பெண்கள் புரட்சி முன்னுரை பெண்கள் ஆண்களுக்கு அடிமைகள்; அவர்கள் ஆடவருக்கு எல்லாவகையிலும் கட்டுப்பட்டு ஒழுகும் கடப்பாடுடையர்; பெண் பிறவி பாவமிகுதியினால் உண்டாவது என்பன போன்ற பொல்லாத கொள்கைகள் இன்றைய மக்களிடையே காணப்படுகின்றன. உண்மையில் பெண்களே ஆடவரிலும் உயர்ந்தவர்களாகவும், அவர்களைச் சீர்திருத்தியவர்களாகவும் காணப்படுகின்றனர். இன்று பெண்கள் ஆடவருக்கு அடிமைப்பட்டு இருப்பது பொருளாதார நிலை ஒன்றினாலேயே யாகும். பெண்கள் வாழ்க்கைச் செலவுக்கு ஆடவரின் கையை எதிர்பாராது தாமே பொருள் ஈட்டும் நிலையில் இருப்பார்களேயாயின் அவர்கள் ஆடவருக்குக் கட்டுப் பட்டு நடக்கும் கட்டாயம் உண்டாகாது. தொடக்கத்தில் பெண்களே பயிர்த் தொழில் கைத்தொழில்கள் புரிந்து ஆடவருக்கும் உணவு அளித்து வந்தார்கள். அதனால் ஆடவர், மகளிருக்குப் பணிந்து நடந்தார்கள். பெண்கள் ஆட்சியே ஆதியில் நடைபெற்றது. பிற்காலத்தில் ஆடவர் சுயநலங் கருதி அவர்களின் பொருளாதார நிலையைப் பரித்து அவர்களைத் தமக்கு அடங்கி நடக்கும்படி செய்தனர். பெண்கள் ஆண்களுக்கு அடங்கி நடத்தல் இயற்கை விதியன்று; ஆண்கள் பெண்களுக்கு அடங்கி நடத்தலே இயற்கை விதியாகும். இவைபோன்ற பெண்களின் பிறமாண்புகளை வரலாற்று முறையில் ஆராய்ந்து கூறுகின்றது இந்நூல். சென்னை 10.05.46 ந.சி. கந்தையா பெண்கள் புரட்சி தோற்றுவாய் ஆதியில் பெண்கள் ஆடவரைவிட உயர் நிலையில் இருந்தார்கள். அவ்வரலாறு இன்று மறக்கப்பட்டது. சில செயற்கைக் காரணங்களால் இன்று அவர்கள் தமது உயர் நிலையினின்றும் வீழ்ச்சியடைந்தனர். ஆடவருக்குப் பணிந்து நடக்கும்படி பெண்கள் கடவுளாற் படைக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அவர்கள் ஆண்களுக்குப் பணிந்து நடத்தலே இயற்கை விதியென் றும் நம்பப்பட்டு வருகின்றன. பெண்களின் வரலாற்றை ஆராயுமிடத்து உண்மை இதற்கு நேர்மாறாகவுள்ளது. ஆட்சியும் சொத்துரிமையும் நீண்ட காலம் பெண்களிடமே இருந்து வந்தன. பெண்களின் அதிகாரம் சிறிது சிறிதாக ஆடவரின் கைக்கு மாறியபோது பெண்களைக் கட்டுப்படுத்து வனவும், கட்டி ஆள்வனமாகிய சமூகக் கட்டுப்பாடுகளை ஆடவர் உண்டு பண்ணினர். இதனால் ஆடவர் ஆளவும் பெண்கள் ஆளப்படவும் பிறந் தார்கள் என்னும் தவறான கருத்து மக்கட் சமூகங்களிடையே தோன்றி வலுவடைந்துள்ளது. வரலாற்று முறையில் பெண்களின் பெருமையை உள்ளவாறு எடுத்து விளக்குவதே இந்நூலின் இலக்காகும். உயிர்ப் படைப்புக்களும் அவைகளின் தொழில்களும் இவ்வுலகின்கண் காணப்படும் அசைவுள்ள, அசைவற்ற எல்லா உயிர்ப் பொருள்களையும் நோக்குவோமாயின் அவை, உணவு தேடுதல் சந்ததியைப் பெருக்குதல் என்னும் இரு தொழில்களிலேயே ஒயாது உழன்று வருகின்றன எனத்தோன்றும், சந்ததியைப் பெருக்கும் வன்மை இழந்த உயிர்கள் விரைவில் மடிந்து போகின்றன. இதனால் சந்ததியைப் பெருக்குவது உயிர்களின் முக்கிய நோக்கம் எனத் தெரிகின்றது. ஆண் பெண் விலங்குகள் சோடிகளாக வாழ்கின்றனவா? பறவைகளுள் முட்டையிட்டு நீண்டகாலம் அடைகாத்துக் குஞ்சு பொரிப்பவைகள் சோடிகளாக வாழ்கின்றன. விலங்குகளின் வாழ்க்கையை நன்கு பயின்றவர்கள் அவை சோடிகளாக வாழாது தனித்தனித் கூட்டங் களாக வாழ்கின்றன என்று கூறுகின்றனர். காட்டில் வாழும் விலங்குகள் பறவைகளுக்குக் கருக்கொள்ளும் உணர்ச்சி (Seasonal rut) ஆண்டின் ஒவ்வோர் காலங்களிலேயே உண்டாகின்றது. *பெண் விலங்குகளும் ஆண் விலங்குகளும் தனித்தனிக் கூட்டங்களாகப் பிரிந்து வாழ்கின்றன. பெண் ணினங்கள் கருத்தரிக்கும் காலத்தில் மாத்திரம் ஆண் விலங்குகள் பெண் விலங்குகளிடையே காணப்படுகின்றன. ஆண் விலங்குகளிடையே பெண் விலங்குகள் காணப்படுவதில்லை. கருத்தரிக்கும் பொருட்டு ஒரு பெண் ஒரு ஆணைத் தெரிந்து எடுப்பது இயற்கைத் தெரிவு (Natural Selection) எனப்படும். எப்பொழுதும் பெண் விலங்கு வீரமுடைய ஒரு விலங்கையே தெரிந்து கொள்ளுகின்றது. ஒரு பெண் மானின் பொருட்டுப் பல ஆண் மான்கள் பல நாளாக ஒன்றோடு ஒன்று முட்டிப் போராடியதையும், அப் போரில் பங்கு பற்றாது தனியே அப்போரைப் பார்த்து நின்ற பெண்மான் இறுதியில் வெற்றியடைந்த அண்மானையே விருப்பத்துடன் தெரிந்து கொண்டதையும் பற்றி டார்வின் என்னும் இயற்கை நூற் புலவர் எடுத்துக் கூறியுள்ளார்.1 ஆண் பெண் சேர்க்கைக்குப் பின்னால் ஆண் விலங்குகள் தம் கூட்டத்தை அடைந்து வாழும். இயற்கைத் தெரிவு ஆண்களாலன்று பெண்களாலேயே தெரியப்படுகின்றது.2 கூட்டத்துக்குப்பின் பெண் விலங்குகள் ஆண் விலங்குகளை உடன் வாழ அனுமதிப்பதில்லை “ஆண் பெண் கூட்டத்துக்குப்பின் இரு இனத்துக்கும் ஒருவகை வெறுப்பு உண்டாகின்றது.3 குட்டிக்குப் பால் கொடுத்து வளர்க்கும் விலங்குகளிடையே இவ்வெறுப்பு மிகக் காணப்படுகின்றது. அமெரிக்க துருவ மான்கள் (Rein deer) ஒரிடத்தினின்றும் இன்னோரிடத்தில் தங்கி வாழும் பொருட்டுச் செல்லும்போது ஆண்களும் பெண்களும் தனித்தனிக் கூட்டங்களாகச் செல்லும். எல்லா இனமான்களிடையும் இவ்வியல்பைக் காணலாம். புரட்டாசி மாதத்துக்குப்பின் எருமைகளுள் ஆண் பெண் இனங்கள் தனித்தனி பிரிந்து வாழ்கின்றன. ஆண் பெண் சேர்க்கைக்குப்பின் பெண் வெளவால் ஆண் வெளவாலைக் கடித்துத் துரத்திவிடுகின்றது. பெண் வெளவால்களின் மத்தியில் ஆண் வெளவால்கள் காணப்படுவதில்லை. கருக்கொண்டபின் பெண் யானைகள் ஆண் யானைகளைத் துரத்தி விடு கின்றன. பெண் யானைக் கூட்டத்துள் ஆண் யானையைக் காண்டல் அரிது. பருவம் அடையும் வரையும் மாத்திரம் ஆண் யானைக் கன்றுகள்தாய் யானைகளுடன் தங்கும்; பெண் நீர்நாய்கள் கருக்கொள்ளும் காலத்துக்குப் பின் ஆண்களும் பெண்களும் பிரிந்து தனித்தனிக் கூட்டங்களாகவாழும். அணில்களும் இவ்வாறே பிரிந்து வாழ்கின்றன. குரங்குகளைப் பற்றியும் இவ்வாறு சொல்லப் படுகின்றது. ‘ஒரான் ஊத்தான்’ என்னும் குரங்குகள் ஆணும் பெண்ணும் கலந்த கூட்டமாக வாழ்வதில்லை. ஆண்கள் ஒரு தனிக் கூட்டமாகவும், பெண்களும் குழந்தைகளும் மற்றொரு கூட்டமாக வும், கொரிலாக் குரங்குகள் வாழும்.” - தாய்மார். (The mothers). ஆடவரும் மகளிரும் தனித்தனிக் கூட்டங்களாக வாழ்ந்தார்கள் விலங்கு நூல் முறையில் மனிதன் விலங்கினத்தைச் சேர்ந்தவன். ஆகவே அவனும் ஒரு காலத்தில் விலங்குகளை ஒப்பவே வாழ்ந்தான் என்று கூறுதல் பிழையாகாது. ஆண்களும் பெண்களும் தனித்தனிக் கூட்டங்களாக வாழ்ந்தார்கள் என்பதற்குரிய சில வழக்கங்கள் இன்றும் காணப்படுகின்றன. மக்களிடையே இயற்கைத் தெரிவு பெண்களாலேயே செய்யப்பட்டது.4 மகளிரும் ஆடவரும் கலந்து வாழாது தனித்தனிக் கூட்டத்தினர்களாகவே நீண்டகாலம் வாழ்ந்து வந்தார்கள் என்பதற்குரிய ஆதாரங்கள் மேற்கூறப்படும் பொருளில் ஆங்காங்கு வருகின்றன. ஆகவே அவைகளை இவ்விடத்தில் விரித்து எழுதிற்றிலேம். “அமேசன்” என்னும் பெண் போர் வீரியர் முற்காலத்தில் இராணியால் ஆளப்பட்ட பெண் இராச்சியம் ஒன்று உலகின் சில பகுதிகளில் இருந்ததென்னும் மேல்நாட்டுப் பழங்கதை ஒன்று உள்ளது. பெண்கள் ஆடவரின் கலப்பின்றித் தனித்து வாழ்ந்தார்கள்; அவர்கள் ஆடவர்களைப்போலப் போர் செய்யவும் வேட்டையாடவும் பழகியிருந்தார்கள். ஆண்டின் ஓரு முறையோ இரு முறையோ ஆடவர் பெண்களைச் சந்திக்கும்படி அனுமதிக்கப்பட்டார்கள். சில நாட்களின் பின் அவர்கள் பிரிந்து தமது கூட்டத்தைச் சேர்ந்துவிடுதல் கட்டாயமாக விருந்தது அமேசன் எனப்பட்ட பெண்கள் அவர்களால் உண்டாக்கப்பட்ட சட்டத்திட்டங்களைக்கொண்டு அரசியரால் ஆளப்பட்டார்கள். தயதோரஸ் (Diodorus) ஸ்ராபோ (Strabo) முதலிய வரலாற்று ஆசிரியர்கள் அமேசன் என்னும் பெண் இராச்சியம் காக்கேசிய மலைகளுக்கும் யுக்சின் (Euxine) கரைகளுக்கும் இடையில் இருந்ததெனக் குறிப்பிட்டுள்ளார்கள். அவர்கள் வில்லை நன்றாக இழுத்து வளைக்கும் வாய்ப்புப் பெறுவதற்காக வலது தனத்தை வெட்டி எடுத்திருந்தார்கள். போர்ப் பிரியமுள்ள இக் கூட்டத்தினர் பிர்கிய (Phrygia) என்னும் நாட்டின்மீது படை எடுத்தார்கள். உரோசருக்கு (Trojans) உதவியாகப் போர் செய்யும் பொருட்டுப் படைக்குத் தலைமை தாங்கிச் சென்ற அமேசன் இராணி அச்சில்லீஸ் என்பவனாற் கொல்லப்பட்டாள். காக்கேசஸ் மலையிடத்திலே கணவரைச் சந்திப்பதால் பிறக்கும் பிள்ளைகள் பெண்களாயின் அவர்கள் அவைகளைத் தாமே வளர்த்தார்கள், ஆண்கள் ஆயின் கொன்றார்கள்; அல்லது ஆடவரிடம் அனுப்பி வைத் தார்கள்.5 தமிழ்நாட்டில் வழங்கும் ஆரவல்லி சூரவல்லி கதை, அல்லி அரசாணி கதை, பவளக்கொடி கதைகள் தமிழ்நாட்டு அமேசன் கதைகளே யாகும். காமம் என்பது யாது? இவ்வுலகப் படைப்புக்கள் எல்லாம் ஆண் பெண் என்னும் இரு வகைகளாக அமைந்துள்ளன. இவ்விரு இனங்களின் ஆண் பெண் சேர்க்கையால் உலகில் அவைகளை ஒத்த சந்ததிகள் தோன்றிப் பெருகு கின்றன. சந்ததி பெருகுவதற்கு ஆண் பெண் சேர்க்கை அவசியம் வேண் டப்படுகின்றது. இயற்கையாகவே எல்லா உயிர்களிடத்தும் தம்மைப் போன்ற உயிர்களைத் தோற்றுவிக்கும் இயற்கை உணர்ச்சி பதிந்து உள்ளது. தம்மைப்போன்ற உயிர்களைத் தோற்றுவிக்கும் பருவம் எய்திய ஆண் இனங்களும் பெண்ணினங்களும் எதிர்ப்படும்போது உள்ளே மறைந்திருந்த உணர்ச்சி கிளர்ந்து எழுந்து வெறிபோல் வெளிப்படுகின்றது. இவ்வாறு கிளர்ந்தெழும் வெறியே காமம் எனப்படுகின்றது. ஆண் பெண் சேர்க்கைக் காலங்களில் ஊன் உணவு கொள்ளும் விலங்குகள் ஒன்றை ஒன்று பற்களாற் கடித்தும் நகங்களாற் கிழித்தும் உடம் பில் காயங்களை உண்டு பண்ணுகின்றன. வீடுகளிலே பூனைகள் இவ்வாறு செய்வதை நாம் பார்க்கின்றோம். சிங்கங்களும் புலிகளும் ஆண் பெண் சேர்க்கைக் காலங்களில் காட்டில் வாழும் உயிர்கள் எல்லாம் நடுங்கும்படி முழக்கஞ் செய்கின்றன. விலங்குகளிடத்திற் காணப்படும். இவ் வகை இயல்புகள் மக்களிடையும் இருந்து சிறிது சிறிதாகப் பண்பட்டுள்ளன. இன்ப நூல்களிற் கூறப்படும் பற்குறி நகக்குறி என்பன ஆண் பெண் சேர்க்கைக் காலத்துத் தோன்றும் வெறியினாற் கடிக்கும் பற்றழும்புகளும், நகங்கள் கீறும் நகத்தழும்புகளுமேயாகும். முத்தம் என்பதும் காம உணர்ச்சியாற் கடிக்கும் கடியின் பண்பாடேயாகும்.6 ஆண் பெண் சேர்க்கைக்குப்பின் ஒருவரில் ஒருவர் பற்று இன்றிப் போகும் காதல் வெறியைக் காமம் எனக் கூறுதல் அமையும்.6 காதல் காமத்தின் பண்பாடே காதல் எனப்படும். காதல் உணர்ச்சி ஆண் பெண் என்னும் இருபாலாரையும் அவர்களின் இளமை கழிந்த காலத்தும் இணைத்தும் வைப்பதாகிய உயர்ந்த பண்பு. தாய், பிள்ளைகளைப் பெறுகின்றனர்; பெற்ற பிள்ளைகள் மீது அன்பு கொள்கின்றாள். இவ்வாறு தோன்றும் அன்பு தலைமுறை தலைமுறையாக வளர்ச்சியடைகின்றது. இவ்வகை இளகிய உள்ளமுள்ள பெண் இயற்கைத் தெரிவு செய்யும்போது தான் தெரிந்தெடுத்த ஆடவன்மீது கசிந்த உள்ளமும் அன்புகலந்த உணர்ச்சியுமுடையவளாகின்றாள். ஆண் பெண் சேர்க்கைக் குப் பின்பும் அவ்வுணர்ச்சி அவளை விட்டுப்பிரியாமல் இருக்கின்றது. இப் பண்பட்ட உள்ளப்பிணைப்பே காதல் எனப்படுகின்றது. காதல் உணர்ச்சி பெண்களிடத்திலேயே முதலிற்றோன்றி வளர்ச்சியடைவதாயிற்று.* தாய் ஆட்சி தாய் வட்டங்கள் நாம் எல்லோரும் தேன் கூட்டில் ஈக்கள் எப்படி வாழ்கின்றன என்று அறிவோம். தேன் கூட்டின் மத்தியில் இராணி, அல்லது தாய் ஈ இருக் கின்றது. அதனைச் சூழ்ந்த அதன் பிள்ளைகளாகிய மற்றைய ஈக்கள் இருக் கின்றன. இதனை ஒரு தாய் வட்டம் எனக் கூறலாம். இதனை ஒப்பவே மக்களும் தாய் வட்டங்களாகப் பெருகுகிறார்கள். பிள்ளைகளுள் ஆண்கள் வேட்டையாடு வோராக அலைந்து திரிந்தனர். பெண்கள் ஒரிடத்தில் தங்கி வாழ்ந்தனர். வயதின் மூத்த தாயே குடும்பத்தின் தலைவியாக விருந்தாள். அவள் சொல்லுக்கு எல்லாரும் அடங்கி நடந்தார்கள். தாய்க்கு அடுத்தபடி யில் அவளின் மூத்த குமாரி அதிகாரமுடையவளானாள். பெண்கள் ஒரிடத்திற் கூட்டமாக வாழ்ந்தமையின் அவர்கள் வாழும் இடங்களிலேயே உணவைப்பெற வேண்டியிருந்தது. ஆகவே அவர்கள் தாம் வாழும் இடத்திலும் அதன் அண்மையிலும் பழ மரங்களையும் தானி யங்களையும் பயிரிட்டுத் தமக்கு வேண்டிய உணவுப் பொருள்களைப் பெற்றனர்.7 உணவின் பொருட்டு ஓய்வின்றி அலைந்து திரியும் நிலையில் மக்களின் நாகரிகம் உதயமாகவில்லை. உணவு எளிதிற் கிடைத்தபோது அவர்கள் ஆறுதல் அடைந்து அமைதியாக வாழத் தொடங்கினார்கள்; வாழ்க்கைக்குத் தேவைப்படும் சட்டி, பானை, பெட்டி, கடகம், பயிர்த் தொழிலுக்கு வேண்டும் ஆயுதங்கள் போன்றவற்றைச் செய்தார்கள். அதனால் சிறிது சிறிதாகக் கைத்தொழில் வளர்ச்சியடைந்தது. அலைந்து திரி யாது ஒரிடத்தில் தங்கி வாழ்ந்தவர்களாகிய பெண்களே கைத் தொழிலையும் பயிர்த்தொழிலையும் வளர்த்தவர்களாவர். ஏர் பூட்டி நிலத்தை உழும் காலம் வரையில் ஆடவர் பெரிதும் வேட்டையாடும் நிலையிலேயே இருந்தார்கள். ஆடவர் சில சமயங்களில் பெண்களையே உணவின் பொருட்டு எதிர் பார்க்க வேண்டியிருந்தது. பெண்கள் ஆடவரிலும் கண்ணிய முடையவர் களாகக் கருதப்பட்டார்கள். ஆடவர் பெண்களுக்குப் பணிந்து ஒழுகினர். உணவுப் பொருளே மக்களின் செல்வமாகக் கருதப்பட்டது. பெண்களிடத்தி லேயே அதிக உணவு இருந்தது. ஒரே தாய் வட்டத்துள் திருமணக் கலப்பு இல்லை நுஒடிபயஅல ஒரு தாய் வழியாகப் பெருகியவர்கள் எல்லோரும் ஒருவருக்கு ஒருவர் உடன்பிறப்பு முறையினராகக் கருதப்பட்டார்கள். ஆகவே ஒரு தாய் வட்டத்திலுள்ள ஆடவரும் மகளிரும் திருமணக் கலப்புடையவராய்ப் பிள்ளைகளைப் பெறுதல் கடியப்பட்டது. ஒரு தாய் வட்டத்தேயுள்ள பெண் பருவமடைந்தபோது இன்னொரு தாய் வட்டத்திலுள்ள ஆடவனைச் சேர்ந்து பிள்ளைகளை ஈன்றாள். பெண்ணின் கணவன் தனது தாய் வட்டத்தில் சென்று வாழ்ந்தான். பெண்ணின் தாய் வட்டத்தில் அவன் தங்கவில்லை. தாய் பெறும் குழந்தைகள் குடும்பத்துக்குச் சொந்தமாக விருந்தன. பிள்ளைகள் தந்தையரை அறியார். ஆகவே பிள்ளைகள் தாய் வழியில் அறியப்பட்டனர். தந்தைக்கும் பிள்ளைக்கும் எவ்வகைத் தொடர்பும் உண்டாகவில்லை. பெண்ணுக்கும் ஆடவனுக்கும் கணவன் மனைவி என்னும் கடமைகளும் தோன்றவில்லை.8 பெண்கள் பல தார மணம் இயற்கைத் தெரிவு ஆண்களுக்கன்று பெண்களுக்கே உரியது என முன்னோரிடத்திற் படித்தோம். பருவமடைந்த பெண்கள் சந்ததி விருத்தி யின் பொருட்டுத் தகுதியுள்ள ஆடவரைத் தெரிந்தெடுத்தனர். இவ் வழக்கி லிருந்து பெண்கள் தாம் விரும்பிய பலரைக் கணவராகத் தெரிந்தெடுக்கும் வழக்கு வளர்ச்சியடைந்தது. அவர்கள் பெண்ணினால் வரையறுக்கப்பட்ட முறைப்படி அவளை அடைந்தார்கள். இவ்வுலகம் முழுமையிலும் இவ் வகை மணங்களே நடைபெற்றன;9 இன்றும் சிற்சில நாடுகளில் காணப்படு கின்றன. இவ்வகை மணங்கள் நடைபெற்ற காலத்தில் வியபிசாரமென்பது பொருளற்றதாயிருந்தது. தந்தை ஆட்சிக் காலத்திலேயே வியபிசாரம் என்னும் குற்றச்சாட்டை உணர்த்தும் சொல் உண்டாயிற்று.10 நாயர் சாதியினரும் அவரின் திருமணங்களும் மலையாளத்தில் நாயர் என்னும் ஒரு வகுப்பினர் காணப்படுகின் றனர். இவர்களின் மணமுறை பழைய தாய் வட்ட மணமுறையை ஒத்தது. நாயர்க் குடும்பங்கள் தாய் வட்டங்களாகவுள்ளன. ஒவ்வொரு குடும்பத் துக்கும் தாயே தலைவியாவள். அவர்களுக்குள் நிலையான திருமணங்கள் இல்லை, நாயர்களும் நம்பூதிரிகளும் பெண்ணின் சகோதரனது விருப் பத்தைப் பெற்றுப் பெண்ணைச் சம்பந்தம் வைத்துக் கொள்வார்கள். சம்மந்த மென்பது சிலகாலத்துக்கு மாத்திரம் இருபாலாரும் கணவன் மனைவியராக இருக்கும் உடன்படிக்கை. எப்பொழுது இருவரில் எவருக்கும் இக்கூட்டுறவு பிடிக்கவில்லையோ அப்பொழுதே அவர்கள் அதனை வெட்டிவிடுவர். பின்பு அவர்கள் தமக்கு விருப்பம்போல் வேறு வேறு சம்பந்தங்களை வைத்துக்கொள்ளலாம். தந்தையின் சொத்தில், பிள்ளைகளுக்கு யாதும் உரிமை இல்லை. பிள்ளைகள் தாய்வட்டத்தைச் சேர்ந்தனவாகும். தாய் வட்டத்துக்குரிய சொத்திலேயே அவைகளின் வாழ்க்கைச் செலவு நடை பெறுகின்றது. தாயின் உடன் பிறந்தானுக்கே பிள்ளைகளைப் பாதுகாக்கும் உரிமை உண்டு. அவனுடைய சொத்து அவனுடைய பிள்ளைகளைச் சேராது மருமக்களையே சேர்கின்றது. பல ஆடவரை ஒரே காலத்தில் கணவராகக் கொண்டு ஒழுகும் ஒழுக்கம் நாயர்ப் பெண்களிடத்தில் உண்டு. இதனை அவர்கள் சமூகம் தவறானதென்று உணர்வதில்லை. தந்தையின் சொத்து பிள்ளைகளை அடையாமல் மருமக்களை அடையும் வழக்கு மருமக்கள் தாயம் எனப் படும். திருவிதாங்கூர் அரசுரிமையும் இவ்வகையினதே. இராணி எனப்படுப வர் அரசனின் மனைவியல்லள், அவனது உடன் பிறந்தாளே, அரசுரிமை அவளுடையதே அரசியின் மூத்த பெண்ணுக்கே அரசுரிமை செல்கின்றது. நாயர்ப் பெண்கள் பன்னிரண்டு கணவர்வரையில் உடையவர்களா யிருந்தார்கள் என்பதற்கு எழுத்து வகையான அதாரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கணவனும் மனைவியால் வகுக்கப்பட்ட முறைப்படி ஒவ்வோர் நாளில் அவளை அடைவான். பெரும்பாலும் அக்கால எல்லை ஒரு நாள் மத்தியானம் முதல் அடுத்தநாள் மத்தியானம் வரையுமாக விருந்தது. இவ் வகை வழக்கு இந்தியாவில் மாத்திரமன்று உலகம் முழுமையிலும் இருந்து வந்தது.11 தாய்க் கடவுள் தாயே எல்லா அதிகாரமுமுடையவளாயிருந்தாள். அக் காலத்தே மக்கள் எல்லா அதிகாரமுமுடைய தாயைக் கடவுளாக வழிபட்டனர். உலகில் முதன்முதல் தாய் வழிபாடே உண்டாயிற்று என மக்கள் நூலார் ஆராய்ந்து கூறுகின்றனர். எல்லா அதிகாரமுமுடைய தாய்க்கு விலங்குகளுக்குள் வீர முடைய சிங்கம் வாகனமாக்கப்பட்டது. அவளே வீரத்தெய்வம் (கொற்றவை) ஆகவும் விளங்கினாள். உலகில் எல்லாப் பாகங்களிலும் தாய்க் கடவுள் கன்னித் தெய்வமாகவே கொண்டு வழிபடப்பட்டாள். முற்காலத் தாய் பிள்ளைகளைப் பெற்றபோதும் கலியாணமாகாதவள் என்றே கொள்ளப் பட்டாள். கலியாணம் என்பது கணவன் மனைவி என்னும் முறையில் ஒருமித்து வாழுதல். தாய்க் கடவுள் கன்னி எனப்படுதல் ஆதிகாலத் திருமண முறையை ஒருவாறு விளக்குவதாகும்.12 விலங்குக் கூட்டங்களைத் தலைமை தாங்கிக் காப்பது பெண்ணே காடுகளிலே விலங்குகள் கூட்டங்களாக வாழ்கின்றன. ஆபத்து நேரும்போது முன்னேவந்து அவைகளைக் காப்பது மூத்த பெண் விலங்கே யாகும்.13 இதுவே இயற்கை விதிபோலும். மக்களுள்ளும் மூத்த பெண்ணே தலைவியாயிருந்தாள் என்று முன் படித்தோம். பெண்கள் ஆடவரிலும் பார்க்கச் சிறந்த போர் வீரியராயிருந்தார்களென்று நாம் வரலாறுகளிற் படிக்கின்றோம். போர்வீரப் பெண்கள் “கனெரியிலுள்ள குவாஞ்செஸ் (Guanches) பெண்கள் அணிகளில் நின்று போர் செய்தனர். மொரக்கோவிலுள்ள பெர்பர் (Berber) பெண்கள் குதிரைகள்மீது ஏறிச் சவாரிசெய்து போர் புரிவர். அராபியரின் வரலாற்றில் பெண் போர் வீரர்களைப்பற்றிய செய்திகள் பெரிதும் காணப்படுகின்றன. பெண் போர்வீரர்கள் பலதடவைகளில் போர் முனையிற்றோன்றி போர்ப் போக்கை மாற்றித் தமது உடன் பிறந்தார், கணவர், பிரதானிகளின் உயிர் களைக் காத்திருக்கின்றனர். வகாபியின் (Wahabi) மனைவியாகிய காலியா என்பவள் மகமத்அலி என்பவனைப் போர் முனையில் பலதடவை எதிர்த்தாள். வான்ரி (Fanti) மக்களுள் பெண்களும் ஆடவருடன் பக்கத்தே நின்று போர் புரிந்தனர். சான்சிபார் சுல்தானிடத்தில் 1000 பெண் போர் வீரர் நிலையாக இருந்தனர். மத்திய ஆசிய, தாத்தாரியப் பெண்கள் மிகவும் வீரமுடையவர்களாக விளங்கினார்கள். அவர்கள் ஆடவரிலும் பார்க்க வேகமாகக் குதிரைகளைச் செலுத்திப் போர் செய்தார்கள். சீயம் (Siam) அரசன் பெண் காவலாளரை அமர்த்தியிருத்தல் வழக்கு. கண்டி அரசனும் இவ்வாறு விற்பிடித்த பெண் காவலரை வைத்திருந்தான். பாரசீக அரசன் ‘அமேசன்’ மெய்க்காப்பாளரை அமர்த்தியிருந்தான். சீத்திய (Seythian) பெண்கள் ஆடவரை ஒப்பப் போர் புரிகின்றார்கள் எனக் கொதோதசு கூறியுள்ளார். கெல்திய (Celt) பெண்கள் ஆடவரின் இடை இடையே நின்று போர் புரிந்தனர். அயர்லாந்தின் இலக்கியங்கள் பெண்வீரர் பலரைப்பற்றிக் கூறுகின்றன.”14 பெண்கள் ஆடவரை ஒப்ப அல்லது அவர்களிலும் திறமையாகப் போர்செய்யும் திறன் அடைந்திருந்தார்கள். தந்தை ஆட்சிக்காலத்தில் அவர்கள் ஒடுக்கப்பட்டு வீட்டில் அடைக்கப்பட்டார்கள். பல தலைமுறை களாக அவர்களின் வீரம் பயன்படுத்தப்படாமல் இருந்தமையினால் வீரம் குன்றி மறைந்துவிட்டது. இன்று பயம் அல்லது கோழைத்தனத்துக்குப் பெண்கள் எடுத்துக்காட்டப்படுகின்றனர். பழைய எகிப்து மேற்கு ஆசிய நாடுகளிற் சொத்துரிமை பழைய15 எகிப்தில் ஆவணங்களில் (Documents) கணவனின் பெயர் காணப்படவில்லை. பில்லோமீற்றர் (Philometer) என்னும் அரசன் கணவனின் உரிமையையும் புகுத்துதற்கு மனைவி எழுதும் ஆவணங் களுக்குக் கணவனும் கையெழுத்திடல் வேண்டும் என்னும் சட்டத்தை உண்டுபண்ணினான். “சகாரா வனாந்தரங்களிலுள்ள டௌரெக் (Touareg) பெண்கள் தாய் வழி உரிமையையே பெற்றிருந்தனர். பாபிலோனிய மகளிரும் எகிப்திய பெண்களைப்போலவே தாயாட்சி உடையவர்களாயிருந்தார்கள். அவர்கள் தம் உடன்பிறந்த ஆடவரைப் போலவும் கணவரைப்போலவும் எல்லாவற் றிலும் சம உரிமை பெற்றிருந்தனர்.” கிரேத்தா (Crete) மக்கள் கிரேத்தாவை தாய்நாடென்றே கூறினர்; தந்தை நாடென்றும் கூறவில்லை எனப் புளுற்றாக் (Plutarch) என்னும் வரலாற்றாசிரியர் கூறியுள்ளார். பழைய அதேன்சில் பிள்ளைகள் தாய்வழியால் அறியப்பட்டார்கள். கிகுரொப்ஸ் (Cecrops) அரசன் காலத்தில் இவ்வகை வழக்கு இருந்தது. இலைசியாவில் தாயாட்சியே இருந்த தென ஹெரதேதசு கூறியுள்ளார். கிரேத்திய (Crete) பெண்களுக்கு எகிப்திய பெண்களைவிட அதிக அதிகாரம் இருந்தது. காசிஸ் (Khasis) என்னும் இடத்தில் ஆண் கடவுளரின் முன்னர் பெண் கடவுளர் வைக்கப் பட்டிருக்கின்றனர். கிரேக்கர் வழிபட்ட எட்டு முக்கிய கடவுளரில் ஐவர் பெண்பாலினர். ஸ்பெயினில் தாய் தந்தை என்னும் இருவரின் பெயர் களையும் இணைத்துப் பிள்ளைகளுக்குப் பெயர் இடப்பட்டது.16 பழைய மெசபெத்தேமியாவில் பெண்கள் ஆடவரை ஒத்த உரிமை பெற்று விளங்கினர். மணமான பெண்களுக்கும் மணமாகாத பெண்களுக் கும் சொத்துரிமை இருந்தது பெண்கள் தாம் விரும்பிய வண்ணம் (கணவ னின் உடன்பாடின்றி) பணம் கொடுத்தல் வாங்கல் சம்பந்தமான கருமங் களைச் செய்தார்கள். பெண்கள் வாணிகமும் புரிந்தனர்; தேசாதிபதிகள், எழுத்தாளர்களாகக் கடமை ஆற்றினர்; ஆலயங்களில் பூசாரிகளாக (Priestess) விருந்தனர். அவர்களுக்குப் பெருஞ்செல்வாக்கும் பொருளும் இருந் தன. எகிப்திய பெண்கள் தாய் தந்தையரைப் பராமரிக்கக் கடமைப்பட்டிருந் தனர். அவர்கள் ஆடவரை ஒப்ப எல்லாத் தொழில்களும் புரிந்தனர்; பயிரிடுந் தொழிலிற் பலர் ஈடுபட்டிருந்தார்கள். நான்காவது அல்லது ஐந்தாவது எகிப்திய பரம்பரைக்காலத்தில் எழுதப்பட்ட ஓவியம் ஒன்றில் பெண் ஒருத்தி கப்பல் ஒட்டுகின்றாள்.17 மக்களின் வாழ்க்கை ஆரம்பத்தில் தொடங்கிய தாயாட்சி, காலத்தில் சிறிது சிறிதாக மாறுதலடைந்து இறுதியில் தந்தை ஆட்சியுட் புகுந்து மறைந்துவிட்டதென வரலாற்றாசிரியர்கள் கூறுவர்.18 ஆண்களைச் சீர்திருத்தினவர்கள் பெண்களே இவ்வுலகில் வாழும் எல்லா ஆண் பெண் உயிர்களுள் ஆண்கள் வலிய தன்மையுடையனவாகவும், பெண்கள் மென்மைத் தன்மையுடையன வாகவும் காணப்படுகின்றன. ஆண்கள் மூர்க்க குணமும், முரட்டுத்தன்மை யும் போர் விருப்பம் உடையர். ஆண்களிடத்தில் ஆக்கும் குணங்களினும் பார்க்க அழிக்கும் குணங்களே பெரிதும் காணப்படுகின்றன. பெண் களிடத்து இயல்பாக மென்மைக் குணங்களுண்டு. அவை பிள்ளைகளைப் பெற்று அவைகளைக் கருத்துடன் பாதுகாக்கும் இயல்பினால் அன்பு தோன்றி மென்மையக் குணங்களோடு வளர்ச்சியடைகின்றது அவ் வன்புக் குணங்கள், அவ் வுயிர்கள் பெறும் குழந்தைகளிடத்தும் தலைமுறை தலை முறையாகச் சுவறி வளர்ச்சியடைகின்றன. இம் முறையினாலேயே போர்க் குணமும் முரட்டுச் சுபாவமுமுடையவர்களாயிருந்த ஆடவர் நீண்ட காலத் தில் சிறிது சிறிதாக சாந்தகுணமுடையவர்களாக மாறியுள்ளார்கள் என ஆராய்ச்சி வல்லார் கூறுகின்றனர்.19 பெண்கள் பொதுவில் இளகிய மனமும் இரக்கமும், ஆடவரிடத்தில் உருக்கமுடையவர்களாகவும் இருக்கின்றனர் அவர்கள் பறவைகள் விலங்குகள் முதலிய எல்லாச் சிற்றுயிர்களிடத்திலும் இவ்வியல்பினர்; தாவரங்கள் பூக்கள், பிற அஃறிணைப் பொருள்கள், தாம் வைத்துப் பயன்படுத்தும் பொருள் முதலியவைகளை மென்மையாகவே எடுத்துக் கையாளுவர். ஆடவரோ அவைகளை முரட்டுத்தனமாகப் பயன்படுத்தி ஒடித்து விடுவர் - தாய்மார். முற்பட்ட சமூகத்தில் தாயே முதன்மை இடத்தைப் பெற்றிருந்தாள். தாய்க் கடவுளைப்பற்றி வரும் பழங்கதைகளாலும், பயிர்த்தொழிலை விருத்திசெய்து வீட்டு வாழ்க்கையையும் நாகரிகத்தையும் வளர்த்தமை யாலும், பிள்ளைகளுக்குக் கல்வி கற்பித்துச் சமூகத்துக்குப் புத்திமதி கூறும் தன்மையினாலும் தாய்மிக முக்கியம் வாய்ந்தவள். அமெரிக்க சிவப்பிந்தி யர்களுக்குத் தாயே ஆலோசனை கூறுவாள். இந்தியாவின் தென்மேற்குக் கரையில் வாழும் நாயர் சாதியினருள் தாயே முதன்மை இடத்தை வகிக் கின்றாள். உலகின் பழைய நாகரிக வரலாறுகளையும் சமய வரலாறுகளை யும் பயிலுமிடத்துத் தாயே முக்கிய முடையவாளாக விருந்தாளென்னும் உண்மை நன்கு புலனாகின்றது - உயிர் வரலாற்றின் காட்சி. தாயாட்சியும் சொத்துரிமையும் தாய் ஆட்சி குடும்ப ஆட்சியாகவே இருந்துவந்தது. தனிப்பட்டவர் களுக்குச் சொத்து இருக்கவில்லை. குடும்பச் சொத்து எல்லோருக்கும் பொதுவில் இருந்தது. குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் புதிதாகத் தேடும் சொத்தும் குடும்பத்தைச் சேர்ந்ததாகவே கொள்ளப்பட்டது. பெரும்பாலும் சொத்துக்கள் நிலம்போன்ற அசைவற்ற பொருள்களாகவிருந்தன அவை பெண்களுக்கே உரியன. வில், அம்பு போன்ற சில அசைவுடைப் பொருள்களே ஆடவருக்குரியனவாயிருந்தன. அவர்கள் இறந்தபோது அவை அவர்களுக்கு அடுத்த உலகில் பயன்படும் பொருட்டுச் சமாதிகளுள் வைக்கப்பட்டன. தாயாட்சியின் வீழ்ச்சியும் தந்தை ஆட்சியின் தொடக்கமும் தொடக்கத்தில் பெண்களே சொத்துக்குரியவர்களா யிருந்தார்கள். பெண்களை மணந்துகொள்வதால் மாத்திரம் ஆடவர் சொத்தைப் பெறக்கூடியவர்களானார்கள். பயிரிடுதல் கைத்தொழில்போன்றவை, நீண்டகாலம் பெண்கள் கையிலேயே இருந்தன. ஆடவர் இத் தொழில்களிற் பங்கு பற்றாது அலைந்து திரிவோராகவும் வேட்டையாடுவோராகவும் இருந்தனர். பெண்களின் பயிர்த்தொழிலுக்குரிய கருவிகள் மண்வெட்டி பாரை போன்றவை. அவர்கள் எருதுகளைக் கலப்பையிற் பூட்டி உழ அறிந் திருக்கவில்லை, பின் கலப்பையில் எருதுகளைப் பூட்டி நிலத்தை உழும் முறை கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிக நிலத்தை உழுது பயிரிட்டு அதிக தானியங்களை விளைவிக்கக் கூடியதாகவிருந்தது. ஆடவர் ஏரைப் பிடித்து உழத் தொடங்கினார்கள். அதனால் அதிக உணவு கிடைத்தது. ஆகவே அவர்கள் அலைந்து திரியும் வாழ்க்கையை விட்டு ஓரிடத்தில் தங்குவாராயினர். இதுவரையில் பெண்கள் செய்துவந்த பயிர்த்தொழில் கைத் தொழில் என்பன சிறிது சிறிதாக ஆடவர்கைக்கு மாறின. பெண்கள் வேலை யற்றவர்களாக வீட்டிற்றங்கினார்கள். அவர்களின் பொருள் வருவாய் குன்றிற்று. அவர்கள் தமது வாழ்க்கைக்கு ஆடவர் கையை எதிர்பார்க்கும் நிலைமை உண்டாயிற்று. வெளியிற் சென்று வெய்யிலிற் காய்ந்து வேலை செய்யாமையால் அவர்களின் மேனி சிறிது சிறிதாக அழகுபெற்றது. மேனி மினுக்குப் பொருள்களாலும், அழகிய ஆடைகளாலும் அவர்கள் தம்மை அலங்கரித்தனர். அவர்களின் அழகு ஆடவரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. அவர்கள் அழகின் மிக்க பெண்களைத் தமக்கே உரிமை யாக்கிக் கொண்டு வாழ விரும்பினார்கள். ஒருவன், தான் சொந்தமாக்கிய பெண்ணோடு இன்னொருவன், நட்புக் கொண்டிருப்பதை விரும்பவில்லை. ஆகவே அவள் மற்றவர்களுடன் அளவளாவி நட்புக்கொள்ளாதபடி அவளை வீட்டில் இருக்கும்படி செய்தான். இது வரையில் வெளியிற் சென்று பெண்கள் சேகரித்துவந்த வாழ்க்கைக்கு வேண்டும் பொருள்களை இவனே சேகரித்து வருவானாயினான். இவ்வகை வாழ்க்கை நாளடைவில் உறுதிப் பட்டது. அப்போது ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித் தொடர்பு உண்டா யிற்று. பிள்ளைகள் பிறந்தன. அப்பொழுது ஆடவன் தனது சொத்துப் பிள்ளைகளைச் சேர வேண்டுமென்று விரும்பினான். இப்பொழுது தாய் தந்தை என்னும் இருவரின் சொத்தும் பிள்ளைகளைச் சேர்வதாகிய மக்கள் தாயம் உண்டாயிற்று, மருமக்கட்டாயமும் தாயாட்சியும் படிப்படியே மறைந்தன.20 தந்தை ஆட்சியும் இயற்கைத் தெரிவும் இயற்கைத் தெரிவு பெண்களுக்கே உரியது என்று முன் விளக்கப் பட்டது. இவ்வியற்கை விதி இப்பொழுது மாறத் தொடங்கிற்று. இப்பொழுது ஆடவனே தான் விரும்பிய பெண்ணைத் தெரிந்தெடுக்க ஆரம்பித்தான். இவ்வாறு ஆடவன் பெண்ணைத் தெரிந்தெடுக்கும் முறைகள் பலவாறு வளர்ச்சியடைந்தன. சில மக்கட் கூட்டங்களில் ஒருவன் ஒரு பெண்ணை மணக்க விரும்பினால் அவன் அவள் தந்தை வீட்டில் ஒரு ஆண்டு வரை யில் தங்கி அவன் செய்துவரும் தொழில்களுக்கு உதவியாகவிருந்தான். பெண்ணின் தந்தை அவனது தொழில் செய்யும் திறமையில் திருப்தியடைந் தால் அவன் தன் புதல்வியை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். சில கூட்டத்தினர் பெண்ணின் தந்தைக்குப் பணத்தைக் கொடுத்துப் பெண்ணைப் பெற்றனர். இவ் வழக்கின் தேய்வே இன்று தமிழ் மக்களிடையே பரியம் என வழங்குவது. இது பெண்ணின் தந்தைக்குத்தான் பெண்ணைக் கொள்ளத் தகுதியுடையவன் என்பதைக் காண்பிப்பதற்கு மணமகன் கொடுக்கும் பொருளாகும். இவ்வழக்கமே பெண்களை மனைவியராக விலைகொடுத்து வாங்கும் வழக்காகவும் மாறியுள்ளது.21 எகிப்தில் தாய் சொத்தும் தந்தை சொத்தும் பிள்ளைகளைச் சேரும்படி சட்டஞ் செய்யப்பட்ட வகை பெண்களைப் போலவே ஆடவரும் சொத்து உடையவர்களாயிருந் தார்கள். அக் காலத்தும் சட்டப்படி தாயின் சொத்தே பிள்ளைகளைச் சேர்வ தாயிருந்தது.22 ஒரு பெண்ணை மணக்க விரும்பிய ஆடவன் தன் சொத்து முழுவதையும் அல்லது அதன் ஒரு பகுதியை பெண்ணுக்கு எழுதிவைத் தான். தாய் தந்தை என்னும் இருவரின் சொத்தும் பிள்ளைகளைச் சேரும் பொருட்டுச் செய்யப்பட்ட முறை இதுவாகும். இவ்வாறு தாயின் உரிமை யோடு தந்தையின் உரிமையையும் பிள்ளைகள் பெறலானார்கள். ஆடவன் பெண்ணின் தந்தையின் கீழிருந்து பணிசெய்தும், பணிக்குப் பதில் பொருள் கொடுத்தும் பெண்ணை மனைவியாகப் பெற்ற காலத்தில் பெரும்பாலும் பெண், சொத்துடையவளாய் இருக்கவில்லை. பெண், சொத்தில்லாதிருந்த காலத்திலேயே ஆடவர் பெண்களை அடிமைப் படுத்தினார்கள். இலங்கையின் வட பாகத்தில் தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அங்கு ஆண் பெண் என்னும் வேறுபாடு இன்றித் தாய் தந்தையின் சொத்துப் பிள்ளைகளைச் சேருகின்றது. ஒரு ஆடவனும் ஒரு பெண்ணும் கணவன் மனைவியாக வாழ்க்கை நடத்திய காலத்தில் தேடிய சொத்தின் நேர்பாதி மனைவியைச் சேர்வதாகும். இவை தாய் உரிமை தந்தை உரிமைகளைப் பிள்ளைகள் அடையும் முறைகளிற் சில பகுதிகளாகும். ஒருவன் பல பெண்களை மணத்தல் ஆடவன் சொத்துடையவனாய் இருந்த காலத்தில் தந்தை ஆட்சி உண்டாயிற்று. தந்தை தாய் என்னும் இருவரும் சொத்துடையராயிருந்த காலத்தில் இருவரும் சமபெருமையுடையவர்களாகக் கருதப்பட்டார்கள். தந்தை ஆட்சி தாயாட்சியைச் சிறிது சிறிதாக விழுங்கி வலிமையடைந்தது. அஞ்ஞான்று பெண்கள் ஆண்களுக்குப்பணிந்து நடக்கும் படியான சட்டங்கள் ஆடவரால் வகுக்கப்பட்டன. தந்தை நிலத்தை உழுது பயிரிடு வதால் செல்வத்தை ஈட்டினான். குடும்பத்தில் எத்தனைபேர் அதிகமாக இருந்தார்களோ அவ்வளவுக்கு அதிக செல்வத்தை ஈட்டக்கூடியதாக விருந் தது. பல பிள்ளைகளையுடையவன் அவர்கள் மூலம் அதிக செல்வத்தை ஈட்டினான். பொருள் ஈட்டும் விருப்புள்ள ஆடவர் பெண்கள் பலரை மணந்து பல பிள்ளைகளைப் பெற்றார்கள். இதற்கு முற்பட்ட ஒரு காலத்தில் பெண் ஒருத்தியின் கணவரின் எண்களைக் கொண்டு அவளின் செல்வத்தையும் அதிகாரத்தையும் அளக்கத்தக்கதாயிருந்தது. இப்பொழுது ஒருத்தனின் மனைவிகளின் எண்களைக் கொண்டு அவன் செல்வத்தையும் அதிகாரத்தையும் அறியத்தக்கதாயிருந்தது. ஆடவர் மகளிர் என்னும் இரு பாலாரிலும் உயர்ந்தவர் யார்? ஆண் பெண் என்னும் இரு பாலாரிலும் உயர்வாகக் கொள்ளத் தகுந்தவர் யார் என்னும் கேள்வி கேட்கப்படுகின்றது. அறிவாற் சிறந்த ஒளவையாரே “அன்னையும் பிதாவும்” என அன்னையை முன்னால் வைத்துக் கூறியிருத்தல் காண்க. பெண்ணின் கருப்பை, வயல்போன்றது. ஆடவன் அதிலே வித்தை வித்துபவன் போல்வனாகின்றான். நிலமின்றி வித்து முளைத்து ஓங்குமாறில்லை. வித்தின்றி வயலில் முளை தோற்றுமா றில்லை. இம் முறையைக் கொண்டு ஆண் பெண்களின் உயர்வு தாழ்வுகளை முடிவு செய்ய முடியாது. இருபாலாரும் தத்தமக்கு இயற்கையால் அளிக்கப் பட்ட கடமைகளை நிறைவேற்றுவதில் தனித்தனி பெருமையுடையவர் களாக விருக்கின்றனர். இவ் வுலகத்திலே ஆதியில் சத்தி (தாய்க் கடவுள்) வணக்கம், தாய் உயிர்களைத் தோற்றுவிக்கின்றாள் என்னும் பெருமைப்பற்றி எழுந்து நடைபெறுவதாயிற்று. இதனால் படைப்பு முறையில் ஆண்களிலும் பார்க்கப் பெண்களே சிறந்தவர்கள் என ஆதிமக்கள் கருதினார்கள் எனத் தெரிகின் றது. பண்டை நாளில் தமிழர் தாய், தந்தை என்னும் இருவரும் சமஉரிமை யினர் என்றே கருதி வந்தார்கள். இவ்வுண்மையினை அவர்களின் சமய நூலாகிய ஆகமங்களிற் காணலாகும்.* மந்தை மேய்க்கும் மக்களுள் பெண்களின் நிலைமை மந்தை மேய்க்கும் மக்களுள் ஆடவரே சொத்துக் குடையவர்களா யிருந்தார்கள்; ஆகவே அவர்களிடையே தந்தை ஆட்சி வளர்ச்சி யடைந்தது. இவர்கள் வெளியிற் சென்று மந்தை மேய்ப்பவர்களாதலின் தம் மனைவியர் பிறருடன் நட்புக் கொள்வதையோ, அல்லது நட்புக்கொண்டு தம்மை விட்டுப் பிரிந்து விடுவதையோ நினைந்து அஞ்சினார்கள். ஆகவே அவர்கள் பெண்கள் பிற ஆடவரை நோக்காதிருக்கும்படி அவர்களை வீடு அல்லது கூடாரங்களின் உபுறங்களில் வைத்திருத்தல், அவர்களைத் தமக்குக் கீழ்ப்படுத்தி வைத்திருத்தல் போன்ற முறைகளைக் கையாளுவாரா யினர். தொடக்கத்தில் மந்தை மேய்க்கும் நிலையில் இருந்தவர்களாகிய ஆரியர் இந்திய நாட்டில் வந்து குடியேறியபோது அவர்களின் பெண்கள் இவ்வாறு ஒடுக்கப்பட்டிருந்தாhக்கள் என்பது அபஸ்தம்பம் போதாயனம் முதலிய அவர்களின் பழைய நீதி நூல்களால் நன்கு விளங்குகின்றது. அவர்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டிருந்தது. பெண்களுக்கு வேதம் மறைக்கப் பட்டிருப்பதும் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.23 தந்தை ஆட்சிக்காலத்தில பெண்கள் ஆடுமாடுகள் போன்ற ஆடவனின் உடைமைகளானார்கள் தந்தை ஆட்சிக்காலத்தில் பெண்கள் சொத்தில்லாதவர்களாயி னார்கள் . ஆடவன் தனது மனைவி மக்களை ஆடு மாடுகள் போன்று விற்க வும் வாங்கவும் கூடிய அசைவுடைப் பொருள்களாகப் பெற்றிருந்தான்.24 அவ்வாறு விற்கவோ வாங்கவோ இரவல் கொடுக்கவோ அவனுக்கு அதிகாரம் இருந்தது. மேற்கு ஆசியாவிலும் கிரேக்க நாட்டிலும் ஒரு வகைச் சட்டம் வழங்கிற்று. ஒருவன் இன்னொருவனின் மனைவியோடு திருட்டுத் தனமாக உறவு வைத்திருந்தால் அவன்மீது வியபிசாரக் குற்றம் சாட்டப்பட வில்லை; திருட்டுக் குற்றம்சாட்டப்பட்டது. ஆகவே அவன் திருட்டுக் குற்றத்துக்குரிய தண்டனை அடைந்தான். வியபிசாரம் குற்றமென்று அவர் களாற் கருதப்படவில்லை.25 வியபிசாரம் செய்தவனுக்குப் பெரும்பாலும் பெண்ணின் கணவனுக்கு விருப்பமான தண்டனை விதிக்கப்பட்டது. தந்தை ஆட்சி உண்டானபோதும் தாயாட்சிக்காலத்திருந்த ஒழுக்கங்கள் அரைகுறையாக இருந்துவந்தன தந்தை ஆட்சி தொடங்கிய போதும் பழைய வழக்கங்கள் திடீரென மறைந்துவிடவில்லை. பல நாடுகளில் கணவனின் உடன்பாட்டுடன் ஒரு பெண் பிற ஆடவரோடு நட்புக் கொண்டிருத்தல் குற்றமாகக் கருதப்பட வில்லை. சில கூட்டத் தினரிடையில் திருமணத்துக்கு முன் நடக்கும் வியபிசாரம் ஒழுக்கக்கேடாகக் கருதப்படவில்லை. இவ்வாறு ஒழுக்கங்கள் மாறுபட்டன.26 மனைவியரை இரவல் கொடுத்தல் உலகின் பல பாகங்களுக்கிடையில் மனைவியரை இரவல் கொடுக்கும் வழக்கம் இருந்து வந்தது. இது பலருக்கு வியப்பைத் தரலாம். கிரேக்கரிடமும் உரோமரிடமும் இவ் வழக்கம் சாதாரண வழக்கில் இருந்தது. கிரேக்கரின் தத்துவ சாத்திரியாகிய சொகிரகிஸ் என்பவரே தனது மனைவி யாகிய சாந்தப்பைபை தனது முதன் மாணாக்கராகிய அல்சிபியாதிஸ் (Alcibiades) என்பவருக்கு இரவல் கொடுத்தார். இவ்வகை வரலாறுகள் கிரேக்க உரோம சரித்திரங்களில் காணப்படுகின்றன.27 “கிரேக்கர் இன்ப நுகர்ச்சி கருதியோ பிள்ளைகளைப் பெறுதல் கருதியோ தமது மனைவியரை நண்பர்களுக்கு இரவல் அளித்தார்கள். ஸ்பார்ட்டன் மக்களுக்கு நீதிநூல் வகுத்த லைகுர்காஸ் என்பவர் மணமான பெண்களின் தயவைப்பெற முயன்றவர்களைப் பழிவாங்கும் பொருட்டுச் செய்யப்படும் போர்களைப் பற்றிப் பரிகசித்தார்; வயதில் முதிர்ந்த ஒருவன் இளம்மனைவியை வைத்திருந்தால் அவன் வீரமும் நேர்மையுமுடைய ஒருவனை அவளுக்கு அறிமுகப்படுத்தி அவன் மூலம் நல்ல குழந்தையைப் பெறுவதை அனுமதித்தார்; நல்ல ஒழுக்கம் உள்ள ஒருவன் விவாகமான ஒரு பெண்ணின் அழகைக் கண்டு அவள்மீது ஆசைப்பட்டால் அவன் அவள் கணவனின் விருப்பைப் பெற்று அவள் நட்பை அடைதல் தவறுடைய தன்று எனவும் அவர் விதித்தார். பிள்ளைகள் பெற்றோருக்குரியன வல்ல அரசாங்கத்திற்குரியவை என்னும் காரணத்தை லைகுர்காஸ் என்பவர் தனது சட்டத்துக்கு ஆதாரமாகக் கொண்டார். அதேன்சில் மனைவியரை நண்ப ருக்கு இரவல் கொடுத்தல் நட்பின் அடையாளம் எனக் கருதப்பட்டது. சொகி ரத்தஸ் என்னும் கிரேக்க ஞானியார் சாந்தப்பை என்னும் தனது மனைவியைத் தனது மாணாக்கரும் நண்பருமாகிய அல்சிபியாதிஸ் என்பவருக்கு இரவல் அளித்தார். காற்றோ என்பவர் தனது தலைவியாகிய மேரியா என்பவளை ஹொரென்சியஸ் என்பவருக்கு இரவலாகக் கொடுத்தார்.” மனைவியரை மாற்றிக்கொள்ளுதல் வட அமெரிக்காவில் வாழும் எஸ்கிமோவா தமது இருப்பிடத்தை விட்டு அயலிடங்களுக்கு வேட்டையாடச் சென்று தங்குவார்கள். அவ்வாறு செல்லும்போது ஒருவனுடைய மனைவிக்கு அவனுடன் செல்லமுடியாத காரணம் எதுவும் இருக்குமாயின் அவளுடைய கணவன் அங்கு உள்ள ஒருவனிடம் தனது மனைவியைக் கொடுத்துவிட்டு அவனுடைய மனைவி யைத் தன்னுடன் அழைத்துச் செல்வான். அவன் திரும்பி வந்ததும் மற்ற வனது மனைவியைக் கொடுத்துவிட்டுத் தனது மனைவியைப் பெற்றுக் கொள்வான். இது எவ்வகையிலும் ஒழுக்கத்துக்கு மாறுபட்டதாகக் கருதப்படுவதில்லை. கற்பு பெண், கணவனுக்கு அடங்கி நடத்தலோடு கணவனை ஒழிந்த பிற ஆடவரோடு சேர்க்கை வைத்திருத்தல் கூடாதென்னும் கட்டுப்பாடு தந்தை ஆட்சிக் காலத்தில் உண்டாயிற்று. இக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித் தொழுகுதலே கற்பு எனப்பட்டது. திருமணத்துக்குப் பின்பு பெண்கள் கணவனுக்குக் கட்டுப்பட்டே நடந்து வந்தார்கள், ஆனால் திருமணத்துக்கு முன்பு பெண்கள் தமது தயவைத் தாம் விரும்பிய ஆடவருக்கு அளித்து வந்தார்கள். திருமணத்துக்கு முன் பெண்கள் ஆடவர் பலருடன் சேர்க்கை வைத்துக்கொள்வதும், அவர்கள் மூலம் பிள்ளைகளைப் பெறுவதும் திருமணத்துக்குத் தடையாகக் கருதப்படவில்லை28. இளமை தொட்டுப் பெண்கள் கற்பாக இருக்கப் பழகும் பொருட்டே இளமையில் அவர் களுக்குத் திருமண நிச்சயம் செய்யப்படுவதாயிற்று. இவ் வழக்கினாலேயே பெண்கள் ஒரு ஆடவனை மாத்திரம் சேர்வதும் அவன் மூலம் பிள்ளை களைப் பெறுதலுமாகிய கற்பு முறையைப் பழகினார்கள். கற்பு என்பதற்குப் பதிவிரதம் என்பது இன்னொரு பெயர். கற்பு அல்லது பதிவிரதம் உடையவள் பதிவிரதை எனப்பட்டாள். பதிவிரதம் என்பதற்கு ஒரே பதியை அடையும் விரதம் அல்லது ஒரே பதியிடத்தில் உறுதிப்பாடு என்பது பொருள். குழந்தை மணம் புதியதா? இந்திய நாட்டில் சில மக்கட் கூட்டங்களுக்கிடையில் சிறுவர் சிறுமியருக்கு மணஞ்செய்யும் வழக்கம் இருந்து வருகின்றது. இது மிகக் கொடிய வழக்கம் எனக் கருதப்பட்டு அதற்கு எதிராக சாரதா சட்டம் என ஒன்றும் செய்யப்பட்டுள்ளது. சின்னஞ் சிறு வயதில் மணஞ் செய்யப்பட்ட இருவருள் கணவன் இளமையிலேயே இறந்துவிட்டால் பெண் தனது வாழ்க்கைக்காலம் முழுவதும் திருமணம் முடியாது கூந்தல் களைந்து எளிய வாழ்க்கை நடத்துதல் வேண்டுமென்னும் சமூகக் கட்டுப்பாட்டினா லும், மிக இளமையிலேயே பெண்கள் குழந்தைகளைப் பெறத் தொடங்கி விரைவில் இளைத்துப் போவதோடு பிள்ளைகளும் பலமற்றவர்களா கின்றார்கள் என்னும் கருத்தினாலும் சாரதா சட்டம் உண்டாவதாயிற்று. பெண்கள் கற்பாக இருக்கப் பழகுவதற்காகவே இவ்வழக்கம் ஆதியில் உண்டாயிற்று. பெண்கள் கற்பாக இருக்கப் பழகிய இக் காலத்தில் சிறு பிள்ளைத் திருமணங்கள் வேண்டியதில்லை என்பது உண்மையே29. திருமண வரலாற்றுச் சுருக்கம் மக்களின் முற்பருவத்தில் ஆடவர் ஒரு தனிக் கூட்டமாகவும், பெண்கள் மற்றொரு தனிக் கூட்டமாகவும் வாழ்ந்தார்கள். அப்பொழுது ஆடவர் கூட்டத்தினர் பெண் கூட்டத்தினரின் கணவராகக் கருதப்பட்டனர். ஓரு கூட்டத்திலுள்ள பெண்களெல்லோருக்கும் மற்றக் கூட்டத்திலுள்ள ஆடவரெல்லாம் கணவர் என்பதும், ஆடவர்கள் கூட்டத்திலுள்ள பெண்கள் எல்லோரும் மனைவியர் என்பதும் கொள்கையளவிலோ நடைமுறை யிலோ இருந்து வந்தது. அக் காலத்திலேயே ஒரு கூட்டத்துள் அல்லது கோத்திரத்துள் ஆண் பெண்கள் திருமணஞ் செய்துகொள்ளாலாகது என்னும் வழக்கு உண்டாயிற்று. இன்றும் தென்னிந்திய மக்கட் பிரிவினர் பலரிடையிலும், உலகின் பல பாகங்களிலும் இவ் வழக்கு இருந்து வருகின் றது. தென்னிந்திய மக்கள் கோத்திரம் எனக் கொண்டது தாய் வட்டத்தையே யாகும். கோத்திரமென்பது குலக்குறி “Totem” என மற்றைய மக்களிடையே வழங்கும். இன்று நீலகிரி மலையிலுள்ள தோடர் வகுப்பில் ஆடவர் சிலர் பெண்கள் சிலரைத் தமக்குப் பொதுவில் மனைவியராக வைத்திருக்கும் வழக்கு உண்டு என்று தேஸ்ரன் என்பார் கூறியுள்ளார். இவ்வகைக் கூட்டத் திருமணம் (Group marriage) சிலகாலம் நடைபெற்றபின் பெண்கள் தாம் விரும்பிய ஒரு ஆடவனையோ, பல ஆடவரையோ தெரிந்தெடுத்தார்கள்; தாம் விரும்பாதபோது அவர்களின் தொடர்பை நீக்கிவிட்டனர். சில காலத்தின்பின் அவர்கள் பல ஆடவரை ஒரிடத்தில் கூட்டி அவர்களுள் தாம் விரும்பிய ஒருவனைத் தெரிந்து கொண்டனர். இவ்வழக்கே சுயம்வரம் எனப்பட்டது.30 ஆடவர் கூட்டத்திலுள்ள ஒரு ஆடவன் பெண்கள் கூட்டத்தினின்றும் ஒரு பெண்ணைத் தனக்கு மனைவியாக்கிக் கொண்டுவாழ விரும்பினான். அப்பொழுது அவன், பெண்கள் கூட்டத்தினின்று பெண்ணைத் திருடித் தனது கூட்டத்துக்குக் கொண்டு செல்வானாயினன். இதனைப் பெண்கள் கூட்டத்தினர் விரும்பமாட்டார்கள். இதனால் அவர்கள் தமது கூட்டத்தி னின்றும் ஒருத்தியை இழந்து விடுகின்றனர். பின்பு ஒரு பெண்ணைப் பெற விரும்பியவன், அக்கூட்டத்துக்கு நேரும் நட்டத்தை நிறைவு செய்யும் பொருட்டு அக்கூட்டத்தாருக்கு ஆடு மாடு முதலியவைகளைக் கொடுத் தான். இதில் இருந்து பெண்களை ஆடு மாடுகளைக் கொடுத்துப் பெறும் வழக்கு உண்டாயிற்று. இதன் பின் மணமகன் மணமகள் இல்லத்திற்கு சென்று பெண்ணின் சுற்றத்தாரின் இசைவைப்பெற்று அவளை மணந்து தனது இடத்துக்குக் கொண்டுசென்று வாழ்தலாகிய வழக்கு உண்டாயிற்று. நாணம் நாணம் பெண்களுக்குச் சிறந்த குணம். அது அவர்களுக்கு இயல்பாக உள்ளது என்று கருதப்படுகின்றது. இதன் காரணத்தை ஆராயின் நாணம் என்பது இடைக்காலத்திற்றோன்றியதேயாகும் என்பது தெளி வாகும். பெண்கள் தாம் விரும்பிய ஆடவரைத் தெரிந்து எடுத்துக் கொள் ளும் காலத்தில் ஆண்களைக்கண்டு நாணுதலாகிய குணம் அவர்களுக்கு உண்டாயிருந்தது என்று கூறுதல் அமையாது. ஒரு பெண் பல கணவரை மணந்திருந்த காலத்தில் ஆண் பெண் சேர்க்கை தொடர்பான பொறாமை உண்டாதலும், ஒரு ஆண் பல மனைவி யரை மணந்திருக்கும்போதும் அவ்வகைப் பொறாமை தோன்றியிருத்த லும் இயல்பன்றோ. இப் பொறாமையிலேயே ஒருவன் ஒருத்தியையே மணத்தலும், ஒருத்தி ஒருவனையே மணத்தலுமாகிய மணமுறை உண் டாயிற்று. அக் காலத்தில் ஒருவனுக்குரிய மனைவியை பிறனொருவன் விரும்பிக் கவராமல் இருத்தற்கும், ஒருத்திக்குரிய கணவனைப் பிறள் ஒருத்தி கவர்ந்து கொள்ளாமல் இருக்கும்படியும், அவ்வகை விருப்புப் பிறருக்கு எழாதிருக்கும்படியும் சில சமூகக் கட்டுப் பாடுகள் தோன்றி வளர்ச்சியடைந்தன. ஒரு சிங்கம் அல்லது புலி ஒரு விலங்கைக் கொல்கின்றது. அது அதன் இரையை மறைவான ஓரிடத்திற்கு இழுத்துச்சென்று அவ் விடத்திலேயே அதனை உண்கின்றது. அது மறைவான இடத்துக்கு அதனை இழுத்துச் செல்வது மாமிசத்தை உணவாகக் கொள்ளும் பிற விலங்குகள் அவ்விரையைக் காணின் அவையும் அவ்விரையை உண்ண விரும்பும்; அதனால் அவை அவ்விரையைக் கவர்வதற்கு முயற்சி செய்யும்; அதனால் சிங்கம் அல்லது புலியின் அமைதிக்குத் தடையுண்டாகும் என்று தெரிகின்றது. இவ்வகைக் கருத்தினைக் கொண்டே மக்களும் ஆண் பெண் சேர்க்கைகளைப் பிறர் காணாதபடி மறைவில் வைத்துக்கொள்வாராயினர். இது, காலத்தில் நாணத்தக்கதாகக் கொள்ளப்படலாயிற்று. பெண்கள் ஆடவருடன் சமமமாகப் பழகுவதாலும் அவர்களுடன் நன்கு அளவளாவு தலாலும் ஆண் பெண் சேர்க்கை உணர்ச்சிகள் தோன்றுதல் இயல்பு. இது பற்றியே பெண்கள் ஆண்களைக் காணின் நாணி ஒதுங்கி நிற்றல் வேண்டும் என்னும் கட்டுப்பாடு உண்டாயிற்று. இக்கட்டுப்பாட்டின் வளர்ச்சியை நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு எனச் சொல்லப்படும் குணங்களாகும். உடை நாணத்துக்காக அணியப்பட்டதா? உடை நாணத்துக்காக அணியப்பட்டது என இன்று நாம் கருது கின்றோம். உடை நாணம்பற்றித் தோன்றவில்லை. வெப்ப நாடுகளில் உடை அவசியம் தேவைப்படவில்லை. குளிர் நாடுகளில் மக்கள் தோல் கம்பளி முதலியவைகளால் தமது உடலைப் போர்த்துக்கொண்டார்கள். இதிலிருந்து மக்கள் தமது உடம்பை அலங்கரிக்கும் வழக்கம் உண்டாயிற்று; அவர்கள் அலங்காரத்தின் பொருட்டு உடம்பின் சில பகுதிகள் தெரியும்படியும் சில பகுதி மறையும்படியும் உடையணிவராயினர். இதிலிருந்து உடை அணியும் வழக்கு வளர்ச்சியடைந்தது. முகமூடிகளை அணிதல் உடம்பை நிறமைகள் பூசி அலங்கரித்தல் முதலியன மந்திர வித்தைக்காரரின் வழக்கங்களாக விருந்தன. இவ்வழக்கினின்றும் உடை அணியும் பழக்கம் உண்டாயிற்று. பழைய மக்கள் “கண்வைப்ப”தால் நோய்களும் தீமைகளும் உண்டாவதை நம்பினார்கள். கருக்கொண்ட பெண்களும், பிள்ளையைப்பெற்ற பெண்களும் தங்கள் தனங்களைப் பிறர் பார்ப்பின் கண்ணூறு உண்டாகும்; அதனால் பால் வற்றிப்போகும், அல்லது தனங்கள்மீது கட்டி, முதலிய நோய்கள் உண்டாகும் என நம்பினார்கள். ஆகவே அவர்கள் தமது மார்பை மறைக்கலானார்கள். பாலித்தீவு, மலையாளம் முதலிய நாகரிகமடைந்த நாடுகளில் மார்பை மறையாதுவிடுதல் நாணத்தக்கதென்றாவது, நாகரிகக் குறைவான தென்றாவது கருதப்படுவதில்லை. இதனால் நாணம் என்பதும் ஒருவகைப் பழக்கம் என நன்கு விளங்குகின்றது. ஆடவர், தமது ஆண் உறுப்பினைப் பிறர் நோக்கின் கண்ணூறு உண்டாகி நோயுண்டாகும், மலடு உண்டாகும் எனக் கருதிப் பிறர் காணா வகை அதனை மறைப்பாராயினர். பெண்களும் இதே நோக்கத்துடன் தமது உறப்புக்களை மறைக்கலாயினர். இவ் வழக்கங்கள் நீண்டகாலம் தலைமுறை தலைமுறையாக வந்தன. அதனால் அவ்வுறுப்புக்களைப் பிறர் காணுதல் நாணத்தக்கது என்னும் கருத்து மக்கள் உள்ளத்தில் பதிந்து நாணமாக மாறிற்று. சீனர் தமது பெண்களின் பாதங்களைச் சிறு வயதிலிருந்து இருப்புச் சப்பாத்திட்டு வளராதிருக்கச் செய்வர். அவர்கள் தமது பாதங்களைப் பிற ரெவரும் காணும்படி விடமாட்டார்கள். அவைகளைப் பிறர் காணும்படி விடுதல் ஆடவரும் மகளிரும் தமது இரகசிய உறுப்புக்களைப் பிறர் காணும் படி விடுதலினும் பார்க்க நாணத்தக்கதென அவர்கள் கருதுகின்றனர். இது நாணம் எவ்வாறு உண்டாகின்றதென நாம் நன்கு அறிந்து கொள்வதற்கு எடுத்துக் காட்டாகும்.31 கிரேக்க நாட்டில் பருவமடைந்த பெண்களும் வாலிபரும் நிர்வாணமாக நின்று பலர் முன்னிலையில் மல்யுத்தம் செய்தனர். நிர்வாணம் வெட்கத்துக்குரியதாக அவர்களால் கருதப்படவில்லை. கிரேக்க உரோமன் சிற்பங்களையும் தென்னிந்திய ஆலயங்களில் காணப்படும் சிற்பங்களை யும் நோக்குமிடத்துப் பெண்கள் அரைக்குமேல் உடையின்றியிருத்தலோ, முழுமையும் உடையின்றியிருத்தலோ வெட்கத்துக்குரியதாகக் கருதப்பட வில்லை என்று நன்கு விளங்கும். விதவைகளை உடன்கட்டை ஏற்றுதல் விதவைகளை உடன்கட்டை ஏற்றும் வழக்கு தந்தை ஆட்சிக் காலத்திலேயே உண்டாயிற்று. தம்முடன் இறக்கும் மனைவி, வேலைக்காரர் குதிரை போன்றவை தம்முடன் மறு உலகுக்குச் செல்கின்றன என நம்பப் பட்டு வந்தது. ஆகவே பிரதாணி ஒருவன் இறந்தபோது அவன் மனைவியர் வேலையாளர் முதலியோரும் உடன் வைத்துக் கொளுத்தப்பட்டார்கள் அல்லது புதைக்கப்பட்டார்கள்32 மனைவியரை உடன் கட்டை ஏற்றுவதற்குப் பிறிதோர் காரணமும் இருந்தது. கணவன் இறந்தபின் அவன் மனைவியர் பிற ஆடவரைக் கணவராகக் கொண்டு வாழ்வார் என்னும் பொறாமை அவன் உள்ளத்தில் குடி கொண்டிருந்தது. அவனது எண்ணத்தை நிறை வேற்றும் பொருட்டும் பெண்கள் உடன்கட்டை ஏற்றப்பட்டார்கள். விதவைகளை மொட்டை அடிக்கச் செய்தல் மனைவியரைக் கணவனுடன் உடன்கட்டை ஏற்றுவதாகிய பொல்லாத வழக்கம் எல்லா நாடுகளிலும் நின்றுபோக நம் இந்திய நாட்டில் சில மக்களிடையே மாத்திரம் சமீப காலம் வரையில் நடைபெறுவதாயிற்று. அது பிராமண மக்களிடையே சமய சம்பந்தமும் பெற்று கிரியைகளுடன் நடத்தப்பட்டு வருவதாயிற்று. இக்கொடிய வழக்கம் நடவாதபடி ஆங்கில ஆட்சியினர் சட்டம் வகுத்தனர். அவ்வாறு செய்தமை சமயத்துக்கு மாறு என வைதீகரிற் பலர் அரசினரை எதிர்த்துப் போராடினர். மனச் சாட்சிக்கு எதிரானதும் மிருகத்தன்மை உடையதுமாகிய இவ்வழக்கத்தை அரசினர் தம்மால் பரிபாலிக்கப்படும் மக்களிடையே நடக்கவிடுவார்களா? அரசினரை எதிர்த்து கணவனை இழந்த மனைவியர் கூந்தலைக் களைந்து விதவை விரதம் காக்க வேண்டுமெனவும் அவர்கள் மறுமணம் செய்யவோ அல்லது பிறர் அவர்களை மணஞ்செய்து கொள்ளவோ கூடாதெனவும் சமூகக் கட்டுப்பாடுகள் செய்வாராயினர். ஒருவனுடன் மனையியாயிருந்த வள் இன்னொருவனைச் சேர்ந்து சுகம் அடைதல் கூடாதென்னும் பொறாமை உணர்ச்சியினால் தந்தை ஆட்சியாளர் உண்டாக்கிய சுயநலச் சட்டங்களே இவைகளாகும். அவ் வழக்கத்தில் தெய்வீகம் எதுவும் இருக்க வில்லை. இவ் வழக்கைப் பரிகசிப்பதற்குப் போலும் அராபிக் கதைகள் ஒன்றில் ஒரு தேசத்தில் மனைவி இறந்தால் கணவனை உடன்கட்டை ஏற்ற வேண்டும் என்னும் சட்டம் இருந்ததெனக் கூறப்பட்டுள்ளது. பெண்களை உடன்கட்டை ஏற்றவும், மொட்டை அடித்துக் கொள்ளவும் சமூகச் சட்டஞ் செய்த ஆண்கள் தம் மனைவியர் இறந்தால் தாமும் தம் மனைவியருக்கு விசுவாசமுடையவர்களாய் இருப்பதற்கு அறிகுறியாகத் தாமும் உடன் கட்டை ஏற வேண்டும், தாமும் கைம்மை விரதம் காத்தல்வேண்டும் என்னும் சட்டங்கள் செய்யாதிருந்தமை தான் விநோதம். ஆடவரின் மனப் பான்மை என்னே! இரங்கத்தக்கது. இயற்கை விதி என்ன? ஆண் பெண் சேர்க்கை சந்ததிப் பெருக்கத்துக்காகவே உண்டா கின்றது என நாம் நம்மைச் சூழ்ந்துள்ள அசைவுள்ள அசைவில்லாத உயிர்த் தோற்றங்களை எல்லாம் நோக்கி நன்கு அறிந்துகொள்ளுதல் கூடும். சந்ததியைப் பெருக்கும் பொருட்டுத் தாம் முதலில் தெரிந்தெடுத்த ஆடவன் மூலமே மேலும் மேலும் தாம் சந்ததியைப் பெருக்குதல் வேண்டும் எனப் பெண்கள் உள்ளத்தில் உதயமாகும் ஒருவகை உணர்ச்சியினாலேயே ஒருத்தி ஒருவனையே கணவனாகக் கொள்ளும் உணர்ச்சியோ, வழக்கோ, கற்பு என்னும் ஒழுக்கமோ உண்டாயிற்று. இவ்வுணர்ச்சி உறுதிப்படாத அளவில் அவள், தான் விரும்பிய பிற கணவரைத் தெரிதெடுக்கும் எல்லா உரிமைகளும் உண்டு. இவ்வகை இயற்கை விதிகளுக்கு இடையூறாக, முட்டுக்கட்டையாக இருக்கும் சுயநலமுடைய ஆடவரின் கொடிய உணர்ச்சி இரங்கத்தக்கதொன்றே யாகும். இந்து “லா” வில் பெண்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டதின் காரணம் இந்து “லா” என்னும் சட்டத்தினால் இந்திய மக்கள் ஆளப்படு கின்றனர். இது இந்திய மக்களின் ஒரு சாராருக்குரிய சட்ட திட்டங்களைக் கொண்டு செய்யப்பட்டதேயாகும். உண்மையில் அது இந்திய மக்கள் எல்லோருக்கும் உரிய சட்டங்கள் ஆகமாட்டா. கிழக்கு இந்தியக் கம்பனி யார் இந்தியாவில் ஆட்சி தொடங்கியபோது இந்திய மக்களிடம் வழங்கும் சட்ட நூல்களைக் கொண்டுவரும்படி மக்களுக்கு அறிவித்தனர். அவர்களிற் சிலர் அக் காலத்தில் ஆரியப் பிராமணர்களால் தமது ஆக்கங் கருதி எழுதிவைத்த போதாயனம் அபஸ்தம்பம் முதலிய நீதி நூல்களையும் பிற ஸ்மிருதி நூல்களையும் கொடுத்தார்கள். மக்களின் ஆட்சிக்குரிய சட்டங்கள் அக் காலத்தில் எழுதி வைக்கப்படவில்லை என்றும், அவைகளை நியாயத் தார் (Judges) நன்கு அறிந்திருந்தார்கள் என்றும் மெகஸ்தீனஸ் என்பவரே குறிப்பிட்டுள்ளார். ஆகவே இந்திய மக்களின் உண்மையான சட்டங்கள் கிழக்கிந்தியக் கம்பனியரின் கைக்கு எட்டவில்லை. ஆகவே அவர்கள் கிடைத்தவைகளைக் கொண்டு இந்து லா என்னும் சட்டங்களைச் செய் தார்கள். ஆரியர் தந்தை ஆட்சியினர். அவர்கள் பெண்களை கீழ்ப்படுத்தி யிருந்தனர், ஆதலினாலேயே ‘இந்து லா’வில் பெண்களின் உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கின்றன. தென்னிந்திய சாதிக்குழுக்கள் (Castes and Tribes of Southern India) என்னும் நூலில் தேஸ்ரன் எழுதியுள்ளவைகளை நோக்கு வோமாயின் இந்தியர்களின் சட்டங்கள் வேறு “இந்து லா” வேறு என்று நன்கு விளங்கும். இந்து லா இந்தியர் “லா”வாக இல்லாமையினாலேயே அது திருத்தப்படல் வேண்டும் என்னும் கூச்சல்கள் கிளம்புகின்றன. தாலி தரித்தல் திருமணக் காலத்தில் கணவன், மனைவிக்குத் தாலி கட்டும் வழக்கம் தென்னிந்திய நாட்டில் மாத்திரம் காணப்படுகின்றன. தாலி கட்டுதல் என்பது ஒரு மாட்டுக்குக் கயிறு கட்டுதல்போல் தாலியைக் கட்டிப் பெண்ணை ஆடவன் அடிமை கொள்ளுதல் என்னும் ஓர் கருத்தும் உலவுகிறது. தென்னிந்திய மக்கள் இன்று போலவே பழங்காலத்திலும் பூக்களை மாலை யாகவும் விடு பூவாகவும் அணியும் விருப்புடையர். பெண், ஒர் ஆடவனைக் கணவனாகத் தெரிந்தெடுக்கும் காலங்களில் அவள் அவனுக்குப் பூ மாலையைச் சூட்டினாள். ஆடவனும், பெண்ணும் சம உரிமையுடைய வர்கள் என்னும் நிலைமையில் திருமணம் நிகழும்போது ஆடவன் பெண்ணுக்கு மாலை இட்டான்; பெண் ஆடவனுக்கு மாலை யிட்டாள். முற்காலப் பெண்களும் சிறுவரும் புலிப் பற்கோத்த மாலைகளை அணிவது வழக்கம். ஆடவன் திருமணக் காலத்தில் பெண்ணுக்கு அவ்வகை மாலை ஒன்றைக் கொடுத்தான். இன்றும் தென்னிந்திய மக்கட் கூட்டத்தினர் பலருக் கிடையில் திருமணக் காலத்தில் பெண்ணுக்குத் தாலி கட்டுவோர் புரோகிதர், கணவனின் உடன் பிறந்தாள் முதலியோராவர். சில கூட்டத்தினரிடையே திருமணம் நிச்சயமானவுடன் கணவனின் உடன் பிறந்தாள் பெண் வீட்டுக்குச் சென்று அவள் கழுத்தில் தாலியைக் கட்டிவிடுகிறாள். இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளின்முன் திருமணக் காலத்தில் தாலி திரிக்கும் வழக்கு இருந்ததாகத் தெரியவில்லை. கைம்மை அடைந்த பெண் தனது கை வளைகளை உடைத்தெறிந்துவிடுவாள். இன்று தாலிதரித் திருத்தல் ஒரு பெண்ணின் கணவன் உயிரோடிருக்கிறான் என்பதை உணர்த்துகின்றது. இன்று கயிற்றில் அல்லது பொன் நாணிற் கோக்கப்பட்டிருக்கும் தாலி புலிப் பல்லின் வடிவுடையதா யிருக்கின்றது. சில கூட்டத்தினர் பொட்டுத் தாலியை அணிவர். மேல்நாட்டவர்கள் தாலிக்குப் பதில் மோதிரம் கொடுப்பர். உயிர்களில் ஆணினங்கள் பெண்ணினங்களை விட அழகுடையன. ஏன்? பறவைகளில் பெண் பறவைகளை விட ஆண் பறவைகளே அழகுடையன. கோழி, மயில் முதலிய பறவை இனங்களைப் பார்த்து இவ் வுண்மையை நாம் நன்கு அறிந்து கொள்ளலாகும். பெரும்பாலும் பறவைகள் ஆண்டின் சிற் சில காலங்களிலேயே முட்டையிட்டுக் குஞ்சு பொரிக் கின்றன. பெண் பறவைகள் ஆண் பறவைகளுடன் சேர்ந்து கருக்கொள்ளும் காலத்தில் ஆண் பறவைகள் பெண் பறவைகளைக் கவரக்கூடியவாறு நிறத்தால் பிரகாசமடைகின்றன. விலங்குகளிலும் பெண்ணினங்களை விட ஆண் விலங்குகளே அழகுடையன. ஆண் சிங்கத்துக்குச் சடையிருத்தல், சில பெண் விலங்குகளுக்குக் கொம்பில்லா திருத்தல் ஆண் விலங்கு களுக்கு அழகிய கொம்பிருத்தல் போன்றவைகளாலும் பிறவற்றாலும் இதனை நாம் நன்கு அறிந்து கொள்ளலாம். புனுகு, சவ்வாதுப் பூனைகளின் ஆண்கள் ஆண் பெண் சேர்க்கைக்குரிய பருவ காலங்களில் நறுமணத்தை வெளிப்படுத்திப் பெண் இனங்களுக்குக் கவர்ச்சி உண்டாக்குகின்றன.33 மக்களுள்ளும் ஆடவரே அழகிற் சிறந்தவராவர். பெண்கள் வெளியிற் சென்று வேலை செய்யாதிருப்பதினால் அவர்கள் சிறிது மினு மினுப்பு அடைகின்றனர். இன்னும் மேனி மினுக்குப் பொருள்கள், அணிகலன்கள் அழகிய ஆடைகளைப் பயன்படுத்திக் கொள்வதால் அவர்கள் ஆடவரி லும் பார்க்க அழகாற் சிறந்தவர் போலக் காணப்படுகின்றனர். இரு பாலின ரையும் ஆடையணி வகைகளின்றி நிறுத்தி நோக்கின் இயற்கையில் ஆண்களே அழகுடையர் எனத் தோன்றும். இயற்கை, ஆணினங்களைப் பெண்ணினங்களிலும் அழகாகப் படைத்திருப்பது பெண்ணினங்கள் ஆண்களின் அழகாற் கவரப்பட்டு அவைகளை இயற்கைத் தெரிவு செய்து கொள்வதற்கே யாகுமென்க. பெண்களின் பொருட்டு ஒன்றோடு ஒன்று போரிடுவன ஆண்களே; பெண்கள் ஒருபோதும் ஆண்களின் பொருட்டுப் போரிடுவதில்லை. பொது மகளிர் ஒரு காலத்தில் திருமணமாகாத பெண்கள் தமது தயவைத் தாம் விரும்பிய ஆடவர்களுக்கு அளிப்பவர்களாயிருந்தனர். ஒருவன் ஒருத்தியை மணஞ் செய்துகொள்வதால் அவள், குடும்பத்தின் பொது உடைமை என்பதினின்றும் நீங்கி ஒருவனின் தனி உடைமையானாள். இவ்வாறு மணமாகி ஒருவனுக்கு உரிமையாகாத பெண்கள் பொது மகளி ராகவே இருந்துவந்தனர். இன்றும் சில சமூகங்களுக்குள் திருமணமான பெண்கள் தமது தயவைத் தம் கணவரின் உறவினராகிற ஆடவருக்கு அளிக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். பிற்போக்குடைய தென்னிந்திய மக்கள் சிலரிடையே இன்றும் இவ்வழக்கத்தைக் காணலாகும்.34 மேற்குத் தேசங்களில் பொது மகளிராக வாழ்க்கை நடத்தும் பெண்களின் தொகை மிகப் பலவாகும். நீதிபதி லின்சி என்பார் கூறியிருப் பது வருமாறு: ‘நியூயோர்க் நகரில் தங்கள் கணவரல்லாத ஆடவருடன் வாழும் பெண்கள் ஐம்பத்தினாயிரத்துக்கு மேற்பட்டவராவர். இலண்டன் பட்டினத்தைப்பற்றி அறியுமிடத்து அங்கு இம்முறையில் வாழும் பெண்களின் தொகையும் இவ்வெண்ணுக்கு நேராகக்கூடும் எனத் தெரி கின்றது. இவ்வாறு வாழும் பெண்கள் பெரும்பாலும் 18 வயதுக்கு இடைப் பட்டவர்களாவர்.’35 பொது மகளிர் காலத்தில் விலைமாதர் ஆகமாறினர். 