kiwkiya«-- 31 (தனித்தமிழியக்க நூற்றாண்டு வெளியீடு) சமூக இயல் - 3  தமிழர் மதம் ஆசிரியர் மும்மொழிச்செம்மல் மறைமலையடிகள் பதிப்பாளர் கோ. இளவழகன் தமிழ்மண் முதல்பதிப்பு : 2015 பக்கம் : 24+320 = 344 விலை : 430/- மறைமலையம் - 31 ஆசிரியர் மும்மொழிச் செம்மல் மறைமலையடிகள் பதிப்பாளர் கோ. இளவழகன் வெளியீடு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. bjh.ng.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: jhŸ : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 344 f£lik¥ò : இயல்பு  படிகள் : 1000 üyh¡f« : வி. சித்திரா   அட்டை வடிவமைப்பு : கவிபாகர்   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006, மற்றும் பிராசசு இந்தியா, திருவல்லிக்கேணி - 600 005. யான் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஏராளமான நூல்களில் ஆராய்ந்து கண்ட முடிவுகளை நூல்களாக எழுதியிருக்கின்றேன். பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்தது போல, உண்மை காணும் உணர்ச்சியினால் நடுநிலை நின்று ஆராய்ந்திருக்கின்றேன். ஒருவர் தம் வாழ்நாள் முழுவதும் கற்றாலும் அறியமுடியாத உண்மைகளை எல்லாம் எளிதாக எழுதி வைத்திருக்கின்றேன். எல்லாரும் தமிழ் இலக்கியங்கள் யாவற்றையும் கற்கும் தொல்லையை மேற்கொள்ள வேண்டிய தில்லை, அது முடியவும் முடியாது, தேவையுமில்லை. எல்லா நூல்களிலும் உள்ள சிறந்த உண்மைகளை எல்லாம் பிழி சாறாக யான் வடித்துத் தந்துள்ளேன். என் நூல்களைப் படித்தாற்போதும், அதனால், தமிழ் முழுதுங் கற்ற பயனை அடையலாம். - மறைமலையடிகள் சான்றிதழ் நாகை - திரு. வேதாசலம் பிள்ளையவர்கள் ஒருபோது திருவனந்தபுரத்தில் ஒருவாரந் தங்கியிருந்த ஞான்று, அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்ததற்குச் சாலவும் மகிழ்கின்றேம். வருங்காலத் தமிழ் மக்களுக்கு மட்டற்ற தமிழ்ப்புலமை மிகுந்து வருமென்பதற்குச் சான்றாக இவர் இளமையிலேயே நுண்மாண் நுழைபுலம் உடையராயிருப்பது களிப்பூட்டுகிறது. மற்றும் தாய்மொழிப் பற்றுக் குறைந்த இக்காலத்தில், இவர் தமது நுண்ணறிவைத் தமிழ் நூல்களில் முற்றும் செலுத்தி நன்காராய்ந்துள்ளதும் பாராட்டற்குரியது. பத்துப்பாட்டு, கலித்தொகை, சீவகசிந்தாமணி முதலிய பழந்தமிழ் நூல்களில் ஆராய்ச்சியுடன் கூடிய இவர்தம் அறிவுடைமையே என்னை இவர்பால் மதிப்புறுமாறு செய்தது. தமிழாசிரியர்களின் தொகை சுருங்கிவரும் இக்காலத்தில் இவருக்குச் சிறந்த ஊக்கமளித்தால் இவர் ஒரு சிறந்த தமிழாசிரியராவாரென்று நாம் உறுதியாக நம்புகின்றேம். முன்னரே இரண்டாந்தரக் கல்லூரிகளில் தமிழ்கற்பிக்கப் போதுமான அளவு இலக்கண இலக்கியத்திற் சிறந்த தேர்ச்சி பெற்றவராயிருக்கின்றாரெனக் கருதுகின்றோம். Fiwªj msÉš v~¥, V., (F.A.) வகுப்புக்குரிய ஆங்கில அறிவு பெற்றாரானால் மேல்நாட்டு முறைப்படி தமிழ் நூல்களை வரலாற்றுச் சான்றுடன் ஆராயவும் எழுதவும் வல்லுநராவாரென்பது எம்முடைய சிறந்த எண்ணம். வண்ணாரப்பேட்டை மனோன்மணீயம் பெ. சுந்தரம்பிள்ளை திருநெல்வேலி தமிழ்த்தாய் வாழ்த்தின் ஆசிரியர் 2-12-1895 (இந்த நற்சான்று திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் சுந்தரம் பிள்ளையவர்கள் பேராசிரியராக இருந்தபோது கொடுக்கப் பெற்றது.) மறைமலைய மாண்பு நுழைவுரை தனித்தமிழ் என்ற அளவில் முன் நிற்கும் முழுதுரு எழில்வடிவர் தவத்திரு. மறைமலையடிகளாரே ஆவர்! முந்தை அடிகள் ஆகிய இளங்கோவடிகள், `முத்தமிழ் அடிகள் என முழக்கமிட நின்றார்! இருபதாம் நூற்றாண்டு மறைமலையடிகளோ, தனித்தமிழ்த் தந்தை என்னும் தகவார்ந்த பெருமை பெற்றார். தமிழ் தனித்து இயங்காது என்றும், வடமொழி வழியது என்றும், வடமொழித் துணையின்றி இயங்காது என்றும், உலக மொழிகளுக் கெல்லாம் தாய்மொழி வடமொழியே என்றும் தமிழ்க் கல்வி வல்ல பெற்றியரும் முற்றும் மயங்கி யுரைக்க, வடமொழி உலக மொழிகளுக்குத் தாய்மொழி என்றால், அதற்கும் மற்றை மொழிகளுக்கும் தந்தை மொழி தமிழே என்று கூறிய வடலூர் அடிகளார் புகழ் பரப்பாளராய்ப் பொதுநிலைக் கழகம் கண்ட தவ அடிகளார், தனித்தமிழ்த் தந்தை என்னும் பெருமை பெற்ற மறைமலையடிகளார் ஆவர். சிவனியம் சார்ந்த பெருமக்களும், பேரறிவர்களும் கூட, ஒப்பாராய், `தனித்தமிழ் (தனித்து அமிழ்) என்று பழிக்கவும் இழிக்கவும், துணிந்து நின்று, அவர் வெள்க; வெள்ளிடை மலையாகத் `தனித்தமிழ் என்பதை நிலை நாட்டிய நிறைமலை, மறைமலையடிகளாரே! சிவனிய மடத்தினரும், வடமொழி வல்லாரும், `தொல் காப்பியக் கடல் எனப் புகழப்பட்டாருமாம் சாமிநாத தேசிகர், நாணமின்றி, ஐந்தெழுத்தால் ஒருபாடை என்று அறையவே நாணுவர் அறிவுடையோரே; யாமும் அதுவே என்றும், ஒன்றே ஆயினும் தனித்தமிழ் உண்டோ? என்றும் - எழுதிப் பரப்பினாராக, ஒரு சொல் தானும் வேற்றுச் சொல் விரவா நூல் யாம் செய்வேம் என்று ஐம்பான் நான்கு நூல்கள் கலைமலி பேழையாய் எழுதிக் காட்சிப் படுத்திய மாட்சியர் மறைமலையடிகளார்! தொல்காப்பியக் காவல் தமிழ் மொழிக்கு வாய்த்த தொல்காப்பிய வளநூல், வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே (884) என்றும், மொழி பெயர்ப்புச் செய்தலிலும் முறைமை பேண வேண்டும் என்பதை, மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தல் (1597) என்றும், பேச்சு வழக்கில் ஒரு கால் வேற்றுச்சொல் வந்து விடினும், மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை (1590) என்றும் - வரம்பாணை செய்தும், அச் செவ்வியல் வழித்தடம் சிதைந்தும் சீரழிந்தும், சேறும் சகதியும் நாறும் சிறுமையும் குறுமையும் வழிவழியே எய்த மூவாயிரம் ஆண்டுகளாய், அயலோர் சூழ்ச்சியாலும் திறவோர் மயக்காலும் ஏற்பட்ட அழிபாடுகளை எல்லாம் தாமே ஓர் இயக்கமாய் இருந்து, விழிப்பும் எழுச்சியும் ஊட்டியவர் மறைமலை அடிகளே என்பதால், ஆரியத்தினின்று தமிழை மீட்டெடுப்ப தற்காக அரும் பாடுபட்டு இலக்கிய இலக்கண மரபோடு யான் கற்ற மொழிகள் முப்பது என்னும் பாவாணர், மூவா யிரமாண்டு மோதும் வடமொழியால் சாவாம் தகைநின்ற தண்டமிழை - மேவாக் குமரித் தனிநிலைக்குக் கொண்டுவந்த அப்பர் அமரர் மறைமலை யார் எனப் பாடிப் பரவினார். `தனித் தமிழ்த் தந்தையார் என்ற பாராட்டும் இப் பாட்டின் தலைப்பில் வழங்கினார். நுண்ணிய நூல்பலவும் கற்பதே நோன்பாக எண்ணிய வாழ்நாள் எலாமளித்துப் - பண்ணிய செந்தமிழ்நூல் ஒவ்வொன்றும் செப்பும் கடலறிவை பைந்தமிழ் காக்கும் படை என அடிகள் கல்வி மேம்பாட்டையும் கலைத் திறப் படைப்புகளின் மேம்பாட்டையும் பாவேந்தர் பாரதிதாசனார் பாராட்டுகிறார். பல்துறை ஆற்றல் அடிகளின் பல்துறை ஆற்றலை 1. பேராசிரியர், 2. பெரும் புலவர், 3. பாவலர், 4. ஆராய்ச்சியாளர், 5. மும்மொழிப் புலவர், 6. மொழிபெயர்ப்பாளர், 7. சொற்பொழி வாளர், 8. எழுத்தாளர், 9. பல்கலைச் செல்வர், 10. தனித்தமிழ்த் தந்தையார் என்று பாவாணர் பகுத்துக் காட்டுகிறார். மேலும் அவர் தம் நுண்மாண் நுழைபுலத்தை பனிமலை முகட்டின் உயர்வும், நீல ஆற்றின் நீளமும் அமைதி வாரியின் ஆழமும் அமைந்தவர் மறைமலையடிகள் என்கிறார். (பனிமலை - இமயம்; நீல ஆறு - நைல்; அமைதிவாரி - பசிபிக்கு மாகடல்). அடிகளார் நூல்கள் அடிகள் பன்மாண் மாத்தமிழ் நூல்களை, நூலக இயக்கத் தந்தை அரங்க நாதரும், இந்நாள் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியரும் அந்நாள் நூலகருமாகிய திருமிகு இரா. முத்துக் குமாரசாமி அவர்களும் 14 வகைமைப்படுத்தி வைத்தமை பெரும் பாராட்டுக்கு உரியதாம் அவை, 1. மருத்துவம் 2. மறைபொருள் 3. இலக்கியம் 4. இதழ்கள் 5. சங்க இலக்கியம் 6. பாடல் 7. நாடகம் 8. புதினம் 9. கடிதம் 10. கட்டுரை 11. சமயம் 12. தத்துவம் 13. வரலாறு 14. சமூக இயல் என்பன. முதற் குறள் வாத நிராகரணம் என்னும் மறுப்பு நூலே, அடிகளின் முதல் நூலாக வெளிப்படுகின்றது (1898) அந்நூன் மறுப்பு நயமே நாகை அடிகளை - பல்லவபுர அடிகளாக -தனித்தமிழ் அடிகளாக ஆக்க அரும் பெரும் தூண்டல் ஆயிற்றாம். அடிகளார் வரலாறு: கீழ்கடல் சார் நாகப்பட்டினத்தைச் சார்ந்த சிற்றூர் காடம்பாடி, ஆங்கு வாழ்ந்த அருந்தவப் பெருந்தகையர் சொக்கநாதர் - சின்னம்மையார்! இவ்விணையர் கொடையாய்த் தமிழன்னை செய்த தவப் பேற்றால் பிறந்தவர் வேதாசலம். பிறந்த பெரு மங்கல நாள் கி.பி. 15.07.1876. சொக்கநாதர், சித்தமலம் அறுவித்த சித்தமருத்துவர்; அறிவ மருத்துவம் என்பதும் அது. அத்தொழில் அவர்க்கு வளத்தை வழங்கியது. அதனால் வேதாசலம் குறைவற வாழ்ந்தார். நாகப்பட்டினத்து வெசிலியன் மிசன் பள்ளியில் ஐந்து வகுப்புவரை பயின்றார்; சிறந்த மாணவராக விளங்கினார். ஆறாம் வகுப்பில் சேரும் நிலையில், அருமைத் தந்தையார் இயற்கை எய்தினார். ஆயினும் அன்னையார் உறுதியால் கல்வியைத் தொடர்ந்தார். அப்பள்ளியில் ஆங்கிலக் கல்விக்கு இருந்த முதன்மை தமிழுக்கு இல்லை. கிறித்தவ சமயம் பற்றி அன்றிச் சிவனியம் பற்றி அறிய வாய்ப்பில்லை என்னும் இரண்டு குறைகளையும் இளமையிலேயே உணர்ந்தார். வீட்டிலேயே தமிழ் நூல்களைப் பயின்று முதற் குறையையும், நாகையில் இருந்த இந்துமதாபிமான சங்கம் வழி இரண்டாம் குறையையும் நீக்கினார். பள்ளியிலும் குறையறக் கற்றார். வருவாய்க் குறையால் வாடும் அன்னைக்குச் சுமையாய் இல்லாமல் தனியே பயில்வதே இனியவழி என எண்ணி, நாகையில் புத்தக வணிகராக விளங்கிய நாராயண சாமியார் புலமையாலும் சிறந்து விளங்கியவர். ஆதலால் அவரிடம் தனியே இலக்கிய - இலக்கண - சமய நூல்களைக் கற்றார். நாராயணரின் முன்னை மாணவர் பேரா. மனோன்மணீயம் பெ. சுந்தரனார் என்பதையும் அறிந்தார். ஒன்பதாம் வகுப்பொடு பள்ளிக் கல்வியை நிறுத்தித் தனிக்கல்வியே கற்றார். தொல்காப்பியம், தொகை நூல்கள், திருக்குறள், திருச்சிற்றம்பலக் கோவை, இறையனார் அகப் பொருள் எனக்கற்றார். அடிகளார் இயற்றிய திருவொற்றி முருகர் மும்மணிக் கோவை முகப்பில், எமது பதினைந்தாம் ஆண்டில் முறைப்படி துவங்கிய தமிழ்ப் பயிற்சியானது எமது இருபத்தோராம் ஆண்டிற்குள் தொல்காப்பியம், திருக்குறள், சிற்றம்பலக் கோவையார் என்னும் மூன்று நூல்களையும் முழுதும் நெட்டுருச் செய்து முடித்தேம் என்றும் வேறுசில நூல்களையும் முழுவதாக ஓதியதையும் கூறி, இங்ஙனமாக, விழுமிய தமிழ்ப்பழ நூல்களில் எமது கருத்து ஈர்ப்புண்டு நின்று பயின்ற பயிற்சியினாலேயே செய்யுளும் உரையும் தனிச் செந்தமிழ் நடையில் எழுதும் திறம் எமது இளமைப் பருவத்திலேயே எமக்கு வாய்ப்ப தாயிற்று என்கிறார். அவ்வாண்டு கி.பி. 1897. நாகை இந்து மதாபிமான சங்கத்திற்குச் சைவ சித்தாந்த சண்ட மருதம் என்னும் விருது பெற்ற சோமசுந்தர நாயகர் வந்து சொற்பொழிவாற்றினார். அவர் பொழிவில் வந்த கருத்தொன்றனை மறுத்து ஒருவர் எழுத, அதற்கு மறுப்பாக முருகவேள் என்னும் புனைபெயரில் மறுப்புரை எழுதினார். அதனைக்கற்ற நாயகர், மீளப் பொழிவுக்கு வருங்கால் முருக வேளைச் சந்திக்க விரும்பினார். அச்சந்திப்பின் பயனே உன்னை விரைவிலே சென்னைக்கு வருவிப்போம். நீ அந்தப் பக்கங்களில் இருப்பதே நல்லது என்று கூறினார். இதுவே அடிகளார்க்குச் சென்னை வாழ்வு அமைய முதல் தூண்டல் ஆயிற்று. அடிகளுக்குப் பதினேழாம் வயதில் (1893) திருமணம் நிகழ்ந்தது. துணைவி தம் மாமன் மகள் சவுந்தர வல்லி என்பார். திருவனந்தபுரம் நாராயணசாமி அவர்களின் முன்னை மாணவராம் பேரா. சுந்தரனார் திருவனந்த புரத்தில் இருந்தார். அவரியற்றிய மனோன்மணிய நாடக நூல் கற்று அதன் அருமை கண்டு, பேராசிரியரைக் காணவிரும்பினார். அதனால் தம் ஆசிரியரோடு திருவனந்தபுரம் சென்று பேராசிரியரோடு உரையாடினார். வேதாசலனார் இளம் பருவத்தையும் மூதறிவையும் அறிந்த சுந்தரனார் வியப்புற்றுத் தகுதிச் சான்று ஒன்று வழங்கினார். சிறிது காலம் திருவனந்த புரத்தில் ஆசிரியப் பணியும் செய்தார். அவ்விடத்தின் பருவநிலை ஒவ்வாமையால் நாகைக்கே திரும்பினார். சென்னை: சோமசுந்தரனார் முன்னே கூறியபடி வேதாசலரைச் சென்னைக்கு அழைத்து அறிஞர் நல்லுசாமி என்பார் நடாத்திய சித்தாந்த தீபிகை என்னும் இதழாசிரியர் ஆக்கினார். பின்னே சென்னை கிறித்தவக் கல்லூரிக்கு ஒரு தமிழ்ப் பேராசிரியர் வேண்டியிருத்தல் அறிந்த சோமசுந்தரனார் வேதாசலனா ர அக்கல்லூரிப் பேராசிரியராக்க முயன்றார். அதுகால் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தவர் வி.கோ சூரியநாராயண சாத்திரியார் என்னும் பரிதிமால் கலைஞர். கல்லூரி முதல்வர் வில்லியம் மில்லர் என்பார். 9.3.1898 இல் வேதாசலனார் பணியேற்றார். அங்குப் பதின்மூன்று ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அக்கல்லூரிக் காலத்தே இளங்கலை மாணவர்க்குப் பாடமாக இருந்த முல்லைப்பாட்டு (1903) பட்டினப்பாலை (1906) என்பவற்றுக்கு ஆராய்ச்சி உரை எழுதினார். அவ்வுரை நூலை வாங்கிக் கற்ற மாணாக்கரும் ஏனைத் தமிழறிஞரும் புதுமுறையாக எழுதப்பட்ட அவ்வுரைப் பாங்கினைப் பின்பற்றிப் பழைய தமிழ் நூல்களை ஆராய்வதில் கிளர்ச்சி பெறலானார். இப்புதுமுறை உரை, தமிழ் நூலாராயும் வகைகளை இனிது விளக்கி அறிஞர் பலர்க்கும் அக மகிழ்ச்சி யினை விளைத்தமை கண்டு இனி, இத்தகைய உரைகளையே எழுதுதல் வேண்டும் என எமதுள்ளம் பெரிதும் விழைந்தது என்கிறார். சென்னைப் பல்கலைக் கழகத்தார்ஆங்கிலமும் வட மொழியும் கட்டாயமாகப் படித்தல் வேண்டும் என்றும், தாய்மொழிப் பாடத்தை விருப்பப் பாடமாகக் கற்பிக்கலாம் என்றும் ஒரு தீர்மானம் ஆட்சிக்குழுவில் கொண்டு வந்தனர். ஒரு பாடம் விருப்பப்பாடம் எனப்பட்ட பின்னர் அதனைக் கற்க வருவார் எவர்? தமிழ் கற்கும் மாணவர் எண்ணிக்கை குறையவே ஆசிரியப் பணியிடமும் குறைய வேண்டுவதாகி, அடிகளார் 31.1. 1911 ஆம் நாளுடன் கல்லூரிப் பணியை முடிக்க வேண்டிய தாயிற்று. மாணவர்: இக்காலத்தில் அடிகளின் மாணவராக இருந்தாருள், தணிகைமணி செங்கல்வராயர், இரசிகமணி டி.கே.சி, நாவலர் ச.சோ. பாரதி, பேரறிஞர் ச. வையாபுரியார் முதலோர் சிலர். தணிகைமணியின், தேவார திருவாசகச் சொல்லடைவு ஒரு பிறப்பளவில் செய்யக் கூடியதா? நாவலர் ச. சோ. பாரதியாரின் ஆய்வுத் துணிவு எத்தனை கசடுகளை நீக்கியது? வையாபுரியார், கால ஆய்விலும், வடமொழிப் பிடிவாதத்திலும் தம்மைச் சால்பு ஆய்வில் இருந்து விலக்கினாலும், சங்க இலக்கியப் பதிப்பு, நிகண்டுப்பதிப்பு, பல்கலைக் கழக அகரமுதலிப் பதிப்பு இவற்றைச் செய்த அருமை என்ன? புறத்திரட்டு, களவியல், காரிகை ஆயவற்றின் பதிப்புச் சிறப்பு என்ன? இவர்கள் பணியும் அடிகளாரைத் தழுவுதல் உண்மை தானே! சமரச சன்மார்க்கம் கல்லூரிப் பணியில் இருந்து வீடுபெற்ற அடிகளார், பல்லவபுரத்தை வாழ்விடமாகக் கொண்டார். சமரச சன்மார்க்க நிலையம் தோற்றுவித்தார். எல்லாச் சாதியார்க்கும் எல்லாச் சமயத்தார்க்கும் அங்கீகாரமான சீவகாருணிய ஒழுக்கத்தையும், சமரச சன்மார்க் கத்தையும் பிற்காலத்தில் மிக வலியுறுத்திப் போதித்த ஆசிரியர் ஸ்ரீமத் இராமலிங்க சுவாமிகளே ஆவார். அச்சுவாமி கள் வலியுறுத்திய அவ்விரண்டு கொள்கைகளையும் எங்கும் வலியுறுத்தி விளக்கி அன்பர்களை ஒருங்கு கூட்ட வேண்டி அச்சுவாமிகள் இட்ட பெயராலேயே, `சமரச சன்மார்க்க நிலையம் என்னும் இது தாபிக்கலாயிற்று. இந்நிலையத்திற்கு முன் ஆசிரியர் திருவள்ளுவ நாயனார்; பின் ஆசிரியர் இராமலிங்க சுவாமிகள் ஆவர் என்று பெயரீடு செய்து கொள்கைகளையும் வகுக்கிறார். குடும்பம் 1898இல் அடிகளார் சென்னைக்கு வரும்போது அவர்தம் அன்னையார் சின்னம்மையார், துணைவியார் சவுந்திரம் அம்மை யார், செல்வி சிந்தாமணி, அடிகளார் என்னும் நால்வரைக் கொண்ட குடும்பமாக இருந்தது. 1911இல் பல்லவ புரத்தில் குடிபுகும் போது நீலாம்பிகை, திருஞான சம்பந்தம், மாணிக்கவாசகம், திருநாவுக்கரசு, சுந்தர மூர்த்தி என்னும் மக்களும் கொண்ட ஒன்பதின்மர் குடும்பமாக இருந்தது. பல்லவுரம் புகுந்த பின் திரிபுர சுந்தரி பிறக்கப் பதின்மன் குடும்பம் ஆயிற்று. இந்நிலையிலேயே 27.08.1911இல் சைவத் துறவியர்க்குரிய துறவாடை (காவி) கொண்டு சுவாமி வேதாசலம் ஆனார். சுவாமி வேதாசலம் என்பதன் தனித்தமிழாக்கமே மறைமலையடிகள் என்பது வெளிப்படை. முன்னேயே அவரை அடிகள் என்றது அவர்தம் மாண்பு கருதியேயாம். மீள்பார்வை நாம் மீள்பார்வை ஒன்றுபார்க்க வேண்டும். அடிகள் 21ஆம் அகவையிலேயே தனித்தமிழ் ஆய்வுத்திறம் கைவரப் பெற்றார். 1903, 1907 ஆகிய ஆண்டுகளில் முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை ஆகிய நூல்களுக்கு ஆய்வுரை வழங்குங்கால் இதிலுள்ள சொற்கள் இத்தனை; இவற்றுள் செந்தமிழ்ச்சொல் இத்தனை; வேற்றுச் சொல் இத்தனை - என அறுதியிடுகிறார். ஆதலால், தனித்தமிழ் என்னும் தோற்றம் 1916 ஆம் ஆண்டில் நீலாம்பிகையார் தூண்டலால் ஏற்பட்டமை என்பது, அகத்தே அமைந்து கிடந்த வித்து, முளை விட்டு வெளிப்பட்ட நிலையாம். அவ் வெளிப்பட்ட நிலையும் உடனே பற்றிப் படரவில்லை! மேலும் சில ஆண்டுகளின் பின்னரேயே சமசர சன்மார்க்க நிலையம், பொதுநிலைக் கழகமாகவும், ஞானசாகரம் அறிவுக் கடலாகவும், சுவாமி வேதாசலம் மறைமலையடிகள் ஆகவும் படிப்படியே கிளர்கின்றனவாம்! ஓர் அரிய அமைப்பு உருவாகும் நிலையும், ஓர் அரிய கண்டு பிடிப்பு உலகவர் அறிய வெளிப்படலும், அவை இயக்கமாகவும் பயனாகவும் ஆகின்ற நிலையும் பற்றிய விளக்கம், அடிகளார் தனித்தமிழ் இயக்க வரலாற்றில் அடங்கியுள்ளதாம்! எதிரிடைத் தூண்டல்: மேலும் ஒன்று: ஒரு நேரிடைத் தூண்டலினும் எதிரிடைத் தூண்டல் வலிமை மிக்கது என்பதும், உள்ளத்து உறுதியை வெள்ளப் பெருக்காய் வெளிப்படுத்த வல்லது என்பதும் தெளிவாம். ஒன்றே ஆயினும் தனித்தமிழ் உண்டா? என்று கற்றறிந்த தமிழர் ஒருவரே வினாவி நகைத்தல், பெற்ற தாய் மொழிப் பிறவிக்கு உற்ற தகைமை ஆகாது என்பதும், அதனை உணர்ந்த அப்பிறவி பாம்பன் குருபாத அடிகள் போல் சேந்தன் செந்தமிழ் என்ன ஒரு நூலியற்றித் தமிழ் தனித்து இயங்கவல்ல தனி உயர் மொழி என்று நிலைநாட்டியிருப்பின் வழிபடத்தக்க பிறவியாய் அமைந்திருக்கும்! அப்பேறு அதற்கு வாய்க்காமை, துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம் (குறள் 263) என்னும் வள்ளுவர் வாய் மொழிப்படி, தனித்தமிழ்த் தந்தைப் பேறு மறைமலையடிகட்கு வர இருப்பதற்கே நேரிட்ட நேர்ச்சியாம் என்க. இயக்கம் அடிகள் இயக்கம் ஆலமரமெனக் கால்பல கொண்டு அகல அகல விரியத் தனித்தமிழ் இயக்கமாய், உலகத்தமிழ்க் கழகமாய், பாவலரேறு தமிழ்க் களமாய், சேரர் கொற்றமாய், தமிழ்க்காப்புக் கழகமாய், தமிழ்ப் பாதுகாப்புக் கழகமாய், தனித்தமிழ் இலக்கியக் கழகமாய், தமிழ் வளர்ச்சிக் கழகமாய், மறைமலையடிகள் மன்றமாய், தமிழ்க்காவல் குழுவாய், இயற்றமிழ்ப் பயிற்றகமாய், பாவாணர் தமிழ் இயக்கமாய் ஆங்காங்கு முகிழ்த்து முனைப்பொடு கடனாற்ற ஏவியதாம். நூலகம் அடிகள் நூற்றொகை, அருமணிக் குவையன்ன நாலாயிரம் நூல்களைக் கொண்டது. எதிரது உணர்ந்து, சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழகத்திற்கு முற்கொடையாக வழங்கியதால், நாலாயிரம் நாற்பதாயிரமாய் மேலும் மேலும் விரிந்து மறைமலையடிகள் நூலகப் பெயரால், பெருமைமிகு வள்ளலார் முதற்கண் பொழிவு செய்த பெரியவர் சோமு அவர்கள் இல்லமே வாய்க்க உலக வளமாக்கியதாம்! அதன் வழியாகவே அடிகள் தாமே வெளியிட்ட நூல்களும், வெளியிடாமல் கழக வழி வெளிவந்த நூல்களும், அடிகள் காலத்திற்குப் பின் வெளிவந்த நூல்களும் ஆகிய முழுமைத் தொகுதிகளும் கி.பி. 1898 முதல் 1969 வரை முதற்பதிப்பாக வெளிவந்தவை. அவற்றுள் படிகள் கிட்டுதற்கு அரியவையும் உண்டு. அடிகள் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப் பட்ட பேற்றால், இன்று வாய்த்த நூல்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக வழங்கும் பெருவாய்ப்பைத் தமிழ்மண் பதிப்பகம் பெற்றதாம். வெள்ளச் சேதம் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு பதிப்பகத்துள் புகுந்து அச்சு அடிக்கப்பட்டதும், அடிக்கப்பட இருந்ததும், கணினிப்படுத்தி வைத்த குறுவட்டுகளும், மூலநூல்களும் என வாரி அள்ளிக் கொண்டு போனமை, களத்துக்கு வந்த கதிர் மணிகள், களஞ்சியத்திற்கு வாராமல் போய, பேரழிவு ஒப்பதாம். ஆதலால், நூல்களை மீளத் தேடவும், கணினிப்படுத்தவும், குறுவட்டு ஆக்கி அச்சிடவும் என மும்மடங்குப் பணியும் பேரிழப்பும் பெருத்த அவலமும் உண்டாக்கிற்றாம். அந்நிலையில், ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழா துஞற்று பவர் என்னும் வாய்மொழியை வாய்மை மொழியாக்கிய துணிவுச் செல்வர் இளவழகனாரும் அவர் குடும்பத்தவரும் ஆவர்! முன்னறிவிப்புத் திட்டப்படி நூலுக்கு ஆர்வமாய்ப் பணம் செலுத்தியோர்க்கும் நூல் காலத்தில் கிட்டா உளைச்சல் இல்லாமல் போகாதே! அவர்களும் அமைந்து தாங்கல், இயற்கை இயங்கியல் வழியதாம். வெளியீடுகள் தமிழ்மண் பதிப்பகம் தமிழ்மொழி இன மண்வளம் - வளர்ச்சி மீட்டெடுப்பு - என்பவற்றை முன்வைத்துத் தமிழ்ப் போராளி இளவழகனாரால் தொடங்கப்பட்டதால், பேரிழப்புக்காம் எனத் தெளிவாகத் தெரிந்தும், இசைக் கலைக்கு வாய்த்த ஒப்பற்ற களஞ்சியமாய் வாய்த்த - கருணாமிர்த சாகரத்தை வெளியிட்டதாம்! முன்னை வந்த முதற்பகுதி பேரிழப்பாக்கியும் அதன் பின்னைப் பகுதிகளையும் அரிதின் முயன்று வெளியிட்டது! மொழிஞாயிறு பாவாணர்; ஈழத்து அறிஞர் ந.சி. கந்தையா; வரலாற்றறிஞர் சாமிநாத சர்மா, உரைவேந்தர் ஔவை சு.து; நாவலர் ந.மு.வே; பண்டித வித்துவான் தி.வே. கோபாலர்; சாமி சிதம்பரனார்; மயிலை சீனி. வேங்கட சாமியார்; பேரறிஞர் க. வெள்ளை வாரணனார்; பாவலர் குழந்தையார்; பாவலர் முடியரசனார்; பாவேந்தர், தொல் பொருள் கல்வெட்டு ஆய்ஞர் சதாசிவனார், சாத்தன்குளம் இராகவன் நூல்களையும் எளியேன் நூல்களையும் முழுமை முழுமையாக வெளியிட்டது. தொல்காப்பியம்- பாட்டு - தொகை - காப்பியம் - கீழ்க்கணக்கு - தமிழ்நாட்டு வரலாறு - ஆங்கிலம் வல்ல அறிஞர் இராம நாதனார் நூல்களையும், யாழ்ப்பாண அகராதி முதலாம் அகராதித் தொகுதிகளையும் வெளியிட்டது. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதிதொட்டு, இருபத்தோராம் நூற்றாண்டின் முற்பகுதி வரை வெளிவந்த - தமிழுக்கு ஆக்கமாம் நாட் டுடைமை ஆக்கப்பட்ட நூல்களை எல்லாம் - ஓரிடத்துப் பெற்று, ஒரு தனித்தமிழ் நூலகம் அமைக்கும் அளவுக்கு அச்சிட்டு வழங்கிய பெருமை இளவழகனார்க்கு உண்டு. அவரே அன்றி அவர் துணையையும் மக்களையும் உறவையும் அன்பையும் நண்பையும் ஒருங்கே இணைத்து, அறிஞர் பெருமக்கள் பலர் அரவணைப்பையும் வாய்ப்பக் கொண்டு வாழும் இயல்பு அவர்க்கு வாய்த்தலால் மட்டுமே, இவ்வாறு செயற்கரிய செய்ய வாய்த்ததாம் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்பவரும் அவர். மறைமலைய மாண்பு மறைமலையம், தனித்தமிழ் இயக்கம்! தமிழ்த் தனிப் பெருவளம்! முத்தமிழ்ச் சுரப்பு! சீர்திருத்தச் செழுமை! வாழ்வியல் வளம்! கலைச் சொல்லாக்கக் களஞ்சியம்! பண்டைத் தமிழர் வரலாற்றுப் புதையல்! ஆய்வியல் வழிகாட்டி! பொழிவுப் பொலிவு! எழுத்தின் எழில்! மொழிக் காவல் முனையம்! முட்டறுக்கும் முழுதுறு கொடை! மீட்டெடுக்கும் மேதகைமை! அள்ள அள்ளக் குறையா அணிமணிக் குவியல்! எனல் மெய்மை விளக்கமாம்! புத்தகம் ஏற்றுப் பொலிவதே புத்தகம் வாழிய நலனே! வாழிய நிலனே! திருவள்ளுவர் நிலையம், இன்ப அன்புடன் 7, இராமன் தெரு, இரா. இளங்குமரன் திருநகர், மதுரை - 6 625006. மலைக்க வைக்கும் மறைமலையம்! பதிப்புரை மொழியே இனமக்கள் முன்னேற நல்ல வழியாம் அதனை வளர்க்க -பழியாய்த் தமிழயரத் தாழ்ந்தான் தமிழன் அவனே தமிழுயரத் தானுயர்வான் தான் மொழிப்பேரறிஞர் பாவாணர் அவர்கள் `மொழியின் வழியாகவே மொழிபேசும் மக்கள் முன்னேற முடியும் எனக் கூறுகிறார். உலகம் முழுதும் இவ்வுண்மை உணரப்பட்டுள்ளதை வரலாறு காட்டுகிறது. பாவாணரை அறிவுலகம் சரியாக அடையாளம் காண்பதற்குக் காரணமானது மறைமலையடிகளார் தந்த பாராட்டு! மறைமலையடிகள் (15.7.1876 - 15.9.1950) தேவநேயப் பாவாணர் (7.2.1902 - 16.1.1981) இருவரும் தனித்தமிழியக்கத்தைத் தாங்கி நிற்கும் தூண்களாகப் போற்றப்படுபவர்கள். மறைமலையடிகளார் 1916இல் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கம், நூற்றாண்டை எட்டியுள்ள மகிழ்வான நேரம் இது! தனித்தமிழியக்க நூற்றாண்டை நினைவு கூரும் வகையில், தனித் தமிழியக்கத் தந்தை மறைமலையடிகளாரின் எழுத்து, சொற்பொழிவு, நாட்குறிப்பு, கடிதங்கள் அனைத்தையும் `மறைமலையம் எனும் பெருந்தொகுப்பாகத் தமிழ்மண் பதிப்பகம் வழி வெளிக்கொணரத் திட்டமிட்டோம். உலகம் முழுதும் பரவி வாழும் உணர்வு குன்றாத தமிழர்கள் தந்த ஊக்குவிப்பு, இந்தப் பெருந்திட்டத்தை நிறைவேற்றித் தீரவேண்டும் எனும் உறுதியை எனக்குத் தந்தது. தனித்தமிழ் இயக்க அறிஞர்களும் ஆர்வலர்களும் அடிகளாரின் அரிய படைப்புகள் பலவற்றையும் தேடித்தேடி வழங்கி வழிகாட்டினர்; வலிமையூட்டினர். மறைமலையடிகளார் 1898ஆம் ஆண்டிலிருந்து எழுதி வந்துள்ளார். அறிவுக்கடல் (ஞானசாகரம்) இதழை 1902ஆம் ஆண்டிலிருந்து வெளியிட்டு வந்துள்ளார். அவரின் படைப்புகள் பெருவெள்ளமாய் வெளிவந்திருக்கின்றன. அச்சேறாதவை, பெயர் கூடக் கேட்டறியாதவை, பெயர் தெரிந்தும் பார்வைக்குக் கிட்டாதவை - எனப் பலவகையாய்க் கிடைத்தன அடிகளாரின் அரும்படைப்புகள்! அவற்றை `மறைமலையம் எனும் தலைப்பில் 34 தொகுப்புகளாக ஒருசேரப் பார்க்கும்போது, தமிழுலகம் வியப்படைவது உறுதி. மொழிநலம் இனநலம் பேணுதல் அன்றோ முழுநலம் பெறுவழி! நாம்பெறல் என்றோ? இப்படிக் கவலையோடு கேட்பார் பாவலரேறு பெருஞ் சித்திரனார் (10.3.1933 - 11.6.1995). அவரின் `தென்மொழி இதழ் 1.8.1959 இலிருந்து வெளிவரத் தொடங்கிய பின்புதான், தனித்தமிழ்த் திசை நோக்கி நூற்றுக்கணக்கானோர் நடைபோடத் தொடங்கினர். அதில் நானும் ஒருவன். பெருஞ்சித்திரனாரின் எழுத்து காட்டிய அடையாளத்தால், பாவாணர் நூல்கள் எனும் அறிவுப்புதையல் பலர் கைகளிலும் குடியேறியது. பாவாணர் நூல்கள் வலியுறுத்திப் பேசியதால், மறைமலை யடிகளாரைத் தேடிப்பயிலும் ஆர்வம் தமிழுலகில் புத்துயிர் பெற்றது. ஆரியத்தை எதிர்ப்பதிலும் சமற்கிருதத்தை விலக்கு வதிலுமே தமிழின மேம்பாடும் தமிழ்க் காப்பும் அடங்கியிருக்கிறது. அவ்வுணர்ச்சியைத் தமிழர் நெஞ்சங்களில் அரும்ப வைத்தது திராவிடர் இயக்கம்; மலர்ந்து விரியவைத்தது தனித்தமிழ் இயக்கம்! குமுக, அரசியல், பண்பாட்டு மலர்ச்சிக்கு இந்த ஈரியக்கங்களின் பேருழைப்புப் பயன்பட்டது. தமிழகத்தில் தனித்தமிழ் உணர்வு கி.மு. 7ஆம் நூற்றாண்டுக்குப் பின் தளரத் தொடங்கியது; 10ஆம் நூற்றாண்டுக்குப் பின் சரியத் தொடங்கியது. வடமொழி வெள்ளத்தில் தமிழ் இழுத்துச் செல்லப்பட்டு விடாமல் காப்பாற்றியோர் கம்பரும் பவணந்தியும்! பின்வந்தோருக்கு அந்தக் காப்புணர்ச்சி இல்லாமல், அயன் மொழிப் பற்றுக்கு அடிமையானதால் தமிழும் தமிழினமும் பெற்ற இழப்புகள் ஏராளம்! அயன்மொழிச் சேற்றிலிருந்து தமிழை மீட்கும் முயற்சி ஆங்கிலேயர் வருகையையொட்டிப் புத்துயிர் பெற்றது. வள்ளலார், பாம்பன் சாமிகள், வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள், சுப்பிரமணியசிவா, பரிதிமாற் கலைஞர் முதலிய பலரும் தொடக்க விதைகளாயினர். கோவை அவிநாசியில் பிறந்து விருதுநகரில் வாழ்ந்த விருதை சிவஞானயோகி 19.11.1908 ஆம் நாள் `திருவிடர் கழகம் தொடங்கித் தனித்தமிழ் உணர்ச்சிக்கு வேகங்கூட்டினார். அவ்வமைப்பில் உறுப்பினராயிருந்தவர் சுவாமி வேதாசலம் (மலைமலையடிகள்). மறைமலையடிகள் எனத் தம் பெயரைக் கொண்டு, 1916இல் அவர் தொடங்கியதே தனித்தமிழ் இயக்கம். `துறைமிகு ஆங்கிலம் மறைவட மொழியொடு தூய்தமிழ்ப் பேரறிஞர் - தனித்தமிழ் தோற்றிய ஓரறிஞர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடியதற்கேற்ப, மறைமலை யடிகளார் தமிழ், ஆங்கிலம், சமற்கிருதம் முதலிய பன்மொழியிலும் புலமை மிக்கவர். பன்மொழிப் பேரறிஞரான மறைமலையடிகளார் தமிழுக்கும் தமிழருக்கும் ஆதரவாக நின்றதால் எதிர்ப்புக்கும் இழப்புக்கும் ஆளாக்கப்பட்டார். ஆனாலும் உறுதி குன்றாமல் தமிழுக்கு ஆதரவாய் உழைக்கும் உள்ளத்தோடிருந்தார். அதனால், தமிழர் உள்ளங்களில் இன்றளவும் மாறாப் பெருமையோடு அவர் வீற்றிருக்கின்றார். வாழ்த்தாத நாளில்லை வையகம் மறைமலை யடிகள் மறையாத் திருப்பெயர் வாழ்த்தாத நாளில்லை வையகம் பாவேந்தர் பாரதிதாசன் அவர் மாண்பினைப் பாடி மகிழ்ந்ததும், தம் `குடும்ப விளக்கு நூலினை மறைமலை யடிகளுக்குக் காணிக்கையாக்கி வழங்கியதும், அவரின் உறுதி தளராத உள்ளமும் உழைப்பும் கண்டு போற்றிய நன்றிக் கடன் என்பதில் அய்யமில்லை. சென்னையில் கடந்த இருபது ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் தமிழ்மண் பதிப்பகப் பணிகளைத் தமிழுலகம் அறியும். வாழும் தலைமுறைக்கும் வருங்காலத் தலைமுறைக்கும் வழிகாட்டவல்ல தமிழறிஞர்கள் பலரின் நூல்களை முழுமுழுத் தொகுப்புகளாக வழங்கியிருப்பது தமிழ்மண் பதிப்பகத்தின் முடிப்பினை (சாதனை)யாகப் போற்றப்படுகிறது. தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட அறிஞர்களைக் கண்டறிந்து, அவர்களின் நூல்களை முழுமையான தொகுப்புகளாகத் தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டு வருகிறது. அவை காலம் முழுதும் பயன்படவல்ல கருவி நூல்கள் என்பதை அறிஞர் உலகம் அறியும்! தமது நலத்தை ஒதுக்கி வைத்து, தமிழ் நலத்தைக் காக்க வாழ்ந்த அறிஞர்களின் அனைத்து நூல்களையும் ஒரு சேரத் தொகுத்து முழுத் தொகுப்பாக வழங்குவது பெரும்பணி! அதனைத் தமிழ்மண் பதிப்பகம் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. தொகுப்பு நூல்களின் பட்டியலைப் பின்னிணைப்பில் காண்க. தமிழுக்காக உழைக்கும் உணர்வை இளமையில் எம்மிடம் ஏற்படுத்தியோருள் பெரும்புலவர் நக்கீரனாரும் அவர்தம் இளவல் புலவர் சித்திரவேலனாரும் குறிப்பிடத்தக்கோர்! எம் நன்றிக்குரியோர்! தனித்தமிழ் ஆர்வம், திராவிடர் இயக்க ஈடுபாடு எனும் இரு சிறகுகளால் எம்மை எழவைத்தவர் பெரும்புலவர் நக்கீரனார்! அவரை எண்ணிக் கண்பனிக்க நன்றி கூறுகிறது எம் நெஞ்சம். காலப்பழமையாலும் பராமரிப்புக் குறைவாலும் அழிய நேர்ந்த தமிழிலக்கியங்கள் அளவற்றவை! அவற்றில் ஒருபகுதியை யாவது மீட்டு நம் கைகளுக்கு வழங்கியோர் ஆறுமுகநாவலர், சி.வை. தாமோதரனார், உ.வே.சாமிநாதர் முதலிய சான்றோர் பெருமக்கள்! தமிழிலக்கியப் பெருஞ்செல்வத்தை மீண்டும் மீண்டும் அச்சாக்கி, அனைவர் கைகளையும் எட்டச் செய்த பெருமை - சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், உ.வே.சா. நூலகம், மணிவாசகர் பதிப்பகம் முதலிய பதிப்பாளர்களுக்கு உரியது. அச்சுத்துறை அறிமுகமான பின்பே, அறிவுத்துறை அனைவருக்கும் பொதுச்சொத்தாகும் வாய்ப்பு வந்தது. எட்டாக் கனியாக ஓலைச் சுவடிகளில் முடங்கிக் கிடந்த இலக்கியச் செல்வங்கள், எல்லோருக்கும் எளிதாய்க் கிடைக்கும் பணியைச் செய்த பதிப்பாசிரியர்களும், பதிப்பாளர்களும் நம் நன்றிக் குரியோர்! இரவு பகல் பாராது முதுமையைக் கருதாது உழைக்கும் மனவுரத்தை முன்னோடிப் பதிப்பாசிரியர்களின் பணியே எமக்கு வழங்கியது. அரசும், பல்கலைக் கழகங்களும், அறநிறுவனங்களும், சமய பீடங்களும் ,பெரும் இயக்கங்களும், பெரும் செல்வர்களும் செய்ய வேண்டிய பெருந் தமிழ்ப்பணி இது! எளியவர்களால் இயங்கும் தமிழ்மண் பதிப்பகம் பெருந்தமிழ்ப் பணிகளை இன்னல்களுக்கு இடையில் அருமுயற்சியோடு செய்து வருவது, உள்ளவுரம் ஒன்றினால்தான்! வல்லமை சேர்க்கும் வலிமையுண் டாக்கும்! வண்டமிழ் நைந்திடில் எதுநம்மைக் காக்கும்? காக்கும் தமிழைக் காக்கும் உணர்வைப் பாவேந்தர் பாடல் வரிகள் தந்தன. அச்சுக்கு எட்டாமலும் கைக்குக் கிட்டாமலும் இருந்த பேரறிஞர் பலரின் நூல்களை நாட்டுடைமையாக்கி திராவிடர் இயக்க அரசுகள் வழங்கின. அதனால், அறிவு பரவலாகும் வாய்ப்புகள் உருவாயின. `சரிவும் இழப்பும் நமக்கு வந்தாலும் தமிழுக்கு வரக்கூடாது என எண்ணி உழைக்கும் இயக்கங்களும் அமைப்புகளும் தமிழ் நாட்டில் வற்றாமல் வளர்ந்தபடி இருக்கின்றன. திருவிடர் கழகம் (1908) தனித்தமிழ் இயக்கம் (1916) தென்னிந்திய நலஉரிமைக் கழகம் (1916) சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம் (1934) தமிழ்ப்பாதுகாப்புக் கழகம் (1937) தமிழறிஞர் கழகம் (1943) தமிழ்ப் பேராயம் (1959) தமிழ்க்காப்புக் கழகம் (1961) தனித்தமிழ்க் கழகம் (1964) உலகத்தமிழ்க் கழகம் (1968) தமிழியக்கம் (1972) தமிழ்ச் சான்றோர் பேரவை (1998) தமிழ் மலர்ச்சிக்கும் தனித்தமிழ் வளர்ச்சிக்கும் அடித்தளம் அமைத்த இத்தகு அமைப்புகளுக்கு மூல விசையாகத் திகழும் பெருமையைப் பெறுவோர் மறைமலையடிகளாரும் பாவாணருமே! தமிழ் வளத்திற்கும் தமிழர் நலத்திற்கும் சிவனிய மேம்பாட்டிற்கும் மறைமலையடிகளார் ஆற்றிய பணிகள் அளப்பரியவை. அவை தொடர்பாக அவர் ஆய்ந்தளித்த அறிவு முத்துகள் எண்ணற்றவை! அடிகளாரின் அனைத்துப் படைப்புகளும் பொருள்வழிப் பிரிக்கப்பட்டு, காலவரிசையில் 34 தொகுப்புகளாகத் தொகுக்கப் பட்டு `மறைமலையம் என உங்கள் கைகளில் இப்போது தவழ்கின்றது. பல தலைமுறைகளுக்குப் பயன்படும் அறிவுக் கருவூலம் இது! தமிழர் இல்லந்தோறும் இருக்கவேண்டிய அருந்தமிழ்ச் செல்வம் இது! அறிவுலகத்தால் `மறைமலையம் வரவேற்கப்படும் என்னும் நம்பிக்கை எமக்குண்டு. நூற் சுரங்கத்தில் நுழைய அழைக்கிறோம். தனக்கென வாழ்வது சாவுக்கொப்பாகும் தமிழ்க்கென வாழ்வதே வாழ்வதாகும் எனும் பாவேந்தர் வரிகளை நினைவுக் கூறுகிறோம். - கோ. இளவழகன் நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் ரோசா முத்தையா நூலகம் - சென்னை. புலவர் கா. இளமுருகன் - புன்செய் புளியம்பட்டி (மறைமலையடிகள் மன்றம்) மறை. தாயுமானவன் - சென்னை (மறைமலையடிகளின் பேரன்) பிழை திருத்த உதவியோர்: திரு. அ. மதிவாணன் (ஆங்கிலம்) திரு. க. கருப்பையா திரு. புலவர். த. ஆறுமுகம் புலவர். மு. இராசவேலு திரு. இராசுகுமார் திரு. நாக. சொக்கலிங்கம் முனைவர். க. சுப்பிரமணியன் திருமதி. அ. கோகிலா திருமதி. உசா செல்வி. அபிராமி நூல் உருவாக்கம் கணினி செய்தோர்: âUkâ வி. சித்திரா திருமதி மலர் திருமதி செல்வி திருமதி ஹேமலதா திரு. ஆசம் திருமதி கலைவாணி பிராசசு இந்தியா திருமதி`புகழ்ச்செல்வி கயல்விழி (Process India), நூல் வடிவமைப்பு: திருமதி வி. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: கவி பாகர் நூலாக்கத்திற்கு உதவியோர் இரா. பரமேசுவரன், க. இளந்திராவிடன், வே. தனசேகரன், கு. மருது, இல. தருமராசன் தாள் வழங்கியோர்: சிவா தாள் மண்டி, சென்னை -1 எதிர்மம் (Negative): பிராசசு இந்தியா (Process India) சென்னை-5. அச்சடிப்பு மற்றும் நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு மற்றும் பிராசசு இந்தியா `மறைமலையம் எல்லா நிலையிலும் செப்பமுற வெளி வருவதற்குப் பல்லாற்றானும் உதவியாக இருந்த இவர்களுக்கும் மற்றும் அறிஞர் பெருமக்களுக்கும் எம் நிறைந்த நன்றியும் பாராட்டும். தமிழர் மதம் 1965 இல் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் பதிப்பித்த நூலினை மூலமாகக் கொண்டு இந்நூல் பதிப்பிக்கப்படுகின்றது. இந்நூலைப் பற்றிய குறிப்புரை... 1940இல் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் கூடிய அனைத்திந்தியத் தமிழர் மதமாநாட்டுக்குத் தலைமையேற்ற அடிகள், அத்தலைமைப் பொழிவுக்கு எழுதியதும், பொழிவாற்றியது மாகியவையே தமிழர் மதம் என்னும் நூலாகும். தொல்காப்பியம் முதலான பழந்தமிழ் நூல்களில் இருந்தும் இருக்கு வேதம் முதலிய வடநூல்களில் இருந்தும் ஆங்கில நூல்களில் இருந்தும் காணப்பெறும் அரிய கருத்து களைக் கொண்டது இந்நூல். தமிழர்களின் ஒளி வழிபாடும் தீப்பிழம்பில் இருந்து சிவமும், நீரின் நீல நிறத்தில் இருந்து அம்மையும் காணப்பட்டமையும், அம்மையையே திருமாலாகக் கண்டவர் என்பதையும் விளக்குகிறார். மேலும் காலைக் கதிர் முருகன் எனவும் மாலைக் கதிர் சிவன் எனவும் வழிபடப்பட்டமையையும் குறிப்பிடுகிறார். எரியோம்பல் தமிழர்க்கு உண்மையையும், அம்மி மிதித்தல் அருந்ததி காட்டல் என்னும் சடங்கு ஒழிந்த மற்றைய திருமணச் சடங்குகள் தமிழர்க்குப் பண்டே உண்டு என்றும் காட்டுகிறார். ஊழ்வினைக் கொள்கையும் தமிழர்க்கு உண்டு என்று உறுதிப் படுத்துகிறார். இது 1941 இல் வெளிவந்தது. - இரா. இளங்குமரனார் இந்திய இலக்கியச் சிற்பிகள் முகவுரை சென்னை மாநகரில் அனைத்திந்திய தமிழர் மத மாநாடு கூட்டுதற்கு முனைந்த அதன் அமைச்சர், யாமே அதற்கு அவைத் தலைவராய் அமர்ந்து அதனை நடத்துதல் வேண்டுமென எம்மை வற்புறுத்து வேண்டிக்கொண்ட துடன், அதனை நடத்தும் எமதுழைப்பிற்காக இருநூறு ரூபாயும் எமக்கு நன்கொடையாக அன்புடன் விடுத் துதவினர். அதனை ஏற்று, அவரது வேண்டுகோளுக்கும் இணங்கி அதனை நடத்த ஒப்புக் கொண்டேம். பின்னர்ச் சிலநாளில், அம்மாநாட்டில் யாம் நிகழ்த்துந் தலைமையுரையினை முழுதும் எழுதி அச்சிட்டு வெளி யிட்டால், தமிழ்மக்கட்கும் பிறர்க்கும் அது பெரிது பயன்படும் எனத் தெரிவித்து, அதனை எழுதுமாறு வற்புறுத்தி அவர் எம்மை மிகவும் வேண்டினர். அதன்மேல், அதனை எழுதுதற்கு இசைந்து, எழுதிமுடித்தபின் அதனை அச்சிடுஞ் செலவுக்கு என் செய்வதென்று அவரை வினாவினேம். அதற்கவர், அச்சுச் செலவைத் தாமே கொடுப்பதாகவும், அச்செலவுத் தொகையை அச்சிட்டபின் புத்தகப் படிகளாகத் தாம் பெற்றுக் கொள்வதாகவுங் கூறினர். அவரது சொல்லை நம்பி, எம்முடைய நூல்களில் அரைகுறையாய் அச்சிட்டு முடிக்கப்படாமலிருக்கும் நூல்களின் வேலையையும் நிறுத்திவைத்துத், தமிழர்மதம் என்னும் இந்நூலை விரைந் தெழுதி முடிக்கும் முயற்சியிலேயே இறங்கி விட்டேம். இறங்கி இதனைப் பாதிக்குமேல் எழுதி விட்டபின், இந்நூலை அச்சிடுஞ் செலவுக்கு வேண்டுந்தொகை திரட்டமுடியா மையால், இதன் அச்சுச்செலவுத் தொகையைத் தாம் தரல் இயலாதென்று அமைச்சர் தெரிவித்துவிட்டார். இதனால் முதலில் எமதுள்ளஞ் சிறிது கலங்கினாலும், இதுகாறும் எம்முடைய தமிழ்த்தொண்டு சிவத்தொண்டு களுக்குப் பொருளுதவி செய்துவரும் எல்லாம்வல்ல சிவ பெருமான் இதற்கும் உதவி செய்து எப்படியும் இதனை வெளியிடுவிப்பான் என்னும் எண்ணம் எமதுள்ளத்தில் முனைந் தெழவே, இதனை எங்ஙனமாயினும் எழுதிமுடித்து அச்சிட்டு வெளிப்படுத்தல் வேண்டுமென உறுதிகொண்டு, திருவள்ளுவர் ஆண்டு 1969, சித்திரைத் திங்கள், 24 ஆம் நாள் எழுதத் துவங்கிய இந்நூலைத், திருவள்ளுவர் ஆண்டு 1970, ஆனித் திங்கள் 29ஆம் நாள் எழுதி முடித்தேம். ஆகவே, இதனை எழுதிமுடிப்பதற்கு ஓராண்டும் இரண்டு திங்களும் இரண்டு நாளும் ஆயின. இந்நூலை எழுதி வெளியிடுதற்கு எமக்குண்டான வாழ்க்கைச் செலவு ரூ. 1500 ஆகும்; இந்நூலின் அச்சுச் செலவு, காகிதச்செலவு, கட்டிடச் செலவெல்லாம் ரூ. 750 ஆகும்; ஆக இந்நூற் செலவு மொத்தம் இரண்டாயிரத்து இருநூற்றைம்பது ரூபாயாகும். இந்த ரூ.2250உம் முன்பணமாகச் செலவழித்தால் அல்லாமல் இந்நூல் வெளி வருதற்கு வேறு வழியில்லை. இப்பெருந் தொகையை முன்னதாகச் செலவழித்தலால் முதலும் வட்டியுங் கரைந்து விடுகின்றன; பிறகு இத்தொகையைக் காண்டலும் இயலாது. இந்நூலின் ஆயிரம்படிகளில் தொளா யிரம்படிகளே விற்பனையாகும்; எஞ்சிய நூறும் பலவழிகளில் வீண் செலவாய்ப்போம்; இத்தொளாயிரம் படிகளும் விற்கச் சிறிதேறக் குறையப் பன்னிரண்டு ஆண்டுகளாகும். இதன் படிகளை அவ்வப்போது விற்றெடுக்குஞ் சிறு சிறு தொகைகளோ உடனுக்குடன் செலவாய்ப்போதலால், இதற்கென்று முன்பணமாகச் செலவழித்த தொகையையும் வட்டியையுந் திரும்பப் பெறுதலும் இயலாது. இங்ஙனமே, எம்முடைய நூல்களை வெளியிடுதற்குச் செலவழித்த தொகை சிறிதேறக்குறைய ஐம்பதினாயிர ரூபாயாகும். இத்தொகை முழுமையாய்க் கையில் இப்போதி ருந்தால், எமக்குத் திங்கடோறும் இருநூறு ரூபாய்க்குக் குறை யாமல் வருமானம் கிடைக்கும். ஆனால், தமிழுலகம் அதனால் யாது பயன்பெறும்? அதனை நினைந்தே எமக் குண்டாம் பெரும் பொருட் செலவையும் பேருழைப்பையும் ஒரு சிறிதுங் கருதாமல் எமது தொண்டினை நாற்பத்தைந் தாண்டுகளுக்கு மேலாகச் சிவபிரான் றிருவருளுதவி ஒன்றேகொண்டு எம்மாலியன்ற மட்டுந் தனித்தமிழில் தொடர்பாக நடத்தி வருகின்றோம். இந்நூல், தமிழையுந் தமிழர்தம் மதத்தையும் பற்றி யாம் நாற்பத்தைந்தாண்டுகளுக்கு மேலாக ஆராய்ந்த ஆராய்ச்சி யின் முடிபுகளை மிகச்சுருங்காமலும் மிக விரியாமலும் நன்கு விளக்க வேண்டு மளவுக்கு விளக்கிச் செல்வதாகும். இதன்கட் காணப்படும் பொருள்களிற் பெரும்பாலான பலர்க்குப் புதுமையாக காணப்படலாம். அதற்குக் காரணம், நந்தமிழ் மக்களிற் பெரும்பாலார் கல்வியறிவு வாயாதவர்களாயுங், கல்வியறிவு வாய்த்த சிறுபாலாரும் பழந்தமிழ் நூல்களை ஆராய்ச்சிக் கண்கொண்டு ஆழ்ந்து நுணுகிப் பாராதவராய் வடநூற் பொய்வழக்குகளைத் தழீஇப் பொய்க் கொள்கை களில் மனம் அழுந்தப் பதிந்தவராயும் இருப்பதேயாகும். தமிழ்ப்பழமக்களின் கொள்கைகளில் யாம் எடுத்து விளக்குதற்குப் புகுந்த ஒவ்வொன்றிற்குந், தொல்காப்பியம் முதலான மிகப் பழைய தமிழ்நூல்களிலிருந்தும், அங்ஙனமே மிகப்பழைய இருக்குவேதம் முதலான வடநூல்களிலிருந்தும், பண்டைத் தமிழர்தங் கொள்கைகளின் உண்மையை உரம்பெற நாட்டும் இஞ்ஞான்றை ஆங்கில அரும்பெறல் நூல்களிலிருந்தும் வலிய சான்றுகள் எடுத்துக் காட்டியிருக் கின்றே மாதலால், யாம் இதன்கண் விளக்கியிருக்கும் பொருள்கள் அத்தனையும் மிகப்பழைய உண்மைப் பொருள் களேயல்லால், முன் இல்லாது புதியவாய் முளைத்த பொருள்கள் அல்லவென் றுணர்தல் வேண்டும். பிறவியிலேயே கண் குருடாகிப் பகலவன் ஒளியைக் காணாத ஒருவன், கதுமென இறைவனருளாற் குருடு நீங்கிப் பகலவனது பேரொளி விளக்கத்தைக் கண்டு புதிய இக்காட்சி மெய்யோ பொய்யோ வெனக்கருதி மருளுமாப் போலவே பழந்தமிழ்ச் சான்றோரின் மெய்க் கொள்கைகளாகிய பெருஞ்சுடரொளி விளக்கத்தைக் காணமாட்டாமல் அகக்கண் குருடுபட்ட இஞ்ஞான்றைத் தமிழர் பெரும்பாலார், இந் நூலால் அக்குருடு நீங்கி அம்மாப்பெருங் காட்சியைக் காணுங்கால் இது மெய்யோ பொய்யோ என மருளுதல் இயல்பன்றோ? ஆயினும், அவர் இந்நூலை ஒருகாலன்றிப் பலகாலும் உற்றுநோக்கிப் பயில்வா ராயின், அம்மருட்சி நீங்கி ஈறில்இன்பம் எய்துவரென்பது திண்ணம். அது நிற்க. சென்ற ஆண்டு ஐப்பசித் திங்கள், 4 -ஆம் நாள் 5-ஆம் நாள் சென்னை மாநகரிற் பச்சையப்பன் கல்லூரியில் அனைத்திந்திய தமிழர் மத மாநாடு கூடிற்று. பெருந்திரளான அன்பர்கள் கல்லூரியின் மேன்மண்டபத்திலும் அதன் கீழும் நிறைந்திருந்தனர். யாம்முன்னமே ஒப்புக்கொண்டபடி, தக்கார் பலர்வேண்ட அம்மாநாட்டின் பேரவைக்குத் தலைவராய் அமர்ந்து, தமிழர் மதம் என்னும் இத்தலைமை யுரையின் முதற்பகுதியை முதலிற் படிக்கச்செய்தேம். அம்முதற்பகுதி முடிந்ததும், அவையிலுள்ளார் பலருங் கடவுளைப்பற்றிய தமிழரின் கொள்கையைச் சொற்பொழி வாகவே நிகழ்த்துதல் வேண்டும் என எம்மைப் பெரிதும் வேண்டினர். அதற்கிசைந்து தமிழரின் கடவுட் கொள்கை இன்னதென்பதை ஒன்றரை மணிநேரம் வரையில் எம் மாலியன்ற மட்டும் நன்கினிது விளக்கிப் பேசினேம். அவையிலிருந்தார் அனைவரும் அதனைக் கருத்தொருங்கி அமைதியுடன் கேட்டு இத்தகைய அரிய சொற்பொழிவு அமெரிக்கா முதலான அறிஞர் நிறைந்த இடங்களிற் செய்யப்பட்டிருக்குமானால் இதன்மேன்மை உலகம் முழுவதுங் கொண்டாடப்பட்டிருக்கும், என வியந்து பாராட்டி மகிழ்ந்தனர். கடவுள் நம்பிக்கை யில்லாதார் சிலரும் எம்பாற் போந்து, கடவுள் அறிவுச்சுடர் என்னும் இக்கொள்கை எங்கட்கும் ஏற்றதொன்றேயாகும் எனக் கூறி மகிழ்ந்தனர். எங்ஙனமாயினும், எமது சிற்றறிவால் அளந்து ரைத்த சிற்றுரை, அளக்கலாகாப் பேரொளிவடி வினனான இறைவன்றன் அளப்பரிய மாட்சியினை அன்பர்கட்கு ஒரு சிறிதாயினும் விளங்கவைத்து அவரை மகிழ்வித்ததே யாம் பெற்ற பேறேனக் கருதி இறைவன் றிருவடிக்கு எமது புல்லிய வணக்கத்தைச் செலுத்தி, இந்நூலைத் தமிழுணர்ந்தார் எல்லார்க்கும் பயன்படும்படி அவர் எல்லாரிடையும் உய்க்கின்றேம். பல்லாவரம், மறைமலையடிகள் பொதுநிலைக் கழகநிலையம், திருவள்ளுவர் ஆண்டு 1970, ஆனி, 32. ENGLISH PREFACE TO THE TAMILIAN CREED “Wilfred Scawen Blunt says that Huxley had long suspected a common origin of the Egyptians and the Dravidians of India, perhaps a long belt of brown-skinned men from India to Spain in very early days.” “This ‘belt’ of Huxley’s, of dark-white and brown-skinned men, this race of brunet-brown-folk, spread even farther than India; they reached to the shores of the Pacific, and they were everywhere the original possessors of the Neolithic culture and the beginners of what we call civilization. It is possible that these Brunet peoples are, so to speak the basic peoples of our modern world.”-H.G. Wells in his ‘Outline of History’ p.138. What had been suspected by the genius of Prof. Huxley and accepted by Mr. H.G. Wells, has recently come off an undoubted fact established by the archaeological evidence which the excavations conducted at Harappa and Mohenjo-daro in the Punjab have afforded us. For Sir John Marshall, Director General of Archaeology in India, has conclusively shown in his epoch-making work “Mohenjo-daro and the Indus Civilisation” that the pre-Aryan people, the originators of the Indus Civilisation, could be none other than the forefathers of the Dravidian People who at present occupy Southern India and that their culture bears a close resemblance to the culture of the Sumerians and the Egyptians as the result of the commercial intercourse they had had with the latter five thousand years ago. In exposing the error into which some of the oriental scholars had fallen when they came to speak of the pre-Aryan inhabitants of India, Sir John Marshall observes: “They (the orientalists) pictured the pre-Aryans as little more than untutored savages (whom it would have been grotesque to credit with any reasoned scheme of religion or philosophy). Now that our knowledge of them has been revolutionized and we are constrained to recognize them as no less highly civilized-In some respects, indeed, more highly civilized - than the contemporary Sumerians or Egyptians, it behoves us to re-draw the picture afresh and revise existing misconceptions regarding their religion as well as their material culture.” And in another place of his remarkable work he says: “The Indus civilization was Pre-Aryan and the Indus language or languages must have been Pre-Aryan also. Possibly, one or other of them (if, as seems likely, there were more than one) was Dravidic. This, for three reasons, seems a most likely conjecture-first, because Dravidic speaking people were the precursors of the Aryans over most of Northern India and were the only people likely to have been in possession of a culture as advanced as the Indus culture; secondly, because on the other side of the Krithar Range and at no great distance from the Indus valley, the Brahu is of Baluchistan have preserved among themselves an island of Dravidic speech which may well be a relic of Pre-Aryan times, when Dravidic was perhaps the common language of these parts; thirdly, because the Dravidic languages being agglutinative it is not unreasonable to look for a possible connection between them and the agglutinative language of Sumer in the Indus valley, which as we know, had many other close ties with Sumer.” So much precaution and reservation with which the above statement made by Sir John Marshall as regards the high antiquity of the Dravidian people, their language and culture, may seem unnecessary to those who possess an intimate knowledge of ancient Tamil literature, some of the extant works of which such as Tholkappiam, Paripadal, Purananooru and others date from 3500 B.C. to the first century A.D. and bear witness to the high level of civilization which the Tamils reached in Pre-Aryan times. Certainly there could have been at that remote period none but one Dravidian language spoken not only all over India but even beyond its frontiers, and that langauge could have been no other than Tamil which still lives among twenty million people in all its literary glory and usefulness. Except Tamil no other Dravidian language possess such vast, antique varied, original, valuable literature, the literatures of the other few cultivated Dravidian tongues such as Kanarese. Telugu and Malayalam being not more than seven or eight hundred years old at most and even these consist of works either translated from Sanscrit or written in imitation of some Sanscrit works. It is an admitted fact that, that language alone which possesses grammer and literature that forms the only criterion to estimate the height of civilization to which the people who owned them had attained. If in India of Pre-Aryan times, there had existed no literary work that could be brought forward from any of the existing Dravidian languages except Tamil, then it is as certain as two and two makes four, that langauge did not exist at that time or if it could be assumed that it did exist, it was not cultivated by a civilized people in any way. For the life of a civilized nation cannot get on without the cultivation of its language and the production of a varied literatures. If Sir John Marshall had a first hand knowledge of the Tholkappiam and some other ancient classics of Tamil he would have easily shown in corroboration of what he stated as regards the pre-Aryan antiquity of one of the Dravidian languages, that Tamil alone, and not any other as he vaguely affirmed, must have been the language spoken and cultivated by the pre-Aryan inhabitants of the Indus valley. Still, he has benefited the historians of the antique past by producing solid and substantial evidence in proof of the Tamilian civilization which was contemporaneous with the civilizations of the Egyptians, the Babylonians, the Sumerians and other ancient nations of the west. Fortunately, we are now in a position strong and unshakable to correlate with the above archaeological evidence, the proofs afforded by the ancient and genuine literary works of the Tamil language. And this I believe has been amply done in the following Tamil treatise which is but an expansion of my Presidential Address partly read and partly delivered in “The All India Tamil Religious Conference” held in Madras on the 19th and 20th October, 1940. For the benefit of the English-knowing people I give below a succinct account of the contents of this book as far as the limit of this short preface permits. The first section is devoted to showing who the real Tamilians were and are, since different peoples belonging to different races mingle together in modern times and almost all of them in the South speak Tamil as the common tongue. This state of things could not have existed in the remote past when the mixture of races was rare, except when one raided into the other for food and comfort and settled amongst them. But, as time went on, the Aryans the Scythians, the Monogolians, the Turks and others entered Northern India through passes in the north-west and the north-east and after hard and continuous struggles with the indigenous Tamils, setteld themselves all over the north rather peacefully. This state of different racial inrush into the north led in course of time to a large intermixture of the foreign blood with the Tamil. Still, in every ethnical type the Dravidian, properly speaking the Tamilian element alone, predominates markedly all over the north. Though the Tamilian stock has thus underwent considerable change in northern India, the stock in the south has remained pure and intact, as has been shown by Prof. Rapson in his ‘Ancient India.’ So we may safely affirm that the people, living at present from Madras to Cape Comorin except those who speak at home tongues different from Tamil, can be no other than the lineal descendants of the original and highly civilized Tamils of pre-Aryan times. Dr. G.A. Grierson justly observes: “With this we may dismiss the theory which assigns a trans-Himalayan origin to the Dravidians. Taking them as we find them now, it may safely be said that their present geographical distribution, the marked uniformity of physical characters among the more primitive members of the group, their animistic religion, their distinctive languages, their stone monuments, and their retention of a primitive system of totemism justify us in regarding them as the earliest inhabitants of India of whom we have any knowledge.”1 Then, the second section takes up the question whether there is any pure and real Aryan element in the present population of India and concludeds that no such element can be said to exist so as to be easily detected in it, although a type approaching the Aryan is traced all along the river Indus, in Kashmir and in Rajputana. The fact, however, seems to be the Aryan branch of people who migrated from Bactria into India driven, of course, by scarcity of food and change of climate, could not have been so numerous as some orientalists suppose but must have been a few thousands only as shown by Ragozin2 and even these few merged in course of time in the vast ocean of the Tamilian people to a degree that their physical and mental characteristics become in later ages quite indistinguishable from the latter. Therefore it has been shown in this section that the existence of a separate Aryan race in India is a mere fiction and nothing more. The third section enters into a discussion of the colour and physical features which the Tamilians possess in common with the other Indian people. As has been shown by Dr. Caldwell, colour is not a safe guide in judging of the racial characteristics of the Tamils as well as all other Indian people. Even among those who are generally black, there are great variations in colour ranging from pitch black to a bright pale black. The labouring classes who work under scorching solar rays become black or dimly brown even if they were born of pure yellow colour; where as the middle classes and the rich who carry on their business within doors are of either bright yellow tint or of rich brown, even here one may notice great and fine gradations. In the same way form and shape, size and height, differ widely not only among the Tamils but even among all other classes of the Indian people. With all such differences there might be seen at a glance perceptible general characteristic running through them all which marks of the Tamils from all other people who have come into India at different periods of time and settled. Many an acute student of ethnic studies has noted in the eyes and features of the Tamils a certain brightness and alterness due to a suffusion of superior intelligence which is naturally denied to others. The fourth and fifth sections consider the origin of the Dravido-Aryans who came to call themselves ‘Brahmins’ from the time when the late Purushasoookta hymn of the tenth mandala of the Rig Veda was composed. Though the Brahmins nowadays style themselves ‘Aryans,’ they liked it not to be called by that appellation at the time when they composed the code the Manusmriti, as is manifest from the contemptuous way in which they speak of the unmixed Aryans who then dwelt in Kashmir. From this it follows that the class of people who wished to call themselves invariably ‘Brahmins’ rather than the Aryans, or the Dravidians, appears evidently for this very reason, to have descended from a stock which was neither Aryan nor Dravidian but was a mixture of the two. Then, the inquiry into the true lineage of Manu the original law-giver to the Aryans is taken up and treated. That the first Manu-first because there had been many persons who bore that name in later times-was a Dravidian king who resided in Malabar, the mountainous district of the Tamil country, has been fully shown by Ragozin in his ‘Vedic India.’ As the name and person of Manu are always associated with the author of an original moral code, and as this Manu was a Dravidian king who taught the laws and moral principles not to the unmixed and uncivilized Aryans of Kashmir but to the more refined Dravido-Aryans of the middle country, it is concluded that the laws he gave were intended not for the Tamils who had laws and excellent moral principles all along, but were intended for the instruction and guidance of the Dravido-Aryans who were then becoming slowly Dravidianized in the north, and that the division of the Dravido-Aryans into four castes was made by him for the special purpose of studying and controlling the social and political affairs of their life. Sections six, seven, eight, and nine pursue the subject of caste and show how it was instituted at first by Manu in imitation of the Tamilian social system which was based not upon the merit of birth but upon division of labour since each section of which is called even now by the name of the profession which it follows. Before the time of Manu the Aryans had no caste, but Manu introduced the fourfold classification among them simply for the sake of giving stability to their calling which were otherwise in a fluidic condition, on account of their long nomadic life which bred in them a disinclination for honest work and led them to live upon plunder and cattle-lifting. What was intended at first to confer social benefit to the Aryan settlers, was seized upon with avidity by the self-interested section of the Dravido-Aryans who had the sagacity enough to perceive the high rank to which the caste system would raise them, if it could be so hardened that it could not by any means be broken through with impunity. What was at first a pliant group became in course of time an impenetrable body like steel. For this deplorable state of Hindu community the vegetarian part of the Tamilians is chiefly responsible. I pointed out this fact thirty-eight years ago in an article on Tholkappiam which appeared in the first volume of my magazine Jnanasagaram, but no oriental scholar took notice of it then. Recently, Dr. Slater who was Professor of Economics in the University of Madras had the shrewdness of mind to discern this important fact and state that the invention of caste and its rigid observance were the work of no other people than the Tamilians. Even at the present day, no other Hindu community, as far as my knowledge goes, pays so much care and attention to cleanliness of food and chastity of their women as the Tamils, especially the community of vegetarian Velalas. In northern India, caste is not so rigidly observed as in the south, since the Aryans had no caste, since those who instituted it were the ancient civilized Tamils only. The fact must be borne in mind that while in the north most of the Brahmins are out and out flesh eaters, those in the south and the Velalas are strict vegetarians. So great an importance came to be attached to clean food and women’s chastity that these two have ever stood as the prime factors actively working at the bottom of the Tamil community to split it up into innumerable small groups that can never cohere with each other. Now, either in the north or in the south no non-brahmin ventures to call himself a God except those of the priestly class who style themselves Brahmins or Gods. With this they are not content but choose to call all the non-brahmins by the name of ‘Sudras’ which term means in Sanscrit the children of the concubines or slaves. But, in point of fact, it is the Brahmins who do all sorts of menial work under the Tamilian landlords, and rich Tamil merchants and heads of the Mutts, while the poor Tamils are honest labourers in the fields, are artisans and weavers. Further, the Brahmins are, as pointed out before, not at all the Aryans nor the Tamilians but are the descendants who came from the mixture of the two. Besides calling themselves the Gods on earth and treating all others as Sudras, or slaves, the Brahmins have adopted Sanscrit as their written language with the motive of establishing their supernatural claims in the treatises which they themselves created in it but attributed their origin to the Supreme Being itself. And in order to bring all the Tamilians under complete control, they kept them in gross ignorance of Sanscrit with the threat that the tongue of those who, in breach of the law, learn it would be cut off, into the ears of those who hear it molten lead would be poured and so on. Though the kings in the north and the south, belonging as they did and even now do to the Tamilian stock, were very hospitable to strangers and treated the Brahmins with respect and reverence, yet they never adopted the unjust laws fabricated by the Brahmins and passed off in the name of Manu the original Tamilian law-giver. Administration of justice seems to have been carried on not with any caste consideration as is laid down in the so-called Manusmriti, but with a broad outlook on the actions of man as they came to affect the welfare of the society to which he belonged. This broad-minded administration of ancient Indian kings accords well with the precepts of St. Thiruvalluvar’s Sacred Kural rather than with the cruel and nunatural laws of the Manusmriti. Now, seeing their failure to bring the kings under their baneful influence so as to make their code of laws the chief and infallible guide to their administrative functions, they sought to revive the sacrificial cult of the Vedas and the Brahmanas under the cloak of securing the Heavenly favour for the prosperity of kings; and in this they succeeded so well that the kings became in fact mere puppets in their hands and sacrifices lasting even hundreds of years came to be performed with the wealth of the monarchs. In these sacrifices hundreds and even thousands of innocent creatures such as goats, sheep, oxen, buffaloes, horses, and others had been slaughtered and intoxicating drinks prepared from Soma plants were freely indulged in. Such inhuman deeds and inebriant revels done in the name of religion cannot but seem revolting and barbaric to the Tamilian mind nurtured in the teaching of its saints and sages who inculcated the virtue and duty of showing love and mercy towards all living beings, of respecting the sanctity of their life brought into existence not by the hand of man but by the hand of God, and of striving one’s utmost to relieve their sufferings, and help them to live their life with ease and peace to the limit of time decreed by Providence. Eventually strong protests came to be raised against animal sacrifices perfomed by the Brahmins, and of those who thus protested two Tamilian sages named Kapila and Patanjali stood foremost to set free the people and the ruling chiefs from the trammels of specious Brahminic teachings and their expensive and inhuman rituals. They showed how the sin of killing and drinking brought on insensibility to tender feelings and made this earth a jungle of wild beasts, and how whereas the virtue of love and mercy and wisdom lead the fit souls to obtain redemption and enjoy heavelny bliss even while they live here. These teachings of love and mercy touched the hearts of all and spread so rapidly everywhere that the ritualistic cult of the Brahmins had begun to fall into disrepute; and the kings also who were wise and learned came forward to take an active part in propagating humanitarian principles and in laying bare the futility of Vedic learning and the evil of animal sacrifice, as is manifest from such Upanishads as Chandogya, Kaushitaki, Mundaka and others. These high spiritual teachings of some noble kings gave such a strong stimulus to an investigation among royal families of the destiny of man and lower beings that a long line of kings who succeeded them could not set their mind at rest without earnestly interesting themselves in the solution of religious and philosophical problems to a complete exclusion of all ritualistic studies and performances. The final stroke to Brahminism was, however, given by the princes Gautama Buddha and Mahavira who, renouncing even their royal state and taking to a mendicant life, stood firmly for the cause of dumb creatures, and devoted their whole time and energy to putting a stop to animal sacrifices, and heartless observance of caste principles, and to the indiscriminate study of the Vedas and other Aryan works. Finding it no longer possible to live in the north with ease and influence, the Brahmins of the Dravido-Aryan stock migrated to the south hoping to exercise their priestly craft over the Tamils; and as expected they were accorded a hearty reception by the Tamil kings and chiefs, by landlords and people. Their complexion, their fine Personal appearance due, as in the case of modern Eurasian type, to the blending of the Dravidian and Aryan elements, impressed the aesthetic sense of the southern people and enlisted their sympathy on behalf of the new-comers. Consequently the Brahmins were allowed to settle without any trouble all over the south; but they were not permitted to live near the habitations of the vegetarian velalas but to make their abode with the other low class Tamils who, like the Brahmins, were addicted to drinking and eating all kinds of animal flesh. Those of the Brahmins who were shrewd enough to discover how low they were considered inwardly by the Velala Tamils while they were outwardly treated with respect came by degrees to give up flesh-eating and thereby suceeded in raising themselves in the estimation of all the vegetarian and non-vegetarian Tamils. Whereas others who persisted in the habit of meat-eating, freely mixed with all sorts of low class Tamils so much so that their progeny in afterages were constrained to live in complete isolation discarded for a long time as outcast, before they too adopted the vegetarian mode of living and passed themselves under the name of Brahmins. The original Brahmin community, in proportion to its admixture with the non-vegetarian classes of the Tamils, underwent considerable changes not only in its physical characteristics but in its creeds, customs and manners also, that, in later times, its descendants could not but live in innumerable separate groups so that each group never interdined with the other nor intermarried. To this spliting up of the Dravido-Aryan community were added many others converted from the various classes of the Tamils from the time of Ramanuja of the Vaishnava sect up to our own. In view of the high rank to which mere mention of the name ‘Brahmin’ raises one in this country, many a shrewd person of the Dravidian stock is daily assuming the title of a Brahmin, and is becoming an enthusiastic convert to Brahminism. In this state of unbridled racial commixture, is it not quite unsafe and unreasonable to call anyone an Aryan against all ethnological facts? And so the section nine closes with the conclusion that, except in the case of the scanty few who dwell in the north-west corner of India, in the veins of almost all the people of India it is the Dravidian blood that courses round from time immemorial up to the present. Then the section ten takes to tracing the origin of the term ‘madam’ and the time when it came to signify religion in the Tamil country. Before the second century of the Christian era no word is met with in Tamil literature to denote religion. Even in the works of the second century it is the term ‘Samayam’ that comes to be used as the name of religion. The very first mention of the word ‘madam’ occurs in the Thiruvachakam of St. Manickavachakar who existed in the first half of the third century A.D. And it must be noted that both these terms ‘madam’ and ‘samayam’ are coined Tamil words though they are claimed now to belong to Sanscrit. Long anterior to the times of the Sankhya, the Yoga and other systems of philosophy, long before the rise of such humanitarian religions as Buddhism and Jainism, people do not seem to have engaged themselves either in religious speculations or in religious discussions. Neither did the Aryans whose whole mind was absorbed in performing animal sacrifices, nor the Tamils who were paying their worship to one Almighty. God whose presence they felt in light and fire, stand in need of religious inquiries, as at that remote age there was no one who could call in question their beliefs and observances. It was only in after ages when some Tamilians of acute intelligence and tender feelings had begun to reflect upon the horrors of animal sacrifices and the waste of life, money and energy which they involved, that their virtue on the one side and their evil on the other came to be discussed with ardour and heat and systems of religious and philosophic thought sprang into existence. And this created the necessity of calling each system by a special name, and the Tamilian religion too came to be called either Saivism or Vaishnavism according as the worshippers of the Almighty God took him to be either a heat principle or cold principle. Since the birth-place of all the different systems of thought and belief had been only northern India. Where, at the time, the Sanscrit language and its dialects were, as it is now, asserting their dominance over the Dravidian tongues, especially in the educated circles, into all of which the Brahmins had insinuated themselves, and their influence, all these different cults and creeds came of necessity to be called by distinct Sanscrit names alone. It was in this way that all manner of dissensions arose among the people of northern India and these again were brought by the Brahmins and introduced into Southern India by the aid of Sanscrit in the three centuries preceding the Christian era and in their wake came the Jains and the Buddhists also in large numbers in the early centuries of the Christian era and spread religious disputations and hair-splitting philosophic discussions among the Tamils. Before this intrusion of the northern people, all the cultured and civilized Tamils were as a body strict monotheists paying their worship only to Siva as the almighty God of the universe and therefore had no occasion to bring in any religious or philosophic discussion among them. But after the introduction of Brahminism, Buddhism, Jainism and Sanscrit, they became torn by religious differences and widely differing cults bearing Sanscrit names rose successively in their midst until our own time, this conclusion can be easily confirmed even by a cursory glance into the Tamil lyrics and idylls produced in the pre-Christian times and by comparing them with the epics and didactic poems and religious and philosophic treatises written in post-Christian centuries. Then, the eleventh section proceeds to inquire what were the elements that composed the Tamilian creed and how and why they came to occupy the minds of the ancient Tamils. First of all it is shown that their forefathers entertained a strong belief in the series of existences which all beings that are endowed with life, will, feeling and intelligence pass through, not of their own accord but in accord with the will and purpose of a Supreme power, and that they looked upon this present life not as a sudden outburst of a precarious will, but as a vital link between what preceded it and what will succeed it. The purpose of creation seems to aim at the unfoldment of all the faculties of the finite mind that lie dormant being enveloped in darkness and to enable it properly to enjoy the happiness and bliss which is in store for it in this world and in the worlds to come. To the degree the beings exercised their will and intelligence, they rise in the scale of embodying themselves in various organisms which too rise in refinement correspondingly. But this unfoldment of mental powers proceeds so slowly and so gradually that no being, however much it may desire quickly to attain perfection, can overstep the bounds set to it by the Supreme intelligence. The finite mind must seek to know not only the Supreme object of the Supreme mind but must also learn to keep its own will and desire in harmony with the Divine will and purpose. It is by not doing any injury to any fellow being and by not thwarting the beneficent purpose of God, that one can accelerate the attainment of perfect state and final redemption from sin and evil. Then the section twelve takes up the clue afforded by the preceding section and deals with the doctrine of nonkilling embraced whole-heartedly and followed unremittingly by the Tamils in its theory and practice. It is laid down in the Tholkappiam that all lives are possessed of an instinctive desire to obtain pleasure all throughout their life here and hereafter. Man who is the apex of creation and who is given a wider scope for obtaining his own enjoyment without interfering with the enjoyment of other beings human or animal, must on no account except in an extreme case of self-defence, attempt to take away the life of any being under any other pretence. When one hardens his heart by not heeding the sufferings of other lives, he hinders the development of his own finer sensibilities without which every sweet thing becomes bitter to him or he deadens them so much as to lead the life of ferocious animals. Besides losing the higher and precious faculties of his mind man loses also the health of his body by killing harmless and useful animals and eating their flesh. As has been conclusively proved by Dr. A. Haig and Dr. J. H. Kellogg, animal food is saturated with uric acid poison and all who devour it, introduce into their blood a fruitful source of all Pernicious diseases. It is to the glory of the Tamil people that the cultured class among them had early discovered the virtue of non-killing and abstaining from flesh-food and conferred the benefit of their discovery even on such anciently civilized peoples as the Egyptians, the Greeks and the Romans with whom they held commercial relations. That this discovery of humane and vegetarian mode of living was first made by the agricultural class of people among the Tamils is borne out by the existence of a very large number of strict vegetarians counting many millions in southern India alone. As these Tamils have been and still are the worshippers of Siva alone their religion and their doctrine of vegetarianism became so intimately bound up that the very term ‘Saivism’ besides signifying the cult of Siva among the educated classes, is popularly used to mark out the vegetarian section specifically. From the many references made to these vegetarian Velalas in the old Tamil poem composed before and after the Christian era, we can safely affirm that their existence in the south and north of India goes back at least to 5000 B.C. As the Egyptian religion and the Hebrew book of Genesis forbade the use of animal food, influenced of course by the Tamil merchants, precept and example, the date we have assigned to the high antiquity of the vegetarian Tamils will not seem improbable or extravagant. From the antique past up to the present no country except India can claim so many millions of pure vegetarians that this fact alone will suffice to place this country as the only earliest home of vegetarianism. Then, the thirteenth section treats of the lifelong union of the opposite sexes which was based in the early stages of the Tamilian society solely on pure love to the exclusion of all other considerations. Chastity of women formed so prominent a factor in the social life of the ancient Tamilians of higher classes that they permitted not any other consideration to interfere with the marriage union and mar its purity. The natural law of sexual union is expressly stated often and often in the very old Tamil work Tholkappiam that any other form of union, as it is at present arranged, seems to have been devised by an intrusive hand bent upon filling its own pocket. The pairs who at first chose each other out of pure love were afterwards openly wedded by their own elderly relations and the wedding ceremony was solemnized without courting the assistance of a priest. It is further shown that the early Aryan settlers had no idea of celebrating the union of sexes by a ceremony such as we find among them, rather among their followers, in later ages when they came into close contact with the Tamils and learnt it. The marriage hymn which is found not in the nine early books of the Rig Veda but only in its tenth book besides bearing indisputable evidence to its later introduction, shows what a mean and undignified view the Aryans took of their women’s character by making them the wives of three Deva husbands previous to their marriage. From this and many other references made to their women’s character, for instance to the incestuous passion of the woman yami, it is quite clear that the Aryans cared little for the chastity of their woman. For a fuller treatment of the institution of marriage, the difference that obtained in the observance of its rites between the ancient Tamils and the Aryan followers and the relative significance that came to be attached to them by the two people, the reader is referred to the sections twentyeight, twentynine, and thirty. Now, the sections fourteen and fifteen deal with the custom of the Tamils which allowed them to have a plurality of wives, even though the marriage of the first wife took place as the outcome of pure love. The reason for this polygamous custom seems to be twofold. First of all the ancient Tamils paid particular attention to preserving the health of their women as well as the health of their children. Sexual intercourse should not be indulged in too often of the detriment of women’s health even if they are blessed with a robust constitution and have not given birth to any children. But, after they have begun to bring forth children, a sufficiently long interval, say three, four, or five years must be allowed them between one child-birth and another so that they may recoup their health and strength and become properly fit for sexual enjoyment and another child-bearing. Otherwise, not only is brought about the breakdown of their own health but the physical and mental capacities of their innocent children also deteriorate. But, who in fact is the root-cause of so much misery and affliction? Undoubtedly it is not the females; it is the males alone who, in ninetynine cases out of a hundred, lose self-control in their passionate moments, commit the crime of sexual congress on their helpless wives against their will and put them to the inexpressible misery of child-bearing within an year they had given birth to a puny and pitiable child. 3Dr. John Cowan has quoted many cases to prove how heartless has been many a male partner as to commit this crime on his innocent wife under the influence of a blind and unbridled sexual passion, thus overlooking the welfare of his own family completely. It is known that women generally lose the capacity for child-bearing beyond their fortieth or fortyfifth year, and become thereby unfit for sexual intercourse: And many still, after giving birth to a child, feel a natural aversion to sexual congress. In all such cases the males conduct themselves either inconsiderately or seek to make clandestine love to women who belong to others or else they go to prostitutes. From this state of sexual diversions it is that adultery and its evil consequences spring up and eat away the health, strength, and moral fibre of humanity. But the forefathers of the Tamils seem to have early recognized these evils towards which the strong sexual appetite of their sons tended and sought to remedy it by marrying two or more wives to their sons either at the time of their first love - marriage or subsequent to it. In this way the parents themselves stood foremost in creating facilities for their sons so that they might not go astray when their first wife was confined but might have recourse to their second wife until she too was in child-bed, when he might go to the third and return again to his first when the last was lying in. By this natural means they succeeded not only in keeping up the health and strength of their females and their progeny but also in saving their male descendants from committing criminal and sinful deeds and contracting dreadful venereal diseases. Prophet Muhammed too seems to have perceived in the strong sexual passion of the males a serious hindrance to a healthy moral life and peace of society and therefore had permitted them to marry from one to four wives as an effective check to their evil tendencies. European travellers who visited Muslim countries were struck with wonder at the absence of adultery among their people and have attributed its absence to the polygamous custom of the Muslims. They have also observed even in countries where monongamy prevails each male having in secret a number of females as concubines. These facts must clearly disclose what a high and wholesome object the Tamilian forefathers must have had in setting up the polygamous custom among their descendants and how nobly they stand as fearless benefactors of their race inspired only by strong and undaunted moral courage. Then, the section sixteen proceeds to show how far the Tamil parents of old held themselves responsible for the up-bringing of their children and at what limit they supposed that responsibility had ceased. It is expressly stated in the old Tamil classics that the duty of the parents lies in bringing up their children healthily and in righteous ways, in educating them in arts, crafts and sciences, in marrying and settling them in life so that they might lead their life independently of their parents’ help and that with this fulfilment of duty their responsibility ceases. It is also plainly enjoined that no property except a valuable education should be bestowed by parents on their children, for all earthly possession are transitory while the light of learning constitutes an everlasting possession. In this view the ancients stood so steadfast that after setting apart a portion of their earnings for the maintenance of their family and the upbringing of their children, they employed a larger part of them for charitable purposes. It is mentioned in the old Tamil lexicons that rich persons lavished their wealth in doing thirty-two kinds of charitable deeds; and it is to their boundless generosity that we now owe the existence of not only thousands of temples all over the south, of which many for the construction of their magnificent and artistic structure must have absorbed millions of pounds, but also innumerable rest-houses, feeding houses, hospitals, schools, religious institutions and others. With this the main subjects pertaining to the present life have closed and those pertaining to a life beyond are treated from the next section with a fulness their importance and inaccessibility to ordinary understanding demand. Now, the seventeenth section opens the subject of future life, with the question why an instinctive longing for a continued existence of their souls after the dissolution of the mortal body is so strongly implanted in the hearts of all human beings whether cultured or uncultured. This and the following sections to the end of the twenty-first treat exhaustively what could be the genuine and well-grounded answer to it. Now the longing for a future life can find itself explained only in the imperfection every man feels every time that he faces a new problem that defies his powers of understanding, in the dissatisfaction he feels every moment after the excitement of a pleasurable feeling is over, accompanied by a sharp painful experience. It is such finite experiences mixed up with ignorance and pain all throughout this mortal life, that impel man to seek for a future life in which he hopes to attain perfection of understanding and perfection of joy. Whether this hope of his will prove fruitful or will turn out to be a mere dream depends upon whether or not the realization of an ever-flowing source of infinite joy and bliss attainable. Inner as the experience of a pleasurable feeling is, in order to excite it every sentient being stands in indispensable need of a contact with an outer object. For instance, the feeling of sweet taste cannot be kindled unless a sweet thing, say an orange fruit or sugar, be brought close to one’s tongue and palate. Similarly, for the enjoyment of each and every kind of pleasure, man necessarily needs the contact of objects that can severally excite one and all. Now and again he clearly perceives that no object of this earth is capable enough to kindle in him the kind of pleasure at once permanent and unaccompanied by pain. Then, if there should be an infinite being as the inexhaustible source of an infinite pleasure-the existence of such a being is necessarily presupposed in the conception of the very finite as its contrast and correlate-then the hope of effecting a union of his self with that Supreme Self would find itself completely realized. Strongly convinced therefore of the existence of such an infinite being, the acute intelligence and the highly developed instincts of the ancinet Tamils anxiously set out to search for the principle in which it could reside in a way perceptible to the outer and inner vision of man. And in their quest of this source they finally succeeded in feeling it in the light and heat of the blazing fiery bodies. Light and heat are pure spiritual energies since the modern science has not proved them to be either matter or material energies. In the view of Tamil Saints and Sages, God is not a transcendent being but a being of supreme love who is ever near to his creation, to his created beings human and animal; he resides in and out of their substance and every thing lives, moves and has its being in him, in him alone. Before the creation of hot and resplendent bodies such as the sun and stars - each star being a sun millions of times bigger than our own sun, how the universe was, whether it was bright or dark, is quite unimaginable; and so far as our knowledge goes no science of Astronomy has as yet succeeded in finding out the exact nature of that unimaginable state. Leaving out therefore, that fruitless inquiry, we must confine our attention to our luminary which gives out light and heat that pervade all throughout the universe that our vision and imagination can comprehend. There is not a needle-point of space which the brilliant rays of the sun have not touched. This earth and all other planets that go around it are being illuminated only by its resplendent light. As it were all bodies are immersed in it or are floating in it. Now, what can be more intimate to man and other beings, animate and inanimate, than this light, this heat which not only bring forth and sustain all beings, but illumine the sight of all sentient beings and through it their understanding also? If there be no light, no heat, no materials for producing heat and light, as in the polar regions from which the sunlight is completely absent for two full months and in which nothing for making fire is procurable, will it be possible for us to get enlightenment of understanding even were it possible to eke out our bare and miserable existence under such inefficient conditions in nature? No, certainly not. It is, therefore, not unreasonable to hold with our forefathers that the light itself is God or the only true form of God, that the fire which is the source of light and heat is the only abode of God or God itself. This spiritual nature of light and heat and fire is emphasized in the body of the work by referring to the widespread worship paid to the sun, moon and fire by such early civilized people as the Egyptians, the Babylonians, the Chaldeans, the Persians, the Mexicans and by other uncivilized tribes all over the world as fully pointed out by Dr. J.G. Frazer. Now, this intuitive perception of the existence of God in light and fire aided, of course, by an acute discriminative understanding helped the ancient Tamilians to detect in it the combination of two fundamental principles which are always at work not only in the creative and sustaining processes but also in the process of consuming the used-up materials. These two are the heat and the cold principles, of which the heat predominates over the cold in fire and the cold is not therefore easily discernible in it. Still, by holding a tumbler over the burning flame, you can clearly see drops of water collecting all around its brim and dripping from it. Besides this, if you carefully look into the flame you can discover within it a light blue colour which the cold principle always assumes. It is from this inseparable union of heat and cold principles that energies of all kinds are generated and it is these energies that bring about the creation, the preservation and the destruction of both the animate and the inanimate bodies of the universe. Whether you call the two principles the positive and negative electricities, whether you call them red and blue, or male and female, whether you call them Siva and Uma, or father and mother, whether you call them a line and a circle when their actions manifest themselves in inanimate matter, in all these and elsewhere the law is the same without any deviation. The steam-power which works wonders in material bodies is a visible instance in which we easily recognize how the heat and cold principles work together to generate the energy required for moving heavy and massive bodies. And in the organic scales of life from the vegetable to the animal kingdom the same two principles work together for bringing forth more and more complex and intricate organisms for the use of lives as they climb more and more in the ladder of intelligence and intelligent capacity. And when we reach the high human level, in which the operation of the heat and cold principles has expressed itself in its maximum intensity, we comprehend in full the high divine purpose of a benevolent Providence in the disinterested love borne by the human father and mother towards their offspring. Disinterested love in the Divine Being has no limit set to it, since all lives from the very lowest to the very highest are nurtured by it, whereas in the human it moves only within a limited range. Except for this difference, the disinterested love borne by our Heavenly and earthly parents towards their children is the same in substance. We see every where all around us every creature endowed with organism, the minute and complex structure of which defies the skill of human hand to produce even a meanest but vital copy of it. Does it not bespeak the illimitable grace and unbounded love on the part of the benefactor to bestow unasked on all sentient beings such invaluable gifts as cannot be given by any but himself? Though such gifts lie beyond the scope of our earthly parents, yet what they give us with so much care, with so much love, with so much self-sacrifice must have been prompted only by the principle of universal love that dwells within every heart to make it like itself. For Divine nature is impressed on all Selves that have been brought into existence on this earth, and he who studies the nature and characteristics of his earthly parents will, as a matter of course, be led to comprehend the nature and personality of God to a real and appreciable extent. If viewed correctly in this light, how much truth is imbedded in the saying of the Holy Bible: “God created man in his own image, in the image of God created he him, male and female created he them.” (Genesis, Chapter 1, verse 27). As a painter imprints his inward thought-picture on the picture he begets outwardly, as a sculpture chisels a statue out of a marble block in accordance with an image formed antecedently in his mind, so too the Divine mind prints its thought-forms on the pliant matter and brings out of it bodies of innumerable kinds and shapes. As Plato said; “The pattern which works on earth is laid up in heaven.” Vast as is the difference between the structure of one body and that of another, the two co-ordiante principles of male and female that underlie them all are invariably the same. Hence, God is a person of light which combines in itself the principles of male and female in their most subtle thought-form which operates as the original of all male and female forms that take shape in matter. This fact relating to the two prominent features both in the material and spiritual planes had forced themselves so much into the attention of all thinking minds among the people of bygone ages that you cannot find among them one single soul who did not worship a God and a Goddess side by side. Now, coming to our own ancient Tamil people, we find much the same kind of conception about the Divine nature to prevail among them from the very remotest past. For, from the antediluvian compositions such as the Tholkappiam and some lyrics that have outlived the ravages of time, to the works of our own time all the wise men who came in close succession as their authors have praised and worshipped God as the father and mother intimately and inseparably united and the many verses quoted from them in the body of the work will corroborate the truth herein emphasized. But what is the vital point in this conception of God which the Tamil Saints and Sages cherished in their hearts and which distinguishes them from all other wisemen of other countries who too seem to have held the belief that in the Godhead there are both the paternal and maternal principles in intimate and inseparable union? yes; it is the knowledge possessed by the Tamils of the colour which the two principles assume that distinguishes them from all other people of all other countries. The Tamils tell us that the male principle of the Godhead glows with a red colour while the female glow with a blue. Whenever they pray to Lord Siva, they speak of him as being of brilliant red, and of mother Uma they speak as being blue and as being also in intimate union with Siva. This knowledge of the two colours of the two Divine principles marks the high significance of the Tamilian conception of God, since without having colour no object, no person can present its from either to the perception of our eyes or to the perception of our mind. It must be borne in mind that nowhere can this notable conception of God be met with except in the Saiva religion of the Tamils. This point is stressed at great length in the body of the work and the reader is referred to it for further details. Now, to many an unreflecting mind such an ascription of form and colour to the Deity may seem not only strange but also degrading to the Supreme Being who is beyond the reach of five senses and human thought, who is untouched by the ills and impurities that are incident to the mortal frame of man. Those who take delight in thus asserting that God is transcendent, do so simply out of fancy, while in reality God is a substance of substances that is ever accessible to reason and intuition and is not a mere zero so as to be completely incomprehensible even to the unclouded superior faculties of the human mind. Such a false conception of God, as pointed out by Professor William James4. has no bearing whatever on the life and destiny of finite souls and must, therefore, be abandoned as an empty, worthless and unprofitable speculation of some idle minds. If God be a substance-a substance indeed it is but purely spiritual, it must be known, like other substances, not necessarily to ordinary senses bereft of superior mental vision as in the case of low animal life, but it must be known to the pre-eminent intuitive perception of highly developed human beings. Further, it is quite unreasonable to hold with the transcendantalists that all forms are perishable, that they are tainted with ills and impurities. On the contrary, the fact must be brought home to our mind that all thought-forms as well as the forms of light and fire, are imperishable, that they always exist absolutely pure untouched by the ills and impurities the heritage of man’s mortal clay. Throw out any amount of dirt and filth, dregs, and sediments and refuse, etc., into the fire and try to defile it but you cannot succeed. On the other hand, the fire will burn them up all to ashes, itself ever remaining pure and undefiled. So also God’s thought-forms exist everlastingly the purest and uncontaminated by any impurities. Then, the sections from twentytwo to twentyseven dwell upon the forms of worship the Tamils have been paying to God from ancient times. The conceived God in a concrete form, in the form of the human father and mother. The whole universe was taken by them to represent the person of God in which the portion suffused with golden light consitituted the father as much as the portion of blue sky light constituted the mother; the three illuminating principles the sun, the moon and the fire were viewed as forming his three eyes; the evening clouds which look ruddy were imagined as his braided red locks; and other microcosmic members of his person represented other mocrocosmic aspects perceived by the senses and miniatured in the imagination so as to be easily pictured in the mind for their loving adoration. The Southern Tamils who loved the three lights chose to call their God “Mukkannan” (K¡f©zh‹) or the triple-eyed God, that is, the God that possesses the three lights as his three eyes; while the northern Tamils who loved the red light of the evening sun fixed upon the term ‘Siva’ as being an appropriate one by which to call the Almighty God of the universe. Now, with this mere intangible microcosmic image of God formed in their mind the Tamils were not satisfied, since it was not accessible to the worship they loved to pay externally also. Intense love towards an object expresses itself in the acts of the loving person and urges him on to offer to it, as a token of that love, what he most values of his earthly possessions. It is for the sake of satisfying this inner urge that persons of a strong religious turn of mind set up before them a stone image, made like the image of God formed in their imagination, and pay their adoration by offering to it flowers, fruits, grains etc., in all love and reverence. The earliest stone symbol worshipped six or seven thousand years ago by the Tamils was a coneshaped piece infixed into a circular stone and called ‘Sivalinga’ in later times. This symbol represents the union of both the heat principles which, as is manifest in the burning flame, always assumes a cone-shape, and the cold principle which, as is seen in the circling motion of the deep running water, takes on a ring-shape almost. That the ancient Tamils used, than as now, such symbpl stones all over India and in foreign countries where they colonized for commercial purposes, is evidenced not only by the large number of these symbol stones recently dug out from the buried cities of Harappa and Mohenjadaro in the Punjab, but also by the multitudinous temple in which this symbol is set up and worshipped even unto this day in Southern India and western countries. And of this very old lithic symbol the under part which is ciruclar in shape is a plain representation of the shape of the pit in which the fire was kindled, while the cone-shaped piece infixed into it stands for the form of the flame that blazes up from the pit. It was in this way that fire was kindled and directly worshipped as God by the ancinet Tamils in pre-historic times and long after; and at the end of the service the burnt up ashes was taken out of the pit as the sacred remnant of the fire and smeared all over thier body and forehead. But as time went on, their love for whoshipping God in still more tangible forms grew up impelling them to substitute for the pit a ring stone and for the blazing fire a piece of stone shaped like it conically; after joining the two together they anointed it with oil, they put leaves and flowers on it, they offered to it what they usually drank and ate, they sang and danced before it, they embraced it and in this wise they satisfied their passion for a tangible worship. It must be noticed too that this form of worship still continues to be paid in all the Siva and Vishnu temples all over India from Cape Comorin to the Himalayas. Notwithstanding this plain and indisputable origin of Sivalinga or the symbol of Lord Siva, most of the European travellers and scholars and many a learned Indian too have mistaken this sacred symbol of God for a phallic emblem. No greater error can be committed than this misapprehension of the saving significance which the sacred symbol of Siva implies. The smearing of the sacred ashes is so closely associated with the worship of Siva in the form of fire that you cannot explain the association if you take the Sivalinga merely as the symbol of the phallus or the generative organ. But when you relate the use of the sacred ashes to fire-worship, it finds itself fully and readily explained, since ashes is the only pure and sacred remnant left by fire at the end of its worship. Fire purifies everything with which it comes in contact and the pure white ashes must be considered therefore as the emblem of purity itself. That is why the very pious Saint Francis of Assisi too always carried the ashes in his hands and declared “Brother ash is very pure.”5 And for more extended treatment of the significance of Sivalinga the reader is referred to the Tamil text. Besides this stone symbol of fire, the Tamils also worshipped the Heavenly Parents as represented in stone in the human male form of Siva and the female form of Uma. Images