kiwkiya«-- 34 (தனித்தமிழியக்க நூற்றாண்டு வெளியீடு) பிள்ளைத்தமிழ்  அரு. சோமசுந்தரன்  சி. அன்பானந்தம்  இறைக்குருவனார் ஆசிரியர் மும்மொழிச்செம்மல் மறைமலையடிகள் பதிப்பாளர் கோ. இளவழகன் தமிழ்மண் முதல்பதிப்பு : 2015 பக்கம் : 24+328 = 352 விலை : 440/- மறைமலையம் – 34 ஆசிரியர் மும்மொழிச் செம்மல் மறைமலையடிகள் பதிப்பாளர் கோ. இளவழகன் வெளியீடு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. bjh.ng.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: elavazhagantm@gmail.com jhŸ : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 352 f£lik¥ò : இயல்பு  படிகள் : 1000 üyh¡f« : வி. சித்திரா   அட்டை வடிவமைப்பு : கவிபாகர்   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006, மற்றும் பிராசசு இந்தியா, திருவல்லிக்கேணி - 600 005. யான் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஏராளமான நூல்களில் ஆராய்ந்து கண்ட முடிவுகளை நூல்களாக எழுதியிருக்கின்றேன். பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்தது போல, உண்மை காணும் உணர்ச்சியினால் நடுநிலை நின்று ஆராய்ந்திருக்கின்றேன். ஒருவர் தம் வாழ்நாள் முழுவதும் கற்றாலும் அறியமுடியாத உண்மைகளை எல்லாம் எளிதாக எழுதி வைத்திருக்கின்றேன். எல்லாரும் தமிழ் இலக்கியங்கள் யாவற்றையும் கற்கும் தொல்லையை மேற்கொள்ள வேண்டிய தில்லை, அது முடியவும் முடியாது, தேவையுமில்லை. எல்லா நூல்களிலும் உள்ள சிறந்த உண்மைகளை எல்லாம் பிழி சாறாக யான் வடித்துத் தந்துள்ளேன். என் நூல்களைப் படித்தாற்போதும், அதனால், தமிழ் முழுதுங் கற்ற பயனை அடையலாம். - மறைமலையடிகள் சான்றிதழ் நாகை - திரு. வேதாசலம் பிள்ளையவர்கள் ஒருபோது திருவனந்தபுரத்தில் ஒருவாரந் தங்கியிருந்த ஞான்று, அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்ததற்குச் சாலவும் மகிழ்கின்றேம். வருங்காலத் தமிழ் மக்களுக்கு மட்டற்ற தமிழ்ப்புலமை மிகுந்து வருமென்பதற்குச் சான்றாக இவர் இளமையிலேயே நுண்மாண் நுழைபுலம் உடையராயிருப்பது களிப்பூட்டுகிறது. மற்றும் தாய்மொழிப் பற்றுக் குறைந்த இக்காலத்தில், இவர் தமது நுண்ணறிவைத் தமிழ் நூல்களில் முற்றும் செலுத்தி நன்காராய்ந்துள்ளதும் பாராட்டற்குரியது. பத்துப்பாட்டு, கலித்தொகை, சீவகசிந்தாமணி முதலிய பழந்தமிழ் நூல்களில் ஆராய்ச்சியுடன் கூடிய இவர்தம் அறிவுடைமையே என்னை இவர்பால் மதிப்புறுமாறு செய்தது. தமிழாசிரியர்களின் தொகை சுருங்கிவரும் இக்காலத்தில் இவருக்குச் சிறந்த ஊக்கமளித்தால் இவர் ஒரு சிறந்த தமிழாசிரியராவாரென்று நாம் உறுதியாக நம்புகின்றேம். முன்னரே இரண்டாந்தரக் கல்லூரிகளில் தமிழ்கற்பிக்கப் போதுமான அளவு இலக்கண இலக்கியத்திற் சிறந்த தேர்ச்சி பெற்றவராயிருக்கின்றாரெனக் கருதுகின்றோம். Fiwªj msÉš v~¥, V., (F.A.) வகுப்புக்குரிய ஆங்கில அறிவு பெற்றாரானால் மேல்நாட்டு முறைப்படி தமிழ் நூல்களை வரலாற்றுச் சான்றுடன் ஆராயவும் எழுதவும் வல்லுநராவாரென்பது எம்முடைய சிறந்த எண்ணம். வண்ணாரப்பேட்டை மனோன்மணீயம் பெ. சுந்தரம்பிள்ளை திருநெல்வேலி தமிழ்த்தாய் வாழ்த்தின் ஆசிரியர் 2-12-1895 (இந்த நற்சான்று திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் சுந்தரம் பிள்ளையவர்கள் பேராசிரியராக இருந்தபோது கொடுக்கப் பெற்றது.) மறைமலைய மாண்பு நுழைவுரை தனித்தமிழ் என்ற அளவில் முன் நிற்கும் முழுதுரு எழில்வடிவர் தவத்திரு. மறைமலையடிகளாரே ஆவர்! முந்தை அடிகள் ஆகிய இளங்கோவடிகள், `முத்தமிழ் அடிகள் என முழக்கமிட நின்றார்! இருபதாம் நூற்றாண்டு மறைமலையடிகளோ, தனித்தமிழ்த் தந்தை என்னும் தகவார்ந்த பெருமை பெற்றார். தமிழ் தனித்து இயங்காது என்றும், வடமொழி வழியது என்றும், வடமொழித் துணையின்றி இயங்காது என்றும், உலக மொழிகளுக் கெல்லாம் தாய்மொழி வடமொழியே என்றும் தமிழ்க் கல்வி வல்ல பெற்றியரும் முற்றும் மயங்கி யுரைக்க, வடமொழி உலக மொழிகளுக்குத் தாய்மொழி என்றால், அதற்கும் மற்றை மொழிகளுக்கும் தந்தை மொழி தமிழே என்று கூறிய வடலூர் அடிகளார் புகழ்பரப்பாளராய்ப் பொதுநிலைக் கழகம் கண்ட தவ அடிகளார், தனித்தமிழ்த் தந்தை என்னும் பெருமை பெற்ற மறைமலையடிகளார் ஆவர். சிவனியம் சார்ந்த பெருமக்களும், பேரறிவர்களும் கூட, ஒப்பாராய், `தனித்தமிழ் (தனித்து அமிழ்) என்று பழிக்கவும் இழிக்கவும், துணிந்து நின்று, அவர் வெள்க; வெள்ளிடை மலையாகத் `தனித்தமிழ் என்பதை நிலை நாட்டிய நிறைமலை, மறைமலையடிகளாரே! சிவனிய மடத்தினரும், வடமொழி வல்லாரும், `தொல் காப்பியக் கடல் எனப் புகழப்பட்டாருமாம் சாமிநாத தேசிகர், நாணமின்றி, ஐந்தெழுத்தால் ஒருபாடை என்று அறையவே நாணுவர் அறிவுடையோரே; யாமும் அதுவே என்றும், ஒன்றே ஆயினும் தனித்தமிழ் உண்டோ? என்றும் - எழுதிப் பரப்பினாராக, ஒரு சொல் தானும் வேற்றுச் சொல் விரவா நூல் யாம் செய்வேம் என்று ஐம்பான் நான்கு நூல்கள் கலைமலி பேழையாய் எழுதிக் காட்சிப் படுத்திய மாட்சியர் மறைமலையடிகளார்! தொல்காப்பியக் காவல் தமிழ் மொழிக்கு வாய்த்த தொல்காப்பிய வளநூல், வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே (884) என்றும், மொழி பெயர்ப்புச் செய்தலிலும் முறைமை பேண வேண்டும் என்பதை, மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தல் (1597) என்றும், பேச்சு வழக்கில் ஒரு கால் வேற்றுச்சொல் வந்து விடினும், மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை (1590) என்றும் - வரம்பாணை செய்தும், அச் செவ்வியல் வழித்தடம் சிதைந்தும் சீரழிந்தும், சேறும் சகதியும் நாறும் சிறுமையும் குறுமையும் வழிவழியே எய்த மூவாயிரம் ஆண்டுகளாய், அயலோர் சூழ்ச்சியாலும் திறவோர் மயக்காலும் ஏற்பட்ட அழிபாடுகளை எல்லாம் தாமே ஓர் இயக்கமாய் இருந்து, விழிப்பும் எழுச்சியும் ஊட்டியவர் மறைமலை அடிகளே என்பதால், ஆரியத்தினின்று தமிழை மீட்டெடுப்ப தற்காக அரும் பாடுபட்டு இலக்கிய இலக்கண மரபோடு யான் கற்ற மொழிகள் முப்பது என்னும் பாவாணர், மூவா யிரமாண்டு மோதும் வடமொழியால் சாவாம் தகைநின்ற தண்டமிழை - மேவாக் குமரித் தனிநிலைக்குக் கொண்டுவந்த அப்பர் அமரர் மறைமலை யார் எனப் பாடிப் பரவினார். `தனித் தமிழ்த் தந்தையார் என்ற பாராட்டும் இப் பாட்டின் தலைப்பில் வழங்கினார். நுண்ணிய நூல்பலவும் கற்பதே நோன்பாக எண்ணிய வாழ்நாள் எலாமளித்துப் - பண்ணிய செந்தமிழ்நூல் ஒவ்வொன்றும் செப்பும் கடலறிவை பைந்தமிழ் காக்கும் படை என அடிகள் கல்வி மேம்பாட்டையும் கலைத் திறப் படைப்புகளின் மேம்பாட்டையும் பாவேந்தர் பாரதிதாசனார் பாராட்டுகிறார். பல்துறை ஆற்றல் அடிகளின் பல்துறை ஆற்றலை 1. பேராசிரியர், 2. பெரும் புலவர், 3. பாவலர், 4. ஆராய்ச்சியாளர், 5. மும்மொழிப் புலவர், 6. மொழிபெயர்ப்பாளர், 7. சொற்பொழி வாளர், 8. எழுத்தாளர், 9. பல்கலைச் செல்வர், 10. தனித்தமிழ்த் தந்தையார் என்று பாவாணர் பகுத்துக் காட்டுகிறார். மேலும் அவர் தம் நுண்மாண் நுழைபுலத்தை பனிமலை முகட்டின் உயர்வும், நீல ஆற்றின் நீளமும் அமைதி வாரியின் ஆழமும் அமைந்தவர் மறைமலையடிகள் என்கிறார். (பனிமலை - இமயம்; நீல ஆறு - நைல்; அமைதிவாரி - பசிபிக்கு மாகடல்). அடிகளார் நூல்கள் அடிகள் பன்மாண் மாத்தமிழ் நூல்களை, நூலக இயக்கத் தந்தை அரங்க நாதரும், இந்நாள் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியரும் அந்நாள் நூலகருமாகிய திருமிகு இரா. முத்துக் குமாரசாமி அவர்களும் 14 வகைமைப்படுத்தி வைத்தமை பெரும் பாராட்டுக்கு உரியதாம் அவை, 1. மருத்துவம் 2. மறைபொருள் 3. இலக்கியம் 4. இதழ்கள் 5. சங்க இலக்கியம் 6. பாடல் 7. நாடகம் 8. புதினம் 9. கடிதம் 10. கட்டுரை 11. சமயம் 12. தத்துவம் 13. வரலாறு 14. சமூக இயல் என்பன. முதற் குறள் வாத நிராகரணம் என்னும் மறுப்பு நூலே, அடிகளின் முதல் நூலாக வெளிப்படுகின்றது (1898) அந்நூன் மறுப்பு நயமே நாகை அடிகளை - பல்லவபுர அடிகளாக -தனித்தமிழ் அடிகளாக ஆக்க அரும் பெரும் தூண்டல் ஆயிற்றாம். அடிகளார் வரலாறு: கீழ்கடல் சார் நாகப்பட்டினத்தைச் சார்ந்த சிற்றூர் காடம்பாடி, ஆங்கு வாழ்ந்த அருந்தவப் பெருந்தகையர் சொக்கநாதர் - சின்னம்மையார்! இவ்விணையர் கொடையாய்த் தமிழன்னை செய்த தவப் பேற்றால் பிறந்தவர் வேதாசலம். பிறந்த பெரு மங்கல நாள் கி.பி. 15.07.1876. சொக்கநாதர், சித்தமலம் அறுவித்த சித்தமருத்துவர்; அறிவ மருத்துவம் என்பதும் அது. அத்தொழில் அவர்க்கு வளத்தை வழங்கியது. அதனால் வேதாசலம் குறைவற வாழ்ந்தார். நாகப்பட்டினத்து வெசிலியன் மிசன் பள்ளியில் ஐந்து வகுப்புவரை பயின்றார்; சிறந்த மாணவராக விளங்கினார். ஆறாம் வகுப்பில் சேரும் நிலையில், அருமைத் தந்தையார் இயற்கை எய்தினார். ஆயினும் அன்னையார் உறுதியால் கல்வியைத் தொடர்ந்தார். அப்பள்ளியில் ஆங்கிலக் கல்விக்கு இருந்த முதன்மை தமிழுக்கு இல்லை. கிறித்தவ சமயம் பற்றி அன்றிச் சிவனியம் பற்றி அறிய வாய்ப்பில்லை என்னும் இரண்டு குறைகளையும் இளமையிலேயே உணர்ந்தார். வீட்டிலேயே தமிழ் நூல்களைப் பயின்று முதற் குறையையும், நாகையில் இருந்த இந்துமதாபிமான சங்கம் வழி இரண்டாம் குறையையும் நீக்கினார். பள்ளியிலும் குறையறக் கற்றார். வருவாய்க் குறையால் வாடும் அன்னைக்குச் சுமையாய் இல்லாமல் தனியே பயில்வதே இனியவழி என எண்ணி, நாகையில் புத்தக வணிகராக விளங்கிய நாராயண சாமியார் புலமையாலும் சிறந்து விளங்கியவர். ஆதலால் அவரிடம் தனியே இலக்கிய - இலக்கண - சமய நூல்களைக் கற்றார். நாராயணரின் முன்னை மாணவர் பேரா. மனோன்மணீயம் பெ. சுந்தரனார் என்பதையும் அறிந்தார். ஒன்பதாம் வகுப்பொடு பள்ளிக் கல்வியை நிறுத்தித் தனிக்கல்வியே கற்றார். தொல்காப்பியம், தொகை நூல்கள், திருக்குறள், திருச்சிற்றம்பலக் கோவை, இறையனார் அகப் பொருள் எனக்கற்றார். அடிகளார் இயற்றிய திருவொற்றி முருகர் மும்மணிக் கோவை முகப்பில், எமது பதினைந்தாம் ஆண்டில் முறைப்படி துவங்கிய தமிழ்ப் பயிற்சியானது எமது இருபத்தோராம் ஆண்டிற்குள் தொல்காப்பியம், திருக்குறள், சிற்றம்பலக் கோவையார் என்னும் மூன்று நூல்களையும் முழுதும் நெட்டுருச் செய்து முடித்தேம் என்றும் வேறுசில நூல்களையும் முழுவதாக ஓதியதையும் கூறி, இங்ஙனமாக, விழுமிய தமிழ்ப்பழ நூல்களில் எமது கருத்து ஈர்ப்புண்டு நின்று பயின்ற பயிற்சியினாலேயே செய்யுளும் உரையும் தனிச் செந்தமிழ் நடையில் எழுதும் திறம் எமது இளமைப் பருவத்திலேயே எமக்கு வாய்ப்ப தாயிற்று என்கிறார். அவ்வாண்டு கி.பி. 1897. நாகை இந்து மதாபிமான சங்கத்திற்குச் சைவ சித்தாந்த சண்ட மருதம் என்னும் விருது பெற்ற சோமசுந்தர நாயகர் வந்து சொற்பொழிவாற்றினார். அவர் பொழிவில் வந்த கருத்தொன்றனை மறுத்து ஒருவர் எழுத, அதற்கு மறுப்பாக முருகவேள் என்னும் புனைபெயரில் மறுப்புரை எழுதினார். அதனைக்கற்ற நாயகர், மீளப் பொழிவுக்கு வருங்கால் முருக வேளைச் சந்திக்க விரும்பினார். அச்சந்திப்பின் பயனே உன்னை விரைவிலே சென்னைக்கு வருவிப்போம். நீ அந்தப் பக்கங்களில் இருப்பதே நல்லது என்று கூறினார். இதுவே அடிகளார்க்குச் சென்னை வாழ்வு அமைய முதல் தூண்டல் ஆயிற்று. அடிகளுக்குப் பதினேழாம் வயதில் (1893) திருமணம் நிகழ்ந்தது. துணைவி தம் மாமன் மகள் சவுந்தர வல்லி என்பார். திருவனந்தபுரம்: நாராயணசாமி அவர்களின் முன்னை மாணவராம் பேரா. சுந்தரனார் திருவனந்த புரத்தில் இருந்தார். அவரியற்றிய மனோன்மணீய நாடக நூல் கற்று அதன் அருமை கண்டு, பேராசிரியரைக் காணவிரும்பினார். அதனால் தம் ஆசிரியரோடு திருவனந்தபுரம் சென்று பேராசிரியரோடு உரையாடினார். வேதாசலனார் இளம் பருவத்தையும் மூதறிவையும் அறிந்த சுந்தரனார் வியப்புற்றுத் தகுதிச் சான்று ஒன்று வழங்கினார். சிறிது காலம் திருவனந்த புரத்தில் ஆசிரியப் பணியும் செய்தார். அவ்விடத்தின் பருவநிலை ஒவ்வாமையால் நாகைக்கே திரும்பினார். சென்னை: சோமசுந்தரனார் முன்னே கூறியபடி வேதாசலரைச் சென்னைக்கு அழைத்து அறிஞர் நல்லுசாமி என்பார் நடாத்திய சித்தாந்த தீபிகை என்னும் இதழாசிரியர் ஆக்கினார். பின்னே சென்னை கிறித்தவக் கல்லூரிக்கு ஒரு தமிழ்ப் பேராசிரியர் வேண்டியிருத்தல் அறிந்த சோமசுந்தரனார் வேதாசலனா ர அக்கல்லூரிப் பேராசிரியராக்க முயன்றார். அதுகால் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தவர் வி.கோ சூரியநாராயண சாத்திரியார் என்னும் பரிதிமால் கலைஞர். கல்லூரி முதல்வர் வில்லியம் மில்லர் என்பார். 9.3.1898 இல் வேதாசலனார் பணியேற்றார். அங்குப் பதின்மூன்று ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அக்கல்லூரிக் காலத்தே இளங்கலை மாணவர்க்குப் பாடமாக இருந்த முல்லைப்பாட்டு (1903) பட்டினப்பாலை (1906) என்பவற்றுக்கு ஆராய்ச்சி உரை எழுதினார். அவ்வுரை நூலை வாங்கிக் கற்ற மாணாக்கரும் ஏனைத் தமிழறிஞரும் புதுமுறையாக எழுதப்பட்ட அவ்வுரைப் பாங்கினைப் பின்பற்றிப் பழைய தமிழ் நூல்களை ஆராய்வதில் கிளர்ச்சி பெறலானார். இப்புதுமுறை உரை, தமிழ் நூலாராயும் வகைகளை இனிது விளக்கி அறிஞர் பலர்க்கும் அக மகிழ்ச்சி யினை விளைத்தமை கண்டு இனி, இத்தகைய உரைகளையே எழுதுதல் வேண்டும் என எமதுள்ளம் பெரிதும் விழைந்தது என்கிறார். சென்னைப் பல்கலைக் கழகத்தார்ஆங்கிலமும் வட மொழியும் கட்டாயமாகப் படித்தல் வேண்டும் என்றும், தாய்மொழிப் பாடத்தை விருப்பப் பாடமாகக் கற்பிக்கலாம் என்றும் ஒரு தீர்மானம் ஆட்சிக்குழுவில் கொண்டு வந்தனர். ஒரு பாடம் விருப்பப்பாடம் எனப்பட்ட பின்னர் அதனைக் கற்க வருவார் எவர்? தமிழ் கற்கும் மாணவர் எண்ணிக்கை குறையவே ஆசிரியப் பணியிடமும் குறைய வேண்டுவதாகி, அடிகளார் 31.1. 1911 ஆம் நாளுடன் கல்லூரிப் பணியை முடிக்க வேண்டிய தாயிற்று. மாணவர்: இக்காலத்தில் அடிகளின் மாணவராக இருந்தாருள், தணிகைமணி செங்கல்வராயர், இரசிகமணி டி.கே.சி, நாவலர் ச.சோ. பாரதி, பேரறிஞர் ச. வையாபுரியார் முதலோர் சிலர். தணிகைமணியின், தேவார திருவாசகச் சொல்லடைவு ஒரு பிறப்பளவில் செய்யக் கூடியதா? நாவலர் ச. சோ. பாரதியாரின் ஆய்வுத் துணிவு எத்தனை கசடுகளை நீக்கியது? வையாபுரியார், கால ஆய்விலும், வடமொழிப் பிடிவாதத்திலும் தம்மைச் சால்பு ஆய்வில் இருந்து விலக்கினாலும், சங்க இலக்கியப் பதிப்பு, நிகண்டுப்பதிப்பு, பல்கலைக் கழக அகரமுதலிப் பதிப்பு இவற்றைச் செய்த அருமை என்ன? புறத்திரட்டு, களவியல் காரிகை ஆயவற்றின் பதிப்புச் சிறப்பு என்ன? இவர்கள் பணியும் அடிகளாரைத் தழுவுதல் உண்மை தானே! சமரச சன்மார்க்கம்: கல்லூரிப் பணியில் இருந்து வீடுபெற்ற அடிகளார், பல்லவபுரத்தை வாழ்விடமாகக் கொண்டார். சமரச சன்மார்க்க நிலையம் தோற்றுவித்தார். எல்லாச் சாதியார்க்கும் எல்லாச் சமயத்தார்க்கும் அங்கீகாரமான சீவகாருணிய ஒழுக்கத்தையும், சமரச சன்மார்க் கத்தையும் பிற்காலத்தில் மிக வலியுறுத்திப் போதித்த ஆசிரியர் ஸ்ரீமத் இராமலிங்க சுவாமிகளே ஆவார். அச்சுவாமி கள் வலியுறுத்திய அவ்விரண்டு கொள்கைகளையும் எங்கும் வலியுறுத்தி விளக்கி அன்பர்களை ஒருங்கு கூட்ட வேண்டி அச்சுவாமிகள் இட்ட பெயராலேயே, `சமரச சன்மார்க்க நிலையம் என்னும் இது தாபிக்கலாயிற்று. இந்நிலையத்திற்கு முன் ஆசிரியர் திருவள்ளுவ நாயனார்; பின் ஆசிரியர் இராமலிங்க சுவாமிகள் ஆவர் என்று பெயரீடு செய்து கொள்கைகளையும் வகுக்கிறார். குடும்பம் 1898இல் அடிகளார் சென்னைக்கு வரும்போது அவர்தம் அன்னையார் சின்னம்மையார், துணைவியார் சவுந்திரம் அம்மை யார், செல்வி சிந்தாமணி, அடிகளார் என்னும் நால்வரைக் கொண்ட குடும்பமாக இருந்தது. 1911இல் பல்லவ புரத்தில் குடிபுகும் போது நீலாம்பிகை, திருஞான சம்பந்தம், மாணிக்கவாசகம், திருநாவுக்கரசு, சுந்தர மூர்த்தி என்னும் மக்களும் கொண்ட ஒன்பதின்மர் குடும்பமாக இருந்தது. பல்லவுரம் புகுந்த பின் திரிபுர சுந்தரி பிறக்கப் பதின்மன் குடும்பம் ஆயிற்று. இந்நிலையிலேயே 27.08.1911இல் சைவத் துறவியர்க்குரிய துறவாடை (காவி) கொண்டு சுவாமி வேதாசலம் ஆனார். சுவாமி வேதாசலம் என்பதன் தனித்தமிழாக்கமே மறைமலையடிகள் என்பது வெளிப்படை. முன்னேயே அவரை அடிகள் என்றது அவர்தம் மாண்பு கருதியேயாம். மீள்பார்வை: நாம் மீள்பார்வை ஒன்றுபார்க்க வேண்டும். அடிகள் 21ஆம் அகவையிலேயே தனித்தமிழ் ஆய்வுத்திறம் கைவரப் பெற்றார். 1903, 1907 ஆகிய ஆண்டுகளில் முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை ஆகிய நூல்களுக்கு ஆய்வுரை வழங்குங்கால் இதிலுள்ள சொற்கள் இத்தனை; இவற்றுள் செந்தமிழ்ச்சொல் இத்தனை; வேற்றுச் சொல் இத்தனை - என அறுதியிடுகிறார். ஆதலால், தனித்தமிழ் என்னும் தோற்றம் 1916 ஆம் ஆண்டில் நீலாம்பிகையார் தூண்டலால் ஏற்பட்டமை என்பது, அகத்தே அமைந்து கிடந்த வித்து, முளை விட்டு வெளிப்பட்ட நிலையாம். அவ் வெளிப்பட்ட நிலையும் உடனே பற்றிப் படரவில்லை! மேலும் சில ஆண்டுகளின் பின்னரேயே சமசர சன்மார்க்க நிலையம், பொதுநிலைக் கழகமாகவும், ஞானசாகரம் அறிவுக் கடலாகவும், சுவாமி வேதாசலம் மறைமலையடிகள் ஆகவும் படிப்படியே கிளர்கின்றனவாம்! ஓர் அரிய அமைப்பு உருவாகும் நிலையும், ஓர் அரிய கண்டு பிடிப்பு உலகவர் அறிய வெளிப்படலும், அவை இயக்கமாகவும் பயனாகவும் ஆகின்ற நிலையும் பற்றிய விளக்கம், அடிகளார் தனித்தமிழ் இயக்க வரலாற்றில் அடங்கியுள்ளதாம்! எதிரிடைத் தூண்டல்: மேலும் ஒன்று: ஒரு நேரிடைத் தூண்டலினும் எதிரிடைத் தூண்டல் வலிமை மிக்கது என்பதும், உள்ளத்து உறுதியை வெள்ளப் பெருக்காய் வெளிப்படுத்த வல்லது என்பதும் தெளிவாம். ஒன்றே ஆயினும் தனித்தமிழ் உண்டா? என்று கற்றறிந்த தமிழர் ஒருவரே வினாவி நகைத்தல், பெற்ற தாய் மொழிப் பிறவிக்கு உற்ற தகைமை ஆகாது என்பதும், அதனை உணர்ந்த அப்பிறவி பாம்பன் குருபாத அடிகள் போல் சேந்தன் செந்தமிழ் என்ன ஒரு நூலியற்றித் தமிழ் தனித்து இயங்கவல்ல தனி உயர் மொழி என்று நிலைநாட்டியிருப்பின் வழிபடத்தக்க பிறவியாய் அமைந்திருக்கும்! அப்பேறு அதற்கு வாய்க்காமை, துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம் (குறள் 263) என்னும் வள்ளுவர் வாய் மொழிப்படி, தனித்தமிழ்த் தந்தைப் பேறு மறைமலையடிகட்கு வர இருப்பதற்கே நேரிட்ட நேர்ச்சியாம் என்க. இயக்கம் அடிகள் இயக்கம் ஆலமரமெனக் கால்பல கொண்டு அகல அகல விரியத் தனித்தமிழ் இயக்கமாய், உலகத்தமிழ்க் கழகமாய், பாவலரேறு தமிழ்க் களமாய், சேரர் கொற்றமாய், தமிழ்க்காப்புக் கழகமாய், தமிழ்ப் பாதுகாப்புக் கழகமாய், தனித்தமிழ் இலக்கியக் கழகமாய், தமிழ் வளர்ச்சிக் கழகமாய், மறைமலையடிகள் மன்றமாய், தமிழ்க்காவல் குழுவாய், இயற்றமிழ்ப் பயிற்றகமாய், பாவாணர் தமிழ் இயக்கமாய் ஆங்காங்கு முகிழ்த்து முனைப்பொடு கடனாற்ற ஏவியதாம். நூலகம் அடிகள் நூற்றொகை, அருமணிக் குவையன்ன நாலாயிரம் நூல்களைக் கொண்டது. எதிரது உணர்ந்து, சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழகத்திற்கு முற்கொடையாக வழங்கியதால், நாலாயிரம் நாற்பதாயிரமாய் மேலும் மேலும் விரிந்து மறைமலையடிகள் நூலகப் பெயரால், பெருமைமிகு வள்ளலார் முதற்கண் பொழிவு செய்த பெரியவர் சோமு அவர்கள் இல்லமே வாய்க்க உலக வளமாக்கியதாம்! அதன் வழியாகவே அடிகள் தாமே வெளியிட்ட நூல்களும், வெளியிடாமல் கழக வழி வெளிவந்த நூல்களும், அடிகள் காலத்திற்குப் பின் வெளிவந்த நூல்களும் ஆகிய முழுமைத் தொகுதிகளும் கி.பி. 1898 முதல் 1969 வரை முதற்பதிப்பாக வெளிவந்தவை. அவற்றுள் படிகள் கிட்டுதற்கு அரியவையும் உண்டு. அடிகள் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப் பட்ட பேற்றால், இன்று வாய்த்த நூல்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக வழங்கும் பெருவாய்ப்பைத் தமிழ்மண் பதிப்பகம் பெற்றதாம். வெள்ளச் சேதம் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு பதிப்பகத்துள் புகுந்து அச்சு அடிக் கப்பட்டதும், அடிக்கப்பட இருந்ததும், கணினிப்படுத்தி வைத்த குறுவட்டுகளும், மூலநூல்களும் என வாரி அள்ளிக் கொண்டு போனமை, களத்துக்கு வந்த கதிர் மணிகள், களஞ்சியத்திற்கு வாராமல் போய, பேரழிவு ஒப்பதாம். ஆதலால், நூல்களை மீளத் தேடவும், கணினிப்படுத்தவும், குறுவட்டு ஆக்கி அச்சிடவும் என மும்மடங்குப் பணியும் பேரிழப்பும் பெருத்த அவலமும் உண்டாக்கிற்றாம். அந்நிலையில், ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழா துஞற்று பவர் என்னும் வாய்மொழியை வாய்மை மொழியாக்கிய துணிவுச் செல்வர் இளவழகனாரும் அவர் குடும்பத்தவரும் ஆவர்! முன்னறிவிப்புத் திட்டப்படி நூலுக்கு ஆர்வமாய்ப் பணம் செலுத்தியோர்க்கும் நூல் காலத்தில் கிட்டா உளைச்சல் இல்லாமல் போகாதே! அவர்களும் அமைந்து தாங்கல், இயற்கை இயங்கியல் வழியதாம். வெளியீடுகள் தமிழ்மண் பதிப்பகம் தமிழ்மொழி இன மண்வளம் - வளர்ச்சி மீட்டெடுப்பு - என்பவற்றை முன்வைத்துத் தமிழ்ப் போராளி இளவழகனாரால் தொடங்கப்பட்டதால், பேரிழப்புக்காம் எனத் தெளிவாகத் தெரிந்தும், இசைக் கலைக்கு வாய்த்த ஒப்பற்ற களஞ்சியமாய் வாய்த்த - கருணாமிர்த சாகரத்தை வெளியிட்டதாம்! முன்னை வந்த முதற்பகுதி பேரிழப்பாக்கியும் அதன் பின்னைப் பகுதிகளையும் அரிதின் முயன்று வெளியிட்டது! மொழிஞாயிறு பாவாணர்; ஈழத்து அறிஞர் ந.சி. கந்தையா; வரலாற்றறிஞர் சாமிநாத சர்மா, உரைவேந்தர் ஔவை சு.து; நாவலர் ந.மு.வே; பண்டித வித்துவான் தி.வே. கோபாலர்; சாமி சிதம்பரனார்; மயிலை சீனி. வேங்கட சாமியார்; பேரறிஞர் க. வெள்ளை வாரணனார்; பாவலர் குழந்தையார்; பாவலர் முடியரசனார்; பாவேந்தர், தொல் பொருள் கல்வெட்டு ஆய்ஞர் சதாசிவனார், சாத்தன்குளம் இராகவன் நூல்களையும் எளியேன் நூல்களையும் முழுமை முழுமையாக வெளியிட்டது. தொல்காப்பியம்- பாட்டு - தொகை - காப்பியம் - கீழ்க்கணக்கு - தமிழ்நாட்டு வரலாறு - ஆங்கிலம் வல்ல அறிஞர் இராம நாதனார் நூல்களையும், யாழ்ப்பாண அகராதி முதலாம் அகராதித் தொகுதிகளையும் வெளியிட்டது. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதிதொட்டு, இருபத்தோராம் நூற்றாண்டின் முற்பகுதி வரை வெளிவந்த - தமிழுக்கு ஆக்கமாம் நாட் டுடைமை ஆக்கப்பட்ட நூல்களை எல்லாம் - ஓரிடத்துப் பெற்று, ஒரு தனித்தமிழ் நூலகம் அமைக்கும் அளவுக்கு அச்சிட்டு வழங்கிய பெருமை இளவழகனார்க்கு உண்டு. அவரே அன்றி அவர் துணையையும் மக்களையும் உறவையும் அன்பையும் நண்பையும் ஒருங்கே இணைத்து, அறிஞர் பெருமக்கள் பலர் அரவணைப்பையும் வாய்ப்பக் கொண்டு வாழும் இயல்பு அவர்க்கு வாய்த்தலால் மட்டுமே, இவ்வாறு செயற்கரிய செய்ய வாய்த்ததாம் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்பவரும் அவர். மறைமலைய மாண்பு மறைமலையம், தனித்தமிழ் இயக்கம்! தமிழ்த் தனிப் பெருவளம்! முத்தமிழ்ச் சுரப்பு! சீர்திருத்தச் செழுமை! வாழ்வியல் வளம்! கலைச் சொல்லாக்கக் களஞ்சியம்! பண்டைத் தமிழர் வரலாற்றுப் புதையல்! ஆய்வியல் வழிகாட்டி! பொழிவுப் பொலிவு! எழுத்தின் எழில்! மொழிக் காவல் முனையம்! முட்டறுக்கும் முழுதுறு கொடை! மீட்டெடுக்கும் மேதகைமை! அள்ள அள்ளக் குறையா அணிமணிக் குவியல்! எனல் மெய்மை விளக்கமாம்! புத்தகம் ஏற்றுப் பொலிவதே புத்தகம் வாழிய நலனே! வாழிய நிலனே! திருவள்ளுவர் நிலையம், இன்ப அன்புடன் 7, இராமன் தெரு, இரா. இளங்குமரன் திருநகர், மதுரை - 6 625006. மலைக்க வைக்கும் மறைமலையம்! பதிப்புரை மொழியே இனமக்கள் முன்னேற நல்ல வழியாம் அதனை வளர்க்க -பழியாய்த் தமிழயரத் தாழ்ந்தான் தமிழன் அவனே தமிழுயரத் தானுயர்வான் தான் மொழிப்பேரறிஞர் பாவாணர் அவர்கள் `மொழியின் வழியாகவே மொழிபேசும் மக்கள் முன்னேற முடியும் எனக் கூறுகிறார். உலகம் முழுதும் இவ்வுண்மை உணரப்பட்டுள்ளதை வரலாறு காட்டுகிறது. பாவாணரை அறிவுலகம் சரியாக அடையாளம் காண்பதற்குக் காரணமானது மறைமலையடிகளார் தந்த பாராட்டு! மறைமலையடிகள் (15.7.1876 - 15.9.1950) தேவநேயப் பாவாணர் (7.2.1902 - 16.1.1981) இருவரும் தனித்தமிழியக்கத்தைத் தாங்கி நிற்கும் தூண்களாகப் போற்றப்படுபவர்கள். மறைமலையடிகளார் 1916இல் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கம், நூற்றாண்டை எட்டியுள்ள மகிழ்வான நேரம் இது! தனித்தமிழியக்க நூற்றாண்டை நினைவு கூரும் வகையில், தனித்தமிழியக்கத் தந்தை மறைமலையடிகளாரின் எழுத்து, சொற்பொழிவு, நாட்குறிப்பு, கடிதங்கள் அனைத்தையும் `மறைமலையம் எனும் பெருந்தொகுப்பாகத் தமிழ்மண் பதிப்பகம் வழி வெளிக்கொணரத் திட்டமிட்டோம். உலகம் முழுதும் பரவி வாழும் உணர்வு குன்றாத தமிழர்கள் தந்த ஊக்குவிப்பு, இந்தப் பெருந்திட்டத்தை நிறைவேற்றித் தீரவேண்டும் எனும் உறுதியை எனக்குத் தந்தது. தனித்தமிழ் இயக்க அறிஞர்களும் ஆர்வலர்களும் அடிகளாரின் அரிய படைப்புகள் பலவற்றையும் தேடித்தேடி வழங்கி வழிகாட்டினர்; வலிமையூட்டினர். மறைமலையடிகளார் 1898ஆம் ஆண்டிலிருந்து எழுதி வந்துள்ளார். அறிவுக்கடல் (ஞானசாகரம்) இதழை 1902ஆம் ஆண்டிலிருந்து வெளியிட்டு வந்துள்ளார். அவரின் படைப்புகள் பெருவெள்ளமாய் வெளிவந்திருக்கின்றன. அச்சேறாதவை, பெயர் கூடக் கேட்டறியாதவை, பெயர் தெரிந்தும் பார்வைக்குக் கிட்டாதவை - எனப் பலவகையாய்க் கிடைத்தன அடிகளாரின் அரும்படைப்புகள்! அவற்றை `மறைமலையம் எனும் தலைப்பில் 34 தொகுப்புகளாக ஒருசேரப் பார்க்கும்போது, தமிழுலகம் வியப்படைவது உறுதி. மொழிநலம் இனநலம் பேணுதல் அன்றோ முழுநலம் பெறுவழி! நாம்பெறல் என்றோ? இப்படிக் கவலையோடு கேட்பார் பாவலரேறு பெருஞ் சித்திரனார் (10.3.1933 - 11.6.1995). அவரின் `தென்மொழி இதழ் 1.8.1959 இலிருந்து வெளிவரத் தொடங்கிய பின்புதான், தனித்தமிழ்த் திசை நோக்கி நூற்றுக்கணக்கானோர் நடைபோடத் தொடங்கினர். அதில் நானும் ஒருவன். பெருஞ்சித்திரனாரின் எழுத்து காட்டிய அடையாளத்தால், பாவாணர் நூல்கள் எனும் அறிவுப்புதையல் பலர் கைகளிலும் குடியேறியது. பாவாணர் நூல்கள் வலியுறுத்திப் பேசியதால், மறைமலை யடிகளாரைத் தேடிப்பயிலும் ஆர்வம் தமிழுலகில் புத்துயிர் பெற்றது. ஆரியத்தை எதிர்ப்பதிலும் சமற்கிருதத்தை விலக்கு வதிலுமே தமிழின மேம்பாடும் தமிழ்க் காப்பும் அடங்கியிருக்கிறது. அவ்வுணர்ச்சியைத் தமிழர் நெஞ்சங்களில் அரும்ப வைத்தது திராவிடர் இயக்கம்; மலர்ந்து விரியவைத்தது தனித்தமிழ் இயக்கம்! குமுக, அரசியல், பண்பாட்டு மலர்ச்சிக்கு இந்த ஈரியக்கங்களின் பேருழைப்புப் பயன்பட்டது. தமிழகத்தில் தனித்தமிழ் உணர்வு கி.மு. 7ஆம் நூற்றாண்டுக்குப் பின் தளரத் தொடங்கியது; 10ஆம் நூற்றாண்டுக்குப் பின் சரியத் தொடங்கியது. வடமொழி வெள்ளத்தில் தமிழ் இழுத்துச் செல்லப்பட்டு விடாமல் காப்பாற்றியோர் கம்பரும் பவணந்தியும்! பின்வந்தோருக்கு அந்தக் காப்புணர்ச்சி இல்லாமல், அயன் மொழிப் பற்றுக்கு அடிமையானதால் தமிழும் தமிழினமும் பெற்ற இழப்புகள் ஏராளம்! அயன்மொழிச் சேற்றிலிருந்து தமிழை மீட்கும் முயற்சி ஆங்கிலேயர் வருகையையொட்டிப் புத்துயிர் பெற்றது. வள்ளலார், பாம்பன் சாமிகள், வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள், சுப்பிரமணியசிவா, பரிதிமாற் கலைஞர் முதலிய பலரும் தொடக்க விதைகளாயினர். கோவை அவிநாசியில் பிறந்து விருதுநகரில் வாழ்ந்த விருதை சிவஞானயோகி 19.11.1908 ஆம் நாள் `திருவிடர் கழகம் தொடங்கித் தனித்தமிழ் உணர்ச்சிக்கு வேகங்கூட்டினார். அவ்வமைப்பில் உறுப்பினராயிருந்தவர் சுவாமி வேதாசலம் (மலைமலையடிகள்). மறைமலையடிகள் எனத் தம் பெயரைக் கொண்டு, 1916இல் அவர் தொடங்கியதே தனித்தமிழ் இயக்கம். `துறைமிகு ஆங்கிலம் மறைவட மொழியொடு தூய்தமிழ்ப் பேரறிஞர் - தனித்தமிழ் தோற்றிய ஓரறிஞர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடியதற்கேற்ப, மறைமலை யடிகளார் தமிழ், ஆங்கிலம், சமற்கிருதம் முதலிய பன்மொழியிலும் புலமை மிக்கவர். பன்மொழிப் பேரறிஞரான மறைமலையடிகளார் தமிழுக்கும் தமிழருக்கும் ஆதரவாக நின்றதால் எதிர்ப்புக்கும் இழப்புக்கும் ஆளாக்கப்பட்டார். ஆனாலும் உறுதி குன்றாமல் தமிழுக்கு ஆதரவாய் உழைக்கும் உள்ளத்தோடிருந்தார். அதனால், தமிழர் உள்ளங்களில் இன்றளவும் மாறாப் பெருமையோடு அவர் வீற்றிருக்கின்றார். வாழ்த்தாத நாளில்லை வையகம் மறைமலை யடிகள் மறையாத் திருப்பெயர் வாழ்த்தாத நாளில்லை வையகம் பாவேந்தர் பாரதிதாசன் அவர் மாண்பினைப் பாடி மகிழ்ந்ததும், தம் `குடும்ப விளக்கு நூலினை மறைமலை யடிகளுக்குக் காணிக்கையாக்கி வழங்கியதும், அவரின் உறுதி தளராத உள்ளமும் உழைப்பும் கண்டு போற்றிய நன்றிக் கடன் என்பதில் அய்யமில்லை. சென்னையில் கடந்த இருபது ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் தமிழ்மண் பதிப்பகப் பணிகளைத் தமிழுலகம் அறியும். வாழும் தலைமுறைக்கும் வருங்காலத் தலைமுறைக்கும் வழிகாட்டவல்ல தமிழறிஞர்கள் பலரின் நூல்களை முழுமுழுத் தொகுப்புகளாக வழங்கியிருப்பது தமிழ்மண் பதிப்பகத்தின் முடிப்பினை (சாதனை)யாகப் போற்றப்படுகிறது. தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட அறிஞர்களைக் கண்டறிந்து, அவர்களின் நூல்களை முழுமையான தொகுப்புகளாகத் தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டு வருகிறது. அவை காலம் முழுதும் பயன்படவல்ல கருவி நூல்கள் என்பதை அறிஞர் உலகம் அறியும்! தமது நலத்தை ஒதுக்கி வைத்து, தமிழ் நலத்தைக் காக்க வாழ்ந்த அறிஞர்களின் அனைத்து நூல்களையும் ஒரு சேரத் தொகுத்து முழுத் தொகுப்பாக வழங்குவது பெரும்பணி! அதனைத் தமிழ்மண் பதிப்பகம் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. தொகுப்பு நூல்களின் பட்டியலைப் பின்னிணைப்பில் காண்க. தமிழுக்காக உழைக்கும் உணர்வை இளமையில் எம்மிடம் ஏற்படுத்தியோருள் பெரும்புலவர் நக்கீரனாரும் அவர்தம் இளவல் புலவர் சித்திரவேலனாரும் குறிப்பிடத்தக்கோர்! எம் நன்றிக்குரியோர்! தனித்தமிழ் ஆர்வம், திராவிடர் இயக்க ஈடுபாடு எனும் இரு சிறகுகளால் எம்மை எழவைத்தவர் பெரும்புலவர் நக்கீரனார்! அவரை எண்ணிக் கண்பனிக்க நன்றி கூறுகிறது எம் நெஞ்சம். காலப்பழமையாலும் பராமரிப்புக் குறைவாலும் அழிய நேர்ந்த தமிழிலக்கியங்கள் அளவற்றவை! அவற்றில் ஒருபகுதியை யாவது மீட்டு நம் கைகளுக்கு வழங்கியோர் ஆறுமுகநாவலர், சி.வை. தாமோதரனார், உ.வே.சாமிநாதர் முதலிய சான்றோர் பெருமக்கள்! தமிழிலக்கியப் பெருஞ்செல்வத்தை மீண்டும் மீண்டும் அச்சாக்கி, அனைவர் கைகளையும் எட்டச் செய்த பெருமை - சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், உ.வே.சா. நூலகம், மணிவாசகர் பதிப்பகம் முதலிய பதிப்பாளர்களுக்கு உரியது. அச்சுத்துறை அறிமுகமான பின்பே, அறிவுத்துறை அனைவருக்கும் பொதுச்சொத்தாகும் வாய்ப்பு வந்தது. எட்டாக் கனியாக ஓலைச் சுவடிகளில் முடங்கிக் கிடந்த இலக்கியச் செல்வங்கள், எல்லோருக்கும் எளிதாய்க் கிடைக்கும் பணியைச் செய்த பதிப்பாசிரியர்களும், பதிப்பாளர்களும் நம் நன்றிக் குரியோர்! இரவு பகல் பாராது முதுமையைக் கருதாது உழைக்கும் மனவுரத்தை முன்னோடிப் பதிப்பாசிரியர்களின் பணியே எமக்கு வழங்கியது. அரசும், பல்கலைக் கழகங்களும், அறநிறுவனங்களும், சமய பீடங்களும் ,பெரும் இயக்கங்களும், பெரும் செல்வர்களும் செய்ய வேண்டிய பெருந் தமிழ்ப்பணி இது! எளியவர்களால் இயங்கும் தமிழ்மண் பதிப்பகம் பெருந்தமிழ்ப் பணிகளை இன்னல்களுக்கு இடையில் அருமுயற்சியோடு செய்து வருவது, உள்ளவுரம் ஒன்றினால்தான்! வல்லமை சேர்க்கும் வலிமையுண் டாக்கும்! வண்டமிழ் நைந்திடில் எதுநம்மைக் காக்கும்? காக்கும் தமிழைக் காக்கும் உணர்வைப் பாவேந்தர் பாடல் வரிகள் தந்தன. அச்சுக்கு எட்டாமலும் கைக்குக் கிட்டாமலும் இருந்த பேரறிஞர் பலரின் நூல்களை நாட்டுடைமையாக்கி திராவிடர் இயக்க அரசுகள் வழங்கின. அதனால், அறிவு பரவலாகும் வாய்ப்புகள் உருவாயின. `சரிவும் இழப்பும் நமக்கு வந்தாலும் தமிழுக்கு வரக்கூடாது என எண்ணி உழைக்கும் இயக்கங்களும் அமைப்புகளும் தமிழ் நாட்டில் வற்றாமல் வளர்ந்தபடி இருக்கின்றன. திருவிடர் கழகம் (1908) தனித்தமிழ் இயக்கம் (1916) தென்னிந்திய நலஉரிமைக் கழகம் (1916) சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம் (1934) தமிழ்ப்பாதுகாப்புக் கழகம் (1937) தமிழறிஞர் கழகம் (1943) தமிழ்ப் பேராயம் (1959) தமிழ்க்காப்புக் கழகம் (1961) தனித்தமிழ்க் கழகம் (1964) உலகத்தமிழ்க் கழகம் (1968) தமிழியக்கம் (1972) தமிழ்ச் சான்றோர் பேரவை (1998) தமிழ் மலர்ச்சிக்கும் தனித்தமிழ் வளர்ச்சிக்கும் அடித்தளம் அமைத்த இத்தகு அமைப்புகளுக்கு மூல விசையாகத் திகழும் பெருமையைப் பெறுவோர் மறைமலையடிகளாரும் பாவாணருமே! தமிழ் வளத்திற்கும் தமிழர் நலத்திற்கும் சிவனிய மேம்பாட்டிற்கும் மறைமலையடிகளார் ஆற்றிய பணிகள் அளப்பரியவை. அவை தொடர்பாக அவர் ஆய்ந்தளித்த அறிவு முத்துகள் எண்ணற்றவை! அடிகளாரின் அனைத்துப் படைப்புகளும் பொருள்வழிப் பிரிக்கப்பட்டு, காலவரிசையில் 34 தொகுப்புகளாகத் தொகுக்கப் பட்டு `மறைமலையம் என உங்கள் கைகளில் இப்போது தவழ்கின்றது. பல தலைமுறைகளுக்குப் பயன்படும் அறிவுக் கருவூலம் இது! தமிழர் இல்லந்தோறும் இருக்கவேண்டிய அருந்தமிழ்ச் செல்வம் இது! அறிவுலகத்தால் `மறைமலையம் வரவேற்கப்படும் என்னும் நம்பிக்கை எமக்குண்டு. நூற் சுரங்கத்தில் நுழைய அழைக்கிறோம். தனக்கென வாழ்வது சாவுக்கொப்பாகும் தமிழ்க்கென வாழ்வதே வாழ்வதாகும் எனும் பாவேந்தர் வரிகளை நினைவுக் கூறுகிறோம். - கோ. இளவழகன் நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் ரோசா முத்தையா நூலகம் - சென்னை. புலவர் கா. இளமுருகன் - புன்செய் புளியம்பட்டி (மறைமலையடிகள் மன்றம்) மறை. தாயுமானவன் - சென்னை (மறைமலையடிகளின் பேரன்) பிழை திருத்த உதவியோர்: திரு. அ. மதிவாணன் (ஆங்கிலம்) திரு. க. கருப்பையா திரு. புலவர். தா. ஆறுமுகம் புலவர். மு. இராசவேலு திரு. இராசுகுமார் திரு. நாக. சொக்கலிங்கம் முனைவர். க. சுப்பிரமணியன் திருமதி. அ. கோகிலா திருமதி. உசா செல்வி. அபிராமி நூல் உருவாக்கம் கணினி செய்தோர்: âUkâ வி. சித்திரா திருமதி மலர் திருமதி செல்வி திருமதி ஹேமலதா திரு. ஆசம் திருமதி கலைவாணி பிராசசு இந்தியா திருமதி`புகழ்ச்செல்வி கயல்விழி (Process India), நூல் வடிவமைப்பு: திருமதி வி. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: கவி பாகர் நூலாக்கத்திற்கு உதவியோர் இரா. பரமேசுவரன், க. இளந்திராவிடன், வே. தனசேகரன், கு. மருது, இல. தருமராசன் தாள் வழங்கியோர்: சிவா தாள் மண்டி, சென்னை -1 எதிர்மம் (Negative): பிராசசு இந்தியா (Process India) சென்னை-5. அச்சடிப்பு மற்றும் நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு மற்றும் பிராசசு இந்தியா `மறைமலையம் எல்லா நிலையிலும் செப்பமுற வெளி வருவதற்குப் பல்லாற்றானும் உதவியாக இருந்த இவர்களுக்கும் மற்றும் அறிஞர் பெருமக்களுக்கும் எம் நிறைந்த நன்றியும் பாராட்டும். பிள்ளைத்தமிழ் - அரு. சோமசுந்தரன் பிள்ளைத் தமிழ் முன்னுரை மறைமலை அடிகள் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற புலவர் ஆவார். அவர் தஞ்சை மாவட்டம் நாகைப்பட்டினத்திற்கு அருகில் உள்ள காடம்பாடி என்னும் ஊரில் 15-7-1876 அன்று பிறந்தார். ``தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை" என்ற பாராட்டுதலுக்கு உரியவர் ஆனார். பக்தியோடு தமிழ் பரப்பினார். அவரது பேச்சும் எழுத்தும் தமிழ் மக்களைத் தட்டி எழுப்பின. அன்னாரது நூற்றாண்டு விழா நினைவாக இப்பிள்ளைத் தமிழ் நூலை எழுதி உள்ளேன். இயன்றவரை எளிமையாகவும் இனிய சந்தத்திலும் பாடி உள்ளேன். மதுரை மீனாட்சி கோயிலில் 1973 ஆம் ஆண்டில் பரிசு பெற்ற ``பாண்டிமாதேவி" என்ற எனது பொற்கிழிக் காவியத்திற்கு அடுத்து இச் சிற்றிலக்கியத்தினைத் தமிழ்த் தாயின் திருவடிகளில் படைக்கிறேன். 123,முத்துப்பட்டணம் III தெரு, அன்புசால், காரைக்குடி. அரு. சோமசுந்தரன். 15-11-1976 உள்ளுறை பக்கம் 1. காப்பு 9 2. செங்கீரை 19 3. தாலாட்டு 26 4. சப்பாணி 33 5. முத்தம் 40 6. வாரானை 48 7. அம்புலி 56 8. சிற்றில் 66 9. சிறுபறை 73 10. சிறுதேர் 80 கவிஞர் அரு.சோமசுந்தரன் வாழ்க்கைக் குறிப்பு ஈன்ற தாய்: மீனாட்சி தந்தை : முத்துராமன் பிறந்த ஊர்: புதுவயல்(இராமநாதபுரம் மாவட்டம்) வளர்ப்புத்தாய் : வள்ளியம்மை;; தந்தை : அருணாச்சலம்;; பிள்ளை வளரச் சென்ற ஊர்: தேவகோட்டை பிறந்த தேதி: 14-8-1936 உடன்பிறந்தோர்: நால்வர்: 1) தமக்கை சோலை தம்பியர்: 1) ஆண்டான் 2) இராசகோபால் 3) மெய்யப்பன் திருமணம்: 1954 மே மனைவி பெயர்: நீலா; குழந்தைகள் : பொன்முடி இளவெயினி, மங்கையர்க்கரசி என்னும் புதல்வியர் மூவர் படித்தபள்ளி : தொடக்கக் கல்வி ஸ்ரீ சரசுவதி வித்தியாசாலை, புதுவயல். உயர்நிலைப்பள்ளிக் கல்வி: சிட்டாளாச்சி நினைவு உயர்நிலைப் பள்ளி, கண்டனூர் கல்லூரிக் கல்வி : அழகப்பா கல்லூரி, காரைக்குடி. பயிற்சிக் கல்வி: அரசினர் பயிற்சிக் கல்லூரி, (B.T.,) குமாரபாளையம் (சேலம் மாவட்டம்) ஆதரித்த வள்ளல்: கண்டனூர் வீ.தெ. வீரப்ப செட்டியார் கவிதைத் தொடக்கம்: 1953 ஆம் ஆண்டில் பள்ளி இறுதி வகுப்பில் படித்த பொழுது தனது முதற் கவிதையினைத் தன்னை ஆதரித்த வள்ளல் பற்றி இயற்றினார். தேர்ச்சி: 1957 மார்ச் பி.ஏ., தேர்வில் சென்னை மாநிலத்திலேயே தமிழில் முதல் மாணவராகத் தேறிப் போப் தங்கப்பதக்கம் பரிசு பெற்றார். 1963இல் எம்.ஏ., தேர்வில் தனிப்பட எழுதி மாநில இரண்டாம் பரிசு பெற்றார். சிறப்புப் பட்டங்கள்: 1) 1966 இல் கவிஞரின் முப்பதாம் பிறந்த நாளன்று குன்றக்குடியில் தவத்திரு. குன்றக்குடி அடிகளார் அவர்களால் ``பல்துறைச் செந்நாப் பாவலர் என்ற பட்டம் வழங்கப் பெற்றார். 2) 24 - 4- 72 அன்று பறம்புமலைப் பாரி விழாவில் தவத்திரு. குன்றக்குடி அடிகளார் அவர்களால் ``கவிஞர்கோ என்னும் பட்டம் வழங்கப் பெற்றார். தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் பொன்னாடை போர்த்தல். தமிழகத் திரைப்படப் பிரிவு திரைப்படம் எடுத்த நிகழ்ச்சி. 3) மதுரை ஸ்ரீமீனாட்சி அம்மன் கோயிற் பொற்கிழிக் காவியப் போட்டியில் ``பாண்டிமாதேவி காவியம் எழுதி முதற்பரிசு பெற்றமையின் 1973 இல் `பொற்கிழிக் கவிஞர் ஆதல். தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் ரூ.1001 - பொற்கிழி வழங்கல் - டாக்டர் மு.வ.தலைமை தாங்கி ஆசி கூறல் - தமிழகத் திரைப்படம் வெளியீடு. புத்தக வெளியீடும் பொன்னாடையும்: இதுவரை 60 தமிழ் நூல்கள் பல்துறைபற்றி வெளியிடல், தந்தை, கட்டுரை, நாடகம், பயணம், இலக்கியத் திறனாய்வு, மொழிபெயர்ப்பு நூல்கள், 5000 -க்கும் மேற்பட்ட கவிதைகள் (13 தொகுப்புகளாக) வெளிவந்துள்ளன. முதல் கவிதைத் தொகுப்பினை 1961 இல் அமைச்சர் சி.சுப்பிரமணியம் வெளியிட்டார். டாக்டர் ராஜா சர். முத்தையாச் செட்டியார் பொன்னாடை போர்த்தினார். பேராசிரியர் டாக்டர். சி. சிதம்பரநாதன், ».th.ஜfªehj‹, தமிழ்வாணன் முதலியோர் பாராட்டினர். 1965 இல் இரண்டாம் கவிதைத் தொகுப்பினைத் தலைவர் திரு. காமராசர் வெளியிட்டார். சபாநாயகர் திரு. செல்லபாண்டியன் தலைமை தாங்கினார். திரு. கிருஷ்ணசாமி நாயுடு, கவிஞர் கண்ணதாசன், சின்ன அண்ணாமலை, கொத்த மங்கலம் சுப்பு, பேராசிரியர் டாக்டர் ந.சஞ்சீவி, திரைப்பட அதிபர் ஏ.வி.மெய்யப்ப செட்டியார், அகிலன் ஆகியோர் பாராட்டினர். தொழிலதிபர் பி.எ.எ. சோமசுந்தரம் செட்டியார் பொன்னாடை போர்த்தினார். 15-10-66 இல் முதலமைச்சர் பக்தவத்சலம் அவர்களின் எழுபதாம் பிறந்தநாள் விழாக் கவியரங்கில் மதுரையில் கவிஞர் சோமசுந்தரன் தலைமை தாங்கினார். பக்தவத்சலம் பொன்னாடை போர்த்தினார். 1965இல் கருமுத்து தி. சுந்தரம் செட்டியார் ``தியாகக் குடும்பம் நாடக நூலை வெளியிட்டுப் பொன்னாடை போர்த்தினார். டாக்டர் மொ.அ.துரை அரங்கனார் பாராட்டினார். 21 -11 -1974இல் சென்னையில் ``பாண்டிமாதேவி நூல் வெளியீடு. நீதிபதி கிருஷ்ணசாமி நாயுடு தலைமை தாங்கிப் பொன்னாடை போர்த்தினார். திரு.ம.பொ.சி நூலை வெளியிட்டார். பேராசிரியர் மறைதிருநாவுக்கரசு, நாரண துரைக்கண்ணன், டாக்டர் சி.பாலசுப்பிரமணியன், சிலம்பொலி செல்லப்பன், இளமுருகு பொற்செல்வி மற்றும் பலர் பாராட்டல். சுற்றுப்பயணம்: இந்தியா முழுவதும் மும்முறை பயணம் செய்துள்ளார். இலங்கை, நேபாளம், பிரிட்டன், பிரான்சு ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, இத்தாலி, பெல்ஜியம், ஹாலந்து, ஆதிரியா, வாட்டிகன் முதலிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு இடங்களில் உரையாற்றினார். பம்பாய்த் தமிழ்ச் சங்கம், டில்லித் தமிழ்ச் சங்கத்திலும் சொற்பொழிவு. திறமை: கவிஞர், பேச்சாளர், எழுத்தாளர், நடிகர், சிவபக்தர். பணி: 1959 முதல் நான்காண்டுகள் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்: 1963 முதல் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர். 1967 முதல் தனிப்பயிற்சிக் கல்லூரி முதல்வர். 1974 முதல் கதாகாலட்சேபம் நாடெங்கும் செய்து வருகிறார். கதாகாலட்சேபம்: 1974 மே மாதம் புதுவயல் ஸ்ரீகைலாச விநாயகர் கோயிலில் வள்ளல் உயர் திரு.யெ.மு.விசுவநாதன் செட்டியார் தலைமையில் ``பாண்டிமாதேவி மங்கையர்க்கரசி பற்றிக் கதாகலாட்சேபம் அரங்கேற்றம். பிறகு 1-6- 76 அன்று ``மகாபாரதம் தொடர் கதா காலட்சேபம் அரங்கேற்றம், இருமுறையும் வள்ளல் உயர்திரு யெ.மு.விசுவநாதன் செட்டியார் அவர்கள் பொன்னாடை போர்த்தல். பொதுப்பணி: 1963 இல் இராமநாதபுர மாவட்டத் தமிழாசிரியர் கழகத்தைத் தொடங்கினார். 5 ஆண்டுகள் அதன் தலைவர். அதற்கு முன் தஞ்சை மாவட்ட ஆசிரியர் கழகச் செயலர். இராமநாதபுர மாவட்ட ஆசிரியர் கழகச் செயலர். 