றார் (33). மொழி மரபில் குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் எனப்படும் சார்பு எழுத்துகள் நிற்கும் வகை, ஒலி நிலை என்பவற்றைக் கூறுகிறார். சொல்லுக்கு முதலாம் எழுத்து இறுதி எழுத்து என்பவற்றையும் கூறுகிறார். க்+அ=க. ‘க்’ என்பதை ‘இ’ சேராமல் சொல்ல முடியுமா? ‘க’ என்பதை ‘இ’சேராமல் சொல்ல ஏன் முடிகின்றது? ‘க’ என்பதில் ‘அ’ என்னும் உயிரொலி சேர்ந்திருத்தலால் முன்னே ஓர் உயிர்ஒலி இல்லாமல் - சேராமல் - ஒலிக்க முடிகிறது. மெய்-உடல் - தனியே இயங்குமா? “செத்தாரைச் சாவார் சுமப்பார் ” என்பது வழங்குமொழி ஆயிற்றே. உயிர் நீங்கிய உடம்புக்குப் ‘பிணம்’ என்பது பெயராயிற்றே. “பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டு” என்பது நம் மந்திரம் அல்லவோ! உயிர், கூத்தன்; உடலை இயக்கும் கூத்தன்; அக் கூத்தன் போகிய உடல் இயக்கமிலா உடல். இம் மெய்யியல் விளக்கம் எழுத்தியக்கத்திலேயே காட்டுவது தொல்காப்பியம். “மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்” என்பது அது (46). சிவணும் - பொருந்தும். மொழி மரபில் வரும் இயக்க இலக்கணம் இது. எழுத்துகளின் இயக்கம், இரண்டு புள்ளிகள் வருமிடம், ஒலி கூடுதல் குறைதல் என்பவற்றை மொழிமரபில் சுட்டிக் காட்டி எழுத்துகள் பிறக்கும் வகையைப் பிறப்பியலில் கூறுகிறார். நனிநாகரிகம் சகர உகரம் (சு) உசு, முசு என்னும் இரண்டிடங்களில் மட்டுமே சொல்லின் இறுதியாகவரும். பகர உகரம் (பு) தபு என்னும் ஓரிடத்து மட்டுமே சொல்லிறுதியாக வரும்; ஆனால் தன்வினை பிறவினை என்னும் இருவினைக்கும் சொல் முறையால் இடம் தரும். தபு - சாவு (தன்வினை) அழுத்திச்சொன்னால் , தபு - சாவச் செய் (பிறவினை) என்கிறார். சு, பு என்னும் எழுத்துகளை உச்சகாரம், உப்பகாரம் என்று குறிப்பிடுவது நாகரிகம் அல்லவோ! பீ என்பதையும் ஈகார பகரம் என்பது இதனினும் நனிநாகரிகம் அல்லவோ! (234) ‘பசு’ என்பது தமிழ்ச் சொல் அன்று என்றுணர, இடவரையறை செய்கிறாரே! மொழியியலாம் அசையழுத்தத்தைத் தபு என்பதன் வழியே காட்டுகிறாரே! எத்தகு நுண் செவியரும் நாகரிகருமாக நூல் செய்வார் விளங்கவேண்டும் என்பது குறிப்பாகும் அல்லவோ! (75,76; 79,80) உயிர்மெய் அல்லாத தனி மெய் எதுவும் எச்சொல்லின் முதலாகவும் வாராது என்பதை ஆணையிட்டுக் கூறுகிறார் தொல்காப்பியர்; ப்ரம்மரம் க்ரௌஞ்சம் - இச்சொற்கள் வேற்று மொழிச் சொற்கள். இவை தமிழியற்படி பிரமரம் கிரௌஞ்சம் என்றே அமைதல் வேண்டும். ‘ப்ரான்சு’ ‘ஷ்யாம்’ இன்னவாறு எழுதுவது மொழிக் கேடர் செயல் என மொழிக் காவல் கட்டளையர் ஆகிறார் தொல்காப்பியர். “பன்னீ ருயிரும் மொழிமுத லாகும்” “உயிர்மெய் அல்லன மொழிமுத லாகா” என்பவை அவர் ஆணை (59. 60). புள்ளி எழுத்துகள் எல்லாமும் சொல்லில் இறுதியாக வருமா? வாரா! ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள் என்னும் பதினொன்றுமே வரும் (78). க், ச், ட், த், ப், ற், ங் என்னும் ஏழும் சொல்லின் இறுதியில் வாரா! ஏன்? சொல்லிப்பார்த்தால் மூச்சுத் தொல்லை தானே தெரியும். ஆதலால், நெடுவாழ்வுக்குத் தமிழியல் உதவும் என்று ஒலியாய்வாளர் குறித்தனர். ‘மூச்சுச் சிக்கன மொழி தமிழ்’ என்பதை மெய்ப்பித்தவர் பா.வே.மாணிக் கர். தொல்காப்பியக் காதலர் மட்டுமல்லர் காவலரும் அவர். பாக் - பாக்கு பேச் - பேச்சு வேறுபாடு இல்லையா. நெல், எள் என்பனவற்றையே நெல்லு, எள்ளு என எளிமையாய் ஒலிக்கும் மண், வல்லின ஒற்றில் சொல்லை முடிக்குமா? மூல ஒலி தோன்றுமிடம் உந்தி. ஆங்கிருந்து கிளர்ந்த காற்று தலை, கழுத்து,நெஞ்சு ஆகிய இடங்களில் நின்று, பல், இதழ், நா, மூக்கு, மேல்வாய் என்னும் உறுப்புகளின் செயற்பாட்டால் வெவ்வேறு எழுத் தொலியாக வரும் என்று பிறப்பியலைத் தொடங்கியவர் (83) வெளிப்படும் இவ்வொலியை யன்றி அகத்துள் அமையும் ஒலியும் உண்டு; அஃது அந்தணர் மறையின்கண் கூறப்படுவது. அதனைக் கூறினேம் அல்லேம் எனத் தமிழ்த்துறவர் ஓக நூன் முறையைக் கூறி அவண் கற்குமாறு ஏவுகிறார் (102). சொல்லின் முதலும் இறுதியும் இரண்டே என்பாராய், “எல்லா மொழிக்கும் இறுதியும் முதலும் மெய்யே உயிரென்று ஆயீர் இயல” என்கிறார் (103). அ, ஆ; க, கா என்பவற்றை அகரம் ஆகாரம், ககரம், ககர ஆகாரம் எனச் சாரியை (சார்ந்து இயைவது) இட்டு வழங்குவதும், அஃகான், ஐகான் எனக் கான்சேர்த்து வழங்குவதும் மரபு என்கிறார் (134, 135). மணி + அடித்தான் = மணியடித்தான் அற + ஆழி = அறவாழி - இவற்றில் ய், வ் என்னும் இரண்டு மெய்களும் ஏன் வந்தன? நிற்கும் சொல்லின் இறுதியும் வரும் சொல்லின் முதலும் உயிர் எழுத்துகள் அல்லவா! இரண்டு உயிர்கள் இணைதல் வேண்டுமானால் இணைக்க இடையே ஒரு மெய் வருதல் வேண்டும். அம்மெய் உடம்பட- உடம்படுத்த- வருமெய் ஆதலால் உடம்படுமெய் என்றனர். மெய்யியற் சீர்மை, மொழிச் சீர்மை ஆகின்றதே! “எல்லா மொழிக்கும் உயிர்வரு வழியே உடம்படு மெய்யின் உருவுகொளல் வரையார்” என்கிறார் (140). பொருள்தெரி புணர்ச்சி “மாடஞ் சிறக்கவே” என்பதொரு வாழ்த்து. இது “மாடம் சிறக்கவே” என்பது. இதனை, “மாடு அஞ்சு இறக்கவே” என்று பிரித்து உரைத்தால் ‘சாவிப்பு’ ஆகவில்லையா! இதனைக் கருத்தில் கொண்டு மறுதலைப் பொருள் வராவகையில் சொல்ல வேண்டும் என்பதற்காக, “எழுத்தோ ரன்ன பொருள்தெரி புணர்ச்சி இசையில் திரிதல் நிலைஇய பண்பே” என்கிறார் (141). எழுத்து ஒரு தன்மையதுதான்; ஆனால், சொல்லும் முறை யால் வேறு பொருள் தருகின்றமையைக் குறிப்பிட்டுத் தெளிவிக்கிறார். “பரிசாகப் பெற்றேன்; பரிசாகப் பெற்றேன்” என்றான் ஒருவன். அவன், பரிசாகப் பெற்ற பரி, சாகப் பெற்றதில் சொல் மாற்றம் இல்லையே; பொருள் மாற்றம் பெருமாற்றம் இல்லையா? அது, ‘நீர் விழும் இடம்’ என்றால் குறிப்பார் குறிப்புப் போல் இருபொருள் தரும் அல்லவோ! இதனையும் குறிக்கிறார் வாழ்வியல் வளம் கண்ட தொல்காப்பியர் (142). எழுத்து வரிசை “கண்ணன் கண்டான்” “தென்னங் கன்று” கண்ணன் என்பதில் ‘ண்’ என்பதை அடுத்து அதே எழுத்து (ண) வந்தது. கண்டான் என்பதில் ‘ண்’ என்பதை அடுத்து அதன் இன எழுத்து (ட) வந்தது. தென்னம் என்பதில் ‘ன்’ என்பதை அடுத்து அதே எழுத்து (ன) வந்தது. கன்று என்பதில் ‘ன்’ என்பதை அடுத்து அதன் இன எழுத்து (று) வந்தது. இவ்வாறே க,ங; ச,ஞ; ட,ண; த,ந; ப,ம; ற,ன ஒற்று வரும் இடங்களைக் காணுங்கள். அவ்வொற்று வரும்; அல்லது அதன் இன ஒற்று வரும். இத்தகு சொல்லமைதியைப் பொதுமக்கள் வாயில் இருந்து புலமக்கள் கண்டுதானே தமிழ் நெடுங்கணக்கும் குறுங்கணக்கும் வகுத்துளர். ஒரு வல்லினம், ஒரு மெல்லினம் என அடுத்தடுத்து வைத்தது ஏன்? வல்லினமாகவே மெல்லினமாகவே இடையினம் போல அடுக்கி வைக்காமை வாழ்வியல் வளம்தானே! கங, சஞ என அடங்கல் முறையில் வல்லினத்தின்பின் மெல்லினம் வரினும்,சொல் வகையில் மெல்லினத்தின் பின் வல்லினம் வருதல் மக்கள் வழக்குக் கண்ட மாட்சியின் அல்லது ஆட்சியின் விளைவே ஆகும். ங்க, ஞ்ச (தங்கம், மஞ்சள்) என வருதலை யன்றி, க்ங, ச்ஞ எனவரும் ஒரு சொல்தானும் இல்லையே! இன்றுவரை ஏற்படவில்லையே! எழுத்து முறையை ஙக ஞச ணட என மாற்றிச் சொல்ல எவ்வளவு இடர்? இது பழக்கமில்லாமை மட்டுமா? இல்லை! இயற்கை யல்லாமையும் ஆம். தமிழின் இயற்கை வளம் ஈது! (143) அளவை தொல்காப்பியர் நாளில் ‘பனை’ என ஓர் அளவைப் பெயரும் ‘கா’ என ஒரு நிறைப் பெயரும் வழக்கில் இருந்தன. அன்றியும் க ச த ப ந ம வ அ உ என்னும் எழுத்துகளை முதலாகக் கொண்ட சொற்களால் அளவைப் பெயரும் நிறைப் பெயரும் வழக்கில் இருந்தன. (169, 170) அவை: கலம் சாடி தூதை பானை நாழி மண்டை வட்டில் அகல் உழக்கு எனவும், கழஞ்சி சீரகம் தொடி பலம் நிறை மா வரை அந்தை எனவும் வழங்கின. இவையன்றி உரையாசிரியர்களின் காலத்தும் அதன் பின்னரும் வேறுவேறு அளவைகள் வழங்கியுள்ளன. இவையெல்லாம் நம்முந்தையர் வாழ்வியல் சீர்மைகள்! அளவுக்குப் பயன்பட்டது கோல். அக் கோல் அளவுகோல் எனப்பட்டது. அக் கோல் மாறாமல் செங்கோல், நிறைகோல், சமன்கோல், ஞமன்கோல், நீட்டல்கோல், முகக்கோல், எழுதுகோல், தார்க்கோல் என வழக்கூன்றின. அண்மைக் காலம்வரை கலம், மரக்கால், நாழி, உரிஉழக்கு, தினையளவு, எள்ளளவு, செறு, வேலி முதலாகப் பலவகை அளவை வழக்குகள் இருந்தன. பொதி, சுமை, கல், வண்டி, துலாம், தூக்கு என்பனவும் வழங்கின. இவையெல்லாம் நம்மவர் பல்துறை வளர்வாழ்வு காட்டுவன வாம் (170). யாவர் ‘யாவர்’ என்பது ‘யார்’ எனவும்படும். ‘யாது’ என்பது ‘யாவது’ எனவும்படும். இன்னவை வழக்கில் உள்ளவை கொண்டு ஏற்றுக்கொள்ளத் தக்கவை என மக்கள் வழக்கை மதித்து மொழிவளர்க்கச் செய்கிறார் (172). உரு உரு என்பது என்ன? வடிவு; உருபு என்பது வடிவின் அடையாளம். அதன் விளக்கமாவது உருபியல். அதிலே, அழன் புழன் என்னும் சொற்கள் சாரியை பெறுதல் பற்றிக் கூறுகின்றது ஒரு நூற்பா (193). அழன், புழன் அழலூட்டப்படுவதும் புதைக்கப்படுவதுமாகிய பிணம் முறையே அழன், புழன் எனப்படுகின்றன. “இடுக ஒன்றோ, சுடுக ஒன்றோ” என்பது புறநானூறு. புறங்காடு எனப் பொதுப்பெயர் உண்டாயினும், இடுகாடு, சுடுகாடு என்னும் பெயர்கள் இன்றுவரை நடைமுறையில் உள்ளனவேயாம். இடுகாடு, புதைகாடு எனவும் சுடுகாடு, சுடலை எனவும் வழங்குதலும் உண்டு. அழன் புழன் என்பவற்றைச் சுட்டுகிறார் தொல்காப்பியர் (193). தொல்காப்பியர் உதி, ஒடு, சே என்னும் மரங்களைக் குறிக்கிறார். ஒன்றனைக் கூறி அதுபோல, அதுபோல எனத் தொடர்கிறார் (243, 262, 278). “உதிமரக் கிளவி மெல்லெழுத்து மிகுமே” “ஒடுமரக் கிளவி உதிமர இயற்றே” “சேஎன் மரப்பெயர் ஒடுமர இயற்றே” என்பவை அவை. உதிங்கிளை, ஒடுங்கிளை, சேங்கிளை எனவருதலைக் குறிக்கிறார். ஏன் இப்படித் தொடரவேண்டும்? உதி (இ), ஒடு (உ), சே (ஏ) என, சொல் ஈறு வேறுவேறு இல்லையா? ஆதலால் அவ்வவ் விடத்து வைத்துச் சொல்கிறார். அவர் கையாண்ட அரிய நூன்முறை இது. வைத்த இடத்தை மாற்றாமை வைப்புமுறை என நம் வீட்டிற்கும் அலுவலகத் திற்கும் உரிய பொருள்களையும் கோப்புகளையும் ஒழுங்குற வைக்க வழிகாட்டும் வழிகாட்டுதல் எனக் கொள்ளலாம் அல்லவா! உதிமரம் ஒதியாக வழங்குகிறது. ஒதி பருத்து உத்திரத்திற்கு ஆகுமா என்பது பழமொழி. ஒதியனேன் என வள்ளலார் தம்மைத் தாமே சுட்டிக் கொண்டார்! அவர்க்கா அது? ஒடு என்பது உடை என்னும் மரம்; முள்மரம். ஒட்டரங்காடு, ஒடங்காடு என்பது பாஞ்சாலங்குறிச்சிப் பாட்டு. சேங்கொட்டை செந்நிறத்தது. தேற்றாங் கொட்டை என்பதும் அது. தொல்காப்பியர் மரநூல் வல்லார் என்பது மரபியலில் பெருவிளக்கமாம். பனம்பாளையைச் சீவி வடித்த நீரைக் காய்ச்சிப் பாகாக்கிப் பனை வட்டு (வட்டமாக்கிய திரளை) எடுத்தனர். அதனை பனை + அட்டு = பனாட்டு என்றனர். அப்பனாட்டு இது கால் பனை வட்டு என வழங்கப் படுதல் எவரும் அறிந்தது. அட்டு, வட்டு என்ற அளவில் நிற்கவில்லை. கட்டி எனவும் வழக்கூன்றியது. கருப்புக் கட்டி (கரும்பில் இருந்து எடுத்தது) சில்லுக் கருப்புக் கட்டி என்றும் ஆயிற்று. பனங்கட்டி,தென்னங்கட்டி இரண்டும் வெல்லக்கட்டி, சருக்கரைக் கட்டி என்றும் ஆயின. பனைக் கொடி சேரர் கொடி இல்லையா! ஏழ்பனை நாட்டையும் ஏழ்தெங்க நாட்டையும் இவை நினை வூட்ட வில்லையா! ஏழேழு நாடு என்பதன் எச்சமே ஈழ நாடு என்றும் ஏழ்பனை நாட்டின் சான்றே யாழ்ப்பாண நாடு என்றும் நம் வரலாற்றுப் பெருமக்களைத் தூண்டித் துலங்கச் செய்ததை நாம் அறியலாமே. கல்லாதவரும் புளிமரம் என்னார். புளியமரம் என்றே கூறுவார். புளியங்கொம்பு, புளியங்காய் என்றே வழங்குவார். புளிங்கறி, புளிங்குழம்பு, புளிஞ்சாறு என மெல்லெழுத்துவரக் கூறுவதும் வழக்கு. அன்றியும் புளிக்கறி, புளிக்குழம்பு, புளிச்சாறு என்பதும் வழக்கே. இவையெல்லாம் தொல்காப்பியர் காலம் தொட்டே வழங்கப்படுதல் வியப்பில்லையா? (244 - 246). குற்றியலுகர ஈற்று மரப்பெயர்ச் சொல்லுக்கு அம் என்பதே சாரியை என்று கூறும் ஆசிரியர் (கமுகங்காய், தெங்கங்காய்) மெல்லெழுத்து வல்லெழுத்தாகாத மரப்பெயரும் உண்டு என்கிறார் (416). வேப்பு வேம்பு கடம்பு என்பவை, ‘வேப்பு கடப்பு’ என்று வழக்கில் உண்மையை நாம் காண்கிறோம் (வேப்பங்காய், கடப்பங்கிளை). அதனால், உரையாசிரியர்கள், வலியா மரப் பெயரும் உள என்பதால், வலிக்கும் மரப் பெயரும் உண்டு என்று கொள்க என்கின்றனர். உரை கண்டார், நூல் கண்டார் நிலையை அடையும் இடங்கள் இத்தகையவை. பூங்கொடி எனலாமா? பூக்கொடி எனலாமா? இரண்டும் சொல்லலாம் என்பது தொல்காப்பியம் (296). ஊனம் உடல் இருவகையாகக் கூறப்படும். ஊன் உடல்; ஒளி உடல் என்பவை அவை. ஊன் உடலில் ஏற்படும் குறை ‘ஊனக் குறை’ எனப் பட்டது. இன்றும் ‘ஊனம்’ உடற்குறைப் பொருளில் வழங்குவதனை நாம் அறிய முடிகின்றதே (270). ஊனம் பற்றித் தொல்காப்பியர் கூறுவதால், அது தமிழ்ச் சொல் என்பதற்கு ஐயமில்லையே! கோயில் கோயில் என்று சிலர் வழங்குகின்றனர். கோவில் என்றும் வழங்குகின்றனர். இவற்றுள் எது சரியானது? இரண்டும் சரியானவைதாமா? “இல்லொடு கிளப்பின் இயற்கை யாகும்” என நூற்பா அமைத்துளார் தொல்காப்பியர் (293). கோ என்பதன் முன் இல் என்னும் சொல் வந்தால் இயல்பாக அமையும் என்கிறார். முதல் உரையாசிரியர் இளம்பூரணர் ‘கோயில்’ என்கிறார். நச்சினார்க்கினியர் ‘கோவில்’ என்கிறார். அவ்வாறானால் இரண்டும் சரியா? நன்னூலார் உடம்படுமெய் வருவது பற்றிய நூற்பாவை, “இ ஈ ஐவழி யவ்வும் ஏனை உயிர்வழி வவ்வும் ஏமுன் இருமையும் உயிர்வரின் உடம்படு மெய்யென் றாகும்” என்று அமைத்துளார். இதன்படி ஏனை உயிர்வழி வவ்வும் என்பது கொண்டு ‘கோவில்’ என்றனர். ய, வ இரண்டும் வருமென்றால் ‘ஏ’ என்பதற்குக் கூறியது போல் ஏ, ஓ முன் இருமையும் என்று நன்னூலார் சொல்லியிருக்க வேண்டுமே! முடிவு செய்தற்கு வழக்குகளை நோக்குதல் வேண்டும். இருபதாம் நூற்றாண்டு உரைநடையில் கோவில் இடம் பெறுவதை அன்றி, அதற்கு முன்னை நூற்பெயர், செய்யுள் வழக்கு என்பவற்றில் ஓரிடத்துத் தானும் கோவில் இடம் பெறவில்லை. ஆதலால் ஆசிரியர் தொல்காப்பியர் ஆணைப்படி ‘கோஇல்’ என இயற்கையாகவே எழுத வேண்டும். இல்லையேல் வழிவழி வந்தவாறு கோயில் என்றே எழுத வேண்டும். “வாயில் வந்து கோயில் காட்ட” “கோயில் மன்னனைக் குறுகினள் சென்றுழி” (சிலப்பதிகாரம்) “கோயில் நான்மணிமாலை” (நூற்பெயர்) இன்னவை கொண்டு தெளிக. யகர உடம்படுமெய் இயல்பாக வருதலும், வகர உடம்படுமெய் சற்றே முயன்று வருதலும் நோக்கின் விளக்கம் ஏற்படும். காயம் ‘காயம்’ என்பது தொல்காப்பியத்தில் ‘விண்’ணைக் குறித்தது. “விண் என வரூஉம் காயப் பெயர்” என்றார் அவர் (305). இப்பொழுது ஆகாயம் என வழங்குகின்றது. அகம் அகம் என்னும் சொல்லின்முன் ‘கை’ சேர்ந்தால் அகம் + கை = அங்கை ஆகும் என்கிறார். அவ்விதிப்படி அகம் + செவி = அஞ்செவி என்றும் அகம்+கண் = அங்கண் என்றும் வழங்குகின்றன (310). அங்கை என்பது பொதுமக்கள் வழக்கில் ‘உள்ளங்கை’ என் றுள்ளது. ‘உள்ளங்கால்’ எனவும் ‘உள்ளகம்’ எனவும் வழங்குகின்றன. முறைப்பெயர் இன்னார் மகன் இன்னார் என்னும் வழக்கம் என்றும் உண்டு. கணக்காயனார் மகனார் நக்கீரனார் என்று வெளிப்படுத்தியும் சேந்தங் கூத்தனார் என்று (சேந்தனுக்கு மகனாராகிய கூத்தனார்) தொகுத்தும் கூறுதல் வழக்கம். இன்னொரு வழக்கமும் தொல்காப்பியர் காலத்தில் பெருக வழங்கியது. அதற்கு விரிவாக இலக்கணம் கூறுகிறார் (347 - 350). பெரியவர்கள் பெயரைச் சொல்லுதல் ஆகாது என்பவர், ‘இன்னார் தந்தை’ என மகன் அல்லது மகள் பெயரைச் சுட்டி அவர்க்குத் தந்தை அல்லது தாய் என முறை கூறல் இக்கால வழக்கம். மணி அப்பா, மணி அம்மா (மணிக்கு அப்பா, மணிக்கு அம்மா) என வழங்கும் வழக்கம் தொல்காப்பியர் நாள் பழமையது. ஆதன் தந்தை (ஆந்தை) பூதன் தந்தை (பூந்தை) என்பன போல வழங்கப்பட்டவை. ஆதன் பூதன் என்பவை அந்நாள் பெருந்தக்க பெயர்கள். பிசிராந்தையார், பூதனார், பூதத்தார், நல்லாதனார், நப்பூதனார் என்றெல்லாம் புகழ் வாய்ந்தோர் பலர் ஆவர். வல் இந்நாள் பரிசுச் சீட்டுக்கு முன்னோடியான சூதாட்டத்தின் ‘அகவை’ மிகப் பெரியது. தொல்காப்பியர் நாளிலேயே சூதாட்டக் காய், ஆடும் அரங்கமைந்த பலகை என்பன இருந்தமையால் அவற்றின் இலக்கணத்தையும் கூறுகிறார் (374 - 375). ஆடு, புலி, குதிரை வைத்து ஆடும் ஆட்டங்களைப் போல் ‘நாய்’ வைத்து ஆடியுளர் என்பது நாயும் பலகையும் (கட்டமிட்ட அரங்கப் பலகை) என்பதால் தெரிகின்றது. சூதின் தன்மையை வள்ளுவம் “ஒன்று எய்தி நூறு இழக்கும் சூது” என்பதால் வெளிப்படுத்தும். அதன் கொடுமையை வெளிப்பட உணருமாறு ‘வல்’ என்று பெயரிட்டிருந்த ஆழ்ந்த சிந்தனையர், எண்ணத்தக்கார் (374). தமிழ் கதவு, தாழ் என்பவை வீடு தோன்றிய பாதுகாப்பு உணர்வு ஏற்பட்ட நாள் முதலே உண்டாகி யிருக்கும். “வழியடைக்கும் கல்” என்பது பாதுகாப்புத் தானே. தாழ் கதவொடு கூடியது. பூட்டு என்பது தாழ்க் கதவொடு இணைந் திருப்பதனை அன்றித் தனியே எடுத்து மாட்டுவதாகவும் அமைந்துளது. பாதுகாப்பில் எத்தனையோ புதுமைகள் ஏற்பட்டுள்ளன. எனினும் தாழ்க் கோல், திறவுகோல், திறப்பான் குச்சி, திறவு என்னும் பழம் பெயராட்சிகள் வழக்கில் மறையாமல் வாழ்ந்துகொண்டுள்ளன. தாழைத் திறக்கும் கோல் தாழக் கோல் எனவும் தாழ்க் கோல் எனவும் வழங்கும் என்று கூறிய தொல்காப்பியர் தமிழ் என்பதை விட்டுவிடாமல், “தமிழென் கிளவியும் அதனோர் அற்றே” என்கிறார். தமிழ்த் தெரு, தமிழத் தெரு; தமிழ்க் கலை, தமிழக் கலை என வழங்கும் வகையை இதனால் காட்டுகிறார். திராவிடத்தில் இருந்து தமிழ் வந்தது என்பாரை இத் தொல்காப்பிய விளக்கம் தண்ணீர் தெளித்துக் கண் விழிக்கச் செய்ய வல்லதாம். எழுத்து எழுது, எழும்பு, எழுப்பு, எழூஉ, எழுச்சி என்பனவெல்லாம் எழு என்பதன் வழியாக வந்தவை. எழுத்து என்பதும் அவ்வாறு வந்ததே. எழூஉம் சீப்பும் உடைய அரணத்தைக் கொண்டிருந்தவர் தமிழர். அவர் எழுத் தழிவுக்கும் எழுத்துச் சிதைவுக்கும் இடந்தருதல் இன்றி மொழி காத்தல் கடமையாகும். மேலும், எழுத்தும் எண்ணும் இணைந்த மொழி தமிழ். எழுத்தே எண்ணாக இருந்தும் அவ்வெண்ணை ஏறத்தாழ மறந்தே போன மக்கள் தமிழ் மக்கள். தமிழெண் மீட்டெடுப்புச் செய்தலைத் தாமே உணரார் எனினும் அண்டை மாநிலங்களை எண்ணினாலும் தமிழர் புரிந்து கொள்ள முடியும். க, உ, ங, ச,ரு, சா, எ, அ, கூ, க0 என்பவை பழந்தமிழெண்கள். இத் தமிழெண்களின் வழிப்பட்டவையே 1,2,3 என வழங்கப் பெறும் எண்கள். பழந்தமிழர் உலக வணிகத்திற்குப் பயன்படுத்திய பொது எண்கள் இவை. எண் எண்கள் எழுத்துகள் என்பவை வேறு வேறாக இல்லாமல், எண்களே எழுத்தாக இருந்தமையால் “எண்ணும் எழுத்தும்” இணைந்தே வழங்கின. “எழுத்தறியத் தீரும் இழிதகைமை” என்றும், “எழுத்தறி வித்தவன் இறைவன்” என்றும் வழக்கூன்றின. இவ்வெண்களைச் சொல்லிப் பாருங்கள்; நூறுவரை சொல்லுங்கள்; எல்லாமும் உகரங்களாக - குற்றியலுகரங்களாக - முடிவதைப்பாருங்கள். (‘ஏழு’ என்பது முற்றியலுகரம்). ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து, நூறு. இவற்றுள் ஒரே ஓர் எண் (ஒன்பது) தப்பி வந்தது போல் தோற்றம் தரவில்லையா? ஒன்பது என்னும் இடத்திலே ‘தொண்டு’ என்பதே இருந்தது. அது வழக்கு வீழ்ந்தும் வீழாமலும் இருந்த காலம் தொல்காப்பியர் காலம். அதனால் அவர் ஒன்பது என்பதுடன் தொண்டு என்பதையும் வழங்கி யுள்ளார் (445, 1358). அவ்வாறே பரிபாடலிலும் ஒன்பதும் தொண்டும் வழங்கப்பட்டுள. தொண்டு வழக்கிழந்து ஒன்பது வந்தமையால் தொண்ணூறு, தொள்ளாயிரம் என்பவையும் கீழே இறங்கிவிட்டன. தொண்பது என்னும் இடத்தில் தொண்ணூறும், தொண்ணூறு என்னும் இடத்தில் தொள்ளாயிர மும் வந்துவிட்டன. இந் நாளிலும் “தொன்னாயிரம் முறை சொன்னேன்” என்னும் பேச்சுமொழி உண்மை, பழமரபை உணர்த்துகின்றது. நூறுவரை உள்ள எண்கள் உகரத்தில் முடிதல் ஒலி எளிமை, ஒழுங்குறுத்தம் என்பவை கொண்டமையை உணரின் அவ்வமைப் பாளியரின் ஆழம் புலப்படும். ஆயிரம், இலக்கம், கோடி என்பவை வழங்கப்படவில்லையோ எனின் ஆயிரம் வழங்கப்பட்டது. அதனின் மேற்பட்டவை ஐ, அம், பல் என்னும் முடிபு கொண்ட சொற்களாக வழங்கப்பட்டன. தாமரை, வெள்ளம், ஆம்பல் முதலியவை அவை. ஆயிரம் அடுக்கிய ஆயிரம் என்பவை தாமரை எனவும் வெள்ளம் எனவும் ஆம்பல் எனவும் வழங்கப்பட்டன. திருவள்ளுவர், சங்கத்தார் ஆயோர் நாளிலேயே கோடி, அடுக்கிய கோடி என்பவை இடம் பெற லாயின. கோடி என்பது கடைசி என்னும் பொருளில் இன்றும் வழங்கப் படுவதே. கடைசி எண் கோடி எனினும், கோடி, கோடியை அடுக்கிய கோடி என்பதும் வழக்கில் இருந்துளது. கோடா கோடி, கோடானு கோடி என்பன அவை. ஊரறிய ஒளியுடைய செல்வர்கள் இருப்பின், அவர்கள் பெருமை யாகப் பேசப்பட்டனர். ஒளிக் கற்றையால் விளங்கும் கதிரவன் போலக் கருதப்பட்டனர். அதனால் அவர்கள் ‘இலக்கர்’களாகினர். “எல்லே இலக்கம்” என்பது தொல்காப்பியம் (754). விளங்கிய செல்வம் இலக்கம் ஆயது; எண்ணும் ஆயது. மக்கட்கை மக்கள் என்பதனுடன் கை சேர்ந்தால், ‘மக்கள் கை’ என்னும் இடமும் உண்டு; ‘மக்கட் கை’ என்னும் இடமும் உண்டு. உயிருடையவர் கை எனின் மக்கள் கை. உயிரற்றவர் கை எனின் மக்கட் கை. இதனைத் தொல்காப்பியர், “மக்கள் என்னும் பெயர்ச்சொல் இறுதி தக்கவழி அறிந்து வலித்தலும் உரித்தே” என்று கூறுகிறார் (405). மக்கள் என்பார் உயிருள்ளவர். அவர்தம் கை உயிரற்றால் - செயலற்றால் - தனித்துக் கிடந்தால் - ‘மக்கட் கை’ என மாற்றம் பெறும் என்பது இப் பரபரப்பான - அமைந்து எண்ண முடியாத - உலகியலில் வியப் பூட்டுவதில்லையா? பெண்டு மக்கள் என்னும் பொதுப்பெயர் பெண், ஆண் எனப் பால் பிரிவுடைமை எவரும் அறிந்ததே. பெண் என்பது பெண்டு என்றும் வழங்கப்பட்டது (420, 421). பெண்டிர் என்பதில் அது விளங்கி நிற்கிறது. பெண்டு என்பதைப் பொண்டு ஆக்கி, ஆட்டி சேர்த்துப் ‘பொண்டாட்டி’ ஆக்கி மொழிக் கேட்டுடன் பண்பாட்டுக் கேடும் ஆக்கிவருதல் குறுந்திரை பெருந்திரைக் கொள்கையாகி விட்ட நிலையில், ‘பெண்டு’ என்னும் பண்பாட்டுப் பெயர் தலை வணங்க வைக்கிறது. பெண்டன் கை, பெண்டின் கை என வழங்கப்படுதலை, “வண்டும் பெண்டும் இன்னொடு சிவணும்” என்றும், “பெண்டென் கிளவிக்கு அன்னும் வரையார்” என்றும் கூறுகிறார் (420, 421). திசை “தெற்கு வடக்குத் தெரியாதவன்” என்பது பழமொழி. தென்கிழக்கு, வடகிழக்கு, தென்மேற்கு, வடமேற்கு எனக் கோணத் திசைகளை வழங்கு கிறோமே! முழுத்திசையில் சுருங்காத முன் திசையைக் கோணத் திசைக்குக் குறுக்குவது நம் வழக்கா? நம் முந்தைத் தொல்காப்பியர் காட்டும் வழக்கே யாம். அவர்க்கு முன்னரே அவ்வழக்கு இருந்ததை என்மனார் புலவர் என்பதால் தெளிவிக்கிறார் (432). பன்னிரண்டு பத்துடன் மூன்று - பதின்மூன்று பத்துடன் ஐந்து - பதினைந்து இவ்வாறுதானே வரும். பத்துடன் இரண்டைப் ‘பன்னிரண்டு’ என்கிறோமே! எதனால்? “பத்தன் ஒற்றுக்கெட னகரம் இரட்டல் ஒத்த தென்ப இரண்டுவரு காலை” (434) என்கிறார். மேலும், “ஆயிரம் வரினும் ஆயியல் திரியாது” (435) என்பதால் பன்னீராயிரம் என்பதற்கு இலக்கணம் காட்டுகிறார். “பன்னீரி யாண்டு வற்கடம் சென்றது” என்பது களவியல் உரை. ‘முந்நீர்ப் பழந் தீவு பன்னீராயிரம்’ என்பது கல்வெட்டு. மொழிக்காவல் தொல்காப்பிய எழுத்ததிகாரத்தின் வழியாக அறியப் பெறும் வாழ்வியல் வளங்களுள் சில இவை. இவ்வதிகாரத்தைச் சொல்லி முடிக்கும் ஆசிரியர் சொல்லிய அல்லாத திரிபுகள் செய்யுள் வழக்கிலோ மக்கள் வழக்கிலோ காணக் கிடப்பின் அவற்றையும் உரிய வகையால் அமைத்துப் போற்றிக் கொள்க என்கிறார். தமிழ்மொழி வழக்கழிந்து படாமல் என்றும் உயிருடைய மொழியாகத் திகழவேண்டும் என்னும் மொழிக் காவல் உள்ளத்தின் வெளிப்பாடே இஃதாம் (483). இவ்வாறு இயல்களி லும் அதிகாரங்களிலும் கூறுவன மொழியின் விரிவாக்கத்திற்கு உடன்பட்டு வழிவகுப்பதாகும். (குறிப்பு : தொல்காப்பிய நூற்பா எண்களாகக் குறிக்கப்பட்டவை எல்லாமும் சை.சி. கழகத் தொல்காப்பிய மூலப்பதிப்பு எண்களாகும்.) - இரா. இளங்குமரனார் தமிழ்வளம் -19, தமிழர் வாழ்வியல் இலக்கணம் நூலில் இருந்து எடுக்கப்பட்டது இளம்பூரணர் உரையாசிரியர் உரையாசிரியர் என்ற அளவானே, `இளம்பூரணர்' என அறியப் பெறும் பெருமையுடையவர் இவர். தொல்காப்பியத்திற்கு முதற்கண் உரை கண்டவராத லுடன், முதன்மையான உரை கண்டவரும் இவரே. மற்றொரு சிறப்பு இவருரையே நூன் முழுமைக்கும் கிடைத்துள்ளமை. உரை யாசிரியர் புலமை நலத்தையும், பேரருள் பேருள்ளத்தையும், உரையெழுது தற்கே தம் தவவாழ்வைச் செலவிட்ட தமிழ்ப்பற்றையும் எத்துணை விரித்துச் சொல்லினும் குறைவுடையதாகவே அமையும். அத்தகும் உயர்வற உயர்ந்த உயர்வர் இவர். “சென்னபட்டணத்தில் இற்றைக்கு ஐம்பதறுபது வருடத்தின் முன்னிருந்த வரதப்ப முதலியாரின் பின், எழுத்துஞ் சொல்லுமேயன்றித் தொல்காப்பியப் பொருளதிகாரத்தை உரை உதாரணங்களோடு பாடங் கேட்டவர்கள் மிக அருமை. முற்றாய் இல்லை என்றே சொல்லலாம். வரதப்ப முதலியார் காலத்திலும் தொல்காப்பியம் கற்றவர்கள் அருமை என்பது, அவர் தந்தையார் வேங்கடாசலம் முதலியார் அதனைப் பாடங்கேட்கும் விருப்பமுடையராயின பொழுது பறையூரில் திருவாரூர் வடுகநாத தேசிகர் ஒருவரே தொல்காப்பியம் அறிந்தவர் இருக்கிறார் என்று கேள்வியுற்றுத் தமது ஊரைவிட்டு அதிகத் திரவியச் செலவோடு அவ்விடம் போய் இரண்டு வருடமிருந்து பாடங்கேட்டு வந்தமையாலும் வரதப்ப முதலியார் ஒருவரே பின்பு அதனைத் தந்தைபாற் கேட்டறிந்தவர் என்பதனாலும் அது காரணமாக அவருக்குத் தொல்காப்பியம் வரதப்ப முதலியார் என்று பெயர் வந்தமையாலும் பின்பு அவர் காலத்திருந்த வித்துவான்கள் தமக்கு யாதாயினும் இலக்கணச் சமுச்சயம் நிகழ்ந்துழி அவரையே வினவி நிவாரணஞ் செய்தமையாலும் நிச்சயிக்கலாம்.” - என்பது தொல். பொருள். நச்சினார்க்கினியப் பதிப்பில் (1885) சி. வை. தாமோதரம்பிள்ளை எழுதியுள்ள பதிப்புரை. பார்த்திப ஆண்டு ஆவணித் திங்கள் வந்த இப்பதிப்பில் தொல்காப்பியப் பின்னான்கியல் உரைகளே உள. இவை நச்சினார்க்கினியம் அன்று, பேராசிரியம் எனச் செந்தமிழ்த் தொகுதி 1. பகுதி 1; தொகுதி 2 பகுதி 11 ஆகியவற்றிலும், தொல். செய்யுளியல் நச்சினார்க்கினியர் உரையுடன் வெளிவந்த தமிழ்ச் சங்கப் பதிப்பிலும் பெரும்புலவர் இரா. இராகவ ஐயங்கார் எழுதினார். தொல்காப்பியம் வரதப்பர் வரலாறும், தாமோதரனாரின் நச்சினார்க்கினியர் உரைப்பதிப்புக் குறிப்பும் மேல் ஆய்வும் நமக்கு என்ன சொல்கின்றன? இளம்பூரணரும் பிறரும் உரை வரைந்து நூலைப் பொருளுடன் காத்த பின்னரும் அஃதறிஞரும் அறியா நிலையில் இருந்தது என்றால், இளம்பூரணர் உரை வரைதலை மேற்கொள்ளா திருந்திருந்தால் தொல்காப்பியத்தின் நிலைமை என்ன ஆகியிருக்கும், என்பதே! இளம்பூரணத்தை 1920இல் வெளியிட்ட கா. நமச் சிவாய முதலியார் 1924இல் தொல். பொருள். மூலத்தை முதற்கண் வெளியிட்டுள்ளார், உரையொடு கூடிய மூலத்தில் இருந்து தனியே மூலத்தைப் பெயர்த்துப் பதிப்பித்த பதிப்பே மூலப்பதிப்பு என்பதை எண்ணிப் பார்த் தால், நாம் இளம்பூரணர்க்குப் பட்டுள்ள நன்றிக் கடனுக்கு அளவுண்டோ? இவர்தம் உரைச்சுவடி இல்லாக்கால், மற்றையர் உரைவரையும் வாய்ப்பும் ஏற்பட்டிராதே! தொல்காப்பியம் நமக்குக் கிட்டியமை இளம்பூரணர் உரைகொண்ட நலத்தாலேயே என்பதை எண்ணும் போதே இவர் தொண்டு மலை விளக்கென இலங்குவதாம். இளம்பூரணர் இளம்பூரணர் என்னும் பெயரால், “இவர் இளமையிலேயே முழுதறிவு பெற்றுச் சிறந்தமை கண்ட சான்றோர் இச்சிறப்புப் பெயரால் இவரை வழங்கினர்” என்பது விளங்கும். இஃதவர் இயற்பெயராக இருத்தற்கு இயலாது. கண்ணகியார் `சிறுமுதுக்குறைவி' எனப்பட்டதும், நம்மாழ்வார் `சிறுப்பெரியார்' எனப்பட்டதும் அறிவார் இதனைத் தெளிவார். `இளங்கோ வேந்தர்' `இளங்கோவடிகளா'ராகப் பெயர் பெற்றமை போல் இளம்பூரணரும் தம் துறவினால் `இளம்பூரணவடிகளார்' எனப் பட்டார் என்பது விளங்குகின்றது. இவர் துறவோர் என்பதை நமக்கு வெளிப்படக் கூறுபவர் நன்னூல் முதலுரையாசிரியர் மயிலைநாதர். அவர் எச்சங்களின் வகையை எடுத்துக் காட்டுங்கால்(359) இளம்பூரணர் உரையை உரைத்து “இஃது ஒல்காப் புலமைத் தொல்காப்பியத்துள் உளங்கூர் கேள்வி இளம்பூரண ரென்னும் ஏதமில் மாதவர் ஓதியவுரையென் றுணர்க” என்கிறார். இதில் இளம்பூரணரை `ஏதமில் மாதவர்' என்ற செய்தி, இவர் துறவோர் என்பதைக் காட்டும் புறச்சான்றாம். அகச்சான்று உண்டோ எனின் உண்டு என்பது மறுமொழியாம். “கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய் முற்படக் கிளந்த எழுதிணை என்ப” என்னும் நூற்பா அகத்திணையின் முதற்கண் உள்ளது. இதில் அகத்திணை ஏழும் முறை பெற நிற்கும் வகையைக் கூறுகிறார் ஆசிரியர். இதற்கு உரைவிளக்கம் வரையும் இளம்பூரணர், “இந்நூலகத்து ஒருவனும் ஒருத்தியும் நுகரும் காமத்திற்குக் குலனும் குணனும் செல்வமும் ஒழுக்கமும் இளமையும் அன்பும் ஒருங்கு உளவழி இன்பம் உளதாம் எனவும், கைக்கிளை ஒருதலை வேட்கை எனவும், பெருந்திணை ஒவ்வாக் கூட்ட மாய் இன்பம் பயத்தல் அரிது எனவும் கூறுதலான் இந்நூலுடையார் காமத்துப் பயனின்மை உய்த்துணர வைத்தவாறு அறிந்து கொள்க” என்கிறார். `காமம் நீத்தபால்', `கட்டில் நீத்தபால்', `தாபத நிலை', `தபுதாரநிலை', `சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயன்' எனவரும் இடங்களில் இத்தகு கருத்து உரைக்கப் பெறின் பருந்தும் நிழலுமென நூலாசிரியர் சொல்லொடு பொருள் பொருந்திச் செல்வதாகக் கொள்ள வாய்க்கும். இவ்விடத்தில் அக்குறிப்பு இல்லையாகவும் `இந்நூலுடையார் காமத்துப் பயனின்மை உய்த்துணர வைத்தவாறு' என்பது இளம்பூரணர் உட்கோளேயாம் என்பதை வெளிப்படுத்தும். இவரையன்றி இப்பகுதிக்கு உரைகண்ட பழைய உரையாசிரியர் நச்சினார்க்கினியரே. அவர் தாமும் இவர்க்குப் பின் உரை கண்டவர். இவரை ஏற்றும் மறுத்தும் உரைப்பவர். அவர் பொருளதிகாரத்தில், “இல்லறம் உணர்த்திப் பின் துறவறமும் சிறுபான்மை கூறுப” என்றும், “அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும் என்னும் சூத்திரத்தான் இல்லறமும் துறவறமும் கூறினார். இந்நிலையானும் பிறவாற்றானும் வீட்டிற்குக் காரணங் கூறினார்” என்றாரே யன்றிக் காமத்துப் பயனின்மை உய்த்துணரவைத்தாரெனக் கூறினாரல்லர். அவ்வாறு ஆசிரியர் கூறக் கருதியிருந்தால் உய்த்துணர்வில் லாமலே வெளிப்பட விளங்க உரைப்பார் என்பது இளம்பூரணரோ அறியார்? இவர் கொண்டிருந்த துறவுநிலை உந்துதலால் வந்த மொழி ஈதெனக் கொள்ளல் தகும். “இனி மாறுகொளக் கூறல்,” என்பதற்குத் “தவம் நன்று என்றவன் தான்தவம் தீதென்று கூறல்” என்பதும் (பொ.654) குறிப்பாகலாம். இவர் துறவர் என்பது `இளம்பூரண அடிகள்' என்னும் அடியார்க்கு நல்லார் குறிப்பாலும் (சிலப். 11 : 18 -20) புலப்படும். மயிலைநாதர் வரைந்த தொடரிலே இளம்பூரணர்க்குரிய தனிப் பெருஞ் சிறப்பொன்றைச் சுட்டுதலறிந்தோம். அஃது, `உளங்கூர் கேள்வி' என்பது. “செவி வாயாக நெஞ்சு களனாகப்” பாடம் கேட்பதும் கேட்ட வற்றை உளத்தமைத்துக் கொள்வதும் பண்டைப் பயின்முறை. அம்முறை யில் பல்கால் பலரிடைச் சென்று கேட்டுக் கருவூலமெனத் தேக்கி வைத்துக் கொண்ட முழுதறிவாளர் இளம்பூரணர் என்பதை நாம் அறிய வைக்கிறது. இதற்கு அகச்சான்று என்னை எனின், பலப்பலவாம்; முதல் உரையாசிரிய ராகிய இவர் பலரிடைக் கேட்ட உரைகளைக் கொண்டே, ‘ஒரு சார் ஆசிரியர் உரைப்பர்’ என்றும், ‘உரையன் றென்பார்’ என்றும், ‘ஒருவன் சொல்லுவது’ என்றும் கூறிச் செல்கிறார் என்பது கொள்ளக் கிடக்கின்றது என்க. இளம்பூரணர் தொல்காப்பியர்மேல் கொண்டிருந்த பேரன்பும், பெருமதிப்பும் அவரைத் தொல்காப்பியரெனவே மதிக்கத் தூண்டுகின்ற தாம். அகத்திணை ஏழாதல் போலப் புறத்திணையும் ஏழே என்பதை வலியுறுத்திக் கூறும் இளம்பூரணர், புறப்பொருள் பன்னிரண்டு என்பாரை மறுத்து அவ்வாறு கொள்வது, “முனைவன் நூலிற்கும் கலி முதலாகிய சான்றோர் செய்யுட்கும் உயர்ந்தோர் வழக்கிற்கும் பொருந்தாது என்க” என்கிறார். ஆசிரியர் தொல்காப்பியனார், “வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதனூல் ஆகும்” என்றதை உளங் கூர்ந்து, அதனை அவர்க்கே ஆக்கி வழிபட்ட சான்றாண்மை இளம்பூரணர் வழியே புலப்படுதல் கண்டு கொள்க. “அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் உளவென மொழிப இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர்” என்பதன் விளக்கத்தில் (எழுத்.33), “இசை நூலாசிரியரும் முதனூலாசிரியர் தாமே யெனினும், ‘மொழிப’ என வேறொருவர் போலக் கூறியது, அதுவும் வேறொரு நூலாகச் செய்யப்படும் நிலைமை நோக்கிப் போலும்” என்று வரைகின்றார். தொல்காப்பியரை இளம்பூரணர் முதனூலாசிரியராகக் கொண்டார் என்பது இதனால் விளங்கும். முன்னிலையாக்கல் எனவரும் பொருளதிகார நூற்பா விளக்கத்தில் (98),“உலகத்துள்ளார் இலக்கணமெல்லாம் உரைக்கின்றாராகலின் இவ்வாசிரியர் உரைக்கின்றவாற்றான் நிகழ்தல் பெரும்பான்மை” எனத் தொடர்கின்றார். தொல்காப்பியர் பற்றி இளம்பூரணர் குறித்த மதிப்பீடு எத்தகு பெருமைக்குரியது! பொருளதிகாரத் தொடக்கத்திலே, “பிற நூலாசிரியர் விரித்துக் கூறினாற்போல அறமும் பொருளும் விரித்துக் கூறாதது என்னையோ எனின், உலகத்தில் நூல் செய்வார் செய்கின்றது அறிவிலாதாரை அறிவு கொளுத்த வேண்டியன்றே; யாதானும் ஒரு நூல் விரித்தோதிய பொருளைத் தாமும் விரித்து ஓதுவாராயின் ஓதுகின்றதனாற் பயன் இன்றாமாதலால் முதனூலாசிரியர் விரித்துக் கூறின பொருளைத் தொகுத்துக் கூறலும் தொகுத்துக் கூறின பொருளை விரித்துக் கூறலும் நூல் செய்வார் செய்யும் மரபு என்றுணர்க. அஃதேல் இந்நூலகத்து விரித்துக் கூறிய பொருள் யாதெனின் காமப்பகுதியும் வீரப்பகுதியும் என்க. இன்பம் காரணமாகப் பொருள் தேடும் ஆகலானும் பொருளானே அறஞ் செய்யும் ஆகலானும் இன்பமும் பொருளும் ஏற்றம் என ஓதினார் என உணர்க,” என்று வரையும் எழுத்தால் தொல்காப்பிய நூலோட்ட நுணுக்கத்தை நுவல்கிறார். உழிஞைத் துறையை, “அதுவே தானும் இருநால் வகைத்தே” என்னும் ஆசிரியர் (பொ.67) அடுத்த நூற்பாவில் அத்துறைகளைக் கூறி “நாலிரு வகைத்தே” (பொ.68) என்றும் கூறுகிறார். இதனைக் கூறியது கூறல் என எவரும் எண்ணி விடுவரோ என்னும் எண்ணம் “கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை” இளம்பூரணர்க்குத் தோன்றிற்றுப் போலும். அதனால், “பதினெட்டு இருபத்தொன்பது என்பார் மதம் விலக்கியமை தோன்றப் பெயர்த்துந் தொகை கூறினார். இது கூறியது கூறலன்று; தொகை” என்றார். ‘ஆசிரியன் ஓதினான்’ என்பது போலக் கூறுதலே பண்டை உரை யாசிரியர் மரபு (எழுத்.469). “குறிப்பு என்றார்”, “கூறினார்” (பொருள்.104) என இளம்பூரணத்துள் வருதல் பதிப்பாசிரியர் கருத்துப்போலும்! மிகைபடக் கூறல் என்னும் நூற்குற்றம் விளக்கும் இளம்பூரணர், “மிகைபடக் கூறலாவது அதிகாரப் பொருளன்றிப் பிறபொருளும் கூறுதல். அஃதாவது தமிழிலக்கணஞ் சொல்லுவான் எடுத்துக்கொண்டான் வடமொழி இலக்கணமும் கூறல்” என்கிறார். இக்குற்றம் செய்யாத சீருரை யாளர் செந்தமிழ் இளம்பூரணர். இக்குற்றம் செய்தார், ‘இவர் வடமொழி யறியார்’ என்பர். எழுத்து. 42, 45, 75, சொல். 443, பொருள். 30, 151, 656 ஆகிய நூற்பாக்களின் உரைகளைக் காண்போர் இவர் வடமொழி அறியார் எனக் கருதார். இளம்பூரணர், சமணர் என்றும் சைவர் என்றும் கூறுவாருளர். படிமையோன் என்பதற்குத் ‘தவவொழுக்கத்தையுடையோன்’ என உரைவரைந்ததையும் (பாயிரம்) படிமை என்பது சமண சமயத் துறவிகளின் தவவொழுக்கத்தைக் குறிக்கும் சொல் என்பதையும் குறித்துச் சமணர் என்பர். படிமை என்பது கட்டமை ஒழுக்கத்தைச் சுட்டுவது என்பதைப் பதிற்றுப்பத்துள் கண்டு கொள்க (74). படிவம் என்பதும் அப்பாடல் ஆட்சியில் உண்டு என்பதும் அறிக. “னகரம் வீடுபேற்றிற்குரிய ஆண்பாலை உணர்த்துதற் சிறப்பான் பின்வைக்கப்பட்டது” (எழுத். 1) என்று இவர் எழுதுவது கொண்டு சமணர் என்பர். முற்பட வைக்கப்பட்ட அகரத்தின் சிறப்புக் கூறியவர் பிற்பட வைக்கப்பட்ட னகரத்தின் சிறப்புக் கூறுவாராய் இது கூறினர். முற்படக் கூறலும் சிறப்பே; பிற்படக் கூறலும் சிறப்பே என்பது நூன்முறை. அம்முறைக்கேற்ப னகரச் சிறப்பாகக் கூற இதனைக் கூறினாரேயன்றி `மகளிர் வீடு பேறு எய்தார்' என்னும் குறிப்பு அதில் இல்லை எனக் கொள்க. இனிச் சமணர் அல்லர் என்பதற்கு, “நிலம், தீ, நீர், வளி, விசும்போடு ஐந்தும், கலந்த மயக்கம் உலகம்” எனவரும் தொல்காப்பிய (பொ.635) நூற்பாவில் விசும்பும் ஒரு பூதமெனக் கொண்டதைக் காட்டுவர். நூற்பாவிற் கிடந்தாங்கு உரை விரிக்கும் மரபுடைய இளம்பூரணரை அதனைக் காட்டி ஒரு சார்பிற் கூட்டல் சாலாது. “குமர கோட்டம் குமரக்கோட்டம், பிரமகோட்டம் பிரமக் கோட்டம்” என்பவர் “அருக கோட்டம் அருகக் கோட்டம்” எனக் காட்டாமையால் சமணச் சார்பினர் அல்லர் என்பர். காட்டாமையால் அச்சார்பினர் அல்லர் என்பது ஏற்காமை போல, காட்டியமையால் அச் சார்பினர் என்பதும் ஆகாதாம். எடுத்துக்கொண்ட பொருளுக்கு எடுத்துக்காட்டுப் பொருந்துவதா என்பதே உரை நோக்கு. குமரகோட்டம் காட்டியதற்கு முற்றொடரிலேயே ‘ஆசீவகப்பள்ளி’ என்பதைக் காட்டுகிறாரே; அவர் அருகக் கோட்டம் காட்டாமையால் சமணர் அல்லர் என்று கொண்டால், ஆசீவகப் பள்ளியை முற்படக் காட்டல் கொண்டு சமணர் எனக் கொள்ள வேண்டுமன்றோ! ஆகலின் பொருளில என்க. இனி, ‘இளம்பூரணர்’ என்பது முருகன் பெயர்களுள் ஒன்றாகலின் சைவர் என்பர். ‘இளையாய்’ என்பதிலும் ‘இளம்’ என்பதிலும் கண்ட சொல்லொப்புமை யன்றிப் பொருளொப்புமை காட்ட முடியாக் குறிப்பு ஈதெனல் தெளிவு. “ஆறு சூடி நீறு பூசி ஏறும் ஏறும் இறைவனைக் கூறு நெஞ்சே குறையிலை நினக்கே” என்பதை `இவர் திருவுள்ளத் தூறிய பெரும் பொருட் சிறுபாடல் எனக் கூறிச் சைவராக்கினால், அடுத்தாற் போலவே (தொ.பொ. 359), “போது சாந்தம் பொற்ப வேந்தி ஆதி நாதர்ச் சேர்வோர் சோதி வானந் துன்னு வோரே” என்பது கொண்டு சமணரெனக் கொண்டாடல் தவிர்க்க முடியாததாகி விடும். “தன்தோள் நான்கின்” எனவரும் பாடலை இளம்பூரணர் மேற்கோள் காட்டுகிறார் (தொல். பொருள். 50). இதனைச் சேனாவரையர் தம் நூலில் முதற்காப்புப் பாடலாக அமைத்துக் கொள்கிறார். இதனால் இவர் சிவச் சார்பினர் எனின், சேனாவரையர் போலவே தாமும் காப்புச் செய்யுளாக வைத்திருப்பார். சேனாவரையர் சிவநெறியர் என்பதற்கு இது சான்றாமேயன்றி இளம்பூரணரைச் சாராதாம் என்க. “இசை திரிந்திசைப்பினும்” என்னும் பொருளியல் முதல் நூற்பா உரையில் மேற்கோளாகக் “கார்விரிகொன்றை” என்னும் அகநானூற்றுக் கடவுள் வாழ்த்துப் பாடலைக் காட்டும் இளம்பூரணர், ‘சிவானுபூதியிற் பேருலகம் தங்கிற்று’ என்று உரையெழுதுவது கொண்டு இவரைச் சிவநெறியர் என உறுதிப்படுத்துவர். அஃதாயின், அப்பாடல் தொடரொடு தொடர்பிலாத அச்செறிப்பும், ‘தாவில்தாள் நிழல்’ என்பதன் பொருள் விடுப்பும் கொண்டு ஐயுறவு கொள்ளற்கு இடமுண்டு! பாடல் தொடரையே இசைத்துத் தொடர்புறுத்தும் அவ்வுரையில் அஃதொன்று மட்டும் ஒட்டா ஒட்டாக இருத்தலும், தாவில்தாள் நிழல் விடுபாடும் பிறிதொருவர் கைச்சரக்கோ என எண்ணவே வைக்கின்றது. இளம்பூரணர் வள்ளுவர் வாய்மையில் நெஞ்சம் பறிகொடுத்த தோன்றல் என்பது இவர் எடுத்துக்காட்டும் மேற்கோள் விளக்கப் பெருக்கத்தானே நன்கு புலப்படும். அதிகாரங்கள் பலவற்றை அடுக்கிக் கூறுதலாலும் விளங்கும். இத்தகையர் வள்ளுவரைப் போலச் சமயக் கணக்கர் மதிவழிச் செல்லாத சமனிலைச் சால்பினர் என்பதே தெளிவாம். சமயச் சார்பினர் வெளிப்படக் காட்டும் வலிந்த பொருளாட்சி, மேற்கோள் ஆயவை இவரிடத்துக் காணற்கில்லாமல் எச்சமயமும் ஒப்பநினைத்துப் போற்றும் ஒரு பெருந்தகைமையே காணப்படுகின்றது என்க. தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணரும் திருக்குறள் உரையாசிரியர் மணக்குடவரும் ஒருவரே என்பர். ஒருவர் ஒரு நூற்கு ஒரு பெயரும், மற்றொரு நூற்கு ஒரு பெயரும் கொண்டு உரை வரைந்தனர் என்றல் மரபு நிலைப்படாது. ஒருவர், இருவர், மூவர் பெயர் கொண் டெழுதிப் பிழைக்கும் ‘வணிக நோக்கர்’ அச்சடிப்புக் காலத்தே காண லாமே யன்றிப் பயில்வார் பயன்பாடு என்னும் ஒன்றே குறியாக் கொண்ட ஏட்டுக்காலத்துத் தூயரை அக்கூட்டிற் சேர்க்க வேண்டுவதில்லையாம். உரையாசிரியர் நச்சினார்க்கினியர் பல நூல்களுக்கு உரை கண்டவர். அவர் தம் பன்னூல் உரையொப்பைச் சுட்டிச் செல்கிறார். அத்தகு குறிப்பொன்றும் இளம்பூரணர் உரையில் இன்மை, இக்கருத்தின் அகச்சான்றின்மைச் சான்றே. ஒரு தனிப்பாடல் செய்தி கொண்டு இம் முடிவுக்கு வருதல் சாலாது. `மணக் குடி புரியான்' என்பது `மணக்குடவர்' பெயராகலாம். ஆனால் `மணக்குடி புரியராம் அவரே இளம்பூரணர்' என்பதற்கு அப்பாடல் சான்றாகாது. மற்றும் உரையாசிரியராகிய இளம்பூரண அடிகள் எனக் கூறும் அடியார்க்கு நல்லார் மணக்குடவ ராகிய இளம்பூரண அடிகள் என்று கூறத் தவறார். ஏனெனில் உரையாசிரி யர் என்னும் பொதுப்பெயரினும் அவர் குடிப்பெயர் விளக்கமானதன்றோ! தொல்காப்பிய இளம்பூரணருரை முற்றாகக் கிடைத்துளது. அதில் அச்சிறப்புப் பாயிரம் இல்லை. திருக்குறள் மணக்குடவருரையும் முற்றாக வாய்த்துளது. அதிலும் அச்சிறப்புப் பாயிரம் இல்லை. சிதைவுற்ற நூலாயின் தனித்துக் கிடைக்க - பிறர் உரைக்கண் கண்டெடுக்க - முறை யுண்டு. அன்னவகை எதுவும் இல்லாச் சிறப்புப் பாயிரங் கொண்டு முடிவுக்கு வருதல் தகுவது அன்று. இளம்பூரணர் திருக்குறள் அதிகாரத் தலைப்புக்குத் தரும் பொருளுரை, மணக்குடவ ருரையொடும் பொருந்தி நிற்பதைக் காட்டி ஈருரையும் அவருரையே என்பர். ஈருரையும் பொருந்தாவுரையும் உண்மை யால் வேறுரையாம் என்பார்க்கு மறுமொழி இல்லாமை கண்கூடு. துறவாவது தன்னுடைய பொருளைப் பற்றறத் துறத்தல் என்பது தொல்காப்பியம் (பொ. 75). துறவாவது ஒருவன் தவம் பண்ணாநின்ற காலத்து யாதாயினும் ஒரு தொடர்ப்பாடு உளதாயினும் அதனைப் பற்றறத் துறத்தல் என்பது திருக்குறள் மணக்குடவருரை (அதி.துறவு). ஒப்பியவுரையை அப்படி அப்படியே ஏற்றுக்கொண்டு போற்றுவ தும், ஒப்பா இடத்து மட்டும் தம் உரையும் விளக்கமும் தருதலும் உரை மரபு ஆகலின் இளம்பூரணத்தைக் கற்ற மணக்குடவர் தம் உரையில் அவ்வுரையைப் போற்றிக் கொண்டார் என்பது பொருந்துவதாம். இளம்பூரணர் உரையில் காணும் எடுத்துக்காட்டுகளைத் தொகை யிட்டுக் காண்பவர், திருக்குறள் மணக்குடவர் உரையை இவருரையெனக் கொள்ளார் என்பது தெளிவு. இளம்பூரணர் உரை வழியே நன்னூலார் பலப்பல நூற்பாக்களை இயற்றி யுள்ளார். ஆகுபெயர் என்ற அளவானே குறித்தார் தொல்காப் பியர்(சொ.110). அதனை “ஆகுபெயர் என்ற பொருண்மை என்னையெனின் ஒன்றன்பெயர் ஒன்றற்காய் நிற்றல் என்றவாறு” என்றார் இளம்பூரணர். அதனையே நன்னூலார் “ஒன்றன் பெயரான் அதற்கியை பிறிதைத் தொன்முறை யுரைப்பன ஆகு பெயரே” என நூற்பாவாக்கிக் கொண்டார் (பெயர். 33). இவ்வாறு இளம்பூரணக் கொடை மிகக் கொண்டு விளங்கியது நன்னூலாகலின், அந்நூலார் காலத்துக்கு முன்னவர் இளம்பூரணராவர். நன்னூலாரைப் புரந்த சீயகங்கன் காலம் கி.பி. 13ஆம் நூற்றாண்டு என்பர். எனவே அக்காலத்திற்கு முற்பட்டவர் இளம்பூரணர் என்க. புறப்பொருள் வெண்பா மாலையில் இருந்து இளம்பூரணர் மேற்கோள் காட்டியுள்ளார். ஆகலின் அம்மாலை தோன்றிய 9ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர் ஆகிறார் இளம்பூரணர். மேலும் பரணியாற் கொண்டான், (எழுத். 125, 248) என வருவது கொண்டு கூடல் சங்கமத்துப் பரணி கொண்ட வீரராசேந் திரன் காலத்திற்குப் பிற்பட்டவர் எனத் தேர்ந்து 11ஆம் நூற்றாண்டு என்பர். இளம்பூரணர் சோணாட்டைச் சேர்ந்தவர் என்றும், வேளாண் குடியினர் என்றும் கூறுவர். இவர் சோணாட்டைச் சொல்வதுடன் மலாடு மழநாடு முதலிய நாடுகளையும் சேரமான் மலையமான் பாண்டியன் சேரன் செங்குட்டுவன் முதலிய வேந்தர்களையும் குறிக்கிறார். உறையூரைக் கூறும் இவர் கருவூர், மருவூர், குழிப்பாடி, பொதியில் என்பவற்றையும் குறிக்கிறார். இவர் பார்வை தமிழகப் பார்வையாக இருந்தது மிகத் தெளிவாக உள்ளது. கைவாய்க்கால் என்பது சோணாட்டு வழக்கு; இன்றும் வழங்குவது என்பர். அது பாண்டிநாட்டும் இன்றும் வழக்கில் உள்ளதே. ‘கோடின்று செவியின்று’ என்பது கொண்டு இந்நாளிலும் அங்கு அவ்வழக் குண்மையைக் குறிப்பர். ஆனால் அதனைக் கூறுமிடத்தேயே (சொல். 216) ‘கோடின்று செவியின்று’ ‘கோடில செவியில’ ‘கோடுடைய செவியுடைய’ ‘கோடுடைத்து செவியுடைத்து’ என உண்மையும் இன்மையும் அடுக்கிக் கூறுவர். இவரை உண்மைப் பாற்படுத்துவதும், இன்மைப்பாற்படுத்துவதும் வேண்டிற்றன்று. தமிழ்நாட்டு வழக்கு முழுதுற அறிந்த இவர்க்கு எவ்வெடுத்துக்காட்டு முந்து நிற்கிறதோ அதனைக் கூறுவர் எனக் கொள்ளலாம். ‘நும் நாடு யாது என்றால் தமிழ்நாடு என்றல்’ எனச் செப்பும் வினாவும் வழுவாது வருவதற்குக் கூறுவதும் (சொல். 13) ‘தமிழ்நாட்டு மூவேந்தரும் வந்தார்’ என்பதும் (சொல். 33) ‘தமிழ்நாட்டு மூவரும் வந்தார்’ என்பதும் (சொ.250) ‘புலிவிற் கெண்டை’ என்பதும்(சொல். 411) இளம் பூரணரின் தமிழ் நில முழுதுறு பார்வையையே சுட்டுகின்றன. மேலும், “நாயை ஞமலி என்ப பூழி நாட்டார் என்றக்கால் அச்சொல் எல்லா நாட்டாரும் பட்டாங் குணரார்; நாய் என்பதனையாயின் எவ்வெத் திசை நாட்டாரும் உணர்ப என்பது”, என்று கூறும் இவர் உரையால் (சொல். 392) நாடு தழுவிப் பட்டாங்குணரச் செய்தலே இவர் பெரும் பார்வை என்க. இளம்பூரணர் உரைநயங்கள் அருஞ்சொல்லுக்குப் பொருள் கூறுதல் : ‘குயின் என்பது மேகம்’ (எ. 336), ‘மின் என்பது ஓர் தொழிலுமுண்டு பொருளுமுண்டு’ (எ. 346), ‘அழனென்பது பிணம்’ (எ. 355) ‘மூங்கா என்பது கீரி’ (பொ. 550) நவ்வி-புள்ளிமான் (பொ. 556) ‘கராகமென்பது கரடி’ (பொ. 56) இவ்வாறு அருஞ்சொற்பொருள் வேண்டுமிடத்துரைக்கின்றார். கோயில் என்பதா? கோவில் என்பதா? எனின் இரண்டும் சரியே என்பார் உளர். அவற்றுள் `கோயில்' என்பதே சரியானது என்பதை ‘இல்லொடு கிளப்பின் இயற்கையாகும்’ என்னும் நூற்பாவில் (எ. 294) தெளிவாக்குகிறார். ‘கஃறு’ என்பது உருவு. ‘சுஃறு’ என்பது இசை என்பதைத் தேர்ந்து சொல்கிறார் (எ. 40). ‘தபு’ என்பது படுத்துச் சொல்ல `நீசா' எனத் தன்வினையாம் எனவும், அதனை எடுத்துச் சொல்ல `நீ ஒன்றனைச் சாவி' எனப் பிறவினையாம் எனவும் அசையழுத்தம் (யஉஉநவே) காட்டி விளக்குகிறார் (எ. 76). அஃறிணை என்பது அல்திணை. அல்லதும் அதுவே, திணையும் அதுவே எனப் பிரித்துக் காட்டி விளக்குகிறார் (சொ. 2). சேரி என்பது பலர் இருப்பதுமன். ஆயினும் ஆண்டுச் சில பார்ப்பனக்குடி உளவேல் அதனைப் பார்ப்பனச்சேரி என்பது; இஃது உயர்திணைக்கண் தலைமை பற்றி வந்தது என்கிறார் (சொ. 49). “பல பொத்தகம் கிடந்த வழி ஒருவன் ஏவலாளனைப் பார்த்து, பொத்தகங் கொண்டு வா’ என்றால், அவன் ஒரு பொத்தகங் கொண்டு வந்த விடத்துத் தான் கருதிய பொத்தகம் அன்றெனில் ‘மற்றையது கொணா’ என்னும்; என்றக்கால் இக் கொணர்ந்ததனை ஒழிக்கும் சொல் இக் கொணர்ந்த பொத்தகம் சுட்டிற்றாகலான் கொணர்ந்ததனை ஒழிக்குஞ் சுட்டு நிலை அதனை ஒழித்து ஒழிந்ததென்று அவ்வினத் தல்லது பிறிதொன்று குறித்தது கொல்லோ எனிற் குறியா; மற்று அப் பொத்த கத்துள் ஒன்றே பின்னும் குறித்தது எனப்படும்” என்பதன் வழியாக ஓரிலக்கணம் கூறுவதுடன் புத்தகம் என்பதன் செவ்விய வடிவத்தையும் நிலைப்படுத்துகிறார். சங்கத்தார் நாளில் ‘உளறுதல்’ என்பது கூந்தலை உலர்த்துதல் பொருள் தந்தது. அப்பொருளை இளம்பூரணர் காலத்தில் ‘உலறுதல்’ என்பது தரலாயிற்று என்பதை, “உலற்றத் திறமின்றிப் பயின்றார் ஒரு சான்றார் மயிர் நீட்டி உலறி நின்றாரைக் கண்டு ஒருவன், எம்பெருமான் உலறி நின்றீரால் என்றக்கால் வாளாதே உலறினேன் என்னற்க, இது காரணத்தால் உலறினேன் என்க. இது தனக்கு உற்றதுரைத்தது” என்பதன் வழியாக அறிய வைக்கிறார் (சொ. 56). பிறரொடு தொடர்பு இல்லானைக் ‘கெழீஇயிலி’ என்பதும் (சொ. 57) தொழில் செய்யும் ஏவலாட்டியைத் ‘தொழீஇ’ என்பதும் (சொ. 122) அரிய சொல்லாட்சியாம். ‘அண்ணாத்தேரி’ என்பதை இவர் எடுத்துக்காட்டுவதைத் திருவண்ணா மலையகத்து ஏரி எனக் கருத்துரைத்தார் உளர். அது ‘வானம் பார்த்த ஏரி’ என்பதாம். ஆறு, கால் ஆயவற்றின் நீர் வரத்தின்றி வானம் பார்த்து இருக்கும் ஏரியே அப்பெயரியதாம் (எ. 134). ‘அண்ணாத்தல்’ ‘அண்ணாந்து நீர் குடித்தல்’ என்னும் வழக்குகளைக் கொண்டு அறிக. “அண்ணாத்தல் செய்யா தளறு” என்றார் வள்ளுவர். திட்டாத்துக்குளம் என்று பிறர் கூறுவது மேடுபட்ட குளம் என்றாதல் கருதுக. “காமப்புணர்ச்சி எனினும், இயற்கைப்புணர்ச்சி எனினும், முன்னுறு புணர்ச்சி எனினும், தெய்வப்புணர்ச்சி எனினும் ஒக்குமென” ஒரு பொருட் பலபெயரைச் சுட்டி ஐயமகற்றுகிறார் (களவியல் முன்னுரை). செங்கடுமொழி என்பதைக் “கொடிய கடுமொழியேயன்றி மனத்தினால் இனியளாகிக் கூறும் கடுமொழி” என நயமுற விளக்குகிறார் (பொ. 112). ஒத்ததெனப் பொதுவில் தோன்றும் இரண்டன் நுண்ணிய வேறுபாட்டையும் அரிதாக விளக்கிச் செல்கிறார். “மடம் என்பதற்கும் பேதைமை என்பதற்கும் வேறுபாடு என்னை எனின், மடம் என்பது பொருண்மை அறியாது திரியக்கோடல்; பேதைமை என்பது கேட்டதனை உய்த்துணராது மெய்யாக் கோடல்” (பொ. 248). ‘ஐவகை யடியும்’ (செய். 48) என்பது ஆசிரியப்பாவிற்குரிய இலக்கண முடைத்தாயினும் ஓசையின்மையான் ஆசிரியம் எனப்படாது நூலெனப் படும் என்று கொள்க (பொ. 391). “கலத்தலாவது முத்தும் பவளமும் நீலமும் மாணிக்கமும் விரவினாற் போறல். மயக்கமாவது பொன்னும் வெள்ளியும் செம்பும் உருக்கி ஒன்றாதல் போறல்” என்பவற்றைக் காண்க. எடுத்துக்கொண்ட ஒன்றை உவமையால் விளக்கும் நயத்தையும் அரிதாக மேற்கொள்கிறார் இளம்பூரணர். சிறப்புப் பாயிரத்தில் “பாயிரமென்பது புறவுரை. அறநூற்குப் புறவுரையேல் அது கேட்டு என்னை பயனெனின் கற்று வல்ல கணவற்குக் கற்புடையாள் போல இன்றியமையாச் சிறப்பிற்றாயும், திருவமைந்த மாநகரத்திற்கு உருவமைந்த வாயின் மாடம் போல அலங்காரமாதற் சிறப்பிற்றாயும் வருதலானும் பாயிரம் கேளாதே நூல் கேட்குமேயெனில் குறிச்சி புக்கமான்போல மாணாக்கன் இடர்ப்படுமாகலானும் பாயிரம் கேட்டல் பயனுடைத்தாயிற்று” என ஓரிடத்தே மூன்றுவமைகள் வைத்து விளக்குகிறார். இகர உகரங்களுக்கும் குற்றியலிகர குற்றியலுகரங்களுக்கும் ஒலியளவையால் வேறுபாடு உண்டாயினும் உயிர் என்னும் பெயரீட்டில் வேறுபாடு இல்லை என்பாராய், “சந்தனக்கோல் குறுகினவிடத்துப் பிரப்பங்கோல் ஆகாது. அதுபோல இகர உகரங்கள் குறுகினவிடத்தும் அவை உயிர் ஆகற்பாலன” என்கிறார் (எ. 2). உயிர்மெய் ஒலிக்கும் வகையை விளக்கும்போது “மெய்யும் உயிரும் முன்னும் பின்னும் பெற நிற்கும் என்றமையால் அக்கூட்டம் பாலும் நீரும் போல உடன் கலந்ததன்றி, விரல் நுனிகள் தலைப்பெய்தாற்போல வேறு நின்று கலந்தன அல்ல என்பது பெறுதும்” என்கிறார் (எ. 18). ‘இதழ் போறலான் வாய், இதழ் எனப்பட்டது’ என வாய்க்கு இதழ் எனப் பெயர் வந்த பொருத்தத்தை உவமையால் விளக்குகிறார் (எ. 83). கலிப்பாவிற்குரிய துள்ளலோசை பற்றிக் கூறும்போது, “துள்ளுத லாவது ஒழுகுநடைத்தன்றி இடையிடையுயர்ந்து வருதல்; கன்று துள்ளிற் றென்றாற்போலக் கொள்க” என்கிறார் (பொ. 387). இவ்வாறே பிறவும் வரும் உவமைகளும் உள. உவமையின் பயன், “புலன் அல்லாதன புலனாதலும், அலங்கார மாகிக் கேட்டார்க்கின்பம் பயத்தலும்”, என்று உவமையியல் முகப்பில் கூறும் அவர்தம் உவமைகளால் தம் கருத்தை மெய்ப்பிக்கிறார் என்க. உரைவளம் இளம்பூரணர் உரைவளம், வேண்டுமிடத்து வேண்டுமளவான் விளங்கி நலம் சேர்க்கின்றது. எழுத்தை எட்டுவகையாலும் எட்டிறந்த பலவகையாலும் உணர்த்தி னார் என அவற்றைக் குறிப்பதும் (எ. முகப்பு) செப்புவகை ஆறு என்பதும், வினாவகை ஐந்து என்பதும் (சொ. 13) தகுதி, வழக்கு ஆகியவற்றைப் பற்றிப் பகுத்துரைப்பதும் (சொ. 17) முதலியவை நன்னூலார் முதலிய பின்னூ லோர்க்கு உதவிய உரைவளங்களாம். “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்னும் நூற்பாவுக்கு (சொ. 152) “பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் இடைச்சொல்லும் உரிச்சொல்லும் ஆகிய எல்லாச் சொல்லும் பொருள் குறியாது நில்லா” என உரை கூறுகின்றார். ‘பொருள் குறித்து நிற்கும்’ என்னாமல், பொருள் குறியாது நில்லா என்று ஈரெதிர் மறைகளால் உடன் பாட்டுக் கருத்தை வலியுறுத்துவது, “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே; அவ்வாறு குறியாதது சொல்லன்று” என்பதை உறுதிபடக் கூறுவதற்கேயாம். முக்காலங்களையும் சுட்டும் இளம்பூரணர், “இறப்பாவது தொழிலது கழிவு; நிகழ்வாவது தொழில் தொடங்கப்பட்டு முற்றுப் பெறாத நிலைமை; எதிர்வாவது தொழில் பிறவாமை” என்கிறார். எளிமையும் அருமையும் மிக்க குறிப்புகள் இவை. கைக்கிளை ‘சிறுமை உறவு’ என்று கூறவேண்டுமெனக் கருதுகிறார் உரையாசிரியர். அதனை, “கை என்பது சிறுமை பற்றி வரும்; அது தத்தம் குறிப்பிற் பொருள் செய்வதோர் இடைச்சொல்; கிளை என்பது உறவு; பெருமையில்லாத தலைமக்கள் உறவு என்றவாறு, கைக்குடை, கையேடு, கைவாள், கைஒலியல், கைவாய்க்கால் எனப் பெருமையில்லாதவற்றை வழங்குபவாகலின்” என விளக்கியமைகிறார் (பொ. 1). கை சிறுமைப் பொருட்டாதலை நிறுவுதற்கு நடைமுறைச் சான்றுகள் பலவற்றை அடுக்குகிறாரே! பொருள் விளக்கம் செய்தலிலும் அவர்க்கிருந்த பற்றுதலின் விளைவு தானே இது! பிரிவு என்னும் உரிப்பொருளைக் கூறும் தொல்காப்பியர், ‘கொண்டு தலைக் கழிதலும், பிரிந்தவண் இரங்கலும்’ என இரண்டாகப் பகுத்துக் கூறுகின்றார். இதனை, “கொண்டுதலைக் கழிதலாவது உடன் கொண்டு பெயர்தல். அது, நிலம் பெயர்தலின் புணர்தலின் அடங்காமை யானும், உடன் கொண்டு பெயர்தலின் பிரிதலின் அடங்காமையானும் வேறு ஓதப்பட்டது” என நூலாசிரியர் கருத்தைத் தெளிவு செய்கிறார் (பொ. 17). “இளமை தீர் திறம்” என ஆசிரியர் கூறினாராயினும் அதனை, “இளமை தீர் திறமாவது; இளமை நீங்கிய திறத்தின்கண் நிகழ்வது. அது மூவகைப்படும்: தலைமகன் முதியனாகித் தலைமகள் இளையளாதலும், தலைமகள் முதியளாகித் தலைமகன் இளையனாதலும், இவ்விருவரும் இளமைப் பருவம் நீங்கிய வழி அறத்தின்மேல் மனம் நிகழ்தலின்றிக் காமத்தின் மேல் மனம் நிகழ்தலும் என” என்கிறார். “எண்ணி உரைகாரர் ஈவார்” என்பதை மெய்ப்பிப்பவை இத்தகையவை (பொ. 54). “கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தல்” என்பதன் விளக்கமும் காண்க (பொ. 87). ‘ஏறிய மடற்றிறம்’ முதலாக ஆசிரியர் சொல்லும் உடன்பாடுகளை ‘ஏறா மடற்றிறம்’ முதலாக எதிர்மறையாக்கிக் கொண்டு இளம்பூரணர் கூறுவது வியப்பு மிக்கது (பொ. 55). “மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்” என்பதற்கு, “குற்றமற்ற செயலையுடைய மழையும் பனியும் வெயிலுமாகிய மூவகைக் காலத்தினையும் நெறியினாற் பொறுத்த அறிவன் பக்கமும்” எனப் பொருள் வரைந்து, “இறந்த காலம் முதலாகிய மூன்று காலத்தினையும் நெறியினால் தோற்றிய அறிவன் பக்கம் என்றாலோ எனின், அது முழுதுணர்ந்தோர்க்கல்லது புலப்படாமையின் அது பொருளன் றென்க” என விளக்குகிறார். தாம் சுட்டிய பொருளே பொருளெனப் பன்னிருபடலச் சான்று காட்டுகிறார். “அறிவன் என்றது கணியனை. மூவகைக் காலமும் நெறியினால் ஆற்றுதலாவது பகலும் இரவும் இடை விடாமல் ஆகாயத்தைப் பார்த்து ஆண்டு நிகழும் வில்லும் மின்னும் ஊர்கோளும் தூமமும் மீன் வீழ்வும் கோள் நிலையும் மழை நிலையும் பிறவும் பார்த்துப் பயன்கூறல்” என மேல் விளக்கம் செய்கிறார் (பொ. 74). எத்தகு நாகரிகமாக மறுக்கிறார். அவருரை முதலுரையாகலின் மறுப் புரை மிகக் கூறவேண்டும் நிலையில்லை. எனினும் பல்வேறு பாடங் களும் உரைகளும் பற்பலரிடத்துக் கேட்டிருக்கக்கூடும். அவற்றை உட்கொண்டு ஒரு விளக்கம் கூறுகிறார். “பன்னிரு படலத்துள் கரந்தைக்கண் புண்ணொடு வருதல் முதலாக வேறுபடச் சிலதுறைகள் கூறினாராதலின், புண்படுதல் மாற்றோர் செய்த மறத்துறையாகலின் அஃது இவர்க்கு மாறாகக் கூறலும் மயங்கக் கூறலு மாம். ஏனையவும் இவ்வாறு மயங்கக் கூறலும் குன்றக் கூறலும் மிகைபடக் கூறலும் ஆயவாறு எடுத்துக்காட்டின் பெருகுமாதலின் உய்த்துணர்ந்து கண்டு கொள்க” என அமைதி காட்டுகின்றார். ஆகலின் மறுப்புக் கூறுதலில் இளம்பூரணர் பெரிதும் மனங் கொண்டிலர் என்பதும், கற்பார் தம் ‘நுண்மாண் நுழைபுலத்தால்’ கண்டுகொள்வார் என அமைந்தார் என்பதும் விளங்கும். தலைவிக்குக் களவில் கூற்று நிகழுமிடங்கள் என்பது குறிக்கும் துறைகளுள் ஒன்று ‘கட்டுரை இன்மை’ என்பது. அதற்குச் சான்று வேண்டுமோ? ‘கட்டுரை இன்மைக்குக் கூற்று நிகழாது’ என்பதும் கூறுகின்றார். எவரேனும் அதற்குச் சான்று இல்லையே என ஐயுறுவரோ என்பதை உன்னித்த குறிப்பு இது (பொ. 109). ‘சிற்றாறு பாய்ந்தாடும்’ எனப் பன்னீரடிப் பஃறொடை வெண்பா ஒன்றைக் காட்டுகிறார் இளம்பூரணர் (பொ. 123). அதில், “இது பன்னிரண் டடியான் பெருவல்லத்தைக் கூற வந்த இன்னிசைப் பஃறொடை வெண்பா” என்று குறிப்பு வரைகிறார். ‘பெருவல்லம்’ என்ற பெயர் இல்லாக்கால் இப் பாடற் பொருள் எவ்வாற்றானும் காணற்கரிது. ஆதலால் ‘திறவு’ வேண் டுங்கால் தந்து செல்லும் `திறம்' இளம்பூரணர் உடைமையாக இருந்துளது எனலாம். அவரே, ‘சூத்திரத்தாற் பொருள் விளங்கும்’ எனவும் (பொ. 585) விடுத்துச் செல்கிறார். சில வழக்காறுகள் இளம்பூரணர் காலத்து வழக்காறுகள் சில அவர் உரை வழியே அறிய வாய்க்கின்றன. எட்டி, காவிதி என்னும் பட்டங்கள் வழங்குவதுபோல் ‘நம்பி’ என்னும் பட்டம் வழங்குதல் (எ. 155), மகப்பாலுக்காக ஆடு வளர்த்தல் (எ. 220), புளிச்சோறு ஆக்குதல் (எ. 247), பேயோட்டுதல் (சொ. 312), வெள்ளாடை மகளிர் உடுத்தல் (சொ. 412), தைந்நீராடல் (சொ. 50), குறித்ததொரு நாளில் கறந்தபால் முழுவதையும் அறத்திற்கென ஆக்குதல் (சொ. 50), ஆடு மாடுகள் தினவுதீரத் தேய்த்துக் கொள்ள `ஆதீண்டு குற்றி' நடுதல் (சொ. 50), சேவற் சண்டை நடத்துதல் (சொ. 61), ஒற்றிக்கலம் (ஆவணம்) எழுதுதல் (சொ. 76), நெல்லடித்துத் தூற்றும் களத்திற்குத் ‘தட்டுப்புடை’ எனப்பெயர் வழங்குதல் (சொ. 77), வெற்றிலையும் பூஞ்செடியும் நடுதல் (சொ. 110), பொழுதின் ஒரு பகுதியைக் கூறு எனக் கூறுதல் (பொ. 9) முதலிய வழக்காறுகள் ஆங்காங்கு அறிய வருகின்றன. பல்துறைப் புலமை நிறுத்தளத்தல், பெய்தளத்தல், நீட்டியளத்தல், தெறித்தளத்தல் தேங்கமுகந்தளத்தல், சாத்தியளத்தல், எண்ணியளத்தல் என எழுவகை அளவைகளைக் கூறுவதும் (எ. 7), “கடுவும் கைபிழி யெண்ணெயும் பெற்றமையான் மயிர் நல்ல ஆயின” என்றும், “எருப்பெய்து இளங்களை கட்டு நீர் கால் யாத்தமையால் பைங்கூழ் நல்ல” என்று கூறுவதும் (சொ. 21, 22) “விலங்கும் மரனும் புள்ளும் உள்ள நோய் உற்றாற்கு மனக்குறைக்கு மறுதலை மாற்றம் கூறுவன போலும் குறிப்பின” எனலும் (சொ. 416) வாளானும் தோளானும் வேறலன்றி, “சொல்லான் வேறலும் பாட்டான் வேறலும் கூத்தான் வேறலும் சூதான் வேறலும் தகர்ப்போர் பூழ்ப்போர் என்பனவற்றான் வேறலும்” எனப் போர்வகை அடுக்குதலும் (பொ. 74) (அடியர்) “அகத்திணைக்கு உரியரல்லரோ எனின், அகத்திணை யாவன அறத்தின் வழாமலும் பொருளின் வழாமலும், இன்பத்தின் வழாமலும், இயலல் வேண்டும்; அவையெல்லாம் பிறர்க்குக் குற்றேவல் செய்வார்க்குச் செய்தல் அரிதாகலானும், அவர் நாணுக் குறைபாடுடைய ராகலானும், குறிப்பறியாது வேட்கை வழியே சாரக்கருதுவராகலானும், இன்பம் இனிது நடத்துவார் பிறரேவல் செய்யாதார்” என்பதனானும் “இவர் புறப் பொருட் குரியராயினார் என்க” என்பதனானும் பிறவற்றாலும் இளம்பூரணர் பல்துறைப் புலமை நன்கறிய வருகின்றது. “சாத்தன் கையெழுதுமாறு வல்லன்; அதனால் தன் ஆசிரியன் உவக்கும்; தந்தை உவக்கும்” என்பதால் உரையாசிரியர் கையெழுத்தழகை எவ்வளவு விரும்பினார் என்பது விளங்கும் (சொ. 40). “மனைவியைக் காதலிக்கும்; தாயை உவக்கும்” என்பவற்றால் வாழ்வியல் நுணுக்கத்தை எவ்வளவு தேர்ந்திருந்தார் இளம்பூரணர் என்பது விளங்கும் (சொ. 72). மணந்தபின்னரும் மனைவியைக் காதலிக்கலாம் எனவும், ஒருத்தியை மணந்த பின்னரும் தன் தாயை உவந்து பாராட்டலாம் எனவும் கூறல் அத்தகைய தூய துறவர் இல்லறம் நல்லறமாகத் திகழ வழிகாட்டவும் வல்லார் என்பதை மெய்ப்பிப்பதாம். - இரா. இளங்குமரன் தமிழ்வளம் -19, தமிழர் வாழ்வியல் இலக்கணம் நூலில் இருந்து எடுக்கப்பட்டது பாயிரம் தெளிவுரை வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து வழக்குஞ் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடிச் செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல் நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து அறங்கரை நாவின் நான்மறை முற்றிய அதங்கோட் டாசாற்கு அரில்தபத் தெரிந்து மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த தொல்காப் பியனெனத் தன்பெயர் தோற்றிப் பல்புகழ் நிறுத்த படிமை யோனே. தெளிவுரை: வடவேங்கடம் தென்குமரி - வடக்கில் அமைந்த வேங்கட மலைக்கும், தெற்கில் அமைந்த குமரிமலைக்கும். ஆ இடை - இடையே அமைந்த தாகிய தமிழ் கூறு நல் உலகத்து - தமிழ் வழங்கும் நல்ல நிலப்பரப்பிடத்து வழக்கும் செய்யுளும் ஆ இரு முதலின் - மக்கள் வழக்கு நூல்வழக்கு ஆகிய இரண்டின் அப்படையிலும், எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி - எழுத்தையும் சொல்லையும் பொருளையும் நுட்பமாக ஆராய்ந்து, செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு - செம்மை யாய் இயற்கையோடு பொருந்தி அமைந்த நிலத்தின் இயல்பொடு முந்து நூல் கண்டு - தம் காலத்துக்கு முன்னை இருந்த புலமையாளர்களால் செய்யப்பட்ட இலக்கிய இலக்கண நூல்களைத் தொகுத்துப் பயின்று, முறைப்பட எண்ணி - மேலும் பலவகையாலும் நூன் முறையை ஆராய்ந்து, புலம் தொகுத்தோனே - முன்னவர் புலமை எதுவும் விடுபாடு இல்லாமல் தொகுத்து அமைத்தோன் தன், போக்கு அறு பனுவல் - குற்றமற்ற நூலினை, நிலந்தரு திருவிற்பாண்டியன் அவையத்து - நிலந்தரு திருவிற் பாண்டியன் என்பான் பெயரால் அமைந்த அவையின் கண், அறங்கரை நாவின் - அறங்கூறல் அன்றிப் பிற கூறா நாவினை யுடையவனும் நான்மறை முற்றிய - அக்காலத்தில் தமிழில் வழங்கிய நான்கு மறைகளையும் தேர்ந்தறிந்த முதிர்புலமையுடையவனும் ஆகிய அதங்கோட்டு ஆசாற்கு - அதங்கோட்டு ஆசான் என்பானுக்கு, அரில் தப தெரிந்து - எக்குற்றமும் இல்லையாகத் தெரியச் செய்து, மயங்காமரபின் - எவர்க்கும் எந்த ஐயமும் திரிபும் ஏற்படாத வகையில், எழுத்து முறை காட்டி - நூல் எழுதப்பட்ட முறையைத் தெளிவுற விளக்கிக் காட்டி மல்குநீர் வரைப்பின் - நீர் நிரம்பிய கடல் சூழ்ந்த உலகில் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என - மேன்மாந்தர்க்குரிய ஐம்புல அடக்கமும் ஒருங்கே அமைந்த தொல்காப்பியன் என்று தன் பெயர் தோற்றி - தன் பெயரை விளங்கச் செய்து பல் புகழ் நிறுத்த படிமையோன் -பல்வகைப் புகழுக்கும் நிலைபேற்றாளனாய் விளங்கிய தவப்பெருந்தன்மையன் ஆவன். - என்பது இதன் தெளிவுரை. விளக்கம்: வடவேங்கடம் என்றது வடக்கே அமைந்த வேங்கடமலையை. சங்கச் சான்றோர் வேங்கடத்து உம்பர் (அப்பால்) மொழி பெயர் தேயம் என 26 இடங்களில் குறித்துளர் என்பது எண்ணத்தக்கது. வடவேங்கடம் என்றது `மலை’ ஆதலால், தென்குமரி என்பதும் மலையே யாம்! ஏனெனில், “மேலைச் சேரிக் கோழி வென்றது என்றால், கீழைச்சேரிக் கோழி தோற்றது” என்பது பழைய உரைகளின் வழியே அறிவது. `கோழி’க்குக் கோழியைச் சுட்டுதலே மரபு. மேலூர் - கீழூர்; தெற்குத் தெரு - வடக்குத்தெரு; தென்மொழி - வடமொழி என்பவை அறிக. பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு தென்திசை யாண்ட தென்னவன் என்பது சிலப்பதிகாரம், கடலூழியால் குமரிமலை, பன்மலைத்தொடர் பஃறுளியாறு, அழிந்தமை தெளிவாம். இழந்த மண்ணை ஒப்பப் பெருக்கவே `நிலந்தரு திரு’வுடையான் எனப்பட்டானாம். `பஃறுளி’ ஆறு அழிந்துபட, அப்பெயர் போற்றும் வகையால் நாஞ்சில் நாட்டு வள்ளுவன் பொற்றைப் பகுதியில் `பறளி’ யாறு என்ற ஒன்றுண்மை இன்றும் அறியலாம். தமிழ் கூறு நல்லுலகம் என்பது தமிழ் வழங்கும் நாடு என்பதாம். “தண் தமிழ் வேலித் தமிழ் நாட்டகம்” என்று பரிபாடல் இதனைக் கூறும். ஒரு மொழி, உயிராறு போல் என்றும் விளங்க வேண்டுமானால், மக்கள் வழக்கு, நூல்வழக்கு ஆகிய இரண்டு வழக்கும் இணைந்து இயங்கல் வேண்டும். மக்கள் வழக்கு ஒழிந்தால், அம்மொழி உயிருள்ள மொழியாகக் கருதப்படமாட்டாது. ஆதலால், இருவகை வழக்குகளையும் ஆய்ந்து நூல் செய்தார். எழுத்து, சொல் ஆகிய இரண்டும் மொழிமரபு காப்பவை. அவ்விரண்டையே மற்றை மொழிகள் கொண்டிருக்க, தொல்காப்பியர் பொருள் இலக்கணமும் செய்தமை, மக்கள் வாழ்வியல் காப்பதாம். மொழிக் காவலால் மக்கள் வாழ்வும், மக்கள் வாழ்வால் மொழியும் பின்னிப் பிணையும் சிறப்பினது இப்பகுப்பாம். `முந்து நூல்’ என்பது தொல்காப்பியர் காலத்துக்கு முற்பட்டதாய், அவர் பயில வாய்த்ததாய் அமைந்த நூல்களாம்! `அகத்தியம் முந்து நூல்’ என்பார் காட்டும் நூற்பாக்கள் என ஒரு `திரட்டு நூல்’ வெளிவந்துளது. `பேரகத்தியத் திரட்டு’ என்பது அதன் பெயர். அந்நூற்பாக்கள் அனைத்தும் உறையூர் முத்துவீர உபாத்தியாயர் என்பார் இயற்றிய `முத்து வீரியம்’ என்னும் 19ஆம் நூற்றாண்டு நூலை முன்வைத்துக் கொண்டு, அந்நூலினும் வடசொற்கள் பெருக ஒருவர் உருவாக்கிய போலிநூல் ஆகும். முத்துவீரிய நூற்பாவை முன்வைத்து, அகத்தியர் பெயரால் விளங்கும் நூற்பாவைப் பின்வைத்து `பேரகத்தியப் பெரும்புரட்டு’ என்றொரு நூல் யான் நாற்பது ஆண்டுகளின் முன்னே எழுதினேன்! அகத்தியன் என்னும் பெயர் பாட்டு தொகை ஆகிய 2381 பாடல்களில் ஒன்றில் தானும் இல்லை என்பதே இதனை மெய்ப்பிக்கும். சமதக்கினியார், திரணதூமாக்கினியார், பாண்டியன் மாகீர்த்தி, உலோபா முத்திரை முதலியவை அனைத்தும், முதல் தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரண ராலோ பிறராலோ காட்டப்படாமல், நச்சினார்க்கினியர் புனைந்த புனைவாம்! பாண்டியன் மாகீர்த்தி 24 ஆயிரம் ஆண்டு வீற்றிருந்தான் என்பதொன்று போதாதா, இட்டுக்கட்டல் என்பதற்கு! நம்பி அகப்பொருள், புறப்பொருள் வெண்பாமாலை, நன்னூல் முதலாயவை கூறுவன, முன்னை நூலாம் தொல்காப்பியச் சான்று ஆகிவிடாது. கரகம் கவிழ்த்த காவிரிப் பாவை முதலியவை புராணப் புனைவுகளாம் அதங்கோடு, விளங்கோடு என்பவை பழஞ்சேர நாட்டகத்தது! அங்கே காப்பியக்குடி என்னும் பெயரோடு ஓர் ஊர் உண்மையும் எண்ணத்தக்கது. தொன்மையான மரபுகளைக் காக்கும் நூலோ எனின், தொல்காப்பிய நூலின் தொடக்க இயல் நூன்மரபு; நிறைவு இயல் மரபியல்; மேலும் மொழிமரபு, தொகைமரபு, விளிமரபு என இயற்பெயர்கள் உண்மையும், மாற்றரும் சிறப்பின் மரபு (1500) என்றும், மரபுநிலை திரியின் பிறிதுபிறி தாகும் (1591) என்றும், மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை (1590) என்றும், மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தல் (1597) என்றும், மரபினைக் கட்டிக் காத்தும், புதிது புதிதாக வரும் சொல் - ஆக்கும் சொல் - ஆகியவற்றை, `மொழிமரபு மாறாமல் கொள்க’ என்பதற்கு, கடிசொல் இல்லை காலத்துப் படினே (935) என்றும் கூறியதுடன் சொல்லாக்கும் வகையைக் `கிளவியாக்கம்’ என ஓர் இயலே வகுத்துக் காட்டினார் தொல்காப்பியர். சொல்லாக்க அடிச்சொல் காட்டுவாராய், உரியியல் என்று ஓர் இயல் விரிவாக வைத்தார். உரியாவது தோல்! தொல் - தோல் தோலாம் பையுள், பொறி, புலன் ஆகியவை தோன்றி உருக்கொண்ட தெண்ணுக! ஆதலால், `தொல் காப்பு இயம்’ என்று பழமரபுகளைக் காக்கும் முறையை நயமாகக் கூறும் நூல் எனப் பெயரிட்டமையால், அவர் தொல்காப்பியன்’ எனத் தம் பெயர் தோன்றச் செய்தவர் ஆனார். மறுப்பு, விரிப்பு என அமையின் நூல் பெருகுமாகலின், இவ்விளக்கம் அமைவதாம். தெளிவுரை ஆதலால் எளிமையும் சுருக்கமும் பழையவுரைப் பார்வையும் புதுப்பார்வைக் குறிப்பும் போற்றப்படுவது இவ்வுரையாம். பொருள்: வடக்கில் அமைந்த வேங்கட மலைக்கும், தெற்கில் அமைந்த குமரிமலைக்கும், இடையே அமைந்ததாகிய, தமிழ் வழங்கும் நல்ல பரப்பிடத்து மக்கள் வழக்கு நூல்வழக்கு ஆகிய இரண்டின் அடிப்படையிலும், எழுத்தையும் சொல்லையும் பொருளையும் நுட்பமாக ஆராய்ந்து, செம்மையாய் இயற்கையொடு பொருந்தி அமைந்த நிலத்தின் அமைவொடு, தம் காலத்துக்கு முன்னை இருந்த புலமையாளர்களால் செய்யப்பட்ட இலக்கிய இலக்கண நூல்களைத் தொகுத்துப் பயின்று, மேலும் பலவகையாலும் நூல்முறையை ஆராய்ந்து, முன்னவர் புலமை எதுவும் விடுபடுதல் இல்லாமல் தொகுத்து அமைத்தோன், தன் குற்றமற்ற நூலினை நிலந்தரு திருவிற் பாண்டியன் என்பான் பெயரால் அமைந்த அவையின் கண், அறங்கூறல் அன்றிப் பிறகூறல் இல்லாத நாவினையுடையவனும் அக்காலத்தில் தமிழில் வழங்கிய நான்கு மறைகளையும் தேர்ந்தறிந்த முதிர்புலமையுடையவனும் ஆகிய அதங்கோட்டு ஆசான் என்பானுக்கு எக்குற்றமும் இல்லையாகத் தெரியச்செய்து, எவர்க்கும் எந்த ஐயமும் திரிபும் ஏற்படாவகையில் நூல் எழுதப்பட்ட முறையைத் தெளிவுற விளக்கிக் காட்டி, நீர் நிரம்பிய கடல் சூழ்ந்த உலகில் மேன்மாந்தர்க்குரிய ஐம்புல அடக்கமும் ஒருங்கே அமைந்த தொல்காப்பியன் என்று தன் பெயரை விளங்கச் செய்து, பல்வகைப் புகழுக்கும் நிலைபேற்றாளனாய் விளங்கிய தவப்பெருந்தன்மையன் ஆவன். இதன் வழியே பின்னவர் கண்ட பாயிரத்து இலக்கணம்! 1) ஆக்கியோன் பெயர் - தொல்காப்பியன் 2) வழி- முன்னையோர் செய்த நூல்வழி 3) எல்லை - வடவேங்கடம், தென்குமரி ஆயிடைத் தமிழ் உலகம் 4) நூற்பெயர் - தொல்காப்பியம் 5) யாப்பு - நூற்பா 6) நுதலிய பொருள் - எழுத்து சொல் பொருள் 7) கேட்போர் - அதங்கோட்டாசான் முதல் அவையோர் 8) பயன் - இருவகை வழக்கும் அறிதல் 9) காலம் - நிலந்தரு திருவிற்பாண்டியன் காலம் 10) களன் - பாண்டியன் அவையம் 11) காரணம் - பழமரபுகளைக் காத்தல் நூல் நூற்பா நூல் என்பது பழநாளில் இலக்கணத்தைக் குறிப்பதாகவே இருந்தது. செய்யுளை, ஏழுவகையாகக் கூறுவார் தொல்காப்பியர். அடிவரையறை யுடையவை `பா’ எனப்படும். அடிவரையறை (அளவு) இல்லாதவை ஆறு வகையாம். அவற்றுள் முதலாவதாக நிற்பது `நூலினான’ என்பது (1420, 1421) அது `நூற்பா’ எனப்படும். செய்யுளியலில் நூலின் இலக்கணம், நூற்பா இலக்கணம் முதலிய வற்றைக் கூறுவார். ஆசிரியர் இலக்கணத்தை நுவல்வார் (கூறுவார்)! அதனை மாணவர் கேட்பர்! `நுவல்’ என்பதன் வழியாக `நூல்’ வந்தது. இரண்டு குறில்கள் ஒரு நெடிலாதல் சொல்லியல் முறை. எ-டு. `அகல்’ என்பது ஒரு மரப்பெயர். அது வளர்ந்து கிளைகள் விரிந்து வீழ்துகள் தோன்றி மண்ணில் ஊன்றி நீண்டும் அகன்றும் செல்வதால் அகல் ழூ ஆல் ஆயது; பகல் ழூ பால் ஆகும். பொழுது ழூ போழ்து, போது. விழுது ழூ வீழ்து என்று வருவன மிகப் பலவாம். `நூலே நுவல் வோன் நுவலும் திறனே’ என்பது நன்னூல். தொல்காப்பியத்தின் பின், நேமிநாதம் என்னும் நூல் உண்டாயது. அது தொல்காப்பியத்தை நோக்க அளவில் சிறிதாகலின், `சின்னூல்’ எனப்பட்டது. அதன்பின் தோன்றிய இலக்கண நூல் நன்னூல்; அதன் பின் தொன்னூல், தென்னூல், இன்னூல் என்பன தோன்றின. நூற்பாவை, இலக்கணம் கூற எடுத்துக் கொண்டது ஏன் எனின், சொல்லும் இலக்கணத்துக்குத்தக இருசீர், முச்சீர், நாற்சீர் என அடிகள் வரலாம். பொருள் விரிவுக்குத்தக முப்பதடி நாற்பதடி என நீளவும் ஆகலாம் (1057, 1060). சாயல் மென்மை (808) ஐவியப் பாகும் (868) என இரண்டு சீர்களிலும், கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள என நான்கு சீர் ஓரடியாகவும் (855) நூற்பா வரலாம். மற்றைப் பாவகையில் குறைந்த அடியளவு உடையது குறட்பாவே. அதனால் அது முதற்பா எனப்பட்டது. அப் பா வகையில் பாடியவர் திருவள்ளுவர் ஆதலால், முதற்பாவலர் எனப்பட்டார். - இரா. இளங்குமரன், தொல்காப்பியம் தெளிவுரை எழுத்ததிகாரம், பக்.10-15 எழுத்ததிகாரம் - இளம்பூரணம் வ.உ.சிதம்பரம்பிள்ளை - பதவுரை (1928) தொல்காப்பியம் - முதல் பதிப்புரை “தொல்காப்பியம்” என்னும் இந்நூல் தமிழ் மொழிக்குத் தலையாக விளங்கும் ஒப்புயர்வாற்ற ஓர் இலக்கணம், இஃது அகத்தியனது பன்னிரு மாணாக்கருள் “திரண தூமாக்கினி’ என்னும் இயற்பெயரினையும், “பொருந்தக் கற்றுப் புரைதப வுணர்ந்தோர் நல்லிசை நிறுத்த தொல்காப்பியன்” என்னும் புகழ்ப்பெயரினையும் கொண்டு விளங்கிய ஓர் முனிவனால் இயற்றப்பெற்றது. இதற்கு முதல் நூல் அகத்தியனால் இயற்றப்பெற்ற “அகத்தியம்” என்ப. இந்நூல் பன்னீராயிரம் வருஷங்களுக்குமுன் இயற்றப்பெற்றதென வீரசோழியத்தின் பதிப்புரையில் திருமன். சி.வை. தாமோதரம்பிள்ளை நிலைநாட்டியுள்ளனர். ஆண், பெண், அலிகளை ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால் விகுதிகளால் உணர்த்துவது தமிழ்மொழி ஒன்றே. ஆண்பால் விகுதியைப் பொருந்தி ஆணைக்குறியாமலும், பெண்பால் விகுதியைப் பொருந்திப் பெண்ணைக் குறியாமலும், ஒன்றன்பால் விகுதியைப் பொருந்தி அலியைக் குறியாமலும் நிற்கும் சொற்கள் ஆரியம் முதலிய மொழிகளில் எண்ணில உண்டு. உயர்திணை, அஃறிணை என்னும் தமிழ் இலக்கணப் பாகுபாடு ஆரியம் முதலியவற்றில் இல்லை. நிலத்தின் பாகுபாடுகளையும், அவற்றின் உரிப்பொருள், கருப்பொருள் களையும் அவற்றின் மக்களது ஒழுக்கங்களையும் கூறுவது தமிழ் இலக்கணம் ஒன்றே. இவ்வகைத் தனிச் சிறப்புப்பொருந்திய இத்தமிழ் இலக்கணத் துள்ளும் ஆரியமொழிகளில் சிலவற்றையும், ஆரியர் பழக்க வழக்கங்கள் சிலவற்றையும் ,ஆரியர் கொள்கைகள் சிலவற்றையும், இந்நூலாசிரியன் நுழைத்திருத்தலை ஆங்காங்குக் காணலாம். ஆயினும், தமிழ் மக்களின் முற்காலப் பழக்க வழக்க ஒழுக்கங்களும், தமிழ் மொழியின் நேர்மையும் மாண்பும் ஏற்றமும் இந்நூலின்கண் தெற்றெனக் காணலாகும். இந்நூலின் எழுத்ததிகாரச் சொல்லதிகாரச் சூத்திரங்களைக் கற்போர் நன்னூலாதிய வற்றைப் புனனூலாதியனவாகக் காண்பரென்பது திண்ணம்; இந்நூற்கு உரை எழுதினோர் இளம்பூரணர், கல்லாடர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், சேனாவரையர் என்னும் ஐவர். அவருள் இளம்புரணரும், பேராசிரியரும் இந்நூலின் எழுத்ததிகாரம் சொல்ல திகாரம், பொருளதிகாரம் என்னும் மூன்றதிகாரங்களுக்கும் உரை இயற்றியுள்ளார்கள். கல்லாடர் எழுத்ததிகாரத்திற்கும் சொல்லதிகாரத் திற்கு மாத்திரம் உரையெழுதியிருப்பதாகவும், சேனாவரையர் சொல்லதி காரத் திற்கு மாத்திரம் உரையெழுதியிருப்பதாகவும் தெரிகிறோம். அவ் வைந்துரைகளும் முறையே இளம்புரணம், கல்லாடம், பேராசிரியம், நச்சினார்க்கினியம், சேனாவரையம் என வழங்குகின்றன. இவ்வுரைகளில் நச்சினார்க்கினிய எழுத்ததிகாரமும் சொல்லதி காரமும் தனித்தனியே அச்சாகி வெளிவந்துள்ளன. நச்சினார்க்கினியப் பொருளதிகாரமும், பேராசிரியப் பொருளதி காரமும் கலந்து அச்சாகி வெளிவந்துள்ளன. பேராசிரியச் சொல்லதிகாரம் கரந்தை தமிழ்ச்சங்கத்தாரால் அச்சிடப்பெற்று முடிந்து விரைவில் வெளிவரும் நிலைமையில் இருக்கின்றது. இளம்பூரணம் எழுத்ததிகாரம் பல ஆண்டுகளுக்கு முன்னர்ப் பூவிருந்தவல்லிக் கன்னியப்ப முதலியாரால் அச்சிட்டு வெளிப்படுத்தப்பட்டது. அவ்வெழுத் ததிகாரத்தைப் பல ஏட்டுப் பிரதிகளோடு ஒப்பிட்டுப் பார்த்துத் திருத்தி யான் இப்பொழுது அச்சிட்டு வெளிப்படுத்துகின்றேன். இளம்பூரணம் பொருளதி காரம் அகத்திணையியலும் புறத்திணையியலும் முன்னரே அச்சிட்டு வெளிப்படுத்தியுள்ளேன். சொல்லதிகாரமும் பொருளதிகாரத்தின் பிந்திய இயல்களும் விரைவில் அச்சிட்டு வெளியிடப்பெறும். இளம்புரணரே முதல் உரையாசிரியர். அவர் “உரையாசிரியர்” எனவே யாவராலும் வழங்கப்படும் பெருமைவாய்ந்தவர். அவர் மூன்று அதிகார உரைகளுள்ளும் எழுத்ததிகாரவுரை “எழுத்திற்கு இளம்பூரணம்” என்று யாவராலும் புகழப்பெற்றது. கற்போர் எளிதில் உணருமாறு பொருட்டொடர்புநோக்கிச் சூத்திரச் சொற்களையும் அவற்றின் பொருட் சொற்களையும் பிரித்தும் நிறுத்திப் படித்தற்குரிய அடையாளங்களிட்டும் பதிப்பித்துள்ளேன். ஒவ்வோரிடத்தில் பாட வேறுபாடும், உரைவேறுபாடும் சேர்த்துள்ளேன். எனது சேர்ப்பிற்கு முன்னும் பின்னும் முறையே () இக்குறிகள் இட்டுள்ளேன். இவ்வெழுத்ததிகாரத்தையும் பொருளதிகாரத்தையும் 1920ஆம் வருடத்தில் அச்சிடத் தொடங்கினேன். பொருளதிகாரம் அகத்திணையியல் புறத்திணையியல்கள் முன்னரே அச்சாகி வெளிவந்துள்ளன. இஃது இப்பொழுது வெளிவருகின்றது. பொருளதிகார ஏனைய இயல்களும் சொல்லதிகாரமும் விரைவில் வெளிவரும். கோவிற்பட்டி வ.உ. சிதம்பரம்பிள்ளை 1.6.1928. எழுத்ததிகாரம் எழுத்தினது அதிகாரத்தையுடையது எழுத்ததிகாரம் எனக் காரணப்பெயராயிற்று. அதிகாரம்-முறைமை. எழுத்துக்களின் இலக்கணத்தை முறைமைப்பட விரித்துரைக்கும் படலம் எழுத்ததிகாரம் என வழங்கப் பெறுவதாயிற்று. எழுத்தாவது மக்களாற் பேசப்படும் மொழிக்கு முதற்காரணமாகிய ஒலியாகும். தொல்காப்பியனாரால் எழுத்தெனச் சொல்லப்பட்டவை அகர முதல் னகர மீறாகவுள்ள முப்பதும் குற்றியலிகரம், குற்றியலுகாம், ஆய்தம் என்னும் மூன்றும் ஆக முப்பத்து மூன்றாகும். இவற்றிற்கு எழுத்தென்னும் பெயர் தமக்கு நெடுங்காலத்திற்கு முன்னே தோன்றி வழங்கியதென்பதனை ‘எழுத்தெனப்படுப, அகர முதல் னகர இறுவாய் முப்பஃது என்ப’ எனவரும் சூத்திரத்தால் தொல்காப்பியனார் குறிப்பிடுகின்றார். விலங்கு முதலிய அஃறிணையுயிர்களின்றும் மக்களை வேறு பிரித்து உயர்திணை மாந்தராக உயர்த்தும் அறிதற் கருவியாக விளங்குவது மொழி. அத்தகைய மொழிகளுள் பேச்சு வழக்கொன்றே பெற்று எழுத்துருப் பெறாதனவும் உள்ளன. பேச்சு மொழி ஓரிடத்தும் ஒருகாலத்துமே பயன்படும். எழுத்துமொழியோ தன்மை, முன்னிலை, படர்க்கையாகிய மூவிடத்தும் இறப்பு, நிகழ்வு, எதிர்வு ஆகிய முக்காலத்தும் ஒப்பப் பயன் தருவதாகும். பனையோலைகளிலும் கல்லிலும் பிற பொருள்களிலும் எண்ணங்களை எழுத்தாற் பொறித்துவைக்கும் வழக்கம் பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னரே நம் தமிழ் மக்களால் கைக்கொள்ளப்பெற்று வருகின்றது. ‘செல்லுந் தேஎத்துப் பெயர்மருங் கறிமார், கல்லேறிந் தெழுதிய நல்லரை மராஅத்த, கடவுளோங்கிய காடேசு கவலை’ (மலைபடு - 394-395) எனவும், ‘பெயரும் பிடும் எழுதி யதர்தொறும், பீலிசூட்டிய பிறங்குநிலை நடுகல்’ (அகம் - 131) எனவும் ‘பெறிகண்டழிக்கும் ஆவணமாக்களின் (அகம் - 77) எனவும் வரும் சங்க இலக்கியத் தொடர்களால் இச்செய்தி புலனாதல் காணலாம். மக்கள் தம்மாற் பேசப்படும் மொழியிலமைந்த ஒலிகளைத் தனித்தனியாகப் பிரித்தறியும் உணர்வுபெற்ற பின்னர்த்தான் கருத்துருவாகிய அவ்வொலிகளைக் கட்புலனாக வரிவடிவில் எழுதுதல்கூடும். அறிஞர்களது நன்முயற்சியால் ஒலிகளுக்குரிய வரிவடிவங்க ளமைந்த பின்புதான் அவ்வொலிகளுக்கு எழுத் தென்னுங் காரணப்பெயர் வழங்கியிருத்தல் வேண்டும். இவ் வுண்மை ‘எழுதப்படுதலின் எழுத்தே’1 எனவரும் பழைய சூத்திரத் தொடரால் அறிவுறுத்தப்பட்டமை காண்க. மெய்யெழுத்துக்கள் புள்ளிபெறுதலும் எகர ஒகரக் குறில்கள் புள்ளிபெறுதலும் குற்றியலுகரம் புள்ளிபெறுதலும் மகரக்குறுக்கம் மெய்க்குரிய மேற்புள்ளியோடு உள்ளேயொரு புள்ளிபெறுதலும் ஆகிய எழுத்து வடிவங்களிற் சிலவற்றைத் தொல்காப்பியனார் தம் நூலகத்து விளக்கியுள்ளார். ஆகவே தொல்காப்பியனார்க்கு நெடுங்காலத்திற்கு முன்பே தமிழ் முன்னோர் அகர முதல் னகர விறுவாயுள்ள எழுத்துக்களுக்குரிய வரிவடிவங்களை யமைத்துத் தமிழ் நெடுங்கணக்கினை ஒழுங்கு செய்துள்ளமை நன்கு தெளியப்படும். - க. வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 163-164 இளம்பூரணருரை சிறப்புப் பாயிரம் வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலின் எழுத்துஞ் சொல்லும் பொருளு நாடிச் செந்தமி ழியற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு முறைப்பட வெண்ணிப் புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல் நிலந்தரு திருவிற் பாண்டிய னவையத் தறங்கரை நாவின் நான்மறை முற்றிய அதங்கோட் டாசாற் கரில்தபத் தெரிந்து மயங்கா மரபி னெழுத்துமுறை காட்டி மல்குநீர் வரைப்பி னைந்திரம் நிறைந்த தொல்காப் பியனெனத் தன்பெயர் தோற்றிப் பல்புகழ் நிறுத்த படிமை யோனே. எந் நூல் உரைப்பினும் அந் நூலுக்குப் பாயிரம் உரைத்து உரைக்கவென்பது மரபு. என்னை? “ஆயிர முகத்தான் அகன்ற தாயினும், பாயிரமில்லது பனுவ லன்றே” என்ப வாகலின். பாயிரமென்பது புறவுரை. அது நூற்குப் புறவுரையேல் அதுகேட்டு என்னை பயனெனின், கற்றுவல்ல கணவற்குக் கற்புடையாள்போல இன்றியமையாச் சிறப்பிற்றாயும், திருவமைந்த மாநகரத்திற்கு உருவமைந்த வாயின் மாடம்போல அலங்காரமாதற் சிறப்பிற்றாயும் வருதலானும், பாயிரம் கேளாதே நூல் கேட்குமேயெனின் குறிச்சி புக்க மான்போல மாணாக்கன் இடர்ப்படுமாகலானும், பாயிரங்கேட்டல் பயனுடைத் தாயிற்று. அப் பாயிரம் பொதுவும் சிறப்பும் என இருவகைத்து. எல்லா நூன்முகத்தும் பொதுவாக உரைக்கப் படுதலிற் பொதுவெனப்பட்டது. ‘ஈவோன் றன்மை’ முதலிய நூலுட் சொல்லும் பொருளல்லாத புறப் பொருளைக் கூறும் பொதுப்பாயிரம் போலாது, நூலகத்தெல்லாம் பயத்தன் மாத்திரையேயன்றி அந் நூலிற் சொல்லப்படுகின்ற பொருள் முதலிய உணர்த்தலின், அணியிழை மகளிர்க்கு அவ் வணியிற் சிறந்த ஆடைபோல நூற்குச் சிறத்தலாற் சிறப்பெனப்பட்டது. அவற்றுள் பொது நால்வகைத்து: “ஈவோன் தன்மை யீத லியற்கை, கொள்வோன் தன்மை கோடன் மரபென, ஈரிரண் டென்ப பொதுவின் தொகையே.” இதனான் அறிக. ஈவோர் கற்கப்படுவோரும் கற்கப்படாதோரும் என இருவகையர். கற்கப்படுவோர் நான்கு திறத்தான் உவமம் கூறப்படுவர். “மலைநிலம் பூவே துலாக்கோலென் றின்னர், உலைவி லுணர்வுடை யார்.” இதனான் அறிக. இனிக் கற்கப்படாதார்க்குக் கூறும் உவமமும் நால்வகைத்து: “கழற்பெய் குடமே மடற்பனை முடத்தெங்கு, குண்டிகைப் பருத்தியோ டிவையென மொழிப.” இதனான் அறிக. ஈதலியற்கை: “ஈத லியல்பே யியல்புறக் கிளப்பின், பொழிப்பே யகலம் நுட்ப மெச்சமெனப், பழிப்பில் பல்லுரை பயின்ற நாவினன், புகழ்ந்த மதியிற் பொருந்தும் ஓரையில், தெளிந்த அறிவினன் தெய்வம் வாழ்த்திக், கொள்வோ னுணர்வகை அறிந்தவன் கொள்வரக், கொடுத்தல் மரபெனக் கூறினர் புலவர்.” இதனான் அறிக. கொள்வோர் கற்பிக்கப்படுவோரும் கற்பிக்கப்படாதோரும் என இருவகையர். கற்பிக்கப்படுவோர் அறுவகையர். அவர்தாம், “தன்மக னாசான் மகனே மன்மகன், பொருள்நனி கொடுப்போன் வழிபடு வோனே, உரைகோ ளாளனோ டிவரென மொழிப.” இதனான் அறிக. இவர் தன்மை: “அன்னங் கிளியே நன்னிறம் நெய்யரி, யானை ஆனே றென்றிவை போலக், கூறிக் கொள்ப குணம்மாண் டோரே.” இதனான் அறிக. இனிக் கற்பிக்கப் படாதார் எண்வகையர்: “மடிமானி பொச்சாப்பன் காமுகன் கள்வன், அடுநோய்ப் பிணியாளன் ஆறாச் சினத்தன், தடுமாறு நெஞ்சத் தவனுள்ளிட் டெண்மர், நெடுநூலைக் கற்கலா தார்.” இதனான் அறிக. இவர் தன்மை: “குரங்கெறி விளங்கா யெருமை யாடே, தோணி யென்றாங் கிவையென மொழிப.” இதனான் அறிக. கோடன் மரபு: “கொள்வோன் முறைமை கூறுங் காலைப், பொழுதொடு சென்று வழிபடல் முனியான், முன்னும் பின்னும் இரவினும் பகலினும், அகலா னாகி அன்பொடு புணர்ந்தாங்கு, ஆசற உணர்ந்தான் வாவென வந்தாங்கு, இருவென இருந்தே டவிழென வவிழ்த்துச், சொல்லெனச் சொல்லிப் போவெனப் போகி, நெஞ்சுகள னாகச் செவிவா யாகக், கேட்டவை கேட்டவை வல்ல னாகிப், போற்றிக் கோட லவனது தொழிலே.”, “எத்திறத் தாசா னுவக்கும் அத்திறம், அறத்திற் றிரியாப் படர்ச்சிவழி பாடே.” “செவ்வன் தெரிகிற்பான் மெய்ந்நோக்கிக் காண்கிற்பான், பல்லுரையுங் கேட்பான் மிகப்பெரிதும் காதலான், தெய்வத்தைப் போல மதிப்பான் திரிபில்லான், இவ்வாறு மாண்பு முடையாற் குரைப்பவே, செவ்விதி னூலைத் தெரிந்து.” “வழக்கின் இலக்கணம் இழுக்கின் றறிதல், பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல், ஆசாற் சார்ந்தவை யமைவரக் கேட்டல், அம்மாண் புடையோர் தம்மொடு பயிறல், வினாதல் வினாயவை விடுத்த லென்றிவை, கடனாக் கொளினே மடநனி யிகக்கும்.” “அனையன் நல்லோன் கொள்குவனாயின், வினையி னுழப்பொடு பயன்றலைப் படாஅன்.” இவற்றான் அறிக. இவ்வாறு கோடன் மரபுடைய மாணாக்கன் நூன்முற்ற அறிந்தானா மாறு: “ஆசா னுரைத்தவை யமைவரக் கொளினும், காற்கூ றல்லது பற்றல னாகும்.” “அவ்வினை யாளரொடு பயில்வகை யொருபால், செவ்விதின் உரைப்ப அவ்விரு பாலும், மையறு புலமை மாண்புநனி யுடைத்தே.” இவற்றான் அறிக. சிறப்புப் பதினொரு வகைத்து: “ஆக்கியோன் பெயரே வழியே யெல்லை, நூற்பெயர் யாப்பே நுதலிய பொருளே, கேட்போர் பயனோ டாயெண் பொருளும், வாய்ப்பக் காட்டல் பாயிரத் தியல்பே.” “காலங் களனே காரண மென்றிம், மூவகை யேற்றி மொழிநரு முளரே.” இவற்றான் அறிக. இனி அச் சிறப்பிலக்கணம் செப்புமாறு: “பாயிரத் திலக்கணம் பகருங் காலை, நூனுதல் பொருளைத் தன்னகத் தடக்கி, ஆசிரியத் தானும் வெண்பா வானும், மருவிய வகையான் நுவறல் வேண்டும்.” இதனான் அறிக. நூல் செய்தான் பாயிரம் செய்வானல்லன்: “தோன்றா தோற்றித் துறைபல முடிப்பினும், தான்தற் புகழ்தல் தகுதி யன்றே” என்பவாகலின். பாயிரம் செய்வார் தன் ஆசிரியனும், தன்னோடு ஒருங்கு கற்ற மாணாக்கனும், தன் மாணாக்கனும் என மூவகையர். அவருள் இந் நூற்குப் பாயிரம் செய்தார் தன்னோடு ஒருங்கு கற்ற பனம்பாரனார். இதன்பொருள்: வடவேங்கடம் தென்குமரி ஆ இடைத் தமிழ் கூறும் நல் உலகத்து வழக்கும் செய்யுளும் அ இரு முதலின் - வடக்கின்கண் ணுளதாகிய வேங்கடமும் தெற்கின்கண் ணுளதாகிய குமரியுமாகிய அவற்றை எல்லையாகவுடைய நிலத்து வழங்கும் தமிழ்மொழியினைக் கூறும் நன்மக்களான் வழங்கும் வழக்கும் செய்யுளுமாகிய இரு காரணத்தானும், எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி – எழுத்திலக்கணத் தினையும் சொல்லிலக்கணத்தினையும் பொருளிலக்கணத்தினையும் ஆராய்ந்து, செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு முந்து நூல் கண்டு - (அவ் வாராய்ச்சியிற் குறைபாடுடையவற்றிற்குச்) செந்தமிழினது இயல்பு பொருந்தின செந்தமிழ் நிலத்து வழக்கொடு முதல்நூல்களிற் சொன்னவற்றினைக் கண்டு, முறைப்பட எண்ணி - அவ் விலக்கணம் முறைப்பட ஆராய்ந்து, நிலம் தரு திருவின் பாண்டியன் அவையத்து - மாற்றாரது நிலத்தினைத் தன்கீழ் வாழ்வார்க்குக் கொண்டு கொடுக்கும் போர்த் திருவினையுடைய பாண்டியன் மாகீர்த்தியது அவைக் கண்ணே, அறம் கரை நாவின் நால்மறை முற்றிய அதங்கோட்டு ஆசாற்கு - (அவ் வவையுள்ளார்க் கேற்பத் தெரிந்தே நின்ற) மெய்சொல்லும் நாவினை யுடைய நான்கு வேதத்தினையும் முற்றவுணர்ந்த அதங்கோடு என்கின்ற ஊரின் ஆசானுக்கு, அரில் தப தெரிந்து - கடா அறத் தெரிந்துகூறி, மயங்கா மரபின் எழுத்து முறை காட்டி - (அவ் வெழுத்தும் சொல்லும் செய்கின்றுழி முன்னை நூல்போல எழுத்திலக்கணம் சொல்லுட் சென்று) மயங்காத முறைமையானே எழுத்திலக்கணத்தினை வேறு தெரிவித்து, மல்கு நீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என தன் பெயர் தோற்றி - (அவ்வாறு செய்கின்றுழி) மிக்க நீரையுடைய கடலாகிய எல்லையை யுடைய உலகின்கண்ணே இந்திரனாற் செய்யப்பட்ட ஐந்திர வியாகரணத் தினை நிறைய அறிந்த பழைய காப்பியக் குடியினுள்ளோனெனத் தன் பெயரைத் தோற்றுவித்து, போக்கு அறு பனுவல் - நூற்குச் சொல்லப்பட்ட குற்றங்களற்ற தன்னூலுள்ளே, புலம் தொகுத்தோன் - அவ் விலக்கணங் களைத் தொகுத்துக் கூறினான், (அவன் யாரெனின்) பல் புகழ் நிறுத்த படிமையோன் - (தவத்தான் வரும்) பல்புகழ்களை உலகிலே நிறுத்தின தவவொழுக்கத்தினை யுடையான். வழக்கும் செய்யுளும் ஆ இரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி முறைப்பட எண்ணி, பாண்டியன் அவையத்து அதங் கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து, எழுத்திலக்கணத்தைச் சொல்லும் முறைமை மயங்கா மரபிற் காட்டி, தொல்காப்பியனெனத் தன் பெயர் தோற்றி, பனுவலுள் புலந்தொகுத்தோன் படிமையோன் எனக் கூட்டுக. ‘வடவேங்கடந் தென்குமரி’ யெனவே, எல்லை பெறப்பட்டது. ‘வழக்குஞ் செய்யுளும் ஆயிரு முதலின்’ எனவே, நூல் நுதலியதூஉம் பயனும் பெறப்பட்டன. ‘முந்துநூல் கண்டு முறைப்பட வெண்ணி’ யெனவே, வழியும் யாப்பும் காரணமும் பெறப்பட்டன. ‘பாண்டிய னவையத்’ தெனவே, காலமுங் களனும் பெறப்பட்டன. ‘அதங்கோட் டாசாற்கு அரில்தபத் தெரிந்து’ எனவே, கேட்டோர் பெறப்பட்டது. ‘தொல்காப் பியனெனத் தன்பெயர் தோற்றி’ யெனவே, ஆக்கியோன் பெயரும் நூற்பெயரும் பெறப்பட்டன. மங்கலத்திசையாகலின், வடக்கு முன் கூறப்பட்டது. கடல் கொள்வதன் முன்பு பிறநாடும் உண்மையின், தெற்கும் எல்லை கூறப்பட்டது. கிழக்கும் மேற்கும் பிறநாடு இன்மையின், கூறப்படாவாயின. பிற இரண்டெல்லை கூறாது இம் மலையும் ஆறும் கூறியது, அவை தீர்த்தமாதலானும் கேடிலவாதலானும் எல்லாரானும் அறியப் படுதலானு மென்பது. இவை அகப்பாட்டெல்லை. ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத் தென்றது, அவ் வெல்லை தமிழ் கூறும் நல்லாசிரியரது என்றவாறு. நல்லாசிரியர் - அகத்தியனார் முதலாயினோர். உலக மென்பது ஆசிரியரை. அ என்றது ஆகுபெயரான், அவற்றை எல்லையாகவுடைய நிலத்தினை. இடையென்பது ஏழா முருபு. முறைப்பட வெண்ணி யென்றது, அம் முந்து நூல்களில் ஒன்றற்குரிய இலக்கணத்தினை ஒன்றன் இலக்கணத்தோடு ஆராய்ந்தாற்போல ஆராயாது முறைப்பட ஆராய்ந்து என்றவாறு. மற்று, நூல் செய்யும் இலக்கணமெல்லாம் இந் நூலுட்படச் செய்தா னென்பது, இம் ‘முறைப்பட வெண்ணி’ யென்றதனாற் கொள்க. அவை யாமாறு: “ஓத்தே சூத்திர மெனவிரு வகைய.” “நேரின மணியை நிரல்பட வைத்தாங்கு, ஓரினப் பொருளை யொருவழி வைப்பது, ஓத்தென மொழிப வுயர்மொழிப் புலவர்.” (செய். 171) “நுட்ப மொப்பந் திட்பஞ் சொல்லிற், சுருக்கங் கருத்துப் பகுதியொடு தொகைஇ, வருத்தமில் பொருட்பய னிகழ்ச்சி சூத்திரம்.” “பொதுவினுஞ் சிறப்பினும் போற்றுங் காலைப், பெறுதல் பெற்றவை காத்தல் காப்பொடு, பிறிதுபெற நிகழ்த்த லதன்கருத்தாகும்.” “அதுவே, பிண்டந் தொகைவகை குறியே செய்கை, கொண்டியல் புறனடை யென்றதன் விகற்பமோ, டொன்றிய குறியே யொன்று மென்ப.” “ஆற்ற தொழுக்கே தேரைப் பாய்வே, சீய நோக்கே பருந்து வீழ்வென்(று), ஆவகை நான்கே கிடக்கைப் பயனே.” “பொழிப்பே யகல நுட்ப மெச்சமெனப், பழிப்பில் சூத்திரப் பயனான் கென்ப.” “பாடங் கண்ணழி வுதாரண மென்றிவை, நாடிற் றிரிபில வாகுதல் பொழிப்பே.” “தன்னூல் மருங்கினும் பிறனூல் மருங்கினுந் துன்னிய கடாவின் புறந்தோன்று விகற்பம், பன்னிய வகல மென்மனார் புலவர்.” “ஏதுவி னாங்கவை துடைத்த னுட்பம்.” “துடைத்துக்கொள் பொருளை யெச்ச மென்ப.” இவற்றானும் பிறவற்றானும் அறிக. இனி, நூல்செய்தற்கு உரியானையும், நூல்செய்யும் ஆற்றையும் சொல்லுதும். “அப்புல மரில்தப வறிந்து முதனூல், பக்கம் போற்றும் பயந்தெரிந் துலகத், திட்ப முடைய தெளிவர வுடையோன், அப்புலம் படைத்தற் கமையு மென்ப.” “சூத்திர முரையென் றாயிரு திறனும், பாற்படப் போற்றல் படைத்த லென்ப, நூற்பய னுணர்ந்த நுண்ணி யோரே.” இவற்றான் அறிக. போக்கு அறுதல் - நூற்குக் கூறுங் குற்றங்களற்று நன்மை யுளவாதல். அவை: “ஈரைங் குற்றமும் இன்றி நேரிதின், எண்வகைப் புணர்ப்பின தென்மனார் புலவர்.” இதனான் அறிக. ‘எழுத்தும் சொல்லும் பொருளும்’ என வைத்துப் பின்னும் ‘மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி’ என்றது, பிறநூல் போலச் சொல்லுள் எழுத்தினை மயக்கிக் கூறாது, வேறு சேரக் கூறினாரென்ற தென்பது. சிறப்புப் பாயிரம் முற்றிற்று. இளம்பூரணம் எழுத்ததிகாரம் இவ் வதிகாரம் என் நுதலி எடுத்துக்கொள்ளப்பட்டதோ வெனின், அதிகாரம் நுதலியதூஉம் அதிகாரத்தினது பெயர் உரைப்பவே அடங்கும். அதிகாரம் என்ன பெயர்த்தோ வெனின், எழுத்ததிகாரம் என்னும் பெயர்த்து. எழுத்துணர்த்தினமை காரணத்திற் பெற்ற பெயர் என உணர்க. எழுத்து எனைத்து வகையான் உணர்த்தினாரோ வெனின், எட்டு வகையானும் எட்டிறந்த பலவகையானும் உணர்த்தினா ரென்பது. அவற்றுள், எட்டுவகையாவன: எழுத்து இனைய என்றலும், இன்ன பெயர வென்றலும், இன்ன முறைமைய வென்றலும், இன்ன அளவின வென்றலும், இன்ன பிறப்பின வென்றலும், இன்ன புணர்ச்சிய வென்றலும், இன்ன வடிவின வென்றலும், இன்ன தன்மைய வென்றலும். எனவே, அவற்றுள் தன்மையும் வடிவும் ஆசிரியர் தாம் உணருவரெனினும், நமக்கு உணர்த்தல் அருமையின் ஒழிந்த ஆறுமே இதனுள் உணர்த்தினார் என உணர்க. இனி, எட்டிறந்த பலவகையாவன: உண்மைத் தன்மையும், குறைவும், கூட்டமும், பிரிவும், மயக்கமும், மொழியாக்கமும், நிலையும், இனமும், ஒன்று பலவாதலும், திரிந்ததன் திரிபது வென்றலும், பிறிதென்றலும், அதுவும் பிறிதும் என்றலும், நிலையிற் றென்றலும், நிலையாதென்றலும், நிலையிற்று நிலையா தென்றலும், இன்னோ ரன்னவும் என இவை. இவையெல்லாம் ஆமாறு மேல் வந்தவழிக் கண்டுகொள்க. இவ் வதிகாரத் திலக்கணம் கருவியும் செய்கையும் என இரு வகைத்து. அவற்றுள், கருவி புறப்புறக்கருவியும், புறக்கருவியும், அகப்புறக்கருவியும், அகக்கருவியும் என நான்கு வகைப்படும். செய்கை புறப்புறச்செய்கையும், புறச்செய்கையும், அகப்புறச் செய்கையும், அகச்செய்கையும் என நான்கு வகைப்படும். நூன் மரபும் பிறப்பியலும் புறப்புறக்கருவி; மொழிமரபு புறக்கருவி; புணரியல் அகப்புறக்கருவி. “எகர வொகரம் பெயர்க்கீ றாகா, முன்னிலை மொழிய வென்மனார் புலவர்” (உயிர் மயங். 70) என்றாற்போல்வன அகக்கருவி. “எல்லா மொழிக்கு முயிர்வரும் வழியே, உடம்படு மெய்யி னுருபுகொளல் வரையார்”(புணர். 38) என்றாற் போல்வன புறப்புறச்செய்கை. “லனவென வரூஉம் புள்ளி முன்னர்த், தந வெனவரிற் றனவா கும்மே” (தொகை. 7) என்றாற் போல்வன புறச்செய்கை. “உகரமொடு புணரும் புள்ளியிறுதி, யகரமும் உயிரும் வரும்வழி யியற்கை” (தொகை. 21) என்றாற் போல்வன அகப்புறச் செய்கை. தொகைமரபு முதலிய ஓத்தினுள், இன்ன ஈறு இன்னவாறு முடியுமெனச் செய்கை கூறுவன வெல்லாம் அகச் செய்கை. நூன்மரபு ‘இவ்வதிகாரத்தாற் சொல்லப்படும் எழுத்திலக்கணத்தினை ஓராற்றாற் றொகுத்துணர்த்துதலின் நூன்மரபென்னும் பெயர்த்து’ என இளம்பூரணரும், ‘இத்தொல்காப்பியமெனும் நூற்கு மரபாந் துணைக்கு வேண்டுவனவற்றைத் தொகுத் துணர்த்துதலின் நூன் மரபென்னும் பெயர்த்தாயிற்று’ என நச்சினார்க்கினியரும், ‘அஃதாவது நூலினது மரபு பற்றிய பெயர் கூறுதல்’..................... மலைகடல்யாறு என்றற் றொடக்கத்து உலகமரபு பற்றிய பெயர் போலாது ஈண்டுக் கூறப்படும் எழுத்து, குறில், நெடில், உயிர், மெய் என்றற் றொடக்கத்துப் பெயர்கள் நூலின்கண் ஆளுதற்பொருட்டு முதனூலாசிரியனாற் செய்துகொள்ளப் பட்டமையின் இவை நூன்மரபு பற்றிய பெயராயின’ எனச் சிவஞானமுனிவரும் இவ்வியலின் பெயர்க்காரணம் கூறினார். இவ்வியலுட் கூறப்படும் எழுத்துக்களின் பெயர் முதலியன அனைத்துல் தொல்காப்பியனார்க்கு முற்காலத்தவரான பண்டைத் தமிழ்ச் சான்றோர் நூல்களிற் சொல்லப்பட்ட எழுத்தியல் மரபுகளாய் இந்நூலில் ஆசிரியரால் எடுத்தாளப் பட்டனவாம். என்ப, புலவர், மொழிப, என்மனார் புலவர் என்றாங்கு முன்னையோர் கருத்தாக இவ்வியலில் வருங் குறியீடுகளை ஆசிரியர் எடுத்துரைத்தலால் இவ்வுண்மை விளங்கும். இவ்வியலிற் கூறப்படும் இலக்கணம் மொழியிடை எழுத்திற்கன்றித் தனிநின்ற எழுத்திற்குரியதாகும். குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்ற மூன்றும் யாதாயினும் ஒரு சொல்லைச் சார்ந்துவரினல்லது தனியெழுத்தாக ஒலித்து நிற்கும் இயல்புடையன அல்ல. இவற்றின் இயல்பினை நன்கறிந்த தமிழ் முன்னோர் இம்மூன்றினையும் சார்பெழுத்தெனப் பெயரிட்டு வழங்கினார்கள். ‘சார்ந்துவரன் மரபின்மூன்று’ எனவும், ‘சார்ந்து வரினல்லது தமக்கியல்பிலவெனத் தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்றும்’ எனவும் வருந் தொடர்களால் தொல்காப்பியனார் இவற்றின் இயல்பினைத் தெளிவாக விளக்குகின்றார். தனித்தியங்கும் இயல்புடையது உயிர். அவ்வியல்பின்றி உயிரினால் இயக்கப்படுவது மெய். அகர முதல் ஒளகார மீறாக வுள்ள பன்னிரண் டெழுத்தும் தனித்தியங்கும் ஆற்றலுடைமையால் உயிரெனப்பட்டன. ககர முதல் னகர மீறாகவுள்ள பதினெட் டெழுத்துக்களும் தனித்தியங்கு மியல்பின்றி அகர முதலிய உயிர்களால் இயக்கப்படுதலின் மெய்யெனப் பட்டன. உயிர்வழியாயடங்கி அதனது விளக்கம் பெற்று நிற்கும் உடம்பைப் போன்று மெய்யெழுத்துக்களும் தம்மேல் ஏறிய உயிரெழுத்தின் மாத்திரைக்குள் அடங்கி அதன் ஒலியோடு ஒத்திசைப்பனவாகும். இங்ஙனம் மெய்யும் உயிரும் கூடியொலிக்கும் எழுத்தொலியினை உயிர்மெய் என்ற நிறையுவமப் பெயரால் வழங்குதல் பழைய தமிழ் மரபாகும். இவ்வியலில் 33 சூத்திரங்கள் உள்ளன. எழுத்தின்ன தென்பதும், அதன் வகையும், எழுத்துக்கள் பெறும் மாத்திரையும், அவற்றுட் சிலவற்றின் வடிவம், குற்றெழுத்து, நெட்டெழுத்து, உயிர், மெய், உயிர்மெய், வல்லெழுத்து, மெல்லெழுத்து, இடையெழுத்து, என அவை பெறும் பெயர்களும், மெய் தன்னொடும் பிறிதொடும் கூடியொலிக்கும் மெய்மயக்கமும், குற்றெழுத்துக்களுள் அ இ உ என்பவற்றுக்குச் சுட்டென்னுங் குறியும் நெட்டெழுத்துக்களுள் ஆ ஏ ஓ என்பவற்றுக்கு வினாவென்னுங் குறியும், எழுத்துக்கள் முற்கூறிய மாத்திரையின் நீண்டொலிக்கு மிடமும் இவ்வியலில் உணர்த்தப்பட்டன. - வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 16-166 முதலாவது நூன்மரபு இவ் வோத்து என் நுதலிற்றோ வெனின், அதுவும் அதன் பெயர் உரைப்பவே அடங்கும். இவ் வதிகாரத்தாற் சொல்லப்படும் எழுத்திலக்கணத்தினை ஓராற்றான் தொகுத்து உணர்த்துதலின், நூன்மரபு என்னும் பெயர்த்து. இதனுட் கூறுகின்ற இலக்கணம் மொழியிடை (நின்ற) எழுத்திற்கன்றி, தனிநின்ற எழுத்திற்கென உணர்க. 1. எழுத்தெனப்படுப அகரமுத னகர விறுவாய் முப்பஃ தென்ப சார்ந்துவரன் மரபின் மூன்றலங் கடையே. இத் தலைச் சூத்திரம் என் நுதலிற்றோ வெனின், எழுத்துகளது பெயரும் முறையும் தொகையும் உணர்த்துதல் நுதலிற்று. இதன்பொருள்: எழுத்து எனப்படுப - எழுத்தென்று சிறப்பித்துச் சொல்லப்படுவன, அகரம் முதல் னகர இறுவாய் முப்பஃது என்ப - அகர மாகிய முதலையுடையனவும் னகரமாகிய இறுவாயினை யுடையனவு மாகிய முப்பதென்று சொல்லுப (ஆசிரியர்); சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடை - சார்ந்து வருதலாகிய இலக்கணத்தினையுடைய மூன்றும் அல்லாவிடத்து. மூன்றும் ஆனவிடத்து முப்பத்து மூன்று என்று சொல்லுப என்றவாறு. உதாரணம்: அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள; க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன். எனவரும். ‘எனப்படுப’ என்ற சிறப்பான், அளபெடையும் உயிர் மெய்யும் வரிவடிவும் சிறப்பில்லா எழுத்தாகக் கொள்ளப்பட்டன. அ ஆ என்பன பெயர்; முறை, அம் முறை; தொகை, முப்பது. அவற்றுள், அகரம் தானும் இயங்கித் தனி மெய்களையும் இயக்குதற் சிறப்பான், முன்வைக்கப்பட்டது. னகாரம் வீடுபேற்றிற்குரிய ஆண்பாலை உணர்த்துதற் சிறப்பான் பின்வைக்கப்பட்டது. தொகை ஸயென்பது] தொகையுட் தெடாகையும், தொகையுள் வகையும், தொகையுள்விரியும்; வகையுள்தொகையும், வகையுள் வகையும், வகையுள்விரியும்; விரியுட்டொகையும், விரியுள்வகையும், விரியுள் விரியும் என ஒன்பது வகைப்படும். எழுத்தென்பது தொகையுள் தொகை. முப்பதென்பது அதன் வகை. முப்பத்து மூன்றென்பது அதன் விரி. முப்பதென்பது வகையுள்தொகை. முப்பத்து மூன்றென்பது அதன் வகை. அளபெடை தலைப்பெய்து நாற்பதென்பது அதன் விரி. முப்பத்து மூன்றென்பது விரியுள் தொகை. நாற்பதென்பது அதன் வகை. உயிர்மெய் தலைப்பெய்து இருநூற்றைம்பத்தாறென்பது அதன் விரி. செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது. அகரமுதல் னகர இறுவாய் என்பன, இருபெயரொட் டாகுபெயரான் முப்பதன்மேல் நின்றன. (1) 2. அவைதாம் குற்றியலிகரங் குற்றியலுகரம் ஆய்த மென்ற முப்பாற் புள்ளியு மெழுத்தோ ரன்ன. இது, மேல் சார்ந்து வரும் என்னப்பட்ட மூன்றற்கும் பெயரும் முறையும் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அவைதாம் - மேற் சார்ந்துவரும் எனப்பட்டவை தாம், குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்ற முப்பால் புள்ளியும் - குற்றியலிகரமும் குற்றியலுகரமும் ஆய்தம் என்று சொல்லப்பட்ட மூன்று கூற்றதாகிய புள்ளியும் என இவை.