1926ஆம் ஆண்டில் எழுதப்பட்ட ஒரு நூலில் பாரிஸ் நகரில் மாத்திரம் காணப்படும் பதிவு செய்த விலைமாதரின் எண் எழுபதினாயிரம் என்றும், பதிவு செய்யாதவர்களின் எண்ணிக்கை இத்தொகையிலும் பன்மடங்கு ஆகும் எனவும் கூறப்பட்டுள்ளன.36 தேவடியாள் வழக்கம் முற்காலத்தில் சமயத்தின் பெயரால் தீய ஒழுக்கங்கள் பல நிலவின. அவைகளுள் தேவடியாள் வழக்கமும் ஒன்றாகும். இது அக்கால மக்களால் குற்றமாகக் கருதப்படவில்லை. ஒரு காலத்தில் பெண்களை உயிருடன் இறந்த கணவரோடு வைத்துக் கொளுத்துதலை மக்கள் சிலர் உயர்ந்த அறமாகக் கருதினார்களல்லவா? ஆபிரிக்காவின் சில பாகங்களில் வயது முதிர்ந்த பெற்றோரைப் பிள்ளைகள் கொன்று அவர்களின் இறைச்சியைக் கடைகளில் விற்றார்கள். இது அவர்கள் சமூகத்தில் குற்றமாகக் கருதப்பட வில்லை. ஐரோப்பிய நாடுகளில் நோயினாற் பிழைக்கமாட்டாதவர்களை அவர் சுற்றத்தினர் ஆலயங்களுக்குக் கொண்டு சென்று தண்டாயுதத்தினால் அடித்துக் கொன்றார்கள். இவ் வகைத் தண்டாயுதங்கள் குடும்பத் தண்டா யுதங்கள் என்னும் பெயருடன் இன்றும் சுவிடன் தேசத்திலுள்ள கிறித்துவ ஆலயங்களில் உள்ளன. தேவடியாள் வழக்கம் உலகம் முழுமையினும் ஒருகால் காணப்பட்டதாயினும் அது இன்றும் இந்திய நாட்டில் காணப்படு கின்றது. அவ்வழக்கம் நாள் வீதம் மறைந்து வருகின்றது. தேவடியாள் வழக்கம் உண்டான வரலாறு ஈண்டு கூறப்படுகின்றது. முற்காலத்தில் ஆடவரும் மகளிரும் தனித் தனிக் கூட்டத்தினராக வாழ்ந்து வந்தார்கள். ஆண்டில் ஒரு முறையோ இரு முறையோ இரு பாலரும் பொது இடங்களிற் சந்தித்துக்கொள்வதாகிய வழக்கம் இருந்து வந்தது. பின்பு பொது இடமாகிய ஆலயத்தில் நிகழும் ஆண் பெண் சேர்க்கை பரிசுத்தமுடைய தாகக் கருதப்பட்டது. தந்தை ஆட்சி உண்டாகி வியபிசாரம் குற்றமாகக் கொள்ளப்பட்ட காலத்திலும் ஆலயங்களிற் செய்யப்படும் வியபிசாரம் குற்றமாகக் கருதப்படவில்லை. இது பபிலோனிய, அசீரிய பழஞ் சட்டங் களைக் கொண்டு நன்கு அறியப்படுகின்றது. அக் காலத்திலே மேற்கு ஆசிய நாடுகளில் பெண்கள் ஆலயங்களிற் சென்று ஆடவரைச் சேர்த லாகிய நேர்த்திக் கடன்கள் செய்தல் சர்வ சாதாரணமாக இருந்து வந்தது.37 மேற்கு ஆசிய நாடுகளில் இவ்வழக்கம் எவ்வாறு மிக மலிந்து காணப் பட்டன என்பதற்கு எடுத்துக்காட்டு கீழே காட்டப்பட்டுள்ளது. முற்காலத்தில் தாய்க்கடவுளரின் கோயில்களில் பெண்கள் பூசாரி களாகவிருந்தனர். கன்னிப்பெண்கள் பலர் தேவடியாட்களாக வந்தடைந் தனர். ஆலயங்களில் நிகழும் ஆண் பெண் சேர்க்கை புனிதமுடையதென்று கருதப்பட்டதாதலின் அப்பெண்கள் ஆலயங்களுக்கு வரும் ஆண் தேவ அடியாரைச் சேர்வாராயினர். தேவ அடியார் ஆகிய பெண்கள் ஆண் கடவு ளரின் ஆலயங்களுக்கு நேர்ந்து விடப்பட்ட போது அவர்கள் கடவுளின் மனைவியர் எனப்பட்டனர். கடவுளின் கடமையைக் குருமார் நிறைவேற்றி வந்தனர். இவைபோன்ற பழக்க வழக்கங்களின் வளர்ச்சியே தேவதாசி வழக்கமாக நிலவுகின்றது. கன்னி அழித்தலில் அச்சம் முற்கால ஆடவர் பெண்களின் கன்னிமையை அழிப்பதில் பெரிதும் அச்சங்கொண்டிருந்தார்கள். ஆகவே கன்னிப் பெண்கள் ஆலயங் களுக்குச் சென்று தாம் விரும்பிய ஆடவரைக் கூடித் தமது கன்னிமையை அழித்துக் கொண்டார்கள். சில நாடுகளில் அரசரும் குருமாரும் இக் கடமையை நிறைவேற்றி வந்தார்கள்.38 மலையாளத்தில் இவ்வழக்கம் சமீபகாலம் வரையில் நிகழ்வதாயிற்று.39 வியபிசாரங்களுக்குச் சமயம் ஆதரவளித்தபடியாலே ஆலயங்களில் வியபிசாரம்புரியும் தேவடியாட்கள் நிறைந்திருந்தனர். தஞ்சாவூர் பெரிய ஆலயத்தில் 400 தேவடியாட்கள் இருந்தார்கள் என்பதற்குக் கல்வெட்டு தொடர்பான சான்று உண்டு. மகமத் கசனி சோமநாத ஆலயத்தைத் தகர்த்தபோது அங்கு முந்நூறு தேவடி யாட்கள் இருந்தனர். தாய்மார் குழந்தைகளுக்குப் பாலூட்டி வளர்க்குங் காலம் கருக்கொள்ளுங்காலத்தில் மாத்திரம் பெண் விலங்குகளும் ஆண் விலங்குகளும் சேர்கின்றன. கருக்கொண்ட பின் பெண் விலங்குகள் ஆண் விலங்குகளைத் துரத்தி விடுகின்றன. குட்டி யீன்று அவைகள் பெரிதானபின் மறுபடியும் கருக்கொள்ளும் காலத்திலேயே அவை மறுபடியும் ஆண் விலங்குகளைச் சேருகின்றன. கருத்தரித்தபின் அவை ஆண் விலங்கு களைச் சேர்வதில்லை. இதே விதி மக்களிடையும் இருந்தது. இன்றும் பிற்போக்குடைய மக்களிடையே இவ்வொழுக்கு இருந்து வருகின்றது. சில கூட்டத்தினரிடையே பெண்கள் ஆறு ஏழு ஆண்டுகள் வரையில் பிள்ளை களுக்குப் பால்கொடுத்து வளர்ப்பார்கள். அவ்வளவு காலமும் அவர்கள் ஆண் சேர்க்கையின்றியிருப்பர். நாகரிகமே இப்பபொழுது இவ்வியற்கை விதியை மாற்றிவிட்டதுபோலும்.40 இக் காலத்து மருத்துவ அறிஞரும் அறிவாளிகளும் தாழ்ந்த மக்களிடையே காணப்படும் ஆண் பெண் சேர்க்கை விதிகளே மிக ஏற்புடையன எனக் கூறுகின்றனர்.41 ஆண் பெண் சேர்க்கையின் நோக்கம் ஆண், பெண் சேர்க்கை சந்ததிகளைப் பெருக்கும் நோக்கம் ஒன்றற் காகவே உள்ளது. இவ்வியற்கை விதியை மீறி நடப்பவர்கள் உறுதியாகத் தண்டனைக்குத் தப்பமாட்டார்கள். ஆண் பெண் சேர்க்கையினால் ஆண் களே பெரிதும் தம் வலிவை இழந்துவிடுகின்றனர். மனிதன் தான் பயன் படுத்தும் மாடு குதிரைகளின் ஆணினங்களைப் பெண் விலங்குகளோடு சேராமல் இருக்கும்படி தனியே வைத்து வளர்க்கின்றான்; இன்றேல் அவை களின் விதையை அடித்து விடுகிறான். ஆண் பெண் சேர்க்கையினால் ஆண்கள் தமது வலிவை இழந்து விடுகின்றனர் என்னும் கருத்துப் பற்றியே அவன் அவ்வாறு செய்து வருகிறான். முனிவர் ஒருவர் நீண்ட காலம் தவம் செய்து கொண்டிருந்தார். ஒரு நாள் அவர் பெண் ஒருத்தியைக்கண்டு அவள்மீது ஆசைகொண்டு அவளைச் சேர்ந்தார். அதனால் அவர் தனது தவ வலிவை இழந்துவிட்டார் என்பன போன்ற பழங்கதைகள் புராணங்களிற் காணப்படுகின்றன. இக்கதை களே பெண்களின் சேர்க்கையால் ஆடவர் தமது உடல் வலி மன வலிகளை இழந்துவிடுகிறார்கள் என்பதை உணர்த்துவதற்கு எழுந்தவைகளேயாகும். பெண்களின் சேர்க்கையில் அதிகம் அழுந்தும் ஆடவன் ஐம்பது ஆண்டு களுள்ளேயே இளைத்து ஓய்ந்துவிடுகின்றான். அமெரிக்காவில் மனைவியை இழந்தவர்களிலும் பார்க்கக் கணவனை இழந்த பெண்களின் எண் 2,00,000 அதிகம் என்று கணக்கு இடப்பட்டது. (1926)42 இது ஆடவர் அளவுக்கு அதிகம் பெண்போகத்தில் அழுந்தியதன் பயன் எனப் படுகின்றது. பெண்கள் உயர்நிலை அடைவதற்கு வழி பெண்கள் தற்போது தமது வாழக்கைக்கு ஆடவரையே எதிர்பார்க்க வேண்டிய நிலையில் இருக்கின்றனர். தாமே பொருளீட்டித் தம் வாழ்க்கை யையும் குடும்ப வாழ்க்கையையும் நடத்தும் நிலையிலுள்ள பெண்கள் ஆடவரை ஒப்பவோ, ஆடவரிலும் மேலாகவோ அதிகாரமுடையவர் களாக வாழ்ந்து வருதலை நாம் காண்கின்றோம். ஆண்களும் பெண்களும் வேலைசெய்து பொருளீட்டும் வேலைக்கார வகுப்பினர்களிடையே பெண்கள் ஆண்கள் ஒப்ப அதிகாரம் உடையவர்களாக இருக்கின்றனர். சில சமயங்களில் ஆடவன் உழைப்பற்றவனாகிவிட மனைவியே ஆசிரியை யாகவோ, எழுத்தாளியாகவோ, வேலை புரிந்து குடும்பத்தைக் காப்பாற்று கின்றாள். இவ்வகைக் குடும்பங்களில் கணவனை விட மனைவியே குடும்பத்தில் அதிகாரம் உடையவள். இவைபோன்ற நிகழ்ச்சிகளால் குடும் பத்தில் மனைவிக்கோ கணவனுக்கோ அதிகாரம் உண்டாவது பொருளா தார நிலையினால் என்று நன்கு விளங்குகின்றது. சில இடங்களில் பெண்களின் பெற்றோர் பெண்ணின் கணவனை விலை கொடுத்து (சீதனம் கொடுத்து) வாங்குகின்றனர். பெண்ணின் பெற்றோர் எவ்வளவு அதிகம் விலை கொடுக் கிறார்களோ அவ்வளவுக்குக் கணவன் பெண்ணின் அடிமையாக வாழ்ந்து வருகின்றான். இவ்வகை நிகழ்ச்சிகளைப் பெரிதும் இலங்கையின் வடபகுதி யில் வாழும் தமிழ்க் குடும்பங்களிடையே நாம் இன்றும் காணலாகும். பெண்கள் உயர்நிலை எய்த வேண்டுமாயின் அவர்கள் தமது வாழ்க்கையைப் பிறர் எவரின் கையையும் எதிர்பாராது நடத்தக்கூடிய நிலையை எய்தல் வேண்டும். ஆகவே அவர்கள் தாம் பருவம் அடையும் காலத்தில் தம் வாழ்க்கைச் செலவுக்கு வேண்டும் பொருள் தொகுக்கக்கூடிய கல்வியை இளவயதிலிருந்து பயிலுதல் வேண்டும். இன்று உண்மையில் நிகழ்வது என்ன? இன்று ஆடவனே பெண்ணுக்கு அதிகாரி என்பது கொள்கை யளவில் இருந்து வருகின்றது. ஆனால் நிகழ்ச்சி இதற்கு நேர்மாறாகவே இருந்துவருகின்றது. அந்தரங்கத்தில் கணவன் மனைவிக்கு முன் நடுநடுங்கு கின்றான். இவ்வகைக் காட்சிகளே, நாடகங்களிலும், பேசும் படங்களிலும் காட்டப்படுகின்றன. திருமணமான ஒவ்வொருவனுக்கும் கணவனைவிட மனைவியே மேலானவல்லமையுடையவள் என்று இதயத்தில் நன்கு தெரியும். ஆயினும் அவன் தனது கருத்தை எளிதில் வெளியிடுவதில்லை. உண்மையான அன்பு இருக்குமானால் பெண் ஒருத்தி தன் கணவனிடத்தில் உண்மையான அன்பு வைத்திருந்தால் அவன் தான் விரும்பிய இன்னொருத்தியை அடைதலைக் குறித்து வருந்தமாட்டாளென்றும், அவ்வாறே கணவனும் அவள் தான் விரும்பிய இன்னொருவனை அடைதலைக்குறித்து கவலை கொள்ள மாட்டானென்றும் மேல்நாட்டறிஞர் கூறியுள்ளார்.43 தேன்நிலவு (Honey Moon) திருமணத்துக்குப்பின் கணவனும் மனைவியும் உல்லாசப் பயணஞ் செய்து சில நாட்கள் தனித்து வாழ்தலை ஹனி மூன் என்று மேல்நாட்ட வர்கள் வழங்குகின்றனர். இது யாதோ சிறந்த ஒழுக்கம் எனக் கருதிக் கீழ் நாட்டவர்களிற் பலரும் அதனைப் பின்பற்றி வருகின்றனர். முற்காலத்தில் ஆடவன் ஒருவன் ஒரு தாய்வட்டத்திலிருந்து ஒரு பெண்ணைத் திருடிக் கொண்டு, அத்தாய்வட்டத்திலுள்ளவர்களின் சினம் தணியும் வரையில் மறைவில் வாழ்வதாகிய இவ்வழக்கமே “ஹனி மூன்” எனப்படுகின்றது. நம்மவர் மேல் நாட்டவரைப் பார்த்துக் காற் சட்டை, டை, காலர் முதலியவை களை அணிவது போன்றது இவ்வழக்கம். “கண்ட பாவனையிற் கொண்டை முடிதல்.” பெண் எப்பொழுதும் பிற ஆடவரை நினைத்து ஆசைப்படுகிறாளா? மக்களுக்கு மண், பெண், பொன் என முப்பெரும் ஆசைகள் உண்டு எனத் தத்துவ சாத்திரிகள் கூறியிருக்கின்றனர். விலங்குகளிலும், பறவைகளி லும், சிற்றுயிர்களிலும் ஆண்களே பெண்ணை நாடிச் செல்கின்றன; மக்க ளிடையும் இவ்விதியே அமைந்தள்ளது. இயற்கை விதி இவ்வாறாகவும் புராணக்கதைகளிலும், பாரதம், இராமாயணங்களிலும் பெண்கள் உறுதியான மனமுடையவர்கள் அல்லர் என்றும் அவர்கள் கருத்து எப்பொழுதும் பிற ஆடவர் மீது ஒடிக்கொண்டு இருக்கும் என்றும், இயற்கைக்கு மாறாக எழுதி வைக்கப்பட்டுள்ளன. ஆடவர் பெண்களை அடிமைப்படுத்திய காலத்தில் தாம் எழுதும் நூல்களில் தாம் விரும்பிய வாறெல்லாம் பெண் களைப்பற்றி எழுதிவிடலாமல்லவா? “அருக்கு மங்கையர் மலரடி பரவி யும்” என வரும் அருணகிரி நாதர் பாடல், விலைமாதராயினும் அவர்கள் ஆடவர் எண்ணத் துக்கு எளிதில் இடங்கொடார் என்பதை விளக்குகின்றது. (அருக்கு-அருக்குகின்ற) “எண்ணறக் கற்று எழுத்தற வாசித்தாலும் பெண்புத்தி என்பதெல்லாம் பெரும் பேதைமைத்தே” என்பதுபோன்ற வாக்கியங்கள் இலக்கியங்களிலிருந்து எடுக்கப்படவேண்டும். முத்தத்தின் வரலாறு தாய் குழந்தையிடத்துள்ள அன்பு முதல் காதல்வரையில் பலவகை உணர்ச்சிகளை முத்தம் உணர்த்துகின்றது. ஆகவே முத்தம் பலவகைப்படும். இம் முத்தத்தின் வரலாறு மிக இன்பம் அளிப்பதாகும். அதனை இங்கு ஆராய்வோம். உயர்ந்த நாகரிக மக்கள் முத்தங்களினால் தமது அன்பைத் தெரி விக்கிறார்கள். தாய் பிள்ளையை முத்தமிடுகின்றாள், காதலர் ஒருவரை ஒருவர் முத்தமிடுகின்றார்கள். சில நாடுகளில் நண்பர்களும் ஒருவரை ஒருவர் முத்தமிட்டுக்கொள்வர்! இம் முத்தங்களில் தாயின் முத்தமும் காதலர்களின் முத்தமுமே சிறப்புடையன. பழைய எகிப்தியர் முத்தத்தை அறியார். பழைய கிரீசிலும் அசிரியாவிலும் இது வேரூன்றியிருந்தது. இந்தியாவிலே இது மிகப் பழமையே இருந்தது. தொடுதலே உணர்ச்சிகளுள் முதன்மையுடையது. முத்தமும் இது சம்பந்தமாகத் தோன்றின தெனக் கருதலாம். பறவைகள் தமது அலகுகளால் ஒன்றை ஒன்று முத்தமிடுகின்றன. சில பூச்சிகளும் இவ்வாறு செய்கின்றன. கரடிகளிடத்தும் நாய்களிடத்தும் கீழ் நிலையிலுள்ள மக்கள் முத்தமிட்டுக் கொள்வதுபோன்ற செயல்களைக் காணலாம். நாகரிக மக்களின் முத்தத்துக்கும், பூனைகள் ஒன்றை ஒன்று மோப்பது போன்ற காட்டுமிராண்டிகளின் முத்தத்துக்கும் அதிக வேறுபாடு உண்டு. முத்தத்தின் வகைகள் கீழ்த்தரமான முத்தங்கள் மூக்கோடு மூக்கை உரைஞ்சுதல் எனக் கூறப்படும். மோத்தல் போன்ற முத்தம் மூக்கோடு சம்பந்தப்பட்டது. மயோரியர், சாண்டவிச்திவினர், எஸ்கிமோவர், மலாயரின் பெரும் பகுதியினர்களின் முத்தம் இவ்வகையினதே. மூக்கை உரைஞ்சுவதாகிய முத்தம் “மலாய முத்தம்” எனப்பெயர் பெறும். முத்தம் கொடுப்பவன் முத்தம் பெறுபவன் மூக்கில் சரிகோணம் (Right angle) விழும்படியாக மூக்கை வைத்து அழுத்துதல் மலாய முத்தம் எனப்படும் என்றும் இது ஐரோப்பியர் கைகுலுக்குவதை ஒத்ததென்றும் டார்வின் கூறியுள்ளார். தென்கடல் தீவு மக்கள், ஒருவர் மூக்கின்மேல் ஒருவர் மூக்கை வைத்து அழுத்தி உரைஞ்சி முத்தமிடுவார்கள். ஆஸ்திரேலியர் முகத்தை முகத்தோடு உரைஞ்சிக்கொள் வர். தாழ்ந்த மக்களிடையே தாய்மார் குழந்தைகளை நக்குவார்கள். மிகப் பழங்கால முத்தம் மூக்கைக் கன்னத்தில் வைப்பதாகும். கயோந்தா (khyountha) மக்கள் வாயையும் மூக்கையும் கன்னத்தில் வைத்து உறிஞ்சு வார்கள். சீனர், மங்கோலிய சாதியினருட் பலர் இலாப்பியர் முதலியோர் மூக்கைக் கன்னத்துக்கு நேராக வைத்து அழுத்தி மோந்து கண் இமைகளைத் தாழ்த்தி இதழ்களால் அழுத்துவர். யப்பானிய மொழியில் முத்தம் என்பதைக் குறிக்கும் சொல் இல்லை. அவர்களிடையே தாய் குழந்தையை முத்தமிடுவ தாகிய முத்தம் மாத்திரம் வழங்கும். ஐரோப்பியருடைய முத்தம் இதழ்களை மற்றவரின் முகம் தலை அல்லது உடலில், அல்லது இதழ்களில் வைப்பதாகும். அவர்கள் மூக்கைப் பயன்படுத்துவதில்லை. இது ஒரு தனிப்பட்ட முறையாகக் காணப்படுவதால் இது காட்டு மிராண்டிகளின் பழக்கத்திலிருந்து வளர்ச்சியடைந்ததெனக் கருதுதல் தவறாகும். முத்தம் என்பது மோந்தும் சுவைத்தும் பார்த்தல் எனச் சிலர் கூறி யிருக்கின்றனர். சிலர் அது சுவைத்துப் பார்க்கும் முறையான வணக்கம் என்பர். சிலர் அது கடித்து உறிஞ்சிப் பார்த்தல் என்பர். காட்டுமிராண்டித் தாய்மார் பிள்ளைகளை விளையாட்டாகக் கடிப்பார்கள். பல சாதியின ரிடையே காதலர்களும் இவ்வாறு செய்து கொள்வர். முத்தம் என்பது ஒருவகைப் பேச்சு என்று கருதப்படுகின்றது. காதலருடைய முத்தம் தாயின் முத்தத்திலிருந்து தோன்றியதெனச் சிலர் கூறுவர். தாய் குழந்தைக்குக் கொடுப்பதல்லாத முத்தத்தை யப்பானியர் அறியார். ஆபிரிக்க மக்களிடை யும் அனாகரிக மக்களிடையும் கணவன் மனைவியரும் காதலரும் முத்த மிடுவதில்லை. வட அமெரிக்கப் பெண் இதழ்களைக் கன்னத்தில் மெதுவாக வைத்து முத்தமிடுகிறாள். அவள் யாதும் சத்தம் செய்வதில்லை. ஐரோப்பிய ரின் முத்தம் உண்பதுபோன்றது எனச் சீனர் கூறுவர். நீகிரோவருடைய முத்தம் மோத்தல் போன்றது. இலத்தின் மொழியில் முகத்தில் அல்லது கன்னத்தில் நண்பருக்கு இடும் முத்தம் அசூலம் (Assulum) எனப்படும். உதடுகளையும் உதடுகளை யும் சேர்த்து அன்பினால் இடும் முத்தம் பாசியம் (Basium) எனப்படும். காதலர் இதழோடு இதழ் வைத்து முத்தமிடுவது சாவியம் (Savium) எனப்படும். இம் முத்தங்கள் பிரான்சிலும் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் வழங்குகின்றன. வாயில் முத்தமிடுவது காதலர்களுக்கு மாத்திரம் உரியது. காதல் காரணமாயல்லாமல் வாயில் முத்தமிடுவது பாவம் என்று பிரான் சியரால் கருதப்படுகின்றது. கிரேக்க இலத்தினிய பெற்றோர் பிள்ளைகளை முத்தமிட்டார்கள்; காதலரும் மணமானவர்களும் ஒருவரை ஒருவர் முத்தமிட்டார்கள். இது போலவே ஆண்களாகிய நண்பர்களும், ஆண்பெண்ணாகிய நண்பர்களும் ஒருவரை ஒருவர் முத்தமிட்டனர். பலவகையான சமயக் கிரியைகளில் முத்தம் பயன்படுத்தப்பட்டது. எபிரேய மக்களிடையும் இவ் வழக்கம் இருந்து வந்தது. ஆண்களும் பெண்களும் முத்தமிட்டுக் கொள்வது அனுமதிக்கப்படவில்லை. பிரியாவிடை, மரியாதை, உபசரித்தல் என்பவை களுக்கு மாத்திரம் முத்தம் பயன்படுத்தப்பட்டது. செமித்திய மக்களிடையே முத்தம் சமய சம்பந்தமாக வழங்கிற்று. கிறித்துவர்கள் ஆண்கள் பெண்கள் என்ற பேதமின்றி முத்தமிடுவது பழைய மக்களில் சமூக வழக்கத்தைப் பற்றி யது. கிறித்துவ மதத்தில் முத்தம் அருளைக் கொடுப்பதாகக் கருதப்பட்டது. முற்காலத்தில் ஆண் பெண் என்ற வேறுபாடின்றி எல்லாருக்கும் குருமார் பரிசுத்தமான முத்தம் கொடுத்து வந்தனர். இலக்கிய காலத்தில் நடைபெற்ற முத்தங்கொடுக்கும் வழக்கங்கள் மத்தியகாலம் வரையில் இருந்துவந்தன. இங்கிலீஷ் பெண்கள் ஆண் நண்பரை முத்தமிடும் உரிமையைச் சிறப்பாகச் பெற்றிருந்தார்கள். இங்கி லாந்தில் பிற்காலத்தில் ஓரு மாற்றமுண்டாயிற்று. அப்பொழுது முத்தம் பெற்றோருக்கும், காதலருக்கும் உரியதாயிருந்தது. பிறப்பினால் அல்லது திருமணத்தினால் உறவினரல்லாத ஆண்களை முத்தமிடும் வழக்கம் நின்று போயிற்று. இப்பொழுது காதலர், ஒரே குடும்பத்தினர், பெண் நண்பர்களுக் குள் மாத்திரம் முத்தமிடும் வழக்கம் இருந்து வருகின்றது. ஐரோப்பாவில் ஆண் நண்பர் ஒருவரை ஒருவர் முத்தமிட்டுக்கொள்ளும் வழக்கம் இன்னும் இருந்து வருகின்றது. இது முக்கியமாகப் பிரான்சில்தான் உண்டு. இது அரசர்களுக்கிடையில் இருந்து வந்தது. மரியாதையின் அடையாளமாகப் பெண்களின் கையை முத்தமிடும் வழக்கம் மத்திய காலத்தில் ஆரம்பித்தது. இது சாதாரண வழக்கில் இல்லை; பெரியவர்கள் சிலருக்கிடையில் இருந்து வருகின்றது. சமூக சமய வழக்கங்கள் தழுவிக்கொள்ளுதல், வணங்குதல் போன்றவைகளுக்குப் பதில் முத்தம் பயன்படுகிறது. இவ்வழக்கம் மறைந்து போன நாடுகளில், அதற் காகச் சொல் பயன்படுத்தப்படுகின்றது. ஸ்பானியர் “நண்பனது கையை முத்தமிடுகின்றேன்” எனக் கூறுவார்கள். மீதியர் கைகளை மாத்திரம் முத்தமிட்டார்கள். ஒடிசியஸ் திரும்பிவந்தபோது அவனது நண்பர்கள் தலை கை தோள் என்பவைகளில் அவனை முத்தமிட்டார்கள். கிரீசில் தாழ்ந்தவர்களே உயர்ந்தவர்களின் கை, மார்பு அல்லது முழந்தாள்களை முத்தமிட்டார்கள். பாரசீகத்தில் சமமானவர்கள் ஒருவரை ஒருவர் வாயில் முத்தமிட்டார்கள்; சிறிது ஏற்றத் தாழ்வுடையவர்கள் கன்னத்தில் முத்தமிட் டார்கள். மிகத் தாழ்ந்தவன் முன்னால் விழுந்து வணக்கம் செலுத்தினான். ஏசுவா, யாக்கோப்பின் கழுத்தில் விழுந்து முத்தமிட்டான். எபிரேயருள் கன்னம், நெற்றி, தாடி, கை, பாதம் என்பன முத்தமிடப்பட்டன. பலஸ்தீனிய ரிடையே நடைபெறும் முத்தம் பின் வருமாறு கூறப்படுகின்றது. முத்தமிடும் இருவரில் ஒவ்வொருவரும் தலையையும் முகத்தையும் கீழே தாழ்த்தி மற்றவரின் தோள் முட்டில் வைத்து மற்றவரின் வலது கன்னத்தில் முத்தமிடுகின்றனர்; பின்பு தலையை மற்றவரின் வலது தோளில் வைத்து இடக்கன்னத்தில் முத்தமிடுகின்றனர். மிகவும் மரியாதையான வணக்கம் ஒத்த இருவர்களுக்கிடையில் நடக்கும்போது ஒருவர் மற்றவரின் தாடியைப் பிடித்து முத்தமிடுகிறார். பெண்களும் கணவர், பிள்ளைகள், தந்தையினரை முத்தமிடுகின்றனர்; மரியாதையுள்ள குடும்பத்தில் ஒத்த நிலைமையுடைய வர்கள் வலது கையை மற்றவரின் இடதுதோளில் வைத்து வலக் கன்னத்தை முத்தமிடுவார்கள். பின் இடக் கையை வலத் தோளில் வைத்து இடக் கன்னத்தை முத்தமிடுவார்கள். ஒருவர் தமது வலக் கையை மற்றவரின் வலக் கையைப் பிடித்துப் பின்பு தமது நெற்றியில் அல்லது நெஞ்சில் வைப்பர். தாழ்ந்தவர்கள் மேலானவர்களின் கையை முத்தமிட்டார்கள். அசீரிய பட்டையங்களில் கீழ்ப்படிவைக் காட்டுவதற்கு அரசனுடைய பாதங்கள் முத்தமிடப்பட்டன என எழுதப்பட்டுள்ளது. கிறித்து சமயத்தவர்கள் கிறித்துவின் பாதத்தை முத்தமிட்டுத் தமது வணக்கத்தைத் தெரிவிக்கும் வழக்கம் இன்றும் காணப்படுகின்றது. கிரியைகளில் போப்பாண்டவரின் பாதங்கள் முத்தமிடப்பட்டன. கி.பி. 847இல் அது பழைய வழக்கங்களில் ஒன்றாகச் சொல்லப்பட்டுள்ளது. இது உரோமர் அரசரை வழிபடும் வழக்கத் தினின்றும் தோன்றியதெனக் கருப்படுகின்றது. விழுந்து வணங்குவது பயம், மரியாதை என்பவைகளைக் காட்டுவது. கிரேக்கர் தமது கீழ்ப் படிவைக் காட்டுவதற்கு முழந்தாள்களைப் பிடிப்பது வழக்கம். இவைகளின் பண்பாடே பாதங்களை முத்தமிடுவது. கிறித்துவ வேதத்தின் பழைய ஏற் பாட்டில் ‘பாததூளியை நக்குவது’ என வரும் சொற்றொடரின் பொருளும் இதுவே. பழைய இந்தியாவில் மரியாதையைக் காட்டும் சின்னம் இதுவே. மத்திய காலங்களில் ஐரோப்பிய அரசர் ஒருவரை ஒருவர் கன்னங்களில் முத்த மிட்டார்கள். குடிகள் அரசனின் கையை முத்தமிட்டார்கள். இக் காலத்தில் ஆசீர்வாதத்தைக் குறிக்கும் முத்தம் நெற்றியில் கொடுக்கப்படு கின்றது. துருக்கியர் தமது கைகளை முத்தமிட்டுப் பின் தமது கையை நெற்றியில் வைப்பர். புயல் காற்றுக்கு மரியாதையாக அராபியர் தமது கையை முத்தமிடுவர். இவ்வாறு சந்திரனுக்கு மரியாதை செய்வதைப்பற்றி கிறித்துவ வேதத்தின் பழைய ஏற்பாடு கூறுகின்றது. இவ்வாறே திபேத்தியர் சூரியனை வணங்கினர். முத்தம் என்பது கைகுலுக்குவது போன்ற ஒரு மரியாதைக் குறி. பழைய வீரர்கள் (Knights) இக் காலப் போர்வீரர் கைகுலுக்குவதுபோல முத்தமிட்டுக் கொண்டார்கள். சமாதானமான எதிரிகள் முத்தமிட்டுக் தமது சமாதானத்தை அறிவித்தார்கள். முத்தம் கலியாணத்தின் அடையாளமாயு மிருந்தது. பழைய பிரான்சிலும் மத்திய கால பிரான்சிலும் தனது கணவனல் லாத பிற ஆடவனை முத்தமிட்டவள் வியபிசாரக் குற்றம் சாட்டப்பட்டாள். வேல்ஸ் நாட்டில் முக்கியமான சில காலங்களில் மாத்திரம் முத்தம் பயன்படுத்தப்பட்டது. ஒருவனின் மனைவி பிறனொருவனை முத்தமிட் டால் கணவன் அவளை நீக்கிவிடலாம். பழைய கிறித்துவர் முத்தத்தின் பயனைப் பெரிதும் அடைந்தனர். வேல்ஸ் மக்களின் கருத்துக்கு மாறாக இது சமய சம்பந்தமும் உடையதாயிருந்தது. பழைய கிறித்துவ கோயில் களில் ஞான முழுக்கு (Baptize) ஆட்டப்பட்டவர், முழுக்காட்டியவரால் முத்தமிடப்பட்டார். இன்றும் புதிதாக பிசுப் பாண்டவரால் குரு ஆக்கப்படு பவர் முத்தத்தைப் பெறுகின்றனர். கிறித்துவருடைய கிரியைகளுள் சமாதான முத்தம் மிகவும் முக்கியமுடையது. உரோமரும் கிரேக்கரும் வணக்கத்தில் முத்தத்தைப் பயன்படுத்தினார்கள். ஹேர்குலிஸ் விக்கிரகத்தின் தலையும் இதழும் முத்தமிடுவதால் அவ்விக்கிரகம் தேய்ந்து போயிருந்தமையை சிசிரோ (Cicero) என்பவர் குறிப்பிட்டுள்ளார். உரோமச் சக்கரவர்த்திகளை மரியாதை செய்வது அவர் உடையைத் தொட்டுக் கைகளை இதழ்களில் வைப்பது அல்லது உடையை முத்தமிடுவது. இது அவர் பாதத்தை அல்லது முழந் தாளை முத்தமிடுவதாக மாறியுள்ளது. பிரபு ஒருவனின் நிலத்தில் இருக்கும் குடியானவன் பிரபுவின் தொடையில் முத்தமிட்டான். உரோமரும் கிரேக்கரும் கடவுள் விக்கிரகங்களை முத்தமிட்டார்கள். பழைய அராபியரும் இவ்வாறே செய்தனர், வீட்டுக்கு வெளியே செல்லும்போதும், வீட்டினுள்ளே நுழையும்போதும் அவர்கள் இல் உறை தெய்வங்களை முத்தமிட்டார்கள். பீற்றர் ஞானியார் விக்கிரகத்தின் பெரு விரலை உரோமன் கத்தோலிக்கர் முத்தமிட்டார்கள். முசிலிம் மக்கள் மெக்காவிலுள்ள காபா என்னும் கல்லை முத்த மிடுவார்கள். அங்கு சுவரில் ஒரு கறுப்புக்கல் காணப்படுகிறது. முசிலிம் மக்கள் அது சுவர்க்கத்தினின்றும் விழுந்த கல் என நம்பி வருகிறார்கள். அது முன் வெண்மையாயிருந்தது; ஆனால் அதை பாவமுள்ளவர்கள் முத்த மிடுவதால் கறுப்பாகமாறியுள்ளது என்று அவர்கள் நம்புகின்றனர். ஏபிரேயர் கன்றுக்குட்டிகளை முத்தமிட்டார்கள். பால் தெய்வம் முத்தமிடப்பட்டது. எபிரேயர் கோயிலின் நிலத்தை முத்தமிட்டார்கள். புத்தகத்தை முத்தமிடுதல் பழைய காலஞ் சத்தியஞ் செய்யும் முறையாகும். ஐரோப்பியர் நியாயத் தலத்தில் கிறித்துவ வேதத்தின் பழைய ஏற்பாட்டை முத்தமிட்டுச் சத்தியம் செய்தார்கள்.  பெண்களும் சமூகமும் அன்றும் இன்றும் முன்னுரை பெண்கள் ஆடவரை ஒப்ப எல்லா உரிமைகளும் உடையவர்களா யிருத்தல் வேண்டும் என்னும் கிளர்ச்சி எல்லாத் தேசங்களிலும் இன்று நடைபெறுகின்றது. “எண்ணற்றக்கற்று எழுத்தற வாசித்தாலும் பெண் புத்தி என்பதெல்லாம் பெரும் பேதமைத்தே,” என்னும் பழைய கருத்துக்கு இன்று இடமில்லை. பெண்கள் விடுதலை யடைந்து வருகின்றவும், விடுதலை யடையத் திணறிக் கொண்டிருக்கின்றவும் இக் காலத்தில், பெண்களின் நிலை சமூகங்களில் எவ்வாறு இருந்து வந்த தென்பதைச் சரித்திர முறையில் பயில்தல் இன்பம் அளிப்பதாகும். உலகம் முழுமையிலும் பெண்களின் நிலை ஒரே வகையாக இருக்கவில்லை; பற்பலவாறு இருந்து வந்தது. ஆகவே பெண்களைப் பற்றிய வரலாற்றில் சிற்சில மாறுபாடுகள் காணப் படுவதும் இயல்பேயாகும். பெண்கள் ஆடவரின் கீழ் அடிமைப்பட்டு நீண்ட காலம் இருந்தமைக்குக் காரணம் பொருளாதார நிலைமையே. நாம் சில விலங்குகளை வீட்டில் வளர்த்து,அவற்றை உணவுக்காக நம்மையே எதிர் பார்த்திருக்கும்படி பழக்கி யுள்ளோம். அவ்வாறே பெண்களும் பழக்கப்பட்டார்கள். இன்று பொருள் வருவாயினால் தம்மைத்தாமே பாதுகாத்துக் கொள்ளக் கூடிய பெண்கள் விடுதலையடைந்துள்ளார்கள். ஏனையர் பழைய நிலையிலேயே இருந்து வருகின்றனர். பெண்கள் விடுதலை அடைவதற்கேற்ற வழி வகைகளைக் கோலுதற்குப் பெண் களைப் பற்றிய வரலாற்றை அறிந்து கொள்வது இன்றியமையாதது. இச் சிறிய நூல், “பெண்களின் இயற்கை சம்பந்தமானவும், சீர்திருத்த வளர்ச்சி சம்பந்தமானவும் வரலாறு”1 என்னும் ஒரு ஜெர்மன் நூலின் ஒருபகுதியின் சுருங்கிய கருத்தாகும். சென்னை 15.2.1948 ந.சி. கந்தையா பெண்களும் சமூகமும் அன்றும் இன்றும் தோற்றுவாய் வரலாறுகளில் மிகமிக இன்பம் அளிப்பது பெண்ணைப் பற்றிய வரலாறே. ஆதிகாலம் முதல் பெண்களின் நிலை சமூகங்களில் எவ்வாறு இருந்தது? காலந்தோறும் அது எவ்வகை மாற்றங்களை அடைந்தது? ஆண் சமூகத்தினர் பெண் சமூகத்தினரை நடத்திய முறைகள் ஏற்றுக் கொள்ளத்தக்கனவா? ஏற்கத்தகாதனவா? பெண்கள் எவ்வாறு படிப்படியே திருத்தமடைந்து உயர்நிலை அடைந்தார்கள் என்பவை போன்ற பல செய்தி களை இன்றைய ஆடவரும் மகளிரும் அறிந்து கொள்ளவேண்டியது அவசியமாகின்றது. பெண்கள் ஆடவரை ஒத்த விடுதலையுடையவர்களா யிருத்தல் வேண்டும் என்னும் உணர்ச்சி உலகம் முழுமையும் பரவியுள்ளது. அவ்வுணர்ச்சிக்கு எதிர்ப்புக்கள் நாளடைவில் ஓய்ந்து வருகின்றன. மிக முற்காலத்தில் பெண்களின் நிலை மனித சமூகத்தின் சீர்திருத்தத்தைப் பற்றிய வரலாறு பழைய உறை பனிக்காலத்திலிருந்து தொடங்குகின்றது. அக் காலத்தில் மக்கள் விலங்கு களோடு விலங்குகளாக வாழ்ந்தார்கள். அன்று முதல் பெண்ணுக்கும் ஆணுக்குமுள்ள சமூகத் தொடர்பு அறியக்கூடியதாக வுள்ளது. பழைய கற்கால மக்களின் எலும்புகளும், அம்மக்கள் எலும்புகளிலும் கற்களிலும் வரைந்த ஓவியங்களும் காணப்படுகின்றன. இவைகளைத் துணைக்கொண்டு அக்காலப் பெண்களைப்பற்றி முடிவாக எதையும் அறிய முடியாமல் இருக் கின்றது. இதுவரையும் கண்டு பிடிக்கப்பட்ட பழைய கற்கால மக்களின் எலும்புகளின் பெரும்பாலன ஆண்களுடையவே. சில சமயங்களில் மாத்திரம் பெண்கள் ஆண்களோடு வைத்துப் புதைக்கப்பட்டிருக்கின் றார்கள். இதனால், பழைய உறைபனிக் காலத்தில் ஆடவர் பெண்களை உயர்ந்தவராகக் கொள்ளவில்லை என்றும், மிக அருமையாகவே அவர்கள் பெண்களின் உடலைச் சிறப்பாகப் புதைத்தார்கள் என்றும் நாம் உய்த் தறியலாம். ஆடவனும் மகளும் ஒருங்கே புதைக்கப்பட்டுக் கிடந்தால், பெண் ஆணுக்கு ஒரு வகைப்பலியாகக் கொடுக்கப்பட்டவள், அல்லது அவள் அவனுக்கு மறுமையில் பயன்படும்படி மற்றைய பொருள்களைப் போல் இட்டுப் புதைக்கப்பட்டவள் என்றும் நாம் கருதலாம். உறைபனிக்கால மக்கள் உயிரின் அழிவின்மையை நம்பினார்கள். இன்றைய பிற்போக்கான மக்கள் மரணமென்பது உயிரின் மீண்டு வராத பயணம் என நினைப்பது போலவே அவர்களும் எண்ணிணார்கள். இறந்தவருடைய மறு உலகப் பயணத்துக்குத் துணையாக அவர் விரும்பிப் பயன்படுத்திய பொருள்கள் கொடுக்கப்பட்டன, அவை அணிகலன்கள், கல்லாயுதங்கள், அடிமைகள், பெண்கள் போல்வன. இறந்த கணவனோடு மனைவியையும் கொன்று புதைத்தல் சமீப காலத்துக்கு முன் இந்தியாவிற்போலவே ஜெர்மனியிலும் மனைவி, இறந்த கணவனோடு உடன் வைத்துப் புதைக்கப்பட்டாள். 1திராய் மக்கள் கணவனின் மிக விருப்பமான மனைவியைக் கொன்று அவனோடு புதைத்தார்கள். ஆப்பிரிக்க பசுடோஸ்2 மக்கள் கணவனைப் புதைக்கு மிடத்திலே மனைவியைத் தலைமீது தடியால் அடித்துக் கொன்றார்கள். தென்கடலிலுள்ள பியூஜித் தீவில் மனைவி திருகிக் கொல்லப்பட்டுக் கணவனோடு புதைக்கப்பட்டாள். இந் நிகழ்ச்சிகளால் முற்காலச் சமாதிகளில் ஆணும் பெண்ணும் புதைக்கப்பட்டிருக்கக் கண்டால் அவர்கள் நோயி னால் ஒரே காலத்தில் இறக்கவில்லையென்றும் மனைவி கொல்லப்பட்டுக் கணவனோடு புதைக்கப்பட்டாள் என்றும் நாம் உய்த்தறியலாம். உறை பனிக்கால மனிதன் மாற்றிக்கொள்ளவோ, கொன்று விடவோ கூடிய பொருளாக பெண்ணைக் கருதினான். பெண் ஆணின் உடைமை பழைய மக்களின் நிலையை ஆராய்ந்து பார்க்கும்போது பெண் களின் நிலை மிகத் தாழ்வாக இருந்ததெனப் புலப்படுகின்றது. புதிய கற்கால ஓவியங்கள், ஆடவன் தனது இச்சைகளை நிறைவேற்றுவதற்கு ஏற்ற பொருளாகப் பெண்ணைக் கருதினான் என்று தெரிவிக்கின்றன. இது முற்கால மனிதன் செய்த சிற்பங்களில் பெண் உறுப்புக்களையே சிறப்பாகத் தோன்றும்படி அமைந்திருப்பதைக் கொண்டு அறியப்படுகின்றது. ஆண் பெண் சேர்க்கையினால் கரு உண்டாகின்றதென மனிதன் அறிந்தது பிற்காலத்திலேயேயாகும். கரு உண்டாவதற்கும் குழந்தை பிறப்ப தற்கும் இடையேயுள்ள காலம் நீண்டதாயிருந்தமையின் அவன் இதைப் பற்றி அறியவில்லை. குறுகிய காலத்தில் குட்டியீனும் விலங்குகளை அக் காலத்தில் வளர்க்காமையால் அவன் இத்தொடர்பை அறிய முடியாமல் இருந்தது. இவ்வியற்கை விதியை அறியாத மக்கள் இன்றும் காணப்படு கின்றனர். ஆஸ்திரேலிய பழங்குடிகள் தம் முன்னோரின் ஆவிகள் விலங்கு வடிவில் பெண்ணின் வயிற்றில் நுழைவதால் கரு உண்டாகின்றதெனக் கருதினார்கள். குழந்தை, வயிற்றுனுள் அசையத்தொடங்கும் வரையில் அவள் தனது நிலையை அறிவதில்லை. இவ்வகை நம்பிக்கை நாகரிக மக்களிடையும், கிறித்துவ மதக்கொள்கையிலும் காணப்படுகின்றது. தாய்க்கும் குழந்தைக்குமுள்ள இவ்வகை உடல் சம்பந்தத்தை ஊன்றிக் கவனிப்பதால் கரு உண்டாவதன் வகை அறியப்பட்டது. இதனால் தாயாட்சி முறையான நாகரிகம் பழைய காலத்தில் உண்டாவதாயிற்று. பெண்ணுக்குக் கடமைகள் இருந்தன; உரிமைகள் இருக்கவில்லை மனிதன் கீழ் நிலையில் இருந்த காலத்தில், பெண் ஒருவனால் விலை கொடுத்து வாங்கப்பட்ட வீட்டு விலங்கு அல்லது பொருள்போலக் கருதப் பட்டாள். அவள் புரிவதற்குக் கடமைகள் இருந்தன; உரிமைகள் இருக்க வில்லை. ஆடவன் தலைவனாயிருந்தான்; பெண் வேலை செய்பவளாயும் பிள்ளைகளைப் பெறுகின்றவளாயுமிருந்தாள். ஆஸ்திரேலிய பழங்குடி களுள் ஒருவன், பெண்ணைத் தான் விரும்பிய எவனுக்கேனும் கொடுக் கலாம். அவ்வாறு கொடுத்தலை விரும்பாவிட்டால் அவள் அடிக்கப்படு வாள்; அவ்வாறு அடிப்பதால் ஆபத்து விளைக்கும் காயங்கள் உண்டாவது முண்டு. இளம் வயதுடைய பெண் தளர்ந்த கிழவனுக்குக் கொடுக்கப்படினும் அவள் மீளுதல் முடியாது. அவள் அவனை விட்டு ஓடிச்சென்றால் அவள் மறுபடியும் ஓடமுடியாதபடி கால்கள் மர ஈட்டிகளால் குத்தப்பட்டன. பெண் சேர்க்கை தொடர்பான கருமங்கள் மிருகத்தன்மையாக நடைபெற்றன. சமூகம் அல்லது கூட்டத்திலுள்ள முதியவர்களே அது தொடர்பான முக்கிய பகுதியைக் கையாண்டனர். வயதானவர்கள் தமது முதிய மனைவியை வாலிபருக்குக் கொடுத்த போதும் அவ்வாலிபர்களுக்கு பெண் கிடைப்பது அருமையாகவிருந்தது. உற்சாகம் குன்றிய பெண்கள் மிகவும் துன்பத்துக் குள்ளானார்கள். இளம் பெண்ணை, அவளுக்கு முன்னமே மனைவியராயி ருக்கும் பெண்கள் கொடுமைப்படுத்தினர். அவள் தடிகளாலும் தோல்களா லும் குடிசை கட்டவேண்டும்; இராக் காலத்தில் குடிசைக்குமுன் நெருப்பு எரித்தற்கு விறகு பொறுக்க வேண்டும்; சிறிய விலங்குகளை வேட்டையாட வேண்டும்; கீரை வகைகளைச் சேகரிக்க வேண்டும்; கூரிய பாறைகளால் கிழங்குகளை அகழ்ந்து எடுக்கவேண்டும்; திரிகைக்கற்களில் (எந்திரக்கல்) தானியங்களை அரைக்க வேண்டும்; அரைத்த மாவைக் கொண்டு வந்து அப்பம் சுட வேண்டும். இவள் இவைகளைச் செய்யும்போது கணவன் வேட்டையாடு கின்றான்; தான் வேட்டையாடிப் பெற்ற விலங்குகளின் இறைச்சியை மற்றைய வேட்டையாடுவாரோடு பங்கு போட்டு உண்கின்றான்; உண்டபின் வீட்டிலுள்ள உணவின் தனது பாகத்தைப் பெற விரைந்து செல்கின்றான். அலைந்து திரியும் காலங்களில் ஆடவன் கையில் ஒரு ஈட்டியை மாத்திரம் கொண்டு செல்கின்றான். குடும்பத்துக்குள்ள மற்றைய எல்லாப் பொருள் களும் மனைவியரின் தோள்கள் மீது கட்டிச் சுமத்தப்படுகின்றன. நாலு அல்லது ஐந்து சுமைகளை ஒருத்தி கொண்டு செல்வது பொது நிகழ்ச்சி. குழந்தை அவள் தோள்மீது ஏறியிருந்தது அவள் சடையைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும். சில சமயங்களில் குழந்தையைத் தோல் பையிலிட்டுத் தோளில் தொங்கவிடுவாள். குழந்தைகளைக் கொல்லுதல் ஆஸ்திரேலியரின் அலைந்து திரியும் வாழ்க்கைக்குக் கூட்டமான குழந்தைகள் தடையாயுள்ளன. ஆகவே குழந்தைகள் கொல்லப்பட்டன. வெள்ளையரின் சட்டம் நுழைய முடியாத இடங்களில் இன்றும் இவ் வழக்கம் நிலவுகின்றது. பிறந்தவுடன் குழந்தையைக் கொன்றுவிட்டு இரண்டு நாய்க்குட்டிகளைப் பால் குடிக்கும்படி தாயின் மார்புகளில் விடுவது முண்டு. இதனால் அவர்களுக்குக் குழந்தையிலும் பார்க்க நாய்கள் எவ்வளவு அருமையுடையன என்று தெரிகின்றது. பெண் வேலை புரியும் விலங்கு திருந்தாத மக்கள் பெண்களை விலங்குகள் போல் நடத்தினார்கள். சமோயெத்திய1 பெண்கள் மிகவும் தாழ்வாக நடத்தப்பட்டார்கள். அவர் களிடையே பெண்களே எல்லா வீட்டு வேலைகளையும் செய்ய வேண்டும். குடிசைகளையும் அவர்களே கட்ட வேண்டும்; அவைகளைப் பிடுங்க வேண்டியவர்களும் அவர்களே. அவர்களே சறுக்கி வண்டிகளைப் பூட்ட வும் கழற்றவும் வேண்டும்; அவற்றோடு தமது கணவருக்கு அடங்கி அடிமைபோல் வேலை செய்யவும் வேண்டும். மாலை நேரத்தில் உல்லாச மாகப் பொழுதுபோக்கும் நேரத்திலல்லாமல் ஆடவர் பெண்களோடு தயவாகப் பேசமாட்டார்கள். பெண்கள் அசுத்தமானவர்கள் எனவும் கருதப் பட்டார்கள். குடிசை கட்டி முடிந்தபின், அதனைக் கட்டிய அவளும் அவள் தொட்ட பொருள்களும் புகை காட்டிச் சுத்தம் செய்யப்படுதல் வேண்டும். சறுக்கி வண்டியில் பூட்டியிருக்கும் துவ மானை (reindeer) அவிழ்க்க வேண்டுமாயின் அவள் வண்டியின் கீழே தவழ்ந்து சென்று அவிழ்க்க வேண்டும். குடிசையின் ஒரு புறத்தில் கம்பு ஒன்று நடப்பட்டிருக்கும். அதைத் தாண்டிப் பெண்கள் செல்லுதல் ஆகாது. வட அமெரிக்கப் புல்வெளிகளில் வாழும் மக்களிடையே, பெண்கள், மரந்தறிப்பவர்கள் தண்ணீர் சுமப்பவர்கள் என்று சொல்லப்படுவர். அம் மக்களிடையே வேலை செய்யும் பெண்கள் அடிமைகள் எனவே கருதப் படுவர். அவர்கள் பத்து அல்லது பன்னிரண்டு வயது அடைந்ததும், அவர் களின் விருப்பத்தைக் கேளாமலே தந்தை அவர்களை விற்றுவிடுவான். பெண்கள் பலவகையான வீட்டுக் கடமைகளையும் சமையலையும் செய்ய வேண்டும். மான் தோல் எருமைத் தோல்களைக் கூடாரங்களுக்குப் பயன் படுத்துவதற்கும், வெள்ளையருக்கு விற்பதற்கும், உடுப்பதற்கும் பதனிட வேண்டும். அவர்களே கூடாரத்தையும், குதிரைகள் இழுத்துச் செல்லும் சறுக்கி வண்டியையும் கழற்றி வைக்க வேண்டும். சில சமயங்களில் பெரிய துணிச் சுமைகளை முதுகிலும், குழந்தைகளை மார்பிலும் அல்லது தோளிலே தொங்கவிடப்பட்ட தொட்டிலிலும் இட்டுச் சுமந்து கொண்டு குதிரை களுக்குப் பின்னால் பல நாட்கள் நடந்து செல்ல வேண்டும். இராக்காலத்தில் பயணம் நின்றவுடன் அவள் தான் களையாறுவதைக் குறித்து நினையாது சமைக்க வேண்டும். பெண்கள் ஆண்களுடன் இருந்து ஒருபோதும் உணவு உண்ணமாட்டார்கள். ஆடவரின் கூத்து, களியாட்டங்களில் பெண்கள் பங்கு பெறுவதில்லை. ஆப்பிரிக்க மக்களிடையே பெண்கள் எல்லா வகையிலும் அடிமை களாகக் கருதப்படுகிறார்கள். தட்டுமுட்டு அல்லது சுமை தூக்கும் விலங்கே பெண் ஆவாள். அவள் இளைத்துவிட்டால் அவள் இடத்துக்கு இன்னொருத்தி கொண்டுவரப்படுகிறாள். அவளை வாங்குமிடத்து ஒரு ஆட்டை விலை பேசி வாங்குவது போலவே அவள் வாங்கப்படுகிறாள். கணவன் மனை வியைத் துரத்திவிட விரும்பினால், அவன் அவள் கையில் வைக்கோலைக் கொடுக்கிறான்; சமாதானமாகப் போகவில்லையானால் அவள் வலுக்கட்டாய மாகத் துரத்தப்படுகிறாள். குரங்குகளிடையே ஆண் பெண்களின் வாழ்க்கை மிக முற்காலத்தில் பெண்களின் நிலை மிகத் தாழ்வாகவே இருந்தது. பல ஆயிரம் ஆண்டுகளாக மக்கள் விலங்குக் கூட்டங்கள் போலவே வாழ்ந்தார்கள். உறைபனிக் காலத்தின் பின் மனிதன் விலங்கு நிலையி லிருந்து மேலான படிக்கு உயர்ந்தான். விலங்குகளுள் உணவுக்காகப் போராடவல்ல உயிரே நிலைபெற்றது. அவ்வகையினதே நன்றாக உண்டு நீண்டகாலம் வாழும். ஒரு கூட்டத்துக்குத் தலைமையாக இருப்பது வயதான மூத்த ஆண். இந் நிலைமையில் அதிகாரத்தால் உயர்ந்த மூத்த ஆணுக்கே எல்லாப் பெண்களிடத்தும் உரிமையுண்டு. விலங்கு நூலார் காடுகளில் வாழும் கொரிலா என்னும் மேலினக் குரங்குகளின் சமூக வாழ்க்கையைப் பற்றிக் கவனித்துள்ளார்கள். உணவு தேடச் செல்லும்போது முன்னால் தலைமை வகிக்கும் குரங்கும், அதன் பின்னே இளங்குரங்குகளும், அவைகளின் பின் பெண் குரங்குகளும், இறுதியில் வயது முதிர்ந்த குரங்குகளும் செல்கின்றன. கூட்டத்தின் தலைவனாகிய குரங்கு மெல்லெனச் செல்கின்றது; இடையிடையே நிமிர்ந்து சுற்றுப் புறங்களைப் பார்க்கின்றது. ஆபத்து ஒன்றும் காணப்படாவிடில் அது மரத்தடியில் குந்தியிருக்கும். பெண் குரங்குகள் உணவு தேடி வந்து அதன் பாதங்களில் வைக்கும். இடையிடையே இரண்டு பெண் குரங்குகள் வந்து அதன் பக்கங்களில் இருக்கும். அப்பொழுது அக் குரங்குத் தலைவன் அவைகளின் தோள்கள் மீது கையைப் போட்டு அவைகளோடு கேளிக்கை செய்யும். அது செய்யும் ஓசையைக் கவனித்துப் பார்த்தால் அது சிரிக்கின்ற தெனக் கூறலாம். ஆபத்தை அறிந்தால் அது உள்ளங்கையை விரித்துக் கன்னங்களில் அடித்துக் கொண்டு உரக்கச் சத்தமிடும். உடனே குரங்குக் கூட்டம் ஓடி மறைந்துவிடும். தலைவன் குரங்கு எதிரியைக் கண்டவுடன் கையைப் பொத்தி மார்பில் அறைந்து எதிரிமீது மூர்க்கமாகப் பாய்கின்றது. ஜெர்மன் வேட்டைக்காரன் ஒருவன் குரங்குக் கூட்டம் ஒன்றைப் பார்த்தான். குட்டிகளும் பெண் குரங்குகளும் ஆண் குரங்குகளுக்கு உணவு தேடிக்கொண்டிருந்தன. அவைகளுள் ஒன்று சுறுசுறுப்பில்லா திருந்தபோதும், அதிக உணவை உண்டபோதும் ஆண் அதன் காதுகளில் அறைந்து உறுமிச் சத்தமிட்டது. கொரிலாக் குரங்குகள் இடம்விட்டு இடம் செல்லும்போது தாங்களும் தங்கள் குட்டிகளும் தங்குவதற்குப் பெண் குரங்குகளே மரத்தில் கூடு கட்டிக் கொள்கின்றன. சில சமயங்களில் அவை கூடுகளை நிலத்தில் அல்லது நேரிய கால் உடைய மரத்தின் பத்து அல்லது பதினெட்டடடி உயரமுள்ள கிளைகளில் கட்டுகின்றன. ஆண் கொரிலா தனது கூட்டத்தைத் தாக்கவரும் எதிரியைத் தாக்குவதற்கு ஆயத்தமாக மர அடியில் கிடக்கும். முதுமை ஏறஏறத் தலைவனின் பலம் குறைகின்றது. இன்னொரு ஆண் அதன் இடத்தை ஏற்க விரும்புகின்றது. பின்பு இரு குரங்குகளுக்கு மிடையில் கடும்போர் மூள்கின்றது. வெற்றியடைந்ததே குட்டிகளுக்கும் பெண் குரங்களுக்கும் தலைவன் ஆகின்றது. தோல்வியடைந்தது காடு களில் தனிமையாக வாழ்கின்றது. ஆண் பெண்களின் கடமைகளில் வேறுபாடு கொரிலாக்களிடையே காணப்பட்ட இவ்வகை வாழ்க்கையை நாம் இன்றும் மிகமிகத் தாழ்நிலையிலுள்ள மக்களிடையும் காணலாம். மக்களின் உடலமைப்பும் பற்களும் தாவரம், ஊன் என்னும் இருவகை உணவுகளை யும் கொள்வதற்கேற்றவை. ஆகவே மிக முற்காலத்தில் உணவு தேடும் வேலைகளில் ஆண் பெண் என்னும் இருபாலினருக்குமிடையில் பிரிவு உண்டாயிருத்தல் வேண்டும். ஆண்கள் வேட்டை ஆடிப்பெற்ற ஊன் உணவையும், பெண்கள், சிறுவர், வயது முதிர்ந்த வேட்டையாடமாட்டாதவர் என்போர் பழங்கள் கிழங்குகள் போன்றவைகளையும் தேடினார்கள். ஆடவர் தாம் வேட்டை யாடிய உணவைத் தாமே வேட்டையாடிய இடத்தில் பச்சையாக உண் டார்கள்; உறைவிடத்துக்குச் சென்று பெண்கள் சேகரித்த தாவர உணவின் பங்கையும் பெற்றனர். இறைச்சியைப் பக்குவஞ் செய்து வைப்பது எப்படி என்று அறியாத பழங்காலத்தில் ஊன் உணவு அதிகம் கிடைத்தமையால் ஆண்களும் பெண்களும் உணவுப் பொருள்களை மாற்றிக் கொண்டார்கள். இது ஆண் பெண் என்னும் இருபாலாரும் ஒருவர் மீது ஒருவர் கொண்ட விருப்பினாலும், இரக்கம், தருமம் என்னும் உணர்ச்சிகளினாலும் நடைபெற்றதாகலாம். ஆடவனுக்குத் தாவர உணவு வேண்டியிருந்தது. இதனை அவன் பெண்ணிடமிருந்து பெற்றான். இதனால் ஆடவருக்கும் மகளிருக்குமிடை யில் ஒருவகைத் தொடர்பு உண்டாயிற்று. இத் தொடர்பு பெண்ணுக்கு வாய்ப் புடையதாயிருந்தது. மனிதன் நெருப்பை உண்டாக்க அறிந்து அதனை அணைந்து போகாதபடி காப்பாற்ற வேண்டிய போது இவ்வாய்ப்பு மேலும் பலமடைந்தது. நெருப்பை அறிந்தபின் நேர்ந்த மாற்றம் உறைபனிக் கால மனிதன் குளிர்காயவும், அக் காலத்தில் நடமாடிய பெரிய காட்டு விலங்குகள் தம்மை தாக்குவதினின்று பிழைக்கவும், இறைச்சியைச் சுடவும் நெருப்பைப் பயன்படுத்தினான். முற்காலத்தில் நெருப்பை அணையாதபடி பாதுகாத்தல் பெண்ணின் கடமையாக விருந்தது. வேட்டை ஆடிச் செல்லும் ஆடவன் நெருப்பையும் உடன் கொண்டு செல்லுதல் ஆபத்தாயும், முடியாததாயும் இருந்தது. பெண்கள் நெருப்பை ஓரிடத்தில் வைத்துக்காக்க வேண்டியிருந்தமையின் உறை விடங்களை அடிக்கடி மாற்றுதல் முடியாதிருந்தது. முற்காலத்தில் ஆடவன் பெண்ணிடத்தில் கொண்ட கவர்ச்சியினால் உறைவிடத்துக்குச் சென்றான்; பின்பு இடையிடையே வந்து போனான். முற்காலத்தில் குறிக்கப்பட்ட சில காலத்திலேயே ஆடவன் பெண்ணின் தோழமையுடையவனாயிருந்தான். இப்பொழுது அவன் நெருப்பின் பொருட்டு அவளிடம் எப்பொழுதும் சென்றான். அவன் நெருப்பின் பொருட்டு அவளிடம் தங்கியிருந்தான். அவன் தான் வேட்டையாடிப் பெற்ற ஊன் உணவைச் சமைத்து உண்ணும் பொருட்டு உறைவிடத்துக்கு வந்தான். தான் செய்யும் வேலைக்காக உணவில் ஒரு பங்கைக் கேட்கக் கூடிய உயர்நிலையைப் பெண் அடைந்தாள். இது பெண்ணின் நிலை மையைச் சிறிது உயர்த்திற்று. பழைய உரோமில் பரிசுத்த நெருப்பை அணை யாமல் காப்பதற்குக் கன்னிப் பெண்கள் நியமிக்கப்பட்டார்கள். நெருப்பை உண்டாக்க அறிந்தபின் நேர்ந்த மாற்றம் மனிதன் வேண்டியபோது நெருப்பை உண்டாக்க அறிந்தான். அப் பொழுது அவன் மறுபடியும் அலைந்து திரிபவன் ஆயினான். இப்பொழுது பெண் சமைக்கும் பானை சட்டிகளைச் செய்ய அறிந்தாள். அதனால் உணவு முறையில் சில திருத்தம் உண்டாயிற்று. பெண்கள் செய்யக் கண்டுபிடித்த பானை சட்டியே ஜேம்ஸ் வாட் நீராவி இயந்திரம் செய்வதற்கும் ஏதுவா யிருந்தது. பானை சட்டி செய்ய அறிந்திருந்தமையால் தான் முற்காலப் பெண்கள் ஆடவரைப் பணியச் செய்தார்கள். பெண்கள் தமது ஊக்கத்தைப் பல வழிகளில் செலுத்தினார்கள். பெண்களே முதலில் வாணிகத்தையும், கைத்தொழில்களையும் புரிந்து தமது அதிகாரத்தைப் பரப்பினார்கள். பெண்களின் தொழிலை ஆண்கள் கைப்பற்றுதல் பழங்களைப் பொறுக்குவதும், கிழங்குகளை அகழ்வதும், தானிய வகைகளை ஒழுங்காக விளைவிப்பதற்கு வழி காட்டின. இதிலிருந்து ஒழுங் கான தாவர உணவு பெறுவதற்கு ஏதுவாகிய முற்கால வேளாண்மை தொடங் கிற்று. இன்றும் கீழ்நிலையிலுள்ள சமூகங்களில் பெண்கள் பாறையினாலும், வளைவு தடியினாலும் நிலத்தைக் கிளறிப் பயிடுகின்றார்கள். ஆதிகாலம் முதல் பெண்களே நெசவு செய்தல், பாய், கூடை முடைதல் முதலிய வேலை களையும் செய்து வந்தார்கள். கம்பளி கொடுக்கும் விலங்குகள் வளர்க்கப் படாத காலத்தில் தாவர வகைகளிலிருந்து நார் எடுத்து ஆடைகள் நெய்யப்பட்டன. சுவிற்சர்லாந்து வாவிகளில் உறைந்த மக்கள் (கி.மு.5,000) சணலினாலும் கம்பளியினாலும் செய்து உடுத்த துணிகளின் துண்டுகள் கிடைத்துள்ளன. பழைய மக்களுள் ஆண்களும் பெண்களும் ஓர் ஓர் இடங்களில் ஆடை நெய்தார்கள் என அறிகின்றோம். பற்பல காரணங்களி னால் ஆடவர் பெண்களுக்குரிய வேலைகளைத் தாம் கைப்பற்றிக் கொண்டு, அவர்கள் மீது ஆண்களுக்குரியனவும், மிகக் கீழ்மையானவும் உள்ள வேலைகளைச் சுமத்தினார்கள் எனத் தெரிகின்றது. ஜெர்மனியில், பானை சட்டி வனைவோரும் ஆடை நெய்வோரும் மத்திய காலம் வரை யில் தாழ்ந்தவர்களாகக் கொள்ளப்பட்டனர். இதற்குக் காரணம் அத் தொழில்கள் பெண்களுக்கு உரியனவாயிருந்தனவேயாகும். தையல் வேலை செய்வோர் பெண் தன்மையுள்ளவர்களாகவும், பரிகசிக்கத்தக்கவர் களாகவும் நீண்ட காலம் கருதப்படலாயினர். தாய் அதிகாரத்தின் தொடக்கம் முற்கால மனிதன் ஆண் பெண் சேர்க்கையினால் குழந்தை பிறக்கின்றது என அறியத் தொடங்கிய பின் தாயாட்சி முறையான சமூக வளர்ச்சி உண்டாயிற்று. முற்காலத்தில் கூட்டு மணங்கள் சமூகங்களுக்குள் இருந்தன. இதனால் தந்தைக்கும் பிள்ளைக்கும் உறவு உண்டாகவில்லை. தாய்க்கும் பிள்ளைகளுக்கும் மாத்திரம் உண்மையான இரத்த உறவு உண்டாகி யிருந்தது. தாய் குழந்தைக்கு நீண்டகாலம் பால் ஊட்டி வளர்த்தாள். அதனால் அவளுக்கும் பிள்ளைக்கும் நீண்ட தொடர்பு உண்டாயிருந்தது. நாகரிக மடைந்த மக்களிடையே உள்ள தாயிலும் பார்க்கப் பிற்போக்கான மக்க ளிடையே உள்ள தாய், தன் குழந்தைக்கு நீண்ட காலம் பால் ஊட்டி வளர்க் கிறாள். சாதாரண காலம் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள், ஆஸ்திரேலிய தாய் ஆறு ஆண்டுகள் குழந்தைக்குப் பாலூட்டி வளர்க்கிறாள். வட அமெரிக்க பெண்கள் பன்னிரண்டு ஆண்டுகள் வரையும் குழந்தைக்குப் பால் கொடுக்கிறார்கள். இவ்வாறு தாய்க்கும் குழந்தைக்கும் உண்டான தொடர்பினால் தாயன்பு அதிகம் வளர்ந்தது. இவ்வாறு அமைந்த சமூகத்தில் தந்தை அன்னிய னாகக் கருதப்பட்டான்; இரத்த உறவு உடையவனாகக் கருதப்படவில்லை. பெண்ணுக்கு அதிகாரம் உண்டாயிற்று. வளர்ந்த புதல்வர் குடும்பத்தைப் பாதுகாப்போராகவிருந்தனர்; புதல்வியர் பெண்களுக்குரிய கடமைகளில் உதவி புரிவோராயிருந்தனர். இந் நிலைமையினால் தோன்றிய தாயாட்சியே ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆசியா முதலிய நாடுகளின் பழங்குடி களிடையே நிலைத்துள்ளன. பழைய நாகரிக மக்களிடையே தாயாட்சி முறை இருந்தது. பாபிலோனிய ஆவணங்களில் “தாயும் தந்தையும்”, “மனைவியும் கணவனும்” என்பன போலப் பெண்ணின் பெயரே முதலிற் கூறப்படுகின்றது. மனிதன் நாகரிகமடைந்திருந்த காலத்திலும் தாயாட்சி முறை அசைக்க முடியாத படி வலிமையடைந்திருந்ததெனத் தெரிகின்றது. பாபிலோனியப் பெண்கள் ஆண்களை ஒத்த உரிமை பெற்றிருந்தார்கள் என்பதைப் பட்டையங்கள் வழியாக அறிகின்றோம். ஹமுராபி காலத்தில் (கி.மு.2,250) பெண்கள் கோவில்களில் குருமாராகவிருந்தார்கள். ஆவணங்களில் பெண்கள் சாட்சிகளாகவும் கையெழுத்திட்டார்கள். எகிப்திய ஆவணங்களில் இன்ன தாயின் மகன் என்றே பெரும் பாலும் காணப்படுகின்றது. தந்தையின் பெயர் அருமையாக ஓரோரிடத்திற் காணப்படுகின்றது. கிரேக்கர் எகிப்தை வெற்றி கொண்ட காலத்தில் எகிப்தியர் தாய் வழியாலேயே அறியப்பட்டார்கள். பின்பு சிறிது சிறியதாகத் தாயின் பெயருக்குப் பதில் தந்தையின் பெயர் இடம் பெற்றது. பழைய ஓவிய எழுத்துக்களில் தாய், வீட்டுக்காரி எனக் குறிப்பிடப்பட்டுள்ளாள்.” அருமை யான தலைவி” அல்லது “உனது கணவனின் அன்புக்குரிய இல்லாள்” என்று கணவன் அவளை அழைத்தான். “எகிப்தில் பெண்கள் கடைத்தெரு வுக்குப் போய் கொள்வனவு விற்பனவுகளைச் செய்கிறார்கள். ஆண்கள் வீட்டிலிருந்து துணி நெய்கிறார்கள். புதல்வருக்குப் பெற்றோரை ஆதரிக்க வேண்டிய கடமை இல்லை; புதல்விக்கே அக் கடமை உண்டு” என எரதோதசு என்னும் பழைய கிரேக்க வரலாற்றாசிரியர் கூறியுள்ளார். ஏரதோதசுக்கு (கி.மு. 480) நானூறு ஆண்டுகள் பின் வாழ்ந்த தயதோரஸ் இக் கூற்றினை வலியுறுத்தி, அரசனிலும் பார்க்க அரசிக்குக் கூடிய அதிகாரம் உண்டு என்று குறிப்பிட்டுள்ளார். திருமண உடன்படிக்கையில் கணவன் மனைவிக்குக் கீழ்ப்படிவதாக வாக்களித்தான் என்றும் அவர் குறிப்பிட்டார். எகிப்திய பெண்களின் சொத்து அவர்கள் அதிகாரத்துக்குட் பட்டு இருந்தது. அவர்கள் அதனைத் தமது எண்ணப்படி எவ்வாறு வேண்டினும் செய்து கொள்ளலாம். எகிப்திலே அரசர் முதல் எல்லா மக்களிடையும் சகோதரன் சகோதரியை மணக்கும் வழக்கம் தோன்றி வளர்ந்திருந்தது. இரண்டாம் தாலமி (கி.மு.285-247) என்னும் எகிப்திய அரசன் பிலாடல்போஸ் எனத் தனக்கு மறு பெயர் வைத்துக் கொண்டான். பிலாடல்போஸ் என்பதற்கு சகோதரியைக் காதலிக்கின்றவன் என்பது பொருள். பழைய வழக்கத்தைப் பின்பற்றி அவன் ஆர்சினோ என்னும் தனது சகோதரியை மணந்தான். எகிப்து பல சிற்றரசர் நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு சிறிய நாட்டையும் ஒவ்வொரு அரசன் ஆண்டான். அவ்வரசனுக்கு ஆட்சி யுரிமை தந்தை வழியாலன்றித் தாய் வழியாகவே வந்தது. அது இன்று திருவிதாங்கூரில் நடைமுறையிலுள்ள மருமக்கள் தாயத்தை ஒத்தது. எதியோப்பியரின் அரசுரிமை அரசனின் பிள்ளைகளை அடையாமல் அவனுடைய சகோதரியின் பிள்ளைகளை அடைந்தது என்று நிக்கோலஸ் என்னும் பழைய வரலாற்றாசிரியர் கூறியுள்ளார். சரித்திரகாலம் வரையில் தாயாட்சி எம்மட்டும் சமூகங்களில் வலிமை பெற்றிருந்ததென்பதை விளக்குவதற்குத் தாயாட்சியைக் குறித்துக் கூறியுள்ளோம். வரவர அதிகாரத்தால் வளர்ந்து வந்த ஆடவர் பெண்களை நியாயமாக நடத்தத் தவறினார்கள் எனக் கூறமுடியாது. ஆடவன் பல பெண்களை மணத்தல் எகிப்திலே செல்வந்தனாயுள்ளவன் தான் விரும்பிய அத்தனை பெண்களையும் வைப்பாட்டிகளாக வைத்திருந்தான். ஆனால் அவனுடைய முறையான மனைவியே வீட்டின் தலைவி எனப்பட்டாள். அரண்மனை களில் ‘பெண்களின் வீடு’ எனப்பட்ட தனிமையான ஒரு இடம் இருந்தது. பைபிலஸ் ஏடு ஒன்றில், வைப்பாட்டிகளின் மேற்கொண்ட காதலால் தன் மீது பற்று ஒழிந்த அரசனைப் பற்றிக் கூறிய இராணி யொருத்தியின் வாக்கியங்கள் காணப்படுகின்றன. வியபிசாரக் குற்றமும் தண்டனையும் பெண்ணை விலைக்கு வாங்கி அல்லது திருடிச் சொந்தமாக்கிய போதும் வியபிசாரம் மனிதனுக்குக் கௌரவக் குறைவானது என்று கொள்ளப் பட்டது. எல்லா நாடுகளிலும் கீழ் நிலையிலுள்ள மக்களிடையே பெண்கள் வியபிசாரத்திற்குத் தண்டிக்கப்படுகிறார்கள்; ஆண் சிறிதேனும் தண்டனை அடைவதில்லை. பெண்ணை அவளுடைய பெற்றோரிடம் போக்கி அவர்களிடமிருந்து பெண்ணுக்கு விலையாகக் கொடுத்த பொருளைப் பெற்றுக் கொள்ளுதல், பெண்ணின் அவயவங்களை வெட்டுதல், அல்லது அவளைக் கொலை செய்தல், போல்வன வியபிசாரக் குற்றத்துக்குப் பெண் அடைந்த தண்டனைகளாகும். சில சமயங்களில் வியபிசாரக் குற்றஞ் சாட்டப்பட்டவன் நட்ட ஈடு கொடுக்க வேண்டியிருந்தது; சில சமயம் கொலைத் தண்டனையும் பெற்றான். எகிப்தில் வியபிசாரக் குற்றத்துக்குட் பட்ட பெண்களின் மூக்கு அறுக்கப்பட்டது. அபாசி (Apache) என்னும் அமெரிக்கரிடையே இவ்வழக்கு இன்றும் நடைபெறுகின்றது. மூக்கு அறுக்கப்படாவிட்டால் அவள் உயிரோடு புதைக்கப்பட்டாள். குற்றத்துக் குள்ளானவன் அடிக்கப்பட்டான். பெண்கள் ஆண்களைக் கவருதற்குத் தம்மை அலங்கரித்தல் எகிப்திய பெண்கள் ஆடவரை வசீகரப்படுத்துவதற்குத் தம்மை எவ்வளவு அலங்கரிக்க முடியுமோ அவ்வளவுக்கு அலங்கரித்துக் கொண்டார்கள். அவர்கள் பலவகை மேனிமினுக்குப் பொருள்கள், மணப் பொருள்கள், சாயங்கள், உடை அலங்காரங்கள் போன்றவைகளைப் பயன் படுத்தினர். தாயாட்சி வலியடைந்திருந்தபோதும் ஆடவன் எவ்வாறு சமூகத்தில் தன்னை உயர்வாக வைக்க முடிந்தது என்பதை இவை விளக்குகின்றன. பதாஹோதெப் (Path-hotep கி.