1971 முதல் இராமநாதபுரம் மாவட்ட அருள்நெறி மன்றத் தலைவர். 1973 இல் எட்டயபுர ``உலகத் தமிழ்ச் சங்க அமைப்புக் கூட்டத் தலைவர். பிரதிநிதி: ``யுனெகோ நடத்திய குழந்தை இலக்கிய ஆய்வரங்கில் தமிழ் மொழிப் பிரதிநிதியாக 1965 இல் சென்னைக் கருத்தரங்கில் 15 நாட்கள் பங்கு பெற்றார். 1959 இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ``புல்பிரைட் பேராசிரியர் டாக்டர் நட்லி நடத்திய ஆங்கிலக் கருத்தரங்கில் பங்குபெற்றார். 31-1-1974 இல் இலங்கை யாழ்ப்பாணத்தில் தொடங்கிய நான்காம் உலகத் தமிழ் மாநாட்டுப் பிரதிநிதியாக அழைக்கப்பெற்று ``இருபதாம் நூற்றாண்டில் தமிழ்க் கவிதை என்னும் தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பித்தார். வானொலி: இவரது நிகழ்ச்சிகளை திருச்சி, சென்னை, இலங்கை வானொலிகள் ஒலிபரப்பி உள்ளன. ஆங்கிலத்தில்: இவரது கவிதைகள் சில ஆங்கிலத்தில் Lyrical Cavalcade என்ற நூலாக வெளிவந்து ஐரோப்பா முழுதும் பரவி நல்ல புகழை ஈட்டியுள்ளது. பொன்முடி பதிப்பகம்: 3-6-1963 இல் பொன்முடி பதிப்பகத்தைத் தொடங்கி அதன் மூலம் கவிஞர் தனது நூல்களை வெளியிட்டு வருகிறார். 1. காப்புப் பருவம் விநாயகர் பூமேவு தேவர்கள் பாமேவு நாவலர் போற்றிய வணங்கி நித்தம் பூசித்து மலரடி யாசித்து நிற்கின்ற புண்ணியா! புகழ்வி நாயகா! நாமேவு கலைமகள் நந்தமிழ்த் தலைமகள் நதியெனப் பொங்கி நின்ற நாயகப் புலவனாம் தாயகத் தலைவனாம் நம்பியை இனிது காக்க! காமேவு கனிரசம் நாமேவு பனிரசம் கட்டுரை ஈந்த செல்வம் கடலலை நாதமும் கதியருள் வேதமும் கண்மணி ஈந்த கீதம்! மாமேவு செந்நெலும் மனமேவு கன்னலும் மறைமலை ஈந்த சொத்து! மாநிலம் புரந்திடும் விநாயகா! மறைமலை 1) மன்னனை இனிது காக்க! புறப்பொருட் கனிரசமும் அகப்பொருள் இதழ்ரசமும் தரும் இன்பத்தை மறைமலை அடிகளின் கட்டுரைகளைப் பயில்வதன் மூலம் பெறலாம். முருகன் அலைபாயும் உள்ளங்கள் கலைபாயும் இல்லங்கள் அனைத்திலும் நடன மாடி அகத்துறை படித்தவா! புறத்துறை முடித்தவா! ஆனந்த வள்ளி கணவா! மலைமாது தெய்வானை குறமாது கலைவள்ளி மார்பிலே தோய்ந்த செல்வா! மணமாலை இரண்டோடு மறைமாலை, ``ஓம் ஒன்று மகிழ்வுடன் தந்த முருகா! சிலையாகி நின்றாலும் மலையாகி நின்றாலும் செந்தமிழ்ப் பாட லென்றால் சிந்துரக் கன்னமும் குறமகள் அன்னமும் சிவக்கவே வந்து நிற்பாய்! மலையினைப் பின்னரும் மறையினை முன்னரும் மதியுடன் அமைத்த பேரன் மறைமலை அடிகளை மால்மரு காநிதம் 2) மகிழ்வுடன் இனிது காக்க! மணமாலை இரண்டு = வள்ளி தெய்வானை ஆகிய இருவர்க்கும் முருகன் சூட்டிய இரண்டு மணமாலைகள். மறைமாலை = ``ஓம் என்னும் மறைக்குப் பொருள் கூறியதால் அதனையே ஒரு மாலையாக உலகிற்குத் தந்தவன் முருகன். பேரன் = மறைமலை என்னும் பேரை உடையவன். சிவபெருமான் தழல்எனும் மேனியும் தழல்வளர் காணியும் தனக்கெனக் கொண்ட தேவா! தகுதியில் உயர்ந்தவை உலகினுக் கீந்தவா! தாழ்புலித் தோலுடைக் கொற்றவா! விழலினை ஏற்றிடும் ஏற்றினைப் போற்றிடும் வேதமே சூழ்ந்த தேவா! வியனுல கத்திலே பயனிலை சுகத்திலே வெற்றிடம் கொண்ட வீரா! அழலெனக் கொதித்திட அருவியாய்க் குதித்திட ஆனந்த நடனம் உற்றாய்! அங்கையில் செங்கனல் மங்கையொரு பாகனே! ஆதியும் அந்தம் இல்லோய்! மழலையே பேசிடும் தனித்தமிழ்க் குழந்தையாம் மறைமலை இனிது காக்க! மதிவளர் ஒளியென மறைமலை அடிகளாம் 3) மன்னனை இனிது காக்க! தழல்வளர் காணி = நெருப்பு வளரும் சுடுகாடு. உலகினுக் கீந்தவா =விலை உயர்ந்த பொருள்களை எல்லாம் உலகத்தாருக்கு அளித்துவிட்டு எளிய பொருள்களான பாம்பு, புலித்தோல், நீறு, சுடுகாடு, உருத்திராக்கம், எருக்கம்பூ ஆகியவற்றை ஏந்தியவன் சிவபெருமான். விழல் = புல், வைக்கோல். மீனாட்சியம்மை கூடலில் தேவியாய்ப் பாடலில் ஆவியாய்க் குடிஎழுந் திருக்கும் அம்மா! கொற்றவர் வணங்கினார் பற்றிலார் வணங்கினார் கோயிலோ வானை முட்டப் பாடலும் புராணமும் ஆடலும் வேதமும் பாதமே போற்றி நிற்கப் பழமறை எத்தனை புதுமறை எத்தனை பார்த்து நீ கேட்டு நின்றாய். ஆடவர் ஆண்டிட மாதவர் வேண்டிட அங்கயற் கண்ணி அம்மா! அருள்நலப் பரவிடப் பொருள்நலம் விரவிட அருந்தமிழ் அமுது தந்தாய்! மாடமா மதுரையில் கூடல்மீ னாட்சியே! மறைமலை இனிது காக்க! மாத்தமிழ் போற்றிடப் பூத்தகண் மணியிவன் 4) மாண்புடன் இனிது காக்க! கூடல் = மதுரை. கண்ணன் வெண்ணெயே உண்டவா! மண்ணையே கண்டவா வேதமே மீட்ட தேவா! வீரமே ஆர்த்திடப் பாரமே தீர்த்திட வேதமும் பொருளு மானாய்! பண்ணினால் பாடினும் கண்ணினால் காணினும் பழவினை தீர்த்து வைப்பாய்! பாரதப் பாடலும் இராகவக் காவியம் பண்டுநீ கேட்ட தோடு மண்ணில் நா லாயிரத் திவ்வியமாம் பிரபந்தம் மாதவா! கேட்டு நின்றாய்! மாண்புகழ்ப் பாரதிப் பாட்டிலும் சேவகப் பாத்திரம் ஆகி நின்றாய்! அண்ணலாய் நின்றுநம் அடிகளாய் வென்றபல் லாவர ஐய னையே அருந்தமிழ்த் தேர்வலா! நறுந்துழாய் மார்பகா! 5) ஆசையாய் இனிது காக்க! வேதமே மீட்ட = வேதங்களைக் கடலுக்குள் இருந்து மீட்டு வந்தவர் திருமால். வேதமும் பொருளும் = திருமால்தான் வேதமாகவும் அதன் பொருளாகவும் விளங்குபவர். நடராசர் பதஞ்சலி களிப்புற வியாக்கிரர் பனிப்புறப் பண்டுநீ ஆடி நின்றாய். பாடலில் மாணிக்க வாசகர் பாவையும் பதிகமாய் எழுதி நின்றாய். பதமெலாம் உன்னுடைப் பாதமே சரணமாய்ப் படிந்திடப் தேடு தய்யா! பார்த்திபர் பொன்னிடக் கீர்த்திகள் பெற்றதும் பழமறை நாத! உன்னால். சதமெனச் சிதம்பரம் கதியெனக் கிடந்தவர் சரித்திரம் கண்ட கோடி! சாற்றிடும் அடியவர் போற்றிடும் குழாத்திலே சார்ந்தநற் சைவ னாகி மதம்களி கூரவே நிதம்உனைப் பரவிடும் மகனைநீ இனிது காக்க! மல்லையில் வாசனே! தில்லைநட ராசனே! 6) மறைமலை இனிது காக்க! பதஞ்சலி முனிவர், வியாக்கிரபாதர் காணச் சிதம்பரத்தில் நடராசர் நடனம் ஆடுகிறார். பனிப்புற = கண்ணில் மகிழ்ச்சிக் கண்ணீர் துளிர்க்க மாணிக்கவாசகரின் திருவாசகத்தை நடராசர் எழுதினார். பதம் = வார்த்தைகள் எல்லாம் நடராசரின் பாதத்தையே தேடுகின்றன. பார்த்திபர் = சோழ மன்னர்கள் பொன்னம்பலத்தில் பொற்கூரை வேய்ந்து புகழ் பெற்றனர். சைவன் = மறைமலை அடிகள். கலைமகள் அறுபத்து நால்கலை உருவத்தில் பூமியில் அவதரித் திருக்கும் அம்மா! அர்ச்சனை நாவலர் கர்ச்சனைப் பாவலர் ஆயிரம் கோடி தந்தாய்! கருவத்தில் உள்ளவர் உருவத்தை மாந்தர்கள் காணவே ஆட்டி வைத்தாய்! காட்சிகள் மாறிட மாட்சிகள் மாறிடக் கதைகளை மாற்று கின்றாய். அருவத்தில் தேவிநீ உருவத்தில் காவியம் அகத்திலே இலக்க ணம்நீ! அருங்கலை எத்தனை அத்தனை கோடியும் அன்னையே வாழும் உன்னால்! பருவத்தில் குழந்தையாய்ப் படைப்பிலே மேதையாய்ப் பரிணமித் திருக்கும் ஐயன் பார்புகழ் மறைமலைக் குழவியைக் கலைமகள் 7) பார்வையால் இனிது காக்க! கருவம் = ஆணவம் மிக்க அறிவாளிகளைக் கலைமகள் ஆட்டிப் படைப்பாள். தமிழ்த்தாய் தென்பொதிகைச் சந்தனமே! மண்குளிரும் செந்தமிழே! தேடரிய மூத்த செல்வி! தேசங்கள் பலவாக வாசங்கள் செய்கின்ற தேனருவித் தெய்வ தம்மே! விண்ணவர்கள் ஏடெழுத வேந்தரெலாம் நாடெழுத வெற்றியுடன் வீற்றி ருந்தாய்! வேலேந்தி நின்றவர்கள் கோலேந்தி வென்றவர்கள் விளையாடிப் பாட்டி சைக்க மண்குளிரும் தேவாரம் மனம்குளிரும் வாசகங்கள் மலைமலையாய்ப் பெற்ற தாயே! மைந்தனெனும் ஒருசிறுவன் மறைமலையாம் ஒரு துருவன் மாண்புடனே தோன்றி உள்ளான் கண்குளிரக் கண்டவளே! காப்பியங்கள் கொண்டவளே! கடவுளுக்கும் மூத்த தாயே! கலைவளர்க்க வந்ததமிழ் மறைமலையை எப்பொழுதும் 8) கனிவுடனே இனிது காக்க! பலதேசங்களில் தமிழ் பேசப்படுகிறது. தேவர்கள் தமிழுக்குப் பல ஏடுகளைத் தந்தார்கள். திருஞானசம்பந்தர் போன்ற பெருமக்கள் அவதாரம் செய்து ஏடெழுதினார்கள். அரசர்கள் பலர் பிறநாடுகள் வென்று தமிழுக்கு நாடெழுதினார்கள். வேலேந்திய வீரர்களும், செங்கோல் ஏந்திய அரசர்களும் கவிதையினை விளையாட்டுப் போலப் பாடும் புலமை பெற்றிருந்தார்கள். ஆங்கிலச் செவிலித் தாய் வெள்ளமெனப் பூமேவி வெல்லமென நாமேவி வீரமுடன் உலகை ஆண்டு வீதியெலாம் கொடிஏந்த சாதியெலாம் மடிஏந்த விளையாடி வந்த தாயே! கள்ளமிலா ஷேக்பியரும் மில்டனுடன் பெர்னாட்ஷா கவிவாணர் கீட்சும் எல்லாம் கடலலையாய்ப் பாடிவர மெக்காலே கூடிவரக் கலைக்கூடம் ஏறி வந்தாய்! தள்ளரிய பிரிட்டனையே தாயகமாய்க் கொண்டாலும் தாரணியைச் சேர்த்து வைத்தாய்! தமிழுக்குப் பலபுதுமை விஞ்ஞானம் தந்தவளே தமிழர்க்குச் செவிலித் தாயே! பள்ளியிலே பயிலாமல் ஷெல்லியெலாம் பயின்றினிய பக்குவங்கள் பெற்ற மேதை பாராளும் மறைமலையைப் பாராண்ட ஆங்கிலமே 9) பாசமுடன் இனிது காக்க! பூவுலகில் வெள்ளம்போல் பாய்ந்து, நாக்கில் வெல்லம் போல் தித்தித்து உலகை ஆண்டவள் ஆங்கிலம். எல்லாச் சாதியினரும் ஆங்கிலம் கற்றனர். ஷேக்பியர் முதலிய கவிஞர்கள் ஆங்கிலத்தை வளர்க்க, மெக்காலே இந்தியாவில் ஆங்கிலக் கல்விக்குப் பாடத்திட்டம் அமைத்தார். மறைமலை அடிகள் பள்ளியில் படிக்காவிட்டாலும் தானே ஆங்கிலம் படித்துப் புலமை பெற்றார். திருவள்ளுவர் முப்பாலைத் தந்துலகின் அப்பாலும் கீர்த்தியினை மூட்டியதால் தமிழ ருக்கு மூவேந்தர் செய்யாத, முகில்கூடப் பெய்யாத மூச்சான குறளை ஈந்தே எப்பாரும் எப்பதமும் எங்களது குறளெனவே ஏற்றமுடன் போற்றி சைக்க இன்பமொரு கோடிவரத் துன்பமெலாம் ஓடிவிட எந்தமிழ்த்தாய் முறுவ லிக்க, செப்பாத ஈரடியால் ஒப்பாரும் இல்லாமல் செந்தமிழில் புதுமை யாகச் சீர்மணக்க வையமெலாம் பேர்மணக்க வாழ்வியலைச் சித்திரித்த வள்ளு வாநீ தப்பேதும் இல்லாத தனித்தமிழில் சொல்லாத தத்துவங்கள் சொல்ல வந்த தலைமகனாம் நமதுதமிழ்க் கலைமகனாம் மறைமலையைத் 10) தாரணியில் இனிது காக்க! செப்பாத = வள்ளுவருக்கு முன்பு யாரும் குறள் வெண்பாப் பாடியதில்லை. 2. செங்கீரைப் பருவம் தேன்கதலிச் சுவைகனியத் தீந்தமிழின் அவைகனியத் தேசமெலாம் பேசு தற்குத் தித்திக்கும் வள்ளுவனும் இளங்கோவும் கம்பனுமே திரண்டொருபால் வந்த தேபோல் வான்மழையாய் வந்தவனே! வாகையெலாம் தந்தவனே! வற்றாத தமிழின் ஊற்றே! வயலேதும் இல்லாமல் பெயலேதும் இல்லாமல் வார்த்தைஎனும் விளைவு தந்தாய்! ஊன்பொலியத் தமிழ்மாந்தர் உளம்பொலியத் தீங்குரலால் ஊக்கமுடன் இனிது பாடி உலகாள வந்தவனே! பலநூல்கள் தந்தவனே! உயர்வான பாதை சொன்னோய்! சேண்மொழியும் தன்மொழிபோல் ஆண்மையுடன் கற்றுணர்ந்தோய்! செங்கீரை ஆடி அருளே! சீர்புகழும் துரைமகனே! செகம்புகழும் மறைமலையே! 1) செங்கீரை ஆடி அருளே! கதலி = வாழை. விளைவு = பல நூல்கள் எழுதினார். மறைமலை அடிகள் இனிமையாகப் பாடுவார். ஆங்கிலம், வடமொழி ஆகியவற்றிலும் மறைமலை அடிகள் புலமை பெற்றிருந்தார். ஆடவரில் நிலைமகனே! ஆத்திகரில் தலைமகனே! அலைகடலாம் இல்ல றத்தில் அன்பான முத்தமிழ்போல் இன்பமொரு முத்தாரம் ஆசையெலாம் நிறைவு செய்யக் காடவர்கோன் நந்திதமிழ்ப் பாடலெலாம் முந்திவரக் காலத்தால் துறவு பூண்டு கடைச்சங்கப் புலவோரும் இடைச்சங்கப் புலவோரும் கைகட்டி வந்து நிற்க நாடவர்கள் பாராட்ட நாவலர்கள் தேரோட்ட நாத்திகரும் போற்றி சைக்க நற்றமிழைச் செந்தமிழர் முற்றமெலாம் சிந்திவர நடைபோட்டு வந்த புலவா! சேடனையும் வென்றவனே! செந்தமிழில் நின்றவனே! செங்கீரை ஆடி அருளே! சீர்புகழும் துரைமகனே! செகம்புகழும் மறைமலையே! 2) செங்கீரை ஆடி அருளே! சங்கத்தார் பாட்டினையும் வங்கத்தார் ஏட்டினையும் சால்புடனே கற்ற செல்வா! சைவத்தில் ஆழ்ந்தவர்கள் தெய்வத்தில் தோய்ந்தவர்கள் சங்கரனை விட்ட போது திங்களணி முடிசூடும் தெய்வதமே விடிவெள்ளி தேசத்திற் கென்று ரைத்துச் முத்தாரம் = மறைமலை அடிகள் மூன்று மனைவியரைத் திருமணம் செய்து கொண்டவர். பல்லவ மன்னன் நந்தியின் நந்திக் கலம்பகம் படித்ததால் அவனைப்போல் தமிழுக்குத் தொண்டு புரியத் துறவுபூண்டார் மறைமலை அடிகள். சேடன் = ஆதி சேடன். சென்னைமுதல் குமரிவரை சைவமத மாநாடு திசைஎலாம் ஏற்ப டுத்திப் புங்கவர்கள் கூட்டத்தில் புத்தரென அவதரித்துப் புலவோரை ஈர்த்த செல்வா! புகழுக்கும் வீழாமல் பொருளுக்கும் தாழாமல் புத்தகமே சேர்த்த பொன்னே! செங்கையினில் நகலேந்தி செந்தமிழின் புகழேந்தி செங்கீரை ஆடி அருளே! சீர்புகழும் துரைமகனே! செகம்புகழும்மறைமலையே 3) செங்கீரை ஆடி அருளே! சிட்டாக வானத்தில் எட்டாய உயரத்தில் சித்தாந்த மொழிகள் பேசித் தென்னாடும் வடநாடும் தென்மூலை ஈழத்தும் சிவபக்தி சூழ வைத்துப் பட்டாடை பூணாமல் கட்டாக வெண்ணீறு பால்வண்ண மேனி கொள்ளப் பழகாத பேர்கூட அழகாகப் பாதத்தில் படிக்காசு வைத்து நிற்கச் செட்டாக அச்சிட்டுக் கட்டாக உலகெங்கும் சீராக நூல்ப ரப்பத் திருமுருகன் அச்சகமும் மறுமுனையில் நூலகமும் திரவியமாய்த் தோற்று வித்தோய்! வங்கத்தார் ஏட்டினையும் = கடல் கடந்த நாடுகளில் உள்ள பல ஏடுகளையும் கற்றவர். சைவர்கள் சங்கரனையும் சைவத்தையும் மறந்த போது அடிகள் நாடெங்கும் சைவ மத மாநாடு கூட்டிச் சைவம் தழைக்கச் செய்தார். நகல் = தான் எழுதிய நூல்களின் நகல். சிட்டாக வந்தவனே! எட்டாத பங்கனியே! செங்கீரை ஆடி அருளே! சீர்புகழும் துரைமகனே! செகம்புகழும் மறைலையே! 4) செங்கீரை ஆடி அருளே! சேலாக விளையாடும் நீலாவின் வேண்டுதலால் செந்தமிழில் கலந்தி ருந்த சேறான பிறமொழியாம் நீராவி பிரித்ததனால் சீர்கொண்ட அன்ன மாகி நாலாறு பாதையிலே கோளாறு கொண்டதமிழ் நடைமாற்றிச் செப்ப னிட்டு நயமான புலவோரும் பயமாகிப் பின்பற்ற நாத்திகமும் தொழுது சுற்றப் பாலாறு பேச்சாகப் பகையாறு போய்ச்சாகப் பைந்தமிழைப் பாய்ச்சு தற்குப் படைகொண்டு வந்தவனே! நடைகண்டு தந்தவனே! பாமரனும் போற்ற வந்தோய்! சேலாறு தாமரையாய் நூலாறு மாமறையே! செங்கீரை ஆடி அருளே! சீர்புகழும் துரைமகனே! செகம்புகழும் மறைலையே! 5) செங்கீரை ஆடி அருளே! திருமுருகன் அச்சகமும், அம்பலவாணர் நூலகமும் அடிகள் ஏற்படுத்தியவை. நீலா = மறைமலை அடிகளின் மகள் நீலாவின் தூண்டுதலால் அடிகள் தனித்தமிழ்ப் பற்றுக் கொண்டார். சேல் = மீன்.மீன்கள் தாமரையில் இளைப்பாறு தலைப்போல நூல்கள் எல்லாம் மறைமலை அடிகளிடம் வந்து தங்கி இளைப்பாறின. ``மறைஞ என்பது தமிழ் மறையாகிய திருக்குறளையும் வடமொழி வேதத்தையும் குறிக்கும் நயம் உண்டு. சிற்பங்கள் பலகோடி உற்பத்தி ஆனாலும் சிந்தையிலே கொண்டி ருந்த சீர்கொண்ட நடராசர் சிலைகொண்டு தினந்தோறும் சேவித்து வாழ்ந்த செல்வா! அற்பங்கள் திசைமாறும்; கர்ப்பங்கள் தசைமாறும் ஆனந்தம் துன்ப மாகும் அண்டங்கள் தூளாகும் பிண்டங்கள் ஆளாகும் ஆச்சரியம் எளிமை ஆகும்! கற்பாந்த காலத்தும் பொற்பாதம் மறவாத காருண்ய மூர்த்தி ஆகிக் கதையோடு புதினங்கள் உரையோடு பாடல்கள் கடிதங்கள் தந்த செல்வா. சிற்பரனை மறவாத அற்புதமே! சிவனருளே! செங்கீரை ஆடி அருளே. சீர்புகழும் துரைமகனே! செகம்புகழும் மறைமலையே! 6) செங்கீரை ஆடி அருளே! அந்தத்தின் நிலையறியா சொந்தத்தின் வலையறியா ஆண்டவனை மனத்தி லேற்றி அம்பலவா! தமிழுக்குச் செம்புலவா! என்றேத்தி அனுதினமும் பூசை செய்து பந்தத்தின் விடுபட்டுப் பைந்தமிழில் தளைபட்டுப் பகவானைப் பாடி நின்று பல்லாவ ரத்தினிலே எல்லாம னத்தினிலும் பக்திமழை பொழிய வைத்து சந்தத்தில் பாடியதும் வந்தித்துக் கூடியதும் சன்மார்க்க சங்க மாகிச் சாமான்ய மக்கட்கும் ஏமாந்த மக்கட்கும் சரித்திரம் சொன்ன சான்றோய்! சிந்தித்த பேர்கட்கு வந்திட்ட மறைமலையே! செங்கீரை ஆடி அருளே! சீர்புகழும் துரைமகனே! செகம்புகழும் மறைமலையே 7) செங்கீரை ஆடி அருளே! பல்லாவரத்தில் அடிகள் சன்மார்க்க சங்கம் அமைத்தார். தென்னையிலே நாற்றாகித் தென்றலிலே கீற்றாகித் தீந்தமிழில் ஊற்று மாகித் தித்திக்கும் மருந்தாகிப் பக்திக்கும் விருந்தாகித் திசையெட்டும் சென்று வென்று பண்ணையிலே பயிராகிப் பாலாடைத் தயிராகிப் பழந்தமிரில் உயிரு மாகிப் பண்பட்ட தமிழ்நூல்கள் மண்பட்டுப் போகாமல் பாடமாய் மனத்தி லேற்றித் திண்ணையிலே இருந்தாலும் தெருஓரம் நடந்தாலும் தீந்தமிழே பரப்பி வந்து தீயாக அரசியலைக் காயாக ஒதுக்கியதால் தீந்தமிழைக் கற்று ணர்ந்தாய்! சென்னையிலே தலைமகனே! குமரியிலே நிலைமகனே! செங்கீரை ஆடி அருளே! சீர்புகழும் துரைமகனே! செகம்புகழும் மறைமலையே! 8) செங்கீரை ஆடி அருளே! தப்பேந்தி வாழ்ந்தவர்கள் பச்சோந்தி ஆனவர்கள் தமிழுக்குத் துரோக மாகத் தடைஅடைத்த போதெல்லாம் மடைஉடைத்த புனலாகிச் சண்டமா ருதமும் ஆகித் துப்பாக்கிக் குண்டாகித் துளைபோடும் வண்டாகித் துயர்நீக்கும் கொண்டல் ஆகித் தோள்தட்டி வந்தவனே! சூள்கொட்டி வென்றவனே! சோதனைகள் தீர்த்த செல்வா! நப்பாசை இல்லாமல் தப்பாசை சொல்லாமல் நாட்டுக்கு வழிகள் காட்டி மறைமலை அடிகள் தென்னையில் நாற்று; தென்றலில் கீற்று; தீந்தமிழில் ஊற்று; தித்திக்கும் மருந்து; பக்திக்கும் விருந்து; பண்ணையில் பயிர்; பாலாடைத் தயிர்; பழந்தமிழில் உயிர் போன்றவர். நாள்காட்டி ஆனவனே! ஊழ்காட்டி வானவனே! நற்றமிழுக் குற்ற மைந்தா! சிப்பந்தி கண்டவனே! சம்பந்தி கொண்டவனே! செங்கீரை ஆடி அருளே! சீர்புகழும் துரைமகனே! செகம்புகழும் மறைமலையே! 9) செங்கீரை ஆடி அருளே! மாதரெலாம் அடிமையெனும் போதனையில் தமிழகமே மயக்கத்தில் வீழ்ந்த போது மாருதமாய் வந்துதமிழ்ச் சாரதியாய் நின்றினிய மகளுக்குத் தமிழ்கற் பித்து வேதனைகள் தீர்த்துபல சோதனைகள் தீர்த்துதமிழ் வெற்றிஆ சிரியை ஆக்கி வியனுலகில் மாதர்களும் பயனுடைய தொழில்புரிய வீரமுடன் பாதை போட்டுக் காதலொரு ரெங்கனையே நாதனெனக் கொண்டதனால் கண்ணியமாய் மணமு டித்துக் கலைகொண்ட தமிழ்க்காதல் நிலைகொள்ள வைத்ததனால் கனவுக்கு வந்த நனவே! சீதனமாய் வந்தவனே! சாதனைகள் தந்தவனே! செங்கீரை ஆடி அருளே! சீர்புகழும் துரைமகனே! செகம்புகழும் மறைமலையே! 10) செங்கீரை ஆடி அருளே! நாள்காட்டி = காலண்டர். வானவன் = அமரன். அச்சகம் வைத்ததனால் அடிகளுக்குப் பல சிப்பந்திகள் இருந்தார்கள். அடிகள் தன் மகள் நீலாவுக்குத் தமிழ் கற்பித்துத் தமிழாசிரியை ஆக்கி, அவளது காதலர் திருவரங்கம் பிள்ளைக்குத் திருமணம் முடித்துக் கொடுத்துக் காதல் கனவை நனவாக்கினார். 3. தாலப் பருவம் ஆயக் கட்டில் ஞாயம் கெட்டால் அரிவாள் கொண்டேந்தி ஆணித் தரமாய்க் காணிச் சண்டை ஆளுக் காள்போட்டுக் காயம் பெற்று நேயம் கெட்டுக் கன்னிப் போனோர்க்குக் கன்னித் தமிழை எண்ணிப் பாடம் கற்பித் ததனாலே தேயம் முற்றும் மாயம் செற்றுத் தேசாந் திரியாகித் தேனும் பாலும் சிவமும் தமிழும் சேரச் செய்தோனே! தாயத் தமிழில் நேயத் தலைவா! தாலோ தாலேலோ! தமிழர் மறையின் மலையே! அமிழ்தே! 1) தாலோ தாலேலோ! சிங்கத் திறனும் சங்கத் தமிழும் சேரும் கூட்டாகிச் சேவை செய்தே தேவை கூடச் செல்வம் கழிவாகி வரப்புச் சண்டை போடும் தமிழர்கட்குத் தனித்தமிழின் பெருமையை உணர்த்தியவர் அடிகள். அங்கப் பொலிவும் சங்கக் குரலும் அன்பர் பெருக்காகி ஆளின் கூட்டம் தமிழின் ஏற்றம் ஆயும் வகுப்பாகி எங்கும் சைவம் எதிலும் தமிழே என்னும் முழக்காகி ஏற்றம் கொள்ளத் தோற்றம் செய்தே ஏசல் தீர்த்தோனே! தங்கத் தமிழில் சங்கத் தலைவா! தாலோ தாலேலோ! தமிழர் மறையின் மலையே அழிழ்தே! 2) தாலோ தாலேலோ! மண்ணோர் ஏற்றி விண்ணோர் போற்றி மயங்கத் தமிழ்பேசி மாலை சூடி ஓலை தேடி மனனம் பலசெய்து நண்ணார் கூட நண்ணும் படியாய் நன்மை பலவாக்கி நாளுக் கொருநூல் ஆளுக் கொருநூல் நயமாய் அச்சிட்டே அண்ணா மலைப்பல் நகரில் பேசி ஆர்வ விளக்கேற்றி அன்னைத் தமிழுக் கென்றே பலரை ஆசான் ஆக்கியதால் சிங்கத்தின் ஆற்றலும் சங்கத்தின் தமிழும் தனக்கெனக் கொண்டு அடிகள் சேவை செய்ததால் செல்வம் குறைந்தது. அன்பர் கூட்டம் பெருகியது. தண்ணார் தமிழின் தலைவா! அமிழ்தே! தாலோ தாலேலோ! தமிழர் மறையின் மலையே! அமிழ்தே! 3) தாலோ தாலேலோ! செக்கின் மாடாய் முக்கி முனகிச் சேற்றில் உழல்மக்கள் செம்மாத் தோங்கிப் பெம்மான் போற்றிச் சேர வழிசெய்து கெக்கின் தலையில் வெண்ணைய் வைத்துக் கொண்டல் மொழிபேசிக் கூற்றை வென்று நாற்றாய் நின்று கூத்தன் பதம்பாடிச் சுக்கின் முதலாம் அக்கா லத்தமிழ்ச் சூரண மருத்துவங்கள் சொல்லி வளர்த்துப் பள்ளி அமைத்த சோதி மருத்துவனே! தக்கார் பலரில் மிக்கோன் ஆனாய்! தாலோ! தாலேலோ! தமிழர் மறையின் மலையே! அமிழ்தே! 4) தாலோ! தாலேலோ! வாசப் பலவின் வேசை ஈபோல் வாழும் உலகத்தில் வானத் தவரும் மோனத் தவரும் வாழ்த்தும் படியாகப் பாசத் தமிழும் தேசத் தவரும் பல்கிப் பொலிவாகப் பட்டி தொட்டி நாடு முற்றும் பவனி வந்தோனே! நண்ணார் = பகைவர் தமிழ் மருத்துவத்தை ஆதரித்தவர் அடிகள். நாசம் செய்தோர் ஈசல் போல நாட்டில் வந்தாலும் நற்றாய் மொழியால் செற்றே அவரை நலியச் செய்தோனே! தாசர் பலரின் ஆசான் ஆனாய்! தாலோ! தாலேலோ! தமிழர் மறையின் மலையே! அமிழ்தே! 5) தாலோ! தாலேலோ! ஆனைப் போரும் சேனைப் போரும் அஞ்சா மற்செய்தே ஆற்றல் காட்டிக் கூற்றை ஓட்டி ஆர வாரித்தே தேனை வென்று மானை வென்ற தென்றல் மொழிபேசித் திக்கெல் லாமும் அக்கா லத்தில் தீரங் கள்காட்டி வானை வென்றே ஏனை உலகும் வாழ்த்தப் புகழ்பெற்ற வற்றாத் தமிழர் அற்றார் ஆனார். வாட்டங் கள்தீர்த்த தானைத் தலைவா! சேனைப் புலவா! தாலோ! தாலேலோ! தமிழர் மறையின் மலையே! அமிழ்தே! 6) தாலோ! தாலேலோ! மறைமலை அடிகளின் வாரிசான மாணவர் பலர் உண்டு. அடிகள் நாடு முற்றும் பவனி வந்து ஈசல் போல முளைத்த நாசகாரக் கும்பலைச் சொல் வன்மையால் அழித்தார். அக்காலத்தில் வீரப்போர் புரிந்து ஈரத் தமிழ் பேசி மூவுலகும் புகழ் வாழ்ந்த தமிழர்கள் தாழ்ந்தபொழுது வாட்டம் தீர்த்தவர் மறைமலை அடிகள். தானி யங்கள் மாடி மச்சு தங்கப் பல்லக்கு தாடி மீசை காதில் தோடு தங்கப் பாதுகைகள் காணி கரைகள் பேணிக் கொண்ட காலத் துறவின்றிக் கச்சை கட்டி விச்சை காட்டிக் கற்றுத் துறந்தோனே! ஆணிப் பொன்னும் நாணிப் போகும் அழகுத் திருமேனி அன்னச் சோறே! கன்னல் சாறே! ஆளும் பஞ்சத்தில் தேனில் நாற்றே! வானில் ஊற்றே! தாலோ! தாலேலோ! தமிழர் மறையின் மலையே! அமிழ்தே! 7) தாலோ! தாலேலோ! ஒத்துப் பாடும் உலகில் நீயே ஒருவன் வேறாகி ஓசை நயமாய்ப் பேசிப் பாடி ஊக்கம் குன்றாமல் சொத்தும் இன்றிச் சோர்வும் இன்றிச் சோம்பல் சிறிதின்றிச் சோகை நீக்கி வாகை ஆக்கிச் சோதித் தமிழுக்குப் துறந்தும் துறக்காத துறவிகளைப் போல இல்லாமல் உண்மையாகத் துறவு நெறியில் வாழ்ந்தவர் அடிகள். வெள்ளரி = அடிகள் வெள்ளரிக்காய் போல இனிமையானவர். வெண்மையான சிங்கம் போல (அரி) எதிரிகளை அழிப்பவர். பித்துக் கொண்ட கொத்துத் தெங்கே! பிஞ்சு வெள்ளரியே! பேசும் வைகை! பாடும் பொன்னி! பெருகும் கொள்ளிடமே! தத்துச் செல்லாப் பத்துப் பாட்டே! தாலோ தாலேலோ! தமிழர் மறையின் மலையே! அமிழ்தே! 8) தாலோ தாலேலோ! வெண்ணா றாகி வெட்டா றாகி விளங்கும் ஐயாற்றில் வேதம் சூழும் நாதன் பாதம் வேண்டிப் பாடியதால் அண்ணா மலையாய்த் தண்ணார் தமிழில் ஆற்றல் பெற்றோனே! ஆடிக் காற்றே! நாடி நரம்பே! ஐப்பசி மாமழையே! ``பெண்ணின் பெருமை பேசும் திரு.வி. கல்யா ணப்பெரியோன் பேணிப் பேசிப் பாடிப் பரவும் பேழைச் செம்பொன்னே! தண்ணீர்ப் பந்தல்! கண்ணீர்க் கோவில்! தாலோ! தாலேலோ! தமிழர் மறையின் மலையே! அமிழ்தே! 9) தாலோ! தாலேலோ! அடிகளின் நிறம் வெள்ளை ஆகும். பெருகும் = அடிகளின் கருத்து எங்கும் பெருகிப் பரவியது. திருவையாற்று இறைவனிடம் அடிகளுக்கு ஈடுபாடு மிகுதி. அடிகளிடம் திரு.வி.க.அவர்கட்கு ஈடுபாடு மிகுதி. பெய்யென் றாலே பெய்யும் மழையே! பேசும் கற்பகமே! பிரள யத்தில் புரளும் மாலே! பேசா அற்புமே! நெய்யும் தறியே! உய்யும் நெறியே! நீற்றின் நாயகமே! நெற்றிக் கண்ணன் பற்றிக் கொண்ட வெற்றிச் சிறுபறையே! கையில் கோலும் மெய்யில் நீறும் காட்சி அளித்தோனே! கடிதம் கொண்டு தமிழில் வரைந்த கன்னிக் கோகிலமே! தையின் குளமே! பையின் வளமே! தாலோ! தாலேலோ! தமிழர் மறையின் மலையே! அமிழ்ந்தே! 10) தாலோ தாலேலோ! அடிகள் எப்பொழுதும் நீறு பூசியிருப்பார். நெற்றிக் கண்ணன் = சிவன். அடிகள் மறைந்து சிவன் கையில் சிறுபறை ஆனாரோ? அடிகள் எழுதிய நூல் ``கோகிலாம்பாள் கடிதங்கள் என்பதாகும். 4. சப்பாணிப் பருவம் பொன்கோடி வந்தாலும் பொருள்கோடி தந்தாலும் புலவோரில் ஒருவ னாகிப் பொல்லாப்பும் இல்லாமல் புறம்பேசி நில்லாமல் பூத்துள்ள முகத்தி னோடு கண்கோடி மொழிபேசக் கைகொடி நூல்தோயக் கதையோடு புதினம் ஈந்து காற்றுள்ள பொழுதிங்கே தூற்றிக்கொள் உலகத்தில் கடையாணி ஆகி நின்று புண்கோடி தாங்கியவா! புகழ்கோடி தேங்கியவா! புதையலாய் வந்த செல்வா! பூச்சரமே! பாராட்டே! ஆச்சிமார் தாலாட்டே! புன்னகையால் வென்ற கண்ணே! சன்மார்க்க நெறிபேசும் சங்கத்தின் வழிகாட்டி! சப்பாணி கொட்டி அருளே! சத்தான மொழிபேசி வித்தான மறைமலையே! 1) சப்பாணி கொட்டி அருளே! புதினம் = நாவல். ஆச்சிமார் = செட்டிநாட்டுப் பெண்கள். அடிகளின் மேனிநிறம் தங்கமாகும். தங்கத்துப் பொன்மேனி தமிழுக்கு விண்மாரி தலைமைக்கு வேந்த னாகித் தரைகெட்ட பாலையிலும் தமிழ்கெட்ட காலையிலும் தனித்தமிழ் பொங்கி நின்று சிங்கத்தின் உருவாகி வங்கத்தின் புனலாகிச் சிறுமைகள் தீர்த்த தாலே சீராட்டி வந்ததமிழ் நீராட்டி வந்தவனே! சீதனமாய் வந்த செல்வா! சுங்கத்து வரிநீக்கும் சோழற்குப் பின்வந்து சோதனை தீர்த்த மன்னா! சுவைதேங்கு தமிழுக்குச் சுமைதாங்கி ஆனவனே! சொல்மாரி பெய்த வேதா! சங்கத்துப் புலவோராம் சிங்கத்தில் ஒருவன்நீ சப்பாணி கொட்டி அருளே! சத்தான மொழிபேசி வித்தான மறைமலையே! 2) சப்பாணி கொட்டி அருளே! ஈன்றோர்கள் கீர்த்திக்கும் இருந்தோர்கள் சீர்த்திக்கும் இம்மையில் பணிகள் செய்தே ஈசனைக் கண்டவா! தாசரைக் கொண்டவா இயலிசைக் கூத்து மன்னா! ஆன்றோர்கள் தமிழிலே தோன்றாத நாளிலை அத்தனை புலவ ருள்ளும் அகம்புறம் இலக்கணம் அருள்நிறை இலக்கியம் ஆயிரம் கற்ற தாலே ``சுங்கம் தவிர்த்த சோழன்ஞ குலோத்துங்கன் ஆவான். அவன் சுங்கவரி நீக்கியதால் சோதனை நீங்கியது. அதுபோல் மறைமலை அடிகளின் தொண்டால் தமிழுக்கு ஏற்பட்ட சோதனை நீங்கியது. வேதா = பிரமன் & வேதாசலம் (மறைமலை) தான்றோன்றி நாதனின் தமிழூன்று பாதமே தலைக்கணி யாக ஏந்தித் தனித்தமிழ்க் கடலிலே புதுக்கலம் செலுத்தியே தாரணி வென்ற மைந்தா! சான்றோர்கள் உலகத்தில் ஆன்றோனாய் வந்தவா! சப்பாணி கொட்டி அருளே! சத்தான மொழிபேசி வித்தான மறைமலையே! 3) சப்பாணி கொட்டி அருளே! கதைஉருவாம் தமிழ்நிலத்தில் புதைபொருளாய் அவதரித்துக் கற்பனை கோடி செய்து கலைமணக்க எழுதியதும் நிலைமணக்கப் பேசியதும் காற்றிலே தோய்ந்த தாலே உதைகொடுத்த பகைவர்க்குச் சிதைஎடுக்க வீரமனம் உற்றனர் தமிழ மாந்தர். ``உல்லாச புரிதேடிச் சல்லாப மொழிபேசி உறங்கிய வாழ்வு போதும் ``எதையிழந்த காலத்தும் தமிழ்இழக்க மாட்டார்கள் என்பதை நிலைநி றுத்த இறுதியாய் உலகிற்கே உறுதியாய்ச் சொல்லவே எழுந்திவண் வந்த பாலா! சதை வளர்க்கும் உலகத்தில் விதைவளர்க்க வந்தவனே! சப்பாணி கொட்டி அருளே! சத்தான மொழிபேசி வித்தான மறைமலையே! 4) சப்பாணி கொட்டி அருளே! இறைவன் தானாகத் தோன்றியவன். அவனது பாதத்தில் படைக்கப் பெற்றுள்ள தமிழைத் தன் தலையில் ஏந்தி பணிபுரிந்தவர் அடிகள். தமிழர் தம் வீர உணர்வையும் மொழி உணர்வையும் தட்டி எழுப்பியவர் அடிகள். ஈன்றாளும் தந்தையுமாய்த் தோன்றாத துணையாகி இருக்கின்ற சிதம்ப ரேசன் இணையடிகள் பிறவிக்குப் புணையெனவே கொண்டதனால் இம்மையிலே புகழில் ஏறி வான்றோய்ந்த முகிலுக்கும் வளம்தோய்ந்த பயிருக்கும் வாய்த்திட்ட நட்பு போல வற்றாத தமிழுக்கு நற்றாயாய் வந்தவனே! வடமொழியும் கற்ற வள்ளல்! ஊன்றாத கோலுண்டா? உதவாத நூலுண்டா? உலவாத காலும் உண்டா? உணராத உலகத்தில் ஊன்றுகோல் நூலாகி உயர்காலாய் வந்த பாலா! சான்றோர்கள் உலகத்தில் ஆன்றோனாய் வந்தவனே! சப்பாணி கொட்டி அருளே! சத்தான மொழிபேசி வித்தான மறைமலையே! 5) சப்பாணி கொட்டி அருளே! பஞ்சமா பாதகங்கள் கொஞ்சமா உலகத்தில்? பரமேசன் உலகில் வந்தால் படித்தோர்கள் மத்தியிலும் நடித்தோர்கள் மத்தியிலும் படைஏந்தி வாழ வேண்டும். தஞ்சமாய் வந்தோர்க்குத் தஞ்சையாய் வாழ்ந்தவர்கள் தாராளம் கெட்ட தாலே தமிழுக்கும் நீரில்லை, தகுதிக்கும் ஆளில்லை தலைமைக்கும் வேலை இல்லை. அன்னையும் அப்பனுமாய் உள்ள தில்லை நடராசப் பெருமானை வழிபட்டதால் அடிகள் இம்மைப் புகழ் பெற்றார். கால் = பாதம் & காற்று. புஞ்சையாய்ப் போனதெலாம் நஞ்சையாய் மாற்றிடவே புகலாகி வந்த புத்தா! புனலாகித் தமிழர்க்கு நனவாகி வந்ததனால் போராட்டம் தீர்த்த புனிதா! சஞ்சலங்கள் இரிந்தோட சபையோர்கள் மகிழ்ந்தாட சப்பாணி கொட்டி அருளே! சத்தான மொழிபேசி வித்தான மறைமலையே! 6) சப்பாணி கொட்டி அருளே! எக்காள மிட்டவர்கள் செக்காக நின்றவர்கள் எல்லோரும் அஞ்சி ஓட இயல்பான மொழிபேசி நயமான பொருள்கூறி இணையற்ற பாணி யாலே அக்காலப் புலவோரும் இக்காலப் புலவோரும் பொற்காலம் என்று போற்ற அரசாங்க மரியாதை சிரசாலே செய்தோங்க ஆன்மீகம் தந்த பாலா! அக்கார வடைசலுடன் உக்காரும் பாயசமும் அல்வாவும் போல வந்தே அவைதோறும் பரிமாறி சபைதோறும் நடமாடி அமுதாகி நின்ற ஐயா! சர்க்கரை இப் பந்தலிலே தேன்மாரி கொட்டியவா! சப்பாணி கொட்டி அருளே! சத்தான மொழிபேசி வித்தான மறைமலையே! 7) சப்பாணி கொட்டி அருளே! தமிழர்க்குப் புத்தராகவும் புனிதராகவும் அவதரித்தவர் மறைமலை அடிகள். அக்கார வடைசல், உக்காரு, பாயசம், அல்வா = தமிழ்நாட்டின் இனிப்பு உணவுகள். போதனைகள் ஒருகோடி புலவோர்கள் பலகோடி பூத்திட்ட பொய்கை ஆகிப் புறங்கண்ட புலவோர்கள் அகங்கண்டு பாராட்டப் புதையலாய் வந்த தாலே சாதனைகள் ஒருகோடி சன்மார்க்க நெறிதேடிச் சரித்திர மனித னாகிச் சலியாத உழைப்பீந்து மெலியோர்கள் பிழைப்பீந்து சான்றோனாய் வந்த சாதே! வேதனைகள் தீர்த்தோனே! வெற்றிமுர சார்த்தோனே! வீரங்கள் ஒன்று கூடி விளையாடு முருகாகி மழையாடு புனலாகி வினையாட வந்த வீரா! சாதகமாய் நின்றோனே! பாதகங்கள் வென்றோனே! சப்பாணி கொட்டி அருளே! சத்தான மொழிபேசி வித்தான மறைமலையே! 8) சப்பாணி கொட்டி அருளே! எலியாகி அறுத்தோரும் புலியாகி ஒறுத்தோரும் ஏராள மான நாட்டில் எண்ணங்கள் புரியாமல் இதயங்கள் விரியாமல் ஏதேதோ பேசி வந்தார். கலிகாலம் என்றேங்கி ஒலியாவும் கேட்டார்கள் கனிவான தமிழ நாட்டார், கடைகெட்ட காலத்தில் நடைபோட்டு வந்திங்கே கலிமாற்றி விட்ட கண்ணா! பொய்கையாகவும், புதையலாகவும், சான்றாண்மை மிக்க சாது ஆகவும் வாழ்ந்தவர் அடிகள். நலிவுற்ற துறையாவும் பொலிவுற்ற மறையாகி நடமாட வைத்த தாலே நயனங்கள் மொழிகாட்டப் பயணங்கள் வழிகாட்ட நாதனாய் வந்த வேதா! சலியாத உளம்கொண்டு மெலியாத உடல்கொண்டு சப்பாணி கொட்டி அருளே! சத்தான மொழிபேசி வித்தான மறைமலையே! 9) சப்பாணி கொட்டி அருளே! பத்திநெறி இம்மைக்கும் முத்திநெறி மறுமைக்கும் பயனுள்ள பாதை என்றே படியாத பேர்கட்கும் நடியாமல் வழிசொல்லிப் பணிசெய்ய வந்த தாலே கத்திமுனை போல்வாழ்ந்து புத்திமுனை தேயாமல் கண்ணாடி நெஞ்ச முற்றுக் கலைகண்ட உலகத்தில் நிலைகண்ட புகழ்தேடிக் கற்றோர்கள் தலைவ னாகி அத்தியெனப் பூத்ததமிழ் மத்தியிலே பாமரர்க்கும் ஆலவிழு தாக வந்தே அழகான மொழிபேசி நிழலாக உருவாகி ஆனந்தம் ஈந்த ஐயா! சத்தியமே வெற்றியென நித்தியமும் பற்றியவா! சப்பாணி கொட்டி அருளே! சத்தான மொழிபேசி வித்தான மறைமலையே! 10) சப்பாணி கொட்டி அருளே! மக்களுக்குப் புரியும்படியாகப் பேசியவர் மறைமலை அடிகள். நடிக்காமல் உண்மையாக வாழ்ந்தவர் அடிகள். அவருடைய நெஞ்சம் கண்ணாடி போன்றது. 5. முத்தப் பருவம் மத்தாக மந்தரமும் கயிறாக வாசுகியும் பாற்கடலைக் கடைந்த போது மணமிக்க நல்லமுதும் சினமிக்க தீநஞ்சும் மண்டியே வந்த காலை ``அத்தா என் றமரர்களும் ``அப்பா என் றசுரர்களும் அலறியே நின்ற தாலே ஆலமுடன் அமுதத்தைக் கோலமிகு கண்டத்தில் அடக்கிய கால கண்டன் சொத்தாக வீற்றருளும் திருநாகைக் காரோணச் சோழியச் சொக்க நாதர் சோர்விலாச் சின்னம்மை மார்பிலே தவழ்ந்தவர் சொல்வளம் பெற்ற செல்வா! முத்தான முத்தமிழை மொத்தமாய் மொழிந்தநல் வாயாலே முத்தம் தருகவே! மூதறிஞர் பேரவையில் சீதனமாம் மறைமலையே 1) முழுநிலா முத்தம் தருகவே! காலகண்டன் = சிவபெருமான். சிவபெருமான் நாகைப்பட்டினத்துக் காரோணம் என்னும் கோயிலில் வீற்றிருக்கிறார். நாகையைச் சேர்ந்த காடம்பாடி எனும் கிராமத்தில் சொக்கநாத பிள்ளைக்கும் சின்னம்மைக்கும் 15-7-1876 இல் பிறந்தார். மறைமலை அடிகள். பொதுவான தமிழ்நூல்கள் சிவஞான போதமுடன் புராணங்கள் யாவும் கற்றுப் புலமைக்கும் தமிழ்ஞானத் தலைமைக்கும் வேரூன்றிப் பொழிவுகள் செய்த தோடு மதுரைநா யகம்பிள்ளை மனம்கொண்ட தொடர்பாலே மாண்புகள் பலவு முற்று மனோன்மணி சுந்தரம் பிள்ளையின் ஆசியால் மார்த்தாண்டன் தம்பி கண்ட பொதுநிலைப் பள்ளியில் தமிழ்த்துறைப் பணியிலே புலமையும் சிறிது காட்டிப் புகழ்திரு வனந்தனது புரத்திலே பலமுறை பொழிவுகள் செய்த புலவா! முதுகுன்றாம் கழுக்குன்றப் பெருமானால் வந்தநல் வாயாலே முத்தம் தருகவே! மூதறிஞர் பேரவையில் சீதனமாம் மறைமலையே! 2) முழுநிலா முத்தம் தருகவே! சித்தாந்தப் புலவனாம் சிற்றம் பலவனாம் சீர்காழிப் புலமைச் செல்வன் செய்ததுக ளறுபோத நூலுக்கு நல்லுரை செப்பியே புகழில் ஏறிச் சித்தாந்த தீபிகைத் திங்களிதழ் ஆசானாய்ச் சிலதிங்கள் தொண்டு செய்து சிவஞான சித்தியார் பதினான்கு செய்யுட்குச் செம்மையாய் உரைகள் தீட்டி அந்நாளில் மதுரை நாயகம்பிள்ளை மிகச் சிறந்த சைவப்புலவர். அவரது தொடர்பால் அடிகள் புகழ்பெற்றார். மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளையின் ஆதரவால் அடிகள் 1896 ஆம் ஆண்டில் திருவனந்தபுரம் சென்று மார்த்தாண்டன் தம்பி என்பவர் நடத்திய பள்ளியில் தமிழாசிரியராகச் சேர்ந்து பணியாற்றினார். பொது மக்களுக்குப் பல சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். திருக்கழுக்குன்றப் பெருமானைத் தாய் தந்தையர் வணங்கியதால் அடிகள் பிறந்தார். முத்தான மந்திரம் முப்பத்து பாட்டுக்கு மூலமாய் உரைகள் தீட்டி மூலைகள் தோறுமே சித்தாந்த தீபிகை முழங்கவே முனைந்த முதல்வா! முத்தான முத்தமிழை மொத்தமாய் மொழிந்தநல் வாயாலே முத்தம் தருகவே! மூதறிஞர் பேரவையில் சீதனமாம் மறைமலையே! 3) முழுநிலா முத்தம் தருகவே! கீர்த்திமிகு சென்னையில் கிறித்தவக் கல்லூரி கிளர்ந்திடப் புலவ னாகிக் கேண்மைமிகு பரிதிமாற் கலைஞருடன் தொண்டாற்றிக் கேட்டவர்ப் பிணிக்கு மாறு வார்த்தைகள் உரைநயம் குரல்நயம் வாய்ந்திட வாய்மையாய்த் தொண்டு செய்து வற்றாத தமிழ்க்கூடம் கிறித்தவக் கலைக்கூடம் வையகம் போற்று மாறே ஈர்த்ததும் ஆங்கிலக் கட்டுரை பேர்த்ததும் எடிசனின் நூல்க ளாக இதயங்கள் கவர்ந்ததும் மொழிபெயர்த் துயர்ந்ததும் எத்தனை கோடி ஐயா! மூர்த்தியாய் வந்துதமிழ்க் கீர்த்தியை மொழிந்தநல் வாயாலே முத்தம் தருகவே! மூதறிஞர் பேரவையில் சீதனமாம் மறைமலையே! 4) முழுநிலா முத்தம் தருகவே! சீர்காழிச் சிற்றம்பலப் புலவர் எழுதிய துகளறுபோதம் எனும் நூலுக்கும், சிவஞான சித்தியார் பதினான்கு செய்யுட்கும், திருமந்திரம் முப்பது பாடல்களுக்கும் அடிகள் உரை எழுதினார். சித்தாந்த தீபிகை என்னும் மாத இதழுக்கு ஆசிரியராக இருந்தார். பரிதிமாற் கலைஞர் எனப்படும் வி.கோ.சூ. அவர்களுடன் அடிகள் 1896 ஆம் ஆண்டு முதல் சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் 13 ஆண்டுகள் தமிழ்ப்பணி புரிந்தார். ஆங்கில நூல்கள் பலவற்றையும், எடிசனின் நூல்களையும் தமிழில் மொழி பெயர்த்தார். கனிவான சோமசுந் தரநாய கப்பெருமான் களித்திடச் சொன்ன தாலே கற்றநற் சிவஞான போதமும் பிறநூலும் கடல்மடை திறந்த தேபோல் தனியான செந்தமிழ்ப் பிரவாக மாகவே, தணிகைமணி செங்கலவ ராயரும் தன்னிகரே இல்லாத ரசிகமணி சிதம்பரர் தமிழ்வையா புரியினோடு மனிதருள் மாணிக்கம் நாவலர் பாரதி மாணவர் ஆகி நிற்க மாத்தமிழ் கற்பித்து மூத்தநற் புலவோர்க்கு மதிதரும் பரிதி ஆனோய்! முனிசொன்ன சிவஞான போதத்தைக் கற்றநல் வாயாலே முத்தம் தருகவே! மூதறிஞர் பேரவையில் சீதனமாம் மறைமலையே 5) முழுநிலா முத்தம் தருகவே! திருவருள் துணையினால் பிணிநீங்கி வந்ததால் திருவொற்றி முருகன் மீது செந்தமிழ்ப் பாடலால் மும்மணிக் கோவையைச் செகமெலாம் போற்று மாறும், குருவெனும் நாயகர் பிரிவினால் காஞ்சியைக் குவலயம் போற்று மாறும், கொழிதமிழ் வளர்த்திட ஞானசா கரமெனும் குணமிகு பத்தி ரிக்கை அடிகளின் குருவாகிய சோமசுந்தர நாயகரின் ஆணைப்படி அடிகள் சிவஞான போதம் பற்றியும் பிற நூல்கள் பற்றியும் ஊருக்கூர் சொற்பொழிவுகள் செய்தார். தணிகைமணி செங்கல்வராயர், ரசிகமணி டி.கே.சிதம்பரநாதர், வையாபுரிப்பிள்ளை ஆகியோர் அடிகளின் மாணவர்கள் ஆவர். உருவுடன் வெளிவர எழுதுகோல் தீட்டிய ஒப்பிலா ஓவி யங்கள் உலகினை ஈர்த்ததும் உன்புகழ் ஆர்த்ததும் உன்னவோ கசியும் உள்ளம்! முருகரின் மும்மணிக் கோவையைப் பாடிய வாயினால் முத்தம் தருகவே! மூதறிஞர் பேரவையில் சீதனமாம் மறைமலையே! 6) முழுநிலா முத்தம் தருகவே! செக்கினை இழுத்தவன் கப்பலை ஓட்டியே செம்மாந் திருந்த புலவன் சிதம்பரன் தன்னையே உறுப்பினன் ஆக்கியே சீர்மிகும் ஞானசா கரத்தினைத் திக்கெலாம் பரப்பியே துக்கடா இதழ்களைத் தீர்த்தநற் சேவை யாலே தெளிவுரை விரிவுரை திருவா சகஉரை தீந்தமிழ் நாடு கொள்ளச் சிக்கெனப் பிடித்தமா ணிக்கவா சகரது சீர்மிகு காலஆ ராய்ச்சியும் சிவமதம் காப்பியம் இலக்கணம் ஆராய்ச்சி செய்ததும் கோடி ஆகும். திருவொற்றி முருகன் அருளால் கொடிய நோயினின்றும் பிழைத்ததால் அடிகள் திருவொற்றி முருகர் மும்மணிக் கோவை எனும் நூலை 1899 ஆம் ஆண்டில் பாடினார். குருவாகிய நாயகர் 22 -2-1901 இல் மறைந்ததால் அவர் மீது சோமசுந்தரக் காஞ்சி எனும் நூலை அடிகள் பாடினார். ஞானசாகரம் (அறிவுக்கடல்) எனும் மாத இதழை அடிகள் 1904 ஆம் ஆண்டில் தொடங்கி நிறைய எழுதினார். முக்கியம் தமிழெனத் திக்கெலாம் மொழிந்தநல் வாயினால் முத்தம் தருகவே! மூதறிஞர் பேரவையில் சீதனமாம் மறைமலையே! 7) முழுநிலா முத்தம் தருகவே! சிறுவனாய் ஐயொரு மூன்றெனும் ஆண்டிலே செந்தமிழ் பயில வந்து திருக்குறள். தொல்புகழ்க் காப்பியம், காரிகை, சிற்றம்ப லக்கோ வையும், பொறுமையாய்ப் பெரியதாம் புராணமும், கல்லாடம், புகழ்கலித் தொகையுடன், சிலம்பும், பொற்புடை நாலடி, புகழ்பத்துப் பாட்டுடன், பூத்தநன் னூல்வி ருத்தி, திருமிகு சிவஞான போதமும், சித்தியும், தீந்தமிழ்த் தண்டி யோடு, தெய்வமாம் இறையனார் அகப்பொருள் உரையுடன், சிந்தா மணியும்ஆ றாண்டில் முருகனாய் வளர்ந்திவண் நெட்டுருச் செய்தநல் வாயினால் முத்தம் தருகவே! மூதறிஞர் பேரவையில் சீதனமாம் மறைமலையே! 8) முழுநிலா முத்தம் தருகவே! அடிகள் தொடங்கிய ஞானசாகரம் மாத இதழுக்கு வ.உ.சிதம்பரனார் அவர்களும் சந்தா செலுத்தி உறுப்பினர் ஆனார். அடிகளின் மாணிக்கவாசகர் கால ஆராய்ச்சி எனும் நூல் புகழ்பெற்றது ஆகும். ஐயொரு மூன்று = 15. அடிகள் தமது 15ஆம் வயதில் தமிழ்நூல்களை மனப்பாடம் செய்யத் தொடங்கினார். ஆறே ஆண்டுகளில் மேற்கண்ட நூல்களை நெட்டுருச் செய்து முடித்தார். சித்தாந்த சிவசபைத் தலைவனே! சென்னையில் திருவருட் பிரகாச சபையும் மெய்கண்ட சந்தான சபையுடன் நாகையில் மேலான மலைக்கோட் டையில் முத்தான தஞ்சையில் தூத்துக் குடியினில் மூலைகள் தோறும் எல்லாம் முழுமுதற் சிவபரம் பொருளினைப் பற்றியே மொழியசித் தாந்த சபைகள் கொத்தாக முளைத்திடச் சிதம்பரச் சபையினில் குவலயம் போற்று மாறு கொழும்பிலே உள்ளவர் ராமநா தத்துரை கொழிதமிழ்த் தலைமை ஏற்க முத்தான முதல்மாநா டாக்கியே மொழிந்தநல் வாயினால் முத்தம் தருகவே! மூதறிஞர் பேரவையில் சீதனமாம் மறைமலையே 9) முழுநிலா முத்தம் தருகவே! அடுத்தமா நாட்டினைப் பாண்டித்து ரைத்தேவர் ஆன்றதோர் தலைமை தன்னில் அருளுக்கு வழிகாட்டும் அம்பல வாணன்தான் அழகாடும் சிதம்ப ரத்தில் 1905 -ஆம் ஆண்டில் அடிகள் சைவசித்தாந்த சபை தொடங்கி அதன் தலைவரானார். இதற்கு நாடு முழுதும் கிளைகள் தோன்றின. சென்னையில் திருவருட்பிரகாச சபை, மெய்கண்ட சந்தான சபை ஆகியன கிளைகள் ஆகும். நாகை, திருச்சி, (மலைக்கோட்டை), தஞ்சை, தூத்துக்குடி, சிதம்பரம் ஆகிய பல ஊர்களில் கிளைகள் தோன்றின. சிதம்பரத்தில் 1906 -ஆம் ஆண்டில் அடிகளால் முதல் மாநாடு சிறப்பாக நடத்தப்பெற்றது. கொழும்பு இராமநாதத் துரை தலைமை தாங்கினார். எடுத்தபின், மூன்றம்மா நாட்டினை நாகையில் ஈடிலா நல்லு சாமி எழில்தலைமை கொள்ளவே முடித்தபின் திருச்சியில் இணையிலா நான்காம்மா நாட்டை, கொடுத்துயர் யாழ்ப்பாணக் கனகமாம் சபைப்புலவர் கொழிதமிழ்த் தலைமை கொள்ளக் குணமுடன் மாநாடு பலகண்டு செயலாற்றிக் குவலயம் போற்று குமரா! முடித்திடா உரைகளைத் தொடுத்துளம் கவர்ந்தநல் வாயினால் முத்தம் தருகவே! மூதறிஞர் பேரவையில் சீதனமாம் மறைமலையே! 10) முழுநிலா முத்தம் தருகவே! இரண்டாம் மாநாடு சிதம்பரத்தில் பாண்டித்துரைத் தேவர் தலைமையிலும், மூன்றாம் மாநாடு நாகையில் நல்லுசாமிப் பிள்ளை தலைமையிலும, நான்காம் மாநாடு திருச்சியில் யாழ்ப்பாண வள்ளல் கனகசபைப் புலவர் தலைமையிலும் நடைபெற்றன. எழுதத் தொடங்கி முடிக்காத பல உரைகளை அடிகள் பேச்சில் வெளிப்படுத்தினார். 