எழுத்து ஓர் அன்ன - (அவை) மேற்சொல்லப்பட்ட முப்பது எழுத்தோடு ஒரு தன்மைய அப்பெயர், பெயர். அம்முறை, முறை. ‘எழுத்தோ ரன்ன’ என வேண்டா கூறியவதனான், முன் ‘எனப்படுப’ என்ற சிறப்பு, அம் மூன்றற்கும் கொள்ளக்கிடந்தமையின், அது விலக்குதல் பெறுது மென்பது. குற்றியலிகரமும் குற்றியலுகரமும் என்னும் எண்ணும்மை விகாரத்தான் தொக்கன. சந்தனக்கோல் குறுகினவிடத்துப் பிரப்பங் கோல் ஆகாது; அதுபோல, இகர உகரங்கள் குறுகினவிடத்தும், அவை உயிர் ஆகற்பாலன. அவற்றைப் புணர்ச்சி வேற்றுமையும் பொருள் வேற்றுமையும் நோக்கி வேறெழுத்தென்று வேண்டினாரென உணர்க. (2) 3. அவற்றுள் அ இ உ எ ஒ வென்னு மப்பா லைந்தும் ஓரள பிசைக்குங் குற்றெழுத் தென்ப. இது, மேற்கூறப்பட்டனவற்றிற்கு அளபும் குறியும் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அவற்றுள் - மேற்கூறப்பட்ட எழுத்தினுள், அ-இ-உ-எ-ஒ என்னும் அப்பால் ஐந்தும் அ-இ-உ-எ-ஒ என்று சொல்லப் படுகின்ற அக் கூற்று ஐந்தும், ஓர் அளபு இசைக்கும் - (ஒரோ வொன்று) ஓர் அளபாக இசைக்கும், குற்றெழுத்து என்ப - (அவைதாம்) குற்றெழுத்தென்னும் குறிய என்று சொல்லுவர் (புலவர்). இவர் காரணம் பற்றியன்றிக் குறியிடார். ஆகலின், இது தன் குறுமையான் இக் குறி பெற்றது. இக் குறியை ஆண்டவாறு மேல் வந்தவழிக் கண்டுகொள்க. (3) 4. ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள வென்னு மப்பா லேழும் ஈரள பிசைக்கு நெட்டெழுத் தென்ப. இதுவும் அது. (இ-ள்.) ஆ-ஈ-ஊ-ஏ-ஐ-ஓ-ஒள என்னும் அப்பால் ஏழும் - ஆ-ஈ-ஊ-ஏ-ஐ-ஓ-ஒள என்று சொல்லப்படுகின்ற அக்கூற்று ஏழும், ஈர் அளபு இசைக்கும் - (ஒரோவொன்று) இரண்டு மாத்திரையாக ஒலிக்கும், நெட்டெழுத்து என்ப - (அவைதாம்) நெட்டெழுத்து என்னும் குறிய என்று சொல்லுவர் (புலவர்) எ-று. ஐகார ஒளகாரங்களுக்கு இனம் இல்லையெனினும், மாத்திரை யொப்புமையான் அவை நெட்டெழுத்து எனப்பட்டன. (4) 5. மூவள பிசைத்த லோரெழுத் தின்றே. இஃது, உயிரளபெடையெழுத்திற்கு மாத்திரை கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) மூ அளபு இசைத்தல் ஓர் எழுத்து இன்று - மூன்று மாத்திரையாக ஒலித்தல் இயல்பாகிய ஓர் எழுத்திற்கு இல்லை (விகாரமாகிய இரண்டு கூடியதற்கு உண்டு). (5) 6. நீட்டம் வேண்டி னவ்வள புடைய கூட்டி யெழூஉத லென்மனார் புலவர். இஃது, உயிரளபெடை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) நீட்டம் வேண்டின் - நீண்ட மாத்திரையையுடைய அளபெடை எழுத்துப்பெற வேண்டின், அ அளபு உடைய கூட்டி எழூஉதல் - மேற்கூறிய இரண்டளபுடைய நெடிலையும் ஓர் அளபுடைய குறிலையும் (பிளவுபடாமற்) கூட்டியெழூஉக, என்மனார் புலவர் - என்று சொல்லுவர் புலவர். (6) 7. கண்ணிமை நொடியென வவ்வே மாத்திரை நுண்ணிதி னுணர்ந்தோர் கண்ட வாறே. இஃது, அம் மாத்திரை யிலக்கணம் கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) கண்ணிமை என நொடி என அவ் மாத்திரை - கண்ணிமையும் நொடியுமாகிய அவை மாத்திரைக்கு அளபு, நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறு - (இது) நுண்ணிதாக நூலிலக்கணத்தினை உணர்ந்த ஆசிரியர் கண்ட நெறி. இமையென்றது, இமைத்தல் தொழிலை. நொடியென்றது, நொடியிற் பிறந்த ஓசையை. தன் குறிப்பு இன்றி நிகழ்தலின் இமை முன் கூறப்பட்டது. நிறுத்தளத்தல், பெய்தளத்தல், நீட்டியளத்தல், தெறித்தளத்தல், தேங்கமுகந்தளத்தல், சார்த்தியளத்தல், எண்ணியளத்தல் என எழுவகைய என்னும் அளவினுள், இது சார்த்தியளத்தல். ‘நுண்ணிதி னுணர்ந்தோர் கண்டவாறு’ என்றதனான், நாலுழக்குக் கொண்டது நாழி யென்றாற்போல அவ் வளவைக்கு அளவை பெறாமை அறிக. (7) 8. ஒளகார விறுவாய்ப் பன்னீ ரெழுத்து முயிரென மொழிப. இது, மேற்கூறிய குறிலையும் நெடிலையும் தொகுத்து வேறு ஒரு குறியிடுதல் நுதலிற்று. (இ-ள்.) ஒளகார இறுவாய் பன்னீர் எழுத்தும் - ஒளகாரமாகிய இறுதியையுடைய பன்னிரண்டு எழுத்தினையும், உயிர் என மொழிப - உயிரென்னும் குறியினையுடைய என்று சொல்லுவர். (8) 9. னகார விறுவாய்ப் பதினெண் ணெழுத்து மெய்யென மொழிப. இது, மேற்கூறிய உயிரல்லா எழுத்திற்கும் ஒரு குறியிடுதல் நுதலிற்று. (இ-ள்.) னகார இறுவாய்ப் பதினெண் எழுத்தும் - னகரமாகிய இறுதியையுடைய பதினெட்டு எழுத்தினையும், மெய் என மொழிப - மெய்யென்னும் குறியினையுடைய என்று சொல்லுவர். (9) 10. மெய்யோ டியையினு முயிரிய றிரியா. இஃது, உயிர்மெய்க்கு அளபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) மெய்யோடு இயையினும் - (உயிர்மெய்யாவன) மெய்களோடு உயிர் இயையப் பிறந்த நிலைமையவாயினும், உயிரியல் திரியா - (அவ் வுயிர்மெய்கள் அவ் வியைபின்கண்ணே வேறு ஓர் எழுத்தாய் நின்றமையின், மெய்யோடு இயைபின்றி நின்ற) உயிர்களது இயல்பின் திரியா. உயிரும் மெய்யும் கூடுகின்ற உயிர்மெய்க் கூட்டத்தினை, ‘மெய்யோ டியையினும்’ என உயிர்மேல் வைத்துக் கூறியது, அவ் வுயிரின் மாத்திரையே இதற்கு மாத்திரையாகக் கூறுகின்றமை நோக்கிப்போலும். ‘இயல்’ என்றது பெரும்பான்மை மாத்திரை யினை. சிறுபான்மை குறியும் எண்ணும் கொள்க. க எனவும், கா எனவும் அவ்வாறு நின்றமை அறிக. (10) 11. மெய்யி னளபே யரையென மொழிப. இது, தனிமெய்க்கு அளபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) மெய்யின் அளபு - மெய்யது மாத்திரையினை, அரை என மொழிப - (ஒரோ வொன்று) அரை மாத்திரை யுடையதென்று சொல்லுவர். உ-ம்: காக்கை, கோங்கு எனக் கண்டுகொள்க. ஈண்டு வேற்றுமை நயமின்றி ஒற்றுமைநயம் கருதப்பட்டது. (11) 12. அவ்விய னிலையு மேனை மூன்றே. இது, சார்பிற்றோற்றத்து எழுத்து மூன்றற்கும் அளபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) அ இயல் நிலையும் - மேற்கூறிய அரை மாத்திரை யாகிய அவ் வியல்பின்கண்ணே நிற்கும், ஏனை மூன்று - ஒழிந்த சார்பிற் றோற்றத்து மூன்றும். கேண்மியா, நாகு, எஃகு. எனக் கண்டு கொள்க. (ஏகாரம் - ஈற்றசை (12) 13. அரையளபு குறுகன் மகர முடைத்தே இசையிட னருகுந் தெரியுங் காலை. இது, மெய்களுள் ஒன்றற்கு மாத்திரைச் சுருக்கம் கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) அரை அளபு குறுகல் மகரம் உடைத்து - அரையளபாகிய எல்லையிற் குறுகிக் கான்மாத்திரையாதலை மகர மெய் உடைத்து; (அஃது யாண்டோவெனின்) இசையிடன் அருகும் - வேறு ஓர் எழுத்தினது ஒலியின்கண் அது சிறுபான்மை யாகி வரும், தெரியுங்காலை - ஆராயுங் காலத்து. உ-ம். போன்ம், வரும் வண்ணக்கன் என வரும். கான் மாத்திரை யென்பது உரையிற்கோடல். (ஏகாரம் ஈற்றசை) (13) 14. உட்பெறு புள்ளி யுருவா கும்மே. இது, பகரத்தின் மகரத்திடை வரிவடிவு வேற்றுமை செய்தல் நுதலிற்று. (இ-ள்.) உள்பெறு புள்ளி உருவு ஆகும் - புறத்துப் பெறும் புள்ளியோடு உள்ளாற்பெறும் புள்ளி மகரத்திற்கு வடிவாம் (அஃதின்மை பகரத்திற்கு வடிவாம்). உ-ம். ம, ப - எனக் கண்டுகொள்க. (14) (உள்ளாற் பெறும்புள்ளி குறுகிய மகரத்திற்கு வடிவாம் என்பதே இச்சூத்திரத்திற்கு நேர் உரை. ஏகாரம் - ஈற்றசை) 15. மெய்யி னியற்கை புள்ளியொடு நிலையல். இஃது, உயிர்மெய்யொடு தனிமெய்யிடை வடிவு வேற்றுமை செய்தல் நுதலிற்று. (இ-ள்.) மெய்யின் இயற்கை - தனிமெய்யினது இயல்பு, புள்ளியொடு நிலையல் - புள்ளியொடு நிற்றல் (உயிர்மெய்யினது இயல்பு புள்ளியின்றி நிற்றல்). க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன் எனக் கண்டு கொள்க. (15) 16. எகர ஒகரத் தியற்கையு மற்றே. இஃது, எகர ஒகரங்கட்கு ஏகார ஓகாரங்களொடு வேற்றுமை செய்தல் நுதலிற்று. (இ-ள்.) எகர ஒகரத்து இயற்கையும் அற்று - எகர ஒகரங்களது இயல்பும் அவ்வாறு புள்ளி பெறும் இயல்பிற்று (ஏகார ஓகாரங்களது இயல்பு அப் புள்ளி பெறா இயல்பிற்று). (ஏகாரம் - ஈற்றசை.) உ-ம்: எ, ஒ. (16) 17. புள்ளி யில்லா வெல்லா மெய்யும் உருவுரு வாகி யகரமோ டுயிர்த்தலும் ஏனை யுயிரோ டுருவுதிரிந் துயிர்த்தலும் ஆயீ ரியல உயிர்த்த லாறே. இஃது, உயிரும் மெய்யும் கூடுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) எல்லா மெய்யும் புள்ளி இல்லா - எல்லா மெய்களும் புள்ளி இல்லையாம்படியாக, உருவு உருவு ஆகி - தத்தம் முன்னை வடிவே இன்னும் வடிவாக, அகரமோடு உயிர்த்தலும் - அகரத்தொடு கூடி ஒலித்தலும், ஏனை உயிரோடு உருவு திரிந்து உயிர்த்தலும் - ஒழிந்த உயிர்களொடு வடிவு வேறுபட்டு ஒலித்தலுமாகிய, அ ஈர் இயல - அவ்விரண்டு இயல் பினையுடைய, உயிர்த்தல் ஆறு - அவை ஒலிக்கு முறைமை. ‘தன்னின முடித்தல்’ என்பதனான், அளபெடை உயிரோடும், சார்பிற்றோற்றத்து உயிரோடும் கூடும் உயிர்மெய்யும் கொள்க. உ-ம்: உருவு உருவாகி உயிர்த்தல் க ங எனக் கண்டுகொள்க. உருவு திரிந்து உயிர்த்தல் கா ஙா எனக் கண்டுகொள்க. ஈண்டு உயிரும் மெய்யும் கூடுகின்ற உயிர்மெய்க் கூட்டத்தினை ‘எல்லா மெய்யு’மென்று மெய்மேல் வைத்துக் கூறியது, அது முன் கூறிக் கூறப்படுதல் நோக்கிப் போலும். உயிர்மெய் யென்பதனை ஒற்றுமை கொள்வுழி உம்மைத் தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை யெனவும், வேற்றுமை கொள்வுழி உம்மைத் தொகையெனவும் கொள்க. ‘இல்லாக’ என்பது ‘இல்லா’ என நின்றது. உருவு திரிந்து உயிர்த்தல் மேலும் கீழும் விலங்குபெறுவன விலங்குபெற்று உயிர்த்தலும், கோடுபெறுவன கோடுபெற்று உயிர்த்தலும், புள்ளிபெறுவன புள்ளிபெற்று உயிர்த்தலும், புள்ளியும் கோடும் உடன் பெற்று உயிர்த்தலும் எனக் கொள்க. (17) 18. மெய்யின் வழிய துயிர்தோன்று நிலையே. இஃது, உயிர்மெய்யுள் உயிரும் மெய்யும் நிற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உயிர் - உயிர் மெய்யின் வழியது - மெய்களின் பின்னவாம், தோன்றும் நிலை - தோன்றும் நிலைமைக்கண். ‘தோன்று நிலை’ என்றதனான், உயிர்மெய்களைப் பிரிக்கு மிடத்தும் கூட்டுமிடத்தும், அவ்வாறே முன்னும் பின்னும் ஆதலைக் கொள்க. மெய்யும் உயிரும் முன்னும் பின்னும் பெற நிற்கு மென்றமையான், அக் கூட்டம் பாலும் நீரும்போல உடன் கலந்ததன்றி, விரல்நுனிகள் தலைப்பெய்தாற்போல வேறுநின்று கலந்தனவல்ல என்பது பெறுதும். ஈண்டு வேற்றுமைநயம் கருதப்பட்டது. (ஏ - ஈற்றசை) (18) 19. வல்லெழுத் தென்ப கசட தபற. இது, தனி மெய்களுள் சிலவற்றிற்கு வேறு ஓர் குறியிடுதல் நுதலிற்று. (இ-ள்.) வல்லெழுத்து என்ப - வல்லெழுத்து என்னும் குறிய என்று சொல்லுவர், க ச ட த ப ற - க ச ட த ப ற என்னும் தனிமெய்களை. வல்லென்று இசைத்தலானும், வல் என்ற தலைவளியாற் பிறத்தலானும் வல்லெழுத்து எனப்பட்டது. மொழிக்கு முதலா மெழுத்து நான்கு உளவாகலானும், அவற்றான் வழக்குப்பயிற்சி பெரிதாகலானும் வல்லினம் முன்கூறப்பட்டது. (க ச ட த ப ற என்னும் தனிமெய்கள் க் ச் ட் த் ப் ற்) (19) 20. மெல்லெழுத் தென்ப ஙஞண நமன. இதுவும் அது. (இ-ள்.) மெல்லெழுத்து என்ப - மெல்லெழுத்து என்னும் குறிய என்று சொல்லுவர், ங ஞ ண ந ம ன - ங ஞ ண ந ம ன என்னும் தனிமெய்களை. மெல்லென்று இசைத்தலானும், மெல் என்ற மூக்கின் வளியாற் பிறத்தலானும், மெல்லெழுத்து எனப்பட்டது. மொழிக்கு முதலாமெழுத்து மூன்று உளவாகலானும், அவற்றின் வழக்குப் பயிற்சியானும், (மெல்லினம்), முதலாமெழுத்துச் சிறுபான்மை வழக்கினவாய் இரண்டாகிய இடையினத்தின் முன் வைக்கப்பட்டது. வன்மை மென்மை கூறலின், எழுத்து அருவன்றி உருவாதல் பெறப்பட்டது. உயிருக்கும் குறுமை நெடுமை கூறலின், உருவென்பது பெறுதும். (ங ஞ ண ந ம ன என்னும் தனிமெய்கள் ங் ஞ் ண் ந் ம் ன்.) (20) 21. இடையெழுத் தென்ப யரல வழள. இதுவும் அது. (இ-ள்.) இடையெழுத்து என்ப - இடையெழுத்து என்னும் குறிய என்று சொல்லுவர், ய ர ல வ ழ ள - ய ர ல வ ழ ள என்னும் தனிமெய்களை. இடைநிகரவாகி ஒலித்தலானும், இடைநிகர்த்தாய மிடற்று வளியாற் பிறத்தலானும் இடையெழுத்து எனப்பட்டது. (ய ர ல வ ழ ள என்னும் தனிமெய்கள் ய் ர் ல் வ் ழ் ள்) (21) 22. அம்மூ வாறும் வழங்கியன் மருங்கின் மெய்ம்மயக் குடனிலை தெரியுங் காலை. இது, தனி மெய் மயக்கத்திற்குப் பெயரும் முறையும் தொகையும் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அ மூ ஆறும் - மேற்சொல்லப்பட்ட (மூவாறு) பதினெட்டு மெய்யும், வழங்கு இயல் மருங்கின் - தம்மை மொழிப் படுத்தி வழங்கும் இயல்பு உளதாமிடத்து, மெய் மயங்கு - மெய்ம் மயக்கம் என்றும், உடன்நிலை - உடன்நிலை மயக்கம் என்றும் இரு வகைய, தெரியும் காலை - (அவை மயங்கு முறைமை) ஆராயும் காலத்து. உயிர், மெய், உயிர்மெய் என்னும் மூன்றனையும் உறழ்ச்சி வகையான் உறழ ஒன்பது உளவாமன்றே. அவற்றுள் தனி மெய்யொடு தனி மெய்மயக்கம் ஒன்றே கூறிய தென்னெனின், மற்றவற்றிற்கு வரையறை யின்மையின் வரையறையுடைய தனிமெய் மயக்கமே கூறியொழிந்தார் என உணர்க. ‘மெய்’ என்றதனான், தனிமெய்யோடு உயிர்மெய் மயக்கமன்றி, தனிமெய்யொடு தனி மெய் மயக்கமாதல் கொள்க. (22) 23. டறலள வென்னும் புள்ளி முன்னர்க் கசப வென்னு மூவெழுத் துரிய. இது, மெய்மயக்கம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) டற லள என்னும் புள்ளி முன்னர் - ட ற ல ள என்று சொல்லப்படும் புள்ளிகளின் முன்னர், க ச ப என்னும் மூ எழுத்து உரிய - க ச ப என்று சொல்லப்படும் மூன்றெழுத்தும் மயங்குதற்கு உரிய. உ-ம்: கட்க, கற்க, செல்க, கொள்க எனவும்; கட்சிறார், கற்சிறார், செல்சிறார், கொள்சிறார் எனவும்; கட்ப, கற்ப, செல்ப, கொள்ப எனவும் வரும். மேல் ‘தெரியுங் காலை’ (22) என்றதனான், இம் மெய்மயக்கம் கூறுகின்ற சூத்திர மெல்லாம் பலபடியான் மயக்கம் கொள்ளச் சொல் நோக்கு உடையவெனினும், வழக்கி னொடு பொருந்த ஒன்றனோடு ஒன்றன்றி மயங்காதென்பது கொள்க. மெய்மயக்கம் ஒருமொழிக்கும் புணர்மொழிக்கும் பொதுவாக லின், மேற்கூறும் புணர்மொழிச் செய்கையெல்லாம் தலையாய அறிவினோரை நோக்க ஒருவாற்றாற் கூறிய வாறாயிற்று. (23) 24. அவற்றுள் லளஃகான் முன்னர் யவவுந் தோன்றும். இதுவும் அது. (இ-ள்.) அவற்றுள் - மேற்கூறிய நான்கனுள்ளும், லளஃகான் முன்னர் - லகார ளகாரங்களின் முன்னர், யவவும் தோன்றும் - கசபக்களேயன்றி யகர வகரங்களும் தோன்றி மயங்கும். உ-ம்: கொல்யானை, வெள்யானை, கோல்வளை, வெள்வளை என வரும். (24) 25. ஙஞண நமன வெனும்புள்ளி முன்னர்த் தத்த மிசைக ளொத்தன நிலையே. இதுவும் அது. (இ-ள்.) ங ஞ ண ந ம ன எனும் புள்ளிமுன்னர் - ங ஞ ண ந ம ன என்று சொல்லப்படும் புள்ளிகளின் முன்னர்; தத்தம் மிசைகள் ஒத்தன (நெடுங்கணக்கினுள்) தத்தமக்கு மேல் நிற்கும் எழுத்தாகிய க ச ட த ப றக்கள் பொருந்தின, நிலை - மயங்கி நிற்றற்கண். (ஏகாரம் - ஈற்றசை) உ-ம்: தெங்கு, மஞ்சு, வண்டு, பந்து, கம்பு, கன்று என வரும். (25) 26. அவற்றுள் ணனஃகான் முன்னர்க் கசஞப மயவவ் வேழு முரிய. இதுவும் அது. (இ-ள்.) அவற்றுள் - மேற்கூறப்பட்ட மெல்லெழுத்து ஆறனுள், ணனஃகான் முன்னர்- ணகார னகாரங்களின் முன்னர், க ச ஞ ப ம ய வ ஏழும் உரிய - (டறக்களே யன்றி) க ச ஞ ப ம ய வ என்று சொல்லப்படும் ஏழும் மயங்குதற்கு உரிய எ-று. உ-ம்: வெண்கலம், புன்கண்; வெண்சாந்து, புன்செய்; வெண் ஞாண், பொன்ஞாண்; வெண்பலி, பொன்பெரிது; வெண் மாலை, பொன்மாலை; மண்யாது, பொன்யாது; மண்வலிது, பொன் வலிது என வரும். (26) 27. ஞநமவ வென்னும் புள்ளி முன்னர் யஃகா னிற்றன் மெய்பெற் றன்றே. இதுவும் அது. (இ-ள்.) ஞ ந ம வ என்னும் புள்ளி முன்னர் - ஞ ந ம வ என்று சொல்லப்படுகின்ற புள்ளிகளின் முன்னர், யஃகான் நிற்றல் மெய் பெற்றன்று - யகரம் மயங்கி நிற்றல் பொருண்மை பெற்றது. உ-ம்: உரிஞ்யாது, பொருந்யாது, திரும்யாது, தெவ்யாது என வரும். (27) 28. மஃகான் புள்ளிமுன் வவ்வுந் தோன்றும். இதுவும் அது. (இ-ள்.) மஃகான் புள்ளிமுன் - மகரமாகிய புள்ளி முன்னர், வ உம் தோன்றும் - (பகர யகரங்களேயன்றி) வகரமும் தோன்றி மயங்கும். உ-ம்: நிலம் வலிது எனவரும். (28) 29. யரழ வென்னும் புள்ளி முன்னர் முதலா கெழுத்து ஙகரமொடு தோன்றும். இதுவும் அது. (இ-ள்.) யரழ என்னும் புள்ளி முன்னர் - யரழ என்று சொல்லப் படுகின்ற புள்ளிகளின் முன்னர், முதல் ஆகு எழுத்து ஙகர மொடு தோன்றும் - மொழிக்கு முதல் ஆம் என்னப்பட்ட ஒன்பது மெய்யும் (முதலாகா) ஙகரத்தொடு தோன்றி மயங்கும் எ-று. உ-ம்: வேய்கடிது, வேர்கடிது, வீழ்கடிது; சிறிது, தீது, பெரிது; ஞான்றது, நீண்டது, மாண்டது, யாது, வலிது என வரும். வேய்ஙனம், வேர்ஙனம், வீழ்ஙனம் எனவும் ஒட்டுக. வேய்யாது என்புழி, உடனிலை யாதலான் யகரம் ஒழித்து ஒட்டுக. (`மொழிக்கு முதல் ஆம் என்னப்பட்ட ஒன்பது மெய்’ என்பது மொழிக்கு முதலாய் வரும் ஒன்பது உயிர் மெய்யெழுத்துகளில் உயிரொழிந்த மெய்களைக் குறித்து நின்றது.) (29) 30. மெய்ந்நிலைச் சுட்டி னெல்லா வெழுத்துந் தம்முற் றாம்வரூஉம் ரழவலங் கடையே. இது, நிறுத்த முறையானே உடனிலை மயக்கம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மெய்ந்நிலை சுட்டின் - பொருள் நிலைமைக் கருத்தின் கண், எல்லா எழுத்தும் தம்முன் தாம் வரும் - எல்லா மெய்யெழுத்தும் தம் முன்னே தாம் வந்து மயங்கும், ர ழ அலங்கடை - ரகார ழகாரங்கள் அல்லாத இடத்து. (ஏகாரம் ஈற்றசை.) உ-ம்: காக்கை, எங்ஙனம், பச்சை, மஞ்ஞை, பட்டை, மண்ணை, தத்தை, வெந்நோய், அப்பை, அம்மி, வெய்யர், எல்லி, எவ்வீ, கொள்ளி, கொற்றி, கன்னி என வரும். ‘மெய்ந்நிலை சுட்டின்’ என்றதனான், ‘தம்முன் தாம் வரும்’ என்றது, மெய்ம்முன்னர் மெய்யென்னும் மாத்திரையன்றி, உடனிலைமெய் மேலதாம் என்பது கொள்க. ‘எல்லாம்’ என்றது, மேல் ய ர ழ (29) என்ற அதிகாரம் மாற்றிவந்து நின்றது. (30) 31. அ இ உஅம் மூன்றுஞ் சுட்டு. (இ-ள்.) அ இ உ அம் மூன்றும் சுட்டு - (குற்றெழுத்து என்னப் பட்ட) அ இ உ என்னும் அம் மூன்றும் சுட்டு என்னும் குறியவாம். உ-ம்: அங்ஙனம், இங்ஙனம், உங்ஙனம் என வரும். (31) 32. ஆ ஏ ஓஅம் மூன்றும் வினா. (இ-ள்.) ஆ ஏ ஓ அம் மூன்றும் வினா - (மேல் நெட்டெழுத்து என்னப்பட்ட) ஆ ஏ ஓ என்னும் அம் மூன்றும் வினா என்னும் குறியவாம். உ-ம்: உண்கா, உண்கே, உண்கோ சாத்தா எனவரும். ‘தன்னின முடித்தல்’ என்பதனான், எகரமும் யகர ஆகாரமும் வினாப் பெறுமெனக் கொள்க. இக் குறிகளையும் முன் குறிலென்றும் நெடிலென்றும் கூறிய வழியே கூறுக வெனின், இவை சொல் நிலைமையிற் பெறும் குறியாகலின், ஆண்டு வையாது மொழிமரபினைச் சாரவைத்தார் என்க. இக்குறி மொழிநிலைமைக்கேல் எழுத்தின்மேல் வைத்துக் கூறியது என்னையெனின், இவ்வதிகாரத்துப் பெயர் வினையல்லன வற்றிற்குக் கருவி செய்யாமையின் என்க. (32) 33. அளபிறந் துயிர்த்தலு மொற்றிசை நீடலும் உளவென மொழிப விசையொடு சிவணிய நரம்பின் மறைய வென்மனார் புலவர். இஃது, எழுத்துகள் முற்கூறிய மாத்திரையின் நீண்டு நிற்கும் இடம் இதுவென்பது உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அளபு இறந்து உயிர்த்தலும் - (உயிரெழுத்துக் களெல்லாம்) தமக்குச் சொன்ன அளவினைக் கடந்து ஒலித் தலையும், ஒற்று இசை நீடலும் - ஒற்றெழுத்துக்கள் தம்மொலி முன்கூறிய அளபின் நீடலையும், இசையொடு சிவணிய நரம்பின் மறைய - (இந் நூலுட் கூறும் விளியின் கண்ணேயன்றிக்) குரல்முதலிய ஏழிசையொடு பொருந்திய நரம்பினை யுடைய யாழினது இசைநூற்கண்ணும், உள என மொழிப என்மனார் புலவர் - உள எனச் சொல்லுவர் அவ் விசை நூலாசிரியர் என்று சொல்லுவர் புலவர். ‘ஒற்றிசை நீடலும்’ என்றனர், ‘அளபிறந் துயிர்த்த’ லென்றது அதிகாரத்தால் நின்ற உயிர்மேற் சேறலின். ‘உள’ வென்றது அந்நீட்டிப்பு ஒரு தலையன்றென்பது விளக்கிற்று. இசைநூலாசிரியரும் முதனூலாசிரியர் தாமே யெனினும், ‘மொழிப’, என வேறொருவர் போலக் கூறியது, அதுவும் வேறு ஒரு நூலாகச் செய்யப்படும் நிலைமை நோக்கிப் போலும். ‘மறையவும்’ என்பதன் உம்மை விகாரத்தால் தொக்கது. அகரம் செய்யுள் விகாரம். (33) முதலாவது - நூன்மரபு முற்றிற்று. மொழி மரபு ‘மொழிகளுக்கு எழுத்தான்வரும் மரபுணர்த்தினமையின் மொழி மரபெனப்பட்டது’ என இளம்பூரணரும் ‘எழுத்தானாம் மொழியது மரபுணர்த்தினமையின் இவ்வோத்து மொழிமரபெனக் காரணப்பெயர்த் தாயிற்று’ என நச்சினார்க்கினியரும் இவ்வியலின் பெயர்க்காரணங் கூறினர். இவ்வியலுட் கூறுகின்ற இலக்கணம் தனிநின்ற எழுத்திற்கன்றி மொழியிடை யெழுத்திற்கு’ என இளம்பூரணர் கூறுவர். எனவே எழுத்துக்களை மொழிப்படுத் திசைக்குங்கால் மொழியில் நின்ற எழுத்துக்களுக்கு உளவாம் இயல்பினை யுணர்த்துவது இவ்வியலென்பது பெறப்படும். இவ்வியலின் சூத்திரங்கள் 49. மொழியினைச் சார்ந்து ஒலித்தலையே இயல்பாகவுடைய சார்பெழுத்து மூன்றிற்கும் ‘அவைதாம் குற்றியலிகரம் குற்றிய லுகரம் ஆய்தம் என முன்னருரைத்த முறையே இவ்வியலில் இலக்கணம் கூறுகின்றார். அம்மூன்றும் ஒரு மொழி புணர்மொழி ஆகிய ஈரிடத்தும் வருமெனக்கொண்டு அவற்றை ஒருமொழிக் குற்றியலிகரம், புணர்மொழிக் குற்றியலிகரம், ஒருமொழிக் குற்றியலுகரம், புணர்மொழிக் குற்றியலுகரம், ஒரு மொழியாய்தம், புணர் மொழியாய்தம் என ஆறாகப்பிரித்து முறையே 1-முதல் 6-வரை யுள்ள சூத்திரங்களில் உணர்த்தி 7-ஆம் சூத்திரத்தில் அவ்வொரு மொழி யாய்தத்திற்கு ஓர் இலக்கணமுங் கூறியுள்ளார். இவை மொழியிடைச் சார்த்தியுணரப்படுவன ஆகலானும் ஒருவாற்றான் எழுத்தெனக் கொள்ளப்படுவன ஆகலானும் நூன் மரபையடுத்து மொழிமரபின் முதற்கண் விளக்கப்பட்டன. இவற்றையடுத்து உயிரளபெடை, மொழி யாக்கம், மெய்களின் இயக்கம், ஈரொற் றுடனிலை, மகரக் குறுக்கம், எழுத்துப்போலி, ஐகாரக் குறுக்கம், மொழி முதலெழுத்துக்கள், மொழிக்கீறாமெழுத்துக்கள், என்பன உணர்த்தப்பட்டன. இவையெல்லாம் தனி யெழுத்துக்களிலன்றி மொழிகளில் வைத்து அறிந்துகொள்ளுதற் குரியனவாதலின் இவ்வியலிற் கூறப்பட்டன. - க. வெள்ளைவாரணனார் நூல்வரிசை - 10, பக். 167-168 இரண்டாவது மொழிமரபு இவ் வோத்து என்ன பெயர்த்தோ வெனின், மொழிகளுக்கு எழுத்தான் வரும் மரபு உணர்த்தினமையின் மொழிமரபு எனப்பட்டது. இதனுள் கூறுகின்றது தனிநின்ற எழுத்திற்கு அன்றி மொழியிடை (நின்ற) எழுத்திற்கு என வுணர்க. 34. குற்றிய லிகர நிற்றல் வேண்டும் யாவென் சினைமிசை யுரையசைக் கிளவிக் காவயின் வரூஉ மகர மூர்ந்தே. இத் தலைச் சூத்திரம் என் நுதலிற்றோவெனின், சார்பிற் றோற்றத்து எழுத்துகளிற் குற்றியலிகரத்தின் ஒருமொழிக் குற்றியலிகரத்திற்கு இடமும் பற்றுக்கோடும் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) குற்றியலிகரம் - ஒருமொழிக் குற்றியலிகரம், உரையசைக் கிளவிக்கு - உரையசைச் சொல்லாகிய மியா என்பதற்கு, ஆவயின் வரூஉம் - (சினையாக) அச் சொல் தன்னிடத்து வருகின்ற, யா என் சினைமிசையா என் சினைமிசை, மகரம் ஊர்ந்து நிற்றல் வேண்டும் - மகர ஒற்றினை ஊர்ந்து நிற்றலை வேண்டும் (ஆசிரியன்). உ-ம்: கேண்மியா என வரும். மியா என்னும் சொல் இடம். மகரம் பற்றுக்கோடு. யா என்னும் சினையும் மகரம்போலக் குறுகுதற்கு ஒரு சார்பு. (1) 35. புணரிய னிலையிடைக் குறுகலு முரித்தே உணரக் கூறின் முன்னர்த் தோன்றும். இது, குற்றியலிகரம் புணர்மொழியுள்ளும் வருமென்று உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) புணர் இயல் நிலை இடையும் - இருமொழி தம்மிற் புணர்தல் இயன்ற நிலைமைக்கண்ணும், குறுகல் உரித்து - அவ் விகரம் குறுகுதலுடைத்து, உணரக் கூறின் - (ஆண்டை இடத்தினையும் பற்றுக் கோட்டினையும் ஈண்டு) உணரக் கூறப்புகின், முன்னர் தோன்றும் - (அது வேண்டுவதில்லை) குற்றியலுகரப் புணரியலுள் (அவ்விடனும் பற்றுக் கோடும்) தோன்றும். ‘புணரிய னிலை யிடையும்’ என மொழிமாற்றி உரைக்க. முன்னர் தோன்றுமாறு: “யகரம் வரும்வழி யிகரங் குறுகும், உகரக் கிளவி துவரத் தோன்றாது” (குற்றியலுகர புணரியல் 5) என்பதனுள் அறிக. யகரம் இடம்; உகரம் சார்ந்த வல்லெழுத்துப் பற்றுக் கோடு. உ-ம்: நாகியாது, வரகியாது, தெள்கியாது, எஃகியாது, கொக்கி யாது, குரங்கியாது என வரும். (2) 36. நெட்டெழுத் திம்பருந் தொடர்மொழி யீற்றுங் குற்றிய லுகரம் வல்லா றூர்ந்தே. இஃது, ஒருமொழிக் குற்றியலுகரத்திற்கு இடமும் பற்றுக்கோடும் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) நெட்டெழுத்து இம்பரும் - நெட்டெழுத்தினது பின்னும், தொடர்மொழி ஈற்றும் - தொடர்மொழியது இறுதியினும், குற்றியலுகரம் வல்லாறு ஊர்ந்து (நிற்றல் வேண்டும்) - குற்றியலுகரம் வல்லெழுத்து ஆறினையும் ஊர்ந்து (நிற்றலை வேண்டும் ஆசிரியன்). ‘தந்து புணர்ந்துரைத்தல்’ (மரபு. 110) என்னும் தந்திரவுத்தியான், முன்னின்ற ‘நிற்றல் வேண்டும்’ என்பது ஈண்டும் புணர்க்கப்பட்டது. உ-ம்: நாகு, வரகு என வரும். நெட்டெழுத்திம்பரும் தொடர்மொழியீறும் இடம். வல் லெழுத்துப் பற்றுக்கோடு. இவ்வாறு இடமும் பற்றுக்கோடும் கூறவே, மொழிக்கு ஈறாதலும் கூறியவாறாயிற்று. (3) 37. இடைப்படிற் குறுகு மிடனு மாருண்டே கடப்பா டறிந்த புணரிய லான. இது, குற்றியலுகரம் புணர்மொழியுள்ளும் வருமென்பது உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இடைப்படினும் குறுகும் இடன் உண்டு - (அவ் வுகரம்) புணர்மொழி இடைப்படினும் குறுகும் இடமுண்டு, (அதன் இடமும் பற்றுக்கோடும் யாண்டோ பெறுவதெனின்) கடப்பாடு அறிந்த புணரியலான் - அதன் புணர்ச்சி முறைமை அறியும் குற்றியலுகரப் புணரியலின் கண்ணே எ-று. ‘இடைப்படினும் குறுகும்’ என மொழிமாற்றி உரைக்க. அக் குற்றியலுகரப் புணரியலுள், “வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து வருவழித், தொல்லை யியற்கை நிலையலு முரித்தே.” (குற்றியலுகரப் புணரியல். 4) என்பதனுள் வல்லொற்றுத் தொடர் மொழியும் வல்லெழுத்து வருவழியும் இடம். அவ் வல்லொற்றுத் தொடர்மொழியீற்று வல்லெழுத்துப் பற்றுக்கோடு. உ-ம்: செக்குக்கணை, சுக்குக்கொடு என வரும். ‘இடன்’ என்றதனான், இக் குறுக்கம் சிறுபான்மை என்றுணர்க. ஆர், ஏ என்பன - அசைகள். ‘புணரியலான்’ என்பது வேற்றுமை மயக்கம். அகரம் - சாரியை) (4) 38. குறியதன் முன்ன ராய்தப் புள்ளி உயிரொடு புணர்ந்த வல்லாறன் மிசைத்தே. இஃது, ஒருமொழி ஆய்தம் வருமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஆய்தப் புள்ளி - ஆய்தமாகிய புள்ளி, குறியதன் முன்னர் - குற்றெழுத்தின் முன்னர், உயிரொடு புணர்ந்த வல் ஆறன் மிசைத்து - உயிரொடு புணர்ந்த வல்லெழுத்து ஆறன் மேலது எ-று. உ-ம்: எஃகு, கஃசு எனவரும். குறியதன் முன்னரும் வல்லெழுத்து மிசையும் இடம். இஃது உயிரன்மையின், இதற்குப் பற்றுக்கோடு என்பதில்லை. கஃறீது என்பதனை மெய்பிறிதாகிய புணர்ச்சி (புணரியல் - 7) என்ப வாகலின், ‘புள்ளி’ என்றதனான் ஆய்தத்தை மெய்ப்பாற் படுத்துக் கொள்க. ஈண்டு உயிரென்றது, மேல் ‘ஆய்தத் தொடர் மொழி’ (குற்றியலுகரப் புணரியல் - 1) என்றோதலின் பெரும் பான்மையும் குற்றியலுகரத்தினை. வெஃகாமை முதலிய பிற உயிர்வரவு சிறுபான்மை யெனக் கொள்க. (5) 39. ஈறியன் மருங்கினு மிசைமை தோன்றும். இஃது, அவ் வாய்தம் புணர்மொழியுள்ளும் வருமென்பது உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஈறு இயல் மருங்கினும் - நிலைமொழியீறு வருமொழி முதலொடு புணர்ந்து நடக்கும் இடத்தினும், இசைமை தோன்றும் - ஆய்த ஒலி தோன்றும். உ-ம்: கஃறீது, முஃடீது எனவரும். ஈண்டும் இடங்கள் அவை. (6) 40. உருவினு மிசையினு மருகித் தோன்றும் மொழிக்குறிப் பெல்லா மெழுத்தி னியலா ஆய்த மஃகாக் காலை யான. இஃது, அவ் வொருமொழி ஆய்தத்திற்கு ஓர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உருவினும் - ஒரு பொருளினது உருவத்தின் கண்ணும், இசையினும் - ஓசையின்கண்ணும், அருகித் தோன்றும் - சிறுபான்மையாய்த் தோன்றும், குறிப்புமொழி யெல்லாம் - குறிப்பு மொழிகளெல்லாம், எழுத்தின் இயலா - ஆய்த எழுத்தானிட்டு எழுதப்பட்டு நடவா, (அஃது எக்காலத்துமோ வெனின், அன்று), ஆய்தம் அஃகாக் காலை யான - அவ் வாய்தம் தன் அரை மாத்திரை அளபாய்ச் சுருங்கி நில்லாது (அவ் வுருவும் இசையது மிகுதியும் உணர்த்துதற்கு) நீண்ட காலத்து அந் நீட்சிக்கு. உ-ம்: ‘கஃறென்றது’ என்பது உருவு. ‘சுஃறென்றது’ என்பது இசை. (7) 41. குன்றிசை மொழிவயி னின்றிசை நிறைக்கும் நெட்டெழுத் திம்ப ரொத்தகுற் றெழுத்தே. இது, ‘நீட்டம் வேண்டின்’ (நூன்மரபு. 6) என்பதற்கு ஒரு புறனடை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) குன்று இசை மொழிவயின் நின்று இசை நிறைக்கும் - (அளபெடை யோசையாகச் சொல்லா தொழியின்) குன்றுவதான ஓசையையுடைய அவ்வளபெடை எழுத்தானாய மொழிக் கண்ணே நின்று அவ்வோசையை நிறைக்கும், (அவை யாவை யென்னின்,) நெட்டெழுத்து இம்பர் ஒத்த குற்றெழுத்து - நெட்டெழுத்துகளின் பின்னாக (அவற்றிற்குப் பிறப்பானும் புணர்ச்சியானும் ஓசையானும்) இனமொத்த குற்றெழுத்துகள். உ-ம்: ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ, ஓஒ எனவரும். ஈண்டு ‘மொழி’யென்றது, அவ் வளபெடை எழுத்து ஒரு பொருள் உணர்த்தி ஓரெழுத் தொருமொழியாய் நிற்கும் நிலைமையினை. இவையும் மொழிமேற் காணப்படுதலிற் சார்பின் தோற்றத்து எழுத்து எனப்படுமாலெனின், பெரும்பான்மையும் அம் மொழிதானே அவ்வெழுத்தாய் வருதலானும், அம்மொழி நிலைமை ஒழிய வேறெழுத்தாகவும் சொல்லப்படுதலானும், அவ்வாறு ஆகாதென்பது. சிறுபான்மையும் அம்மொழிதானே எழுத்தாய் வாராதெனக் கொள்க. உ-ம்: ‘எருது காலுறாஅது’ என்றாற்போல்வன. (8) 42. ஐஒள என்னு மாயீ ரெழுத்திற் கிகர கர மிசைநிறை வாகும். இது, மேலதற்கு ஒரு புறனடை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஐ ஒள என்னும் அ ஈர் எழுத்திற்கு - (ஒத்த குற்றெழுத்து இல்லா) ஐ ஒள என்று சொல்லப்படும் அவ் விரண்டெழுத்திற்கு முன், இகரம் உகரம் இசைநிறை ஆகும் - (ஈகார ஊகாரங்கட்கு ஒத்த குற்றெழுத் தாகிய) இகர உகரங்கள் (அக் குன்றிசை மொழிக்கண் நின்று) ஓசையை நிறைப்பனவாகும். இத்துணையும் நூன்மரபின் ஒழிபு. (9) 43. நெட்டெழுத் தேழே யோரெழுத் தொருமொழி. இஃது, எழுத்தினான் மொழியாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) நெட்டெழுத்து ஏழும் - நெட்டெழுத்தாகிய ஏழும், ஓர் எழுத்து ஒருமொழி - ஓர் எழுத்தானாகும் ஒருமொழியாம். உ-ம்: ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என வரும். இதுவும் உயிர்க்கும் உயிர்மெய்க்கும் பொது. ஒளகாரத்தில் உயிர்மெய்யினையே கொள்க. ‘ஏழும்’ என்பதன் உம்மை விகாரத்தான் தொக்கது. (10) 44. குற்றெழுத் தைந்து மொழிநிறை பிலவே. இது, குற்றெழுத்துகள் ஓரெழுத்தொருமொழி ஆகா வென்பதும், அவற்றுள் ஒருமொழியாவன உளவென்பதும் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) குற்றெழுத்து ஐந்தும் - குற்றெழுத்தாகிய ஐந்தும், மொழி நிறைபு இல - ஓரெழுத்தாய் நின்று ஒரு மொழியாய் நிறைதல் இல; அவற்றுட் சில நிறைக்கும். ஒகரம் ஒழிந்த நான்கும் சுட்டாயும் வினாவாயும் மொழி நிறைக்குமன்றோவெனின், அவை இடைச்சொல்லாதலின், அவற்றிற்குக் கருவி செய்யார் என்க. இதுவும் உயிர்க்கும் உயிர்மெய்க்கும் பொது. ஐந்தும் என்பதன் உம்மை ஈண்டு எச்சப்பட நின்றது. உ-ம்: து, நொ எனவரும். (11) 45. ஓரெழுத் தொருமொழி யீரெழுத் தொருமொழி இரண்டிறந் திசைக்குந் தொடர்மொழி யுளப்பட மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே. இஃது, எழுத்தினான் ஆகும் மொழிகளின் பெயரும் முறையும் தொகையும் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஓர் எழுத்து ஒரு மொழி - ஓரெழுத்தான் ஆகும் ஒருமொழி, ஈர் எழுத்து ஒருமொழி - இரண்டெழுத்தான் ஆகும் ஒருமொழி, இரண்டு இறந்து இசைக்கும் தொடர்மொழி - இரண்டிறந்து பலவற்றான் இசைக்கும் தொடர்மொழி, உளப்பட மூன்று - உட்பட்ட மொழிகளின் நிலைமை மூன்றாம், தோன்றிய நெறி - அவை தோன்றிய வழக்கு நெறிக்கண். (ஏகாரம் - ஈற்றசை) உ-ம்: ஆ, மணி, வரகு, கொற்றன் எனவரும். (12) 46. மெய்யி னியக்க மகரமொடு சிவணும். இது, தனி மெய்களைச் சொல்லும் முறைநிலை இது வென்பது உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மெய்யின் இயக்கம் - தனி மெய்களினது இயக்கம், அகரமொடு சிவணும் - அகரத்தொடு பொருந்தும். உ-ம்: “ட ற ல ள வென்னும் புள்ளி” (நூன்மரபு 23) எனவரும். இது மொழியிடை (நின்ற) எழுத்துகள் அன்மையின் நூன்மரபின் வைக்க வெனில் தன்னை உணர்த்தாது வேறு பொருள் உணர்த்தும் சொல் நிலைபோல ‘டறலள’ வென்றது உயிர்மெய்யை உணர்த்தாது தனி மெய்யை உணர்த்தலானும், ஒற்றினை உயிர்மெய் போலச் சொல்லுகின்ற வழுவமைதி யிலக்கணத்தானும் மொழிமரபின்கண்ண தாயிற்றென உணர்க. (13) 47. தம்மியல் கிளப்பி னெல்லா வெழுத்தும் மெய்ந்நிலை மயக்க மான மில்லை. இது, மெய்ம்மயக்கத்திற்கு ஓர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) எல்லா எழுத்தும் தம் இயல் கிளப்பின் - எல்லா மெய் யெழுத்தும் மொழியிடையன்றித் தம் வடிவின் இயல்பைச் சொல்லுமிடத்து, மெய்மயக்கநிலை மானம் இல்லை - மெய் மயக்க நிலையின் மயங்கிவருதல் குற்றம் இல்லை. உ-ம்: “வல்லெழுத் தியையின் டகார மாகும்” (புள்ளிமயங்கு -7) என வரும். இதனை அம் மெய்ம்மயக்கத்து வைக்கவெனின், இது வழுவமைதி நோக்கி மொழிமரபின்கண்ண தாயிற்று. (14) 48. யரழ வென்னும் மூன்றுமுன் னொற்றக் கசதப ஙஞநம வீரொற் றாகும். இஃது, ஈர்ஒற்று உடனிலை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ய ர ழ என்னும் மூன்று - யரழ என்று சொல்லப் படுகின்ற மூன்றனுள் ஒன்று, முன் ஒற்ற - (குறிற்கீழும் நெடிற் கீழும்) முன்னே ஒற்றாய் நிற்ப (அவற்றின் பின்னே), கசதப ஙஞநம ஈர் ஒற்றாகும் - கசதபக்களின் ஒன்றாதல் ஙஞநமக்களின் ஒன்றாதல் ஒற்றாய்வர அவை ஈரொற்றுடனிலையாம். உ-ம்: வேய்க்குறை, வேய்ங்குறை, வேர்க்குறை, வேர்ங்குறை, வீழ்க்குறை, வீழ்ங்குறை; சிறை, தலை, புறம் என ஒட்டுக. இவ் விதிமேல் ஈற்றகத்து உணர்ந்துகொள்ளப்படுமா லெனின், இஃது ‘ஈர்க்கு’, ‘பீர்க்கு’ என ஒரு மொழியுள்ளும் வருதலானும், இரண்டுமொழிக்கண் வருதல் விகாரமாதலானும் ஈண்டுக் கூறப்பட்டது. அஃதேல், இதனை நூன்மரபினகத்து மெய்ம்மயக்கத்துக்கண் கூறுகவெனின், ஆண்டு வேற்றுமைநயம் கொண்டதாகலின் ஈரொற்று உடனிலையாதல் நோக்கி ஒற்றுமைநயம்பற்றி ஈண்டுக் கூறப்பட்டது. (15) 49. அவற்றுள் ரகார ழகாரங் குற்றொற் றாகா. இது, ரகார ழகாரங்கட்கு எய்தியது ஒருமருங்கு மறுத்தல் நுதலிற்று. (இ-ள்.) அவற்றுள் - மேற்கூறப்பட்ட மூன்றனுள்ளும், ரகாரம் ழகாரம் குற்று ஒற்று ஆகா - ரகாரமும் ழகாரமும் குறிற்கீழ் ஒற்றாகா. அவை நெடிற்கீழ் ஒற்றாம்; குறிற்கீழ் உயிர்மெய்யாம். உ-ம்: தார், தாழ் என நெடிற்கீழ் ஒற்றாய் நின்றன. கரு, மழு எனக் குறிற்கீழ் உயிர்மெய்யாய் நின்றன. இவ்வாறு விலக்கினமையின், யகரம் பொய் எனவும் நோய் எனவும் இரண்டிடத்தும் ஒற்றாயிற்று. குற்றொற்று என்பது குறிதாகிய ஒற்று எனப் பண்புத்தொகை. குறிற்கீழ் நிற்றலான், குறியது எனப்பட்டது. ஈண்டுக் குறில் நெடில் என்கின்றது மொழிமுதல் எழுத்தினை என உணர்க. இது, மேல் வரையறை இல எனப்பட்ட உயிரும் மெய்யும் மயங்கும் மயக்கத்திற்கு ஒரு வரையறை கண்டு கூறினவாறு. (16) 50. குறுமையு நெடுமையு மளவிற் கோடலின் றொடர்மொழி யெல்லா நெட்டெழுத் தியல. (இ-ள்.) குறுமையும் நெடுமையும் அளவின் கோடலின் - உயிரெழுத்திற்குக் குறுமையும் நெடுமையும் அளவிற் கொள்ளப் படுதலின், தொடர்மொழி எல்லாம் நெட்டெழுத்து இயல - தொடர்மொழிக் கீழ் நின்ற ரகார ழகாரங்களெல்லாம் நெடிற்கீழ் நின்ற ரகார ழகாரங்களின் இயல்பையுடைய (என்று கொள்ளப்படும்). உ-ம்: அகர், புகர், அகழ், புகழ் எனக் கொள்க. ‘புலவர்’ என்றாற்போல இரண்டு மாத்திரையை இறந்ததன் பின்னும் வருமாலெனின், அவையும் ‘தன்னின முடித்தல்’ என்பதனான் ‘நெடிற்கீழ் ஒற்று’ எனப்படும். ‘எல்லாம்’ என்றதனான், ரகார ழகாரங்களேயன்றி, பிற ஒற்றுகளும் ‘நெடிற்கீழ் ஒற்று’ எனப்படும். இதனானே, விரல் தீது என்புழி லகரம் ‘நெடிற்கீழ் ஒற்று’ என்று கெடுக்கப்படும். (17) 51. செய்யு ளிறுதிப் போலுமொழிவயின் னகார மகார மீரொற் றாகும். இது, செய்யுட்கண் ஈரொற்று உடனிலை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) செய்யுள் இறுதி போலும் மொழிவயின் - செய்யுள் இறுதிக் கண் ‘போலும்’ என்னும் மொழிக்கண், னகாரம் மகாரம் ஈர் ஒற்று ஆகும் - னகாரமும் மகாரமும் வந்து ஈரொற்று உடனிலையாய் நிற்கும் (போலி எனவும் பாடம்) உ-ம்: ‘எம்மொடு தம்மைப் பொரூஉங்காற் பொன்னொடு, கூவிளம் பூத்தது போன்ம்’ எனவரும். (18) 52. னகார முன்னர் மகாரங் குறுகும். இஃது, “அரையளபு குறுகன் மகர முடைத்து” (நூன்மரபு 13) என்பதற்கு ஒரு புறனடை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) னகாரம் முன்னர் மகாரம் குறுகும் - (மேற்கூறப்பட்ட) னகாரத்து முன்வந்த மகாரம் மாத்திரை குறுகி நிற்கும். (19) 53. மொழிப்படுத் திசைப்பினுந் தெரிந்துவே றிசைப்பினும் எழுத்திய றிரியா வென்மனார் புலவர். இஃது, எழுத்துகட்கு மொழிக்கண் மாத்திரை காரணமாகப் பிறப்பதோர் ஐயம் தீர்த்தல் நுதலிற்று. (இ-ள்.) மொழிப்படுத்து இசைப்பினும் - மொழிக்கண் படுத்துச் சொல்லினும், தெரிந்து வேறு இசைப்பினும் - தெரிந்துகொண்டு வேறே சொல்லினும், எழுத்து இயல் திரியா என்மனார் புலவர் - உயிரும் மெய்யுமாகிய எழுத்துகள் (பெருக்கம் சுருக்கம் உடையனபோன்று இசைப்பினும்,) தத்தம் மாத்திரை இயல்பின் திரியா என்று சொல்லுவர் புலவர். உ-ம்: அஃகல், அ எனவும், ஆல், ஆ எனவும், கடல், க எனவும், கால், கா எனவும் கண்டுகொள்க. ‘வேறு’ என்றதனான், எடுத்தல் படுத்தல் முதலிய ஓசை வேற்றுமைக்கண்ணும் எழுத்தியல் திரியா வென்பது கொள்க. (20) 54. அகர இகர மைகார மாகும். இது, போலி எழுத்து ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அகரம் இகரம் - அகரமும் இகரமும் கூடச் சொல்ல, ஐகாரமாகும் - ஐகாரம்போல ஆகும். உ-ம்: ஐயர், அஇயர் எனவரும். அது கொள்ளற்க. (21) 55. அகர உகர மௌகார மாகும். இதுவும் அது. (இ-ள்.) அகரம் உகரம் - அகரமும் உகரமும் கூடச் சொல்ல, ஒளகாரம் ஆகும் - ஒளகாரம்போல ஆகும் எ-று. உ-ம்: ஒளவை, அஉவை எனக் கண்டுகொள்க. அது கொள்ளற்க. (22) 56. அகரத் திம்பர் யகரப் புள்ளியும் ஐயெ னெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும். இதுவும் அது. (இ-ள்.) அகரத்து இம்பர் யகரப் புள்ளியும் - அகரத்தின் பின்னர் இகரமேயன்றி யகரமாகிய புள்ளியும், ஐ என் நெடுஞ்சினை மெய் பெறத் தோன்றும் - ஐ எனப்பட்ட நெட்டெழுத்தாம் வடிவுபெறத் தோன்றும். உ-ம்: ஐவனம், அய்வனம் எனவரும். ‘மெய்பெறத் தோன்றும்’ என்றதனான், (அகரத்தின் பின்னர் உகரமேயன்றி,) வகரப்புள்ளியும் ஒளகாரம்போல வருமெனக் கொள்க. இச்சூத்திரம், “அகரத் திம்பர் யவகரப் புள்ளியும் ஐயௌ நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்” என்றிருத்தல் வேண்டும். இ-ள்: அகரத்து இம்பர் யவகரப் புள்ளியும் அகரத்தின் பின்னர் யகர வொற்றும் வகர வொற்றும், ஐ ஒள நெடுஞ்சினை - ஐகாரம் ஒளகாரம் என்னும் நெட்டெழுத்தாம். மெய்பெற தோன்றும். (அவை) வடிவு பெறத்தோன்றும். உ-ம்: ஐயவி, அய்யவி; ஒளவை, அவ்வை ‘மெய் பெறத்தோன்றும்” என்றனால், அவற்றைக் கொள்க என்றவாறு’. காலப் பழைமையில் ஏடு பெயர்த்து எழுதினோர் `யவகரப்புள்ளி’ என்பதனை `யவரப்புள்ளி’ எனவும் `ஐbய்ள நெடுஞ்சினை’ என்பதனை `ஐயெ னெடுஞ்சினை’ எனவும் பிழையாக எழுதினர் போலும். அப்பிழைப்பாடத்தைப் பிழையற்ற பாடமெனக் கருதி உரையாசிரியர் அதற்குத் தக்கவாறு உரையெழுதிச் சென்றனர் போலும்.) எனக் கண்டுகொள்க. (23) 57. ஓரள பாகு மிடனுமா ருண்டே தேருங் காலை மொழிவயி னான. இஃது, என் நுதலிற்றோ வெனின், உயிர்களுள் ஒன்றற்கு மாத்திரைச் சுருக்கம் கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) தேருங்காலை மொழிவயின் ஓர் அளபு ஆகும் இடனும் உண்டு - ஐகாரம் ஆராயுங்காலத்து மொழிக்கண் ஓர் அளபாய் நிற்கும் இடமும் உண்டு. உ-ம்: இடையன், மடையன் எனவரும். ‘தேருங் காலை’ என்றதனான், முதற்கண் சுருங்காதென்பது கொள்க. “இடன்” என்றதனான் இக் குறுக்கம் சிறுபான்மை யென்பது கொள்க. இச்சூத்திரத்திற்குப் பின்வருமாறு உரைத்தலே பொருத்த முடைத்து:- இஃது, உயிர்களுள் இரண்டற்கு மாத்திரைச் சுருக்கம் கூறுதல் நுதலிற்று. இ-ள்: தேரும் காலை மொழிவயின் ஆன- ஆராயுங்காலத்து மொழிக்கண் நின்ற ஆகார ஊகாரங்கள், ஓர் அளபு ஆகும் இடனும் உண்டு ஓர் அளபாய் நிற்கும் இடமும் உண்டு. `தேரும் `காலை’ என்றதனான், தனியே நின்ற ஐகாரமும் ஒளகாரமும் ஒரு மாத்திரையாகு மென்றுகொள்க. உ-ம்: பை, மை, கை; கௌ, சௌ, வெள. `இடனும்’ என்றதனான் இக்குறுக்கம் சிறுபான்மை யென்பது கொள்க. ஆர் என்பன அசைகள். மேல் “யகரப்புள்ளியும் ஐய னெடுஞ்சினை” என்ற பிழைப் பாடத்தைப் பிழையற்ற பாடமெனக் கொண்டதால் உரை யாசிரியர் ஈண்டு ஒளகாரத்தைக் கூறாது ஐகாரம் ஓர் அளபாய் நிற்கும் இடமும் உண்டு என்று உரைத்துச் சென்றனர் போலும். (24) 58. இகர யகர மிறுதி விரவும். இதுவும் ஒரு போலியெழுத்து உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இறுதி இகர யகரம் விரவும் - இகரவீற்று மொழிக்கண் யகரமும் (அதுபோல) இகரமும் விரவிவரும் எ-று. உ-ம்: நாய், நாஇ எனக் கண்டுகொள்க. (விரவும் என்றதனால், அவையிரண்டும் கொள்க என்றவாறு.) (25) 59. பன்னீ ருயிரு மொழிமுத லாகும். இஃது, உயிரெழுத்து மொழிக்கு முதலாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பன்னீர் உயிரும் மொழிமுதல் ஆகும் - பன்னிரண்டு உயிரெழுத்தும் மொழிக்கு முதலாம் எ-று. உ-ம்: அடை, ஆடை, இலை, ஈயம், உரல், ஊர்தி, எழு, ஏணி, ஐவனம், ஒளி, ஓக்கம், ஒளவியம் எனவரும். (26) 60. உயிர்மெய் யல்லன மொழிமுத லாகா. இது, மெய்யெழுத்து மொழிக்கு முதலாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உயிர்மெய் அல்லன மொழி முதல் ஆகா - உயிரொடு கூடிய மெய்யல்லாதனவாகிய தனிமெய்கள் மொழிக்கு முதலாகா; உயிரொடு கூடிய மெய்கள் மொழிக்கு முதலாம். ஈண்டு உயிர்மெய் யென்பது வேற்றுமைநயம் கருதியென வுணர்க. ஈண்டு ஒற்றுமை கருதில், “கதந பமஎனும் ஆவைந் தெழுத்தும், எல்லா வுயிரொடுஞ் செல்லுமார் முதலே” (மொழிமரபு - 28) எனச் சூத்திரம் சுருங்க வருவதன்றி, இதனாற் சொல்லப்பட்ட அறுபது உயிர்மெய்யினை எடுத்தோத வேண்டிச் சூத்திரம் பரக்க வருமென்பது. (`சுருங்க ஓதுமன்றி’ எனவும், `ஓதவேண்டில்’ எனவும் முந்திய அச்சுப் பிரதியிலும் ஏட்டுப் பிரதிகளிலும் காணப்படும் (உரைப்) பாடம் ஏடுபெயர்த் தெழுதினோரால் நேர்ந்த பிழை போலும்) (27) 61. கதந பமஎனு மாவைந் தெழுத்தும் எல்லா வுயிரொடுஞ் செல்லுமார் முதலே. இது, மேல் முதலாம் என்னப்பட்ட உயிர்மெய்கட்கு வரையறை கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) க த ந ப ம எனும் அ ஐந்து எழுத்தும் - க த ந ப ம என்று சொல்லப்பட்ட ஐந்து தனி மெய்யெழுத்தும், எல்லா உயிரொடும் முதல் செல்லும் - பன்னிரண்டு உயிரோடும் மொழிக்கு முதலாதற்குச் செல்லும். உ-ம்: கலை, காளி, கிளி, கீரி, குடி, கூடு, கெண்டை, கேழல், கைதை, கொண்டல், கோடை, கௌவை எனவும்; தந்தை, தாடி, திற்றி, தீமை, துணி, தூணி, தெற்றி, தேவர், தையல், தொண்டை, தோடு, தௌவை எனவும்; நடம், நாரை, நிலம், நீர், நுழை, நூல், நெய்தல், நேயம், நைகை, நொய்யன், நோக்கம், நௌவி எனவும்; படை, பாடி, பிடி, பீடம், புகழ், பூமி, பெடை, பேடி, பைதல், பொன், போதகம், பௌவம் எனவும்; மடம், மாலை, மிடறு, மீனம், முகம், மூதூர், மெலிந்தது, மேனி, மையல், மொழி, மோதகம், மௌவல் எனவும் வரும். ‘முதற்கு’ என்பதன் நான்காம் உருபு விகாரத்தான் தொக்கது. (ஆர் என்பது அசை. ஏகாரம் - ஈற்றசை) (28) 62. சகரக் கிளவியு மவற்றோ ரற்றே அஐ ஒளவெனு மூன்றலங் கடையே. இதுவும் அது. (இ-ள்.) சகரக் கிளவியும் அவற்று ஓர் அற்று - சகரமாகிய எழுத்தும் மேற்சொல்லப்பட்டவைபோல எல்லா உயிரொடும் மொழிக்கு முதலாம், அ ஐ ஒள எனும் மூன்று அலங்கடை - அ ஐ ஒள என்னும் மூன்றும் அல்லாவிடத்து. உ-ம்: சாலை, சிலை, சீறுக, சுரும்பு, சூழ்க, செய்கை, சேவடி, சொறிக, சோறு என வரும். சகடம் எனவும், சையம் எனவும் விலக்கினவும் வருமாலெனின், அவற்றுள் ஆரியச்சிதை வல்லாதன ‘கடிசொல் இல்லை’ என்பதனாற் கொள்க. (ஏகாரம் இரண்டும் ஈற்றசைகள். இந்நூல் மூலத்தில் `ஓர் அன்ன,’ `ஓர் அற்று’ என்று வரும் இடங்களில் `ஓர்’ என்பதனை அசையென்று கொள்ளுதல் பொருத்தமுடையதாகத் தோற்றுகின்றது.) (29) 63. உஊ ஒஓ வென்னு நான்குயிர் வஎன் னெழுத்தொடு வருத லில்லை. இதுவும் அது. (இ-ள்.) உ ஊ ஒ ஓ என்னும் நான்கு உயிர் - உ ஊ ஒ ஓ என்று சொல்லப்படுகின்ற நான்கு உயிரும், வ என் எழுத்தொடு வருதல் இல்லை - வ என்னும் மெய்யெழுத்தொடு மொழி முதலில் வருதலில்லை. பிற உயிர்கள் வரும். உ-ம்: வளை, வாளி, விளரி, வீடு, வெள்ளி, வேர், வையம், வெளவு என வரும். (30) 64. ஆ எ ஒஎனு மூவுயிர் ஞகாரத் துரிய. இதுவும் அது. (இ-ள்.) ஆ எ ஒ எனும் மூ உயிர் ஞகாரத்து உரிய - ஆ எ ஒ என்று சொல்லப்படும் மூவுயிர்கள் ஞகார ஒற்றொடு முதலாதற்கு உரிய; பிற உயிர் உரியவல்ல. உ-ம்: ஞாலம், ஞெகிழி, ஞொள்கிற்று எனவரும். ஞழியிற்று என்றாற்போல்வன விலக்கினவும் வருமா லெனின், அவை அழி வழக்கென்று மறுக்க. (31) (பாடம்) `அழி வழக்கென்று மறுக்க’ என்பது. 65. ஆவோ டல்லது யகர முதலாது. இதுவும் அது. (இ-ள்.) ஆவோடு அல்லது யகரம் முதலாது - ஆகாரத்தோடு அல்லது யகரம் முதலாகாது. உ-ம்: யான் என வரும். யவனர் என்றாற்போல்வன விலக்கினவும் வருமாலெனின், அவை ஆரியச் சிதைவென்று மறுக்க. (32) 66. முதலா வேன தம்பெயர் முதலும். இது, மொழிக்கு முதலாகாதனவும் ஒரோவழி ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) முதலா ஏன - மொழிக்கு முதலாகாத ஒழிந்த மெய்களும், தம் பெயர் முதலும் - (அவ் வெழுத்துகள்) தம் பெயர் கூறுதற்கு முதலாம். முதலாயின மெய் கதநபமக்களும், வகரமும், சகரமும், ஞகரமும், யகரமும் என இவை. முதலாகாத மெய் ஙகரமும், டகரமும், ணகரமும், ரகரமும், லகரமும், ழகரமும், ளகரமும், றகரமும், னகரமும் என இவை. உ-ம்: அவை தம் பெயர்க்கு முதலாமாறு: ஙக்களைந்தார், டப்பெரிது, ணந்நன்று என்றாற்போல ஒட்டிக் கொள்க. இனி ‘ஏன’ என்றதனான், முதலாம் என்னப்பட்ட ஒன்பது உயிர் மெய்யும் பன்னிரண்டு உயிரும் தம் பெயர் கூறும் வழியும் மொழிக்கு முதலாம் எனக்கொள்க. உ-ம்: கக்களைந்தார், தப்பெரிது, அக்குறிது, ஆவலிது என்றாற் போல ஒட்டிக்கொள்க. (33) 67. குற்றிய லுகர முறைப்பெயர் மருங்கின் ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும். இது, குற்றியலுகரம் மொழிக்கு முதலாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) குற்றியலுகரம் முறைப்பெயர் மருங்கின் - குற்றியலுகரம் முறைப் பெயரிடத்து, ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும் - ஒற்றாய் நின்ற நகரத்தின் மேலாய நகரத்தொடு மொழிக்கு முதலாம். உ-ம்: நுந்தை என வரும். இவ்வாறு முதலாக்கம் கூறவே, மொழிமுதற் குற்றிய லுகரத்திற்கு இடமும் பற்றுக்கோடும் கூறியவாறாயிற்று. இடம் நுந்தை என்னும் முறைப்பெயர். பற்றுக்கோடு நகரமிசை நகரம். (நகரமிசை நகரம் - நகர ஒற்றின் மேலுள்ள நகர ஒற்று) (34) 68. முற்றிய லுகரமொடு பொருள்வேறு படாஅ தப்பெயர் மருங்கி னிலையிய லான. இது, மேலதற்கு ஓர் புறனடை. (இ-ள்.) முற்றியலுகரமொடு பொருள் வேறுபடாது - (அம் முதற்கட் குற்றியலுகரம் ஆண்டு இதழ்குவித்துக் கூறும் வழி) முற்றுகரத்தொடு பிற உகரம்போலப் பொருள் வேறுபடாது; (யாண்டெனின்,) அப் பெயர் மருங்கின் நிலை இயலான் - அம் முறைப்பெயரிடத்துத் தான் நிற்றற்கண் எ-று. உ-ம்: நாகு எனவும், நகு எனவும் குறுகியும், குறுகாதும் நின்ற உகரங்கள்போல, நுந்தை என்று குறுக்கமாய வழியும், இதழ் குவித்துக் கூறக் குறுகாதவழியும், பொருள் வேறுபடாதவாறு அறிக. இனி ‘இரட்டுறமொழிதல்’ என்பதனால், பொருள் என்றதனை இடனும் பற்றுக்கோடும் ஆக்கி, பிற உகரங்கள்போல ஈண்டை உகரங்கள் இடனும் பற்றுக்கோடும் வேறுபடாது என்பது கொள்க. (ஈற்றகரம் சாரியை) (35) 69. உயிர் ஒள வெஞ்சிய விறுதி யாகும். இஃது, உயிர் மொழிக்கு ஈறாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உயிர் ஒள எஞ்சிய இறுதி ஆகும் - உயிரெழுத்து களுள் ஒளகாரம் ஒழிந்தவை மொழிக்கு ஈறாம், ஒளகாரந்தான் ஈறாகாது. இஃது உயிர்க்கும் உயிர்மெய்க்கும் பொது. உ-ம்: ஆஅ, ஆ; ஈஇ, ஈ; ஊஉ, ஊ;ஏஎ, ஏ; ஐஇ, ஐ; ஓஒ, ஓ என உயிர் ஈறாயின. இவற்றுட் குற்றெழுத்தைந்தும் அளபெடை வகையான் ஈறாயின. உயிர்மெய்களும், மேல்வரையறை கூறாதனவாகிய அகர ஆகார இகர ஈகார ஐகாரங்களோடு இயைந்தன ஈண்டே கொள்க. உ-ம்: விள, பலா,கிளி, குரீ, பனை என வரும். (36) 70. கவவோ டியையி னௌவு மாகும். இஃது, ஈறாகாதென்ற ஒளகாரம் இன்னுழி ஆம் என்கின்றது. (இ-ள்.) க வ ஓடு இயையின் - ககர வகரமாகிய மெய்களொடு பொருந்தின், ஒளஉம் ஆகும் - முன் ஈறாகா தென்ற ஒளகாரமும் ஈறாம். உ-ம்: கௌ, வெள என வரும். (37) 71. எ என வருமுயிர் மெய்யீ றாகாது. இஃது, எகரம் தானே நின்றவழியன்றி மெய்யோடுகூடி ஈறாகாதென வரையறை கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) எ என வரும் உயிர் - எ என்று சொல்ல வரும் உயிர், மெய் ஈறு ஆகாது - தானே ஈறாவதன்றி மெய்யோடு இயைந்து ஈறாகாது. (38) 72. ஒவ்வு மற்றே நவ்வலங் கடையே. இதுவும் வரையறை. (இ-ள்.) ஒவ்வும் அற்று - ஒகரமும் தானே நின்று ஈறாவ தன்றி மெய்யோடு இயைந்து ஈறாகாது, ந அலங்கடை - நகர மெய்யோ டல்லாத விடத்து எ-று. உ-ம்: நௌ என வரும். (39) 73. ஏஓ எனுமுயிர் ஞகாரத் தில்லை. இதுவும் வரையறை. (இ-ள்.) ஏ ஓ எனும் உயிர் ஞகாரத்து இல்லை - ஏ ஓ என்று சொல்லப்படும் உயிர் (தாமே நின்றும் பிற மெய்களொடு நின்றும் ஈறாவதன்றி) ஞகரத்தோடு ஈறாவதில்லை. தாமே யாதல் முன்னே காட்டப்பட்டன. பிற மெய்களோடு ஈறாவனவற்றுள் வழக்கிறந்தன வொழிய இறவாதன வந்தவழிக் கண்டு கொள்க. (40) 74. உஊ கார நவவொடு நவிலா. இதுவும் வரையறை. (இ-ள்.) உ ஊகாரம் ந வ ஒடு நவிலா - உகர ஊகாரங்கள் (தாமே நின்றும் பிற மெய்களொடு நின்றும் பயில்வதன்றி) நகர வகரங்களொடு பயிலா. தாமே ஈறாதல் மேலே காட்டப்பட்டன. பிற மெய்களோடு ஈறாமவற்றுள் வழக்கிறந்தன வல்லாதன வந்தவழிக் கண்டு கொள்க. ‘நவிலா’ என்றதனாற் சிறுபான்மை நொவ்வு கவ்வு என்று (உகரம்) வகாரத்தோடு ஈறாதல் கொள்க. இன்னும் இதனானே சிறுபான்மை நகரத்தோடு வரவு உண்டேனும் கொள்க. (41) 75. உச்ச கார மிருமொழிக் குரித்தே. இதுவும் அது ஒரோவழி வரையறை. (இ-ள்.) உச்சகாரம் இருமொழிக்கு உரித்து - உகரத்தொடு கூடிய சகரம் இரு மொழிக்கு ஈறாகும்; (பலமொழிக்கு ஈறாகாது). உ-ம்: உசு, முசு என வரும். பசுவென்பது ஆரியச் சிதைவு. (42) 76. உப்ப கார மொன்றென மொழிப இருவயி னிலையும் பொருட்டா கும்மே. இதுவும் மொழிவரையறையும் மொழியது பொருள் பாடும் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உப்பகாரம் ஒன்று என மொழிப - உகரத்தொடு கூடிய பகரம் ஒரு மொழிக்கு ஈறாம் என்று சொல்லுவர், இருவயின் நிலையும் பொருட்டு ஆகும் - அதுதான் தன்வினை பிறவினை என்னும் இரண்டிடத்தும் நிலைபெறும் பொருண்மைத் தாம் எ-று. உ-ம்: தபு என வரும். இது படுத்துச் சொல்ல, நீ சா எனத் தன் வினையாம். எடுத்துச் சொல்ல, நீ ஒன்றனைச் சாவிப்பி எனப் பிற வினையாம். (ஏகாரம் - ஈற்றசை.) (43) 77. எஞ்சிய வெல்லா மெஞ்சுத லிலவே. இது, மொழிக்கு ஈறாகா உயிர்மெய்யும் ஒரோவழி ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) எஞ்சிய எல்லாம் எஞ்சுதல் இல - மொழிக்கு ஈறாகாது நின்ற உயிர்மெய்களெல்லாம் தம் பெயர் கூறும்வழி ஈறாதற்கு ஒழிபு இல. எஞ்சிய உயிர்மெய்யாவன: ஒளகாரம் ககார வகாரங்களை ஒழிந்த மெய்யோடு இயைந்த உயிர்மெய்யும், எகரம் எல்லா மெய்யோடும் இயைந்த உயிர்மெய்யும், ஒகரம் நகரம் ஒழிந்த மெய்யோடு இயைந்த உயிர்மெய்யும், ஏகார ஓகாரம் ஞகாரத்தோடு இயைந்த உயிர் மெய்யும், உ ஊகாரம் நகர வகரங்களோடு இயைந்த உயிர்மெய்யும் என இவை. உ-ம்: தம் பெயர்க்கு (ஈறு) ஆமாறு: ஙௌக் களைந்தார் எனவும், கெக் களைந்தார் எனவும், கொக் களைந்தார் எனவும், ஞேக் களைந்தார் எனவும், ஞோக் களைந்தார் எனவும், நுக் களைந்தார் எனவும், நூக் களைந்தார் எனவும், வுக் களைந்தார் எனவும், வூக் களைந்தார் எனவும் வரும். ‘எல்லாம்’ என்றதனான், மொழிக்கு ஈறாய் நின்ற உயிர் மெய்களும் தம் பெயர் கூறும் வழியும் ஈறாம் என்று கொள்க. கக் களைந்தார், கா வலிது எனவும், அக் களைந்தார், ஆ வலிது எனவும் இவ்வாறே ஒட்டிக் கொள்க. தன்னை உணர நின்றவழி, மொழிகட்கு இது கருவியாக ஈற்றகத்து முடிபு ‘ஒன்றின முடித்தலாற்’ கொள்க. (44) 78. ஞணநம னயரல வழள வென்னும் அப்பதி னொன்றே புள்ளி யிறுதி. இது, தனிமெய்களுள் மொழிக்கு ஈறாவன கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள என்னும் அப் பதினொன்றே - ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள என்று கூறப்பட்ட அப் பதினொன்றுமே, புள்ளி இறுதி - புள்ளிகளில் மொழிக்கு ஈறாவன. உ-ம்: உரிஞ், மண், பொருந், திரும், பொன், வேய், வேர், வேல், தெவ், வீழ், வேள் என வரும். னகாரத்தை ஈற்று வையாது, மகரத்தொடு வைத்தது அதன் மயக்க இயைபு நோக்கி என்றுணர்க. (45) 79. உச்ச காரமொடு நகாரஞ் சிவணும். இதுவும் மொழிவரையறை. (இ-ள்.) உச்சகாரமொடு நகாரம் சிவணும் - உகரத்தோடு கூடிய சகாரத்தோடே நகாரம் பொருந்தி அஃது இருமொழிக்கு ஈறாயவாறு போலத் தானும் இருமொழிக்கு ஈறாம். உ-ம்: பொருந், வெரிந் என வரும். (46) (உகரத்தோடு கூடிய சகரம் இருமொழிக்கு ஈறாயவாறு போல நகரம் இரு மொழிக்கு ஈறாம் என்க.) 80. உப்ப காரமொடு ஞகாரையு மற்றே அப்பொரு ளிரட்டா திவணை யான. இதுவும் மொழிவரையறை. (இ-ள்.) உப்பகாரமொடு ஞகாரையும் அற்று - உகரத்தோடு கூடிய பகரத்தொடு ஞகாரமும் அத்தன்மைத்தாய் ஒருமொழிக்கு ஈறாம், இவணையான அ பொருள் இரட்டாது - இவ்விடத்து அதன் பொருள் அவ் வுப்பகாரம் போல இருபொருள்படாது. உ-ம்: உரிஞ் என வரும். ஞகாரம் ஒருமொழிக்கு ஈறாதலின், நகரத்தின்பின் கூறப்பட்டது. (ஏகாரம் - ஈற்றசை) (47) 81. வகரக் கிளவி நான்மொழி யீற்றது. இதுவும் மொழிவரையறை. (இ-ள்.) வகரக் கிளவி நான்மொழி ஈற்றது - வகரமாகிய எழுத்து நான்குமொழி ஈற்றதாம் எ-று. உ-ம்: அவ், இவ், உவ், தெவ் என வரும். (48) 82. மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த னகரத் தொடர்மொழி யொன்பஃ தென்ப புகரறக் கிளந்த வஃறிணை மேன. இதுவும் ஒரோவழி மொழிவரையறை. (இ-ள்.) புகர் அற கிளந்த அஃறிணை மேன - குற்றம் அறச் சொல்லப்பட்ட அஃறிணையிடத்து, மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த - மகரவீற்றுத் தொடர்மொழியொடு மயங்காதென்று வரையறுக்கப்பட்ட, னகரத் தொடர்மொழி ஒன்பஃது என்ப - னகரவீற்றுத் தொடர்மொழி ஒன்பதென்று சொல்லுவர். உ-ம்: நிலன் நிலம், பிலன் பிலம் என்றாற்போல்வன மயங்குவன. இனி மயங்காதன: எகின், செகின், விழன், பயின், அழன், புழன், குயின், கடான், வயான் என வரும். இவற்றுள் திரிபுடையன களைக. ஒன்பஃது என்னும் ஆய்தம் செய்யுள் விகாரம். அஃறிணை யென்றது - ஈண்டு அஃறிணைப் பெயரினை. (49) இரண்டாவது - மொழிமரபு முற்றிற்று. பிறப்பியல் அகர முதல் னகரவிறுதியாகவுள்ள முதலெழுத்துக்கள் முப்பதையும் நூன்மரபிலும் சார்பெழுத்து மூன்றையும் மொழி மரபிலும் வைத்துணர்த்திய ஆசிரியர். அம்முப்பத்து மூன்றெழுத்துக்களின் பிறப்பு முறையினை இவ்வியலால் உணர்த்துகின்றார். அதனால் இவ்வியல் பிறப்பியலென்னும் பெயர்த்தாயிற்று. உந்தியிலிருந்தெழுகின்ற காற்றானது தலை, மிடறு, நெஞ்சு என்னும் மூன்றடங்களிலும் நிலைபெற்று அவற்றுடன் பல், உதடு, நா, மூக்கு, அண்ணம் (மேல்வாய்) ஆகிய உறுப்புக்கள் தம்மிற் பொருந்தி அமைதிபெற வேறுவேறுருவாகிய எழுத்துக்களாய்ப் பிறந்து புலப்பட வழங்குதலே எழுத்துக்களுக் குரிய பொதுவாகிய பிறப்பு முறையாகும் இதனை இவ்வியலின் முதற் சூத்திரத்து ஆசிரியர் விரித்துரைக்கின்றார். உயிரெழுத்துக்கள் பன்னிரண்டும் தத்தம் நிலைதிரியாது மிடற்று வளியாற் பிறக்கும். எனவே உயிரெழுத்துக்களின் பிறப்பிடம் மிடறு என்பது புலனாம். ஓரிடத்தே ஒரு முயற்சியாற் பலவெழுத்துக்கள் பிறக்குமெனப் பொதுவகையாற் கூறினும் அவ்வெழுத்துக் களிடையே நுண்ணிய வேறுபாடுகள் உள்ளனவென ஆசிரியர் தெளிவுபடுத்துகின்றார். இவ்வியலின்கண் 7-முதல் 11-வரையுள்ள சூத்திரங்களில் கங, சஞ, டண, தந, ஆகிய மெய்யெழுத்துக்களுக்கு நெடுங் கணக்கு முறை பற்றிப் பிறப்புக் கூறுகின்றார். 12 முதல் நாவதிகாரம் பற்றிப் பிறப்புக்கூறத் தொடங்கி றன, ரழ, லள, பம, வய, என்னும் மெய்யெழுத்துக்களுக்குப் பிறப்புக் கூறியுள்ளார். இங்குப் பிறப்புக்கூறிய மெய்யெழுத்துக்களுள் மெல்லெழுத் தாறும் தத்தம் பிறப்பினது ஆக்கஞ் சொல்லிய இடத்தே நிலை பெற்றனவாயினும் அவை மூக்கின்கண் உளதாகிய காற்றோசையால் இயைபுபெறத் தோன்றியொலிப்பனவாம். இவ்வாறு மெல்லெழுத் தாறுக்கும் மூக்குவளியின் தொடர்புடைமையினைச் சொல்லவே இடையெழுத் தாறும் மிடற்றுவளியையும் வல்லெழுத்தாறும் தலைவளியையும் பெற்று ஒலிப்பனவெனக் கொண்டார் இளம்பூரணர். முதலெழுத்துக்களைச் சார்ந்துதோற்றினல்லது தனித் தொலிக்கும் இயல்பில்லாதன என ஆராய்ந்து வெளிப்படுத்தப் பட்ட சார்பெழுத்துக்கள் மூன்றும் தத்தமக்குச் சார்பாகிய முத லெழுத்துக்களின் பிறப்பிடத்தையே தமக்குரிய பிறப்பிடமாகப் பொருந்தி இசைப்பனவாம். இவ்வாறு எழுத்துக்களின் பிறப் புணர்த்திய தொல்காப்பியனார் அவ்வெழுத்துக்கள் பெறும் மாத்திரையினைக் குறித்துக்கூறும் விளக்கம் இவண் கருதத்தகுவ தாகும். எல்லாவெழுத்துக்களையும் வெளிப்படச் சொல்லப் பட்ட இடத்தின்கண் எழுங்காற்றினாலே ஒலிக்குமிடத்து அவ்வெழுத்துக்கள் யாவும் கொப்பூழடியிலிருந்தெழுங் காற்றானது தலையளவுஞ் சென்று மீண்டும் நெஞ்சின்கண் நிலைபெறுதலாகிய திரிதருங் கூறு பாட்டினையுடையன. இவ்வெழுத்துக்களுக்கு இங்ஙனம் உறழ்ச்சி வாரத்தினால் உளதாம் அகத்தெழுவளியிசையினை நுட்பமாக ஆராய்ந்து மாத்திரை வரையறையால் அளந்து கொள்ளுதல் அந்தணரது மறைநூற் கண்ணதாகிய முறையாகும். அம்முறையினை இந்நூலிற் சொல்லாது எல்லார்க்கும் புலனாகப் புறத்தே வெளிப்பட்டிசைக்கும் மெய்தெரிவளியிசையாகிய எழுத்துக் களுக்கே யான் இங்கு மாத்திரை கூறினேன் என்பது ஆசிரியர் கூறிய விளக்கமாகும். உந்தியில் எழுந்தகாற்று முன்னர்த் தலைக்கட் சென்று பின்னர் மிடற்றிலேவந்து அதன்பின்னர் நெஞ்சிலே நிற்றல் உறழ்ச்சிவாரம் எனப்படும். மூலாதாரத்திலிருந் தெழுங் காற்றோசை அகத்தெழுவளியிசை யெனப்பட்டது. எல்லார்க்கும் எழுத்துருவம் நன்கு புலனாக வாயிலிருந்து புறத்தே வெளிப்பட் டிசைக்கும் காற்றினாலாகிய எழுத்தோசையே மெய்தெரிவளி யிசை யெனப்படும். அந்தணர் மறையிற் கூறுமாறு அகத் தெழுவளியிசையாகிய எழுத்துக்களுக்கு அளபுகூறின் அஃது எல்லார்க்கும் நன்றாக விளங்காதெனக் கருதிய தொல்காப்பியனார் புறத்தெழுந்திசைக்கும் மெய்தெரிவளி யிசையாகிய எழுத்துக்களுக்கே மாத்திரை கூறுவாராயினர். உந்துயிலெழுந்த காற்றினைக் கூறுபடுத்தி மாத்திரை கூட்டிக்கொள்ளுதலும், மூலாதாரம் முதலாகக் காற்றெழுமாறு கூறுதலும், அந்தணர் மறைக்கு உளதென்று கூறிய இவ்வாசிரியர், அவர் மதம் பற்றிப் பெறுவதோர் பயனின்றென இச் சூத்திரத்தால் உய்த்துணர வைத்தலின், இச்சூத்திரம் பிறன் கோட்கூறல் என்னும் உத்திக்கினம் என்றார் நச்சினார்க்கினியர். - வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 168-170 மூன்றாவது பிறப்பியல் இவ் வோத்து என்ன பெயர்த்தோவெனின், எழுத்துக்களது பிறப்பு உணர்த்தினமையின் பிறப்பியல் என்னும் பெயர்த்து. இதனை நூன்மரபின் பின்னே வைக்கவெனின், சார்பிற்றோற்றத் தெழுத்தும் தனிமெய்யும் மொழிமரபிடை உணர்த்திப் பிறப்பு உணர்த்த வேண்டுதலின், மொழி மரபின் பின்னதாயிற்று. 83. உந்தி முதலா முந்துவளி தோன்றித் தலையினு மிடற்றினு நெஞ்சினு நிலைஇப் பல்லு மிதழு நாவு மூக்கும் அண்ணமு முளப்பட வெண்முறை நிலையான் உறுப்புற் றமைய நெறிப்பட நாடி எல்லா வெழுத்துஞ் சொல்லுங் காலைப் பிறப்பி னாக்கம் வேறுவே றியல திறப்படத் தெரியுங் காட்சி யான. இத் தலைச் சூத்திரம் என் நுதலிற்றோவெனின், எழுத்துகளது பொதுப் பிறப்பு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) எல்லா எழுத்தும் நெறிப்பட நாடி சொல்லும் காலை - தமிழெழுத்துகளெல்லாம் ஒருவன் முறைப்பட ஆராய்ந்து தம்மைச் சொல்லுங்காலத்து, உந்தி முதலா முந்துவளி தோன்றி - கொப்பூழ் அடியாக மேலே கிளர்கின்ற உதானன் என்னும் பெயரையுடைய வாயுத் தோன்றி, தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ - தலையின் கண்ணும் மிடற்றின் கண்ணும் நெஞ்சின்கண்ணும் நிலை பெற்று, பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான் உறுப்பு உற்று அமைய - (தலையும் மிடறும் நெஞ்சும் என்னும் மூன்றனோடும்) பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்ணமும் உளப்பட எட்டாகிய முறைமையையுடைய இடங்களின் ஓர் உறுப்போடு ஓர் உறுப்புத் தம்மிற் பொருந்தி அமைதிபெற, பிறப்பின் ஆக்கம் வேறு வேறு இயல - பிறப்பினது ஆக்கம் வேறு வேறு புலப்பட்டு வழங்குதலுடைய, திறப்படத் தெரியும் காட்சியான - கூறுபாடுளதாக ஆராயும் அறிவிடத்து. இதழ்போறலான் வாய் இதழெனப்பட்டது. ‘எல்லா எழுத்தும்’ என்னும் எழுவாய்க்குப் ‘பிறப்பி னாக்கம் வேறுவேறு இயல’ என்பதனை ஒருசொன் னீர்மைப்படுத்திப் பயனிலை யாக்குக. (`முதலாக’ என்பது ஈறு கெட்டு நின்றது ஈற்றகரம் சாரியை) (1) 84. அவ்வழிப் பன்னீ ருயிருந் தந்நிலை திரியா மிடற்றுப் பிறந்த வளியி னிசைக்கும். இஃது, உயிரெழுத்திற்குப் பொதுப்பிறப்பு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அ வழி - அவ்விடத்து, பன்னீர் உயிரும் தம் நிலை திரியா - பன்னிரண்டு உயிரெழுத்தும் தத்தம் நிலையின் திரியாவாய், மிடற்று பிறந்த வளியின் இசைக்கும் - மிடற்றின்கட் பிறந்த வளியான் ஒலிக்கும். ‘தந்நிலை திரியா’ என்றதனால், குற்றியலிகரம், குற்றிய லுகரம் தந்நிலை திரியுமென்பது பெறப்பட்டது. (2) 85. அவற்றுள் அஆ வாயிரண் டங்காந் தியலும். இஃது, உயிரெழுத்துகளுட் சிலவற்றிற்குச் சிறப்புப் பிறவி உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அவற்றுள் - மேற்சொல்லப்பட்ட உயிர் பன்னிரண் டனுள், அ ஆ அஇரண்டு அங்காந்து இயலும் - அகர ஆகாரங்களாகிய அவ் விரண்டும் அங்காந்து சொல்ல அஃது இடமாகப் பிறக்கும். (3) 86. இஈ எஏ ஐயென விசைக்கும் அப்பா லைந்து மவற்றோ ரன்ன அவைதாம் அண்பன் முதனா விளிம்புற லுடைய. இதுவும் அது. (இ-ள்.) இ ஈ எ ஏ ஐ என இசைக்கும் அ பால் ஐந்தும் - இ ஈ எ ஏ ஐ என்று சொல்லப்படும் அக் கூற்று ஐந்தும், அவற்று ஓர் அன்ன - மேற்கூறிய அகர ஆகாரங்கள் போல அங்காந்து சொல்லப் பிறக்கும், அவைதாம் பல்அண் நாமுதல் விளிம்பு உறல் உடைய - அவைதாம் (அவ்வாறு சொல்லப் பிறக்குமிடத்துப்) பல்லினது அணிய இடத்தினை நாவினது அடியின் விளிம்பு சென்று உறுதலை யுடைய. (4) 87. உஊ ஒஓ ஒளஎன இசைக்கும் அப்பா லைந்தும் இதழ்குவிந் தியலும். இதுவும் அது. (இ-ள்.) உ ஊ ஒ ஓ ஒள என இசைக்கும் அ பால் ஐந்தும் - உ ஊ ஒ ஓ ஒள எனச் சொல்ல இசைக்கும் அக் கூற்று ஐந்தும், இதழ் குவிந்து இயலும் - இதழ் குவித்துச் சொல்ல நடக்கும். (5) 88. தத்தந் திரிபே சிறிய வென்ப. இது, முன்கூறிய உயிர்க்கும் மேற்கூறும் மெய்க்கும் ஓர் புறனடை கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) தம்தம் திரிபு சிறிய என்ப - (எழுத்துகள் ஒரு தானத்துக் கூடிப் பிறக்கு மெனப்பட்டன; அவ்வாறு கூடிப் பிறப்பினும்,) தத்தம் வேறுபாடுகளைச் சிறிய வேறுபாடுகளென்று சொல்லுவர். அவ் வேறுபாடு அறிந்துகொள்க. (ஏகாரம் - அசை). (6) 89. ககார ஙகாரம் முதனா வண்ணம். இது, மெய்களுட் சிலவற்றிற்குப் பிறவி ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ககாரம் ஙகாரம் நாமுதல் அண்ணம் (முதல்) - ககாரமும் ஙகாரமும் நாமுதலும் அண்ணமுதலும் உறப் பிறக்கும். (7) 90. சகார ஞகார மிடைநா வண்ணம். (இ-ள்.) சகாரம் ஞகாரம் நாஇடை அண்ணம் (இடை) - சகாரமும் ஞகாரமும் நாவது இடையும் அண்ணத்தது இடையும் உறப் பிறக்கும். (8) 91. டகார ணகார நுனிநா வண்ணம். இதுவும் அது. (இ-ள்.) டகாரம் ணகாரம் நாநுனி அண்ணம் (நுனி) - டகாரமும் ணகாரமும் நாவது நுனியும் அண்ணத்தது நுனியும் உறப் பிறக்கும். (9) 92. அவ்வா றெழுத்தும் மூவகைப் பிறப்பின. இது மேலனவற்றிற்கு ஒரு புறனடை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அ ஆறு எழுத்தும் மூவகை பிறப்பின - மேற் கூறப்பட்ட ஆறு எழுத்தும் நிரனிறை வகையான் (அறுவகைப் பிறப்பின அல்ல) மூவகைப் பிறப்பின. (10) 93. அண்ணன் நண்ணிய பன்முதல் மருங்கின் நாநுனி பரந்து மெய்யுற வொற்றத் தாமினிது பிறக்குந் தகார நகாரம். இதுவும் மெய்களிற் சிலவற்றிற்குப் பிறப்பு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அண்ணம் நண்ணிய பல் முதல் மருங்கின் - அண்ணத்தைப் பொருந்திய பல்லினது அணிய இடத்தின் கண்ணே, நாநுனி பரந்து மெய் உற ஒற்ற - நாவினது நுனி பரந்து வடிவை உறும்படி ஒற்ற, தாம் இனிது பிறக்கும் - தாம் இனிதாகப் பிறக்கும், தகாரம் நகாரம் - தகாரமும் நகாரமும். முன்னே ‘உறுப்புற் றமைய’ (83) என்று வைத்துப் பின்னும் ‘மெய்யுற’ என்றதனான், எல்லா எழுத்துகளும் மெய்யுற்ற போதே இனிது பிறப்பவென்பது கொள்க. (11) 94. அணரி நுனிநா வண்ண மொற்ற றஃகா னஃகா னாயிரண்டும் பிறக்கும். இதுவும் அது. (இ-ள்.) அணரி நுனிநா அண்ணம் ஒற்ற - அணர்ந்து நுனிநா அண்ணத்தைச் சென்று ஒற்ற, றஃகான் னஃகான் அ இரண்டும் பிறக்கும் - றகார னகாரமாகிய அவ் விரண்டும் பிறக்கும். இங்குநின்று நெடுங்கணக்கு முறைமை விட்டு நா அதிகாரம் பட்டது கண்டு கூறுகின்றதென வுணர்க. (12) 95. நுனிநா வணரி யண்ணம் வருட ரகார ழகார மாயிரண்டும் பிறக்கும். இதுவும் அது. (இ-ள்.) நுனிநா அணரி அண்ணம் வருட - நுனிநா அணர்ந்து அண்ணத்தைத் தடவ, ரகார ழகாரம் அ இரண்டும் பிறக்கும் - ரகார ழகாரமாகிய அவ்விரண்டும் பிறக்கும். (13) 96. நாவிளிம்பு வீங்கி யண்பன் முதலுற ஆவயி ணண்ண மொற்றவும் வருடவும் லகார ளகார மாயிரண்டும் பிறக்கும். இதுவும் அது. (இ-ள்.) நா விளிம்பு வீங்கி பல் அண் முதல் உற - நாவினது விளிம்பு தடித்துப் பல்லினது அணிய இடத்தைப் பொருந்த, அ வயின் அண்ணம் ஒற்ற லகாரமும் வருட ளகாரமும் அ இரண்டும் பிறக்கும் - அவ்விடத்து (முதல்நா) அவ் வண்ணத்தை ஒற்ற லகாரமும் அதனைத் தடவ ளகாரமுமாக அவ் விரண்டும் பிறக்கும். (14) 97. இதழியைந்து பிறக்கும் பகார மகாரம். இதுவும் அது. (இ-ள்.) இதழ் இயைந்து பிறக்கும் பகாரம் மகாரம் - கீழ் இதழும் மேல் இதழும் தம்மில் இயையப் பிறக்கும் பகாரமும் மகாரமும். (15) 98. பல்லித ழியைய வகாரம் பிறக்கும். இதுவும் அது. (இ-ள்.) பல் இதழ் இயைய வகாரம் பிறக்கும் - மேற்பல்லும் கீழ் இதழும் தம்மில் இயைய வகாரம் பிறக்கும். (16) 99. அண்ணஞ் சேர்ந்த மிடற்றெழு வளியிசை கண்ணுற் றடைய யகாரம் பிறக்கும். இதுவும் அது. (இ-ள்.) அண்ணம் சேர்ந்த மிடற்று எழு வளிஇசை கண் உற்று அடைய யகாரம் பிறக்கும் - அண்ணத்தை நாச் சேர்ந்த விடத்து மிடற்றினின்றும் எழும் வளியானாய இசை அவ் வண்ணத்தை அணைந்து செறிய யகாரம் பிறக்கும். (17) 100. மெல்லெழுத் தாறும் பிறப்பி னாக்கஞ் சொல்லிய பள்ளி நிலையின வாயினும் மூக்கின் வளியிசை யாப்புறத் தோன்றும். இது, மெல்லெழுத்திற்கு ஓர் புறனடை கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) மெல்லெழுத்து ஆறும் பிறப்பின் ஆக்கம் சொல்லிய பள்ளி நிலையின ஆயினும் - மெல்லெழுத்துகள் ஆறும் தத்தம் பிறப்பினது ஆக்கம் மேற்சொல்லப்பட்ட இடத்தே நிலை பெற்றன வாயினும், மூக்கின் வளி இசை யாப்புற தோன்றும் - அவை மூக்கின்கண் ணுளதாகிய வளியது இசையான் யாப்புறத் தோன்றும். ‘யாப்புற’ என்றதனான், இடையெழுத்திற்கு மிடற்று வளியும், வல்லெழுத்திற்குத் தலைவளியும் கொள்க. (18) 101. சார்ந்துவரி னல்லது தமக்கியல் பிலவெனத் தேர்ந்துவெளிப் படுத்த வேனை மூன்றுந் தத்தஞ் சார்பிற் பிறப்பொடு சிவணி ஒத்த காட்சியின் தம்மியல் பியலும். இது, சார்பின் தோற்றத்து எழுத்திற்குப் பிறப்பு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) சார்ந்துவரின் அல்லது தமக்கு இயல்பு இல எனத் தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்றும் - சிலவற்றைச் சார்ந்து வரின் அல்லது தமக்குத் தாமே வரும் இயல்பு இலவென்று ஆராய்ந்து வெளிப்படுத்தப்பட்ட ஒழிந்த மூன்றும், தம்தம் சார்பின் பிறப்பொடு சிவணி ஒத்த காட்சியின் தம் இயல்பு இயலும் - தத்தமக்குச் சார்பாகிய எழுத்துக்களது பிறப் பிடத்தே பிறத்தலொடு பொருந்தி அவ்விடத்தே தமக்குரிய இயல்பின் நடக்கும். ‘ஒத்த காட்சி’ என்றதனான், ஆய்தத்திற்குக் குற்றெழுத்துச் சார்பேயெனினும் தலைவளியாற் பிறத்தலின், உயிரொடு புணர்ந்த வல்லெழுத்துச் சார்பாகவே பிறக்குமென்பது கொள்க. ‘தம்மியல் பியலும்’ என்றதனான், அளபெடையும் உயிர்மெய்யும் தமக்கு அடியாகிய எழுத்துக்களது பிறப்பிடமே இடமாக வருமென்பது கொள்க. (19) 102. எல்லா வெழுத்தும் வெளிப்படக் கிளந்து சொல்லிய பள்ளி யெழுதரு வளியிற் பிறப்பொடு விடுவழி யுறழ்ச்சி வாரத் தகத்தெழு வளியிசை யரிறப நாடி யளவிற் கோட லந்தணர் மறைத்தே. இஃது, எல்லா எழுத்திற்கும் ஆவதோர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) எல்லா எழுத்தும் - எல்லா எழுத்துக்களும், வெளிப்பட கிளந்து சொல்லிய பள்ளி - வெளிப்பட விதந்து சொல்லப்பட்ட இடத்தின் கண்ணே, எழுதரு வளியின் - எழுகின்ற வளியானே, பிறப்பொடு விடுவழி - தாம் பிறக்குந் தொழிலுடைய வாதலொடு தம்மைச் சொல்லும் இடத்து, உறழ்ச்சி வாரத்து அகத்து எழுவளி இசை - திரிதருங் கூற்றையுடைய உள்நின்று எழும் வளியானாய இசையை, அரில் தப நாடி - பிணக்கமற ஆராய்ந்து, அளபின் கோடல் - மாத்திரை வரையறையாற் கோடல், அந்தணர் மறைத்து - பார்ப்பார் வேதத்துக் கண்ணது. ‘உறழ்ச்சி வாரம்’ என்றது, உந்திமுதலா எழும் வளி தலைகாறும் சென்று மீண்டும் நெஞ்சின்கண் நிலைபெறுதலை எனக் கொள்க. ‘வளி’ என்னாது ‘வளியிசை’ என்றது, அவ்வாறு நெஞ்சின்கண் நிலைபெறும் அளவே வளி எனப்படும்; பின்னை நெஞ்சினின்றும் எழுவுழியெல்லாம் வளித்தன்மை திரிந்து எழுத்தாம் தன்மையதாம் என்பது விளக்கி நின்றது.(ஏகாரம் - ஈற்றசை.) (20) 103. அஃதிவ ணுவலா தெழுந்துபுறத் திசைக்கும் மெய்தெரி வளியிசை யளபுநுவன் றிசினே. இது, மேற்சூத்திரத்திற்கு ஓர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அஃது இவண் நுவலாது - (‘அகத்தெழு வளியிசை அளபிற் கோடலாகிய’) அதனை இந் நூலிடத்துச் சொல்லாது, எழுந்து புறத்து இசைக்கும் - (அகத்தினின்று) எழுந்து புறத்துப் போந்து இசைக்கும், மெய் தெரி வளி இசை அளபு - பொருண்மை தெரிகின்ற வளியானாய இசையது மாத்திரையினை, நுவன்றிசின் - யான் ஈண்டுக் கூறினேன். மற்று, இஃது “அளபிற் கோட லந்தணர் மறைத்து” (பிறப்பியல் 20) எனவே பெறப்பட்டதன்றோவெனின், ‘அந்தணர் மறைத்து’ என்பது பிறன்கோட் கூறுதற்கும், பிறன்கோட் கூற்று நேர்ந்து உடம்படுதற்கும் ஒப்பக் கிடந்தமையின் அவ் வையம் தீர்தற்குக் கூறினாரென்பது. புறத்து இசைப்பதன் முன்னர், அகத்து இசைக்கும் வளியிசையை அம் மறைக்கண் ஓர் எழுத்திற்கு மூன்று நிலை உளதாகக் கூறும் (அதன் ஆசிரியன்); அஃது ஆமாறு அறிந்து கொள்க. ‘மெய்தெரி’ என்றதனான், முற்கு முதலியன முயற்சியாற் பிறக்குமெனினும், பொருள் தெரியா நிலைமைய வாகலின் அவற்றிற்கு அளபு கூறாராயினாரென்பது பெறப்பட்டது. ‘நுவன்றிசின்’ என்பது ஈண்டு இறந்தகாலத் தன்மை வினை. (21) மூன்றாவது - பிறப்பியல் முற்றிற்று. புணரியல் மொழிகள் தம்மிற் புணர்தற்குரிய கருவியின் இயல்பினைக் கூறுதலின் இது புணரியல் என்னும் பெயர்த்தாயிற்று. இவ்வியலிற் கூறப்படும் விதிகள் பின்வரும் இயல்களிற் கூறப்படும் செய்கைபற்றிய விதிகளுக்குப் பயன்படுதலின் கருவிகளெனப் பட்டன. தமிழ் நெடுங்கணக்கிலுள்ள முப்பத்து மூன்றெழுத்துக்களுள் இருபத்திரண்டெழுத்துக்கள் மொழிக்கு முதலாமெனவும், இருபத்து நான்கெழுத்துக்கள் மொழிக்கு ஈறாமெனவும், எல்லா மொழிகளுக்கும் இறுதியும் முதலுமாவன மெய், உயிர் என்னும் இவ்விருவகையெழுத்துக்களெனவும், மொழியிறுதியில் நின்ற மெய்யெல்லாம் புள்ளிபெற்று நிற்குமெனவும், மொழியிறுதியி லுள்ள குற்றியலுகரமும் மெய்யின் தன்மையையுடையதா மெனவும், மொழியீறாய் நின்ற உயிர்மெய் உயிரீற்றின் தன்மையையுடையதா மெனவும் இவ்வியலில் 1-முதல் 4-வரையுள்ள சூத்திரங்கள் கூறுகின்றன. நிலைமொழியை நிறுத்தசொல் என்றும் வருமொழியைக் குறித்துவருகிளவியென்றும் தொல்காப்பியனார் வழங்குவர். நிறுத்த சொல்லின் ஈற்றெழுத்தோடு குறித்துவருகிளவியின் முதலலெழுத்துப் பொருந்த அவ்விருமொழிகளும் இயைந்து வருதலே புணர்ச்சியெனப்படும். அப்புணர்ச்சி உயிரீற்றுச் சொல் முன் உயிர் வருமிடம், உயிரீற்றுச் சொல்முன் மெய்வருமிடம், மெய்யீற்றுச் சொல்முன் உயிர் வருமிடம், மெய்யீற்றுச் சொல்முன் மெய் வருமிடம் என எழுத்துவகையால் நான்கு வகைப்படும்; பெயரொடு பெயர், பெயரொடு தொழில், தொழிலொடு பெயர், தொழிலொடு தொழில் எனச் சொல் வகையால் நான்காகும். மொழிகள் புணருங்கால் இடைநின்ற எழுத்துக்கள் ஒன்று மற்றென்றாகத் திரிதலை மெய்பிறிதாதல் என்றும், அவ்விடத்துப் புதியவெழுத்துத் தொன்றுதலை மிகுதல் என்றும், அங்கு முன்னிருந்த எழுத்துக் கெடுதலைக் குன்றல் என்றும், இவ்வேறு பாடெதுவுமின்றி அவ்விருமொழிகளும் முன்னுள்ளவாறு புணர்ந்து நிற்றலை இயல்பென்றும், இந்நான்கினையும் மொழிபுணரியல்பு என்றும் ஆசிரியர் குறியிட்டு வழங்கியுள்ளார். நிறுத்தசொல்லும் குறித்து வருகிளவியும் தனித்தனியே அடைமொழி பெற்றுவரினும் நிலைமொழி வருமொழியாகப் புணர்தற்கு உரியனவாம். முன் பின்னாக மாறி நின்ற மரூஉ மொழிகளும் நிலைமொழி வருமொழியாகப் புணர்க்கப்படுதலுண்டு. மொழிப்புணர்ச்சி வேற்றுமைப் புணர்ச்சியெனவும் அல்வழிப் புணர்ச்சியெனவும் பொருள் வகையால் இருதிறப்படும் இவற்றுள் வேற்றுமைப் புணர்ச்சியை வேற்றுமை குறித்த புணர்மொழி நிலையென்றும் அல்வழிப் புணர்ச்சியை வேற்றுமையல்வழிப் புணர்மொழி நிலையென்று ஆசிரியர் வழங்கியுள்ளார். இவ்விருவகைப் புணர்மொழிகளும் எழுத்து மிகுதலும் சாரியை மிகுதலும் ஆகிய இருதிறத்தாலும் நடப்பன. வேற்றுமை யுருபாவன ஐ, ஒடு, கு, இன், அது, கண் என்னும் ஆறாம் எனத் தொல்காப்பியனர்க்கு முற்பட்ட தமிழிய னூலார் வகைப்படுத்தியுள்ளார்கள். வேற்றுமையுருபுகள் புணரும் நிலைமைக்கண் பெயரின் பின்னிடத்தே நிற்றற்குரியன. உருபேற்கும் பெயர்கள் உயர்திணைப் பெயர், அஃறிணைப் பெயர் என இருவகைப்படும். அவை வேற்றுமையுருபோடு பொருந்துங்கால் பெயர்க்கும் வேற்றுமையுருபிற்குமிடையே சாரியை மிகும். சாரியைகளாவன இன், வற்று, அத்து, அம், ஒன், ஆன், அக்கு, இக்கு, அன் எனவரும் இவ்வொன்பதும் இவைபோல்வன பிறவும் ஆம். இன் சாரியை இகரங்கெட்டு னகரமெய் மட்டும் நிற்றலும், னகரங் கெட்டு இகரவுயிர் மட்டும் நிற்றலும், னகரம் றகரமாகத் திரிந்து நிற்றலும் ஆகிய மூன்று திரிபுடையதென்றும், வற்றுச் சாரியை முதற்கணுள்ள வகரமெய் கெட அற்று எனத்திரியுமென்றும், இன், ஒன், ஆன், அன் என்னும் இச்சாரியைகளின் னகரம் றகரமாய்த் திரிதலுண்டென்றும், அகரவீற்றுச் சொல்முன் வரும் அத்துச்சாரியை அகரங்கெட ‘த்து’ என நிற்குமென்றும், இகர ஐகார வீற்றுச் சொல்முன்வரும் இக்குச் சாரியை இகரங்கெட ‘க்கு’ என நிற்குமென்றும், வல்லெழுத்து முதன்மொழி வருங்கால் அக்குச் சாரியை இறுதிக் குற்றியலுகரமும் அதனுலூரப்பட்ட ககரமெய்யும் அக்ககர மெய்யின்மேல் நின்ற ககரமெய்யும் ஒருசேரக்கெட ‘அ’ எனத் திரிந்து நிற்குமென்றும், கசத வரு மொழியாய் வருங்காலத்து அம் சாரியையின் மகரம் முறையே ங ஞ ந எனத் திரிதலும், மெல்லெழுத்தும் இடையெழுத்தும் வருமொழியாய் வருங்காலத்துக் கெடுதலுமாகிய நிலைமைத் தென்றும், சொற்கள் பெயருந் தொழிலுமாய்ப் பிரிந்தும் பெயரும் பெயருமாய்க்கூடியும் இசைப்ப வேற்றுமையுருபு விரிந்து நிற்கு மிடத்தும் மறைந்து நிற்குமிடத்தும் மொழிகளைப் பிரித்துக் காணுங்கால் பெயர்க்கும் வேற்றுமையுருபிற்கு மிடையே வந்து நிற்றல் சாரியையின் இயல்பென்றும் சாரியையின் இலக்கணத் தினை ஆசிரியர் தெளிவாக வரையறுத்துக் காட்டியுள்ளர். சொற்களை நிலைமொழி வருமொழியாகப் பிரித்துக் காணும் முறையினைத் ‘சொற்சிதர் மருங்கு’ எனவும் பெயர் சாரியை உருபு முதலிய சொல்லுறுப்புக்கள் ஒன்றன்பின்னொன்றாக ஒட்டி நடத்தற்குரிய மொழிவழக்கினை ‘ஒட்டுதற்கொழுகிய வழக்கு’ எனவும் ஆசிரியர் குறியிட்டு வழங்கியுள்ளார். நிறுத்த சொல்லுங் குறித்து வருகிளவியுமாகப் பிரித்தற்கேற்றவாறு ஒட்டி நில்லாது, நிலாக்கதிர் நிலாமுற்றம் என்றாற் போல உடங்கியைந்து நிற்கும் புணர்மொழிகள் ஒட்டுதற்கொழுகிய வழக்கின அல்லவெனவுங் ஆகவே அவை சாரியை பெறா வெனவும் இளம்பூரணர் கூறிய விளக்கம் இவண் சிந்தித்துணரத் தகுவதாம். காரம், கரம், கான் என்பன எழுத்தின் சாரியைகளாம். அவற்றுள் கரம், கான் என்னும் இரு சாரியைகளையும் நெட்டெழுத்துப் பெறுதலில்லை. குற்றெழுத்து மேற்கூறிய மூன்று சாரியைகளையும் பெறும். நெட்டெழுத்துக்களில் ஐ, ஒள என்னுமிரண்டும் கான் சாரியையும் பெறும். என இவ்வியலில் இயைபுடைமை கருதி எழுத்துக் சாரியைகளும் உடன் கூறப்பட்டன. மெய்யீற்றின்முன் உயிர்முதன் மொழி வருங்கால் வருமொழி முதலிலுள்ள உயிர் தனித்து நில்லாது; மெய்களுக்குரிய புள்ளி பெறுதலாகிய அவ்வியல்பினைக் கெடுத்து நிலைமொழி யீற்றிலுள்ள அம்மெய்யுடன் கூடி நிற்கும். இங்ஙனம் கூடிய உயிர் பிரிந்து நீங்கியவழி நிலைமொழியீற்றிலுள்ள மெய் மீண்டும் தன் பழைய வடிவாகிய புள்ளியைப் பெறும். இவ்வியல்பினை இவ்வியலின் 36, 37-ஆம் சூத்திரங்களால் ஆசிரியர் குறிப்பிடுவர். குற்றியலுகரமும் மெய்யீறு போலுந் தன்மையத்து என இவ்வியலின் மூன்றாம் சூத்திரத்தால் ஆசிரியர் மாட்டேற்றிக் கூறியுள்ளார். இம்மாட்டேறு புள்ளி பெறுதலும் உயிரேற இடங்கொடுத்தலுமாகிய மெய்யின் தன்மைகளுள் புள்ளி பெறுதலை விலக்கி உயிரேற இடங்கொடுத்தலாகிய அவ்வளவுக்குச் செல்லுதலின் “இம்மாட்டேறு ஒருபுடைச்சேற லெனவுணர்க” என உரையாசிரியர் விளக்கங் கூறுவர். ‘குற்றியலுகரமும் அற்றென மொழிப’ என முன்னர் மாட்டேறு கூறினமையால் மெய்யீற்றின்முன் உயிர் தனித்து நில்லாதவாறு போன்று குற்றியலுகரவீற்றின் முன்னும் உயிர் தனித்து நில்லாது அக்குற்றியலுகரத்தோடு பொருந்தி நிற்கும் எனத் தொல் காப்பியனார் உய்த்துணர வைத்தமை பெறப்படும். உயிரீற்றின்முன் உயிர்முதன்மொழி வருமிடத்து உயிரோடு உயிர்க்குக் கலந்து நிற்கும் இயல்பின்மையால் இரு மொழிகளும் ஒட்டி நில்லாது விட்டிசைப்பனவாம். நிலைமொழியீற்றிலும் வரு மொழி முதலிலும் நிற்கும் அவ்விரண்டுயிர்களும் உடம்படுதற் பொருட்டு அவற்றிடையே யகர வகரங்களுள் ஒன்று உடம்படு மெய்யாய் வரும். உடம்படாத இரண்டுயிர்களும் உடம்படுதற் பொருட்டு இடையே தோன்றும் மெய் உடம்படுமெய் என வழங் கப்படும். உடன்பாடு, உடம்பாடு என மருவி வழங்கியது வருமுயிர்க்கு உடம்பாக அடுக்கும் மெய் உடம்படுமெய் எனப்பொருள் கோடலுமுண்டு. எல்லா மொழிக்கும் இறுதியும் முதலும் உயிர் வரும்வழி அவற்றிடையே உடம்படுமெய் பெறுதலை விலக்கார் எனத் தொல்காப்பியனார் கூறுதலால் அவர் காலத்து உயிரீற்றின் முன் உயிர்முதன்மொழி வந்து புணருங்கால் உடம்படுமெய் பெற்றே வரவேண்டுமென்னும் வரையறையில்லை யென்பது நன்கு புலனாகும். உடம்படுமெய்யாக வருதற்குரிய எழுத்துக்கள் இவையெனத் தொல்காப்பியனார் கூறாது போயினும் அவரியற்றிய இயற்றமிழ் நூலாகிய இத் தொல்காப்பியத்திலும் இதற்குப்பின் தோன்றிய தமிழ் நூல்களெல்லாவற்றிலும் யகர வகரங்களே உடம்படுமெய்யாக ஆளப்பெற்றுள்ளமை காணலாம். “உடம்படு மெய்யே யகார வகாரம், உயிர் முதன் மொழி வரூஉங்காலையான” என நச்சினார்க்கினியர் காட்டிய பழஞ்சூத்திரம் யகர வகரங்களே உடம்படுமெய்யாய் வருதற்குரியன என்பதைத் தெளிவாக விளக்குதல் காண்க. உயிர்களுள் இகர ஈகார ஐகார வீறுகள் யகர வுடம்படுமெய் கொள்ளும் எனவும், ஏகாரவீறு யகர வகரங்களுள் ஒன்றை உடம்படுமெய்யாகப் பெற்றுவரும் எனவும், ஏனைய வுயிரீறுகள் யாவும் வகர வுடம்படு மெய்யே பெறும் எனவும் இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் வகைபெற விளக்கியுள்ளார்கள். எழுத்தால் ஒன்றுபோலத் தோன்றிச் சொல்லால் வேறு பட்டுப் பொருள் விளங்கி நிற்கும் புணர்மொழிகள் ஓசை வேறு பாட்டற் பிரிந்து புணர்ச்சி வேறுபடுதல் சொல்நடையின் நிலை பெற்ற பண்பாகும். இவ்வாறு வரும் புணர்மொழிகள் குறிப்பினாலுணரும் பொருளையுடையன. எழுத்து வகையால் இத்தன்மைய எனத் தெளிவாக வுணரும் முறைமையை யுடையன அல்ல. எடுத்துக்காட்டாகச் ‘செம்பொன் பதின்றொடி’ என்னும் புணர் மொழி பொன்னைப்பற்றிப் பேச்சின்கண் எடுத்தாளப் பட்டால் செம்பொன் + பதின்றொடி எனப் பிரிந்தும், செம்பைக் குறித்து நிகழும் பேச்சில் எடுத்தாளப்பட்டால் செம்பு + ஒன்பதின்றொடி எனப் பிரிந்தும் ஓசை வேறுபட்டு வேறுவேறு பொருளுணர்த்தி நிற்றல் காணலாம். இவற்றின் இயல்பினை இவ்வியலின் ஈற்றிலுள்ள இரண்டு சூத்திரங்களாலும் ஆசிரியர் அறிவுறுத்துகின்றார். எனவே அவர் காலத்து இங்ஙனம் நுண்ணிதாகப் பொருளுணர்த்தும் புணர்மொழிகள் பெருக வழங்கினமை நன்கு புலனாகும். - க. வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 170-174 நான்காவது புணரியல் இவ் வோத்து என்ன பெயர்த்தோ வெனின், மொழிகள், (மேற் செய்கை யோத்துக்களுள்) புணர்தற்குரிய கருவியின் இயல்பு கூறினமையின் புணரியல் எனப்பட்டது. மேல் மொழிமரபிற் கூறிய மொழிகள் புணருமாறு உணர்த்தின மையின் மொழிமரபினோடு இயைபுடைத் தாயிற்று. 104. மூன்றுதலை யிட்ட முப்பதிற் றெழுத்தின் இரண்டுதலை யிட்ட முதலா கிருபஃ தறுநான் கீறொடு நெறிநின் றியலும் எல்லா மொழிக்கு மிறுதியு முதலும் மெய்யே யுயிரென் றாயீ ரியல. இத் தலைச் சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், மொழிமரபினுள் முதலும் ஈறும் கூறியவழி உயிரும் மெய்யும் உயிர் மெய்யும் என மூன்றாய் விரிந்து நின்றதனை உயிரும் மெய்யும் என இரண்டாகத் தொகுத்தலானும், அவ்வழி இருபத்திரண்டு எழுத்து மொழிக்கு முதல், இருபத்து நான்கு எழுத்து மொழிக்கு ஈறு எனக் கூறலின், முப்பத்து மூன்று எனப்பட்ட எழுத்து நாற்பத்தாறு ஆவனபோல் விரிந்ததனை அவையெல்லாம் முப்பத்து மூன்றனுள்ளனவே எனத் தொகுத்தலானும் விரிந்தது தொகுத்தல் நுதலிற்று. (இ-ள்.) மூன்று தலையிட்ட முப்பதிற்று எழுத்தின் - மூன்றனை முடிவிலே யிடப்பட்ட முப்பதாகிய எழுத்தினுள், இரண்டு தலையிட்ட முதல் ஆகு இருபஃது - அவ் விரண்டனை முடிவிலே யிடப்பட்ட மொழிக்கு முதலாய இருபதும், அறுநான்கு ஈறொடு நெறி நின்று இயலும் - இருபத்து நான்கு ஈற்றோடு வழக்கு நெறிக்கண் நின்று நடக்கும், எல்லா மொழிக்கும் இறுதியும் முதலும் - மூவகை மொழிக்கும் ஈறும் முதலுமாவன, மெய் உயிர் என்று அ ஈர் இயல - மெய்யும் உயிருமாகிய அவ் விரண்டு இயல்பினையுடைய. உ-ம்: மரம், இலை, ஆல், விள என மெய்யும் உயிரும் முதலும் ஈறும் ஆயின. இருபத்திரண்டு எழுத்து முதலாவன பன்னிரண்டு உயிரும் ஒன்பது உயிர்மெய்யும் மொழிமுதற் குற்றியலுகரமும் என இவை. இருபத்து நான்கு எழுத்து ஈறாவன பன்னிரண்டு உயிரும் பதினொரு புள்ளியும் ஈற்றுக் குற்றியலுகரமும் என இவை. ‘ஈற்றொடு’ என்பது விகாரத்தான் தொக்கது. மெய் முதற் கூறியவதனான், நால்வகைப் புணர்ச்சியும் மெய்க்கண நிகழுமாறு உயிர்க்கண் நிகழாவென்பது கொள்க. (`என்று’ என்பது எண்ணிடை ச் சொல்.) (1) 105. அவற்றுள் மெய்யீ றெல்லாம் புள்ளியொடு நிலையல். இது, மேற்கூறியவாற்றான் தனிமெய்யும் முதலாவான் சென்றதனை விலக்கலின், எய்தியது விலக்கல் நுதலிற்று. (இ-ள்.) அவற்றுள் - மேல் மெய்யும் உயிரும் என்று கூறிய இரண்டனுள், ஈறு மெய்யெல்லாம் புள்ளியொடு நிலையல் - மொழிக்கு ஈறாய மெய்யெல்லாம் புள்ளி பெறுதலொடு நிற்கம்; முதலாயவை யெல்லாம் புள்ளியிழந்து நிற்கும். உ-ம்: மரம் என வரும். ‘மொழிமுதன் மெய் புள்ளியொடு நில்லாது’ என்னாது, ‘ஈறெல்லாம் புள்ளியொடு நிலையல்’ என ஈற்றின்மேல் வைத்துக் கூறியவதனான், அவ் வீற்றின் மெய் உயிர் முதன்மொழி வந்த இடத்து அஃது ஏற இடம்கொடுக்குமென்பது பெறப்பட்டது. (2) 106. குற்றிய லுகரமு மற்றென மொழிப. இஃது, ஈற்றிற் குற்றியலுகரத்திற்கு ஓர் கருவி கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) குற்றியலுகரமும் அற்று என மொழிப - ஈற்றிற் குற்றிய லுகரமும் (புள்ளி யீறுபோல உயிரேற இடம் கொடுக்கும்) அத் தன்மைத்து என்று சொல்லுவர். இம்மாட்டேறு ஒருபுடைச் சேறல் என வுணர்க. (3) 107. உயிர்மெய் யீறு முயிரீற் றியற்றே. இது, மேல் “மெய்யே யுயிரென் றாயீ ரியல” (புணரியல் - 1) என்றதற்கு ஓர் புறனடை கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) உயிர்மெய் ஈறும் உயிர் ஈற்று இயற்று - உயிர்மெய் மொழியீற்றில் நின்றதுவும் உயிரீற்றின் இயல்பையுடைத்து, இடையில் நின்றதுவும் உயிரின் இயல்பை யுடைத்து எ-று. ஈறும் இடையும் உயிருள் அடங்குமெனவே, முதல் மெய்யுள் அடங்கும் என்பதாயிற்று. இதனான், விள முதலிய உயிர்மெய் ஈறெல்லாம் அகரவீறு முதலிய உயிரீற்றுள் அடங்கிப் புணர்ச்சிபெறுவன வாயின. வரகு என்புழி இடை நின்ற ரகர உயிர்மெய் அகரமாய் உயிர்த் தொடர்மொழி யெனப்பட்டது. ஈண்டு உயிர்மெய் ஒற்றுமை நயத்தான் உயிர்மெய்யென வேறு ஓர் எழுத்தாவதன்றி, ஈறும் இடையும் உயிரென ஓரெழுத் தாயும், முதல் மெய்யென ஓரெழுத்தாயும் நின்றதாயிற்று. இத்துணையும் ஒருமொழி யிலக்கணங் கூறலின் மொழி மரபின் ஒழிபாயிற்று. (4) 108. உயிரிறு சொன்மு னுயிர்வரு வழியும் உயிரிறு சொன்முன் மெய்வரு வழியும் மெய்யிறு சொன்மு னுயிர்வரு வழியும் மெய்யிறு சொன்முன் மெய்வரு வழியுமென் றிவ்வென வறியக் கிளக்குங் காலை நிறுத்த சொல்லே குறித்துவரு கிளவியென் றாயீ ரியல புணர்நிலைச் சுட்டே. இது, மேற்கூறும் புணர்ச்சி மும்மொழிப் புணர்ச்சியாகாது, இருமொழிப் புணர்ச்சியாமென்பதூஉம், அவை எழுத்து வகையான் நான்காமென்பதூஉம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உயிர் இறு சொல்முன் உயிர்வரு வழியும் - உயிரீற்றுச் சொல்முன் உயிர்முதல்மொழி வரும் இடமும், உயிர் இறு சொல்முன் மெய் வரு வழியும் - உயிரீற்றுச் சொல்முன் மெய்ம்முதல் மொழி வரும் இடமும், மெய் இறு சொல்முன் உயிர்வரு வழியும் - மெய்யீற்றுச் சொல்முன் உயிர்முதல் மொழி வரும் இடமும், மெய் இறு சொல்முன் மெய் வரு வழியும் - மெய்யீற்றுச் சொல்முன் மெய்ம்முதல் மொழி வரும் இடமும், இவ் என அறிய - (என்று அப் புணர்ச்சிவகை) இவையென அறிய, கிளக்கும் காலை - ஆசிரியர் சொல்லுங்காலத்து, நிறுத்த சொல் குறித்துவரு கிளவி என்று அ ஈர் இயல - அவை நிறுத்த சொல்லும் அதன் பொருண்மையைக் குறித்துவரும் சொல்லு மாகிய அவ் விரண்டு இயல்பையுடைய, புணர்நிலைச் சுட்டு - புணரும் நிலைமைக்கண். உ-ம்: ஆ ஈ, ஆ வலிது, ஆல் இலை, ஆல் வீழ்ந்தது எனக் கண்டு கொள்க. விளவினைக் குறைத்தான் என்பது அவ் வுருபு குறித்துவரு கிளவியை நிலைமொழியுள் அடக்கி இருமொழிப் புணர்ச்சியாய் நின்றவாறு அறிக. (அவ்வுருபு - `விளவினை’ என்பதன் ஐ உருபு. முதல் ஏகாரம் பிரிநிலை. இரண்டாம் ஏகாரம் - ஈற்றசை. `என்று’ இரண்டும் - எண்ணிடைச்சொல்.) (5) 109. அவற்றுள் நிறுத்த சொல்லி னீறா கெழுத்தொடு குறித்துவரு கிளவி முதலெழுத் தியையப் பெயரொடு பெயரைப் புணர்க்குங் காலும் பெயரொடு தொழிலைப் புணர்க்குங் காலுந் தொழிலொடு பெயரைப் புணர்க்குங் காலுந் தொழிலொடு தொழிலைப் புணர்க்குங் காலும் மூன்றே திரிபிட னொன்றே யியல்பென ஆங்கந் நான்கே மொழிபுண ரியல்பே. இது, மேற்கூறும் புணர்ச்சி புணர்ச்சிவகையான் நான்கா மென்பதூஉம், அவை சொல்வகையான் நான்கா மென்பதூஉம், புணர்வது சொல்லும் சொல்லுமேயன்றி, எழுத்தும் எழுத்தும் என்பதூஉம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அவற்றுள் - நிலைமொழி வருமொழி யெனப்பட்ட வற்றுள், நிறுத்த சொல்லின் ஈறு ஆகு எழுத்தொடு குறித்து வரு கிளவி முதல் எழுத்து இயைய - நிறுத்த சொல்லினது ஈறாகின்ற எழுத்தினோடு அதனைக் குறித்து வருகின்ற சொல்லினது முதலெழுத்துப் பொருந்த, பெயரொடு பெயரைப் புணர்க்கும் காலும் - பெயர்ச்சொல்லொடு பெயர்ச் சொல்லைப் புணர்க்கும் காலத்தும், பெயரொடு தொழிலை புணர்க்கும் காலும் - பெயர்ச்சொல்லொடு வினைச்சொல்லைப் புணர்க்கும் காலத்தும், தொழிலொடு பெயரைப் புணர்க்கும் காலும் - வினைச் சொல்லொடு பெயர்ச்சொல்லைப் புணர்க்கும் காலத்தும், தொழிலொடு தொழிலைப் புணர்க்கும் காலும் - வினைச்சொல்லொடு வினைச்சொல்லைப் புணர்க்கும் காலத்தும், திரிபு மூன்று இயல்பு ஒன்று என அ நான்கே மொழிபுணர் இயல்பு - திரியும் இடம் மூன்றும் இயல்பு ஒன்றும் ஆகிய அந் நான்கே மொழிகள் தம்மிற் புணரும் இயல்பு எ-று. உ-ம்: சாத்தன் கை, சாத்தன் உண்டான், வந்தான் சாத்தன், வந்தான் போயினான் எனக் கண்டுகொள்க. இடையும் உரியும் பெயர் வினைகளை அடைந்தல்லது தாமாக நில்லாமையின், பெயர் வினைகட்கே புணர்ச்சி கூறப்பட்டது. (இடை - இடைச்சொல். உரி -உரிச்சொல். `ஆங்கு’ என்பது அசை. முதல் மூன்று ஏகாரமும் தேற்றப்பொருளில் வந்தன. நான்காம் ஏகாரம் - ஈற்றசை.) (6) 110. அவைதாம் மெய்பிறி தாதன் மிகுதல் குன்றலென் றிவ்வென மொழிப திரியு மாறே. இது, மேற்கூறிய திரிபு மூன்றும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அவைதாம் - அத் திரிபுதான், மெய்பிறிது ஆதல் மிகுதல் குன்றல் என்று இவ் என மொழிப திரியும் ஆறு - மெய் பிறிதாதலும் மிகுதலும் குன்றலுமாகிய இவை எனச் சொல்லுவர் திரியும் நெறியினை. இம் மூன்றும் அல்லாதது இயல்பென்று கொள்க. உ-ம்: பொற்குடம், யானைக்கோடு, மரவேர் எனவரும். குவளை மலர் என்பது இயல்பு. இப் புணர்ச்சி நான்கும் ஒரு புணர்ச்சிக்கண்ணே நிகழ்வு பெறுமென்பது உரையிற்கொள்க. மேல் ‘இடம்’ (புணர். 6) என்றதனான், திரிபு மூன்றனுள், யாதாயினும் ஒன்றாயது, ஒரு புணர்ச்சிக்கு இரண்டும் மூன்றும் ஒருங்கு வரப்பெறும் எனக்கொள்க. ‘மகத்தாற் கொண்டான்’ என்பது அம் மிகுதி இரண்டு வந்தது; ‘நீயிர் குறியிர்’ என்பது அம் மிகுதி மூன்று வந்தது. பிறவும் அன்ன. (முதல் உதாரணத்தில் `அத்திரிபு மூன்று வந்தது’ என்றிருத்தல் வேண்டும். இரண்டாம் உதாரணம் பிழை. இப்பிழைகள் ஏடுபெயர்த்தெழுதினோரால் நேர்ந்தன போலும். ‘என்று’ எண்ணிடைச்சொல்.) (7) 111. நிறுத்த சொல்லுங் குறித்துவரு கிளவியும் அடையொடு தோன்றினும் புணர்நிலைக் குரிய. இது, “நிறுத்த சொல்லே குறித்துவரு கிளவி” (புணர். 5) என்பதற்கு ஓர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) நிறுத்த சொல்லும் குறித்துவரு கிளவியும் - நிலை மொழியாக நிறுத்தின சொல்லும் அதனைக் குறித்து வருசொல்லும், அடையொடு தோன்றினும் புணர்நிலைக்கு உரிய- (தாமே வந்து புணர்வதன்றி), அவை யிரண்டினும் ஓரோர் சொல்லடைவந்து ஒன்றித் தோன்றினும் புணர்நிலைக்கு உரிய. உ-ம்: பதினாயிரத்தொன்று, ஆயிரத்தொருபஃது, பதினாயிரத் தொருபஃது என வரும். ஈண்டு அடையென்றது உம்மைத்தொகையினையும், இரு பெயரொட்டுப் பண்புத்தொகையினையும் என வுணர்க. அவையல்லாத தொகைகளுள் வினைத்தொகையும், பண்புத் தொகையும் பிளந்து முடியாமையின், ஒருசொல் எனப்படும். அன்மொழித் தொகையும் தனக்கு வேறு ஒரு முடிபு இன்மையின் ஒருசொல் எனப்படும். இனி ஒழிந்த வேற்றுமைத் தொகையும் உவமைத் தொகையும் ‘தன்னின முடித்தல்’ என்றதனான் ஈண்டு ஒருசொல் எனப்படும். உண்டசாத்தன் வந்தான், உண்டுவந்தான் சாத்தன் என்பனவும் அவ்வாறே ஒருசொல் எனப்படும். பிறவும் அன்ன. (8) 112. மருவின் றொகுதி மயங்கியன் மொழியும் உரியவை யுளவே புணர்நிலைச் சுட்டே. இஃது, இலக்கண வழக்கேயன்றி மரூஉக்களும் புணர்க்கப்படும் என்பது உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மருவின் தொகுதி மயங்கு இயல் மொழியும் - (இலக்கண வழக்கேயன்றி) மரூஉத்திரளாகிய தலைதடுமாறாக மயங்கின இயல்பையுடைய இலக்கணத்தொடு பொருந்தின மரூஉ வழக்கும், உரியவை உள புணர்நிலைச் சுட்டு - உரியன உள புணரும் நிலைமைக்கண். உ-ம்: மீகண், முன்றில் என வரும். ‘நிலை’ என்றதனான், இலக்கணத்தொடு பொருந்திய மரூஉ வழக்கல்லா மரூஉ வழக்கும் புணர்க்கப்படும் எனக்கொள்க. (9) 113. வேற்றுமை குறித்த புணர்மொழி நிலையும் வேற்றுமை யல்வழிப் புணர்மொழி நிலையும் எழுத்தே சாரியை யாயிரு பண்பின் ஒழுக்கல் வலிய புணருங் காலை. இது, நால்வகைப் புணர்ச்சியுள் மிக்க புணர்ச்சி இத்தன்மைத் தென்பதூஉம், அந் நால்வகைப் புணர்ச்சியும் வேறு ஓர் ஆற்றான் இருவகை யாமென்பதூஉம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வேற்றுமை குறித்த புணர்மொழி நிலையும் - வேற் றுமையது பொருண்மையினைக் குறித்த புணர்மொழியது நிலைமையும், வேற்றுமை அல்வழி புணர்மொழி நிலையும் - வேற்றுமையல்லாத அல்வழியிடத்துப் புணர்மொழியது நிலைமையும், எழுத்து சாரியை அ இரு பண்பின் ஒழுக்கல் வலிய - (மிக்க புணர்ச்சிக்கண்) எழுத்து மிகுதலும் சாரியை மிகுதலு மாகிய அவ் விரண்டு இலக்கணத்தானும் நடாத்துதலைத் தமக்கு வலியாக உடைய, புணரும்காலை - அவை புணருங்காலத்து. உ-ம்: விளங்கோடு, மகவின்கை, விளக்குறிது, பனையின் குறை எனக் கண்டுகொள்க. ‘ஒழுக்கல் வலிய’ என்றதனான், எழுத்தும் சாரியையும் உடன் பெறுதல் கொள்க. அவற்றுக்கோடு, கலத்துக்குறை எனவரும். அல்வழி முற்கூறாதது, வேற்றுமையல்லாதது அல்வழியென வேண்டலின் என்பது. முன்னே ‘புணர்மொழி’ என்று வைத்து, ‘புணருங் காலை’ என்றதனாற் புணர்ச்சிக்கண்ணே வேற்றுமை அல்வழி என இரண்டாவது அல்லாக்கால், வேற்றுமையெனவே படுமென்பது கொள்க. ஈண்டு ‘அல்வழி’ யென்றது பெரும்பான்மையும் எழுவாயினை. (10) 114. ஐஒடு குஇன் அதுகண் ணென்னும் அவ்வா றென்ப வேற்றுமை யுருபே. இது, மேல் வேற்றுமை யென்னப்பட்ட அவற்றது பெயரும், முறையும், தொகையும் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஐ ஒடு கு இன் அது கண் என்னும் - ஐ ஒடு கு இன் அது கண் என்று சொல்லப்படும். அ ஆறு என்ப வேற்றுமை உருபு - அவ் வாறும் என்று சொல்லுவர் வேற்றுமையுருபுகளை எ-று. இவ் ஆறும் அல்லன வெல்லாம் அல்வழி எனப்படும். அவை எழுவாயும், விளியும், உவமத்தொகையும், உம்மைத் தொகையும், பண்புத் தொகையும், இருபெயரொட்டுப் பண்புத்தொகையும், முற்றும், இரு வகை எச்சமும், இடையும், உரியும் என இவை. (11) 115. வல்லெழுத்து முதலிய வேற்றுமை யுருபிற் கொல்வழி யொற்றிடை மிகுதல் வேண்டும். இது, நான்காவதற்கும் ஏழாவதற்கும் உருபியலை நோக்கிற்றோர் கருவி உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வல்லெழுத்து முதலிய வேற்றுமை உருபிற்கு - வல்லெழுத்து முதலாகவுடைய வேற்றுமை யுருபிற்கு, ஒல்வழி ஒற்று இடை மிகுதல் வேண்டும் - பொருந்தின இடத்து வல்லொற்றாயினும் மெல்லொற்றாயினும் இடைக்கண் மிகுதல் வேண்டும். உ-ம்: ஊர்க்கு, நீர்க்கு, ஊர்க்கண், நீர்க்கண் என வல்லெழுத்து மிக்கன. தங்கண், எங்கண் என மெல்லெழுத்து மிக்கன. ‘ஒல்வழி’ என்றதனான், அரசர்கண், பார்ப்பார்கண் என ஒற்று மிகாதனவும் கொள்க. ‘மெய்பிறி தாதல்’ (புணர். 