of this twofold character have been unearthed from the ruins of Harappa and Mohenjadaro and Dr.E. Mackay correctly identifies them with Siva and Uma6 There can therefore be little doubt that temples dedicated to Siva built both on small scale and large, just as we find them now all over India, existed five or six thousand years ago, as is clear from mention made of them in the Tamil Lyrics composed about 3500 B.C. As times advanced, conceptions of God’s various function and of his various manifestations in various forms also multiplied that images representing them all came to be made successively and set up for worship in one and the same temple of Siva. Of such images those of Murukan and Ambalavanan constitute the earliest after the erection of Sivalinga and Umasiva. The form of Murukan represents God’s eternally existing youthful personality, while the dancing posture of Lord Ambalavanan intimates the unceasing activity of God that sets the whole universe in everlasting motion. For Further representations of God’s functions and what they import the Tamil text must be looked into. Besides the daily divine service performed in the temples of Lord Siva, there were also celebrated many festivals on days specially appointed for them in every year with the object of exhibiting the dealings of God with his pious and devoted servants. Of such sacred festivals, the worshipping of God in the great conflagration of fire called the festival of Karthikai, seems to have been celebrated more than two thousand years ago, since a full description of which is given in the Tamil poem composed at the beginning of the Christian era. That some other festivals also were held with great solemnity and magnificence in pre-Christian times is evidenced by Tamil classical poems and their commentaries produced before and after the beginning of the Christian era. Now, the sections twentyeight, twentynine and thirty return to a searching inquiry of the matrimonial rite as already indicated. How did the marriage rite originate in the past, who were its originators the Aryans or the Tamils, what were the forms into which the rite divided itself between the two peoples, how was it conducted by them, how does the ancient wedding ceremony of the Tamils differ from its later form and observance, how have the modern Tamils to conduct it with necessary changes to suit the modern life requirements, what do the forms and principles of the ceremony signify-all these are treated exhaustively in these sections. Then, the section thirtyone deals with the funeral rite observed by the Tamils in ancient and modern times and shows how it should be performed in future with the assistance of Tamil priests alone. After that, the thirty second section enters into a full discussion of the habits of mind inherited by each individual soul as an inevitable result of the deeds done in its previous births. Habits of mind acquired in previous lives and brought into this present life by each individual soul are summarily called in Tamil vinai or karma in Sanscrit. The Tamil people are by nature always reflective, and they could not therefore set their mind at rest with the satisfaction of their mere bodily wants. They went deeper into the problems that affect the human life as a whole, instead of limiting their thought to a transitory part of its existence. For every sentient being has a continuous existence, of which the present is a quick flying moment having no independent value and reality but for its intimate relation to what consituted its past and what would constitute its future. In an undertaking of a momentous kind you will not associate with you a man who seeks to take part in it, without getting an exact knowledge of his antecedents as well as his would be conduct. In the management of one’s vital affairs, no one will leave it in the hands of stranger whose past history is so completely unknown as to render an inference of his future totally impossible. Nay, our very daily life is so closely interwoven with the kind of life we led in the previous days the kind of life we will lead in the days to come. Most of all, the very law of motion which we observe to prevail all around us warrants our belief in the existence of a series of lives through which every individual soul passes. For everything in this vast universe moves in a circle. The sun, moon and stars and our own earth move in a circle. Only for a limited length of time can we catch sight of a moving body in proportion to its velocity and the position from which we view it. Sooner or later it may pass out of our view and may reappear and disappear again and again as the scenes and actors in a dramatic representation do. The sun vanishes from our sight every evening and manifests itself every morning; yet we believe the same sun, and not a new sun quite different from the one we saw yesterday, has risen to our view. In like manner, every finite soul passes away every time its flimsy garment-like body wears out and reappears in a new body refreshed and recuperated. This state of things wil continue until man learns the art of prolonging the life in a single body and with that conquering death he enters into an eternal union with the Supreme Being and becomes there the receptacle of its ineffable and everlasting bliss. Now, this fact of soul’s birth and rebirth was, as evidenced by the old Tamil classics, discovered at first only by the Tamilian sages and was communicated by them to the Aryans and others who came to them for instruction in the destiny of man. Nevertheless many a scholar of oriental learning wrongly thinks that the discovery of soul’s rebirth was first made by the Aryans alone. But in the whole range of such Rig Vedic hymns as were brought by the Aryans there is not even a stray reference to the doctrine of rebirth to uphold their assertion. The minds of the Aryan settlers were so overwhelmed with the anxiety of meeting their needs for the present life that they could bestow no thought on the question relating either to their past lives or their future; this can be made plain to every one who would take trouble to glance at the Rig Vedic hymns of the Aryans. They were too much concerned with the present to extend their vision either to what had gone before or what would come on hereafter. But, not so were the ancient Tamils who were so highly advanced in civilization and in mental, moral and religious culture that every problem relating to the destiny of man engaged their serious attention and was solved by them in such a way that the reasonableness of its solution and the bearing of which solution on the practical life of man constitute the marvels of the Tamilian thought. Then, the sections thirtythree and thirtyfour treat of the ascetic mode of living with which the latter part of the ancient Tamilians’ life was occupied. It has been already pointed out that the Tamilian forefathers, even while they were rolling in riches and enjoying the pleasures of life to their heats content, never for an instant allowed themselves to lose sight of the momentous fact that their present happiness was due in a large measure to the virtuous deeds they did in their former births, and that, if their future lives also should be made enjoyable that could be achieved only by making the present life also virtuous in every respect so that it might contribute its moulding power to their future existence and render it progressively happy. Such constant application of their mind to a serius consideration of the indissoluble connection of their present state with their past and future states of life, naturally bred in them an aversion to implicating themselves continually in a material life which continually changes, and which, however carefully led, brings on painful experiences and cannot afford a permanent and unalloyed pleasure even to highly developed souls. And so, after making their life fruitful, and before old age was approaching to sap their vitality, they retired from the worldly life in time and set their mind and energy on freeing themselves from the whirlpool of births and deaths and putting an end to their gross and impure material existence. And in order to achieve this end, they thought recourse must be had to the perfect. Being who alone being beyond births and deaths can redeem them from the clutches of mortal life and set them in the realm of light and imperishable enjoyment. Now, what characterizes the ascetic life of the ancient Tamils is that they never forsook their wives and children like the Buddhist monks, but lived with them and devoted with them their whole time to the contemplation of God, to His Divine service, and to the service of humanity. So long as they were serving their own purpose and the purpose of their kith and kin, their love was moving on the limited plane of self-interest; but now entering the ascetic life which aims at breaking down the barrier of self-interest and merging it in the disinterested universal love of God, they looked upon all including their wives and children as their own kindred and made no difference whatever between their own and others. The olden day ascetic thought it a sin to leave his wife and children to mourn over his separation, instead of living with them and guiding them to follow in his footsteps the spiritual path which he pursued. This form of ascetic life led by the ancient Tamils is clearly mentioned in the Tholkappiam and for further details on this point the reader is referred to the Tamil text. Before closing this subject, one more important point has to be brought to the notice of students who take interest in the study of antiquities. As pointed out before, the ascetic life was peculiar to the Tamils, the theory and practice of yoga being indispensably and closely bound up as much with the virtue of non-killing and abstaining completely from flesh-eating, and drinking, as with the loving worship of Siva, the almighty God of the universe. I need hardly say that this ascetic mode of life, being quite incompatible with the life of the Aryans who were addicted to flesh-eating and drinking, and worshipping deified heroes, could not have originated with them in the remote past, but must have been discovered and brought into use by the ancient Tamil sages as the essential means of holding communion with God and attaining salvation. Then, the final thirtyfifth section advocates such of the reforms as are necessarily and immediately required to ameliorate the present condition of the Tamilians. The chief of all is that the Tamilians who now allow themselves to be called Sudras or slaves or sons of concubines must understand to what great height their forefathers had risen in social, moral, intellectual, religious and linguistic cultures and to what a bottomless pit of ignorance and illiteracy their descendants have fallen at present and are being down-trodden by the very people who are fattening themselves on their wealth. In the next place they must realize that the glory of a nation consists in the cultivation they have bestowed and are bestowing on their language and literature and the extreme care with which they preserve their purity and independence. It must also be borne in mind that, if the few cultivated languages of the ancient world such as the Egyptian, the Sumerian, the Hebrew, the Sanscrit, the Greek, the Latin and so on, it is, Tamil alone that still lives by being spoken and written by more than twenty million people all over this globe. Because of this undying vitality, Tamil requires from her sons that care and vigilance which would keep it ever pure undefiled by extinct extraneous elements which, like parasites, seek to live upon living tongues. Next to that, all Tamils must abandon worshipping the multitudinous gods and goddesses and deified heroes and return to the montheistic belief of their ancestors and worship only the one almighty God Siva with the divine mother Uma. Finally, the Tamils must take note British government is the only best government which has been directed by Providence to rule impartially over all the Indian peoples who are torn by endless caste distinctions, and irreconcilable racial and religious differences. Each section of the Indian people is dominated by its own self-interest to the detriment of every other section. No one of them, however enlightened, can occupy an important place in the government without seeking the interest of his own community and ignoring that of others. Therefore, in all responsible posts the British people alone must be appointed, since they alone can do full and impartial justice to all the different classes and communities of the Indian people. No place of importance must be left to be occupied by any Hindu- here I except Muslims and Christians - for the Hindu administration ends, as we have recently seen in the dire distress and dissatisfaction of the people. Moreover, government by the ruling class alone is less expensive, less troublesome and more profitable. Until the people are educated at least fifty percent, until they are made to realize the responsibility they bear to each other in the social and political situations, until they learn to consolidate their interests rising above baneful caste and racial claims, they must not be suffered to bear the burden of self-government or any government in which they cannot participate intelligently, earnestly and disinterestedly. With this I close this summary directing the reader to go through the following Tamil work for fuller information on the topics touched above. Pallavaram, Vedachalam The Sacred Order of Love, 15th October, 1941 Foot Notes 1. The Indian Empire, Vol. I. p.299, 2. Vedic India. pp.313, 314. 3. Read the chapter on ‘Foeticide’ in ‘The Science of New Life’ by Dr. John Cowan, M.D. 4. In his “Varieties of Religious Experience.” 5. Read F.E. Cooke’s “Life of St. Francis of Assisi.” 6. The Indus Civilization, pp. 70-84. 1. தமிழர் இன்னாரென்பது இந்நாளில் இவ்விந்திய தேயத்தின் வடக்கே இமய மலையிலிருந்து தெற்கே குமரிமுனைவரையிலும், வடமேற்கே பஞ்சாபிலிருந்து வடகிழக்கே அசாம் வரையிலும், மேற்கே மலையாளக் கரையிலிருந்து கிழக்கே வங்காளக் குடாக் கடற்கரை வரையிலும் நிறைந்திருக்கும் பல்வேறு வகையான மக்கட் கூட்டத்தாரில், தமிழ் மக்களுக்கே உரிய சமயக் கொள்கையினை ஆராய்ந்து முடிவு கட்டுதற் பொருட்டு இம்மாநாடு கூட்டப் பட்டிருக்கின்றமையின், தமிழரது மதத்தை நன்காராய்ந்து யான் எனது தலைமையுரையினை நிகழ்த்தல் வேண்டு மென்று இதன் அமைச்சர் கேட்டுக் கொண்டதற்கு இசைந்து தமிழர் மதத்தின் முன்னை நிலை பின்னை நிலைகளைப் பற்றி ஆராய்ந்து பேசுதற்குப் புகுகின்றேன். முதலில் தமிழர் என்பார் யாவரென்பதனைச் சிறிது ஆராய்ந்து பார்த்தல் வேண்டும். தமிழ்மொழி பேசுவோரே தமிழரெனின்; தமிழ்மொழிக்கு உரியரல்லாத மகமதியருங், கிறித்துவரும், வெள்ளைக்காரரும் மகாராட்டிரரும் தெலுங்கர், கன்னடர், மலையாளர் முதலியோரும், வேறு பிறரும் இஞ்ஞான்று இந்நாட்டில் தமிழ் மொழி பேசக் காண்கின்றோ மாகலின், தமிழ் பேசுதல் ஒன்றே கொண்டு அவரெல்லாரையுந் தமிழர் எனக் கூறுதல் பொருந்துமோ? உரைமின்கள்! அது பொருந்தா தாகலின், வேறு பொருத்தமான தக்க சான்றுகள் கொண்டுதான் தமிழர் இன்னாரென நாம் ஆராய்ந்து துணிதல் வேண்டும். மக்கட் கூட்டத்தாரைப் பல வகுப்பினராய்ப் பிரித்தறிதற்கு மேனாட்டாசிரியர்கள் சில திட்டமான அடையாளங்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். அவை: உடம்பின் உயரம், உடம்பின் நிறம், தலைமயிரின் வடிவம் நிறம், கண்களின் அமைப்பு நிறம், தலையின் அமைப்பு, மூக்கின் அமைப்பு முதலியனவாகும். இவ்வடையாளங்களிற் பெரும்பாலுங் காணப்படும் ஒற்றுமை வேற்றுமைகளைக் கொண்டும், அவ்வாற்றால் வெவ்வேறு குழுவினராகத் துணியப்பட்ட மக்கட் பகுப்பினர் பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னே தொட்டுத் தமக்குள்ளே வழங்கிவந்த மொழிகளின் அமைப்பைக் கொண்டும் அவ்வாசிரியர்கள் நுணுக்கமாக ஆராய்ந்து பார்த்ததில், தமிழர்களும் அவர்களோடு இனமான திராவிட மக்களும் பெரும்பாலுங் குள்ளமான வடிவின ரென்றும்; கரிய நிறத்தினரென்றும் தழைக்க கூந்தலும் அதில் ஓரோவொருகாற் சுருண்ட மயிரும் வாய்ந்தவ ரென்றும் கரிய விழியினரென்றும், நீண்ட மண்டை யோட்டினரென்றும், ஒரோவொருகால் அடியிற் குழிந்த அகன்ற மூக்கினரென்றும், என்றாலும் அதனால் தட்டையாகக் காணப்படாத முகத்தினரென்றுந் திட்டமாய் அறியலாயினர். இங்ஙனம் அறியப்பட்ட உறுப்படை யாளங்கள் உடைய தமிழரும் அவர் இனத்தவருமே இப்போது இலங்கை முதல் இமயம் வரையிற் பரவியிருக்கும் மக்கட் கூட்டத்தாரிற் பெரும்பகுதி யினராய்க் காணப் படுகின்றனரென 1ரிசிலி என்னும் ஆசிரியர் முடித்துச் சொல்லியிருக்கின்றனர். அவரைப் பின்பற்றி ராப்சன்2 என்னும் ஆசிரியரும் பின்வருமாறு வரைகின்றனர் : இந்திய மக்களின் பண்டையத் தொகுதியில் முதன்மை யாய் இருந்தவர்கள் திராவிட வகுப்பினரே யாவர்; அவர், வழிநாட்களில் வந்து குடியேறிய ஆரியர், சித்தியர், மங்கோலியர் முதலான மற்றைக் குழுவினருடன் கலப்புற்று மிகவும் வேறுபாடுற்றனர். இன்னும், ஆரியர்கள் வடமேற்கே யிருந்து வந்து குடியேறுகின்றுழித் தம்முடன் கொணர்ந்த ஐரோப்பிய ஆரியமொழிகளை இத்தேயத்தில் நுழைத்த ஞான்று, வடவிந்தியாவின் மேற்கேயுள்ள நாடுகளில் மெய்யாகவே வழங்கிவந்தவை திராவிட மொழிகளே யென்பதிற் சிறிதும் ஐயமில்லை. வேதமொழியிலும், அதற்குப் பிற்பட்ட சமகிருத மொழியிலும், பிராகிருத மொழிகளிலும், இன்னும் முற்பட்ட குடிமக்கள் மொழிகளிலும், அவற்றி னின்று தோன்றி இஞ்ஞான்று வழங்கும் மொழிகளிலும், எல்லாந் தமிழ் மொழிக்கேயுரிய குறியீடுகள் புகுந்திருத்தல் ஆராய்ந்து கண்டுபிடிக்கப்பட் டிருக்கின்றது. ஆகவே, இந்தியர் ஆரியர்கள் வருதற்கு முன்னமே, திராவிடமொழிகளைப் பேசுவாரே தென்னிந்திய வடஇந்திய நாடுகளில் முதன்மையாக நிறைந்திருந்தனர் என்று கருதுதற்குச் சிறந்த சான்றுகள் இருக்கின்றன.3 என்று ஆராய்ச்சிவல்ல ஆங்கில ஆசிரியர்கள் நடுநின்று கண்டு கூறும் மெய்யுரை கொண்டு, ஆரியர் இவ்விந்திய நாட்டின் வடமேற்கே புகுந்து குடியேறுதற்கு முன்னமே இவ்விந்திய நாடு முற்றும் பரவியிருந்தவர்கள் தமிழ் மக்களும் அவர்க்கு இனமான ஏனைத் திராவிட மக்களுமே ஆவரென்பதும், அவர்கள் அஞ்ஞான்று பேசிய மொழி தமிழுந் தமிழுக்கு இனமான ஏனைத் திராவிட மொழிகளுமே ஆகுமென்பதுந் தெற்றென விளங்கா நிற்கின்றன. இனிப், பஞ்சாபிலுள்ள அரப்பா மொகஞ்சதரோ என்னும் இடங்களில் அழிந்துபட்ட நகர்களை அகழ்ந்து, அவற்றினின்றும் எடுத்த கல்லுருக்கள், பொன், வெள்ளி செம்புருக்கள், கட்டிடங்கள் முதலானவைகளைக் கருத்தாக ஆராய்ந்து பார்த்த 4ஸர் ஜான் மார்ஷல் என்னுந் துரை மகனார், இற்றைக்கு ஐயாயிர ஆண்டுகளுக்கு முன்னமே, அஃதாவது ஆரியர்கள் இவ்விந்திய நாட்டிற்குட் குடிபுகு முன்னமே, நாகரிகத்தில் மிகச் சிறந்தாராய் விளங்கிய தமிழ்மக்களே அந்நகரங்களில் வாழ்ந்தவர்கள் என்னும் வரலாற்றினை எடுத்துக் காட்டி யிருக்கின்றனர். அவையும் பிறவும் யாம் ஆங்கிலத்திற் சைவசித்தாந்த வரலாற்றினை விரித்தெழுதிய நூலில் தக்க சான்றுகளுடன் விளக்கிக் காட்டியிருக்கின்றேம். அவையெல்லாம் இங்கே எடுத்துச் சொல்வதற்கே நேரமில்லை. எனவே, ஆரியர் வருதற்கு முன்னமே அஃதாவது ஐயாயிர ஆண்டுகளுக்கு மேலாகவே, இவ்விந்திய நாடெங்கணும் பெருந்தொகையினராய்ப் பரவியிருந்தவர் நாகரிகத்திற் சிறந்த தமிழரும் அவரோடு இனப்பட்ட ஏனைத் திராவிடருமே யாவரென்பதும், அவர் வழங்கிய மொழி தமிழுந் தமிழோ டினமான ஏனைத் திராவிட மொழிகளுமே யாமென்பதும் நன்கு பெறப்பட்ட உண்மை முடிபுகளாதல் கண்டுகொள்ளல் வேண்டும். அடிக்குறிப்புகள் 1. Risley. 2. Rapson. 3. “This was assumed by Risley to be ‘the original type of the population of India, now modified to a varying extent by the admixture of Aryan, Seythian and Mongoloid elements.” “At the same time there can be little doubt that Dravidian languages were actually flourishing in the western regions of Northern India at the period when languages of the Indo European type were introduced by the Aryan invasions from the north-west. Dravidian characteristics have been traced alike in Vedic and Classical Sanscrit, in the Prakrits or early popular dialects, and in the modern Vernaculars derived from them.” “There is good ground, then, for supposing that before the coming of the Indo-Aryans, speakers of the Dravidian languages predominated both in Northern and in Southern India.” Prof.E.J. Rapson, in Ancient India of the Cambridge History of India. pp.41-44. 4. Sir John Marshall 2. ஆரியர் இன்னாரென்பது அங்ஙனம் பண்டைநாளிலிருந்த தமிழ்மக்கள் இன்னா ரென்பது துணியப்பட்டாற்போல, வந்தேறுங் குடிகளான ஆரியர் இன்னாரென்பது துணியப் பட்டிருக்கிறதோ வெனின்; அதுவும் ஒருவாறு துணியப் பட்டே இருக்கின்றது. இந்திய ஆரியர் என்பார் பெரும்பாலும் நீண்டுயர்ந்த யாக்கையின ரென்றும், வெள்ளை நிறத்தினரென்றுங், கரிய அல்லது நீல விழியினரென்றும், முகத்தின்மேல் மிகுந்த மயிரின ரென்றும், நீண்டமண்டை யினரென்றும், ஒடுங்கி யுயர்ந்திருந்தாலும் தனிப்பட நீளாத மூக்கினரென்றும் மேனாட்டாசிரியர்கள் ஆராய்ந்தறிந்திருக்கின்றனர். இவ்வாரியமாந்தர், காசுமீரத்திலும் பஞ்சாபில் சிந்துநதி நெடுக அம்பாலா வரையிலுள்ள இடங்களிலும் இராசபுதனத்திலுமே காணப்படுகின்றன ரென்றும், அவர் வழங்கிய ஆரியமொழி, பாரசிகம், இலத்தீன், கிரேக்கம் முதலான மேல்நாட்டு மொழிகளோடு இனமுடைய தென்றும் அவ்வாசிரியர்களே ஆராய்ந்து சொல்லி யிருக்கின்றனர். ஆனாலுந், தனிப்பட்ட ஆரியக்குழுவினர் இவர் தாமென்று உறுதிப்படுத்திச் சொல்லுதற்கு இன்றி யமையாத சான்றுகள் கிடைத்திலாமையின், இப்போதுள்ள இந்திய மக்களில் இவர் தாம் ஆரியரென்று பிரித்துக் காட்டுதல் இயல வில்லை யென்றும் மேனாட்டாசிரியர்களே உண்மையை ஒளியாமற் சொல்லி விட்டனர். இவ்விந்திய நாட்டுக்குப் புறம்பே குளிர்மிகுந்த மணல் வெளிகளிலும், அவற்றின் இடையிடையே அடர்ந்த புல் நிலங்களிலும் ஆடுமாடு மேய்த்துக் கொண்டு மிடிப்பட்ட வாழ்க்கையினராய் அலைந்து திரிந்த ஆரியர் பெருந்தொகை யினராய் இருத்தல் இயலாது; ஆகவே, அவரிலிருந்து பிரிந்து இவ்விந்திய நாட்டின் வடக்கே போந்து குடியேறிய ஆரியர் மிகச் சிறு தொகையினராகவே அந்நாளில் இருந்தாராகல் வேண்டும். ஆதலினாற்றான் ஒரு பெருங்கடல் நீரில் ஓடிமறைந்த ஒரு சிற்றருவி நீர் போலவும், பகலவன் ஒளியில் மறைந்த ஒரு சிறு விளக்கொளி போலவும் பெருந்தொகை யினராய் இருந்து நாகரிக ஒளிமிக்கு நன்குயிர் வாழ்ந்த தமிழ்மக்களிடையே, மிடிப்பட்டு ஒளியின்றி வந்து கலந்த ஆரியர், பெரும்பாலும் அவரின் வேறாய்ப் பிரித்துத் தனிப்பட வைத்துக் காண்டற்கு இயலாமலே மறைந்து போயினர். 3. தமிழரின் உருவ அமைப்பு மேலும், தமிழ்மக்கள் எல்லாருங் கரிய நிறத்தினராயும், ஆரியரெல்லோரும் ஐரோப்பியரைப் போல் வெளிய நிறத்தினராயும் எங்கும் நிறத்தால் வேறுபட்டேயிருந்தன ராயின், அவரை அதுகொண்டு வேறு பிரித்துக் காண்டல் இயலும். மற்றுக், கால்டுவெல் ஆசிரியர் காட்டியபடி, தமிழ் மக்களிலேயே கறுப்பில் வெளிறிய நிறம் உடைய வரும், சிவந்தநிறம் வாய்ந்தவரும், பொன்னிறம் மிகுந்த வரும், பழுப்புநிறம் பொருந்தியவருமாகப் பலவேறு நிறம் உடையவர் இடையிடையே காணப்படுகின்றனர். சென்னையைத் தலைநகராய்க் கொண்ட தொண்டை நாட்டிலும் மதுரையைத் தலைநகராய்க் கொண்ட பாண்டி நாட்டிலும் உள்ள தமிழர்கள் பொதுவாய்க் கரிய நிறத்தினராகவே காணப்படுகின்றனர். ஆனாலும், பாண்டி நாட்டவர் உடம்பின் உயரத்தில், தொண்டை நாட்டவரை விட நீண்டு காணப்படுகின்றனர். நடுப்பட்ட சோழ நாட்டிலுள்ளவர்களோ மிக நீண்டும் மிகக் குறுகியும் இல்லாத நடுப்பட்ட உயரமுள்ள உடம்பினராய், வெளிறிய கறுப்பு நிறமும் பழுப்பு நிறமுஞ் சிவந்த நிறமும் பொன்னி றமும் வாய்ந்தவர்களாய் இருக்கின்றனர். மலையாள நாட்டிற் புலையர்களைத் தவிர மற்றை வகுப்பினர் அனைவருங் கரிய நிறத்தினர் அல்லர். அவர்களிற் சிவந்த நிறத்தினரும் பழுப்பு நிறத்தினரும் பொன்னிறத்தினரும் மிகுதியாய்க் காணப் படுகின்றனர். இங்ஙனமே தெலுங்கர் கன்னடர் தோடர் முதலான மற்றைத் திராவிட மாந்தர்களும் பலவேறு நிறத்தினராய் இருக்கின்றனரே யல்லாமல், அவரெல்லாரும் முற்றுங் கறுப்பு நிறமே வாய்ந்தவரல்லர். தமிழ்மக்களிற் பண்டை வகுப்பினராகிய பறையர் பள்ளர் முதலியோர் பகல்முழுதும் வெயிலிலும் வேனலிலும் நின்று பயிர்த்தொழிலைச் செய்து வருதலாற் கரிய நிறத்தினராய் இருக்கின்றனரே யல்லாமல், உடம்பின் அமைப்பு வகையில் அவர்கட்கும் மற்றை வகுப்பினரான தமிழர்கட்கும் ஏதொரு வேறுபாடுங் காணப்படவில்லை. அங்ஙனமே, தமிழர் மலையாளர் தெலுங்கர் கன்னடர் தோடர் முதலான திராவிட மாந்தரிலும் நிறவேறுபாடு சிறிது சிறிதே காணப் படினும், உருவ வமைப்பில் வேறுபாடு சிறிதுங் காணப்படவில்லை. பறையரிலேயே உழுதொழிலின்றி, வேறு தொழில்களை நிழலிலிருந்து செய்வாரும், கல்விகற்று உயர்ந்த நிலைகளில் இருப்பாருஞ் சிவந்த நிறத்தினராய் அழகிய தோற்றம் வாய்ந்து ஏனை உயர்வகுப்பினரோடு ஒத்த வடிவினராயே திகழாநிற்கின்றனர் 4. திராவிட ஆரியர் ஆதலால், உடம்பின் நிறத்தைவிட உருவ வமைப்பு களிற் புலப்படக் காணும் வேறுபாடு கொண்டு மக்களின் பல வேறு பிரிவுகளைத் தேர்ந்தறிதலே பொருத்தமாகுமென்று தெரிதல் வேண்டும். காப்பிரிகளையும் அராபியரையும் மங்கோலியரையுஞ் சீனர்களையுங் கண்டவுடனேயே அவர் தம்மில் வேறுபட்ட அமைப்புடையராதலைத் தெற்றென அறியாதார் யார்? அதுபோல இப்போதுள்ள நம் இந்து மக்களில் இவர் ஆரியர், இவர் தமிழர் என்று புலப்படப் பிரித்துக் காண்டல் சிறிதேனும் இயலுமோ? இயலாதே. என்றாலும், சித்தியருந் திராவிடருந் கலந்த கலப்பிற் றோன்றிய மக்களையும் மங்கோலியரும் திராவிடருங் கலந்த கலப்பிற்றோன்றிய மக்களையும் பிரித்துக் காண்டல் இஞ்ஞான்று எளிதாய் இருத்தல் போலவே, திராவிடரும் ஆரியருங் கலந்த கலப்பிற் பிறந்த மக்களையும் பிரித்தறிதல் இயல்வதாகவே யிருக்கின்றது. இங்ஙனமாக ஆரிய திராவிடக் கலவையிற் றோன்றிய மக்களையே ஆரியராகக் கருதி, அவர் உறையும் இடம்; சரசுவதி யாறு மணல் வெளியிற் சுவறி மறைந்துபோன இடமான விநசநா என்னும் ஊரிலிருந்து அலகபாத்து அல்லது பிரயாகை வரையிலுள்ள மத்ய தேசமே ஆகுமென்று மனுமிருதி (2,21) கூறுவதாயிற்று. இங்ஙனம் ஆரிய திராவிடக் கலவையிற் பிறந்த மக்களைத் தவிர, வேறு தனிப்பட்ட ஆரியர் என்பார் மநு குறித்த மத்திய தேசத்தில் இல்லையாகவும், அத்தேசத்தி லிருந்த திராவிட ஆரியரையே ஆரிய மக்களாகவும், அவர் உறைந்த இடத்தையே மத்திய தேசமாகவுங் கொண்டு கூறிய மநு, தனிப்பட்ட ஆரிய மாந்தர் உறைந்த காசுமீரத்தையும் அதன்கண் உறைந்த ஆரியரையும் ஒப்புக்கொண்டு கூறாமையினை உற்றுநோக்குங் கால், அவர் காலத்தில் அங்கிருந்த ஆரியர், குதிரை எருமை ஆடு மாடு முதலான விலங்குகளை ஏராளமாய்க் கொன்று அவற்றின் இறைச்சியைத் தின்று வந்ததும் அல்லாமல், ஆறறிவுவாய்ந்த மக்களையுங் கொலை செய்து அவர்களின் ஊனையும் விழுங்கிவந்தமையும், அது மட்டுமோ, சோமப்பூண்டை நசுக்கிப் பிழிந்த கள்ளையுங் குடங்குடமாய்க் குடித்து, வரைதுறையின்றி மகளிரைப் புணர்ந்துஞ் சூதாடியுங் களியாட்டிற் காலங்கழித்து வந்தமையுங் கண்டு, நாகரிக ஒழுக்கஞ் சிறிதும் இல்லா அத்தனி ஆரியரையும் அவர் உறைந்த காசுமீர தேயத்தையும் மநு ஒப்புக்கொண்டு கூற உள்ளம் ஒருப்படாமலே விட்டு விட்டனர் என்பது புலனாகா நிற்கின்றது. வடமேற்கிலிருந்து வந்து இவ்விந்திய நாட்டுள் நுழைந்த ஆரியர் கொலை புலை கட்குடி வெறியாட்டு முதலிய இழிதொழிற்களில் மிக்கவராய் இருந்தமை, அவர் அஞ்ஞான்று இந்திரன் வருணன் முதலான தந்தெய்வங் கண்மேற் பாடிய இருக்குவேதப் பாட்டுகளால் நன்கறியக் கிடக்கின்றது. இவற்றின் விரிவெல்லாம் எமது மாணிக்க வாசகர் வரலாறுங் காலமும் என்னும் நூலிற் றக்க சான்று களுடன் காட்டப் பட்டிருக்கின்றன. 5. மநு ஒரு திராவிட மன்னன் மநு என்பவன் நாகரிக ஒழுக்கத்திற் சிறந்த ஒரு திராவிட மன்னன் என்றும், இம்மாநிலத்தைக் கடல்நீர் கவரத் துவங்கிய காலத்தில் அம்மன்னன் மலையநாட்டில் ஓடிய கிருதமாலை ஆற்றங்கரையிற் றவஞ்செய்து கொண்டிருக்க ஒரு மீன்வடிவிற் றோன்றிய திருமால் அவனை அவ் வெள்ளத்திற்குத் தப்புவித்தன ரென்றும், அவ்வெள்ளம் வடிந்த பின் அம்மன்னன் பல முகமாய்ச் சிதர்ந்தோடிப் போன குடிமக்களையெல்லாம் ஒருங்கு சேர்த்து, அவரை மீண்டும் நாடுநகரங்களில் நிலை நிறுத்தி அவர் ஒழுக வேண்டிய வாழ்க்கை முறைகளைக் கற்பித்தனனென்றும், அங்ஙனம் அவன் கற்பித்த அறநூலே மநு மிருதிஎனப் பெயர் பெறலா யிற்றென்றும் பாகவதம் மற்ச புராணம், அக்கினி புராணம் முதலான நூல்கள் நுவலா நிற்கின்றன.1 இவ்வரலாற்றினை நுனித்தறியுங்காற், காசுமீரத்திற் றங்கிய ஆரியர் நாகரிகவொழுக்கஞ் சிறிதும் இலராகவே . அவரைத் திருத்துதல் ஒருவாற்றானும் இயலாமை கண்டு அவரை அறவே விட்டொழித்து, இன்னுங் கிழக்கே கங்கையாறு பாயும் நடுநாடுவரையிற் போந்து வழிநெடுக நாகரிக வாழ்க்கையில் உயிர் வாழ்ந்த தமிழருடன் கலந்து, தமிழருடைய பழக்க வழக்கங்களிற் பழகிக், கொலை புலை கட்குடி சூது வெறியாட்டுகளைப் பையப் பைய விட்டுச் சீர் திருந்தி வந்த திராவிட ஆரியருடைய வாழ்க்கை முறைகளையே பின்னுஞ் சீர்திருத்தி அவர்க்கு அறிவு தெருட்டும் பொருட்டே மநுவென்னுந் தமிழ் மன்னன் மத்திய தேசத்தில் அல்லது நடுநாட்டில் உறைந்த திராவிட ஆரியரை நோக்கியே மநுமிருதி என்னும் அந்நூலை வகுப்பானாயினனென்று ஆராய்ந்து உணர்தல் வேண்டும். அடிக்குறிப்பு 1. See Ragozins Vedic India. pp.341-346. 6. திராவிட ஆரிய வகுப்பு ஆகவே. காசுமீரதேயத்தின்கண் வந்து குடியேறிய ஒரு சிறு தொகுதியினரான ஆரியரைத் தவிர, வேறு தனிப்பட்ட ஆரியர் இவ்விந்தியதேயத்தில் இலரென்பதும், காசுமீரம் இராசபுதனம் முதலான சில இடங்களிற்றங்கிய ஆரியரைத் தவிர இமய மலைக்கும் விந்தியமலைக்கும் இடையேயுள்ள நாட்டிற் குடிபுகுந்த ஆரியர் அனைவரும், அவர்க்கு முன்னமே அங் கெல்லாம் நாகரிகத்திற் சிறந்தாராய் வயங்கிய திராவிட மக்களிற் கலந்து திராவிட ஆரியராயினரென்பதும், இங்ஙனந் திராவிட ஆரியக் கலவையிற்றோன்றிய மக்கள் ஆரியருடைய தீய பழக்க வழக்கங்களைப் பெரும்பாலுங் கைவிட்டுத் தமிழருடைய அருளொழுக்க முறைகளைச் சிறிது சிறிதாக் கைக்கொண்டு ஒழுகத் துவங்கின்மையின், தவவொழுக்கத்தின் மேம்பட்ட தமிழ்மன்னனாகிய மநுவென் பான், அவரைப் பார்ப்பனர், அரசர், வணிகர், தொழிலாளர் என நான்கு வகுப்பினராகப் பிரித்து, அவரவர்க்குரிய ஒழுக லாறுகளை முறை செய்து நூல் இயற்றலாயினன் என்பதும் மனத்திற் பதித்தல் வேண்டும். இந்நால்வகைச் சாதி, வகுப்பு, திராவிட ஆரியர்க்காக வகுக்கப்பட்டதே யன்றி, அது தமிழ்மக்கட்கும் உரியதாக வகுக்கப்பட்டது அன்று. ஏனென்றால், ஆரியர் இங்கு வருதற்கு முன்னமே, அந்தணரும், அரசரும், வேளாளரும் பதினெண்டொழிலாளரும் பண்டைத் தமிழ் மக்களுள் இருந்தமை, இப்போதிருப்ப வற்றுள் மிகப் பழைய நூலாகிய தொல்காப்பியத்தின் புறத்திணையியலிற் போந்த, அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும் ஐவகை மரபின் அரசர் பக்கமும் இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும் என்னுஞ் சூத்திரத்தாலும், அங்ஙனங் கூறப்பட்ட அந்தணர் முதலாயினார்க்குரிய உரிமைகளைக் கிளந்தெடுத் துரைக்கும், நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய என்றற் றொடக்கத் தனவாக வரூஉம் மரபியற் சூத்திரங்களாலும் நன்குணரக் கிடக்கின்றது. 7. ஆரியருட் சாதிவகுப்பு இல்லை இவ்விந்தியநாட்டுள் வந்து குடியேறுதற்கு முன்னமே மேற்கிளந்த நால்வேறு வகைச் சாதிப்பகுப்பு ஆரியர்க்குள் இருந்ததாயின், அஃது இருக்குவேத முதல் ஒன்பது மண்டிலங் களில் அவராற் பாடப்பட்ட பதிகங்களிற் காணப்படுதல் வேண்டும்; ஆனால், அவைகளில் அது சிறிதுமே காணப் படவில்லை; அங்கே காணப்படுவ தெல்லாம் ஆரியராகிய தமக்கும் ஆரியரல்லாத தயுக்களுக்கும் இயற்கையாய் உள்ள நிறவேறுபாட்டால் உண்டான வேற்றுமையினைக் காழ்ப்புஏற மனத்திற்பதித்து ஆரியராகிய தம்மைக் காத்து, ஆரியரல்லாத தயுக்களை அழித்துவிட வேண்டுமென அவர் தந்தெய்வ மாகிய இந்திரனை வேண்டும் வேண்டு கோள் உரைகளேயாம். இனி, ஆரியர் கொணர்ந்த பாட்டுக்களுடன், அவர் களைத் திருத்தும் பொருட்டுத் தமிழர் தாம் வணங்கிய உருத்திரர் மேலும், உருத்திரர்க்கு இருப்பிடமான தீக்கடவுண் மேலும் பகலவன் மேலுந் தாம் பாடிய பாட்டுகளையும் ஒன்று சேர்த்து இருக்குவேத ஒன்பது மண்டிலங்களாக வகுத்து வைத்தபின், நெடுங்காலஞ் சென்று இருக்குவேதப் பத்தாம் மண்டிலமாகிய இறுதிப் பகுதி திரட்டிச் சேர்க்கப்பட்டது என ஆராய்ச்சிவல்ல ஆசிரியர் அனைவரும் ஒத்து ஒருமுகமாய் உரைக்கின்றனர். இங்ஙனம் நெடுங்காலத்திற்குப்பின் சேர்க்கப் பட்டதாகிய இருக்கு வேதப் பத்தாம் மண்டிலத்தின் தொண்ணூறாம் பதிகத்தின் பன்னிரண்டாஞ் செய்யுளில் மட்டுமே, பிராமணர் விராட்புருடனுக்கு வாய்ஆவர்; அவனு டைய இரண்டு தோள்களிலிருந்தும் இராஜ்ந்யா உண்டாக்கப் பட்டனர்; அவன் தொடைகள் வைசியர் ஆயின; அவனுடைய அடிகளிலிருந்து சூத்திரர் தோற்றுவிக்கப் பட்டனர். என்று நால்வகைச் சாதிவகுப்பு நவிலப்பட்டிருக் கின்றது. ஆகவே, ஆரியர் வருதற்கு முன்னமே தமிழர்க்குத் தொழில் வேற்றுமைபற்றி இயற்கையாயிருந்த அந்தணர், அரசர், வணிகர், பதினெண்டொழிலாளர் என்னும் மக்கட் பாகுபாடே, மநுவினாலோ அல்லதவன் வழிவந்த வேறெவராலோ நாற்சாதியாக மாற்றப்பட்டு, இருக்குவேதப் பத்தாம் மண்டிலத்தின்கண் நுழைக்கப்படலானமை தெற்றெனப் புலனாகின்றது. இனி, இருக்குவேதப் புருட சூத்தத்தில், தொழிலான் மட்டுமன்றிப் பிறப்பினாலும் பார்ப்பனர்க்கு ஏனையெல்லாச் சாதியாரினும் பார்க்க மிக்கதோர் உயர்வு சொல்லப்பட்டிருத்தலை உற்று நோக்குங் கால், அப் பதிகத்தைப் படைத்து அதனுள் நுழைத்தவர் ஒரு திராவிட ஆரியப் பார்ப்பனரே யாவரென்பது துணியப் படுகின்றது. ஏனென்றால், இஞ்ஞான்றும் ஆரியப் பழக்க வழக்கங்கள் மிகுந்துள்ள வடநாட்டில் உறையும் பார்ப்ப னர்கள் ஊன் உணவு கொள்பவராய் இருத்தலின், அவர் தம்மினத்தவர் அல்லாத மற்றை வகுப்பினரை இழிவுபடுத்தக் காணேம். அவர் ஒரே கூடத்திற் றம்மவர் அல்லாத மற்றை இனத்தவர் காண இருந்து அவர் காண உணவு கொள்ளு தலையும் யாம் வடநாடு சென்ற ஞான்று நேரே கண்டிருக்கின்றேம். மற்றுத் திராவிட ஆரியக் கலப்பிற் றோன்றிய பார்ப்பனரோ, ஏனை வகுப்பினர் அனை வரையும் அடிமைகள் வைப்பாட்டி மக்கள் எனப் பொருள்படுஞ் சூத்திரர் என்னும் இழிசொல்லால் மிக இழித்துப் பேசி, அவரைத் தொடுதலும் ஆகாது, தாம் உணவருந்துங்கால் அவர் தம்மைக் காண்டலும் ஆகாது என ஒரு பெருங் கட்டுப்பாடு வகுத்துக் கொண்டு தாமே இம்மாநிலத் தேவர்கள் எனத் தம்மைத் தாமே உயர்த்துச் சொல்லித் தமக்குப் பிறப்பினாலேயே பெரும் பெருமை தேடுபவரா யிருக்கின்றனர். இத்தன்மையினரான இத் தென்னாட்டுப் பார்ப்பனரன்றி வேறு எவர்தாந் தாம் இறைவனது முகத்தினின்று பிறந்தவர் என்று சிறிதும் அச்சமின்றி அத்தனை நெஞ்சழுத்தத்துடன் கூறத்துணிவர்? அதனை யெண்ணிப் பார்க்குங்கால் தென்னாட்டுப் பார்ப்பனர் எவரோ அப் புருட சூத்தப் பதிகத்தைப் படைத்து இருக்குவேதப் பத்தாம் மண்டிலத்தில் நுழைத்து விட்டா ரென்பது திண்ணமாய்ப் பெறப்படுகின்றது. 8. திராவிட ஆரியரில் நாற்சாதி இன்னும், நடுநாட்டி லிருந்த திராவிட ஆரியர், இந்தியாவின் வடமேற்கே யிருந்த ஆரியரை இழித்துப் பேசி வந்தமையும், ஆரியர்க்குள் இல்லாத பார்ப்பனச் சாதி நடு நாட்டிலிருந்த இத் திராவிடஆரியர்க்குள் மட்டுமே தோன்றி வளர்ந்தமையும் வடமொழிவல்ல ஆசிரியர் மாக்டானல் என்பவரால் நன்கெடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றது.1 எனவே, திராவிட ஆரியக் கலப்பிற் புதியராய்த் தோன்றிய பார்ப்பனரே தமக்குப் பிறப்பினாலேயே எவர்க்கும் இல்லா ஓர் உயர்வு தேடிக் கொள்ளுதற் பொருட்டும், அவ்வுயர்வு தாம் இறைவனது முகத்தினின்று தோன்றினமை பால் உண்டாயதெனக் கட்டிச் சொன்னாலன்றித் தமிழ்ப் பொதுமக்கள் அதனை ஒப்புக் கொள்ளாரெனக் கண்டு அவரை அவ்வாற்றால் ஏமாற்றித் தமதுயர்வினை நாட்டுதற் பொருட்டுமே அப்புருட சூத்தப் பதிகத்தை இயற்றி அதன்கண் நுழைத்தாராகல் வேண்டுமென்பது சிறிது ஆராய்ந்து பார்க்க வல்லார்க்கும் நன்கு விளங்காநிற்கும். அது விளங்காநிற்கவே, வடக்கே நடுநாட்டிலிருந்து உண்டான பார்ப்பனர் திராவிட ஆரியக் கலப்பிற் றோன்றிய இரு பிறப்பாளரேயன்றித் தனிப்பட்ட ஆரியர் அல்ல மென்பதூஉம், அது பற்றியே அவர் தனிப்பட்ட ஆரியரை நாகரிகம் இல்லா மிலேச்சர் என இகழ்வாராயின ரென்பதூஉந் தாமே போதரும் (மநு, 2,23). இனி, வடக்கே கங்கை யாற்றை யடுத்த நடுநாட்டிலிருந்த பார்ப்பனரே ஆரியர் அல்லாதபோது, விந்திய மலைக்குத் தெற்கேயுள்ள நாடுகளிலும், இத்தென்றமிழ் நாட்டிலும் உள்ள பார்ப்பனர்கள் தம்மை ஆரியரென உயர்த்துப் பேசிக் கொள்வதும், தம்மவரல்லாத தமிழர் அனைவரையுஞ் சூத்திரர் என்னும் இழிமொழியால் இழித்துப் பேசி வருவதும் அறிவுடையோர் செயலாகுமோ சொல்லுங்கள். ஆரியர் இத்தென்றமிழ் நாட்டிற் குடிபுகுந்து நிலைபெற்றனர் என்பதற்கு ஏதொரு சான்றும் இயலாமையினாலும்; வட ஆரிய மன்னர் சிலர் தமிழ் மன்னரை இகழ்ந்தமை கேட்டுச் சேரன் செங்குட்டுவன் அவர்மேற் படையெடுத்துச் சென்று அவரை வென்று மீண்டமையுஞ், சோழன் கரிகாற் பெரு வளத்தான் வடநாட்டின்மேற் சென்று அங்குள்ள அரசரை யெல்லாம் வென்று இமயலைமேற் றனது புலிக்கொடியை நாட்டி வந்தமையுஞ் சிலப்பதிகாரத்தால் அறியக் கிடத்தலாலுந், தென்னாடு புகுதற்குத் துணிந்து வந்த ஆரியப் படையினைப் பாண்டியன் நெடுஞ்செழியன் என்பான் வென்று துரத்தி னமை பற்றியே அவன் ஆரியப் படை கடந்த பாண்டியன் நெடுஞ் செழியன் எனச் சிறப்புப் பெயர் பெற்றமை புறநானூற்றினால் அறியப்படுதலாலும், விந்திய மலைக்குத் தெற்கே போந்து கலிங்கம் வரையில் வென்ற அசோக அரசன் தமிழ் மூவேந் தரையும் வெல்ல இயலாமல் திரும்பிப் போய்த் தான் வெட்டு வித்த கல்வெட்டு ஒன்றில் அத்தமிழ் மூவேந்த ரையுந் தந் தோழர்கள் எனக் குறித்தமை (அதனால்) விளங்கு தலாலும் வட ஆரியராதல் வடநாட்டு மன்னராதல் கி.பி. முதல் நூற்றாண்டு வரையிற் பெருந் தொகையினராய்த் தமிழ்நாட்டிற் போந்து நிலைபெறுதற்கு இடம் பெற்றில ரென்பது தேற்றமேயாம். அங்ஙனமாயின், கி.பி. முதல் நூற்றாண்டிற்குப்பின் ஆரியர் தமிழ்நாடு புகுந்து நிலைபெற்றாரெனக் கூறுதல் ஆகாதோவெனின்; ஆகாது-தனிப்பட்ட ஆரியர் காசுமீரத் திலும், அதனையடுத்த சில நாடுகளிலு மன்றிப் பிற இடங் களுக்குப் பெருந்தொகையினராய்ப் போந்திலாமையி னாலும், போந்த சிறு தொகையினருந் திராவிட மக்களுடன் கலந்து திராவிட ஆரியராகித் திராவிட நாகரிகத்தைப் பின்பற்றிச் சிறிது நாகரிகம் பெற்று வடமேற்கில் நாகரிகம் இலராய் உயிர்வாழ்ந்த ஆரியரை மிலேச்சரென இகழ்ந்து கழித்தமையினாலும் அங்ஙனங் கழித்து ஒதுக்கப்பட்ட மிலேச்ச ஆரியர் தாம் இருந்த வடமேற்குப் பகுதிகளை விட்டுத் தென்னாட்டிற்கு வர இயலாதவராயினரென்க. அடிக்குறிப்பு 1. A.A. Macdonell in his History of Sanscrit Literature p.160. 9. தென்னாடு போந்த திராவிட ஆரியர் என்றாலும், நடுநாட்டில் திராவிடருடன் கலந்து தோன்றிய திராவிட ஆரியரில் ஒரு சிறு கூட்டத்தாரே மெல்ல மெல்லத் தென்னாடு போந்தவராவர். எங்ஙன மெனிற் கூறுதும், அத் திராவிட ஆரியர் தம்மைப் பார்ப்பன ரென உயர்த்துப் பேசிக் கொண்டு, அவ்வுயர்வுக்கு ஒரு பெருந் துணையாகத் திராவிடப் பொதுமக்களுக்குத் தெரியாத ஆரிய மொழியைத் தேவர் களாகிய தமக்குரிய தேவ மொழியாகப் பயின்று, அம்மொழி யில் திராவிட முனிவரால் தொகுத்து வைக்கப்பட்ட இருக்கு எசுர், சாமம், அதர்வம் முதலான வேதங்களை ஓதியும், பழைய மிலேச்ச, ஆரியர் செய்து போந்த உயிர்க்கொலை கட்குடி யொடு கூடிய வெறியாட்டு வேள்விகளைத் தாம் திராவிட மன்னர்பாற் கரவாய்ப் பெற்ற பெரும் பொருள் கொண்டு ஆயிரக்கணக் காக வேட்டும் வடக்கேயுள்ள நடுநாடுகளில் அருளொழுக்கத் திற்கு மாறான கொடுஞ் செயல்களைப் பரவச்செய்து வந்தனர். அதுகண்டு மனங்குழைந்த தனித் தமிழ் முனிவர் களான கபிலரும் பதஞ்சலியும் முறையே சாங்கியமும் யோகமும் இயற்றி அருளும் அன்புமே இறைவன் குணங்கள், அருளும் அன்பும் உடையாரே இறைவன் றிருவருளைப் பெறுவர், உயிர்க்கொலையுங் கட்குடியும் மக்களை இம்மை மறுமையிலும் நிரயத்திற் செலுத்திப் பிறவி வட்டத்திலும் ஓயாமல் வைத்துச் சுழற்றி வருத்துந் தீவினைகளாமென அறிவுரை கூறி எங்கும் அறிவொளி யினைப் பரவச் செய்வா ராயினர். அவர் காட்டிய அறிவு விளக்கத்தைக் கைப்பற்றிய அஜாதசத்துரு, ஜனகன், பிரவாகனஜைவலி, அசுவபதி கைகேயன் முதலான பழைய தமிழ்த் தவவேந்தர்கள் அப் பார்ப்பனரிள அறியாமையினை அவர்களே ஒப்புக் கொள்ளுமாறு நன்கெடுத்துக் காட்டிப், பின்னர் அவரது வேண்டு கோளுக்கு இரங்கி அவர்க்கு மெய்யறிவு தெருட்டினர். அவர் அங்ஙனம் அவர்க்கு மெய்யறிவு தெருட்டிய அறிவுரைகளே ஈச, கேந, கட, பிரசின, முண்டக, மாண்டூக்ய, சாந்தோக்ய, பிருக தாரணியக, தைத்திரீய, சுவேதாசுவதரம் முதலான உபநிடதங்களாக இயற்றப் பட்டன. இவ்வரலாறுகளெல்லாம் அவ்வுபநிடதங் களிலேயே சொல்லப் பட்டிருக்கின்றன. அதன்பிற் சைவசமயத்திற் பிறந்து பிறப்பு இறப்பு இல்லா முழுமுதற் கடவுளாகிய சிவபிரானையே அரு ளொழுக்கத்தில் நின்று வழிபட்டு வந்த தாய் தந்தையர்க்கு அருமைப் புதல்வராய்த் தோன்றி, முதன் முதல் அத்தாய் தந்தையராற் சிவபிரான் கோயிலுக்கு எடுத்துச் சென்று ஏற்பிக்கப்பட்டவராகப் பழைய கல்வெட்டு ஒன்றிற் குறித்துச் சொல்லப்படுங் கௌதம புத்தர் என்பார் தமது அரச வாழ்வினையுந் துறந்து, ஆரூயிர்கட்கு அருளுரை பகரும் அருள் வாழ்வினையே மேற்கொண்டு, திராவிட ஆரியப் பார்ப்பனர் வேட்டுவந்த உயிர்க்கொலை வேள்வி கள் நடைபெற வொட்டாமற் றடைசெய்து, எங்கும் அருளொழுக்க வொளியினையே விரைந்து பரவச் செய்தனர். அதனால், அப்பார்ப்பனக் குழுவினர் வடநாட்டில் அங்குள்ள மக்களை ஏய்த்துப் பிழைக்கும்வழி அடைபட்டு மெல்ல மெல்லத் தென்னாடு நோக்கி வரத் துவங்கினார் கௌதம புத்தராற் பரவிய அருட்பெருங் கொள்கை அவர் பெயராற் புத்தசமயம் எனப் பெயர் பெறலாயிற்று. புத்தர்க்குப் பின் அவ்வருட் பெருங்கொள்கையை இவ்விந்திய நாட்டிலும் இதற்குப் புறம்பேயுள்ள நாடுகளிலும் பரவச் செய்த அருளாளன் அசோக வேந்தனே யாவன்; இவ்வேந்தனுஞ் சிவபிரானையே வழிபட்டவன் என்பது வின்சண்ட் மித் என்னும் வரலாற்று நூலாசிரியர் கூறுதலாற் பெறப்படுத லாலும் இவனும் பண்டைத் தமிழர்க்குரிய அருட்பெருங் கொள்கையினையே வட நாடுகளிலும் பிற நாடுகளிலும் பெரிதும் பரவச் செய்தான் என்க.1 இவ் வேந்தன் காலத்தே தான், வடக்கே நடுநாட்டி லிருந்த பார்ப்பனர் தொகுதி தொகுதி யாய்த் தென்னாடு புகுந்து குடியேறினரென்பது அறியப்படும். இங்ஙனங் குடியேறிய பார்ப்பனருந் திராவிட ஆரியக் கலப்பிற் பிறந்தவரேயன்றி இவருந் தனிப்பட்ட ஆரியர் அல்லரென்று துணிந்து கொள்க. இங்ஙனமாக அசோக வேந்தன் காலத்தில் விந்திய மலைக்குத் தெற்கே வந்த திராவிட ஆரியப் பார்ப்பனரே, நெடுக மராட்டிய தேயத்திலும் ஆந்திர கன்னட மலையாள தேயங்களிலும் இத்தென்றமிழ் நாட்டிலுங் குடியேறி, ஆங்காங் குள்ள திராவிடரிற் கீழ் வகுப்பாருடன் கலந்து, பல்வேறு வகைப் பிரிவினையுடைய பார்ப்பனர் ஆயினர். வடக்கிருந்து வந்த பார்ப்பனர் பல்வகைப் பறவைகள் மீன்கள் விலங்குகளின் இறைச்சியுடன், மாட்டின் இறைச்சியுந் தின்றுவந்தன ரென்பது இருக்கு முதலான வேதங்களாலும், அவற்றின் பிரமாணங் களாலும், மநு முதலான மிருதி நூல்களாலுந் தெற்றென விளங்குதலானும், இன்றைக்கும் வங்காளத்திலுள்ள பார்ப்பனர் ஊனுணவு, கொள்வதை எவரும் நேரே சென்று காணலாமாக லானும், இத் தமிழ்நாட்டிற் குடியேறித் தமிழிற் சிறந்த புலவராய் வயங்கிய பார்ப்பனருங்கூட ஊனுணவை விலக்காமல் அதனை உட்கொண்டு வந்தமை கபிலர் பாடிய கடுங்கண்ண கொல் களிற்றால் என்னும் புறநானூற்றுச் செய்யுளால் நன்கறியக் கிடத்தலானும், இத் தமிழ்நாடு புகுந்த பார்ப்பனர், பண்டு தொட்டே ஊன்மறுத்த சைவ அருளொழுக்கத் தினரான உயர்குடி வேளாளருடன் கலக்க இடம் பெறாமல், தம்போல் ஊன் உணவு கொள்வாரான ஏனை இழிகுடித் தமிழருடன் மட்டுமே கலக்க இடம் பெற்றுத், தாந் தாங் கலந்த தமிழ்க்குடி மக்களின் ஏற்றத் தாழ்வுக்குத் தக்கவாறு தாமுந் தம்முள ஏற்றத்தாழ்வு பல உடைய பல்வகைப் பார்ப்பனர் ஆயினர். இன்றைக்கும் மலையாளத்தில் நம்பூரிப் பார்ப்பனரும் பிறரும் மலையாள மகளிரைக் கூடி வாழ்தல் எவரும் அறிந்ததோர் உண்மை யன்றோ? இன்னும், வடக்கிருந்து வந்த பார்ப்பனரைப்பார்த்து, அவர்போல் ஆரிய மொழியைக் கற்று, அதனையே கடவுள் வழிபாட்டிற்கும் மணச்சடங்கு பிணச்சடங்குகட்கும் பயன் படுத்தி, அவர்போல் தாமும் பூணூல் பூண்டுங், கீழாடை மேலாடை யுடுத்தும், உச்சிக்குடுமி வைத்தும் பார்ப்பனராய் விட்ட தமிழ்மக்களும் பலர்; இன்னும் பார்ப்பனராகி வருந் தமிழரும் மிகப் பலர். இராமாநுசர் காலத்திலிருந்து வைணவப் பார்ப்பனராகி வருந் தமிழருக்குங் கணக்குண்டோ? அத்திப் பழத்தைப் பிட்டால் அத்தனையுஞ் சொத்தை யாதல் போற், பார்ப்பன வகுப்பைப் பண்டிருந்து ஆராய்ந்து பார்த்தால், அதில் ஒருவகுப்பினரன்றிப் பல்வேறு வகுப்பினர் கலப்பும் ஊடுருவி யிருத்தலை எளிதில் அறிந்து கொள்ளலாம். இஞ்ஞான்றைப் பார்ப்பனர் அனைவரும் ஆரிய மொழியைத் தமக்கே உரிய மொழியாகப் பயின்று, அவ்வாற்றால் தம்மைத் திராவிட மக்களினின்றும் வேறு பிரித்துக்கொண்ட தம்மை ஆரியர் என வழங்கிக் கொண்டாலும், அவருடம்பினுள் ளோடுவது பெரும் பாலுந் திராவிட இரத்தமேயன்றிப் பிறிதில்லை. ஆகவே, இவ்விந்திய நாட்டின் வடமேற்கு மூலையைத் தவிர, மற்றை அதன் நான்கெல்லைக்குட் பண்டைக் காலம் முதல் இன்றுகாறும் பரவி நிறைந்திருப்பவர் தமிழரும் அவர் இனத்தவரான திராவிட மக்களுமேயன்றி வேறு பிறர் பெரும்பாலும் இலர் என்பது தேற்றமேயாம் என்க. அடிக்குறிப்பு 1. See Vincent Smith’s The Early History of India, P.176. 10. மதம் இன்னதென்பது இங்ஙனமாக இமயம் முதற் குமரிவரையிற் பண்டும் இன்றும் பரவியிருப்பவர் பெரும்பாலுந் தமிழரும் அவ ரினத்தைச் சேர்ந்த திராவிடருமே யென்பது பெறப்படுதலால், இனி அம்மக்களின் மதம் பண்டும் இன்றும் எத் தன்மையதாய் இருந்தது இருக்கின்றது. இனி எதிர்காலத்தே அஃதெவ்வாறு இருக்குமென்பது ஆராயற் பாற்று. அவ்வியல்புகளை ஆராயும் முன் மதம் என்னுஞ் சொற் பொருளும் அதன் வழக்கும் ஆராய்ந்து காண்பது இன்றியமையாததாய் இருக்கின்றது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட நூல் களில் மட்டுமே மதம் என்னுஞ் சொற், கடவுளைப்பற்றி யாதல் உயிரைப் பற்றியாதல் உலகத்தைப் பற்றியாதல் ஒழுக்கத்தைப் பற்றியாதல் மக்கட் குழுவினர் கொண்ட கொள்கைக்கும் பெயராய்த் தமிழ் நூல்களில் வழங்கப்பட்டு வருகின்றது. கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு அஃதாவது இற்றைக்கு ஆயிரத்தெழு நூறு ஆண்டுகட்கு முற்பட்ட நூல்களில் மதம் என்னுஞ் சொற் கொள்கை யென்னும் பொருளில் வருதலைக் காண்கிலேம். புறநானூறு, பரிபாடல், பத்துப்பாட்டு முதலான பழைய இலக்கியங் களில் மதம் என்னுஞ் சொல் வலிமை, செருக்கு, அறியாமை, அழகு முதலான பொருள்களில் வருகிறதே யன்றிக் கொள்கை யென்னும் பொருளில் வரவில்லை. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதான மணி மேகலையிலுங் கூடச் சமயம் என்னுஞ்சொல் வந்திருக்கின்றதேயன்றி, அதற்கு ஈடான மதம் என்னுஞ் சொல் வரவில்லை. கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் முற்பாதியிற் றோன்றிய மாணிக்கவாசகப் பெருமான் அருளிச் செய்த திருவாசக காலத்திலிருந்துதான் மதம் என்னுஞ் சொல் கொள்கை யென்னும் பொருளில் இன்றுகாறும் வழங்கி வருகின்றது. இடைப்பட்ட காலத் தெழுந்த நன்னூல் முதலான இலக்கண நூல்களும் மதம் என்னுஞ் சொல்லைக் கொள்கை யென்னும் பொருளில் வழங்கி வருதல் எழுவகை மதமே யுடம்படல் மறுத்தல் என்னும் நன்னூற் சூத்திரத்தால் அறியப்படும். ஆனாற், பண்டைத் தமிழ் இலக்கணமான தொல்காப்பியத்திலோ மதம் என்னுஞ் சொல்லாதல் சமயம் என்னுஞ் சொல்லாதல் எவ்விடத்துங் காணப்படவே யில்லை. இதுகொண்டு பல்வகை மதங்களும் இத் தமிழ் நாட்டிற் றோன்றுதற்கு முன்னமே தொல்காப்பியம் இயற்றப்பட்டமை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் நன்கு விளங்காநிற்கும்; அங்ஙனமே மணிமேகலை காலத்திற்கு அஃதாவது ஆயிரத் தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட எந்தத் தமிழ் இலக்கியத் திலுஞ் சமயம், மதம் என்னுஞ் சொற்கள் வழங்காமையை உற்றுநோக்குங்கால், ஆயிரத் தெண்ணூறு ஆண்டுகட்கு முன்னே இத்தென்றமிழ் நாட்டின்கண்ணே பல்வகைச் சமயப் பகுப்புகள் பல்வகை மதவேறுபாடுகள் இருந்திலாமை தெற்றென விளங்கா நிற்கும். மற்றும், கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து முன்னில்லாத சமயப் பகுப்புகளும் மத மாறுபாடுகளும் இத்தென்றமிழ் நாட்டிற் றோன்றித் தமிழ் மக்களின் ஒற்றுமையைச் சிதைத்து, அவரை ஒருவரோ டொருவர் மாறுபடச் செய்து அலைக்கழிக்கலானமை, மாணிக்க வாசகப் பெருமான், தெய்வ மென்பதோர் சித்தமுண் டாகி முனிவி லாததோர் பொருளது கருதலும், ஆறு கோடி மாயா சத்திகள் வேறு வேறுதம் மாயைகள் தொடங்கின: ஆத்த மானார் அயலவர் கூடி நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர் சுற்ற மென்னுந் தொல்பசுக் குழாங்கள் பற்றி யழைத்துப் பதறினர் பெருகவும்: விரத மேபர மாக வேதியருஞ் சரத மாகவே சாத்திரங் காட்டினர், சமயவாதிகள் தத்தம் மதங்களில் அமைவ தாக அரற்றி மலைந்தனர்: மிண்டிய மாயா வாத மென்னுஞ் சண்ட மாருதஞ் சுழித்தடித் தாஅர்த்து உலோகா யதனெனும் ஒண்டிறற் பாம்பின் கலாபே தத்த கடுவிட மெய்தி அதிற்பெரு மாயை எனைப்பல சூழவும் என்று அருளிச் செய்த போற்றித் திருவகவற் பகுதியால் நன்கு புலனாகின்றதன்றோ? கடவுளும் உயிரும் இல்லையெனப் பாழ்ங்கொள்கை பேசும் நாத்திகரும்; வேள்வியாற்றுதல் பட்டினி கிடத்தல் முதலான வினைகளே ஒரு வாக்கு வீட்டின்பத்தைத் தரும்: இவற்றின் வேறாகக் கடவுள் ஒருவன் உளனெனக் கொண்டு அவனை வழிபடுதலும் பிறவும் வீணேயாமெனக்கரையும் மீமாஞ்சகரும், உயிருங் கடவுளு மெல்லாம் பொய், அறமே மெய்யெனக் கழறும் பௌத்தரும், இவ்வுடம்போடிருந்து உலக இன்பங்களை நுகருதல் விடுத்துக் கடவுளும் உயிரும் இருவினையும் மறுமையும் மறுபிறப்பும் உளவெனக் கொண்டு உழன்று உடம்பை மாய்த்தல் அறியாமை யேயாம் எனக் கூவும் உலோகாயதரும், இவரின் இன்னும் பலவேறு வகையான சமயவாதிகளும் மாணிக்கவாசகர் காலத்தும் அவர்க்கும் முற்பட்ட மணிமேகலை ஆசிரியரான கூல வாணிகன் சாத்தனார் காலத்தும் இத்தமிழ் நாட்டின்கண் வந்து பல்கிவிட்டமை மேற்காட்டிய மாணிக்கவாசகர் திருமொழியாலும், மணிமேகலையிற் சமயக்கணக்கர் தந்திறங் கேட்ட காதையாலும் நன்குணரப் படும். கௌதம புத்தர் காலத்திருந்து வடநாட்டுப் பார்ப்பனர் தென்றமிழ் நாடு புகுந்து சோழ பாண்டிய அரசர்களைத் தம்வயப்படுத்தி, அவருதவியாற் பல வேள்விகள் வேட்டு ஆரியச் சிறுதெய்வ வெறியாட்டு வேள்வியை இந்நாட்டிற் பரப்ப முயன்றன ராயினும், அருளொழுக்கத்திலும் ஒரு முழுமுதற் கடவுள் வழி பாட்டிலும் உறைத்து நின்ற வேளாண் மாந்தர்க்கும் அவரையே பெரிதுஞ் சார்ந்த ஏனைத் தமிழ்ப் பொதுமக்கட்கும் ஆரிய வேள்வி இசையாமையின் அஃதிங்கு வேரூன்றாமலே ஒழிந்து போயிற்று. ஆகவே, ஆரிய மதம் என ஒன்று இத்தமிழ்நாட்டில் நிலை பெறாதொழியினும், இங்குவந்த வடநாட்டுப் பார்ப்பனர் தமிழ்ப் பொது மக்களுடன் கலந்து தமிழ்மொழியை நன்கு பயின்று அதில் வல்ல நல்லிசைப் புலவர்களாயுந் தமிழ்த் தெய்வமாகிய சிவபிரானையே வணங்கித் தமிழ் மேன்மக்கள் கொள்கையின் பாலராயும் மாறிவிட்டமையின் ஆரியமதம் தமிழர்மதம் என இருவேறு மதங்கள் தோன்றுதற்கு இடமில்லாதொழியினும், வடநாட்டுப் பார்ப்பனரைத் தொடர்ந்து இத்தமிழ்நாடு போந்து நிலை பெற்ற பௌத்தர் சமணர்களாலேதாம் இங்கே பல வேறு மதங்களும் மதவழக்குகளுங் கிளைக்கலாயினவென்று அறிதல் வேண்டும். அசோக வேந்தன் காலத்திருந்து கி.பி. முதல் நூற்றாண்டு வரையிற் சிறிதேறக்குறைய முந்நூறாண்டு களாக இங்கு வந்து அமைதியாய் வாழ்ந்த பௌத்த சமணர்கள், சோழ பாண்டிய அரசு நிலைகுலையலான கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் துவக்கம் முதற் றமிழ்நாட்டின் மேற்படை யெடுத்துவந்த கருநட மன்னரின் துணை கொண்டு, தஞ் சமயக் கொள்கைகளை இந்நாட்டின்கட் பரப்ப மிக முயன்று, தங் கொள்கைகளுக்கு இணங்காத தமிழ் மக்களையெல்லாந் தம் மதங்களிற் றிருப்புதற்குப் பல தீய முறைகளை யெல்லாங் கையாள்வா ராயினர். இதனாற், றமிழாசிரியர்க்கும், பௌத்த சமண சமயத்தார்க்கும் இடையே வழக்குகளும் எதிர் வழக்குகளும் அடுத்தடுத்து நிகழலானமையின், ஒருசார் கொள்கையினை யுடையார் பிறிதொருசார் கொள்கையினை யுடை யாரினின்று தம்மை வேறு பிரித்துக் வழங்குதற்கும் பிறரைத் தம்மினின்று வேறு பிரித்து காட்டுதற்குஞ், சைவரென்றும் வைணவரென்றும் பௌத்தரென்றுஞ் சமணரென்றும் உலகாயதரென்றும் மாயாவாதிகளென்றும் வெவ்வேறு குழுவினர்க்கு வெவ்வேறு சமயப்பெயர்கள் கொடுத்து வழங்குவாராயினர். சமயம் மதம் என்ற பெயரும் அப் பெயராற் குறிக்கப்படுங் கொள்கைகளும் இல்லாமல், எல்லாம் ஒரே கொள்கையினராய் அமைதியாய் எல்லாம் வல்ல ஒரு முழுமுதற் கடவுளை வணங்கிக்கொண்டு இனி துயிர் வாழ்ந்த தமிழ் மக்களிடையே, வடக்கிருந்து வந்து நிலைபெற்ற பௌத்த சமண சமயத்தவராலும், அவர்க்குப் பின்வந்த குழுவினராலுமே பல்வேறு மதங்களும் மதப் போர்களும் இந்நாட்டின்கண் மேன்மேற் கிளைத்து வரலாயினவென் றுணர்ந்து கொள்ளல் வேண்டும். இவ்வாறுண்டான பலவேறு மதங்களும் வடக்கிருந்து வந்த வராலேதாம் பல்கின வென்பதற்கு, அம் மதங்கள் பலவும் வடமொழிப் பெயர்கொண்டு உலவுதலும், அம்மதங்களைப் பற்றிய நூல்களெல்லாம் வடமொழி யிலேயே வரையப் பட்டிருத்தலுமே உறுபெருஞ் சான்றாம் என்க. இதனை நன்குணர்ந்தே சுவாமி விவேகாநந்தரும் மதச்சண்டைகளுஞ் சாதி வேற்றுமைக் கலகங்களும் பல்குதற்கு ஒரு பெருங் கருவியாய் இருந்ததும் இருப்பதும் ஸமகிருத மொழியே யாகும் என்றும், ஸமகிருத மொழி நூல்கள் தொலைந்து போகுமானால் இப் போராட்டங்களுந் தொலைந்து போகுமென்றும் வருந்திக் கூறினார். பழைய தமிழ் நூல்களிற் சமயப் போருக்காவது சாதிச் சண்டைக்காவது சிறிதும் இடம் இல்லாதிருத்தலை அவற்றைப் பயில்வோர் நன்குணர்வர். இங்ஙனம், மதம் என்னுஞ் சொல்லும், அச்சொல்லில் அடங்கிய ஒன்றோ டொன் றொவ்வாக் கொள்கைகளும் வடக்கிருந்து வந்து இத் தமிழ்நாட்டிற் குடியேறிய மாந்தர்களால் உண்டாயின வேயல்லாமல், அவை தமிழ் நாட்டுத் தமிழ் மக்களால் உண்டாயின வல்லவென்பதை அறிஞர்கள் கருத்திற் பதித்துக் கொள்ளல் வேண்டும். 