மு.3,350) என்னும் அரசன் பெண்களை ஆடவருக்குப் பின்வருமாறு புத்திமதி கூறியுள்ளான். “நீ புத்திமானாயின் உனது மனைவியிடம் அன்பாயிரு; அவளுக்கு நல்ல உணவு கொடு; அவளை அழகாக உடுக்கும் படி செய்; அவளுக்கு மணப் பொருள்களை வாங்கிக் கொடு. இன்னும் அவளுக்கு மகிழ்ச்சி கொடுக்கக் கூடியவைகளை நீ இருக்குமட்டும் செய். அவள் தன்னையுடையவனின் தகுதிக்கேற்றவளாய் வாழ வேண்டும். நீ அவளிடம் கொடுமையாக நடவாதே. முரட்டுத்தனமான அதிகாரத்திலும் பார்க்க அன்பு நன்மைகளைச் செய்கின்றது. முகக்கண்ணாடியில் தன்னைப் பார்க்கும்போது அவள் மகிழ்ச்சியடைவாள். அவள் மகிழ்ச்சியோடு உனது வீட்டிலிருந்து வீட்டு வேலைகளை விரும்பிச் செய்வாள்.” இதனால், பெண்ணின் அதிகாரத்துக் குடைய தாயாட்சி நீண்ட காலம் நடைபெற்று வந்தபோதும் அது காலத்தில் குறையத் தொடங்கி விட்டதெனத் தெரிகின்றது. யூதரிடையே தாயாட்சி முறை கிறித்துவ வேத காலத்தில் யூதரிடையே தாயாட்சி முறை இருந்ததெனக் காண்கின்றோம். கிறித்துவ வேதத்தில் அரசரைப் பற்றிய புத்தகத்தில் அரசனின் பெயரோடு தாயின் பெயர் இணைக்கப்பட்டிருக் கின்றது. அரச சபையில் அரசனின் தாய்க்கு முதன்மை அளிக்கப்பட்டது. “ஆகவே ஒருவன் தனது தாயையும் தந்தையையும் விட்டுத் தனது மனைவியோடு சேர்ந்து இருவரும் ஒருவராவார்களா?” (ஆதி ஆகமம் 11-24) எனக் கிறித்துவ வேதத்தின் பல விடங்களிற் கூறப்படுகின்றது. இதி னுடைய பொருள், ஒருத்தன் ஒரு பெண்ணை மணந்து தாயாட்சி வழக்கப் படி அவள் குடும்பத்தைச் சேர்ந்தவனாவான் என்பதே. புல்வெளிகளில் வாழ்ந்த எபிரேய மக்களிடையே தாயாட்சி முன்னமே மறைந்து போயிற்று. ஆடு மாடு வளர்த்து அலைந்து திரியும் மக்களின் வாழ்க்கைக்கும் பயிரிட்டு ஓர் இடத்தில் தங்கியிருக்கும் மக்களின் வாழ்க்கைக்கும் வேறுபாடு உண்டு. தந்தையின் அதிகாரம் வேட்டையாடும், ஆடவரே தொடக்கத்தில் விலங்குகளைப் பிடித்துப் பழக்கி வளர்த்தார்கள். புல்வெளிகளில் மேய்ந்து மனிதரின் கவனிப்புக்குட்படாது பெருகும் ஆடுமாடுகளின் கூட்டங்களுக்கும் ஆடவரே தலைவராகவிருந்தனர். மந்தைகள் பால், இறைச்சி முதலிய உணவுகளையும், தோல், கம்பளி முதலிய உடைகளையும் கொடுத்தன. இதனால் அவை மிகவும் மதிப்புக்குரிய சொத்தாகப்பெருகின. ஆட்டு மந்தை, மாட்டு மந்தைகளை அதிகமாக வைத்திருப்பதால் அவைகளின் சொந்தக்காரன் புதிய மேய்ச்சல் நிலத்தைத் தேட வேண்டியிருந்தது. ஆகவே அவன் தனது உறைவிடத்தை அடிக்கடி மாற்ற வேண்டியிருந்தது. பெரிய ஆடு மாடுகளின் கூட்டங்களைப் பாதுகாப்பதற்கு அவனுக்கு வேட்டை யாடுதல், போர் செய்தல்களிற் பயிற்சியுள்ள உதவியாளர் தேவைப்பட்டனர். ஆகவே அவன் அடிமைகளைப் பெறும் அவசியம் உண்டாயிற்று. அடிமை களைப் பெற்றதும் அவன் தனது புதல்வர்களுக்கு மந்தை மேய்க்கும் பயிற்சியளித்து மந்தையை அவர்கள் கவனிக்கும்படி செய்தான். ஆப்பிரிக்காவிலே ஆடுமாடுகளை வளர்க்கும் கூட்டத்தினரிடையே அவை விடப்பட்டிருக்கும் பட்டிக்குள் பெண்கள் செல்ல அனுமதிக்கப் படமாட்டார்கள். அவைகளை மேய்ப்பது, பால்கறப்பது எல்லாம் ஆடவரால் செய்யப்படுகின்றன. பெண்களுக்கும் ஆண்களுக்குமுள்ள சமூகத் தொடர்பை பொருளா தாரத் தொடர்பான மாற்றங்களும் வேறுபடுத்தியுள்ளன. தாய் வழியிலிருந்து உரிமை உண்டாவதற்குப் பதில் தந்தை ஆட்சி உண்டாயிற்று. மந்தைக் குரியவனே தன்னை உணவுக்கு எதிர்பார்க்கும் குடும்பத்தின் மற்றையவர் களுக்கெல்லாம் தலைவனானான். அவனுக்குத் துணை புரிவதற்குப் பல ஆட்களின் உதவி வேண்டியிருந்தது. ஆகவே அவனுக்குப் பல குழந்தை களைப் பெறுவதற்குப் பல பெண்கள் தேவைப்பட்டார்கள். பாபிலோனிலும் எகிப்திலும் பெண்கள் சம்பந்தமான மாற்றம் உண்டாகத் தொடங்கியிருந்தன. பிற்காலத்தில் ஓரிடத்தில் தங்கியிருந்த எபிரேயரிடையே மேலும் தாயாட்சி விழுகையடைவதாயிற்று. கிறித்துவ மறையின் பழைய ஏற்பாட்டில் ஆண் குழந்தை பிறந்தால் யேகோவாக் கடவுளுக்கு நன்றி செலுத்துவது போலப் பெண் குழந்தை பிறந்தால் நன்றி செலுத்தும் வாக்கியங்கள் காணப்படவில்லை. பெண்கள் பெற்றோர் களுடைய சொத்தாயிருந்தது பின்பு கணவனின் சொத்து ஆனார்கள். பெண் விலை மதிப்புள்ள வேலையாளாயிருந்தாள். அவள் மிகக் கடுமையான வீட்டு வேலைகளைச் செய்தாள். அவள் அடிமைபோல் வேலை செய்தது மாத்திரமல்லாமல் அவளிடம் தான் உரிமை பாராட்டக்கூடிய சொத்து எதுவும் இருக்கவில்லை. பாபிலோனியரால் சிறை பிடிக்கப்படும் காலம் வரையில் ஆண்கள் பல பெண்களை மணந்தார்கள். ஆடவன் பெண்ணை விலை கொடுத்து வாங்கினான், சொத்து ஆண் வழியைச் சேர்ந்தது. ஆண் சந்ததி இல்லாவிடில் சொத்துப் பெண்ணைச் சேர்ந்தது; ஆனால் அவள் அக் குடும்பத்தில் மாத்திரம் கணவனைத் தெரிந்து கொள்ளுதல் வேண்டும், பெண்ணின் கடமை பிள்ளைகளைப் பெறுவதும் வீட்டை ஒழுங்காக வைத்துக் கொள்ளுவதுமே என்று கருதப்பட்டது. இலக்கிய கால மக்களை நாம் நோக்கும்போது எரதோதசு கூறி யிருக்கும் ஒரு நிகழ்ச்சி இதற்கு மாறாகக் காணப்படுகின்றது. சின்ன ஆசியா வின் தென்மேற்கு மூலையிற் குடியேறியிருந்தவர்களும், கிரேத்தா (Crete) வினின்று வந்தவர்கள் எனப்பட்டவர்களுமாகிய இலைசியரிடையே பிள்ளைகள் தாய் வழியால் அறியப்பட்டனர். ஒருவனை நோக்கி அவன் குடும்ப வழியை வினாவினால் அவன் தனது தாய் அல்லது தாயின்தாய் பெயரைக் கூறுவான். பெண், அடிமை ஒருவனைச் சேர்ந்து பிள்ளையைப் பெற்றால் பிள்ளை முறைமையானதாகக் கொள்ளப்பட்டது. ஆண், அடிமைப் பெண்ணைச் சேர்வதால் பிறந்த பிள்ளைகள் அடிமைகளாகவும் முறைகேடாகப் பிறந்தனவாகவும் கொள்ளப்பட்டன. சொத்து தாயிட மிருந்து மகளை அடைந்தது; மகனை அடையவில்லை. கிரேக்க நாகரிகத்தின் முன்முறையில் நாம் தாயாட்சியைக் காண் கின்றோம். இவ்வடையாளங்கள் பழங்கதைகளிலேயே காணப்படுகின்றன. அதேனிய சட்டம் தந்தை வழியிலுள்ள (தந்தையின் சகோதரனின் பெண் ணாகிய) சகோதரியை மணக்க அனுமதிக்கின்றது; ஆனால் தாய் வழியில் இவ்வாறு மணக்கும் படி அனுமதிக்கவில்லை. பழைய கிரேக்கரிடத்தில் காதல் என்பது இன்றைய கீழ் நிலையிலுள்ள மக்களிடையே காணப்படும் காதலைப் பற்றிய கருத்தைவிட வேறாக இருக்கவில்லை. கன்னிப் பெண்கள் பெண்களுக்கு விடப்பட்டுள்ள அறைகளிலிருந்து வளர்ந் தார்கள், பெண் மணப்பருவம் அடைந்ததும் பெற்றோர் மணமகனைத் தேடி அவனிடத்தில் அவளைக் கொடுத்தார்கள். அவள் கணவனின் வீட்டுக்குச் சென்று அங்குப் பெண்கள் இருக்கும் அறையில் வாழ்ந்தாள். அவள் கல்வி யறிவில்லாதிருந்தாள்; அவளுக்குப் பெண்களுக்குரிய தையல் வேலை மாத்திரம் தெரியும். அவள் வெளியே செல்லவும் ஆடவரோடு பழகவும் மன வளர்ச்சிக்குரியவைகளை அறியவும் முடியாமல் இருந்தாள். பிற்காலத்தில் ஆட்சி முறைகளில் மாற்றம் உண்டான போது கிரேக்கப் பெண்களின் நிலை இன்னும் மோசமடைந்தது. மனைவியிருக் கும் அறையைக் காவல் காப்பதற்கு அடிமைப் பெண் ஒருத்தி நியமிக்கப் பட்டாள். மனைவியிருக்கும் அறையை அடைத்துத் தாள் இட்டு அவளைக் காவல் காப்பதே நல்ல முறை என்று கணவன் கருதினான். பழைய தத்துவ சாத்திரிகள், பெண்கள் ஆண்களுக்குச் சமமானவர்களல்லர் எனக் கருதி னார்கள். ஆகவே சட்டத்தில் பெண்களுக்கு வாய்ப்பானவை எவையும் இருக்கவில்லை. கிரீசிலே ஸ்பாட்டிய, டோரியப் பெண்கள் விடுதலை யடைந்திருந்தார்கள் எனச் சிலர் கூறுவதுண்டு. இக் கருத்துத் தவறுடையது. ஸ்பாட்டிய, டோரியப் பெண்கள் வெளியே சென்று விளையாட்டுகளிலும் மல்யுத்தங்களிலும் கலந்து கொள்ளும்படியும் விடப்பட்டார்கள். இது அவர்கள் உடல் நலம் பெற்று நல்ல குழந்தைகளைப் பெறும் பொருட்டும், ஆடவரின் நன்மையைக் கருதியும் அனுமதிக்கப்பட்ட வழக்கமேயாகும். அக் காலத்தில் கிரீசில் இன்னொரு வகையாகப் பெண்கள் முன்னுக்கு வந்தார்கள். இவர்கள் பரத்தையராவர் (Hetairai). இவர்கள் ஆடவரின் கவர்ச்சிக்குடையவர்களாயிருந்தனர். வீட்டு மனைவியர்களிலும் பார்க்க இவர்களுக்கு உலக நடையும், கல்வியும், ஆடவரை வசியப் படுத்தும் தன்மையும், நல்ல பழக்கங்களும் தெரியும். கிரேக்கக் கணவர்கள் இவர்களையே சுற்றித் திரிந்தனர். சாகிராட்ஸ், அரிஸ்டோட்டில் முதலிய தத்துவ ஞானிகளும் இவர்களின் கவர்ச்சிக்குட்பட்டிருந்தனர். வீட்டுக்காரி எனப்பட்ட பெண் இவ்வாறு பரத்தையைச் சுற்றித்திரியும் கணவனைக் கலியாண நீக்கம் செய்து கொள்ளலாம். அப் பரத்தையை வீட்டுக்குக் கொண்டு வராத அளவில் அவள் அவ்வாறு செய்தல் முடியாது. பெரிக்கிளிஸ் (Pericles) இவ்வாறு செய்தமையால் கலியாண நீக்கம் செய்யப்பட்டார். அவர் ஐம்பது வயதுடையவராயும், வளர்ந்த மக்களை உடையவராயும் இருந்தபோதும் அஸ்பேசியா (Aspesia) என்னும் பரத்தையை மணந்தார். டெமொஸ்தீனிஸ் என்னும் கிரேக்கர் கூறியிருப்பது வருமாறு: “நாங்கள் எங்களுடைய தேவைகளுக்கும் ஊழியத்துக்குமாக வைப்பாட்டிகளை (அடிமைகளை) வைத்திருக்கிறோம்; எங்கள் காதலுக்கும் இன்பத்துக்கு மாகப் பரத்தையர் இருக்கிறார்கள்; வீட்டைக் கவனிக்க மனைவியர் இருக்கிறார்கள்.” 1பரத்தைமை முறைமையான தொடர்பு இல்லாத ஆடவரோடு சேர்க்கை வைத் திருக்கும் பெண் பரத்தை எனப்படுவாள். ஆடவனின் இயல்பான தன்மை ஒரு பெண்ணை மணப்பதன்று. திருமணங்கள் ஒழுக்க சம்பந்தத்திலும் பார்க்கப் பொருளாதார சம்பந்தமுடையன. முற்காலத்தில் பலவான் அல்லது செல்வவான், தான் விரும்பிய அத்தனை பெண்களைக் கொள்ளையினால் அகப்படுத்தி அல்லது விலை கொடுத்து வாங்கி வைத்திருக்கலாம். கீழ் நிலையிலுள்ள மக்களிடையே இன்றும் இம்முறை காணப்படுகின்றது. கிறித்துவ வேதத்தின் பழைய ஏற்பாட்டில் கூறப்படும் சாலமன் அரசனிடத் தில் மனைவியரும் வைப்பாட்டிகளுமாக ஆயிரம் பெண்கள் வரையிலிருந் தார்கள். பலமில்லாதவரும், வறியவரும் ஒரு மனைவியை வைத்திருந்தனர், அல்லது மனைவி இல்லாது இருந்தனர். பொருள் ஆதார நிலைமை நன்றா யில்லாவிடினும் பெண்துணை வேண்டுமென்னும் விருப்பினால் ஆடவன் ஒருத்தியை விலை கொடுத்து வாங்குவான் அல்லது திருடிக் கொண்டு வருவான். இவ்வடிப்படையிலிருந்தே ஒழுக்கம் ஒழுக்கமின்மை என்னும் நியாயங்கள் தோன்றுகின்றன. ஒழுக்கம் என்பது சாதாரணமாக மக்க ளிடையே நடப்பது; ஒழுக்கமின்மை அம் மக்களிடையே நடவாதது. பின்பு சட்டங்கள் தோன்றி ஒழுக்கமின்மைக்குத் தண்டனைகளை விதிக்கின்றன. பெண்களும் ஆண்களும் வாழ்கின்ற இடங்களில் இச் சட்டங்கள் நிலை பெறுகின்றன. பழைய சட்டங்களை வகுத்த சோலன்1 (கி.மு. 504) என்னும் கிரேக்கர் வியபிசாரத்தை சட்டதிட்டப்படுத்த நினைத்து அரசாங்க வியபிசார விடுதி ஒன்றைத் திறந்தான். அவ் விடுதிக்கு ஒன்றரைப் ‘பென்ஸ்’ (ஒன்றரை அணா) வரையில் கட்டணம் கொடுக்கும் ஆடவன் அனுமதிக்கப்பட்டான். இவ்வாறு கிடைத்த பொருளைக் கொண்டு சோலன் அபிரோடைற் என்னும் காதலுக்குரிய பெண் தெய்வத்திற்குக் கோவில் கட்டினான். இது பிற்காலத் தில் யூத குருமார் எருசலேம்2 கோவிலைக்கட்டுவதற்கு ஒழுக்கந்தவறிய பெண்களிடமிருந்து வரி தண்டியது போன்றதாகும், பரத்தையராகிய இக் கீழ்த்தரப் பெண்கள் மணவாழ்க்கைக்குப் பெருந்தீங்கு விளைவித்தார்கள். கிரேக்கர் ஆசிய மக்களின் உல்லாச வாழ்க்கையை அறிந்து பகட்டான பரத்தையரின் பழக்கத்தைப் பெற்றார்கள். முன் கூறப்பட்ட அஸ்பேசியா என்னும் பெரிக்கிளிசின் மனைவி அதேன்சில் நடத்திய பரத்தையர் பள்ளிக் கூடத்துக்கு அதேனிய மக்களின் பெண்களும், புதல்வியரும் சென்றனர். பைரனி (Pyryne) என்னும் பரத்தை தனது உழைப்பில் ஒரு பகுதியை தீப்ஸ் நகரின் அழிந்த மதிலைத் திருத்துவதற்குக் கொடுத்தாள். சாகிரடீஸ், அரிஸ்டாடில், பிளாடோ முதலியோருக்குப் பரத்தையரின் உறவு இன்றி யமையாதிருந்தது. பரத்தையர் தாய்மாரும், மனைவியருமாயுமிருந்தனர். பரத்தையர் பெறும் பிள்ளைகள் முறையான குழந்தைகளாகக் கொள்ளப் பட்டமையால் இளம் பெண்கள் பரத்தைமைத் தொழிலைக் கைக்கொள்ளும் படி தூண்டப்பட்டார்கள். இவ்வாறு ஐரோப்பாவில் அழகுக் கலைக்கல்வியும் பரத்தையரிட மிருந்து ஆரம்பித்துள்ளது. பரத்தையரின் இயக்கமே பெண்களின் முதல் இயக்கம் எனக் கூறலாம். பிற்கால சீர்திருத்த வளர்ச்சிக் காலங்களில் பெண்கள் இம் முறையைச் சிறிது மாற்றி ஆடவர் விடுவித்துக் கொள்ள முடியாதபடி அவர்களுக்குப் புதிய விலங்கு இட்டார்கள். உரோமப் பெண்கள் உரோமப் பெண்களின் நிலை, பார்வைக்குக் கிரேக்கப் பெண்களின் நிலையிலும் உயர்ந்ததெனத் தோன்றும். உரோமர்களிடையும் ஆடவர் கட்டுப்படுத்தப்படாத தலைவர்களாயிருந்தனர். மணச் சடங்கில் பெண்ணின் கையில் திறவுகோல் கொடுக்கப்பட்டது. இது வீட்டு அதிகாரம் அவளிடம் அளிக்கப்பட்டதைக் குறிக்கின்றது. மணமகன் தனது கைவிரலில் இரும்பு மோதிரத்தை அணிந்தான். இது அவன் கட்டுப்படுத்தப்பட்டதை அறிவிக்கும். பெண்ணுக்குச் சிறுவயதில் மணம் நிச்சயிக்கப்பட்டது; பன்னிரண்டு அல்லது பதின்மூன்று வயதில் மணம் நிகழ்ந்தது. பெண் கணவனின் தந்தை யால் தெரிந்து எடுக்கப்பட்டாள். அவள் திருமணத்துக்குத் தனது சம்மதம் கொடுக்க வேண்டியதில்லை; தந்தையின் பாதுகாப்பிலிருந்து அவள் கணவன் பாதுகாப்புக்குச் சென்றாள். கிரேக்க மனைவிக்கும் உரோமன் மனைவிக்குமிடையில் சமூக நிலைமையில் வேறுபாடு உண்டு. உரோமன் பெண், பெண்களுக்கு எனத் தனிமையாகக் கட்டப்பட்ட இடத்தில் வாழ வில்லை. அவள் கணவனோடு இருந்து உண்டாள்; விருந்துகளில் கலந்து கொண்டாள். அவள் வீட்டுக்கு வருபவர்களை எதிர்கொண்டாள்; விரும்பிய போது வீட்டை விட்டு வெளியே சென்றாள்; நியாய மன்றங்களில் வழக் காளியாக அல்லது சாட்சியாகச் சென்றாள். கணவன் வீட்டிக்குத் தலைவ னாகவிருந்தான். வெளியிலுள்ள வேலைகள் எல்லாவற்றுக்கும் அவனே பொறுப்புடையவன். குடும்பத்திலுள்ளவர்கள் அடிமைகள் விலங்குகள் எல்லாம் தலைவனுக்குரியவை. மிக முற்காலத்தில் மனைவி மதுவருந்தும் பழக்கமுள்ளவளாயிருந்தால், அவளைக் கணவன் கொன்றுவிடுதல் குற்றமாகக் கருதப்படவில்லை. டொமிட்டியஸ் என்பவன் பெண் ஒருத்தி வைத்தியன் சொன்ன அளவுக்கு அதிகம் மது அருந்தியதற்காக அவள் தன் கலியாணத்தால் கிடைத்த பணத்தை இழந்துபோகும்படி தீர்ப்புச் செய்தான். மக்களின் ஆட்சி உண்டானபோது உரோம் நாட்டில் தந்தை ஆட்சி நடைபெற்றது. பெண்கள் உரிமையைப் பற்றியிருந்த பழைய காலக் கருத்துக்கள் மறைந்தபோது அவர்கள் தங்களுக்கு வாய்ப்பாக அவைகளை மாற்றிக்கொண்டார்கள். வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் அவர்களுக்கும் பங்கு இருந்தது. இப்பொழுது அவர்கள் தமது உடைமை களையும் செல்வத்தையும் தமது அதிகாரத்திலேயே வைத்திருந்தார்கள். பெண்கள் சம்பந்தமான கருமங்களைப் பற்றி ஆலோசிப்பதற்கு இவர்கள் அரசாங்கத்திலும் வேண்டப்பட்டார்கள். “எல்லாச் சாதியினரும் தங்கள் பெண்களைக் கட்டியாள்கிறார்கள்; நாங்கள் ஆண்களை மாத்திரம் ஆள்கின்றோம்; எங்களுக்கும் மேலாகப் பெண்கள் ஆள்கிறார்கள். நாம் நமது பெண்ணை அடக்கி ஆளும் திறமையுள்ளவர்களாயிருந்தால் பெண்கள் சம்பந்தமான தொல்லைகள் இரா. நாம் வீட்டுக் கருமங்களில் அதிகாரத்தையிழந்துவிட்டபடியால் பொதுக் கருமங்களிலும் பெண்கள் எங்களைக் கட்டியாளுகின்றார்கள். நாங்கள் தனிப்பட்டு நின்று அவர்களை எதிர்க்கமுடியாது. அவர்களின் ஒன்று சேர்ந்த அதிகாரத்தை நாம் அஞ்சுகின்றோம். இந்த ஒழுங்கற்றவர்களிடத்தில் எங்களை நாம் ஒப்புவித்தால் அவர்களின் பேராசையான செயல்களுக்கு முடிவு காண இயலாது. உண்மையாகக் கூறுமிடத்து பெண்களுக்கு விடுதலையே கூடாது. அவர்களுக்கு எல்லாச் செயல்களிலும் கட்டுப்பாடு வேண்டும். பெண் எங்களோடு சம உரிமையைப் பெற்றால் அவள் எங்களை விரைவில் பின்னால் தள்ளிவிடுவாள்” என்று கேடோ (Cato- கி.மு. 195) கூறியுள்ளார். கிரேக்க நாகரிகம் பரவியதாலும், அரசாங்கத்தில் அதிகாரம் உண் டானமையினாலும், செல்வம் அதிகரித்தமையினாலும் உரோமப் பெண்கள் கேடோ கூறியதுபோல ஆண்களின் கட்டுப்பாட்டினின்றும் விடுபட்டு வியக்கத்தக்க முன்னேற்றமடைந்தார்கள், கிரேக்க நாட்டில் காணப்பட்ட பரத்தையரின் நடைமுறைகள் பெரிய அளவினதாயும் கீழான தன்மை யுடையதாயும் உரோமில் தோன்றலாயின. பெரிய அரசாங்க உத்தியோகத் தரின் மனைவியர், தண்டனை பெறாது தமது அளவு கடந்த இச்சையைத் தணித்துக் கொள்ளும் பொருட்டுத் தம்மைப் பகிரங்க விலை மாதராகப் பதிவு செய்து கொண்டார்கள். அக் காலத்தில் சட்டம் வியபிசாரக் குற்றங் களுக்குக் கடுந்தண்டனை விதித்தது. தேவ அரம்பையை ஒத்த கட்டழகி யாகிய மெசலினியா (Messalinia) போன்ற இராணிகளே வியபிசார விடுதி களில் பரத்தமைத் தொழிலை நடத்தினார்கள். பெண்களின் விடுதலை எவ்வளவு தூரம் சென்றதென்பதை நாம் அறிந்து கொள்ளலாம். உரோமப் பெண்களின் விடுதலையினால் பிறப்பு விகிதம் குறைந்தது. இதனைச் சட்டங்களினால் உயர் நிலைக்குக் கொண்டு வர முடியவில்லை. இது உரோமரின் விழுகைக்கு ஒரு காரணமாகவிருந்தது. பெண் பல கணவரை மணத்தல் உரோமர் பிரிட்டன்மீது படையெடுத்த காலத்தில் பிரித்தனில் பெண்கள் பல கணவரை ஒரே காலத்தில் மணந்திருந்தார்கள். இதனைச் சீசர் ‘டி பெல்லோ கலிக்கோ’ என்னும் தனது நூலிற் குறிப்பிட்டுள்ளார். ஒரு பெண் சாதாரணமாக பத்து முதல் பன்னிரண்டு கணவரை மணந்திருந்தாள். அவர்கள் பெரும்பாலும் சகோதரராகவும், தந்தையும் புதல்வர்களுமாயு மிருந்தனர். பெண் பல கணவரை மணக்கும் வழக்கம், பெண் தொகை குறைவதாலும் ஆண் தொகை அதிகப்படுவதாலும் உண்டாகின்றது என்று ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார்கள், இவ் வழக்கம் இன்றும் வடமேற்கு அமெரிக்க மக்கள், தென்னிந்திய மக்கள் சிலர், திபெத்து, மக்களிடையே காணப்படுகின்றது. எவன் பெண்ணை முதலில் சேர்கின்றானோ, பிறக்கும் பிள்ளை அவனுடையதெனப் பிரித்தானிய மக்கள் கொண்டார்கள் எனச் சீசர் கூறியுள்ளார். ஜெர்மனி, அயர்லாந்து, ஸ்காத்துலாந்து முதலிய நாடுகளில் மணத்திலன்றைய இரவு பெண்ணை நண்பருக்குக் கொடுப்பதாகிய வழக்கு சமீப காலம் வரையில் நடைபெற்றது. இது அந் நாடுகளில் பலதார மணம் இருந்ததென்பதற்குச் சான்றாகும். பெண் பலரை மணக்கும் வழக்கம் தாயாட்சியை வளரச் செய்தது. ஜெர்மனியர் பெண்களைப் பரிசுத்தமுடையவர்களாகக் கருதினார் கள். அவர்கள் அவர்களின் புத்திமதியை அல்லது அவர்கள் செய்யும் தீர்ப்புக்களைத் தட்டமாட்டார்கள் என்று தாசிற்ரஸ் என்னும் பழைய சரித்திர ஆசிரியர் கூறியுள்ளார். மத்திய ஆப்பிரிக்கா, சின்ன ஆசியா முதலிய இடங்களிலும் தாயாட்சி வழக்கு உள்ள இடங்களிலும் பெண்கள் இன்றும் தலையாரிகளாகவும் குருமார்களாகவும் இருந்து வருகின்றனர். தாசிற்ரஸ் காலத்தில் ஜெர்மனியில் ஆண்கள் முக்கிய நிகழ்ச்சிகளைப் பெண்களுடன் கலந்து ஆலோசித்தார்கள். ஆப்பிரிக்காவிலே சாம்பசி நீக்ரோவர் பெண்கள் கூடி ஆலோசிக்கும் இடங்களுக்குச் செல்லமாட்டார்கள். அவர்கள் மனைவி யரின் சம்மதமின்றிப் பிறருக்கு ஒரு உதவியும் செய்ய மாட்டார்கள். பன்ஸ் நீக்ரோவர்களுக்கிடையில் ஆண்களின் ஆலோசனைக் கூட்டத்தில் தலையாரியின் தாய் கலந்து கொள்வாள். தந்தை ஆட்சி தாயாட்சிக்கு முன் தந்தை ஆட்சியிருந்தது. கன்றுக்குட்டி மாட்டுக் காரனுக்குச் சொந்தமாவதுபோல பிள்ளை தந்தைக்குச் சொந்தமானவன் என்னும் சட்டம் இருந்தது. பெண், திருடப்பட்டு அல்லது விலை கொடுத்து வாங்கப்பட்டுக் கொண்டுவரப்பட்டாள். செல்வன் அல்லது பலமுடையவன் பல பெண்களை வைத்திருக்கலாம். இவ்வாறு செய்தல் ஒருவகைக் கடமை என்று தாசிற்ரஸ் கூறியுள்ளார். அயர்லாந்தின் உள்நாடுகளில் பெண்களைத் திருடுவதாகிய வழக்கங்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை யிலும் இருந்தது. ஸ்காந்திநேவிய மக்களுள் வைகிங் (Vikings) ஆடவர் தமது அதிட்டத்துக்கு ஏற்றவாறு, இரண்டு, மூன்று அல்லது பல மனைவியரை வைத்திருந்தார்கள்; செல்வரும் தலையாரிகளும் மிகப் பல மனைவியரை உடையராயிருந்தனர். ஒரு பெண்ணை ஒருவன் விலை கொடுத்து வாங்கி னால் அவன் அவளை விற்கவும் முடியும், இவ் வழக்கம் ஜெர்மனியில் சிறு வகுப்பினரிடையே பதின்மூன்றாம் நூற்றாண்டு வரையும் இருந்தது. ஒருவன் விரும்பியபோது தனது மனைவியையும் பிள்ளைகளையும் விற்றான். இங்கிலாந்திலே பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையில் கணவன் தனது மனைவியை அவளது சம்மதமின்றியே தான் விரும்பிய படி ஆடுமாடுகள் விற்பதுபோல விற்கும் உரிமை பெற்றிருந்தான். சிற்றரசன் (Duke) ஒருவன் தனது வண்டி யோட்டுபவனின் மனைவியை விலைகொடுத்து வாங்கிய ஆவணமும், செருப்புத் தைப்பவன் கயிற்றில் கட்டிச் சந்தைக்குக் கொண்டு வந்து விற்ற பெண்ணை ஐந்து பவனுக்கு வாங்கிய ஆவணமும் காணப்படுகின்றன. கிறித்துவ மதமும் பெண்களும் முற்காலத்தில் ஜெர்மனியில் விதவை கொல்லப்பட்டுக் கணவனோடு புதைக்கப்பட்டாள். காலத்தில் இவ்வழக்கங்கள் மறைந்துபோக பெண்ணுக் குக் கணவனைத் தெரியும் உரிமை உண்டாயிற்று. ஆடவனின் எல்லையில் லாத அதிகாரம் தளர்ந்தது. இப்பொழுது அவன் பெயரளவில் பெண்ணின் பாதுகாப்பாளனாகவிருந்தான். பதினைந்தாம் நூற்றாண்டில் பெண், சொத் துக்கு உரிமையுடையவளானாள். பின்பு கிரேக்கர் உரோமர்களிடையே நேர்ந்தவை போன்ற மாற்றங்கள் உண்டாயின. பிராங்கிய (Frankish) மக்களின் ஒழுக்கத்தைப் பற்றி அக்காலச் சட்டங்களே வெளியிடுகின்றன. அக் காலத்தில் குருமாரோடு கிறித்துவ மதத்தைத் தழுவிய பெண்கள் தொடர்பு வைத்திருக்க அனுமதிக்கும் சமயச் சட்டங்கள் இருந்தன. கிறித்துவ மதம் பெண்களின் சமூக நிலையை உயர்த்துவதற்கு உதவி புரிந்ததெனக் கூற முடியாது. தொடக்கத்தில் அது அரசியல் சம்பந்தமும் வாணிக சம்பந்தமும் உடையதாயிருந்தது. அது பலதார மணங்களைக் கண்டிக்கவில்லை. கிறித்துவ ஆண்டின் முற்பகுதியில் பல பெண்களை மணத்தல் பாவமாகக் கொள்ளப்படவில்லை. கிறித்துவ சமயம் பெண்களுக்குச் சிறிதும் மதிப்புக் கொடுக்கவில்லை. பிற்காலக் குருமார், பெண்கள் அசுத்தமானவர்களும் பாவம் நிறைந்தவர்களும் எனக் கூறினர். பிற்காலத்தில் கிறித்துவ நாடுகளில் ஒருவன் ஒரு பெண்ணை மணக்கும் வழக்கம் சமூக, பொருளாதார ஏதுக்களால் உண்டாயிற்று. பல பெண்களை மணக்கும் வழக்கம் மாறி ஒரு பெண்ணை மணக்கும் வழக்கம் உண்டானபோதும் வைப்பாட்டியின் எண்களைப் பற்றிய கட்டுப்பாடு இருக்கவில்லை. வைப்பாட்டிகளுக்குப் பிறந்த பிள்ளைகளுக்குச் சொத்தில் உரிமை இருக்கவில்லை; அவர்கள் முறைமையான பிள்ளைகளாகவும் கொள்ளப்படவில்லை. இதனால் மரியாதையுடைய பெற்றோர் வைப்பாட்டி களின் குமாரருக்குத் தங்கள் குமாரிகளை மணம் முடிக்க விரும்பவில்லை. இதனால் ஒரு பெண்ணை மணக்கும் வழக்கம் வலிமையடைந்தது. பொருளாதாரம் ஏதுவாகத் தோன்றிய ஒருதார மணத்தைச் சமயமும் கிரியைகள் மூலம் வற்புறுத்திற்று. முன்பு மிலித்தியா, இசிஸ், அபிரடைட் முதலிய பெயர்களால் மக்கள் வழங்கிய கன்னித் தெய்வத்துக்குப் பதில் மேரி வழிபாடு உண்டாயிற்று. இது பெண்களின் உயர்வுக்கு ஏதுவாயிருந்தது. 15ஆம் நூற்றாண்டில் கிறித்துவ நாடுகளில் ஒழுக்கம் பதினைந்தாம் நூற்றாண்டில் கிறித்துவ நாடுகளில் ஒழுக்கம் மிகவும் தாழ்வடைந்திருந்தது. பிரபுக்கள் காதற் பாடல்களைப் பாடிக்கொண்டு மண மான பெண்களைப் பெற முயன்றார்கள், மணமான பெண்களும் உரோமன், கிரேக்க பரத்தையரைப் போலத் தமது காதலை அவர்களுக்கு விற்றார்கள், இப்பெண்களும் கிரேக்க பரத்தையர் போலத் தம்மை அழகிய உடைகளால் அலங்கரித்தும், மேனி மினுக்குப் பொருள்களைப் பயன்படுத்தியும், நறுமணங்களைப் பூசியும் தம்மை ஆடவரின் கவர்ச்சிக் கேற்றவர்களாக்கிக் கொண்டார்கள். சன்னியாசிகளே (monks) அவர்களுக்குப் பாடம் கற்பித்தார்கள். அக் காலத்தில் உயர்ந்தவர்களிடையும் தாழ்ந்தவர்களிடையும் ஒழுக்கம் ஒரேவகையாகவிருந்தது. இரண்டாம் பயஸ் என்னும் பாப்பாண்ட வர் பதினைந்தாம் நூற்றாண்டில் வீயன்னா நகரின் ஒழுக்க நிலை எவ்வாறு இருந்ததென எழுதிவைத்துள்ளார். “மக்கள் எல்லோரும் காதல் ஒழுக்கங்களி லேயே பொழுது போக்கினார்கள். பகிரங்க வியபிசாரிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. சில பெண்களே ஒரு ஆடவனோடு திருப்தியடைந்திருந் தார்கள். பிரபுக்கள், குடியானவனின் அழகிய மனைவிக்குப் பின்னால் ஓடுவது பொது நிகழ்ச்சியாயிருந்தது. அந் நிழச்சிக் காலங்களில் பெண்ணின் கணவனே விருந்தாளியாகிய பிரபுவுக்குச் சாராயம் கொடுத்து, அவனை அவளோடு தனிமையாகக் கூடிக்குலாவும்படி விடுவான். பெண்கள் பலர் தாம் விரும்பாத கணவரை நஞ்சு கொடுத்துக் கொன்றனர். அரசாங்க உத்தியோகத்தர் தம் மனைவியர் புதல்வியரோடு ஒழுகுவதை எதிர்த்த குடியானவர்களில் பலர் கொல்லப்பட்டார்கள். வியபிசாரத்துக்குக் காரணம் வியபிசாரம் ஒருவன் ஒருத்தியை மணப்பதாகிய ஒரு தார மணத்தி னால் தடுக்கக் கூடியதன்று. அது ஆடவனின் பெண் சேர்க்கை விருப்பும், பெண்ணின் ஆண் சேர்க்கை விருப்பும் தகுந்த வழியில் கட்டுப்படுத்தப் படாவிடில் உண்டாகின்றது. சமூகத்தில் ஆடவரிலும் அதிகமாகப் பெண்க ளிருந்தாலும், பெண்களிலும் ஆண் மிகுந்தாலும் இது அதிகம் நிகழ்கின் றது. இயற்கையான தூண்டுதல்களின் நிமித்தம் ஆடவன் வியபிசாரத்தை விரும்பும் போது பெண்கள் அதனால் இலாபம் அடைய முந்துவார்கள். மத்திய காலத்தில் இவ்வகைப் பல காரணங்களால் வியபிசாரம் அதிகப்பட்டது. அதன்விளைவாக ஒரு தாரமணம் சமயத்தினால் கட்டாயப் படுத்தப்பட்டது. ஒருவனுக்கும் ஒருத்திக்கும் வாழ்நாள் முழுமையிலும் இருக்கக் கூடியதல்லாத ஆண் பெண் உறவுகள் பாவமானதாகவும் தண்டனைக் குரியனவும் என்று கருதப்பட்டன. கிறித்துவ மதம் முதலில் குருமார் திருமணம் செய்வதைத் தடுக்க வில்லை; கோவிலைச் சேர்ந்த சன்னியாசிகள், சன்னியாசிப் பெண்கள் மாத்திரம் திருமணம் செய்யத் தடுக்கப்பட்டிருந்தார்கள். கி.பி.869ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தில் பல மனைவியரையுடைய குருமார் தமது சமய சமபந்தமான உடையைக் களைந்துவிட வேண்டுமெனச் சொல்லப்பட்டுள்ளது. சிறிது காலத்தில் சன்னியாசிகளும் சன்னியாசிப் பெண்களும் தங்கும் மடங்கள் களியாட்டத்துக்குரிய இடங்களாகவும், வியபிசார விடுதிகளாகவும் மாறின. ஒழுக்கக்கேடுகள் அளவு கடந்து பெருகின. குருமாரின் இன்ப நுகர்வு அவர்களின் நிலையான சோம்பல் வாழ்க்கையினால் செழிப்படைந்தது. குருமாரின் இகழ்ச்சிக்குரிய ஒழுக்கக் கேடு காரணமாக மூன்றாம் கிரிகரி (Gregory III), குருமார் எல்லோரும் துறவிகளாயிருத்தல் வேண்டுமென்னும் சட்டத்தைக் கட்டாயமாக்கினார். இப்பொழுது ஆயிரக்கணக்கான குருமார் தமது இச்சைகளைத் தமது பாதுகாப்பிலும் தமது அதிகாரத்திலும் இருந்தவர் மூலம் நிறைவேற்றிக் கொண்டார்கள். ஒழுக்கங்கெட்ட இச்செயல்களைப் பற்றிப் பாடல்களும், கதைகளும், பழமொழிகளும் அக் காலத்து வழங்கின. மத்திய காலத்தில் திருமணமின்றி அலைந்து திரியும் ஒரு வகைச் சன்னியாசிக் கூட்டத்தினரால் ஒழுக்கக் கேடுகள் பரவின. பொறாமை, பிறர் போட்டியிடுவார்கள் என்ற பயம் முதலியவைகளால் பட்டினங்களில் அன்னியருக்கு வேலைகள் கொடுக்க மறுக்கப்பட்டது. அக் காலங்களில் வாழ்க்கையின் பொருட்டும் வியபிசாரம் ஆரம்பித்தது. போர்களில் பல ஆண்கள் மடிந்தனர். சிலுவைப் போர்களில் ஈடுபட்ட ஆண்களில் சிறந்தவர், பல ஆண்டுகள் அயல் நாடுகளில் தங்கினர். ஆடவர் பலர் கூட்டங்களாகச் சேர்ந்து அயல்நாடுகளிற் சென்று வாணிகம் நடத்தினர். எல்லாப் பட்டினங் களிலும் வாழும் மக்களில் பெரும்பாலோர் பருவமடைந்த பெண்களா யிருந்தனர். இது காரணமாக ‘பெண்களின் விடுதிகள்’ என்னும் பெயருடன் வியபிசார நிலையங்கள் தோன்றின. இவ் விடுதிகளுக்கு வரிகள், எழுத்து மூலமுள்ள கணக்குகளைக் கொண்டு விதிக்கப்பட்டன. இவ் விடுதிகளில் வாழும் பெண்களின் சார்பாகத் தனிச் சட்டங்கள் இருந்தன. இவ் விடுதியைச் சேராது தனிப்பட்ட வியபிசாரத்தால் தம்மோடு போட்டியிடும் பெண்கள் மீது இவர்கள் வழக்குத் தொடுக்கக் கூடியதாகவிருந்தது. கி.பி.1,414இல் கான்ஸ்டன்ஸ் (Constance) என்னும் இடத்தில் கூடிய மகாநாட்டின்போது கிடைக்கக்கூடிய ஊதியத்தை எதிர்பார்த்து அவ்விடத்தில் 1,500 இவ்வகைப் பரத்தைப் பெண்கள் திரண்டார்கள், சாள்ஸ் (Charles) என்பவனின் பட்டாளத்தில் 900 குருமாரும், 1,600 பரத்தைப் பெண்களும் இருந்தார்கள். உரோமன் இராணிகள் மதுக் கடைகளுக்குச் சென்று தம்மை முட்டாக்கிட்டு மறைத்துக் கொண்டு பரத்தைமையால் தமது இச்சைகளைத் தணித்துக் கொண்டார்கள். பரத்தைமை எல்லாக் காலங்களிலும் பாவமுடையதாகக் கொள்ளப் பட்டது. சில சமயங்களில் “கிறித்துவ மதத்துக்கு நேரும் பலவகைத் தீமை களைப் போக்குவது காரணமாக இக் குற்றம் பரிசுத்த தேவாலயத்தால் மன்னிக்கப்படுகின்றது” இவ்வாறு நேண்பெக் என்னுமிடத்தில் பதினைந் தாம் நூற்றாண்டில் கூடிய நகர மகாநாட்டில் கூறப்பட்டது. கிறித்துவ மதத்தில் பெரிய புரட்சியைத் தோற்றுவித்த உலூதர், ஆண் சேர்க்கை சம்பந்தமாகத் தம்மைத் திருப்திப் படுத்திக் கொள்வதற்குப் பெண்களுக்குப் பூரண உரிமையுண்டு என்றும், உண்பது, உறங்குவது, விடாய்க்கு நீர் குடிப்பது போல அது அவளுக்கு அவசியமானவைகளுள் ஒன்று என்றும், இவை களுக்கு மாறாகத் தலையிடுகின்றவன் இயற்கைக்கு இசைய நடக்காதவ னென்றும், நெருப்புச் சுடாதென்றும், தண்ணீர் நனைக்காதென்றும், மனிதன் உண்ணக் குடிக்க நித்திரை கொள்ள மாட்டானென்றும் நினைப்பது தவறு என்றும் கூறியுள்ளார். பழைய எபிரேயருள் ஒருவன் புதல்வனில்லாமல் இறந்து விட்டால் அவனுடைய விதவையை அவனுடைய சகோதரன், புதல்வன் பிறக்கும் வரையில் சேர்ந்திருக்கலாம் என்னும் சமயவிதி உண்டு. இவ்வழக்கம் நியோகம் என்னும் பெயருடன் பஞ்சாப்பில் நடைபெறுகின்றது. மங்கோலி யர், சைபீரியர் முதலிய மக்களிடையேயும் இவ்வழக்கம் இருந்து வருகின் றது. இவ் வழக்கத்தைத் தழுவிப் போலும் உலூதர், ஆண்மை (Impotent) அற்றவனை மணந்தவர்களில் இது மன்னிக்கத்தக்கதாகவிருந்தது. ஒருத்தி கணவனின் சகோதரன் அல்லது அவனுடைய கிட்டிய உறவினனைச் சேரலாம் எனச் சமயச் சட்டம் கொண்டு வந்தார். ஆண்மையில்லாத ஒருவன் தனது மனைவியுடன் அயல் வீட்டுக்காரனிடஞ்சென்று தனது மனைவியின் காதல் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமெனக் கேட்க வேண்டும். அவன் அதற்கு உடன்படாவிட்டால் அவன் தனது மனைவியை நன்றாக உடுத்தி கிட்டிய சந்தைக்குச் செல்ல வேண்டும். அங்கு அவள் தனது கணவனுக்குப் பிள்ளையைப் பெற்று அளிப்பதற்கு உதவியாயுள்ள ஒரு காதலனைக் கண்டுபிடிக்கக் கூடும் எனப் பழைய ஜெர்மன் ஆசிரியர் ஒருவர் அக் காலத்தில் ஜெர்மனியில் இருந்த வழக்கத்தைக் குறிப்பிட் டுள்ளார். உலூதர் முன்னிருந்த இவ்விதியைப் பின்பற்றித் தனது விதியைக் கூறியிருக்கலாம். பெண்ணுக்கும் ஆணுக்கும் சம உரிமையின் பொருட்டு நேர்ந்த போரில் உலூதரின் கருத்துப் பெண்களுக்குச் சார்பாகவுள்ளது. பதினேழாம் நூற்றாண்டின் நடுப்பகுதி பெண்கள் விழிப்படைந்த காலமாகும். அப்பொழுது அலங்காரம் (fashion) என்னும் எழுச்சி பெண்க ளிடையே எழுந்தது. மிக அலங்காரியாகிய பெண் தன்னை அலங்காரஞ் செய்து கொள்வதற்கு நாளில் ஏழுமணி நேரம் செலவிட்டாள். பெண்கள் இயற்கையாகக் கவர்ச்சிக்குரிய அழகு வாய்ந்தவர்களாயிராவிட்டாலும் ஆடவனைக் கவருவதற்கு அல்லது சமூகத்தில் மதிப்படைவதற்குக் கல்வி கற்கின்றார்கள். முன் கூறப்பட்ட கிரேக்க பரத்தையர் கூட்டத்தினராலும் இம் முறை கையாளப்பட்டது. பதினாறாம் நூற்றாண்டில் நடுப்பகுதியிலிருந்து இத்தாலியில் கல்வி பெண்களின் சீதனமாகக் கருதப்பட்டது. பெண்களின் விடுதலை சிறிது சிறிதாக வளர்ந்து கொண்டு வந்தது. அதனை எவ்வகையிலும் ஆடவரால் தடுக்க முடியவில்லை. இடையிடையே பெண்களின் விடுதலை சம்பந்தமான கிளர்ச்சிகள், வரலாற்றில் இடம் பெற்ற பலரால் நடத்தப்பட்டு வந்தன. பொருளாதார அரசியல் காரணங்களால் பெண்களின் விடுதலை பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்டது. அதனால் பெண்கள் வாணிகத்துறையில் ஆண்களை ஒத்த உரிமை அடைந்தார்கள். தொடக்கத்தில் எல்லா மக்களிடையும் பெண்கள் சமூகத்துக்குரிய விரும்பத் தகாத எல்லாக் கடின வேலைகளையும் புரியும்படி கட்டாயப்படுத்தப்பட் டார்கள். அவர்கள் நூல் நூற்றல், நெசவு நெய்தல், தைத்தல், சவுக்காரஞ் செய்தல் போன்ற தொழில்களையும் செய்தார்கள். பொருளாதார நெருக்கடி யினால் அவர்கள் இப்பொழுது பெண்களுக்கு உரியவனவல்லாத வேலை களையும் புரியலானார்கள். இவை நிலைமையை மாறுதல் அடையச்செய்தன. இப்பொழுது பெண்கள், ஆண்களுக்கு மாத்திரம் விடப்பட்டிருந்த கைத் தொழில், வாணிகம் முதலியவைகளையும் செய்து ஊதியம் அடைந்தார்கள். இங்கிலாந்திலே பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்க்கைப் போராட்டத்தின் நெருக்கடியினால் பெண்களின் விடுதலைப் போர் அனுகூலமாக நடைபெற்றது. நூல் நூற்கவும், நெசவு செய்யவும், ஆடைக்கு அச்சடிக்கவும் இயந்திரத் தொழிற்சாலைகளில் ஒரு இலட்சம் பெண்களும் எண்பதினாயிரம் சிறுவர்களும் வேலை செய்தார்கள், இப்பெண்களும் சிறுவர்களும் மிகவும் மோசமான வாழ்க்கை நடத்தி வந்தார்கள். 1907இல் ஜெர்மனியில் மாத்திரமே 2,10,000 பெண்கள் தொழிற்சாலை களில் வேலை செய்தார்கள். இவர்களில் நூற்றுக்குப் பதின்மூன்று வீதத்தினர் மணமானவர்கள். ஆண்களிலும் பார்க்கப் பெண்களின் வேலை திறமை யற்றதாகவிருந்தமையால் பெண்களின் கூலி குறைவாயிருந்தது. ஓரோரிடங்களில் இதற்கு மாறாகவும் இருந்து வந்தது. அமெரிக்காவில் இது இவ்வாறு இருந்தது. அமெரிக்காவிலே மெயின் (Maine) போன்ற தொழிற் சாலைகள் மிகுந்த பட்டினங்கள் “பெண்களின் பட்டினங்கள்” என்று அறியப்படுகின்றன. அங்கு ஆண்கள் சமையல், துணிதோய்த்தல், குழந்தை களைக் கவனித்தல் போன்ற வீட்டு வேலைகளைப் பார்ப்பார்கள். மனைவி மார் தொழிற்சாலைகளில் ஆடவர்களைப் பார்க்கிலும் அதிக கூலி பெற் றார்கள். ஆதலால் ஆடவர் பெண்கள் செய்யும் வீட்டு வேலைகளைச் செய்து வந்தார்கள். அமெரிக்காவிலே முற்போக்கில் உயர்ந்து சென்ற பெண்கள் ஒரு தனிப்பட்ட பெண் ஆட்சியை நடத்துகிறார்கள். இது பெண்கள் குறைவாயிருந்த முற்காலத்தில் பெண்கள் ஆடவரைத் தமது எண்ணத்தின் படி நடத்திய வழக்கத்தின் உயிர்ப்பேயாகும். ஐரோப்பிய மக்களுக்கு இந் நிலைமை இயற்கைக்கு மாறுபட்டதுபோல் காணப்படலாம், இன்றும் அமெரிக்காவில் ஆண்களைவிடப் பெண்கள் குறைவாயிருப்பதால் இந் நிலைமை அங்கு காணப்படுகின்றது. அங்கு நான்கு கோடி பெண்களும் நான்கு கோடியே நாற்பது இலட்சம் ஆண்களும் உள்ளார்கள். பெண்கள் பொருளாதார விடுதலையினால் இன்று எல்லாத் துறைகளிலும் ஆண்களை ஒத்த சம உரிமை அடைந்துள்ளார்கள். எல்லா நாகரிக சாதியாரும் பெண் களும் ஆண்களும் ஒரே உரிமை உள்ளவர்கள் என்பதை ஏற்றுக் கொள் கின்றனர். இன்று விடுதலை அடைந்த பெண்களின் ஒழுக்க நிலை, இரண் டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கேடோ என்னும் உரோமானியர் கூறியதை ஒப்ப ஆடவருக்குப் பயம் விளைப்பதாயிருக்கின்றது. இன்று நாம் அதே வழிக்குத்தான் சென்று கொண்டிருக்கிறோம். நாம் கேடோ கூறியதை ஒத்த நிலையை அடைவதற்குச் சிறிதுகாலம் செல்லலாம் என ஒரு சீர்திருத்த வாதி கூறியுள்ளார். திருமணம் (மேற்குத் தேசங்களில்) திருமணம் குடும்ப நிகழ்ச்சியிலும் பார்க்கச் சமூக நிகழ்ச்சியாகக் கருதப்படுகின்றது. திருமணத்தினால் மற்றொரு புதிய குடும்பம் உண்டா கின்றது. ஆடவன் ஒருவனதும், பெண் ஒருவளதும் வாழ்நாளில் திருமணம் மிகச் சிறப்புடையதாதலின் அது முக்கியத்துவமுடையதாகக் கொள்ளப்படு கின்றது. முற்காலத்தில் இந்திய ஆடவர் தாமே தமது மனைவியரைத் தெரிந்துகொண்டனர். பிற்காலத்தில் இச்செயல் பெற்றோரின் கடமையாக மாறிவிட்டது. ஐரோப்பிய நாடுகளில் பெற்றோர் தமது புதல்வரையும் புதல்வியையும் தாமாகவே தமது மனைவியரையும் கணவரையும் தெரிந்து கொள்ள அனுமதிக்கின்றனர். ஆண் பெண்ணையோ, பெண் ஆணையோ தெரிவதன் முன் இருவரும் சிலகாலம் பழகுகிறார்கள். இது ஆடவனால் தான் ஆரம்பிக்கப்படுகின்றது. விக்டோரியா இராணி காலத்தில், பெண்ணின் தந்தை தனது சம்மதத்தைத் தெரிவித்தாலன்றி ஆடவன் அவளோடு பழகுதல் முடியாது. பெண் “ஆம்” என்று தனது திருமண விருப்பத்தைத் தெரிவித்ததும் தெரிவு முடிவடைகின்றது. இது ‘வார்த்தைப் பாடு’ (Proposal) என்னும் மரியாதையான பெயரைப் பெறுகின்றது. பெண்ணின் தந்தை பழகு வதற்கு அனுமதித்தல், பெண் அவனை ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும் என்னும் கட்டுப்பாடு ஆகமாட்டாது. இன்று இளைஞன் ஒருவன் தனக்கு விருப்பமான இளம் பெண் ஒருத்தியோடு பேசிப் பழகுவதற்கு அவள் தந்தையிடமிருந்து அனுமதி பெறவேண்டியதில்லை. சில காலத்திற்கு முன் ஒருவன் பெண்ணோடு பழக வேண்டுமானால் தக்க ஒருவர் அவனை அவளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்; அல்லாத இளைஞனோடு பெண் பேசமாட்டாள். இன்று இவ்வாறு எவரும் அறிமுகப்படுத்த வேண்டிய தேவை இல்லை. பெண்ணும் ஆணும் விரும்பினால் பேசிக் கொள்ளலாம். அவர்களைத் தடைப்படுத்துவார் யாரும் இல்லை. இன்று பெண்கள் வயது முதிர்ந்த பெண்களின் துணை இன்றி வெளியே செல்கிறார்கள். முற்காலத் தில் இவ்வாறு நிகழவில்லை. இவர்களை எல்லா இடங்களிலும் தனிமையில் சந்திக்கலாம். நடனமாடும் மண்டபத்தில் அல்லது சிற்றுண்டிச் சாலையில் இருக்கும் பெண்ணிடம் சென்று அவளுடன் இருக்கும் பெண் அல்லது ஆணுக்குக் குனிந்து வணக்கஞ் செய்தபின் அவளை நடித்துக் களியாட்டம் ஆடுவதற்கு அழைப்பது வழக்கத்துக்கு மாறான செயலாகக் கருதப்பட மாட்டாது. இன்றும் ஆணைப் பெண்ணுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்னும் கொள்கையுடையவர்கள் இருக்கிறார்கள்; ஆனால் அவர்கள் மிகச் சிலரே. ஆடவன் அழகும் மரியாதையும் உடையவனாகக் காணப்பட்டால் பெண் அறிமுகப்படுத்துவதைத் தேவைப்படமாட்டாள். பழைய நாளில் பழகுதல் என்பது ஆணைப் பொறுத்திருந்தது. பெண் ஒருபோதும் தனது எண்ணத்தை முதலில் அறிவிப்பதில்லை. விக்டோரியா காலத்தில் பெண்கள் பெரிதும் வெளியே செல்ல வில்லை. ஆகவே அவர்கள் ஆடவரோடு அதிகம் பழகவில்லை. இப்பொழுது பெண்களுக்குத் தாம் அறிய வேண்டிய எல்லாரைப் பற்றியும், எல்லாக் கருமங்களைப் பற்றியும் தெரியும். ஆகவே அவர்களுக்கு ஆடவர் வகுப்பினரைப் பற்றிய மயக்கம் யாதும் இல்லை. அவர்கள் வாலிபரின் தேன் போன்று இனிப்பான பேச்சுக்களால் எடுபடமாட்டார்கள்; பகட்டாகத் தோன்றுகின்றவைகளில் அவர்கள் நம்பிக்கை கொள்வதும் இல்லை. ஆகவே அவர்களை மகிழ்விப்பது கடினம். இன்றைய வாலிபனுக்குப் பெண்ணோடு பழகுவது வில்லங்கமாகத் தோன்றும். பழைய போக்கில் அவளின் திருமண விருப்பத்தைக் கேட்டால் அவள் உடனே கெக்கட்டம் இட்டுச் சிரிப்பாள். இக்காலப் பெண்ணிடத்தில், பேசும் அறிவு அதிகம் உண்டு; அவள் அகன்ற அறிவும், கடமைகளை நிறைவேற்றுவதில் உறுதி யும் உடையவள். ஆவியாக மாறிவிடக்கூடிய காதலினாலும் பகட்டினாலும் மகிழ்ச்சியோடு வாழமுடியாதென்று அவளுக்குத் தெரியும். குறிக்கப்பட்ட ஒருவனை மணப்பதால் மகிழ்ச்சியும், வாழ்க்கையில் வாய்ப்புக்களும் இருக்குமெனக் கண்டால் அவள் திருமணத்துக்கு இசைகின்றாள். இன்று பெண் ஒருத்தி கூறுவது என்னவென்றால், “உன்னைக் காதலிக்கும் ஒருவனை அன்று, நீ காதலிக்கும் ஒருவனை என்பதாகும். இக்காலத்தில் ஆடவன் ஒருவன் தனது காதலை அறிவிக்கும் பொருட்டு மரத்தின் கீழ் ஒருத்தியின் கையைப் பிடிப்பது அல்லது புல்லின் மீது முழங்கால் படிவது இப்பொழுது இல்லை; என்னை மணஞ் செய்கின்றாயா என்று வெளிப்படையாகவும் நாணமின்றியும் கேட்கலாம். “செய்வேன்” என்று நாணமின்றியும் மன அசைவின்றியும் பெண் கூறலாம். திருமணத் துக்கு ஒருத்தியை இசைவுபடுத்துவதற்கு அவளைச் சுற்றித் திரிவதாகிய பழைய போக்கு விரைவில் மாறுபட்டு வருகின்றது. காதல், பகட்டு என்பன தமது கவர்ச்சியை இழந்துவிட்டன என்றாவது குடும்ப சேமத்துக்காகவும் காதல் நுகர்ச்சிக்காகவும் திருமணங்கள் செய்யப்படவில்லை என்றாவது கருதுதல் ஆகாது. காதலினால் பல திருமணங்கள் நிகழ்கின்றன. மேற்குத் தேசத் திருமணங்களைத் தோல்வி என்று கருதிவிடுதல் ஆகாது. மகிழ்ச்சி யளியாத திருமணத்துக்கு மருந்து திருமண நீக்கம். ஒரு ஆடவனும் பெண்ணும் மணம் முடிக்க இசைந்ததும் பெண் தனது இடதுகை மோதிர விரலில் கல்பதித்த மோதிரமொன்றை அணிந்து கொள்கின்றாள். இம்மோதிரம் அவளை மணஞ் செய்யப்போகும் ஆடவ னால் அளிக்கப்பட்டது. பெற்றோரின் விருப்பம் கேட்கப்படுகின்றது. மதிப் புக்குரிய குடும்பங்களில் ஒருநாள் குறிக்கப்படுகின்றது. அன்று உறவினரின் முன்னால் திருமணம் நிச்சயமான செய்தி கூறப்படுகின்றது. அன்று விருந்தும் நடனமும் உண்டு. திருமணத்துக்கு நாள் குறிக்கப்படுகின்றது. மேல் நாட்டவர் நாள் பார்ப்பதில்லை. அவர்களுக்கு ஒரு நாளைப் போலவே எல்லா நாட்களும் நல்லவை. திருமணம் காலை எட்டு அல்லது ஒன்பது மணிக்கும் மாலை மூன்று மணிக்கும் இடையில் நிகழும். மூன்று மணிக்குப் பின் திருமணம் நிகழ்வதில்லை. மேல் நாடுகளில் திருமணப் பதிவு நிலையங்களில் திருமணம் செய்து கொள்ளலாம். மணமகனும் மணமகளும் திருமணப் பதிவு நிலையத்துக்கு இரண்டு அல்லது மூன்று சாட்சிகளுடன் செல்வார்கள். பதிவு செய்பவர் அவர்கள் கணவன் மனைவியராக வாழ விரும்புகின்றனரா எனக்கேட்பார். ‘ஆம்’ என்று மறுமொழி வருமாயின் திருமணம் பதிவு செய்து கொள்ளப்படும். மணமகன், மணமகள் என்போர் அவர்கள்தான் என்று அத்தாட்சிப் படுத்துவதற்கும் திருமணத்துக்குச் சாட்சி அளிப்பதற்கு மாக உடன் சென்றவர்கள் உதவியளிப்பர். பதிவுகாரர் புதிய கணவன் மனைவியருக்கு திருமண அத்தாட்சிச் சீட்டுக் கொடுப்பார். முன் ஒரு முறை கலியாண நீக்கம் செய்தவர்களும் ஏழைகளும் பெரும்பாலும் இவ்வாறு திருமணத்தை முடித்துக்கொள்கின்றனர். மேல் நாட்டில் திருமணக் கொண்டாட்டம் சுருக்கமானது. அது சில மணி நேரமே நடைபெறுகின்றது. மிகக்கிட்டிய நண்பரும் சுற்றத்தவர்களு மல்லாத பிறர் மணமகள் அல்லது மணமகள் வீட்டில் தங்கியிருக்கச் செல்வ தில்லை. முதல்நாள் மாலை அல்லது திருமணத்தன்று காலையில் மண மகன் திருமணம் நடக்கும் இடத்துக்கு வருவான்; ஆனால் அவன் மணமக ளின் வீட்டில் தங்கமாட்டான். மணமகன் தனது சுற்றத்தவர் களோடும் நண்பர்களோடும் கோயிலுக்குச் செல்வான். அவன் அங்கு மணமகளின் வரவை எதிர்பார்த்திருப்பான். மணமகள் தனது தந்தை சகோதரர் முதலிய வர்களோடு அவ்விடத்துக்கு வருவாள். மணமகன் அவளைக் கோயில் வாயிலில் எதிர்கொண்டு அழைத்துக் கொண்டு பலிபீடத்துக்குச் செல்வான். மணமகளின் பக்கத்தார் இடப்பக்கத்திலும் மணமகளின் பக்கத்தார் வலப்பக்கத்திலும் இருப்பார்கள். மணமகள் மணமகனுக்கு இடப்பக்கத்தில் முழங்கால் படிந்து நிற்பாள். இருவரும் வரும்போது கோயிலுள்ள எல்லாரும் எழுந்து நிற்பார்கள். திருமணக் கிரியை நீண்டதன்று, அவர்கள் கணவன் மனைவியராக விரும்புகிறார்களோ என்று குரு கேட்கிறார். எல்லோரும் அவர்கள் கூறும் மறுமொழியை ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். இரு வரும் “நான் விரும்புகிறேன்” என்று தனித்தனியே கூறுவார்கள். உடனே மணமகன் திருமண மோதிரத்தைப் பெண்ணின் இடது விரலில் அணிகின்றான். இந்திய மக்கள் தாலி தரிப்பது போன்றது அவர்கள் மோதிரம் தரிப்பது. பின்பு குருவால் திருமணப் பதிவுச் சீட்டு ஆசீர்வாதத்துடன் அவர்கள் கையில் அளிக்கப்படுகிறது. மணமகனும் மணமகளும் கோயிலுக்கு வெளியே வருதலும் அவர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வர வேற்கப்படுவார்கள். பின்பு கலியாணக் கூட்டம் மணமகளின் வீட்டுக்குச் செல்லும். கலியாண விருந்து மிக மகிழ்வுக்குரியது. மிக நேர்த்தியானவும் உருகியுள்ளவுமான உணவுப் பொருள்கள் மது வகையும் பரிமாறப்படுகின் றன. “திருமண அப்பம்” (Wedding Cake) அவைகளுள் முக்கியமுடையது. மணமகள் அப்பத்தை வெட்டுவாள்; மணமகன் அவளிடம் கத்தியை எடுத்துக் கொடுப்பான். அப்பம் விருந்தினருக்குப் பரிமாறப்படுகின்றது. விருந்தினர் மணமகன் மணமகள் என்னும் இருவரின் உடல் நலன் நன்றா யிருக்க வேண்டுமென ஆசி கூறி அதனை உண்கின்றனர். விருந்துக்கு வராத நண்பர்களுக்கும் சுற்றத்தவர்களுக்கும் அப்பத்துண்டுகள் அனுப்பப் படுகின்றன. விருந்தினர் மது வகைகளைக் குடிக்கும் போதும் மணமகள தும் மணமகனதும் உடல்நலன் நன்றாயிருக்க வேண்டுமென்று சொல் வார்கள். குடிவகைகள் அருந்தும்போது சிறிய சொற்பொழிவுகளும் நடத்தப் படும். விருந்து முடிந்ததும் புதிய கணவனும் மனைவியும் “ஹனிமூனு”க்குப் புறப்படுவர். எல்லோரும் அவர்களைப் பார்த்து அவர்களுக்கு உலகில் எல்லா மகிழ்ச்சியும் நலனுமுண்டாக வேண்டுமென்று ஆசி கூறுவர். “ஹனிமூன்” மோட்டார் புறப்பட்டுச் செல்கின்றது. மகிழ்ச்சிச் சிரிப்பும் ஆரவாரமும் ஆகாயத்தில் ஓசையும் எழுகின்றன. மோட்டாரின் பின்புறத்தில் பழைய சப்பாத்தும் அதிட்டம் தரும் குதிரை இலாடமும் தொங்குகின்றன. இவை மிகப் பழங்காலச் சங்கதிகள். புதிய கணவன் மனைவியர் இயல்புடையவர்களாயின் ஹனிமூனை அயல்நாடுகளில் கொண்டாடுவர். வறியவர் தமது ஹனிமூனைத் தமது ஊரிலே அல்லது தமது வீட்டிலே கொண்டாடுவர். ஹனிமூன் மிக மகிழ்ச் சிக்கும் இன்பத்துக்கும் உரியதெனக் கொள்ளப்படுகின்றது. உண்மையில் ஒருவரை ஒருவர் காதலிக்கும் மணமக்களுக்கு அது இவ்வாறே உள்ளது. சில சமங்களில் ஹனிமூன் “கனியாத மூனாக” (Blue Moon) மாறி விடுவது முண்டு. திருமணச் செலவு பெரும்பாலும் மணமகனைப் பொறுத்தது. மணமகனுக்கு கொடுக்கும் கலியாண வெகுமதி, மணமகளின் உடை சம்பந்தமான சிறிய செலவுகளே பெண் வீட்டாரைப் பொறுத்தது. இன்று பெண்கள் வேண்டுவது 1939இல் கூடிய பெண்கள் சபை1 ஒன்றில் இந்தியப் பெண்களின் சமூகநிலை எவ்வாறு இருத்தல் வேண்டுமென்பதைக் குறித்து நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களின் சுருக்கத்தை இங்குத் தருகின்றோம். 1. பெண்களின் நிலை எல்லாவகையிலும் ஆண்களுக்குச் சமமா யிருத்தல் வேண்டும். 2. பெண்கள் என்னும் காரணமாக அவர்களுக்கு எவ்வகை வேலை களும் மறுக்கப்படுதல் கூடாது. 3. பெண்கள் ஆண்களோடு சமமான சமூகப் பொருளாதார உரிமை களைப் பெற்று வாழ்வதற்குத் திருமணம் தடையாயிருத்தல் ஆகாது. 4. அரசாங்கம் பெண்ணையும் ஆணையும் சம உரிமையுள்ள அங்கத்தவர்களாகக் கொள்ளுதல் வேண்டும். பெண்களுக்கு வாக்குரிமை வேண்டும். ஆடவரைப்போல அவர் களும் உத்தியோகங்கள் பெற்று, ஆடவரைப்போல் ஊதியம் அடைதல் வேண்டும். வயதான பெண்களும் ஆண்களும் விரும்பினால் மணந்து கொள்வதற்குச் சாதி மதம் என்னும் கட்டுப்பாடுகள் இருத்தல் கூடாது. பெண்கள் பருவமடைவதன் முன் மணஞ் செய்துகொள்வதைச் சட்டம் தடைசெய்தல் வேண்டும். ஒரே காலத்தில் ஒருவன் ஒருத்தியையும், ஒருத்தி ஒருவனையும் மாத்திரம் மணம் செய்துகொள்ள வேண்டும். கலியாண நீக்க உரிமை இருத்தல் வேண்டும். திருமணங்கள் பதிவு செய்துகொள்ளும் நிலை யங்கள் கிராமங்கள்தோறும் இருத்தல் வேண்டும். கலியாண நீக்கம் இருவரில் எவர் விரும்பினாலும் செய்து கொள்ளலாம். ஆனால் பிள்ளைகளின் பராமரிப்பு, பாதுகாப்பு என்பவைகளைப்பற்றிய ஏற்பாடுகள் ஒழுங்கு செய்யப் படுதல் வேண்டும். விதவையாயிருப்பது கலியாணத்துக்கு தடையாதல் கூடாது. ஆடவரைப்போலப் பெண்களுக்குச் சொத்து உரிமையும் அவற்றை அவர்கள் வேண்டியபடி செய்யும் அதிகாரமும் வேண்டும். சிறுவரும் சிறுமியரும் கலந்து கல்வி பயிலும் கலவன் பாடசாலைகள் வேண்டும். இக்காலத் தாய் முற்காலத்தில் தாயின் கடமை பிள்ளைகளைப் பெறுவது மாத்திரம் என்று கொள்ளப்பட்டது. அவள் பெறும் பிள்ளைகள் பெண்களாகவும், மனிதராகவும் எவ்வகையிலோ வளர்ந்து விடுவார்கள் என்னும் எண்ணம் அவர்களிடம் இருந்தது. தங்கள் குழந்தைகளை எவ்வாறு உருப்படுத்த வேண்டுமென்பது அவர்கள் மூளையிற்படவில்லை. இக்காலத் தாய் பழங் காலத் தாயிலும் பார்க்கச் சமூகப் பழக்கமுடையவள். இப்பொழுது அவள் தான் உலக கருமங்களில் கலந்துகொள்ளாது தனியேயிருக்கலாமென உணரவில்லை. அவள் தன்னைச் சுற்றியுள்ள உலக நடவடிக்கைகளில் கலந்து கொள்கிறாள். பிறந்தது முதல் குழந்தை எவ்வாறு பயிற்றப்படுகின் றதோ அவ்வாறாகவே அதன் பிற்கால வாழ்க்கையும் உருப்படுகின்றது. தாய் மாரையும் குழந்தை வளர்ப்பைப் பற்றியும் எழுதப்பட்ட பல புத்தகங்களை இக்காலத் தாய் படிக்கிறாள். தாய்மார்களையும் பிள்ளைகளையும் பற்றிய பல செய்திகள் தினமும் பேசப்படுகின்றன. இவ் விஷயங்கள் முற்காலத் தாய்மாருக்கு இடக்கராகத் தோன்றக்கூடியன. இவ்வகையான பேச்சுக்கள் தூய்மையற்றனவென்று இன்று கருதப்படுவதில்லை. இன்றைய நிலைமை தாயின் கடமை பிள்ளைகளைப் பெறுவது என்ற அளவில் இராது அவள் கடமை மனித சமூகத்தையே நல்வழியில் பழக்கி, வருங்கால உலகத்துக்கு நம்பிக்கை அளிப்பது என்று கருதப்படுகின்றது.  பெண்கள் உலகம் முன்னுரை இவ்வுலகில் நேர்பகுதியினர் பெண்கள். உலக வரலாற்றில் இவர்கள் பாதி இடம் பெறுதல் வேண்டும். ஆனால் உலக வரலாறு என்பது ஆடவரின் வரலா றாகவே அமைந்துள்ளது. இடையிடையே ஒவ்வொரு காலத்து விளங்கிய நாட்டியக்காரியோ, அரசியோ, ஒரு படையைத் தாங்கிச் சென்ற ஒருத்தியோ போன்ற பெண்கள் சிலரின் வரலாறுகளே காணப்படுகின்றன. பெண்களே இவ்வுலகில் நாகரிகத்தைத் தோற்றுவித் தார்கள் என்பதை ஆராய்ச்சியாளர் ஒருதலையாக ஒப்புக்கொள்கின்றனர்1. “தொட்டிலாட்டுங்கையே அரசாளுகின்றது”2, “நாகரிகமென்பது நல்ல பெண் களின் ஊக்குதலே”,3 என அறிவாளிகள் புகன்றிருக் கின்றனர். இவ்வுண்மைகளை அறியாதும், ஆடவரை ஒப்பப் பெண்களும் சுதந்திரமுடையவர்கள் என்பதை மறந்தும், பெண் சமூத்தினருக்கு ஆண் சமூகத்தினர் இழைத்து வரும் அடக்கு முறைகள் நீதியற்றன என்பதை விளக்கி இந் நூல் எழுதப்பட்டுள்ளது. வரலாற்று முறையாகப் பெண்களின் உயர்வை விளக்கும் செய்திகள் பலவற்றை இந் நூலிற் காணலாம். ந.சி.கந்தையா பெண்கள் பெருமை தோற்றுவாய் மனித வகுப்புக்குள் மாத்திரமன்று, மரம், செடி, பறவை, விலங்குகள் முதலிய அஃறிணைப் பொருள்களுள்ளும் பெண் உயிர்களே மிகப்பய னுடையன. ஓர் ஆண் பனையையும், ஓர் பெண்பனையையும் எடுத்துக் கொள்வோம். இவற்றுள் பெண் பனையே மிக்க பயனுடையதென்பது எவருக்கும் தெள்ளிதிற் புலப்படும். விலங்கு, பறவைகளுள் ஆடு, கோழி என்பவைகளின் ஆண் பெண் இனங்களையும் எடுத்து நோக்கி அவை களுள் எவை பயனுடையன என அறிந்து கொள்ளுங்கள். உயிர்களில் பெண்ணினங்களே எல்லா வகையிலும் சிறந்து விளங்கும் இயற்கைப் பண்புடையனவாயினும், மக்கள் சமூகத்தில் இவ்விதி மாறுபட்டது போல நமக்குத் தோன்றுகிறது. மக்களுள் பெண்களே ஆண்களைவிட உயர்ந்த தன்மையுடையவர்களாயின் அவர்கள் இன்று ஆண்களுக்கு அடங்கி நடக்கவேண்டிய நிலைமை எவ்வாறு உண்டாயிற்று? அவர்கள் இயற்கை விதிக்கு அமைய ஆண்களைவிடச் சிறந்து விளங்கினார்களா? அவர்கள் ஆண்களுக்கு அடங்கி நடக்கும் கட்டாயம் எவ்வாறு நேர்ந்தது? என்பன போன்ற கருத்துக்களை ஆராய்ந்து அறியின் நாம் பெண் சமூகத்தினரின் வரலாற்றையே அறிந்தவர்கள் ஆவோம். பெண் சமூகத்தினரின் உண்மை வரலாற்றினை அறியாதிருப்பதனாலேயே, நாம் பெண்களைத் தாழ்ந்த வர்களாகக் கருதுகின்றோம். உண்மையில் பெண்களே ஆடவரைவிட எல்லா வகையிலும் மதிக்கத்தக்கவர்களாவர். அவர்களின் பெருமையை உணர்ந்து நாம் அவர்களுக்கு முதன்மை அளியாத அளவில் நமது சமூகம் முன்னேற வகை இன்றாகும். இவையும் இவைபோன்ற கருத்துக்களையும் வரலாற்றோடும் இயற்கையோடும் தொடர்புப்படுத்தி விளக்குவது இந்நூலின் நோக்கமாகும். படைப்புக்கள் இவ்வுலகில் உயர்திணை, அஃறிணை என்னும் உயிர்ப் படைப்புக்கள் எல்லாம் ஆண் பெண் என்னும் இருவகைப்படும். ஆண் பெண் சேர்க்கை யினால் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தம்போன்ற உயிர்களைத் தோற்றுவித்துப் பெருக்குகின்றன. தம்போன்ற உயிர்களைத் தோற்றுவிக்கும் வன்மையை இழக்கும் போது உயிர்கள் மடிந்து போகின்றன. எல்லா உயிர்களின் வாழ்க்கை முறைகளையும் நாம் ஊன்றி ஆராயுமிடத்து, உயிர்ப் படைப்புக்களின் நோக்கம், தம் போன்ற உயிர்களைத் தோற்றுவித்து உலகில் பரப்புவதே என்று நமக்கு நன்கு தோன்றும். இதற்காகவே அவை வாழ்கின்றன. வாழ்க்கைப் போர் மரஞ் செடி புழுக்கள் முதல் மனிதன் வரையிலுள்ள எல்லா உயிர் களும் வாழ்க்கையின் பொருட்டு இவ்வுலகில் இடைவிடாது, போராடிக் கொண்டிருக்கின்றன. வாழ்க்கைப் போராட்டமென்பது தாம் நல்லுணவு பெறுதலோடு தம்மைப் பிற உயிர்கள் ஊறு விளையாதபடியும், கொன்று தின்றுவிடாதபடியும் பாதுகாத்துக் கொள்ளுதல். இவ்வாழ்க்கைப் போராட் டத்தில் மிகச் சுறுசுறுப்பும் வன்மையும் உடையனவே நிலைபெறுகின்றன. மற்றவை மடிந்து போகின்றன. தகுதியுடையன நிலைபெறுதல் எல்லா உயிர்களிடத்தும் தம்போன்ற சந்ததிகளை உண்டு பண்ணும் இயற்கை வன்மை உண்டு. வாழ்க்கைப் போராட்டத்தில் தகுதிபெற்று நிலை பெறுகின்ற ஒரு பெண் தன்னைப்போன்ற தகுதியுடைய சந்ததியைப் பெருக்கும் பொருட்டு ஒரு ஆணைத் தெரிந்துகொள்கிறாள். இவ்வாறு ஒரு பெண் ஆணைத் தெரிந்து கொள்வது இயற்கைத் தெரிவு எனப்படும். இவ்வாறு தகுதியுடைய ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சேர்ந்து தோற்று விக்கும் சந்ததிகள், இவ்வுலகில் வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி யடைந்து நீண்டகாலம் வாழ்ந்து பல சந்ததிகளைத் தோற்றுவிக்கும் வன்மை யுடையனவாகின்றன. இயற்கைத் தெரிவு ஒரு பெண் ஒரு ஆணைத் தெரிந்து கொள்வதே இயற்கை விதி. ஆண், பெண்ணைத் தெரிந்து கொள்வது இயற்கை விதியன்று. பெண் விலங்கு ஒன்று கருக்கொள்ளும் காலத்தில் பல ஆண் விலங்குகள் அதனை அடைய முந்துகின்றன. அப்பொழுது அவற்றுள் போட்டி உண்டாகிப் போர் மூள்கின்றது. அவற்றுள் இறுதியாக வெற்றியடையும் வீரமுடைய ஆண் விலங்கையே பெண் விலங்கு அடைகின்றது. பெண் விலங்கு போரிற் கலந்து கொள்வதில்லை. அது, ஆண்களுக்கிடையில் நடக்கும் போரை அயலே நின்று நோக்கும். தார்வின் என்னும் இயற்கை நூற்புலவர் ஒரு பெண் மானுக்காகப் பல நாட்கள் போராடிய பல கலைமான்களைப் பற்றி யும், இறுதியில் வெற்றியடைந்த கலைமானைப் பெண்மான் அடைந்ததைப் பற்றியும் கூறியிருக்கின்றார். பெண் விலங்குகள் கருக்கொள்ளும் பருவகாலத்தில், ஆண் நாவிப்பூனை, புனுகு பூனை என்னும் விலங்குகள் பெண் இனங்களைக் கவரும் பொருட்டு நறுமணத்தைக் கக்குகின்றன. பேடுமுட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் காலத்தில் சில ஆண் பறவைகளின் நிறம் மிகவும் மினுமினுப்பும் அழகும் அடைகின்றன. இவை பெண்ணினங் களுக்கு ஆண் இனங்கள் கவர்ச்சி அளிக்கும்படி அவைகளுக்கு இயற்கை அளித்துள்ள சில பண்புகளாகும். சுயம்வரம் முற்காலத்தில் பெண்களும் இவ்வாறே செய்தார்கள். பெண் ஒருவள் மணப்பருவம் அடைந்த போது, அவள் மாலையிட்டு ஒருவனைக் கணவ னாகத் தெரியவிருக்கும் செய்தி, இளம் ஆடவருக்கு அறிவிக்கப்பட்டது. குறிக்கப்பட்ட நாளில் அவர்கள் பெண் வீட்டில் கூடினார்கள். அவர்களுள், யாதும் ஒரு வீரச்செயல் காண்பிப்பவனை அவள் மாலையிட்டுத் தெரிந்து கொண்டாள். எப்பொழுதும் ஆடவர், பெண்கள் தம்மை வீரரென்று மதிக்கக் கூடிய செயல்களையே செய்ய விரும்புகின்றனர். முற்காலப் போர்கள் பெரும் பாலும் பெண்கள் காரணமாக நேர்ந்தன எனப்படுதல் மிகவும் கருத்திற் கொள்ளத்தக்கது. இன்று உலகில் நடக்கும் பெரிய குற்றங்கள் பல, ஆடவர் பெண்களை மகிழ்விப்பது காரணமாகச் செய்யப்படுவனவேயாகும். விலங்குகளின் வாழ்க்கை நீண்டகாலம் அடைகாத்துக் குஞ்சு பொரிக்கும் பறவைகளல்லாத பிற உயிர்களில் ஆண்களும் பெண்களும் சோடிகளாக வாழ்வதில்லை. பெண்கள் தனியே ஒரு கூட்டமாகவும், ஆண்கள் தனியே மற்றொரு கூட்ட மாகவும் வாழ்கின்றன. பெண் விலங்குகள் ‘கருக்கொள்ளும்’ காலத்தில் மாத்திரம் பெண் விலங்குகளிடையே ஆண் விலங்குகள் காணப்படு கின்றன. கருக் கொண்ட பின் பெண் விலங்குகள் ஒருபோதும் ஆண் விலங்குகளைத் தம்மை அணுக அனுமதிப்பதில்லை. ஆதிகால மக்களின் வாழ்க்கை மக்கள் விலங்கினத்தைச் சேர்ந்தவர்களே. ஆகவே, அவர்களும் ஆதிகால வாழ்க்கையில் விலங்குகளைப் போலவே இருந்தார்கள். பெண்கள் ஒரு கூட்டமாக வாழ்ந்தார்கள். பெண்கள் கருக்கொள்ளும் காலங் களில் இயற்கைத்தெரிவு செய்து கொண்டார்கள். விலங்குகள், பறவைகள் முதலியவைகளுக்குப் பருவகாலங்களின் வெப்பதட்ப நிலை, அதிக உணவு கிடைத்தல் போன்ற காரணங்களினால் ஆண்டின் சிற்சில காலங் களிலேயே கருக்கொள்ளும் வேட்கை தோன்றும். இவ்விதியே மக்களுக் கும் உண்டாயிருந்தது. பெண்கள் கூட்டமாக ஓரிடத்தில் தங்குவோராகவும், ஆண்கள் வேட்டையாடுவோராகவும் இருந்தனர். தாயாட்சி முற்காலத்தில் குழந்தைகள் தாய் வழியாகவே அறியப்பட்டார்கள். பெண்கள் ஓரிடத்தில் இருந்தமையால் பழமரங்களை வைத்து உண்டாக்கி யும், தானியங்களைப் பயிரிட்டும் உணவுப்பொருள்களை உண்டாக்கி னார்கள். *பெண்கள் கூட்டத்துக்கு வயதில் மூத்த தாயே தலைவியாகவிருந் தாள். மற்றவர்கள் அவளுக்கு அடங்கி நடந்தார்கள். இவ்வாறு உலகில் தாயாட்சி உண்டாகியிருந்தது. சொத்து பெண்களுக்கே உரியதாயிருந்தது. அக் காலத்தில் தந்தைக்குப் பிள்ளைகளிடத்தில் உரிமை உண்டாகவில்லை. சொந்தக் கூட்டத்தில் மணம் இல்லை ஒரு கூட்டத்தில் தோன்றிய பெண்களும் ஆண்களும் சகோதர சகோதரிகளாகக் கருதப்பட்டனர். ஒரு கூட்டத்திலுள்ள பெண்கள் இன்னொரு தாய் வட்டத்திலுள்ள ஆண்களைச் சேர்ந்து பிள்ளைகளைப் பெற்றார்கள். உலகில் எல்லாப் பாகத்திலும் சொந்தக் கூட்டத்தில் பெண் கொள்ளுதல் கூடாது என்னும் சட்டம் இருந்து வந்தது. இன்றும் பிற்போக் குள்ள மக்களிடையே இச்சட்டம் காணப்படுகின்றது. இந்திய நாட்டிலும் பல கூட்டத்தினர் தமது சொந்தக் கோத்திரத்தில் பெண் கொள்வதில்லை. இவையெல்லாம் தாயாட்சி உண்டாயிருந்த காலத்தில் தோன்றியிருந்த வழக்கங்கள். தாய்க் கடவுள் உலகில் மிகப் பழமையாகத் தோன்றியது தாய் வழிபாடு. தாய் எல்லா அதிகாரமும் உடையவளாக இருந்தாள். பிள்ளைகள் அவளைச் சூழ இருந்தார்கள். அவர்கள் கடவுளை எல்லா அதிகாரமுமுடைய, தாய் வடிவில் வழிபட்டார்கள். இவ்வுலகம் முழுவதிலும் தாய்க்கடவுளின் வழிபாடு ஒரே வகையாகக் காணப்பட்டது. தாய் கன்னி எனப்பட்டாள். நிலையான மணக் கட்டுப்பாடு இல்லாமையால், தாய் பிள்ளைகளைப் பெற்ற போதும், கன்னி யாகவே கருதப்பட்டாள். உலக முழுமையிலும் தாய்க் கடவுள் கன்னிக் கடவுளாகவே கொள்ளப்பட்டது. நாகரிகம் பெண்களிடையே தோன்றி வளர்ந்தது