7) முதலாய நான்கு புணர்ச்சியும் உருபு புணர்ச்சிக்கண்ணும் எய்தலின், மெய்பிறிதாதலை எடுத்தோதாது மிக்கதனை எடுத்தோதிய வதனான், மிக்க புணர்ச்சி யல்லனவும் ஈண்டே கொள்க. பொற்கு, பொற்கண், ஆங்கண், ஈங்கண், ஊங்கண், அவற்கு, இவற்கு; நுங்கண், கொற்றற்கு, சாத்தற்கு என வரும். அவன்கண், சாத்தன்கண் என்புழி இயல்பும் இதனானே கொள்க. குன்றிய புணர்ச்சி வந்தவழிக் கண்டு கொள்க. (12) 116. ஆற னுருபி னகரக் கிளவி ஈறா ககரமுனைக் கெடுதல் வேண்டும். இஃது, ஆறாவதற்குத் தொகைமரபினை நோக்கியதொரு கருவி கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) ஆறன் உருபின் அகரக் கிளவி - ஆறாம் வேற்றுமையாகிய அது என்னும் சொல்லிடத்து அகரமாகிய எழுத்து, ஈறு ஆகு அகரமுனை கெடுதல் வேண்டும் - (நெடுமுதல் குறுகும்) மொழியீற்று உளதாகின்ற அகரத்தின் முன்னர்த் தான் கெடுதல் வேண்டும். உ-ம்: நமது, எமது, தனது, எனது, நினது என வரும். மேல் ஈறாகு அகரம் இதற்குத் தாராது, இவ்வுரு பகரமே ஏறி முடிய அமைதலின், அது கேடாதல் வேண்டா எனின், நெடுமுதல் குறுகி விகாரப்பட்டு நின்ற மொழியாகலின் அதன்மேல் உருபகர மேறி முடியல் வேண்டாராயினார் போலு மென்பது. (13) 117. வேற்றுமை வழிய பெயர்புணர் நிலையே. இது, வேற்றுமையுருபு பெயர்க்கண் நிற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வேற்றுமை பெயர் வழிய புணர்நிலை - வேற்றுமை பெயர்களின் பின்னிடத்தன அவற்றொடு புணரும் நிலைமைக் கண். உ-ம்: சாத்தனை, சாத்தனொடு என வரும். மேல் “உருபுநிலை திரியா தீறுபெயர்க் காகும்” (வேற். 8) என்றாரன்றோ வெனின், பெயரொடு பெயர் முதலிய நால்வகைப் புணர்ச்சியையும் வேற்றுமை அல்வழியென இரண்டாக அடக்கலின், வினைவழியும் உருபு வருமென்பதுபட நின்ற தாகலின் ஈண்டு இது கூறப்பட்டது. (வேற்றுமை - வேற்றுமை யுருபுகள். ஏகாரம் - ஈற்றசை.) (14) 118. உயர்திணைப் பெயரே யஃறிணைப் பெயரென் றாயிரண் டென்ப பெயர்நிலைச் சுட்டே. இது, வேற்றுமையொடு புணரும் பெயர்கட்குப் பெயரும், முறையும், தொகையும் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உயர்திணைப் பெயரே அஃறிணைப் பெயர் என்று அ இரண்டு என்ப - உயர்திணைப் பெயரும் அஃறிணைப் பெயருமாகிய அவ் விரண்டுமென்று சொல்லுப, பெயர் நிலைச் சுட்டு - பெயராகிய நிலைமையது கருத்தினை. உ-ம்: ஆடூஉ, மகடூஉ என்பன உயர்திணைப் பெயர். ஒன்று பல என்பன அஃறிணைப் பெயர். மற்று விரவுப்பெயர் கூறாராயது என்னை யெனின், மற்றது சாத்தன் வந்தான்; வந்தது எனப் புணர்ச்சிக்கண் பெரும்பான்மை யும் ஒரு திணைப் பாற்படுதலின், அவ் விரண்டாக அடக்கிக் கூறினா ரென்பது. (ஏ, என்று என்பன - எண்ணிடைச்சொல் இரண்டாம். ஏகாரம் - ஈற்றசை.) (15) 119. அவற்றுவழி மருங்கிற் சாரியை வருமே. இது, சாரியை வரும் இடம் கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) அவற்றுவழி மருங்கின் சாரியை வரும் - அப் பெயர்களின் பின்னாகிய இடத்தின்கண்ணே சாரியை வரும். உ-ம்: ஆடூஉவின் கை, மகடூஉவின் கை, பலவற்றுக் கோடு என வரும். (`அவற்றுள் வழி’ எனவும் பாடம்.) (16) 120. அவைதாம் இன்னே வற்றே யத்தே யம்மே ஒன்னே யானே யக்கே யிக்கே அன்னென் கிளவி யுளப்படப் பிறவும் அன்ன வென்ப சாரியை மொழியே. இது, சாரியைகட்குப் பெயரும் முறையும் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அவைதாம் - மேற்சாரியை யென்னப்பட்டவை தாம், இன்னே வற்றே அத்தே அம்மே ஒன்னே ஆனே அக்கே இக்கே அன் என் கிளவி உளப்பட பிறவும் - இன்னும் வற்றும் அத்தும் அம்மும் ஒன்னும் ஆனும் அக்கும் இக்கும் அன் என்னும் சொல்லுமாகிய அவ் வொன்பதும் உளப்படப் பிறவும், அன்ன என்ப சாரியை மொழி - அச் சாரியையாம் தன்மைய என்று சொல்லுவர் சாரியையாகிய மொழிகளை. ‘பிறவும்’ என்றதனான், தம், நம், நும், உம், கெழு, ஏ, ஐ, ஞான்று என்பனவுங் கொள்க. ‘எடுத்த நறவின் குலையலங் காந்தள்’ என்புழி அலம் என்பதொரு சாரியையும் உண்டாலெனின், அதனை அலங்கு காந்தள் என்பதன் விகார மென்ப. இன்சாரியை வழக்குப் பயிற்சியானும் நூலுட் பலகாலும் எடுத் தோதப்படலானும், வாளா ஓதியவழித் தானே சேறலானும் முன்வைக்கப்பட்டது. அன் சாரியையும் அதுபோலச் சிறப்புடை மையின் பின் வைக்கப்பட்டது. இடை நின்றவற்றியல்பும் அறிந்து கொள்க. (முதல் எட்டு ஏகாரமும் - எண்ணிடைச்சொல். ஒன்பதாம் ஏகாரம் - ஈற்றசை.) (17) 121. அவற்றுள் இன்னி னிகர மாவி னிறுதி முன்னர்க் கெடுதல் உரித்து மாகும். இஃது, அவற்றுள் இன்சாரியை முதல் திரியுமாறு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) அவற்றுள் - மேற்கூறப்பட்ட சாரியைகளுள், இன்னின் இகரம் ஆவின் இறுதிமுன்னர் - இன்சாரியையினது இகரம் ஆ என்னும் சொல்லீற்றுமுன்னர், கெடுதலும் உரித்தாகும் - கெடாமையேயன்றிக் கெடுதலும் உரித்தாம் எ-று. உ-ம்: ஆனை, ஆவினை, ஆன்கோடு, ஆவின்கோடு என வரும். ‘முன்னர்’ என்றதனான், ‘மா’ என்னும் சொல்லின் முன்னும் அவ்இரு விதியும் எய்தும். மானை, மாவினை, மான்கோடு, மாவின்கோடு என வரும். (18) 122. அளபாகு மொழிமுத னிலைஇய வுயிர்மிசை னஃகான் றஃகா னாகிய நிலைத்தே. இஃது, இன் இறுதி திரியுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அளவாகும் மொழி முதல் - அளவுப் பெயராகும் மொழி முதற்கண், நிலைஇய உயிர்மிசை னஃகான் - நிலைபெற்ற உயிருக்கு மேலாய் நின்ற இன்சாரியையது னகாரம், றஃகான் ஆகிய நிலைத்து - றகாரமாகிய நிலைமைத்து. உ-ம்: பதிற்றகல், பதிற்றுழக்கு என்புழி அவ்வாறு வருதல் அறிக. ‘நிலைத்து’ என்றதனான், பிறவழியும் இன்னின் னகரம் றகரமாதல் கொள்க. பதிற்றொன்று, பதிற்றேழு என வரும். (19) 123. வஃகான் மெய்கெடச் சுட்டுமுத லைம்முன் அஃகா னிற்ற லாகிய பண்பே. இது, வற்று முதல் திரியுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) சுட்டு முதல் ஐமுன் - சுட்டெழுத்தினை முதலாக வுடைய ஐகார ஈற்றுச் சொல்முன்னர், வஃகான் மெய் கெட அஃகான் நிற்றல் ஆகிய பண்பு - வற்றுச்சாரியை தன் வகரமாகிய மெய்கெட அகரம் நிற்றலாகிய பண்பினையுடைய. உ-ம்: அவையற்றை, இவையற்றை, உவையற்றை எனவும், அவையற்றுக்கோடு எனவும் வரும். ‘ஆகிய பண்பு’ என்றதனால், சுட்டு முதலாகிய ஐ என் இறுதி ஐகாரத்தொடு நில்லாதவழி, வற்றின் வகரம் அகரம் நிற்கக் கெடாது வற்றாயே நிற்றல் கொள்க. மற்றிது, “திரிந்ததன் திரிபு பிறிது” என்னும் நயத்தாற் கெடாதே நிற்குமாகலின், இது கூறவேண்டா எனின், “சுட்டு முதல் ஐ ஈற்றுச் சொல்லின் ஐமுன்” என ஓதாது, “சுட்டு முதல் ஐம்முன்” என அச் சொல்முன் எல்லாம் கெடுவதுபோல ஓதினமையின், வேண்டிற்றென்பது.(20) 124. னஃகான் றஃகா னான்க னுருபிற்கு. இது, னகர ஈற்றுச் சாரியை நான்கற்கும் ஈறு திரிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) நான்கன் உருபிற்கு னஃகான் றஃகான் - நான்காம் உருபிற்கு (னகர ஈற்றுச் சாரியையெல்லாம்) னகரம் றகரமாம். உ-ம்: விளவிற்கு, கோஒற்கு, ஒருபாற்கு, அதற்கு என வரும். (21) 125. ஆனி னகரமு மதனோ ரற்றே நாண்முன் வரூஉம் வன்முதற் றொழிற்கே. இஃது, ஆன்சாரியை பொருட்புணர்ச்சிக்கண் ஈறு திரியுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) நாள்முன் வரும் வல் முதல் தொழிற்கு ஆனின் னகரமும் - நாட்பெயர் முன்னர் வரும் வல்லெழுத்தை முதலாக வுடைய வினைச் சொற்கண் வரும் ஆன்சாரியையின் னகரமும், அதன் ஓர் அற்று - அந் நான்கனுருபின்கண் வரும் ஆன்சாரியை யோடு ஒரு தன்மைத்தாய் னகாரம் றகரமாம். ‘தொழிற்கு’ என்பதனைத் ‘தொழிற்கண்’ என மயக்கமாகக் கொள்க. உ-ம்: பரணியாற் கொண்டான் என வரும். உம்மையை இரட்டுற மொழிதலானே எதிரது தழீஇய தாக்கி, அதனான் நாளல்லவற்றுமுன் வரும் வன்முதற் றொழிற்க ண் இன்னின் னகரமும் றகாரமாய்த் திரிதல் கொள்க. பனியிற் கொண்டான் என வரும். தொழிற்கண் இன்னின் னகரம் திரியுமென, பெயர்க்கண் இன்னின் னகரம் திரிதலும் திரியாமையுமுடைய தென்பது ஞாபகத்தாற் கொள்ளப் படும். பறம்பிற் பாரி, வண்டின் கால் என வரும். (22) 126. அத்தி னகர மகரமுனை யில்லை. இஃது, அத்து முதல் திரியுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அத்தின் அகரம் அகரமுனை இல்லை - அத்துச் சாரியையின் அகரம் அகரவீற்றுச் சொல்முன்னர் இல்லையாகும். உ-ம்: மகத்துக்கை என வரும். (23) 127. இக்கி னிகர மிகரமுனை யற்றே. இஃது, இக்குச் சாரியை முதல் திரியுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இக்கின் இகரம் இகரமுனை அற்று - இக்குச் சாரியையினது இகரம் இகர ஈற்றுச்சொல் முன்னர் மேற்கூறியவாறு போலக் கெடும் எ-று. உ-ம்: ஆடிக்குக் கொண்டான் என வரும். (24) 128. ஐயின் முன்னரு மவ்விய னிலையும். இதுவும் அது. (இ-ள்.) ஐயின் முன்னரும் அ இயல் நிலையும் - (இக்கின் இகரம்) இகரவீற்றுச் சொல் முன்னன்றி ஐகாரவீற்றுச் சொல் முன்னரும் மேற்கூறப்பட்ட கெடுதலியல்பிலே நிற்கும். உ-ம்: சித்திரைக்குக் கொண்டான் என வரும். (25) 129. எப்பெயர் முன்னரும் வல்லெழுத்து வருவழி அக்கி னிறுதிமெய் மிசையொடுங் கெடுமே குற்றிய லுகர முற்றத் தோன்றாது. இஃது, அக்கீறு திரியுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) எ பெயர் முன்னரும் வல்லெழுத்து வருவழி அக்கின் இறுதிக் குற்றியலுகரம் முற்றத் தோன்றாது - எவ்வகைப்பட்ட பெயர் முன்னும் வல்லெழுத்து வருமிடத்து அக்கின் இறுதிக் குற்றியலுகரம் முடியத் தோன்றாது, மெய் மிசையொடும் கெடும் - அதனாற் பற்றப்பட்ட வல்லெழுத்தாகிய மெய் தனக்கு மேல் நின்ற மெய்யொடும் கெடும். உ-ம்: குன்றக்கூகை, மன்றப்பெண்ணை, ஈமக்குடம், அரசக் கன்னி, தமிழக்கூத்து எனவரும். (‘முற்ற’ என்றதனான் வன்கணமன்றி மற்றக் கணங்கட்கும் கொள்க.) தமிழநூல், தமிழயாப்பு, தமிழவரையர் என வரும். (26) 130. அம்மி னிறுதி கசதக் காலைத் தன்மெய் திரிந்து ஙஞந வாகும். இது, அம்மின் இறுதி திரியுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அம்மின் இறுதி க ச தக் காலை - அம்மின் இறுதியாகிய மகரவொற்று க ச தக்கள் வருமொழியாக வந்த காலத்து, தன் மெய் திரிந்து ங ஞ ந ஆகும் - தன் வடிவுதிரிந்து ங ஞ நக்களாம். உ-ம்: புளியங்கோடு, புளியஞ்செதிள், புளியந்தோல் என வரும். ‘தன்மெய்’ என்றதனான், அம்மின் இறுதி மகரமேயன்றித் தம் நம் நும் உம் என்பனவற்றின் இறுதி மகரமும் திரியுமென்பது கொள்க. எல்லார்தங்கையும், எல்லாநங்கையும், எல்லீர் நுங்கையும், ‘வான வரிவில்லுந் திங்களும்’, என வரும். (27) 131. மென்மையு மிடைமையும் வரூஉங் காலை இன்மை வேண்டு மென்மனார் புலவர். இதுவும் அது. (இ-ள்.) மென்மையும் இடைமையும் வரும் காலை - அம்மின் இறுதி மென்மையும் இடைமையும் வருமொழியாய் வருங்காலத்து; இன்மை வேண்டும் என்மனார் புலவர் - இன்றிமுடிதலை வேண்டும் என்று சொல்லுவர் புலவர். உ-ம்: புளிய ஞெரி; நுனி, முரி, யாழ், வட்டு என வரும். உரையிற் கோடல் என்பதனான், புளியவிலை எனவும் உயிர் வருவழிக் கேடும் கொள்க. புளியிலை என முழுவதூஉம் கேடு கூறலும் கொள்க. (28) 132. இன்னென வரூஉம் வேற்றுமை யுருபிற் கின்னென் சாரியை இன்மை வேண்டும். இஃது, இன் சாரியை முழுவதூஉம் கெடும் இடம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இன் என வரும் வேற்றுமை உருபிற்கு - இன் என்று சொல்ல வருகின்ற வேற்றுமை யுருபிற்கு, இன் என் சாரியை இன்மை வேண்டும் - இன் என்னும் சாரியைதான் இன்றி முடிதல் வேண்டும் எ-று. உ-ம்: விளவின், பலாவின் என வரும். ‘அவற்றுள் இன்னின் இகரம்’ (புணர். 18) என்றதன் பின் வையாததனால், சிறுபான்மை இன் சாரியை கெடாது நிற்றல் கொள்க. பாம்பினிற் கடிது தேள் என வரும். (29) 133. பெயருந் தொழிலும் பிரிந்தொருங் கிசைப்ப வேற்றுமை யுருபு நிலைபெறு வழியும் தோற்றம் வேண்டாத் தொகுதிக் கண்ணும் ஒட்டுதற் கொழுகிய வழக்கொடு சிவணிச் சொற்சிதர் மருங்கின் வழிவந்து விளங்கா திடைநின் றியலுஞ் சாரியை யியற்கை உடைமையு மின்மையு மொடுவயி னொக்கும். இது, சாரியைகட்கெல்லாம் பொதுவாயதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பெயரும் தொழிலும் பிரிந்து ஒருங்கு இசைப்ப - பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் பெயரும் வினையுமாய்ப் பிரிந்தும் பெயரும் பெயருமாய்க் கூடியும் இசைப்ப, வேற்றுமை உருபு நிலைபெறு வழியும் - வேற்றுமையுருபு தொகாது நிலைபெற்ற இடத்தினும், தோற்றம் வேண்டாத் தொகுதிக் கண்ணும் - அவை தோற்றுதல் வேண்டாத தொகுதிக்கண்ணும், ஒட்டுதற்கு ஒழுகிய வழக்கொடு சிவணி - தாம் தாம் பொருந்துதற்கேற்ப நடந்த வழக்கொடு பொருந்தி, சொல் சிதர் மருங்கின் - சாரியை பெறும் புணர்மொழிகளைப் பிரித்துக் காணுமிடத்து, வழி வந்து விளங்காது இடைநின்று இயலும் - அவற்றின் பின் வந்து விளங்காது அவற்றிடையே நின்று நடக்கும், சாரியை இயற்கை - சாரியையின் இயல்பு. உடைமையும் இன்மையும் ஒடுவயின் ஒக்கும் - அவைதாம் உண்டாதலும் இல்லையாதலும் ஒடு உருபினிடத்து ஒக்கும். உ-ம்: விளவினைக் குறைத்தான், விளவினைக் குறைத்தவன் எனவும், நிலாத்துக்கொண்டான், நிலாத்துக் கொண்டவன் எனவும் வரும். ஒட்டுதற் கொழுகிய வழக்கன்மையின், நிலாக்கதிர் நிலாமுற்றம் என்பன சாரியை பெறாவாயின. எல்லா நம்மையும் எனச் சாரியை ஈற்றின்கண்ணும் வருதலின், இடைநின்றியறல் பெரும்பான்மை யெனக் கொள்க. பூவினொடு விரிந்த கூந்தலெனவும், பூவொடு விரிந்த கூந்தலெனவும், உண்மையும் இன்மையும் ஒடுவயின் ஒத்தவாறு. ‘இயற்கை’ என்றதனான் ஒடுவுருபின்கண் சாரியை பெறுதலும் பெறாமையும் ஒழிய, ஒரோவழிப் பெற்றே வருமென்பது கொள்க. பலவற்றொடு என வரும். (30) 134. அத்தே வற்றே ஆயிரு மொழிமேல் ஒற்றுமெய் கெடுத றெற்றென் றற்றே அவற்றுமுன் வரூஉம் வல்லெழுத்து மிகுமே. இஃது, அத்தும் வற்றும் வருமிடத்து நிலைமொழியினும் வருமொழியினும் வருஞ் செய்கை கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) அத்தே வற்றே அ இருமொழிமேல் ஒற்று மெய் கெடுதல் தெற்றென்றற்று - அத்தும் வற்றுமாகிய அவ் விருமொழி மேல்நின்ற ஒற்றுத் தன்வடிவு கெடுதல் தெளியப்பட்டது, அவற்று முன்வரும் வல்லெழுத்து மிகும் - அவ் விருசாரியை முன்னும் வரும் வல்லெழுத்து மிகும். (முந்திய ஏகாரம் இரண்டும் எண்ணிடைச்சொல். பிந்திய ஏகாரம் இரண்டும் ஈற்றசை.) உ-ம்: கலத்துக்குறை, அவற்றுக்கோடு என வரும். கலன் என, னகாரமாக நிறுத்திக் கெடுக்கவே. ‘ஒன்றின முடித்தல்’ என்பதனான், புள்ளியீறல்வழி விகார வகையான் நின்றனவும் அவற்றின்மிசை யொற்றென்று கெடுக்கப்படுமெனக் கொள்க. அவற்றுக்கோடு என வரும். இஃது ஐகார ஈறு. ஈண்டு ‘வல்லெழுத்து மிகு’மென்றது, ஈற்று வல்லெழுத்தின்றித் திரிந்து முடியும் னகரமும் ணகரமும் லகரமும் ளகரமும் என இவற்றை நோக்கியென வுணர்க. அத்து முற்கூறிய முறையன்றிக் கூற்றினான், அத்தின் மிசை யொற்றுக் கெடாது நிற்கவும் பெறும். விண்ணத்துக் கொட்கும், வெயிலத்துச் சென்றான், இருளத்துக் கொண்டான் என வரும். ‘மெய்’ என்றதனால், அத்தின் அகரம் பிறவுயிரின் முன்னும் கெடுதல் கொள்க. அண்ணாத்தேரி எனவரும். ‘தெற்று’ என்றதனால், அத்தின் அகரம் கெடாது நிற்றலும் கொள்க. விளவத்துக்கண் என வரும். (31) 135. காரமுங் கரமுங் கானொடு சிவணி நேரத் தோன்று மெழுத்தின் சாரியை. இஃது, எழுத்துச் சாரியைகட்குப் பெயரும் முறையும் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) காரமும் கரமும் கானொடு சிவணி - காரமும் கரமும் கானொடு பொருந்தி, நேரத்தோன்றும் எழுத்தின் சாரியை - எல்லா ஆசிரியரானும் உடன்படத் தோன்றும் எழுத்துச்சாரியை யாதற்கு. ‘நேரத் தோன்றும்’ என்றதனான், நேரத்தோன்றாதன ஆனம், ஓனம், என இவை. (32) 136. அவற்றுள் கரமுங் கானு நெட்டெழுத் திலவே. இஃது, அவற்றுட் சில சாரியை சில எழுத்தோடு வாரா என எய்தியது விலக்குதல் நுதலிற்று. (இ-ள்.) அவற்றுள் கரமும் கானும் நெட்டெழுத்து இல - மேற் சொல்லப்பட்டவற்றுள் கரமும் கானும் நெட்டெழுத்திற்கு இல. காரம் நெட்டெழுத்திற்கு உண்டு என்றவாறு. ஆகாரம், ஈகாரம் என வரும். (33) 137. வரன்முறை மூன்றுங் குற்றெழுத் துடைய. இது, நெட்டெழுத்திற்குச் சில சாரியை விலக்கினமையின் குற்றெழுத்திற்கும் சில விலக்குவதுண்டுகொல் என்னும் ஐயம் தீர்த்தல் நுதலிற்று. (இ-ள்.) வரல்முறை மூன்றும் குற்றெழுத்து உடைய - வரலாற்று முறைமையையுடைய மூன்று சாரியையும் குற்றெழுத்து உடைய. உ-ம்: அகாரம், அகரம், அஃகான் என வரும். ‘வரன்முறை’ என்றதனான், அஃகான் என்புழி ஆய்தமிக்கு முடியுமென்பது கொள்க. (34) 138. ஐகார ஒளகாரங் கானொடுந் தோன்றும். இஃது, அவற்றுள் காரமுங் கானும் என்பதற்கு ஓர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஐகாரம் ஒளகாரம் கானொடும் தோன்றும் - நெட் டெழுத்துக்களில் ஐகாரமும் ஒளகாரமும் முன் விலக்கப்பட்ட கானொடும் தோன்றும். உ-ம்: ஐகான், ஒளகான் என வரும். (35) 139. புள்ளி யீற்றுமு னுயிர்தனித் தியலாது மெய்யொடுஞ் சிவணு மவ்வியல் கெடுத்தே. இஃது, உயிர்முதல்மொழி புள்ளியீற்றுமுன் வருங்காற் பிறப்பதோர் கருவி கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) புள்ளி ஈற்றுமுன் உயிர் தனித்து இயலாது - புள்ளியீற்றுச் சொல்முன் உயிர் தனித்து நடவாது, மெய்யொடும் சிவணும் அ இயல் கெடுத்து - அப் புள்ளியொடும் கூடும் தான் தனிநின்ற அவ் வியல்பினைக் கெடுத்து எ-று. உ-ம்: ஆல் + அடை = ஆலடை என வரும். ‘ஒன்றென முடித்தல்’ என்பதனான், இயல்பல்லாத புள்ளிமுன் உயிர் வந்தாலும் இவ் விதி கொள்க. அதனை எனவும், நாடுரி எனவும் வரும். புள்ளியீற்று முன்னும் என, தொகுத்து நின்ற உம்மையை விரித்ததனானே குற்றியலுகரத்தின் முன்னும் இவ் விதி கொள்க. நாகரிது என வரும். (36) 140. மெய்யுயிர் நீங்கிற் றன்னுரு வாகும். இது, புணர்ச்சியிடத்து உயிர்மெய் உயிர் நீங்கியவழிப் படுவதொரு விதி கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) மெய் உயிர் நீங்கின் தன் உரு ஆகும் - மெய் தன்னொடு கூடிய உயிர் புணர்ச்சியிடத்து நீங்கிய வழித் தன் புள்ளி வடிவு பெறும். உ-ம்: அதனை - அதன் + ஐ என வரும். (37) 141. எல்லா மொழிக்கு முயிர்வரு வழியே உடம்படு மெய்யி னுருபுகொளல் வரையார். இஃது, உயிரீறு உயிர்முதன் மொழியொடு புணரும்வழி நிகழ்வ தொரு கருவி கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) எல்லா மொழிக்கும் - மூவகைப்பட்ட மொழிக்கும், உயிர் வரு வழி - உயிர் முதன்மொழி வரும் இடத்து, உடம்படு மெய்யின் உருவு கொளல் வரையார் - இடை உடம்படுமெய் வடிவு கோடலை நீக்கார். உ-ம்: புளியங்கோடு, எருவங்குழி, விளவத்துக்கொட்கும் என வரும். ‘உரையிற் கோடல்’ என்பதனான், உடம்படுமெய்யாவன யகரமும் வகரமும் எனக் கொள்க. இகரவீறும் ஈகாரவீறும் ஐகாரவீறும் யகரவுடம் படுமெய் கொள்வன; அல்லன வெல்லாம் வகரமெய் கொள்வன. ‘ஒன்றென முடித்தல்’ என்பதனான், விகாரப்பட்ட மொழிக் கண்ணும் உடம்படுமெய் கொள்க. மரவடி, ஆயிருதிணை என வரும். ‘வரையார்’ என்றதனான், உடம்படுமெய் கோடல் ஒருதலை அன்றென்பது கொள்ளப்படும். கிளி அரிது, மூங்கா இல்லை என வரும். (38) 142. எழுத்தோ ரன்ன பொருள்தெரி புணர்ச்சி இசையிற் றிரித னிலைஇய பண்பே. இஃது, எழுத்துக்கள் ஒன்று பலவாதல் கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) எழுத்து ஓர் அன்ன பொருள் தெரி புணர்ச்சி - எழுத்து ஒரு தன்மையான பொருள் விளங்கிநிற்கும் புணர் மொழிகள், இசையின் திரிதல் நிலைஇய பண்பு - ஓசை வேற்றுமையான் புணர்ச்சி வேறுபடுதல் நிலைபெற்ற பண்பு. உ-ம்: செம்பொன்பதின்றொடி, குன்றேறாமா என வரும். (39) 143. அவைதாம் முன்னப் பொருள புணர்ச்சி வாயின் இன்ன வென்னும் மெழுத்துக்கட னிலவே. இது, மேலதற்கு ஓர் புறனடை கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) அவைதாம் - மேற்சொல்லிய புணர்மொழிகள் தாம், முன்னப் பொருள - முன்னத்தினான் உணரும் பொருண் மையை யுடைய; புணர்ச்சி வாயின் இன்ன என்னும் எழுத்துக் கடன் இல - அவை புணர்ச்சி யிடத்து இத்தன்மைய வென்னும் எழுத்து முறைமையை உடையவல்ல எ-று. செம்பொன்பதின்றொடி என்றவழிப் பொன்னாராய்ச்சி உள் வழிப் பொன்னெனவும், செம்பாராய்ச்சி உள்வழிச் செம்பெனவும் குறிப்பான் உணரப்பட்டது. மற்று, இதன்மேல் ‘இசையி றிரிதல் நிலைதல்’ (எழுத். 142) என அறியுமாறு கூறினாரன் றோவெனின், ஓசை என்றமையான் அஃது ஒலியெழுத்திற் கெனவும், “இன்ன வென்னு மெழுத்துக் கடனில” என்றதனான் இது வரிவடிவிற்கெனவுங் கொள்க. (40) நான்காவது - புணரியல் முற்றிற்று. தொகை மரபு உயிரையும் மெய்யையும் இறுதியாகவுடைய சொற்களைப் பின்வரும் இயல்களில் ஈறுகள்தோறும் தனித்தனியே விரித்தோதி முடிக்கக் கருதிய ஆசிரியர், பல வீறுகளுக்கும் பொதுவான விதிகளை இவ்வியலில் ஒவ்வோர் சூத்திரங்களால் தொகுத்து முடிபு கூறுகின்றார். அதனால் இவ்வியல் தொகைமரபு என்னும் பெயர்த்தாயிற்று. நிலைமொழி வருமொழிப் புணர்ச்சிகட்படும் இலக்கணங்களாய்த் தொன்றுதொட்டு வரும் இலக்கண மரபுகளைத் தொகுத்துணர்த்துதலின் தொகைமர பெனப் பட்டது எனினுமமையும். நிலைமொழியும் வருமொழியும் மேல் புணரியலிற் கூறிய கருவிகளால் தொக்குப்புணரும் செய்கை கூறுவது இவ்வியலாதலின் இது புணரியலோடு இயைபுடைத் தாயிற்று. இவ்வியல் முப்பது சூத்திரங்களையுடையது. இதன்கண் அல்வழியும் வேற்றுமையுமாகிய இருவழியிலும் கசதப என்னும் வல்லெழுத்து முதன்மொழி வருங்கால் மிகுதற்குரிய மெல்லெழுத்துக்கள் முறையே ங ஞ ந ம என்பனவாம் என்னும் வருமொழிக் கருவியும், இருபத்துநான்கீற்றின் முன்னும் வன்கண மொழிந்த கணங்களுக்கு இருவழியும் வருமொழிமுடிபும், ணகர னகர வீற்றுச் சொற்களுக்கு இருவழியும் நிலைமொழி முடிபும், லகர, னகர வீறுகளின் முன்னும் ணகர ளகர வீறுகளின் முன்னும் வரும் தகர நகரங்கள் முறையே றகர னகரங்களாகவும் டகர ணகரங்களாகவும் திரியு மென்னும் வருமொழிக் கருவியும், உயிரையும் மெய்யையும் இறுதியாகவுடைய முன்னிலை வினைச் சொற்கள் வல்லின முதன்மொழி வருங்கால் இயல்பும் உறழ்ச்சியு மாகிய இருநிலைமையையுடையன வென்பதும், ஒளகாரத்தையும் ஞநமவ என்னும் மெய்களையும் குற்றியலுகரத்தையும் ஈறாகவுடைய முன்னிலை வினைச்சொற்கள் முற்கூறிய முடிபிற்கு முற்றும் பொருந்துவன அல்ல என்பதும், உயிரையும் மெய்யையும் ஈறாகவுடைய உயர் திணைப் பெயர்கள் நான்குகணத்தும் இருவழியும் இயல்பாய் முடியுமென்பதும், அவற்றுள் இகரவீற்று உயர்திணைப் பெயர் திரிந்து முடியுமிடனுமுண் டென்பதும், அஃறிணை விரவு பெயர் இயல்பாய் முடிவனவுமுள வென்பதும், மூன்றாம் வேற்றுமைப் புணர்ச்சியிலும் இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சியிலும் உளவாகுந் திரிபுகளும், இகர ஐகாரவீற்றுப் பெயர்களுக்கு அல்வழி முடிபும், இகர ஐகாரவீற்றுள் ஏழாம் வேற்றுமையிடப் பொருளுணர நின்ற இடைச்சொல் முடிபும், நெட்டெழுத்தின் பின்னின்ற மெய்யீறு கெடுதல் குற்றெழுத்தின் பின்னின்ற இறுதிமெய் இரட்டித்தல் ஆகிய நிலைமொழிக்கரு வியும், இவற்றிற்கு உருபியலை நோக்கியதோர், வருமொழிக் கருவியும், உகரமொடு புணரும் மெய்யீற்றுச் சொற்கள் யகரமும் உயிரும் வருமொழியாய் வரின் அவ்வுகரம் பெறாது இயல்பாம் என்னும் வருமொழிச் செய்கையும் அளவுப்பெயரும் நிறைப்பெயரும் எண்ணுப்பெயரும் தம்மிற் புணருமாறும், அளவுப்பெயர்க்கும் நிறைப்பெயர்க்கும் முதலாதற்குரிய வெழுத்துக்கள் க ச த ப ந ம வ அ உ என்னுமிவ் வொன்பதுமே யென்னம் வரையறையும், மேலே கூறப்பட்டன வற்றிற்குப் புறனடையும், யாவர் என்பது யார் எனவும் யாது என்பது யாவது எனவும் வரும் மரூஉ முடிபும் இவ்வியலில் உணர்த்தப்பட்டன. - க. வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 174-176 ஐந்தாவது தொகைமரபு இவ் வோத்து என்ன பெயர்த்தோ வெனின், மேல் அகத்தோத்தினுள் இருபத்துநான்கு ஈற்றினும் விரிந்து முடிவனவற்றையெல்லாம் தொகுத்து முடித்தலின் தொகைமரபு எனப்பட்டது. மேல் புணரியலுட் கூறிய கருவிகளாற் செய்கை கூறும் வழி, தொக்குப் புணருஞ் செய்கை கூறலிற் புணரியலோடு இயைபுடைத் தாயிற்று. 144. கசதப முதலிய மொழிமேற் றோன்றும் மெல்லெழுத் தியற்கை சொல்லிய முறையான் ஙஞநம வென்னு மொற்றா கும்மே அன்ன மரபின் மொழிவயி னான. இத் தலைச் சூத்திரம் என் நுதலிற்றோவெனின், அல்வழியும் வேற்றுமையுமாகிய இருவழிக்கண்ணும், உயிர்மயங்கியலையும் புள்ளிமயங்கியலையும் நோக்கியதொரு வருமொழிக் கருவி கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) க ச த ப முதலிய மொழிமேல் தோன்றும் மெல்லெழுத்து இயற்கை - உயிரீற்றினும் புள்ளியீற்றினும் இரு வழியும் க ச த பக்களை முதலாகவுடைய மொழிகளின்மேல் தோன்றும் மெல்லெழுத்தினது இயல்புகூறின், சொல்லிய முறையான் ங ஞ ந ம வென்னும் ஒற்றாகும் - மெல்லெழுத்து மேற்சொல்லும் முறைமையான் க ச த பக்களுக்கு நிரனிறை வகையானே ங ஞ ந ம வென்னும் ஒற்றாகும், அன்ன மரபின் மொழிவயின் ஆன - அத் தன்மைத்தாகிய முறைமையினை யுடைய மொழிகளிடத்து. உ-ம்: விளங்கோடு; செதிள், தோல், பூ என வரும். ‘தோன்றுமென்றதனான் தோன்றி நின்றனவும் அவ்வாறே திரிந்து மெல்லெழுத்தா மென்பது. மரங்குறிது; சிறிது, தீது, பெரிது என வரும். அன்னமரபின் மொழியன்மையின், விளக் குறுமை என்புழி மெல்லெழுத்து மிகாதாயிற்று. (ஏகாரம் - ஈற்றசை. `ஆன’ என்பதன் அகரம் அசை.) (1) 145. ஞ ந ம ய வ வெனு முதலாகு மொழியும் உயிர்முத லாகிய மொழியு முளப்பட அன்றி யனைத்து மெல்லா வழியும் நின்ற சொன்மு னியல்பா கும்மே. இஃது, இருபத்துநான்கு ஈற்றின் முன்னும், வன்கண மொழிந்த கணங்கட்கு இருவழியும் வருமொழி முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) ஞ ந ம ய வ எனும் முதல் ஆகு மொழியும் - ஞ ந ம ய வ என்று சொல்லப்படும் முதலெழுத்து உளவாகும் மொழியும், உயிர் முதலாகிய மொழியும் உளப்பட - உயிர் முதலாகிய மொழியுமாக, அன்றி அனைத்தும் எல்லா வழியும் - அவ் வனைத்து மொழியும் அல்வழியும் வேற்றுமையுமாகிய எல்லா விடத்தும், நின்ற சொல்முன் இயல்பாகும் - இருபத்து நான்கு ஈற்றுப் பெயராகிய நிலைமொழி முன்னர் இயல்பாகி முடியும். ஈண்டு, ‘உளப்பட’ வென்பது, ஆக வென்னும் பொருண்மைத்து. உ-ம்: விள, தாழ் என நிறுத்தி - ஞான்றது, நீண்டது, மாண்டது, யாது, வலிது, அடைந்தது, ஆடிற்று, இடிந்தது, ஈரிற்று, உடைந்தது, ஊறிற்று, எழுந்தது, ஏறிற்று, ஐது, ஒடிந்தது, ஓடிற்று, ஒளவியத்தது, நுந்தையது எனவும்; ஞாற்சி, நீட்சி, மாட்சி, யாப்பு, வலிமை, அடைவு, ஆட்டம், இடிபு, ஈட்டம், உடைபு, ஊற்றம், எழு, ஏணி, ஐயம், ஒடுக்கம், ஓக்கம், ஒளவியம், நுந்தை எனவும் ஒட்டிக்கொள்க. ‘எல்லாம்’ என்றதனான், ஒற்றிரட்டலும், உடம்படுமெய் கோடலும், உயிரேறி முடிதலும் எனவரும் இக்கருவித்திரிபு மூன்றும் திரிபு அன்மையின் திரிபெனப் படாவென்பது கொள்க. இஃது இருபத்து நான்கு ஈற்றிற்கும், அல்வழியினும், வேற்றுமை யினும், அகத்தோத்தினுள் நாற்பத்தெட்டுச் சூத்திரத்தான் முடிவதனை, ஈண்டு ஒரு சூத்திரத்தான் தொகுத்து முடித்த தாயிற்று. மேலும் இவ்வாறே தொகுத்து முடிக்கின்ற வாறு அறிக. (2) 146. அவற்றுள் மெல்லெழுத் தியற்கை யுறழினும் வரையார் சொல்லிய தொடர்மொழி யிறுதி யான. இது, மேற்கூறிய முடிபிற் சிலவற்றிற்கு, அம் முடிபு விலக்கிப் பிறிது விதி எய்துவித்தல் நுதலிற்று. (இ-ள்.) அவற்றுள் - மேற்சொல்லப்பட்ட மூன்று கணத்தினும், மெல்லெழுத்து இயற்கை உறழினும் வரையார் - மெல்லெழுத்தினது இயல்பு இயல்பாதலேயன்றி உறழ்ந்து முடியினும் நீக்கார், சொல்லிய தொடர்மொழி இறுதியான - சொல்லப்பட்ட தொடர் மொழி ஈற்றுக்கண் எ-று. உ-ம்: கதிர்ஞெரி, கதிர்ஞ்ஞெரி; நுனி, முரி என வரும். வருமொழி முற்கூறியவதனால், ஓரெழுத்தொருமொழி யுள்ளும், ஈரெழுத்தொருமொழியுள்ளும் சிலவற்றிற்கு உறழ்ச்சி முடிபு கொள்க. உ-ம்: பூஞெரி, பூஞ்ஞெரி; நுனி, முரி எனவும்; காய்ஞெரி, காய்ஞ்ஞெரி; நுனி, முரி எனவும் வரும். ‘சொல்லிய’ என்றதனான், ஓரெழுத்தொருமொழி யுள்ளும் ஈரெழுத்தொருமொழியுள்ளும் சிலவற்றிற்கு மிக்கு முடிதல் கொள்க. கைஞ்ஞெரித்தார்; நீட்டினார், மடித்தார் எனவும், மெய்ஞ் ஞானம், மெய்ந்நூல், மெய்ம்மறந்தார் எனவும் வரும். (3) 147. ணனவென் புள்ளிமுன் யாவும் ஞாவும் வினையோ ரனைய என்மனார் புலவர். இது, யகர ஞகரங்கள் முதலாம்வழி நிகழ்வதொரு கருவி கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) ண ன என் புள்ளிமுன் - ண ன என்று சொல்லப்படும் புள்ளிகளின்முன், யாவும் ஞாவும் வினை ஓர் அனைய என்மனார் புலவர் - யாவும் ஞாவும் வினைச்சொற்கண் முதலாதற்கு ஒரு தன்மைய வென்று சொல்லுவர் புலவர். உ-ம்: மண்யாத்த எனவும், பொன்யாத்த எனவும், மண்ஞாத்து எனவும், பொன்ஞாத்து எனவும் வரும். ஞா முற்கூறாது யா முற்கூறியவதனான், யா முதன் மொழிக்கண் ஞா வருமென்று கொள்க. (4) 148. மொழிமுத லாகு மெல்லா வெழுத்தும் வருவழி நின்ற வாயிரு புள்ளியும் வேற்றுமை யல்வழித் திரிபிட னிலவே. இது, ணகாரவீற்றிற்கும் னகாரவீற்றிற்கும் அல்வழிக்கண் நிலை மொழி முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) மொழிமுதல் ஆகும் எல்லா எழுத்தும் வருவழி - மொழிக்கு முதலாமென்று சொல்லப்பட்ட இருபத்திரண் டெழுத்தும் வருமிடத்து, நின்ற அ இரு புள்ளியும் வேற்றுமை அல்வழி திரிபு இடன் இல - பெயர்ச் சொல்லினின்ற ண னக்களாகிய அவ்விரு புள்ளியும் வேற்றுமையல்லாத அல்வழி யிடத்துத் திரியும் இடம் இல. உ-ம்: மண், பொன் என நிறுத்தி, கடிது, சிறிது, தீது, பெரிது என வன்கணத்தோடு ஒட்டுக. பிற கணத்துக்கண்ணும் அவ்வாறே ஒட்டுக. வருமொழி முற்கூறியவதனால், ணகாரத்திற்குச் சிறுபான்மை திரிபும் உண்டெனக் கொள்க. சாட்கோல் என வரும். (ஏகாரம் ஈற்றசை). (5) 149. வேற்றுமைக் கண்ணும் வல்லெழுத் தல்வழி மேற்கூ றியற்கை யாவயி னான. இஃது, அவ் விரண்டு ஈற்றிற்கும் வேற்றுமைக்கண் நிலைமொழி முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) வேற்றுமைக்கண்ணும் - வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக் கண்ணும், வல்லெழுத்து அல்வழி - வல்லெழுத்து அல்லாத விடத்து, மேல்கூறு இயற்கை அவயின் ஆன - மேற்கூறிய இயல்பு முடிபாம் அவ் விரண்டு புள்ளியிடத்தும். உ-ம்: மண், பொன் என நிறுத்தி, ஞாற்சி, நீட்சி என வன்கணம் ஒழித்து எல்லாவற்றோடும் ஒட்டுக. (6) 150. லனவென வரூஉம் புள்ளி முன்னர் தந வெனவரிற் றனவா கும்மே. இது, புள்ளிமயங்கியலை நோக்கியதொரு வருமொழிக் கருவி கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) ல ன என வரும் புள்ளி முன்னர் - ல ன என்று சொல்ல வருகின்ற புள்ளிகளின் முன்னர், த ந என வரின் - த ந என வருமொழி வரின், ற ன ஆகும் - அத் தகர நகரங்கள் நிரனிறையானே றகர னகரங்களாம். உ-ம்: கஃறீது, கன்னன்று, பொன்றீது, பொன்னன்று என வரும். (7) 151. ணளவென் புள்ளிமுன் டணவெனத் தோன்றும். இதுவும் அது. (இ-ள்.) ண ள என் புள்ளிமுன் - ண ள என்னும் புள்ளிகளின் முன்னர் (அதிகாரத்தினான் தகார நகாரங்கள் வரின்), ட ண எனத் தோன்றும் - அவை நிரனிறையான் டகார ணகரங்களாய்த் தோன்றும். உ-ம்: மண்டீது, மண்ணன்று, முஃடீது, முண்ணன்று என வரும். (8) 152. உயிரீ றாகிய முன்னிலைக் கிளவியும் புள்ளி யிறுதி முன்னிலைக் கிளவியும் இயல்பா குநவும் முறழ்பா குநவுமென் றாயீ ரியல வல்லெழுத்து வரினே. இது, முன்னிலை வினைச்சொல் வன்கணத்துக்கண் முடியுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உயிர் ஈறாகிய முன்னிலைக் கிளவியும் புள்ளி இறுதி முன்னிலைக் கிளவியும் - உயிர் ஈறாகிய முன்னிலைச் சொற்களும் புள்ளி இறுதியையுடைய முன்னிலைச் சொற்களும், வல்லெழுத்துவரின் - வல்லெழுத்து முதல்மொழி வரின், இயல்பு ஆகுநவும் உறழ்பு ஆகுநவும் என்று அ ஈர் இயல - இயல் பாவனவும் உறழ்ச்சியாவனவும் என அவ் விரண்டு இயல்பினை யுடைய. உயிரீறு புள்ளியீறு என்றமையான், முன்னிலை வினைச் சொல் என்பது கொள்க. உ-ம்: எறிகொற்றா, கொணாகொற்றா; சாத்தா, தேவா, பூதா எனவும்; உண்கொற்றா, தின்கொற்றா எனவும் வரும். இவை இயல்பு. நடகொற்றா, நடக்கொற்றா எனவும், ஈர்கொற்றா, ஈர்க்கொற்றா எனவும் வரும். இவை உறழ்ச்சி. (9) 153. ஒளவென வரூஉ முயிரிறு சொல்லும் ஞநமவ வென்னும் புள்ளி யிறுதிங் குற்றிய லுகரத் திறுதியு முளப்பட முற்றத் தோன்றா முன்னிலை மொழிக்கே. இது, மேல் முடிபு கூறியவற்றுட் சிலவற்றிற்கு அம் முடிபு விலக்குதல் நுதலிற்று. (இ-ள்.) ஒள என வரும் உயிர் இறு சொல்லும் - ஒள என வருகின்ற உயிரீற்றுச் சொல்லும், ஞ ந ம வ என்னும் புள்ளி இறுதியும் - ஞ ந ம வ என்று சொல்லப்படும் புள்ளியீற்றுச் சொல்லும், குற்றியலுகரத்து இறுதியும் உளப்பட - குற்றியலுகர மாகிய இறுதியையுடைய சொல்லுமாகிய இவை, முன்னிலை மொழிக்கு முற்றத் தோன்றா - முன்னிலை மொழிக்குக் கூறிய இயல்பும் உறழ்வுமாகிய முடிவிற்கு முற்றத்தோன்றா. ‘முற்ற’ என்றதனான், ஈண்டு விலக்கப்பட்டவற்றுட் குற்றியலுகர ஈறு ஒழித்து, ஒழிந்தனவெல்லாம் நிலைமொழி உகரம் பெற்று, வருமொழி வல்லெழுத்து உறழ்ந்து முடிதலும், குற்றியலுகர ஈறு வருமொழி வல்லெழுத்து உறழ்ந்து முடிதலுங் கொள்க. உ-ம்: கௌவுகொற்றா, கௌவுக்கொற்றா, உரிஞுகொற்றா, உரிஞுக் கொற்றா, பொருநுகொற்றா, பொருநுக்கொற்றா, திருமுகொற்றா, திருமுக்கொற்றா, தெவ்வுகொற்றா, தெவ்வுக் கொற்றா எனவும்; கூட்டுகொற்றா, கூட்டுக் கொற்றா எனவும் வரும். (10) 154. உயிரீ றாகிய வுயர்திணைப் பெயரும் புள்ளி யிறுதி யுயர்திணைப் பெயரும் எல்லா வழியு மியல்பென மொழிப. இஃது, உயர்திணைப் பெயர் நான்கு கணத்துக்கண்ணும், இரு வழியும் முடியுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உயிர் ஈறாகிய உயர்திணைப் பெயரும் - உயிர் ஈறாகிய உயர்திணைப் பெயர்களும், புள்ளி இறுதி உயர்திணைப் பெயரும் - புள்ளி இறுதியையுடைய உயர்திணைப் பெயர்களும், எல்லா வழியும் இயல்பு என மொழிப - நான்கு கணத்திலும் அல்வழியும் வேற்றுமையுமாகிய எல்லாவிடத்தும் இயல்பாம் என்று சொல்லுவர். உ-ம்: நம்பி எனவும் அவன் எனவும் நிறுத்தி, அல்வழிக்கண் குறியன், சிறியன், தீயன், பெரியன் எனவும்; ஞான்றான், நீண்டான், மாண்டான் எனவும்; யாவன், வலியன் எனவும்; அடைந்தான், ஒளவியத்தான் எனவும்; வேற்றுமைக்கண் கை, செவி, தலை, புறம் எனவும்; ஞாற்சி, நீட்சி, மாட்சி எனவும்; யாப்பு, வலிமை எனவும்; அடைபு, ஒளவியம் எனவும் ஒட்டுக. ஒருவென் என நிறுத்து, குறியென், சிறியென் எனவும்; கை, செவி, தலை, புறம் எனவும் தன்மைப் பெயர்க்கண்ணும் ஒட்டுக. ‘உயிரீறு’, ‘புள்ளியிறுதி’ என்றதனான், உயர்திணைப் பொருள் இயல்பன்றி முடிவன வெல்லாம் கொள்க. பல்சான்றார், கபிலபரணர், இறைவநெடுவேட்டுவர், மருத்துவ மாணிக்கர், பல்லரசர் என இவை ஈறுகெட்டு முடிந்தன. கோலிகக்கருவி, வண்ணாரப்பெண்டிர், ஆசீவகப் பள்ளி என இவை ஈறுகெட்டு வல்லெழுத்து மிக்கன. குமரகோட்டம், குமரக்கோட்டம், பிரம கோட்டம், பிரமக் கோட்டம் என இவை ஈறுகெட்டு வல்லெழுத்து உறழ்ந்து முடிந்தன. பிறவும் அன்ன. ‘எல்லாம்’ என்றதனான், உயர்திணை(வினை)ச்சொல் இயல்பாயும் திரிந்தும் முடிவன கொள்க. உண்ப சான்றார், உண்டார் சான்றார், உண்பேன் பார்ப்பேன் என இவை இயல்பு. உண்டேஞ் சான்றேம், உண்டேநாம் என இவை திரிந்தன. பிறவும் அன்ன. (11) 155. அவற்றுள், இகரவீற் றுப்பெயர் திரிபிட னுடைத்தே. இஃது, உயர்திணைப் பெயருட் சிலவற்றிற்கு எய்தாதது எய்துவித்தல் நுதலிற்று. (இ-ள்.) அவற்றுள் - மேற்சொல்லப்பட்ட உயர்திணைப் பெயருள், இகர ஈற்றுப் பெயர் திரிபு இடன் உடைத்து - இகரமாகிய இறுதியை யுடைய பெயர் திரிந்து முடியும் இடமும் உடைத்து. உரையிற்கோடல் என்பதனான், இது மிக்க திரிபென்பது கொள்ளப்படும். உ-ம்: எட்டிப்பூ, எட்டிப்புரவு; காவிதிப்பூ, காவிதிப்புரவு; நம்பிப்பூ, நம்பிப்பேறு என வரும். ‘இடனுடைத்து’ என்பதனான், இகர ஈறன்றிப் பிற ஈறும் ஈறு திரியாது வல்லெழுத்து மிக்கு வருவன ஈண்டுக்கொள்க. தினைப்பூ, தினைப்புரவு என வரும். (12) 156. அஃறிணை விரவுப்பெய ரியல்புமா ருளவே. இது, விரவுப்பெயர் முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) அஃறிணை விரவுப்பெயர் இயல்பும் உள - உயர் திணையோடு அஃறிணை விரவும் விரவுப்பெயர் இயல்பாய் முடிவனவும் உள; இயல்பின்றி முடிவனவும் உள. இயல்பின்றி முடிவன இன்னவாறு முடியுமென, மேல் அகத்தோத்தினுட் கூறப்படும். உ-ம்: சாத்தன்குறியன், சாத்தன்குறிது எனவும்; சாத்தன் கை எனவும்; இவ்வாறு அல்வழியினும் வேற்றுமையினும் நான்கு கணத்தோடும் ஒட்டிக்கொள்க. (13) 157. புள்ளி யிறுதியு முயிரிறு கிளவியும் வல்லெழுத்து மிகுதி சொல்லிய முறையாற் றம்மி னாகிய தொழிற்சொன் முன்வரின் மெய்ம்மை யாகலு முறழத் தோன்றலும் அம்முறை யிரண்டு முரியவை யுளவே வேற்றுமை மருங்கிற் போற்றல் வேண்டும். இது, மூன்றாம் வேற்றுமைத் திரிபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) புள்ளி இறுதியும் உயிர் இறு கிளவியும் - புள்ளி யீற்றுச் சொல்லும் உயிரீற்றுச் சொல்லும், வல்லெழுத்து மிகுதி சொல்லிய முறையான் - வல்லெழுத்தினது மிகுதி மேற்சொல்லும் முறைமையான், தம்மின் ஆகிய தொழிற்சொல் முன்வரின் - அம் மூன்றாவதன் பொருளாகிய வினைமுதற் பொருள்கள் தம்மான் உளவாகிய வினைச் சொற்கள் தாம் அவற்றுமுன்வரின், மெய்ம்மையாகலும் உறழத் தோன்றலும் அ முறை இரண்டும் உரியவை உள - இயல்பாகலும் உறழத் தோன்றுதலுமாகிய அம் முறைமையினையுடைய இரண்டு செய்கையும் உரியன உள, வேற்றுமை மருங்கின் போற்றல் வேண்டும் - அவற்றை மேலே வேற்றுமைப் பொருட்புணர்ச்சி முடிபு சொல்லுமிடத்துப் போற்றியறிதல் வேண்டும் . உ-ம்: நாய்கோட்பட்டான், புலிகோட்பட்டான், சாரப் பட்டான், தீண்டப்பட்டான், பாயப்பட்டான் என இவை இயல்பு. சூர்கோட்பட்டான், சூர்க்கோட்பட்டான், வளிகோட் பட்டான், வளிக்கோட்பட்டான் என இவை உறழ்ச்சி. ‘புள்ளியீறு உயிரீறு’ என்றதனான், பேஎய்கோட்பட்டான் பேஎய்க் கோட்பட்டான் என்னும் உறழ்ச்சியுள் எகரப்பேறு கொள்க. ‘உரியவை யுள’ என்றதனான், பாம்புகோட்பட்டான், பாப்புக்கோட்பட்டான் என்னும் உறழ்ச்சியுள் நிலைமொழி யொற்றுத் திரியாமையும் திரிதலும் கொள்க. (14) 158. மெல்லெழுத்து மிகுவழி வலிப்பொடு தோன்றலும் வல்லெழுத்து மிகுவழி மெலிப்பொடு தோன்றலும் இயற்கை மருங்கின் மிகற்கை தோன்றலும் உயிர்மிக வருவழி யுயிர்கெட வருதலுஞ் சாரியை யுளவழிச் சாரியை கெடுதலுஞ் சாரியை யுளவழித் தன்னுருபு நிலையலுஞ் சாரியை யியற்கை யுறழத் தோன்றலும் உயர்திணை மருங்கி னொழியாது வருதலும் அஃறிணை விரவுப்பெயர்க் கவ்விய னிலையலும் மெய்பிறி தாகிடத் தியற்கை யாகலும் அன்ன பிறவுந் தன்னியல் மருங்கின் மெய்பெறக் கிளந்து பொருள்வரைந் திசைக்கும் ஐகார வேற்றுமைத் திரிபென மொழிப. இஃது, இரண்டாம் வேற்றுமைத்திரிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) மெல்லெழுத்து மிகுவழி வலிப்பொடு தோன்றலும் - மெல்லெழுத்து மிகுமிடத்து வல்லெழுத்தாதலொடு தோன்று தலும், வல்லெழுத்து மிகுவழி மெலிப்பொடு தோன்றலும் - வல்லெழுத்து மிகுமிடத்து மெல்லெழுத்தாதலொடு தோன்று தலும், இயற்கை மருங்கின் மிகற்கை தோன்றலும் - இயற்கை யிடத்து மிகுதி தோன்றுதலும், உயிர் மிக வருவழி உயிர் கெட வருதலும் - உயிர் மிக வருமிடத்து அவ்வுயிர் கெட வருதலும், சாரியை உளவழி சாரியை கெடுதலும் - சாரியையுள்ள இடத்துச் சாரியை கெடுதலும், சாரியை உளவழி தன் உருபு நிலையலும் - சாரியை உள்ளவிடத்துச் சாரியையொடு தன்னுருபு நிற்றலும், சாரியை இயற்கை உறழத் தோன்றலும் - சாரியை பெறுக என்றவழிச் சாரியை பெறாது இயல்பாகிய மொழிகள் வருமொழியினும் நிலைமொழியினும் மிக்கும் திரிந்தும் வரும் வருமொழி வல்லெழுத்துக்கள் உறழ்ச்சியாகத் தோன்றுதலும், உயர்திணை மருங்கின் ஒழியாது வருதலும் - உயர்திணைப் பெயரிடத்துத் தன்னுருபு தொகாதே விரிந்து வருதலும், அஃறிணை விரவுப்பெயர்க்கு அ இயல் நிலையலும் - உயர்திணையோடு அஃறிணை விரவுப்பெயர்க்கும் அவ் வுருபு அவ் வியல்பிலே நிற்றலும், மெய்பிறிது ஆகு இடத்து இயற்கை ஆகலும் - மெய் பிறிதாய் முடியுமிடத்து இயல்பாய் முடிதலும், அன்ன பிறவும் - அத்தன்மையன பிற முடிபுகளும், தன் இயல் மருங்கின் மெய்பெற கிளந்து பொருள் வரைந்து இசைக்கும் - தனக்கு இயல்பாகிய கூற்றான் அகத்தோத்தினுட் பொருள் பெற எடுத்தோதப்பட்ட வேற்றுமைப் பொருட் புணர்ச்சியது பொது முடிவினைத் தான் வரைந்து வேறு முடிபிற்றாய் நின்று ஒலிக்கும், ஐகார வேற்றுமைத் திரிபு என மொழிப - ஐகார வேற்றுமை யினது வேறுபாட்டுப் புணர்ச்சி என்று சொல்லுவர் புலவர். உ-ம்: விளக்குறைத்தான் என்பது மெல்லெழுத்து மிகுவழி வல்லெழுத்துமிக்கது. மரங்குறைத்தான் என்பது வல்லெழுத்து மிகுவழி மெல்லெழுத்து மிக்கது. தாய்க் கொலை என்பது இயல்பாமிடத்து மிக்கது. பலாக் குறைத்தான் என்பது உயிர்மிக வருவழி உயிர் கெட்டது. வண்டு கொணர்ந்தான் என்பது சாரியை உளவழிச் சாரியை கெட்டது. வண்டினைக் கொணர்ந்தான் என்பது சாரியை உளவழித் (421) தன்னுருபு நிலையிற்று. புளி குறைத்தான், புளிக்குறைத்தான், பூல்குறைத்தான், பூற்குறைத்தான் என இவை சாரியை யியற்கை உறழத் தோன்றின. நம்பியைக் கொணர்ந்தான் என்பது உயர்திணை மருங்கின் ஒழியாது வந்தது. கொற்றனைக் கொணர்ந்தான் என்பது விரவுப்பெயர்க்கு அவ்வியல் நிலையது. மண்கொணர்ந்தான் என்பது மெய்பிறிதாகிடத்து இயற்கையாய் வந்தது. ‘அன்ன பிறவும்’ என்றதனாற் கொள்வன: கழிகுறைத்தான், தினைபிளந்தான் என்பன. பிறவும் அன்ன. ‘ஒழியாது’ என்றதனான் ஒரோவழி ஒழிந்தும் வரும். ‘அவற்கண்டு’ எனவும், ‘ஒன்னார்த் தெறலும்’ எனவும் இவை உயர்திணையுள் ஒழிந்து வந்தன. மகற்பெற்றான், மகட்பெற்றான் என இவை விரவுப் பெயருள் ஒழிந்து வந்தன. இவ் விலேசுதன்னானே, இவற்றின் முடிபு வேற்றுமையும் கொள்க. ‘மெய்பெற’ என்றதனான், உறழ்ச்சியாய் முடிவனவும் கொள்க. மைகொணர்ந்தான், மைக்கொணர்ந்தான் எனவும்; வில்கோள், விற்கோள் எனவும் வரும். இவ்வாறு திரிந்து முடியாது, அகத்தோத்தின் பொதுமுடிபே முடிபாய்க் கடுக்குறைத்தான், செப்புக் கொணர்ந்தான் என்றாற் போல்வன முடிவன அறிந்து கொள்க. இவ்வாறு வேறுபட முடிவது பெரும்பான்மையும் இரண்டாவது வினையொடு முடியும்வழிப் போலும். அது “தம்மினாகிய தொழிற் சொன் முன்வரின்” (தொகைமரபு 14) என நின்ற அதிகாரத்தாற் கொள்ள வைத்தார் போலும். ‘தன்னின முடித்தல்’ என்பதனான், ஏழாம் வேற்றுமை வினை யொடு முடியும்வழி இயல்பும் கொள்க. ‘வரைபாய் வருடை’ (மலைபடு. 503), ‘புலம்புக் கனனே புல்லணற் காளை’ என வரும். (15) 159. வேற்றுமை யல்வழி இ ஐ யென்னும் ஈற்றுப்பெயர்க் கிளவி மூவகை நிலைஇய அவைதாம் இயல்பா குநவும் வல்லெழுத்து மிகுநவும் உறழா குநவும் என்மனார் புலவர். இஃது, இகரவீற்றுப் பெயர்க்கும் ஐகாரவீற்றுப் பெயர்க்கும் அல்வழி முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) வேற்றுமை அல்வழி இ ஐ என்னும் ஈற்றுப் பெயர்க் கிளவி மூவகை நிலைய - வேற்றுமையல்லாத அல்வழியிடத்து இ ஐ என்னும் ஈற்றையுடைய பெயர்ச்சொற்கள் மூவகை முடிபு நிலைமையுடைய, அவைதாம் இயல்பாகுநவும் வல்லெழுத்து மிகுநவும் உறழாகுநவும் என்மனார் புலவர் - அவைதாம் இயல்பாய் முடிவனவும் வல் லெழுத்து மிகுவனவும் உறழ்ச்சியாய் முடிவனவும் இவையென்று சொல்லுவர் புலவர். உ-ம்: பருத்தி குறிது, கரை குறிது; சிறிது, தீது, பெரிது என இவை இயல்பு. அலிக்கொற்றன், புலைக்கொற்றன் என இவை மிகுதி. கிளிகுறிது, கிளிக்குறிது, தினைகுறிது, தினைக்குறிது என இவை உறழ்ச்சி. ‘பெயர்க்கிளவி மூவகை நிலைய’ எனவே, பெயர்க்கிளவி யல்லாத கிளவி மிகுதியும் இயல்பும் என இருவகைய எனக் கொள்க. ஒல்லைக் கொண்டான் என்பது ஐகாரவீற்று வினைச் சொல் மிகுதி. இகரவீற்று மிகுதி வந்தவழிக் கண்டுகொள்க. “தில்லைச் சொல்லே” (சொல். 253) “மன்னைச் சொல்லே” (சொல். 252) என்றது ஐகாரவீற் றிடைச்சொல் மிகுதி. இவற்றியல்பு வந்தவழிக் கண்டுகொள்க. கடிகா என்பது இகரவீற்று உரிச்சொல்லியல்பு. இவ் வீற்றுமிகுதி வந்த வழிக் கண்டுகொள்க. பணைத்தோள் என்பது ஐகாரவீற்று உரிச்சொல் மிகுதி. இவற்றியல்பு வந்தவழிக் கண்டு கொள்க. (16) 160. சுட்டுமுத லாகிய விகர விறுதியும் எகரமுதல் வினாவி னிகர விறுதியுஞ் சுட்டுச்சினை நீடிய வையெ னிறுதியும் யாவென் வினாவினையெ னிறுதியும் வல்லெழுத்து மிகுநவு முறழா குநவுஞ் சொல்லிய மருங்கி னுளவென மொழிப. இஃது, அவ் விகர ஐகார வீற்றுள் ஏழாம் வேற்றுமை இடப் பொருள் உணரநின்ற இடைச்சொல் முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) சுட்டு முதலாகிய இகர இறுதியும் - சுட்டெழுத் தினை முதலாகவுடைய இகரவீற்று இடைச்சொல்லும், எகர முதல் வினாவின் இகர இறுதியும் - எகரமாகிய மொழிமுதல் வினாவினுடைய இகரவீற்று இடைச்சொல்லும், சுட்டுச்சினை நீடிய ஐஎன் இறுதியும் - சுட்டாகிய உறுப்பெழுத்து நீண்ட ஐகார வீற்று இடைச்சொல்லும், யா என் வினாவின் ஐ என் இறுதியும் - யா என்னும் வினாவினை முதற்கண்ணுடைய ஐகார வீற்று இடைச்சொல்லும், வல்லெழுத்து மிகுநவும் உறழாகுநவும் சொல்லிய மருங்கின் உள என மொழிப - வல்லெழுத்து மிக்கு முடிவனவும் உறழ்ச்சியாய் முடிவனவும் மேற்சொல்லப்பட்ட இடத்தின் கண்ணே உளவென்று சொல்லுவர் புலவர். உ-ம்: அதோளிக்கொண்டான், இதோளிக்கொண்டான், உதோளிக் கொண்டான், எதோளிக்கொண்டான்; சென்றான், தந்தான், போயினான் எனவும்; ஆண்டைக்கொண்டான், ஈண்டைக் கொண்டான், ஊண்டைக் கொண்டான், யாண்டைக் கொண்டான் எனவும் இவை மிக்கு முடிந்தன. அவ்வழிகொண்டான், அவ்வழிக்கொண்டான்; இவ்வழி கொண்டான், இவ்வழிக் கொண்டான்; உவ்வழி கொண்டான், உவ்வழிக் கொண்டான்; எவ்வழிகொண்டான், எவ்வழிக் கொண்டான் எனவும், ஆங்கவைகொண்டான், ஆங்கவைக் கொண்டான்; ஈங்கிவை கொண்டான், ஈங்கிவைக்கொண்டான் எனவும்; ஊங்குவைகொண்டான், ஊங்குவைக் கொண்டான் யாங்கவை கொண்டான், யாங்கவைக் கொண்டான் எனவும் இவை உறழ்ந்து முடிந்தன. இவற்றுள் ஐகாரவீற்றுள் உறழ்ந்து முடிந்தன திரிபுடையன. திரிபில்லன பெற்றவழிக் கண்டு கொள்க. ‘சொல்லிய மருங்கு’ என்றதனான், பிற ஐகாரவீறு மிக்கு முடிவன கொள்க. பண்டைச் சான்றார், ஒருதிங்களைக் குழவி என வரும். (17) 161. நெடியதன் முன்ன ரொற்றுமெய் கெடுதலுங் குறியதன் முன்னர்த் தன்னுரு பிரட்டலும் அறியத் தோன்றிய நெறியிய லென்ப. இது, புள்ளிமயங்கியலை நோக்கியதோர் நிலைமொழிக் கருவி கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) நெடியதன் முன்னர் ஒற்று மெய் கெடுதலும் - நெட் டெழுத்தின்முன் நின்ற ஒற்றுத் தன் வடிவு கெடுதலும், குறியதன் முன்னர் தன் உருவு இரட்டலும் - குற்றெழுத்தின் முன்னர் நின்ற ஒற்றுத் தன் வடிவு இரட்டுதலும், அறியத் தோன்றிய நெறி இயல் என்ப - இவை அறியும்படி தோன்றிய முறைமையான இயல் புடையனவென்று சொல்லுவர். உ-ம்: கோறீது, கோனன்று என இவை நெடியதன் முன்னர் ஒற்றுக் கெட்டன. மண்ணகல், பொன்னகல் என இவை குறியதன் முன்னர்த் தன்னுருபு இரட்டின. மேலைச்சூத்திரத்து ஆறனுருபு முற்கூறியவதனான், ஒற்று இரட்டுதல் உயிர்முதன்மொழிக் கண்ணதென்று கொள்க. குறியது பின்கூறிய முறையன்றிக் கூற்றினான் நெடியன குறுகிநின்ற வழியும் குறியதன் முன்னர் ஒற்றாய் இரட்டுதலும், குறியது திரிந்து நெடியதாயவழி அதன் முன்னர் ஒற்றாய்க் கெடுதலும் கொள்க. தம்மை, நம்மை என இவை நெடியன குறுகிநின்று ஒற்று இரட்டின. மற்றையது வந்தவழிக் கண்டு கொள்க. ‘அறிய’ என்றதனான், நெடியதன் முன்னர் ஒற்றுக்கெடுவது தகார நகாரங்கள் வந்து திரிந்தவழி யென்பதூஉம், ஆண்டு எல்லாம் கெடாதென்பதூஉம் கொள்க. தேன்றீது என்பது ஆண்டுக் கெடாதது. ‘நெறியியல்’ என்றதனாற் குறியதன் முன்னர் நின்ற ஒற்றின்றிப் புணர்ச்சியாற் பெற்றதும் இரட்டுமென வுணர்க. அவ்வடை எனவரும். (18) 162. ஆற னுருபினு நான்க னுருபினுங் கூறிய குற்றொற் றிரட்ட லில்லை ஈறாகு புள்ளி யகரமொடு நிலையும் நெடுமுதல் குறுகு மொழிமுன் னான. இஃது, உருபியலை நோக்கியதோர் நிலைமொழிக் கருவி கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) ஆறன் உருபினும் நான்கன் உருபினும் ஈறு ஆகு புள்ளி அகரமொடு நிலையும் - ஆறனுருபின்கண்ணும் நான்க னுருபின்கண்ணும் ஈறாகு புள்ளிகள் அகரத்தொடு நிலைபெறும், நெடுமுதல் குறுகும் மொழி முன் கூறிய குற்றொற்று இரட்டல் இல்லை - நெடிதாகிய முதலெழுத்துக் குறுகி முடியும் மொழிக் கண் மேற்கூறிய குற்றொற்று இரட்டல் (ஆறனுருபின்கண்ணும் நான்கனுருபின்கண்ணும்) இல்லை. உ-ம்: தமது, தமக்கு; நமது, நமக்கு எனவரும். ‘கூறிய’ என்றதனானே நெடுமுதல் குறுகாத மொழியும் குறுகு மொழியும் இவ் விரு விதியும் கொள்க. எல்லார் தமதும், எல்லார் தமக்கும் என வரும். (நெடுமுதல் குறுகாதமொழிகள் தம், நம், நும் என்னுஞ் சாரியை யிடைச்சொற்கள். ஆன் என்பது இடைச் சொல். அ என்பது - அசை.) (19) 163. நும்மெ னிறுதியு மந்நிலை திரியாது. இதுவும் அது. (இ-ள்.) நும் என் இறுதியும் அ நிலை திரியாது - நும் என்னும் மகரவிறுதி மேற்கூறிய ஈறாகு புள்ளி அகரமொடு நிலையலும் குற்றொற்றிரட்டாமையுமாகிய அந்நிலைமையில் திரியாது எ-று. உ-ம்: நுமக்கு, நுமது என வரும். (20) 164. உகரமொடு புணரும் புள்ளி யிறுதி யகரமு முயிரும் வருவழி யியற்கை. இது, புள்ளிமயங்கியலை நோக்கியதொரு நிலைமொழிச் செய்கை கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) உகரமொடு புணரும் புள்ளி இறுதி - உகரப் பேற்றொடு புணரும் புள்ளியிறுதிகள், யகரமும் உயிரும் வருவழி இயற்கை - யகரமும் உயிரும் வருமொழியாய் வருமிடத்து அவ் வுகரம் பெறாது இயல்பாய் முடியும் எ-று. உ-ம்: உரிஞ் யானா, உரிஞ் அனந்தா; பொருந் யானா, பொருந் அனந்தா; உரிஞ் ஆதா, பொருந் ஆதா என ஒட்டுக. (21) 165. உயிரும் புள்ளியு மிறுதி யாகி அளவு நிறையு மெண்ணுஞ் சுட்டி உளவெனப் பட்ட வெல்லாச் சொல்லுந் தத்தங் கிளவி தம்மகப் பட்ட முத்தை வரூஉங் காலந் தோன்றின் ஒத்த தென்ப வேயென் சாரியை. இஃது, அளவுப்பெயரும் நிறைப்பெயரும் எண்ணுப் பெயரும் தம்மிற் புணருமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உயிரும் புள்ளியும் இறுதியாகி அளவும் நிறையும் எண்ணும் சுட்டி உள எனப்பட்ட எல்லாச் சொல்லும் - உயிரும் புள்ளியும் ஈறாய் அளவையும் நிறையையும் எண்ணையும் கருதி உளவென்று சொல்லப்பட்ட எல்லாச் சொற்களும், தம் தம் கிளவி தம் அகப்பட்ட முத்தைவரும் காலம் தோன்றின் ஏ என் சாரியை ஒத்தது என்ப - தமக்கு இனமாகிய சொற்களாய்த் தமக்கு அகப்படும் மொழியாயுள்ளன தம் முன்னே வரும் காலம் தோன்றுமாயின் ஏ என்னுஞ் சாரியை பெற்று முடிதலைப் பொருந்திற்று என்ப. உ-ம்: உழக்கேயாழாக்கு, கலனேபதக்கு என இவை அளவுப் பெயர்; தொடியேகஃசு, கொள்ளேஐயவி என இவை நிறைப் பெயர்; காணியேமுந்திரிகை, காலேகாணி என இவை எண்ணுப் பெயர். ‘உயிரீறு புள்ளியீறு’ என்றதனானே, ஏ என் சாரியை பெறாதனவும் உளவென்று கொள்க. குறுணி நானாழி என வரும். (22) 166. அரையென வரூஉம் பால்வரை கிளவிக்குப் புரைவ தன்றாற் சாரியை யியற்கை. இஃது, எய்தியது விலக்குதல் நுதலிற்று. (இ-ள்.) அரை என வரும் பால்வரை கிளவிக்குப் புரைவது அன்று சாரியை இயற்கை - அரை என்று சொல்ல வருகின்ற பொருட்கூற்றை யுணர நின்ற சொல்லிற்குப் பொருந்துவதன்று மேற்கூறிய ஏ என் சாரியை பெறும் இயல்பு எ-று. உ-ம்: உழக்கரை, தொடியரை, ஒன்றரை என வரும். இஃது ‘ஒட்டுதற் கொழுகிய வழக்கு’ (புணர். 30) அன்று என்பதனான் விலக்குண்ணாதோவெனில், ‘தம்மகப்பட்ட’ என்று வருமொழியையும் வரைந்தோதினமையின் இதற்கு அவ் விதி செல்லா தென்பது. (ஆல் என்பது அசை) (23) 167. குறையென் கிளவி முன்வரு காலை நிறையத் தோன்றும் வேற்றுமை யியற்கை. இஃது, எய்தியது விலக்கிப் பிறிதுவிதி உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) குறை என் கிளவி முன் வரு காலை - குறை என்னும் சொல் அளவு முதலியவற்றின்முன் வருங்காலத்து, நிறையத் தோன்றும் வேற்றுமை இயற்கை - நிறையத் தோன்றும் மேல் (236) வேற்றுமைப் பொருட்புணர்ச்சி முடிபிற்குச் சொல்லும் இயல்பு. உ-ம்: உரிக்குறை, கலக்குறை; தொடிக்குறை, கொட்குறை; காணிக்குறை, காற்குறை என வரும். ‘முன்’ என்றதனான், பொருட்பெயரொடு புணரும்வழியும் வேற்றுமை முடிபு எய்துகவென்பது. கலப்பயறு என வரும். ‘நிறைய’ என்பதனான், கூறு என்பதன்கண்ணும் வேற்றுமை முடிபு எய்துமென்பது. நாழிக்கூறு என வரும். (24) 168. குற்றிய லுகரக் கின்னே சாரியை. இது, வேற்றுமை முடிபு விலக்கி இன் வகுத்தமையின் எய்தியது விலக்கிப் பிறிது விதி கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) குற்றியலுகரத்திற்கு - குற்றுகரவீற்று அளவுப் பெயர் முதலிய வற்றிற்கு, சாரியை இன் - குறையொடு புணரும்வழி வரும் சாரியை இன். உ-ம்: உழக்கின்குறை, கழஞ்சின்குறை, ஒன்றின்குறை என வரும். (`குற்றியலுகரத்திற்கு’ என்பது `குற்றியலுகரக்கு’ என விகாரப்பட்டு நின்றது. அஃது ஆகுபெயர், அவ்வீற்று அளவுப் பெயர் முதலியவற்றிற்கு ஆயினமையின். ஏகாரம் - அசை.) (25) 169. அத்திடை வரூஉங் கலமென் னளவே. இதுவும் அது. (இ-ள்.) கலம் என் அளவு இடை அத்து வரும் - கலம் என்னும் அளவுப் பெயர் (குறையொடு புணரும்வழி) இடையில் அத்து வரும். உ-ம்: கலத்துக்குறை என வரும். இது, ‘கலன்’ என்னும் னகரவீறேல், நிலைமொழி ஒற்றுக்கேடும், வருமொழி ஒற்றுப்பேறும் ‘அத்தே வற்றே’ (புணரியல் - 31) என்பதனாற் கொள்ளப்படும். ‘கலனென் அளவு’ என ஓதாதது செய்யுளின்பம் நோக்கிப் போலும். சாரியை முற்கூறிய வதனான், இன்சாரியை பெற்றவழி முன் மாட்டேற்றான் (167) எய்திய வல்லெழுத்து வீழ்க்க. (26) 170. பனையெ னளவுங் காவெ னிறையும் நினையுங் காலை யின்னொடு சிவணும். இதுவும் அது. (இ-ள்.) பனை என் அளவும் கா என் நிறையும் - பனை என்னும் அளவுப் பெயரும் கா என்னும் நிறைப் பெயரும், நினையும் காலை இன்னொடு சிவணும் - (குறை என்பதனொடு புணருமிடத்து) ஆராயுங் காலத்து இன்சாரியையொடு பொருந்தும். உ-ம்: பனையின் குறை, காவின்குறை என வரும். ‘நினையுங் காலை’ என்றதனான், வல்லெழுத்துப் பேறும் சிறு பான்மை கொள்க. (எழுத். 167) பனைக்குறை, காக்குறை என வரும். (27) 171. அளவிற்கு நிறையிற்கு மொழிமுத லாகி உளவெனப் பட்ட வொன்பதிற் றெழுத்தே அவைதாம் கசதப வென்றா நமவ வென்றா அகர உகரமோ டவையென மொழிப. இஃது, அளவுப்பெயர்க்கும் நிறைப்பெயர்க்கும் முதலாம் எழுத்துக்கு வரையறை கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) அளவிற்கும் நிறையிற்கும் மொழிமுதலாகி உள எனப்பட்ட ஒன்பதிற்று எழுத்து - அளவுப்பெயர்க்கும் நிறைப் பெயர்க்கும் மொழி முதலாய் உளவென்று சொல்லப்பட்டன ஒன்பதெழுத்து, அவைதாம்- அவை (யாவையோவெனின்), க ச த ப என்றா ந ம வ என்றா அகரமொடு உகரமொடு அவை என மொழிப - க ச த ப க்களும் ந ம வ க்களும் அகரமும் உகரமுமாகிய அவை என்று சொல்லுவர். உ-ம்: கலம், சாடி, தூதை, பானை, நாழி, மண்டை, வட்டி, அகல், உழக்கு எனவும்; கழஞ்சு, சீரகம், தொடி, பலம், நிறை, மா, வரை, அந்தை எனவும் வரும். ‘உளவெனப் பட்ட’ என்றதனான், உளவெனப் படாதனவும் அளவை உளவென்பது. இம்மி, ஓரடை, ஓராடை என வரும். மற்று இவ் வரையறை கூறிப் பயந்தது என்னை யெனின், மேல் அகத்தோத்தினுள் (390) அவற்றிற்கு முடிபு கூறும் வழி, அதிகாரத்தான் வன்கணத்தின்மேற் செல்லாது, ஒழிந்த கணத்தினும் சேறற்கு என்பது. (`அகரமொடு’ என்பது ஒடு கெட்டு நின்றது. `என்றா’ என்பன இரண்டும், `ஒடு’ என்பன இரண்டும் - எண்ணிடைச்சொல். ஏகாரம் - ஈற்றசை.) (28) 172. ஈறியன் மருங்கி னிவையிவற் றியல்பெனக் கூறிய கிளவிப் பல்லா றெல்லாம் மெய்த்தலைப் பட்ட வழக்கொடு சிவணி ஒத்தவை யுரிய புணர்மொழி நிலையே. இஃது, இவ் வோத்து, புறனடை. (இ-ள்.) ஈறுஇயல் மருங்கின் - உயிரும் புள்ளியும் இறுதி யானவை வருமொழியொடு கூடி நடக்குமிடத்து, இவை இவற்று இயல்பு என கூறிய கிளவி பல் ஆறு எல்லாம் - இம் மொழிகளின் முடிபு இவையெனக் கூறி முடிக்கப்பட்ட சொற்களின் (அவ்வாற்றான் முடியாது நின்ற) பலவகை முடிபுகளெல்லாம், மெய் தலைப்பட்ட வழக்கொடு சிவணி ஒத்தவை உரிய புணர் மொழிநிலை - உண்மையைத் தலைப்பட்ட வழக்கொடு கூடிப் பொருந்தினவை உரியவாம் புணரும் மொழிகள் நிலைமைக்கண். உ-ம்: விள ஞான்றது என்புழி நிலைமொழிப் பெயரது இயல்பும், ‘ஞான்ற ஞாயிறு’ என நிலை மொழி வினையாய வழி இருமொழி இயல்புமாகிய ‘ஞ ந ம ய வ’ (தொகை மரபு 2) என்பதன் ஒழிபும், மண் கடிது என்புழி வருமொழி வன்கணத்து இயல்பாகிய ‘மொழிமுதலாகும்’ (தொகை மரபு 5) என்பதன் ஒழிபும், நடஞெள்ளா என்னும் இயல்புகணத்து இருமொழி இயல்பும், நில்கொற்றா, நிற்கொற்றா என நிலைமொழி திரிந்த உறழ்ச்சியும், துக்கொற்றா, துஞ்ஞெள்ளா என்னும் மிகுதியும், உரிஞுஞெள்ளா என்னும் இயல்புகணத்து உகரப் பேறும், உரிஞ்யானா, உரிஞ் அனந்தா என்னும் இருமொழி இயல்பும், மண்ணுகொற்றா, மண்ணுக் கொற்றா, ஞெள்ளா எனவரும் ‘ஒளவென வரூஉம்’ (தொகை. 10) என்பதனுள் விலக்கப்படாத ணகர னகர லகர ளகர மாகிய புள்ளியிறுதிகளின் நிலைமொழி உகரப் பேறுமாகிய “உயிரீ றாகிய முன்னிலைக் கிளவி” (தொகை. 9) என்பதன் ஒழிபும், விரவுப்பெயர்த் திரிபின் மேல் எடுத்து ஓதப்படாதனவாய நின்ஞாண் என்றாற்போல வரும். ‘அஃறிணை விரவுப்பெயர்’ (தொகை. 13) என்பதன் ஒழிபும், காவிக்கண், குவளைக்கண் என்றாற்போல அல்வழி முடிபாகிய ‘வேற்றுமை யல்வழி’ (தொகை. 16) என்பதன் ஒழிபும், குறுணி பதக்கு நானாழி, சீரகரை, ஒருமாவரை என்னும் “உயிரும் புள்ளியு மிறுதி யாகி” (தொகை. 22) என்பதன் ஒழிபும், பிறவற்றின் ஒழிபுமெல்லாம் ஈண்டே கொள்க. (29) 173. பலரறி சொன்முன் யாவ ரென்னும் பெயரிடை வகரங் கெடுதலு மேனை ஒன்றறி சொன்முன் யாதென் வினாவிடை ஒன்றிய வகரம் வருதலு மிரண்டும் மருவின் பாத்தியிற் றிரியுமன் பயின்றே. இது, மரூஉ முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) பலர் அறிசொல்முன் யாவர் என்னும் பெயரிடை வகரம் கெடுதலும் - பலரை அறியும் சொல்முன்னர் வருகின்ற யாவர் என்னும் பெயரிடையில் வகரம் கெடுதலும், ஏனை ஒன்று அறி சொல்முன் யாது என் வினா இடை ஒன்றிய வகரம் வருதலும் - ஒழிந்த ஒன்றனை அறியும் சொல்முன்னர் வரும் யாது என்னும் வினாமொழியிடை உயிரொடு பொருந்திய வகரம் வருதலும், இரண்டும் மருவின் பாத்தியின் பயின்று திரியும் - இரண்டும் மரூஉக்களது முடிபினிடத்துப் பயின்று வழங்கும். உ-ம்: அவர் யார் எனவும், அது யாவது எனவும் வரும். ‘ஒன்றிய’ என்றதனான், வகர உயிர்மெய் என்று கொள்க. இன்னும் அதனானே, யாரென்பதும் யாவதென்பதும் நிலை மொழியாய்ப் பிற வருமொழியொடு புணரும்வழியும் இம் முடிபு கொள்க. ‘யார்யார்க் கண்டே யுவப்பர்’ எனவும், “யாவது நன்றென வுணரார் மாட்டும்” (குறுந். 78) எனவும் வரும். ‘பயின்று’ என்றதனால், பலரறி சொல்லும் ஒன்றறி சொல்லும் வருமொழியாய வழியும் இம் முடிபு கொள்ளப்படும். யாரவர், யாவதது என வரும். (30) ஐந்தாவது - தொகைமரபு முற்றிற்று. உருபியல் வேற்றுமையுருபுகள் பெயர்களோடு பொருந்தும் முறைமை யினை யுணர்த்துவது உருபியலாகும். இதன்கண் முப்பது சூத்திரங்கள் உள்ளன. பெயரும் அதனால் ஏற்கப்படும் வேற்றுமையுருபும் ஆகிய அவ்விரண்டிற்கும் இடையே வரும் சாரியைகள் இவையென்பதும், வேற்றுமையுருபினை யேற்குங்கால் பெயர்கள் பெறும் இயல்பும் திரிபுமாவன இவை யென்பதும் இவ்வியலில் வகுத்து விளக்கப் பெற்றுள்ளன. உயிர்களுள் அ ஆ உ ஊ ஏ ஒள என்னும் ஆறினையும் ஈறாகவுடைய பெயர்களும், மெய்களுள் ஞகர நகரவீற்றுப் பெயர்களும், தெவ் என்னும் வகரவீற்றுப் பெயரும், மகரவீற்றுப் பெயர்கள் சிலவும், குற்றியலுகர வீற்றுப் பெயர்களும் உருபேற் குங்கால் இடையே இன்சாரியை பெறுவன. பன்மைப் பொருளைக் கருதின அகர வீற்றுப் பெயர்களும், யா என்னும் ஆகாரவீற்று வினாப்பெயரும், அவை, இவை, உவை, யாவை, அவ், இவ், உவ் என்பனவும் வற்றுச்சாரியை பெற்று உருபேற்பன. யாவை என்னும் வினாப்பெயர் வற்றுச் சாரியை பெறுங்கால் அப்பெயரின் ஈற்றில் நின்ற ஐகாரமும் அதனாலூரப்பட்ட வகரமெய்யும் கெட்டு முடியும். எல்லாம் என்னும் பொதுப்பெயர் அஃறிணைக்கண்வரின் வற்றுச் சாரியையும், உயர் திணைக்கண்வரின் நம் சாரியையும் பெறுவதுடன் வேற்றுமை யுருபின் இறுதியில் உம் சாரியையும் பெற்றுமுடியும். அது, இது, உது எனவரும் உகரவீற்றுச் சுட்டுப்பெயரும், ஏழ் என்னும் ழகரவீற்று எண்ணுப்பெயரும், குற்றியலுகரவீற்றுள் வரும் எல்லா எண்ணுப்பெயர்களும், யாது என்னும் வினாப் பெயரும், அஃது, இஃது, உஃது எனவரும் சுட்டுப் பெயர்களும் அன்சாரியை பெற்று உருபேற்பனவாம். அன்சாரியை பெறுங்கால் அது, இது, உது என்பன இறுதியுகரங் கெட்டு முடிவன; அஃது, இஃது, உஃது என்பன ஆய்தங்கெட்டு முடிவன. பஃதென்பதனை யிறுதியாகவுடைய ஒருபதுமுதல் எண்பது வரையுள்ள எண்ணுப்பெயர்கள் எட்டும், அன்சாரியையேயன்றி ஆன்சாரியை பெறுதலும் உண்டு. ஆன்சாரியை பெறுங்கால் நிலைமொழியிலுள்ள பஃதென்பதன் கண் பகரமெய்மட்டும் நிற்க அஃதென்பது கெடும். ஓகார வீற்றுப்பெயர் உருபேற்குங்கால் ஒன்சாரியை பெறும். அகர ஆகார வீற்று மரப்பெயர்கள் ஏழாமுருபு பெறும்வழி அத்துச் சாரியைபெறும். மகரவீற்றுப் பெயர்கள் உருபேற்குங்கால் அத்துச்சாரியை பெறுவன. அழன், புழன் என்பன அத்தும் இன்னும் பெற்று உறழ்வன. நீ என்னும் பெயர் நின் எனத்திரிந்து உருபேற்கும். மகர வீற்றுள் நும் என்பதும் தாம், நாம், யாம் என்பனவும் அத்தும் இன்னும் பெறாது இயல்பாய் முடிவன. யாம் என்னும் பெயரில் யகரத்தின்மேலேறிய ஆகாரம் எகரமாகத் திரிய அங்கு நின்ற யகரம் கெடும். தாம், நாம் என்பன முதல்குறுகி முறையே தம் நம் என நிற்கும். ‘எல்லாரும்’ என்னும் படர்க்கைச் சொல்லிடத்தும் ‘எல்லீரும்’ என்னும் முன்னிலைச் சொல்லிடத்தும் இறுதியில் நின்ற உம் என்பது கெட, அவ்விருபெயரும் முறையே தம் சாரியையும் நம் சாரியையும் பெற்று உருபேற்கும். அவைபெறும் உருபின் பின்னர் உம் சாரியை வந்து பொருந்தும் னகர வீற்றுள் தான் என்பது முதல்குறுகித் தன் என்றும் யான் என்பது முதற்கண் நின்ற யகரங்கெட்டு அதனையூர்ந்து நின்ற ஆகாரம் எகரமாகி என் என்றும் திரிந்து உருபேற்கும். நெடிற்றொடர்க் குற்றியலுகரங்களுள் (டற) ஒற்றி ரட்டிக்குஞ் சொற்கள் உருபேற்குங்கால் இன்சாரியைபெறாது இயல்பாவன. குற்றுகரவீற்றுத் திசைப்பெயர்கள் கண்ணுருபினை ஏற்குங் கால் இன்சாரியை பெறாது இயல்பாதலுமுண்டு. இவ்வாறு இயல்பாயவழி இறுதியிலுள்ள குற்றியலுகரம் தான் ஊர்ந்து நின்ற மெய்யோடு சேரக்கெடும். இங்கு எடுத்துரைக்கப்பட்ட பெயர்களல்லாத ஏனைய பெயர்கள் சாரியை பெற்றே உருபேற்றல் வேண்டுமென்னும் வரையறையில்லாதன வாம். அவை சாரியை பெற்றும் பெறாதும் முடிவனவாம். - க. வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 176-178 ஆறாவது உருபியல் இவ் வோத்து என்ன பெயர்த்தோ வெனின், உருபுகளொடு பெயர் புணரும் இயல்பு உணர்த்தினமையின், உருபியல் என்னும் பெயர்த்து. மேல் தொகுத்துப் புணர்த்த செய்கை ஈண்டு நின்றும் விரித்துப் புணர்க் கின்றாராகலின், தொகைமரபினோடு இயைபு உடைத்தாயிற்று. 174. அஆ உஊ ஏ ஒள வென்னும் அப்பா லாற னிலைமொழி முன்னர் வேற்றுமை யுருபிற் கின்னே சாரியை. இத் தலைச் சூத்திரம் என் நுதலிற்றோவெனின், அகர ஆகார உகர ஊகார ஏகார ஒளகார ஈறுகள் உருபினொடு புணருமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அ ஆ உ ஊ ஏ ஒள என்னும் அப்பால் ஆறன் நிலைமொழி முன்னர் - அ ஆ உ ஊ ஏ ஒள என்று சொல்லப் படுகின்ற அக் கூற்று ஆறனையும் ஈறாகவுடைய நிலைமொழி களின் முன்னர், வேற்றுமை உருபிற்கு சாரியை இன் - வேற்றுமை யுருபுகள் வருமொழியாய் வந்த நிலைமைக்கு இடைவரும் சாரியை இன் சாரியை. உ-ம்: விளவினை, விளவினொடு, விளவிற்கு, விளவின், விளவினது, விளவின்கண் எனவும்; பலாவினை, பலாவி னொடு எனவும்; கடுவினை, கடுவினொடு எனவும்; கழூஉவினை, கழூஉவினொடு எனவும்; சேவினை, சேவினொடு எனவும்; வெளவினை வெளவினொடு எனவும் கருவி அறிந்து ஒட்டுக. (1) 175. பல்லவை நுதலிய வகர விறுபெயர் வற்றொடு சிவண லெச்ச மின்றே. இது, மேற்கூறிய ஈற்றுள் அகரஈற்றுள் சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) பல்லவை நுதலிய பெயர் இறு அகரம் - பன்மைப் பொருளைக் கருதின பெயர்களின் இறுதி அகரம், வற்றொடு சிவணல் எச்சம் இன்று - வற்றுச்சாரியையொடு பொருந்துதலை ஒழிதல் இல்லை. உ-ம்: பல்லவற்றை, பல்லவற்றொடு; உள்ளவற்றை, உள்ளவற் றொடு; இல்லவற்றை, இல்லவற்றொடு; சில்லவற்றை, சில்லவற்றொடு என ஒட்டுக. ‘எச்ச மின்று’ என்றதனான் ஈண்டு மூன்றாம் உருபின்கண் சாரியை பெற்றே முடியுமென்று கொள்க. இன்னும் இதனானே மேல் இன்பெற்றன பிறசாரியையும் பெறுமெனக் கொள்க. மகத்தை, நிலத்தை என வரும். (2) 176. யாவென் வினாவு மாயிய றிரியாது. இஃது, ஆகார வீற்றுள் ஒருமொழிக்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் நுதலிற்று. (இ-ள்.) யா என் வினாவும் அ இயல் திரியாது - யா என்று சொல்லப்படும் ஆகாரவீற்று வினாப் பெயரும் மேற்கூறப்பட்ட வற்றுப் பெறும் அவ் வியல்பின் திரியாது எ-று. உ-ம்: யாவற்றை, யாவற்றொடு என ஒட்டுக. (3) 177. சுட்டுமுத லுகர மன்னொடு சிவணி ஒட்டிய மெய்யொழித் துகரங் கெடுமே. இஃது, உகரவீற்றுட் சில மொழிக்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று. (இ-ள்.) சுட்டு முதல் உகரம் அன்னொடு சிவணி - சுட்டெழுத்தினை முதலாகவுடைய உகரவீற்றுச் சொல் அன்சாரியையொடு பொருந்தி, ஒட்டிய மெய் ஒழித்து உகரம் கெடும் - தான் பொருந்திய மெய்யை ஒழித்து உகரம் கெடும். உ-ம்: அதனை, அதனொடு; இதனை, இதனொடு; உதனை, உதனொடு என ஒட்டுக. (4) 178. சுட்டுமுத லாகிய வையெ னிறுதி வற்றொடு சிவணி நிற்றலு முரித்தே. இஃது, ஐகாரவீற்றுட் சில மொழிக்கு முடிபுகூறுதல் நுதலிற்று. (இ-ள்.) சுட்டு முதலாகிய ஐ என் இறுதி - சுட்டெழுத்தினை முதலாகவுடைய ஐகாரவீற்றுச் சொல், வற்றொடு சிவணி நிற்றலும் உரித்து - வற்றுச்சாரியையொடு பொருந்தி அவ் வீற்று ஐகாரம் நிற்றலு முரித்து; (நில்லாமையு முரித்து.) உ-ம்: அவையற்றை, அவையற்றொடு; இவையற்றை, இவையற் றொடு; உவையற்றை, உவையற்றொடு என ஒட்டுக. ஐகாரம் கெட்டவழி, நின்ற வகரத்தினை வற்றின்மிசை ஒற்றென்று கெடுத்து அவற்றை, இவற்றை, உவற்றை என ஒட்டுக. மற்று, இம் முடிபு சுட்டுமுதல் வகர வீற்றோடு ஒத்தமையின், ஈண்டு இது கூறல் மிகைபடக் கூறலாம் பிற எனின், அஃது ஒக்கும்; இவ்வாறு கூறுவன மேலும் உள; அவற்றிற்கெல்லாம் ஆசிரியன் கருத்து அறிந்து கொள்ளப்படு மென்பது. (5) 179. யாவென் வினாவி னையெ னிறுதியும் ஆயிய றிரியா தென்மனார் புலவர் ஆவயின் வகர மையொடுங் கெடுமே. இதுவும் அது. (இ-ள்.) யா என் வினாவின் ஐ என் இறுதியும் - யா என்னும் வினாவினையுடைய ஐகாரவீற்றுச் சொல்லும், அ இயல் திரியாது என்மனார் புலவர் - மேற்கூறிய சுட்டுமுதல் ஐகாரம் போல வற்றுப் பெறும் இயல்பின் திரியாதென்று சொல்லுவர் ஆசிரியர்; அ வயின் வகரம் ஐயொடும் கெடும் - அவ்விடத்து வகரம் ஐகாரத்தொடுகூடக் கெடும். உ-ம்: யாவற்றை, யாவற்றொடு என ஒட்டுக. வகரம் வற்றின்மிசை ஒற்றென்று (134) கெடுவதனை, ஈண்டுக் கேடோதியவதனால் பிற ஐகாரமும் வற்றுப்பெறுதல் கொள்க. எ-டு: கரியவற்றை, செய்யவற்றை என வரும். (6) 180. நீயெ னொருபெயர் நெடுமுதல் குறுகும் ஆவயி னகர மொற்றா கும்மே. இஃது, ஈகாரவீற்றுள் ஒருமொழிக்கு முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) நீ என் ஒரு பெயர் நெடுமுதல் குறுகும் - நீ என்னும் ஒரு பெயர் நெடிதாகிய முதல் குறுகும்; அ வயின் னகரம் ஒற்றாகும் - அவ்விடத்து வரும் னகரம் ஒற்றாகும். உ-ம்: நின்னை, நின்னொடு என ஒட்டுக. ‘ஒருபெயர்’ என்றது, நின் என்பதும் வேறொரு பெயர் போறலை விலக்கிற்று. ‘பெயர்குறுகும்’ என்னாது ‘முதல்குறுகும்’ என்றது, அப் பெயரின் நெட்டெழுத்து நிலையது அக் குறுக்க மென்றற் கென்பது. ‘நெடுமுதல்’ என்றது அம் மொழிமுதலின் நகரம் குறுகுதலை விலக்கிற்று. ஈண்டு, உயிர்மெய் யொற்றுமை பற்றி நெடியது முதலாயிற்று. சாரியைப்பேற்றிடை எழுத்துப் பேறு கூறியது, மூன்றாம் உருபின் கண் சாரியை பெற்றே வந்த அதிகாரம் மாற்றி நின்றது. (7) 181. ஓகார விறுதிக் கொன்னே சாரியை. இஃது, ஓகார ஈறு முடியுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஓகார இறுதிக்குச் சாரியை ஒன் - ஓகாரவீற்றுக்கு இடைவரும் சாரியை ஒன்சாரியை எ-று. உ-ம்: கோஒனை, கோஒனொடு என ஒட்டுக. (8) 182. அ ஆ வென்னு மரப்பெயர்க் கிளவிக் கத்தொடுஞ் சிவணு மேழ னுருபே. இஃது, அகர ஆகாரவீற்றுட் சில மொழிக்கு, உருபின்கண் எய்தியதன்மேல் சிறப்புவிதி கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) அ ஆ என்னும் மரப்பெயர்க் கிளவிக்கு - அ ஆ என்று சொல்லப்படும் மரத்தை உணரநின்ற பெயராகிய சொற்கு, அத்தொடும் சிவணும் ஏழன் உருபு - முன்கூறிய இன்னோடன்றி (174) அத்தோடும் பொருந்தும் ஏழாம் உருபு. உ-ம்: விளவத்துக்கண், பலாவத்துக்கண் என வரும். (9) 183. ஞ ந வென் புள்ளிக் கின்னே சாரியை. இது, புள்ளியீற்று ஞகாரவீறும் நகாரவீறும் முடியுமாறு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) ஞ ந என் புள்ளிக்கு இன்னே சாரியை - ஞ ந என்று சொல்லப்படுகின்ற புள்ளியீறுகட்கு வரும் சாரியை இன்சாரியை. உ-ம்:உரிஞினை, உரிஞினொடு; பொருநினை, பொருநி னொடு என ஒட்டுக. (ஏகாரம் அசை.) (10) 184. சுட்டுமுதல் வகர மையு மெய்யும் கெட்ட விறுதி யியற்றிரி பின்றே. இது, வகரவீறு நான்கனுள்ளும் சுட்டுமுதல் வகரவீற்றிற்கு முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) சுட்டுமுதல் வகரம் - சுட்டெழுத்தினை முதலாக வுடைய வகரவீற்றுச்சொல், ஐயும் மெய்யும் கெட்ட இறுதி இயல் திரிபு இன்று - ஐகாரமும் அதனாற் பற்றப்பட்ட மெய்யும் கெட்டு வற்றுப்பெற்று முடிந்த சுட்டுமுதல் ஐகாரவீற்றியல்பின் திரிபின்றி வற்றுப் பெற்று முடியும். உ-ம்: அவற்றை, அவற்றொடு; இவற்றை, இவற்றொடு; உவற்றை, உவற்றொடு என ஒட்டுக. (11) 185. ஏனை வகர மின்னொடு சிவணும். இது, வகரவீற்றுள் ஒழிந்த வகரவீற்றிற்கு முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) ஏனை வகரம் இன்னொடு சிவணும் - ஒழிந்த வகர வீறு இன்சாரியையொடு பொருந்தி முடியும். உ-ம்: தெவ்வினை, தெவ்வினொடு என ஒட்டுக. மற்று இது உரிச்சொல் லன்றோவெனின், உரிச்சொல்லே யெனினும் படுத்தலோசையாற் பெயராயிற்றெனக் கொள்க. (12) 186. மஃகான் புள்ளிமு னத்தே சாரியை. இது, மகரஈறு முடியுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மஃகான் புள்ளிமுன் அத்து சாரியை - மகரமாகிய புள்ளியீற்றுச் சொல்முன் வரும் சாரியை அத்துச் சாரியை. உ-ம்: மரத்தை, மரத்தொடு என வரும். (13) 187. இன்னிடை வரூஉ மொழியுமா ருளவே. இது, மகரவீற்றுட் சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் நுதலிற்று. (இ-ள்.) இன் இடைவரும் மொழியும் உள - மகரவீறு அத்துச்சாரியை யொழிய இன்சாரியை இடைவந்து முடியும் மொழிகளும் உள. உ-ம்: உருமினை, உருமினொடு என ஒட்டுக. (ஆர் என்பது அசை. ஏகாரம் ஈற்றசை.) (14) 188. நும்மெ னிறுதி யியற்கை யாகும். இது, மகரவீற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று. (இ-ள்.) நும் என் இறுதி இயற்கை ஆகும் - நும் என்னும் மகரவீறு மேற்கூறிய அத்தும் இன்னும் பெறாது இயல்பாய் முடியும் . உ-ம்: நும்மை, நும்மொடு என ஒட்டுக. (15) 189. தாம்நா மென்னு மகர விறுதியும் யாமெ னிறுதியு மதனோ ரன்ன ஆ எ ஆகும் யாமெ னிறுதி ஆவயின் யகரமெய் கெடுதல் வேண்டும் ஏனை யிரண்டு நெடுமுதல் குறுகும். இது, மகரவீற்றுள் முன்கூறிய முடிபு ஒவ்வாதனவற்றிற்கு முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) தாம் நாம் என்னும் மகர இறுதியும் யாம் என் இறுதியும் அதன் ஓர் அன்ன - தாம் நாம் என்று சொல்லப்படும் மகரவீறும் யாம் என்னும் மகரவீறும் மேற்கூறிய நும் என்னும் மகரவீறுபோல அத்தும் இன்னும் பெறாது முடிதலை யுடையவாம்; யாம் என் இறுதி ஆ எ ஆகும் - யாம் என்னும் மகரவீற்று மொழி ஆகாரம் எகாரமாம்; அ வயின் யகரமெய் கெடுதல் வேண்டும் - அவ்விடத்து யகரமாகிய மெய் கெடுதல் வேண்டும்; ஏனை இரண்டும் நெடுமுதல் குறுகும் - ஒழிந்த இரண்டும் நெடியவாகிய முதல் குறுகிநின்று முடியும். உ-ம்: தம்மை, தம்மொடு; நம்மை, நம்மொடு; எம்மை, எம்மொடு என ஒட்டுக. ‘ஆவயின் மெய்’ என்றதனால், பிறவயின் மெய்யும் கெடுமெனக் கொள்க. தங்கண், நங்கண், எங்கண் என வரும். (16) 190. எல்லா மென்னு மிறுதி முன்னர் வற்றென் சாரியை முற்றத் தோன்றும் உம்மை நிலையு மிறுதி யான. இது, மகரவீற்றுள் ஒருமொழிக்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று. (இ-ள்.) எல்லாம் என்னும் இறுதிமுன்னர் - எல்லாம் என்னும் மகரவீற்றுச் சொல்லின்முன்பு, வற்று என் சாரியை முற்றத் தோன்றும் - மேற்கூறிய அத்தும் (186) இன்னுமின்றி (187) வற்று என்னும் சாரியை முடியத்தோன்றி முடியும், உம்மை நிலையும் இறுதியான - உம் என்னும் சாரியை நிலைபெறும் இறுதிக்கண். உ-ம்: எல்லாவற்றையும், எல்லாவற்றொடும் என ஒட்டுக. ‘முற்ற’ என்றதனான், மூன்றாம் உருபின்கண்ணும் நான்காம் உருபின்கண்ணும் ஆறாம் உருபின்கண்ணும் உம்மின் உகரக்கேடு கொள்க. இறுதியின் என்பது வேற்றுமை மயக்கம். அகரம் சாரியை) (17) 191. உயர்திணை யாயி னம்மிடை வருமே. இதுவும் அது. (இ-ள்.) உயர்திணையாயின் நம் இடைவரும் - எல்லாம் என்னும் விரவுப்பெயர் அஃறிணைப் பெயரன்றி உயர்திணைப் பெயராய் நிற்குமாயின், நம் இடைவரும் - நம் என்னும் சாரியை இடைவந்து புணரும். நிலைமொழியொற்றும் மேல் ‘வற்றுமிசை யொற்று’ என்று கெட்டுநின்ற அதிகாரத்தாற் கெடுக்க. இன்னும் அதனானே உம்முப் பெறுதலும், அதன்கண் உகரம் சில உருபின்கண் கெடுதலும் கொள்க. உ-ம்: எல்லாநம்மையும், எல்லாநம்மொடும் என ஒட்டுக. (18) 192. எல்லாரு மென்னும் படர்க்கை யிறுதியும் எல்லீரு மென்னு முன்னிலை யிறுதியும் ஒற்று முகரமுங் கெடுமென மொழிப நிற்றல் வேண்டும் ரகரப் புள்ளி உம்மை நிலையு மிறுதி யான தம்மிடை வரூஉம் படர்க்கை மேன நும்மிடை வரூஉ முன்னிலை மொழிக்கே. இது, மகர வீற்றுட் சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் நுதலிற்று. (இ-ள்.) எல்லாரும் என்னும் படர்க்கை இறுதியும் எல்லீரும் என்னும் முன்னிலை இறுதியும் - எல்லாரும் என்று சொல்லப் படும் படர்க்கையிடத்து மகரவீற்றுச் சொல்லும் எல்லீரும் என்று சொல்லப் படும் முன்னிலையிடத்து மகரவீற்றுச் சொல்லும், ஒற்றும் உகரமும் கெடும் என மொழிப - இவற்றின் மகரவொற்றும் அதன்முன் நின்ற உகரமும் கெட்டு முடியு மென்று சொல்லுவர், ரகரப்புள்ளி நிற்றல் வேண்டும் - அவ் வுகரம் கெடுவழி அதனால் ஊரப்பட்ட ரகரப்புள்ளி கெடாது நிற்றல் வேண்டும், இறுதியான உம்மை நிலையும் - அவ் விரு மொழிக்கும் இறுதிக்கண் உம் என்னும் சாரியை நிலைபெறும், படர்க்கை மேன தம் இடை வரும் - படர்க்கையிடத்துத் தம்முச் சாரியை இடை வரும், முன்னிலை மொழிக்கு நும் இடைவரும் - முன்னிலை மொழிக்கு நும்முச்சாரியை இடைவரும். உ-ம்: எல்லார் தம்மையும், எல்லார்தம்மொடும்; எல்லீர் நும்மையும், எல்லீர்நும்மொடும் என ஒட்டுக. ‘படர்க்கை’, ‘முன்னிலை’ என்ற மிகுதியான், மகரவீற்றுத் தன்மைப் பெயரிடைக்கண் நம்முச்சாரியையும், ஈற்றுக்கண் உம்முச் சாரியையும் பெற்றுமுடிவன கொள்க. கரியேநம்மையும், கரியேநம்மொடும் என ஒட்டுக. படர்க்கைப்பெயர் முற்கூறியவதனால், ரகாரவீற்றுப் படர்க்கைப் பெயரும் முன்னிலைப் பெயரும் இறுதிக்கண் உம்மொடு தம்முச் சாரியையும் நும்முச்சாரியையும் (இடையே) பெற்று முடிவன கொள்க. கரியார்தம்மையும், சான்றீர்நும்மையும் என ஒட்டுக. உகரமும் ஒற்றும் என்னாத முறையன்றிய கூற்றினான், அம் மூன்று உருபின்கண் (எழுத். 190) உம்மின் உகரக்கேடு எடுத்தோதியவற்றிற்கும் இலேசினாற் கொண்ட வற்றிற்கும் கொள்க. (மேல் என்பது மேன் எனத் திரிந்து அகரச்சாரியை ஏற்றுநின்றது.) (19) 193. தான்யா னென்னு மாயீ ரிறுதியும் மேன்முப் பெயரொடும் வேறுபா டிலவே. இது, னகர வீற்றுட் சிலவற்றிற்கு முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) தான் யான் என்னும் அ இரு இறுதியும் - தான் யான் என்று சொல்லப்படும் அவ்விரண்டு னகர வீறும், மேல் முப்பெய ரொடும் வேறுபாடு இல மேல் மகரவீற்றுட் சொல்லப்பட்ட (189) மூன்று பெயரொடும் வேறுபாடின்றித் தானென்பது நெடுமுதல் குறுகியும் யான் என்பதன்கண் ஆகாரம் எகாரமாய் யகரங்கெட்டும் முடியும் எ-று. உ-ம்: தன்னை, தன்னொடு; என்னை, என்னொடு என ஒட்டுக. (`இரு’ என்பது தன்முன்னர் உயிர்வந்தமையால் `ஈர்’ என்றாயிற்று. அகரச் சுட்டு நீண்டு யகர உடும்படுமெய் பெற்றது. ஏகாரம் ஈற்றசை.) (20) 194. அழனே புழனே யாயிரு மொழிக்கும் அத்து மின்னு முறழத் தோன்றல் ஒத்த தென்ப உணரு மோரே. இதுவும் அது. (இ-ள்.) அழன் புழன் அ இரு மொழிக்கும் - அழன் புழனாகிய அவ் விரு மொழிக்கும், அத்தும் இன்னும் உறழத் தோன்றல் ஒத்தது என்ப உணருமோர் - அத்துச்சாரியையும் இன்சாரியையும் மாறிவரத் தோன்று தலைப் பொருந்திற்றென்ப உணருவோர். உ-ம்: அழத்தை, அழத்தொடு; அழனினை, அழனினொடு; புழத்தை, புழத்தொடு; புழனினை, புழனினொடு என ஒட்டுக. ‘தோன்றல்’ என்றதனான், எவன் என்றும், என் என்றும் நிறுத்தி, வற்றுக்கொடுத்து வேண்டும் செய்கைசெய்து எவற்றை, எவற்றொடு எனவும், எற்றை, எற்றொடு எனவும் முடிக்க. ‘ஒத்தது’ என்றதனான், எகின் என நிறுத்தி, அத்தும் இன்னும் கொடுத்துச் செய்கை செய்து எகினத்தை, எகினத்தொடு; எகினினை, எகினினொடு எனவும் முடிக்க. அத்து முற்கூறியவதனான், அத்துப் பெற்றவழி இனிது இசைக்கு மெனக் கொள்க. (அழன் - பிணம். முன் ஏகாரம் இரண்டும் எண்ணிடைச் சொல். பின் ஏகாரம் ஈற்றசை. `உணருமோர்’ என்பது தொல்லைவழக்கு.) (21) 195. அன்னென் சாரியை யேழ னிறுதி முன்னர்த் தோன்றும் மியற்கைத் தென்ப. இது, ழகரவீற்று ஒருமொழிக்கு முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) அன் என் சாரியை ஏழன் இறுதி முன்னர்த் தோன்றும் இயற்கைத்து என்ப - அன் என்னும் சாரியை ஏழென்னும் சொல்லிறுதியின் முன்னே தோன்றும் இயல்பினை யுடைத்தென்று சொல்லுவர் எ-று. உ-ம்: ஏழனை, ஏழனொடு என ஒட்டுக. சாரியை முற்கூறியவதனான், பிறவும் அன் பெறுவன கொள்க. பூழனை, பூழனொடு; யாழனை, யாழனொடு என ஒட்டுக. (22) 196. குற்றிய லுகரத் திறுதி முன்னர் முற்றத் தோன்று மின்னென் சாரியை. இது, குற்றியலுகர ஈற்றிற்கு முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) குற்றியலுகரத்து இறுதிமுன்னர் முற்றத் தோன்றும் இன் என் சாரியை - குற்றியலுகரமாகிய ஈற்றின் முன்னர் முடியத் தோன்றும் இன் என் சாரியை. உ-ம்: வரகினை, வரகினொடு; நாகினை, நாகினொடு என ஒட்டுக. ‘முற்ற’ என்றதனான், பிற சாரியை பெறுவனவும் கொள்க. வழக்கத்தாற் பாட்டாராய்ந்தான், கரியதனை, கரியதனொடு என வரும். (23) 197. நெட்டெழுத் திம்ப ரொற்றுமிகத் தோன்றும் அப்பான் மொழிக ளல்வழி யான. இஃது, அவற்றுட் சிலவற்றிற்கு எய்தியது விலக்குதல் நுதலிற்று. (இ-ள்.) நெட்டெழுத்து இம்பர் ஒற்று மிகத் தோன்றும் - நெட்டெழுத்தின் பின்னாக (இடை) இனவொற்று மிகத் தோன்றும், அப்பால் மொழிகள் அவ்வழியான - அக் கூற்று மொழிகள் அல்லாத இடத்தின் கண்ணே. அவ் வீறு இன்சாரியை பெறுவது; ஆண்டாயின் பெறாது. உ-ம்: யாட்டை, யாட்டொடு, யாற்றை, யாற்றொடு என வரும். அப்பான் மொழிகளாவன: க ச த ப க்கள். இவை இனவொற்று மிகாவென்று கொள்க. ‘தோன்றும்’ என்றதனான், உயிர்த்தொடர் மொழியும் இன்பெறாது இனவொற்று மிகுதல் கொள்க. பகட்டை, பகட்டொடு; முயிற்றை, முயிற்றொடு என வரும். (24) 198. அவைதாம் இயற்கைய வாகுஞ் செயற்கைய வென்ப. இது, மேற் சாரியை விலக்கப்பட்டவற்றிற்கு முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) அவைதாம் - மேற் சாரியை பெறாவென விலக்கப் பட்ட அவைதாம், இயற்கைய ஆகும் செயற்கைய என்ப - இயல்பாய் முடிதலை யுடையவாகும் செய்தியையுடைய வென்று சொல்லுவர். உ-ம்: யாட்டை, யாட்டொடு என ஒட்டுக. ‘செயற்கைய’ என்றதனான், இனவொற்று மிக்கன சிறுபான்மை இன்பெறுதலும் கொள்க. யாட்டினை, யாட்டி னொடு; முயிற்றினை, முயிற்றினொடு என வரும். (25) 199. எண்ணி னிறுதி யன்னொடு சிவணும். இஃது, அவ்வீற்று எண்ணுப்பெயர் முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) எண்ணின் இறுதி அன்னொடு சிவணும் - எண்ணுப் பெயர்களினது குற்றுகர வீறு அன்சாரியையொடு பொருந்தும். உ-ம்: ஒன்றனை, ஒன்றனொடு; இரண்டனை, இரண்ட னொடு என ஒட்டுக. (26) 200. ஒன்று முதலாகப் பத்தூர்ந்து வரூஉம் எல்லா வெண்ணுஞ் சொல்லுங் காலை ஆனிடை வரினு மான மில்லை அஃதென் கிளவி யாவயிற் கெடுமே உய்தல் வேண்டும் பஃகான் மெய்யே. இதுவும் அது. (இ-ள்.) ஒன்று முதலாகப் பத்து ஊர்ந்து வரும் எல்லா எண்ணும் - ஒன்று என்னும் எண்ணுப் பெயர் முதலாகப் பத்து என்னும் எண்ணுப் பெயரான் ஊரப்பட்டு வரும் எல்லா எண்ணுப் பெயர்களும், சொல்லுங் காலை - முடிபு சொல்லுங் காலத்து, ஆன் இடைவரினும் மானம் இல்லை - அவ் வீற்றிற்கு மேற்கூறிய அன்னேயன்றி ஆன்சாரியை இடைவரினும் குற்றமில்லை, அ வயின் அஃது என் கிளவி கெடும் - அவ் வான்சாரியை பெற்றவழி அஃது என்னும் சொல் கெடும், பஃகான்மெய் உய்தல் வேண்டும் - அது கெடுவழி அவ் வகரத்தான் ஊரப்பட்ட பகரமாகிய மெய் கெடாது நிற்றலை வேண்டும். உ-ம்: ஒருபானை, ஒருபானொடு; ஒருபஃதனை, ஒருபஃதனொடு; இருபஃதனை, இருபஃதனொடு என ஒட்டுக. ‘சொல்லுங் காலை’ என்றதனான், ஒன்பதென்னும் எண்ணுப் பெயரும் ஆன் பெற்று, அவ்வீற்றின் அது என்னும் சொற்கெட்டு முடிதல் கொள்க. ஒன்பானை, ஒன்பானொடு என ஒட்டுக. (27) 201. யாதெ னிறுதியுஞ் சுட்டுமுத லாகிய ஆய்த விறுதியு மன்னொடு சிவணும் ஆய்தங் கெடுத லாவயி னான. இதுவும், அக் குற்றுகர வீற்றுட் சிலவற்றிற்கு முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) யாது என் இறுதியும் - யாது என வரும் குற்றுகர ஈறும், சுட்டு முதலாகிய ஆய்த இறுதியும் - சுட்டெழுத்தினை முதலாகவுடைய ஆய்தத் தொடர்மொழிக் குற்றுகர ஈறும், அன்னொடு சிவணும் - அன்சாரியையொடு பொருந்தும், ஆ வயினான ஆய்தம் கெடுதல் - அவ்விடத்து ஆய்தம் கெடுக. உ-ம்: யாதனை, யாதனொடு; அதனை, அதனொடு; இதனை, இதனொடு; உதனை, உதனொடு என ஒட்டுக. (அகரச்சுட்டு நீண்டு நின்றது. `ஆன்’ என்பது - வேற்றுமை மயக்கம். ஈற்றகரம் - சாரியை.) (28) 202. ஏழ னுருபிற்குத் திசைப்பெயர் முன்னர்ச் சாரியைக் கிளவி யியற்கையு மாகும் ஆவயி னிறுதி மெய்யொடுங் கெடுமே. இதுவும் குற்றுகரவீற்றுட் சிலவற்றிற்கு ஏழன் உருபொடு முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) ஏழன் உருபிற்கு - ஏழாம் வேற்றுமைக்கு, திசைப் பெயர் முன்னர் - திசையை உணரநின்ற பெயர்களின் முன்னர், சாரியைக்கிளவி இயற்கையும் ஆகும் - இவ் வீற்றிற்கு முன்கூறிய இன்சாரியையாகிய சொல் நின்று முடிதலேயன்றி நில்லாது இயல்பாயும் முடியும்; அ வயின் இறுதி மெய்யொடும் கெடும் - இயல்பாயவழிப் பெயர் இறுதிக் குற்றுகரம் தன்னான் ஊரப்பட்ட மெய்யொடும் கெடும். உ-ம்: வடக்கின்கண், கிழக்கின்கண், தெற்கின்கண், மேற்கின்கண் எனவும்; வடக்கண், கிழக்கண், தெற்கண், மேற்கண் எனவும் வரும். உருபு முற்கூறியவதனான், கீழ்சார், கீழ்புடை; மேல்சார், மேல்புடை; தென்சார், தென்புடை; வடசார், வடபுடை என இவ்வாறு சாரியை பெறாது திரிந்து முடிவனவெல்லாம் கொள்க. (அகரச்சுட்டு நீண்டு நின்றது. ஏகாரம் - ஈற்றசை.) (29) 203. புள்ளி யிறுதியு முயிரிறு கிளவியும் சொல்லிய வல்ல வேனைய வெல்லாம் தேருங் காலை யுருபொடு சிவணிச் சாரியை நிலையுங் கடப்பா டிலவே. இஃது, இவ் வோத்திற்கெல்லாம் புறனடை கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) புள்ளி இறுதியும் உயிர் இறு கிளவியும் சொல்லிய அல்ல ஏனைய எல்லாம் - புள்ளியீற்றுச் சொல்லும் உயிரீற்றுச் சொல்லுமென முடிபு சொல்லியவை அல்லாத ஒழிந்தவை யெல்லாம், தேரும் காலை - ஆராயுங்காலத்து, உருபொடு சிவணி சாரியை நிலையும் கடப்பாடு இல - உருபுகளொடு பொருந்தி இன் சாரியை நின்று முடியும் முறைமையை யுடைய வல்ல (நின்றும் நில்லாதும் முடியும்). புள்ளியீற்றுள் ஒழிந்தன ஐந்து; உயிரீற்றுள் ஒழிந்தது ஒன்று. இவையும் எடுத்தோதிய ஈற்றுள் ஒழிந்தனவுமெல்லாம் ஈண்டுக் கொள்ளப்படும். உ-ம்: மண்ணினை, மண்ணை; வேயினை, வேயை; நாரினை, நாரை; கல்லினை, கல்லை; முள்ளினை, முள்ளை எனவும்; கிளியினை, கிளியை எனவும்; பொன்னினை, பொன்னை எனவும்; தாழினை, தாழை; தீயினை, தீயை; கழையினை, கழையை எனவும் ஒட்டுக. புள்ளியீற்றுள் ஒழிந்தன பலவாகலின், அது முற்கூறப் பட்டது. ‘தேருங் காலை’ என்றதனான், உருபுகள் நிலைமொழி யாக நின்று தம் பொருளொடு புணரும்வழி முடியும் முடிபு வேற்றுமை யெல்லாம் கொள்க. மண்ணினைக் கொணர்ந்தான், நம்பியைக் கொணர்ந்தான், கொற்றனைக் கொணர்ந்தான்; மலையொடு பொருதது மால்யானை; மரத்தாற் புடைத்தான்; மரத்துக்குப் போனான்; காக்கையிற் கரிது; காக்கையது பலி; மரத்துக்கண் கட்டினான் என ஒட்டுக. இஃது உருபியலாகலின், ‘உருபொடு சிவணி’ என வேண்டாவன்றே, அதனான், உருபுபுணர்ச்சிக்கண் சென்ற சாரியைகளெல்லாம் ஈற்றுப் பொதுமுடிபு உள்வழிப் பொருட்புணர்ச்சிக்கண்ணும் செல்லு மென்பது கொள்க. இன்னும் அதனானே, உயிரீறும் மெய்யீறும் சாரியை பெறாது இயல்பாய் முடிவன கொள்க. நம்பியை, கொற்றனை என வரும். (30) ஆறாவது - உருபியல் முற்றிற்று. உயிர் மயங்கியல் உயிரீறு நின்று வல்லெழுத்தோடும் சிறுபான்மை ஏனை யெழுத்துக்களோடும் புணருமாறு கூறுவது உயிர் மயங்கிய லாகும். மயங்குதல் - கலத்தல். உயிரும் புள்ளியும் இறுதியாகிய உயர்திணைப் பெயர்கள் அல்வழி வேற்றுமையாகிய இரு வழியிலும் இயல்பாமெனவும், ஒரு சில விடங்களில் அஃறிணை விரவுப் பெயர் இயல்பாதலு முண்டெனவும் தொகை மரபில் விதந்து கூறிய ஆசிரியர், அவையொழிந்த உயிரீற்று அஃறிணைப் பெயர்களையும் ஏனை வினைமுற்று வினையெச்சம் பெயரெச் சங்களையும் அகரவீறுமுதல் ஒளகாரவீறுமுடிய நெடுங்கணக்கு முறையில் வைத்து உணர்த்துகின்றார். இவ்வியலில் 93-சூத்திரங்கள் உள்ளன. அவற்றுட் பல மாட்டேற்று முறையில் அமைந்தனவாகும். இவ்வியலிற் கூறப்பட்ட விதிகள் யாவும் வல்லெழுத்து மிகுவன, இயல்பாவன, மெல்லெழுத்து மிகுவன, உயிர்மிக வருவன, நீடவருவன குறுகிவருவன, சாரியைபெறுவன, பிறவாறு திரிவன என்னும் இவ்வகையுள் அடங்குவனவாகும். அ, இ, உ. என்னும் மூன்று சுட்டின் முன்னும் உயிரும் யகரமும்வரின் வகரவொற்றும் கசதபஞநமவ என்பனவரின் வந்த ஒற்றெழுத்துக்களும் மிகுமென்பதும் செய்யுளுள் சுட்டு நீண்டு முடியுமென்பதும் 3-6, 34, 35, 53-ஆம் சூத்திரங்களிற் சொல்லப் பட்டன. ஆ, ஆ, ஈ, உ, ஊ, ஏ, ஓ, ஓள என்பவற்றை ஈறாகவுடைய பெயர்கள் அல்வழி வேற்றுமையாகிய ஈரிடத்தும் வல்லெழுத்து மிகப்பெறுமென்றும், இகர ஐகார வீற்றுப் பெயர்கள் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண் வல்லெழுத்து மிகப்பெறு மென்றும் 1, 14, 19, 22, 33, 47, 57, 62, 64, 72, 74, 78, 87, 90, 93-ஆம், சூத்திரங்களில் ஆசிரியர் விரித்துக்கூறியுள்ளார். அல்வழிக்கண் அகரவீற்றுள் அன்னவென்னும் உவமவுருபும், அண்மைசுட்டிய உயர்திணை விளிப்பெயரும், செய்ம்மன என்னும் வினைச்சொல்லும், ஏவலைக் கருதிய வியங்கோள் வினையும், செய்த என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சமும், செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சமும், அம்ம என்னும் உரையசையும், அகர வீற்றுப் பலவறிசொல்லும், ஆகாரவீற்றுள் ஆ, மா என்னும் பெயர்ச் சொல்லும், உயர்திணை விளிப்பெயரும், யா வினாவும் முற்றுவினையும், மியா என்னும் அசைச் சொல்லும், தன் தொழிலைக் குறித்துவரும் ஆகார வினாவையுடைய வினைச்சொல்லும், ஈகார வீற்றுள் நீ, மீ என்பனவும் பகரவீகாரமும், உகரவீற்றுச் சுட்டுப் பெயர்களும், தேற்றப் பொருளில் வரும் எகரவீறும், சிறப்புப் பொருளில் வரும் ஒகரவீறும், மாறுகோளெச்சப் பொருளிலும் வினாப் பொருண்மையிலும் எண்ணுப்பொருண்மையிலும் ஐயப் பொருண்மையிலும் வரும் ஏகார ஓகார வீற்றிடைச் சொற்களும் வல்லெழுத்து மிகாது இயல்பாவன. அகரவீற்று மரப்பெயரும் ஆ, இ, உ, ஏ, ஐ ஆகிய ஈறுகளில் எடுத்தோதிய பிடா, தளா, மா (மரம்) ஆ, மா, (விலங்கு) உதி, ஒடு, சே, விசை, ஞெமை, நமை என்னும் பெயர்களும் வல்லெழுத்து முதன்மொழிவரின் மெல்லெழுத்து மிக்கு முடிவனவாம். யா, பிடா, தளா, புளி (சுவை) என்பன வல்லெழுத்துப் பெறுதலுமுண்டு. உம்மைத்தொகைக்கண்வரும் ஆகாரவீற்றுப்பெயரும் வேற்றுமைக் கண் குறிற்கீழ் நின்ற ஆகாரவீற்றுப்பெயரும் ஓரெழுத்தொரு மொழியாகிய ஆகார வீற்றுப்பெயரும் அகரம் மிக்கு முடியும். இரா என்னுஞ் சொல்லுக்கு அகரமிகுதல் இல்லை. குறிற்கீழ் நின்ற ஊகாரவீறும் ஓரெழுத்துத்தொரு மொழியாகிய ஊகார வீறும் வேற்றுமைக்கண் உகரம் மிக்குமுடியும். ஏ யென்னும் பெயர் வேற்றுமைக்கண் எகரம் மிக்கு முடியும். ஓகாரவீறு வேற்றுமைக் கண் ஒகரம் மிகும். ஒளகாரவீற்றுப் பெயர் இருவழியிலும் உகரம்மிகும். செய்யுட்கண்வரும் அகரச்சுட்டும், அம்ம என்னும் இடைச் சொல்லிறுதியும், பல சில என்னுஞ் சொற்களின் இறுதி அகரமும், ழகரமெய்யையூர்ந்த இறுதி உகரமும் நீண்டு முடிவனவாம். ஆ முன்வரும் பகர வீகாரம் குறுகும். குறிற்கீழ் நின்ற இறுதி ஆகாரம் குறுகி உகரம் பெறும். மக, ஆடூஉ, மகடூஉ சே என்பன இன்சாரியைபெறும். நிலா அத்துச்சாரியைபெறும். பனி (காலம்), வளி (பூதம்), மழை என்பன அத்துச்சாரியையும் இன்சாரியையும் பெறுவன. புளி, எரு, செரு, பனை, அரை, ஆவிரை என்பன அம்சாரியைபெறுவன. இகர ஐகார வீற்று நாட் பெயர்முன் தொழிற்சொல்வரின் இடையே ஆன்சாரியை வரும். அவ்விரண்டீற்றுத் திங்கட் பெயர் முன் தொழிற்சொல்வரின் இடையே இக்குச்சாரியை வரும். ஊவென்னும் ஓரெழுத்தொருமொழி னகரவொற்றும் அக்குச் சாரியையும் பெறும். அ, ஈ, உ, ஐ, ஓ என்னும் ஈறுகளுக்கு உருபியலிற் கூறப்பட்ட சாரியைகளை இவ்வியலிலுள்ள 18, 51, 61, 79, 92-ஆம் சூத்திரங்களால் அவ்வீற்றுப் பொருட் புணர்ச்சிக்கும் மாட்டெறிந்து விதி கூறுவர் ஆசிரியர். ‘சாவ’ என்பதன் வகரவுயிர்மெய்யும் ‘வாழிய’ என்பதன் யகரவுயிர்மெய்யும் கெட்டு முடியும். நாழி என்பதன்முன் உரி யென்னுஞ்சொல் வந்துபுணரின் நிலைமொழியீற்றின் இகரம் தான் ஏறிய ழகர மெய்யுடன்கெட அவ்விடத்து டகரமெய் தோன்றி முடியும். செரு என்பதன் முன்வரும் அம்சாரியையின் மகரங்கெட வருமொழி வல்லெழுத்து மிக்கு முடியும். பனை, ஆவிரை என்பன அம்சாரியை பெறுங்கால் இறுதி ஐகாரங்கெட்டு முடிவன. பனை என்னுஞ்சொல்முன் அட்டு என்பது வருமொழியாய்வரின் நிலை மொழியிறுதி ஐகாரங்கெட அவ்விடத்து ஆகாரம் தோன்றும். பல சில என்பவை தம் முன்னர்த் தாம்வரின் இறுதி நின்ற லகர வுயிர்மெய் லகரவொற்றாகத் திரியும். இன்றியென்பதன் இறுதியிகரம் செய்யுளுள் உகரமாகத்திரியும். சுட்டுப் பெயரீற்று உகரம் அன்று என்பதனோடு புணருங்கால் ஆகாரமாகத் திரிதலும் ஐயென்பதனோடு புணருங்கால் கெடுதலும் செய்யுளிடத் துண் டாகுந் திரிபுகளாம். வேட்கை யென்னுஞ்சொல்முன் அவா என்பது வந்து புணரின் நிலைமொழியீற்றிலுள்ள ஐகாரம் தான் ஊர்ந்து நின்ற ககரமெய்யொடுங்கெட அங்குள்ள டகரம் ணகர மாய்த் திரிதல் செய்யுட்கண்வருந் திரிபாகும். - க.வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 178-181 ஏழாவது உயிர்மயங்கியல் இவ் வோத்து என்ன பெயர்த்தோவெனின், உயிரீறு வன் கணத்தொடும் சிறுபான்மை பிற கணத்தொடும் மயங்கிப் புணரும் இயல்பு உணர்த்தலின் உயிர்மயங்கியல் என்னும் பெயர்த்து. மேல் உருபு புணர்ச்சி கூறி ஈண்டுப் பொருட்புணர்ச்சி கூறுகின்றமையின், மேலத னோடு இயைபுடைத்தாயிற்று. 