11. தமிழர் கொள்கை அங்ஙனமாயினும், பகுத்தறிவும் நாகரிக முதன்மையும் பல்லாயிர ஆண்டுகட்கு முன்னமே தொட்டு வாய்ந்தவராகிய நம் பண்டைத் தமிழாசிரியரும் அவர் வழிப்பட்ட நந் தமிழ் மேன்மக்களும் இம்மை மறுமை வாழ்க்கைக்குரிய கொள்கைகள் சிலவேனும் உடையராதல் வேண்டுமன்றோ வெனின்; வேண்டும். அவை தம்மைச் சிறிது ஆராய்ந்து உரைப்பாம். இவ்வுடம்போடு இசைந்து சிறிது காலம் நாம் இந்நிலவுலகத்தின்மேல் இருந்து உயிர்வாழும் வாழ்க்கையே இம்மை வாழ்க்கையாகும். இனி, இவ்வுடம்பையும் இந் நிலத்தையும் விட்டுப்போய், இப்போது நம் பொறிபுலன் களுக்கு நேரே விளங்காத வேறு நுண்ணிய உலகங்களில் அவ்வுலகங்களுக்கு ஏற்ற நுண்ணிய வுடம்புகளில் இருந்து சிலகாலம் வாழும் வாழ்க்கையும், அவ்வாழ்க்கையும் அங்கு முடிந்தபின் மீண்டும் பருவுடம்பிற் புகுந்து அப்பருவுடம்பிற் கேற்ற பருப்பொருள் உலகங்களிற் பிறந்து உயிர்வாழும் வாழ்க்கையுஞ் சேர்ந்து மறுமை வாழ்க்கை என்று கருதப் படும். இவ்வுடம்பொடு கூடி நாம் இம் மண்ணுலகிற் பிறவி யெடுப்ப தற்கு முன்னமே , இந்நிலமும் இந்நிலத்து நுகர் பொருள்களும் அமைத்து வைக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலம் இல்லையானால் நாம் பிறவியெடுதது உலவுதல் முடியாது. இந்நிலம் இருந்தாலும், இதன்கண் மரஞ் செடி கொடிகளும் இவற்றின் பயன்களான இலையும் பூவுங் காயுங் கனியுங் கிழங்கும் வித்தும், இவற்றின் வேறான நீரும் நெருப்புங் காற்றும் இல்லையானால் நாம் ஒரு நொடிப் பொழுதுதானும் இங்கிருந்து உயிர்வாழ்தல் இயலாது. ஆகையால், இவை யெல்லாம், யாம் பிறந்து எம்மறிவால் அறியப்படுதற்கும் எம்பொறி புலன்களால் நுகரப்படுதற்கும் முன்னமே அமைத்து வைக்கப்பட்டிருக்கின்றன. நாம் இந்நிலத்திலிருந்து வாழ்தற்கு ஓர் உடம்பும், இந்நிலத்தின் கண் உள்ள நுகர்பொருள்களை நுகர்தற்கு ஏற்ற மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும் புறக் கருவிகளும், மனம் நினைவு அறிவு முனைப்பு என்னும் அகக் கருவிகளும் பிறவும் நமக்கு அமைத்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இக்கருவிகளுள் ஒன்றாயினும் பலவாயினுங் குறைவுபடுமாயின், மக்கள் என்போர் அறிவும் இன்பமும் பெறுதல் சிறிதும் இயலாது. கண்ணில்லாத ஒருவன் இந் நிலவுலகத்தியற்கைக் காட்சிகளை எங்ஙனங் காணமாட்டுவான்? செவியில்லாத ஒருவன் சான்றோர் கூறும் அரும் பொருள் உரைகளை எங்ஙனங் கேட்க மாட்டுவான்? நாவில்லாத ஒருவன் பிறரோடு எங்ஙனம் உரையாட மாட்டுவான்? இங்ஙனமே ஏனை அகக்கருவி புறக் கருவிகளை குறைபட்டவ ரெல்லாரும் இவ்வுலகியற் பொருள் களை உணர்தலும் அறிதலும் நுகர்தலுஞ் சிறிதும் ஏலாவென்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்ததேயாகும் என்க. இவ்வாறு நமக்கு அறிவு விளங்கி இவற்றை அறிதற்கும் நுகர்தற்கும் முன்னமே, இவ்வுலகத்தையும் இவ்வுடம் பையும் நமக்குப் படைத்துக் கொடுக்கும்படி நாம் எவரை யேனுங் கேட்டதுண்டா? சிறிதும் இல்லையே. ஏன்? இப்பிறவிக்கு வரும்முன் நமக்கு அறிவு சிறிதுமே விளங்க வில்லை யாதலால் அறிவில்லா அந்நிலையில் அவைகளை நமக்குப் படைத்துக் கொடுக்கும்படி கேட்டால் நம்மாற் சிறிதும் இயலாதாகலின் என்க. இங்ஙனம், நாம் கேளா மலிருக்கவும், நமக்குப் படைத்துக் கொடுக்கப்பட்ட இவைகளை நாம் வேண்டாமென்றுதான் கழித்து விடுதல் இயலுமோ வெனின், அதுவுஞ் சிறிதும் இயலாதன்றோ? இன்னும் ஆணாய்ப் படைக்கப் பட்டவர் ஆணாயிருந்தே தீரல் வேண்டும். பெண்ணாய்ப் படைக்கப் பட்டவர் பெண்ணாயிருந்தே தீரல்வேண்டும். அங்ஙனமே, நாம் பிறப்பிக்கப்படுங்காற் பிறந்தேயாகல் வேண்டும்; இறப்பிக் கப் படுங்கால் இறந்தே போகல் வேண்டும். இவை களை மாற்றி விடுதல் எவராலும் ஆகாது. இவ் வுலகமும் உடம்பும் பொய் யென்று சொல்லிவிட்டால் இவை யெல்லாம் பொய்யாய் விடும் என்று சிலர் சொல்லு கிறார்கள். ஆனால், அங்ஙனஞ் சொல்லியவர் அடுத்த நேரத்திலேயே பசியும் விடாயும் வந்துவிட்டால் அவற்றைப் போக்குஞ் சோற்றையும் தண்ணீரையுந் தேடுகின்றார்; தமக்கு ஒரு நோய் வந்துவிட்டால் உடனே அது தீர்க்கும் ஓர் அருமருந்தினை ஆராய்ந்தலைகின்றார்; ஆகவே, அவர் சொல்லிய சொல்லுக்குப் பின் அவர் செய்யுஞ் செயல் முழு மாறா யிருத்தலின், அவர் சொல்லிய சொற்றான பொய், உலகமும், உடம்பும் மெய் யென்பதனையே அவரது செயல் காட்டுகின்றதன்றோ? அற்றேல், உடம்பும் நிலையின்றி அழிந்து போகின்றதே யெனின்; நிலையின்றி அழிவது வேறு, பொய்யாவது வேறென்று பகுத்தறிதல் வேண்டும்; நிலையின்றி யழிவதெல்லாம் நம்பொறி புலன்களுக்கு விளங்காத நுண்ணிய நிலையினை அடை கின்றனவே யன்றி, அவை பொய்யாகவில்லை யென்பது இஞ்ஞான்றை இயற்கைப் பொருணூல் ஆசிரியரால் ஆராய்ந்து நிறுவப் பட்டிருக்கின்றது. இவ்வாறு தெளிந்த மெய்ப்பொருள் களாய் இருக்கும் உலகத்தோடும் உடம்போடுஞ் சேர்ந்துலவி, அம் முகத்தாற் சிறிது சிறிதாக அறிவு விளங்கப் பெற்று வருஞ் சிற்றுயிர்களாகிய நாம் இவ்வரும் பெருஞ் சேர்க்கையை நம்மறிவாலும் நஞ் செயலாலும் பெற இயலாமல், நம்மினுஞ் சிறந்த பேரறிவும் பேராற்றலும் பேரிரக்கமும் வாய்ந்த வேறு ஒர் அரிய விழுமிய உயிரின் செயலாற் பெற்றிருத்தலி னாலேயே, இவ்வுடம்பின் சேர்க்கையையும் இவ்வுலகின் சேர்க்கையையும் இவ்வுலகத்துப் பொருள்களின் சேர்க்கை யையும் விட்டு நீங்கும்படி நேருங்கால், அந்நீக்கத்தைத் தாங்க இயலாமல் மக்களாகிய நாம் எவ்வளவோ நெஞ்சம் நொந்து கதறி அழுகின்றோம்! நாமே நம்மறிவாலும் நஞ்செயலாலும் இவ்வுலகு உடற் சேர்க்கையை நிலைநிறுத்திக் கொள்ள வல்லவர்களா யிருந்தால், இவைகளைப் பிரிந்து சாக வேண்டுவதில்லை யன்றோ? மேலும், நமக்கு அறிவையும் இன்பத்தையும் மேன்மேற் பெருகச் செய்யும் இவ்வுலகுடற் சேர்க்கை நமக்கு இனியதாகவே இருக்கக் காண்கின்றோமல்லது, இன்னாததா யிருக்கக் காண்கிலோம். இதனை இன்னாத தாகவே எல்லாருங் காண்பராயின், எவருமே இம்மண்ணுலகில் உயிரோடு இரார். உலகையும் உயிரையும் எட்டிக் காயாகக் கருதிக் கசந்து பேசியவர்களுங்கூட அவற்றை உடனே துறந்து இவ்வுலகத்தைக் கடந்து சென்றார் அல்லர். தமது முன்னாளி லெல்லாம் இவை தம்மை வெறுத்துப் பாடிய மாணிக்கவாசகப் பெருமானே தமது பின்னாளில், நாயிற் கடையாம் நாயேனை நயந்து நீயே யாட்கொண்டாய், மாயப் பிறவி யுன்வசமே வைத்திட் டிருக்கு மதுவன்றி ஆயக் கடவேன் நானோதான்? என்னதோஇங் கதிகாரம்? காயத் திடுவாய் உன்னுடைய கழற்கீழ் வைப்பாய் கண்ணுதலே என அவ்வாறு தாஞ்செய்தது பிசகென உணர்ந்து உண்மையை ஒளியாமலே எடுத்திசைத்தார். இங்ஙனமே ஆசிரியர் திருமூலரும், உடம்பா ரழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாய மறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே என்றும், உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன் உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன் உடம்புளே யுத்தமன் கோயில்கொண் டானென் றுடம்பினை யானிருந் தோம்புகின் றேனே என்றும் இருகால் அருளிச் செய்தார். இம் மேலோர் உரைகளைக் கருதிப் பார்க்குங்கால், உலகையும், உடம்பையும் வெறுத்துப் பேசும் பேச்சு வெறுஞ் சொல்லளவாகவே முடிகின்றதன்றி, உண்மையில் அவை தம்மை எவரும் வெறுப்பதாயில்லை; எல்லாரும் அவற்றின் சேர்க்கையை மிக விரும்புகின்றவர்களாயும் அச் சேர்க்கையை என்றும் நிலை பெறுத்திக் கொள்வதில் அடங்கா வேட்கை யுடையவர்களாயுமே இருக்கின்றனர். கட்பார்வை மழுங்கிச் செவியுங் கேளாமற் கைகால் வழங்குதலும் இல்லையாகிப் பாயும் படுக்கையுமாய்க் கிடக்குந் தள்ளாத கிழவர்களுங் கூடத் தம் உடம்பையும் இவ்வுலகையுந் துறந்து சாவதென்றால் நெஞ்சம் நடுநடுங்கிக் கண்ணீர் சிந்திக் கலுழ்கின்றனர். இந்நிகழ்ச்சியை யுற்று நோக்குங்கால், இப்பிறவியை எல்லாரும் மிக விரும்புவது, இஃது அறிவும் இன்பமும் பெறுதற்கு ஓர் ஒப்பற்ற கருவியாய் இருத்தல் பற்றியே யாமென்பது தெளியப்படுகின்ற தன்றோ? இவ்வுலகியற் பொருள்களைப் பகுத்தாராய்ந் துணர்தலால் நமக்கு எவ்வளவு அறிவு வளர்கின்றது! நமதறிவு வளர வளர, அதனைப் பலதுறைகளிற் புகுத்திப் பயன்படுத்தப்படுத்த, அவற்றைப் பயன்படுத்தத் தெரியாத காலங்களிற் பட்ட சொலற்கருந் துன்பங்களெல்லாம் நீங்கி இப்போது நாம் எவ்வளவு நலங்களைப் பெற்று இன்புற்று வருகின்றோம்! நீராவியின் வல்லமையைக் கண்டு அதனைப் பயன் படுத்திய ஓர் ஆங்கிலத் துரைமகன் இவ்வுலகத்திற்கு விளைத்த நன்மைகளை எவரேனுங் கணக்கிட்டுச் சொல்லல் கூடுமோ? முற்காலத்தில் மூன்றாண்டுகள் பெருஞ்செலவு செய்து கொண்டு வழிச் சென்றாலுஞ் சென்று சேர்தற்கரிய காசிமா நகரை இக் காலத்தில் மூன்று நாட்களில் மிகச் சுருங்கிய செலவிற் சென்று சேரும்படி பேருதவி புரிவது எது? நீராவி வண்டியே யன்றோ? முற்காலத்திற் பாய் கட்டிக் கப்பலிற் கடல்தாண்டிச் சென்று இரங்கூன், மலேயா, சீனம் முதலான அயல் நாடுகளில் வாணிகம் நடாத்திய வணிகர்கள், தம் மனைவி மக்கள்பால் வாய்க்கரிசி வாங்கிக் கொண்டு மனம் உளைந்து சென்றார்களென எம் பாட்டன் பாட்டிமார் சொல்லக் கேட்டிருக்கின்றோம். ஏன்? அக்கப்பலிற் சென்றவர் அவ் வயல்நாடு போய்ச் சேர்வதும் உறுதியில்லை; திரும்பி வந்து சேர்வதாயிருந்தாலும் எத்தனையோ ஆண்டுகள் செல்லும்! ஆனால், இஞ்ஞான்றே மூன்று நாட்களில் இரங்கூன் மாநகர் செவ்வனே சென்று சேரவும், பின்னும் மூன்று நாட்களில் திரும்பி இங்கே வந்து சேரவும் நமக்குப் பேருதவி புரிவது எது? நீராவிக் கப்பலேயன்றோ? இன்னும் இங்ஙனமே, மின்னின் ஆற்றலையும் ஒலியின் இயக்கங்களையும் ஒலியின் பதிவுகளையும் ஒளியின் விரைவு ஒளியின் பதிவுகளையும் இரவும் பகலும் உற்று நோக்கி ஆராய்ந்து அவற்றைப் பேருழைப்பினாலும் பெருமுயற்சி யினாலும் பயன்படுத்திவரும் மேல் நாட்டாசிரியரின் கைம்மாறு கருதா உதவியினாலன்றோ கம்பிச் செய்தியும் கம்பியில்லாச் செய்தியும் நிழலுருவும் ஒலி யெழுதியும் வானவூர்தியும் பிறவும் பெற்று அளவிறந்த நலங்களை அடைந்து வருகின்றோம்? இன்னும், எவ்வளவோ நலங்களை அடையப் போகின்றோம். ஆகவே, இவ்வுலகுடனும் இவ்வுடம்புடனும் உயிர்கட் குண்டான சேர்க்கை, அவ்வுயிர்கட்கு அறிவையும் இன்பத்தையும் மேன் மேற் பெருகச் செய்தற் பொருட்டே வந்ததா மென்பதூஉம், அதுபற்றியே மக்களும் மற்றை யுயிர்களும் இவ்வுலக வாழ்வினைத் துறந்து போக விரும்பாமல் அதன்கண் நிலை பெற்றிருப்பதற்கே விழைகின்றன ரென்பதூஉம் நினைவிற் பதிக்கற்பாலன வாகும். இனி, உயிர்கள் கேட்டுப்பெறும் அறிவு விளங்காமலே யிருக்கவும், அவற்றிற்குப் போந்த இவ்வுலகு உடற் சேர்க்கையின் நோக்கத்தை, ஆறறிவு வாய்ந்த மக்களாகிய நாம் ஆராய்ந்து பார்க்கத் தக்க நிலையில் இருப்பது போல, ஆறறிவிற் குறைந்த ஏனைச் சிற்றுயிர்கள் அதனை ஆராய்ந்து பார்க்கத்தக்க நிலையில் இருக்கவில்லை. மக்கட் பிறவி யெடுத்தவர்களுள்ளும் ஏற்றத்தாழ்வான பலதிறப்பட்ட அறிவுடையவர்கள் இருந்தாலும், பொதுவாக எல்லாருந் தத்தம் அறிவுநிலைக் கேற்ப இப் பிறவியின் நோக்கத்தை உணர்ந்து பார்ப்பவராயும், இப்பிறவி யால் மேன்மேல் அறிவும் இன்பமும் பெறத்தக்க வழி வகைகளை நாடி முயல்பவராயுமே இருக்கின்றனர். அறிவில்லா அக்களின் சேர்க்கையால் உண்டான இப்பிறவி, அவ்வணுக்களின் பிரிவால் அழிந்துபோகும். அதற்குமேல் வேறொன்றும் இல்லையென்று வழக்குப் பேசும் பாழ்ங் கொள்கைக் காரர்களுங் கூட, இவ்வுடம் போடு இசைந்து இருக்கும் வரையில் தமக்கும் பிறர்க்கும் அறிவையும் இன்பத்தையும் பெருகச் செய்து கொள்வதற்கே பெரும்பாடு பட்டு வருகின்றார்கள். இப்போது இந் நிலவுலகம் எங்கணும் நடைபெற்று வரும் அரசியற் போராட்டங்கள் அத்தனையும் எந்த நோக்கத்தைக் கொண்டு நடைபெறுகின்றன? தமக்கு மேன்மேல் அறிவும் இன்பமும் பெருகுதலை வேண்டி முனைந்து நிற்கும் ஒரு மக்கட் கூட்டத்தார், தமது முயற்சிக்கு மாறாய்த் தமக்கு இன்னல் விளைக்கும் மற்றொரு கூட்டத்தாருடன் போராடி அவரை அழித்துவிட்டுத் தாமே அறிவும் இன்பமும் பெற்று வாழல் வேண்டு மென்னும் நோக்கத்தாலன்றோ? ஒவ்வோர் ஆண்மகனும் பெண் மகளும், எல்லா வுயிர்க்கும் வந்திருக்கும் இப்பிறவியின் நோக்கத்தையும் பயனையுஞ் சிறிதாயினும் ஆராய்ந்து பார்ப்பார்களானால், தாம் அறிவும் இன்பமும் பெறுதலில் ஆராவேட்கை யுடையராயிருத்தல் போலவே, ஏனையுயிர் ஒவ்வொன்றும் அங்ஙனமே அவற்றைப் பெறுதலின் அடங்கா வேட்கை யுடையவாய் இருத்தலை எளிதில் அறிந்து கொள்ளலாம். நாம் அறிவும் இன்பமும் பெறுதற் பொருட்டு, நமக்கு ஆகாத உயிர்களின் பிறவியை அழித்து விடுதல் எவ்வளவு தீயதென்பது, நம்மைப் பிறர் அழிக்க வருங்காலன்றோ நடுக்கத்துடன் நமது உணர்வுக்குப் புலனாகின்றது? ஆகவே, எந்த உயிரின் பிறவியையும் அழியாமல், நமது பிறவியின் பயனை நாம் அடைய முயலுதலே நமக்கும் பிறர்க்கும் அறிவையும் இன்பத்தையும் பெருகச் செய்தற்கேற்ற வழியாகும். 12. கொல்லா அறம் இந்த வழியை முதன்முதற் கண்டறிந்து அதற்கேற்பத் தமது இம்மை வாழ்க்கையை நடத்தினவர்கள் தமிழரில் மேன்மக்களாய் இருந்த ஒரு பெரும் பகுதியாரே யென்பது கருத்திற் பதிக்கற்பாற்று. மக்கட் பிரிவினர் ஒவ்வொரு வரினும் மேன்மக்களுங் கீழ்மக்களும் இருந்தாலும், தமிழரில் மேன் மக்களைத் தவிர, மற்றை மக்கட் பிரிவினரிலுள்ள எந்த மேலோரும் இவ்வருமருந்தன்ன உண்மையினைக் கண்டறிந்திலர்; இஃது ஆசிரியர் தொல்காப்பியனார், எல்லா வுயிர்க்கும் இன்ப மென்பது தானமர்ந்து வரூஉ மேவற் றாகும் (பொருள் அதிகாரம் 223) என்று மொழிந்தமையால் அறியப்படும். எல்லா உயிரும் இன்பத்தையே அவாவி நிற்றலின், எந்த உயிரின் பிறவியையும் அழித்து, அதற்குத் துன்பத்தை விளைத்த லினுங் கொடியது பிறிதுண்டோ சொல்லுமின்! இக் கொடுமையை நன்குணர்ந்தே தமிழ் மேன்மக்கள் எந்தப் பிறவியையுங் கொல்லுதலும் ஆகாது, ஒரு பிறவியைக் கொன்று அதன் ஊனைத் தின்னுதலும் ஆகாது என்னுங் கொள்கையை விடாப் பிடியாய்க் கொண்டு நிற்கலாயினர். தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார், கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிருந் தொழும் (குறள் 260) என்றும் ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் பின்சாரப் பொய்யாமை நன்று (குறள் 323) என்றும் இற்றைக்கு இரண்டாயிர ஆண்டுகட்கு முன்னமே கொல்லா அறத்தின் மேன்மையை வலியுறுத்திக் கூறி யிருத்தல் காண்க. தமிழ் மேன்மக்களில் இக்கொல்லா வறத்தினை விடாப் பிடியாய்க் கொண்டு ஒழுகினவர்கள் வேளாளர்களே யென்பது பட்டினப்பாலை என்னும் பழைய பாட்டினால் நன்கறியப் படுகின்றது. இவர்கள் முழுமுதற் கடவுளைச் சிவம் என்னும் பெயரால் அழைத்து வணங்கி வந்தமையின், இவர்கள் இடைப் பட்ட காலத்திருந்து சைவர் எனவும் பெயர் பெறலாயினர். இவர்கள் கைக்கொண்ட கொல்லா வறமும் அவ் வேளாளர் வழியே சைவம் என வழங்கப்பட்டு வருகின்றது. புலாலுணவு விட்டவரைச் சைவ மாயினர் என வழங்கும் வழக்கும் இன்று காறும் நடைபெற்று வருகின்றது கொல்லாவறஞ் சமண் சமயத்தார்க்கே சிறப்பாகச் சொல்லப் படினும், புலவுத் துறந்தாரைச் சமணர் என்றுரை யாமற், சைவர் என்றே எல்லாரும் வழங்கி வருதலை உற்று நோக்குங்கால், இத் தென்றமிழ் நாட்டிற் சமண சமயத்தார் வருதற்குப் பல நூற்றாண்டுகள் முன்னே தொட்டுச் சைவ வொழுக்கத்திற் றலை நின்றவர் சைவசமயத்தவரான வேளாளர்களே யென்பது தெற்றெனப் புலனாகின்றது. சைவ சமயத்தில் நின்ற மேன் மக்கள் எல்லாரும் உயிர்க் கொலையினைப் பெருந் தீவினை யாகக் கருதி அதனைப் பிறர் செய்யாமல் விலக்குதற்குப் பெரிது முயன்றமை, மேற் காட்டிய திருக்குறளால் மட்டுமேயன்றி, அதற்குப் பின்வந்த ஆசிரியர் முதுமொழிகளாலும் இனிது விளங்கா நிற்கும் மாப்பெருந் தவமுனிவரான ஆசிரியர் திருமூலர், கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை வல்லிடி காரர் வலிக்கயிற் றாற்கட்டிச் செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை நில்லிடு மென்று நிறுத்துவர் தாமே எனவும், பொல்லாப் புலாலை நுகரும் புலையரை எல்லாருங் காண இயமன்றன் றூதுவர் செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தின் மல்லாக்கத் தள்ளி மறித்து வைப்பாரே எனவும் மிக அச்சுறுத்தி அறிவுதெருட்டினர். அவர்க்குப் பின்வந்த சைவசமயா சிரியரான சுந்தரமூர்த்தி நாயனாரும் கொன்றுசெய்த கொடுமையாற்பல சொல்லவே நின்றபாவ வினைக டாம்பல நீங்கவே சென்றுசென்று தொழுமின்றேவர் பிரானிடங் கன்றினோடு பிடிசூழ் தண்கழுக் குன்றமே என்று கொலைப்பாவத்தின் கொடுமை நீங்குதற்கு வழி காட்டினமை காண்க. அவர்க்குப்பின் வந்த பட்டினத் தடிகளும், கொல்லாமற் கொன்றதைத் தின்னாமற் குத்திரங் கோள்களவு கல்லாமற் கைதவ ரோடிணங் கர்மற் கனவிலும் பொய் சொல்லாமற் சொற்களைக் கேளாமற் றோகையர் மாயையிலே செல்லாமற் செல்வந் தருவாய் சிதம்பர தேசிகனே என்று கொலை புலை முதலான தீவினைகளைக் கடிதல் வேண்டி இறைவனைத் தொழுதனர். அவர்க்குப் பின்வந்த தாயுமான அடிகளும், கொல்லா விரதங் குவலயமெல் லாமோங்க எல்லார்க்குஞ் சொல்லுவதென் னிச்சை பராபரமே எனவும், கொல்லா விரதமொன்று கொண்டவரே நல்லோர்மற் றல்லாதார் யாரோ அறியேன் பராபரமே எனவுங் கூறிக் கொல்லா அறத்தை எங்கும் பரவச் செய்த லிற் றமக்குள்ள பெருவிருப்பினையும், அவ்வறத்தைக் கடைப் பிடித்தாரை யன்றிப் பிறரை நல்லாரென்று கருதத் தமதுள்ளம் ஒருப்படாமையினையும் நன்கெடுததுத் தெரிவித்தமை காண்க. அவர்க்குப் பின்வந்த இராமலிங்க அடிகளும், மருவாணைப் பெண்ணாக்கி யொருகணத்திற் கண்விழித்து வயங்கு மப்பெண் ணுருவாணை யுருவாக்கி யிறந்தவரை யெழுப்புகின்ற வுறுவ னேனுங் கருவாணை யுறவிரங்கா துயிருடம்பைக் கடிந்துண்ணுங் கருத்த னேலெங் குருவாணை யெமதுசிவக் கொழுந்தாணை ஞானியெனக் கூறொ ணாதே எனக் கூறி, ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் உருமாற்றி இறந்தவரை உயிர் பெற்றெழச் செய்யும் அத்தனை ஆற்றல் ஒருவர் உடையரேனும், எள்ளளவும் இரக்கமின்றி ஓருயிரின் உடம்பை வாளால் வெட்டி அதன் ஊனை அவர் தின்பாராயின் அவரை ஞானியெனச் சொல்லுதல் ஆகாது என்று கொல்லா வறத்தின் மேன்மையையும் அஃதல்லா மறத்தின் கீழ்மை யையும் எத்துணை அழுத்தமாக விளம்பி யிருக்கின்றார்! இவை கொண்டு, பண்டைக் காலம் முதல் இன்றைக்காலம் வரை வந்த தமிழாசிரியரும், அவர் தம் மெய்யுரை வழிநின் றொழுகிய வேளாண் மாந்தரும், இம்மை வாழ்க்கை எல்லாவுயிர்க்கும் இனிது நடைபெறுதற்கு இன்றி யமையாத தான கொல்லா அறத்தினை முதன்முதற் கண்டறிந்து, அதனைத் தமக்குரிய முதற்பெருங் கொள்கையாகக் கடைப் பிடித்து வரலாயின ரென்பது இனிது விளங்கா நிற்கும். பண்டைத்தமிழ் மேன்மக்களே கொல்லாவறத்தினை முதன்முதற் கண்டு, அதன்கண் வழுவாதொழுகினவர் என்பத தென்னை? வடக்கிருந்த சமணர் சாக்கியர் சாங்கியர் யோகர் முதலாயினாருங் கொல்லாவறத்தினை விடாப் பிடியாய்க் கொண்டு ஒழுகினவரல்லரோ வெனின்; சமணர் சாக்கியர் முதலான அவரெல்லாம், ஆரியர் வருதற்கு முன்னமே இமய மலை வரையிற் பரவி நாகரித்திற் சிறந்து உயிர் வாழ்ந்த வடநாட்டுத் தமிழ் மேன்மக்களின் மரபில் வந்தவரே யென்பது ஆராய்ச்சியாற் புலனாதலின், பண்டைத் தமிழ் மக்களே கொல்லாவறத்தினை முதன்முதற் கண்டா ரென்னும் எமதுரை சிறிதும் பிறழாது. சமணர் சாக்கியர் சாங்கியர் யோகர் முதலா யினாரெல்லாந் தமிழ் மேன்மக்களாதலினாற்றான் அவர் எல்லாருந் தமது நாட்டிற் குடியேறிய ஆரியரின் உயிர்க்கொலை வேள்விகளைப் பெரிதும் அருவருத்துப் பேசி, அவ்வேள்வி களை நுவலும் ஆரியவேத நூல்களையும் ஏசிவிடுவாராயின ரென்க. அற்றேற், பழைய யூதமதத்தினரும் ஊன் உண்ணா நோன்பின்கண் நின்றவரேயென்பது அவர்க்குரிய விவிலிய வேதப் பழைய ஏற்பாட்டின் முதன்மறைப் பகுதியாலும், ஐசாயா தானியேல் முதலான முனிவர்கள் அருளிச்செய்த அருளுரை களாலும் நன்கு பெறப்படுதலின், தமிழ் மேன்மக்களே கொல்லா அறத்தினை முதன்முதற் கைப்பற்றி யொழுகினாரென்றல் யாங்ஙனமெனிற், கூறுதும், பண்டைக் காலத்தே மேனாடு கீழ்நாடுகட்குச் சென்று வாணிகம் நடாத்தினவர், இன்றைக் காலத்திற் போல, வேளாள வணிகரே யாவர். இவர்களே இருக்குவேத காலத்திற் பணிகர் என்றும், பாபிலோனியர் காலத்திற் பிநீசியர் என்றுஞ் சொல்லப்பட்டவராவர். இவர்கள் தாம் வாணிகம் புரியச்சென்ற அயல் நாடுகளிலும் புலாலுண்ணா ஒழுக்கத்திற் றவறா திருந்தமை யால், இவர்களைப் பார்த்து அயல் நாடுகளில் இருந்த மக்களில் எவரோ ஒரு சிலர் புலால் மறுத்த ஒழுக்கத்தைக் கைப்பற்றி நின்றாராகலின், அவர்களின் வழியே கொல்லாவறம் விவிலிய வேத முதன்மறையிலும், வேறு சில இடங்களிலும் உயர்த்துச் சொல்லப்பட்டு நிலைபெற லாயிற்று. அவ்வளவேயன்றி, யூதர்களில் மேன் மக்களாயிருந்தா ரனைவருங் கொல்லா வறத்தைக் கைக் கொண்டு ஒழுகினவரல்லர். யூதர்கள் கொல்லா வறத்தின் மேன்மை கண்டு அதனை அவரில் மேலோராயினார் கைக் கொண்டு ஒழுகியிருந்தாற், சைவ வேளாளர் பெருந் தொகை யினராய்த் தமிழ் நாட்டில் இன்றைக்கும் உயிர்வாழ்ந்து வருதல் போல மேனாடுகளிலும் ஊனுண்ணா மக்கள் பெருந் தொகையினராய்க் காணப்படுதல் வேண்டும். அவ்வாறின்றி அங்குள்ளார் அனைவரும் இன்றுகாறும் ஊனுணவு கொள்பவ ராகவே வாழ்நாட் கழித்து வருதலின், அவரெல்லாங் கொல்லா அறத்திற்கு உரியரல்லரென்பது தேற்றமேயாம். ஆகவே, தமிழ் மக்களில் மேலோராயிருந்த வேளாளரே முதன் முதற் கொல்லா அறத்தின் விழுப்பம் உணர்ந்து, அதனைக் கடைப்பிடியாய்க் கொண்டொழுகி னோராவரென்னும் உண்மை ஆணித் திறமாய்க் கருத்திற் பதிக்கற்பாற்று. இதுகொண்டு, இம்மை வாழ்க்கையின் நிலையினையும், அஃது எதற்காக நடை பெறுகின்றதென அதன் நோக்கத்தினையும் நன்காராய்ந்து பார்த்துக், கொல்லா அறத்தின் கட் பிறழாது நின்று வாழ்க்கை செலுத்துவதே, ஆறறிவுடைய சிறந்த மக்கட் பிறவியினர்க்கு இரக்கமும் அன்பும் அருளும் ஒருங்கு அளாவிய அற வாழ்க்கை யாகும் என்றுணர்ந்து கைக்கொண்ட முதற் பெருங் கொள்கையே தமிழர் மதத்திற்கு இன்றியமையாப் பேர் உறுப்பாய்ப் பிறங்குகின்ற தென்பது உணரற்பாற்று. அஃதுண்மையே யாயினும், இத்தென்றமிழ் நாட்டில் உயிர் வாழுந் தமிழரில் வேளாளர் என்னும் ஒரு வகுப்பாரைத் தவிர மற்றையோ ரெல்லாரும் ஊன் உண்பவராகவேயிருத்த லாலும், இச் சிறிய தமிழ் நாட்டிற்குப் புறம்பேயுள்ள பெரும் பெருந் தேயங்களில் உறையும் பெரும்பெருந் தொகையினரான மக்கட் பிரிவினர் அனைவரும் ஊனுண் வாழ்க்கையினராகவே யிருத்தலாலும் இம்மை வாழ்க்கைக்குச் சிறந்தது கொல்லா வறமே என்று கூறுதல் பொருந்துமோவெனிற், கூறுதும். உயிர்களுக்கு இப்பிறவி கொடுக்கப்பட்டிருப்பதன் நோக்கத்தை ஆழ்ந்து ஆராய்ந்து பார்க்குங்கால், இவர்கள் இயற்கையாகவே மறைக்கப்பட்ட அறிவினராயும் அதனாற் பல குற்றங்களுடையராயும் இருத்தல் எளிதிற் புலனாகா நிற்கின்றது; இவ்வுடம்பொடு கூடிய உயிர் வாழ்க்கை நீள நீள இவ்வுயிர்கட் குள்ள அறியாமையுஞ் சிறிது சிறிதாக விலகியொழிய அவர் களது அறிவும் வர வர விளக்க முடையதாகி விரிதலுறுகின்றது; அங்ஙனம் அறிவு விளங்க விளங்க அவர்கள்பால் உள்ள குற்றங்களும் வரவரக் குறைந்து போகின்றன; ஆகவே, இப்பிறவி கொடுக்கப் பட்டதன் நோக்கம், அறியாமையை அகற்றி அறிவைத் துலக்கிக் குற்றங் குறைகளைத் தொலைப்பதற் கேயாமென்பது நன்கு விளங்கா நிற்கின்றதன்றோ? இங்ஙனம் அறிவு விளங்குதற்குங் குற்றங்கள் நீங்குதற்கும் பேருதவி செய்யுங் கருவியான இவ்வுடம்பு ஆறறிவு வாய்ந்த மக்களாகிய நமக்கு இன்றியமையாததாய் இருத்தல் போலவே, ஆறறிவிற் குறைந்த எல்லாச் சிற்றுயிர்கட்கும் இன்றியமையாததாய் இருக்கின்றது. இதனை யுணர்ந்து பாராமல், ஆடு மாடு கோழி கொக்கு குருவி நண்டு நத்தை மீன் முதலான சிற்றுயிர்களின் அரிய உடம்புகளை இரக்கமின்றிச் சிதைத்து அவற்றின் ஊனைத் தின்னும் வன்னெஞ்சக் கொடுஞ்செயலை இந்நிலவுலகம் எங்கணும் உள்ளார் செய்து வருதலினா லேயே அப் புன்செயல் நன்செயலாய் விடுமோ? புகலுங்கள்! புலி கரடி சிங்கம் ஓநாய் முதலான மற விலங்குகளும் ஏனைச் சிற்றுயிர்களை அங்ஙனமே இரக்கமின்றிக் கொன்று அவற்றின் ஊனைத் தின்னுகின்றன. அங்ஙனமே ஆறறிவுடைய மக்களுஞ் செய்து வருவார் களானால், அம்மற விலங்குகளுக்கும் இம்மக்களுக்கும் வேறுபாடு என்னை? ஆதலால், அறக்கொடியதொரு மறச்செயலை எல்லாருஞ் செய்கின்றனரென்று நாமுஞ் செய்து வந்தால், இக்கொடிய புன்செயலை விட்டு அருளும் அன்பும் இரக்கமும் வாய்ந்து நாம் மேனிலையேறி இப்பிறவியைப் புனிதமாக்குவது எந் நாள்? மேலும், இம்மாநிலத்துறையும் மாந்தரில் எவரோ ஒரு சிலர் ஒழிய, மற்றை யெல்லாருங் குற்ற மான எண்ணங்களும் குற்றமான செயல்களும் பொருந்தினவர் களாகவே யிருக்கின்றனர். மக்களிற் பொய் பேசாதவர் யாவர்? எவரும் இல்லையே. எல்லாரும் பொய் பேசுதல் கொண்டு, எவரும் பொய்பேசுதலை நீக்கவேண்டுவதில்லையெனக் கூறுவார் உண்டோ? மக்களிற் பொறாமையில்லாதவர் யாவர்? எவரும் இல்லையே. அதனால் எவரும் பொறாமையை நீக்குதல் எற்றுக்கு என்று கரைவார் உண்டோ? மக்களிற் பிறருடை மையைக் கவர்ந்துகொள்ள அவாவுறாதவர் எவருமே இல்லை. அதனால், அவாக்கொண்டு அலைக்கழிதல் விலக்கற்பாலதன்றென விளம்புவார் உண்டோ? இன்னும், மக்களிற் பிறரைப் புறங்கூறிப் பழியாதவர் எவருமே யில்லை. அதனாற், புறங்கூறுதல் கடியற்பால தன்றெனக் கழறுவார் உண்டோ? இல்லையே. எத்தகைய பொய் பேசுவாரும், எத்தகைய பொறாமையுடையாரும், எத்தகைய பேரவா மிகுந்தாரும், எத்தகைய புறங்கூற்றுரை பொழிவாரும், பிறர் பொய்பேசக் கண்டால், பிறர் பொறாமைப்படுதல் கண்டால், பிறர் அவாப்படுதல் கண்டால், பிறர் புறங்கூறக் கண்டால், அவரை ஏன் அவர் அவ்வளவு அருவருக்கின் றனர்? அவர்மேல் ஏன் அவ்வளவு சினங் கொள்கின்றனர்! அவரை ஒறுத்து அடக்குதற்கு ஏன் அவ்வளவு முயல் கின்றனர்! ஆகவே, எத்துணைக் கொடிய குற்றங்களையுந் தாங் குற்றமாக நினையாமற் செய்வாரும், தாஞ்செய்யுங் குற்றத்தில் ஓர் எள்ளளவு பிறர் செயக் கண்டால், அவரை வெறுக்கின்றமை நாடோறும் மக்கள் வாழ்க்கையிற் காணப்படுதல்போல, மக்களெல்லாரும் உயிர்களின் உடம்பை வெட்டி அதன் ஊனை மிசைந்து வருதல் கண்டு, அன்பும் அருளும் இரக்கமும் ஒருங்கு குடிகொண்ட நல்லோர்கள் அங்ஙனஞ் செய்வாரை அருவருப்பரேயன்றி அவரை ஒரு சிறிதும் பாராட்டுவாரல்ல ரென்பது தெளியப்படுமென்க. எனவே, குற்றமான ஒரு கொடிய செயலை எல்லாருஞ் செய்தல் கண்டு அதனைக் குற்றமெனக் கருதாமை பகுத்தறிவு வாய்ந்த மக்களாகிய நமக்கு அடுத்த தன்று, மக்கள் அல்லாத விலங்குகளும் ஏனைச் சிற்றுயிர்களுமே இது குற்றமானது, இது குற்றமாகாதது எனவும், இது நல்லது, இது தீயது எனவும், குற்றத்தைத் தீயதை விலக்கிக் குற்ற மல்லாததை நல்லதை யாங் கைப்பற்றக் கடவே மெனவும் பகுத்தறிந்து பார்க்கமாட்டாதனவாகும். மற்றுப், பகுத்தறிவு பெற்ற மாந்தர்களாகிய நாமும் அவ்வறிவினைப் பயன் படுத்தாமல் நடப்பமானால், நாம் இச் சிறந்த பிறவியினைப் பெற்றது எதற்கு? உண்டுடுத்து உறங்கிக் கழிவதற்கா? எனச் சிறிதாயினும் நினைந்து பார்த்தல் வேண்டும். இனி, இத் தென் றமிழ் நாட்டில் உள்ள வேளாளரைத் தவிர, இந்நிலவுலகத்தின் மற்றைப் பெருந் தேயங்களில் வாழும் மாந்தர்கள் எல்லாருங் கொலைத் தொழிலைச் செய்துஞ் செய்வித்தும் அதனாற் கிடைக்கும் ஊனைத் தின்பவர்களாகவே யிருந்தாலும், அறிவும் ஆராய்ச்சியும் நாளுக்கு நாட் பெருகா நின்ற இக் காலத்தில் மக்களுயிர் வாழ்க்கைக்கு இசைந்த நல்லுணவு யாதென்ன ஆழ்ந்து ஆராய்ந்து பார்க்கும் பேரறிஞரும் அவரைப் பின்பற்று வாரும் அயல் நாடுகளிலுந் தொகை தொகையாய்ப் பெருகி, ஊனுணவு ஒருவகைக் கொடிய புளிப்பு நஞ்சு (Uric acid) கலக்கப்பெற்றதா யிருத்தலின் அது மக்களுடம்புக்கு ஒரு சிறிதும் இசையாதென்றும், அதனால் ஊனுணவு கொள்வார்க்கு, இருமல் எலும்புருக்கி மலக்கட்டு மார்புவலி வயிற்றுளைச்சல் பிளவை நீரிழிவு முதலான பல பொல்லாத நோய்கள் வருகின்றனவென்றும், புளிப்பு நஞ்சு இல்லாத மரஞ் செடி கொடிகளின் இலை பூ காய் கனி கிழங்கு வித்து பால் முதலான சைவ உணவுப் பொருள் களைச் செரிக்கும் அளவாய் உட்கொண்டு வருவார்க்கு நோய் இல்லா இனிய வாழ்க்கையே நீண்டு வருகின்றதென்றும் அறிவித்து வருகின்றனர். அவர்தம் அரிய அறிவுரைகளைக் கேட்டு ஊனுணவை அறவே விலக்கிச் சைவவுணாப் பொருள் களையே உட்கொண்டு இனிது வாழ்க்கை செலுத்துவார் தொகையும் இங்கிலாந்து அமெரிக்கா பிராஞ்சு ஜர்மனி முதலான அயல் நாடுகளிற் பெருகி வருகின்றது. இன்னும் அறிவாராய்ச்சி மிக்க சான்றோர் கூட்டமும் அவர்வழி நிற்பார் குழுவும் மிகுந்து வருந்தோறும், இம்மாநில மெங்குந் தமிழர்தம் முதற்பெருங் கொள்கையாகிய கொல்லா அறமும் புலால் மறுத்த சைவவொழுக்கமே பரவி நிலைபெற்று விளங்கு மென்பது திண்ணம். இன்னும், தமிழ்மக்கட் குரிய கொல்லாவறம், அவர்கள் பண்டைக் காலத்தே வாணிகம் புரியச்சென்ற அயல் நாடுகளில் இருந்த அறிஞர்களாலும் மிகச் சிறந்ததாகக் காணப்பட்டு, அவர்களால் அக் காலத்திலேயே தழுவப் பட்டமை அத் தேய வரலாறுகளால் நன்கறியக் கிடக்கின்றது. இற்றைக்குப் பத்தாயிர ஆண்டுகளுக்கு முன்னமே நாகரிக வாழ்க்கையில் மிக்கு விளங்கிய1 எகு பதியருடைய சமய நூல்களும் எதியோப்பிய ருடைய சமய நூல்களும் ஊனுணவை அறவே விலக்கிவிடல் வேண்டுமென்று கட்டளையிடுகின்றன. 2 அவர்க்குப்பின் நாகரிகத்திற் றலைசிறந்து விளங்கிய கிரேக்கரும் உரோமரும், கட்குடி கூடாவொழுக்கங்களைக் கைக்கொண்டு தம் அருமை பெருமைகளை இழப்பதற்கு முன், காய் கனி கீரை கம்பு பால் முதலான சைவ உணாப் பொருள்களையே உண்டு உயிர் வாழ்ந்து வந்தனர். உரோமரிற் சிலம்பம் பழகுவார் வாற்கோதுமை அப்பமும் எண்ணெயுமே உட்கொண்டு வந்தனரென்றும், அவ்வுணவு அவர்கட்கு நரம்பு வலிவினையும் எதனையுந் தாங்க வல்ல ஆற்றலினையுந் தந்தது என்றும் இற்றைக்கு இரண் டாயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னமேயிருந்த இப்போகிரட்டீ என்னும் மருத்து நூலாசிரியர் வரைந் திருக்கின்றார். இம் மாநிலத்து மாந்தரிற் பெருந் தொகையினர் உறையுந் தேயங்களான சீனம் சப்பானில் உள்ள பௌத்த மடங்களிற் பெருங் கூட்டமாய் உயிர் வாழுந் துறவிகள் எந்த வகையான ஊனுணவும் எடாமையொடு, வெண்ணெயும் பாலுங்கூட உட் கொள்வதில்லையென்றும் அவர்களின் துறவு வாழ்க்கையை நேரே சென்று கண்ட ஆங்கில ஆசிரியர் ஒருவர்3 எழுதி யிருக்கின்றார். இன்னும் இங்ஙனமே அயல்நாடுகளிற் பண்டை நாளிருந்த அறிஞர்கள் தமிழரின் கொல்லாவறத்தைத் தழுவி யொழுகிய வரலாறுகளை யெல்லாம் எடுத்துக்காட்டப் புகுந்தால் இது மிக விரியும். இவ்வாற்றால், தமிழரின் கொல்லாவறம் இக் காலத்திற் போல அக்காலத்தும் அயல் நாடுகளிலிருந்த அறிஞர்களாற் சிறந்த தொன்றாகத் தழுவப் பட்டதேயன்றி, அஃதவர்களால் விலக்கப்பட்டதில்லை யென்பதை அன்பர்கள் கருத்திற் பதித்தல்வேண்டும். மேலும், மாந்தர்கள் கடைப்பிடித் தொழுக வேண்டிய அறங்களை யெல்லாம் எடுத்தோதிய ஆசிரியர் திருவள்ளுவர், அவ்வெல்லா அறங்களுள்ளும் மிகச் சிறந்தனவாகக் கொல் லாமை, பொய்யாமை என்னும் இரண்டனையுமே பிரித்துக் கூறிப், பின் அவ்விரண்டனுள் ளும் முதல் வைக்கற்பாலது கொல்லாமை. அதன்பின் வைக்கற்பாலது பொய்யாமை எனக் கிளந் தெடுத்துரைத்தார். அஃது, ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் பின்சாரப் பொய்யாமை நன்று ( குறள் 323) என்னுந் திருக்குறளால் இனிது விளங்கா நிற்கின்றது. இவ்வாறு திருக்குறளைப்போற் கொல்லா அறத்தை, இரண்டாயிர ஆண்டுகளுக்கு முன்னமே, ஏனையெல்லா அறங்களுக்குந் தலையாய முதலிடத்தே தனி வைத்துரைத்த ஓர் அறநூலை, வேறு எந்த அயல் நாட்டு மத நூல்களுள்ளுங் காண்கிலேம். விவிலிய மறை இம்மை யொழுக்கத்திற்குரிய அறங்களைக் கூறுகின்றுழிக் கொல்லாமையை முதல் வைத் துரைப்பினும், அது கூறிய கொல்லாமை யென்பது ஆறறிவுடைய மக்களைக் கொல்லாமை யென்றே அதற்கு உரைவகுத்தார் பலரும் உரைப்பக் காண்டலின், அதன்கட் சிற்றுயிரைக் கொல்லாமை யும் அடங்குமென்று உறுதிப் படுத்திக் கூறுதல் இயலாதா யிருக்கின்றது. சிற்றுயிரைக் கொல்லாமையும் அதன்கண் அடங்குமென்றே கொண் டாலும், அக்கற்பனையின் வழி நடக்கும் யூதர்களையுங் கிறித்துவர்களையும் அந் நாள் முதல் இந்நாள் வரையில் எங்கும் காண்டல் அரிதா யிருத்தலின், அக்கொல்லா அறம் அவர்கட்குரியதாய் அவர்களாற் கடைப்பிடிக்கப்பட்ட தன்றென்பதும், அதற்குப் பண்டைக் காலம் முதல் உரியவர் களான வேளாள வணிகர் வழியாகவே அது விவிலிய மறையினுள்ளும் புகுந்து அங்கு நிலைபெறலாயிற் றென்பதும் அறிதல் வேண்டும். அடிக்குறிப்புகள் 1. Egyptians. 2. See Dr. Anna Kingsford’s The perfect way in Diet, p. 18. 3. Rev. R.H. Cobbold. 13. காதலன்பு இங்ஙனம் இம்மை வாழ்க்கை எல்லாவுயிர்க்கும் நிலைபெறுதற்கு இன்றியாமையாததான கொல்லாவறம், பண்டைக்காலம் முதல் இன்றைக்காலம் வரையிலுள்ள தமிழரில் மேன்மக்களுக்கு முதற்பெருங் கொள்கையாய்த் திகழ்ந்தாற் போலவே, அதற்கடுத்த படியாக இம்மை வாழ்க்கை இனிது நடைபெறுதற்கு இன்றியமையாததான இல்லொழுக்கம் மிகவுந் தூயதான அன்பையே தனக்குயிராக் கொண்டு நிகழ வேண்டு மென்பதுதான் தமிழரின் இரண்டாவது கொள்கை யாதல் பண்டைச் செந்தமிழ் நூல்களால் அறியக் கிடக்கின்றது. கணவனும் மனைவியுங் காதலன்பிற் பிணைந்து நடத்துவதே இல்லொழுக்கமாகும். கணவனும் மனைவியுங் கூடுங் கூட்டம் இல்லையானால் இல்லொழுக்கமே இல்லை. இல்லொழுக்க மில்லையானால் இம் மண்ணுலகில் மக்கள் எவருமே இரார். ஆண் பெண் பாலார் ஒன்று சேராத நிலை இன்றுமுதல் ஒரு நூற்றாண்டு வரையில் இந் நிலவுலகில் நிலைத்து விடுமானால், இவ்வொரு நூற்றாண்டுக்குப் பின் இம்மாநிலத்தில் மக்கள் எவருமே இரார் என்பது திண்ணமன்றோ? ஆனால், அங்ஙனம் நேர வொட்டாது அன்பும் இன்பமும் மக்களில் எத்துணை நெஞ்சத் திட்பம் உடையாரையும் பிணித்துப் பொருத்தி வைக்கின்றது. ஏனென்றால், அன்பும் இன்பமும் மக்கள் இருவரின் சேர்க்கையிலேதான் நிகழ்வனவா யிருக்கின்றன. அம் மக்களுள்ளும் ஆண் பெண்பாலாரின் சேர்க்கையே தொடர்பான உண்மையன்பிற்கும், தொடர்பான இன்ப நுகர்ச்சிக்குங் கருவியாயிருக்கின்றது. இவ்வாய்மை கண்டே ஆசிரியர் தொல்காப்பியனார் இற்றைக்கு ஐயாயிர ஆண்டுகளுக்கு முன்னமே ஆண் பெண்பாலாரின் சேர்க்கையை நுவலும் அகத்திணையியலை முன் வைத்து, அவரல்லாத ஏனைப் பிறரின் சேர்க்கையை நுவலும் புறத்திணையியலை அதன்பின் வைத்துப் பொரு ளோத்தினை அருளிச் செய்தார். அவர்க்குப் பின் இற்றைக்கு இரண்டாயிர ஆண்டுகளுக்குமுன் திருக்குறள் இயற்றிய ஆசிரியர் திருவள்ளுவ நாயனாரும் முதலில் ஆண் பெண்பாலார் சேர்க்கையினை விதந்து கூறும் இல்லறவியலை முன்வைத்து, ஏனையோர் சேர்க்கையினைக் கூறும் பொருளியலை அதன் பின் வைத்திட்டார் என்பது. இன்னும், அன்பின் வழியது இன்பம் அன்பில்லா விடத்து நிகழ்வது துன்பம். உலகியல் நடைபெறுதற்கு இன்றி யமையாததான ஆண் பெண் பாலாரின் சேர்க்கை தொடர்ந்து நிகழ வேண்டுமானால், அதனை இறுகப் பிணித்து நடத்துதற்குக் காதல் அன்பென்னுங் கயிறு இருவருள்ளத் தினின்றுமே தோன்றி அவரை இணைக்க வேண்டும். ஓர் ஆண்மகன் தன்னாற் காதலிக்கப்பட்ட ஒரு பெண்மகளையும், ஒரு பெண்மகள் தன்னாற் காதலிக்கப்பட்ட ஓர் ஆண்மகனையும் மணந்து வாழ்க்கை செலுத்துதல் வேண்டுமென்பதே பண்டைத்தமிழ் மேன்மக்களின் கொள்கையாயிருந்தது. பொன்னுக்கும் மண்ணுக்கும் புகழுக்குந் தலைமைக்குங் குலத்திற்கும் புதல் வர்க்கும் அவாவுற்று அன்பில்லா ஆடவரும் மகளிரும் மணஞ் செய்து கொள்வார்களானால், அவர்களது வாழ்க்கை பல்வகைக் குற்றங்களுடையதாய் நிலைகுலைந்து போகும். அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று (குறள் 78) என்று ஆசிரியர் திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த அறிவுரை என்றும் மறக்கற்பாலதன்று. பண்டைத் தமிழ் மக்கள் வேறெதனையுங் கருதாது காதல் ஒன்றனையே மேலதாய்க் கருதிக் காதன் மணமே செய்து வந்தனரென்பது, தொல்காப்பியம், அகநானூறு, திருச்சிற்றம்பலக் கோவையார் முதலான பழந் தமிழ் நூல்களாலும், சைவ சமயா சிரியராகிய சுந்தரமூர்த்தி நாயனார் வாழ்க்கை வரலாற்றி னாலும் நன்கு புலனாகின்றது. காதலன்பு இல்லாவழி மகளிர்க்குக் கற்பொழுக்கம் நிலை பெறுதல் அரிது. தமிழ் மக்கள் மகளிரது கற் பொழுக்கத்தையே மிக மேலதாய்க் கருதினவர்களென்னும் உண்மை. உயிரினுஞ் சிறந்தன்று நாணே, நாணினுஞ் செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று (குறள் 54) எந்னுந் தொல்காப்பியர் உரையானும் (தொல்காப்பியம், களவியல், 22), பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னுந் திண்மையுண் டாகப் பெறின் (குறள் 57) என்னுந் திருவள்ளுவர் உரையானும் நன்கு தெளியப்படும் மகளிரது கற்பொழுக்கத்தைக் காத்து நிலைபெறுவித்தற்கு, அவர் தங் காதலர்மேல் வைத்த உண்மைப் பேரன்பே துணைசெய்யுமல்லது, வேறு காவலுங் கட்டுப்பாடுந் துணை செய்யா வென்பதூஉம் பண்டைத் தமிழ்மக்களால் நன்கு தெளியப்பட்டதாகும்: அது, சிறைகாக்குங் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்குங் காப்பே தலை என்னுந் திருவள்ளுவர் திருக்குறளாலும், கணவன் மாய்ந்தவழித் தீப் பாயப் புகுந்த பூதப் பாண்டியன் றேவியைச் சான்றோர் தடுத்தும் அதற்குடம்படாது தீப் பாய்வாள் பாடிய புறநானூற்றுச் செய்யுளாலுந் தெற்றெனப் புலப்படும். இங்ஙனந் தம்முள் உண்மைக் காதலன்பு மீதூர்ந்த ஆடவர் மகளிரையே வேறு காரணங் கருதாது இல்லற வாழ்க்கையிற் படுப்பித்தனர் பழந்தமிழ் மக்களென்பது கருத்திற் பதிக்கற்பாற்று. இனி, ஆரியரது ஒழுகலாற்றைத் தழுவிய வடநாட்ட வர்கள் இத் தென்றமிழ் நாடு புகுந்து வைகியபின், தமிழரது காதன் மணஞ் சிறிது சிறிதாக் கைவிடப்பட்டுக், குலஞ் செல்வந் தலைமை முதலான காரணங்களையே முதன்மை யாகக் கொண்ட அன்பற்ற போலி மணம் வழக்கத்தில் நிகழ்ந்து வரலாயிற்று. இத்தகைய போலி மணத்திற் சுற்றத் தாராற் புகுத்தப் பட்டமையினாலேயே காரைக்காலம்மையாரின் இல்லறவொழுக்கம் பாழ்பட்டது. ஒரே குலம் என்னுங் காரணம் ஒன்றேபற்றிக், காரைக்காலம்மை யாருக்குத் தக்கவன் அல்லாத, அவரால் விரும்பப் படாத ஒருவன் அவருக்குக் கொழுநனாகப் பிணைக்கப்பட்டமை யினாலேயே அவரது இல்லற வொழுக்கம் நடைபெறாது சிதைந்து போயிற்று. சுந்தரமூர்த்தி நாயனார்க்கு அவர்தஞ் சுற்றத்தார் ஏற்படுத்திய திருமணத்தை இறைவன் றடைசெய்து, பின்னர்ப் பாவை சங்கிலியார் வேறு குலத்தவராயினும் அவர்க்கும் நாயனார்க்கும் இடை நிகழ்ந்த காதலன்பின் றிறத்தையே வியந்து அவ்விருவரையும் அவர்க்கு மணம் பொருத்திய அருட் பான்மை, தமிழர்தங் காதன்மணச் சிறப்பை நன்கு புலப்படுத்து கின்றதன்றோ? இன்னும், சோழமன்னன் தன்மகள் அமராவதியுங் கம்பர் மகன் அம்பிகாபதியும் ஒருவரை யொருவர் உயிர்போற் காதலித்த அன்பின் பெருக்கை உணராதுபோயது எதனால்? தான் அரசன் என்னுஞ் செருக்கினாலும், அம்பிகாபதி தன்னை அண்டிப் பிழைக்கும் ஒரு புலவனின் மகன் என அவனது நிலையை இழிவாக நினைந்த நினைவினாலு மன்றோ? இங்ஙனமே, எத்தனையோ குடும்பங்கள் சுற்றத்தாரால் நேர்ந்த அன்பில்லா உடற் சேர்க்கையால் முன்னும் பாழாய்ப் போயின! இன்னும் பாழாய் வருகின்றன! தமிழரின் பண்டைக் காதன் மணந் திரும்ப உயிர் பெற்று எழுமானால், அப்போதுதான் இம்மண்ணுலக வாழ்க்கை விண்ணுலக வாழ்க்கையாய்ச் சுடர்ந்து திகழுமென்று நினைமின்கள்! இஞ்ஞான்றை அறிஞர்கள், காதல் வழிப்பட்ட கலப்பு மணத்தை அரசனே ஒப்புக்கொண்டு அதனைச் சட்டமாக்கல் வேண்டுமெனச் செய்யும் நன்முயற்சிக்குப், பண்டைக் காதன் மணத்தின் வழிவந்த தமிழ்மக்களாகிய நாம் பெரிதுந் துணையாய் நிற்கக் கடமைப்பட்டிருக்கின்றோம். காதலன்பை ஒருசிறிதுங் கருதிப் பாராமற், செல்வத் தையும் புதல்வர்ப் பேற்றையுங் குலத்தையும் பிற வற்றையுமே மேலாகக் கருதி ஆரியர் வழிப்பட்ட பார்ப்பனர் நடத்திவரும் பொருந்தா மணந் தமிழ் மக்களால் மிகவுங் கடியற் பாலதாகும். மேலும், மங்கைப் பருவம் எய்தாச் சிறு பெண்களை ஆடவர்க்கு மணம் பொருத்தும் பார்ப்பனரின் ஒழுகலாறும் பெரிதும் அருவருக்கற் பாலதாகும். மக்களினுந் தாழ்ந்த விலங்கினங் களுஞ் செய்யாத ஒரு செயலை, மக்களினுஞ் சிறந்த தேவராகத் தம்மைத் தாமே மதித்திருக்கும் பார்ப்பனர், இயற்கை யமைப்புக்கும் இறைவன் றிருவுளக் குறிப்புக்கும் முழு மாறாகச் செய்து வருவதில் விடாப்பிடியாய் நிற்பது எத்துணை இழிக்கத்தக்க செயலாய் இருக்கின்றது! இதனால் எத்தனை நல்ல பார்ப்பனக் குடும்பங்கள் பாழாய் விட்டன! தம் பெண் மக்கள் பூவாமுன்னம் மணங் கூடல் வேண்டுமே என்னும் ஏக்கத்தாற், கணவராகக் குறிப்பிடப்பட்ட ஆடவர் நெஞ்சிரக்கந் தினைத்தனையுமின்றிக் கேட்கும் பெருந் தொகைப் பொருளுக்குத், தம் உடைமைகளை யெல்லாம் விற்றும், அதுவும் போதாமற் கடன் வாங்கியுங் கொடுத்துப் பெண்களைப் பெற்றவர்களில் எத்தனை ஆயிரம் பேர் முதுமைக் காலத்தில் வறியராகிப் பட்டினியும் பசியுமாய்க் கிடந்து துன்புற்று இறந்து போயினர்! போகின்றனர்! காதலன்பு எட்டுணையுமின்றி, அஃதில்லாமை யின் நெஞ் சிரக்கமும் அடியோடில்லையாகி, மேலுமேலும் பெரும் பொருள் கொண்டு வரவில்லையே யென்று தம் மனைவி யரைக் கரும்பாலையில் வைத்துக் கசக்கிப் பிழிவதுபோல் வருத்தி, அதனால் அவர் தங் கற்பினை யிழந்து காலங் கழிக்கவோ, அல்லது குளங் கூவல்களில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளவோ கட்டாயப் படுத்திவிட்ட, கட்டாயப் படுத்தி வருகின்ற கணவன்மார் எத்தனைபேர்! தேவர்கள் எத்தனைக் கொடிய செயலும், எத்தனை நடுவிகந்த செயலும், எத்தனை நெஞ்சிரக்கமற்ற செயலும் வெறும் பொருளின் பொருட்டுச் செய்யலாம் போலும்! இரக்க நெஞ்சமில்லாக் கயவர்களே எத்துணைக் கொடிய செயலுஞ் செய்ய வல்லார். அங்ஙனமே தேவர்களுஞ் செய்வரானால் அவரை என்னென்று சொல்வோம்! இவ்வகையிற் றேவருங் கயவரும் ஒரு தன்மையரே யாதல் கருதிப் போலுந் திருவள்ளுவ நாயனார், தேவர் அனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான் (குறள் 1023) என்றருளிச் செய்தார். சிறுபெண்கள் மங்கைப்பருவம் அடையும் முன் பெரும்பொருள் கொடுத்து அவர்களை மணஞ் செய்விக்குங் கொடிய பார்ப்பன வழக்கத்தையுந் தொலைத்தற்கு நம் நாட்டு அறிஞர்கள் பெரும்பாடு பட்டுச் சட்டஞ் செய்திருப்பது மிகவுங் கொண்டாடற் பாலதாகும். அச் சட்டப்படி நம் நாட்டவர் அனைவரும் வழுவாமல் நடக்குமாறு நாம் நம் பொதுமக்களுக்கு நல்லறிவு புகட்டி வருதல் நமக்கு இன்றியமையாப் பெருங் கடமையாகும். இனி, நமது நாட்டிற் பண்டைக் காலத்தே காதன் மணமே நடைபெற்று வந்தமையின், தங் காதற் கணவரை இழந்த மகளிர் பின்னர் வேறு ஆடவரை மணக்க இசை யாராய்க் கைம்மை நோன்பு நோற்றே காலங் கழித்தன ரென்பது புறநானூறு முதலான பழைய தமிழ்நூல்களால் அறியக் கிடக்கின்றது. மற்று, ஆரியரது நடைமலிந்த வடநாட்டிலோ காதன் மணம் பெரும்பாலும் நடவாமையின், அங்கிருந்த மகளிர் தங்கணவர் இறந்தபின், அவருடன் பிறந்தாரை மணந்து கொள்ளும் வழக்கம் பண்டு நடைபெற்றது (இந்நாளிலும் அவ்வழக்கம் நடைபெறுதலை யாம் வடநாடு சென்ற காலத்திற் சில இடங்களில் நேரே கண்டேம்). அது மாபாரதம், சாந்தி பர்வத்தில் (2749) வீடுமர் கூறும் மொழி யாலும் அறியப்படும். மேலும், கணவன் உயிரோ டிருக்கை யிலோ, அல்லதவன் இறந்த பின்னோ மகப்பெறாத மகளிர் தம் மைத்துனரையோ அன்றி வேறு பிறரையோ கூடி மகப் பெற்றுக் கொள்ளலாமென்று மநுமிருதி (9,59,60,61) வெளிப்படையாய்க் கூறுதலால், கற்பற்ற அவ்வொழுக்கம் வடநாட்டவரிற் பொதுவாயிருந்தமை தெளியப் படும். இனி, இஞ்ஞான்றைத் தமிழ்மக்கள், பார்ப்பனரைப் பார்த்துக், குல வேற்றுமை மிகுதியாய்ப் பாராட்டிக், காதலன்பு நிகழப் பெறாத ஆடவரையும் மகளிரையுங் கட்டாய மணத்திற் புகுத்திவருதலின், அதிற்புகுந்த ஆண் பெண் பாலார் பெரும்பாலுந் துன்பவாழ்க்கையிலேயே பெருந்துயர் உழந்து மாய்கின்றனர். அல்லது, ஒத்த அன்பு நிகழாத தம் வயிற்றின்றும் நற்குண நற்செய்கை வாயாத நோய்கொண்ட புதல்வர் புதல்வியரைப் பெற்று உலக வாழ்க்கைக்கே பெருந்தீமையை விளைவிக்கின்றனர். இத்தகையவர் வேறு வேறு பிரிந்து, தாந்தாம் விரும்பியவரைத் திரும்ப மணஞ்செய்துகொண்டு நன்கு வாழ்தற்கு வேண்டும் உதவிகள் செய்தலும் நம்மனோர்க்கு இன்றி யமையாத கடமையாகும். இன்னும், கணவரை இழந்த மாதரிற் றிரும்ப மணஞ் செய்துகொள்ளும் விருப்ப முடையார்க்கு ஏதொரு தடையும் ஏதொரு தீங்குஞ் செய்யாது, அவர் விரும்பிய ஆடவருடன் மகிழ்ந்து வாழ உதவி செய்தல் வேண்டும். இத் தென்னாடு ஓர் ஆலிலை மூக்கை யொப்பச் சிறியது. இத்துணைச் சிறிய இந்நாட்டிலிருக்கும் நம் மக்களின் தொகையும் மிகச் சிறியது. மற்று, ஆலிலையை யொப்ப மிகப் பெரிதான இம் மாநிலப் பரப்பில் உறையும் பலகோடி மக்களின் தொகையோ மிகமிகப் பெரியது. இத்துணைப் பெருந்தொகையினரான ஏனை மக்களிற் கணவரை இழந்த மகளிர் திரும்ப மணஞ்செய்துகொண்டு, இனிது வாழா நிற்கையில், அவர்களை நோக்க மிகச் சிறு கூட்டத்தாரான நந் தமிழ்மாதர்மட்டுந் திரும்ப மணஞ் செய்து கொள்ள இடம்பெறாமல் தடைசெய்யப்பட்டுத், தம் வாழ்நாள் முடியும் மட்டும் அழுத கண்ணுஞ் சிந்திய மூக்குமாயிருந்து பெருந்துயர் உழக்கச் செய்வது, ஈரநெஞ்சமுடையார் செயலாகுமா? தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோ மன்னுயிர்க் கின்னா செயல் (குறள் 318) என்ற தமிழ்முறைப்படி, தம் முயிர்க்கு ஒரு சிறு துன்பம் வரினும் அதனைப்பொறாத ஆடவர், நம் அருமைப் பெண் மணிகளை அவர்தம் வாழ்நாள் எல்லையளவுந் துன்பக் கடலில் அழுத்தி யலைப்பது அருளுடையார் செயலாகுமா? தம் மனைவியர் மாய்ந்த அன்றே வேறு மாதரை மணக்க முயலும் நம் ஆடவர், கணவரை இழந்த மகளிரை மட்டும் மறுமணஞ் செய்யாவாறு கட்டுப்படுத்தி வைத்துக் கலங்கச்செய்தல் என்ன கொடுமை! ஆகவே, பெண்டிர் ஆடவர் என்னும் இருதிறத்தார்க்குரிய இன்பதுன்ப நிலைகளையும் நடுநின்று சீர்தூக்கிப் பார்த்து, இருவரையும் இன்பவாழ்க்கையில் இருத்தி வாழச்செய்வதே அறிவும் அன்பும் அருளும் உடைய மேலோரது செயலாகு மென்று உணர்மின்கள்! 14. பன்மனைவியர் மணம் இனி, நந்தமிழ் மக்கள் வாழ்க்கையிற் பண்டிருந்த ஓர் ஒழுகலாற்றி னையும் ஒளியாமல் எடுத்துக்காட்டுவது எமது கடமையாய் இருக்கின்றது. ஓர் ஆண்மகனும் ஒரு பெண்மகளுங் காதலன்பிற் பிணிக்கப்பட்டே மணந்து கொண்டார்களென்று வைத்துக்கொள்வோம். இவர்கள் மணஞ் செய்துகொண்ட பின் பெரும்பாலும் ஒன்றிரண் டாண்டுகளில் ஒரு பிள்ளையைப் பெற்றெடுக்கின்றனர். பிள்ளையைக் கருக்கொண்ட காலம் முதல், அதனைப் பெற்று வளர்த்து, ஐந்தாண்டுச் சிறுவன் சிறுமி ஆக்கும் வரையில் தாய்க்குள்ள துன்பம் அளவிடப் படாததாகும். தாய்க்குள்ள துன்பத்தில் ஆயிரத்தில் ஒரு கூறே தகப்பனைச் சார்கின்றது. தன் மனைவியின் துன்பத்தைக் கருதிப் பாராத கணவனாயிருந்தால், அவ்வாயிரத்தில் ஒரு கூறான துன்பத்தையும் அவன் ஏன்று கொள்ள உடம்படுவதில்லை. அச்சிறு துன்பத்தைத் தான் ஏன்றுகொள்ளா தொழியினும், மகப்பெற்றுத் துன்புறுந் தன் மனைவியைத் தான் மேலுந் துன்புறுத்தாமல் இருந்தாலாவது, அஃது அவட்கு நன்மை செய்வதை ஒப்பதாகும். ஆனால், அங்ஙனம் அவள் துன்பம் உணர்ந்து நடக்குங் கணவரைக் காண்பது முயற் கொம்பாகவே யிருக்கின்றது! பிள்ளையைப் பெற்று வளர்க்கும் பெருந்துன்பத் துடன், சமயற்றொழிலும், கணவன் மாமன் மாமி மைத்துனர் உறவினர்க்காவன செய்தலும், மற்றை இல்லப்பணி எல்லாந் தானே ஆற்றியும் அல்லது ஏவலரைக் கொண்டு ஆற்றுவித்தும், வேளைதப்பிய உணவுகொண்டு அளவிற் குறைந்த தூக்கமும் உடையளாய் நீள வருந்தும் மனைவியின் நிலையறியாமல் இரவிலோ பகலிலோ அவளைக் கட்டாயப்படுத்திப் புணர்ந்து, அவள் பிள்ளை பெற்று ஓராண்டுதானுங் கழியாதிருக்கையில், அவள் மீண்டுங் கருக்கொண்டு பின்னும் ஒரு மெலிந்து நோய்கொண்ட மகவினைப் பெற்றுவிடுமாறு செய்யுங் கணவர்களே இத்தமிழ்நாட்டில் மிகுதியாய் இருக்கின்றனர். மனைவி ஒரு பிள்ளை பெற்றபின் மூன்றாண்டு வரையிற் கணவன் அவளை அணுகலாகாதென்று இத் துறையில் ஆராய்ச்சிவல்ல மருத்துவ ஆசிரியர் கௌவன் என்பார் வரைந்திருக்கின்றார். 1 எமது கருத்தோ தாம் ஈன்ற மகவு ஐந்தாண்டு வளர்ந்து பள்ளிக்கூடஞ் செல்லும் வரையில் மனைவியுங் கணவனும் மருவுதல் ஆகா தென்பதே யாம். தான் பெற்ற பிள்ளை பள்ளிக்கூடஞ் சென்றுவரத் துவங்கிய பிறகுதான் மனைவிக்குச் சிறிது ஆறுதலாய் ஓய்ந்திருக்கவும், அவளுடம்பு முழுநலம் பெற்று மீண்டுந் தன் கணவனை மருவுதற்கு ஏற்ற மனக்களிப்புக் கொள்ளவும் இடம் உண்டா கின்றது. ஆதலால், மனைவி ஒரு மகவீன்று ஐந்தாண்டுகள் சென்ற பிறகு அவளை மருவுதல்தான், அவள் கணவன் அவளுக்கும் அவள் ஈன்ற மகவுக்கும் பின்னர்ப் பிறக்கப்போகும் மகவுக்குஞ் செய்யும் பேருதவியாகும். அங்ஙனமின்றி, அவள் மகவீன்ற ஓராண்டுக்குள் அவன் அவளைக் கூடி, ஈன்ற மகவு நன்கு வளர்தற்கு முன், அவள் மற்றுமொரு மகவினை ஈனும்படி செய்து விடுவானாயின், அதனால் மனைவியின் உடல்நலம் பழுதுபட்டுப் பல நோய்களுக்கு இருப்பிடமாவது மல்லாமல், அவள் முதலில் ஈன்ற மகவும் பின்னர் அதனை யடுத்து ஈன்ற மகவுங் கூட உடல் நலங் கெட்டு, எல்லார்க்குந் துன்பந் தருவன வாய்ச் சில்லாண்டுகள் உயிரோடிருந்து, பின்னர் இறந்து போய் விடுகின்றன! இங்ஙனம் நாடோறும் நோய்த் துன்பமும் பின் அதனை யடுத்தடுத்துச் சாவும் நிகழும் ஓர் இல்லம் நிரயக் குழியாகுமே யன்றி, அஃதோர் எள்ளளவு இன்பத்திற் கேனும் வாயிலாகு மென்று கூறல் கூடுமோ? இவ்வளவு துன் பத்தையும் விளைத்துக்கொண்டு ஒருவன் வாழும் வாழ்க்கை உண்மையில் இல்லற வாழ்க்கை யென்று சொல்லப்படு தற்கும் ஏற்குமோ? அறிவுடையீர் உணர்ந்து பார்மின்கள்! பெரும்பாலும் இத்தகைய நிரயவாழ்க்கை நடாத்தும் நம் ஆடவர் பலரைப் பார்த்து, மகவீன்று நாற்பது நாள் கூட ஆகாத நிலையில் நீர் நும் மனைவியைக் கூடி மறுபடியும் ஓராண்டிற்குள் அவர் மற்றுமொரு மகவினை ஈனும்படி செய்வது நன்றாகுமா? என வினவிய காலங் களிலெல்லாம், அவர்கள் என் செய்வோம்! எங்களாற் சேர்க்கையின்றி இருக்க முடியவில்லையே! என்றே விடை பகர்ந்து வந்தனர். அவர் தம் மனைவியரும் எங்கே தங் கணவர் வேறு மாதரை மருவச் சென்று விடுவரோ என்னும் அச்சத்தால் தம் உடல் நிலை அவரை மருவுதற்கேற்ற நலம் வாயாதிருக்கையிலும், வேண்டா விருப்பாய் அவரைக் கூடுதற்கு இசைந்து, தமக்குந் தங் குழந்தைகளுக்குந் தொடர்பாக நோயையுந் துன்பத்தையும் வருவித்துக் கொள்கின்றனர். இங்ஙனமாக இஞ்ஞான்றை மணவாழ்க்கையில் மேன் மேற் கிளைக்குந் துன்பங்கள், அஞ்ஞான்றிருந்த இளைஞர்க் கும் அவர்தங் குடும்பத்தார்க்கும் வாராமைப் பொருட்டு, அவர்தம் பெற்றோர்கள் அவர்க்குச் செய்து வைத்த இல் வாழ்க்கை ஏற்பாடுகள் சாலவும் பாராட்டற் பாலனவாய் இருக்கின்றன. அவ்வேற்பாடுகள் என்னையோ வெனிற்; காதற் பரத்தை எல்லார்க்கும் உரித்தே என்னும் இறையனாரகப்பொருட் சூத்திரத்திற்குத் தொல் லாசிரியர் நக்கீரனார் உரைத்த வுரையிலிருந்து அவற்றை ஈண்டு எடுத்துக் காட்டுதும், பண்டைக் காலத்திருந்த பெற்றோர்கள் தம் புதல்வர்கட்கு உரிமையாகத் தத்தஞ் செல்வ வளத்திற்குத் தக்கபடி பெண்கள் இருவர் மூவரை அவர்க்குக் காமக்கிழத்தி யராக வளர்த்து வைப்பர். தம் புதல்வன் தன்னாற் காதலிக்கப் பட்ட ஒரு மங்கையை மணஞ்செய்து கொண்டபின், அவன்றன் மனைவி மகப் பெற்றனளாயின், அம்மகவு நன்கு வளர்ந்து சிறுவன் சிறுமி யாகும்வரையில், அவன் தன் மனைவியை அணுகாமைப் பொருட்டு, அவனுக்கு உரிமையாகத் தாம் வளர்த்த இள மங்கையரை அவன் பெற்றோர்கள் அவனுக்கு மனைவி யராக அமைத்து வைப்பர். இவ்வாறு தனக்கு அமர்த்தி வைக்கப்பட்ட மனைவியரை ஒருவர் பின் ஒருவராய்க் கூடி அவன் வாழ்க்கை செலுத்தா நிற்பனாகலின், அவன்றன் காதன் முதன் மனையாளும் ஏனை மனைவியரும் அடுத்தடுத்து மகப்பெற்று வளர்க்குந் துன்பத்திற்கு ஆளாகாமலும், தங் கணவனைத் தொடர்பாக மருவித் தமதுடல் நலத்தையுந் தாம் பெறும் மக்களின் உடல் நலத்தையும் பழுதுபடுத்தாமலும் மனநல உடல்நலங்கள் நன்கு வாய்க்கப் பெற்றுக் கிட்டத்தட்ட நூறாண்டுகள் வரையில் இனி துயிர் வாழ்ந்து வந்தனர். அவர்தங் கணவருங் கவலையும், நோயுந் துன்பமும் இலராய்ச் செவ்வனே இன்பந் துய்த்து நீண்டகாலம் உயிர் வாழாநின்றனர். இத்தகைய வாழ்க்கையமைப்பு இற்றைக்குச் சிறிதேறக் குறைய ஐயாயிர ஆண்டுகளுக்கு முன்னமே யிருந்து நெடுக நடைபெற்று வந்து, பிறகு சில நூற்றாண்டு களாக அருகி ஒரோவொரு குடும்பங்களில் மட்டும் இக்காலத்தே நடை பெறும் நிலைக்கு வந்துவிட்டது. காதலின் மணந்த முதன் மனைவிக்குப் பின், பெற்றேர்களால் வளர்த்து அமர்த்தி வைக்கப்பட்ட மனைவியர் காமக் கிழத்தியர் அல்லது இற்பரத்தையர் என்னும் பெயருடை யராய்த் தலை மகனோடு ஒருங்கிருந்து வாழ்க்கை செலுத்திய வரலாறு, காமக் கிழத்தி மனையோ ளென்றிவர் ஏமுறு கிளவி சொல்லிய எதிரும் என்னுந் தொல்காப்பியக் கற்பியற் சூத்திரத்தால் (5) நன்கறியக் கிடக்கின்றது. தொல்காப்பியர் காலம் இற்றைக்கு ஐயாயிர ஆண்டுகளுக்கு முற்பட்டது. இன்னும் இற்றைக்கு இரண்டாயிர ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட இறையனாரகப்பொருள் காலத்திலும் இவ்வழக்கம் நடைபெற்று வந்தமை அந்நூலுக்கு நக்கீரனார் கண்ட விழுமிய பேரு ரையின்கண் விளக்கமாக நுவலப் பட்டிருத்தலை மேலெடுத் துக் காட்டினாம். இன்னுஞ் சுந்தரமூர்த்தி நாயனார் காலத்திலும் இவ்வழக்கம் இருந்தமை அவர் முதன் மணந்த பரவைநாச்சியார்க்குப்பின், இரண்டாம் மனைவியாராகச் சங்கிலிநாச்சியாரை மணந்தமை கொண்டு அறியப்படும். இக்காலத்திலுஞ் செல்வர்கள் பலர் மனைவியர் பலரை மணந்து வாழ்க்கை நடத்துகின்றனர். செல்வம் இல்லாத ஏழை யெளியவர்களிலும் மனைவியர் பலரை மணந்து வாழ்வாரும் பலர் உளர். அங்ஙனமாயிற், செல்வம் படைத்தவர்கள் மனைவியர் பலரை வைத்துத் தமது வாழ்க்கையை நன்கு நடத்துதற்கு அவர்கள்பாற் பொருள்வள மிருக்கின்றது. பொருள் இல்லாத ஏழை யெளியவர்களிலுங், கணவனும் அவன்றன் மனைவியரும் பல்வகைக் கைத்தொழில்கள் செய்து பிழைப்பவர்களாய் இருத்தலால், அவர்களுள்ளும் மனைவியர் பலர் இருத்தல் இடர் பயவாது. ஆனாற் செல்வ வளனுமின்றி, ஏழைமையு மின்றி, நடுநிலையிலுள்ளவர்கள் மனைவியர் பலரை மணந்து துன்பமின்றி வாழ்க்கை நடத்துதல் இயலுமோவெனின்; இயலும். பண்டைக் காலத்தில் ஆண்பாலார் மட்டுமேயன்றிப் பெண்பாலாருங் கூட இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்க் கல்வியிற் சிறந்த புலமை யடைந்து விளங்கியதுமல்லாமற், பல திறப்பட்ட கைத்தொழில்களிலுந் தேர்ச்சியடைந்து திகழ்ந்தனர். அஃது ஒக்கூர் மாசாத்தியார், ஔவையார், காக்கை பாடினியார், நச்செள்ளையார், காவற்பெண்டு, குறமகள் இளவெயினி, பாரிமகளிர், பெருங்கோப்பெண்டு, நக்கண்ணையார், பேய்மகள் இளவெயினி, பொன்முடியார், மாற்பித்தியார், மாறோக்கத்து நப்பசலையார், வெண்ணிக் குயத்தியார், காமக்கண்ணியார் முதலான பழந்தமிழ் மாதர்கள் தமிழ்கல்விப் புலமையிலும் ஏனைத் தொழிற் கல்விப் புலமையிலுஞ் சிறந்து விளங்கினமை, புறநானூற்றில் அவர்கள் பாடியிருக்கும் அருந்தமிழ்ச் செய்யுட் களாலும், அவர் தம் பெயர்களாலும் நன்கறியக் கிடக்கின்றது. ஆகவே, ஆண்பாலாரைப் போலவே, பெண்பாலாருங் கல்விப் புலமையாலுங் கைத்தொழிற் புலமையாலும் பொருள் ஈட்ட வல்லவர்களாயிருந்தால், அவர்கள் தங் கணவனது வருவாயையே எதிர்பார்த்துப் பிழைக்க வேண்டுவதில்லை. அங்ஙனம் புலமை வாய்ந்த மனைவியரையுடைய கணவன் மிடிப்பட்டு வருந்தாமலே இனிது வாழ்க்கை செலுத்து வானென்பதுஞ் சொல்ல வேண்டுவதில்லை. இங்ஙனம் இரு பாலாரும் ஒருமித்துத் தத்தம் முயற்சிகளால் வாழ்க்கை செலுத்து தலாலும், ஓர் ஆண்மகன் தான் முதன் மணந்த காதன் மனைவியையே தொடர்ந்து மருவாமற் காமக் கிழத்தியராம் ஏனை மனைவியரையும் ஒருவர் பின்னொருவ ராக மருவி வாழ்ந்து வருதலாலும், பெண்பாலார் உடல்நல மனநலங்கள் மிகுந்து மூன்று அல்லது நான்காண்டுகளுக்கு ஒருகால் ஒரு மகவு ஈன்று அதனைச் செவ்வனே வளர்த்துவர அவர் தங் கணவனும் உடல்நல மனநலங்கள் மிகுந்து இனிது வாழ்வானாவது. இனிப், பண்டைக்காலம் முதல் இடைக்காலம்வரை யிற் பெருகியும், அதன்பின் இக்காலத்தில் அருகியும் நடைபெறா நிற்கும் பன்மனைவியர் மணம் இஞ்ஞான்றைத் தமிழ் மக்கட்குப் புதுமையாயும் பொருத்தமில்லாததாயுங் காணப்படலாம். பெண்பாலாரும் அவர் வயிற்றிற் பிறக்கும் பிள்ளைகளும் அவர்தங் கணவரும் நோயுங் கவலையும் வறுமையுந் துன்பமு மின்றித் தமக்கும் பிறர்க்கும் பயன் பட்டு, நீடு வாழ்தலை விழைவார்களானாற், பழந்தமிழ்ச் சான்றோர் வகுத்த இப் பன்மனைவியர் மணவாழ்க்கையைக் குற்றமாகவும் புதுமை யாகவும் காண்பார் அல்லர். துலுக்கர் மதத்தின் ஆசிரியரான மகமது முனிவர் ஆண் பெண் பாலாரின் இயற்கைகளையும், அவர் தம் வாழ்க்கையின் இடர்ப்பாடுகளையும் ஆழ்ந்தாராய்ந் துணர்ந்தன்றோ ஓர் ஆண்மகன் ஒருவரிலிருந்து நால்வர் வரையில் மனைவியர் பலரை மணந்துகொள்ளலாம் என்று தாம் அருளிச் செய்த குரான்மறையில் ஒரு சிறந்த சட்டம் வகுத்தருளினார். அச்சட்டத்தின்படியே துலுக்கரில் ஆண் பாலார் தத்தம் பொருள் நிலைக்கு ஏற்ப மனைவியர் பலரை மணந்து வாழ்க்கையை இனிது நடத்தி வருகின்றனர். இங்ஙனம் பன்மனைவியருடனிருந்து வாழுந் துலுக்கரின் வாழ்க்கை இனிது நடைபெறுகின்றதோ இடர்ப்பட்டு நடைபெறு கின்றதோ என்பதனை நேரே சென்று ஆராய்ந்துகண்ட ஆங்கில ஆசிரியர் சிலர், அஃது இனிதாகவே நடைபெறு கின்றதென முடிவுகட்டி யிருக்கின்றனர். ஒரு கணவனுக்கு மனைவியர் பலர் இருப்பது அவர்களுள் வழக்கத்தில் வந்து விட்டமையால் ஒருவன் றன் மனைவிமார் தம்முட் பொறாமை சிறிதுமின்றி அன்புடன் ஒருவருக்கொருவர் உதவியாய் நின்று ஒத்து உயிர் வாழ்கின்றன ரென்றும், ஒரு மனைவி மகவீன்று அதனைச் செவ்வனே வளர்த்துப் பெரிய பிள்ளையாக்குங்காறும் அவள் கணவன் ஒருவர்பின் னொருவராய் மற்றை மனைவியருடன் கூடி உறைந்து வாழ்க்கை செலுத்துதலின் மனைவியரும் அவர்தம் பிள்ளைகளுங் கணவருமெல்லாம் உடல்நல மனநலங்கள் நன்கு வாய்ந்து நீடு இனிது உயிர் வாழ்கின்றனரென்றுந், தமக்கு மனைவியர் பலர் இருத்தலின் அவரைவிட்டு வேறு மாதரை விழைந்து செல்லுங் கூடாவொழுக்கங் கணவர் பாற் சிறிதுங் காணப்படவில்லை யென்றும், ஆகவே பன்மனைவியர் மணவாழ்க்கை துலுக்கருள் நலந் தருவதா கவே இருக்கின்ற தன்றித் தீது தருவதாய் இல்லை யென்றும் அவ்வாங்கில ஆசிரியர்கள் தெளிவாக வரைந்திருக்கின்றனர். மற்றுந், கிறித்துமத சட்டப்படி ஒரு மனைவி உயிரோ டிருக்கையில் வேறு மனைவியரை மணவாத வெள்ளைக் காரரிலோ, ஏறக்குறைய ஒவ்வொரு கணவன் மாரும் பெரும் பாலும் வழுவிய ஒழுக்கமுடை யராய் மறைவிலே வைப்பாட்டி மார் இருவர் மூவர் நால்வரை மருவி வாழ்நாட் கழிக்கின்றன ரெனவும் அவர்களே ஆராய்ந்து கணக்கெடுத்து நுவல்கின்றனர். கிறித்துவர் துலுக்கரின் இவ்வாழ்க்கை வரலாறுகளை உற்று நோக்குங்கால், பன்மனைவியர் மணவாழ்க்கையினை இனியதாக ஏற்குந் துலுக்கமதக் கோட்பாடும் பண்டைத் தமிழர் மதக் கோட்பாடும் பெண்மக்கள் ஆண் மக்கட்குப் பல நலங் களைத் தருவனவாயிருத்தல் தெற்றெனப் புலனாகின்ற தன்றோ? அற்றேல், ஒரு பெண்மகள் தான் காதலித்த ஒருவனை யன்றிப் பிறனொருவனைக் கனவினும் நினையாத மாண்பே கற்பொழுக்கமெனப் பழந்தமிழ் நூல்கள் வகுத்தாற்போல, ஓர் ஆண் மகனுந் தான் காதலித்த ஒருத்தியையன்றிப் பிறள் ஒருத்தியைக் கனவினும் நினையாத கற்பொழுக்கத்திற் குரியனென அந்நூல்கள் வகுத்துரை யாமை என்னையெனிற், கூறுதும்: ஒருவன் தன் காதன் மனையாளைத் தவிர மற்றை யொருத்தியை விரும்பாத மனத்திட்பம் உடையனாயிருந்தாலும், அவன்தன் மனையாள்பால் வைத்த காதல் மிகுதியால், அவள் மகப்பெறுதற்கு முன்னும் மகப்பெற்ற பின்னும் அவளை யடுத்தடுத்து மருவாதிரான். அவ்வாறவன் அவளொடு கூடி யொழுகுதலால் அவளுடம்பின் நலம் பழுதுபடுதல் மட்டுமே யன்றி, அவள் அடுத்தடுத்து ஈனுங் குழந்தைகளும் நோய் கொண்டு சிறிது காலத்தில் மடிந்து போகின்றன. அதனால் அவனது இல்லத்தில் நோயுங் கவலையுந் துன்பமுங் குடியா யிருக்கின்றன. இந் நிலைமையை ஆராய்ந்து பார்த்தே காதன் மனையாளை மணந்தவனுங் கூட, அவளுடன் மட்டுமே கூடியிராமல், தன் பெற்றோரால் இளமை தொட்டே வளர்த்து அமர்த்தி வைக்கப்பட்ட காமக்கிழத்தியரோடுங் கூடி வாழ்க்கை செலுத்துமாறு பண்டைத் தமிழ்ச் சான்றோர் வகுத்து வைத்தனர். இங்ஙனம் இவர்கள் வகுத்து வைத்ததெல்லாம், பெண்பாலாரின் உடல்நல மனநலங்களைப் பாதுகாத்து, அவர் வயிற்றிற் பிறக்கும் பிள்ளைகளும் அந்நலங்களுடையராய்த் திகழவும், அம்முகத்தால் ஆண்பாலாரும் நோயுங் கவலையுங் கூடா வொழுக்கமும் இன்றி இன்ப வாழ்க்கையில் நீடு வாழவுமே யாம் என்க. எனவே, தொல்லாசிரியர் பெண்பாலார்க்குக் கற்பொழுக்கத்தை வகுத்துக் கூறினாற்போல, ஆண் பாலார்க்கும் ஒரு மனைவியோ டிருக்குங் கற்பொழுக்கத்தை வகுத்துக் கூறாதது, இருபாலாரும் அவர்தம் மக்களும் இனிது வாழ்தற் பொருட்டே யாம் என்பது தானே போதரும். உலக வழக்கிலும் பெண்பாலார்க்குக் கற்பொழுக்கம் வேண்டப்படு கின்றதே யன்றி, ஆண்பாலார்க்கு அது வேண்டப்படாமை எவரும் அறிந்ததேயாம். அங்ஙனமாயினுந் தம் மனைவியரைக் கடந்த கூடா வொழுக்கம் எவர்க்கும் ஆகாமையும் எவரும் அறிந்ததே யாம். இவ்வாற்றாற், பழந்தமிழாசிரியர் ஆடவர்க்குக் கற் பொழுக்கம் வகுத்துரையாத நுட்பம் எவர்க்கும் இனிது விளங்கா நிற்கும் என்க. அற்றேல், பெண்பாலாரும் ஆடவர் பலரைக் கணவராக மணந்து வாழ்தல் பொருத்த முடைத்தாமன்றோ? துரோபதை ஐவரைக் கணவராகக் கொண்டு வாழவில்லையா? நீலமலையில் உறையுந் தோடர்க்குள் ஒரு பெண் ஒரு குடும்பத்தில் உடன் பிறந்த ஆடவர் பலர்க்கும் மனையாளா யிருக்கின்றனளன்றோ? இமயமலையை யடுத்த திபேத்து தேயத்திலும் அங்ஙனமே ஒரு மாது ஒரு குடும் பத்தில் உடன் பிறந்த ஆடவர் பலரை மணந்து வாழ்கின் றனளன்றோ? இங்ஙனமே பழைய பிரித்தானியர்க் குள்ளும் அராபியர்க்குள்ளும் வேறு வகுப்பினர் சிலர்க் குள்ளும் ஒருத்தி ஆடவர் பலர்க்கு மனையாளாயிருந்த வரலாறுகள் அறியப்படு கின்றன. ஆதலால், தமிழர் மட்டும் ஒரு மங்கை ஒருவனைத் தவிரப் பிறனொருவனைக் கனவிலும் நினைதல் ஆகாதென வரையறை செய்ததென்னையெனிற், கூறுதும். பெரும்பாலும் ஆடவர் தம் மனைவிமாரின் உடல்நல மனநலங்களையும், அவர் வயிற்றிற் பிறக்குந் தம் பிள்ளை களின் உடல்நல மனநலங்களையுங் கருதிப் பாராமல், தமக்குக் காமவேட்கை எழுங் காலங்களி லெல்லாம் அவரை வலிந்து மருவும் இயல்பினரென்பதனை மேலே காட்டினாம். பூவாச் சிறுமிகளை மணக்கும் பார்ப்பனக் கணவன்மார், அச்சிறுமிகள் மங்கைப்பருவம் எய்தும் முன்னமே அவர் களை வலிந்துபற்றிப் புணர்ந்து அவர் உடம்பின் நலத்தைப் பழுதுபடுத்தி வரும் உண்மை வரலாறுகளைப் புலமையிற் சிறந்த மேயோ என்னும் ஆங்கிலப் பெருமாட்டி யார் தாம் இயற்றிய இந்தியத்தாய் என்னும் நூலின் ஐந்தாம் இயலில் உண்மைச் சான்றுகள் பல கொண்டு உறுதிப்படுத்தியிருக்கின்றார். இவ்வாறு மங்கைப் பருவம் அடையாத பேதைச் சிறுமிகளையே - இவர்கள் ஏழிலிருந்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு உட்பட்டவர்கள் - வலிந்து பற்றிப் புணர்ந்து, வாழ்நாளெல்லாம் அவர்கள் நோய்வாய்ப்பட்டு மடியச்செய்யுங் காமப் பேய்களான ஆடவர், மங்கைப் பருவம் எய்திய ஒருத்தி மனைவி யென்னும் உரிமையிற் றமக்குக் கிடைத்துவிட்டால் அவளைச் சும்மா விடுவரோ சொன்மின்கள்! ஒரு மங்கையின் உடம்பைப் பழுதாக்க ஒரு கணவனே போதும்; அவளுக்கு மேலும் இன்னும் பலர் கணவராக அமர்ந்தால், அக் கணவன்மார் பலரால் அவ் வொருத்திக்கு நேரும் அலைக்கழிவினை எம்மொரு நாவால் எடுத்துரைத்தல் இயலுமோ சொன்மின்கள்! தோடர், திபேத்தியர் முதலான மக்கட் பிரிவினர் சிலர்க்குள் ஒருத்தி பலர்க்கு மனையாளாய் இருக்குந் தீய கொடிய வழக்கம் இருத்தலினாலே தான், அவர்க்குட் பெண்பாலார் தொகை வரவர அருகிப் போகின்றது! அவர் வயிற்றிற் பிறக்கும் மக்களும் மனநல உடல்நலங்கள் வாயாமற் குன்றிப் போகின்றனர்! மேலும், ஒருத்தி ஆடவர் பலர்க் மனை யாளாய் இருந்தாலும், அவள் அவருள் ஒரு கணவனிடத்தே தான் காதலன்பு பாராட்டுவள். துரோபதை ஐவர்க்கு மனையாளாயிருந்தும், அவள் அருச்சுனனிடத்தே தான் காதலன்பு பாராட்டின ளென்று நுவலப்படுகின்றனள். அதனால், ஒருத்திக்குக் கணவராய் அமர்ந்த பலருந் தமக்குட் பொறாமையும் பகைமையுங் கொண்டு கலாய்த்தலேயன்றி, அம்மாதினையும் பலவகையால் துன்புறுத்தா நிற்பர். இன்னும் அவள் வயிற்றிற் பிறந்த பிள்ளைகளிலும் இஃது இன்னார்க்குப் பிறந்ததென்பது திட்டமாய் அறியப்படாமையால், அப் பிள்ளைகள்பால் அவள் கணவன்மார் பலரும் அன்பிலராயே யொழுகுவர். இவையே யன்றி இன்னும் பல அல்லல்களும், ஒரு பெண் ஆடவர் பலரை மணக்குங் குடும்பங்களில் உண்டாகும். ஆதலினாற்றான் இத்தகைய மணம் நாகரிமற்ற மக்கட் பிரிவினர் சிலர்க்குள் மட்டுங் காணப்படுகின்றது. நாகரிகம் எய்திய மக்கட் கூட்டத்தார் பலருள்ளுமோ ஒரு மகள் ஒருவனை மட்டும் மணந்து வாழும் வாழ்க்கையே நடைபெறுதல் எல்லாரும் அறிந்ததேயாம். ஆகவே, பண்டைத்தமிழ் மக்களும், அவர் தம் வாழ்க்கை வரலாறுகளைத் தழீஇ நூல்கள் இயற்றிய தமிழாசிரியர்களும் ஒரு மங்கை ஒருவனோடுறைந்து வாழும் கற்பொழுக்கத்தினையே வற்புறுத்தி வரலாயினர். அவர் வற்புறுத்திய கற்பொழுக்க வாழ்க்கையே இன்றுகாறும் இத் தமிழகத்தில் நிலைபெற்று வழங்கி வருதலை அறியா தார் யார்? இஞ்ஞான்றைத் தமிழ் மக்களின் மணவாழ்க்கை காதலன்பின் வழிபட்டு நடவாமையின், ஒரோவொருகாற் பிழைபட்டுச் சிதைவதாயிருப்பினும், அது பெரும்பாலும் பெண் பாலாரைக் கற்பொழுக்கத்தில் நிலைபெறுவித்தே வருதலின், அதனை மற்றை நாட்டவரும் பாராட்டிப் பேசுவதுமல்லாமல், அதனையே தாமுங் கைக்கொண்டு நடக்க விரும்புகின்றனர்; சிலர் பலர் கைக்கொண்டும் நடந்து வருகின்றனர் என்க. அடிக்குறிப்பு 1. Dr. John Cowan in his Science of New Life, P. 177. 