6. வாரானைப் பருவம் கண்டோர் கரம்குவிய உண்டோர் மனமகிழக் கற்பூரச் சொல்லோ வியங்கள் கடலாடு சென்னைமுதல் அலையாடு குமரிவரை கன்னித் தமிழ்மாந்தர் கேட்க செண்டோ எனவாகி, வண்டோ எனமக்கள் செந்தமி ழால்சுற்றி நிற்க சீரோடு தளைதோய நாரோடு மலர்தோய செம்பவள வாய்தி றந்து தொண்டோ, பொதியமலைத் துண்டோ எனுமாறு தொல்லரிய தமிழை ஈந்து தூய்மைக்கும் தமிழ்ப்புலவர் வாய்மைக்கும் சான்றாகத் தோள்தட்டி வந்த செல்வா! பண்டோர் அகத்தியனைக் கொண்டோர் உருவமெனப் பைந்தமிழ் தனைப்பருக வருகவே! பல்லா வரத்திலெழு பிள்ளாய்! தமிழ்ஒழுகு பச்சைக் குழந்தாய் வருகவே! சென்னை முதல் குமரி வரை அடிகள் சொற்பொழிவாற்றினார். பூச்செண்டாக அவர் திகழ மக்கள் அவரை வண்டாகச் சுற்றினர். தமிழ் பிறந்த பொதிய மலையின் ஒரு துண்டு போல மறைமலை தொண்டு செய்தார். அகத்தியனின் மறுபிறவியாக வந்தார். கற்ற நூல்கோடி கவிசொல் தாள்கோடி கனகமா மலையி லுள்ள கற்றைச் சடையவனாம் கங்கைக் கிறையவனாம் கண்மூன் றுடைய பெம்மான் நெற்றிக் கண்ணில்எழு வெற்றித் திருமுருகன் நேயமிகும் அருண கிரியோ? நெல்லைப் பொருநையிலே கல்லைக் குடைவித்த நேர்த்திமிகு குறுக்குத் துறையோ? பற்றிப் படர்தற்குப் பொற்றேர் கொடிக்கீந்த பாரிப் பறம்பு மலையோ? பாலைக் கலந்து தமிழ்த் தேனைக் குழைத்துதரும் பண்பு வேத மலையோ? பற்று தமிழுக்கு; முற்றில் எனக்கண்ட பச்சைக் கிளியே! வருகவே! பல்லா வரத்திலெழு பிள்ளாய் தமிழ்ஒழுகு 2) பச்சைக் குழந்தாய் வருகவே! சட்டை துறந்தாலும் சாட்டை துறவாமல் சபையில் தமிழ்முழக்க மிட்டு சங்கம் ஒருமார்க்கம் சான்ற சன்மார்க்கம் சாலும் நெறியென்று சொல்லி அடிகள் கற்றநூலும், அவருக்குக் கவிசொன்ன தாளும் கோடியாகும். தமிழும் பக்தியும் இயைந்த அருணகிரியோ? குறுக்குத் துறையோ? பறம்பு மலையோ? இந்த (வேதாசலம்) வேத மலையாகிய மறைமலை அடிகள் யார்? தமிழில் இவர் வைத்த பற்றுக்கு முடிவில்லை. நிட்டை பயிலாமல் நீரில் துயிலாமல் நீண்ட தமிழ்த்தவமே பூண்டு நித்தம் நடந்தோடி சித்தம் கவிபாடி நெக்கு நெக்கெனவே உருகிக் குட்டை குளங்களென மட்டை மரங்களெனக் குந்தி யிருந்ததமிழ் மாந்தர் குன்று போல்நடந்து வென்று மிகஉயரக் கோடி ழுக்கவந்த குமரா! பட்டைத் திருநீறும் சுற்றித் துறவாடை பண்டைத் தமிழ்ப்புலவா! வருகவே! பல்லா வரத்திலெழு பிள்ளாய்! தமிழ்ஒழுகு 3) பச்சைக் குழந்தாய்! வருகவே! பண்பில் சவுந்தரமோ பழகப் பொன்னம்மாள் பாசக் கண்ணம்மாள் என்று பண்டு முத்தாரம் கொண்ட நாதனெனப் பாரில் இல்லறமே பூண்டு நண்பில் திருவரங்கம் செந்தில் ஆறுமுகம் நல்ல பெரியநா யகமும் நாளும் உதவிசெயும் வைரவ நாதபிள்ளை நற்றெய்வ நாயகமும் ஆகி அன்பால் பொருளுதவி நின்பால் செய்திடவே அச்சுத் தொழிற்கூடம் கண்டே ஆரா தனைசெய்ய நீராய் மைஊற்றி அச்சுப் பூப்பொட்டு நித்தம் நீரிலும் நெருப்பிலும் தவம் புரியாமல் தமிழ்த் தவம்பூண்டு மக்கட்பணி புரிந்தவர் அடிகள்.சவுந்தரம்மாள், பொன்னம்மாள், கண்ணம்மாள் என்ற மூன்று தாரம் அடிகட்கு உண்டு. பண்பால் தமிழ்த்தாயை அன்பால் வணங்கிடவே பைய நடைபோட்டு வருகவே! பல்லா வரத்திலெழு பிள்ளாய்! தமிழ்ஒழுகு 4) பச்சைக் குழந்தாய் வருகவே! சிந்தா மணியினொடு நந்தா நீலாம்பிகை ஞான சம்பந்தன் மணிவாசகம் திருநா வுக்கரசு பெருநாச் சுந்தரம் திரிபுர சுந்தரி யோடு முந்து முதல்மனைவி தந்து வளர்செல்வம் முனைஅம் பலவாணன் கலாவதி மூத்த பச்சையப்பன் ஏத்து சொக்கம்மாள் முயன்று தமிழ்வளர்க்க ஈந்தோய்! மந்தா கினிபோல சிந்தா மணியோடு மக்கட் செல்வங்கள் கோடி! மழையோ எனுமாறு தழையும் தமிழுக்கு மாண்பாய் உவந்தளித்த தாலே பந்தாய்க் குதியாமல் நந்தாய் ஒளியாமல் பாகாய் மழலைதர வருகவே! பல்லா வரத்திலெழு பிள்ளாய்! தமிழ்ஒழுகு 5) பச்சைக் குழந்தாய்! வருகவே! கொழும்பில் வாழ்ந்த திருவரங்கனார், செந்தில் ஆறுமுகம் பிள்ளை, பெரியநாயகம் பிள்ளை, வைரவநாத பிள்ளை, தெய்வநாயகம் பிள்ளை ஆகியோரின் பொருள் உதவியால் அடிகள் /திருமுருகன் அச்சுக்கூடத்தைத் தொடங்கினார்.சவுந்தரவல்லி அம்மாள் பெற்ற குழந்தைகள் = சிந்தாமணி, நீலாம்பிகை, ஞானசம்பந்தன், மணிவாசகம், திருநாவுக்கரசு, சுந்தரம், திரிபுரசுந்தரி ஆகிய எழுவர்.பொன்னம்மாள் பெற்ற குழந்தைகள் = அம்பலவாணன், கலாவதி ஆகிய இருவர்.கண்ணம்மாள் பெற்ற குழந்தைகள் = பச்சையப்பன், சொக்கம்மாள். மந்தாகினி = கங்கை. நந்து = சங்கு கல்விப் பணியோடு சைவப் பணிசெய்யப் கச்சை கட்டிவந்த தாலே கற்றுத் துறைபோய முப்பத் தைந்தாண்டில் காவி மனம்படைத்த வள்ளல் சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே எனநிறுவிச் சொக்கன் பதம்பணிந்து பாடிச் சோர்வு சிறிதுமின்றி ஊர்கள் பலவுமுற்று சுற்றி இலங்கையிலும் வந்து நல்லார் பலர்உறவும் வல்லார் பலர்தொடர்பும் நாடிப் பெற்றதனால் எங்கும் நல்ல தனித்தமிழை வெல்ல வழிஅமைத்து நாட்டில் பரப்பவிதை வித்திப் பல்லார் கரம்குவிக்க வல்லார் சிரமசைக்கப் பச்சைக் கற்பகமே! வருகவே! பல்லா வரத்திலெழு பிள்ளாய்! தமிழ்ஒழுகு 6) பச்சைக் குழந்தாய்! வருகவே! பாகும் கனியதமிழ் பாடும் வள்ளலது பாடல் அருட்பாவில் மூழ்கிப் பண்ணில் குழையபெரு விண்ணில் உள்ளவரும் பக்கம் இருந்துதமிழ் கேட்க நாகும் பால்மறக்க நாதம் யாழ்மறக்க நாடும் செயல்மறந்துமு நிற்க நல்ல அம்பிகையாம் வல்ல தமிழ்நீலா நாடி ஒருகேள்வி கேட்கத அடிகள் தமது முப்பத்தைந்தாம் ஆண்டில் (1911 -ஆம் வருடத்தில்) துறவுபூண்டார். தேகம் என்றவட சொல்லை நீக்கிஅதில் யாக்கை என்றசொல்லைப் பெய்தால் தேனில் கலந்ததொரு பாலைப் போலினிமை தேக்கும் தனித்தமிழே என்னப் பாகு தனித்தமிழைப் பாரில் பரப்பவரு பச்சைப் பசுங்கிளியே! வருகவே! பல்லா வரத்திலெழு பிள்ளாய்! தமிழ்ஒழுகு 7) பச்சைக் குழந்தாய்! வருகவே! பெருவா சகங்களிலெலாம் திருவா சகத்தினது பெருமை தனையறியார் யாரோ? பேணி அதற்குரைகள் காணின் உடன்வீடு பெறுவர் எனும்உரையும் பீடோ? திருவா சகத்தினுரை தீட்டி முடியுமுனே தென்றல் நடைபயிலும் ஆசான் தென்னர் புகழவரும் அண்ணா மலைக்கழகத் தேசம் புகழும்கதி ரேசன் பெருவான் புகுந்தகதை கருவாய் உள்ளவரும் பேசித் தெரிந்தகதை அன்றோ? பீடு தனித்தமிழில் நாடு மகிழ்ச்சிகொளப் பேழைக் களஞ்சியத்தில் நித்தம் 1911-ஆம் ஆண்டில் ஒருநாள் அடிகள் பெற்ற தாய்தனை என்ற திருவருட்பாப் பாடலை இனிமையாய்ப் பாட, அதைக் கேட்ட அவரது மகள் நீலாம்பிகை அப்பாடலில் உள்ள தேகம் என்ற வடசொல்லுக்கு பதிலாக யாக்கை என்ற தமிழ்ச்சொல் இருந்தால் மேலும் இனிமையாக இராதா? என்று கேட்டதனால், அடிகள் தனித்தமிழ் இயக்கம் தொடங்கினார். பருக விரிவுரைகள் திருவா சகம்பெறவே பச்சைப் பசுங்குதலாய்! வருகவே! பல்லா வரத்திலெழு பிள்ளாய்! தமிழ்ஒழுகு 8) பச்சைக் குழந்தாய்! வருகவே! கல்லா திருந்தவரும் சொல்லா திருந்தவரும் கடவுள் நிலையறிய வேண்டிக் கற்ற மனத்துடனே முற்ற முழுத்துறவில் கண்ட கடவுள்நிலைக் கொள்கை எல்லாக் கடவுளரும் ஒன்றே எனும்பொதுமை ஏற்ற கொள்கை எனக் கூறி எங்கும் சாதிமத பங்கம் இல்லையதில் ஏற்ற ஒழுக்கம் அருள் அன்பு நல்ல தனித்தமிழில் வல்ல நடையதனில் நாளும் வழக்குமுறை கொள்ள நாட்டில் பொதுநிலைமை கூட்டக் கழகமென நாடி உருவமைக்க ஓடிப் திருவாசகத்திற்கு உரை எழுதுவோர் அது முடியுமுன் முக்தி பெறுவர் என்பது பழமொழி. அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்ப்பேராசிரியர் பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார் அவர்கள் திருவாசக உரை எழுதத் தொடங்கி அது முடியுமுன் மறைந்தார்கள். மறைமலை அடிகள் 1920 பிப்ரவரி முதல் 22 ஏப்ரல் வரை தாம் நடத்திய செந்தமிழ்க் களஞ்சியம் எனும் மாத இதழில் திருவாசகம் முதல் நான்கு அகவலுக்கு உரை எழுதினார். உரை முற்றுப் பெறவில்லை. 1910 - ஆம் ஆண்டில் அடிகள் பொதுநிலைக் கழகம் தொடங்கினார். பல்லா வரத்திலொரு கழகம் அமைக்கவரு பச்சை மரகதமே! வருகவே! பல்லா வரத்திலெழு பிள்ளாய்! தமிழ்ஒழுகு 9) பச்சைக் குழந்தாய்! வருகவே! பொன்னில் உள்ளவனோ? கண்ணில் உள்ளவனோ? போற்றும் அருட்பாவில் தானோ? பூசைப் பொருள்களிலோ? ஆசை மனங்களிலோ? பூவில் நீரில்மிதந் தானோ? விண்ணில் உள்ளவனோ? மண்ணில் உள்ளவனோ? வீழும் மழைத்துளியில் தானோ? வெற்றி முழவொலியில் சுற்றி ஆடுபவன் வேடம் உள்ளசுடு காடோ? பண்ணில் உள்ளவனோ? பலத்தில் உள்ளவனோ? பாகும் கனியமொழி பாடின் பதமும் சலிக்கஉயர் மதமும் தழைக்கநடம் பயிலும் தில்லைநட ராஜன் பண்ணில் திளைக்கதமிழ்ப் பல்லா வரத்திலொரு கோயில் படைக்கவென வருகவே! பல்லா வரத்திலெழு பிள்ளாய்! தமிழ்ஒழுகு 10) பச்சைக் குழந்தாய்! வருகவே! அதன் கொள்கைகள்:- 1) ஒன்றே குலம் ஒருவனே தேவன். 2) அன்பு அருள் ஒழுக்கம். 3) தனித் தமிழ். நடராஜப் பெருமான் பொன்னம்பலத்தில் இருக்கிறாரா? அல்லது மேற்குறிப்பிட்டுள்ள இடங்களிலா? அத்தகு நடராஜப் பெருமானுக்கு மறைமலை அடிகள் பல்லாவரத்தில் பொதுநிலைக் கழக மாளிகையில் அம்பலவாணர் திருக்கோயில் கட்டி நால்வர் படம் வைத்து 2-2-1931 இல் குடமுழுக்குச் செய்தார். 7. அம்புலிப் பருவம் கண்ணைக் கவர்தலிலே உன்னைப் போலொருவன் கன்னித் தமிழி லுள்ளான் கலைகள் பலநிறைந்து நிலைகள் பலவளர்ந்து கருத்தில் அமுதம் உள்ளான். மண்ணில் உள்ளவரை மயக்கும் அழகுடையான் மதியும் உச்ச முள்ளான் மல்லி கைபோல வெள்ளி மீன்சூழ மாலை விண்மீன்கள் கொண்டாய்! எண்ணில் இங்கவனும் மல்லி கைமாலை இனிய மேடைகளில் சூடி இதயம் கவர்ந்துலகில் உதயம் ஆவதனால் இவனும் உன்னவனே ஆவான்! அன்னைத் தமிழ்வளரும் சென்னைத் தலைநகரில் அம்புலீ ஆட வாவே! அத்தன் உயர்தமிழில் சித்தன் அடிகளுடன் 1) அம்புலீ ஆட வாவே! கண்ணைக் கவர்தல், கலைகள் நிறைதல், நிலைகள் வளர்தல், அமுதத்தோடு உடன்பிறத்தல், மயக்கும் அழகு, உச்சமதி, (விண்மீன்,மல்லிகை) மாலை சூடல், இதயம் கவர்தல், உதயமாதல் ஆகியவற்றில் சந்திரனும் மறைமலை அடிகளும் ஒப்புமை. மேகம் மறைத்தாலும் சோகத் திரையின்றி மேலும் வளர்ந்தினிமை செய்வாய், மெல்ல வளர்ந்தாலும், உடலம் தளர்ந்தாலும் மேன்மை நீகுறைய மாட்டாய். தாகம் கொண்டதனால் தியாக மனத்தினொடு தார ணிக்கேஒளி தந்தாய்! தாயின் அருகினிலே தந்தை முடியினிலே தவழ்ந்து நீபெருமை கொண்டாய்! யாகம் புரிந்தாலும் ஆக முடியாத யாணர்ப் பெருமைதனைக் கொண்டான். யாழின் இசைபோலப் பாடி மகிழ்வித்து யாண்டும் புகழ்ஒளிகள் செய்வான். ஆகம் குளிரவனைச் சேர்ந்து நீஉலகில் அம்புலீ ஆட வாவே! அத்தன் உயர்தமிழில் சித்தன் அடிகளுடன் 2) அம்புலீ ஆட வாவே! சந்திரன் அடிகள் (ஒப்புமை) மேகம் மறைத்தல் - எதிரிகள் இகழ்ச்சி மறைத்தல் மதி வளர்தல் - புகழ் வளர்தல். உடல் குறைதல் - உடல் பிணி உறுதல். ஒளி வீசல் - புகழ் ஒளி வீசல். சக்தியாகிய தாய் அருகில் - தாய் தந்தையர்க்குப் சிவன் முடியில் இருத்தல் பெருமை தருதல். கோகி லங்கள்எலாம் கூவி உனைஅழைத்துக் குரலில் கடிதங்கள் கூறும். கொள்ளை ஆசைகளைக் கோகி லாம்பாள்கடி தங்கள் எடுத்திங்கே கூறும். ஊகித் துரைப்பதிலும் மூழ்கித் திளைப்பதிலும் உன்னைப் புலவரெலாம் கொள்வார். ஊரில் உள்ளவர்கள் பாரில் இவன்புகழை உணர்ந்து பாடிமகிழ் வுண்டார். சாகித் தியங்கள்எலாம் பாடிப் பரவிடவே சான்ற நிலவொளிகள் செய்வாய். சாகித் தியக்குழுவும் சான்ற தமிழ்க்குழுவும் சாற்று கவிபாடச் செய்தான். ஆகி வளர்ந்ததனால் நீயும் இறங்கிஇவண் அம்புலீ ஆட வாவே! அத்தன் உயர்தமிழில் சித்தன் அடிகளுடன் 3) அம்புலீ ஆட வாவே! மறைகள் உனைச்சரணம்; மலையை நீசரணம் மதியே! நீ திகழும் காட்சி! மறையும் மலையும்எலாம் சரணம் இவனைஉற மாண்பால் இவன்பெயரே சாட்சி! சந்திரன் மறைமலை அடிகள் (குயில்) கோகிலங்கள் குரல் மூலம் கோகிலாம்பாள்கடிதங்கள்சந்திரனுக்குக் கடிதம் அனுப்பல். எனும் நூல் எழுதல். புலவர்கள் மூழ்கித் திளைத்தல் அப்படியே. சாகித்தியங்கள் (பாடல்கள்) சாகித்தியக் குழுவும் புலவர் பாடுதல் குழுவும் பாராட்டல். குறைகள் அத்தனையும் நிறைவு செய்வதிலும் குளிரும் நிலாவினிலும் நீயே! கொண்ட காதலினை நிறைவு செய்ததனால் குளிரும் நீலாமனம் தாயே! பிறைகள் வளர்வதுவும் பின்னர் தேய்வதுவும் பேசும் வானுலகில் உண்டு. பிழைகள் வளர்வதுவும் பின்னர் தேய்வதுவும் பேசும் இவனிடத்தில் இல்லை. அறையும் கடலாடி வானில் ஆடவரும் அம்புலீ ஆட வாவே! அத்தன் உயர்தமிழில் சித்தன் அடிகளுடன் 4) அம்புலீ ஆட வாவே! சந்திரன் அடிகள் மறைகள் சந்திரனைச் சரண் மறைமலை பெயரில் அடைந்து பாடும். காலை, சரணம். மாலையில் சந்திரன் மலையைச் சரணடையும். குறைகளை நிறைவு செய்கிறது அடிகள் மனக் குறைகளை (வளர்பிறை) நிலா குளிர்கிறது. மாற்றிக் கொள்வார். திருவரங்கனாருடன் கொண்ட மனக்குறையை மாற்றிக் கொண்டு அவருக்குத் தம் மகள் நீலாவை மணம் முடித்துக் கொடுத்தார். அதனால் நீலா மனம் குளிர்ந்தது. பிறைகள் வளரும் தேயும் பிழை செய்வது அடிகளுக்கு இல்லை. கடலில் மூழ்கிமந் தரத்தின் உதவியினால் காட்சி கொடுத்துயர்ந்தாய் மதியே! கடலாய் தமிழில்இவன் திடமாய் மூழ்கிமந் திரத்தால் வென்றதும் மதியே! உடலில் உனக்குமொரு குறையும் உண்டெனவே உலகம் இன்றுவரை சொல்லும் உடலில் இவனுமொரு கழலை நோயதனால் உலகில் மிகத்துயரம் கொள்ளும். கடலைக் கடந்துதினம் உலகைச் சுற்றிஒளிக் கதிரைப் பரப்பிவரும் மதியே! கடலைக் கடந்திவனும் இலங்கைத் தரணியதில் கதிராம் அறிவொளிசெய் பதியே! அடலில் வென்றவனாம் அடிகள் ஐயனுடன் அம்புலீ ஆட வாவே! அத்தன் உயர்தமிழில் சித்தன் அடிகளுடன் 5) அம்புலீ ஆட வாவே! சந்திரன் அடிகள் கடலில் இருந்து மந்தர மலை தமிழ்க் கடலில் மூழ்கியின் உதவியால் பிறந்து வானில் வடமொழி மந்திரங்கள் உயர்ந்தது கற்று உயர்ந்தார். முயற் கறை உடலில் உண்டு கழலை நோய் உண்டு. கடலைக் கடந்து ஒளி பரப்புகிறது கடலைக் கடந்து இலங் கையில் அறிவொளி பரப்பினார். புத்த கங்கள்எலாம் சித்தன் எனமகிழ்ந்து போற்றி உனைப்பாடும் மதியே! புத்த கங்களெலாம் புகழ்ந்து இனியன்எனப் போற்றிப் பாடுவதும் இவனை! மெத்தக் காதலர்கள் சென்னை மாநகரில் மேவி ஏற்பதுவும் உன்னை. மேன்மை மிக்கதமிழ்க் காதல் உள்ளமெலாம் மேவும் சென்னையிலே இவனை. சொத்து சுகங்கள்எலாம் சேர்த்துக் கொண்டதில்லை சோதி உலகினுக்குத் தந்தாய். சொத்து சுகமும்இவன் சேர்த்த தில்லைநட ராஜ சோதியினைத் தந்தான். அத்தி பூத்ததுபோல் சித்தி பெற்றவனுடன் அம்புலீ ஆட வாவே! அத்தன் உயர்தமிழில் சித்தன் அடிகளுடன் 6) அம்புலீ ஆட வாவே! சந்திரன் அடிகள் புத்தகங்கள் புகழும் அப்படியே. காதலர் வரவேற்பர் தமிழ்க் காதலர் வரவேற்பர் சொத்து சுகம் இல்லை சொத்து சுகம் தேடவில்லை. உலகிற்கு சோதி வழங்குகிறது சோதி வடிவான அம்பல வாணர்க்குக் கோயில் அமைத்தார். வீட்டில் உனக்குமொரு வெள்ளி உண்டுவான் வீதி தன்னில்நீ காட்டுவாய்! வீடு பேறிவனும் கிழமை வெள்ளியிலே வெற்றி யோடுபுகழ் ஈட்டுவான். கூட்டில் உனக்குமொரு முறியும் உண்டெனவே கூறு போடுவதும் நாகமே! கூறில் இவனுமொரு முறியை எழுதியதால் கூறு போடுவதும் பாகமே! ஈட்டி எய்தரிய புகழைக் கொண்டமதி ஏறி யதும்சிவன் சித்தமே! இவனும் இன்றுவரை எழுதும் நூல்களெலாம் ஏறியதும் சைவசித் தாந்தமே! ஆட்டிப் படைப்பவனாம் நாட்டுப் புலவனுடன் அம்புலீ ஆட வாவே! அத்தன் உயர்தமிழில் சித்தன் அடிகளுடன் 7) அம்புலீ ஆட வாவே! சந்திரன் அடிகள் வான வீதியில் வெள்ளி உண்டு. வீடு பேறு பெற்றது வெள்ளிக்கிழமை உடலை ராகு கேது விழுங்கு இறுதி முறி (Will) எழுதித் வதால் உடல் கூறுபட்டு முறி தன் எழுத்து வருவாய் படுகிறது எவ்வாறு கூறு போடப்பட வேண்டும் என்று பாகம் பிரித்தார். சிவன் தலையில் ஏறி இருப்பது இவரது நூல்கள் சிவன் சித்தப்படி அச்சேறுவது சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தால். கற்கள் கூடஉனைக் கண்ட போதுதினம் காந்த சக்தியால் உருகுமே! கண்ணில் கண்டவுடன் மண்ணில் உள்ளமனக் கற்கள் யாவும்இவன் உருக்குமே! பற்கள் இல்லைஎன மதியே! உன்னைநிதம் பாடும் யாவருமே சொல்லுவார். பற்கள் யாவும்உன தினிய வாயினின்று பாடும் இவனிடத்து வந்ததோ? புற்கள் அல்லிமுதல் முல்ப் பூக்களெலாம் போற்றி வாழ்த்துவதும் உன்னையே! பூதி மான்கள்அனு பூதி மான்களெலாம் போற்றி வாழ்த்துவதும் இவனையே! அற்ப மில்லைஇவன் சொற்ப மில்லைஎன அம்புலீ ஆட வாவே! அத்தன் உயர்தமிழில் சித்தன் அடிகளுடன் 8) அம்புலீ ஆட வாவே! சந்திரன் அடிகள் சந்திரனைக் கண்டதும் சந்திர இவனைக் கண்டதும் கல் காந்தக் கல் உருகும் மனமும் உருகும் பல் இல்லை சந்திரனின் பற்கள் இவனிடம் வந்ததுபோல் பற்கள் ஒளி வீசும். புல் முதல் அல்லி வரை பூதி மான்கள் அனுபூதி எல்லாம் வாழ்த்தி வரவேற்கும் மான்கள் எல்லோரும் வரவேற்பர். தண்ட பாணிநட ராச னாரொடு தமிழவ ளர்க்கும்சுப் பையாவும் தர்மாம் பாளொடு பண்டி தானந்தர் தழைத்த தும்இருவர் சொந்தமே! மண்ட லத்தினையே வென்ற தோடும்ஒரு மணிமொ ழிக்குலம் கண்டதும் மாத்தி ரையினில் நின்ற தோடும்தன் மானி என்றபேர் கொண்டதும் சண்ட மாருதங்கள் கொண்டு வந்ததுவும் சாதி பேதஇழை தகர்த்ததும் சாத்தி ரங்கள்உயர் கோத்தி ரங்களெலாம் சாம ரைக்கவரி வீசவும் அண்ட ரானஉயர் மதியை ஒப்புபவன் அம்புலீ ஆட வாவே! அத்தன் உயர்தமிழில் சித்தன் அடிகளுடன் 9) அம்புலீ ஆட வாவே! இருவர் = சந்திரன் & அடிகள் சந்திரன் அடிகள் தண்டபாணி (முருகன்) நடராசர் தண்டபாணிதேசிகர்,டாக்டர்சுப்பையா, தர்மாம்பாள் (தர்மபுத்திரர்) நடராசனார், வ.சுப்பையா பிள்ளை, ஆனந்தர் (நடராசர்) எல்லோரும் டாக்டர் தருமாம்பாள், பண்டித சந்திர பகவானுக்குச் சொந்தம். ஆனந்தர் அடிகளுக்கு நண்பர்கள். பூ மண்டலத்தை ஒளியால் வென்றான் புகழால் வென்றார் சந்திர குலத்தை உண்டாக்கினான் மணிமொழி நூலகம் ஏற்படுத்தி 4000 நூல்கள் சேர்த்தார். மாத்திரைகள் சந்திரனைப் போல எழுத்துக்கள் மாத்திரையில் உருண்டை சரியாக இருக்கும் தன்மானம் உடையவன் தன் மானி சூறாவளியை உண்டாக்குகிறது தனித்தமிழ்ச் சூறாவளியை உண்டாக்கினார் ஒளியில் சாதிபேதம் இல்லை சாதிபேதம் இல்லை சாத்திரங்கள் எல்லாம் புகழ்கின்றன நூல்கள், புலவர்கள் புகழ்கின்றனர். படத்தில் உண்டவனும் பாதை கொண்டவனும் பதுமை கண்டவனும் ஆனான். பழமை ஆனவனும் புதுமை ஆனவனும் பாகு பொழிபவனும் ஆனான். மடத்தை வென்றவனும் மதியில் நின்றவனும் மணிகள் பிறந்தவனும் ஆவான். மண்ணில் உள்ளவரும் விண்ணில் உள்ளவரும் மயங்க வந்துதித்து நின்றான். தடத்தில் பலர்தொடரக் குலத்தை வளர்த்ததுடன் தக்க பணிபுரிந்த தாலே தமிழில் தலைமையுடன் அமிழ்தின் நிலைமைபெறும் தங்க மறைமலையாம் ஐயன் அடர்த்தி உடையபுகழ் அள்ளிக் குவித்தவனோ டம்புலீ ஆட வாவே! அத்தன் உயர்தமிழில் சித்தன் அடிகளுடன் 10) அம்புலீ ஆட வாவே! சந்திரன் அடிகள் படம் எடுக்கும் பாம்பு உண்டவன் புகைப்படத்தில் உண்டு அவன் ஒளியால் உலகிற்குப் பாதை காட்டுபவன் - புதிய பாதை காட்டியவன் சிலைவடிவில் உள்ளான் சிலை உண்டு. பழமையும் புதுமையும் உடையவன் அப்படியே. பாகு போன்ற கிரணங்களைப் பொழிபவன் - பாகுமொழி பகர்பவன். மடங்களில் சந்திரனுக்கு உருவம், மடாதிபதிகள் பொன்னாடை ஆராதனை உண்டு - போர்த்திச் சிறப்பித்தனர். மதி எனும் பெயர் உண்டு - மதி (புத்தி) உடையவன். திருப்பாற் கடலில் இருந்து சந்திரன் இவருக்குப் பல ஆண்மணிகள்,பிறந்தபோது கெளதுபம் முதலிய பெண்மணிகள் பிறந்தன. மணிகள் பிறந்தன மண்ணும் விண்ணும் போற்றும் - அப்படியே. சந்திர குலத்தை வளர்த்தான் - தனித் தமிழ்க் குலத்தை வளர்த்தான். 8. சிற்றில் பருவம் தென்னை மரத்தின் தேங்காயாய்த் திருப்பாற் கடலின் திரவியமாய்த் தேசம் போற்றும் அறிவியலாய்த் தெளித்த ஞானத் தெள்ளமுதாய் மண்ணை வளர்க்கும் நல்லாறாய் மதியை வளர்க்கும் ஆசானாய் மாண்பை வளர்க்கும் வாசகமாய் மழையைப் பொழியும் மாமுகிலாய்ப் பெண்ணைப் போற்றும் தமிழ்மறையாய்ப் பேணிக் காக்கும் மருத்துவனாய்ப் பிறந்து வளரும் தமிழ்மணியே! பேசிப் பூக்கும் மறைமலையே! சென்னைப் பல்லா வரத்தினுயர் சிறுவா! சிற்றில் சிதையேலே! தேவா! தமிழர் செய்ததவச் செல்வா! சிற்றில் சிதையேலே! கானப் புள்ளாய் ஆனாயோ? கடைசிப் பிள்ளை ஆனாயோ? கந்தன் போல வந்தாயோ? கன்னித் தமிழைத் தந்தாயோ? வாசகம் = திருவாசகம். தமிழ்மறை = திருக்குறள். ஞானப் பெருக்கில் சாதேவன் நட்பின் முறையில் சுக்ரீவன் நல்ல றத்தில் மாதர்மன் நாளும் கொடையில் கோகர்ணன் வானம் பாடி நீதானோ? வாகை சூடி நீதானோ? வளரும் கீதை மொழிபோல வாழ்வில் மேதை ஆனோனே! தேனில் தமிழைக் குழைத்துதரும் சிறுவா! சிற்றில் சிதையேலே! தேவா! தமிழர் செய்ததவச் 2) செல்வா! சிற்றில் சிதையேலே! கண்ணின் நடுவே கருமணியே! கதையின் நடுவே உயிர்இழையே! களத்தின் நடுவே தேர்த்தட்டில் காட்சி கொடுத்த கருமுகிலே! எண்ணில் சிகரம் ஆனவனே! எழுத்தில் அகரம் ஆனவனே! ஈடில் பக்தி ஓங்காரம்! இதயம் நீத்தாய் ஆங்காரம்! பண்ணில் தும்புரு நீதானோ?! பலத்தில் ஆஞ்ச நேயன்தான் படையில் ஆளும் பார்த்தன்நீ! கானப் புள் = காட்டுப் பறவை. கடைசிப் பிள்ளைக்கு அறிவும் மதிப்பும் மிகுதி. சாதேவன் = சகாதேவன். பார தத்தில் வீமன்நீ! தெண்ணீர் அமுதைக் குழைத்துதரும் சிறுவா! சிற்றில் சிதையேலே! தேவா! தமிழர் செய்ததவச் 3) செல்வா! சிற்றில் சிதையேலே! நீலா பூமா இலக்குமியாய் நீரின் வண்ணன் கொண்டபடி நேயம் மூன்று பேர்களிடம் நெஞ்சம் கொண்ட திருமாலோ? பாலா றோடும் தமிழ்நாடும் பஞ்ச நதிபாய் பஞ்சாப்பும் பண்பாய்ச் சேர்ந்து வாழவெனப் பைந்தமிழ் வடமொழி பயின்றாயோ? காலோ டிருந்து பயனில்லை கடலோ டிகளும் வேண்டுமெனக் கடலைக் கடந்து சென்றாயோ? கதையும் எழுதி நின்றாயோ தேளோ நீக்கித் தமிழ்குழைக்கும் சிறுவா! சிற்றில் சிதையேலே! தேவா! தமிழர் செய்ததவச் 4) செல்வா! சிற்றில் சிதையேலே! உயிர் இழை = உயிர்க் கருத்து. கருமுகில் = கண்ணன். ஆங்காரம் = அகங்காரம் (மமதை) திருமாலுக்கு நீலாதேவி, பூமாதேவி, இலக்குமி என்ற மூன்று மனைவியர். அடிகளுக்கும் மூன்று மனைவியர். தேள் போன்ற கலப்புச் சொற்களை நீக்கித் தமிழைக் குழைத்துத் தருபவர் அடிகள். மந்தா கிளியின் தண்ணீரோ? வைகை நதியின் தமிழ்நீரோ? மலரும் பொன்னிச் சைவமதோ? மான சரோவார்ப் பொய்கையதோ? சிந்தா மணியோ? மேகலையோ? சிலப்பதி காரச் செழுஞ்சுவையோ? தேவா ரத்தின் இன்னிசையோ? திருவா சகத்தின் உள்ளுணர்வோ? நந்தா விளக்கோ? நாயகமோ? நாயன் மாரின் மறுபிறவியோ? நாவக் கரசின் சொல்மழையோ? நற்றேன் பொழியும் மலைக்கொம்போ? செந்தா மரையைப் பிழிந்துதரும் சிறுவா! சிற்றில் சிதையேலே! தேவா! தமிழர் செய்த தவச் 5) செல்வா! சிற்றில் சிதையேலே! வானில் தூவும் சரமழையோ? மண்ணில் தூவும் உரமழையோ? வளரும் கவிதை உரைமழையோ? வையம் காக்கும் மறைமலையோ? ஆனின் கணங்கள் காதாட்ட ஆடும் தென்றல் தாலாட்ட அசையும் பூக்கள் சீராட்டும் அழகுக் கண்கள் சூழலிசையோ? மந்தாகினி = கங்கை. மானசரோவர் = இமயமலையில் உள்ள ஏரி. ஊனில் உயிரில் கலந்துலவும் ஒப்பில் அருட்பாத் தீஞ்சுவையோ? உண்மை கண்ட சாக்கிரட்டீ உருவாய் வந்த புதியவனோ? தேனில் பாலைக் குழைத்துதரும் சிறுவா! சிற்றில் சிதையேலே! தேவா! தமிழர் செய்ததவச் 6) செல்வா! சிற்றில் சிதையேலே! நடரா சற்குக் கோயிலினை நயமாய்க் கட்டி முடித்தவனே! நால்வர் படமும் வைத்தவனே! ஞானசாகரம் அமைத்தவனே! திடமாய் முருகன் அச்சகமும் தீந்தமி ழுக்குச் செய்தவனே! திருவா சகத்தின் திருவுரைக்குச் செந்தமிழ்க் களஞ்சியம் படைத்தவனே! புடம்போட் டுத்தமிழ் மொழிவளர்க்கப் பொதுநிலைக் கழகம் புரிந்தவனே! பொன்போல் மணிமொழி நூலகத்தைப் போற்றி அமைத்த பூச்சரமே! திடமாய் ஆக்கும் காலாலே சிறுவா! சிற்றில் சிதையேலே! தேவா! தமிழர் செய்ததவச் 7) செல்வா! சிற்றில் சிதையேலே! கணங்கள் = கூட்டங்கள். அம்பலவாணர் கோயில், நால்வர் படம், ஞானசாகரம் இதழ், திருமுருகன் அச்சகம், செந்தமிழ்க் களஞ்சியம் இதழ், பொதுநிலைக் கழகம், மணிமொழி நூலகம் ஆகியன அடிகளின் ஆக்கப்பணிகள்,. முருகர் மும்மணிக் கோவை1 யுடன் முல்லைப் பாட்டின் ஆராய்ச்சி2 முதற்குறள் வாத நிவாரணம்3 முற்கா லத்தொடர் தமிழ்ப்புலவோர்4 உருகும் மணிவா சகர்வரலாறு5 உலகில் இறந்தபின் இருக்கும்நிலை6 உலவும் சிந்தனைக் கட்டுரைகள்7 உன்னத மான தமிழர்மதம்8 பருகும் சோம சுந்தரக்காஞ்சி9 பட்டினப் பாலை ஆராய்ச்சி10 பழந்தமிழ்க் கொள்கையே சைவசமயம்11 பண்டைக் காலத் தமிழர் ஆரியர்12 சிறுவர்க் கான செந்தமிழ்13 தந்த சிறுவா! சிற்றில் சிதையேலே! தேவா! தமிழர் செய்ததவச் 8) செல்வா! சிற்றில் சிதையேலே! கோகி லாம்பாள் கடிதங்கள்14 குமுத வல்லி15 சாகுந்தலம்16 கூறும் அறிவுரைக் கொத்து17 டனே குலவே ளாளர் நாகரிகம்18 ஆகும் சைவ சித்தாந்த ஞானபோதம்19 எனும் நூலும் அருஞ்சை வத்தின் நெருக்கடிநிலை20 அம்பல வாணர் திருக்கூத்து21 1 முதல் 13. அடிகள் எழுதிய நூல்கள். யோக நித்திரை22 தென்புலத்தார்23 தொலைவில் உணர்தல்24 மனித வசியம்25 பொருந்தும் உணவும் பொருந்தாஉணவும்26 மக்கள் நூறாண் டுயிர்வாழ்க்கை27 தேகத் தாலே தமிழ்க்கீந்த சிறுவா! சிற்றில் சிதையேலே! தேவா! தமிழர் செய்ததவச் 9) செல்வா! சிற்றில் சிதையேலே! அச்சுப் போலத் தமிழ்எழுதி ஆங்கி லத்தில் மிகஎழுதி அரிய வடநூல் பலவற்றை அன்னைத் தமிழில் மொழிபெயர்த்துத் தச்சன் மயனைப் போலிங்கு தமிழில் வாய்த்த நாயகமே! தன்னே ரில்லாக் கடிதங்கள் தமிழுக் கிலக்கியம் தந்தோனே! மிச்சம் இல்லை எனுமாறு மேலும் மேலும் நூல்எழுதி மேடைப் பேச்சில் நயம்கூறி மீண்டும் அதனை அச்சிட்டோய்! சிச்சிலிப் பறவை எளியேங்கள் சிறுவா! சிற்றில் சிதையேலே! தேவா! தமிழர் செய்ததவச் 10) செல்வா! சிற்றில் சிதையேலே! 14 முதல் 27. அடிகள் எழுதிய நூல்கள். அடிகளின் கையெழுத்து அச்சுப்போல் இருக்கும். தேவதச்சன் மயன் கட்டடக் கலைக்கு உயிர் அளித்ததுபோல அடிகள் தனித்தமிழ்க் கலைக்கு உயிர் அளித்தார். 9. சிறுபறைப் பருவம் காயமிது பொய்யெனவே காற்றடைத்த பையெனவே கண்டதொரு கால முண்டு கண்ணான உள்ளங்கள் புண்ணான பொல்லாங்கு காலத்தில் நேர்ந்த துண்டு. மாயமொடு மந்திரமும் சாயமொடு தந்திரமும் மயக்கங்கள் தந்த துண்டு. மதிமாறி உலகத்தின் கதிமாறிக் கவர்ச்சியினால் மாந்தர்கள் பிறழ்ந்த துண்டு. தாயமொடு சொத்துரிமை காயமொடு வழக்குகளைத் தாரணியில் தந்த துண்டு. தலைமகனாய் வந்துதமிழ் நிலைஉயரச் செய்தவனே! தமிழர்க்குப் புதியவழி காட்டி! தேயமெலாம் கண்டவனே! ஆய தமிழ் கொண்டவனே! சிறுபறை முழக்கி அருளே! தென்றலென மன்றமெலாம் நின்றுலவு சைவமுனி! சிறுபறை முழக்கி அருளே! கோசரினக் கொள்கையெனத் தேசமெலாம் ஒருமொழியாம் கோட்பாடு பாவு தற்குக் கோபுரமாய் நின்றவனே! கொள்கைவழி சென்றவனே! கோலங்கள் இட்ட கோவே ஆசைவழி காட்டாமல் அறிவுவழி காட்டியதால் ஆங்கிலமும் கற்ற தோடே உடலை வெறுத்தல், உயர்ந்தோரைப் பழித்தல், மந்திர தந்திரங்கள், கவர்ச்சிகள், மதிமயக்கல், சொத்துரிமையால் வழக்குகள், போராட்டம் நிகழ்தல் முதலிய தீங்குகள் மனித வாழ்வில் நிறைந்தபோது அடிகள் நல்வழி காட்டினார். அன்னைமொழி நற்றமிழும் அழகுமிகு வடமொழியும் ஆராய்ந்து கற்ற ஐயா! நேசமொரு சென்னையிலும் வாசமொரு திண்ணையிலும் நினைவெல்லாம் தமிழு மாகி நிகழ்காலம் வருங்காலம் நீண்டதொரு நெடுங்காலம் நிலைத்தபுகழ் ஈட்ட வந்தோய்! தேசமெலாம் சென்றவனே! பாசமெலாம் வென்றவனே! சிறுபறை முழக்கி அருளே! தென்றலென மன்றலொம் நின்றுலவு சைவமுனி 2) சிறுபறை முழக்கி அருளே! வான்மணக்கும் கற்பகமே! வயல்மணக்கும் நெற்கதிரே! வாழ்வாங்கு வாழும் தேவே! வண்டமிழின் தீஞ்சுவையே! வளர்ந்துவரும் செஞ்சாலி வைகையெனப் பொங்கும் ஆறே! கான்மணக்கும் மலர்க்கொத்தே! கலைமணக்கும் தமிழ்வித்தே! கவிமணக்கும் பத்துப் பாட்டே! கத்துகடல் அத்தனையும் மொத்தமெனத் திரண்டொருபால் காட்சிதரும் புலமை ஊற்றே! கோன்மணக்க விழிகாட்டிக் குடிமணக்க வழிகாட்டிக் குவலயத்தைக் காப்ப தற்குக் கொடிதாங்கி வந்தவனே! இடிதாங்கி நொந்தவனே! கொத்துமலர் ஆன செல்வா! சங்க காலத்தில் வாழ்ந்த கோசகர் என்னும் இனத்தார் ஒன்றே மொழியும் உரவோர் ஆவர். உண்மையே பேசுவர். அதுபோல் அடிகள் தமிழகம் முழுதும் ஒரே மொழியாகிய தனித்தமிழ் பரவ விரும்பினார். அவர் சென்னையில் ஒரு திண்ணையில் வாழ்ந்தாலும் அவரது நினைவு தமிழில் இருந்தது. தேன்மணக்கும் கருங்குவளை! திருமணக்கும் நறுந்துளவம்! சிறுபறை முழக்கி அருளே! தென்றலென மன்றமெலாம் நின்றுலவு சைவமுனி 3) சிறுபறை முழக்கி அருளே! அக்கால நக்கீரர் பிற்காலச் சிவஞான அருமுனியும் ஒருவ ராகி அழகான தமிழ்ச்சங்க நூல்எல்லாம் ஊர்ஊராய் அறிவோடு பரப்பி வந்து மெய்க்காதல் தமிழ்மீது கொண்டாடி வானத்தின் மீதூரும் திங்க ளாகி மேலான திருஞான சம்பந்தப் பெருமானின் மேன்மையை எடுத்து ரைத்துத் தக்கார்கள் பலர்தோன்ற முக்கால வித்திட்ட தகுதியை எண்ணி எண்ணித் தலையாய திரு.வி.க.நிலையாகப் பாராட்டித் தமிழினால் தொண்ட னாகத் தெக்காணப் புலவனொரு பொற்கால மறைமலையே! சிறுபறை முழக்கி அருளே! தென்றலென மன்றமெலாம் நின்றுலவு சைவமுனி 4) சிறுபறை முழக்கி அருளே! ஆட்சியாளர் சிறக்க விழிகாட்டியும் குடிமக்கள் சிறக்க வழிகாட்டியும் காத்தவர் அடிகள். எதிர்ப்பாளர்களின் இடிகளைத் தாங்கி நொந்தார். நக்கீரரும் சிவஞான முனிவரும் கலந்த உருவே அடிகள். சங்க நூல்களைப் பரப்பினார். தமிழ்வானில் திங்கள் போல் திகழ்ந்தார். சம்பந்தப் பெருமானின் புகழ் பரப்பினார். அறிஞர் பலர் தோன்ற வழிகாட்டினார் என்று திரு.வி.க. மறைமலை அடிகளைப் பாராட்டி அவரது தொண்டர் ஆனார். இருபதாம் நூற்றண்டின் இணையற்ற புலவரென இயல் கா.சு பிள்ளை உரைக்க, எதனையும் துணிவாக உரைப்பவர் துணிப்பவர் என்று சந் தோஷம் உரைக்க, பொறுமையாய்ப் பயின்றவர்; நினைவாற்றல் நிறைந்தவர் புலமையும் மிகுதி என்றே புகழ்மிகும் உ.வே.சா. மகிழ்ச்சியால் பூரிக்கப் புத்துயிர் அளிக்க வந்தோய்! அருமையாய் உரைநடை இன்னோசை உடையதாய் அகலமும் காட்டி நிற்க அளவிலா நுட்பமும் திட்பமும் நயமுமாய் ஆற்றொழுக் கெழுத்து மிக்க திருவினார் என இராக வையங்கார் புகழ்ந்தவா! சிறுபறை முழக்கி அருளே! தென்றலென மன்றமெலாம் நின்றுலவு சைவமுனி 5) சிறுபறை முழக்கி அருளே! புளியம் பழம்போலப் பற்றில்லா இல்லறமே போற்றுதற் குரிய தென்றும் பொன்னான நேரத்தைப் பொழுதாகச் சேமித்துப் புகழோடு வாழ்க என்றும் ஒளியின் உருவமென உலகத்தில் உள்ளஇறை உயர்பதங்கள் தொழுக என்றும் ஒன்றாக நன்றாக இன்றைக்கே செய்கவென உலகத்திற் கெடுத்து ரைத்தும் கா.சு.பிள்ளை, க.ப.சந்தோஷம் உ.வே.சாமிநாத அய்யர், மு.இராகவ அய்யங்கார் போன்ற பெரும்புலவர்கள் மறைமலை அடிகளின் புலமையைப் புகழ்ந்தனர். பழியும் பாவமெதும் வாராமல் வாழ்க்கையிலே பக்குவமாய் வாழ்க என்றும் பண்பட்ட தமிழிசையே பிறநாட்டின் இசைகட்குப் பாதையினை அமைத்த தென்றும் தெளிவாய் அறைந்தவனே! தீந்தமிழில் நிறைந்தவனே! சிறுபறை முழக்கி அருளே! தென்றலென மன்றமெலாம் நின்றுலவு சைவமுனி 6 சிறுபறை முழக்கி அருளே! ஊரார்கள் அழைத்தாலும் உரையாற்றப் போமுன்னே உள்ளத்தில் உள்ள தான உலகத்து வசதிகளைக் கடிதத்தில் எழுதியதும் ஒப்பற்ற இலக்கி யம்மே! சோறாக்கப் புழுங்கரிசி, பருப்புவகை, சவ்வரிசி, சுவைமிக்க கொத்த மல்லி, சோம்போடு, சீரகமும், பெருங்காயம் திராட்சையுடன் சுவையான வெள்ளைப் பூண்டும் ஈரானின் வாதுமையும், சீனாவின் கற்கண்டும் இனிமைமிகு சர்க்க ரையும் ஏற்புடைய பசும்பாலும், தயிர்நெய்யும் வெந்நீரும், இலைக்கோசும், பச்சைக் காயும், சீரான தனிவீடும், பணியாளும் கேட்டவனே! சிறுபறை முழக்கி அருளே! தென்றலென மன்றமெலாம் நின்றுலவு சைவமுனி 7) சிறுபறை முழக்கி அருளே! மேற்கண்ட பாடலில் அடிகளின் பொன்மொழிகள் பல உள்ளன. சொற்பொழிவுக்குப் புறப்படுமுன் மேற்கண்ட தேவைகளை விரிவாகக் கடிதம் மூலம் எழுதி அனுப்புவது அடிகளின் வழக்கம். வாதுமை = வாதுமைக் கொட்டை. பச்சைக் காய் = பச்சைக் காய்கறிகள். பொழிவாற்றும் இடம்பற்றி மேடையமைப் பத்தனையும் பொருத்தமுறப் படம்வ ரைந்து பொல்லாப்பை எண்ணாமல் முன்கூட்டி அறிவித்துப் புகழீட்ட வந்த பொன்னே! வழியுள்ள இடத்தினிலே வளமான பந்தலிலே வளர்காற்று வருவ தற்கு வகையான சாளரமும், காற்றாடி அமைப்புகளும் வரம்போடு பொருத்து கென்றும் விழிப்போடு காலைமணி எட்டரைக்குத் தேவாரம் வாசகமும் இசைக்க என்றும் விரிவுரையை ஒன்பதுக்குத் தொடங்கியபின் பன்னிரண்டில் வீட்டுக்குச் செல்க என்றும் தெளிவாக வரன்முறைகள் அவைமுறைகள் தெரிவித்தோய்! சிறுபறை முழக்கி அருளே! தென்றலென மன்றமெலாம் நின்றுலவு சைவமுனி 8) சிறுபறை முழக்கி அருளே! கருவுற்ற காலத்தில் திருஞான சம்பந்தர்க கதையினைப் பயில்க என்றும் கருத்துள்ள சொற்பொழிவு கவிதையுடன் தேவாரம் கருத்தூன்றிக் கேட்க என்றும் துருதுருவென் றோயாமல் சோம்பேறி ஆகாமல் தொழிலாற்ற முயல்க என்றும் துணையான இறையன்பில் தோய்ந்தாலே பெண்கட்குத் துயரின்றிக் கருவு யிர்க்கும் விரிவுரை நிகழ்த்தும் மேடை அமைப்புப் பற்றி முன்கூட்டியே படம் வரைந்து அனுப்புவது அடிகளின் வழக்கம். காலை 8-30 மணிக்குத் தேவார திருவாசகம் பாடல்; 9 மணிக்கு விரிவுரை தொடங்கல். 12 மணிக்கு முடித்தல் என்பது அடிகளின் திட்டமாகும். உருவாகும் பெண்ஆனால் மங்கையர்க்கே அரசிஅது! ஒப்பற்ற ஆணே ஆனால் உயர்ஞான சம்பந்தப் பெருமானே எனவாழ்த்தி உலகிற்கு வழிகள் காட்டித் திருவருளைப் பெறவைத்த குருவருளே! மறைமலையே! சிறுபறை முழக்கி அருளே! தென்றலென மன்றமெலாம் நின்றுலவு சைவமுனி! 9) சிறுபறை முழக்கி அருளே! வள்ளலெனும் இராமலிங்கப் பெருமானின் அருட்பாவில் வளமாகத் தோய்ந்த தாலே வற்றாத இன்னிசையால் நாடோறும் இசைபாடி வையத்தார்க் கருள்பா லித்துக் கள்ளமிலாக் கதிரைவேற் பிள்ளையெனும் பெரும்புலமைக் கற்பகத்தைத் திட்ட மிட்டுக் கத்தியினால் குத்திடவே புத்தியிலார் எண்ணியதைக் காலத்தால் அறித்து நீக்கிப் பிள்ளையினைக் காத்ததனால் ஈழத்தார் பேரன்பைப் பெருமையுடன் பெற்ற செல்வா! பெரும்புலவர் திரு.வி.க. அரசியலில் துழைந்ததனைப் பிழையென்று கடிந்த வீரா! தெள்ளரிய தமிழமுதே! தேன்மொழியும் தாமரையே! சிறுபறை முழக்கி அருளே! தென்றலென மன்றமெலாம் நின்றுலவு சைவமுனி 10) சிறுபறை முழக்கி அருளே! கருவுற்ற பெண்கள் எப்படி நடக்க வேண்டும் என்று வழிகாட்டினார் அடிகள். திருவருட்பாவில் மூழ்கியவர் அடிகள். இலங்கைப் புலவர் கதிரைவேற் பிள்ளை அவர்கட்குத் தீங்கு வராமல் காத்தவர் அடிகள். திரு.வி.கஅவர்கள் அரசியலில் நுழைந்ததைக் கண்டித்தவர் அடிகள். அதனைத் திரு.வி.க.அவர்களே பாராட்டினார். 10. சிறுதேர்ப் பருவம் நீராடை உலகத்தில் துவராடை பூண்டாலும் நெஞ்சிலே தமிழை ஏந்தி நெற்றிக்கண் திறந்தாலும் குற்றங்கள் குற்றமென நேர்மையாய் உரைத்த தாலே தூரோடு பகைநீக்கி வேரோடு களைநீக்கித் தூயதாய்த் தமிழை ஆக்கித் தொல்லைகள் தாங்கியே பிள்ளைகள் ஓங்கவே தொண்டினைச் செய்த வள்ளல்! நாரோடு மலர்போலத் தேரோடு மணிபோல நதியோடு மீனும் ஆனோய்! நகைஎட்டு சுவைகாட்டித் தொகைஎட்டு மொழிகாட்டி நலம்பூத்து நின்ற நாவால் சீரோடு நின்றவனே! பாரோடு வென்றவனே! சிறுதேர் உருட்டி அருளே! தில்லைநட ராசனுக்குப் பல்லாவர வாசகனே! சிறுதேர் உருட்டி அருளே! துவராடை = காவி ஆடை. அடிகளின் நாவில் நகை முதல் எட்டுச் சுவையும், எட்டுத்தொகையும் தவழும். பல்லாவரத்தில் அம்பலவாணர் கோயிலை அமைத்ததன் மூலம் அடிகள் மற்றொரு மணிவாசகர் ஆனார். வார்த்தைகளின் நயமென்ன? வளமான குரலென்ன? வரலாற்றைப் படைத்த தென்ன? வண்டிருந்த குழல்மேவிப் பண்டிருந்த மனம்நாடி வந்திருந்த பாட லுக்குப் கூர்த்தமதி நக்கீரன் ஆர்த்தெழுந்து தடைகூறிக் கொள்கையில் வென்ற தேபோல் கோட்பாடு சொல்லியதால் ஆர்ப்பாளர் முன்னின்று கொள்கையில் வென்ற கோவே! ஈர்த்தாலும் வீழாமல் வேர்த்தாலும் தாழாமல் இயலிசை நாட கத்தால் இனிமைமிகு தனித்தமிழைத் தனிமையுடன் வளர்த்தவனே! எளியதிருத் தலமும் ஆகித் தீர்த்தங்கள் ஆனவனே! மூர்த்திகளும் ஆனவனே! சிறுதேர் உருட்டி அருளே! தில்லைநட ராசனுக்குப் பல்லாவர வாசகனே! 2) சிறுதேர் உருட்டி அருளே! தேவதை கட்குயிர்ப் பலியிடல்1 தீதெனத் தீட்டிய அறிவுரைக் கொத்திலே திருக்கோயில் வழிபாடு2 தனித்தமிழ் மாட்சியும்3 சைவமதப் பாது காப்பும்4 காவலாய் நிற்கின்ற கடவுளுக் கருளுருவம்5 கல்வியே அழியாச் செல்வம்6 கல்வியே அறிவுநூல்7 கைத்தொழில் மேன்மைகள்8 கடவுளின் நிலை9 யி னோடு தருமிக்காகச் சிவன் வரைந்த பாடலில் இருந்த பொருட் குற்றத்திற்காக வாதாடினார் நக்கீரர். அதுபோல் தனித்தமிழுக்காகப் போராடினார் மறைமலை அடிகள். தமிழ்ப் புலவர்களுக்கு அடிகள் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றுமாக இருந்தார். மாதரும் பகுத்துணர் வாற்றலும்10 மடமையை ஒழிக்க வந்தோய்! மாண்புடைக் கூட்டுவா ணிகத்துடன்11 பெண்மக்கள் கடமையும்12 எழுதி வைத்தோய்! சீவகா ருண்யமாம்13 கட்டுரை வரைந்தவா! சிறுதேர் உருட்டி அருளே! தில்லைநட ராசனுக்குப் பல்லாவர வாசகனே! 3) சிறுதேர் உருட்டி அருளே! உடம்பெடுத்துப் பயனென்ன? உலகத்து வாழ்க்கையிலே உயர்வான தமிழ நாட்டார் ஒப்பற்ற மேல்நாட்டார் செயலுடனே ஒப்பிட்டே உண்மைகள் தெரிய வைத்தோய்! கடமையென மேல்நாட்டார் கல்வியுடன் ஆராய்ச்சி கருதரிய சேவை செய்யக் கலைத்தமிழர் தமக்குள்ளே தலைச்சாதி கடைச்சாதி கற்பனையால் சண்டை போட்டு மடமையினால் வழக்காடி உடமையெலாம் இழந்தாலும் மதியேதும் கொள்வ தின்றி மாறாத சடங்காலும் ஆறாத பிணியாலும் வாழ்க்கையில் அமைதி நீங்கித் திடமின்றி அலைதீமை தெளிவாகக் காட்டியவா! சிறுதேர் உருட்டி அருளே! தில்லைநட ராசனுக்குப் பல்லாவர வாசகனே! 4) சிறுதேர் உருட்டி அருளே! அடிகள் எழுதிய அறிவுரைக் கொத்து எனும் நூலில் மேற்கண்ட 1முதல் 13 தலைப்புக் கட்டுரைகள் உள்ளன. அறிவுரைக் கொத்து நூலில் அடிகள் தமிழ் நாட்டவரும் மேல்நாட்டவரும் என்ற தலைப்புக் கட்டுரையில் மேற்கண்ட கருத்துக்களைக் கூறி உள்ளார். உடன்பிறந்தார் தமக்குள்ளே ஒற்றுமையாய் வாழ்ந்திட்டால் உலகத்தை ஈர்க்க லாகும். ஒப்பற்ற அன்பாலே உலகத்தார் யாவரையும் உடன்பிறந்தார் ஆக்க லாகும். மடமையினால் சொத்தென்றும் மனையென்றும் மனைவியென்றும் மக்கட்பே றென்ப தாலும் மாறான எண்ணத்தால் தீராத பகைகொண்டு மாற்றார்கள் போல நின்றே உடன்பிறந்தார் பகைகொள்ளல் உள்ளத்தின் தளர்ச்சியென உலகத்தார் உணர வேண்டும். ஒற்றுமையைப் போலுலகில் உயர்செல்வம் வேறில்லை உடன்பிறப்பு போல வாழ்வில் திடமான துணையில்லை எனஅறிவு தீட்டியவா! சிறுதேர் உருட்டி அருளே! தில்லைநட ராசனுக்குப் பல்லாவர வாசகனே! 5) சிறுதேர் உருட்டி அருளே! மங்கையர்கள் எல்லோரும் அறிவாற்றல் துணிவுகளில் மங்கையர்க்கே அரசி யாகி மணமிக்க புகழோடு குணமிக்க கற்போடு மதிபெற்று வாழ வேண்டும். செங்கையினில் பொருளேந்தி ஏழைஎளியோர்கட்குச் சேவையினால் அன்ன மிட்டுச் சிவனுக்கும் உலகுக்கும் சிறப்பான தொண்டாற்றிச் செயலூக்கம் காட்ட வேண்டும். அறிவுரைக் கொத்தில்அடிகள் உடன்பிறந்தார் ஒற்றுமை எனும் தலைப்பில் மேற்கண்ட கருத்துக்களைக் கூறியுள்ளார். மங்காத விருந்தோம்பி அன்பான இன்சொல்லும் மாறாமல் பொழிவ தோடு மதியாத குறைநீக்கி, நதியான இறைபாடி மணமான கல்வி கற்று சிங்கார வாழ்க்கையிலே பேரின்பம் பெறச் சொன்னோய்! சிறுதேர் உருட்டி அருளே! தில்லைநட ராசனுக்குப் பல்லாவர வாசகனே! 6) சிறுதேர் உருட்டி அருளே! கூட்டான வாணிகம்போல் நாட்டாரைச் சேர்ப்பிக்கும் குணமான சக்தி இல்லை கொள்கையெனக் கொண்டதனால் குவலயத்தில் ஓடோடிக் கொத்தான பொருள்கள் சேர்த்தே ஈட்டாத பொருள்இல்லை எனமக்கள் பாராட்ட ஏழைஎளி யோர்கள் போற்ற இனியபொருள் குறைந்தவிலை எனுமாறு விற்பதுடன் ஏராள இலாப மின்றி நாட்டார்கள் சீராட்ட நயமான சொல்பேசி நடுவுநிலை தவறி டாமல் நலமான முகப்பொலிவும் வளமான அகப்பொலிவும் நம்பிக்கை நேச நெஞ்சும் அறிவுரைக் கொத்தில் அடிகள் பெண்மக்கள் கடமை என்னும் தலைப்புக் கட்டுரையில் மேற்கண்ட கருத்துக்களை எழுதி உள்ளார். அறிவுரைக் கொத்தில் அடிகள் கூட்டு வாணிகம் எனும் தலைப்பில் மேற்கண்ட கருத்துக்களைக் குறிப்பிட் டுள்ளார். கூட்டான வாணிகத்தின் கொள்கையெனக் கூறியவா! சிறுதேர் உருட்டி அருளே! தில்லைநட ராசனுக்குப் பல்லாவர வாசகனே! 7) சிறுதேர் உருட்டி அருளே! சூல்கொண்ட காலத்தில் கால்கொள்ளும் எண்ணங்கள் சூழுமே கருவி னுக்கும்! சுவையான எண்ணங்கள் துணிவான வீரங்கள் சூலிலே கருவி லேறும்! சேல்போலும் கண்ணோடு பால்போலும் தங்கைக்குத் திருமாலாம் கண்ணன் அன்று தீரத்துக் கதையெல்லாம் வீரத்தால் சொல்லியதைத் தினவோடு கேட்ட தாலே வாள்போலும் அபிமன்யு தூள்போலப் பகைநீக்க வளமாகப் பிறந்து நின்றான். வற்றாத எண்ணங்கள் முற்றாகக் கருவாகும் வாய்மையைத் தாயர் எண்ணித் தேள்போலும் மனம்நீக்கிப் பால்மனம் கொளச்சொன்னோய்! சிறுதேர் உருட்டி அருளே! தில்லைநட ராசனுக்குப் பல்லாவர வாசகனே! 8) சிறுதேர் உருட்டி அருளே! தங்கை = சுபத்திரை. அறிவுரைக் கொத்தில் அடிகள் `பெற்றோள் கடமை எனும் தலைப்பில் மேற்கண்ட கருத்துக்களைக் கூறி உள்ளார். கல்லாத மூடர்க்குப் பொல்லாத பிறவியது கடல்அலையாய்ப் பெருகி நிற்கும் கைசலிக்க வேதாவும் மெய்சமைக்க வையாமல் கல்வியினைக் கற்க வேண்டும். பொல்லாத உலகநூற் கல்வியது வையத்தில் போற்றுமே உடலை மட்டும். புகழ்மிக்க அறிவுநூற் கல்வியினால் நிலையான போற்றுதல் உயிருக் குண்டு. வெல்லாத பொருளில்லை; கொள்ளாத புகழில்லை வெற்றியும் குறைவதில்லை. விலங்காக இல்லாமல் அறிவுநூல் கற்றோர்கள் விற்பன்னர் ஆகக் கல்வி செல்லாத பிறவியிலை எனஉண்மை செப்பியவா! சிறுதேர் உருட்டி அருளே! தில்லைநட ராசனுக்குப் பல்லாவர வாசகனே! 9) சிறுதேர் உருட்டி அருளே! வேதா = பிரமன். உலகநூற் கல்வி உடம்பை வளர்க்கும். அறிவுநூற் கல்வி உயிரை வளர்க்கும் என மேற்கண்ட கருத்துக்களை அறிவுரைக் கொத்தில் அடிகள் அறிவுநூற் கல்வி என்னும் கட்டுரையில் வரைந்துள்ளார். கார்மேகம் பொய்த்தாலும் கல்வியெலாம் பொய்த்தாலும் கடவுள்நிலை பொய்ப்ப தில்லை கற்கண்டு கசந்தாலும் கனிச்சாறு கசந்தாலும் கலைத்தமிழ் கசப்ப தில்லை. தார்மாலை சூட்டிடினும் தேர்வாகை காட்டிடினும் தனித்தமிழ் பிறழ்வ தில்லை, தக்கோர்கள் குறைந்தாலும் மிக்கோர்கள் மறைந்தாலும் தைரியம் குறைவ தில்லை ஊர்திரண்டு நின்றாலும் பேர்வறண்டு சென்றாலும் உண்மையை மறைப்ப தில்லை உலகமே எதிர்த்தாலும் கலகமே அழைத்தாலும் ஓய்வினைக் கொள்வ தில்லை. சீர்நிறைந்த தனித்தமிழைப் பார்நிறைக்க வந்தவனே! சிறுதேர் உருட்டி அருளே! தில்லைநட ராசனுக்குப் பல்லாவர வாசகனே! 