204. அகர விறுதிப் பெயர்நிலை முன்னர் வேற்றுமை யல்வழிக் கசதபத் தோன்றின் தத்த மொத்த வொற்றிடை மிகுமே. இத் தலைச்சூத்திரம் என் நுதலிற்றோவெனின், அகர வீற்றுப் பெயர்க்கு வன்கணத்தோடு அல்வழி முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) அகர இறுதி பெயர்நிலை முன்னர் - அகரமாகிய இறுதியையுடைய பெயர்ச்சொல் முன்னர், வேற்றுமை அல்வழி க ச த ப தோன்றின் - வேற்றுமையல்லாத அல்வழிக்கண் க ச த ப முதல்மொழி வருமொழியாய்த் தோன்றின், தம் தம் ஒத்த ஒற்று இடைமிகும் - தத்தமக்குப் பொருந்தின அக் க ச த பக்களாகிய ஒற்று இடைக்கண் மிகும். உ-ம்: விளக்குறிது, மகக்குறிது; சிறிது, தீது, பெரிது என வரும். ‘ஒத்த’ ஒற்றென்னாது ‘தத்தம்’ என்றதனான், அகரவீற்று உரிச்சொல் வல்லெழுத்து மிக்கும் மெல்லெழுத்து மிக்கும் முடியும் முடிபும், இடைச்சொற்களுள் எடுத்தோதாதவற்றின் முடிபும், அகரம் தன்னை உணரநின்றவழி முடியும் முடிபும் கொள்க. தடக்கை, தவக்கொண்டான் என இவை உரிச்சொல் வல்லெழுத்துப்பேறு. தடஞ்செவி, தடந்தோள் என இவை மெல்லெழுத்துப்பேறு. “மடவ மன்ற தடவு நிலைக் கொன்றை” என்பது இடைச்சொல் முடிபு. அக்குறிது, சிறிது, தீது, பெரிது என்பது தன்னை உணர நின்றவழி வல்லெழுத்து மிகுதி. அவ்யாது என்பது இடையெழுத்து மிகுதி. அவ்வழகிது என்பது உயிர்க்கணத்து முடிபு. (1) 205. வினையெஞ்சு கிளவியு முவமக் கிளவியும் எனவெ னெச்சமுஞ் சுட்டி னிறுதியும் ஆங்க வென்னு முரையசைக் கிளவியும் ஞாங்கர்க் கிளந்த வல்லெழுத்து மிகுமே. இஃது, அகரஈற்று வினைச்சொல் முடிபும், இடைச்சொல் முடிபும் கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) வினையெஞ்சு கிளவியும் உவமக் கிளவியும் - அகர வீற்று வினையெச்சமாகிய சொல்லும் உவமச் சொல்லும், என என் எச்சமும் சுட்டின் இறுதியும் - என என்று சொல்ல வருகின்ற எச்சச் சொல்லும் சுட்டாகிய அகரவீறும், ஆங்க என்னும் உரையசைக் கிளவியும் - ஆங்க என்று சொல்லப்படும் உரையசை யாகிய சொல்லும், ஞாங்கர் கிளந்த வல்லெழுத்து மிகும் - மேலைச் சூத்திரத்துச் சொன்ன வல்லெழுத்து மிக்கு முடியும். உ-ம்: உணக்கொண்டான், தினக்கொண்டான்; சென்றான், தந்தான், போயினான் என்பன - வினையெச்சம். மேலனவெல்லாம் இடைச்சொல். புலிபோலக் கொன்றான் என்பது - உவமம். கொள்ளெனக் கொண்டான் என்பது - என என் எச்சம். அக்கொற்றன், சாத்தன், தேவன், பூதன் என்பன - சுட்டின் இறுதி. ஆங்கக் கொண்டான் என்பது - உரையசைக் கிளவி. (2) 206. சுட்டின் முன்னர் ஞ ந மத் தோன்றின் ஒட்டிய வொற்றிடை மிகுதல் வேண்டும். இஃது, அகரச்சுட்டு மென்கணத்தொடு முடியுமாறு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) சுட்டின்முன்னர் ஞ ந ம தோன்றின் - அகரச் சுட்டின் முன்னர் ஞநமக்கள் முதலாகிய மொழி வருமொழியாய்த் தோன்றின், ஒட்டிய ஒற்று இடைமிகுதல் வேண்டும் - தத்தமக்குப் பொருந்திய ஒற்று இடைக்கண்ணே மிகுதலை வேண்டும். உ-ம்: அஞ்ஞாலம், நூல், மணி என வரும். (3) 207. யவமுன் வரினே வகர மொற்றும். இது, சுட்டு இடைக்கணத்தொடு முடியுமாறு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) ய வ முன் வரின் வகரம் ஒற்றும் - யகர வகரம் முதல் மொழியாகச் சுட்டின் முன்னே வரின் இடைக்கண் வகரம் ஒற்றாம். உ-ம்:அவ்யாழ், அவ்வளை என வரும். (4) 208. உயிர்முன் வரினு மாயிய றிரியாது. இஃது, அச்சுட்டு உயிர்க்கணத்தொடு முடியுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உயிர் முன் வரினும் அ இயல் திரியாது - உயிர் முதல் மொழி அகரச் சுட்டின் முன்னர் வரினும் மேற்கூறிய வகரம் மிக்கு முடியும் அவ் வியல்பின் திரியாது எ-று. உ-ம்: அவ்வடை, அவ்வாடை என ஒட்டுக. இடைமிக்க வகரத்தினை ‘நெறியியல்’(161) என்ற இலேசினான் இரட்டுதல் கூறினமையின், அது நிலைமொழித் தொழிலென்பதுவே கூறப்பட்டது. ‘திரியாது’ என்றதனானே, மேற் சுட்டு நீண்டவழி வகரக்கேடு கொள்க. (5) 209. நீட வருதல் செய்யுளு ளுரித்தே. இஃது, அச்சுட்டுச் செய்யுளுள் முடியுமாறு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) நீடவருதல் செய்யுளுள் உரித்து - அகரச் சுட்டு நீளும்படியாக வருதல் செய்யுளிடத்து உரித்து எ-று. உ-ம்: “ஆயிரு திணையி னிசைக்குமன சொல்லே” (கிளவி. - 1) என வரும். வருமொழி வரையாது கூறினமையின், இம் முடிபு வன்கண மொழிந்த கணமெல்லாவற்றொடும் சென்றது. உதாரணம் பெற்றவழிக் கண்டுகொள்க. (6) 210. சாவ வென்னுஞ் செயவெ னெச்சத் திறுதி வகரங் கெடுதலு முரித்தே. இது, மேல் ‘வினையெஞ்சு கிளவியும்’ (உயிர்மயங்கியல் 2) என்ற முடிபிற்கு எய்தாதது எய்துவித்தல் நுதலிற்று. (இ-ள்.) சாவ என்னும் செய என் எச்சத்து இறுதி வகரம் கெடுதலும் உரித்து - சாவ என்று சொல்லப்படும் செய என் எச்சத்து இறுதிக்கண் அகரமும் அதனாற் பற்றப்பட்ட வகர வொற்றும் கெடாது நிற்றலே யன்றிக் கெட்டு முடிதலும் உரிய. உ-ம்: சாக்குத்தினான், சீறினான், தகர்த்தான், புடைத்தான் என வரும். இதனை ‘வினையெஞ்சு கிளவியும்’ (உயிர்மயங்கியல் - 2) என்றதன்பின் வையாத முறையன்றிய கூற்றினான், இயல்பு கணத்தும் அந் நிலைமொழிக் கேடு கொள்க. சாஞான்றார் என வரும். (7) 211. அன்ன வென்னு முவமக் கிளவியும் அண்மை சுட்டிய விளிநிலைக் கிளவியும் செய்ம்மன வென்னுந் தொழிலிறு சொல்லும் ஏவல் கண்ணிய வியங்கோட் கிளவியும் செய்த வென்னும் பெயரெஞ்சு கிளவியும் செய்யிய வென்னும் வினையெஞ்சு கிளவியும் அம்ம வென்னு முரைப்பொருட் கிளவியும் பலவற் றிறுதிப் பெயர்க்கொடை யுளப்பட அன்றி யனைத்து மியல்பென மொழிப. இஃது, அகரவீற்றுள் ஒருசார்ப் பெயர்க்கும் வினைக்கும் இடைக்கும் முன் எய்தியது விலக்கியும், எய்தாதது எய்துவித்தும் முடிபு கூறுதல் நுதலிற்று. அன்னவென்பதும் செய்யிய வென்பதும் பலவற்றிறுதிப் பெயர்க்கொடை யென்பதும் எய்தியது விலக்கின. மற்றையன எய்தாதது எய்துவித்தன. (இ-ள்.) அன்ன என்னும் உவமக்கிளவியும் - அன்ன என்று சொல்லப்படும் உவம உருபாகிய இடைச்சொல்லும், அண்மை சுட்டிய விளிநிலைக் கிளவியும் - அணியாரைக் கருதிய விளியாகிய நிலைமையை யுடைய உயர்திணைப் பெயர்ச் சொல்லும், செய்ம்மன என்னும் தொழில் இறு சொல்லும் - செய்ம்மன என்று சொல்லப்படும் வினைச்சொல்லாகிய அகரவீற்றுச் சொல்லும், ஏவல் கண்ணிய வியங்கோள் கிளவியும்- ஏவலைக் கருதிய வியங்கோளாகிய வினைச்சொல்லும், செய்த என்னும் பெயரெஞ்சு கிளவியும் - செய்த என்று சொல்லப்படும் பெயரெச்சமாகிய வினைச்சொல்லும், செய்யிய என்னும் வினை எஞ்சு கிளவியும் - செய்யிய என்று சொல்லப் படும் வினை யெச்சமாகிய வினைச் சொல்லும், அம்ம என்னும் உரைப் பொருள் கிளவியும் - அம்ம என்று சொல்லப்படும் உரை யசைப் பொருண்மையையுடைய இடைச்சொல்லும், பலவற்று இறுதிப் பெயர்க்கொடை உளப்பட அன்றி அனைத்தும் - பன்மைப் பொருள்களின் அகர வீற்றுப் பலவென்னும் பெயர்ச் சொல்லுமாகிய அவ்வனைத்துச் சொல்லும், இயல்பு என மொழிப - இயல்பாய் முடியுமென்று சொல்லுவர் (ஆசிரியர்). உ-ம்: பொன் அன்ன குதிரை, செந்நாய், தகர், பன்றி எனவும்; ஊர கொள், செல், தா, போ எனவும்; உண்டன குதிரை, செந்நாய், தகர், பன்றி எனவும்; செல்க குதிரை, செந்நாய், தகர், பன்றி எனவும்; உண்ட குதிரை, செந்நாய், தகர், பன்றி எனவும்; இதன் எதிர்மறை உண்ணாத குதிரை எனவும்; இதன் குறிப்பு நல்ல குதிரை, செந்நாய் எனவும்; உண்ணிய கொண்டான், சென்றான், தந்தான், போயினான் எனவும்; அம்ம கொற்றா, சாத்தா, தேவா, பூதா எனவும்; பல குதிரை, செந்நாய், தகர், பன்றி எனவும் வரும். ‘ஊர கொள்’ என்பது ‘உயிரீறாகிய உயர்திணைப் பெயர்’ (154) என்பதனுள் அடங்காதோவெனின், ஊரன் என்பது ஊர என ஈறு திரிந்தமையின் ஆண்டு அடங்காதாயிற் றென்பது. விளிநிலைக் கிளவியாகிய பெயரை முன்வைத்ததனால், செய்த வென்பதன் மறையன்றிச் செய்யும் என்பதற்கு மறையாகிய செய்யாத என்பதும் அவ் வியல்பு உடைத்தெனக் கொள்க. வாராத கொற்றன் என வரும். ‘உரையிற்கோடல்’ என்பதனான், வியங்கோள் முன் வைக்கற் பாலதனை முன்வையாது செய்ம்மன என்பதனை முன்வைத்ததனான், இவ் வியல்பு முடிபின்கண் செய்ம்மன என்பது சிறப்புடைத்தெனப் பெறப்பட்டது. அதனான், ‘ஏவல்கண்ணாத வியங்கோளும்’ இவ் வியல்பு முடிபு உடைத்தெனக் கொள்க. “மன்னிய பெருமநீ” (புறம். 6) என வரும். ‘பலவற்றிறுதிப் பெயர்க்கொடை’ என்பதனை அம்ம என்பதற்கு முன் வையாததனான், பல என்பது மேற்கூறும் செய்யுள் முடிபின் (214) திரிந்து முடிதல் ஈண்டை இயல்பிற் சிறப்பின்றென்பதூஉம், அகர வீற்றுள் முடிபு கூறாத முற்றுவினையும் வினைக்குறிப்பும் இவ் வியல்பினவென்பதூஉம் பெறப்படும். உண்டன குதிரை என்பது முற்றுவினை. கரிய குதிரை என்பது முற்றுவினைக் குறிப்பு. ‘தன்னின முடித்தல்’ (பொருள்.999 உரை) என்பதனான், பல என்பதன் இனமாகிய சில என்பதற்கும் அவ் வியல்பு கொள்க. சில குதிரை எனவரும். (8) 212. வாழிய வென்னுஞ் சேயென் கிளவி இறுதி யகரங் கெடுதலு முரித்தே. இஃது ஏவல் கண்ணாத வியங்கோள்களின் ஒன்றற்கு எய்திய இயல்பு விலக்கி விகாரம் கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) வாழிய என்னும் சேய் என் கிளவி - வாழிய என்று சொல்லப்படுகின்ற, அவ் வாழுங்காலம் அண்மையதன்றிச் சேய்மையது என்று உணர்த்தும் சொல், இறுதி யகரம் கெடுதலும் உரித்து - தன்னிறுதிக்கண் அகரமும் அதனாற் பற்றப்பட்ட யகரவொற்றும் கெடாது முடிதலேயன்றிக் கெட்டு முடிதலும் உரித்து. உ-ம்: வாழிகொற்றா என வரும். ‘சேயென் கிளவி’ என்றதனான், அம் முடிபு இவ் ‘வாழிய’ என்பதற்கு ஏவல் கண்ணாத நிலைய தென்பது விளக்கிய நின்றது. ‘ஒன்றென முடித்தல்’ (பொருள் - 999 உரை) என்பதனான், பிற கணத்துக்கண்ணும் இவ் விதி கொள்க. வாழிஞெள்ளா என வரும். (9) 213. உரைப்பொருட் கிளவி நீட்டமும் வரையார். இஃது, அம்ம என்பதற்கு எய்தாதது எய்துவித்தல் நுதலிற்று. (இ-ள்.) உரைப்பொருள் கிளவி நீட்டமும் வரையார் - உரையசைப் பொருண்மையினையுடைய அம்ம என்னும் இடைச்சொல் தன் ஈற்றகரம் அகரமாய் நிற்றலேயன்றி ஆகாரமாய் நீண்டு முடிதலையும் வரையார். உ-ம்:அம்மாகொற்றா என வரும். ‘ஒன்றென முடித்தல்’ (பொருள் - 999 உரை) என்பதனான், அந் நீட்சி இயல்புகணத்தும் கொள்க. அம்மாஞெள்ளா என வரும். (10) 214. பலவற் றிறுதி நீடுமொழி யுளவே செய்யுள் கண்ணிய தொடர்மொழி யான. இது, மேற் “பலவற் றிறுதிப் பெயர்க்கொடை” (உயிர் மயங்கியல் 8) என்று ஓதியதற்குச் செய்யுள் முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) பலவற்று இறுதி நீடும் மொழி உள - பல என்னும் சொல்லின் இறுதி அகரம் நீண்டு முடியும் மொழிகளும் உள; (யாண்டு உளவெனின்), செய்யுள் கண்ணிய தொடர் மொழியான- செய்யுளாதலைக் கருதிய ஒன்றோடொன்று தொடர்ச்சிப்படும் செய்யுள் முடிபுடைய மொழிகளின் கண்ணே. ‘செய்யுள் கண்ணிய மொழி’ என்னாது ‘தொடர்மொழி’ என்றதனான், இப் பலவென்பது நீளும்வழி வருமொழியாவது சிலவென்பதே என்று கொள்ளப்படும். ‘செய்யுளான’ என்னாது ‘செய்யுள் கண்ணிய தொடர்மொழி யான’ என்றதனான், பல என்னும் மொழியீறு நீண்டவழி நிலைமொழி அகரப் பேறும் வருமொழி ஞகார மெல்லெழுத்துப் பேறும், வருமொழியீறு நீண்டவழி அகரப்பேறும் மகரமாகிய மெல்லெழுத்துப் பேறும் கொள்க. ‘உண்டு’ என்னாது ‘உள’ என்றதனான், சிலவென்னும் வருமொழி யிறுதி நீடலும் கொள்க. உ-ம்: ‘பலாஅஞ் சிலாஅ மென்மனார் புலவர்’ எனவரும். இதன் சொல்நிலை பலசில என்னும் செவ்வெண். (அகரம் சாரியை.) (11) 215. தொடர லிறுதி தம்முற் றாம்வரின் லகரம் றகரவொற் றாதலு முரித்தே. இது, பல சில என்பவற்றிற்கு இயல்பேயன்றித் திரிபும் உண்டென எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) தொடரல் இறுதித் தம்முன் தாம்வரின் - தொடர் மொழியல்லாத ஈரெழுத் தொருமொழியாகிய பல சில என்னும் அகரவீற்றுச் சொல் தம்முன்னே தாம்வரின், லகரம் றகர ஒற்று ஆதலும் உரித்து - தம் ஈற்றில் நின்ற லகரவொற்று றகர வொற்றாய்த் திரிந்து முடிதலும் உரித்து. உ-ம்: பற்பல கொண்டான் எனவும், சிற்சில வித்தி எனவும் வரும். ‘தன்முற்றான்’ என ஒருமையாற் கூறாது ‘தம்முற்றாம்வரின்’ என்ற பன்மையான், மேற் பல சில என நின்ற இரண்டும் தழுவப் பட்டன. ‘தொடர லிறுதி தம்முன் வரின்’ என்னாது ‘தாம்’ என்றதனான், இம் முடிபின்கண் பலவென்பதன்முன் பல வருக, சிலவென்பதன் முன் சில வருக என்பது கொள்ளப்பட்டது. ‘லகரம் றகரமாம்’ என்னாது ‘லகரம் றகர வொற்றாம்’ என்ற ஞாபகத்தான், அகரம் கெடுமென்றாராகக் கொள்க. அருத்தாபத்தி முகத்தால், தம்முன் தாம்வரின் லகரம் றகர வொற்றா மெனவே, தம்முன் பிற வந்தவிடத்து லகரம் றகரவொற் றாகாது அகரம் கெடுமென்பது கொள்ளப்படும். ‘பல்படை’ பல்யானை, சில்படை, சில்வேள்வி என வரும். ‘தொடர லிறுதி’ என்பது சுட்டல்லது ஓரெழுத்தொரு மொழி அகரமின்மையின், ஓரெழுத் தொருமொழிமேற் செல்லா தாயிற்று. உரித்தென்றது, அகரவீற்றொருமை பற்றி. ஸஏகாரம் ஈற்றசை] (12) 216. வல்லெழுத் தியற்கை யுறழத் தோன்றும். இதுவும், மேற்கூறிய இரண்டற்கும் இன்னும் ஒரு முடிபு வேற்றுமை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வல் எழுத்து இயற்கை உறழத்தோன்றும் - மேற்கூறிய பல சில என்னும் இரண்டற்கும் அகரவீற்றுப் பொதுவிதியிற் கூறிய வல்லெழுத்து மிகுதியது இயல்பு, மிகுதலும் மிகாமையுமாகி உறழ்ந்துவரத் தோன்றும். உ-ம்: பலப்பல; சிலச்சில; பலபல, சிலசில என வரும். ஈண்டும் தம்முன் தாம் வருதல் கொள்க. ‘இயற்கை’ என்றதனான் முன்கூறிய பற்பல, சிற்சில என்னும் முடிபோடு பல்பல, சில்சில என்னும் முடிபுபெற்று உறழ்ச்சியாதல் கொள்க. ‘தோன்றும்’ என்றதனான், அகரம் கெட லகரம் ஆய்தமும் மெல் லெழுத்துமாய்த் திரிந்து முடிதல் கொள்க. உ-ம்: பஃறானை, பன்மரம்; சிஃறாழிசை, சின்னூல் என வரும். (13) 217. வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே. இஃது, அகர ஈற்றுப் பெயர்க்கு வன்கணத்தொடு வேற்றுமை முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) வேற்றுமைக்கண்ணும் அதன் ஓர் அற்று - அகர வீற்றுப்பெயர் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண்ணும் மேற்கூறிய (204) அல்வழியோடு ஒரு தன்மைத்தாய்க் க ச த ப முதல்மொழி வந்தவழி தத்தம் ஒற்று இடைமிக்கு முடியும். உ-ம்: இருவிளக்கொற்றன்; சாத்தன், தேவன், பூதன் என வரும். விளக்குறுமை எனக் குணவேற்றுமைக் கண்ணும் கொள்க. (இருவிள - ஓலை, வேணாட்டகத்து ஓர் ஊர்) (14) 218. மரப்பெயர்க் கிளவி மெல்லெழுத்து மிகுமே. இஃது, அகரவீற்று மரப்பெயர்க் கிளவிக்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று. (இ-ள்.) மரப்பெயர்க் கிளவி மெல்லெழுத்து மிகும் - அகரவீற்று மரப்பெயராகிய சொல் மெல்லெழுத்து மிக்கு முடியும். உ-ம்: விளங்கோடு, விளஞ்செதிள்; தோல், பூ என வரும். (15) 219. மகப்பெயர்க் கிளவிக் கின்னே சாரியை. இஃது, அவ்வீற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் நுதலிற்று. (இ-ள்.) மகப்பெயர்க் கிளவிக்கு இன்சாரியை - அகரவீற்று மக என்னும் பெயர்ச்சொல்லிற்கு வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் வரும் சாரியை இன். உ-ம்: மகவின்கை; செவி, தலை, புறம் என வரும். சாரியைப்பேறு வரையாது கூறியவழி நான்கு கணத்துக் கண்ணும் செல்லுமென்பதாகலின், மகவின்ஞாண் என இயல்பு கணத்துக்கண்ணும் கொள்க. (16) 220. அத்தவண் வரினும் வரைநிலை யின்றே. இதுவும் அது. (இ-ள்.) அத்து அவண் வரினும் வரை நிலை இன்று - மேற்கூறிய இன்னேயன்றி அத்து என்னும் சாரியை இயைபு வல்லெழுத்தினோடு அம் மக என்னும் சொல்லிடத்து வந்து முடியினும் நீக்கும் நிலைமை இன்று. உ-ம்: மகத்துக்கை; செவி, தலை, புறம் எனச் செய்கை அறிந்து முடிக்க. ‘அவண்’ என்றதனான், மகப்பால்யாடு என வல்லெழுத்துப் பேறும், மகவின்கை என மேல் இன்சாரியை பெற்றவழி இயைபு வல்லெழுத்து வீழ்வும், உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கண் வந்தவழி விளவின்கோடு என இயைபு வல்லெழுத்து வீழ்வும் கொள்க. ‘நிலை’ என்றதனான், மகம்பால் யாடு என மெல்லெழுத்துப் பேறும் கொள்க. (17) 221. பலவற் றிறுதி யுருபிய னிலையும். இஃது, அகரவீற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் நுதலிற்று. (இ-ள்.) பலவற்று இறுதி உருபு இயல் நிலையும் - பல என்னும் அகரவீற்றுச் சொல் உருபுபுணர்ச்சிக்கண் (175) வற்றுப் பெற்றுப் புணர்ந்த இயல்பின்கண்ணே நிற்கும். உ-ம்: பலவற்றுக்கோடு; செவி, தலை, புறம் என வரும். (18) 222. ஆகார விறுதி யகர வியற்றே. இஃது, ஆகார ஈற்றுப்பெயர் அல்வழிக்கண் முடியுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஆகார இறுதி அகர இயற்று - ஆகார வீற்றுப் பெயர் (அல் வழிக்கண்) அகர வீற்று அல்வழியது இயல்பிற்றாய் வல்லெழுத்துப் பெற்று முடியும் எ-று. உ-ம்: தாராக் கடிது; சிறிது, தீது, பெரிது என வரும். (19) 223. செய்யா வென்னும் வினையெஞ்சு கிளவியும் அவ்விய றிரியா தென்மனார் புலவர். இஃது, அவ்வீற்று வினைச்சொல் முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) செய்யா என்னும் வினை எஞ்சு கிளவியும் - (பெயரே யன்றி) செய்யா என்று சொல்லப்படும் ஆகாரவீற்று வினையெச்சச் சொல்லும், அ இயல் திரியாது என்மனார் புலவர் - வல்லெழுத்து மிக்கு முடியும் அவ்வியல்பின் திரியாதென்று சொல்லுவர் புலவர். உ-ம்: உண்ணாக் கொண்டான்; சென்றான், தந்தான், போயினான் என வரும். ‘திரியாது’ என்றதனான், ‘செய்யா’ என்னும் பெயரெச்சமும் அவ்வாறு முடியுமெனக் கொள்க. உண்ணாக் கொற்றன் என வரும். (20) 224. உம்மை யெஞ்சிய விருபெயர்த் தொகைமொழி மெய்ம்மை யாக வகர மிகுமே. இஃது, அவ்வீற்று அல்வழிக்கண் உம்மைத்தொகை முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) உம்மை எஞ்சிய இருபெயர்த் தொகைமொழி - உம்மை தொக்க இருபெயராகிய தொகைச்சொல், மெய்ம்மை யாக அகரம் மிகும் - மெய்யாக நிலைமொழியீற்று அகரம் மிக்கு முடியும். உ-ம்: உவாஅப் பதினான்கு. ‘மெய்ம்மையாக’ என்றதனான் வல்லெழுத்துக் கொடுக்க. ‘உம்மை தொக்க’ என்னாது ‘எஞ்சிய’ என்ற வாய்பாட்டு வேற்றுமையான், இம் முடிபு இருபெயரொட்டுப் பண்புத் தொகைக்கும் கொள்க. அராஅப் பாம்பு எனவரும். இன்னும் அதனான், எழுவாய் முடிபிற்கும் பெயரெச்சத் திற்கும் அகரப்பேறு கொள்க. உவாஅக் கொடிது; உவாஅக் காக்கை எனவரும். நிலைமொழி எழுத்துப்பேறு வருமொழி வரையாது கூறினவழி நான்கு கணத்துக்கண்ணும் செல்லுமாகலின், இயல்பு கணத்துக்கண்ணும் அகரப்பேறு கொள்க. இறாஅ வழுதுணங் காய் எனவரும். (21) 225. ஆவு மாவும் விளிப்பெயர்க் கிளவியும் யாவென் வினாவும் பலவற் றிறுதியும் ஏவல் குறித்த வுரையசை மியாவும் தன்றொழி லுரைக்கும் வினாவின் கிளவியோ டன்றி யனைத்து மியல்பென மொழிப. இஃது, அவ் வீற்றிற் சிலவற்றிற்கு இயல்புகூறி எய்தியது விலக்குதலும், எய்தாதது எய்துவித்தலும் நுதலிற்று. (இ-ள்.) ஆவும் மாவும் விளிப்பெயர்க் கிளவியும் - ஆ என்னும் பெயர்ச்சொல்லும் மா என்னும் பெயர்ச்சொல்லும் விளித்தலையுடைய பெயராகிய உயர்திணைச்சொல்லும், யா என் வினாவும் பலவற்று இறுதியும் - யா என்னும் வினாப் பெயரும் அஃறிணைப் பன்மைப் பொருளை உணர்த்தும் ஆகாரவீற்று முற்றுவினைச் சொல்லும், ஏவல் குறித்த உரையசை மியாவும் - முன்னிலையில் ஏவல் வினைச்சொல்லைக் குறித்து வரும் உரையசையாகிய மியா என்னும் ஆகாரவீற்று இடைச் சொல்லும், தன்தொழில் உரைக்கும் வினாவின் கிளவியோடு அன்றி அனைத்தும் - தனது தொழிலினைச் சொல்லும் ஆகார வினாவினையுடைய வினைச் சொல்லுமாகிய அவ்வனைத்தும், இயல்பு என மொழிப - இயல்பாய் முடியும் என்று சொல்லுவர் புலவர். உ-ம்: ஆ குறிது, சிறிது, தீது, பெரிது எனவும்; மா குறிது, சிறிது, தீது, பெரிது எனவும்; ஊரா கொள், செல், தா, போ எனவும்; யா குறிய, சிறிய, தீய, பெரிய எனவும்; உண்ணா குதிரை, செந்நாய், தகர், பன்றி எனவும்; கேண்மியா கொற்றா, சாத்தா, தேவா, பூதா எனவும்; உண்கா கொற்றா, சாத்தா, தேவா, பூதா எனவும் வரும். ‘விளிப்பெயர்க் கிளவியும்’, ‘பலவற்றிறுதியும்’, ‘ஏவல் குறித்த உரையசை மியாவும்’, ‘தன்தொழி லுரைக்கும் வினாவும்’ எய்தாதது எய்துவிக்கப்பட்டன. ஊரா கொள் என்பது ‘உயிரீறாகிய உயர்திணைப் பெயரென்பதனுள் அடங்காதோ வெனின், முன் (உயிர்மயங்கியல் 8) கூறிற்றே கூறுக. (22) 226. வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே. இஃது, அவ்வீற்று வேற்றுமை கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) வேற்றுமைக்கண்ணும் அதன் ஓர் அற்று - (ஆகார வீற்றுப்பெயர் அல்வழிக்கண்ணேயன்றி) வேற்றுமைக்கண்ணும் அகரவீற்று அல்வழியோடு ஒருதன்மைத்தாய் வல்லெழுத்து வந்தவழி வல்லெழுத்து மிக்குமுடியும். உ-ம்: தாராக்கால்; சிறகு, தலை, புறம் எனவரும். (23) 227. குறியதன் முன்னரு மோரெழுத்து மொழிக்கும் அறியத் தோன்று மகரக் கிளவி. இஃது, அவ்வீற்றின் சிலவற்றிற்கு எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) குறியதன் முன்னரும் ஓர் எழுத்து மொழிக்கும் - குற்றெழுத்தின் முன் நின்ற ஆகாரவீற்றிற்கும் ஓரெழுத் தொருமொழி ஆகாரவீற்றிற்கும், அகரக்கிளவி அறியத் தோன்றும் - (நிலைமொழிக்கண்) அகரமாகிய எழுத்து அறியத் தோன்றும். உ-ம்: பலாஅக்கோடு; செதிள், தோல், பூ எனவும்; காஅக்குறை, செய்கை, தலை, புறம் எனவும் வரும். ஓரெழுத்தொருமொழி முற்கூறாதவதனான், அதன்கண் அகரப்பேறு சிறுபான்மை யெனக் கொள்க. ‘அறிய’ என்றதனான், அவ் விருவழியும் அகரம் பொருந்திய வழியே வருதலும், அவ்வீற்று வேற்றுமையுள் எடுத்தோதாதவற்றின் முடிபும், இவ்வீற்றுள் உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கண் சென்ற வழி இயைபு வல்லெழுத்து வீழ்வும், இவ் வுயிரீற்றில் வரும் உருபீற்றுச் செய்கையும் கொள்க. உ-ம்: அண்ணாஅத்துக் குளம், உவாஅத்துஞான்று கொண்டான், உவாஅத்தாற் கொண்டான், யாவற்றுக்கோடு என இவை - பிறமுடிபு. மூங்காவின்றோ என்பது - வல்லெழுத்து வீழ்வு. இடாவினுட் கொண்டான் என்பது - உருபீற்றுச் செய்கை. (24) 228. இராவென் கிளவிக் ககர மில்லை. இஃது, அவ் அகரப்பேற்றிற்கு ஒருவழி எய்தியது விலக்குதல் நுதலிற்று. (இ-ள்.) இரா என் கிளவிக்கு அகரம் இல்லை - இரா என்னும் ஆகாரவீற்றுச் சொல்லிற்கு முன்கூறிய அகரப்பேறு இல்லை. உ-ம்: இராக்கொண்டான் என வரும். (25) 229. நிலாவென் கிளவி யத்தொடு சிவணும். இஃது, அவ்வீற்றுள் ஒருவழி அகரம் விலக்கி அத்துவருதல் நுதலிற்று. (இ-ள்.) நிலா என் கிளவி அத்தொடு சிவணும் - நிலா என்னும் சொல் அத்துச் சாரியையொடு பொருந்தி முடியும். உ-ம்: நிலாஅத்துக் கொண்டான்; சென்றான், தந்தான், போயினான் என வரும். நிலைமொழித் தொழில் வருமொழித் தொழிலை விலக்கு மாகலின், அத்து வகுப்ப அகரம் வீழ்ந்தது. (26) 230. யா மரக் கிளவியும் பிடாவுந் தளாவும் ஆமுப் பெயரு மெல்லெழுத்து மிகுமே. இஃது, அவ்வீற்றிற் சிலவற்றிற்கு வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்து விதித்தல் நுதலிற்று. (இ-ள்.) யாமரக் கிளவியும் பிடாவும் தளாவும் அ முப்பெயரும் - யா என்னும் மரத்தை உணரநின்ற சொல்லும் பிடா என்னும் சொல்லும் தளா என்னும் சொல்லுமாகிய அம் மூன்று பெயரும், மெல்லெழுத்து மிகும் - வல்லெழுத்து மிகாது மெல்லெழுத்து மிக்கு முடியும். உ-ம்: யாஅங்கோடு, பிடாஅங்கோடு, தளாஅங்கோடு; செதிள், தோல், பூ என வரும். மெல்லெழுத்துப்பேறு வருமொழித் தொழிலாதலின், வருமொழி வல்லெழுத்தை விலக்கிற்று. (27) 231. வல்லெழுத்து மிகினு மான மில்லை. இது, மேலனவற்றிற்கு வல்லெழுத்தும் சிறுபான்மை மிக்கு முடியும் என இறந்தது காத்தல் நுதலிற்று. (இ-ள்.) வல்லெழுத்து மிகினும் மானம் இல்லை - மேற்கூறிய மூன்று பெயரும் மெல்லெழுத்தேயன்றி வல்லெழுத்து மிக்கு முடியினும் குற்றம் இல்லை. உ-ம்: யாஅக்கோடு, பிடாஅக்கோடு, தளாஅக்கோடு; செதிள், தோல், பூ என வரும். ‘மானமில்லை’ என்றதனான், யா முதலிய மூன்றற்கும் உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கண் சென்றவழி, இயைபு வல்லெழுத்து வீழ்க்க. உ-ம்: யாஅவின்கோடு, பிடாஅவின்கோடு, தளாஅவின் கோடு என வரும். இன்னும் அதனானே, யாஅத்துக்கோடு எனச் சிறுபான்மை அத்துப்பேறுண்டேனும் கொள்க. அவ் வகரப் பேற்றோடு வல்லெழுத்துப் பெறுதலின். ‘யாமரக் கிளவி’ என்பதனைக் ‘குறியதன் முன்னரும்’ என்பதன்பின் வையாத இதனான், இராவிற் கொண்டான், நிலாவிற் கொண்டான் என உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கண் சென்றவழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க. நிலாவிற் கொண்டான் என்பதற்கு நிலாஅத்துக் கொண் டான் என்பது ஈற்றுப் பொது முடிபாயின வாறு அறிக. (28) 232. மாமரக் கிளவியு மாவு மாவும் ஆமுப் பெயரு மவற்றோ ரன்ன அகரம் வல்லெழுத் தவையவ ணிலையா னகர மொற்று மாவு மாவும். இஃது, அவ்வீற்றிற் சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) மாமரக்கிளவியும் ஆவும் மாவும் அ முப்பெயரும் அவற்று ஓர் அன்ன - மாமரமாகிய சொல்லும் ஆ என்னும் சொல்லும் மா என்னும் சொல்லுமாகிய அம் மூன்று பெயர்ச்சொல்லும் மேற்கூறிய (230) யா முதலிய மூன்றனொடும் ஒரு தன்மையவாய் வல்லெழுத்துப் பெறாது மெல்லெழுத்துப் பெற்று முடிதலுமுடைய, ஆவும் மாவும் அகரம் வல்லெழுத்து அவை அவண் நிலையா னகரம் ஒற்றும் - அவற்றுள் ஆவும் மாவும் முன்பெற்று நின்ற அகரமும் (227) வல்லெழுத்துமாகிய அவை அவ்விடத்து நிலைபெறாவாய் னகரம் ஒற்றாகப் பெற்று முடியும். உ-ம்: மாஅங்கோடு, செதிள், தோல், பூ எனவும்; ஆன்கோடு, மான்கோடு; செவி, தலை, புறம் எனவும் வரும். ‘அறிய’ (உயிர். 24) என்றதனான், சிறுபான்மை மாங்கோடு என அகரமின்றியும் வரும். இனி ‘அவண்’ என்றதனான் காயாங்கோடு, ஆணாங்கோடு, நுணாங்கோடு என்றாற்போலப் பிறவும் மெல்லெழுத்துப் பெறுதலும்; அங்காக் கொண்டான், இங்காக் கொண்டான், உங்காக் கொண்டான், எங்காக் கொண்டான் என இவ்வீற்று ஏழாம் வேற்றுமை இடப்பொருள் உணரநின்ற இடைச்சொற்கள் வல்லெழுத்துப் பெறுதலும்; ஆவின்கோடு, மாவின்கோடு எனச் சிறுபான்மை இன்பெறுதலும், பெற்றவழி வல்லெழுத்து வீழ்வும் கொள்க. ‘அவற்றோரன்ன’ என்ற மாட்டேற்றான் பெற்றுநின்றது மெல் லெழுத்தாகலின், ‘அகரம் வல்லெழுத் தவையவ ணிலையா’ என்று ஓதற் பாலதன்றெனின், மேல் “ஊவென் னொருபெய ராவொடு சிவணும்” (உயிர்மயங்கியல் 67) என்றவழி, அம் மாட்டேற்றானே அதன் வல்லெழுத்து வீழ்வும் கொளல் வேண்டித் ‘திரிந்த தன்றிரிபது’ என்னும் நயத்தானே மெல் லெழுத்தை வல்லெழுத்தாக ஓதினாரெனக் கொள்க. (29) 233. ஆனொற் றகரமொடு நிலையிட னுடைத்தே. இஃது, அவ்வீற்றுள் ஆ என்றதற்கு எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) ஆன் ஒற்று அகரமொடும் நிலைஇடன் உடைத்து - முன்பு பெற்றுநின்ற ஆன் என்னும் சொல்லினது னகரவொற்று அகரத்தொடும் நிற்கும் இடனுடைத்து. ‘இடனுடைத்து’ என்றதனான், வன்கணம் ஒழிந்த கணத்து இம் முடிபெனக் கொள்க. உ-ம்: ‘ஆனநெய் தெளித்து நான நீவி’ என வரும். ‘அகரமொடும்’ என்ற உம்மையான், அகரமின்றி வருதலே பெரும்பான்மை எனக் கொள்க. (30) 234. ஆன்முன் வரூஉ மீகார பகரம் தான்மிகத் தோன்றிக் குறுகலு முரித்தே. இஃது, இன்னும் ஆன் என்பதற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) ஆன்முன் வரும் ஈகாரப் பகரம் - ஆன் என்னும் சொல்முன்னர் வருமொழியாய் வருகின்ற ஈகாரத்தொடு கூடிய பகரமாகிய மொழி, தான் மிகத் தோன்றிக் குறுகலும் உரித்து - அப் பகரமாகிய தான் மிகத் தோன்றி அவ் வீகாரம் இகரமாகக் குறுகி முடிதலையும் உடைத்து. ‘தோன்றி’ என்றதனால், நிலைமொழிப் பேறாகிய னகர வொற்றின் கேடு கொள்க. உ-ம்: ஆப்பி என வரும். உம்மையான், ஆன்பீ என்பதே பெரும்பான்மையெனக் கொள்க. (31) 235. குறியத னிறுதிச் சினைகெட வுகரம் அறிய வருதல் செய்யுளு ளுரித்தே. இஃது, அவ்வீற்றிற் சிலவற்றிற்குச் செய்யுள் முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) குறியதன் இறுதிச் சினை கெட உகரம் அறிய வருதல் செய்யுளுள் உரித்து - குறியதன் இறுதிக்கண் நின்ற ஆகாரத்தினது சினையாகிய அகாரம் மாத்திரை கெட ஆண்டு உகரம் அறிய வருதல் செய்யுளிடத்து உரித்து. உ-ம்: “இறவுப் புறத்தன்ன பிணர்ப்படு தடவுமுதல்” (நற். 19) என வரும். ‘அறிய’ என்றதனான், உகரம்பெறாது சினைகெடுதலும் கொள்க. அரவணி கொடி என வரும். ‘பிணவுநாய் முடுக்கிய’ என்றாற்போல வரும் அல்வழிமுடிபு ‘கிளந்த வல்ல’ (குற்றியலுகர புணரியல் - 77) என்னும் புறனடைய தெனக் கொள்க. (32) 236. இகர விறுதிப் பெயர்நிலை முன்னர் வேற்றுமை யாயின் வல்லெழுத்து மிகுமே. இஃது, இகரவீற்றுப் பெயர்க்கு அல்வழி முடிபு தொகை மரபினுட் கூறி நின்றமையின் அதன் வேற்றுமை முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) இகர இறுதிப் பெயர்நிலை முன்னர் வேற்றுமை யாயின் வல்லெழுத்து மிகும் - இகரவீற்றுப் பெயர்ச்சொல் முன்னர் அதிகாரத்தாற் க ச த ப முதல் மொழி வந்தவழி வேற்றுமைப் பொருட் புணர்ச்சியாயின் தமக்குப் பொருந்தின வல்லெழுத்து மிக்கு முடியும். உ-ம்: கிளிக்கால்; சிறகு, தலை, புறம் என வரும். (33) 237. இனியணி யென்னுங் காலையு மிடனும் வினையெஞ்சு கிளவியுஞ் சுட்டு மன்ன. இஃது, இவ்வீற்றுள் சில இடைச்சொல்லும் வினைச் சொல்லும் முடியுமாறு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) இனி அணி என்னும் காலையும் இடனும் வினையெஞ்சு கிளவியும் சுட்டும் அன்ன - இனி என்றும் அணி என்றும் சொல்லப்படுகின்ற காலத்தையும் இடத்தையும் உணர நின்ற இடைச்சொல்லும், இவ் விகரவீற்று வினையெச்சமாகிய சொல்லும், இவ்வீற்றுச் சுட்டாகிய இடைச்சொல்லும், மேற்கூறிய வாறே வல்லெழுத்து மிக்கு முடியும் தன்மைய. உ-ம்: இனிக்கொண்டான், அணிக்கொண்டான்; சென்றான், தந்தான், போயினான் எனவும்; தேடிக்கொண்டான்; சென்றான், தந்தான், போயினான் எனவும்; இக்கொற்றன்; சாத்தன், தேவன், பூதன் எனவும் வரும். (34) 238. இன்றி யென்னும் வினையெஞ் சிறுதி நின்ற விகர முகர மாதல் தொன்றியன் மருங்கிற் செய்யுளு ளுரித்தே. இஃது, இவ்வீற்று வினையெச்சக் குறிப்பினுள் ஒன்றற்குச் செய்யுள் முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) இன்றி என்னும் வினையெஞ்சு இறுதி நின்ற இகரம் உகரம் ஆதல் - இன்றி என்று சொல்லப்படும் வினையெச்சத்து இறுதிக்கண் நின்ற இகரம் உகரமாய்த் திரிந்து முடிதல், தொன்று இயல் மருங்கின் செய்யுளுள் உரித்து - பழக நடந்த கூற்றையுடைய செய்யுள்களிடத்து உரித்து. உ-ம்: “உப்பின்று புற்கை யுண்கமா கொற்கை யோனே” என வரும். ‘நின்ற’ என்றதனான், முன் பெற்றுநின்ற வல்லெழுத்து வீழ்க்க. ‘தொன்றியன் மருங்கு’ என்றதனான், அன்றி என்பதும் செய்யுளுள் இம் முடிபிற்றாதல் கொள்க. ‘நாளன்று போகிப் புள்ளிடை தட்ப’ (புறம் - 124) என வரும். (35) 239. சுட்டி னியற்கை முற்கிளந் தற்றே. இஃது, இவ்வீற்றுச் சுட்டுப்பெயர் இயல்புகணத்தொடு முடியுமாறு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) சுட்டின் இயற்கை முன்கிளந்த அற்று - இகர வீற்றுச் சுட்டினது இயல்பு இயல்புக்கணம் வரும்வழியும் உயிர்க்கணம் வரும் வழியும் முன் அகரவீற்றுச் சுட்டிற்குச் சொல்லப்பட்ட தன்மைத்தாம். என்றது மென்கணம் வரும்வழி அம் மெல்லெழுத்து மிக்கும் (உயிர்மயங்கியல் 3), இடைக்கணம் வரும்வழியும் உயிர்க்கணம் வரும் வழியும் நிலைமொழி வகரம் பெற்றும் (உயிர்மயங்கியல் 4,5), செய்யுட் கண் வகரம்கெட்டுச் சுட்டுநீண்டும் (உயிர்மயங்கியல் - 6) முடியும் என்றவாறு. உ-ம்: இஞ்ஞானம், இந்நூல், இம்மணி எனவும்; இவ்யாழ், இவ்வட்டு எனவும்; இவ்வடை, இவ்வாடை, இவ்வெளவியம் எனவும்; ஈவயினான எனவும் வரும். (36) 240. பதக்குமுன் வரினே தூணிக் கிளவி முதற்கிளந் தெடுத்த வேற்றுமை யியற்றே. இஃது, இவ்வீற்று அல்வழிகளில் அளவுப்பெயருள் ஒன்றற்கு மேல் தொகைமரபினுள் (சூத். 22) எய்திய ஏ என் சாரியை விலக்கி வேறு முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) பதக்கு முன் வரின் தூணிக்கிளவி முதல் கிளந்து எடுத்த வேற்றுமை இயற்று - பதக்கு என்னும் சொல் தன்முன் வரின் தூணி என்னும் சொல் முன்பு விதந்தெடுத்த வேற்றுமை முடிபின் இயல்பிற்றாய் வல்லெழுத்து மிக்கு முடியும். உ-ம்: தூணிப்பதக்கு என வரும். வருமொழி முற்கூறியவதனால், இருதூணிப்பதக்கு என அடையடுத்து வந்தவழியும் இவ்விதி கொள்க. ‘கிளந்தெடுத்த’ என்றதனான், தூணிமுன்னர்ப் பிற பொருட் பெயர் வந்தவழியும், ஆண்டு நிலைமொழி அடையடுத்து வந்தவழியும், தன் முன்னர்த் தான் வந்தவழியும் இம் முடிபு கொள்க. இன்னும், அதனானே, தன்முன்னர்த் தான் வந்தவழி இக்குச் சாரியைப்பேறும் கொள்க. உ-ம்: தூணிக்கொள், தூணிச்சாமை எனவும்; இரு தூணிக்கொள் எனவும்; தூணித்தூணி எனவும்; தூணிக்குத் தூணி எனவும் வரும். (37) 241. உரிவரு காலை நாழிக் கிளவி இறுதி யிகர மெய்யொடுங் கெடுமே டகார மொற்று மாவயி னான. இதுவும் அது. (இ-ள்.) உரி வரு காலை நாழிக்கிளவி இறுதி இகரம் மெய் யொடும் கெடும் - உரி என்னும் சொல் வருமொழியாய் வந்த காலத்து நாழி என்னும் சொல் தன் ஈற்றில் நின்ற இகரம் தான் ஊர்ந்து நின்ற மெய் யொடும் கெடும், அ வயின் டகாரம் ஒற்றும் - அவ்விடத்து டகரம் ஒற்றாய் வரும். உ-ம்: நாடுரி என வரும். வருமொழி முற்கூறியவதனான், நிலைமொழி அடை யடுத்து ‘இரு நாடுரி’ என்ற வழியும் இம் முடிபு கொள்க. ‘இகரம்’ என்னாது ‘இறுயிகரம்’ என்றதனான் ஈண்டை நிலை மொழியும் வருமொழியும் நிலைமொழிகளாய் நின்று பிற பொருட் பெயரொடு வல்லெழுத்து மிக்கு முடிதலும் கொள்க. நாழிக்காயம், உரிக்காயம் என வரும். (38) 242. பனியென வரூஉங் கால வேற்றுமைக் கத்து மின்னுஞ் சாரியை யாகும். இஃது, இவ் வீற்று வேற்றுமையுள் ஒன்றற்கு வல்லெழுத்தி னொடு சாரியை பெறுமென எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) பனி என வரும் கால வேற்றுமைக்கு அத்தும் இன்னும் சாரியை ஆகும் - பனி என்று சொல்ல வருகின்ற பனிக்காலத்தை உணர நின்ற வேற்றுமை முடிபுடைய பெயர்க்கு வரும் சாரியை அத்தும் இன்னும் ஆகும். உ-ம்: பனியத்துக் கொண்டான், பனியிற் கொண்டான்; சென்றான், தந்தான், போயினான் என வரும். ‘வேற்றுமை’ என்றதனான், இன் பெற்றவழி இயைபு வல்லெழுத்தை வீழ்க்க. (39) 243. வளியென வரூஉம் பூதக் கிளவியும் அவ்விய னிலையல் செவ்வி தென்ப. இதுவும் அது. (இ-ள்.) வளி எனவரும் பூதக் கிளவியும் அ இயல் நிலையல் செவ்விது என்ப - வளி என்று சொல்ல வருகின்ற இடக்கரல்லாத ஐம்பெரும் பூதங்களில் ஒன்றை உணர நின்ற சொல்லும் மேற்கூறிய அத்தும் இன்னும் பெறும் அவ் வியல்பின்கண் நிற்றல் செவ்விதென்று சொல்லுவர் புலவர். உ-ம்: வளியத்துக் கொண்டான், வளியிற் கொண்டான்; சென்றான், தந்தான், போயினான் என வரும். ‘செவ்விது’ என்றதனான், இன்பெற்றுழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க. (40) 244. உதிமரக் கிளவி மெல்லெழுத்து மிகுமே. இஃது, இவ் வீற்று மரப்பெயர் ஒன்றற்கு வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்து விதித்தல் நுதலிற்று. (இ-ள்.) உதிமரக் கிளவி மெல்லெழுத்து மிகும் - உதி என்னும் மரத்தினை உணர நின்ற சொல் வல்லெழுத்து மிகாது மெல்லெழுத்து மிக்கு முடியும். உ-ம்: உதிங்கோடு; செதிள், தோல், பூ என வரும். (41) 245. புளிமரக் கிளவிக் கம்மே சாரியை. இஃது, இவ் வீற்று மரப்பெயர் ஒன்றற்கு மேல் எய்திய வல்லெழுத்து விலக்கிச் சாரியை விதித்தல் நுதலிற்று. (இ-ள்.) புளிமரக் கிளவிக்கு சாரியை அம் - புளி என்னும் மரத்தினை உணர நின்ற சொல்லிற்கு வரும் சாரியை அம்முச் சாரியை. உ-ம்: புளியங்கோடு; செதிள், தோல், பூ என வரும். சாரியைப்பேற்றிடை எழுத்துப்பேறு கூறியவதனான், அம்முப் பெற்றவழி இயைபு வல்லெழுத்து (236) வீழ்க்க. (42) 246. ஏனைப் புளிப்பெயர் மெல்லெழுத்து மிகுமே. இஃது, அம் மரப்பெயரல்லாத புளிப்பெயர்க்கு வேறு முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) ஏனை புளிப்பெயர் மெல்லெழுத்து மிகும் - அம் மரப் பெயரன்றி ஒழிந்த சுவைப்புளி உணரநின்ற பெயர் வல்லெழுத்து மிகாது மெல்லெழுத்து மிக்கு முடியும். உ-ம்: புளிங்கூழ்; சோறு, தயிர், பாளிதம் என வரும். (43) 247. வல்லெழுத்து மிகினு மான மில்லை ஒல்வழி யறிதல் வழக்கத் தான. இஃது, மேலதற்கு வல்லெழுத்து மிகுமென எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) வல்லெழுத்து மிகினும் மானம் இல்லை - ஏனைப் புளிப்பெயர்முன் எய்திய மெல்லெழுத்தேயன்றி வல்லெழுத்து மிக்குமுடியினும் குற்றம் இல்லை. ஒல்வழி அறிதல் வழக்கத்தான - பொருந்தும் இடமறிக வழக்கிடத்து. உ-ம்: புளிக்கூழ்; சோறு, தயிர், பாளிதம் என வரும். ‘ஒல்வழி யறிதல்’ என்றதனான், புளிச்சோறு என்றதுபோல மற்றையவை வழக்குப் பயிற்சி இலவென்பதும் கொள்க. ‘வழக்கத் தான’ என்றதனான், இவ்வீற்றுள் எடுத்தோத்தும் இலேசும் இல்லாதனவற்றின் முடிபு வேற்றுமையெல்லாம் கொள்க. கூதாளங்கோடு எனவும், கணவிரங்கோடு எனவும், துளியத்துக் கொண்டான் எனவும், பருத்திக்குச் சென்றான் எனவும், கப்பி தந்தை கப்பிந்தை எனவும், கட்டி அகல் கட்டகல் எனவும், குளிகுறுமை குளிக்குறுமை எனவும், இன்னினிக் கொண்டான் அண்ணணிக் கொண்டான் எனவும், ‘புளிங்காய்’ (ஐங்குறு. - 51) எனவும் வரும். இன்னும் அதனானே, இவ்வீற்றுள் உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கண் சென்றவழி, இயைபு வல்லெழுத்து வீழ்தலும் கொள்க. கிளியின்கால் என வரும். (44) 248. நாண்முற் றோன்றுந் தொழினிலைக் கிளவிக் கானிடை வருத லைய மின்றே. இஃது, இவ் வீற்றுட் சிலவற்றிற்குச் சாரியை விதித்தல் நுதலிற்று. (இ-ள்.) நாள் முன் தோன்றும் தொழில்நிலைக் கிளவிக்கு - இகரவீற்று நாட்பெயர்களின் முன்னர்த் தோன்றும் வினைச் சொல்லிற்கு, ஆன்இடை வருதல் ஐயம் இன்று - ஆன்சாரியை இடை வந்து முடிதல் ஐயம் இல்லை. உ-ம்: பரணியாற் கொண்டான்; சென்றான், தந்தான், போயினான் என வரும். `ஐய மின்று’ என்றதனான், இயைபு வல்லெழுத்து வீழ்க்க. (45) 249. திங்கண் முன்வரி னிக்கே சாரியை. இதுவும் அது. (இ-ள்.) திங்கள்முன் வரின் சாரியை இக்கு - திங்களை உணர நின்ற இகரவீற்றுப் பெயர்முன்னர்த் தொழில்நிலைக் கிளவி வரின் வரும் சாரியை இக்குச்சாரியை. உ-ம் ஆடிக்குக்கொண்டான், சென்றான், தந்தான், போயினான் என வரும். (46) 250. ஈகார விறுதி யாகார வியற்றே. இஃது, ஈகார வீற்றுப்பெயர் அல்வழியின்கண் முடியுமாறு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) ஈகார இறுதி ஆகார இயற்று - ஈகாரவீற்றுப் பெயர் அல்வழிக்கண் ஆகாரவீற்று அல்வழியின் இயல்பிற்றாய் வல்லெழுத்து வரும்வழி வல்லெழுத்து மிக்கு முடியும். உ-ம்: தீக்கடிது; சிறிது, தீது, பெரிது எனவரும். (47) 251. நீயென் பெயரு மிடக்கர்ப் பெயரும் மீயென மரீஇய விடம்வரை கிளவியும் ஆவயின் வல்லெழுத் தியற்கை யாகும். இஃது, இவ் வீற்றுட் சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிது முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) நீ என் பெயரும் இடக்கர்ப் பெயரும் மீ என மரீஇய இடம்வரை கிளவியும் - நீ என்னும் பெயரும் இடக்கர்ப் பெயராகிய (பீ என்னும்) ஈகாரவீற்றுப் பெயரும் மீ என்று சொல்ல வரூஉம் மருவாய் வழங்கின, ஓர் இடத்தினை வரைந்துணர்த்தும் சொல்லும், அ வயின் வல்லெழுத்து இயற்கை ஆகும் - மேல் இவ் வீற்றுட் கூறிய வல்லெழுத்துப் பெறாது இயல்பாய் முடியும். உ-ம்: நீ குறியை, சிறியை, தீயை, பெரியை எனவும்; பீ குறிது, சிறிது, தீது, பெரிது எனவும்; மீகண், செவி, தலை, புறம் எனவும் வரும். ‘நீ குறியை’ என்பது மேல் “அஃறிணை விரவுப்பெய ரியல்புமாருளவே” (தொகை. 13) என்றவழி அடங்காதோ வெனின், மேல் (254) வேற்றுமைக்கண் நின்கை எனத் திரிந்து முடிதலின் அடங்காதாயிற் றென்க. மீகண் என்பது அல்வழி முடிபன் றெனினும் இயல்பாதல் நோக்கி உடன்கூறப்பட்டது. (48) 252. இடம்வரை கிளவிமுன் வல்லெழுத்து மிகூஉம் உடனிலை மொழியு முளவென மொழிப. இது, மேற்கூறியவற்றுள் மீ என்பதற்கு வேறொரு முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) இடம்வரை கிளவிமுன் வல்லெழுத்து மிகூஉம் உடன் நிலைமொழியும் உள என மொழிப - இடத்தினை வரைந்துணர்த்தும் மீ என்னும் சொல்முன் இயல்பாய் முடிதலேயன்றி வல்லெழுத்து மிக்கு முடியும் தம்மில் இயைந்து நிற்றலையுடைய மொழிகளும் உளவென்று சொல்லுவர். உ-ம்: மீக்கோள், மீப்பல் என வரும். ‘உடனிலை’ என்றதனால், மீங்குழி, மீந்தோல் என மெல் லெழுத்துப் பெற்று முடிவனவும் கொள்க. (49) 253. வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே. இஃது, அவ் வீற்றுப்பெயர் வேற்றுமைக்கண் முடியுமாறு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) வேற்றுமைக்கண்ணும் அதன் ஓர் அற்று - ஈகார வீற்றுப் பெயர் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண்ணும் ஆகார வீற்று அல்வழியோடு ஒருதன்மைத்தாய் வல்லெழுத்து வந்தவழி வல்லெழுத்துப் பெற்று முடியும். உ-ம்: ஈக்கால், சிறகு, தலை, புறம் என வரும். (50) 254. நீயெ னொருபெய ருருபிய னிலையும் ஆவயின் வல்லெழுத் தியற்கை யாகும். இஃது, அவ் வீற்று வேற்றுமை முடிபினுள் ஒன்றற்கு வேறு முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) நீ என் ஒரு பெயர் உருபு இயல் நிலையும் - நீ என நின்ற ஒருபெயர் உருபுபுணர்ச்சிக்கண் நெடுமுதல் குறுகி னகர வொற்றுப் பெற்று முடிந்த இயல்பின்கண்ணே நின்று முடியும், அ வயின் வல்லெழுத்து இயற்கை ஆகும் - அவ்வாறு முடிந்தவிடத்து இயைபு வல்லெழுத்து மிகாது. உ-ம்: நின்கை; செவி, தலை, புறம் என வரும். (51) 255. உகர விறுதி யகர வியற்றே. இஃது, உகரவீற்றுப் பெயர் அல்வழிக்கண் முடியுமாறு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) உகர இறுதி அகர இயற்று - உகர வீற்றுப் பெயர் அல் வழிக்கண் அகரஈற்று அல்வழியின் இயல்பிற்றாய் வல்லெழுத்து வந்தவழி வல்லெழுத்து மிக்கு முடியும். உ-ம்: கடுக்குறிது; சிறிது, தீது, பெரிது எனவரும். (52) 256. சுட்டின் முன்னரு மத்தொழிற் றாகும். இஃது, இவ் வீற்றுச் சுட்டு வன்கணத்தொடு கூடி முடியு மாறு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) சுட்டின் முன்னரும் அ தொழிற்று ஆகும் - உகரவீற்றுச் சுட்டின் முன்னரும் வல்லெழுத்து வரும்வழி அவ் அகரவீற்று அல் வழியின் தொழிற்றாய் (205) வல்லெழுத்து மிக்கு முடியும். உ-ம்: உக்கொற்றன்; சாத்தன், தேவன், பூதன் என வரும். (53) 257. ஏனவை வரினே மேனிலை யியல்பே. இஃது, அவ் வீற்றுச் சுட்டு ஒழிந்த கணத்தொடு முடியு மாறு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) ஏனவை வரின் மேல் நிலை இயல்பு - உகரவீற்றுச் சுட்டின் முன் ஒழிந்த கணம் வருமொழியாக வரின் மேல் அகரவீற்றுச் சுட்டு முடிந்து நின்ற நிலைமையின் இயல்பை யுடையதாய் முடியும். உ-ம்: உஞ்ஞாண், உந்நூல், உம்மணி எனவும்; உவ்யாழ், உவ் வட்டு எனவும்; உவ்வடை, உவ்வாடை, உவ்வெளவியம் எனவும்; ஊவயினான எனவும் வரும். (54) 258. சுட்டுமுத லிறுதி யியல்பா கும்மே. இஃது, இவ் வீற்றுட் சிலவற்றிற்கு வல்லெழுத்து விலக்கி இயல்பு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) சுட்டு முதல் இறுதி இயல்பாகும் - சுட்டெழுத் தினை முதலாகவுடைய உகர வீற்றுப்பெயர் மேற்கூறிய வல்லெழுத்து மிகாது இயல்பாய் முடியும். உ-ம்: அதுகுறிது, இதுகுறிது, உதுகுறிது; சிறிது, தீது, பெரிது என வரும். (55) 259. அன்றுவரு காலை யாவா குதலும் ஐவரு காலை மெய்வரைந்து கெடுதலும் செய்யுண் மருங்கி னுரித்தென மொழிப. இஃது, இவ் வீற்றுச் சுட்டுமுதற் பெயர்க்கு ஒரு செய்யுள் முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) அன்று வருகாலை ஆ ஆகுதலும் - அதிகாரத்தான் நின்ற சுட்டுமுதல் உகரவீற்றுப் பெயர் அன்று என்னும் சொல் வருமொழியாய் வருங்காலத்து அவ் வுகரம் ஆகாரமாகித் திரிந்து முடிதலும், ஐ வருகாலை மெய் வரைந்து கெடுதலும் - ஐ என்னும் சாரியை இடைவந்து முடியுங் காலத்து அவ்வுகரம் தான் ஊர்ந்த மெய்யை ஒழித்துக் கெட்டு முடிதலும், செய்யுள் மருங்கின் உரித்து என மொழிப - அவ் விரு முடிபும் செய்யுட்கண் உரித்தென்று சொல்வர். உ-ம்: அதாஅன்றம்ம, இதாஅன்றம்ம, உதாஅன்றம்ம எனவும்; அதைமற்றம்ம, இதைமற்றம்ம, உதைமற்றம்ம எனவும் வரும். (56) 260. வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே. இஃது, இவ் வீற்றுப் பெயர் வேற்றுமைக்கண் முடியுமாறு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) வேற்றுமைக்கண்ணும் அதன் ஓர் அற்று - உகரவீற்றுப் பெயர் வேற்றுமைப்பொருட் புணர்ச்சிக்கண்ணும் அவ் வகர வீற்று (204) அல்வழியோடு ஒருதன்மைத்தாய் வல்லெழுத்து வந்தவழி வல்லெழுத்து மிக்கு முடியும். உ-ம்: கடுக்காய்; செதிள், தோல், பூ என வரும். (57) 261. எருவுஞ் செருவு மம்மொடு சிவணித் திரிபிட னுடைய தெரியுங் காலை அம்மின் மகரஞ் செருவயிற் கெடுமே தம்மொற்று மிகூஉம் வல்லெழுத் தியற்கை. இஃது, இவ் வீற்றுள் ஒன்றற்கு வல்லெழுத்து விலக்கிச் சாரியை விதியும், ஒன்றற்கு வல்லெழுத்தினொடு சாரியை விதியும் கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) எருவும் செருவும் அம்மொடு சிவணி திரிபு இடன் உடைய தெரியும் காலை - எரு என்னும் சொல்லும் செரு என்னும் சொல்லும் அம்முச்சாரியையொடு பொருந்தி முன் சொன்ன வேற்றுமைப் பொது விதியின் வேறுபட்டு முடியும் இடனுடைய ஆராயுங் காலத்து; அம்மின் மகரம் செருவயின் கெடும் - அவ் வம்முச் சாரியையது ஈற்றின் மகரம் செரு என்னும் சொல்லிடத்துக் கெட்டு முடியும்; வல்லெழுத்து இயற்கை தம் ஒற்று மிகூஉம் - அவ்வாறு கெட்டவிடத்துச் செரு என்பது வல்லெழுத்தாகிய இயல்பையுடைய தனது ஒற்று மிக்கு முடியும். உ-ம்: எருவங்குழி; சேறு, தாது, பூழி எனவும்; செருவக்களம், சேனை, தானை, பறை எனவும் வரும். ‘தெரியுங் காலை’ என்றதனான், எரு என்பதற்குச் சிறுபான்மை மெல்லெழுத்துப்பேறும், வல்லெழுத்துப்பேறும், செரு என்பதற்குச் சிறுபான்மை வல்லெழுத்துப்பேறும் கொள்க. எருங்குழி, எருக்குழி, செருக்களம் என வரும். ‘வல்லெழுத்தியற்கை’ என்றதனான், உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கண் சென்றவழி அவ் விருமொழிக்கும் அதிகார வல்லெழுத்து வீழ்வும் கொள்க. எருவின் கடுமை, செருவின் கடுமை என வரும். இன்னும் அதனானே, “அம்மொடு சிவணித் திரிபிட னுடைய” என வல்லெழுத்தின்கண்ணதாக வரைந்து கூறினமை யின், அம்முச் சாரியை இயல்புகணத்துக்கண் பெறுவன கொள்க. எருவ ஞாற்சி, செருவ ஞாற்சி என வரும். (58) 262. ழகர வுகர நீடிட னுடைத்தே உகரம் வருத லாவயி னான. இஃது, இவ் வீற்றின் சிலவற்றிற்குச் செய்யுளுள் எய்தியதன் மேல் சிறப்புவிதி கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) ழகர உகரம் நீடு இடன் உடைத்து - இவ் வீற்று மொழிகளுள் ழகரத்தொடு கூடிய உகரவீற்று மொழி அவ் வுகரம் ஊகாரமாய் நீண்டு முடியும் இடன் உடைத்து; அ வயின் உகரம் வருதல் - அவ்விடத்து உகரம் வந்து முடிக. ‘இடனுடைத்து’ என்றதனான், இது செய்யுளிடத்தெனக் கொள்க. உ-ம்: “பழூஉப்பல் லன்ன பருவுகிர்ப் பாவடி” என வரும். (59) 263. ஒடுமரக் கிளவி யுதிமர வியற்றே. இஃது, இவ் வீற்று மரப்பெயருள் ஒன்றற்கு வல்லெழுத்து விலக்கிப் பிறிதுவிதி கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) ஒடுமரக் கிளவி உதிமர இயற்று - ஒடு என்னும் மரத்தினை உணரநின்ற சொல் உதி என்னும் மரத்தின் இயல்பிற்றாய் மெல்லெழுத்துப் பெற்று முடியும். உ-ம்: ஒடுங்கோடு; செதிள், தோல், பூ என வரும். (60) 264. சுட்டுமுத லிறுதி யுருபிய னிலையும் ஒற்றிடை மிகாஅ வல்லெழுத் தியற்கை. இஃது, இவ் வீற்றுட் சிலவற்றிற்கு வல்லெழுத்து விலக்கிச் சாரியை வகுத்ல் நுதலிற்று. (இ-ள்.) சுட்டு முதல் இறுதி உருபு இயல் நிலையும் - சுட்டெழுத்தினை முதலாகவுடைய உகரவீற்றுச் சொற்கள் உருபு புணர்ச்சியிற் சொன்ன இயல்பிலே நின்று அன்சாரியை பெற்று உகரம் கெட்டு முடியும்; வல்லெழுத்து இயற்கை ஒற்று இடைமிகா - அவ்விடத்து வல்லெழுத்து இயற்கையாகிய ஒற்று இடைக்கண் மிகா. உ-ம்: அதன்கோடு, இதன்கோடு, உதன்கோடு; செதிள், தோல், பூ என வரும். ‘ஒற்று இடை மிகா’ என்றதனான், சாரியை வகுப்ப வல்லெழுத்து மிகாதென்பது பெற்றாம். ‘வல்லெழுத் தியற்கை’ என்றதனான், இவ் வீற்றுள் உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கண் சென்றவழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க. கடுவின்குறை, ஒடுவின்புறம் என வரும். (61) 265. ஊகார விறுதி யாகார வியற்றே. இஃது, ஊகாரவீற்றுப்பெயர் அல்வழிக்கண் முடியுமாறு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) ஊகார இறுதி ஆகார இயற்று - ஊகாரவீற்றுப் பெயர் அல் வழிக்கண் ஆகாரவீற்று அல்வழியின் இயல்பிற்றாய் வல்லெழுத்து வந்தவழி வல்லெழுத்து மிக்கு முடியும். உ-ம்: கொண்மூக்கடிது; சிறிது, தீது, பெரிது என வரும்.(62) 266. வினையெஞ்சு கிளவிக்கு முன்னிலை மொழிக்கும் நினையுங் காலை யவ்வகை வரையார். இஃது, இவ் வீற்று வினைச்சொற்கு முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) வினையெஞ்சு கிளவிக்கும் முன்னிலை மொழிக்கும் - ஊகாரவீற்று வினையெச்சமாகிய சொல்லிற்கும், முன்னிலை மொழி யாகிய வினைச்சொல்லிற்கும், நினையும்காலை அவ்வகை வரையார் - ஆராயுங் காலத்து அவ் வல்லெழுத்து மிக்கு முடியும் கூற்றினை நீக்கார் எ-று. உ-ம்: உண்ணூக் கொண்டான்; சென்றான், தந்தான், போயினான் எனவும்; கைதூக் கொற்றா; சாத்தா, தேவா, பூதா எனவும் வரும். ‘நினையுங் காலை’ என்றதனான், இவ்வீற்று உயர்திணைப் பெயர் அல்வழிக்கண் வல்லெழுத்து மிக்கு முடிவன கொள்க. ஆடூஉக்குறியன், மகடூஉக்குறியன் என வரும். (63) 267. வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே. இஃது, ஊகாரவீறு வேற்றுமைக்கண் முடியுமாறு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) வேற்றுமைக்கண்ணும் அதன் ஓர் அற்று - ஊகார வீறு வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண்ணும் அவ் வாகார வீற்று அல் வழியோடு ஒத்த இயல்பிற்றாய் வல்லெழுத்து வந்தவழி வல்லெழுத்து மிக்கு முடியும். உ-ம்: கொண்மூக்குழாம்; செலவு, தோற்றம், பறைவு என வரும். (64) 268. குற்றெழுத் திம்பரு மோரெழுத்து மொழிக்கும் நிற்றல் வேண்டு முகரக் கிளவி. இஃது, இவ் வீற்றிற் சிலவற்றிற்கு எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) குற்றெழுத்து இம்பரும் ஓர் எழுத்து மொழிக்கும் உகரக் கிளவி நிற்றல் வேண்டும் - குற்றெழுத்தின்பின் நின்ற ஊகாரவீற்று மொழிக்கும் ஓரெழுத்தொருமொழியாகிய ஊகார வீற்று மொழிக்கும் உகரமாகிய எழுத்து நிற்றலை வேண்டும். உ-ம்: உடூஉக்குறை, தூஉக்குறை; செய்கை, தலை, புறம் என வரும். ‘நிற்றல்’ என்றதனான் இவ்வீற்று உயர்திணைப்பெயர் வேற்றுமைக் கண் வல்லெழுத்து மிகுவனவும் கொள்க. ஆடூ உக்கை, மகடூஉக்கை; செவி, தலை, புறம் என வரும். (65) 269. பூவெ னொருபெய ராயியல் பின்றே ஆவயின் வல்லெழுத்து மிகுதலு முரித்தே. இஃது, அவ் வீற்றுள் ஒன்றற்கு உகரமும் வல்லெழுத்தும் விலக்கிப் பெரும்பான்மை மெல்லெழுத்தும் சிறுபான்மை வல்லெழுத்தும் பெறுமென எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் நுதலிற்று. (இ-ள்.) பூ என் ஒரு பெயர் அ இயல்பு இன்று - பூ என்னும் ஊகார வீற்றையுடைய ஒரு பெயர் மேற்சொன்ன உகரமும் வல்லெழுத்தும் பெற்று முடியும் அந்த இயல்பில்லாமையை உடைத்து; எனவே, வேறு ஓர் இயல்பிற்றாய் மெல்லெழுத்து மிக்கு முடியும். அ வயின் வல்லெழுத்து மிகுதலும் உரித்து - அவ்விடத்து ஆம் மெல்லெழுத்தே யன்றி வல்லெழுத்து மிக்கு முடிதலும் உரித்து. மெல்லெழுத்துப் பெறுமென்றது, உரையிற் கோடலாற் கொள்ளப் பட்டது. உ-ம்: பூங்கொடி, பூக்கொடி; செய்கை, தாமம், பந்து என வரும். (66) 270. ஊவெ னொருபெய ராவொடு சிவணும். இஃது, இன்னும் அவ் வீற்றுள் ஒன்றற்கு உகரமும் வல்லெழுத்தும் விலக்கி நிலைமொழி னகரம் பெறுமென எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் நுதலிற்று. (இ-ள்.) ஊ என் ஒரு பெயர் ஆவொடு சிவணும் - ஊ என்று சொல்லப்படும் ஊகாரவீற்i யுடைய ஒரு பெயர் ஆகார வீற்றின் ஆ என்னும் சொல்லொடு பொருந்தி, உகரமும் வல்லெழுத்தும் பெறாது நிலைமொழி னகர வொற்றுப் பெற்று முடியும். உ-ம்: ஊன்குறை; செய்கை, தலை, புறம் என வரும். (67) 71. அக்கென் சாரியை பெறுதலு முரித்தே தக்கவழி யறிதல் வழக்கத் தான. இஃது, இன்னும் அதற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) அக்கு என் சாரியை பெறுதலும் உரித்து - அதிகாரத்தான் நின்ற ஊ என்னும் பெயர் மேற்கூறிய னகரத்தோடு அக்கு என்னும் சாரியை பெற்று முடிதலும் உரித்து; வழக்கத்தான் தக்கவழி அறிதல் - வழக்கிடத்து அம் முடிபு தக்க இடம் அறிக. ‘தக்கவழி யறிதல்’ என்றதனால், சாரியை பெற்றவழி நிலைமொழி னகரம் விலக்குண்ணாது நிற்றலும், முன் (270) மாட்டேற்றான் விலக்குண்ட வல்லெழுத்துக் கெடாது நிற்றலும் கொள்க. உ-ம்: ஊனக்குறை; செய்கை, தலை, புறம் என வரும். ‘வழக்கத்தான’ என்றதனான், இவ்வீற்று உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கண் சென்றவழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க. கொண்மூவின் குழாம் என வரும். (68) 272. ஆடூஉ மகடூஉ வாயிரு பெயர்க்கும் இன்னிடை வரினு மான மில்லை. இஃது அவ் வீற்று உயர்திணைப் பெயர்க்கு முன் எய்திய வல்லெழுத்தே யன்றி, சாரியையும் பெறுமென எய்தியதன் மேற் சிறப்பு விதி கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) ஆடூஉ மகடூஉ அ இரு பெயர்க்கும் - ஆடூஉ மகடூஉ வாகிய அவ்விரண்டு பெயர்க்கும், இன் இடைவரினும் மானம் இல்லை - மேல் எய்திய (“குற்றெழுத் திம்பரும்’ உயிர்மயங்கியல் - 65) என்னும் சூத்திரத்தின் ‘நிற்றல்’ என்பதனான் வந்த வல்லெழுத்தேயன்றி இன்சாரியை இடைவரினும் குற்றம் இல்லை. உ-ம்: ஆடூஉவின்கை, மகடூஉவின்கை; செவி, தலை, புறம் என வரும். ‘மான மில்லை’ என்றதனான், இன் பெற்றவழி மேல் இலேசினா னெய்திய வல்லெழுத்து வீழ்க்க. (69) 273. எகர வொகரம் பெயர்க்கீ றாகா முன்னிலை மொழிய வென்மனார் புலவர் தேற்றமுஞ் சிறப்பு மல்வழி யான. இஃது, எகரவீற்றிற்கும் ஒகரவீற்றிற்கும் ஈறாகாத நிலையில் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) எகரம் ஒகரம் பெயர்க்கு ஈறு ஆகா - எகரமும் ஒகரமும் பெயர்ச்சொற்கு ஈறு ஆகா, முன்னிலை மொழிய என்மனார் புலவர் - வினைச்சொல்லுள் முன்னிலை மொழியிடத் தனவென்று சொல்லுவர் புலவர், தேற்றமும் சிறப்பும் அல்வழியான - தேற்றப் பொருண்மையின் வரும் இடைச்சொல் எகார வீறும் சிறப்புப் பொருண்மையின் வரும் இடைச்சொல் ஒகார வீறும் அல்லாதவிடத்து. உ-ம்: ஏஎ எனவும், ஓஒ எனவும் வரும். இவை முன்னிலை வினை. ஏஎ கொண்டான், ஓஒ கொண்டான். இவை இடைச் சொல். (70) 274. தேற்ற வெகரமுஞ் சிறப்பி னொவ்வும் மேற்கூ றியற்கை வல்லெழுத் துமிகா. இது, முன் ஈறாம் என்னப்பட்ட எகர ஒகர ஈற்று இடைச்சொற்கும், அவ் வீற்று முன்னிலை வினைச்சொற்கும் முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) தேற்ற எகரமும் சிறப்பின் ஒவ்வும் - தேற்றப் பொருண் மையில் வரும் எகரவீற்று இடைச்சொல்லும் சிறப்புப் பொருண்மையில் வரும் ஒகரவீற்று இடைச்சொல்லும், மேல் கூறு இயற்கை வல்லெழுத்து மிகா - மேலை முன்னிலை வினைச் சொற்குக் கூறப்படும் இயல்புடைய வல்லெழுத்து மிகாவாய் இயல்பாய் முடியும். ‘மேற்கூறியற்கை வல்லெழுத்து மிகா’ என்றதனான், ‘வந்தது (முன்னிலை வினை) கொண்டு வாராதது உணர்க’ என்னும் தந்திரவுத்தி வகையான் வல்லெழுத்து மிகுமென்பது கூறப்பட்டதாயிற்று. உ-ம்: யானேஎ கொண்டேன், நீயேஎ கொண்டாய், அவனேஎ கொண்டான் எனவும்; ஓஒகொண்டேன், ஓஒ கொண் டாய், ஓஒகொண்டான் எனவும் வரும். இவை இடைச்சொல். ஏஎக்கொற்றா, ஓஒக்கொற்றா; சாத்தா, தேவா, பூதா என இவை முன்னிலைவினை. ‘இயற்கை’ என்றதனான், அம் முன்னிலை வினைகளை அளபெடையாக நிறீஇக் கொள்க. (71) 275. ஏகார விறுதி யூகார வியற்றே. இஃது, ஏகாரவீற்று அல்வழி முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) ஏகார இறுதி ஊகார இயற்று - ஏகாரவீற்றுப் பெயர் அல்வழிக்கண் ஊகாரவீற்று அல்வழி இயல்பிற்றாய் வல்லெழுத்து வந்தவழி வல்லெழுத்து மிக்கு முடியும் எ-று. உ-ம்: சேக்கடிது; சிறிது, தீது, பெரிது என வரும். (72) 276. மாறுகொ ளெச்சமும் வினாவு மெண்ணும் கூறிய வல்லெழுத் தியற்கை யாகும். இஃது, அவ்வீற்று இடைச்சொற்கு முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) மாறுகொள் எச்சமும் வினாவும் எண்ணும் - மாறுபாடு கோடலையுடைய எச்சப் பொருண்மைக்கண் வரும் ஏகார வீற்று இடைச்சொல்லும், வினாப்பொருண்மைக்கண் வரும் ஏகார வீற்று இடைச்சொல்லும், எண்ணுப் பொருண்மைக் கண் வரும் ஏகார வீற்று இடைச் சொல்லும், கூறிய வல்லெழுத்து இயற்கை ஆகும் - மேற்கூறிய வல்லெழுத்துப் பெறாது இயல்பாய் முடியும். உ-ம்: யானே கொண்டேன், சென்றேன், தந்தேன், போயினேன் எனவும்; நீயே கொண்டாய், சென்றாய், தந்தாய், போயினாய் எனவும்; கொற்றனே சாத்துனே தேவனே பூதனே எனவும் வரும். ‘கூறிய’ என்றதனான், பிரிநிலைப் பொருண்மைக்கண்ணும், ஈற்றசைக்கண்ணும் வரும் ஏகாரங்களின் இயல்பு முடிபும் கொள்க. அவனே கொண்டான் என்பது - பிரிநிலை. ‘கடலே பாடெழுந் தொலிக்கும்’ என்பது - ஈற்றசை. (73) 277. வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே. இஃது, இவ்வீற்று வேற்றுமை முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) வேற்றுமைக்கண்ணும் அதன் ஓர் அற்று - ஏகார வீறு வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண்ணும் அவ்வூகார வீற்று (265) அல்வழியோடு ஒருதன்மைத்தாய் வல்லெழுத்து வந்தவழி வல்லெழுத்து மிக்கு முடியும். உ-ம்: வேக்குடம்; சாடி, தூதை, பானை என வரும். (74) 278. ஏயெ னிறுதிக் கெகரம் வருமே. இஃது, அவ் வீற்றிற்கு எய்தியதன்மேல் சிறப்பு விதி கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) ஏ என் இறுதிக்கு எகரம் வரும் - அவ் வேற்றுமைக்கண் ஏ என்னும் இறுதிக்கு எகரம் வரும். உ-ம்: ஏஎக்கொட்டில்; சாலை, துளை, புழை என வரும். ‘உரையிற்கோடல்’ என்பதனான், அவ் வெகரப்பேறு பொருந்தின வழிக் கொள்க. (75) 279. சேவென் மரப்பெய ரொடுமர வியற்றே. இஃது, அவ் வீற்றுள் ஒன்றற்கு வல்லெழுத்து விலக்கி மெல் லெழுத்து விதித்தல் நுதலிற்று. (இ-ள்.) சே என் மரப்பெயர் ஒடு மர இயற்று - சே என்னும் மரத்தினை உணரநின்ற பெயர் ஒடுமரத்தின் (263) இயல்பிற்றாய் மெல்லெழுத்து மிக்கு முடியும். உ-ம்: சேங்கோடு; செதிள், தோல், பூ என வரும். (76) 280. பெற்ற மாயின் முற்றவின் வேண்டும். இஃது, அம் மரப்பெயரல்லாத சே என்பதற்கு வேறு முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) பெற்றம் ஆயின் முற்ற இன் வேண்டும் - மேற்கூறிய சே என்பது பெற்றத்தினை உணரநின்ற பொழுதாயின் முடிய இன்சாரியை பெற்று முடிய வேண்டும். ‘முற்ற’ என்றதனான், இச் சே என்பது எடுத்தோத்தான் இன் பெற்றவழியும், அதுவே மரப்பெயராய் உருபிற்கு எய்திய சாரியை (இன்) பெற்றவழியும், பிறசொல் அவ்வாறு இன் பெற்றவழியும் இயைபு வல்லெழுத்து வீழ்க்க. உ-ம்: சேவின்கோடு; செவி, தலை, புறம் எனவும்; சேவின் கோடு, செதிள், தோல், பூ எனவும்; ஏவின் கடுமை, சிறுமை, தீமை, பெருமை எனவும் வரும். (77) 281. ஐகார இறுதிப் பெயர்நிலை முன்னர் வேற்றுமை யாயின் வல்லெழுத்து மிகுமே. இஃது, ஐகாரஈற்று அல்வழி முடிபு தொகைமரபினுட் (எ. 159) கூறி நின்றமையின், அதன் வேற்றுமை முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) ஐகார இறுதிப் பெயர்நிலை முன்னர் - ஐகார ஈற்றுப் பெயர்ச்சொல் முன்னர், வேற்றுமை ஆயின் வல்லெழுத்து மிகும் - அதிகாரத்தாற் க ச த ப முதல்மொழி வந்தவழி வேற்றுமைப் பொருட் புணர்ச்சியில் தமக்குப் பொருந்தின வல்லெழுத்து மிக்கு முடியும். உ-ம்: யானைக்கோடு; செவி, தலை, புறம் என வரும். (78) 282. சுட்டுமுதல் இறுதி உருபியல் நிலையும். இஃது, இவ் வீற்றுட் சுட்டு முதற்பெயர்க்கு வல்லெழுத் தொடு வற்று வகுத்தல் நுதலிற்று. (இ-ள்.) சுட்டு முதல் இறுதி உருபு இயல் நிலையும் - சுட்டெழுத் தினை முதலாகவுடைய ஐகாரவீற்றுப்பெயர் உருபு புணர்ச்சியிற் (178) கூறிய இயல்பின்கண்ணே நின்று ஐகாரம் கெடாதும் கெட்டும் வற்றுப்பெற்று முடியும். உ-ம்: அவையற்றுக்கோடு, இவையற்றுக்கோடு, உவை யற்றுக் கோடு; செவி, தலை, புறம் எனவும்; அவற்றுக் கோடு, இவற்றுக்கோடு, உவற்றுக்கோடு; செவி, தலை, புறம் எனவும் வரும். (79) 283. விசைமரக் கிளவியும் ஞெமையும் நமையும் அவைமுப் பெயருஞ் சேமர இயல. இஃது, இவ் வீற்றுள் மரப்பெயர் சிலவற்றிற்கு வேறு முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) விசைமரக்கிளவியும் ஞெமையும் நமையும் அவை முப்பெயரும் - விசை என்னும் மரத்தினை உணரநின்ற சொல்லும் ஞெமை என்னும் மரத்தினை உணரநின்ற சொல்லும் நமை என்னும் மரத்தினை உணரநின்ற சொல்லும் ஆகிய அம் மூன்று பெயரும், சேமர இயல - மேற்கூறிய வல்லெழுத்து மிகாது சே என்னும் மரத்தினது இயல்பினவாய் (279) மெல்லெழுத்து மிக்கு முடியும். உ-ம்: விசைங்கோடு, ஞெமைங்கோடு, நமைங்கோடு; செதிள், தோல், பூ என வரும். (80) 284. பனையு மரையு மாவிரைக் கிளவியும் நினையுங் காலை யம்மொடு சிவணும் ஐயெ னிறுதி யரைவரைந்து கெடுமே மெய்யவ ணொழிய என்மனார் புலவர். இதுவும் அது. (இ-ள்.) பனையும் அரையும் ஆவிரைக் கிளவியும் - பனை என்னும் சொல்லும் அரை என்னும் சொல்லும் ஆவிரை என்னும் சொல்லும், நினையுங்காலை அம்மொடு சிவணும் - ஆராயுங் காலத்து மேற்கூறிய வல்லெழுத்து மிகாது, அம் என்னும் சாரியையொடு பொருந்தி முடியும், ஐ என் இறுதி அரை வரைந்து கெடும் - அவ்விடத்து ஐ என்னும் ஈறு அரை என்னும் சொல்லை நீக்கிக் (ஏனையிரண்டிலும்) கெடும், மெய் அவண் ஒழிய என்மனார் புலவர் - தன்னானூரப்பட்ட மெய் அச் சொல்லிடத்தே ஒழியவென்று சொல்லுவர் புலவர். உ-ம்: பனங்காய், செதிள், தோல், பூ எனவும்; அரையங் கோடு; செதிள், தோல், பூ எனவும்; ஆவிரங்கோடு, செதிள், தோல், பூ எனவும் வரும். ‘நினையுங் காலை’ என்றதனான் பிறவும் தூதுணை, வழுதுணை, தில்லை, ஓலை என வருவனவற்றிற்கும் அம்முக் கொடுத்து ஐகாரம் கெடுத்துத் தூதுணங்காய், வழுதுணங்காய், தில்லங்காய், ஓலம்போழ் என்று முடிக்க. (81) 285. பனையின் முன்ன ரட்டுவரு காலை நிலையின் றாகு மையெ னுயிரே ஆகாரம் வருத லாவயி னான. இதுவும் அது. (இ-ள்.) பனையின் முன்னர் அட்டு வருகாலை - மேற்கூறிய வழியேயன்றிப் பனை என்னும் சொல்லின் முன்னர் அட்டு என்னும் சொல் வருமொழியாய் வருங்காலத்து, நிலை இன்றாகும் ஐ என் உயிர் - நிற்றல் இன்றாம் ஐ என்னும் உயிர்; அ வயினான ஆகாரம் வருதல் - அவ்விடத்து ஆகாரம் வந்து அம் மெய்மேல் ஏறி முடிக. உ-ம்: பனாஅட்டு என வரும். ‘ஆவயின்’ என்றதனான், விச்சாவாதி என்றாற்போல்வன வற்றது வேற்றுமை முடிபு கொள்க. (82) 286. கொடிமுன் வரினே பையவ ணிற்பக் கடிநிலை யின்றே வல்லெழுத்து மிகுதி. இதுவும் அது. (இ-ள்.) கொடிமுன் வரின் - கொடி என்னும் சொல் பனை என்னும் சொல்முன்னர் வரின், ஐ அவண் நிற்ப வல்லெழுத்து மிகுதி கடிநிலை இன்று மேற்கெடும் எனப்பட்ட ஐகாரம் ஆண்டுக் கெடாதே நிற்ப, வல்லெழுத்து மிகுதி நீக்கும் நிலைமையின்று. உ-ம்: பனைக்கொடி என வரும். ‘கடிநிலை’ என்றதனான், இவ் வீற்றுள் எடுத்தோத்தானும் இலேசினானும் அம்முச்சாரியையும் பிற சாரியையும் பெற்றவழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க. இன்னும் இதனானே, உருபிற்குச் சென்ற சாரியை பொருட்குச் சென்றவழியும் இயைபு வல்லெழுத்து வீழ்க்க. உ-ம்: பனையின் காய், அரையின்கோடு, ஆவிரையின் கோடு எனவும்; விசையின்கோடு, ஞெமையின் கோடு, நமையின் கோடு எனவும்; தூதுணையின்காய், வழுதுணையின்காய் எனவும்; வழையின் கோடு, வழையின் பூ எனவும் வரும். ‘அவண்’ என்றதனான், பனைத்திரள் என வல்லெழுத்துப் பேறும் பனைந்திரள் என்ற மெல்லெழுத்துப் பேறும் கொள்க. (83) 287. திங்களு நாளு முந்துகிளந் தன்ன. இஃது, இயைபு வல்லெழுத்தினொடு சாரியைப்பேறும், வல்லெழுத்து விலக்கிச் சாரியைப்பேறும் கூறுகின்றமையின், எய்தியதன் மேற் சிறப்பு விதியும், எய்தியது விலக்கிப் பிறிது விதியும் வகுத்தல் நுதலிற்று. (இ-ள்.) திங்களும் நாளும் முந்து கிளந்தன்ன - ஐகார வீற்றுத் திங்களை உணரநின்ற பெயரும் அவ் வீற்று நாளை உணர நின்ற பெயரும் முன் இகர ஈற்றுத் திங்களும் நாளும் கிளந்த தன்மையவாய் இக்கும் ஆனும் பெற்று முடியும். உ-ம்: சித்திரைக்குக் கொண்டான்; கேட்டையாற் கொண்டான்; சென்றான், தந்தான், போயினான் என வரும். நாள் முன்கூறாது திங்கள் முன்கூறியவதனால், கரியவற்றுக் கோடு எனவும்; அவையத்துக் கொண்டான் எனவும்; வழைங் கோடு, வழைக் கோடு எனவும்; கலைங்கோடு, கலைக்கோடு எனவும் இவ்வீற்று முடியா தனவெல்லாம் கொள்க. (84) 288. மழையென் கிளவி வளியிய னிலையும். இஃது, இயைபு வல்லெழுத்தினோடு அத்துப்பேறும், வல்லெழுத்து விலக்கி இன்னும் வகுக்கின்றமையின், எய்திய தன்மேற் சிறப்பும், எய்தியது விலக்கிப் பிறிதுவிதியும் கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) மழை என் கிளவி வளி இயல் நிலையும் - மழை என்னும் ஐகாரவீற்றுச்சொல், இகரவீற்று வளி என்னும் சொல் (243) அத்தும் இன்னும் பெற்று முடிந்த இயல்பின்கண்ணே நின்று முடியும். உ-ம்: மழையத்துக் கொண்டான், மழையிற் கொண்டான்; சென்றான், தந்தான், போயினான் என வரும். (85) 289. செய்யுண் மருங்கின் வேட்கை யென்னும் ஐயெ னிறுதி யவாமுன் வரினே மெய்யொடுங் கெடுத லென்மனார் புலவர் டகார ணகார மாதல் வேண்டும். இஃது, இவ் வீற்றுள் ஒன்றற்கு அல்வழிக்கண் செய்யுள் முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) செய்யுள் மருங்கின் வேட்கை என்னும் ஐ என் இறுதி - செய்யுளிடத்து அல்வழிக்கண் வேட்கை என்னும் ஐகார வீற்றுச்சொல், அவா முன்வரின் - அவா என்னும் சொல் தனக்கு முன்வரின், மெய்யொடும் கெடுதல் என்மனார் புலவர் - அவ் வைகாரம் தான் ஊர்ந்த மெய்யொடுங்கூடக் கெடுகவென்று சொல்லுவர் புலவர்; டகாரம் ணகாரம் ஆதல் வேண்டும் - அவ்விடத்து நின்ற டகாரவொற்று ணகார வொற்றாய்த் திரிந்து முடிதல் வேண்டும். உ-ம்: “வேணவா நலிய வெய்ய வுயிரா” (நற். 61) என வரும். இதனை உம்மைத்தொகையாகக் கொள்க. அவாவென்பது அவ் வேட்கையின் மிகுதி. இவ் வல்வழியை வேற்றுமை முடிபிற்கு முன் கூறாததனான், விச்சாவாதி என்றாற்போல வரும் உம்மைத்தொகை அல்வழி முடிபும், பாறங்கல் என இருபெயரொட்டு அல்வழி முடிபும் கொள்க. (86) 290. ஓகார விறுதி யேகார வியற்றே. இஃது, ஓகாரவீற்று அல்வழி முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) ஓகார இறுதி ஏகார இயற்று - ஓகாரவீற்று அல்வழிப் பெயர்ச்சொல் ஏகாரவீற்று (275) அல்வழி இயல் பிற்றாய் வல்லெழுத்து வந்தவழி வல்லெழுத்து மிக்குமுடியும். உ-ம்: ஓக்கடிது; சிறிது, தீது, பெரிது என வரும். (87) 291. மாறுகொ ளெச்சமும் வினாவு மையமும் கூறிய வல்லெழுத் தியற்கை யாகும். இஃது, இவ்வீற்று இடைச்சொல் முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) மாறுகொள் எச்சமும் வினாவும் ஐயமும் - மாறு பாட்டினைக் கொண்ட எச்சப்பொருண்மையினையுடைய ஓகாரமும், வினாப் பொருண்மையை யுடைய ஓகாரமும், ஐயப்பொருண்மையினையுடைய ஓகாரமும், கூறிய வல்லெழுத்து இயற்கை ஆகும் - முன் பெயர்க்குக் கூறிய வல்லெழுத்தின்றி இயல்பாய் முடியும். உ-ம்: யானோகொண்டேன் எனவும், நீயோ கொண்டாய் எனவும், பத்தோ பதினொன்றோ எனவும் வரும். ‘கூறிய’ என்றதனான், பிரிநிலையும், தெரிநிலையும், சிறப்பும், எண்ணும், ஈற்றசையும் இயல்பாய் முடிதல் கொள்க. அவனோகொண்டான் எனவும், நன்றோ தீதோவன்று எனவும், ஓஒ கொண்டான் எனவும், “குன்றுறழ்ந்த களிறென்கோ கொய்யுளைய மாவென்கோ” (புறம். 387) எனவும் ‘யானோ தேறேன்’ (குறுந். 21) எனவும் வரும். (88) 292. ஒழிந்தத னிலையு மொழிந்தவற் றியற்றே. இதுவும் அது. (இ-ள்.) ஒழிந்ததன் நிலையும் ஒழிந்தவற்று இயற்று - ஒழியிசை ஓகாரத்தினது நிலையும் மேற்சொல்லியொழிந்த ஓகாரங்களின் இயல்பிற்றாய் இயல்பாய் முடியும். உ-ம்: கொளலோ கொண்டான் என வரும். (89) 293. வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே ஒகரம் வருத லாவயி னான. இஃது, அவ் வீற்று வேற்றுமை முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) வேற்றுமைக்கண்ணும் அதன் ஓர் அற்று - ஓகார வீறு வேற்றுமைக்கண்ணும் அவ் வோகாரவீற்று (290) அல்வழியோ டொத்து வல்லெழுத்துப் பெற்றுப் புணரும்; அ வயினான ஒகரம் வருதல் - அவ்விடத்து ஒகரம் வருக. உ-ம்: ஓஒக்கடுமை; சிறுமை, தீமை, பெருமை என வரும். (90) 294. இல்லொடு கிளப்பி னியற்கை யாகும். இஃது, எய்தியது ஒருமருங்கு மறுத்தல் நுதலிற்று. (இ-ள்.) இல்லொடு கிளப்பின் இயற்கை ஆகும் - ஓகார வீற்றுக் கோ என்னும் மொழியினை இல் என்னும் வரு மொழியொடு சொல்லின் ஓகாரம் மிகாது இயல்பாய் முடியும். உ-ம்: கோயில் என வரும். நிலைமொழி ஒகரவெழுத்துப்பேறு வரையாது கூறினவழி நான்கு கணத்துக்கண்ணும் செல்லுமென்பது இதனாற் பெற்றாம். கோவென்றது உயர்திணைப் பெயரன்றோவெனின், கோவந்தது என அஃறிணையாய் முடிதலின் அஃறிணைப்பாற் பட்டது போலும். (91) 295. உருபிய னிலையு மொழியுமா ருளவே ஆவயின் வல்லெழுத் தியற்கை யாகும். இஃது, அவற்றிற் சிலவற்றிற்கு வல்லெழுத்து விலக்கிச் சாரியை வகுத்தமையின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) உருபுஇயல் நிலையும் மொழியுமார் உள - அவ் வீற்றுட் சில உருபு புணர்ச்சியது இயல்பிலே நின்று ஒன்சாரியை பெற்று முடியும் மொழிகளும் உள; அ வயின் வல்லெழுத்து இயற்கை ஆகும் - அவ்விடத்து வல்லெழுத்தின்றி இயல்பாய் முடியும். உ-ம்: கோஒன்கை; செவி, தலை, புறம் என வரும். இதனானும் பெற்றாம், சாரியைப்பேறு வருமொழி வல்லெழுத்து விலக்காமை. (92) 296. ஒளகார விறுதிப் பெயர்நிலை முன்னர் அல்வழி யானும் வேற்றுமைக் கண்ணும் வல்லெழுத்து மிகுதல் வரைநிலை யின்றே அவ்விரு வீற்றும் உகரம் வருதல் செவ்வி தென்ப சிறந்திசி னோரே. இஃது, ஒளகார ஈறு அல்வழிக்கண்ணும் வேற்றுமைக் கண்ணும் முடியுமாறு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) ஒளகார இறுதி பெயர்நிலை முன்னர் அல்வழியானும் வேற்றுமைக்கண்ணும் வல்லெழுத்து மிகுதல் வரைநிலை இன்று - ஒளகாரவீற்றுப் பெயர்ச்சொல் முன்னர் வல்லெழுத்து முதல்மொழி வரின் அவை அல்வழிக்கண்ணும் வேற்றுமைக்கண்ணும் வல்லெழுத்து மிக்கு முடிதல் நீக்கும் நிலையின்றாம்; அ இரு வீற்றும் உகரம் வருதல் செவ்விது என்ப சிறந்திசினோர் - அவ் விருகூற்று முடிபின்கண்ணும் நிலை மொழிக் கண் உகரம் வந்து முடிதல் செவ்விதென்று சொல்லுவர் சிறந்தோர். உ-ம்: கௌவுக்கடிது; சிறிது, தீது, பெரிது எனவும்; கௌவுக் கடுமை; சிறுமை, தீமை, பெருமை எனவும் வரும். ‘செவ்விது’ என்றதனான், மென்கணத்துக்கண்ணும் இடைக் கணத்துக்கண்ணும் இருவழியும் உகரப்பேறு கொள்க. உ-ம்: கௌவு ஞான்றது, கௌவுஞாற்சி எனவும்; கௌவு வலிது, கௌவு வலிமை எனவும் வரும். ‘நிலை’ என்றதனான், கௌவின் கடுமை என உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கண் சென்றவழி, இயைபு வல்லெழுத்து வீழ்வு கொள்க. (93) ஏழாவது - உயிர்மயங்கியல் முற்றிற்று. புள்ளி மயங்கியல் மெய்யீறு வன்கணத்தோடும் பிறகணத்தோடும் புணருமாறு கூறுவது புள்ளி மயங்கியலாகும். மெய்யீறெல்லாம் புள்ளியொடு நிற்குமாதலின் புள்ளியென்றார். மெய்யீற்றுள் உகரம்பெறுவன, இறுதி கெட்டு வல்லெழுத்து மிகுவன மெல்லெழுத்து மிகுவன, இறுதிகெடாது வல்லெழுத்து மிகுவன மெல்லெழுத்து மிகுவன, வல்லெழுத்தும் மெல்லெழுத்தும் உறழ்ந்து முடிவன, இயல்பாய் வருவன, சாரியை பெறுவன, திரிந்து முடிவன என்னும் இவ்வகையினுள் இவ்வியலிற் கூறப்பட்ட விதிகள்யாவும் அடங்கு வனவாம். ஞ, ந, ண, ம, ல, ள என்னும் மெய்களை இறுதியாகவுடைய தொழிற்பெயர் முன்னர் வல்லெழுந்து முதன்மொழி வரின் இரு வழியும் வருமொழி வல்லெழுத்து மிக நிலைமொழியீறு உகரம் பெற்று முடியும். நகர வீற்றுத் தொழிற்பெயர் வேற்றுமைக்கண் உகரம்பெறாது அகரம்பெற்று முடியும், ஈம், கம், உரும், மின், பின், கன், வல், தெவ், புள், வள் என எடுத்தோதிய பெயர்களும் தொழிற்பெயர்போல இருவழியும் உகரம்பெற்று வல்லெழுத்து மிகுவனவாம். அவற்றுள் கன் என்னுஞ்சொல் வேற்றுமைக்கண் அகரம் பெற்று வல்லெழுத்து மிகப்பெறும். வல் என்னுஞ் சொல்லின்முன் நாய், பலகை என்பன வருமொழியாய்வரின் அவ்வழி உகரமின்றி அகரம்பெற்று முடியும். வெரிந் என்ற சொல், இறுதி நகரவொற்றும் அச்சொல் பெற்ற அகரமும்கெட வல்லெழுத்து வரும்வழி அவ்வல்லெழுத் தாயினும் அதன் கிளையெழுத்தாகிய மெல்லெழுத்தாயினும் மிக்கு முடியும், மகரவீற்றுப் பெயர் வேற்றுமைக்கண் இறுதி மகரம்கெட வல்லெழுத்து மிக்கு முடியும். இங்ஙனம் மகர வீறுகெட்ட விடத்து வருமொழி வல்லெழுத்தோடு மெல்லெழுத்து உறழ்ந்து முடியும் மொழிகளும் சில உள. ஆயிரம் என்பதன்முன் அளவுப்பெயர் வந்து புணருமிடத்து வேற்றுமையிற்போல இறுதி மகரங்கெட்டு வல்லெழுத்து மிகும். இல்லம் என்னும் மரப்பெயர் இறுதி மகரங்கெட்டு மெல்லெழுத்து மிகும். அழன் என்பதன் இறுதிகெட வருமொழி வல்லெழுத்து மிக்குமுடியும். வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண்வரும் யரழ வீற்றுப் பெயர்கள் வல்லெழுத்து முதன்மொழி வருமிடத்து அவ்வல் லெழுத்து மிக்கு முடிவன. தாய் என்னுஞ்சொல்முன் மகன் வினைவரின் வல்லெழுத்து மிகும். ஆர், வெதிர், சார், பீர், குமிழ் என்னுஞ் சொற்கள் வல்லெழுத்து வருவழி மெல்லெழுத்து மிக்கு முடிவன. வேற்றுமைக்கண் யகர வீற்றுட் சிலவும் சார், பாழ் என்பனவும் வல்லெழுத்தோடு மெல்லெழுத்துப்பெற்று உறழ்வனவாம். கீழ் என்னுஞ்சொல் வல்லெழுத்துப்பெற்றும் பெறாதும் உறழும். ஆண், பெண், உமண், முரண், குயின், எகின், தான், பேன், கோன் என்பனவும் நெட்டழுத்தின் பின்வரும் லகார, ளகார வீற்றுப்பெயர்கள் சிலவும் திரியாது இயல்பாவனவாம். தாய் என்னும் பெயரும் அல்வழிக்கண்வரும் யகார வீற்றுப் பெயர்களும் வல்லெழுத்து மிகாது இயல்பாவன. அல்வழிக் கண்வரும் எல்லாரும், தாம், நாம், யாம், தான் என்பன குறுகலுந் திரிதலுமின்றி இயல்பாவன. நூறாயிரம், தாமரை, வெள்ளம், ஆம்பல் என்பவற்றோடும் ஏனை உயிர் முதன்மொழிகளோடும் புணரும் ஏழ் என்னும் எண்ணுப்பெயரும், உயிர் முதன் மொழிகளோடும் யகர வகர முதன்மொழிகளோடும் புணரும் வகர வீற்றுச் சுட்டுப்பெயர்களும் குறுகலுந் திரிதலுமின்றி இயல்பாவனவாம். ஆண், எகின், பீர், பூல், வேல், ஆல், குமிழ் என்பன அம்சாரியையும், வேற்றுமைக்கண்வரும் ஈம், கம் என்பனவும் கோல் என்பதனோடு புணரும் தாழ் என்னுஞ் சொல்லும், தமிழ் என்னும் சொல்லும் அக்குச்சாரியையும், வெயில், இருள் என்பன அத்துச்சாரியையும் இன்சாரியையும், மகரவீற்று நாட்பெயர் இகர வீற்று நாட்பெயர்போல ஆன்சாரியையும் அதன்மேல் அத்துச் சாரியையும், செய்யுளிடத்துவரும் விண் என்னுஞ்சொல் வினைச் சொல் வருமொழியாக வருமிடத்து அத்துச்சாரியையும், தனித்தும் அடையடுத்தும் வரும் ஆயிரம் என்ற எண்ணுப்பெயர் பிற எண்களோடு புணருமிடத்து அத்துச்சாரியையும் பெறுவன என்பர் ஆசிரியர். எல்லாரும் என்னும் படர்க்கைப்பெயரும், எல்லீரும் என்னும் முன்னிலைப்பெயரும், நெடுமுதல் குறுகி முடியுமியல் புடைய தாம், நாம், யாம் என்னும் பெயர்களும், னகர வீற்றுள் தான், யான் என்னும் பெயர்களும் சாரியைபெறுவன ஈறுகெட்டு இடையிலும் இறுதியிலும் சாரியைபெற்றும், நெடுமுதல் குறுகுவன நெடுமுதல் குறுகியும், உருபு புணர்ச்சிக்கண் முடிந்தவாறே வேற்றுமைப் பொருட் புணர்ச்சியினும் முடியும்என ஆசிரியர் மாட்டேற்று முறையான் விதிகூறியுள்ளார். எல்லாம் என்னும் விரவுப்பெயர் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் இடையே வற்றுச்சாரியையும் இறுதியில் உம்சாரியையும் பெறும். அப்பெயர் அல்வழிக்கண் சாரியை பெறாது. உயர்திணைக்கண் இடையே நம் சாரியையும் இறுதியில் உம்சாரியையும்பெறும். வகர வீற்றுச் சுட்டுப்பெயர் வற்றுச்சாரியைபெறும். ஏழ் என்னும் எண்ணுப்பெயர் அன்சாரியை பெறும். ணகர ளகர வீறுகள் வல்லெழுத்து முதன்மொழி வருங்கால் டகரமாகவும், னகர லகர வீறுகள் றகரமாகவும் திரிவன. எள்ளை யுணர்த்தும் எண் என்னும் பெயரின் ணகரம் அல்வழியிலும் டகர மாகத்திரியும். நெல், செல், கொல், சொல் என்பவற்றின் லகரம் அல்வழியிலும் றகரமாய்த்திரியும். அல்வழிக்கண்வரும் ளகரவீறு திரிந்தும் திரியாதும் உறழ்ந்து முடியும். வேற்றுமையிற்போல அல்வழியிலும் டகரமாகத்திரியும் ளகர வீறுகள் சிலவுள. மன், சின், ஆன், ஈன், பின், முன் என்பனவும் செயின் என்னும் வினையெச்சமும் அவ்வயின், இவ்வயின், உவ்வயின் எவ்வயின் எனவரும் ஏழாம் வேற்றுமை யிடப்பொருளுணர்த்தும் இடைச் சொற்களும் ஆகியவற்றின் னகரம் றகரமாகத்திரியும். மீன் என்பதன் னகரம் றகரமாகத்திரிந்தும் திரியாதும் உறழும். லகர ளகர வீற்றுச்சொற்கள் தகரமுதன்மொழி வருமிடத்து லகர ளகரங்கள் ஆய்தமாகத்திரியும். மெல்லெழுத்து முதன்மொழி வருங்கால் முறையே லகரம் னகரமாகவும் ளகரம் ணகரமாகவும் திரிவன. மகரவீறு அல்வழிக்கண் வலிவரின் ஏற்றமெல்லெழுத்தாகத் திரியும். அகம் என்னுஞ் சொல்லின்முன் கை என்பது வருமொழியாய்வரின் நிலைமொழியின் நடுவெழுத்தாகிய ககரவுயிர் மெய்கெட மெல்லெழுத்து மிக்கு முடியும். நும் என்பதனை அல்வழிக்கண் கூறுங்கால் நகரவொற்றின்மேல் நின்ற உகரம் கெட அவ்வொற்றின்மேல் ஈகாரம் ஊர்ந்து நீ என்றாகி ஓர் இகரம் இடையில்வர இறுதி மகரங்கெட்டு ரகர வொற்றுத் தோன்றி நீயிர் எனத்திரியுமென்பர் தொல்காப்பியர். எனவே நும் என்பதே திரிபில் சொல்லென்றும் நீயிர் என்பது அதன் திரிபென்றுங் கொள்ளுதல்வேண்டும். தேன் என்னுஞ்சொல், வலிவரின் னகரம் றகரமாகத் திரிந்தும் திரியாதும் உறழ்தலும், இறுதி னகரங்கெட்டு வலிமெலி மிகுதலும், மெலிவரின் இறுதிகெட்டும் கெடாதும் உறழ்தலும் பெறும். இறால் என்பது வருமொழியாகவரின் தேன் என்பதன் னகரம் கெட்டுத் தகரம் இரட்டித்து முடியும். சாத்தன், கொற்றன் முதலிய இயற்பெயர் முன்னர்த் தந்தையென்பது வருமொழியாய்வரின், தந்தை யென்பதன் முதலிலுள்ள தகரங்கெட்டு, அதன்மேலேறிய அகரங்கெடாது நிற்ப, நிலைமொழியியற்பெயரிலுள்ள அன்கெட்டு, அங்கு நின்ற மெய்யின்மேல் வருமொழி முதலிலுள்ள அகரம் ஏறிமுடியும். முற்கூறிய இயற்பெயருள் ஆதன், பூதன் என்னும் இருபெயர்களும் வருமொழியாகிய தந்தையென்னும் முறைப்பெயரொடு புணருங்கால் இவ்வியற் பெயர்களின் இறுதிநின்ற அன்கெட எஞ்சிய தகரவொற்றும், தந்தை என்பதில் முன்கூறியபடி தகரங்கெட எஞ்சிய அகரவுயிரும் சேரக்கெட்டு, ஆந்தை, பூந்தை என முடிவனவாம். இப்பெயர்கள் சிறப்புப் பண்படுத்துவருங்கால் அங்ஙனந்திரிதலின்றி இயல்பாவன என்பர். மேற்கூறிய இயற்பெயர்கள் இன்னாற்கு மகன் இன்னான் என்னும் முறையில் ஒட்டி நிற்குங்கால் நிலைமொழிப் பெயரீற்றின் அன்கெட்டு அம்சாரியை பெற்றுப் புணர்தலுமுண்டு. முன் என்னும் சொல்முன் இல் என்னுஞ்சொல் வந்து புணரின் இடையே றகரவொற்றுத் தோன்றி முன்றில் எனமுடிதல் தொன்று தொட்டு மருவிவழங்கும் இலக்கண முடிபாம். பொன் என்னுஞ்சொல், ஈற்றில் னகரம்கெட லகரவுயிர்மெய்யும் மகர மெய்யும்பெற்றுப் பொலம் எனத் திரிந்துவழங்கும். இல் என்னும் சொல், வீட்டை யுணர்த்தாது இல்லாமையென்னும் பொருளை யுணர்த்துங்கால், ஐகாரம் பெற்று வருமொழி வல்லெழுத்து மிகுதலும், மிகாமையும், இயல்பாதலும், ஆகாரம்பெற்று வல்லெழுத்து மிகுதலும் ஆகிய நான்குமுடிபினை யுடையதாகும். - க. வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 181-185 எட்டாவது புள்ளிமயங்கியல் இவ்வோத்து என்ன பெயர்த்தோவெனின், புள்ளியீறு வன்கணத் தோடும் சிறுபான்மை பிற கணத்தோடும் மயங்கிப் புணரும் இயல்பு உணர்த்தினமையின் புள்ளிமயங்கியல் என்னும் பெயர்த்து. 297. ஞகாரை யொற்றிய தொழிற்பெயர் முன்னர் அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும் வல்லெழுத் தியையி னவ்வெழுத்து மிகுமே உகரம் வருத லாவயி னான. இத் தலைச் சூத்திரம் என் நுதலிற்றோவெனின், ஞகார ஈறு வன்கணத்தோடு இருவழிக்கண்ணும் புணருமாறு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) ஞகாரை ஒற்றிய தொழிற்பெயர் முன்னர் - ஞகாரம் ஈற்றின்கண் ஒற்றாக நின்ற தொழிற்பெயரின் முன்னர், அல்லது கிளப்பினும் வேற்றுமைக்கண்ணும் - அல்வழியைச் சொல்லு மிடத்தும் வேற்றுமைக் கண்ணும், வல்லெழுத்து இயையின் அவ் வெழுத்து மிகும் - வல்லெழுத்து முதல்மொழி வருமொழியாய் இயையின் வல்லெழுத்து வருமொழிக்கண் மிக்கு முடியும், ஆவயினான உகரம் வருதல் - ஆண்டு நிலைமொழிக் கண் உகரம் வருக. உ-ம்: உரிஞுக் கடிது; சிறிது, தீது, பெரிது எனவும்; உரிஞுக் கடுமை; சிறுமை, தீமை, பெருமை எனவும் வரும். (1) 298. ஞநமவ வியையினு முகர நிலையும். இஃது, அவ் வீறு மென்கணத்தோடும் இடைக்கணத்து வகரத் தொடும் முடியுமாறு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) ஞ ந ம வ இயையினும் உகரம் நிலையும் - அந்த ஞகாரவீரு வீன்கணமன்றி ஞ ந ம வ முதன்மொழி வருமொழி யாய் இயையினும் நிலைமொழிக்கண் உகரம் நிலைபெற்று முடியும். உ-ம்: உரிஞு ஞான்றது; நீண்டது, மாண்டது எனவும்; உரிஞு ஞாற்சி; நீட்சி, மாட்சி எனவும்; உரிஞுவலிது, வலிமை எனவும் வரும். இடைக்கணத்து யகரத்தோடும் உயிரோடும் புணருமாறு தொகைமரபினுள் “உகரமொடு புணரும் புள்ளி யிறுதி” (சூத். 21) என்பதனுட் கூறப்பட்டது. (2) 299. நகர விறுதியு மதனோ ரற்றே. இது, நகரவீறு மேற்கூறிய கணங்களோடு ஒருவழி முடியுமாறு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) நகர இறுதியும் அதன் ஓர் அற்று - நகரஈற்றுப் பெயரும் மேற்கூறிய கணங்களொடு புணரும்வழி அஞ் ஞகார ஈற்றோடு ஓர் இயல்பிற்றாய் முடியும். உ-ம்: பொருநுக் கடிது; சிறிது, தீது, பெரிது எனவும்; பொருநு ஞான்றது; நீண்டது, மாண்டது எனவும்; பொருநு வலிது எனவும் ஒட்டுக. (3) 300. வேற்றுமைக் குக்கெட வகர நிலையும். இஃது, அவ் வீற்று வேற்றுமைக்கண் நிலைமொழி முடிபு வேறாய் முடியுமாறு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) வேற்றுமைக்கு உ கெட அகரம் நிலையும் - அந் நகர வீறு வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண் எய்திய நிலைமொழி உகரம் கெட அகரம் நிலைபெற்று முடியும். உ-ம்: பொருநக் கடுமை; சிறுமை, தீமை, பெருமை எனவும்; பொருந ஞாற்சி; நீட்சி, மாட்சி எனவும்; பொருந வலிமை எனவும் வரும். ‘அகரம் நிலையும்’ என்னாது ‘உகரங் கெட’ என்றதனான், அவ் வீர் ஈற்றின் உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கண் சென்றவழி இயைபு வல்லெழுத்து வீழ்வும் சிறுபான்மை உகரப்பேறும் கொள்க. பொருநின் குறை, உரிஞின் குறை எனவும், “உயவல் யானை பொருநுச்சென் றன்ன” (அகம். 65) எனவும் வரும். (4) 301. வெரிநெ னிறுதி முழுதுங் கெடுவழி வருமிட னுடைத்தே மெல்லெழுத் தியற்கை. இஃது, அந் நகரவீற்று ஒருமொழிக்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் நுதலிற்று. (இ-ள்.) வெரிந் என் இறுதி முழுதும் கெடுவழி - வெரிந் என்று சொல்லப்படும் நகரவீற்றுமொழி தன் ஈற்று நகரம் முன் பெற்ற அகரத்தோடு எஞ்சாமற் கெட்டவிடத்து, மெல்லெழுத்து இயற்கை வரும் இடன் உடைத்து - மெல்லெழுத்துப் பெறும் இயல்பு வந்து முடியும் இடனுடைத்து. உ-ம்: வெரிங் குறை; செய்கை, தலை, புறம் என வரும். (5) 302. ஆவயின் வல்லெழுத்து மிகுதலு முரித்தே. இஃது, இன்னும் அம் மொழிக்கு எய்தியது ஒரு முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) அ வயின் வல்லெழுத்து மிகுதலும் உரித்து - அவ் வெரிந் என்னும் சொல் அவ்வாறு ஈறு கெட்டு நின்றவிடத்து மெல்லெழுத்தே யன்றி வல்லெழுத்து மிக்குமுடிதலும் உரித்து. உ-ம்: வெரிக் குறை; செய்கை, தலை, புறம் என வரும். ஞகாரவீற்றொடு நகாரவீறு ஒத்த முடிபிற்றாதலின் உடன் கூறப்பட்டது. (6) 303. ணகார விறுதி வல்லெழுத் தியையின் டகார மாகும் வேற்றுமைப் பொருட்கே. இது, ணகாரவீறு வேற்றுமைப்பொருட்கண் புணருமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ணகார இறுதி வல்லெழுத்து இயையின் - ணகார வீற்றுப்பெயர் வல்லெழுத்து முதன்மொழி இயையின், டகாரம் ஆகும் வேற்றுமைப் பொருட்கு - டகாரமாய் முடியும் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண். உ-ம்: மட்குடம்; சாடி, தூதை, பானை என வரும். (7) 304. ஆணும் பெண்ணு மஃறிணை யியற்கை. இஃது, அவ் வீற்று விரவுப்பெயருட் சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று. (இ-ள்.) ஆணும் பெண்ணும் அஃறிணை இயற்கை - ஆண் என்னும் பெயரும் பெண் என்னும் பெயரும் மேல் தொகை மரபினுள் ‘மொழிமுத லாகும்’ என்பதன்கண் அஃறிணைப் பெயர் முடிந்த இயல்புபோலவே வேற்றுமைக்கண் இயல்பாய் முடியும் எ-று. உ-ம்: ஆண்கை, பெண்கை; செவி, தலை, புறம் என வரும். மற்றிது தொகைமரபினுள் “அஃறிணை விரவுப்பெயர்” (சூத்திரம் 13) என்பதனுள் இயல்பாய் முடிந்ததன்றோவெனின், இவை ஆண்டு முடிந்தனபோலத் தத்தம் மரபின் வினையாற் பாலறியப்படுவன வன்றி, இருதிணைக்கண்ணும் அஃறிணையாய் முடிதலின் அவ் வஃறிணைப் பெயரது இயல்பொடு மாட்டெறிந்து முடித்தார் எனக் கொள்க. இவ்வாறாதலின், ஆண்கடிது பெண் கடிது என்னும் அல்வழியும் ‘மொழிமுத லாகும்’ (தொகை. 5) என்பதனுட் கொள்ளப்படும். (8) 305. ஆண்மரக் கிளவி யரைமர வியற்றே. இது, திரிபு விலக்கிச் சாரியை வகுத்தமையின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று. (இ-ள்.) ஆண்மரக் கிளவி அரைமர இயற்று - ஆண் என்னும் மரத்தை உணரநின்ற பெயர்ச்சொல் அரைமரம் அம்முப்பெறும் இயல்பிற்றாய்த் (284) தானும் அம்முப்பெற்று முடியும். உ-ம்: ஆணங்கோடு; செதிள், தோல், பூ என வரும். (9) 306. விண்ணென வரூஉங் காயப் பெயர்வயின் உண்மையு முரித்தே யத்தென் சாரியை செய்யுண் மருங்கிற் றொழில்வரு காலை. இது, செய்யுளுள் திரிபு விலக்கிச் சாரியை வகுத்தல் நுதலிற்று. (இ-ள்.) விண் என வரும் காயப் பெயர்வயின் - விண் என்று சொல்ல வருகின்ற ஆகாயத்தை உணரநின்ற பெயர்க்கண், அத்து என் சாரியை உண்மையும் உரித்து - அத்து என்னும் சாரியை உண்டாதலும் உரித்து இல்லையாதலும் உரித்து, செய்யுள் மருங்கின் தொழில் வரு காலை - செய்யுளிடத்து வினைவரும் காலத்து. உ-ம்: விண்ணத்துக் கொட்கும் எனவும், ‘விண்குத்து நீள்வரை’ (நாலடி. 226) எனவும் வரும். (10) 307. தொழிற்பெய ரெல்லாந் தொழிற்பெய ரியல. இஃது, இவ் வீற்றுட் சிலவற்றிற்குத் திரிபு விலக்கி உகரமும் வல்லெழுத்தும் வகுத்தல் நுதலிற்று. (இ-ள்.) தொழிற்பெயரெல்லாம் தொழிற்பெயர் இயல - ணகார வீற்றுத் தொழிற் பெயரெல்லாம் அல்வழிக்கண்ணும் வேற்றுமைக் கண்ணும் ஞகாரவீற்றுத் தொழிற்பெயரது இயல்பாய் வன்கணம் வந்தவழி வல்லெழுத்தும் உகரப்பேறும், மென்கணமும் இடைக்கணத்து வகரமும் வந்தவழி உகரமும் பெற்று முடியும். உ-ம்: மண்ணுக்கடிது எனவும், மண்ணுக்கடுமை எனவும்; மண்ணு ஞான்றது; ஞாற்சி எனவும்; மண்ணுவலிது; வலிமை எனவும் இருவழியும் ஒட்டுக. ‘எல்லாம்’ என்றதனான், தொழிற்பெயரல்லனவும் உகரமும் வல்லெழுத்தும் பெறுவன கொள்க. வெண்ணுக்கரை, எண்ணுப்பாறு, மண்ணுச்சோறு என வரும். (11) 308. கிளைப்பெய ரெல்லாங் கொளத்திரி பிலவே. இஃது, இவ் வீற்றுட் சிலவற்றிற்குத் திரிபு விலக்கி இயல்பு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) கிளைப்பெயர் எல்லாம் கொளத் திரிபு இல - ணகார வீற்றுள் ஓர் இனத்தை உணரநின்ற பெயரெல்லாம் திரிபுடைய வென்று கருதும் படியாகத் திரிதலுடையவன்றி இயல்பாய் முடியும். உ-ம்: உமண்குடி; சேரி, தோட்டம், பாடி என வரும். ‘எல்லாம்’ என்றதனான், இவ் வீற்றுச் சாரியை பெற்று முடிவனவும் இயல்பாய் முடிவனவும் கொள்க. உ-ம்: மண்ணக்கடி, எண்ணநோலை எனவும்; பரண்கால், கவண்கால் எனவும் வரும். `கொள’ என்றதனான், இவ்வீற்று ஏழாம் வேற்றுமைப் பொருண்மை உணர நின்ற இடைச்சொல் திரிந்து முடிவன கொள்க. உ-ம்: அங்கட்கொண்டான், இங்கட்கொண்டான், உங்கட் கொண்டான் எனவும்; ஆங்கட்கொண்டான், ஈங்கட் கொண்டான், ஊங்கட் கொண்டான் எனவும்; அவட் கொண்டான், இவட் கொண்டான், உவட் கொண்டான் எனவும் ஒட்டுக. (`மண்ணக்கடி’ என்பதில் அக்குச்சாரியையும் `வண்ண நோலை’ என்பதில் அம்ச்சாரியையும் வந்தன.) (12) 309. வேற்றுமை யல்வழி யெண்ணெ னுணவுப்பெயர் வேற்றுமை யியற்கை நிலையலு முரித்தே. இஃது, அவ் வீற்றுள் ஒன்று அல்வழியுள் வேற்றுமை முடிபு போலட் திரிந்து முடிவது கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) வேற்றுமை அல்வழி - வேற்றுமை யல்லாத விடத்து, எண் என் உணவுப்பெயர் - எண் என்று சொல்லப் படுகின்ற உணவினை யுணர்த்தும் பெயர், வேற்றுமை இயற்கை நிலையலும் உரித்து - வேற்றுமையது திரிந்து முடியும் இயல்பு நிற்றலும் உரித்து. உ-ம்: எட்கடிது, சிறிது, தீது, பெரிது எனவரும். உம்மையான், எண்கடிது என்று இயல்பாதலே (148) பெரும் பான்மை. (13) 310. முரணென் றொழிற்பெயர் முதலிய னிலையும். இஃது, இவ் வீற்றுத் தொழிற்பெயர் ஒன்றற்குத் தொழிற் பெயர் முடிபு விலக்கி, இவ் வீற்று அல்வழி முடிபும் வேற்றுமை முடிபும் கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) முரண் என் தொழிற்பெயர் முதல் இயல் நிலையும் - முரண் என்று கூறப்படும் தொழிற்பெயர் இவ் வீற்றிற்கு இருவழியும் முன்கூறிய இயல்பும் (148), திரிபுமாகிய (303) இயல்பின்கண்ணே நின்று முடியும். உ-ம்: முரண்கடிது, சிறிது, தீது, பெரிது எனவும்; முரட் கடுமை, சேனை, தானை, பறை எனவும் வரும். இதனை ‘தொழிற்பெய ரெல்லாம்’ (சூத்திரம் 11) என்பதன்பின் வையாத முறையன்றிய கூற்றினான், முரண்கடுமை என்னும் இயல்பும்; அரண் கடுமை, அரட்கடுமை என்னும் உறழ்ச்சியும் கொள்க. (14) 311. மகர விறுதி வேற்றுமை யாயின் துவரக் கெட்டு வல்லெழுத்து மிகுமே. இது, மகரவீற்றிற்கு மேற்கூறிய ணகரவீற்று வேற்றுமை முடிபோடு இயைய வேற்றுமை முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) மகர இறுதி வேற்றுமையாயின் - மகரவீற்றுப் பெயர்ச் சொல் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண்ணாயின், துவரக் கெட்டு வல்லெழுத்து மிகும் - அம் மகரம் முற்றக் கெட்டு வருமொழி வல்லெழுத்து மிக்கு முடியும். உ-ம்: மரக்கோடும்; செதிள், தோல், பூ என வரும். ‘துவர’ என்றதனான், இயல்புகணத்துக்கண்ணும் உயர் திணைப் பெயர்க்கண்ணும் விரவுப்பெயர்க்கண்ணும் மகரக்கேடு கொள்க. உ-ம்: மரஞாண், நூல், மணி, யாழ், வட்டு, அடை, ஆடை எனவும்; நங்கை, எங்கை; செவி, தலை, புறம் எனவும்; நுங்கை, தங்கை எனவும் வரும். (15) 312. அகர ஆகாரம் வரூஉங் காலை ஈற்றுமிசை யகர நீடலு முரித்தே. இஃது, அவ் வீற்று முடிபு வேற்றுமையுடையன கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) அகரம் ஆகாரம் வருங்காலை - அகர முதல் மொழியும் ஆகார முதல்மொழியும் வருமொழியாய் வருங்காலை, ஈற்றுமிசை அகரம் நீடலும் உரித்து - நிலைமொழிக்கண் ஈற்றின்மேல் நின்ற அகரம் நீளாது நிற்பதேயன்றி நீண்டு முடிதலும் உரித்து. உ-ம்: மராஅடி, குளாஅம்பல் எனவும்; மரவடி, குளவாம்பல் எனவும் வரும். வருமொழி முற்கூறியவதனான், இவ்வீற்றுட் பிறவும் வேறுபட முடிவன கொள்க. கோணாகோணம், கோணாவட்டம் என வரும். முன்னர்ச் ‘செல்வழி யறிதல்’ (சூத்-17) என்பதனால், குளா அம்பல் என்புழி வருமொழி ஆகாரக்குறுக்கமும், கோணா கோணம் என்புழி வருமொழி வல்லெழுத்துக்கேடும் கொள்க. (கோணா கோணம், கோணாவட்டம் என்பனவற்றுள் கோணத்துட் கோணம் கோணத்துள் வட்டம் என ஏழனுருபு விரிக்க.) (16) 313. மெல்லெழுத் துறழு மொழியுமா ருளவே செல்வழி யறிதல் வழக்கத் தான. இஃது, இவ் வீற்றுட் சிலவற்றிற்கு வேறு முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) மெல்லெழுத்து உறழும் மொழியும் உள - மெல்லெழுத்தோடு உறழ்ந்து முடியும் மொழிகளும் உள; வழக்கத்தான செல்வழி அறிதல் - வழக்கின்கண் அவை வழங்கும் இடம் அறிக. உ-ம்: குளங்கரை, குளக்கரை; சேறு, தாது, பூழி என வரும். ‘செல்வழி யறிதல்’ என்றதனான், குளங்கரை, குளக்கரை என்றது போல, அல்லன ஒத்த உறழ்ச்சியல்ல வென்பது கொள்க. ‘வழக்கத் தான’ என்றதனான், இவ் வீற்று வேற்றுமைக்கண் முடியாதன வெல்லாம் முடித்துக் கொள்க. இலவங்கோடு எனவும், ‘புலம்புக் கனனே’ எனவும், நிலத்துக் கிடந்தான் எனவும் வரும். (17) 314. இல்ல மரப்பெயர் விசைமர வியற்றே. இஃது, இவ் வீற்றுள் ஒன்றற்கு வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்து விதித்தல் நுதலிற்று. (இ-ள்.) இல்லம் மரப்பெயர் விசை மர இயற்று - இல்லம் என்னும் மரத்தினை உணரநின்ற பெயர் விசையென்னும் மரத்தின் இயல்பிற்றாய் மெல்லெழுத்து மிக்கு முடியும். உ-ம்: இல்லங்கோடு; செதிள், தோல், பூ என வரும். இதன்கண் மகரக்கேடு முன்னர் ‘எல்லாம்’ (சூத்திரம் 19) என்பதனாற் கொள்க. (18) 315. அல்வழி யெல்லா மெல்லெழுத் தாகும். இஃது, அவ் வீற்று அல்வழி முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) அல்வழி எல்லாம் மெல்லெழுத்து ஆகும் - மகரவீறு அல்வழிக்கணெல்லாம் மெல்லெழுத்தாய்த் திரிந்து முடியும். உ-ம்: மரங்குறிது; சிறிது, தீது, பெரிது என வரும். ‘எல்லாம்’ என்றதனான், இவ் வீற்று அல்வழி முடிபின் முடியாதன வெல்லாம் கொள்க. உ-ம்: மரஞான்றது; நீண்டது, மாண்டது எனவும்; வட்டத் தழை, வட்டப்பலகை எனவும்; கலக்கொள், கலநெல் எனவும்; நீலக்கண், பவளவாய் எனவும்; நிலநீர் எனவும்; கொல்லுங் கொற்றன், பறக்குநாரை எனவும் வரும். (19) 316. அகமென் கிளவிக்குக் கைமுன் வரினே முதனிலை யொழிய முன்னவை கெடுதலும் வரைநிலை யின்றே யாசிரி யர்க்க மெல்லெழுத்து மிகுத லாவயி னான. இஃது, இவ் வீற்றுள் மரூஉ முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) அகம் என் கிளவிக்கு கை முன்வரின் - அகம் என்னும் சொல்லிற்கு கை என்னும் சொல் முன்வரின், முதல் நிலை ஒழிய முன்னவை கெடுதலும் - முன் ‘மகரவிறுதி’ (சூத்திரம் -15) என்றதனான் மகரம் கெட்டு நின்ற நிலைமொழி முதல் நின்ற அகரம் ஒழிய அதன்முன் நின்ற அகரமும் அகரத்தாற் பற்றப்பட்ட ககரமெய்யும் கெட்டு முடிதலும் அவை கெடாது நின்று முடிதலும், வரைநிலை இன்று ஆசிரியர்க்கு - நீக்கும் நிலைமையின்று ஆசிரியர்க்கு; அ வயின்னான மெல்லெழுத்து மிகுதல் - அவ் விரண்டிடத்தும் மெல்லெழுத்து மிக்கு முடிக. உ-ம்: அங்கை, அகங்கை என வரும். (ஒழிய-தவிர) (20) 317. இலமென் கிளவிக்குப் படுவரு காலை நிலையலு முரித்தே செய்யு ளான. இஃது, அவ் வீற்று உரிச்சொல் ஒன்றற்குச் செய்யுள் முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) இலம் என் கிளவிக்குப் படு வருகாலை - இலம் என்னும் சொல்லிற்குப் படு என்னும் சொல் வருமொழியாய் வருங்காலத்து, நிலையலும் உரித்துச் செய்யுளான - முன் ‘மகரவிறுதி’ (சூத்திரம் -15) என்பதனாற் கெட்ட ஈறு கெடாது நின்று முடிதலும் உரித்துச் செய்யுட்கண். உ-ம்: “இலம்படு புலவ ரேற்றகை நிறைய” (மலைபடு. 576) என வரும். உரிச்சொல்லாகலான் உருபு விரியாதெனினும் இலத்தாற் பற்றப்படும் புலவரென்னும் பொருள் உணர நிற்றலின், வேற்றுமை முடிபாயிற்று. உம்மை மகரவீறு என்னும் சாதியொருமைபற்றி வந்த எதிர்மறை. (21) 318. அத்தொடு சிவணு மாயிரத் திறுதி ஒத்த வெண்ணு முன்வரு காலை. இஃது, இவ் வீற்று எண்ணுப்பெயருள் ஒன்றற்குத் தொகை மரபினுள் எய்திய ஏ என் சாரியை விலக்கி, அத்து வகுத்தல் நுதலிற்று. (இ-ள்.) ஆயிரத்து இறுதி - ஆயிரம் என்னும் எண்ணுப் பெயரின் மகரமெய், ஒத்த எண்ணு முன் வருகாலை - தனக்கு அகப்படுமொழியாய்ப் பொருந்தின எண்ணுப்பெயர் தன்முன் வருங்காலத்து, அத்தொடு சிவணும் - தொகைமரபிற் கூறிய ஏ என் சாரியை ஒழித்து அத்துச்சாரியை பொருந்தி முடியும். உ-ம்: ஆயிரத்தொன்று, ஆயிரத்திரண்டு, மூன்று, நான்கு என ஒட்டுக. நிலைமொழி முற்கூறாது சாரியை முற்கூறியவதனான், இதன் முன்னர்க் குறை, கூறு, முதல் என்பன வந்தவழியும் இம் முடிபு கொள்க. ஆயிரத்துக்குறை; கூறு, முதல் என ஒட்டுக. (22) 319. அடையொடு தோன்றினு மதனோ ரற்றே. இஃது, அவ் வெண்ணுப்பெயர் அடையடுத்தவழி முடியுமாறு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) அடையொடு தோன்றினும் அதன் ஓர் அற்று - அவ் வாயிரம் என்னும் எண்ணுப்பெயர் அடையடுத்த மொழியொடு தோன்றினும் மேற்சொன்னதனோடு ஒருதன்மைத்தாய் அத்துப் பெற்று முடியும். உ-ம்: பதினாயிரத்தொன்று; இரண்டு என ஒட்டுக. மேல் இலேசினான் வந்தனவும் அடையடுத்து ஒட்டுக. பதினாயிரத்துக்குறை; கூறு, முதல் என வரும். (23) 320. அளவு நிறையும் வேற்றுமை யியல. இஃது, அவ் வெண்ணின் முன்னர் அளவுப்பெயர் நிறைப்பெயர் வந்தால் முடியுமாறு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) அளவும் நிறையும் வேற்றுமை இயல - ஆயிரத்து முன் அளவும் நிறையும் வந்தால் இவ் வீற்று வேற்றுமை இயல்பாய் (311) மகரம்கெட்டு வல்லெழுத்து மிக்குமுடியும் எ-று. உ-ம்: ஆயிரக்கலம், சாடி, தூதை, பானை எனவும்; ஆயிரக் கழஞ்சு, தொடி, பலம் எனவும் ஒட்டுக. இம்மாட்டேற்றானே, மேல் ‘துவர’ (சூ. 