பெண்கள் உணவுப் பொருள்களை விளைவித்தார்கள் என முன் கூறினோம். அவர்கள் ஓரிடத்தில் தங்கியிருந்தபோது, பெட்டி, கடகம், கூடை முடைதல் போன்ற பலவகைக் கைத்தொழில்களைச் செய்தார்கள்; பருத்தியை உண்டாக்கிப் பஞ்சிலிருந்து நூல் நூற்று ஆடை நெய்தார்கள். அவர்கள் தாம் அறிந்த பொருள்களைக் குறிக்க ஒவ்வோர் ஒலிக்குறிகளை இட்டு அவைகளைத் தம் குழந்தைகளுக்கும் கற்பித்தார்கள். இவ்வாறு பெண்களிடையே பயிர்த்தொழில், கைத்தொழில் முதலியவையும், மொழியும் தோன்றி வளர்ச்சியடைந்தன. ஆடவர் வேட்டையாடுவோராக வும், சில சமயங்களில் உணவுக்குப் பெண்களையே எதிர்பார்ப்பவர்களாக வும் இருந்தனர். மக்கள் முற்பருவத்தில் விலங்குகளை ஒப்ப ஒருவரோடு ஒருவர் போராடிக் கொண்டிருந்தார்கள். தற்காப்பின் பொருட்டே பெரும் பாலும் மக்கள் ஒன்று சேர்ந்து வாழ்ந்தார்கள். ஒரு கூட்டத்தினர் இன்னொரு கூட்டத்தினரைத் தாக்கும்போது அவர்களை எதிர்த்துப் போராடுதல் போன்ற செயலுக்கு மாத்திரம் ஆண்கள் பயன்பட்டார்கள். குழந்தைகளுக்குத் தாயே சிறந்தவள் குழந்தைகள் உதவியற்றவர்களாகப் பிறக்கின்றனர். அவர்கள் தாமாகத் தமது வாழ்க்கையை நடத்தத் தகுதியற்றவர்களாயிருக்கின்றார்கள். அப்பொழுது தாயே குழந்தைகளுக்குப் பாலூட்டி வளர்க்கின்றாள். அது, வெளி உலகில் சென்று தனது வாழ்க்கையைத் தானே நடத்தும் தகுதி பெறும்வரையும் தாயின் ஆதரவில் இருக்கின்றது. தாய், குழந்தைகளிடத் தில் வைக்கும் பற்று மிகப் புனிதமானது. குழந்தைகளிடத்தில் தாய் வைப்ப தாகிய பற்றுக் கீழ் இன உயிர்கள் முதல், மேல் இன உயிர்கள் வரையிற் காணப்படுகின்றது. சில இனப்பறவைகள் தமது குஞ்சுகளைக் காப்பதற் காகத் தமது உயிரையும் விடுகின்றன. விலங்கினங்களும் அப்படியே. தாய் பாலூட்டி வளர்க்கும் விலங்கினங்கள் குட்டிகள் மீது வைக்கும் பற்று மிக மேலானது. குரங்குகளிடத்திலும் மனிதரிடத்தும் இப்பற்று அளவு கடந்து காணப்படுகின்றது. குரங்குக்குட்டி இறந்து விட்டால், அதன் தாய் இரண்டு மூன்று நாட்களுக்கு அதனை உடன் கொண்டு செல்லும்; மிகக் கவலை யோடு அமைதியாக இருக்கும்; உணவு கொள்ளமாட்டாது. தாயன்பு தாய் குழந்தையிடத்தில் வைக்கும் அன்பு மேலானது. தாய் பதில் பலனை எதிர்பாராது குழந்தையிடத்தே அன்பு வைக்கின்றாள். அது மகிழ்வதைப் பார்த்து அவளும் மகிழ்கின்றாள்; அது வருந்துவதைக் கண்டு தானும் வருந்துகின்றாள். பதில் பலனை எதிர்பாராது செலுத்தும் அன்பு கடவுள் தன்மையுடையது. தன்னலம் கருதாது இவ்வுலகிற் சிலவற்றைச் செய்கின்றவர்களைப் புனிதமுடையவர்களாக வைத்து உலகம் போற்றுகின் றது. “தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன்” என்னும் உயர்ந்த பண்பு காரணமாகப் புத்தர் உலக மக்களால் போற்றப்பட்டார். கிறித்துநாதர், முகம்மது நபி, கொன்பியூசஸ், மகாவீரர் முதலியவர்களைத் தெய்வங்களாக மக்கள் வணங்கிப் போற்றுவது அவர்கள் பிறருக்காக வாழ்ந்தமையினாலே யாகும். இன்று காந்தி, மகாத்துமா எனப் போற்றப்படுவதும் இக் கருத்துப் பற்றியே. இக் கொள்கைப் பற்றியே, ஒவ்வொரு தாயும் தன் குழந்தை களுக்குத் தெய்வம் ஆவாள். “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்றதும் இக் கருத்துப் பற்றியதேயாகும். கடவுள் ஒவ்வொரு வீட்டிலும் இருப்பதற்குப் பதில், தாயை அங்கு அனுப்பியுள்ளார் என ஒரு அறிஞர் கூறியுள்ளார். தந்தை அன்பு பறவை, விலங்குகள், தந்தை அன்பைப் பற்றி அறியா. அவை களுக்குத் தாயன்பு ஒன்றே உள்ளது. குழந்தை வளர்ந்து வெளியுலகத்தை அறிய வருகின்றது. அப்பொழுது குழந்தைக்கு வேண்டிய பிற உதவிகளைத் தந்தை அளிக்கிறான். அதனால் குழந்தை தந்தையிடத்தில் அன்பு கொள்கின்றது. ஆயினும், அது தந்தையிடத்தில் கொள்ளுமன்பு தாயிடத்துக் கொண்டுள்ள அன்பிலும் அளவிற் குறைவுடையதே. பெண்களிடத்தில் மென்மைக் குணம் எல்லா ஆண் இனங்களும் வன்மைக் குணம் உடையனவாகவும் பெண் இனங்கள் மென்மைக் குணம் உடையனவாகவும் காணப்படுகின்றன. சிங்கம், புலி போன்ற மூர்க்க குணமுடைய விலங்கினங்களில் பெண் இனங் களை விட ஆண் இனங்களே போர் செய்யும் அதிக மூர்க்கக் குணமுடை யனவாகக் காணப்படுகின்றன. படைப்புக்களுள் மக்கட்படைப்பு இறுதி யானது என்று ஓர் இடத்திற் கூறியுள்ளோம். ஆதியில் மக்களுக்கு விலங் கினங்களைப் போன்று ஒருவரோடு ஒருவர் எதிர்த்துப் போர்செய்யும் மூர்க்கக் குணம் உடையவர்களாகவே இருந்தனர். மக்கள் தோன்றி எண்ணில்லாத காலம் இவ்வுலகில் வாழ்ந்து வருகின்றமையால் அவர்களின் விலங்குக் குணங்கள் படிப்படியே தணிவு பட்டுப் பண்பட்டுள்ளன. அவ்வாறாயினும் பெண்களை விட ஆண்களே முரட்டுத்தனம் உடையவர்களாகக் காணப்படு கின்றனர். ஆண்களின் மூர்க்கக் குணம் தணிவுபட்டுப் பண்படைதற்குக் காரணராயிருந்தவர்கள் பெண்களேயாவர். பெண்கள் தாய்மாராகும் போது, அவர்கள் உள்ளத்தில் அன்பு தோன்றிப் பெருகுகின்றது. தாய்மார் குழந்தை களுக்கு அன்போடு பால் ஊட்டி வளர்த்தலின் அன்புக் குணங்கள் அவர் மாட்டும் சுவறுகின்றன. இவ்வாறு தலைமுறை தலைமுறையாகத் தாய்மார் தமது அன்புக் குணங்களைப் பிள்ளைகள் மூலம் பரப்புதலின் ஆண்களும் படிப்படியே பழைய முரட்டுத் தன்மையினின்றும் நீங்கி, அன்பு செறிந்த உள்ளத்தவர்களாக வந்துள்ளார்கள். மக்கள் உள்ளத்தின் இயல்புகளை நன்கு ஆராய்ந்த அறிஞர்கள் பெண்களே ஆடவரைச் சீர்திருத்தியவர் களாவர் எனக் கூறியுள்ளார்கள். அன்புக்கு இருப்பிடம் பெண்ணே. பெண் ணிடமிருந்தே அன்பு வெள்ளம் ஊற்றெடுத்து ஆண் பாலார்களிடையே யும் பரவுவதாயிற்று. பெண்கள் உயர்வடைந்திருந்த போது நாகரிகம் ஓங்கியிருந்தது இன்றைக்கு ஐயாயிரம் அல்லது ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன், இந்தியா, மேற்கு ஆசியா, எகிப்து, கிரேத்தா (Crete) முதலிய நாடுகள் நாக ரிகத்தில் மிக ஓங்கியிருந்தன. இந் நாகரிகங்களின் உறழ்ச்சி பிறழ்ச்சிகளே இன்றைய நாகரிகங்களாகும். உலக நாகரிகங்களுள் மிகப்பழமையுடையது சிந்து வெளி நாகரிகம் எனப் பேராசிரியர் பிறாங்போட் என்னும் அறிஞர் கூறுகின்றார். மொஞ்சதரோ நாகரிக காலத்தில் தாயாட்சியே இருந்தது என, “இந்தியாவில் தாயாட்சி” என்னும் நூல் எழுதிய பரன் ஓமர் ரல்வ் எர்நெல்ஸ் என்பார் கூறியுள்ளார். எகிப்திய பெண்கள் எல்லா நாட்டுப் பெண்களையும் விட மேலான நிலை எய்தியிருந்தார்கள். எகிப்தியப் பெண்களைப் போல வேறெந்த நாட்டுப் பெண்களும் அதிகாரம் பெற்று விளங்கவில்லை என ஹால் என்பார் கூறியுள்ளார். நைல் ஆற்றை அடுத்த நாடுகளிலுள்ள மக்களைப்போல வேறெந்த நாட்டினரும் பெண்களுக்கு அவ்வளவு உயர்வு கொடுக்கவில்லை என மாக்ஸ்முல்லர் கூறியுள்ளார். மணமான அல்லது மணமாகாத எந்தப் பெண்ணும், தனது விருப்பின்படி எவ்வகைக் கொடுக்கல் வாங்கலும் செய்யக்கூடியவளாகவிருந்தாள். அவர்களைக் கணவனோ, தாய் தந்தையரோ, தமையன் தம்பிமாரோ கட்டுப்படுத்த உரிமையில்லாதவர்களா யிருந்தனர். பெண்ணின் பெயரால் கணவன் பத்திரங்கள் எழுதவோ கொடுக்கல் வாங்கல் செய்யவோ அதிகாரம் பெற்றிருக்கவில்லை. ஆனால் பெண் கணவனின் சார்பில் அவ்வாறு செய்ய அதிகாரம் பெற்றிருந்தாள். மூன்றாம் இராம்சே என்னும் அரசன் காலத்துப் பட்டையமொன்றில் “பெண், தான் விரும்பிய எவரோடாவது செல்லலாம். அவளை ஒருவரும் கட்டுப்படுத்த முடியாது” என எழுதப்பட்டிருக்கின்றது. எகிப்திலே பெண்கள் கடைத் தெருவுக்குச் சென்று வாணிகம் செய்தார்கள். அவர்களின் கணவர் வீட்டிலிருந்து ஆடை நெய்தார்கள் என்று ஹெரதோத்தசு கூறியுள்ளார். எழுத்து வேலையில் ஆரம்பித்த ஒரு பெண், படிப்படியே பதவியில் உயர்ந்து, ஒரு நாட்டுக்கு ஆட்சி அதிகாரியாகிப் (Governor) பின்பு இராணுவ அதிகாரியாக வந்த வரலாறு ஒன்று காணப்படுகின்றது. அரேபியாவிலே பெண்களே பணத்துக்குச் சொந்தக்காரராயிருந் தனர்; அவர்களிடத்தில் பெரிய மந்தைக் கூட்டங்கள் இருந்தன. அவர்களின் கணவர் மந்தைகளை மேய்ப்போராயிருந்தனர். கலியாணம் நீக்குவதின் அடையாளம் கணவன் “இனி நான் மந்தைகளை மேய்ச்சல் நிலத்துக்கு ஓட்டிச் செல்லமாட்டேன்” எனக் கூறுவதாகும். எகிப்திலே பிள்ளைகள் தாய்க்கே சொந்தமுடையவர்கள். கணவனும் மனைவியும் பிரிந்து வாழ நேர்ந்தால் பிள்ளைகள் தாயோடு தங்கினர். எகிப்திய குடும்பங்கள் தாயாட்சி முறையான அமைப்புடையன. ஒரு குடும் பத்தில் பெண்ணை மணப்பவன் குடும்பத்தில் முதன்மை பெறவில்லை. எகிப்தியக் கீழ் வகுப்பு, நடுத்தர வகுப்புப் பெண்கள் திருமணத்துக்குப்பின் சுதந்திரமுடையவர்களாகவும், மரியாதைக் குரியவர்களாகவும் இருந்தார்கள். மனைவி என்னும் முறையில் அவளே வீட்டுக்கு அரசி (இல்லாள்). வீட்டிலே முதன்மையுடையவர் தந்தையல்லர்; தாயே. குடும்பத்தில் கணவனைத் தலைமையாகக் கூறும் சட்டம் எதுவும் எகிப்தில் இருக்க வில்லை. பில்லே பேரர் என்னும் அரசன் காலத்திற்குப் பின்பே, கணவன் என்னும் பொருளை உணர்த்தும் சொல் ஆக்கப்பட்டது. ஆடவன், வீட்டில் தங்குபவனாகவும் சொத்துச் சுதந்தரங்கள் எல்லாம் பெண்ணுக்கே உரியன வாகவும் கொள்ளப்பட்டன. ஒருவன் புதிய வீடு ஒன்றைக் கட்டினால் அது, மனைவியின் கைக்கு மாறிற்று. மணமான பெண்களும், மணமாகாத பெண் களும் தங்கள் சொத்தைத் தாமே ஆண்டு அனுபவித்தார்கள். மனைவியின் கருமங்களைப் பற்றிக் கணவன் ஒன்றும் அறியாதவனாயிருந்தான். கணவன், மனைவியின் சொத்தில் தலையிடுவது சட்ட சம்மதமில்லாததாகக் கொள்ளப்பட்டது. வயதான பெற்றோரைக் காப்பற்றும் பொறுப்புப் பெண் மக்களின் கடமையாகவிருந்தது. திருமணங்கள் சமய சம்பந்தமான கிரியைகளோடு நடத்தப்படவில்லை. கிரேத்தாவில் (Crete) சொத்து பெண்கள் வசமே இருந்தது. கணவனுக்குச் சொத்தில் தலையிடும் அதிகாரம் சிறிதும் இருக்கவில்லை. பிள்ளைகள் தாய் தந்தை என்னும் இருவரின் சொத்துக்களையும் பெற்றார்கள். விரும்பினால் கலியாணத்தை நீக்கிக் கொள்ளும் அதிகாரம் பெண்ணுக்கு இருந்தது. இவ்வாறு முற்காலத்தில் நாகரிகத்தாற் சிறந்து விளங்கிய நாடுகளி லெல்லாம், பெண்களே முதல் இடம் பெற்றிருந்தார்கள் என அறிகின்றோம். மௌரிய சந்திரகுப்தனின் அரண்மனையில் தூதராகவிருந்த மெகஸ்தனீஸ் என்னும் கிரேக்கர் பாண்டிய நாடு பெண்களாலாளப்படுகிறதெனக் கூறி யிருக்கின்றார். இதனால் தமிழ் நாட்டில் பழங்காலத்தில் சொத்துரிமை பெற் றிருந்தவர்கள் பெண்களே எனத் தெரிய வருகின்றது. ஒரு ஆயிரம் ஆண்டு களுக்கு முன், மேற்கு நாடுகள் மிகப் பிற்போக்கான நிலையில் இருந்தன. மேற்கு நாடுகளில் பெண்கள் முதன்மை அடையத் தொடங்கியதும், அங்கு நாகரிகம் படிப்படியே வளர்ச்சியடைந்து இன்றைய நிலையை அடைந்து விட்டது. பெண்களுக்கு முதன்மை கொடாத கிழக்கு நாடுகளில் நாகரிகம் இருளடைந்து கிடக்கின்றது. மக்கள் மிகவும் கீழ்நிலையில் இருக்கின்றனர். தந்தை ஆட்சி உலகில் ஆட்சி என்பது வலிமையையும் செல்வநிலையையும் அடிப்படையாகக் கொண்டது. மக்கள் வாழ்க்கையின் முற் பருவத்துப் பெண்களே நாகரிகத்துக்கு வேண்டிய அடிப்படையாகவுள்ள பலவகைத் தொழில்களையும் ஆரம்பித்து வைத்தார்கள். முற்கால மக்களின் செல்வம் என்பது உணவே. எவனிடத்து அதிக உணவுப் பொருளுண்டோ அவனே செல்வனாகக் கருதப்பட்டான். தொடக்கத்தில் பெண்களிடமே அதிக உணவுப் பொருள்கள் இருந்தன. ஆகவே, அவர்கள் செல்வர்களாக விருந்தனர். ஆடவர் அவர்கள் ஏவியவற்றைச் செய்தும், போர்க்காலத்தில் பகைவரோடு போர் செய்து பெண்களைப் பாதுகாத்தும் வந்தனர். ஏர் பூட்டி உழுது அதிக தானியம் விளைவிக்கும் முறை அறியப்பட்டபோது, வேடர் களாக அலைந்து திரிந்த ஆடவர் பலர், தானியங்களை விளைவிக்கத் தொடங்கினர். இதுவரையும் பெண்கள் செய்துவந்த பயிர்த் தொழிலை அவர்கள் கைப்பற்றினர். அதனால் செல்வநிலை பெண்கள் கையிலிருந்து ஆடவர் கைக்கு மாறத் தொடங்கிற்று. ஆடவன் சிறிது சிறிதாகச் சொத்துக்குத் தலைவனானான். அவ்வாறு வந்தபோதும் பெண் ஆட்சிக் காலத்திலிருந்த பல வழக்கங்களும் இருந்து வந்தன. பெண் ஆட்சிக் காலத்தில் பெண்ணுக் குப் பூரண சுதந்தரம் இருந்தது. அவள் விரும்பிய ஒருவனைக் கணவனாகத் தெரிந்து கொள்ளலாம். வேண்டாதபோது அவனை விட்டு வேறொரு வனைக் கணவனாகத் தெரிந்து கொள்ளலாம். தந்தை ஆட்சி உண்டான பின்பு, ஆடவர் சிறிது சிறிதாகப் பெண்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தத் தொடங்கினார்கள். ஒரு பெண் ஒருவனை மணந்தால், அவள் தனது வாழ்க்கைக் காலம் முழுமையிலும் அவனுடைய மனைவியாக விருத்தல் வேண்டுமென்னும் சட்டங்களும் சமூக வழக்கக் கட்டுப்பாடுகளும் உண்டாயின. தந்தையாட்சி உண்டான பின்பே, நிலையான திருமணங்கள் உலகில் தோன்றி வலிவடைந்தன. பெண்களின் உயர் நிலையும் தாழ் நிலையும் தாய் ஆட்சி முறையைப் பின்பற்றி நாகரிக காலத்தில் பெண்கள் உயர் நிலையில் இருந்தார்கள். மக்கள் மூர்க்கமான விலங்குகளைப்போல ஒரு கூட்டத்தினரோடு இன்னொரு கூட்டத்தினர் போர் செய்தல் போன்ற முரட்டுக் குணங்களுடையவர்களாயிருந்தனர். இன்றும் மக்கள் போர்க் குணமுடையவர்களாகவே காணப்படுகின்றனர். அக் காலத்தில் ஒரு கூட்டத்தினர் இன்னொரு கூட்டத்தினரைத் தாக்கி அவர்களை வென்றால், அவர்கள் ஆடவர் எல்லோரையும் கொன்றுவிட்டுப் பெண்களை அடிமை களாகக் கொண்டு செல்வது வழக்கம். இவ்வாறு அடிமைகளாகச் சென்ற பெண்கள் பகைவர்களிடம் மாடுகள் குதிரைகள்போல உழைத்தார்கள். அவர்கள் பகைவரைச் சேர்ந்து பிள்ளைகளைப் பெற்றுப் பகைவர்களிடை யும் தமது இரத்தக் கலப்பை உண்டாக்கினார்கள். உலகம் முழுமையிலும் சொந்தக் கூட்டத்தினருள் பெண்கொள்ளுதல் ஆகாது என்னும் வழக்கு இருந்தமையின், ஒரு கூட்டத்தவன் இன்னொரு கூட்டத்திலிருந்து பெண்ணைத் திருடிக்கொண்டு செல்வதும் வழக்காக இருந்தது. இதனால் பழங்கால மக்களிடையே பெண்களைத் திருடி மணம் புரிந்துகொள்வ தாகிய வழக்கமும் வலிவடைந்திருந்தது. திருமணத்தின் சரித்திரம் மிக முற்காலத்தில் திருமணம் இருக்கவில்லை; அது இன்னதென்றும் அறியப்படவில்லை. ஆடவன் ஒருவன் பெண் ஒருத்தியோடு நட்பாயிருந் தால், அதனால் அவன் சட்டபூர்வமாகவோ சமய பூர்வமாகவோ கட்டுப்பட வில்லை. ஆடவரும் மகளிரும் தத்தம் விருப்பப்படி வாழும் உரிமையைப் பெற்றிருந்தனர். ஆடவர் பெண்களை வலிமையாற் பிடித்து மணஞ்செய்து கொள்ளும் காலம் வரையில் நிலைமை இவ்வாறே இருந்தது. பெண்ணை வலிமையாற் பிடிப்பது, என்பது உண்மையாக அல்லது போலியாகவிருக்க லாம். ஒரு பெண்ணை வலிமையாற் பிடிப்பதால், அவனுக்கு ஒரு அடிமை கிடைக்கின்றது. இதனால் சொந்தக் கூட்டத்தில் பெண் கொள்வதற்குப் பதில் அயற் கூட்டத்தில் பெண் கொள்ளும் வழக்கு உண்டாயிற்று. இவ்வகை மணங்களால் இரண்டு கூட்டத்தினருக்கும் இணைப்பு உண்டாயிற்று. அதனால் அவர்கள் வலிமைபெற்றுத் தம்மைப் பகைவரிடமிருந்து காப்பாற்றிக் கொள்ளத் தக்கதாகவிருந்தது. பிற்காலங்களில் இரு கூட்டங் களிலும் சிறுவருக்கு மணம்செய்து இணைப்புக்கள் உண்டாக்கப்பட்டன. பெண்களைக் கவரும் வழக்கத்தோடு, கவர்வதற்குப் பதில் பெண் களை விலைகொடுத்து வாங்கும் வழக்கம் உண்டாயிற்று. திருந்தாத மக்க ளிடையே இவ் வழக்கு நீண்ட காலம் தொடர்ந்து வருவதாயிற்று. அக் காலங் களில் பெண், தந்தையோடு இருந்தாள். தான் விரும்பிய எவனுக்காவது அவளை அதிக விலைக்கு விற்றுவிடும் உரிமையிருந்தது. விற்பவன், வாங்கு பவனின் நற்குணத்துக்கல்லாமல், பொருளின் தொகைக்காகவே அவனை விரும்பினான். இவ் வழக்கம் இருக்கும் காலத்தில் பெண்ணுக்கு அவள் விரும்பிய ஒருவனைத் தெரிந்தெடுக்கும் உரிமை இருக்கவில்லை. தந்தை அல்லது அவளின் பாதுகாப்புக்குரியவன் தெரிந்தெடுக்கும் ஒருவனுக்கு அவள் விற்கப்படலானாள். அவள் அவனுடைய அடிமையானாள். இக் கொள்கை நியாயமானதன்று என்றும், பணத்துக்காகப் பெண் களை அடிமைகள் ஆக்குதல் கூடாது என்றும், மக்கள் காலப்போக்கில் உணரத் தொடங்கினார்கள். அப்பொழுது பெண்ணை விலைகொடுத்து வாங்குபவன், அல்லது கணவன், பெண்ணின் தந்தையிடம் சீதனம் கேட்டான். இம்முறையினால் பெண்ணை விலை கொடுத்து வாங்கும் வழக்கம் ஒழிந்தது. விலை கொடுத்து வாங்கிய வழக்கத்தின் நிழலே இன்று பரியம் என்றும் பெயர் பெற்று வழங்குகின்றது. பரியம் கொடுப்பது என்பது போலியாக வாங்குவதைக் குறிக்கின்றது. இதனால் பெண்ணுக்குக் கொடுக்கப்படும் பணம் பெண்ணின் விலை அளவில் இராமல், பெயர் மட்டில் சிறு தொகையாகவிருந்தது; விற்பவன் வாங்குபவனுக்கு அல்லது பெண்ணுக்கு விலைப்பொருளில் ஒரு பகுதியைக் கொடுத்தான். அதன்பின், தந்தை பெண் வழியாகக் கணவனுக்குப் பொருள் கிடைக்கும்படி சீதனம் அளித்தான். இந்நிலையிலும் பெண்ணுக்குக் கணவனைத் தெரியும் உரிமை இருக்கவில்லை; தந்தையே அவளுக்குக் கணவனைத் தெரிந்தான். இதன்பின் பெண்ணை விலை கொடுத்து வாங்கும் வழக்கம் மறைந்து போயிற்று. தனது பெண்ணுக்குத் தகுந்த கணவனைத் தேட வேண்டும் என்னும் எண்ணம் தந்தைக்கு இருந்தமையால், அவன் பெண்ணுக்கேற்ற கணவனைத் தேடவேண்டியிருந்தது. இதன்பின் பெண், தான் விரும்பிய கணவனைத் தெரிந்து கொள்ளும் நிலை உண்டாயிற்று. இது வளர்ச்சியடைந்தபோது புரோகிதர் மணங்களைக் கிரியைகளோடு நடத்திவைத்தனர். பெண்களின் நிலை ஒரு காலத்தில் உயர்வு பெற்றிருந்து, பின் தாழ்வு நிலை அடைந்து, மறுபடியும் நாகரிக காலத்தில் உயர்வடைந்த தென அறிகின்றோம். இடைக்காலத்தில் பெண்கள் நிலை வீழ்ச்சியுற்றதற்குக் காரணம் இவ்வுலகம், வாழ்க்கைப் போராட்டம், தகுதியுடையது நிலை பெறுதல், என்னும் இரண்டு இயற்கை விதிகளுக்கு உட்பட்டுச் செல்கின்றது. வலியது மெலியதைக் கொன்று தின்னுதலை அல்லது வலியது மெலியதை அடக்கி ஆளுதலைக் காண்கின்றோம். வாழ்க்கைப் போராட்டத்தில் “வலிமையே நியாயம்”. இன்று வலிய சாதியார் மெலிய சாதியாரை அடக்கி ஆள்வதும் இவ்விதி பற்றியே. மக்கள் திருந்தாத காலத்தில் அவர்களின் உணர்ச்சி விலங்குகளின் உணர்ச்சி போலவே இருந்தது. ஆண் பெண் என்னும் இரு பாலாரில் பெண்களைவிட ஆண்களே உடல் வலியிலும் முரட்டுக் குணத்திலும் மிகுந்திருந்தார்கள். ஆகவே, அவர்கள் தம்மினும் மெலிந்த பெண்களை அடக்கித் தமது வாழ்க்கைப் போராட்டத்துக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள். மக்களின் உள்ளம் பண்பட்டு அறிவு ஓங்கிய காலத்தில், அவர்களிடையே நியாய உணர்ச்சி தோன்றிற்று. அக் காலங் களில் அவர்கள் ஆடவரைவிடப் பெண்களே உலகுக்குப் பயனுள்ளவர்கள் என உணர்ந்தார்கள். அப்பொழுது பெண்கள் படிப்படியே எல்லா அதிகாரங்களையும் பெற்று விளங்கினார்கள். கிரேக்கர் உரோமர்களின் திருமணம் கிரேக்க நாட்டில் திருமணம் தனிப்பட்ட உரிமையுடையது மாத்திரமல்லாமல், அரசாங்கத்தோடு சம்பந்தப்பட்டதாகவும் இருந்தது. இஸ்பாட்டாவில், இதன் தொடர்பான சட்டங்கள் இருந்தன. இலைகர்கஸ் (Lycurgus) என்பவரின் சட்டப்படி உரியகாலத்தில் மணஞ்செய்யாதவர் மீதும், மிகவும் காலஞ் சென்று மணஞ் செய்பவர்கள் மீதும், இசைவில்லாத மணஞ் செய்தவர்கள் மீதும் வழக்குத் தொடரக்கூடியதாகச் சட்டம் இருந்தது. ஒவ்வொருவரும் நல்ல குழந்தைகளைப் பெற்று நாட்டுக்கு அளிக்க வேண்டுமென்பதே அக்காலக் கொள்கை. மணஞ்செய்வது குழந்தைகளைப் பெறுவதற்கு மாத்திரம் என்று கருதப்பட்டது. ஒரு பெண் தன் கணவன் மூலம் குழந்தைகளைப் பெற இயலாதவளாயிருந்தால், அவள் இன்னொரு வனைச் சேரலாம் என்று மாத்திரமல்ல, சேரவேண்டுமென்று சட்டம் கட்டாயப்படுத்திற்று. பிளாற்றோ என்பவரின் சட்டப்படி, முப்பத்தைந்து வயதுக்கு முன் மணம் செய்து கொள்ளாதவர் கடுமையாகத் தண்டிக்கப்பட லாம். பெண்ணை மனைவியாகத் தெரிவது நாட்டின் நலனைக்கருதியே யன்றிச் சொந்த நலன் கருதியன்று என அவர் கூறியுள்ளார். திருமணம் புனிதமுடையது திருமணம் சந்ததிகளைத் தோற்றுவிக்கும் நோக்கமாகத் தோன்றியது. எல்லா மக்களும் திருமணத்தைப் புனிதமுடையதாகவே கொண்டு வருகின்றனர். விலங்குகள், பறவைகள் முதலிய கீழ் இன உயிர்கள் சந்ததியைத் தோற்றுவிக்கும் காலத்திலன்றி ஆண் பெண் சேர்க்கை செய்வ தில்லை. கீழ் நிலையில் உள்ள மக்களிடையில் இவ்வழக்கே நிலைபெறு கின்றது. மக்கள் நாகரிகம் என்னும் போர்வையில் செயற்கையாக வாழத் தொடங்கியபோது, ஆண் பெண் சேர்க்கையை இன்பத்துக்குரியது எனக் கொண்டு அதில் அழுந்துவாராயினர். இதற்காகக் கொக்கோகம் போன்ற இன்ப நூல்கள் எழுதப்படலாயின. அந்நூல்கள் எப்படியிருக்கின்ற தென்றால், இவ்வாறு கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்டு (தூக்கிலிட்டு) மனிதன் சாகலாம் என்பதுபோல வென்க. மனிதன் ஆண் பெண் சேர்க்கையில் செலவிடும் ஆற்றலைத் திரட்டி, வேறு வழியில் செலவிடுவதால் பெரிய காரியங்களைச் சாதிக்கலாம் எனக் கூறப்படுகின்றது. சைன, பௌத்த, கிறித்துவத் துறவிகள் கல்வித் தொடர்பாக அதிகவேலை செய்ததற்குக் காரணம் இதுவேயாகும். நாட்டின் முன்னேற்றத்துக்குத் தாயே காரணம் பிள்ளைகளின் வளர்ச்சிக்கும் நற் பழக்கங்களுக்கும் தாயே பொறுப்பாக இருக்கின்றாள். அவள் குழந்தைகளின் உடல் வளர்ச்சியைக் கவனிப்பது போல, அறிவு வளர்ச்சியையும் கவனிக்கக்கூடிய நிலையில் இருப்பாளேயாயின் அவள், குழந்தைகளின் மனத்தையும் மாற்றிவிடலாம். இரண்டு தலைமுறைகளில் இவ்வுலகில் போர்கள் தலைகாட்டாமல் ஒழிந்துவிடும். வாழ்க்கையின் மத்திய இடம் வீடு. வீடுகளில் தோன்றும் நாகரிகமே ஒரு சாதியாரின் நாகரிகமாக வளரும். ஒரு சாதியார் நாகரிகம் அடைந்து முன்னேறுவதற்குத் தாயே காரணம். கிழக்குத் தேசப் பெண்கள் கீழ் நாட்டுப் பெண்களும், மேல் நாட்டுப் பெண்களும் தலைமுறை யாக வரும் பரம்பரைப் பழக்கங்களாற் கட்டுப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் நீண்டகாலமாகத் தமது பொருளாதாரத்துக்கும் பாதுகாப்புக்கும் தம் கணவரையே நம்பி வருகின்றார்கள். அவர்கள் இவ்வாறு ஒதுக்கப்பட் டிருப்பது மேல் நாட்டவர்களுக்கு அடிமை வாழ்வாகத் தோன்றும். பெண் களை அறியாமையில் வைத்திருப்பதால் பல தீமைகள் உண்டாகும். எகிப்தியப் பெண் தனது குழந்தைக்குக் கண்ணூறு படாதிருக்கும்படி அதற்குக் கந்தைகளை உடுத்திருக்கிறாள். சீனத்தாய், தனது ஆண் குழந்தையை பெண் குழந்தையென்று தெய்வங்கள் நினைக்கும்படி அதன் காதைக் குத்திவளையம் இடுகிறாள். அவள், சமயச் சட்டங்களால், கணவன், தந்தை, சகோதரன் போன்ற ஆடவருக்கு அடங்கி நடக்கவும், அவர்களைக் கடவுளாக நினைத்து நடக்கவும் பழக்கப்பட்டுள்ளாள். அதனால் அவள் தானாக ஒன்றை நினைக்கும் ஆற்றலை மறந்துவிட்டாள். அவளைக் கட்டுப்படுத்தி வைக்க வேண்டுமென்று சமயச் சட்டம் சொல்லுகின்றது. அவளுக்குத் தனது குழந்தைகளையும், கிராமப் பெண்கள் சிலரையும், அவர்கள் வீடுகளையுமே தெரியும். அவள் ஒன்றைப் பற்றி யோசனை செய்யாதிருக்கும்படி பழக்கப்பட்டுள்ளாள். அதனால் அவள் தன்னால் நினைக்க முடியாதென நம்புகின்றாள். பள்ளிக்கூடத்தில் படித்து வெளி யுலகத்தை அறிந்த பெண்கள் தமது கணவரால் வற்புறுத்தப்படும் இவ்வகை வாழ்க்கையால் துன்புறுகின்றனர். சிறைக் கூடத்தில் இருப்பதாகவே அவர்கள் உணருகின்றனர். ஒரு மிருகத்தைக் கட்டி அவிழ்ப்பவனைப் போல, அவளுக்கு அவள் கணவன் தோன்றுகின்றான். பெண்கள் ஆண்களுக்குக் கீழ்ப்படிதல் தொடக்கத்தில் கணவன் மனைவியருக்குள்ள கடமைகள் பிரிக்கப் பட்டிருந்தன. பெண், வீட்டிலுள்ள கடமைகளைச் செய்தாள். ஆடவன் வெளியிலுள்ள சில கடமைகளைப் பார்த்து வந்தான். இதனால் பெண் தாழ்ந்தவள், கணவன் உயர்ந்தவன் என்றாவது, பெண் உயர்ந்தவள், கணவன் தாழ்ந்தவன் என்றாவது கருத்து உண்டாகவில்லை. இருவரும் சமமான வர்கள் என்னும் கருத்தே உண்டாயிருந்தது. முற்காலங்களில் பெரும்பாலோர் அடிமைகளாகவே இருந்தனர். பெண்களும் அப்படியே. உலகநீதி, வலிமையில் தான் கட்டப்பட்டிருக் கின்றது. உலகத்தில் அடிமைகள் அடிமைகளல்லாதார் என இரண்டு பிரிவுகள் இருந்த ஒரு காலமுண்டு. மிக நாகரிகமடைந்த மக்கள் உள்ளத்திலும் இதுவே நியாயமான ஒழுங்குபோலத் தோன்றிற்று. ஆனால் அது நியாய மானதன்று. இதுபோலவே பெண்களை அடிமைப்படுத்துவது உலக வழக்க மாகவிருந்தது. பெண்கள் அடிமைப்படுத்தப்படாமல் இருப்பார்களேயானால், அது இயற்கைக்கு மாறுபட்டது எனத் தோன்றலாம். பெண்கள் வலிமையி னால் அடக்கப்பட்டிருக்கவில்லை. பெண்களே தாம் அடங்கியிருக்க விரும்புகிறார்கள். அவர்கள் அதைப்பற்றி வெறுப்புக் கொள்ளவில்லை. அவர்கள் அதற்கு இணங்கி ஒழுகுபவர்களாயிருக்கின்றனர். ஆகவே பெண்கள், ஆண்களுக்கு அடங்கி நடத்தல் தான் இயற்கை விதியெனப் பலர் கூறலாம். உண்மை அவ்வாறன்று. பெண்களின் ஒழுக்கம் ஆண்களுக்கு முற்றும் மாறுபட்டது என்று கொள்ளும் முறையில், எல்லாப் பெண்களும் இளமை முதல் பயிற்றப்படுகின்றார்கள். அவர்களுக்குச் சுயபுத்தி, சுய அதிகாரம், சுய பாதுகாப்பு இல்லையென்றும், அவர்கள் பிறருக்கு அடங்கி நடக்க வேண்டுமெனவும் உள்ளத்திற் கொள்ளும்படி பழக்கப்படுகின்றனர். எல்லா நீதி நூல்களும், எல்லா உணர்ச்சிகளும், அவர்கள் மற்றவர்களிடத் தில் தங்கி வாழவேண்டும் என்னும் கருத்தையே வற்புறுத்துகின்றன. பெண்களை அறியாமையில் அமிழ்ந்தும்படி செய்து, அவர்களை அடிமைகளாக இருக்கும்படி ஆடவர் செய்தார்களேயன்றிப் பெண்கள் ஆண் களுக்கு அடங்கிவாழ இணங்குகிறார்கள் எனக் கூறுதல் உண்மையாகத் தோன்றவில்லை. பெண்களுக்கு விடுதலை வேண்டும்; பெண்களுக்கு ஆட்சியிற் பங்கு வேண்டும்; அரசாங்க சபைகளுக்கு உறுப்பினரைத் தெரிவ தற்குப் பெண்கள் தமது விருப்பைத் தெரிவிக்கும் (ஓட்டு) உரிமை வேண்டும் என்னும் கிளர்ச்சிகள் உண்டாயிருந்த போதெல்லாம், அதனை ஆதரித்துப் பெருந் தொகையான பெண்கள் திரண்டார்கள். இதனால் பெண்களிடத்தில் ஆண்களுக்கு அடங்கி நடக்க வேண்டுமென்னும் இயல்பான மனப்பான்மை இல்லையென்றும் ஆடவர், அவர்கள் அடங்கி நடக்கும்படி, சமயம் என்றும், நீதி என்றும் பெயர் கொடுத்துப் பல கயிறுகளால் அவர்களைக் கட்டி வைத்துள்ளார்கள் என்றும் நமக்கு நன்கு விளங்குகின்றதன்றோ? இந்திய நாகரிகத்திற் பெண்கள் நிலை இருக்கு வேதத்தின் சர்வானுக்கிர மணிகையில் இருபது பெண் புலவர்கள் வரையிற் காணப்படுகின்றனர். தமிழ் இலக்கியங்களிலும் பல பெண் புலவர்களின் பெயர்கள் காணப்படுகின்றன. சாளுக்கியர் ஆட்சியில் (கி.பி.980-1160) பல பெண் ஆட்சித் தலைவர்களும் (Governors) அதிகாரிகளும் இருந்தார்கள். அக் காலத்தில் பெண்கள் இராணுவப் பயிற்சி பெற்றார்கள். அவர்கள் அரசரின் மெய்காப்பாளராக இருந்து வந்தனர். அவர்கள் வில்லைப் பயன்படுத்த நன்கு பயிற்சி பெற்றிருந்தனர். அரச குடும்பப் பெண்கள் ஆபத்துக் காலங்களில் ஆயுதந்தாங்கி வீடுகளைக் காத்தார்கள் என்று மத்திய காலத் தென்னிந்தியப் பட்டையங்கள் ஒன்றிற் காணப்படுகின்றது. கன்னடப் பெண்கள் இம் முறையில் சிறந்து விளங்கினர். மைசூரில் சித்தங்காலி என்னும் இடத்தில் ஓர் வீரப்பெண் கிராமத்தில் நிகழ்ந்த போரில் கி.பி.1041-இல் மாண்டாள். 1264-இல் வீரப் பெண் ஒருத்தி, கொள்ளைக்காரனை மடக்கி அடித்ததற்காக மூக்கு அணி ஒன்று வீரப் பதக்கமாகப் பெற்றாள். நில்கொண்ட என்னும் இடத்தில் காணப்பட்ட பட்டையமொன்றில் ஒரு சிற்றரசுக்குரிய இராணி, படை ஒன்றை நடத்திச் சென்ற நிகழ்ச்சி குறிப்பிடப்பட்டுள்ளது. அவள் 144இல் தனது தந்தையைக் கொன்ற பகைவரைப் பழி வாங்கும் பொருட்டுப் புரிந்த போரில் மாண்டாள். இராசபுத்திர குடும்பப் பெண்கள் வாளும், ஈட்டியும் பயன்படுத்தினர். அவர்கள் படையை நடத்திச் செல்லக்கூடியவர்களாகவும், வேண்டிய போது ஆட்சியை நடத்தக்கூடியவர்களாகவும் இருந்தனர். கூர்மதேவி என்னும் அரசி, தன்னுடைய கணவன் இறந்தபின் இராச்சியத்தை நடத்தி, குதாம் உத்தின் என்பவனின் படையைச் சிதற அடித்தாள். யவாகிஹிர் தேவி என்பவள் தனது கணவனின் மரணத்துக்குப்பின் போர் முனையின் முன்னணியில் நின்று போர்செய்து மடிந்தாள். இராசபுத்திரர் வரலாற்றில் இவ்வகை நிகழ்ச்சிகள் பல காணப்படுகின்றன. பெண்களுக்கு இராணுவப் பயிற்சி அளிக்கும் வழக்கம் மராட்டிய அரச குடும்பங்களிலும் இருந்து வந்தது. படையை நடத்துவதற்குக் கணவன் அல்லது புதல்வன் இல்லாதபோது, அரசியே படையை நடத்திச் சென்றாள். கோலாப்பூர் சமஸ்தானத்தைத் தாபித்த தாதாபாய் என்பவள், ஆட்சி நடத்தியதோடு தானே படையையும் நடத்திச் சென்றாள். இவளுக்கு இலக்குமிபாய் என்பவள் படைத் தலைமை வகித்துத் தனது வீரத்தைக் காண்பித்தாள். புத்தர் கால இலக்கியங்களில், பெண்கள் நூல் நூற்றல், நெசவு செய்தல், கம்பளி நெய்தல், துணிக்குச் சாயமூட்டுதல் முதலிய தொழில்களால் வருவாயை உண்டுபண்ணிக் கணவரின் வறுமையைப் போக்கினார்கள் என்று கூறப்பட்டுள்ளது. நூல் நூற்றல் பெண்களின் தொழிலாக நீண்டகாலம் இருந்து வந்தது. பெண்களும் மறுமணமும் உயிர்ப் படைப்புக்களின் நோக்கம் சந்ததிகளைப் பெருக்குவது என, முன் ஓர் இடத்திற் கூறியுள்ளோம். உயிர்களில் ஆண் பெண் என்னும் வேறுபாடுகளும் சந்ததியைப் பெருக்குவதற்காகவே உண்டாகியிருக் கின்றன. சில உயிர்களில் ஆண், பெண் சேர்க்கையின் பின் மடிந்து விடு கின்றது. இதற்கு எடுத்துக்காட்டுத் தேனீ. உயிர்கள் சந்ததியைப் பெருக்கு வதாகிய இயற்கை விதிக்கு மாறாக எழுந்ததே விதவைகளின் விவாக மறுப்பாகும். இச்செயற்கைக் கட்டுப்பாடு இயற்கை விதிக்கு மாறுபட்டது. இந்திய நாட்டில் விதவைகள் கொடுமை அடைந்து வருவதுபோல, வேறெந்த நாட்டிலும் அடைந்ததில்லை. விதவைகள் உடன்கட்டை ஏறவேண்டும், அல்லது வாழ்நாள் முழுவதும் பிரமச்சாரணி விரதங்காக்க வேண்டுமென, இந்தியரின் ஒரு சாராருடைய சமய நூல்களில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. பிரமசாரிணியைப் போல, அவள் வெற்றிலை போட்டுக் கொள்ளக்கூடாது; வெண்கல வட்டிலில் உணவு கொள்ளக்கூடாது. அவள் ஒரு நாளில் ஒரு முறை மாத்திரம் உண்ண வேண்டும்; இரண்டுமுறை உண்ணுதலாகாது; கட்டிலில் படுத்தல் ஆகாது; வாசனைப் பொருள்களைப் பயன்படுத்தல் ஆகாது. அவள் தினமும் இறந்த கணவனுக்கு அமுதுபடைத்தல் வேண்டும். இவ்வகையான கொடிய சட்டங்கள் வேத காலத்தில் இருக்கவில்லை. கணவனை இழந்த பெண், கணவனின் சகோதரனை மணந்தாள். இது அக் காலத்தில் பொது வழக்காக விருந்தது. திவாரா என்பதற்கு இரண்டாவது கணவன் என்று பொருள். இச் சொல் பெண்ணின் கொழுநனைக் குறிக்கின்றது. பிணத்தைக் கொளுத்துஞ் சமயத்தில் இறந்தவனின் சகோதரன் கொழுந்தியின் கையைப் பிடித்து அவளைத் தனது மனைவியாகும்படி கேட்டான். இறந்தவனின் மனைவி, அவன் சகோதரனை சேர்தலைப்பற்றி வேதங் கூறுகின்றது. தைத்திரிய சங்கிதை ஒரு மனைவி, ஒரே காலத்தில் இரண்டு கணவரை வைத்திருத்தல் தகுதியன்று எனக் கூறுகின்றது. இக்கருத்து ஐதரேயப் பிராமணத்திலும் காணப்படுகின்றது. மாபாரதத்தில் பெண்களின் மறுமணத்தைத் தடுக்கும் சில சட்டங்கள் எழுந்தன என்று தெரிகிறது; ஆனால் வேத காலத்தில் பெண் களுக்கு மறுமணமென்பது சர்வ சாதாரணமானது. மாபாரதத்தின் சாந்தி பருவத்தில் பெண்களுக்கு மறுமணஞ் செய்தல் இயல்பு என்று கூறப்பட் டுள்ளது. யாக்ஞவல்கி, யாருக்கும் சொந்தமல்லாதிருக்கும் பெண்ணை (விதவையை) மணம் முடிக்கும்படி கூறுகின்றார். இதிகாச காலத்தில், மணம் செய்து கொள்ளப்படும் பெண், கன்னியாக இருக்க வேண்டுமென்னும் கட்டாயம் இருக்கவில்லை. கிருட்டிணன், கொல்லப்பட்ட நரகனின் பெண் களைச் சேர்ந்தான். திரிசங்கு, தான் கொன்ற விதர்ப்ப அரசனின் மனைவியை மணந்து இரண்டு புதல்வர்களைப் பெற்றான். தமயந்தி இன்னொருவனின் மனைவியாக விருந்தாள் என்பதை அறிந்தும், இருதுபன்னன் அவளை மணக்க விரும்பினான். இதிகாச காலத்தில் மறுமணங்கள் புதுமையானவை யல்ல. பழைய நூல்கள், பழம் போக்குடைய புரோகிதரால் திருத்தப்பட்ட பின்பும், விதவைகளின் மணத்தைக் குறிப்பிடும் நிகழ்ச்சிகள் காணப்படுதல் வியப்புக்குரியதே. வேதகால முடிவில் பெண்களின் மறுமணம் இழிவாகக் கருதப்பட லாயிற்று. ஒருமுறை மணஞ்செய்தவளை மணக்கும் ஒருவன் பாவியாவான் என ஆபத்தம்பர் கூறியுள்ளார். ஆபத்தம்பர் காலத்தும் விதவைகளின் மணத்தைத் தடுப்பதற்கு எத்தனங்கள் நடந்துவந்தன வென்றும் தெரிகின் றது. விதவை வயிற்றில் பிராமணன் மூலம் பிறப்பவன் பிராமணன் ஆவான் என்றும், அவன் வாணிகம் செய்து வாழும் பிராமணனை ஒப்பத் தாழ்ந்தவ னாகக் கருதப்படுவானென்றும் மனு கூறியுள்ளார். மறுமணம் மூலம் விதவை வயிற்றில் பிறந்தவனுக்குத் தந்தையின் சொத்தில் நாலிலொன்றுக்கு உரிமையுண்டு எனக் கௌதமர் கூறியுள்ளார். வசிட்டரும், விட்டுணுவும் விதவை வயிற்றில் மறுமணத்தாற் பிறக்கும் பிள்ளைகள் வளர்ப்புப் பிள்ளை களுக்குச் சமமானவர்கள் எனக் கூறியுள்ளார்கள். ஒரு பெண் வலிதில் கவரப்பட்டுக் கிரியைகள் மூலம் மணஞ்செய்து கொடுக்கப்படாவிட்டால், அவள் இன்னொருவனுக்குக் கொடுக்கப்படலாமென்று வசிட்டர் கூறி யுள்ளார். கணவனிருக்கும்போது, பெண் கிரியைமூலம் மாத்திரம் மணஞ் செய்யப்பட்டிருந்து உண்மையான மணம் (ஆண், பெண் சேர்க்கை) நடவா விட்டால், அவள் மறுபடியும் மணக்கப்படலாம் என ஆபத்தம்பர் கூறி யுள்ளார். அயலூருக்குச் சென்ற கணவன், ஐந்து ஆண்டுகள் வரையும் திரும்பி வராவிடின், அவள் வேறு கணவனை மணக்கலாம்; கணவன் இறந்தபின் பிராமண வகுப்பினள் ஐந்து ஆண்டுகள் கழித்தும் வைசியப் பெண் நான்கு ஆண்டுகளுக்குப் பின்னும், சூத்திரப் பெண் மூன்று ஆண்டுகள் கழிந்தும், மணக்கலாம் என அவரே கூறியுள்ளார். இதனால் கணவன் இறந்த பெண்கள் மாத்திரமல்லர்; கணவனை இழக்காத பெண்களும் மறுமணம் செய்யலாம் என்னும் சட்டங்கள் இருந்தனவென்று தெரிகிறது. கலியாண நீக்கம் “மோக்ஷம்” எனப்பட்டது. நாரதர் சொல்லும் சட்டம் வருமாறு: “கணவன் வெளிநாட்டுக்குச் சென்று திரும்பாவிடில், பிராமணப் பெண் எட்டு ஆண்டுகள் காத்திருக்கவேண்டும். அவளுக்குப் பிள்ளை இல்லாவிட்டால் நான்கு ஆண்டுகள் பொறுத்திருக்கலாம். பிள்ளையுள்ள சத்திரியப் பெண் நான்கு ஆண்டுகள் காத்திருக்கலாம். அதன்பின் அவள் இன்னொருவனை மணக்கலாம். பிள்ளையுள்ள வைசியப் பெண் நான்கு ஆண்டுகளும், பிள்ளையில்லாதவள் இரண்டு ஆண்டுகளும் பொறுத் திருக்கலாம். சூத்திரப் பெண் காத்திருக்க வேண்டியதில்லை. இது பிரசாபதி யின் சட்டம்.” இக் காரணங்களால் மறுமணம் குற்றமாகாது. நாரதர் கூறுவது: “பெண், சந்ததியைப் பெருக்குவதற்காகப் படைக்கப் பட்டவள். பெண்வயல்; ஆண் விதையை விதைப்பவன். விதையில்லாத வனுக்கு வயலைக் கொடுக்கக்கூடாது. விதையில்லாதவன் வயலை ஆளுவ தற்குத் தகுதியற்றவன். கணவனிறந்தபின் தன் கொழுநனை அலட்சியஞ் செய்து அயலானைச் சேர்பவள் கெட்டவளாவாள்.” சாதகக் கதைகளில் மறுமணங்களைப் பற்றிய வரலாறுகள் காணப் படுகின்றன. கோசல தேசத்தரசன் காசி தேசத்தரசன் மனைவியை மணந்தா னென்று அசதரூப என்னும் சாதகம் கூறுகின்றது. மரண தண்டனை விதிக்கப் பட்ட சகோதரன், கணவன், மகன் என்னும் மூவரில், “புதிய கணவனைத் தேடலாம்; புதிய புதல்வனைப் பெறலாம்; சகோதரனைப் பெறுதல் முடி யாது” எனக் கூறி அவனுடைய விடுதலைக்காக மன்றாடிய பெண்ணைப் பற்றி உச்சிங்க சாதகம் கூறுகின்றது. குப்த அரசர் காலத்தில் விதவையை அவள் கொழுநன் மணக்கும் வழக்கு இருந்தது. சந்திர குப்தனின் மகனாகிய விக்கிரமாதித்தன் தனது தமையன் இராம குப்தனைக் கொன்று அவன் மனைவி துருவ தேவியைத் தனக்குப் பரியாக்கினான். துல்பகன் என்னும் அரசன், தன் மனைவிமீது ஆசை கொண்டிருப்பதை அறிந்த ஒரு செல்வ வணிகன், அவளை அவ்வரசனுக்கு மணஞ் செய்து கொடுத்தானென்று இராச தரங்கிணி என்னும் நூல் கூறுகின்றது. மனுகாலத்துக்கு முன், விதவைகள் கடுந்தவம் செய்யவேண்டுமென்னும் சட்டம் இருக்கவில்லை. இவ்வகைச் சட்டம் வேத காலத்தில் இருக்கவும் இல்லை. பழைய நீதி நூல்களை எழுதிய கௌதமர் அதைப்பற்றிக் குறிப்பிடவில்லை. போதாயனரும், வசிட்டரும், அவர்கள் சிலகாலம் கட்டுப்பாடாக வாழவேண்டுமெனக் கூறுகின்றனர். அவர்கள் ஓர் ஆண்டுக்கு விதவைகள், தேன், இறைச்சி, வெறிதரும் குடிவகைகள், உப்பு முதலியவைகளை நீக்கி நிலத்தில் நித்திரை கொள்ள வேண்டுமெனக் கூறியுள்ளார்கள். மௌத்கலியர் என்பவர், அவர்கள் அவ்வாறு ஆறு திங்கள் செய்தால் போதுமானது என்று கூறியுள்ளார். அக் காலத்தின் பின் அவள் கொழுநனைச் சேர்ந்து பிள்ளைகளைப் பெறலாம். பெண்கள் கல்வியே உலக முன்னேற்றம் பெண்களுக்குக் கல்வி கூடாது; அவர்களின் கல்வி என்பது ஆடவருக்குக் கீழ்ப்படிந்து நடப்பதே என்னும் கொள்கை விரைவாக மறைந்து வருகின்றது. மணமாகுமுன் தந்தைக்கும், மணமானபின் கணவ னுக்கும், கணவனிறந்த பின் மகனுக்கும் அடங்கி நடப்பதே பெண்கள் கடைத்தேறுவதற்கு வழி என நீண்ட காலம் நம்பப்படுவதாயிற்று. பெண் களுக்குக் கல்வி கூடாது என்னும் கருத்து அமெரிக்கா, இங்கிலாந்து முதலிய இடங்களிலும் இருந்து வந்தது. ஜப்பானிலும் பெண்கள் சிலரே ஆரம்பக் கல்வி கற்க அனுமதிக்கப்பட்டார்கள். இந்நிலை சென்ற நூற்றாண்டின் பிற் பகுதி வரையில் ஜப்பானில் நிலவிற்று. அதன் பின் பெண்கள் ஆண் களுக்குத் தாழ்ந்தவர்கள் என்னும் கொள்கை கைவிடப்பட்டது. இன்று ஆயிரக்கணக்கான ஜப்பானியப் பெண்கள் கல்லூரிகளிலும் கலாசாலை களிலும் கல்வி கற்று வருகின்றார்கள். அங்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன் உண்டான விழிப்பு இன்று இந்தியாவில் உண்டாகவில்லை. எண்ணம், புத்தி, ஒழுக்கங்களை வளர்ப்பதற்கு ஆணுக்காயினும் பெண்ணுக்காயினும் கல்வி தேவை. விதைபோன்ற குழந்தை வளர்ந்து மரம்போல ஆவதற்கு, அல்லது புழுப்போன்றுள்ள குழந்தை வளர்ந்து மனிதன் போல விளங்குவதற்குக் கல்வியே துணைபுரிகின்றது. இவ்வகையான உதவி ஆணுக்காவது பெண்ணுக்காவது மறுக்கப்படுதல் கூடாது. கல்வி நம்மை ஆள்வதற்கும், நம் போன்ற பிறரை ஆள்வதற்கும் பயன்படுகின்றது. இன்று குடியாட்சிக் காலம். இன்று ஆளும் உரிமை எல்லா மக்களின் உரிமையாக மாறிக் கொண்டு வருகின்றது. இவ்வாறிருக்கும் போது பெண்ணாவது ஆணாவது தனது உரிமையைப் பயன்படுத்தாவிடில் யாது பயன்? பொதுமக்கள் எவ்வளவு கல்வியறிவுடையவர்களாகின்றார்களோ, அவ்வளவுக்கு ஆட்சி நிலை உயர்கின்றது. எங்குச் சுயஆட்சி வேண்டப்படுகின்றதோ, அங்கெல் லாம் எல்லா மக்களுக்கும் கல்வி அவசியமாகின்றது. இந்திய நாட்டில் மக்களில் பாதித் தொகையினர் பெண்பாலினர். அவர்கள் கல்லாதவர்களாயும், அறியாமையுடையவர்களாகவும் இருக்க முடியாது. மக்கள் கல்வியறிவுடையவர்களாக இருந்தால் மாத்திரம் குடி ஆட்சி நடைபெறும் என அரசியல் அறிஞர் கூறிகின்றனர். எப்பொழுதும் ஆடவன் கல்வியறிவுள்ள பெண்ணையே மணக்க விரும்புகிறான். நாள் முழுதும் உழைத்து ஓய்ந்த கணவனுக்குப் புத்திசாலி யான மனைவியோடு உரையாடுவது களையைப் போக்குவதா யிருக்கும். மனைவி படியாதவளாயும், கணவனுக்குப் புத்தி கூறமாட்டாத அனுபவமற்ற வளாயும், மூடத்தனமுடையவளாயும் இருப்பாளாயின், அவள் கணவனின் நட்பினளாயிருக்கத் தகுதியற்றவளாவாள். படிப்பதால் பெண் குழந்தை களை நேரான வழியில் பழக்குவாள். பெண்களுக்குக் கல்வி பயிற்றுவதால் நாம் படித்த குடும்பங்களை உண்டாக்குகின்றோம். பையன் ஒருவனைப் படிக்க வைப்பதால் நாம் படித்த ஒருவனை மாத்திரம் பெறுகின்றோம். பொருளாதார முறையிலும் பெண்களுக்குக் கல்வி இன்றியமையாதது. பெண்கள் கல்வி கற்பதால் பொருளுற்பத்திகளும், பொருள்களை வாங்கும் தகுதியும் அதிகரிக்கும். ஆகவே ஒரு நாட்டுக்குரிய பொருளுற்பத்தி முதலியன இரட்டிக்கும். ஆண் பெண் என்ற வேறுபாடு இன்றி எல்லோரும் தமது வாழ்க்கைக்குப் போதுமான பொருளீட்டக்கூடிய கல்வியை அளிப்பது அரசினரின் கடமை. ஒவ்வொரு கணவனும், தன் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் சரியான முறையில் கல்வி அளிக்கப்படுகின்றதா என்று கவனிக்க வேண்டும். கணவனின் மரணத்துக்குப்பின் பெண் ஆதரவற்றவளாகக் கூடாது; அவள் பிறர் கையை எதிர்பார்த்து வாழ்தல் கூடாது. ஆதரவற்ற காலங்களில் பெண் களுக்குக் கல்வியே ஆதரவளிக்கின்றது. பெண், விரும்பினால் மணஞ் செய்துகொள்ளாது வாழலாம். அப்போது அவள் தனது வாழ்க்கைச் செலவைத் தானே தேடுபவளாக விருத்தல் வேண்டும். பெண்ணுக்குத் தக்க கல்வியளிக்கா விட்டால் தந்தை தனது கடமையைச் செய்தவனாக மாட்டான். ஒரு நாட்டுக்குரிய மக்களின் ஒழுக்கத்தை உயர்த்தி அவர்களை மேல் நிலையில் வைத்தலால் கல்வி ஒவ்வொருவருக்கும் அவசியமானது. கல்வி, அறிவை வளர்ப்பது மாத்திரமல்லாமல் நேர்மை, பொதுத் தொண்டு களில் ஊக்கம் முதலியவைகளையும் கொடுக்கும். ஆடவர், பெண்களுக்குக் கல்வியளிக்க மறுத்து வந்தார்கள். அதற்குக் காரணம், அவர்கள் அறிவின் மேன்மையால் தமக்கு என்றும் கீழ்ப்படிந்து இருக்கமாட்டார்கள். என்ற சுயநலமேயாகும். இக்கருத்து இந்தியாவில் மாத்திரமன்று, உலகம் முழுமையிலும் இருந்தது. உரோமாபுரி யில் அரச குடும்பப் பெண்கள் சிலர் மாத்திரம் கல்வி கற்றார்கள். மற்றப் பெண்களுக்குக் கல்வி பயில இடம் கிடைக்கவில்லை; ஆண்களைப் போலவே பெண்களுக்கும் கல்வி வேண்டுமென வாதாடியவர் மார்ட்டின் லூதர். (கி.பி.1483-1546) வயான் ரெக்ஸ் என்பார் இக்கருத்துக்காக ஸ்காத் லாந்தில் வாதாடினார். பதினேழாம் நூற்றாண்டுக்கு முன் இங்கிலாந்தில் பெண்களுக்கெனத் தனிப்பள்ளிக்கூடங்கள் இருக்கவில்லை. பெண்கள் சிலர் கிறித்துவ மடங்களில் ஆரம்பக் கல்வி கற்க அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் ஆரம்பப் பாடசாலைகளிலும் உயர்தரப் பாடசாலைகளிலும் அனுமதிக்கப்பட்டனர். பிரிஸ்டல் என்னும் இடத்தில் 1627இல், முதல் பெண் பாடசாலை ஆரம்பமாயிற்று. அதனைக் கண்ட பொதுமக்கள் பெரிதும் வியப்படைந்தார்கள். லூதர் கி.பி. 1500 வரையில் எல்லோருக்கும் படிப்பு வேண்டுமெனச் சாதித்து வந்தார். ஆனால் 1870 ஆண்டிலேயே எல்லோருக்கும் கல்வி அவசியம் என்னும் கல்விச் சட்டம் நிறைவேறிற்று. அதன் பின்பே இங்கிலாந்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கல்வி கட்டாயமாக்கப்பட்டது. ஐரோப்பிய நாடுகளில் பெண்கள் நிலை இன்னும் மோசமாயிருந்து வந்தது. பெண்கள் வீட்டுக்குத் தலைமையாயிருந்து கணவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டுமென்னுங்கருத்து சர்மானியர் உள்ளத்திற் பதிந்திருந்தமையால், அவர்கள் பெண்களுக்கு உயர்ந்த கல்வி அளித்தார்கள். 1848க்குப் பின்பே பெண்கள் உயர்ந்த கல்விபெற அனுமதிக் கப்பட்டார்கள். இந்தியாவிலும் அங்குமிங்குமாகச் சில பெண்கள் கல்வி பயின்றிருந்தார்கள். ஆனால் அவர்களின் எண் மிகச் சில ஆகும். இருப தாம் நூற்றாண்டுக்கு முன், இந்தியாவில் பெண்கள் கல்விநிலை திருப்தியுற வில்லை. மற்ற நாடுகளில் நடப்பவை இந்திய மக்களின் கண்களைத் திறக்கச் செய்தன. இன்று பெண்களுக்கும் ஆண்களுக்கும் கட்டாய ஆரம்பக்கல்வி வேண்டுமென்னும் சட்டங்கள் செய்யப்படுகின்றன. இந்தியாவில் பெண்களுக்குச் சிறுவயதிலேயே மணம் செய்கி றார்கள். இது அவர்கள் படிப்பிற்கு இடையூராக இருக்கின்றது. முகமதியப் பெண்கள் வீட்டோடு இருக்கும் வழக்கம் இருந்து வருகின்றது. சில இந்துக் களிடையும் இவ்வழக்கம் உண்டு. இதனால் அவர்கள் பொதுப் பாடசாலை களுக்குப் போக முடியாமல் இருக்கின்றனர். குழந்தை மணமும், வாலிபத் தில் விதவையாதலும் படிப்பைத் தடுக்கும் இரண்டு தடைகளாகும். இந்தியாவில் ஒவ்வொரு ஆயிரம் பேருக்கும் எண்பது பேர் மாத்திரம் எழுத வாசிக்கக்கூடிய படிப்புள்ளவர்களாயிருக்கின்றனர். இந்தியாவைக் காட்டிலும் பர்மா படிப்பில் மேல் நிலை அடைந்துள்ளது. இதற்குக் காரணம் ஒவ்வொரு கிராமத்திலுமுள்ள பௌத்த மடங்களில் ஆண்களும் பெண் களும் கல்வி கற்பிக்கப்படுகிறார்கள். அதற்கு அடுத்தபடியில் கொச்சி, திருவிதாங்கூர், பரோடா முதலிய இராச்சியங்கள் உள்ளன. இவ்விராச்சியங் களையும் சீர்தூக்கிப் பார்த்தால் பெண் கல்வி அபிவிருத்தி மிக அற்பமே. ஆண்களில் நூற்றுக்குப் பதின்மர் வரையில் பள்ளிக்கூடஞ் சென்று கல்வி பயில்கிறார்கள். இதில் பெண்கள் மூன்று சதவீதத்தினரே பள்ளிக்கூடஞ் செல்கின்றனர். கொச்சியிலும் திருவனந்தபுரத்திலும் இரண்டு படித்த ஆடவருக்கு ஒரு படித்த பெண் இருக்கின்றாள். மலையாளத்திலும் கூர்க்கி லும் மூன்று படித்த ஆடவருக்கு ஒரு படித்த பெண்ணும், பரோடாவிலும் மைசூரிலும் ஐந்து ஆடவருக்கு ஒரு பெண்ணுமுளர். அமெரிக்காவில் ஒவ்வொரு பிள்ளையும் 14 வயது வரையும் பள்ளிக் கூடஞ் செல்லவேண்டுமெனச் சட்டமுண்டு. இங்கிலாந்தில் ஐந்து வயதுக்கும் 14 வயதுக்குமிடையிலுள்ள பிள்ளைகள் கட்டாயமாகப் பள்ளிக்கூடஞ் செல்லவேண்டும். உருசிய நாட்டில் எல்லா மக்களுக்கும் அறிவை வளர்க்கும் தாகமுண்டு. எல்லாக் கல்வி நிலையங்களிலும் ஆண்களைவிடப் பெண் களே அதிகம் காணப்படுகின்றனர். சோவியத் உருசியாவில் ஆரம்பக் கல்வி மாத்திரமன்று, உயர்தரக் கல்வியும் இலவசமாக அளிக்கப்படுகின்றது. சர்மனியில் பெண்களுக்குக் கட்டாயக் கல்வி 1931-இல் விதிக்கப்பட்டது. இத்தாலியில் பெண்களுக்குக் கலாசாலைப் படிப்பு மறுக்கப்பட்டுள்ளது. ஆகவே அவர்களுக்குச் சுகவழி, வீட்டு வேலைக்குரிய கல்வி முதலியன அளிக்கப்படுகின்றன. டென்மார்க்கில் இளம் பெண்களுக்கு வீட்டுச் சிக்கனம், தையல், சுகவழி முதலியவைகளைப் பயிற்றுவதற்குப் பள்ளிக் கூடங்கள் உண்டு. இம்முறையில் சிறுவர், சிறுமிகளைப் பயிற்றுவதற்கு நாட்டுப் பள்ளிக்கூடங்களும் உண்டு. டென்மார்க்கில் ஒரு பெண்ணுக்கு மணம் நிச்சயமானவுடன், அவள் வீட்டைச் செம்மையாக வைத்திருக்கும் பழக்கத்தைப் பயில்வதற்கு நாட்டு விடுதிக்கு ஓராண்டு காலம் அனுப்பப் படுவாள். சீனாவில் கல்வியின் பொருட்டு எத்தனங்கள் நடந்து வருகின்றன. அங்குப் பொதுப் பள்ளிக்கூடங்கள் அமைத்துப் பொதுக்கல்வி கற்பிக்கும் முயற்சி நடைபெறுகின்றது. பிரான்சில் ஆறு வயதுக்கும் 13 வயதுக்கும் இடையிலுள்ள ஆண் பெண் என்னும் இருபாலாருக்கும், முழுசேரப் கட்டாயக்கல்வி இருந்து வருகின்றது. அங்கு ஆரம்பக் கல்விக்கு மேலுள்ள கல்வியும் இலவசமாக அளிக்கப்படுகின்றது. எல்லா நாடுகளிலும் பெண் களுக்கும் ஆண்களுக்கும் ஆரம்பக்கல்வி இலவசமும் கட்டாயமுமாக இருந்து வருவதை அறிகின்றோம். இந்தியாவில் கல்வி மிகப் பிற்போக்கான நிலையில் இருந்து வருகின்றது. இது பெண்களிடையே பெரிதும் காணப்படுகின்றது. பெண் களுக்கு உரிய இடம் வீடுதான் என்னும் கருத்து மறைந்து, அதுவே வாழ்க் கைக்கும் உயர்வுக்கும் காரணம் என்னும் கருத்து உண்டாக வேண்டும். பெண்களைப் பற்றிய சமூகச் சட்டங்கள் மாற வேண்டும் அக்பர் இந்துச் சட்டத்தில் (இந்து லா) சில மாற்றங்களைக் கொண்டுவந்தார். அவர், விதவைகளை அவர்கள் விருப்பத்துக்கு மாறாக உடன்கட்டை ஏற்றுதல் கூடாதென்றும், பெண்கள் பதினான்கு வயதுக்கு முன்பும், ஆண்கள் பதினாறு வயதுக்கு முன்னும் மணஞ்செய்தல் கூடா தென்றும், மறுமணஞ் செய்தலில் தடை இருக்கக்கூடாதென்றும் சட்டம் செய்தார். இச்சட்டத்தைப் பழம் போக்குள்ள இந்துக்கள் எதிர்த்தார்கள். காலத்துக்கேற்ப நாம் நமது வாழ்க்கை முறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரு காலத்தில் சமூகக் கட்டுப்பாடுகள் சமயச் சட்டங்களால் கட்டுப் படுத்தப்பட்டிருந்தன. அப்பொழுது இந்தியாவில் கிராமங்கள் மாத்திரம் இருந்தன. கிராமப் பஞ்சாயத்தின் தீர்ப்பே கடைசி முடிவாக இருந்தது. ஒரு கிராமவாசி சமூகத்துக்குரிய சட்டத்தைக் கடந்தால் அவன் கிராமப் பஞ்சாயத்தில் சேரவும் முடியாது. அவனுடைய இன்பக் காலத்திலோ, அல்லது துன்பக் காலத்திலோ அவனுக்கு ஒருவரும் உதவி அளிக்கக் கூடாது. ஒருவனுக்கு வேண்டியவை எல்லாம் கிராமத்திலேயே அடங்கி யிருந்தன. ஆகவே ஒவ்வொருவனும் சமூகக்கட்டுபாட்டுக்கு அடங்கி யிருந்தான். தனிப்பட்டவனின் செயலுக்குச் சுதந்திரம் இருக்கவில்லை. எவனாவது தான் விரும்பிய தொழிலைச் செய்ய முடியாது. சாதியே அவனவன் தொழிலை முடிவு செய்தது. இன்று அவ் வகையான காலமன்று. இன்று புதிய, புதிய பொருள்களையும், இயந்திரங்களையும், நாடுகளையும் கண்டறியும் காலம். ஒரு இராச்சியமாவது தனிப்பட்ட முறையில் தனித் திருக்க முடியாது. பல தலைமுறைகளுக்கு முன் இருந்த கிராமங்கள் இன்று வேறு வகையில் மாறியுள்ளன. இன்று சமூகக் கட்டுப்பாடுகளுக்கு வலிமை யில்லை. நியாயம் கேட்டறியாமலே, பெரியவர்களுக்குக் கீழ்ப்படியும் காலம் மறைந்துவிட்டது. இந்துப் பத்திரிகையின் ஆசிரியராயிருந்த சுப்பிரமணிய ஐயர் ஒருமுறை கூறியுள்ளது வருமாறு: “இன்று எத்தனைப் பிராமணக் குடும்பத்தினர் வேதங்களிலும் ஸ்மிருதிகளிலும் சொல்லப்பட்ட கிரியை களைச் செய்கின்றனர். இந்தியா இனி ஒருபோதும் பழைய காலத்துக்குத் திரும்பிப் போகமாட்டாது. இது ஆங்கிலேயர் துரூயித்தியர் (Druid) காலத் துக்குப் போகமாட்டாதது போன்றது.” இன்று கைத்தொழில்கள் உள்ள பட்டினங்கள் பெருகியுள்ளன. கிராமத்திலிருந்து ஒருவன் வெளியேற்றப் பட்டால் அவன் பட்டினத்திலுள்ள தொழிற்சாலைகளில் வேண்டப்படு வான். பட்டினத்தில் குழாய்த்தண்ணீர் இருக்கிறது. ஆகவே, அவன் கிராமக் கிணற்றுக்குத் தண்ணீர் எடுக்கப்போக வேண்டியதில்லை. இவ்வாறு வாழ்க்கைமுறை விரைவில் மாறி வருகின்றது. ஐரோப்பிய நாகரிகத்தின் எதிரில் சாதிக் கட்டுப்பாடுகள் மறைந்து வருகின்றன. கூட்டுக் குடும்ப வாழ்க்கையும் மறைந்து செல்கின்றது. இவைகள் எல்லாம் காலத்துக்கு ஏற்ற மாற்றங்கள். எல்லா இயற்கையும் காலத்துக்குக் காலம் சிறிது சிறிதாக மாற்றமடைகின்றன. உயிரற்றவையே மாற்றமடைவதில்லை. புதிய ஆற்று நீர் ஓடிக் கொண்டிருக்கிறது; அதை மறித்து வைத்தால் அது தேங்கி அழுக் கடைகின்றது: இது போலேவே ஒரு சாதியும் அதன் வாழ்க்கையும். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் முதுமையை அடைகின்றோம். குழந்தைகள் சிறு பெண்களாகின்றனர்; சிறு பெண்கள் பெரிய பெண்களாகி முதுமையடைகிறார்கள். இம்மாற்றங்களுக்கேற்றவாறு நாம் நடந்து கொள்ளவேண்டும். எங்களில் பலர் உலகம் மாறவில்லை என நினைக் கிறார்கள்? அவர்கள் தமது மனதை இறுக மூடி வைத்திருக்கிறார்கள். அவர்கள் மனதில் புதிய கருத்துக்கள் நுழைய முடியாது. சீர்திருத்தத்தை நினைப்பதைப் போலப் பயம், அவர்களுக்கு வேறொன்றும் இல்லை. மனுஸ்மிருதி கி.மு.200இல் எழுதப்பட்டது. யாக்ஞவல்கியின் நீதி கி.பி.4-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. நாரத ஸ்மிருதி கி.பி.6ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இவை இருபதாம் நூற்றாண்டுக்கு ஏற்றனவா என்று நாம் நினைத்தல் வேண்டும். பழையன வெல்லாம் புதியனவற்றுக்கு இடம் கொடுக்கவேண்டும் என்னும் விதியை நாம் மறந்து விடுதல் ஆகாது. ஒரு காலத்தில் இந்தியா எல்லா நாடுகளிலும் பார்க்கச் சிறந்திருந்ததென்பது உண்மையே. இன்று இந்தியாவைவிட ஐரோப்பா எல்லா வகையிலும் சிறந்து விளங்குகின்றது. இந்தியாவின் பாதிச் செல்வநிலை பாதிக்கப்பட்டுள்ளது. பெண் களுக்கு உரிய இடம் வீடுமாத்திரம் என மக்கள் நினைப்பதே இதற்குக் காரணம். குழந்தை மணம் பெண்களின் கல்வியைக் கெடுக்கின்றது. இளமையிற் குழந்தைகளைப் பெறுதல், அவர்களின் சுக வாழ்வையும் வலிமையையும் கெடுக்கின்றது. இந்திய மக்களின் சராசரி வருவாய் மற்றைய நாடுகளைவிட மிகக் குறைவு. இதனைப் போக்குவதற்குப் பெருந் தொகைப் பெண்கள் அவரவர்களுக்கேற்ற வேலைகளைப் புரிதல் வேண் டும். இம்முறையில் ஜப்பான், உருசியா முதலிய நாடுகள் சிறந்துள்ளன. படித்த தாய், குழந்தைகளை நற்காரியங்களில் பழக்குவாள். “தாயைப்போற் பிள்ளை; நூலைப்போற் சீலை” என்பது பழமொழி. இன்று படித்த வகுப்பினரிடையே பெண்களைப் பற்றியே புதிய உணர்ச்சி வலுவடைந்து வருகின்றது. இந்தியாவில் மகளிரினும் பார்க்க ஆடவர் மதிப்படைந்த காரணம் இந்தியாவிலே தந்தை ஆட்சிக் காலத்தில் தந்தையே உயர்ந்த தலைவ னாகவிருந்தான். அவனே இறந்தவர் வணக்கத்துக்குரிய கிரியைகளைச் செய்தான். இறக்கும்போது அவன் தனது கடமையைத் தன் மூத்த மகனிடம் ஒப்படைத்தான். இறந்தவர் வணக்கத்தைப் பற்றிய இயற்கை விதி, இது வென மக்கள் நம்பத் தலைப்பட்டார்கள். இதனால் ஒவ்வொரு குடும்பத் திலும் உள்ள தந்தை, தனது கடமையைப் பார்ப்பதற்குப் புதல்வனே வேண்டுமென்று விரும்பினான். இதனால் பெண்கள் புதல்வர்களைப்போலச் சிறந்தவர்களாகக் கருதப்பட்டிலர். பெண்களைத் தாழ்வாகக் கருதும் கொள்கை, நாள்தோறும் பலவாறு வளர்ச்சியடைந்தது; குழந்தை மணம், பெண்கள் மறுமண மறுப்பு, பெண் கல்வி மறுப்புப்போன்ற தீமைகள் தோன்றின. இன்று ஐரோப்பிய நாகரிகத்தின் தொடர்பால் பெண்களை வீட்டுக்குள் அடைத்து வைத்தலும், அவர்களை அறியாமையில் ஆழ்த்து வதும் நாட்டின் பலவீனத்துக்குக் காரணம் எனத் தெரியவருகின்றன. சில காலத்தின் முன் பெண்களுக்குக் கல்வி ஆகாது என இருந்த கொள்கை இன்று வலி பெறவில்லை. பெண்களுக்குக் கல்வி, மறுமணம் போன்றன வேண்டுமென்றும், அவர்களை அடைத்து வைத்தல் கூடாதென்னும் கொள்கைகள் இருந்து வருகின்றன. பெண்கள் முன்னேற்றத்துக்கு மாறாக இருந்த பல கட்டுப்பாடுகளை ஆங்கிலக் கல்வி தகர்த்து வருகின்றது. ஆண் களுக்கு மறுமணம் அவசியமென்று கூறி, பெண்களுக்கு அது கூடாதென்று தடுத்தல் நியாயமற்ற செயலெனப் பலர் கருதுகின்றனர். ஒழுக்கம் பெண்களுக்கும் வேண்டும்; ஆண்களுக்கும் வேண்டும் ஒரு காலத்தில் ஆண் பெண் இருபாலாரும் ஒருவரினும் பார்க்க மற்றவர் உயர்ந்தவர் எனக் கருதாது, வாழ்க்கையின் கடமைகளை அவரவர் களுக்கு ஏற்றவாறு பிரித்துக்கொண்டு வாழ்க்கை நடத்தினார்கள் என ஓர் இடத்தில் கூறினோம். பிற்காலத்தில் பெண், கணவனுக்கு அடிமையைப் போல் அடங்கி நடக்கவேண்டுமென்றும், அவள் ஒரே கணவன் விரதமுடைய வளாயிருந்து தனது ஒழுக்கத்தைக் காக்கவேண்டுமென்றும், ஆடவனுக்கு ஒழுக்கம் அவசியமில்லையென்றும், அவன் தான் விரும்பிய பல பெண் களை மணந்து கொள்ளலாமென்றும் சமூக வழக்கங்கள் தோன்றலாயின. பெண்கள் ஆடவரின் இத்தவறான கருத்துக்களுக்கு மாறாகக் கிளம்பாதபடி பெண்ணின் கடமை கணவனின் விருப்பத்துக்கு இசைய ஒழுகுதலேயெனச் சமயச் சட்டங்களும் நீதிகளும் உண்டாயின. அவர்கள் கல்வி அளிக்கப் படாது இருளில் அடைக்கப்பட்டும் இருந்தனர். இன்று பெண்கள் உலகம் விழிப்படைந்துள்ளது. உலக மக்களில் பெண்களின் தொகை பாதியாகும். பெண்களுக்கும் ஆடவரைப் போன்ற சம உரிமைகள் இருக்கவேண்டு மென எல்லா நாடுகளிலும் கிளர்ச்சி நடைபெறுகின்றது. அதில் அவர்கள் வெற்றியடைந்துள்ளார்கள். ஒரு குடும்பத்தைக் கொண்டு இழுப்பதில் கணவனும் மனைவியும், ஒரு வண்டியை இழுக்கும் இரு எருதுகளைப் போன்று இருக்கிறார்கள். இவைகளில் ஒன்று செம்மையாக இழுக்காவிட்டால் வண்டி செல்லாது. பெண் ஒரே மணம் உடையவளாய் இருக்க வேண்டியது சட்டமானால், அதே விதி ஆண்களுக்கும் ஏன் இருக்கக்கூடாது என்னும் கேள்வி எழுகின்றது. பெண்கள் ஒரு கணவனையன்றி வேறு கணவனை விரும்பக் கூடாது என்னும் சட்டமிருக்குமானால், ஆடவர் பல பெண்களை விரும்ப லாம்; மணக்கலாம் என்னும் சட்டங்கள் இருப்பதும் ஒழுக்கக் கேடாகவே கருதப்படும். மகாத்துமா காந்தி ஓரிடத்திற் கூறியிருப்பது வருமாறு: “பெண் ஆணின் துணைவி. அவளுக்கு அவனைப்போன்ற மன ஆற்றல் உண்டு. அவளுக்கு அவன் முயலும் ஒவ்வொரு முயற்சிகளிலும் பங்கு பெறும் உரிமையுண்டு. அவளுக்கு அவனை ஒத்த சுதந்தரமுண்டு. தீய சமூகச் சட்ட பலத்தினால் மிக அறியாமையும் தகுதியின்மையுமுடைய ஆண்கள் தானும் பெண்களை அடக்கி ஆளுகின்றனர். அவ்வாறு அவர்கள் ஒரு போதும் செய்தல் கூடாது. எங்கள் இயக்கங்கள் பாதி வழியில் நின்று போவதற்குக் காரணம் பெண்களின் நிலைமையினால் ஆகும். எங்கள் முயற்சிகள் அதிக பலன் அளிப்பதில்லை. சோடியாக வாழும் இருவரில், ஒருவருக்கு மற்றவர் உதவியாயிருக்கின்றார். ஒருவரின் உதவியில்லாமல் மற்றவர் நிறைவடைதல் முடியாது. ஒருவரின் நன்மையைப் பாதிக்கக் கூடிய செயல் மற்றவரின் அழிவுக்கும் காரணமாகும்.” கமலாதேவி சடோபாத்தியாய கூறுவது வருமாறு: “கணவன் மனைவிக்குக் கண்டிப்பான சட்டதிட்டங்களை உண்டுபண்ணி விட்டுத் தான் நினைத்தபடி நடக்கலாம் என்னும் இக் காலக் கருத்து மிக ஆபத் தானது. இனிமேல் இருபாலாருக்கும் ஒரே வகையான நீதியே இருக்க முடியும். அதனைக் கடக்க முடியாது. ஒருவருக்குப் பிழையாகத் தோன்றுவது மற்றவருக்குச் சரியாக விருக்கமுடியாது. பிறப்பைப் போல இறப்பும் பொது வான நிகழ்ச்சி. ஆகவே கணவனை இழந்த பெண்ணைக் கீழ்மைப்படுத்தி அவளுக்குக் கொடிய சட்டங்களை விதித்தல் கூடாது. ஆண், பெண்கள் பலரை மணத்தலை அனுமதித்துப் பெண் ஒரு கணவனைத்தான் மணக்க லாம் என விதித்தலும் கூடாது. நாளை எழும் சட்டத்தில் இரு பாலாரும் ஒரே மணம்தான் செய்யலாம் என வருதல் வேண்டும். இருபாலாருக்கும் சில காரணங்களை முன்னிட்டு விரும்பினால் மணங்களை நீக்கிக் கொள்ளவும் அனுமதி வேண்டும்.”  