15. பின்முறை மணம் இன்னும், பெண்பாலார் பெரும்பாலும் ஆண்பாலா ரைப் பார்க்கிலும் விரைவில் முதுமை யடைகின்றனர். நாற்பதுக்கும் நாற்பத்தைந்தாண்டுகட்கும் இடையில் மாதரிற் பலர் பூப்பு நிற்கப் பெறுகின்றார். பூப்பு நின்றபின் அவர்கள் கணவனை மருவுதற்கும் புதல்வரைப் பெறுதற்குந் தகுதியற்றவராகின்றார். நாற்பதாண்டுக்கு மேற்பட்டபின் மாதர் பலர்க்குப் புணர்ச்சி வேட்கையே இல்லையாய் ஒழிகின்றது. ஆனால், ஆண் பாலாரின் உடம்பு நிலையோ அத்தகையதாயில்லை. யாக்கை நோயற்ற நல்ல நிலைமையில் இருக்க, அறிவும் முயற்சியும் நன்கு வாய்ந்து நீண்டநாள் உயிரோடிருக்கும் ஆடவர் பலர்க்கு எழுபதாண்டுக்கு மேலும் புணர்ச்சி விருப்பும், மகளிரை மருவிப் புதல்வர்ப் பெறும் ஆற்றலும் இயற்கையாய்ப் பொருந்தி யிருத்தலையும், அத் தன்மையினார் எழுபதாண்டுக்கு மேலுந் திருமணஞ் செய்துகொண்டு வாழ்தலையும் இன்றைக்கும் பல இடங்களிற் பலரும் பார்க்கலாம். மேலும், பூப்பு நின்றபின் தன் காதன் மனையாளேயாயினும் அவளை அவள் காதலன் மருவுதலாகாதென அறிவுடையோர் கூறுமுரை பொருத்த முடையதாகவே காணப்படுகின்றது. ஏனென்றால், மாதர்க்குப் பூப்பு நின்றபின் பெரும்பாலுங் காமவேட்கை குறைந்து போவதுடன், அந்நிலையிற் புணர்ச்சி நிகழின் அவர்க்கும் அவர் தங் கணவர்க்கும் பலவகையான கொடிய நோய்களும் உண்டாகின்றன. ஆண் பெண் பாலாரின் இவ் வேறுபட்ட உடம்பின் நிலைகளை உற்றுநோக்கி ஆராய்ந்த நம் பண்டை ஆசிரியர், நாற்பத்தைந்தாண்டுகட்கு மேற்பட்ட தங் காதன் மனைவியரையும் ஆடவர் மருவுதல் தவிர்ந்து, வேறு மாதரை மணந்து கொண்டு வாழ்க்கை செலுத்தும் முறையினை ஏற்றுக் கொண்டமை நமது பழைய தொல்காப்பிய நூலை ஆராய்தலாற் புலனாகின்றது. ஓர் ஆண்மகன் தான் முதலில் மணந்து கொண்ட மனைவி தொன்முறை மனைவி என்றும், பின்னர் மணந்து கொண்ட மனைவி பின்முறை மனைவி என்றும் பெயர் பெறலானவை, தொல்காப்பியத்துக் கற்பியலிற் போந்த, பின்முறை யாக்கிய பெரும்பொருள் வதுவைத் தொன்முறை மனைவி எதிர்ப்பா டாயினும் (31) என்னும் நூற்பாவினால் இனிது விளங்கா நிற்கின்றது. மேலுந் தனது இளமைக் காலத்தே தான் மணந்து கொண்ட காதன் மனைவி மக்களை ஈன்று மூத்துப் போன பின், அவளே இல்லறக் கடமைகளைத் தான் சாகுமட்டுந் தாங்கித் தொடர்ந்து செலுத்துமாறு வைத்து அவளை வருத்துதல் அவள் கணவனுக்கு அருளுடைமையாகாது. அம்முதுமைக் காலத்தே அவள் ஓய்ந்திருந்து இனிது காலங் கழிக்குமாறு, அவளுக்கு வேண்டும் உதவிகளைச் செய்து அவளை உவப்பித்தலே அவள் கணவனுக்கு இன்றியமை யாத கடமை யாகும். இதனை நன்குணர்ந்த நம் பண்டைத் தமிழ்மக்கள் தம் தொன்முறை மனைவிக்குந் தமக்கும் உதவியாம் பொருட்டுப், பின்முறை மனைவியாக மற்றுமொரு மாதை மணந்து, தம் தொன்முறை மனைவி யுடனிருந்தே வாழ்க்கை செலுத்தி வந்தமை அவர்தம் அருட்பான்மையினை இனிது புலப்படுத்தா நிற்கின்றது. இவ்வாறு நந்தமிழ் முதுமக்கள் தமக்குரிய பெண் பாலாரைப் பாதுகாக்கும் பொருட்டுப், பன் மனைவியரை மணந்தும் பின்முறை மனையாளாக மற்றுமொரு மங்கையை மணந்தும் இல்வாழ்க்கை நடாத்திய வரலாறு களை உண்மையான் ஆராய்ந்து நோக்க வல்லார்க்கு அவர் தம் ஒழுகலாறு சிறிதேனுங் குற்றமுடைய தாகக் கருதப் படுதற்கு இடந்தராதாய், அவர்தம் பெண்பாலார்பால் வைத்த மெய்யன்பினையும் பேரருளினையும் புலப்படக் காட்டுந் தன்மையதாய் நிற்றல் தெற்றென விளங்காநிற்கும். பிழை பட்ட உணர்ச்சியும் அழுக்காறும் அறியாமையுங் கொண்ட இஞ்ஞான்றை மாதர் ஆடவர் தமது வழுவான ஒழுகலாறே விழுமிதெனக் கருதி, உண்மை யருளொழுக் கத்திற் றலைநின்ற நம் பண்டைச் செந்தமிழ் மாந்தரின் ஒழுகலாற் றுக்குக் குறைகூறுதல் ஏதமாமென அறிதல் வேண்டும். 16. புதல்வர்ப் பேறு இனிக், கற்பொழுக்க மாட்சி வாய்ந்த இல்வாழ்க்கை யின் சிறந்த பயனாவது நன்மக்களைப் பெற்று அவரைப் பல நலங்களும் வாய்ந்தவராக்கி, அவர் தமக்கும் பிறர்க்கும் பயன்பட்டொழுகச் செய்தலேயாமென்பது தமிழர்தம் அடுத்த கொள்கையாகும். அது, மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன் நன்கல நன்மக்கட் பேறு (குறள் 60) என்று தெய்வத் திருவள்ளுவர் விளம்புதலால் நன்கு பெறப்படும். கற்பிற் சிறந்த காதன் மனையாளைப் பெற்று இல் லறத்தை நடத்துவானுக்கு நன்மக்கட்பேறு வாய்த்தலினும் விழுமியது பிறிதில்லை. தமிழர்தங் கோட்பாட்டின்படி இல்லறத்தை நடத்துவான் ஒருவனுக்கு முதற்கண் வேண்டற்பாலன தன்மனைவியின் காதலுங் கற்புமேயாகும். அதனையடுத்து அவனுக்கு வேண்டற்பாலது நன்மக்கட் பேறேயாம். மற்று, ஆரியர்தங் கோட்பாட்டின்படியோ மனைவாழ்க்கையில் இருப்பானுக்கு முதற்கண் வேண்டற் பாலது புதல்வர்ப் பேறேயாம்; புதல்வரைப் பெறுதற் பொருட்டுத் தன் மனைவி கற்பொழுக்கத்திற் பிறழ்ந்து நடத்தலும் அவள் கணவனுக்கு உடன்பாடேயாம். மேலும், புதல்வர்ப் பேற்றின் பொருட்டு ஒரு பெண்ணையோ அல்லது ஒன்றின் மேற்பட்ட பெண்களையோ மணத்தல் வேண்டுமென்று ஆரியர் கூறுவதல்லாற், காதலன்பின் பொருட்டும் அன்பினையும் அறத்தினையும் வளர்த்தற் பொருட்டும் ஒரு மங்கையுடன் கூடி இல்வாழ்க்கையை நடத்தல் வேண்டுமென்று அவர் கூறுவதில்லை. மனை வாழ்க்கையைப் பற்றிய கோட்பாட்டில் தமிழர் கொண்ட கருத்தும் ஆரியர் கொண்ட கருத்தும் இங்ஙனந் தம்முட் பெரிதும் வேறுபட்டு நிற்றல் நினைவிற் பதிக்கற்பாற்று. இனி, மனைவாழ்க்கையைத் தமக்கும் பிறர்க்கும் பயன் றரும் முறையில் நன்கு நடத்தி நன்மக்களைப் பெற்றவர் அம்மக்களுக்குச் செய்யும் உதவியாவது அம்மக்களைக் கல்வியிலுங் கலைத்துறையிலுந் தேர்ச்சி பெற்று விளங்கச் செய்தலே யாகுமன்றி, அவர்க்குச் செல்வப் பொருளைச் சேர்த்து வைத்தலாக மாட்டாதென்றே பண்டைத் தமிழ் மக்கள் கருதினர். அது, தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி யிருப்பச் செயல் (குறள் 67) என்னுந் திருவள்ளுவர் திருக்குறளாலும், திருவள்ளுவர் காலத்தவரான பொன்முடியார் என்னுஞ் செந்தமிழ்ப் புலமைச் சேயிழையார், ஈன்று புறந்தருதல் என்றலைக் கடனே சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே எனக் கூறிய செய்யுண் மொழியாலும், இவற்றிற்கு விளக்கவுரை போலெழுந்த, வைப்புழிக் கோட்படா, வாய்த்தீயிற் கேடில்லை மிக்க சிறப்பின் அரசர்செறின் வௌவார், எச்ச மெனவொருவன் மக்கட்குச் செய்வன விச்சைமற் றல்ல பிற என்னும் நாலடியார் செய்யுளாலும் நன்கறியப்படும். இற்றைக்கு ஐயாயிர ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்திலேயே, பெற்றோர் தம்மக்களைக் கல்வியில் வல்லராக்கி, அவர் அக்கல்வியின் உதவி கொண்டு தம் வாழ்க்கைக்கு வேண்டும் பொருளை, நிலத்தினும் நீரினுஞ் சென்று ஈட்டிக் கொள்ள ஏவுவரென்பதும், அவர்தம் புதல் வரும் அவரேவியவாறே நிலமும் நீரும் கடந்து பல தேயங்கள் போய்ச் சேர்ந்து பல நன்முயற்சி களைச் செய்து பொருள் ஈட்டித் திரும்புவ ரென்பது அவ்வாசிரியர் அருளிச் செய்த, மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய முல்லை முதலாச் சொல்லிய முறையாற் பிழைத்தது பிழையா தாகல் வேண்டியும் இழைத்த வொண்பொருண் முடியவும் பிரிவே என்னும் நூற்பாவால் இனிது விளங்காநிற்கும். தந்தை யும் அவன் முன்னோருந் தேடிய பொருள் கைக்கொண்டு தன் இல்லற வாழ்க்கையை நடாத்துததல் கலைவல்ல ஓர் ஆண்மகனுக்கு ஆணமை அன்மையின், அவன் அவரது பொருளை அவாவானாய்ச் சேய பல தேயங்கள் சென்றா யினும் பொருள் தொகுத்தலையே மேற்கொண்டொழு கினான். இஃது ஆசிரியர் நக்கீரனார் இறையனாரகப் பொருள் என்னும் நூலின், ஓதல் காவல் பகை தணி வினையே வேந்தர்க் குற்றுழி பொருட்பிணி பரத்தையென் றாங்க வாறே அவ்வயிற் பிரிவே என்னும் நூற்பாவுரையில், தன்முதுகுரவராற் படைக்கப்பட்ட பலவேறு வகைப் பட்ட பொருளெல்லாங் கிடந்ததுமன்; அதுகொடு துய்ப்பது ஆண்மைத் தன்மை அன்றெனத் தனது தாளாற்றலாற் படைத்த பொருள் கொண்டு வழங்கிவாழ் தற்குப் பிரியுமென்பது என்று வரைந்த விளக்கவுரைப் பகுதியால் தெற்றென வுணரப்படும். படவே, பண்டை நாளிலிருந்த தமிழ்மக்கள் தம் பிள்ளைகளைச் செவ்வனே வளர்த்து, அவர் கல்வியிலுங் கைத்தொழிலிலும் வாணிகத்திலுந் தேர்ச்சி பெறுமளவே தமது பொருளைச் செலவு செய்து, அவர் அவற்றிற் றேர்ச்சி பெற்றுத், தமது முயற்சியாற் பொருள்தேட வல்லரானபின் தமது செல்வத்தைப் பல அறத்துறைகளிற் பயன்படுத்தி உலகத்திற்கு நன்மை பல செய்து வந்தனரென்பது புலனா கின்றது. அஞ்ஞான்றைத் தமிழ்மக்கள் தம் புதல்வர் புதல்வியர்க்குச் செல்வப் பொருளைத் தொகுத்து வைத்த லிலேயே முனைந்து நில்லாது, உலகத்துயிர்கட்கு நன்றாற்று தலிலும் முனைந்து நின்றமையால், வறியோர்க்கு உறையுளும், கல்வி பயில்வார்க்கு உணவும், அறுவகைச் சமயத்தார்க்கு உண்டியும், ஆவிற்கு வாயுறையும், சிறைப் பட்டார்க்குச் சோறும் வழங்கலும், ஐயமிடுதலும்; குழந்தைக்குத் தின்பண்டமும், சோறுங் கொடுத்தலும்; மகப் பெறுவித்தலும், மகவளர்த்தலும், மகப்பால் தருதலும், அறவைப்பிணஞ் சுடுதலும், அற்றார்க்கு ஆடைகொடுத் தலும், வண்ணாரால் ஆடை ஒலிப்பித்துக் கொடுத்தலும், மயிர்வினைஞரால் வறியார்க்கு மயிர் அகற்றலும், திரு மணஞ் செய்து வைத்தலும், பூண்நூல் பூட்டு வித்தலும், நோய்க்கு மருந்து கொடுத்தலும், முகம்பார்க்கக் கண்ணாடி அமைத்தலும், காதுவளர்க்க ஏழைமகளிர்க்கு ஓலை தருதலும், கண்ணுக்கு மருந்து இடுதலும், தலைக்கு எண்ணெய் கொடுத்தலும், காமவின்பத்திற்குப் பொது மகளிரைச் சேர்த்தலும், வெற்றிலைக்குச் சுண்ணந்தருதலும், பிறர்துயர் காத்தலும்; தண்ணீர்ப்பந்தல், திருமடம், தடாகம், இளமரக்கா அமைத்தலும்; ஆவுரிஞ்சுதறி ஆங்காங்கு நடுதலும், ஆவுக்குக் காளை விடுதலும், விலை கொடுத்துக் கொலைக்குச் செல்லும் ஆடுமாடுகளை வாங்குதலும் ஆகிய முப்பத்திரண்டு அறங்களை யுஞ் செய்து வந்தார்களென்பது பழைய திவாகர நிகண்டால் நன்கு விளங்குகின்றது. அவ்வாறவர்கள் செய்து வந்த அறங்களின் அடையாளங்கள் இஞ்ஞான்றும் ஆங்காங்குக் காணப்படுதலுடன், அறஞ் செயும் அம்மரபு பிழையாமல் அவ்வறங்களிற் சில பல செய்யுந் தமிழர் சிலரும் இடையிடையே இந்நாட்டில் இன்னுந் திகழ்கின்றனர். இங்ஙனம் பண்டைநாளில் இருந்த தமிழ்த்தாய் தந்தை யர்கள் தாம் பெற்ற தம் மக்களைக் கல்வியிலுங் கலைத் துறைகளிலுந் தேர்ச்சிபெறச் செய்து, அவர் தமது தேட்டங் கொண்டே தமது வாழ்க்கையினை நடாத்திக் கொள்ளுமாறு கற்பித்துத், தாந் தேடிய பொருளை முப்பத் திரண்டறங் களுக்கும் பயன்படுத்தி வந்தமையினாலேயே, முற்காலத்தில் நஞ் செந்தமிழ் நாட்டிலிருந்த மக்கள் கல்வி யிலுங் கலைத் துறைளிலுந் திறம்பெற்றுத் தமது ஆள் வினையால் திரை கடலோடியுந் திரண்ட பொருள் ஈட்டித், தாம் நன்கு வாழ்ந்து வந்ததுமல்லாமல், மற்றையோரும் நன்குவாழப் பேருதவிபுரிந்து வந்தனர். மற்று, இந்நாளிலோ பெற்றோர்கள் எல்லாருந் தம்மக்களுக்குச் செல்வப்பொருள் சேர்த்துவைத்தலையே பெருங்கடமையாகப் பிழைபடக் கருதி, எத்தனையோ குடும்பத் தவர்களின் பொருள்களை யெல்லாம் பல சூழ்ச்சிகளாற் கைப்பற்றித் தம்மக்களுக்குச் சேர்த்துவைத்து, அக்குடும்பத்தவர் களைப் பாழாக்குவது மல்லாமல், தம்மக்களையும் பாழாக்கி விடுகின்றனர். என்னை? தான்தேடாப் பொன்னுக்கு மாற்று மில்லை உரையுமில்லை என்னும் பழமொழிப்படி, புதல்வர்கள் தாம் வருந்தித் தேடாமல் தம் பெற்றோர்களாற் கிடைத்த பொருளைக் கண்டவுடனே தீயாரைத் துணைக்கொண்டு, அப்பொருளை விலைமாதர்க்குங் களியாட்டு விருந்திற்குங் குடிக்குஞ் சூதுக்கும் அழிவழக்கிற்கும் இன்னும் இவை போன்ற பல தீய செயல்கட்குஞ் செலவுசெய்து, சிற் சில ஆணடுகளிற் செல்வமெல்லாம் இழந்து, நோயும் வறுமையுங் கொண்டு ஆண்டு முதிராமுன்னரே மாண்டு போகின்றார்கள்! இங்ஙனம் புதல்வர்க்குப் பொருள் சேர்த்துவைக்கும் எண்ணந் தலைப் பட்டபின், நந்தமிழர்கள் ஈகை யறங்களை அறவே மறந்து விட்டார்கள்! தமிழ் கற்பார்க்குந் தமிழ் நூல் வரைவார்க்கும் உதவி புரியுநரைக் காண்பது அரிதினும் அரிதாய் விட்டது! துறந்தாரையுந் துவ்வாதவரையுங் கண்ணெடுத்துப் பார்ப்ப வரும் இல்லை! அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருந்துயர் களைவார் அற்றே போயினர்! வெளியாரவாரங்களுக்கும் வெறும் பட்டங் களுக்கும் வெறும் புகழுக்கும் வேண்டுமட்டும் பொருளை வாரியிறைக்குஞ் செல்வர்களே எங்கும் காணப் படுகின்றனர்! ஈரமற்ற நெஞ்சையும் எண்ணமற்ற கொடுஞ்செய் கையையுமே எங்குங் காண்கின்றோம்! பார்ப்பனரைப் பார்த்துத் தம் பெண்மக்களுக்குப் பெரும்பொருள் வரிசை கொடுத்து மாப்பிள்ளைகளை விலைக்கு வாங்குவதில் ஒருவர் ஒருவரின் முந்தி நிற்கின்றார்கள்! மணங் கூடுவாரின் மனப் பான்மையும் மனவொருமையுங் கருதிப் பார்ப்பவர் எவரையுங் காணோம்! எங்குந் தன்னயமுந் தற்பெருமையும் பொய்யும் புனைசுருட்டும் ஏமாற்றமுமே தலைவிரித்தாடு கின்றன! இவற்றைக் களைதற்கு அறமன்றஞ் சென்றால், அங்குந் தன்னயமும் பொருளவாவும் பொய்யும் புனை சுருட்டுமே தலைநிமிர்ந்து நிற்கின்றன! அறமகள் நடுவரின் காற்கீழ் மிதிபட்டுக் கிடக்கின்றனள்! பாழ்த்த இந்நிலை வேரூன்றுமானால் அஃதின்னுஞ் சிறிது காலத்தில் வளர்ந்து காழ்ப்பேறித் தமிழ் மக்களாகிய பைங்கூழை அடியோடு அழித்துவிடுவது திண்ணம். மற்றுத், தம்முடைய பொருளையெல்லாந் தமக்கு மட்டுமென்றே வரைந்து வைத்துக் கொள்ளாமல், தாஞ் செல்லும் நாடுகடோறு முள்ள எல்லாவகையான மக்கட் கூட்டத்தினரின் முன்னேற்றத்திற்கும் பயன்படுத்தி, எல்லாருங் கல்வியிலுங் கலைத்துறைகளிலும் தேர்ச்சி பெற்று இனிது வாழ இடைவிடாது முயன்று வருதலினாலன்றோ நம் ஆங்கில நன்மக்கள் இவ்வுலக மெங்கணுஞ் செங்கோலாட்சி செலுத்தி நாளுக்குநாள் பிறைமதிபோற் பெருகி வாழ் கின்றனர். அவர்களைப் பார்த்தாயினும் நம் தமிழ் மக்கள், மன்னுயிர் ஓம்பி அருள் ஆள்வார்க் கில்லென்ப தன்னுயிர் அஞ்சும் வினை (குறள் 244) என்று நம் பழந்தமிழ்ப் பேராசிரியர் அறிவுறுத்திய அருளுரையினைக் கடைப்பிடித்துத், தம் மக்களுக்கென்றே செல்வப் பொருள் சேர்த்து வைக்குஞ் சிறுசெயலை யொழித்து, அவர்க்குக் கேடில் விழுச்செல்வமாகிய கல்விப் பொருளையே மிகுத்துக் கொடுத்துத், தமது செல்வப் பொருளை முப்பத் திரண்டு அறங்களுக்கும் பயன்படுத்தித் தம் முன்னோர் தம் விழுமிய கோட்பாட்டின்வழி யொழுகு வாராக! 17. மறுமை வாழ்க்கை இனி, ஐந்தறிவு மட்டுமே வாய்ந்த சிற்றுயிர்த் தொகைகளுக்கு வாயாத ஆறாம் அறிவாகிய ஆராய்ச்சியறிவு வாய்ந்த மக்கள், உண்டு உடுத்து உறங்கி இன்புற்று இறந் தொழிவதாகிய இம்மை வாழ்க்கையளவிலே மனவமைதி பெற்று நிற்பவர்களாய் இல்லாமல், இனி வரக் கடவதாகிய மறுமை வாழ்க்கையைப்பற்றி ஆராய்ந்தறிவதில் அடங்கா வேட்கையுடையவர்களாய் முனைந்து நிற் கின்றனர். மக்களைப் போலவே எல்லாச் சிற்றுயிர்களும் இரைதேடித் தின்றும், இரைதேடிய இளைப்புத் தீர உறங்கியும், ஆணும் பெண்ணுங் கூடி இன்புறுதற்குரிய சிற்சில காலங்களில் இன்புற்றும், அதிலிருந்து தத்தங் குழவிகளை ஈன்று வளர்த்தும், பின்னர்ச் சிறிது காலத்தில் உயிர் மடிந்தும் போனாலும், அவைதம்மிற் குழவிகள் பெரியனவாய் விட்டால் அவை தமக்கும் அவை தம்மை ஈன்ற தாய் தந்தைக்கும் ஏதொரு தொடர்பும் இல்லாமற் போகின்றது; ஆனால், ஆறறிவுடைய நம் மக்களுள்ளோ அவ்வாறு தொடர்பற்றுப் போகவில்லை; அவர் இறக்குங் காறும் அன்பின் றொடர்பு நீண்டு செல்கின்றது. தம் புதல்வர் புதல்விகள் நோயும் மிடியுங் கொண்டு துன்புறக் கண்டால் அவர்க்கு அவற்றைத் தீர்த்துதவி செய்யத் தாய் தந்தையர் உள்ளந் துடிதுடிக்கின்றது. தாய் தந்தையர் முதுமையாலும் நோயாலும் பொருள் தேடமாட்டாமையாலும் உடலும், உயிருஞ் சோர்ந்து வருந்தக் கண்டால், அவர்க்கு அவ் வருத்தத்தைத் தீர்த்துதவி செய்யப் புதல்வர் புதல்வியர் நெஞ்சம் பதைபதைக்கின்றது. எல்லார்க்கும் எல்லா வுயிர்க்கும் பசியாலும் நோயாலும் பற்பல துன்பங்கள் வருகின்றன; ஆனால், மக்களைத் தவிர. மற்றைச் சிற்றுயிர்கள் ஒன்றற் கொன்றுதவியாய் நின்று அவற்றைத் தீர்த்துக் கொள்ள வழி தேட மாட்டா. மக்கள் மட்டுமே தமக்கு வருந் துன்பங்களை ஒருவர்க்கொருவர் உதவியாய் நின்று தீர்த்துக் கொள்ள முயற்சி செய்பவர்களாய் இருக்கின்றனர். இதற்குக் காரணம் என்னென் றால், மக்களுள் தொடர்ந்து நிகழும் அன்பே காரணமாய் இருக்கின்றது. சிற்றுயிர்கள் தமக்கு வருந்துன்பங்களை ஒன்றற்கொன்றுதவியாய் நின்று தீர்த்துக் கொள்ளாமை அவை தம்முள் தொடர்ந்த அன்பு நிகழாமையினாலேயாம். ஆகவே, துன்பத்தை நீக்க எழுவது தொடர்ந்த அன்பென்றே அறிதல் வேண்டும். இவ்வாறு மக்கள் உயிர்வாழும் இம்மை வாழ்க்கையில் அடுத்தடுத்து நிகழுந் துன்பமும், அதனை நீக்குதற்குத் தூண்டும் அன்பும், அதனால் விளையும் அறிவும் துன்ப இம்மை வாழ்க்கையின் வேறாக இன்ப மறுமை வாழ்க்கை ஒன்றுண்டென மக்களுக்கு அறிவுறுத்தி, அவர் அதனை அவாவுமாறு செய்கின்றன. மாந்தர்க்கு வருந்துன்பங்க ளெல்லாம் பசி விடாய் காமம் என்னும் மூன்று காரணங் களின் வழியே வருகின்றன. இத்துன்பங்க ளெல்லாம் பிறருதவியின்றி, அப் பிறர் வழியே வரும் பிறபொருட் சேர்க்கையின்றித் தாமாகவே நீங்குவன அல்ல. பசி தீர உணவும், விடாய் தீர நீரும், காமந் தீரச் சேர்க்கையும் இன்றியமையாது வேண்டப்படுகின்றன. இம் மூன்றால் வரும் மூன்று துன்பங்களும் இம்மூன்று வகையால் தீரா விட்டால், இந்நிலவுலகில் மக்களே இரார், விலங்குகளும் இரா, புற்பூண்டுகளுந் தலைக்காட்ட மாட்டா. இம் மூன்று துன்பங்களையும் நீக்கவல்ல சோறுந் தண்ணீருஞ் சேர்க்கையுந் தொன்றுதொட்டே இங்கமைந்திருக்கின்றன. ஆனாலும், முதன்முதல் நம்மக்களுயிர் அவைகளைத் தாமாகவே தேர்ந் தெடுத்துக் கொண்டு அத் துன்பங்களை நீக்கிக்கொள்ள மாட்டா. ஈன்றணிய பசுங்குழவி பசியாலும் விடாயாலும் எவ்வளவு துன்புற்று, எவ்வளவு துடிதுடித்து அழுகின்றது! அந்நிலையில் அது தானாகவே தன் பசியையும் விடாயையும் நீக்கும் பாலைத் தேடியெடுத்துப் பருகவல்லதா? அதனை ஈன்ற தாய் அதன் பசித்துன்பங் கண்டு மனம் பொறாளாய் நெஞ்சங் கசிந்து அதனை யடுத்தணைத்துத் தன் கொங்கைகளிற் சுரந் தொழுகும் பாலமிழ்தினை ஊட்ட உண்டன்றோ அஃது அவ்வாற்றொணாத் துன்பம் நீங்கப் பெறுகின்றது? இவ் வுலகத்துள்ள எண்ணிறந்த கோடி மக்களுயிர்களும் மற்றைச் சிற்றுயிர்களுமெல்லாம் முதன்முதற் றமது உயிர் வாழ்க்கை யினை இங்குத் துவங்கும்போதே துன்பத்திற் றுவங்கி, உடனே தாயினுதவியினா லன்றோ அத்துன்பம் நீங்கப் பெறுகின்றன? துவக்கத்திலேயே பசித்தும் விடாய்த்துந் துன்புறுஞ் சிறு குழவிகளைத் தாய்மார் கருதிப் பாராமலும், பால் கொடாமலும் இருந்து விடுவார் களானால், நாமெல்லாம் வளர்ந்து பெரியராகி இங்கே ஒருங்கு குழுமியிருந்து உயர்ந்த பொருள்களை நினைக்கவும் பேசவுங் கூடுமா? சிறதுங் கூடாதே. ஆகவே, தாம் ஈன்ற குழவிகளைத் தம்முயிரினும் மேலாய்க் கருதித் தாய்மார் அவற்றிற்குப் பசித்த போதெல்லாம் நெஞ்சம் நெகிழ்ந்து பால் ஊட்டுமாறு செய்ததெது? தன்மகவு நோய் கொண்டு துன்புறுந் காலங்களில்லாம் ஊணுறக்கமின்றி இரவும் பகலும் அதனருகே காத்திருந்து அதற்கு மருந்து தேடிக் கொடுத்து அதன் றுன்பத்தை நீக்குமாறு அதன் தாயை ஏவியது எது? தன் மகவு வளர்ந்து இளைஞனான போதும், அதுவுந் தாண்டி ஆண் மகனானபோதும், அதுவுந் தாண்டி முதியனான போதும், தொடர்ந்த அன்பு மீதூரப்பெற்று அவ்வந் நிலையிலுந் தன் மகனுக்கு வேண்டுவனவெல்லாம் விரும்பிச் செய்யுமாறு அவன் தாயைத் தொடர்பாகத் தூண்டி வந்தது எது? அவள் தன் பிள்ளையின்மீது தன் நெஞ்சத்தே இயற்கை யாய் எழப்பெற்ற அன்பேயன்றோ? இனித், தாய்தான் என்செய்வள்! தந்தையின் சேர்க்கை யின்றித் தாயின் வயிற்றில் மகவுதான் தோன்று மாறு யாங்ஙனம்? தந்தையின் சேர்க்கையாற் றாய்வயிற்றி னின்று தான் தோன்றிய பின்னும், தன்னையுந் தன் அன்னை யையும் ஏதுங் குறையின்றி வைத்துப் பாதுகாப்பவன் யாவன்? தகப்பனேயன்றோ? நாள் முழுதும் வெளியே சென்று தான் கற்ற கல்வியைப் பிறர்க்குக் கற்பித்தும், தன் அரசனுக்காகப் படைக்கலந் தாங்கிச் சென்று தன்னுயி ரையும் ஒரு பொருட்டாகக் கருதாது போராண்மை புரிந்தும், உழவே வாணிகமே கைத்தொழிலே யென்பன பல நடாத்தியும், பிறர்க்கேவலாளாய் அவரிட்ட ஊழியம் பல செய்தும் பலவாற்றால் அல்லல் உழந்து பொருள் தேடித் கொணர்ந்து தன் மனைவியையும் மகவையும் பாதுகாப்பவன் யாவன்? தகப்பனே யன்றோ? அவன் அங்ஙனமெல்லாம் பெரும்பாடுபட்டுத் தன் மனைவி மக்களைப் பாதுகாக்கும்படி ஏவுவதெது? அவனகத்தே இயற்கையாய் எழும் அன்பேயன்றோ? இங்ஙனம் வழிவழியே தாய் தந்தையர் தந் நலம் பாராது, தம்முயிரினும் மேலாய்த் தங் குழந்தைகளைப் பாதுகாத்துக் கண்ணுங் கருத்துமாய் வளர்த்துவருந் தொடர்ந்த அன்பினாலன்றோ மக்கட் பூண்டு பல கோடிக்கணக்காய்ப் பல்கி உலகமெங் கணும் நிறைந்து காணப்படுகின்றன? இனி, இவ்வாறு தாய்தந்தைய ருதவியால் வளர்க்கப் பட்டு நடைபெறுந் தமது பிறவியின் வரலாற்றை நினைந்து பார்த்துத், தந் தாய் தந்தையர்பால் நெஞ்சங் கரைந்து அன்பும் நன்றியும் பாராட்டத் தக்கவர்களோ ஆறறிவு மிக்க மக்களேயன்றி, ஆறறிவு வாயாத விலங் கினங்கள் அல்ல. மக்களுள்ளுந் தாய் தந்தையர் செய்த நன்றியைப் பாராட் டாதவர் உளரெனின், அவரை ஆறறிவும் அன்பும் அற்ற விலங்குகளென்றோ, உணர்ச்சியும் நெகிழ்ச்சியும் அற்ற கருங்கற்களென்றோ கருதுதல் வேண்டும். இவ்வாறு, மக்களு யிர்கள் மட்டுமேயன்றி, இயங்கும் உயிர்கள் அத்தனையும் இப் பிறவிக்கு வந்த காலத்திலேயே தமக்குப் பசியாலும் விடாயாலும் நோயாலும் வந்த துன்பங்களைத் தாமாகவே தீர்த்துக்கொள்ள மாட்டாமல், தந் தாய்தந்தைய ருதவியாற் றீர்த்துக் கொண்டு வளர்ந்து வருதலால் மக்கள் முதன்முதல் தந் தாய் தந்தையரையே தெய்வமாக நினைந்து வணங்கி வருதல் வேண்டுமென்பது தமிழர்தம் முதற் றெய்வக் கொள்கையாம். இஃது, அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்னும் ஔவையார் திருமொழியால் அறியப்படும் ஆசிரியர் திருவள்ளுவருந் தந்தாய் தந்தையரான ஆதியை யும் பகவனையும் நினைவு கூர்ந்து வணங்கும் முகத்தால் உலகிற்கெல்லாந் தாய் தந்தையரான முழுமுதற் கடவுளுக்கு வழிபாடு கூறுவான் புகுந்து, அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே யுலகு (குறள் 1) என்னும் முதற் றிருக்குறளை அருளிச் செய்தார் என்க. இவ்வாறு தந் தாய் தந்தையர்பாற் காட்டும் அன்பும் நன்றியும் பணிவுமே, இவ் வுலகத்துள்ள எல்லா வுயிர்க்குந் தாய் தந்தையான முழுமுதற் கடவுளை யறிந்து வழிபட்டு உய்தற்கு வழிகாட்டுவதாகும். எனவே, நம் பிறவிக்குக் கண்கண்ட காரணரான தாய் தந்தையரே, நம் பிறவிக்குக் கண்காணாக் காரணரான முழுமுதற் கடவுளை அறிவிப்ப வராயிருக்கின்றன ரென்பதூஉம், அதனால் நம் தாய் தந்தையரே நம் இம்மை வாழ்க்கையிலிருந்து மறுமை வாழ்க்கைக்கு நாம் செல்ல நடுநின்று உதவி புரிபவரா யிருக்கின்றன ரென்பதூஉந் தெற்றென விளங்கா நிற்கும். அற்றேல், இம்மை வாழ்க்கைக்கு இன்றியமையாத் துணைவராயிருக்குந் தாய் தந்தையர், மறுமை வாழ்க்கைக்கு இன்றியமையாத் துணைவராகக் கருதப்படும் முழுமுதற் கடவுளை அறிவிப்பவராதல் யாங்ஙனமெனின்; அதனைச் சிறிது விளக்குதும். முன்னமே கூறியபடி, மக்களாய்ப் பிறந்த நாம் ஐம்புல அறிவுகளுடன் ஆறாம் அறிவாகிய பகுத்துணர்வும் இயற்கை யாகவே வாய்ந்து எதனையும் ஆராய்ந்து பார்க்கும் வேட்கை பெரிதுடையவர்களாய் இருத்தலால், இப்பிறவி நமக்கேன் வந்தது? யார் நமக்கு இப்பிறவியைத் தந்தவர்? நாம் இப் பிறவிக்கு வந்தபின் பசியாலுங் காமத்தாலுந் துன்புறுவதேன்? அத்துன்பம் நீங்குதற்குப் பல்வேறுணவுப் பொருள்களையும் நம் போன்ற மக்களையும் அமைத்து வைத்தவர் யார்? எம்மைப் பிறப்பித்த தாய் தந்தையர் இறந்துபோயது ஏன்? யாமுஞ் சில காலத்தில் இறக்க வேண்டுவதாய் இருப்பது ஏன்? யாம் வேண்டாமலே எம்மைப் பிறப்பித்ததும், யாம் வேண்டினும் விடாமலே எம்மை இறப்பிப்பதும் எது? அவ்வாறு ஆக்கலும் அழித்தலுஞ் செய்வது எதற்கு? பிறப்பதற்குமுன் யாம் எங்கே யிருந்தோம்? எப்படி யிருந்தோம் இறந்தபின் எங்கே செல்வோம், எவ்வாறிருப்போம்? இறந்து சென்ற பின் யாம் மீளப் பிறப்பதுண்டா? இல்லையா? பிறப்பதும் இறப்பதுந் தொடர்பாக நிகழுமாயின், அத் துன்ப நிகழ்ச்சியிலிருந்து விடுபட்டுப், பேராப் பேரின்ப வாழ்விலிருப்பது யாங்ஙனம்? எப்போது? என்று பலவாற்றாலெல்லாம் நாம் ஆராய்ச்சி செய்தபடியாகவே யிருக்கின்றோம். ஆராய்ச்சியறிவில் மிகக் குறைந்தவராயிருக்கின்ற கானக மக்களுங்1 கூடத் தம் முள்ளத்தே மேற்காட்டிய வினாக்கள் எழப்பெற்றவர்களாய்த், தம்மறிவுக்குத் தென்பட்ட வரையில் அவைகளுக்கு விடைகண்டு வாழ்கின்றார்களென்று, அவர்களை இந் நிலவுலகமெங்கணும் போய்க்கண்டு, அவர்களுடைய கொள்கைகளைத் துருவித் துருவி யாராய்ந்த வெள்ளைக் கார ஆசிரியர்கள் பற்பல நூல்களில் வரைந்து வைத் திருக்கின்றார்கள். ஆராய்ச்சி யறிவும் நாகரிகமும் மிகக் குறைந்த கானக மாந்தரே, இம்மை மறுமையைப் பற்றிய உண்மைகளைத் தேர்ந்துணர்தலில் அடங்கா ஆவல் உள்ளவர்களாய் இருக்கின்றனரென்றால், இயற்கை யறிவொடு கல்வியறிவும் நாகரிகமும் வாய்ந்த நாமும் நம் முன்னோர்களும் இம்மை மறுமையைப்பற்றிய உண்மை களை ஆராய்ந்தறியாமல் இருத்தல் இயலுமோ? சொன் மின்கள்! இயற்கைப் பொருளாராய்ச்சி யளவில் நின்று அதற்குமேல் ஏதுமே யில்லையென்று அழுத்தமாய்ப் பேசிவந்த ஹக்ஸிலி2 என்னும் மேல் நாட்டறிஞர் தாமுந் தம் வாழ் நாளின் கடைப்பகுதியில் இயற்கைப் பொருளின் வேறாக, எல்லாம்வல்ல அறிவுப்பொருள் ஒன்றுண்டென்னும் முடிவுக்கு வந்தார்.2 அவரைப் போலவே இயற்கைப் பொருளாராய்ச்சியிற் புகழ்பெற்று விளங்கிய டிண்டல்3 என்னும் ஆசிரியரும் அறிவில்லா இயற்கையைத் தவிர வேறேதுமில்லை யென்று உறைப்பாகப் பேசி வந்தனராயினும், பாடியன்4 என்னும் ஆசிரியர் செய்த ஆராய்ச்சிகளைத் தாம் மீண்டும் மிக விழிப்பாய்ச் செய்து பார்த்ததிலிருந்து, உயிரில்லா இயற்கைப் பொருளிலிருந்து உயிருடைய அறிவுப் பொருள் தோன்றாது, உயிர்ப்பொருள் உயிரில்லா இயற்பொருளின் வேறாய்ப் பிறிதோர் உயிர்ப் பொருளினின்றே தோன்றும் என்னும் முடிபுக்கு வந்து அவ்வியல்பினை நன்கு விரித்தெழுதி யிருக்கின்றார். இன்னும் இங்ஙனமே இயற்பொருளாராய்ச்சி யில் முனைந்துநின்ற ஆலிவர் லாட்ஜ், உவில்லியம் குரூக், உவில்லியம் ஜேம், மையர், உவில்லியம் மக்டூகல், ஜே.ஏ. தாம்ஸன், பெர்க்ஸன்5 முதலான பேரறிவாளரெல்லாம் இப்போது உயிர்நிலைகளைப் பற்றியுங் கடவுள் உண்மை யைப் பற்றியும் மிக நுண்ணிய ஆராய்ச்சிகள் எல்லும் எல்லியும் இடைவிடாது செய்து, அவைகளை அரும்பெரு நூல்களாக வரைந்து உலகிற்கு உதவியிருக்கின்றார்கள். இன்றும் அவர்தம் அடிச்சுவடு பற்றி இம்மை மறுமை வாழ்க்கையியல்களை நன்காராய்ந்து நூல்கள் எழுதி உதவுவார் தொகை அயல் நாடுகளிற் பெருகிக் கொண்டே வருகின்றது. உண்மையான கல்வி மணம் வீசப்பெறாத இவ்விந்திய நாட்டிலோ, மக்களுயிர்க்கு உறுதிபயக்கும் இவ்விழுமிய துறையிற் புகுந்து ஆராய்வார் கார்த்திகைப் பிறையாய் இருக்கின்றனர். உயர்ந்த கல்வியும் ஆழ்ந்த ஆராய்ச்சியும் இன்றி, அதனால் மறுமையை ஆராயும் அறிவாற்றல் இன்றி, இம்மையை, இயற்கைப் பொருளைத் தவிரப் பிறிதேதுமில்லையென எளிதிற் கரைவார் சிலரே ஆங்காங்குக் காணப்படுகின்றனர்! ஆனாலும், மறுமை வாழ்க்கையைப்பற்றி எண்ணாமல் அவை யெல்லாம் பொய் என எளிதாகப் பேசிவிடுவாருங் கூடச் சிற்சில நேரங்களில் உயிரின் நிலைகளையுங் கடவுளுண்மையினையும் நெஞ்சத் தில் நினையாதிரார் என அறிஞர்கள் தேர்ந்து சொல்லியிருக் கின்றனர். அது கிடக்க, இனிப், பசி விடாய் காமம் முதலியவற்றால் நமக்கு வருந் துன்பங்களை, நமக்குத் தொடர்புடையவர்கள் நம் பால் வைத்த அன்பின் மிகுதியினாற், பிறபொருட் சேர்க்கையாலும் பிறவுயிர்ச் சேர்க்கையாலுந் தீர்த்து நமக்கு இன்பமும் அறிவும் மேன்மேற் பெருகுமாறு உதவி புரிகின்றன ரென்பதனை முன்னரே விளக்கிக் காட்டினாம். அதனாற், பிறபொருட் சேர்க்கையின்றிப், பிறவுயிர்ச் சேர்க்கையின்றி நமக்குத் துன்பம் நீங்காது, நமக்கு இன்பம் உண்டாகாது, நமக்கு அறிவு வளராது என்னும் உண்மையினை நாம் நன்கு நினைவிற் பதித்துக் கொள்ளல் வேண்டும். இனி, நாம் இந்நிலவுலகத்திற் பிறந்தவுடனே நமக்கு வருந் துன்பங்களை நீக்கி நமக்கு இன்பத்தைத் தருபவர் நம் தாய் தந்தையரே யென்பதூஉம் முன்னமே விளக்கப்பட்டது. ஆனாலும், நம் தாய் தந்தையரும் பிறபொருட் சேர்க்கை யின்றிப், பிறவுயிர்ச் சேர்க்கையின்றி நம்முடைய துன்பங் களை நீக்கமாட்டாரா வென்பது ஆராயற்பாற்று, நம் தந்தை அல்லும் பகலும் வெளியே சென்று உழைத்து உணவுப் பண்டங்களைத் தொகுத்துக் கொணர்ந்து தந்தா லன்றோ? நந்தாய் செழுமை யான உடல்நல மனநலம் பெற்றுப், பச்சைப் பசுங் குழவியா யிருந்த நமக்குப், பால் சுரந்தொழுக ஊட்டுவள்? தந்தை யாயினான் பெரிதும் மிடிப்பட்டுக் கூழும் அடகுங் கூடக் கொடுக்க மாட்டா தவனாயின், அவன்றன் மனையாள் என் செய்வள்! அவள் வற்றிய யாக்கை யினளாய்ப் பால் வறண்டு தன் மகவுக்குப் பால் ஊட்ட மாட்டாளாய்ப் பெரிதுந் துயருறுவளன்றோ? இந் நேரத்திற் பெருந்தலைச் சாத்தனார் என்னும் புலவர் பெருமான் வறுமையால் நைந்து வள்ளலாகிய குமணன்பாற் சென்று பாடிய அருந்தமிழ்ச் செய்யுள் நினைவுக்கு வருகின்றது. ஆடுநனி மறந்த கோடுயர் அடுப்பில் ஆம்பி பூப்பத் தேம்புபசி உழவாப் பாஅல் இன்மையிற் றோலொடு திரங்கி இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை சுவைத்தொ றழூஉந்தன் மகத்துமுக நோக்கி நீரொடு நிறைந்த ஈரிதழ் மழைக்கண்என் மனையோள் எவ்வம் நோக்கி நினைஇ நிற்படர்ந் திசினே நற்போர்க் குமண! என்னும் அச்செய்யுள் வறுமை யுழந்த அப் புலவர் பெருந் தகையின் மனையாள் துயரும், அவள் ஈன்ற பசுங் குழவியின் துயரும் எத்துணை யுருக்கமாக எடுத்திசைக் கின்றது! ஆகவே, தந்தையாயினான் எவ்வளவுதான் புலமையிலும் முயற்சியிலும் மிக்கவனாயினும், அவனுக்கு உணவுப் பண்டங்கள் கிட்டா வாயின், அவன்றான் என் செய்வன்! அவன்றன் மனையாடான் என் செய்வள்! அவர்க்கு உணவுப் பண்டங்களை வருவித்துக் கொடுப் போரும், அவற்றை விளைவித்துக் கொடுப்போரும் இல்லை யாயின், அவரும் அவர்தம் மைந்தரும் மடிந்து போவது திண்ணமன்றோ? எனவே, எத்தகையவரும் பிறவுயிரினுதவி யின்றிப் பிறபொருளின் சேர்க்கையின்றி உயிர் வாழ்தல் சிறிதும் இயலாதென்பது தெற்றென விளங்கா நிற்கின்றதன்றோ? இனி, நாம் பிறப்பதற்கு முன்னே நம்போன்ற மக்களும் நம்மிற் றாழ்ந்த சிற்றுயிர்களும் எங்ஙனம் தோன்றினர்? அவர்க்குப் பசியும் விடாயும் நீக்கப் பாலுஞ் சோறும் நீரும் எங்ஙனந் தோன்றின? அவ்வுயிர்களையும் அவ்வுணவுப் பொருள்களையும் நந் தாய் தந்தையர்கள் தாமே படைத்த வர்களா? அல்லது தாமே படைக்க வல்லவர்களா? ஒரு சிறிதும் இல்லையே. நந் தாய் தந்தையர்களை நாம் தெய்வமாக நினைந்து வணங்க வேண்டுவது நமது அன்பான கடமையே யாயினும், அவர்கள் உண்மையிலே தெய்வங்கள் ஆவரா? அவர்கள் நம்மைப் போலவே பசித்தும் விடாய்த் தும் வருந்து கின்றனர்; அவை தீர்க்குஞ் சோறும் நீருந் தேடித் திரிகின்றனர்; நோய்கொண்டு துன்புறுகின்றனர்; சிறிது காலத்தில் மாண்டும் மறைந்து போகின்றனர்! இனி, நந் தாய் தந்தையர்க்கு உணவுப் பொருள்களை வருவித்துத் தந்தவர்களேனும், அல்லது அவற்றை விளை வித்துத் தந்தவர்களேனுந் தெய்வங்கள் ஆவரா? என்று கருதிப் பார்த்தால், அவர்களெல்லாரும், நந்தாய் தந்தை யரை யொப்பவே, பசித்தும் விடாய்த்தும் நோயுற்றுஞ் சிறிது காலத்தில் மாய்ந்து மறைந்து போகின்றவர் ளாகவே யிருக்கின்றனர்! இவர் களுடைய உதவியுந் துணையுங் கூட நிலையில்லாதனவாய் ஒழிகின்றன ! அஃதுண்மையே யாயினும், நம்போன்ற மக்கள் தாம் உயிரோடிருக்குந்தனையுமாவது நமக்குதவியுந் துணையு மாய் இருக்கின்றனரோ வெனின் ; அதுவும் நிலையா யில்லை; அவர்கள் நோயாலும் முதுமையாலும் வருந்தும் போது அவர்கள் நமக்குதவி செய்வது மாறி, நாம் அவர்கட்குதவி செய்யும் நிலையினை அடைகின்றோம். அப்படி யானாலும், அவர்கள் நோயும் முதுமையுமின்றி உரமுடன் உயிர் வாழுங் காறும் அவர்கள் நமக்குதவி செய்யக் காண்கின்றோமே யெனின்; அவர்கள் நன்குயிர் வாழுங் காலத்தும் பெய்ய வேண்டும் பருவத்தில் மழை பெய்யாவிடினும், மழை பெய்தும் பெருவெள்ளத்தாலுஞ் சூறைக் காற்றாலும் நில அதிர்ச்சி யாலும் பயிர் பச்சைகள் முற்ற அழிந்து படினும் அவர்தாம் என் செய்வர்! ஆகவே, நந் தாய் தந்தையர் உண்மையிற் றெய்வங்கள் ஆகாமை போலவே, நந்தாய் தந்தையர்க் குதவியாய் இருந்த வரும் அவர்க்குதவியா யிருந்தவரும் எல்லாம் உண்மையிற் றெய்வங்கள் ஆகாமையுந் தெற்றென விளங்கா நிற்கும். என்றாலும், நந்தாய் தந்தையரே நம்மைப் பிறப்பித் தவராகலான், அவர்தாம் நமக்குத் தெய்வங்கள் ஆகற்பால ரெனின்; அவர்தாம் நம்மைப் பிறப்பித்தவரென்பது நமக்கு எங்ஙனந் தெரியும்? நாம் தாய் வயிற்றிற் கருவா யிருந்தகாலத்தும் அதனை அறிந்திலேம், தாய் வயிற்றை யகன்று சிறுமகவாய்ப் பிறந்த காலத்தும் அதனை அறிந்திலேம்; வளர்ந்து அறிவதறியுங் காலத்திலேதான் தாய் தந்தையரும் பிறருஞ் சொல்வதைக் கேட்டு நம்பி, இவர் தாம் என் தாய் தந்தையர் என்னும் அறிவுவரப் பெறுகின்றோம். எத்தனையோ பேர் தமக்குப் பிள்ளை இல்லாமையாற், பிறருடைய பிள்ளைகளை, அவர் அறியாமலோ அறிந்தோ தம்பாற் கொணர்ந்து தம் பிள்ளைகளாகவே வளர்த்து, அப்பிள்ளைகள் பெரியவர்களான பின்னும் தாம் பிறர் பெற்ற பிள்ளை களென்பதனை அவர்கள் அறியாமலே வைத்து, அவர்களின் பிறப்பை முற்றுமே மறைத்து விடுகின்றனர். ஆதலால், நம்மைப் பிறப்பித்த தாய் தந்தையர் இவர்தாம் என நாம் நம்பும் நம்பிக்கையும் பழுதுபடுதற்கு இடம் இருக்கின்றது. அதனால், நந் தாய் தந்தையரே நம்மைப் பிறப்பித்த தெய்வங்கள் எனக் கருதி விடுவதும் பிழையாகவே யிருக்கின்றது. நாம் நந் தாய் தந்தையராகக் கருதும் மக்களும் அவர்க்கு உறவினரும் அவர்க்கு நண்பரும், அவர்க்கு அயலாரும் ஆகிய அனைவரும் எங்கிருந்து இங்கு வந்தோம்? எவ்வாறு வந்தோம்? என்பவைகளை அறியாமலே பிறந்து, சில காலந் துன்புற்றுஞ் சில காலம் இன்புற்றுஞ் சில காலம் இரண்டும் அற்றும் இங்கே பலவகை யால் உழன்று, பிறகு தம்மாலும் பிறராலுந் தடுக்க முடியாமலும், இன்ன விடத்திற்குச் செல்கின்றோம் என்பதனை அறிய முடியாமலும் இறந்துபடுதலை, நங் கண் ணெதிரே காண்கையில், இம் மக்களுள் எவருந் தெய்வம் ஆகாரென்ப தனை நன்கு தெளியப் பெறு கின்றோம் அல்லேமோ? இங்ஙனம் ஆறறிவுடைய மக்களே தெய்வமாகாத போது, மக்களினுந் தாழ்ந்த சிற்றுயிர்களும், உயிரேயில்லாத கல்லும் மண்ணுந் தெய்வமாதல் யாங்ஙனம்? என்னும் இவ்வளவிலே எமது ஆராய்ச்சி யறிவு நின்றுவிடுமோ? இவ்வளவிலே எமதுள்ளம் அமைதி பெற்று நிற்குமோ? என்றால்; இவ்வளவுக்குமேல் அறிய முடியாத நிலையில் மக்களறிவு நின்று விடுதலே நல்லது, என்பர் சிலர். ஆனால், மேன்மேல் ஆராய்ந்து செல்லும் முறையிற் றடைப்படுத்தப் படாமல் வளர்ந்து செல்லும் அறிவே விழுமிய மாந்தரெல்லா ரிடத்துங் காணப்படுதலால், மக்களும் ஏனைச் சிற்றுயிர்களும் உயிரற்ற கல்மண் முதலியனவுந் தெய்வங்கள் அல்லவெனத் துணிந்த மட்டில் அவர் அமைதியுறாராய், இவரும் இவையுந் தெய்வங்கள் அல்லவாயின், வேறெது தான் தெய்வமாகும்? என ஆராய்ந்து காண்பதில் அறிவு முனைந்து நிற்றலை எங்குங் காண்கின்றேம். யாங்ஙன மெனிற், காட்டுதும். அடிக்குறிப்புகள் 1. Savages 2. Huxley 3. Tyndall 4. Bastian. *Read his ‘Educational Value of Natural History Sciences’ and ‘Evolution and Ethics’. 5. Oliver Lodge, William Crookes, William James, Myers, William McDougall, I.A. Thomson, Bergson. 18. கடவுளே தாய் தந்தை இந் நிலவுலகத்துயிர்கள்பாற் காணப்படுந் தாய் தந்தைய ரமைப்பே, நாம் முடிவாய் அறிந்து அமைதி பெறுதற்குரிய உண்மையினைப் புலப்படுத்துவதா யிருக்கின்றது. ஓரறிவுடைய புற் பூண்டுகள் முதல் ஆறறி வுடைய மக்கள் ஈறாகவுள்ள எல்லாவுயிர்களிலும் இத் தாய் தந்தைய ரமைப்பு அமைந்து கிடத்தலை இக்காலத் துயிர் நூல் வல்லார் நன்காராய்ந்து கண்டிருக்கின்றனர். புற் பூண்டுகளிலும் மரஞ் செடி கொடி களிலும் ஆண் பெண் அமைப்பு வழுவாமலே காணப்படு கின்றது. புல்லிலும் ஆண்புல் பெண்புல் உண்டு; ஒவ்வொரு வகைப் பூண்டு களிலும் ஆண்பூண்டு பெண்பூண்டுகள் உண்டு; ஒவ்வொரு வகை மரங்களிலும் ஆண் பெண் மரங்கள் இருக்கின்றன; இங்ஙனமே ஏனைச் செடி கொடிகளிலும் ஆண் செடி கொடிகளும் பெண் செடிகொடிகளும் அமைக்கப் பட்டிருக்கின்றன. ஆண் செடிகொடிகளில் உள்ள கருவைப் பெண் செடிகொடிகளிற் கொண்டுபோய்ச் சேர்க்கும் வண்டுகளின் உதவியாற் பெண் செடிகொடிகள் காயுங் கனியுந் தருகின்றன. இவ்வாறு ஆண் பெண் கருக்கள் ஒன்று சேர்க்கப்படாவிட்டால், மரஞ்செடி கொடிகள் காய்த்துப் பயன் றருவதில்லை. ஆகவே, ஓரறிவுடைய புற்பூண்டுகள் மரஞ் செடி கொடிகளிலும் ஆண் பெண் அல்லது தாய்தந்தைய ரமைப்பு அமைந்து கிடத்தல் ஆராய்ச்சியாற் றுணியப்பட்டிருத்தலின், முதலில் இவ்வுண்மையினை அனைவரும் நன்கு நினைவிற் பதித்துக் கொள்ளல் வேண்டும். இவ்வமைப்பின் நுட்பம் நம் கண்களுக்குப் புலனாகாத ஓரறிவுடைய புற்பூண்டுகளிலும் மாறாமல் அமைந்து கிடத்தல் போலவே, ஈரறிவு மூவறிவு நாலறிவு வாய்ந்த சிற்றுயிர்களிலும், ஐந்தறிவு வாய்ந்த பாம்பு பறவை ஆடு மாடு அரிமா புலி யானை குதிரை முதலான உயிர்களிலுந் தாய் தந்தையராம் ஆண் பெண் அமைப்பு வழுவாமாற் காணப்படுகின்றது. இனி, ஆறறிவு வாய்ந்த நம் மக்களிலும் இத் தாய், தந்தைய ரமைப்பு வழுவாமற் காணப்படுதலைப் பற்றி நாம் சொல்ல வேண்டுவதில்லை. இவ்வமைப்பின் பேருதவியினாலேயே உயிர்கள் மேன்மேற் பல்கி வருகின்றன. இவ்வாண் பெண் அமைப்பு இங்குள்ள இவ்வுயிர்கள்பாற் காணப்படாவிட்டால், இந்நிலவுலகில் உயிரற்ற வெறுங்கல்லும் மண்ணுந் தண்ணீருமன்றி உயிர்ப் பொருளென ஒன்று காணப்படுமோ? சொல்லுங்கள்? ஆகவே, இவ் வாண்பெண் அமைப்பே இங்குள்ள உயிர் களெல்லாந் தோன்றுதற்கும், தோன்றிய உயிர்கள் மேன் மேல் அறிவும் முயற்சியும் உடையவாய் இன்புற்று வாழ்தற்கும் பேருதவி புரிகின்றதென்பதனை எல்லாரும் மறவாமல் மனத்திற் பதித்துக் கொள்ளல் வேண்டும். இனி, இவ்வாண் பெண் அமைப்பை, ஓரறிவு முதல் ஐயறிவுவரையில் வாய்ந்த சிற்றுயிர்களும், அவற்றிலும் உயர்ந்த ஆறறிவு வாய்ந்த மக்களுந் தாமாகவே அமைத் துக்கொள்ள வல்லவர்களா? இல்லை, இல்லை. நாம் எங்கிருந்து இங்கு வந்தோம்? எவ்வாறு வந்தோம்? என்பவைகளையே நாம் ஒரு சிறிதும் அறியாமற் பிறந்து, பிறந்து பின் நெடுங்காலம் ஆக வளர்ந்து பெரியராகியும் இன்னும் அவைதம்மை அறியாத வர்களாகவே, அறிய முடியாதவர்களாகவே யிருக்கின்றனம். இத்தகைய சிற் றறிவுப் பேதைகளாகிய நாம், பிறப்பதற்கு முன்னும், பிறந்த பின்னும், ஆண் பெண், அமைப்புகளை வகுக்கத் தக்க அறிவு வாய்ந்தவர்களாய் இருந்தனமா? இருக்கின்றனமா? சிறிதும் இல்லையே. அல்லது, நம் உடம்பில் ஓர் உறுப்பேனும் பல உறுப்பேனும் அமைக்கப்படா விட்டாலும், அமைக்கப் பட்டவை பழுதுபட்டுப் போனாலும், அவற்றை நாமே நம் அறிவும் நம் ஆற்றலுங் கொண்டு படைத்து அல்லது திருத்தி அமைத்துக் கொள்ளல் முடியுமா? அணுவளவும் முடியாதே. கண்ணில்லாத குருடர்களையுங், காது கேளாத செவிடர் களையும், வாய் பேசாத ஊமை களையுங், கை காலற்ற முடவர்களையும், இன்னும் இங்ஙனமே உறுப்புகள் ஒன்றும் பலவும் அற்ற அல்லது பழுதுபட்ட மாக்களையும் நாம் நம் மக்கட் பரப்பின் இடையிடையே காண்கின்றனமே! எம்மினும் அறிவிற் பெரியார் யார்? எம்மினும் ஆற்றலிற் பெரியார் யார்? யாமே அறிவிற் பெரியேம்! ஏனையோ ரெல்லாம் அறிவற்ற மடையர் என வாய்கூசாது பேசி இறுமாந்து நடப்பவர் எவரேனுங் குருடர்க்குக் கண்ணுஞ், செவிடர்க்குச் செவியுணர்வும், ஊமையர்க்குப் பேசுந் திறனுங், கைகால் அற்றவர்க்குக் கை காலும் படைத்துக் கொடுக்க மாட்டுவாரா? எட்டுணையும் மாட்டார்களே! இத்தன்மைய ரான நம் மக்கள் தமக்குள்ள சிற்றறிவு கொண்டுந், தமது சிறு வல்லமை கொண்டுங், கடல் மணலை அளவிடினும் அளவிடப் படாத உயிர்த்தொகைகளில் ஆண் பெண் அமைப்புகளை வகுக்க வல்லராதல் யாங்ஙனம்? கூறுமின்கள்! அற்றன்று, மக்களுடைய அறிவும் ஆற்றலும் இவ்வாண் பெண் அமைப்பை வகுக்க ஏலாவிட்டாலும், உயிர்த் தொகைகளின் உடம்பில் ஒருங்கு குழுமி நிற்குஞ் சிற்றணுக்களே, ஆண் பெண் அமைப்புகளாகத் தம்முட் பிரிந்து நின்றன; எனக் கூறுதலாற் போந்த குற்றம் என்னையெனின்; இவ்வாறு கூறுதல், கொசுகின் கடிக் கஞ்சிப் புலிவாய்ப் பட்டதனையே யொத்திருக்கின்றது. ஆறறிவிற் சிறந்த மக்களே இவ்வமைப்பு களை ஒரு தினைத்தனையும் ஆக்க வல்லவர்களாய் இல்லாத போது, அறிவற்ற அணுக்களே பெரிதும் வியக்கத்தக்க இவ் வமைப்புகளை அளவற்ற உயிர்த் தொகைகளிலெல்லாம் இருவேறு வகையாய் வகுத்து வைத்தன வென்றுரைத்தல், ஒப்பிலா மலடி பெற்ற மகனொரு முயற்கொம் பேறித் தப்பில் ஆகாயப் பூவைப் பறித்தமை சாற்றி னாரே என்பதனோடு ஒப்பவைத்து நகையாடற் பாலதாகவே யிருக்கின்றது! மேலும், உலகத்திலுள்ள உயிர்களின் ஒழுக்கங்க ளெல்லாம் அறிவினால் நடைபெறுகின்றனவேயல்லாமல், அறி வின்மையால் நடைபெறவில்லை. விழித்திருக்கும் நிலையில் அறிவும், அயர்ந்துறங்கும் நிலையில் அறியாமையும் எல்லா வுயிர்களிடத்தும் முனைத்து நிற்றலை அறியாதார் யார்? உயிர்கள் விழித்து அறிவுடன் உலவும் போது ஒரு செயலைச் செய்கின்றனவா? விழி துயின்று அறிவின்றிக் கிடக்கும்போது அச்செயலைச் செய் கின்றனவா? என்று ஒரு சிறிது கூர்ந்து பார்ப்பவர்க்கும், அறிவே யில்லாத அணுக்கள் இவ் வாண் பெண் அமைப்பை இவ்வுயிர்கள் பால் அமைத்து வைத்தல் சிறிதும் இயலா தென்பது தெற்றென விளங்கா நிற்கும். அங்ஙனமாயின், அறிவே யில்லாத ஒரு காந்தக்கல் இருப்பூசியைத் தன்பால் இழுத்துக் கொள்ளுஞ் செயலைச் செய்தல் என்னையெனின் ; அவ் விழுக்குஞ் செயல் அறிவினால் நிகழுஞ் செயல் அன்று. அறிவானது ஒன்றனை இழுத்தலுஞ் செயவல்லது, இழுத்ததனை விட்டு விடுதலுஞ் செயவல்லது. ஓர் எறும்பானது தனக்கு வேண்டும் ஒரு நொய்யினை இழுத்துச் செல்வதும் பார்மின்கள்! இழுத்துச் சென்றதனைத் தனது வளையிற் கொண்டுபோய் வைத்து விட்டுத் திரும்புதலும் பார்மின்கள்! மேலும், அது செல்லும் வழியில் நாம் ஒரு தடையை ஏற்படுத்தி வைத்தால், அவ்வெறும்பு, அத்தடை ஏறிச் செல்லக் கூடிய அளவின தாய் இருந்தால் அதன் மேல் ஏறி அதனைக் கடந்து செல்லுதலும், அத்தடை அங்ஙனம் ஏறிச் செல்லக்கூடாத அளவினதாய் இருந்தால் அஃது அதனைச் சுற்றி வேறு வழியாய்ச் செல்லுதலும் உற்றுப் பார்மின்கள்! இங்ஙன மெல்லாம் ஒரு காந்தக் கல் செய்ய வல்ல தாமா? அது தான் இழுத்த ஊசியை இழுத்தபடியே வைத்திருக்கு மல்லது, அதனைத் தானாகவே விட்டுவிடத் தெரியாது. அதுவேயுமன்றி, அக் காந்தக் கல்லுக்கும் அதனால் இழுக்கப் படும் ஓர் ஊசிக்கும் இடையே தடையாக ஒரு பலகையை நிறுத்தினால், அக் காந்தம் அத் தடையினை மேற்கடந்து செல்லல் கூடுமா? அல்லது, அத் தடையினைச் சுற்றிப்போய் வேறொரு வழி செய்து கொண்டு அவ் வூசியினை இழுக்க வல்லதாமா ? ஆகாதே. ஆகவே, அறிவற்ற உயிரில் பொருளின் செயல் ஒன்றனை யிழுத்தலையோ, பிறிதொன்றனைத் தள்ளுதலையோ செய்யுமல்லாமல், இழுத்தல் விடுதல் தடைகடத்தல் பொருள்களைப் பல வகையாய் அமைத்தல் முதலான செயல்களை அறிவுடைய உயிர்கள் செய்தல்போற், செய்யமாட்டாது. ஒரு தூங்கணங் குருவி தான் முட்டையிடும் பருவத்தே தொடுக்கும் கூட்டைப்போல் வியக்கத் தக்கதோர் அமைப்பை அறிவற்ற பொருள் ஏதேனும் செய்யக் கண்ட துண்டா? நல்லிசைப் புலவன் ஒருவன் தன் கூர்த்த அறிவால் ஆக்குஞ் சிலப்பதிகாரம் போன்ற ஒரு காவியத்தையும், இன்னிசைப் புலவன் ஒருவன் தொடுக்கும் யாழ்முறிப் பதிகம் போன்ற ஓர் இசைப் பாட்டையும், நாடகப் புலவன் ஒருவன் ஆக்குந் திருச்சிற்றம்பலக் கோவையார் போன்ற ஒரு நாடக நூலையும், கற்றச் சுவல்லான் ஒருவன் சமைக்கும் திருவால வாய்க் கோயில் போன்ற ஒரு வியத்தகு கட்டிடத்தையும், அறிவின்றிறம் வாய்ந்த கொற்றன் ஒருவன் எழுப்பும் திருமலை நாய்கன் அரண்மனை போன்ற ஒரு மாபெருங் கட்டிடத்தையும், ஓவியம் வல்லான் ஒருவன் தீட்டுஞ் சகுந்தலை வடிவம் போன்ற ஓர் ஓவியத்தையும் இன்னும் இக்காலத்தே மேனாட்டறிஞர்கள் அரிதிற் கண்டுபிடித்து இயக்கும் நீராவிவண்டி, நீராவிக்கப்பல், வானவூர்தி, நிலவூர்தி, மின்வண்டி, மின்செய்தி, அச்சுப் பொறி முதலான பயன்படு கருவிகள் போன்ற அமைப்புகளையும் அறிவும் உயிரும் இல்லாத எந்தப் பொருளேனும் எந்த அணுவேனும் அமைத்தலை எவரேனும் கண்டதுண்டா? பகர்மின்கள்! இன்னும், உழவு, வாணிகம், அரசியல், சமையல் முதலாக நம் உலக வாழ்க்கையில் நடைபெறும் இன்றியமையாத தொழில்களெல்லாம் அறிவுடைய உயிர்கள் தம் அறிவின் திறத்தால் நடத்தக் காண்கின்றனமே யன்றி, அறிவில்லா உயிரில்லாப் பொருள்கள் நடத்தக் காண்கின்றோம் இல்லையே. நம் உடம்பையும் உயிரையும் நன்கு நிலைபெறச் செய்தற்கு இன்றியமையாததான சமையற்றொழில் எத்துணை யறிவோடு எத்துணைக் கருத்தோடு இயற்றப்பட வேண்டுவதா யிருக்கின்றது! அறிவுங் கருத்துமின்றி ஆக்கப்பட்ட சுவை யில்லா உணவு நமக்கு எவ்வளவு மனப் புழுக்கத்தினைத் தருகின்றது! அங்ஙனம் அவ்வுணவைப் பழுதுபடுத்தியவர்மேல் நமக்கு எவ்வளவு மனக் கசப்பு உண்டாகின்றது! இவ்வாறு நமதுயிர் வாழ்க்கையிற் காணப்படும் ஒவ்வோர் அமைப்புக்கும், ஒவ்வோர் இயக்கத்திற்கும் ஒவ்வொரு செயலுக்கும் நாம் அறிவுடையார் முயற்சியையுந் துணையையும் உதவியையும் நாடியபடி யாயிருந்து வாழ்நாட்கழித்து வருகையில், இவ் வுலகத்துள்ள எண்ணிறந்த கோடியுயிர்களிலுங் காணப்படும் ஆண் பெண் அமைப்புக்கு மட்டும் அறிவற்ற உயிரற்ற அணுக்களை வினை முதலாகக் கூறுவது யாங்ஙனம் பொருந்தும்? ஆகையால், அளவு காண்பரிய இவ்வுயிர்களிற் காணப்படும் இத்தாய் தந்தையரமைப்பிற்கு, அளவற்ற அறிவும் அளவற்ற ஆற்றலும் வாய்ந்த ஒரு பேருயிரே வினைமுதலா மென்பது தெள்ளிதின் முடிக்கப்படும் என்க. இவ்வுண்மையைத் தேற்றுதற்கே நம் அறிவுநூற் பேராசிரியராகிய மெய் கண்டதேவர், அவன் அவள் அதுவெனும் அவைமூ வினைமையின் தோற்றிய திதியே ஒடுங்கி மலத்துளதாம் அந்தம் ஆதி என்மனார் புலவர் என்று அருளிச்செய்தார். எல்லா உயிர்ப் பொருள்களிலுங் காணப்படும் அமைப்புகள் அத்தனையும் ஆண்பெண் என்னும் இவ்விருவகை வியத்தகு படைப்பு களில் வந்து அடங்கு தலாலும், நம்மால் அறியப்பட்ட எந்தச் சிற்றுயிரேனும் அல்லது எந்த மக்களேனும் இவ்விருவேறு வகையான படைப்பை உண்டாக்க வல்லவர்களாய் இல்லாமையாலும், இவ்வரிய பெரிய நுண்ணிய அமைப்பை வகுத்து, அவ்வாற்றால், தந் நிலையில் அறிவு விளங்குவதின்றி இருளிற் கிடந்து துன்புற்று உயிர்களுக்கு அறிவைச் சிறிது சிறிதாகப் படிப்படியா விளங்கச் செய்து, இன்பத்தை ஊட்டிவரும் பேரறிவுப் பேராற்றற் பேரருட் பேருயிர் ஒன்றுண்டென்பது தெளிய ப்படும். இவ்வருட் பேருயிரே முழுமுதற்கடவுளாகுமென்று தொன்று தொட்டு நந் தமிழ் முன்னோருந் தமிழாசிரியருங் கருதி அதனையே வழிபட்டு வரலாயினர். முழுமுதற் கடவுள் ஒருவர் உண்டென்பதனைத் துணிதற்கு உயிர்களிற் காணப்படும் இவ்வாண் பெண் அமைப்பு நேர்வழி காட்டுதல் போல உயிரற்ற பொருள்களிலும் நம் கட்புலனாகும் உயிரற்ற உலகங்களிலும் காணப்படும் அமைப்புகள் நேர்வழிகாட்டா அதலினாற் றான் நம் தெய்வ ஆசிரியர் மெய்கண்டதேவ நாயனார் முழுமுதற் கடவுள் உண்டென்பதனைத் துணிதற்கு உயிரற்ற உலக அமைப்பினை முதலில் கூறாமல், ஆண்பெண் அமைப்பினையே அவன் அவள் என முதலிற் கூறினார். அங்ஙனம் ஆண் பெண் அமைப்பின் வழியே தெள்ளிதிற் றுணியப்படும் முழுமுதற் கடவுள் உண்மைக்குப், பின்னும் ஒரு சான்றாக உலகவமைப் பினையும் அது என்னும் ஒரு சொல்லால் அதனை யடுத்துக் கூறலுற்றார். இத்துணை நுட்பமாக ஆண் பெண் அமைப்பையே முதலில் எடுத்துக் காட்டி, அவ்வாற்றால் முழுமுதற் கடவுள் உண்மை தேற்றிய ஓர் ஆசிரியர். மெய்கண்ட தேவரைத் தவிர வேறெவரையும் வேறெங்குங் கண்டிலேம். மற்றையாசிரிய ரெல்லாம் உலக வமைப்பின்மேல் வைத்தே கடவுளுண்மையினை நிறுவலாயினர். உயிரற்ற உலக வமைப்பு இயற்கையில் உண் டாவதென்று பகர்தற்கும் இடந் தருதலால், அது கடவு ளுண்மையைத் தேற்றுதற்கு, ஆண் பெண் அமைப்பைப் போல் அத்துணைச் சிறந்ததன் றென்பது நுண்ணறிவினார்க் கெல்லாம் நன்கு விளங்கா நிற்கும். இனி, இங்ஙனமாக உயிர்கள் எல்லாவற்றிலும் ஆண் பண் அமைப்பை வகுத்தமைத்த முழுமுதற் கடவுள் ஒருவர் கட்டாயமாய் இருக்கவேண்டு மென்பது துணியப் பட்டாற் போலவே, அம் முழுமுதற் கடவுளும் ஆண்பெண் உரு ஒன்றுகூடிய இயற்கையினராகவே யிருப்பரென் பதூஉம் ஆராய்ந்து காட்டுவாம். உயிர்களிடத்தே காணப் படும் ஆண்பெண்ணமைப்பு, அதனைத் தோற்றுவிக்க முனைந்த இறைவனது அறிவின்கண் முதலில் உருவு கொண்டு தோன்றி, அதன்பின் அவனால் உயிர்களுக்குப் படைத்துக் கொடுக்கப் பட்ட உடம்புகளில் அமையலாயிற் றென்றறிதல் வேண்டும். ஏனென்றால், நங் கட்புலனாகும் பருப்பொருள் களில் ஒருவன் ஒருவடிவினைச் சமைக்கப் புகுங்கால், அதனை அவன் அவற்றிற் சமைத்தற்கு முன்னமே தான் சமைக்கக் கருதிய உருவினைத் தன் அறிவின்கண்ணே முதலிற் சமைத்துக் கொள்ள வேண்டியவனா யிருக்கின்றான். அங்ஙனம் அவ் வுருவினை அவன் அகத்தே தன்னறிவின்கட் சமைத்துக் கொண்டிலனேற், புறத்தே தான் சமைக்கக் கருதிய வடிவினைச் செய்து முடிக்க மாட்டுவான் அல்லன். மாற்றுயர்ந்த பொற்கட்டியில் ஓர் ஆண்பாவையையோ அல்லதொரு பெண் பாவையையோ செய்ய வேண்டினான் ஒரு தட்டான் முதலில் அதனைத் தன்னறிவின்கண் தெளிவாக அமைத்துக் கொள்ள வேண்டியவனா யிருக்கின்றான். சிறந்த ஓர் அடுக்கு மாளிகை யினைக் கட்ட வேண்டினான் ஒரு கொற்றன் முதலில் அதனைத் தன் அறிவின்கண் திட்டமாய் அமைத்துக் கொள்ள வேண்டியவனா யிருக்கின்றான். அழகிய ஒரு மலைக்காட்சி யினையோ அல்ல தங்குள்ள ஒரு மயிலின் வடிவத்தையோ அல்ல தங்குள்ள வேட்டுவ மாதரையோ ஓவியமாக வரையவேண்டினான் ஓர் ஓவியன், முதலில் அவற்றை அழகிய வகையாகத் தன் உள்ளத்தின்கண் திறமாக அமைத்துக் கொண்டு, அதன்பிறகே புறத்தில் வண்ணங் களைக் குழைத்து இரட்டுத் துணிமேல் அவற்றை யொக்கும் வடிவினை வரைகுவன். இங்ஙனமே, இன்னும் எவ்வெவ்வ மைப்புகளைப் புறத்தே அமைக்க வேண்டினும், அவை தம்மை அமைக்கப் புகுவார் முதலில் அவற்றைத் தம் அறிவின்கண் அமைத்துக் கொண்டு செய்துவருதலை நாம் ஒவ்வொரு நொடியும் மக்களின் உலகியலொழுக்கத்தில் நேரே