15) என்ற இலேசினான், இயல்புகணத்துக்கண் கேடு எய்திய மகரம் ஈண்டும் கெடுத்துக் கொள்க. உ-ம்: ஆயிரநாழி; வட்டி, அகல் என வரும். பதினாயிரக்கலம் என்றாற்போல அடையடுத்து வந்தவழியும் ஒட்டுக. (24) 321. படர்க்கைப் பெயரு முன்னிலைப் பெயரும் தொடக்கங் குறுகும் பெயர்நிலைக் கிளவியும் வேற்றுமை யாயி னுருபிய னிலையும் மெல்லெழுத்து மிகுத லாவயி னான. இஃது, இவ் வீற்றுட் சில உயர்திணைப்பெயரும் விரவுப் பெயரும் உருபிபுணர்ச்சி முடிந்தவாறே ஈண்டுப் பொருட் புணர்ச்சிக்கண்ணும் முடியுமென உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) படர்க்கைப்பெயரும் முன்னிலைப் பெயரும் தொடக்கம் குறுகும் பெயர்நிலைக்கிளவியும் - எல்லாரும் என்னும் படர்க்கைப் பெயரும் எல்லீரும் என்னும் முன்னிலைப் பெயரும் (கிளைத் தொடர்ச்சிப் பொருளவாய்) நெடுமுதல் குறுகி முடியும் தாம் நாம் யாம் என்னும் பெயரும், வேற்றுமை யாயின் உருபு இயல் நிலையும் - வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக் கண்ணாயின் உருபுபுணர்ச்சிக்கண் சொன்ன இயல்பின் கண்ணே நின்று, சாரியை பெறுவன ஈறுகெட்டு இடையும் ஈறும் சாரியை பெற்றும் (192), நெடுமுதல் குறுகுவன நெடுமுதல் குறுகியும் (189) முடியும், அவயினான் மெல்லெழுத்து மிகுதல் ஆன - அந் நெடுமுதல் குறுகுமொழிக்கண் மெல்லெழுத்து மிகும். உ-ம்: எல்லார்தங்கையும், எல்லீர்நுங்கையும்; செவியும், தலையும், புறமும் எனவும்; தங்கை, நங்கை, எங்கை; செவி, தலை, புறம் எனவும் ஒட்டுக. ‘வேற்றுமையாயின்’ என்றதனான், படர்க்கைப்பெயர்க்கும் முன்னிலைப்பெயர்க்கும் இயல்புகணத்து ஞகரமும் நகரமும் வந்தவழி தம்முச்சாரியையும் நும்முச்சாரியையும் ஈறு கெடுதல் கொள்க. ‘ஆவயினான’ என்றதனான், படர்க்கைப்பெயர்க்கும் முன்னிலைப் பெயர்க்கும் ஞகரமும் நகரமும் வந்துழி அவை மிகுதலும், தொடக்கம் குறுகும் பெயர்க்கும் அஞ் ஞகரமும் நகரமும் வந்துழி மகரங்கெட்டு அவை மிகுதலுங் கொள்க. எல்லார் தஞ்ஞாணும், எல்லீர் நுஞ்ஞாணும், நூலும் எனவும்; தஞ்ஞாண், நஞ்ஞாண், எஞ்ஞாண், நூல் எனவும் வரும். இன்னும் ‘ஆவயினான’ என்றதனான், படர்க்கைப்பெயரும் முன்னிலைப்பெயரும் சாரியை பெறாது இறுதி உம்முப் பெறுதலும் கொள்க. உ-ம்: எல்லார்கையும், எல்லீர்கையும்; செவியும், தலையும், புறமும் எனவரும். உ-ம்: இன்னும் அதனானே, உருபீற்றுச் செய்கை யெல்லாம் கொள்க. தமகாணம் எனவரும். (இஃது அகர உருபுகொடுத்து முடித்தவாறு காண்க). (25) 322. அல்லது கிளப்பி னியற்கை யாகும். இது, மேலனவற்றிற்கு அல்வழி முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) அல்லது கிளப்பின் இயற்கை ஆகும் - மேற்கூறிய படர்க்கைப் பெயரும் முன்னிலைப் பெயரும் தொடக்கம் குறுகும் பெயர் நிலைக்கிளவியும் அல்வழியைச் சொல்லுமிடத்து இயல்பாய் முடியும். ஈண்டு இயல்பென்பது சாரியை பெறாமை நோக்கி. இவற்றின் ஈறுதிரிதல் ‘அல்வழி யெல்லாம்’ (சூத்திரம் 19) என்றதனுள் ‘எல்லாம்’ என்னும் இலேசினாற் கொள்க. உ-ம்: எல்லாருங் குறியர்; சிறியர், தீயர், பெரியர் எனவும்; எல்லீருங் குறியீர், சிறியீர், தீயீர், பெரியீர் எனவும்; தாங் குறியர்;சிறியர், தீயர், பெரியர் எனவும்; நாங் குறியம்; சிறியம், தீயம், பெரியம் எனவும்; யாங் குறியேம்; சிறியேம், தீயேம், பெரியேம் எனவும் வரும். இன்னும் ‘எல்லாம்’ என்னும் இலேசினானே, இவ் வீற்றுக்கண் மென்கணத்து மகரம் ஒழிந்தன வந்தவழி மகரம் அவ்வொற்றாய்த் திரிதலும் கொள்க. உ-ம்: எல்லாருஞ் ஞான்றார், நீண்டார் எனவும்; எல்லீருஞ் ஞான்றீர், நீண்டீர் எனவும்; தாஞ்ஞான்றார், நீண்டார் எனவும்; நாஞ்ஞான்றாம், நீண்டாம் எனவும்; யாஞ்ஞான்றேம், நீண்டேம் எனவும் கொள்க. (26) 323. அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும் எல்லா மெனும்பெய ருருபிய னிலையும் வேற்றுமை யல்வழிச் சாரியை நிலையாது. இஃது, அவ் வீற்று விரவுப்பெயருள் ஒன்றற்கு அல்வழிக் கண்ணும் வேற்றுமைக்கண்ணும் உருபியலொடு மாட்டெறிந்து முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) அல்லது கிளப்பினும் வேற்றுமைக்கண்ணும் - அல் வழியைச் சொல்லுமிடத்தும் வேற்றுமைப் பொருட்புணர்ச்சி யிடத்தும், எல்லாம் எனும் பெயர் உருபு இயல் நிலையும் - எல்லாம் என்னும் விரவுப் பெயர் உருபுபுணர்ச்சியின் இயல்பிலே நின்று (190) வற்றுச்சாரியையும் இறுதி உம்முச்சாரியையும் பெற்று முடியும், வேற்றுமை அல்வழி சாரியை நிலையாது - அப் பெயர் வேற்றுமையல்லாத இடத்துச் சாரியை பெறுதல் நிலையாதாயே முடியும். மாட்டேறு ஏலாத அல்வழியினையும் உருபியலொடு மாட்டெறிந்து விலக்கிய மிகுதியான், அல்வழிக்கண் வன்கணத் திறுதி உம்முப்பேறும், நிலைமொழி மகரக்கேடும், வருமொழி வல்லெழுத்துப்பேறும், மென் கணத்து மகரக்கேடும், பண்புத் தொகைக்கண் மகரக்கேட்டோடு இறுதி உம்முப்பேறும் கொள்க. உ-ம்: எல்லாக்குறியவும்; சிறியவும், தீயவும், பெரியவும் எனவும்; எல்லாவற்றுக்கோடும்; செவியும், தலையும், புறமும் எனவும்; எல்லாஞான்றன; நீண்டன, மாண்டன எனவும்; எல்லாஞாணும்; நூலும், மணியும், யாப்பும், வலிமையும், அடைவும், ஆட்டமும் எனவும்; எல்லாவற்றுஞாணும்; நூலும், மணியும், யாப்பும், வலிமையும், அடைவும், ஆட்டமும் எனவும் வரும். எல்லாக் குறியரும்; சிறியரும், தீயரும், பெரியரும் என உயர் திணைக்கண்ணும் ஒட்டுக. ஈண்டுச் சாரியை பெற்றவழி, மகரக்கேடு வற்றின்மிசை ஒற்றாய்க் கெட்டது. இது விரவுப்பெயராகலின், ஈற்றுப் பொது முடிபிற்கு ஏலாதென்று சாரியை வல்லெழுத்துக் கொள்ளப் பட்டது. (27) 324. மெல்லெழுத்து மிகினு மான மில்லை. இது, மேற்கூறிய எல்லாம் என்பதற்கு அல்வழிக்கண் எய்தியதன் மேற் சிறப்பு விதி கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) மெல்லெழுத்து மிகினும் மானம் இல்லை - அவ் வெல்லாமென்பது அல்வழிக்கண் மேல் இலேசினாற் கூறிய வல்லெழுத்தே யன்றி மெல்லெழுத்து மிக்கு முடியினும் குற்றம் இல்லை எ-று. மேற்கூறிய செய்கைமேலே இது கூறினமையின், மகரக் கேடும் இறுதி உம்முப்பேறுங் கொள்க. உ-ம்: எல்லாங்குறியவும்; சிறியவும், தீயவும், பெரியவும் எனவும்; எல்லாங்குறியரும்; சிறியரும், தீயரும், பெரியரும் எனவும் ஒட்டுக. இனி, உரையிற்கோடல் என்பதனான், இறுதி உம்மின்றி எல்லாங் குறிய, எல்லாருங்குறியர் எனவும் வரும். மேல் இலேசினாற் கூறிநின்ற வல்லெழுத்தினொடு மெல் லெழுத்து வகுத்தமையின், இஃது அல்வழியாயிற்று. 325. உயர்திணை யாயி னுருபிய னிலையும். இது, மேலதற்கு உயர்திணை முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) உயர்திணையாயின் உருபு இயல் நிலையும் - அவ் வெல்லாமென்பது அஃறிணைப்பெயராயன்றி உயர்திணைப் பெயராய் நின்ற நிலைமையாயின் உருபுபுணர்ச்சியின் இயல்பிலே நின்று ஆண்டுக் கூறிய நம்முச்சாரியை பெற்று முடியும். வற்று வகுத்த செய்கை மேல் வகுத்தமையின், மகரக்கேடு கொள்க. இறுதி உம்மையும் அச் செய்கை மேலே வகுத்தமையிற் கொள்க. உ-ம்: எல்லாநங்கையும்; செவியும், தலையும், புறமும் என வரும். மேல் மானமில்லை (சூத். 28) என்றதனான், அல்வழிக் கண் வன்கணத்து மகரம்கெட்டு வல்லெழுத்து மிக்கு இறுதி உம்முப்பெற்று முடிதலும், இயல்புகணத்துக்கண் மகரம் கெட்டு இறுதி உம்முப்பெற்று முடிதலும் கொள்க. உ-ம்: எல்லாக் கொல்லரும், சேவகரும், தச்சரும், புலவரும் எனவும்; எல்லா ஞாயிறும், நாயகரும், மணியகாரரும் வணிகரும், அரசரும் எனவும் வரும். (29) 326. நும்மெ னொருபெயர் மெல்லெழுத்து மிகுமே. இதுவும், அவ் வீற்று விரவுப்பெயருள் ஒன்றற்கு வேற்றுமை முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) நும் என் ஒரு பெயர் மெல்லெழுத்து மிகும் - நும் என்று சொல்லப்படுகின்ற ஒரு விரவுப்பெயர் வேற்றுமைக்கண் மெல்லெழுத்து மிக்கு முடியும். உ-ம்: நுங்கை; செவி, தலை, புறம் என வரும். மகரம் ‘துவர’ (சூத். 15) என்ற இலேசினாற் கெட்டது. ‘ஒருபெயர்’ என்றதனான், ஞகர நகரங்கள் வந்த இடத்தும் அவ்வொற்று மிகுதல் கொள்க. நுஞ்ஞாண், நுந்நூல் என வரும். ‘ஒன்றின முடித்தல்’ என்பதனான், உங்கை என உம் என்பதன் முடிபும் இவ் வீற்றதாகக் கொள்க. (30) 327. அல்லதன் மருங்கிற் சொல்லுங் காலை உக்கெட நின்ற மெய்வயி னீவர இஇடை நிலைஇ யீறுகெட ரகரம் நிற்றல் வேண்டும் புள்ளியொடு புணர்ந்தே அப்பான் மொழிவயி னியற்கை யாகும். இது, மேலதற்கு அல்வழி முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) அல்லதன் மருங்கின் சொல்லும் காலை - அந் நும் என் ஒரு பெயர் தன்னை அல்வழியிடத்துச் சொல்லுங்காலை, உ கெட நின்ற மெய்வயின் ஈ வர இ இடைநிலைஇ ஈறு கெட ரகரம் புள்ளியொடு புணர்ந்து நிற்றல் வேண்டும் - நகரத்து உகரங்கெட அந் நின்ற மெய்யிடத்து ஈகாரம் வர, ஓர் இகரம் இடையிலே பெற மகரம் கெட அவ்விடத்து ஒரு ரகரம் புள்ளியொடு பொருந்தி நிற்றல் வேண்டும்; அப்பால் மொழிவயின் இயற்கை யாகும் - வருமொழியிடத்து அம் மொழிதான் இவ்வாறு திரியாது இயல்பாதல் வேண்டும். உ-ம்: நீயீர்குறியீர், சிறியீர், தீயீர், பெரியீர் என வரும். ஞான்றீர், நீண்டீர், மாண்டீர் என இயல்பு கணத்தோடும் ஒட்டுக. (31) 328. தொழிற்பெய ரெல்லாந் தொழிற்பெய ரியல. இஃது, இவ் வீற்றுத் தொழிற்பெயர்கள் அல்வழிக் கண்ணும் வேற்றுமைக் கண்ணும் முடிபு வேற்றுமை கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) தொழிற்பெயரெல்லாம் தொழிற்பெயர் இயல - மகரவீற்றுத் தொழிற்பெயரெல்லாம் அல்வழிக்கண்ணும் வேற்றுமைக் கண்ணும் ஞகாரவீற்றுத் தொழிற்பெயர் இயல்பினவாய் வன்கணத்து உகரமும் வல்லெழுத்தும் பெற்றும், இயல்புகணத்து உகரம் பெற்றும் வரும். உ-ம்: செம்முக்கடிது, சிறிது, தீது, பெரிது எனவும்; செம்மு ஞான்றது, நீண்டது, மாண்டது, வலிது எனவும்; செம்முக் கடுமை, சிறுமை, தீமை, பெருமை எனவும்; செம்மு ஞாற்சி, நீட்சி, மாட்சி, வலிமை எனவும் வரும். ‘எல்லாம்’ என்றதனான், உகரம்பெறாது அல்வழிக்கண் நாட்டங் கடிது என மெல்லெழுத்தாய்த் திரிவனவும், வேற்றுமைக் கண் நாட்டக் கடுமை என மகரங்கெட்டு வல்லெழுத்து மிக்கு வருவனவுங் கொள்க. (32) 329. ஈமுங் கம்மு முருமென் கிளவியும் ஆமுப் பெயரு மவற்றோ ரன்ன. இது, பொருட்பெயருட் சில அல்வழிக்கண்ணும் வேற்றுமைக் கண்ணும் தொழிற்பெயரோடு ஒத்து முடியுமெனக் கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) ஈமும் கம்மும் உரும் என் கிளவியும் அ முப்பெயரும்- ஈம் என்னும் சொல்லும் கம் என்னும் சொல்லும் உரும் என்னும் சொல்லுமாகிய அம் மூன்று பெயரும், அவற்று ஓர் அன்ன - அல்வழிக்கண்ணும் வேற்றுமைக்கண்ணும் அத் தொழிற் பெயரோடு (297, 298) ஒருதன்மையவாய் வன்கணம் வந்தவழி உகரமும் வல்லெழுத்தும் பெற்றும், இயல்புகணத்து உகரம் பெற்றும் முடியும். உ-ம்: ஈமுக்கடிது, கம்முக்கடிது, உருமுக்கடிது; சிறிது, தீது, பெரிது, எனவும்; ஈமுஞான்றது, கம்முஞான்றது, உருமுஞான்றது; நீண்டது, மாண்டது, வலிது எனவும்; ஈமுக் கடுமை, கம்முக்கடுமை, உருமுக்கடுமை; சிறுமை, தீமை, பெருமை எனவும்; ஈமுஞாற்சி, கம்மு ஞாற்சி, உருமுஞாற்சி; -நீட்சி, மாட்சி, வலிமை எனவும் வரும். (ஈம்-இடுகாடு, கம்-கம்மியரதுதொழில், உரும்-இடி.) (33) 330. வேற்றுமை யாயி னேனை யிரண்டும் தோற்றம் வேண்டு மக்கென் சாரியை. இது, மேல் முடிபு கூறிய மூன்றனுள் இரண்டற்கு வேற்றுமைக்கண் வேறு ஒரு முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) வேற்றுமை ஆயின் - வேற்றுமைப் பொருட் புணர்ச்சி யாயின், ஏனை இரண்டும் அக்கு என் சாரியை தோற்றம் வேண்டும் - இறுதி உரும் ஒழிந்த இரண்டும் `அக்கு’ என்னும் சாரியை தோற்றி முடிதல் வேண்டும். ‘தோற்றம்’ என்றதனான் உகரம் நீக்குதல் வேண்டுமென்க. உ-ம்: ஈமக்குடம், கம்மக்குடம்; சாடி, தூதை, பானை என வரும். மேல் வேற்றுமை கூறிய முடிபு குணவேற்றுமைக் கண்ண தென்றும், ஈண்டுக் கூறிய முடிபு பொருட்பெயர்க்கண்ண தென்றும் கொள்க. (34) 331. வகார மிசையு மகாரங் குறுகும். இது, பருந்துவிழுக்காடாய் ‘அரையளபு குறுகல்’ (நூன்மரபு 13) என்பதற்கு ஒரு புறனடை கூறுகின்றது. (இ-ள்.) வகாரம் மிசையும் மகாரம் குறுகும் - மேல் ஒரு மொழிக்கண் கூறிய ‘னகாரை முன்னர்’ (மொழிமரபு. சூத்திரம். 19) அன்றி, ஈண்டுப் புணர்மொழிக்கண் வகரத்தின்மேலும் மகரங் குறுகும். உ-ம்: நிலம் வலிது என வரும். (35) 332. நாட்பெயர்க் கிளவி மேற்கிளந் தன்ன அத்து மான்மிசை வரைநிலை யின்றே ஒற்றுமெய் கெடுத லென்மனார் புலவர். இஃது, இவ்வீற்று நாட்பெயர்க்கு வேற்றுமை முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) நாள்பெயர்க் கிளவி மேல் கிளந்த அன்ன - மகரவீற்று நாட்பெயர்ச்சொல் மேல் (248) இகரவீற்று நாட்பெயரிற் கிளந்த தன்மைய வாய் ஆன் பெற்று முடியும்; அத்து ஆன் மிசையும் வரைநிலை இன்று - அத்துச்சாரியை அவ் வான்சாரியைமேலும் பிற சாரியைமேலும் நீக்கும் நிலைமை யின்றாம்; ஒற்றுமெய் கெடுதல் என்மனார் புலவர் - அவ்விடத்து மகரவொற்றுத் தன் வடிவு கெடுக வென்று சொல்லுவர் புலவர். உ-ம்: மகத்தாற் கொண்டான்; மகத்துஞான்று கொண்டான்; சென்றான், தந்தான், போயினான் என வரும். ‘ஒற்று’ என்னாது ‘மெய்’ என்றதனான், நாட்பெயரல்லாத பொருட்பெயர்க்கண்ணும் அம் முடிபு கொள்க. உ-ம்: மரத்தாற் கொண்டான், சென்றான், தந்தான், போயினான் என வரும். (ஞான்று என்பது - சாரியை.) (36) 333. னகார விறுதி வல்லெழுத் தியையின் றகார மாகும் வேற்றுமைப் பொருட்கே. இது, னகார வீற்று வேற்றுமை முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) னகார இறுதி வல்லெழுத்து இயையின் - னகார வீற்றுப்பெயர் வல்லெழுத்து முதன்மொழி வருமொழியாய் வந்து இயையின், றகாரம் ஆகும் வேற்றுமைப் பொருட்கு - றகாரம் ஆகும் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண். உ-ம்: பொற்குடம்; சாடி, தூதை, பானை என வரும். (37) 334. மன்னுஞ் சின்னு மானு மீனும் பின்னு முன்னும் வினையெஞ்சு கிளவியும் அன்ன வியல வென்மனார் புலவர். இஃது, அவ் வீற்று அசைநிலை இடைச்சொல்லும், ஏழாம் வேற்றுமை இடப்பொருள் உணரநின்ற இடைச்சொற்களும், வினையெச்சமும் முடியுமாறு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) மன்னும் சின்னும் ஆனும் ஈனும் பின்னும் முன்னும் வினையெஞ்சு கிளவியும் - மன் என்னும் சொல்லும் சின் என்னும் சொல்லும் ஆன் என்னும் சொல்லும் ஈன் என்னும் சொல்லும் பின் என்னும் சொல்லும் முன் என்னும் சொல்லும் வினையெச்சமாகிய சொல்லும், அன்ன இயல என்மனார் புலவர்- மேற்கூறிய இயல்பினவாய் னகரம் றகரமாய் முடியும் என்று சொல்லுவர் புலவர். உ-ம்: “அதுமற் கொண்கன் றேரே,” “காப்பும் பூண்டிசிற் கடையும் போகலை” எனவும்; ஆற்கொண்டான், ஈற்கொண்டான், பிற்கொண்டான், முற்கொண்டான்; சென்றான், தந்தான், போயினான் எனவும்; வரிற்கொள் ளும்; செல்லும், தரும், போம் எனவும் வரும். பெயராந் தன்மையவாகிய ஆன், ஈன் என்பனவற்றை முற் கூறாததனான், ஆன்கொண்டான், ஈன்கொண்டான் எனத் திரியாது முடிதலும் கொள்க. பின், முன் என்பன பெயர்நிலையும் வினையெச்சநிலையும் உருபு நிலையும் படும். அவற்றுள் வினையெச்சநிலை ஈண்டு ‘வினையெஞ்சு கிளவியும்’ என்பதனான் முடியும். உருபுநிலை உருபியலுள் முடியும். ஈண்டுப் பெயர் கூறுகின்றது. அப் பெயரை முன் கூறாததனான், பின் கொண்டான், முன்கொண்டான் எனத் திரியாமையும் கொள்க. ‘இயல’ என்றதனான், ஊன் என்னும் சுட்டு ஊன் கொண்டான் என இயல்பாய் முடிதல் கொள்க. (38) 335. சுட்டுமுதல் வயினு மெகரமுதல் வயினும் அப்பண்பு நிலையு மியற்கைய வென்ப. இஃது, இவ் வீற்றுள் ஒருசார் ஏழாம் வேற்றுமை இடப்பொருள் உணர்த்தி நின்ற இடைச்சொல்லிற்கு முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) சுட்டுமுதல் வயினும் எகரமுதல் வயினும் - சுட்டெழுத்தினை முதலாகவுடைய வயின் என்னும் சொல்லும் எகரமாகிய முதலையுடைய வயின் என்னும் சொல்லும், அ பண்பு நிலையும் இயற்கைய என்ப - மேல் றகரமாய் முடியுமென்ற அப் பண்பு நிலை பெற்று முடியும் இயற்கையையுடைய என்று சொல்லுவர். உ-ம்: அவ்வயிற்கொண்டான், இவ்வயிற்கொண்டான், உவ்வயிற் கொண்டான், எவ்வயிற்கொண்டான்; சென்றான், தந்தான், போயினான் என வரும். ‘இயற்கைய’ என்றதனான், திரியாது இயல்பாய் முடிவனவும் கொள்க. கான்கோழி என வரும். (39) 336. குயினென் கிளவி யியற்கை யாகும். இஃது, இவ் வீற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) குயின் என் கிளவி இயற்கை யாகும் - குயின் என்னும் சொல் திரியாது இயல்பாய் முடியும். உ-ம்: குயின்குழாம்; செலவு, தோற்றம், மறைவு என வரும். குயின் என்பது மேகம். (40) 337. எகின்மர மாயி னாண்மர வியற்றே. இது, திரிபு விலக்கி அம்மு வகுத்தல் நுதலிற்று. (இ-ள்.) எகின் மரம் ஆயின் ஆண்மர இயற்று - எகின் என்னும் சொல்லும் மரப்பெயராயின் ஆண்மரத்தினது இயல்பிற்றாய் அம்முப் பெற்று முடியும். உ-ம்: எகினங்கோடு; செதிள், தோல், பூ என வரும். (41) 338. ஏனை யெகினே யகரம் வருமே வல்லெழுத் தியற்கை மிகுதல் வேண்டும். இதுவும் அது. (இ-ள்.) ஏனை எகின் அகரம் வரும் - ஒழிந்த மரமல்லா எகின் நிலைமொழிக்கண் அகரம் வந்து முடியும்; வல்லெழுத்து இயற்கை மிகுதல் வேண்டும் - அவ்விடத்து வருமொழி வல்லெழுத்து இயல்பு மிக்கு முடிதல் வேண்டும். உ-ம்: எகினக்கால், செவி, தலை, புறம் என வரும். மேலைச் சூத்திரத்தோடு இதனை ஒன்றாக ஓதாததனான், இயல்புகணத்துக்கண்ணும் அகரப்பேறு கொள்க. எகினஞாற்சி, யாப்பு, அடைவு என வரும். `இயற்கை’ என்றதனான் அகரப்பேற்றோடு மெல்லெழுத்துப் பேறும் கொள்க. உம்:எகினங்கால், செவி, தலை, புறம் எனவரும். (42) 339. கிளைப்பெய ரெல்லாங் கிளைப்பெய ரியல. இஃது, இவ் வீற்றுட் சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் நுதலிற்று. (இ-ள்.) கிளைப்பெயர் எல்லாம் கிளைப்பெயர் இயல - னகார ஈற்றுக் கிளைப்பெயரெல்லாம் ணகார ஈற்றுக் கிளைப்பெயர் போலத் (308) திரியாது இயல்பாய் முடியும். உ-ம்: எயின்குடி; சேரி, தோட்டம், பாடி என வரும். ‘எல்லாம்’ என்றதனான், அக்குச்சாரியையும் வல்லெழுத்தும் பெற்று எயினக்கன்னி என முடிதலும்; பார்ப்பனக்கன்னி என நிலைமொழி திரிந்து அக்கும் வல்லெழுத்தும் பெறுதலும்; இனிச் சாரியை பெறாது ஈறு திரிந்து வேளாண்குமரி, வேளாண் வாழ்க்கை என முடிதலும் கொள்க. (43) 340. மீனென் கிளவி வல்லெழுத் துறழ்வே. இதுவும், அவற்றுள் ஒன்றற்கு வேறு முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) மீன் என் கிளவி வல்லெழுத்து உறழ்வு - மீன் என்னும் சொல் தன் திரிபு வல்லெழுத்தினோடு உறழ்ந்து முடியும். உ-ம்: மீன்கண், மீற்கண்; சினை, தலை, புறம் என வரும். (44) 341. தேனென் கிளவி வல்லெழுத் தியையின் மேனிலை யொத்தலும் வல்லெழுத்து மிகுதலும் ஆமுறை யிரண்டு முரிமையு முடைத்தே வல்லெழுத்து மிகுவழி யிறுதி யில்லை. இதுவும் அது. (இ-ள்.) தேன் என் கிளவி வல்லெழுத்து இயையின் - தேன் என்னும் சொல் வல்லெழுத்து முதன் மொழியாய் வந்து பொருந்தின், மேல்நிலை ஒத்தலும் வல்லெழுத்து மிகுதலும் ஆ முறை இரண்டும் உரிமையும் உடைத்து - மேல் மீன் என்னும் சொல்லிற்குச் சொன்ன திரி புறழ்ச்சியின் நிலைமையையொத்து முடிதலும் வருமொழி வல்லெழுத்து மிக்கு முடிதலுமாகிய அம் முறையையுடைய இரண்டனையும் உரித்தாதலையும் உடைத்து, வல்லெழுத்து மிகுவழி இறுதி இல்லை - வல்லெழுத்து மிகுமிடத்து நிலைமொழியிறுதி னகரவொற்று நிலையின்றிக் கெடும். ‘உரிமையும்’ என்ற வும்மை ‘மெல்லெழுத்து மிகினும்’ (342) என மேல்வருகின்ற முடிவினை நோக்கி நின்றது. உ-ம்: தேன்குடம், தேற்குடம்; சாடி, தூதை, பானை எனவும்; தேக்குடம்; சாடி, தூதை, பானை எனவும் வரும். (45) 342. மெல்லெழுத்து மிகினு மான மில்லை. இது, மேலதற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மெல்லெழுத்து மிகினும் மானம் இல்லை - தேன் என் கிளவி வல்லெழுத்து வந்தால் வல்லெழுத்து மிகுதலே யன்றி மெல்லெழுத்து மிக்கு முடியினும் குற்றம் இல்லை. னகரக்கேடு அதிகாரத்தாற் கொள்க. உ-ம்: தேங்குடம்; சாடி, தூதை, பானை என வரும். (46) 343. மெல்லெழுத் தியையி னிறுதியோ டுறழும். இது, மேலதற்கு மென்கணத்துக்கண் தொகைமரபிற் கூறிய முடிபு ஒழிய வேறுமுடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) மெல்லெழுத்து இயையின் இறுதியோடு உறழும் - அத் தேன் என் கிளவி மெல்லெழுத்து முதல்மொழி வந்து இயையின் நிலைமொழியிறுதி னகாரவொற்றுக் கெடுதலும் கெடாமையுமாகிய உறழ்ச்சியாய் முடியும். உ-ம்: தேன்ஞெரி, தேஞெரி; நுனி, முரி எனக் கொள்க. மேல் ‘மான மில்லை’ (சூத்திரம் 49) என்றதனான், ‘இறுதி யோடு உறழும்’ என்றது ஈறுகெட்டு வருமொழி மெல்லெழுத்து மிக்கும் மிகாதும் உறழ்தற்கும், வருமொழி மிகாது இறுதி கெட்டும் கெடாதும் உறழ்தற்கும், அவ் விரண்டற்கும் உரித்தாய்ச் சென்றதனை விலக்கி வருமொழி மிகாதே நிற்ப அவ்வீறே கெட்டும் கெடாதும் நின்று உறழுமென்பது கொள்ளப் பட்டது. அதன்மேல் ‘ஆமுறை’ (சூத்திரம் 45) என்றதனான், சிறுபான்மை ஈறுகெட்டுத் தேஞ்ஞெரி; நுனி, முரி என மெல்லெழுத்து மிகுதலும் கொள்க. (47) 344. இறாஅற் றோற்ற மியற்கை யாகும். இஃது, இன்னும் அதற்கு உயிர்க்கணத்து ஒருமொழிக்கண் முடியும் வேற்றுமை முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) இறாஅல் தோற்றம் - தேன் என்னும் சொல் இறால் என்னும் வருமொழியது தோற்றத்துக்கண், இயற்கை ஆகும் - நிலைமொழி னகாரங்கெடாதே நின்று இயல்பாய் முடியும். உ-ம்: தேனிறால் என வரும். (48) 345. ஒற்றுமிகு தகரமொடு நிற்றலு முரித்தே. இஃது, அதற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) ஒற்றுமிகு தகரமொடு நிற்றலும் உரித்து - அத்தேன் என்பது இறால் என்னும் வருமொழிக்கண் பிறிதும் ஒரு தகரவொற்று உடன்மிகு தகரத்தொடு நின்று முடிதலும் உரித்து. மேல் “வல்லெழுத்து மிகுவழி யிறுதியில்லை” (புள்ளி. 45) என்றதனான் நிலைமொழி யீறு கெடுக்க, ‘தகர மிகும்’ என்னாது, ‘ஒற்றுமிகு தகரம்’ என்றதனான் ஈரொற்றாக்குக. உ-ம்: தேத்திறால் என வரும். மேலைச் சூத்திரத்தோடு இதனை ஒன்றாக ஓதாததனால், பிற வருமொழிக்கண்ணும் இம் முடிபுகொள்க. தேத்தடை, தேத்தீ என வரும். ‘தோற்றம்’ என்றதனான், தேனடை, தேனீ என்னும் இயல்பும் கொள்க. (49) 346. மின்னும் பின்னும் பன்னுங் கன்னும் அந்நாற் சொல்லுந் தொழிற்பெய ரியல. இஃது, இவ்வீற்றுட் சிலவற்றிற்கு வேறுமுடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) மின்னும் பின்னும் பன்னும் கன்னும் அ நால் சொல்லும் - மின் என்னும் சொல்லும் பின் என்னும் சொல்லும் பன் என்னும் சொல்லும் கன் என்னும் சொல்லுமாகிய அந் நான்கு சொல்லும், தொழிற் பெயர் இயல - வேற்றுமைக் கண்ணும் அல்வழிக்கண்ணும் ஞகரவீற்றுத் தொழிற்பெயர் போல (297, 298) வன்கணம் வந்தவழி உகரமும் வல்லெழுத்தும் பெற்றும், மென்கணத்துக்கண்ணும் இடைக் கணத்துக்கண் ணும் உகரம் பெற்றும் முடியும். உ-ம்: மின்னுக்கடிது, பின்னுக்கடிது, பன்னுக்கடிது, கன்னுக் கடிது; சிறிது, தீது, பெரிது, ஞான்றது, நீண்டது, மாண்டது, வலிது, யாது எனவும்; மின்னுக்கடுமை, பின்னுக்கடுமை, பன்னுக் கடுமை, கன்னுக் கடுமை; சிறுமை, தீமை, பெருமை, ஞாற்சி, நீட்சி, மாட்சி, வலிமை, யாப்பு எனவும் வரும். “தொழிற்பெயரெல்லாந் தொழிற்பெயரியல” என்று ஓதாது இவ்வாறு எடுத்தோதியவதனான், இம் முடிபினைத் தொழிற்பெயர்க்கும் பொருட்பெயர்க்கும் உடன் கொள்க. மின் என்பது ஒரு தொழிலுமுண்டு; பொருளுமுண்டு. பிறவும் அன்ன. (50) 347. வேற்றுமை யாயி னேனை யெகினொடு தோற்ற மொக்குங் கன்னென் கிளவி. இது, மேல் முடிபு கூறியவற்றுள் ஒன்றற்கு வேறு ஒரு முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) கன் என் கிளவி வேற்றுமையாயின் - கன் என்னும் சொல் வேற்றுமைப் பொருட் புணர்ச்சியாயின், ஏனை எகினொடு தோற்றம் ஒக்கும் - ஒழிந்த மரமல்லா எகினொடு தோற்றம் ஒத்து (338) அகரமும் வல்லெழுத்தும் பெற்று முடியும். உ-ம்: கன்னக்குடம்; சாடி, தூதை, பானை, ஞாற்சி, நீட்சி, மாட்சி, வலிமை என வரும். சிறுபான்மை கன்னக்கடுமை எனக் குணவேற்றுமைக் கண்ணும் இம் முடிபு கொள்க. ‘தோற்றம்’ என்றதனால், அல்வழிக்கண் அகரமும், வன்கணத்துக்கண் மெல்லெழுத்தும் கொள்க. உ-ம் கன்னங்கடிது, சிறிது, தீது, பெரிது, ஞான்றது, நீண்டது, மாண்டது, யாது, வலிது என வரும். இன்னும் ‘தோற்றம்’ என்றதனான், சிறுபான்மை கன்னங் கடுமை; சிறுமை, தீமை, பெருமை எனக் குணவேற்றுமைக் கண்ணும் அகரமும் மெல்லெழுத்தும் கொள்க. இக் ‘கன்’ என்பதன் வேற்றுமை முடிபிற்கு, மேற்கூறியது (346) குணவேற்றுமைக்கு எனவும், ஈண்டுக் கூறியது பொருட்பெயர்க்கு எனவும் கொள்க. (51) 348. இயற்பெயர் முன்னர்த் தந்தை முறைவரின் முதற்கண் மெய்கெட வகர நிலையும் மெய்யொழித் தன்கெடு மவ்வியற் பெயரே. இஃது, இவ் வீற்று விரவுப்பெயருள் இயற்பெயர்க்குத் தொகை மரபினுள் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) இயற்பெயர் முன்னர்த் தந்தை முறைவரின் - னகார வீற்று இயற்பெயர் முன்னர்த் தந்தை என்னும் முறைப்பெயர் வருமொழியாய் வரின், முதற்கண் மெய்கெட அகரம் நிலையும் - முதற்கண் மெய்கெட அதன்மேல் ஏறிநின்ற அகரம் கெடாது நிலைபெறும், அ இயற்பெயர் மெய் ஒழித்து அன்கெடும் - நிலைமொழியாகிய இயற்பெயர் அவ்வன் என்னும் சொல்லின் அகரம் ஏறிநின்ற மெய்யை ஒழித்து அவ்வன்தான் கெட்டு முடியும். உ-ம்: சாத்தந்தை, கொற்றந்தை என வரும். ‘முதற்கண் மெய்’ என்றதனான், சாத்தன்றந்தை, கொற்றன் றந்தை என்னும் இயல்பு முடிபும் கொள்க. (52) 349. ஆதனும் பூதனுங் கூறிய வியல்பொடு பெயரொற் றகரந் துவரக் கெடுமே. இது, மேலதற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) ஆதனும் பூதனும் - மேற்கூறிய இயற்பெயருள் ஆதனும் பூதனும் என்னும் இயற்பெயர்கள், கூறிய இயல்பொடு பெயர் ஒற்று அகரம் துவரக்கெடும் - மேற்கூறிய செய்கையொடு நிலைமொழிப் பெயருள் அன் கெடநின்ற ஒற்றும் வருமொழியுள் ஒற்றுக்கெட நின்ற அகரமும் முற்றக்கெட்டு முடியும். உ-ம்: ஆந்தை, பூந்தை என வரும். ‘இயல்பு’ என்றதனான், பெயரொற்றும் அகரமும் கெடாதே நின்று முடிந்தவாறே முடிதலும் கொள்க. ஆதந்தை, பூதந்தை எனவரும். ‘துவர’ என்றதனான், அழான், புழான் என நிறுத்திப் பொருந்தின செய்கை செய்து அழாந்தை, புழாந்தை என முடிக்க. (53) 350. சிறப்பொடு வருவழி யியற்கை யாகும். இஃது, எய்தியது ஒருவழி விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று. (இ-ள்.) சிறப்பொடு வருவழி இயற்கை ஆகும் - அவ் வியற்பெயர் பண்படுத்து வருவழி முன்கூறிய இருமொழிச் செய்கையும் தவிர்த்து இயல்பாய் முடியும். உ-ம்: பெருஞ்சாத்தன்றந்தை, பெருங்கொற்றன்றந்தை என வரும். (54) 351. அப்பெயர் மெய்யொழித் தன்கெடு வழியே நிற்றலு முரித்தே யம்மென் சாரியை மக்கண் முறைதொகூஉ மருங்கி னான. இது, மேலதற்கு வேறு ஒரு வருமொழிக்கண் எய்தாதது எய்துவித்தது. (இ-ள்.) அ பெயர் மக்கள் முறை தொகும் மருங்கின் ஆன மெய் ஒழித்து அன்கெடு வழி - அவ்வியற்பெயர் மக்கள் என்னும் முறைப்பெயர் வந்துகூடும் இடத்தின்கண்ணும் பிறிதிடத்தும், தான் ஏறிய மெய்யை ஒழித்து அன்கெடும் அவ்வழி, அம் என் சாரியை நிற்றலும் உரித்து - அம் என்னும் சாரியை நிற்றலும் உரித்து. உ-ம்:சாத்தங்கொற்றன், கொற்றங்கொற்றன் எனவும்; சாத்தங்குடி, கொற்றங்குடி எனவும் வரும். (55) 352. தானும் பேனுங் கோனு மென்னும் ஆமுறை யியற்பெயர் திரிபிட னிலவே. இது, மேலதற்கு ஒருவழி எய்தியது விலக்கிப் பிறிதுவிதி கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) தானும் பேனும் கோனும் என்னும் அ முறை இயற்பெயர் - அவ் வியற்பெயருள் தானும் பேனும் கோனும் என்னும் முறைமை யினையுடைய இயற்பெயர்கள் தந்தை மக்கள் என்னும் முறைப்பெயரொடு புணரும்வழி, திரிபு இடன் இல - மேற்கூறிய திரிபுகள் இன்றி இயல்பாய் முடியும் . உ-ம்: தான்றந்தை, பேன்றந்தை, கோன்றந்தை எனவும்; தான் கொற்றன், பேன்கொற்றன், கோன்கொற்றன் எனவும் வரும். (56) 353. தான்யா னெனும்பெய ருருபிய னிலையும். இது, விரவுப்பெயருள் தான் என்பதற்கும், உயர்திணைப் பெயருள் யான் என்பதற்கும், வேற்றுமைக்கண் தொகைமரபினுள் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) தான் யான் எனும் பெயர் உருபு இயல் நிலையும் - தான் என்னும் விரவுப்பெயரும் யான் என்னும் உயர்திணைப் பெயரும் மேல் தொகைமரபினுட் கூறிய இயல்புகள் ஒழித்து உருபு புணர்ச்சியிற் கூறிய இயல்பின்கண்ணே நிலைபெற்றுத் தான் என்பது நெடுமுதல் குறுகித் தன் என்றாயும், யான் என்பது யகரம்கெட்டு ஆகாரம் எகாரமாய் என் என்றாயும் முடியும். உ-ம்: தன்கை, என்கை; செவி, தலை, புறம் எனவும்; தன் ஞாண், என்ஞாண்; நூல், மணி, யாழ், வட்டு, அடை, ஆடை எனவும் வரும். (57) 354. வேற்றுமை யல்வழிக் குறுகலுந் திரிதலும் தோற்ற மில்லை யென்மனார் புலவர். இது, மேலவற்றிற்கு அல்வழி முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) வேற்றுமை அல்வழி - மேற்கூறிய தான் யான் என்னும் பெயர்கள் வேற்றுமைப்புணர்ச்சியல்லாதவிடத்து, குறுகலும் திரிதலும் தோற்றம் இல்லை என்மனார் புலவர் - தான் என்பது நெடுமுதல் குறுகலும் யான் என்பது அவ்வாறு திரிதலும் தோற்றமின்றி இயல்பாய் முடியும் என்று சொல்லுவர் புலவர். உ-ம்: தான்குறியன்; சிறியன், தீயன், பெரியன், ஞான்றான், நீண்டான், மாண்டான் எனவும்; யான்குறியேன், சிறியேன், தீயேன், பெரியேன், ஞான்றேன், நீண்டேன், மாண்டேன் எனவும் வரும். ‘தோற்றம்’ என்றதனான், வேற்றுமைக்கண் அவ்வாறன்றித் திரிதலும் கொள்க. உ-ம்: தற்புகழ், தற்பகை எனவும்; எற்பகை, எற்பாடி எனவும் வரும். (58) 355. அழனென் னிறுதிகெட வல்லெழுத்து மிகுமே. இஃது, இவ் வீற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் நுதலிற்று. (இ-ள்.) அழன் என் இறுதிகெட வல்லெழுத்து மிகும் - அழன் என்னும் சொல் தன் னகரவீறு கெட வருமொழி வல்லெழுத்து மிக்கு முடியும் எ-று. உ-ம்: அழக்குடம்; சாடி, தூதை, பானை என வரும். அழன் என்பது பிணம். (59) 356. முன்னென் கிளவி முன்னர்த் தோன்றும் இல்லென் கிளவிமிசை றகர மொற்றல் தொல்லியன் மருங்கின் மரீஇய மரபே. இஃது, இவ் வீற்றுள் இலக்கணத்தொடு பொருந்திய மரூஉக்களுள் ஒன்றற்கு வேறு முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) முன் என் கிளவி முன்னர்த் தோன்றும் இல் என் கிளவி மிசை றகரம் ஒற்றல் - முன் என்னும் சொல்லின் முன்னர்த் தோன்றும் இல் என்னும் சொல்லின்மேல் றகர வொற்று வந்து முடிதல், தொல் இயல் மருங்கின் மரீஇய மரபு - பழையதாகிய இயல்பினையுடைய விடத்து மருவி வந்த இலக்கண முடிபு. உ-ம்: முன்றில் என வரும். இது கடைக்கண் என்றாற்போல வரூஉம் மரூஉ முடிபு போலன்றி, முன்னில் என ஒற்றிரட்டி முடியற்பாலது, இரு மொழிக்கும் இயல்பிலதோர் ஒற்று மிக்கு முடிந்த மரூஉ முடிபு. (60) 357. பொன்னென் கிளவி யீறுகெட முறையின் முன்னர்த் தோன்றும் லகார மகாரம் செய்யுண் மருங்கிற் றொடரிய லான. இஃது, இவ் வீற்றுள் ஒன்றற்குச் செய்யுள் முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) பொன் என் கிளவி ஈறு கெட முன்னர் முறையின் லகாரம் மகாரம் தோன்றும் - பொன் என்னும் சொல் பகர முதன்மொழி வந்த விடத்துத் தன் ஈற்றின் னகரம்கெட அதன் முன்னர் முறையானேலகரமும் மகரமும் தோன்றி முடியும்; செய்யுள் மருங்கின் தொடர் இயலான - (யாண்டெனில்,) செய்யு ளிடத்துச் சொற்கள் தம்மில் தொடர்ச்சிப்படும் இயல்பின்கண். ‘முறையின்’ என்றதனான், லகரம் உயிர்மெய்யாகவும் மகரம் தனிமெய்யாகவும் கொள்க. உ-ம்: “பொலம்படைப் பொலிந்த கொய்சுவற் புரவி” (மலைபடு. 574) என வரும். ‘தொடரியலான’ என்றதனான், பகரம் அல்லாத வன்கணத்துக் கண்ணும் சிறுபான்மை ஈறுகெட்டு லகரமும் வல்லெழுத்திற்கேற்ற மெல்லெழுத்தும் மிக்குமுடிதல் கொள்க. பொலங்கலம், பொலஞ்சுடர், பொலந்தேர் என வரும். ‘ஒன்றின முடித்தல்’ என்பதனான் ‘பொலநறுந் தெரியல்’ (புறம். 29) ‘பொலமல ராவிரை’ (கலி. 138) என்றாற்போல வரும் பிற கணத்து முடிபும் கொள்க. (61) 358. யகர விறுதி வேற்றுமைப் பொருள்வயின் வல்லெழுத் தியையி னவ்வெழுத்து மிகுமே. இது, யகாரவீற்றிற்கு வேற்றுமை முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) யகர இறுதி வேற்றுமைப் பொருள்வயின் - யகார வீற்றுப் பெயர் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண், வல்லெழுத்து இயையின் அ எழுத்து மிகும் - வல்லெழுத்து முதன்மொழி வந்து இயையின் அவ் வல்லெழுத்து மிக்கு முடியும். உ-ம்: நாய்க்கால்; செவி, தலை, புறம் என வரும். (62) 359. தாயென் கிளவி யியற்கை யாகும். இஃது, இவ் வீற்று விரவுப்பெயருள் ஒன்றற்கு வேறு முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) தாய் என் கிளவி இயற்கை யாகும் - தாய் என்னும் சொல் வல்லெழுத்து மிகாது இயல்பாய் முடியும். உ-ம்: தாய் கை; செவி, தலை, புறம் என வரும். இவ்வியல்பு மேல் இன்னவழி மிகும் என்கின்றமை யின், ‘அஃறிணை விரவுப்பெயர்’ என்பதனுள் அடங்காதாயிற்று. (63) 360. மகன்வினை கிளப்பின் முதனிலை யியற்றே. இது, மேலதற்கு அடையடுத்து வந்தவழி இன்னவாறு முடியுமென எய்தாதது எய்துவித்தல் நுதலிற்று. (இ-ள்.) மகன் வினை கிளப்பின் முதல்நிலை இயற்று - அத் தாய் என்னும் சொல் மகனது வினையைக் கிளந்து சொல்லு மிடத்து, இவ் வீற்று முதற்கண் (358) கூறிய நிலைமையின் இயல்பிற்றாய் வல்லெழுத்து மிக்கு முடியும். உ-ம்: மகன்றாய்க் கலாம்; செரு, தார், படை என வரும். ‘மகன்வினை’ என்றது, மகற்குத் தாயாற் பயன்படும் நிலைமையின்றி, அவளொடு பகைத்த நிலைமையை. 64) 361. மெல்லெழுத் துறழு மொழியுமா ருளவே. இஃது, இவ் வீற்றுட் சிலவற்றிற்கு எய்தாதது எய்துவித்தல் நுதலிற்று. (இ-ள்.) மெல்லெழுத்து உறழும் மொழியுமார் உள - மேற்கூறிய வல்லெழுத்தினொடு மெல்லெழுத்து மிக்கும் உறழ்ந்தும் முடியும் மொழிகளும் உள. உ-ம்: வேய்ங்குறை; வேய்க்குறை; சிறை, தலை, புறம் என வரும். (65) 362. அல்வழி யெல்லா மியல்பென மொழிப. இஃது, இவ்வீற்று அல்வழி முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) அல்வழி எல்லாம் இயல்பு என மொழிப - யகர வீற்று அல்வழியெல்லாம் இயல்பாய் முடியும் என்று சொல்லுவர் புலவர். உ-ம்: நாய்கடிது; சிறிது, தீது, பெரிது என வரும். ‘எல்லாம்’ என்றதனால், இவ் வீற்று உருபு வாராது, உருபின் பொருள்பட வந்த இடைச்சொல் முடிபும், வினையெச்ச முடிபும், இருபெயரொட்டுப் பண்புத்தொகை முடிபும், அல்வழி யுறழ்ச்சி முடிபும் கொள்க. உ-ம்: அவ்வாய்க் கொண்டான், இவ்வாய்க் கொண்டான், உவ்வாய்க் கொண்டான், எவ்வாய்க் கொண்டான்; சென்றான், தந்தான், போயினான் எனவும்; தாய்க் கொண்டான், சென்றான், தந்தான், போயினான் எனவும்; பொய்ச்சொல், மெய்ச்சொல் எனவும்; வேய்கடிது, வேய்க்கடிது; சிறிது, தீது, பெரிது எனவும் வரும். (66) 363. ரகார விறுதி யகார வியற்றே. இது, ரகார வீற்றுப்பெயர் வேற்றுமை முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) ரகார இறுதி யகார இயற்று - ரகார வீற்றுப்பெயர் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண் யகார வீற்று இயல் பிற்றாய் (358) வல்லெழுத்து வந்தவழி மிக்கு முடியும். உ-ம்: தேர்க்கால்; செய்கை, தலை, புறம் என வரும். (67) 364. ஆரும் வெதிருஞ் சாரும் பீரும் மெல்லெழுத்து மிகுதன் மெய்பெறத் தோன்றும். இஃது, இவ் வீற்றுட் சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) ஆரும் வெதிரும் சாரும் பீரும் - ஆர் என்னும் சொல்லும் வெதிர் என்னும் சொல்லும் சார் என்னுஞ் சொல்லும் பீர் என்னும் சொல்லும், மெல்லெழுத்து மிகுதல் மெய்பெற தோன்றும் - மெல்லெழுத்துமிக்கு முடிதல் மெய்ம்மைபெறத் தோன்றும். உ-ம்: ஆர்ங்கோடு, வெதிர்ங்கோடு, சார்ங்கோடு, பீர்ங்கோடு; செதிள், தோல், பூ என வரும். ‘மெய்பெற’ என்றதனான், பிறவும் மெல்லெழுத்து மிகுதல் கொள்க. உ-ம்: குதிர்ங்கோடு, துவர்ங்கோடு; செதிள், தோல், பூ என வரும். இன்னும் அதனானே, பீர் என்பது மேல் அம்முப் பெற்ற வழி இயைபு வல்லெழுத்து வீழ்வும் கொள்க. (68) 365. சாரென் கிளவி காழ்வயின் வலிக்கும். இது, மேலனவற்றுட் சார் என்பதற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) சார் என் கிளவி காழ்வயின் வலிக்கும் - சார் என்னும் சொல் காழ் என்னும் சொல்லொடு புணருமிடத்து வல்லெழுத்து மிக்குப் புணரும். உ-ம்: சார்க்காழ் என வரும். (69) 366. பீரென் கிளவி யம்மொடுஞ் சிவணும். இஃது, அவற்றுட் பீர் என்பதற்கு எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) பீர் என் கிளவி அம்மொடும் சிவணும்- பீர் என்னும் சொல் மெல்லெழுத்தேயன்றி அம்முச்சாரியையும் பெற்று வந்து முடியும். உ-ம்: பீரங்கோடு; செதிள், தோல், பூ என வரும். (70) 367. லகார இறுதி னகார வியற்றே. இது, லகார ஈற்றிற்கு னகார ஈற்று வேற்றுமையோடு இயைய வேற்றுமை முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) லகார இறுதி னகார இயற்று - லகார வீற்றுப் பெயர் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண் வல்லெழுத்து முதன்மொழி வரின் னகாரவீற்றின் இயல்பிற்றாய் (333) லகாரம் றகாரமாய்த் திரிந்து முடியும். உ-ம்: கற்குறை; சிறை, தலை, புறம் என வரும். (71) 368. மெல்லெழுத் தியையி னகார மாகும். இஃது, அவ் வீறு மென்கணத்தொடு முடியுமாறு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) மெல்லெழுத்து இயையின் னகாரம் ஆகும் - அவ்வீறு மென்கணம் வந்து இயையின் லகாரம் னகாரமாய்த் திரிந்து முடியும். உ-ம்: கன்ஞெரி; நுனி, முறி என வரும். இச் சூத்திரத்தினை வேற்றுமையது ஈற்றுக்கண் அல்வழியது எடுத்துக்கோடற்கண் சிங்கநோக்காக வைத்தமையான், அல்வழிக்கும் இம் முடிபு கொள்க. கன்ஞெரிந்தது; நீண்டது, மாண்டது என வரும். (72) 369. அல்வழி யெல்லா முறழென மொழிப. இஃது, அவ் வீற்றிற்கு அல்வழி முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) அல்வழி எல்லாம் உறழ் என மொழிப - அவ் வீறு அல்வழிக்கணெல்லாம் தந்திரிபு வல்லெழுத்தினோடு உறழ்ந்து முடியும் என்று சொல்லுவர் புலவர். உ-ம்: கல்குறிது, கற்குறிது; சிறிது, தீது, பெரிது என வரும். ‘எல்லாம்’ என்றதனான், கல்குறுமை, கற்குறுமை எனக் குணம் பற்றி வந்த வேற்றுமைக்கும் இவ்வுறழ்ச்சி கொள்க. இன்னும் அதனானே, இவ்வீற்று வினைச்சொல்லீறு திரிந்தனவும் கொள்க. வந்தானாற் கொற்றன் என வரும். இன்னும் அதனானே, அக்காற்கொண்டான், இக்காற் கொண்டான், உக்காற் கொண்டான், எக்காற் கொண்டான்; சென்றான், தந்தான், போயினான் என உருபு வாராது உருபின் பொருள்பட வந்தவற்றின் முடிபும் ஈண்டே கொள்க. இதனான், பிறவும் உள்ளவாறு அறிந்து ஒட்டிக் கொள்க. (73) 370. தகரம் வரும்வழி யாய்த நிலையலும் புகரின் றென்மனார் புலமை யோரே. இது, மேலதனுள் ஒரு கூற்றிற்கு எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) தகரம் வரும்வழி - அவ்வாறு றகாரமாய்த் திரிந்த லகாரம் தகர முதல்மொழி வருமொழியாய் வந்தவழி, ஆய்தம் நிலையலும் புகர் இன்று என்மனார் புலமையோர் - அவ்வாறு றகாரமாய்த் திரிதலேயன்றி ஆய்தமாய்த் திரிந்து நிற்றலும் குற்றமின்றென்று சொல்லுவர் ஆசிரியர். உ-ம்: கஃறீது, கற்றீது என வரும். ‘புகரின்று’ என்றதனான், ‘நெடியத னிறுதி’ (புள்ளி. 75) என்பதனுள், வேறீது, வேற்றீது என்னும் உறழ்ச்சி முடிபுங் கொள்க. (74) 371. நெடியத னிறுதி யியல்புமா ருளவே. இது, மேலதற்கு ஒருவழி எய்தியது விலக்கிப் பிறிதுவிதி கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) நெடியதன் இறுதி இயல்புமார் உள - நெடியதன் இறுதிக்கண் நின்ற லகாரவீறு குறியதன் இறுதிக்கண் நின்ற லகாரம் போலத் திரிந்து உறழ்தலேயன்றி இயல்பாய் முடிவனவும் உள. உ-ம்: பால்கடிது; சிறிது, தீது, பெரிது என வரும். இயல்பாகாது திரிந்தன வேல்கடிது, வேற்கடிது என்றாற் போல்வன. (75) 372. நெல்லுஞ் செல்லுங் கொல்லுஞ் சொல்லும் அல்லது கிளப்பினும் வேற்றுமை யியல. இஃது, இவ் வீற்று அல்வழியுட் சிலவற்றிற்கு வேறு முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) நெல்லும் செல்லும் கொல்லும் சொல்லும் - நெல் என்னும் சொல்லும் செல் என்னும் சொல்லும் கொல் என்னும் சொல்லும் சொல் என்னும் சொல்லும் ஆகிய இவை நான்கு சொல்லும், அல்லது கிளப்பினும் வேற்றுமை இயல - அவ்வழியைச் சொல்லுமிடத்தும் தம் வேற்றுமை முடிபின் இயல்பினவாய் லகாரம் றகாரமாய்த் திரிந்து முடியும். உ-ம்: நெற்கடிது, செற்கடிது, கொற்கடிது, சொற்கடிது; சிறிது, தீது, பெரிது எனவரும். (76) 373. இல்லென் கிளவி யின்மை செப்பின் வல்லெழுத்து மிகுதலு மையிடை வருதலும் இயற்கை யாதலு மாகாரம் வருதலும் கொளத்தகு மரபி னாகிட னுடைத்தே. இஃது, இவ்வீற்று வினைக்குறிப்புச் சொல் ஒன்றற்கு வேறு முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) இல் என் கிளவி இன்மை செப்பின் - இல் என்னும் சொல் புக்குறையும் இல்லை உணர்த்தாது ஒரு பொருளது இல்லாமையை உணர்த்துமிடத்து, வல்லெழுத்து மிகுதலும் ஐ இடை வருதலும் இயற்கை ஆதலும் ஆகாரம் வருதலும் - வல்லெழுத்து மிகுதலும் ஐ இடை வருதலும் இயல்பாதலும் ஆகாரம் மிக்கு முடிதலும் ஆகிய இம் முடிபு நான்கும், கொளத்தகும் மரபின் ஆகு இடன் உடைத்து - இச் சொல்லிற்கு முடிபாகக் கொளத்தகும் மரபானே இதன் முடிபு ஆகும் இடன் உடைத்து. ‘கொளத்தகு மரபு’ என்றதனான், வல்லெழுத்து மிக்கவழி ஐகாரம் வருதலும், ஆகாரம் மிக்கவழி வல்லெழுத்து மிகுதலும் கொள்க. இயல்பு முற்கூறாது ஒழிந்ததனான், வல்லெழுத்து மிகுதி ஆகாரம் வந்தவழி மிக்கே முடிதலின் சிறப்புடைத்தாதலும், ஐகாரம் வந்தவழி மிகுதலும் மிகாமையு முடைமையின் சிறப்பின்றாதலும் கொள்க. உ-ம்: இல்லைக்கல், இல்லைகல்; இல்கல்; இல்லாக்கல்; சுனை, துடி, பறை என வரும். இல்லைக்கல், இல்லைகல் என்பன இல்லை என்னும் ஐகார வீற்றுச் சொல் முடிபன்றோ வென்றும், இல்லாக்கல் என்பது உள்ள என்னும் பெயரெச்சத்து எதிர்மறையாகிய ஆகாரவீற்றுச் சொல்லது முடிபன்றோ வென்றும், இல்கல் என்பது பண்புத் தொகை முடிபன்றோ வென்றும் கூறின், அம் முடிபுகளோடு இம் முடிபுகள் எழுத்தொப்புமையன்றி, இவை ஓசை வேற்றுமை யுடைய வென்பது போலும் கருத்து. அவ்வோசை வேற்றுமை யாவன, ஐகார வீறாயவழி அவ் வைகாரத்து மேல் ஒலியூன்றியும், லகாரவீறு இயல்பு முடிபாயவழிப் பண்புத்தொகை போல ஒரு திரண்மையாக ஒலியாது இடையற்று லகாரத்துமேல் ஒலி யூன்றியும், ஆகாரவீறாயவழி, ஒரு திரண்மையால் அவ் ஆகாரத்துமேல் ஒலியூன்றியும், ஆண்டு லகார வீறாய வழி ஒரு திரண்மையாக ஒலியாது அந்த ஆகாரத்துமேல் ஒலியூன்றியும் வரும் வேறுபாடுகள் போலும். இல் என்பது எதிர்மறை வினைக்குறிப்புமுற்று விரவுவினை. (77) 374. வல்லென் கிளவி தொழிற்பெய ரியற்றே. இஃது, இவ் வீற்றுள் ஒன்றற்கு அல்வழிக்கண்ணும் வேற்றுமைக் கண்ணும் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று. (இ-ள்.) வல் என் கிளவி தொழிற்பெயர் இயற்று - வல் என்னும் சொல் அல்வழிக்கண்ணும் வேற்றுமைக்கண்ணும் ஞகாரவீற்றுத் தொழிற்பெயர் இயல்பிற்றாய் (297, 298) வன்கணத்து உகரமும் வல்லெழுத்தும் பெற்றும், மென்கணத்தும் இடைக்கணத்து வகரத்தும் உகரம் பெற்றும் முடியும். உ-ம்: வல்லுக்கடிது; சிறிது, தீது, பெரிது, ஞான்றது, நீண்டது, மாண்டது, வலிது எனவும்; வல்லுக்கடுமை; சிறுமை, தீமை, பெருமை, ஞாற்சி, நீட்சி, மாட்சி, வலிமை எனவும் வரும். (78) 375. நாயும் பலகையும் வரூஉங் காலை ஆவயி னுகரங் கெடுதலு முரித்தே உகரங் கெடுவழி யகர நிலையும். இது, மேலதற்கு எய்தியது ஒருமருங்கு மறுத்துப் பிறிது விதி கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) நாயும் பலகையும் வரும் காலை - மேல்நின்ற வல் என்பதன்முன் நாய் என்னும் சொல்லும் பலகை என்னும் சொல்லும் வருமொழியாய் வருங்காலத்து, அ வயின் உகரம் கெடுதலும் உரித்து - அவ்விடத்து உகரம் கெடாதே நின்று முடிதலேயன்றிக் கெட்டு முடியவும் பெறும், உகரம் கெடுவழி அகரம் நிலையும் - அவ் வுகரம் கெடுமிடத்து அகரம் நிலைபெற்று முடியும். உ-ம்: வல்லநாய், வல்லப்பலகை என வரும். ‘அகரம் நிலையும்’ என்னாது ‘உகரம் கெடும்’ என்றதனான், பிற வருமொழிக்கண்ணும் அவ் வகரப்பேறு கொள்க. உ-ம்: வல்லக்கடுமை; சிறுமை, தீமை, பெருமை என வரும். (79) 376. பூல்வே லென்றா வரலென் கிளவியோ டாமுப் பெயர்க்கு மம்மிடை வருமே. இதுவும், அவற்றுட் சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) பூல் வேல் ஆல் என் கிளவியோடு அ முப்பெயர்க்கும் - பூல் என்னும் சொல்லும் வேல் என்னும் சொல்லும் ஆல் என்னும் சொல்லும் ஆகிய அம் மூன்று பெயர்க்கும், அம் இடை வரும் - வேற்றுமைக்கண் திரிபின்றி அம்முச்சாரியை இடை வந்து முடியும் எ-று. உ-ம்: பூலங்கோடு, வேலங்கோடு, ஆலங்கோடு; செதிள், தோல், பூ என வரும். (என்றா என்பது - எண்ணிடைச்சொல்) (80) 377. தொழிற்பெய ரெல்லாந் தொழிற்பெய ரியல. இஃது, இவ்வீற்றுத் தொழிற்பெயர்க்கு அல்வழிக்கண்ணும் வேற்றுமைக்கண்ணும் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று. (இ-ள்.) தொழிற்பெயர் எல்லாம் தொழிற்பெயர் இயல - லகாரவீற்றுத் தொழிற்பெயரெல்லாம் ஞகாரவீற்றுத் தொழிற் பெயரின் இயல்பினவாய் அல்வழிக்கண்ணும் வேற்றுமைக் கண்ணும் வன்கணத்து உகரமும் வல்லெழுத்தும் பெற்றும், மென்கணத்தும் இடைக்கணத்து வகரத்தும் உகரம் பெற்றும் முடியும். உ-ம்: கல்லுக்கடிது; சிறிது, தீது, பெரிது, ஞான்றது, நீண்டது, மாண்டது, வலிது எனவும்; கல்லுக்கடுமை; சிறுமை, தீமை, பெருமை, ஞாற்சி, நீட்சி, மாட்சி, வலிமை எனவும் வரும். ‘எல்லாம்’ என்றதனான், இவ்வாறு முடியாது பிறவாறு முடிவனவும் கொள்க. உ-ம்: பின்னல்கடிது, துன்னல்கடிது; பின்னற் கடுமை, துன்னற் கடுமை என வரும். இன்னும் அதனானே, மென்கணம் வந்தவழி, பின்னன் ஞான்றது; பின்னன் ஞாற்சி என மெல்லெழுத்தாய்த் திரிந்து முடிவனவும் கொள்க. (81) 378. வெயிலென் கிளவி மழையிய னிலையும். இதுவும், எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று. (இ-ள்.) வெயில் என் கிளவி மழை இயல் நிலையும் - வெயில் என்னும் கிளவி மழை என்னும் சொல்லியல்பின்கண்ணே (288) நிலைபெற்று அத்தும் இன்னும் பெற்று முடியும். உ-ம்: வெயிலத்துக் கொண்டான்; வெயிலிற் கொண்டான்; சென்றான், தந்தான், போயினான் என வரும். (82) 379. சுட்டுமுத லாகிய வகர விறுதி முற்படக் கிளந்த வுருபிய னிலையும். இது, வகாரவீற்றுப் பெயர் நான்கினுள் சுட்டுமுதல் வகரம் மூன்றற்கும் வேற்றுமை முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) சுட்டு முதலாகிய வகர இறுதி - சுட்டெழுத்தை முதலாகவுடைய வகர வீற்றுச்சொல், முற்படக் கிளந்த உருபு இயல் நிலையும் - வேற்றுமைக்கண் முற்படச் சொன்ன உருபு புணர்ச்சியின் இயல்பு நிலைபெற்று வற்றுப் பெற்றுப் புணரும். உ-ம்: அவற்றுக்கோடு, இவற்றுக்கோடு, உவற்றுக் கோடு; செவி, தலை, புறம் என வரும். ‘முற்படக் கிளந்த’ என்றதனான், வற்றினோடு இன்னும் பெறுதல் கொள்க. உ-ம்: அவற்றின்கோடு, இவற்றின்கோடு, உவற்றின் கோடு; செவி, தலை, புறம் என வரும். (83) 380. வேற்றுமை யல்வழி யாய்த மாகும். இது, மேலவற்றிற்கு அல்வழி முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) வேற்றுமை அல்வழி ஆய்தம் ஆகும் - அச் சுட்டு முதலாகிய வகரவீறு வன்கணம் வந்தால் வேற்றுமைப் பொருட் புணர்ச்சியல்லாத அல்வழிக்கண் அவ்வகரம் ஆய்தமாய்த் திரிந்து முடியும். உ-ம்: அஃகடிய, இஃகடிய, உஃகடிய; சிறிய, தீய, பெரிய என வரும். (84) 381. மெல்லெழுத் தியையி னவ்வெழுத் தாகும். இது, மேலனவற்றிற்கு மென்கணத்து முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) மெல்லெழுத்து இயையின் அ எழுத்து ஆகும் - அச்சுட்டு முதலாகிய வகரவீறு மென்கணம் வந்து இயைந்த விடத்து அவ்வகரம் அவ்வம் மெல்லெழுத்தாய்த் திரிந்து முடியும். உ-ம்: அஞ்ஞாண், இஞ்ஞாண், உஞ்ஞாண்; நூல், மணி என வரும். (85) 382. ஏனவை புணரி னியல்பென மொழிப. இது, மேலனவற்றிற்கு இடைக்கணத்தும் உயிர்க்கணத்தும் முடிபு கூறுகின்றது. (இ-ள்.) ஏனவை புணரின் இயல்பு என மொழிப - அச் சுட்டு முதலாகிய வகரவீறு ஒழிந்த இடைக்கணமும் உயிர்க்கணமும் வந்து புணரின் அவ் வகரம் திரியாது இயல்பாய் முடியும். உ-ம்: அவ்யாழ், இவ்யாழ், உவ்யாழ்; வட்டு, அடை, ஆடை என ஒட்டுக. (86) 383. ஏனை வகரந் தொழிற்பெய ரியற்றே. இஃது, இவ் வீற்றுள் ஒழிந்த ஒன்றற்கும் அல்வழிக் கண்ணும் வேற்றுமைக்கண்ணும் முடிபு கூறுகின்றது. (இ-ள்.) ஏனை வகரம் தொழிற்பெயர் இயற்று - ஒழிந்த வகரவீறு ஞகர வீற்றுத் தொழிற்பெயர் இயல்பிற்றாய் வன்கணத்து உகரமும் வல்லெழுத்தும் பெற்றும், அல்லன வற்றுக்கண் உகரமே பெற்றும் முடியும். உ-ம்: தெவ்வுக்கடிது; சிறிது, தீது, பெரிது, ஞான்றது, நீண்டது, மாண்டது, வலிது எனவும்; தெவ்வுக்கடுமை; சிறுமை, தீமை, பெருமை, ஞாற்சி, நீட்சி, மாட்சி, வலிமை எனவும் வரும். (87) 384. ழகார விறுதி ரகார வியற்றே. இது, ழகாரவீற்று வேற்றுமை முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) ழகார இறுதி ரகார இயற்று - ழகார ஈற்றுப் பெயர் வன்கணம் வந்தால் வேற்றுமைக்கண் ரகார ஈற்று இயல்பிற்றாய் வல்லெழுத்து மிக்கு முடியும். உ-ம்: பூழ்க்கால்; சிறகு, தலை, புறம் என வரும். (88) 385. தாழென் கிளவி கோலொடு புணரின் அக்கிடை வருத லுரித்து மாகும். இஃது, இவ் வீற்றுள் ஒன்றற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) தாழ் என் கிளவி கோலொடு புணரின் - தாழ் என்னும் சொல் கோல் என்னும் சொல்லொடு புணரும் இடத்து, அக்குஇடை வருதலும் உரித்து - வல்லெழுத்து மிகுதலேயன்றி அக்குச்சாரியை இடை வந்து முடிதலும் உரித்து. உ-ம்: தாழக்கோல் என வரும். (89) 386. தமிழென் கிளவியு மதனோ ரற்றே. இதுவும் அது. (இ-ள்.) தமிழ் என் கிளவியும் அதன் ஓர் அற்று - தமிழ் என்னும் சொல்லும் அதனோடு ஒரு தன்மைத்தாய் வல்லெழுத்து மிகுதலேயன்றி அக்கும் பெற்று முடியும். உ-ம்: தமிழக்கூத்து; சேரி, தோட்டம், பள்ளி என வரும்.(90) 387. குமிழென் கிளவி மரப்பெய ராயின் பீரென் கிளவியோ டோரியற் றாகும். இதுவும், அவ் வீற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் நுதலிற்று. (இ-ள்.) குமிழ் என் கிளவி மரப்பெயர் ஆயின் - குமிழ் என்னும் சொல் குமிழ்த்தல் என்னும் தொழிலன்றி மரப்பெய ராயின், பீர் என் கிளவியோடு ஓர் இயற்று ஆகும் - பீர் என் கிளவியோடு ஓர் இயல்பிற்றாய் மெல்லெழுத்தும் அம்முச் சாரியையும் பெற்று முடியும். உ-ம்: குமிழ்ங்கோடு; குமிழங்கோடு; செதிள், தோல், பூ எனவரும். ‘ஓர் இயற்று’ என்றதனான், பிறவற்றிற்கும் இம் முடிபு கொள்க. மகிழ்ங்கோடு என வரும். (91) 388. பாழென் கிளவி மெல்லெழுத் துறழ்வே. இதுவும், அவ் வீற்றுள் ஒன்றற்கு எய்தியதன்மேல் சிறப்பு விதி கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) பாழ் என் கிளவி மெல்லெழுத்து உறழ்வு - பாழ் என்னும் சொல் வல்லெழுத்தொடு மெல்லெழுத்து உறழ்ந்து முடியும். உ-ம்: பாழ்க்கிணறு; பாழ்ங்கிணறு; சேரி, தோட்டம், பாடி என வரும். (`ஏகாரம்’ - ஈற்றசை.) (92) 389. ஏழென் கிளவி யுருபிய னிலையும். இஃது, இவ் வீற்று எண்ணுப்பெயர்க்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) ஏழ் என் கிளவி - ஏழ் என்னும் எண்ணுப் பெயரது இறுதி, உருபு இயல் நிலையும் - உருபு புணர்ச்சிக்கண் சொன்ன இயல்பின் கண்ணே (195) நிலைபெற்று (அன்பெற்று) முடியும். உ-ம்: ஏழன் காயம்; சுக்கு, தோரை, பயறு என வரும். இயல்பு வல்லெழுத்து (384) இவ் வோத்தின் புறனடையான் (406) வீழ்க்க. (`கிளவி’ ஆகு பெயர்.) (93) 390. அளவு நிறையு மெண்ணும் வருவழி நெடுமுதல் குறுகலு முகரம் வருதலும் கடிநிலை யின்றே யாசிரி யர்க்க. இது, மேலதற்கு எய்தாதது எய்துவித்தல் நுதலிற்று. (இ-ள்.) அளவும் நிறையும் எண்ணும் வருவழி - (அவ் ஏழ் என்னும் எண்ணுப்பெயர்) அளவுப்பெயரும் நிறைப்பெயரும் எண்ணுப் பெயரும் (வருமொழியாய்) வருமிடத்து, நெடுமுதல் குறுகலும் உகரம் வருதலும் ஆசிரியர்க்கு கடிநிலை இன்று - நெடுமுதல் குறுகுதலும் (ஆண்டு) உகரம் வருதலும் ஆசிரியர்க்கு நீக்கும் நிலைமை இன்று. உ-ம்: எழுகலம்; சாடி, தூதை, பானை, நாழி, மண்டை, வட்டி, அகல், உழக்கு எனவும்; எழுகழஞ்சு; தொடி, பலம் எனவும்; எழுமூன்று, எழுநான்கு எனவும் வரும். ‘நிலையின்று’ என்றதனான், வன்கணத்துப் பொருட் பெயர்க்கும் இம் முடிபு கொள்க. உ-ம்: எழுகடல்; சிலை, திசை, பிறப்பு என வரும். (`ஏகாரம்’ - அசை. `ஆசிரியர்க்கு’ என்பது `ஆசிரியர்க்க’ என்றாயிற்று.) (94) 391. பத்தென் கிளவி யொற்றிடை கெடுவழி நிற்றல் வேண்டு மாய்தப் புள்ளி. இது, மேலதற்கு ஒருவழி எய்தியதன்மேல் சிறப்பு விதி கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) பத்து என் கிளவி இடை ஒற்று கெடுவழி ஆய்தப் புள்ளி நிற்றல் வேண்டும் - (அவ்) ஏழ் என்பதனொடு பத்து என்பது (புணரும் இடத்து அப்பத்து என்(னும்) கிளவி(யின்) இடை ஒற்றுக் கெடுவழி ஆய்தமாகிய புள்ளி நிற்றல் வேண்டும்.) உ-ம்: எழுபஃது என வரும். (95) 392. ஆயிரம் வருவழி யுகரங் கெடுமே. இது, மேலதற்கு எய்தியது ஒருமருங்கு மறுத்தல் நுதலிற்று. (இ-ள்.) ஆயிரம் வருவழி உகரம் கெடும் - (அவ் ஏழ்) என்பது ஆயிரம் என்பது வருமிடத்து (முன்பெற்ற) உகரம் பெறாது முடியும். உ-ம்: எழாயிரம் என வரும். (ஏகாரம் - ஈற்றசை) (96) 393. நூறூர்ந்து வரூஉ மாயிரக் கிளவிக்குக் கூறிய நெடுமுதல் குறுக்க மின்றே. இதுவும், மேலதற்கு ஒருவழி எய்தியது முழுவதும் விலக்கு கின்றது. (இ-ள்.) நூறு ஊர்ந்து வரும் ஆயிரக் கிளவிக்கு - (அவ் ஏழ்) என்பது நூறு என்னும் சொல் ஊர்ந்து வருகின்ற ஆயிரக் கிளவியாகிய நூறாயிரம் என்பதற்கு, கூறிய நெடுமுதல் குறுக்கம் இன்று - (முன்) கூறிய நெடுமுதல் குறுகி உகரம் பெறுதல் இன்று. உ-ம்: ஏழ் நூறாயிரம் என வரும். ‘கூறிய’ என்றதனான், நெடுமுதல் குறுகி, உகரம் பெற்று எழு நூறாயிரம் என்றும் ஆம். இவ் விலேசினானே ஏழாயிரம் என்றும் ஆம். இன்னும் அதனானே, இயல்புகணத்து முடிபு கொள்க. எழுஞாயிறு, எழுநாள் என வரும். (`ஏகாரம்’ - ஈற்றசை) (97) 394. ஐயம் பல்லென வரூஉ மிறுதி அல்பெய ரெண்ணு மாயிய னிலையும். இதுவும், மேலதற்கு ஒருவழி எய்தியது முழுவதும் விலக்கு கின்றது. (இ-ள்.) ஐ அம் பல் என வரூஉம் இறுதி அல்பெயர் எண்ணும் - (அவ்வேழ் என்பதன்முன்) ஐ என்றும், அம் என்றும், பல் என்றும் வருகின்ற இறுதிகளையுடைய (பொருட்பெயர்) அல்லாத எண்ணுப் பெயராகிய தாமரை வெள்ளம் ஆம்பல் என்பனவும் (வந்தால்); அ இயல் நிலையும் - (நெடுமுதல் குறுக்கம் இன்றி உகரம் பெறாது) அவ்வியல்பின் கண்ணே நின்று முடியும். உ-ம்: ஏழ்தாமரை, ஏழ்வெள்ளம், ஏழாம்பல் என வரும். (`ஆகாரம்’ செய்யுள் விகாரம்.) (98) 395. உயிர்முன் வரினு மாயிய றிரியாது. இதுவும், மேலதற்கு எய்தியது ஒருவழி விலக்கிப் பிறிது விதி வகுக்கின்றது. (இ-ள்.) உயிர் முன் வரினும் - (அவ் வேழ் என்பது அளவு முதலிய பெயர்களுள்) உயிர் முதல்மொழி (முன்) வரினும், அ இயல் திரியாது - (நெடுமுதல் குறுகி உகரம் வராது) அவ் வியல்பில் திரியாது முடியும். உ-ம்: ஏழகல், ஏழுழக்கு, ஏழொன்று, ஏழிரண்டு என வரும். (`ஆகாரம்’ செய்யுள் விகாரம்) (99) 396. கீழென் கிளவி யுறழத் தோன்றும். இஃது, இவ் ஈற்றுள் ஒன்றற்கு வேற்றுமைக்கண் வேறு முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) கீழ் என் கிளவி உறழ தோன்றும் - கீழ் என்னும் சொல் உறழ்ச்சியாகத் தோன்றி முடியும். உ-ம்: கீழ்குளம், கீழ்க்குளம் என வரும். ‘தோன்றும்’ என்றதனான், நெடுமுதல் குறுகாது உகரம் வருதலும் கொள்க. (ஆங்கு) இயைபு வல்லெழுத்து இவ் வோத்தின் புறனடையான் (406) வீழ்க்க. உ-ம்: கீழுகுளம்; சேரி, தோட்டம், பாடி என வரும். (100) 397. ளகார விறுதி ணகார வியற்றே. இது, ளகார ஈற்றிற்கு ணகார ஈற்று வேற்றுமை முடிபோடு இயைய வேற்றுமை முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) ளகார இறுதி ணகார இயற்று - ளகார ஈற்றுப் பெயர் (வேற்றுமைக்கண்) ணகார ஈற்று இயல்பிற்றாய் (303) (வன்கணம் வந்தால் ளகாரம் டகாரமாய்த் திரிந்து) முடியும். உ-ம்: முட்குறை; சிறை, தலை, புறம் என வரும். (101) 398. மெல்லெழுத் தியையின் ணகார மாகும். இது, மேலதற்கு மென்கணத்து முடிபு கூறுகின்றது. (இ-ள்.) மெல்லெழுத்து இயையின் ணகாரம் ஆகும் - (ளகார ஈறு) மெல்லெழுத்து (வருமொழியாய் வந்து) இயையின் ணகாரமாய்(த் திரிந்து) முடியும். உ-ம்: முண்ஞெரி; நுனி, முரி என வரும். இதனை வேற்றுமை இறுதிக்கண் அல்வழியது எடுத்துக் கோடற் கண் சிங்கநோக்காக வைத்தலின், அல்வழிக்கும் இம் முடிபு கொள்க. உ-ம்: முண்ஞெரிந்தது; நீண்டது, மாண்டது என வரும். (102) 399. அல்வழி யெல்லா முறழென மொழிப. இது, மேலதற்கு அல்வழி முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) அல்வழி எல்லாம் உறழ் என மொழிப - (ளகார ஈற்று) அல்வழிகளெல்லாம் (திரிந்தும் திரியாதும்) உறழ்ந்து முடியும் என்று சொல்லுவர் புலவர். உ-ம்: முள்கடிது, முட்கடிது; சிறிது, தீது, பெரிது என வரும். ‘எல்லாம்’ என்றதனான், குணவேற்றுமைக்கண்ணும் இவ் வுறழ்ச்சி கொள்க. உ-ம்: முள்குறுமை, முட்குறுமை; சிறுமை, தீமை, பெருமை எனவும்; கோள்கடுமை, கோட்கடுமை எனவும் வரும். இன்னும் அதனானே, உருபு வாராது உருபின் பொருள்பட வந்தவற்றின் முடிபும் கொள்க. உ-ம்: அதோட்கொண்டான், இதோட்கொண்டான், உதோட் கொண்டான்; சென்றான், தந்தான், போயினான் என வரும். (103) 400. ஆய்த நிலையலும் வரைநிலை யின்றே தகரம் வரூஉங் காலை யான. இது, மேலதற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று. (இ-ள்.) ஆய்தம் நிலையலும் வரைநிலை இன்று - (ளகாரம் டகாரமாயே திரியாது) ஆய்தமாய்(த் திரிந்து) நிற்றலும் வரையும் நிலைமை இன்று, தகரம் வரும் காலை - தகர முதல்மொழி வரும் காலத்து. உ-ம்: முஃடீது, முட்டீது என வரும். (104) (ஏகாரம் - ஈற்றசை. உகர நீட்டம் செய்யுள் விகாரம். ‘ஆன்’ இடைச்சொல்.‘அகரம்’ சாரியை. வரைநிலைமை - கடியும் நிலைமை) 401. நெடியத னிறுதி யியல்பா குநவும் வேற்றுமை யல்வழி வேற்றுமை நிலையலும் போற்றல் வேண்டும் மொழியுமா ருளவே. இது, மேலதற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று. (இ-ள்.) நெடியதன் இறுதி இயல்பாகுநவும் - (ளகாரம்) நெடியதன் இறுதி திரியாது இயல்பாய் முடிவனவற்றையும், வேற்றுமை அல்வழி வேற்றுமை நிலையலும் - வேற்றுமை அல்லாத அல்வழியிடத்து வேற்றுமை(யின் இயல்புடையன வாய்த் திரிந்து) முடிதலையும், போற்றல் வேண்டும் மொழியுமார் உள - போற்றுதல் வேண்டும் மொழிகளும் உள. உ-ம்: வாள்கடிது, கோள்கடிது; சிறிது, தீது, பெரிது எனவும்; தோட்கடிது; நாட்கடிது; சிறிது, தீது, பெரிது எனவும் வரும். ‘போற்றல் வேண்டும்’ என்றதனான், உதளங்காய், செதிள், தோல், பூ என அம்முப்பெற்று முடிவன கொள்க. (`ஆர்’, `ஏ’ அசைகள். அம்மு - அம் சாரியை.) (105) 402. தொழிற்பெய ரெல்லாந் தொழிற் பெயரியல. இஃது, இவ் வீற்றுத் தொழிற்பெயர்க்கு வேற்றுமைக் கண்ணும் அல்வழிக்கண்ணும் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று. (இ-ள்.) தொழிற்பெயர் எல்லாம் தொழிற்பெயர் இயல - (ளகார ஈற்றுத்) தொழிற்பெயரெல்லாம் வேற்றுமைக்கண்ணும் அல்வழிக் கண்ணும் ஞகார ஈற்றுத் தொழிற்பெயர் இயல்பின வாய் (297, 298) வன்கணம் வந்தவழி வல்லெழுத்தும் உகரமும் பெற்றும், மென்கணமும் இடைக்கணத்து வகரமும் வந்தவழி உகரம் பெற்றும் முடியும். உ-ம்: துள்ளுக் கடிது; சிறிது, தீது, பெரிது, ஞான்றது, நீண்டது, மாண்டது, வலிது எனவும்; துள்ளுக்கடுமை; சிறுமை, தீமை, பெருமை; ஞாற்சி, நீட்சி, மாட்சி, வலிமை எனவும் வரும். ‘எல்லாம்’ என்றதனான், தொழிற்பெயர்கள் இருவழியும் இவ்வா றன்றிப் பிறவாறு முடிவனவும் கொள்க. உ-ம்: கோள்கடிது, கோட்கடிது; வாள்கடிது, வாட்கடிது; சிறிது, தீது, பெரிது எனவும்; கோள் கடுமை, கோட்கடுமை; வாள் கடுமை, வாட்கடுமை; சிறுமை, தீமை, பெருமை எனவும் வரும். ஈண்டு, வாள் என்றது - சொல்லுதலை. (106) 403. இருளென் கிளவி வெயிலிய னிலையும். இதுவும், அவ் வீற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று. (இ-ள்.) இருள் என் கிளவி வெயில் இயல் நிலையும் - இருள் என்னும் சொல் (வேற்றுமைப்பொருட் புணர்ச்சிக்கண்) வெயில் என்னும் சொல்லின் இயல்பிலே (நின்று, அத்தும் இன்னும் பெற்று முடியும்). உ-ம்: இருளத்துக் கொண்டான், இருளிற் கொண்டான்; சென்றான், தந்தான், போயினான் என வரும். 404. புள்ளும் வள்ளுந் தொழிற்பெய ரியல. இதுவும், அவ் வீற்றுள் சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று. (இ-ள்.) புள்ளும் வள்ளும் தொழிற்பெயர் இயல - புள் என்னும் சொல்லும் வள் என்னும் சொல்லும் (வேற்றுமைக் கண்ணும் அல்வழிக் கண்ணும்) ஞகார ஈற்றுத் தொழிற்பெயர் இயல்பிற்றவாய் (வன் கணத்து உகரமும் வல்லெழுத்தும் பெற்றும், மென்கணத்தும் இடைக் கணத்து வகரத்தும் உகரம் பெற்றும்) முடியும். உ-ம்: புள்ளுக்கடிது, வள்ளுக்கடிது; சிறிது, தீது, பெரிது, ஞான்றது, நீண்டது, மாண்டது, வலிது எனவும்; புள்ளுக் கடுமை, வள்ளுக்கடுமை; சிறுமை, தீமை, பெருமை, ஞாற்சி, நீட்சி, மாட்சி, வலிமை எனவும் வரும். இதனைத் ‘தொழிற்பெயரெல்லாம்’ என்றதன்பின் வையாத முறையன்றிய கூற்றினான், இருவழியும் வேற்றுமைத் திரிபு எய்தி முடிவனவும் கொள்க. உ-ம்: புட்கடிது, வட்கடிது; சிறிது, தீது, பெரிது; ஞான்றது, நீண்டது, மாண்டது, வலிது எனவும்; புட்கடுமை, வட்கடுமை; சிறுமை, தீமை, பெருமை, ஞாற்சி, நீட்சி, மாட்சி, வலிமை எனவும் வரும். இன்னும் அதனானே, பள் என்பதன்கண்ணும், கள் என்பதன் கண்ணும் இருவழியும் இவ்விரு முடிபு பெற்றமையும் கொள்க. பள்ளுக்கடிது, கள்ளுக்கடிது; பள்ளுக்கடுமை, கள்ளுக் கடுமை எனவும்; பட்கடிது, கட்கடிது; பட்கடுமை, கட்கடுமை எனவும் ஒட்டுக. (108) 405. மக்க ளென்னும் பெயர்நிலைக் கிளவி தக்கவழி யறிந்து வலித்தலு முரித்தே. இது, மக்கள் என்னும் உயர்திணைப் பெயருக்கு ‘உயிரீறாகிய வுயர்திணைப் பெயரும்’ (தொகை. 11) என்பதனுள் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று. (இ-ள்.) மக்கள் என்னும் பெயர்நிலை கிளவியும் - மக்கள் என்னும் பெயர்ச்சொல்லின் இறுதி, தக்கவழி அறிந்து வலித்தலும் உரித்து - (இயல்பேயன்றித்) தக்க இடம் அறிந்து வல்லொற்றாய்(த் திரிந்து) முடிதலும் ஆம். ‘தக்கவழி’ என்றதனான், அம் மக்கள் உடம்பு, உயிர் நீங்கிய காலத்து இம் முடிபு எனக் கொள்க. உ-ம்: மக்கட்கை; செவி, தலை, புறம் என வரும். (109) (‘கிளவி’ ஆகுபெயர். ‘ஏகாரம்’ ஈற்றசை) 406. உணரக் கூறிய புணரியன் மருங்கின் கண்டுசெயற் குரியவை கண்ணினர் கொளலே. இஃது இவ்வோத்திற்குப் புறநடை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உணரக் கூறிய - உணரக் கூறப்பட்ட புள்ளியீறு(கள்), புணர் இயல் மருங்கின் - (வருமொழியொடு) புணரும் இயல் பிடத்து, கண்டு செயற்கு உரியவை கண்ணினர் கொளல் - (மேல் முடித்த முடிபுகளேயன்றி வழக்கினுள்) கண்டு முடித்தற்குரிய பிற முடிபுகளைக் கருதிக்கொண்டு முடிக்க. உ-ம்: விழன் குளம்; சேறு, தறை, பழனம் என இவை, னகார ஈற்று வேற்றுமைக்கண் திரியாது இயல்பாய் முடிந்தன. பொன்னப்பத்தம் என்பது அவ்வீறு அக்குப்பெற்று முடிந்தது. நீர் குறிது; சிறிது, தீது, பெரிது (என்பது) ரகார ஈற்று அல்வழி முடிபு. வேர் குறிது; வேர்க்குறிது (என்பது) அவ் வீற்று அல்வழி உறழ்ச்சி. அம்பர்க்கொண்டான், இம்பர்க்கொண்டான், உம்பர்க் கொண்டான், எம்பர்க் கொண்டான்; சென்றான், தந்தான், போயினான் என்பன அவ் வீற்றுள் உருபு வாராது உருபின் பொருள்பட வந்தவற்றின் முடிபு. தகர்க்குட்டி என்பது அவ் வீற்று இருபெயரொட்டுப் பண்புத் தொகையாகிய அல்வழி முடிபு. வடசார்க்கூரை, தென்சார்க்கூரை என்பன அவ்வீற்று இலக்கணத்தொடு பொருந்திய மரூஉ முடிபு. உசிலங்கோடு, எலியாலங்கோடு என்பன லகார ஈற்று அம்முப் பேறு. கல்லம்பாறை என்பது அவ் வீற்று அல்வழி அம்முப்பேறு. அழலத்துக் கொண்டான் என்பது அவ்வீற்று அத்துப்பேறு. அழுக்கற்போர் என்பது அவ் வீற்று அல்வழித் திரிபு. யாழ்குறிது; சிறிது, தீது, பெரிது என்பன ழகார ஈற்று அல்வழி முடிபு. வீழ்குறிது, வீழ்க்குறிது என்பன அவ் வீற்று அல்வழி உறழ்ச்சி. தாழப்பாவை என்பது அவ் வீற்று அல்வழி அக்குப்பேறு. இனி ‘உணரக் கூறிய’ என்றதனான், குளத்தின்புறம், மரத் தின்புறம் என உருபிற்கு எய்திய அத்தோடு இன்பெறுதலும் கொள்க. இனிக் ‘கண்ணினர்’ என்றதனான், ஒருநாளைக் குழவி என ளகர ஈறு ஐ என்னும் சாரியையும் வல்லெழுத்தும் பெற்று முடிந்தன கொள்க. பிறவும், இவ் வோத்தின் வேறுபட வருவனவெல்லாம் இதன் அகத்து முடித்துக் கொள்க. (110) எட்டாவது - புள்ளிமயங்கியல் முற்றிற்று. குற்றியலுகரப் புணரியல் குற்றியலுகரவீறு நின்று வருமொழியோடு புணரும் இயல் பினை யுணர்த்துவது இவ்வியலாகும். நெட்டெழுத்தின் பின்னும் தொடர்மொழியீற்றும் குற்றியலுகரம் வரும் என மொழிமரபிற் கூறினார். தொடர்மொழியீற்றுக் குற்றுகரத்தை அயலிலுள்ள எழுத்து வகையால் உயிர்த்தொடர், இடைத்தொடர், ஆய்தத் தொடர், வன்றொடர், மென்றொடர் என ஐந்தாகப்பகுத்து, அவற்றொடு நெட்டெழுத்தின் பின்வருங் குற்றுகரத்தையுங் கூட்டி அறுவகைப்படுத்து விளக்குகின்றார். யரழமுன்னர்க் கசதபஙஞநம ஈரொற்றாகிவருங் குற்றுகரங்க ள் ஒருவாற்றான் இடையொற்றுக்களோடு தொடர்ந்துவரினும் குற்றிய லுகரத்தையடுத்து நேரே தொடர்ந்தன அல்லவாதலின் அவை இடைத் தொடராகக் கொள்ளப்படாவென்றும், ஆறீற்றுக் குற்றியலுகரமும் இருவழியிலும் கெடாது நிறைந்தே நிற்குமென்றும், வன்றொடர்க் குற்றியலுகரம் வல்லெழுத்து முதன் மொழி வருமிடத்து முன்கூறிய (அரைமாத்திரையினுங் குறுகும்) இயல்பில் நிற்றலுமுரித்தென்றும், குற்றியலுகர வீற்றின்முன் யகர முதன்மொழி வருமிடத்து ஈற்றிற் குற்றியலுகரங்கெட அங்கு ஓர் இகரம் வந்து குறுகி நிற்குமென்றும் இவ்வியலின் முதல் ஐந்து சூத்திரத்தானும் குற்றியலுகரத்தியல் பினை ஆசிரியர் பொதுவகையாற் கூறிப்போந்தார். 6-முதல் 17-வரையுள்ள சூத்திரங்களால் குற்றுகரவீற்று வேற்றுமைப் பொருட்புணர்ச்சி கூறினார். 18-முதல் குற்றுகரவீற்று அல்வழிப்புணர்ச்சியினைத் தொடங்கிக் கூறுகின்றார். உண்மைத் தன்மையை யுணர்த்தும் உண்டு என்னுஞ்சொல் வல்லெழுத்து முதன்மொழிவரின் இறுதிநின்ற உகரம் மெய் யொடுங்கெட ணகரம் ளகரமாகத் திரியுமென்றும், குற்றுகர வீற்றுத் திசைப்பெயர்களுள் இரண்டு பெருந்திசையும் தம்மிற் புணருமிடத்து ஏயென்னுஞ்சாரியை இடையே வந்துமுடியு மென்றும், குற்றுகரவீற்றுப் பெருந்திசைகளோடு கோணத் திசைகள் புணருமிடத்து இறுதியுகரம் மெய்யொடுங் கொடுமென்றும் அவ்வழி தெற்கு என்பதன் றகரம் னகரமாகத் திரியுமென்றும் கூறுவர் ஆசிரியர். குற்றுகர வீற்று எண்ணுப் பெயரியல்பினை 28-ஆம் சூத்திர முதலாகத் தொடங்கிக் கூறுகின்றார். பத்து என்னும் எண்ணின் முன் ஒன்றுமுதல் எட்டுவரையுள்ள எண்களும் ஆயிரமென்னும் எண்ணும் நிறைப்பெயரும் அளவுப்பெயரும் வந்து புணரு முறையினை 28-முதல் 30-வரையுள்ள சூத்திரங்கள் உணர்த்துவன ஒன்று முதல் எட்டுவரையுள்ள குற்றுகர வீற்று எண்ணும் பெயர்களின்முன் பத்து வந்து புணர்தலை 31-முதல் 38-வரையுள்ள சூத்திரங்கள் குறிப்பிடுவன. ஒன்பது என்னும் சொல்லின்முன் பத்து வந்து புணருங்கால் நிலைமொழியாகிய ஒன்பதில் ஒகரத்திற்கு மேலாகத் தகர மெய்தோன்றித் தொன்பது என்றாகிப் பது கெட்டு னகரம் ணகரமாகத் திரிந்து இரட்டித்துத் தொண்ண் என நிற்குமென்றும், வருமொழியாகிய பஃதென்பதில் பகரவுயிர்மெய்யும் ஆய்தமும்கெட்டு ஊகாரம் தோன்றி இறுதியிலுள்ள ‘து’ என்பதன் தகரம் றகரமாகத் திரிந்து ஊறு என்றாகித் தொண்ணுhறு என முடியுமென்றும், இவ்வியல் 39-ஆம் சூத்திரத்தால் ஆசிரியர் விரித்துரைப்பர். மேற்கூறிய ஒன்றுமுதல் ஒன்பது வரையுள்ள எண்ணுப்பெயர்களோடு அளவுப்பெயரும் நிறைப் பெயரும் வந்து புணரு முறையினை 40-முதல் 53-வரையுள்ள சூத்திரங்களாலும், நூறென்னுஞ்சொல் வருமொழியாய் வந்து புணர்வதனை 54, 55, 56, 57-ஆம் சூத்திரங்களாலும், ஆயிரம் என்னும் எண் தனித்தும் நூறென்னும் அடையடுத்தும் புணர்தலை 58-முதல் 65-வரையுள்ள சூத்திரங்களாலும் கூறுவர் ஆசிரியர். ஒன்பது என்னும் எண்ணின்முன் நூறு என்னும் எண் வந்துபுணரின் முற்கூறியவாறு நிலைமொழியாய் நின்ற ஒன்பது என்னும் சொல்லின் ஒகரத்தின் முன்னே தகரமெய் ஒன்று தோன்றித் தொன்பது என்றாகிப் பதுகெட்டு னகரமெய் ளகர மெய்யாக இரட்டித்துத் தொள்ள் என நிற்குமென்றும், வருமொழியாகிய நூறென்பதன் முதலில் நின்ற நகரமெய் கெட அம்மெய்யின் மேலேறிய ஊகாரம் ஆகாரமாகத்திரிந்து அதனை யடுத்து இகரவுயிரும் ரகரவுயிர் மெய்யும் இடையேதோன்றி ஈற்றிலுள்ள றகர வுகரங்கெட்டு மகரமெய்தோன்றி ஆயிரம் என்றாகித் தொள்ளாயிரம் என முடியுமென்றும் 57-ஆம் சூத்திரத்தால் தொல்காப்பியனார் விரித்துக்கூறியுள்ளார். தொண்ணுhறு, தொள்ளாயிரம் என்னும் புணர்மொழிகளுக்கு ஆசிரியர் தொல்காப்பியனார் கூறும் புணர்ச்சி முறைகள் வலிந்து கூறுவனவாகவே அமைந்துள்ளன வென்றும் ஒன்பது என்னும் பொருள்படத் தொல்காப்பியரே தொண்டு என்னும் எண்ணுப்பெயரைத் தம் நூலில் ஆண்டிருத்தலால் தொண்டு+பத்து = தொண்ணுhறு என்றும், தொண்டு+ஆயிரம் = தொள்ளாயிரம் என்றும் நிலைமொழி வருமொழி செய்து புணர்ச்சிவிதி கூறுவதே மொழியியல்புக்கு ஒத்ததாகுமென்றும் பரிதிமாற்கலைஞர் கூறும் கொள்கை இங்கு சிந்திக்கத் தக்கதாகும். நூறு என்பது நிலைமொழியாக அதன் முன் ஒன்று முதல் ஒன்பதும் அவையூர் பத்தும் அளவும் நிறையும் வந்து புணரும் முறையினை 66-முதல் 68-வரையுள்ள சூத்திரங்கள் விளக்கு வனவாம். ஓன்று முதல் எட்டினையூர்ந்த பஃதென்னும் எண்ணுப் பெயருடன் ஒன்று முதல் ஒன்பதெண்களும் ஆயிரமும் அளவும் நிறையும் புணரு முறையினை 69, 70, 71-ஆம் சூத்திரங்கள் குறிப்பிடுகின்றன. ஒன்று முதல் ஒன்பான்களோடு பொருட் பெயர்கள் புணருமியல்பினை 72, 73-ஆம் சூத்திரங்களாலும் இரண்டு முதல் ஒன்பது வரையுள்ள எண்களின்முன் அளவு, நிறை, எண் என்பவற்றுக்குரிய மா என்னுஞ்சொல் புணர்தலை 74-ஆம் சூத்திரத்தாலும் ஆசிரியர் குறிப்பிடுவர். எண்ணுப்பெயர் களுள் மிக்க எண்ணோடு குறைந்த எண் வந்து புணர்தலை உம்மைத்தொகையாகவும், குறைந்த எண்ணோடு மிக்க எண் வருதலைப் பண்புத் தொகையாகவும்கொண்டு ஆசிரியர் விதி கூறியுள்ளமை இவண் கருதற்குரியதாகும். லகார னகார வீற்றுச் செய்யுள் முடிபு கூறுவது 75-ஆம் சூத்திரம். இவ் வதிகாரத்து நிலைமொழி வருமொழிசெய்து புணர்க்கப்படா மொழிகள் இவையெனத் தொகுத்துரைப்பது 76-ஆம் சூத்திரமாகும். இவ்வியலின் இறுதியிலுள்ள 77-ஆம் சூத்திரம் எழுத்ததிகாரத்தின் புறனடையாகும். - க. வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 16-166 ஒன்பதாவது குற்றியலுகரப் புணரியல் இவ் வோத்து என்ன பெயர்த்தோ எனின், குற்றியலுகர ஈறு வருமொழியொடு புணரும் இயல்பு உணர்த்தினமையின் குற்றியலுகரப் புணரியல் எனப்பட்டது. 407. ஈரெழுத் தொருமொழி யுயிர்த்தொட ரிடைத்தொடர் ஆய்தத் தொடர்மொழி வன்றொடர் மென்றொடர் ஆயிரு மூன்றே யுகரங் குறுகிடன். இத் தலைச்சூத்திரம் என் நுதலிற்றோ எனின், இக் குற்றியலுகரம் வரும் இடத்திற்குப் பெயரும் முறையும் தொகையும் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஈர் எழுத்து ஒரு மொழி - இரண்டு எழுத்தானாகிய ஒரு மொழியும், உயிர்த்தொடர் - உயிர்த்தொடர் மொழியும், இடைத்தொடர் - இடைத்தொடர் மொழியும், ஆய்தத்தொடர் - ஆய்தத்தொடர் மொழியும், வன்தொடர் - வன்றொடர் மொழியும், மென்தொடர் - மென்றொடர் மொழியும், அ இரு மூன்று - ஆகிய அவ் வாறு என்று சொல்லப்படும், உகரம் குறுகு இடன் - உகரம் குறுகி வரும் இடன். உ-ம்: நாகு, வாகு, தெள்கு, எஃகு, கொக்கு, குரங்கு என வரும். (நாகு - இளமரம். தெள்கு - ஒரு பூச்சி, எஃகு - வேல், `தொடர்’ நான்கும் ஆகுபெயர். சுட்டின் நீட்டமும் வகர உடம்படுமெய் யகர உடம்படுமெய்யானதும் செய்யுள் விகாரம். `ஏகாரம்’ தேற்றேகாரம். நன்னூலார் போல இந்நூலார் வல்லொற்றின் மீது ஏறிய உகரமே குறுகும் என்று கூறாலமை காண்க.) (1) 408. அவற்றுள் ஈரொற்றுத் தொடர்மொழி யிடைத்தொட ராகா. இஃது, அவ்வாறனுள் ஓர் ஈற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று. (இ-ள்.) அவற்றுள் ஈர் ஒற்று தொடர்மொழி - அவற்றுள் ஈர் ஒற்றுத் தொடர்மொழி(களில்), இடைத்தொடர் ஆகா - இடைத்தொடர் ஆகா, (வன்றொடர் மொழியும் மென்றொடர் மொழியும் ஆம்.) உ-ம்: ஈர்க்கு; மொய்ம்பு என வரும். ஸ(இடையில்) இரண்டு ஒற்றெழுத்துக்கள் தொடர்ந்து வரும் (மூவகை) மொழிகளில் இடைத்தொடர் மொழிகள் உகரம் குறுகும் இடன் ஆகா என்பதே நேர் உரை. உ-ம்: வெய்ய்து எனவரும். இவ்விடைத் தொடர்மொழிகள் “அலர்பெய்ய்து வூராரழிப்பினு மென்னொடு, மலர்கொய்ய்து வூடு மகிழ்ந்து” என்றது போன்ற செய்யுளின் கண்ணே நிகழும். இரண்டொற்று இடைவிடாமையைக் குறித்து நின்றது.] (2) 409. அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும் எல்லா விறுதியு முகர நிறையும். இஃது, எய்தியது ஒரு மருங்கு மறுத்தல் நுதலிற்று. (இ-ள்.) அல்லது கிளப்பினும் - அல்வழியைச் சொல்லும் இடத்தும், வேற்றுமைக்கண்ணும் - வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக் கண்ணும், எல்லா இறுதி உகரமும் நிறையும் - ஆறு ஈற்றுக் குற்றியலுகர மும் நிறைந்தே நிற்கும். உ-ம் நாகு கடிது; நாகு கடுமை; வரகு கடிது; வரகு கடுமை என வரும். (`நிலையும்’ என்ற பாடங்கொண்டு, அல்வழிக்கண்ணும் வேற்றுமைக்கண்ணும் (ஒற்றுக்கள் இரண்டு தொடர்ந்துவரும் இடைத் தொடர்மொழிகள் அல்லாத) அறுவகை மொழிகளின் இறுதிக்கண்ணும் குற்றியலுகரம் நிற்கும் என்று உரைத்தலே பொருத்தம் உடைத்து.) (3) 410. வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து வருவழி தொல்லை யியற்கை நிலையலு முரித்தே. இஃது, எய்தியது ஒரு மருங்கு மறுக்கின்றது. (இ-ள்.) வல்லொற்றுத் தொடர்மொழி - (அவ் வாறீற்றுள்ளும்) வல்லொற்றுத் தொடர்மொழி, வல்லெழுத்து வருவழி - வல்லெழுத்து முதல்மொழி வருமொழியாய் வரும் இடத்து, தொல்லை இயற்கை நிலையலும் உரித்து - முன் (எழுத். 12) கூறிய இயற்கை நிற்றலும் உரித்து. உ-ம்: கொக்குக் கடிது, கொக்குக் கடுமை என வரும். (`ஏகாரம்’ - ஈற்றசை. `தொல்லை இயற்கை’ என்பதற்கு ஈண்டுக் கூறும் உகரம் (அதாவது குற்றியலுகரம்) தனது முந்திய தன்மையில் (அதாவது முற்றுகரமாக) நிற்றலும் உரித்து, நில்லாமையும் உரித்து என்று உரைத்தலே பொருத்தம் உடைத்து. உ-ம்: கொக்கு கடிது; கொக்கு கடுமை என்பவற்றில் முற்றுகரம் ஒலித்தலும், கொக்குக்கடிது; கொக்குக்கடுமை என்பவற்றில் குற்றுகரம் ஒலித்தலும் காண்க.) (4) 411. யகரம் வருவழி யிகரங் குறுகும் உகரக் கிளவி துவரத்தோன் றாது. இது, குற்றியலிகரம் புணர்மொழியுள் வருமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இது, குற்றியலுகரம் குற்றியலிகரம் ஆம் இடம் உணர்த்துதல் நுதலிற்று என்று கூறுதல் மிகப்பொருத்தம் உடைத்து.) (இ-ள்.) யகரம் வருவழி உகரக்கிளவி துவரத் தோன்றாது - யகர முதல்மொழி வரும் இடத்து நிலைமொழி உகரம் முற்றத் தோன்றாது; இகரம் குறுகும் - (ஆண்டு) ஓர் இகரம் (வந்து) குறுகும். உ-ம்: நாகியாது, வரகியாது, தெள்கியாது, எஃகியாது, கொக்கியாது, குரங்கியாது என வரும். இதனானே, ஆகார ஈறு அகரம் பெற்றாற் (உயிர். மயங். சூத். 24) போல ஆறு ஈற்றுக் குற்றியலுகரமும் இகரமும் பெற்று யகர முதல்மொழியொடு புணருமாறு கூறிற்றாயிற்று. (5) 412. ஈரெழுத்து மொழியு முயிர்த்தொடர் மொழியும் வேற்றுமை யாயி னொற்றிடை யினமிகத் தோற்றம் வேண்டும் வல்லெழுத்து மிகுதி. இது, மேற்கூறிய ஆறனுள்ளும் முன் நின்ற இரண்டற்கும் வேற்றுமைப் பொருட்புணர்ச்சி முடிபு கூறுகின்றது. (இ-ள்.) ஈர் எழுத்து மொழியும் உயிர்த்தொடர் மொழியும் - ஈர் எழுத்து ஒருமொழிக் குற்றியலுகர ஈறும் உயிர்த் தொடர்மொழிக் குற்றியலுகர ஈறும், வேற்றுமை ஆயின் - வேற்றுமைப் பொருட்புணர்ச்சி யாயின், இன ஒற்று இடைமிக வல்லெழுத்து மிகுதி தோற்றம் வேண்டும் - இனமாகிய ஒற்று இடையிலே மிக வல்லெழுத்து மிகுதி தோன்றி முடிதல் வேண்டும். உ-ம்: யாட்டுக்கால்; செவி, தலை, புறம் எனவும்; முயிற்றுக்கால்; சினை, தலை, புறம் எனவும் வரும். ‘தோற்றம்’ என்றதனான், இவ் விரண்டற்கும் இயல்பு கணத்து முடிபும் கொள்க. உ-ம்: யாட்டு ஞாற்சி, முயிற்று ஞாற்சி; நீட்சி, மாட்சி, யாப்பு, வலிமை, அடைவு, ஆட்டம் என வரும். (மொழி இரண்டும் ஆகுபெயர்.) (6) 413. ஒற்றிடை யினமிகா மொழியுமா ருளவே அத்திறத் தில்லை வல்லெழுத்து மிகலே. இஃது, எய்தியது ஒருமருங்கு மறுத்தல் நுதலிற்று. (இ-ள்.) இன ஒற்று இடை மிகா மொழியுமார் உள - இன ஒற்று இடை(யில்) மிக்கு முடியாத மொழிகளும் உள; வல்லெழுத்து மிகல் அ திறத்து இல்லை - வல்லெழுத்து மிக்கு முடிதல் அக் கூற்றுள் இல்லை. உ-ம்: நாகுகால்; சினை, தலை, புறம் எனவும்; வரகுகதிர்; சினை, தலை, புறம் எனவும் வரும். ‘அத்திறம்’ என்றதனான், உருபிற்கு எய்திய சாரியை பொருட்கு எய்தியவழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க. உ-ம்: யாட்டின் கால், முயிற்றின்கால், நாகின்கால், வரகின்கால் என வரும். (`ஆர்’ - அசை. ஏகாரம் இரண்டும் - ஈற்றசை.) (7) 414. இடையொற்றுத் தொடரு மாய்தத் தொடரும் நடையா யியல வென்மனார் புலவர். இஃது, இடைநின்ற இரண்டிற்கும் முடிபு கூறுகின்றது. (இ-ள்.) இடை ஒற்றுத்தொடரும் ஆய்தத்தொடரும் நடை - இடை ஒற்றுத் தொடர்மொழிக் குற்றியலுகர ஈறும் ஆய்தத் தொடர்மொழிக் குற்றியலுகர ஈறும் நடக்கும் இடத்து, அ இயல என்மனார் புலவர் - மேற்கூறிய இயல்பு முடிபினை உடைய என்று சொல்லுவர் புலவர். உ-ம்: தெள்குகால்; சிறை, தலை, புறம் எனவும்; எஃகு கால்; சிறை, தலை, புறம் எனவும் வரும். (சுட்டின் நீட்டம் செய்யுள் விகாரம்.) (8) 415. வன்றொடர் மொழியு மென்றொடர் மொழியும் வந்த வல்லெழுத் தொற்றிடை மிகுமே மெல்லொற்றுத் தொடர்மொழி மெல்லொற் றெல்லாம் வல்லொற் றிறுதி கிளையொற் றாகும். இது, பின் நின்ற இரண்டற்கும் முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) வன்றொடர் மொழியும் மென்றொடர் மொழியும் - வன்றொடர் மொழிக் குற்றியலுகர ஈறும் மென்றொடர் மொழிக் குற்றிய லுகர ஈறும், வந்த வல்லெழுத்து ஒற்று இடை மிகும் - (வருமொழியாய்) வந்த வல்லொற்று இடையிலே மிக்கு முடியும்; மெல்லொற்று தொடர் மொழி மெல்லொற்று எல்லாம் - (அவ் விரண்டு ஈற்றினுள்) மெல்லொற்றுத் தொடர் மொழி(க்கண் நின்ற) மெல்லொற்றெல்லாம், இறுதி வல்லொற்று கிளை ஒற்று ஆகும் - இறுதி வல்லொற்றும் கிளை வல்லொற்றும் ஆய் முடியும். உ-ம்: கொக்குக்கால்;சிறகு, தலை, புறம் எனவும்; எட்குக் குட்டி; செவி, தலை, புறம் எனவும் வரும். ‘வந்த’ என்றதனான், இவ்விரண்டற்கும் உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கு எய்தியவழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க. உ-ம்: கொக்கின்கால், குரங்கின்கால் என வரும். ‘எல்லாம்’ என்றதனான், பறம்பிற்பாரி என்றாற் போல்வன மெல்லொற்றுத் திரியாமையும் கொள்க. ஒற்று என்ற மிகுதியான் இயல்பு கணத்துக்கண்ணும் குரக்குஞாற்சி; நீட்சி, மாட்சி, யாப்பு, வலிமை, அடைவு, ஆட்டம் என மெல்லொற்றுத் திரிதலும் கொள்க. (ஏகாரம் - ஈற்றசை, `மொழியும்’ என்ற இரண்டும் ஆகுபெயர்.) (9) 416. மரப்பெயர்க் கிளவிக் கம்மே சாரியை. இஃது, அவ் வீறு இரண்டற்கும் எய்தியது விலக்கிப் பிறிது விதி கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) மரப்பெயர் கிளவிக்குச் சாரியை அம் - (வன்றொடரின் கண்ணும் மென்றொடரின்கண்ணும்) மரப் பெயராகிய சொல்லிற்கு (வரும்) சாரியை அம்(முச் சாரியை.) உ-ம்: குருந்தங்கோடு; செதிள், தோல், பூ எனவும்; வேப்பங் கோடு; செதிள், தோல், பூ எனவும் வரும். (10) 417. மெல்லொற்று வலியா மரப்பெயரு முளவே. இது, மென்றொடர் மொழிக்கு எய்தியது ஒருமருங்கு மறுக் கின்றது. (இ-ள்.) மெல்லொற்று வலியா மரப்பெயரும் உள - மெல் லொற்று வல்லொற்றாய்த் திரியாது முடியும் மரப்பெயரும் உள. உ-ம்: குருந்தங்கோடு; செதிள், தோல், பூ எனவும்; புன்கங் கோடு; செதிள், தோல், பூ எனவும் வரும். மற்று, இது நிலைமொழித் தொழிலை நிலைமொழி விலக்கு மாதலின் (எழுத். 229) சாரியை வகுப்பவே முடியும் பிற எனின், இது நிலைமொழியின் உள் தொழிலாகலின் அவ்வாறு விலக்குண்ணா தென்பது கருத்து. (ஏகாரம் - ஈற்றசை.) (11) 418. ஈரெழுத்து மொழியும் வல்லொற்றுத் தொடரும் அம்மிடை வரற்கு முரியவை யுளவே அம்மர பொழுகு மொழிவயி னான. இஃது, ஈரெழுத்து ஒருமொழிக்கும் வன்றொடர் மொழிக்கும் எய்தாதது எய்துவித்தல் நுதலிற்று. (இ-ள்.) ஈர் எழுத்து மொழியும் வல்லொற்றுத் தொடரும் - ஈரெழுத்து ஒருமொழிக் குற்றியலுகரமும் வன்றொடர் மொழிக் குற்றியலுகரமும், அம் இடை வரற்கும் உரியவை உள - முன் முடித்துப் போந்த முடிபுகளன்றி அம்முச்சாரியை இடைவந்து முடித்தற்கு உரியனவும் உள. யாண்டெனின், அம் மரபு ஒழுகும் மொழிவயின் ஆன - அவ் விலக்கணம் நடக்கும் மொழியிடத்து. உ-ம்: ஏறங்கோள் (சீவக. 489), வட்டம்போர் என வரும். ‘உள’ என்றதனான், தெங்கங்காய், பயற்றங்காய் என வன்றொடர் அல்லனவற்றிற்கு அம்(முப்)பேறு கொள்க. ‘அம்மர பொழுகும்’ என்றதனான், அரசக்கன்னி, முரசக்கடிப்பு என அக்குப்பேறும் கொள்க. இன்னும் அதனானே, இருட்டத்துக் கொண்டான் என்னும் அத்துப்பேறும் கொள்க. இன்னும் அதனானே, மயிலாப்பிற் கொற்றன், பறம்பிற்பாரி என இன்பேறும் கொள்க. இன்னும் அதனானே, கரியதன்கோடு என அன்பேறும் கொள்க. (ஏகாரம் - ஈற்றசை. `ஆன்’ இடைச்சொல்; அகரம் சாரியை. `மொழியும்’ `தொடரும்’ ஆகுபெயர். `அம்’ சாரியையை `அம்மு’ச் சாரியையெனக்கூறுவது வழக்கு.) (12) 419. ஒற்றுநிலை திரியா தக்கொடு வரூஉம் அக்கிளை மொழியு முளவென மொழிப. இது, மென்றொடர் மொழியுள் சிலவற்றிற்கு எய்தியது விலக்குத லும் எய்தியதன்மேல் சிறப்பும் கூறுகின்றது. (இ-ள்.) ஒற்று நிலை திரியாது அக்கொடு வரும் அ கிளை மொழியும் உள என மொழிப - ஒற்று முன் நின்ற நிலை திரியாது அக்குச் சாரியையொடும் பிற சாரியையொடும் வரும் அக் கிளை யெழுத்து மொழியும் உள என்று சொல்லுவர் ஆசிரியர். உ-ம்: குன்றக் கூகை, மன்றப் பெண்ணை என வரும். உம்மையான், கொங்கத்துழவு, வங்கத்து வாணிகம் என அத்துப் பெற்றன. ‘நிலை’ என்றதனான், ஒற்றுநிலை திரியா அதிகாரத்துக் கண் இயைபு வல்லெழுத்து விலக்குக. ‘அக்கிளைமொழி’ என்றதனான், பார்ப்பனக்கன்னி, பார்ப்பனச் சேரி என அன்னும் அக்கும் வந்தன கொள்க. (உகர நீட்டம் செய்யுள் விகாரம். `அக்கிளை - ஆகுபெயர்.) (13) 420. எண்ணுப் பெயர்க்கிளவி யுருபிய னிலையும். இது, குற்றுகர ஈற்று எண்ணுப்பெயரொடு பொருட்பெயர் முடிக்கின்றது. (இ-ள்.) எண்ணுப்பெயர் கிளவி உருபு இயல் நிலையும் - எண்ணுப்பெயராகிய சொற்கள் உருபுபுணர்ச்சியின் இயல்பின் கண்ணே (199) நின்று (அன்பெற்று) முடியும். உ-ம்: ஒன்றன்காயம், இரண்டன்காயம்; சுக்கு, தோரை, பயறு என வரும். (14) 421. வண்டும் பெண்டு மின்னொடு சிவணும். இது, மென்றொடர் மொழியுள் சிலவற்றிற்குப் பிற முடிபு கூறுகின்றது. (இ-ள்.) வண்டும் பெண்டும் இன் ஒடு சிவணும் - வண்டு என்னும் சொல்லும் பெண்டு என்னும் சொல்லும் இன்சாரியை யொடு பொருந்தி முடியும். உ-ம்: வண்டின்கால், பெண்டின்கால் எனவரும். (15) 422. பெண்டென் கிளவிக் கன்னும் வரையார். இது, மேற்கூறியவற்றுள் ஒன்றற்கு எய்தியதன்மேல் சிறப்புவிதி கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) பெண்டு என் கிளவிக்கு அன்னும் வரையார் - பெண்டு என்னும் சொல்லிற்கு (இன்னேயன்றி) அன் சாரியையும் வரையார் (ஆசிரியர்). உ-ம்: பெண்டன்கை என வரும். (16) 423. யாதெ னிறுதியுஞ் சுட்டு முதலாகிய ஆய்த விறுதியு முருபிய னிலையும். இஃது, ஈரெழுத்து ஒருமொழியுள் ஒன்றற்கும், சுட்டு முதல் ஆய்தத் தொடர்மொழிக்கும் வேறு முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) யாது என் இறுதியும் சுட்டு முதல் ஆகிய ஆய்த இறுதியும் - யாது என்னும் ஈறும் சுட்டு முதலாகிய ஆய்தத் தொடர்மொழிக் குற்றியலுகர ஈறும், உருபு இயல் நிலையும் - உருபு புணர்ச்சியின் இயல்பின்(கண்ணே) (201) நின்று சுட்டு முதல் மொழிகள் (அன்பெற்றும்) ஆய்தம் கெட்டும் முடியும். உ-ம்: யாதன்கோடு, அதன்கோடு, இதன்கோடு, உதன்கோடு என வரும். (17) 424. முன்னுயிர் வருமிடத் தாய்தப் புள்ளி மன்னல் வேண்டு மல்வழி யான. இது, மேற்கூறிய ஈற்றுள் சுட்டுமுதல் ஈற்று உகரத்திற்கு ஒருவழி அல்வழி முடிபு கூறுகின்றது. (இ-ள்.) முன் உயிர் வரும் இடத்து - (அவற்றுள் சுட்டு முதல் ஆய்தத் தொடர்மொழி உகர ஈறு தன்) முன்னே உயிர் வரும் இடத்து, ஆய்தப்புள்ளி மன்னல் வேண்டும் - ஆய்தப் புள்ளி (முன்பு போலக் கெடாது) நிலைபெற்று முடிதல் வேண்டும், அல்வழியான - அல்வழிக் கண். உ-ம்: அஃதடை, இஃதடை, உஃதடை; ஆடை, இலை என ஒட்டுக. ‘முன்’ என்றதனான், வேற்றுமைக்கண்ணும் உயிர் முதல் மொழி வந்த இடத்து அஃதடைபு, அஃதாட்டம் என ஆய்தம் கெடாமை கொள்க. (`ஆண்’ என்பது - வேற்றுமை மயக்கம். அகரம் - சாரியை.) (18) 425. ஏனைமுன் வரினே தானிலை யின்றே. இது, மேலனவற்றிற்குப் பிற கணத்தொடு முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) ஏனை முன்வரின் தான் நிலையின்று - (அச்சுட்டு முதல் உகர ஈறு உயிர்க்கணம் ஒழிந்த) பிற கணங்கள் முன்வரின் அவ் வாய்தம் நிலையின்றி முடியும். உ-ம்: அது கடிது, இது கடிது, உது கடிது; சிறிது, தீது, பெரிது, ஞான்றது, நீண்டது, மாண்டது, யாது, வலிது என வரும். (முன்னைய ஏகாரம் - அசை, பின்னையது - ஈற்றசை.) (19) 426. அல்லது கிளப்பி னெல்லா மொழியும் சொல்லிய பண்பி னியற்கை யாகும். இஃது, ஆறு ஈற்றுக் குற்றியலுகரத்திற்கும், அல்வழி முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) அல்லது கிளப்பின் - அல்வழியைச் சொல்லும் இடத்து, எல்லா மொழியும் - ஆறு ஈற்றுக் குற்றியலுகரமும், சொல்லிய பண்பின் இயற்கை ஆகும் - மேற்சொல்லிய பண்பினையுடைய இயல்பாய் முடியும். உ-ம்: நாகு கடிது, வரகு கடிது, தெள்கு கடிது, எஃகு கடிது, குரங்கு கடிது; சிறிது, தீது, பெரிது என வரும். ‘எல்லா மொழியும்’ என்றதனான், வினைச்சொல்லும் வினைக் குறிப்புச் சொல்லும் இயல்பாய் முடிந்தன கொள்க. உ-ம்: கிடந்தது குதிரை, கரிது குதிரை என வரும். ‘சொல்லிய’ என்றதனான் இருபெயரொட்டுப் பண்புத் தொகை முடிபுகொள்க. உ-ம்: காட்டுக்கானம், குருட்டெருது எனவரும் ‘பண்பின்’ என்றதனான், ஐ என்னும் சாரியை பெற்று வரும் அல்வழி முடிபும் கொள்க. உ-ம்: அன்றைக் கூத்தன், பண்டைச் சான்றார், ஓர் யாட்டை யானை, மற்றை யானை என வரும். (20) 427. வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து மிகுமே. இஃது, அவ் ஒற்றுள்ளும் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று. (இ-ள்.) வல்லொற்றுத் தொடர்மொழி - வல்லொற்றுத் தொடர் மொழிக் குற்றியலுகரம், வல்லெழுத்து மிகும் - (வல்லெழுத்து வருவழி) வல்லெழுத்து மிக்கு முடியும். உ-ம்: கொக்குக்கடிது; சிறிது, தீது, பெரிது என வரும். (`வல்லொற்றுத்தொடர்மொழி’ என்பது ஆகுபெயர். `ஏகாரம்’ - ஈற்றசை.) (21) 428. சுட்டுச்சினை நீடிய மென்றொடர் மொழியும் யாவினா முதலிய மென்றொடர் மொழியும் ஆயிய றிரியா வல்லெழுத் தியற்கை. இதுவும், அவ் ஈற்றுள்ளும் ஒன்றன்கண் ஏழாம் வேற்றுமை இடப்பொருள் உணரநின்ற இடைச்சொற்கு முடிபு கூறுகின்றது. (இ-ள்.) சுட்டு சினை நீடிய மென்றொடர் மொழியும் - சுட்டாகிய சினையெழுத்து நீண்ட மென்றொடர்மொழிக் குற்றியலுகர ஈறும், யா வினா முதலிய மென்றொடர்மொழியும் - யா என்னும் வினா முதலாகிய மென்றொடர்மொழிக் குற்றியலுகர ஈறும், வல்லெழுத்து இயற்கை அ இயல் திரியா - மேற்கூறிய வல்லெழுத்து இயற்கையாகிய அவ் வியல்பில் திரியா(து முடியும்.) உ-ம்: ஆங்குக்கொண்டான், ஈங்குக்கொண்டான், ஊங்குக் கொண்டான், யாங்குக்கொண்டான்; சென்றான், தந்தான், போயினான் என வரும். ‘இயற்கை’ என்றதனான், அக் குற்றுகர ஈற்று வினையெச்ச முடிபு கொள்க. செத்துக்கிடந்தான், இருந்துகொண்டான் என வரும். (22) (மென்றொடர் மொழி இரண்டும் - ஆகுபெயர். அகரநீட்டம் - செய்யுள் விகாரம்.) 