பெண்கள் போராட்டம் (Women’s Struggle) வரலாற்றில் பெண்கள் பகுதி வரலாற்றுக்கு எட்டக்கூடிய காலம் முதல் பெண்களும் வரலாற்றின் பகுதியாக இருந்து வருகின்றார்கள். பெண்ணே வரலாற்றுக்கு ஆதாரமாக வுள்ளவள்; ஆயினும் அவள் வரலாறு இருளடைந்துள்ளது. அரசியர், கட்டழகியர், விலைமாதர், கடவுள்பக்தர்கள் போன்ற பெண்கள் சிலரே வரலாறுகளில் அங்கும் இங்கும் தோன்றுகின்றார்கள். மற்றைய பெண் சமூகத்தினரின் வாழ்க்கைச் செய்திகள் காலம் இன்னும் இருளில் மறைந்து கிடக்கின்றன. நமக்கு முற்பட்ட மக்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்று நமக்குத் தெரிகின்றது. காலந்தோறும் எவ்வாறு பொருளாதார மாறுதல்கள் உண்டா கின்றன; எண்ணங்கள், கல்விமுறை, போர் ஒழுங்கு, ஆட்சிமுறை போல்வன வெவ்வேறு காலங்களில் எவ்வாறிருந்தன என்பவைகளைப் பற்றியும் அறிகின்றோம். இவ்வகை மாற்றங்கள் உண்டாகின்ற காலங்களில் வீட்டில் வாழும் பெண்ணின் நிலை எவ்வாறிருந்ததென்பதை நாம் ஊகையினால் மாத்திரம் அறிய முடிகின்றது. ஆடவர் மகளிரின் தொழில்முறை, பழக்க வழக்கங்கள், வாணிகத்தின் பொருட்டு அவர்கள் பயன்படுத்திய பொருள்கள் போல்வன இக்காலச் சரித்திரக்காரரால் தெளிவுறுத்தப்பட்டுள்ளன. ஆனால் பெண்கள் முன்னேற்ற வளர்ச்சி பற்றிய செய்திகள் உய்த்தறிதல் அளவில் இருந்து வருகின்றன. ஆடவர் தாமே நாகரிகத்தை முன்னுக்குக் கொண்டு வந்தவர்கள் என்றும், பெண்கள் எப்பொழுதும் தமக்குப் பின்னால் தமக்காக அடுப்பை யும், சமையலையும், வீட்டையும் கவனித்துக் குழந்தைகளை வளர்த்து வந்தார்கள் என்றும் எண்ணுகிறார்கள். இக் கருத்து வரலாற்றில் முன்னும் இருந்தது, இன்னும் இருக்கின்றது. வரலாற்றாசிரியர் உள்ளத்தில் இக் கருத்துப் பதிந்திருந்தமையின் அவர்கள் பெண்களைப்பற்றி அதிகம் ஆராய்ச்சி செய்வதில் கவலை கொள்ளவில்லை. ஆடவர் மகளிர் ஒழுக் கங்கள், திருமண வழக்கங்களைப் பற்றிய ஆராய்ச்சிகள் தமது நூல்களில் தற்செயலாக எழும்போது மாத்திரம் அவர்கள் பெண்கள் தொடர்பான சில அடிக்குறிப்புகளை எழுதுவது வழக்கம். இவ்வாறு அவர்கள் செய்வதன் காரணம் அவர் எழுதும் நூல்கள் மனித வரலாறாகவிருப்பதினாலும், பெண்ணின் வரலாறாயில்லாமையினாலுமேயாகும். பெண்களும் ஆடவரை ஒத்த மக்கள் வகுப்பினரல்லவா? பஞ்சம், நெருப்பு, வெள்ளம், நோய் முதலியவகைகளால் ஆடவருக்குப் போலவே மகளிருக்கும் துன்பம் நேருகின்றது; இருபாலாருக்கும் ஒருவாறே குளிர் அடிக்கின்றது; வெயிலும் அவ்வாறே காய்கின்றது; உயிர் வாழ்க்கை, மகிழ்ச்சி, இன்பம், மரணம் முதலியனவும் ஒரே வகையாகவுள்ளன. இவைகளே மனித சமூகத்தின் வரலாறாயின் அதில் பெண்களை நீக்கிக் கூறவேண்டியதில்லை. நம் முன்னோர் குகைகளிலும் மரக்கிளைகளிலும் வாழ்ந்தபோதும், மண்ணினால் குடிசைகள் அமைத்த போதும், விலங்குகளுக்கு அஞ்சி நடுங்கியபோதும் ஆடவர், மகளிர் வரலாறுகள் ஒரே வகையாகவிருந்தன. கழிந்தகால மக்கள் வாழ்க்கையில் இவைகளல்லாத அடிப்படையான பல உண்மைகளும் இருந்தன. மனித வாழ்க்கை, புலப்படாத பல ஆற்றல்களால் கட்டுப்படுத்தப்பட்டு மனித எண்ணத்தின் வலிமையால் மாற்றமடைந்து வளச்சியடைந்தது. எழுத்து முறையான வரலாற்றுக்கு முற்பட்ட பழைய பண்படாத வாழ்க்கையோடு புதிய எண்ணங்களும் சேர்க்கப்பட்டன. ஒழுங்குபட்ட போர்முறை, பயிர்த்தொழில், மந்திரவித்தை முதலியன தோன்றியபோது பெண்களதும், ஆண்களதும் வாழ்க்கை முறைகள் வெவ் வேறு வகைகளில் பிரிந்து சென்றன. இவ்வகை மாறுபட்ட வாழ்க்கைகள், மக்கள் சமூகமாக வாழத்தொடங்கியது முதல் சமயத்தின் அதிகாரத்துட் பட்டது வரையில் ஆரம்பிக்கின்றன. அக்காலம் வரையில் ஆடவரும் மகளிரும் சேமமாக வாழ்ந்தனர். இருபாலாரின் வரலாறுகளும் ஒரேவகை யாக இருந்தனவென்பது உண்மையாகாது. பெண்களின் சமூகநிலை எப்பொழுதும் ஆடவரைவிட வேறுவகையாகவிருந்தது. இருபாலாரும் வெவ்வேறு வகையாக வாழ்ந்தார்கள். இருபாலாருடைய வரலாறுகளையும் ஆராய்ந்து எவ்வளவுக்கு அவர்கள் ஒரே வகையாக இருந்தார்கள் என அறிந்துகொண்டால் பல செய்திகள் நமக்குப் புலப்படும். பெண்கள் ஆடவரிடம் தங்கியிருப் பவர்கள், அவர்கள் ஆடவரினும் கீழ்ப்பட்டவர்கள் எனக் கொள்ளப்பட்ட போதும் அவர்கள் மனித சமூகத்தில் பாதி அளவினராவர். ஆகவே அவர் களின் வரலாறு மனித வரலாற்றில் பாதி அளவினதாகும். நான்கு தன்மைகள் ஆடவரிலிருந்து பெண்களைப் பிரித்துக் காட்டுகின்றன. அவை: பால் வேறுபாடு, போர்த்தொழில், பொருளாதாரநிலை, கருத்துக்கள் என்பன. இவ் வேறுபாடுகள் ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டு அறிய முடியாத வெவ்வேறு தன்மைகளுடையன; ஆனால் இவை பெண்களின் நிலையைத் தீர்மானிக்கும் கேள்விகளாக அமைந்துள்ளன. இருபாலாரின் உடலமைப்புச் சம்பந்தம் முதன்மையானது. இஃதே எல்லாவகை நியாயங்களுக்கும் அடிப்படை. தாயாயிருக்கும் உடல் சம்பந்தமான சுமை இல்லாதவளாயிருந்தால் பெண் ஒருபோதும் ஆடவனுக்கு வலிமையால் குறைந்தவளாகமாட்டாள். ஆண் பெண் என்ற பால் வேறுபாட்டால் வேலைகள் பிரிக்கப்படவும் மாட்டா. இவை காரண மாகத் தோன்றிய வழக்கங்களும் காணப்படமாட்டா. அப்பொழுது வரலாறு எவ்வகையாக இருக்குமென்றும் நினைத்து அறியமுடியாது. ஒருவேளை நாம் தேனீக்களைப்போல நன்றாயமைந்த சமூக வாழ்வும், வாழ்க்கைத் தகுதியும் உடையவர்களாகவும், தனித்தனி வாழ்வதில் விருப்பில்லாதவர் களாயும் இருக்கலாம். பெண்கள் ஆண்களிலும் பார்க்க உடல் வலியால் குறைந்தோர். உடல் வலியின்மையே அவர்களை இன்றைய நிலைக்குக் கொண்டு வந்தது. சமூகமே தனது பாதியினரை மூடமாக வைத்திருக்கும் கொள்கையை ஆமோதிக்கின்றது. இது அறிவுடைமை எனக் கூற முடியாது. மக்கள் ஒருவரோடு ஒருவர் நெடுகிலும் போர் விளைத்துக் கொண் டிருந்தமையால் பெண்களும் ஆண்களும் வெவ்வேறு வாழ்க்கை முறையைப் பின்பற்றும் நிலை ஏற்பட்டது. போர் எப்பொழுதும் பெண்கள் நிலையைக் கெடுத்துவந்தது. போரில் பெண்கள் வெற்றியாளரின் கொள்ளைப் பொருள்களா னார்கள். ஆடவர் எவ்வளவுக்கு மூர்க்கமும் போர்க்குணமும் உடையவர் களாயிருந்தார்களோ அவ்வளவுக்குப் பெண்களின் நிலைமையும் கீழ்மை யடைந்தது. போரினால் நன்மைக்கேதுவான சில மாறுதல்களுண்டாவது முண்டு. சென்ற இரண்டு போர்களால் பெண்களின் நிலை மாறுதலடைந்தது. முற்காலப்போர்கள் போலல்லாமல் சென்ற இரண்டு போர்களும் பொருளா தாரத்தை அடிப்படையாகக் கொண்டவை. பொருளாதாரம் போர் செய்வதை ஒத்த முதன்மையுடையது. சென்ற போர்களில் பெண்களின் உதவியற்ற நிலை மறைந்து போயிற்று. அவர்களும் அவர்களின் வேலைகளும் போருக்கு வேண்டப்பட்டன. முன்போலப் போரின் முடிவை எதிர்பார்த் திருக்க வேண்டிய நிலைமை அவர்களுக்கு உண்டாகவில்லை. வெடி மருந்து தயாரிக்கும் இடங்களிலும் தொழிற்சாலைகளிலும் அவர்களுக்குத் தேவையிருந்தது. போர் அணிகளிலும் அவர்கள் ஆடவருடன் தோளோடு தோளாக நின்று போர் செய்தார்கள். முற்காலப் போர்கள் இவ்வாறிராமல் பெண்களின் அழிவுக்குக் காரணமாயிருந்தன. இதனாலேயே பெண்கள் நீண்டகாலம் கீழ்நிலை அடைந்திருந்தார்கள். பொருளாதார நிலை பெண்களை விடுதலை அடையச் செய்கின்றது. இதிலும் விதிவிலங்குகள் பல உண்டு. பெண்கள் விடுதலை அடைதல் ஆடவருக்குப் பயம் விளைவிக்கின்றது. உலகம் முழுவதிலும் பெண்கள் குறைந்த கூலிக்கு வேலை வாங்கப்படுகிறார்கள். எல்லா இடங்களிலும் அவர்கள் தாழ்ந்த வாழ்க்கை நடத்துகின்றனர்; ஆனால் தொழில் புரிவதற்கு அவர்கள் இன்றியமையாதவர்களாயிருக்கின்றனர். அவர்கள் நன்கு பாதுகாக்கப்படாமலும், நன்றாகக் கூலி கொடுக்கப்படாமலும், ஒழுங்காக அமைக்கப்படாமலும் வாழ்கின்றனர். இன்று வேலை புரியும் பெண் ஒருத்தி கணவனுடைய சுமையையும் தன்னுடைய சுமையையும் சுமக்கவேண்டிய வளாயிருக்கின்றாள். பெண்ணின் நிலைமை இவ்வாறு வருந்தத்தக்கதா கின்றது. தமக்கு இவ்வளவு வாய்ப்பான நிலைமை தோன்றுவதற்கு ஆடவர் எப்படி அனுமதித்தனர்? இயற்கைக்கு மாறுபட்ட இக்கொடுமை எவ்வாறு உண்டாயிற்று? பழம்போக்குடைய வரலாறு இதற்கு மறுமொழி அளிக்கச் சிறிதும் முன்வரவில்லை. அரசாட்சியும் இதனை நீக்குவதற்கு முன்வர வில்லை. பெண்களைக் கட்டுப்படுத்துகின்ற பெரிய வல்லமை சமயம், ஒழுக்கம், சமூகச் சட்டங்கள் என்பன. இக்கட்டுப்பாடுகளை உண்டாக்கின வர்கள் பெண்களும், பெண் தத்துவ சாத்திரிகளும், பெண் சமயபோதகர் களுமல்லர். முற்கால வாழ்க்கையில் பெண்ணே மிக முக்கியமுடையவளா யிருந்தாள். பிற்கால வாழ்க்கையில் பெண்கள் அடிமைகள் போலானார்கள்; அவர்கள் தமது சமூகத்தின் வேலைகள் எல்லாவற்றையும் செய்தார்கள்; ஆடவர் உண்டு எஞ்சியதை உண்டார்கள். கடவுள் வழிபாட்டிலும் பிறசமயக் கொள்கைகளிலும் பெண்ணைப் பற்றிய எண்ணமே அதிகமாகவிருந்தது. ஆண் தெய்வங்களெத்தனையோ அத்தனை பெண் தெய்வங்களும் இருந்தன. இயற்கை பெண்ணாகவே உருவகஞ் செய்யப்பட்டுள்ளது. பெண்களைப் பற்றிய பல கருத்துக்கள் தோன்றின. அவைகளில் ஒன்று மிகவும் கடுமையாகக் கருதப்பட்டது. பெண்ணின் கடமைகள், அவள் நற்குணங்கள், அவள் ஆண்களோடு நடந்துகொள்ள வேண்டிய முறைகள் சம்பந்தமானவை என்பனவாம். இக் கருத்துக்கள் சட்டங்களும், நம்பிக்கை களுமாக மாறின. இவை கணக்கில்லாத வகையில் ஒவ்வொரு காலத்திலும் போதிக்கப்பட்டன. பெண்கள் எப்படி நற்குணமுள்ளவர்களாயிருக்க வேண்டுமென விரும்பப்பட்டனர் என்பதை இது நினைவூட்டுகின்றது. பெண்கள் சம்பந்தப்பட்ட அளவில் அவர்கள் கற்பாயிருக்கவேண்டுமென வற்புறுத்தப்பட்டது. ஆண் பெண் சேர்க்கை சம்பந்தமான இயற்கை விதியைச் சமயமும், வலிமையும், போதனைகளும் கட்டுப்படுத்துதல் முறையாகுமா? முற்காலத்தில் ஆண் பெண் சேர்க்கைத் தொடர்பான சட்டங்கள் உண்டாவதற்குப் பெண்ணே காரணமாயிருந்தாள். ஒரு காலத்தில் சமூகத் தில் ஆண்கள் எல்லோருக்கும் எல்லாப் பெண்களிடத்திலும் உரிமை யிருந்தது; பெண்கள் எல்லோருக்கும் ஆண்களிடத்தில் உரிமையிருந்தது. ஆச்சரியமான இம்முறை எவ்வாறு நடைபெற்றது? பின்பு இவ்வொழுக்கம் எவ்வாறு தவிர்க்கப்பட்டது? பல கணவரை மணந்த பெண்ணுக்கும், பல மனைவியரை மணந்த கணவனுக்கும் அவ்வழக்கங்கள் எவ்வாறு தோன்றின. பெண் எதை விரும்பினாள்? சில கூட்டத்தினர் ஒன்றை ஏன் விரும்புகிறார்கள்? வேறு கூட்டத்தினர் மாற்றத்தை ஏன் விரும்புகிறார்கள்? உலகில் தாயாட்சி எவ்வகை மாற்றத்தைச் செய்தது? இவை போன்றவை ஆராயத்தக்கன. தந்தையை அறுதியிட முடியாமல் இருந்தபோது பிள்ளைகள் தாய் வழியால் அறியப்பட்டார்கள். சொத்து தாய் மூலம் பிள்ளைகளை அடைந்தது. தாயாட்சியில் இருவகை வழக்குகள் இருந்தன. ஒன்று அவளைச் சொத்துடையவளாயும் அதிகாரமுடையவளாயும் ஆக்குவது. பெண்களின் வரலாறு தெள்ளிதில் அறிந்து கொள்ள இயலாததாயிருக்கின் றது. அது ஓர் இடத்தில் ஒரு வகையாகவும், இன்னோரிடத்தில் இன்னொரு வகையாகவும் இருந்ததென அறிகின்றோம். கிடைக்கின்ற சான்றுகளால் பெண்கள் பெரிதும் தாழ்வாக நடத்தப் பட்டார்கள் எனத் தெரிகிறது. இக்காலத்திலேயே பெண்களின் கட்டுக்கள் தளர்வடைந்தன. காட்டுமிராண்டித்தனத்திலிருந்து முன்னேற்றம் ஒழுங்காக உண்டானதென்று நாம் நினைக்கப் பழகி விட்டோம். எவ்வகையான நாகரிகத்திலும் சென்ற நாலாயிரம் ஐயாயிரம் ஆண்டுகளில் பெண்கள் உயர் நிலை அடையவில்லை. பாபிலோனில் பெண்கள் நிலை பழைய காட்டுமிராண்டிகள் நகரில் வாழ்பவர்களாக மாறினர். அவர்கள் வாழ்ந்த உலகின் பல பகுதிகளில் நிலையான சட்டங்கள் இருந்தன. அவை பல ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் தோன்றியவை. அவை பெண்களை விருப்பம்போல் வாழ உரிமை அளித்தன எனக் கூறமுடிய வில்லை. பழைய நாகரிகங்களிற் பல இன்று முற்றிலும் மறைந்து போய் விட்டன. மற்றவைகளைப் பற்றிப் பழங்கதைகள் மூலம் உய்த்தறியலாம். எகிப்தியர் சுமேரியர்களைப்பற்றிய எழுத்து மூலமான சான்றுகள் உள்ளன. அவைகளைக்கொண்டு நீலநதி, தைகிராஸ், ஐபிராத்து ஆறுகளை அடுத்த நாடுகளில் வாழ்ந்த மக்களைப்பற்றி நாம் அறியலாம். அவர்களின் வரலாறு கி.மு.4000 வரையில் செல்கின்றது. மெசபடோமியாவில் பெண்கள் ஆண் களை ஒத்த உரிமை பெற்று வாழ்ந்தார்கள் எனத் தெரிகிறது. மணமான பெண்களும் மணமாகாத பெண்களும் சொத்துடையவர்களாயிருந்தனர். அவர்கள் உடன்படிக்கைகளிற் கையெழுத்திடவும், சாட்சி நிற்கவும், பொறுப் பான கருமங்களை நடத்தவும் உரிமை பெற்றிருந்தனர். இருபாலாரும் வாணிகம் புரிந்தனர்; நியாயத்தாரராகவும் (Judges) மாகாண ஆட்சித் தலைவர் (Governors) களாகவும் இருந்தனர். இருபாலினரும் எழுதக் கற்றுக் கொள்ளலாம், எழுத்து வேலைகள் செய்யலாம். கோயில்களில் கடவுளரைச் சேவிக்கலாம், குருமாராகிய பெண்கள் செல்வமும் மதிப்பும் உடையவர் களாயிருந்தனர். தாய்மார் பிள்ளைகளைப் பாதுகாப்போராயிருந்தனர். புதல்வர், புதல்வியருக்குப் பெற்றோரின் சொத்தில் சம உரிமை இருந்தது. சுருங்கக் கூறுமிடத்து மெசபெடோமியாவின் நிலை இன்றைய நிலையை ஒத்துள்ளது. திருமணத்தொடர்பாக வியப்பான சட்டங்கள் சில இருந்தன; அவை அவ்வளவு விளக்கமளிப்பனவாயிருக்கவில்லை. பெண்களும் ஆண்களும் விரும்பியவாறு கலியாண நீக்கம் செய்து கொள்ளலாம். பெண்ணின் எதிர்ப்பு அதற்குத் தடையாக இருக்கவில்லை. பெண் கோபக் காரி அல்லது கணவனிடம் வேண்டா வெறுப்பாய் இருப்பவள் என்று சான்றுப்படுத்தினால் அவள் நீரில் அமிழ்த்தப்பட்டாள். விபசாரக் குற்றங் களுக்கும் வேறு குற்றங்களுக்கும் குற்றவாளிகளை நீரில் அமிழ்த்திக் கொல்வது பொதுவான தண்டனையாகவிருந்தது. அக் காலத்துக்குப்பின் அத்தண்டனைகள் இன்றுவரை காணப்படவில்லை. கி.மு. 2100 வரையில் ஹமுரபி என்பவனால் செய்யப்பட்ட சட்டங்களைக் கொண்டு அக்காலப் பெண்கள் வாழ்க்கை எவ்வாறிருந்ததென்றும் நாம் அறிந்து கொள்ளலாம். எகிப்தியப் பெண்கள் அதே காலத்தில் எகிப்திய பெண்கள் நிலங்களுடையவர்களாயிருந் தனர்; சொத்து, பெண்வழியை அடைந்தது, பெற்றோரைக் காப்பாற்றும் பொறுப்பு அவளையே சேர்ந்தது. பழைய சுமேரியாவில் இருந்தது போன்ற உயர்ந்த விடுதலை அவர்களுக்கு இருக்கவில்லை. ஐந்தாம் ஆறாம் அரச பரம்பரைக் காலங்களில் பெண்கள் வயல் வேலைகள் செய்தார்கள். பெண் ஒருத்தி சுக்கான் பிடித்து மரக்கலத்தை ஓட்டும் ஓவியம் ஒன்று காணப் படுகின்றது. அரச குடும்பத்தவர்களல்லாத பெண்கள் அரசிற் கருமங்களில் பங்கு எடுக்கவில்லை. பெண்கள் வாணிகம் அல்லது பொது வேலைகளைப் புரிந்தார்கள் என விளங்கவில்லை. ஹற்செப்பற் என்னும் இராணி உலகில் பெரிய அறிவாளி எனக் கருதப்பட்டாள். இராணிக்குள்ள சுதந்திரங்களுக்கும், பொதுவான பெண்கள் பெற்றிருந்த சுதந்திரங்களுக்கும் யாதும் தொடர்பு இருக்கவில்லை. பெண்கள் கிளர்ச்சி செய்ததால் சுமேரியப் பெண்கள் விடுதலை யடைந்திருந்தார்கள் எனக் கூற முடியாது. அது உயர்வான தாயாட்சி முறையினால் உண்டானது. அவ்வகை மக்கள் நகரங்களில் குடும்பங்களாக வாழத் தொடங்கியபோது பெண்கள் சமூகத்தில் பெருமையுடையவர்களா னார்கள். நகரங்கள் பெரியனவாகும்போது தடையின்றி ஆடவர் மகளிரின் பெருமைகள் சமமுடையனவாகும்; அதற்குத் தடை உண்டாகமாட்டாது. தாயாட்சி முறையிலிருந்து பெண்களின் அதிகாரம் தோன்றி யிருக்கு மென்று வரலாற்றாசிரியர்கள் சிந்தித்துப் பார்க்கவில்லை. பழங்கதைகளில் வீரப்பெண்களைப் பற்றிக் காண்கின்றோம். இவ் வகைப் பழங்கதைகளி லிருந்தே ‘அமேசன்’ என்னும் வீரத் தன்மை வாய்ந்த மகளிர் கதை தோன் றிற்று. சில கூட்டத்தினரில் பெண்களும் ஆண்களிடையே போருக்குச் சென்றார்கள். இதனால் அத்தகைய வீரப் பெண்களின் கதை பின்னர் தோன்றிற்று. போர்வீரப் பெண்கள் காலத்துக்குக் காலம் போர் செய்யும் பெண்கள் தோன்றினார்கள். ஆபிரிக்காவில் தகோமி (Dahomey) மக்களுள் படையில் பேர்பாதியினர் பெண்களாவர். பொகேமியில் கொடுங்கோலாட்சி செய்த சிற்றரசனை வீழ்த்துவதற்கு அவர்களில் ஒரு கூட்டத்தினர் திரண்டனர். 1915 வரையில் உருசியப்படையில் பெண்கள் பதிவு செய்யப்பட்டார்கள். அவர்களுக்குப் பெண் அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தாள். ஆண் வீரருக்குப் போலவே அவர்களுக்கு உணவும் ஊதியமும் கொடுக்கப்பட்டன. 1சோன் ஆப் ஆர்க் அல்லது 2பொடீசியா (Boadicia) போன்றவர்களின் வரலாறுகள் கற்பனைக் கதைகளல்ல. ஆகவே ஆறாயிரம் அல்லது ஏழாயிரம் ஆண்டுகளின் முன் இலைசியாவில் வீரப் பெண்மணிகளும் இருந்தார்கள் எனக் கூறும் வரலாறு கற்பனையாகமாட்டாது. சுமேரிய வழக்கங்கள் எவ்வாறு தோன்றிய போதும் அவை மறைந் தன, அவை சடுதியில் மறைந்தன அல்லது காலந்தாழ்ந்து மறைந்தன என்று நம்மால் கூறமுடியாது. இப்பொழுது பாபிலோன் ஒரு இடிபாட்டு மேடாக விருக்கின்றது. எகிப்திய அரசரும் சிங்காசனத்தால் வீழ்ந்துவிட்டார்கள். அவர்களுக்குப் பின்வந்த செமித்தியரும் இந்து ஐரோப்பியரும் வேறு வகை நாகரிகத்தை நுழைந்தார்கள். கிரேக்க நாட்டுப் பெண்கள் கி.மு.1000 வரையில் கிரேக்கர் எச்சாதியினரிலிருந்து தோன்றினார் களோ அச்சாதியினரும் பெண்களின் சுதந்திரத்தைவிட்டு வைக்கவில்லை. ஆயினும் அவர்கள் பழங்கதைகளில் வீரப் பெண்களைப் பற்றிய வரலாறுகள் காணப்படுகின்றன. அண்டிகோன்3. எலக்ரா4 முதலியோர் வரலாறுகள் காணப்படுகின்றன, தினசரி வாழ்க்கையில் முக்கியமுடையவர்களாகக் கிரேக்கப் பெண்கள் கொள்ளப்படவில்லை; அவர்களின் சேவை வேண்டி யிருந்தமையால் அவர்கள் உயிர்கள் காப்பாற்றப்பட்டன. உண்ணுதல், உடுத்தல், பருகுதல், துடைத்தல் போன்ற தொழில்களுக்காக அவர்கள் பயன்படுத்தப்பட்டார்கள், அவர்களின் அறிவும் அவ்வளவுக்கே இருந்தது. அவர்கள் உடற்பயிற்சி மொழிப் பயிற்சி அற்றவர்களாகவேயிருந்தனர். வீட்டுக்கு வேண்டப்படும் அளவு பேச்சையே அவர்கள் அறிந்திருந்தனர். இவர்களுக்குப் புறம்பாகவுள்ள விலைமாதர் வகுப்பினர் ஆடம்பரமான வாழ்வு நடத்தினர். ஒழுக்கமுடையவர்களுக்கு மறுக்கப்பட்டிருந்த கல்வி யும் சுதந்தரமும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தன. வீட்டில் வாழும் பெண்கள் கீழ்ப்படிவும் அறியாமையுமுடையவர்களாய் இருக்கும்படி கட்டுப்படுத்தப்பட்டிருந்தார்கள். அவர்கள் பிள்ளைகளுக்கும் அடங்கி யிருத்தல் வேண்டும். தந்தை விரும்பினால் பிறந்த பெண் குழந்தையை மண் சாடியிலிட்டு மலை அடிவாரத்தில் அல்லது வீதி ஓரத்தில் இறக்கும்படி விடலாம்; தாய் யாதும் பேசுதல் கூடாது. அவள் வாழ்க்கையினின்றும் ஒதுக்கி வைக்கப்பட்ட விளையாட்டுப் பொருளாவள். பழைய உலகத்தில் அழிவு உண்டாக்கிக் கொண்டிருந்த கொடிய போர்களால் பெண்கள் ஒடுக்கமடைந்திருக்கலாம். ஒரு சாதியார் போரில் வெற்றி பெற்றால் எல்லா ஆடவரையும் கொன்று விட்டுப் பெண்கள் எல்லோரையும் கொள்ளைப் பொருளாகக் கொண்டு செல்வது வழக்கம். வெற்றிபெற்ற தலைவர் நினைத்த தற்கு மாறாகப் பெண்கள் பெரிய புரட்சி உண்டாக்கினார்கள். இவர்கள் வெற்றியாளரின் செல்வமாவர். இவர்கள் அதிக வேலை புரிபவர்களாகவும், அதிக பிள்ளைகளை ஈன்று அவர்களுக்குக் கொடுப்பவர்களாகவும் கருதப் பட்டார்கள். அறிய முடியாதபடியும், சந்தேகிக்க முடியாதபடியும் அவர்கள் வெற்றியாளருக்குப் பலவீனத்தை உண்டுபண்ணினார்கள். அடிமைப் பெண்கள் சில சமயங்களில் அவர்கள் தாழ்ந்த நிகிரோவ இரத்தக்கலப்பை அச் சாதியிடத்தே உண்டாக்கினார்கள், மெதுவாக அவர்கள் வெற்றியாளரின் வலியை உறிஞ்சினார்கள். அவர்கள் கலகஞ் செய்யவில்லை என்பது உண்மையே. இவை எல்லாம் விரைவில் ஒன்று சேர்ந்தன. அவர்களின் வலிமை ஓங்கியிருந்தது. அவர்கள் தாம் எங்குநின்று வந்தார்களோ அந் நாட்டு மேலான நாகரிகத்தைக் கொண்டு வரவில்லை; கீழான தன்மைகளை யும், மூடநம்பிக்கைகளையும், தம் வாழ்க்கையின் மத்தியிலிருந்த சிறுமை களையும் கொண்டுவந்தார்கள். அவர்கள் அடிமைப்படுவதன் முன்பும் பின்பும் அடைத்து வைக்கப்பட்டமையாலும், கல்வியையும், காலத்துக் கேற்ற முன்னேற்ற முறைகளையும் அறியாமையாலும், போர்க்காலத்தில் பிடிக்கப்பட்ட பெண்கள் இக் கீழ்மைகளை ஒரு சாதியினின்று இன்னொரு சாதிக்குப் பரப்பியிருத்தல் வேண்டும். பெண்களே பழைய நம்பிக்கைகளைத் தொடர்பாகக் காப்பாற்றி வந்தார்கள். அவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக அவைகளைக் கோத்துத் தொடர்புபடுத்தி வளர்த்தார்கள். அவை இன்றைய மூடநம்பிக்கைகளும் அறியமுடியாத கருத்துகளுமாகவுள்ளன. இவர்களே குழந்தைகளுக்குப் புதுமையான பழங்கதைகளைச் சொன்னார்கள்; தமக்கு அன்னியமும் புனித மல்லாதனவுமாகியவற்றை அவர்கள் மனத்தினின்றும் நீங்கும் படி செய்தார்கள். பழைய தெய்வ வழிபாடுகளும் இரத்தப் பலிகளும் கிறித்துவ மதம் தோன்றிய பின்னும் நடைபெற்றன. மறைமுகமாக வேலைபுரியும் அடிமைகளே தம்முடன் இருந்து வேலை புரியும் மக்களையும் கீழே இழுத்திருத்தல் வேண்டும். அவர்களின் இடம் வீடாதலின் அவர்கள் இதனைத் தவறாது செய்திருத்தல் கூடும். கிரேக்க நாட்டுப் பெண்கள் பொற்கால நாகரிகத்தை அடைந்திருந் தார்களானால் அது நீண்ட காலம் நிலைத்திருக்கும். அதில் மாறுதல் உண்டாகியிருக்கமாட்டாது. பெண்கள் வீழ்த்தி உழக்கப் பட்டார்கள்; உலகம் மெதுவாகச் சென்றது. இன்றைய நிலையில் அவர்கள் நாகரிகத்தை நாம் இவ்வாறு மாத்திரம் கூறலாம். ஐரோப்பியப் பெண்கள் பாபிலோனின் விழுகைக்கும் கிறித்துவ மதம் தோன்றுவதற்கு மிடையில் பெண்களின் நிலை பலபடிகளாகவிருந்தன. வட ஐரோப்பியர் பெண்களுக்கு மிக உயர்ந்த நிலை அளித்தனர்; அதற்குக் காரணம் நாட்டின் வெப்ப நிலை காரணமோ, அல்லது அவர்கள் இன்னும் போர்க் காலத்தைத் தாண்டாமையோ தெரியவில்லை. ஒரு ஆண் ஒரு பெண்ணை மணக்கும் வழக்கம் மிக நீண்ட காலத்தின் முன்பே உண்டாயிற்று. சர்மனிய மக்களுள் பெண்களின் ஆலோசனையே முதன்மையாகக் கருதப்பட்டது. கெல்திய சாதியினர், போர் அல்லது சாமாதானத்தைப் பற்றி ஆலோசிப்பதற்குப் பெண்களின் புத்திமதியைக் கேட்டார்கள் என்றும், அவர்களுக்கும், அவர் களைச் சேர்ந்த சாதியினருக்குமிடையில் மாறுபாடு உண்டானவிடத்தில் பெண்களே நடுவர்களாக நின்று சமாதானஞ் செய்தார்களென்றும் புளுற்றா என்னும் வரலாற்றாசிரியர் கூறியுள்ளார். அவர்கள் ஹனிபல் என்னும் காதேசிய அரசனோடு செய்து கொண்ட ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது பின்வருமாறு: “கெல்தியர் காதேசியரோடு பிணங்க நேர்ந்தால் ஸ்பெயின் நாட்டிலுள்ள காதேசிய ஆட்சித் தலைவர்களும் அதிகாரிகளும் அப் பிணக்கைத் தீர்த்து வைக்க வேண்டும், காதேசியர் கெல்தியரைக் குற்றஞ் சாட்டினால் கெல்திய பெண்கள் அப்பிணக்தைத் தீர்த்து வைக்க வேண்டும்”. அவர்களின் தீர்ப்பு, நல்லது, பொல்லாதது, போர் செய்யும்படி வற்புறுத்திற்று அல்லது சமாதானத்தைக் கையாளும் படி தூண்டிற்று என்று கூறமுடியாது. தாசிற்றங் என்பார் கெல்திய பெண்கள் மிகப் போர் குணமுடையவர்கள் எனக் கூறியிருக்கின்றார். வெற்றிக்காலங்களிலேயே அவர் பெண்களைப் பார்த்ததாகக் கூறியுள்ளார். பொது மக்களின் பொறுப்பு அவர்களிடம் இருந்தபோதும், வாழ்க்கையில் பெண்கள் வேலையாட்கள் போலவே உழைத்தார்கள்; பயிரிட்டார்கள்; ஆடவர் உண்டு உறங்கினார்கள். உரோமில் கைகலந்து போர் செய்வது மாத்திரம் ஆண்களின் வேலையாக இருக்கவில்லை. அங்கு உறுதியான நாகரிகம் வளர்ந்தது. பெண்கள் சட்டபூர்வமாக மதிக்கத்தக்க நிலையைப் பெற்றார்கள். அவர்களுக்கு சொத்தில் நியாயமான உரிமையிருந்தது. சோமியா (Soaemia) என்னும் ஒரு பெண் அரசாங்க சபையில் இடம் பெற்றிருந்தாள், அவள் சட்டத்திருத்தங்களுக்குத் தனது உடன்பாட்டையோ, உடன்பாடின்மை யையோ தெரிவித்தாள். இன்றைய அரசியல் மன்றங்களில் பெண்கள் பலர் இவ்வாறு செய்கின்றனர். சோமியா என்பவள் சக்கரவர்த்தியின் தாய். அவள் மற்றைய அங்கத்தவர்களின் அயலே இருப்பது திடுக்கிடத்தக்கதா யிருந்தது. பெண் எவளாவது அரசாங்க சபைக்குத் தெரிந்தெடுக்கப்படுதல் ஆகாதென்னும் சட்டம் விரைவில் நிறைவேறிற்று. பெண்கள் அதிக முதன்மையுடையவர்களான போதும் அவர்கள் ஆடவரின் தொடர்பைப் பெற்று இருக்க வேண்டியவர்கள் எனக் கருதப் பட்டது. அவர்களின் வீரத்தைப் பற்றிய பழங்கதைகள் எல்லாம், தந்தைக்கு, கணவனுக்கு அல்லது மகனுக்குப் பணிவாயிருக்கும் கதைகளாகமாறின. அவர்கள் நன்மையின் பொருட்டாவது தீமையின் பொருட்டாவது ஆடவ ரால் குறிக்கப்படாதிருப்பதே அவர்களின் புகழ்களுள் மேலானதாகக் கருதப்பட்டது. நாகரிக காலத்தில் பெண்களின் தாய்மை என்னும் நிலை கவனிக்கப் படவில்லை. பெண் கருவை வளர்ப்பவளாகவும் கருவுற்பத்தி ஆணுக்குரிய தென்றும் கருதப்பட்டன. முற்கால யூதர் கடவுள் தங்களைப் பெண்களாக வும் அடிமைகளாகவும் படைக்காமைக்காகக் கடவுளுக்குத் துதி செலுத்தினர். சமயத் தொடர்பான போதனைகள் மக்கள் உள்ளத்தில் அதிகம் பதியக் கூடியனவாக விருந்தன. எவ்வகைச் சமயக் கொள்கைகள் தோன்றிய போதும் அவை பெண்களைக் கீழ்மைப்பட்டவர்களாகக் கூறின. கிறித்துவ மதத்தின் ஆரம்ப காலக் கிறித்தவ ஆலயங்கள் பெண்களிலேயே தங்கி யிருந்தன. அவர்களே சுறுசுறுப்பான மதபோதகர்களாக விருந்தனர்; அவர்கள் அதிகாரமுடையவர்களாயிருந்தனர். முற்காலக் கிறித்துவக் கோயில்களில் பெண்கள் முதன்மை பெற்றிருந்தமையினாலேயே அம்மதத்துக்கு அனுகூலம் உண்டாயிற்று, பிற்காலத்தில் அவர்கள் தமது முதன்மையை இழந்தார்கள், அவர்களின் நிலை இருளடைந்திருந்தபோதும் பெண்கள் உயிருள்ளவர்களாகவே கருதப்பட்டார்கள். கிழக்குத் தேசமக்கள் பெண்கள் தமது சுயமுயற்சியினால் கடவுளை அடைதல் முடியாதெனக் கூறினார்கள். ஐரோப்பாவில் பெண்கள் பலர் பெருமை பெற்று விளங்கினார்கள், சப்போ (Sappho) என்பவள் பெரும் புலமை பெற்று விளங்கினாள். எலிசபெத் இங்கிலாந்தின் அரசியாக விளங்கினாள். சினாயில் தோன்றிய கதரினாள், மேரியா திசியா, புலோறன்ஸ் நைட்டிங்கேல், சோன் ஆப் ஆர்க் போன்ற பலர் காலத்துக்குக் காலம் தோன்றினார்கள். அவ்வாறு தோன்றிய சிலரின் பெயர்களே வரலாற்றுள் நுழைந்துள்ளன. இப் பெண்களின் வாழ்க்கை வரலாறுகள், பெண்கள் ஒன்றைத் தாமாகச் சிந்தித்து அறிய மாட்டாதவர்கள், உறுதியற்றவர்கள், தேவை உண்டான போது வீரங் கொள்ள மாட்டாதவர்கள் என்னும் கருத்துக்களைப் போக்கின. மேற்குத் தேச நூல்கள் பெண்கள் மிக ஆற்றல் படைத்தவர்கள் எனக் கூறுகின்றன. கிரேக்க நாடகங் களிலும், சேக்ஸ்பியர் நாடகங்களிலும் பெண்களின் இயல்பான கணங்கள் சித்திரிக்கப்பட்டுள்ளன. காலந்தோறும் பெண்களின் முன்னேற்றத்தை நசுக்க எழுந்த பல தடைகளால் அவர்களின் வளர்ச்சி தடைப்படவில்லை. பெண்கள் கீழ்நிலையில் இருந்த போதும் அவர்கள் தமது அடையாளங்களைப் பிற்காலத்தவரிடத்தே விட்டுச் செல்லும் வலிமையுடையவர்களாயிருந்தனர். இந்தியப் பெண்கள் கிழக்குத் தேசங்களில் இப்படி இருக்கவில்லை. இந்தியாவில் பழங் காலப் பெண்கள் உயர்நிலையிலிருந்தார்கள். அக் காலத்தில் பெண்கள் அரசாங்கத்திலும் அதிகாரத்திலும் பங்கு ஆற்றினார்கள். ஆரியருடைய மனு நூலில் பெண்களின் நிலை மிக இழிவுபடுத்தப்பட்டுள்ளது. மனு கூறும் சட்டங்கள் வழங்கும் நாட்டில் பெண்கள் ஒரு போதும் தலை எடுக்க முடியாது. “பெண்கள் பொய்யைப் போலப் பாவமுடையவர்கள். ஆண்களை அசுத்தஞ் செய்வதே பெண்களின் இயல்பு. பெண் எப்பொழுதுமே விடுதலையடைந் திருக்கத் தகுதியற்றவள்” என்பவை போன்ற சட்டங்கள் மனுநூலிற் காணப்படுகின்றன. சிறுபிள்ளை மணம், பெண்களை உடன்கட்டை ஏற்றுதல், பெண்களை வீட்டில் அடைத்துவைத்தல் போன்ற வழக்கமுடைய நாட்டில் ஆண்குழந்தைகளைப் பெறுவதில் மாத்திரம் பெண்களின் பெருமை தங்கியிருந்தது. பௌத்த சமயமும் முகமதிய சமயமும் பெண்களுக்கு ஆறுதல் அளிக்கவில்லை. அசோக மன்னன் (கி.மு.264) புத்த சமயத்தைப் பரப்பும் நோக்கமாகப் பெண்களுக்குக் கல்வி கற்பிக்கும் ஒழுங்கு செய்தான். பல நூற்றாண்டுகளாக வந்த மாறுபட்ட கொள்கையை அசோகச் சக்ரவர்த்தியால் தனது காலத்தில் மாற்ற முடியாமல் இருந்தது. சீனப் பெண்கள் முகமதிய மதம் கிழக்கே பரவியபோது பெண்களின் நிலை மிகத் தாழ்வுற்றது, முகமதியர் பல நாடுகளை வென்றார்கள். அவர்கள் வெற்றி கொண்ட இடங்களிலெல்லாம் பெண்களின் நிலை மோசமடைந்தது. சீனாவிலே பெண்களின் நிலை இதே வகையாகவிருந்தது. பெண்கள் உதவி யற்றவர்களாகவிருக்கும்படி அவர்களின் கால்கள் நொண்டி யாக்கப்பட்டன. இதனால் சீனரின் பெண்களைப் பற்றிய கருத்து வெளியாகின்றது. உயர்ந்த குடும்பங்களிடையும் செல்வர்களிடையும் மாத்திரம் இவ்வாறிருந்ததென்று கூறுதற்கில்லை. சீன நாடு முழுமையிலும் இந்நிலையிருந்தது. நாகரிகத் தினளவுக்கே பெண்களின் நிலைமையும் இருந்ததென்ற கருத்தும் நிலவு கின்றது. இதற்குக் கொள்கைகளில் மாற்றம் அடையாத கிழக்குத் தேசங்கள் எடுத்துக்காட்டாகக் காட்டப்படுகின்றன. மேற்குத் தேசத்தில் பெண்கள் விடுதலை அடைந்ததற்குக் காரணம் அந்நாட்டின் பிற்கால நாகரிகப் போக்கு என்று சொல்லப்படுகின்றது. இதனிற் சில உண்மைகள் இருக்கலாம். பிற்போக்குடைய பெண்களும் ஐரோப்பாவில் வாழ்ந்தார்கள். அவர்கள் வெளியே உலாவினார்கள். தங்கள் நண்பர்களோடு கலந்தார்கள்; தாம்பிறந்த உலகத்தைப் பற்றிச் சிறிதளவு அறிந்திருந்தார்கள். கிழக்குத் தேசப் பெண்கள் மிகக் கீழான ஒரே வகை வாழ்க்கையை நடத்தினார்கள்; வீடுகளின் மூலைகளில் அடைத்து வைக்கப்பட்டார்கள்; இவ் வகைச் சிறுமைகளுக்கிடையே வளர்ந்த பெண்களிடம் எவ்வாறு அறிவாலும் வீரத் தாலும் சிறந்த மக்கள் தோன்றுதல் கூடும்? இவ்வாறு வளர்க்கப்படும் குழந்தைகள் தானும் உலக நடையை எவ்வாறு அறிதல் கூடும்? கிறித்துவ மதமும் பெண்களும் பெண்களின் நிலையைக் கொண்டு நாகரிகம் அறியப்படுமாயின் நாகரிகம் நீண்ட காலம் கண்டிக்கத்தக்க நிலையில் இருந்ததாகும். அதன் குற்றங்களும் தண்டனைகளும் கிழக்கில் மிக அதிகமாகவிருந்தன. அங்கிருந்தே பெரும்பாலும் தீய கருத்துக்கள் பரவின. கிறித்துவ மதம் தோன்றிச் சில நூற்றாண்டுகளின் பின் திபெத்தினின்றும் மேற்கே சில தீய கருத்துக்கள் பரவின. வாழ்க்கை மோசமாக உள்ள இடத்திலேயே துறவு வாழ்க்கை தோன்றும். கிறித்துவ வேதம் தோன்றுவதன் முன் அது அங்கு தோன்றிப் பாராட்டப்பட்டது. பெண்களின் கற்பு மிகவும் சிறப்புடையதாகக் கொள்ளப்பட்டது. இக் கருத்தே மேற்கிலும் முதன்மை பெற்றது. சமயப் பற்றுள்ள மக்களிடையே செல்வாக்குப் பெற்ற எழுத்தாளர், பெண்கள் இருப்பதே தூய்மைக்குப் பங்கம் எனக் கருதினார்கள். பெண்கள் தாம் பெண் களாயிருப்பதைப் பற்றி நாணவேண்டுமென்றும், பெண்ணாய்ப் பிறந்த பாவத்துக்காக அவர்கள் வாழ்நாள் முழுதும் தவம் செய்ய வேண்டுமென வும் கூறினார்கள். மறுபடியும் மனுவின் பாதைகள் பின்பற்றப்பட்டன. பெண்கள் நரக வாசலின் கதவுகள்; பாவத்தின் உருவங்கள் என்று கூறப் பட்டார்கள். அவர்களின் உடல் பிசாசு சம்பந்தமான படைப்பு எனக் கூறப் பட்டது. இவ்வாறு கூறுவோர் சமயத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் எனக் கொள்ளப்பட்டனர். இவ்வகைக் கருத்துக்கள் மலிந்த காலத்தில் பெண்ணாக விருத்தல் மிகவும் மனச் சோர்வு அளிப்பதாகவிருந்தது. கோயில்களில் பெண்கள் முதன்மை பெற்றிருந்த காலம் மறைந்தது. இக் கருத்தின்படி ஆண் சேர்க்கையைப் பற்றிய விருப்பு மிகப் பாவமானது; அதுவே பாவங்களெல்லாவற்றுள்ளும் பயங்கரமானது; அதுவே மனிதனின் வீழ்ச்சிக்குக் காணரமானது. பெண்கள் முழுவதும் ஆண் சேர்க்கை இன்றியிருத்தலே வாழ்க்கையின் பண்பு. பெண்கள் இருப்பது ஆசைக்குக் காரணம். பெண்கள் வெளியாகக் குற்றஞ்சாட்டத் தகுந்தவர்கள். சாத்தான் பெண் வடிவு எடுப்பது வழக்கம். குகைகளிலிருந்து தவம் செய்யும் ஞானிகள் சாத்தானை இவ்வடிவில் பன் முறை பார்த்தார்கள். பெண்ணைப் பற்றிய நினைவு ஆபத்தானது. பெண் என்னும் உயிர் துன்பத்தை உண்டாக்குவது. இவ்வாறு பெண்களைப் பற்றிய கருத்து இருந்தது. இயற்கைக்கு மாறுபட்ட இக் கருத்து மனித இயல்புக்கு ஏற்றதாகாது. முற்காலங்களில் நடந்தது போலவே மக்கள் கலியாணம் என்னும் தவறில் விழுந்தார்கள். மனிதப் பிறப்பின் முடிவைக் காண்பதற்கு பெண்கள் எல்லோரும் கன்னியராயிருக்கவேண்டுமென கொண்டு வரப்பட்ட புதிய கொள்கை, மனிதனின் இயற்கை, உணர்ச்சி, பழக்கம் முதலியவற்றால் எதிர்த்து நிற்க முடியவில்லை. இதன் பின்பு ஒரு சாதியினர் அழியாமல் இருப்பதைக் கருதிக் கலியாணஞ் செய்து கொள்ளுவது பாவமன்று எனச் சமயம் கூறிற்று. கன்னிப் பெண்ணாயிருப்பது சுவர்க்கத்தை அடைவதற்குச் சரியான வழி என்றும் அதுவே உயர்ந்த நிலை என்றும் கருதப்பட்டன. பெண்கள் பாவத்தின் உருவம் என்னும் கருத்து மறையத் தொடங்கிற்று. ஆனால் அதன் சின்னங்கள் சில இன்றும் காணப்படாமல் இல்லை, அவர்கள் குருமாராவதற்குத் தடை, பரிசுத்தமான பொருள்களுக்கு எட்டி நிற்பது போன் றன இன்றும் காணப்படுகின்றன. பெண்களின் நிலை மிக மோசமாயிருந்த காலத்தும் பெண் துறவிகள் இருந்தார்கள்; அவர்கள் மரியாதை செய்யப் பட்டார்கள். சாதாரண பெண்கள் இரங்கத்தக்க நிலையில் இருந்தார்கள். ஆண்களும் கலியாணமின்றியிருத்தல் வேண்டும் என்னும் கருத்தும் பரவிற்று. திருமணமின்றியிருத்தலே இருபாலரின் சிறந்த கொள்கையாகக் கருதப்பட்டது. இவ்வாறு திருமணமின்றியிருக்க வேண்டுமென்னும் இயற்கைக்கு மாறான கருத்து, ஐரோப்பாவில் இயற்கையான பேறுபேற்றை அளித்தது. புதிய பொய்யான சமய ஒழுக்கம் உண்டாயிற்று. இது பழைய உலகில் நிகழவில்லை. மத்திய காலத்தில் பெண்களதும், ஆண்களதும் தீய ஒழுக்கங்கள் மலிந்தன1. ஒழுக்கத்திலும் பார்க்க ஒழுக்கக்கேடே பெரிதும் காணப்பட்டது. இதற்குக் காரணம் சமூகத்தில் துறவாயிருக்கும் கொள்கை பரவியதாலாகும். மத்திய கால ஒழுக்கக் கேடுகள் சமயக் கட்டளைகளால் அதிகப்பட்டன. சிறிது காலத்தில் பெண்கள் தாய்மாராய் இருத்தலே சிறந்தது என்னும் கருத்துத் தோன்றிற்று. பிரபுக்கள் (Knights) பெண்களிடத்தில் கொண்ட காதலால் போருக்குச் சென்றார்கள். பெண்கள் அவர்களை எதிர் பார்த்துக் கொண்டிருந்து தையல் வேலை செய்தார்கள். பெண்கள் தம்மை இரண்டு கண்களாலும் நோக்குவது தமது வேலையின் கூலியென அவர்கள் கருதினார்கள். பிரபுக்கள் புகழ் ஈட்டுவதற்கு வெளியே சென்றனர். பெண்கள் வீட்டில் தங்கி நிலங்களைக் கவனித்தார்கள்; வேட்டை ஆடுதல், பார்வைப் பறவைகளால் பறவைகளைப் பிடித்தல் போன்றவைகளில் பொழுதைப் போக்கினார்கள். இதனால் வீரம் வளர்ந்தது. வீரம் நாகரிகத்தை உண்டாக் கும் ஆற்றல் எனக் கருதப்பட்டது. மத்திய காலத்தில் பெண்களைப் புகழும் பாடல்கள் எழுந்தன. இதனால் பெண்கள் நிலை சிறிது மாறுதலடைந்திருந்த தெனத் தெரிகிறது. வீர உணர்ச்சியினால் இன்னொரு மாற்றம் உண்டாயிற்று. சமூகத்தின் பொருளாதார நெருக்கடியினால் அடக்கு முறையும் கடுமை யாக்கப்பட்டது. அது மத்திய காலம் முதல் 19ஆம் நூற்றாண்டு வரையில் நிலைத்தது. பிரான்சுப் புரட்சி பிரான்சுப் புரட்சிக்குப் பின் உண்டாயிருந்த ஆட்சியில் பெண்கள் திருப்தியுறவில்லை. பெண்களுக்கு விடுதலையும், ஆண்களை ஒத்த உரிமையும் வேண்டுமென கொண்டர் செட் (Condorcet) வாதாடி வந்தார். புரட்சிக் காலத்தில் பெண்கள் இரத்தக்களரிகளில் பங்கு கொண்டனர். கூட்டங்களாக எழுந்து தங்கள் கழுத்தை வாள் முனைக்குக் கொடுத்தார்கள். அவ்வாறிருந்தும் அவர்கள் நிலை மாறவில்லை. மீண்டும் பெண்கள் இயக்கத்துக்குப் பிரான்சுப் புரட்சியே காரணமாயிருந்தது. பெண்கள் இயக் கங்கள் பயனளிக்கவில்லை. அவர்களின் கிளர்ச்சிகள் நியாயமானவை யல்ல என்று கருதப்பட்டன. ஆனால் மனிதனுக்கு விடுதலை இருக்க வேண்டுமென்னும் கொள்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. புலவர்கள் புகழும் முறையில் பெண்கள் வீட்டில் வைத்துக் காக்கப்பட்டார்கள். புதுவழியான பொருள் உற்பத்தி முறையினாலும், செல்வம் அதற்கேற்பப் பிரிந்து பரவுவ தாலும் அவர்களை விட்டுச் செல்வம் சிறிது சிறிதாக அகன்றது. பதினெட் டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பெண்கள் ஆண்களின் இரத்தத்தை உறிஞ்சி வாழ்பவர்களாயினர். ஒரு மாற்றம் உண்டாகாவிடில் அவர்களின் வாழ்க்கை பயனற்றதாக விருந்தது. ஆகவே மாற்ற முண்டாகாமல் தடுத்தல் முடியாதிருந்தது. தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சிகளைப் பற்றி ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டன. தொழிற்சங்கங்களும், வாணிகச் சங்கங்களும் எழுந்து, விழுந்தன. தொழிற்சங்க அமைப்புக்கள், வாணிகச்சங்க அமைப் புக்களைப் பற்றிய முயற்சிகள் நடந்தன. இவைகளோடு பெண்கள் எவ்வளவு தூரம் தொடர்பு பெற்றவர்கள் என நினைத்தவர் யார்? பெண்கள் பெரிய படிப்பாளிகளாகவும், வரலாற்றாசிரியர்களாகவும் வரும் வரையில் இந் நினைவு ஒருவருக்கும் எழவில்லை. வீட்டுவேலைக்கு மேற்பட்ட கருமங் களிலும் தமக்குத் தலையிட இடமிருப்பதாகப் பெண்கள் கருதினார்கள். பெண்கள் பணிவாயிருக்க வேண்டுமென்னும் கொள்கை அவர்கள் உள்ளத்தில் தொந்தரவை உண்டுபண்ணிற்று. குடிசைத் தொழில்கள் வீழ்ச்சியடைந்தன. குடிசைத் தொழில்களைக் கொண்டு வாழ்க்கை நடத்திய மக்கள் துன்பத்துக்குள்ளானார்கள். பெண் களிடையே தோன்றிய பொருளாதார நெருக்கடியால் புரட்சி உண்டாயிற்று. இவர்களின் தொழில்கள் தொடக்கத்திலிருந்து கவனிக்கப்பட்டால் இக் காலச் சமூகக் குழப்பங்கள் தோன்றியிரா. தொழிற்சாலைகள் வளரும்போது தொழிலாளருக்கு வீடுகள் கொடுப்பதைப்பற்றி எண்ணியிருந்தால் தொழிற் சாலைகளில் இன்றைய நிலையைப் பார்க்கப் பலர் உழைப்பார்கள். 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19ஆம் நூற்றாண்டின் முற் பகுதியிலும் மேல்நாட்டுப் பெண்கள் என்றுமில்லாத கீழ் நிலையிலிருந் தார்கள்; அக் காலத்தில் பெண்கள் இயக்கம் எழுந்தது. அவ்வியக்கத்தினால் அவர்கள் தமது நிலையை மாற்றிக் கொள்ளவும் நன்னிலைப்படுத்தவும் முயன்றார்கள். பெண்கள் விடுதலை மெதுவாக நகர்ந்து சென்றது. ஆண்களின் மனமாற்றம் ஆடவரின் மனம் இப்பொழுது மாற்றத்துக்கு இசைந்து இருந்தது. மாறான பழைய கருத்துக்கள் மறைந்தன. அவ்வாறிருந்தும் பெண்களின் விடுதலை படிப்படியாகவே சென்றது. இரண்டு தலைமுறைகளில் அது அடைந்துள்ள மாற்றத்தை நோக்கின் அது கற்பனைபோலத் தோன்றும். மாற்றம் விசாலமான கல்வி முறையால் தோன்றிற்று. இன்று பெண்கள், முன் மறைந்துபோன சுமேரியப் பெண்களின் நிலையை அடைந்துள்ளார்கள். ஆனால் பொருளாதார முறையில் முன்னேறு வது அவர்களுக்குக் கடினமாயுள்ளது. வருங்காலத்தில் பெண்களால் எவ் வகைப் பயன் உண்டாகுமென்று நம்மால் அளந்து கூற முடியாது. அது நன்மையாகவும், சமாதானக் கொள்கையுடையதாகவும், சமூகத்துக்கு நன்மை அளிப்பதாயும் இருக்குமென்று கூறலாம். சென்றகால நிகழ்ச்சிகளை நோக்கும்போது பெண்களின் கீழான நிலையே உலக முன்னேற்றத்துக்குத் தடையாயிருந்ததெனத் தெரிகின்றது. இன்றைய பெண்கள் ஆடவரோடு கலந்து நடப்பார்கள். பெண்கள் தாயாக விருப்பதற்கேற்ற உடல் வளர்ச்சி யுள்ளவர்களாய் இருந்தால் மாத்திரம் போதும் என்றும், வேறுவகையில் அவர்களுக்கு முன்னேற்றம் வேண்டியதில்லை என்றும் நினைப்பவர்கள், பெண்களுக்கு முன்னேற்றம் வேண்டியதில்லை எனக் கூறுவர். அடிமைகளை வைத்திருந்த நாடுகளில் ஒழுக்க சம்பந்தமானவும் பிறவும் தொல்லைகள் உண்டானமைபோலவே பெண்களை அடக்கி வைப்பதாலும் தொந்தரவு உண்டானது. ஆணும் பெண்ணும் தாம் வாழும் உலகில் பங்கு பெற்றுள்ளார்கள். இருவரும் தொழிற்பட்டு உலகை இன்றைய நிலைக்குக் கொண்டு வந்தார்கள். பெண்கள் வரலாற்றை நாம் நன்கு ஆராய்ந்தாலன்றி இதனை நாம் நன்கு அறியமுடியாது. இன்று பெண்களைப் பற்றிய வரலாறு ஆராய்ச்சிக்கு ஏற்றதெனக் கருதப்பட்டு வருகின்றது. தென் இந்திய நாட்டில் ஒரு காலத்தில் பெண் ஆட்சி இருந்ததெனப் பழங்கதைகளில் படிக்கின்றோம். கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த மெகஸ்தனிஸ் என்னும் கிரேக்கர் பாண்டியநாடு பெண்களாலாளப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார். ஆரவல்லி, சூரவல்லி, பவளக்கொடி, அல்லி கதைகள் என வழங்கும் பழங்கதைகள் தென்னாட்டில் ஒரு காலத்தில் பெண்கள் ஆட்சி இருந்ததென்பதை வலியுறுத்துகின்றன. இன்றும் குன்று களிலும் மலைச்சரிவுகளிலுமாக அங்குமிங்கும் வாழும் தனித்துவிடப் பட்ட திராவிட மக்கள் பெரும்பாலாரிடையே தாயாட்சி வழியே காணப்படு கின்றது. அவர்களின் சொத்தும் பெண்வழியையே சேருகின்றது. தாயம் என்னும் பழந்தமிழ்ச் சொல்லின் பொருளும் சொத்துத் தாயிடமிருந்து வருவது என்னும் பொருளையே தருகின்றது. வேதகாலத்தில் திராவிடப் பெண்கள் பட்டாளத்தில் சேர்க்கப்பட்டமைக்கு ஆதாரம் உண்டு என வரலாற்றுக்காரர் கூறுகின்றனர். காலம் செல்லச்செல்லத் தாயாட்சிமுறை சிறிது சிறிதாக மறைந்து போகத் தந்தையாட்சி தலையெடுத்தது. ஆயினும் பெண்கள் மரியாதையாக நடத்தப்பட்டார்கள். மனைவியைக் குறிக்கும் இல்லாள் என்னும் சொல்லுக்கு வீட்டை ஆள்பவள் என்பது பொருள். திருவள்ளுவர் காலம் இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகள் முந்தியது. திருக்குறளில் மனைவியைப் பற்றிய இலக்கணங்கள் கூறப்பட்டிருக்கின் றன. அவைகளைக் கொண்டு அக்காலப் பெண்களின் நிலை எவ்வா றிருந்ததென நாம் அறிதல் கூடும். “தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை.” என்னும் குறள், கணவனுக்குப் பெண் அடங்கிக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டுமென்பதைக் குறிக்கின்றது. பிற்காலத்தவரான ஒளவையாரும் “கற்பெனப்படுவது சொற்றிறம் பாமை” எனக் கூறியுள்ளார். “அடிசிற் கினியாளே யன்புடையாளே படிசொற் றவறாத பாவாய் - அடிவருடிப் பின்றூங்கி முன்னெழுந்த பேதையே போதியோ என்றூங்கு மென்க ணிரா.” எனத் திருவள்ளுவனார் தன் மனைவி யிறந்தபோது பாடியதாக வழங்கும் பாடலாலும் அக்காலத்தில் பெண்கள் நிலை எவ்வாறு இருந்ததென நாம் உய்த்தறியலாம். பிற்காலத்தில் “கல்லென்றாலும் கணவன்; புல்லென்றாலும் புருஷன்” என்னும் பழமொழியும் வழங்கலாயிற்று. பெண்கள் ஆண்களுக்கு எல்லா வகையிலும் அடங்கி நடக்க வேண்டுமென்னும் கட்டாயமே பிற் காலத்தில் நிலவுவதாயிற்று; இன்றும் அக்கருத்தே நிலவுகின்றது. முற்காலப் பெண்களிற் சிலர் தம் கணவர் இறந்தபோது தீயிற்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்கள். நாள் ஆக ஆக பெண்கள் கணவனோடு உடன் கட்டை ஏற்றப்பட வேண்டுமென்னும் கட்டாயம் உண்டாயிற்று. தென்னாட் டிலும் வடநாட்டிலும் ஆயிரக்கணக்கான பெண்கள் இறந்த கணவரோடு கட்டையில் வைத்து உயிரோடு கொளுத்தப்பட்டார்கள். அவர்கள் கட்டையை விட்டு எழுந்து ஓடிவிடாதபடி சில சமயங்களில் முளைகள் இறுக்கி முளை களில் கயிற்றால் கட்டப்பட்டார்கள். ஆங்கிலர் இந்திய நாட்டுக்கு வந்து பெண்களை உடன்கட்டை ஏற்றும் சட்டத்தை ஒழிக்கின்ற வரையில் “பெண்ணாய்ப் பிறந்த சென்மம்போதும் போதும்” எனப் பெண்கள் அலறிப் புலம்பும்படி பெண்கள் துன்பத்துக்காளானார்கள். பெண்களை உடன்கட்டை ஏற்றும் வழக்கத்தை நேரில் கண்ட மேல்நாட்டவர்கள் அதனை உருக்கமான எழுதியுள்ளார்கள். அவர்கள் எழுதியதைப் படிக்கும்போது நமது உள்ளம் கரைந்துபோகின்றது. உடன்கட்டை ஏற்றுவதில் இன்னொரு வினோதம் கவனிக்க வேண்டியிருக்கின்றது. பெண்களை உடன்கட்டை ஏற்றுவதற்குப் பிராமணரால் கிரியை முறைகளும் எழுதிவைக்கப்பட்டன. உடன்கட்டை புரோகிதக் கிரியைகளுடன் நடைபெற்றது. புரோகிதராலேயே தீ மூட்டப்பட்டது. புரோகிதர் அதற்காக “தக்கணை” என்னும் பெயரால் கூலி பெற்றார்கள்; உடன்கட்டை ஏற்றப்படும் பெண்ணின் பொன்னுடைமை களைத் தானமாகப் பெற்றார்கள். உடன்கட்டை ஏறும் பெண், தனது உடம்பில் எத்தனை மயிர்த் துவாரங்கள் இருக்கின்றனவோ அவ்வளவு ஆண்டுகள் சுவர்க்கத்தில் கணவனோடு இந்திரபோகம் அனுபவிப்பாள் என்றும் புராணங்கள் எழுதிவைத்தனர் புரோகிதர். ஆங்கிலர் ஆட்சியால் உடன்கட்டை ஏற்றும் சட்டம் ஒழிந்தபோது சமயம் பாழாகிவிட்டது என்று கண்ணீர் வடித்தது இப்புரோகிதக் கூட்டம். பெண்கள் ஆண்களுக்குத் தாழ்ந்தவர்களல்லர்; பெண்களுக்கு ஆண்களோடொத்த உரிமை வேண்டும் என்னும் கருத்துக்கள் சமீப காலத்தில்தான் நமது நாட்டில் உண்டாயிற்று. இது ஆங்கிலேயக் கல்வியினால் உண்டானது. பெண்கள் விரும்பினால் கண்வனைக் கலியாண நீக்கம் செய்யலாம் என்னும் சட்டத்தை இன்றும் பலர் எதிர்க்கின்றனர். கல்வி பயின்ற பெண்கள் சிலர் ஆட்சிச் சபை அங்கத்த வர்களாகவும், பிற அரசினர் உத்தியோகத்தர்களாகவும், பள்ளிக்கூட ஆசிரியர்களாகவும் இருந்தபோதும் ஏனைய பெண்களின் நிலை கவலைக் கிடமாகவே இருக்கின்றது. இந்திய சனத் தொகையில் நூற்றுக்குப் பதின் மூன்று பேர் எழுத வாசிக்கக் கற்றவர்கள் எனக் கணக்கிடப்படுகின்றது. இப் பதின்மூவரில் பெண்களின் எண் மூன்று அல்லது நாலுக்கு அதிகப்படாது. இந் நிலைமையில் பெண்கள் நிலைமை உயர்வு என எவரும் கூற முடியாது. பிறநாடுகளில் ஆரம்பக் கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கல்வியே மக்களுக்குக் கண். பெண்கள் கல்வியறிவுடையவர்களாகும் போதே பெண்களின் நிலை உயரும். மேல்நாடுகளில் பெண்கள் நிலை இவ்வாறே உயர்ந்தது. படித்த ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு படித்த குடும்பத்தை உண்டாக்குகின்றாள். பல குடும்பங்கள் சேர்ந்ததே ஒரு சமூகம். பெண்கள் நிலை உயர வேண்டுமானால் பெண்களுக்குக் கட்டாயக் கல்வி வேண்டும். பெண்கள் தமது வாழ்க்கைச்செலவுக்கு ஆண்களின் கைகையே எதிர் பார்த்துக் கொண்டிராமல் பொருளாதார விடுதலை அடைதல் வேண்டும். இன்று உருசிய நாட்டில் நடப்பதென்ன? பொருளாதார முறையில் பெண்கள் விடுதலை பெற்றால் அவர்கள் ஆடவருக்கு அடங்கி நடக்க வேண்டுமென் னும் கட்டாயம் ஒருபோதும் இருக்கமாட்டாது. இன்று தாமே பொருள் சம்பாதிக்கக் கூடிய பெண்களுக்கு அவ்வாறு பொருளீட்ட முடியாத கணவர் கீழ்ப்படிந்து ஒழுகுதலை நாம் கண்ணாரப் பார்க்கின்றோமல்லவா! பெண்களைப் பற்றிய சட்டங்கள் முற்காலத்தில் பெண்கள் சம்பந்தமாக உண்டாயிருந்த சட்டங்கள் சில வற்றைப் பற்றிப் படிப்போம். 1எபிரேயர் ஆண் பிறப்பதைப் போலப் பெண் பிறப்பதை மகிழ்ச்சிக்குரியதாகக் கொள்ளவில்லை. தந்தை அவளைத் தனது கடனுக்காக விற்றுவிடலாம். அவன் விரும்பினால் அவளை விலை மாது ஆக்கலாம். இவ்விதி பிற்காலத்தில் தடுக்கப்பட்டது. குருவின் மகள் விதவையானால் தந்தையின் வீட்டுக்குத் திரும்பி வந்தாள். கலியாண நிச்சயம் செய்யப்பட்ட பெண் ஒருவரின் மனைவியாகக் கருதப்பட்டாள். கலியாண நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணைப் பலவந்தஞ் செய்தவன் மரணதண்டனை அடைந்தான். கலியாண நிச்சயம் செய்யப்படாத பெண்ணை பலவந்தம் செய்தவனுக்குப் பணத்தண்டம் விதிக்கப்பட்டது. திருமணத்தின் போது பெண்ணின் தந்தை அவளுக்குச் சில வெகுமதி அளித்தான். அவை அடிமைகளும் சொத்துக்களுமாயிருந்தன. இவைகளே அவளுடைய சீதனம். பெண்ணைக் கொடுப்பதற்கு அவள் தந்தை கணவனிடமிருந்து பொருள் கேட்டான். கலியாணத்தின்போது பெண்ணுக்கு முக்காடு இடப் பட்டது. கன்னிமை பெரிதும் மதிக்கப்பட்டது. ஒருவன் ஒரு பெண்ணின் கன்னிமையை அழித்தால் அதற்கு அவன் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். கன்னிமை அழிக்கப்பட்ட பெண் மணமுடித்துக் கொள்வது கடினமாக விருந்தது. பெண் இடும் கூச்சல் மற்றவர்களுக்குக் கேட்கக்கூடிய பட்டி னங்களில் பெண் பலவந்தஞ் செய்யப்பட்டால் பெண் அக்குற்றத்துக்குப் பொறுப்பாவாள். தனிப்பட்ட இடங்களில் அவ்வாறு செய்யப்பட்டால் அக் குற்றம் குறைவாகக் கருதப்பட்டது. பெண்ணைப் பலவந்தம் செய்வது ஒழுக்கத் தவறாகக் கருதப்படவில்லை; திருட்டுக் குற்றமாகக் கருதப்பட் டது. பெண்ணின் கன்னிமை சம்பந்தமாகக் கணவன் பொய்யாகக் குற்றஞ் சாட்டினால் அவனுக்கு நூறு ‘செக்கல்’ தண்டம் விதிக்கப்பட்டது; குற்றம் உறுதிப்பட்டால் அவளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. எபிரேயரின் தலைமைக்குரு கன்னிப் பெண்களை மாத்திரம் மணக்கலாம். குருவின் மகள் ஒழுக்கந் தவறினால் மரண தண்டனை அடைந்தாள். போரில் பிடிக்கப்பட்ட பெண்கள் மனைவியராக்கப்பட்டார்கள். பெண்ணின் சீதனப் பொருள்களாகவும் இவர்கள் கொடுக்கப்பட்டார்கள். மனைவி பிள்ளை யில்லாதிருந்தால் போரில் பிடிக்கப்பட்ட பெண்களில் ஒருத்தியை அவள் (மனைவி) கணவனுக்கு மனைவியாக்கலாம். அவள் மூலம் பிறக்கும் குழந்தைக்குச் சொத்தில் உரிமை இல்லை. தந்தை கடனுக்காக விற்ற பெண்ணை ஒருவன் தனது மனைவியாக்கிக் கொள்ளலாம். அவன் அவளைத் தனது மகனுக்கு மனைவியாகவும் அளிக்கலாம். அவன் அவளைத் தனது மகள்போல் நடத்த வேண்டும். நியோகம் எபிரேயரின் பழைய வழக்கு. உடன் பிறந்தவனின் விதவை பிள்ளை இல்லாதிருந்தால் அவனுடைய சகோதரன் அவளை மணந்தான். பெண்கள் பலி செலுத்தும் குருமாராக வருதல் முடியாது. சமயத்தோடு சம்பந்தம் பெற்ற விபசாரிகள் இருந்தனர். கடனுக்காகப் பெண்ணைப் பிடிக்கலாம். இவ்வாறு பிடிக்கப்பட்ட பெண் பாபிலோனில் மூன்று ஆண்டுகளும். இசிரேல் நாட்டில் ஆறு ஆண்டுகளும், அசீரியாவில் குறிக்கப்படாத காலமும் தலைவனுக்கு ஊழியம் புரிந்தார்கள். தந்தைக்குப் பெண்ணிடத்து எல்லா அதிகாரமும் உண்டு. அவள் கடன்காரனுக்கு அடைவாகக் கொடுக்கப்படலாம். அடைவாகப் பெற்றவன் அவளை அவள் தந்தை சகோதரன் என்பவர்களின் சம்மதம் பெற்று மணந்து கொள்ளலாம். தந்தை மகளைத் தான் விரும்பியவாறு தண்டிக்க லாம். பெண்ணின் தலைமீது எண்ணெயை ஊற்றி வெகுமதி கொடுத்துக் கலியாண முடிவு செய்யப்பட்டது. தந்தையே கணவனைத் தெரிந்தெடுத் தான். பெண்கள் முக்காடிட்டார்கள். முக்காடிடுவது அவள் ஒருவனுக்கு உரியவள் என்பதையும் அவளை யாரும் தீண்டுதல் கூடாதென்பதையும் குறித்தது. திருமணமாகாத பெண் முக்காடிட்டால் தண்டிக்கப்பட்டாள். கன்னிமை விலை மதிக்கப்பட்டது. ஒருவன் ஒரு பெண்ணின் கன்னிமையை அழித்தால் அவன் கன்னிமையின் விலையைப்போல் மூன்று பங்கு அதிகம் நட்டஈடு கொடுக்க வேண்டும். மணஞ்செய்து கொண்டவன் ஒரு பெண்ணைப் பலவந்தம் செய்தால் அவன் மனைவி பெண்ணின் தந்தை யிடம் பலவந்தம் செய்து கொள்ளும்படி கொடுக்கப்பட்டாள். அவள் கணவ னிடம் திரும்பிச் செல்லாவிடின் அவன்தான் பலவந்தம் செய்த பெண்ணை மணக்கலாம். பெண் கணவன் வீட்டில் இருந்தாள்; கணவன் அங்கு இடையிடையே வந்து போய்க் கொண்டிருந்தான்; தந்தை வீட்டிலிருந்த போதும் அவள் கணவனின் கடனுக்குப் பொறுப்பாகவிருந்தாள். கடனுக்காக அவன் மனைவியை விற்க முடியாது; ஆனால் அடைவாகக் கொடுக்கலாம். கணவன் தான் விரும்பியபடி மனைவியைத் தண்டிக்கலாம். கணவன் தூர தேசம் சென்று பிரிந்திருந்த காலத்தில் பெண் இன்னொருவனை மணந்தால், முந்திய கணவன் திரும்பி வந்த போது அவளையும் பிள்ளையையும் பெற்றுக் கொள்ளலாம். போருக்குச் சென்றவன் இரண்டு ஆண்டுகளுள் மீளாவிடில் மனைவி மறுமணம் செய்து கொள்ளலாம். அதன்பின் கணவன் திரும்பி வந்தால் அவன் அவளைப் பெற்றுக் கொள்ளலாம்; மற்றவன் மூலம் பிறந்த பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள முடியாது. கன்னிப் பெண்ணைப் பலவந்தம் செய்தால் பணம் தண்டமாக விதிக்கப்பட்டது. மணமானவளைக் கணவன் தான் விரும்பியவாறு தண்டித்தான். கூடா நடத்தையுள்ள பெண்ணைக் கணவன் கொல்லலாம்; உறுப்புகளை வெட்டிவிடலாம்; விரும்பினால் தண்டிக்காதும் விடலாம். தந்தை தனது மகளைக் கடனுக்காக விற்கலாம் அல்லது கடன்கார னுக்கு வேலையாளாகக் கொடுக்கலாம். ஒருவன் ஒரு பெண்ணின் கருச் சிதையும்படியான காயம் அல்லது நோய் விளைத்தால் அவனுடைய மகளின் உயிர் போக்கப்பட்டது. 1பெண்ணின் தந்தையே அவளுக்குக் கணவனைத் தேடினான். கணவனின் தந்தையின் அனுமதியின்றிச் செய்து கொண்ட மணம் செல்லுபடியாகாது. விதவை, கலியாணம் நீக்கப்பட்டவள், கணவனால் விட்டுவிடப்பட்டவள் ஆகியவர்கள் மறுமணம் செய்து கொள்ளலாம். திருமணம் செல்லுபடி ஆவதற்கு எழுத்து மூலம் ஒப்பந்தம் செய்து கொள்ளுதல் வேண்டும். தந்தை பெண்ணுக்குப் பணம், ஆடுமாடும், அடிமைகள், வீட்டுத் தளபாடங்கள், துணிகள் போன்றவைகளைச் சீதனமாக அளித்தான். சீதனப் பொருளைக் கணவனின் கடன்காரர் தீண்ட முடியாது. அவளைக் கணவன் கலியாண நீக்கஞ்செய்தால், அல்லது கணவன் அவளை விட்டுப் பிரிந்தால், அல்லது அவள் விதவையானால், சீதனப் பொருள் அவளின் வாழ்க்கைப் பொருட்டாகும். பெண் கணவன் வீட்டில் வாழ்ந்தாள். கணவன் அவளைக் கடனுக்காகக் கடனாளியிடம் மூன்று ஆண்டுகள் சேவிக்கும்படி விற்றுவிடலாம். பாபிலோனில் கடனுக் காக மக்கள் விற்கப்பட்டார்கள். பாபிலோனியப் பெண், தான் விரும்பியபடி கணவனை கலியாண நீக்கம் செய்ய முடியாது. கலியாண நீக்கம் செய்யப் பட்ட பெண்தான் விரும்பியபடி மறுமணம் செய்து கொள்ளலாம். போருக்குச் சென்ற கணவன் மீண்டு வராவிட்டால் அவள் இன்னொருவனை மணக்கலாம். மீண்டு வந்தால் அவன் பிந்திய கணவன் மூலம் பிறந்த பிள்ளைகளை விட்டுவிட்டு அவளைப் பெற்றுக் கொள்ளலாம். இன்னொருவனின் மனைவிக்கு அல்லது சமய சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு நேரே ஒருவன் விரலை நீட்டினால் அவன் நெருப்பினால் சுடப்பட்டான். கணவன் இறந்தபின் மனைவி அவனுடைய வீட்டில் ஆயுட்காலம் முழுமை யும் இருந்து வாழலாம். அவள் அதனை விற்க முடியாது. வெளிச்சப்பாடு (Oracle) கூறுவோர், மந்திர வித்தைக்காரர், இழவு வீடுகளில் அழுவோர் பெரிதும் பெண்களாகவே இருந்தனர். இற்றைக்கு நாலாயிரம் ஆண்டுகளின் முன் சமூகங்களில் பெண்கள் நிலை எவ்வாறிருந்ததென்பதை மேற்கு ஆசிய நாடுகளில் வழங்கிய அக்காலச் சட்ட முறைகள் நன்கு விளக்குகின் றன. பெண்கள் சம்பந்தமான இன்றைய சமூகச் சட்டங்களோடு இவைகளை ஒப்புநோக்குக. சில குறிப்புகள் “பெண்கள் ஆண்கள் தம் ஆற்றலின் நிறைவு. பெண்கள் கூர்ந்து நோக்கும் இயல்பும் வசப்படுத்தும் அன்பும் நிறைந்தவர்கள். அதிகாரம், தைரியம், உழைப்பு என்பவைகளின் சின்னம் மனிதன். பெண்கள் மென்மை, அழகு, நம்பிக்கை என்பவைகளின் சின்னம். மனிதவர்க்கத்தின் வசனம் ஆண்; பெண் அதன் பாடல், ஆண் ஆசையினால் முயற்சி செய்கிறான்; பெண் அன்பினால் முயல்கின்றாள். பெண் தனது வலிமையை இருதயத்திலும், ஆண் அதனை தலையிலும் வைத்திருக்கின்றனர். கடவுள் அன்புவடிவாக இருக்கிறார்; ஆகவே நாம் நினைப்பதிலும் பார்க்க அன்பு கொள்ளும்போது பெருமை அடைகின்றோம். அன்பு உடைமையால் பெண் ஆணிலும் பார்க்கக் கடவுளுக்கு அண்மையில் இருக்கின்றாள். பெண் பொன் மயமான அன்பு ஏணிப் படிகளில் ஏறிச் செல்கின்றாள்; மனிதன் கீழே நிற்கின்றான். அவன் அவளுக்காகவே வெளிப் பொருள்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து அறிகின்றான். அவள் கடவுளில் உறைந்து அவனுக் காகக் கடவுளை வேண்டுகிறாள்.” - Women a charm and power p.23. “உயர்ந்த பண்புகளையும் தூய்மைக் குணத்தையும் பெண்கள் மூலம் உலகிற் பரப்பக் கடவுள் விரும்பினார் என்று நான் கருதுகிறேன். இவ்வுலகிற் கடவுள் படைத்தவைகளுள் மிகமேலானது உயர்ந்த தன்மைகளுடைய பெண்களின் உள்ளம் என நான் பழைய மார்ட்டின் லூதரை ஒப்பக் கருதுகிறேன்”- ஹென்ரிவாட் பீச்சர் - (Hentry Ward Beecher.) “பெண்களின் குறைபாடுகள் பலவற்றுக்கு ஆண்களே காரணம்; எங்கள் மேலான குணங்களுக்கு பெண்களே காரணம்” - சாள்ஸ் லெமிசில் (Charles Lemesle). “வானத்தில் நட்சத்திரங்கள் பாடல்களாக விளங்குதல் போல பெண்கள் உலகின் பாடல்களாக விளங்குகின்றனர்”-ஹார்கிரேவ் (Hargrave). “பெண்ணே மனிதனின் உயர்ந்த ஊக்கங்கள் எல்லாவற்றுக்கும் விளக்கு; அவனுடைய எண்ணங்கள், ஆற்றல்கள், தைரியம் என்பன அவளுடைய அன்பு என்னும் ஆற்றலிருந்து தோன்றியவை” - ஜேம்ஸ் எல்லிஸ் (James Ellis). “பெண்ணும் ஆணும் ஒரு கத்திரிக்கோலின் இரண்டு அலகுகள் போன்றவர்கள். ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒருவரை ஒருவர் நிறைவடை விக்கின்றனர்” - பென்சமின் பிராங்கிளின். (Benjamin Franklin). நாம் மற்றப் பொருள்களை ஒப்பிட்டுப் பார்த்துக் கூறுவதுபோல ஆண்கள் மேலானவர் அல்லது பெண்கள் மேலானவர் என்று மூடத்தனத் தால் கூறுகின்றோம். இரு வகையாரிடத்தும் மற்றவரிடத்தில் இல்லாத சிறந்த தன்மைகள் இருக்கின்றன; ஒருவரிடத்தில் இருப்பது மற்றவரிடத்திற் காணப்படுவதில்லை. ஒருவரிடம் இல்லாதவற்றை மற்றவர் கேட்டுப் பெற்றுக் கொள்வதால் நிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகின்றன - ஜான் ரஸ்கின் (John Ruskin). பெண்களின் மூளை மனிதனின் மூளையைவிடச் சிறியதென்று சொல்லப்படுகின்றது. மூளையில் இரண்டு தன்மைகள் உண்டு என நாம் அறிதல் வேண்டும். அவை அளவும் குணமும் என்பன. திமிங்கிலம் ஒன்றின் மூளை ஒரு மனிதனின் மூளையிலும் இருமடங்கு அதிக பார முடையது! ஆயினும் அது மனிதனினும் பார்க்க விவேகமுடையது என்று அறியப்படவில்லை.  திருமணம் தோற்றுவாய் மனிதனுடைய வாழ்க்கை, போராட்டம் மலிந்ததாயிருக்கின்றது. இப்போராட்டத்தை ஆண் பெண் என்னும் இருவரும் சேர்ந்து ஆதிமுதல் நடத்தி வருகின்றார்கள். இவ்வாறு இருபாலாரும் இணைந்து செல்லும் வகையில் காலந்தோறும் பண்பாடுகள் உண்டாயின. ஆணும் பெண்ணும் ஒன்று சேர்ந்து ஒரே நோக்கத்துடன் ஒருமித்து வாழும் வாழ்க்கையே திருமணம் எனப்படுகின்றது. திருமணம் எவ்வாறு தோன்றிற்று? காலத்தில் அது அடைந்து வந்த மாறுதல்கள் யாவை? இன்று திருமணத்தைப் பற்றி எவ்வகைக் கருத்துக்கள் நிலவுகின்றன? இதைப் போன்ற வரலாறுகளை அறிதல் எல்லோருக்கும் இன்றியமையாததாகின்றது. திருமணத்துக்கு ஏது ஆண் பெண் என்னும் இருபாலாருக்கும் ஒருவரை ஒருவர் விரும் பும் இயற்கையுணர்ச்சி ஒன்று உண்டு. இதைக் காதல் உணர்ச்சி எனவும் கூறலாம். இவ்வுணர்ச்சி திருமணத்துக்கு ஒரு காரணமாகும். பிள்ளை களைப் பெறுதல் வேண்டும் என்னும் இயற்கை உணர்ச்சியும் இருபாலா ரிடையும் உண்டு. இது திருமணத்துக்கு மற்றொரு காரணமாகும். கணவன் மனைவி என்னும் முறையில் ஒருவருக்கு ஒருவர் துணையாயிருத்தல் வேண்டுமென்னும் விருப்பு திருமணத்துக்கு மற்றொரு ஏதுவாகும். முற்காலத் காதல் முற்கால மனிதன் பெண்ணிடத்தில் பொறாமை கொள்ளவில்லை. இருபாலாருக்கும் புதுமுறையான காதலும் தோன்றவில்லை. ஆடவன் பெண்ணின் கற்பைக் குறித்தோ அல்லது அவள் பெறும் பிள்ளையின் தந்தையைக் குறித்தோ கவலை கொள்ளவில்லை. அவனுடைய காதல் உணர்ச்சி, வேறுபாட்டை விரும்புவதாயும் பெண்கள் பலரிடம் செல்வதாயு மிருந்தது. முற்கால மனிதனுக்கு விரும்பியபடி பெண் சேர்க்கை வைத்துக் கொள்வது இயல்பாயிருந்தது. அவன் திருமணம் செய்து எப்படி நிலையாக வாழத் தொடங்கினான் என்னுங் கேள்வி எழுகின்றது. *பழங்கால மக்களே இக்கேள்விக்கு விடை அளிக்கிறார்கள். சிப்பிவாஸ் (Chippeivas) தலைவன் ஒருவன் பிரயாணி ஒருவனுக்குக் கூறி யது வருமாறு: “பெண்கள் வேலை புரிவதற்காகப் படைக்கப்பட்டிருக் கிறார்கள். ஒருத்தியால் இரண்டு ஆண்கள் இழுக்க அல்லது சுமக்கக்கூடிய சுமையைக் கொண்டு செல்ல முடியும். அவர்கள் எங்கள் கூடாரங்களை அடிக்கிறார்கள்; அவைகளைப் பழுது பார்க்கிறார்கள். இராக்காலங்களில் எங்களை வெப்பமாக வைத்திருக்கின்றார்கள். நமது நாட்டில் பெண்கள் இல்லாமல் நாம் காலம் கழிக்க முடியாது. அவர்கள் எல்லா வேலைகளையும் செய்கிறார்கள். அவர்களால் அதிக பணச்செலவு இல்லை. அவர்கள் எப்பொழுதும் சமையல் செய்கிறார்கள். சாப்பாடு கிடையாத காலங்களில் அவர்கள் தமது விரல்களை நக்கிக் கொண்டு திருப்தி அடைகின்றார்கள்.” கீழ் நிலையிலுள்ள மனிதனுக்கு அவன் காதல் உணர்ச்சியைத் தணிப்பதிலும் பார்க்கப் பெண், பொருளாதார சம்பந்தமுடையவளாயிருந் தாள்; அவள் அடிமையாகவும், விரும்பி வேலை செய்யும் ஆயுதமாகவும், கணவனின் விலையுள்ள சொத்தாகவும் பயன் அளித்தாள். முற்காலத் திருமணத்தின் காரணம் பிள்ளைப் பேறன்று; பொருளாதார சம்பந்தமே. இருபாலாருக்குமுள்ள வேலைகள் பிரிக்கப்பட்டிருப்பதால் அவர்கள் ஒருவரில் ஒருவர் தங்கியிருப்பராயினர். காலத்தில் இவ்வாறு ஒருவருக்கு ஒருவர் துணையாயிருத்தல் அவர்களின் பண்பாக மாறுகின்றது. பெண் வலி குறைந்தவளாதலின் அவள் ஆடவனுக்குக் கீழ்ப்படிகின்றாள். யாரும் இரண்டு எசமானருக்குக் கீழ்ப்படிந்து வேலை செய்யமாட்டார்கள். ஆகவே, ஒவ்வொருவனும் ஒவ்வொரு பெண்ணைத் தனது nலைகளுக்காக வைத்துக் கொண்டான். பழைய மக்கள் நிலையாக ஓரிடத்தில் வாழவில்லை. ஆண் பெண் என்னும் இருபாலாருக்கும் வேலைகள் பிரிக்கப்பட்டிருந்தன. அதனால் ஆடவனுக்குத் திருமணம் அவசியமாயிருந்தது. அவன் தனது மந்தைகளைப் பெண்ணின் உதவியின்றி வைத்திருத்தல் முடியாமல் இருந்தது. பெண் முதலில் அடிமையாகின்றாள். முற்கால மணமென்பது பெண்ணை அடிமையாக்குதலாகும். முற்கால மணத்தைப்பற்றி அறிவ தற்குத் திறவுகோல் இதுவேயாகும். முற்கால மக்கள் திருமணஞ் செய்யும் இரண்டாவது நோக்கம் பிள்ளைகளைப் பெறுதல். இம்முறையிலும் அவள் கணவனின் சொத்து ஆகின்றாள் தாய் என்னும் தன்மையினால் அவள் முன்னிலும் பார்க்க மதிப்பு உடையவளாகின்றாள். இவள் தான் வேலையாளாயிருப்பது மல்லாமல் பல வேலையாளரையும் அவனுக்குக் கொடுப்பவளாயுமாகின் றாள். இப்பிள்ளைகளும் கணவனின் சொத்தாகக் கருதப்படுகின்றனர். ஆண்பிள்ளைகள் உதவியாட்களாகின்றனர். பெண்கள் விற்கப்படுகிறார்கள். முற்கால மக்களுள் திருமணநோக்கம் ஒரே வகையாக இருந்தது. மத்திய ஆப்பிரிக்காவில் பல மனைவியரை வைத்திருப்பவன் பெரிய செல்வ னாகக் கருதப்பட்டான். மனைவியர் கூலியின்றி எல்லா வேலைகளையும் செய்தனர். அவர்கள் முதலாகவும் பிள்ளைகள் முதல் அளிக்கும் வட்டி யாகவும் கருதப்பட்டார்கள். இரண்டாவது படி குடிசைகள் வீடாக மாறின. கிராமங்கள் நகரங்களாக மாறின. இப்பொழுது அழகைப்பற்றிய எண்ணம் உண்டாகின்றது. பெண் வீட்டில் இருக்கிறாள். அவள் புரியும் வருத்தமான வேலைகளை ஆண் அடிமைகள் செய்கிறார்கள். அவளின் கடமைகள் வீட்டு வேலையளவில் சுருங்குகின் றது. மக்களிடையே எழும் மாற்றங்களாலும் வாணிகத்தாலும் செல்வம் உண்டாகின்றது. திரண்ட செல்வமுடையவன் இறந்தபோது அவனுடைய செல்வத்தை அனுபவிப்பவன் யார் என்னும் கேள்வி எழுகின்றது. அவன் இரத்த உறவுடையவர்கள் அதனைப்பெற முன்வருகின்றனர். நீங்கள் ஏன் மணம் செய்கிறீர்கள் என்று முற்கால மக்களைக் கேட்டால் அவர்கள் இம்மறுமொழியையே அளிப்பார்கள். ஆகவே, பெண்ணின் உயர்வான பண்பு பிள்ளைகளைப் பெறுவது எனக் கொள்ளப்பட்டது. மலடியாக விருத் தல் மானக்கேடு. ஆகவே, பிள்ளையில்லாதவள் திருமண நீக்கஞ் செய்யப் பட்டாள். உரோமில் பிள்ளையில்லாத திருமணத்தைக் குலைத்துவிடும்படி சட்டம் இருந்தது. இறந்தவர் வணக்கம் நிலவும் நாடுகளில் இவ்வழக்கு மேலும் வலியுறுத்தப்பட்டது. காதற் பொறாமை பழைய மக்களிடையே காதல் தொடர்பான பொறாமை எழவில்லை. இதனை அக்கால மக்களிடையே காணப்பட்ட வழக்கங்களைக் கொண்டு அறிதல் கூடும். அக்கால மக்கள் விருந்தாளிகளுக்குத் தம் மனைவியரை இரவல் கொடுத்தல் பொது நிகழ்ச்சி. ஆப்பிரிகா, அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா, இலங்கை முதலிய எல்லா நாடுகளிலும் இவ்வழக்கம் காணப் பட்டது; இன்றும் சில இடங்களிற் காணப்படுகின்றது. அவ்வாறு இரவல் கொடுக்கத் தவறுவது அவமதிப்பாகக் கருதப்பட்டது. சாண்ட்விச்தீவில் நண்பர் மரியாதையின் அடையாளமாகத் தமது மனைவியரை மாற்றிக் கொண்டனர். தாபானில் (Dhaban) விருந்தாளி வீட்டுக்காரனின் மனை வியைத் தழுவலாம், முத்தமிடலாம். இச் சுதந்திரத்தைக் கடந்து வேறு யாதும் நிகழ்ந்தால் அவன்கத்தியால் குத்தப்படுவான். இந் நாட்டின் இன்னொரு பகுதியினர் தமது மனைவியருடன் விருந்தாளிகள் விரும்பியவாறு நடந்து கொள்ளும்படி அவர்களை அவர்களிடம் ஒப்படைத்தனர். பழைய ஜெர்மன் வழக்கப்படி வீட்டுக்காரனின் மனைவி விருந் தாளியை அவனுக்காக ஆயத்தஞ் செய்யப்பட்ட படுக்கைக்கு அழைத்துச் சென்று அவனுக்கு வேண்டிய எல்லா வசதிகளையும் செய்ய வேண்டும். முற்காலத்தில் விருந்தாளியாக வந்தவன் வீட்டுக்காரனின் மனைவியின் படுக்கையில் அவளோடு படுத்தான். பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத் திலும் நெதர்லாந்தில் மதிப்புக்குரிய விருந்தாளியிடம் வீட்டுக்காரன் தன் மனைவியை ஒப்புவித்து விடுவது வழக்கம்; விருந்தாளி உடையைக் களையவும், அதனை அணியவும் கன்னிப் பெண்கள் உதவி புரிந்தார்கள்; அவர்கள் அவனைக் குளிப்பாட்டி அவனுடைய துணியால் உடம்பின் ஈரத்தைத் துடைத்தார்கள். வடஜெர்மனியில் மனைவி அல்லது மகளின் படுக்கை விருந்தாளிக்குக் கொடுக்கப்பட்டது. ஹோமர் காலத்தில் கிரீசில் விருந்தாளிகளைக் குளிப்பாட்டி உடலுக்கு வாசம் பூசுவது கன்னிப் பெண் களின் கடமையாக விருந்தது. அரச குடும்பங்களிலும் இவ்வாறு நடை பெற்றது. இது முற்காலத்திய மனைவியரை இரவல் கொடுக்கும் வழக்கத்தின் நிழல் ஆகலாம். இவைகளால் முற்கால மனிதன் இக்கால மனிதனைவிடக் காதற் கருமங்களில் வேறுவகையாக விருந்தான் எனத் தெரிகின்றது. இவ்வாறு வழக்கங்கள் இருந்தபோதும் வியபிசாரக் குற்றத்துக்குப் பெண்கள் தண்டிக்கப்பட்டார்கள். அக்கால ஆடவன் தனது உடன்பாடின்றித் தனது மனைவியைப் பிறர் தீண்டுதல் ஆகாது என நினைத்தான். இதனால் காதல் சம்பந்தமான பொறாமை ஒரு வகையில் இருந்ததெனத் தெரிகின்றது. பெண்களைப் பங்காக வைத்துக்கொள்வதும் பிற்போக்கான மக்க ளிடையே காணப்படுகின்றது. ஆஸ்திரேலியா பழங்குடிகளுள் தமையன், தனது இளைய சகோதரர்களுக்குத் தனது மனைவியைப் பங்குபற்றும்படி அனுமதிப்பான். இளையவர்கள் மணம் புரியும்போது தமையன் அப்பெண் களை பங்கு பற்றுவான். இது முற்காலக் கூட்டு மணங்களின் சின்னமாகலாம். கூட்டு மணம் என்பது பல ஆடவர் பல பெண்களை ஒரே முறையில் மணப் பது அல்லது ஒரு பெண் பல ஆடவரை ஏக காலத்தில் மணப்பது, அல்லது பல ஆடவர் சேர்ந்து ஒரு பெண்ணை மணப்பது. திபேத்து, இலங்கை முதலிய நாடுகளில் சகோதரர் பலர் சேர்ந்து ஒரு பெண்ணை மணந்தார்கள்; பிரிட்டன் தீவில் உறவினர் பலர் சேர்ந்து பொதுவான ஒரு மனைவியை வைத்திருந்தனர். இந் நிகழ்ச்சியை சூலியர் சீசர் குறிப்பிட்டுள்ளார். பிற்போக்குடைய மக்கள் சிலருள் ஆடவர் அடிக்கடி தமது மனைவி யரை மாற்றிக் கொண்டார்கள்; சிறிது காலத்தில் அவர்கள் மறுபடி தத்தம் மனைவியரைப் பெற்றார்கள். ஆஸ்திரேலியர் மனைவியரைக் குறிக்கப் பட்ட சில காலத் தவணையில் மாற்றிக் கொண்டனர். இவ்வகை வழக்கு பீமா (Beama) எனப்பட்டது. எஸ்கிமோவர் நட்பின் அறிகுறியாகத் தமது மனைவியரை ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு மாற்றிக்கொள்வர். ஆப்பிரிக்காவில் புஷ்மன் சாதியாரின் மனைவி கணவனிடத்தில் அனுமதி பெற்று எவருடனாவது வாழலாம். மனைவியரைக் கூலிக்கு விடுவதாகிய இன்னொரு வழக்கம் இருந் தது. ஆப்பிரிக்காவில் காபன் (Gabun) மக்களிடையே கணவன் கூலிக்குக் கேட்பவருக்கு மனைவியைக் கொடுக்க ஆயத்தமாக விருந்தான். அவ்வாறு பிறக்கும் குழந்தைகளை அவர்கள் தமது குழந்தைகள் போலக்கருதி வளர்த்தார்கள். இவ்வகை வழக்கு மனைவி, கணவனின் உடமை என்னும் கருத்துப் பற்றித் தோன்றிற்று. ஒரு உரோமன் கணவனுக்குப் போதிய பிள்ளைகள் இருந்தால், அவன், பிள்ளைகளைப் பெற வேண்டும் ஒருவன் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளும்படி தனது மனைவியை இரவல் கொடுக்கவும், திரும்பப் பெறவும் உரிமை பெற்றிருந்தான். ஸ்பார்ட்டாவில் தனது வீட்டில் தங்கியிருக்கும் விருந்தாளி கேட்பின் அவன் அனுபவிக்கும்படி கணவன் தனது மனைவியைக் கொடுத்தான். அந்நாட்டில் கணவர் பலர், தமது கடமையை ஏற்கும்படி ஆடவர் பலரை வேண்டினர்; சில சமயங்களில் அவர்கள் ஆடவரை வீட்டுக்கு அழைத்துச் சென்று மனைவியருக்கு அறிமுகப்படுத்தி, அவர்கள் மூலம் நல்ல அழகிய குழந்தைகளைப் பெறலாம் எனக் கூறினர்; ஆதென்ஸில் இருவருக்கிடையில், பரத்தை ஒருத்தி, யாருக்குச் சொந்தம் என்னும் பிணக்கு நேர்ந்தது. அப்போது அவள் ஒருநாள் ஒருவனோடும், அடுத்த நாள் மற்றவனோடுமாக வாழ வேண்டுமென்னும் நல்ல தீர்ப்பு அளிக்கப்பட்டது. பழைய ஜெர்மனியில் பிள்ளையில்லாத ஒருவன் தன்னுடைய இடத்தை ஏற்கும்படி இன்னொரு வனை அனுமதித்தான். இவ்வழக்கம் உலூதராலும் அனுமதிக்கப்பட்டது. இவ்வழக்கம் பிள்ளையைப் பெறுவதற்கு மாத்திரமன்று. இன்னொரு வழக்கம் பல நாடுகளில் இருந்து வந்தது. அது பெண்ணைக் கணவனல்லாத இன்னொருவன் முதல் முதல் அனுபவித்தல். இம்மூன்றாவது மனிதன் பெரும்பாலும் அரசன் அல்லது சமயக்குருவாக விருந்தான். சில சமயங்களில் மணமகனின் நண்பனே இக் கருமத்தை நிறைவேற்றினான். சில மக்கட் கூட்டத்தினரிடையே பெண், கணவனின் சுற்றத்தவர்களுக்கு அல்லது கலியாணத்துக்கு வந்த விருந்தினர்களுக்கெல் லாம் தனது தயவை அளித்தாள். இவ்வழக்கு இன்றும் தெற்குச் சிலாவிய மக்களிடையே காணப்படுகின்றது. கொங்கோவிலுள்ள லோன்கோவில் திருமணத்தின் முன் பெண் பொது உடமையாகக் கருதப்பட்டாள். மேற்கு அசிரியாவில் பெண்கள் எல்லோரும் மிலித்தியாவின் கோயிலில் இருந்து தம் வாழ்நாளின் ஒரு முறை தமது கற்பை விற்க வேண்டும் என்னும் சமயச் சட்டம் இருந்துவந்தது. கமஸ்கற்காவில் விதவை ஒருத்தி மறுமணம் செய்ய வேண்டுமாயின் அவள் இன்னொரு ஆடவனோடு படுத்து உறங்கவேண் டும்; இல்லையாயின் இரண்டாவது கணவன் இறந்து விடுவான் என நம்பப் பட்டது. முற்காலங்களில் விருந்துகளில் ஆடவரும் மகளிரும் கட்டுப் பாடின்றிச் சேர்ந்துகொள்ளும் வழக்கம் இருந்துவந்தது. இன்றும் மக்கள் சிலர் ஆண்டின் சில காலங்களில் இவ்வகைக் காமக் களியாட்டங்கள் நடத்து வதுண்டு. அக்காலத்தில் ஆண் பெண் சேர்க்கை சம்பந்தமான கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது. இதன் சின்னங்கள் இன்றைய களியாட்டங்களிற் காணப்படுகின்றன. மூன்றாவது படி பிள்ளைகளைப் பெறும் இலக்குக் குறைகின்றது. இறந்தவர் வணக்கம் மறைகின்றது. உலகம் மக்களால் நிரம்பியிருக்கின்றது. பிள்ளைகளை அதிகம் பெறுவதாலுள்ள சுமை முன்னிலும் அதிகமாயிருந்தது. இப்பொழுது பிள்ளைகள் தம்மை முதுமையில் தாங்குவார்கள் என்று பெற்றோர்கள் நினைக்கவில்லை. மனிதன் அதிக பிள்ளைகளைப் பெறாமல் இருக்க முயல்கின்றான். இதற்கு உதவியான வழிகள் அதிகம் அதிகமாக எழுகின்றன. மலடு காரணமாகப் பெண்ணைக் கலியாண நீக்கம் செய்யவேண்டும் என்னும் சட்டம் வற்புறுத்தப்படவில்லை. குடும்ப காலத்தில் வளர்ச்சியடையாதிருந்த புதிய காதல் இப்பொழுது வளர்ச்சியடைகிறது. இப்பொழுது காதலே கலியாணத்துக்குத் தூண்டுதலாக விருக்கின்றது. இப்பொழுது காதலிக்கப்படுகின்றவள் வேலை செய்யும் அல்லது பிள்ளைகளைப் பெறும் விலங்குபோல் நோக்கப்படவில்லை. தொழிற்சாலைகள் தோன்றிப் பொருளுற்பத்தி அதிகரித்தது. ஆகவே, வீடு களில் பொருளாதார நிலை தாழ்வடைந்தது. பெண்கள் தொழிற்சாலைகளில் வேலை செய்தார்கள். திருமணத்தில் சீதனம் என்பது பொருளாதார சம்பந்தம். இன்றும் காதலும், மணங்களும் பொருளாதாரத்திலிருந்து பிரிந்து செல்கின்றன. காதலே ஆணையும் பெண்ணையும் நிலையாகப் பிணிப்பதற்கு ஏதுவாகின்றது. முற்காலத்தில் மணமாகாதவள் குழந்தையைப் பெற்றால் அவள் அவமானத்துக்குள்ளானாள். அவள் குற்றவாளியாகக் கருதப்பட்டாள். பெரும்பாலும் அவள் குழந்தையைக் கொன்றாள். தந்தைக்கு அதனால் அவமானம் நேரவில்லை. இன்று அரசாங்கம் மணமான தாய்மாருக்குப் போலவே மணமாகாத தாய்மாருக்கும் உதவி அளிக்கின்றது. முற்காலத்தில் விதவை இரண்டாவது மணம் செய்து கொள்ளுதல் அவமானமாகவும் மானங்கெட்ட செயலாகவும் கருதப்பட்டது. இன்று அவ்வாறு இருக்கவில்லை. நிர்வாணம், நாணமின்மை, கருவழிப்பு, கட்டுப்பாடில்லாத கலியாணம் முதலியன ஏற்றனவாகக் கொள்ளப்படுகின்றன. முற்காலத்தில் ஆண் பெண் சம்பந்தமான கருமங்கள் பேசுவது மிக இரகசியம் எனக் கருதப்பட்டது. இன்ற ஆண் பெண் சேர்க்கை சம்பந்தமாகத் தோன்றும் நோய்களைப் பற்றிய பேசப்படும் பொதுக் கூட்டங்களில் உயர்நிலையிலுள்ள பெண்களும் சமூகமளிக்கின்றனர். கற்பு ஆடவர் மகளிரிடத்திற் கொண்ட காதல் சம்பந்தமான பொறாமை யினாலேயே கற்பு உண்டாயிற்று. இவ்வகைப் பொறாமை தோன்றா விட்டால் கற்புச் சிறந்த குணமாகக் கருதப்படமாட்டாது. முற்காலத்தில் மணமான பெண்களின் கற்பு மதிப்புக்குரியதாக இருக்கவில்லை. ஆகவே பெண்கள் விருந்தினருக்கு இரவலளிக்கப்பட்டார்கள். பிற்போக்கான மக்கள் மணத்துக்கு முற்பட்ட கன்னிமையையும் மதிக்கவில்லை. மணமாகாத பெண், கட்டுப்பாடற்றவளாயிருந்தபோதும் மணமான பெண் கட்டுப்பாடாக இருக்க வேண்டுமென்னும் கொள்கை இருந்து வந்தது; மணமானவளைப் போல மணமாகாதவள் கட்டுப்படுத்தப்படவில்லை. பல கூட்டத்தாரிடையே பெண்கள் மணத்துக்கு முன் தமது தயவை ஆடவருக்கு விற்று அதனால் சீதனம் சம்பாதித்தார்கள். இலிதிய மக்கள் சீதனஞ் சம்பாதிக்கும் பொருட்டுத் தமது புதல்வியரைப் பரத்தைத் தொழிலுக்கு அனுமதித்தார்கள் என்று எரதோதசு கூறியுள்ளார். பரத்தைத் தொழில் அவர்கள் மணமாகும் வரையும் நடைபெற்றது. மெக்சிக்க மக்கள் மணப்பருவமடைந்த பெண்களைத் தமது காதல் மூலம் அழகிய உடை களைச் சம்பாதிக்கும்படி வெளியே போக்கினார்கள். பேலோ (Pelau) தீவுப் பெண்கள் தமது காதலை ஆடவருக்கு விற்கிறார்கள். நிகரகுவா அமெரிக்கர் பரத்தைத் தொழிலால் சீதனம் சம்பாதிக்கும்படி தமது பெண்களை அனுமதித்தார்கள். ஜப்பானிய தந்தை பணமுடை நேர்ந்தால் தனது குமாரத்திகளை சிவாரா என்னும் களியாட்டு விடுதிகளுக்குப் போக்கினான். இது பெண்களின் மதிப்பை எவ்வகையிலும் குறைக்கவில்லை. சில மக்கட் கூட்டத்தினர் தம்மிடையே வளர்ந்த பெண்கள் கன்னிய ராய் இருப்பதில் வெட்கமடைந்தார்கள். திருமணத்துக்கு முன் அவர்கள் பல ரின் காதலியராயிருத்தல் மதிப்புக்குரியதாயிருந்தது. குழந்தையைப் பெற்றுத் தான் மலடி அல்லள் எனக் காட்டிய ஒருத்தியையே அந்நாட்டு வாலிபர் மணஞ் செய்துகொள்ள விரும்பினர். இந்தியாவில் தேவடியாள் என்னும் நாட்டியப் பெண்கள் மரியாதை பெற்றனர்; பெறுகின்றனர். தமது பெற்றோருக்கு அல்லது கணவனுக்கு உதவி அளிக்கும் பொருட்டுத் தம்மைப் பரத்தையர் விடுதி ஒன்றுக்குச் சில ஆண்டுகள் விற்கப்பட்ட ஜப்பானியப் பெண்கள் உயர்வினராகக் கருதப் பட்டார்கள். பரத்தையரோடு ஆடவர் சேர்தலில் அவர்களின் கற்புப் பங்கம் அடைகின்றதென்று கருதப்படவில்லை; அது சிறுபொழுதைய திருமண மாகக் கருதப்பட்டது. ஆதென்ஸ் பட்டினத்தில் பரத்தையர் பலர் அரசிக் குரிய மதிப்பைப் பெற்றிருந்தனர். அவர்கள் பலருக்கு உருவச் சிலைகள் நாட்டப்பட்டன. சில சமயக் கொள்கைகளோடு பரத்தைமையும் கலந்திருந் தது. முற்காலத்திற் சமய சம்பந்தமான பரத்தைமை பொதுவாக விருந்தது. கிரீசில் அபிரடோயிற் என்னும் தெய்வத்தின் கோயிலைச் சேர்ந்த பரத்தையர் விடுதிகள் இருந்தன. கோமம் என்னும் கோயிலில் 6,000 பரத்தையர் இருந்தனர் என்று தயதோரஸ் கூறியுள்ளார். வாணிகமும் தொழிலும் வளர்ந்தபோது செல்வம் வளர்ந்தது. அக் காலத்தில் மற்றப் பண்டங்களை வாங்குவதைப்போல மனைவியரை வாங்கு வதும் வழக்கமாயிருந்தது, விலை கொடுத்து வாங்குவது. பெண்ணைப் பண்டங்கள்போல் ஆக்கினாலும் சமூகத்தில் அவளுக்குச் சில வாய்ப்புகள் இருந்தன. தான் அரிதில் முயன்று தேடி பொருள்களைப் பெண்ணுக்காகக் கொடுத்தமையால் அவன் அவளைத் தானே வைத்திருக்க விரும்பினான். ஆகவே, எனது உனது என்ற வகையான உணர்ச்சி எழுந்தது. விலை கொடுத்து வாங்கப்பட்டமையின் பெண் நன்கு கவனிக்கப்பட்டாள். அவ னுடைய சொத்து அவன் பிள்ளைகளைச் சேர்ந்தது. தன் மூலம் பிறக்கும் பிள்ளைகளல்லாத மற்றவர்களுக்குத் தனது சொத்துச் செல்லுதல் கூடாதென அவன் நினைத்தான். பெண்ணை விலை கொடுத்து வாங்குதலால் பெண்ணின் கற்பில் மாற்றம் உண்டாயிற்று. மணமாகாத பெண்களின் நிலையையும் மாறுதல் அடையச் செய்தது. பெண்ணுக்கு ஒரு குறித்த விலை உண்டு. அவ்விலை கொடுத்து வாங்கப்படா விட்டால் அவளுக்கும் அவள் குடும்பத்துக்கும் மரியாதைக் குறைவெனக் கருதப்பட்டது. வாணிக முறையில், ஒரு பொரு ளின் விலையாகக் கொடுக்கப்பட்ட பொருள் பெருமதிப்புள்ளதாக மாட் டாது. நாகரிகத்தின் கீழ்நிலையில் இவ்வகைக் கருத்தே உண்டாகியிருந்தது. பெண்ணுக்காகக் கொடுக்கப்படும் பொருளோடு அவள் மரியாதை இணைக்கப்பட்டிருப்பதாகக் கருதப்பட்டது. விலை கொடுத்து வாங்கப் படாத பெண்கள் பரத்தையராகச் சில கூட்டத்தினரிடையே கருதப்பட்டனர். தொடக்கத்தில் கற்பு கீழான கருத்தோடு ஆரம்பித்ததெனத் தெரிகின் றது. பல கூட்டத்தினரிடையே காணப்படும் குழந்தை மணப் பேச்சுக்களும் கற்புக்குக் காரணமாகும். இரண்டு குடும்பங்களையும் இணைக்கும் பொருட்டு இளமையிற் குழந்தை மணங்கள் முடிவு செய்யப்பட்டன. ஆகவே, மணமான சிறுமிகள் மணமான வளர்ந்த பெண்களைப்போலக் கட்டுப்பாடு உடையவர்களானார்கள். ஆண் பெண் பொறாமைக்குப் பொருளாதாரமும் ஒரு காரணமாக விருந்தது. ஆடவரின் தொழில்கள் வெவ்வேறு வகைகளாயிருந்தன. பெண் வீட்டு வேலை ஒன்றையே கவனிப்பவளாயிருந்தாள். அவள் பொருள் ஈட்ட வில்லை. அவள் தனக்கு வேண்டிய எல்லாவற்றையும் கணவனிடமிருந்து தனது காதலின் விலையாகப் பெற்றாள். இதில் இடையூறு நேரும்போது பொறாமை தோன்றுவது இயல்பு. ஆடவரின் வேலைகள் வெவ்வேறாக இருந்தமையால் வேறு விளைவுகள் தோன்றின. ஆடவர் பொதுக் கருமத்தின் பொருட்டு ஒன்று சேர்வதால் சமூகமும் ஆட்சியும் தோன்றின. இதனால் நாட்டு அமைப்பில் மாறுதல் உண்டாயிற்று. நாட்டின் நலனுக்காக ஒழுங்கான குடும்பங்களும், திருமணச் சட்டங்களும் தோன்றின. மக்கள் குடிகளாகவும், குலங்களாகவும் பிரிந்து வாழ்ந்தபோது மணமாகாத தாய்மார் தாழ்ந்தவராகக் கருதப்பட்ட னர்; ஆயினும், குடும்பங்கள் அவர்களைப் பாதுகாத்தன. குலங்கள் என்னுங் கட்டுக் குலைந்ததும் நாடு குடும்பங்களில் தங்கியிருந்தது. ஆகவே, ஆட்சி ஒருதார மணத்தையும் கற்பையும் வற்புறுத்தி ஆண் பெண் தொடர்பான பொறாமையை வளரச் செய்தது. ஒருவன் தனது மனைவி இன்னொருவனோடு மறைவான தொடர்பு வைத்திருக்கிறாள் எனக் கண்டவுடன், அவன் தனது பயனுள்ள மனைவியை இழந்து விடவும் கூடும் எனப் பயமடைந்தான். அவள் புதிய காதலன் பொருட்டுக் கணவனை விட்டுப் பிரியலாம். இது திருமணக் குழப்பமாவ துடன் அவன் ஏய்க்கப்பட்டவனுமாகின்றான். இக்காரணம் பற்றியும் கற்பு வற்புறுத்தப்பட்டது. உடம்பு சம்பந்தமான வெறுப்பும் ஆண் பெண் பொறா மைக்குக் காரணமாகும். ஒருவன் காதலிக்கின்ற ஒருத்தி இன்னொருவ னோடு கள்ளச் சேர்க்கை உடையவளாகின்றாள். கணவன் தனது எண்ணம் தடைப்படுவதை உணர்வதை மாத்திரமல்லாமல், தான் பற்று வைத்திருக்கும் ஒரு பொருளை இன்னொருவனின் வெட்கத்தோடு இணைத்துச் சிந்தனை செய்யவுந் தூண்டப்படுகின்றான். ஒருவன் குடித்த பாத்திரத்தில் இன்னொரு வன் குடிக்க அருவருப்படைவதோடும் சிலர் இதனை உவமிப்பர். நல்ல தோற்றத்தினாலும் மனிதன் இன்பம் அடைகின்றான். பழங் கால மனிதன் கட்டான தேகமும் பெண்ணுக்குரிய தன்மைகளும் உள்ள ஒருத்தியை விரும்பினான். அவன் பெண்ணின் நடை, உடை, அசைவு, அழகு, நிறங்களைப்பற்றிப் பொருட்படுத்தவில்லை. இவ்வாறு பெண்ணைப் பற்றி முற்கால மனிதனின் உள்ளத்தில் எழுந்த உணர்ச்சியே இன்றைய புதுமுறையான காதலாக வளர்ச்சியடைந்தது. கற்பு ஒரு கடமையாக வளர்ந்தது கற்பு பெண்ணைக் கட்டுப்படுத்திற்றேயன்றி ஆணைக் கட்டுப்படுத்த வில்லை. சில சமயங்களில் பெண்களையும் கட்டுப்படுத்தவில்லை. மணஞ் செய்த ஒருவன் ஆண்தன்மை இல்லாதவனாயிருந்தால் (Impotent) அவ னுடைய மனைவி கணவனின் விருப்போடு அவனுடைய சகோதரனை அல்லது நெருங்கிய நண்பனைச் சேரலாம் என உலூதர் கூறியுள்ளார். ஆண், ஆண் தன்மை உடையவனாயிருந்த போது பெண் கற்பாயிருக்க வேண்டு மென்று கொள்ளப்பட்டது. ஆண் சம்பந்தப்பட்டவளவில் அவன் இவ்வா றிருக்க வேண்டியதில்லை; பிறமாதரைச் சேர்தல் அவன் வல்லமைக்குட் பட்டிருந்தது. உயர்ந்த குடும்பங்களில் அவ்வாறிருத்தல் அவசியம் எனவும் கருதப்பட்டது. மத்திய காலங்களில் பரத்தையர் விடுதிகள் நகர வாழ்க்கைக்கு இன்றியமையாதனவென்றும் கருதப்பட்டன; தமது மனைவியரல்லாத பெண்களைச் சேர்தல் ஒழுக்கக்கேடு என்று கருதப்படவில்லை. கோயிற் குருமார் மாத்திரமல்லர் விசுப்பாண்டவர்களும் பரத்தையர் விடுதிகளில் வரி தண்டினார்கள். உரோமில் போப்பு பரத்தையர்களிடமிருந்து வரி தண்டினார். பத்தாம் நூற்றாண்டில் போப்பின் காரியாலயத்தில் 20,000 டக்கட் (Dueat) இவ்வகையில் வரியாகக் கிடைத்ததற்குப் பற்றுச் சீட்டுகள் காணப் படுகின்றன. ஜெர்மனியிலுள்ள மேயின் என்னுமிடத்தில் ‘ஆட்சி விசுப்பு’ இவ்வகை வரி தண்டினார். பொதுப் பெண்கள், பரத்தையரோடு போட்டியிடு வதால் தமது வருவாய் குறைந்ததைப்பற்றி அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ராஸ் பேக்கின் விசுப்பு பரத்தையர் விடுதி ஒன்றைத் தொடக்கினார். சில வகுப்பினரிடையே விலைமாதர் மிக மதிப்புப் பெற்றனர். அவர்கள் மனைவியரிலும் மேலானவர்களாகக் கொள்ளப்பட்டனர். அபிசீனியாவிலே பரத்தையர் அரசன் அரண்மனையில் மிக மதிப்புக் குரியவர்களாயிருந்தனர். ஒரு நகர் அல்லது மாகாணத்தினர் ஆட்சி அவர் பொறுப்பில் விடப்பட்டது. அரசியரைப் போல் உடுத்து அவர்கள் தமது மத்தியில் இருப்பதைப் பார்த்து முறைமையான மனைவியர் பெருமை கொண்டனர். தந்தையைப்பற்றி முக்கியமின்மை மனைவியை விருந்தாளிகளுக்கு இரவல் கொடுத்தல், திருமணமான பெண்ணைக் கணவனல்லாத பிறர் முதல்முதல் சேருதல் போன்றவைகளுக் கும் மனைவி மூலம் பிறக்கும் பிள்ளைகளுக்கும் தொடர்பு இருக்கவில்லை. கணவர், பிற ஆடவர் மூலம் தமது மனைவியர், பிள்ளைகளைப் பெற அனுமதிக்கும் நிகழ்ச்சிகள் பல உண்டு. அவ்வாறு பிறக்கும் பிள்ளைகளைக் கணவன் தனது பிள்ளைகளாகவே பாவிக்கின்றான். எஸ்கிமோவர் தம் மனைவியர் தம் மதகுரு மூலம் பிள்ளைகளைப் பெறுவதை விரும்பினார்கள். மேலான சந்ததியைப் பெற விரும்பும் அராபியன் ஒருவன் மனைவி பூப்பு அடைந்ததும் இன்னொருவனைத் தனது மனைவியோடு சேர்ந்திருக்கும் படி விடுவான். அவள் விருந்தாளி மூலம் கருவடைந்தாள் என்று அறியு முன் கணவன் அவளைத் தீண்டமாட்டான். பெண், பிள்ளை இல்லாதவளான போது நாகரிக காலத்திலும் இவ்வகைச் செயல்கள் நிகழ்ந்தன. பழைய யூதரின் திருமணச் சட்டபடி இறந்துபோன தமையனின் மனைவியைச் சேரும்படி ஒருவன் அனுமதிக்கப்பட்டான். அவ் வகையிற் பிறக்கும் பிள்ளை இறந்தவனின் பிள்ளையாகக் கருதப்பட்டது. கபீர் மக்க ளுள் தந்தையின் மனைவி அவன் மரணத்துக்குப்பின் அவள் மகனுக்குச் சொந்தமானாள். மகன் தந்தையின் மனைவியைத் தீண்ட மாட்டான். அவன் அவளை இன்னொருவனோடு இருக்கும்படி சிலகாலம் அனுமதித்தான். அவள் வயிற்றில் பிறக்கும் பிள்ளை தந்தை மூலம் வந்த சொத்தாகக் கருதப் பட்டது. இந்தியாவில் நியோக மணத்தினால், பிள்ளையில்லாதவனின் மனைவி கணவன் இருக்கும்போதே அவனுடைய சகோதரன் மூலம் அல்லது வேறு உறவினர் மூலம் பிள்ளைகளைப் பெற்றாள்; பிள்ளைகள் கணவனின் பிள்ளைகளாகக் கருதப்பட்டன. ஓசெடிஸ் (Ossetes) மக்களிடையே ஒருவன் தனது ஆறு வயது மகனுக்கு வளர்ந்த பெண்ணைக் கலியாணம் கட்டி வைத்தான். கணவனின் தந்தை மூலம் அவள் வயிற்றில் பிறக்கும் பிள்ளைகள் கணவனின் பிள்ளைகளாகக் கருதப்பட்டன. தென்னிந்திய பிற்போக்கான மக்கள் சிலரிடையும் இவ்வழக்கம் காணப்படு வதைத் தென்னிந்திய குலங்களும் குடிகளும் என்னும் நூலில் தேஸ்ரன் காட்டியுள்ளார். கற்பின் சின்னமாகிய நாணம் நாணம் இயற்கையான குணமன்று. அது பிற்காலத்தில் தோன்றி வளர்ந்தது. சில நாடுகளில் ஆண் பெண் சேர்க்கை வெளிப்படையாக நிகழ்கின்றது. தென் கடல் தீவுகள், தாகிதி போன்ற பற்பல இடங்களில் இது பொது நிகழ்ச்சி. சில பிற்போக்கான மக்களுள் ஆண்களும் பெண்களும் உடையின்றிச் செல்கின்றனர். பக்காரி (Bakaire) மக்களைக் குறித்து ஸ்டினென் (Steinen) கூறியிருப்பது வருமாறு: “நமது ஊரவர்களுக்கு உடம்பில் மறைவான இடமென்பது கிடையாது. மறைவான உறுப்பு எனக் கூறுவதே மூடத்தனம் என அவர்கள் கூறுகிறார்கள். ஒரு ஆணையோ பெண்ணையோ அவர்களின் பிள்ளையைக் காட்டி அவர் யார் எனக் கேட்டால் அவர்கள் தமது இரகசிய உறுப்புகளைத் தொட்டுக்காட்டி அவர்கள் அவைகளிலிருந்து தோன்றியவர்கள் எனக் கூறுவர்.” அவர்கள் மற்றவர்களுக்கு முன் நின்று உண்ண நாணுகின்றனர். மற்றவர்கள் காணாமல் உண்பது நற்பழக்கமென அவர்களால் கொள்ளப்படுகின்றது. முகம், கால், மயிர், பாதம், வயிறு என்பவைகளில் ஒவ்வொன்றைக் காட்ட நாணும் மக்களும் காணப்படுகின்றார்கள். முகமதியப் பெண்கள் முகத்தைக் காட்டமாட்டார்கள். பல மக்களிடையே மகன் பன்னிரண்டு வயதான பின் தாய் அவனைப் பார்க்க அனுமதிக்கப்படமாட்டாள். எகிப்திலே வெலகீன் பெண்கள் ஆடவரின் மத்தியில் தமது உடையை உரிந்து உடுப்பில் நாண மாட்டார்கள். ஆனால், தமது முகத்தை மற்றவர்கள் பார்க்கும்படி விடமாட் டார்கள். ஹொற்றன் ரோவர் என்னும் ஆப்பிரிக்கப் பெண்கள். யூதப் பெண்களைப் போலத் தலைக்கு மேல் ஒரு துணியைப் போர்த்திருப்பார்கள் அவர்கள் தமது மயிரை மற்றவர்கள் பார்க்கும்படி ஒருபோதும் விடமாட் டார்கள். பெலுத்தித் தீவில் சாமா என்னும் இடத்துப் பெண்கள் தமது இரகிய உறுப்புக்களை வெளியே காட்டுவதில் நாணமடைய மாட்டார்கள்; கொப்பூழை வெளியே காட்டுவதில் நாணமடைவர். சீனப் பெண்கள் தமது பாதத்தை வெளியே காட்ட நாணுவர். பாதத்தைக் குறித்துப் பேசுவதே விரும்பத்தகாத செயலாகும். ஊகண்டாவில் ஒருவன் தனது காலின் சிறிய பகுதி தானும் வெளியே தெரியும்படி அரசனுக்கு எதிரில் நின்றால் அவன் கொலைத் தண்டனை அடைவான்; ஆனால், அவனைச் சேவிக்கும் மகளிர் முற்றும் உடையின்றி நின்றனர். மத்திய ஆப்பிரிக்காவில் பல கூட்டத்தின ரிடையே பெண்கள் மரக்கிளை ஒன்றை அணிவர். அது முற்பக்கத்தை மறைப்பதற்குப் பதில் பிற்பக்கத்தை மறைத்தது. இம்மரக்கிளை தற்செய லாகத் தவறி விட்டால் அவர்கள் பெரிதும் நாணமடைவர். அமெரிக்க மக்கட் கூட்டத்தினர் பலர் அன்னியருக்கு முன் உடலில் நிறங்கள் பூசாமல் செல்லமாட்டார்கள். ஆடையில்லாமல் திரியும் மக்களுக்கு ஆடை உடுப்பது திடுக்காட்டம் விளைவிப்பதாயிருக்கின்றது. முகம்மதியப் பெண்கள், முகத்தை மறைக்காத பெண்களைத் தாழ்ந்தவராகக் கருதுவர். உடலை மறையாமல் விடுவதால் தோன்றும் நாணம் உடை அணிவதாலும் அலங்காரம் செய்வதாலும் உண்டானதெனத் தெரிகின்றது. நாணத்தினால் உடை தோன்றவில்லை. உடையினால் நாணம் தோன்றிற்று. உடையின்றி இருந்து வெயிற் காயும் (Sun bath) பெண்கள் முதலில் நிமிர்ந்து பார்க்க நாணுவார்கள். பழக்கம் உண்டான பின்பு அவர்கள் மற்றவர்களோடு நன்றாகக் கலந்து பேசுவார்கள். கற்பு மதிப்புக்குரியதான போது அது உடல் சம்பந்தமான நாணத் தோடு இணைத்துப் பலப்படுத்தப்பட்டது. சிறுவர் இளமை முதல் தமது சில உறுப்புகளைக் குறித்து நாணம் அடையும்படி பழக்கப்படுகின்றனர். இச் சட்டங்களை மீறுகின்றவர்களைத் தண்டிப்பதாக அரசினரும் பயமுறுத்து கின்றனர். இதனால் இன்னும் நாணம் வலியுறுத்தப்படுகின்றது. மத்திய காலத்தில் ஜெர்மனியில் குடிசைகளில் வாழ்பவர்கள் நிர்வாணமாகப் படுக்கைக்குச் சென்றார்கள். சிறிய வீடுகளிலுள்ளவர்கள் ஒரே படுக்கையில் படுத்தார்கள். தலைக்குக் கட்டிக் கொள்ளும் நாடாமாத் திரம் இராக்கால உடையாக விருந்தது. டென்மார்க்கில் இரவில் முற்றும் உடையின்றி படுக்கைக்குச் செல்லும் வழக்கம் 17ஆம் நூற்றாண்டு வரை யில் இருந்தது. 1658இல் டென்மார்க்குக்குச் சென்ற போலீஸ் இராணுவ அதிகாரி டென்மார்க்கிலுள்ளவர்கள் எப்படிப் படுக்கைக்குச் சென்றார்கள் என்று கூறியுள்ளார். 13ஆம் நூற்றாண்டின் ஓவியங்கள் எப்படி ஆடவரும் மகளிரும் குளித்தார்கள் என்பதைக் காட்டுகின்றன. உடையில்லாத ஆணும் பெண்ணும் ஒரே காலத்தில் ஒரே இடத்தில் நின்று குளித்தார்கள். ஓவியம் ஒன்றில் ஆடவன் அரையில் துணிகட்டி நிற்கின்றான். பெண் உடையின்றிக் கழுத்தில் மாலை அணிந்து கொண்டு தலையை மறைத்துக் கொண்டு நிற்கின்றாள். மத்தியகால உரொட்டிச் சுருள்கள் ஆண் பெண்களின் இரகசிய உறுப்புக்களின் வடிவாகச் செய்யப்பட்டன. அவ்வுறுப்புகளின் பெயர் களாலேயே அத்தின்பண்டங்கள் அறியப்பட்டன. மரியாதையுள்ளவர்கள், பரிசுத்தம் நிறைந்தவர்கள், குருமார், கன்னிப்பெண்கள், தந்தைமார், தாய் மார்களின் வாய்களால் அப்பெயர்கள் உச்சரிக்கப்பட்டன. அவ்வாறு செய்வதில் தடையாதும் எழவில்லை. தந்தையின் மதிப்பு செல்வம் திரளத் தொடங்கியபோது ஒருவன் தனது செல்வத்தைத் தனது இரத்தத் தொடர்புள்ள பிள்ளைகளுக்கு விட விரும்பினான். ஆகவே, திருமணம் முக்கிய கடமையாக விருந்தது. பழைய போக்கில் பிள்ளை களை வளர்ப்பது இலகுவாயிருந்தது. நாகரிகம் ஏற ஏற இது கடினமாயிற்று. கணவன் பிள்ளைகளுக்குத் தானே பொறுப்பு என அறிந்து அவர்களின் சுமையைத் தானே தனது தோள்களில் ஏற்றான். இச்சுமையை இன்னொரு வன் தனது தோளின்மேல் சுமத்தினால் அது ஏய்ப்பாகக் கருதப்பட்டது. ஆகவே அவன் கோபம் அடைந்தான். குடும்ப காலம் குடும்ப காலத்தில் பெண் ஆடவனுக்குக் கீழ்ப்பட்டு நடக்க வேண்டி யவள் எனக் கருதப்பட்டாள். அக்காலத்தில் அவள் தனிப்பட்டவளாகக் கருதப்படவில்லை. பெண் ஆடவனின் வீட்டைப் பார்ப்பவளாகவும், அவனுடைய பிள்ளைகளைப் பெறுபவளாகவும் இருந்தாள். ஆடவன் அவளுடைய தலைவனாக இருந்தான். திருமணத்தினால் பெண் தந்தை யின் கவனிப்பிலிருந்து கணவனின் கீழ்ப்படிவதாக விரதம் செய்யவேண்டும். கணவனுடைய எண்ணத்தின்படி அவள் நடக்க வேண்டும். ஆகவே கணவ னுடைய எண்ணப்படி அவளுடைய குணங்கள் மாறுபட்டன. அவள் மிக எளிதில் கீழ்ப்படிவுள்ளவளாகும் பொருட்டு, அவள் அனுபவமில்லாத வளாயும், கபடமற்ற கற்புடையவளாயும், துணிவுடையவளாயும், அச்ச முள்ளவளாயும் இருத்தல் வேண்டும். அவளுடைய வாழ்க்கை ஆடவனின் வாழ்க்கையுள் அடங்கியிருத்தல் வேண்டும். அவள் அவனை மகிழ்விக்க வேண்டுமானால் அவள் மேற்கூறிய பெண்ணுக்குரிய குணங்களுடைய வளாயிருத்தல் வேண்டும். பெண்கள் முதலாளித்தனத்தின் கீழ் வாழ்வதால் சில தீமைகளும் தோன்றின. வேலைக்காரராக்கப்பட்ட பெண்கள் கீழ்மை அடைந்தார்கள். அவர்களிடத்தில் ஆடவரின் அடக்கு முறைக்கு மாறான குணங்களும் எழுந்தன. ஆடவனிடத்தில் அதிகாரமிருந்தமையால் அவள், தந்திரம், சூழ்ச்சி, பொய் முதலிய குணங்கள் உடையவளானாள். அவள் பெரிய கருமங்களில் கலந்து கொள்ளவில்லை. ஆகவே அவள் தீமை புரிதல், குழப்பம் செய்தல், அதிகம் பேசுதல், அழுதல் போன்ற குணங்கள் உடைய வளானாள். அவள் அனுபவமும், கபடமும் இல்லாமல் இருந்ததால் அவள் ஆடவனோடு பழக்கமில்லாதவளாயுமிருந்தாள். இவ்வகையான மனப் பிளவுபட்ட நிலையானது ஒருதார மணத்தினால் உண்டாயிற்று. அவர்கள் ஒருவரை ஒருவர் விளங்காதவர்களாயும், வெவ்வேறு விருப்புடையவர் களாயும் கலியாணத்துள் இருந்தார்கள். இது இரகசியமான போராட்டத்தை ஒத்திருந்தது. இப் போராட்டத்தில் ஆடவன் எப்பொழுதும் வெற்றியாளனா யிருக்கவில்லை. பெண், பொருள் சம்பந்தமான சுதந்திரமில்லாதவளான படியால் மனிதன் அவளை வாழ்நாள் முழுவதும் வைத்துக் காப்பாற்ற வேண்டியவனானான். குடும்பத்தில் பெண் வாழ வேண்டிய முறையை மனு கூறுகின்றார்; பெண்ணே அவமானத்துக்குக் காரணம்; அவளே பகைக்கும் ஏது; பெண் தனது வாழ்நாள் முழுவதும் கணவனுக்குப் பணிவிடை செய்வது மாத்திரமல்லாமல் அவன் இறந்த பின்பும் அவனுக்கு விசுவாசமாயிருக்க வேண்டும்; காரணமின்றி அவன் அவளை ஏய்த்தாலும், அவன் இன்னொரு பெண்ணோடு நட்பாயிருந்தாலும் அவள் அவனைத் தெய்வம் போல் மரியாதை செய்ய வேண்டும். அவள் அவனை வாழ்நாளிலோ மரணத்தின் பின்போ வெறுக்கும்படி செய்தல் கூடாது. பெண் கணவனின் மரணத்தின் பின் அவனுக்கு விசுவாசமாயிருக்கும் பொருட்டுச் சதி என்னும் வழக் கத்தைப் பிராமணர்கள் உண்டு பண்ணி உயிரோடு இருக்கும் விதவையைக் கணவனோடு கட்டையில் கிடத்திக் கொளுத்தினார்கள். இலக்கிய காலத்தில் கிரீசில் அல்லது உரோமில் பெண்களின் நிலை இதற்கு மேலாக இருந்ததெனக் கூற முடியவில்லை. அரிஸ்டாட்டில் என்னும் கிரேக்க ஞானியார், பெண் இயற்கையின் மாறுபாடு என்றும், கொடிய விலங்குகளுள் முதன்மையானவள் என்றும் கூறினார். ஒருவன் ஆயிரம் பெண்களிலும் பார்க்க மேலானவன் என இயுபிரிடிஸ் (Eupirides) கூறினார். பிறரால் நன்மை அல்லது தீமை கூற முடியாதபடி வாழ்பவளே நல்லவள் எனத் துகிடிடீஸ் கூறினார். அக்காலப் பெண்கள் சிறையிலடைக் கப்பட்டவர்களை போல வாழ்ந்தார்கள். அக்காலப் பெண்கள் பணிவுள்ள அடிமைகளாகக் கருதப்பட்டனர். குடும்ப காலத்தில் புதல்வியரிலும் பார்க்கப் புதல்வர் விரும்பப்பட்டனர். புதல்வன் விடுதலையுள்ள வனாவான்; புதல்வி இன்னொருவனுக்கு அடங்கி நடப்பவளாவாள். கிரேக்கப் புலவர்கள் பெண்களைப் பற்றி வருணித்திருப்பது மிக மிக வியப் பாகத் தோன்றுகிறது. “திருமண மகிழ்ச்சி இரண்டு முறை மாத்திரம் அறியப் படும். ஒன்று மணமான அன்று, மற்றது அவளை இடுகாட்டிற் புதைக்கும் போது” என ஒரு புலவர் கூறியுள்ளார். “பெண் படுக்கையிலும் சவக் காலை யிலும் நல்லவள்” என்னும் முதுமொழி உரோமில் வழங்கிற்று. முற்காலத்தில் திருமணம் சுமையுடையதாகவும் தீமையுடைய தாகவும் கருதப்பட்டது; மகிழ்ச்சியுடையதாகக் கொள்ளப்படவில்லை. திருத்தமில்லாத பெண்ணின் இணைப்பினால் மகிழ்ச்சி உண்டாக மாட்டாது. டெமாஸ்தினீஸ் (Demosthenes) என்பார் அதேனியருக்குக் கூறியது வருமாறு: “எங்களுக்கு இன்பம் அளிக்க விலைமாதர் இருக்கின்றனர்; எங்கள் உடலைக் கவனிக்க வைப்பாட்டிகள் இருக்கின்றனர். முறையான பிள்ளைகளைப் பெறவும் வீட்டைப் பார்க்கவும் முறைமையான மனைவி யர் இருக்கின்றனர்”. பிளாட்டோவும் இதே கருத்திற் பேசியுள்ளார். “ஒருவன் கலியாணம் என்னும் வழக்கத்துக்குட்பட்டுப் பிள்ளைகளைப் பெறுவது தானாகவன்று, சட்டத்துக்கடங்கி” என்பது அவர் கூற்று. கி.மு. 132இல் ஒரு மேல் உத்தியோகத்தன், “நாம் மனைவிமாரின்றி நன்றாகக் காலங் கழிக்க வேண்டுமானால் எல்லோரும் இச்சுமையிலிருந்து விடுதலையடைய வேண்டும்” எனக் கூறினான். இக்கருத்தே குடும்பக் காலத்தில் இருந்து வந்தது. பழைய உருசியாவில் பெண்ணின் தந்தை சவுக்கினால் பெண்ணை மெல்ல அடித்து, “நான் இதுவரையும் செய்து வந்த வேலையை இனி உன் கணவன் செய்வான்” என அவளிடம் கூறிக் கணவனிடம் சவுக்கைக் கொடுத்தான். இவ்வாறு செய்தல் கலியாணக் கிரியையில் ஒரு பகுதியாக இருந்து வந்தது. குரோசியாவில் (Croatia) அது முதல் பெண்ணுக்குத் தலைவன் தானே என்று காட்டும் பொருட்டுக் கலியாணத்தின் போது கணவன் பெண்ணை அடித்தான். காதலும் மணமும் பிரிந்து செல்லுதல் கிரேக்கப் பெண்கள் அந்தப்புரங்களில் மறியற்காரரைப் போல் வாழ்ந்தார்கள். அவர்களுக்குக் கல்வியில்லை. கணவரல்லாத மற்றவர் களோடு பழகாதபடி அவர்கள் தடுக்கப்பட்டார்கள். வேலைக்காரி போன்ற வாழ்க்கை நடத்தி வந்தமையால் அவர்கள் கணவருக்குக் காதல் அளிக்கக் கூடியவர்களாயிருக்கவில்லை. ஆகவே கணவர் பரத்தையர் இல்லங்களை நாடிச் சென்றனர். பரத்தையர் அவர்கள் மனைவியரைப்போல் இல்லாமல், அழகு, திருத்தம், உலக அறிவு, கலைவிருப்பு முதலிய தன்மைகள் உடையவர்களாயிருந்தனர். “குருமார். சக்கரவர்த்தி, பிரபு, ‘நைட்,’ புலவர்கள் எல்லோரும் ‘வீனஸ்’ தெய்வத்தின் ஆட்சிக்குட்பட்டிருந்தனர். ‘நைட்’ என்னும் பிரபுக்கள் தமது மனைவியருக்குச் சேவை புரிவதில்லை; மணமான பெண்களின் காதலின் பொருட்டுச் சேவை புரிந்தனர். இதனால் மணமும் காதலும் பிரிக்கப்பட்டிருந்தன”. 11ஆம், 12ஆம் நூற்றாண்டுகளில் கன்னி மடங்களும் குருமார் மடங்களும் சமீபங்களிலிருந்தன. பத்திக்கும், படிப்புக்கும் பதில் பல மடங்கில் சோம்பல், ஆசாடபூதித்தனம், கெட்ட நடத்தை முதலியவை தோன்றின. மணம் குடும்ப சம்பந்தமாகவிருந்தது. அது தனிப்பட்ட ஒருவனின் சம்பந்தமுடையதாயிருக்கவில்லை. கணவன் அல்லது மனைவியைத் தெரிவது பெற்றோரின் கடமையாகவிருந்தது. பெண்ணின் தந்தை பெரும் பாலும் செல்வமுடைய கணவனைத் தெரிந்தான். கிரீன்லாந்தில் விதவைகள் கணவனின் மரணகால விருப்பத்தில் குறிப்பிடப்பட்டவனை மணஞ் செய்தார்கள்; அவர்கள் தாம் விரும்பியபடி மணம் செய்யவில்லை. சீனா வில் மணமகன் கலியாணத்தின் அன்றுதான் பெண்ணைப் பார்ப்பான். காதல் விடுதலை விழாக்கள், நாட்டியங்கள், நீராடும் வழக்கங்கள், வியபிசார விடுதிகள், இரகசியமான நடிப்புக்கள் போன்ற நிகழ்ச்சிகளில் பழம் போக் கான காதல் விடுதலை உண்டாயிருந்தது. ஆண் பெண் சேர்க்கை தொடர் பான கட்டுக்கள் நீக்கப்பட்டிருந்தன. ஆறாவது அலக்சாந்தரின் போப்புச் சபையில் கட்டழகு வாய்ந்த கட்டான பெண்களும் தேகக்கட்டுள்ள வேலையாட்களும் சேரும்படி விடப்பட்டார்கள். இதனைச் சபையிலுள்ளவர்கள் எல்லோரும் பார்த்து மகிழ்ந்து பொழுது போக்கினார்கள்1. பிரபுக்கள் கூட்டங்களில் ஒருவ னுடைய மனைவி ஒரே காலத்தில் இன்னொருவனோடு காதல் சம்பந்தப்பட் டிருந்தால் அவள் கணவன் அதைக் குறித்துக் கவலை கொள்ளவில்லை. அக்கூட்டத்திலுள்ள பெண்கள் தமது இச்சைக்கு நிரம்பிய விருந்து அளித்து வந்தார்கள். உருசிய நாட்டுச் சக்கரவர்த்தினி தனது அறையில் எபிரவேசு என்று அழைக்கப்படும் ஒரு தாதியை அமர்த்தியிருந்தாள். தனக்குத் தகுதி யுள்ளவன் என ஒருவனை அவள் அறிந்தால் அவனுடைய திறமையைப் பழகிப் பார்த்து அறிவிக்கும்படி அவன் அவளிடம் அனுப்பப்பட்டான்2. சீர்திருத்தத்திலும் பரத்தைமை, வியபிசாரம், தமது கணவரல்லா தவர்களோடு பெண்கள் சேர்தல், தமது மனைவியரல்லாத பெண்களோடு ஆண்கள் சேர்தல் போன்ற கீழ் நீரோட்டங்கள் இருக்கின்றன. பெண்ணைப்பெறும் வழிகள் வலிமையால் பிடித்து மணத்தல், மாற்று மணம், கொடைமணம், சேவைமணம், கடமைமணம், பொருள்மணம், காதல்மணம் என மணத்தை ஏழு பிரிவுகளாகப் பிரிக்கலாம். கணவனின் சகோதரி அல்லது உறவினரில் ஒருத்தி பெண்ணின் சகோதரன் அல்லது அவள் உறவினருள் ஒருவனை மணத்தல் மாற்றுமணம் எனப்படும். கொடைமணமென்பது கணவனிட மிருந்து பெண்ணின் தந்தை சில வெகுமதிகளைப் பெற்றுக் கொண்டு பெண்ணைக் கொடுத்தல். பொருள்மண மென்பது பெண்ணின் தந்தை பெண்ணுக்குச் சீதனமளித்தல். கடமை மணமென்பது சகோதரனின் விதவையை மணத்தல் அல்லது குழந்தையில் மணம் பேசி முடிவு செய்யப் பட்டிருந்தமையின் மணத்தல் போன்றவை. முற்கூறியவை ஒன்றையும் நோக்காது காதல் காரணமாக மணத்தல் காதல் மணம் எனப்படும். மணமென்பது தொடக்கத்தில் பெண்ணை அடிமைப்படுத்துவதா யிருந்தது. இது பெண்ணை வலிமையாற் பிடித்து உறுத்தப்படுவது. மனிதனின் கீழ் நிலையில் அவள் எல்லா வேலையாளரிலும் பார்க்க மேலாக மதிக்கப்பட்டாள். அக்காலத்தில் வாணிகத்தாலும் பணத்தாலும் செல்வம் உண்டாகவில்லை. ஆகவே, ஒருவனுக்குப் பெண் ஒருத்தியைப் பிடித்துச் சொந்தமாக்குவது இயல்பாக இருந்து வந்தது. பெண் சேர்க்கை சம்பந்தமான மனிதனின் இயற்கை உணர்ச்சி அவன் கூட்டத்துக்கு வெளியிலேயே சென்றது. ஆகவே அவன் பெண் ஒருத்தியைப் பெற விரும்பினால் அவன் அவளை அயற் கூட்டத்திலிருந்து வலிமையால் பிடித்தான். முற்காலத்தில் அயலே வாழும் மக்கட் கூட்டத்தினர் ஒருவருடன் ஒருவர் பகைமை கொண்டிருந்தனர். ஆகவே கொள்ளையின் பொருட்டும் போர்கள் நிகழ்ந்தன. பெண் அடிமை மிக விலை ஏறப் பெற்றவளாயும் மனிதனுக்கு இன்றியமையாதவளாயும் இருந்தாள். முற்காலத்தில் பெண்களைக் கவர்ந்து கொண்டு செல்லுதல் பொது நிகழ்ச்சிகளாயிருந்தன. சாபைன்ஸ் (Sabines) பெண்களைக் கவர்தல், எலினை திராய் அரசன் கவர்தல், இராவணன் சீதையைக் கவர்தல் போன்ற பழைய செயல்களை வரலாறுகளிற் படிக்கின் றோம். இவையெல்லாம் பெண்களை வலிமையாற் பிடிக்கின்ற கால நிகழ்ச்சிகளின் நிழல்களேயாகும். ஆஸ்திரேலிய தஸ்மேனியர் அயற் கூட் டங்களிலிருந்து பெண்ணைக் கவர்ந்தார்கள். அயல் கூட்டத்தினரோடு அவர்கள் எப்பொழுதும் போர் விளைத்தனர். கரிப்ஸ் என்னும் ஆப்பிரிக்கர் தாம் வெற்றி கொண்ட மக்களின் ஆண்களைக் கொன்று விட்டுப் பெண் களைத் தமக்கு மனைவியராக்குவதற்கு அழைத்துச் சென்றனர். கிறித்துவ வேதத்தில் பெண்களைப் பிடித்தலைப் பற்றிய செய்தி காணப்படுகின்றது. நீதிபதிகள் என்னும் புத்தகத்தில், பென்சமினின் புதல்வர்கள் முந்திரிகைத் தோட்டத்துள் பதுங்கியிருந்து நடனமாடிக் கொண்டிருந்த சில்லோவின் புதல்வியரை மணஞ் செய்தற்காகப் பிடித்தார்கள். மனுவிற் கூறப்படும் எண் வகை மணங்களுள் வலிமையாற் பெண்ணைப் பிடிக்கும் மணம் இராக்கதம் எனப்பட்டது. உரோமர் ஜெர்மனியர்களிடையில் பெண்களை இவ்வாறு பிடித்தல் புகழ்ச்சிக்குரியதாகவிருந்தது. ஸ்காந்தினேவிய பழைய பாடல் களில் பெண்களைக் கவரும் போர்கள் கூறப்படுகின்றன. பகைவனின் மனைவி, மகள் முதலியோரைக் கவர்ந்து மணத்தை முடிவு செய்யும் ஒழுக்கமுறை என்று கருதப்பட்டது. கிரேக்க மொழியில் மனைவியைக் குறிக்கும் (Damar) என்னும் சொல் ‘அடிமை’ அல்லது போரில் சிறை யாக்கப்பட்டவள் என்னும் பொருள்படும். தென்சிலாவியரிடையே ‘பெண் பிடி மணம்’ இந் நூற்றாண்டின் தொடக்கம் வரையில் இருந்தது. பெண் பிடி வழக்கம் நின்றபோதும் அவைகளின் நிழல்கள் நிலைபெற்றன. ஸ்பார்ட் டாவில் மணமகனின் நண்பர் பெண்ணை வலிமையால் பிடித்துக் கொண்டு போவதாகிய மணக்கிரியை நடத்தப்பட்டது. புளூடோ காலத்தில், பெண் தாயின் மடியில் மறைந்திருப்பதாகவும் அப்பொழுது மணமகனும் அவனுடைய நண்பரும் அவளை இட்டுச் செல்வதாகவும் மணக்கிரியை நடத்தப்பட்டது. பெண் வாசற் படியைத் தானாகத் தாண்டவில்லை; மண மகன் அவளைத் தூக்கி வாயிற்படிக்கு அப்பால்விட்டான். பல மக்களிடை யே பெண்ணின் பெற்றோர் அவள் கணவனோடு பேசுதல் ஆகாது என்னும் சட்டம் இருந்து வருகின்றது. இதற்குக் காரணம் மேற்கூறப்பட்டதே. பெண் பிடியிலிருந்து மாற்றுச் சடங்கு வளர்ச்சியடைந்தது. பெண் பிடியினால் கூட்டங்களிடையே முடிவில்லாத போரும் பகையும் உண்டாயிருந்தன. ஆகவே சமாதான முறையான மாற்றுக் கலியாணம் நன்று என அவர்கள் கண்டார்கள். பெண்களைக் கொடுத்து வாங்குவதால் கூட்டங்களிடையே பகை தணிந்தது. ஆகவே பெண் பிடியிலிருந்து மாற்றுச் சடங்கு வளர்ச்சியடைவதாயிற்று. பெண்ணின் தந்தையிடம் சேவை புரிந்து பெண்ணைப் பெறுவது எல்லா சாதியாரிடத்தும் இயல்பாக இருந்து வந்தது. யாக்கோப்பு, இராச்செல் என்பவளுக்காக ஏழு ஆண்டுகள் சேவை புரிந்தார். பெண்ணை வாங்கு வதற்குப் பணமில்லாத மணமகன் பெண்ணின் தந்தையிடம் சேவை புரிதல் எல்லா நாடுகளிலும் வழக்காறாக விருந்தது. பியூசி மணமகன் பெண்ணின் தந்தை தோணி கட்டுவதற்கு உதவி புரிதல் வேண்டும்; புஷ்மன் மணமகன் வேட்டையாடுவதற்கு உதவி புரிதல் வேண்டும். அமெரிக்க மக்களிடையே மணமகன் பெண்ணின் தந்தை வீட்டிற் சென்று வேலையாள் போல வேலை செய்தல் வேண்டும். இவ்வகைச் சேவை மணம் சேர்மனியிலும் இருந்தது. சேவை மணமே பயிர்ச் செய்கை உள்ள நாடுகளில் தாயாட்சியாக மாறிற்று. கணவன் பெண்ணின் குடும்பத்தில் சென்று வாழ்ந்தான். அவனைச் சூழ்ந்து பெண்ணின் உறவினர் வாழ்ந்தார்கள். சேவை மணத்துக்குப் பின் விலை கொடுத்துப் பெண்ணை வாங்கும் மணம் தோன்றிற்று. பெண்ணை விலைகொடுத்து வாங்கும் மணமும் சீதன மணமும் கைத்தொழில், வாணிபம், ஆடுமாடு முதலியவைகளால் செல்வம் வளர்ந்தது. செல்வம் ஆடவர்கையில் இருந்தது. முதலில் வாணிகரும், மந்தை மேய்ப்போரும் ஆடவராயிருந்தனர். ஆகவே, அவர்கள் அப் பொழுது பெண்ணைப் பெறும் பொருட்டுச் சேவை செய்ய வேண்டி யிருக்க வில்லை. அவர்கள் பெண்ணின் தந்தைக்குப் பொருள் கொடுத்துப் பெண்ணை வாங்கினார்கள். விலை கொடுத்து வாங்கும் மணங்களோடு சேவை மணங்களும் இருந்து வந்தன. சில நாடுகளில் பெண்ணின் தந்தைக்குப் பொருள் கொடாத மணங்கள் முறையான மணங்களாகக் கொள்ளப்பட வில்லை. அமெரிக்க வாலிபனொருவன் பெண்ணொருத்தியைக் காதலித்துப் பெண்ணை வாங்குவதற்கு அவனிடம் போதிய பொருள் இல்லாதிருக்குமானால் அவளுடைய தந்தை அவனிடமிருந்து பாதி விலையைப் பெற்று அவனைப் பாதி மணமுள்ளவனாக்கினான். இதனால் அவன் அப்பெண்ணைத் தனது குடிசைக்கு அழைத்துச் சென்று அவளைத் தனது அடிமையாக்க முடியாமல் இருந்தது; அவன் அவள் குடிசையில் தங்கி அவளுக்கு அடிமையானான். செல்வம் ஏற ஏறச் சேவை மணங்கள் விலை மணங்களாயின. விலை மணத்தினால் பெண், பண்டங்களைப் போலக் கணவனின் சொத்தா னாள். விலை கொடுத்து வாங்குவதால் மணம் நிலை உடையதாயிற்று. கணவன் பெண்ணின் கலியாணத் தொடர்பை ஒருபோதும் நீக்க விரும்ப வில்லை. அவ்வாறு செய்தால் அவன் பெண்ணுக்கு விலையாகக் கொடுத்த பணத்தை இழந்து விடுவான். கால நிலைமை, பொருளாதார நிலைமை களுக்கு ஏற்றவாறு பெண்ணின் விலை இருந்தது. பணம், கயிற்றில் ஓடு களைக் கோத்த மாலைகள், கம்பளங்கள், குதிரைகள், ஆடுமாடுகள், அடிமைகள் வகையில் பெண்களின் விலை இருந்தது. ஒட்டன்ரோவ பெண் ஒருத்தியின் விலை ஒரு எருது அல்லது ஒரு பசு. காருவ பெண்ணின் விலை மூன்று பசுவும் ஒரு ஆடும். கபீர் பெண்ணின் விலை 6 முதல் 30 மாடுகள்; விலை பெண்ணுடைய தந்தையின் பெருமையைப் பொறுத்திருந்தது. பொங்கோப் பெண்ணின் விலை 20 இராத்தல் இரும்பு, 20 ஈட்டி முனை; வயதானவளாயின் மலிவாகக் கிடைப்பாள். தொகொஸ் பெண்ணின் விலை 16 வெள்ளியும் ஆறு வெள்ளி விலையுள்ள பண்டங்களும். கலினாப் பெண்ணின் விலை நாற்பது முதல் அறுபது மார்க்கு பணம். கம்ரூன் பெண்ணின் விலை 6,000 சிலின்; சாதாரண பெண்ணின் விலை 2,000 சிலின்; அடிமையாயின் 800 சிலின். பெண்கள் பணமாகவும் பயன்படுத்தப்பட்டார் கள். பெருந்தொகைப் பணம் பெண்கள் வகையாகவும் செலுத்தப்பட்டது. அலைந்து திரியும் ஆசியப் பெண்களுள் கலமுககேட், தத்தாரிப் பெண்களின் விலை மிக அதிகம். ஒரு கலின் பெண்ணின் விலை 90 நான்கு வயதுடைய குதிரை, 90 நாலு வயது ஆடு, 90 நாலு வயது ஒட்டை. துங்கு மக்களுள் ஒரு பெண்ணின் விலை 20 துருவமான். விதவையாயின் மலிவாகக் கிடைப்பாள். துர்கோமன் மக்களுள் ஒரு பெண்ணின் விலை 5 ஒட்டகம்; ஒரு விதவையின் விலை 50 ஒட்டகம். சீனாவில் ஒரு பெண்ணின் விலை 1,800 மார்க் வரையில். விலை மணம் எபிரேயருக் கிடையிலும் சர்மனியருக் கிடையிலும் இருந்தது. ஹோசியா (Hosea) என்பார் பெண்ணின் விலையாக 50 செக்கல் கொடுத்தார். கலியாணத்தைக் குறிக்கும் ஏரன்ரென் என்னும் சர்மன் சொல்லுக்கு வாங்குதல் அல்லது கூலிக்கு விடுதல் என்பது பொருள். சந்தை மணம் பல சாதியினர் மணப்பருவமடைந்த பெண்களைச் சந்தைக்குக் கொண்டு சென்று விலை கூறிவிற்றார்கள். இவ்வகை மணம் பாபிலோனில் நடைபெற்றதை எரதோதசு குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியிருப்பது வரு மாறு: “மெசபெதோமியாவில் ஆண்டில் ஒரு முறை மணப் பருவமுள்ள பெண்கள் ஓர் இடத்துக்குக் கொண்டு வரப்படுகிறார்கள். அங்கு அவர்கள் விலை கூறி ஏலத்தில் விற்கப்பட்டார்கள். விற்பனை மிக அழகான பெண்ணி லிருந்து ஆரம்பமாயிற்று. அவள் விலையானதும் அவளுக்கு அடுத்த படியிலுள்ள அழகி விற்கப்பட்டாள். இவ்வாறு விற்கப்படும் பெண்களை வாங்கியவர்கள் அவர்களை மணஞ்செய்து கொண்டார்கள். மிக அழகான பெண்ணை வாங்குவதற்குப் பாபிலோனிய வாலிபர் போட்டியிட்டார்கள். மணம் முடிக்க விரும்பிய பொதுமக்கள் அழகில்லாத பெண்களை வாங்கினார்கள். அவர்களுக்கு ஒரு தொகைப் பணம் கொடுக்கப்பட்டது. அழகான பெண்கள் விலையானவுடன் அழகில்லாத உறுப்புக் குறை பாடுடைய பெண்கள் விற்கப்பட்டார்கள். அவர்களைக் கூறும்போது அவர் களுக்குக் கொடுக்கும் இனாம் பணமும் சேர்த்துக் கூறப்பட்டது. இப் பணம் அழகான பெண்களை விற்றதினால் கிடைத்தது. இவ் வழக்கம் இல்லீரியா வில் வாழும் எனெரி மக்களுடையே தொடங்கியது”. அலக்சாந்தர் இந்தியா மீது படையெடுத்தபோது இவ்வகைச் சந்தை வடக்கே நடைபெற்றதாகக் கிரேக்க சரித்திரக்காரர் எழுதியுள்ளார்கள். அராபியாவில் அசிர் (Asyr) வகுப்பினர் மணப் பருவமடைந்த பெண்களை நன்றாக உடுத்திச் சந்தை களுக்குக் கொண்டு சென்று அங்குமிங்கும் உலாவும்படி விட்டு அவர்களை விற்றார்கள். நாகரிக காலத்தில் வாங்கும் மணம் சீதன மணமாக மாறிற்று. ஓமர் காலத்தில் பெண்ணின் தந்தை கலியாண வெகுமதியிலொரு பகுதியைப் பெண்ணுக்குச் சீதனமாகக் கொடுத்தான். விலை கொடுத்து வாங்கும் கலியாணம் சாக்சனியர், ஆங்கிலோ சாக்சனியர், டானியர்களுக் கிடையிலும் ஜெர்மன் சாதியார்களுக்கிடையிலும் காணப்பட்டது. ஆங்கிலோ சாக்சனியருக்கிடையிலிருந்த இவ் வழக்கம் கான்யூட் என்னும் அரசனால் ஒழிக்கப்பட்டது. சீனாவில் இவ் வழக்கம் இன்றும் இருந்து வருகின்றது. விலை கொடுத்து வாங்கப்பட்ட பெண் விலை கொடுத்து வாங்கப் படும் பொருள்கள் போலானாள். மக்களிடையே திருத்தமுண்டான போது பெண்ணின் தந்தை இதனை வெறுத்தான். தனது புதல்வியர் வியாபாரப் பொருள்கள் போல மதிக்கப்படுவதை அவன் விரும்பவில்லை. உயர்ந்த குடும்பங்களிடையே பெண்களை விற்கும் வழக்கம் மறைந்தது; இன்றேல் விலைப்பணத்தில் ஒரு பகுதி பெண்ணுக்குக் கொடுக்கப்பட்டது. இதனால் பெண்ணுக்குக் கணவனுடைய வீட்டில் சில உரிமைகள் உண்டாயின. கணவனின் வைப்பாட்டிகளைவிடத் தனது மகள் உயர்ந்தவளாகக் கருதப் படும் பொருட்டும் பெண்ணின் தந்தை சீதனம் அளித்தான். பின்பு விலை கொடுத்துப் பெண்ணை வாங்குதல் அநாகரிகத்தின் குறி என்று கருதப் பட்டது. பெண்ணுக்குச் சீதனம் கொடுத்தல் தந்தையின் கடமையாகக் கருதப் பட்டது. சீதன மணம் விலை மணத்திலிருந்து வளர்ந்தது. சீதனம், பண மாகவும் பண்டங்களாகவும் கொடுக்கப்பட்டது. பெண்ணுக்குக் கணவனைத் தெரிதல் குடும்பம் கருமமாகவும் பெற்றோரின் கடமையாகவும் இருந்தது. பெற்றோர் மணத்துக்குத் தகுதிப் பொருளெனக் கொண்டனர். மணமகனும், மணமகளும் பணத்துக்கு அடுத்தபடியில் வைத்துக் கருதப்பட்டனர். ஒருவன் விரும்பியவாறு மணஞ் செய்தலும் அங்குமிங்கும் காணப்படுகின் றது. பழைய கருத்துக்களை மீறுவது கடுமையாக விருக்கின்றது. திருத்தம் வளர்ச்சியடைவதற்குப் பாடல்கள் முக்கியமானவை. பாடல்கள் வாலிப முடைய பெண்ணும் ஆணும் ஒருவரை காதலிப்பதாகவும், பொருளாதாரத் தொடர்பாக மூத்தோர் குறுக்கிடுவதாகவும் அதனால் இருவரும் பல துன்பங்களுக்குள்ளாவதாகவும் சித்தரிக்கின்றன. காதல் மணம் சீதன மணத்தின் பின் இன்னொரு மாற்றம் உண்டாயிற்று. பணத்துக்காகச் செய்யும் மணத்தைப் பொது உணர்ச்சி கண்டிக்கின்றது. விலை கொடுத்துப் பெண்ணை வாங்கும் மணம் எப்படி விலங்குத் தன்மை எனக் கருதப்பட்டதோ அவ்வாறே சீதன மணமும் கருதப்படலாயிற்று. சீதனத்துக்காக மணம் செய்வது இக் காலத்தில் உண்டானதன்று. முற்காலத் தில் இது இருக்கவில்லை என நினைத்தல் கூடாது. திருமணம் குடும்பக் கருமம் என்று கருதப்படும் அளவில் இது நடைபெறவே செய்யும். “ஏக்கருக்கும் ஏக்கருக்கும் முடிக்கும் முடிக்கும் மணம்” என்னும் முது மொழி மேல்நாடுகளில் வழங்கும். மணத்துக்கு முன்னால் குடும்பத்தின ருடையவும் உறவினருடையவும் பொருளாதார நிலை கவனிக்கப்படுவது இயல்பு. காதல் தனிப்பட்டவர்களின் விருப்பத்தை உறுத்துவது. பெண் களிடையே வேறுபாடுகளும் குடும்பத்தில் பிரிவும் உண்டானபோது தனிப் பட்ட காதல் மணங்கள் வளர்ந்தன. காதல் பொருளாதாரத்தை நோக்குவ தில்லை. பணத்துக்காகச் செய்யப்படும் மணங்கள் காதல் மணங்களாக வளர்ந்தன. பெண்கள் பொருளாதார சம்பந்தமாக அடையும் விடுதலைக் கேற்ப இதுவும் வளர்ச்சியுறும். இன்று உலகில் கைத்தொழில்கள் பெருகியுள்ளமையால் பெண் களும் ஆண்களைப்போல் பொருள் சம்பாதிக்கின்றனர். கைத்தொழிலல் லாத வேறு துறைகளிலும் அவர்கள் ஆடவரை ஒப்ப வேலை புரிந்து ஊதியம் பெறுகின்றனர். ஆகவே, இதுவரையும் அவர்களைத் தடைப்படுத்தி யிருந்த பொருளாதாரப் பிணிப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரப் பிணிப்பே பெண்களை நீண்டகாலம் ஆடவரின் அடிமைகளாக வைத் திருந்தது. பெண் பொருள் சம்பந்தமாகத் தனது காலில் நிற்க முடியும் போது அவள் விடுதலையடைந்துள்ளாள். அவள் தான் விரும்புவதுபோல் வாழலாம். அவளுக்கும் சாதாரண குடும்பத்திலுள்ள பெண்ணுக்கும் காதல் சம்பந்தத்தில் வேறுபாடு உண்டு. புது வகையான பெண் தனது வேலையி னால் விடுதலையடைந்தாள். அவள் ஆடவனைப் போலச் சம உரிமை அடைகின்றாள். இப்பொழுது பெண்ணின் சுமை குறைவாக்கப்படுகின்றது. முற் காலத்தில் ஆடவன் கட்டளையிட்ட வேலைகளையெல்லாம் அவள் செய்தாள். அவள் இவ்வுலகத்தைப் பிள்ளைகளால் நிரப்பினாள். அவள் வாழ்நாள் கருப்பமாயிருத்தல், பிள்ளைகளைப் பெறுதல், அவர்களை வளர்த்தல் அளவில் இருந்தது. இன்றைய மனிதன், வீட்டைப் பார்க்கும் மனைவியளவில் திருப்தியடையவில்லை; அவள் தன்னைப்போல அறிவு விளக்கமுடைய வளாயிருப்பதில் திருப்பதியடைகிறான். ஒரு தொழில் செய்பவன் அதே போன்ற தொழில் புரிகின்றவளை மணப்பதில் மகிழ்ச்சியடைகின்றான். ஒழுக்கத் தளர்வு உலக மக்களிடையே ஆண் பெண் தொடர்பான ஒழுக்கங்கள் பலவாறாகவிருந்தன. தெற்கு அந்தமான் பெண்களிடையே நாணம் மிக வளர்ச்சியடைந்திருந்தது. அவர்கள் தம் முன் போர்வையை பெண்கள் முன்பாகவும் எடுக்க நாணினார்கள். ஆனால் அயற் கூட்டத்திலுள்ள பெண்கள் முற்றும் நிர்வாணமாகச் செல்கின்றார்கள். இத்தாலியில் பதினேழாம் நூற்றாண்டின் முடிவில் ஒருத்தி இரண்டு அல்லது மூன்று காதலரை வைத்திருத்தல் பற்றி அவள் கணவன் யாதும் வேறு பாடாக நினைக்கவில்லை. இவ்வகை வழக்கம் பிரான்சிலே பதினெட் டாம் நூற்றாண்டில் காணப்பட்டது. சாதாரண காலத்தில் தன் மார்பைக் கணவன் முன் மூடி மறைக்கும் ஒரு பெண் பால் (Ball) என்னும் நடனத்தில் தனது முன் புறத்தின் மேற்பாகத்தை எல்லாரும் பார்க்கும்படி திறந்துவிட நாணமாட்டாள். மேற்குத் தேசங்களில் ஓவியப் பள்ளிக்கூடங்களில் உடல் நிலையைப் பார்த்து ஓவியம் எழுதும் பொருட்டுப் பெண்கள் நிர்வாணமாக நிறுத்தி வைக்கப்படுவர். அவர்கள் நிற்கும் நேரத்துக்குத் தக்கதாக மணிக்கு இன்னதென்று கூலி கொடுக்கப்படுகின்றது. பல நாடுகளில் பிரபுக்கள், அல்லது பொதுமக்கள் மனைவியருள் ஒருத்தியை அரசன் தெரிந்தெடுத் தானாயின் அவர்கள் பெரிதும் களிப்படைந்தனர். ஒரு சாதியாரிடையே காணப்படும் ஆண் பெண் சேர்க்கைத் தொடர்பான ஒழுக்கங்கள் இன்னொரு சாதியாருக்கு வெறுப்பளிக்கலாம். பல பெண்களை ஒருவன் மணக்கும் நாட்டினர் ஒரு பெண்ணை ஒருவன் மணப்பவனைத் தாழ்ந்தவ னாகக் கருதுவர். பெண் ஒருத்தி பல கணவரை மணக்கும் நாட்டினர் ஒருத்தி ஒருவனை மணப்பதைப் பற்றி இழிவாகக் கருதுவர். சகோதர சகோதரி மணமுடைய எகிப்து பாரசீக நாட்டினர் மற்றைய நாட்டு வழக்கங்களை வெறுப்பர். பழைய மக்களின் காதல் தொடக்கத்தில் காதல் இயற்கை உணர்ச்சியின் தூண்டுதலாக விருந்தது. இதில் உயர்ந்த பண்புகள் எவையும் இருக்கவில்லை. விலங்கு களிடத்தில் காணப்படும் இவ்வகை உணர்ச்சியிலும் பார்க்க இது மேலான தன்று. ஆண் பெண் சேர்க்கையினால் கரு உண்டாகிறதென மக்கள் அறியாதிருந்த காலம் ஒன்று உண்டு. சில பூக்களை மணத்தலால், அல்லது சில விலங்குகளைக் காணுதலால், சூரியனின் கதிர்படுவதால், ஆவி நுழைதலால் கரு உண்டாகின்றதென நம்பும் பிற்போக்குடைய மக்கள் இன்றும் காணப்படுகின்றனர். ஆஸ்திரேலிய அரிந்தா வகுப்பினர் கருப்பத் துக்குக் காரணம் ஆண் பெண் சேர்க்கையன்று என நினைக்கின்றனர். மாங்கனியைப் புசித்துப் பெண்கள் கரு உண்டானார்கள் எனக் கூறும் இந்தியப் பழங்கதைகள் உண்டு. ஆண் பெண் சேர்க்கையினால் கரு உண் டாகின்றதென்று மக்கள் அறிகின்ற வரையில் தந்தையைப் பற்றிய நினைவு தோன்றமாட்டாது. தாய் குழந்தைமேல் கொள்ளுமன்பு தொடக்கத்தில் அவள் குழந்தை அளவில் நிற்கவில்லை; எல்லாக் குழந்தைகள் அளவிலும் இருந்தது. ஆகவே முற்காலத்தாய் தனது பிள்ளையைப் பிறர் பிள்ளைகளுக்காக மாற்றிக் கொள்ளவோ பிறர் குழந்தைகளைத் தன் குழந்தைகள் போல் வளர்க்கவோ விருப்பமுடையவளாயிருந்தாள். எனது உனது என்னும் எண்ணங்கள் வலுவடைந்த காலத்தில் தாய் அன்பு அவள் குழந்தை அளவில் சுருங்கி நிற்பதாயிற்று. முற்காலத்தில் ஆண் பெண் தொடர்பான நாணம் தோன்றி இருக்க முடியாது. உடம்பு தொடர்பான நாணமும் ஆதி முதல் வருவதன்று. நிர்வாணமே மனிதனின் ஆதிநிலை. ஆடையும் உடைகளும் கண்டு பிடிக்கப்பட்ட பின்பே நாணமுண்டாயிற்று. பெண்தன்மைக்குரிய நாணம் இயற்கையாக ஆதிமுதல் இருக்கின்றது. இந்நாணம் ஆணின் விருப்பை எழுப்புகின்றது. ஏற்ற ஆணைத்தெரிந்து கொள்வதற்கு இது உதவியாக வமைந்துள்ளது. மேலான விலங்குகளிடையும் நாம் இப்பண்பைக் காணலாம். ஆண் பெண் சம்பந்தமான பொறாமை விலங்குகளிடமும் காணப் படுகின்றது. இது ஆதி முதல் உள்ள இயற்கை உணர்ச்சி எனக் கூறுதலமை யாது. இது பழைய மக்கள் பலரிடையே தோன்றவில்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் முரிய வேலைகள் பிரிக்கப்படும்போது பொருளாதாரம் சம்பந்தமாக ஆணுக்குப் பெண் தேவைப்படுகின்றாள். பெண் ஆணிடம் தங்கியிருக்கும் நிலை மணம் தொடர்பானது. முற்காலத்தில் மணமென்பது பெண்ணை ஆடவன் தனக்கு அடிமைப் படுத்துதல்; அவ்வாறு செய்தல் பொருளாதார ஒழுங்கு. பொருளாதாரம் ஆண் பெண் சேர்க்கை உணர்ச்சி யிலும் வலியது. குடும்ப காலக் காதல் குடும்ப காலத்திலே காதல் உணர்ச்சி மனிதனின் அறிவாற் பண் படுத்தப்பட்டு உயர்நிலை அடைகின்றது. இப்பண்பாடு சடுதியில் தோன்ற வில்லை; சிறிது சிறிதாக வளர்ச்சியடைந்தது. இப்பண்பட்ட நிலை ஆண் பெண் பொறாமையினாலும் தனிப்பட்ட காதல் சம்பந்தத்தில் உண் டாயிற்று. ஆண் பெண் சம்பந்தமான பொறாமை பெண்ணைச் சொந்தமாக வைத் திருக்கும்படி ஒருவனைத் தூண்டிற்று. இதுவே முற்காலத்தில் மணத்துக்குத் தூண்டுதலாக விருந்தது. இத்தூண்டுதலால் பெண்ணை விலை கொடுத்து வாங்கும் விலைமணம் எழுந்தது. இவ்வாறு மணம் உண்டாவதால் பெண் பொருள் போல் கருதப்படாது ஆள்போல் கருதப்பட்டாள். பிள்ளைகளாலும் ஆண் பெண் பொறாமை வலிவடைந்தது. ஆண் பெண் சேர்க்கையினால் குழந்தை பிறக்கின்றதென அறியப்பட்டபோதும், எனது உனது என்னும் வேறுபாடு உண்டான போதும் ஆண் பெண் தொடர் பான பொறாமை வலிவடைந்தது. கற்பு விலையுடையதாகக் கொள்ளப் பட்டதற்கும் காரணம் இதுவே. கற்பு ஆண் பெண் பொறாமையால் உண் டானதே. இதனால் புது முறையான காதல் உணர்ச்சி தோன்றிற்று. பழைய மக்களிடையே அழகைப் பற்றிய எண்ணம் எழவில்லை. மக்கள் திருத்த மடைந்த காலத்திலேயே பெண்ணின் அழகு கவனிக்கப்பட்டது. பெண்ணின் அழகு மதிக்கப்பட்டபோது ஒழுக்கமும் கவனிக்கப்பட லாயிற்று. முற்காலத்தில் ஆடவன் பெண்ணைப் பெண் உறுப்புடைய பொருளாக நோக்கினான். இப்பொழுது அவன் அவளைப் பெண் தன்மைகள் உடைய ஆளாகப் பார்க்கின்றான். பல மொழிகள் பெண்ணைக் குறிக்கும் சொற்கள் அவளின் இரகசிய உறுப்பின் பெயராக விருக்கின்றன. நெக்கிவோ (எபிரேயம்), ஜீனா (இந்து ஜெர்மனி), ஜெனி (கிரேக்கு), மோடெர் (பழைய ஜெர்மனி), முதலிய சொற்கள் அவ்வுறுப்பை உடையவள் என்னும் பொருளுடையன. பல்கேரியத்தில் பெண்ணைக் குறிக்கும் ‘மற்கா’ வயிற்றைக் குறிக்கின்றது. மற்றேனா என்னும் பெண்ணைக் குறிக்கும் சைபீரியப் பெயருக்கு வயிறு உடையவள் என்பது பொருள். முன்பு பெண்ணுறுப்புடையவளாக மனத்திற் காட்சியளித்த அவள், இப்பொழுது அழகு ஒழுக்கம் முதலியவையுடையவளாகக் காட்சியளிப் பாளாயினள். இதுவரையும் பொது நோக்காயிருந்த காதல் இப்பொழுது தனிப்பட்ட காதலாக மாறிற்று. விலங்குத் தன்மையுள்ள காதல் வெளியே செல்லுதல் கூடும். தனிப்பட்ட காதல் வெளியே செல்லமாட்டாது. முத்தம் முற்காலத்தில் முத்தமிடும் வழக்கம் தோன்றியிருக்க வில்லை. கலனா அமெரிக்கரிடையே முத்தத்தைக் குறிக்கும் சொல் காணப்படவில்லை. குடும்ப காலத்தில் எபிரேயர், கிரேக்கர், உரோமர், அராபியர் முதலிய பலரிடையே இவ் வழக்கம் தோன்றியிருந்தது. ஆனால் அது தன் இலக்கை அடைவதன் முன் பல வழிகளில் அலைந்து கொண்டிருந்தது. அராபியப் பெண்கள் தமது கணவருடையவும், தந்தையருடையவும் தாடிகளை முத்தமிடவேண்டும். தம்மனைவியர் “உவைன்” பருகியிருக்கின்றார்களோ என்று அறியும் பொருட்டு உரோம கணவர் தம் மனைவியரை முத்தமிட் டனர். உரோமிய பெண்கள் உவைன் குடித்தல் கூடாது. அவர்களிடையே வழங்கிய முத்தங்கள் பலவகையின. அவை வெவ்வேறு பெயர்களால் அறியப்பட்டன. மரியாதையின் பொருட்டுக் கொடுக்கும் முத்தம் பாசியம் எனப்பட்டது. நட்பின் குறியாகக் கொடுக்கப்படும் முத்தம் ஒஸ்கலம் எனவும், காதலுக்காகக் கொடுக்கப்படுவது சோவியம் எனவும் பட்டன. மத்திய காலங்களில் முத்தங்கள் பலவாறு கையாளப்பட்டன. 710இல் போப்பாண்டவரின் செருப்பை முத்தமிடும் வழக்கம் தோன்றிற்று. 