காணலாம். தம் அறிவின்கண் அமைத்துக் கொள்ளாத ஓர் அமைப்பைச் சிலர் வெளியே செய்யமாட்டாமல் விழித்தலும், வேறு சிலர் தம் அறிவின்கண் அரைகுறையாய் எண்ணியவற்றை வெளியேயும் அரைகுறையாய்ச் செய்து பிழைபடுதலும், இத்தன்மையினார் அறிவில்லா மடைய ரென்றும் பேதையரென்றும் உலகத்தாரால் இகழப்படுதலும் நாம் நாடோறும் நம் வீட்டின் அகத்தும் புறத்துங் கண்டு வருகின்றனம் அல்லமோ? ஆதலால், வெளியே எந்த அமைப்பினைச் செவ்வனே அமைத்து முடித்தற்கும், நம் உள்ளே நமதறிவின்கண் அதனைச் செவ்வனே அமைத்துக் கொள்ள வேண்டுவது இன்றியமை யாததாய் இருக்கும் முறை இனிது விளங்கற் பாலதேயாம். ஆகவே, இந்நிலவுலகத்துள்ள எண்ணிறந்த கோடியுயிர் களிலுங் காணப்படும் ஆண் பெண்ணமைப்பு எல்லையில்லா ஒரு பேரறிவினாலன்றி உண்டாதல் செல்லாமையானும், அத்தகைய பேரறிவுங் கடவுளிடத்தன்றி வேறு சிற்றுயிர் எதன்கண்ணுங் காணப்படுதல் இல்லாமையானும், இவ் விருவேறு வகையான அமைப்பும் உயிர்கள்பாற் றோன்றுதற்கு முன்னமே இதற்கு மூலமான ஓர் ஆண்பெண் உரு இறைவன் தறிவின்கட்டோன்ற வேண்டுவது இன்றியமை யாததாய் இருத்தலானும், அறிவுருவாய் விளங்கும் இறைவன் ஆண் பெண் அல்லது தாய் தந்தையர் உருவாயே இருப்பனென்பது முடிக்கப்படும். இதுபற்றியே, இற்றைக்குச் சிறிதேறக் குறைய இரண்டாயிர ஆண்டுகட்கு முன் இயற்றப்பட்ட தனிச் செந்தமிழ் நூல்களில், நீல மேனி வாலிழை பாகத் தொருவனது இருதாள் நிழற்கீழ் மூவகை யுலகும் முகிழ்த்தன முறையே (ஐங்குறுநூறு) என்றும், கண்ணி கார்நறுங் கொன்றை காமர் வண்ண மார்பிற் றாருங் கொன்றை, ஊர்தி வால்வெள் ளேறே சிறந்த சீர்கெழு கொடியும் அவ்வே றென்ப கறைமிட றணியலும் அணிந்தன்று, அக்கறை மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே, பெண்ணுரு ஒருதிறன் ஆகின்று, அவ்வுருத் தன்னுள் ளடக்கிக் கரக்கினுங் கரக்கும், பிறைநுதல் வண்ணம் ஆகின்று, அப்பிறை பதினெண் கணனும் ஏத்தவும் படுமே, எல்லா உயிர்க்கும் ஏம மாகிய நீர் அற வறியாக் கரகத்துத் தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே (புறநானூறு) என்றும் போந்த கடவுள் வாழ்த்துச் செய்யுட்களில் இறைவன் ஒருபாற் பெண்ணுருவும் உடையனாய்த் திகழ்தல் தெளித்துச் சொல்லப்பட்டமை காண்க. இனிப், பண்டைத் தமிழாசிரியர்க்குப் பின்னுஞ், சைவசமய முதலாசிரியராய் இற்றைக்கு ஆயிரத்தறு நூறாண்டுகளுக்கு முன்னுந் தோன்றிய மாணிக்கவாசகப் பெருமானும், குவளைக் கண்ணி கூறன் காண்க! அவளுந் தானும் உடனே காண்க! பரமா னந்தப் பழங்கட லதுவே எனவும், பைங்குவளைக் கார்மலராற் செங்கமலப் பைம்போதால் அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால் தங்கண் மலங்கழுவு வார்வந்து சார்தலினால் எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநஞ் சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக் கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப் பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய் எனவும் அருளிச் செய்திருக்குந் திருவாசகத் திருப்பாட்டு களிலும் எல்லாம் வல்ல முழுமுதற் கடவுள் ஒருபால் ஆணுருவும் ஒருபாற் பெண்ணுருவும் ஒருங்கு கலந்த அம்மை யப்பராய் விளங்கும் உண்மை நன்கெடுத்துக் காட்டப் பட்டிருத்தல் கருத்திற் பதிக்கற் பாற்று. இனி, மாணிக்க வாசகர்க்குப் பின்வந்த திருஞான சம்பந்தப்பெருமான், பேதையா ளவளொடும் பெருந்தகை யிருந்ததே என்றுந், திருவநாவுக்கரசு நாயனார், மைப்படிந்த கண்ணாளுந் தானுங் கச்சி மயானத்தான் என்றும், சுந்தரமூர்த்தி நாயனார், படைத்தாய் ஞான மெலாம்படர் புன்சடை யெம்பரமா உடைத்தாய் வேள்விதனை உமை யாளையொர் கூறுடையாய் என்றும் அருளிச் செய்திருக்குந் தேவாரத் திருச் செய்யுட்களும் பண்டைத் தண்டமிழ்த் தொல்லாசிரியர் மொழிந்த படியே, இறைவன் தாய் தந்தையர் உருவினனாய்த் திகழும் வாய்மை யினை வற்புறுத்துரைத்தல் காண்க. இனிப், பண்டை நாகரிக மக்களில் முதன்மையுற்றவராக ஆராய்ச்சிவல்ல ஐரோப்பிய ஆசிரியரால் துணியப் பட்ட எகுபதியர்1 என்னும் மாந்தர் முழுமுதற் கடவுளை ஓஸைரி2 எனப் பெயரிய அப்பனாகவும், ஐஸி3 எனப் பெயரிய அம்மையாகவும் வைத்து வழிபட்டு வந்தன ரென்பது அவர் பொறித்திருக்கும் ஓவிய எழுத்துக்களாற் புலனாகின்றது. அங்ஙனமே, அவரோடொத்த பழைய நாகரிக மக்களான பாபிலோனியரும், எல்லாம் வல்ல இறைவனை ஏ4 எனப் பெயரிய அப்பனாகவும், தவகிநா5 எனப் பெயரிய அம்மையாகவும் வைத்து வணங்கி வந்தனர். இப் பாபிலோனியர், எகுபதியரைப் போலவே பண்டை நாகரிகத்திற் சிறந்தவரான சாலடியர் என்னும் மாந்தரும் ஊர் என்னும் மாநகரில் எழுப்பிய எழுநிலைக் கோபுரம் வாய்ந்த தமது மாபெருங் கோயிலில் ஒளிவடிவினனாய் விளங்குந் தம் கடவுளை ஸம6 எனப் பெயரிய அப்பனாகவும், இதர்7 எனப் பெயரிய அம்மையாகவும் வைத்து வழிபாடாற்றி வந்தனர். இன்னும் இங்ஙனமே மேனாடு கீழ் நாடுகளிற் பண்டை நாளில் நாகரிகத்திற் சிறந்து விளங்கிய பினீசியர், அசீரியர், கிரேக்கர், உரோமர், துயூத்தானியர், மெகுசிகர், பெரூவியர் முதலாயினாரெல்லாம் முழுமுதற் கடவுளை அம்மையப்பர் வடிவாகவே வைத்து வழிபாடு செய்து வந்த வரலாறு களெல்லாம் இங்கே எடுத்துரைப்பின் இது மிக விரியும். அற்றேல், ஒரு முழுமுதற் கடவுள் நம்பிக்கையிற் சிறந்த பண்டை மக்களான எபிரேயர்8 தாம் வணங்கிய கடவுளை அங்ஙனம் ஆண் பெண் வடிவினராக வைத்து உரையாமை என்னை யெனின்; அவருங் கடவுளை அம்மையப்பராகவே கொண்டு வணங்கி வந்தனரென்பது அவரது மறையின் படைப்பின் தோற்றம்9 என்னும் முதற்பகுதியில் வெளிப் படையாகச் சொல்லப்படாவிடினும் குறிப்பாகச் சொல்லப் பட்டே யிருக்கின்றது. நமதுருவில் நம்மை யொப்பவே நாம், மகனை உண்டாக்கக் கடவேம்எனக் கடவுள் தம் மனைவியாரை நோக்கிக் கூறினாரென்றும் (1,26), அங்ஙனங் கூறிய வண்ணமே. கடவுள் மகனைத் தமதுருவை யொப்பவே ஆணும் பெண்ணுமாய்ப் படைத்தனர் என்றும் (1,27) அதன்கண் நுவலப்பட்டிருத்தலை நோக்கும்போது, முழு முதற் கடவுள் அம்மையப்பர் வடிவினராகவே இருந்து, தம்மை யொப்பவே உயிர்களை ஆண் பெண் வடிவிற் றோற்றுவித்தனரென்னுங் கோட்பாடு பண்டைநாள் எபிரேயர்க்கும் உண்மையாய் இருந்தமை தெற்றெனத் துணியப்படும். ஆகவே, பண்டைக் காலத்தில் இந்நிலவுலகின் பல பகுதிகளிலும் உறைந்தவரான நாகரிக மக்கட் குழுவினர் அனைவரும் எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளை அம்மை யப்பர் வடிவினராகவே வைத்து வழிபட்டு வந்தன ரென்பதூஉம், அவ்வாறு அவரெல்லாம் இறைவனைத் தாய் தந்தையர் வடிவில் வைத்து வழிபட்டு வருதற்கு அவருட் சிலராயினும் முதல்வனின் அவ்வடிவினைக் கண்ணாரக் கண்டிருந்தாலன்றி ஒருவரை யொருவர் அகன்று நெடுந் தொலைவில் உள்ள பல்வேறு நாடுகளில் உயிர் வாழ்ந்த அப் பல்வேறு மக்கட் பகுப்பினரும் அங்ஙனம் ஒத்து ஒருமுகமாய்க் கடவுளை ஆண் பெண் வடிவினராக வைத்து வழிபாடு ஆற்றுதல் ஆகாதென்பதூஉம் அதனால் நந் தமிழ் மூதாதை யரும் அத்துணைப் பழைய காலத்திருந்தே ஆண்டவனை அம்மையப்பர் உருவில் வைத்து வணங்கி வரலானது கடவுளின் உண்மை வடிவினைக் கண்ட மெய்யுணர்வினர் வழியராய் அவர் வருதலின் பயனேயா மென்பதூஉம் இதுகாறும் ஆராய்ந்த இவ் வாராய்ச்சியாற் புலனாக நிற்கு மென்க. இடைக் காலத்திற் றோன்றியருளிய மாணிக்கவாசகருந் திருஞான சம்பந்தருந் தாங்கண்ட கடவுண்மேற் பாடிய செந்தமிழ்த் தெய்வத் திருப்பாட்டு களிலுங் கடவுளைத் தாம் அம்மையப்பர் வடிவில் நேரே கண்ணாற் கண்டதைப் பல விடங்களிலும் எடுத்தியம்பி நெஞ்சம் கரைகின்றனர். இவற்றின் மெய்ம்மை யெல்லாம் எம்முடைய சைவசித்தாந்த ஞான போதம் என்னும் நூலிலும், மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் என்னும் நூலிலுந் தக்க அகச்சான்று புறச் சான்றுகளுடன் எடுத்துக் காட்டி விளக்கப் பட்டிருக்கின்றன. அங்ஙனமாயின், ஆண் பெண் பகுப்பினரா யிருக்கும் நம் மக்களிற் காணப்படும் மலமுஞ் சிறுநீரும் முடை நாற்றமும் முதலான அருவருப்புகளெல்லாம், ஆண் பெண் வடிவினனாய் இருக்கும் இறைவனிடத்தும் உண்டாம் எனப்பட்டு, இறை வனுக்கும் மக்களுக்கும் வேற்றுமை இல்லையாய் முடியுமா லெனின்; அற்றன்று. உருவம் என்னுஞ் சொல்லைக் கேட்ட வுடனே அஃது அருவருக்கத் தக்க எல்லாக் குறைபாடுகளும் உடையதாய் விடுமென முடிவுகட்டுதல், பகுத்தறி வுடையார்க்கு இசையாது உருவ மெல்லாம் ஒரே தன்மையுடையதன்று. அஃது அறிவுருவம் பொருளுருவம் என இரண்டாயும், பொரு ளுருவமும் பருப் பொருளுருவம் நுண் பொருளுருவமென வேறிரண்டாயும், பருப்பொருளுருவமுந் தூயவுருவமுந் தூவாவுருவமுமெனப் பின்னும் வேறிரண்டாயும் பல தன்மையுடையதாய்த் தோன்றாநிற்கும். இவை தம்முள், அறிவுருவம் என்பது நமதறிவின்கட் டோன்றும் வடிவுகள். அழகிய ஒரு தாமரை மலரையேனும், அழகில்லா ஓர் எருக்க மலரையேனும் நாம் காணநேர்ந்தால் அவை யிரண்டின் வடிவங்கள் உடனே நமதறிவின்கட் பதிந்து தோன்றுகின்றன; ஆனால், அழகில்லா எருக்க மலரின் அருவருப்பு நமதறிவின்கட் டோன்றிய அதனுருவத்திற் காணப்படு கின்றிலது. இங்ஙனமே இன்னும் எத்தனை அருவருப்பான பொருளுருவங்கள் நமதுள்ளத்தில் அறிவுருவங்களாய்த் தோன்றினாலும், அவற்றின்கண் உள்ள அருவருப்புகள் அவ்வறிவுருவங்களில் ஏறுவதில்லை யென்பதையும், பொருளுருவங்களின் அரு வருப்புகள் நமது நினைவின் சேர்க்கையால் நமதுள்ளத்தே தோன்றி நமக்குச் சிறிது துன்பத்தைத் தந்தாலும், நமதறிவின் கண் அவ்வரு வருப்புகள் ஏறுவதில்லை யென்பதையும் அனைவரும் கருத்திற் பதித்தல் வேண்டும். இனிப், பொருளுருவங்களிலுஞ் சில பருப்பொருள் வடிவுகளில் மட்டுமே வெறுக்கத் தக்க சில வாலாமைகள் காணப்படுகின்றன; ஆனாலும், அவை தாமும் நுண் பொருளாக மாறிவிட்டால் அந்நிலையில் அவ்வருவருப்பு கள் அவற்றின்கட் காணப்படுவதில்லை. மலக் கும்பியுஞ் சேறுஞ் சகதியும் நெருப்பின் சேர்க்கையால் நுண்ணிய நிலையை அடைந்த வுடனே, அவற்றின்கண் இருந்த முடை நாற்றமும் அருவருப்பும் இல்லையாய் ஒழிகின்றமையே இதற்குச் சான்றாம். இனிப், பருப்பொருள்களிலுந் தூயவடிவு வாய்ந் தனவுந், தூவாவடிவு வாய்ந்தனவுமாக இருவேறு வகைகள் இருக்கின்றன. அழகிய ஓர் ஆண்மகனையோ அல்லதொரு பெண்மகளையோ ஒப்பச்செய்த பொற்பாவை வெள்ளிப் பாவைகளில், அவ் வாண்பெண்ணிடத்துள்ள மலம் முடை நாற்றம், முதலான உவர்ப்புகள் காணப்படுவதில்லை யன்றோ? செம்பு, பித்தளை, இரும்பு, ஈயம் முதலியவற்றிற் சமைத்த பாவைகளில் உண்டாகுங் களிம்புந் துருவும், பொன், வெள்ளியிற் சமைத்த பாவைகளில் உண்டாவ துண்டா? இல்லையே. இன்னுஞ் சேற்றிலுஞ் சகதியிலுங் கும்பியிலும் உண்டாகும் முடைநாற்றம், அவற்றின்கண் முளைத்து முறுக்கவிழ்ந்த தாமரை மலரிலும் அல்லி மலரிலும் உண்டாவதுண்டா? இல்லையே. சேறுஞ் சகதியும் பார்ப்பதற்கும் மோப்பதற்கும் மிக்கதோர் அரு வருப்பினைத் தருவனவாயிருக்க, அவற்றின்கட் டோன்றி நறுமணங் கமழ அலர்ந்து விளங்கா நின்ற தாமரையும் அல்லியும் பார்ப்பதற்கும் மோப்பதற்கும் எவ்வளவு இனியன வாய் இருக்கின்றன! இங்ஙனமே, மாந்தர் எல்லாரும் பொதுவாகவே மலமுஞ் சிறுநீரும் முதலான உவர்க்கத்தக்க கழிவுகள் உடையராயினும், அவருட் சிலர் கண்ணையுங் கருத்தையுங் கவரும் பேரழகு வாய்ந்தவராயும், வேறு சிலர் வெறுத்து விடத்தக்க அருவருப் பான வடிவம் உடையராயும், மற்றுஞ் சிலர் அழகும் அருவருப்பும் இல்லா யாக்கையினராயும் இருத்தலை நாம் நாடோறும் நங் கண் முன்னே காண்கின்றனம் அல்லமோ? அதுமட்டுமோ,மக்கள் தம்முடம்பின்கணிருந்து வெளிப்படும் நறுநாற்றந் தீ நாற்றத்தானும் பல திறப்படுகின்றனர். சிலர் நமதருகே வரின் அவருடம்பிலிருந்து வருந் தீ நாற்றம் நம்மாற் பொறுக்கக் கூடவில்லை. பின்னுஞ் சிலர் நம்பால் அணுகின் நறுநாற்றந் தீநாற்றம் இரண்டுமே அவர் பாலிருந்து வரக் காணேம். இனி, மிக அரிய ஒரு சிலர் நம்மருகே வந்தால் அமைதியான ஒரு நறுமணம் அவர்பாலிருந்து வருதலையும் நாம் ஒரோவொருகால் உணர்ந்திருக்கின்றேம். இஃது இயற்கைக்கு மாறென்று சிலர் நினைத்தல் கூடும். ஆனால், இங்ஙனம் பல்வேறு நாற்றம் இயற்கையிலேயே அமைந்திருத்தலை இயற்கைக்கு மாறென்று கூறுவது யாங்ஙனம் பொருந்தும்? இந்நிலவுலமெங்கணும் உள்ள மக்கட் குழுவினர் இயற்கைகளை நுண்ணிதின் ஆராய்ந் துணர்ந்த டைலர்10 என்னும் ஆங்கில ஆசிரியர் பல்வேறு வகையான மக்கட் குழுவினர் உடம்புகளிற் பல்வேறு வகையான நறுநாற்றந் தீநாற்றம் இயற்கையே யமைந்து வெளிவருதலை நன்கெடுத்து விளக்கி யிருக்கின்றார்.11 மக்களுடம்பில் இயற்கையே உண்டாம் நறுநாற்றந் தீநாற்றம் போற், சில விலங்குகளிலும் நறுநாற்றந் தீநாற்றம் உண்டாதலைக் கூர்ந்து பார்மின்கள்! பூனையின் உடம்பிலிருந்து முடை நாற்றமே வருகின்றது; ஆனாற், புழுகு பூனையின் உடம் பிலிருந்தோ புழுகு மணங் கமழ்கின்றது. இங்ஙனமே அரிதிற் சிற்சிலர் உடம்பிலிருந்துங் கூந்தலிலிருந்தும் போந்து நறுமணங் கமழும் உண்மை, மக்கள் உடம்பின் றன்மைகளை நன்காராய்ந் துணர்வார்க்கு விளங்காமற் போகாது. பண்டைத் தமிழ்ப் புலவரான ஆசிரியர் நக்கீரனார் தாமும் மக்களியற்கை யினை நன்காராய்ந் துணராமையாலன்றோ, பாண்டியன் மனைவியின் கூந்தல் இயற்கை மணம் பொருந்தியதாய்க் கமழா நிற்கவும், அதனை யறியாமல் அது பூவின் சேர்க்கை யாலுண்டான செயற்கை மணமேயென அழிவழக்குப் பேசி இழுக்கினார். ஆகவே, உருவப் பொருள்களெல்லாம் வெறுக்கத் தக்க அருவருப்புகள் உடையனவாகுமெனக் கரைதல், நுணுகி விரிந்த ஆராய்ச்சியறிவில்லார் செயலேயாதல் தெளியப் படும். பருப் பொருள்களிலேயே பொன் வெள்ளி முதலியன வாலாமை சிறிதுமின்றிச் சுடரொளி துளும்பு வனவாயிருக் கையில், நுண்ணிய பொருள்களிலெல்லாம் நுண்ணியதாய் அறிவொளி வடிவாய்த் திகழும் இறைவன்றன் ஆண் பெண் ணுருவில் வெறுக்கத்தக்க வாலாமை சிறிதேனும் உளதாகுமோ? உணர்ந்து பார்மின்கள்! மண்ணிலும் ஒரோவோரிடத்து வாலாமை உண்டு; நீரிலும் ஒரோவிடத்து வாலாமை உண்டு; ஆனாற், கதிரவன் சுடரொளியிற் சிறிதேனும் வாலாமை யுண்டென்று எவரேனுந் துணிந்து சொல்வரா? சொல்லார், அது போலவே, இறைவனாகிய கதிரவன்றன் அளவிலா ஒளியுருவில் எத்தகைய வாலாமையும் அணுகமாட்டாதென எல்லாருங் கடைப்பிடித் துணர்தல் வேண்டும். ஆகவே, இறைவன்றன், அம்மையப்பர் உரு வாலாமை சிறிதுமில்லா அருளொளி வடிவினதாமென்பது நிறுவப் பட்டமையின், நம் பண்டைத் தமிழ்மக்கள் இறைவனை அம்மையப்ப ருருவில் வைத்து வணங்கி வந்ததும் வருவதுஞ் சாலவும் பொருத்தமுடையவாதல் அறிவுடையார்க் கெல்லாந் தெற்றென விளங்கா நிற்கும். இனி, நம் முதுமக்கள் முழுமுதற் கடவுளின் அம்மை யப்பர் வடிவினை, நம ஐம்பொறிகளுக்குப் புலனாகும் இயற் கைப் பொருள்களில் எதன்கண்ணே தெளியக் கண்டு, அதனை வணங்கி வரலாயினரென்பது ஆராயற்பாற்று, உலக இயற்கையினையும் மக்களியற்கையினையும் உற்று நோக்க நோக்க, அவற்றின்கட் புலனாய்த் தோன்றும் வியத்தகும் அமைப்புகளின் திறத்தை உன்னித்து நினைக்க நினைக்க, இவ்வமைப்புகளை உண்டாக்கத் தக்க பேரறிவும் பேராற்றலும், பகுத்தறிவில்லாச் சிற்றுயிர்களிலாயினுஞ் சிற்றறிவேயுடைய மக்களிலாயினும் அச்சிற்றறிவு தானு மில்லா இயற்கைப் பொருள்களிலாயினும் ஒருவாற்றாலுங் காணப்படாமையின், அப்பேரறிவு பேராற்றல்களையுடைய ஒரு பேருயிர் கட்டாயம் உண்டென்னும் எண்ணம், மிக மழுங்கிய அறிவினரான கானவர் முதல் மிக விளங்கிய அறிவினரான சான்றோர் ஈறான எல்லா மாந்தருள்ளத்தும் எதனாலுந் தடைசெய்யப்படாமல் தானாகத் தோன்றிய படியாகவே விளங்கா நிற்கின்றது. இவ்வாறு முழுமுதற் கடவுள் ஒருவர் உண்டெனக் கடவுளிருப்பைப் பற்றிக் கட்டாயமாய்த் தோன்றும் ஓர் எண்ணந் தம் முள்ளத்தே தோன்றப் பெற்றளவில் மக்கள் மனவமைதி யுடையவரா யிருக்கவில்லை. உலகத்திற்குப் பேருதவிகளைச் செய்யும் அருளாளரான ஒரு சான்றோர் உயிரோடிருக்கின்றார் என்று தெரிந்தால், அவரைப் போய்க் காணவும் அவரை வணங்கவும் அவரை நீடு வாழ்கவென வாழ்த்தவும் அவர் கூறும் அறிவுரைகளைக் கேட்கவும் அவர்க்கு எல்லாச் சிறப்புகளுஞ் செய்து பார்த்து மகிழவும் நாம் எவ்வளவு அவாவும் எவ்வளவு முயற்சியும் வாய்ந்தவர்களா யிருக் கின்றோம்! இது மக்கள் எல்லார்க்குமுள்ள இயற்கை விருப்பமாய் இருத்தலால், எல்லாம்வல்ல ஒரு முழுமுதற் கடவுள் இருக்கின்றார் என்று தெளிந்தவளவானே, அக் கடவுளை நேரே கண்ணாரக் காணவும், அவரை வணங்கவும், அவரது பேரருளை வாழ்த்தவும், அவரருளுரை களைக் கேட்கவும் அவரை அழகுற ஒப்பனை செய்து பார்த்துக் களிக்கவும் மக்களனைவரும் பெரிதும் விழைந்து அதற்காக அல்லும் பகலும் எவ்வளவோ பாடுபட்டு வருகின்றார்கள். அங்ஙனம் உண்மைப் பெருங்காதல் கொண்டு கடவுளைக் காணப் பெரும்பாடு பட்டுவரும் மக்களிற் கடவுளைக் கண்ட சிற்சிலர், ஆங்காங்குத் தோன்றித், தாங்கண்ட அப்பேரின்பக் காட்சியை, அதனைக் காணாது அலமரும் மக்களுக்கு, அவர் மாட்டு வைத்த பேரிரக்கத்தாற், காட்டியபடியாகவே பேருதவி செய்திருக் கின்றார்கள். அவருள் நஞ் செந்தமிழ் நாட்டில் இடை யிடையே தோன்றிய சான்றோர் இறைவனைத் தாம் நேரே கண்டு நம்மனோர்க்குங் காட்டியிருக்கும் உண்மையை ஈண்டெடுத்து விளக்குவாம். இவ்வுலகத்தின்கண் நம்மால் அறியப்படும், நம்மால் நுகரப்படும் பொருள்களெல்லாம் மண்ணும் நீரும் நெருப்புங் காற்றும் வெளியும் என்னும் ஐந்து பெரும் பகுப்பில் அடங்கு வனவாய் இருக்கின்றன. இவ்வுலகமும் இவ்வுலகத்தில் உலவும் நம் உடம்புகளும் எல்லாம் பொதுவாய் இவ்வைம்பெரும் பொருள்களினாலேயே ஆக்கப்பட்டிருக்கின்றன. இவ்வைந்தில் மண்ணானது நங் கண்ணாற் காணப்படும் உருவமுஞ், செவியாற் கேட்கப்படும் ஓசையும், மூக்கால் முகக்கப்படும் மணமும், நாவால் உணரப்படுஞ் சுவையுங், கையாற் பற்றப்படும் பருமனும் உடையது. நீரோ கண்ணாற் காணப்படும் உருவத் துடன் காதாற் கேட்கப்படும் ஓசையும், நாவால் அறியப்படுஞ் சுவையும், மெய்யால் உணரப்படும் நெகிழ்ந்த வடிவும் உடையது. காற்றோ தீயோ கண்ணாற் காணும் உருவுஞ் செவியாற் கேட்கும் ஒலியுங் கையால் தொட்டுணருஞ் சூடும் உடையது. கண்ணாற் காணப்படுவதன்றேனுஞ் செவியால் அறியப்படும் ஓசையும், மெய்யால் உணரப்படும் ஊறும் உடையது. மற்று, வான்வெளியோ நம் ஐம்பொறி களால் எவ்வாற்றானும் அறியப்படாத தொன்று. இங்ஙனம் நம்பாற் பொருந்திய ஐம்பொறிகளின் வாயிலாக நாம் அறிந்தும் நுகர்ந்தும் வரும் இவ்வைம்பெரும் பொருள்களில் மண் ஒன்றே தடிப்பான பருப்பொருளாகும். நீரோ நெகிழ்ந்த இயல்பினதான பருப் பொருளாதலால் அதனை மண்ணினும், நுண்ணிய தென்று சொல்லலாம். தீயோ கட்புலனுக்குத் தெரிவதாயிருந்துங், கையிற் பிடிபடாததாய் இருத்தலின், அது நீரினும் நுண்ணிய தென்பது எல்லார்க்கும் ஒத்த முடிபேயாம். காற்றானது நமதுடம்பின் மேற்படுதலால், அதுவும் ஒருவகையிற் பருப் பொருளாகவே கருதத் தக்கதாயிருப்பினும், அது நமது கையாற் பிடிபடத் தக்கதாய் இல்லாமையானும் நங் கண்களுக்குப் புலனாகா மையானும் அது தீயினும் பார்க்க நுட்பமான பொருளென்றே அறியப்படுகின்றது. இனி, இடை வெளியோ ஓசையும் ஒளியும் வளியும் உலவுதற்கு இடமா யிருக்கும் மிக நுண்ணிய பொருளாக உய்த்துணரப் படுகின்றதே யன்றி, மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும் ஐம்பொறிகளில் எதற்கும் எவ்வாற்றானும் புலனாவதாயில்லை. இத்தகைய ஐம்பெரும் பொருள்களையும், இவற்றை யறியும் மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும் புறக் கருவி களையும் மனம் என்னும் அகக்கருவியையும் அடையப் பெற்ற மக்கட் பிறவியினராகிய நாம், இவை தம்மை யெல்லாம் நாம் கேளாதிருக்கையிலும் நமக்கு அமைத்துக் கொடுத்த எல்லா அறிவும் எல்லா ஆற்றலும் எல்லா இரக்கமும் ஒருங்கு வாய்ந்த இறைவன் ஒருவன் உளன் என்பதைத் தெரிந்து கொண்டபின், அவனை நேரே நங்கட் புலனாற் காண்டற்குங், கண்டு அவன் றிருவுருவினை வணங்குதற்கும் அடங்கா வேட்கை மீதூரப் பெற்று, நங் கண்கட்குப் புலனாகும் பொருள்களுள் எதன்கண்ணே அவன் முனைத்து நின்று விளங்குகின்றான் என்று ஆராய்ந்து தெளிதற்குப் பெருமுயற்சி செய்பவர்களாய் இருக்கின்றனம் அல்லமோ? ஆனால், இப்போது நாம் இம் முயற்சியிற் பயன்பெறுபவர்களாய் இல்லாவிட்டாலும், நமக்குப் பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னமேயிருந்த நந் தமிழ் முன்னோர்கள் அம்முயற்சியிற் பயன் பெற்றவர் களாய்க், கடவுளைத் தாம் நேரே கண்டதுமல்லாமல், அவரைக் காணமாட்டா ஏழையறிவினராகிய நாமும் அவரை நேரே கண்டு களிக்குமாறு நமக்குக் காட்டி வைத்தும் இருக்கின்றார்கள். முழுமுதற் கடவுள் தாம் வகுத்தமைத்த இவ்வைம் பெரும் பொருள்களின் உள்ளும் புறம்பும் எங்கும் நிறைந்து நிற்பவராயிருக்கின்றார். அவர் உள்ளிருக்கப் பெறாத பொருளும், அவரிலிருந்து நிலவாத பொருளும் எங்கும் இல்லை. அவர், உயிர்களாகிய நம் பொருட்டே, சிற்றுயிர் களாகிய நாம் பேரறிவும் பேரின்பமும் பெறும் பொருட்டே நம்பால் வைத்த பேரிரக்கத்தாற் பேரருளால் இத்தனைப் பொருள்களையும் நாம் பிறவி யெடுப்பதற்கு முன்னமே அமைத்து வைத்திருக்கின்றார். இத்தனை இரக்கமும் இத்தனை அருளும் நம்பால் வைத்திருக்கும் நம் ஐயன், நம் ஆண்டவன், நம் மெய்யான அப்பன், நம் மெய்யான தாய், தாமே காணமாட்டாத நம் எளிய கண்முன்னே தன்றிரு வுருவினை நேரே விளங்கக்காட்டி நமக்கு அருள்செய்யா தொழிவனோ? ஒழியானன்றே. ஆனாற், சிலர், கடவுள் மக்களின் சிற்றறிவுக்கும் ஊனக் கண்ணுக்கும் ஒருவாற்றா னும் புலப்படாதவன் என்றும், அவன் உயிருள் பொருள் உயிரில்பொருள் என்னும் எல்லாவற்றின் நிலையை யுங் கடந்து அருவாய் நிற்பவன் என்றும், ஆகையால் அவனை உருவமாக வைத்து வணங்குதலும் வாழ்த்துதலும் பயனற்ற செயல்களாமென்றுங் கரையா நிற்கின்றனர். இது கடவுளின் உண்மை நிலையை ஆழ்ந்து ஆராய்ந்து பாராதவர் கூற்றென்றே, அதனை ஆழ்ந்தாராய்ந்தார் உணரா நிற்பர். ஏனென்றாற், கடவுள் பேரறிவுப்பொருள் என்பதும், அறிவெல்லாம் உருவத்தைப்பற்றி நிற்குமல்லது அருவத்தைப்பற்றி நில்லா தென்பதும், இவ்வுலகத்திலும் இவ்வுயிர்களின் உடம்புகளிலுங் காணப்படும் எண்ணிறந்த உருவ மைப்புகள் அத்தனைக்கும் மூலமான அறிவுருவம் இறை வன்றன் றிருவுள்ளத்தின்கண் அமைந்திருக்கு மாதலால் இறைவனறிவு உருவமாயே விளங்கு மல்லது அருவமாய் இராதென்பதும் முன்னமே விளக்கிக் காட்டி யிருக்கின் றேம். எமது சைவசித்தாந்த ஞானபோதம் என்னும் நூலிற் கடவுளுக்கு அருளுருவம் உண்டு என்னுங் கட்டுரையிலும் அதனை விரிவாயெடுத்து விளக்கியிருக் கின்றேம். ஆகவே, எல்லாப் பொருள்களிலும் நிறைந்து நிற்கும் முதல்வன், அப்பொருள்கள் எல்லாவற்றின் உருவமுந் தனது பேரறிவின்கண் உடையனாய், அப்பொருள்களின் உள்ளும் புறம்பும் அணுக்கமாய் நிற்பனேயன்றி, அவற்றிற்குச் சேயனாய், உயிர்களின் அறிவுக்கும் நினைவுக்கும் எட்டாத, எவற்றையும் மேற்கடந்த அருவநிலையில் நிற்பான் அல்லனென்பதே தேற்றமாம். அஃது எதுபோல வெனின்; பொருள்களின் வடிவினைத் தன்கண் விளங்கக் காட்டும் ஒரு கண்ணாடி அப்பொருள்களின் அருகேயிராமல் அவற்றை விலகி நெடுந் தொலைவிலிருக்குமாயின் அவற்றின் வடி வினைத் தன்கண் ஒரு சிறிதுங் காட்டமாட்டாதது போலவென்க. அற்றேல், தொலைவுநோக்கி என்னுங் கண்ணாடி எத்தனையோ கோடி நாழிகை வழிக்கு அப்பால் அகன்றுள்ள பகலவன் முதலான மண்டிலங்களின் உருவங்களைத் தன்கண் அணிமையில் வைத்துக் காட்டுதல் என்னையெனின்; தொலைவு நோக்கியும் பகலவனது முழு வடிவினையுங் காட்டவல்லதன்று; அவனது வடிவந் தனக்கு எத்துணை அணிமையிற் றோன்றுகின்றதோ அத் துணைக்கே அதனைக் காட்டவல்லது; அதனால் தொலைவு நோக்கியுங் கோள்கள் நாள்களின் அணிமையின் அளவுக்கே அவற்றின் வடிவினைக் காட்டுமல்லாமல், எட்டுணையும் அளவு தெரியாச் சேய்மையில் அகன்றிருப்பன வற்றை அவை காட்டமாட்டாவென்று தேர்ந்துகொள்க. இனி, அறிவெல்லாம் ஒளிவடிவினவென்றும் அறி யாமையெல்லாம் இருள்வடிவினவென்றும் நினைவிற் பதித்தல்வேண்டும். எங்கெல்லாம் ஒளிவிளக்க மிருக் கின்றதோ, அங்கெல்லாம் நமக்குக் கண்ணுங் கருத்தும் விளக்கம் உடையனவாய்த் திகழ்கின்றன. அவ்வாறு ஒளி விளக்கஞ் சிறிதுமின்றி எங்குந் திணித்த இருளே பரவி நிற்குமாயின், அங்கே நங் கண்ணுங்கருத்தும் விளங்கா மையும் எவரும் அறிந்ததேயாம். ஆகவே, ஒளிவிளக்கமே அறிவுவிளக்க மென்றும், அஃதல்லாத இருட்பெருக்கமே அறியாமைப் பெருக்கமென்றுந் தேர்ந்து கொள்ளல் வேண்டும். ஞாயிறு திங்கள் தீ யென்னும் ஒளியுடைப் பொருள்கள் எவையுமே இவ்வுலகத் தில்லையாயின், எங்கும் திணிந்த இருளே செறிந்து நிற்குமாயின், மக்களே யன்றி ஓரறிவு வாய்ந்த புற்பூண்டுகள் தாமும் இந்நிலவுலகத்தின் கட் காணப்படுமோ? உரைமின்கள்! எனவே, ஒளி விளக்கமே உயிர்விளக்க மென்றும், அவ்வுயிர் களின் அறிவு விளக்க மென்றுங் கடைப்பிடித்துணர்தல் வேண்டும். இங்ஙனம் உயிர்களின் உயிர்வாழ்க்கைக்கு மட்டுமே யன்றி அவற்றின் அறிவு வாழ்க்கைக்கும் ஒளியின் உதவி இன்றியமை யாது வேண்டியிருத்தலாலும்; உயிர்களே இவ்வொளியினை நெருப்புக்குச்சியி னுதவியால் உண்டாக் கிக்கொள்ள வல்லனவெனின்; உயிர்கள் பிறவியெடுத்து நெருப்புக்குச்சியை உண்டாக்கிக் கொள்ளுதற்கு முன்னம் ஒளியின் உதவினாலேயே அவை இப்பிறவிக்கு வரக் காண்டலின் இவ்வுயிர்களின் தோற்றத்திற்கு இன்றியமை யாக் காரணமாய் முதல் நிற்கும் ஒளியைப் பின்வந்த மக்கள் உண்டாக்க வல்லரென்றல் இசையாமையாலும் ஒளியே கடவுளென்று அல்லது கடவுளின் றிருவுருவமென்று கொள்ளுதலே பொருத்த முடைத்தாம். மேலும், நம்போன்ற சிற்றுயிர்கள் அத்தனையும் பிறி தொன்று அல்லது பிறரொருவர் விளக்கினால் விளங்கும் அறிவுடையனவேயன்றித் தாமாகவே விளங்கும் அறிவின அல்ல; ஏனென்றால், அவை யியற்கையிலேயே அறியாமை யாற் கவரப்பட்டிருக்கின்றன. மற்று, இறைவனோ எண் ணிறந்த உலகங்களையும் அவ்வுலகங்களிலுள்ள எண் ணிறந்த பொருள்களையும் அவை தம்மில் உலவும் எண் ணிறந்த உயிர்களின் எண்ணிறந்த உடம்புகளையும் படைக் கத்தக்க எல்லையற்ற பேரறிவும் எல்லையற்ற பேராற்றலும் வாய்ந்தவ னாதல் தெற்றெனத் துணியப்படுதலால், அவனி டத்தில் அறியாமை ஒரு சிறிதுமே இருத்தல் இயலா தென்பதும், அவன் என்றும் விளங்காநின்ற அறிவொளியினதாயே திகழ்வ தென்பதும் நந்தமிழ் முன்னோர் கண்ட முடிந்த உண்மைகளாம் என்று தெளிந்துகொள்க. அதனா லன்றோ இற்றைக்கு ஐயாயிர ஆண்டுகளுக்கு முன்னரே வயங்கிய தமிழ்ப் பேராசிரியரான தொல்காப்பியனார், வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல் நூல் ஆகும் என்று அருளிச்செய்தார். அருமருந்தன்ன இந் நூற் பாவிற், பண்டைத் தமிழ்ச் சான்றோர் கடவுளைப் பற்றித் தெளித்துக் கண்ட கருத்துக்கள் அத்தனையும் ஒரு சிறு கடுகளவுவித்தில் அடங்கிய ஒரு பேராலமரம்போல் அடங்கிக் கிடத்தலின், அவை தம்மை ஒரு சிறிது ஆராய்ந்து காட்டுதல் இன்றி யமையாததாய் இருக்கின்றது. கடவுள் இயல்பாகவே வினையின் நீங்கியவன் என்கின்றார் தொல்காப்பியர். வினை என்பது செயல் அல்லது தொழில் என்று பொருள்படும். ஒருவன் ஒரு செயல் செய்வது தனக்குள்ள துன்பத்தை நீக்கித் தனக்கு இன்பத்தை வருவித்துக் கொள்ளுதற்கேயாகும். எல்லா உயிர்களுக்கும் உள்ள துன்பமானது முதன்முதற் பசியையுங் காமத்தையும் அடிப்படையாய்க் கொண்டு தோன்றி அவ்வுயிர் களை வருத்திவரும் வகையினை முன்னமே விளக்கிக்காட்டி யிருக்கின்றேம். உயிர்கள் பிறவிக்கு வருங்கால் முழுதும் அறியாமையால் மூடப்பட்டிருத்தலையும், அப்போது அவற்றின் வயிற்றகத்துள்ள பசித்தீ அவைகளை வருத்த அவை வாய் திறந்து அழுதலையும், அவ் வழுகைக் குரலைக் கேட்ட தாய் உடனே அவற்றை யணுகிப் பாலூட்ட அவை அத் துன்பந் தீர்ந்து இன்புற்றிருத்தலையும் அங்ஙனமே மேலெடுத்துக் காட்டியிருக்கின்றேம். அவை கொண்டு, உயிர்கள் தமக்குள்ள துன்பத்தை நீக்கிக்கொள்ள முதன் முதற் செய்யும்வினை வாய்திறந்து அழுதலே யாமென்பது பெறப்படுகின்றதன்றோ? ஒரு சிறுமகவு தனக்குள்ள துன்பத்தைத் தானே தீர்த்துக் கொள்ள அறியாமை யாலன்றோ வாய் திறந்தழுகின்றது? தானே முயன்று பொருள் தேடித் தனது பசித்துன்பத்தை நீக்கிக் கொள்ளும் அறிவும் ஆற்றலும் வந்தபின் ஓர் ஆண்மகன் அங்ஙனம் வாய் திறந்தழுவனா? அழானன்றோ? ஆதலால், அறியாமையாற் கவரப்பட்டிருக்கும் நிலையில் முதன்முதற் றோன்றும் வினை ஆற்றாது அழுதலேயாமென்பது பெறப்படும். எனவே, எந்த உயிருந் துன்பத்திற் புதைந்து கிடந்து அதனினின்றுந் தன்னை விடுவித்துக் கொள்ளும் அறிவும் ஆற்றலும் இல்லாதிருக்குங்காறும் அதன்பால் ஆற்றாமையும் அது காரணமாக வரும் அழுகை வினையுந் தோன்றாதிரா. இவ் விரண்டு வினையுங் கண்பூவாக் குழவியின் மாட்டுமே யன்றிக், கலைவல்ல புலவர்மாட்டுங் கண்ணகன் ஞாலங் காக்குங் காவலர் மாட்டுங் காணப்படு வனவாகவே கருதப் படுகின்றன. ஆகவே, எத்தகைய வினையுந் துன்பத்தை நீக்குதற்பொருட்டுத் தோன்றுவ தொன்றாய் நன்கு விளங்கிக் கிடத்தலாலுந், துன்பத்தையுடைய நம் போன்ற சிற்றுயிர் கட்கன்றித் துன்பமே சிறிதுமில்லாது இன்பமே முழுதும் உடைய இறைவற்கு எத்தகைய வினையுஞ்செய்ய வேண்டுவதில்லாமை யாலும், எல்லாச் சிற்றுயிர்களும் பிறவிக்கு வருங்கால் தமக்குள்ள துன்பத்தைத் தாமே நீக்கிக் கொள்ள வல்ல வகை அறியாமல் முதன்முதல் அழுகை வினையிலேயே தமதுயிர் வாழ்க்கையினைத் தொடங்குதல்போல, இறைவனும் வினை யுடைய னாயின் அவனும் அறியாமையும் ஆற்றாமையுங் காரணமாக வரும் வினையிலேயே தனது முயற்சியைத் தொடங்கினானாகல் வேண்டும் எனப்பட்டு அவனுக்கும் ஏனைச் சிற்றுயிர்கட்கும் வேறுபாடு இல்லையாய் முடியுமாத லாலும் இறைவனும் வினையுடையனெனக் கூறுவது பெரிதும் பிழை பாடுடைத்தா மென்க. அற்றன்று, இறைவன் தனக்கொரு துன்பமுங் குறை பாடும் இல்லானாகலின், அவன் வினை செய்வனென்பது, துன்பமுங் குறைபாடும் நிரம்பிய சிற்றுயிர்கட்கு அவற்றை நீக்குதற் பொருட்டே யாகலின், அஃதவன் இறைமைக் குணத்திற்கு இழுக்காதல் யாங்ஙனமெனிற் கூறுதும். அறியாமையின் வயப்பட்டுக் கிடக்குஞ் சிற்றுயிர்கள் கடல் மணலினும் அளவு படாதனவாய் இருக்கின்றன. இவை யவ்வளவும் அறியாமை யாற் கவரப்பட்டிருப்பினுந் தமக்கென ஓர் அறிவுந் தமக்கென ஒரு செயலும் வாய்ந்தவை களேயாம். உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு வேங்கைப் புலியும், அங்ஙனமே யுறங்கிக் கொண்டிருக்கும் ஒரு கலைமானும் உறக்கமென்னும் அறியாமையில் அழுந்திக் கிடக்கும் வகையில் அவற்றின் அறிவுஞ் செயலும் புலனாகா விடினும், அவை யுறக்கம் நீங்கி விழித்தவுடனே, வேங்கைப் புலியானது மானைக் கொல்லும் அறிவுஞ் செயலும் உடை யதாதலும், மானோ அப்புலியின் பிடிக்குத் தப்பித் தன்னைக் காத்துக் கொள்ளக் கடுகியோடும் அறிவுஞ் செயலும் உடையதாதலும் பிரிந்து விளங்குதல் காண்மின்கள்! இங்ஙனமே மக்களாகிய உயிர்களும் மற்றைச் சிற்றுயிர்கள் எல்லாமும் அறியாமையினின்று விழித்தவுடன் வேறுவே றறிவும் வேறுவேறு செயலும் உடையனவாய்த், தாந்தாம் விரும்பிய வழியே செல்கின்றன. இத்தனை யுயிர்களுந் தம்மைப் பொதிந்த அறியாமையிருளினின்றும் விடுபடல் வேண்டி, இறைவன் இவ்வுயிர்களுக்கு அளவில் அடங்காப் பல வேறு உடம்புகளையும் படைத்துக் கொடுத்தலாகிய வினையைச் செய்யுங்கால் உழைப்பினாற் றோன்றும் வருத்தஞ் சிறிதாயினும் உடையனாதல் வேண்டும். அங்ஙனமே அவ்வுயிர்கள் அறியாமையாலுந் தமக்கென உள்ள சிற்றறிவு முனைப்பாலும் இறைவன் றந்த தம் அரிய உடம்புகளையும் அவ்வுடம்பின்கண் உள்ள உறுப்புகளையும் பழுது படுத்துங் கால்; அவ்வுயிர்கள் மேற் சினமும் இரக்கமுங் கொண்டு அவை தம்மைப் பாதுகாக்குமிடத்து இறைவனுள்ளமும் வேறுபாடுறுதல் வேண்டும். இனி, அவ் வுயிர்களின் ஆணவத்தாலுந் தீய செயல்களாலும் அவை தம் முடம்புகள் முற்றுமே பழுதுபட்ட விடத்து, அவ்வுயிர் கள்மேற் பின்னும் மிக்க சினங்கொண்டு அவற்றை யழித்து, அவ்வுயிர்கட்கு வேறு பல உடம்புகளைக் கொடுக்குங்கால் இறைவற்கு வன்குணமும் உண்டாகல் வேண்டும். ஆகவே, படைத்தல் காத்தல் அழித்தல்களை இறைவனே செய்வானாயின், அவனுந் துன்பத்திற்குள்ளாகு வனென்றே கொள்ளல் வேண்டும்; அவ்வாறு கொள்ளின், துன்பத்திற் பட்ட உயிர்களுக்கும் அங்ஙனமே துன்பத்திற்பட்ட இறைவற்கும் வேற்றுமையில்லையாய் முடியுமாலெனின்; இவ்வியல்பினை முன்னமே ஆராய்ந்துணர்ந்த ஆசிரியர் தொல்காப்பியனார் முதலான பண்டைச் செந்தமிழ்ச் சான்றோர்கள் இறைவன் அம்மூவகை வினையிற்றொடக் குண்ணான் என்பது தெரிப்பார், வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் என்றருளிச் செய்தார் என்பது, ஐயாயிர ஆண்டுகட்கு முன்னே யிருந்த தமிழா சிரியர் கடவுளைப் பற்றிக் கொண்ட இவ்வுயர்ந்த கொள்கை யினையே, பிற்காலத்தில் இற்றைக்கு எழுநூறு ஆண்டுகட்கு முன்னிருந்த ஆசிரியர் மெய்கண்டதேவருந் தாம் அருளிச்செய்த சிவஞான போதத்தில், நோக்காது நோக்கி நொடித்தன்றே காலத்திற் றாக்காது நின்றுளத்திற் கண்டிறைவன் - ஆக்காதே கண்ட நனவுணர்விற் கண்ட கனவுணரக் கண்டவனில் இற்றின்றாங் கட்டு என்று இனிதெடுத்து விளக்கியருளினார். அவ்வாறாயிற், படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் மூன்று வினைகளையும் இறைவன் செய்யினும், அவற்றால் வருந் துன்பந் தன்னைத் தாக்காதபடி அவன் செய்து கொள்ள வல்லானென்று கொள்ளுதலாற் போந்த குற்றம் என்னை யெனின்; தான் செய்யும் தொழிலால் தனக்கு வருந்துன்பந் தன்னைத் தாக்காதபடி செய்து கொள்ளுதலும் ஒரு வினையே யாகலின், அவ்வினையும் ஒருவாற்றாற் கடவுளுக்குத் துன்பந் தருவதேயாகும்; அதனால், அவ்வாறு கொள்ளுதலுங் குற்றமுடைத் தென்பதே பண்டைத் தமிழாசிரியர் கருத்தாதல், மேற்காட்டிய தொல்காப்பிய நூற்பாவின் சொல்லமைப்பை நுனித்துக் காண்டலால் நன்கு புலனாகா நிற்கின்றது. மூவினை களைச் செய்தும் அவற்றால் வருந் துன்பந் தன்னைத் தாக்காது முதல்வன் செய்துகொள்வன் என்பது மேலோர் கருத்தாயின், வினையை நீக்கி விளங்கிய அறிவின் என்று ஆசிரியர் தொல்காப்பியனார் பிறவினை வாய்பாட்டாற் சூத்திரஞ் செய்திருப்பர்; அவ்வாறு சூத்திரஞ் செய்யாது; வினையின் நீங்கி விளங்கிய அறிவின் என்று தன்வினை வாய்பாட்டாற் சூத்திரஞ் செய்திருத்தலால், இறைவன் இயல்பாகவே வினை செய்தலினின்று நீங்கி விளங்கிய வறிவினன் என்பதே பண்டையோர் கருத்தாதல் தெற்றென விளங்கா நிற்கின்றது. அற்றேல், வினை செய்தலுக்கும் அறிவு விளக்கத்திற்கும் மாறுபாடு வரக் காரணம் என்னை யெனின்; எத்துணை அறிவு விளக்கம் உடையாரும் பிறரைத் திருத்தப் புகுங்கால், அன்னார்க் குள்ள எடுப்பும் இறுமாப்பும் அறிவின்மையும் அழிச்சாட்டிய முங் கண்டு மனந் துன்புறா நிற்கின்றனர்; அவ்வாறு துன்புறுங் கால் அவரது அறிவும் விளக்கங் குன்றுகின்றது; அறிவு விளக்கங் குன்றவே அறியாமையுஞ் சிறிது சிறிதேயுண்டாகின்றது; அறியாமையுண்டாகவே முதல்வற்கும் அறியாமையுடைய நம் போன்ற சிற்றுயிர் கட்கம் வேற்றுமை யுமில்லையாய் ஒழிகின்றது. அங்ஙனம் இறைவனும் நம்போல் அறியாமை யுடையனாயின், அவன் இவ்வெண்ணிறந்த உலகங்களையும் அவற்றின்கண் உள்ள எண்ணிறந்த உயிர்களையும் அசை வித்தலும் அறிவித்தலும் இயலா. அதனாற், கடவுள் எத்தகைய வினையுந் தானாகவே முனைந்து செய்வான் அல்லனென்பதே பண்டைச் செந்தமிழ்ச் சான்றோர் கண்ட முடிபாமென்று கடைப் பிடித்தல் வேண்டும். அற்றேல், தொல்காப்பியனார் முனைவன் கண்டது முதல்நூலாகும் எனக் கூறி முதல்நூல் இறைவனாற் செய்யப்பட்டதாகும் என முதல்நூல் செய்யும் வினையை அவன்மேல் ஏற்றிக்கூறிய தென்னையெனின்; இதன் கண்ணும் உள்ள சொல்லமைப்பை நுனித்து நோக்குதல் வேண்டும். முனைவன் காட்டியது எனவாதல், முனைவன் செய்தது எனவாதல் ஆசிரியர் ஓதாமற், கண்டது எனத் தன்வினை வாய்பாட்டால் ஓதிய நுட்பத்தை உற்றுணருங் கால், முதல்வன் ஏதொரு நூலுந் தானாகவே முனைந்து செய்யாதிருக்க, என்றும் ஒரு தன்மைத்தாய் விளங்கும் அவனது முற்றறிவின் கண்ணே எல்லாக் கலையறிவுந் தானே விளங்கியபடியா யிருக்கு மென்பதே கண்டது என்னும் அச்சொல்லாற் பெறப்பட்ட உண்மையாகும் என்க. இனி, இவ்வாறெல்லாம் உரைப்பின், இவ்வுலகங் களையும் இவ்வுயிர்களின் உடம்புகளையும் படைத்துக் காத்து அழிக்கும் வினை இறைவன்செயல் அல்லவெனப் பட்டு, இவ்வுலகுயிர்கள்பாற் காணப்படும் அம் மூவினை களைக் கொண்டு, அவற்றைச் செய்யும் எல்லாம்வல்ல கடவுள் ஒருவன் உளனெனக் கொள்ளுங் கொள்கை பிழை பாடாய் முடிந்து, கடவுள் இல்லையெனுங் கொள்கையே தமிழசிரியர் கைக்கொண்ட கொள்கையாய்ப் பெறப்படுமா லோவெனின், அற்றன்று. இறைவன் எத்தகைய அறியாமையும் அது காரணமாக வருங் குறைபாடுஞ் சிறிதும் இலனாகலின் அவனது அறிவு என்றும் ஒளி விளக்கம் வாய்ந்ததாகவே திகழாநிற்கும். ஒளியைச் சாரும் பொருள்களெல்லாம் அவ்வொளியினைத் தாமும் பெற்று ஒளி வடிவாய்த் திகழ்தல் எல்லாரும் அறிந்ததே யாம் இருட்காலத் திரவில் இருளைச் சார்ந்து இருள் வடிவாய் நின்ற பொருள்களெல்லாம் விடியற் காலத்தே கீழ்பால் எழூஉங் கதிரவனொளியைக் கண்டு தாமும் ஒளி வடிவாய் விளங்குதலை அறியாதார் யார்? உவாநாள் இரவிற் குளிர்ந்த ஒளிவிளக்க முடையதாய் நீலவானின் மேலே விளங்கும் வெண்மதியத்தின் ஒளி அம்மதியத்திற்கு எங்கே யிருந்து வந்தது? கதிரவனொளியி லிருந்தன்றோ? இங்ஙனமே இறைவன் என்றும் விளங்கின அறிவொளியினனான சுடர் விரிந்து திகழாநிற்ப, அவ் வறிவுச் சுடரொளி பட்ட வளவானே, மாயை என்னும் அறிவில் பொருளும் உயிர்கள் என்னுஞ் சிற்றறிவுப் பொருளும் ஒழுங்கின்றி நின்ற அருவநிலை12 மாறி ஒழுங்குற்று நிற்கும்13 உருவநிலைக்கண் வருவவாயின, இயற்கையொளிப் பொருள், இயற்கை யொளியில்லா ஏனையொரு பொருள் தன்னைச் சார்ந்தவளவானே அதனையும் ஒளிவடிவின தாக்குதல், விளக்கொளியில் ஒளிவிளக்க முடையதாய் மிளிரும் ஒரு பளிங்குத் துண்டினிடத்துங் காணப்படும். இங்ஙனமே, காந்தக்கல் ஓர் இரும்பூசியைத் தன் மாட்டு இழுத்துக் கொள்வ துடன், அவ்வூசி சிறிது காலந் தன்னுடன் ஒட்டியபடியே யிருக்குமாயின், பின்னர் அது மற்றோர் இருப்பூசியைத் தன்மாட்டு ஈர்த்துக் கொள்ளுமாறும் அதற்கு அவ்விழுக்கு மாற்றலைத் தருகின்றது. அறிவில்லாப் பொருள்களே இங்ஙன மாகத் தாம் நின்ற நிலை திரியாமல், மற்றைப் பொருள்களின் நிலையைத் திரிபடையச் செய்யு மானால், முழுதும் விளங்கிய இறைவன்றன் அறிவொளி தனது நிலை திரியாமல் நின்றே, படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் வினைகளை மாயையினிடத்தும் உயிர்களினிடத்தும் விளைக்குமென்பதை நாம் விண்டு விளம்புதலும் வேண்டுமோ? இவ்வாறு இறைவன் அறிவுப் பேரொளி யினனாய் ஏதொரு வினையுஞ் செய்யாமலே சுடர்ந்து திகழாநிற்க, மாயையும் உயிர்களும் அவ் வறி வொளியின் தோற்றத்தளவிலேயே, தமது கலங்கிய அருவ நிலை மாறித் துலங்கிய உருவநிலை எய்தும் உண்மை யினை நம் பண்டைத் தமிழாசிரியர் கண்டறிந்தமை, மன்னுசிவன் சந்நிதியின் மற்றுலகஞ் சேட்டித்த தென்னு மறையின் இயன்மறந்தாய் சொன்னசிவன் கண்ணா வுளம்வினையாற் கண்டறிந்து நிற்குங்காண் எண்ணான் சிவன் அசத்தை யின்று என ஆசிரியர் மெய்கண்ட தேவர் சிவஞான போதத் தின்கண் அருளிச் செய்தவாற்றானும் பெறப்படும். இன்னும் இறைவன் பேரொளியுருவினனாயுந், தன்னைச் சார்ந்த மையால் உண்டான மாயையின் ஒளி வடிவுகளாகிய ஞாயிறு திங்கள் தீ என்னும் மூன்று ஒளி வடிவுகளின் உள்ளொளியாய்த் திகழ்பவனாயும் நிற்கின்றானென்னும் இவ்வுண்மை, ஓதி யாரும்அறி வார்இலை ஓதி யுலகெலாஞ் சோதி யாய் நிறைந் தான்சுடர்ச் சோதியுட் சோதியான் வேதி யாகிவிண் ணாகிமண் ணோடெரி காற்றுமாய் ஆதி யாகிநின் றானும்ஐ யாறுடை ஐயனே எனத் திருஞானசம்பந்தப் பெருமான் அருளிச் செய்த தேவாரத் திருப்பாட்டின்கண் எடுத்து வற்புறுத்தப்பட்டமை காண்க. இங்ஙனம் அறிவொளியினனாய்த் துலங்கா நின்ற முதல்வன் தான் படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய முத்தொழில் களையும் முனைந்து செய்யாமலே நிற்க, அவனைச் சார்ந்த உயிர்களில் அவன்றன் அறிவொளியினை நேரே பெறத்தக்க வாய்ப்புடைய சில சிறந்த உயிர்கள் அவன்றன் அறிவொளி யினால் உந்தப்பெற்று அம்முத் தொழில்களைப் புரியா நிற்குமென்னும் உண்மை மாணிக்க வாசகப் பெருமானால், தேவர்கோ அறியாத தேவ தேவன் செழும்பொழில்கள் பயந்துகாத் தழிக்கும் மற்றை மூவர்கோ னாய்நின்ற முதல்வன் மூர்த்தி என்று திருவாசக மாமறையிலும் எடுத்தருளிச் செய்யப் பட்டமை கண்டுகொள்க. மக்களாகிய நமக்குள்ளும் ஒருவர் ஒருவரின் மேற்பட்ட அறிவும் ஆற்றலும் இயற்கையே பெற்றவர் களாய், ஏனையோரைத் தஞ் சொல்வழி நிறுத்தி உலகியலை நடைபெறச் செய்யவல்ல தலைவர்கள் இருத்தல் போல, மேலுலகங்களிலுள்ள சிறந்த உயிர்களாகிய தேவர்களுள்ளும் அறிவாற்றலில் நனிசிறந்த தலைவர் சிலர் உளர் என்பதூஉம், அவர் எல்லாம்வல்ல முழுமுதற் கடவுளின் அறிவுப் பேரொளி யினால் உந்தப் பெற்று உலகங்களை ஆக்குதலுங் காத்தலும் அழித்தலு மாகிய வினைகளை நடத்துவர் என்பதூஉம் இயற்கை நூற்புலமை யிலும் அறிவுநூற் புலமையிலுந் தலைசிறந்து விளங்கிய ஸர் ஆலிவர் லாட்ஜ்14 என்னும் ஆங்கில ஆசிரியராலும் நன்கெடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றது.15 இங்ஙனமாக மேலுலகங்களிற் சிறந்த தேவர்களிலுஞ் சிறந்தாராய் அறிவாற்றல்கள் இயற்கையே மிகுதியாய் வாய்க்கப் பெற்று இறைவன்றன் அறிவொளியை நேரே ஏற்று முத் தொழில் புரிவாரை நான்முகன், திருமால், உருத்திரன் எனப் பழைய சான்றோர்கள் கூறாநிற்பர். எனவே, எல்லாம்வல்ல முழு முதற்கடவுள் தான் ஏதொரு செயலுஞ் செய்யாதிருக்க, அவனது அறிவொளியால் உந்தப்படுந் தேவர்களே படைத்தல் காத்தல் அழித்தல் முதலான வினைகளைச் செய்யாநிற்ப ரென்னும் உண்மை, தோற்றுவித் தளித்துப் பின்னுந் துடைத்தருள் தொழில்கள் மூன்றும் போற்றவே யுடையன் ஈசன் புகுந்தது விகார மென்னிற் சாற்றிய கதிரோன் நிற்கத் தாமரை யலருங் காந்தங் காற்றிடுங் கனலை நீருங் கரந்திடுங் காசி னிக்கே என்றும், உரைத்த இத் தொழில்கள் மூன்றும், மூவருக் ருலக மோத வரைத்தொரு வனுக்கே யாக்கி வைத்ததிங் கென்னை யென்னின் விரைக்கம லத்தோன் மாலும் ஏவலான் மேவி னோர்கள் புரைத்ததி கார சத்தி புண்ணிய நண்ண லாலே என்றும், சிவன்உரு அருவும் அல்லன் சித்தனோ டசித்தும் அல்லன் பவம்முதற் றொழில்க ளொன்றும் பண்ணிடு வானும் அல்லன் தவமுத லியோக போகந் தரிப்பவன் அல்லன் றானே இவைபெற இயைந்தும் ஒன்றும் இயைந்திடா இயல்பி னானே என்றும் அருணந்திசிவனார் தமது சிவஞான சித்தியாரில் அருளிச் செய்தவாற்றாலும் நன்கு விளங்காநிற்கும் என்றித் துணையுங் கூறிய வாற்றால், இற்றைக்கு ஐயாயிர ஆண்டுகட்கு முன்னமே நம் தமிழ் முன்னோர் கண்ட கடவுட்கொள்கையைத் தழீஇ ஆசிரியர் தொல்காப்பியனார் அருளிச்செய்த, வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல்நூல் ஆகும் என்னும் நூற்பாவிலுள்ள முழுமுதற் கடவுளிலக்கணத்தின் நுட்பந் தெற்றென விளங்கற்பாலதேயாம். தொல் காப்பியனார் அருளிச் செய்தவாறே தெய்வப் புலமைத் திருவள்ளுவனாரும், கற்றதனால் ஆய பயன்என்கொல் வால்அறிவன் நற்றாள் தொழாஅ ரெனின் (குறள் 2) என்னுந் திருக்குறளிற் கடவுள் வால் அறிவன் என்று முழு முதற் கடவுளிலக்கணத்தை நன்கறிய வைத்தமையும், வால் அறிவன் என்னுஞ் சொற்றொடரும் விளங்கிய அறிவனன் என்னுஞ் சொற்றொடரும் ஒரே பொருள் தந்து நிற்றலும் நினைவிற் பதிக்கற்பாலனவாகும். இன்னுந் தொல் காப்பியர் இறைவன் வினையின் நீங்கியவன் என்று ரைத்தவாறே திருவள்ளுவரும், வேண்டுதல்வேண் டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல (குறள் 4) என்னுந் திருக்குறளில் இறைவன் ஒன்றைவிரும்பிச் செய்தலாகிய வினையும் பிறிதொன்றை வெறுத்து அழித்த லாகிய வினையும் இல்லாதவன் என்று வலியுறுத்துரைத்தார். ஆக்குதலும் அழித்தலுங் கூறவே இடைப்பட்ட காத்தலும் அதன்கண்ணே அடங்கும். இங்ஙனம் அறிவொளி வடிவாய் நிற்கும் இறைவன் செயலற்ற வனாயினும், அறிவும் நினைவும் அருளும் அற்றவன் அல்லன். அறிவும் நினைவும் அருளும் ஒன்றோ டொன்று நெருங்கிய தொடர்புடையனவாகும். அறிவில்லா தவன் நினைவும் அருளும் உடையவன் ஆகான். இம் மூன்றையும் இம் மூன்றால் வரும் இன்பத்தையும் ஒருங் குடையவன், அறிவும் நினைவும் அருளும் இன்பமும் இல்லாமல் அறியாமையில் துன்புறும் மக்களாகிய நமக்கும் ஏனைச் சிற்றுயிர்களுக்கும் அறிவும் நினைவும் அருளும் இன்பமும் உண்டாகவும் அறியாமையும் அதனால் வருந் துன்பமும் அகலவுமே கருதுவன். அறிவுடையானிடத்தே அறிவிலா னொருவன் இடையறாது பழகி வருவனாயின், நாட் செல்லச் செல்ல இவனும் அறிவுடை யனாதல் திண்ணம். இங்ஙனமே நல்ல குணங்கள் உடையவ ரோடு நெருங்கி நெடு கப் பழகுவோர் தாமும் நல்ல குணம் உடையராதலுந், தீய குணங்கள் உடையவரோடு நெருங்கி நெடுகப் பழகு வோர் தாமுந் தீய குணம் உடையராதலும் நாம் நமதுயிர் வாழ்க்கை யில் எங்குங் கண்டு வருகின்றனம் அல்லமோ? மக்களாகிய நாமும் நம்மினுங் கீழ்ப்பட்ட சிற்றுயிர் களும் இவ்வாறு தாந்தாஞ் சார்ந்த உயிர்களின் தன்மைகளையுந் தாந்தாஞ் சார்ந்த பொருள்களின் தன்மைளுகளையும் அடையப் பெறுதல் இஞ்ஞான்றை உயிர்நூல் வல்லாராலும் நன்கா ராய்ந்து காட்டப்பட்டிருக்கின்றது.16 இற்றைக்கு இரண்டாயிர ஆண்டுகளுக்கு முன்னமே திருவள்ளுவ நாயனார், நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க் கினத்தியல்ப தாகு மறிவு (குறள் 452) என்னுந் திருக்குறளில் இவ்வுண்மையினை நன்கு விளக்கிக் காட்டி யிருக்கின்றார். என்பில்லாத பச்சிலைப் புழுவுந் தான் சார்ந்திருக்கும் பச்சிலையின் நிறத்தைப் பெற்றுப் பச்சென் றிருக்குமாயின், இறைவன் அருளாற் சிறிது சிறிதே இவ்வுடம் பின் வாயிலாக அறிவு விளங்கப் பெற்று வரும் நாமும் இறை வன்றன் அறிவொளியினையே முழுதுஞ் சார்ந்து நிற்பமாயின் அவ்வறிவொளியினை நாமும் முற்றும் பெறுதல் திண்ண மன்றோ? அஃதுண்மையே யென்றாலும், இறைவ னறிவொளி யினைச் சார்ந்தவளவானே நாம் அவ்வொளியினைப் பெறுதல் திண்ணமாயின், எல்லாம் நஞ்செயலாகவே முடிகின்றதன்றி, இறைவன் நமக்குச் செய்வதொன்றும் இல்லையாய் முடிகின்றதாலோவெனின்; அற்றன்று. இறைவன் தனக்குரிய அறிவொளியினை உயிர்களும் பெறல் வேண்டுமெனக் கருதியபடியாயே யிருப்பன். அவன் அங்ஙனங் கருதியபடியாய் இருத்தலால், அவன்றன் அறிவொளி எல்லா உயிர்களின் அறிவையும் விளக்கம் உடையதாகச் செய்தே விடும். அற்றேற், கருவிகளின் உதவியின்றி ஒரு நிகழ்ச்சியினை வெறு நினைவு மட்டாற் செய்தல்கூடுமோ வெனிற்; கூடும். ஒருவர் நினைக்கும் நினைவு தொலைவிலுள்ள வேறொருவர் உள்ளத்திற் சென்று பதிந்து தோன்றும் நிகழ்ச்சிகள் நாடோறும் பல்லாயிரக் கணக்காய் எங்கும் நடைபெறுகின்றன. இவற்றுள் ஆராய்ந்து உண்மையெனத் தெளியப்பட்ட நினைவு நிகழ்ச்சிகள் பற்பலவற்றை உயிர்நிலை ஆராய்ச்சிக் கழகத்தார்17 தொலைவிலுணர்தல்18 என்னுந் தலைப்பின்கீழ் விரிவாய் எடுத்துக்காட்டி யருக்கின்றனர். எட்மண்ட் கர்நி19 மையர்20 பாட்மோர்21 என்னும் ஆங்கில ஆசிரியர்கள் எழுதியிருக்கும் நூல்களையும், யாம் ஆராய்ந்து வரைந் திருக்குந் தொலைவி லுணர்தல் என்னும் நூலையும் நோக்கு வார்க்குக், கருவிகளின் உதவி வேண்டாமலே திண்ணியார் ஒருவர் நினைத்த நினைவானது தான் கருதிய பயனைத் தந்தே விடும் உண்மை விளங்கா தொழியாது. இது தெய்வப் புலமைத் திருவள்ளுவர், எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின் (குறள் 666) என்றருளிச் செய்த திருக்குறளாலும் நன்குணரப்படும். இன்னும், ஒருவர் எந்தப் பொருளின் உருவத்தை நினைக்கின்றனரோ அந்தப் பொருளின் நினைவுருவத்தை பாரடக்22 என்னும் மேனாட்டாசிரியர் படம் பிடித்துக் காட்டியிருக்கின்றார். ஒருவர் ஒரு பறவையின் வடிவத்தை நினைத்துக் கொண்டிருக்க, அந்நினைவுருவம் அவ்வாசிரியர் அமைத்த நுண்ணிய தட்டத்திலே பதிந்து எல்லார்க்குங் கட் புலனாக, அப்பறவையின் வடிவினைத் தோன்றக் காட்டியது.23 இங்ஙனமே பாரடக் ஆசிரியர் படம் பிடித்துக் காட்டிய நினைவுருவங்கள் எத்தனையோ பல. நம் போன்ற மக்களாகிய சிற்றுயிர்களின் எண்ணங்களும் நினைவு களுமே தாந்தம் எண்ணியவைகளையும் நினைந்தவைகளை யும் எவ்வகையான கருவியின் உதவியும் வேண்டாமல் தாமே செய்து முடிக்க வல்லனவாய் இருக்குமாயின், வரம்பற்ற ஆற்றல்மிக்க இயற்கை யறிவினனான இறைவன் எத்தகைய கருவியினுதவியும் வேண்டாமலே தான் எண்ணியவற்றை எண்ணியவாறே செய்து முடிக்க மாட்டுவான் என்பதனை யாம் எடுத்துச் சொல்லுதலும் வேண்டுமோ! ஆகவே, இறைவன் நினைவளவினாலேயே யாவுஞ் செய்ய மாட்டுவான் என்னும் அரும்பேருண்மையினை நந் தமிழ் முதுமக்கள் பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னமே கண்டறிந்தாற் போல, ஏனையோர் கண்டிலரென்பதும் நினைவிற் பதிக்கற்பாற்று. அற்றேல், உயிர்களெல்லாந் தொன்றுதொட்டே இறைவ னறிவொளியிலன்றி வேறெதன்கண்ணுங் வைகுதல் இல்லாமை யால், அவைகள் இன்னும் அவ்வறிவொளியினை முற்றும் பெறாதவா றென்னையெனின்; பகலவனொளி எங்கும் பரவி எக்காலும் விளங்குவது; அதனொளி வெள்ளத்திலேயே நாம் வைகும் இம்மாநில மாகிய பந்து மிதக்கின்றது; அங்ஙன மிருந்தும் பகலவன்னொளியில்லாத இராப்பொழுதும், அவனொளி விளங்கும் பகற்பொழுதும் மாறிமாறி வருதல் என்னை? என்று சிறிது நோக்குவோ மாயின், எக்காலும் எவ்விடத்துந் விளங்கும் இறைவ னொளியிலேயே நாம் முழுகிக் கிடந்தும் ஒருகால் அவ் வொளியினைப் பெறாது அறியாமை யிருளிற் புதைந்தும், பிறிதொருகால் அவ்வொளியினைப் பெற்று அறிவு விளங்கியும் நாம் மாறிமாறி நிற்கும் நிலையின் உண்மை புலனாகிவிடும். இந்நிலை உருண்டையானது பகலவ னொளி வெள்ளத்தில் தன்னைத்தானே சுற்றிய படியாய்ப் பகல வனைச் சூழ்ந்து சுழன்று செல்கின்றது; இந்நிலவுருண் டையின் மேற்பரப்பின் எந்தப் பக்கம் பகலவன் முகமாய்த் திரும்பு கின்றதோ அந்தப் பக்கம் மட்டுமே அப்போது பகலவன் ஒளியைப்பெற்றுத் திகழ் கின்றது; பகலவன் முகமாய்த் திரும்பாத அதன் மற்றைப் பக்கங்கள் அப்போது இருள்மிகுந்து இராப் பொழுது வாய்ந்தனவாய்ச் செல் கின்றன; நாடோறும்; நாங்காணும் இவ்விருவகை நிகழ்ச்சி களைப் போலவே, இறைவன்றன் அறிவொளி முகமாய்த் திரும்பும் பேரன்பர்கள் அவன்றன் அறி வொளியைப் பெற்று விளங்கா நிற்ப, அவ்வொளி முகமாய்த் திரும்பாத சிற்றுயிர்களோ அறியாமை யால் விழுங்கப்பட்டுப் பிறவி வட்டத்திற் கிடந்து சுழன்று சுழன்று துன்புறா நிற்கின்றன என்க. எனவே, இறைவன் தனது அறிவொளியை எல்லா வுயிர்க்கும் வழங்குதலில் என்றுங் கருத்துடைய னாயிருத்தல் போலவே, சிற்றுயிர்களாகிய நாமும் அவன்றன் அறிவொளியை நோக்குங் கருத்துடையராய் என்றும் நிற்பினல்லது அவ்வொளியிற் றோய்ந்து அதன்கட் டோன்றும் பெயராப் பேரின்பத்தினை நுகர்தல் இயலாது. மக்களாகிய நமக்கும், நம்மினுந் தாழ்ந்த சிற்றுயிர் களுக்குந் தமக்கு நன்மையாவ திதுவென அறியும் அறிவும் அந் நன்மையைப் பெறும் முயற்சியும் இயற்கையே பொருந்தி யுள்ளன. ஆகவே, அவ்வறிவையும் முயற்சியையும் எந்த வுயிர் பயன்படுத்தவில்லையோ, அவை யிரண்டையும் பயன்படுத்தி எந்தவுயிர் இறைவன்றன் அறிவொளியைப் பெற வில்லை யோ அவ்வுயிர் தன்னுடைய அறிவாற்றலும் ஆள்வினை யாற்றலுங் குன்றி வரவர அறியாமையாற் கவரப்பட்டுத் துன்புறாநிற்கும். எல்லா உயிரும் அறிவும் முயற்சியும் வாய்ந்தவனவாய் இயங்குதலும், அவ்வறிவையும் முயற்சி யையும் பயன்படுத்தும் உயிர்கள் மேன்மேல் அறிவும் இன்பமும் பெருகப் பெறுதலும், அவை தம்மைப் பயன் படுத்தாத உயிர்கள் அறிவும் இன்பமும இழந்து சாதலும் உயிர்நூல் வல்லாராலும் நன்கெடுத்துக் காட்டப்பட் டிருக்கின்றது.24 ஆகவே, என்றும் ஒரு பெற்றித்தாய் விளங்கும் இறைவனது அறிவுப் பேரொளியிற் கிடந்த படியாயிருந்தும், அவன்றன் அறிவொளியை நோக்காத குற்றம் நம்பாற் படுமேயன்றி அவன்பாற் படாதென்று கடைப் பிடித் துணர்தல் வேண்டும். அவ்வா றுணரவே, இறை வன்றன் அறிவுப் பேரொளி என்றும் விளங்கியபடியாகவே நின்று தன்னைச் சாரும் உயிரைத் தன்னைப்போல் அறிவு விளக்கம் உடையதாகவே செய்து விடுமென்பதுந் தானே உணரப் படும். அடிக்குறிப்புகள் 1. Egyptians 2. Osiris 3. Isis 4. Ea 5. Davkina 6. Samas 7. Istar 8. Hebrews 9. Genesis 10. E.B. Tylor 11. Read his Anthropology 12. Chaos 13. Cosmas 14. Sir Oliver Lodge 15 “Man and the Universe”. pp.41,42. 16. Prof. H. Drummond on Environment in his “Natural Law in the Spiritual World.” 17. Society for Psychic Research 18. Telepathy 19. Edmund Gurneys’ Phantasms of the Living. 20. Myer’s Human Personality 21. Podmores’ Thought Transference. 22. Baraduc 23. See C.W. Leadbeater’s “Some Glimpses of Occulism” pp. 132-134. 24. Read chapter on ‘Death in Prof. Henry Drummond’s “Natural Law in the Spiritual World.” 19. ஒளிவடிவே கடவுள் வடிவு இனி, இத்துணைப் பேரொளியுருவினனாகிய இறைவன், சிற்றுயிர்களாகிய நமக்குத் தன்னை விளங்கக் காட்டாமல் மறைந்திருப்பனாயின், அவனை அறியும் ஆற்றல் நம்மனோர்க்குச் சிறிதும் இல்லையே! ஒளிமுன் நின்றே ஒளியின் இயற்கையுங் கடவுளினியற்கையும் ஒன்றென் றறிய மாட்டாப் பேதைகளான நாம், ஒளிமுன் நில்லாமல் இருளிலேயே நின்று காலங் கழிக்கும் படி நேருமானால், அவ்வொளியினைக் காணமாட்டுவமோ, அங்ஙனம் ஒளியென்பது ஒன்றுண்டென்றுதான் அறிய மாட்டுவமோ? ஒரு சிறிதும் மாட்டோமன்றோ? ஆதலால், எல்லா அருளும் எல்லா இரக்கமும் ஒருங்குடைய முதல்வன் தன்னை என்றும் ஒளிவடிவில் வைத்தே ஏழை யறிவினராகிய எமக்குத் தன்னைக் காட்டிய வண்ணமாய்த் திகழா நிற்கின்றான். ஒளிவடிவு ஒளியுடைப் பொருளின் வாயிலாக விளங்கித் தோன்றுமேயல்லாமல், ஒளி இல்லாத கல் மண்நீர் என்னும் பொருள்களிலும், உருவேயில்லாத காற்றிலும் விளங்கித் தோன்றாது. அற்றேல், ஒளியேயில்லாத விளக்குத் திரியிலுஞ், சிகிமுகிக் கல்லிலுங் கட்டையிலும், இரும்புக்கம்பி செப்புக்கம்பி முதலியவை களிலும் ஒளியுருவு புலனாய்த் தோன்றுதல் என்னையெனின்; ஒளியில்லா அந்தத் திரி முதலியவைகளை ஒரு பற்றுக் கோடாக் கொண்டு அஃது அவைகளிற் செயற்கை யாய்த் தோன்று கின்றதே யன்றிப், பகலவனில் அஃது என்றும் இயற்கை யாய்த் தோன்றி விளங்குமாறுபோல் அவற்றின்கண் அஃது இயற்கையாய்த் தோன்றுகின்றிலது என்க. இன்னும், இறைவன் உருவமாயே இருப்பவனும் அல்லன்; அன்றி அருவமாயே யிருப்பவனும் அல்லன், உருவமாயே இருப்பன் எனக்கொள்ளின், அருவமாதற்குரிய ஆற்றல் அவன்பால் இல்லையென்றும், அருவமாய் நின்று எத்தகைய பொருளையும் அசைத்து ஆட்டும் ஆற்றல் வாய்ந்த காற்று முதல்வனிலும் மிக்கதென்றுங் கொள்ளப் படும். அவ்வாறு கொள்ளப்படின், அறிவில்லாத காற்றுக் கடவுளாதல் யாங்ஙனமென மேல் எழுப்பிய தடைக ளெல்லாம் மீண்டும் எழும். ஆதலாற், கடவுள் காற்றினும் பார்க்க நுண்ணிய தன்மை வாய்ந்த அருவநிலையிலும் நிற்கவல்லவனென்பதே முடிக்கப்படும். அதுவேயுமன்றி, அங்ஙனம் அருவாயும் உருவாயும் நிற்கவல்ல முதல்வன் அவ்வாற்றால் அருவுருவமும் உடையனா மென்பதுந் தானே போதரும். இறைவன் இங்ஙனம் அருவாயும் உருவாயும் அருவுருவாயும் நிற்கவல்லனென்னும் உண்மையை நந்தமிழ்ச் சான்றோர்கள் கண்டறிந்தமைக்குச் சிவஞான சித்தியாரிற் போந்த, அருவமோ உருவா ரூவ மானதோ அன்றி நின்ற உருவமோ உரைக்குங் கர்த்தா வடிவெனக் குணர்த்திங் கென்னில், அருவமும் உருவா ரூவ மானதும் அன்றி நின்ற உருவமும் மூன்றுஞ் சொன்ன ஒருவனுக் குள்ள தாமே என்னுந் திருப்பாட்டே சான்றாம். எனவே, நங் கண் முதலிய பொறிகளுக்குப் புலனாகும் நிலன் நீர் நெருப்பு காற்று என்னும் நாற்பெரும் பொருள்களில், இறைவன் தன்னைப் போல் அருவாயும் உருவாயும் அருவுருவாயும் ஒளி கிளர்ந்து நிற்குந் தீப்பிழம்பின்கண்ணே தான் புலனாய்த் தோன்றி நின்று எல்லா வுயிர்க்கும் அருள் வழங்குகின்றா னென்பதும் முடிக்கப்படும். யாங்ஙனமெனிற், காட்டுதும். தீயானது, காற்று நீர் நிலம் என்னும் ஏனையெல்லாப் பொருள்களிலும் ஊடுருவி நிறைந்து நிற்கும் அருவ நிலையும், அப்பொருள்களிற் சிலவற்றின்கண்ணே தான் விளங்கித் தோன்றுதற்கேற்ற காரணம் உண்டாய வழித்தான் அனற் கொழுந்து வடிவாய்ச் சுடர்ந்து திகழும் உருவ நிலையுங், கையாற் பற்றப்படாத அருவ நிலையுடன் கண்ணாற் பற்றப்படும் உருவ நிலையும் ஒருங்குடைமையின் அருவுருவ நிலையும் வாய்ந்ததாய் நிற்குந் தனிப்பேருண்மை அறிஞரனைவரும் நினைவிற் பசுமரத்தாணிபோற் பதித்துக்கொளற் பாலார். எனவே, காற்று அருவமாயே நிற்றலானும், நீரும் நிலனும் உருவமாயே நிற்றலானும், மேலும் இவை மூன்றும் ஒளியுடைப் பொருள்களாய் விளங்காமையானும், எல்லையற்ற பேரொளியினனான முதல்வன் தன்னையொப்ப அருவாயும் உருவாயும் அருவுருவாயும் பெருகொளி மருவி யொளிருந் தீவடிவின் மட்மே இயல்பாக விளங்கித் தோன்றுவனல்லது, ஏனைக் காற்றினும் நீரினும் நிலத்தினும் விளங்கித் தோன்றுவானல்ல னென்பது கடைப்பிடித்துணர்தல் வேண்டும். தீவடிவே இறைவன் வடிவென்னும் உண்மையைத் தமிழ்ச் சான்றோரே முதன்முதற் கண்டறிந்தவரென்பதற்குச், சுடர்கின்ற கோலந் தீயேயென மன்னு சிற்றம்பலவர் என்று சைவசமய முதலாசிரியராகிய மாணிக்கவாசகப் பெருமான் வலியுறுத்தி அருளிச் செய்தவாறு போலவே, அவர்க்குப்பின் வந்த ஏனைச் சைவ சமயாசிரியரும், மெய்கண்ட தேவர் முதலான சைவசித்தாந்த ஆசிரியரும் பிறருமெல்லாம் ஒரு காலன்றிப் பலகாலும் பற்பல இடங்களிலும் அடுத்தடுத்து ஓதுமாற்றால் நன்கு விளங்காநிற்கும். அவற்றின் விரிவெல்லாம் எமது மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் என்னும் நூலிற் கண்டுகொள்க. இன்னுந் தீயின்றமையும் இறைவன் றன்மையும் எல்லா வகையாலும் ஒத்துநிற்றலும், அந் நூலிலும் எம்முடைய திருவாசக விரிவுரையிலுஞ் சைவ சித்தாந்த ஞானபோதத் திலும் அங்ஙனமே விரிவாயெடுத்து விளக்கப் பட்டிருக்கின்றது. எனவே, ஒளிவடிவே கடவுள் வடிவு எனக்கொண்டார் பண்டுதொட்டு இன்றுகாறு முள்ள நந் தமிழாசிரியர் எல்லாம் என்பதை எல்லாருங் கருத்திற் பதித்துக் கொள்ளல் வேண்டும். 