429. யாவினா மொழியே யியல்பு மாகும். இது, மேலவற்றுள் ஒன்றன்மேல் சிறப்புவிதி கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) யா வினா மொழி இயல்பும் ஆகும் - (அவற்றுள்) யா வினா மொழி (மேற்கூறிய விகாரமேயன்றி) இயல்பாயும் முடியும் எ-று. உ-ம்: யாங்கு கொண்டான், சென்றான், தந்தான், போயினான் என வரும். (23) 430. அந்நான் மொழியுந் தந்நிலை திரியா. இது, மேலவற்றிற்கு நிலைமொழிச் செய்கை கூறுகின்றது. (இ-ள்.) அ நால் மொழியும் - (சுட்டு முதல் மூன்றும் யா முதல் மொழியுமாகிய) அந் நான்கு மொழியும், தம் நிலை திரியா - தம் மெல்லொற்று நிலை திரிந்து வல்லொற்று ஆகாது முடியும். ‘தந்நிலை’ என்றதனான், மெல்லொற்றுத் திரியாது மிக்கு முடிவன பிறவும் கொள்க. உ-ம்: அங்குக்கொண்டான், இங்குக்கொண்டான், உங்குக் கொண்டான், எங்குக்கொண்டான்; சென்றான், தந்தான், போயினான் என வரும். ‘யாமொழி’ என்னாது ‘வினா’ என்றதனான், பிற இயல்பாய் முடிவனவும் கொள்க. முந்து கொண்டான், பண்டு கொண்டான், இன்று கொண்டான், அன்று கொண்டான் என வரும். (`ஏகாரம்’ அசை.) (24) 431. உண்டென் கிளவி யுண்மை செப்பின் முந்தை யிறுதி மெய்யொடுங் கெடுதலும் மேனிலை யொற்றே ளகார மாதலும் ஆமுறை யிரண்டு முரிமையு முடைத்தே வல்லெழுத்து வரூஉங் காலை யான. இது, மென்றொடர் மொழியுள் ஒரு வினைக்குறிப்பு மொழிக்கு வேறு முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) உண்டு என் கிளவி உண்மை செப்பின் - உண்டு என்னும் சொல் (உண்டு என்னும் தொழில் ஒழிய) உண்மை என்னும் பண்பு உணர நிற்கும் இடத்து, முந்தை இறுதி மெய்யொடும் கெடுதலும், மேல்நிலை ஒற்று ளகாரம் ஆதலும் - முற்பட்ட ஈற்றுக் குற்றியலுகரம் (தான் ஏறி நின்ற) மெய்யொடும் கெடுதலும் அதற்கு மேல் நின்ற ணகார ஒற்று ளகாரம் ஆதலுமாகிய, அ முறை இரண்டும் உரிமையும் உடைத்து - அம் முறைமையுடைய இரண்டனையும் உரித்தாதலும் உடைத்து, வல்லெழுத்து வருங்காலை - வல்லெழுத்து முதல்மொழி வருங்காலத்து. வல்லெழுத்ததிகாரம் வாரா நிற்ப, (‘வல்லெழுத்து வரூஉங் காலை’ என்றதனான்) இவ் இருமுடிபும் உள்ளது, பகர முதல்மொழி வந்தால்; மற்றை மூன்று எழுத்தின்கண்ணும் ஈறு கெடாதே நின்று முடியும் என்று கொள்க. இன்னும் அதனானே, இயல்புகணத்து இறுதி கெடாதே முடிதல் கொள்க. உ-ம்: உள் பொருள், உண்டு பொருள் எனவும்; உண்டு காணம், உண்டு சாக்காடு, உண்டு தாமரை எனவும்; உண்டு ஞாண், நூல், மணி, யாழ், வட்டு, அடை, ஆடை எனவும் வரும். ‘உள்பொருள்’ என்பது பண்புத்தொகை முடிபு அன்றோ எனின், அஃது ஓசை ஒற்றுமைப்படச் சொல்லும் வழியது; இஃது, ஓசை இடையறவுபடச் சொல்லும் வழியது போலும். (உண்மைப்பண்பாவது, ஒரு பொருள் தோன்றுங்கால் தோன்றி அது கெடுந்துணையும் உண்டாய் நின்ற தன்மை. `ஏகாரம்’ அசை. அகர நீட்டமும் உகர நீட்டமும் செய்யுள் விகாரம். `ஆன்’ இடைச்சொல்; அகரம் - சாரியை.) (25) 432. இருதிசை புணரி னேயிடை வருமே. இது, குற்றுகர ஈற்றுத் திசைப்பெயர்க்கு அல்வழிக்கண் வேறு முடிபு கூறுகின்றது. (இ-ள்.) இருதிசை புணரின் ஏ இடை வரும் - இரண்டு பெருந் திசைகள் (தம்மிற்) புணரின் ஏ என்னும் சாரியை இடைவந்து புணரும். உ-ம்: வடக்கே தெற்கு, கிழக்கே மேற்கு என வரும். (ஏகாரம் - ஈற்றசை). (26) 433. திரிபுவேறு கிளப்பி னொற்று மிறுதியும் கெடுதல் வேண்டு மென்மனார் புலவர் ஒற்றுமெய் திரிந்து னகார மாகும் தெற்கொடு புணருங் காலை யான. இஃது, அப் பெருந்திசையொடு கோணத்திசை புணருமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) திரிபு வேறு கிளப்பின் - (அப் பெருந்திசைகளொடு) கோணத்திசைகளை வேறாகப் புணர்க்கும் இடத்து, ஒற்றும் இறுதியும் கெடுதல் வேண்டும் என்மனார் புலவர் - (அவ் வுகரம் ஏறி நின்ற) ஒற்றும் அவ் ஈற்று உகரமும் கெட்டு முடிதல் வேண்டுமென்று சொல்லுவர் புலவர், தெற்கொடு புணரும் காலை - தெற்கு என்னும் திசையொடு புணரும் காலத்து, ஒற்று மெய் திரிந்து னகாரம் ஆகும் - (அதன்கண் நின்ற) றகார ஒற்று (தன் வடிவு) திரிந்து னகாரமாய் முடியும். ‘திரிந்து’ என்றதனான், வடக்கு என்பதன்கண் இடை நின்ற ககர ஒற்றுக் கெடுக்க. உ-ம்: வடகிழக்கு, வடமேற்கு; தென்கிழக்கு, தென்மேற்கு என வரும். ‘வேறு’ என்றதனான், திசைப்பெயரொடு பொருட் பெயர்க்கும் இவ் விதி கொள்க. வடகடல், வடவரை என வரும். ‘மெய்’ என்றதனான், அத்திசைப்பெயரொடு பொருட் பெயர் புணருமிடத்து இறுதியும் முதலும் திரிந்து முடிவன வெல்லாம் கொள்க. உ-ம்: கீழ்கூரை, மேல் கூரை என வரும். (27) 434. ஒன்று முதலாக வெட்ட னிறுதி எல்லா வெண்ணும் பத்தன் முன்வரின் குற்றிய லுகர மெய்யொடுங் கெடுமே முற்றவின் வரூஉ மிரண்டலங் கடையே. இஃது, இவ் வீற்று எண்ணுப்பெயரோடு எண்ணுப் பெயருக்கு முடிபு கூறுகின்றது. (இ-ள்.) ஒன்று முதலாக எட்டு என் இறுதி எல்லா எண்ணும் - ஒன்று என்னும் சொல் முதலாக எட்டு என்னும் சொல் இறுதியாகவுள்ள எல்லா எண்ணுப்பெயரும், பத்தன் முன்வரின் - பத்து என்னும் எண்ணுப் பெயர் முன்வரின், குற்றியலுகரம் மெய்யொடும் கெடும் - (அப் பத்து என்னும் சொல்லிற்) குற்றியலுகரம் தான் ஏறி நின்ற மெய்யொடும் கெட்டு முடியும், இரண்டு அலம் கடை முற்ற இன் வரும் - இரண்டாகிய எண்ணுப் பெயர் அல்லாத எண்ணுப்பெயரிடத்து முடிய இன் வந்து புணரும். உ-ம்: பதினொன்று, பதின்மூன்று, பதினான்கு, பதினைந்து, பதினாறு, பதினேழு, பதினெட்டு என வரும். நிலைமொழி முற்கூறாததனான், பிறமொழியும் அவ் இன் பேறு கொள்க. ஒன்பதின்பால், ஒன்பதின்கூறு என வரும். ‘முற்ற’ என்றதனான், மேல் எடுத்தோத்தானும் இலேசானும் இன் பெற்றவழி, பதிற்றொன்று பதிற்றிரண்டு என்றாற் போல முடிபுகள் வேறுபட வருவனவெல்லாம் கொள்க. (`ஏகாரம்’ இரண்டும் - ஈற்றசை. உகர நீட்டம் - செய்யுள் விகாரம்.) (28) 435. பத்தனொற் றுக்கெட னகார மிரட்டல் ஒத்த தென்ப விரண்டுவரு காலை. இது, மேல் இன் பெறாதென்று விலக்கிய அதற்குப் பிறிது விதி வகுத்தல் நுதலிற்று. (இ-ள்.) பத்தன் ஒற்று கெட னகாரம் இரட்டல் - பத்து என்னும் சொல்லின் நின்ற தகர ஒற்றுக்கெட னகர ஒற்று வந்து இரட்டுதல், ஒத்தது என்ப - பொருந்திற்று என்று சொல்லுப (புலவர்), இரண்டு வரு காலை - இரண்டு என்னும் எண் வரும் காலத்து. உ-ம்: பன்னிரண்டு என வரும். (29) 436. ஆயிரம் வரினு மாயிய றிரியாது. இதுவும், எண்ணுப்பெயர்க்கு முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) ஆயிரம் வரினும் - (மேற்கூறிய பத்து என்னும் எண்ணுப்பெயர் முன்னர், ஒன்று முதலாகிய எண்ணுப் பெயரேயன்றி) ஆயிரம் என்னும் எண்ணுப்பெயர் வந்தாலும், அ இயல் திரியாது - மேல் (434) ஈறு கெட்டு இன் பெற்ற இயல்பின் திரியாதே முடியும். உ-ம்: பதினாயிரம் என வரும். (அகர நீட்டம் - செய்யுள் விகாரம்) (30) 437. நிறையு மளவும் வரூஉங் காலையும் குறையா தாகு மின்னென் சாரியை. இஃது, எண்ணுப் பெயரொடு நிறைப்பெயரும் அளவுப் பெயரும் புணர்க்கின்றது. (இ-ள்.) நிறையும் அளவும் வரூஉம் காலையும் - (மேல் நின்ற பத்தென்பதன்முன்) நிறைப்பெயரும் அளவுப்பெயரும் வரும் காலத்தும், இன் என் சாரியை குறையாது ஆகும் - (அவ்) இன் என்னும் சாரியை குறையாது வந்து முடியும். உ-ம்: பதின்கழஞ்சு; தொடி, பலம் எனவும்; கலம், சாடி, தூதை, பானை, நாழி, மண்டை, வட்டி, அகல், உழக்கு எனவும் வரும். ‘குறையாதாகும்’ என்றதனான், பத்து என்பதன் முன்னர்ப் பொருட்பெயர்க்கு வருமுடிபும் கொள்க. உ-ம்: பதின்றிங்கள், பதிற்றுமுழம், பதிற்றுவேலி பதிற்றிதழ் என வரும். (31) 438. ஒன்றுமுத லொன்பா னிறுதி முன்னர் நின்ற பத்த னொற்றுக்கெட வாய்தம் வந்திடை நிலையு மியற்கைத் தென்ப கூறிய வியற்கைக் குற்றிய லுகரம் ஆற னிறுதி யல்வழி யான. இஃது, எண்ணுப் பெயரோடு எண்ணுப் பெயர்க்கு முடிபு கூறுகின்றது. (இ-ள்.) ஒன்று முதல் ஒன்பான் இறுதி முன்னர் நின்ற பதன் ஒற்று கெட ஆய்தம் வந்து இடைநிலையும் இயற்கைத்து என்ப - ஒன்று முதலாக ஒன்பது ஈறாகச் சொல்லப்படுகின்ற எண்ணுப் பெயர்களின் முன்னர் (வருமொழியாய் வந்து) நின்ற பத்து என்னும் சொல்லினது தகர ஒற்றுக் கெட ஆய்தமானது வந்து இடையில் நிலைபெறும் இயல்பையுடைத் தென்று சொல்லுவர் புலவர், ஆறன் இறுதி அல்வழி குற்றியலுகரம் கூறிய இயற்கை - அவற்றுள் ஆறு என்னும் ஈறு அல்லாத இடத்துக் குற்றிய லுகரம் மேற்கூறிய இயற்கையாய் மெய்யொடும் கெட்டு முடியும். உ-ம்: ஒருபஃது, இருபஃது என ஒட்டுக. ‘வந்த’ என்றதனான், ஆய்தமாய்த் திரியாது கெட்டு ஒருபது என்றுமாம். (`ஆன்’ - இடைச்சொல். அகரம் - சாரியை.) (32) 439. முதலீ ரெண்ணி னொற்றுரகர மாகும் உகரம் வருத லாவயி னான. இது, மேற்கூறிய முடிபிற்கு உரியதொன்று உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) முதல் ஈர் எண்ணின் ஒற்று ரகரம் ஆகும் - (அவற்றுள்) முதற்கண் நின்ற இரண்டு எண்ணின் ஒற்று ரகார ஒற்றாம், அ வயின் உகரம் வருதல் - அவ்விடத்து உகரம் வருக. உ-ம்: ஒருபஃது என வரும். (`ஆன்’ - இடைச்சொல். அகரம் - சாரியை.) (33) 440. இடைநிலை ரகர மிரண்டெ னெண்ணிற்கும் நடைமருங் கினறே பொருள்வயி னான. இதுவும் அது. (இ-ள்.) இரண்டு என் எண்ணிற்கு இடைநிலை ரகரம் பொருள் வயின் நடை மருங்கு இன்று - அவ் இரண்டு என்னும் எண்ணிற்கு இடை நின்ற ரகரம் அம் மொழி பொருளாமிடத்து நடக்கும் இடம் இன்றிக் கெடும். உ-ம்: இருபஃது என வரும். (`ஏகாரம்’ - அசை. `ஆன்’ என்பதை மேற்கூறி யாங்குக் கொள்க.) (34) 441. மூன்று மாறு நெடுமுதல் குறுகும் மூன்ற னொற்றே பகார மாகும். இதுவும் அது. (இ-ள்.) மூன்றும் ஆறும் நெடு முதல் குறுகும் - மூன்று என்னும் எண்ணும் ஆறு என்னும் எண்ணும் நெடுமுதல் குறுகி முடியும், மூன்றன் ஒற்று பகாரம் ஆகும் - மூன்று என்னும் எண்ணின்கண் நின்ற னகார ஒற்றுப் பகர ஒற்றாய் முடியும். உ-ம்: முப்பஃது, (அறுபஃது) என வரும் (ஏகாரம் அசை.) (35) 442. நான்க னொற்றே றகார மாகும். இதுவும் அது. (இ-ள்.) நான்கன் ஒற்று றகாரம் ஆகும் - நான்கு என்னும் எண்ணின்கண் நின்ற னகார ஒற்று றகர ஒற்றாய் முடியும். உ-ம்: நாற்பஃது என வரும். (ஏகாரம் - அசை.) (36) 443. ஐந்த னொற்றே மகாரம் ஆகும். இதுவும் அது. (இ-ள்.) ஐந்தன் ஒற்று மகாரம் ஆகும் - ஐந்து என்னும் எண்ணின்கண் நின்ற நகார ஒற்று மகார ஒற்றாய் முடியும். உ-ம்: ஐம்பஃது என வரும். ஆறன் நெடுமுதல் குறுகியவாறே நின்று அறுபஃது என வரும். ‘ஏழ்’ குற்றுகர ஈறு அன்றாம். (37) 444. எட்ட னொற்றே ணகார மாகும். இதுவும் அது. (இ-ள்.) எட்டன் ஒற்று ணகாரம் ஆகும் - எட்டு என்னும் எண்ணின்கண் நின்ற டகார ஒற்று ணகார ஒற்றாய் முடியும். எ-டு: எண்பஃது என வரும். (ஏகாரம் - அசை.) (38) 445. ஒன்பான் னொகரமிசைத் தகர மொற்றும் முந்தை யொற்றே ணகார மிரட்டும் பத்தென் கிளவி யாய்த பகரங்கெட நிற்றல் வேண்டும் மூகாரக் கிளவி ஒற்றிய தகரம் றகார மாகும். இதுவும் அது. (இ-ள்.) ஒன்பான் ஒகர மிசை தகரம் ஒற்றும் - (நிலைமொழி யாகிய) ஒன்பது என்னும் சொல்லின் ஒகரத்திற்கு மேலாகத் தகரம் ஒற்றாய் மிக்கு வரும், முந்தை ஒற்று ணகாரம் இரட்டும் - முன் சொன்ன ஒகரத்தின் முன்னர் னகர ஒற்று இரண்டு ணகார ஒற்றாய் மிக்கு வரும், பத்து என் கிளவி பகரம் ஆய்தம் கெட ஊகாரக் கிளவி நிற்றல் வேண்டும் - (வருமொழி யாகிய) பத்து என்னும் சொல் தன்கண் பகரமும் ஆய்தமும் கெட (நிலை மொழியில் இரட்டிய ணகரத்தின் பின்னர்) ஊகாரமாகிய எழுத்து நிற்றல் வேண்டும்; ஒற்றிய தகரம் றகாரம் ஆகும் - (வருமொழியாகிய பத்து என்பதன் ஈற்றதன்மேல் ஏறிய உகரம் கெடாது பிரிந்து நிற்ப) ஒற்றாய் நின்ற தகரம் றகார ஒற்றாகும். இஃது, ஒன்பதும் பத்தும் என நின்றால் முடியற்பால (இன்ன) வென்பது. ‘பகர ஆய்தம்’ என்னாத முறையன்றிய கூற்றினான், நிலை மொழிக்கண் பகரக்கேடும் கொள்க. குற்றியலுகரமும் அஃது ஏறிய மெய்யும் முன்னர் (438) மாட்டேற்றாற் கெட்டன. (`ஏகாரம்’ - அசை. இச்சூத்திரம் “இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பல்” ஆம்.) உ-ம்: தொண்ணூறு என வரும். (39) 446. அளந்தறி கிளவியு நிறையென் கிளவியும் கிளந்த வியல தோன்றுங் காலை. இது, மேற்கூறிய ஒன்று முதல் ஒன்பான்களோடு அளவுப் பெயரும் நிறைப்பெயரும் முடியுமாறு கூறுகின்றது. (இ-ள்.) அளந்து அறி கிளவியும் நிறை என் கிளவியும் தோன்றும் காலை - (மேற்கூறிய ஒன்று முதல் ஒன்பான்களின் முன்னர்) அளந்து அறியப்படும் அளவுப் பெயர்ச்சொல்லும் நிறை என்னும் பெயர்ச்சொல்லும் தோன்றுங்காலத்து, கிளந்த இயல - அவ் வொன்று முதல் ஒன்பான்கள் மேல் பத்து என்பதனொடு புணரும்வழிக் கிளந்த (438 - 444) இயல் பினவாய் முடியும். உ-ம்: ஒரு கலம், இரு கலம்; சாடி, தூதை, பானை, நாழி, மண்டை, வட்டி எனவும்; ஒருகழஞ்சு, இருகழஞ்சு; தொடி, பலம் எனவும் வரும். ‘தோன்றுங் காலை’ என்றதனான், அவ் வெண்களின்முன் எடுத்தோத்தானும் இலேசானும் முடியாது நின்ற எண்ணுப் பெயரை யெல்லாம் இவ்விதியும் பிறவிதியும் எய்துவித்து முடித்துக் கொள்க. உ-ம்: ஓரொன்று, ஓரிரண்டு; ஈரொன்று, ஈரிரண்டு; ஒரு முந்திரிகை, இருமுந்திரிகை; ஓரரைக்கால், ஈரரைக்கால்; ஒரு கால், இருகால்; ஓரரை, ஈரரை; ஒரு முக்கால், இரு முக்கால் என ஒட்டிக் கொள்க. (40) 447. மூன்ற னொற்றே வந்த தொக்கும். இது, மாட்டேறு எய்தாததற்கு வேறு முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) மூன்றன் ஒற்று வந்தது ஒக்கும் - மூன்றாம் எண்ணின்கண் நின்ற னகார ஒற்று வருமொழியாய் வந்த அளவுப்பெயர் நிறைப்பெயரின் முத(லி)ல் வந்த ஒற்றோடு ஒத்த ஒற்றாய் முடியும். உ-ம்: முக்கலம், சாடி, தூதை, பானை எனவும்; முக்கழஞ்சு, தொடி, பலம் எனவும் வரும். மாட்டேற்றானே நாற்கலம், சாடி, தூதை, பானை எனவும்; நாற்கழஞ்சு, தொடி, பலம் எனவும் வரும். (ஏகாரம் அசை.) (41) 448. ஐந்த னொற்றே மெல்லெழுத் தாகும். இதுவும் அது. (இ-ள்.) ஐந்தன் ஒற்று மெல்லெழுத்து ஆகும் - ஐந்தாவதன் கண் நின்ற நகர ஒற்று (மேல் வருகின்ற வருமொழி முதல் வல்லெழுத்திற்கு ஏற்ற) மெல்லெழுத்தாய் முடியும். உ-ம்: ஐங்கலம், சாடி, தூதை, பானை எனவும்; ஐங்கழஞ்சு, தொடி, பலம் எனவும் வரும். (ஏகாரம் - அசை.) (42) 449. கசதப முதன்மொழி வரூஉங் காலை. இது, மேற்கூறிய மூன்றற்கும் ஐந்தற்கும் வருமொழி வரையறுக் கின்றது. (இ-ள்.) க ச த ப முதல்மொழி வரும் காலை - மூன்றன் ஒற்று வந்தது ஒப்பதூஉம் ஐந்தன் ஒற்று மெல்லெழுத்தாவதூஉம் (அவ் அளவுப்பெயர் நிறைப்பெயர் ஒன்பதினும் வன்கணமாகிய) க ச த ப முதல் மொழிகள் வந்த இடத்து. உ-ம்: மேல் மாட்டேற்றானே, அறுகலம், சாடி, தூதை, பானை எனவும்; அறுகழஞ்சு, தொடி, பலம் எனவும் வரும். ஏழு குற்றுகர ஈறன்மையின், மாட்டேறு ஏலாதாயிற்று. (முந்தின இரண்டு சூத்திரமும் இதுவும் ஒரு சூத்திரமாயிருந்து கால அளவில் மூன்றாயின போலும்.) (43) 450. நமவ வென்னு மூன்றொடு சிவணி அகரம் வரினு மெட்டன்மு னியல்பே. இது, வேண்டா கூறி வேண்டியது முடித்தல் நுதலிற்று. (இ-ள்.) ந ம வ என்னும் மூன்றொடு சிவணி அகரம் வரினும் - (அளவுப்பெயர் நிறைப்பெயர்களில் மென்கணத்து இரண்டும் இடைக் கணத்து ஒன்றுமாகிய) ந ம வ என்னும் மூன்றனோடும் பொருந்தி, (உயிர்க் கணத்து) அகர முதல்மொழி வரினும் (உம்மையான் அவ் வுயிர்க்கணத்து ஒழிந்த உகரமும் கூறாத வல்லெழுத்துக்களும் வரினும்), எட்டன்முன் இயல்பு - எட்டென்பதன் முன் (மேற்கூறிய நின்ற விகாரமே விகாரமாக வேறொரு விகாரமின்றி) இயல்பாய் முடியும். உ-ம்: எண்கலம், சாடி, தூதை, பானை, நாழி, மண்டை, வட்டி, அகல், உழக்கு எனவும்; எண்கழஞ்சு, தொடி, பலம் எனவும் வரும். இவ் வேண்டா கூறலான், எண்ணகல் எனத் தொடர் மொழிக்கண் ஒற்றிரட்டுதல் கொள்ளப்பட்டது. (`ஏகாரம்’ - ஈற்றசை.) (44) 451. ஐந்து மூன்று நமவருங் காலை வந்த தொக்கு மொற்றிய னிலையே. இதுவும், மேல்மாட்டேற்றோடு ஒவ்வா வேறு முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்) ஐந்தும் மூன்றும் நம வரும் காலை - ஐந்து என்னும் எண்ணும் மூன்று என்னும் எண்ணும் நகர முதல் மொழியும் மகர முதல் மொழியும் வருங்காலத்து, ஒற்று இயல் நிலை வந்தது ஒக்கும் - தங்கண் நின்ற ஒற்று நடக்கும் நிலைமை (சொல்லின்) அவ் வருமொழி முதலில் வந்த ஒற்றோடு ஒத்த ஒற்றாய் முடியும். உ-ம்: முந்நாழி, மும்மண்டை; ஐந்நாழி, ஐம்மண்டை என வரும். மூன்றும் ஐந்தும் என்னாத முறையன்றிய கூற்றினான், நானாழி என்னும் முடிபின்கண் விகாரமாகிய னகரத்தின் முன்னர் வருமொழி நகரத் திரிபும், அது காரணமாக நிலைமொழி னகரக் கேடும் கொள்ளப்பட்டன. (`ஏகாரம்’ -ஈற்றசை.) (45) 452. மூன்ற னொற்றே வகாரம் வருவழித் தோன்றிய வகாரத் துருவா கும்மே. இதுவும் அது. (இ-ள்.) மூன்றன் ஒற்று வகாரம் வரு வழி - மூன்றாம் எண்ணின் கண் நின்ற னகர ஒற்று வகர வருமொழி வரும் இடத்து, தோன்றிய வகாரத்து உருபு ஆகும் - வருமொழியாய வகரத்து உருவாய் முடியும். உ-ம்: முவ்வட்டி என வரும். ‘தோன்றிய’ என்றதனான், முதல் நீண்டு வகர ஒற்றின்றி மூவட்டி என்றுமாம். இன்னும் அதனானே, முதல் நீளாது ஒற்றின்றி முவட்டி என்றுமாம். (மகர ஒற்று மிகுதி செய்யுள் விகாரம், ஏகாரம் ஈற்றசை). (46) 453. நான்க னொற்றே லகார மாகும். இதுவும் அது. (இ-ள்.) நான்கன் ஒற்று லகாரம் ஆகும் - நான்காம் எண்ணின்கண் நின்ற னகார ஒற்று வகரம் வந்தால் லகார ஒற்றாய்த் திரிந்து முடியும். உ-ம்: நால்வட்டி என வரும். (`ஏகாரம்’ - அசை.) (47) 454. ஐந்த னொற்றே முந்தையது கெடுமே. இதுவும் அது. (இ-ள்.) ஐந்தன் ஒற்று முந்தையது கெடும் - ஐந்தாம் எண்ணின்கண் நின்ற நகர ஒற்று வகரம் வந்தால் முன் நின்ற வடிவு கெட்டு முடியும். உ-ம்: ஐவட்டி என வரும். ‘முந்தை’ என்றதனான், நகர ஒற்றுக்கெடாது அவ் வகரமாய்த் திரிந்து ஐவ்வட்டி என்றும் ஆம். (முதல் ஏகாரம் அசை. இரண்டாம் ஏகாரம் - ஈற்றசை) (48) 455. முதலீ ரெண்ணின்முன் னுயிர்வரு காலை தவலென மொழிப வுகரக் கிளவி முதனிலை நீட லாவயி னான. இதுவும் அது. (இ-ள்.) முதல் ஈர் எண்ணின்முன் உயிர் வரு காலை - முற்பட்ட இரண்டு எண்ணின்முன் உயிர் முதல்மொழி வருங்காலத்து, உகரக் கிளவி தவல் என மொழிப - உகரமாகிய எழுத்துக் கெடும் என்று சொல்லுவர் (புலவர்). முதல்நிலை அ வயின் நீடல் - (அவ் வெண்ணின்) முதற்கண் நின்ற எழுத்துக்கள் அவ்விடத்து நீண்டு முடியும். உ-ம்: ஓரகல், ஈரகல்; ஓருழக்கு, ஈருழக்கு என வரும். (`ஆன்’ - இடைச்சொல் -அகரம் - சாரியை.) (49) 456. மூன்று நான்கு மைந்தன் கிளவியும் தோன்றிய வகரத் தியற்கை யாகும். இதுவும் அது. (இ-ள்.) மூன்றும் நான்கும் ஐந்து என் கிளவியும் - மூன்று என்னும் எண்ணும் நான்கு என்னும் எண்ணும் ஐந்து என்னும் எண்ணுச் சொல்லும், தோன்றிய வகரத்து இயற்கையாகும் - (மேல்) தோன்றி முடிந்த வகரத்து இயற்கையாய் மூன்றன்கண் வகர ஒற்றாயும் நான்கன்கண் லகர ஒற்றாயும் ஐந்தன்கண் ஒற்றுக் கெட்டும் முடியும். உ-ம்: முவ்வகல், முவ்வுழக்கு எனவும்; நாலகல், நாலுழக்கு எனவும்; ஐயகல், ஐயுழக்கு எனவும் வரும். ‘தோன்றிய’ என்றதனான், மேல் மூன்று என்பது முதல் நீண்ட இடத்து நிலைமொழி னகர ஒற்றுக் கெடுத்துக் கொள்க. (50) 457. மூன்றன் முதனிலை நீடலு முரித்தே உழக்கென் கிளவி வழக்கத் தான. இதுவும் அது. (இ-ள்.) மூன்றன் முதல்நிலை உழக்கு என் கிளவி வழக்கத்தான - மூன்று என்னும் எண்ணின்கண் முத(லி)ல் நின்ற எழுத்து உழக்கு என்னுங் கிளவியது வழக்கிடத்து, நீடலும் உரித்து - குறுகாது நீண்டு முடிதலும் உரித்து. உ-ம்: மூவுழக்கு என வரும். ‘வழக்கத்தான’ என்றதனான், அகல் என்பதன்கண்ணும் இச் செய்கை கொள்க. மூவகல் என வரும். (ஏகாரம் - ஈற்றசை. `வழக்கத்தான்’ - வேற்றுமை மயக்கம். அகரம் - சாரியை.) (51) 458. ஆறென் கிளவி முதனீ டும்மே. இதுவும் அது. (இ-ள்.) ஆறு என் கிளவி முதல் நீடும் - ஆறு என்னும் சொல் (உயிர் முதல்மொழி வந்தால் முன் குறுகி நின்ற) முதலெழுத்து நீண்டு முடியும். உ-ம்: ஆறகல், ஆறுழக்கு என வரும். (மகர ஒற்று மிகுதி - செய்யுள் விகாரம், ஏகாரம் - ஈற்றசை.) (52) 459. ஒன்பா னிறுதி யுருபுநிலை திரியா தின்பெறல் வேண்டுஞ் சாரியை மொழியே. இதுவும் அது. (இ-ள்.) ஒன்பான் இறுதி உருவு நிலை திரியாது சாரியை மொழி இன் பெறல் வேண்டும் - ஒன்பது என்னும் எண்ணின் இறுதி தன் வடிவு நிலை திரியாது சாரியை மொழியாகிய இன்பெற்று முடிதல் வேண்டும். உ-ம்: ஒன்பதின்கலம்; சாடி, தூதை, பானை, நாழி, மண்டை, வட்டி, அகல், உழக்கு எனவும்; ஒன்பதின்கழஞ்சு; தொடி, பலம் எனவும் வரும். ‘உருவு’ என்றதனான், ஒன்பதிற்றகல் என்புழி இரட்டிய றகரமாகக் கொள்க. (ஏகாரம் - ஈற்றசை.) (53) 460. நூறுமுன் வரினுங் கூறிய இயல்பே. இஃது, ஒன்று முதல் ஒன்பான்களொடு நூறு என்பதன் முடிபு கூறுகின்றது. (இ-ள்.) நூறு முன் வரினும் கூறிய இயல்பு - நூறு என்பது (ஒன்று முதல் ஒன்பான்கண்) முன்வரினும் (மேல் பத்தென்பத னொடு புணரும் வழி) கூறிய இயல்பு எய்தி முடியும். உ-ம்: ஒருநூறு, இருநூறு, அறுநூறு, எண்ணூறு என வரும். இவை மாட்டேற்றானே முடிந்தன. (54) 461. மூன்ற னொற்றே நகார மாகும். இது, மாட்டேற்றோடு ஒவ்வாததற்கு வேறு முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) மூன்றன் ஒற்று நகாரம் ஆகும் - மூன்றாம் எண்ணின்கண் நின்ற னகர ஒற்று நகர ஒற்றாகும். உ-ம்: முந்நூறு என வரும். (`ஏகாரம்’ - அசை) (55) 462. நான்கும் மைந்து மொற்றுமெய் திரியா. இதுவும் அது. (இ-ள்.) நான்கும் ஐந்தும் ஒற்று மெய் திரியா - நான்கு என்னும் எண்ணும் ஐந்து என்னும் எண்ணும் தம் ஒற்றுக்கள் நிலை திரியாது முடியும். உ-ம்: நானூறு, ஐந்நூறு என வரும். ‘மெய்’ என்றதனான், நானூறு என்புழி வருமொழி ஒற்றாகிய நகரக்கேடு கொள்க. இன்னும் அதனானே, ஒற்றின்றி ஐநூறு என வரும் முடிபும் கொள்க. (முந்திய இரண்டு சூத்திரங்களும் இதுவும் ஒன்றாயிருந்து கால அளவில் மூன்றாயின போலும்.) (56) 463. ஒன்பான் முதனிலை முந்துகிளந் தற்றே முந்தை யொற்றே ளகார மிரட்டும் நூறென் கிளவி நகார மெய்கெட ஊஆ வாகு மியற்கைத் தென்ப ஆயிடை வருத லிகார ரகாரம் ஈறுமெய் கெடுத்து மகார மொற்றும். இதுவும் அது. (இ-ள்.) ஒன்பான் முதல் நிலை முந்து கிளந்து அற்று - ஒன்பது என்னும் சொல்லின் முதல் நின்ற ஒகரம் மேல் (பத்தென்பதனொடு புணரும் வழிக்) கூறியவாறு போல (445) ஒகரமிசைத் தகர ஒற்று மிகும், முந்தை ஒற்று ளகாரம் இரட்டும் - அவ் வொகரத்தின் முன்னின்ற (னகர) ஒற்று இரண்டு ளகர ஒற்றாம், நூறு என் கிளவி நகார மெய் கெட ஊ ஆ ஆகும் இயற்கைத்து என்ப - (வருமொழியாகிய) நூறு என்னும் சொல்லும் நகார மாகிய மெய்கெட (அதன்மேல் ஏறிய) ஊகாரம் ஆகாரமாம் இயல்பை யுடைத்து என்பர் (புலவர்). அ இடை இகாரம் ரகாரம் வருதல் - அம் மொழியிடை ஓரிகரமும் ரகாரமும் வரும், ஈறு மெய் கெடுத்து மகாரம் ஒற்றும் - இதற்கு ஈறாகிய குற்றியலுகரத்தினையும் அஃது ஏறி நின்ற றகார ஒற்றினையும் கெடுத்து (ஓர்) மகரம் ஒற்றாய் வந்து முடியும். ‘மெய்’ என்றதனான், நிலைமொழிக்கண் நின்ற பகரம் கெடுக்க. உ-ம்: தொள்ளாயிரம் என வரும். (`அகரம்’ செய்யுள் விகாரத்தாற் கெட்டது. ஏகாரங்கள் அசைகள். அகரச்சுட்டின் நீட்டம் செய்யுள் விகாரம்.) (இச்சூத்திரமும் “இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பல்” ஆம்.) (57) 464. ஆயிரக் கிளவி வரூஉங் காலை முதலீ ரெண்ணி னுகரங் கெடுமே. இஃது, அவ் வொன்று முதல் ஒன்பான்கள்முன் ஆயிரம் என்பது வருங்கால் முடிபு கூறுகின்றது. (இ-ள்.) ஆயிரக் கிளவி வரும் காலை முதல் ஈர் எண்ணின் உகரம் கெடும் - ஆயிரம் என்னும் சொல் (ஒன்று முதல் ஒன்பான்கள்) முன் வருங்காலத்து முதல் ஈர் எண்ணின்கண் பெற்று நின்ற உகரம் கெட்டு முடியும். உ-ம்: ஒராயிரம், இராயிரம் என வரும். (`ஏகாரம்’ - ஈற்றசை. முதல் ஈர்-முதல் இரண்டு. அவையாவன ஒரு, இரு என்பன.) (58) 465. முதனிலை நீடினு மான மில்லை. இஃது, எய்தியதன் மேல் சிறப்புவிதி கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) முதல்நிலை நீடினும் மானம் இல்லை - அம்முதல் ஈர் எண்ணின் முதற்கண் நின்ற ஒகர இகரங்கள் நீண்டு முடியினும் குற்றம் இல்லை. உ-ம்: ஓராயிரம், ஈராயிரம் என வரும். (59) 466. மூன்ற னொற்றே வகார மாகும். இதுவும், மாட்டேற்றோடு ஒவ்வா முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) மூன்றன் ஒற்று வகாரம் ஆகும் - மூன்றாம் எண்ணின்கண் நின்ற னகார ஒற்று வகர ஒற்றாய் முடியும். உ-ம்: முவ்வாயிரம் என வரும். ‘முதனிலை’ (465) என்றதனான் முதல் நீண்டு வகர ஒற்றுக் கெட்டு மூவாயிரம் என்றும் வரும். (ஏகாரம் - அசை.) (60) 467. நான்க னொற்றே லகார மாகும். இதுவும் அது. (இ-ள்.) நான்கன் ஒற்று லகாரம் ஆகும் - நான்காம் எண்ணின்கண் நின்ற னகர ஒற்று லகர ஒற்றாய் முடியும். உ-ம்: நாலாயிரம் என வரும். (ஏகாரம் - அசை). (61) 468. ஐந்த னொற்றே யகார மாகும். இதுவும் அது. (இ-ள்.) ஐந்தன் ஒற்று யகாரம் ஆகும் - ஐந்தாம் எண்ணின்கண் நின்ற நகர ஒற்று யகர ஒற்றாய் முடியும். உ-ம்: ஐயாயிரம் என வரும். முன்னர் இவ்வாறு ஓதாமையான், ஐயகல் ஐயுழக்கு (என்பவை) உடம்படு மெய் பெற்றது. (ஏகாரம் - அசை.) (62) 469. ஆறன் மருங்கிற் குற்றிய லுகரம் ஈறுமெய் யொழியக் கெடுதல் வேண்டும். இதுவும் அது. (இ-ள்.) ஆறன் மருங்கின் குற்றியலுகரம் ஈறு மெய் ஒழிய கெடுதல் வேண்டும் - ஆறாம் எண்ணின்கண் நின்ற குற்றியலுகரம் (தான் ஏறிய) மெய்யாகிய றகர ஒற்றுக் கெடாது நிற்ப (உகரமாகிய அவ்வீறு தானே) கெட்டு முடிதல் வேண்டும். உ-ம்: அறாயிரம் என வரும். ‘திரிந்ததன் திரிபது’ என்னும் நயத்தான், ‘ஆறன் மருங்கின்’ என்று ஓதப்பட்டது. ஆறு என்பது அறு எனக் குற்றியலுகரம் முற்றியலுகரமாக ஓதப்பட்டு நின்றமையின் அவ் வுகரக்கேடு ஓதப்பட்டது. ‘ஈறு’ எனவும் ‘மெய்’ எனவும் அவ் வுயிர்மெய்யைப் பிரித்துச் செய்கை ஓதினமையான், அவ் வுயிர்மெய்யினை ஒற்றுமை நயத்தாற் குற்றியலுகரம் என்று ஓதினாராகக் கொள்க. ‘ஆறன் மருங்கின் ஈறு மெய் யொழியக் கெடும்’ என்னாது ‘குற்றியலுகரம்’ என்றோதினமையான், நெடுமுதல் குறுகாதே நின்று ஆறாயிரம் என்றும் ஆம். இன்னும் அதனானே ‘ஆறா குவதே’ (சொல். 79) என்றாற் போலப் பொருட்பெயர்க்கண் வருமுடிபும் கொள்க. மேல் மாட்டேற்றானே (460) எண்ணாயிரம் என முடிந்தது. (63) 470. ஒன்பா னிறுதி யுருபுநிலை திரியா தின்பெறல் வேண்டுஞ் சாரியை மரபே. இதுவும் அது. (இ-ள்.) ஒன்பான் இறுதி உருபு நிலை திரியாது சாரியை மரபு இன் பெறல் வேண்டும் - ஒன்பது என்னும் எண்ணின் இறுதிக் குற்றியலுகரம் தன் வடிவு நிலை திரிந்து கெடாது சாரியையாகிய மரபினையுடைய இன்பெற்று முடிதல் வேண்டும். உ-ம்: ஒன்பதினாயிரம் என வரும். ‘உருபு’ என்றும், ‘நிலை’ என்றும், ‘சாரியை மரபு’ என்றும் கூறிய மிகுதியான், ஆயிரமல்லாத பிற எண்ணின்கண்ணும் பொருட்பெயரிடத்தும், இன்னும் உகரமும் வல்லெழுத்தும் பெற்று முடியும் முடிபும் கொள்க. ஒன்பதிற்றுக்கோடி, ஒன்பதிற்றொன்று; ஒன்பதிற்றுத் தடக்கை (பரிபாடல் 3) ஒன்பதிற்றெழுத்து (தொகை. 28) என வரும். இன்னும் அவ் விலேசானே மேல் எண்ணாயிரம் என்றவழி ஒற்றிரட்டுக் கொள்க. (ஏகாரம் - ஈற்றசை) (64) 471. நூறா யிரமுன் வரூஉங் காலை நூற னியற்கை முதனிலைக் கிளவி. இஃது, ஒன்று முதல் ஒன்பான்களொடு நூறு என்னும் அடையடுத்து ஆயிரம் என்பது முடியுமாறு கூறுகின்றது. (இ-ள்.) நூறாயிரம் முன்வரு காலை முதல்நிலை கிளவி நூறு என் இயற்கை - நூறாயிரம் என்னும் அடையடுத்த மொழி (ஒன்று முதல் ஒன்பான்கள்) முன்வருங் காலத்து முதனிலைக் கிளவியாகிய ஒன்று என்னும் எண் (மேல் ஒன்று முதல் ஒன்பான்களொடு முடிந்த) நூறு என்னும் சொல் அவ் வொன்றனொடு முடிந்த விகார இயற்கை எய்தி முடியும். வழிநிலைக் கிளவியாகிய இரண்டு முதல் எண்கள் விகாரம் எய்தியும் எய்தாது இயல்பாயும் முடியும். உ-ம்: ஒருநூறாயிரம் என வரும். இருநூறாயிரம், இரண்டு நூறாயிரம்; முந்நூறாயிரம், மூன்று நூறாயிரம்; நானூறாயிரம், நான்கு நூறாயிரம்; ஐந்நூறாயிரம், ஐந்து நூறாயிரம்; அறுநூறாயிரம், ஆறு நூறாயிரம்; எண்ணூறாயிரம், எட்டு நூறாயிரம்; ஒன்பது நூறாயிரம் என வரும். உரையிற் கோடல் என்பதனான், தொள்ளாயிரம் என்ற முடிபினொடு மாட்டேறு சென்றதேனும் அவ்வாறு முடியா தென்று கொள்க. ‘முன்’ என்பதனான் இன்சாரியை பெற்று ஒன்பதினூ றாயிரம் என்றும் ஆம். ‘நிலை’ என்றதனான், மூன்றும் ஆறும் இயல்பாய் முடியும் முடிபின்கண் நெடுமுதல் குறுகாமை கண்டு கொள்க. இன்னும் அதனானே நானூறாயிரம் என்புழி வருமொழி ஒற்றாகிய நகரக்கேடு கொள்க. (65) 472. நூறென் கிளவி யொன்றுமுத லொன்பாற் கீறுசினை யொழிய வினவொற்று மிகுமே. இது, நூறு என்பதனோடு ஒன்று முதல் ஒன்பான்களைப் புணர்க்கின்றது. (இ-ள்.) நூறு என் கிளவி ஒன்று முதல் ஒன்பாற்கு ஈறு சினை ஒழிய இன ஒற்று மிகும் - நூறு என்னும் சொல் ஒன்று முதல் ஒன்பான்களொடு புணருமிடத்து ஈறாகிய குற்றிய லுகரமும் அவ் வுகரம் ஏறிய மெய்யாகிய சினையும் கெடாது நிற்ப (சினைக்கு) இனமாகிய இன ஒற்று மிக்கு முடியும். எ-டு: நூற்றொன்று; இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது என வரும். ‘ஈறுசினை’ என்று ஓதிய மிகையானே நூறு என்பதனொடு பிற எண்ணும் பிற பொருட்பெயரும் இவ் விதியும் பிற விதியும் பெற்று முடியுமாறு கொள்க. நூற்றுக்கோடி, நூற்றுப்பத்து, நூற்றுத்தொண்ணூறு எனவும்; நூற்றுக்குறை, நூற்றடுக்கு எனவும் வரும். (66) 473. அவையூர் பத்தினு மத்தொழிற் றாகும். இஃது, அந் நூறு என்பதனோடு ஒன்று முதல் ஒன்பான்கள் அடையடுத்துவழிப் புணருமாறு கூறுகின்றது. (இ-ள்.) அவை ஊர்பத்தினும் அதொழிற்று ஆகும் - (அந் நூறு என்பது) ஒன்றுமுதல் ஒன்பான்களான் ஊரப்பட்ட பத்தினொடு புணருமிடத்து அத்தொழிற்றாய் இன ஒற்று மிக்கு முடியும். உ-ம்: நூற்றொருபஃது; இருபஃது, முப்பஃது, நாற்பஃது, ஐம்பஃது, அறுபஃது, எழுபஃது, எண்பஃது எனவரும். ‘ஆகும்’ என்றதனான், நிலைமொழி யடையடுத்து வரும் முடிபும் கொள்க. ஒருநூற்றொருபஃது என ஒட்டுக. (67) 474. அளவு நிறையு மாயிய றிரியா குற்றிய லுகரமும் வல்லெழுத் தியற்கையும் முற்கிளந் தன்ன வென்மனார் புலவர். இஃது, அந் நூறு என்பதனோடு அளவுப்பெயரும் நிறைப் பெயரும் முடியுமாறு கூறுகின்றது. (இ-ள்.) அளவும் நிறையும் அ இயல் திரியா - (அந் நூறு என்பத னொடு புணருமிடத்து) அளவுப்பெயரும் நிறைப்பெயரும் மேற்கூறிய இயல்பின் திரியாதே நின்று இனவொற்று மிக்கு முடியும், குற்றியலு கரமும் வல்லெழுத்து இயற்கையும் முன் கிளந்த அன்ன என்மனார் புலவர் - அவ்விடத்துக் குற்றியலுகரம் கெடாமையும் (இன ஒற்று மிக்கு வன்றொடர் மொழியாய் நின்றமையான் வருமொழி) வல்லெழுத்து மிகும் இயல்பும் மேல் (வன்றொடர் மொழிக்குக்) கூறிய தன்மையவென்று சொல்லுவர் புலவர். உ-ம்: நூற்றுக்கலம்; சாடி, தூதை, பானை, நாழி, மண்டை, வட்டி, அகல், உழக்கு எனவும்; கழஞ்சு, தொடி, பலம் எனவும் வரும். ‘திரியா’ என்றதனான், நூறு என்பது அடையடுத்த வழியும் இவ் விதி கொள்க. உ-ம்: ஒருநூற்றுக்கலம், இருநூற்றுக்கலம் என ஒட்டுக. (ஆகாரம் - செய்யுள் விகாரம். கிளந்து என்பது - வினையெச்சத் தொகை.) (68) 475. ஒன்றுமுத லாகிய பத்தூர் கிளவி ஒன்றுமுத லொன்பாற் கொற்றிடை மிகுமே நின்ற வாய்தங் கெடுதல் வேண்டும். இஃது, ஒன்று முதல் எட்டு ஈறாகிய எண்கள் அடையடுத்த பத்தினோடு ஒன்று முதல் ஒன்பான்களைப் புணர்க்கின்றது. (இ-ள்.) ஒன்று முதலாகிய பத்து ஊர் கிளவி - ஒன்று முதல் எட்டு ஈறாகப் பத்து என்னும் எண் ஊரப்பட்ட சொற்கள், ஒன்று முதல் ஒன்பாற்கு - அவ் வொன்று முதல் ஒன்பான்கள் வருமொழி யாய் வந்து புணருமிடத்து, நின்ற ஆய்தம் கெடுதல் வேண்டும் - ஆண்டு நின்ற ஆய்தம் கெட்டு முடிதல் வேண்டும், ஒற்று இடை மிகும் - (கெட்ட வழி இனவொற்றாய் ஒரு தகர) ஒற்று இடை மிக்கு முடியும். உ-ம்: ஒருபத்தொன்று, இருபத்தொன்று, ஒருபத்திரண்டு, இருபத்திரண்டு, ஒருபத்துமூன்று, இருபத்துமூன்று என ஒட்டிக் கொள்க. ‘நின்ற’ என்றதனான், மேல் (476) ஒருபதிற்றுக்கலம் என்னும் முடிபிற்கு இன் பேறும் கொள்க. (ஏகாரம் - ஈற்றசை.) (69) 476. ஆயிரம் வரினே யின்னாஞ் சாரியை ஆவயி னொற்றிடை மிகுத லில்லை. இஃது, அவ் வடையடுத்த பத்தினோடு ஆயிரத்தினைப் புணர்க்கின்றது. (இ-ள்.) ஆயிரம் வரின் சாரியை இன் ஆம் - (அவ் வொன்று முதலாகிய பத்தூர் கிளவி முன்) ஆயிரம் என்பதுவரின் இடை வந்து புணருஞ்சாரியை இன் ஆம், அ வயின் ஒற்று இடை மிகுதல் இல்லை - அவ்விடத்து முன் கூறிய ஒற்று இடை மிகுதல் இன்றி முடியும். உ-ம்: ஒருபதினாயிரம், இருபதினாயிரம் என ஒட்டுக. ‘ஆவயின்’ என்றதனான், ஒருபதிற்றுக்கலம் என்னும் முடிபிற்கு உகரமும் வல்லெழுத்துப் பேறும் கொள்க. (ஏகாரம் -அசை. ஆகாரம் - செய்யுள் விகாரம்.) (70) 477. அளவு நிறையு மாயிய றிரியா. இஃது, அவ் வொன்று முதலாகிய பத்தூர் கிளவி முன் அளவுப் பெயரும் நிறைப்பெயரும் முடியுமாறு கூறுகின்றது. (இ-ள்.) அளவும் நிறையும் அ இயல் திரியா - (அவ்வொன்று முதலாகிய பத்தூர்கிளவி முன்) அளவுப்பெயரும் நிறைப்பெயரும் மேல் ஆயிரத்தொடு புணரும்வழி முடிந்த இயல்பின் திரியாதே நின்று இன்பெற்று முடியும். உ-ம்: ஒருபதின்கலம், இருபதின்கலம்; சாடி, தூதை, பானை, நாழி, மண்டை, வட்டி, அகல், உழக்கு எனவும்; ஒரு பதின் கழஞ்சு, தொடி, பலம் எனவும் கொள்க. ‘திரியா’ என்றதனான், ஒருபதிற்றுக்கலம் என்னும் முடிபிற்கு இன்னின் னகரம் இரட்டி றகரமாகலும், ஒருபதினாழி என்னும் முடிபின் கண் வருமொழி நகரம் திரிந்தவழி நிலைமொழியின் னகரக்கேடும் கொள்க. (ஆகாரம் செய்யுள் விகாரம்.) (71) 478. முதனிலை எண்ணின்முன் வல்லெழுத்து வரினும் ஞ ந ம தோன்றினும் யவவந் தியையினும் முதனிலை யியற்கை யென்மனார் புலவர். இஃது, ஒன்று முதல் ஒன்பான்களொடு பொருட்பெயரைப் புணர்க்கின்றது. (இ-ள்.) முதல்நிலை எண்ணின்முன் வல்லெழுத்து வரினும் ஞ ந ம தோன்றினும் ய வ வந்து இயையினும் - முதனிலை எண்ணாகிய ஒன்று என்னும் எண்ணின்முன் வல்லெழுத்து முதன்மொழி வரினும் ஞநமக் களாகிய மெல்லெழுத்து முதன்மொழி வரினும் ய வக்களாகிய இடை யெழுத்து முதன்மொழி வந்து பொருந்தினும், முதல்நிலை இயற்கை என்மனார் புலவர் - அவ் வொன்று முன் எய்திய முடிபுநிலை எய்தி முடியும் என்று சொல்லுவர் புலவர். எனவே, வழிநிலை எண்ணாகிய இரண்டுமுதலாகிய எண்கள் அம் (முதனிலை முடிபாகிய) முற்கூறிய விகாரம் எய்தியும் எய்தாது இயல்பாயும் முடியும். உ-ம்: ஒருகல்; சுனை, துடி, பறை, ஞாண், நூல், மணி, யாழ், வட்டு என வரும். இருகல், இரண்டுகல்; சுனை, துடி, பறை, ஞாண், நூல், மணி, யாழ், வட்டு எனவும் ஒன்பதின்காறும் ஒட்டுக. ஒன்பதின்கல் எனச் சென்றதேனும் வழக்கின்மையின் ஒழிக்க. ‘நிலை’ என்றதனான், மாட்டேற்றுக்கு (171) ஏலாத ஞகர யகரங்களின் முடிபு கொள்ளப்பட்டது. (72) 479. அதனிலை யுயிர்க்கும் யாவரு காலையும் முதனிலை யொகர மோவா கும்மே ரகரத் துகரந் துவரக் கெடுமே. இஃது, ஒன்று முதல் ஒன்பான்களொடு பொருட்பெயருள் உயிர் முதன்மொழி முடியுமாறும் மேற்கூறிய யகரம் வேறுபட முடியுமாறும் கூறுகின்றது. (இ-ள்.) அதன் நிலை உயிர்க்கும் யா வருகாலையும் முதல் நிலை ஒகரம் ஓ ஆகும் - அவ் வொன்று முதல் ஒன்பான்களொடு புணருமிடத்து உயிர் முதன்மொழி வந்த இடத்தும் யா முதல் மொழி வந்த இடத்தும் முதல்நிலை எண்ணாகிய ஒன்று என்பதன்கண் ஒகரம் ஓகாரம் ஆம், ரகரத்து உகரம் துவரகெடும் - (அவ்விடத்து) ரகரத்து உகரம் முற்றக் கெட்டு முடியும். எனவே, வழிநிலை யெண்களுள் உயிர் முதன்மொழி வந்த இடத்து முன்கூறியவாறே இருவாற்றானும் முடியும். உ-ம்: ஓரடை ஓராடை எனவும்; இருவடை, இருவாடை இரண்டடை, இரண்டாடை எனவும் உயிர் முதல் மொழிகளை ஒட்டிக் கொள்க. யா முதல்மொழி ஓர் யாழ் என வரும். ‘துவர’ என்றதனான், இரண்டு என்னும் எண்ணும் மூன்று என்னும் எண்ணும் செய்யுளகத்து ஈரசை எனவும் மூவசை எனவும் முதல் நீண்டு வேறுபட முடியுமாறு கொள்க. ‘அதனிலை’ என்றதனான், முதனிலை நீளாதே நின்று உகரம் கெட்டு ஒரடை, ஒராடை, ஒர்யாழ் என வரும் முடிபும் கொள்க. (ஏகாரங்கள் - ஈற்றசைகள்.) (73) 480. இரண்டுமுத லொன்பா னிறுதி முன்னர் வழங்கியன் மாவென் கிளவி தோன்றின் மகர வளபொடு நிகரலு முரித்தே. இஃது, இரண்டு முதல் ஒன்பான்கள் முன்னர் அளவு முதலிய மூன்றற்கும் உரிய மா என்பது புணருமாறு கூறுகின்றது. (இ-ள்.) இரண்டு முதல் ஒன்பான் இறுதி முன்னர் - இரண்டு முதலாக ஒன்பது ஈறாகச் சொல்லப்படுகின்ற எண்களின் முன்னர், வழங்கு இயல் மா என் கிளவி தோன்றின் - வழக்கின்கண்ணே கிடக்கின்ற (விலங்கு மரம் முதலிய அல்லாத அளவு முதலிய வற்றிற்குரிய) மா என்னும் சொல் தோன்றின், மகர அளவொடு நிகரலும் உரித்து - (இயல் பாய் முடிதலேயன்றி) மேற்கூறிய (446) மண்டை என்னும் அளவுப்பெய ரோடு ஒத்து வேறுபட முடிவனவும் பெறும். உ-ம்:இரண்டுமா, இருமா, மூன்றுமா, மும்மா என ஒன்பதின் காறும் இவ்வாறு ஒட்டுக. ‘இரண்டு முதல் ஒன்பான்’ என்று எடுத்தமையின், ஒன்றற்கு ஒருமா என்னும் முடிபேயன்றி ஒன்றுமா என்னும் முடிபு இல்லையாயிற்று. இவற்றுள், மிக்க எண்ணொடு குறைந்த எண் வருங்கால் உம்மைத் தொகையாகவும், குறைந்த எண்ணோடு மிக்கது வரிற் பண்புத்தொகை யாகவும் முடித்தார் என்க. (ஏகாரம் - ஈற்றசை) (74) 481. லனவென வரூஉம் புள்ளி யிறுதிமுன் உம்முங் கெழுவு முளப்படப் பிறவும் அன்ன மரபின் மொழியிடைத் தோன்றிச் செய்யுட் டொடர்வயின் மெய்பெற நிலையும் வேற்றுமை குறித்த பொருள்வயி னான. இது, லகார னகார ஈற்றுச் செய்யுள் முடிபு கூறுகின்றது. (இ-ள்.) ல ன என வரும் புள்ளி இறுதிமுன் - ல ன என்று சொல்ல வருகின்ற புள்ளியீற்றுச் சொல்முன், உம்மும் கெழுவும் உளப்பட பிறவும் - உம் என்னும் சாரியையும் கெழு என்னும் சாரியையும் உளப்படப் பிற சாரியையும், அன்ன மரபின் மொழியிடைத் தோன்றிச் செய்யுள் தொடர் வயின் மெய் பெற நிலையும் - அப் பெற்றிப்பட்ட மரபினையுடைய மொழியிடைத் தோன்றிச் செய்யுள் மொழிகளைத் தொடர்ந்து சொல்லும் இடத்து மெய்ம்மை பெற நிலைபெற்று முடியும், வேற்றுமை குறித்த பொருள் வயினான - வேற்றுமை குறித்த பொருட் புணர்ச்சிக்கண். உ-ம்: ‘வானவரி வில்லுந் திங்களும்’ ‘கல்கெழு கானவர் நல்குறு மகளே’ எனவும், ‘மாநிதிக் கிழ வனும் போன்ம்’ எனவும், ‘கான்கெழு நாடு’ எனவும் வரும். ‘மொழியிடைத் தோன்றி’ என்ற மிகையான், பிற ஈற்றுள்ளும் இச் சாரியை பெற்று முடிவன கொள்க. ‘துறைகெழு மாந்தை’ ‘வளங்கெழு திருநகர்’ என வரும். ‘அன்ன மரபின்’ என்றதனான், சாரியை காரணமாக வல்லெழுத்துப் பெறுதலும், அது காரணமாக நிலைமொழியீறு திரிதலும், சாரியையது உகரக்கேடும், எகர நீட்சியும் கொள்க. உ-ம். பூக்கேழூரன், வளங்கேழ் திருநகர் என்று அவ்வாறு வந்தமை யறிக. ‘மெய்பெற’ என்றதனான், இச் சாரியைப்பேற்றின்கண் ஈற்று வல்லெழுத்து வீழ்க்க. (`ஆன் இடைச்சொல் அகரம் சாரியை.) (75) 482. உயிரும் புள்ளியு மிறுதி யாகிக் குறிப்பினும் பண்பினு மிசையினுந் தோன்றி நெறிப்பட வாராக் குறைச்சொற் கிளவியும் உயர்திணை அஃறிணை யாயிரு மருங்கின் ஐம்பா லறியும் பண்புதொகு மொழியும் செய்யுஞ் செய்த வென்னுங் கிளவியின் மெய்யொருங் கியலுந் தொழிறொகு மொழியும் தம்மியல் கிளப்பிற் றம்முற் றாம்வரூஉம் எண்ணின் றொகுதி யுளப்படப் பிறவும் அன்னவை யெல்லா மருவின் பாத்திய புணரிய னிலையிடை உணரத் தோன்றா. இஃது, இவ் வதிகாரத்துப் புணர்க்கப்படா மொழிகள் இவையென அவற்றை எடுத்து உணர்த்துகின்றது. (இ-ள்.) உயிரும் புள்ளியும் இறுதியாகிக் குறிப்பினும் பண்பினும் இசையினும் தோன்றி நெறிப்பட வாராக் குறைச்சொல் கிளவியும் - உயிரெழுத்தும் புள்ளியெழுத்தும் ஈறாகிக் குறிப்பின்கண்ணும் பண்பின் கண்ணும் இசையின் கண்ணும் தோன்றி ஒரு நெறிப்பட வாராக் குறைச் சொற்களாகிய உரிச்சொற்களும், உயர்திணை அஃறிணை அ இரு மருங்கின் ஐம்பால் அறியும் பண்புதொகு மொழியும் - உயர்திணை அஃறிணையாகிய அவ் விரண்டு திணையிடத்தும் உளவாய ஐந்து பாலினையும் அறிய வரும் பண்புத்தொகை மொழிகளும், செய்யும் செய்த என்னும் கிளவியின் மெய் ஒருங்கு இயலும் தொழில்தொகு மொழியும் - செய்யும் செய்த என்னும் பெயரெச்சச் சொற்களின்படி ஒருங்கு நடக்கும் வினைச் சொல் தொக்க வினைத்தொகையும், தம் இயல் கிளப்பின் - (எண்கள்) தம் இயல்பு கிளக்கும் இடத்து, தம் முன் தாம் வரும் எண்ணின் தொகுதி உளப்பட பிறவும் அன்னவை எல்லாம் - (நிறுத்த சொல்லும் குறித்துவரு கிளவியுமாய் வாராது) தம்முன் தாம் வரும் எண்ணின் தொகுதியும் உட்பட்ட பிறவும் அத் தன்மையவெல்லாம், மருவின் பாத்திய - வழக்கிடத்து மருவி நடந்த இடத்துள்ளன (ஆகலான் அவ்வாறே கொள்ளப்படும்). புணர் இயல் நிலையிடை உணரத் தோன்றா - புணர்ச்சி இயன்ற நிலைமைக்கண் (அவற்றின் முடிபு) விளங்கத் தோன்றா. உ-ம்: விண்விணைத்தது, கார்கறுத்தது, ஒல்லொலித்தது: இவை குறைச்சொற் கிளவி ஆயினமையின் முடிக்கப் படாவாயின. விண்ணென விசைத்ததென இடைச்சொல்லொடு கூடிய வழிப் புணர்க்கப்படும். கருஞ்சான்றான் என்றது பண்புத்தொகை. இது கரும் எனப் பண்புணர நின்றது. கருஞ்சான்றானெனத் தொகையாயவழி கருமென்பது கரியானெனப் பால்காட்டி நிற்றலில் புணர்க்கப் படாதாயிற்று. கொல்யானை என்றது வினைத்தொகை. அதுவும் கொல் லெனத் தொழின்மை உணரநின்றது. கொல்யானை எனத் தொகையாய வழி, கொன்றெனக் காலம் காட்டி நின்றமையின் புணர்க்கப் படாதாயிற்று. ஓரொன்று என இது, தம்முற் றாம் வந்த எண். இது நிறுத்த சொல்லும் குறித்துவரு கிளவியும் அன்மையிற் புணர்க்கப் படாதாயிற்று. இது தானே ஓரொன்றாகக் கொடு என்புழிப் புணர்க்கப்படும். ‘பிறவும்’ என்றதனான் முடியாதன உண்டான், கரியன் என்பன. இவை உண் எனவும் கருமை எனவும் பிரித்து நிறுத்தியவழி ஆனும் அன்னும் குறித்துவருகிளவி யன்மையான் வந்து புணராமையின், புணர்க்கப்படாவாயின. ‘தோன்றி’ என்றதனான், கொள்ளெனக்கொண்டான் என்புழிக் கொள்ளென்பதனை என என்பதனொடு புணர்க்கப்படாமை கொள்க. ‘மெய் ஒருங்கியலும்’ என்றதனான், உண்டான் என்புழிச் செய்கையும் காலமும் பாலும் தோற்றி நிற்குமாறு பிரித்துப் புணர்க்கப்படாமை கொள்க. (76) 483. கிளந்த வல்ல செய்யுளுட் டிரிநவும் வழங்கியன் மருங்கின் மருவொடு திரிநவும் விளம்பிய வியற்கையின் வேறுபடத் தோன்றின் வழங்கியன் மருங்கி னுணர்ந்தன ரொழுக்கல் நன்மதி நாட்டத் தென்மனார் புலவர். இஃது, இவ் வதிகாரப் புறனடை யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) கிளந்த அல்ல செய்யுளுள் திரிநவும் - முன் எடுத்தோதின அல்லாதன செய்யுளிடத்து வேறுபட வருவன வற்றையும், வழங்கு இயல் மருங்கின் மருவொடு திரிநவும் - வழக்கு நடத்துமிடத்து மருவுதலொடு வேறுபட வருவனவற்றையும், விளம்பிய இயற்கையின் வேறுபட தோன்றின் - முன் சொன்ன முடிபியற்கையின் வேறுபடத் தோன்றின், நல்மதி நாட்டத்து வழங்கு இயல் மருங்கின் உணர்ந்தனர் ஒழுக்கல் - நல்லறிவினது ஆராய்ச்சியான் வழக்கு இயலுமிடத்து அவற்றின் முடிபு வேறுபாடுகளை யறிந்து நடத்துக, என்மனார் புலவர் - என்று சொல்லுவர் புலவர். உ-ம்: நறவங்கண்ணி, ‘கள்ளியங்காடு’ (அகம். 97), ‘புன்னையங் கானல்’ (அகம். 80), ‘பொன்னந்திகிரி’, (புறம். 365) ஆரங்கண்ணி, கானலம் பெருந்துறை (ஐங்குறு. 158) என இவை வேற்றுமைக்கண் அம்முப் பெற்று முடிந்தன. “வேர்பிணி வெதிரத்துக் கால்பொரு நரலிசை” (நற். 62) என்பது ரகரவீறு அத்துப்பெற்று முடிந்தது. ‘முளவுமா’, (அகம். 182) பிணவுநாய் என்பன, அல்வழிக்கண் மென்கணத்துக் குறியதன் இறுதிச் சினைகெட்டு உகரம் பெற்று முடிந்தன. ‘அஞ்செவி நிறைய மந்திரம் கூறி’ என்பது அகம் என்னும் நிலைமொழி செவி என்னும் வருமொழியொடு வேறுபட முடிந்தது. ‘ஆயிடை’ என்பது அவ்வென்னும் வகரவீறு வேறுபட முடிந்தது. தடவுத்திரை, தடவுத்தோள் என்பன உரிச்சொல் முடிபு. அருமருந்தன்னான் எனற்பாலது அருமருந்தான் என மரூஉவாய் முடிந்தது. சோணாடு மலாடு என்பனவும் அது. பொதியி லென்பதும் அது. பிறவும் அன்ன. (77) ஒன்பதாவது - குற்றியலுகரப் புணரியல் முற்றிற்று. எழுத்ததிகாரம் இளம்பூரணருரை முற்றுப்பெற்றது. பின்னிணைப்புகள் தொல்காப்பியம் இயற்றப் பெறுதற்குரிய காரணம் தம் காலத்தில் நிகழ்ந்த கடல்கோளால் தமிழகத்தின் தென் பாலமைந்த பெரு நிலப்பரப்பும் தமிழ் நூல்கள் பலவும் அழிந்து பட்ட பேரிழப்பினையுணர்ந்து மனங்கவன்ற ஆசிரியர் தொல் காப்பியனார், தமிழ் மக்களின் கல்வி வளர்ச்சியிற் கருத்துடைய ராய்த் தமிழ் மொழிக்குத் தொண்டு செய்ய எண்ணினார். குமரிநாட்டின் தென்பால் தென்மதுரைத் தலைச் சங்கத்திற் சான்றோர் பலரும் போற்றி வளர்த்த தமிழ் மொழியானது இயல், இசை, நாடகம் என்னும் மூன்று துறைகளிலும் வளர்ச்சிபெற்றுத் திகழ்ந்தது. முத்தமிழ்த் துறையிலும் விரிந்த பல இலக்கியங்கள் தோன்றவே அவற்றின் அமைதியை விளக்கும் இலக்கண நூல்கள் பல தோன்றுவனவாயின. இங்ஙனம் விரிந்து பரந்த தமிழ் நூற்பரப்பின் அமைதியைக் குமரிநாடு கடல் வாய்ப்பட்ட பின்னர் வாழ்ந்த மக்கள் அறியும் ஆற்றலற்றவராயினர். வடநாட்டினராற் பேசப்படும் ஆரிய மொழியும் தமிழ் நாட்டில் சிறிது சிறிதாக இடம்பெறுவதாயிற்று. இரு மொழிகளுக்குமுரிய இயல்புகளுள் ஒன்று மற்றொன்றனோடு விரவும் வகையில் தென்தமிழ் மக்களும் வடவரும் அளவளாவும் நிலையேற்பட்டது. முத்தமிழுள் ஒன்றற் குரிய இயல்புகள் ஏனையவற்றுடன் இயைத்துரைக்கப்படுவன வாயின. பொதுமக்கள் தம் மொழித் திறத்தையும் பொருட்டிறத்தையும் பகுத்துணரும் ஆற்றலற்ற வராயினர். இந்நிலையில் தமிழ் மொழியின் சிறப்பில்பினை எல்லார்க்கும் விளங்க எடுத்துரைக்கும் இயற்றமிழிலக்கண நூலொன்று இன்றியமையாததாயிற்று.1-6-1928 - க. வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 44-45 தொல்காப்பியனார் காலம் இப்பொழுது கிடைத்துள்ள தமிழ் நூல்களெல்லாவற்றிற்கும் மிகமிகத் தொன்மை வாய்ந்தது. தொல்காப்பியமாகும். எட்டுத் தொகை நூல்களுளொன்றாகிய புறநானூற்றிற் காலத்தால் மிகப் பழைய பாடல்களும் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றின் சொற் பொருளமைதியினை ஆராயுங்கால் இயற்றமிழ் நூலாகிய தொல்காப்பியம் சங்கத் தொகை நூல்களெல்லாவற்றிற்கும் காலத்தால் முற்பட்டதென்பது நன்கு புலனாம். கயவாகு என்னும் பெயருடைய வேந்தர் இருவர் இலங்கையில் ஆட்சி புரிந்துள்ளார்கள். அவர்களுள் முதற்கயவாகுவின் காலம் கி. பி. 171 - 193 என்பது ஆராய்ச்சியாளர் துணிபு. செங்குட்டுவ னென்னும் சேரமன்னன், கண்ணகியார்க்குத் திருவுருவமைத்துக் கோயிலெடுத்துக் கடவுண் மங்கலஞ் செய்த நாளில், இலங்கை வேந்தனாகிய கயவாகு வஞ்சி நகரத்திற்கு வந்து கண்ணகியாரை வழிபட்டு வரம்பெற்றுச் சென்றான் எனச் செங்குட்டுவற்குத் தம்பியாகிய இளங்கோவடிகள் தாமியற்றிய சிலப்பதிகாரத்திற் குறிப்பிட்டுள்ளார். எனவே இளங்கோவடிகள் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டென்பது தெளிவாதல் காணலாம்.1 இளங்கோவடிகளும், அவர் காலத்தும் அவர்க்கு முன்னும் வாழ்ந்த சங்கப் புலவர்களும் தெய்வப் புலவர் இயற்றிய திருக்குறளிலுள்ள சொற்றொடர்களையும் கருத்துக்களையும் அவ்வாறே எடுத்தாண்டுள் ளார்கள். ஆகவே திருக்குறளாசிரியர் திருவள்ளுவனார் காலம் கி. மு. முதல் நூற்றாண்டெனக் கொள்ளுதல் ஏற்புடையதாகும். - க. வெள்ளைவாரணனார் நூல்வரிசை - 10, பக். 87-88 தொல்காப்பியம் நுதலிய பொருள் வண்புகழ்மூவர் தண்பொழில் வரைப்பிலே வழங்கும் செந்தமிழ் மொழியின் உலகவழக்கையும் செய்யுள் வழக்கையும் அடிப்படையாகக் கொண்டு எழுத்து, சொல், பொருள் என்னும் மூவகையிலக்கணங்களையும் முறைப்பட ஆராய்ந்து இவற்றின் இயல்புகளையெல்லாம் தொல்காப்பியனார் தாம் இயற்றிய தொல்காப்பிய நூலின் கண்ணே தொகுத்துக் கூறியுள்ளார். இந்நூல் சூத்திரம், ஓத்து, படலம் என்னும் மூன்றுறுப்புக் களையுடைய பிண்டமாக அமைந்துளது. ஆசிரியப்பாவைப் போன்ற யாப்பிலமைந்த நூற்பா சூத்திரமெனப்படும். ஆசிரியப்பாவுக்கு அடிவரையறையுண்டு. இந்நூற்பாவுக்கு அடிவரையறையில்லை. அடிவரையறை இல்லாத செய்யுள்வகை ஆறு என்பர் தொல்காப்பியர். அவற்றுள் நூற்பாவும் ஒன்று. கண்ணாடியினகத்தே எதிர்ப்பட்ட பொருள் இனிது விளங்குமாறு போன்று படித்த அளவிலேயே ஆராயாமற் பொருள் எளிதில் விளங்க இயற்றப்படுவதே நூற்பாவாகிய சூத்திரமாகும். அவற்றுள், சூத்திரந்தானே ஆடிநிழலின் அறியத் தோன்றி நாடுத லின்றிப் பொருள்நனி விளங்க யாப்பினுட் டோன்ற யாத்தமைப் பதுவே(162) எனவரும் செய்யுளியற் சூத்திரம் சூத்திரத்தியல்பினை நன்கு விளக்குதல் காண்க. ஒத்த இனத்தனவாகிய மணிகளை ஒரு மாலையாகக் கோத்தமைப்பதுபோன்று ஒரினமாக வரும் பொருள்களை ஒருசேர இயைத்துரைத்தற்கு இடமாக அமைவது ஓத்து எனப்படும். இதனை இயல் என்ற பெயராலும் வழங்குதலுண்டு. பல்வேறு வகைப்படவரும் பொருளெல்லாவற்றிற்கும் வேறு வேறு இலக்கணங் கூறுவதாய் அவையெல்லாவற்றையும் தன்னுள்ளே யடக்கி நிற்பது படலம் எனப்படும். சூத்திரம், ஓத்து, படலம் என்னும் இம் மூன்றுறுப் பினையும் அடக்கி நிற்பது பிண்டம் எனப்படும். இவ்வாறு மூன்றுறுப்படக்கிய பிண்டமாக அமைந்ததே இத்தொல் காப்பியமாகும். இதன்கண்ணுள்ள எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்பன படலம் என்னும் உறுப்புக்களாம். படலத்தின் உள்ளுறுப்பாக அமைந்தவை ஓத்துக்கள். ஓத்தின் உள்ளுறுப்பாக விளங்குவன சூத்திரங்கள், சூத்திரமாகிய உறுப்பொன்றேயுடையநூல் இறையனார்களவியல். சூத்திரம், ஓத்து ஆகிய இரண்டுறுப்புடைய நூல் பன்னிருபடலம், சூத்திரம், ஓத்து. படலம் ஆகிய மூன்றுறுப்பும் ஒருங்குடையநூல் தொல்காப்பியம். இம்மூவகை நூல்களையும் முறையே சிறுநூல், இடைநூல், பெருநூல் எனவும் வழங்குதலுண்டு. (தொல்-செய்-இளம் - 165) தொல்காப்பியம் என்னும் இந்நூல் எழுத்து, சொல் பொருள் ஆகிய மூன்றதிகாரங்களையுடையதாய் ஒவ்வோ ரதிகாரங் களுக்கும் ஒன்பதொன்பது இயல்களாக இருபத் தேழியல்களால் இயன்றது. இந்நூற் சூத்திரங்கள் 1595-என இளம்பூரணரும், 1611-என நச்சினார்க்கினியரும் வகுத்து உரையெழுதியுள்ளார்கள். - க. வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 162-163 1. தமிழ் எழுத்துக்கள் "எழுத்தெனப் படுப, அகரமுதல் னகர விறுவாய் முப்ப ஃதென்ப சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே."1 "அவைதாம், குற்றிய லிகரம் குற்றிய லுகரம் ஆய்த மென்ற முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன,"2 என்னும் தொல்காப்பிய நூன்மரபுச் சூத்திரங்கள் தமிழெழுத் துக்கள் இவை யெனவும், இத்துணைய வெனவும் உணர்த்து கின்றன. 'எழுத்தெனப்படுப' என்னும் இத்தலைச் சூத்திரத்தானும், இவ்வியலிற் பின்வரும் பல சூத்திரங்களானும் தமிழெழுத்துக் களின் முறை நெடுங்கணக்கில் வழங்கிவரும் முறையே யாமென்பது அறியப்படும். அது விரிவஞ்சி விளக்காது விடப்படுகின்றது. அகரம் முதல் ஒளகாரம் இறுதியாகவுள்ள பன்னிரண்டு உயிரெழுத்துக்களும், ககரம் முதல் னகரம் இறுதியாகவுள்ள பதினெட்டு மெய்யெழுத்துக்களும், குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்ற மூன்று சார்பெழுத் துக்களும் தமிழெழுத்துக் களாமென்க. எழுத்துக்களை உருவெழுத்து, உணர்வெழுத்து, ஒலியெழுத்து, தன்மையெழுத்து என்றும், பிறவாறும் பகுத்துக் கொண்டு இலக்கணங் கூறுவாருமுளர். இளம்பூரணரும், நச்சினார்க் கினியரும், 'தன்மையும் வடிவும் நமக்குணர்த் தலருமையின் ஆசிரியர் கூறிற்றிலர்' என இங்ஙனமுரைப்பது தன்மை யெழுத்தென ஓர்பிரிவு கொள்ளுதலும் உண்டென் பதற்குப் பழஞ்சான்றாகும். வெளிப்படையாகவுள்ள ஒலியெழுத்து, வடிவெழுத்து என்பனவே இங்கு ஆராய்ச்சிக்குரியன. எழுத்து என்னும் பெயரின் காரணம் சுவாமிநாத தேசிகர் தமது இலக்கணக் கொத்துரையில் எழுத்தென்னும் பெயர் பற்றி யெழுதுவது பின்வருமாறு:- "எழுத்தென்னுந் தொழிற் பெயர் அப்பொருளை விட்டுப் பால்பகாவஃறிணைப் பொருட்பொதுப் பெயராய், அப் பொருளை விட்டு ஓவிய முதலியன போலன்றி அகரம் னகரம் முதலியன வடிவை யுணர்த்துஞ் சிறப்புப் பெயராய், அப்பொருளை விட்டு ஒலியை யுணர்த்தும் ஆகுபெயராய், அப்பொருளைவிட்டு அவ்வொலியின திலக்கணத்தை யுணர்த்தும் இருமடியாகுபெயராய், அப்பொருளைவிட்டு அவ்விலக்கணத்தை யுணர்த்தும் நூலினையுணர்த்தும் மும்மடியாகு பெயராய், அப்பொருளை விட்டு இங்ஙனங் கூறிற்றெழுத்து. இங்ஙன மறிவித்த தெழுத்து எனக் கரும கருத்தாவையும் கருவிக் கருத்தாவையும் உணர்த்தும் நான்மடி யாகுபெயராய் நின்று பலபொருள் பட்டது காண்க". இதனானே, எழுத்தென்னுஞ் சொல் தொழிற் பெயரென்பதும், அது முதற்கண் எழுதலுறும் வடிவை யுணர்த்திப் பின்பு ஒலியை யுணர்த்தலுற்ற தென்பதும், அவர் கருத்தாதல் பெறப்படும். யாப்பருங்கல விருத்தி மேற்கோட் சூத்திரமொன்று ‘எழுதப்படுதலினெழுத்தே' என்று கூறுவதும், நன்னூல் உரைக்கண் ‘எழுதப்படுதலின் எழுத்தெனக் கொள்க' என்று மயிலை நாதர் கூறுவதும் எழுத்தென்பது எழுது என்னும் பகுதியடியாகப் பிறந்த செயப்படு பொருட்பெயர் என்னும் கருத்துடையனவாம். சிவஞான முனிவர் தொல்காப்பியச் சூத்திர விருத்தியில் எழுதப் படுவதென்னும் பொருட்கண் எழுதென்னு முதனிலையுரிச் சொல்லின் முன்னர்ச் செயப்படு பொருண்மை யுணர்த்தும் ஐகாரவிகுதி புணர்ந்து..... அவ்வைகாரங் கெட்டுக் கெட்ட வழித் தகரமிரட்டித்து எழுத்தென முடிந்தது' என்று கூறுவது அதனைத் தெளிவாக்குகிறது. மற்றும் அவர், ‘இவ்வாறன்றி எழுதென்னு முதனிலை எழுத்தெனத்தானே திரிந்து நின்ற தென்றும், அஃதாகு பெயராற் செயப்படு பொருளையுணர்த்திற் றென்றுங் கூறுவாருமுளர்; அது பொருந்தாது, என்றுரைப்பது சுவாமிநாத தேசிகர் கூற்றை மறுப்பது போன்றுளது. எனினும், இவரனைவரும் எழுத்தென்பதற்கு எழுது என்பதே முதனிலையெனக் கொண்டனர். இன்னோர் கருத்தின்படி எழுத்தென்பது எழுதப்படும் வடிவையே முதற்கட் குறித்ததாகும். அங்ஙன மாயின், ஒலியையுணர்ந்து கோடற்குக் கருவியாகவே வடிவு வேண்டப்பட்டதென்பது எல்லார்க்கும் உடம்பாடாகலின் வடிவாகிய எழுத்துண்டாதற்கு முன்பு ஒலியைக் குறிப்பதொரு பெயர் இருந்திருத்தல் வேண்டும். தொல்காப்பியத்துயாண்டும் எழுத்தென்னும் பெயரே பயின்று வந்துளது. ‘ஓரள பிசைக்குங் குற்றெழுத்து' ‘ஈரள பிசைக்கு நெட்டெழுத்து' என்றாற்போல் வருவன பலவும் ஒலியையே சிறப்பாகக் குறித்தவும், வடிவினைச் சிறப்பாகக் குறிக்கலுறும் ‘உட்பெறு புள்ளி யுருவா கும்மே' ‘மெய்யி னியற்கை புள்ளியொடு நிலையல்' என்றற் றொடக்கத்துச் சூத்திரங்களில் எழுத்தென்னும் பெயர் காணப்படாமையும் சிந்திக்கற்பாலன. இவ்வற்றால் எழுத்தென்னும் பெயர் மொழிக் கருவியாம் ஒலியைக் குறிப்ப தொன்றாகவே தொல்காப்பியனார் கொண்டுளாரெனக் கருதுதல் பொருத்தமுடைத்தெனத் தோன்றுகிறது. தொல்காப்பிய உரைகாரர் யாரும் இப்பெயர்ப் பொருளை விளக்கிற்றிலராயினும் 'இவ்வெழுத்தெனப்பட்ட ஓசையை அருவென்பார் அறியாதார்; அதனை உருவென்றே கோடும்' என நச்சினார்க்கினியர் கூறுவது ஒருவாறு இக்கருத்திற்குச் சார்பாகவுளது. இனி, ஆசிரியர் ‘எல்லா வெழுத்தும்' என்னும் பிறப்பியற் சூத்திரத்து எழுத்தொலிகளின் நிலைவேறுபாடுகளை யுணர்த்துங்கால் ‘எழுதரு வளி'யில் எனவும், ‘அகத்தெழு வளியிசை' எனவும், ‘எழுந்துபுறத் திசைக்கும் மெய்தெரிவளி யிசை' எனவும், வளியிசையின் எழுச்சியை அவற்றுக்குக் காரணமாகக் கோடலின் எழு என்னும் பகுதியினின்று எழுத்தென்னும் பெயர் தோன்றிற்றாகக் கொள்வது பொருத்த முடைத்தெனத் தோன்றுகிறது. அது பின்பு அவ்வெழுத்தினை யுணர்தற்குக் கருவியாக வேண்டப்பட்ட வடிவினையும் குறித்ததாகல் வேண்டும். உயிர் முதலிய பெயர்களின் காரணம் இனி, அகரமுதலிய பன்னிரண்டுக்கும் உயிர் என்றும், ககர முதலிய பதினெட்டுக்கும் மெய் என்றும் குறியிட்டிருப்பது பண்டைத்தமிழரின் உண்மை நூலுணர்வுக்குத்தக்க சான்றாகும். நன்னூல் உரையில், மயிலைநாதர் ‘ஆவி, உயிர், மெய், உடம்பு என்பன இடுகுறிப் பொதுப்பெயர்' என்று கூறியது பொருத்தமில் கூற்றாம். ‘அம் முதலீரா றாவி' என்னும் நன்னூற் சூத்திரவுரைக் கண் ‘ஆவியும் மெய்யும் போறலின் இவ்விருவகையெழுத்திற்கும் ஆவி மெய்யென்பன உவமவாகு பெயராய்க் காரணப் பொதுப் பெயராயின' என்று சங்கர நமச்சிவாயப்புலவர் கூறுவதும், ‘ஒளகார விறுவாய்ப், பன்னீரெழுத்து முயிரென மொழிப' என்னுந் தொல்காப்பியர் சூத்திர வுரைக்கண் ‘இதுவும் ஆட்சியுங் காரணமும் நோக்கியதோர் குறி; மெய்பதினெட்டினையும் இயக்கித்தான் அருவாய் வடிவின்றி நிற்றலின் உயிராயிற்று' என்றும், ‘னகார விறுவாய்ப், பதினெண்ணெழுத்து மெய்யென மொழிப' என்னுஞ் சூத்திரவுரைக்கண் ‘இதுவும் ஆட்சியுங் காரணமும் நோக்கிய குறி, என்னை, பன்னீருயிர்க்குந்தான் இடங்கொடுத்து அவற்றான் இயங்குந்தன்மை பெற்ற உடம்பாய் நிற்றலின்' என்றும் நச்சினார்க்கினியர் உரைப்பனவும் உயிர் மெய்யென்பவற்றின் பொருளை விளக்குவனவாம். குற்றிய லிகரம், குற்றியலுகரம் என்பன இகர உகரங்களின் குறுக்கமாயினும் அவை முன் ஒரு மாத்திரையாய் நின்று பின் அரை மாத்திரையாய்க் குறுகின எனற்கிடனின்றி, இடமும் பற்றுக்கோடுஞ் சார்ந்து இயற்கையாய் அரைமாத்திரை பெற்று நிற்றலானும் அப்பெயர்க் குரியவாயின. ஆய்தம் என்பதன் பெயர்க் காரணத்தைப் பழைய உரையாளர் யாரும் உள்ளவாறு புலப்படுத்தினாரல்லர். 'ஆய்தமென்ற ஓசைதான் அடுப்புக் கூட்டுப்போல் மூன்று புள்ளி வடிவிற்றென்பது உணர்த்தற்கு ஆய்தமென்ற முப்பாற் புள்ளியு மென்றார்' எனத் தொல்காப்பியவுரையில் நச்சினார்க்கினியர் கூறியிருக்கின்றனர். ஈண்டு முப்புள்ளி யெனக் கூறின் அவ்வடிவு ......இங்ஙனமோ, அன்றி உங்ஙனமோ, வேறெங்ஙனமோ எழுதப்படும் என ஐயம் நிகழுமாகலின், அது நிகழாமைப் பொருட்டு 'முப்பாற்புள்ளி' என ஆசிரியர் கூறி வைத்தனர். நச்சினார்க்கினியர் ‘அடுப்புக் கூட்டுப் போல' என உவமங்காட்டி அதனை விளக்கினர். ஆய்தமென்னும் பெயர்க்கு அவர் காரணங் கூறிற்றிலர். பிற்காலத்தே நன்னூற்கு உரையெழுதப் புகுந்தார் சிலர் நச்சினார்க்கினியரின் கருத்தினை யறிய மாட்டாராய் அதனைத் திரியக்கொண்டு, ‘அடுப்புக் கூட்டுப் போல ஒருவகை ஆயுத வடிவாக மூன்று புள்ளி வைத்து எழுதப்படுதலால் ஆய்தமென்று பெயர். ஆய்தம் - ஆயுதம்; இங்கே போர்க் கருவியாகிய கேடகமென்னும் படையும், சமைத்தற் கருவியாகிய அடுப்பும்.' என்று தம்மனம் போனவாறு கூறுவாராயினர். இங்ஙனம் ஒரு நெறிப்பாடுமின்றித் தனித்தமிழ்ச் சொல்லாகிய ஆய்தம் என்பதனைப் படைக்கலப் பொதுமை யுணர்த்தும் ஆயுதம் என்னும் வடசொல்லெனக் கொண்டு நலிந்து பொருள் கூறுவது ஆராய்ச்சிக்கும் அறிவுக்கும் சிறிதும் ஒத்ததன்று. ஆயின், ஆய்தமென்பதன் பொருள்தான் யாதோ எனின், ஆய்தல் என்பது நுணுகுதல் என்னும் பொருட் டாகலின் நுணுகிய ஓசையுடையது என்பது பொருளாதல் வேண்டும். ஆய்தல் அப்பொருட்டாதலை "ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்"3 என்னும் உரியியல் சூத்திரத்தானறிக. முதல் சார்பு இனி, உயிர், மெய் என்பவற்றை முதலெழுத்தென்றும், குற்றியலிகரம் முதலியவற்றைச் சார்பெழுத்தென்றும் பின்னு ளோர் கூறிவருகின்றனர். தொல்காப்பியனார் அகரமுதல் னகரவிறுவாய் முப்பதனையும் எழுத்தென்றதன்றி, முதலெழுத் தென்று கூறிற்றிலர். குற்றியலிகரம் முதலிய மூன்றனையும் சார்ந்து வருவன எனக்கூறி, அவையும் எழுத்துக்களோடு ஒரு நிகரன என்றார். எனினும் 'மூன்றுதலை யிட்ட முப்பதிற் றெழுத்தின்' எனச் சார்பிற்றோற்றமும் எழுத் தென்னும் பெயரால் ஆளப்பட்டது. ஆயின், எழுத்தெனப்படுப முப்பத்துமூன்று எனக் கூறாது ‘முப்பஃதென்ப.....மூன்றலங் கடையே' எனக் கூறியது என்னையெனின், அம்மூன்றும் தனித்தேனும், சாரியையொடு பொருந்தியேனும் வருதலின்றி, மொழியைச் சார்ந்தே வருதலாகிய சிறப்பின்மையைப் பற்றி என்க. இங்ஙனம் சிறப்பும் சிறப்பின்மையும் பற்றி வேறு பிரித்துக்கூறுவது ஆசிரியர்க் கியற்கை யென்பதனை, ‘சொல்லெனப் படுப பெயரே வினையென் றாயிரண் டென்ப வறிந்திசினோரே' எனவும், ‘இடைச்சொற் கிளவியும் உரிச்சொற்கிளவியும் அவற்று வழிமருங்கிற் றோன்று மென்ப', எனவும் சொற்களைப் பிரித்தோதுதன் முதலியவற்றான் அறியலாகும். குற்றியலிகரம் முதலிய மூன்றும் உயிரும் மெய்யும்போல அத்துணைச் சிறப்புடையன வல்ல வென்பதே ஆசிரியர் கருத்தாதல் ‘சார்ந்துவரன் மரபின் மூன்று' என முதலிற் கூறியதனையே ‘சார்ந்துவரினல்லது தமக்கியல் பிலவெனத்', தேர்ந்துவெளிப்படுத்த ஏனை மூன்றும், எனப் பிறப்பியலுள் வலியுறுத்திக் கூறலானும் நன்கு துணியப்படும். அவ்வாறு கூறினாராயினும், முதற் சூத்திரத்து ‘எழுத்தெனப்படுப ...... முப்பஃதென்ப......மூன்றலங்கடையே' என, மூன்று மல்லாவிடத்து முப்பதுஞ் சிறந்தன என்பதனால், மூன்றுமே முப்பதினுஞ் சிறந்தன எனப்பொருள் கோடலும் அமையுமாலோ எனின், அங்ஙனம் பொருள் கொள்ளாமைக்கன்றே அடுத்த சூத்திரத்து அவற்றை ‘எழுத்தோரன்ன என ஓதினாராயிற்றென்பது. இன்றேல் ‘எழுத்தோரன்ன' என்பது பொருளில் கூற்றாமாறு காண்க. இவ்வுண்மை ‘எழுத்தோரன்ன' வென வேண்டா கூறியவதனான், முன் ‘எனப்படுப' என்ற சிறப்பு அம்மூன்றற்குங் கொள்ளக் கிடந்தமையின், அது விலக்குதல் பெறுது மென்பது என இளம்பூரணராலும், இங்ஙனமே நச்சினார்க்கினியராலும் விளக்கப்பெற்றிருத்தலுங் காண்க. அற்றாயினும், சார்பிற்றோற்ற மென்பன மூன்றுமே எவற்றினுஞ் சிறப்புடையன வென்று காண்கின்றாமெனின், அங்ஙனமாயின் அது புதியதோராராய்ச் சியின் பயனென்றே கொள்ளப்படும். யாமும் அவ்வாராய்ச்சியின் பயனை இழத்தற்கு ஒருப்படுவேமல்லேம். தமிழ்ப் பற்றுடையார் பலரும் அன்னர் எனினும், அதனைத் தொல்காப்பியனார் கருத்தாக வைத்து நலிந்து பொருள் கோடற்கும், புதிய ஆராய்ச்சியின் பயனால் உளதாம் பெருமையை ஆராய்ச்சி யாளர்க்கன்றித் தொல்காப்பியனார்க் களித்தற்கும் கருதுதல் பெரியதோரிழுக்காமென்க. இனி, தொல்காப்பியனார் சார்பிற்றோற்றம் மூன்றெனக் கூறியிருப்பவும், நன்னூலார் சார்பெழுத்து பத்தென்பாராயினர். ‘உயிர்மெய் ஆய்தம் உயிரளபு ஒற்றளபு- அஃகிய இ உ ஐ ஒள மஃகான் - தனிநிலை பத்துஞ் சார்பெழுத்தாகும்’4 என்பது நன்னூல். யாப்பருங்கலமுடையார் உயிர்மெய், அளபெடை, ஐ ஒள மகாரங்களின் குறுக்கம் இவற்றைத் தனித்தனி எழுத்தென வேண்டினராயினும் ஆய்தக்குறுக்கமென ஒன்று கொண்டிலர். எனினும், யாப்பருங்கலவிருத்தி மேற்கோட் சூத்திரங்கள் சிலவற்றில் ஆய்தக் குறுக்கமும் கூறப்பட்டுள்ளது. இலக்கண விளக்கமுடையார் சார்பெழுத்து ஒன்பதெனக் கொண்டனர். ஆய்தக் குறுக்கங் கொண்டிலர். அதன் உரைகாரர், தொல்காப்பியனார் கூறிற்றிலராகலின் ஆய்தக் குறுக்கமென ஒன்று இன்றென்றியம்பினர். இங்ஙனம் சார்பெழுத்துக்கள் பற்றிக் கருத்து வேறுபடுவாரெல்லாம் தொல்காப்பியனாரது ஆணை கடைப்பிடித்தலைப் பெருமையாகக் கொள்ளும் ஒரு பெற்றியராகலின், யாமும் தொல்காப்பியரது கருத்தினை ஆராய்ந்து காணற்பாலம். தொல்காப்பியனார் குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம், உயிரளபெடை, மகரக்குறுக்கம், உயிர்மெய் என்பவற்றை நூன் மரபிற் பொதுவகையாலும், மொழிமரபிற் சிறப்பு வகை யாலும் கூறியுள்ளார். இவற்றுட் குற்றியலுகரம் குற்றியலுகரப் புணரியலுள் மேலும் சிறப்பாகக் கூறப்பெற்றுள்ளது. ஐகார ஒளகாரங்கள் குறுகுமென்பதனை மொழி மரபிலும், ஒற்றள பெடையைச் செய்யுளியலிலும் கூறியுள்ளார். ஆய்தங் குறுகுமென யாண்டுங் கூறிற்றிலர். இங்ஙனம் பிறர் சார்பெழுத்தெனக் கொண்ட ஒன்பது தொல்காப்பியராற் கூறப்பட்டிருப்பினும், அவர் சார்பெழுத்து மூன்றேயென்றும், அவற்றுடனாக எழுத்துக்கள் முப்பத்துமூன்றே யென்றும் வரையறை செய்து கொண்டார். அதன் காரணம் என்னை யென்பதே இங்கு ஆராய்தற்குரியது. உயிர்மெய்யை ஓரெழுத்தாகக் கொள்ளுதல் பொருந்தாதெனச் சிவஞான முனிவர் தமது தொல்காப்பியச் சூத்திர விருத்தியில் நன்கு விளக்கியுள்ளார். அது, "இனி இம் மூன்றுமேயன்றி உயிர்மெய் முதலியவற்றையும் சார்பெழுத்தென்பாரு முளராலோவெனின், ஆல் என்புழி உயிர் முன்னும் மெய் பின்னும் நின்று மயங்கினாற்போல, லா என்புழியும் மெய்முன்னும் உயிர் பின்னும் நின்றுமயங்கின வேயல்லது, உயிருமெய்யுமாகிய தந்தன்மை திரிந்து வேறாகாமைக்கு 'மெய்யோடியையினு முயிரிய றிரியா' என்றற் றொடக்கத்துச் சூத்திரங்களே சான்றாகலான், உயிர்மெய்யாகிய காலத்தும் குறின்மை நெடின்மை யென்னும் உயிர்த்தன்மையும், வன்மை மென்மை இடைமை யென்னும் மெய்த்தன்மையும் தம்மியல்பிற் றிரிவு படாமையானும், உடன் மேலுயிர் வந்தொன்றுதல் பொன்மணி போல இயல்பு புணர்ச்சியா மென்பவாகலானும், ஒற்றுமை நயத்தான் உயிர்மெய் யென்பதனைத் தகர ஞாழல் போல உம்மைத் தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித்தொகை யென்பார்க்குத் தகரமும் ஞாழலுங் கூடிய சாந்து பின்னர்த் தகரமு ஞாழலு மாகாதவாறு போல மெய்யுயிர் நீங்கிற்றன்னுருவாதல் பொருந்தாமையானும், துணங்கை யென்பது மெய்ம்முதல் உயிரீறு மெய்ம்மயக்கமெனவும் வரகு என்பது உயிர்த்தொடர் மொழிக் குற்றியலுகர மெனவும் கொள்வதன்றி, உயிர்மெய் முதல் உயிர்மெய்யீறு, உயிர்மெய்மயக்கம், உயிர்மெய்த் தொடர் மொழிக் குற்றியலுகரம். எனக் கொள்ளாமையின் ஒற்றுமை நயம்பற்றி யொன்றென்பதனாலொரு பயனின்மை யானும், மெய்களெல்லாம் உயிர்வந்தொன்றாது தனித்து நின்ற வழியே மாத்திரை கொள்ளவும் எழுத்தென்னவும் படுமென்பது அவற்றியல் பாகலின் அதுபற்றியொன்றெனல் வேண்டாமை யானும், அவ்வியல் பறிந்து கோடற்குத் தனித்து நின்றமெய்யை யொற்றெனவும் புள்ளியெனவும் உயிரோடு கூடிய மெய்யை உயிர்மெய்யெனவும் சிறப்புப் பெயரிட்டாளுதல் ஆசிரியர் கருத்தாகலானும், உயிரோடு கூடியவிடத்து வரி வடிவுவேறு படுதலின் அதுபற்றிப் 'புள்ளியில்லாவெல்லா மெய்யும்' என மெய்மேல் வைத்துச் சூத்திரஞ் செய்து வடிவெழுத்திலக்கணங் கூறினாரன்றி ஒலியெழுத்திலக்கணம் வேறுபடக் கூறாமை யானும் - அது பொருந்தாதென மறுக்க" என்பது. இங்ஙனம் உயிர்மெய் ஓரெழுத்தாகாதென்பதற்குச் சிவஞான முனிவர் கூறிய காரணங்களெல்லாம் மிக்க வலியுடையன வென்பதில் ஐயமில்லை. எனினும், கா முதலியன ஓரெழுத்தொரு மொழியெனக் கொள்ளப்படுதலானும், செய்யுளியலில், அசை கொள்ளுமிடத்தும் பிறாண்டும் உயிர் மெய்யை ஓரெழுத்தெனவே கொள்ளவேண்டி இருத்தலானும் உயிர்மெய்யை ஒருவாற்றால் ஓரெழுத்தாகக் கொள்ளுதலும் ஆசிரியர் தொல்காப்பியனார்க்குடன் பாடென்பது பெற்றாம். அதனாற்றான் பின்னூலாசிரியர்கள் உயிர்மெய்யைச் சார்பெழுத்துளொன்றாகக் கொண்டனராவர். எனினும், எழுத்தின் தன்மையை நோக்குழி அதன்கண் உயிரும் மெய்யும் வேறுவேறு புலப்பட நிற்றலானும்' உயிர்மெய்யென ஒன்று கொள்ளாது கா என்பது க் ஆ என எழுதப்படினும், எழுதுதற்கும் பயிலுதற்கும் சிறிது வருத்தமாவதன்றி வேறொரிழுக்குமின்மை யானும் தொல்காப்பியனார் உயிர்மெய்யை வேறெழுத்தாக வைத்தெண்ணிற்றிலர். இங்ஙனமே வடநூலார் முதலாயினாருஞ் உயிரும் மெய்யுஞ் சேர்ந்ததனை ஓரெழுத்தாக வைத்தெண் ணாமையும் காண்க. அடிக்குறிப்புகள் 1. தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் - நூன்மரபு - நூற்பா - 1 2. மேலது - நூற்பா - 2 3. தொல்காப்பியம் - சொல்லதிகாரம் - உரியியல் - நூற்பா - 34 4. நன்னூல் - எழுத்ததிகாரம் - எழுத்தியல் - நூற்பா - 5. - நாவலர் நாட்டார் தமிழ்உரைகள் -16, பக். 43-50 2. தொல்காப்பிய ஆராய்ச்சி நூலாசிரியர் வரலாறு 1. தொல்காப்பியர் ஜமதக்கினி மைந்தரென்பதும் அகத்தியர் மாணாக்கரென்பதும் பொருந்துமா என்னும் ஆராய்ச்சி. அறிவு சான்ற ஆன்றோர்களே! இவ்வாராய்ச்சியுரைக்குப் பொருளாகவுள்ள தொல்காப் பியத்தில், “அவையடக்கிலே அரிறவத் தெரியின் வல்லா கூறினும் வகுத்தனர் கொண்மினேன் றெல்லா மாந்தர்க்கும் வழிமொழிந் தன்றே” என அவையடக்கத்திற்கு இலக்கணம் கூறப்பட்டிருத்தலின், யானும் அம்முறை பற்றி என் உரைகளிலுள்ள குறைகளை நுங்கள் சீரிய மதியாற் செப்பஞ் செய்து கொள்கவென வேண்டி, எனது ஆராய்ச்சியைத் தொடங்குகின்றேன். இப்பொழுது நமக்குக் கிடைத்துள்ள தமிழ் நூல்கள் எல்லாவற்றுள்ளும் காலத்தால் முந்தியதும், தமிழியல் அனைத்தையும் முற்றவெடுத்துக் கூறுவதும் தொல்காப்பியமே என்பது தமிழ்வல்லார் அனைவர்க்கும் ஒப்ப முடிந்த கருத்தாகும். இந்நூலினை நன்கு ஆராய்தலானே தமிழ்மொழியின் இயல்புகளையும், தமிழகத்தின் பழைய நிலைமைகளையும் ஒருவாறு காண்டல் கூடுமென்பதில் ஐயமில்லை. யான் இவ்வாராய்ச்சியை நடாத்துழிப் பண்டை நூல், உரையாசிரியன்மார் கொண்ட கொள்கைகளுக்கு ஒரோவழி மாறாகச் செல்லுதலுங் கூடும் அன்றி, இதுகாறும் யான் கொண்டிருந்த கருத்துக்கு முரணாகவும் சில இருத்தல் கூடும். ஆராய்ச்சியின் பெற்றி இதுவெனவறிந்த அறிவுடையார் இவை குறித்து என்னை முனியாரென்னும் துணிவுடையேன். இந்நூலின் ஆசிரியராகிய தொல்காப்பியர் சமதக்கினி முனிவர்க்கு மைந்தர் என்றும், அகத்தியனார்க்கு மாணாக்கர் என்றும் கூறப்படுகின்றார். இவற்றுள் முன்னையதற்கு ஆதரவு, உரையாசிரிய ரெல்லாருள்ளும் பின் வந்தவராகிய ஆசிரியர் நச்சினார்க்கினியர், தொல்காப்பியப் பாயிரவுரையில், “தேவ ரெல்லாருங் கூடி யாம் சேரவிருத்தலின் மேருந்தாழ்ந்து தென்றிசையுயர்ந்தது, இதற்கு அகத்தியனாரே ஆண்டிருத்தற் குரியரென்று அவரை வேண்டிக்கொள்ள, அவரும் தென்றிசைக்கட் போதுகின்றவர் கங்கையாருழைச் சென்று காவிரியாரை வாங்கிக் கொண்டு, பின்னர் யமதங்கியாருழைச் சென்று அவர் மகனார் திரணதூமாக்கினியாரை வாங்கிக் கொண்டு, புலத்தியனாருழைச் சென்று அவருடன் பிறந்த குமரியார் உலோபாமுத்திரையாரை அவர் கொடுப்ப நீரேற்று இரீஇப், பெயர்ந்து... பொதியிலின்கணிருந்து, இராவணனைக் கந்தருவத்தாற் பிணித்து, இராக்கதரை ஆண்டு இயங்காமை விலக்கி, திரணதூமாக்கினியாராகிய தொல்காப்பியனாரை நோக்கி ‘நீ சென்று குமரியாரைக் கொண்டு வருக’ எனக் கூறினர்” என உரைத்திருக்கும் கதையன்றி வேறில்லை. அகத்தியனார் எனப் பெயரிய தமிழாசிரியர் ஒருவர் பண்டு விளங்கியிருந்தனரென்பதற்கும், முத்தமிழ்க்கும் இலக்கணமாக அவரால் இயற்றப் பெற்றதொரு விரிந்த நூல் அகத்தியமென்னும் பெயருடன் திகழ்ந்ததென்பதற்கும் அளவிறந்த சான்றுகள் உள்ளன. அவற்றை நான் எழுதிய ‘அகத்தியர்’ என்னும் உரை நூலில் விரிவாகக் காட்டியுள்ளேன். ஈண்டுச் சிலவற்றைக் குறிப்பிடுகின்றேன். இறையனார் களவியல் உரையில் முச்சங்க வரலாறு கூறு மிடத்து, தலைச்சங்கப் புலவருள்ளும் இடைச்சங்கப் புலவருள்ளும் அகத்தியனார் முதலில் வைத்துக் கூறப்படுகின்றனர். அகத்தியம் முச்சங்கத்தார்க்கும் நூலாயிருந்ததெனவும் அதிற்கூறப் பெற்றுளது. பின் வந்த உரையாளர்கள் பலரும் அகத்தியனாரைப் பற்றியும் அகத்தியத்தைப் பற்றியும் ஆண்டாண்டுக் குறிப்பிட் டிருப்பதுடன், அகத்தியமெனச் சிற்சில நூற்பாக்களையும் எடுத்துக் காட்டியிருக்கின்றனர். “தரவின்றாகித் தாழிசை பெற்றும்” என்னும் தொல்காப்பியச் செய்யுளியற் சூத்திரவுரையில் ‘இனி இவ்வாறு வந்த கொச்சகங்களையெல்லாம் ஒரு வரையறைப் படுத்துப் பாத்தோறும் இனஞ்சேர்த்திப் பண்ணிற்குத் திறம் போலப் பின்னுள்ள. ஆசிரியர் அடக்குவர். அதனை அகத்தியமும் தொல்காப்பியமும் உணர்ந்து அவர்தம் கருத்தறிந்த ஆசிரியர் அவ்வாறடக்காமைக்குக் காரணங் கூறுவர்’ என நச்சினார்க் கினியர் கூறியுள்ளார். அவ்வாசிரியர் கூறுங் காரணம் இவையென அவர் பின்பு எடுத்துக் காட்டியவை யெல்லாம் பேராசிரிய ருரையாக விருத்தலின், அகத்தியமும் தொல்காப்பியமும் உணர்ந்தவரென அவராற் சுட்டப்பெற்றவர் பேராசிரியரே யென்பது துணிபு. “ஆங்ஙனம் விரிப்பின்’ என்னும் செய்யுளியற் சூத்திரவுரையில் ‘இஃது எற்றாற் பெறுதுமெனின், இதன் முதனூல் செய்த ஆசிரியன் அகத்தியனார் சொல்லுமாற்றாற் பெறுதும் என்றவாறு” எனப் பேராசிரியர் தாமே கூறியிருப்பதும் இதனை வலியுறுத்தும். இதிலிருந்து கடைச்சங்க காலத்தின் பின் நெடுநாள் வரை அகத்தியம் வழங்கி வந்ததென்று துணிந்து கூறலாகும். எனினும் அதற்கு யாரும் உரை கண்டாரெனத் தெரியாமையின், உரை யாளர்கள் காலத்தில் அந்நூல் முழுவுருவுடன் காணக் கூடாதவாறு சிதைந்து போயிற்றென்று கருதுதல் சாலும். இனி, தலைச்சங்கப் புலவராயிருந்து தமிழிலக்கணம் இயற்றிய இவ்வகத்தியரும், முனிவர் பலருள்ளும் சிறந்தவராக வைத்துப் புராணவிதிகாசங்கள் கூறும் அகத்தியரும், இருக்கு வேதப்பதிகங் களிற் பலவற்றை இயற்றிய அகத்தியரும் ஒருவரென்றோ, வெவ்வேறாவர் என்றோ அறுதியிட்டுரைத்தல் மிக அரிதாகும். அகத்தியர் என்பது ஓர் குடும்பப் பெயரே என்றும், அப் பெயருடையார் பலர் இருந்திருக்கின்றனர் என்றும், முதலில் விந்தமலையின் வடக்கில் ஓர் அகத்தியரும், இராமாயண காலத்தில் கோதாவரியாற்றங்கரையில் ஓர் அகத்தியரும், பாரத காலத்தில் பொதியின் மலையில் மற்றோர் அகத்தியரும் இருந்துளாரென்றும் ஒரு சாரார் கூறுகின்றனர். மற்றொரு சாரார் அகத்தியர் பெயரினர் பலரெனக் கூறுவதுடன் தலைச்சங்கத்து அகத்தியர் இருந்தாரென்பது தவறு என்றும், நக்கீரனார்க்கு இலக்கணம் அறிவுறுத்துவராகத் திருவிளையாடற் புராணம் கூறுகின்ற அகத்தியரொருவர் கடைச்சங்க நாளில் இருந்தாராவரென்றும் கூறுகின்றனர். ஆனால் அவர்தம் கூற்றுக்கு யாதொரு ஆதாரமும் காட்டப்படவில்லை. ஒரே பெயருடைய பலர் ஒருபெற்றியே நிகரற்ற பெருமை வாய்ந் திருந்தனர் என்பது புதுமையாகத் தோற்றினும் அங்ஙனம் நிகழ்தல் கூடாதென்பதில்லை. எனினும் அவர் ஒருவரல்லர் என்பதற்குச் சான்று இன்றியமையாததன்றோ? எந்த நூல்களின் வாயிலாக அகத்தியர் என்னும் பெயரை நாம் அறிகின்றோமோ அந்த நூல்களனைத்தும் அகத்தியரை ஒருவராகவே வைத்துக் கூறுகின்றன. அப்பெயரினர் பலரென்பதற்குத் தினையளவு சான்றும் காணப்படவில்லை. விந்தத்திற்கு வடக்கிலிருந்த அகத்தியரையும் பொதியில் அகத்தியரையும் ஒருவராகவே கந்த புராணம் முதலியன கூறுகின்றன. கோதாவரி மருங்கிருந்த அகத்தியரும் பொதியிலகத்தியரும் வேறல்லரென்பது இராமாயணத்தால் அறியப்படும். “நீண்ட தமிழாலுலகை நேமியினளந்தான்” “தழற்புரை சுடர்க்கடவுள் தந்ததமிழ் தந்தான்” “என்றுமுள தென்றமி ழியம்பியிசை கொண்டான்” என அகத்தியப் படலத்துக் கம்பர் கூறுமாறுங் காண்க. மற்றும் அவர் ‘விந்தமெனும் விண்டோய் நாகமது நாகமுற நாகமென நின்ற’ மையும், ‘ஈசனிக ராயுலகு சீர்பெற விருந்த’ மையும் கூறுதலும் கருதற்பாற்று. அகத்தியர் பலரென்பார், முன்னுள்ள நூலாசிரியர் பலரும் பெயரொருமையால் மருண்டு அகத்திய ரொருவரெனக் கொண்டு வழுவி விட்டனரெனக் கூறுங் கடப்பாடுடையராகின்றனர். அஃது எவ்வாறாயினும் ஆகுக. இராம ராவணப் போருக்கு முன்னரே அகத்தியர் பொதியிலின் கண் இருந்தன ரென்பதையும், அவரே அகத்தியமியற்றிய தமிழாசிரியராவாரென்பதையும் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவுகளனைத்தும் வலியுறுத்துகின்றன. காவிரிப் பூம்பட்டினத் திலிருந்த காந்தன் என்னும் சோழ மன்னன் அரசர் குலத்தைக் களைதலையே நோன்பாகக் கொண்ட பரசுராமன் தன்னொடு போர்குறித்து வருதலையறிந்து அகத்திய முனிவரைச் சரணடைந்தானென்று மணிமேகலைக்காப்பியங் கூறுவதும், அகத்தியர் இராவணனை வென்று போக்கியதாகத் தொல்காப்பிய உரையிலும் மதுரைக் காஞ்சியுரையிலும் நச்சினாக்கினியர் கூறுவதும் போல்வன வெல்லாம் இக்கருத்தை அரண் செய்து நிற்றல் காண்க. இனி, தொல்காப்பியனார் அகத்தியர்க்கு மாணாக்கர் தாமோ என்பது ஆராய்தற்குரியது. தமிழுரைகளில் முற்பட்ட தாகிய இறையனார் களவியலுரையானது தொல்காப்பியரை இடைச்சங்கத்துப் புலவராகவும், தொல்காப்பியத்தை இடைச் சங்கத்தார்க்கும் கடைச்சங்கத்தார்க்கும் நூலாகவும் கூறுவதன்றி அவரை அகத்தியனாரொடு தொடர்புபடுத்து யாதும் கூறிற்றிலது. “மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத் தென்மலை யிருந்த சீர்சால் முனிவரன் றன்பாற் றண்டமிழ் தாவின் றுணர்ந்த துன்னருஞ் சீர்த்தித் தொல்காப்பியன் முதற் பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த பன்னிரு படலம் பழிப்பின் றுணர்ந்தோன்” என வரும் புறப்பொருள் வெண்பாமாலைப் பாயிரமே முதன் முதலாகத் தொல்காப்பியரை அகத்தியர் மாணாக்கர் என்று கூறுகின்றது. இதனைப் பின்பற்றியே பின்வந்த உரையாசிரியர் சிலரும் கூறுவாராயினர். வெண்பா மாலைக்கு முதனூலாகிய பன்னிருபடலம் களவியலுரைப் பாயிரத்தில் அளவினாற் பெயர் பெற்றதற்கு உதாரணமாகக் காட்டப் பட்டிருத்தலின் இந்நூல்கள் கி.பி. 6ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவை யல்ல வென்று கருதல் பொருந்தும். எனினும் தொல்காப்பியர் முதற் பன்னிரு புலவரும் சேர்ந்தியற்றியது பன்னிரு படலம் என்பதில் இளம்பூரண வடி களும், நச்சினார்க்கினியரும் கருத்தொருப்படாதவராகின்றனர். தொல்காப்பியப் புறத்திணையியலுரையில் இளம்பூரணர் “அகத்திணை ஏழாகிப் புறத்திணை பன்னிரண்டாகில் மொழிந்த பொருளோ டொன்ற வைத்தல் என்னும் தந்திரவுத்திக்கும் பொருந்தாதாகி, மிகை படக்கூறல், தன்னானொரு பொருள் கருதிக் கூறல் என்னுங் குற்றமும் பயக்கும் என்க” என்றும், “பன்னிரு படலத்துள் ‘தன்னுறு தொழிலே வேந்துறு தொழிலென்-றன்னவிருவகைத்தே வெட்சி’ என இரண்டு கூறு படக் கூறினாராயினும்... அவர் அவ்வாறு கூறல் மிகைபடக் கூறலாம். அதனால் பன்னிருபடலத்துள் வெட்சிப்படலம் தொல்காப்பியர் கூறினார் என்றல் பொருந்தாது” என்றும், “பன்னிரு படலத்துள் கரந்தைக்கண் புண்ணொடு வருதல் முதலாக வேறுபடச் சில துறை கூறினாரால் எனின், புண்படுத்தல் மாற்றோர் செய்த மறத்துறை யாகலின் அஃது இவர்க்கு மாறாகக் கூறுதல் மயங்கக்கூறுதலாம்; ஏனையவும் இவ்வாறு மயங்கக் கூறலும், குன்றக் கூறலும், மிகைபடக் கூறலும் ஆயவாறு எடுத்துக் காட்டின் பெருகுமாகலின் உய்த்துணர்ந்து கண்டு கொள்க” என்றும் இங்ஙனம் பலவிடத்தும் பன்னிரு படலத்தை மறுத்திருப்பதுடன், வெட்சிப்படலம் தொல்காப்பியனார் கூறியதன்றெனத் துணிந்தும் உரைத்துள்ளார். நச்சினார்க்கினியரும் பன்னிரு படலக் கொள்கையைப் பலவிடத்து மறுத்திருப்பதுடன், ‘கொடுப்போரேத்தி’ என்னும் சூத்திரவுரையில் “தத்தம் புது நூல் வழிகளாற் புற நானூற்றிற்குத் துறை கூறினாரேனும், அகத்தியமும் தொல்காப்பியமுமே தொகைகளுக்கு நூலாகலின் அவர் சூத்திரப் பொருளாகத் துறைகூற வேண்டுமென்றுணர்க” எனவும் உரைத்துள்ளார். இவற்றிலிருந்து பன்னிரு படலம் என்பது பிற்காலத்து யாரோ ஒருவரால் இயற்றப்பெற்று, அகத்தியர் மாணாக்கர் பன்னிருவராலும் இயற்றப்பெற்றதெனக் கட்டியுரைக்கப்பட்டதென்பதே அவர்கள் கருத்தாதல் பெறப்படும். ‘வினையினீங்கி’ என்னும் மரபியற் சூத்திரவுரையிற் பேராசிரியர் “பன்னிரு படலத்துப் புனைந்துரை வகையாற் பாயிரச் சூத்திரத்துள் உரைக்கப்பட்டது” என்று கூறியிருத்தல் ஊன்றியுணரின் அவர்கருத்தும் இதுவென்பது போதரும். இவ்வாற்றால் அகத்தியர்க்கு மாணாக்கர் தொல்காப்பியர் என்னும் கொள்கையும் வலியற்றொழிதல் கண்கூடாம். தொல்காப்பியத்திலே வடசொற்களை எடுத்தாளுதற்கு விதி கூறியிருப்பதுடன் அம்போதரங்கம், குஞ்சரம், வைசியன் முதலிய வடசொற்கள் பயின்றிருப்பதும், இகர ஐகாரவீற்று திங்கட் பெயரும் நாட்பெயரும் நின்று புணர்தற்கு வழிவகுத்திருப்பதும், வழி நூல் வகையுள் மொழி பெயர்த்தியற்றலும் ஒன்றாக விதித்திருப்பதும், பிறவும் ஓர்ந்துணரின் ஆரியமக்களின் கலப்புப் பெரிதும் ஏற்பட்ட பின்னரே இந்நூல் இயற்றப் பெற்றதாகு மெனில் பொருத்தமாம். இராமாயண காலத்தில் அத்துணை மிகுதியாக ஆரியக்கலப்பு இருந்திருக்க இடமின்மையால் ஆசிரியர் அகத்தியனார்க்கு நெடுநாளின் பின்பு தொல்காப்பியம் தோன்றியதாகுமெனலே நேரிது. இவ்வாற்றால் தொல்காப்பிய னார் அகத்தியனார்க்கு மாணாக்கராக்குதல் செல்லாதென்பது பெறப்படும். ஆகவே, அவர் சமதக்கினியின் புதல்வர் என்பதும், அகத்தியரால் அழைத்து வரப்பெற்றன ரென்பதும் பொருந்தாமை கூறல் வேண்டா என்க. தொல்காப்பியர் அகத்தியனார்க்கு உடன் காலத்தினரல்ல ராயினும் அவரது கொள்கையைப் போற்றியோ ரருகினமையால் அவர்க்கு மாணாக்கரெனப் பெற்றனர் எனக் கருதுதல் சாலும். இனி பாரத நிகழ்ச்சிக்குப் பின்பே தொல்காப்பியம் இயற்றப்பெற்ற தென்பதற்கு உறுதியுடைய சான்று ஒன்று உள்ளது. தொல்காப்பியத்து உயிர் மயங்கியலில், “பனையின் முன்னர் அட்டுவரு காலை நிலையின் றாகும் ஐயெனுயிரே ஆகாரம் வருத லாவயி னான.” “கொடிமுன் வரினே ஐயவணிற்பக் கடிநிலையின்றே வல்லெழுத்து மிகுதி” என்னுஞ்சூத்திரங்களால் பனை என்பது கொடி என்பதனோடு புணர்த்துப் பனைக்கொடியெனச் செய்கை செய்து முடிக்கப்பெற்றுள்ளது. தமிழ் வழக்குச் செய்யுட்களில் இத் தொடர் பயின்றிருந்தாலன்றி ஆசிரியர் இங்ஙனம் விதிகூறா ரென்பது தேற்றம். தொகை நூல்களிலும் பிறவற்றிலும் நம்பி மூத்தபிரானாகிய பலராமன் பலவிடத்துக் கூறப்பட்டிருத்தல் காணலாகும். அவற்குக் கொடி பனையென்பதும் அவற்றுள் காணக்கிடக்கின்றது. “புதையிருளுடுக்கைப் பொலம்பனைக் கொடியோற்கு” எனவும், “நின்னொன் றுயர்கொடி பனை” எனப் பரிபாடலிலும் “அடல்வேந் நாஞ்சிற் பனைக் கொடி யோனும்” எனப் புறநானூற்றிலும், “பொற்பனை வெள்ளையை யுள்ளா தொழுகின்னா” என இன்னா நாற்பதிலும் கூறப்படுதல் காண்க. இவ்வாற்றால் பலராமனோடு தொடர்புடைய பாரத நிகழ்ச்சிக்குப் பின்பே இந்நூல் இயற்றப் பெற்றதாதல் ஒருதலை. பாரத காலத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்துள்ளார் பலர். பாரதப் போர் நடந்தது கி.மு.1000-ஆம் ஆண்டில் என்று ஒருவரும், கி.மு.1100-ஆம் ஆண்டில் என்று மற்றொருவரும் கூறுகின்றனர். கி.மு.1194-ஆம் ஆண்டில் நிகழ்ந்ததென்று சித்தூர் கோபாலையர் ஆராய்ந் துரைக்கின்றனர். சு.ஊ. தத்தர் கூறுங்காலம் இன்னுஞ் சிறிது முன்னர்ச் செல்கின்றது. ஊ.ஏ. வைத்தியா என்பவர் கி.மு. 3100 தான் பாரதப்போரின் காலமாமென்று பல சான்றுகளால் நிறுவு கின்றனர். துவாபர கலியுக சக்தியில் பாரதம் நிகழ்ந்த தென்னும் பரம்பரைக் கொள்கை வைத்தியர் அவர்களால் வேறு சான்றுகள் கொண்டும் நிறுவப்படுதலின் அதுவே பாரதப் போரின் காலமாகுமென யாமும் கொள்ளற்பாலம். இனி, மாபாரதப் போரின் பின்பு தொல்காப்பியம் எப்பொழுது தோன்றிய தென்பது ஆராய்தற்குரியது. கி.பி. எட்டாம் நூற்றாண்டுக்கு முன் தமிழ் மொழி திருந்திய நிலையைடைந்த தின்றென்னும் கருத்துடைய ஒருவர் தொல்காப்பியம் அந்நூற்றாண்டை யடுத்துத் தோன்றியதாகும் என்பர். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட ஜைநேந்திரமே தொல்காப்பியப்பாயிரத்தில் ‘ஐந்திரம்’ எனக் குறிக்கப்பட்டதென்னும் கருத்துடைய ஒருசாரார் அஃது கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இடையில் உதித்த தாகும் என்பர். சாதவாகனன் என்னும் ஆந்திரமன்னனுக்கு அமைச்சனாயிருந்த சார்வவர்மனால் இயற்றப்பட்ட ‘காதந்திரம்’ என்பதே திராவிட இலக்கணங்களுக்கு வழிகாட்டிற்று எனக் கொண்ட, மற்றொரு சாரார் இந்நூல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பின்பு எழுந்ததாகுமென்பர். இங்ஙனம் ஐரோப்பிய ஆசிரியர் சிலராலும் இந்திய ஆசிரியர் சிலராலும் பலவாறாகக் கூறப்பட்டன வெல்லாம் பழங்கதையாய்ப் போனமையின் இனி அவற்றின் பொருந் தாவியல்புகளை எடுத்து விளக்குதல் வேண்டா. கடைச் சங்கத்தின் இறுதிக்காலமானது கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத் திற்குப் பிற்பட்டதன்று என்பது வரலாற்றறிவுடைய தமிழ் வல்லோர் பலராலும் இப்பொழுது நன்கு துணியப்பெற்றுள்ளது. கடைச்சங்கப் புலவருள்ளே பெரும் பகுதியினர் கி.பி. முதல் நூற்றாண்டிலும் இரண்டாம் நூற்றாண்டிலும் இருந்தோராவர். அவர்களால் இயற்றப் பெற்ற செய்யுட்களில் சகடம், சமம், சமழ்ப்பு, ஞமலி, ஞமன், யவனர் முதலிய சொற்கள் பயின்று வந்திருப்பவும், தொல்காப்பியனார், “சகரக் கிளவியும் அவற்றோரற்றே அ ஐ ஒளவெனும் மூன்றலங் கடையே” “ஆஎ, ஒ எனும் மூவுயிர் ஞகாரத் துரிய” ஆவோ டல்லது யகரம் முதலாது” என்னும் சூத்திரங்களால் ச, ஞ, ய, முதலிய எழுத்துகள் மொழிக்கு முதலாகா என விலக்கியுள்ளார். மற்றும் அவர், “ நாற்சீர் கொண்ட தடியெனப்படுமே” என்று கூறிவைத்து, எழுத்துவரையறை கொண்டு அந்நாற் சீரடியையே குறளடி, சிந்தடி, நேரடி, நெடிலடி, கழிநெடிலடி என ஐவகைப்படுத்துரைத்தனர். இது கட்டளையடி எனப்படும். சங்கச் செய்யுட்களிலோ இக் கட்டளையடிக்கு இலக்கியம் காணு மாறில்லை. சங்கச் செய்யுள் பலவற்றையும் ஆராய்ந்து தொல் காப்பியத்திற்கு உரை வகுத்த பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் ‘ஆங்ஙனம் விரிப்பின்’ என்னுஞ் சூத்திரவுரையில், “சிறப்புடைய கட்டளையடி சான்றோர் செய்யுளுட் பயின்று வரல் வேண்டும் பிறவெனின், இந்நூல் செய்த காலத்தில் தலைச் சங்கத்தாரும் இடைச்சங்கத்தாரும் கட்டளையடி பயின்று வரச்செய்யுள் செய்தாரென்பது இச் சூத்திரங்களாற் பெறுதும்; பின்பு கடைச்சங்கத்தார்க்கு அஃது அரிதாகலின் சீர்வகையடி பயிலச் செய்யுள் செய்தாரென்றுணர்க” என உரைத்தனர். இங்ஙனம் கடைச்சங்க நாளிலேயே தொல்காப்பியர் கூறியன இறந்து பட்டனவும், கூறாதன தோன்றியனவுமாக உள்ளவை சாலப்பல. அவற்றை விரிப்பிற் பெருகும். இவற்றிலிருந்து கடைச்சங்க நாட்குச் சில பல நூற்றாண்டுகளின் முன்பே தொல்காப்பியம் தோன்றியதெனல் பெறப்படும். கடைச்சங்க நாளின் முன்பே தொல்காப்பியர் இருந்தாரெனக் கொண்டாருள் ஒரு சாரார், இலங்கைத் தீவின் வரலாற்றாற் பெறப்படும் கடல்கோள் பலவற்றுள் கி.மு. 306ல் நிகழ்ந்த மூன்றாங் கடல் கோட்குச் சிறிது முன்னே தொல்காப்பியம் இயற்றப்பெற்றதெனவும், அலெக்சாந்தர் என்னும் கிரேக்க வேந்தன் இந்தியாவின் மேற்படையெடுத்து வந்தபொழுது உடன்போந்த கிரேக்க வான நூலாசிரியராற் கொண்டு வரப்பட்ட ‘ஹோரா’ என்னும் மொழி தொல்காப்பியத்துள் ‘ஓரை’ எனத் திரித்து வழங்கப்படுதலின் அது கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இயற்றப்பெற்றதெனல் போதரும் எனவும் கூறுவர். மற்றும் ஒரு சாரார் பாணினியால் எடுத்துக் காட்டப்பெற்ற வடமொழி இலக்கணவாசிரியர் அறுபத்து நால்வருள் முதல்வனாகிய இந்திரனாற் செய்யப்பட்ட ‘ஐந்திரம்’ என்னும் நூலினைச் சுட்டி ‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” எனப் பனம்பாரனார் பாயிரத்துள் ஓதுதலின், பாணினியின் காலமாகிய கி.மு.350க்கு முன்பே தொல்காப்பியம் இயற்றப்பெற்றதாகும் என்பர். ஓரைஎன்னும் தமிழ்ச் சொல்லே ‘அரிசி’ முதலிய சொற்கள் போன்று கிரேக்க மொழியிற் புகுந்ததாமெனக் கருதற்குப் பல காரணங்கள் இருத்தலானும், தொல்காப்பியர் பாணினிக்குப் பின்னிருந்தவராயின் வடமொழியில் மிகச்சிறப்புடையதாகிய பாணினீயத்தை நன்கு கற்று, ஓர் பகுதியிற் பிறந்த பல சொற்களை ஆராய்ந்து அதன்கண் அடக்கும் அந்நூன்முறையை மேற்கொண்டு தாமும் தமது நூலின் கண் சொற்களை ஆராயாது விடாராகலானும், பாணினீயம் நிறைந்த என்னாது ‘ஐந்திரம் நிறைந்த’ எனக் கூறியிருப்பதனால் அவர் பாணினீயத்தை உணர்ந்தவரல்லர் என்பது பெறப்படுதலானும் தொல்காப்பியர் பாணினிக்கு முன்னிருந்தாராவர் என்னும் கொள்கையே வலியுறா நிற்கும். பாணினியின் காலம் கி.மு. 300 என்றும், 350-என்றும், கி.மு.700க்கு நீண்டநாளின் முன்னாகும் என்றும் சரித்திர அறிஞர் பலர் பலவாறு கூறா நிற்பர் எஸ். கிருஷ்ண பேல் வால்கர் என்னும் அறிஞர் தமது ‘வடமொழி’ இலக்கணவொழுங்குகள்’ என்னும் நூலிலே’ பாணினியின் காலம் கி.மு. ஏழாம் நூற்றாண்டுக்குப் பிந்தியதன்றென ஆராய்ந்து நிறுவியுள்ளார். பாணினி முனிவர் காலம் எதுவாயினும் தொல்காப்பியனார் அவர்க்கு முன்னிருந்தாராவரென்பது, கடைப்பிடிக்க தொல்காப்பியர் காலத்தை ஆராய்தற்குரிய மற்றொரு சாதனம் குமரியாறு கடல்கொள்ளப்படுவதற்கு முன்பு அவர் இருந்தாரென்பது. கலித்தொகை, சிலப்பதிகாரம், களவியலுரை முதலிய தமிழ்நூல், உரைகள் தமிழ் நாட்டில் நிகழ்ந்த கடல் கோளைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. சிலப்பதிகாரவுரையில் அடியார்க்கு நல்லார் குமரியாற்றின் தெற்கு நாற்பத்தொன்பது தமிழ்நாடுகள் இருந்து கடல்கொள்ளப்பட்டதெனக் கூறுகின்றார். எர்னஸ்ட் ஹெக்கல், ஸ்காட் எலியட் முதலிய பேரறிஞர்களாற் குறிப்பிடப்படுகின்ற குமரிக்கண்ட (லெமூரியா) அழிவு பன்னூறாயிர ஆண்டுகளின் முன்பு நிகழ்ந்ததாகல் வேண்டும். ‘எலியட்’ பண்டிதர் கூறும் ஐந்து பெரிய பிரளயங்களில் கி.மு. 9564-இல் நிகழ்ந்த ஐந்தாம் பிரளயத்தால் ஏழேழ் தமிழ்நாடுகள் கடல் கொள்ளப்பட்டன வென்று கருதுதல் பொருந்தும். எனினும் குமரியாறும், அதன் தெற்கே சிறு நிலப்பகுதியும் எஞ்சியிருந்து பின்னொரு கடல் கோளால் அழிந்திருக்க வேண்டும். களவியலுரையானது ‘அக்காலத்துப்போலும் பாண்டிய னாட்டைக் கடல்கொண்டது’ என இடைச்சங்கத்திறுதியில் நிகழ்ந்ததாகக் கருதியுரைக்கின்ற கடல்கோளால் குமரியாறு அழிந்திருக்க வேண்டுமாதலின் அதற்கு முன்பே தொல்காப்பியம் இயற்றப்பெற்றதாமென்க. பனம்பாரனார் குமரியாற்றைத் தமிழ்நாட்டிற்கு எல்லையாகக் கூறியிருப்பதும், ‘கடல் கொள்வதன் முன்பு பிறநாடு முண்மையின் றாதற்கும் எல்லை கூறப்பட்டது’ என இளம்பூரணர் உரைத்திருப்பதும் போல்வன இதனை வலியுறுத்தாநிற்கும். இனி அக்கடல்கோள் எக்காலத்து நிகழ்ந்ததோ எனின், கூறுவல். யூதவேதத்தின் ஆதியாகமத்திலே நோவாவின் காலத்தில் ஓர் பிரளயம் உண்டான வரலாறு விரித்துரைக்கப்பட்டுள்ளது. அது கிமு. 2344இல் நிகழ்ந்திருக்க வேண்டுமென்று யூதநூலாசிரியர்கள் கணக்கிட்டிருக்கின்றனர். பாபிலோனியர்க்குள்ளும் ஓர் கடல் கோட் செய்தி வழங்கி வந்திருக்கின்றது. இதன் வரலாறு கி.மு.2000-இல் அவர்களால் வெட்டப்பட்ட கல்வெட் டொன்றிலே கூறப்பட்டுள்ளது. இலங்கைத் தீவின் வரலாற்றிலும் கி.மு.2387இல் ஓர் கடல்கோள் நிகழ்ந்தமை குறிக்கப்பட்டுள்ளது. மநுவரசன் காலத்தில் ஓர் பிரளயம் நிகழ்ந்தமையைச் சதபத பிராமணம் தெரிவிக்கின்றது. அப்பிரளயத்தோடு தொடர்புற்ற மநுவரசன் மலையமலைமேல் தவம் புரிந்து கொண்டிருந் தானென மச்சபுராணம் கூறுகின்றது. பாகவத புராணமானது கிருதமாலையாற்றங்கரையிலே திராவிட அரசனான சத்தியவிரதன் என்பான் தவஞ்செய்து கொண்டிருந்த பொழுது அங்கு மீன் வடிவுடன் வந்த ஒரு தெய்வம் அங்கே நிகழப் போகும் கடல்கோளை அவனுக்கு முன்னரே அறிவித்து, அவ்வாறே அது நிகழ்ந்தபொழுது ஓர் மரக்கலத்தில் அவனையும் அவனைச் சார்ந்தோரையும் ஏற்றுவித்துக் கொண்டுபோய் உய்வித்த வரலாற்றை விரித்துரைக்கின்றது. யூதர்களின் ஆகமத்திற் கூறப்பட்டுள்ள கடல்கோள் வரலாற்றோடு பாகவதபுராணத்தின் வரலாறு பெரிதும் ஒத்திருத்தல் கருதற்பாலது. இங்ஙனம் வெவ்வேறு நாட்டினர் கூறும் பிரளயம் வரலாற்றாலும் காலத்தாலும் பெரிதும் ஒத்திருத்தலானும், அது தமிழ்நாட்டில் நிகழ்ந்ததென்பதற்குப் புராணங்களேயன்றி பழைய தமிழ்நூல் உரைகளும், நிலநூல் உண்மையும் சான்று பகர்தலானும் இற்றைக்குச் சற்றேறக்குறைய 4200-ஆண்டுகளின் முன்பு தமிழகத்தின் தெற்கே ஒரு கடல்கோள் நிகழ்ந்து, அதனாற் குமரியாறும், அதனைச் சார்ந்த நிலப்பகுதியும் அழிந்தன வென்றும், தொல்காப்பியம் அதற்கு முன்னரே இயற்றப்பெற்ற தாகுமென்றும் கொள்ளுதல் வேண்டும். ஒருக்கால் இக்கடல் கோளாற் குமரியாறு அழியாதிருந்திருப்பின், இலங்கை வரலாற்றிலே கி.மு.504இல் நிகழ்ந்ததாகக் கூறப்படும் இரண்டாங் கடல்கோளின் முன்பாவது தொல்காப்பியம் இயற்றப் பெற்றதாகல் வேண்டும். இவ்வாற்றால் இலங்கை வரலாறு கூறும் இரண்டாங் கடல்கோள் நிகழ்ந்த கி.மு.504ஆம் ஆண்டுக்கும், பாணினி முனிவர் காலமாகிய கி.மு.7ஆம் நூற்றாண்டுக்கும் முன்னும், பாரத காலமாகிய கி.மு.3100க்குப் பின்னும் உள்ள காலப் பகுதியொன்றிலே தொல்காப்பியர் இருந்தாரென்பது கொள்ளற்பாற்று. தொல்காப்பியரது கல்விப் பெருமையும், நூலமைப்புத் திறனும் : தொல்காப்பியப் பாயிரமானது தொல்காப்பியரைத் தமிழ் கூறும் நல்லுலகத்து வழக்கும் செய்யுளும் ஆராய்ந்தவர் என்றும், முந்து நூல் கண்டவர் என்றும், ஐந்திரம் நிறைந்தவர் என்றும் கூறுகின்றது. இவ்வாசிரியர்க்கு முன்பே தமிழில் இலக்கண நூல்கள் பல இருந்திருக்க வேண்டுமென்பது இவர் தாமே ‘என்ப’ என்றும், ‘என்மனார் புலவர்’ என்றும் இவ்வாறாகத் தொல்லாசிரியர் மதம்படப் பலவிடத்துங் கூறிச் செல்லுதலால் அறியப்படும். முந்துநூல் என்றது அகத்தியம் ஒன்றனையே யெனச் சிலர் கொண்டனர். அஃதொன்றே யாயின் ஓரிடத்தேனும் அதனை விதந்தோதாது யாண்டும் ‘என்மனார் புலவர்’ என்றும், ‘கடிநிலையின்றே ஆசிரியர்க்கு’ என்றும் பொதுப்படக் கூறிச் செல்லாராகலின், இவர்க்கு முன்பே பல நூல்கள் இருந்திருக்க வேண்டும் என்றும், அவற்றையே ‘முந்து நூல்’ எனப் பாயிரமும் கூறிற்றெனவும் கோடல் வேண்டும். முந்து நூலாவன அகத்தியமும், மாபுராணமும், பூதபுராணமும், இசை நுணுக்கமும் என நச்சினார்க்கினியரும் கூறினர். அப்பொழு திருந்தவை இன்னின்ன நூல்களென அறுதியிட்டுரைத்தல் சாலாதெனினும் அகத்தியம் உள்ளிட்ட பல நூல்கள் இருந்தன வென்பது தேற்றம். இவர் அவற்றையும், அற்றைநாள் வழக்குச் செய்யுட்களையும் நன்காராய்ந்தவர் எனப் பாயிரம் கூறுவதும், அவையனைத்தையும் முற்றவறிந்தவர் எனக்கருதற்குரிய குறிப்புக்கள் தொல்காப்பியத்திற் காணப்படுவதும் இவரது கல்வியின் அகலத்தையும் ஆழத்தையும், நன்கு புலப்படுத்துவன வாம். எடுத்துக்காட்டாகப் பின்வரும் குறிப்புக்கள் சில நோக்கற்பாலன. மொழி மரபின் கண்ணே மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துக்களை உணர்த்துமிடத்து ‘உச்சகாரம் இரு மோழிக்குரித்தே’ என்னுஞ் சூத்திரத்தால் சகரவுகரத்தை ஈற்றிலுடைய முற்றியலுகரமொழி, தமிழில் இரண்டே உள்ளன என்றும், ‘உப்பகாரம் ஒன்றென மொழிய இருவயினிலையும் பொருட்டா கும்மே’ என்னுஞ் சூத்திரத்தால் பகரவுகரத்தை ஈற்றிலுடைய முற்றுகர மொழி ஒன்றேயுண்டென்றும் அஃதொன்றுமே தன்வினைப் பொருளும் பிறவினைப்பொருளும் உடைத்தாகுமென்றும் கூறினர். பின்னும் நகரவொற்றை ஈறாகவுடைய சொல் உச்சகார மொழிபோல் இரண்டேயென்றும், ஞகரவொற்றை யீறாக வுடைய சொல் உப்பகாரமொழிபோல் ஒன்றேயென்றும், ஆனால் இது இருபொருட்படாதென்றும் கூறினர். மற்றும் நிலம் நிலன், கலம் கலன் என்பபோல மகரத்தோடு மயங்குத லில்லாத னகரவீற்று அஃறிணைச் சொற்கள் ஒன்பது உள்ளன வென்றும், தொகைமரபின் கண்ணே அளவுப் பெயர்க்கும் நிறைப்பெயர்க்கும் முதலாகவுள்ளன கசதபநமவஅஉ என்னும் ஒன்பதெழுத்துமே என்றும் வரையறுத்துக் கூறியுள்ளார். இவை போல்வனவும், உயிரும் புள்ளியும் இறுதியாகிய பலதிறப்பட்ட சொற்களையும் எஞ்சாதெடுத்து வருமொழியொடு புணர்த்துச் செய்கை செய்து முடிப்பதும், வேற்றுமைகளின் பொருள் விகற்பங்களையும் அவை மயங்கிவருமாற்றையும் மிக விரித்துரைப்பதும், இளமைப்பெயரும் ஆண்பாற்பெயரும் பெண்பாற்பெயரும் ஆகிய மரபுப் பெயர்கள் பலவற்றையும் எடுத்து அவை இன்னின்ன வற்றுக்கு உரியவென உணர்த்துவதும் பிறவும் தமிழ் வழக்குச் செய்யுட்களின் சொற்பொருட் பரப்பு முழுதும் இவ்வாசிரியரால் நன்கு வடித்தறியப் பெற்றன என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியெனத் தெள்ளிதின் விளக்குவனவாதல் காண்க. இனி இவ்வாசிரியர்தாமே சூத்திரத்தியல்பெனக் கூறிய சில்வகையெழுத்தின் செய்யுட்டாதலும் நுண்மையொடு புணர்ந்த ஒண்மைத்தாதலும் போல்வனவெல்லாம் ஒருங்கமைந் தனவாகத் தொல்காப்பியச் சூத்திரங்கள் விளங்குவதும், அவற்றின் கண் சொற்கள் பொன்பணியாமாறு போல இவர் கருதிய வாறெல்லாம் திரிந்து அழகு செய்வதும் போல்வனவற்றை நோக்கின் இவர் வழிவழியாகத் தமிழிலே ஊறிவந்ததொரு குடியின் கட்டோன்றி, உண்ணுஞ்சோறும் பருகுநீரும் தின்னும் வெற்றிலையுமெல்லாம் தமிழாகவே கொண்டு வளர்ந்து தலைமையெய்திய சான்றோராவர் என்பது விளங்கும். “முதலா வேன தம்பெயர் முதலும்” “ஒவ்வு மற்றே நவ்வலங் கடையே” “உச்ச காரமொடு நகாரஞ் சிவணும்” “உப்பகாரமொடு ஞகாரையுமற்றே அப்பொருளிரட்டாதிவணையான என்னும் சூத்திரங்களிலுள்ள முதலா, முதலும், அலங்கடை, சிவணும், ஞகாரை, இவணை யென்னும் சொல்வழக்கு களையும், இந்நூற்பாக்களின் திட்ப நுட்பங்களையும் நோக்குங் கள். இறையனார்களவியற் சூத்திரம் சிலவன்றி நன்னூல் சின்னூல் தொன்னூல் முதலாய பிற்காலத்து எந்நூலின் கண்ணும் ஒரு சூத்திரத்தானும் இந்நூற்பாக்களின் அணிமையிலும் நிற்றற் குரிய தன்றாயின் ஆசிரியர் தொல்காப்பியனாரது தமிழ்ப் புலமையின் விழுப்பத்தை எங்ஙனம் அளவிட்டுரைத்தல் கூடும்? இனி இவர் வடமொழியிலும் பெரும் புலமை வாய்ந்தவரென்பது ‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியனெனத் தன் பெயர் தோற்றி’ என்னும் பாயிரக் கூற்றானே துணியப்படும். “அகத்தெழு வளியிசை யரிறப நாடி அளபிற் கோட லந்தணர் மறைத்தே” என இவர் கூறுவது அருமறையின்கண் இவருக்குள்ள பயிற்சியைப் புலப்படுத்தா நிற்கும். இனி இவ்வாசிரியர் இந்நூலை அமைக்கும் திறப்பாடுகள் நோக்கற்பாலன. எழுத்தும் சொல்லும் பொருளுமாகிய மூன்றனையும் மூன்று அதிகாரத்தாற் கூறலுற்ற இவர் ஒவ்வோரதிகாரத்தையும் ஒன்பது ஒன்பது இயல்களாக வகுத்துக் கொண்டுள்ளார். இங்ஙனம் ஒவ்வோர் அதிகாரமும் இயல்வகையால் ஓரளவினவாக வகுத்திருப்பது தாம் கூறக்கருதிய பொருள்களை ஓரெல்லையுள் அடக்க முயன்று இடர்ப்படுவ தாகுமெனச் சிலர் கருதவுங்கூடும். எனினும் அவ்வியல்கள் யாவும் இன்றியமையாதனவும், அவ்வவ்வதிகாரங்களோடு இயைபுள் ளனவுமாதல் நுண்ணறிவான் ஆராய்வார்க்குப் புலனாகா நிற்கும், ஆயின் ஓரதிகாரத்தை ஒன்பான் இயலிற் குறையவோ மிகவோ வகுத்தமைத்தல் ஒல்லாதோ எனின், அங்ஙனஞ் செய்தல் ஒல்லுமாயினும் ஒரு நிகரான வரையறையுடைமையின் பயன்கருதி அங்ஙனம் இயல்களை வரையறை செய்து, பொருளளவுக்கேற்பச் சூத்திரங்களை மிகுத்தும் குறைத்தும் இடர்ப்பாடின்றி யாத்தமைத்துள்ளாரெனல் வேண்டும். பண்டையாசிரியர்கள் தாம் கருதிய பொருள்களை எஞ்சாமற் கூறுவதில் நோக்குடையராயிருந்தமைபோன்றே அவை பிற்காலத்தில் திரிபின்றி நின்று நிலவவும், கற்போருள்ளத்தில் எளிதிற்புகுந்து அகலாதிருக்கவும் உரிய முறைகளை இயலுமளவு கைக்கொண்டு அவற்றைக் கூறும் கருத்துடையாராவர். பாணினியும் தமது நூலின் எட்டு அத்தியாயங்களையும் நந்நான்கு பாதங்களாக வகுத்துள்ளனர். திருக்குறள், தேவாரம், திருவாய்மொழி முதலிய தமிழ் மறைகளும், ஆரிய வேதப் பகுதியாகிய ஐதரேயப் பிராம்மணம் முதலியனவும், சங்கச் செய்யுட்களில் பதிற்றுப்பத்து முதலாயினவும் ஒவ்வோரளவின வாக இயன்றிருத்தலும் காண்க. இனி, இவ்வாசிரியர் மெய்ப்பாட்டியலின் கண் எண்வகை மெய்ப்பாடும் நிகழுங் காரணங்களை உணர்த்துமிடத்து, “கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே” “செல்வம் புலனே புணர்வு வினையாட்டென் றல்லல் நீத்த வுவகை நான்கே” என்றிங்ஙனம் ஒவ்வொரு மெய்ப்பாட்டுக்கும் நந்நான்கு காரணங் கூறுவதும், உவமவியலிலே வினை, பயன், மெய், உரு என்னும் நால்வகை உவமத்திற்கும் உருபுகள் தனித்தனி எவ்வெட்டாக வரையறுத்துரைப்பதும், பெயரியலிலே, “அவனிவன் உவனென வருஉம் பெயரும் அவளிவள் உவளென வரூஉம் பெயரும் அவரிவர் உவரென வரூஉம் பெயரும் யான் யாம் நாமென வரூஉம் பெயரும் யாவன் யாவள் யாவர் என்னும் ஆவயின் மூன்றோ டப்பதினைந்தும் பாலறி வந்த உயர்திணைப் பெயரே” எனவும், “அதுவிது உதுவென வரூஉம் பெயரும் அவைமுத லாகிய ஆய்தப் பெயரும் அவையிவை உவையென வரூஉம் பெயரும் அவைமுத லாகிய வகரப் பெயரும் யாதுயா யாவை என்னும் பெயரும் ஆவயின் மூன்றோடப்பதினைந்தும் பாலறி வந்த அஃறிணைப் பெயரே” எனவும் ஓரினமான மும்மூன்று பெயர்களை ஒவ்வோரடியில் நிறுத்தி அழகும் தெளிவும் பொருந்தக் கூறுவதும் போல்வன கற்போருள்ளத்தில் அவை நன்கு பதியுமாறு செய்ய மேற் கொண்ட முறைகளாம் என்க. இனி இலக்கண நூல்களில் பொதுவும் சிறப்பும் முதலிய விதிகள் ஒன்றனையொன்று போற்றியும் மறுத்தும் செல்லும் இயல்பினவாகலின் இலக்கணங்கற்பார் நூலின் ஒரு பகுதி கற்று அமையாது நூன்முழுதுங் கற்கும் கடப்பாடுடையராவர். அக்கடப்பாட் டினின்றும் அவர் விலகாமைப் பொருட்டு இவர் நூற்பாக்களை அமைத்திருக்குந் திறன் மிக வியத்தற்குரியது. இருள் என்னுஞ் சொல் நின்று வேற்றுமைப் பொருட் புணர்ச்சியில் வருமொழியோடு புணருமாறு கூறவந்தவர் ‘இருளென்கிளவி வெயிலியல் நிலையும்’ என்றார். வெயில் என்னுஞ் சொற்கு அங்ஙனம் விதி கூறுமிடத்தோ ‘வெயிலென்கிளவி மழையியல் நிலையும்’ என்றார். மற்று, மழை என்னுஞ் சொற்கு விதி கூறுங்கால் ‘மழையென் கிளவி வளியியல் நிலையும்’ என்றார். வளி என்னுஞ் சொல்லுக்கு விதியும் ‘வளியென வரூஉம் பூதக் கிளவியும் - அவ்வியல் நிலையல் செவ்விதென்ப’ என அதற்கு முன்னுள்ள சூத்திரத்தோடுமாட்டெறிந்து கூறினார். அச்சூத்திரந்தான் ‘பனியென வரூஉம் காலவேற்றுமைக்கத்தும் இன்னும் சாரியை யாகும்’ என்பது. இங்ஙனம் உயிர் மயங்கியல் 39-ஆம் சூத்திரத்திற் கூறிய விதியை 161-ஆம் சூத்திரங்கட்குப்பின் புள்ளி மயங்கியலிலுள்ள ‘இருளென் கிளவி’ என்னும் சூத்திரங்காறும் தொடர்ந்து வரச்செய்திருத்தலின் இவை யனைத்தையும் ஒருங்கு கற்றுணர்ந்தாலன்றி இருள், வெயில், மழை, வளி என்னுஞ் சொற்கள் அத்துச்சாரியை யாவது இன்சாரியை யாவது பெற்று முடியும் என்பதனை எங்ஙனம் அறிதல் சாலும். இவை வெவ்வேறு உயிரும் புள்ளியும் இறுதியாகவுடைய சொற்க ளாதலின் இவற்றை ஒருவழிக் கொணர்ந்து ஒருங்குமுடித்தலும் பொருந்தாமை காண்க. இவ்வாறு முடிப்பன மற்றும் பலவுள. இங்ஙனம் சூத்திரங்களைக் கோவைப்படுத்தி முதலும் முடிவும் மாறுகோளின்றி இவ்வாசிரியர் அமைத்திருக்கும் முறையை உணரலாற்றாத சிலர் தம்மை இலக்கணம் வல்லாராகத் தாமே மதித்துக் கொண்டு, ‘தொல்காப்பியத்துள் இச்சூத்திரம் ஈண்டிருத்தல் பொருந்தாது, ஆண்டு இருத்தல் வேண்டும்’ என்று தமக்குத் தோற்றியவா றெல்லாம் உரைத்தல் எத்துணைப் பெரியதோர் அறியாமை யாகும். தொல்காப்பியத்திற்கு முதனூல் ஐந்திரமென்பார் கூற்றுப் போலியாதல் : திருக்குருகூர்ச் சுப்பிரமணிய தீக்கிதர் தாம் இயற்றிய தமிழ்ப் பிரயோக விவேகவுரையில் “ஏழியன் முறைய தெதிர் முக வேற்றுமை - வேறென விளம்பான் பெயரது விகாரமென்-றோதிய புலவனு முன்னொரு வகையா - னிந்திரனெட்டாம் வேற்றுமை யென்றனன்’ என அகத்தியத்தின் கண்ணும், ‘ஐந்திர நிறைந்த தொல்காப்பியன்’ எனத் தொல்காப்பியப் பாயிரத்தின் கண்ணும் வருதலின் இவைகட்கு முதனூல் பாணினியமும் ஐந்திரமுமா மென்க. அகத்திய நிறைந்த தொல்காப்பியன் என்னாமையானும், ‘கடிநிலையின்றே யாசிரியர்க்கு’ எனப் பொதுப்பட வோதிய தல்லது பெயரெடுத்தோதாமையானும் அதுவே பொருளென்க. பின்னூல் செய்தார் தத்தம் பாயிரத்துள் வேண்டிய வாறோதினார்; அதுபற்றி உரைகாரரும் அவருரைத்தாங்குரைத்தார்; அது பொருளன்மையறிக” என்று கூறினர். இவர் அகத்தியத்திற்கு முதனூல் பாணினியம் எனக் கூறியது போலியுரை யாமென ‘அகத்தியர்’ என்னும் உரைநூலில் விரித்து விளக்கியுள்ளேன். தொல்காப்பியத்திற்கு ஐந்திரம் முதனூல் என்றது பொருந்துமா என்பது ஈண்டு ஆராய்தற்குரியது. எத்தனையோ பல நூலாசிரியர் உரையாசிரியர்களின் கொள்கைக்கு முற்றிலும் மாறாகத் தாம் கொண்ட இத்துணிவிற்கு இவர் காட்டிய ஆதாரம் தொல் காப்பியப் பாயிரத்தில் “ஐந்திர நிறைந்த தொல்காப்பியன்” எனக் கூறியிருப்பதேயாகும். தொல்காப்பியர் தமக்கு முன்னுள்ள தமிழ் நூல்களேயன்றி ஐந்திரவியாகரணமும் கற்றுவல்லவரென அவர் பெருமை கூற வேண்டியே பாயிரத்துள் அவ்வாறுரைக்கப் பட்டது. அதனால் ஐந்திரத்தை முதனூலாகக் கொண்டன ரென்பது எட்டுணையும் பெறப்படுவதின்று. பாயிரத்தில், ‘தமிழ் கூறு நல்லுலகத்து வழக்குஞ் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி’ என்பதும், ‘செந்தமி ழியற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு முறைப்பட வெண்ணி’ என்பதும் நூல் இயற்றினமையை விசேடித்து நிற்றலும், ‘ஐந்திரம் நிறைந்த’ என்பது ஆக்கியோன் பெயரை விசேடித்து நிற்றலும் நோக்காது தீக்கிதர் இங்ஙனம் வழுவுவாராயினர். அவர் பிறிதோரிடத்தில் ‘ யாம் இந்நூலுட் பெரும்பான்மையும் தற்சமம் தற்பவங்களாற் கூறினாம். இப்பெரும்பான்மையுங் கூறியது யாது பற்றியெனின், வடமொழிக்கும் தமிழ் மொழிக்கும் இலக்கண மொன்றென்ப தறியாது சம்ஞாபேதத்தாலும் பாடை வேற்றுமையாலும் இகழ்ந்து வேறென்பாரை நோக்கியென்க’ எனக் கூறியிருப்பதை நோக்குங்கால், வடமொழிக்கும் தமிழுக்கும் இலக்கணம் ஒன்றெனக் கொண்ட திரிபுணர்ச்சியும் அவர் சிறிதும் ஓராது தொல்காப்பியத்திற்கு ஐந்திரம் முதனூலெனக் கூறக் காரணமா யிருந்ததெனல் வேண்டும். இனி, சுப்பிரமணியதீக்கிதரேயன்றிச் சுவாமிநாத தேசி கரும் தமது இலக்கணக் கொத்தில் “வடமொழி தென்மொழி யெனுமிரு மொழியினும் இலக்கண மொன்றே யென்றே யெண்ணுக” என்று கூறுவாராயினர். தமிழினும் வடமொழியினும் நிரம்பிய புலமையுடையராகிய இவ்விருவரும் இங்ஙனம் கூறியது மிகுந்த வியப்பிற்குரியது. இவர்கள் தமிழுக்கும் வடமொழிக்குமுள்ள வேற்றுமையை அறியாதாரல்லர் என்பது, சுப்பிரமணிய தீக்கிதர் தமது பிரயோக விவேகத்து 46-ஆம் செய்யுளுரையில் ;‘இது வடமொழிக்கும் தமிழ்மொழிக்கும் பேதம் கோடி கூறிட்டு ஒரு கூறுண்டோ இன்றோவென்பது கூறுகின்றது. திணை உணர்த்தும் வினைவிகுதியும், ஆண்பால் பெண்பாலுணர்த்தும் வினைவிகுதியும் வடமொழிக்கில்லை. தமிழ்மொழிக்குப் பிரதமா விபத்தியும், இலிங்கத்திரயமுமில்லை’ என உரைத்தலானும், இங்ஙனமே சுவாமிநாத தேசிகரும் ‘இருதிணையும் ஆண்பால் பெண்பால் வினையீறும் வடமொழிக்கில்லை. மூன்றிலிங்கமும், முதலீற்று வேற்றுமைகட் குருபுகளும் தமிழிற்கில்லை. மேலும் ஆண்டாண்டுக் காட்டுதும்’ என ஓரிடத்துரைத்து, மற்றோரிடத்து, ‘சிலபெயரெச்சமுஞ் சில வினைத்தொகையும் இருவகையுவமையும் வண்ணச் சினைச்சொலும் பண்புத் தொகையெனப் பகரும் வடநூல்’ எனச் சூத்திரஞ் செய்து, ‘பகரும் வட நூல் எனவே தமிழிற் கடாதென்க’ எனவும் உரைத்தலானும் இனிது விளங்கும். இவ்வாறு இவற்றின் வேறுபாடுகளை நன்கு உணர்ந்து வைத்தே இவர்கள் இருமொழிக்கும் இலக்கணம் ஒன்றெனக் கூறியது வடமொழியின் மேலுள்ள பற்று மிகுதியானோ, வேறெ தனானோ என்பது தெரிந்திலது. இனி, வடமொழியிலும் பிற மொழிகளிலும் இலக்கணம் என்பது எழுத்துச் சொல்லமைதியே யாகும். வடநூலார் இலக்கணத்தைச் சத்தநூல் என