16ஆம் நூற்றாண்டில் பெண்கள் தம்முடன் நடனமாடியவர்களுக்குப் பதில் உபகாரமாக முத்தங்கள் கொடுத்தார்கள். மணமகனின் கையையும் மணமகளின் கையையும் இணைத்து மணஞ் செய்து வைக்கும் கோயிற்குரு மணமகளை மாத்திரமன்று, மணமகளின் தோழிமாரையும் முத்தமிடும் வழக்கம் நீண்டகாலம் இருந்து வந்தது. நண்பரும் உறவினரும் தமது முத்தங்களை மாற்றிக் கொண்டார்கள்; அன்னியராயின் கையில் முத்தமிடப் பட்டது. இறுதியில் முத்தம் தனக்குரிய இடத்தை அடைந்தது. தாயின் முத்தமும், காதல் முத்தமுமே இன்று நிலைத்திருக்கின்றன. புது முறையான காதலுக்கு முத்தம் முக்கியம். அது இன்றிக் காதலை அறிய முடியாது. உறவினரை முத்தமிடும் வழக்கம் நாள்வீதம் மறைந்து வருகின்றது. சோவியத் உருசியாவில் திருமணச் சட்டம் சோவியத் உருசியாவில் புதிய திருமணச்சட்டம் 1927ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் நாள் நடைமுறைக்கு வந்தது. சார் காலத்தில் மனைவி கணவனின் சொத்தாக விருந்தாள். அவள் பெயர் கணவனின் “பாஸ் போட்டில்” பதிவு செய்யப்பட்டிருந்தது. அவள் கணவனை விட்டுப் பிரிய வேண்டுமாயின் அவளுக்குள்ள “பாஸ் போட்” வேண்டும். அதனைக் கொடுப்பதற்குக் கணவன் பெரும்பாலும் மறுத்தான். அவள் தனியே தனது பாஸ் போட்டைப் பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் கண வனின் சம்மதம் வேண்டும் என்னும் சட்டம் இருந்தது. நாட்டுக்கு வெளியே திருமணம் செய்வது முறைகேடான மணமாகக் கருதப்பட்டது. கோயில்களில் நிறைவேற்றப்படும் மணங்கள் மாத்திரம் சட்ட சம்மதமாகவிருந்தன. ஆண் 18 வயதுக்கும் பெண் 16 வயதுக்கும் முன்னும் திருமணம் செய்தல் கூடாது. திருமண ஒப்பந்தம் பெற்றோரின் சம்மதத்தைப் பொறுத்திருந்தது. அவர்களின் சம்மதமின்றி மணஞ் செய்தல் குற்றமாகக் கருதப்பட்டது. குற்றஞ் செய்தவருக்கு எட்டுமாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. யூதர், பிற மதத்தவர், சமயத்தில் நம்பிக்கையில்லாதவர் களோடு செய்யும் மணம் தடுக்கப்பட்டிருந்தது. மத்தியகால உருசியச் சட்டம் கூறுவது பின்வருமாறு: “கணவனும் மனைவியும் ஒருமித்து வாழுதல் வேண்டும். கணவன் ஒரு இடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு வாழும்பொருட்டு ஏகினால் மனைவி அவனைப் பின்தொடர்ந்து செல்ல வேண்டும். மனைவி கணவனைக் குடும்பத் தலைவனாகக் கொண்டு அவனுக்கு அடங்கி நடத்தல் வேண்டும். மனைவியின் கடமை கணவனின் எண்ணத்துக்கு அடங்கி நடத்தல்.” புதிய திருமணச் சட்டம் தாயையும் பிள்ளையையும் காப்பதற்கும், கணவன் மனைவி இருவருக்கும் சொத்து, பிள்ளைகளின் கல்வி முதலிய வைகளில் உரிமை கொடுப்பதற்கும் எழுந்தது. ஆணுக்கும் பெண்ணுக்கும் சம்பந்தப்பட்ட எல்லா நிகழ்ச்சிகளும் தனிப்பட்ட கருமங்களாகக் கொள்ளப் பட்டன. சோவியத் உருசியாவில் பதிவு செய்யப்பட்ட மணங்களைப் போலவே பதிவு செய்யப்படாத மணங்களும் சட்ட சம்மதம் பெற்றுள்ளன. திருமண நீக்கம் சம்பந்தமான நிகழ்ச்சிகளில் அரசாட்சி தலையிடும் போது திருமணப் பதிவு, திருமணத்தை அத்தாட்சிப்படுத்த உதவியளிக்கின்றது. கலியாணப் பதிவு இல்லாத மணங்களில் பிணக்கு உண்டாகும் போது கலியாணத்தைப் பற்றிச் சான்றுபடுத்தும் கடமை உண்டாகின்றது. கலியாணம் தனிப்பட்ட கருமமாதலின் ஒருவன் பல பெண்களை மணப் பதில் தடை இருக்கவில்லை. ஒரு மணம் செய்தவன் அல்லது செய்தவள் அக் கலியாண நீக்கத்துக்கு முன் மறுமணம் செய்தல் முடியாது. ஒருமணம் செய்தவர் அம்மணத்தைத் தள்ளாது பொய் வாக்குக் கொடுத்து மறுமணம் செய்தால் அதற்காகத் தண்டனை அடைந்தார். உருசியாவில் வியபிசாரத்துக்குத் தண்டனையில்லை. அது கணவன் மனைவியரின் தனிப்பட்ட கருமம். நாட்டுக்குத் தீங்கு விளைக்கக்கூடிய ஆண் பெண் சேர்க்கைத் தொடர்பான செய்கைகளில் அரசினர் தலையிடு கின்றனர். வைப்பாட்டி வைத்தல், முறைகேடான ஆண் பெண் சேர்க்கை முதலியவைகளில் அரசினர் தலையிடுவதில்லை. கலியாணப் பதிவில் கிரியைகள் யாதும் இல்லை. இரு பகுதியினரும் விரும்பினால் தமது நண்பர் களைக்கூட இருக்கும்படி அவ்விடத்துக்கு அழைக்கலாம். கலியாணப் பதிவு செய்வதற்கு இருபாலரும் பதினெட்டு வயதுக்குப் பதியாதவர்களாக விருத்தல் வேண்டும். இருவரும் தாம் கலியாணம் செய்து கொள்ள விரும்புவதாகத் தமது விருப்பத்தைத் தெரிவிக்க வேண்டும். பதிவுத் தாளில் கையெழுத்திடுக்கின்ற இருவரும் அப்பெயருடையவர்கள் என்று அத் தாட்சிப்படுத்த வேண்டும். இருவருக்கும் மற்றவரின் உடல் நிலையைப்பற்றி அறிவிக்கப்பட்டுள்ள தென்று உறுதி கூறவேண்டும். இருவரில் ஒருவர் மனம் பலவீனம் அல்லது மனக்கோளாறு உள்ளவராயின் கலியாணம் பதிவு செய்யப்படமாட்டாது. பெண் அல்லது ஆண், பதிவு நிலையத்துக்குச் செல்ல முடியாது நோயுற்றிருந்தால் வீட்டில் மணப் பதிவு செய்து கொள்ள லாம். மணத்துக்குப் பின் புதிய பெயர் இட்டுக் கொள்ள விரும்பினாலும் அவர்கள் செய்து கொள்ளலாம். கணவன் மனைவியின் பெயரை விரும்பி னால் வைத்துக்கொள்ளலாம். பொய்யான வாய்த் தகவல் கொடுத்திருந்தால் அவர்களுக்கு விதிக்கப்படும் தண்டனையைக் குறித்த சட்டம் அவர் களுக்கு வாசித்துக் காட்டப்படும். கலியாணம் செய்து கொள்ளும் ஆண் பெண்களோடு பதிவுக்காரரும் கையெழுத்திடுவர். கட்சிகள் விரும்பினால் சாட்சிகளின் முன்பு கையெழுத்திடப்படும். படியாத இருவருக்கிடையில் பதிவு நடப்பதனால் இரண்டு சாட்சிகள் வேண்டும். இருவரும் தாம் தாம் விரும்பிய வேலைகளைச் செய்யலாம். இருவரும் சேர்ந்து வீட்டை நடத்துதல் பொதுவான ஒழுங்கு. ஒருவர் விரும்பினால் தமது இருப்பிடத்தை மாற்றிக் கொள்ளலாம். திருமணத்துக்கு முன் இருவருக்கும் அவர்களிடமிருந்த சொத்துப் பொதுவானதன்று. திருமணத்துக்குப் பின் இருவரும் தேடிய பொருள் இருவருக்கும் பொது வானது. பாகம் அரசினரால் தீர்மானிக்கப்படும். இவ்வுரிமை கலியாணம் பதிவு செய்யப்பட்டவர்களுக்கும், கலியாணம் பதிவு செய்யப்படாதவர் களுக்கும் உண்டு. திருமணம் நிலைத்திருக்கும் வரையில் ஒருவர் மற்றவரைக் காப்பாற்றக் கடமைப்பட்டவர். சோவியத் உருசியாவில் திருமணங்கள் இலகுவில் குலைத்துவிடத்தக்கன. கலியாணப் பதிவிற் போலவே இருவரும் கையெழுத்திடும்போது கலியாணம் குலைந்து விடுகின்றது. கலியாணத்தை நீக்குவது அரசாங்கமன்று; இருவரின் விருப்பமுமே. அரசாங்கம் இருவரின் விருப்பத்தையும் பதிவு செய்து வைக்கின்றது. சோவியத் உருசியாவில் கலியாண நீக்க வழக்குகள் இல்லை; கலியாண நீக்கத்துக்குக் காரணமும் வேண்டியதில்லை. இருவர் விரும்பினாலும், ஒருவர் விரும்பினாலும் கலியாண நீக்கம் செய்யப்படலாம். கலியாணத்தைப் போலக் கலியாண நீக்கமும் தனிப்பட்ட கருமம். கலியாண நீக்கம் செய்தவர்கள் விரும்பினால் மறுபடி கலியாணம் செய்து கொள்ளலாம். ஒருவர் இத்தனை முறைதான் கலியாணம் செய்யலாம் அல்லது கலியாண நீக்கம் செய்யலாம் என்று சட்டம் இல்லை. இருவரில் ஒருவர் உழைப்பில்லாதிருந்தால் உழைக்கின் றவர் அவரைக் காப்பாற்றக் கடமைப்பட்டவர்; கலியாண நீக்கத்துக்குப்பின் வேலை செய்யத் தகுதியற்றவரை ஒரு ஆண்டும், தகுதியுள்ளவரை ஆறு மாதமும் காப்பாற்ற வேண்டும். கலியாண நீக்கத்துக்கு முன் யார் குழந்தை களைக் காப்பற்றுவது என்று தீர்மானிக்கப்படுகின்றது. இதில் முடிவு காணா விட்டால் அரசாங்கம் தீர்ப்பளிக்கின்றது. குழந்தைகள் ஏழு அல்லது எட்டு வயது அடையும் வரையும் அது தாயுடன் இருப்பது வழக்கம். பிள்ளைகள் தாயோடும் தந்தையோடும் விடப்படாவிட்டால் குழந்தைகளின் விடுதியில் விடப்படுவார்கள். இருவரும் தமது உழைப்புக்குத் தக்கவாறு அவர்களுக்கு உதவியளிக்கிறார்கள். 1902 வரையில் கலியாணமாகாத தாய்மாரின் குழந்தைகள் தாய்க்கோ தந்தைக்கோ சொந்தமில்லாதிருந்தன: இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்சு முதலிய நாடுகளில் அவர்கள் தாய்க்குச் சொந்தமாயிருந் தார்கள். உருசியாவில் முறையான பிள்ளை முறையில்லாத பிள்ளை என்று வேறுபாடு இல்லை. தந்தை ஒருவன் தன் மூலம் குழந்தை உண்டாகவில்லை எனக் கூறி மறுத்தால் கருப்பமாயிருக்கும் தாய் பிள்ளைப் பேற்றுக்கு மூன்று மாதங்களின் முன் திருமணம் பதியும் அதிகாரிக்கு அதனை அறிவித்தல் வேண்டும். அவள் தான் கருப்பமடைந்த காலத்தையும் தந்தையின் இருப் பிடத்தையும் தெரிவித்தல் வேண்டும். திருமணப்பதிவு அதிகாரி அறிவிப்புப் போக்கிய ஒரு திங்களுள், பெண் கூறியது பொய்யாயிருந்தால் அவன் கோர்ட்டு மூலம் மறுக்கலாம். அவ்வாறு செய்யாவிட்டால் அவன் அதை ஏற்றுக்கொண்டதாகப் பொருள் செய்யப்படும். அவளின் அறிவிப்புப் பொய்யாகவிருந்தால் அதை மறுத்து ஒரு ஆண்டுக்குள் வழக்குத் தொடர லாம். அவர்கள் ‘கோர்ட்டில்’ உண்மை பேச வேண்டும். இல்லாவிடில் பொய்ச் சத்தியக் குற்றம் சாட்டப்படுவர். பெண் பல ஆடவரோடு சேர்க்கை உடையவளென்றும் குழந்தையின் தந்தை யார் என அறிய முடியாது என்றும் அவன் கூறினால் எல்லாத் தந்தையருமே அவள் பிள்ளைப் பேற்றுச் செலவையும் பிள்ளை வளர்ப்புச் செலவையும் கொடுக்க வேண்டும். இதனால் குழந்தை பல தந்தையருடையதென்னும் அவமானத்துட்படு மெனக் கருதிப் பலருள் அதிக பொருள் கொடுக்கக் கூடியவனே செலவைக் கொடுக்கும்படி கட்டளையிடப்படுவான். உக்கிரைன் குடும்பங்களில் இவ்வகை நிகழ்ச்சிக்கு எல்லாத் தந்தைமாரும் சேர்ந்து செலவு கட்டுதல் வேண்டும். பெண்ணை ஒருவன் அடிமைப்படுத்துவதில் தொடங்கிய திருமணம் இன்று இந்நிலை வரையில் வளர்ச்சியடைந்துள்ளது. அநாகரிக நாகரிக முனைகளின் சந்திப்பு உலகிலே உருசிய நாட்டிலேயே பெண்கள் ஆண்கள் ஒத்தவர் களாகக் கட்டுப்பாடின்றி வாழ்கின்றார்கள். இங்கு பெண்களிற் பலர் மணஞ் செய்து கொள்ள விரும்புவதில்லை; ஆனால் பிள்ளைகளைப் பெற விரும்பு கிறார்கள். இவ்வாறு கலியாணமில்லாமலே பிள்ளைகளைப் பெற்று வாழும் பெண்களின் எண் அதிகப்பட்டு வருகின்றது. மாஸ்கோ நகரத்தில் உயர்ந்த பதவியிலுள்ள பெண் ஒருத்தி கூறியிருப்பது வருமாறு: “எனக்கு மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். நான் இன்னும் ஒன்பது பிள்ளைகளை வெவ்வேறு ஆடவர் மூலம் பெற விரும்புகின்றேன்.” உருசியாவிலே கலியாணமாகிப் பிறந்த பிள்ளை, கலியாணமா காமல் பிறந்த பிள்ளை என்னும் வேறுபாடில்லை. பெண்கள் விரும்பினால் கருவை அழித்துக் கொள்ளலாம். இதற்கு எல்லாப் பட்டினங்களிலும் மருத்துவ விடுதிகள் அரசினரால் அமைக்கப்பட்டுள்ளது. நமது நாட்டு நிலை இந்திய நாட்டில் ஒருவன் பல மனைவியரை மணந்து கொள்ளலாம் என்னும் விதி மிகப் பழைய நாள் முதல் இன்று வரையும் இருந்து வருகின்றது. ஒரு பெண் ஒருவனுக்கு மனைவியாகி விட்டால் அவளுக்குக் கணவனிடம் விருப்பம் இருந்தாலென்ன, இல்லாவிட்டாலென்ன அவள் கடைசி வரையில் அவனது மனைவியாகவே இருந்துவர வேண்டும். அவள் கலியாண நீக்கம் செய்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டாள். கணவன் இறந்து விட்டால் அவள் மறுமணம் செய்து கொள்ளாது இறந்து போனவனின் மனைவியாகவே இருந்து அவனிடத்தில் பத்தி செலுத்திக் கொண்டு இருக்க வேண்டும். மனைவி இறந்துவிட்டால் கணவன் விரும்பிய படி இன்னொரு மனைவியையோ பல மனைவியரையோ மணந்து கொள்ளலாம். மிக நாகரிகம் அடைந்துள்ளவர்கள் எனக் கூறிக்கொள்ளும் இந்திய மக்களுக்கு இது நியாயமான செயலாகவே தோன்றி வருவதாயிற்று. கணவன் இறந்துவிட்டால் பெண்களை உடன்கட்டை ஏற்றுவதாகிய தீய வழக்கமும் நமது நாட்டில் இருந்து வந்தது. உடன் கட்டை ஏற்றுவதென்பது இறந்து போன கணவனோடு மனைவியை உயிரோடு வைத்துக் கொளுத்தி விடுவது. உடன்கட்டை ஏற விரும்பாத பெண்கள் பலவந்தமாக இழுத்துச் சென்று உடன் கட்டை ஏற்றப்பட்டார்கள் என்று விளக்கி எழுதியுள்ளார்கள். இக்கொடிய வழக்கம் ஆங்கிலரால் ஒழிக்கப்பட்டது. ஆங்கிலர் ஆட்சி உண்டான பின்பே பெண்களுக்குக் கல்வி கற்கும் வாய்ப்புக் கிடைத்தது. இன்று இந்திய ஜனத் தொகையில் நூற்றுக்கு பத்து வீதத்தினரே எழுதப் படிக்க அறிவார்கள். இவர்களுள் மிகச் சிலரே கல்வி கற்ற பெண்களாவார். மேல்நாட்டு முறையான கல்வியினால் பெண்கள் விழிப்படைந்தனர். மேல்நாட்டு முறையில் தமக்கும் ஆண்களை ஒத்த சுதந்தரம் வேண்டுமெனப் பெண்கள் வாதாடுகின்றனர். இன்று திருணம் சம்பந்தமான திருத்தங்கள் பல உண்டாயிருக்கின்றன. பெண்கள் விரும்பி னால் கலியாண நீக்கம் செய்துகொள்ளும் சட்டம் உண்டாயிருக்கின்றது. பெண்கள் ஆண்களைப்போலவே ஆசிரியராகவும், அரசாங்க அலுவலாள ராகவும், பிறவாறும் பொருளீட்டத்தக்கவராகிப் பொருளாதார விடுதலை அடைந்து வருகின்றமையால் இந்திய நாட்டிலும் காதல் மணங்கள் நிகழ்கின்றன. பெண்களைக் கீழ்மைப்படுத்தியும் கட்டுப்படுத்தியும் வைக்கும் கொள்கைகள் நாள் வீதம் மறைந்து வருகின்றன. மேற்குத் தேசங் களில் சிறுவருக்குக் கட்டாய ஆரம்பக் கல்வியுண்டு? நமது நாட்டில் இதைப் பற்றிய எண்ணம் இன்னும் உதிக்கவில்லை. நமது நாட்டில் கட்டாயக் கல்வி உண்டாகி மக்கள் அறிவு வளர்ச்சியடையும்போதே சமூகத்துக்கு நன்மை பயவாத பழங் கொள்கைகள் மறைந்து ஒழியும்; இயற்கைக்கேற்ற திருமணங் களும் நடைபெறும். இயற்கை மணமென்பது பெண் கணவனைத் தெரிவது; ஆண் தான் விரும்பிய பெண்ணைத் தெரிவதன்று; பெண் தான் விரும்பிய ஆணைத் தெரிவதே விலங்குகள் பறவைகள் முதலிய உயிர் வாழ்வன எல்லாவற்றுள்ளும் காணப்படுவது. எஎஎஎ 1 2 15 * Among mammal and other animals a periodic rut is general throught universal. It is a fact that spring and the harvest are among the savages, barabarians and the modern peasants, regular seasons both for general festivity and for special development of sexual feelings. The reasonmay be partly biological, partly climatic and mostly connected with mass food supply - Studies of Savages - p.91. - Earnest Crowley. “குட்டிக்குத் தாய்ப் பால்கொடுத்து வளர்க்கும் விலங்குகளுக்கும் பிற உயிர்களுக்கும் ஆண்டின் சில காலங்களில் ஆண் பெண் சேர்க்கை தொடர்பான மதம் உண்டாகின்றது. இது உலகம் முழுமையிலும் காணப்படுகின்றது. இலை துளிர்காலத்தும் தானிய அறுவடை காலத்தும், காட்டுச் சாதியினரும் இக்கால நாட்டு மக்களும் தமது விழாக்களைக் கொண்டாடுகின்றனர். அக் காலங்களில் ஆண் பெண் சேர்க்கை உணர்ச்சியும் வளருகின்றது. இக் காரணத்தின் பகுதி பிராணிகளின் இயற்கை சம்பந்தமும், பகுதி உணவு, வெப்ப நிலைகளுமாக விருக்கலாம்.” 1. Sexual selection among animals is supposed, by Darwin to be exercisd by females and not by males - The Mothers. 2. Among animals the female admits the male at such times only as she is prepared for the exercise of his function. At other times she repels him, and her attitude towards him is generally one of positive hostility. The description given by pallas of the mannar in which the female camel rounds on the bull the moment she is impregnated, driving him away with much snarling and display of teeth. Except on the moment when she herself is on a state of rut serves Dr. Tiller the female absolutely refuses any sexual intercourse’ -Ibid. 3. After the function is fulfilled there appears to be as a general rule an actual repulsion between the sexes, “As soon as the pairing is over” says Brehm speaking of mammals Generally, great indifference is shown towards one another by the sexes. - The Mother Vol. 1. p.122. 4. What sexual selection exists among the lower aces is predominantly exercised by the women - Ibid. 5. It is claimed by some writers that in certain parts of the world there have existed tribal communties comprised exclusively of women who work, fig and hunt like men. The males live apart in seperate community . Periodically, once or twice a year at a fixed time, the men are perimitted to visit or meet their amazon wives for a certian number of days, after which they seperate once more and go back to live in thier own communities. The amazons lived under the rule of a queen and were governed by their own laws and customs. Children which resulted from this meeting, if female, were brought up by their mothers and be came part of the amazon nation ; if male, they were either slain or sent to the Garareans - Amatory Curiosa - p.3. 6. Kiss has developed out of love bite. In many parts of Europe women are not convinced of their lovers or husband’s affection unless their own lovers leave the visible marks of it in the form of incesions from their teeth - The Mothers Vol. 2. p.16. முத்தம், ஒருவகைப் பேச்சு எனவும் கொள்ளப்படுகின்றது. இதனை இந் நூலின் பிறிதோரிடத்திற் காண்க. The gradual admixure of tenderness with the mating instinct, its transformation into love is a pace which has taken place in the psychological evolution of the female, and it appears probable that in the human species love was at first confined to mothers - The Mothers Vol - p. 123. Sensual love is fickle; it is influenced by the desire of change. On the otherhand, when the love implies sympathy and affection arising from mental qualities there is a he between husband and wife which lasts long after youth and beauty are gone. This leads to monogamy that is enduring - A short History of Marriage. p. 247. 7. The women food gatherers became the first plant cultivators and the men, apart from lending some assistance in preparing the garden continued as hunters. This generally admitted as affording the best explanation of why among primitive plant cultivators the system of descent is generally of the maternal type i.e. Kinship is reckoned in the female line - Ecology - T.W.Bews - p.179. 8. The fatherhood is not taken in to account when the sexual bond is a loose one, and undersuch circumstances the descent can only be reckoned on the mother side. The sense of father-hood was a later development and in primative times the child was held to be allied by blood with the mother and not with the father - Primitive Family - C.N. Starke. The wife though she should grieve at her husband’s death though aften she really and sincerely does so remains but a stranger by the rules of maternal kinship. A woman and her brother are bound to each other by characteristic and highly important ties of kinship. The brother became the natural warder of her children, who therefore have to reqard him and not their father as the legal head of the family-Crime and Custom in Savage Life - pp.34,34 - B.Malinowski. 9. In Ladakh women who have two, three, four or even five husbands, have generally use the right of selecting additional husbands or lovers who are known as “Magfa”. The supplementing husband is regarded as the property of the wife; she can dismiss him whenever she chooses and take another. The women as a general rule avail themselves of these privileges; among the Thodas also the women exercise the right to have recognised lovers in addition to their regular husbands. In Ceylon according to Tennant the women of nobler birth and wealth had the most husbands. So elsewhere in the Marquses it was with princesses that polyandry on the most extensive scale was practised. Amongst the Aleuts according to Bancript, it was the wealthiest women and those whose position was therefore of greatest infuluence who were the most polyandrous in their relations. Noble woman and heiresses of Madagascar have many lovers as they choose. In Arabia high born women refused to bend themselves of one man by marriage and claimed complete freedom in the disposal of their favours - The Mothers Vol. 2 - p. 258. “லாடாக் நாட்டுப் பெண்கள் இரண்டு, மூன்று அல்லது நான்கு ஐந்து கணவரைத் தெரிந்தெடுத்துக் கொள்கின்றனர். அவர்களுக்கு மென்மேலும் கணவரைத் தெரிந் தெடுக்கும் உரிமை உண்டு. அவர்கள் தெரிந்தெடுக்கும் கணவருக்கு மெக்கவா என்பது பெயர். மேலும் தெரிந்தெடுக்கும் கணவர் பெண்ணின் சொத்தாகக் கருதப்படுகின்றனர். அவள் விரும்பிய எந்தநேரமும் கணவனைத் துரத்திவிடலாம். தோடர் வகுப்புப் பெண் களுக்கும் இவ்வகை அதிகாரம் உண்டு. இலங்கையில் உயர்குலப் பெண்களும் சீமாட்டி களுமே அதிக கணவரை உடையவர்களாயிருந்தனர் என்று தெனற் கூறியுள்ளார். மார் குசஸ் என்னும் தேசத்தில் அரச குடும்பப் பெண்களே பல கணவரை வைத்திருந்தார்கள். அலுஎற் என்னும் நாட்டில் சீமாட்டிகளே அதிக கணவரை உடையராயிருந்தனர். மடகாஸ்கரில் சீமாட்டிகள் தாம் விருப்பிய பல கணவரைத் தெரிந்தெடுப்பார்கள். அராபியாவில் உயர்குலப் பெண்கள் ஒருவனுக்குப் பணிவதை மறுத்தார்கள்; அவர்கள் தாங்கள் விரும்பியவாறு தமது தயவை விரும்பிய பிறருக்கு அளிக்கும் சுதந்திரம் பெற்றிருந்தார்கள்.” 10. The adultary is an offence under patriarchal but not under matriarchal conditions. - Ibid p. 207. 11. Polyandry, the traces of which are still to be found among many castes and tribes of southern India was not prohibited among the Nayars until, as late as nineteenth century. The maximum number of legitimate husbands for a noble Nayar lady according to various reports seems to have been twelve. Each husband had the right to remain with his wife in turn, punctually regulated and reckoned in turn punctually from mid-day ot mid-day. - Mother Right in India. p.61 Baran Omar Ralf Ehreneels. Under the Kandian laws polyandry as well as polgamy was allowed without limitation as to the number of husbands or wives. A women usually had two husbands and there are cases where women had as many as seven. The custom of polyandry as practised in Ceylon ....J.A.Gunaratna. 12. The older and important deity is always the female partner of the divine couple. Everywhere she is unwed...Mother Right in India - p,190. 13. The actual leader which guides the herd in its movements and keeps watch against possible dangers is usually an old female. The baffalo herds are likwise led by an old cow. The female leadership is common to most if not all horned ruminants. There is in fact one way, and one only by the feminine constitution of the family could have been maintained while it expanded at the same time into a larger assembly, namely, by the sons leaving the group and daughters remaining and pairing with males from some other group - The Mothers Vol.2.p.185. 14. The Mothers Vol. p. 454. 15. Where (in Egypt) women held a position more free and more honourable than they in any country today, Diodorus affirms that in a Egyptian family it is the man who is subjected to women. “All this explain why the Queen received more power and respect than the king, and why among private individuals als, the woman rules over the man, and that it is stipulated between married couples by the terrors of the marrying contract that the man shall obey the woman” (Diodorus)- The position of Woman in premitive Society. 16. Ibid. 17. Universal History of the World Vol. II. The ancient Egyptian woman had their own right of property; the sons were named after their mothers; the ancient inscriptions more often show a genealogy of the mothers than that of the father’s property. Right of princes were inherited by the daughter not by the son’s son. As late as the 4th century there existed in Egypt a matriarchal side, with matriarcahal form of marriage enabling a girl to choose her husband herself and to divorse him after a payment of fixed fine - Mother Right in India. P. 194. 18. Matriarchal culture circle is now considered to have extended over a larger period commencing earlier and longer in the course of Evolution - Mother Right in India. P. 8. 19. My study in the palaeo-ethnology and prehistoric anthropology have shown me that women has played greater part in the progess of civilization in the softening of manners - prof. D.E. Mortiller-Year book of facts. Woman becomes in general tenderhearted, merciful, compassionate towards all males- towards animals and all living things; and even towards plants, flowers, in animale things, possessions which are handed gently and tenderly, whereas the male is disposed to be rough, to destory and break - The Mothers Vol. 2 - p. 146. Not a few reasons remain for seeking a fresh term say Matri-primal? to express the highly important and in various ways even predominant influence of women in early society. As from the well founded traditions of mother goddess to the substantial initiatives and attributions of women as inventor and civilizer of these conspicuously in the domestic and in the agricultural life; as well as educator of children and counseller of the tribe, as markedly among Red Indian tribes, so far even to this day among other survivals the matrilinear family system of the Nairs of S.W. India is conspicuously associated with a high status of woman, and a good deal of civilization while its antiquity and that in high esteem is further confirmed by the tradition of various ancient civilizations and religions - Life outlines of general Biology - P. 1188 - Arthur Thomson. 20. Individual marriage has its foundation in economic relations. Individual economic associations between sexual partners have inevitably tended to establish individual sexual claims. The married woman tends in time to become to be prohibited to all but to her individual associate...Marriage by giving a woman to her husband merely separates her in common with others...It has been supposed that exclusive personal claims over women arise originally in the most premitive human societies in consequence of masculine jealousy. Matriarchal society survived until the dawn of culture brought about by contact with the rich civilization of the Oment; and the man came as a suitor to the woman, through her alone he could enter in to possessions of the land...Women had long ceased to be cultivators of the soil. Their traditional ownership of it by transmission of property in the feminine line, was, as have been seen readily circum-verted and reduced to legal function. They regular and assured agricultural food supply had released the men... The corn field abolished the economic importance of the hunter. The economic function of the female came to an end. He was set free for other avocations. He had yoked his oxen to the plough; he had by degrees taken over the bulk of agricultural labour. The industries which had hitherto been exclusively in the woman’s hands passed in to those of men. The household crafts which had originated with the household worder, pottery, woodwork, rude building, weaving etc, became masculine industries. They became generally extended through the trading activities of the caravan driver and the seafarer. The fertility of the land had released the men; they took over the work of the women. The latter from being the workers were left idle. Thus the great economic revolution brought about by agriculture which is accentuated for a while the matriarchal character of the archaiasocieties which transformed had ultimately of the opposite result. In the end no economic change established male supremacy more firmly and overthrow matriarchal society so completely. The sexual divison of labour upon which the social development had been founded in premitive societies was abolished. Women instead of being the chief producer, became economically unproductive, destitute and dependent. The contact between the toiling premitive woman and the idle lady of civilization has been mistaken for an indication of enslavement of the former and the freedom of the latter marks the opposite relation. It is the premitive toiler who is independent and the employed woman who has lost her freedom, and is destitute - The Mothers Vol. 2 - p.p.50, 51. 21. We can see the growth of purchase marriage in the service demand by the parents of the bride, this taking the place of the earliest custom of the bridegroom proving his fitness by test of strength - ஞடிளவைiடிn டிக றடிஅயn in யீசiஅவைiஎந society - p. 248. 22. The law of female inheritance must at one time have been universal...The husband’s property was made over by dead to the wife (atfrist entierlly and afterwards in part) to secure its inheritance by the children of the marriage. It was in such wise way the Egyptians arranged the difficult problem of fusing of mother right with father right - Position of women in primitive society -p.p.249,214. * The later rise of patriarchal system and its spread as a social institution has been clearly associated with a different theory of the role of the sexes. For here the dominant importance is given ot the father whose all important seed is shown in the woman’s field; a conception which goes naturally with the subordination of woman to man and must have generally helped to justify it even in her own eyes-Life outlines of general Biology. * The Agama favours both sexes equally, and makes no distinction between women and men for men and woman compose equally mankind. This sect holds women in great esteem and calls them Sakthi-that is a woman -. To illtreat the Sakthi is held to be a crime . Principles of Tantra P - XVIII - Avalon. 23. The pastoral clan or tribe is usually patriarchal and aristocratic men keeping their power in their own hands. The office of tribal chief in most cases is hereditary. Woman kind was placed in a position of subjection - Human Ecology - p. 227 - J.W.Bews. 24. Among the ancient Romans in relation to the house father, all in the household were destitute of legal right. The wife and the children no less than the bullack or the slave - A Short History of marriage p. 137 - Edward Westermark. 25. Adultery however was not a sin against morality but a trespass against the husband -The Assyrian laws -G.R.Driver and John C Miles. 26. Morals vary, therefore, as laws vary according to peoples and to times. The rules of morality form a second cord set above to social law, and they embody the larger aggrigate of duties-The World History Vol.1-p. 46. We have examples of general promiscuity, and examples of modified promiscuity, in which, with the pretence of marriage, the woman may bestow her favours upon any one, under certain restrictions as to rank and family. We have numerous examples of polyandry and they are such as to show that the polyandry must be regarded as a modification of advance from promiscuity-Primitive Marriage - p. 94-John Ferguson Mc.Lenned. Spartan husband had no scruple in calling on a friend, or even a stranger to be the father of his children; it was proper for a Spartan matron to be mistress in two houses - Premitive marriage p. 10. - John Ferguson. Mc. Lennan. It was their custom to surrender them even when they had two or three children by them, to other men, as Cato surrendered Marcia in our own time - Strabo. 27. Another custom which has been adduced as evidence of former communism in women is that which requires a man to offer his wife or one of his wives to a guest.... The custom of lending wives were found among many peoples of different parts. This sort of hospitality is frequently mentioned in Irish heroic tales - A short history of marriage - p.14 - Edward Westermark. For it is equally shared by the ancient Greeks and Romans who sold or lent their-wives to their friends either for pleasure or procreation. So plutarch describing the life of Lycurgas the Spartan law-giver wrote, “He laughed at those who revenge with wars and blood-shed the communication of a married woman’s favours; and allowed that if a man in years should have a young wife he might introduce to her some handsome and honest young man, whom he most approved of and when she had a child of the venerous race bring, bring it up as his own. On the other hand, he allowed that if a man of character should entertain a passion for a married women on account of her modesty and the beauty of her children he might treat with her husband for admission of her company, that so planting under beauty bearing soil, he might produce excellent children, the congeanial offspring of excellent parents. Sycurgas justifies his regulation on the ground that children were not so much the property of parents as of the state as the state was interested in seeing that they were begotten by the best men in it ! The regulation was held to have had the most salutary effect upon the morals of the women themselves. The privilege of lending and receiving a wife esteemed a high privilege of the Sparten citizen and its forfeiture was deemed condigh punishment reserved for serious delinquencies. The lending of wives reserved for serious delinquencies. The lending of wives to friends was regarded as one mark of favour in Athens, and Socretes is said to have lent his wife Xantippe to his young disciple and friend Alcibisdes. That the wife was friendship’s offering is illustrated in the life of Cato the younger. when he married his second wife Marria after divorcing Atlia, his friend Hortensius a man of great dignity and politeness requested Cato to lend him his married daughter Portia for the purpose of propagation. Cato answered that he had the greatest regard for the friendship of Hortensius but he could not think of his application for another man’s wife. Whereupon Hortensius requested him to lend his own wife which Cato did not only lent but present to his friend with the consent of the lady’s father - The Hindu code p. XX - Dr.H.S.GOUR. An Eskimo may oblige a vistor by surrendering his wife temporarily, and a man coming from one settlement to another expects to be similarly treated by a member of his own age - An Introduction to cultural anthropology - p. 244 - Robert H. Lowill. It may be well to append some modern examples of promiscuity, and of practices which have the same effect in rendering uncertain male parentage. The Ansarians have their wives in common; the Kaias (paropamisans) lend their wives to their guests; so do the Eimauk (Caubul), so we are informed of the Kandyans. The Mpongme (Africa) lend wives Premitive marriage p. 96. Exchange of wives are habitual among Eskimos. This is due often as a matter of convenience.... If a man’s wife is unable to accompany him on a hunting party, he will exchange her for the wife of some men who is staying behind, - The Mothers Vol, 2 - p.10. 28. In some districts of Holland girls it is said are seldom virgins at their marriage and are often in an advanced state of pregnancy at the ceremony. Prenuptual unchastity, multiplicity of lovers and illequimate children are not looked upon as a bar to marriage. Similar views are said to remain in the rural parts of Austria, Baveria, Switzerland, and Norway. In many parts of Italy says a sixteenth century writer the men would not think of marrying a woman who had not given proof of her popularity by the multitude of her armours. The mothers Vol. 3 - p. 313. ஒல்லாந்தின் சில பகுதிகளில் திருமணமாகும் காலத்தில் கன்னியராக விருக்கும் பெண்கள் அரியர். பெண் கருக்கொண்டிருத்தல், பல கணவரையுடையவளாயிருத்தல் போல்வன அவள் திருமணத்துக்கு இடையூறுகளாகமாட்டா. ஆஸ்திரியா, பவேரியா, சுவிற்சர்லாந்து, நார்வே முதலிய நாடுகளிலும் இக் கருத்தே நிலவி வருகின்றது. பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த எழுத்தாளர் ஒருவர் இத்தாலியின் பல பகுதிகளில் பெண் ஒருத்தி தனக்குப் பல காதலர்கள் உளர் என்பதை அத்தாட்சிப் படுத்தினாலன்றி அவளை ஆடவன் மணந்துகொள்ள நினைக்கமாட்டான்” என்று கூறியுள்ளார். 29. But also among races having a fully developed married institution the unmarried are often permitted to have in conditions of sexual freedom.... The institution of child betrothal marked an important step in development; for in such cases the brides was from childhood destined for her husband and bound to chastity. This is the historical significance of child betrothal - The world History Vol. 1 - p. 50. திருமண ஒழுங்குகள் உருப்பட்டுள்ள நாடுகளிலும் மணமாகாத பெண்களுக்கு அவர்கள் விரும்பிய ஆடவருக்குத் தமது தயவை அளிக்கும் சுதந்திரம் இருந்துவந்தது. சிறு பிள்ளைகளாக இருக்கும்போது அவர்களுக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்படுவதால் அவர்கள் இளமை தொடக்கம் தம் கணவருக்கே உரிமைப்பட்டுக் கற்பாயிருக்கப் பழகினார்கள். சிறு பிள்ளைத் திருமணத்தின் இரகசியம் இதுவே. 30. Group Marriage is the form established by the association of two hordes or packs according to which the men of one group marry the women of the other; not a marriage of individual men with individual women, but a promiscuous relationship, each man of one group marry all the women of the other group - atleast in theory - The World History Vol. 1- p.48. 31. Modesty is a derived feeling; it cannot exist until a high state of individualism has been attained, until each man desires exclusial possession of his wife and therefore wishes to shield her from covetousness of the other men. This leads to the performance of sexual intercourse private; and gradually to the concealment of the organs of sex. The World History Vol. 1-p. 27. Few Englishmen see anything indecent in the nude in art but would be horrified at the idea of the sexes bathing together when nude. In Japan nothing unmodest is found in the fact that the sexes bathe together in a state of absolute nudity; but any representation of nude in art is considered indecent. - From nudity to Raiment - p. 5 - Hilaine Hiber. The wearing of clothes is in no way natural to man, and that the earliest form of ornament was in the form of charms such as the cowrie shells worn in the soudon and elsewhere to by women to give them fertility - Ibrid - p. 9. Greek Girls used also to appear naked on certain days of festivity and wrestle in public assembly promiscuously with boys of equal age with themselves - The Hindu Code p. XVIII - Dr. H.S. GOUR, D.C. LLD. He (Lycurgus) ordered that they should go naked as well as young men, and dance too in that condition at their solemn feasts and sacrifices, singing certian songs, whilst the people stood in a ring about them, seeing and hearing them. The Kings and the whole senate as well as the rested of the City went to see and hear all that passed - Amatory Curiose - p. 38. 32. Among Anglosaxons usually a widow was put to death on her deceased husband’s pyre or at his grave side. If she did not offer herself her death she was scorned and hated - Sex and culture - p. 399. J.D.Uwin. 33. The male argus pheasant, noted for the extreme beauty of the plumage, shows himself off before the female by erecting his tail and expanding his magnificiant wing feathers....The bullfinch makes his advances in point of the female and then puffs out his breast so that many more of the crimson feathers are seen than would otherwise be the case. The males of certain baboon species are said to turn their coloured surface to the females - Darwin. 34. It is further said that their newly married girls are even compelled to co-habit with their huaband‘s near relatives. Married women are allowed to bestow their favours upon their husband’s relations, and it is an understanding that a man should not enter his dwelling, if he sees another’s slippers placed outside as a sign that the owner of them is with the mistress of the house-Castes and Tribes of Southern India Vol.7 - p. 182. Valians of Pattukkotai in Tanjore District say intimacy between a man and woman before marriage is tolerated, and children of such union are regarded as members of the castle and permitted to intermarry with others provided that the parties pay a nominal penalty imposed by the council - Ibid. 35. According to Judge Lindsey there are atleast fifty thousand girls in NewYork living with men who are not their husbands, and knowing both London and NewYork we are of the opinion that London can easily rival these figures. Free unions of a more or less durable nature which are really natural however will be considered later and what here concerns us is the increase in occasional semipromiscuous sexual intercourse between the ages of 18 and thirtyfive - which is effectively eliminating the necessity of commercial prostitution - Marriage- Past Present and Future. 36. Today in the City of Paris there are seventy thousand registered prostitutes, and certainly several times that number unregistered and every other city and town in the country has its large share. The houses of prostitution in France are filled with young, childless, exmarried woman, while most of the semipublic prostitutes in the country are of the same class - Thurston’s philosophy of marriage pp. 53, 54. 