10) சிறுதேர் உருட்டி அருளே! போராட்டத்திற்கிடையில் அடிகள் தனித்தமிழ்க் கொள்கையில் வெற்றி கண்டார். ஆனால் அவர் பல மொழி பயின்றவர் என்பது குறிப்பிடத் தக்கது. பிள்ளைத்தமிழ் - சி. அன்பானந்தம் ஆராய்ச்சி முன்னுரை புலவர். தெ. KUfrhÄ, v«.V.,ã.X.vš., (முதல்வர், இராமசாமி தமிழ்க்கல்லூரி, காரைக்குடி) காலத்திற் கேற்பக் கவிஞர்கள் தோன்றுவார்கள் என்பது ஆன்றோர் வாக்கு. அதன்படி காலத்திற்குக் காலம் மொழியில் கலைவளர்ச்சியும் இலக்கிய வளர்ச்சியும் தொடர்ந்து நடை பெறுவது வரலாறு காட்டும் உண்மையாகும். தொல் காப்பியத்தில் சுட்டப்பெறும் வனப்பு எட்டனுள் ஒன்றாகிய விருந்து புதிய புதிய இலக்கியத் தோற்றத்திற்கு வழி கோலியது. இதனால் சங்க காலத்தில் இல்லாத எத்தனையோ இலக்கியங்கள் பிற்காலத்தில் தோன்றலாயின. காலத்திற்குக் காலம் இலக்கியங்கள் மாறி மாறியமைந்தன போலவே தமிழ்க் கவிதைகளின் வடிவமும் மாறி மாறியமைந்தன. அந்த வகையில் இடைக்காலத்தில் தோன்றிய இலக்கிங்கள் சிற்றிலக்கியங்கள் எனப்பட்டன. பொதுவாகச் சிற்றிலக்கியங்களைத் தொண்ணுற்றாறு வகையாகக் கூறுவர். அவைகளுள் பிள்ளைத் தமிழ் என்பதும் ஒன்று. `குழவி மருங்கினும் கிழவதாகும்' என்ற தொல்காப்பிய நூற்பாவை ஆதாரமாகக் கொண்டு இந்நூல் அமைந்ததாகக் கொள்வர். ஆசிரிய விருத்தத்தால் இனிய சந்தமுடனும் பொருள் நுட்பத்தோடு கூடிய சொல்லாட்சியுடனும் கற்பனை வளத் துடனும் பாடப்பெறும் பிள்ளைத் தமிழ் நூல் கற்பாரைக் கொள்ளை கொள்ளும் சிறந்த இலக்கியமாகத் திகழ்கிறது. இளமைப்பருவத்தில் குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு செயலும் கண்டு மகிழத்தக்கனவாகவே இருக்கும். இம்மகிழ்ச்சி உந்தலின் வெளிப்பாடு தாயின் பாடல்களாக வெளிவருகின்றன. இப்படியாகத் தாய் தான் துய்த்துப் பாடிய பாடல்களே பிற்காலத்தில் புலவர்களால் பாடப் பெற்ற பிள்ளைத் தமிழ்ப் பாடல்களாக வெளிவரலாயின. பிள்ளைச் செல்வத்தின் வழிப் பிறப்பது அன்பு. இவ்வன்பே பின் உலகில் பிறரிடமும் பரவிச் சென்று `யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற உயரிய பண்பை வளர்க்கிறது. எனவே பிள்ளைப் பாசத்தின் அடிப்படையில் எழுந்தனவே பிள்ளைத் தமிழ் நூல்கள் என்றும் கூறலாம். கவிஞர்கள் தாங்கள் போற்ற விரும்பும் தெய்வத்தையோ அரசரையோ பிறரையோ குழந்தையாகக் கருதிக் கொண்டு காப்பு முதலிய பத்துப் பருவங்களாக அமைத்துப் பாராட்டுவர். அங்ஙனம் பாராட்டுகையில் ஆண் பெண் இருபாலார்க்கும் தனித்தனியே பிள்ளைத்தமிழ் செய்வது மரபாகும். இந்த வகையில் இலக்கிய இன்பம் பூத்துக் குலுங்கும் பிள்ளைத் தமிழ் நூல்கள் பல தோன்றின. இப்பிள்ளைத்தமிழ் வரிசையில் கவிஞர் திரு.சி.அன்பானந்தம் எழுதிய மறைமலையடிள் பிள்ளைத் தமிழும் ஒன்று. நூலெழுந்த வரலாறு: காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரி நிறுவனர் திரு. இராம. பெரி. பெரியகருப்பன் செட்டியார் அவர்கள் தமிழ் மொழியிடத்தும் தமிழ்ச் சான்றோர்களிடத்தும் அளப்பரிய பற்றுக்கொண்டவர்கள். அப்பற்றின் வெளிப்பாடாக அவர்கள் ஆற்றிவரும் தமிழ்த் தொண்டுகள் பலவற்றுள் மறைமலையடிகள் நூற்றாண்டு விழாவை மிகச்சிறப்பாகக் கொண்டாட வேண்டுமென்ற அவர் தம் எண்ணமும் ஒன்றாகும். அதனால் மறைமலையடிகள் பிள்ளைத் தமிழ்க் கவிதைப் போட்டி என்ற ஒன்று உருவானது. அப்போட்டியில் கலந்து கொண்ட பதின்மூன்று கவிஞர்களுள் மலேசிய நாட்டைச் சார்ந்த பினாங்குக் கவிஞர் சி.அன்பானந்தம் எழுதிய இந்நூல் உரூ.இரண்டாயிரம் (உரூ. 2,000) முதற்பரிசு பெற்ற வகையில் வெளிவருகிறது. நூலமைப்பு: பிள்ளைத் தமிழ்பாடும் மரபிற்கேற்ப இந்நூலும் ஆசிரிய விருத்தத்தால் பாடப்பட்டுள்ளது. பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களே மிகுதியாகப் பாடப்பட்டுள்ளன. இடையிடையே சீர்கள் மிகுந்தும் குறைந்தும் உள்ள பாடல்களும் சந்த விருத்தங்களும் காணப்படுகின்றன. எடுத்துக் கொண்ட தலைப்பிற்கேற்ப மறைமலையடிகளின் வாழ்க்கை வரலாறு கற்பவர் கருத்தைவிட்டு நழுவாதவாறு விடாமல் கூறிச் செல்லும் திறன் இந்நூலுக் கமைந்துள்ள தனிச் சிறப்பாகும். கையிதழ் நீட்டிய ழைத்திடும் பூக்களும் கச்சித மாய்த்தலை யாட்டித் தென்றலும் கண்டுலா வந்திடும் காடநற் பாடியில் நாவணி செய்தமிழ் நாவலர் பாடிட நன்குசி றந்துதி கழ்வுற வேவரும் நம்பியைச் சீர்தமிழ் நன்குணர் செல்வனை 1 என நூலின் தொடக்கத்தில் மறைமலை அடிகளின் பிறப்பும், கார்குழற் சாந்தம்மை கற்புநெறி வாழ்கஅவர் கருத்துரை துணைவர் வாழ்க கருவிலே திருவென உருவான மறைமலை காணும்வழி எச்சம் வாழ்க 100 என நூலின் இறுதியில் அடிகள் சாந்தம்மை என்பாருடன் வாழ்ந்த இறுதி வாழ்வும் சுட்டுவதால் பிறப்பிற்குட்பட்ட வரலாறு முழுவதையும் இடைப்பட்ட பாடல்கள் உணர்த்து கின்றன எனலாம். வாழ்வில் மனிதன் எப்படி வாழவேண்டும் என்ற குறிப்பை இந்நூலின் அமைப்பு உணர்த்துகிறது. பருவ விளக்கம்: பருவ விளக்கம் பற்றிய கருத்துக்களைப் புலவர்கள் ஒரோவழி சில பருவங்களில் அகச் சான்றாகக் கூறுவது உண்டு. குமரகுருபரர் குழந்தை செங்கீரை ஆடுகின்ற முறையை முத்துக் குமாரசாமி பிள்ளைத் தமிழில் குறிப்பிடுகிறார். இவ்வாறு இந்நூலில், மேவிடக் கையோடு காலூன்றித் தலைதூக்கி மின்னுமொளிக் கண்களாலே மிரளாது தெளிவோடு நோக்கியழ கூட்டியே மென்னகைப் பூட்டிவளர்த்தே 14 எனச் செங்கீரைப் பருவத்தை விளக்கும் வரிகள் அப்பருவத்தில் காணப்படுகின்ற.ன தாலப் பருவத்தில் குழந்தையைத் `தொட்டிலில் கிடத்தித் தாலாட்டுப் பாடுவதாகப் பிள்ளைத்தமிழ் நூல்களின் பெரும்பாலும் பாடல் இல்லை. திருநெல்வேலிக் காந்திமதியம்மை பிள்ளைத் தமிழில் ஆசிரியர் அழகிய சொக்கநாதர், `திருமணித் தொட்டில் ஏற்றித் திருக்கண் வளரச் சீராட்டேன்' என்று வருகைப் பருவத்தில் தாலப் பருவ அமைப்பைக் கூறுகிறார். ஆனால் கவிஞர் அன்பானந்தம் தாலப் பருவத்திலேயே, `தொங்கல் பூண்டே நவமணிப்பொன் தொட்டில் தனிலே தாலேலோ' 27 எனப் பருவ விளக்கத்தைத் தந்திருப்பது மிக மிகச் சிறப்பிற் குரியதாக உள்ளது. நூலாசிரியரைப் பற்றி:- இந்நூலின் ஆசிரியர் கூறும் சி.அன்பானந்தம் அவர்கள் நூற்றொடக்கத்திலுள்ள பிள்ளை யார் வணக்கப்பாடலில், பேர்கொண்ட பனிமலைப் பெம்மானின் பிள்ளையாய்ப் பெரும்பேறு பெற்ற வேழம் பெரிதும் மனத்துளே வைத்துருகும் பிள்ளையைப் பிரியமுடன் வந்துகாக்க என்று தம்மை அடக்கமாகக் கூறிக்கொள்கிறார். `பிள்ளையை' என்ற அவர் தம் அவையடக்கக் குறிப்பும் பணியுமாம் என்று பெருமை என்பதைக் காட்டுகிறது. மேலும், பிள்ளை என்றழைக்கும் வேளாளர் குலத்தைச் சார்ந்த குறிப்பையும் உணர்த்துகிறது. மதுரைச் சொக்கேசரின் திருவிளையாடற் புராணக் கதைகளையே நூலின் தொடக்கத்தில் பல இடங்களில் (2,3,4, 15) சுட்டுவதால் இவர் தாம் பாண்டிய நாட்டைச் சார்ந்தவர் என்பதைக் குறிப்பாகத் தெரிவிக்கிறார். கவிஞரின் நெசப்பாங்கு: அடிகளிடம் நெருங்கிப் பழகியவரைப் போல அவர் தம் நூல் முழுவதையும் நன்கு கற்றுத் தெளிந்து இந்நூலைச் செய்துள்ளார். குருவினிடம் சீடன் ஒருவன் காட்டும் உணர்ச்சியைப்போல் ஆசிரியர் அடிகளிடம் காட்டி யுள்ள உணர்வை இந்நூலைக் கற்போர் உணரலாம். தமிழ் மொழிகள் சிறப்பைத் தலைமையாகக் கொண்டு பிள்ளைத் தமிழ் பாடிய குமரகுருபரரைப் போலத் தொட்ட இடமெல்லாம் கவிஞர் தமிழைப் பாராட்டுகிறார். தமிழைக் கூறுமிடங்களில் எல்லாம் அடை கொடுத்தே கூறுகிறார். சொக்கரின் தீந்தமிழ் (3) கணக்குந் தண்டமிழ் (8) மலரெனுந் தண்டமிழ் (20) நளிரே நிறைந்த தமிழ் (48) வழுதியர் புரந்த தமிழ் (50) இவ்வாறு தமிழை அடைகொடுத்து மகிழும் நெஞ்சினராகப் பாவலர் விளங்குகிறார். தமிழ்மொழி ஐந்திணை நெறியளாவிய மொழி. எம்மொழியிலும் இல்லாத அன்பின் ஐந்திணைப் பகுப்பு நம் தமிழில் மட்டுமே காணும் தனிப்பெரும் சிறப்பாகும். இந்நுட்பத்தை உணர்ந்த கவிஞர் சிறுதேர்ப் பருவத்தில் ஐந்திணைகளையும் மறைமலையடிகளுடன் பொருத்திப் பாராட்டியிருப்பது நீள நினைந்து இன்புறத்தக்கதாக உள்ளது. முல்லைக்குத் தானமர் தங்கத்தே ருறைதந்த முடியுடைப் பாரிதனிலும் முல்லைக்குத் தேனமர் செந்தமிழ் தேருரை முழுதீந்த புகழுமெய்தி இல்லைக்குச் சான்றெனும் பாலைக்குங் குறிஞ்சியின் இறையருட் தமிழைஈந்தே இயல்பகஞ் சோலையாய் இழையூடு பாவுற எடுத்தநூல் நெய்தலாக்கி எல்லைக்குச் சார்புறாக் கருணைமரு தம்வீச இந்திரன் வருணனுடனே இளையவன் துர்க்கைதிரு மாலுமவர் தேரேறி இனிதே விரைந்தருள தில்லைக்குள் ளுள்ளவனின் உள்ளத்தேர் நிற்பவன் சிறுதே ருருட்டியருளே திருக்கழுக் குன்றத்துச் சிவனருள் பெற்றவன் சிறுதே ருருட்டியருளே. 98 தானமர்தற்குரிய தேரை முல்லைக்குத் தந்த பாரி வள்ளலைவிட அடிகள் முல்லைப்பாட்டு என்னும் நூலுக்குத் தேர்ந்த உரை தந்தனர். நிலம் பகுக்கப்படாத பாலை என்னும் பெயரையுடைய பட்டினப்பாலை என்னும் நூலுக்கும் சிறந்த உரையீந்தனர். குறிஞ்சி நிலக் கடவுளாகிய முருகனுக்கு மும்மணிக்கோவை என்னும் நூலைச் செய்தனர். இவ்வாறாக, முல்லைப்பாட்டு, பட்டினப் பாலை என்னும் நூல்களுக்குப் பசுஞ்சோலை போன்ற தண்ணிய அழகிய உரையும் (இழை) முருகர் மும்மணிக்கோவை என்ற நூலும் (பா) தமிழில் நெய்து (நெய்தலாக்கி) இப்படியாக அடிகளின் எல்லையிட முடியாத தமிழ் மீது கொண்ட கருணையாகிய மருதம் (காற்று) எங்கும் வீசிடச் செய்வதால் இவ் ஐவகை நிலங்களுக்குரிய செயல்களை ஒருவரே செய்யும் நிலையை எண்ணி மருதத்திற்குரிய இந்திரன், நெய்தலுக்குரிய வருணன், குறிஞ்சிக்குரிய முருகன், (இளையவன்) பாலைக்குரிய கொற்றவை (துர்க்கை) முல்லைக்குரிய திருமால் ஆகிய ஐம்பெருங் கடவுளர்களும் மறைமலையாகிய குழந்தைக்கு அருள்செய்ய வேண்டித் தேரேறி வரச் சிறுதேர் உருட்டுக என்கிறார் கவிஞர். அடிகள் உரை எழுதியும் நூல் செய்தும் தமிழ்த் தொண்டாற்றிய சிறப்பை நெசவுத் தொழிலோடு ஐந்திணையைப் பொருத்திப் பார்க்கும் பாவலரின் தமிழ் நெசப் பாங்கு பாராட்டுதற்குரியது. சொல்லாட்சி: இந்நூலுள் பழமையும் புதுமையும் எளிமையும் கலந்த சொற்கள் கையாளப்பட்டுள்ளன. (9) மோய் - தாய்;(21) தண்ணம் - மழு; (45) முள்கிட - தழுவிட - (71) சிகலில் - கேடில்லாத; (77) சிணக்கம் - துன்பம்; என்பன அரிய இலக்கிய வழக்குச் சொற்கள். கச்சிதமாய் (1) கண்ணியம் (4) சளையாது (36) தலைமை வகித்து (89) என்பன எளிய வழக்குச் சொற்கள். பாவலரின் புது ஆட்சியாக நறுமணம் என்ற பொருளில் கமழ்ச்சி (56) என்ற சொல் கையாளப்பட்டுள்ளது. மேலும் கலப்புத் தமிழ் என்பதைச் சரளத் தமிழ் (22) என்றழைக்கிறார். வாழ்த்துதல், புதிய கொள்கை என்ற பொருள்களில் வரும் முகம்மதியரின் `தீன்' (15) என்ற சொல்லாட்சி சிறப்பாக உள்ளது. ஆங்கிலேயரை வெண்மக்கள் (7,46) என்றும் அவர்களது நூலை வெள்ளை நூல் (7) என்றும் சுட்டும் சொற்கள் நகைச்சுவை தருவனவாக உள்ளன. சிலேடை வகையில் (4) தும்பி (யானைமுகக் கடவுள், வண்டின் இனம் (5) அருள்தாதா (அருள் தந்தை, அருளைத் தாதா), (61) மறைமலையார் (வேதாசலநாதராகிய இறைவன், அடிகள் பெயர்) எனப் பல சொற்கள் கையாளப்பட்டுள்ளன. ஓசையின்பம்: பாடல்கள் இனிமையும் ஓசை நயமும் மிக்கனவாக உள்ளன. குமரகுருபரர் எழுதிய, `உலகு குளிர எமது மதியின் ஒழுகும் அமுத கிரணமே' எனும் முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்ப் பாடலைத் தமிழ்க் கவிஞர்கள் பொருளாலும் சந்த இன்பத்தாலும் சிறந்த பாடலாகக் கூறுவர். அவ்வாறே செந்தமிழின் தீஞ்சுவை செறிந்த சொற்களால் இந்நூலாசிரியர் அரசு மதியு மொளியும் புனலு முடைய எளிய சிவனையே அறிவு முணர்வு மிணைந்த பொழுதி லகத்தி லொடுக்கியிருந்தியே 60 என்ற வருகைப் பருவப் பாடலை நாவினிக்கப் பாடும் சந்த இன்பம் உடையதாகப் பாடியுள்ளார். இப்பருவத்தின் முடிவுகளில் ஓசையின்பங் கருதி `வருகவே நீ வருகவே, `வருகவே, முன் வருகவே' என நீ, முன் எனும் சொற்கள் பெய்தது இந்தநூலில் காணப்படும் புதிய முறையாகும். மேலும், `வேதாசல நாதாவருள் தாதாவெனப் போற்றில் வேலாயுத மேதானுடை கோலத்துறு கன்றை வேதாகம நூலோர்பணி வேந்தேயெனப் பாடில் வீணாய்மிடி வாராவகை வாழச்செயுங் குன்றை' 5 என்ற காப்புப் பருவப் பாடல் அழகிய சந்த விருத்தமாக செவிக்கின்பந் தருகிறது. உவமை: உவமை என்பது கவிதைக்கு அணி செய்யும் செய்யுட் பகுதி. அடிகளின் வாழ்வு காலத்தோடு ஒட்டிய தேவையை யுணர்த்தும் காலக் கண்ணாடி என்பதை நன்குணர்ந்த இந்நூலாசிரியர் அதற்கேற்ற உவமைகளைக் கையாளுகிறார். `வான்முறை வைத்துமும் மாரியும் பெய்திட வந்ததை யொத்தவனை' என்று அடிகள் மழைக்குச் சமமாகப் போற்றப்படுகிறார். அதிலும் மாதம் மும்மாரியைப் போன்றவராம். நாடு செழிக்க வந்த மும்மாரியைப் போலத் தமிழ்ப்பயிர் செழித்து வாழவேண்டி அடிகள் தோன்றினார் என்பது பொருள். `பெய்யெனப் பெய்யும் மழை' என்ற வள்ளுவரின் கருத்து ஈண்டு ஒப்புநோக்கற்குரியது. `உழுதிடு மொருசெயில் உழவன்றன் பொழுதினை யுணர்வொடு போக்குதல் போல் ஒளியுமிழ் தமிழெனுங் கழனியிற் பொழுதினை யொருங்குறத் தேக்கியவன்' 51 செவ்வியறிந்து காலத்தை வீணாக்காமல் உழுது பயிர் செய்யும் ஓரேருழவனைப் போல் அடிகள் தமிழ்க் கழனியில் சொல்லோரைக் கொண்டு உழுது, தமிழ்ப்பயிர் வளர்க்க வாழ்நாள் முழுவதையும் வீணாக்காமல் வாழ்ந்தார். `வாராது வந்த மாமணி' என்ற பாரதியின் தொடர் ஈண்டு ஒப்புநோக்குதற்குரியதாகும். அடிகள் திருவெண்ணீறணிந்துள்ள நெற்றியில் பொட்டணிந்துள்ள காட்சி சொல்லும் பொருளும் போல் உள்ளதாம். துடியைந் தாங்கு சிவனார்கொள் துய்ய வெண்மைத் திருநீறும் பொட்டுந் துலங்கப் பொலிவேற்றுப் பொற்பைக் கூட்டும் திருக்காட்சி பொருள்சே ரினிமைச் சொற்கவியின் பொருந்தி வாய்த்தாற் போலிருக்க 28 `எமக்குத் தொழில் கவிதை என்பது போலக் கவிஞர்கள் சொற்களிலேயே பழகுவதால் இந்நூலாசிரியர் `சொல்லும் பொருளும், போல் என்றார் போலும். சொல்லும் பொருளும் பிரியாதது போலத் திருநீறும் பொட்டுமாகவே அடிகள் எப்போதும் காட்சியளிப்பார் எனத் தெரிகிறது. மேலும் ஆனிடைக் கண்ணன் வேய்ங்குழல் வென்றோன் (16) தடவிடு மொருவீணை தன்னினிமை வென்றவா (33) ஏழிசையே எழுந்தோருருவாய் வந்தமகன் (77) என்றெல்லாம் அடிகளின் இனிய குரலைக் கவிஞர் பாராட்டுகிறார். சிலையுடனொரு மாரன் புவிவரல் போலானாய் (83) என்று அடிகளின் மன்மதனை ஒத்த மேனியழகைப் பாராட்டுகிறார். உருவகம்: உவம உருபினை நீக்கி உவமையை மாற்றிப் போட்டால் உவமை உருவகமாகி விடும். உவமையில் உவமேயத்தைவிட உவமானம் உயர்ந்தது. ஆனால் உருவகத்தில் இரண்டும் ஒன்றே என்ற சமநிலையைக் கூறி உவமேயத்திற்கு முதலிடம் கொடுப்பது மரபு. இவ்வுருவக அணியின் அருமையை யறிந்த கவிஞர் அரிதான ஓர் உருவகத்தைப் படைக்கிறார். `துப்புர வாய்மன மெய்மொழி யாக்கியே தூமனப் பூவிருத்தி சொற்சுவைத் தேன்மணம் சூழ்கவி தந்திடுந் தும்பியையசலிப்பாம்' 4 `கவிதைத் தேனைத் தந்திடும் தும்பிக்கையனாகிய தும்பியைத் தூய்மையான மனமாகிய ஆவில் வைத்துப் போற்றுவோம்' என்பது பொருள். ஈண்டு மனம் என்பது பூ. மனதில் வந்து தங்கும் தும்பிக்கையானாகிய விநாயகன் வண்டின் இனமாகிய தும்பி; சொற்களாலான கவிதை என்பது தேன். பூவில் தேனிருப்பது இயல்பு. அத்தேனை வண்டு உண்ண வருவதும் மரபு. ஆனால் ஈண்டுத் தும்பி தேனை உண்ண வாராமல் கொடுக்க வருகிறது என்கிறார் கவிஞர். `சொற்சுவைத் தேன் மணம் சூழ்கவி தந்திடும் தும்பி' என்ற வரிக்கு `மனமாகிய பூவில் சொல்லாகிய தேன் சூழ்ந்த கவியைத் தந்திடும் தும்பி' என்பது பொருள். சொற்களாலானது கவி. சொல் தேன் என்றால் சொற்களாலான கவிதையும் தேனன்றோ! எனவே `சொற்சுவைத் தேன் மணம் சூழ்கவி' என்பது கவித்தேன் என்பதாகப் பொருள்படும். `கவிதந்திடும் தும்பி' என்றதால் மனமாகிய பூவில் இயல்பாகத் தேறாமல் தும்பி கொணரும் தேனையே மனப்பூப் பெற்றுக்கொண்டது என்பது பொருள். ஆக தெய்வீகத் தன்மை பொருந்திய விநாயகனாகிய வண்டு தேனை எடுக்க வாராமல் கொடுக்க வந்தது என்ற கற்பனை பொருத்தமுடையதாகவே உள்ளது. `அவனருளாலே அவன் தாள் வணங்கி' என்றாற் போலத் தும்பி மனமாகிய பூவில் கவிதைத் தேனை அருள அவ்வருளாலேயே கவிஞர் யானைமுகனாகிய தும்பியைத் தம் மனப்பூ இருத்தி அசலிக்க விரும்புகிறார் எனலாம். இவ்வாறாக அவனின்றிக் கவிதை எழுத இயலாத அவர் தம் விநாயக வழிபாட்டு முறையை உருவகப்படுத்திக் காட்டுவது மிகவும் நயமாக உள்ளது. மறைமலையடிகளைப் பற்றி: `சின்னம்மை சொக்கனார் தாம் பெற்ற செல்வமே' (11) என்று அடிகளின் தாய் தந்தையரை அறிமுகப்படுத்துகிறார் கவிஞர். நாகப்பட்டினத்தையடுத்த காடம்பாடியில் அடிகளின் தந்தை சொக்கநாதர் மருத்துவராக விளங்கினார் (16). பெற்றோர் குழந்தைப் பேற்றிற்காகத் திருக்கழுக்குன்றத்துச் சிவனை யெண்ணி நோன்பிருந்து பெற்றதால் (11) அடிகள் வேதாசலம் எனப் பெயர் பெற்றார். சைவ வேளாளர் வகுப்பைச் சார்ந்தவர் (17). `பரணியிற் பிறந்தார் தரணியை ஆள்வார்' என்பதற் கொப்ப `ஓங்கிய தரணி யாண்டிடப் பரணி ஓச்சிய நன்னாளில்' (17,92) பிறந்தார். இறையருளால் தோன்றிய காரணத்தால் மீண்டும் பிறவாப் பெருநெறியுடன் வாழ்ந்தார். `தாயின் கருப்பேறார் நெறி தாம் போற்றிடத் தோன்றி' (5) என்கிறார் பாவலர். மறைமலையடிகள் என்றாலே தனித்தமிழ்த் தந்தை என்ற நினைவு அனைவருக்கும் எழுவது இயல்பு. `உருள்கின்ற மணிவட்டைக் குணில்கொண்டு துரந்ததுபோல்' என இளங்கோவடிகள் கூறியது போல இயல்பாகவே தமிழ் மீது பற்றுக்கொண்ட அடிகளை /பெற்ற தாய்தனை மகமறந் தாலும் ... .... என்ற இராமலிங்கரின் அருட்பாவிலுள்ள `தேகம்' என்ற சொல் தனித்தமிழ்ப் பணியாற்றத் தூண்டியது. (78) இதனால் `தனித்தமிழ்ச் செப்பமும் செய்துலகு திறம்புரிய வைத்த செம்மல்' எனப் பாவலரால் பாராட்டப் பெற்றார். பிறமொழிகள் தமிழில் கலப்பதைத் தம் அறிவால் பொறுத்துக்கொள்ளாத அடிகள் முதலில் பிற மொழிக்கலப்பை நீக்குவதையே தம் பெரும் பணியாகக் கொண்டார். புரியாத மொழிநீக்கிப் புத்துணர் வூட்டிய பொற்புடை யமுதவூற்றே 14 என்றும், `சந்தைக் காணா வேற்றுமொழி தண்ணார் தமிழில் தாள்கூட்டிச் சரளத் தமிழாய் மாற்றியதைத் தாளா மதியிற் கூராளா தத்தாய் வந்த மொழிநீக்கத் தரவே வந்தாய்' 22 என்றும் பல வகையில் அடிகளின் தமிழ்ப் பணி பாராட்டப் படுகிறது. உரிமையில்லாத மொழி உரிமை கொண்டாட வந்த நிலையைத் `தத்தாய் வந்த மொழி' என்ற நகைச்சுவையுடன் கூறியிருப்பது பாவலரின் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்திக் காட்டுகிறது. தற்காலத் தமிழ்மொழி வரலாற்றில் இந்தி எதிர்ப்பு என்பது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அடிகள் காலத்தில் தான்இந்தி எதிர்ப்புணர்ச்சி உருப்பெற்றது. எனவே அவ்வெதிர்ப்புணர்ச்சியாகிய வரலாற்று நிகழ்ச்சியை நீக்கி அடிகளைத் தனித்துப் பார்ப்பதென்பது இயலாது. வருமுரு மிந்தி யெனுமயல் மொழியின் வருகையை முறியடிக்க 89 என்று இடிபோல வந்த இந்தி மொழியைத் தடுத்து நிறுத்திய பெருமையைச் சுட்டுகிறார் கவிஞர். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற கொள்கையைப் பரப்பியவர் மறைமலையாரே யாவார். தமிழ் வழிச் சிந்தனையே தமிழரை வாழ வைக்கும் என்ற உயர்ந்த நம்பிக்கை கொண்டவர். மொழித் தொண்டைப் போலவே சமயத்தொண்டும், சமூகத்தொண்டும் செய்தவர். செல்வரைப் பாடாது சிவன்புகழ் பாடினோய்' 85 செழுங்கை மணக்க நீறணிந்து 80 சிறவாத பொய்மூடச் சிறுமைதாவித்தவர் 84 கொள்கையில் மாறாது வெல்வதில் வல்லவன் 36 எனக் கவிஞர் ஆங்காங்கே கூறிச் செல்வதால் அடிகளின் வாழ்க்கை பிறருக்கு அறிவுறுத்தும் வகையில் அமைந்துள்ளது என நன்றாக உணரமுடிகிறது. தமிழ்மொழி வாழ வேண்டி இறைவனே மறைமலையை யனுப்பி வைத்தார் எனப் பாவலர் கூறுகிறார். தேனினு மினியசெந் தமிழீந்த தெய்வமாம் திருத்தில்லை நகரவேந்தன் தேர்ந்திந்தப் புவிமீது செந்தமிழ் வாழ்ந்திடச் செய்திடற் கெண்ணமிட்டே மானிடப் பிறப்பினில் மாட்சிகொள் தண்ணருள் மலர்ச்சியா முயிரவைத்து மங்காத வொளிநிறை மறைமலையெனுமுரு மன்னுபுகழ் சேர்த்தளிக்க 15 இக்கருத்து என்னை நன்றாக இறைவன் படைத்தனன். தன்னை நன்றாகத் தமிழ்செய்யுமாறே என்ற திருமூலரின் கருத்தோடு ஒப்புநோக்குதற்குரியது. இங்ஙனம் கூறிய பாவலர் அடிகள் மீது கொண்ட ஆர்வத்தால் `இறைவனே மறைமலையடி களாக அவதரித்தார்' என மற்றோரிடத்தில் வாயாரப் புகழ்கின்றார். இறங்கிக் கருணை வடிவாக இறையே துணித்து ஒளிவிளக்காய் இருளை யகற்றும் ஒளிவிளக்காய் இயக்கு சக்தித் திருவிளக்காய்ப் பிறங்கு தமிழை யுலகனைத்தும் பெரிதாய் விளங்கச் செயவந்த பெருமைக் குரியாய் 73 உலகில் தீமைகள் மிகுதியாகும்போது நான் தோன்றுவேன் என்று கண்ணபிரான் கூறியது போலத் தமிழிற்கும் தமிழினத்திற்கும் தீங்கு வந்துவிட்ட காரணத்தால் இறைவனே மறைமலையாகத் தோன்றினார் எனப் பாவலர் கூறுவது போற்றுதற்குரியதாக உள்ளது. திருவள்ளுவர் ஆண்டு என்ற ஒன்றை (51) அடிகள் உறுதிப்படுத்தித் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியது அடிகளின் வரலாற்றில் மிக மிகப் போற்றுதற்குரிய பகுதியாகும். திருஞான சம்பந்தர் சமணர்களைச் சைவர்களாக மாற்றியது போலவே அடிகள் கடம்பவன சுந்தரப் பாதிரியாரின் குடும்பத்தையே கிருத்துவத்திலிருந்து சைவத்திற்கு (95) மாற்றினார். தம் காலத்து வாழ்ந்த தவத்திரு ஞானியாரடிகள், திரு.வி.க.பண்டிதமணி போன்றோருடன் நட்புக் (79) கொண்டிருந்தார். தமிழர் நலங்குறித்துப் பல்வேறு நூல்களைச் செய்தார். அவைகளுள் முல்லைப் பாட்டாராய்ச்சி, மாணிக்கவாசகர் கால ஆராய்ச்சி போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கதாகும். அடிகள் தந்த இலக்கியமாகப் புகழ்பெறுவன சோமசுந்தரக் காஞ்சியாக்கமும், திருவொற்றியூர் முருகர் மும்மணிக்கோவையும் ஆகும். அடிகள் குடும்பமே தமிழ்க் குடும்பம் (76) என்பதில் ஐயமில்லை. அடிகளின் வரலாற்றை ஆராய்வார்க்கு இந்நூல் சிறந்த காலப் பெட்டகமாக இலங்குகிறது. செய்யுட் சிறப்பு: பிள்ளைத்தமிழின் எல்லாப் பகுதியும் சுவையுள்ளனவே. இருப்பினும் எண்சாண் உடம்பிற்குத் தலையே சிறப்புடையது போலப் பருவங்களுள் அம்புலிப் பருவமே சிறப்புடையதாகும். கவிஞரின் புலமையை இப்பருவமொன்றைக் கொண்டே அறிவது வழக்கம். நிலவைக் குழந்தையோடு ஒப்பிட்டுரைக்கும் பாடலில் பல ஒப்புமைகள் கூறப்படுகின்றன. மறைமலை யார்தாங்க வருவைநீ இவன்பெயர் மறைமலை தாங்கி வருவான்' 61 திருக்கழுக்குன்றத்து ஈசனுக்கு வேதாசலம் என்று பெயர். அச்சொல்லை மறைமலை யென்றாக்கி அடிகட்கும் இறைவனுக்கும் உள்ள அப்பெயர் ஒப்புமையால் சந்திரனைக் கூறியழைப்பது நயமாக உள்ளது. `நறைசெறி அல்லிநகை மலரவரு வாயிவன் நலவல்லி மலரவருவான் நதிசேரும் கடல்பொங்க வருவைநீ யிவன்தமிழ் நவில்கடல் பொங்கவருவான்' 61 அல்லி என்பது மலரையும் அடிகளின் மனைவி சௌந்தர வல்லியையும் குறிக்கிறது. சந்திரனால் கடல் பொங்குதல் போல இக்குழந்தையால் தமிழ்க்கடல் பொங்குகிறது. அடுத்துக் குழந்தையைத் திங்களோடு வேறுபடுத்திக் கூறும்போது, மங்கையொரு பங்கன்முடி நீயுற்றாய் அவனையிவன் மனக்கோயில் தன்னிலுற்றான் 63 என்கிறார். நிலவு சிவன் முடியில் தங்குகிறது. ஆனால் சிவனோ குழந்தையின் உள்ளத்தில் தங்குகிறான். இங்ஙனம் உணர்த்தும் வேறுபாட்டில் ஓர் இலக்கிய நயம் காணக்கிடக்கிறது. சிவனின் முடியில் என்று கூறாமல் `மங்கையொரு பங்கன்முடி' என்றதால்ஆண் பெண்ணாக விளங்கும் சிவனின் ஆண்பாற் பகுதியில் மட்டுமே சந்திரன் தங்கியுள்ளான் எனத் தெரிகிறது. சத்தியை விட்டுச் சிவன் பிரிந்திருக்க முடியாததால் குழந்தையின் உள்ளத்தில் சிவன் ஆண்பாற் கூறாக மட்டும் தங்காமல் மாதொரு பாகனாகவே தங்கும் நிலை ஏற்பட்டு விட்டது. எனவே அடைக்கலம் எனப் போய்த்தங்குதற்கிடமான சிவன் தன் மனைவியோடே குழந்தையின் உள்ளத்தில் தஞ்சம் புகுந்து தங்கி விடுவதால் நிலவினும் குழந்தை சிறப்புடைய தன்றோ! மேலும் நிலவின் முழுவடிவம் சிவனின் முடியில் தங்காமல் அதன் ஒரு கூறாகிய பிறை மட்டுமே தங்குகிறது. ஆனால்இறைவனோ முழு வடிவினனாய் உள்ளத்தில் தங்கியுள்ளான். இப்படியெல்லாம் வேறுபாடுகள் தோன்றுமாறு கவிஞர் பாடியுள்ளது வியந்து மகிழத் தக்கதாயுள்ளது. `தங்குமொரு வடமேற்குத் திசையுனக் கிவனுக்கு சரியுரிமை எத்திசையுமாம்' 63 என்று கூறும் மற்றோர் பாட்டில் சந்திரன் வடமேற்காகிய ஒரு திசையில் மட்டும் தோன்றுவதையும் அடிகள் எல்லாத் திசைகளிலும் புகழுடன் தோன்றுவதையும் வேற்றுமையாகக் காணமுடிகிறது. ஈண்டு மேற்கு என்று கூறாமல் வடமேற்கு என்பதைக் கூர்ந்து நோக்கினால் ஓர் உண்மை விளங்கும். மேற்கு என்பது நாற்றிசையுள் ஒன்று. ஆனால் வடமேற்கு என்பது எண்டிசையுள் ஒன்று. (1. வட, 2. தென்கிழக்கு, 3.கிH¡F, 4. வட, 5. தென்மேற்கு, 6. மேற்கு, 7. தெற்கு, ஒருவராகக் கொள்ளாமல் ஆயிரத்தில் ஒருவராகக் கொண்டது போலக் கவிஞர் அடிகளை நாற்றிசையுள் அடக்காமல் எண்டிசையில் அடக்கி, அவர் தம் புகழ் சென்று பரவும் எல்லையின் விரிவைக் கூறினார் எனலாம். `நில்லா தொழிந்த உயிராவி நிலையுந் தெளியக் கூறியவாய் நிறைய முத்தம் வைத்திருந்தும் நிலையா மணிகொள் சிற்றில்மேற் செல்லா திருக்க மனமில்லையோ சிறியேம் சிற்றில் சிதையேலே 74 என்று சிற்றில் பருவத்தில் சிறுமியர் வேண்டுவதாய்ப் பாடும் திறம் நினைந்து இன்புறத் தக்கதாயுள்ளது. ஒப்புமை: ஒரு நூலின் தரத்தை யறிய ஒப்பியல் ஆய்வு தேவை. பாவலர் பல நூல்களையும் கற்ற அனுபவத்தில் அடையாளங்களை ஆங்காங்கே காட்டியுள்ளார். திருச்செந்தூர் பிள்ளைத்தமிழில் முத்தம் தனக்கு விலையில்லை எனக் கூறும் பகழிக் கூத்தர் போல இந்நூலாசிரியர், `மெருகில் குறைதல் மறைதலெனு மிழிவைப் பெறலா லவைநீக்கி 42 எனச் சித்திரித்துக் காட்டும் அழகு போற்றுதற்குரியதாகும். `தெங்குங் கதலித் தீங்கனியுந் திரண்ட முலைசேர் பசும்பாலும் செழித்த கரும்பின் நறும்பாகும் செறிந்த சுவையின் பெருசுவையே 27 என்ற தாலப் பருவப் பாடல் தனித்தனி முக்கனி பிழிந்து வடித்தொன்றாய்க் கூட்டி என்ற அருட்பாவைப் போல பாடப்பட்டுள்ளது. வழுவா யெனுசீர் மனையாள்வாய் ளவடிவாய் மெதுவா யிதழ்சேர்த்து வரிவாய்ச் சுடர்பல் விடையூறும் வளைவாய்ச் சுவைநீர் பருகியவாய் 43 தூமனப்பூ(4) என்று மனதைப் பூவாக உருவகப்படுத் தினார் பாவலர். `மலர்மிசை யேகினான்' என்ற குறள் உரையில் பரிமேலழகர் உள்ளக் கமலத்தின் கண்... என்று நெஞ்சைத் தாமரையாக உருவகப்படுத்தியுள்ளார். `உள்ளப் புண்டரீகம்' எனத் திருஞானசம்பந்தர் திருவீழிமிழலை தேவாரத்தில் கூறுகிறார். `உழுதிடு மொருசெயில் உழவன்றன் பொழுதினை யுணர்வொடு போக்குதல் போல் ஒளியுமிழ் தமிழெனுங் கழனியிற் பொழுதினை யொருங்குறத் தேக்கியவன்' 51 என்று அடிகளை ஓரேருழவனாகக் கூறப்பட்ட செய்தி, மிடியன் ஒருசெய்யாளன் அச்செய்வினையக்காக்கும் செயல்போல என்று கூறும் நல்லாற்றூர் சிவப்பிரகாசரது பிரபுலிங்கலீலைப் பகுதியோடு ஒப்பு நோக்குதற்குரியது. முடிவுரை: பாட்டு என்பது பாவலனின் கையிற்கிடைத்த ஒரு மந்திரக்கோல். அதைக்கொண்டு அவன் உணர்வுலகத்தை ஆட்டிப் படைக்கிறான். இந்த வகையில் பாவலர் அன்பானந்தத் தின் பாடல்கள் மறைமலையடிகளை உயிர்ப்பித்துக் காட்டுகின்றன. இலக்கியம் படைக்கும் கவிஞனைப் பிரமனுக்குச் சமமாகக் கூறுவதுண்டு. இக்கவிப்பிரமர் மறைந்தும் மறையாமலிருக்கும் மறைமலையடிகளைக் குழந்தையாக்கி இந்நிலவுலகில் விளையாட விட்டுள்ளார். வெள்ள நீர் உழக்கினில் அடங்காதது போல என் உரைத் திறத்தால் இந்நூலின் சிறப்பை அளக்க இயலாது. எனவே கவியின்பம் நாடுவோர் இப்பிள்ளைத் தமிழ் வெள்ளத்தில் இன்புறத் திளைத்துப் புனலாடுவார்களாக. மருவார் கொன்றை மதிசூடி மன்றுள் ளாடும் பெருமானை மனத்துட் கொண்டு நிகழுமுழு மதியே வருக வுளக்கோவில் தருவா கென்றே தவஞ்செய்யுந் தளிராம் சௌந்த ரத்துக்குத் தனையே தந்து நிழலீந்த தருவே வருக தனித்தமிழை யுருவா யாக்கி யுலகளித்த வுயிரே வருக வுயர்சைவ வொளியே வருக மறைமலையா யுயர்ந்தாய் வருக வுண்ணவுண்ண வருவா னமுதே தமிழ்தந்த வாழ்வே வருக வருகவே வழுவாச் செழுமைப் புகழுடையாய் வருக வருக வருகவே! மறைமலையடிகள் வரலாறு செந்தமிழ் நாடு செய்த தவப்பயனாய் அலை தவழும் நாகப்பட்டினத்தை யடுத்த காடம்பாடி என்னும் சிற்றூரில் மறைமலையடிகள் 15-7-1876 இல் தோன்றினார். தந்தையார் மருத்துவர் வேலை பார்த்த சொக்கநாதர். தாயார் சின்னம்மை. விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதற்கேற்ப அடிகளின் கல்வியும் ஒழுக்கமும் அனைவரும் வியக்குமாறு ஆக்கமுற அமைந்தன. `ஒருமைக்கண் தான் கற்ற கவ்லி ஒருவற்கெழுமையும் ஏமாப் புடைத்து' என்ற குறட்பாவிற் கிணங்க அடிகள் தம் பதினாறாம் அகவைக்குள் தமிழிலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். வடநூலும் ஆங்கிலமும் நன்கு கற்றார். நாகையில் ஓலைச்சுவடி விற்பனை செய்து வந்த வெ.நாராயணசாமி பிள்ளையிடம் தமிழ் கற்றார். சென்னை.சோமசுந்தர நாயகரிடம் சைவ சித்தாந்தங்களைக் கற்றார். மனோன்மணீய நாடக ஆசிரியர் பெ.சுந்தரம் பிள்ளை அவர்களால் திருவனந்தபுரத்தில் முதன்முதலில் தமிழாசிரியர் வேலைக்கு அமர்ந்தார். பின் தமிழ்ப் பேராசான் பரிதிமாற் பரிதிமாற் கலைஞரின் பேருதவியால் சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் பதின்மூன்றாண்டுகள் பணியாற்றினார். ஆசிரியத் தொழிலை விட்டு விலகி `ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற தமிழரின் கொள்கையைப் பரப்ப வேண்டி பல்லாவரத்தில் பொது நிலைக்கழகம் கண்டார். நாடு முழுவதும் சென்று தமிழ்ப் பணியோடு சைவப் பணியும் சமூகப் பணியும் செய்தார். கடல் கடந்த இலங்கைக்குச் சென்று பல இடங்களில் சொற்பொழிவாற்றினார். சொற்பொழிவில் கிடைத்த பொருள்களையெல்லாம் தாம் நிறுவிய பொது நிலைக் கழகத்திற்கே தந்துதவினார். திருப்பாதிரிப்புலியூர் தவத்திரு ஞானியாரடிகள் முன்னிலையில் சைவ சித்தாந்த சமாசம் நிறுவினார். திருவள்ளுவராண்டு என்ற தமிழ்ப் புத்தாண்டை அறிமுகப்படுத்தினார். எங்கும் தமிழ் -எதிலும் தமிழ் என்று முழங்கிய அடிகள் இந்தியென்னும் நச்சரவிற்கு இடியாக விளங்கி இந்தி எதிர்ப்புணர்ச்சியால் தமிழர்களுக்கு மொழிப்பற்றை யூட்டினார். அடிகள் சித்தாந்த தீபிகை, அறிவுக்கடல் போன்ற திங்கள் இதழ்களுக்கு ஆசிரியராக விளங்கினார். பல இதழ்களில் காய்தல் உவத்தலின்றிப் பல கட்டுரைகளையும் மறுப்புரைகளையும் எழுதினார். சாகுந்தல நாடகத்தை மொழி பெயர்த்தார். முல்லைப் பாட்டாராய்ச்சி, பட்டினப்பாலை ஆராய்ச்சி, திருவாசகவுரை, மாணிக்கவாசகர் கால ஆராய்ச்சி, நூறாண்டுகள் வாழ்வது எப்படி போன்ற அடிகளின் நூல்கள் அவர்தம் புலமைக்கு உரை கற்களாக நிற்கின்றன. திருவொற்றியூர் முருகர் மும்மணிக்கோவை, சோமசுந்தரக் காஞ்சியாக்கம் போன்ற அடிகளால் இயற்றப்பட்ட இலக்கியங்கள் தமிழுள்ள அளவும் நின்று நிலவும் என்பதில் ஐயமில்லை. இல்லறமல்லது நல்லறமன்று என்பதற் கிணங்க அடிகள் பதினெட்டு வயதிலேயே சவுந்தரவல்லி என்பாரை மணந்து இல்லறத்தை மேற்கொண்டார். சிந்தாமணி, நீலாம்பிகை, திருஞானசம்பந்தன், மாணிக்கவாசகம், திருநாவுக்கரசு, சுந்தரமூர்த்தி, திரிபுரசுந்தரி என்ற மக்கள் அடிகட்குப் பிறந்தனர். `வேண்டின் உண்டாகத் துறக்க' என்ற வள்ளுவரின் கருத்திற் கிணங்க இல்லறத்தினின்றும் துறவுநிலை மேற்கொண்டாலும், அடிகள் தமிழையும் தமிழ்ப் பணியையும் துறந்தாரல்லர். அடிகள் தம் எழுபத்தைந்தாம் அகவையில் 15-9-1950 இல் அம்பலவாணர் திருவடிகளை அடைந்தார். நடமாடும் பல்கலைக்கழகமாக விளங்கிய மறைமலையடிகள் இருபதாம் நூற்றாண்டின் தமிழ்மொழி வரலாற்றில் ஓர் இளஞாயிறு எனலாம். வாழ்க மறைமலையடிகள் புகழ்! பொருளடக்கம் பக்கம் 1. காப்புப் பருவம் 111 2. செங்கீரைப் பருவம் 125 3. தாலப் பருவம் 136 4. சப்பாணிப் பருவம் 147 5. முத்தப் பருவம் 158 6. வருகைப் பருவம் 169 7. அம்புலிப் பருவம் 180 8. சிற்றிற் பருவம் 190 9. சிறுபறைப் பருவம் 201 10. சிறுதேர்ப் பருவம் 210 மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ் 1. காப்புப் பருவம் பிள்ளைத் தமிழாசிரியர் பாட்டுடைத் தலைவரைக் குழந்தையாகக் கருத்திற்கொண்டு அக்குழந்தைக்கு எவ்வித இடையூறும் நேராவண்ணம் கடவுளர் காக்க எனத் தாய்மார்கள் கூறுவதுபோல வேண்டிக் கொள்வதாகப் பாடப்படுவது காப்புப் பருவமாகும். குழந்தை பிறந்த ஏழாம் நாளில் அதற்குக் `காப்பிடல்' என்னும் பழக்கம் ஒன்று உண்டு. அதனை ஒட்டிய இலக்கிய வழக்கே இக்காப்புப்பருவம் என்று டாக்டர் உ.வே.சா.கூறுவர். `பிள்ளைப் பாட்டே தெள்ளிதின் கிளப்பின் மூன்று முதலா மூவேழ் அளவும் ஆன்ற திங்களின் அறைகுவர் நிலையே' எனப் பன்னிரு பாட்டியல் கூறுவதால் முதற்பருவமாகிய இக்காப்புப் பருவம் குழந்தையின் மூன்றாம் திங்களில் பாடப்பெறும் என வரையறுக்கலாம். இப்பருவத்தே பாடுதற்குரிய உமையவள், திருமால், சிவன், பிரமன், விநாயகன், முருகன், உமையவள், திருமகள், நாமகள், எழுகன்னியர், முப்பத்துமூவர், சூரியன், இந்திரன், குபேரன் என்று பலராவர். காப்புப் பருவமாதலின் காத்தற் கடவுளாம் திருமாலை முதற்கடவுளாக அமைத்துப் பாடுவது மரபு. இப்பருவத்தே கடவுளரைப் பாடும்போது அவர்தம் கொலைத்தன்மையும், கொடுமையும் கூறாது மங்கலமாகப் பாடவேண்டும் என்று பாட்டியல் நூல்கள் இலக்கணங் கூறுகின்றன. கடவுளரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்ட நூல்களில் காப்பிற்குரியவர் அவராக அமைந்து விடுவதால் அவரை விடுத்து வேறு கடவுளர்களை விளித்துப் பாடுதல் மரபு அன்று. காப்புப் பருவம் அமைகின்ற முறையில் நூலாசிரியர்கள் தங்கள் மனம் விரும்பியபடி, பாட்டுடைத் தலைவர்களின் தொடர்புகளுக்கேற்பக் காப்புமுறைகளை மாற்றிப் பாடுவர். தெய்வங்களை விடுத்து அடியவர்களையும், ஆழ்வார்களையும் காவற்கடவுளாக வைத்துப் பாடும்முறை சேக்கிழார் பிள்ளைத் தமிழிலும், வைகுந்தநாதன் பிள்ளைத் தமிழிலும் காணக்கிடக்கின்றது. ஓம் பிள்ளையார் வணக்ம் (ஆசிரிய விருத்தம்) பார்கொண்ட வுயிரினம் பல்கோடி வாழ்வுறப் பரிவோடு காத்துவிண்ணேர் பரவித் துதித்திடப் பாரதப் பெருங்கதை பழமலையிற் றீட்டிவைத்துப் பேர்கொண்ட பனிமலைப் பெம்மானின் பிள்ளையாய்ப் பெரும்பேறு பெற்றவேழம் பெரிதும் மனத்துளே வைத்துருகும் பிள்ளையைப் பிரியமுடன் வந்துகாக்க, சீர்கொண்ட தமிழ்நலம் சிந்தையிற் கொண்டருட் சிறப்போடு முற்றுமாய்ந்து தெளிந்தே தனித்தமிழ்ச் செப்பமும் செய்துலகு திறம்புரிய வைத்தசெம்மல் தார்கொண்ட சிவனருள் தாள்போற்றி யில்லறம் தரணிமேல் வாழ்ந்தமேலோன் தகைசேர் மறைமலை யடிகள்மேற் பிள்ளையைத் தமிழ்பாட அருளுமீந்தே. 1. இந்நூலாசிரியர் கவிஞர் அன்பானந்தம் தம்மைப் பிள்ளையென அடக்கமாகக் கூறிக் கொள்கிறார். 1. காப்புப் பருவம் திருமால் (ஆசிரிய விருத்தம்) பூவணி பெற்றிட மாமலர் நிற்பவள் பொன்னொடு நற்பொருள் தந்தருள் பெற்றியவள் பொற்புறத் தன்வல மார்பினை ஈந்தருள் பொங்கிடு பாற்கடல் மேற்றுயில் பான்மையன் பாவணி நல்கிடும் பாமகள் கேள்வனைப் பண்புடன் தன்திருக் கொப்புளுள் தாங்கியே பற்றுற வோடுல கோச்சிடும் மால்கழல் பைந்துழாய் கொண்டுவந் தன்புடன் போற்றுதும், காவணி யுற்றிடத் தூமணம் நல்கியே கையிதழ் நீட்டிய ழைத்திடும் பூக்களும் கச்சித மாய்த்தலை யாட்டிடைத் தென்றலும் கண்டுலா வந்திடும் காடநற் பாடியில்3 நாவணி செய்தமிழ் நாவலர் பாடிட நன்குசி றந்துதி கழ்வுற வேவரும் நம்பியைச் சீர்தமிழ் நன்குணர் செல்வனை நண்ணிவந் தின்னருள் செய்துபு ரக்கவே. 1.திருமால் 2. பிரமன் 3. காடநற்பாடி - நற்பாடம் பாடி என மாறுக. மறைமலையடிகள் பிறந்த ஊர். நாகப்பட்டினத்தை அடுத்த சிற்றூர். சிவபெருமான் (ஆசிரிய விருத்தம்) நான்மறை யோதிந லம்படத் தேர்ந்தெழில் நந்தமிழ் காத்தவனை நல்லவை செய்திடும் சொல்மொழி மெய்யனை நற்புகழ் சேர்த்தவனை வான்முறை வைத்துமும் மாரியும் பெய்திட வந்ததை யொத்தவனை வையகம் மெச்சிட வாய்த்தம றைமலை வாணனைக் காத்திடுக, கோன்முறை மீன்விழிக் கோதை1க்கு வாய்த்தநற் கூடல்ந கர்தனிலே குண்டோ தரர்க்கருள் தந்திட வைகையிற் கூடிய நீரடைக்கக் கூன்முறை தோன்றிய மூதினள்2 பங்கினிற் கூலியைப் போலவந்து கொண்டபி ரம்படி பிட்டினிற் கீடெனக் கொண்டசி வன்மகிழ்ந்தே. 1. மதுரையை ஆண்ட மீனாட்சி. 2. வந்தி பிட்டுக்கு மண்சுமந்த திருவிளையாடல் சுட்டப்படுகிறது. மீனாட்சியம்மை (வேறு) செய்யமென் தூமலர்த் தாளொன்று தூக்கியே செஞ்சடை வெண்மதி கங்கையும் தேக்கியே சீர்த்திகொள் மாநடம் செய்திடுந் தன்மையால் சிக்கலை நீக்கியிவ் வையம்பு ரந்திடும் துய்யவெண் மேனியன் தன்னிடப் பாகமாய்த் தோன்றிய மும்முலைத் தொல்புக ழன்னை1யின் தூமணிப் பூம்பதம் நெஞ்சுள் ளிருத்தியே சொக்கரின் தீந்தமிழ்2 தானெடுத் தேத்துதும், உய்யவே வைத்திடு மொப்பிலாச் செம்மொழி ஒன்றென இப்புவி ஓம்பிய சீர்மொழி ஊறினைச் செய்தபல் லாட்சிகள் சூழ்ந்ததால் உற்றமெய்த் தன்மையின் மாறிப்பி றர்மொழி1 பையவே வந்ததைப் பற்றியே சேர்ந்திடப் பான்மையுங் கெட்டதென் றார்த்துடன் மெய்வழிப் பைந்தமி ழின்றனி நன்னயங் காட்டிய பாலன்ம றைமலை தன்னைப்பு ரக்கவே. 3 1. உமையவள் மலையத்துவசன் மகள் தடாதகைப் பிராட்டியாகத் தோன்றியபோது மூன்று மார்புடன் தோன்றிய நிலை. 2. மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் குன்றமெறிந்த குமரவேளும், திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளும், தமிழ்ப் புலவராய்த் தோன்றித் தமிழாய்ந்ததாக இறையனாரகப் பொருள் கூறுவதால் தமிழ் சொக்கரின் தீந்தமிழாயிற்று. 3. வடபுல மொழிகள் தும்பிக்கையான் (வேறு) எப்புற மெப்படி யெங்ஙன மாயினும் இட்டமு டன்பிடித்தால் ஏற்றுவந் தவ்வுருத் தன்னிலே தங்கிடும் இன்சுவைத் தேனமுதை துப்புர வாய்மன மெய்மொழி யாக்கியே தூமனப் பூவிருத்திச் சொற்சுவைத் தேன்மணம் சூழ்கவி தந்திடுந் தும்பி1யையசலிப்பாம் முப்புற சூழ்கடல் முத்தமிழ்ப் பண்ணிசை மூச்சாய்க் கலந்திசைக்க முக்கூடல் காத்தசு வைத்தமிழ் மாந்திட முன்தவத் தாலுதித்துக் கப்பிய2 மாற்றுமொ ழிப்படை யோட்டிய கண்ணியம் மிக்கவனைக் கற்பணி பூண்டசின் னம்மை3புறந்தநற் கன்னலைக் காத்திடவே. 1. யானைமுகக் கடவுள். 2. தமிழை மூடிக்கொண்ட 3. அடிகளை ஈன்ற அன்னையார் முருகன் (சந்தவிருத்தம்) வேதாசல நாதா1வருள் தாதாவெனப் போற்றில் வேலாயுத மேதானுடை கோலத்துறு கன்றை வேதாகம நூலோர்2 பணி வேந்தேயெனப் பாடில் வீணாய்மிடி3 வாராவகை வாழச்செயுங் குன்றை நீதாவென நாரார்4துதி நீடேயுள மார்க்க நேராய்மயில் மாதோர்புடை சூழக்கவி பெய்தே நீங்காதுள சேர்ந்தேதமிழ் ஈந்தேயருள் வானை நேரார்கழல் பேரார்புகழ் ஏற்றித்துதி செய்வோம். வேதாசல நாதாவருள் தாதாவெனப் போற்றி5 வேலாயுத மேதானுடை சீலத்தனின் தந்தை வேயேயிணை தோளாள்துணைத் தாளோன்தனை யேத்த வீறாய்வரு சீரார்புகழ் வேள்செய்பரி சென்றே தாதாரணி போதார்திரு மார்பானருள் பூண்டு தாழாமன மேதான்துணை தானாய்வர நன்கே தாயார்க்குப் பேறார்நெறி6 தாம்போற்றிடத் தோன்றி தானேதமிழனான்7 தனைக் காவல்செயற் கென்றே. 1.சிவபெருமான். 2. நான்முகன் 3. வறுமை 4. நாராயணன் 5. திருக்கழுக்குன்றத்துச் சிவபெருமான் பெயர் வேதாசலர் அடிகளின் பெற்றோர் குழந்தைப் பேற்றிற்காக இந்த நாற்பது நாட்கள் நோன்பிருந்து, தவத்தின் பயனாய்ச் செவ்வேளைப் போன்ற அடிகளைப் பெற்றனர். 6. மீண்டும் பிறவாப் பெருநெறி 7. மறைமலையடிகளைக் குறிக்கும். திருமகள் (ஆசிரிய விருத்தம்) சிந்தை குளிரச் செந்தா மரையில் திகழும் திருமகளைச் செல்வம் வழங்கிச் சீரினை நல்கத் திடமாய் வருபவளை விந்தைபுரியு செங்கண் திருமால் விரும்பும் மணமகளை வெற்றிக் கழல்கள் பற்றித் தொழுதே விழைவாய்த் துதிபுரிவோம் முந்தை வினையின் முற்படு நோற்பால் முகிழ்த்த தமிழ்மலரை1 முற்றுந் தமிழில் முழங்கித் தொண்டு முறையாய்ப் புரிமகவை எந்தை யம்பல வாணர்2 தம்புகழ் இசைக்கும் மறைமலையை எங்கும் புகழும் மங்காச் சுடரை இனிதாய்ப் புரந்திடவே. 6 1. மறைமலையடிகள் 2. அடிகள் பொன்னம்பல வாணரைத் தம் வழிபடு தெய்வமாகக் கொண்டவர். நான்முகன் (வேறு) நிலையாய சீர்மறை நான்கினைக் கையேந்தி நெடியவுல கம்படைத்தே நீதிநெறி மாறாது நித்தமும் மெய்யத்தவம் நிகழ்ந்திடும் நான்முகத்தோன் கலையா ஓர்மாதை1க் கண்ணினும் மேலாகக் கருதியே நாவிலன்பாய்க் கானமெழு வீணையொடு காலமெல் லாம்வைத்துக் களிக்கின்ற வன்புரக்க. தலையாய சைவசித் தாந்தங்க ளத்தனையும் தணியாத வேட்கையோடு தான்தக்க குரு நாடித் தன்னிளம் வயதுளே தகவோடு கற்றபிள்ளை மலையாய வடநூலும் மாண்புவெண் மக்களின்3 மணியான வெள்ளைநூலும்4 மாட்சியாய்ப் பெற்றருள் ஆட்சியாய்க் கற்றெழும் மறைமலைச் செல்வனையே. 7 1. கலைமகள் 2. அடிகளின் ஞானாசிரியர் சோமசுந்தர நாயகர் 3. வெள்ளையர் (ஆங்கிலேயர்) 4. ஆங்கிலமொழி நூல் கலைமகள் (வேறு) மணக்கும் மெல்லிதழ் வெண்டா மரைமேல் மங்கள வீணைக் கையுடையாள் மலர்மே லுறைவோன் கொழுநன்1 அதனால் மன்றென அன்னான் நாவமர்வாள் கணக்கும் தண்டமிழ்ச் சொல்லும் கலையாய்க் கற்பவர் நெஞ்சில் உள்ளிருப்பாள் கருத்தா யறிவைத் துலக்கும் இறைவி கற்பனைச் செல்வி காத்திடுக. குணக்குன் றென்றுயர் கொள்கைத் திறத்தார்2 கொண்டநல் லில்லற வாழ்வினிலே குவலயந் தண்டமி ழினிமை மாந்திடக்3 கொம்பினிற் றேனாய் வந்தவனை பிணக்குற் றயலவர் பேசிடும் மொழிகள் பின்னிய தீமை வலைநீக்கிப் பிறங்கிடு செந்தமிழ் தன்னைக் காத்திடும் பெற்றிகொ ளன்புச் சேயினையே. 8 1. மலரில் உறைவோனாகிய பிரமன் கலைமகள் கணவன் 2. அடிகளின் பெற்றோர் 3. பருகிட மாதவர் எழுவர் (வேறு) மறையெனும் பொருளை மலர்க்கையி லேந்தி மண்டிரு ளன்னமதில் மகிழ்வுட னமர்ந்து மனக்கொலு வேறும் மாண்பபி ராமியளும் மதிநிறை மகேசு வரியென ளாகி மன்னொளி முச்சூலும் மணிக்கையில் திகழ அணியிடப1த்தில் மாபுவி சேர்பவளும் கறையிரு ளகற்றிக் களிமயி லேறிக் கையினில் வேலிலங்கக் கருத்தினி லெண்ணிய கணத்தினில் நல்கும் கௌமாரி என்பவளும் கருடனி லமர்ந்து சங்குட னாழி கைகளில் தாங்கியன்பர் கவின்மிகு வாழ்வினில் களிப்பினை ஈந்தே காக்குநா ராயணியும் 1. காளைஊர்தி நறைமல ரணிந்து கலப்பையுந் தாங்கி நன்குயர் சிங்கமதில் நலமவர் வராகி நயந்திகழ் பேரில் நானிலம் காப்பவளும் நகைமுக முடன்வரச் சிரப்படை யேந்தி நற்கரி2 லேமர்ந்து நனிமிக வருமிந் திரன்துணை யான நாகுறை3 தேவியளும் முறைகெடு முயிரால் முளைத்திடும் பேய்மேல் முன்திகழ் சூலமுடன் முனைந்துயிர் புரக்கு மொருபெருங் காளி மூவுல காள்பவளும் முழுமறை மலையாய் முளரி4யில் தேனாய் முன்புரி நற்பயனாய் முழுத்தனித் தமிழை முழங்கிய சேயை மோயெ5னக் காத்திடவே. 