வழங்குதலுங் காண்க. தமிழிலக்கணமோ எழுத்துஞ் சொல்லுமாகிய ஒலியளவில் அடங்குவதன்று; மக்கள் உறுதிப் பொருளெய்து தற்குரிய ஒழுகலாற்றினையெல்லாம் வரையறை செய்துணர்த்தும் பொருட்பகுதியை உடையது. பொருளிலக்கணம் வேறெம் மொழியிலுமின்றித் தமிழில் மாத்திரமே யுள்ளதென்பது அனைவராலும் நன்கறியப்பட்டது. தமிழானது பிற இலக்கணங்களைக் காட்டினும் பொருளிலக்கணத்தையே சிறந்ததாகவும் இன்றியமையாததாகவும் கொண்டுள்ளதென்பது ‘எழுத்தும் சொல்லும் யாப்பும் ஆராய்வது பொரு ளதிகாரத்தின் பொருட்டன்றே, பொருளதிகாரம் பெறேமேயெனின் இவை பெற்றும் பெற்றிலேம்’ என்னும் களவியலுரையானும் அறியப்படும். இவ்வாறாகவும், இருமொழிக்கும் இலக்கணம் ஒன்றென்பதும், தொல்காப்பியத் திற்கு முதனூல் ஐந்திரம் என்பதும் பொருந்துமாறு எங்ஙனம்? பொருளிலக்கணத்தை விடுத்துச் சொல்லிலக்கணம் ஒன்றே கொண்டு அங்ஙனம் கூறினாராவரெனின், அதன்கண்ணும் இருமொழிக்கும் கோடிபேதமுள்ளன என்று அவரே கூறினமை மேலே காட்டப்பெற்றது. தொல்காப்பியர் ஐந்திரத்தை முதனூலாகக் கொண்டன ரென்னும் பிரயோகவிவேக நூலார் கொள்கையை இருமொழிக்கடலும் நிலைகண்டுணர்ந்த சிவஞானமுனிவர் தமது பாயிரவிருத்தியுள் மறுத்திருக்கும் பகுதி ஈண்டு அறிந்து மகிழற்பாலது. அது, ‘ஐந்திரம் நோக்கித் தொகுத் தானெனின், தமிழ் மொழிப் புணர்ச்சிக்கட்படும் செய்கைகளும், ‘குறியீடுகளும், வினைக்குறிப்பு வினைத்தொகை முதலிய சில சொல்லிலக்கணங்களும், உயர்திணை அஃறிணை முதலிய சொற்பாகுபாடுகளும், அகம்புறம் என்னும் பொருட்பாகு பாடுகளும், குறிஞ்சி வெட்சி முதலிய திணைப்பாகுபாடுகளும், அவற்றின் பகுதிகளும், வெண்பா முதலிய செய்யுளிலக்கணமும், இன்னோரன்ன பிறவும் வடமொழியிற் பெறப்படாமையானும், இவையெல்லாம் தாமே படைத்துக் கொண்டு செய்தாரெனின் முந்து நூல் கண்டு என்பதனோடு முரணுதலானும் முற்காலத்து முதனூல் அகத்தியம் என்பதூஉம், அதன் வழித்தாகிய தொல் காப்பியம் அதன் வழிநூலென்பதூஉம் துணியப்படுமென்க’ என்பது. இதிற்குறிப்பிடப் பெற்றனவும் பிறவுமாகிய தமிழின் சிறப்பியல்புகள் பின்னரும் விளக்கப்படும். இவ்வாற்றால் தொல் காப்பியத்திற்கு முதனூல் ஐந்திரமென்பார் கூற்றுச் சிறிதும் பொருத்தமில்லாத போலியுரையாயொழிதல் காண்க. தொல்காப்பியத்தின் பாகுபாடு தொல்காப்பியம் என்னும் நூல் சூத்திரம், இயல், அதிகாரம் (படலம்) என்னும் மூன்று உறுப்புக்களை அடக்கியதோர் பிண்டமாகும். இந்நூற்படலங்கள் எழுத்ததிகாரம், சொல்லதி காரம், பொருளதிகாரம் என மூன்றாம். இவ்வதிகாரங்கள் ஒவ்வொன்றும் ஒன்பது இயல்களை உடையன. எழுத்ததி காரத்தின் இயல்கள் நூன் மரபு, மொழி மரபு, பிறப்பியல், புணரியல், தொகை மரபு, உருபியல், உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல் என்பன. நூன்மரபானது நூற்கு இன்றியமையாதனவாகிய எழுத்துக்களின் பெயரும், முறையும், தொகையும், பாகுபாடும், அளவும், உருவும், மெய் யெழுத்துக்கள் பிற மெய்யோடும் தம்மோடும் மயங்குமாறும், பிறவும் உணர்த்துகின்றது. மொழிமரபானது குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்ற சார்பெழுத்துக்கள் ஒரு மொழிக் கண்ணும் புணர் மொழியகத்தும் வருமாறும், ஓரெழுத்தொரு மொழி முதலிய மொழிப் பாகுபாடும், மகரக் குறுக்கமும், ஐகார ஒளகாரங்களின் தோற்றமும், மொழிக்கு முதலாம் எழுத்துக்களும், ஈறாம் எழுத்துக்களும் பிறவும் உணர்த்துகிறது. பிறப்பியலானது உடம்பினகத்து எழுத்துக்கள் பிறக்கும் நிலைக்களங்களும், உறுப்புக்களும், அவற்றான் அவை வேறு வேறு பிறக்குமாறும், பிறவும் உணர்த்துகின்றது. புணரியலானது மெய்யும், உயிரும் இறுதியும் முதலுமாகவுள்ள சொற்கள் நிறுத்த சொல்லும் குறித்து வரு கிளவியுமாய் அல்வழி வேற்றுமைப் பொருளில் இயல்பும் திரிபுமெய்திப் பொது வகையாற் புணருமாறும், பெயருடன் ஐ முதலிய வேற்றுமையுருபுகளும், இன் முதலிய சாரியைகளும் புணருமாறும், எழுத்துக்களுடன் காரம் முதலிய சாரியைகள் புணருமாறும், பிறவும் உணர்த்துகின்றது. தொகை மரபானது மேல் உயிர் மயங்கியல் முதலியவற்றில் ஈறுகடோறும் விரிந்து முடியும் புணர்ச்சி விதிகளைத் தொகுத்து முடிக்கின்றது. இரண்டாம் வேற்றுமையும் மூன்றாம் வேற்றுமையும் மேல் வேற்றுமைக்குக் கூறும் முடிவு பெறாது திரிபெய்தி நிற்குமாற்றையும் இஃது உணர்த்துகின்றது. உருபியலானது பெயர்கள் வேற்றுமையுருபுகளுடன் புணரும்பொழுது சாரியைப் பேறெய்துமாற்றை விரித்துணர்த்து கிறது. உயிர்மயங்கியலானது உயிரீற்று மொழிகள் நின்று பெரும் பான்மை வன்கணத்தோடும், சிறுபான்மை ஏனைக் கணங் களோடும் அல்வழியினும் வேற்றுமையினும் புணருமாற்றை விரித்துணர்த்துகின்றது. புள்ளிமயங்கியலானது மெய்யீற்று மொழிகள் நின்று பெரும்பான்மை வன்கணத்தோடும், சிறுபான்மை ஏனைக்கணங்களோடும் புணருமாற்றை விரித் துணர்த்துகின்றது. குற்றியலுகரப் புணரியலானது குற்றிய லுகரத்தின் வகையும், அவை நின்று வருமொழியோடு புணரு மாறும் உணர்த்துகின்றது. ஒன்று முதலாகிய குற்றுகர வீற்று எண்ணுப் பெயர்கள் நின்று எண்ணுப் பெயரோடும் பிற பெயர் களோடும் புணரும் முறைமையை இது விரித்துணர்த்து கின்றது. எழுத்ததிகாரத்தில் நிறுத்த சொல்லும் குறித்து வரு கிளவியுமாக வைத்துப் புணர்க்கப்படாத சொற்கள் இவையென் பதனையும் இஃதுணர்த்துகின்றது. சொல்லதிகாரத்தின் இயல்கள் கிளவியாக்கம், வேற்றுமை யியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, பெயரியல், வினை யியல், இடையியல், உரியியல், எச்சவியல் என்பன. கிளவியாக்க மானது சொல்லும் பொருளும் இருதிணை ஐம்பாலாகப் பாகுபடுமாறும், சில திணை பால் இடம் மரபு முதலியவற்றின் வழாநிலை, வழுவமைதிகளும் உணர்த்துகின்றது. வேற்றுமை யியலானது எட்டு வேற்றுமைகளின் பெயரும் முறையும் முதலியன கூறி, விளியொழிந்த ஏனை வேற்றுமைகளின் பொருள் விகற்பங்களை விரித்துணர்த்துகின்றது. வேற்றுமை மயங்கிய லானது வேற்றுமையுருபுகள் தம்பொருளிற் றீராது பிறவற்றின் பொருளிற் சென்று மயங்கும் பொருண் மயக்கமும், தம்பொருளிற் றீர்ந்து பிறவற்றின் பொருளிற் சென்று மயங்கும் உருபு மயக்கமும், வினை நிகழ்ச்சியின் எட்டுக் காரணங்களும், ஆகு பெயரின் வகைகளும், பிறவும் உணர்த்துகின்றது. விளிமரபானது விளியின் பொதுவிலக்கணமும், உயர்திணைப் பெயர், அஃறிணைப் பெயர், விரவுப் பெயர்களில் இவ்வீறு இவ்வாறு விளியேற்குமென்பதும், விளியேலாப் பெயர்கள் இவையென்பதும் உணர்த்துகின்றது. பெயரியலானது நால்வகைச் சொற்குமுரிய சில பொதுவிலக்கணங்களும், பெயர்ச்சொல்லின் பாகுபாடும், இலக்கணமும் உணர்த்துகின்றது. வினையியலானது வினைச் சொல்லின் பாகுபாடும், இலக்கணமும், காலவழாநிலை வழுவமைதிகளும், ஒரு சார் மரபு வழுவமைதியும் உணர்த்து கின்றது. இடையிய லானது இடைச்சொல்லின் பாகுபாடும், ‘மண்’ முதலிய இடைச்சொற்கள் பொருள் குறிக்குமாறும், இரட்டித்து நின்று அசை நிலையாவனவும் பொருள் குறிப்பனவும் இவையென்பதும் உணர்த்துகின்றது. உரியியலானது இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றி ஒரு சொல் பல பொருட்கு உரிமையாதலும் பல சொல் ஒரு பொருட்கு உரிமையாதலும் உடைய உரிச் சொற்கள் பலவும், அவற்றின் பொருளும், சொற்களின் பொருள் உணருமாறும், அதனை யுணர்த்து முறைமையும் உணர்த்துகின்றது. எச்சவியலானது முற்கூறிய எட்டியலுள்ளும் உணர்த்துதற்கு இடமின்றி எஞ்சி நின்ற சொல்லிலக்கணங்களைத் தொகுத்துணர்த்துகின்றது. செய்யுட்குரிய இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வட சொல் என்பவற்றின் இலக்கணங்களும், வலிக்கும் வழிவலித்தல் முதலிய செய்யுள் விகாரங்களும், நிரனிறை, சுண்ணம், அடிமறி, மொழிமாற்று என்னும் பொருள் கோள்களின் இலக்கணங்களும், வேற்றுமைத் தொகை முதலிய அறுவகைத் தொகைகளின் இலக்கணங்களும், பிரிநிலை முதலிய பத்து வகை எச்சங்களும், அவற்றின் முடிவுகளும், சில வினைச் சொற்கள் அசைநிலையா மாறும், சில வழாநிலை வழுவமைதிகளும், பிறவும் இஃது உணர்த்துகின்றதென்க. பொருளதிகாரத்தின் இயல்கள் அகத்திணையியல், புறத் திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் என்பன. அகத்திணை யியலானது அகத்திணை ஏழன் பெயரும், அகனைந்திணையின் முதல் கரு உரிப்பொருள்களும், அகப்பொருட்டலை மக்களாவார் இவரென்பதும், ஓதற்பிரிவு முதலிய பிரிவுகளின் வரையறைகளும், நற்றாய், தோழி, கண்டோர், தலைவன் என்பவர்க்குக் கூற்று நிகழுமிடங்களும், உள்ளுறையுவமமும், கைக்கிளை பெருந் திணைகளின் இலக்கணங்களும், பிறவும் உணர்த்துகின்றது. புறத்திணையியலானது புறத்திணை ஏழன் பெயரும் இலக்கணமும் அவற்றின் பகுதியாகிய துறைகளும் உணர்த்து கின்றது. பாடாண்டிணையில் ஒருபகுதியாகக் கடவுள் வாழ்த்து வகைகளை உணர்த்துகின்றது. களவியலானது களவு இன்னதென்பதும், தலைமக்கள் எதிர்ப்பாட்டின் காரணமும், காட்சி முதலியன நிகழுமாறும், இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற்கூட்டம், தோழியிற் கூட்டம் என்னும் களவுக் கூட்டம் நான்கும், தோழியிற் கூட்ட வகைகளும், எண்வகை மணமும் அகத்திணையேழனுள் இன்னவாறு அடங்கு மென்பதும், களவென்னும் கைகோளில் தலைவன், தலைவி, தோழி, செவிலி என்போர்க்குக் கூற்று நிகழுமிடங்களும், களவு வெளிப்படுமாறும், பிறவும் உணர்த்துகின்றது. கற்பியலானது கிழவன் கிழத்தியை மணத்தலாகிய கற்பின் இலக்கணமும், முனிவர் கரணம் யாத்தவாறும், கற்பென்னும் கைகோளில் தலைவன், தலைவி, தோழி, செவிலி, அறிவர், கூத்தர், பார்ப்பார் முதலியோர்க்குக் கூற்று நிகழுமிடங்களும், ஓதற் பிரிவு முதலியவற்றின் காலவரையறையும், தலைவனும் தலைவியும் துறவறம் நிகழ்த்தி வீடுபெறுமாறும், பிறவும் உணர்த்துகின்றது. பொருளியலானது அகப்பொருட்குரிய வழுவமைதிகள் பலவும் உணர்த்துகின்றது. மெய்ப்பாட்டியலானது அகத்திற்கும் புறத் திற்கும் பொதுவாகிய எண்வகை மெய்ப்பாடுகளும், அவை ஒவ்வொன்று நான்காமாறும், அவை போல் வேறு முப்பத்திரண்டு மெய்ப்பாடுகளும், அகப்பொருட்கேயுரிய மெய்ப்பாட்டின் வகை களும், பிறவும் உணர்த்துகின்றது. உவமவியலானது உவமத்தின் இலக்கணமும், வகையும், நிலைக்களனும், சில உவம விகற்பங்களும், உவமவுருபுகளும், தலைவி முதலாயினார் இன்னின்னவிடத்து உள்ளுறையுவமம் கூறற்குரியாரென்பதும், பிறவும் உணர்த்துகின்றது. செய்யுளியலானது நல்லிசைப் புலவர் செய்யுட்களில் தனிநிலைச் செய்யுட்கு உறுப்பாக வரும் மாத்திரை முதலாய இருபத்தாறும், பெரும்பான்மையும் தொடர் நிலைச் செய்யுட்கு உறுப்பாக வரும் அம்மை முதலிய எட்டு வனப்பும், கூறு முகத்தாற் செய்யுளிலக்கணம் உணர்த்துகின்றது. அடிவரையில்லாத அறுவகைச் செய்யுளும் உணர்த்துகின்றது. மரபியலானது இளமைப் பெயர், ஆண்பாற் பெயர், பெண்பாற் பெயர்களில் இன்னின்னவை இன்னின்னவற்றுக்கு உரியவென்பதும், ஓரறிவுயிர் முதலிய உயிர் வகைகளும், புல், மரம் என்பவற்றுள் வரும் மரபுப் பெயர்களும், அந்தணர் முதலியோர்க்குரிய சில முறைமைகளும், இருவகை நூல், காண்டிகை, உரை என்பவற்றின் இலக்கணங்களும், நூற்குற்றம் பத்தும், உத்தி முப்பத்திரண்டும் உணர்த்துகின்றது. தொல்காப்பியம் தோன்றியதற்கு நீண்ட நாளின் முன்பே தமிழ் மொழியும், தமிழரும் உயரிய நிலையில் இருந்திருக்க வேண்டுமென்பதற்கு அதிற் காணப்படும் ஆதரவுகள். தொல்காப்பியத்திலே பலவிடத்தும் ‘என்மனார் புலவர்’ என்று முன்னை யாசிரியர்களின் துணிவு கூறப்படுதலை நோக்கின் அதற்கு முன்பே தமிழிலக்கண நூல் பல இருந்திருத்தல் தேற்றம். ‘நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே’ ‘நுனித்தகு புலவர் கூறிய நூலே’ என வருபவை போல்வனவற்றால் முன்னை நூலாசிரியர்களின் பெருமையும் புலனாகும். ‘தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சமொடு’ எனவும், ‘தோலென மொழிப தொன்மொழிப் புலவர்’ எனவும் வருவன தொல்காப்பியம் தோன்றுதற்குப் பல நூற்றாண்டுகளின் முன்பே தமிழ் மொழியும் தமிழாசிரியரும் சிறந்திருந்தமை காட்டும். இங்கே குறிக்கப் பெற்றோர் இலக்கண ஆசிரியர்களென்பதனையும், ஓர் மொழியில் விழுமிய இலக்கணந் தோன்ற வேண்டுமாயின் அதற்கு முன்பே வழக்கும் செய்யுளும் சிறந்திருத்தல் வேண்டுமென்னும் உண்மையினையும் கொண்டு நோக்கின். தமிழ் மொழியானது தொடக்கம் கண்டுணரலாகாத அத்துணைப் பழமையுடையதென்பது பெறப்படும். தொல்காப்பியத்திற் பயின்றுள்ள சொற்கள், சொற்றொடர்கள், அது கூறும் செய்யுட்கள், பொருள்கள் என்பவற்றை உய்த்துணரினும் அவை அத்தகைய திருந்திய நிலை யெய்துதற்குப் பல நூற்றாண்டுகள் சென்றிருக்க வேண்டுமென்னும் உண்மை புலனாகும். எடுத்துக் காட்டாகத் தொண்ணூறு, தொள்ளாயிரம் என்னும் எண்ணுப் பெயர்களைக் காண்க. ஒன்பது பத்து தொண்ணூறு எனவும், ஒன்பது நூறு தொள்ளாயிரம் எனவும் ஆயினமைக்கு ஆசிரியர் கூறியிருக்கும் திரிபு விதி மொழி நூலியற்கையோடு பொருந்து வதன்றாயினும், அவற்றின் தோற்றரவு உணரலாகாவாறு அவர்க்கு நெடு நாளின் முன்பே அச்சொற்கள் அந்நிலைமை யெய்தி விட்டன என்பது புலனாமன்றோ? தமிழ் மக்களின் பழைய உயரிய நிலை இவ்வாராய்ச்சிகளின் அறுதியிற் கூறப்படுமாகலின், ஈண்டு இரண்டு குறிப்புக்கள் மாத்திரம் எடுத்துக்காட்டுவல். ‘போந்தை வேம்பே ஆர் என வரூஉம், மாபெருந் தானையர் மலைந்த பூவும்’ ‘வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்’ என்னுந் தொடர்கள் தமிழ்நாட்டு மூவேந்தர்களையும், அவர்களுடைய மாலை, தானை, நிலம் என்பவற்றையும் குறிப்பிடுகின்றன. மூவேந்தர் ‘வண்புகழ் மூவர்’ எனவும், தமிழ்நிலம் ‘தண்பொழில் வரைப்பு’ எனவும் புகழ்ந்துரைக்கப்பட்டிருத்தல் சிந்திக்கற்பாலது. வண்புகழுடைய ரெனவே அதற்குக் காரணமாய கொடை அளி செங்கோல் குடியோம்பல் முதலிய இறைமாட்சியனைத்தும் உடைய ரென்பதும் பெறப்படும். ஒரு நாட்டின் அரசியல் திருந்திய நிலையில் இருப்பது அந்நாட்டினதும், அந்நாட்டு மக்களதும் உயர்வைக் காட்டும் குறியாகும். அதனாற்றான், “ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே வேந்தமை வில்லாத நாடு” எனத் தெய்வப் புலமைத் திருவள்ளுவனாரும் கூறினர். சேக்கிழார், பெரியபுராணத்திலே சோணாட்டின் சிறப்புகளைக் கூறிவந்து, முடிவில், “நற்றமிழ் வரைப்பி னீங்கு நாம்புகழ் திருநா டென்றும் பொற்றடந் தோளால் வையம் பொதுக்கடிந் தினிது காக்கும் கொற்றவ னநபாயன் பொற் குடைநிழற் குளிர்வருதேறா மற்றதன் பெருமை நம்மால் வரம்புற விளம்ப லாமோ” என்று கூறியிருக்கும் செய்யுளின் கருத்தும் ஈண்டு அறிந்து மகிழ்தற்குரியது. வடமொழியிலுள்ள வேதம் முதலாய கலை களையும், தமிழ் நூல்களனைத்தையும் நன்குணர்ந்த பரிமேலழகர் திருக்குறளுரையிலே ‘சேர சோழ பாண்டியர் என்றாற்போலப் படைப்புக் காலந்தொடங்கி மேம்பட்டு வருங்குடி’ எனச் சிறப்பித்தோதிய மூவேந்தர் புகழ் கூறப்படவே தொல்காப் பியர்க்கு முன்பு தொட்டுள்ள தமிழ் மக்களின் உயர்வும் தானே பெறப்படும் என்க. இனி, ஒரு நாட்டின் உயர்வெல்லாம் அந்நாட்டு மக்களின் குணவொழுக்கச் சிறப்பேயாகும். மக்களுள்ளே மக்களின் பண்பு அறியப்படின் அது கொண்டே ஏனையர் பண்பும் அறியப்பட்டதாகும் என்ப. பண்டு தமிழ் நாட்டு மகளிர் பண்பு எங்ஙனம் இருந்ததென்பது “உயிரினும் சிறந்தன்று நாணே நாணினும் செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந் தன்றெனத் தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சமொடு” எனத் தொல்காப்பியரும் கூறுவதனாற் புலப்படும். பிற பண்புகளும் பின்னர்க் காட்டப்பெறும். இங்கு எடுத்துக் காட்டியவற்றிலிருந்தே தொல்காப்பியந் தோன்றுதற்கு நெடுநாளின் முன்னரே தமிழும் தமிழரும் உயர்நிலை யெய்தியிருந்தமை அங்கை நெல்லியென நன்கு விளங்கும். எழுத்தாராய்ச்சியும் சொல்லாராய்ச்சியும் தமிழ் எழுத்துக்களின் தொகையும் முறையும் உருவமும்: “எழுத்தெனப்படுப அகரமுதல னகர விறுவாய் முப்பஃ தென்ப சார்ந்துவரன் மரபின் மூன்றலங் கடையே” என்னும் தொல்காப்பிய முதற் சூத்திரத்தால் தமிழெழுத்துக் களின் தொகை முப்பத்து மூன்று என்பது பெறப்படும். அகர முதல் ஒளகாரம் ஈறாகவுள்ள பன்னிரண்டும் உயிரெழுத் துக்கள். ககர முதல் னகரம் ஈறாகவுள்ள பதினெட்டும் மெய் யெழுத்துக்கள். இம்முப்பதெழுத்துக்களையும் முதலெழுத் தென்ப. குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்னும் மூன்றும் சார்பெழுத்துக்கள். இம்மூன்றும் உயிர்போலத் தனித்தும் மெய்போல அகரத்தோடு கூடியும் இயங்குதலின்றி ஒரு மொழியைச் சார்ந்தே வரும் இயல்பினவாகலின் சார்பெழுத் தெனப்பட்டன. இது பற்றியே இவை தோன்று மாற்றை ஆசிரியர் மொழி மரபின்கண் கூறினாரென்க. குற்றியலிகரம் குற்றியலுகரம் என்பன இகர உகரங்களின் குறுக்கமாகலின் இவற்றை வேறு கூற வேண்டிய தென்னையெனின், இவை முன்னர் ஒரு மாத்திரை யாய் நின்று பின்னர் ஒரு காரணம்பற்றி அரை மாத்திரையாகாது என்றும் ஒரு மாத்திரையாயே நிற்கும் ஒரு தன்மையினவாகலின் இவற்றை வேறு எழுத்துக்களாக ஆசிரியர் வேண்டினாரென்க. இவற்றிற்குக் குற்றிகரம், குற்றுகரம் என்று பெயர் கூறியொழியாது, ‘இயல்’ என்பது சேர்த்து ‘குற்றிய லிகரம்’, ‘குற்றியலுகரம்’ எனக் குறிப்பிட்டிருத்தலும் கருதற்பாலது. உயிர்மெய், உயிரளபெடை, ஒற்றளபெடை, ஐகாரக் குறுக்கம், ஒளகாரக் குறுக்கம், மகரக் குறுக்கம், ஆய்தக் குறுக்கம் என்பவற்றை விடுத்துச் சார்பெழுத்து மூன்றென்றது என்னையெனின் கூறுவல். ‘ஆல்’ என்புழி உயிர்முன்னும் மெய்பின்னும் நின்று மயங்கினாற்போல் ‘லா’ என்புழியும் மெய்முன்னும், உயிர் பின்னும் நின்று மயங்கினவே யல்லது’ உயிரும் மெய்யுமாகிய தம் தன்மை திரிந்து வேறாயின வல்ல: “மெய்யோடியையினும் உயிரியல் திரியா” என்றற் றொடக்கத்துச் சூத்திரங்களும் அதற்குச் சான்றாகும். தினை என்பது மெய் முதல் உயிரீற்றுச் சொல் எனவும், வரகு என்பது உயிர்த்தொடர் மொழிக் குற்றியலுகரம் எனவும் கொள்வதன்றி, உயிர் மெய் முதல் உயிர்மெய் ஈற்றுச் சொல் எனவும், உயிர் மெய்த் தொடர் மொழிக் குற்றியலுகர மெனவும் கொள்ளாமையுங் காண்க. இவ்வாற்றால் உயிர் மெய் ஓரெழுத்தாகாமை பெறப்படும். அளபெடையிரண்டும் ஒரு காரணம் பற்றி நீண்டொலிப்பனவே ஆகலின் அவை வேறெழுத்தாகா. ஐகாரக் குறுக்கம் முதலியனவும் இயற்கையாகக் குறுகியிசைப்பனவல்ல வாகலின் ஓரெழுத்தாகா. அங்ஙனமாகலின், பின்னுளோர் கொண்ட ஆய்தக் குறுக்கமென்பதொழித்து ஏனைய வெல்லாவற்றையும் ஆசிரியர் எடுத்தோதினராயினும் அவற்றை வேறெழுத்தாகக் கொண்டு சார்பெழுத்தென வேண்டினாரல்லர். வடநூலாரும் உயிர்மெய், உயிரளபெடை, ஐகாரக் குறுக்கம் முதலியவற்றை வேறெழுத்தெனக் கொள்ளாமை யுணர்க. பின்வந்த நன்னூலார் முதலாயினார் எழுத்தினியல்பை நோக்காது வேறெக் காரணத்தானோ அவற்றையும் சார்பெழுத் தென்பாராயினர். இனி ஒரு சாரார் தெங்கு, இஞ்சி, வண்டு, பந்து, செம்பியன் என்பவற்றிற் போல மெல்லெழுத்தை அடுத்துள்ள வல்லெழுத்துக்களின் ஓசைக்கும், செகுத்த, பசித்த என்பவற்றில் இயல்பாக மென்மையாய் ஒலிக்கும் வல்லெழுத்தோசை முதலியவற்றிற்கும் வேறு தனியெழுத்துக்கள் இல்லாமையால் தமிழ் நெடுங்கணக்கானது எழுத்துக் குறைபாடுடையது என்பர். ககரம் முதலிய வல்லெழுத்துக்கள் தனித்தும், பிறவெழுத்துக் களோடு கூடி ஒலிக்கும் ஒலியும் வெவ்வேறு இயல்பினவாயின் பின்னது இயற்கையொலியன்றென்பது பெறப்படும். மெல் லெழுத்தோடு கூடாதே வேறுபட ஒலிப்பதுண்டாயின் அது அதனைப் பேசும் மக்களின் சோர்வு முதலியவற்றால் உண்டா வதேயாம். அவ்வொலி எவ்விடத்தும் ஒரு பெற்றியே நிகழ் வதாகக் கொள்ளுதல் அமையாது. இங்ஙனம் பிறவெழுத்துக் களின் சேர்க்கையாலெழும் செயற்கையொலிக்கும், சோர்வு முதலியவற்றாலெழும் போலியொலிக்கும் தனித்தனி எழுத்துக்கள் அமைப்பதாயின் நாட்குநாள் எழுத்துக்கள் வரம்பின்றிப் பல்கி மரபுநிலை திரிந்து முன் முன்னுள்ள வழக்கும் செய்யுளுமெல்லாம் பொருளறிய வாராவாய்க் கழியும் என்பதனை அறிதல் வேண்டும். அன்றியும் தெங்கு, இஞ்சி முதலியவற்றிலுள்ள ஒலிகள் வேறெழுத்துக்கள் வேண்டாமலே யாதொரு இடர்ப்பாடுமின்றி இனிதின் இயன்று வரவும் அவற்றுக்கு வேறு எழுத்துக்கள் வகுக்க வேண்டுமென்பது பொருத்தமாகுமோ? தமிழ் நெடுங்கணக்கு வகுத்த முதலாசிரியர் தமது பேரறிவின் திறத்தால் தமிழிலுள்ள ஒலிகளின் பெற்றியை யெல்லாம் நுனித்துணர்ந்து எழுத்துக்கள் வகுத்த அடைவை ஓர்ந்துணராது பிறர் தமக்குத் தோன்றியவாறெல்லாம் எழுத்துக்களை மிகுத்தலும் குறைத்தலும் செய்யவேண்டுமென்று கூறுவது பெரியதோரேதமாகுமென்க. தமிழ் மெய்யெழுத்துக்கள் வலி, மெலி, இடை யென மூன்று இனமாக, அவை ஒவ்வொன்றும் ஒரேயளவாக அவ்வாறு எழுத்துக்கள் பெற்றிருப்பதும், எழுத்துக்களின் பிறப்பியலும், பிறவும் நோக்கின் அவை பரந்த ஆராய்ச்சியும் சிறந்த காரணமும் கொண்டு அங்ஙனம் வகுக்கப் பெற்றனவா மென்பது போதரும். இனி, தமிழெழுத்துக்களின் கிடக்கை முறை இப்பொழுது போன்றே தொல்காப்பியர் காலத்தும், அதற்கு முன்னும் இருந்தது. அங்ஙனம் இருந்ததென்பது தொல்காப்பியத்து நூன்மரபிலும் பிறப்பியலிலுமுள்ள சூத்திரங்கள் பலவற்றை அணுகவைத்து நோக்கின் இனிது புலப்படும். அச்சூத்திரங்கள் ‘என்ப’ ‘எனமொழிப’ என ஆசிரியர் துணிவாக உரைத்தலின் தொல்காப்பியர்க்கு முன்னும் அங்ஙனமிருந்தமை தேற்றம். தமிழ் நெடுங்கணக்கு அம்முறையால் எப்பொழுது யாரால் வகுக்கப் பெற்றதென அறுதியிடுதல் அரிது. எனினும், தமிழெழுத்துக்களின் முறை வைப்பும் வடவெழுத்துக்களின் முறைவைப்பும் இருமொழியினும் சிறப்பெழுத்தொழிய நோக்கின் யாதும் வேறுபாடின்றி அமைந்திருத்தலின், தமிழ் வட மொழி இரண்டும் நன்குணர்ந்த ஆசிரியரொருவரால் ஒரு மொழியை நோக்கி மற்றொரு மொழிக்கண்ணும் அம்முறை யானே எழுத்துக்கள் அமைக்கப் பெற்றனவாமென்று கருதுதல் பொருந்தும். எழுத்துக்கள் சாரியை பெற்று வழங்குதற்கண்ணும் ‘பகாரம் மகாரம்’ என்றாற்போல இருமொழியிலும் ஒற்றுமையுளது. வடமொழியிலே ‘தலகாரம்’ என்றும், தமிழிலே ‘லளஃகான்’ என்றும் இரண்டெழுத்துக்குச் சாரியை யொன்றே வருதலும் சிறுபான்மையுண்டு. வடமொழியை நோக்கியே தமிழெழுத்துக்கள் முறைப் படுத்தப் பெற்றனவாயின் ஆசிரியர் அகத்தியனாரால் தமிழ் நெடுங்கணக்கு அங்ஙனம் வகுக்கப் பெற்றதாமெனக் கருதுதலும் இழுக்கன்று. ஆனால் வடமொழியெழுத்துக்கள் தொல்காப் பியர்க்கும் அகத்தியனார்க்கும் முன்னரும் அம்முறையால் வழங்கப் பெற்றனவென்பது துணியப்படினன்றி வடமொழி நோக்கித் தமிழெழுத்து முறை கொள்ளப் பெற்றதெனல் அடாது. வடவெழுத்துக்களை உணர்த்தும் மாகேச்சுர சூத்திரம் என்பவற்றில் உயிரெழுத்துக்களின் கிடக்கை முறை மாத்திரம் இப்பொழுது வழங்குமாறே காணப்படுகின்றது. முதலும் ஈறுங் கூட்டிப் பிரத்தியாகரித்து ‘அச்’ எனவும், ‘ஹல்’ எனவும் வடவெழுத்துக்கள் பெயரிடப்பட்டிருப்பது போலன்றி, தமிழ் எழுத்துக்கள் அவற்றினியல்பால் உயிர், மெய் என்பவற்றுடன் ஒத்திருத்தல் கண்டு உயிர் எனவும், மெய் எனவும் பெயரிடப் பட்டிருத்தலை நோக்கின் பிறரைக் காட்டினும் விழுமிய தத்துவ உணர்வு சான்றோரால் தமிழ்நெடுங்கணக்கு வகுக்கப்பெற்ற தாமெனல் போதரும் ஆகலின் தமிழை நோக்கியே வடவெழுத்து முறை தோன்றிற்றாமெனக் கருதுதலும் ஏற்புடைத்தே. இவற்றுள் யாது உறுதியுடைத்தென்பது இரு மொழியினும் வல்லுநரால் ஆராய்ந்து வெளியிடற் பாலது. இனி, தமிழ் எழுத்துக்களின் கிடக்கை முறைக்குரிய காரணங்கள் தொல்காப்பிய முதற் சூத்திர விருத்தியில் சிவஞான முனிவரால் நன்கு விளக்கப்பட்டுள்ளன. ஆண்டுக் காண்க. இனி, இவ்வெழுத்துக்கள் ஒலி வடிவும் வரி வடிவும் என இருவகை வடிவுடையன. சிலர் எழுத்துக்களை உணர்வெழுத்து, ஒலியெழுத்து, தன்மையெழுத்து, உருவெழுத்து என்றும், பிறவாறும் பாகுபடுத்துரைப்பர். இவற்றுள் உணர்வெழுத் தாவது சிவாகமங்களில் உணர்த்தப்படும் சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி என்னும் நால்வகை வாக்குள் மத்திமைத் தானத்து உணர்ச்சியளவாக இருக்கும் எழுத்தென்றும், ஒலி யெழுத்தாவது தன் செவிக்கே கேட்கும் வைகரியென்றும். தன்மை எழுத்தாவது பிறர் செவிக்குக் கேட்கும் ஒலியுடைய வைகரி யென்றும், உருவெழுத்தாவது செவிப்புலனாம் ஒலியெழுத்தை அறிதற்குக் கருவியாக ஓவியம் போல் எழுதப்படுவதாமென்றும் கொள்க. இவற்றுள் உணர்வு, ஒலி, தன்மை என்னும் மூன்றும் ஒலியென்றே கொள்ளற்பாலன. எனவே எழுத்துக்கள் ஒலியெழுத்து எனவும், உருவெழுத்து எனவும் இரு வகையாகும். ஒலியெழுத்தாவது உயிரின் முயற்சியால் உந்தியிலுள்ள உதானன் என்னுங் காற்று நெஞ்சு, மிடறு, தலை என்னும் இடங்களிற் சென்று நிலைபெற்று அவற்றுடன் பல், இதழ், நா, மூக்கு, அண்ணம் என்னும் உறுப்புக்களுடன் கூடுதலால் வேறு வேறு ஒலியாகத் தோன்றுவதாம். தமிழெழுத்துக்கள் யாவும் இங்ஙனம் பிறக்குமாறு தொல்காப்பியத்திலே பிறப்பியலிற் கூறப்பட்டுள்ளது. இவ்வொலிவடிவேதான் நூல்களிற் பெரும்பாலும் எழுத்தென்று வழங்கப்படுவதாகும். உருவெழுத் தாவது கீற்றும் புள்ளியுங் கொண்டு கட்புலனாகத் தோன்றுமாறு எழுதப்படுவதாம். ஒலியெழுத்தின்றி இதற்கு நிலைபேறின்மை யானும், இஃதின்றியே ஒலியெழுத்திற்கு இயக்கமுண்டாகலானும், ஓரெழுத்தொலிக்கே வெவ்வேறு மொழியாளர் வெவ்வேறு வடிவமைத்துக் கொள்வராகலானும் இஃது அத்துணைச் சிறப்புடைத்தன்று. அதனாற்றான் ஆசிரியர் தொல்காப்பியனார் தமிழ் எழுத்துக்கள் எல்லாவற்றுக்கும் வடிவு கூறாது சிலவற்றுக்குச் சிறுபான்மை வடிவு கூறினார். நூன் மரபிலே மெய்களும், எகர ஒகரங்களும் புள்ளிபெறும் என்றும், மகரத்திற்கு உட்பெறு புள்ளி உருவாகும் என்றும், ஆய்தத்தை முப்பாற்புள்ளி என்றும் கூறியிருப்பதும், மெய்யும் உயிரும் கூடியவிடத்து அவை திரியாதும் திரிந்து நிற்குமெனப் பொதுப்படக் கூறியிருப்பது மன்றி, வேறு வடிவு கூறப்படாமை காண்க. சிலர் குற்றியலிகர, குற்றியலுகரங்கட்கும் புள்ளியுண்டென்பர். தொல்காப்பியச் சூத்திரங்கள் சில அவ்வாறு கருதுதற்கும் இடஞ்செய்து நிற்றலே அவர் அங்ஙனம் கூறுதற்குக் காரணமாகும். எனினும், அவற்றிற்குப் புள்ளி உண்டென்று துணிந்துரைக்கத் தொல்காப்பியத்திலே போதிய சான்றில்லை. ஆசிரியர் இங்ஙனம் சிறுபான்மையே வடிவு கூறினாராயினும், கூறியவற்றிலிருந்தே அக்காலத்தில் தமிழெழுத்துக்கள் வரி வடிவில் எழுதப் பெற்று வந்தன என்னும் உண்மை பெறப்படுகின்றது. ஒலியெழுத்தை நோக்க வடிவெழுத்துச் சிறப்பிலதென்று முன் கூறப்பட்டதாயினும் வடிவெழுத்தின் பயன் சிறிதென்று கருதலாகாது. மொழி வளர்ச்சிக்கும், அம்மொழியைப் பேசும் மக்களின் நாகரிக வளர்ச்சிக்கும் வடிவெழுத்துச் சிறந்த கருவியாகும். தமிழெழுத்துக்களின் ஒலி வடிவும், வரி வடிவும் ‘எழுத்து’ என்னும் ஒரு பெயராலேயே வழங்குகின்றன. இச்சொல் ‘எழு’ என்னும் பகுதியடியாகப் பிறந்திருப்பின் ஒலிவடிவைக் குறிப்பது பொருந்தும். அன்றேல் எழுத்து வரையறையும் அவை எழுதப்படுதலும் ஒருங்கு தோற்றிய காரணத்தால் வரி வடிவைக் குறிக்கும் அப்பெயரே ஒலி வடிவிற்கும் ஆயிற்றென்று கொள்ளுதல் வேண்டும். தொல்காப்பியத்திலே ‘அந்தரத்தெழுதிய எழுத்தின்மான’ என்னுந் தொடரில் ‘எழுதிய’ என்னும் வினை கொடுக்கப் பட்டிருத்தலின் எழுது என்னும் முதனிலையிலிருந்து எழுத்து என்னும் பெயருண்டாயிற்றென்பதே பெரிதும் பொருத்தமாம். இனி, தமிழ் வடிவெழுத்துக்களின் வரலாறாகப் பிறர் கூறியிருப்பன சில ஆராய்தற்குரியன. மொழி நூல் ஆராய்ச்சி யாளர்கள் பண்டு கல்வெட்டுக்களிலும் செப்புப் பட்டயங் களிலும் பொறிக்கப்பட்டுள்ள தமிழ் எழுத்துக்களுக்கு வட்டெழுத்து என்று பெயர் கொடுத்து வழங்கி வருகின்றனர். ஐரோப்பியப் புலவர்களுள்ளே ‘டாக்டர் கால்டுவல்’, ‘டாக்டர் பூலர்’ முதலிய சிலர் தமிழ் வட்டெழுத்துக்கள் இந்திய நாடு முழுதும் வழங்கிய பிராமி என்னும் அசோக எழுத்துக்களிலிருந்து வந்தனவாம் என்பர். தமிழ் எகர ஒகரங்கட்கும் ஏகார ஓகாரங்கட்கும் வடிவு வேற்றுமையில்லாமை அவை பழைய வடவெழுத்துக்களினின்று வந்தன என்பதற்குச் சான்றாகும் என்று ‘கால்டுவல்’ கூறுகின்றனர். மிஸ்டர் இ. தாமஸ் ‘டாக்டர் ரைஸ் டேவிட்ஸ்’, ‘டாக்டர் பர்னல்’ என்னும் ஐரோப்பிய ஆசிரியர்கள் இந்தியாவில் வழங்கும் எழுத்துக்கள் எவ்விதத்திலும் ஆரியருடையனவல்லவென்றும், கி.மு. 7 அல்லது 8ஆம் நூற்றாண்டில் தமிழ் வர்த்தகர்களால் இந்தியாவில் வழங்கச் செய்தனவாகுமென்றும் கிடைத்துள்ள எல்லா ஆதரவுகளும் உறுதிப்படுத்துகின்றன என்கின்றனர். இந்து ஆரிய இலக்கணக் காரர்களின் வருகைக்கு முன்பே தமிழ் நெடுங்கணக்கு திருந்திய நிலையில் இருந்ததென்றும், தமிழ் வட்டெழுத்து அசோக எழுத்தினின்றும் வந்ததன்றென்றும் அவர்கள் உறுதியாக மொழிகின்றனர். இக்கொள்கையே திரு. சுவாமி வேதாசலம் அவர்களால் தமது நூற்கள் சிலவற்றில் வலியுறுத்தப்படுகின்றது. திரு.எம். சீனிவாசையங்காரவர்கள் ‘தமிழாராய்ச்சிகள்’ என்னும் தம் நூலின் கண்ணே வட்டெழுத்துக்கள் தமிழர்க்குரியனவே யன்றி வடநாட்டில் வழங்கிய அசோக எழுத்துக்களின் திரிபல்லவென்றும், கால்டுவெல் கூறுகிறபடியன்றி ஏகார ஓகாரங்களோடு வேற்றுமை தெரிய எகர ஒகரங்களுக்குப் புள்ளியுண்டென்று தொல்காப்பியர் கூறுதலாலும், ப,ம, என்னும் எழுத்துக்கள் பிராமி எழுத்துக்களிலும் வட்டெழுத்துக் களிலும் வேறுபட்டிருத்தலாலும் கால்டுவெல் முதலாயினோர் கொள்கை பொருந்தாது என்றும், கி.மு. 15 ஆம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் பினீஷியர், எகிப்தியர்களுடன் வாணிகத்தால் கலந்திருத்தலால் எகிப்தியருடைய எழுத்து முறையைத் தமிழர் அந்நாளிலேயே கொணர்ந்திருக்க வேண்டுமென்றும், இந்திய ஆரியர் இவ்வெழுத்து முறையைத் தமிழரிடமிருந்து பெற்றிருத்தல் கூடுமென்றும் கூறி, தாமஸ்,டேவிட்ஸ், பர்னல் என்பவர்களின் கொள்கையே வலியுடைத்தாமென வற்புறுத்துகின்றனர். திரு.பா.வே. மாணிக்க நாயக்கர் அவர்கள் தமது ‘தமிழ் மறை விளக்கம்’ என்னும் நூலிலே, வட்டெழுத்துக்கள் என்பன பல்லவ மன்னர் காலத்தில் சில நூற்றாண்டுகளே வழங்கின என்றும், அவை அசோக னுடைய ‘பாலி’ மொழி அறிந்தவர்களும், தமிழ் நன்கு அறியாத வர்களுமான கற்றச்சர்களால் பொறிக்கப்பட்டமையின் சிற்சில தமிழெழுத்துக்களுக்குப் பிரதியாகப் பாலி எழுத்துக்களைக் கலந்து பொறித்து விட்டனரென்றும், பல்லவர் காலத்துக்கு முன்னும் பின்னும் உள்ள தமிழ் எழுத்துக்களுக்கும் வட்டெழுத்துக்கும் தொடர்பு இல்லையென்றும், இப்பொழு துள்ள தமிழின் எழுத்துக்கள் கி.மு. நான்காம் நூற்றாண்டுக்கு முந்தியதாகிய தொல்காப்பியக் காலந்தொடங்கி ஒரு பெற்றியே உள்ளன என்றும் கூறுகின்றனர். தொல்காப்பியத்திற்கு முன்பு தொட்டுள்ள தமிழ் எழுத்துக்கள் வட்டெழுத்து என்னும் பெயர்க்கு உரியவாயினும் அல்லவாயினும் அவை அசோகனுடைய பாலி எழுத்துக்களினின்று உண்டானவையல்ல வென்பது தேற்றம். கி.மு. மூன்றாம் நூற்றாண்டுத் தொடங்கியே வழங்கி வந்த பாலி (பிராமி) எழுத்தினின்று கி.மு. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பு தொட்டுள்ள தமிழ் எழுத்துக்கள் உண்டாயின வென்று கூறுவது எங்ஙனம் பொருந்தும்? இனி, தமிழெழுத்துக்கள் பிராமி அசோக எழுத்துக்களினின்று வந்தனவல்லவாயினும், அவை தமிழராலேயே முதலில் உண்டாக்கப் பெற்றனவோ அல்லது சில ஐரோப்பிய ஆசிரியர் முதலாயினார் கருதுமாறு வேற்று நாட்டவராகிய எகிப்தியரிடமிருந்து அறிந்து கொள்ளப் பெற்றனவோ என்பது துணிந்துரைக்கற்பாலதன்று. தமிழர் வேற்றுநாட்டவரிடமிருந்தே எழுத்தினை அறிந்தாரென்பதற்கு உறுதியான சான்றுகள் இல்லாத வரையில் தமிழெழுத்துக்கள் தமிழர் தாமாகவே அறிந்து உண்டாக்கியன வென்று கொள்வதே முறையாகும். இனி, உயிர்மெய்களின் வடிவு வேற்றுமை குறித்துத் தொல் காப்பிய உரைகாரர்கள் எழுதியிருப்பன ஈண்டு அறிதற்குரியன. ‘உருவுதிரிந்துயிர்த்தல் மேலும் கீழும் விலங்கு பெறுவன விலங்கு பெற்றுயிர்த்தலும், கோடு பெறுவன கோடு பெற்றுயிர்த்தலும், புள்ளி பெறுவன புள்ளி பெற்றுயிர்த்தலும், புள்ளியும் கோடும் உடனே பெறுவன உடன் பெற்றுயிர்த்தலும் எனக்கொள்க’ என இளம்பூரணர் கூறினர். நச்சினார்க்கினியரும் இங்ஙனம் கூறிய தனோடு மேலும் இதனை விளக்கி ‘கி, கீ’ முதலியன மேல் விலங்கு பெற்றன. ‘கு, கூ’ முதலியன கீழ் விலங்கு பெற்றன. ‘கெ, கே’ முதலியன கோடு பெற்றன. ‘கா, ஙா’ முதலியன புள்ளி பெற்றன. அருகே பெற்ற புள்ளியை இக்காலத்தார் காலாக எழுதினார். மகரம் உட்பெறு புள்ளியை வளைத்தெழுதினார். ‘கொ, கோ, ஙொ, ஙோ’ முதலியன புள்ளியும் கோடும் உடன் பெற்றன என உரைத்தார். இவர்கள் இங்ஙனம் வடிவு காட்டியது தமக்கு முன்னிருந்த கல்வெட்டுக்களைக் கொண்டோ பிற ஆதரவுகளைக் கொண்டோ ஆதல் வேண்டும். நச்சினார்க்கினியர் எழுதியிருப்பதி லிருந்து ‘கா’ முதலியன அவர் காலத்திற்கு முன்பு அருகிற் புள்ளி பெற்றும், அவர் காலத்தில் கால் பெற்றும் இயங்கியமை புலனாகும். ‘கெ, கே’ முதலியன கோடு பெற்றன என்று கூறியிருப்பதால் முன்பு நேர் கோடாக இருந்ததே பின்பு வளைத்தெழுதப்பெற்றது எனப் புலப்படுகின்றது. இவர்கள் ‘கை கௌ’ முதலியவற்றின் வடிவு வேற்றுமை காட்டாது விட்டதன் காரணம் புலப்படவில்லை. கை முதலியன முன்பு இருகோடு பெறுமெனக் கொள்க. இவை இவ்வாறாகவே கல்வெட்டுக்களிற் காணப்படுகின்றன. கௌ முதலியவற்றின் பழைய வடிவு இன்னும் ஆராய்ந்து காணற்பாலது. இனி, பெயர், வினை, இடை, உரி எனத் தமிழ்ச்சொல் நால்வகைப்படும். ஆசிரியர் தொல்காப்பியனார், “சொல் லெனப்படுவ, பெயரே வினையென் றாயிரண்டென்ப அறிந்திசினோரே” “இடைச் சொற் கிளவியும் உரிச் சொற்கிளவியும் அவற்றுவழி மருங்கிற் றோன்று மென்ப” எனக் கூறியிருப்பது பெயர் வினைகளின் சிறப்பையும், இடை உரிகளின் சிறப்பின்மையையும் காட்டும். பெயர் வினைகளை யின்றி இடைஉரிகட்கு இயக்கமின்மை உணர்க. எனினும் அவர், “எல்லாச் சொல்லும் பொருள் குறித் தனவே” என்று கூறியிருப்பது ‘அசைநிலை’ முதலிய இடைச் சொற்களும் பொருளுணர்ச்சிக்கு ஒருவாறு துணையாவன என்பதை விளக்கும். பெயர்ச் சொல்லாவது இருதிணை ஐம்பாற் பொருளை உணர்த்தும் சொல்லாம். பயனிலை கொள்ளற்கும் உருபேற்றற்கும் உரித்தாதலும், காலந்தோற்றாமையும் பெயர்ச் சொல்லின் இலக்கணமாகும். உயர்திணைப் பெயர், அஃறிணைப் பெயர், விரவுப் பெயர் எனப் பெயர்ச்சொல் மூவகைப்படும். வினைச் சொல்லாவது பொருளின் புடை பெயர்ச்சியாகிய தொழிலை உணர்த்தும் சொல்லாம். தொழில் நிகழ்ச்சிக்கு வினை முதல், கருவி, இடம், காலம் என்பன இன்றியமையாதன. வேற்றுமை கொள்ளாமையும், காலம் தோற்றலும் வினைச் சொல்லின் இலக்கணமாகும். காலமும் செயலும் குறிப்பிற் பெறப்படுவன குறிப்பு வினையும், வெளிப்படையாக வுள்ளன தெரிநிலை வினையும் ஆகும். இவையும் உயர்திணை வினை, அஃறிணை வினை, பொது வினை என மூவகைப்படும். இவையெல்லாம் மூன்று காலமும், மூன்று இடமும், ஐந்து பாலும் பற்றியும், முற்று, பெயரெச்சம், வினையெச்சம் என்பன பற்றியும் பலவாகப் பாகுபடுமாறுங் காண்க. இடைச் சொல்லாவது பெயரும் வினையும் இடமாக அவற்றைச் சார்ந்து தோன்றும் சொல்லாம். இடை என்பது இடம் என்னும் பொருட்டு. இனி, பெயர் வினைகட்கு முன்னும் பின்னும் வருமாயினும் பெரும்பாலும் இடையே வருதலின் இடைச்சொல் எனப்பட்டது என்பாரும், பெயர்ச்சொல் வினைச்சொற்களுமாகாது அவற்றின் வேறுமாகாது இடை நிகரதாய் நிற்றலின் இடைச்சொல்லாயிற்று என்பாரும் உளர். இடைச்சொல் சாரியையும், வினையுருபும், வேற்றுமையுருபும், அசைநிலையும், இசைநிலையும், குறிப்பிற் பொருளுணர்த்துவதும், உவமவுருபும் என எழுவகைப்படும். குறிப்பிற் பொருளுணர்த்துதல் ‘மன்’ முதலியன ‘கழிவு’ முதலிய பொருளையுணர்த்துதல். நன்னூலார் பொருளுணர்த்துவதும் குறிப்பும் என இரண்டாகக் கொண்டு இடைச்சொல்லை எண்வகையாக்குவர். உரிச்சொல் லாவது இசை, குறிப்பு, பண்பு என்பவற்றை உணர்த்தும் சொல். இஃது ஒரு பொருளுணர்த்தும் ஒரு சொல்லும், ஒரு பொருளுணர்த்தும் பல சொல்லும், பல பொருளுணர்த்தும் ஒரு சொல்லும் என மூவகைப்படும். நன்னூலார் ‘பிங்கல முதலா நல்லோ ருரிச் சொலின்’ என்று கூறியிருப்பது கொண்டு சொல்லெல்லாம் உரிச் சொல்லே என்பர் பிரயோக விவேக நூலார். அவர், “வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா வெளிப்பட வாரா வுரிச்சொன்மேன” என்னும் சூத்திரத்தையும் தமக்காதரவாகக் கொண்டு ‘வெளிப் படவாராவுரிச்சொல்’ என்றமையால் ஏனையன வெளிப்பட வந்த உரிச்சொல்லென்பது பெற்றாம் என்பர். அங்ஙனம் கூறுவது, சொல்லெனப்படுவன பெயரும் வினையுமாகிய இரண்டுமே என்று அவற்றைச் சிறப்பித்துக் கூறி இடைச்சொல்லும் உரிச் சொல்லும் அவற்றைச் சார்ந்து தோன்றுமெனக் கூறிய தொல்காப்பியனார் கருத்துக்கும், ஏனையாசிரியன்மார் கருத்துக்கும் மாறாகலின் போலியென்றொதுக்கற்பாற்று. இனி உரிச்சொல் என்னும் பெயர்ப்பொருள் உணர்த் துவார் இசை குறிப்பு பண்பு என்னும் பொருட்கு உரிய சொல்லா கலின் உரிச்சொல்லாயிற்று என்பாரும், செய்யுட்குரிய சொல்லா கலின் உரிச்சொல் என்பாரும், பொருட்கு உரிமை பூண்டு வருதலின் உரிச்சொல் என்பாரும், பொருட்குப் பண்பு உரிமை பூண்டு நிற்றலின் அதனை உணர்த்துஞ் சொல் உரிச்சொல் எனப்பட்டதென்பாரும் ஆக உரைகாரர் பல திறத்தவராவர். வட நூலாசிரியர் ‘தாது’ என்று குறிப்பிட்ட சொற்களே இவை யென்பர் தெய்வச் சிலையார். இக்கருத்து ஒருசார் பொருத்த முடைத்தாகும் என்க. இனி தமிழ் மொழியானது மிக்க இனிமையுடைய தென்பது பலரும் அறிந்ததொன்று. பண்டைநாள் தொட்டு வந்த புலவர் பெருமக்கள் பலரும் இதன் சுவையை நுகர்ந்து வியந்து இதனைக் குறிக்குமிடமெல்லாம் செந்தமிழ், பைந்தமிழ், வண்டமிழ், ஒண்டமிழ், தண்டமிழ், மென்றமிழ், இன்றமிழ், தீந்தமிழ், சுவைத்தமிழ், நறுந்தமிழ், செழுந்தமிழ், நற்றமிழ், சொற்றமிழ் என்றிங்ஙனமாக அடைகொடுத்து வழங்கி வருவாயினர். ‘ஒண்டீந்தமிழ்’ என மாணிக்கவாசகரும், ‘தேனுறை தமிழ்’ எனக் கல்லாடரும், ‘செவ்விய மதுரஞ் சேர்ந்த நற்றமிழ்’ என்று தஞ்சைவாணன் கோவையுடையாரும் கூறுமாறு காண்க. இங்ஙனம் பலரும் இனிமையுடையதெனப் பாராட்டுதற்குத் தமிழ்ச் சொற்களின் இனிய ஓசை நலமும், இயற்கை நெறி வழுவாத சந்தியமைதியும் பெரிதும் காரணமாதல் வேண்டும். தமிழ் எழுத்துக்களெல்லாம் உரப்பலும் கனைத்தலும் வேண்டாது எளிய முயற்சியால் எழுவன. அவற்றுள்ளும் சிலவெழுத்துக்கள் மொழிக்கு முதலில் வாராமையும், சிலவெழுத்துக்கள் இறுதியில் வாராமையும், சிலவெழுத்துடன் சிலவெழுத்து மயங்கி வாராமையும் நோக்கின் தமிழ்ச் சொற்களின் ஆக்கப்பாடு அருமுயற்சியின்றி கூறத் தக்கவாறு இயற்கை முறையில் அமைந்துள்ளனவென்பது புலப்படும். தனி மெய்களும், உயிர் மெய்களும் டகரம் முதலியனவும் முதலில் வரினும், வல்லொற்றுக்கள் இறுதியில் வரினும், மயங்காவென்ற எழுத்துக்கள் மயங்குமாறு நிற்பினும் அவை மென்மைச் செவ்வி யுடைய நாவிற்கு வருத்தம் விளைத்தல் கண்கூடு. மாணவர்கள் ப்ரபு, டம்பம், த்வொக், உத்பத்தி என்பவற்றை ஓதிக் காண்க. இனி இச்சொற்களே இயற்சொல், திரிசொல், திசைச் சொல், வடசொல் என நால்வகைப்படும். ஆசிரியர் தொல்காப்பியனார், “இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொலென் றனைத்தே செய்யு ளீட்டச் சொல்லே” என்னும் எச்சவியற் சூத்திரத்தால் தமிழ்ச்செய்யுட்களுக்குரியன இந்நால்வகைச் சொல்லும் என்றமை காண்க. பெயர் வினை இடை உரி என்னும் நான்கும் இங்ஙனம் பாகுபடும் என்பது இளம்பூரணர் கருத்தாகும். பெயர் வினை இடை உரி என்பன இயற்சொல்லின் பாகுபாடு என்பதும், திரிசொல்லும் திசைச் சொல்லும் வடசொல்லும் பெரும்பான்மை பெயராயும் சிறுபான்மை வினையாகவும் வரும் என்பதும் சேனாவரையர், தெய்வச் சிலையார், நச்சினார்க்கினியர் என்னும் உரையாளர் களின் கருத்தாம். இவர்க்குள்ளும் சிறிது வேற்றுமையுண்டு. அதனை உரை நோக்கி யுணர்க. இயற்சொல்லாவது, செந்தமிழ் நிலத்து வழக்குடன் பொருந்தித் தம் பொருள் வழுவாமல் இசைக்கும் சொல்லாம். எனவே யாவரும் எளிதில் பொருளுணரும் செந்தமிழ் நாட்டுச் சொல் இயற்சொல் எனப்படும் என்க. இதனை, செந்தமிழ் நிலத்தும் கொடுந்தமிழ் நிலத்தும் ஒப்ப வழங்கும் சொல்லென்றும், இயல்பாகிய சொல்லென்றும் கூறுவர். இதனைச் செஞ்சொல் எனினும் அமையும் என்பர் தெய்வச்சிலையார். திரி சொல்லாவது இயற்சொல்லின் வேறுபட வருஞ்சொல். ஒரு பொருள் குறித்த பல சொல்லாகியும் பல பொருள் குறித்த ஒரு சொல்லாகியும் அரிதிற் பொருளுணரப்படும் சொல்லே திரிசொல் என்க. இயற்சொல்லே திரிந்து திரி சொல்லாகும் என்பதும், கிளி கிள்ளை யென்றானது உறுப்புத்திரிந்ததும், தத்தை என்றானது முழுவதும் திரிந்ததும் ஆம் என்பதும் சேனாவரையர் கருத்து. இளம்பூரணர் கருத்தும் இதுபோலுமெனக் கொள்ளக் கிடக்கிறது. நச்சினார்க்கினியர் சொல்லின் திரிவை ஒருவாறு கொண்டாராயினும், முழுவதும் திரித்தல் என்பதனைப் பிற சொற்கொணர்ந்து திரித்தல் என்பர். இயற் சொல்லின் வேறுபட வருவதென்பதே பிற ஆசிரியர்களின் கருத்தாகும். கிளி என்னும் சொல்லே தத்தை என்றும், மலை என்னும் சொல்லே வெற்பு என்றும் திரிந்தன வென்பது தமிழியலுக்கு முற்றிலும் மாறாகையால் சேனாவரையர் உரை கொள்ளற்பாலதன்றாகும். திசைச் சொல்லாவது செந்தமிழ் நாட்டைச் சூழ்ந்து கிடந்த பன்னிரு நிலத்துமுள்ளார் கருதிய பொருளையுடையதாகும். எல்லா நாட்டிற்கும் பொதுவாதலின்றிக் கொடுந்தமிழ் நாடு ஒவ்வொன்றற்கேயுரிய சொல் திசைச் சொல்லாம் என்க. வட சொல்லாவது வடமொழியிலிருந்து தமிழிற் கொள்ளப்படுஞ் சொல். அஃது இரு மொழிக்கும் பொதுவான எழுத்தாலாயதும், வடமொழிக்கேயுரிய எழுத்துச் சிதைந்து வருவதும் என இருவகைப்படும். இதற்கு ஆரியச் சொற் போலும் எனக் கூறிய இளம்பூரணருரை பொருந்துவதன்று. இனி செந்தமிழ் நிலம் யாது, செந்தமிழைச் சேர்ந்த பன்னிரு நிலம் யாவை என ஆராய்தல் வேண்டும். இளம்பூரணர், சேனாவரையர், நச்சி னார்க்கினியர் மூவரும் செந்தமிழ் நிலமாவது வையை யாற்றின் வடக்கும் மருத யாற்றின் தெற்கும் கருவூரின் கிழக்கும் மருவூரின் மேற்கும் உள்ள நிலம் என்பர். இவர்கள் இங்ஙனம் கொண் டமைக்கு யாதும் ஆதாரம் காட்டவில்லை. நாமும் கண்ட தில்லை. இவ்வுரையாளர்கள் காலத்திற்கு இவ்வரையறை பொருத்தமுடைத்துப் போலும்! கடைச்சங்க நாளிலும், பின்வந்த சேக்கிழார், கம்பர் முதலானோர் நாட்களிலும் பாண்டிநாடே செந்தமிழ் நாடெனக் கொள்ளப் பெற்றதென்று ‘கபிலர்’ என்னும் உரை நூலில் பல சான்றுகளுடன் காட்டியுள்ளேன். ஆசிரியர் தொல்காப்பியர் நாளிலே கிழக்கும் மேற்கும் கடலும், வடக்கும் தெற்கும் வேங்கடமும், குமரியும் எல்லையாக வுடைய நிலமுழுதும் செந்தமிழ் நாடாதல் வேண்டும். “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து வழக்குஞ் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி” எனப்பாயிரத்தும், “வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் நாற்பெய ரெல்லை யகத்தவர் வழங்கும் யாப்பின் வழிய தென்மனார் புலவர்” எனச் செய்யுளியலினும் வருதல் இதற்குச் சான்றாகும். எனவே பன்னிரு நிலம் என்பன இதற்குப் புறம்பாகவுள்ள தமிழ்திரி நிலங்களாதல் வேண்டும். இளம்பூரணர், சேனாவரையர் முதலாயினார் பொங்கர் நாடு, ஒளிநாடு, தென்பாண்டி நாடு, குட்ட நாடு, குட நாடு, பன்றி நாடு, கற்கா நாடு, சீதநாடு, பூழி நாடு, மலையமானாடு, அருவாநாடு, அருவாவடதலை என்பன பன்னிரு நிலம் என்பர். இது பிற்காலத்திற்குப் பொருந்துமாயினும் தொல்காப்பியர் காலத்திற்குப் பொருந்துவதாகாது. அற்றை நாளில் இந்திய நாட்டின் வட பகுதியில் ஆரியமன்றிப் பிற மொழிகளும், தென் பகுதியில் தமிழன்றிப் பிற மொழிகளும் வழங்கியிருப்பின் ஆரியத்திற்கே வடமொழி என்றும், தமிழுக்கே தென்மொழி என்றும் பெயர் வழக்குண்டாகக் காரணமில்லை. அன்றியும், சிங்களம், கன்னடம், தெலுங்கு முதலியன அப் பொழுது தனி மொழிகளாக வழங்கியிருப்பின் தொல்காப்பியர் திசைச் சொற்கு இலக்கணங் கூறுமிடத்தில் அம்மொழிகளை விடுத்து, ‘செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் தங்குறிப்பின’ என்று மாத்திரம் கூறுதல் பொருத்தமுடைத்தன்று. ஆதலின் வடக்கே ஆரியத்தின் சிதைவுகளும், தெற்கே தமிழின் சிதைவுகளும் தனி மொழிகளின் நிலைமையை அடையாமலே அக்காலத்தில் வழங்கினவென்று கொள்ளுதல் வேண்டும். யான் கூறுவதே தெய்வச் சிலையார்க்கும் வேறுசிலர்க்கும் கருத்தென்பது அவருரையால் அறியப்படும். ‘வேங்கடமலையின் தெற்கும், குமரியின் வடக்கும், குண கடலின் மேற்கும், குட கடலின் கிழக்குமாகிய நிலம் செந்தமிழ் நிலம் என்ப’ ‘பன்னிரு நிலமாவன குமரியாற்றின் தென்கரைப்பட்ட பழந்தீபமும் கொல்லமும் கூபகமும் சிங்களமும், சையத்தின் மேற்குப்பட்ட கொங்கணமும் , துளுவமும் குடகமும் குன்றகமும், கிழக்குப்பட்ட கருநடமும் வடுகும் தெலிங்கும் கலிங்கமும் என்று கொள்ளப்படும்’ என்னும் அவ்வுரைப்பகுதிகள் காண்க. இதற்கு மேற்கோளாகஅவ்வுரையிற் கொள்ளப் பெற்றதொரு சூத்திரப்பகுதி நன்னூல் மயிலை நாதர் உரையிலும் காணப் படுகின்றது. அது, “கன்னித் தென்கரைக் கட்பழந் தீவம் சிங்களம் கொல்லம் கூவிள மென்னும் எல்லையின் புறத்தவும் ஈழம் பல்லவம் கன்னடம் வடுகு கலிங்கம் தெலிங்கம் கொங்கணம் துளுவம் குடகம் குன்றம் என்பன குடபால் இருபுறச் சையத் துடனுறைபு பழகுந் தமிழ்திரி நிலங்களும் முடியுடை மூவரும் இடுநில வாட்சி அரசுமேம் பட்ட குறுநிலக் குடிகள் பதின்மரும் உடனிருப் பிருவரும் படைத்த பன்னிரு திசையிற் சொன்னய முடையவும்” என்பது; இதன் பின் ‘என்றார் அகத்தியனார்’ என்று கூறியிருத் தலின் இஃது அகத்தியச் சூத்திரமே எனக் கொள்ளப் பெற்றமை புலனாகும். இப்பன்னிரு நிலங்களும் முடியுடை வேந்தர் மூவரின் ஆணை வழி குறுநில மன்னர் பதின்மராலும் ஏனை இருவராலும் ஆளப் பெற்றன வென இச்சூத்திரம் கூறுவதும் கருதற்பாலது. கல்லாத சிறுவர் பேச்சிலுள்ள சந்தியும், தமிழிலக்கணங் கூறும் சந்தியும் ஒன்றேயாகலின் இயற்கையின் வழுவாமலே தமிழ் நூலோர் சந்திகளை அமைத்துள்ளனர் என்பது பெறப்படும். உதாரணமாக மாவிலை என வகரவுடம்படுமெய் பெறுவதும், வாழையிலை என யகரவுடம்படுமெய் பெறுவதும், மரவேர் என மகரவொற்றுக்கெடுவதும், வாழைக்காய் எனக் ககரவொற்று மிகுவதும், புளியங்காய் என அம்சாரியை பெற்று மகரம் ஙகரமாய்த் திரிவதும் தமிழிலக்கணம் கூறுமாறே சிறுவர் பேச்சில் அமைந்திருத்தல் காண்க. பொருளுணர்த்து முறை யிலும் தமிழ்ச் சொற்கள் மிகச் சிறப்புடையன. தமிழிலுள்ள வினைச் சொற்கள் திணை, பால், எண், இடம், காலம், செயல் என்பவற்றை ஒருங்கு விளக்குதல் போல் வேறு எம்மொழிச் சொற்கள் விளக்குவனவாகும்? படித்தான் என்னும் வினை முற்றிலே பகுதியாற் செயலும், இடைநிலையாற் காலமும், விகுதியால் திணை, பால், எண். இடங்களும் விளங்கித் தோன்றுதல் காண்க. திரு. செல்வக் கேசவராய முதலியார் எம்.ஏ. அவர்கள் தாம் எழுதிய ‘தமிழ்’ என்னுங் கட்டுரையில் ஆங்கிலத் தோடு தமிழை ஒப்பிட்டுக் காட்டியிருப்பதன் ஓர் பகுதி பின் வருவது. ‘நாம் வந்திலன், சென்றிலன் என ஒரு சொல்லாய் வழங்கும் எதிர்மறை முற்றுக்களை ஆங்கிலத்தில் உரைப்பதற்கு மூன்று சொற்கள் வேண்டும். தெரிநிலையும் குறிப்புமான ஒவ்வொரு வினையாலணையும் பெயரையும் ஆங்கிலத்தில் பல சொற்களின்றி அமைக்கலாகாது. ‘வந்தாய்’க்கு என்பதை வந்தவ னாகிய உனக்கு எனப் பொருள் படுவதாய் நான்கு சொற்களால் அமைக்க வேண்டும். அடியேனுக்கு என்னும் குறிப்பு வினையாலணையும் பெயரை அமைக்க ஆறு சொற்கள் வேண்டும். நம்முடைய பெயரெச்ச வினையெச்சங்களும் சொற் சுருங்குதற்கு அநுகூலமாக இருக்கின்றன. வந்த மனிதன் என்பதை அமைக்க அவர்களுக்கு நான்கு சொற்கள் வேண்டும். அவன் வந்து போனான் என்னும் ஒரு வாக்கியத்தை அவர்கள் இரண்டு வாக்கியமின்றி உரைக்க இயலாது. அவர்களுக்கு வேற்றுமைத் தொகை, வினைத் தொகை, உவமைத் தொகை, அன்மொழித் தொகைகள் இல்லை.’ இதிலிருந்து தமிழ்ச் சொற்களும் சொற் றொடர்களும் சுருங்கிய வுருவில் விரிந்த பொருளைக் கொண்டிருக்கும் சிறப்பு நன்கு புலனாகும். சொல்லமைதி, புணர்ச்சி, வேற்றுமை முதலியவற்றில் தமிழும் வடமொழியும் வெவ்வேறு இயல்பினவாதல்: உலகில் வழங்கும் எல்லா மொழிக்கும் ஆரிய மொழியே தாயாகு மென்றும், அம்முறையே தமிழும் ஆரியத்தினின்றே தோன்றியதாகு மென்றும் கொள்ளும் ஆராய்ந்து துணியாத கொள்கையினையுடையார் சிலர் சின்னாள் முன்பு தொட்டு இருந்து வருகின்றனர், மொழியாராய்ச்சி என்பது புதிய கலை முறைகளில் ஒன்றாகி மொழிகளின் உண்மைத் தன்மையை விளக்கி வரும் இந்நாளில் அக்கொள்கை அருகிவிட்டதேனும் உண்மையுணராதார் சிலர் இன்னுமிருத்தலின் அவர் பொருட் டாக வடமொழி தென்மொழிகளின் வேறுபட்ட இயல்பினை விளக்குதல் கடனாகின்றது. மொழி நூற்புலவர்கள் மொழிகளை அவ்வவற்றின் பண்புகள் கொண்டு வெவ்வேறு இனம் அல்லது குழுஉவாகப் பாகுபடுத்தியிருக்கின்றனர். பகுதிகளே சொற்களாக அல்லது சொல்லெல்லாம் ஓரசையேயாகவுள்ள இனம் (ஐளடிடயவiபே) ஒன்று. பகுதியுடன் விகுதி முதலியன ஒட்டிநின்று, அதனாற் சொல்லின் உருபு திரியாதிருக்கும் இனம் (ஹபபடரவiயேவiஎந) ஒன்று. விகுதி முதலியன கூடுதலால் சொல்லின் உருவந்திரிந்தும் மாறுதலடையும் இனம் (ஐகேடநஉவiடியேட) ஒன்று. மொழிகள் பலவும் இம் மூன்றினத்திலே அடங்காநிற்கும். சீனம் முதலியன முதல் இனத்தையும், தமிழ் முதலியன இரண்டாவது இனைத்தையும், வடமொழி முதலியன மூன்றாவது இனத்தையும் சேர்ந்தவை. தமிழானது சிறுபான்மை முதல் இனத்தையும் மூன்றாம் இனத்தையும் ஒத்திருக்குமாயினும் பெரும்பான்மை ஒவ்வாமை யுடையது. மொழிகள் ஒரு நிலைமையிலிருந்து மற்றொரு நிலைமையை ஒரு காலத்தில் எய்து மென்பதற்குரிய இயைபும் சான்றும் இன்மையால் இம்மூவினமும் எக்காலத்தும் மூவேறு தனித்தன்மைகளை உடையனவேயாகும். இந்த அடிப்படையான வேறுபாட்டிலிருந்தே தமிழும் வடமொழியும் ஒன்றையொன்று சார்ந்திராத தனிமொழிகள் என்பது நன்கு புலப்படும். மற்று இவ்விரு மொழிகளும்இலக்கண வகையால் எங்ஙனம் வேறுபடுகின்றன என்பதும் காணற்பாலது. தமிழுக்கும் வடமொழிக்கும் உள்ள வேற்றுமைகளைக் கூறுங்கால் இவ்விரு மொழிக்கும் ஒற்றுமையே இல்லையெனக் கருதுவதாகக் கொள்ளலாகாது. திருத்தமுற்ற மொழிகள் பல வற்றிலும் பொதுவாக அமைந்திருக்கக் கூடிய பண்புகள் பல உள்ளன. உயிர் மெய், பெயர் வினை, ஆண்பால், பெண்பால், ஒருமை, பன்மை, எழுவாய், பயனிலை, மூவிடம், முக்காலம் போல்வன எல்லா மொழிகட்கும் பொதுவியல்புகளாம். தமிழ் வாணரும் வடமொழிவாணரும் நெடுங்காலமாகக் கலந்து வாழ்தலால் அக்கலப்புப் பற்றியும் இவ்விரு மொழிக் கண்ணும் ஒத்த பண்புகள் சில அமைதல் இயற்கையே. மொழிகளின் வரலாற்றுக்கு அவற்றின் பொதுவியல்களினும் சிறப்பியல்புகளே மிக்க வலிமையுடையன வாகும். ஆகலின் தமிழின் சிறப்பியல்கள் இவையென்பது காட்டப்படின் அதுகொண்டு அஃது ஓர் உயர்தனிச் செம்மொழியாமென்பது போதரும். முன்பு, தொல்காப்பியத்திற்கு முதனூல் ஐந்திரம் என்பார் கூற்றை மறுத்துரைத்த வழியும் சிவஞான முனிவர் தொல் காப்பியப் பாயிரவிருத்தியலில் தமிழின் சிறப்பியல்புகளை விளக்கி அதனை மறுத்துரைத்தமையை எடுத்துக்காட்டிய வழியும், தமிழ்ச் சொற்களின் மாண்புகளை விளக்க நேர்ந்த வழியும் தமிழின் சிறப்பியல்புகள் பல போந்தன. மேலே பொது வகையாற் கூறியனவும், கூறாதனவுமாய சில சிறப்பியல்புகள் இங்கே விளக்கப்படும். ஆறறிவுடைய மக்களை உயர்திணை என்றும், ஏனைத் தாழ்ந்த உயிர்களையும் உயிரில்லாவற்றையும் அஃறிணை என்றும் பாகுபாடு செய்திருப்பது தமிழிலன்றி, வடமொழி முதலிய வேறெம்மொழியிலும் இல்லை. எழுத்துகட்கு உயிர், மெய் எனப் பெயரிட்டிருப்பது போன்று இஃதும் தமிழர்களின் தத்துவ வுணர்வு மேம்பாட்டிற்குச் சிறந்த சான்றாகும். பால் வகுப்பு முறையிலும் தமிழும் வடமொழியும் முற்றிலும் வேறுபட்டவை. தமிழ் முறையானது பொருணோக்கத்தால் ஆணை ஆண் என்றும் பெண்ணைப் பெண் என்றும் கூறும் சிறப்புடையது. வடமொழி முறையோ சொன்னோக்கங்கொண்டு ஆணைப் பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும், இரண்டையும் அலியாகவும், உயிரில்லாத பொருட்களையும் ஆண் பெண்ணாக வும் பிறழக் கூறும் குறைபாடுடையது. ஒரு பொருளே சொல் வேற்றுமையால் ஆணாகவும், பெண்ணாகவும் அலியாகவும் மாறுவதும் ஒரு பொருளைக் குறித்த ஒரு சொல்லே அடை மொழியாக வருங்கால் ஆண் பெண் அலியாக மாறுவதும் ஆகிய குறைகள் வடமொழியில் உள்ளன. உலகத்துப் பொரு ளெல்லாம் சாத்துவிகம் இராசதம் தாமதம் என்னும் குணங் களோடு கலந்தனவாகலின் சாத்துவிகமுள்ளது ஆணாகவும், இராசதமுள்ளது பெண்ணாகவும், தாமதமுள்ளது அலியாகவும், ஒரு பொருளே அக்குணங்களின் மிகுதி குறை ஒப்புப் பற்றி ஆண் பெண் அலியாகவும் கூறப்படும் என்னும் வட நூலார் கூற்றும் ஆராயுங்கால் உண்மையுடைத்தெனத் தோன்றவில்லை. தக்கிணம் என்னும் திசைப் பெயரானது அதனால் விசேடிக்கப் பட்டதற் கேற்பத் தக்கிண தேசம் என்புழி ஆண்பாலும், தக்கிணாமூர்த்தி என்புழிப் பெண்பாலும் ஆகுமெனின், தேசம் சாத்துவிகமாகவும் மூர்த்தி இராசதமாகவும் கோடற்குரிய இயைபுதான் என்னையோ? தமிழ் நூல்களிலே ‘தென்றலஞ் செல்வன்’ ‘நாணென்னு நல்லாள்’ என்றிங்ஙனம் உயிரில் பொருளும் குணமும் முதலாயின் ஆண்பாலாகவும் பெண் பாலாகவும் கூறப்படுதல் வடநூல் முறையன்றோ வெனின், இவை உருவக மாதலின் வடநூல் முறையாமாறு யாங்ஙனம் என்க. ‘கங்கையாள்’ முதலியவற்றையும் விரித்து உருவகமாக்குதல் வேண்டும். சிறுபான்மை வடநூன்முறை தழுவிற்றுமாம். தமிழ்ச் செய்யுட்களும் நூல்களும் செய்யுள் என்பதைத் தொல்காப்பியர் பொதுப் பெயராகக் கொண்டிருக்கிறார். பாட்டுக்கும் உரைக்கும் சூத்திரத்துக்கும் அக்காலத்தில் செய்யுளென்றே வழங்கப்பட்டு வந்தது. பாட்டு என்பதற்குப் பா எனப்படுவதே சிறப்புப் பெயராகும். அவர் உறுப்புக்கள் 34 எனவும் பிரித்திருக்கிறார். செய்யுள் யாவும் பொருள் இலக்கணத்துக்கு இலக்கியமானவை. மாத்திரை என்பதும் அவ்வுறுப்புகளில் ஒன்று. செய்யுளில் தொகை நிலைச் செய்யுள் என்றும் தொடர்நிலைச் செய்யுளென்றும் பாகுபாடுகள் உண்டு. ‘புறநானூறு’ தொகை நிலைச் செய்யுளாகும். ‘சீவக சிந்தாமணி’ தொடர்நிலைச் செய்யுளாகும். தொல்காப்பியத்தில் கூறியுள்ள அசைக்கும், மற்ற நூல்களில் கூறப்பட்டுள்ள அசைக்கும் வித்தியாசமிருக்கிறது. தொல்காப்பியர் ‘நாற் சீர் கொண்டது அடியெனப்படுமே’ என்று கூறுகிறார்.இத்தனை எழுத்துக்கள் முதல் இத்தனை எழுத்துவரையுள்ளது இன்னின்ன அடியென்றும் அவர் வகுத்திருக்கிறார். 4 முதல் 6 வரை உள்ளதைக் குறளடியென்றும், 7 முதல் 9 வரையுள்ளதை சிந்தடியென்றும், 10 முதல் 14 வரையுள்ளதை நேரடியென்றும், 15 முதல் 19 வரையுள்ளதை நெடிலடியென்றும் 18 முதல்20 வரையுள்ளதை கழி நெடில் என்றும் பிரித்திருக்கிறார். இதுதான் கட்டளையடி எனப்படுவது. இந்த கட்டளையடி என்பது கடைச்சங்க காலத்திலேயே இல்லாது போய்விட்டதாகத் தெரிகிறது. இதனைப் பேராசிரியர் முதலியோர் தங்கள் உரையில் விளக்கியிருக்கின்றனர். ஒரு காலத்தில் வழக்கத்திலிருந்து பிறகு மறைந்த ஒரு காரியத்தைப் பிற்காலத்திலும் வழக்கிலிருப்பது போலக் கூறுவது கூடாதென ஆசிரியர் ‘மரபு’ என்ற நுணுக்கத்தாலே குறிப்பிட்டிருக்கிறார். உதாரணமாக தழை என்பது முற்காலத்தில் கையுறையாகக் கொண்டு கொடுக்கும் ஒருவித தழையாலான உடை. இப்போது அந்த தழை கொடுக்கும் வழக்கமில்லை. இப்படியிருக்க இக்காலத்திலும் தழை கொடுத்ததாக எங்காவது சொல்லுவோமானால் அது தவறாகும். தூரவிருந்து ஒருவர் பாடுகையில் அது எத்தன்மையான பாவெனக் கண்டறிவதே பா என்ற உறுப்பின் லஷணமெனச் சொல்லப்படுகிறது. பா என்ற சொல் உறுப்பின் பெயராக விருப்பத்தோடு செய்யுளின் பெயராகவு மிருக்கிறது. பாக்களை ஆறுவகையாகப் பாகுபாடு செய்திருக்கிறார். செய்யுளில் இருவகை உண்டெனவும், அவற்றில் ஒன்று அடி வரையறை உள்ளதென்றும், மற்றொன்று அடிவரையறையற்றதென்றும் கூறப்படு கிறது. நூல் என்பது அடிவரையறை இல்லாதது. பண்டைநாளில் நூல் என்றது இலக்கணம் என்ற ஒன்றை மட்டும் குறித்தது. இப்போது நாம் எல்லாவற்றையும் நூலென வழங்குகிறோம். அக்காலத்தில் செய்யுள் என்ற பெயரால் மற்றவை வழங்கப்பட்டன. நூலுக்கு அடிவரையறை இல்லாதது போலவே சூத்திரத்துக்கும் அடிவரையில்லை, உரைக்கும் இல்லை. செய்யுட்களை ஆசிரியர் 7 விதமாகப் பாகுபாடு செய்திருக்கிறார். வண்ணம் என்ற ஒரு உறுப்பை மட்டும் 20 விதமாகப் பிரித்திருக்கிறார். வல்லிசை வண்ணம் மெல்லிசை வண்ணம் முதலியன அந்தப் பாகுபாட்டில் அடங்கியவைகளே. இது ஓசைமுறையைக் குறிக்கிறது. இதிலிருந்து இப்போது (சுhநவடிசiஉ) என்று சொல்லப்படும் ஓசைமுறை அக்காலத்தும் இருந்ததாகத் தெரிகிறது. நூலை, முதல் வழியென இரண்டு வகைப்படுத்திக் கூறியிருக்கிறார். நன்னூலார் சார்புநூல் என்றும் ஒன்றைக் குறிக்கிறார். மற்றும் சிலர் எதிர் நூல் என்ற ஒன்றிருந்ததாகவும் சொல்லு கின்றார்கள். சார்புநூல் என்ற ஒன்றிருப்பதாகக் கொள்ளுவது தவறென நச்சினார்க்கினியர் கூறுகிறார். மொழி பெயர்ப்பும் வழிநூலாகவே கொள்ளப்படுகிறது. ஒரு பொருளோடு மற்றொரு பொருளை ஒப்புமை கூறுவது உவமமாகும். இது வெளிப்படை உவமமென்றும் உள்ளுறை உவமென்றும் பிரிகிறது. உள்ளுறை உவமம் பெரும்பாலும் செய்யுளுக்கும் அகப்பொருளுக்குமே உரியது. பண்டைநாளில் சங்க இலக்கியங்களில் உவமையை மிகப் பொருத்தமாகச் சொல்லியிருக்கிறார்கள். ஒரு ஆசிரியர் நண்டின் கண்களுக்கு உவமை கூறுகையில் “ வேப்புநனையன்ன நெடுங்கட்கள்வன்” எனக் கூறி நண்டின் கண்களுக்கு வேப்பம்பூவை உவமையாகக் கூறுகிறார். உள்ளுறை உவமையினால் நாம் அக்கால மக்களின் நாகரீக மேம்பாட்டை உணர்ந்து கொள்ளலாம். மெய்ப்பாடு என்றது உள்ள நிகழ்ச்சி புறத்திலே வெளிப்பட்டுத் தோன்றுவதைக் காட்டுவது. இது எட்டு வகையாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. மெய்ப்பாட்டியல் மனோதத்துவ சாஸ்திரம் போன்றிருக்கிறது. மரபு என்பதில் ஆசிரியர் இளமைப் பெயர், ஆண்பாற் பெயர், பெண்பாற் பெயர் என மூன்று பிரிவுகள் செய்து கொண்டு இன்னின்னவற்றை இன்னின்னவாறு கூறவேண்டு மென விரிவாக ஆராய்ந்திருக்கிறார். இளமைப் பெயர் - பார்ப்பு, குட்டி, குழவி, கன்று, குருளை முதலியன. ஆண்பாற் பெயர்;- ஏறு, களிறு, சேவு, சேவல் முதலியன; பெண்பாற் பெயர்- பேடை, பெட்டை, பிடிமுதலியன. குழவி என்பது குஞ்சரத்தின் இளமைப் பெயர் என அதற்குத் தனி சூத்திரம் சொல்லியிருக்கிறார். அதனால் அவ்வழக்கு அதிகமாக அக்காலத்தில் பிரயோகத்திலிருந்திருக்க வேண்டும். ஆவுக்கும் எருமைக்கும் அவ்விதமே சொல்லவேண்டு மென்றும் கூறியிருக்கிறார். இப்போது பலர் விநோதமாக நினைக்கக்கூடிய சில விஷயங்களும் ஆசிரியரால் இது சம்மந்தமாகச் சொல்லப்பட்டிருக் கின்றன. ஆட்டின் ஆணை அப்பர் எனச் சொல்லவேண்டுமென்றும், நரியின் பெண்ணை நரிப்பாட்டி எனச் சொல்ல வேண்டுமென்றும் கூறியிருக்கிறார். மரபியலில் உயிர்களைப் பலவிதப் பாகுபாடு செய்து மக்கள் தாமே ஆறறிவுயிரே என்றும் குறித்திருக்கிறார். தாவரவர்க்கத்தை மரம் புல் என இரண்டு விதமாகப் பிரித்து தென்னை, பனை முதலியவற்றைப் புல்லினத்தில் சேர்த்துப் புளியமரம் முதலியவற்றை மரத்தினத்தில் சேர்த்தும் கூறியிருக்கிறார் என முடித்தார். பொருளாராய்ச்சி (மணமுறைகள்) தமிழரின் மணமுறை நாட்டார் இப் பிரசங்கத்தில் பண்டை நாளைத் தமிழரின் நாகரீகச் சிறப்புகளைப் பற்றி விவரித்தார். முதலில் அவர் தொல்காப்பியப் பொருளதிகாரத்திலிருந்து தமிழரின் மணமுறையை ஆராய ஆரம்பித்தார். பொருளதிகாரத்திலே ஆசிரியர் அகப்பொருளியலைப் பற்றியும் புறப்பொருளியலைப் பற்றியும் நன்கு ஆராய்ந்து பல விஷயங்கள் சொல்லியிருக்கிறார். சங்க இலக்கியங்களிலே அகப்பொருளே மிகுந்திருக்கின்றது. தொல்காப்பியரும் அகப் பொருளைப் பற்றியே முதலில் கூறியிருக்கிறார். உலகியல் என்பது மூன்று வகைப்படும்.அவை: இன்பம், பொருள், அறம் எனப் பிரியும். நால்வகைப் புருஷார்த்தங்களைக் கூறும் வடமொழி நூலார் அறம் பொருள் இன்பம் வீடு என அறத்தை முதலில் வைத்திருக்க தமிழ் நூல் வல்லார்கள் மட்டும் இன்பத்தை முதலில் வைத்திருப்பதன் காரணத்தை சற்று கவனிக்க வேண்டும். மக்கள் மட்டுமின்றி உலகிலுள்ள ஜீவராசிகளனைத்துமே இன்பத்தைத்தான் விரும்புகின்றன. வாழ்க்கையின் முடிவே இன்பமாகும். பொருளும் அறமும் இன்பத்தைப் பெற சாதனங்களாகவிருக்கின்றனவே யொழிய இன்பத்தைப் போல் அவை பயனாக மாட்டா. இன்பமாகிய பயனையடைய பொருளும் அறமும் துணையாக நிற்கின்றன. ஆதலால்தான் தமிழ் வல்லார் இன்பத்தை முதலில் வைத்திருக்க வேண்டும். இங்கும் இன்பம் என ஆசிரியர் சொல்வது இவ்வுலக இன்பத்தையேயாகும். வீடு அல்லது வீட்டின்பம் என்பது உலகியல் மூன்றையும் விட்டநிலையாகும். ஐம்புலன் கொண்டும் ஒருங்கே நுகரும் தலையாய இன்பத்தையே ஆசிரியர் அகப்பொருளின்கண் விளக்கினார். மனமொத்து காதலிக்கும் ஒரு ஆண்மகனையும் பெண் மகளையும் ஆசிரியர் உயர்ந்த ஒழுக்கத்தினராகவும் மிக்கச் சிறந்தவராகவும் குறித்திருக்கிறார். அவர்களுக்குத் தலைமகன் - தலைமகள் எனப் பெயரிட்டழைத் திருக்கிறார். பெயரிட்டிருக்கும் பான்மையிலிருந்தே அவர்களை எல்லாவற்றிலும் அதாவது நடை, குணம் முதலிய எல்லாவற்றிலும் சிறந்தவராகவே ஆசிரியர்கள் கொண்டிருக்கிறார்கள் எனத் தெரிகிறது. கிழவன் - கிழத்தி என்றும் காதலர் அழைக்கப் படுகின்றனர். மாறாத உரிமை உடையவர்கள் என்பதைக் காட்டவே இவ்விதம் பெயரிடப்பட்டிருக்கிறது. தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் காண்கின்றனர். கண்டவுடனே ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பிக்கின்றனர். இதுவே தலையன்பாகும். தலைவன் ஓரிடத்திலிருந்து வந்திருக்கக் கூடும் தலைவி வேறோரிடத்திலிருந்து வந்திருக்கக்கூடும். இருவரும் தெய்வசங்கற்பத்தால் ஒன்றாகச் சந்தித்தபோதே அவர்கள் நெஞ்சம் கலப்பார்கள். அதுவே வாழ்க்கைக்கு ஆரம்பமாகும். இது தெய்வத்தால் வந்த நட்பு என்றே ஆசிரியர்கள் உணர்த்தி இருக்கின்றனர். கண்டவுடனும் கேட்டவுடனும் அன்பு கொள்வதையே தலையன்பாக அவர்கள் கொண்டிருக்கின்றனர். காளத்தியில் தோன்றிய கண்ணப்பன் ஆண்டவனிடம் கொண்ட அன்பும் தலையன்பேயாகும். காளத்திமலை மீது நாதனிருப்பதாகக் கேட்டவுடனே அவர் அளவிலா அன்புகொண்டார். தலைஅன்பு வயப்பட்ட தலைவன் தலைவியர் தங்களுக்கிடையே தோன்றிய நட்பைத் தங்களால் ஏற்பட்டதாகக் கொள்வதில்லை. கடவுளே அங்ஙனம் கூட்டி வைத்ததாக நினைக்கின்றனர். தலை மக்களுக்குள் நேரிடும் கூட்டம் தெய்வத்தால் ஆகின்ற கூட்டமாகும். “ ஒன்றே வேறே என்றிருபால் ஆயின் ... ஒத்த கிழவனும், கிழத்தியும் காண்பே” என்றார் ஆசிரியரும். முதலிலே சந்திக்கலுற்ற தலைமக்கள் நெஞ்சம் கலந்து என்றும் பிரியாத் தன்மையுடைய வராகின்றனர். அது முதல் அவர்களின் உயிர் ஒன்றாகவும் உடம்பிரண்டாகவும் மாறுகிறது. ஒருவர் உடம்பில் மற்றொருவர் வாழ ஆரம்பிக்கின்றனர். இந்த அபிப்பிராயத்தைக் குறளாசிரியரும் வற்புறுத்தியிருக்கிறார். இவர்களின் கலப்பை இனி இறப்பிலேதான் பிரிக்க வேண்டும். அந்த இறப்பும் பிரிக்க முடியாதெனத் தமிழ் நூலார் கொள்ளுகின்றனர். வெவ்வேறிடங் களிலிருந்து ஓடிவந்த நீர் ஒன்று கலந்தபின் எப்படிப் பிரிக்க முடியாத தன்iயை அடைகிறதோ அங்ஙனமே இவர்களும் பிரிவுறா நிலையை அடைகின்றனர். இந்த அபிப்பிராயத்தையே ஆசிரியர் தொல்காப்பியனாரும் “பெய் நீர் போல” என்ற சூத்திரத்தில் அமைத்திருக்கிறார்.இருவரும் ஒன்றுபட்ட பின் அவர்களுக்குத் தனித்தனியே இன்பதுன்பங்களில்லை. ஒருவருக்கு வந்த துன்பத்தை மற்றொருவரும் கொள்ளுகின்றனர். ஒருவர் அடையும் இன்பத்தை மற்றொருவரும் நுகருகின்றனர். ‘இருவர் ஆகத்துள் ஓருயிர் கண்டனம்’ என்ற திருக்கோவை யாற்றின் அடிகள் இதனை வலியுறுத்தும். இப்படித் தலைவனும் தலைவியும் நெஞ்சங்கலந்த பின் மெய்யுறு புணர்ச்சியின்றி அன்பொடு ஒழுகி வருவதையே களவு என வகுத்தார்கள். பிறகு உற்றார் பெற்றோர் அறிய மணவிழைகொண்டு ஒழுகும் வாழ்க்கைக்கு கற்பு எனப் பெயரிட்டனர். கற்பு என்பதை விட களவே சிறந்ததெனக் கொள்ளப்படுகிறது. “கற்பெனப்படுவது களவின் வழித்தே” என இறையனாரகப் பொருளில் கூறப்பட் டிருக்கிறது. களவு என்ற பெயரை நோக்கி அதை இழிவாக நினைக்கக் கூடாது. களவு வாழ்க்கையை சீவக சிந்தாமணியார் “இன்றமிழ் இயற்கையின்பம்” எனக் கூறுகிறார். தலைவன் தலைவியரிடையே ஏற்படும் இவ்விதச் சேர்க்கையை களவு-கற்பு எனப் பிரித்த ஆசிரியர் மற்றும் அவற்றை மூன்று உட்பிரிவுகளாகவும் பிரித்திருக்கிறார். அவையாவன:- கைக்கிளை பெருந்திணை, ஐந்திணை, அகனந்திணை என்பனவாம். கைக்கிளையும் பெருந்திணையும் சற்று தாழ்ந்தனவாகவும் ஐந்திணையே உயர்ந்ததாகவும் கொள்ளப்படுகிறது. கைக்கிளை என்பது சிறுமையுறவாகும். இது ஒரு பக்கத்துறவு. பெருந்திணை என்பது பருவம்நீங்கி ஒன்று படுவது. ஆகவே இவ்விரண்டையும் விட ஐந்திணையே சிறந்ததென ஆசிரியர் கொண்டார். இறையனாரகப் பொருளிலுஷம் “அன்பின் ஐந்திணைக் களவெனப்படுவது” எனக் கூறப்பட்டிருக்கிறது. கற்புக்கு லஷணம் சொல்லுகையில் ஆசிரியர், “ கற்பெனப்படுவது கரணமொடு புணரகொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக் கொடற்குரி மரபினோர் கொள்வது” எனக் கூறுகிறார். கரணம் என்பது சடங்கு என்றாகும். இது சடங்குகளுடன் சுற்றத்தார் அறிய மணஞ் செய்துகொள்வதைக் குறிக்கிறது. சுற்றத்தாரின்றி ஒருவர் கொடுப்பதன்றி தலைவனும் தலைவியும் தாங்களே கூடுவதும் உண்டு. மணமென்றதில் தலைவனும் தலைவியுமே முக்கிய புருஷர்கள். இது நிற்க , “மேலோர் மூவருக்கும் புனர்த்தகரணம் கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டு” என்ற ஒரு சூத்திரமும், “பொய்யும் வழுவும் தோன்றியபின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப” என மற்றொரு சூத்திரமும் காணப்படுவதிலிருந்து நான்கு வருணத்தாருக்கும், ஒரே வித சடங்குகள் இருந்தனவென்றும் பிறகே நான்கு வருணத்தாருக்கும் வெவ்வேறான கரணங்கள் (சடங்குகள்) ஏற்படுத்தப்பட்டன வென்றும் தெரிகின்றது. ஆசிரியர் இங்கே குறிப்பது ஆரியர்களுக் குள்ளிருந்த வருண பாகுபாடுகளையேயாகும். இவ்விதப் பாகுபாடுகள் தமிழரிடம் அக்காலத்தே இருந்ததாகத் தெரிய வில்லை. தமிழர் மணமுறைக்கும் ஆரியர் மணமுறைக்கும் வித்தியாசங்களிருந்திருக்கின்றன. ஆரியர் மணமுறை எட்டு வகைப்படும். அவைதான் பிரமம் காந்தர்வம் முதலியன. தமிழர் மணமுறை மூன்று வகையானதென முன்னமே சொன்னேன். அவைதான் கைக்கிளை, பெருந்திணை, ஐந்திணை என்பன. ஆரியர் மணமுறையில் ஆசுரம்,இராக்கதம், பைசாசம் என்ற மூன்றுவித மணங்களும் மற்றும் நான்குவித மணங்களும் தமிழ்மண முறைகளாகிய கைக்கிளை பெருந்திணைகளிலேயே அடங்கிவிட்டன. ஆசுரம் முதலிய மணங்கள் கூட வடமொழியில் போற்றப்படுகின்றன. அவற்றைத் தமிழர் ஒதுக்கித் தள்ளினர். தமிழரின் ஐந்திணை மணமே ஆரியரின் காந்தர்வ மணத்தோடு ஒன்றியிருக்கின்றது. மணச்சடங்குகள் கரணம் என்பதென்ன? தமிழ் மக்கள் அவற்றை எப்படிக் கொண்டிருந்தனர் என்பதை இனி ஆராய்வோம். இப்போது நமது நாட்டில் அநுஷ்டிக்கப்படும் கலியாணச் சடங்குகள் பண்டைநாளில் தமிழர்களால் அநுஷ்டிக்கப்பட்டதேயில்லை. அழகிய பந்தல் அமைத்துப் பசுந்தழைகட்டிப் புஷ்பாலங்காரம் செய்து புது மணல் பரப்புவதும், பிறகு சுமங்கலிகளாவிருப்பவர் நன்னீராடித் தலைவன் தலைவியரை ஒன்று சேர்ப்பதுமுண்டு. இவையே அக்காலச் சடங்குகள். இப்போது அநுஷ்டிக்கப் படும் சடங்குகளுக்கு இலக்கிய நூல்களில் ஆதாரமேயில்லை. இவ்விதம் சேர்க்கப்பட்ட காதலர் இருவர் மாறா அன்புடன் வாழ்கின்றனர்.வயது உயர உயர அன்பு குறையுமென நினைப் பதற்கில்லை. தலைவன் தலைவியைப் விட்டுப் பிரியாமலும் தலைவி தலைவனைவிட்டுப் பிரியாமலுமிருக்கின்றனர். அக்காலத்தில் முன்னோர் வைத்த பொருளைக் கொண்டு காலம் கடத்துவதை விட்டுத் தனது தாளாண்மையால் பணம் தேடி வாழ்வதே நலமென நினைத்தனராகையால் தலைமகன் பொருள் தேடவும், கல்வி பயிலவும் போரில் கலந்துகொள்ளவும் தலைவியை விட்டுப் பிரிவதுண்டு. இத்தகைய பிரிவைத் தலைவி தாங்கமாட்டாது அரற்றுவாள். தோழி அவளுக்கு ஆறுதல் கூறி ஆற்றுவாள். தலைவனும் தனது புறப்பாட்டை நேரில் தலைவியிடம் சொல்லாது சில குறிப்புகளால் உணர்த்துவான். அல்லது தோழி மூலம் செய்தி விடுப்பான். தலைவன் வரவையே எதிர்நோக்கித் தலைவி உண்ணல், பூச்சூடல் என்பன எதையும் கொள்ளாது காத்திருப்பாள். தலைவி பிரிவை ஆற்றாதவளாகி யிருப்பதை உணர்ந்த தோழி தலைவிக்கு வருந்த வேண்டா மென்று சொல்லி தலைவன் தன்னிடம் சீக்கிரத்தில் வருவதாகச் சொல்லிப் போனதாகக் கூறித் தேற்றுவாள். கலித்தொகையிலே இந்த நிலையை “அடிதங்கு அழலன்ன வெம்மையாக” என்ற செய்யுள் மூலம் விளக்கியுள்ளார்கள். அதில் தோழி தலைவியை நோக்கி வெம்மையால் உலர்ந்து சொற்ப நீருள்ள ஒருசிறு குட்டையில் ஆண்யானையும் பெண்யானையும் நீரருந்தச் சென்ற போது அங்கு அருந்துவதற்குப் போதிய நீர் இல்லாதிருந்தும் ஆண் யானை முன்னதாக குடிக்காது “பிடியூட்டி பின் உண்™ணும் களிறு” எனக் குறிப்பிட்டிருப்பதுபோல பெண் யானையைக் குடிக்கும்படிச் செய்துவிட்டுப் பிறகு குடிப்பதைப் பார்த்துவிட்டும் அங்கு உன் தலைவன் நீண்ட நாள் தங்க மாட்டான் என்று கூறுகிறாள். குறுந்தொகையிலும் இந்நிலையை விளக்க இன்னொரு செய்யுளிருக்கிறது. சுனை நீலைக் குடிக்க வந்த ஆண்மானும் பெண்மானும் அங்கு இருவரும் குடிப்பதற்குப் போதிய நீரில்லாமையால் ஆண் மான் பெண் மான் குடித்தால் போதுமென நினைத்ததாம். ஆனால் ஆண்மானை விட்டுப் பெண்மான் முன்னதாகக் குடிக்க மனம் கொள்ளாது. ஆகையால் ஆண்மான் வாயை ஜலத்தில் வைத்துக் குடிப்பது போல் பாசாங்கு காட்டி விட்டுப் பிறகு பெண்மானை குடிக்கச் செய்யுமாம். தலைவன் தலைவியர்க்கிடையே உள்ள உள்ளன்பையும் இணைபிரியாத் தன்மையையும் பண்டைய ஆசிரியர்கள் இத்தகைய முறையில் விளக்கியிருக்கிறார்கள். ஜாதிப் பாகுபாடு என்பது தமிழருக்குள் இருந்ததாகத் தெரியவில்லை. வருணம் என்பது வட சொல், தமிழில் இதற்கு உரிய சொல்லே கிடையாது. தொல்காப்பியர் தமது நூலிலே வட சொற்கள் பலவற்றை உபயோகித்திருக்கிறார். குஞ்சரம் என்ற சொல்லை அவர் தாராளமாகக் கையாண்டிருக்கிறார். ஜாதி பாகுபாட்டைக் குறிக்கும் தமிழ்ச்சொல் இருந்திருந்தால் அவர் அதற்கு இலக்கணம் கூறியிருப்பார். அவர் நிலப்பெயர் குடிப்பெயர்... எனக் குறிக்கும் சூத்திரத்தில் ‘குடிப்பெயர்’ என்று ஆசிரியர் சொல்லியுள்ள இடத்தில் உரையாசிரியர்கள் சிலர் ஜாதி பாகுபாட்டைப் புகுத்த முயற்சிக்கின்றனர். மற்றும் சிலர் அந்த சூத்திரத்திலே “திணை நிலைப்பெயர்” என்று கூறியுள்ள இடத்திலே அதைப் புகுத்தப் பார்க்கின்றனர். பிறப்பு, திணை, குடி என்ற வார்த்தைகள் ஜாதியைக் குறிக்குமா என்று பார்த்தாலும் அவ்விதம் கொள்ளுவதற் கில்லை. ஆரியர் கலப்புக்குப் பின் தமிழரிடம் ஏற்பட்ட ஜாதி பாகுபாடு களுக்கும் ஆரியர் களுக்குள்ளேயிருக்கும் வருண பேதங்களுக்கும் கூட வித்தியாசமிருக்கிறது. அந்த நான்கு வருணத்திலே தமிழர்கள் யாவரும் அடங்கவில்லை. பிராம்மண ஷத்ரிய, வைசிய, சூத்திரர் என்று பிரிக்கப்பட்டிருப்பதில் நான்காவதாகவுள்ள சூத்திரர் என்ற பதத்துக்கு ஏவல் செய்வோர் எனப் பொருள்படுத்தப் படுகின்றது. அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற பாகுபாட்டில் கடைசியாகவுள்ள வேளாளர் என்ற பதத்துக்கு அடிமை என்ற பொருளில்லை. வேளாண்மைத் தொழில் செய்பவர் எனவே அதற்குப் பொருள். அத்தொழிலும் அதனைச் செய்பவர்களும் தமிழர்களால் முதன்மையாகப் போற்றப்படுகிறார். தொல்காப்பியர் காலத்திலும் பிறகும் ஆரியக்கொள்கைகள் கலக்க ஆரம்பித்தன. இவற்றில் முக்கியமானவை வேதம் வேள்வி வருணம் ஆகிய மூன்றே. வேதம் தமிழ்மக்களாலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால் வேத வேள்வியைத் தமிழ்மக்கள் ஒப்புக் கொள்ளவில்லை. தமிழ் அரசர் சிலர் வேள்வி புரிந்ததாகத் தெரிகின்றதானாலும் ஆரியர்கள் செய்தது போல அவர்கள் செய்யவில்லை. இவைகளை யெல்லாம் பார்க்கும்போது ஆரியர்கள் மிகப் பழைய நாளிலேயே தமிழர்களோடு கலக்க ஆரம்பித்தார்கள் எனத் தெரிகிறது. தமிழரின் போர்முறைகள் தமிழர்கள் தறுகண் ஆண்மையுடையவர்கள், அஞ்சாதவர்கள் என்பதற்குப் பல ஆதாரங்களிருக்கின்றன. “விழித்தகண்” என்பதைத் தொடக்கமாகக் கொண்ட குறளடி தமிழரின் தறுகண் முறையை வெளியாக்குகின்றது. போர்முறையை வெட்சி, வஞ்சி, தும்பைத்திணை, உமிஞ்ஞைத் திணை எனப்பல பிரிவுகளாகப் பிரித்திருக்கின்றார். வெட்சி என்பது முதலில் ஆட்களை ஏவி, வேற்றரசனின் பசுக் கூட்டங்களைப் பிடித்து வரச் செய்தால் அவற்றை மீட்க அவ்வரசன் வர இருவரும் பொருவது. வஞ்சியென்பது நாட்டைக் கைப்பற்றப் போர் செய்வது, தும்பைத்திணை என்பது வீரத்தைக் காட்டப் போரிடுவது, உழிஞ்ஞைத்திணை யென்பது மதில் வளைத்து முற்றுகையிட்டுப் போரிடுவது. அக்காலத்தில் அரசர்கள் நால்வகைப் படைகளையும் வைத்திருந்த தாகத் தெரிகிறது. “முழுமுதல் அரணம்” எனத் தொல்காப்பியனார் கூறியிருப்பதால் அக்காலத்தில் உயர்ந்த கோட்டைகளிருந்தனவென்று தெரிகிறது. நல்ல நாள் கண்டு குடை, வாள் முதலியனவற்றை வெளியே புறப்படச் செய்து பிறகு அரசர்கள் போர்முனைக்குச் செல்லும் வழக்கமுடையவர்களாக விருந்ததாகவும் தெரிகிறது. போரிடுவதற்கு முன் படையாளருக்கு விருந்திட்டு அரசனும் உடனிருந்து உண்ணுவதும் வழக்க முண்டென்று தெரிகிறது. போரிடுவதில் சில நியாயங்களை அநுஷ்டிக்க வேண்டுமென்றும் நிர்ணயம் செய்யப்பட்டிருக் கிறது.பகைவர் வலியிழந்த காலத்தில் அவர்களைத் தாக்காமல் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்றும் அதுவே யுத்ததருமமென்றும் சொல்லப்பட்டிருக்கிறது. தமிழ்மக்களின் வாழ்க்கை முறை தமிழ்மக்கள் மிக்க முயற்சியுடையவர்கள். நாவாய்கள் மூலம் வெளிநாடுகளுக்கும் சென்று வாணிபம் நடத்தி வந்திருக்கின்றனர் என்பதற்கு அநேக ஆதாரங்களிருக்கின்றன. இல்லறம் நடத்தும் முறையில் அவர்களின் விருந்தோம்பும் தன்மை மிகச் சிறந்ததாகும். அவர்கள் சிறந்த ஒழுக்கத்தினராகவும் வள்ளன்மை வாய்ந்தவர்களாகவும், பிழைத்தார் தாங்கும் காவல் பான்மையோராகவும், மெய்யுணர்வு பெறுவதில் கருத்துக் கொண்டாராகவும் இருந்தனரென்றம் முடிவாகப் பற்றறத் துறக்கும் தன்மையினராயினர் எனவும் குறிக்கப்பட்டிருக்கின்றது. உலக இன்பத்தை நன்கு அநுபவித்த பின் அவர்கள் இவ்வின்பம் நிலையாதது என்பதை அறிந்து வீடு பெற விரும்பும் தன்மையினர் என்பதைக் காட்டவும் ஆதாரங்களுண்டு. நாவலர் நாட்டார் தமிழ்உரைகள் - 16, பக். 82-130 3. தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் முதலாவது நூன்மரபு இயல் முன்னுரை நூலுக்கு மரபாக வழங்கிய குறியீடுகளைக் கூறுவது நூன்மரபாகும். இவ்வியலில் எழுத்திலக்கணத்துக்கு உரிய எழுத்து, உயிர், குறில், நெடில், மெய், வல்லினம், மெல்லினம். இடையினம் முதலான பல குறியீடுகள் கூறப்படும். சுருக்கம், விளக்கம், எடுத்தாட்சி இவை குறியீட்டின் பயன். அறிவியல் கலையியல் எனப்பட்ட எல்லாத்துறைகட்கும் குறியீடுகள் உள. எழுத்ததிகாரத்தின் முதலியலான நூன்மரபில் எழுத்துக் குறியீடுகளைச் சொல்வது போலச் சொல்லதிகாரத்தின் முதலியலான கிளவியாக்கத்தில் உயர்திணை, அஃறிணை, பெயர்வினை இடை உரி என்றின்ன சொல்லிலக்கணக் குறிகளையும் பொருளதிகாரத்தின் முதலாவது அகத்திணை யியலில் பெருந்திணை, ஐந்திணை, கைக்கிளை, முதல் கரு உரி என்றினைய பொருளிலக்கணக் குறிகளையும் சொல்லுவர் ஆசிரியர். பாயிரம் கூறுவதுபோல இது மயங்காமரபின் ஓர் எழுத்துமுறை. நூல் - இலக்கணநூல்; ஈண்டு போக்கறு பனுவலான தொல்காப்பியத்தைக் குறிக்கும். முதலாவது இயலுக்கு எழுத்துமரபு என்று பெயர் இருக்கலாம். ஆனால் நூலின் தொடக்கவியல் என்று காட்டுவதற்கு நூன்மரபு என்ற பெயர் வைக்கப்பட்டது. முன்னுரையை நூன்முகம் என்று இன்றும் நாம் வழங்குகின்றோம். இயற்கருத்து தமிழ்மொழி அகரமுதல் னகரம் வரை முப்பது எழுத்துக்கள் (ஒலிகள்) கொண்டது. குற்றியலிகரம். குற்றியலுகரம். ஆய்தம் என்ற மூன்றும் எழுத்துப் போல்வன. இவை சார்பெழுத்தாம். புள்ளிபெறும். குற்றெழுத்து ஐந்து ஒரு மாத்திரை இசைக்கும். நெட்டெழுத்து ஏழு. இரண்டு மாத்திரை இசைக்கும் ஓரெழுத்து மூன்று மாத்திரை ஒலிக்கும் தன்மை தமிழில் இல்லை. கூடுதலான மாத்திரை ஒலிக்கவேண்டின். வேண்டிய அளபுக்குரிய எழுத்துக்களைக் கூட்டி ஒலிக்க வேண்டும். இமைக்கும் காலமும் நொடிக்கும் காலமும் ஒரு மாத்திரைக் காலவளவாம். அகரமுதல் ஒளகாரம் வரை பன்னிரண்டும் உயிர் என்ற குறியும். ககரமுதல் னகரம் வரை பதினெட்டும் மெய் என்ற குறியும் பெறும். மெய்க்கும் மூன்று சார்பெழுத்துக்கும் மாத்திரை அரை. மகரமெய் கால் மாத்திரை ஒலிக்கும் இடனுண்டு. கால் மாத்திரை பெறும் மகரமெய்க்குப் புள்ளி வடிவு உள்ளாக இருக்கும். (ம) பொதுவாக மெய்யெழுத்துக்கள் தனிநிலையில் புள்ளிவடிவுகள் பெறும். உயிரெழுத்துக்களில் எகரத்துக்கும் ஒகரத்துக்கும் புள்ளிவடிவு உண்டு. (எஒ) மெய்யும் உயிரும் சேர்ந்து உயிர் மெய்யாகுங்கால் வரிவடிவு மாற்றங்கள் ஏற்படும். க், ச், த் எனவரும் மெய்யெழுத்தின் மேல் இருக்கும் புள்ளியை மட்டும் எடுத்துவிட்டால் க, ச, த, என்று அகரத்தொடு கூடிய உயிர்மெய்யாகிவிடும். ஏனை உயிர் மெய்கள் கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கௌ என்றவாறு பல வடிவுத்திரிபுகள் எய்தும். உயிர்மெய் என்பது குறியீடாக இருந்தாலும் முதலில் மெய்யொலியும் பின் உயிரொலியும் தோன்றும். மெய் வல்லெழுத்து ஆறு, மெல்லெழுத்து ஆறு, இடையெழுத்து ஆறு என்று முவ்வினமாம். இவை தம்முள் தொடருவது மெய்ம்மயக்கம் (கலப்பு, இயைபு,) எனப்படும் அப்பா, அண்ணா, அல்லா, எனத் தன்மெய்க்குப்பின் தன்மெய்யே வருதலுண்டு. ஆட்சி, ஆண்டு ஆய்வு என ஒருமெய்க்குப்பின் வேற்றுமெய் வருதலுமுண்டு. இவை ஒரொற்றுடனிலை எனப்படும். பதினெட்டு மெய்களில் ர, ழ, நீங்கிய பதினாறு மெய்கள் தம்முன்தாம் வரும். ர, ழ, இரண்டின் முன் சார்பு வாழ்வு எனப் பிற எழுத்துக்களே வரும். குற்றெழுத்து ஐந்தில் அ, இ, உ என்ற மூன்றும் சுட்டுக் குறியும். நெட்டெழுத்து ஏழில் ஆ, ஏ, ஓ என்ற மூன்றும் வினாக்குறியும் பெறும். உயிரெழுத்துக்களும் மெய்யெழுத்துக்களும் மேலே சொல்லிய மாத்திரையளவுகளைக் கடந்து, இசைத்தமிழில் இசைத்தல் உண்டு என்று யாழ்மறை கூறும். கருத்து விளக்கம் எழுத்து என்பது தமிழில் பொருட்சுட்டுடைய மொழி யொலியைக் குறிக்கும்; வரிவடிவையும் குறிக்கும். நூன்மரபு முதற்கண் ஒலிகளையும் ஒலிக்குரிய அளபுகளையும் கூறிய பின், சிலவற்றிற்கு வரிவடிவும் கூறும். இலக்கணத் தெளிவுக்கு வேண்டப்படும் வரிவடிவுகளை மட்டும் தொல்காப்பியம் நூன்மரபிற் சொல்லும். மயக்கம் - ஒரு மெய்யெழுத்தோடு ஒரு மெய்யெழுத்துத் தொடரும் நிலை, சேர்ந்தியையும் தன்மை. நாம் இன்று கூறும் கலக்கம், குழப்பம் என்ற பொருளில்லை. மெய்ம்மயக்கம் என்பது தமிழுக்கு உயிரனைய அமைப்புக்கூறு. இன்ன மெய்க்குப்பின் இன்னமெய்தான் வரலாம் என்ற மொழியியல்பை இதனால் உணரலாம். மொழி நிலைபேற்றுக்கும் மொழிக் காப்புக்கும் சொல்லாக்கத்திற்கும் சொல்லொழுங்குக்கும் இவ் விலக்கணம் வரம்பானது. இது செயற்கையாகப் புகுத்தும் புறவிதியன்று. மக்கள் வாய்வழக்கிலிருந்து தோன்றும் இயல்பு நெறி. மொழிக்கு மொழி இம்மயக்கம் வேறுபடுமாதலின் தமிழ்மொழியின் அமைப்பை நன்குஅறிந்து வழாது பேசவும் எழுதவும் வேண்டும். எல்லா இலக்கணங்களும் இதனை யொட்டி நடத்தலின் நூன்மரபு மெய்ம்மயக்கம் பற்றி ஒன்பது நூற்பாக்களில் விரித்துக் கூறுகின்றது. ஒலி, எண்ணிக்கை, வகை, அளபு, வடிவு, மயக்கம் என்ற எழுத்தின் அறுகூறுகள் நூன்மரபில் மொழியப்பட்டன. மேலும் இந்நூன்மரபு தனியெழுத்துக்குத் தனித்த நிலையில், அதன் தன்மைகளை நுவலும். வரிவடிவுபற்றிய செய்தி நூன்மரபளவில் நின்றுவிடும். புணர்ச்சியிலக்கணம் அனைத்தும் ஒலிநிலையில் வைத்து விதிக்கப்படுவன என்பதனை மறவாது நினைத்துக் கொள்க. ஆதலின் எழுத்து என்பது ஒலிநிலையைக் குறிக்கும் எனவும் எழுத்ததிகாரம் என்பது ஒலிநிலை யடிப்படையில் ஒலி, பிறப்பு, ஒலியிடைப்புணர்ச்சி முதலான இலக்கண விதிகளைச் சுட்டும் அதிகாரம் எனவும் அறிக. முப்பது தனியொலிக்கும் முப்பது தனிவரிவடிவங்கள் தமிழில் உண்டு; அஃதாவது ஒவ்வோர் ஒலியும் தனக்கென ஒரு வரி வடிவு உடையது. இவ்வுடைமை செம்மையான தமிழ் வரலாற்றுக்கு எடுத்துக்காட்டு. இங்'னம் ஒற்றுமையிருத்தலின் எழுத்து என்ற ஒரு குறியீடே இரண்டினையும் குறிக்கப் பயன்பட்டது; எனினும் இக்கால வளர்ச்சியில் மேலும் தெளிவு கருவி ஒலியெழுத்தை ஒலியன் எனவும் வரியெழுத்தை வடிவன் எனவும் புதிய குறியீடுகள் அமைத்துக்கொள்வோம். ஒலியனை `எழுத்தொலி' என்பர் நன்நூலார். - மாணிக்க விழுமியங்கள் - 14, பக். 185-188 4. சுதந்திர போராட்டத்தின் கலங்கரை விளக்கம் “இவர் வெறுக்கத்தக்க இராஜதுரோகி. இவருடைய எலும்புகள்கூட, சாவுக்குப் பின் ராஜதுவேஷத்தையூட்டும்...” வ.உ.சி. மீதான அரச நிந்தனைக் குற்றசாட்டில் ஆங்கிலேய அரசின் நீதிபதி பின்ஹே தன்னுடைய தீர்ப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். `இறந்தவரின் எலும்புகள் கூட தேசபக்தியை ஊட்டும் வல்லமை பெற்றவை’ என்ற அச்சத்தை ஆங்கிலே யரிடம் ஊன்றிய தென்னிந்தியாவின் மாபெரும் தலைவர் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை. அந்நிய ஆட்சிக்கு எதிராகப் பேசினால் சிறை, துணை நின்றால் தீவாந்திரம், எதிர்த்துப் போராடினால் தூக்கு. மக்கள் எழுச்சியின் போதெல்லாம் வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவதுதானே அரசுகளின் வாடிக்கை. ஆங்கிலேய அரசும் 1800-*களில் தென் தமிழகத்தில் சுடர்விட்ட எதிர்ப்பை, தூக்குக் கயிற்றால் அணைத்தது. பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகில்... போராளிகள் புதைக்கப் பட்ட மண்ணிலேயே பிறந்தார்கள். நூறாண்டுகளுக்குப் பிறகு தென்தமிழகத்தில் மீண்டும் ஒரு போராட்டக் கனல் உருவானது. வீழ்த்தப்பட்ட பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகில் இருந்த ஒட்டப்பிடாரத்தில், 73 ஆண்டுகளுக்குப் பிறகு வ.உ.சி. பிறந்தார். பரம்பரையாகச் செல்வந்தர்கள். தமிழ்ப் புலமையும் கல்வியும் மேலோங்கிய குடும்பம். செல்வமும் கொஞ்சம் சுதந்திரமும் தந்த வழக்கறிஞர் பணியை மேற்கொண்டார்கள் குடும்பத்தினர். திண்ணைப் பள்ளியில் கல்வி கற்ற வ.உ.சி.க்கு உயர்கல்வி தரவேண்டும் என்பதற்காக ஒட்டப்பிடாரத்தில் அவரின் தந்தை உலகநாதன் புதிதாக நடுநிலைப் பள்ளி ஒன்றைத் தொடங்குகிறார். வைதீகமான குடும்பத்தின் பின்னணியில் பிறந்து வளர்ந்த வ.உ.சிக்கு கல்வி, திருமணம், குழந்தை பிறப்பெல்லாம் காலப்படி நடந்தது. வ.உ.சிக்கு மெய்ஞானத்திலும், தமிழிலக்கியத்திலும் ஆழ்ந்த ஈடுபாடு. வங்கத்தில் பேரெழுச்சியாக உருவான சுதேசி இயக்கம் தமிழகத்திலும் பரவுகிறது. ஆங்கிலேயர்கள் விடுதலைப் போராட்ட வீரர்களை ஏளனமாக `சுதேசி’ என்றழைத்தார்கள். அச்சொல்லே மக்களை ஓரணியில் திரட்டுவதற்கான மந்திரச் சொல்லாகவும் மாறிய நேரம் அது. பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய், விபின் சந்திர பாலர் போன்ற தலைவர்கள் `சுதேசி’ இயக்கத்தின் முன்னோடிகளானார்கள். வ.உ.சி. தென்னிந்தியாவின் போராட்டத்துககுத் தலைமையேற்கிறார். சுப்பிரமணிய சிவாவும், பாரதியும் சுதேசி இயக்கத்தின் தளகர்த்தர்கள். அடி மேலை கடல் முழுதும்... “சுதேசி சுதேசி... என தெருக்களில் கோஷமிட்டுக் கொண்டிருந்தால் நம்மால் அந்நியர்களை விரட்ட முடியாது. அந்நியர்கள் ஆதிக்கம் மேலோங்கி இருக்கும் தொழில்களில் நம்மவர்களும் ஈடுபட வேண்டும்” என்ற தீர்க்க தரிசனம் வ.உ.சி.க்கு இருந்தது. ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி’ என்ற பெயரில் சுதேசிக் கப்பல் கம்பெனியை நண்பர்களுடன் சேர்ந்து தொடங்குகிறார். பாண்டித்துரை தேவர் தலைவர். இரண்டு செயலார்களில் வ.உ.சி. ஒருவர். ரூ. 10 லட்சம் முதலீட்டில் ரூ. 25க்கு ஒரு பங்கு வீதம் 40 ஆயிரம் பங்குகள் திரட்டப்பட்டு, இரண்டு சுதேசிக் கப்பல்கள் வங்கக் கடலில் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையில் இயக்கப்பட்டன. இந்திய அரசியல் வரலாற்றிலேயே முனனோடியான முயற்சி இது. வ.உ.சி. தென்தமிழகத்தில் பெரும் எழுச்சியை உண்டாக்கினார். நெல்லை மக்களுக்கு வ.உ.சியின் சொற்களே ஆணை. அவருடைய கை அசைவை மக்கள் செயலாக்கினார்கள். தூத்துக்குடி கோரல் மில் பிரச்சினைக்காகத் தொழிலாளர்களை ஒன்றிணைத்தார். போராட்ட வெற்றிக்காக தொழிலாளர்கள் பணிக்குச் செல்லவில்லை. நாவிதர்கள் சுதேசி எதிர்ப்பாளர் களுக்குச் சவரம் செய்ய மறுத்தனர். குதிரை வண்டி ஓட்டுபவர்கள், குதிரைகளை அவிழ்த்து விட்டு அமைதியாக நின்றார்கள். துப்புரவு பணியாளர்கள் பணிக்கு வரவில்லை. சமையற்காரர்கள் சமைக்கவில்லை. மொத்த நகரமும் ஸ்தம்பித்தது. கோஷம் போட்டாலும், கொடி பிடித்தாலும் பொங்கி எழும் அந்நிய அரசு, கப்பல் விடுவதையும் தொழிலாளர்களிடம் ஒற்றுமையை உண்டாக்குவதையும் பொறுத்துக் கொள்ளுமா? நெல்லை கலெக்டர் விஞ்சு துரை, இனியும் விட்டு வைக்கக்கூடாது என்று வ.உ.சியை கைது செய்தான். தலை சாயுதல் செய்யோம் அரச நிந்தனைக் குற்றத்துக்காக 10 ஆண்டுகளும், சுப்பிரமணிய சிவாவுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக 10 ஆண்டுகளும் ஆக, 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இரண்டு தண்டனைகளையும் ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவு. தீர்ப்பைக் கேட்ட வ.உ.சியின் சகோதரர் மீனாட்சிப் பிள்ளை, மனநிலை திரிந்து, இறக்கும்வரை பித்தராகவே திரிந்தார். மனைவியும் 3 குழந்தைகளும் பெற்றோர்களும் உறைந்து நிற்க, வ.உ.சி.யும் நண்பர்களும் சிரித்த முகத்துடன் தான் சிறைக்குச் சென்றார்கள். கோவை சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவருக்கு ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் இருந்த மக்களின் எழுச்சி பேருவகையாக அமைந்தது. இவ்வெழுச்சி நாட்டுக்கு விடுதலைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையோடு சிறை சென்றார். சிறையில் வ.உ.சி.க்கு சகிக்கமுடியாத கொடுமைகள். சணல் திரிக்கும் இயந்திரத்தில் வேலை. கைகளில் சதைகள் பிய்த்து ரத்தம் கசிவதைப் பார்த்த சிறை அதிகாரி, மேலும் தண்டிக்க மாடுகளுக்குப் பதிலாக செக்கிழுக்கச் சொன்னான். கொதிக்கும் வெயிலில் சுடும் கால்களுடன் செக்கிழுத்தார். மிருகத்தைப் போல் ஒரு தலைவரை நடத்திய கொடுமை வ.உ.சி.க்குத்தான் நேர்ந்தது. முறையீடு, மேல் முறையீடு என்று அடுத்தடுத்த மனுக்களால் வ.உ.சியின் தண்டனைக் காலம் 6 ஆண்டு காலமானது. தண்டனைக் குறைப்புகளால் 4 ஆண்டுகள் 3 மாத சிறை வாசத்துக்குப் பிறகு விடுதலைப் பெற்ற வ.உ.சியை சிறை வாசலில் வரவேற்க காத்திருந்தவர் சுப்பிரமணிய சிவா, சிறை வாசம் தந்த பரிசான தொழுநோயுடன் தளர்ந்துபோன உடம்புடன் சிவா நின்றிருந்தார். சென்னை வாழ்க்கை சிறைக்குச் செல்லும்போது சுதேசி எழுச்சியினால் நிறைந்திருந்த வீதிகள் அடக்குமுறையின் அமைதியில் இருந்தன. மக்கள் மௌனிகளாக இருந்தார்கள். பெருங்கனவுடன் வாங்கப்பட்டிருந்த கப்பல் கம்பெனியை உடன் இருந்தவர்கள் அரசாங்கத்திடமே விற்றிருந்தார்கள். வழக்கறிஞர் உரிமம் பறிக்கப்பட்டிருந்தது. நான்காண்டு கால சிறை வாழ்க்கையில் எல்லாம் மாறிப்போயிருந்தது. நெல்லைக்குத் திரும்புவதற்கும் கட்டுப்பாடு. வ.உ.சி. சென்னையில் குடியேறினார். சிறையில் இருந்த காலத்தில் உறுதுணையாக இருந்தவர்கள் நண்பர்கள்தான். வ.உ.சியை `மாமா’ என்று அன்பொழுக அழைக்கும் பாரதி, வ.உ.சி. சிறையில் படும் துன்பங்களைத் தன் எழுத்தின் வாயிலாக மக்களிடம் கொண்டுசென்றார். காங்கிரஸ்காரர்கள் யாரும் உதவவில்லை. தென்னாப்பிரிக்க, இலங்கை, மலேயாவில் இருந்த தமிழர்கள்தான் உதவினார்கள். வ.உ.சி.யின் சென்னை வாழ்க்கைப் பல சிரமங்களுக் கிடையில் நடந்தது .பெரும் செல்வந்தரான வ.உ.சி. குடும்பத்தைக் காக்க அரிசிக் கடை, மண்ணெண்ணெய் வியாபாரம் போன்ற தொழில்கள் செய்தார். கூட்டுறவு இயக்கம், தொழிலாளர் இயக்கம், சுதேசி இயக்கம் மூன்றிலும் தீவிரமாக செயல்படத் தொடங்கினார். திரு.வி.க. உள்ளிட்ட தலைவர்களுடன் இணைந்து சென்னையில் பல்வேறு தொழிற்சங்கங்களை அமைத்தார். அவரின் அடிப்படை கொள்கை சுயராஜ்ஜியமும், மக்கள் நலனும்தான். அதற்கு ஆதரவான எல்லா இயக்கங்களிலும் பங்கெடுத்தார். காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் உடன்பாடு இல்லையென்று மாநாட்டிலேயே கூறிவிட்டு வெளியேறியவர். காங்கிரஸின் கொள்கைகளோடு முரண்பட்டு, காங்கிரஸை விட்டு வெளியேறுகிறேன் என்றுகூட அறிவித்திருக்கிறார். ஆனால், ஒருபோதும் வெளியேறியதில்லை. ஒருபடைப்பாளியாக... நீதிபதி வாலேஸ் என்பவரால் மீண்டும் வழக்கறிஞர் பணிபுரிய சன்னத் கிடைக்கப்பெற்று தன்னுடைய ஊருக்குத் திரும்பினார் வ.உ.சி. ஆனாலும் தொழிலிலும் கட்சியிலும் பழைய நிலைக்கு வரமுடியவில்லை. நெருக்கடியான காலத்திலும் எழுதுவதை நிறுத்தவில்லை. சுயசரிதை நூலொன்றுடன் 8 நூல்களும், 4 மொழிபெயர்ப்பு நூல்களும், திருக்குறள் மற்றும் தொல்காப்பிய பதிப்பும் வ.உ.சி.யின் இலக்கியப் பங்களிப்புகள். சுதந்திர இந்தியாவைத் தன் வாழ்நாளில் தரிசித்துவிடும் ஆவலோடு வ.உ.சி.யின் கடைசி நாட்கள் கடந்தன. உலக யுத்தம் வந்தால்தான் இந்தியாவுக்கு விடுதலை கிடைக்கும் என யுத்தத்தை எதிர்பார்த்து படுக்கையில் கிடந்தார். தன்னைச் சிறையில் அடைத்துத் துன்புறுத்தியவர்கள் முன்னால் சுதந்திர நாட்டில் வாழ்ந்து காட்ட முடியவில்லையே என்ற ஏக்கம் அவர் உடலை மேலும் வருத்தியது. நாளுக்கு நாள் பலவீனமடைந்த வ.உ.சி முடிவு நெருங்கி விட்டதை உணர்ந்தார். தன்னுடைய உயிர் காங்கிரஸ் அலுவலகத்தில்தான் போக வேண்டும் என்று காங்கிரஸ் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லச் சொன்னார். வ.உ.சியின் விருப்பத்துக்காக தூத்துக்குடி காங்கிரஸ் அலுவலகத்துக்குக கூட்டிச் சென்றார்கள். சில நாட்களுக்குப் பிறகு, மீண்டும் இல்லத்துக்கு அழைத்து வரப்பட்ட வ.உ.சி. பாரதியின் சுதேச பாடல்களைக் கேட்க விரும்பினார். தொண்டர்கள் பாரதியின், `பாரத சமுதாயம் வாழ்கவே’, `பறையருக்கும் இங்குத் தீயர் புலையருக்கும் விடுதலை’ போன்ற பாடல்களைப் பாடினர். காங்கிரஸ் தொண்டர் சிவகுருநாதனை, `என்று தணியும் இந்த சுதந்திரத் தாகம்’ என்ற பாடலைப் பாடச் சொல்லிக் கேட்டவாறே தன்னுடைய இறுதி மூச்சை நிறுத்திக்கொண்டார் வ.உ.சி. காங்கிரஸினுடைய தென்னிந்தியத் தலைவராக இருந்த வ.உ.சிக்கு காங்கிரஸ் அலுவலகத்தில் சிலை வைக்க சத்தியமூர்த்தி காங்கிரஸ் நிதியில் இருந்து பணம் தர மறுத்துவிட்டார். ம.பொ.சி உள்ளிட்ட தலைவர்களின் முயற்சியில்தான் அவருக்கு சிலை வைக்கப்பட்டது. போதிய பணம் வசூல் ஆகாததால் ஆளுயர சிலை முக உருவ சிலையானது. சிலைகளில் இல்லை வ.உ.சி. இன்றும் அம்மண்ணில் மக்கள் எழுச்சியாக நடந்து கொண்டிருக்கும் போராட்டங்களின் வெற்றிகளில்தான் இருக்கிறார். - அ. வெண்ணிலா நன்றி ‘தீ’ இந்துகள (தமிழ் நாளிதழ்) 31-5-2018 பாயிரம் மேற்கோள் சொற்றொடர் நிரல் அகரவரிசையில் - பக்க எண் அதுவே, பிண்டம் தொகைவகை 83 அப்புலம் அரிந்தப 83 அவ்வினை யாளரொடு 80 அன்னங்கிளியே 79 அனைய னல்லோன் 80 ஆக்கியோன் பெயரே 80 ஆசான் உரைத்தவை 81 ஆயிர முகத்தான் 78 ஈதல் இயல்பே 79 ஈரைங் குற்றமும் 83 ஈவோன் தன்மை 79 எத்திறத்து ஆசான் 80 ஏதுவின் ஆங்கவை 83 ஒத்த சூத்திரம் 83 கழற்பெய் குடமே 79 காலம் களனே காரணம் 80 குரங்கெறி விளங்காய் 80 கொள்வோன் முறைமை 80 சூத்திரம் உரைஎன்று 83 செவ்வன் தெரிகிற்பான் 80 தன்மகன் ஆசான் 79 தன்னூல் மருங்கினும் 83 துடைத்துக் கொள்பொருள் 83 தோன்றா தோற்றி 81 நுட்ப மொப்பந் 83 நேரின மணியை 83 பாயிரத்திலக்கணம் 80 பொதுவினும் சிறப்பினும் 83 பொழிப்பே அகலம் 83 மடிமானி பொச்சாப்பன் 79 மலைநிலம் பூவே 79 யாற்ற தொழுக்கே 83 வழக்கின் இலக்கணம் 80 நூற்பா நிரல் (அகரவரிசையில்) நூற்பா எண் அஆ உஊ 174 அஆ என்னும் 182 அஇ உஅம் 31 அஃதிவ ணுவலாது 103 அஃறிணை விரவுப்பெயர் 156 அக்கென் சாரியை 271 அகமென் கிளவிக்கு 316 அகர ஆகாரம் 312 அகர இகரம் 54 அகர இறுதி 204 அகர உகரம் 55 அகரத் திம்பர் 56 அடையொடு தோன்றினும் 319 அண்ணம் சேர்ந்த 99 அண்ணம் நண்ணிய 93 அணரி நுனிநா 94 அத்தவண் வரினும் 220 அத்திடை வரூஉம் 169 அத்தின் அகரம் 126 அத்தே வற்றே 134 அத்தொடு சிவணும் 318 அதனிலை உயிர்க்கும் 479 அந்நான் மொழியும் 430 அப்பெயர் மெய்யொழித்து 351 அம்மின் இறுதி 130 அம்மூ வாறும் 22 அரையளவு குறுகல் 13 அரையென வரூஉம் 166 அல்லதன் மருங்கின் 327 அல்லது கிளப்பின் இயற்கை 322 அல்லது கிளப்பின் எல்லா 426 அல்லது கிளப்பினும் 323, 409 அல்வழி யெல்லாம் இயல்பென 362 அல்வழி யெல்லாம் உறழென 369 அல்வழி யெல்லாம் மெல்லெழுத் 315 அவ்வழிப் பன்னீ ருயிரும் 84 அவ்வா றெழுத்தும் 92 அவ்வியல் நிலையும் 12 அவற்றுவழி மருங்கின் 119 அவற்றுள், அஆ ஆயிரண்டு 85 அஇ உஎ ஒ 3 ,இகர 155 ,, இன்னின் இகரம் 121 ,,ஈரொற்றுத் டர் 408 ,,கரமுங் கானும் 136 ,,ணனஃகான் 26 ,,நிறுத்த சொல்லின் 109 ,,மஃகான் 28 ,,மெய்யீ றெல்லாம் 105 ,,மெல்லெழுத்து 146 ,,ரகார ழகாரம் 49 ,,லளஃகான் முன்னர் 24 அவைதாம், இயற்கைய வாகும் 198 ''இன்னே வற்றே 120 ''குற்றிய லிகரம் 2 ''முன்னப் பொருள 143 ''மெய்பிறி தாதல் 110 அவையூர் பத்தினும் 473 அழனென் இறுதிகெட 355 அழனே புழனே 194 அளந்தறி கிளவியும் 446 அளபிறந் துயிர்த்தலும் 33 அளவாகும் மொழி 122 அளவிற்கும் நிறையிற்கும் 171 அளவும்...ஆயியல் திரியா 477 அளவும்...ஆயியல் திரியாது 474 அளவும்...எண்ணும் 390 அளவும்...வேற்றுமை 320 அன்று வருகாலை 259 அன்ன வென்னும் 211 அன்னென் சாரியை 195 ஆஈஊ, ஏஐ 4 ஆஎ ஒஎனும் 64 ஆஏ ஓஅம் 32 ஆகார இறுதி 222 ஆடூ மகடூ 272 ஆண்மரக் கிளவி 305 ஆணும் பெண்ணும் 304 ஆதனும் பூதனும் 349 ஆய்தம் நிலையலும் 400 ஆயிரக் கிளவி 464 ஆயிரம் வரினும் 436 ஆயிரம் வரினே 476 ஆயிரம் வருவழி 392 ஆரும் வெதிரும் 364 ஆவயின் வல்லெழுத்து 302 ஆவும் மாவும் 225 ஆவோ டல்லது 65 ஆறன் உருபின் 116 ஆறன் உருபினும் 162 ஆறன் மருங்கின் 469 ஆறென் கிளவி 458 ஆன்முன் வரூஉம் 234 ஆனின் னகரமும் 125 ஆனொற் றகரமொடு 233 இஈ எஏ 86 இக்கின் இகரம் 127 இகர இறுதி 236 இகர யகரம் 58 இடம்வரை கிளவிமுன் 252 இடைநிலை ரகரம் 440 இடைப்படிற் குறுகும் 37 இடையெழுத் தென்ப 21 இடையொற்றுத் தொடரும் 414 இதழியைந்து பிறக்கும் 97 இயற்பெயர் முன்னர் 348 இரண்டுமுத லொன்பான் 480 இராவென் கிளவி 228 இருதிசை புணரின் 342 இருளென் கிளவி 403 இல்ல மரப்பெயர் 314 இல்லென் கிளவி 373 இல்லொடு கிளப்பின் 294 இலமென் கிளவிக்கு 317 இறாஅல் தோற்றம் 344 இன்றி என்னும் 238 இன்னிடை வரூஉம் 187 இன்னென வரூஉம் 132 இனிஅணி என்னும் 237 ஈகார இறுதி 250 ஈமுங் கம்மும் 329 ஈரெழுத்து...உயிர்த்தொடர் 412 ஈரெழுத்து...வல்லொற்று 418 ஈரெழுத் தொருமொழி 407 ஈறியல் மருங்கின் 172 ஈறியல் மருங்கினும் 39 உஊ...என்னும் 63 உஊ...ஒளஎன 87 உஊ காரம் 74 உகர இறுதி 255 உகரமொடு புணரும் 164 உச்ச காரம் 75 உச்ச காரமொடு 79 உட்பெறு புள்ளி 14 உண்டென் கிளவி 431 உணரக் கூறிய 406 உதிமரக் கிளவி 244 உந்தி முதலா 83 உப்ப காரம் 76 உப்ப காரமொடு 80 உம்மை எஞ்சிய 224 உயர்திணைப் பெயரே 118 உயர்திணை யாயின் உருபியல் 325 உயர்திணை யாயின் நம்மிடை 191 உயிர்ஒள எஞ்சிய 69 உயிர்முன் வரினும் 208,395 உயிர்மெய் அல்லன 60 உயிர்மெய் ஈறும் 107 உயிரிறு சொல்முன் 108 உயிரீ றாகிய உயர்திணை 154 உயிரீ றாகிய முன்னிலை 152 உயிரும்...அளவும் 165 உயிரும்...குறிப்பினும் 482 உரிவரு காலை 241 உருபியல் நிலையும் 295 உருவினும் இசையினும் 40 உரைப்பொருட் கிளவி 213 ஊஎன் ஒருபெயர் 270 ஊகார இறுதி 265 எஎன வருமுயிர் 71 எகர ஒகர 16 எகர ஒகரம் 273 எகின்மர மாயின் 337 எஞ்சிய வெல்லாம் 77 எட்ட னொற்றே 444 எண்ணின் இறுதி 199 எண்ணுப்பெயர்க் கிளவி 420 எப்பெயர் முன்னரும் 129 எருவும் செருவும் 261 எல்லா எழுத்தும் 102 எல்லா மென்னும் 190 எல்லா மொழிக்கும் 141 எல்லாரு மென்னும் 192 எழுத்தெனப் படுப 1 எழுத்தோ ரன்ன 142 ஏஓ எனும் 73 ஏகார இறுதி 275 ஏயென் இறுதிக்கு 278 ஏழ னுருபிற்கு 202 ஏழென் கிளவி 389 ஏனவை புணரின் 382 ஏனவை வரினே 257 ஏனை எகினே 338 ஏனைப் புளிப்பெயர் 246 ஏனைமுன் வரினே 425 ஏனை வகரம் 185, 383 ஐஅம் பல்லென 394 ஐஒடு குஇன் 114 ஐஒள என்னும் 42 ஐகார இறுதி 281 ஐகார ஒளகாரம் 138 ஐந்த...மகாரமாகும் 443 ஐந்த...