20. ஒளிவு வடிவு சிவமும் உமையும் இனி, ஒளிவடிவை உற்று நோக்குவோமாயின், அது சிவந்த நிறம் அல்லது பொன்னிறம் உடையதாயும், அந்நிறத்தின்கண்ணே அடங்கிய ஒரு சிறு நீலநிறமும் உடன் கூடியதாயும் இருத்தலை அறிந்து கொள்ளலாம். தீயின் றன்மை கடுந்தன்மையேயாகும்; தீயின் நிறமுஞ் சிவந்த நிறமேயாகும்; அத் தீயின்கண் அடங்கிய நீரின்றன்மையோ குளிர்ந்த தன்மை யாகும்; அந்நீரின் நிறமோ நீலநிற மாகும். மேலும், வன்றன்மை யுடைய தீ ஆண்டன்மையது என்றும் மென்றன்மையுடைய நீர் பெண்டன்மையது என்றும் பகுத்துணர்ந்து கொள்ளல் வேண்டும். ஆனதனாற்றான், வன்றன்மையுஞ் சிவந்த நிறமும் உடையவன் சிவபிரான் என்றும், மென்றன்மையும் நீலநிறமும் உடையவள் உமைப்பிராட்டி யென்றுந் தமிழ் நூல்களெல்லாம் ஒத்து ஒருமுகமாய் உரைக்கின்றன. அவ்வுண்மைக்குச் சிவனெனு நாமந் தனக்கே யுடைய செம்மேனி எம்மான் என்னும் அப்பர் திருமொழியும், நீல மேனி வாலிழை என்னும் பழைய ஐங்குறு நூற்றுச் செய்யுட் சொற்றொடருமே உறுபெருஞ் சான்றாம் என்க. சிவன் என்னுஞ் சொல் முருகப் பிரான் பெயராகப் பண்டைத் தொல்காப்பிய நூலுள் ஓதப்பட்ட சேயோன் என்னுஞ் சொல்லின் திரிபேயாகும் இனி, இற்றைக்கு ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட பழைய பத்துப்பாட்டு எட்டுத்தொகை முதலிய நூல்களிலாதல், அவற்றிற்கும் முற்பட்ட தொல்காப்பிய நூலிலாதல் சிவன் என்னும் பெயர்ச்சொற் காணப் படாமையின், அது தென்னாட்டிலிருந்த பண்டைத் தமிழ்ச் சான்றோர் வழங்கிய சொல்லன்றென்பது அங்கையங்கனி போல் நன்கு விளங்கா நிற்கும். அஃதங்ஙனந் தமிழ்ச் சான்றோர் வழங்கிய சொல் அன்றாயிற், பின் அது வந்த வரலாறுதான் யாதோவெனிற் கூறுதும், தமிழ்மக்கள் பண்டைக் காலத்தே, அஃதாவது சிறிதேறக் குறைய ஐயாயிர ஆண்டுகளுக்கு முன்னமே இவ்விந்திய நாடெங்கும், அஃதாவது வடக்கே பனிமலை முதல் தெற்கே குமரியாறு வரையிலும், இன்னும் இவ்விந்திய நாட்டுக்குப் புறம்பே யுள்ள மேல் கீழ் நாடுகளிலும் பரவி யிருந்தோராவர் என்னும் உண்மை நடுநிலைவழா வெள்ளைக்கார ஆசிரியர்களால் மிகச்சிறந்த சான்றுகள் கொண்டு நன்குவிளக்கிக் காட்டப்பட்டு வருகின்றது. தமிழுக்குந் தமிழ் மக்கள் நாகரிகத்திற்குந் தொன்மை கூற ஒருப்படாத பார்ப்பனரும் அவர் வழிச் சார்ந்தாருங்கூட அது கண்டு தமிழரின் பண்டைச் சிறப்பினை ஒப்புக்கொண்டு கூற முன் வந்திருக்கின்றனர். ஆதலால், தமிழ்மக்கள் பண்டை நாளில், ஆரியர் இந்திய நாட்டுட் புகும் முன்னமே வடமேற்கே சிந்தியாறு பாயும் பஞ்சாபு மாகாணம் வரையிலும் பரவி, நாடு நகரங்களும் மலையரண்களும் வகுத்து நாகரிகத்திற்றலை சிறந்து வாழ்ந்து வந்தனரென்னும் எமதுரை சிறிதும் ஐயுறற்பாலதன்றென்பது நினைவிற் பதிக்கற் பாற்று. அங்ஙனம் ஆரியர் வருதற்கு முன்னமே பஞ்சாப் மாகாணத்திற் சிறந்துயிர்வாழ்ந்த பண்டைத் தமிழ் மக்களின் அழிந்துபட்ட நகர்களாகிய அரப்பா மொகிஞ்சதரோ என்பவைகளை அகழ்ந்தெடுத்த ஆங்கில ஆசிரியர்கள், அகழ்ந்தெடுத்த அரும்பொருள்களுட் சிவபிரான் றிருவுருக் களுஞ் சிவலிங்கத் திருவுருக்களும் மிகுதியா யிருத்தலைக் குறிப்பிட்டுச், சிவபிரானை வழிபடுஞ் சைவசமயமானது பண்டைத் தமிழ் மக்கட்கேயுரிய தாதலுடன் அதுவே உலகத்திலுள்ள எல்லாச் சமயங் களினும் மிக்க பழமை யுடையதாகவுங் காணப் படுகின்றது என இவ் வரும்பே ருண்மையினை ஒளியாமல் திறந்து சொல்லியிருக்கின்றனர்.1 ஆதலாற், சிவன் என்னும் பெயர் இவ்விந்திய நாட்டின் வடமேற்கே யிருந்த பண்டைத் தமிழ் மக்களால் ஐயாயிர ஆண்டுகட்கு முன்னமே ஆக்கப்பட்டு எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளுக்குரிய சிறப்புப்பெயராக வழங்கப்பட்ட பான்மை தெளியற்பாற்று. ஆரியர் வருதற்கு முன்னமே சிவன் என்னுஞ் சொல் முழுமுதற் கடவுளுக்குச் சிறப்புப் பெயராகப் பழந்தமிழ் மக்களால் வழங்கப்பட்டு வந்தமையாலன்றே, பெரும் பாலும் ஆரியர் கொணர்ந்த சிறுதெய்வப் பாட்டுகளுஞ் சிறுபான்மை தமிழ்ச் சான்றோர் இறைவனாகிய உருத்திரன் தீக்கடவுள் பகலவன்மேல் ஆரியமொழியிற் பாடி வைத்த ப ட்டுகளும் ஒருங்கு விரவிய இருக்கு வேதத்தில் ஏபி: சிவ(10 19, 9) எனச் சிவன் என்னும் பெயர் காணப்படுவ தாயிற்று. ஆரிய மொழி நூல்களில் இருக்கு வேதமே மிகப் பழமையானதென்னுங் கொள்கை ஆராய்ச்சி வல்ல இஞ்ஞான்றை ஆசிரியர் (10, 92, 9) எல்லார்க்கும் ஒப்பமுடிந்த தொன்றாகலின், அதன்கட் போந்த சிவன் எனுஞ் சொல்லும் அந்நூலுக்கும் முந்திய தென்பதூந் தானே போதரும். எனவே, இவ்விந்திய நாட்டின் வடமேற் கெல்லையில் உயிர் வாழ்ந்த பண்டைத் தமிழ்ச் சான்றோர் தாம் வணங்கிய முழுமுதற் கடவுளுக்குச் சிறப்புப் பெயராக இட்டு வழங்கிய சிவன் என்னும் பெயரே, பின்னர் ஆரிய வேதங்களிலும் அவற்றிற்குப் பின்வந்த ஆரிய மொழி நூல்களிலும் பையப் பைய நுழைந்து, கி.பி. முதல் நூற்றாண்டிற்குப்பின் வட நாட்டிலிருந்து தொகுதி தொகுதியாய்த் தமிழ்நாட்டிற் குடி புகுந்து வைகிய திராவிட ஆரியரிற் சிவபிரான் வழிபாட்டில் உறைத்துநின்ற சைவசமயத்தவர் வாயிலாகத் தென்றமிழ் நாட்டிற் பரவி வழங்கித் தமிழ் நூல்களிலும் புகுந்து நிலைபெறலாயிற்று. வடுக நாட்டிலிருந்து போந்து பாண்டி நாட்டிற் குடியேறிய மாணிக்கவாசகப் பெரு மானின் குடும்பத் தார் திராவிட ஆரிய அந்தணரிற் சிவ நெறி கடைப்பிடித் தொழுகிய சைவமரபின ரென்பதும், அக் குடும்பத்தவர்க்கு மணிக்கலனாய் விளங்கிய மாணிக்க வாசகரே தாங் கொணர்ந்த சிவன் எனும் பெயரைத் தாம் அருளிச் செய்த திருவாசகம், திருச்சிற்றம்பலக் கோவையார் என்னும் ஒப்புயர்வில்லாத் தனித்தமிழ் மாமறைகளின் வாயிலாக இத்தென்றமிழ் நாட்டிற்கு வழங்கிய வள்ளலுஞ் சைவசமய முதலாசிரியரும் ஆவரென்பதும் ஆராய்ச்சியாற் புலனாகின்றன. ஆகவே, சிவன் எனுஞ் சொல் வடக்கிருந்து போந்து இத்தென்றமிழ் நாட்டில் வைகிய சைவசமயப் பெரியாரால் வழங்கவிடப்பட்ட உண்மை நினைவிற் பதிக்கற்பாற்று. அங்ஙனமாயின், இத் தென்றமிழ் நாட்டில் உயிர் வாழ்ந்த பண்டைத் தமிழாசிரியர் தாம் வணங்கிப் போந்த முழுமுதற் கடவுளுக்கு இட்டு வழங்கிய சொல் யாதோ வெனிற், கூறுதும். இப்போது கிடைத்திருக்கும் பழந்தமிழ் நூல்களுள் மிகப் பழையது தொல்காப்பியம் ஒன்றே யாகும். அதன்கட் கூறப்பட்ட கடவுட் பெயர்கள் சேயோன், மாயோன், கொற்றவை என்பவைகளே யாகும்; சேயோன் என்பது சிவந்த நிறத்தினனான முருகப் பிரானைக் குறிக்கின்றது; மாயோன் என்பது கரிய அல்லது நீல நிறத்தினனான திருமாலைக் குறிக்கின்றது; கொற்றவை என்பது வெற்றிபெற்ற திரிபுரசுந்தரி அல்லது முப்புரம் எரி செய்த அம்மையைக் குறிக்கின்றது; கொற்றம் என்னுஞ் சொல் வெற்றியைக் குறிக்கும். திரிபுரம் எரித்த அம்மை யைக் கொற்றவை என்று தொல்காப்பியங் கூறினமையால், அவ்வம்மையை ஒருபாலுடையனாய்த் திரிபுரம் எரித்த அப்பனுக்குக் கொற்றன் என்னும் பெயரும், அக் காலத்தே வழங்கப்பட்டமை உய்த்துணரப்படும். அதனாலன்றே கொற்றன் என்னுஞ் சொல் தொல்காப்பிய உரையாசிரியரில் மிகப் பழையரான இளம்பூரணர் உரையிற் பலவிடங்களிலும் எடுத்துக் காட்டப்பட்டிருக் கின்றது. இனித், தொல்காப்பியத்திற்கு அடுத்தபடியிற் பழமை யானதுங், குமரிநாட்டில் ஓடிய பஃறுளியாறு கடல்வாய்ப்படு முன் இயற்றப்பட்டதுமான வடாஅது பனிபடு நெடுவரை வடக்குந் தெனா அ துருகெழு குமரியின் றெற்கும் என்னுங் காரிகிழாரது புறப்பாட்டிற் பணியிய ரத்தைநின் குடையே முனிவர் முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே எனச் சிவபெருமான் முக்கட்செல்வர் என்று நுவலப் படுகின்றனன், இச்செய்யுள் ஐயாயிர ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட தொன்றாகலின் இதன்கண் நுவலப் பட்ட முக்கண்ணான் என்னுஞ் சொல் பண்டைத் தமிழ் மக்களால் முழுமுதற் கடவுளுக்குச் சிறப்புப் பெயராக வைத்து வழங்கப் பட்டமை நன்கு தெளியப்படும். இச்செய்யுள் இயற்றப்பட்ட காலத்தில் தமிழ்மக்களும் அவர் வழங்கிய தமிழ் மொழியும் வடக்கே பனிமலையாகிய இமயம் வரையிற் பரவி யிருந்தமை வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும் என்னும் இதன் முதலடியாற் புலனாகின்றது; அதுவேயுமன்றி, அந்நாளிற் சிவபிரானுக்குத் திருக்கோயில் இருந்தமையும் இதனாற் பெறப்படுகின்றது. இன்னும், பெருங்கடுங்கோன் என்னும் பழைய நல்லிசைப் புலவர் பாடிய பாலைக்கலியின் முதற்பாட்டின்கண், முக்கண்ணான் மூவெயிலும், உடன்றக்கால் முகம்போல ஒண்கதிர் தெறுதலின் என முக்கண்ணான் என்னும் பெயர் சிவபெருமானுக்குச் சிறப்புப் பெயராக ஓதப்படுதலும், அவன் முப்புரம் எரித்த வரலாறு கூறப்படுதலும் நினைவிற் பதிக்கற்பாற்று. இனி முக்கண்ணான் என்னும் பெயரேயன்றிச் சடையன் என்னும் பெயரும், மணிமிடற்றண்ணல் என்னும் பெயருஞ் சிவபிரானுக்குரியனவாகப் பண்டை நாளில் தமிழகத்தில் வழங்கப்பட்டமை, இமயவில் வாங்கிய ஈர்ஞ்சடை யந்தணன் என்னுங் குறிஞ்சிக்கலிப்பாவின் அடியாலும், மணிமிடற் றண்ணற்கு மதியாரற் பிறந்தோய் நீ என்னும் பரிபாடல் ஒன்பதாம் பாடலின் அடியாலுந் தெற்றென விளங்கா நிற்கின்றது. எனவே, முக்கண்ணான், சடையன், மணிமிடற்றான் என்னும் பெயர்களே சிவபிரானுக்குரிய சிறப்புப் பெயர்களாகத் தென்றமிழ் நாட்டின்கட் பண்டிருந்த சான்றோர்களால் வழங்கப்பட்டமை நன்கு பெறப்படுதல் காண்க. அற்றேல், வடநாட்டிலிருந்த பண்டைத் தமிழர் உருத்திரன், சிவன் என்னும் பெயர்களாற் குறித்த கடவுளும், தென்னாட்டிலிருந்த பழந்தமிழாசிரியர் முக்கண்ணான், சடையன், மணிமிடற்றான் என்னும் பெயர்களாற் குறித்த கடவுளும் ஒன்றே என்பதற்குச் சான்று என்னையெனிற், காட்டுதும் மூவெயில் எரித்த அருட்செயல் முக்கண்ணான் செய்த தொன்றாகக் கலித்தொகை கூறுமாறு போலவே, உருத்திரன் மேலனவான இருக்கு வேதப் பதிகங்களுங் கூறாநிற்கின்றன. கடுந்தன்மையனான தீக்கடவுளே நீ, ஒரு வில் லாண்மை வல்லானை யொப்பவுங் கூர்ங்கொம்புவாய்ந்த ஒரு காளை யினையொப்பவும் புரங்களைப் பொடி செய்தனை என இருக்குவேத ஆறாம்மண்டிலம் (16, 36) பகர்தல் காண்க. இப்பதிகந் தீக்கடவுள் மேலதாகக் காணப்படினும், அக்நி, நீயே உருத்திரன், (த்வம் அக்நே ருத்ரோ 2,1,6) என்று அவ்விருக்கு வேதமே பலவிடங்களிலும் ஓதக்காண்டலானுஞ் சைவசமய ஆசிரியரான திருநாவுக்கரசு நாயனார், எரிபெ ருக்குவர் அவ்வெரி ஈசனது உருவ ருக்கம தாவது உணர்கிலார் என அருளிச் செய்தவாறு போலவே ஏனை ஆசிரியன் மாரும் அருளிச் செய்திருத்தலானுந் தீவடிவே சிவபிரான் வடி வென்பதூஉந், தீக் கடவுண் மேற்றாக கூறிய முந்நகரழிவு (திரிபுர தகனம்) சிவபிரான் தன்னடியாரைக் காக்கச்செய்த ஒரு பேரருட்செயலேயா மென்பதூஉம், அச்செயலை முக்கண்ணான் மேற்றாகக் கூறும் பழந்தமிழ் நூல்களும் உருத்திரன் மேற்றாகக் கூறும் இருக்குவேதம் முதலான பழைய வடநூல்களும் அவ்வாற்றாற் சிவபிரான் மேலதாகவே அவ்வருட் பெருஞ் செயலை எடுத்தோதின வென்பதூஉம் கடைப்பிடித் துணர்தல் வேண்டும். இனிச், சடையன் எனும்பெயர் முக்கட்பிரானுக் குரியதாகப் பழந்தமிழ் நூல்கள் நுவலுமாறு போலவே, இருக்குவேதமும் (1, 114, 1), வலியோனுஞ், சடைமுடி வாய்ந்தோனும் வீரர் களுக்குத் தலைவனுமான உருத்திரனுக்கு (இமா: ருத்ராய தவஸே கபர்திநே க்ஷயத்வீராய) என ஓதா நிற்கின்றது. இவ்விருக்கு வேதவுரையிற் போந்த கபர்திந் என்னுஞ் சொல் சடையன் என்னும் பொருளே தருவது. உருத் திரன்மேற் பாடப்பட்ட இருக்குவேதப் பதிகங்கள் பலவற்றிலும் இக் கபர்திந் என்னுஞ் சொல் அவற்குரிய தொன்றாகவே வழங்கப்பட்டு வருதல் கொண்டுஞ், சடையன் என்னுந் தமிழ்ச்சொல்லாலுங், கபர்திந் என்னும் வடசொல்லாலுங் குறிக்கப்பட்ட கடவுள் சிவபிரான் ஒருவனே என்பது வெள்ளிடை மலைபோல் விளங்காநிற்கின்றது. இனி, மணிமிடற்றான் என்னும் பெயர், ஒரு காலத்திற் றன் னடியவர்களைக் கொல்வான் வேண்டி எழுந்த ஒரு கொடும்பாம்பின் நஞ்சைச் சிவபிரான் பருகி, அதனைத் தன் மிடற்றின்கண் அடக்கி அவர்களைத் காத்த காரணத்தால் வந்த தொன்றாகும். அந்நஞ்சு தங்கிய அவனது கழுத்து நீலமணி பதித்ததுபோற் றோன் றியதாகலின் அவன் அதுபற்றித் தமிழில் மணிமிடற்றான் எனவும், வடநூல்களில் நீலகண்டன் எனவும் வழங்கப் படுவானாயினன். இறைவன் இங்ஙனம் நஞ்சைப் பருகித் தன்னை அடைக்கலம்புக்க தேவர்களைக் காத்த வரலாறு இருக்குவேதப் பத்தாம் மண்டிலத்தின்கண் (12 6), நீண்ட சடைகளையுடையவன், ஓர் உருத்திரன் கொணர்ந்த பரிகலத்திலிருந்த நஞ்சைப் பருகினான் (கேஸி விஷய பாத்ரேண யத் ருத்ரேணாபிபத் ஸக), என்று நுவலப்படுதல் காண்க. இன்னும் இங்ஙனமே முக்கண்ணான் செய்தனவாகத் தமிழ்நூல்கள் புகலும் அருட்பெருஞ் செயல்களும், உருத்திரனுஞ் சிவபெருமானுஞ் செய்தனவாக வட நூல்கள் எடுத்துரைக்கும் பேரருட் செயல்களும் எல்லா வாற்றாலும் ஒருங்கொத்து நிற்றலின், முக்கண்ணான், சடையன் மணிமிடற்றான் என்னுந் தமிழ்நூற்பெயர் களாலும் உருத்திரன் சிவன் என்னும் வடநூற்பெயர் களாலும் குறிப்பிடப்பட்ட முழுமுதற் கடவுள் சிவபெரு மான் ஒருவனே யென்பது அங்கையங்கனிபோல் நன்கு விளங்காநிற்குமென்க. அற்றேல், எல்லாம்வல்ல இறைவனுக்குப் பழைய தமிழ்நூல்களிலும் வடநூல்களிலும் வழங்கிய முக்கண் ணான் உருத்திரன் முதலான பலபெயர்கள் இருக்க, அவற்றுள் ஒன்றான சிவன் என்னும் பெயர்மட்டும் ஏனைப் பெயர்கள் எல்லாவற்றினுஞ் சிறந்ததாக எடுக்கப்பட்டு முதல்வனுக்கு வழங்கலானதும், அப்பெயரின் வழியே முழுமுதற்கடவுளை வழிபடுந் தமிழரது கொள்கை அல்லது மதம் சைவம் எனப் பெயர் பெறலானதும் என்னை யெனின்; சிவன் என்னுஞ் சொல்லே ஏனை யெல்லாவற்றி னும் மிக்க பழமையுடைய தொன்றென்பது. மற்றைப் பண்டை மக்களிற் பலர் அச்சொல்லையே இறைவனுக்குச் சிறந்த பெயராக வைத்து வழங்கியவாற்றால் அறியப்படு கின்றது. எபிரேயர்2 தாம் வணங்கிப் போந்த கடவுளைக் கிகோவா3 என்றே அழைத் தனர்; கிரேக்கர்4 அதனைச் சியூ5 என்றே அழைத்தனர்; உரோமர்6 அதனைச் சூபிதர்7 என்றே அழைத்தனர்; இவ் வயலவர் வழங்கிய அச்சொற்களெல்லாஞ் சிவ என்னுஞ் சொல்லின் திரிபேயன்றி வேறல்ல. மேல் நாடுகளில் அஞ்ஞான்று வாணிகம் நடாத்திய பண்டைத் தமிழரின் வாயிலாகச் சிவ என்னுஞ் சொல் அயல்நாட்டு நாகரிக மக்களிடையே பரவினாற் போற், சிவபிரானைக் குறிக்கும் ஏனைப் பெயர்ச்சொற்கள் அம் மக்களிடையே பரவக் காணாமையின், வடக்கிருந்த பழந்தமிழர் வழங்கிய சிவ என்னுஞ் சொல்லே ஏனையெல்லாவற்றினும் மிக்க பழமை யுடைத்தென்பது தெளியப்படா நிற்கும். அதனாற்றான், சிவ என்னுஞ் சொல் தமிழர் வணங்கிய முழுமுதற் கடவுளுக்குச் சாலச் சிறந்த பெயராகவும், அவரது மதம் அச்சொல்லின் வழியே சைவம் என்னுஞ் சிறப்புப்பெயருடையதாகவும் வழங்கி நிலைபெறலாயின வென்று ஓர்ந்து கொள்க. இனிப், பண்டைக்காலத் தமிழர், ஒளிவடிவிற் சிவந்த நிறமுங் கடுந்தன்மையும் வாய்ந்து தோன்றிய அனலுருவை முக்கண்ணான் சடையன் எனப் பெயர் வைத்து வணங்கிய வகையினால், முழுமுதற் கடவுளின் றிருவுருவம் நங் கட்புல னெதிரே விளங்கித் திகழும் அருண் மாட்சியினையும் ஒருசிறிது விளக்கிக் காட்டுவாம். இறைவன் எங்கும் ஒளியுருவாய்த் தோன்றி நின்று நமக்குக் கண்ணறிவை விளக்கு முகத்தால் நமது மனஅறிவைக் கிளரச்செய்து, அதன்வழியே நமக்கு இன்பத்தையும் மேன்மேற் பெருக வைத்துவரும் அருட் பெருந்திறம் மேற்போந்த இந்நூற்பகுதிகளால் நன்குணரக் கிடக்கும். அதனால், இறைவன்றன் ஒளிவிளக்கம் இல்லாத இடம் எங்குமே இல்லையென்பதனை எல்லாருங் கருத்திற் பதித்துக் கொள்ளல்வேண்டும். அற்றேல், பகவலன் வெளிச்சம் இல்லாத இராக் காலத்தில் இறைவன்றன் ஒளிவிளக்கம் இல்லாதுபோதல் என்னை யெனின்; அற்றன்று, இராக்காலத்தும் மதியொளி வான் மீனொளி மின்னொளி முதலான இயற்கை யொளிகள் காணப் படுதலுடன், பல்வகை விளக்கொளியாகிய செயற்கை யொளியும் மக்களின் அறிவுமுயற்சியால் எங்குங் கிளர்ந்து தோன்றி மக்களும் ஏனைச் சிற்றுயிர்களும் இயங்குதற்கு உதவிபுரிகின்ற தாகலின் இராக்காலத்தில் ஒளியே யில்லையென்று கட்டுரைத்துச் சொல்லுதலும் அடாது. அஃதொக்கும் மக்களின் அறிவு முயற்சியாற் றோன்றுஞ் செயற்கை விளக்கொளியையும் இறைவனொளி யென்றல் ஒக்குமோவெனின், ஒக்கும்; என்னை? விளக்கொளி தோன்றுதற்கேற்ற எண்ணெய் கர்ப்பூரம் எரி கந்தகம் பஞ்சு முதலான பொருள்கள் மக்களாற் படைக்கப் பட்டன அல்ல; அவையும் அவைபோல்வன பிறவும் இறை வனொருவனாலேயே படைக்கப்பட்டனவாகும்; அவை தம்மை யெடுத்துப் பயன்படுத்தி ஒளியினை வருவித்துக் கொள்ளும் அத்துணையே மக்களின் செயலாகு மன்றி, அப் பொருள்களின் உதவியின்றி ஒளியினை யுண்டாக்குந் திறம் அவரது செயலுக்கு இல்லாமையின், அங்ஙனம் அவராற் செயற்கையாய்த் தோற்று விக்கப்படும் விளக்கொளியும் இறைவனொளியே என்றற்கு ஏதும் ஐயம் இல்லையாகலின் என்க. இனிப், பகலவன் முகமாய்த் திரும்பாத இந்நில வுருண்டையின் ஒரு பாதிப்பக்கமே இருள் செறிந்த இராப் பொழுது வாய்ந்ததாய் இருக்கின்றதன்றி, அவன் முகமாய்த் திரும்பும் அதன் மற்றைப் பாதி அவனது பேரொளி யினைப் பெற்று விளக்கமுடையதாயே திகழ்கின்றது. இங்ஙனமே திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி முதலான ஏனையுலகங்களும் உருண்டை வடிவின வாய்ப் பகவலனைச் சுற்றி யுருண்டு செல்லுஞ் செயலினவாய் இயங்குதலின் அவைகளின் ஒரு பாதியும் எஞ்ஞான்றும் பகலவன் ஒளியில் மூழ்கி ஒளிவிளக்கம் வாய்ந்தனவாகவே வயங்கா நிற்கின்றன. இங்ஙனமாக, இவ்வுலகங்களின் மாப் பெரும் பரப்பெல்லாம் ஒளிவடிவாயே விளங்குதலுடன், பகலவனும் பகலவனைச் சூழ்ந்து செல்லும் ஏனையுலகங் களும் இயங்குதற் இடனாய், எல்லை காணப்படாமல் எங்கும் விரிந்து நிற்கும் வான்வெளியுந் தன்கண்ணே இருள் திணிந்த இடம் ஓர் அணுத்துணையுமின்றி, எங்கும் ஒரே பேரொளி தோய்ந்து பெருவிளக்கமுடையதாய் எக்காலும் விளங்கி நிற்றலையுங் கருத்தூன்றி நோக்குதல் வேண்டும். இவ்வாறு, பேரொளி வடிவாய் எல்லையின்றி எக்காலும் விளங்காநின்ற வான் வெளியின் மிக நுண்ணிய வடிவே, எங்கும் நிறைந்த முழு முதற் கடவுளின் திருவுருவ மாகுமென்பது தான் பண்டைக் காலந் தொட்டுத் தமிழ்மக்கட்கே யுரிய விழுமிய கொள்கை யாய் வருதல் கடைப்பிடித்துணர்தல்வேண்டும்; இது, நிலன்நீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன் புலனாய மைந்தனோ டெண்வகையாய்ப் புணர்ந்துநின்றான்; உலகே ழெனத்திசை பத்தெனத்தான் ஒருவனுமே பலவாகி நின்றவா தோணோக்க மாடாமோ என்னுந் திருவாசகத் திருப்பாட்டாலும், தானே யிருநிலந் தாங்கிவிண் ணாய் நிற்குந் தானே சுடும்அங்கி ஞாயிறு திங்களுந் தானே மழைபொழி தையலு மாய்நிற்குந் தானே தடவரை தண்கடற் கண்ணே என்னும் திருமந்திரத் திருமொழியாலும், உலகமே யுருவ மாக யோனிகள் உறுப்ப தாக இலகுபே ரிச்சா ஞானக் கிரியையுட் கரண மாக அலகிலா உயிர்ப்பு லன்கட் கறிவினை யாக்கி யைந்து நலமிகு தொழில்க ளோடு நாடகம் நடிப்பன் நாதன் என்னுஞ் சிவஞானசித்தித் திருச்செய்யுளாலும் இனிது விளங்காநிற்கும், இங்ஙனமாக, நங் கட்புலனெதிரே இயங்கா நின்ற மாப் பேருலகங்களும், இவை தமக்கு இடனாய் எல்லையின்றி எங்கும் விரிந்து இலங்காநின்ற நுண்ணிய வான்வெளியும் எல்லாம் என்றும் மங்கா இலகு பேரொளியுடன் சுடர் விரிந்து துலங்கக் காண்டலால், இவ்வொளியின் எல்லை யற்ற பரப்பே எல்லையின்றி எங்கும் விரவி விளங்காநின்ற இறைவன்றன் றிருவுருவமாகப் பண்டைத் தமிழராற் கருதி வழுத்தப்படுவ தாயிற்று. இவ்வாறு வரம்பற்ற வான் வெளியின் ஒளிப்பரப்பு இறைவன்றன் றிருவுருவமாகக் கருதப்படவே, அவ் வான் வெளியிற்றிகழும் ஞாயிறுந், திங்களும் அத் திருவுருவத்திற்கு இரண்டு கண்களாகவும், வான் அளாவிநிற்கும் எரிமலைகளின் முகட்டிற் கிளர்ந்து தோன்றும் பேரனற்கொழுந்து, அவ் விருகண்களின் இடையே நுதலின்கட் சுடர்ந்தெரியும் நெற்றிக் கண்ணா கவுங் கருதப்படலாயின. இங்ஙனம் ஞாயிறு திங்கள் தீ என்னும், முச்சுடரும் இறைவனுக்கு மூன்று கண்களாகக் கருதப்பட்ட காரணத்தினாலேதான், பண்டைத் தமிழ கத்தில் அவன் முக்கண்ணான் என்னும் பொருள் பொதிந்த பெயரால் வழங்கப்படுவானாயினன். இனி, எல்லாம் வல்ல முதல்வனுக்கு எழிற்பேரொளி தோய்ந்த எல்லையில்லா இடைவெளி திருமேனியாகவே, அவ்வெளியின் கீழ்ப்பரப்பாகிய இந்நிலவுலகம் அவன்றன் றிருவடியாகவும், இந்நிலவுலகுக்கு மேல் நிவந்து காணப்படும் வான்முகடு அவனது சென்னியாகவும், அவ்வான் வெளியிற் செவ்வொளி மூழ்கிப் பரவிய முகிற்குழாம் அச் சென்னியில் மிளிருஞ் செக்கச்சிவந்த சடையாகவும், இவ் வுயர்ந்த வியத்தகு காட்சியில் உச்சிக்கண் முதன்மை யுற்றுத் தோன்றும் அந்தச் சடையினையுடைய சிவபிரான் அக் காரணத்தாற் சடையன் என்னும் பெயரினனாகவுங் கருதிப் பண்டிருந்த தமிழ்ப் பெரு மக்களால் எல்லாம்வல்ல இறைவன் வழுத்தப் படலானமை நினைவிற் பதிக்கற்பாற்று. இனி, இவ்வுலகங்களைக் கடந்தும், எம்போன்ற பேதைச் சிற்றுயிர்களின் அறிவைக் கடந்தும், இறைவன் தன்னை மறைத்தே நிற்பனாயின், ஏழையேம் அவனை எம் அறிவால் அறிந்தும் எங் கட்புலனாற் கண்டுங் களித்து அவனது பேரின்பத் தேறலை மாந்திப் பிறப்பிறப்புத் துன்பங்களினின்றும் விடுபட்டு வாழும் பேரின்ப வாழ்க்கை எமக்குக் கைகூடுவது எங்ஙனம்? கண்பூவாக் குழவியைக் காதலாற் றானே பரிந்தெடுத்து அதன் பசித்துன்பம் நீங்கத் தன் றிருமுலையிற் சுரந்தொழுகுந் தீம்பாலை யூட்டுந் தாயினும் பார்க்கத் தண்ணளி கெழுமி னோனாய், எல்லாம் வல்ல இறைவன் எண்ணிறந்த இவ்வுலகங் களினூடும், இவ்வுலகங்களைத் தாங்கும் இடைவெளியினூடுந் தனது அருட்பேரொளியினைக் கிளர்ந்தெழச் செய்து, தன் பேரின்பப் பேரொளி வடிவினை, எக்காலும் எவ்விடத்தும் அண்மையிலுஞ் சேய்மையிலும் அகத்தும் புறத்தும் அறி வொளியாகவுஞ் சுடரொளியாகவும் நம் அகக்கண்ணெ திரும் நம் புறக்கண்ணெதிருங் காட்டி, ஒவ்வொரு நொடியும் நமக்கு அறிவையும் இன்பத்தையும் ஊட்டிக் கொண் டிருக்கும் இவ்வணுக்க வுண்மையினைத் தம்மைச் சொன்ன வளவிலே நம் முள்ளத்தே பளீரெனத் தோற்றுவிக்கும் முக்கண்ணான், சடையன் என்னும் இறைவன் பெயர்கள் எவ்வளவு விழுமியவாய், எவ்வளவு உயர்ந்தோங்கு நிலையினவாய்த் திகழா நிற்கின்றன! ஆகவே, பண்டைத் தமிழர் இறைவனை ஒளி வடிவிற் கண்ட காட்சி முக்கண்ணான் என்னும் பெயராற் றெற்றென விளங்குமாறு போல் ஏனைப் பெயர்களால் விளங்கக் காணாமையின், அதுவே அவர் களால் அவனைக் குறித்தற்குச் சிறந்த பெயராக வழங்கப்பட லாயிற்றென்று ஓர்ந்து கொள்க. அடிக்குறிப்புகள் 1. Sir John Marshall in his “Mohenjo-daro and the Indus Civilisation.” Vol.1. 2. The Hebrews 3. Jehovah 4. The Greeks 5. Zeus 6. The Romans 7. Jupiter 21. சைவ வைணவம் இனி, முன்னாளிருந்த தமிழர் அனைவரும் இறைவனை ஒளியுருவில் வைத்து வழிபாடு செய்யும் ஒரே கொள்கை யினராக இருந்தமையின், அவருள் எவ்வகையான மதப் பிரிவும் இருந்திலது; அதனால், மதம் என்னுஞ் சொல்லே அவர்க்குள் வழங்கவில்லை யென்பது முன்னமே விளக்கிக் காட்டப்பட்டது. வடநாட்டிலிருந்த பௌத்த சமண்மதங்களுந் திராவிட ஆரியரின் பல திறக்கொள்கைகளுந் தென்றமிழ் நாட்டிற் குடிபுகுந்து நிலைபெறத் துவங்கிய பிறகே, அஃதாவது ஆசிரியர் திருவள்ளுவர் காலத்திற்கு ஒரு நூற்றாண்டு கழிந்த பிறகே, கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து அஞ்ஞான் றிருந்த பல திறக்கொள்கைகளும் பல திறப்பெயர்களால் வழங்கத் துவங்கிய பான்மையும் முன்னரே காட்டப்பட்டது. இறைவன் வடிவு நங் கட்புலனெதிரே காணப்படும் ஒளி வடிவேயென்பது மேற்செய்த உண்மை யாராய்ச்சியிற் பெறப்பட்டமையால், தீக்கொழுந்திற் காணப்படுஞ் செவ்வொளியே முக்கட் பெருமானாகவும், அவ்வொளியில் அடங்கிச் சிறிதே தோன்றும் நீலவொளியே உமையம்மை யாகவும் வைத்து வணங்கப்பட்டன. நீண்டகாலம் வரையில் அப்பனையும் அம்மையையும் அவர் பிரிவின்றி நிற்கும் நிலை யிலேயே வைத்து வணங்கிவந்த பண்டைத் தமிழர், பின்னர் இருவேறு வகையினராய்ப் பிரிந்து அப்பனையே வணங்குவோர் மற்றொரு குழுவினராயும் நிலைபெறலாயினர். இவ்விரு வேறு குழுவினரில் அப்பனை வணங்குவோர், அம்மையை வணங்கு வோரையும், அம்மையை வணங்குவோர், அப்பனை வணங்கு வோரையும் இழித்துப் பேசிக்கலாம் விளைக்கலாயினர். இக்கொள்கைப் போரில் இரு குழுவினரும் பெண்பிறவியைக் குறைவாகக் கருதவும் பேசவுந் துவங்கவே, அம்மையை வணங்கிய குழுவாரில் ஒரு பெரும் பகுதியார் கடவுளைப் பெண்வடிவில் வைத்து வழிபாடு புரிதல் தமக்கு இழிவெனக் கருதி அம்மையையும் அப்பனாக்கி அவற்கு மாயோன், திருமால் என்னும் பெயர்களைப் புனைந்து விடலாயினர். கடவுளைப் பெண் பாலாக வைத்து வணங்குதல் குறைவெனக் கருதியவரில், வடக்கிருந்த தமிழரைவிடத் தெற்கிருந்த தமிழரே முன் நின்றவர் என்பதற்குத், தென்றமிழ் நாட்டில் இன்றைக்குந் திருமால் கோயில்கள் மிகுதியாய்க் காணப்படுமாறு போல் வடநாட்டின் கட் காணப்படாமையும், வடநாட்டின்கண் அம்மையாகிய கொற்றவை (துர்க்கை)யின் கோயில்களே நகரங்கடோறும், அந்நகரங்களில் தெருக்கடோறும், அத் தெருக்களில் வீடுகாடோறும் நிறைந்து காணப்படுதலுமே உறுபெருஞ் சான்றாம். அம்மை அங்ஙனம் ஆண்வடிவாகத் திரிக்கப் பட்டாலும், உண்மையிலே திருமால் பெண்பாலே யென்பது, அவர் பெருமான் என்னும் ஆண்பாற் சொல்லால் வழங்கப் படாமற் பெருமாள் என்னும் பெண்பாற் சொல்லால் வழங்கப் படலாலுந், திருமால் மோகினி என்னும் பெண்வடிவெடுத்துச் சிவபிரானைக் கூடிச் சாத்தனைப் பெற்றார் என்னும் புராண கதையாலும், அவர் உமைப்பிராட்டி யாருக்குத் தமையன் என்னும் வழக்காலும், அவர் அம்மையைப் போலவே நீலநிறம் வாய்ந்தவராயிருத்தலாலும், சிவந்தநிறம் நெருப்பிற்குரிய தாய் ஆண்டன்மையைக் காட்டுமாறு போல நீலநிறம் நீருக்குரிய தாய்க் குளிர்ந்த அருளினதான பெண்டன் மையைக் காட்டு தலாலும் ஐயுறவின்றித் துணியப்படும். அற்றேல், ஆண்வடிவான சிவத்தினும் பெண்வடிவான அம்மை குறைந்தவளாவளே யெனின்; அஃது ஆராய்ச்சியறி வில்லார் கூற்றாம். ஒளிவடிவில் எது குறைந்தது? எது சிறந்தது? பருப்பொருள்களினுள்ளுந் தூயவான செம்மணி (இரத்தினம்) நீலமணியில் உருவாக்கிய ஆண்பெண்பாவை களிலும், பொன் வெள்ளி முதலியவற்றிற் றிரட்டிய ஆண் பெண்பாவைகளிலும் எதனை உயர்ந்ததென்று சொல்லலாம்? எதனைத் தாழ்ந்த தென்று சொல்லலாம்? என்புந் தோலும் நரம்பும் ஊனுங் குருதியுஞ் சேர்ந்து திரண்ட நம்மக்களுடம்பே அருவருக்கத்தக்க மலப் பாண்டமா யிருக்கின்றதன்றி, இறைவன் இறைவியின் ஒளியுடம்பும் அவ்வாறு அருவருக்கத்தக்க இயல்பினதா யிருத்தல் கூடுமோ? மேலும், மக்களுடம்பெல்லாம் அரு வருப்புள்ளனவாயிருக்க, அவற்றுள் ஆண் உடம்பை உயர்ந்த தென்றும் பெண்ணுடம்பைத் தாழ்ந்ததென்றுங் கூறுதல் எத்துணை அறியாமையுடையதா யிருக்கின்றது! அருவருப்புள்ள ஆண்பெண் உடம்புகளுள்ளுஞ் சிற்சில வுடம்புகள் அவ் வருவருப்பை மாற்றி விழைவூட்டும் அழகும் மணமும் வாய்ந்தன வாயிருத்தலும், பெரும்பாலும் பெண் மக்களுடம்பு ஆண் மக்களினுடம்பைவிடத் தூயனவாய் நோய் ஒட்டாதனவா யிருத்தலும் எமது சிவஞானபோத ஆராய்ச்சியில் வரிவாய்க் காட்டி விளக்கியிருக்கின்றேம். இந்நூலிலும் மேலே சிறிது அவை விளக்கப் பட்டிருக் கின்றன. உயர்வுதாழ்வுக்கு இடமான ஊனுடம்புகளிலேயே, பெண் பிறவி சிறந்ததென்பது பெறப் படுவதாயிருக்க, அவ் வாறுயர்வு தாழ்வு கருதற்குச் சிறிதும் இடந்தராத ஒளியுடம்புகளிற் சிவத்தினுருவை உயர்ந்த தென்றும், அம்மையினுருவைத் தாழ்ந்ததென்றும் பிழைபடக் கருதல் எத்துணை மடமை! இனி, மக்களுள்ளேயே பெண்மக்கள் அறிவாற்றல் களில் ஆண்மக்களுக்குச் சிறிதுங் குறைந்தவரல்லர். இது, பழைய கழக இலக்கியங்களில் ஔவையார், காக்கைபாடினி நச்செள்ளை யார், பெருங்கோப்பெண்டு, வெண்ணிக் குயத்தியார் முதலான செந்தமிழ்ப் புலமை மாதரார் பாடியிருக்கும் அருந்தமிழ்ப் பாடல்களையும், அவர்க்குப் பின் காரைக்காலம்மையார் இறைவன் மேல் அன்பிற் குழைந்துருகிப் பாடியருளிய செய்யுள் நூல்களையும் ஒருசிறிது நோக்குவார்க்குந் தெற்றெனப் புலப்படும். மக்களுள்ளேயே பெண்பாலார் அறிவாற்றல்களில் எந்தவகையிலும் ஆண்பாலார்க்குக் குறைந்தவரா யில் லாமை தெளியக் கிடக்கையில், எல்லாம்வல்ல இறைவி யாகிய உமையம்மை மட்டுஞ் சிவபிரானுக்கு எந்தவகையி லேனுங் குறைந்தாள் ஆய்விடுவளோ? ஆகாளன்றே; அன்றாகவே, இறைவியாகிய உமை இறைவனோடொத்த தூய்மையும் அறிவாற்றல்களும் உடைய ளென்பதே பண்டைத் தமிழ் முன்னோர் கொண்ட கொள்கையாகு மென்று கடைப்பிடிக்க. இது, சைவசித்தாந்தப் பழ நூலாகிய திருக்களிற்றுப்படியார், பொன்னிறங் கட்டியினும் பூணினும் நின்றாற்போல் அந்நிறம் அண்ணலும் அம்பிகையுஞ் - செந்நிறத்தள் எந்நிறத்த ளாயிருப்பள் எங்கள் சிவபதியும் அந்நிறத்த னாயிருப்பன் ஆங்கு என அண்ணலையும் அம்மையையும் ஏற்றத்தாழ்வின்றி ஒரு நிலைப்பட வைத்து வலியுறுத்திக் கூறுமாற்றால் தெளியப்படும். ஆகவே, அம்மையை வணங்கி வந்த தமிழ்ப் பழமக்கள் வரவர மெய்யுணர்விழந்து அவளைத் திருமாலாக்கி வணங்கி வரினும், அப்பனை வணங்கினார்க்கும் அவர்க்கும் மிகுதியான பகைமை நெடுங்காலம் வரையில் நிகழாமை யால், அவ் விருவகைக் குழுவினரில் ஒருவர் தம்மைச் சைவர் எனவும், மற்றொருவர் தம்மை வைணவரெனவும் வேறு படுத்தி வழங்கிக் கொண்டாலுஞ் சைவர் திருமாலை வணங்கவும், வைணவர் சிவபிரானை வணங்கவும் பின் வாங்கிற்றிலர்; ஏனெனிற், சிவபிரானுந் திருமாலும் ஒருவரே யென்னும் பண்டைத் தமிழர்தங் கொள்கை, அவர்தங் கால்வழியில் வந்தவரான பின்றைத் தமிழர்தம் நினைவை விட்டு அகலாமையின், இது தமிழ்ப் பொது மக்கள், அரியுஞ்சிவனும் ஒண்ணு அறியார் வாயில் மண்ணு எனத் தமக்குள் வழங்கிவரும் பழமொழி யாலும் நன்குணரப்படும். இங்ஙனமாகப் பண்டைத்தமிழர் தங் கொள்கை சைவம் வைணவம் என இருவேறு தெய்வக் கொள்கையாகப் பிரியினும், அவற்றைக் கைக்கொண்டோர் தமக்குட் பகைமையும் மாறுபாடு மிலராய்ச் சிவ பிரானையுந் திருமலையும் வேற்றுமையின்றியே வைத்து நெடுங்காலம் வரையில் வழிபாடு செய்து வந்தனர். இது, சைவ சமயாசிரியராகிய திருஞான சம்பந்தரும் அப்பரும், ஊறினார் ஓசையுள் ஒன்றினார் ஒன்றிமால் கூறனார் எனவும், அரியலாற் றேவியில்லை ஐயன் ஐயாறனார்க்கே எனவும் முறையே அருளிச் செய்திருத்தலாலும், வைணவ சமய முதலாழ்வார்களான பொய்கையாரும் பேயாரும், பொன்றிகழும் மேனிப் புரிசடையம் புண்ணியனும் நின்றுலகந் தாய் நெடுமாலும் - என்றும் இருவரங்கத் தாற்றரிவ ரேனும் ஒருவன் ஒருவனங்கத் தென்றும் உளன் எனவும், தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவுஞ் சக்கரமுஞ் சூழரவும் பொன்நாணுந் தோன்றுமால்-சூழுந் திரண்டருவி பாயுந் திருமலைமேல் எந்தைக்கு இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து எனவும் முறையே அருளிச் செய்திருத்தலாலும் நன்கு தெளியப்படும். இங்ஙனமாகச், சைவசமயாசிரியரும் வைணவ சமய ஆழ்வார் முதலிவருவரும் வயங்கிய தி.பி. (கி.பி.) எட்டாம் நூற்றாண்டு வரையிலுஞ் சைவத்திற்கும் வைணவத்திற்கும் மாறுபாடு பெரிதுமில்லையாய், இருசமயத் தெய்வங்களும் அவ்விரு சமயத்தவராலும் வணங்கப்பட்டு வந்திருக்க, வடக்கிருந்து வந்து குடியேறிய திராவிட ஆரியப் பார்ப்பனரும், அவருடன் கலந்துகொண்ட தமிழ்ப் பார்ப்பனரும் ஒருங்கு சேர்ந்து, தமிழ் மக்களின் ஒற்றுமை யைச் சிதைத்து, அவரைத் தமக்கு அடிமைகளாக்கிக் கொள்ளுந் தீய எண்ணமே தலைக் கேறித் தமிழ்ப் பொது மக்களுக்குத் தெரியாத சமகிருதம் என்னும் இறந்து பட்ட வடமொழியைத் தமக்கே உரியதாக்கிக் கொண்டு, பிறவியே யில்லாத முழுமுதற் கடவுளாகிய திருமாலுக்குப் பல பிறவிகளைக் கற்பித்துப், பொய்யும் புனை சுருட்டும் நிரம்பத் தாம் அம்மொழியிற் கட்டிவிட்ட புராணக் கதைகளில் திருமாலின் பிறவிகளை உயர்த்திச், சிவபிரானை மக்களினுங் கடைப்பட்டவராகத் தாழ்த்தி, வைணவர்க்கு முற்காலத்திலில்லாத வெண்மண் செம்மண் குறியையும் அவரது நெற்றியிற் றீட்டி, இவ்வாற்றால், வைணவர் சைவரொடு பெரிதும் இகலிக் கலாம் விளைக்குமாறு செய்து விட்டனர். பார்ப்பனர் செய்த இச்சூழ்ச்சியின் திறன், அவரது சூழ்ச்சிக்கு முற்பட்ட பொய்கையாழ்வார் பேயாழ்வார் பாடலையும், அவரது சூழ்ச்சிக்குப் பிற்பட்டு அதிற் சிக்குண்ட ஏனை யாழ்வாரின் பாடல்களையும் புடைபட வைத்து ஒத்து நோக்குதலால் நன்கு விளங்கும். பொய்கை யாழ்வார் பேயாழ்வார் பாடல்களிற் சிவபிரானை இகழும் இழிப்புரைகள் சிறிதுங் காணப்படா; மற்றுத் திருமங்கை யாழ்வார் திருமழிசை யாழ்வார், நம்மாழ்வார் முதலான பிற்காலத்தவர் பாட்டுகளிலோ சிவபிரானைப் பழித்துரைக்கும் பழிப்புரைகள் மலிந்து கிடக்கின்றன. இவற்றின் விரிவெல்லாம் எமது மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் என்னும் பெருநூலிற் றக்க சான்றுகளுடன் காட்டப் பட்டிருத்தலின் அவற்றை அங்கே கண்டு கொள்க. இவ்வாறாகத் தமிழர்க்குட் பண்டை நாளில் ஒன்றாயிருந்த கடவுட்கொள்கை பின்னர் இரண்டாய தூஉம், அவ் விரண்டுந் தி.பி. முதல் நூற்றாண்டிலிருந்து, சைவம், வைணவம் எனப் பெயர் பெறலாயதூஉம், பின்னர்த் தி.பி. எட்டாம் நூற்றாண்டிலிருந்து பார்ப்பனர் தமிழரைச் சீர்குலைத்தற் பொருட்டு வடமொழியிற் கட்டிவிட்ட புராணப் புரட்டுக் கதைகளால் அவ்விருசமயத்தாருந் தமக்குட் பெரும் பகைமை கொண்டு கலாய்க்கலாயதூஉம் வந்த வரலாறு கண்டு கொள்க. இங்ஙனந் தமிழரது உயர்ந்த ஒரு முழுமுதற் கடவுளின் விழுமிய கொள்கை மெய்யுணர்விழப்பினாலும், ஆராய்ச்சி யறிவின்மையாலும், பார்ப்பனச் சூழ்ச்சியாலும் பலவாறு சிதைந்து போயினும், ஆராய்ச்சியறிவு மிக்க நமது சிறந்த ஆங்கில அரசின்கீழ் அது மீண்டுந் தன் பழஞ்சிறப்பினை எய்திக் கதிரவனொளியென வீறித் திகழும் பெற்றியதாதலை ஒரு சிறிது விளக்குவாம். ஒளியையே கடவுளெனக் கண்டு, அவ்வொளியிற் றோன்றிய செவ்வொளியினை அப்பனாக வும் அதிற்றோன்றிய நீலவொளியினை அம்மையாகவுந் துணிந்து கடவுள் வழிபாடு செய்துபோந்த தமிழ் முன்னோர் கொள்கை, இஞ்ஞான்று அரிய பெரிய ஆராய்ச்சி செய்யும் மேனாட்டாசிரியரின் ஆராய்ச்சி முடிபுக்கும், இறைவன் உண்டென்னும் ஏனை யெல்லாச் சமய முடிபுக்கும் பெரிதும் ஒத்ததாகவே கிளர்ந்து நிற்கின்றது. உயிர்களின் பிறவி யெல்லாம் ஆண்பெண் என்னும் இரு பகுதியிலும், ஆற்றலெல்லாம் வெப்பம் தட்பம் என்னும் இருவகை யாற்றலிலும், பொருள்களெல்லாம் நெருப்புந் தண்ணீரும் என்னும் இருபெரும் பகுப்பிலும், நிறங் களெல்லாஞ் சிவப்பும் நீலமும் என்னும் இருவேறு நிறங்களிலும் அடங்கி நிற்கின்றன. வெம்மை மிகுந்த நெருப்பு ஆண்டன்மை யிலுந், தண்மை மிகுந்த நீர் பெண்டன்மையிலும், வெம்மை யுள்ள நெருப்பு சிவந்த நிறத்திலுந், தண்மையுள்ள நீர் நீல நிறத்திலும் புலனாய்த் தோன்றல் ஆராய்ச்சி வல்ல ஆசிரியரால் முடித்துக்காட்டப்பட்டிருக்கின்றது. உவில்லியம் ஜேம் என்னும் ஆராய்ச்சிவல்ல பேராசிரியர் தாம் நுணுகியாய்ந்து எழுதிய உளநூலில் ஓவியக்காரர் ஒவ்வொருவருந் தங் கண்ணெதிரே ஒரு தோற்றத்தை வெம்மையுடையதாகவோ அல்லது தண்மையுடைய தாகவோ வண்ணங்களினால் எங்ஙனந் தோன்றச் செய்தல் கூடுமென்பதைத் தமது கருத்தை எந்த வழியாய்த் திருப்பு கிறார்களோ அந்த வழிக்குத் தக்கபடி அறிந்திருக்கிறார்கள் வெப்பம் வாய்ந்ததாகக் காட்டல் வேண்டுமாயின். ஒவ்வொன்றிலிருந்துஞ் சிவப்பு நிற தோன்று தலை அவர் விரைந்து காண்பர்; குளிர்ச்சி யுடையதாகக் காட்டல் வேண்டுமாயின் நீலநிறந் தோன்று தலை அங்ஙனமே அவர் விரைந்து காண்பர் என ஓரிடத்தும்,1 வெளிறின நீல நிறம் பெண்டன்மையோடு உறவுடையதாகவுஞ், செங்குருதி நிறம் ஆண்டன்மையோடு உறவுடையதாகவுங் கூறப்படுங்கால் முடிவில் அஃதுண்மை யாகவே ஒரு திகைப்பினை யுண்டாக்கு கின்றது2 என மற்றோரிடத்தும் எடுத்துரைத்தலாற், செந்நிற நீலநிறங்கள் முறையே வெப்ப தட்பங்கட்கும் ஆண்மை பெண்மை கட்கும் மெய்யாகவே உரியவாதல் தெற்றென விளங்கா நிற்கும். எனவே, ஒளியுருவாய் எங்கும் விளங்கும் இறைவன் எல்லையற்ற வெவ்விய ஆற்றல் வாய்ந்தவ னாகலின் சிவந்த நிறத்தினனாய்த் திகழ்தலுடன், தன்கண் அடங்கித் தோன்றுந் தண்ணிய ஆற்றலால் நீலநிறம் உடைய அம்மையையும் ஒருபாற் பெற்றவனாய் நிற்கும் உண்மை, ஆராய்ச்சியறிவு முதிர்ந்த நல்லாசிரியர் எந்நாட்டவரா யிருப்பினும் எச்சமயத்தகவராயிருப்பினும் அவர்க் கெல்லாம் ஒப்ப முடிந்ததொரு கொள்கையே யாதல் நன்கு பெறப்படுதல் காண்க. இனி, உலகத்திலுள்ள ஆற்றலெல்லாஞ் சூடுங் குளிர்ச்சியும் என்னும் இரண்டில் வந்தடங்குமெனக் கண்டு, அவ்வுண்மையிற் கடைப்பிடியாய் நின்ற தமிழரது கொள்கையே, இஞ்ஞான்றை இயற்கைப் பொருள் நூலார்க் கெல்லாம் ஒத்தமுடிபாய் இருக்கின்றது. இவ்வுலகிற் சூடு மட்டுமே யிருந்தால் உலகம் என்னும் பொருளும் பெயருமே இல்லையாய்ப்போம்; அல்லது குளிர்ச்சி மட்டுமே யிருந்தாலும், அதைத் தவிர வேறெவையுமே இரா. ஆகவே, உலகத் தோற்றத்திற்ககும் இயக்கத்திற்குஞ் சூடுங் குளிர்ச்சியும் ஆகிய இருவகை யாற்றல்களும் இன்றியமையாதனவா யிருக்கின்றன வென்று உணர்தல் வேண்டும். வெவ்விய ஆற்றல் வாய்ந்த இறைவனே உளனாயின், அவனது வெம்மை அவிறந்த ஆற்றலுடையதாகலின், அஃது இப்பருப்பொரு ளுலகத்தை எவ்வகையாலும் பயன்படாத மிக நுண்ணிய நிலையிலேயே வைக்கும் அல்லால், உயிர்களுக்குப் பயன் படும் இப்பருவுடம்புகளையும், இவ்வுடம்புகளுக்குக் கட்டாயமாய் வேண்டிய பருப்பொரு ளுணவுகளையும் உண்டாக்க மாட்டாதாகும். இவ்வுலகின்கண் நீரும் நீரின் குளிர்ச்சியும் ஒரு சிறிது மில்லாமல், வெறு நெருப்பும் நெருப்பின் சூடுமே இருக்குமானால் எல்லாம் அந் நெருப்பின் சூட்டில் எரிந்து நுண்ணியவாய்ப் போக எங்கும் வெறு வெட்டவெளியே யிருக்குமன்றி வேறேதேனும் இருக்குமோ? எண்ணிப் பாருங்கள் அல்லது, இங்கு நெருப்பும் நெருப்பின்சூடுஞ் சிறிதுமே யில்லாமல், வெறுந்தண்ணீருந் தண்ணீரின் குளிர்ச்சியுமே எங்கும் இருக்குமானாற், புல்லிய புற்பூண்டுகளேனும் ஏனைச் சிற்றுயிர் களேனும் மாந்தர்களேனும் இங்கிருத்தல் கூடுமோ? எங்கும் வெறும் பனிப்பாறைகளேயன்றி வேறெவையும் இருத்தல் இயலாதே, நெருப்பும் நீரும் ஒருங்கு விரவி யிருத்தலாலன்றோ, இவ்வுலகமும் உலகியற் பொருள்களும் உயிர்வாழ் உடம்புகளும் இங்கு நிலைபேறுற்றுக் காணப்படு கின்றன. அறிவில்லாத நெருப்பும் நீருந் தாமாகவே ஒன்றுகூடி மிக வியக்கத்தக்க நம் உடம்புகளையும், அவ் வுடம்புகளின் வாயிலாக நாம் நுகர்ந்து வரும் இனிய பண்டங்களையும், நம்முடம்புகளும் பண்டங்களும் இருத்தற்கு நிலைக்களனான இவ்வுலகத்தையும் படைத்து வைத்தல் இயலாமையால், எல்லா அறிவும் முதன்மையும் வாய்ந்த இறைவனது வெவ்விய ஆற்றலாலும், அவனோடு ஒருங்கு விரவிய இறைவியின் தண்ணிய ஆற்றலாலும் உந்தப்பட்டே, நெருப்பும் நீரும் ஒனறுகூடி இவ்வுலகத்தையும், உலகத்துப் பல்பொருள் களையும், உயிர்களின் உடம்புகளையுந் தோற்றுவித்து இயக்குகின்றனவென்று கடைப்பிடித்து உணர்தல் வேண்டும். ஒவ்வொரு பொரு ளிலும் ஒவ்வோருடம்பிலும் இறைவன் இறைவியின் வெப்பதட்ப ஆற்றல்கள் கலந்துநின்று அவற்றை நிலைபெறுத்தியும் நிலைமாற்றியும் வரும் நிகழ்ச்சி, எல்லா மாந்தருங் கண்கூடாய் அறிந்துவரும் இயல்பினதா யிருத்த லின், இவ்வுண்மையினைக் கண்டு கடைப்பிடித்த தமிழரது கொள்கை, எத்தேயத்துள்ள அறிஞராலும், எச்சமயத்துள்ள சான்றோராலும் விரும்பி ஏற்றுக்கொளற் பாலதேயன்றி விலக்கற்பாலதன்று. அன்றி எவரேனும் இவ்வுண்மையின் அரும்பெருஞ்சிறப்பினை யுணராமை யினாலோ, உணர்ந்துந் தாம் அதனைத் தழுவ லாகரதெனச் செருக்கு தலினாலோ இதனைத் தழுவாதொழிவராயின் அந்தோ! அவர் தமது பிறவிப்பயனை இழந்தாராதல் திண்ணமென்க. இனி, ஆற்றல்களெல்லாம் வெப்பதட்பங்களென இரண்டாயே நிலவும் அரும்பேருண்மையினைக் கண்டாற் போலவே, அவ்வாற்றல்களிற் புலனாம் நிறங்களுஞ் சிவப்பும் நீலமும் என இரண்டேயாமெனக் கண்ட மாபெருஞ் சிறப்புந் தமிழ்ப் பழஞ் சான்றோர்க்கே யுரித்தாகும். இவ் வுலகத்தில் எழுவகை நிறங்களும் இவற்றின் கலப்பால் எண்ணிறந்த பல நிறங்களுங் காணப்படினும், இவையெல் லாஞ் சிவப்பும் நீலமும் என்னும் இரண்டிலே சென்றடங்கு மெனவும், மூலமான இவ்விரண்டு நிறங்களும் ஏற்றியுங் குறைந்துங் கலத்தலினாலேயே எண்ணிறந்தனவான நிறங்கள் பலவுங் காணப்படுகின்றன வெனவும் இஞ்ஞான்றை இயற்கைப்பொருள் நூலார் பெரிதாராய்ந்து முடிவுகட்டி யிருக்கின்றனர். 3இஞ்ஞான்றை இயற்கைப் பொருணூலார் கண்ட இம்முடிபினை, இற்றைக்கு ஐயாயிர ஆண்டுகட்கு முன்னமேயிருந்த நந்தமிழ் முதுமக்கள் கண்டு, எல்லா நிறங்களுக்கும் மூலமான சிவப்பும் நீலமும் என்னும் இந்நிறங்களிரண்டும் இறைவனது சிவப்பு நிறத்தி லிருந்தும், இறைவியின் நீலநிறத்திலிருந்தும் முதன்முதற் றோன்றிப், பின்னர்ப் பருப்பொருண்மாயையில் அவ்விரண் டனையும், அவற்றின் கலப்பால் வேறுபல நிறங்களையுந் தோற்று விக்கலான நிகழ்ச்சி உண்மையினையுந் தெற்றெனத் தெரிந்து, அவ்வாற்றாற் சிவப்புநிறமுடைய தீவடிவினனான இறைவனைச் சிவன் சேயோன் எனவும், நீலநிறமுடைய நீர்வடிவினளான இறைவியை மாயோன், மாயோள் எனவும் அழைத்து அவ்விருவரையும் அவர் ஒருங்கு விரவி நிற்கும் அந்நிலையிலேயே வைதது வழுத்தி வந்ததூஉம், அவர் மரபு பிழையாது அப்பண்டைத் தமிழ் முன்னோர் வழிவந்த பின்றைத்தமிழர் அனைவரும் இன்றைக்கும் இறைவன் இறைவியை அந்நிலையிலேயே வைத்து வாழ்த்தியும் வழுத்தியும் வழிபாடாற்றி வருவதூஉம், உண்மையான் ஆராய்ந்து காணவல்லார் எவராயிருப்பினும் எந்நாட்டவரா யிருப்பினும் எச்சமயத் தவராயிருப்பினும் அவரெல்லாம் மகிழ்ந்தேற்றுத் தாமும் அவ்வழியொழுகிப் பெறற்கரும் பெரும்பயன் பெறக் காட்டும் பெற்றியவாய்த் துலங்கு கின்றனவல்லவோ? தமிழ் முன்னோர் கண்ட இவ்வரும்பே ருண்மைகள், பின்றைக் காலத்திற் சைவம் வைணவம் எனப் பெயர் கொண்ட இருமதங்களிலன்றி வேறெவற்றிலுங் காணப்படாமையால், இவ்விரு மதங்களுமே தமிழர் மதமாகுமன்றி, வேறெதுவுந் தமிழர் மதமெனப் பெயர் பெறுதற்குச் சிறிதும் உரிமையுடைய தாகாதென்று கடைப்பிடித் துணர்ந்துகொள்க. அஃதொக்குமாயினும், பௌத்தம் சமணம் என்னுஞ் சமயங்களிரண்டும் வடநாட்டகத்திருந்த பழைய தமிழ் மக்களிடையே தோன்றிச் சிறிதேறக்குறைய இரண்டா யிரத் தைந்நூறாண்டுளாக இவ்விந்திய நாட்டில் நிலவிய வைகளே யாதலால், இவையிரண்டையுந் தமிழர் மதம் எனக் கொள்ளாமை என்னையெனின்; பண்டைத் தமிழர் தாம் ஒளிவடிவிற் கண்ட முழுமுதற் கடவுளை அவ்வொளி வடிவில் வைத்து வழிபடு தலையே தமக்கு முதற்பெருங் கொள்கையாக் கொண்டனர்; அதனையடுத்தே கொல்லா அறத்தினைத் தமக்குச் சிறப்புடையக் கொள்கையாக் கொண்டனர். இவ்விந்திய நாட்டுக்குப் புறம்பேயிருந்த ஆரியர், உணவுக்கும் உறையுளுக்கும் மிக மிடிப்பட்டு இவ்விந்திய நாட்டுட் புகுந்து குடியேறிய போது, தமிழர்க்குப் பெருஞ் செல்வமாயிருந்த மாடு ஆடு குதிரை முதலான தீங்கற்ற மிக்க பயனுடைய விலங்குகளை அவர் அறிந்தும் அறியாமலும் பலவகையாற் கைப்பற்றிக் கொலை புரிந்து, அவற்றின் ஊனை வரைதுறையின்றித் தின்றுஞ், சோமப் பூண்டின் கள்ளைக் பருகியுஞ், சூதாடியுங் களியாட்டிற் காலங்கழித்தனர். அதுகண்டு அருவருப்புக் கொண்ட அஞ்ஞான்றைத் தமிழாசிரியர் சிலர், அவர்க்கும் அவரைப் பின்பற்றிய தமிழரிற் கீழ்மக்கட்கும் அறிவு தெருட்டு தற்பொருட்டுக், கொல்லா அறத்தின் மேன்மையை மிகுத் தெடுத்துப் பேசி, அதனைக் கடைப்பிடித்து ஒழுகுதலாலே இம்மை மறுமைப் பயன்களெல்லாம் தாமே வரும் என வற்புறுத்து வரலாயினர். இங்ஙனம் அறவுரை பகர்ந்துவந்த தமிழாசிரியரின் அறிவுமொழிகளே வடமொழியில் உபநிடதங் கள் ஆயின. இன்னும் அவர்களால் அக்காலத்தே யாக்கப்பட்ட நூல்களே சாங்கியம் யோகம் நையாயிகம் வைசேடிகம் எனப் பெயர் பெற்றன. இந்நூல்களெல்லாம் ஆரியர் செய்து போந்த உயிர்க்கொலை வேள்விகளை ஒருமுகமாய் நின்று மறுத்து, அவர் மிக உயர்த்துப் பாராட்டிய இருக்கு, எசுர், சாமம் முதலான ஆரிய வேதங்களை இழித்துப்பேசுதல் காண்க. தமிழாசிரியர் ஆரியமொழியில் ஆக்கிய இம் மெய்யுணர்வு நூல்கள் தோன்றிய பின்னும் ஆரியரின் கொலை புலை யொழுக்கங் குறையாமற் பெருகியே வர, அதனை வேரறக் களைந் தெறிதற்பொருட்டு ஏழையுயிர்களைக் காக்கும் ஏந்தலான இறைவன்றன் றிருவருட் குறிப்பாற் பண்டைத் தமிழர் மரபில் வந்த அரசர் குடியிலே கௌதம சாக்கியர் என்னும் இளவரசர் தோன்றித் தங் கண்முன்னே நடக்கும் ஆரியரின் வேள்விக் கொலையின் கொடுமையினை நினைந்து மனம் பொறாராய்த், தமது அரச வாழ்க்கையினையுந் துறந்து போய், உயிர்களைக் கொன்று தின்னாத கொல்லா அறத்தின் மேன்மையினையே எங்கும் எடுத்துச்சொல்லி, ஆரியரின் உயிர்க்கொலை வேள்வியினை அடியோடு ஒழித்தலிற் கடைப்பிடியாய் நின்றார். கௌதம புத்தர் எங்கும் பரப்பி வந்த அறக்கொள்கையே அவரது பெயராற் பிற்காலத்திற் பௌத்த சமயம் என்னும் பெயர் பூண்டு வழங்கலாயிற்று. இத்துணையே யன்றிக், கௌதம புத்தர், முழுமுதற் கடவுளொருவர் இல்லை யென்றாவது, கடவுள் வழிபாடு செய்தல் பயனற்றதென்றாவது தமது அறவுரையில் எங்குங் கூறினாரல்லர். ஒரு காலத்தில் வாசெட்டன் என்னும் பார்ப்பனன் ஒருவன் கௌதம் புத்தர்பாற் போந்து, பிரமோபாசனை (கடவுள் வழிபாடு) செய்யலாமா? அது செய்தற்கு வழி யாது? என்று கேட்ட போது, புத்தர் கடவுள் வழிபாடு செய்யலாம்; அது செய்தற்கு வழி இது. என்று தமது கொல்லா அறக் கொள்கையினையே விரித்தெடுத்து அவற்கு அறிவுறுத்தி யிருக்கின்றார்.4 மேலுங், கௌதம புத்தரின் முன்னோர்கள் சிவபிரானையே வழிபட்டு வந்தவர்கள் என்பது, புத்தர் பிறந்த ஞான்று அவர் தம் பெற்றோரான அரசனும் அரசியும் அவரைச் சிவபிரான் கோயிலுக்கு எடுத்துச் சென்று சிவபிரானை வழிபட்ட செய்தி பழைய கல்வெட்டு ஒன்றிற் குறிக்கப்பட்டிருத்தல் கொண்டு நன்கறியக் கிடக்கின்றது. பௌத்த சமய முதல்வரான கௌதம சாக்கியர் சைவ சமயத்திற்கு இன்றியமையா அறங்களான கொல்லாமை புலாலுண்ணாமை என்னும் அருளொழுக்கங் கள் தங் காலத்திருந்த ஆரியர்க்கும் அவர் வழிச்சார்ந்தார்க்கும் முதன்மையாக வேண்டியிருந்தமையால், அவற்றை எடுத்து வலியுறுத்தி வந்தனரேயன்றி, அவர் சைவசமயக் கோட் பாட்டிற்குங் கடவுள் வழிபாட்டிற்குஞ் சிறிதும் மாறு பட்டவரா யில்லா மையினாலேதான், அவர் தம் மாணாக்கரில் அவரது திருவுளக் கருத்தின் உண்மை கண்டார் மரபில் வந்த இடைக்காலத்தவர் சிவபிரானையும் அம்மையையும் உடன் வைத்து வணங்கும் முறைகளையுஞ் சேர்த்து மகாயான பௌத்தத்தை உண்டாக்கினர். மாணிக்க வாசகப் பெருமான் காலத்தில், அஃதாவது இற்றைக்கு ஓராயிரத்து எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னம் இம் மகாயான பௌத்தமே வடக்கே இமயமலைக்கும் அப் பாலிருந்து தெற்கே குமரிமுனைவரையிற் பரவியிருந்த தாகும். இம்மகாயான பௌத்தம் சைவ சமயக் கோட்பாடுகளுடன் பெரிதொத்து நின்றமையால், அதனைத் தழுவி யிருந்த பௌத்த குருமார்க்குஞ் சைவ சமய குரவர்க்கும் ஏதொரு போராட்டமும் நேர்ந்திலது. மற்று, முதலாசிரியர் கொள்கைக்கு மாறாய்க், கடவுளும் இல்லை, உலகமும் இல்லை, உயிர்களும் இல்லை யெனக் கரையும் ஈனயான பௌத்தமோ இவ்விந்திய நாட்டில் வழங்குதற்கு இடம் பெறாமையின், இலங்கையிற் சென்று ஒடுங்கிற்று; இது சைவ சமயக் கோட்பாடுகளுக்கு மாறாய்க் கிடந்தமையின், இதன் இல்வழக்கைப் பின்பற்றிய இலங்கைப் பௌத்த குருமார்களே தில்லைக்குப் போந்து மாணிக்கவாசகரொடு வழக்காடித் தோல்வியுற்றவராவர். இன்னும், இவ்வீனயான மகாயான பௌத்தமத வரலாறுகளுங், காலமும், அவற்றை யாக்கி யோரும், பிறவுமெல்லாம் எமது மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் என்னும் நூலில் வலிய சான்றுகளுடன் எடுத்துக் காட்டி விளக்கப் பட்டிருக்கின்றன. எனவே பௌத்தமத முதலாசிரியரான கௌதம சாக்கியரின் கொள்கை, பண்டைத் தமிழாசிரியரின் கொள்கையுடன் முழுதொத்து நிற்றலின், அதனைத் தமிழர் மதமெனத் தழுவுதற்கண் இழுக்கேதும் இலதேனும், அவர்க்குப்பின் பௌத்தமதப் பெயரால் வெளிவந்தார் பலரும், முதலாசிரியர் கொள்கைக்கு முழுமாறாய் இல்வழக்கே (சூனியவாதமே) பேசுதலின், அவரது பௌத்த மதத்தைத் தமிழர்மதம் எனக் கூறுதல் ஒருவாற்றானும் ஒவ்வாதென விடுக்க. இனி, இங்ஙனமே கௌதம சாக்கியர் காலத்தில் வட நாட்டில் உடனிருந்தவரான மகாவீரரால் ஆக்கப்பட்ட சமண்மதமுங் கொல்லாமை புலாலுண்ணாமையாகிய சைவ சமய ஒழுக்கங்களையே பௌத்தமதத்தினும் பார்க்க மிகவும் உறைப்பாய் எடுத்து வலியுறுத்தி, ஆரிய வேதங்களை இழித்துப் பேசக் காண்டலின், அதுவும் அக்காலத்திற்கு முதன்மையாய் வேண்டிய சைவவொழுக்கத்தை உயர்த் தெடுத்துப் பேசியதே யன்றிக், கடவுள் இல்லையென்றாவது, கடவுளை வழிபடுதல் வீணென்றாவது பேசியதில்லை. முதலாசிரியரான மகாவீரர்க்கு உடன்பாடாகாத கொள்கைகளையே, அவர்க்கு நெடுங்காலம் பிற்பட்டு வந்தவரான சமண்சமயத்தவர் கைக்கொண்டு ஒழுகுதலானும், பிற்காலத்துச் சமண்சமயத்தார் கடவுள் வழிபாட்டைக் கைவிட்டுத், தம் முதலாசிரியரான மகா வீரரையே கடவுளாக வைத்து வழிபடுதலானும், இப் பிற்காலத்துச் சமண்மத முந் தமிழர் மதமாதற்கு உரியதல்லாத தாயிற் றென்க. இனி, இஞ்ஞான்றைத் தமிழ்மக்களில் ஒரு பெரும் பகுதியார் கிறித்துமதத்தினராகவும், மற்றொரு பெரும்பகுதி யார் மகமதுமதத்தினராகவும் வாழ்ந்துவரக் காண்டலின், அவ்விருவரையுந் தமிழர் மதத்தின்கட் சேர்த்துப் பேசுதல் வேண்டுமாலெனின்; ஒரே முழுமுதற் கடவுள் வணக்கத்திற் கடைப்பிடியாய் நிற்றலிற் கிறித்துவரும் மகமதியரும் பண்டைத் தமிழரோடு ஒப்பராயினும், பண்டைத் தமிழர்க்கு இரண்டாவ தாய்ச் சிறந்த கொல்லாமை புலாலுண்ணாமை யென்னும் அருளொழுக்கங்களை அவ்விரு வருங் கடைப்பிடித்து நடவாமையானும், உயிர்களுக்கு முற் பிறவி பிற்பிறவி யுண்மையினையும் ஊழ்வினை யுண்மை யினையும் அவர் உடம்படாமையானும், இறைவனது திருவுருவ வழிபாட்டை அவர் மறுத்தலானும் அவரிவருவரும் பண்டைத் தமிழர் மதத்திற்குப் புறம்பாகவே நிற்கவேண் டியவ ராயினா ரென்க. என்றிதுகாறும் விளக்கிப் போந்தவாற்றால் மிகப் பழைய காலத்திருந்த தமிழரின் முப்பொருட் கொள்கையே (முப்பொருட் கொள்கையாவன கடவுள் உயிர் உலகு என்னும் மூன்றையும் பற்றியவை), தி.பி. முதல் நூற் றாண்டிற்குப் பின்னிருந்து இரண்டாய்ப் பிரிந்து சைவம் வைணவம் என்னும் பெயர்களால் இன்றுகாறும் இவ் விந்திய நாடெங்கும் வழங்கிவரும் உண்மை நன்கு புலனாகா நிற்கும். ஒரே முழுமுதற் கடவுளை ஒளிவடிவிற் கண்டு, அதனையே அம்மையப்பரென வைத்து வணங்கி வருதலிற் பல்லாயிர ஆண்டுகளாகக் கடைப்பிடியாய் நின்ற பண்டைத் தமிழர்க்குப் பின் பல்லாயிர ஆண்டுகள் கழித்து, அப் பண்டைத் தமிழரது மரபிலேயே தோன்றிய கௌதம சாக்கியரும் மகாவீரருந் தம் முன்னோர்தங் கொல்லா அறத்தினையே எங்கு மெடுத்துப்பேசி, ஆரியரின் கொலை புலையொழுக்கத்தினை வேரறக் களைந்து வந்தனராயினும், அவர்க்குப்பின் அவர்பெயர் தாங்கிவந்த பௌத்தருஞ் சமணரும் முழுமுதற் கடவுளுண்மையினை மறுத்து, மக்கள் தாம் பெறுதற்குரிய முதற்பெரும்பயனான கடவுள் வழி பாட்டை இழக்குமாறு செய்து தமிழுலகினைப் பாழ்படுத்தி வந்தமையின், அவ்விருவரும், இறைவன் றிருவருட் டிறத்தாற் றோன்றி யருளின மாணிக்கவாசகராலுந் திருஞான சம்பந்தராலும் முறையே ஒடுக்கப்பட்டு இவ் விந்திய நாட்டின்கட் பெரும்பாலும் இல்லாமலே ஒழிந்து போயினர். எஞ்சி நின்ற பௌத்தர் சமணரிற் சிறு பகுதி யாருந் தமக்கு மேற்பட்ட அறிவும் ஆற்றலும் வாய்ந்த ஒரு முழுமுதற் பொருள் வணக்கத்தைக் கைவிடமாட்டாராய்த், தத்தஞ் சமய முதல்வரான கௌதமபுத்தரையும் மகாவீர ரையுமே கடவுளாக்கி, அவர்க்குத் திருவுருவங்கள் சமைத்து, அவை தம்மை மிக அழகிய மிகப்பெரிய திருக்கோயில்களில் இருத்தி இன்றுகாறும் அவை தமக்கு வழிபாடாற்றி வருகின்றனர். ஆகவே, சைவரைப் பகைத்துக் கடவுள் இல்லையெனக் கட்டுரைத்து வந்த பிற்றை ஞான்றைப் பௌத்தர் சமணருங் கூடக் கடைப்படியாகக் கடவுள் வணக்கத்தில் வந்து மனஆறுதல் பெற்று நிற்றல் எவர்க்கும் இனிது விளங்காநிற்கும். இப்போது சில ஆண்டுகளாகப் புதிது தோன்றி, ஆரியக் குறும்பை அடக்கித் தமிழர்க்கு நன்மை செய்வார் போல் ஆரவாரம் புரியும் ஒரு சிறு கூட்டத்தார், பண்டைத் தமிழரின் மரபிற் றோன்றி அவர்க்குரிய பிறப்பு இறப்பு இல்லா ஒரே முழுமுதற் கடவுளின் ஒளியுருவ வழிபாட்டில் உறைத்து நிற்பவரான சைவசமயத் தவரையுஞ் சைவசமய ஆசிரியரையும் அவர் அருளிச் செய்த ஒப்புயர்வில்லாத் தேவார திருவாசகம் முதலான செந்தமிழ் மாமறைகளையும் வாய் கூசா திகழ்ந்து ஆரவாரஞ் செய்து வருகின்றனர். இவர்களோ இவர்க்குப் பின் இவர்தங் கால்வழியில் வருவாரோ தாங் கடவுள் வணக்கத்தைக் கைவிட மாட்டாமை யுணர்ந்து, சிறிது காலத்தில் தத்தந் தலைவரையே, பௌத்தர் சமணரைப் போற், கடவுளாக்கி அவரை வணங்குதலும் வாழ்த்துதலுஞ் செய்யா நிற்பர். சிற்றறிவுடையராய்ப் பிறப்பிறப்பில் பட்டுழலும் மக்களை எத்துணை தான் கடவுளாக உயர்த்தி வழிபடினும், அவர்கள் கடவுளாய் விடுவரோ? கல் லெல்லாம் மாணிக்கக் கல்லாமோ? மின்னுவவெல்லாம் பொன்னாமோ? ஆகையால், இறைவ னில்லையென எடுப்புடன் பேசுவார் எவருந், தாங் கவலை யிலும் நோயிலும் வறுமையிலும் துன்பத்திலுஞ் சிக்குண்டு நையுங்காலுஞ், சாகப்போகுந் தறுவாயிலும் இறைவன் நம்பிக்கை வரப் பெற்று, அதற்குமுன் தாஞ்செய் பெரும் பிழையினை யுணர்ந்து நெஞ்சம் இரங்கா நிற்பரென்பது திண்ணம், அது நிற்க. அடிக்குறிப்புகள் 1. “Every artist knows how he can make a scene before his eyes appear warmer or colder in colour, according to the way he sets his attention. If for warm, he soon begins to see the red color start out of everything; if for cold, the blue.” p.425. The principles of Psychology, by Prof. W. James. Vol.1. 2. And finally, it is a real puzzle when the color paleblue is said to have feminine and blood-red masculine affinities.” p.582, ibid. 3. See, for instance, “The Popular Lectures on Scientific Subjects” by Prof. Helmholtz, Vol.1.p.218. 4. See Prof. Rhys David’s Hibbert Lectures on Indian Buddhism, pp. 63-69. 