9 2. ஐராவதம் என்னும் இந்திரன் யானை 3. இளமை பொருந்திய 4. தாமரை 5. தாய் முப்பத்து மூவர் (கட்டளைக் கலிப்பா) மறையே ஓருருக் கொண்டதை யொத்தொரு மழலைச் சேயினை வேண்டிய சொக்கரின் நிறையே எண்ணிய நீள்நட வேந்தனும் நினைவாய்த் தந்தமெய் நேர்தமிழ்ச் சேயினை முறையே பன்னிரு சூரியர் தம்முடன் முனைப்பா ருத்திரர் ஏழுடன் நால்வரும் இறையே வாழ்த்தவி ரண்டும ருத்துவர் இணைந்தே எட்டுவ சுக்களுங் காக்கவே 16 1. மறைமலையடிகளின் தந்தையார் 2. தில்லைக் கூத்தப்பெருமான் பொன்னம்பலவாணன் 3. மறைமலையடிகள் 2. செங்கீரைப் பருவம் செங்கீரைப் பருவம் என்பது குழந்தைகளுக்கு ஒரு காலை மடக்கி ஒரு காலைப் பின்னால் நீட்டி இரு கைகளையும், முன்னே நிலத்தில் ஊன்றித் தலையைத் தூக்கி அமைத்துக் கொண்டு தாயர் பயிற்றும் இனிய சொற்களைக் கூறி ஆடுக எனக் கூறும் பருவமாகும். கீரையாடுதல் என்ற தொடர்க்குச் சொற்களைச் சொல்லித் தலையாட்டுதல் என்றும், சொற்களைப் பேசுதல் என்றும் பொருள் கூறுவர். குழந்தை தலையசைத்து ங்க், ங்க் எனக் கூறுதலைக் கேட்டுத் தாய்மார்கள் உவப்பர். கீர் என்பதற்குச் சொல் எனப்பொருள் கொண்டு செம்மை + கீர் எனப் பிரித்துக் கேட்பார்க்கினிய சொற்களைச் சொல்லும் பருவம் என்றும், கீரம் (க்ஷீரம்) என்பதற்குப் பால் எனப் பொருள் கொண்டு பால் போலும் இனியமழலை பேச முயலும் பருவம் என்றும், கீரம் - கிளி என்பதால் கிளி ஒரு காலை மரக்கிளையில் வைத்துக் கொண்டு மற்றொரு காலைத் தூக்கிக் கொண்டு முகம் அசைத்து ஒலியெழுப்பி ஆடுவது போலக் குழந்தையை ஆடுமாறு கூறும் பருவம் என்றும் பலவகையாகக் கூறுவர். ஆனால் செம்மை + கீரை செங்கீரை எனப் பிரித்து இளமையான கீரைத் தண்டு தன் தலைப் பகுதியிலுள்ள இலைகளின் பாரம் தாங்க மாட்டாமல் காற்றில் ஆடுவது போல இளமையான ஐந்து மாதக் குழந்தை ஒரு காலை மடக்கி, ஒரு காலை நிமிர்த்திக் கழுத்துப் பொறுக்க மாட்டாமல் அசைந்து ஆடுமாறு கூறும் பருவம் என்ற பொருளில் செங்கீரைப் பருவம் என்று கூறுதலே மிகப்பொருத்தமாகக் கொள்ளலாம். 2. செங்கீரைப் பருவம் (ஆசிரிய விருத்தம்) பொங்கியெழுங் கங்கையைச் செஞ்சடையிற் கொண்டவன் புகழ்கழுக் குன்றநாதன் பொற்பாதம் போற்றியோர் பிள்ளையை வேண்டிடப் புண்ணியங் கூடிவரவே திங்கொளி வீசிடத் தேவனருள் கூடிடத் திரண்டிருந்த வையமுழுதும் தீந்தமிழ்த் தேன்சுவை தித்திக்கத் தித்திக்கத் தெள்ளிநித மள்ளிநல்க. தங்கமனச் செம்மலாய்ச் சைவமனக் காளையாய்த் தகதகப் பொன்மேனியாய்த்1 தக்கநற் கல்வியும் தன்னுறுதி மேன்மையும் தான்கொண்டு நெஞ்சுயர்த்திச் சிங்கமென வந்தவன் செய்யுபுகழ் தந்தவன் செங்கீரை யாடியருளே சின்னம்மை சொக்கனார் தாம்பெற்ற செல்வமே செங்கீரை யாடியருளே. 1. அடிகள் கண்டாரைக் கவரும் செம்மேனியினர். குன்றெடுத் தானிரை காத்தவன்1 மருமகனாய்க் கொடியவினை யோட்டியருளக் குன்றேறி நின்றுவிளை யாடிடு சிவனாங் குக்குடக் கொடியண்ணலை2 ஒன்றிவருந் தோற்றனாய் ஒப்பரிய ஏற்றனாய் உயர்விக்க வந்தபொலிவும் உச்சியில் வெண்கொண்டை ஒள்ளொளி வெண்முத்தம் ஒத்திடுங் காதினழகும் கன்றெழுந் தாலெனத் துள்ளிமகிழ் வெய்திடுங் கருத்தார்ந்த வெல்லமொழியும் கற்றவர் மெச்சிடு மொப்பிலாப் புலமையுங் கண்டவர் மனமகிழ்ந்து சென்றெடுத் தன்பொடுங் கொஞ்சவரு தங்கமே செங்கீரை யாடியருளே சின்னம்மை சொக்கனார் தாம்பெற்ற செல்வமே செங்கீரை யாடியருளே. 12 1. திருமால் 2. சேவற் கொடியுடைய முருகன். இறையவன் தான்படைத் தின்னுயிர்க் கேற்பதாய் இசைவோடு தந்தநீரில் இணையற்ற செவ்விதழ்த் தாமரை நாணுவகை இலங்குமணிக் கால்களோடு மறையவன் தான்தரு மட்டிலாச் சீர்தமிழ் மகிழ்வோடு காதிற்புக மலர்ந்திடும் நெஞ்சத்துக் களிப்பினை யொலியாக்கும் மணிபுனை பூங்கைகளும் முறையுடன் வைத்திடு செயலினால் பெரும்பேறு முழுமையாய்ப் பெற்றமண்ணாள் முகத்தோடு தன்னகம் முற்றிலும் தான்பூக்க மொழிநலம் சேர்த்ததின்பால் திறையென மேன்மைகள் செலுத்திடக் கொண்டவா செங்கீரை யாடியருளே சின்னம்மை சொக்கனார் தாம்பெற்ற செல்வமே செங்கீரை யாடியருளே. 13 அடிகள் தாமரையும் நாணும்படியாக விளங்கும் கால்களோடும், உள்ளக் களிப்பினை ஒலியாக வெளிப்படுத்தும் மணிபுனைந்த கைகளோடும் தோன்றியதால், நிலமகள் முழுமையான பெறற்கரும் பேறு பெற்றாள். அகமும் முகமும் மலர, மொழிநலம் பேணும் அடிகட்கு நிலமகள் மேன்மைகள் என்னும் நிறைப் பொருளை அளிக்க ஏற்றுக் கொண்டு உவந்த அடிகளைச் செங்கீரை யாடுமாறு வேண்டுகின்றார். காவி1யை வென்றவேற் கணையினை வென்றமீன் கண்ணுடை மதுரையன்னை கடைநோக்கி லருளாட்சி காட்டிவென் றாற்போலக் கற்பனைக் கெட்டாவெழில் மேவிடக் கையோடு காலூன்றித் தலைதூக்கி2 மின்னுமொளிக் கண்களாலே மிரளாது தெளிவோடு நோக்கியழ கூட்டியே மென்னகைப் பூட்டினர்த்தே பூவிடைத் தங்குநறுந் தேனெனத் தித்திக்கும் பொங்குதனித் தமிழ்தந்தவா புரியாத மொழிநீக்கிப் புத்துணர் வூட்டிய பொற்புடை யமுதவூற்றே சீவிநற் சூழியக் கொண்டைமலர் கொண்டவா செங்கீரை யாடியருளே சின்னம்மை சொக்கனார் தாம்பெற்ற செல்வமே செங்கீரை யாடியருளே. 14 1. நீலோற்பல மலர். 2. செங்கீரைப் பருவத்தின் இயல்பு காட்டப்பட்டது. வானிடைப் புயலன்ன வண்ணனின் தங்கையை வலம்நீக்கி இடத்தமைத்து வற்றாத வைகையால் வளமோங்குமதுரையில் வைத்தகால் மாறியாடித் தேனினு மினியசெந் தமிழீந்த தெய்வமாம் திருத்தில்லை நகரவேந்தன் தேர்ந்திந்தப் புவிமீது செந்தமிழ் வாழ்ந்திடச் செய்திடற் கெண்ணமிட்டே மானிடப் பிறப்பினில் மாட்சிகொள் தண்ணருள் மலர்ச்சியா முயிரைவைத்து மங்காத வொளிநிறை மறைமலை யெனுமுரு மன்னுபுகழ் சேர்த்தளிக்கத் தீனி1டப் பொலிவோடு தென்னக சேர்ந்தவன் செங்கீரை யாடியருளே சின்னம்மை சொக்கனார் தாம்பெற்ற செல்வமே செங்கீரை யாடியருளே. 15 மீனாட்சியம்மை திருமணம், பாண்டியனுக்காகக் கால் மாறி ஆடிய திருவிளையாடலும் சுட்டப்பெற்றன. திருத்தில்லை நகரவேந்தன் செந்தமிழ் வாழ்ந்திட மறைமலையடிகளைத் தோற்றுவிக்க, அடிகள் தனித்தமிழ்க் கொள்கையை நிறுவித் தமிழ் வளர்க்கத் தென்னகம் சேர்ந்தார். 1. புதிய கொள்கை. (வேறு) கானிடை வீசிக் காவிடை புக்குக் காடம் பாடிதனில் கட்டியங் கூறி யாழியின்1 தன்மை காட்டிடுந் தென்றலெழ ஊனிடை மேவும் நோயினைப் போக்கி ஊக்கம தைச்சேர்க்கும் ஒப்பறு மேன்மை மருத்துவ ராகி ஊர்புக ழும்சீர்மை தானெழச் சொக்க நாதரென் றானார் தாம்புரி மெய்நோற்பால் தாயெனச் சின்னம் மைமகிழ்ந் தீந்த தாழ்வறு சீராளன் ஆனிடைக் கண்ணன் வேய்ங்குழல் வென்றோன் ஆடுக செங்கீரை அம்பல வாணர் தம்மருட் செல்வன் ஆடுக செங்கீரை. 16 1. இசையின்பம் கருதி யாழின் என்பது யாழியின் என்றாயிற்று. அடிகளின் தந்தை சொக்கநாதர் காடம்பாடிக் கிராமத்தில் மருத்துவராக விளங்கினார் என்பது வரலாறு. மேழி1யைக் காத்துச் சீரினை யாக்கும் மேலவர் வேளாளர் மேம்படு பண்பர் மெச்சிடு மன்பர் மீனருள் போல்நெஞ்சர்2 சோழியச் சைவர்3 தம்வழி வாழ்ந்த சொக்கரின் நேர்மகனாய்ச் சூழ்ந்தத டங்கல் மாய்ந்தகன் றோடிச் சொல்வள மிக்கதமிழ் ஊழியை வென்றே யுள்ளொளி காண உள்ளமும் பெற்றவனாய் ஓங்கிய தரணி ஆண்டிடப் பரணி4 ஓச்சிய5 நன்னாளில் ஆழியின் சூழல் மண்ணிடை வந்தோன் ஆடுக செங்கீரை அம்பொன் மேனிச் செந்திரு மைந்தன் ஆடுக செங்கீரை. 17 1. ஏர் 2. மீன் போல் அருளும் நெஞ்சினர் 3. சோழநாட்டுச் சைவர். 4. பரணியிற் பிறந்தார் தரணி யாள்வார் என்பது உலகியல், அடிகள் பரணியிற் பிறந்தவர். 5. ஆட்சிசெலுத்திய பொங்கெழி லொன்றுதி ரண்டதைப் போலப் பொன்னார் திருமேனி பூவினில் வாழ்பிர மன்திருக் கையாற் பூட்டிய செம்மேனி கங்கையைத் தன்சடை கொண்டவன் நெற்றிக் கண்வரு செவ்வேளா காவினில் பூத்திடு மென்மலர் நெஞ்சுள் கண்டத மிழ்த்தேனோ எங்குளன் மன்மதன் இங்கிவன் தானோ என்றிப் பார்திகைக்க ஏற்றமுந் தோற்றமுந் தேற்றமும் பெற்றே ஏந்திடு புகழுடையன் அங்கனி யின்சுவை தன்மொழி கொண்டவன் ஆடுக செங்கீரை ஆய்ந்துத னித்தமிழ் அன்பொடு தந்தவன் ஆடுக செங்கீரை. 18 அடிகளின் உருவப் பொலிவு தெய்வ வடிவங்களோடு ஒப்பிட்டுப் பாராட்டப்படுகின்றது. (சந்த விருத்தம்) குன்றை மோதிடு தோள்வலி கொண்டே வந்தோனே கூறும்செந்தமிழ் எண்ணிரண் டுள்ளே தந்தோனே மன்றுள் ளாடிய மாமணி தன்தாள் செந்தேனே மாசில் மென்மல ரேய்ந்தம ணத்தை வென்றோனே என்று சௌந்தரப் பேரினள்2 நெஞ்சே நின்றோனே ஏறு மன்புசெய் யில்லற முய்த்தே சென்றோனே தென்றல் போல்வலம் வந்தவச் செங்கோ செங்கீரை தேடுறு மெய்ப்புகழ் தந்தவச் செங்கோ செங்கீரை 1.அடிகள் தம் 16 வயதிலேயே தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுணர்ந்தார். 2. அடிகளின் வாழ்க்கைத் துணைவியார் (வேறு) கருவினில் தோற்றிய கணமுதற் கொண்டுத மிழ்தான் துய்த்தோனே1 கருத்தினை யாய்வினில் கனவிலும் பெய்தமு தந்தான் தந்தோனே திருவினைக் கூட்டிடு மழகினைக் கொண்டொரு பொற்றேர் வந்தாற்போல் திருத்தரி பூவையின்2 திரள்வளை மென்கர மன்பாய்க் கொண்டோனே மருவினைத் தேக்கிய மலரெனுந் தண்டமிழ்ச் செந்தே னுண்டேபார் மதித்திட மேம்படு புகழ்நிலை தந்தனை மங்காச் செவ்வேளே செருகிடு பூச்சரச் சிறுகுமிழ் கொண்டவச் செங்கோ செங்கீரை திறத்தமிழ் சீர்தரு மறைமலைக் கண்மணி செங்கோ செங்கீரை 20 1. அடிகள் கருவிலே திருவுடையார். 2. அணிகலன்கள் அணியப் பெற்ற சௌந்தர வல்லியின். 3. தாலப் பருவம் தாலப் பருவம் என்பது குழந்தையைத் தொட்டிலில் கண் வளரச் செய்ய உரிமை மகளிர் நாற்புறமும் சூழ நின்று தம் நாவினாற் பாடி அத் தொட்டிலையாட்டுவதாகக் கூறப்படும் பருவமாகும். ஐந்தாம் திங்களில் தலைநிமிர்த்திப் பழகிய குழந்தை, ஏழாம் திங்களில் பிறர் கூறும் ஒலி வேறுபாடுகளையும், குரல் வேறுபாடுகளையும் ஓரளவு புரிந்து கொள்ளுமாதலின், குழந்தை உறங்குதற்கெனப் பாடப்பெறும் பாட்டையே தாலாட்டு என்பர். தால் என்பது தொங்குதல் என்ற பொருளில் நாவைக் குறிக்கும். எனவே குழந்தையைத் தூங்க வைக்கத் தாயர்கள் தாலேலோ, தாலேலோ என மெல்லிய இனிய இசை எழுப்பிப் பாடுதற் பொருட்டு நாவசைத்தலால் தாலப் பருவம் எனப்பட்டது. பிள்ளைத் தமிழ் நூல்களில் குழந்தையைத் தூங்கச் செய்வதாகப் பாடல்கள் அமையவில்லையாயினும் இந் நூலாசிரியர் தொட்டில் தனிலே தாலேலோ என்று குழந்தையைத் தொட்டிலில் தூங்கச் செய்வதாகப் பாடியது சிறப்பாக உள்ளது. தாலப்பருவம் என்பதற்கு நாவை அசைத்துச் சொற்களைப் பயிலச் செய்யும் பருவம் என்றும் கூறலாம். அதாவது தாயார் தம் குழந்தைகளுக்குத் தம் நாவினை அசைத்துக் காட்டி அவ்வாறு அசைத்து ஒலியெழுப்பும்படிக் கூறுவதாக அமைக்கும் பருவம். வீட்டை இன்பத்தால் ஆளவந்த குழந்தைக்குப் பாடப் பெறும் தாலாட்டு, நாட்டை ஆளவந்த மன்னன் உறங்கச் செல்லும்பொழுது `கண்படைநிலையாகப் பாடும் இலக்கிய வடிவம் பெற்ற தெனத் தொல்காப்பியத்தால் உணரமுடிகிறது. பிள்ளைத் தமிழில் தாலப் பருவம் என்ற ஒன்றே வாய்மொழி இலக்கியமான தாலாட்டு என்ற தரத்தைப் பெற்றுள்ளது என்பது இப்பருவத்திற்குரிய சிறப்பாகும். இசைத்தமிழ் வளர்ச்சிக்கு இப்பருவமே வித்து எனலாம். 3. தாலப் பருவம் (ஆசிரிய விருத்தம்) வண்ணங் கருத்த வெள்ளைமனம் வடித்த செம்மைக் குணங்கொண்டு வளையா மனமும் வளைந்திசைய வைக்குந்தந் துணையாய்ச் சவுந்தரத்தை எண்ணம் விரும்பிக் கொண்டதுபோல் இணைந்த வாழ்வில் நலமெல்லாம் இனிதாய்ப் பெற்றுப் பெருவாழ்வில் எல்லாங் கொண்டு மகிழ்வுற்றுத் திண்ணப் புகழும் சீர்சிறப்புத் தெளிந்த தெய்வ நல்லருளும் செழிக்கச் செய்யும் மேன்மக்கட் செல்வம் முழுதும் பெற்றுதமிழ் தண்ணம்1 பிடித்த அம்பலவன் தரவே கொண்டோய் தாலேலோ தனித்த தமிழைத் தந்தபசுந் தளிரே வொளியே தாலேலோ. 21 மழு பத்தோ டாறா மாண்டிற்குள் பசுமைத் தமிழ்முற் றுங்கற்றுப் பழகுந் தமிழைக் கற்பிக்கும் பணியைச் செய்து பேர்பெற்றுச் சித்தி ரைசேர் வெண்மதியாய்த் திகழ்பைந் தமிழாம் வானத்திற் சிறிது மிணைஈ டில்லாதே சிறந்த புலமைச் சீராளா சத்தைக் காணா வேற்றுமொழி தண்ணார் தமிழில் தான்கூட்டிச் சரளத் தமிழாய்1 மாற்றியதைத் தாளா மதியிற் கூராளா தத்தாய் வந்த மொழி2நீக்கந் தரவே வந்தாய் தாலேலோ தனித்த தமிழைத் தந்தபசுந் தளிரே வொளியே தாலேலோ. 22 1. மணிப்பிரவாள நடை. 2. இயற்கையால் உரிமையில்லாது, வந்து கலந்த மொழி. தூங்கிக் கிடந்த தமிழ்நாட்டில் சுடரு மொளியாய்த் தோன்றியிருள் சூழா தோடச் செய்துநெஞ்சில் துவளா எண்ணந் தோற்றுவித்தே ஆங்கி லத்தொடு வடநூலில் அருமைப் புலவர் பெற்றபயன் அனைத்துந் திரட்டிச் செந்தமிழில் அழகார் நூல்கள் பதிப்பித்தே ஏங்கிக் கிடந்தா ருரிமைக்கு எழுச்சிக் குரலை எழுப்பித்தே இணையில் புதுமைத் திட்டமெலாம் இசையத் தேடிக் கொடைசெய்தே தாங்கிக் களித்து மாந்தருளத் தடத்தே நிற்போய் தாலேலோ தனித்த தமிழைத் தந்தபசுந் தளிரே வொளியே தாலேலோ .23 அடிகள் ஆங்கில மொழியிலும், வடமொழியிலும் நல்ல பயிற்சித்திறன் உடையவர் நாட்குறிப்பெழுதுவதும், தம் நூல்களுக்கு முன்னுரை எழுதுவதும் ஆங்கிலத்தில்தான். நாகைப் பதியில் முன்வாழ்ந்து நல்லோர் புலவர் பேரறிஞர் நாடும் புலமைத் தெளிவாலே நாளும் புகழை வரவாக்கித் தோகைத் துணைவி யறங்காக்கத் துள்ளும் சிந்தா மணி1மகவைத் துவக்கக் கனியாய்ப் பெற்றுவகை துளிக்கக் கண்டே யனந்தபுரம்2 வாகை சூடுந் தமிழரசாய் வாய்க்கக் கொண்டே பேரறிவால் வடித்துக் கொடுக்குங் கட்டுரைகள் வளரும் புகழை வழங்கிடவே தோகை மயிலோன் தந்ததமிழ் சொற்றவ தாலோ தாலேலோ தூய்மைத் தமிழ்செய் மறைமலையாந் துணைவா தாலோ தாலேலோ. 24 1. அடிகளின் முதல் பெண் மகவின் பெயர். 2. மனோன்மணீயம் நாடகம் இயற்றிய பேராசிரியர் சுந்தரம் பிள்ளையவர்களின் தொடர்பால் அடிகள் திருவனந்தபுரத்தில் ஓர் ஆங்கிலப்பள்ளியில் தமிழாசிரியராக வேலையிலமர்ந்தார். நல்லார் நாரா யணசாமி1 நன்றாய்த் தமிழைக் கற்பிக்க நலஞ்செய் யுளத்தற் கசடறவே நாட்டம் செலுத்தி யாய்ந்தறிந்து வல்லார் சோம சுந்தரனார் வளமார் சைவ சித்தாந்தம் வற்றா ஊற்றாய்த் தான்சுரக்க வரைவே யின்றி யதிலாழ்ந்து வெல்வா ரிந்தப் புவீமீதில் வேறா ரென்றே2 கூறுவகை வெற்றிக் கரசாய் விளங்கியருள் வேட்கை யெழவே நடத்தரசைத்3 தொல்லோர் புகழ்முத் தமிழாலே துதிப்போய் தாலோ தாலேலோ தூய்மைத் தமிழ்செய் மறைமலையாந் துணைவா தாலோ தாலேலோ. 25 1. அடிகட்கு இலக்கண இலக்கியங் கற்பித்த ஆசிரியர் 2. வேறு + யார் என்பது வேறார் எனச் செய்யுள் முடிபாயிற்று. 3. கூத்தப்பெருமான். சென்னை நகரில் செய்யதமிழ்; சீராய்க் காக்குங் கல்லூரி சிறந்த ஆசான் எனப்போற்றித் திருவார் பணியிற் சேர்ப்பிக்க மன்னும் புலமை மாணறிவால் மாணாக் கருளங் கொள்ளையிட்டு மலர்ந்த முல்லை யாராய்ச்சி மதிப்பைக் கூட்ட முறையாகப் பின்னும் பட்டி னப்பாலை பெருங்கட் டுரையு மாய்ந்தளித்துப் பிறங்கு சைவ சித்தாந்தப் பெருமை யுலகிற் கெடுத்தோதித் தொன்மைக் கினிமை சேர்த்தபசுந் துளிரே தாலோ தாலேலோ தூய்மைத் தமிழ்செய் மறைமலையாத் துணைவா தாலோ தாலேலோ. 26 அடிகள் சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்த பரிதிமாற் கலைஞரின் உதவியால் அக்கல்லூரியிலேயே தமிழாராய்ச்சியராய் அமர்த்தப் பட்டார். அங்குப் பணியாற்றுங் காலத்தில் முல்லைப்பாட்டு ஆராய்ச்சி உரையும், பட்டினப்பாலை ஆராய்ச்சியுரையும் எழுதினார். தங்கத் தகட்டின் மீதினிலே தகுமோ ரிணையாய் நடுவைக்கத் தலைசேர்ந் திலங்கும் மாணிக்கத் தனையும் வெல்லும் மாமணியே வங்கக் கடலின் மீதெழுந்து வளமார் தமிழின் தேன்சுமந்து வயலின் பசுமைக் குளிர்தாங்கி வருமென் தென்றல் பூங்காற்றே தெங்குங் கதலி1த் தீங்கனியுந் திரண்ட முலைசேர் பசும்பாலும் செழித்த கரும்பின் நறும்பாகும் செறிந்த சுவையின் பெருஞ்சுவையே தொங்கல்2 பூண்டே நவமணிப்பொன் தொட்டில் தனிலே தாலேலோ சுவைக்குந் தமிழ்செய் தூமணியே சுடரே தாலோ தாலேலோ. 27 தென்றல் தென் பொதிகை மலையிலிருந்து பிறந்து வருவது இயல்பு. அடிகள் நாகையில் தோன்றியவராதலின் வங்கக் கடலின் மீதெழுந்து வரும். தென்றலாகக் கூறப்பட்டார். 1. வாழை 2. மாலை தொட்டாற் சிவக்குந் திருமேனித் துங்கம்1 நிறைந்த நெற்றிக்கண் துடியைத் தாங்குஞ் சிவனார்கொள் துய்ய வெண்மைத் திருநீறும் பொட்டுந் துலங்கப் பொலிவேற்றுப் பொற்பைக் கூட்டுந் திருக்காட்சி பொருள்சே ரினிமைச் சொற்கவியுள் பொருந்தி வாய்த்தாற் போலிருக்க அட்டால்2 குறையாச் சுவைப்பாலாய் அமைந்த உள்ளப் பண்பொழுக அறிவின் திறத்தால் ஆய்ந்ததெலாம் அகற்றாக் கொள்கைப் பிடிப்பாக்கிச் சுட்டும் முனர்தா னுவந்தருளு சுகமே கனியே தாலேலோ சுவைக்குத் தமிழ்செய் தூமணியே சுடரே தாலோ தாலேலோ 28 1. பெருமை, உயர்வு. 2. காய்ச்சினால். அடிகள் தம்மிடம் எவரேனும் ஒரு கருத்தைக் கேட்பதற்கு முன்னர் கேட்போரின் குறிப்பறிந்து இன்னதெனக் கூறும் இயல்பினர். (வேறு) அழகுறு கொண்டை யணியெனக் கொண்ட அன்பா தாலேலோ ஆங்கில வடநூ லகலமு மாய்ந்த அறிவா தாலேலோ பழகிட மேன்மை பயந்திடு கேண்மைப் பண்பா தாலேலோ பைந்தமிழ் வையம் பயனுற வருளும் பரிவா தாலேலோ கழலிணை1 மாட்சி கருத்தினிற் பூண்ட கனியே தாலேலோ கற்றவர் போற்றுந் தனித்தமிழ் கண்ட கடலே தாலேலோ நிழலினைக் கூட்டுந் தமிழ்மொழி2 யொப்பும் நிலையே தாலேலோ நெஞ்சினில் மாந்தர் நினைவுறத் தாங்கும் நிறைவே தாலேலோ. 29 1. சிவபெருமானின் வீரக் கழல் 2. தன்பால் வந்தாரை வாழ்விக்கும் தண்ணிய தமிழ்மொழி. (வேறு) முப்பா லாய்ந்துமு ழுப்பயன் தந்த முகிலே தாலேலோ முழங்கிய வள்ளுவ ராண்டினைக் கண்ட முதலே1 தாலேலோ தப்பாத் திருமறைச் சத்தினை யெல்லாந் தந்தாய் தாலேலோ தனித்திரு வாசக உரையினை2 ஈந்த தமிழே தாலேலோ ஒப்பாக் கொள்கையு ரைத்திடும் நூலை யுன்னாய்3 தாலேலோ உணர்விலி நெஞ்சுளுந்4 தெளிவினை ஊட்டும் ஒளியே தாலேலோ செப்பார் நகில்சீர்த் திருபுனை மங்கை சேர்ந்தாய் தாலேலோ செந்தமிழ் போற்றியே வந்தனை செய்யு செல்வா தாலேலோ. 30 1. வள்ளுவராண்டு எனக் குறிப்பிடும் வழக்கை அடிகள்தாம் தோற்றுவித்தனர். 2. அடிகள் திருவாசகத்தில் சில பகுதிகளுக்கு விரிவான ஆய்வுரை எழுதியுள்ளார். 3. நினையாய். 4. அறியாமை மிக்கவர் உள்ளத்திலும். 4. சப்பாணிப் பருவம் சப்பாணிப் பருவம் என்பது குழந்தையைக் கைகொட்டி விளையாடுமாறு கூறுவதாக அழைக்கும் பருவமாகும். ஒன்பதாம் மாதத்தில் குழந்தை உட்கார ஆரம்பித்த பிறகு கையாட்டுதல், கைகொட்டுதல் போன்ற விளையாட்டு நிகழ்ச்சிகள் அதனிடத்தே தோன்றுவது இயல்பு. பெற்றோரும் மற்றோரும் கைகளைச் சேர்த்துத் தட்டிக்காட்டிக் குழந்தையை அழைப்பதோடு, கைகொட்டிக் காட்டும் படியும் கூறுவர். குழந்தை அதற்கேற்ப `சப்' என்ற ஒலி உண்டாகும்படி பாணி (கை) யைக் கொட்டும். ஆசிரியர் தாம் எடுத்துக்கொண்ட தலைவராகிய குழந்தை யின் கையைக் குறிப்பிடும்போது, இன்ன சிறப்புக்களையுடைய கைகளினாலே ஓசை எழுப்புக என்று கைக்குரிய பெருமையைச் சேர்த்துக் கூறுவது மரபு. குழந்தை நிமிர்ந்து உட்கார்ந்திருக்கும் அமைப்பைச் சப்பாணி என்று கூறும் வழக்கம் உண்டு. சப்பாணி என்பதற்குச் சகபாணி எனப்பிரித்து, சக என்பது உடன், பாணி யென்பது கை, இரண்டு கைகளையும் உடன் சேர்த்துக் கொட்டுதல் எனப்பொருள் கூறுதலும் உண்டு. `ச'என்றால் சேர்த்தல் என்றும் பொருள் கொண்டு கைகளைச் சேர்த்து ஒலியெழுப்புதல் எனவும் கூறலாம். 4. சப்பாணிப் பருவம் (ஆசிரிய விருத்தம்) வண்டுணர்ந் தறியாத வளரளி மலர்1 தன்னை வடிவான கூந்தலின்மேல் வட்டமுற இட்டுமதி கிட்டவர லொத்தவகை வளமான வாழ்வுவாழ தண்டமிழ்த் தனிமேன்மை தனையறிந் துலகுக்குத் தணியாத ஆர்வமோடு தந்ததொரு வள்ளலின் தங்குபுகழ் மார்பினைத் தனதாக்கிக் கொண்டுவந்தே கண்டுரை2 மொழிபேசிக் கருத்தினிற் சுவையூட்டிக் கனிவாயி னமுதமீந்து கட்டழகு மிக்கபல மெத்தபுக ழுக்குரிய கவினார்ந்த மக்களீன்ற தண்டிகை3 யமர்புகழ்ச் சௌந்தரம் நெஞ்சுளோய் சப்பாணி கொட்டியருளே தளராம லுலகாளுந் தனிநடத் தான்பிள்ளை சப்பாணி கொட்டியருளே. 31 1. மலர்மொட்டு, வண்டு மொய்க்காத மொட்டை மலரும் செவ்வியிலேயே கூந்தலிற் சூடல் சிறப்பு. 2. கற்கண்டு போலினிய சொற்கள். 3. பல்லக்கின் மேல் அமர்ந்து செல்வது போன்ற உயர்ந்த புகழ். திருப்பெருந் துறையுறை1 சீராளன் தன்மீது சிவபுரா ணம்2பாடிய திருவாச கப்பிரா னருள்வாச கத்தாழ்ந்து திறமான ஆராய்ச்சியைப் பருப்பொரு ளுரையுடன் பகுத்துல களித்தவன் படித்தவ ரொப்புமாறே பழந்தமிழ்க் கொள்கையே சைவசம யம்மெனப்3 பயன்கண்டு தான்செய்தவன் திருக்குறட் சிறப்பினை யாராய்ச்சி செய்தவன் சிறுவர்க்கு மினிதாந்தமிழ்4 திரட்டியே தந்தவன் சிவஞான போதமெனுந்5 தெளிவான நூலோர்ந்தவன் தருக்கினை யொழித்தவன் தான்கற்றுத் தேர்ந்தவன் சப்பாணி கொட்டியருளே தளராம லுலகாளுந் தனிநடத் தான்பிள்ளை சப்பாணி கொட்டியருளே. 32 1. மாணிக்கவாசகருக்கு இறைவன் ஞானகுருவாய்த்தோன்றி அருளீந்த ஆவுடையார் கோயில் என்னும் இடம். 2. திருவாசகத்தின் முதற்பகுதி. 3. சங்கத் தமிழ்க்கொள்கையை, பிற்காலத்தார் சைவசித்தாந்தம் எனக் கொண்டதாக அடிகள் ஆய்ந்துரைந்தார். `பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்' என்பது அடிகள் எழுதிய நூல். 4. `சிறுவர்க்கான செந்தமிழ்' என்பது அறிவுபுகட்டுங் கதைகளும், கட்டுரைகளும் அமைத்து அடிகள் சிறுவர்க்காய் எழுதிய நூல். 5. மெய்கண்டார் அருளிய சைவசித்தாந்த நூல். படரொளி சடையோடு விடைதனில் வருவான்றன் பணிமலர்த் தாளினருமை பற்றுமிக வேபாடும் பகவதி யார்1 தண்கை பற்றுசிவ பாதஇதயர்2 இடர்கெடும் வகைசெய்த இறைவனி னருளேற்ற இனியசம் பந்தவள்ளல் இசையொடு கைப்பாணி3 யிணைத்துசெந் தமிழ்பாடி இன்பநிலை கண்டதைப்போல் சுடர்தரு நிலவோடு புனலினைத் தலைகொண்டு சுழன்றாடுந் தெய்வந்தனைச் சொற்றமிழ் கோத்திசைச் சுவையோடு பாடிமனம் சொக்கவே தான்வைத்தவா தடவிடு மொருவீணை தன்னினிமை வென்றவா சப்பாணி கொட்டியருளே தனக்குவமை யில்லதோர் தனித்தமிழில் வல்லவா சப்பாணி கொட்டியருளே. 33 1. ஞான சம்பந்தரின் தாய் 2. ஞான சம்பந்தரின் தந்தை 3. கைத்தாளம். அணிபுனை தமிழ்ச்சீரை யறிவுடன் நெஞ்சத்தில் அணையேற்றி நாளுமாய்ந்தே அறிஞர்க ளொப்பியே யகமாரப் போற்றிட அனைத்தையு முறைப்படுத்தும் பணியினைப் புரிந்துயர்ப் பரிவோடு நாளிதழ் பயனெண்ணி அச்சிலேற பசுந்தரை மீதிலே யிளந்தென்றல் சூழஅமர் பான்மையென யின்பமேவ நுணியசெந் தமிழ்நாகை நீலலோ சனியோடு நுகர்திரா விடமந்திரி நுவலுசித் தாந்ததீ பிகையென்னுந் தாள்களில் நுணுகியா ராய்ந்ததெல்லாந் தணிந்தலுங் குறைதலும் தாமின்றித் தந்தவா சப்பாணி கொட்டியருளே தனக்குவமை இல்லதோர் தனித்தமிழில் வல்லவா சப்பாணி கொட்டியருளே. 34 நாகப்பட்டினத்திலிருந்து வார இதழாக வெளிவந்த நீலலோசனியிலும், காரைக்காலிலிருந்து வெளிவந்த திராவிட மந்திரியிலும், அடிகளை ஆசிரியராகக் கொண்டு சென்னையி லிருந்து திங்கள் இதழாக வெளிவந்த சித்தாந்த தீபிகையிலும் அடிகள் காய்தல் உவத்தலின்றி கட்டுரைகளும், மறுப்புகளும் எழுதி வந்தார். செய்1யெலா செழுந்தா மரைமேவு நன்னகர் திருநடம் புரிகின்றவன் திகழ்சைவ சித்தாந்த ஞானபோதசெய்யத் தெள்ளறிவு நல்கியருள் மெய்யெலா முணர்ந்தஅம் பலவாணர் திருக்கூத்து மெச்சுமெந் தமிழர்மதம் மிடுக்குள்ள கோகிலாம் பாள்கடி தங்களை மிகநன்கு நூலாக்கியே பொய்யெலா மில்லாது மக்கள்நூ றாண்டுகள் புவிமீது வாழுவகையும் பொருந்திடு முணவோடு பொருந்தாத உணவினைப் புரிந்திட எழுத்தாக்கியே தையனா யகிபங்கன்2 தண்ணருளில் தந்தவா சப்பாணி கொட்டியருளே தனக்குவமை இல்லதோர் தனித்தமிழில் வல்லவா சப்பாணி கொட்டியருளே. 35 1. வயல். 2. உமையொரு பாகனாய் சிவபெருமான். தமிழர் மதம், கோகிலாம்பாள் கடிதங்கள் மக்கள் நூறாண்டு வாழ்வதெப்படி, பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் என்னும் நூல்களை அடிகள் எழுதினார். (வேறு) தருகொடை மழையெனத் திருவருட் பாவினைத் தந்தபுகழ் ராமலிங்கந் தனையறிந் துணரார்மம் மிருளினைப் போக்கிடச் சளையாது வாதிட்டவன்1 மருளினை யொழித்திருள் மடமையை வெருட்டிடும் மன்னுபுகழ்த் திருவருட்பா மதிப்பினை யுயர்த்திட மணிப்பொருள் விளக்கிய மறைமலைப் பேருற்றவன்2 அருளினை யுயிர்களின் நலமதிற் புகுத்திட அன்புரைகள் தாம்தந்தவன் அருமைசா குந்தல அணிநாட கந்தந்த அரியமொழி யுணர்வல்லுநன்3 குருவினைச் சிவனெனக் கொண்டவன் கண்டனன் கொட்டியருள் சப்பாணியே கொள்கையில் மாறாது வெல்வதில் வல்லவன் கொட்டியருள் சப்பாணியே. 36 1. வடலூர் வள்ளல் இராமலிங்கரின் திரு. அருட்பாப் பாடல்கள் பற்றி யெழுந்த, கருத்து வேறுபாட்டில் அடிகள் அருட்பாவின் சிறப்புகளைப் பல மன்றங்களில் எடுத்துரைத்து வென்றார். 2. காளிதாசரின் சாகுந்தலத்தை அடிகள் வடமொழியிலிருந்து சாகுந்தல நாடகமெனத் தமிழில் மொழி பெயர்த்தார். மேடையெனும் நெஞ்சிலே மிக்கவருள் கொண்டுமே மிடுக்காகக் கூத்தியற்றி மிடி1யுடன் துன்பமும் மேவிவரு பீடை2யும் மின்னலெனத் தேய்ந்துமாய ஆடையென வெம்புலித் தோலினைப் பூண்டினிய வருள்தந்து காத்தளிப்போன் அறிந்தார்க்கு விருந்தாகி யன்புமழை கொட்டிடும் அம்பலவா ணன்றன்னையே ஓடையொடு தேன்சுனை யூற்றெழுந் தீஞ்சுவை யுடையநறுந் தண்ணீரென உயிருக்கு முடம்புக்கு முற்றதுணை மருந்தாக வொப்பியுள மேன்றுகொண்டு கோடையதில் வீசுமொரு குளிர்தென்ற லொத்தவன் கொட்டியருள் சப்பாணியே கொள்கையில் மாறாது வெல்வதில் வல்லவன் கொட்டியருள் சப்பாணியே 37 1. வறுமை 2. நோய் கத்திடுங் கடல்தன்னை முப்புறம் பெற்றினிய கலைமாட்சி காத்துநாளும் கருத்தீர்த்துப் புறநாடுங் கண்குளிரக் காணுவகை கட்டழகு மிக்கநாடாய் எத்திசையு மேற்றநலம் பெற்றிளமை பூண்டதா லிருக்கின்ற செல்வமெல்லா மிழுக்கின்ற காந்தமா யிலங்குதல் கண்டவ ரெதிரியாய் நுழைந்ததாலே நந்திடும்1 பிறர்மொழி நந்தமிழ் மொழியிலே நண்டுபோ லோடிவந்து2 நடமாட லானதால் நயத்தமிழ் தன்னினிமை நன்குணரா மக்களுக்குக் கொத்தெனத் தனித்தமிழ் கொடுத்தசெங் கைசேர்த்துக் கொட்டியருள் சப்பாணியே கொள்கையில் மாறாது வெல்வதில் வல்லவா கொட்டியருள் சப்பாணியே. 38 1. வளர்ந்திடும் 2. நண்டு இடம் மாறி வந்து ஆட்சி பெறல் போல பிறமொழி தமிழில் ஆட்சிபெறல். (வேறு) அறிதுயி லென்னும் பெருநிலை தன்னை அறிவால் முற்றாய்ந்தும் அதைத்திரு நாவுக் கரசெனும் பிள்ளைக் களித்தே நோய்தீர்த்தும்1 செறிவுற நன்கே தொலைவிலு ணர்தற்2 சிறப்புத் தானேர்ந்து சிறிதொரு நூலாய்ச் செயும்வகை கண்டு திறமை காண்பித்தும் நெறியுற மெய்கண் டவர்திரு நாளை3 நினைவாய்க் கொண்டாடி நெடும்புகழ் மேவ அரும்பணி செய்து நிலைக்கும் பேருற்றும் குறி4யினில் மாறாப் பெரும்புகழ் கண்டவ கொட்டுக சப்பாணி குறையா அழகிற் குரிமை கொண்டவ கொட்டுக சப்பாணி. 39 1. அடிகள் `யோக நித்திரை' என்னும் அறிதுயிலின் பயிற்சியாலே தம் மகள் திருநாவுக்கரசருக்கு நேர்ந்த இளைப்பிருமல் நோயைத் தவிர்த்திருக்கின்றனர். 2. `தொலைவிலுணர்தல் என்னும் மறைபொருளுணர்ச்சி' என்பது அடிகள் எழுதிய நூல். 3. சிவஞானபோதம் இயற்றிய மெய்கண்ட தேவர் திருநாளைச் சென்னையில் கொண்டாட அடிகள் வழிகோலினார். 4. கொள்கை. (சந்த விருத்தம்) எளிமையு மருமையு முறுகொடைச் சிற்பமெ னப்பார்க்கு மிளமுலை யழகுறு சவுந்தரப் பொற்கொடிப் பெட்பேற்கக் களிதரு குறளருள் வழியினிற் புக்கற சொற்காத்துக் கடவுளின் திருநிலை யுலகுறை மக்களு ளத்தோங்கத் தெளிவுற அழகுட னிசையினை யுட்கலத் தெக்காலுந் திறமெழுப் பிடவல சுவைதரு மற்புத நற்பாக்கள் குளிருறு தமிழினில் தருபவ கொட்டுக சப்பாணி கொடையென விசைதர வருபவ கொட்டுக சப்பாணி 40 அடிகள் மனைத்தக்க மாண்புடையாளாம் சௌந்தரப் பொற்கொடியோடு குறள்நெறியில் இல்லறங்காத்து, இறை யுணர்வு மக்களிடத்தில் தோன்றுமாறு இனிய, எளிய சுவை சேர் நற்பாக்களைத் தமிழில் தருபவர். 5. முத்தப் பருவம் முத்தப் பருவம் என்பது குழந்தையை முத்தம் கொடுக்க வருவாய் என அழைத்துப் பாடும் பருவமாகும். குழந்தை தரும் வாய்முத்தத்தால், குழந்தையை ஆரம் துய்க்கின்றன ஊற்றின்பத்தைப் பெற்றோரும், மற்றோரும் பெறுவர். இப்பருவத்தில் முத்தின் வகைகள் பலவற்றைக் கூறி, அவற்றிலே உள்ள குறைகளை எடுத்துக்காட்டி, குழந்தையின் முத்தப் பெருமையை விளக்கிப் பாடுதல் மரபு. குழந்தையின் பதினோராம் மாதத்தில் பாடப் பெறுவது. முத்தந்தரும் வாயின் சிறப்புக்கள் பலவற்றைக் கூறுவதும் மரபு. பிள்ளைத் தமிழ்ப் பருவங்களுள் மிகச் சிறப்பான பருவம் முத்தம் பருவமாகும். 5. முத்தப்பருவம் (ஆசிரிய விருத்தம்) முத்துக் குமரன் தனைஈந்து மும்ம தவேழத் தினையுள்ளி முழுதும் பேசா நிலையமர்ந்து முனைப்பா யேற்று சிவனன்பிற் சித்த செலுத்தி யுருகியுளம் சிந்தித் தேனே திருக்கூத்துச் திருவே தேனே திருக்கூத்துச் சிவவே யென்று தெளிவோடு பித்தந் தவிர்க்கும் பெருமானை பெண்ணை இடங்கொள் திருவானை பெரிதா யருள்செய் வல்லோனை பிறவா யாக்கைப் பெரியானை1 முத்துத் தமிழாற் பாடியவாய் முத்தந் தருக முத்தமே முடியா முதலைப் பாடியவாய் முத்தந் தருக முத்தமே. 41 1.கருவுற்றுப் பிறவாத இயற்கை வடிவினன் சிவபெருமான். கொக்குங் கரும்புங் குலைவாழை கோதை கழுத்தும் பசுவின்பால் குலையாச் சிப்பி முதிர்செந்நெல் கொடுவாய் முதலை முழுமதியும் அக்குங்1 கமுகும்2 முகில்மூங்கில் ஆனைக் கொம்பும் கயல்முளரி அரவம் நத்தை உடும்புடனே அலையும் பன்றிச் சிறுகொம்பும் மிக்கு விளைந்தே தருமுத்தம் மெருகில் குறைதல் மறைதலெனு மிழிவைப் பெறலா லவைநீக்கி மிகுந்தே யொளிரும் வளர்முத்த மொக்கு மலர இதழ்க்கனிவாய் முத்தந் தருக முத்தமே முடியா முதலைப் பாடியவாய் முத்தந் தருக முத்தமே. 42 இப்பாடலில் முத்தின் வகைகள் கூறப்படுகின்றன. 1. சங்கு 2. பாக்கு மரம் திருவாய் மலர்த்திச் சீருருவாய்த் தெளிவாய்ப் பணிவாய் மெய்யுணர்வாய்த் திருவாய்ப் பிணைந்த வோருருவாய்த் திகழ்வா யருள்வா யென்றேத்தி உருவா யிலவாய்ப் பலவினவா யுணர்வாய் நிறைவாய் இலங்கிடுவா யுயர்வாய் மகிழ்வா யுலகியல்வா யொளிர்வாய் தருவாய் நீஇவண்வாய் வருவா யெனுசீர் மனையாள்வாய் வடிவாய் மெதுவா யிதழ்சேர்த்து வரிவாய்ச் சுடர்ப்பல் லிடையூறும் வளவாய்ச் சுவைநீர் பருகியவாய் அருகாய் நெருங்கி யகமகிழ்வாய் அமுதா முத்தந் தருகவே அறிவாய்க் கனிவாய்க் கூறியவாய் அமுதா முத்தந் தருகவே. 43 அடிகளை, தம் வாழ்க்கைத் துணைவியரின் இதழ்சேர்த்து இன்பமார்ந்த கனி வாயிதழாலே முத்தம் தருமாறு வேண்டப்பட்டது. (வேறு) கார்த்திர ளனைய திருமேனி கட்டழ குருண்டு திரண்டிருக்க கண்மணி யனைய பெண்மணியாய்க் கருதின முழுதாய்த் தந்தருகில் வார்த்தறி யாத சித்திரமாய் வனப்புற வாடும் பெட்டகமாய் வற்றிட லறியாய்ச் சுனைநீராய் வழங்கிடு மன்புத் துணையாளாம் நேர்த்திகள்1 புரிந்து குலங்காக்கும் நெஞ்சுறை சாந்தம் மை2யினுளம் நிறைவுறப் பொலிவா யன்புருவாய் நிலையுடன் மகிழ்ச் சொல்வடிவாய் ஆர்த்துசெந் தமிழைக் கூறியவாய் அமுதுறு முத்தந் தருகவே அறிவொடு கனிவாய்க் கூறியவாய் அமுதுறு முத்தந் தருகவே. 44 1. நோன்புகள். 2. அடிகட்குத் தொண்டு புரிந்த அன்புத் துணைவி. (வேறு) சைவசித் தாந்தக் கழகம்1 நிறுவித் தக்கவர் துணையோடு சமயத் திருப்பணி சைவப் பெரும்பணி தங்கு தடையின்றி வைகலு மோங்கி வளர்ந்திட வைத்து வல்லமை மிக்கதமிழ் வையக மெங்கணு மோசையெ ழுப்பிட வைத்தசு வைக்கனியே கைவளை யோடுங் காதணி குலுங்கக் கயற்கண் மொழிபேசக் கரும்புத் தமிழ்செய் திறமுற் றிடுவாய் களித்துச் சுவைபருகும் மொய்குழல் சுந்தர வள்ளியின் கணவ முத்தந் தந்தருளே முருகர் மும்மணிக் கோவை2 தெய்தவ முத்தந் தந்தருளே. 45 1. சைவ சமய வளர்ச்சிக்காக சைவ சித்தாந்த சபை நிறுவி அதன் தலைவரனார். 2. அடிகள் திருவொற்றியூர் முருகனிடத்துக் கொண்ட ஈடுபாட்டால் திருவொற்றி முருகர் மும்மணிக்கோலை என்னும் நூல் இயற்றினார். வெள்ளைநன் மக்கள்1 வித்தக நூற்கள் விரிவா யாராய்ந்து விழைவுடன் கற்போர் வியந்திடு மாறு விளக்கிட நூல்செய்து தெள்ளிய ராகி நந்தமிழ் மக்கள் சிறப்பினில் மேம்படவே சிறிதும் பொழுதைச் சிதைவாக் காமற்2 செயல்புரி தெள்ளமுதே துள்ளிடு தீமதி யுள்ளமுங் கொண்டோர் தொடுத்திடு போர்க்கணைகள் துவண்டு றைந்திடத் தூய்தமிழ்க் கணைகள் துலங்கிடச் செய்துபுகழ் முள்கிடக் கொண்ட முத்தமிழ்த் தலைவ முத்தந் தந்தருளே முருகர் மும்மணிக் கோவை செய்தவ முத்தந் தந்தருளே. 46 1. ஆங்கிலேயர். 2. அடிகள் சிறிதும் நேரத்தை வீணாக்காமல், நூல்களைப் படிப்பதிலும் ஆய்வுகள் எழுதுவதிலும் ஈடுபடுவர். சென்னையில் எந்தப் பொது சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் போகமாட்டார் என்பது வரலாறு. (வேறு) மதுரை நகர்த்தமிழை யமுதா யெடுத்துரைத்த மணிவாயின் முத்தமருளே மறையாய் விளங்குதமிழ்த் துரையே எனக்குனது மணிவாயின் முத்தமருளே பொதுவிற்1 சுழன்றுநடம் புரிவோன் திறம்பேசும் புகழ்வாயின் முத்தமருளே புரியா மொழிக்கலவை புரிந்தார் தமைக்கடிந்த புகழ்வாயின் முத்தமருளே எதுமெய்த் தனித்தமிழென் றிசைத்தோ யெனக்குமல ரிதழ்வாயின் முத்தமருளே இறவாப் புகழுடம்பி லிருப்பா யெனக்குமல ரிதழ்வாயின் முத்தமருளே கதுவுந்2 தமிழ்ப்புலவ கலையே யெனக்குனது கனிவாயின் முத்தமருளே கதுப்பை3யணைத்துனது களிப்பா லெனக்குனது கனிவாயின் முத்தமருளே. 47 1. மன்றம், தில்லைப் பொன்னம்பலத்தைக் குறித்தது. 2. மிகுதியான பற்றுக்கொண்ட 3. கன்னம் நதியே கதித்தசடை மதியே புனைந்திருக்க நயந்தாடும் கூத்தனுடனே நளிரே1 நிறைந்ததமிழ் மலரே எனப்பிணைந்து நறவூறு2 மன்புமலரே துதியே புரிந்துமனத் துணையே யெனப்புகழத் தொடர்பாகி மெய்பொழுதுமே துறைசேர் தமிழ்மணமும் துணையா யருள்குமரன் சொரிந்தேற்ற தெள்ளமுதே நிதியே தனித்தமிழின் நினைவே கணிப்பருளும் நிலையான பண்புருவமே நெறியே புதுப்பொலிவின் நிகழ்வே யொளிச்சுடரின் நிறைவான யின்பவெழிலே கதியே பழுத்தநறுங் கனியே யெனத்திகழுங் கனிவாயின் முத்தமருளே கதுப்பை யணைத்துனது களிப்பா லெனக்குனது கனிவாயின் முத்தமருளே. 48 1. பெருமை. 2. தேன் (வேறு) ஒருவனா யுலகேத்த வொளியாகி நின்றானை1 யுளவாயிற் சென்றமர்ந்தே ஓருருவில் மூவுருவம் உண்டாக்கி2 மன்றாடி3 யுலகோச்சும் வெற்பன்தனை மருவிடும் மலைமகள் மலர்முகம் ஒத்தொரு மடமாதாய் வந்தமைந்தே மானொயிலும் மீன்விழியு மட்டில்லாப் பேரழகும் மலர்நாணுந் தன்மையோடு கருவினிற் றிருமேவக் கனிதமிழ்ச் செல்வநின் கருத்தோடு தோள்சேர்ந்தவள் காணரிய தீந்தமிழின் கன்னலினை மிகுசுவை கவினுற அள்ளிநல்க திருவினைத் தருமாழி யமுதென4ச் சுவைத்தவன் திருவாயின் முத்தமருளே தேனொத்த பைந்தமிழை வாழ்விக்க வந்தவன் திருவாயின் முத்தமருளே. 49 1. திருவண்ணாமலையில் ஒளியுருவமாக நின்றவன். 2. உருத்திரன், திருமால், பிரமன் என மூன்று உருவமாக நின்ற சிவன். 3. தில்லை மன்றில் நடனமாடி. 4. திருமகளைத் தந்த பாற்கடலில் தோன்றிய அமுதம்போல. வானவர் மறையோதி நாடொறும் வழிபட்டு வருகின்ற கந்தவேளை வதையுற்ற கொடுந்துன்ப வலைப்பட்ட நிலைபோக்க வடிவேலை விட்டதேவை கானமர் புனமேறிக் காவலுட் படும்வள்ளிக் கனியுள்ள முற்றகோவை கலைமேவு கொடிமுல்லை யெனுந்தெய்வ குஞ்சரிக்1 கருள்செய்த செந்திவாழ்வை2 தானவர்3 படைவென்று வாகையும் புனைமார்பு தனிற்சந்தங்4 கொண்ட வேலைத் தனக்கேற்ற துணையாக்கித் தமிழ்செய்த குருபரன் தனைப்போல் நாடுமுற்றுந் தேனடைத் தமிழின்பத் தானெடுத் துரைத்திட்ட திருவாயின் முத்தமருளே சீரொத்த பைந்தமிழின் பேர்சொல்ல வைத்தவன் திருவாயின் முத்தமருளே. 50 1. தெய்வயானை 2. திருச்செந்தூர் முருகன் 3. அசுரர் 4. அழகு முருகனருள் பெற்ற குமரகுருபரர் நாடு முழுவதும் சென்று தமிழ் பரப்பியது போல அடிகளும் தமிழ் பரப்பினார். 6. வருகைப் பருவம் வருகைப் பருவம் என்பது தளர் நடையிட்டு வரும் குழந்தையை வருக வருக என்று கை காட்டி அழைத்து நடப்பிக்கும் செய்தியை விளக்கும் பருவமாகும். இதை `வாரானைப் பருவம்' என்றும் கூறுவர். குழந்தையின் பதின்மூன்றாம் மாதத்தில் பாடப்பெறும். `மக்கள் மெய் தீண்டல் உடற்கின்பம்' என்பதற்கொப்ப குழந்தையை அருகழைத்து ஆரத் துய்க்கும் ஊற்றின்பத்தைப் பெறத் துடிக்கும் உண்மையை இப்பருவத்தால் உணரலாம். இப்பருவத்தில் புலவர்கள் தமது அன்பு ஈடுபாட்டை மிகுதியும் வெளிப்படுத்திப்பாடுவர். 6. வருகைப் பருவம் (ஆசிரிய விருத்தம்) தொழுதெழு பவருளத் துறைகின்ற இறையவன் துணைதரு செங்கழல்போல் துலங்கிடு மிணைகழற் சிலம்பொலி ஒலியினைத் துணிகடல் போலெழுப்ப உழுதிடு மொருசெயில் உழவன்றன் பொழுதினை யுணர்வொடு போக்குதல்போல்1 ஒளியுமிழ் தமிழெனுங் கழனியிற் பொழுதினை யொருங்குறத் தேக்கியவன் பழுதறு மொழிபல பயின்றவை தனிலுறு பயன்தனை நன்குணர்ந்து பகைநெறி யொருசிறு துளியுமி லாதருட் பரிவுடன் தேர்ந்தெடுத்து வழுதியர்2 புரந்தசெந் தமிழினை யொலித்தவன் வருகவே நீவருகவே வளர்தமிழ்ப் புவிக்கென வள்ளுவ ராண்டினை வழங்கினை நீ வருகவே. 51 1. ஓரேருழவனின் முயற்சியைப்போல அடிகள் மொழிநலம் பேணலையே தம் கருத்தாய்க் கொண்டு வாழ்ந்தார். 2. பாண்டியர் குழைதரு மெழிலொளி யுடனரை மணிதர குரை1கிண் கிணியெழுப்ப குறுந்தொடி சதங்கைபொற் சிலம்புகள் கலின்கலில் அறையா தொலிமுழக்க மழைதரு முகில்நிகர் கருங்குழல் அலைந்திட மயக்கே பு னைந்தொளிர மதுமல ரிணைவுறச் செறிவுட னொளிதரும் மணிச்சூ ழியம்பொருத்த கழைமொழி2 மழலையை யுதிர்த்திடு மொருசிறு கனிவா யமுதுசிந்த கருவிழி யிருசிறு மலரளி யெனச்சுழல் கலந்தே யொளியுமிழ வழை3யிணை கழலிணை மெதுவெடுத் தருகினில் வருகவே நீவருகவே வளர்தமிழ்ப் புவிக்கென வள்ளுவ ராண்டினை வழங்கினை நீவருகவே. 51 1. ஒலி 2. கரும்புபோல் இனிய சொல் 3. சுரபுன்னை கயல்விழி யொருமகள் காத்திடுந் தமிழினைக் கலைச்சுவைத் தேனாக்கிக் களிக்கம னோன்மணிக் கவின்நா டகஞ்செய் கவிசுந் தரம்பிள்ளை முயல்பவர் தமக்கொரு முயற்சியி னுருவென முழங்கிய வ.உ.சி. முனிவினை யழியாப் பரிதிமாற் கலைஞர் முதுபுகழ் திரு.வி.க. செயல்நல முறுரசி கமணிசி தம்பரர் சீர்மிகு பாண்டித்துரை சிறப்புறப் பணிபுரி நாவலர் மற்றும் திருவரங் கம்பிள்ளை வயல்நிறை பயிரென வயங்கொள நட்டனை வருகவே நீவருகவே வளர்தமிழ்ப் புவிக்கென வள்ளுவ ராண்டினை வழங்கினை நீ வருகவே. 53 இப்பாட்டு அடிகளிடம் நட்புக்கொண்டோரைக் குறிப்பிடுகிறது. கற்றவை யனைத்தையு முலகினிற் களித்திடக் கருணையு மிகவுற்றே கடலினைக் கடந்தெழில் வளந்திக ழீழமுங் கனிவுடன் சென்றவனே கொற்றவ னாய்த்தமிழ் குலவிடு முளங்களில் கொலுவீ றிருந்தரசு குணமுறச் செலுத்திநல் லுறவினை வளர்த்துக் குவலயம் வென்றவனே சுற்றமும் மணிவயி றதிற்சுமந் தளித்த சுடர்புகழ்ப் பெற்றோரும் சுழன்றிருந் தழைத்திடச் சிறுமலர்க் கழல்கள் தொடர்கிண் கிணியெழுப்ப வற்றிட லறியாச் சொற்சுவைக் கடலே வருகவே வருகவே வளர்தமிழ்ப் புவிக்கென வள்ளுவ ராண்டினை வழங்கினை நீவருகவே. 54 அடிகள் இலங்கைப் பயணம் சென்று வந்தமை குறிக்கப்படுகிறது. (வேறு) வீசிடுங் குளிர்தென்றல் தனைவிஞ்சு தண்டமிழ் விளையாடு கின்றநாட்டில் விரிவாகப் பலகற்ற பெரியாரும் தாய்மொழி விரும்பியே பேசிடற்குக் கூசிய நிலைபோக்கிக் குறையினை நீக்கியே குழைகின்ற இன்சுவையைக் கொடுத்தனை பருகிடக் குமிண்சிரிப் பு1டன் தமிழ்க் கோதையும் புன்னகைத்தாள் பாசியும் படராது பைந்தமிழ் ஊற்றினைப் பரிந்துயிர் காத்திடல்போல் பகலிலு மிரவிலும் பனியிலும் வெளியிலும் பரவிப்பு கழ்ந்துகாத்து வாசி யாய்ச் செந்தமிழ் பேசிடவுந் தந்தவ வருகவே முன்வருகவே வளர்தமிழ்ப் புவிக்கென வள்ளுவ ராண்டினை வழங்கினை முன்வருகவே 55 1. புன்சிரிப்பு 2. மிகுதி தமிழ்மொழியில் பேசுதற்குக் கூசிய அக்காலத்தில் அடிகள் இனிமையாகப் பேசி அக்குறையை நீக்கிப் பிறரும் தமிழில் பேச ஆர்வந்தோற்றுவித்தார். (வேறு) கதிரைப் பரப்பி யொளிகூட்டிக் கருமை யிருட்தீ தினையோட்டிக் கலகல் லெனவே யொலித்தோடிக் கலக்கும் புனல்சேர் கடல்கிழித்து முதிரா இளமை யொடுசுற்றி முறையா யுலகிற் குயிரூட்ட முதிருங் கதிரைத் தருங்கழனி முழுதும் பயிரை விளைவிக்கும் கதிரோன் வருகை கண்டுவக்குங் கமழ்ச்சி1 மிகுசெந் தாமரைபோல் கனியின் சுவையை மிஞ்சுதமிழ்க் கடலுள் திளைப்பார் முகம்மலரப் பொதிகைத் தென்றல் எனவருகை புரிந்தாய் வருக வருகவே பொலிவுந் திருவு மொளிவீசும் பொன்னே வருக வருகவே. 56 1. நறுமணம் துள்ளித் திரியு மிளமையிலே தொடர்ந்த கலையார் வத்தாலே தொல்காப் பியமுந் திருக்குறளும் தொகையும்1 பாட்டும்2 நாலடியும் தெள்ளு சிந்தா மணிநன்ல் திருச்சிற் றம்ப லக்கோவை சிலம்பு வளமார் கல்லாடம் சிறந்த யாப்பு விருத்தியுரை அள்ளச் சுவைக்கு மகப்பொருளும் அருள்சி வஞான போதசித்தி அணிகொள் தண்டி யலங்காரம் அருமைப் பெரிய புராணமுடன் புள்ளிக் கடங்கா3 நூல்மனனம் புரிந்தாய் வருக வருகவே பொலிவுந் திருவு மொளிவீசும் பொன்னே வருக வருகவே 57 1. எட்டுத்தொகை 2. பத்துப்பாட்டு 3. எண்ணிக்கையில் அடங்காத அறிவா லுணர்ந்த அத்தனையும் அணையா விளக்கா யொளிவீச அறிவுக் கடலில்1 வெளியிட்டே அழகுத் தமிழைப் பரப்பியுயர் நெறிசே ரொழுக்க நிலைகாத்து நினைவிற் கினிதாம் மனைவியொடு நிகழ்த்து மில்லப் பெருவாழ்வில் நிலையாம் புகழை நிரப்பியருட் செறிவா லுயர்ந்து துலங்குபொழிற் சிலைபோல வுருண்டு திரண்டழகு திகழ்ந்து சிறக்க நல்லறத்திற் செழித்துத் துறவும்2 பின்பூண்டு பொறிவா யவித்த3 பெருவிந்தை புரிந்தாய் வருக வருகவே பொலிவுந் திருவு மொளிவீசும் பொன்னே வருக வருகவே. 58 1. அடிகள் தம் அறிவாராய்ச்சியால் அறிந்த ஆய்வு முடிவுகளைத் தாம் நடத்திவந்த அறிவுக்கடல் (ஞானசாகரம்) என்னும் இதழ் மூலம் வெளியிட்டு வந்தார்கள். 2. அடிகள் பூண்ட துறவு தமிழ்த்துறவு; மக்களொடு மகிழ்ந்து, மனையறம் காத்து, துறவு பூணல் தமிழ்நெறி. 3. ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய. மருவார் கொன்றை மதிசூடி மன்றுள் ளாடும் பெருமானை மனத்திற் கொண்டு திகழுமுழு மதியே வருக வுளக்கோவில் தருவா ரென்றே தவஞ்செய்யுந் தளிராம் செந்த ரத்துக்குத் தனையே தந்து நிழலீந்த தருவே வருக தனித்தமிழை யுருவா யாக்கி யுலகளித்த வுயிரே வருக வுயர்சைவ வொளியே வருக மறைமலையா யுயர்ந்தாய் வருக வுண்ணவுண்ண வருவா னமுதே தமிழ்தந்த வாழ்வே வருக வருகவே வழுவாச் செழுமைப் புகழுடையாய் வருக வருக வருகவே 59 (சந்த விருத்தம்) அரவு மதியு மொளியும் புனலு முடைய எளிய சிவனையே அறிவு முணர்வு மிணைந்த பொழுதி லகத்தி லொடுக்கி யிருத்தியே அவனி மகிழத் தமிழின் பெருமை யதனை மிகவு முணர்த்தியே அடைந்த புகழின் செறிவிற் பொலிவும் நெறியி லடக்க1முளவனே இரவு செழிக்க அமுத ஒளியை யுமிழு முழுமை நிலவென இறைவன் வகுத்த இனிய வுலகில் தமிழு முயர்ந்து செழிக்கவே எளிமை மிகுந்த கருணை யுளமு மிசைந்த பெருமை யழகுமே இயங்கி மனிதத் திருவு ருவினி லெழுந்த புனித வமுதமே விரவு மொழிக ளகல மருளி லிருந்து தமிழர் விழித்திட விடிவுப் பொழுதி லெழும்பு பரிதி யெனவும் படர்ந்த கருணையே விளையுங் கழனி வழங்க முளைத்து விரைந்து முதிர்ந்த பயிரென விரும்பியபடி தமிழர் பெருமை விளங்க முகிழ்த்த பெரியனே வரவு தருக இனிமை பெருக வளமும் நலமும் பொலியவே வணங்கு முலகு களித்து மகிழ்ந்து தமிழின் சுவையை யுணரவே வயங்கு மொளியில் திகழும் வனப்பை யுடைய மதலை வருகவே வளமை தழுவு மதுரைத் தமிழை யுணர்த்து மமுதன் வருகவே. 60 1. உள்ளவனே என்பது உளவனே என வந்தது. 7. அம்புலிப் பருவம் அம்புலிப் பருவம் என்பது குழந்தையோடு சந்திரனை விளையாட வருமாறு அழைத்துப் பாடும் பருவமாகும். நடக்கக் கற்ற குழந்தை அங்கு மிங்கும் சென்று காட்சியின்பங்களைக் காண மிகுதியாக விரும்பும் நிலையில் குழந்தையின் பதினைந்தாம் மாதத்தில் பாடப்பெறும் பருவமாகும். அம்புலி என்றால் நிலவு என்று பொருள். அம்புலியை அம் + புல்லி எனப் பிரிக்கலாம். புல்லி என்பது புல்லும் இயல்புடையது. ஏனைய நாள்களோடு (நட்சத்திரங்களோடு) புல்லும் சிறப்பு நோக்கிப் புல்லி என்பதன் இடைக்குறையே புலி. அழகுமிக்க தண்ணிய ஒளிக்கதிர்களைப் புல்லியுள்ளதால் அம்புலி என்று நிலவைக் கூறினும் பொருந்தும். நிலவில் உள்ள களங்கத்தை முயல் என்பர். புலி என்றும் கூறுவர். அகம் + கை அங்கை என்றானதுபோல அகத்தில் புலி உடையது அம்புலி என்றாயிற்று எனினும் ஆம். அம்புலிப் பருவமே கவிஞரின் திறனை அளக்கும் அளவுகோல். `பிள்ளைக் கவிக்கு அம்புலி புலியாம்' என்று இப் பருவத்தின் அருமைப் பாட்டை விளக்குவர். ஏனைய பருவங்களில் அழைக்கப்படும் பொருள் குழந்தையாயிருக்க இப்பருவத்தில் நிலவாயிருத்தலின், பிள்ளைத் தமிழ் நூல்கள் தோறும் நிலவு பற்றிய கற்பனைகளைப் புதிதாயமைக்கக் கவிஞர் முயல்பது இயல்பாம். எனவே பிள்ளைத் தமிழில் மிகவும் நயம்பெற அமைவதற்குரிய பகுதி அம்புலிப் பருவமாம். இப்பருவத்திலே சந்திரனைப் புகழ்ந்தும், பாட்டுடைத் தலைவனாகிய குழந்தைக்கும், சந்திரனுக்கும் உள்ள ஒற்றுமை இயல்புகளையும், சந்திரனை விஞ்சிய உயர்வு சிறப்புக்களையும் எடுத்துரைத்தும் செய்யுள் அமைத்தல் வேண்டும். இதையே சாம பேத தான தண்டம் எனக் கூறுவர். 7. அம்புலிப் பருவம் சாமம்:- ஒத்த நிலை கூறியழைத்தல் (ஆசிரிய விருத்தம்) நிறைகலை ஈரெட்டில் நீமுதிர, பதினாறில் நிறைந்திவன் கலைமுதிர்வான் நெடும்புவிக் கெனச்சொக்கர் தருமதியம் நீயிவன் நெறிசொக்கர் நல்குமதியம் நறைசெறி அல்லிநகை மலரவரு வாயிவன் நலவல்லி மலரவருவான் நதிசேருங் கடல்பொங்க வருவைநீ யிவன்தமிழ் நவில்கடல் பொங்கவருவான் மறைமலை யார்தாங்க வருவைநீ இவன்பெயர் மறைமலை தாங்கிவருவான் மதிசூடி யருள்மேவி வருவைநீ இவன்கலை மதிசூடி யருள்மேவுவாள் அறைமொழி மேலொக்க இவனைநீ ஒத்தலால் அம்புலீ ஆடவாவே அறிவோங்கு மறைமலை யடிகளுளம் மகிழ்வுற அம்புலீ ஆடவாவே. 61 சந்திரன் மறைமலையடிகள் 16 கலைகளையுடையவன். சிவன் வாழ்வு தருகின்ற மதி அல்லிமலர் மலர வரும். கடல்பொங்க வரும். வேதாசலநாதர் முடிமீது தங்கவரும். சிவன் அருள் பெற்று வரும். மேற்கூறிய வண்ணம் சந்திரனுக்கும், அடிகட்கும் ஒப்புமை கூறப்பட்டது. 16 வயதில் கலை முழுதுங் கற்றவன். தந்தை சொக்கர் வாழ்வு தரவந்தவர் மனைவி சவுந்தரவல்லி மகிழ வருவார். தமிழ்க் கடல் பொங்க வருவார். மறைமலை என்னும் பெயர் பெற்றவர். கலை கற்ற அறிவு பெற்று அருள்வார். அடிகட்கும் ஒப்புமை கூறப்பட்டது. பொழிகின்ற தண்ணொளியைக் கொண்டுள்ள மலரிதழ் பூரிக்க மலர்வித்தலால் பொறிவாய்க்கு நல்லின்பந் தந்தமுத மெய்க்கலை பொங்கியெழ வேசெய்தலால் வழிநின்ற சொல்லிருட் பழிபோக்கிப் பார்மனம் வயங்கொளிக் காளாக்கலால் வற்றியறி யாக்கங்கைக் குற்றசிவ னாரன்பில் வாழ்வுற்ற மேன்மையுறலால் மொழிகின்ற செந்தமிழி லுவமைக்குப் பொருளாகி முன்னிற்குந் தன்மைபெறலால் முழுமைபெறு மொளிநிலவு திருவடிவி னாலுலகை முற்றுந்தன் வயமாக்கலால் அழிகின்ற பொய்நிலையை யற்றிவனை யொத்தனை அம்புலீ ஆடவாவே அறிவோங்கு மறைமலை யடிகளுளம் மகிழ்வுற அம்புலீ ஆடவாவே. 62 சந்திரன் மறைமலையடிகள் மலரிதழ் மலர்வித்தல் - அல்லி மலரினை இதழ் விரித்து மலரச் செய்தல். வண்டுகள் மகிழ மலர்களை மலரச் செய்வாய். வழியில் நின்ற இருள்நீக்கி ஒளி பரப்புவாய். சிவனின் பால் வாழ்வு பெற்றாய். மதிமுகம் என உவமையாதல். வெள்ளுவா (முழுநிலா) நாளில் உலகை மகிழ்வித்தல். மலர் இதழ் - அறிவைக்கொண்டு சொற்பொழிவில் மலர் போன்ற இதழ் விரித்தல் கேட்பார் ஐம் பொறிகளும் மகிழ அறிவுக்கலை நல்குபவர் அறியாமை இருள் நீக்கி அறிவொளி கூட்டுவார் சிவன் அன்பால் மேன்மையுற்றவர். தமிழ் மலை என உவமையாதல் அடிகள் உருவப் பொலிவினாலும் கலை அறிவினாலும் பிறரை மகிழ்வித்தல். பேதம்:- ஒவ்வாத நிலைசுட்டி அன்போடழைத்தல் மங்கையொரு பங்கன்முடி நீயுற்றாய் அவனையிவன் மனக்கோயில் தன்னிலுற்றான் மல்லிருளில் திங்களொரு பாதிநீ ஒளிரஇவன் மாறாமல் ஒளிகூட்டுவான் தங்குமொரு வடமேற்குத் திசையுனக் கிவனுக்குச் சரியுரிமை எத்திசையுமாம் தணலாடி இடக்கண்ணின் ஒளியானாய் இவனவன் தகைமேவு முக்கண்ணொளி மங்குமொளி யுனக்குண்டு தேயாமல் இவனுக்கு மலர்கின்ற ஒளியேயுண்டு மாறிவருந் தன்மைமிகு முன்னிலும் மிக்கஇவன் மட்டில்லாப் பெருமையுறல் அங்கயலின் கண்துணையை நெஞ்சிருத்தும் பிள்ளையுடன் அம்புலீ ஆடவாவே அறிவோங்கு மறைமலை யடிகளுளம் மகிழ்வுற அம்புலீ ஆடவாவே 63 சந்திரன் சிவனின் முடிமீது மட்டுமே இடம்பெற்றான். ஒவ்வொரு திங்களும் பாதிநாள் தேய்பிறை. வடமேற்குத் திசைக்கு மட்டுமே உரிமை சிவனின் இடதுகண்ணொளியாய், தேய்பிறையில் ஒளி மங்கும் மறைமலையடிகள் சிவனையே தன் மனக்கோயிலில் கொண்டவர். எல்லா நாளும் நிறைவுடையவர். கற்றார்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பென எத்திசையிலும் புகழ்மிக்கவர் முக்கண்ணொளியாகத் திகழ்பவர் என்றும் பெருகுகின்ற ஒளியே உண்டு. அங்கயலின் கண்துணை - சிவபெருமான். கடகநண் டுன்வீடு காசினியோர் நெஞ்சமிக் கடகளிற் றுடையவீடாம் கலைகளைப் பதினாறு கொண்டுளை இவன்கொண்ட கலைகளறு பத்துநான்கு குடையினை மட்டும்நீ கொண்டுவர இவன்மன்னர் குடையோடு பிறவுமுள்ளான் கொண்டிலை நேர்மையு மொழுக்கமும் இவன்நேர்மை கொண்டொழுகு செம்மையாளன் நடையொளி பரிதியால் பெறுவைநீ இவன்நடை நடந்திடில் பரிதிநாணும் நவின்றஇத் திறங்களால் இவனுன்னில் மிக்கவன் நலஞ்சேர்க்க அழைத்தனன்காண் அடைதலுக் கெளிதில்லா அருமந்த சேயுடன் அம்புலீ ஆடவாவே அறிவோங்கு மறைமலை யடிகளுளம் மகிழ்வுற அம்புலீ ஆடவாவே. 64 சந்திரன் கடகராசி சந்திரன் வீடு. கலைகள் பதினாறு மட்டுமே. மன்னர்க்கு வெண் கொற்றக்குடையாக மட்டுமே உள்ளாய். நேர்மையும் ஒழுக்கமும் இல்லை. சூரியனால் ஒளி பெறுவாய். மறைமலையடிகள் கடகளிறு போன்ற அடிகட்கு காசினியோர் நெஞ்சே வீடு. கற்ற கலைகளோ அறுபத்து நான்கு, மன்னரிடத்து குடையோடு பிறபேறுகளும் பெற்றவர். நேர்மை கொண்ட செம்மையாளர், நடைகண்டு சூரியன் நாணும். அருமந்த சேய் - அமுதம் போன்ற சேய். குறுநடை பயின்றிட்ட பொழுதுன்னைத் தட்டென்று கொண்டெட்ட வீசியெறிந்த குமரவேள் மீதினில் பதினாறு வயதினில் கொஞ்சுமொழி யாங்கிலத்தில் நறுமணக் கவிதையும் வடித்துமணி வாசக நல்லுரையு செய்தளித்து நாகநாட் டரசிவே ளாளர்நா கரிகமினும் நலமூட்டு கின்ற நூல்கள் மறுவறச் செய்திட்ட மாபுகழின் மிக்கவன் மகிழ்வோடு நின்னையன்பாய் மதிகொண்டு நூல்செய்ய மாட்டைநீ என்றாலும் மாகருணை கொண்டழைத்தலால் அறுபகை நெறிவென்ற பெரும்புகழ்ச் சேயுடன் அம்புலீ ஆடவாவே அறிவோங்கு மறைமலை யடிகளுளம் மகிழ்வுற அம்புலீ ஆடவாவே. 65 அடிகள் தன் நோய் நீங்க திருவொற்றியூர் முருகன்மீது மும்மணிக் கோவை பாடி நோய் நீங்கப் பெற்றார். `யோக நித்திரை' என்ற தம் நூலில் அறிதுயில் மூலமாக நோய்களை நீக்குவது பற்றிக் கூறியுள்ளார். ஆதலால் சந்திரனே அடிகளிடம் வந்தால் நோய் நீங்கி மகிழலாம் என அழைப்பது. வீழ்தலு மெழுதலும் விளங்கிடு விண்மிசை வெருட்டிடப் பாம்புளதால் விரிந்திடு செஞ்ச1ட யடைக்கல மெனவே விரைந்துடன் ஓடுதலால் ஆழ்வினை யுறுத்திட மதிதடு மாறிடும் அவலமும் போர்க்கிமதி அடைந்திடத் தண்டமி ழமுதினைத் தந்தொளி யருளிடுந் தகையவனின் சூழ்தரு மெண்கலை2 நூலறிந் துயர்ந்தவர் சொக்கிடு முள்ளமுடன் சொற்சுவை யமுதெனும் நற்றமிழ் மாந்திடச் சுற்றியும் நின்றிருக்க வாழ்வினை யுனக்கெனத் தரவிழைந் தழைத்தான் வாவம் புலிவாவே வளந்திகழ் பல்லா வரமுறை சேய்முன் வாவம் புலிவாவே. 67 1. சிவபெருமானின் சடைமுடி. 2. ஆராய்ந்து செய்த அறிவு நூல். துங்கக் கரிமுகத் தூயனைப் பழித்திடத் தொடர்ந்திடுந் தீவினையும் துடியிடை மடவார் தம்மிடம் மதியினைத் தொலைத்திடும் வல்வினையும் பொங்கிக் குலவிடுங் கடல்நீர் திருடிடப் புகுமுகில் தருவினையும் பொலிவினைக் குலைத்துன் வடிவினை மாற்றிட புறப்படு மூழ்வினையும் கங்குல்1 தறிபட ஓட்டிடுங் கதிராய்க் கனன்றிடு கண்ணொளியாய்க் கவின்மிகு தமிழாய்த் திகழ்மறை யடியைக் கண்டிட மாய்ந்திடலால் வங்கந் தந்திடுந் தென்றலு சேர்த்துடன் வாவம் புலிவாவே வளந்திகழ் பல்லா வரமுறை சேய்முன் வாவம் புலிவாவே. 68 1. இரவு, இருள் நாரத முனிவன் சிவபெருமானிடம் கிடைத்தற்கரிய கனியைக் கொடுத்தபோது, சிவன் நான்முகனிடம் அக்கனியை யாருக்குக் கொடுக்கலாம் எனக் கேட்க, இளையவனான முருகப்பெருமானுக்குத் தருவதே சிறந்ததென நான்முகன் கூறினான். அது கேட்டு யானைமுகக் கடவுள் நான்முகனிடம் கோபமுற்றார், யானை முகனை வணங்கி நான்முகன் பொறுத்தருள வேண்டினான். அப்போது சந்திரன் எள்ளலாகச் சிரித்தான் அதனால் கோபமுற்ற யானை முகக்கடவுள் சந்திரனை ஒளியின்றி மறைந்து போகச் சாபமிட்டார். விநாயக புராணம் வசனம் - பக்கம் -181 (கழக வெளியீடு) தண்டம்:- வாராக்கால் அம்புலிக்கேற்படும் தீமையைச் சுட்டி அழைத்தல். தில்லை யாடிட வல்ல ஒருவனைச்1 சிந்தை தன்னிலே கண்டவன் செங்கை வீணையை மீட்டு மொருத்தியைச்2 சிவந்த நாவிலே கொண்டவன். கல்வி மேம்படக் காட்டும் நற்கலை கற்றுந் தேர்ந்தசீர் வல்லவன் கலந்த வேற்றவர் மொழிக ளறிந்தவன் கற்பு மாறிட நல்லவன் புல்லைச் செந்தமிழ் புகட்டி யம்பெனப் பொழிய வல்லமெய் யறிவினன் புரிந்து கொண்டுநீ வருக இல்லையேல் புகலு மில்லைவீண் தொல்லைகாண் அல்லல் தீர்த்திடும் பிள்ளை யானதால் ஆட அம்புலீ வருகவே அழகு பொங்கிடும் மறைமலையுடன் ஆட அம்புலீ வருகவே. 69 1. தில்லையம்பலவாணன். 2. கலைமகள். மதியைத் தந்திடுங் கோளென் றுன்னையே1 மனத்தின் சொந்தமுந் தந்திறை மதித்துச் செஞ்சடை யேற்றி வைத்துமே மதியி ழந்துவீண் பேதையாய் விதியைத் தன்கடை நோக்கில் மாற்றிடும் வியாழ குருபகை யுற்றனை2 விளைந்த இத்துயர் நீக்கத் தந்துணை விரைந்து காத்திட எண்ணிடும் நிதியை, கண்கடைப் பார்வை யால்நலம் நிகழ்த்து விந்தைசேர் நுண்மதி நிறைந்த மறைமலைக் குருவை விட்டிடில் நிலைத்த துயருனை வாட்டிடும் அதிரு மல்லலேன் அணைக்கு சேயுடன் ஆட அம்புலீ வருகவே அழகு கொஞ்சிடும் மறைமலையுடன் ஆட அம்புலீ வருகவே. 70 1. அறிவைத் தருகின்ற கோள் என்று பாராட்டிச் சிவபெருமான் தன்முடி மீது சந்திரனை அமைத்துக் கொண்டார். 2. தன் சடைமுடி மீது சிவபெருமான் இடங்கொடுத்திருந்த போதிலும் அறிவிழந்த சந்திரன், சிவபெருமானைத் தக்கன் அவமதிக்கச் செய்த யாகத்தில் ஏனைய தேவர்களோடு கூடி வேள்விப் பலியினை ஏற்றுச் சிவபெருமானின் கோபத்துக் காளானது குருவும் சந்திரனும் இணைந்திருப்பின் நல்லூழென்றும், பகையுற்றால் நன்மை தாராதென்றும் சோதிடர் கூறுவர். வியாழ குரு என்றது தென்முகக் கடவுளாகிய சிவபெருமானைச் சோதிடக் கருத்துக் கேற்ப இப்பாடல் நயம் பாடப்பட்டுள்ளது. 8. சிற்றிற் பருவம் சிற்றில், சிறுபறை, சிறுதேர் முதலிய மூன்று பருவங்களும் ஆண்பாற் பிள்ளைத் தமிழிற்கே உரிய சிறப்புப் பருவங்களாகும். சிறுமியர் மணலினால் வீடு கட்டிச் சிறு சோறு சமைத்து விளையாடுகையில் பாட்டுடைத் தலைவனாகிய குழந்தை தனது சிறு கால்களால் சிதைப்பான் என உட்கொண்டு அங்ஙனம் அவன் சிதையாதிருக்க வேண்டும் முகத்தாற் செய்யுள் அமைத்துத் துதிக்கும் பருவம் சிற்றிற் பருவமாகும். ஓடியாடிச் சுற்றித் திரிந்து விளையாடும் குழந்தையின் பதினேழாவது திங்களில் பாடப்படுவதாகும். தாயர்களும் மற்றவர்களும் பாடுவதாக ஏனைய பருவங்கள் பாடப்பெற இப்பருவம் மட்டும் சிறுமியர் பாடுவதாக அமைத்துப் பாடுவது இயல்பு. நாயகன், நாயகி என்ற வழக்கில் ஆண்டவனை உயிர்கள் சென்றடையும் தத்துவ விளக்கமாக இப்பருவம் பாடப் பெறுவதும் உண்டு. ஆண் இளமை நிரம்பியபோது அறிவு சிறந்து உணர்வும் வளர்ந்து விளங்குகின்றன. பெண் இளமை நிரம்பியபோது உணர்வு சிறந்து அறிவும் வளர்ந்து விளங்குகிறார். வளர்ச்சிக்குரிய வித்துக்கள் விளையாட்டுப் பருவத்திலேயே காணப்படுகின்றன. அமைதியாக இருந்து பெண் சிற்றில் இழைக்கும் பருவத்தில் ஆரவாரமாக இருந்து பெண் சிற்றில் இழைக்கும் நிலையில் இருக்கின்றான். எனவே சிறுமியின் மனம் பெரிதும் ஆக்க வேலையில் முனைந்திருக்கச் சிறுவனின் மனமோ அழிவு வேலையில் ஊக்கம் காட்டுவதால் ஆண் ஆற்றல் மிக்கவனாக வளர்கிறான் என்பது இயற்கையின் வியக்கத்தக்க முறையாக அமைந்திருக்கின்றதுடாக்டர் மு.வ. 8. சிற்றிற் பருவம் (ஆசிரிய விருத்தம்) புகழும் வடிவுங் கலையறிவும் புதுமைத் திறனுந் திடமனமும் பொருந்திச் சிறந்த வுனைஈன்ற பொலிவார் திருசேர் சின்னம்மை திகழும் மதியா யொளிருமுகத் தெளிவில் திளைத்துத் தனைமறந்து திருத்தித் திருத்தி யழகூட்டித் திருவைச் சேர்த்துக் களிப்புற்று மகரக் குழையு சூழியமும் மதிப்பார் பிறபொன் னணிமணியும் மகிழப் பூட்டி யனுப்பியதும் மகளிர்க் கிடுக்கண் செய்தற்கோ சிகலில்1 மலர்ச்செஞ் சீரடியால் சிறியேம் சிற்றில் சிதையேலே சிந்தைக் கினிமை தந்திடுவோய் சிறியேம் சிற்றில் சிதையேலே. 71 1. கேடில்லாத, குறையில்லாத மழுவைக் கையி லேந்தியருள் மழையைப் பொழியுங் கூத்தரசின் மனத்துள் நிறைந்து மதித்தளித்த மணக்குந் தமிழின் சீரறிந்து விழுதைப் பரப்பும் ஆலெனவே விரிந்து படர்ந்து கிளைபரப்ப விரும்பித் தனியாந் தமிழ்தந்து விளங்கும் புலமைக் கனியமுதைத் தொழுதுங் கிண்கிண் ஒலியடியைத் துடைத்தும் புழுதி நீக்கலொடு தொடங்கி யமைத்து மணிமுத்தால் துலங்கப் படைத்த சிறுவீட்டின் செழுமை குலையாய்1 என வேண்டும் சிறியேம் சிற்றில் சிதையேலே சிந்தைக் கினிமை தந்திடுவோய் சிறியேம் சிற்றில் சிதையேலே. 72 1. அழிக்காதே உறங்கிக் கிடந்த தென்னாட்டின் உணர்ச்சித் துடிப்பை முடுக்கிவிட ஒளிரா திருளில் மூழ்குமன உளைச்சல் தனையுந் தடுத்துவிட இறங்கிக் கருணை வடிவாக இறையே துணிந்து வந்ததுபோல்1 இருளை யகற்று மொளிவிளக்காய் இயக்கு சக்தித் திருவுருவாய்ப் பிறங்கு தமிழை யுலகனைத்தும் பெரிதாய் விளங்கச் செயவந்த பெருமைக் குரியாய் நினக்கிந்தப் பிழையாச் சிறியேம் புனைசிற்றில் திறங்குன் றிடத்தான் செய்திடலும் சிறப்போ சிற்றில் சிதையேலே சிந்தைக் கினிமை தந்திடுவோய் சிறியேம் சிற்றில் சிதையேலே. 73 1. தென்னாட்டு மக்கள் இதயத்தில் உறங்கிக் கிடந்த மொழி உணர்வைத் தூண்டி, உலகனைத்தும் தமிழ்மொழியின் பெருமையைப் பரப்ப இறைவனே கருணை கொண்டு மறைமலையடிகளாகத் தோன்றினார். நல்லா ரிணக்க முற்றுதவ நடுநின் றறிவுத் திறன்கொண்டு நறுந்தேன் சொரியுந் தமிழாய்ந்து நாட்டிற் கெனப் பனு வல்செய்து சொல்லா லுயர்ந்த தனித்தமிழின் சுவையுங் காட்டித் தொகுத்தளித்துச் சுட்டும் வேதா சலமென்னு சொல்லை மறையின் மலையாக்கி நில்லா தொழிந்த உயிராவி நிலையுந் தெளியக் கூறியவாய் நிறைய முத்தம் வைத்திருந்தும் நிலையா மணிகொள் சிற்றில்மேற் செல்லா திருக்க மனமிலையோ சிறியேம் சிற்றில் சிதையேலே சிந்தைக் கினிமை தந்திடுவோய் சிறியேம் சிற்றில் சிதையேலே. 74 வேதம் - மறை, அசலம் - மலை, வேதாசலம் - மறைமலை `மரணத்தின் பின் மனிதர் நிலை' என்ற ஆவி உலக வாழ்வைப் பற்றிய நூலொன்றை அடிகள் எழுதியுள்ளார். அயல்நாட் டறிஞர் மொழியாய்வோர் அறிந்து தெளிந்து முதன்மொழியாய் அமிழ்தாந் தமிழைத் தெரிந்துரைத்த அரிதா செய்தி யத்தனையும் மயல்கொண் டறிவா லாராய்ந்து மயக்கத் தமிழர்க் கெடுத்தோதி மறையாய்த் திகழும் பதினான்கு மணிநூல் நுவலும் முப்பொருளின் நயங்கள் முழுதுங் கருத்திருத்தி நவிலும் புராணக் கதைநீக்கி நலஞ்செய் கடவுள் கொள்கையெலாம் நலியா வகையிற் கூறியருஞ் செயல்கள் செய்திப் புவியளந்த சிறுகால்கள் சிற்றில் சிதையேலே சிந்தைக் கினிமை தந்திடுவோய் சிறியேம் சிற்றில் சிதையேலே. 75 மறையாய்த் திகழும் பதினான்கு மணி நூல்கள்: தமிழில் உள்ள பதினான்கு சாத்திரங்கள். 1. திருவுந்தியார், 2. திருக்களிற்றுப்படியார், 3. சிவஞானபோதம், 4. சிவஞான சித்தியார், 5. இருபா இருபஃது, 6. உண்மை விளக்கம், 7. சிவப்பிரகாசம், 8. திருவருட்பயன், 9. வினாவெண்பா, 10. போற்றிப் பஃறொடை, 11. கொடிக்கவி, 12. நெஞ்சுவிடுதூது, 13. உண்மை நெறி விளக்கம், 14. சங்கற்ப நிராகரணம். சுந்த ரவல்லி கரம்பற்றித் தொகைசே ரின்பந் தனைத்துய்த்துச் சொற்சீர் செறிந்த பிள்ளைகளாய்த் தொடிசேர் நீலாம் பிகையுடனே வந்தி டுசீர் திருஞான சம்பந் தமுடன் மாணிக்க வாசன் திருநா வுக்கரசு வளர்முப் புரசுந் தரிமற்றும் சுந்த ரமூர்த்தி யெனுசேயும் சூழ்சந் ததியாய்த் தாம்திகழச் சுற்றம் நிறைபல் லாவரத்துச் சுடர்பொன் னொளிசேர் மாளிகையில் சிந்தை மகிழ்ந்து கொலுவோச்சும் செழிப்பே சிற்றில் சிதையேலே செப்பத் தமிழைத் தந்திடுவோய் சிறியேம் சிற்றில் சிதையேலே. 76 மணக்கும் நறுசந் தனமரமும் மருவைத் தருமென் மலரினமும் மலரில் பொலிவும் மதுநிறைவும் மதியில் திகழு மொளிநிலையும் சுணக்கங்1 கொடுக்கா துடனுடனே தொடர்ந்து மகிழ்வைத் தருமாப்போல் துவக்கத் துவக்க இனிதூட்டிச் சுவைக்கச் சுவைக்க அருளூட்டும் இணக்கம்2 செறிந்த இன்குரலும் இசையுங் கலந்த தமிழமுதை இனிதாய்ப் படைக்க ஏழிசையே எழுந்தே குருவாய் வந்தமகன் சிணக்கங்3 கொடுக்க மனத்தெண்ணிச் சிறியேம் சிற்றில் சிதையேலே செப்பத் தமிழைத் தந்திடுவோய் சிறியேம் சிற்றில் சிதையேலே. 77 1. தாமதம். 2. விருப்பம். 3. துன்பம். வடலூர் வள்ள லருட்பாவில் வழியு செந்தேன் சுவைத்தொருநாள் வளமார் பெற்ற தாய் எனும்பா வண்ணப் பண்ணிற் பாடுங்கால் உடனே தேகம் எனுசொல்லிற் குகந்த யாக்கை அவ்விடத்தே உறுமா றமைந்தா லோசையின்பம் உயர்வா மெனவே தெளிவுற்றுக் குடமார் சுடரா யிலங்குமகட் குரைக்க நீலாஒப்பிடவே கொண்ட வேதா சலப்போரைக் கொழிக்கும் மறைம லையெனவே திடமாய்க் கொண்டு நின்றமகன் சிறியேம் சிற்றில் சிதையேலே செப்பத் தமிழைத் தந்திடுவோய் சிறியேம் சிற்றில் சிதையேலே. 78 பெற்ற தாய்தனை மகமறந்தாலும் பிள்ளை யைப்பெறுந் தாய்மறந் தாலும் உற்ற தேகத்தை உயிர்மறந்தாலும் உயிரை மேவிய உடல் மறந் தாலும் கற்ற நெஞ்சகங் கலைமறந் தாலும் கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும் நற்றவத் தவர் உள்ளிருந் தோங்கும் நமச்சி வாயத்தை நான்மற வேனே. என்ற திருவருட்பாப் பாடலை அடிகள் தம் மகள் நீலாம்பிகை உடனிருக்கும் போது பாடினர். பின் அடிகள் இப்பாடலில் தேகம் என்ற சொல்லுக்கு யாக்கை என இருப்பின் இனிமையாயிருக்கும். ஏற்ற தமிழ்ச் சொல்லொன்று கூற, நீலாம்பிகை அம்மை பிறமொழிக் கலப்பை நீக்கின் தமிழ் சிறக்கும் என்றார். இயல்பாகத் தனித் தமிழார்வம் கொண்ட அடிகள், வேதாசலம் என்ற தம் பெயரை மறைமலை என மாற்றியதோடு தனித் தமிழியக்கமுங் கண்டார். தவஞ்செய் ஞானி யாரடிகள் தகுமெய் வாலை யானந்தர் தவறாப் பாண்டித் துரைத்தேவர் தமிழ்செப் பிடுசுந் தரம்பிள்ளை நவஞ்செய்1 பெரியார் திரு.வி.க நாவலர் சோ.சு. பாரதியார் நலங்காண் நாரா யணவணிகர் நடுவமை திருவ ரங்கநல்லார் உவந்தாள் சாமி நாதையர் உமாம கேசுவ ரம்பிள்ளை ஒளிசேர் பண்டித மாமணியார் உயர்மா ணிக்க நாயகரும் சிவன்தா ளருளால் நட்புறவே சிறந்தோய் சிற்றில் சிதையேலே செப்பத் தமிழைத் தந்திடுவோய் சிறியேம் சிற்றில் சிதையேலே 79 1. நவசக்தி இதழாசிரியராக இருந்த திரு.வி.க. நவம் - புதுமை. தமிழ்மொழியில்புதிய எழுத்துநடையை உருவாக்கிய பெரியார் திரு.வி.க அழுங்கல்1 மறைந்த அகத்தினராய் அருமைத் தமிழர் நெறிமாற்றி அயலார் கலவை செய்தநிலை அறவே நீக்கிச் சைவநெறி ஒழுங்கில் சிறக்க அருளுணர்ச்சி உயர்ந்த ஒழுக்கம் இறையெண்ணம் உயிர்கள் தம்பால் அன்பிரக்கம் உறவும் வேண்டு மெனக்கூறி மழுங்கிக் கிடந்த தமிழ்ச்சைவம் மலர்ச்சி யுறமெய் நிலைநிறுவி மகிழுந் திருமறை யோதிதமிழ்' மணக்கும் மன்றல் நெறிகண்டு செழுங்கை மணக்க நீறணிந்து திகழ்வோய் சிற்றில் சிதையேலே செப்பத் தமிழைத் தந்திடுவோய் சிறியேம் சிற்றில் சிதையேலே. 80 1. கெடுதல் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற கொள்கையுடைய அடிகள் இறைவழிபாடும், திருமணம் முதலிய சடங்குகளும் தமிழ்மொழியிலேயே நடைபெற வேண்டும் என்ற தனித் தமிழியக்கம் கண்டார். 9. சிறுபறைப் பருவம் குழந்தையைச் சிறுபறை கொட்டி விளையாடுக என வேண்டுவதாகத் தெரிவிக்கும் பருவம் சிறுபறைப் பருவமாகும். ஒலி இன்பம் குழந்தையைக் கவருமாதலின் குழந்தை பறை முதலியவற்றைக் கொட்டிக் கொண்டு விளையாடும். இது குழந்தையின் பத்தொன்பதாம் திங்களில் பாடப்பெறும். 9. சிறுபறைப்பருவம் (ஆசிரிய விருத்தம்) ஆற்றுப் படைத்தமிழை ஏற்றக் கனிச்சுவையி லருளொழுக வுலகுபோற்ற அகமுய்யப் பாடியருட் புகழுற்ற நக்கீர ரவனிக்கண் வந்துமுழங்கத் தோற்றந் தரித்தார்கொல் துதிமூல ருருவோகொல் தொடர்ஞான சம்பந்தரோ துயர் நீக்கு சிவஞான முனிவரோ வள்ளுவர் துலக்கமோ முருகவேளோ சாற்றுந் தனித்தமிழில் மற்றம் புகாதருளித் தரவந்த இறையனாரோ சரிநிற்க நிகருற்றுப் புகழ்முற்ற வுறவுற்ற தகைசாலிம் மழலையென்று தேற்றங் கொளச்செய்து போற்றிமு ழக்கமிடச் சிறுபறை முழக்கியருளே சீருற்ற பெருவாழ்வுப் பேறுற்ற மறைமலை சிறுபறை முழக்கியருளே 81 அடிகள் தமிழ் மலையாய் நின்றிலங்கினாராதலின் அருளாளர் பலரின் திருவுருவ நினைவைத் தூண்டும் இயல்பினராய் விளங்கினார். மன்றாடி யுலகத்து மனமாட உயிராட மற்றுமுள புவனமாட மதியாடக் கதிராட மலையாடக் கடலாட மருவுதீ நிலமுமாட நின்றாடி வெளியாடி விளையாடு கின்றவன் நெறிகண்ட தில்லையெல்லை நிலைமாற்றித் தண்ணொளி நிலவீய அறிவொளி நிறைசுடர்க் கதிருமீய அன்றாட மிசைகூட்டி யருட் தோலுந் துகிலு மெனும் அணிவாத வூரடிகளின் அருந்தமிழ்ப் பண்பாடி யம்பலவா ணன்தணை அழைத்துப் பல்லாவரத்துச் சென்றாட முழக்கிய திருவாயன் கைமலர் சிறுபறை முழக்கியருளே சீருற்ற பெருவாழ்வுப் பேறுற்ற மறைமலை சிறுபறை முழக்கியருளே. 82 அடிகள் தம்வழிபாடு தெய்வமாகிய அம்பலவாணரை நாளும் வழிபடுகையில் தோலுந் துகிலுங் குழையு சுருள்தோடும் பால் வெள்ளை நீறும் பசு சாந்தும் பைங்கிளியு சூலமும் தொக்க வளையு முடைத் தொன்மைக் கோலமே நோக்கிக் குளிர்ந் தூதாய் கோத்தும்பீ, என்ற திருவாசகப் பாடலை மெய்யுருகப் பாடுவார். மலையுடன் களிப்புற்று மயங்குமுகில் நாணிட மருவருந் தென்றலோடு மளமளவென் றினியநீ ரருவிசல சலவென மகிழ்ந்தோடிக் கழனிசேரக் குலையுட னிறைவுற்றுக் கதிர்வரப் பினிலோங்க குளிர்வர வேற்புநல்கம் குலப்புகழ் தரும்வாழை நலத்திற மெடுத்தோதும் குளிர்பல்லா வரங்கண்டவா தலைமையி லெழிலோங்கித் தமிழ்ச்சுவை மிகமாந்தும் தனிப்புகழ் திகழ்கரந்தைத் தமிழ்ச்சங்க மினிதுவாழ்த் தளித்துமு ழங்கிடத் தவழுமிசை யெங்குமொலிக்கச் சிலையுட னொருமாரன் புவிவரல் போலானாய் சிறுபறை முழக்கியருளே சீருற்ற பெருவாழ்வுப் பேறுற்ற மறைமலை சிறுபறை முழக்கியருளே. 83 மலை சேர்ந்த முகில் நாணுமாறு அருவி நீர் தென்றலோடு மகிழ்ந்து கழனியில் இன்னோசையோடு சேரவும் அங்கு விளைந்த செந்நெற்கதிர்கள் ஓங்கி நிற்கவும் வருவோர்க்குத் தலைசாய்த்து வரவேற்பு நல்குவது போல வாழைமரங்கள் சூழ்ந்ததும் ஆகிய பல்லாவரம். தமிழ்ச்சுவை மாந்தும் ஒப்பிலாப் புகழ்பெற்ற கரந்தைத் தமிழ்ச் சங்கம் வாழ்த்தும் புகழ் ஒலி எங்கும் முழங்க அடிகள் மன்மதனைப் போல அழகுடன் புவியில் விளங்கினார். பிறவாது தோன்றியருள் பெருமானைப் புராணங்கள் பிறப்பிக்கும் நிலைமறுத்துப்1 பெருசக்தி இடமேற்றுப் பிள்ளையுடன் முருகனாய்ப் பிறங்குமொளி வடிவுபோற்றி இறவாத புகழ்ராம லிங்கரருட் பாக்களின் இயற்றிறந் தன்னை நிறுவி இனிதுயர்ந் தொளிர்வது தமிழ்நா ரீகமே2 எனுமாண்பை யெடுத்துரைத்து மறவாது திருக்கோவில் வழிபாட்டில் தமிழ்மறை மகிழ்ந்தோத முழக்கமிட்டு மதிமிக்க குருமார்கள் மக்கள்குல முழுதிலும் மலர்ந்துள்ள தன்மைகூறிச் சிறவாத பொய்மூடச் சிறுமைத விர்த்தவா சிறுபறை முழக்கியருளே சீருற்ற பெருவாழ்வுப் பேருற்ற மறைமலை சிறுபறை முழக்கியருளே. 84 1. புராணங்களில் கடவுளர்க்கு அவதாரம் கூறி, மனிதப் பிறப்பு எடுப்பதாகக் கூறப்படும் செய்தியை அடிகள் வன்மையாய் மறுத்தனர். மறைமலையடிகள் வரலாறு - பக்கம் 649. 2. தமிழ் நாகரீகம்' என அடிகள் நூல் எழுதியுள்ளார். பல்வகை நூல்களிலும் பயின்றதன் சாற்றினைப் பயன்கொள்ள உலகளித்துப் படித்தபுல வர்க்கெல்லாம் மதிப்பைநிலை நாட்டியே பயமின்றிப் பணியுமாற்றித் தொல்புகழ் மேன்மைகொள் சைவசித் தாந்தசபை தோற்றமுறத் துணைபுரிந்து துடிக்கவுயிர்க் கொலைசெய்து புசித்திடல் கள்ளுண்ணல் தொலைக்கும்நிலை வலியுறுத்தி கொல்லுபுன் னிறசமயக் கொள்கைகரு தாமலே குடும்பமெனப் பிறரையெண்ணிக் கொளும்வாழ்க்கைச் சடங்கெலாந் தமிழிலே நடத்திடற் குரியனவும் முழக்கமிட்டுச் செல்வரைப் பாடாது சிவன்புகழ் பாடினோய் சிறுபறை முழக்கியருளே சீருற்ற பெருவாழ்வுப் பேருற்ற மறைமலை சிறுபறை முழக்கியருளே. 85 வாழ்க்கை இறுதிச் சடங்குகள் தமிழில் நடைபெற வேண்டுமென அடிகள் விரும்பினார். தண்டைகள் சிலம்புகள் தமைமிஞ்சு செந்தமிழ் தருமறைப் பாமுழங்கத் தாமரை பூத்திடத் தடக்கதிர் கைநீட்டத் தமிழன்னை நாமுழங்கத் தொண்டுசெய் துணையாளும் துதிபாட மக்களுந் தொடங்குசொற் பண்முழங்கத் துவளாது தமிழாய்ந்து சொன்னபய னுற்றவர் துவக்குபுக ழிசைமுழங்கக் கண்டவர் நெஞ்செலாங் கவர்ந்திடு முள்நாதக் கனிவென்னு மணிமுழங்கக் கரைகாணாச் செந்தமிழ்க் கடல்நீந்திப் புகழிசை கண்டகலை யலைமுழங்கத் திண்டிறல் கொண்டுகை தண்டமிழ் முரசார்க்கச் சிறுபறை முழக்கியருளே சீருற்ற பெருவாழ்வுப் பேருற்ற மறைமலை சிறுபறை முழக்கியருளே. 86 அடிகளின் மனைவி மக்கள் யாவரும் தமிழ் நலம்பேணி வாழ்ந்தனர். வருமுரு மிந்தி1 யெனுமயல் மொழியின் வருகையை முறியடிக்க வளர்தமிழ் காப்போ ரணியினில் முதன்மை' வகித்2தொலி முழக்கியதும் திருமுறை நெறிகள் திடமுறப் பயின்று திருவருட் டுணைகொண்டு திசைபல சென்று சுவையிசை குழைத்துத் தெளிதமிழ் முழக்கியதும் கருதிடு மில்லறங் கவினுற நடத்திக் களிப்புற மழலைகளுங் கணக்குறக் கொண்டு துறவிலும் நின்றுயர் கலைகளை முழக்கியதும் முருகினை யொத்தவ மும்மணி யாத்தவ முழக்குக சிறுபறையே முதுதமிழ் சிறக்க வருமொரு மணியே முழக்குக சிறுபறையே. 89 1. இடிபோலக் கொடுமையுடன் வரும் இந்தி 2. ஏற்று (சந்த விருத்தம்) நிறையுசுவைத்தமிழ் திகழொளியைத்தர அரியணைமேல் நிலவுவகைக்குவர் நெறிமுறையைத்தரு மொருதுணையே நெடியபுகழ்க்கொரு வளவழியைத்தரு கனிமொழியால் நிலவுலகத்தினி லுறைபெருமக்களி னுளமுறைவோய் துறைசெறிவுற்றிடு கலையறிவைத்தர வுளநிறைவாய்த் துகளறுமெய்ப்பொரு ளுறுநிலையைப்புகன் றிடுபுகழோய் தொடிகுழையைப்புனை துடியிடையைப்புணர் துணையரசே தொழிலினிமைப்பயன் தருநிலையிற்குரு வெனவருவோய் கறைபடியச்செயல் கடுகளவுக்கெனும் செயஅறியாய் கருதுசிவப்பெயர் கணமுழுதுற்றிட மறதியுறாய் கடவுளருட்சுவைக் கனியமுதைத் தினம் பருகிடலால் கதைகளெனக்கடல் துவரொழுகத்திரைப் புனலறியாய் முறைதவழத்தமி ழருளமுதைப்பொழி கொடைமழையே மொழிநலமுற்றிட வழிவகையைத்தரு மறைமலையே முளரி1திகைத்திடச் சிறுகைமுழக்குக சிறுபறையே முதியவருட்தமிழ்க் கொருமுழக்குக சிறுபறையே 90 1. தாமரைமலர் திகைப்படையும்படி அழகுற்ற கை. 10. சிறுதேர்ப் பருவம் குழந்தையை மரத்தால் ஆன சிறு தேரை உருட்டும்படி வேண்டும் பருவம் சிறுதேர்ப் பருவமாகும். மடநடை பயிலும் பருவத்ததாகிய குழந்தை தனது நடைப்பயிற்சிக்கு உறுதுணையாக உதவும் பொருட்டுச் சிறு தேருருட்டல் இயல்பு. மேலும் குழந்தை வளர்ச்சி பெறப்பெறத் தரையில் நடந்து செல்லுதலேயன்றித் தேர் முதலியவற்றின் மீது ஊர்ந்து செல்லவும் விரும்பும். இவ்விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளச் சிறிய தேர் முதலியவற்றை உருட்டி மகிழும். இது குழந்தையின் இருபத்தோராம் மாதத்தில் பாடப்பெறும். இப்பருவமே ஆண்பாற் பிள்ளைத் தமிழில் இறுதியில் அமையும் பருவமாகும். 10. சிறுதேர்ப் பருவம் (ஆசிரிய விருத்தம்) ஊர்தியில் திருவுலா வருபவன் தன்னிடம் உறுதிகொள் ளுமையவள்போல் ஒண்கயற் கண்ணினால் நெஞ்சிடங் கொண்டவள் உறுதுணை தருமகிழ்வால் தார்புனை வேந்தெனத் தமிழ்கூ றுலகெலாந் தனித்தமி ழாட்சிநிறுவித் தகுசோம சுந்தர காஞ்சியாக் கம்செய்து சாகுந் தலமெனும்நூல் பேர்நிறை மொழிபெயர்ப் பாக்கிடச் சீராட்டும் பெருகு சுவைப்புலவர்கள் பேரறி வாளர்புடை சூழவே பாமாலை பிணையன்பு மிகுந்தளிக்கத் தேர்வரும் வழியெலாந் திரண்டவர் வாழ்த்திடச் சிறுதே ருருட்டியருளே திருக்கழுக் குன்றத்துச் சிவனருள் பெற்றவன் சிறுதே ருருட்டியேருளே. 91 அடிகளின் அருட்குரு சோமசுந்தர நாயக்கர் மறைந்த போது, கையாறடைந்த அடிகள் நிலையாமை பற்றி இரங்கற் பாடலாக சோமசுந்தரக் காஞ்சி பாடினர். பின்னர் அது சோமசுந்தரக் காஞ்சி ஆக்கம் என்ற நூலாயிற்று. அடிகளின் மொழி பெயர்ப்புத் திறனுக்கோர் எடுத்துக்காட்டு சாகுந்தல நாடகம். பத்துட னொன்பது நூறுமோ ரேழுமே பகர்வன் ளுவாரண்டெனப் பயன்தர ஆங்கிலம் பதினேட்டு நூறெழு பத்தாறு மொருங்கிணையவே ஒர்ந்துள சூலையி லுறும்பதி னைந்தினில் ஒளிதரு பரணிதனிலே உய்திடற் கித்தரணி உயர்தமிழ்க் கொடிமேவ உயர்ந்தேறும் பிறவியெனுந்தேர் முத்துள மனைவியும் மொழிநல மக்களும் முகிழ்த்தஇல் லறமெனுந்தேர் முறையுடன் துறவுமே பூண்டதேர் புகழெனும் மொழியேறி வலம்வந்ததேர் சித்தமா யித்தனை தேர்நிலை கண்டவன் சிறுதே ருருட்டியருளே திருக்கழுக் குன்றத்துச் சிவனருள் பெற்றவன் சிறுதே ருருட்டியருளே. 92 அடிகளின் பிறப்பு திருவள்ளுவராண்டு 1907. ஆங்கில ஆண்டு 1876 சூலை 15. ஈன்றிடுந் தாயென இயலிசை கூத்துடன் இலங்குமுத் தமிழரசியின் இணையறு மும்முடித் தேரேறி யுலகினில் இசையுடன் புகழமைத்தவன் தோன்றிய பன்னிரு திருமுறை பதினான்கு தூயமெய்ச் சாத்திரங்களுந் துணைவரச் சீர்சைவ சமயத்தே ரேறியே தொடர்ந்தொண் டினைச்செய்தவன் ஊன்றிற முருக்கியே யுள்ளத்தை ஈர்த்திடு முணர்ச்சிசெய் யெழுதிறத்திசை ஒலிநல மெனும்பெருந் தேரேறி யுவப்புடன் உயிர்க்குலந் தழைப்பித்தவன் தேன்றிறச் சொற்சுவைத் தேருடைச் செல்வமே சிறுதே ருருட்டியருளே திருக்கழுக் குன்றத்துச் சிவனருள் பெற்றவன் சிறுதே ருருட்டியருளே. 93 ஐயமே யகன்றிட அகமுறக் கற்றவை யனைத்துமே நிலைபெறுவகை அழிவினைத் தழுவிடாப் பெருநிலைக் காக்கிட அச்சிட்டு வழங்கியருளிச் சைவசித் தாந்தநூற் பதிப்புக் கழகமும் தழைத்திட வகையுரைத்துத் தனித்தமி ழியக்கமுங் கண்டய லோர்மொழித் தடமுறா நெறிக்குயர்த்தித் தையலர் மறுமணந் தக்கநற் கல்விநெறி தடையறச் செயற்குரைத்தே சலியாம லெழுபத் தைந்தினைக் கண்டுமெய் தவறாத ஒழுக்கவாழ்விற் செய்யநற் புகழினைச் செழுமையாய்க் கொண்டவ சிறுதே ருருட்டியருளே திருக்கழுக் குன்றத்துச் சிவனருள் பெற்றவன் சிறுதே ருருட்டியருளே. 94 அடிகள் தாம் கற்றுணர்ந்து ஆய்ந்த கருத்துக்களை நூல் வடிவில் நிலைபெறச் செய்ய. திருநெல்வேலி சைவ சித்தாந்தநூற்பதிப்புக் கழகத்திற்குப் பேருதவியாக இருந்தார். தனித்தமிழியக்கம், தையலர் மறுமணம், மகளிர் கல்வி இவற்றிற்கு அடிகள் பாடுபட்டார். அடிகள் எழுபத்தைந் தாண்டுகள் தாம் வாழ்ந்தனர். ஏறுகொள் சைவநெறி இனிமை துலக்கினும் இருக்கும் பிறர்சமயமும் இலங்கிடச் சார்ந்துளார் தம்பாலும் மிக்கினிமை இணைந்திடப் பழகுமெளிமை நாறுமென் மலர்பல நாரொன்றில் மாலையாம் நல்லதோர் நிலையுணர்த்தி நலிவிலாச் சைவநெறிப் பொலிவினைக் கூட்டிடும் நகந்தசை யறவுநாட்டும் பேறுசெய் கடம்பவன சுந்தரப் பாதிரிகள் பெருமைசேர் மறைகண்டிடப் பெற்றிகொள் சைவமெடுத் தோதியக் குடும்பமே பிழிசைவ சாரவைத்துத் தேறுமெய் வழியோடு திருநீறுத் தந்தவ சிறுதே ருருட்டியருளே திருக்கழுக் குன்றத்துச் சிவனருள் பெற்றவ சிறுதே ருருட்டியருளே. 95 பன்னிற மலர்களும், நார் ஒன்றில் இணைவது போல, பல சமயத்தவர்களும் அடிகளிடம் ஒன்றிப் பழகினார்கள். கடம்பவன சுந்தரம் என்ற கிறித்தவர் அடிகளிடம் சைவ சமயக்கோட்பாடுகளைக் கேட்டறிந்து, தாம் சார்ந்திருக்கும் கிறித்தவத்தைக் காட்டிலும் சைவமே சிறந்தது எனத் தெரிந்து தம் குடும்பத்தையும் சைவ சமயத்தைத் தழுவச் செய்தார். (வேறு) அம்பல வாணரின் திருக்கூத் தரிதாம் பெருமையினை அருட்சிவ லிங்கத் திருவுரு வமைப்பி லடங்கிய உண்மையினைக் கூடிடு முருவத் திருவழி பாட்டிற் குரித்தாம் மேன்மையினைக் குழைவாய்ப் பிறவுயிர் தம்பா லிரக்கங் கொளுமுயர் தகமையினைத் தேடிடு மொருதுணை யோடுயர் வாழ்வினைத் தெளியுங் கனிவுதனைச் சேய்மதி பரிதி புதன்குரு வெள்ளி திகழ்சனி தன்மையினை ஊடிடு முளத்தோர்க் குரைத்திட வந்தோய் உருட்டுக சிறுதேரே உயர்தமிழ் வரையும் மறைமலைப் பூங்கை உருட்டுக சிறுதேரே. 96 அடிகள் நாள், கோள் பார்த்துரைக்கும் திறத்தினர். அருளுங் கருணை இறைவன் நெஞ்சி லமைவாய் வந்திடவும் அறிவும் தெளிவும் வளமும் திடமும் அருளித் தந்திடவும் மருளும் புரியாக் கொடுமை இருளும் மறைந்தே ஓடிடவும் மலரும் உள்ளத் துள்ளொளி பரவி மகிழ்வே கூடிடவும் பொருளும் நலமே புரியும் நினைவும் பொருந்திப் பல்கிடவும் புகழ்சேர் தமிழிற் குலகோர் வணக்கம் பொலிவாய் நல்கிடவும் உருளும் வையப் பெருந்தேர் வாழ்த்த உருட்டுக சிறுதேரே உயர்தமிழ் வரையும் மறைமலைப் பூங்கை உருட்டுக சிறுதேரே. 97 (வேறு) முல்லைக்குத் தானமர் தங்கத்தே ருறைதந்த முடியுடைப் பாரிதனிலும் முல்லைக்குத் தேனமர் செந்தமிழ்த் தேருரை முழுதீந்த புகழுமெய்தி இல்லைக்குச் சான்றெனும் பாலைக்குங் குறிஞ்சியின் இறையருட் தமிழைஈந்தே இயல்பசுஞ் சோலையாய் இழையூடு பாவுற எடுத்தநூல் நெய்தலாக்கி எல்லைக்குச் சார்புறாக் கருணைமரு தம்வீச இந்திரன் வருணனுடனே இளையவன்1 துர்க்கைதிரு மாலுமவர் தேரேறி இனிதே விரைந்தருளத் தில்லைக்குள் ளுள்ளவனின் உள்ளத்தேர் நிற்பவன் சிறுதே ருருட்டியருளே திருக்கழுக் குன்றத்துச் சிவனருள் பெற்றவன் சிறுதே ருருட்டியருளே. 98 முல்லைக்குத் தேரீந்த பாரியைக் காட்டிலும், முல்லைப் பாட்டுக்கு ஆராய்ச்சியுரை எழுதிப் புகழ் மேம்பட்டவர் அடிகள். பாலைக்கு நிலப் பாகுபாடு இல்லை பாலை - பாலை நிலம். அடிகள் பட்டினப்பாலைக்கும், குறிஞ்சிப் பாட்டுக்கும் ஆராய்ச்சியுரைகள் செய்தார். 1. முருகன். ஊனிறை யுடம்பினை யுதறிமெய்ப் புகழுடம் புற்றிடும் பொழுது முற்றும் உள்சடங் கெத்தனை யுற்றாலு மவைதூய ஒண்டமிழ் மொழியிலன்றிக் கூனிடும் பிறமொழிக் கூற்றினில் பயன்செயக் கூடாதென் றுணரவைக்க கூரறி வாளர்க்குச் சொற்பொழிவுக் காணிக்கை கொள்ளவும் முறைசமைக்க தீனியிற் பொருந்திடு பொருந்தாத நிலையினைத் தெளிவோ டெடுத்துரைக்க சீர்தமிழர் பண்பாடு திருக்கோவில் வழிபாடு சிறப்பீயும் நெறிவகுக்கத் தேனிறை தனித்தமிழ்த் தேரேறி வந்தவன் சிறுதே ருருட்டியருளே திருக்கழுக் குன்றத்துச் சிவனருள் பெற்றவன் சிறுதே ருருட்டியருளே. 99 கார்குழற் சாந்தம்மை கற்புநெறி வாழ்கஅவர் கருத்துரை துணைவர்வாழ்க கருவிலே திருவென உருவான மறைமலை காணுவழி எச்சம்வாழ்க பேர்புகழ் மறைமலை நூல்நிலை யம்வாழ்க பெருசைவ நெறியும்வாழ்க பிறங்குமறை மலையடி தனித்தமிழ்க் கல்லூரி பெற்றிபல வுற்றுவாழ்க தேர்செலுந் திருவீதிப் பல்லா வரம்வாழ்க திகழுநூற் றாண்டின்விழாச் செய்காரைக் குடிராம சாமிதமிழ்க் கல்லூரித் திறன்வாழ்க வாழ்கவையம் சீர்பெறத் தமிழுடன் இறைதாளம் வாழ்கநீ சிறுதே ருருட்டியருளே திரள்தனித் தமிழ்தரு மறைமலைச் செல்வமே சிறுதே ருருட்டியருளே. 100 பிள்ளைத்தமிழ் - இறைக்குருவனார் பொருளடக்கம் பக்கம் 1 காப்புப் பருவம் 225 2. செங்கீரைப் பருவம் 235 3. தாலப் பருவம் 245 4. சப்பாணிப் பருவம் 255 5. முத்தப் பருவம் 265 6. வாரானைப்பருவம் 275 7. அம்புலிப்பருவம் 285 8. சிற்றிற்பருவம் 295 9. சிறுபறைப்பருவம் 305 10. சிறுதேர்ப்பருவம் 315 முன்னுரை முற்றும் அயன்மொழி விரவாத் தனிச்செந்தமிழில் இயன்ற மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ் என்னும் இச் சிற்றிலக்கியத்தின் கண் இயற்கையிகந்த உயர்வு நவிற்சியோ போலித் தொன்ம (புராண)க் கதைச் செய்திகளோ ïl«bg‰¿y; இயற்கை நிகழ்ச்சிகளும் உண்மைச் செய்திகளுமே அணி நயம்படப் புனையப் பெற்றிருக்கின்றன. சிறுதெய்வ வணக்கம் முழுமுதற் கடவுள் வழிபாட்டு நெறிக்கும், அதனை வலியுறுத்தும் பாட்டுடைத் தலைவர், நூலாசிரியன் கோட்பாடுகளுக்கும் ஏலாமையின் காப்புப் பருவத்தின்கண் அம்மையம்பலவாணர், தமிழ்த்தாய், சமயச் சான்றோர், முத்தமிழ்ப் புலவோர், உரையாசிரியர், கணக்காயர், ஆராய்ச்சியாளர், பல கலைவாணர், ஆட்சியாளர், பொதுத் தொண்டர் என்னும் பதின்மர் வழுத்தி வேண்டிக் கொள்ளப்பெற்ற தன்றித் திருமால் முதலிய பதின்மர் அங்ஙனம் வேண்டிக் கொள்ளப்பெறவில்லை. அற்றேல் இஃது ஆன்றோர் வழக்கொடும் மாறுபட்டதோவெனின், பெரும்புலவர் மீனாட்சிசுந்தரனார் இயற்றிய சேக்கிழார் பிள்ளைத் தமிழின் காப்புப் பருவத்தில் தில்லைவாழ் அந்தணர் முதல் மன்னியசீர் மறைநாவன் ஈறான பதினொரு பாடலில் சிவனடியார் பெருமக்களே வழுத்தி வேண்டப்பெற்றிருத்தலின் இஃது ஆன்றோர் வழக்கொடும் மாறுபட்டதாகாது. பாட்டுடைத் தலைவரான அடிகளார்தம் கொள்கைகள், நூல்கள், நிறுவனங்கள், வரலாற்று நிகழ்ச்சிகள் முதலியன பற்றிய சிறப்புச் செய்திகள் யாவும் வெளிப்படையாகவும் குறிப்பாகவும் இந்நூலின்கண் இடம்பெற்றுள்ளன. இளமைப் பருவத்திலேயே அடிகளார் நூல்கள் அனைத்தையும் ஆரா வேட்கையொடும் பல்காற் பயின்று செந்தமிழுணர்வும், சிவநெறியொழுக்கமும் கொண்டு அவைதமக்குப் பணியாற்றுவதில் முனைப்பும் உறைப்பும் உடையேமை, அடிகளாரையே பாட்டுடைத் தலைவராகக் கொண்ட இச் சிற்றிலக்கியம் ஆக்கும் முயற்சியில் ஈடுபடுத்தி முற்றுப்பெறுவித்த திருவருளை வழுத்தி வணங்குகின்றேம். சென்னை தி.பி. 2007 (கி.பி. 1976) - இறை கடவுள் வாழ்த்து உலகெலாந் தோற்றியுங் காத்தும் ஒடுக்கியும் ஓவா தருள்வெளிக்குள் உயிரினம் மேன்மேற் றழைத்துச் சிறப்புற்(று) உயர்ந்துபே ரின்பங்கொள அலகிலாப் பலவிளை யாடல்செய் மாட்சியான் அறிவினின் மேம்படுத்தி அகத்துணரும் முழுமுதற் செம்பொருள் எனநின்ற ஆர்ந்தபெரு bkŒ«ikbahËna! இலகுநற் செந்தமிழ் திருநெறி எனப்படுவ இருள்வயப் பட்டநிலைமை 1ïÇîw¤ தமிழினம் எழுச்சியுற் றோங்கிட இருநிலம் வியக்குமாறு பலதலைய வாயநற் றொண்டினால் ஆழ்ந்தினிது பாரித்த நுண்ணறிவினால் பாங்குயர் தவத்தினால் வீங்குபுகழ் மறைமலை 2igªjÄœ 3áw¡fbt‹nw! குறிப்புரை : 1. இரிவுற - நீங்க. 2. பைந்தமிழ் - பிள்ளைத்தமிழ் (பசுமை - இளமைக்குறிப்பு). 3. சிறக்கவென்றே - வென்று சிறக்க. 1. காப்புப் பருவம் 1 அம்மை அம்பலவாணர் மலர்தலைய பலகோடி யண்டங்கள் யாவையும் மாறுபா டின்றியாண்டும் மன்னிநின் றாங்கவை தந்நெறி இயங்கிட மன்னுயி buyh§1fÈ¥g மலரனைய 2beŠáD« மாமன்ற நடுவினும் மருவிநின் றாடல்கொண்டு 3k«kbuh‹ றில்லாத 4br«ikna அருள்செய்யும் அம்மையம் gytngh‰¿! குலவுநற் றமிழர்தங் கொள்கையாஞ் செந்நெறிக் 5bfh©Koò தன்மேன்மையும் கொழுந்துவிட் டொளிர்கின்ற செந்தீ விளக்கமே குறிசிவ 6ïy§fbk‹D« உலகுபுகழ் மெய்மையும் வையகம் உய்யுமா(று) உணர்த்துநன் மெய்த்தவத்தோன் ca®7_y‹ மரபில்வரு பெயரோங்கு மறைமலை ஒள்ளியற் fh¤jUŸfnt! குறிப்புரை : 1. கலிப்ப - தழைக்க. 2. நெஞ்சினும் - “á‰w«gy¤J« என் áªijíŸS«” - திருக்கோவை. 3. மம்மர் - அறியாமை. 4. செம்மையே... - “br«ikna யாய átgj«” - திருவாசகம். 5. கொண்முடிபு - சித்தாந்தம். 6. இலங்கம் - இலிங்கம். 7. மூலன் - திருமூலர் மரபில் வந்த அரசானந்த அடிகளார் மறைமலையடிகளுக்கு மந்திரம் அருளினர் என்பது வரலாறு. 2 தமிழ்த்தாய் ‘m«kh’ வெனச்சொல்ல எந்தமக் கருள்செய்யும் அமுதவடி thdahna! அனைத்துலகம் எங்கணும் ஆட்சிபெற் றொளிர்கின்ற அறிவார்ந்த _yKjny! செம்மாந்து 1ngWgâ னாறுமுற் றுங்கொண்டு திகழ்கின்ற bgUkh£ona! சீரார்ந்த தென்குமரி நாடாண்ட eha»! திருவளர் bršÉngh‰¿! இம்மா நிலத்துமுதன் மாந்தன் பிறந்தகம் இருங்கடற் குமரிநாடே இயம்பிடு முதன்மொழி அவன்நா வசைத்திட எழுந்தநற் றமிழேயென v«2kh திரத்தினுந் தன்மா பெரும்புலம் இலங்குற எடுத்துரைத்தோன் 3Vbwd¥ பொலிவுகொள் வீறுயர் சால்பினெம் 4Vªjiy¡ fh¤jUŸfnt! குறிப்புரை : 1. பேறுபதினாறு - தமிழின் பதினாறுவகைப் பேறுகளாவன செம்மை, மும்மை முதலியன. 2. மாதிரம் - திசை. 3. ஏறு - அரியேறு (ஆண்சிங்கம்). 4. ஏந்தல் - ஆண்பாற் சிறப்புப்பெயர். 3 சமயச் சான்றோர் வையத்து வாழ்வாங்கு வாழ்ந்துமேம் பாடுற வயங்குபுகழ் நிலைநிறுத்த வான்பதம் பெறுமற்று யான்என தறச்செய் வழிப்படுத் தொன்மைசான்ற மெய்யகப் பொருளுணர்ந் துய்வுகொடு பேரின்பம் மேவுநெறி யிற்புணர்த்தும் மேனாள் தொடங்கிவரும் ஆனாத சீர்த்தியின் மேலாய âUkuãÜ®! பொய்யகத் தொன்மங்கள் புகலுவன சிவனியப் பொருள்நெறிய வாகாவெனப் போற்றுசிவ be¿1gHª தமிழ்க்கொள்கை யேயெனப் பொருந்துமுரை செய்தெமக்குக் கையகத் துற்றதீங் கனிபோல் விளக்கியெங் கைதூக்கி 2MjÇ¡F« கருதுதவ மேன்மையின் ஒருவனென வந்தவெங் கண்மணியைக் fh¤jUŸfnt! குறிப்புரை : 1. பழந்தமிழ்க் கொள்கை - பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம் என்பது அடிகளார் நூல்களுள் ஒன்று. 