முந்தையது 454 ஐந்த...மெல்லெழுத் 448 ஐந்த...யகாரமாகும் 468 ஐந்தும் மூன்றும் 451 ஐயின் முன்னரும் 128 ஒடுமரக் கிளவி 263 ஒவ்வும் அற்றே 72 ஒழிந்ததன் நிலையும் 292 ஒற்றிடை இனமிகா 413 ஒற்றுநிலை திரியா 419 ஒற்றுமிகு தகரமொடு 345 ஒன்பான் ஒகரமிசை 445 ஒன்பான் முதனிலை 463 ஒன்பா னிறுதி ... மரபே 470 ஒன்பா னிறுதி ... மொழியே 459 ஒன்றுமுத லாக எட்டன் 434 ஒன்றுமுத லாகப் 200 ஒன்றுமுத லாகிய 475 ஒன்றுமுத லொன்பான் 438 ஓகார இறுதி 290 ஓகார இறுதிக்கு 181 ஓரள பாகும் 57 ஓரெழுத் தொருமொழி 45 ஒளகார இறுதி 296 ஒளகார இறுவாய் 8 ஒளவென வரூஉம் 153 ககார ஙகாரம் 89 கசதப முதலிய 144 கசதப முதன்மொழி 449 கண்ணிமை நொடியென 7 கதந பமஎனும் 61 கவவோ டியையின் 70 காரமுங் கரமும் 135 கிளந்த அல்ல 483 கிளைப்பெய...கிளைப் 339 கிளைப்பெய...கொளத் 308 கீழென் கிளவி 396 குமிழென் கிளவி 387 குயினென் கிளவி 336 குற்றிய லிகரம் 34 குற்றிய லுகரக் கின்னே 168 குற்றிய லுகரத் திறுதி 196 குற்றிய லுகரம் 67 குற்றிய லுகரமும் 106 குற்றெழுத் திம்பரும் 268 குற்றெழுத் தைந்தும் 44 குறியதன் இறுதி 235 குறியதன் முன்னர் 38 குறியதன் முன்னரும் 227 குறுமையும் நெடுமையும் 50 குறையென் கிளவி 167 குன்றிசை மொழிவயின் 41 கொடிமுன் வரினே 286 ஙஞண நமன 25 சகரக் கிளவியும் 62 சகார ஞகாரம் 90 சார்ந்துவரி னல்லது 101 சாரென் கிளவி 365 சாவ என்னும் 210 சிறப்பொடு வருவழி 350 சுட்டின் முன்னர் 206 சுட்டின் முன்னரும் 256 சுட்டி னியற்கை 239 சுட்டுச்சினை நீடிய 428 சுட்டுமுதல்..இயல்பா 258 சுட்டுமுதல்..ஒற்றிடை 264 சுட்டுமுதல்..நிலையும் 282 சுட்டுமுதல் வகரம் 184 சுட்டுமுதல் வயினும் 335 சுட்டுமுத லாகிய இகர 160 சுட்டுமுத லாகிய ஐயென் 178 சுட்டுமுத லாகிய வகர 379 சுட்டுமுத லுகரம் 177 செய்யா என்னும் 223 செய்யுள் இறுதிப் 51 செய்யுள் மருங்கின் 289 சேஎன் மரப்பெயர் 279 ஞகாரை ஒற்றிய 297 ஞணநம என்னும் 78 ஞநஎன் புள்ளிக்கு 183 ஞநம யவவெனும் 145 ஞநமவ இயையினும் 298 ஞநமவ என்னும் 27 டகார ணகாரம் 91 டறலள என்னும் 23 ணகார இறுதி 303 ணளவென் புள்ளி 151 ணனவென் புள்ளி 147 தகரம் வரும்வழி 370 தத்தம் திரிபே 88 தம்மியல் கிளப்பின் 47 தமிழென் கிளவி 386 தாம்நாம் என்னும் 189 தாயென் கிளவி 359 தாழென் கிளவி 385 தான்யான் என்னும் 193 தான்யா னெனும்பெயர் 353 தானும் பேனுங் 352 திங்கள் முன்வரின் 249 திங்களும் நாளும் 287 திரிபுவேறு கிளப்பின் 433 தேற்ற எகரமும் 274 தேனென் கிளவி 341 தொடரல் இறுதி 215 தொழிற்பெய ரெல்லாம் 328,77,402 நகர இறுதியும் 299 நமவ என்னும் 450 நாட்பெயர்க் கிளவி 332 நாயும் பலகையும் 375 நாவிளிம்பு வீங்கி 96 நாள்முன் தோன்றும் 248 நான்க னொற்றே லகார 453, 67 நான்க னொற்றே றகார 442 நான்கும் ஐந்தும் 462 நிலாவென் கிளவி 229 நிறுத்த சொல்லுங் 111 நிறையு மளவும் 437 நீஎன் ஒருபெயர் உருபியல் 254 நீஎன் பெயரும் 251 நீயென் ஒருபெயர் நெடுமுதல் 180 நீட்டம் வேண்டின் 6 நீட வருதல் 209 நும்மென் இறுதி 188 நும்மென் இறுதியும் 163 நும்மென் ஒருபெயர் 326 நுனிநா அணரி 95 நூறா யிரமுன் 471 நூறுமுன் வரினும் 460 நூறூர்ந்து வரூஉம் 393 நூறென் கிளவி 472 நெட்டெழுத் திம்பர் 197 நெட்டெழுத் திம்பரும் 36 நெட்டெழுத் தேழே 43 நெடியதன் இறுதி இயல்புமா 371 நெடியதன் முன்னர் 161 நெடியத னிறுதி இயல்பா 401 நெல்லுஞ் செல்லுங் 372 படர்க்கைப் பெயரும் 321 பத்தனொற் றுக்கெட 435 பத்தென் கிளவி 391 பதக்குமுன் வரினே 240 பல்லவை நுதலிய 175 பல்லிதழ் இயைய 98 பலரறி சொல்முன் 173 பலவற் றிறுதி உருபியல் 221 பலவற் றிறுதி நீடுமொழி 214 பன்னீ ருயிரும் 59 பனியென வரூஉங் 242 பனையின் முன்னர் 285 பனையும் அரையும் 284 பனையென் அளவும் 170 பாழென் கிளவி 388 பீரென் கிளவி 366 புணரியல் நிலையிடை 35 புள்ளி யில்லா 17 புள்ளி யிறுதியும்..சொல்லிய 203 புள்ளி யிறுதியும்..வல்லெழுத் 157 புள்ளி யீற்றுமுன் 139 புள்ளும் வள்ளும் 404 புளிமரக் கிளவிக்கு 245 பூஎன் ஒருபெயர் 269 பூல்வே லென்றா 376 பெண்டென் கிளவி 422 பெயருந் தொழிலும் 133 பெற்றம் ஆயின் 280 பொன்னென் கிளவி 357 மஃகான்..அத்தே 186 மஃகான்..வவ்வுந் 28 மக்க ளென்னும் 405 மகப்பெயர்க் கிளவி 219 மகர இறுதி 311 மகரத் தொடர்மொழி 82 மகன்வினை கிளப்பின் 360 மரப்பெயர்க் கிளவிக் கம்மே 416 மரப்பெயர்க் கிளவி மெல் 218 மருவின் தொகுதி 112 மழையென் கிளவி 288 மன்னுஞ் சின்னும் 334 மாமரக் கிளவியும் 232 மாறுகொள் எச்சமும் 276, 291 மின்னும் பின்னும் 346 மீனென் கிளவி 340 முதலா ஏன 66 முதலீ ரெண்ணின்முன் 455 முதலீ ரெண்ணினொற்று 439 முதனிலை எண்ணின் 478 முதனிலை நீடினும் 465 முரணென் தொழிற்பெயர் 310 முற்றிய லுகரமொடு 68 முன்உயிர் வருமிடத் 424 முன்னென் கிளவி 356 மூவள பிசைத்தல் 5 மூன்றன் முதனிலை 457 மூன்ற னொற்றே நகார 461 மூன்ற னொற்றே வகரம் 457 மூன்ற னொற்றே வகார 466 மூன்ற னொற்றே வந்த 447 மூன்று தலையிட்ட 104 மூன்றும் நான்கும் 456 மூன்று மாறும் 441 மெய்உயிர் நீங்கின் 140 மெய்ந்நிலை சுட்டி 30 மெய்யின் அளபே 11 மெய்யின் இயக்கம் 46 மெய்யின் இயற்கை 15 மெய்யின் வழிய 18 மெய்யோ டியையினும் 10 மெல்லெழுத் தாறும் 100 மெல்லெழுத் தியையின் அவ் 381 மெல்லெழுத் தியையின் இறுதி 343 மெல்லெழுத் தியையின் ணகார 398 மெல்லெழுத் தியையின் னகார 368 மெல்லெழுத்து மிகினும் 324, 342 மெல்லெழுத்து மிகுவழி 158 மெல்லெழுத் துறழும்..உளவே 361 மெல்லெழுத் துறழும்...செல்வழி 313 மெல்லெழுத் தென்ப 20 மெல்லொற்று வலியா 417 மென்மையும் 130 மென்மையும் இடைமையும் 131 மொழிப்படுத் திசைப்பினும் 53 மொழிமுத லாகும் 148 யகர இறுதி 358 யகரம் வருவழி யரழ என்னும் புள்ளி 29 யரழ என்னும் மூன்றும் 48 யவமுன் வரினே 207 யாதென்...அன்னொடு 201 யாதென்...உருபியல் 423 யாமரக் கிளவியும் 230 யாவினா மொழியே 429 யாவென் வினாவின் 179 யாவென் வினாவும் 176 ரகார இறுதி 363 லகார இறுதி 367 லனவென...முன்னர் 150 லனவென...யிறுதி 481 வஃகான் மெய்கெட 123 வகரக் கிளவி 81 வகார மிசையும் 331 வடவேங்கடந் தென்குமரிசிறப்புப் பாயிரம் வண்டும் பெண்டும் 421 வரன்முறை மூன்றும் 137 வல்லெழுத் தியற்கை 216 வல்லெழுத்து...மில்லை 231 வல்லெழுத்து...மில்லை ஒல்வழி 247 வல்லெழுத்து முதலிய 115 வல்லெழுத் தென்ப 19 வல்லென் கிளவி 374 வல்லொற்றுத்...மிகுமே 427 வல்லொற்றுத்...வருவழி 410 வளியென வரூஉம் 243 வன்றொடர் மொழியும் 415 வாழிய என்னும் 212 விசைமரக் கிளவியும் 283 விண்ணென வரூஉம் 306 வினையெஞ்சு கிளவிக்கும் 266 வினையெஞ்சு கிளவியும் 205 வெயிலென் கிளவி 378 வெரிந்என் இறுதி 301 வேற்றுமைக் கண்...ஒகரம் 293 வேற்றுமைக் கண்ணும் 26, 53, 60, 67, 76, 217, 306 வேற்றுமைக் கண்ணும் வல் 149 வேற்றுமைக்கு உக்கெட 300 வேற்றுமை குறித்த 113 வேற்றுமை யல்வழி ஆய்த 380 வேற்றுமை யல்வழி இ ஐ 159 வேற்றுமை யல்வழி எண்ணென் 309 வேற்றுமை யல்வழிக் குறுகலு 354 வேற்றுமை யாயின்...தோற்றம் 330 வேற்றுமை யாயின்...யெகினொடு 347 வேற்றுமை வழிய 117 ழகர உகரம் 262 ழகார இறுதி 384 ளகார இறுதி 397 னஃகான் றஃகான் 124 னகார இறுதி 333 னகார இறுவாய்ப் 9 னகாரை முன்னர் 52 சொல் நிரல் (மேற்கோள்) நூற்பா எண் அ அ 1 அஃகல் 53 அஃகான் 137 அகங்கை 316 அகர் 50 அகரம் 137 அகல் 171 அகழ் 50 அகாரம் 137 அங்கை 316 அங்ஙனம் 31 அடை 59 அடைவு 145 அதற்கு 124 அதனை 139, 140, 177, 201 அதனொடு 177, 201 அந்தை 171 அப்பை 30 அம்மணி 206, 381 அம்மி 30 அய்வனம் 56 அரசக்கன்னி 129, 418 அரசர்கண் 115 அவ் 81 அவ்வை 56 அவற்கு 115 அவற்றை 178, 184 அவற்றொடு 184 அவன்கண் 115 அவையற்றை 123, 178 அவையற்றொடு 178 அழக்குடம் 355 அழச்சாடி 355 அழத்தூதை 355 அழத்தை 194 அழத்தொடு 194 அழப்பானை 355 அழன் 82, 355 அழனினை 194 அழனினொடு 194 அழாந்தை 349 அழான் 349 அறாயிரம் 469 அறுநூறாயிரம் 471 அறுநூறு 460 அறுபஃது 441 ஆ ஆ 45, 53, 69 ஆஅ 41, 69 ஆஈ 108 ஆகாரம் 136 ஆங்கண் 115 ஆடூ 118 ஆடை 59 ஆண்டலை 304 ஆதந்தை 349 ஆந்தை 349 ஆப்பி 234 ஆயிரத்திரண்டு 318 ஆல் 53, 104 ஆறாகுவதே 470 ஆறாயிரம் 469 ஆனம் 135 ஆனை 121 இ இ 1 இஃகடிய 380 இங்ஙனம் 31 இலை 59 இடையன் 57 இதனை 177, 201 இதனொடு 177, 201 இம்மி 171 இரண்டனை 199 இரண்டனொடு 199 இராயிரம் 464 இருநூறு 460 இருபஃது 438, 440 இருபத்திரண்டு 475 இருபத்துமூன்று 475 இருபத்தொன்று 475 இல்லவற்றை 175 இல்லவற்றொடு 175 இலை 59, 104 இவ் 81 இவற்கு 115 இவற்றை 184 இவற்றொடு 184 இவையற்றை 123, 178 இவையற்றொடு 178 ஈ ஈ 43,69 ஈஇ 41, 69 ஈக்கால் 253 ஈகாரம் 136 ஈங்கண் 115 ஈயம் 59 ஈர்க்கு 48, 408 ஈரகல் 455 ஈராயிரம் 465 உ உங்கை 326 உங்ஙனம் 31 உசு 75 உண்கா 32 உண்கே 32 உண்டடை 432 உண்டான் 483 உதனை 177, 201 உதனொடு 201, 227 உரல் 59 உரிக்காயம் 241 உரிக்குறை 167 உரிஞ் 78, 80 உரிஞினை 183 உரிஞினொடு 183 உருமினை 187 உருமினொடு 187 உவ் 81 உவற்றை 178, 184 உவற்றொடு 184 உவையற்றை 123, 178 உவையற்றொடு 178 உழக்கு 171 ஊ ஊ 43 ஊஉ 69 ஊங்கண் 115 ஊர்க்கண் 115 ஊர்க்கு 115 ஊர்தி 59 ஊர 211 ஊரன் 211 ஊவயினான 257 ஊறிற்று 145 ஊன் 334 எ எஃகு 12, 38, 407 எகின் 82, 194 எகினத்தை 194 எகினத்தொடு 194 எகினினை 194 எகினினொடு 194 எங்கண் 115, 189 எங்கா 232 எங்கு 430 எங்கை 311 எங்ஙனம் 30 எண்ணாயிரம் 469, 470 எண்ணூறாயிரம் 472 எண்ணூறு 460 எண்பஃது 444 எம்மை 189 எம்மொடு 189 எமது 116 எருக்குழி 261 எருங்குழி 261 எருவங்குழி 141, 261 எல்லி 30 எவ்வி 30 எவற்றை 194 எவற்றொடு 194 எவன் 194 எழாயிரம் 392 எழு 59 எழுநூறாயிரம் 393 எழுபஃது 391 எற்றை 194 எற்றொடு 194 என் 194 என்றலை 353 என்னை 193 என்னொடு 193 எனது 116 ஏ ஏஎ 41, 69, 273 ஏணி 59 ஏழ்நூறாயிரம் 393 ஏழகல் 395 ஏழனை 195 ஏழனொடு 195 ஏழாயிரம் 393 ஏறங்கோள் 418 ஏனம் 135 ஐ ஐ 43, 69 ஐஇ 42 ஐகான் 138 ஐங்கலம் 448 ஐந்துநூறாயிரம் 472 ஐந்நூறாயிரம் 472 ஐந்நூறு 462 ஐநூறு 462 ஐம்பஃது 443 ஐயகல் 456 ஐயாயிரம் 468 ஒ ஒராயிரம் 479 ஒருநூற்றொருபஃது 474 ஒருநூறாயிரம் 472 ஒருநூறு 461 ஒருபஃதனை 200 ஒருபஃதனொடு 200 ஒருபஃது 438, 439 ஒருபத்திரண்டு 476 ஒருபத்தொன்று 476 ஒருபதினாயிரம் 477 ஒருபது 438 ஒருபானொடு 200 ஒருபாற்கு 124 ஒளி 59 ஒன்பதிற்றொன்று 470 ஒன்பதினாயிரம் 470, 471 ஒன்பது 200 ஒன்பது நூறாயிரம் 472 ஒன்பானை 200 ஒன்பானொடு 200 ஒன்றரை 166 ஒன்றனை 199 ஒன்றனொடு 199 ஒன்று 118 ஓ ஓ 43, 69 ஓஒ 41, 69, 273 ஓக்கம் 59 ஓரரை 446 ஓரரைக்கால் 446 ஓராயிரம் 465 ஓரிரண்டு 446 ஓரொன்று 446, 482 ஓனம் 135 ஒள 1 ஒளஉ 42 ஒளகான் 138 ஒளவியம் 59 ஒளவை 55 க கஃசு 38 கட்க 23 கட்ப 23 கடல் 53 கடான் 82 கடுக்காய் 260 கடுவினொடு 174 கம்பு 25 கரியதனை 196 கரியதனொடு 196 கரியவற்றை 179 கரியன் 482 கரு 482 கல்லினை 203 கல்லை 203 கலம் 171 கலன் 134 கலை 61 கழஞ்சு 171 கழூஉவினொடு 174 கழையினை 203 கழையை 203 கற்க 23 கற்ப 23 கன்று 25 கன்னி 30 கா 17, 53 காக்கை 11, 30 கால் 53 காலை 61 கிழக்கண் 202 கிழக்கின்கண் 202 கிளி 61, 69 கிளியினை 203 கிளியை 203 கீரி 61 குடி 61 குயின் 82, 336 குரங்கு 407 குரீ 69 கூடு 61 கெக்களைந்தார் 77 கெண்டை 61 கேண்மியா 12, 34 கேழல் 61 கைதை 61 கொக்கு 407 கொட்குறை 167 கொண்டல் 61 கொள்க 23 கொள்ப 23 கொள்ளி 30 கொற்றற்கு 115 கொற்றன் 45 கொற்றனை 203 கொற்றி 30 கோஒற்கு 124 கோஒனை 181 கோஒனொடு 181 கோங்கு 11 கோடல் 471 கோடி 472 கோயில் 294 கௌ 70 கௌவை 61 ச சகடம் 62 சாட்கோல் 148 சாடி 171 சாத்தற்கு 115 சாத்தன்கண் 115 சாத்தனை 117 சாத்தனொடு 117 சார்க்காழ் 365 சாலை 62 சிலச்சில 216 சிலசில 216 சிலப்பதிகாரம் 415 சிலவற்றை 175 சிலவற்றொடு 175 சிலை 62 சின்னூல் 216 சீரகம் 171 சீரகரை 172 சீறுக 62 சுரும்பு 62 சூழ்க 62 செகின் 82 செய்யவற்றை 179 செல்க 23 செல்ப 23 சேம்பூ 279 சேவடி 62 சேவினை 174 சையம் 62 சொரிக 62 சோணாடு 483 சோறு 62 ஞ ஞழியிற்று 64 ஞாலம் 64 ஞெகிழி 64 ஞொள்கிற்று 64 த தங்கை 311, 321 தத்தை 30 தந்தலை 321 தந்தை 61 தபு 76 தம்மை 161, 189 தம்மொடு 189 தமக்கு 162 தமது 162 தன்னை 193 தன்னொடு 193 தனது 116 தாடி 61 தார் 49 தாழ் 49 தாழக்கோல் 385 தாழினை 203 தாழை 203 திற்றி 61 தினை 57 தீமை 61 தீயினை 203 தீயை 203 து 44 தூணி 61 தூதை 171 தெவ் 78, 81 தெவ்வினை 185 தெவ்வினொடு 185 தெள்கு 407 தெற்கண் 202 தெற்கின்கண் 202 தெற்றி 61 தென்கிழக்கு 433 தென்சார் 202 தென்புடை 202 தென்மேற்கு 433 தேங்கு 25 தேவர் 61 தேனீ 345 தையல் 61 தொடி 171 தொண்டை 61 தொண்ணூறு 445 தொள்ளாயிரம் 463 தோடு 61 தௌவை 61 ந நகு 68 நங்கை 311, 321 நடம் 61 நந்து 61 நம்பி 154 நம்மை 161, 189 நம்மொடு 189 நமக்கு 162 நமது 116, 162 நாஇ 58 நாகினை 196 நாகினொடு 196 நாகு 12, 36, 68, 407 நாய் 58 நாரினை 203 நாரை 61, 203 நாலாயிரம் 467 நாழி 171 நாற்பஃது 442 நானூறாயிரம் 471 நானூறு 462 நிலத்தை 175 நிலம் 61, 82 நிலன் 82 நிலாத்தை 175 நிறை 171 நின்னை 180 நின்னொடு 180 நினது 116 நீர் 61 நீர்க்கண் 115 நீர்க்கு 115 நுங்கை 311, 320 நும்மை 188 நும்மொடு 188 நுமக்கு 163 நுமது 163 நுழை 61 நூல் 61 நூற்றறுபஃது 473 நூற்றாறு 473 நூற்றிரண்டு 472 நூற்றிருபஃது 473 நூற்றுக்கோடி 472 நூற்றுத்தொண்ணூறு 472 நூற்றுநாற்பஃது 473 நூற்றுமுப்பஃது 473 நூற்றுமூன்று 472 நூற்றெட்டு 472 நூற்றெண்பஃது 473 நூற்றெழுபஃது 473 நூற்றேழு 472 நூற்றைம்பஃது 473 நூற்றொருபஃது 473 நெய்தல் 61 நேயம் 61 நைகை 61 நொ 44 நொய்யன் 61 நொவ்வு 74 நோக்கம் 61 நோய் 49 நௌவி 61 ப பச்சை 30 பசு 75 பட்டை 30 படை 61 பந்து 25 பயின் 82 பல்லவற்றை 175 பல்லவற்றொடு 175 பல 118 பலம் 171 பலவற்றொடு 133 பலா 69 பலாவத்துக்கண் 182 பலாவின் 132 பலாவினை 174 பலாவினொடு 174 பனை 57, 69 பன்னிரண்டு 435 பாடி 61 பார்ப்பார்கண் 115 பானை 171 பிடி 61 பிலம் 82 பிலன் 82 பீடம் 61 பீர்க்கு 48 புகர் 50 புகழ் 50, 61 புலவர் 50 புழத்தை 194 புழத்தொடு 194 புழன் 82 புழனினை 194 புழனினொடு 194 புழாந்தை 349 புழான் 349 புன்கண் 26 புன்செய் 26 பூந்தை 349 பூமி 61 பூழனை 195 பூழனொடு 195 பெடை 61 பேடி 61 பைதல் 61 பொதியில் 483 பொய் 49 பொருந் 78, 79 பொற்கு 115 பொன் 61, 78 பொன்னினை 203 பொன்னை 203 போதகம் 61 போன்ம் 13 பௌவம் 61 ம மகடூஉ 118 மகத்தை 175 மஞ்சு 25 மஞ்ஞை 30 மடம் 61 மடித்தார் 145 மடையன் 57 மண் 78 மண்டை 171 மண்ணினை 203 மண்ணை 30, 203 மணி 45 மரத்தை 186 மரத்தொடு 186 மரம் 104, 105 மலாடு 483 மழு 49 மா 171 மாலை 61 மாவினை 121 மானை 121 மிடறு 61 மீனம் 61 முகம் 61 முசு 75 முந்நூறாயிரம் 471 முந்நூறு 461 முப்பஃது 441 முயிற்றினை 198 முயிற்றினொடு 198 முயிற்றை 197 முயிற்றொடு 197 முவ்வாயிரம் 466 முள்ளினை 203 முள்ளை 203 முன்றில் 112, 356 மூவாயிரம் 466 மெலிந்தது 61 மேற்கண் 202 மேற்கின்கண் 202 மேனி 61 மையல் 61 மொய்ம்பு 408 மொழி 61 மோதம் 61 மௌவல் 61 ய யவனர் 65 யாட்டினை 198 யாட்டினொடு 198 யாட்டை 197 யாட்டொடு 197, 198 யாதனை 201 யாதனொடு 201 யாவற்றை 176, 179 யாவற்றொடு 176, 179 யாழனை 195 யாழனொடு 195 யாற்றை 197 யாற்றொடு 197 யானை 65 வ வட்டி 171 வடக்கண் 202 வடக்கின்கண் 202 வடகிழக்கு 433 வடமேற்கு 433 வண்டு 25 வயான் 82 வரகினை 196 வரகினொடு 196 வரகு 36, 45, 107, 407 வரை 171 வழுதுணங்காய் 284 வளை 63 வாளி 63 விச்சாவாதி 285, 289 விழன் 82 விள 69, 104 விளரி 63 விளவிற்கு 124, 174 விளவின் 132 விளவின்கண் 174 விளவினது 174 விளவினை 174 விளவினொடு 174 வீடு 63 வீழ் 78 வெஃகாமை 38 வெண்கலம் 26 வெந்நெய் 30 வெய்யர் 30 வெரிந் 79 வெள்ளி 63 வேய் 78 வேயினை 203 வேயை 203 வேர் 63, 78 வேல் 78 வேள் 78 வையம் 63 வெள 70 வெளவினை 174 வெளவினொடு 174 வெளவுக 63 சொற்றொடர் நிரல் (மேற்கோள்) நூற்பா எண் அ அஉவை 55 அஃகடிய 380 அஃசிறிய 380 அஃதடை 424 அஃதடைபு 424 அஃதாட்டம் 424 அஃதாடை 424 அஃதிலை 424 அஃதீய 380 அஃபெரிய 380 அக்களைந்தார் 77 அக்காற் கொண்டான் 369 அக்காற் சென்றான் 369 அக்காற் போயினான் 369 அக்காற் றந்தான் 369 அக்குறிது 204 அக்கொற்றன் 205 அங்கட் கொண்டான் 308 அங்காக் கொண்டான் 232 அங்குக் கொண்டான் 430 அங்குச் சென்றான் 430 அங்குத் தந்தான் 430 அங்குப் போயினான் 430 அச்சாத்தன் 205 அச்சிறிது 204 அஞ்ஞாண் 381 அஞ்ஞாலம் 206 அண்ணணிக் கொண்டான் 247 அண்ணாஅத்துக்குளம் 227 அண்ணாத்தேரி 134 அணிக் கொண்டான் 237 அணிச் சென்றான் 237 அணித் தந்தான் 237 அணிப் போயினான் 237 அத்தேவன் 205 அக் குறிது 204 அச் சிறிது 204 அத் தீது 204 அப் பெரிது 204 அதன்கோடு 264, 423 அதன்செதிள் 264 அதன் பூ 264 அதன்தோல் 264 அது கடிது 425 அது குறிது 258 அது சிறிது 258, 425 அது ஞான்றது 425 அது தீது 258, 425 அது நீண்டது 425 அது பெரிது 258, 425 அது மாண்டது 425 அது யாது 425 அது யாவது 173 அது வலிது 425 அதோட் கொண்டான் 399 அதோட் சென்றான் 399 அதோட் போயினான் 399 அதோளிக் கொண்டான் 160 அதோளிச் சென்றான் 160 அதோளித் தந்தான் 160 அதோளிப் போயினான் 160 அந்நூல் 206, 381 அப்பூதன் 205 அப் பெரிது 204 அம்பர்க் கொண்டான் 406 அம்பர்ச் சென்றான் 406 அம்பர்த் தந்தான் 406 அம்பர்ப் போயினான் 406 அம்ம கொற்றா 211 அம்ம சாத்தா 211 அம்மணி 206, 381 அம்ம தேவா 211 அம்ம பூதா 211 அம்மா கொற்றா 213 அம்மா ஞெள்ளா 213 அரட் கடுமை 310 அரண் கடுமை 310 அராஅப் பாம்பு 224 அருமருந்தன்னான் 483 அருமருந்தான் 483 அரையங்கோடு 284 அரையஞ்செதிள் 284 அரையந்தோல் 284 அரை குறிது 159 அரை சிறிது 159 அரை தீது 159 அரை பெரிது 159 அரையம்பூ 284 அரையின் கோடு 286 அலிக் கொற்றன் 159 அவ் யாது 204 அவ் யாழ் 207, 382 அவ்வட்டு 382 அவ்வடை 161, 208, 382 அவ்வயிற் கொண்டான் 335 அவ்வயிற் சென்றான் 335 அவ்வயிற் போயினான் 335 அவ்வயிற் றந்தான் 335 அவ்வழகிது 204 அவ்வழிக் கொண்டான் 160 அவ்வழி கொண்டான் 160 அவ்வளை 207 அவ்வாடை 208, 382 அவ்வாய்க் கொண்டான் 362 அவ்வாய்ச் சென்றான் 362 அவ்வாய்த் தந்தான் 362 அவ்வாய்ப் போயினான் 362 அவட் கொண்டான் 308 அவர் யார் 173 அவற் கண்டு 158 அவற்றின் கோடு 379 அவற்றின் செவி 379 அவற்றின் தலை 379 அவற்றின் புறம் 379 அவற்றுக் கோடு 113, 134, 282,379 அவற்றுச் செவி 282, 379 அவற்றுத் தலை 282, 379 அவற்றுப் புறம் 282, 379 அவன் குறியன் 154 அவன் சிறியன் 154 அவன் ஞான்றான் 154 அவன் தீயன் 154 அவன் நீண்டான் 154 அவன் பெரியன் 154 அவன் மாண்டான் 154 அவன் யாவன் 154 அவன் வலியன் 154 அவனே கொண்டான் 276 அவனோ கொண்டான் 291 அவையத்துக் கொண்டான் 287 அவையற்றுக் கோடு 123, 282 அவையற்றுச் செவி 282 அவையற்றுத் தலை 282 அவையற்றுப் புறம் 282 அழலத்துக் கொண்டான் 406 அழுக்கற் போர் 406 அறு கலம் 449 அறு கழஞ்சு 449 அறு சாடி 449 அறு தூதை 449 அறு தொடி 449 அறு பலம் 449 அறுபானை 449 அன்று கொண்டான் 430 அன்றைக்கூத்தன் 426 ஆ ஆ குறிது 225 ஆங்கக் கொண்டான் 205 ஆங்கட் கொண்டான் 308 ஆங்கவை கொண்டான் 160 ஆங்குக் கொண்டான் 428 ஆங்குச் சென்றான் 428 ஆங்குத் தந்தான் 428 ஆங்குப் போயினான் 428 ஆ சிறிது 225 ஆசீவகப்பள்ளி 154 ஆடிக்குக் கொண்டான் 127, 249 ஆடிக்குச் சென்றான் 249 ஆடிக்குத் தந்தான் 249 ஆடிக்குப் போயினான் 249 ஆடூஉவின் கை 119, 272 ஆடூஉவின் செவி 272 ஆடூஉவின் புறம் 272 ஆடூஉவின் றலை 272 ஆண் கை 304 ஆண் செவி 304 ஆண்டைக் கொண்டான் 160 ஆண் புறம் 304 ஆணங்கோடு 305 ஆணஞ்செதிள் 305 ஆணந்தோல் 305 ஆணம்பூ 305 ஆணாங்கோடு 232 ஆ தீது 225 ஆ பெரிது 225 ஆயிடை 483 ஆயிரக் கலம் 320 ஆயிரக் கழஞ்சு 320 ஆயிரச் சாடி 320 ஆயிரத்துக் குறை 318 ஆயிரத்துக் கூறு 318 ஆயிரத்துநான்கு 318 ஆயிரத்து முதல் 318 ஆயிரத்துமூன்று 318 ஆயிரத் தூதை 320 ஆயிரத் தொடி 320 ஆயிரத்தொருபஃது 111 ஆயிரத்தொன்று 318 ஆயிர நாழி 320 ஆயிரப் பலம் 320 ஆயிரப் பானை 320 ஆயிரவகல் 320 ஆயிர வட்டி 320 ஆர்ங்கோடு 364 ஆர்ஞ்செதிள் 364 ஆர்ந்தோல் 364 ஆர்ம்பூ 364 ஆல் வீழ்ந்தது 108 ஆலங்கோடு 376 ஆலஞ்செதிள் 376 ஆலடை 139 ஆலந்தோல் 376 ஆலம்பூ 376 ஆலிலை 108 ஆ வலிது 66, 77, 108 ஆவிரங்கோடு 284 ஆவிரந்தோல் 284 ஆவிரம்பூ 284 ஆவிரையின் கோடு 286 ஆவின் கோடு 121, 232 ஆவினை 121 ஆற் குறைத்தான் 158 ஆற் கொண்டான் 334 ஆற் சென்றான் 334 ஆற் போயினான் 334 ஆற் றந்தான் 334 ஆறு நூறாயிரம் 471 ஆறுழக்கு 458 ஆன் கொண்டான் 334 ஆன் கோடு 121, 232 ஆன் செவி 232 ஆன் பீ 234 ஆன் புறம் 232 ஆன் றலை 232 இ இஃகடிய 380 இஃசிறிய 380 இஃதடை 424 இஃதாடை 424 இஃதிலை 424 இஃதீய 380 இஃபெரிய 380 இக்காற் கொண்டான் 369 இக்காற் சென்றான் 369 இக்காற் போயினான் 369 இக்காற் றந்தான் 369 இக் கொற்றன் 31, 237 இங்கட் கொண்டான் 308 இங்காக் கொண்டான் 232 இங்குக் கொண்டான் 430 இங்குச் சென்றான் 430 இங்குத் தந்தான் 430 இங்குப் போயினான் 430 இச்சாத்தன் 237 இஞ்ஞாண் 381 இஞ்ஞானம் 239 இடாவினுட் கொண்டான் 227 இத்தேவன் 237 இதன்கோடு 264, 423 இதன்செதிள் 264 இதன்தோல் 264 இதன்பூ 264 இது கடிது 425 இது குறிது 258 இது சிறிது 258, 425 இது ஞான்றது 425 இது தீது 258, 425 இது நீண்டது 425 இது பெரிது 258, 425 இது மாண்டது 425 இது யாது 425 இது வலிது 425 இதோட் கொண்டான் 399 இதோட் சென்றான் 399 இதோட் டந்தான் 399 இதோட் போயினான் 399 இதோளிக் கொண்டான் 160 இதோளிச் சென்றான் 160 இதோளித் தந்தான் 160 இதோளிப் போயினான் 160 இந்நூல் 239, 381 இப்பூதன் 237 இம்பர்க் கொண்டான் 406 இம்பர்ச் சென்றான் 406 இம்பர்த் தந்தான் 406 இம்பர்ப் போயினான் 406 இம் மணி 239, 381 இரண்டன் காயம் 420 இரண்டன் சுக்கு 420 இரண்டன்தோரை 420 இரண்டன் பயறு 420 இரண்டாடை 479 இரண்டு கல் 478 இரண்டு சுனை 478 இரண்டு ஞாண் 478 இரண்டு துடி 478 இரண்டு நூல் 478 இரண்டு நூறாயிரம் 471 இரண்டு பறை 478 இரண்டு மணி 478 இரண்டு மா 480 இரண்டு யாழ் 478 இரண்டு வட்டு 478 இராஅ வழுதுணங்காய் 224 இராஅக் காக்கை 224 இராஅக் கொடிது 224 இராக் கொண்டான் 228 இராவிற் கொண்டான் 231 இரு கலம் 446 இரு கழஞ்சு 446 இரு கால் 446 இரு சாடி 446 இரு சுனை 478 இரு ஞாண் 478 இருட்டத்துக் கொண்டான் 418 இரு துடி 478 இருதூணிக் கொள் 240 இருதூணிப் பதக்கு 240 இரு தூதை 446 இரு தொடி 446 இருந்து கொண்டான் 428 இரு நாடுரி 241 இரு நாழி 446 இரு நூல் 478 இருநூற்றுக் கலம் 474 இருநூறாயிரம் 471 இருபஃதனை 200 இருபஃதனொடு 200 இருபதின் கலம் 477 இருபதின் சாடி 477 இருபதின் தூதை 477 இருபதின் பானை 477 இருபதின் மண்டை 477 இருபதின் வட்டி 477 இருபதினாயிரம் 476 இருபதினாழி 477 இருபதினுழக்கு 477 இரு பலம் 446 இருபானை 446 இரு மண்டை 446 இரு மணி 478 இருமா 480 இரு முக்கால் 446 இரு முந்திரிகை 446 இரு வட்டி 446 இரு வட்டு 478 இரு வடை 479 இரு வாடை 479 இருவிளக் கொற்றன் 217 இருவிளச் சாத்தன் 217 இருவிளத் தேவன் 217 இருவிளப் பூதன் 217 இருளத்துக் கொண்டான் 134, 403 இருளத்துச் சென்றான் 403 இருளத்துத் தந்தான் 403 இருளத்துப் போயினான் 403 இருளிற் கொண்டான் 403 இருளிற் சென்றான் 403 இருளிற் போயினான் 403 இருளிற் றந்தான் 403 இல் கல் 373 இல் சுனை 373 இல் துடி 373 இல் பறை 373 இல்லங்கோடு 314 இல்லஞ்செதிள் 314 இல்லந்தோல் 314 இல்லம்பூ 314 இல்லாக் கல் 373 இல்லாச் சுனை 373 இல்லாத் துடி 373 இல்லாப் பறை 373 இல்லைக் கல் 373 இல்லைகல் 373 இல்லைச் சுனை 373 இல்லை சுனை 373 இல்லைத் துடி 373 இல்லை துடி 373 இல்லைப் பறை 373 இல்லை பறை 373 இலவங் கோடு 313 இவ்யாழ் 293, 82 இவ் வட்டு 239, 382 இவ் வடை 239, 382 இவ்வயிற் கொண்டான் 335 இவ்வயிற் சென்றான் 335 இவ்வயிற் போயினான் 335 இவ்வயிற் றந்தான் 335 இவ்வழிக் கொண்டான் 160 இவ்வழி கொண்டான் 160 இவ் வாடை 239, 382 இவ்வாய்க் கொண்டான் 362 இவ்வாய்ச் சென்றான் 362 இவ்வாய்த் தந்தான் 362 இவ்வாய்ப் போயினான் 362 இவ்வெளவியம் 239 இவட் கொண்டான் 308 இவற்றின் கோடு 379 இவற்றின் செவி 379 இவற்றின் புறம் 379 இவற்றின் றலை 379 இவற்றுக் கோடு 282, 379 இவற்றுச் செவி 282, 379 இவற்றுத் தலை 282, 379 இவற்றுப் புறம் 282, 379 இவையற்றுக் கோடு 282 இவையற்றுச் செவி 282 இவையற்றுத் தலை 282 இவையற்றுப் புறம் 282 இறைவ நெடுவேட்டுவர் 154 இன்று கொண்டான் 430 இன்னினிக் கொண்டான் 247 இனிக் கொண்டான் 237 இனிச் சென்றான் 237 இனித் தந்தான் 237 இனிப் போயினான் 237 ஈ ஈங்கட் கொண்டான் 308 ஈங்கிவைக் கொண்டான் 160 ஈங்கிவை கொண்டான் 160 ஈங்குக் கொண்டான் 428 ஈங்குச் சென்றான் 428 ஈங்குத் தந்தான் 428 ஈங்குப் போயினான் 428 ஈச் சிறகு 253 ஈண்டைக் கொண்டான் 160 ஈத்தலை 253 ஈப்புறம் 253 ஈமக்குடம் 129, 330 ஈமச்சாடி 330 ஈமத்தூதை 330 ஈமப்பானை 330 ஈமுக் கடிது 329 ஈமுக் கடுமை 329 ஈமுச் சிறிது 329 ஈமுச் சிறுமை 329 ஈமு ஞாற்சி 329 ஈமு ஞான்றது 329 ஈமுத் தீது 329 ஈமுத் தீமை 329 ஈமு நீட்சி 329 ஈமு நீண்டது 329 ஈமுப் பெரிது 329 ஈமுப் பெருமை 329 ஈமு மாட்சி 329 ஈமு மாண்டது 329 ஈமு வலிது 329 ஈமு வலிமை 329 ஈர்க் கொற்றா 152 ஈர் கொற்றா 152 ஈரசை 479 ஈரரை 446 ஈரரைக்கால் 446 ஈரிரண்டு 446 ஈருழக்கு 455 ஈரொன்று 446 ஈவயினான 239 ஈற் கொண்டான் 334 ஈற் சென்றான் 324 ஈற் போயினான் 334 ஈற் றந்தான் 334 ஈன் கொண்டான் 334 உ உஃகடிய 380 உஃசிறிய 380 உஃதடை 424 உஃதாடை 424 உஃதிலை 424 உஃதீய 380 உஃபெரிய 380 உக்காற் கொண்டான் 369 உக்காற் சென்றான் 369 உக்காற் போயினான் 369 உக்காற் றந்தான் 369 உக் கொற்றன் 256 உங்கட் கொண்டான் 308 உங்காக் கொண்டான் 232 உங்குக் கொண்டான் 430 உங்குச் சென்றான் 430 உங்குத் தந்தான் 430 உங்குப் போயினான் 430 உச் சாத்தன் 256 உசிலங்கோடு 406 உஞ்ஞாண் 257, 381 உடூஉக் குறை 268 உடூஉச் செய்கை 268 உடூஉத் தலை 268 உடூஉப் புறம் 268 உண் கொற்றா 152 உண்கோ 32 உண்கோ சாத்தா 32 உண்ட குதிரை 211 உண்ட செந்நாய் 211 உண்ட தகர் 211 உண்ட பன்றி 211 உண்டன குதிரை 211 உண்டாடை 431 உண்டார் சான்றார் 154 உண்டு காணம் 431 உண்டு சாக்காடு 431 உண்டு ஞாண் 431 உண்டு தாமரை 431 உண்டு நூல் 431 உண்டு பொருள் 431 உண்டு மணி 431 உண்டு யாழ் 431 உண்டு வட்டு 431 உண்டேஞ் சான்றேம் 154 உண்டே நாம் 154 உண்ணாக் கொண்டான் 223 உண்ணாக் கொற்றன் 223 உண்ணா குதிரை 225 உண்ணாச் சென்றான் 223 உண்ணா செந்நாய் 225 உண்ணாத் தந்தான் 223 உண்ணா தகர் 225 உண்ணாத குதிரை 211 உண்ணாத செந்நாய் 211 உண்ணாத தகர் 211 உண்ணாத பன்றி 211 உண்ணாப் போயினான் 223 உண்ணா பன்றி 225 உண்ணிய கொண்டான் 211 உண்ணிய சென்றான் 211 உண்ணிய தந்தான் 211 உண்ணிய போயினான் 211 உண்ணூக் கொண்டான் 266 உண்ணூச் சென்றான் 266 உண்ணூத் தந்தான் 266 உண்ணூப் போயினான் 266 உண்ப சான்றார் 154 உண்பேன் பார்ப்பேன் 154 உண்மன குதிரை 211 உண்மன செந்நாய் 211 உண்மன தகர் 211 உண்மன பன்றி 211 உணக் கொண்டான் 205 உணச் சென்றான் 205 உணத் தந்தான் 205 உணப் போயினான் 205 உத்தேவன் 256 உதளங்காய் 401 உதளஞ்செதிள் 401 உதளந்தோல் 401 உதளம்பூ 401 உதன்கோடு 264, 423 உதன்செதிள் 264 உதன்பூ 264 உதன்றோல் 264 உதிங்கோடு 244 உதிஞ்செதிள் 244 உதிந்தோல் 244 உதிம்பூ 244 உது கடிது 425 உது குறிது 258 உது சிறிது 258, 425 உது ஞான்றது 425 உது தீது 258, 425 உது நீண்டது 425 உது பெரிது 258, 425 உது மாண்டது 425 உது யாது 425 உது வலிது 425 உதோட் கொண்டான் 399 உதோட் சென்றான் 399 உதோட் டந்தான் 399 உதோட் போயினான் 399 உதோளிக் கொண்டான் 160 உதோளிச் சென்றான் 160 உதோளித் தந்தான் 160 உதோளிப் போயினான் 160 உந்நூல் 257, 381 உப்பூதன் 256 உம்பர்க் கொண்டான் 406 உம்பர்ச் சென்றான் 406 உம்பர்த் தந்தான் 406 உம்பர்ப் போயினான் 406 உம்மணி 257, 381 உமண்குடி 308 உமண்சேரி 308 உமண்டோட்டம் 308 உமண் பாடி 308 உரிஞ் அனந்தா 164, 172 உரிஞ் ஆதா 164 உரிஞ் யாது 27 உரிஞ் யானா 164, 172 உரிஞின் குறை 300 உரிஞுக் கடிது 297 உரிஞுக் கடுமை 297 உரிஞுக் கொற்றா 153 உரிஞு கொற்றா 153 உரிஞுச் சிறிது 297 உரிஞுச் சிறுமை 297 உரிஞு ஞாற்சி 298 உரிஞு ஞான்றது 298 உரிஞு ஞெள்ளா 172 உரிஞுத் தீது 297 உரிஞுத் தீமை 297 உரிஞு நீட்சி 298 உரிஞு நீண்டது 298 உரிஞுப் பெரிது 297 உரிஞுப் பெருமை 297 உரிஞு மாட்சி 298 உரிஞு மாண்டது 298 உரிஞு வலிது 298 உரிஞு வலிமை 298 உருமுக் கடிது 329 உருமுக் கடுமை 329 உருமுச் சிறிது 329 உருமுச் சிறுமை 329 உருமு ஞாற்சி 329 உருமு ஞான்றது 329 உருமுத் தீது 329 உருமுத் தீமை 329 உருமு நீட்சி 329 உருமு நீண்டது 329 உருமுப் பெரிது 329 உருமுப் பெருமை 329 உருமு மாட்சி 329 உருமு மாண்டது 329 உருமு வட்டு 257 உருமு வலிது 329 உருமு வலிமை 329 உவ்யாழ் 257, 382 உவ்வட்டு 382 உவ்வடை 257, 382 உவ்வயிற் கொண்டான் 335 உவ்வயிற் சென்றான் 335 உவ்வயிற் போயினான் 335 உவ்வயிற் றந்தான் 335 உவ்வழிக் கொண்டான் 160 உவ்வழி கொண்டான் 160 உவ்வாடை 257, 382 உவ்வாய்க் கொண்டான் 362 உவ்வாய்ச் சென்றான் 362 உவ்வாய்த் தந்தான் 362 உவ்வாய்ப் போயினான் 362 உவ்வெளவியம் 257 உவற்றின் கோடு 379 உவற்றின் செவி 379 உவற்றின் புறம் 379 உவற்றின் றலை 379 உவற்றுக் கோடு 282, 379 உவற்றுச் செவி 282, 379 உவற்றுத் தலை 282, 379 உவற்றுப் புறம் 282, 379 உவாஅத்தாற் கொண்டான் 227 உவாஅத்து ஞான்று கொண்டான் 227 உவாஅப் பதினான்கு 224 உவையற்றுக் கோடு 282 உவையற்றுச் செவி 282 உவையற்றுத் தலை 282 உவையற்றுப் புறம் 282 உழக்கரை 166 உழக்கின் குறை 168 உள்பொருள் 431 உள்ளவற்றை 175 உள்ளவற்றொடு 175 ஊ ஊங்கட் கொண்டான் 308 ஊங்குவைக் கொண்டான் 160 ஊங்குவை கொண்டான் 160 ஊங்குக் கொண்டான் 428 ஊங்குச் சென்றான் 428 ஊங்குத் தந்தான் 428 ஊங்குப் போயினான் 428 ஊங்குவைக் கொண்டான் 160 ஊங்குவை கொண்டான் 160 ஊண்டைக் கொண்டான் 160 ஊர கொள் 211 ஊர செல் 211 ஊர தா 211 ஊர போ 211 ஊரா கொள் 225 ஊரா செல் 225 ஊரா தா 225 ஊரா போ 225 ஊன் குறை 270 ஊன் கொண்டான் 334 ஊன் செய்கை 270 ஊன் புறம் 270 ஊன் றலை 270 ஊனக்குறை 271 ஊனச்செய்கை 271 ஊனத்தலை 271 ஊனப்புறம் 271 எ எஃகி யாது 35, 411 எஃகு கடிது 426 எஃகு கால் 414 எஃகு சிறிது 426 எஃகு சிறை 414 எஃகு தலை 414 எஃகு தீது 426 எஃகு புறம் 414 எஃகு பெரிது 426 எகின அடைவு 338 எகினக்கால் 338 எகினங்கால் 338 எகினங்கோடு 337 எகினச்செவி 338 எகினஞ்செதிள் 337 எகினஞ்செவி 338 எகினஞாற்சி 338 எகினத்தலை 338 எகினந்தலை 338 எகினந்தோல் 337 எகினப்புறம் 338 எகினம்பூ 337 எகினயாப்பு 338 எங்காக் கொண்டான் 232 எங்குக் கொண்டான் 430 எங்குச் சென்றான் 430 எங்குத் தந்தான் 430 எங்குப் போயினான் 430 எஞ்செவி 311 எஞ்ஞாண் 321 எட் கடிது 309 எட்குக்குட்டி 415 எட்குச் செவி 415 எட்குத் தலை 415 எட்குப் புறம் 415 எட் சிறிது 309 எட்டிப் புரவு 155 எட்டிப் பூ 155 எட் டீது 309 எட்டு நூறாயிரம் 471 எட் பெரிது 309 எண்கடிது 309 எண்கலம் 450 எண்சாடி 450 எண்டூதை 450 எண்டொடி 450 எண்ணகல் 450 எண்ணாழி 450 எண்ணுப் பாறு 307 எண்ணுழக்கு 450 எண்பலம் 450 எண்பானை 450 எண்மண்டை 450 எண்வட்டி 450 எதோளிக் கொண்டான் 160 எந்தலை 311 எந்நூல் 321 எம்பர்க் கொண்டான் 406 எம்பர்ச் சென்றான் 406 எம்பர்ப் போயினான் 406 எம்புறம் 311 எயின்குடி 339 எயின்சேரி 339 எயின்பாடி 339 எயின்றோட்டம் 339 எயினக்கன்னி 339 எருவஞாற்சி 261 எருவந்தாது 261 எருவம்பூழி 261 எருவின் கடுமை 261 எல்லா அடையும் 323 எல்லா ஆட்டமும் 323 எல்லாக் குறியரும் 323 எல்லாக் குறியவும் 323 எல்லாக் கொல்லரும் 325 எல்லாங் குறிய 324 எல்லாங் குறியர் 324 எல்லாங் குறியரும் 324 எல்லாங் குறியவும் 324 எல்லாச் சிறியரும் 323 எல்லாச் சிறியவும் 323 எல்லாச் சேவகரும் 325 எல்லாஞ் சிறிய 324 எல்லாஞ் சிறியர் 324 எல்லாஞ் சிறியரும் 324 எல்லாஞ் சிறியவும் 324 எல்லா ஞாணும் 323 எல்லா ஞாயிறும் 325 எல்லா ஞான்றன 323 எல்லாத் தச்சரும் 325 எல்லாத் தீயரும் 323 எல்லாத் தீயவும் 323 எல்லாந் தீய 324 எல்லாந் தீயர் 324 எல்லாந் தீயவும் 324 எல்லாநங்கையும் 130, 325 எல்லாநஞ்செவியும் 325 எல்லாநந்தலையும் 325 எல்லாநம்புறமும் 325 எல்லா நம்மையும் 191 எல்லா நம்மொடும் 191 எல்லா நாயகரும் 325 எல்லா நீண்டன 323 எல்லாநுங்கையும் 130 எல்லா நூலும் 323 எல்லாப் புலவரும் 325 எல்லாப் பெரியரும் 323 எல்லாப் பெரியவும் 323 எல்லாம் பெரிய 324 எல்லாம் பெரியர் 324 எல்லாம் பெரியரும் 324 எல்லாம் பெரியவும் 324 எல்லா மணியகாரரும் 325 எல்லா மணியும் 323 எல்லா மாண்டன 323 எல்லா யாப்பும் 323 எல்லார் கையும் 321 எல்லார் செவியும் 321 எல்லார்தங் கையும் 130, 321 எல்லார்தஞ்செவியும் 321 எல்லார்தஞ் ஞாணும் 321 எல்லார்தந்தலையும் 321 எல்லார்தந்நூலும் 321 எல்லார்தம்புறமும் 321 எல்லார்தம்மையும் 192 எல்லார்தம்மொடும் 192 எல்லார்தமக்கும் 162 எல்லார்தமதும் 162 எல்லார்தலையும் 321 எல்லார்நங்கையும் 130 எல்லார் புறமும் 321 எல்லாருங் குறியர் 322 எல்லாருஞ் சிறியர் 322 எல்லாருஞ் ஞான்றார் 322 எல்லாருந் தீயர் 322 எல்லாருந் நீண்டார் 322 எல்லாரும் பெரியர் 322 எல்லா வணிகரும் 325 எல்லா வரசரும் 325 எல்லா வலிமையும் 323 எல்லாவற்றடைவும் 190, 323 எல்லாவற்றாட்டமும் 323 எல்லாவற்றுச் செவியும் 323 எல்லாவற்று ஞாணும் 323 எல்லாவற்றுத் தலையும் 323 எல்லாவற்று நூலும் 323 எல்லாவற்றுப் புறமும் 323 எல்லாவற்று மணியும் 323 எல்லாவற்று யாப்பும் 323 எல்லாவற்று வலிமையும் 323 எல்லாவற்றொடும் 190 எல்லீர் கையும் 321 எல்லீர் செவியும் 321 எல்லீர் தலையும் 321 எல்லீர்நுங்கையும் 130, 321 எல்லீர்நுஞ்செவியும் 321 எல்லீர்நுஞ்ஞாணும் 321 எல்லீர்நுந்தலையும் 321 எல்லீர்நுந்நூலும் 321 எல்லீர்நும்புறமும் 321 எல்லீர்நும்மையும் 192 எல்லீர்நும்மொடும் 192 எல்லீர் புறமும் 321 எல்லீருங் குறியீர் 322 எல்லீருஞ் சிறியீர் 322 எல்லீருஞ் ஞான்றீர் 322 எல்லீருந் தீயிர் 322 எல்லீருந் நீண்டீர் 322 எல்லீரும் பெரியீர் 322 எலியாலங்கோடு 406 எவ்வயிற் கொண்டான் 335 எவ்வயிற் சென்றான் 335 எவ்வயிற் போயினான் 335 எவ்வயிற் றந்தான் 335 எவ்வழிக் கொண்டான் 160 எவ்வழி கொண்டான் 160 எழுஉழக்கு 390 எழுகடல் 390 எழுகலம் 390 எழுகழஞ்சு 390 எழுசாடி 390 எழுசிலை 390 எழுஞாயிறு 393 எழுதிசை 390 எழுதூதை 390 எழுதொடி 390 எழு நாள் 393 எழு நாழி 390 எழுநான்கு 390 எழுபலம் 390 எழுபானை 390 எழுபிறப்பு 390 எழு மண்டை 390 எழு மூன்று 390 எழு வகல் 390 எழு வட்டி 390 எற்பாடி 354 எறி கொற்றா 152 எறி சாத்தா 152 எறி தேவா 152 எறி பூதா 152 என் கை 353 என் செவி 353 என் ஞாண் 353 என் புறம் 353 என் மணி 353 என் யாழ் 353 என் வட்டு 353 என்னடை 353 என்னாடை 353 என்னூல் 353 ஏ ஏஎக் கொட்டில் 278 ஏஎ கொண்டான் 273 ஏஎக் கொற்றா 274 ஏஎச் சாத்தா 274 ஏஎச் சாலை 278 ஏஎத் துளை 278 ஏஎத் தேவா 274 ஏஎப் புழை 278 ஏஎப் பூதா 274 ஏவின் கடுமை 280 ஏவின் சிறுமை 280 ஏவின் பெருமை 280 ஏவின் றீமை 280 ஏழ்தாமரை 394 ஏழ்வெள்ளம் 394 ஏழன் காயம் 389 ஏழன் சுக்கு 389 ஏழன் பயறு 389 ஏழன் றோரை 389 ஏழாம்பல் 394 ஏழிரண்டு 395 ஏழுழக்கு 395 ஏழொன்று 395 ஐ ஐங்கலம் 448 ஐங்கழஞ்சு 448 ஐஞ்சாடி 448 ஐந்தூதை 448 ஐந்தொடி 448 ஐந்நாழி 451 ஐம்பலம் 448 ஐம்பானை 448 ஐம்மண்டை 451 ஐயுழக்கு 456 ஐவ்வட்டி 454 ஐவட்டி 454 ஒ ஒடுங்கோடு 263 ஒடுஞ்செதிள் 263 ஒடுந்தோல் 263 ஒடும்பூ 263 ஒடுவின் குறை 264 ஒரு கல் 478 ஒரு கலம் 446 ஒரு கழஞ்சு 446 ஒரு கால் 446 ஒரு சாடி 446 ஒரு சுனை 478 ஒரு ஞாண் 478 ஒரு துடி 478 ஒரு தூதை 446 ஒரு தொடி 446 ஒரு நாழி 446 ஒருநாளைக் குழவி 406 ஒரு நூல் 478 ஒருநூற்றுக்கலம் 474 ஒருபதிற்றுக்கலம் 475, 476, 477 ஒருபதின் கலம் 477 ஒருபதின் கழஞ்சு 477 ஒருபதின் சாடி 477 ஒருபதின் பலம் 477 ஒருபதின் பானை 477 ஒருபதின் மண்டை 477 ஒருபதின் வட்டி 477 ஒருபதின் றூதை 477 ஒருபதின் றொடி 477 ஒருபதி னகல் 477 ஒருபதினாழி 477 ஒருபதி னுழக்கு 477 ஒருபலம் 446 ஒருபறை 478 ஒருபானொடு 200 ஒரு மண்டை 446 ஒரு மணி 478 ஒருமாவரை 172 ஒரு முக்கால் 446 ஒரு முந்திரிகை 446 ஒரு யாழ் 478 ஒரு வட்டி 446 ஒரு வட்டு 478 ஒருவென் குறியென் 154 ஒருவென் கை 154 ஒருவென் சிறியென் 154 ஒருவென் செவி 154 ஒல்லைக் கொண்டான் 159 ஒல்லொலித்தது 482 ஒன்பதிற் றகல் 459 ஒன்பதிற்றுக் கோடி 470 ஒன்பதின் கலம் 459 ஒன்பதின் கழஞ்சு 459 ஒன்பதின் கூறு 434 ஒன்பதின் சாடி 459 ஒன்பதின் பலம் 459 ஒன்பதின் பால் 434 ஒன்பதின் பானை 459 ஒன்பதின் மண்டை 459 ஒன்பதின் வட்டி 459 ஒன்பதின் றூதை 459 ஒன்பதின் றொடி 459 ஒன்பதி னகல் 459 ஒன்பதி னாழி 459 ஒன்பதி னுழக்கு 459 ஒன்றன் காயம் 420 ஒன்றன் சுக்கு 420 ஒன்றன் பயறு 420 ஒன்றன் றோரை 420 ஒன்றின் குறை 168 ஓ ஓஒக் கடுமை 293 ஓஒக் கொற்றா 274 ஓஒ கொண்டாய் 274 ஓஒ கொண்டான் 273, 274, 291 ஓஒ கொண்டேன் 274 ஓஒச் சாத்தா 274 ஓஒச் சிறுமை 293 ஓஒத் தீமை 293 ஓஒத் தேவா 274 ஓஒப் பூதா 274 ஓஒப் பெருமை 293 ஓக் கடிது 290 ஓச் சிறிது 290 ஓத் தீது 290 ஓப் பெரிது 290 ஓர்யாட்டை யானை 426 ஓர்யாழ் 479 ஓரகல் 455 ஓரடை 171, 479 ஓராடை 479 ஓருழக்கு 455 ஓரெடை 171 ஓலம்போழ் 284 க கஃறீது 370 கஃறென்றது 40 கக்களைந்தார் 77 கட்கடிது 404 கட்கடுமை 404 கட்சிறார் 23 கட்டகல் 247 கடிகா 159 கடுக் குறிது 255 கடுக் குறைந்தான் 158 கடுச் சிறிது 255 கடுச் செதிள் 260 கடுத்தீது 255 கடுத்தோல் 260 கடுப்பூ 260 கடுப் பெரிது 255 கடுவின் குறை 264 கடுவினை 174 கடுவினொடு 174 கணவிரங்கோடு 247 கதிர்ஞ்ஞெரி 146 கதிர்ஞெரி 146 கதிர்ந்நுனி 146 கதிர்நுனி 146 கதிர்ம்முரி 146 கதிர்முரி 146 கப்பிந்தை 247 கபிலபரணர் 154 கம்மக்குடம் 330 கம்மச் சாடி 330 கம்மத் தூதை 330 கம்பப் பானை 330 கம்முக் கடிது 329 கம்முக் கடுமை 329 கம்முச் சிறிது 329 கம்முச் சிறுமை 329 கம்மு ஞாற்சி 329 கம்மு ஞான்றது 329 கம்முத் தீது 329 கம்முத் தீமை 329 கம்மு நீட்சி 329 கம்மு நீண்டது 329 கம்முப் பெரிது 329 கம்முப் பெருமை 329 கம்மு மாட்சி 329 கம்மு மாண்டது 329 கம்மு வலிது 329 கம்மு வலிமை 329 கரட்டுக்கானம் 426 கரிது குதிரை 426 கரிய குதிரை 211 கரியதன் கோடு 418 கரியவற்றுக் கோடு 287 கரியார் தம்மையும் 192 கரியே நம்மையும் 192 கரியே நம்மொடும் 192 கருஞ் சான்றான் 482 கல் குறிது 369 கல் குறுமை 369 கல் சிறிது 369 கல் தீது 369 கல்லுக் கடிது 377 கல்லுக் கடுமை 377 கல்லுச் சிறிது 377 கல்லுச் சிறுமை 377 கல்லு ஞாற்சி 377 கல்லு ஞான்றது 377 கல்லுத் தீது 377 கல்லுத் தீமை 377 கல்லு நீட்சி 377 கல்லு நீண்டது 377 கல்லுப் பெரிது 377 கல்லுப் பெருமை 377 கல்லு மாட்சி 377 கல்லு மாண்டது 377 கல்லு வலிது 377 கல்லு வலிமை 377 கலக் குறை 167 கலக் கொள் 315 கலத்துக் குறை 113, 134, 169 கல நெல் 315 கலப் பயறு 167 கலனே பதக்கு 165 கலைக் கோடு 287 கலைங் கோடு 287 கழஞ்சின் குறை 168 கழூஉவினை 174 கள்ளியங்காடு 483 கள்ளுக் கடிது 404 கள்ளுக் கடுமை 404 கற் குறிது 369 கற்குறுமை 369 கற்குறை 367 கற்சிறார் 23 கற்சிறிது 369 கற்சிறை 367 கற் புறம் 367 கற் பெரிது 369 கற்றலை 367 கற்றீது 369, 370 கன்ஞெரி 368 கன் ஞெரிந்தது 368 கன் மாண்டது 368 கன்முறி 368 கன்னங் கடுமை 347 கன்னக் குடம் 347 கன்னங் கடிது 347 கன்னங் கடுமை 347 கன்னச் சாடி 347 கன்னஞ் சிறிது 347 கன்னஞ் சிறுமை 347 கன்ன ஞாற்சி 347 கன்ன ஞான்றது 347 கன்னத் தூதை 347 கன்னந் தீது 347 கன்னந் தீமை 347 கன்ன நீட்சி 347 கன்ன நீண்டது 347 கன்னப் பானை 347 கன்னம் பெரிது 347 கன்னம் பெருமை 348 கன்ன மாட்சி 347 கன்ன மாண்டது 347 கன்ன யாது 347 கன்ன வலிது 347 கன்ன வலிமை 347 கன் னன்று 150 கன் னீண்டது 368 கன்னுனி 368 காஅக் குறை 227 காஅச் செய்கை 227 காஅத் தலை 227 காஅப் புறம் 227 காக் குறை 170 காக்கையது பலி 203 காக்கையிற் கரிது 203 கரட்டுக் கானம் 426 காணிக் குறை 167 காணியே முந்திரிகை 165 காய்ஞ்ஞெரி 146 காய்ஞெரி 146 காய்ந்நுனி 146 காய்நுனி 146 காய்ம்முரி 146 காய்முரி 146 காயாங்கோடு 232 காலேகாணி 165 கா வலிது 77 காவிக் கண் 172 காவிதிப் புரவு 155 காவிதிப் பூ 155 காற்குறை 167 கான்கெழு நாடு 481 கான்கோழி 335 கிடந்தது குதிரை 426 கிழக்கே மேற்கு 432 கிளி அரிது 141 கிளிக்கால் 236 கிளிக் குறிது 159 கிளி குறிது 159 கிளிச்சிறகு 236 கிளித் தலை 236 கிளிப்புறம் 236 கிளியின் கால் 247 கீழ்க் குளம் 396 கீழ் குளம் 396 கீழ் கூரை 433 கீழ் சார் 202 கீழ்புடை 202 கீழு குளம் 396 கீழு சேரி 396 கீழு தோட்டம் 396 கீழு பாடி 396 குதிர்ங்கோடு 364 குதிர்ஞ்செதிள் 364 குதிர்ந்தோல் 364 குதிர்ம் பூ 364 குமரக் கோட்டம் 154 குமர கோட்டம் 154 குமிழ்ங் கோடு 387 குமிழ்ஞ்செதிள் 387 குமிழ்ந்தோல் 387 குமிழ்ம்பூ 387 குமிழங்கோடு 387 குமிழஞ்செதிள் 387 குமிழந்தோல் 387 குமிழம்பூ 387 குயின் குழாம் 336 குயின் செலவு 336 குயின் பறைவு 336 குயின் றோற்றம் 336 குரக்கடைவு 415 குரக்காட்டம் 415 குரக்குக் கால் 415 குரக்குச் செவி 415 குரக்கு ஞாற்சி 415 குரக்குத் தலை 415 குரக்கு நீட்சி 415 குரக்குப் புறம் 415 குரக்கு மாட்சி 415 குரக்கு யாப்பு 415 குரக்கு வலிமை 415 குரங்கி யாது 35, 411 குரங்கின் கால் 415 குரங்குக் கால் 415 குரங்கு கடிது 426 குரங்குச் செவி 415 குரங்கு சிறிது 426 குரங்குத் தலை 415 குரங்கு தீது 426 குரங்குப் புறம் 415 குரங்கு பெரிது 426 குருட்டெருது 426 குருந்தங்கோடு 417 குருந்தஞ்செதிள் 417 குருந்தந்தோல் 417 குருந்தம்பூ 417 குவளைக் கண் 172 குவளை மலர் 110 குளக்கரை 313 குளங்கரை 313 குளச்சேறு 313 குளஞ்சேறு 313 குளத்தாது 313 குளத்தின் புறம் 406 குளந்தாது 313 குளப்பூழி 313 குளம்பூழி 313 குளவாம்பல் 312 குளாஅம்பல் 312 குளிக் குறுமை 247 குளி குறுமை 247 குறுணி நானாழி 165 குன்றக் கூகை 129, 419 குன்றேறாமா 142 கூட்டுக் கொற்றா 153 கூட்டு கொற்றா 153 கூதாளங் கோடு 247 கேட்டையாற் கொண்டான் 287 கேட்டையாற் சென்றான் 287 கேட்டையாற் போயினான் 287 கேட்டையாற் றந்தான் 287 கேண்மியா கொற்றா 225 கேண்மியா சாத்தா 225 கேண்மியா தேவா 225 கேண்மியா பூதா 225 கைஞ் ஞெரித்தார் 146 கைதூக் கொற்றா 266 கைதூச் சாத்தா 266 கைதூத் தேவா 266 கைதூப் பூதா 266 கைந் நீட்டினார் 146 கைம் முறித்தார் 146 கொக் களைந்தார் 77 கொக்கி யாது 35, 411 கொக்கின் கால் 415 கொக்குக் கடிது 410, 427 கொக்குக் கடுமை 410 கொக்குக் கால் 415 கொக்குச் சிறகு 415 கொக்குச் சிறிது 427 கொக்குத் தலை 415 கொக்குத் தீது 427 கொக்குப் புறம் 415 கொக்குப் பெரிது 427 கொங்கத் துழவு 419 கொண்மூக் கடிது 265 கொண்மூக் குழாம் 267 கொண்மூச் சிறிது 265 கொண்மூச் செலவு 267 கொண்மூத் தீது 265 கொண்மூத் தோற்றம் 267 கொண்மூப் பறைவு 267 கொண்மூவின் குழாம் 271 கொணா கொற்றா 152 கொணா சாத்தா 152 கொணா தேவா 152 கொணா பூதா 152 கொல்யானை 24, 482 கொல்லுங் கொற்றன் 315 கொள்சிறார் 23 கொள்ளெனக் கொண்டான் 205 கொள்ளே ஐயவி 165 கொளலோ கொண்டான் 292 கொற் கடிது 372 கொற் சிறிது 372 கொற் பெரிது 372 கொற்றங்குடி 351 கொற்றங் கொற்றன் 351 கொற்றந்தை 348 கொற்றன்றந்தை 348 கொற்றனைக் கொணர்ந்தான் 158, 203 கொற்றனே சாத்தனே தேவனே பூதனே 276 கொற்றீது 372 கோஒன் கை 295 கோஒன் செவி 295 கோஒன் புறம் 295 கோஒன் றலை 295 கோட் கடிது 402 கோட்கடுமை 402 கோட் சிறிது 402 கோட்சிறுமை 402 கோட் டீது 402 கோட்டீமை 402 கோட் பெரிது 402 கோட்பெருமை 402 கோடை 61 கோணாகோணம் 312 கோணாவட்டம் 312 கோல்வளை 24 கோலிகக் கருவி 154 கோ வந்தது 294 கோள் கடிது 401, 402 கோள் கடுமை 402 கோள் சிறிது 401, 402 கோள் சிறுமை 402 கோள் தீது 401 கோள் தீமை 402 கோள் பெரிது 401, 402 கோள் பெருமை 402 கோறீது 161 கோன் கொற்றன் 352 கோன் றந்தை 352 கோனன்று 161 கௌவுக் கடிது 296 கௌவுக்கடுமை 296 கௌவுக் கொற்றா 153 கௌவு கொற்றா 153 கௌவுஞாற்சி 296 கௌவு ஞான்றது 296 கௌவுச் சிறிது 296 கௌவுச்சிறுமை 296 கௌவுத் தீது 296 கௌவுத்தீமை 296 கௌவுப் பெரிது 296 கௌவுப்பெருமை 296 கௌவு வலிது 296 கௌவுவலிமை 296 ஙௌக் களைந்தார் 77 ச சாக் குத்தினான் 210 சாச் சீறினான் 210 சா ஞான்றார் 210 சாத் தகர்த்தான் 210 சாத்தங்குடி 351 சாத்தங்கொற்றன் 351 சாத்தந்தை 348 சாத்தன் குறிது 156 சாத்தன் குறியன் 156 சாத்தன் கை 109, 156 சாத்தன் வந்தது 118 சாத்தன் வந்தான், வந்தது 118 சாத்தன் றந்தை 348 சாத்த னுண்டான் 109 சாத்தனை 117 சாத்தனொடு 117 சாப் புடைத்தான் 210 சார்க்காழ் 365 சார்ங்கோடு 364 சார்ஞ்செதிள் 364 சார்ந்தோல் 364 சார்ம்பூ 364 சான்றீர் நும்மையும் 192 சாலை 62 சிஃறாழிசை 216 சித்திரைக்குக் கொண்டான் 128, 287 சித்திரைக்குச் சென்றான் 287 சித்திரைக்குத் தந்தான் 287 சித்திரைக்குப் போனான் 287 சில்படை 215 சிலகுதிரை 211 சில்வேள்வி 215 சுஃறென்றது 40 சுக்குக்கொடு 37 சூர்க்கோட்பட்டான் 157 செத்துக் கிடந்தான் 428 செப்புக் கொணர்ந்தான் 158 செம்பொன்பதின்றொடி 142, 143 செம்முக் கடிது 328 செம்முக் கடுமை 328 செம்முச் சிறிது 328 செம்முச் சிறுமை 328 செம்மு ஞாற்சி 328 செம்மு ஞான்றது 328 செம்முத் தீது 328 செம்முத் தீமை 328 செம்மு நீட்சி 328 செம்மு நீண்டது 328 செம்முப் பெரிது 328 செம்முப் பெருமை 328 செம்மு மாட்சி 328 செம்மு மாண்டது 328 செம்மு வலிது 328 செம்மு வலிமை 328 செருக்களம் 261 செருத்தானை 261 செருவக் களம் 261 செருவச் சேனை 261 செருவ ஞாற்சி 261 செருவப் பறை 261 செருவின் கடுமை 261 செல்க குதிரை 211 செல்க செந்நாய் 211 செல்க தகர் 211 செல்க பன்றி 211 செல்சிறார் 23 செற் கடிது 372 செற் சிறிது 372 செற் பெரிது 372 செற்றீது 372 சேக் கடிது 275 சேங்கோடு 279 சேச் சிறிது 275 சேஞ்செதிள் 279 சேத் தீது 275 சேந்தோல் 279 சேப் பெரிது 275 சேவின் கோடு 280 சேவின் செதிள் 280 சேவின் செவி 280 சேவின் புறம் 280 சேவின் பூ 280 சேவின் றலை 280 சேவின் றோல் 280 சேவினொடு 174 சொற் கடிது 372 ஞ ஞெமைங்கோடு 283 ஞெமைஞ்செதிள் 283 ஞெமைந்தோல் 283 ஞெமைம்பூ 283 ஞெமையின் கோடு 286 ஞேக் களைந்தார் 77 ஞோக் களைந்தார் 77 ட டப் பெரிது 66 த தகர்க்குட்டி 406 தங்கண் 115, 189 தஞ்செவி 321 தஞ்ஞாண் 321 தடக்கை 204 தடஞ்செவி 204 தடந்தோள் 204 தடவுத்திரை 483 தடவுத்தோள் 483 தந்தை 30 தந்நூல் 321 தப் பெரிது 66 தம்புறம் 321 தமிழக் கூத்து 129, 386 தமிழச் சேரி 386 தமிழத் தோட்டம் 386 தமிழ நூல் 129 தமிழப் பள்ளி 386 தமிழ யாப்பு 129 தமிழ வெழுத்து 129 தவக் கொண்டான் 204 தளாஅவின் கோடு 231 தற்பகை 354 தற்புகழ் 354 தன்கை 353 தன்செவி 353 தன்ஞாண் 353 தன்புறம் 353 தன்மணி 353 தன்யாழ் 353 தன்வட்டு 353 தன்றலை 353 தன்னடை 353 தன்னாடை 353 தன்னூல் 353 தாங் குறிய 322 தாஞ் சிறிய 322 தாஞ் ஞான்றார் 322 தாந் தீய 322 தாந் நீண்டார் 322 தாம் பெரிய 322 தாய்க் கொண்டான் 362 தாய்கை 359 தாய்ச் சென்றான் 362 தாய்செவி 359 தாய்த் தந்தான் 362 தாய்க் கொலை 158 தாய்தலை 359 தாய்ப் போயினான் 362 தாய்புறம் 359 தாராக் கடிது 222 தாராக்கால் 226 தாராச்சிறகு 226 தாராச் சிறிது 222 தாராத்தலை 226 தாராத் தீது 222 தாராப்புறம் 226 தாராப் பெரிது 222 தாழ்அடைவு 145 தாழ்ஆட்டம் 145 தாழ்இடிபு 145 தாழ்ஈட்டம் 145 தாழ் ஈறிற்று 145 தாழ் உடைந்தது 145 தாழ் உடைபு 145 தாழ் ஊற்றம் 145 தாழ் ஊறிற்று 145 தாழ் எழு 145 தாழ் எழுந்தது 145 தாழ் ஏணி 145 தாழ் ஏறிற்று 145 தாழ் ஒடிந்தது 145 தாழ் ஒடுக்கம் 145 தாழ் ஓக்கம் 145 தாழ் ஓடிற்று 145 தாழ் ஐது 145 தாழ் ஐயம் 145 தாழ் ஒளவியத்தது 145 தாழ் ஒளவியம் 145 தாழ் ஞாற்சி 145 தாழ் ஞான்றது 145 தாழ் நீட்சி 145 தாழ் நீண்டது 145 தாழ் நுந்தை 145 தாழ் நுந்தையது 145 தாழ்மாட்சி 145 தாழ் மாண்டது 145 தாழ் யாது 145 தாழ்யாப்பு 145 தாழ் வலிது 145 தாழ்வலிமை 145 தாழடைந்தது 145 தாழப் பாவை 406 தாழாடிற்று 145 தாழிடிந்தது 145 தான் குறியன் 354 தான் கொற்றன் 352 தான் சிறியன் 354 தான் ஞான்றான் 354 தான் பெரியன் 354 தான் மாண்டான் 354 தான் றந்தை 352 தான் றீயன் 354 திரும் யாது 27 திருமுக் கொற்றா 153 திருமு கொற்றா 153 தில்லங்காய் 284 தின் கொற்றா 152 தினக் கொண்டான் 205 தினச் சென்றான் 205 தினத் தந்தான் 205 தினப் போயினான் 205 தினைக் குறிது 159 தினை குறிது 159 தினைப் புரவு 155 தினைப்பூ 155 தீக் கடிது 250 தீச் சிறிது 250 தீத் தீது 250 தீப் பெரிது 250 துக் கொற்றா 172 துஞ் ஞெள்ளா 172 துவர்ங்கோடு 364 துவர்ஞ்செதிள் 364 துவர்ந்தோல் 364 துவர்ம்பூ 364 துள்ளுக் கடிது 402 துள்ளுக் கடுமை 402 துள்ளுச் சிறிது 402 துள்ளுச் சிறுமை 402 துள்ளு ஞாற்சி 402 துள்ளு ஞான்றது 402 துள்ளுத் தீது 402 துள்ளுத் தீமை 402 துள்ளு நீட்சி 402 துள்ளு நீண்டது 402 துள்ளுப் பெரிது 402 துள்ளுப் பெருமை 402 துள்ளு மாட்சி 402 துள்ளு மாண்டது 402 துள்ளு வலிது 402 துள்ளு வலிமை 402 துளியத்துக் கொண்டான் 247 துன்னல் கடிது 377 துன்னற் கடுமை 377 தூஉக் குறை 268 தூஉச் செய்கை 268 தூஉத் தலை 268 தூஉப் புறம் 268 தூணிக்குத் தூணி 240 தூணிக்கொள் 240 தூணிச்சாமை 240 தூணித்தூணி 240 தூணிப்பதக்கு 240 தூதுணங்காய் 284 தூதுணையின் காய் 286 தெங்கங்காய் 418 தெவ் யாது 27 தெவ்வுக் கடிது 383 தெவ்வுக் கடுமை 383 தெவ்வுக் கொற்றா 153 தெவ்வு கொற்றா 153 தெவ்வுச் சிறிது 383 தெவ்வுச் சிறுமை 383 தெவ்வு ஞாற்சி 383 தெவ்வு ஞான்றது 383 தெவ்வுத் தீது 383 தெவ்வுத் தீமை 383 தெவ்வு நீட்சி 383 தெவ்வு நீண்டது 383 தெவ்வுப் பெரிது 383 தெவ்வுப் பெருமை 383 தெவ்வு மாட்சி 383 தெவ்வு மாண்டது 383 தெவ்வு வலிது 383 தெள்கியாது 35, 411 தெள்கு கடிது 426 தெள்குகால் 414 தெள்குசிறிது 426 தெள்குசிறை 414 தெள்குதலை 414 தெள்கு தீது 426 தெள்கு புறம் 414 தெள்கு பெரிது 426 தென்சார்க்கு கூரை 406 தேக்கங்கோடு 416 தேக்கஞ்செதிள் 416 தேக்கந்தோல் 416 தேக்கம்பூ 416 தேஞ்ஞெரி 343 தேஞெரி 343 தேடிக் கொண்டான் 237 தேடிச் சென்றான் 237 தேடித் தந்தான் 237 தேடிப் போயினான் 237 தேத்தடை 345 தேத்திறால் 345 தேத்தீ 345 தேந்நுனி 343 தேநுனி 343 தேம்முரி 343 தேமுரி 343 தேர்க்கால் 363 தேர்ச்செய்கை 363 தேர்த்தலை 363 தேர்ப்புறம் 363 தேற்குடம் 341 தேற்சாடி 341 தேற்பானை 341 தேற்றூதை 341 தேன்குடம் 341 தேன்சாடி 341 தேன்ஞெரி 343 தேன்பானை 341 தேன்முரி 343 தேன் றீது 161 தேன்றூதை 341 தேன்னுனி 343 தேனடை 345 தேனிறால் 344 தோட் கடிது 401 தோட் சிறிது 401 தோட் டீது 401 தோட் பெரிது 401 தொடிக்குறை 167 தொடியரை 166 தொடியே கஃசு 164 தொண்டை 61 ந நங்கண் 189 நஞ்செவி 311, 321 நஞ்ஞாண் 321 நடக் கொற்றா 152 நட கொற்றா 152 நட ஞெள்ளா 172 நந்தலை 311, 321 நந்நூல் 321 நம்பி அடைபு 154 நம்பி ஒளவியம் 154 நம்பி குறியன் 154 நம்பி சிறியன் 154 நம்பிசெவி 154 நம்பிஞாற்சி 154 நம்பி ஞான்றான் 154 நம்பிதலை 154 நம்பி தீயன் 154 நம்பிநீட்சி 154 நம்பி நீண்டான் 154 நம்பிப்பூ 155 நம்பிப்பேறு 155 நம்பிபுறம் 154 நம்பி பெரியன் 154 நம்பிமாட்சி 154 நம்பி மாண்டான் 154 நம்பி யடைந்தான் 154 நம்பியடைபு 154 நம்பியாப்பு 154 நம்பியாவன் 154 நம்பியைக் கொணர்ந்தான் 158, 203 நம்பி யௌவியத்தான் 154 நம்பி யௌவியம் 154 நம்பி வலியன் 154 நம்பி வலிமை 154 நம்புறம் 311, 321 நமையின் கோடு 286 நல்ல குதிரை 211 நல்ல செந்நாய் 211 நல்ல தகர் 211 நல்ல பன்றி 211 நன்றோ தீதோ அன்று 291 நாகரிது 139 நாகியாது 35, 411 நாகின் கால் 413 நாகு கடிது 409, 426 நாகுகடுமை 409 நாகுகால் 413 நாகு குறியம் 322 நாகு சிறிது 426 நாகுசினை 413 நாகுதலை 413 நாகு தீது 426 நாகுபுறம் 413 நாகு பெரிது 426 நாஞ் சிறியம் 322 நாஞ் ஞான்றாம் 322 நாட் கடிது 401 நாட் சிறிது 401 நாட்டக் கடுமை 328 நாட்டங் கடிது 328 நாட்டீது 401 நாட் பெரிது 401 நாடுரி 139, 241 நாந் தீயம் 322 நாந் நீண்டாம் 322 நாம் பெரியம் 322 நாய்க்கால் 358 நாய் கடிது 362 நாய் கோட்பட்டான் 157 நாய்ச்செவி 358 நாய் சாரப்பட்டான் 157 நாய் சிறிது 362 நாய்த்தலை 358 நாய் தீண்டப்பட்டான் 157 நாய் தீது 362 நாய்ப்புறம் 358 நாய் பாயப்பட்டான் 157 நாய் பெரிது 362 நால் வட்டி 453 நாலகல் 456 நாலுழக்கு 456 நாழிக்காயம் 241 நாழிக் கூறு 167 நாற்கலம் 447 நாற்கழஞ்சு 447 நாற் சாடி 447 நாற்பலம் 447 நாற்பானை 447 நாற்றூதை 447 நாற்றொடி 447 நான்கு நூறாயிரம் 471 நானாழி 172, 451 நில் கொற்றா 172 நிலத்துக் கிடந்தான் 313 நிலநீர் 315 நிலம் வலிது 28, 331 நிலாக்கதிர் 133 நிலாத்துக் கொண்டவன் 133 நிலாத்துக் கொண்டான் 133, 229, 231 நிலாத்துச் சென்றான் 229 நிலாத்துத் தந்தான் 229 நிலாத்துப் போயினான் 229 நிலாமுற்றம் 133 நிலாவிற் கொண்டான் 231 நிற் கொற்றா 172 நின்கை 251, 254 நின்செவி 254 நின்ஞாண் 172 நின்புறம் 254 நின்றலை 254 நீஇர் குறியீர் 110, 327 நீஇர் சிறியீர் 327 நீஇர் ஞான்றீர் 327 நீஇர் தீயீர் 327 நீஇர் நீண்டீர் 327 நீஇர் பெரியீர் 327 நீஇர் மாண்டீர் 327 நீ குறியை 251 நீ சா 76 நீ சாவிப்பி 76 நீ சிறியை 251 நீ தீயை 251 நீ பெரியை 251 நீயேஎ கொண்டாய் 274 நீயே கொண்டாய் 276 நீயே சென்றாய் 276 நீயே தந்தாய் 276 நீயே போயினாய் 276 நீயொன்றனைச் சாவி 76 நீயோ கொண்டாய் 291 நீர் 61 நீர் குறிது 406 நீர் சிறிது 406 நீர் தீது 406 நீர் பெரிது 406 நீலக்கண் 315 நுக் களைந்தார் 77, 115 நுஞ்செவி 326 நுஞ்ஞாண் 326 நுணாங்கோடு 232 நுந்தலை 326 நுந்நூல் 326 நும்புறம் 326 நூக் களைந்தார் 77 நூல் 61 நூற்றகல் 473 நூற்றடுக்கு 472 நூற்றுக் கலம் 474 நூற்றுக் கழஞ்சு 474 நூற்றுக் குறை 472 நூற்றுச் சாடி 474 நூற்றுத் தூதை 474 நூற்றுத் தொடி 474 நூற்று நாழி 474 நூற்றுப் பலம் 474 நூற்றுப் பானை 474 நூற்று மண்டை 474 நூற்று வட்டி 474 நூற்றுழக்கு 474 நூற்றொண்டு 472 நெய்தலஞ்சிறுபறை 483 நெற் கடிது 372 நெற் சிறிது 372 நெற் பெரிது 372 நெற் றீது 372 ப பட் கடிது 404 பட்கடுமை 404 பண்டு கொண்டான் 430 பண்டைச் சான்றோர் 160, 426 பத்தோ பதினொன்றோ 291 பதக்கு நானாழி 172 பதிவழக்கு 437 பதிற்றகல் 122 பதிற்றிதழ் 437 பதிற்று முழம் 437 பதிற்று வேலி 437 பதிற்றுழக்கு 122 பதின் கலம் 437 பதின் கழஞ்சு 437 பதின் சாடி 437 பதின் பலம் 437 பதின் பானை 437 பதின் மண்டை 437 பதின் வட்டி 437 பதின் றிங்கள் 437 பதின் றூதை 437 பதின் றொடி 437 பதினகல் 437 பதினாயிரக் கலம் 320 பதினாயிரத்துக் குறை 319 பதினாயிரத்துக் கூறு 319 பதினாயிரத்து முதல் 319 பதினாழி 437 பதினுழக்கு 437 பரணியாற் கொண்டான் 125, 248 பரணியாற் சென்றான் 248 பரணியாற் போயினான் 248 பரணியாற் றந்தான் 248 பருத்திக்குச் சென்றான் 247 பருத்தி குறிது 159 பருத்தி சிறிது 159 பருத்தி தீது 159 பருத்தி பெரிது 159 பல் சான்றார் 154 பல் படை 215 பல் யானை 215 பல்லரசர் 154 பல குதிரை 211 பல செந்நாய் 211 பல தகர் 211 பல பன்றி 211 பலவற்றுக் கோடு 119, 221 பலவற்றுச் செவி 221 பலவற்றுத் தலை 221 பலவற்றுப் புறம் 221 பலாஅக் கோடு 227 பலாஅச் செதிள் 227 பலாஅத் தோல் 227 பலாஅப் பூ 227 பலாக் குறைத்தான் 158 பவளவாய் 315 பள்ளுக் கடிது 404 பள்ளுக் கடுமை 404 பற்பல கொண்டார் சிற்சில வித்தி 215 பறக்கு நாரை 315 பறம்பிற் பாரி 125, 415, 418 பன்மரம் 216 பன்னுக் கடிது 346 பன்னுக் கடுமை 346 பன்னுச் சிறிது 346 பன்னுச் சிறுமை 346 பன்னு ஞாற்சி 346 பன்னு ஞான்றது 346 பன்னு தீது 346 பன்னு தீமை 346 பன்னு நீட்சி 346 பன்னு நீண்டது 346 பன்னுப் பெரிது 346 பன்னு பெருமை 346 பன்னு மாட்சி 346 பன்னு மாண்டது 346 பன்னு யாது 346 பன்னு யாப்பு 346 பன்னு வலிது 346 பன்னு வலிமை 346 பனங்காய் 284 பனஞ்செதிள் 284 பனந்தோல் 284 பனம்பூ 284 பனாஅட்டு 285 பனியத்துக் கொண்டான் 242 பனியத்துச் சென்றான் 242 பனியத்துத் தந்தான் 242 பனியத்துப் போயினான் 242 பனியிற் கொண்டான் 125, 242 பனியிற் சென்றான் 242 பனியிற் போயினான் 242 பனியிற் றந்தான் 242 பனைக்கொடி 286 பனைத்திரள் 286 பனை பிளந்தான் 158 பனையின் காய் 286 பனையின் குறை 113, 170 பாப்புக் கோட்பட்டான் 157 பாம்பினிற் கடிது தேள் 132 பாம்பு கோட்பட்டான் 157 பார்ப்பனக் கன்னி 339, 419 பார்ப்பனச் சேரி 419 பால் கடிது 371 பால் சிறிது 371 பால் தீது 371 பால் பெரிது 371 பாழ்க்கிணறு 388 பாழ்ங்கிணறு 388 பாழ்ச்சேரி 388 பாழ்ஞ்சேரி 388 பாழ்த்தோட்டம் 388 பாழ்ந்தோட்டம் 388 பாழ்ப்பாடி 388 பாழ்ம்பாடி 388 பாறங்கல் 289 பிடாஅக்கோடு 231 பிடாஅங்கோடு 230 பிடாஅச் செதிள் 231 பிடாஅஞ்செதிள் 230 பிடாஅத்தோல் 231 பிடாஅந்தோல் 230 பிடாஅப்பூ 231 பிடாஅம்பூ 230 பிடாவின் கோடு 231 பிரமக்கோட்டம் 154 பிரமகோட்டம் 154 பிற் கொண்டான் 334 பிற் சென்றான் 334 பிற் போயினான் 334 பிற் றந்தான் 334 பின் கொண்டான் 334 பின்னல் கடிது 377 பின்னற்கடுமை 377 பின்னன்ஞாற்சி 377 பின்னன் ஞான்றது 377 பின்னுக் கடிது 346 பின்னுக் கடுமை 346 பின்னுச் சிறிது 346 பின்னுச் சிறுமை 346 பின்னு ஞாற்சி 346 பின்னு ஞான்றது 346 பின்னுத் தீது 346 பின்னுத் தீமை 346 பின்னு நீட்சி 346 பின்னு நீண்டது 346 பின்னுப் பெரிது 346 பின்னுப் பெருமை 346 பின்னுமாட்சி 346 பின்னு மாண்டது 346 பின்னு யாது 346 பின்னு யாப்பு 346 பின்னு வலிது 346 பின்னு வலிமை 346 பீ குறிது 251 பீ சிறிது 251 பீ தீது 251 பீ பெரிது 251 பீர்ங்கோடு 364 பீர்ஞ்செதிள் 366 பீர்ந்தோல் 364 பீர்ம்பூ 364 பீரங்கோடு 366 பீரஞ்செதிள் 366 பீரந்தோல் 366 பீரம்பூ 366 புட் கடிது 404 புட்கடுமை 404 புட் சிறிது 404 புட்டீது 404 புட்டீமை 404 புட் பெரிது 404 புட்பெருமை 404 புண்ஞாற்சி 404 புண் ஞான்றது 404 புண்ணீட்சி 404 புண் ணீண்டது 404 புண்மாட்சி 404 புண் மாண்டது 404 புளிக் குறைத்தான் 158 புலிக்கொற்றன் 159 புலி கோட்பட்டான் 157 புலி போலக் கொண்டான் 205 புலி போலச் சென்றான் 205 புலி போலத் தந்தான் 205 புலி போலப் போயினான் 205 புலைக் கொற்றன் 159 புள் வலிது 404 புள் வலிமை 404 புள்ளுக் கடிது 404 புள்ளுக் கடுமை 404 புள்ளுச் சிறிது 404 புள்ளுச் சிறுமை 404 புள்ளு ஞாற்சி 404 புள்ளு ஞான்றது 404 புள்ளுத் தீது 404 புள்ளுத் தீமை 404 புள்ளு நீட்சி 404 புள்ளு நீண்டது 404 புள்ளு பெரிது 404 புள்ளு பெருமை 404 புள்ளு மாட்சி 404 புள்ளு மாண்டது 404 புள்ளு வலிது 404 புள்ளு வலிமை 404 புளிக் குறைத்தான் 158 புளிக்கூழ் 247 புளி குறைத்தான் 158 புளிங்காய் 247 புளிங்கூழ் 246 புளிச்சோறு 247 புளிஞ்சோறு 246 புளித்தயிர் 247 புளிந்தயிர் 246 புளிப்பாளிதம் 247 புளிம்பாளிதம் 246 புளியங்கோடு 130, 141, 245 புளியஞ்செதிள் 130, 245 புளியஞெரி 131 புளியந்தோல் 130, 245 புளியநுனி 131 புளியம்பூ 245 புளியமுரி 131 புளியயாழ் 13 புளியவட்டு 131 புளியவிலை 131 புளியிலை 131 புன்கங்கோடு 417 புன்கஞ்செதிள் 417 புன்கந்தோல் 417 புன்கம்பூ 417 பூக்கேழூரன் 481 பூக்கொடி 269 பூங்கொடி 269 பூச்செய்கை 269 பூஞ்செய்கை 269 பூஞ்ஞெரி 146 பூஞெரி 146 பூதந்தை 349 பூந்நுனி 146 பூ நுனி 146 பூம்முரி 146 பூமுரி 146 பூல் குறைத்தான் 158 பூலங்கோடு 376 பூலஞ்செதிள் 376 பூலந்தோல் 376 பூலம்பூ 376 பூவினொடு விரிந்த கூந்தல் 133 பூவொடு விரிந்த கூந்தல் 133 பூழ்க்கால் 384 பூழ்ச்சிறகு 384 பூழ்த்தழை 384 பூழ்ப்புறம் 384 பூழனொடு 195 பெண்கை 304 பெண்செவி 304 பெண்தலை 304 பெண்டன் கை 422 பெண்டின் கால் 421 பெண்புறம் 304 பெருங்கொற்றன்றந்தை 350 பெருஞ்சாத்தன்றந்தை 350 பேஎய்க் கோட்பட்டான் 157 பேன்கொற்றன் 352 பேன்றந்தை 352 பொய்ச்சொல் 362 பொருந் யாது 27 பொருந் யானா 164 பொருநக் கடுமை 300 பொருநச் சிறுமை 300 பொருந ஞாற்சி 300 பொருநத் தீமை 300 பொருந நீட்சி 300 பொருநப் பெருமை 300 பொருந மாட்சி 300 பொருந வலிமை 300 பொருநனந்தா 164 பொருநாதா 164 பொருநின் குறை 300 பொருநினை 183 பொருநினொடு 183 பொருநுக் கடிது 299 பொருநுக் கொற்றா 153 பொருநு கொற்றா 153 பொருநுச் சிறிது 299 பொருநு ஞான்றது 299 பொருநுத் தீது 299 பொருநு நீண்டது 299 பொருநுப் பெரிது 299 பொருநு மாண்டது 299 பொருநு வலிது 299 பொலங்கலம் 357 பொலஞ்சுடர் 357 பொலந்தேர் 357 பொழிப்பே யகல சிறப்புப் பாயிரம் பொற்கண் 115 பொற்குடம் 110, 333 பொற்சாடி 333 பொற்பானை 333 பொற்றூதை 333 பொன் கடிது 148 பொன் சிறிது 148 பொன்ஞாண் 26 பொன் ஞாத்த 147 பொன்ஞாற்சி 149 பொன் பெரிது 26, 148 பொன்மாலை 26 பொன் யாத்த 147 பொன் யாது 26 பொன் வலிது 26 பொன் றீது 148, 150 பொன்னகல் 161 பொன்னந்திகிரி 483 பொன்னப் பத்தம் 406 பொன்னன்று 150 பொன்னன்ன குதிரை 211 பொன்னன்ன செந்நாய் 211 பொன்னன்ன தகர் 211 பொன்னன்ன பன்றி 211 ம மக்கட்கை 405 மக்கட்செவி 405 மக்கட்டலை 405 மக்கட்புறம் 405 மகக் குறிது 204 மகட் பெற்றான் 158 மகடூஉவின் கை 119, 272 மகடூஉவின் செவி 272 மகடூஉவின் புறம் 272 மகடூஉவின் றலை 272 மகத்தாற் கொண்டான் 110, 332 மகத்தாற் சென்றான் 332 மகத்தாற் போயினான் 332 மகத்தாற் றந்தான் 332 மகத்துக் கை 126, 220 மகத்துஞான்று கொண்டான் 332 மகத்துஞான்று சென்றான் 332 மகத்துஞான்று தந்தான் 332 மகத்துஞான்று போயினான் 332 மகத்துத் தலை 220 மகத்துப் புறம் 220 மகம்பால்யாடு 220 மகவின் கை 113, 219 மகவின் செவி 219 மகவின் ஞாண் 219 மகவின் புறம் 219 மகவின் றலை 219 மகற் பெற்றான் 158 மகன்றாய்க்கலாம் 360 மகன்றாய்ச்செரு 360 மகன்றாய்த்தார் 360 மகன்றாய்ப்படை 360 மகிழ்ங்கோடு 387 மகிழங்கோடு 387 மட்குடம் 303 மட்சாடி 303 மட்டூதை 303 மட்பானை 303 மண் கடிது 148, 172 மண் கொணர்ந்தான் 158 மண் சிறிது 148 மண் ஞாத்த 147 மண்ஞாற்சி 149 மண் டீது 148, 151 மண்ணகல் 161 மண் ணன்று 151 மண்ணினைக் கொணர்ந்தான் 203 மண்ணீட்சி 149 மண்ணுக் கடிது 307 மண்ணுக் கடுமை 307 மண்ணுக் கொற்றா 172 மண்ணு கொற்றா 172 மண்ணு ஞாற்சி 307 மண்ணு ஞான்றது 307 மண்ணு ஞெள்ளா 172 மண்ணுச் சோறு 307 மண்ணு வலிது 307 மண்ணு வலிமை 307 மண் பெரிது 148 மண் யாத்த 147 மண் யாது 26 மண் வலிது 26 மயிலாப்பிற் கொற்றன் 418 மரக்கோடு 311 மரங்குறிது 144 மரங் குறைத்தான் 158 மரஞ் சிறிது 144, 315 மரச்செதிள் 311 மரஞாண் 311 மர ஞான்றது 315 மரத்தாற் கொண்டான் 332 மரத்தாற் சென்றான் 332 மரத்தாற் புடைத்தான் 203 மரத்தாற் போயினான் 332 மரத்தாற் றந்தான் 332 மரத்துக்கண் கட்டினான் 203 மரத்துக்குப் போனான் 203 மரத்தோல் 311 மரந் தீது 144, 315 மர நீண்டது 315 மரநூல் 311 மரப்பூ 311 மரம் பெரிது 144, 315 மரமணி 311 மரமாண்டது 315 மர யாழ் 311 மரவட்டு 311 மரவடி 141, 312 மரவடை 311 மரவாடை 311 மரவேர் 110 மரா அடி 312 மருத்துவ மாணிக்கர் 154 மலையொடு பொருதது 203 மலையொடு பொருத மால் யானை 203 மழையத்துக் கொண்டான் 288 மழையத்துச் சென்றான் 288 மழையத்துத் தந்தான் 288 மழையத்துப் போயினான் 288 மழையிற் கொண்டான் 288 மழையிற் சென்றான் 288 மழையிற் போயினான் 288 மழையிற் றந்தான் 288 மற்றை யானை 426 மன்றப் பெண்ணை 129 மாஅங்கோடு 232 மாஅஞ்செதிள் 232 மாஅந்தோல் 232 மாஅம்பூ 232 மா குறிது 225 மாங்கோடு 232 மா சிறிது 225 மா தீது 225 மா பெரிது 225 மாவின் கோடு 121, 232 மான்கோடு 121, 232 மான்செவி 232 மான்புறம் 232 மான்றலை 232 மின்னுக் கடிது 346 மின்னுக் கடுமை 346 மின்னுச் சிறிது 346 மின்னுச் சிறுமை 346 மின்னு ஞாற்சி 346 மின்னு ஞான்றது 346 மின்னுத் தீது 346 மின்னுத் தீமை 346 மின்னு நீட்சி 346 மின்னு நீண்டது 346 மின்னுப் பெரிது 346 மின்னுப் பெருமை 346 மின்னு மாட்சி 346 மின்னு மாண்டது 346 மின்னு யாது 346 மின்னு யாப்பு 346 மின்னு வலிது 346 மின்னு வலிமை 346 மீக்கோள் 252 மீகண் 112, 251 மீங்குழி 252 மீசெவி 251 மீதலை 251 மீந்தோல் 252 மீப்பல் 252 மீப்பாய் 252 மீப்புறம் 251 மீற்கண் 340 மீற்சினை 340 மீற்புறம் 340 மீற்றலை 340 மீன்கண் 340 மீன்சினை 340 மீன்புறம் 340 மீன்றலை 340 முஃடீது 39, 151, 400 முக்கலம் 447 முக்கழஞ்சு 447 முச்சாடி 447 முட் கடிது 399 முட்குறுமை 399 முட்குறை 397 முட் சிறிது 399 முட்சிறுமை 399 முட்சிறை 397 முட்டலை 397 முட்டீது 399, 400 முட்டீமை 399 முட்புறம் 397 முட் பெரிது 399 முட்பெருமை 399 முண்ஞெரி 398 முண் ஞெரிந்தது 398 முண் ணன்று 151 முண் ணீண்டது 398 முண்ணுனி 398 முண் மாண்டது 398 முண்முரி 398 முத்தூதை 447 முத்தொடி 447 முந்து கொண்டான் 430 முந்நாழி 451 முப்பலம் 447 முப்பானை 447 மும்மண்டை 451 மும்மா 480 முயிற்றடைவு 412 முயிற்றாட்டம் 412 முயிற்றின் கால் 413 முயிற்று ஞாற்சி 412 முயிற்றுத் தலை 412 முயிற்று நீட்சி 412 முயிற்றுப் புறம் 412 முயிற்று மாட்சி 412 முயிற்று யாப்பு 412 முயிற்று வலிமை 412 முரசக் கடிப்பு 418 முரட் கடுமை 310 முரட் சேனை 310 முரட் டானை 310 முரட் பறை 310 முரண் கடிது 310 முரண் கடுமை 310 முரண் சிறிது 310 முரண் டீது 310 முரண் பெரிது 310 முவ்வகல் 456 முவ்வட்டி 452 முவ்வுழக்கு 456 முவட்டி 452 முள் கடிது 399 முள் குறுமை 399 முள் சிறிது 399 முள் சிறுமை 399 முள் தீது 399 முள் தீமை 399 முள் பெரிது 399 முள் பெருமை 399 முளவுமா 483 முற் கொண்டான் 334 முற் சென்றான் 334 முற் போயினான் 334 முற் றந்தான் 334 முன் கொண்டான் 334 முன்னில் 356 மூங்கா இல்லை 141 மூங்காவின் கால் 227 மூதூர் 61 மூவகல் 457 மூவசை 479 மூவட்டி 452 மூவுழக்கு 457 மூன்று நூறாயிரம் 471 மூன்று மா 480 மெய்ச்சொல் 362 மெய்ஞ்ஞானம் 146 மெய்ந்நூல் 146 மெய்ம்மறந்தார் 146 மேல்கூரை 433 மேல்சார் 202 மேல்புடை 202 மேற்கண் 202 மேற்கின்கண் 202 மைக் கொணர்ந்தான் 158 மை கொணர்ந்தான் 158 யா யாஅக்கோடு 231 யாஅங்கோடு 230 யாஅச்செதிள் 231 யாஅஞ்செதிள் 230 யாஅத்துக்கோடு 231 யாஅத்தோல் 231 யாஅந்தோல் 230 யாஅப்பூ 231 யாஅம்பூ 230 யா குறிய 225 யாங்கவைக் கொண்டான் 160 யாங்கவை கொண்டான் 160 யாங்குக் கொண்டான் 428 யாங்கு கொண்டான் 429 யாங்குச் சென்றான் 428 யாங்கு சென்றான் 429 யாங்குத் தந்தான் 428 யாங்கு தந்தான் 429 யாங்குப் போயினான் 428 யாங்கு போயினான் 429 யாங் குறியேம் 322 யா சிறிய 225 யாஞ் சிறியேம் 322 யாஞ் ஞான்றேம் 322 யாட்டடைவு 412 யாட்டாட்டம் 412 யாட்டின் கால் 413 யாட்டுக் கால் 412 யாட்டுச் செவி 412 யாட்டு ஞாற்சி 412 யாட்டுத் தலை 412 யாட்டு நீட்சி 412 யாட்டுப் புறம் 412 யாட்டு மாட்சி 412 யாட்டு யாப்பு 412 யாட்டு வலிமை 412 யாண்டைக் கொண்டான் 160 யாதன் கோடு 423 யா தீய 225 யாந் தீயேம் 322 யாந் நீண்டேம் 322 யா பெரிய 225 யாம் பெரியேம் 322 யார்யார் கண்டே யுவப்பர் 173 யாரவர் 173 யாவதது 173 யாவற்றுக் கோடு 227 யாவின் கோடு 231 யாழ் குறிது 406 யாழ் சிறிது 406 யாழ் பெரிது 406 யாழ் தீது 406 யான் குறியேன் 354 யான் சிறியேன் 354 யான் ஞான்றேன் 354 யான் தீயேன் 354 யான் நீண்டேன் 354 யான் பெரியேன் 354 யான் மாண்டேன் 354 யானேஎ கொண்டேன் 274 யானே கொண்டேன் 276 யானே சென்றேன் 276 யானே தந்தேன் 276 யானே போயினேன் 276 யானைக்கோடு 110, 281 யானைச்செவி 281 யானைத்தலை 281 யானைப்புறம் 281 யானோ கொண்டேன் 291 யானோ தேறேன் 291 வ வங்கத்து வாணிகம் 419 வட் கடிது 404 வட் கடுமை 404 வட் சிறிது 404 வட் சிறுமை 404 வட்டத்தழை 315 வட்டப்பலகை 315 வட்டம்போர் 418 வட்டீது 404 வட்டீமை 404 வட்பெரிது 404 வட்பெருமை 404 வடகடல் 433 வடக்கே தெற்கு 432 வடசார் 202 வடசார்க் கூரை 406 வடபுடை 202 வட வரை 433 வண்ஞாற்சி (வள்) 404 வண் ஞான்றது 404 வண்டின் கால் 125, 421 வண்டினைக் கொணர்ந்தான் 158 வண்டு கொணர்ந்தான் 158 வண்ணாரப் பெண்டீர் 154 வண்ணீட்சி 404 வண்ணீண்டது 404 வண்மாட்சி 404 வண் மாண்டது 404 வந்தான் சாத்தன் 109 வந்தான் போயினான் 109 வந்தானாற் கொற்றன் 369 வரகி யாது 35, 411 வரகின் கால் 413 வரகு கடிது 409, 426 வரகுகடுமை 409 வரகுகதிர் 413 வரகு சிறிது 426 வரகுசினை 413 வரகுதலை 413 வரகு தீது 426 வரகுபுறம் 413 வரகு பெரிது 426 வரிற் கொள்ளும் 334 வரிற் செல்லும் 334 வரிற் போம் 334 வரிற் றரும் 334 வரும் வண்ணக்கன் 13 வல்லக் கடுமை 375 வல்லச் சிறுமை 375 வல்லத் தீமை 375 வல்ல நாய் 375 வல்லப் பலகை 375 வல்லப் பெருமை 375 வல்லுக் கடிது 374 வல்லுக் கடுமை 374 வல்லுச் சிறிது 374 வல்லுச் சிறுமை 374 வல்லு ஞாற்சி 374 வல்லு ஞான்றது 374 வல்லுத் தீது 374 வல்லுத் தீமை 374 வல்லு நீட்சி 374 வல்லு நீண்டது 374 வல்லுப் பெரிது 374 வல்லுப் பெருமை 374 வல்லு மாட்சி 374 வல்லு மாண்டது 374 வல்லு வலிது 374 வல்லு வலிமை 374 வழக்கத்தாற் பாட்டாராய்ந்தான் 196 வழுதுணையின் காய் 286 வழைக்கோடு 287 வழைங்கோடு 287 வழையின் கோடு 286 வழையின் பூ 286 வள் வலிது 404 வள்வலிமை 404 வளங்கேழ் திருநகர் 481 வளிக் கோட்பட்டான் 157 வளி கோட்பட்டான் 157 வளியத்துக் கொண்டான் 243 வளியத்துச் சென்றான் 243 வளியத்துத் தந்தான் 243 வளியத்துப் போயினான் 243 வளியிற் கொண்டான் 243 வளியிற் சென்றான் 243 வளியிற் றந்தான் 243 வளியிற் போயினான் 243 வாட்கடுமை 402 வாட்சிறுமை 402 வாட்டீமை 402 வாட்பெருமை 402 வாராத கொற்றன் 211 வாழி கொற்றா 212 வாழி ஞெள்ளா 212 வாள் கடிது 401 வாள்கடுமை 402 வாள் சிறிது 401 வாள்சிறுமை 402 வாள் தீது 401 வாள்தீமை 402 வாள் பெரிது 401 வாள்பெருமை 402 விசைங்கோடு 283 விசைஞ்செதிள் 283 விசைந்தோல் 283 விசைம்பூ 283 விசையின் கோடு 286 விண்ணத்துக் கொட்கும் 134, 306 விண்ணென விசைத்தது 482 விண் விணைத்தது 482 விரறீது 50 வில்கோள் 158 விழன்குளம் 406 விழன்செரு 406 விழன்பழனம் 406 விழன்றரை 406 விள அடைந்தது 145 விளஅடைவு 145 விளஆட்டம் 145 விள ஆடிற்று 145 விள இடிந்தது 145 விள இடிபு 145 விள ஈட்டம் 145 விள ஈரிற்று 145 விள உடைந்தது 145 விள உடைபு 145 விளஊற்றம் 145 விள ஊறிற்று 145 விள எழு 145 விள எழுந்தது 145 விள ஏணி 145 விள ஏறிற்று 145 விள ஐது 145 விள ஐயம் 145 விள ஒடிந்தது 145 விளஒடுக்கம் 145 விளஓக்கம் 145 விள ஓடிற்று 145 விள ஒளவியத்தது 145 விள ஒளவியம் 145 விளக் குறிது 113, 204 விளக்குறுமை 144, 217 விளக் குறைத்தான் 158 விளங்கோடு 113, 144, 218 விளச் சிறிது 204 விளஞ்செதிள் 144, 218 விளஞாற்சி 145 விள ஞான்றது 145, 172 விளத் தீது 204 விளந்தோல் 144, 218 விளநீட்சி 145 விள நீண்டது 145 விள நுந்தை 145 விள நுந்தையது 145 விளப் பெரிது 204 விளம்பூ 144, 218 விளமாட்சி 145 விள மாண்டது 145 விள யாது 145 விளயாப்பு 145 விளவத்துக்கண் 134, 182 விளவத்துக் கொட்டும் 141 விள வலிது 145 விளவலிமை 145 விளவினைக் குறைத்தவன் 133 விளவினைக் குறைத்தான் 108, 133 விற்கோள் 158 வீழ்க் குறிது 406 வீழ் கடிது 29 வீழ் குறிது 406 வீழ்குறை 48 வீழ்ங்குறை 48 வீழ்ஙனம் 29 வீழ்ச்சிறை 48 வீழ் சிறிது 29 வீழ்ஞ்சிறை 48 வீழ் ஞான்றது 29 வீழ்த்தலை 48 வீழ்த் தீது 29 வீழ்ந்தலை 48 வீழ் நீண்டது 29 வீழ்புறம் 48 வீழ் பெரிது 29 வீழ்ம்புறம் 48 வீழ் மாண்டது 29 வீழ் யாது 29 வீழ் வலிது 29 வெண்சாந்து 26 வெண்ஞாண் 26 வெண்ணுக் கரை 307 வெண்பலி 26 வெண்மாலை 26 வெதிர்ங்கோடு 364 வெதிர்ஞ்செதிள் 364 வெதிர்ந்தோல் 364 வெதிர்ம்பூ 364 வெந்நோய் 30 வெயிலத்துக் கொண்டான் 378 வெயிலத்துச் சென்றான் 134, 378 வெயிலத்துத் தந்தான் 378 வெயிலத்துப் போயினான் 378 வெயிலிற் கொண்டான் 378 வெயிலிற் சென்றான் 378 வெயிலிற் போயினான் 378 வெயிலிற் றந்தான் 378 வெரிக்குறை 302 வெரிங்குறை 301 வெரிச்செய்கை 302 வெரிஞ்செய்கை 301 வெரித்தலை 302 வெரிந்தலை 301 வெரிப்புறம் 302 வெரிம்புறம் 301 வெள்யானை 24 வெள்வளை 24 வேக்குடம் 277 வேச்சாடி 277 வேத்தூதை 277 வேப்பங்கோடு 416 வேப்பஞ்செதிள் 416 வேப்பந்தோல் 416 வேப்பம்பூ 416 வேப்பானை 277 வேய்க் கடிது 362 வேய்க்குறை 48, 361 வேய் கடிது 29, 362 வேய்ஙனம் 29 வேய்ச் சிறிது 29, 362 வேய்ச்சிறை 48, 361 வேய்ஞ்சிறை 48, 361 வேய் ஞான்றது 29 வேய்த்தலை 48, 361 வேய்த்தீது 362 வேய் தீது 29, 362 வேய்ந்தலை 48, 361 வேய் நீண்டது 29 வேய்ப்புறம் 48, 361 வேய்ப் பெரிது 362 வேய் பெரிது 29, 362 வேய்ம்புறம் 48 வேய் மாண்டது 29 வேய் வலிது 29 வேய்ங்குறை 48, 361 வேர்க் குறிது 406 வேர்க்குறை 48 வேர் கடிது 29 வேர் குறிது 406 வேர்ங் குறை 48 வேர்ஙனம் 29 வேர்ச்சிறை 48 வேர் சிறிது 29 வேர்ஞ்சிறை 48 வேர் ஞான்றது 29 வேர் தலை 48 வேர் தீது 29 வேர்ந்தலை 48 வேர் நீண்டது 29 வேர்ப்புறம் 48 வேர் பெரிது 29 வேர்ம்புறம் 48 வேர் மாண்டது 29 வேர் யாது 29 வேர் வலிது 29 வேல் கடிது 371 வேலங்கோடு 376 வேலஞ்செதிள் 376 வேலந்தோல் 376 வேலம்பூ 376 வேளாண் குமரி 339 வேளாண் வாழ்க்கை 339 வேற் கடிது 371 வேற்றீது 370 வேறீது 370 செய்யுள் நிரல் (மேற்கோள் ) நூற்பா எண் அஞ்செவி நிறைய மந்திரம் கூறி 483 அதாஅன் றம்ம 259 அதுமன் கொண்கன் தேரே 334 அவற்கண்டு (அகம். 48) 158 ஆயிடை (குறுந். 43) 483 ஆரங் கண்ணி (அகம். 93) 483 ஆனநெய்தெளிந்து நாளம் நீவி. 232 இதாஅன்றம்ம 259 இலம்படு புலவர் ஏற்றகை நிறைய (மலைபடு.576) 317 இறவுப் புறத்தன்ன பிணர்படு தடவுமுதல் (நற்.19) 235 உதாஅன்றம்ம 259 உப்பின்று புற்கை உண்கமா கொற்கையோனே 238 உயவல் யானை வெரிநுச் சென்றன்ன (அகம்.65) 300 எடுத்த நறவின் குலையலங் காந்தள்(கலி.40) 120 எம்மொடு தம்மைப் பொரூஉங்கால் பொன்னொடு கூவிளம் பூத்தது போன்ம் 51 எருது காலுறாஅது (புறம்.327) 41 ஏஎப்புழை (பு.வெ.மா.86) 278 ஏறங்கோள் (சீவக. 489) 418 ஐந்நூறு (சீவக. 453) 462 ஒன்பதிற்றுத் தடக்கை (பரிபாடல் 3-39) 470 ஒன்னார்த் தெறலும் (குறள். 264) 158 கடலே பாடெழுந்து இசைக்கும் (அகம். 350) 276 கடிகா (புறம். 239) 159 காப்பும் பூண்டிசின் கடையும் போகல் (அகம்.7) 334 கான்கெழு நாடு (நற்.61) 481 கானவம் பெருந்துறை (ஐங்குறு. 138) 483 குன்றக் கூகை (குறுந். 153) 129 குன்றுறழ்ந்த களிறென்கோ கொய்யுனைய மாஎன்கோ (புறம். 387) 291 சாக்குத்தி (னான்) (கலி. 105: 35) 210 சென்மதி பாக 159 ஞான்ற ஞாயிறு (புறம். 82) 172 தற்பாடி (ய) (பட்டினப். 3) 354 துறைகெழு மாந்தை (நற். 35) 481 நறவங் கண்ணி 483 நன்றோ தீதோ அன்று 291 நாளன்று போகிப் புள்ளிடை தட்ப (புறம்.124) 238 நெய்தலஞ் சிறுபறை 483 பவளவாய் (சீவக. 1819) 315 பழூஉப்பல் அன்ன பருவுகிர்ப் பாவடி (குறுந். 180) 265 பற்பல கொண்டார் சிற்சில வித்தி 215 பனைக்கொடி (புறம். 56) 286 பிணவுநாய் முடுக்கிய (மலைபடு.176) 235 புலம்புக் கனனே புல்அணற் காளை (புறம்.258) 158 புளிங்காய் (ஐங்குறு.51) 247 புன்னையங் கானல் 481 பூக்கே ழூரன் 481 பொலநறுந்தெரியல் (புறம்.29) 357 பொலம்படைப் பொலிந்த கொய்சுவல் புரவி (மலைபடு.574) 357 பொலமலர் ஆவிரை (கலி.138) 357 பொன்னந் திகிரி (புறம். 365) 483 மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை (குறுந்.66) 204 மன்றப் பெண்ணை (நற். 303) 129 மன்னிய பெருமநீ (புறம்.6) 21 மாநிதிக் கிழவனும் போன்ம் (அகம்.66) 481 மீப்பாய் (புறம்.30) 252 மீன்கண் (சீவக.54) 340 முளவுமா (மலைபடு. 176) 483 யாவது நன்றென உணரார் மாட்டும் (குறுந்.78) 173 யானோ தேறேன் (குறுந். 27) 291 வரைபாய் வருடை (வாழ்) (மலைபடு. 503) 158 வளங்கெழு திருநகர் (அகம்.17) 483 வானவரி வில்லும் திங்களும் 120,481 விண்குத்து நீள்வரை வெற்ப (நாலடி. 26) 306 வேணவா நவிய வெய்ய உயிரா (நற். 61) 289 வேர்பிணி வெதிரத்துக் கால்பொரு நரலிசை (நற். 62) 483 கலைச்சொல் நிரல் (நூற்பா வழி) எண் : நூற்பா எண் அ அஃதென் கிளவி 200 அஃறிணை 82 அஃறிணை இயற்கை 304 அஃறிணைப் பெயர் 118 அஃறிணை விரவுப்பெயர் 156, 158 அக்கென் சாரியை 271, 330 அகத்தெழு வளி 102 அகமென் கிளவி 316 அகர இறுதிப் பெயர் 204 அகர இறுபெயர் 175 அகரமுனை 116 அண்ணம் 96 அத்தென் சாரியை 306 அம்மென் சாரியை 351 அரை 284 அரையளவு 13 அளபிற் கோடல் 102 அளபிறந்துயிர்த்தல் 33 அன்னென் சாரியை 195 ஆ ஆண்மரக் கிளவி 305 ஆண்மரம் 337 ஆய்த இறுதி 201, 423 ஆய்தத் தொடர் 414 ஆய்தத் தொடர்மொழி 407 ஆய்த நிலையல் 400 ஆய்தப் புள்ளி 38, 391, 424 ஆய்தம் 2 ஆய்தம் நிலையல் 370 ஆயிரக் கிளவி 393, 464 ஆவிரைக் கிளவி 284 ஆறன் உருபு 162 இ இசைநிறை 42 இசையின் திரிதல் 142 இடக்கர்ப் பெயர் 251 இடம்வரை கிளவி 251 இடைத்தொடர் 407 இடைநிலை ரகரம் 440 இடையெழுத்து 21 இடையொற்றுத் தொடர் 414 இயற்கை ஆதல் 373 இயற்பெயர் 348, 352 இராவென் கிளவி 228 இருபெயர்த் தொகைமொழி 224 இருளென் கிளவி 403 இல்ல மரப்பெயர் 314 இல்லென கிளவி 373 இலமென் கிளவி 317 இன்னென் சாரியை 132, 196, 437,476 ஈ ஈரெழுத்து ஒருமொழி 45, 407 ஈரெழுத்து மொழி 412, 418 ஈரொற்று 48 ஈரொற்றுத் தொடர்மொழி 408 உ உச்சகாரம் 75, 79 உட்பெறுபுள்ளி 14 உடம்படுமெய் 141 உடன்நிலை 22 உண்டென் கிளவி 431 உதி 244, 263 உந்தி 83 உப்பகாரம் 76, 80 உம்மை நிலை 190, 192 உயர்திணைப் பெயர் 118, 154 உயிர்கெட வருதல் 158 உயிர்த்தொடர் 407 உயிர்த்தொடர் மொழி 412 உயிர்தோன்றும் நிலை 18 உயிர்மெய் ஈறு 107 உயிர்வரு வழி 108, 141 உயிரிறு கிளவி 157, 203 உயிரிறு சொல் 108, 153 உருபியல் நிலை 264, 295 உரைப்பொருட் கிளவி 211, 213 உரையசை 225 உரையசைக் கிளவி 34, 205 உவமக் கிளவி 205, 211 உழக்கென் கிளவி 457 உறழத்தோன்றல் 157 எ எகின் மரம் 337 எண்ணின் இறுதி 199 எண்ணுப்பெயர்க் கிளவி 420 எண்ணென் உணவுப் பெயர் 309 எரு 261 எல்லாம் எனும் பெயர் 323 எழுத்தின் சாரியை 135 எழுத்துக்கடன் 143 எனவென் எச்சம் 205 ஏ ஏயென் சாரியை 165 ஏழன் உருபு 182 ஏழென் கிளவி 389 ஐ ஐகார வேற்றுமை 158 ஐந்தென் கிளவி 456 ஒ ஒடுமரக்கிளவி 263 ஒருபெயர் உருபியல் நிலை 254 ஒல்வழி 115 ஒல்வழி அறிதல் 247 ஒற்றிடை இனமிகா மொழி 413 ஒற்றிடை மிகுதல் 115 ஒற்றியல் நிலை 451 ஒற்றுமெய் கெடுதல் 161 ஒன்பான் இறுதி 459 ஒன்பான் முதனிலை 463 ஒன்றறி சொல் 173 ஓ ஓரெழுத்து ஒருமொழி 43, 45 ஓரெழுத்து மொழி 227, 268 க கண்ணிமை 7 கலம் 169 கலமென் அளவு 169 கன்னென் கிளவி 347 கா என் நிறை 170 கால வேற்றுமை 242 கிளைப் பெயர் 308, 339 கிளைமொழி 419 கீழென் கிளவி 396 குமிழென் கிளவி 387 குயினென் கிளவி 336 குற்றியலிகரம் 2, 34 குற்றியலுகரத்திறுதி 153 குற்றியலுகரம் 2, 67, 106, 129, 196, 434, 438, 469, 474 குற்றெழுத்து 3, 41, 44, 137, 268 குற்றொற்று 49 குற்றொற்று இரட்டல் 162 குறித்துவரு கிளவி 108, 111 குறுகும் மொழி 162 குறைச்சொற் கிளவி 482 குறையென் கிளவி 167 குன்றிசை மொழி 41 கொடி 286 ச சாரியை 113, 119, 158, 166, 174, 181, 183, 186, 190, 202, 203, 219, 242, 249, 271 சாரியை இயற்கை 133 சாரியை கெடுதல் 158 சாரியை மரபு 470 சாரியை மொழி 120, 459 சாரென் கிளவி 365 சுட்டின் இயற்கை 239 சுட்டு 31, 123 சுட்டுச்சினை 160 செய்யுள் கண்ணிய தொடர் மொழி 214 செய்யுள் மருங்கு 357 செயவென் எச்சம் 210 செரு 261 செல்வழி அறிதல் 313 சேயவென் கிளவி 212 ஞ ஞெமை 283 த தம்மினாகிய தொழிற்சொல் 157 தமிழென் கிளவி 386 தன்னுருபு இரட்டல் 161 தன்னுருபு நிலையல் 158 தாயென் கிளவி 359 தாழென் கிளவி 385 திங்கள் 287 திசைப்பெயர் 202 திறப்படத் தெரியும் காட்சி 83 தூணி 240 தேனென் கிளவி 341 தொடர்மொழி 36, 45, 50, 146 தொல்லியன் மருங்கு 356 தொல்லை இயற்கை 410 தொழில்நிலைக் கிளவி 248 தொழிலிறு சொல் 211 ந நாட்பெயர்க் கிளவி 332 நாழிக் கிளவி 241 நான்கன் உருபு 162 நிலாவென் கிளவி 229 நிலைமொழி 174 நிறுத்த சொல் 108, 109, 111 நிறையென் கிளவி 446 நீடுமொழி 214 நீயென் ஒரு பெயர் 180 நும்மென் இறுதி 163 நூறென் கிளவி 463 நெட்டெழுத்து 4, 36, 41, 43, 50, 136, 197 நெடுஞ்சினை 56 நெடுமுதல் குறுக்கம் 393 நொடி 7 ப பஃதென் கிளவி 445 படர்க்கை இறுதி 192 படர்க்கைப் பெயர் 321 பண்புதொகு மொழி 482 பத்தென் கிளவி 391 பதக்கு 240 பதினெண் எழுத்து 9 பலரறி சொல் 173 பன்னீரெழுத்து 8 பனை என் அளவு 170 பால்வரை கிளவி 166 பாழென் கிளவி 388 பிறப்பின் ஆக்கம் 83 பீரென் கிளவி 366, 387 புணர்நிலைச் சுட்டு 108, 112 புணர்மொழி நிலை 113, 172 புணரியல் நிலை 35 புள்ளியிறுதி 157, 203 புள்ளியொடு நிலையல் 105 பூதக் கிளவி 243 பெண்டென் கிளவி 422 பெயர்க் கொடை 211 பெயர்நிலைக் கிளவி 405, 321 பெயர்நிலைச் சுட்டு 118 பெயர்புணர் நிலை 117 பெயரெஞ்சு கிளவி 211 பொருள்தெரி புணர்ச்சி 142 பொன்னென் கிளவி 357 ம மகப்பெயர்க் கிளவி 219 மகரத்தொடர்மொழி 82 மயங்கியல் மொழி 112 மரப்பெயர்க் கிளவி 182, 218, 416 மருவின் தொகுதி 112 மழையென் கிளவி 288 மாத்திரை 7 மாமரக் கிளவி 232 மாவென் கிளவி 480 மாறுகொள் எச்சம் 291 மானம் 247 மிகற்கை தோன்றல் 158 மீனென் கிளவி 340 முத்தை வரூஉங் காலம் 165 முதலாகு எழுத்து 29 முதலாகு மொழி 145 முதலெழுத்து 109 முதன்மொழி 449 முதனிலை 316 முதனிலை இயற்கை 478 முதனிலை எண் 478 முதனிலைக் கிளவி 471 முதனிலை நீடல் 455, 465 முப்பாற்புள்ளி 2 முப்பெயர் 193 முரணென் தொழிற்பெயர் 310 முற்றியலுகரம் 68 முறைப்பெயர் 67 முன்னிலை இறுதி 192 முன்னிலைக் கிளவி 152 முன்னிலைப் பெயர் 321 முன்னிலை மொழி 153, 192, 266 மெய் கெடுதல் 134 மெய்த்தலைப்பட்ட வழக்கு 172 மெய்ந்நிலை 30 மெய்ந்நிலை மயக்கம் 47 மெய்பிறிதாதல் 110 மெய்ம்மையாகல் 157 மெய்மயங்கு 22 மெய்யிறு சொல் 108 மெய்யின் இயற்கை 15 மெய்யுயிர் 140 மெய்வருவழி 108 மெல்லெழுத்து 158, 20, 100, 218, 230, 244, 246 மெல்லெழுத்து இயற்கை 144, 146, 301 மெல்லெழுத்து உறழும் மொழி 361 மெல்லெழுத்து மிகுதல் 316 மெல்லெழுத்து மிகுதி 321 மெல்லொற்றுத் தொடர்மொழி 415 மெலிப்பொடு தோன்றல் 158 மென்றொடர் மொழி 415, 428 மொழிக்குறிப்பு 40 மொழி நிறைபு 44 மொழிபுணர் இயல்பு 109 யா யாதென் இறுதி 201 யாதென் வினா 173 யாவென் வினா 160 வ வல்முதல் தொழில் 125 வல்லெழுத்து 19, 115, 129, 134, 149, 152, 157, 158, 159, 160, 205, 247, 216, 232, 236, 247, 251, 254, 261, 269, 274, 276, 281 வல்லெழுத்து இயற்கை 261, 264, 291, 295, 338, 428, 474 வல்லெழுத்து இயைபு 303 வல்லெழுத்து மிகுதல் 296, 302, 341 வல்லெழுத்து மிகுதி 286, 412 வல்லென் கிளவி 374 வல்லொற்றுத் தொடர் 418 வல்லொற்றுத் தொடர்மொழி 410, 427 வலிப்பொடு தோன்றல் 158 வழங்கியன் மருங்கு 22 வளியிசை அளபு 103 வற்றென் சாரியை 190 வன்றொடர் 407 வன்றொடர் மொழி 415 விசைமரக் கிளவி 283 விசைமரம் 314 வியங்கோட் கிளவி 211 விளிநிலைக் கிளவி 211 விளிப் பெயர்க் கிளவி 225 வினா 32 வினாவின் கிளவி 225 வினையெஞ்சு இறுதி 238 வினையெஞ்சு கிளவி 205, 211, 223, 237, 266, 334 வெயிலென் கிளவி 378 வேற்றுமை 157 வேற்றுமை இயற்கை 167 வேற்றுமை உருபு 174, 132, 133 வேற்றுமைப் பொருள் 303, 333, 358 வேற்றுமையுருபு 114, 115 னகரத்தொடர்மொழி 82 கலைச்சொல் நிரல் (உரை வழி) எண் : நூற்பா எண் அ அக்குச்சாரியை 339 அகக்கருவி 1 அகப்புறக்கருவி 1 அகரச் சுட்டு 206 அகரப்பேறு 375 அகரம் விலக்கி அத்து வகுத்தல் 229 அகரவீற்று மரப்பெயர் 218 அசைநிலை இடைச்சொல் 334 அதிகாரப் புறனடை 483 அம்முச் சரியை 286 அரண்கடுமை, அரட்கடுமை என்னும் உறழ்ச்சி 310 அருத்தாபத்தி 215 அல்வழிக்கண் எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுதல் 324 அல்வழிக்கண் செய்யுள் முடிபு கூறுதல் 289 அல்வழிக்கண்ணும் வேற்றுமைக் கண்ணும் முடிபு வேற்றுமை கூறுதல் 328 அல்வழி முடிபு 406 அல்வழி முடிபு கூறுதல் 322 அல்வழியுள் வேற்றுமை முடிபு போலத் திரிந்து முடிவது கூறுதல் 309 அளபெடை எழுத்து ஒரு பொருள்உணர்த்தி ஓரெழுத்து ஒருமொழியாய் நிற்கும் நிலைமை 41 அளவுப் பெயர் 320, 437, 446 ஆ ஆய்தத்திற்குக் குற்றெழுத்துச் சார்பு 101 ஆய்தத் தொடர்மொழி 423 ஆரியச் சிதைவு அல்லாதன 62 இ இடப்பொருள் உணர்த்தி நின்ற இடைச்சொல் 335 இடப்பொருள் உணர நின்ற இடைச்சொற்கள் 334 இடைக்கணம் 207, 239, 381 இடைச்சொல் 334 இடைச்சொல் முடிபு 205 இடைச்சொல் முடிபு கூறுதல் 291 இடைச்சொற்கு முடிபு கூறுதல் 276 இடைநிகரவாகி..... இடையெழுத்து 21 இமைத்தல் தொழில் 7 இயல்புகணத்துக்கட்கு எய்திய மகரம் 320 இயல்புகணத்துக்கண்ணும் அகரப் பேறு 224, 338 இயல்புகணத்து முடிபு 412 இயல்புகணம் 210, 239 இயல்பு வல்லெழுத்து 389 இயைபு வல்லெழுத்து 231, 245, 364 இரண்டிருந்து பலவற்றான் இசைக்கும் தொடர்மொழி 45 இரண்டெழுத்தானாகும் ஒருமொழி 45 இருபெயரொட்டுப் பண்புத் தொகை 362, 406 இருமொழிப் புணர்ச்சி 108 இருவகை எச்சம் 114 இலக்கணத்தொடு பொருந்திய மரூஉ 112, 356 இலக்கணத்தொடு பொருந்திய மரூஉ முடிபு 406 இறந்தது காத்தல் 231 இன் சாரியை 471 ஈ ஈரெழுத்து ஒருமொழி 146, 418, 423 ஈரொற்று உடனிலையாதல் 48 ஈற்றின் மெய் உயிர் முதன்மொழி வந்த இடம் 105 ஈற்று அல்வழி முடிபு கூறுதல் 315 ஈற்றுச்சுட்டு ஒழிந்த கணத்தொடு முடியுமாறு கூறுதல் 257 ஈற்றுச்சுட்டு முதற்பெயர்க்கு ஓர் செய்யுள் முடிபு கூறுதல் 259 ஈற்றுச்சுட்டு வன்கணத்தொடு கூடி முடியுமாறு கூறுதல் 256 ஈற்றுப்பெயர் வேற்றுமைக்கண் முடியுமாறு கூறுதல் 253, 260 ஈற்றுப் பொதுமுடிபு 203 ஈற்று மரப்பெயருள் ஒன்றற்கு வல்லெழுத்து விலக்கிப் பிறிதுவிதி கூறுதல் 263 ஈற்றுள் சிலவற்றிற்கு வல்லெழுத்து விலக்கி இயல்பு கூறுதல் 258 ஈற்றுள் சிலவற்றிற்கு வல்லெழுத்து விலக்கிச் சாரியை வகுத்தல் 264 உ உகரக்கேடு 191 உகரவீற்றுப் பெயர் அல்வழிக்கண் முடியுமாறு கூறுதல் 255 உடம்படுமெய் கோடல் 145 உம்முச் சாரியை 192 உம்மை மகரவீறு 317 உம்மையை இரட்டுற மொழிதல் 125 உயர்திணைப்பெயர் வேற்றுமைக்கண் வல்லெழுத்து மிகுவன 268 உயர்திணைப் பொருள் 154 உயிர்க்கணத்து ஒருமொழிக்கண் முடியும் வேற்றுமை முடிபு கூறுதல் 344 உயிர்க்கணம் 208, 239, 381 உயிர்களுள் ஒன்றற்கு மாத்திரை சுருக்கம் கூறுதல் 57 உயிர்முதன் மொழி 161 உயிர்மெய் என்பது வேற்றுமை நயம் 60 உயிரும் மெய்யும் கூடுகின்றஉயிர்மெய்க் கூட்டம் 10 உயிரேறி முடிதல் 145 உரிச்சொல் ஒன்றற்குச் செய்யுள் முடிபுகூறுதல் 317 உரிச்சொல்லேயெனினும் படுத்தலோசையாற் பெயர் 185 உரிச்சொல் வல்லெழுத்துப்பேறு 204 உருபிற்கு எய்திய சாரியை பொருட்கு எய்தியவழி இயைபு 413 உருபிற்குச் சென்ற சாரியைபொருட்கண் சென்றவழி இயைபு வல்லெழுத்து 231, 264 உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கு எய்தியவழி இயைபு 286, 415 உருபின் பொருள்பட வந்த இடைச்சொல் 362 உருபீற்றுச் செய்கை 227 உருபு வாராது உருபின் பொருள்படவந்தவற்றின் முடிபு 399 உருவு திரிந்து உயிர்த்தல் 17 உரையிற் கோடல் 13, 141, 471 உறழ்ச்சி முடிபு 146 உறழ்ச்சியுள் நிலைமொழியொற்றுத் திரியாமையும் திரிதலும் 157 உறழ்ச்சி வாரம் ..... நிலைபெறுதல் 102 ஊ ஊகாரவீற்றுப்பெயர் அல்வழிக்கண் முடியுமாறு கூறுதல் 265 ஊகாரவீறு வேற்றுமைக்கண்முடியுமாறு கூறுதல் 267 எ எடுத்தல் படுத்தல் முதலிய ஓசை வேற்றுமை 53 எண்ணுப்பெயர் அடையடுத்த வழி முடியுமாறு கூறுதல் 319 எண்ணுப்பெயர்க்கு முடிபு கூறுதல் 436 எண்ணுப்பெயர் முடிபு கூறுதல் 199 எண்ணுபெயருக்கு முடிபு 434 எதிர்மறை வினைக்குறிப்புமுற்று விரவுவினை 373 எய்தாதது எய்துவித்தல் 360, 390 எய்தியதன்மேல் சிறப்பு விதிகூறுதல் 227, 278, 366, 345, 349, 385, 391, 465 எய்தியது ஒருமருங்கு மறுக்கின்றது 410 எய்தியது ஒருமருங்கு மறுத்தல் 294, 392, 409, 413 எய்தியது ஒருமருங்கு மறுத்துப் பிறிது விதி கூறுதல் 375 எய்தியது ஒருவழி விலக்கிப் பிறிது விதி வகுக்கின்றது 395 எய்தியது ஒருவழி விலக்கிப் பிறிது விதி வகுத்தல் 350 எய்தியது விலக்கிப் பிறிது முடிபு கூறுதல் 251 எய்தியது விலக்கிப் பிறிதுவிதி உணர்தல் 167 எய்தியது விலக்கிப் பிறிது விதி கூறுதல் 168, 175, 295, 336, 352, 353, 355, 364, 376, 388, 389, 416 எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் 187, 188, 190, 192, 218, 219, 221, 234, 304, 305, 374, 378, 387, 400, 401, 402, 403, 404 எழுத்துப்பேறு 180 ஏ ஏவல்கண்ணாத வியங்கோள் 212 ஏழாம் வேற்றுமை இடப்பொருள் உணரநின்ற இடைச்சொல் 428 ஏழாம் வேற்றுமை இடப்பொருள் உணரநின்ற இடைச்சொற்கள் வல்லெழுத்துப் பெறுதல் 232 ஏழாம் வேற்றுமைப் பொருண்மை உணரநின்ற இடைச்சொல் 308 ஒ ஒருதிணைப் பாற்படுதல் 118 ஒருபுடைச் சேறல் 106 ஒருமொழி இலக்கணம் 107 ஒருமொழிக்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் 176, 190 ஒருமொழிக்கு முடிபு கூறுதல் 180, 195 ஒருவழி எய்தியது முழுவதும் விலக்குகின்றது 394 ஒருவழி எய்தியது விலக்கிப்பிறிது விதி கூறுதல் 371 ஒலியெழுத்து 143 ஒற்றிரட்டல் 145 ஒன்றற்கு எய்தியதன்மேல்சிறப்புவிதி கூறுதல் 422 ஒன்றற்கு மேல் எய்திய வல்லெழுத்து விலக்கிச் சாரியை விதித்தல் 245 ஒன்றற்கு வல்லெழுத்து விலக்கிச் சாரியை விதியும், ஒன்றற்கு வல்லெழுத்தினோடு சாரியை விதியும் கூறுதல் 261 ஒன்றற்கு வேறு முடிபு கூறுதல் 340 ஒன்றின முடித்தல் 326 ஓ ஓரெழுத்தானாகும் ஒருமொழி 45 ஓரெழுத்து ஒருமொழி 146, 215 க கருவித்திரிபு 145 குணம் பற்றி வந்த வேற்றுமை 369 குண வேற்றுமை 330, 347, 399 குற்றியலிகரம் புணர்மொழியுள் வருமாறு உணர்த்துதல் 411 குற்றுகர ஈற்றுத் திசைப்பெயர் 432 குற்றுகர ஈற்று வினையெச்ச முடிபு 428 குற்றுகர ஈறு 420, 443 குறித்துவரு கிளவி 482 குறிதாகிய ஒற்று 49 குறிற்கீழ் நிற்றலான் குறியது 49 குன்றிய புணர்ச்சி 115 கோடுபெறுவன கோடு பெற்றுஉயிர்த்தல் 17 ச சாதியொருமை 317 சாரியை காரணமாக வல்லெழுத்துப் பெறுதல் 481 சாரியைப் பெற்று வரும் அல்வழி 426 சாரியைப் பேற்றிடை எழுத்துப்பேறு 245 சாரியைப் பேறு 481 சாரியைப் பேறு வருமொழி வல்லெழுத்து விலக்காமை 295 சாரியை பெற்றவழி நிலைமொழி னகரம் விலக்குண்ணாது நிற்றல் 271 சாரியை பொருட்கண் சென்றவழி, இயைபு வல்லெழுத்து வீழ்தல் 247 சாரியை மரபு 470 சாரியையது உகரக்கேடு 481 சாரியை விதித்தல் 248 சாரியை விலக்கப்பட்டவற்றிற்குமுடிபு கூறுதல் 198 சிங்க நோக்கு 368 சில மொழிக்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் 177 சுட்டு முதற்பெயர்க்கு வல்லெழுத் தோடு வற்று வகுத்தல் 282 செய்யுட்கண் ஈரொற்று உடனிலை ஆமாறு உணர்த்துதல் 51 செய்யுள் முடிபு கூறுதல் 235, 357 செரு என்பதற்குச் சிறுபான்மை வல்லெழுத்துப்பேறு 261 சொற்கெட்டு முடிதல் 200 ஞ ஞகார ஈற்றோடு நகர ஈறு ஒத்த முடிபிற்றாதல் 302 ண ணகர ஈற்று வேற்றுமை முடிபோடு இயைய வேற்றுமை முடிபு கூறுதல் 311 த தத்தம் மரபின் வினையாற் பாலறியப்படுவன 304 தம்முச் சாரியை 321 தன்வினை பிறவினை 76 திரிபு விலக்கி அம்மு வகுத்தல் 337 திரிபு விலக்கி இயல்பு கூறுதல் 308 திரிபு விலக்கி உகரமும் வல்லெழுத்தும் வகுத்தல் 307 திரிபு விலக்கிச் சாரியை வகுத்தல் 306 தொடர் மொழிக்கண் ஒற்றிரட்டுதல் 450 ந நம்முச் சாரியை 192, 325 நாட்பெயர்க்கு வேற்றுமை முடிபு கூறுதல் 332 நாட்பெயரல்லாத பொருட்பெயர் 332 நால்வகைப் புணர்ச்சி 104 நிலைமொழி அகரப்பேறு 214 நிலைமொழி அடையடுத்து வரும் முடிபு 473 நிலைமொழி ஒகரவெழுத்துப் பேறு 294 நிலைமொழிக்கண் பகரக்கேடு 445 நிலைமொழிக் கருவி 161 நிலைமொழிக் கேடு 210 நிலைமொழிச் செய்கை 430 நிலைமொழித் தொழில் 417 நிலைமொழி முடிபு 148, 149 நிலைமொழியீறு திரிதல் 481 நிறைப்பெயர் 320, 437, 446 நும்முச் சாரியை 321 நூலுட் பலகாலும் எடுத்தோதப்படல் 120 நெடுமுதல் குறுகாத மொழி 162 நெடுமுதல் குறுகாது உகரம் வருதல் 396 நொடியென்றது, நொடியிற் பிறந்த ஓசை 7 ப படர்க்கைப் பெயர் 321 படுத்தலோசையாற் பெயர் 185 பருந்து விழுக்காடு 331 பிரிநிலைப் பொருண்மைகண்ணும் ஈற்றசைக் கண்ணும் வரும் ஏகாரம் 276 புணர்க்கப்படா மொழிகள் 482 புள்ளி பெறுவன புள்ளிபெற்று உயிர்த்தல் 17 புள்ளியும் கோடும் உடன் பெற்று உயிர்த்தல் 17 புறக்கருவி 1 புறப்புறக்கருவி 1 பெயர்க்கிளவி அல்லாத கிளவி மிகுதியும் இயல்பும் என இருவகை 159 பெயர்நிலை 334 பெயராத் தன்மை 334 பெருந்திசையோடு கோணத்திசை 433 பொருட்பெயரொடு வல்லெழுத்து மிக்கு முடிதல் 241 போலி எழுத்து ஆமாறு உணர்த்துதல் 54 ம மக்கள் என்னும் உயர்திணைப் பெயர் 405 மகரக் கேடு 311 மகரவீற்றுத் தன்மைப் பெயர் 192 மரப்பெயர் சிலவற்றற்கு வேறுமுடிபு பெறுதல் 283 மரப்பெயரல்லாத சே 280 மரூஉ முடிபு கூறுதல் 173, 316 மாட்டெறி முடிபு கூறுதல் 323 மாட்டேற்றோடு ஒவ்வாததற்கு வேறு முடிபு கூறுதல் 461 மாட்டேற்றோடு ஒவ்வாமுடிபு கூறுதல் 451, 466 மாட்டேறு 106, 447 மாத்திரை யொப்புமையான் அவை நெட்டெழுத்து 4 முதலாக்கம் 67 முதனிலை முடிபாகிய விகாரம் 478 மும்மொழிப் புணர்ச்சி 108 முரண்கடுமை என்னும் இயல்பு 310 முன்கூறிய முடிபு ஒவ்வாதனவற்றிற்கு முடிபு கூறுதல் 189 முன்னிலைப் பெயர் 321 முன்னிலை வினைகள் 274 முன்னிலை வினைச்சொல் 152 மெல் என்று இசைத்தலானும் ....மெல்லெழுத்து 20 மெல்லெழுத்தாய்த் திரிவன 328 மெல்லெழுத்துப் பெற்று முடிவன 252 மெல்லெழுத்துப் பேறு 220 மெல்லெழுத்து மிகுதல் 364 மென்கணத்துக்கண் ...... வேறுமுடிபு கூறுதல் 343 மென்கணம் 206, 239, 377 மென்றொடர் மொழி 417, 421 மேலும் கீழும் விலங்கு பெறுவன விலங்கு பெற்று உயிர்த்தல் 17 மொழிக்கண் மாத்திரை காரணமாக பிறப்பதோர் ஐயம் தீர்த்தல் 53 மொழிக்கு முடிபு கூறுதல் 178 மொழிமுதல் எழுத்து 49 மொழிமுதற் குற்றியலுகரத்திற்குஇடம் பற்றுக்கோடு 67 மொழி வரையறை 80 வ வகரப்பேற்றோடு வல்லெழுத்துப் பெறுதல் 231 வந்தது கொண்டு வாராதது உணர்கஎன்னும் தந்திரவுத்தி 274 வருமொழி ஆகாரக்குறுக்கம் 312 வருமொழிக் கருவி 150 வருமொழி வல்லெழுத்துக் கேடு 312 வரைந்தோதினமை 166 வல் என்று இசைத்தலானும் ..... வல்லெழுத்து 19 வல்லெழுத்ததிகாரம் 431 வல்லெழுத்தினோடு அத்துப்பேறு 288 வல்லெழுத்தினோடு சாரியைப்பேறு 287 வல்லெழுத்தினோடு மெல்லெழுத்து வகுத்தமை 324 வல்லெழுத்து இயற்கை 261 வல்லெழுத்துப் பேறு 170 வல்லெழுத்தும் வீழ்வும் கொளல் 232 வல்லெழுத்து மிகுதி 204 வல்லெழுத்து வருவழி 37 வல்லெழுத்து விலக்கிச் சாரியைப்பேறு 287 வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்து விதித்தல் 230, 244, 279, 314 வல்லெழுத்து வீழ்வு 227, 300 வல்லொற்றுத் தொடர்மொழி 37 வழக்கல்லா மரூஉ 112 வழக்குப் பயிற்சி 120 வழிநிலைக் கிளவி 471 வன்கணத்துப் பொருட்பெயர் 390 வன்கணம் 217 வன்கணமொழிந்த கணங்கட்கு இருவழியும் வருமொழிமுடிபு கூறுதல் 145 வன்றொடர் மொழி 418, 419 வாளா ஓதியவழித் தானே சேறல் 120 விரவுப்பெயர் 323, 348 விரவுப்பெயர் திரிபு 172 விளிநிலைக் கிளவி 211 வினைக்குறிப்புச் சொல் 426 வினைகுறிப்பு மொழி 431 வினைச்சொல் முடிபு 205 வினையெச்சநிலை 334 வேண்டா கூறி வேண்டியது முடித்தல் 450 வேற்றுமைக்கண் நாட்டக் கடுமை 328 வேற்றுமைக்கண் வேறு முடிபு கூறுதல் 396 வேற்றுமைப் பொருட்புணர்ச்சி முடிபு 412 வேற்றுமை முடிபு கூறுதல் 236