22. தமிழர்தந் திருக்கோயில்கள் இனி, ஒளிவடிவே முழுமுதற்கடவுளின் அருள்வடி வாதலை நன்கு கண்ட பண்டைத் தமிழர் அக்கடவுளின் அருள் வடிவை வைத்து வழிபடுதற்கு அமைத்த திருக் கோயில்களின் வரலாற்றைச் சிறிதெடுத்துக் கூறுவாம். பழைய தமிழ் முன்னோர் ஒளிவடிவே இறைவன் வடிவென உணர்ந்தபின், பகற்காலத்தே பேரொளிப் பிழம்பாய்த் துலங்கா நின்ற கதிரவனையே கடவுளாகக் கருதி வழிபட்டு வரலானார். இது வடமொழி யிருக்கு வேதத்திற் பகலவன் வணக்கத்தின் மேலதான காயத்திரி மந்திரமே மிகச் சிறந்த வழிபாட்டுரை யாய்த் திகழ்தலாலும், அம் மந்திரத்தினையே காலை நண்பகல் மாலை என்னும் மூன்று பொழுதுகளிலும் அந்தணரெல்லாரும் பற்பலகாலுஞ் சொல்லி இன்றுகாறும் வழிபாடியற்றிவரக் காண்டலாலும், அக்காயத்திரி மந்திரத்திற் பர்க்கன் என்னும் பெயரால் விளிக்கப்படுவோன் சிவபிரானே யென்பது மைத்திராயணீ யோபநிடதத்திலும் அமரநிகண்டிலும் நன்கெடுத்துத் தெளிவுறுத்தப்பட்டிருத்த லாலும், அதற் கிணங்கவே சைவ சமயாசிரியரான திருநாவுக்கரசு நாயனாரும், அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில் அருக்க னாவான் அரனுரு வல்லனோ? இருக்கு நான்மறை ஈசனை யேதொழுங் கருத்தி னைநினை யார்கன் மனவரே என்றருளிச் செய்திருத்தலாலுந் தெற்றென அறியப் படும். அஃதொக்கும், ஆரியவேதத்திற் போந்த கதிரவன் வணக்கத்தைப் பண்டைத் தமிழர்க்குரிய தொன்றாகக் கூறுதல் யாங்ஙனமெனின்; ஆரிய வேதமான இருக்கு வேதத்தில் உள்ள பதிகங்கள் அத்தனையும் ஆரிய மாந்தராலேயே ஆக்கப்பட்டன அல்ல; இந்திரன் வருணன் முதலான தம் படைத் தலைவர்களின் ஆவிகண்மேல் ஆரியர் பாடிக் கொணர்ந்த பாட்டுகளை, அவர்களைச்சீர்திருத்தல் வேண்டி அவருடன் ஒருங்கு சேர்ந்து நின்று ஒரு கோவைப் படுத்தி அவற்றிற்கு இருக்குவேதம் எனப்பெயருந் தந்த பண்டைத் தமிழாசிரியரே தாம் வணங்கிப் போந்த பகலவன் மேலும், அப் பகலவனுக்கு உயிரான சிவபிரான் மேலுந் தாம் பாடிய பதிகங்களையும் அவ் விருக்கு வேதத்தின் இடை யிடையே சேர்த்து அவற்றை ஒரொ ழுங்கு படுத்திய வாய்மையினை இந்நூலின்கண் முன்னமே சிறிது எடுத்துக்காட்டி யிருக்கின்றேம். இதற்குமுன் எமது மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் என்னும் பெருநூலினும் அதனை விரித்து விளக்கியிருக்கின்றேம். காயத்திரி மந்திரத்தை இயற்றி இருக்கு வேதத்திற் சேர்த்து, அவ் வேதத்திற்கு உயிரும் உயர்வுங் கொடுத்தவர் விசுவாமித்திரர் என்னுந் தமிழ்ப் பரதகுல அரசமுனிவரே யாதல் கருத்திற் பதிக்கற்பாற்று. இனிப், பேரொளிப் பிழம்பான பகலவனை இறைவனுரு வாகக் கண்டு வணங்கி வந்த பண்டைத் தமிழர், நாளேற நாளேற அவன்பால் அன்பு மீதூரப் பெற்று, அதனால் அவனை எட்டாத் தொலைவில் வைத்து வழிபடுதலில் மனநிறைவு பெறாராய், அவன்போன்ற ஓர் ஒளியுருவினைத் தமதெதிரே நிறுத்தி வழுத்துதற்குப் பெருவிழைவு கொண்டனர். தம்மால் அன்புசெய்யப் பட்டாரை அருகே வைத்துக் காணவும். அவர்க்கு மலர் மாலை சூட்டுதல் முதலான சிறப்புகளைச் செய்து, அவருடைய காலடிகளில் வீழ்ந்து வணங்கி அவரை வாழ்த்தவும் மிக விரும்புவது, மக்களில் மிக உயர்ந்தாரி லிருந்து மிக இழிந்தார் வரையிலுள்ள எல்லாரிடத்தும் இயற்கையாய்க் காணப்படுகின்றது. ஆகவே, பகலவனை யொப்பதோர் ஒளியுருவினைத் தம்மெதிரே நிறுத்தித், தாம் வேண்டிய சிறப்புகளை யெல்லாம் அதற்குச் செய்து அதனைப் பழந்தமிழர் வழிபட விழைந்ததில் இயற்கைக்கு, மாறானதேதும் அவர்பால் இல்லையென்றுணர்ந்து கொள்க. அங்ஙனம் விழைவு கொண்டு, அதற்கேற்றதோர் ஒளியுருவினை அவர் தேடப் புகுந்த காலத்திலெல்லாம், அவர் மரக்கட்டைக ளிரண்டை ஒன்றோடொன்று தேய்த்து நெருப்பினை யுண்டாக்கி அதனாற் பச்சை யுணவுப் பண்டங்களைப் பதமாக்கிச் சமைத்துண்ணவும், அதனொளியால் இருள் செறிந்த இராப் பொழுதில் நச்சுயிர் கட்குங் கொலை விலங்குட்கும் அஞ்சாது அகன்றொழுகவுந் தெரிந்து கொண்டார்களாதலால், அத்தகைய நெருப்பின் ஒளியுருவினையே தமக்கு அண்மையில் வைத்து மனக் களிப்புடன் வணங்குதற்குத் தலைப்பட்டனர். நந் தமிழ் முன்னோர் இரண்டு மரக்கட்டைகளைத் தேய்த்தே மிகப் பழைய காலத்தில் நெருப்பினை உண்டாக்கி வந்தன ரென்பது, ஞெலிகோற் கொண்ட பெருவிறன் ஞெகிழிச் செந்தீத் தொட்ட கருந்துளைக் குழலின் இன்றீம் பாலை முனையின் என்று பெரும்பாணாற்றுப்படையில் அதனாசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் கூறுமாற்றால் நன்கறியப்படும். ஞெலிகோல் என்பது தீக்கடைகோல். இன்றைக்கும் வேள்வி வேட்கும் ஆசிரியர் முதலிற் றீக்கடை கோல் கொண்டே தீயை யுண்டாக்கி வேள்வியைத் தொடங்கு மாற்றால், இது மிகப் பழைய காலத்தே தமிழர்க்குள் ளிருந்த தொரு பழக்கமாதல் அறியக்கிடக்கின்றது. பெரும்பாலும் அப்பண்டை நாளிற் பெரிய பெரிய மரநீழல்களில் வட்ட மான ஒரு குழி அகழ்ந்து, அதிற் றீயை வளர்த்து, அத் தீச்சுடர்க்கு நெற் பொரியும் மலருந் தூவி அதனையே மிக மனங்கரைந்து வழி மட்டு வந்தனர் நந் தமிழ் முன்னோர். பின்னர் நாட்செல்லச் செல்ல அத் திருவுருவின் பாற் பின்னும் பின்னும் அன்பு பெருகப் பெற்று, அதனைத் தொடுதற்கும், அதற்கு நீராட்டுதற்கும், அதற்கு மலர்மாலை சூட்டிப் பார்த்தற்கும் பெரிதும் அவர் விரும்ப லாயினர். ஆனால், தீயோ தொட்டாற் சுடுவதா யிருத்தலுடன், கையிற் பிடிபடாத தாயும் நீராட்டுதற்கும் மலர் மாலை யணிந்து பார்த்தற்கும் இடந்தராத நுண்ணிய இயல்பினதாயும் இருத்தல் கண்டு, அத்தீச்சுடரை ஒப்பதோர் உருவினைத் தாந்தொடுதற் கேற்றதொரு பொருளிற் சமைத்தற்குக் கருதி, அதனைக் கருங்கல்லில் அமைத்தற்குப் புகுந்தார்; புகுந்து தீவளர்க்குங் குழியை ஒப்பதான ஒரு வட்ட வடிவையும், அக்குழியில் நீண்டு குவிந்து வளர்ந்தெரியுந் தீச்சுடரை ஒப்பதான நீண்டு குவிந்ததொரு குழவி வடிவையும் அக் கருங்கல்லிற் சமைத்துப், பின் நீண்டு குவிந்த அக் குழவிவடிவை வட்ட வடிவிற் கோத்து அங்ஙனங் கோத்துச் செய்த கருங்கற்றிருவுருவை மரநீழல் களிலேயே நிறுத்தித், தமது அன்பின் பெருக்கால் அதனைத் தொட்டு நீராட்டியும், அதற்கு மலர் மாலை சூட்டியுந், தாம் உண்ணும் உணவுப் பண்டங்களாகிய பழங்களுஞ் சோறும் அதற்கும் உணவாகப் படைத்தும், இறைவன் றிருவுருவினைத் தமதருகே பெற்று அதனைத் தொடவும் அதனை அண்மை யிற் காணவும் பெற்ற பெருங் களிப்பால் அதன்முன் நின்று பாடியும் ஆடியும் எல்லாம் அவர் அதனைப் பரவி வரலானார். இவ்வாறாக, அம்முது மக்கள் தீக்குழியையும் அதில் வளர்ந்தெரியுந் தீச்சுடரையும் ஒப்பதாகத் தாங் கருங்கல்லிற் சமைத்து நிறுத்திய பண்டைத் திருவுருவே பிற்காலத்திற் சிவலிங்கம் என்னும் பெயரால் வழங்கப்பட்டு வரலாயிற்றென் றுணர்தல் வேண்டும். ஆரியர் இவ் விந்திய நாட்டுட் புகும் முன்னமே, பண்டைத் தமிழ்மக்கள் இச் சிவலிங்கத் திருவுருவை அமைத்து அதனை வழிபட்டு வந்தனரென்பதற்கு, வடமேற்கே பஞ்சாபு மாகாணத்தில் இற்றைக்கு ஐயாயிர, ஆறாயிர ஆண்டுகளுக்கு முன்னரே நாகரிகத்திற் சிறந் தோங்கித் திகழ்ந்து பின்னர் அழிந்துபட்ட அரப்பா, மொகிஞ்சதரோ என்னும் பண்டைத் தமிழரின் நகரங்களி லிருந்து இப்போது வெள்ளைக்கார ஆசிரியர்களால் அகழ்ந்தெடுத்து வைக்கப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான சிவலிங்கத் திருவுருக்களே உறுபெருஞ் சான்றாய் விளங்கா நிற்கின்றன.1 இனி, இங்ஙனங் கல்லிற் சமைத்துத் தாம் வழி பாடாற்றி வருஞ் சிவலிங்க வடிவந், தாம் பண்டு நிலத்தின் கண்ணே அகழ்ந்த குழியில் வளர்த்து வணங்கிய தீச் சுடரின் வடிவமே யன்றிப் பிறிதன்றென்பதனை மறவாமல் நினைவு கூர்தற்பொருட்டே, தாம் ஆற்றும் அச் சிவலிங்க வழி பாட்டின் ஈற்றில் ஓர் ஒளியினைக் காட்டி அதனை முடிப் பாராயினர். அவர் அங்ஙனம் ஈற்றிற் காட்டிய ஒளியினையே, இஞ்ஞான்று விளக்குந் திரியொளியிலுங் கருப்புரக் கட்டி யொளியிலுங் காட்டி வருகின்றனரென் றுணர்ந்து கொள்ளல் வேண்டும். இவ்வாறு கல்லிற் சமைத்த சிவலிங்கவுருவின் வணக்கந் தோன்றிய காலத்திலெல்லாம் பழந்தமிழ் மாந்தர் தாம் நிலையாக இருந்து உயிர்வாழ்தற்கு இன்றியமையா தனவான இல்லங்களை முதலில் மரங்களினாலும், பின்னர்ச் சிலகாலங் கழித்துக் கற்களினாலும் அமைக்கலாயினர். அங்ஙனந் தமக்கு இல்லங்கள் அமைத்துக் கொண்டது போலத் தாம் வணங்குஞ் சிவலிங்க் திருவுருவிற்கும் பின்னர் இல்லங்கள் வகுக்கலாயினர். இறைவனைப் பழந் தமிழர் கோ என்னும் ஓரெழுத்தொரு மொழியால் அழைத்தமையின், அவ்விறைவனைச் சிவலிங்க வுருவில் எழுந்தருளச் செய்து தாம் அமைத்த ஓர் இல்லினையும் அம் மொழியோடு சேர்த்துக் கோயில் என வழங்கலாயினர். இதுவே, சிவலிங்கத் திருவுருவும் அதனை நிறுத்தி வணங்குதற்கு இருப்பிடமாய் அமைத்த திருக்கோயிலும் பண்டைத் தமிழர்களிடையே தோன்றிய வரலாறாகுமென் றுணர்ந்து கொள்க. இனி, இவ்விந்தியதேயத்தின் வடமேற்கு மாகாணத்தில் நாகரிகத்தில் மிக்கோங்கி விளங்கிய பண்டைத் தமிழ் மக்களிடையே, மேய்ப்பர்களான ஆரியர் இத்தேயத்திற்குப் புறம்பேயிருந்து போந்து குடியேறிய பின், தமிழ் மாந்தர் புரியுந் தீச்சுடர் வணக்கத்தைக் கண்டு, அதைப் போற் றாமுஞ் செய்யத் துவங்கித், தாம் வழக்கமாய் வெட்டித் தின்றுவரும் மாட் டிறைச்சியைத், தாம் வளர்த்த தீச்சுடர்க்கு முன் படைத்துப், பின் அதனை விழுங்கி வரலாயினர். உயிர்க் கொலையைப் பெரிதும் வெறுப்பவரான தமிழ் முதுமக்கள், ஆடு மாடு குதிரைகளை இரக்கமின்றி வெட்டி ஆரியர் வேட்கும் வேள்விகளைக் கண்டு மனம் பொறாராய் அவ்வேள்விகளை அழிக்கத் துவங்கினர். அதனால் ஆரியர் பெரிதுந் தமிழர்கண் மேற் கொடும் பகைமைகொண்டு, ஆற்றலிற் சிறந்த அவர்களை அழித்தல் தம்மால் ஆகா மையின், தாம் வணங்கிப் போந்த தம் படைத் தலைவரின் ஆவிகளான இந்திரன் வருணன் மித்திரன் முதலானவர் களையே நோக்கி தமதிடரைச் சொல்லித், தமிழரை அடியோடு அழித்து விடும்படி வேண்டினர். ஆரியர் தாம் வேட்ட வேள்விக்களத்தே சோமப்பூண்டின் சாற்றிற் சமைத்த கள்ளைப் பருகிக் களியாட்டயர்ந்தமையிற் றம்மைச் சுரர் என உயர்த்துப்பேசிக் கொண்டனர்; ஆரிய மொழியிற் சுரர் என்னுஞ் சொல் கள்ளினையே உணர்த்தா நிற்கும். மற்று, அத்தகைய கள்ளினைப் பருகாத தமிழரை யோ அவர்கள் அசுரர் என்னும் பெயராற் சுட்டுவாரா யினர். சுரர், அசுரர் என்னுஞ் சொற்களின் உண்மைப் பொருள்களை நோக்குங்காற் கள்ளைக் குடிக்கும் ஆரியரை இழிந்தவராகவுங், கள்ளைக் குடியாத தமிழரை உயர்ந்தவரா கவுமே அறிவுடையோர் கருதா நிற்பர். ஆனால், ஆரியரோ தம்மைச் சுரர் என உயர்த்தியுந், தமிழரை அசுரர் எனத் தாழ்த்தியுந் தாம் பாடிய பாட்டுகளிற் பேசியிருக்கின்றனர். இனித், தமிழரிடமிருந்து கற்றுக்கொண்ட தீ வணக்கத்தை ஆரியர் தமக்கு இசைந்தபடி அருளொழுக்கத் திற்கு மாறான வழியிற்றிருப்பி, அதற்குடம்படாத தமிழரைப் பகைத்து வந்தமையின், நெடுங்காலம் வரையில் இரு வகுப்பார்க்கும் பெரும்போராட்டம் நடைபெற்று வந்தது. ஆனாலுங், கல்வியறிவிலுஞ் செல்வ வளத்திலும் பிற நாகரிகத் துறை களிலும் விழுமியராய் வயங்கி ஆற்றலிலுந் தலைமையிலும் ஈடும் எடுப்புமின்றி வீறி நிற்பவரான தமிழரை எதிர்த்துத் திறப்பாக வெற்றி பெறுதற்கு, அவ் வகைகளிலெல்லாம் வறுமைப்பட்டுச் சீர்குலைந்து அழுங்கு வோரான ஆரியர் சிறிதும் இயலாதவராகவே போயினர். அது கண்டு சூழ்ச்சியில் மிக்கவரான ஆரியக் குருமார் சிலர் பலர், தமிழ் மன்னரையுந் தமிழ்ச் செல்வரையும் அண்டிப் பிழைக்க வழிதேடியதுடன், அவர் மறைபொருளாய் வைத்திருந்த மெய்ப் பொருளறிவையுங் கோட்பாடுகளையும் அவர்க்கு மாணாக்கராகி அவர்பாலிருந்துங் கற்றுக் கொண் டனர். உத்தாலக ஆருணி என்னும் பார்ப்பன குரு அசுவபதி கைகேயன் என்னுந் தமிழ் வேந்தன்பாலுங், கார்க்கிய பாலாகி என்னும் பார்ப்பன குரு அசாத சத்துரு என்னுந் தமிழ் வேந்தன்பாலும், நாரதன் என்னும் பார்ப்பனன் சனற் குமாரர் என்னுந் தமிழ்க் கடவுளான முருகப்பிரான் பாலுஞ் சென்று மெய்ப் பொருளறிவு பெற்ற வரலாறுகள் சாந்தோக்கியம் கொஷீதகி முதலான பழைய உபநிடதங் களிலே தெளிவாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கின்றன. இவ்வாறு ஆரியக் குருமார் தமிழ்ச் சான்றோரை யடுத்து அவரால் மெய்ப்பொருள் அறிவுறுக்கப்பட்ட பின், தாம் அதற்குமுற் செய்துபோந்த வெறியாட்டு வேள்வியின் புன்மை யுந் தீவினையும் நன்குணர்ந்து, அது செய்தலை முற்றுங் கைவிடலாயினர். வேள்வித் தீக்கு எதிரிலே மாட்டை வெட்டி அதன் தசையை அதற்குப் படைத் தெடுத்துத் தின்னல் பெருந் தீவினையாதலின் அதனைத் தமக்கு மெய்ப்பொருள் அறிவுறுத்திய தமிழாசிரியர் துணை கொண்டொழித்து, வேள்விக் குண்டத்திற்கும், அதன்கண் வளர்க்கப்பட்ட தீச்சுடருக்கும் அறிகுறியாக அமைத்து நிறுத்தப்பட்ட சிவலிங்கத்தின் எதிரிலே அதனைச் சென்றணுகுந் தூய உயிருக்கும் முன் வேள்விக் களத்தே வெட்டப்பட்ட மாட்டுக்கும் அடையாளமாக ஒரு மாட்டினுருவைக் கல்லிற் சமைத்து அதற்கு நந்தி என்னும் பெயர் சூட்டி அதனைச் சிவலிங்கத்தின் எதிரே நிறுத்தலா யினர்; அஙஙனம் அம்மாட்டினுருவை நிறுத்துங்கால், முன்னே வேள்விக் களத்தில் மாட்டின் தலையை வைத்து வெட்டுதற்கு இடமாயிருந்த மேடையைப் பலிபீடம் எனப் பெயர் தந்து, அதனையும் அம்மாட்டிற்குப் பின்புறத்தே அமைத்து வைக்கலாயினர். முதலில் மரநீழல்களிற் றமிழ்ப் பழமக்களாற் சிவலிங்க வுருவம் மட்டுமே வைத்து வழிபாடு செயப்பட்டு வந்ததாகப், பின்னர் உண்டான ஆரியக் குருமாரின் சேர்க்கையாலோ நந்தியும் பலிபீடமும் அச் சிவலிங்கத் திருவுருவின் எதிரிலே மேலும் மிகுதியாகச் சேர்த்தமைக்கப் பட்டுச் சிவபிரான் றிருக்கோயில்கள் நாடெங்கும் வகுக்கப் படலாயின. இதுவே பழையநாளிற் சிவபிரான் றிருக் கோயில்கள் வரவரப் பிற்சேர்க்கை யுடை யனவாய் அமைக்கப்பட்டு வந்த உண்மை வரலாறாகும். இங்ஙனம் போந்த திருக்கோயிலமைப்பில் ஆரியர் செய்துபோந்த வெறியாட்டு வேள்வியின் அடையாளங்கள் காணப்படுதலைக் கண்டு மனம்புழுங்கிய இடைக்காலத் தமிழ்ச் சான்றோர், அக்கொடிய வேள்வியின் நினைவை அறவே மாற்றிவிடுதற் பொருட்டு, அவ்வடையாளங்களுக்கு அவர் கொண்ட பருப்பொருளை யொழித்து, அவை தமக்கு மேன்முறையிற் செல்லும் நுண்பொருளுரைக்கத் தலைப் பட்டார். சிவலிங்கத் திருவுருவமானது எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளைக் குறிப்பதாமென்றும் பலிபீடமானது அம்முழுமுதற் கடவுளின் றிருவருளைப்பெற விழைந்து செல்லும் ஓர் உயிர் தனக்கிருந்த அறியாமையையும் யான் எனது என்னுஞ் செருக்கையும் வெட்டி வீழ்த்தும் ஓருயர்ந்த இடத்திற்கு அறிகுறியாமென்றும், அப் பலிபீடத்தைக் கடந்து சிவலிங்கத்தின் எதிரே வைக்கப்பட்டிருக்கும் நந்தியானது அறியாமையுஞ் செருக்கும் அற்றுத் தூய்தாகிச் சிவத்தின் றிருவருட்பேற்றை நாடிச் செல்லுந் தூய உயிருக்கு அடையாளமாமென்றும் உயர்ந்த நுண்பொருள் இடைக் காலத்தாசிரியரால் அவை தமக்குக் கற்பிக்கப்பட்டமை நன்கு புலனாகா நிற்கின்றது. அது, தி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலி ருந்தவரான திருமூலர். ஆய பதிதான் அருட்சிவ லிங்கமாம் ஆய பசுவும் அடலே றெனநிற்கும் ஆய பலிபீடம் ஆகும்நற் பாசம் ஆய அரன்நிலை ஆய்ந்துகொள் வார்க்கே என்று அருளிச்செய்த திருமந்திரத் திருப்பாட்டால் நன்கு புலனாகா நிற்கின்றது. சைவசித்தாந்தத்தின்கண் உணர்த் தப்படும் பதி பசு பாசம் என்னும் முப்பொருளிலக்கணங் களையே சிவாலய அமைப்பு உணர்த்துகின்றதென இச் செய்யுள் நுவலா நிற்கின்றது. மூலத்தானம் என்னுங் கரு வறையினுள் நிறுத்தப்பட்டிருக்குஞ் சிவலிங்கம் முழுமுதற் கடவுளாகிய பதியையும், அச்சிவலிங்கத்தி னெதிரே வைக்கப் பட்டிருக்கும் மாட்டின் வடிவான நந்தி அப்பதியை நாடிச் செல்லுந் தூய உயிரான பசுவையும், அந்நந்தியின் பின்னே அமைக்கப்பட்டிருக்கும் பலிபீடம் அப்பசுவினாற் றொடர் பறுத்துக் கழிக்கப்பட்ட ஆணவ மலமாகிய பாசத்தையும் உணர்த்துமென இடைக் காலத்திருந்த சைவசித்தாந்த ஆசிரியரான திருமூலர் தெளிவுபடுத்திக் கூறுதல் காண்க. இனித், திருமூலநாயனார்க்கு ஆயிரமாண்டு பிற்பட்டு வந்த கடைக்காலத்திற் சிவாகமங்களை வடமொழியில் எழுதிய கோயிற் குருக்கள்மார், சிவபிரான் திருக்கோயில் களைச் சிவனடியார்களின் நெஞ்சத் தாமரையின் வடிவாக வும், அவர்களின் பருவுடம்பு நுண்ணுடம்பு மூலவுடம்பு களின் வடிவாகவும் அமைக்கும் முறைகளையும் அவற்றின் கண் வைகுந் தெய்வங்களை வழிபடும் முறைகளையும் வரவரப் பெருக்கி வரையலாயினர். அங்ஙனம் அவர்கள் பிற்காலத்திற் பெருக்கி வகுத்த முறைகளின்படி கட்டப்பட்ட சிவபிரான் றிருக்கோயில்கள் இத்தென்றமிழ் நாட்டின்கட் பற்பல காணப்படுகின்றன. இப்பிற்கால முறைப்படி அமைக்கப் படாமல், இடைக்கால முறைப்படி சிவலிங்கம் நந்தி பலிபீடம் என்னும் மூன்று மட்டுமே வைத்து அமைக்கப்பட்ட பழைய கோயில்களும் ஆங் காங்குக் காணப்படுகின்றன. இனி, நந்தியும் பலிபீடமும் இல்லாமல் மிகப் பழைய கால முறைப்படி சிவலிங்கம் ஒன்று மட்டுமே நிறுவி அமைக்கப்பட்ட பழைய கோயில் களும் இடையிடையே அருகிக் காணப்படுகின்றன. இம் முற்கால பிற்காலத் திருக்கோயிலமைப்பின் கருத்தை விரிவாகத் தெரிய வேண்டுவார் எமது சைவசித்தாந்த ஞான போதத்தை நோக்குவாராக. அடிக்குறிப்பு 1. Read Sir John Marshall’s “Mohenjo-daro and the Indus Civilization.” 23. திருக்கோயிற் றெய்வங்கள் இனிப், பின்றைக் காலங்களில் அமைக்கப்பட்ட சிவபிரான் றிருக்கோயில் களின் கருவறையிற் சிவலிங்கம் ஒன்றுமட்டுமே முதன்மையாக நிறுத்தப்பட்டு வணங்கப் படினும், அக் கருவறையைச் சூழ்ந்துள்ள இடங்களில் வேறு பல தெய்வங்களும் நிறுத்தப்பட்டுப் பராவப்படுகின்றன. அவை தம்மில் முதன்மையான சிலவற்றில் வரலாறுகளை மட்டும் இங்கெடுத்துக் கூறுவாம். சிவலிங்கமானது குவிந்து நீண்ட அனற்கொழுந்தின் வடிவையே குறிக்குமென்பதும், அதனையே மிகப் பழைய காலத்திருந்து தமிழ் மக்கள் இறைவனுருவாகக் கருதி வணங்கி வரலாயின ரென்பதும், அவ்வனற்கொழுந்திற் சிவந்து காணப்பட்ட ஒளிவடிவை இறைவனாகவும் அதன் கட் சிறுநீல நிறமாய் அடங்கிக் காணப்படும் ஒளி வடிவை இறைவியாகவுங் கருதி அவர் வழுத்தி வரலாயினரென்பதும் மேலே தெளிவு படுத்தப்பட்டன. அனற்கொழுந்தை யொப்பதோர் உருவினைக் கல்லில் அமைத்து நந்தமிழ் முன்னோர் நெடுங்காலம் அதனையே வணங்கி வந்தா ராயினுங், காலஞ் செல்லச் செல்ல, அறிவும் நாகரிகமும் பெருகப்பெருக, வெறும் பிழம்புவடிவில் வைத்துக் கடவுளை வணங்குவதிற் றமிழறிஞர் மனவமைதி பெறாராய், அப்பனை ஓர் ஆண்மகன் வடிவில் அமைத்தும் அம்மையை ஒரு பெண்மகள் வடிவில் அமைத்தும் வணங்கு தற்குப் பெருவிழைவு கொண்டார். பல திறப்பட்ட பிறவி களுள்ளும், மக்கட் பிறிவியிலும் மக்களுருவிலுஞ் சிறந்தது பிறிதில்லை. ஆகவே, மக்களுட் சிறந்தார் அனைவரும் முழுமுதற் கடவுளைத் தம்போன்ற மக்கள்வடிவில் வைத்து வணங்க ஆவல்கொள்வரே யல்லாமற், றம்மினுங் கீழ்ப்பட்ட விலங்குகள் புட்கள் பாம்புகள் மீன்கள் முதலியவற்றின் வடிவில் வைத்து வணங்க ஆவல் கொள்ளார். இது சிறந்தோர்க்குரிய நெறி. சிறந்தோரல்லாதார் எத்தகைய உருவையுங் கடவுளாக நம்பும் நீரர் ஆகலான், அவர் குரங்கு பறவை பாம்பு பல்லி மரம் முதலான எதனையுந் தெய்வங்களாக வைத்து வழிபடுவர். இவ்வியல்பினரான பேதை மக்கள் தமிழ் நாட்டில் தமிழ் மாந்தரிடையே மட்டுமல்லாமல், எல்லா நாட்டிலும் எவ்வகையான மக்களிடையிலும் அன்றும் இன்றும் உளர். ஆகையாற், கீழ்மக்களான அவர்கள் கைக் கொண்ட சிற்றுயிர் வணக்கத்தையும் பழக்க வழக்கங் களையும், அவர்களின் பக்கத்தே உறையும் மேன்மக்களுங் கைக்கொண்டவராகப் பிழைபடக் கருதி அவர்மேற் குறைகூறுதல் பகுத்தறிவுடை யார்க்குச் சிறதும் ஆகாது. மேலுங், காலவேறுபாட்டாலுஞ் செல்வக் குறைவாலும் ஒரு நாட்டிலுள்ள மேன்மக்களின் பெருமை குன்றியுங் கீழ் மக்களுள்ளும் அறிவுச் செல்வமின்றிப் பொருட்செல்வம் மட்டுமே யுடையாரின் தொகையுந் தலைமையும் மிகுந்தும் நிற்குங் காலங்களிற் கீழோர்க்குரிய சிற்றுயிர் வணக்கம் மேலோர் எழுப்பிய சிவபிரான் திருக் கோயில்களுள்ளும் பையப்பைய நுழைந்து ஆங்காங்கு நிலை பெறலாயிற்று. அதனாற், சிற்றுயிர் வணக்கந் தமிழரில் மேன் மக்களுஞ் செய்து போந்தனரென இசைத்தல் பொருந்தாது. அது நிற்க. இனித், தமிழ்மேன்மக்களே, தாந்துன்புற்று நிலை கலங்கும் நேரங்களில், இறைவனை வெறும் ஒளிப்பிழம்பு வடிவில் வைத்து நினைக்க உள்ளம் ஒருப்படாமற் றமது துன்பத்தின் கொடுமையை அருகிருந்து கண்டு இரங்கி அதனைத் தீர்க்கவல்ல தந்தையுந் தாயுமாகக் கருதி வழிபட்டு ஆறுதல் உறுதற்கே பெரிதும் விரும்பா நிற்பார். அதனாற், றந்தைதாய் வடிவில் அமைத்த அம்மையப்பர் திருவுருவம் நீண்ட காலத்திற்கு முன்னமே சிவபிரான் றிருக்கோயில் களில் வைத்து வழிபாடு செய்யப்படுவதாயிற்று. என்றாலும், இவ்வம்மையப்பர் திருவுருவம் (உமாமகேசுவரம்) அமைக்கப் பட்டது, சிவலிங்கத் திருவுருவம் அமைக்கப் பட்டதற்குப் பன்னெடுங் காலம் பிற்பட்டதேயாகும். சிவலிங்க வடிவஞ் சிறிதேறக்குறைய ஏழாயிர ஆண்டுகட்கு முன்னமே அமைக்கப் பட்ட தொன்மை யுடைய தென்றும், அதற்கு ஓர் ஆயிரம் ஆண்டு பிற்பட்டுச் சிறிதேறக்குறைய ஆறாயிர ஆண்டுகட்கு முன்னமே அம்மையப்பர் திருவுருவம் அமைக்கப்பட்டு வணங்கப்பட்ட பழமையு டையதென்றும், பண்டிருந்து அழிந்துபட்ட நகரங்களை அகழ்ந்து அவற்றின் கணிருந்த திருக்கோயிற் றிருவுருவங் களை எடுத்து வைத்துக் காட்டும் மேனாட்டாசிரியரின் அரிய பெரிய வுதவியினாலும், பண்டைத் தமிழ் நூலாராய்ச்சியினாலும் நன்கறியப் பெறுகின்றேம். இனித், தமிழ்ப் பழ மக்களிலேயே தந்தையைவிடத் தாய்க்கு உயர்வு கூறும் ஒரு குழுவினர் உண்டாகியபின், அம்மைக்குத் தனிக்கோயில்கள் சிவபிரான் றிருக்கோயில் களின் அகத்தும் புறத்தும் அமைக்கப்படலாயின. இதற்குக் குமரிமுனை (கன்னியாகுமரி)யிலுள்ள அம்மை திருக் கோயிலுங், கச்சி மாநகரில் (காஞ்சிபுரத்தில்) உள்ள காமக் கண்ணம்மை (காமாட்சி)யின் றிருக்கோயிலுங், காளி கட்டத்தில் (கற்கத்தாவில்) உள்ள காளியம்மை திருக்கோயிலும் பிறவுஞ் சான்றாக நிற்றல் காண்க. இனித், தெய்வத்தைப் பெண்வடிவில் வைத்து வணங்குதல் இழிவெனக் கருதும் வேறொரு கூட்டத்தார் தமிழரிற் றோன்றியபின், அம்மையே ஆண்வடிவினரான திருமாலாகத் திரிக்கப்பட்டுச் சிவபிரான் திருக்கோயிலின் உள்ளும் வெளியும் வைத்து வணங்கப்படலாயினர். திருமால் வணக்கம் உண்டான வரலாறு இந்நூலின்கண் முன்னும் விரித்து விளக்கப்பட்டது. இனிக், கிழக்கே விடியற்காலையிற் றோன்றும் ஞாயிறு இளஞ்செவ்வியுடையதாய்ச் செஞ்சுடர் விரிந்து திகழ அதன்கீழ்த் தோன்றுங் கடல்நீர் நீலமும் பசுமையுங் கலந்த நிறத்தினதாய்த் துலங்காநிற்பக் காணப்படும் மிக அழகிய காட்சி, இறைவன் எழில் கிளர் நீலத்தோகை மயின்மேற் றோன்றுங் காட்சியை ஒப்பதாயிருத்தலின் அவ்விடியற் காலையிற் சிவந்து தோன்றுங் கதிரவனே சேயோனாகவும், அக் கதிரவனுக்குக் கீழ்த் தோன்றும் நீலநிறக் கடலே அவன் ஊரும் நீலமயிலாகவுங் கருதி வழுத்தப்படலாயினவென்க. சேயோனாகிய முருகப்பிரான் விடியற் காலையிற் கிழக்கே மேலெழுந்து கதிர் விரிக்கும் இளவள ஞாயிற்றின் றிருவுருவே யாகலின், அவன் என்றும் இளையோன் எனப்பட்டான். கதிர்சாயுஞ் சாய்ங்கால வேளையில் மேற்கே காணப்படுவங் கதிரவனே, தன் செவ்வொளி தோய்ந்த முகிற்குழாங்கள் வான்முகட்டின் நாற்புறத்துஞ் செக்கர்ச் சடையெனச் சிவந்து மிளிர, அம் முகிற்குழாங்களின் இடையே தோன்றும் வெள்ளிய பிறை அச்சடைக்கற்றை மேல் நிவந்து விளங்காநின்ற வெண்பிறை யென்னத் துலங்காநிற்பக், கண்ணையுங் கருத்தையும் ஒருங்கே கவருங் காட்சித்தாய்த் தோன்று நிலையிற் சிவபிரான் என வைத்து நம் பண்டைத்தமிழ் முது மக்களால் வணங்கப்படுவான் ஆயினன். காலை ஞாயிறு இளஞ் செவ்விய தாகலின் முருகவேள் எனவும் மாலைக் காலத்து ஞாயிறு முதிர்ந்த செவ்வியதாகலிற் சிவபெருமானெனவுங் கருதப்பட்டமை யின் இளமுருகன் சிவபிரானுக்கு மகனெனக் கொள்ளப் பட்டான். என்றாலுங், காலைஞாயிறும் மாலைஞாயிறுங் கால வேறுபாட்டால் இரண்டாகக் காணப்படினும், பொருளளவில் இரண்டும் ஒன்றேயாதல் எல்லார்க்கும் ஒப்ப முடிந்தமையின், முருகப்பிரானுஞ் சிவபிரானும் இருவராக வைத்து வணங்கப் பட்டாலும் இருவரும் ஒருவரே யென்பது ஆராய்ச்சி வல்லார்க் கெல்லாம் ஒத்த கருத்தேயாகும். இஃது அவ்விருவர்க்கும் வழங்குஞ் சேயோன் சிவன் என்னும் பெயர்களாலும் இனிது விளங்கா நிற்கின்றது. சேயோன் என்னுஞ் சொல்லுஞ் சிவந்த நிறத்தினன் என்னும் பொருளையே தருகின்றது; சிவன் என்னுஞ் சொல்லுஞ் சிவந்த நிறத்தினன் என்னும் பொருளையே தருகின்றது. எனவே, பொருளொற்றுமை யாலுஞ் சொல்லொற்றுமை யாலும் முருகனும் சிவனும் ஒரே முழுமுதற் கடவுளாதல் பெறப்பட்டமை காண்க. முருகப்பிரான் சிவபிரானுக்குப் புதல்வராகக் கொள்ளப் பட்டபின், அவரது திருவுருவமுஞ் சிவபிரான் றிருக் கோயில்களி னகத்தும் புறத்தும் வைத்து வணங்கப்படுவ தாயிற்று, திருப்பரங் குன்றம், திருவாவினன் குடி (பழனி), திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்), திருவேரகம் முதலியன முருகப்பிரானைத் தனிவைத்து நந்தமிழ் முன்னோர் வணங்கும் மிகப்பழைய திருக்கோயில்களாகும். இனிச், சிவபிரானை அம்பலத்தில் ஆடுங்கூத்தனாக வைத்து வணங்குவதும் மிகப்பழைய காலத்திருந்தே நடைபெற்றுவரும் முழுமுதற் கடவுள் வழிபாடாய் நம் பழந் தமிழ் மக்களிடையே காணப்படுகின்றது. இற்றைக்கு ஆயிரத்தெழுநூறாண்டுகட்கு முன்னமே இயற்றப்பட்ட தான சிலப்பதிகாரப் பதிகச் செய்யுளில், அதிராச் சிறப்பின் மதுரை மூதூர்க் கொன்றையஞ் சடைமுடி மன்றப் பொதியிலில் வெள்ளியம் பலத்து நள்ளிருட் கிடந்தேன் எனப் போந்த பகுதியிற் சிவபிரானும் அவன் திருநடங் குயிற்றும் வெள்ளியம்பலமும் நன்கு குறிப்பிடப்பட்டிருத் தல் காண்க. தி.பி. மூன்றாம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்த மாணிக்க வாசகப் பெருமான் தில்லைப் பொன்னம்பலத்தே பேரின்பத் தனிக்கூத்தாடுஞ் சிவபிரான் மேலதாக வைத்துத் திருச் சிற்றம்பலக் கோவையார் அருளிச் செய்திருத்தல் காண்க. இன்னும் மாணிக்கவாசர்க்குப் பின்வந்த அப்பர் சம்பந்தர் சுந்தரர் முதலான சமயாசிரியரும் பிறருமெல்லாம் அம்பலக் கூத்தனை நெஞ்சம் நெக்குருகிப் பற்பல பதிகங்கள் பாடி யிருக்கின்றனர். இப்பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடை யிலிருந்த இராமலிங்க அடிகள் எடுத்துக் காட்டியவாறு, எல்லா உயிர்களின் நெஞ்சத் தாமரையின் அகத்தும் விளக் கொளி போல் அசைந்து கொண்டிருக்கும் அருளொளியின் இயக்கமே இறைவனது அருள் நடனமாகும். இவ்வியக்கத் தினால் உந்தப்பட்டே ஓரறிவுடைய உயிர்களிலிருந்து ஆறறிவுடைய மக்கள் ஈறான எல்லாஉயிர்களுந் தத்தம் உடம்புகளில் நிலைபெற்று நின்று அறிவும் முயற்சியும் வாய்ந்தனவாய் வாழ்ந்து வருகின்றன. இவ்வாறு நடை பெறும் நெஞ்சத் தாமரையின் இயக்கமே எல்லா உயிர்களின் உயிர் வாழ்க்கைக்கும் இன்றியமையா விழுப்பம் உடை யதாயிருத்தலை இஞ்ஞான்றை உடம்புநூல் வல்லாரும் நன்காராய்ந்து காட்டியிருக்கின்றனர். இந்நெஞ்சத் தாமரையில் நிகழுஞ் சிவபிரானது அருளொளி யின் இயக்கமே, இற்றைக்கு மூவாயிர ஆண்டுகட்கு முன்னமே வடமொழியிற் றமிழாசிரியராற் செய்து வைக்கப்பட்ட சாந்தோக்கியம், தைத்திரீயம், பிருகதாரணியம் முதலான பல பழைய உபநிடதங்களிலும், அவற்றின் சார்பாய்ப் பிற்றை நாளிற் றோன்றிய கைவல்யோப நிடதத்திலும் விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. ஆகவே, உயிர்களினகத்தும் புறத்தும் ஓவாது நடைபெறும் இறைவனது அருளியக்க நிலை யினைப் பல்லாயிர ஆண்டுகட்கு முன்னமே தவக்காட்சியால் நுண்ணிதின் ஆராய்ந்து கண்ட தமிழ்ச் சான்றோர்கள், அம்பலத்தாடுஞ் சிவபிரானுக்கு ஒரு முதன்மையான இடந் திருக்கோயில் களினுள்ளே அமைத்து வைத்து வழிபடலாயினர். பண்டைத் தமிழரிற், றவவொழுக்கத்தில் நின்று அகக்கண் திறக்கப் பெற்றார் தொகை பெருகியபின் நிறுவப்பட்டதே அம்பலவாணர் திருவுருவமாகும். எங்ஙனமாயினும், அம்பல வாணர் திருவுருவமாகும். எங்ஙனமாயினும், அம்பலவாணர் திருவுருவ வழிபாடு தோன்றியது இற்றைக்கு மூவாயிர ஆண்டுகட்குக் குறையாதென்பது திண்ணம். இனித், தவவொழுக்கமும் அதனை மேற்கொண்டார் தொகையும் பெருகப்பெருக, முழுமுதற் கடவுளை ஒளிப் பிழம்பாகிய பொருள்வடிவிற் கண்டு வணங்கிப் போந்த பழந்தமிழாசிரியர், அதனை ஓசைவடிவிலுங் கண்டு வணங்கத் தலைப்பட்டார். பொருள்களைப் பற்றித் தமக் குண்டாந் தெளிவான உணர்ச்சியும், அவ்வுணர்ச்சியைத் தம்மொடு தொடர்புடையார்க்குத் தாந் தெளிவாகப் புலப்படுத்தி வைக்குந் திறமும் எல்லாம் எழுத்தோசையொடு கூடிய சொல்லின் உதவி கொண்டே நடைபெறக் காண்ட லின், எல்லாப் பொருட்கும் எல்லாவுயிர்க்கும் முதலாய் நிற்கும் எல்லாம் வல்ல இறைவனை, எல்லா எழுத்தோசை கட்கும் முதலாய் இயற்கையிலே தோன்றி ஒலியா நின்ற எழுத்தோசை ஒன்றனை ஆராய்ந்தறிந்து, அதன் கண்ணே வைத்து வழிபடத் துவங்கினார் நந்தமிழ் முன்னோர். எல்லா எழுத்தோசைகட்கும் முதலாய் இயற்கையிலே ஒலிப்பது எது? கடலோசையைக் கருத்தாய் நோக்குமின்கள்! வெள்ளிய ஒரு சங்கினை எடுத்துக் காதில் வைத்துக் கேண்மின்கள்! அவை யிரண்டிலிருந்தும் இயல்பாகக் கேட்கப்படும் ஓசை யாது? அஃது ஓஎன்று இரையும் ஓர் ஒலியே யன்றோ? ஆகவே, எல்லா எழுத்தோசைகட்கும் முதலாய் இயல்பாகத் தோன்றி ஓவாது ஒலி செய்து கொண்டிருப்பது ஓவென்னும் ஒலியே யல்லாமல் வேறொன் றன்றென்பது நினைவிற் பதிக்கற்பாற்று. இவ்வியற்கை முதலோசை வடமொழியிற் ப்ரணவம் என்று வழங்கப்படுகின்றது; ப்ரண என்னும் முதல் பழைய என்னும் பொருளைத் தருவதாகும்; எனவே, வடநூலாரும் ஓ என்னும் ஓசை ஏனை எல்லா ஓசைகட்கும் முன்னதாய் இயற்கையே தோன்றி இயங்கும் பழமையுடைத் தாதல் பற்றியே அதற்குப் பிரணவம் எனப் பெயர் தந்தாரென்பது அறியப்படுகின்றது. இனி, ஓ என்னும் இம்முதலோசை தானுங் காதினாற் கேட்கப் படுவதேயன்றிக் கண்ணினாற் காணப்படுவதன்று. மற்றுக், கடவுள் வணக்கமோ கண்ணினாற் காணப்படும் ஒரு பொருளினை நிறுத்தி அதனெதிரே செய்யப் படுவதன்றிக் காதினாற் கேட்கப்படும் ஓர் ஓசைக்குச் செய்யப்படுவதன்று. மக்களெல்லாருந் தம்பால் அன்பு பாராட்டி வணங்கப்படும். பொருளைத் தங்கண்ணெதிரே காணப் பெருவிழைவு கொள்கின்றரனன்றிக் காதாற் கேட்குமளவில் தமது அவா அடங்கப்பெறுபவர்களாய் இல்லை. ஆகவே, மக்களின் அறிவு வளர்ச்சிக்கும், அவர் ஒருவரோடொருவர் அளவ ளாவி ஒருங்கிருந்து வாழ்தற்கும் இன்றியமையாக் கருவி யான எல்லா எழுத்தோசைகட்கும் முதலான ஓங்காரமும் இறைவனுக்கு ஓர் ஒப்பற்ற வடிவமாதலை நந்தமிழாசிரியர் ஆராய்ந்தறிந்தபின், கட்புலனாகாத அவ்வோங்கார வடிவத்தைக் கட்புலனாம்படி வைத்து வணங்குவது எங்ஙனமென்றாராயத் துவங்கினாராதல் வேண்டும். ஓசையை கவர்தற்குக் கருவியா யிருப்பது யாது? காதே யன்றோ? காதே ஓசையைக் கவருங் கருவியா யிருத்தலை அறிந்தபின், அக்காதின் வடிவத்தை, எல்லா ஓசைகட்கும் முதலான ஓகாரத்திற்கும் வடிவாக எழுதத் தெரிவது இயற்கை யன்றோ? வரிவடிவில் எழுதப் படும் ஓ என்னும் எழுத்தின் உருவத்தையும், மக்களாகிய நஞ் செவியின் உருவத்தையும் ஒத்திட்டுப் பார்மின்கள்! ஓவின் உருவுஞ் செவியின் உருவும் ஒன்றா யிருத்தலை எளிதில் உணர்வீர்கள். நம் பழந்தமிழ்ச் சான்றோர்கள் ஓசையை யுணருஞ் செவியின் உருவமைப்பை உற்றுநோக்கியே முதலோசையாகிய ஓங்காரத்திற்குக் கட்புலனாம் உருவினை அமைத்த நுட்பம் இப்போது யாவரும் எளிதில் அறியற் பாலார். இனி, ஓங்கார ஒலிக்குக் கட்புலனாம் உருவமைப் பினைத் தெரிந்து கொண்டபின், சில காலமெல்லாம் அதனை வரிவடிவில் மணலிலும் பனையேட்டிலும் எழுதி, அதன் ஓசையை வாயினாலும் ஓம் ஓம் எனப் பலகாற் சொல்லித், தங் கட்புலனையும் மனனையும் அவ்வுருவிலே நிலைபெற நிறுத்தி இறைவனைத் தொழுது போந்தனர் நந்தமிழ்த் தவ ஆசிரியர். அதனால் அவர் பெற்ற இம்மை மறுமைப் பயன்கள் பல. இங்ஙனம் ஓங்கார வடிவிலே கண்ணுங் கருத்தும் ஒருவழி உறைத்துநிற்க அவர் ஓவாது கூறிவந்த ஓங்காரஒலி பெறற்கரும் பயன்கள் பலவற்றைத் தமக்குந் தம்மைச் சார்ந்தார்க்குந் தருதல்கண்டு, அவர் அதனை ஒரு தலைசிறந்த மந்திரமாகக் கருதலாயினர். எல்லா ஒலிகட்கும், அவ்வொலிகளை உறுப்பாய்க் கொண்ட எல்லா மந்திரங் கட்கும் முந்தியதாய், அவற்றின் முதல்நின்று அவற்றை இயக்கிப் பயன்றருதல் பற்றியே இவ்வோங்காரம் மந்திர அரசு என்று முனிவர்களால் வழங்கப்பட்டு வருகின்றது. இனி, ஓங்காரத்தை வடிவில் எழுதியும் வாயினாற் சொல்லியுங் கடவுள் வழிபாடு ஆற்றிவந்த நந்தமிழாசிரியர் தாம் அதனாற் பெரும்பயன் அடைந்தளவில் அமைதியுறாது, தாம் பெற்ற பயனைத் தம்மோடொத்த மக்களெல் லாரும் பெற்று இன்புறல் வேண்டுமெனக் கருதினவர்களாய், எழுத்தினுருவையும் அவ்வெழுத்தின் ஒலியையுங் கண்டுங் கேட்டுஞ் சொல்லியும் இறைவனை வணங்குமளவுக்குப் பொதுமக்கள் உள்ளம் ஒருப்படாரென உணர்ந்து, அவ் வோங்கார வுருவினை அவர் புலங்கொளக் காணும் ஒரு சிறந்த வடிவிலே வைத்துக் காட்டுதற்கு முனைந்து, அவர்க் கேற்றதொரு முடிவு யாதாகலாமென ஆராய்ந்து காணலா யினாராதல் வேண்டும். நாம் அறிந்த உயிர்ப்பொருள்களிலே ஓங்கார வடிவினை நங் கட்புலனெதிரே விளங்கக் காட்டுவது யாது? யானையும் பாம்புமே யல்லவோ? யானையின் முகமும் அதன்கீழ்த் தொங்கும் நீண்டுசுருளும் புழைக்கையும் ஓ என்னும் எழுத்தின் வடிவத்தை முழுதும் ஒத்திருத்தல் காண்க. அங்ஙனமே, நல்லபாம்பின் படமும் நீண்டு சுருளும் அதன் உடம்பும் ஓங்காரவடிவினை முழுதும் ஒத்திருத்தலும் நினைவு கூரற்பாற்று. யானையும் பாம்பும் ஓங்கார வடிவினை யொத்திருப்பினும், பாம்பினும் யானையின் வடிவமே அதற்கு மிகவும் இயைந்த தொன்றாகத் தமிழ்ச் சான்றோர்களால் எடுக்கப்பட்டது. ஏனெனிற், கூறுதும், எல்லா உயிர்ப் பொருள்களிலும் முழுமுதற் கடவுள் ஒருவரே பெரியராதல்போல, எல்லா உயிர்களிலும் யானையே உருவத்தாலும் வலிமையாலும் பெரிய தொன்றாய்க் காணப்படுகின்றது. கடவுள் எந்த உயிரையுந் தனக்கெனக் கொலை செய்யாமை போல, யானையுந் தனது உணவுக்கென்று எந்த இயங்கும் உயிரையுங் கொலை செய்யாததாய்த் தழைகளையும் நாணற் புல்லையுங் கனி களையுந் தின்று உயிர்வாழுஞ் சைவவிலங்காய் விளங்கு கின்றது. கடவுள் தன்னை அன்பினால் உருகி வழிபடும் ஏழை அடியார்க்கு எளியராய் அவர் வேண்டுவனவெல்லாம் விரும்பிச் செய்தல் போல, யானையுந் தன்னுடன் அன்பினாற் பழகுவாரிடத்தே தனது பெருவலிமையினைக் காட்டாது அவர்க்கு மிக அடங்கி அவர் வேண்டும் உதவி களெல்லாஞ் செய்து அவர்க்குப் பெரிதும் பயன்படுவ தொன்றாய்த் திகழ்கின்றது. இங்ஙனமாக யானையானது பலவகையிற் கடவுளியல்போடு ஒரு சிறிதாயினும் ஒத்து நிற்றல் கண்டே தமிழாசிரியர் ஓங்கார வடிவினைப் பொது மக்கள் எல்லாரும் உள்ளம் ஒருவழிப்பட்டு நிற்கக் கண்ணாரக் கண்டு வணங்குதற்குச் சாலவும் ஏற்ற தொன்றாய் யானைமுகமுடைய பிள்ளையார் உருவினை அமைத்து வைக்கலாயினரென்று தெற்றென அறிந்து கொள்ளல் வேண்டும். இதுவே யானைமுகமுடைய பிள்ளையார் வழிபாடு உணடான உண்மை வரலாறாகும். ஆனால், வடமொழியிற் புராண நூல்கள் இயற்றினவர், இழிந்த மக்களின் நடையைக் காட்டிலும் அருவருக்கத் தக்க செய்திகளைப் பொய்யாகப் பிணைத்துக் கட்டிச் சிவபிரான் மேலும் உமைப்பிராட்டியார்மேலும் அவை தம்மை ஏற்றி, யானைமுகமுடைய பிள்ளையார் அவ்விருவர்பால் நின்றுந் தோன்றிய வரலாறுகளைப் பற் பலவாறு ஒன்றோ டொன்று மாறுபடப் பகர்ந்திருக் கின்றனர். மேலே யாம் காட்டிய உண்மை வரலாற்றினை யுணர்ந்தவர், வடநூற் புளுகர் கட்டிவிட்ட இழிந்த வரலாறு களைக் கண்டு மனங்களையார். அதுநிற்க. இனி, யானைமுகமுடைய பிள்ளையாராகிய முழுமுதற் கடவுள் வணக்கம் தி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் ஈற்றிலாதல் ஆறாம் நூற்றாண்டின் துவகத்திலாதல் தோன்றிய தாகல் வேண்டுமென்பதனைப் பல வலியசான்று கள் கொண்டு எமது மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் என்னும் நூலின்கண் நன்கு விளக்கிக்காட்டி யிருக்கின்றேம். அங்கே அதனைக் கண்டுகொள்க. புறப்பொருளுணர்ச்சியோடு அகப்பொருளுணர்ச்சி யும் மிக்க அருந்தவத்தோர் தொகை பெருகத் துவங்கிய பின்னரே, இறைவனை ஒலிவடிவில் வைத்து வணங்கும் வணக்கமும், அதன்வழியே யானைமுகமுடைய பிள்ளை யார் வழிபாடும் இவ்விந்திய நாடெங்கணுந் தோன்றி நிலைபெற லாயினவென்று அறிந்து கொள்ளல் வேண்டும். எல்லா வொலிகட்கும் முற்பட்டு ஓங்காரவொலியே இயற்கையாய்த் தோன்றி நிலவக் காண்டலின், எல்லா வணக்கங் கட்கும் முதலதாய்ப் பிள்ளையார் திருவுருவ வணக்கமே சிவபிரான் திருக்கோயில்கள் எல்லா வற்றிலும் நடை பெறுமாறு அவரது வடிவம் அவற்றின் முகத்தே அமர்த்தி வைக்கப்பட்டது. இங்ஙனமே காலங்கடோறும் இறைவனை வணங்கு தற்குத் திருக்கோயிலினுள் வரும் பலதிறமக்களின் பல திற நம்பிக்கைகளுக்கும் பலதிறக் கொள்கைகளுக்கும் ஏற்பப் பற்பல தெய்வ வடிவங்கள் சிவபிரான் திருக்கோயில் களினுள்ளே நுழைக்கப்பட்டுச் சிவலிங்கப்பெருமான் எழுந்தருளியுள்ள கருவறையைச் சூழவுள்ள சுற்றுகளில் நிறுத்தப்படலாயின. என்றாலும், பண்டைக்காலந் தொட்டுத் தமிழ்மக்களால் வணங்கப்பட்டு வந்ததும் வருவதும் ஒளிப்பிழம்பாய் விளங்கும் ஒரு முழுமுதற் கடவுளே என்பதற்குக், கோயிலின் நெஞ்சம் போன்ற கரு வறையிலே சிவலிங்கம் (அருட்குறி) ஒன்றுமே முதன்மை யாய் நிறுத்தப்பட்டிருத்தலும், அதனைச் சூழ்ந்த பிற இடங்களின் மட்டுமே பிறதெய்வங்கள் அமர்த்தப்பட் டிருத்தலுமே சான்றாமென்க. 24. திருவிழாக்கள் மேற்கூறியவாறு சிவபிரான் திருக்கோயில்களுந் திருக்கோயிற் றெய்வங்களும் அமைக்கப்பட்டு, அவை தம்மை வணங்க வருவார் தொகை மிகுதிப்பட்ட பின், ஓராண்டிற் பல சிறப்பு நாட்கள் குறிக்கப்பட்டுக், குறிக்கப் பட்ட அந்நாட்களிலே சிவபிரான் றிருவுருவத்தையுஞ், சிவபிரானைச் சார்ந்த பிறதெய்வங்களையுங் கோயிலுக்குப் புறத்தே ஊர்வலமாகக் கொணர்ந்து திருவிழாக்கள் கொண்டாடும் வழக்கம் ஆங்காங்குத் தோன்றலாயிற்று. நாடோறுந் தாஞ்செய்யுந் தொழிலையே செய்துகொண்டும், நாடோறுந் தாம் உடுப்பதனையே உடுத்துக்கொண்டும், நாடோறுந் தாங் காண்பன கேட்பன பேசுவன முதலானவைகளையே கண்டு கேட்டுப் பேசிக் கொண்டும் வாழ்நாட்கடத்தும் மாந்தர்க்கு இடையிடையே தாஞ் செய்யுந் தொழிலினின்று ஓய்வுபெற்றும், இனியன புதியன உண்டும், அழகிய புதியன உடுத்தும் புதிய ஊர்களையுந் தோப்புகள் இளமரக்காக்கள் ஆறுகள் குளங்கள் ஏரிகள் முதலியவைகளையும் புதிய மாந்தர் களையுங் கண்டும், அவர் தனித்தனிக் குழுவினராய்த் தத்தம் ஊர்களிலிருந்து கொணர்ந்து பேசும் பல புதிய செய்தி களைக் கேட்டுந், தம் மனைவி மக்கள் பெற்றார் உற்றார் உறவினர் நண்பர் முதலாயினருடன் கூடிப் புதிய பல பேச்சுக்களைப் பேசியும், இவற்றுடன் வெறும் உலகிய லின்பத்தளவில் உள்ளம் மகிழ்ந்துவிடாமல், தம்மைப் படைத்துத் தமக்கு இத்தனை நலங்களையும் வழங்கியருளிய இறைவன் றிருவுருவத்தினைக் கண்ணும் மனமுங் கரையக் கண்டு வணங்கியும் வந்தாலல் லாமல், நம்போன்ற மாந்தர்க்கு வரவரப் புதியவுணர்ச்சியும், மனக்கிளர்ச்சியும், உயர்ந்தவற்றி லெல்லாம் உயர்ந்த கடவுளுணர்ச்சியும் உண்டாக மாட்டா; அவை யுண்டாகா விடின், அவர் மேன்மேற் பெருகும் அறிவும் இன்பமும் பெறாராய்ப் பகுத்தறிவு அற்ற விலங் கினங்களை யொப்ப உண்டு உறங்கிச் சிலநாளில் உயிர் துறந்து போவர்! இவ்வாறு நம்மாந்தர் கிடைத்தற்கரிய இம்மக்கட் பிறவியை இறைவன் றிருவருட்டிறத்தாற் பெற்றும், அதனாற் பெறுதற் குரிய பெரும் பயனைப் பெறாமல் அதனை இழந்து போகின்றா ராதலின், அங்ஙனம் அவர் அதனை இழவாமைப் பொருட்டே, நம் நாட்டகத் திருந்த சான்றோர்கள் சிவ பிரானுக்குத் திருக்கோயில்கள் எடுப்பித்த வளவில் நின்று விடாமல், அறிவிற் சிறியரான பொதுமக்கள் மேன்மேல் அறிவும் இன்பமும் பெற்றுத் தமது பிறவியைக் கடவுளை அகங்குழைந்து வழுத்து முகத்தால் விழுமிதாக்கிக் கொள்ளும் பொருட்டே குறிப்பிட்ட சிறப்புநாட்களில் ஆங்காங்குத் திருவிழாக்கள் நடைபெறுதற்கும் ஏற்பாடுகள் செய்துவைப்பராயினர். இத்திருவிழாக் காலங்களில், விழா நடைபெறும் ஊரைச் சூழ்ந்துள்ள பற்பல சிற்றூர்களிலிருந்துந், தொலை விலுள்ள பற்பல நாடு நகரங்களிலிருந்தும் ஆடவரும் மகளிருந் தத்தங் குழந்தை குட்டிகளுடன் உற்றார் பெற்றார் உறவினர் நண்பருடன், கடவுளைத் தொழப் போகும் பேரெண்ணந் தமதகத்தே முன்னெழுந்து நிற்க, நீராடிக் கூந்தல் நீவித் தூயஆடை யுடுத்து நறுமணங் கமழும் மருவு மருக்கொழுந்து பன்மலர்மாலை சூடித் தத்தந் தருதிக்குத் தகப் பல்வகை அணிகலம் பூண்டு உள்ளும் புறம்புந் தூயராய்த் தொகுதி தொகுதியாக மனக்களிப்புடன் வருதலை இன்றுங் காண்மின்கள்! திருவிழா நடக்குந் திருக்கோயிலின் உள்ளும் புறம்பும் ஓவியந் தீட்டிய ஆடைகளுந் தெய்வ உருக்களுங் கட்டித் தோரணங்கள் நாற்றி ஒப்பனை செய்யப்பட்டிருக்கும் உயர்ந்தகன்ற பந்தர்களின் நீழற்கீழ் அம்மாந்தர்கள் கூட்டங் கூட்டமாக அமர்ந்திருக்குங் காட்சியைப் பார்மின்கள்! கோயிலின் உட்சுற்று புறச்சுற்றுகளிலும் எதிரிலும் ஊரிலே ஆங்காங்குள்ள தெருக்களிலும் பல்வகை அறிவு நூல்கள் விற்குங் கடைகளும், அறச்சோறு வழங்கும் இல்லங்களும், பருகற்கினிய தேனீர் நீர்மோர் வார்க்குந் தண்ணீர்ப் பந்தர்களும், அப்பங்கள் முறுக்கு வடை தீம்பாகுகள் முதலியன விலைசெய்யுஞ் சிற்றுண்டி விடுதிகளும், ஓவியங்கள் புதுமையான காட்சிகள் அமைந்த நிலையங் களும் பல்வேறு மலர்கள் புழுகு நானம் முதலான ஏனை மணப்பண்டங்கள் விற்குங் கடைகளுஞ், செப்புக்கலங்கள் பித்தளைக்கலங்கள் பொன் வெள்ளி நகைகள் விலை செய்யும் ஆவணங்களும், பட்டாடை நூலாடைகள் விற்பனைக்கு விரித்து வைத்திருக்கும் ஒள்ளிய கடைகளும் பிறவும் விளங்குதலும், அவற்றின் கண்ணே மக்கள் திரள்திரளாய் நின்று தத்தமக்கு வேண்டியவைகளை வாங்குதலும், வாங்கிக் கொண்டு வரிசை வரிசையாய் மகிழ்ந்து செல்லுதலுமாகிய காட்சி காணக் காண எவ்வளவு அழகிதாய், எவ்வளவு மனக்கிளர்ச்சி யினைத் தருவதாய்ப் பொலிகின்றது! இன்னும், ஒரு பக்கத்தே தேவார திருவாசகங் கரும்பினுங் கனியினும் இனிக்க இன்னிசை யுடன் மிழற்றுவார் குழுவும் மற்றொரு பக்கத்தே இறை வனையும் இறைவன்றன் அருள்பெற்ற அடியாரையும் பற்றிச் சொற்பொழிவுகள் செய்யுஞ் செந்தமிழ் நாவலரைச் சூழ்ந்த அறிஞர் குழாமும், பின்னும் ஒரு பக்கத்தே சிறாரும் இளைஞரும் மரக்குதிரைகள் ஏறிச் சுற்றுங் கூடாரங்களும், மேலும் ஒருபக்கத்தே மேலுங் கீழுமாய்ச் சுழற்றப்படும் மரத்தொட்டில்களிலே இளைஞர்கள் அமர்ந்து விளை யாடும் இராட்டினங்களும் பின்னும் ஒரு பக்கத்தே அடியார் வரலாறுகளை ஆடிக் காட்டும் நாடக அரங்குகளும், இன்னும் நஞ்சொல்லளவில் அடங்கா எத்தனையோ பல புதுமைகளுங் காட்சிகளுந் திருவிழா நடக்குஞ் சிவபிரான் றிருக்கோயில் வாய்ந்த ஊர்களிலும் நகரங்களிலும் ஒரு காலத் தோரிடத்தே கண்ணாரக் கண்டு இன்புறுதற்கு வாய்த்தலை உணர்ந்து பார்மின்கள்! இங்ஙனமாகலின், இம்மை யின்பமும், அதனைத் தொடர்ந்து உயிரோடு உடன் இயைந்து சென்று நிலைபெறு வதான மறுமையின்பமும் ஒருங்கே சேர்ந்து நின்று, மக்களின் உடம்பையும் உயிரையும் ஒருகாலத்தே ஓரிடத்தே ஊடுருவிக் கனிந்து பெருகித் தித்திக்கச் செய்யும் எளிய இனிய கருவிகளாகவே சிவபிரான் றிருக்கோயிற் றிரு விழாக்கள் தமிழ்ச்சான்றோர்களால் தொன்றுதொட்டு வகுக்கப் பட்டிருக்கும் நுட்பம் அனைவரும் நினைவிற்பதிக் கற் பாலார். இம்மையின்பத்தை வெறுத்துப் பேசி இறைவ னின்பத்தையும் இல்லாத தொன்றாக வைத்து இல் வழக்குப் பேசும் புத்தர் சமணர்கள், தமது கொள்கையின் உறைப்புக்கு இணங்க, உடனே ஊண் துறந்து தமதுடலை மாய்த்து விட்டனரா? ஒரு சிறிதுமில்லையே. அவரும் அவர்தங் கொள்கைகளைத் தழுவினாரும் ஊண் உடைகொண்டு ஐம்புல இன்பங்களும் மற்றை மக்களைப் போலவே ஆரத் துய்த்து வருகின்றன ரல்லரோ? இனி, இம்மை யின்பத்தை இல்லாத வெறும் பொய்யெனக் கரைந்து, தன்னைக் கடவுளாக நினைந்திருக்கும் மறுமையின்ப மொன்றே மெய்யென வாய்ப்பறை யறையும் மாயாவாத வேதாந்தி களாவது தமதுடலைப் பொய்யென மாய்த்து, உடனே தம்மைக் கடவுளாக நினைந்து மறுமை யின்பத்திற் போய் அமர்ந்துவிட்டனரா? அதுவுமில்லையே. ஏனை மாந்தரைப் போலவே, அவரும் அவரைச் சார்ந்தாரும் உண்டு உடுத்து உறங்கி ஏனை ஐம்புல நுகர்ச்சிகளையும் நுகர்ந்து, காலங் கழிந்தபின் காலனுக்கு இரையாகின்றன ரல்லரோ? இனி இம்மையின்பத்தைத் தவிர, மறுமையின்பம் வேறில்லை யென அறை கூவும் உலகாயதரேனுந், தாங்கூறும் இம்மை யின்பத்தை நோயுங் கவலையும் அச்சமுமின்றித் துய்க்க மாட்டுவரா? அல்லது, முதலிற் றமது கொள்கையினைத் தழுவினோர்? பின்னர் அதன் பொய்ம்மையுணர்ந்து இறைவனை வழுத்தி மறுமையின்பம் பெறப் போதலைத் தடுக்க மாட்டுவரா? அல்லது எல்லாக் கலைகளிலும் வல்லராய் இறைவனிடத்துப் பேரன்பு பூண்டு விளங்கும் அறிஞரைத் தமது உலகாயதக் கொள்கைக்குத் திருப்ப மாட்டுவரா? அல்லது கடவுளிடத்து மெய்ந் நம்பிக்கையுந் கடவுள்வழிபாட்டில் மெய்யன்புமுடைய பொது மக்களை யேனுந் தமது உலகாயதக் கொள்கைக்குத் திருப்ப வல்லுநரா? அல்லது, மிக வியத்தகு தெய்வ அருள் நிகழ்ச்சி களைப் பட்டப்பகலில் நங் கண்முன்னே இப்போதும் வருவித்துக் காட்டாநிற்கும் மருதூர்த் தெய்வ யானையம்மையாரின் அரிய அருட்செயல்களைத் தெய்வச் செயல்கள் அல்ல வென்று எந்த உலகாயதரேனும் நிறுவிக் காட்ட முன் வருவரா? இன்னும், மேல் நாட்டிலுள்ள உயிர்நிலை ஆராய்ச்சிக்கழகத்தார்1 வெளியிட்டு வருந் தெய்வக்காட்சி யுடையரின் உண்மை வரலாறுகளை யெல்லாம் பொய்யென்று நாட்ட எந்த உலகாயதரேனுந் துணிந்து முன் வருவரா? மறுமை யின்பத்தைத் துய்ப்ப வரும் அதனை ஆராய்ந்து காணும் பேரறிஞரும் நாளுக்கு நாள் மிகுந்துவரும் இச் சிறந்த காலத்தே அதனை இல்லையெனக் கரைவாருரை எத்தகைய பயனையும் பயவாதாகலின், இம்மையிற் றுய்க்கும் இன்பமெல்லாம் மறுமையின்பத்தின் முதற்சுவையா மென்றும், இம்மையின்பத்தின் றன்மையை உண்மையான் ஆராய்ந்து அதனைத் துய்க்குமுறை பிழைபடாமற் றுய்த்துவருவார்க்கு, அதுவே மறுமையின்ப மாய் மாறி அவரைப் பேரின்ப நுகர்ச்சியிற் செலுத்தி, அதனோடு தொடர்பு குன்றாதாய் நிற்குமென்றும் உணர்ந்து கொள்க. இதுவே, தமிழாசிரியரின் விழுமிய கொள்கையாதல், பெற்றசிற் றின்பமே பேரின்பமாய் அங்கே முற்ற வரும்பரி சுந்தீபற முளையாது மாயையென் றுந்தீபற என்னும் பழைய திருவுந்தியார் நூற்செய்யுளால் நன்கறியப் படும். இத்திருவுந்தியாரினும் பழமையுடையதாய் இற்றைக்கு ஆயிரத்து முந்நூறாண்டுகட்கு முன் இயற்றப்பட்ட திருமந்திரம் என்னும் மெய்யுணர்வு நூலும், ஐந்தும் அடக்கடக் கென்பர் அறிவிலார் ஐந்தும் அடக்கும் அமரரும் அங்கில்லை ஐந்தும் அடக்கில் அசேதன மாமென்றிட்டு ஐந்தும் அடக்கா அறிவறிந் தேனே என நுவலுதல் கொண்டு, ஐம்புலங்களும் ஆரத்துய்க்கும் இம்மை யின்பநுகர்ச்சி விலக்கற்பால தன்றென்பதே தமிழ்ச் சான்றோர் கொள்கையாதல் தெளியப்படும். ஆனால், இவ் விம்மையின்ப நுகர்ச்சி, இறைவனை அகங்குழைந்து தொழுதலாகிய மறுமையின்பத்துடன் தொடர்பு கொண்டு நிகழாதாயின், அது பலவகையிற் பழுதுபட்டுத் துன்ப நுகர்ச்சிக்கட் செலுத்தும் என்பதும், அஃது அங்ஙனம் பழுதுபடாமற் றுய்த்தற்குரிய மெய்வழி இறைவனை எந் நேரமும் நினைந்துருகுதலேயாம் என்பதும் அறிவுறுத்து தற்கே ஐந்தும் அடக்கா அறிவறிந் தேனே என்று ஆசிரியர் திருமூலர் மேலைச் செய்யுளில் திருவாய் மலர்ந்தருளினார். இன்னுந், திருமூலர்க்கு முன்னிருந்த தெய்வத்திருவள்ளுவரும் இல்லறங் துறவறம் இரண்டனையுந் தொடர்புபடுத்திக் கூறுதலுந், திருவள்ளுவர்க்கு முன்னிருந்த தமிழாசிரியர்களும், ஒல்காப் புலமைத் தொல்காப்பியரும் இம்மை மறுமை யின்பங்கள் இரண்டனையும் அகத்திணை புறத்தினை யெனப் பெயர்தந்து, ஒன்றனோடு ஒன்று தொடர்பு கொண்டு நிற்றலை விரித்து விளக்குதலுங் காண்க. இன்னும் இதன் விரிவைப் பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம் என்னும் எமது நூலிற் கண்டு கொள்க. எனவே, இம்மையின்பநுகர்ச்சி அத்தனையும் மறுமைப் பெயராப் பேரின்ப நுகர்ச்சிகட் செலுத்துஞ் சிவவழிபாட்டுடன் ஒருங்கு பிணைந்து நடைபெறல் வேண்டுமென்னுங் கருத்துப்பற்றியே சிவபிரான் றிருக்கோயிற் றிருவிழாக்கள் ஆங்காங்கு நடை பெறுமாறு செந்தமிழ்ச் சான்றோரால் வகுக்கப்பட்டன. இங்ஙனம் வகுக்கப்பட்ட திருவிழாக்களுட் சிவ வழி பாட்டை நோக்கி எடுக்கப்பட்ட மிகப் பழைய திரு விழாக்கள் கார்த்திகை விளக்குத் திருவிழாவுந் திருவாதிரைத் திருவிழாவும் ஆகும்; இவை இற்றைக்கு இரண்டாயிர ஆண்டுகட்கு முன்னே தொட்டு இத் தமிழகத்தே நடை பெற்று வருந் தனிச்சிறப்பு வாய்ந்தன வாகலின் இவற்றின் உண்மையை இங்கே சிறிது விளக்கிக் காட்டுவாம். அடிக்குறிப்பு 1. The Society for Psychic Research 25. கார்த்திகை விளக்குவிழா கார்த்திகைத் திங்களில் முழுமுதியானது அறுமீனைச் சேர்ந்த நாளின் இராக் காலத்து நடுவிலே, ஊரிற் றெரு வெங்கும் விளக்குகளை வரிசை வரிசையாக ஏற்றிவைத்து, மலர்மாலைகளைத் தொங்கவிடுதல் முதலாகிய ஒப்பனை களைச் செய்து, ஒளிவடிவினனாகிய எல்லாம்வல்ல இறை வனை வழிபடுந் திருவிழாப், பண்டைக்காலந் தொட்டு இன்றை வரையில் தென்றமிழ் நாட்டிலுள்ள தமிழ் மக்களாற் கொண்டாடப்பட்டு வருகின்றது. இஃது இற்றைக்கு இரண்டாயிர ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத் திருந்தே தமிழ் மக்களால் மிக்க சிறப்புடன் கொண்டாடப் பட்டுவரும் பழமையுடைத்தென்பது, ஆசிரியர் நக்கீரனார் பாடிய அம்மவாழி தோழி என்னும் அகநானூற்றுச் செய்யுளில் (141). மழைகால் நீங்கிய மாக விசும்பிற் குறுமுயல் மறுநிறங் கிளர மதிநிறைந்து அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள் மறுகு விளக்குறுத்து மாலை தூக்கிப் பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய விழவுடன் அயர வருகதில் லம்ம என இக்கார்த்திகை விளக்குவிழாக் கொண்டாடப்பட்ட செய்தி நன்கெடுத்துக் கூறப்படுதலாற் றெற்றென விளங்கா நிற்கும். இங்ஙனம் பண்டைத் தமிழ்மக்கள் கொண்டாடிவரும் விளக்கு விழாவிலிருந்து, அவர்கள் இறைவனை ஒளிவடி வினனாகக் கொண்ட கொள்கையின் மாட்சி புலனாகா நிற்கின்றது. நங் கட்புலனெதிரே விளங்கித் தோன்றும் ஞாயிறு திங்கள் தீ விண்மீன் முதலான ஒளிவடிவுக ளெல்லாம் இறைவன் வடிவேயென்பது, சைவசித்தாந்த இரண்டாம் ஆசிரியரான அருணந்திசிவனார், நாயகன் கண்ந யப்பால் நாயகி புதைப்ப எங்கும் பாயிரு ளாகி மூடப் பரிந்துல கினுக்கு நெற்றித் தூயநேத் திரத்தி னாலே சுடரொளி கொடுத்த பண்பிற் றேயமார் ஒளிக ளெல்லாஞ் சிவனுருத் தேச தென்னார் என்றருளிச் செய்த சிவஞானசித்திச் செய்யுளால் நன்கு விளங்கற்பாலதே யாம். ஒளிவடிவே கடவுள் வடிவாதலுங், கடவுள் உயிர்களின் காட்சிக்குங் கருத்துக்கும் அப்பாற் பட்டவராய் இராமல், அவர்தங் காட்சிக்குங் கருத்துக்கும் எளியராய் அவர்க்கு அணுக்கராயே நின்று அருள்புரிந்து வருதலும், இவற்றோ டினமானை ஏனை நுட்பங்களும் யாம் இயற்றிய மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும், சைவ சித்தாந்த ஞானபோதம், முதலான நூல்களில் விரிவா யெடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன. அவையெல்லாம் இங்கே விரித் துரைத்தற்கு இடமில்லை. 26. தீபாவலி இனித், தென்றமிழ் நாட்டுமக்கள் கார்த்திகைத் திங்கள் முழுமதி யிரவிலே விளக்குகளை வரிசை வரிசையாக வைத்து அவற்றின் ஒளிவடிவிலே எல்லாம்வல்ல முழுமுதற் கடவுளைக் கண்ணாரக் கண்டு வணங்கி வருதல் போலவே, வடநாட்டில் அக்காலத்திருந்த தமிழ் மேன்மக்களும் ஐப்பசித் திங்களில் விளக்குவரிசை வைத்து அவற்றின் ஒளியிலே விளங்காநின்ற முழுமுதற் கடவுளுக்குத் திருவிழாக் கொண்டாடி வந்தனர். அதுதான் தீபாவலி என வழங்கி வருகின்றது. வடநாட்டவர் தென்னாட்டிற் குடியேறியபின் தீபாவலித் திருநாள் இங்குள்ள தமிழரது கொள்கைக்கும் ஏற்றதாயிருத்தலின், அஃதிங்குள்ள தமிழ் மக்களாலுங் கொண்டாடப்பட்டு வருவதாயிற்று. கண்ணன் நரகாசுரனைக் கொன்றநாளின் நினைவுக்குறியாகத் தீபாவலித் திருநாள் கொண்டாடப்படுவதாயிற்று என்னுங் கதை பிற்காலத்திற் பார்ப்பனர் கட்டிவிட்ட தொன்றாகும். பார்ப்பனர் தமது உயிர்க்கொலை வேள்விக்கு உடம்படாத நரகாசுரன் என்னுந் தமிழ்மன்னன் ஒருவனைத், தமது உயிர்க்கொலை வேள்விக்கு உடம்பட்டுத் தமக்குத், துணை யாயிருந்த மற்றொரு தமிழ் மன்னனாகிய கண்ணனை ஏவிக் கொலை செய்தனர். இந்நிகழ்ச்சியை, இதற்கு முன்னமே தோன்றி நடைபெற்றுவந்த தீபாவலித் திருநாளில் இயைத்து, அத்திருநாளின் உயர்ந்த கருத்தை மாற்றி விட்டதெல்லாம் பார்ப்பனர் செய்த சூழ்ச்சிச் செயலாகும். தீபாவலி என்னுஞ் சொற்றொடர்ப் பொருளை ஆயுங்கால் அத்திருநாளுக்குங், கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நிகழ்ச்சிக்கும் ஏதோர் இயைபும் இல்லாமை தெளியப்படும். தீபாவலி என்பது தீப ஆவலி எனப் பிரிந்து விளக்குவரிசை என்றே பொருள்தரும். விளக்குவரிசை வைத்து அதன் கண்ணே இறைவனை வழிபடுங் கார்த்திகை விளக்கு விழாவுக்குந் தீபாவலி விழாவுக்கும் வேற்றுமை சிறிதுமே யில்லை. ஆதலால், தீபாவலித் திருநாளுக்குப் பார்ப்பனர் பிற்காலத்தே ஏற்றி வைத்த பொருந்தாக் கதையை மறந்து, அஃது இறைவனை ஒளிவடிவில் வழிபடுந் திருநாளாதலைத் தமிழ் மக்களனைவரும் நினைவு கூர்வார்களாக! திருமைலாப்பூரில் அறுபத்துமூன்று நாயன்மாரை நினைவுகூர்ந்து வணங்குதற்பொருட்டு நடத்தும் அறு பத்துமூவர் திருவிழாவின் உண்மையறியாக் கீழ்மக்கள் ஔவையார் அறுபத்துமூன்று பிள்ளைகள் பெற்றும் போதாமற் பின்னும் ஒரு பிள்ளைப்பேற்றிற்கு வரங்கேட்கும் நிகழ்ச்சியாகக் கூறுங் கதைக்குந், தீபாவலித் திருநாள் நரகாசுரன் இறந்ததை நினைவுகூரும் நிகழ்ச்சியாகக் கூறுங் கதைக்கும் வேறுபாடு சிறிதும் இல்லை. ஆதலால், தீபாவலி, நரகாசுரன் கதைக்குச் சிறிதும் இசைவதன்றாய்க், கார்த்திகைத் திருநாளே போல், எல்லாம் வல்ல சிவ பிரானை ஒளிவடிவில் வைத்து வழிபடுந் திருநாளே யாகுமென்று மேன்மக்களனை வருங் கடைப்பிடித்துணர்ந்து, அவ் விரண்டிலும் இறை வனையே வணங்கி உய்வார்களாக! 27. திருவாதிரைத் திருநாள் இனி, ஆதிரை நாள் சிவபிரானுக்குரிய சிறந்த நாளாகப் பண்டைத் தமிழ்மக்களாற் கருதப்பட்டமை பழைய பரிபாடலின் எட்டாஞ் செய்யுளிற் போந்த ஆதிரை முதல்வன் என்னுஞ் சொற்றொடராலும், அதன் உரை யாலும் நன்கறியப்படும். இனி, மார்கழித் திங்களில் வருந் திருவாதிரை நாளில் எல்லாம்வல்ல இறைவனாகிய சிவ பெருமானுக்கு இரண்டாயிர ஆணடுகளுக்கு முன்னிருந்தே திருவிழாக் கொண்டாடப்பட்டமை, ஆசிரியர் நல்லந்துவனார் பாடிய பதினோராம் பரிபாடற் செய்யுளிற்போந்த, கனைக்கும் அதிர்குரல் கார்வானம் நீங்கப் பனிப்படு பைதல் விதலைப் பருவத்து ஞாயிறு காயா நளிமாரிப் பிற்குளத்து மாயிருந் திங்கள் மறுநிறை ஆதிரை விரிநூல் அந்தணர் விழவு தொடங்கப் புரிநூல் அந்தணர் பொலங்கலம் ஏற்ப என்னும் பகுதியால் இனிது புலனாகின்றது. இனி இவ்விருபெருந் திருவிழாக்களே யன்றி, மதுரையில் ஆவணி அவிட்டம் என்னும் ஒரு திருவிழாவும், உறையூரிற் பங்குனியுத்திரம் என்னும் ஒருதிருவிழவுங், கருவூரில் உள்ளி என்னும் ஒரு திருவிழாவும் ஆசிரியர் நக்கீரனார் காலத்திற்கு முன்னமே அஃதாவது இற்றைக்கு இரண்டாயிர ஆண்டுகட்கு முன்னமே இத்தென்றமிழ் நாட்டகத்தே நடைபெற்று வந்தமை, அவர் இறையனாரகப்பொருள் என்னும் நூலுக் குரைத்த தேனினும் பாகினும் இனிய தெள்ளிய விரிவுரையில், இனி, ஊர்துஞ்சாமை யென்பது ஊர் கொண்ட பெருவிழா நாளாய்க் கண்பாடு இல்லையாமாகவும் இடையீடாமென்பது. அவை மதுரை ஆவணி அவிட்டமே, உறையூர்ப் பங்குனி யுத்திரமே, கருவூர் உள்ளிவிழாவே யென இவையும், இவைபோல்வன பிறவும் எல்லாம் அப்பெற்றியான பொழுது இடை யீடாமென்பது எனக் கூறிய உரைப்பகுதியால் (16 ஆஞ் சூத்திரவுரை) நன்கறியக் கிடக்கின்றது. எனவே, மெய்யறிவுக்கு ஒரு வரம்பாய் நின்ற நம் பண்டைத் தண்டமிழ்ச் சான்றோர், எல்லா மக்களும் இம்மையின்பமும் மறுமையின்பமும் ஒருங்கே எளிதிற் பெற்றுத், தமக்கு இறைவன்றந்த அரிய மக்கட் பிறவியைத் தூய்தாக்கிக் கொள்ளுதற்கு ஒரு சிறந்த வாயிலாகவே சிவபிரான் றிருக்கோயிற் திருவிழாக்கள் மிகப் பழைய காலந்தொட்டே இத் தமிழகத்தில் ஆங்காங்கு நடைபெற்று வருமாறு வகுத்த மாட்சி நுண்ணறி வுடையாரெவர்க்குந் தெற்றென விளங்கா நிற்கும். 28. திருமணச் சடங்கு இனி, இத் தென்றமிழ் நாட்டில் இப்போது நடத்தப் பட்டுவருந் திருமணச் சடங்கு, ஆரியவழிப்பட்ட பார்ப்பனர் களால் ஆரியமொழியில் நடத்தப்படினும், முதன் முதல் இத் திருமணச சடங்கை உண்டாக்கி அதனை நடத்திக் காட்டினவர் பண்டைத் தமிழாசிரியர்களே யல்லால், ஆரியக் குருமார் அல்லரென்பது, இருக்குவேதம் முதலான பழைய ஆரிய நூல்களை நடுநின்று ஆராய்ந்து நோக்கு வார்க்கும், வடநாட்டில் இன்றைக்கும் நடைபெற்றுவருந் திருமண நிகழ்ச்சிகளை நேரே சென்று காண்பார்க்குந் தெற்றென விளங்காநிற்கும். திருமணச்சடங்குகளை முதன் முதல் வகுத்து அவற்றின்படி திருமணம் நடத்தினவர்கள் ஆரியர்களேயாயின், ஆரியர் கொணர்ந்த பாட்டுகளே பெரும்பான்மையாய்க் காணப்படும் இருக்குவேத முதல் ஒன்பது மண்டிலங்களிலே திருமணச் சடங்கைப் பற்றிய குறிப்பு ஒரு சிறிதாயினுங் காணப்படுதல் வேண்டும். மற்று, அவற்றில் அது முழுதுமே காணப்படாமையின் அதனை ஆரியர் அறியாரென்பதை அறிஞர் கருத்திற் பதித்தல் வேண்டும். இனித், திருமணச் சடங்கை நுவலும் ஒரேயொரு பதிகங் (85) காணப்படு வதெல்லாம் இருக்கு வேதப் பத்தாம் மண்டிலத்தின்கண் மட்டுமே யாகும். இருக்குவேதப் பத்தாம் மண்டிலத்துள்ள பதிகங்களோ, ஆரியர் இவ்விந்திய நாட்டிற்புகுந்து குடியேறி, இவ்விந்திய நாட்டின் பழைய நாகரிக மக்களான தமிழருடன் கூடி உறவாடி அவருடைய பழக்க வழக்கங்களைக் கற்று, அவற்றைத் தாமுந் தழுவி நடக்கத் தொடங்கியபின், தமிழாசிரியராலுந் தம் ஆரியக் குருமாராலும் ஆக்கப் பட்டவைகளே யாகும். ஆகவே, திருமணச் சடங்கை முதன்முதல் வகுத்தவர் செந்தமிழ்ச் சான்றோரே யென்பதும், அச்சடங்கையே ஆரியமொழியில் முதன்முதற் பாட்டாகப் பாடிவைத்தவர் சூரியன் எனப் பெயர் பூண்ட ஒரு திராவிட ஆரியரே யாவரென்பதும் துணியப்படு கின்றன. இன்னுந், திருமணச் சடங்கை முதன்முதல் வகுத்தவர் தமிழ்முனிவரே யென்னும் உண்மை, இப்போதிருப்பவற்றில் மிகப்பழைய நூலாகிய தொல்காப்பியத்திற் சொல்லப் பட்டிருப்பது கொண்டுந் தெற்றெனத் துணியப்படுகின்றது. அதனை ஒரு சிறிதெடுத்த விளக்கிக் காட்டுவாம். தொல் காப்பியருக்குப் பலநூற்றாண்டுகள் முற்பட்ட காலத் திலெல்லாம், அஃதாவது இற்றைக்கு ஆறாயிர ஆண்டுகட்கு முன்னெல்லாம் பண்டைத் தமிழ் மக்களில் ஆடவரும் பெண்டிரும் ஒருவரையொருவர் எதிர்ப்பட்டுத், தங் காட்சியுங் கருத்தும் ஒன்றுபட்டுத் தமக்குள் ஒருவரை யொருவர் உயிர்போற் காதலிக்குங் காதலன்பு நிகழப்பெற்ற பின் தமக்குள் திருமணஞ் செய்து கொண்டு இனிது வாழ்ந்து வரலாயினர். இது தமிழகத்தில் அன்பினைந் திணைக் காமக்கூட்டம் என்று கூறப்படுமெனவும், இஃது யாழோர் மணம் எனப் பிறநாடுகளில் உள்ளார் ஒரு வகுப்பினராலுங் கைக்கொள்ளப்பட்டு வருவது எனவும் ஆசிரியர் தொல் காப்பியனார், இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கிற் காமக் கூட்டங் காணுங் காலை மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள் துறையமை நல்லியாழ்த் துணைமையோ ரியல்பே (களவியல் -1) என்னும் நூற்பாவில் நன்கெடுத்துக் காட்டியிருக்கின்றார். முதலிற் காதலிற் பிணைந்தார் இருவரையும் மணங்கூட்டு வோர் அவர்தம் பெற்றாருஞ் சுற்றத்தாருமே யல்லால், இக்காலத்திற் போலப் பார்ப்பனக் குருமார் அல்லரென்பது, கற்பெனப் படுவது கரணமொடு புணரக் கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக் கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள் வதுவே என்னுங் கற்பியற் சூத்திரத்தில் அவர் கூறுமாற்றால் நன் நறியப்படும். இனி, மகளிர்க்குரியார், தம் மகளிரால் விரும்பப்பட்ட காதலர்க்குத் தம் மகளிரை மணஞ்செய்து கொடுக்க ஒருப்படாவழிக், காதலர் இருவரும் பெற்றார் உற்றார் அறியாமே வேற்று நாட்டிற் சென்று தாமே மணஞ்செய்து கொள்ளுதலும் அஞ்ஞான்றை வழக்கமாயிருந்ததென்பது, கொடுப்போர் இன்றியுங் கரணம் உண்டே புணர்ந்துடன் போகிய காலை யான என்று ஆசிரியர் பின்னுங் கிளக்குமாற்றால் தெளியப்படும். இனிப், பெற்றாரும் உற்றாருந் தம் மகளிராற் காதலிக்கப் பட்ட ஆடவர்க்கே தம்மகளிரை மணஞ்செய்து கொடுக்க ஓருப்பட்டாற், பெற்றாரும் உறவினருமே முன் நின்று அவரை மணங்கூட்டி வைத்தமையும், அங்ஙனம் மணங் கூட்டியக்கால் அவர் அம் மணத்தை நடத்திய முறையும் அகநானூறு என்னும் பழைய செய்யுட்டொகை நூலின் 86-வது செய்யுளில் விளக்கமாக நுவலப்பட்டிருக் கின்றது; அதுவருமாறு; உழுந்துதலைப் பெய்த கொழுங்களி மிதவை பெருஞ்சோற் றமலை நிற்ப, நிறைகாற் றண்பெரும் பந்தர்த் தருமணன் ஞெமிரி, மனைவிளக் குறுத்து, மாலை தொடரிக், கனையிரு ளகன்ற கவின்பெறு காலைக், கோள்கால் நீங்கிய கொடுவெண் டிங்கட் கேடில் விழுப்புகழ் நாள்தலை வந்தென, உச்சிக் குடத்தர் புத்தகல் மண்டையர் பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர் முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தரப் புதல்வற் பயந்த திதலையவ் வயிற்று வாலிழை மகளிர் நால்வர் கூடிக் கற்பினின் வழாஅ நற்பல உதவிப் பெற்றோற் பெட்கும் பிணையை ஆகென நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க வதுவை நன்மணங் கழிந்த பின்றைக் கல்லென் சும்மையர் ஞெரெரெனப் புகுந்து பேரிற் கிழத்தி யாகெனத் தமர்தர ஓரிற் கூடிய உடன்புணர் கங்குல் ஒரு தலைவியைத் திருமணஞ் செய்துகொண்ட ஒரு தலைமகன் தனக்கு அவள் திருமணஞ்செய்து கொடுக்கப் பட்ட முறையினைப் பின்னர் ஒருகால் அவடன் தோழிக்கு எடுத்துரைத்தமை இச்செய்யுளின்கண் நுவலப்பட்டிருக் கின்றது. உழுந்து அரைத்த மாவை முதன்மையாகச் சேர்த்துச் செய்த கொழுமையான களியுணவும், மிகுதியாகச் சமைத்த சோற்றுத் திரளையுந் திருமணத்திற்கு வந்தவர் எல்லார்க்கும் ஒரு பக்கத்தே வழங்கப்படா நின்றன; வரிசைப்பட நாட்டிய கால்களின்மேற் கட்டப்பட்ட குளிர்ந்த பெரும் பந்தலின்கீழ் வண்டியில்வந்த ஆற்றுமணல் பரப்பப் பட்டது; வீட்டினிடம் எல்லாம் விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டுப், பன்மலர்மாலைகள் தொடர்ந்து பிணைக்கப்பட்டன: மிகுந்த இருள் நீங்கிய அழகிய விடியற்காலையிலே தீய கோள்கள் நின்ற இடம் நீங்கி வெண்மதி சகடு என்னும் விண்மீனை யணைந்த கெடுதல் இல்லாத சிறந்த நாள் தோன்றா நின்றது; அந்நேரத்தில் தலையின் உச்சியிலே சுமந்த நீர்க்குடத்தினரும், புதிய அகன்ற வாயினையுடைய மண்டையென்னும் மட் பாண்டத்தை விளக்கேற்றி ஏந்தினருமாய், ஒருங்கொத்த ஆரவார ஓசையினை விளைக்கும் முதிர்ந்த செவ்வி வாய்ந்த பெண்பாலார், முன் கொடுக்க வேண்டியவைகளையும் பின்கொடுக்க வேண்டியவைகளையும் முறைமுறையே கொடுத்துக்கொண்டிருக்க, ஆண்மகவு பெற்று அழகு தேமல் படர்ந்த வயிற்றினையும் ஒள்ளிய அணிகலன்கள் பூண்ட கோலத்தினையும் உடைய மாதர்கள் நான்குபேர் ஒன்று சேர்ந்து, கற்பொழுக்கத்தினின்றும் வழுவாத திட்பம் வாய்ந்தனையாய், அறவோர்க்கு அளித்தலும் அந்தண ரோம்பலுந் துறவோர்க்எதிர்தலும் விருந்தெதிர் கோடலு மாகிய நல்ல பல கடமைகளைச் செய்துகொண்டு, நின்னை மனைவியாகப் பெற்றவனைப் பேணும் மங்கை யாகக் கடவாயாக! v‹W thœ¤Jiu bkhʪj gona