2. ஆதரித்தல் - ஆக்கத்திற்குத் துணை செய்தல் என்னும் பொருளுடைய தமிழ்ச்சொல். 4 முத்தமிழ்ப் புலவோர் 1bjhšiy¥ gH§2FkÇ eš3yfL வாய்ந்துதமிழ் தோன்றுநாள் அன்றுதொட்டுத் தூயபெரு மறைகளைத் தோற்றியும் இலக்கணம் துறைதொறும் வரையறுத்தும் எல்லை யிலாதபல கலையிலக் கியநூல்கள் இயற்றியும் வழங்கச்செயும் ஈடிலா முத்தமிழ்ப் புலவோர்தம் மரபினில் இலங்குநன் kh©òÄ¡Ñ®! சொல்லைப் புகுத்திநந் தமிழைச் சிதைத்ததொடு தொடர்பாய் நமைக்கெடுத்தோர் சூழ்ந்தபொல் லாங்கெலாம் வீழ்ந்துபட வாகைகொள் 4Rluida பேரறிவினான் இல்லை இவற்குநிகர் என்றுலகம் ஏத்துநன் இருந்தமிழ் வாணர்க்கெலாம் இலக்கியம் இலக்கணம் இவனெனத் திகழ்தரும் எந்தையைக் fh¤jUŸfnt! குறிப்புரை : 1. தொல்லை - தொன்மை. 2. குமரி - குமரிக்கண்டம். 3. அகடு - வயிறு. 4. சுடரனைய - ஞாயிறு போலும். குமரி வயிற்றில் தமிழ் தோன்றியமை ஒரு புதுமையாயினவாறு காண்க. 5 உரையாசிரியர் ஐயமுந் திரிபுமற ஆர்ந்தபாப் பொருளெலாம் அகழ்ந்தெடுத் துள்ளங்கொள அருமைசான் மகவினுக் கமுதங் குழைத்தூட்டும் அன்னையைப் போல்வழங்கி வையகம் போற்றவுயர் செய்யதமி ழுக்குரை வகுத்தநக் கீரன்மரபில் வாழையடி வாழையென வண்டமிழ்த் தொண்டுசெய் வளமார்ந்த புலமாண்பினீர்! மெய்யருள் நூற்குரை செய்தலா காதென மெத்தவும் கழிமடமையால் மேலோர்தம் நூல்களை வாளா உருப்போட்டு மெலியுநிலை முற்றுமாற்றி ஐயன்மணி வாசகன் செய்ததிரு வாசகத்(து) அரும்பொருள் 1விரித்து மற்றும் 2ஆராய்ச்சி யுரைகள்செய் தாற்றுப் படுத்தநல் அடிகளைக் காத்தருள்கவே! குறிப்புரை : 1. விரித்து - திருவாசக விரிவுரை. 2. ஆராய்ச்சி - பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை, முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை, குறிஞ்சிப்பாட்டு ஆராய்ச்சியுரை. 6 கணக்காயர் 1அகரமுத லாங்கணக் 2கிருவகை வடிவையும் அழகுறப் பயிலுவித்தே அகக்கண் திறப்பித் தருங்கருவி நூல்களும் அன்றிமற் றனயாவையும் தகவுடன் மாணாக்கர் உள்ளகம் நிறைத்துநற் றரமுயர்த் தாளாக்கிய தலைநாட் 3கணக்காயர் 4சரவடித் தொடர்கின்ற தனிப்பெருந் தலைமைசான்றீர்! பகரரிய மலைவளம் மிகவுடை 5அனந்தையில் பரவுறு பெருஞ்சென்னையில் பாங்குறக் 6கல்லூரி யகத்தினும் மனையினும் பல்லா யிரம்மாணவர் அகமகிழ வினியதமிழ் விரிவுரை யாற்றிநல் அறிவொளி வழங்கு7செம்மல் ஆன்றோர்கள் போற்றவரு சான்றாண்மை யாளனெம் 8அத்தனைக் காத்தருள்கவே! குறிப்புரை : 1. கணக்கு - எழுத்து வரிசை. 2. இருவகை வடிவம் - ஒலி வடிவம், வரி வடிவம். 3. கணக்காயர் - நூல் பயிற்றுநர். 4. சரவடி - மரபு. 5. அனந்தை - திருவனந்தபுரம். 6. கல்லூரி - சென்னைக் கிறித்தவக் கல்லூரி. 7. செம்மல் - தலைவன். 8. அத்தன் - அப்பன். 7 ஆராய்ச்சியாளர் 1காய்தல் உவத்தலில் லாதுமெய் 2காணுவான் கருத்துடன் நுணுகியாய்ந்து கண்டநல் லுண்மையை விண்டருள்வ தன்றியுங் கணக்கிலாப் புதுமைபலவும் ஓய்தல் இலாதபே ருழைப்பினின் விளைவித்தும் உருவாக்கம் செய்தளித்தும் உலகெலாம் பெருநலம் பெறுவிக்கும் உயர்வுடை ஒண்மையறி வியலறிஞரீர்! சாய்தல் இலாதமன வுரமுடைய செம்மையன் சலியா துழைத்தறிவினாற் சரியெனக் கண்டவை தமையெலாந் தெரிவுறச் சாற்றிமா மலையகத்து 3வேய்தல் செயப்பெற்ற மாடமென நிறுவுநன் விளங்கிவளர் புதுமைவேட்பன் வியன்பழந் தமிழ்நலம் 4விருந்தினிற் காட்டுமிவ் 5விரகனைக் காத்தருள்கவே! குறிப்புரை : 1. காய்தல் - வெறுத்தல். 2. காணுவான் - காணும் பொருட்டு. 3. வேய்தல் - கட்டுதல். 4. விருந்து - புதுமை. 5. விரகன் - திறமுடையோன். 8 பலகலைவாணர் உள்ளங் கவர்ந்துபே ரறிவுநிலை யதனினும் உணர்வுநிலை மேற்சிறப்ப ஊக்கியுஞ் சுவைவயம் ஆக்கியும் இன்பநிலை ஊட்டுநற் பெற்றிசான்ற விள்ளருஞ் சீர்த்திசால் தெள்ளுற்ற கலைநலம் வீறுமிகு பேறுபெற்று வியன்ஞாலம் மேன்மேற் பயன்கொள்ள வாழ்வுறும் விளங்குபல கலைவாணரீர்! 1ஒள்ளிய கொழுந்தமிழ் குயிலென வழங்குநன் ஒப்பிலா நாநலத்தோன் உணர்வுநிலை பற்றுறும் அறிதுயில் வல்லுநன் 2ஓகநெறி காட்டுமேலோன் கொள்ளுந் திருக்கோலம் எழிலார்ந்த பொலிவினன் 3கோணளவு வினையாயினும் 4கோட்டம் இலாதுசெய் நாட்டமிக வுடையநற் 5குரிசிலைக் காத்தருள்கவே! குறிப்புரை : 1. ஒள்ளிய - ஒளி (புகழ்) வாய்ந்த. 2. ஓகம் - யோகம். 3. கோண் - அணுவின் நூற்றிலொரு TW; அணுவைச் சதகூறிட்ட கோண் - கம்பர். 4. கோட்டம் - சாய்வு, திருகல். 5. குரிசில் - தலைவன். 9 ஆட்சியாளர் 1moehŸ தொடங்கிநனி மேம்பட்டு வருபெருமை ஆர்தரு பழங்குடியினில் ஆட்சிசெய் மாட்சியான் அரியதமிழ் போற்றலான் ஆன்றோர் தமைப்பேணலான் நெடியபுகழ் கொண்டிலகு பெருவேந்தர் ஆண்டவெம் நீள்தமிழ்க் குடிவாணரை நிறைவேற்ற உறுதிகள் பலசொல்லி ஆட்சிசெய் நிலையுற்ற ngWbg‰Ö®! அடிமையின் மூழ்கியும் அறியாது 2khœ»í« 3mykªj தமிழுலகினை அறிவொடும் உணர்வூட்டி நெறியுறச் செய்துமற்(று) அயலவர் 4ÉuFbfh‹nwh‹ 5Fok¡fŸ அரசினர் கடமைகள் விளக்குநன் குற்றங் கடிந்துரைப்போன் கூர்த்தமதி யாலரிய சான்றாண்மை யாற்பெரிய 6FUkÂia¡ fh¤jUŸfnt! குறிப்புரை : 1. அடிநாள் - தோற்றநாள். 2. மாழ்கியும் - மயங்கியும். 3. அலமரல் - அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி - (தொல்). 4. விரகு - தந்திரம். 5. குடிமக்கள் - ‘Fok¡fŸ flik’ என்பது அடிகளாரின் கட்டுரைகளில் ஒன்று. 6. குருமணி - நிறம் பொருந்திய மாணிக்கம் போல்பவன். 10 பொதுத்தொண்டர் 1k‹gij நலஞ்சிறந் தின்புறத் தந்நலம் மறுத்துத் துறந்துசற்றும் 2koahJ 3khdK§ கருதாது வந்துறும் மலையனைய பலதலையவாம் துன்பங்கள் தமையெலாம் நகையாடி மேற்கொண்ட தூயவினை முற்றநன்றே தொண்டுசெய் கின்றபெரு மாண்பினீர் எம்மனோர் தொழநின்ற khbgÇaß®! பன்மையாந் தொண்டினும் முன்மைய(து) அடிப்படைப் பான்மையது நல்லறிவினைப் பாங்குற விளங்குமா றோங்குவிப் பதுவெனப் பலதுறையி னுஞ்சிறக்கத் தன்மெய்ப் பெரும்புலமை நன்னெஞ்ச வுறுதியால் தாளாண்மை கொண்டதகவால் தக்கபணி யாற்றியொரு மிக்கபுகழ் உறுபெருந் தலைவனைக் fh¤jUŸfnt! குறிப்புரை : 1. மன்பதை - உயிர்ப்பன்மை, மக்கட்பரப்பு. 2. மடியாது - சோம்பலுறாது. 3. மானமும்... - ‘FobrŒth®¡F’ எனுங் குறள் காண்க. 2. செங்கீரைப் பருவம் 11 தனித்தமிழ் அமுதமாய் இனித்திடும் பெற்றியைச் rh‰¿1aŸ ளூறியொழுகத் jhŸ2ötš ஏந்தியெமை வாழ்விக்கும் இருகையுந் தலையினில் ஊன்றிநிற்பப் 3gŤâL« பெருங்கடல் அணிகின்ற பார்மகள் 4gh®¤âyh மைக்கிரங்கிப் பாதமொன் 5¿iwô‹¿ யொருகாலை நீட்டிநற் பாங்கான தோற்றத்தொடும் குனித்தபுரு வத்தினன் அம்பலத் தரசுநங் கோனினைக் கண்டுவையங் கூறுதமிழ் வீறுறும் எனவுவந் தாடல்செய் கூத்தினிய நேர்த்தியதனைத் 6âÅ¡f©z வர்க்கெலாங் காட்டுபே ரருளாள செங்கீரை ahoaUns! தென்னா டெழுச்சியுற முன்னோடி யாயவன் செங்கீரை ahoaUns! குறிப்புரை : 1. அள் - வாய் நீர். 2. தூவல் - மையூற்றெழுதுகோல். 3. பனிப்பு - குளிர்ச்சி. 4. பார்த்திலா - அடிகளார் இல்லத்தில் துணிச்செருப்பும், வெளியில் பாதக்குறடும் அணிதலின் வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள். 5. இறை - சிறிது. 6. தினி - மேதினி, தலைக்குறை. 12 1ïwh‰f© ணிழிந்தசெந் தேனுற்ற 2bg‰w¤â‹ இனியபாற் றீங்கட்டியை இளையதன் குழவிக்கு மந்திவாய் ஊட்டுநல் இரும்பொழிற் சூழல்யாண்டும் 3mwh¥g© முழக்கத் திருக்கழுக் குன்றத்(து) அமர்ந்துறையும் எந்தையருளால் 4maytu வென்றுதிரு நெறியே தழைக்கவும் அருந்தமிழ் செழித்தோங்கவும் 5ewh¢áª தெழின்மலர் 6tha 7á‹ னம்மையும் நற்றவச் 7brh¡f¥gU« நஞ்செல்வ மென்றுநனி கொஞ்சிவிளை யாடிமகிழ் நன்மதலை யாகிவந்தோய் 8áwh®¡»Åa செந்தமிழ் தந்தபே ரருளாள செங்கீரை ahoaUns! தென்னா டெழுச்சியுற முன்னோடி யாயவன் செங்கீரை ahoaUns! குறிப்புரை : 1. இறால் - தேனடை. 2. பெற்றம் - ஆ(பசு). 3. அறாப்பண் - பண் அறா - திருமுறை இன்னிசை ஓவாத. 4. அயலவர - அயலவர்களுடைய. 5. நறா - தேன். 6. வாய - வாயையுடையாய். 7. சின்னம்மை, சொக்கப்பர் - அடிகளாரின் பெற்றோர். 8. சிறார்க்கினிய செந்தமிழ் - சிறுவர்க்கான செந்தமிழ் இளைஞர்க்கான இன்றமிழ் என்பன அடிகளாரின் நூல்கள். மேனின்றொழுகும் தேன் திருவருளாகவும், பெற்றத்தின் பாலுறை (பாற்கட்டி) தமிழாகவும், தேனுறைந்த பாற்கட்டி திருமுறைகளாகவும், மந்தி குழவிக்கு ஊட்டுவது மெய்ந்நூலாசிரியன் மாணாக்கர்க்கு அருள் செய்வதாகவும் கொள்க. 13 1bfhªJgL முத்தமிழ் மேன்மேற் செழித்தினிது கொழுமையுற் றோங்கிவளரக் கூறுபிற மொழியிலுள பேரறிஞர் தங்கள்நூல் கொழித்தெடுத் தாங்கவற்றை நந்தமக் குரியதாய் மொழிவழக் கிற்கிசையும் நடையிற் பெயர்த்துயாக்கும் நன்முறை தெரிந்துயாம் பின்பற்ற வழிகாட்டி நானிலத் தெதிரிலாத வெந்திறல் மிக்குடையர் ஆங்கிலப் பெரியமொழி வியன்புலவர் 2mor‹brí« வீங்கிசைக் கட்டுரைகள் நூல்நயங் கண்டினிய விரிதமிழில் மொழிபெயர்த்துச் 3áªjid¡ கட்டுரைகள் தந்தருள் 4KUfntŸ செங்கீரை ahoaUns! தென்னா டெழுச்சியுற முன்னோடி யாயவன் செங்கீரை ahoaUns! குறிப்புரை : 1. கொந்து - கொத்து. 2. அடிசன் - ஆங்கிலப் பேரறிஞர். 3. சிந்தனைக் கட்டுரைகள் - அடிகளாரின் நூல். 4. முருகவேள் - அடிகளாரின் òidbga®: மேற்படி நூலில் இடம் பெற்றது. 14 உலகத் தியற்கையும் மக்கள்தம் இயற்கையும் ஒண்மைமிகு நுண்ணறிவினால் உற்றாழ்ந்து நோக்கிநன் காராய்ந்து 1ÉGÄa ஓங்குறத் தேர்ந்துபெரிதும் நலமிக்க மொழிநடையில் உண்மையாம் அணியொளிர நற்றமிழ் இலக்கியஞ்செய் நாவீறு நனியிலகு மேலைநாட் புலவர்தம் நயத்தக்க மாபெருமையும் இலவாய வற்றையும் உளவேனுங் கோடியாய் இயற்கையின் இறப்பப்புனை ஏற்றமில் பிற்றைநாட் புலவர்தஞ் சிறுமையும் 2ïUªjÄÊš 3M§»y¤âš 4bry¥ngá நூல்செய்த பேராண்மை யாளநற் செங்கீரை ahoaUns! தென்னா டெழுச்சியுற முன்னோடி யாயவன் செங்கீரை ahoaUns! குறிப்புரை : 1. விழுமிய - áwªjd; பெயர்ச்சொல். 2. இருந்தமிழில் - முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர் அடிகளாரின் நூல்கள். 3. ஆங்கிலத்தில் - Ancient and modern Tamil poets 4. செலப்பேசி - மேற்படி நூல்(கள்) சென்னை மாநிலத் தமிழாசிரியர் மாநாட்டுத் தலைமைப் பொழிவு. 15 பெருவாழ்வு பெற்றிலகு திருவார்ந்த செந்தமிழ் பிழைப்புறு மயன்மொழிகளான் பிணிப்புற்று நலிவுண்ட இழிநிலை தனைக்கண்டு பெருகவும் நுணுகியாய்ந்தே அருளாளர் வடலூரர் பாவுற்ற 1njf¤ij அரியதமிழ் யாக்கையாக்கின் அழகுநனி பொலியுமென அருமந்த 2e‹kf£(F) அறிவுறுத் தன்றுதொட்டுப் பொருளாழம் மிக்கசொல் மலியிளந் தமிழினிற் பொருந்தா வயற்சொற்களைப் புகுத்தல் தவிர்த்தினிது தூய்தாய் வளர்க்கெனப் புகன்றுபகை வென்றுநாட்டித் 3bjUsh®ªj பலதுறை நூல்களுந் தந்தவா செங்கீரை ahoaUns! தென்னா டெழுச்சியுற முன்னோடி யாயவன் செங்கீரை ahoaUns! குறிப்புரை : 1. தேகத்தை - ‘c‰w njf¤ij’ என்னுந் திருவருட்பாவிலுள்ள ‘njf«’ என்னும் சொல்லை. 2. நன்மகள் - திருவாட்டி நீலாம்பிகையம்மையார். 3. தெருள் - தெளிவு. 16 (வேறு) இயலிசை நாடக மென்றிசை மன்னி இலங்கு பசுந்தமிழின் எழினல மயலார் பழிபடு வினையான் இழந்தமை பட்டொழிய அயலின மொழியினு முயர்வுறு தமிழின் ஆற்றன் மிகப்போற்றி அருந்தமிழ் 1ehlf« ஆக்கிய மெய்ப்பொருள் அறிஞன் 2RªjuÅ‹ உயரிய வாழ்த்தும் பாராட் டுரையும் உலவாப் பேரன்பும் ஓங்குறு நட்பும் பெற்றோய் தமிழை உற்ற வழித்தீய்க்கும் அயலவர் விரகுகள் வீழ்த்திய பெரியோய் ஆடுக br§Ñiu! அம்பல வாணன் அடிமலர் 3guÉ ஆடுக br§Ñiu! குறிப்புரை : 1. நாடகம் - மனோன்மணீயம். 2. சுந்தரன் - ஆலப்புழை திருவுயர் பெ. சுந்தரனார். 3. பரவி - tG¤Jnth‹: பெயர்ச்சொல். 17 1K¤âw¤ தவரும் ஒத்து மகிழ்ந்திட முன்னைச் சிவநெறியின் 2KoîW முடிபே மீமுடி பென்று முழங்கிப் 3bga®bfh©nlh‹ மெத்தவு 4kiwKo கொள்கை பரப்புவி வேகா னந்தற்கு மேன்மைச் சிவனிய தனிமுடி பருளிய மேதைப் பெருமகனாம் எத்திசை யும்புகழ் வித்திய 5nrhk சுந்தரன் மாணவனாய் 6vÊštu லாறுங் காஞ்சியும் ஆக்கமும் இயற்றிநன் மெய்யறிவின் அத்த னெனக்கொடு போற்றினை நன்றே ஆடுக br§Ñiu! அம்பல வாணன் அடிமலர் பரவி ஆடுக br§Ñiu! குறிப்புரை : 1. முத்திறத்தார் - நாட்டார், ஒட்டார், அயலவர். 2. முடிவுறு முடிபு - சித்தாந்தம். 3. பெயர் - சூறாவளி (சண்டமாருதம்) என்னும் பட்டம். 4. மறை முடிபு - வேதாந்தம். 5. சோமசுந்தரன் - அடிகளாரின் மெய்ந்நூலாசிரியரான திருப்பெருந்திரு சோமசுந்தரனார். 6. எழில்வரலாறுங்... - சோமசுந்தரநாயகர் வரலாறு, சோமசுந்தரக்காஞ்சி, சோமசுந்தரக் காஞ்சியாக்கம் என்பன அடிகளார் இயற்றிய நூல்கள். மன்னன் சேதுபதியின் பேரவையில் சோமசுந்தரனார் சிவனியக் கொண்முடிபு நாட்டியமையையும், விவேகானந்தர்க்கு அஃது அறிவுறுத்தியமையும் வரலாற்றில் காண்க. 18 நல்லார் பரவும் 1átÅa நெறியும் நலமிகு செந்தமிழும் நாளும் அயலவர் தலையெடுப் பதனால் நலிவுறு நிலைமையுணர்ந்(து) ஒல்லும் வகையான் உறுபணி செய்யும் உறுதியின் 2òfÈa®nfh‹ உயர்பெயர் தாங்கிய 3jiykf‹ தரலும் உவகை யொடும்பெற்றுக் 4fšyh டையைமேற் கொண்டு 5jÄœKiw காட்டிய மெய்த்துறவின் கண்ணிய முயரத் திண்ணிய வண்ணங் கனிவொடு செய்பணியால் அல்லல் அறுத்தெமை ஆண்டுகொள் பெரும ஆடுக br§Ñiu! அம்பல வாணன் அடிமலர் பரவி ஆடுக br§Ñiu! குறிப்புரை : 1. சிவனியம் - சிவநெறி (சைவமதம்). 2. புகலியர் கோன் - ஆளுடைப்பிள்ளையார் (ஞானசம்பந்தர்). 3. தலைமகன் - அடிகளாரின் மூத்த மகனார் திருஞானசம்பந்தம் என்னும் bgaÇd®; அவர் கையாற் றரப்பெற்றே துவராடை பூண்டு அடிகளார் துறவிக்கோலம் பூண்டார். 4. கல்லாடை - துவராடை (fhÉahil). 5. தமிழ்முறை - இயற்கைக்கு மாறான தனித்துறவு கொள்ளாமை. 19 விருந்தியல் நாடகம் ஆக்கி வழங்கி விளங்கு புகழ்கொண்டோன் விரிதமிழ் போற்றும் 1Rªju‹ இனிதே விரும்பு கணக்காயன் 2brUªJNœ நாகை 3ehuh யணனாஞ் சீரிய பெரியோனால் செந்தமிழ் அமுதம் ஊட்டப் பெற்றவ திப்பிய மெய்ப்புலவ திருந்திய பத்துப் பாட்டுறு 4ghiy¤ தெள்ளிய ஆய்வுரைநூல் திருவுயர் அன்னோன் நினைவாய்ப் படையல் செய்துளம் நனியுருகும் அருந்தவ வாழ்வின் பெருந்தகை யாள ஆடுக br§Ñiu! அம்பல வாணன் அடிமலர் பரவி ஆடுக br§Ñiu! குறிப்புரை : 1. சுந்தரன் - மனோன்மணீய ஆசிரியர் சுந்தரனார். 2. செருந்து - செருந்திக்கொடி. 3. நாராயணன் - நாகை நாராயணசாமி என்பார் அடிகளாரின் இயற்றமிழ் MáÇa®; மனோன்மணீயம் சுந்தரனார் இவ்வாசிரியரிடத்திலேயே யாப்பிலக்கணம் பயின்றார். 4. பாலை - பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை என்னும் நூலைத் தம்மாசிரியர் நினைவாக வெளியிட்டனர் அடிகளார். 20 பிறமொழி கலவா(து) உயரிய தமிழைப் பேணி வளர்ப்பதுவே பேசு பெரும்பணி என்றருண் மொழியைப் பெட்புற மேற்கொண்டு திறமிகு 1f£Liu 2üšgy யாத்துத் தெள்ளிய பணியாற்றித் 3âUtu§ கற்குப் பெருமனை யாளும் திருவுற் றிகல்வெல்லும் மறமி(கு) 4ïuhk சாமித் தலைவனை மாபெரி யாரென்றே மன்பதை போற்றப் பட்ட மளித்து மாண்புறு 5kfŸjhij அறவோர் போற்றும் இறவாப் புகழோய் ஆடுக br§Ñiu! அம்பல வாணன் அடிமலர் பரவி ஆடுக br§Ñiu! குறிப்புரை : 1. கட்டுரை - தனித்தமிழ்க் கட்டுரைகள். 2. நூல்கள் - வடசொற் றமிழ் அகரவரிசை, நைட்டிங்கேல் அம்மையார், பட்டினத்தார் பாராட்டிய மூவர், முப்பெண்மணிகள் வரலாறு முதலியன. 3. திருவரங்கற்கு - திருவரங்கனார்க்கு. 4. இராமசாமி - ஈரோடை இராமசாமிப் பெரியார். 5. மகள் - அடிகளாரின் மகளான திருவாட்டி நீலாம்பிகையம்மையார். ஈ.வே.இரா. அவர்களுக்கு அம்மையார் தலைமையில் நிகழ்ந்த மாநாட்டில் ‘bgÇah®’ என்னும் பட்டம் வழங்கப்பட்டது; மேற்கொண்டு, யாத்து, பணியாற்றி, திருவுற்று, பட்டமளித்து மாண்புறு மகள்; மகன் தந்தைக் காற்றும் உதவி எனும் திருக்குறள் பொருண்மையைக் கருதுக. 3. தாலப் பருவம் 21 மழலைச் செந்தமிழ் 1_jh£o 2ky®thŒ 3ï‹bkhÊ மெய்யேயாய் மன்னி விளங்கும் வாய்மை நலம் மாநிலம் உணரக் காட்டுவைபோல் சுழலைத் தாங்கிக் கரைபொருது துளும்பிப் 4ghiy நிலமறையச் சொரியும் வெள்ளப் பாலாறு சூழுந் தொண்டை வளநாட்டுள் 5òHiy¥ புரையும் பேரேரி பொலியும் பல்லவ புரத்தின்கண் பொதுமைக் 6fHf¢ சான்றோனாய்ப் புதுமை யரசு வீற்றனையால் தழலைப் புரையுந் திருமேனி தாலே தாலோ தாலேலோ தன்னே ரில்லாத் 7jÄHhË தாலே தாலோ jhnynyh! குறிப்புரை : 1. மூதாட்டி - ஔவையார். 2. மலர்வாய் - வாய்மலர் - வாயினால் - மலர்ந்த மலர் - வினைச்சொல். 3. இன்மொழி - ‘bj©Ù® வயிற்றொண்டை நன்னாடு rh‹nwhUil¤J”. 4. பாலை ... - “ghÈdhš (ÚÇid) நிலம் மறையும்படி சூழும் எனவும், பாலைநிலம் (ïšiyba‹DkhW) மறையும்படி எனவும் கொள்க. 5. புழலைப் ... - புழலேரியைப் போலும் பேரேரி பல்லவபுரத்தில் உள்ளது. 6. கழகச்சான்றோன் - சங்கச் சான்றோர் என்பது மேலோர் tH¡F; (பல்லவபுரத்தில்) பொதுநிலைக் கழகம் (சன்மார்க்க சங்கம்) நிறுவிய சான்றோன் எனவும் கொள்க. 7. தமிழாளி - தமிழை ஆளுநன். “mªjÄHhË” - சேக்கிழார். 22 வண்டமிழ் ஆளும் நிலவரையில் வந்து புகுந்தோர் சிறுதெய்வ வணக்கமும் அவர்தாஞ் சிற்றுயிரை வதைக்கும் வேள்வி வெறியாட்டும் மண்டிய போலிப் பழங்கதையும் மற்றுச் செந்தமிழ் முன்னோர்தம் மாண்புயர் முழுமுதல் வழிபாடும் மயங்கலின் மங்கிய தமிழர்நிலை கண்டு வருந்திப் பேரறிவால் கலைவளம் மிக்க 1jÄH®kj«, 2fh£o விளக்கி இனிதொழுகிக் கடையேம் உய்ய அருள் brŒnjhŒ! தண்டலை சூழும் தமிழ்நாட தாலே தாலோ jhnynyh! தன்னே ரில்லாத் தமிழாளி தாலே தாலோ jhnynyh! குறிப்புரை : 1. தமிழர்மதம் - அடிகளாரின் நூல் தமிழர்மத மாநாட்டின் தலைமைப்பொழிவின் விரிவு. 2. காட்டி... - தமிழர் மதம் இதுவெனச் சுட்டிக்காட்டி விளக்கியது மட்டுமன்றித் தாம் அந்நெறியில் ஒழுகிக் காட்டியமையும் குறித்தவாறு. 23 புகழும் புலவர் பெருங்குழுவும் போற்றா ராய 1kWjiyí« பொருவரும் ஆவல் மீதூர்ந்து பொங்கப் பெரிதங் காத்திருப்ப இகலொன் றில்லாப் 2bgUkiyÆ‹ இயக்கத் துற்ற நறும்பயனாய் இறவாப் புகழில் நிலைப்பிக்கும் இயல்பின தாய்நற் புதுமையதாய் அகன்றாழ் 3m¿î¡ கடல்வந்த அரும்பொரு ளாய தமிழமுதம் அடையும் பேறு யாம்பெற்றேம் அண்ணல் நின்றன் பேரருளால் தகவினின் உயரிய தமிழ்ப்பெரும தாலே தாலோ jhnynyh! தன்னே ரில்லாத் தமிழாளி தாலே தாலோ jhnynyh! குறிப்புரை : 1. மறுதலை - அடிகளாரின் கொள்கைகட்குப் புறம்பாயினார். 2. பெருமலை - அடிகளார். 3. அறிவுக்கடல் - அடிகளாரின் திங்கள் இதழ். இப்பாடற்கண் பிறிதொரு பொருள் (திருப்பாற்கடலைக் கடைந்த தொன்மக் கதை) அமைந்துள்ளமை காண்க. 24 வேறு படும்பல நிலையினரும் விளங்கு பரம்பொருள் வழிபாட்டை விரும்பிய முறையே மேற்கொள்ள விரிவாய் அமைந்து பற்பலவாங் கூறு படும்படி நிலைகொண்ட கொண்முடி பாய சிவநெறியைக் குலவிய சிறுமை அகல்வித்துக் கொள்கை வழியே தனிநின்று மாறு படும்படி இல்லாது மன்னுயிர் எல்லாம் இன்பமுற மன்னும் 1bghJÃiy¡ கழகமென மாபெரு நிறுவனங் கண்டுதிருச் 2rhW கொளும் பெரு வீறுடையாய் தாலே தாலோ jhnynyh! தன்னே ரில்லாத் தமிழாளி தாலே தாலோ jhnynyh! குறிப்புரை : 1. பொதுநிலைக்கழகம் - அடிகளாரின் நிறுவனம். (சமரச சன்மார்க்க நிலையம்). 2. சாறு - விழா. கழகத்தின் இருபதாம் ஆண்டு விழா (நிறைவு விழா) சிறப்புறக் கொண்டாடப் பெற்றது. 25 பாவலன் அரிய உரைவல்லான் பரவுறும் உரைநடை தனிவல்லான் பாடம் பயிற்றும் பேராசான் பண்ணியல் நாடக முறைதெரிவோன் நாவலன் உடனூல் மருத்துவனாம் நலமார் அறிதுயில் வல்லுநனால் நமதாஞ் சிவநெறி ஆசிரியன் நாடுறும் அச்சுக் கலையறிவன் காவலன் எனநின் றின்றமிழைக் காக்கும் ஏரணப் போர்மறவன் கருதுறு மொழிநூல் ஆய்வாளன் கைவரு 1jhËif யாளனெனத் 2jhtW மெய்புகழ் மேவுபெருந் தலைவா தாலோ jhnynyh! தன்னே ரில்லாத் தமிழாளி தாலே தாலோ jhnynyh! குறிப்புரை : 1. தாளிகை - இதழ். 2. தாவறு - குறைவற்ற. 26 (ntW) பண்டைப் பாண்டியர் கண்டன கழகம் பட்டு மறைந்தமையின் பைந்தமிழ் நாளும் நைந்திழி நிலையைப் பார்த்துளம் நனிவேர்ப்புக் கொண்டுயர் கூடலில் பாண்டித் துரைமகன் கூட்டிய 1fHf¤J¡ குலவிய நலமிகு புலவோர் தாமுங் 2nfhkf னும்போற்றப் 3g©il¤ தமிழர் ஆரியர் இயல்புகள் பாரித் துரைசெய்து பரவு புரட்சிக் கொடியை யுயர்த்திப் படையும் நடப்பித்துத் 4j©l¤ தலைமையின் கொண்டனை வாகை தாலோ jhnynyh! தண்டமிழ் தழையத் தழையுங் கொண்டல் தாலோ jhnynyh! குறிப்புரை : 1. கழகம் - மதுரையில் பாண்டித்துரையார் நிறுவிய நான்காந் தமிழ்க் கழகம். 2. ‘nfhkf‹’ - பாண்டித்துரையார். 3. பண்டை... - ‘g©il¡ காலத் தமிழரும் MÇaU«’ என்னும் நூல் மதுரைத் தமிழ்க் கழகத்தில் அடிகளார் நிகழ்த்திய சொற்பொழிவு. 4. தண்டத்தலைமை - படைத்தலைமை. 27 பரவுறு மயலவர் சமய மெலாமிப் பைந்தமிழ் நிலவரையில் பழமைச் சிவநெறி தளர்வுறு மாறே பன்னெடு நாண்முதலா விரவுத லுறலின் தமிழர் மருண்டு வீழும் நிலைகண்டு விழைவுறும் 1ïªJ மதப்பற் றவையம் விளங்கக் கண்டதொடும் உரமிகு சான்றோர் பரவுசெந் நெறியின் உயிர்முடி புலகுகொள ஊர்நகர் தோறும் கிளைபல கொண்டே ஒள்ளிய பணிசெய்யும் தரமிகு 2nguit நிறுவிய பெரும தாலோ jhnynyh! தண்டமிழ் தழையத் தழையுங் கொண்டல் தாலோ jhnynyh! குறிப்புரை : 1. இந்து... - ‘ïªJ மதாபிமானிகள் r§f«’ அடிகளார் நாகையில் இளமைக் காலத்தில் நிறுவியது. 2. பேரவை - “irtá¤jhªj kfhrkhr«’ அடிகளாரால் நிறுவப் பெற்றது. 28 1cd‰fÇ யனவாம் நுண்ணிய வாற்றல் உடைமையை உணராதே உலகவர் நாளுங் கலகம் விளைத்தனர் உறுபயன் காண்கிலராய்க் 2fd¡f வுயர்ந்தினி வாய்த்த பிறப்புக் கழியச் செயலொழியக் கருதிய வெல்லாங் கருதிய வாறே கண்டு சிறப்புறுவான் 3kd¡ft®¢ சியெனும் 4mUkª துறழும் மாட்சியின் உயர்கலைநூல் மன்னுறு தமிழில் ஆக்கி வழங்கி மட்டறு புகழ்கொண்டோய் 5jd¡F¤ தானே நிகராந் தமிழ்மகன் தாலோ jhnynyh! தண்டமிழ் தழையத் தழையுங் கொண்டல் தாலோ jhnynyh! குறிப்புரை : 1. உனற்கரிய - உனற்கு +mÇa - சிந்தித்து உணர்வதற்கு அரியதான. 2. கனக்க - Äfî«; கனம் தமிழ்ச்சொல்லே. 3. மனக்கவர்ச்சி - அடிகளாரின் நூல் (மனிதவசியம்). 4. அருமந்து - அருமருந்து எனற்பாலது அருமந்து என நின்றது. 5. தனக்குத்... - (jd¡F¥ãw®) நிகரிலாமை கூறியவாறு. 29 அலைவுறு நெஞ்சக நினைவுகள் தம்மை அடக்கி முயன்றினிதே ஆங்கதை யொருவழி வைத்தினி தாளும் ஆற்றல் மிகப்பெற்றார் தொலைவினில் உள்ளன நிகழ்வன கண்முன் தோன்றுங் காட்சியெனத் தோற்ற மளித்திட உணர்தல் உணர்த்தல் 1njhkW முறைகாட்டி நிலைபெறு செந்தமிழ்க் கலைவளம் மேன்மேல் நீடிய 2üšbrŒnjhŒ நெடிதே அடிமையின் எம்மவர் 3jhœjiy நிமிரச் செய்பணியில் தலைமையின் ஓங்கிய பெருமையன் எந்தை தாலோ jhnynyh! தண்டமிழ் தழையத் தழையுங் கொண்டல் தாலோ jhnynyh! குறிப்புரை : 1. தோம் - குற்றம். 2. நூல் - தொலைவிலுணர்தல் - அடிகளாரின் நூல். 3. தாழ்தலை - வினைத்தொகை (இறந்தகாலம்). 30 நிலைபெறும் உயிரினம் உய்வுறு மாறே நிறையரு ளாலிறைவன் நினைவினின் ஆக்கிய உடல மழிந்திட நிரம்ப வருந்தியுயிர்க் குலைநடுக் குறுமா றிரங்குத லின்றிக் கொலைசெய் தீவினையும் கொள்ளுந் தன்னூன் பெருகப் பிறவூன் கொள்ளும் இழிவினையும் அலைகடல் சூழும் நிலவயின் முதல் வந்(து) அழியா தென்றென்றும் ஆண்டருள் மாட்சியின் மிக்க பசுந்தமிழ் ஆன்றோர் தவிர்கென்னுந் தலைமை யறங்கள் என்றருள் அந்தண தாலோ தாலேலோ தண்டமிழ் தழையத் தழையுங் கொண்டல் தாலோ jhnynyh! குறிப்புரை : கொல்லாமை, புலான் மறுத்தல் ஆகியவை தமிழரின் தலையாய அறங்கள் என்றது அடிகளார் “Ó® திருத்தக் குறிப்புகளுள் ஒன்று. `Ó®âU¤j¡ F¿¥òfŸ’ துண்டு வெளியீடாக வந்தது. 4. சப்பாணிப் பருவம் 31 எங்குநிறை கின்றமை முதலாய 1bt©Fz¤(J) இறைவனைத் 2j‹Åašãš ஏற்றவழி பாடுகொடு சிற்றுயிர்கள் உய்யுமா(று) இன்மையால் அருளாளனின் பொங்குநற் 3bghJÉašò பற்றி யரு வுருவமாய்ப் பொலிதலும் அறியாவிருள் போக்குபே ரொளியுடைமை யன்றியும் பற்றுறும் பொருளெலாந் தூய்மைசெயலும் செங்கதிர் நீலமென இருவண்ண முடைமையுஞ் சீர்த்தமுத் தொழில்செய்தலுஞ் சீருற விளங்குஞ் சிறப்பியல் புடையநற் செந்தீயில் bj‹dh£lt®4 தங்கள்சிவ பெருமானை நோக்கித் தொழுங்கையால் சப்பாணி bfh£oaUns! தண்டலை சூழ்ந்திலகு வண்டமிழ்ப் பெருநாட சப்பாணி bfh£oaUns! குறிப்புரை : 1. எண்குணம் : (1) தன்வயத்தனாதல், (2) தூய உடம்பினனாதல், (3) இயற்கையுணர்வினனாதல் (4) முற்றுணர்தல், (5) இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், (6) பேரருளுடைமை (7) முடிவிலாற்றல் உடைமை, (8) வரம்பிலின்பம் உடைமை. 2,3. தன்னியல்பு - இறைவனின் இருவகை நிலைகளுள் ஒன்று. இது சிறப்பியல்பாம். பிறிது பொதுவியல்பாம். இவையிற்றை வடநூலார் சொரூபநிலை, தடத்தநிலை என்ப. 4. ‘bj‹dhLila át‹’ - திருவாசகம். செந்தீப் பிழம்பு இறைவன் இயல்புடன் ஒத்துள்ளமையை அடிகளார் தம் நூல்களின் பலவிடங்களில் விளக்கியுள்ளார். 32 இமிழ்கடல் சூழ்கின்ற பேருலகின் முதலாம் இருந்தமிழ் வழக்கெல்லையில் இறைவனைத் திருவிளை யாடல்செய் வித்தவன் இன்னருட் புனன்முகந்தே அமிழ்தொழுக் கேய்ப்பமெய் யந்தணர்கள் மன்பதை யடங்கலும் ஓதியுய்ய அளித்துதவு கொடையாய e‰1g© Rkªjd2 வருந்திரு முறைப்பாக்களைக் குமிழ்நகை யிலங்கவெழில் அம்பலத் துடையவன் கூத்தாடு பொலிவுகண்டு குழைகின்ற நெஞ்சொடுங் குயிலனைய குரலொடுங் கொவ்வைவாய் இனிதுபாடுந் தமிழிசைக் கேற்பநற் றாளமிடு செங்கையால் சப்பாணி bfh£oaUns! தண்டலை சூழ்ந்திலகு வண்டமிழ்ப் பெருநாட சப்பாணி bfh£oaUns! குறிப்புரை : 1. பண் - “g©Rkªj ghlš” - திருவாசகம். 2. சுமந்தன - சுமந்தனவாக. 33 1_th யிரந்தமிழ்ப் பாவா யிலங்குபெரு முன்னுறு jÄœ¤2njh‹¿a« 3_‹wht தாம்படிக் கேன்றதிரு முறையென 4Kidtuh® தலைமேற்கொளுந் தேவார்ந்த மந்திரந் தந்ததிரு மூலனின் திருமரபில் வருமொருவனாம் தீம்புனற் காவிரியின் ஓங்குகரை மன்னும் திருக்கொட்டை யூரின்மேவும் 5khnth» யாயவர சானந்த முனிவனின் மணிமலர்த் தாள்பணிந்து மற்றவன் தந்தருள் மந்திரம் பெற்றொளிர் மாசிலாக் குருமாமணி தாவாப் பெரும்புகழ் நிலைகொண்ட தலைமகன் சப்பாணி bfh£oaUns! தண்டலை சூழ்ந்திலகு வண்டமிழ்ப் பெருநாட சப்பாணி bfh£oaUns! குறிப்புரை : 1. மூவாயிரந்தமிழ் - மூலன் உரைசெய்த மூவாயிரம் பா - திருமந்திரம். 2. தோன்றியம் - ஆகமம். திருமந்திரம் தமிழாகமம் என்பது வழக்கு. 3. மூன்றாம்படி - (1) பற்று (2) தொண்டு (3) ஓகம் (4) அறிவு என்னும் படிநிலைகள் நான்கனுள் மூன்றாவதாகிய ஓகம். இந்நான்கினையும் வட நூலார் (1) சரியை (2) கிரியை (3) யோகம் (4) ஞானம் என்ப. 4. முனைவர் - வினையின் நீங்கி விளங்கிய அறிவினர். 5. மாவோகி - திருமூலரின் குருமரபில் வந்தவர் திருக்கொட்டையூர் அரசானந்த முனிவர். 34 நான்மறைகள் என்றே பழந்தமிழ் நூல்கள் தாம் நவிலுவ பெரும்பான்மையும் நல்லதமிழ் நூல்களே யல்லாது பின்னாள் நடப்பித்த வடமொழியினில் மேன்மை யிலாச் சிறிய தெய்வங்கள் தம்மையும் வெறியாட்டு வேள்விதமையும் மிக்கபூ j§fŸ1Fo 2Éoašãw வற்றையும் மெத்திவழி பாடுசெய்யும் பான்மையின் இருக்குமுதல் நான்மறைகள் அலவெனப் பாங்குற 3vL¤Jiu¥nghŒ பழந்தமி ழிலக்கியப் பயிற்சியிற் றமிழர்தம் படி நிலை வளர்ச்சிகண்டு சான்றவ னெனக்கேட் டுவந்ததாய் MÆndhŒ4 சப்பாணி bfh£oaUns! தண்டலை சூழ்ந்திலகு வண்டமிழ்ப் பெருநாட சப்பாணி bfh£oaUns! குறிப்புரை : 1. குடி - சோமப் பூண்டின் சாறு. 2. விடியல் - வைகறை உருவகம் (உஷா) - இவை தெய்வமாக வழுத்தப்பட்டுள்ளன. 3. எடுத்துரைப்போய் - பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை எனும் அடிகளார் நூலின் முன்னுரை fh©f! 4. ஆயினோய் - “<‹w bghGâš” - திருக்குறள். 35 கம்பனின் மகனாய அம்பிகா பதிபெருங் காவலன் பெற்றமகளாங் கன்னியம ராவதிக் கதைகள்வர லாறெலாங் கண்டுமிக நுணுகியாய்ந்து 1br«òy¥ பெயலென்ன ஆங்கவர்கள் தாங்கொண்ட சீரார்ந்த காதல்நிலையும் சீர்த்தநற் பழகுதமிழ் வளமையும் மற்றுநின் செம்மைமிகு புலமைநலமும் எம்பால் விளங்கிமிகு பேருவகை செய்யஉயர் இனியமுத் தமிழ்சிறக்க எழிலார்ந்த நாடகஞ் செய்தருள் மாவயவ எங்கணும் பசுமைபூத்துச் 2r«gh வளங்கெழுமு பொன்னிசூழ் நன்னாட சப்பாணி bfh£oaUns! தண்டலை சூழ்ந்திலகு வண்டமிழ்ப் பெருநாட சப்பாணி bfh£oaUns! குறிப்புரை : 1. செம்புலப்... - “br«òy¥ பெயல்நீர் nghy” - குறுந்தொகை. 2. சம்பா - நெற்பயிர் - நிலத்துக்கணியென்ப நெல்லுங் கரும்பும். 36 (ntW) நற்றமிழ் நலியத் தமிழர் தொடர்ந்து 1e©zh®¡ கடிமையுற நாட்டுப் பொதுமைக் கோட்பா டென்று நண்ணிய புன்மொழியை முற்றாய்ந் திந்தி பொதுமொழி யாவென முறையுற விருமொழியின் 2bkhŒ«òW நூல்கள் செய்து வழங்கி 3KidÆ‹ முனைவுற்றுச் 4br‰wh® மருளுற வணியணி யாகச் செந்தமி ழோரீண்டச் செறுபடை கொண்டு 5kWjiy வென்ற Ó®¤âa! செந்தமிழக் கொற்றவ னெனநன் குற்றுழிக் காப்போய் கொட்டுக rh¥ghÂ! கோலத் தமிழால் ஞாலம் மகிழக் கொட்டுக r¥ghÂ! குறிப்புரை : 1. நண்ணார் - பகைவர். 2. மொய்ம்புறு - (1) இந்தி bghJbkhÊah? (2) Can Hindi be a lingua franca of India. 3. முனை - போர்முனை. 4. செற்றார் 5. மறுதலை - பகைவர். 37 1njt® குறளும் பாவயின் அமுதச் செந்தமிழ் 2_jh£o தெளிவாய் உணரத் தெரிவித் தருளிய திருநூல் வரிசைக்கண் மூவர் தமிழை யடுத்து விளங்கும் முனிமொழி யீதென்று முன்னோர் காட்டிய வடநூ லன்று முன்னூற் கடையென்று 3ehty‹ கூறிய உரையை இலக்கண நன்மர புக்கொவ்வா நலமில் லுரையென முன்னோர் உரைநல நவிலலின் நடுவுநிலைக் கோவென யாவரும் ஏத்துறு பெரியோய் கொட்டுக r¥ghÂ! கோலத் தமிழால் ஞாலம் மகிழக் கொட்டுக r¥ghÂ! குறிப்புரை : 1. தேவர்... - “njt® குறளும் திருநான் kiwKoò«” எனும் வெண்பா. 2. மூதாட்டி - ஔவையார். 3. நாவலன் - சபாபதி நாவலர். 38 வளருந் தமிழில் புதுமைக் கதைகள் வரையும் நன்முறையை 1thGŠ சூழலில் அன்றியும் 2K‹id வழக்கினி லும்வைத்தே இளமை மணமுங் கைம்பெண் நிலையும் எய்திய 3FÆy«ik எழிலுறு தெய்வ நாயக நம்பிக்(கு) எழுதிய கடிதங்கள் வளமுறு நாக நாட்டர சியெனும் 4tšÈÆ‹ வாழ்வியல்கள் வகையாய்ப் புனைந்து காட்டிய தகையாய் வையத் தினியென்றும் கொளவரு மாப்புகழ் நிலவுறு பெரும கொட்டுக r¥ghÂ! கோலத் தமிழால் ஞாலம் மகிழக் கொட்டுக r¥ghÂ! குறிப்புரை : 1. வாழுஞ் சூழலில் - இற்றைச் சூழலில் - இயற்றியது கோகிலாம்பாள் கடிதங்கள். 2. முன்னை - முன்னை வழக்கிலியற்றியது நாகநாட்டரசி. 3. குயிலம்மை - கோகிலாம்பாள். 4. வல்லி - குமுதவல்லி. 39 இளமையிற் கொண்டான் இறப்பக் கைம்பெண் எனுநிலை தாமெய்தி எல்லையில் அல்லல் அழுந்துறு மகளிர் இடர்வாய் மீண்டேறி உளமிசை வாரை மறுமணங் கூடி ஒழுக்கத் துடன்வாழ உள்ள மிரங்கித் திருந்துக வென்றே உரைத்தரு ளியதன்றி இளமை மகளிரை முதியர் மணக்கும் இழிநிலை மாற்றியவர்க் (கு) ஏற்புறு கைம்பெண் மகளிரை வரைகென இசையுங் கருத்துலகம் கொளநல மிக்க அறிவுரை தந்தோய் கொட்டுக சப்பாணி! கோலத் தமிழால் ஞாலம் மகிழக் கொட்டுக சப்பாணி! குறிப்புரை : இளம்பருவக் கைம்பெண்கள் மறுமணங்கூட ஆவன செய்ய வேண்டுமெனவும், முதிய ஆடவர் மணக்க விரும்பின் கைம்பெண்களையே மணக்கத் தூண்ட வேண்டுமெனவும் அடிகளார் தமது சீர்திருத்தக் குறிப்புக்களில் கூறியுள்ளார். 40 நூலா சிரியன் உரையா சிரியன் நூல்நுவல் ஆசிரியன் நுட்ப முணர்த்துஞ் சமயா சிரியன் நுண்கலை யாசிரியன் 1ghyh சிரியன் தாளா சிரியன் பதிப்பா சிரியன்மெய்ப் பாடுறு நாடக இசையா சிரியன் 2g©Lt வாசிரியன் 3fhyh சிரியன் மொழிநூல் அறிவியல் காட்டுறு மாசிரியன் கவினுறு தமிழில் 4Éideil முறைகள் காணா சிரியனெனக் 5nfhyh சிரியக் குலவுறு புகழோய் கொட்டுக r¥ghÂ! கோலத் தமிழால் ஞாலம் மகிழக் கொட்டுக r¥ghÂ! குறிப்புரை : 1. பால் ஆசிரியன் - பாலியல் நூலாசிரியன். 2. பண்டுவம் - மருத்துவம். 3. கால + ஆசிரியன் - காலாசிரியன். 4. வினைநடை முறைகள் - கரணங்கள் - சடங்குகள். 5. கோலாசிரிய - கோல் + ஆசு + இரிய - திரண்ட குற்றங்கள் நீங்க. 5. முத்தப் பருவம் 41 தெண்டிரைப் பொன்னிசூழ் தண்டலையில் இனமுற்ற தேன்வண்டு பண்மிழற்றித் தெளிதமிழ்ப் பெருநலங் காட்டுமுயர் 1ntqÇš 2á¤j® அமுதக்கரையினில் ஒண்டொடித் 3ijabyhL 4nt«goÆ‹ நீழலில் உறுபிணிகள் தீர்ந்துவையம் உய்வுகொள மேற்கெழுந் தருளியுள உவமையில் ca®5kU¤ துவனையுன்னிக் கொண்டபிணி தீர்ந்துநீ தொண்டுசெய வாழ்வுறு குறிப்புணர்ந் துள்ளமுருகிக் கொழுமலர்ச் செய்யவடி இணைபோற்றி யிருநிலங் கொள்ளவொரு பதிகவடிவில் எண்டிசை யரும்புகழ் தண்டமிழ்ப் 6ghnthJ« எழில்வாயின் K¤jkUns! ஏற்றமிகு பாவாணர் போற்றிடுந் திருவாள எழில்வாயின் K¤jkUns! குறிப்புரை : 1. வேளூர் - புள்ளிருக்கு வேளூர் - வினை தீர்த்தான் கோயில் (it¤ÔRtu‹ கோயில்). 2. சித்தர் அமுதம் - திருக்கோயிலில் உள்ள திருக்குளம் சித்தாமிர்தம் என்னும் பெயருடையது. 3. தையல் - தையல் நாயகி. யூர் அம்மன். 4. வேம்பு - யூர்த் திருக்கோயில் மரம் (தல விருட்சம்). 5. மருத்துவன் - மருத்துவப் பெருமான் - இறைவன். 6. பா - மறைமலையடிகளார் இயற்றிய புள்ளிருக்கு வேளூர்ப் பதிகம். 42 செவ்வையாய்ச் சொற்பொருள் உணர்ந்துநெஞ் சுருகிநற் செம்பொருளை இனிதுபோற்றிச் சிறப்புமிகு வழிபாடு செய்துயர மாட்டாது சிறுமையே யுறுவேமெனத் 1j›tis¡ கூச்சலாய்ச் செவியுறப் பெற்றவர் தமக்கன்றியும் விள்ளுவார் தமக்குமொரு பொருளுணர்வு தாராத வடமொழித் தகவில்வழி பாடுசெய்தே எவ்வளவு பயனுமறி யாததமிழ் மக்கட்(கு) இனிக்குங் 2fU«ãU¡f இன்னாத வேம்புநுகர் கின்றமை விளக்கி - நன்(கு) ஏலுமறி வுரைவழங்கி எவ்வமில் இருந்தமிழில் இறைவனடி போற்றுநின் எழில்வாயின் K¤jkUns! ஏற்றமிகு பாவாணர் போற்றிடுந் திருவாள எழில்வாயின் K¤jkUns! குறிப்புரை : 1. தவ்வளை - தவளை. 2. கரும்பிருக்க... - “fU«ãU¡f வேம்பு நுகர்வார் nghy” என்பது அடிகளார் தமது திருவாசக விரிவுரையில் கூறியுள்ள உவமை. 43 நீற்றவன் திருவருள் போற்றுநல் லடியவர் நிறைதமிழ் ஆய்வுவல்லார் நெடுநாள் நினைந்துசெய் பேரரு முயற்சியால் நெடியபுனல் கெடிலமென்னும் ஆற்றினுக் கணிசெயும் 1ghâÇ¥ புலியூரில் m¥g®2fiu யேறவிட்டார் ஆங்கவர் திருமுன்பில் ஓங்குமா நாடென அணிதிரண் டினிதிருப்ப வீற்றுநற் றலைவனாய் வியன்பழஞ் செந்நெறி விளங்கிநீ டூழிவாழ வேண்டிய திருத்தங்கள் தீரமா னித்தாண்டு வீங்குபுகழ் 3PhÅk»H ஏற்றநிறை பேருரை யாற்றியருள் செய்யுநின் எழில்வாயின் K¤jkUns! ஏற்றமிகு பாவாணர் போற்றிடுந் திருவாள எழில்வாயின் K¤jkUns! குறிப்புரை : 1. பாதிரிப்புலியூர் - திருப்பாதிரிப்புலியூர். 2. கரையேறவிட்டார் - கரையேறவிட்ட பெருமான் என்பது யூரில் இறைவன் பெயர். 3. ஞானி - திருப்பெருந்திரு ஞானியாரடிகள். 44 முந்தைநாள் ஆலால சுந்தரன் கயிலையில் முறைபிறழ்ந் திருமாதரை முன்னிய பிழைக்கந்த கன்னியர்கள் தம்மொடும் மும்மைநீர் சூழுலகினில் வந்ததாய் ஆரூரர் முற்பிறவி 1tuyhW வரைந்துளது பொய்யாமென வண்டமிழ்ச் சேக்கிழார் விண்டிலர் இதுவென வையகம் மிகவியந்து பொந்திகை யுறப்பல விளக்கங்கள் தருகின்ற பொருவரிய பேரறிவினால் போற்றுமா தொண்டர்தம் வரலாற்று மாட்சிப் புலப்படுத் துந்திறத்தால் எந்தமை ஆட்கொள்ளும் முந்துதமிழ் சிந்துநின் எழில்வாயின் K¤jkUns! ஏற்றமிகு பாவாணர் போற்றிடுந் திருவாள எழில்வாயின் K¤jkUns! குறிப்புரை : 1. வரலாறு - சுந்தரரின் முற்பிறவி வரலாறு முதலியன இடைச்செருகல் என்பதனை அடிகளார் பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம் என்னும் தமது நூலில் விளக்கியுள்ளார். நூல் திருப்பாதிரிப்புலியூர் மாநாட்டுத் தலைமையுரையும் அதன் மேலெழுந்த தடைகட்கு விடையுமாம். 45 ஊனையுரு கச்செயுங் 1nf£lhU மறியாத ஒண்டமிழ்ப் பாவெடுத்தே உலகுளம் உவந்திட இலகுதமிழ் மாமழை உரையான் விளக்கிமற்றும் ஆனைமுகன் ஆறுமுகன் வருபிறப் பிவையென அறிவிலியர் தாங்கேட்பினும் அறவெறுப் புறநின்ற தரமிலாக் கதைகளின் அளவிலாப் பொல்லாங்கெலாம் பானையுறு தயிரினிற் புக்கமத் தேயெனப் பாறுறச் செய்துஞாலம் பார்க்கநிற் கின்றவத் திருவுருப் பொருளெலாம் பாங்குற விளக்கியருளி ஏனையவ ருந்தமிழ் வேணவா கொள்விக்கும் எழில்வாயின் K¤jkUns! ஏற்றமிகு பாவாணர் போற்றிடுந் திருவாள எழில்வாயின் K¤jkUns! குறிப்புரை : 1. கேட்டாரு... - “nf£lhU k¿ahjh‹” என்பது திருவாசகப் பாடல். கடவுள் நிலைக்கு மாறுபட்ட கொள்கைகள் சைவம் ஆகா (திருச்சி மாநாட்டுத் தலைமைப் பொழிவு நூல்). 46 சீர்கொண்ட நந்தமுன் னோர்கண்ட வறிதுயில் சிறப்புணர்ந் துரியமுறையே செம்மையாய்க் கையாண்டு நன்மைபெற மாட்டாது சிறுமையுறு தமிழருயர ஓர்கின்ற நுண்ணுணர்வும் ஒப்பிலாப் பேரறிவும் உலகநலம் வேட்குநெஞ்சும் உடையவெம் பெருமநன் காராய்ந்து 1üštF¤(J) உதவியது மன்றிநின்பால் நேர்கின்ற அடியவர்க்(கு) ஆங்கவர்கள் மேற்கொள நெறிப்படு பயிற்சிமுறையும் நீணிலம் பயன்கொள்ளு மாறவ் வருங்கலை நிகழ்த்துமுறை யும்விளக்கி ஏர்கொண்ட தமிழினாற் கட்டளை மொழிதரும் எழில்வாயின் K¤jkUns! ஏற்றமிகு பாவாணர் போற்றிடுந் திருவாள எழில்வாயின் K¤jkUns! குறிப்புரை : 1. நூல் - யோக நித்திரை அல்லது அறிதுயில் - அடிகளாரின் நூல். 47 (ntW) பலபல வாயிரம் 1Û‹eh¥g© பான்மதி யொளிரும் பான்மையென பார்புகழ் அறிஞர் பேரவையில் பைந்தமிழ் வளமும் அயன்மொழியால் நலமிக வீழ்ந்து நலிந்தமையும் நாநலம் உடையாய் உரைசெய்ய நாவுக் கரசர் சலங்காட்டி நடுவே புலவர் வினவுதலும் சலசல வென்னும் ஒலிக்குறியால் 2ryK« நீரின் தமிழ்ப்பெயரே சாற்றும் நல்வாய் இல்லாதார் ஜலமென் றனரென்(று) 3ciubrŒnjhŒ இலகுறு தமிழின் நலங்காட்டும் எழில்வாய் முத்தந் jUfnt! எறிதிரை நாகைக் கடல்முத்தே எந்தாய் முத்தந் jUfnt! குறிப்புரை : 1. மீன் - விண்மீன். 2. சலம்... - ‘ry« பூவொடு தூபம் kwªj¿na‹” என்பது திருநாவுக்கரசர் தேவாரம். 3. உரைசெய்தோய் - கரந்தை தமிழ்க் கழகத்தில் அடிகளார் தலைமையுரை நிகழ்த்துங்கால் சலம் பூவொடு என்னும் பாடலை நினைவூட்டி அவையிலிருந்து பண்டித மணி வினவினராகச் சலசலவென ஓடுதலின் ஒலிக்குறிப்பால் சலம் என்பது தமிழ்ச்சொல்லே என்றனர். 48 பார்புகழ் தமிழில் நாடகநூல் பனுவல்கள் மற்றும் வரலாறு பற்பல பிறவும் செய்ததொடும் பைந்தமி ழிற்பெயர் பெயர்கொண்டு சீர்மிகு சென்னை மாநகரின் செவ்விய கிறித்துக் கல்லூரி செந்தமிழ்த் துறையாள் பெரியோனாய்ச் சிறப்புறு பரிதி மாற்கலைஞன் 1nj®th‹ உயிர்த்தொடர் குற்றுகரம் தெரிக்கென நின்னை வினவுதலும் 2bjÇah(J) என்ற மொழிவிடையாய்த் தெரியச் சொல்லி வியப்பித்தோய் ஏர்வளர் தமிழின் நலங்காட்டும் எழில்வாய் முத்தந் jUfnt! எறிதிரை நாகைக் கடல்முத்தே எந்தாய் முத்தந் jUfnt! குறிப்புரை : 1. தேர்வான்... - கிறித்தவக் கல்லூரிப் பணி நேர்முகத்தேர்வுக்குச் சென்றகாலைப் பரிதிமாற் கலைஞர் உயிர்த்தொடர் குற்றியலுகரம் ஒன்று கூறுமாறு வினவலும் அடிகளார் “bjÇahJ” என்றார் என்ப. 2. தெரியா(து) - தெரியாது என்பது உயிர்த்தொடர்க் குற்றியலுகரம். 49 1kh‰wª 2bjÇah(J) எனக்கேட்டு மன்னு jÄœ¥3ng ராசிரியன் மாண்புடை யாய்நின் திறமெண்ணி மகிழ்ச்சி மிக்கூர்ந் திருந்தக்கால் ஆற்றல் மிக்கோன் அவன்பால்நீ 4mÇad மூன்று வினவுதலும் ஆங்கவன் அமைதி ó©L5ãid அண்ணல் நினையே பகர்கென்னத் தேற்றம் உடைய தீந்தமிழில் திண்ணிய நின்றன் நுண்ணறிவும் தெரிய வுரைக்கும் பெருநலனும் தேரச் செப்பித் தெளிவித்தோய் ஏற்றம் பொலியும் தமிழ்தருநின் எழில்வாய் முத்தந் jUfnt! எறிதிரை நாகைக் கடல் முத்தே எந்தாய் முத்தந் jUfnt! குறிப்புரை : 1. மாற்றம் - மறுமொழி. 2. தெரியா(து) - தெரியாது என்பது விடை. 3. பேராசிரியன் - பேராசிரியர் பரிதிமாற்கலைஞர். 4. அரியன... - பரிதிமாற் கலைஞரை நோக்கி அடிகளார் மூன்றுவினாக்கள் எழுப்பினர் எனவும் அவற்றுக்கு அடிகளாரையே விடை சொல்லுமாறு கலைஞர் கூறினார் எனவும் கூறுப. 5. பினை- பின்னை என்பதன் இடைக்குறை. 50 1rhªJiz யும்நனி கற்கவெனுஞ் 2rh‹nwh‹ மெய்ம்மொழி வழிநின்று சற்றும் பிழையா தினிதொழுகிச் சாற்றும் ஞாலத் தாய்மொழியாம் தீந்தமிழ் மொழியும் ஆரியமும் தேயம் பலவும் நனிபரவித் திகழும் ஆங்கிலத் தொடுபிறவும் திறவோர் முயற்சியின் அவைநன்றே ஏந்திய பற்பல துறைகொண்ட ஏற்றம் மிக்க நூல்களெலாம் இரவும் பகலும் வேட்கையொடும் இனிது பயின்று வழிகாட்டும் ஏந்தல் எந்தாய் செம்பவள எழில்வாய் முத்தந் jUfnt! எறிதிரை நாகைக் கடல் முத்தே எந்தாய் முத்தந் jUfnt! குறிப்புரை : 1. சாந்துணை... - யாதானும் நாடாமால் என்னுந் திருக்குறள். 2. சான்றோன் - திருவள்ளுவர். 6. வாரானைப்பருவம் 51 கருமுற்றி இளநடை தாங்கிவரு fU1nkâ 2ifij¥ பொழில் நீழல்வாய்க் கடன்மேற் செலும்பரத வக்குழாத் தின்னிசையில் கண்படுத் தினிதுதுயிலும் திருவொற்றி யூர்க்கோயில் கொண்டெழுந் தருளியெஞ் சிறுமைக ளெலாந்தொலைத்துத் தீராத பேரின்பம் நல்குநற் காட்சிதரு 3bj‹wÄœ வாணனென்னும் முருகற்கு முத்தமிழ்க் கழகநூல் பிறவெலாம் முறையிற் பயின்றுயர்ந்த முதுக்குறை வையகங் காணுமா றெழிலார்ந்த 4K«k¡ கோவைபுனையும் பெருவெற்றி கொள்தமிழில் பொருவற்ற நாநலம் பெறுமகன் tªjUŸfnt! பேசுதமி ழுக்குற்ற மாசிரித் தொளிர்வித்த பெருமையன் tªjUŸfnt! குறிப்புரை : 1. மேதி - எருமை. 2. கைதை - தாழை. 3. தென்றமிழ்வாணன் - முருகன் தமிழ்க்கடவுள் என்பது வழக்கு. 4. மும்மணிக்கோவை - திருவொற்றி முருகர் மும்மணிக் கோவை - அடிகள் இயற்றியது. இப் பாடலில் திணைமயக்கம் அமைந்துள்ளமை காண்க. 52 பெருஞாலம் நல்வாழ்வு பெற்றுச் சிறந்திடும் பெரிதுயர் நெறியுணர்ந்து பெட்புகொடு பின்பற்றி யொழுகியுய்ந் திடவரிய பேரின்ப நிலையுற்றிட அருமைமிகு செந்தமிழ் பெருநிலம் யாங்கணும் அரைசுவீற் றாட்சிசெய்ய ஆற்றல்மிகு தமிழினம் மாற்றாரை 1Æšyhik ஆர்ந்தபுகழ் கொண்டிலங்கப் பொருளாழ மிக்ககுறு வெண்பாவில் வையகம் போற்றுபொய் யாமொழியெனும் பொருவிலாப் புகழ்கொண்ட 2âUüš வழங்கிடும் புலமையின் 3Kj‰ghty‹ பெருமைமிகு வள்ளுவன் 4ah©LKiw கண்டருள் பெருமகன் tªjUŸfnt! பேசுதமி ழுக்குற்ற மாசிரித் தொளிர்வித்த பெருமையன் tªjUŸfnt! குறிப்புரை : 1. இல்லாமை - இல்லாது. 2. திருநூல் - திருக்குறள். 3. முதற்பாவலன் - முதற்பாவலர் என்பது திருவள்ளுவர் பெயர்களுள் ஒன்று. 4. ஆண்டுமுறை - இப்பொழுது நடைமுறையிலுள்ள திருவள்ளுவர் ஆண்டு முறை அடிகளாரால் நிறுவப்பெற்றது. 53 ஏர்திருத் தஞ்செய்ய வளமல்கு கழனிபொலி ஈர்ந்தமிழ் வழங்குமெல்லை இருநிலம் பின்பற்றி மேன்மையுறு மாறுநல் ஏற்றமுற் றினிதிலங்கச் சீர்திருத் தஞ்செய்ய வேண்டியவை தமையெலாம் செம்மையாய்த் தீரவுன்னிச் சிறப்புமிக முறையே வகுத்தெழுதி ஆங்கவை செயற்பட முயன்றசெம்மல் ஊர்திருத் தஞ்செய் எழுச்சிகொடு வருகுநர் உற்றதம் நிலையைமுன்னம் ஒழுங்குறச் செய்துகொளல் தலையாய கடனென உலகவர்கள் உணருமாறு 1ng®âU¤ தஞ்செய்து வழிகாட்டி யருள்செயும் பெருமகன் tªjUŸfnt! பேசுதமி ழுக்குற்ற மாசிரித் தொளிர்வித்த பெருமையன் tªjUŸfnt! குறிப்புரை : 1. பேர்திருந்தஞ்... - அடிகளார் சுவாமி வேதாசலம் என்னும் தமது பெயரை மறைமலையடிகள் என்றும், சன்மார்க்க சங்கத்தைப் பொதுநிலைக் கழகமென்றும், ஞான சாகரத்தை அறிவுக்கடல் என்றும் மாற்றி வழிகாட்டினர். 54 கருத்துப் புரட்சியான் உலகந் திருத்துவார் கருதுவ வெளிப்படுத்தும் கருவியா வனபேச் செழுத்தொழுக் கம்மெனக் கைக்கொள்ளு 1_‹wDŸS« பொருத்தமிகு நடுவதே ஏனைய விரண்டினும் பொருவரும் பயன்நல்கலின் புகலப் பெரும்பணிக் கச்சகம் தம்முடைப் பொறுப்பினில் இயங்கல்நன்றால் திருத்தமுறு திருமுருகன் அச்சகம் நிறுவிநற் றீந்தமிழில் ஆங்கிலத்தில் தெருளார்ந்த நூல்களும் 2khâifí« எழிலார்ந்து திகழுமா றச்சியற்றி வருத்தந் தொலைந்துயாம் இன்புற வழங்கியருள் வள்ளலெஞ் br«kštUf! வளருந் தமிழ்ப்பயிர் வாட்டம் தவிர்த்திட வந்தகரு K»štUfnt! குறிப்புரை : 1. மூன்றனுள்ளும்... - யாதேனுமொரு கருத்தை வெளிப்படுத்துதற்கு வாயில்களான பேச்சு, எழுத்து, நடப்பு என்னும் மூன்றுமாம். இவற்றுள் பேச்சும் நடப்பும் காலமும் இடமும் கடந்து பயன்தரமாட்டா. எனவே எழுத்தொன்றே பெரும் பயன் நல்குவதாம். 2. மாதிகை - மாதந்தொறும் வரும் வெளியீடு (monthly). 55 மதிநுட்ப மிகவுடைய காளிதா சன்றந்த மன்னுபுகழ் சாகுந்தலை மாட்சிமை தெரிந்துயாம் மனவளங் கெழுமிட மாத்தமிழ் நிலைப்படுத்தும் அதிகாரி யாய் வந்த பெருமநின் 1bkhÊbga®¥(ò) ஆக்கமும் 2MuhŒ¢áí« அருந்தமிழ்க் கொள்கையில் திருந்துசெந் நெறியினில் அனையவாம் பிறவற்றினில் எதிர்நிலைக் காஞ்சியா சாரியன் றன்னையும் ஈர்த்தலின் நின்றிருப்பேர் இலங்குநற் 3gÇáš தருதிட்டம் வகுத்தவன் இனிதே நடத்துவண்ணம் எதிரிலாப் புகழ் கொண்ட ஏற்றமிகு பெற்றியார் ஏந்தற் பிரான் tUfnt! என்றுமுள தென்றமிழ் வென்றுயர நன்றுசெய் எங்கள் பெரு kh‹tUfnt! குறிப்புரை : 1. மொழிபெயர்ப்பு - சாகுந்தல நாடக மொழிபெயர்ப்பு அடிகளார் 2. ஆராய்ச்சி - சாகுந்தல நாடக ஆராய்ச்சி நூல்கள். 3. பரிசில்... - நூல்களின் மாட்சிமை யுணர்ந்து காஞ்சி காமகோடி பீடத்துத் தலைவர் சங்கராச்சாரியார் “kiwkiy அடிகள் நினைவு சாகுந்தல நாடகப் பரிசுத்திட்டம் என்னும் அறக்கட்டளை அமைத்துள்ளார். 56 (ntW) இருநில முழுதுங் கைக்கொள்ளும் இயல்பின வாய்நற் பொதுமையவாய் என்றும் பொருந்தும் நிலையினவாய் இயற்கையி னொன்றிய செயற்கையவாய் அருமையு மெளிமையு மொருங்குடைய ஆற்றல் சான்ற நடையினவாய் அறநெறி யருளும் பண்பினவாய் அழகுயர் தமிழின் முதனூலாய்ப் பெருமையி னோங்கிய வள்ளுவனும் பெண்ணை வருமெய் கண்டானும் 1ãȉ¿a நெஞ்ச மலரின்றேன் பெற்றிமை வையஞ் சுவைத்துணர அருமையின் 2MuhŒª திருநூல்கள் அளித்தோன் வருக வருகவே! அருந்தமிழ் ஆளும் பெருந்தகையெம் அத்தன் வருக tUfnt! குறிப்புரை : 1. பிலிற்றல் - சிந்துதல். 2. ஆராய்ந் திருநூல்கள் - திருக்குறள் ஆராய்ச்சி அடிகளார் சிவஞான போத ஆராய்ச்சி நூல்கள். 57 அடிமைப் பெண்டிர் மக்களென ஆர்பொரு ளுடைய சூத்திரரென் (று) ஐயம் புக்க அயலவர்கள் அஞ்சா துரைத்த இழிமொழியை அடிமைப் பட்ட பெருந்தமிழர் அறியா மையாற் சிறப்பென்றே ஆங்கவர் மகிழத் தொண்டுபல அடங்கா மகிழ்வொடும் செய்துழலும் 1moik நாளுறு தியினறியா அருந்தமிழ் மக்கள் நாகரிகம் அனைத்துல கத்தும் மேன்மையதென்(று) ஆராய்ந் தெழுதி வெற்றியுடன் அடிமை நிலையைச் சிதைவித்த அத்தன் வருக tUfnt! அருந்தமிழ் ஆளும் பெருந்தகையெம் அண்ணல் வருக tUfnt! குறிப்புரை : 1. அடிமை நாள் - தொடக்கக்காலம். 58 ஓங்கிய மேனாட் தமிழ்ப்புலவோர் உயர்ச்சியும் பிற்றை நாளவர்தாம் உற்றிழி சிறுமையும் ஆய்ந்தவையில் உரைமழை நன்றே பொழிந்ததுவும் ஈங்கிந் தியெனும் புன்மொழியை இந்திய கண்டப் பொதுமொழியென்(று) ஏற்கும் வண்ணம் பரப்புவதை எதிர்க்கும் வகையாய்க் கிளர்ந்ததுவும் பாங்குயர் செந்நெறி வாழ்வியலைப் பற்றி விளங்கும் பெற்றிமையைப் பாரித் தினிதே விளக்கியதும் பாரக மெங்கணும் பரவிவளர் ஆங்கில மொழியில் 1K¥bgUüš அளித்தோன் வருக tUfnt! அருந்தமிழ் ஆளும் பெருந்தகையெம் அரைசு வருக tUfnt! குறிப்புரை : 1. Ancient and modern Tamil poets. Saiva sithandha as a philosophy of practical knowledge. Can Hindi be a lingua franca of India. 59 வரையறை கொண்ட நல்வாழ்வும் வழுவா தொழுகும் பெற்றிமையும் வையகம் நன்றே பின்பற்ற வழிகாட் டியருள் பெருமைகொள அரைநூற் றாண்டின் மேலாக அன்றா டத்துக் குறிப்புகளை ஆங்கில மொழியில் தவறாதே அழகுற வெழுதிய சிறப்புடையாய் புரைபா டில்லாப் பெருவாழ்வும் பொருந்தார் தம்மைப் புறங்கண்டு பொலியும் வாகை தோள்கொண்டு பொருவில் புகழும் கொண்டுதனி அரையன் எனவே தமிழ் காத்த அண்ணல் வருக tUfnt! அருந்தமிழ் ஆளும் பெருந்தகையெம் அத்தன் வருக tUfnt! குறிப்புரை : 1. ஆங்கில மொழியில்.... - அடிகளார் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக இடைவிடாது சீரிய ஆங்கிலத்தில் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் கொண்டிருந்தார். 60 1Kiskª திரமென மெய்யறிவர் மொழியும் திருமொழி மாட்சிமையும் முன்னறு திருவைந் தெழுத் தென்னும் முதன்மை 2kiwbkhÊ நுண்பொருளும் இளையாத் தமிழில் எழிலுறநன்(கு) ஏற்புற வெழுதிப் புன்மையினேம் ஏழைமை யொழிய அருள் செய்தோய் எந்தை பெருமான் tªjUŸf! வளையாக் கொள்கைச் செம்மாப்பும் வையம் பணியும் பெருமிதமும் வைப்பா யுற்ற தனிமேன்மை வள்ளால் வருக என்றென்றும் 3misah¤ தவமிகு திருவுடைய அண்ணல் வருக tUfnt! அருந்தமிழ் ஆளும் பெருந்தகையெம் அத்தன் வருக tUfnt! குறிப்புரை : 1. முளைமந்திரம் - ஓங்காரம். இதனை வடநூலார் பீசமந்திரம் பிரணவம் என்ப. 2. மறைமொழி - மறைமொழிதானே மந்திரமென்ப - தொல். 3. அளையாமை - குற்றமின்மை. 7. அம்புலிப்பருவம் 61 திருமேனி ஒளிமிக் கிலங்குமுயர் பொலிவினால் தீம்பொழிவு செய்வண்மையால் திறமிக்க புலவோர் வியந்துபாப் புனைகின்ற திருவுடைப் பெருநலத்தால் ஒருதுளிக் காலமுந் தவறாத நடைமுறை உடைமையால் உலகமெல்லாம் ஒள்ளிய மதிச்செல்வன் என்றினிது பேசிநல் உவகையொடு பயனுகர்தலால் பெருமானெம் ஐயனின் wid¥1bghUtš ஒருதலை பெரிதும் விருப்பு கொண்டு பேருலக முழுவதுந் தொழுதேத்தி நன்கினிது பேசப் பெறுந்தமிழினால் அருகினில் வருகெனத் திருவாய் மலர்ந்தனன் அம்புலீ ahlthnt! mÇa2f‰ றவர்பயில் நாகை கிழானொடும் அம்புலீயாட thnt! குறிப்புரை : இப்பாடல் ஒப்பு (சமம்) என்னும் வாயின் முறை பற்றி அம்புலிக்கு அடிகளாரை உவமித்துப் பாடியது. 1. பொருவல் - ஒத்திருத்தல். 2. அரிய... - “f‰wh® பயில் ehif” - அப்பர் தேவாரம். 62 மண்ணிலடி 1njhahj வியல்பினை எமையாளும் மன்னவனும் அன்னனேயால் மாந்தர்கள் 2kâ¡»‹w பெருமையை ஈங்கிவன் மாட்சிநீ அறியாயலை கண்ணுதற் செஞ்சடை யவன்கொள விருந்தனை கண்மணியின் நிலையுமதுவே கனிவோடு நள்ளிரவின் இனிதியங் குவையிவன் கருதுபணி 3brŒík¡fhš எண்ணவரு வரிசையின் உலாவருவை எங்கள்தம் ஏந்தல் உலாக்கண்டுளை இருந்தவாற் றாலிவன் றனைநிகர்க் கின்றனை இனியவாய் மழலைபேசி அண்மையில் வருமாறு நண்புற வழைத்தனன் அம்புலீ ahlthnt! அரியகற் றவர்கள்பயில் நாகை கிழானொடும் அம்புலீ ahlthnt! குறிப்புரை : இப்பாடலும் ஒப்பு (சமம்) என்னும் வாயில் முறைபற்றி அம்புலியை அடிகளார்க்கு உவமித்துப் பாடியது. 1. தோயாத... - அடிகளார் பாதங்கள் நிலத்தில் தோய்தலில. 2. மதித்தல் - அம்புலியை அடிப்படையாகக் கொண்டே நாள் எண்ணிக்கையும் திங்கள் வரையறையும் செய்யப் பெறுகின்றன. 3. செய்யுமக்கால்... - அடிகளார் நள்ளிரவில் விழித்திருந்து படித்தல் எழுதுதல் முதலியன செய்வார். 63 திருவருட் பேரொளியர் வள்ளலார் பாக்களைத் தீண்டிய 1kU¡fisªjh‹ தென்றமிழர் “N¤âu®” என்ற விழி பெயரையுந் தீர்த்தனன் இவைமட்டுமோ பெருமைமிகு செந்தமிழ் கொடியவர்கள் விரகினால் பெறுகளங் கந்துடைத்துப் 2ãw§Fɤ தானிவன் பெருமைகள் நாவினாற் பேசப் புகின்வளருமால் இருளென்ன நின்பால் இலங்குறு களங்கமும் எளிதினின் இரித்துமுற்றும் எழிலுற விளங்குமா றொளிர்விப்பன் இனிதுகாண் எவ்வுயிர்க் கும்மிரங்கும் அருள்நெஞ்சம் உடையனெம் பெருமகன் அழைத்தனன் அம்புலீ ahlthnt! அரியகற் றவர்கள்பயில் நாகை கிழானொடும் அம்புலீ ahlthnt! குறிப்புரை : இப்பாடல் உதவி (தானம்) என்னும் வாயின் முறை பற்றியது. 1. மரு - குற்றம் (உலகவர் கூறியது). அடிகளார் மருட்பா என்றாரை மறுத்து அருட்பா என நாட்டினார். 2. பிறங்குவித்தல் - ஒளிரச்செய்தல். 64 தன்பெருக் கங்கொண்ட கல்வியறி வாண்மையால் தகுதிமிகு கலைநலத்தால் தாளாண்மை யின்வந்த 1g£l¿î வன்மையால் தன்னே ரிலாச்செவ்வியன் துன்புறுத் துங்கொடிய நோய்நொடிகள் யாவையும் தூய்மை மருந்தால்அறி துயில்படுத் தரியநன் முறைமையால் வேரோடு தொலைத்துநல மாக்குவன்காண் நின்வருத் தஞ்செயும் பிணிபற்றி வையகம் நிகழ்த்துமுரை கேளாதிலேம் நிரம்பவும் பேறுடைய நினையழைத் தானீண்டு 2Ãika¤â‹ ஓடிவருதி அன்பருக் கெளியனாய் உதவுவான் இவனொடும் அம்புலீ ahlthnt! அரியகற் றவர்கள்பயில் நாகை கிழானொடும் அம்புலீ ahlthnt! குறிப்புரை : இப்பாடலும் உதவி (தானம்) என்னும் வாயின் முறை பற்றியது. 1. பட்டறிவு - பட்டறிவு என்பது வடநூலாரால் அநுபவம் எனப்படுவது. 2. நிமையம் - நிமைய மாவது சிறுபொருள் - கன்னல். 65 1t¿nj சுரக்குமோர் அமுதவூற் றுடையையால் வளர்ந்துநிறை வெய்தியக்கால் வையகங் கொள்ளுமா றினிதே வழங்கலும் வடிந்தொழிய மீண்டுமுன்போல் நெறியே நிறைதலும் நன்றே வழங்கலும் 2Ãu¥òw¥ பெறுதலுமென நீணெடுங் காலநின் ஒப்புரவு கண்டனம் நின்மனக் கவலையொழிக சிறிதே இவன்றருந் தமிழமுது கொளினூழி செல்லினும் வற்றாதுகாண் செலவிடச் செலவிடப் பெரிதும் வளர்ந்திடு சிறப்புடைத் தென்பதறிதி அறிவிலா வெளியேமும் ஆட்கொளப் பெற்றனம் அம்புலீ ahlthnt! அரியகற் றவர்கள்பயில் நாகை கிழானொடும் அம்புலீ ahlthnt! குறிப்புரை : இப்பாடல் பிரிப்பு (பேதம்) என்னும் வாயின் முறைபற்றியது. 1. வறிதே - ‘t¿J á¿jhF«’ - தொல். 2. நிரப்பு - வறுமை. 66 செம்மைசால் நன்மதியன் என்றிவனை வையஞ் சிறப்பிப்ப தறியாயலை சீரிலாப் பேதைமையை வெண்மையறி வென்றல்நின் சிறுமையை வெளிப்படுத்தும் இம்மைக்கும் ஏழேழ் பிறப்புக்கும் ஒளிநல்கும் எந்தை, இராப்பொழுதுநீ எரிதரும் நிலவினால் பெரிதுபயன் இல்லென எடுத்துரைப் பின்மிகுதியாம் எம்மையாள் உடையவன் அறிவுக் கடல்தரும் ஏற்றமிக் குடையகுரிசில் எளியை உவர்க்கடல் தருதலின் வந்தனை இவையெலாம் ஆய்ந்துபாராய் 1m«kÉt‹ நின்னை மதித்தழைத் தான்மகிழ்ந் (து) அம்புலீ ahlthnt! அரியகற் றவர்கள்பயில் நாகை கிழானொடும் அம்புலீ ahlthnt! குறிப்புரை : இப்பாடலும் பிரிப்பு (பேதம்) என்னும் வாயின் முறை பற்றியது. 1. அம்மவிவன்... - “m«k nf£ã¡F«” - தொல். 67 ஈரெட் டெனுங்கலை வளர்தலே அன்றியும் இறங்குமுக முகங்கொள்ளுவாய் இயம்புமக் கலைகள்தாம் நனிபழைய வேயன்றி எண்முனைப் புதுமையுண்டோ பாரெட்டு மாதிரத் தினுமிரவு கொள்ளுவாய் பறவையுளும் x‹wD¡F«1 பசிப்பிணி யகற்றிடுந் திறநினக் கிலையெனப் பகர்வர்மற் றெங்கள்பெருமான் 2Óbu£ டிரண்டுடைய தமிழ்மகன் எண்ணருஞ் சிறப்புவளர் புதுமைக்கலைச் செல்வனிர வறிகிலன் பிறவிநோய் மாய்வுறச் செந்நெறி உயிர்க்கருளுவன் ஆரெட்ட முயலினும் ஒண்ணாத சீர்த்தியனொ(டு) அம்புலீ ahlthnt! அரியகற் றவர்கள் பயில் நாகை கிழானொடும் அம்புலீ ahlthnt! குறிப்புரை : இப்பாடலும் பிரிப்பு (பேதம்) எனும் வாயின்முறை பற்றியது. 1. ஒன்றனுக்கும் - சகோரப் பறவை அம்புலியின் ஒளியையே கொள்ளும் என்பர்; அஃது அறிவியலாரால் மறுக்கப் பெறுகின்றது. 2. சீரெட்டு - சீர் + எட்டு + இரண்டு - பதினாறுவகைப் பேறு முன்னமே கூறப்பட்டது. 68 நீர்வளஞ் சான்றநற் றாமரைப் பொய்கையில் நெடியநாள் 1Ezšit»D« நிறைமணங் கமழ்தலுறு தாமரைத் தேன்சுவை நென் முனைத் துணைநுகருமோ ஏர்நலஞ் சான்றநற் செஞ்சடை இருத்தலால் இறைவனின் நலமறிவையோ எம்முடைய பெருமகன் 2K«ikí« பேரவை எடுத்தபொற் பாதத்துள சீர்மிகுங் கதிரவன் பெருவெயிலை எதிரொளி செயவருதல் ஒரு பெருமையோ செம்மாந்த புலமைநலம் மிகவுடைய நம்பியவன் சீர்த்திநீ அறிவைநன்றே ஆர்வமுற நின்றனைத் தன்பால் அழைத்தனன் அம்புலீ ahlthnt! அரியகற் றவர்கள்பயில் நாகை கிழானொடும் அம்புலீ ahlthnt! குறிப்புரை : இப்பாடலும் பிரிப்பு (பேதம்) எனும் வாயின் முறை பற்றியது. 1. நுணல் - தவளை. 2. மும்மை - எண்ணம், சொல், செயல். 69 ஒண்கதிர்ச் செல்வனில் லாமையின் ஓரிரவில் ஒளிநல்கு வையேனைநாள் ஒளிகுன்றி உருவமுங் குறைவுற் றுலாவுவை ஓரிரவு காரிரவுகாண் தண்டமிழ்ப் பேரொளி வழங்குமெங் குரிசிலது தடையுற்ற தில்லையறிதி தங்கள் கண் மூடித் துயில்வோர் அறிந்திடத் தரமில்லை நின்னொளிக்கே 1f©LÃf® மொழியனெம் பெருமகன் கட்டளையிற் கண்டுயில் வாருமறிவர் 2fh®fu¡ குஞ்சிறுமை உடையையெம் நெஞ்சகக் 3fhbuhʤ தாளுமையன் அண்டையில் நீவரப் பெருமனங் கொண்டனன் அம்புலீ ahlthnt! அரியகற் றவர்கள் பயில் நாகை கிழானொடும் அம்புலீ ahlthnt! குறிப்புரை : இப்பாடலும் பிரிப்பு (பேதம்) எனும் வாயின் முறைபற்றியது. 1. கண்டு - கற்கண்டு. 2. கார் - முகில். 3. கார் - அறியாமை. 70 புலவர்கள் முதலாய பல்துறைப் பெருமக்கள் 1ó£ifÆ‹ பொருவிலாதார் புகலுமிவன் ஒருசொல்லை எதிர்நோக்கி நிற்பவும் பூங்கை அசைத்தசைத்து நலமிக்க செந்தமிழில் நின்னைவரு கென்றனன் நண்ணிலாய் என்னையென்று நாடிப் புறக்கணிப் பறியின் 2fW¥òbfhL 3eh£l¤ துறுத்து நோக்கி நிலவுடைய நின்றிறம் அழிக வென வாய்மொழி நிகழ்த்துமேல் நிகழ்வதுறுதி நில்லா திதோவந்த னன்னென் 4¿iw¥ பொழுதும் நீடியா தோடிவிரைவாய் அலகிலாப் பெருமைசால் நிறைமொழியன் இவனொடும் அம்புலீ ahlthnt! அரியகற் றவர்கள்பயில் நாகை கிழானொடும் அம்புலீ யாட thnt! குறிப்புரை : இப்பாடல் ஒறுப்பு (தண்டம்) எனும் வாயின் முறை பற்றியது. 1. பூட்கை - கொள்கை. 2. கறுப்பு - “fU¥ò« சிவப்பும் வெகுளிப் bghUs” - தொல். 3. நாட்டம் - கட்பார்வை. 4. இறைப்பொழுது - சற்றுநேரம். 8. சிற்றிற்பருவம் 71 இல்லற மென்னும் நல்வாழ்வை இனிது நடாத்தும் Kiw1f‰gh‹ இளையேங் குழுமி யீண்டுற்றே இழைத்தேஞ் சிற்றில் அல்லாது நல்லரும் இன்றமிழ் பயிலுவதில் நாளும் பணிசெய முயலுவதில் நாட்டம் இன்றி விளையாட்டை 2eaªâJ செய்தோம் அல்லேமால் சொல்லரு மாண்பிற் பொதுமறையாய்த் தூய்மையின் ஓங்கிய வள்ளுவனார் சொல்லிய வாய்மைப் பெருமொழியாம் தொழுதுல கேத்துங் குறணூலால் செல்லரு மாப்புகழ்த் தமிழ்நாடா சிறியேஞ் சிற்றில் áijnany! சிவநெறி தழைய வந்தவருட் செல்வா சிற்றில் áijnany! குறிப்புரை : 1. கற்பான் - பானீற்று வினையெச்சம். 2. நயப்பு - விருப்பு. 72 1k©kfŸ அறியா வண்ணமிகு மலர்புரை அடிகள் புழுதிபட மகளிர் யாஞ்செய் பிழையென்னோ மற்றும் அதனாற் சிறியேமை 2k©Q« பழியை 3k©zbtÅ‹ 4kh‰bwh‹ றிலையால் அருளுடையாய் மாண்புறு பெரியோய் நின்றிருமுன் மதிப்பொன் றில்லேம் எதிரேயோ எண்ணரு பெருமையின் முப்பானூல் இயற்றிய எந்தைப் பெயர் கொள்ளும் எழிலார் 5nfh£l« புதுமையதாய் ஏற்றம் பெற்றுத் திகழுதலின் திண்ணிய சீர்த்தித் தமிழ்நாடா சிறியேஞ் சிற்றில் áijnany! சிவநெறி தழைய வந்தவருட் செல்வா சிற்றில் áijnany! குறிப்புரை : 1. மண்மகள்... - அடிகளார் பாதங்கள் மண்ணில் தோய்தலில. இது முன்பும் கூறப்பட்டது. 2. மண்ணும் - மிகும். 3. மண்ணுதல் - நீக்குதல். 4. மாற்று - கழுவாய். 5. கோட்டம் - வள்ளுவர் கோட்டம். 73 1ãwth யாக்கைப் பெரியோன்றன் பேரரு ளானற் பெருவீடு பெறுமுறை பேசுந் திருநெறியின் பெருமைகள் காட்டுந் திருவாள திறவும் பூட்டும் இல்லாவிச் சிறிதாம் வீட்டைச் சிதைப்பதுதான் சீர்த்திய தோபே ரின்பத்தின் சிறப்புடையதுவோ வாய்விள்ளாய் நறவுறழ் இனிமையின் முதன்மையதாய் நானில மேத்துஞ் செந்தமிழை நற்றாய் மொழியாய்ப் பெற்றவர் வாழ் நலமிகு நிலமென மேன்மைமிகு திறவோர் போற்றும் தமிழ்நாடா சிறியேஞ் சிற்றில் áijnany! சிவநெறி தழைய வந்தவருட் செல்வா சிற்றில் áijnany! குறிப்புரை : 1. பிறவா யாக்கைப் பெரியோன் (சிலம்பு) - சிவபெருமான். 74 சான்றவ நின்றன் பேரறிவால் சாற்றிய 1bghUªJ« உணவன்றிச் சற்றும் பொருந்தா உணவுசெயேம் சற்றே பொறுத்தல் ஆகாதோ ஆன்றரு நறுநெய்ப் பண்ணியமும் அன்றித் 2bj§»‹ பாற்குழம்பும் அருமிள கின்சா றும்பிறவும் ஆக்கிப் படைப்பேம் ஒருநொடியில் வான்றரு நன்கொடை பொய்த்திடினும் வற்றா தென்றும் உலகூட்டும் வளமார் பொன்னி முதல்யாற்றின் வளருஞ் செந்தமிழ் நன்னாட தேன்றரு சுவைமிகு தமிழ்தரு மெஞ் செம்மல் சிற்றில் áijnany! சிவநெறி தழைய வந்தவருட் செல்வா சிற்றில் áijnany! குறிப்புரை : 1. பொருந்தும்... - பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் அடிகளார் நூல். 2. தெங்கின்... - தேங்காய்ப் பாற்குழம்பும் மிளகு சாறும் அடிகளார் விரும்பியுண்பன வாகலின் இங்ஙனம் கூறினர் சிறுமியர். 75 1ïisahŒ நின்றன் நல்வரவால் எளியேம் பெரிதும் மகிழ்வுற்றே 2ïÅahŒ வருக என்றேயாம் இயல்பாய் விளித்தேம் தீம்பலவின் சுளையாய் இனிக்கும் தமிழ்ப்பெரும சொல்லிய விளியை எதிர்மறையாய்ச் சொன்னேம் என்று முனிவாயேல் சுவையார் தமிழின் தகவாமோ வளையாச் செங்கோல் இனிதோச்சி வையம் பரவிப் பின்னிற்ப வாகை பொலியும் மூவேந்தர் வயங்குறு புகழாம் 3ngÇ‹gª 4âisah நின்ற தமிழ் நாடா சிறியேஞ் சிற்றில் áijnany! சிவநெறி தழைய வந்தவருட் செல்வா சிற்றில் áijnany! குறிப்புரை : 1. இளையாய் - இளமையுடையாய், எய்ப்பு அறியாய். 2. இனியாய் - இனிமையுடையாய் என்னும் பொருள்படச் சிறுமியர் விளித்ததனை இனிமை இல்லாய் என்னும் எதிர்மறைப் பொருள்படப் பாட்டுடைத்தலைவன் கொண்டதாக அமைந்துள்ளது இப்பா. 3. பேரின்பம் - மிக்க இன்பம். 4. திளையாநின்ற - ஆநின்று என்னும் இடைநிலையது. 76 கட்டிய மாளிகை ஒன்றோநின் கருத்தைப் பரப்பும் நோக்குடைய கல்விக் கழகம் கலைமன்றம் கருத்துயர் நூல்நிலை யங்களெனப் பட்டியல் நீளப் பலபலவாய்ப் பாங்குற விளங்குவ வுளவலவோ பச்சிள மகளிர் எம்மனைதான் பாதைக் கிடையூ றாயினதோ கிட்டிய யாக்கையும் அறிவுணர்வும் கேடுறு வித்தும் விழைவூட்டும் கீழ்மைக் குடியும் இழிசூதும் கேடுறு மாறே துணிவுகொடு திட்டந் தீட்டிய தமிழ் நாடா சிறியேஞ் சிற்றில் áijnany! சிவநெறி தழைய வந்தவருட் செல்வா சிற்றில் áijnany! குறிப்புரை : பாதைக்கிடையூறு என்று தலைக்கீடு காட்டிச் சிற்றிலை அழிக்கப் பாட்டுடைத் தலைவன் முனையச் சிறுமியர் கூறியது இப் பா. 77 குலவேற் றுமையுஞ் சமயப்பேர் கொண்டு கெடுக்குஞ் சிறுமைகளும் கோணல் 1bjh‹k¡ குப்பைகளும் கொஞ்சு தமிழ்ப்பாற் கலப்படமும் நலமின் றேனும் நிலமாளும் நசைகொள் புல்லிய மொழியுமென நவிலுந் தொடரில் ஒன்றேயோ நாடிச் செய்யெஞ் சிறுவீடு 2fytif பற்பல கண்(டு) ஏனைக் கரைவாழ் வோரும் பெறுமாறு 3fUik¡ கறிபிற வணிகஞ்செய் கலையின் உயர்ந்து நீள்கடலில் செலவார் செந்தமிழ் நன்னாடா சிறியேஞ் சிற்றில் áijnany! சிவநெறி தழைய வந்தவருட் bršth! சிற்றில் áijnany! குறிப்புரை : 1. தொன்மக்குப்பை - புராணக் குப்பை. 2. கலம் - கப்பல். 3. கருங்கறி - மிளகு. 78 கலைமன் றமெனப் பொலிவுறவே கவினுறு கூடம் உயர்மாடம் 1fhyj® பிறவும் திகழ்தருநின் 2fHf¥ பெருமா ளிகையேபோல் நிலைபெறு வளமனை யாங்குயிற்ற நின்போல் எமக்கும் எளிதேயோ நிறைவில தேனும் மணல்வீடு நின்பால் அன்பு குறைந்தேமா அலைகடல் கொண்ட 3FkÇbaD« அற்றை மாந்தன் பிறந்தகமாம் ஆங்கதன் எச்சம் எனநிற்கும் அருமைச் செந்தமிழ் நன்னாடா 4áiybfhs உயரிய நாகைக்கண் திகழ்வோய் சிற்றில் áijnany! சிவநெறி தழைய வந்தவருட் செல்வா சிற்றில் áijnany! குறிப்புரை : 1. காலதர் - வளிவாய் (ஜன்னல்). 2. கழகம் - பொதுநிலைக் கழக மாளிகை. 3. குமரியெனும்... - கடலில் மூழ்கிய குமரிப் பெருநிலமே மாந்தன் (KjÈš) பிறந்தக மென்பதும், அதன் எச்சமே இற்றைத் தமிழ்நாடென்பதும் அறிஞர் கருத்து. 4. சிலை - நாகையில் அடிகளாரின் சிலை நிறுவப்பட்டுள்ளது. 79 குயிலொடு மாறு கூவினமால் குரிசில் நின்றன் தீங்குரலைக் குறித்துப் பகடி பண்ணுகிற குறிப்பால் அங்ஙன் செய்திலமால் பயில்தமிழ்ப் பெரும தோல்விகொடு பறந்தோ டியவம் 1kHFÆiy¥ பார்த்துச் சிரித்ததும் ஒரு பிழையாய்ப் பாராட் டுவதும் அழகாமோ எயில்முதல் அரணம் செய்தினிதே இன்றமிழ் 2k‹w« கண்டுநனி ஏற்றம் பொலியப் பெருமிதமாய் இரும்புகழ் 3ntªj® ஆட்சிசெயச் 4brÆuW செந்தமிழ் நன்னாடா சிறியேஞ் சிற்றில் áijnany! சிவநெறி தழைய வந்தவருட் செல்வா சிற்றில் áijnany! குறிப்புரை : சிறுமியர் குயிலுக்கு மாறாய்க் கூவிச் சிரித்தனராகப் பாட்டுடைத் தலைவன் தன்னைப் பகடி செய்ததாக வெகுண்டனன் என அமைந்தது இப் பா. 1. மழகுயில் - இளங்குயில் - மழவும் குழவும் இளமைப் பொருள - தொல். 2. மன்றம் - தமிழ்க்கழகம். 3. வேந்தர் - பேரரசர். 4. செயிரறு - குற்றமற்ற. 80 அருமைத் தமிழின் நிலைகுலைய அயலவர் குழுமிச் சூழிடமோ அன்றிச் சிவனியத் திருநெறியை அழிப்பவர் கும்பல் வாழிடமோ பெருமன் பதையின் நலந்தீய்க்கும் பேதைமை யாளர் குடியிருப்போ பெண்பா லவர்எம் சிறுவீட்டைப் பெரியோய் சிதைத்தல் முறையாமோ அருள்நெறி யென்னும் தந்நெறியால் அந்தமிழ் மக்களை உய்வுசெய அயல்நாட் டினினின் றீண்டுற்ற ஆன்றவர் போப்பு முதலோரைத் 1bjUSW வித்த தமிழ்நாடா சிறியேஞ் சிற்றில் áijnany! சிவநெறி தழைய வந்தவருட் செல்வா சிற்றில் áijnany! குறிப்புரை : 1. தெருள் - தெளிவு. 9. சிறுபறைப்பருவம் 81 (வேறு) வள்ளலார் என்றுலகு போற்றிடத் திருவருள் வயமுற்று நெஞ்சமுருகி வான்மழை பொழிந்தென இராமலிங் கர்தரும் வண்டமிழ்த் தீம்பாக்களை vŸË1eif யாவருட் பாவல்ல காணுமின் இன்னா மருட்பாவென இழித்துப் பழித்துக் கழித்தோர் 2bjÊ¥ò¡fŸ இரியப் புறங்கண்டுநின் ஒள்ளிய வருட் புலமை 3jWf©ik யாலவை உயரருட் பாவேயென உறுதியாய் நாட்டிநற் 4brWâwš அரியனுக்(கு) உவமைசொல நின்றபெரியோய் தெள்ளிய தமிழ்ச்சிறப் புலகுணர விண்டவா சிறுபறை KH¡»aUns! செந்தமிழ் இலங்குங் கலங்கரை விளக்கமே சிறுபறை KH¡»aUns! குறிப்புரை : 1. நகையா - நகைத்து - செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். 2. தெழிப்பு - ஆரவாரம். 3. தறுகண்மை - வீரம். 4. செறுதிறல் - போர்வலிமை. 82 மன்புலவன் என்றுலகு போற்றுதிரு வள்ளுவன் மன்பதை நலந்தழைப்ப மனங்கொடு வழங்கியருள் பொதுமறைக் Fiu1brŒJ மன்னுபரி மேலழகியன் தென்புலத் தார்க்குப் பொருத்தமில் லாதே தெரித்தவுரை திரிபுகண்டு தெளிவுமிகு சான்றுகள் வலிவா யிலங்குறத் திறவோர் வியந்துபோற்றத் தன்புலமை யேயன்றி நிகரொன் றிலாப்பெருந் தகைநறுந் தண்டமிழினால் தக்கவாறா ராய்ந்து 2thŒbkhÊÆ‹ நன்பொருள் தமிழுலக முணருமாறு 3bj‹òy¤ தார்யாவர் என்றெழுதி யருள்கையாற் சிறுபறை KH¡»aUns! செந்தமிழ் இலங்குங் கலங்கரை விளக்கமே சிறுபறை KH¡»aUns! குறிப்புரை : 1. செய்து - காரண வினையெச்சம். 2. வாய்மொழி - திருக்குறள். 3. தென்புலத்தார்... - தென்புலத்தார் யாவர் என்பது அடிகளாரின் நூல். 83 கருத்தொன்ற இறைவனைத் திருவுருவி னிற்கண்டு கனிவுமிகு தமிழில்பரவிக் கைதொழுது வையகம் மெய்யுணர்ந் தின்புறக் கட்டிய திருக்கோயிலில் fU¤âÅa1 நீள்குழன் மாதரை இறைமைக் கலைப்பணிகள் செய்யுமாறு கருதிய பழங்கொள்கை பழுதுபட ஆங்கவர் கணிகையர்க ளாயிழிதலின் பொருத்தமில் லாதவப் புன்மைநிலை யின்வரும் பொல்லாங்கு கண்டுநைந்து பொதுமகளிர் இறைவனுக் கடியவர் எனும் பெயரில் பொட்டணிதல் விட்டொழித்துத் திருத்தமுறு மாறுநற் ¿£l«2 வகுத்தவன் சிறுபறை KH¡»aUns! செந்தமிழ் இலங்குங் கலங்கரை விளக்கமே சிறுபறை KH¡»aUns! குறிப்புரை : 1. இனிய - காட்சிக்கினிய. 2. திட்டம் - திருக்கோயிலில் பொதுமகளிர் பொட்டணியும் வழக்கை ஒழிக்க வேண்டும் என்பது அடிகளாரின் சீர்திருத்தக் கொள்கைகளுள் ஒன்று. 84 பல்லா யிரங்கால மாத்தமி ழினத்தவர் பகைவர்தம் விரகாண்மையால் பலநூறு பிளவுகொள் 1Fynt‰W மையெனும் பாழ்ங்குழியில் வீழ்ந்துபட்டுத் 2bjhšiyehŸ ஆண்டவன் எந்தமக் கருளினால் தோற்றியன அவையாமெனுந் தூய்மையில் கதைபற்றி நாயினுங் கீழராய்த் துயருறக் கண்டிரங்கி வெல்லுநுண் புலமையால் ஆராய்ந்து மாற்றவர் விழுப்பமில் கொள்கை வீழ்த்தி வீறுகொண் டெந்தைசெய் 3üšf©L வையகம் வியப்பினால் வாய்திறப்பச் 4bršyh¥ பெரும்புகழ்ச் சீர்கொண்ட நாயகன் சிறுபறை KH¡»aUns! செந்தமிழ் இலங்குங் கலங்கரை விளக்கமே சிறுபறை KH¡»aUns! குறிப்புரை : 1. குலவேற்றுமை - சாதிப்பிரிவு. 2. தொல்லை நாள் - பழங்காலம். 3. நூல் - சாதி வேற்றுமையும் போலிச் சைவரும், தமிழர் அல்லது வேளாளர் நாகரிகம் - அடிகளாரின் நூல்கள். 4. செல்லாப்புகழ் - குறையாப்புகழ். “bršyh¢ bršt” சிலம்பு. 85 பிறிவிவாய்ப் பட்டுழல் 1cÆ®fbsd வுணராது பேரருள் வாய்ந்தவென்று பேதைமையின் ஏழைமைச் சிற்றுயிர் துடித்திடப் பெருகவுங் bfh‹W2fhî 3ewnth டளித்துப் படைத்துற வணங்கிடும் நனிகொடிய தீமைபற்றி நலமிழந் தளவிலாக் 4fÇRfŸ சுமந்துபெரு நாட்டமுறு மிழிவு நெறியை அறவெறுத் தாங்கதனை முற்றுந் தொலைத்தலின் அறமுநற் றொண்டுமிலை யென்(று) அருள்நெஞ் சிரங்கிபே ரறிவுரை வழங்கியெமை ஆட்கொண்டு புன்மைபலவும் 5bjwtªj செங்கதிர்க் கனலியே யனையை நற் சிறுபறை KH¡»aUns! செந்தமிழ் இலங்குங் கலங்கரை விளக்கமே சிறுபறை KH¡»aUns! குறிப்புரை : 1. உயிர்கள் - சிறுதெய்வங்கள். 2. காவு - பலி. 3. நறவு - கள். 4. கரிசு - பாவம். 5. தெறுதல் - தீய்த்தல். 86 (ntW) கத்து கருங்கடல் நீரை முகந்து கடுகிவிண் மீதேறிக் கருமுகிற் கூட்டம் பெருக முழங்கிக் கனலுங் கோடையற மெத்தவும் வாடிய பயிர்களும் மண்ணில் மேவிய பிறவுயிரும் மேன்மையில் வறுமை நீங்கித் தழைய மேற்பொழி மாரியென முத்தமிழ் அவையின் தலைமைப் பெரியோய் மொழிமழை பொழியுங்கால் மொழிநலம் ஓம்பார் எவரே யாயினும் 1kâna« எனமிசையில் குத்து மணிக்கையி ʼn2Fš கொண்டு கொட்டுக áWgiwna! கொற்றத் தமிழின் வெற்றி சிறக்கக் கொட்டுக áWgiwna! குறிப்புரை : 1. மதியேம்... - கரந்தை தமிழ்க் கழகத்தில் தனித்தமிழ்ப் போராட்ட நிகழ்ச்சி. 2. குணில் - பறையடிக்குங் குறுந்தடி. 87 ஆட்சியின் பற்பல துறைகளில் நடுநின்(று) 1mw§T றவையத்தில் 2mUbshË வடிவன் திருவடி போற்றும் அழகுறு கோவில்களில் மாட்சியின் மிக்க கல்வி பயிற்றும் மனைகளில் மேன்மேலும் மலருங் கலைகள் வளரப் பணிசெய் மன்று களிற்செய்தி ஏட்டினில் மற்றும் நாட்டினில் எங்கும் யாவினி லுந்தமிழே இலங்கச் செய்வேம் என்று முழங்கி ஏற்பன செய்கின்ற கோட்பா டுடையார் போற்றும் பெரும கொட்டுக áWgiwna! கொற்றத் தமிழின் வெற்றி சிறக்கக் கொட்டுக áWgiwna! குறிப்புரை : 1. அறங்கூறவையம் - அறமன்றம். 2. அருளொளி வடிவன் - இறைவன். 88 வடமொழி முதனூல் கண்டு வகுத்த வழிநூல் அல்லாது வண்டமிழ் முதனூல் அன்றுமெய் கண்டான் வழங்குமெய் நூலென்று திடமாய்ச் சொல்லியும் நம்பியும் வந்தோர் திகைப்பத் தெளிவுகொளத் 1â¥ãa புலமையின் ஆய்ந்துமெய் கண்டு திகழ்தமிழ் முதனூலே சுடர்பே ரறிவன் 2f‹d‰ பெருவயல் சூழ்பெண் ணாகடவூர் 3njh‹wš செய்மெய் நூலென வயிரத் தூண்போல் நிலைநாட்டி முடமுறு தமிழர் அறிவு நிமிர்த்தோய் முழக்குக áWgiwna! மும்மைத் தமிழின் செம்மை சிறக்க முழக்குக áWgiwna! குறிப்புரை : 1. திப்பிய - செறிந்த. 2. கன்னல் - கரும்பு - இக்கால் பெண்ணாகடத்தில் கரும்பாலை அமைக்கப் பெற்றுள்ளது. 3. தோன்றல் - மெய்கண்டார். 89 1eiwíW தமிழில் வடமொழி யதனில் நாளும் பெருகிவளர் நாற்றிசை யாளும் ஆங்கில மொழியில் நவிலும் பிறமொழியில் துறைதுறை தோறும் அறிஞர்கள் யாத்துத் துலங்குபல் லாயிரநூல் துருவித் துருவி யாய்ந்து படித்தே துய்த்தவை யுலகு பெற மறைமலை யடிகள் நூல்நிலை யமென மன்னிச் சிறந்தொளிரும் 2kÂbkhÊ நூல்நிலை யந்தரு வள்ளால் மற்றொரு பற்றின்றி முறையுற இறையடி பரவிய பெரும முழக்குக áWgiwna! மும்மைத் தமிழின் செம்மை சிறக்க முழக்குக áWgiwna! குறிப்புரை : 1. நறை - தேன். 2. மணிமொழி நூல்நிலையம் - மணிமொழி நூல் நிலையமென அடிகளார் நிறுவியதே இந்நாள் அவர்கள் விருப்ப ஆவணப்படி மறைமலையடிகள் நூல்நிலையமென விளங்குகின்றது. 90 அறியாப் பருவச் சிறியோர் தங்கட்(கு) அன்னை தந்தையொடும் அன்புறு கிளைஞர்கள் உறவினர் கூடி அஃறிணை யும்நாண வறிதே மணமென x‹W1 நிகழ்த்தி வாழ்நாள் இறுதிவரை வாட ஒழுக்கங் கோட வகுக்கும் வரைவு வழக்கோடும் 2g¿Kiw போலும் வரைதுறை யின்றிப் பல்பொருள் கொண்டுமனப் பாங்கறி யாதிரு பாலவர் தங்கைப் பற்றும் இழிநிலையும் 3K¿îW மாறு முன்னிய பெரியோய் முழக்குக áWgiwna! மும்மைத் தமிழின் செம்மை சிறக்க முழக்குக áWgiwna! குறிப்புரை : 1. மணமென ஒன்று - சிறுவர் மணம் (பால்ய விவாகம்). 2. பறிமுறை........ - (மணவிலை கோடல்). 3. முறிவுறல் - கெடல். 10. சிறுதேர்ப்பருவம் 91 1fUâÅa 2gšÈa¤ துறுபெரு முழக்கமும் கனிவுமிகு பண்சுமந்த கடவுட் பழந்தமிழ்ப் பாமுறை முழக்கமும் காதல்வளர் தொண்டுக்குழாம் 3tUâÅ¥ பெருமறவர் அணிவகுப் பெனவுடன் வந்துதமிழ் அருமைபேசி வாயார வாழ்த்துறு முழக்கமும் ஓங்கவெழில் வண்ணமண மாலைபொலிய அருகினில் 4ckhknf Ru‹5mu§ கன்போலும் 6M©lifa® சூழ்ந்துபோத அணிபெற்ற மகிழுந்தில் இனிதுவீற் றருளிநல் அருந்தமிழ் நாட்டகத்துத் தெருவினி லெலாமுலா வருகைதரு பெருமகன் சிறுதேர் cU£oaUns! செந்தமிழர் வாழ்வுபெற வந்தொளிர் செழும்பரிதி சிறுதேர் cU£oaUns! குறிப்புரை : 1. கருதினிய - கருது + இனிய. 2. பல்லியம் - இசைக்கருவிகள் (Archestra). 3. வருதினி - போர்ப்படை. 4. உமாமகேசுரன் - உமாமகேசுரனார். 5. அரங்கன் - திருவரங்கனார். 6. ஆண்டகையர் - பொன்னரசு (கனகராயர்) முதலிய அணுக்கத் தொண்டர்களும், பா.வே.மாணிக்கனார், கா. சுப்பிரமணியனார். திரு.வி. கலியாணசுந்தரனார் முதலிய பேரறிஞர்களும் இளவழகனார், சோம சுந்தர பாரதியார் முதலிய மாணவர்களும் இன்னோரன்ன பிறரும். 92 1âw¥gh oyhj2tl வாரியத் தலைவரார் செந்தமிழர் åu3ÄfHh செருக்கினால் எள்ளிநகை யாடினர்கள் என்றாலும் சீறிச் சினந்துபொங்கி மறப்போர்க் களத்துவென் றாங்கவர்கள் புன்றலை மாமலைக் கல்சுமத்தி மணித்தேர் இவர்ந்துவரு செங்குட்டு வப்பெரிய மன்னவன் w‹id4khd¥ புறப்பாடு கொண்டுநற் றமிழைச் சிதைக்குநர் பொருந்துசிவ நெறிகெடுப்பார் பூட்கைகள் யாவையும் வீழ்த்துநின் வெற்றியைப் புலவர்புனை வாகைபொலியச் சிறப்போ டுலாவரும் செந்தமிழ்ப் பெருமறவ சிறுதேர் cU£oaUns! செந்தமிழர் வாழ்வுபெற வந்தொளிர் செழும்பரிதி சிறுதேர் cU£oaUns! குறிப்புரை : 1. திறப்பாடு - வல்லமை. 2. வடவாரியத் தலைவரார் - கனகவிசயர். 3. இகழா - இகழ்ந்து - செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். 4. மான - உவமஉருபு. 93 பல்லா யிரஞ்சிறப் போங்குநன் னூல்களைப் பைந்தமிழ் நெறிசிறப்பப் பாங்காக வச்சிட்டு யாங்கும் பரப்புநற் பணியில்தனி வென்றுநின்று 1fšyhil யன்கலை மன்றுநூல் நிலையமுங் கருதுசிவ ஞானமுனிவன் காசுவென உலகுபுகழ் மாசிலா மணியிவர் கரையிலாத் தொண்டுபோற்றி 2ešyhŒî மன்றமும் நூல்நிலைய முங்கண்டு நாடுபிற பணியுஞ்செயும் நானிலம் போற்றுநல் உயர்சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகமாம் செல்லாப் 3òfœ¤jij நிறுவுவித் தருள்பெரும சிறுதேர் cU£oaUns! செந்தமிழர் வாழ்வுபெற வந்தொளிர் செழும்பரிதி சிறுதேர் cU£oaUns! குறிப்புரை : 1. கல்லாடையன்... - மறைமலையடிகள் கலைமன்றம், மறைமலையடிகள் நூல் நிலையம். 2. நல்லாய்வு... - சிவஞானமுனிவர் ஆராய்ச்சி மன்றம், கா.R¥ãukÂadh® நூல் நிலையம். 3. புகழ்த்ததை - புகழுடையதை. 94 நடமாடு மெய்க்கோயில் என்றலால் இறைவனின் நல்லருட் கொடையாதலால் நண்ணுற்ற விம்மைக்கும் மறுமைக்கும் ஆதரவு நன்னிலைய மென்னுமாற்றால் உடனலம் பேணியினி தொழுகுநெறி யும்பொருந்(து) உணவுகொள் முறையும்மற்றும் உற்றநோய் களைதலும் நற்றவம் பயிறலும் உரைக்குமிவை முதலானவும் சுடர்கின்ற தமிழினில் வாழ்வியல் முறைகள் சுட்டுமுயர் பெருநூலெனச் சூழ்ந்துலகு பாராட்டு பெருமைமிகு மக்களுயிர் 1üwh©L வாழ்க்கைதந்து திடமான மெய்ப்புகழ் கொண்டிலகு பெருமகன் சிறுதேர் cU£oaUns! செந்தமிழர் வாழ்வு பெற வந்தொளிர் செழும்பரிதி சிறுதேர் cU£oaUns! குறிப்புரை : 1. நூற்றாண்டு... - “k¡fŸ நூறாண்டுயிர் thœ¡if” - அடிகளார்நூல். 95 அறவாழி யந்தணன் குருவாகி வந்துமெய் யருள்செய்து சிவமாக்கிநன்(கு) ஆட்கொண்ட பெருநிலையில் நெஞ்சகம் நெக்குருகி அரியவின் னமுதத்தினை உறழ்கின்ற தமிழினில் திருவாய் மலர்ந்துமொழி யுதவிமெய் யுணர்விலெம்மை ஊக்கித் திளைப்பிக்கு மாப்பெரிய வாதவூர் ஒப்பிலாத் திருவாளனின் பிறழ்வுற்ற வரலாறு காலமிவை பற்றிநனி பெரிதுமா ராய்ந்துமெய்ம்மை பிறங்குமா றரியதொரு 1bgUüš இயற்றுநின் பேராண்மை கண்டுவையம் திறவோ னெனப்பணிந் தேத்துமுயர் பெருமநற் சிறுதேர் cU£oaUns! செந்தமிழர் வாழ்வுபெற வந்தொளிர் செழும்பரிதி சிறுதேர் cU£oaUns! குறிப்புரை : 1. பெருநூல் - “kh¡fthrf® வரலாறும் fhyK«” அடிகளாரின் நூல். 96 செழித்துவளர் மேலைநாட் டொள்ளியர்கள் மேன்மையுஞ் செந்தமிழ் 1it¥ãUªJŠ சீரழிவு பட்டநந் தமிழர்தங் கீழ்மையுஞ் சீராய் எடுத்துரைத்துப் பழித்தறி வுறுத்துநற் பான்மையை யுணர்கிலார் பகையான் மறுத்தெதிர்க்கப் பார்த்துளம் வேர்த்தஈ ரோடை கிழாரெனும் பட்டறிவு Ä¡f2bgÇah® கொழித்தபே ரறிவாளர் மறைமலை யடிகளார் கூற்றெலாஞ் சரியேயெனக் கூறிய மறுப்பினை நூறினர் 3kW¥òüš கொண்டெதிர்த் தவரைவீழ்த்தத் தெழித்தமறு தலையரும் போற்றுமுயர் சீராள சிறுதேர் cU£oaUns! செந்தமிழர் வாழ்வுபெற வந்தொளிர் செழும்பரிதி சிறுதேர் cU£oaUns! குறிப்புரை : 1. வைப்பு - பொருள் வைப்பு. 2. பெரியார் - ஈ.வெ.இராமசாமி. 3. மறுப்பு நூல் - மறுப்புக்கு மறுப்பு அடிகளாரின் தமிழ்நாட்டவரும் மேல்நாட்டவரும் என்னும் கட்டுரையை ஒருசாரார் கண்டனஞ் செய்தமையால் அக் கண்டனத்தைக் கண்டித்துப் பெரியார் வெளியிட்டநூல். 97 தடைசெய்க வென்றுபகை நடைகொண்ட கடையவர் தருக்கித் தலைநிமிர்த்தித் தகைமாண்ட சீர்த்தியின் அறிவுரைக் கொத்துதரு 1j©lÄœ¤ தாய்ச் சுட்டலும் 2»ilbfh©l தொழிலினர் விரகார்ந்த சூழ்வினிற் கிளைத்துவரு விளைவாயவர் கிண்டலின் எழுந்தவார்ப் பாட்டங்கள் யாவுங் கிளர்ந்தெழு பெருங்காற்றினால் உடைபடச் சிதறியொழி 3bfh©_¡ குழாமென உருவிலா தேயொழிந்த ஓவா முயற்சியின் தாவாத பேரறிவின் ஒண்டமிழின் மாசுபோக்கிக் 4»ilí‰w எம்மவரை யார்த்தெழச் செய்தவன் சிறுதேர் cU£oaUns! செந்தமிழர் வாழ்வுபெற வந்தொளிர் செழும்பரிதி சிறுதேர் cU£oaUns! குறிப்புரை : 1. தண்டமிழ்த்தாய் - அடிகளாரின் அறிவுரைக் கொத்து என்னும் நூலிலுள்ள தமிழ்த்தாய் என்னும் கட்டுரையைப் பாடத்தில் வையாது தடை செய்க வென்று ஒரு சாரார் ஆரவாரஞ் செய்தனர். 2. கிடை - வேத மோதுங் கூட்டம். 3. கொண்மூ - கருமுகில். 4. கிடையுறல் - மடிந்து கிடத்தல். 98 கற்றோர் உவப்புறப் பலவகைச் செய்திகொடு காலமுறை யிற்போந்தவர் கையுறுந் தாளிகைத் துறையினில் v«kndh®¡1 கைதூக்கி மேம்படுத்தச் 2á‰ù® அடைத்துநற் 3á¤jhªj தீபிகை சீறுற விளக்கிமற்றும் 4brªjÄœ வைப்புபே 5u¿î¡ கடலிவை சீர்த்திசால் தமிழ் மொழியினும் k‰6wh§ கிலத்தினிற் கீழைநாட் டுள்ளநன் மக்கள் கவர்ச்சிபெரிதும் மாண்புறத் தந்தினிது சேண்புகழ் கொண்டனை மணிநடையில் இற்றைநாளில் செற்றார் கலங்கவரு 7jhËif வழிகாட்டி சிறுதேர் cU£oaUns! செந்தமிழர் வாழ்வுபெற வந்தொளிர் செழும்பரிதி சிறுதேர் cU£oaUns! குறிப்புரை : 1. எம்மனோர் - உயர்திணை இரண்டன் தொகை. 2. சிற்றூர் - சித்தூர். 3. சித்தாந்த தீபிகை - அடிகளார் ஆசிரியராக இருந்த மாதவிதழ். 4. செந்தமிழ் வைப்பு - செந்தமிழ்க் களஞ்சியம் (அடிகளார் ஆசிரியராக இருந்த மாதவிதழ்). 5. அறிவுக் கடல் - அடிகளார் நடத்திய ஞானசாகரம் எனும் இதழின் பெயர் அடிகளாரால் அறிவுக்கடல் எனத் தமிழாக்கம் செய்யப்பட்டது. 6. ஆங்கிலத்தினிற்... - The Oriental Mystic Myna. 7. தாளிகை - தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழம், செந்தமிழ்ச் செல்வி முதலியன. 99 ஆக்கையை யுயிர்பெற்ற நோக்கைப் பகுத்தறிவின் ஆரவாய்ந் தம்மையிம்மை அன்றிமறு மையிருள் உலகின்ப உலகுகள் அரியபெரு முத்திமற்றும் வீக்கமுறு மாணவம் வினைமாயை பிறவுமென விள்ளுவ நுனித்துணர்ந்து வீழ்நாள் படாதிம்மை வாழ்க்கையை மேற்கொண்டு வேண்டல்வேண் டாமையிலா 1V¡bfh©l செம்மையன் நன்னெறியில் ஒழுகற் (கு) இயம்புதமிழிற் புதுமையாய் 2ïwªjã னிருக்குநிலை யென்னுநன் னூல்வகுத்(து) இறவாத புகழில் வாழுந் தேக்கமறு நின்னினிய தமிழொழுக் கேய்ப்பநற் சிறுதேர் cU£oaUns! செந்தமிழர் வாழ்வு பெற வந்தொளிர் செழும்பரிதி சிறுதேர் cU£oaUns! குறிப்புரை : 1. ஏ - பெருமிதம். 2. இறந்தபின் இருக்கும் நிலை - மரணத்தின் பின் மனிதர் நிலை - அடிகளாரின் நூல். 100 புகழ் கொண்ட பெருமநீ போற்றவளர் செம்மை பொருந்துநற் றிருநெறியொடும் புதுமைகொள் பழந்தமிழ் மேன்மேற் றழைந்தொளி பொலிந்தினிது நீடுவாழ நிகழ்கின்ற காலத்தும் முன்னையும் பின்னையும் நின்வழித் தொண்டு செய்யும் நிறைதமிழ்ப் பெரியோர்தம் புகழ்வாழ மற்றுநின் நிறுவனம் பலவாழநின் அகழ்வுற் றகன்றவுயர் நுண்ணறிவி னாலெமக்(கு) அருளிச்செய் பெருநூல்களும் ஆங்கவற் றுட்பொருள் தாங்கிவரு நூல்களும் ஆராய்ச்சி நெறியும்வாழ திகழ்கின்ற வள்ளுவர் ஆண்டுமுறை வாழநற் சிறுதேர் cU£oaUns! செந்தமிழர் வாழ்வுபெற வந்தொளிர் செழும்பரிதி சிறுதேர் cU£oaUns! குறிப்புரை : அடிகளார் தாம் போற்றி வளர்த்த சிவநெறியும் தமிழும் நீடு வாழ; அடிகளாரைப் பின்பற்றி அவர்வழி நின்று பணியாற்றிய - யாற்றும் பெருமக்கள் புகழ் வாழ; அடிகளார் தாம் நுணுகி ஆராய்ந்து அருளிச் செய்த நூல்களும், அந் நூல்களை அடியொற்றி எழுந்த நூல்களும் ஆய்வுகளும் வாழ; அடிகளார் வகுத்தளித்த திருவள்ளுவர் ஆண்டுமானம் வாழ - என்னுமாறு. மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ் முற்றும் மறைமலையம் (பொருள்வழி பிரிக்கப்பட்டு - காலநிரல் செய்யப்பட்டவை) மருத்துவம்: 1. பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் 1921 2. மக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கை 1, 2 1933 மறைபொருளியல்: 3. மரணத்தின் பின் மனிதர் நிலை 1911 4. யோக நித்திரை அல்லது அறிதுயில் 1922 5. மனித வசியம் அல்லது மனக்கவர்ச்சி 1927 6. தொலைவிலுணர்தல் 1935 இலக்கியம்: 7. சாகுந்தல நாடகம் 1907 8. சாகுந்தல நாடக ஆராய்ச்சி 1934 இதழ்கள்: 9. ஞானசாகரம் 1902 சங்க இலக்கிய ஆய்வு: 10. முதற் குறள் வாத நிராகணம் 1898 11. முல்லைப்பாட்டு ஆராய்ச்சி உரை 1903 12. பட்டினப்பாலை ஆராய்ச்சி உரை 1906 13. முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவர் 1936 14. திருக்குறள் ஆராய்ச்சி 1951 பாடல்: 15. மறைமலையடிகள் பாமணிக்கோவை 1977 16. முனிமொழிப் பிரகாசிகை 1899 நாடகம்: 17. அம்பிகாபதி அமராபதி 1954 புதினம்: 18. குமுதவல்லி நாகநாட்டரசி 1911 19. கோகிலாம்பாள் கடிதங்கள் 1921 கடிதம்: 20. மறைமலையடிகளார் கடிதங்கள் 1957 கட்டுரை: 21. சிந்தனைக் கட்டுரைகள் 1908 22. அறிவுரைக் கொத்து 1921 23. சிறுவர்க்கான செந்தமிழ் 1934 24. இளைஞர்க்கான இன்றமிழ் 1957 25. அறிவுரைக்கோவை 1971 26. உரைமணிக் கோவை 1972 27. கருத்தோவியம் 1976 சமயம்: 28. திருவொற்றியூர் முருகர் மும்மணிக்கோவை 1900 29. சோமசுந்தரக் காஞ்சியும், காஞ்சியாக்கமும் 1901 30. கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா 1929 31. மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 1930 32. மாணிக்கவாசகர் மாட்சி 1935 33. திருவாசக விரிவுரை 1940 34. மாணிக்கவாசகர் வரலாறு 1952 35. சோமசுந்தர நாயகர் வரலாறு 1957 தத்துவம்: 36. சித்தாந்த ஞானபோதம்- சதமணிக் கோவை 1898 37. துகளறு போதம் உரை 1898 38. வேதாந்த மத விசாரம் 1899 39. வேத சிவாகமப் பிரமாண்யம் 1900 40. சைவசித்தாந்த ஞானபோதம் 1906 41. சிவஞான போத ஆராய்ச்சி 1958 வரலாறு: 42. இந்தி பொது மொழியா? 1937 சமூக இயல்: 43. பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும் 1906 44. சாதிவேற்றுமையும் போலிச்சைவரும் 1923 45. வேளாளர் நாகரிகம் 1923 46. பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம் 1938 47. தமிழர் மதம் 1941 மறை மலையடிகள் நாட்குறிப்புகள் 1988 பொது நிலைக் கழக உரை விவேகாமிர்தம் பிரசண்ட மாருதம் வேதாந்த சித்தாந்தம் சைவ சமயப் பாதுகாப்பு ஆங்கில நூல்கள்: 48. Oriental Mystic Myna bi Monthly 1908 49. Ocean of Wisdom’ bi Monthly 1935 50. The Tamilian and Aryan Forms of Marriage 1936 51. Ancient and Modern Tamil poets 1937 52. Can Hindi be the Lingu franca of India? 1937 53. Saiva Siddhanta as a Philosophy of Practical Knowledge 1940 54.The Concemption of God Rudhra