37. In Cyprus it appears that before marriage all women were formerly obliged by custom to prostitute themselves to strangers at the sanctuary of the goddess, where she went by the name of Aphrodite, Astarte, or what not. Similar customs prevailed in many parts of Western Asia. Whatever the motive the practice was clearly regarged not as an orgy of lust, but as a solemn religious duty performed in the service of the great mother goddess of Western Asia, whose name varied, while her type remained constant from place to place. Thus at Babylon every women whether rich or poor, had once in her lifetime to submit to the embrace of a stranger at the temple of Mylitta that is of Ishar or Astrate and to dedicate to the goddess the wages earned by the sanctified harlotry. The sacred precinct was crowded with women waiting to observe the custom. Some of them had to wait there for years at the Heliopolis or Baalbec in Syria famous for the imposing grandour of the ruined temples. The custom of the country required that every maiden should prostitute herself to a stranger at the temple of Astarte. Matrons as well as maidens testified their devotion to the Goddess in the same mannar. In Phonecian temples women prostitute themselves for life in the service of religion, believing that by this conduct they propitiated the goddess and won her favour. It was a law of the Amorites that she who was about to marry should set in fornication seven days by the gate...At Bablus the people shaved their heads in the annual mourning for Adonis. The women who refused to sacrifice their hair had to give themselves up to strangers on a certain day of the festival and the money which they earned was devoted to the Godddess. This custom may have been migration of as older rule when at Babylus as else where formerly compelied every women with exception to sacrifice of her virtue in the service of religion. We are told that in Lydia all girls were obliged to prostitute themselves in order to earn adowry, but we may suspect that the real motive of the custom was devotion rather than economy. The suspician is confirmed by a Greek inscription found at Talles in Lydia, which proves that the practical religious prostitution survives in the country as late as second century of our era. It records of a certian woman Aurchia Aemilia by name, not only that she herself served God in the capacity of a harlot a his express command, but that her mother and other female ancestors have done the same before her. In Armania the noblest females dedicated their daughters to the service of the Goddess Anaites as prostitutes for a long time before they were given in marriage. Nobody scrupled to take one of these girls to wife when her period of service was over. Again the Goddess Ma was served by a multitude of sacred harlots in Commanu, and crowds of men and women flocked to her sanctuary from the neighbouring cities and country to attend the biennial festivals or to pay their vows to tht Goddess-Golden Bough. Part IV.- p. 39. Not was this Babylonian temple mentioned by Haeradotus an isolated case. The Mylatta cult was practised in many parts of the country. In other lands notably Egypt and Greece, the women served their respective duties in much the same way. Starbo says that the Temple of Aphrodite Porne at Corinth contained no fewer than a thousand harlo’s at a time all of them served the Goddess. Trather affirms this same historian. Among the ancient Greeks it was customary to dedicate to Zeus the most beautiful vergin girls available. They were forced to remain in the service of the deity giving their bodies to all men who sought them, untill the outset of mensuration proclaimed the embrace marriage, In the temple of Aesculapus near Tithcrasa, there was always in readiness a bed prepared for the purpose of incubation which was practised worship - p. 65. 38. In an old manuscript, which contains a collection of pieces in the Irish language compiled about A.D. 1100 it is said Conchobar, King of Uister, who lived at the time when Christ was born, deflowered all the virgins of his kingdom and it is indicated that the defloweration of maidens was a duty incubent upon them - A short History of Marriage - p. 15. Edward Westermark. 39. Numbudries were entitled to the first fruits; and it was considered the high privillege to every Nair maid to be introduced by them to womanhood. In this connection reference may be made to Hamill’s new account of the East Indies where it is stated, “ when Zomarin married he must not cohabit with his bride till the Nambudiri or chief priest has enjoyed her. And he, if he pleases may have three nights of her nuptuals because the first fruits of her nuptuals must be an holy oblation to the god she worships, and some of the nobles are so complaisant as to allow the clergy the same tribute, but the common people cannot have the compliment paid to them, but are forced to supply the Priest’s place for themselves - Castes and Tribes of Southern India - Thurston. It has been prosposed to derive the religious prostitution of Western Asia from a privilege secular and precutionary practise if destroying a bride’s virginity before handing her over in order that the bridegroom’s intercourse should be safe from a peril that is much dreaded by men in certian stage of culture Golden Bough IV p. 50 - Fraser. 40. A Fuegian husband is not even permitted to speak to his wife after her confinement unless she gives him leave to do so..... In primitive socities it is a very general rule that all cohabitation must cease when a woman became pregnancy. And the seperation between her and her husband is commonly observed during the whole time that she is nursing the child. The latter period is very much longer among uncultured peoples than with European women.....To suckle her childern for even four years; and even five, six or seven years is quite usual for a primitive woman. From two to three years is the most general duration of nursing. Throughout the general part of that time marital relation among many uncultured people cease entirely....The usage was general among the tribes of America and the restriction extended from the first recognition of pregnancy to the end of the period of sucking - In Figi it is quite out of the question for a man to have relations with his wife at any time she is pregnant of is suckling a child that is for about four years. In New Caledonia abstention from marital relations is also observed during the whole duration of both pregnancy and nursing that is for four or five years. In Solomon Islands after the birth of the child the husband is not supposed to cohabit with his wife until child could walk. So again in Loyality islands a man may not even see his wife until the child is able to crawl - The Mothers Vol. 2 - p. 391. பியூசித் தீவிலே மனைவி கருக் கொண்டிருக்குங் காலத்தில் கணவன் அவளுடன் பேசத்தானும் அனுமதிக்கப்படமாட்டான். முற்காலச் சமூகங்களில் பெண் கருக் கொண்ட தும் ஆண் பெண் சேர்க்கை அறவே ஒழிக்கப்படவேண்டும் என்னும் கட்டாயம் இருந்து வந்தது. கரு வளர்ச்சியுற்ற பிற்காலத்திலும் மனைவி பிள்ளையைப் பெற்றுப் பால் கொடுக்கும் காலத்திலும் கணவனும் மனைவியும் பிரிந்திருந்தார்கள். திருந்தாத மக்களிடையே பிள்ளைகளுக்குப் பாலூட்டி வளர்க்குங் காலம் மிகவும் நீண்டது. வட அமெரிக்கரிடையே பெண் கருக்கொண்டு பிள்ளையைப் பெற்றுப் பாலூட்டி வளர்க்குங் காலம் முழுமையும் கணவனோடு சேர்ந்து வாழும் தொடர்பு முற்றாக நீக்கப்பட்டுள்ளது. இதனால் நாலு ஆண்டுகள் வரையில் கணவன், மனைவியுடன் தொடர்பு வைத்திருத்தல் முடியாததாகும். நீயுகலிடோனியா என்னும் இடத்திலும் மனைவி கருக்கொண்டதிலிருந்து இருவரும் கணவன் மனைவி என்னும் தொடர்பின்றி நாலு அல்லது ஐந்து ஆண்டுகள் வாழ்தலாகிய வழக்கம் உண்டு. சலமன் தீவுகளில் பிள்ளை நடக்கும் பருவம் அடைவதன் முன் கணவன் மனைவியுடன் சேர அனுமதிக்கப் படமாட்டான். லோயாலிற்றித் தீவுகளில் பிள்ளை தவழும் பருவம் அடையுமுன் கணவன் மனைவியைப் பார்க்கத்தானும் முடியாது. 41. If a verile bull breaks into a pen with a pregnant cow, the latter will make every effort within her power to avoid him. If she be unable to do so. The stock raiser always expects to be presented later on with a defective calf-Sexual intercourse during list of physical and mental defects in childern defectives, due to this cause, is rapidly increasing from year to year - Thurston’s philosophy of marriage - p.13. 42. At present there are approximately, 2,000,000 more widows in the United States than there are widowers - Ibid. 43. A man who turly loves a woman will unhesitantly surrender her to another if his sacrifive will be contentive to her greater happiness, and as women who truly loves her husband will make a like sacrifice but although this sentiment is somewhat rare at present it is unquestional and gaining strength - Marriage past present and Future - p. 164. 1. The Opposite Sexes - A Study of Woman's Natural and Cultural History - by Dr. Adolg Heilborn. 1. Thracians. 2. Basutos. 1. Samoyeds- வட ஐரோப்பாவிலும் சைபீரியாவிலும் அலைந்து திரிந்து மந்தை மேய்த்து வாழும் மக்கள். 1. Prostitution. 1. Solon. 2. Jerusalem. 1. De Bello Gallico. 1. National Planning Committee of Women’s Role in National Life - Indian Women’s Magazine, Vol. 1, Introduction Number. 1945. பகுதி 1 1. Man from all time has had strength as his share. Woman has ruled over and refinded this nearly always brutal strength by the irresistible influence of the art of grace and beauty. - James Mason - The Year book of facts in science and arts 1878. 2. The hand that rocks the cradle rules the world. 3. It (Civilization) is the influence of good women - Emerson. * பெண்கள் பயனுள்ள தாவரங்களைத் தேடிக் கண்டுபிடித்து அவைகளை உண்டாக்குவதில் திறமை அடைந்தார்கள். அவர்கள் தமது குழந்தைகளைக் காப்பதற்கு உறைவிடங்களை அமைக்கும் உபாயங்களையும் கண்டறிந்தார்கள். மொழி, புதியவற்றைக் கண்டறிதல், சமயம், சமூகத் தொடர்புகள் என்பவை பெண்களிடமிருந்தே தொடங்கின. ஆண்கள் போர் வீரராய்க் கொடுமையான குணங்களை மேலும் மேலும் வளர்த்தார்கள். பெண்கள் குடும்ப வட்டத்துள் இருந்து மென்மைக் குணங்களை மேலும் மேலும் வளர்த்தார்கள். தமது பிள்ளைகளின் பசியைப் போக்கும் பொருட்டு பெண்களே விலங்குகளை வளர்க்கலானார்கள்; சில சமயங்களில் நிலத்தைத் திருத்திப் பயிருமிட்டார்கள். இவ்வாறு ஆதியில் பெண்களால் கண்டுபிடிக்கப்பட்ட தொழில்கள் நாகரிக காலத்தில் வளர்ச்சியடைந்தன. - The family in its social aspects-p. 11. - J.G.Dealy 1. இவள் பிரான்சியப் பெண் (கி.பி.1410-1431) இவள் பிரான்சுப் படைக்குத் தலைமை வகித்துப் பல போர்களில் வெற்றி பெற்றாள், இறுதியில் இவள் ஆங்கிலரால் பிடிக்கப் பட்டாள், போப்பாண்டவருக்கு முன் இவள் விசாரணை செய்யப்பட்டாள், மந்திரவித்தைக் காரி என்னும் தீர்ப்பினால் இவள் உயிரோடு நெருப்பிலிட்டுக் கொளுத்தப்பட்டாள். 2. இவள் கி.பி.62இல் வாழ்ந்த பிரிட்டிஷ் இராணி. இவள் உரோமருக்கு மாறாகப் படைதிரட்டி 70,000 பகைவரைக் கொன்றாள், இறுதியில் இவள் உரோமரால் தோற்கடிக்கப்பட்டு, நஞ்சூட்டிக் கொல்லப்பட்டாள். 3. அண்டிகோன் என்பாள் கிரியோனின் கொடுங்கோலாட்சியைப் பற்றித் துணிவாக எடுத்துக் கூறினமையின் உயிரோடு புதைக்கப்பட்டாள். 4. இவளும் பல ஆபத்துக்குள்ளான கிரேக்க வீரப்பெண். 1. Millions of monks and secular priests, all forbidded to marry; all pampered in luxurious ease and abundance to voluptuousness, were let loose on the female world as Counsellors and confessors with secrecy in on hand, and amplest power of absolution from Sin in the other and the effect at domestic purity may be so readily imagined - A popular History of Priestoraft in all ages and nations - (p.110) W. Howitt. 1. The position of women as reflected in Semitic codes of law-Elizabeth Mary Macdonell Ph.D - University of Toronto Studies Oriental Services. இது மேற்படி கட்டுரையின் சுருக்கம். 1. ஹமுராபி பாபிலோனிய அரசன் * பழைய மக்கள் என்பதற்கு பழைய மக்களின் போக்கில் வாழ்கின்றவர்கள் எனப் பொருள் கொள்க. 1. As an example of this licence, in the Papal court Alexander VI, beautiful courtesans and strong limbed servitors performed the sexual act enmasse for the avowed purpose of providing entertainment for the whole court - The evolution of modern marriage P.82-F. Muller-Lyer. 2. The Empress Catherine of Russia had a lady of the chamber who was called the eprouveuse to whom the Empress was accustomed to turn over for trial any favourite who seemed to her to have merit - Ibid P.83. 1. Yet the history of moral shows that in the time of absolutism, not so far distant, many a hole or burgher felt highly honoured if the price ‘close’ his wife for his pleasure - Ibid - p.210 காலிப்பக்கம் அறிஞர் ந.சி. கந்தையா எழுதிய நூல்கள் நூல் பெயர் ஆண்டு 1. பத்துப்பாட்டு 1949 2. பதிற்றுப்பத்து 1937 3. கலித்தொகை 1941 4. பரிபாடல் 1938 5. அகநானூறு 1938 6. புறப்பொருள் விளக்கம் 1936 7. கலிங்கத்துப்பரணி 1938 8. விறலிவிடுதூது 1940 9. பெண்கள் உலகம் --- 10. பெண்கள் சமூகம் அன்றும் இன்றும் 1948 11. பெண்கள் புரட்சி 1946 12. பொது அறிவு 1957 13. பொது அறிவு வினா விடை 1961 14. உலக அறிவியல் நூல் --- 15. உங்களுக்குத் தெரியுமா? 1954 16. அறிவுக் கட்டுரைகள் 1950 17. நூலகங்கள் 1948 18. அறிவுரை மாலை 1950 19. அறிவுரைக் கோவை 1950 20. தமிழர் சமயம் எது? 1947 21. சைவ சமய வரலாறு 1958 22. சிவன் 1947 23. இந்து சமய வரலாறு 1954 24. தமிழர் பண்பாடு 1966 25. நமது தாய்மொழி 1948 26. நமது மொழி 1946 27 நமது நாடு 1945 28. திராவிட மொழிகளும் இந்தியும் 1948 29. தமிழ்ப் பழமையும் புதுமையும் 1946 30. முச்சங்கம் 1947 31. தமிழ்க் கடவுளுக்கு ஆரியப் பாடலா? 1947 32. ஆரியர் தமிழர் கலப்பு 1946 33. ஆரியத்தால் விளைந்த கேடு 1948 34. புரோகிதர் ஆட்சி 1949 35. இராமாயணம் நடந்த கதையா? 1947 36. ஆரியர் வேதங்கள் 1947 37. திராவிடம் என்றால் என்ன? 1948 38. திராவிட இந்தியா 1949 39. திராவிட நாகரிகம் 1947 40. மறைந்த நாகரிகம் 1948 41. ஆதி மனிதன் 1948 42. ஆதி உயிர்கள் 1949 43. மனிதன் எப்படித் தோன்றினான்? 1947 44. மரணத்தின் பின் 1950 45. பாம்பு வணக்கம் 1947 46. தமிழர் யார்? 1946 47. உலக நாகரிகத்தில் தமிழர் பங்கு 1948 48. சிந்துவெளித் தமிழர் 1947 49. தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் 1958 50. தமிழர் சரித்திரம் 1940 51. வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர் 1943 52. திருவள்ளுவர் 1948 53. திருக்குறள் 1949 54. தமிழகம் 1934 55. தமிழ் இந்தியா 1945 56. திருக்குறள் அகராதி 1961 57. தமிழ்ப் புலவர் அகராதி 1953 58. தமிழ் இலக்கிய அகராதி 1953 59. காலக் குறிப்பு அகராதி 1960 60. செந்தமிழ் அகராதி 1950 61. கலிவர் யாத்திரை 1959 62. இராபின்சன் குரூசோ 1949 63. அகத்தியர் 1948 64. தமிழ் ஆராய்ச்சி 1947 65. தமிழ் விளக்கம் —--- 66. நீதிநெறி விளக்கம் 1949 xvi தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967) தமிழ்மொழியின் தொன்மையை அதன் தனித் தன்மையை உலக மொழிகளோடு ஒப்பிட்டு விரிவாக ஆய்வு செய்தவர் தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள். தமிழ் இனத்தின் மேன்மையை வரலாற்று நோக்கில் ஆய்வு செய்தவரும் அவரே. ‘தொண்டு செய்வாய்! தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே’ என்பார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். புரட்சிக் கவிஞரின் கனவை நினைவாக்கும் வகையில், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தமிழின் துறைதோறும் துறைதோறும் அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். தமது நூல்களின் வாயிலாக வீழ்ச்சியுற்ற தமிழினத்தை எழுச்சி பெறச் செய்தவர். ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப் பணியோ மலையினும் மாணப் பெரியது. ஆயினும் அவருடைய வாழ்க்கைப் பதிவுகளாக நமக்குக் கிடைப்பன தினையளவே யாகும். தமிழர்கள் அந்த மாமனிதரின் தமிழ்ப் பணியைக் கூர்ந்து அறிந்து தக்க வகையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யத் தவறி விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. இன்று அவருடைய வாழ்ககைக் குறிப்புகளாக நமக்குக் கிடைப்பன மிகச் சிலவாகும். அவை:- தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் ஈழ நாட்டில் கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டில் திரு நன்னியர் சின்னத்தம்பி என்பாரின் புதல்வராய்ப் பிறந்தார். தக்க ஆசிரியரிடம் பயின்று கல்வியில் தேர்ந்தார். பின்னர் கந்தரோடை என்னும் ஊரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். ஆசிரியர் பணியிலிருக்கும் போதே தக்க பெரும் புலவர்களைத் தேடிச் சென்று தமிழ் இலக்கிய இலக்கணங்கள் முறையாகப் பயின்று பெரும் புலவராய் விளங்கினார். ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்ற வல்லுநராய்த் திகழ்ந்தார். பின்னர் மலேசியா நாட்டிற்குச் சென்று சிறிதுகாலம் புகைவண்டி அலுவலகத்தில் பணியாற்றினார். ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் தமிழறிவு ஆழமும் அகலமும் கொண்டது. அவரது வாழ்க்கை முழுமையும் தமிழ் ஆய்வுப் பணியே பெரும் பணியாக அமைந்தது. அவர் பெற்ற ஆங்கில அறிவின் துணையால் தமிழ் மொழி, தமிழினம் தொடர்பான மேலை நாட்டு அறிஞர்களின் நூல்களை யெல்லாம் நுணுகிக் கற்றார் வியக்கத்தக்க கல்விக் கடலாய் விளங்கினார். அறுபதுக்கு மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதினார். தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தாம் எழுதிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்று வேட்கை கொண்டார். இலங்கையில் அதற்குப் போதிய வசதி இல்லை. ஆதலால் தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்தார். சென்னையில் “ஒற்றுமை நிலையம்” என்னும் பதிப்பகத்தின் உரிமையாளராய்த் திகழ்ந்தவர் வீரபாகு பிள்ளை என்பவர். அவர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். பின்னர் முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகியவற்றின் வாயிலாக ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் நூல்கள் வெளிவரலாயின. ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் அருமைத் துணைவியார் இரத்தினம்மா எனப்படுபவர். இவருக்குத் திருநாவுக்கரசு என்றொரு மகனும் மங்கையர்க்கரசி என்றொரு மகளாரும் உண்டு. துணைவியார் பல ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். தமிழ்மொழி, தமிழினம் ஆகியவற்றின் மேன்மைக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை தமது எழுபத்து நான்காம் வயதில் 1967இல் இலங்கையில் மறைந்தார். எனினும் தமிழ் வாழும் வரை அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும். தமிழறிஞர் கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணி மதிப்பு மிக்கது; காலத்தை வென்று நிலைத்துநிற்க வல்லது. தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ்ப்பண்பாடு, தமிழ்இனம் ஆகியவற்றின் வரலாற்றை எழுதியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. அவருடைய ஆய்வுப் பணியைச் சிறிது நோக்குவோம். அகராதிப் பணி தமிழ் மொழியில் முதன் முதலில் தோன்றிய அகராதி வீரமா முனிவர் எழுதிய சதுரகராதியே யாகும். பின்னர் பல்வேறு அகராதிகள் தோன்றின, வளர்ந்தன, வெளிவந்தன. அகராதி வளர்ச்சிப் பணியில் கந்தையா பிள்ளையவர்களுக்கும் பெரும் பங்குண்டு. அவர் படைத்த அகராதிகள் ஐந்து. 1. செந்தமிழ் அகராதி, 2. தமிழ் இலக்கிய அகராதி, 3. தமிழ்ப் புலவர் அகராதி, 4. திருக்குறள் அகராதி, 5. காலக் குறிப்பு அகராதி என்பன அவை. ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் செந்தமிழ் அகராதி முன்னுரை யில் “நாம் தமிழ்த் தாய் மொழிக்குச் செய்யும் பணிகளுள் ஒன்றாக இந் நூலைச் செய்து முடித்தோம்” என்கிறார். “நூலொன்றைச் செய்து தமிழுலகுக்கு உதவ வேண்டும் என்னும் ஆவலால் பலவகையில் முயன்று இந் நூலைச் செய்து முடித்தோம்” என்று கூறுகிறார். தமிழ் இலக்கிய அகராதியில் அகத்தியர் முதல் வைராக்கிய தீபம் ஈறாக ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. தமிழ்ப் புலவர் அகராதியில் பல நூற்றுக்கணக்கான தமிழ்ப்புலவர்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. அவர் தொகுத்த திருக்குறள் சொற் பொருள் அகராதி பயன்பாடு மிக்கது. காலக்குறிப்பு அகராதி புதுமை யானது. தமிழ் மொழியில் இது போன்ற அகராதி இதுவரை வெளிவந்த தில்லை “இந்நூல் ஓர் அறிவுக் களஞ்சியம்” என்கிறார் முனைவர். மா. இராச மாணிக்கனார். இலக்கியப் பணி புலவர்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த தமிழ் இலக்கியச் செல்வத்தை எளிய மக்களும் படித்துப் பயன் பெறுமாறு உரைநடையில் வழங்கிய வள்ளல் கந்தையா பிள்ளை அவர்கள். பத்துப்பாட்டு, அகநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலிங்கத்துப்பரணி, புறப்பொருள் விளக்கம், விறலிவிடுதூது போன்ற இலக்கியச் செல்வங்களை எல்லாம் இனிய எளிய நடையில் உரைநடையில் தந்தவர் கந்தையா பிள்ளை அவர்கள். திருக்குறளுக்கும், நீதிநெறி விளக்கத்திற்கும் அரிய உரை வரைந்தவர். தமிழ்மொழி - தமிழினம் தமிழ்மொழி - தமிழினம் தொடர்பாகப் பதினைந்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியவர் கந்தையா பிள்ளை. தமிழகம், தமிழ் இந்தியா, தமிழர் சரித்திரம், தமிழர்யார்?, வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர், நமதுமொழி, நமதுநாடு, தமிழ் ஆராய்ச்சி, தமிழ் விளக்கம், முச்சங்கம், அகத்தியர், சிந்துவெளி நாகரிகம், தமிழர் பண்பாடு, தமிழர்சமயம் எது? சிவன், சைவ சமய வரலாறு, தமிழ்ப் பழமையும் புதுமையும் போன்ற எண்ணற்ற அரிய ஆயவு நூல்களைப் படைத்தவர். ஆயிரக் கணக்கான நூற்கடலுள் மூழ்கி எடுத்த அரிய கொற்கை முத்துக்கள் அவரது நூல்கள். எத்தனை ஆண்டுகாலப் பேருழைப்பு! நினைத்தால் மலைப்புத் தோன்றும். தமிழின் - தமிழினத்தின் தொன்மையைத் தமிழர்தம் பண்பாட்டை - நாகரிகத்தை, தமிழர்தம் உயர் வாழ்வியலை உலகறியச் செய்த பேரறிஞர் கந்தையா பிள்ளை. திராவிட நாகரிகமும் - ஆரியத்தால் விளைந்த கேடும் தொன்மை மிக்க திராவிட நாகரிகத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் பல நூல்களை எழுதினார். அவை:- திராவிடர் நாகரிகம், திராவிடம் என்றால் என்ன? திராவிட இந்தியா, தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் போன்ற அரிய ஆய்வு நூல்களை எழுதினார். ஆரியர்களால் விளைந்த கேடுகள் குறித்தும், ஆரியர் தமிழர் கலப்பு, ஆரியத்தால் விளைந்த கேடு, புரோகிதர் ஆட்சி, இராமாயணம் நடந்த கதையா? என்பன போன்ற நூல்களை எழுதினார். பிற மாணவர் தம் அறிவை விரிவு செய்யும் வகையில் எட்டு நூல்களும், மகளிருக்குப் பல்லாண்டுக் காலமாக இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து மூன்று நூல்களையும் எழுதினார். மேலும் மொழிபெயர்ப்பு நூல்கள் சிலவும் மனித இனத்தோற்றம் குறித்த நூல்கள் சிலவும் எனப் பல நூல்களை எழுதியுள்ளார். புரட்சிக் கவிஞர் கூறியவாறு துறைதோறும், துறைதோறும் எண்ணற்ற நூல்களை எழுதித் தமிழுக்கு வளம் சேர்த்தவர். ந.சி. கந்தையா பிள்ளை. புட்சிக்கவிஞர் பாரதிதாசனார், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களைப் பற்றிப் பின்வருமாறு பாராட்டுகிறார். “ந.சி. கந்தையா எனும் நல்லவன், வல்லவன் தமிழ் தமிழின வரலாறனைத்தையும் தொல்பொருள் ஆய்வின் தொகை வகை, விரித்து நிலநூல், கடல்நூல் சான்றுகள் நிறைத்தும் தமிழ் நூற் சான்றுகள் முட்டறுத் தியம்பியும் இலக்கிய இலக்கணச் சான்றுகள் கொடுத்தும் பழக்க வழக்க ஒழுக்கம் காட்டியும் வையகம் வியக்க வரலாறு எழுதினான். பொய் அகன்று மெய்க் கை உயர்ந்தது.” வாழ்க! ந.சி. கந்தையா பிள்ளையின் பெரும் புகழ்! தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வரலாறே தமிழர் களால் மறக்கப்பட்டு விட்டது. தமிழ்ப் பகைவர்களால் மறைக்கப்பட்டு விட்டது. அங்ஙனமிருக்க அம் மாமனிதரின் ஆய்வு நூல்கள் மட்டும் எங்ஙனம் கிடைக்கும்? ஆழ்கடலிலிருந்து முத்துக்கள் எடுப்பது போல, தங்கச் சுரங்கத்திலிருந்து தங்கத்தை வெட்டி எடுப்பது போல, பெருமுயற்சி எடுத்து ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்களைத் தேடினேன். நூல்நிலையங்களைத் தேடித்தேடி என் கால்கள் அலைந்த வண்ணம் இருந்தன. அதன் விளைவாக ஐம்பது நூல்கள் கிடைத்தன. பெரும் புதையலைத் தேடி எடுத்தது போல் பெருமகிழ்வுற்றேன். அன்பன் கோ. தேவராசன் அகம் நுதலுதல் உலகில் வாழும் மாந்தர் அனைவர்க்கும் உள்ளார்ந்த எண்ண ஓட்டங்கள் அலை அலையாய் எழுந்து பல்வேறு வடிவங்களில் வெளிப் படுகின்றன. சங்கக் காலத்துத் தமிழ் மாந்தர் தமது எண்ணங்களை ஒழுங்கு படுத்தி ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்தி வாழ முற்பட்டதன் விளைவே நாகரிகத்தின் தொடக்கம் எனலாம். உலகில் தோன்றி வாழ்ந்து வரும் எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது இயல்பாக விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே உள்ளது. அந்த இன்பத்துககுத் தடையோ இடையீடோ நேரின் அதைப் போக்கிக் கொள்ள முயலும் முறையில் மனிதக் குலத்துக்குத் தனிப் பண்பு சிறப்பாக வெளிப்பட்டிருப்பதைச் சங்க இலக்கியத்தின் வழி நன்கு அறிய முடிகிறது. தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்று பெரும் பிரிவாக மனித வாழ்வின் இயல்பை வகுத்து இலக்கணம் செய்தாலும், அவன் உள்ளத்தில் எழும் உணர்வை வெளிப்படுத்த மொழியும் சொல்லும் அதன் பொருளும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்திருக்கின்ற பாங்கு புறத்திணைச் செய்யுளைக் காட்டிலும் அகத்திணைச் செய்யுள்களிலேயே மிகுந்திருப்பதைக் காண முடிகிறது. தொல்காப்பியர் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்றார். குறித்தனவே என்னும் தேற்றேகாரம் பொருள் குறியாத சொல் இல்லை என்பதையே உணர்த்துகிறது. இற்றை நாளில் நம்மில் சிலர் வஞ்சக எண்ணத்துடனும் பலர் மக்களின் சிந்தனை ஓட்டத்தைத் தூண்டி நல்வழிப் படுத்தவும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதைக் கேட்கிறோம். எருதுநோய் காக்கைக்குத் தெரியாது என்று கூறும் போதும் குதிரைக்குக் கொம்பு முளைத்தது போலத்தான் என்று கூறும் போதும் (முயற்கொம்பே) அச் சொல்லின் பொருளையும் அதனால் நுண்ணுணர் வுடையார் அறியும் வேறு பொருளையும் அச் சொல் உணர்த்துவதாக அறிய முடிகிறது. விடுகதைகள் சொல்லி அறிவைத் தூண்டிச் சிந்திக்க வைப்பதும் சிலேடையாகப் பேசி உட்பொருளை உணரத் தூண்டுவதும் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அறிவார்ந்த செயல்கள். இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்ப் பிரிவின் முடிவும் மனித னின் உள்ளுணர்வை வெளிப்படுத்த முயன்ற முயற்சியே. அகம் - புறம் என்ற பிரிவில் உள்ளத்து உணர்வைத்தான் நுகர்ந்தான் என்பதை எவ்வாறு வெளிப்படுத்துவது? எவ்வாறு அறிவது? அறமோ மறமோ - உயிர் உடல் வேறுபாடுகளால், மொழியால், இசையால், அழுகையால், சைகை என்னும் நாடகத்தால் அல்லவோ வெளிப்படுத்த முடியும். அகத்தில் எழும் காதல் உணர்வை ஒருவனும் ஒருத்தியும் நுகர்ந்த நுகர்ச்சியை இத்தகையது என்று பிறர்க்கு அறிவுறுத்த இயலாது. அகத்தால் மட்டுமே உள் முகமாக நாடி ஆராய்ந்து அறிந்து கொள்ளமுடியும் என்பது உண்மை என்றாலும். இவ்வுணர்வு மனிதக் குலத்திற்கு ஒத்திருப்பதால் சில பல குறிப்புகளை மட்டுமே வெளிப்படுத்தினால் போதும் மற்றவரும் அறிந்து இது இவ்வாறு இருக்கும் என்று உணர்ந்து மகிழவும் ஒருவர்க்கு ஒருவர் உதவி செய்யவும் ஏதுவாக இருக்கிறது. எட்டுத்தொகை நூல்களுள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய மூன்றும் நானூறு நானூறு பாடல்களாலான தொகை நூல்கள். சங்கக்காலச் சான்றோரின் அரிய முயற்சியால் இவ்வாறு தொகுக்கப் பட்டாலும் அகப் பொருள் திணைக் களங்கள் ஐந்தும் இவற்றுள் கலந்துள்ளன. ஆனால் குறுந்தொகை 4 முதல் 8 அடிகளும், நற்றிணை 9 முதல் 12 அடிகளும், அகநானூறு 13 முதல் 21 அடிகளும் கொண்ட அடிவரையறை களையுடையன. ஏனோ அகநானூறு நீண்ட ஆசிரியப் பாவான் அமைந்து நெடுந்தொகை எனப் பெயர் பெற்றாலும் களிற்றி யானை நிரை, மணிமிடைப் பவளம், நித்திலக் கோவை என முப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உயிர் எழுத்துகள் 12 மெய் எழுத்துகள் 18 என்பதால் எழுத்துகள் ஒவ்வொன்றற்கும் பத்துப் பத்தாகக் களிற்று யானை நிரை 12 x 10 = 120 பாடல்களாகவும் மணிமிடை பவளம் 18 x 10 = 180 பாடல்களாகவும் பிரித்தனரோ என்று எண்ணத் தோன்றுகிறது. மதங் கொண்ட யானை போன்ற ஐம்புலனையும் ஒழுங்கு படுத்தக் களிற்றுயானை நிரை என்று உயிர் பன்னிரண்டை 120 ஆகப் பகுத்தனரோ! மணிபோன்ற மெய்யான உடலை நிரல்பட மாலையாகத் தொடுக்கப்பட்டதாக எண்ணிப் பதினெட்டை 180 மணிமிடை பவளமாகத் தொகுத்தனரோ! உள்ளமாகிய கடலின் ஆழத்திலிருந்து சேகரித்த நித்திலத்தை முழுமை பெற்ற மாலையாகத் தரித்து மகிழவோ முழுவதும் நூறி எழுந்த வெற்றி யின்பத்தைக் குறிக்கவோ 100 நூறு பாடல்களை நித்திலக் கோவை எனத் தொகுத்தனர் என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த முப்பான் பிரிவிற்குக் காரணம் முழுமையாகத் தோன்றவில்லை. வகுபடாமல் ஒற்றைப் படையாய் எஞ்சி நிற்கும் எண்களையுடைய பாடல்கள் உரிப்பொருளால் பாலைத் திணைப் பாடல்களாகவும், இரண்டும் எட்டும் உரிப் பொருளால் புணர்ச்சியை உணர்த்தும் குறிஞ்சித் திணைப் பாடல்களாகவும், நான்கில் முடியும் எண்ணுள்ள பாடல்கள் நான்கு உறுதிப் பொருள்களை எண்ணி உரிப் பொருளால் ஆற்றி இருக்கும் முல்லைத் திணைப் பாடல்களாகவும், ஆறாவது எண்ணில் முடியும் பாடல்கள் தொடர்ந்து செல்லும் ஆறுபோல மனம் ஒருநிலைப் படாமல் மாறி மாறி உடல் கொள்ளவாய்ப்பாக அமைந்து நீர் வளம் மிக்க மருதத்திணைப் பாடலாகவும், முழுமை பெற்ற ஒன்றோடு சுழியைச் சேர்த்தது போன்ற பத்தாம் எண்ணுள்ள பாடல்கள் யான் என் தலைவனோடு சேர்ந்து என்று முழுமை பெறுவோனோ என்று இரங்கி ஏங்கும் உரிப் பொருளால் நெய்தல் திணைப் பாடலாகவும் பகுத்துத் தொகுத்திருக்கும் பாங்கு அகநானூற்றுப் பாடல்களில் மட்டுமே காணப்படும் சிறப்பாகும். முல்லை, மருதம், நெய்தல் ஆகிய முத் திணைப் பாடல்கள் ஒவ்வொன்றும் சமமாக நாற்பது பாடல்களைக் கொண்டு பொதுவாக அமைந்துள்ளது. புணர்ச்சி உரிப் பொருளை உணர்த்தும் குறிஞ்சிப் பாடல்கள் எண்பதாக அமைந்தன; பிரிவை உணர்த்தும் பாலைத்திணைப் பாடல்கள் இருநூறாக உள்ளது வாழ்வில் இன்பம் அடைய துன்பத்தில் மிகுதியும் உழல வேண்டியுள்ளது என்பதை உணர்த்தவோ என்று எண்ணத் தோன்றுகிறது. அகத்துறைப் பாடல்கள் நாடகப் பாங்கில் அமைந்துள்ளன. சொல்ல வந்த கருத்தை நிலை நாட்ட உவமை மூலமாக விளக்குவது மிகவும் எளிது. பெண்கள் நயமாகப் பேசிக் கருத்தை வலியுறுத்திச் செயல் படுத்துவதில் வல்லவர்கள். அகத்துறையில் தோழி அறத்தொடு நின்று பேசும் பேச்சுகள் தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையைக் காட்டுவன. தோழியின் பேச்சில் உள்ளுறைப் பொருளும் இறைச்சிப் பொருளும் வெளிப்படும் பாங்கு நினைந்து நினைந்து போற்றத்தக்கன. உள்ளுறை என்பது தெய்வம் நீங்கலாகக் கூறப்படும். அவ்வந் நிலத்துக் கருப் பொருள்களை நிலைக்களனாகக் கொண்டு உணரப்படும் குறிப்புப் பொருளாகும். கருப் பொருள் நிகழ்சசிகள் உவமம் போல அமைந்து அவற்றின் ஒத்து முடிவது போலப் பெறப்படும் ஒரு கருத்துப் பொருளாகும். இறைச்சி தானே பொருட் புறத்ததுவே என்பார் தொல்காப்பியர். இறைச்சியிற் பிறக்கும் பொருளுமாருளவே இறைச்சி தானே உரிப் புறத்ததுவே என்றும் பாடம். அகத்திணைக் கருப்பொருள்களின் மூலம் பெறப்படும் குறிப்புப் பொருள் இறைச்சி என்று கொள்ளலாம். அக் குறிப்புப் பொருளிலிருந்து வேறு ஒரு கருத்துப் பெறப்படுமாயின் அக் கருத்தே இறைச்சியில் பிறக்கும் பொருள் என்று கொள்ளலாம். அகநானூற்றில் முதல் கருப்பொருள்களுக்கே சிறப்பிடம் கொடுத்துப் பேசப்படுகிறது. மிக நுட்பமான உள்ளுறை உவமமும் இறைச்சிப் பொருளும் ஆங்காங்கு கண்டு உணர்ந்து மகிழுமாறு அமைந்துள்ளன. ஆசிரியர் சங்க இலக்கியச் செய்யுள்களில் பெரிதும் பயிற்சியுடையவர் என்பதை அவரது உரைநடையால் காணமுடிகிறது. செய்யுள் இலக்கணம் கடந்த உரைநடைப் பாட்டு என்று சொல்லுமளவுக்குத் தொடர்கள் அமைந் துள்ளன. நீண்ட எச்சச் சொற்களால் கருத்தைத் தெளிவுறுத்தும் பாங்கு இவ்வாசிரியர்க்கே கைவந்த கலையாக அமைந்து நம்மை எல்லாம் வியக்க வைக்கிறது. சங்கக் காலத்தில் வழக்கிலிருந்த சொற்களை நினைவுறுத்தும் பாங்கில் அரிய சொற்களைத் தமது உரைநடையில் கையாண்டு தமிழைப் பழம் பெருமை குன்றாமல் காத்திட இவரது உரைநடை சிறந்த எடுத்துக் காட்டாகும் என்பதை இந்த அகநானூற்று உரைநடையைப் பயில்வார் உணர்வர் என்பது உறுதி. அரிய நயம் மிக்க செந்தமிழ்த் தொடரையும் ஆசிரியர் தமது உரையில் தொடுத்துக் காட்டுகிறார். மெய்யின் நிழல் போலத் திரண்ட ஆயத்தோடு விளையாடி மகிழ்வேன் என்று 49 ஆம் பாடலில் குறிப்பிடு கிறார். மெய் - உண்மை அவரவர் நிழல் அவரவரை விட்டுப் பிரியாது அது போல தலைவியை விட்டுப் பிரியாத தோழியரோடு தலைவி விளையாடி யதை எண்ணி மகிழலாம். உப்புவிற்கும் பெண் ‘நெல்லுக்கு வெள்ளுப்பு’ என்று கூவிக் கை வீசி நடக்கிறாள். பண்ட மாற்று முறையை இது நமக்கு உணர்த்துகிறது. நீனிற வண்ணன் குனியா நின்ற ஆயர் பெண்களின் துகிலை எடுத்துக் கொண்டு குருந்தமரத் தேறினானாகப் பானிற வண்ணன் இடையர் குலப் பெண்களின் மானத்தைக் காக்கக் குருந்த மரக் கிளையைத் தாழ்த்தித் தழைகளால் மறைத்துக் காத்தான் என்று கூறும் வரலாற்றைப் பாலைத் திணைச் செய்யுள் 59 இல் கூறியிருப்பது எண்ணி மகிழத்தக்கது. பெண் யானை உண்பதற்கு ஆண் யானை யாமரத்தின் கிளையைத் வளைத்துத் தாழ்த்தித் தருவதைக் கண்டும், மதநீர் ஒழுகும் கன்னத்தில் மொய்க்கும் வண்டுகளை ஓட்டும் தழைகளின் செயலையும் ஒருங்கு இணைத்துப் பார்த்துத் தலைவனின் தண்ணளியை எண்ணி ஆறி இருக்கலாம் என்னும் தோழியின் கூற்றை மிக ஆழமாக ஆசிரியர் விளக்கிய பாங்கு போற்றுதற்கு உரியதாம். அன்பன் புலவர் த. ஆறுமுகன் நூலறிமுகவுரை திரு. ந.சி. கந்தையா பிள்ளை 1930-40களில் தமிழ், தமிழிலக்கியம், தமிழ்மொழி, தமிழர் வரலாறு, திராவிட வரலாறு, தமிழ்நாட்டுக் குடிகள் போன்ற பல விடயங்கள் பற்றி அக்காலத்துச் சாதாரண தமிழ் வாசகர் நிலையில் பெரிதும் வாசிக்கப்பட்ட நூல்களை எழுதினார். பண்டைய இலக்கியங்களான அகநானூறு, கலித்தொகை, பரிபாடல் போன்ற வற்றினை உரைநடையில் எழுதி மக்களிடையே சங்க இலக்கியம் பற்றிய உணர்வினை ஏற்படுத்தினார். திருக்குறளுக்கான ஒரு சொல்லடைவைத் திருக்குறள் அகராதி என்னும் பெயரில் வெளியிட்டவர். இவை யாவற்றுக்கும் மேலாக உலக வரலாற்று நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகக் காலவரிசைப்படுத்தித் தந்தார். செந்தமிழ் அகராதி என்றவோர் அகர முதலியையும் தொகுத்தார். இன்று பின்னோக்கிப் பார்க்கும் பொழுது 1940-50களில் இளைஞர் களாக இருந்த பல தமிழ் ஆர்வலர்கள் தமிழ் பற்றிய தங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதற்கான வாசிப்பு விடயங்களை அளித்தவர். இவருடைய பெரும்பாலான படைப்புக்கள் அக்காலத்திற் பிரசுரிக்கப் பட்ட ஒற்றுமை என்னும் இதழின் அலுவலகத்தாலேயே வெளியிடப் பெற்றன. இவர் வெளியிட்டனவற்றுள் பல ஒற்றுமை இதழில் வெளிவந் திருத்தல் வேண்டும். ஆனால், அதனை இப்பொழுது நிச்சயமாக என்னாற் சொல்ல முடியவில்லை. ஒற்றுமை அலுவலகம் இவற்றைப் பிரசுரித்தது என்பதை அறிவேன். ஏனெனில் இலங்கையில் தமிழாசிரியராக இருந்த எனது தகப்பனாரிடத்து இந்நூல்களிற் பெரும்பாலானவை இருந்தன. திரு ந.சி. கந்தையா பிள்ளையின் பெயர் தமிழகத்திலே தொடர்ந்து போற்றப்படுமளவுக்கு ஈழத்தில் நினைக்கப்படுவதில்லை என்ற உண்மையை மிகுந்த மனவருத்தத்துடன் பதிவு செய்யவேண்டியுள்ளது. அங்கு அவர் அத்துணைப் போற்றப்படாதிருப்பதற்குக் காரணம் ஏறத்தாழ அவர்களது எல்லா நூல்களுமே தமிழகத்திலேயே வெளியிடப் பெற்றன. இந் நூல்களின் பிரசுரப் பின்புலம் பற்றி எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. அவற்றின் பொருளியல் அம்சங்கள் பற்றிய தரவுகளும் இப்பொழுது தெரியாதுள்ளன. ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றிற்கூட இவரது பெயர் முக்கியப் படுத்தப் பெறாது போயுள்ளது. மிகுந்த சிரமத்தின் பின்னர் அவரைப் பற்றிக் கிடைத்துள்ள தகவல்கள் பின்வருமாறு: சுவாமி ஞானப் பிரகாசர், ந.சி. கந்தையா பிள்ளை போன்ற அறிஞர்களின் தமிழ்ப் பங்களிப்புக்கள் தமிழகத்தில் போற்றப்படுகின்றமை ஈழத்தவர்க்குப் பெருமை தருகின்றது. இவர் எழுதிய நூல்களின் பெயரை நோக்கும்பொழுது தமிழ் வாசகர்களுக்கு உலக நிலைப்பட்ட, தமிழ்நிலைப் பட்ட தரவுகளைத் தொகுத்துத் தருவதே இவரது பெருஞ்சிரத்தையாக இருந்தது என்பது புலனாகின்றது. இப்பதிப்பகத்தின் பணியினை ஊக்குவிக்க வேண்டியது தமிழ்சார்ந்த நிறுவனங்களினதும் தமிழ்ப் பெரியோர்களினதும் கடமையாகும். உண்மையில் இதனை ஒரு அறிவுப்பசிப் பிணித் தீர்வாகவே நான் காண்கிறேன். 2/7, றாம்ஸ்கேட், அன்புடன் 58, 37ஆவது ஒழுங்கை, கார்த்திகேசு சிவத்தம்பி வெள்ளவத்தை, தகைசார் ஓய்வுநிலை பேராசிரியர் கொழும்பு - 6 யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம். கருவிநூல் தந்த ந.சி. கந்தையா தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மூலவர்களில் யாழ்ப்பாணம் தந்த பேரறிஞர் ந.சி. கந்தையாவும் ஒருவர். உண்மையான அறிஞர்களைக் காலங்கடந்து அடையாளம் காண்பதும் அவர்தம் படைப்புக்களைத் தேடிப் பிடித்துப் புரப்பதும் தமிழினத்தின் பழக்கங்களில் ஒன்று. தமிழின், தமிழரின் தொல்பழங்கால வரலாறு தொடர்பாகத் தமிழில் நூல்கள் மிகக் குறைவு. ஓர் ஆயிரம் நூல்களாவது தமிழின் தமிழரின் தொல்பழங்கால வரலாறுபற்றி வெளிவரவேண்டும். விரிவாக எழுதப்பட வேண்டிய தமிழ், தமிழர் வரலாற்று வரைவு முயற்சிக்கு வழிகாட்டும் கருவி நூல்களை வரைந்திருப்பவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார். உலகம் முழுவதும் உற்றுக் கவனிக்க வேண்டிய வரலாற்றிற்கு உரியவர்கள் தமிழர்கள். அவர்களே உலக மொழிகளை ஈன்ற மூலமொழிக்குச் சொந்தக்காரர்கள். அவர்களே உலக நாகரிகங்களின் பிறப்பிற்குக் காரணமான உலக முதல் நாகரிகத்தைப் படைத்தவர்கள். இந்த உண்மைகளைத் தமிழர்களும் அறியவில்லை உலகமும் அறியவில்லை. தமிழர் சரித்திரம், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந் தமிழர், தமிழர் யார், உலக நாகரிகத்தில் தமிழர்பங்கு, சிந்துவெளித் தமிழர், தமிழ் இந்தியா, தமிழகம், மறைந்த நாகரிகங்கள் ஆகியன ந.சி. கந்தையாவின் குறிப்பிடத்தகுந்த நூல்களாகும். உலக முதல் நாகரிகம் என இன்று உலகம் நம்பிக்கொண்டிருக்கக் கூடிய நீல ஆற்றங்கரை நாகரிகம் (Nile Civilisation) தமிழ் நாகரிகத்தின் அதாவது சிந்துவெளி நாகரிகத்தின் வழிப்பட்ட நாகரிகமே என்பதை ஏராளமான சான்றுகளால் விளக்குபவை மேலைய நூல்கள். மொழிநிலையில் தமிழின் உலக முதன்மையைப் பாவாணர் நிலைநாட்டினார் என்றால் இன நிலையில் தமிழின உலக முதன்மையை ந.சி. கந்தையா நிலைநாட்டினார் என்று உரைக்கலாம். நீல ஆற்றங்கரை நாகரிக முடிவின்பின் நண்ணிலக் கடற் பகுதியில் உருவான பிறிதொரு வழிநாகரிகமே கிரேக்க நாகரிகம். கிரேக்க நாகரிகத் தின் உடைவில் தெறிப்பில் பிறகு மலர்ந்தவையே இன்றைய மேலை நாகரிகம். உலகின் எல்லா நாகரிகங்களையும் தாங்கிநிற்கும் தாய் நாகரிகமே தமிழ் நாகரிகம். தமிழ் நாகரிகத் தொன்மையைச் சங்க நூல்களுக்கு அப்பால் சிந்துவெளி அகழ்வாய்வும் உலக வரலாற்றாசிரியர்கள் உலக முதல் நாகரிகம் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்துக்களும் நமக்கு மேலும் விளக்கும் பகுதிகளாகத் திகழ்கின்றன. இங்கெல்லாம் சென்று நுண்மாண் நுழைபுல முயற்சியால் தமிழின வரலாறு எழுதியவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார். ந.சி. கந்தையா பெருமகனார் நூல்களைத் தமிழரின் தொல்பழங்கால வரலாற்றைக் கற்கும் முயற்சியில் நான் ஈடுபடத்தொடங்கியபோது தேடிக் கற்றேன். பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் சென்ற ஆண்டு இயற்கையெய்திய வரலாற்றுப் பேரறிஞர் கோ. நிலவழகனார் ந.சி. கந்தையா அவர்களைச் சென்னையில் அவர் வாழ்ந்த நாளில் சந்தித்தது பற்றியும் அவரின் பன்னூற்புலமை பற்றியும் எம்மிடம் மகிழ்ந்து கூறுவார். ந.சி. கந்தையா அவர்களின் நூல்கள் பலவற்றையும் அவர் வைத்திருந்தார். அருகிய பழைய நூல்களைப் பேணுவாரிடத்திலும் நூலகங்கள் சிலவற்றிலும் மட்டுமே ஒடுங்கிக்கிடந்த ந.சி. கந்தையா நூல்களை மீண்டும் அச்சில் வெளியிடுவார் இலரே என்று கவலையுற்றேன். அமிழ்தம் பதிப்பகம் இவரின் நூல்களை வெளியிடுகின்றது. உண்மைத் தமிழ் நெஞ்சங்கள் இந் நூல்களை உச்சிமோந்து வாரியணைத்துப் புகழ்ந்து கற்றுப் பயனடைவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு. பேரா. கு. அரசேந்திரன் பதிப்புரை வளம் சேர்க்கும் பணி “குமரிநாட்டின் தமிழினப் பெருமையை நிமிரச் செய்தான்,” “சிந்தையும் செயலும் செந்தமிழுக்கு சேர்த்த நூல் ஒன்றா இரண்டா” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் போற்றப்பட்ட தமிழீழ அறிஞர் ந.சி. கந்தையாவின் நூல்களை மீண்டும் மறுபதிப்புச் செய்து தமிழ் உலகிற்கு வளம் சேர்க்கும் பணியைச் செய்ய முன் வந்துள்ளோம். இப்பெருமகனார் எழுதிய நூல்கள் அறுபதுக்கு மேற்பட்டவை யாகும். இந்நூல்கள் சிறிதும் பெரிதுமாக உள்ளவை. இவற்றைப் பொருள் வாரியாகப் பிரித்து இருபதுக்கு மேற்பட்ட நூல் திரட்டுகளாகத் தமிழ் உலகிற்குக் களமாகவும், தளமாகவும் வளம் சேர்க்கும் வைரமணி மாலை யாகவும் கொடுத்துள்ளோம். மொழிக்கும் இனத்திற்கும் அரணாக அமையும் இவ்வறிஞரின் நூல்கள் எதிர்காலத் தமிழ் உலகிற்குப் பெரும் பயனைத் தரவல்லன. ந.சி. கந்தையா இவர் 1893இல் தமிழீழ மண்ணில் நவாலியூர் என்னும் ஊரில் பிறந்தவர். பிறந்த ஊரிலேயே பள்ளிப்படிப்பை முடித்து அவ்வூரிலேயே ஆசிரியப் பணியாற்றியவர். பின்னர் மலேசிய மண்ணில் சிலகாலம் தொடர்வண்டித் துறையில் பணியாற்றியுள்ளார். இவர் தமிழ் ஈழ மண்ணில் பிறந்திருந்தாலும் தமிழகத்தில் இருந்துதான் அவர் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்க்கும் நூல்கள் பல எழுதினார் என்று தெரிகிறது. தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்களில் ந.சி. கந்தையா குறிப்பிடத்தக்கவர். தன்னை முன்னிலைப் படுத்தாது மொழியையும் இனத்தையும் முன்னிலைப்படுத்திய பெருமைக்குரியவர். உலக மொழி களுள் தமிழ்மொழி தொன்மைமிக்கது. உலகமொழிகளுக்கு வேராகவும் சாறாகவும் அமைந்தது. தமிழர் சமயமும், கலையும் பண்பாடும், வரலாறும், தமிழன் கண்ட அறிவியலும் உலகுக்கு முன்னோடியாகத் திகழ்வன. இவற்றையெல்லாம் தம் நுண்ணறிவால் கண்டறிந்து பல நூல்களை யாத்தவர். தமிழியம் பற்றிய ஆய்வை ஆராய்ந்த அறிஞர்கள் பலருளர். இவர்கள் அனைவரும் கலை, இலக்கியம், சமயம், மொழி, வரலாறு, நாகரிகம், பண்பாடு போன்ற பல துறைகளில் பங்காற்றியுள்ளனர். ஆனால், ந.சி.க. இத் துறைகளில் மட்டுமன்றிப் பொது அறிவுத் துறையிலும் புகுந்து புத்தாக்கச் செய்திகளைத் தமிழ் உலகிற்குக் கொடுத்தவர். இவருடைய மொழிபெயர்ப்பு படிப்பாரை ஈர்க்கக் கூடியவை. படித்தலின் நோக்கம் பற்றியும் பல்வேறு பொருள் பற்றியும் கூறுபவை. தமிழ் அகராதித் துறையில் இவர் எழுதிய காலக்குறிப்பு அகராதி தமிழ் உலகிற்குப் புதுவரவாய் அமைந்தது. தமிழ் மொழிக்கு அரிய நூல்களைத் தந்தோர் மிகச் சிலரே. நிறைதமிழ் அறிஞர் மறைமலை அடிகளும், தமிழ் மலையாம் தேவநேயப் பாவாணரும் தமிழ் மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் சேர்க்கத்தக்க நூல்களைத் தமிழர்களுக்கு வைப்பாக எழுதிச் சென்றவர்கள். அவர் தம் வரிசையில் இவர் தம் நூல்களின் வரிசையும் அடங்கும். தமிழ் ஆய்வு வரலாற்றில் இவரின் பங்களிப்பு குறிக்கத்தக்கது. கழகக் காலச் செய்தி களைப் படித்துப் பொருள் புரிந்து கொள்வது பலருக்குக் கடினமாக இருந்தது. இவற்றை எளிதில் படித்துப் பொருள் புரியும் உரைநடைப் போக்கை முதன்முதலில் கையாண்டவர். இவரது மொழிநடை, கருத்துக்கு முதன்மை தருபவை. உரைநடை, எளிமையும் தெளிவும் உடையது. சிறுசிறு வாக்கிய அமைப்பில் தெளிந்த நீரோடை போன்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னகம் பெற்றிருந்த நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளைக் கண்ணுக்குக் காட்சியாகவும் படிப்பாரின் கருத்துக்கு விருந்தாகவும் அளித்தவர். நூல் திரட்டுகள் நுவலும் செய்திகள் 1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர் காலம் தொட்டு இவர் வாழ்ந்த காலம் வரை தமிழரின் வரலாற்றுச் சுவடுகளை நுட்பமாக ஆராய்ந் துள்ளார். அவர் மறைவிற்குப் பிறகு இன்று வரை அவருடைய ஆய்விற்கு மேலும் ஆக்கம் தரும் செய்திகள் அறிவுலகில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வலுவாய் அமைந்துள்ளன. தமிழும் சிவநெறியும் ஓங்கியிருந்தமை. - தாயாட்சிக் காலம் முதன்மை பெற்றிருந்தது. மொழியின் தோற்றம், சமற்கிருதம் எப்படித் தோன்றியது - ஆரியர் யார் - இந்தியாவிற்கு எப்படி வந்தனர் - தமிழரோடு எவ்வாறு கலப்புற்றனர் - ஆதிமக்களின் தோற்றமும், பிறப்பும் - இந்திய நாட்டின் ஆதிமக்கள், திராவிட மக்கள் - ஆதிமக்கள் பிறநாடுகளில் குடிபெயர்ந்தது - மொழிக்கும், சமயத்துக்கும் உள்ள உறவு - சமற்கிருதம் சமயமொழி ஆனதற்கான ஆய்வுகள் - வழிபாட்டின் தொடக்கம் - வழிபாடு எங்கெல்லாம் இருந்தது - பண்டைய மக்கள் எழுது வதற்குப் பயன்படுத்திய பொருள்கள் - மேலை நாடுகளிலும், சென்னை யிலும் இருந்த நூல் நிலையங்கள் - ஆரியமொழி இந்திய மண்ணில் வேரூன்றிய வரலாறு - தமிழுக்கு நேர்ந்த கேடுகள் - திருவள்ளுவர் குறித்த கதைகள் - வள்ளுவச் சமயம் - பண்டைய நாகரிக நாடுகள் - அந்நாடுகளில் பெண்களைப் பற்றிய நிலை - அகத்தியர் பற்றிய பழங்கதைகள் - திராவிட மொழிகள் பற்றிய குறிப்புகள் - உலகநாடுகளில் தமிழர் நாகரிகச் சுவடுகள் - திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் - திராவிடரின் பிறப்பிடம் - ஐவகை நிலங்கள், பாகுபாடுகள் - பழக்க வழக்கங்கள் - சிந்து வெளி நாகரிக மேன்மை - புத்தரின் பிறப்பு - அவரைப் பற்றிய கதைகள் - இராமகாதை பற்றிய செய்திகள் - தென்னவரின் குலங்கள், குடிகள், வடவரின் குலங்கள், .குடிகள் - தமிழின் பழமை, தமிழக எல்லை அமைப்பு - பண்டைக்கால கல்வி முறை, உரைநடை - வேதங்கள், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் - நீர்வழி, நிலவழி வணிகம் சிறந்தோங்கிய நிலை - மலைவழி, கடல்வழி, நிலவழி பொருள்கள் நிரம்பிய காலம் - சுற்றம் தழைக்க வாழ்ந்த நிலை - தமிழ வணிகர், வேற்று நாட்டு வணிகருடன் தொடர்பு கொண்டு மிக்கோங்கியிருந்த காலம் - வானநூல் கலையும், சிற்பக் கலையும், கட்டடக் கலையும் , இசைக்கலையும் மிக்கோங்கியிருந்த காலம் - ஆரியர் வருகைக்கு முற்பட்ட பிறமொழி கலப்பற்ற தூய தமிழ் பெருகி யிருந்த காலம் - உலக நாகரிகங்களுக்குத் தமிழர் நாகரிகம் நாற்றங்கால் - உலகப் பண்பாடுகளுக்குத் தமிழர் பண்பாடு தொட்டிலாக அமைந்தமை - அகராதிகள் - அறிவுத் தேடலுக்குரிய செய்திகள் - இவர்தம் நூல்களின் உயிர்க்கூறுகளாக அடங்கியுள்ளன. வாழும் மொழி தமிழ் தமிழ் இளைஞர்கள் தம் முன்னோரின் பெருமையை உணர, எதிர்கால வாழ்விற்கு ஏணிப்படிகளாய் அமைவன இந்நூல்கள். எகிப்திய மொழி, சுமேரிய மொழி, இலத்தீனும், பாலியும் கிரேக்கமும் அரபிக் மொழியும் வாழ்ந்து சிறந்த காலத்தில் தமிழ் மொழியும் வாழ்ந்து சிறந்தது. பழம்பெரும் மொழிகள் பல மாண்டும் சில காப்பக மொழிகளாகவும் அறிஞர்களின் பார்வை மொழியாகவும் இருந்து வரும் இக் காலத்தில் இன்றளவும் இளமை குன்றா வளம் நிறைந்த மொழியாக தமிழ் மொழி வாழ்கிறது என்று நாம் பெருமைகொள்ளலாம். ஆனால், இத்தமிழ் மொழியின் நிலை இன்று ஆட்சிமொழியாக அலுவல் மொழியாக, இசைமொழியாக, கல்வி மொழியாக, அறமன்ற மொழியாக , வழிபாட்டு மொழியாக, குடும்ப மொழியாக இல்லாத இரங்கத் தக்க நிலையாக உள்ளது. தாய்மொழியின் சிறப்பைப் புறந்தள்ளி வேற்றுமொழியைத் தூக்கிப் பிடிக்கும் அவல நிலை மிகுந்துள்ளது. முகத்தை இழந்த மாந்தன் உயிர்வாழ முடியாது. எப்படி உயிரற்றவனோ, அவ்வாறே மொழியை இழந்த இனம் இருந்த இடம் தெரியாமல் அழியும் என்பது உலக வரலாறு காட்டும் உண்மை. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் மொழியை அழித்தால்தான் இனத்தை அழிக்க முடியும். உலக மக்களெல்லாம் தம் கையெழுத்தைத் தம் தம் தாய்மொழியில் போடுவதைப் பெருமையாகக் கொள்வர். ஆனால் தமிழ் மண்ணின் நிலையோ? எங்கணும் காணாத அவலம் நிறைந்தது. மொழியையும் இனத்தையும் உயர்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் உன்னதத்தையும் தாழ்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் தாழ்வுற்று இருப்பதையும் தமிழர்கள் இனியேனும் அறிவார்களா? தமிழர்களின் கடன் இளம் தலைமுறைக்கும் மாணவர்களுக்கும் பயன்படத்தக்க இவ்வரிய நூல்களைத் தொகுத்து 23 திரட்டுகளாகக் கொடுத்துள்ளோம். தமிழ் மொழியின் காப்புக்கும், தமிழரின் எழுச்சிக்கும் வித்திடும் இந்நூல்கள். தமிழர் யார், எதிரிகள் யார் எனும் அரிய உண்மைகளைக் கண்டு காட்டும் நூல்கள். இவரின் பேருழைப்பால் எழுதப்பட்ட இந் நூல்கள் பழைய அடையாளங்களை மீட்டெடுக்கும் நூல்கள். தமிழர் களுக்குள்ள பலவீனத்தை உணர்வதற்கும் பலத்தை உயிர்ப்பிப்பதற்கும் உரிய நூல்களாகும். இந் நூல்களைத் தேடி எடுத்து இளந்தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இவற்றைக் காப்பதும் போற்றுவதும் தமிழர்கள் கடன். மாண்டுபோன இசுரேல் மொழியையும் பண்பாட்டையும் மீட் டெடுத்த இசுரேலியர்களின் வரலாறு நமக்குப் பாடமாக அமைந்துள்ளது. உலக மக்களுக்கு நாகரிகம் இன்னதெனக் காட்டியவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் உழவுத் தொழிலையும் கடல் வாழ்வையும் வளர்த்த வர்கள் தமிழர்கள். முதன்முதலில் வீடமைப்பும், தெருவமைப்பும் நகரமைப்பும் நாடமைப்பும் கண்டவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் மொழியும் கலையும் ஆட்சிப் பிரிவுகளும், சட்டங்களும் பிற கூறுகளும் வகுத்தவர்கள் தமிழர்கள். எழுச்சிக்கு வித்திட... உடம்பு நோகாமல் கை நகத்தின் கண்களில் அழுக்குபடாமல் தமிழகக் கோயில்களைச் சாளரமாகக் கொண்டு வாழும் கூட்டத்தால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் விளைந்த சீரழிவை இற்றைத் தலைமுறை அறிதல் வேண்டும். மறுமலர்ச்சிக்கும் உரிமைப் போருக்கும் உன்னத எழுச்சிக்கும் அந்தந்த நாடுகளில் இளைஞர்கள் முன்னெடுத்துச் சென்ற வரலாறு நம் கண்முன்னே காட்சியாகத் தெரிகிறது. அயர்லாந்து, செர்மனி, துருக்கி, சப்பானின் அன்றைய நிலையும், இன்றைய நிலையும் - தமிழ் இளைஞர்கள் படித்தால்தான் நம்நாட்டின் எழுச்சிக்கு வித்திட முடியும் என்பதை இந்நூல்களின் வாயிலாக உணர முடிகிறது. இந் நூல் திரட்டுகள் வெளிவருவதற்கு எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தவர் சென்னை வாழ் புலவரும், வடசென்னை தமிழ் வளர்ச்சிப் பேரவையின் செயலாளர், நிறுவனருமான புலவர் கோ. தேவராசன், மு.க.,க.இ., ஆவார். இவரின் பேருதவியால் முழுமையாக நூல்களைத் தேடி எடுத்துத் தமிழ் உலகிற்குக் கொடையாகக் கொடுத்துள்ளோம். அவருக்கு எம் நன்றி. இந்நூல்களைப் பொருள் வாரியாக பிரித்துத் திரட்டுகளாக ஆக்கியுள்ளோம். ஒவ்வொரு திரட்டிற்கும் தக்க தமிழ்ச் சான்றோரின் அறிமுக உரையோடு வெளியிடுகிறோம். இவர்களுக்கு என் நன்றி என்றும். இந் நூலாக்கப் பணிக்கு உதவிய கோ. அரங்கராசன், மேலட்டை ஆக்கத்திற்கு உதவிய பிரேம், கணினி இயக்குநர்கள் சரவணன், குப்புசாமி, கலையரசன், கட்டுநர் தனசேகரன், இந்நூல்கள் பிழையின்றி வெளிவர மெய்ப்புத் திருத்தி உதவிய புலவர் சீனிவாசன், புலவர் ஆறுமுகம், செல்வராசன் ஆகியோருக்கும் மற்றும் அச்சிட்டு உதவிய ‘ப்ராம்ட்’ அச்சகத்தார் மற்றும் ‘வெங்க டேசுவரா’ அச்சகத்தாருக்கும் எம் பதிப்பகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதிப்பகத்தார் பெண்களும் சமூகமும் அன்றும் இன்றும் ஆசிரியர் ந.சி. கந்தையா தொகுப்பாளர் புலவர் கோ. தேவராசன். எம்.ஏ.,பி.எட்., பதிப்பாளர் இ. இனியன் அமிழ்தம் பதிப்பகம் 328/10 திவான்சாகிப் தோட்டம் இராயப்பேட்டை, சென்னை - 14. நூற்குறிப்பு நூற்பெயர் : பெண்களும் சமூகமும் அன்றும் இன்றும் ஆசிரியர் : ந.சி. கந்தையா பதிப்பாளர் : இ. இனியன் முதல் பதிப்பு : 2003 தாள் : 16.0 கி. மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 20 + 156 = 176 படிகள் : 1000 விலை : உரு. 75 நூலாக்கம் : பாவாணர் கணினி 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : பிரேம் அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட் 20 அஜீஸ் முல்க் 5வது தெரு ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006 கட்டமைப்பு : இயல்பு வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம் 328/10 திவான்சாகிப் தோட்டம், டி.டி.கே. சாலை, இராயப்பேட்டை, சென்னை - 600 014. i ii xv xiv iii iv xiii xii v vi xi x vii viii ix xx உள்ளடக்கம் ந.சி. கந்தையாப் பிள்ளை வாழ்வும் தொண்டும். . . . iii அகம் நுதலுதல் . . . vii நூலறிமுகவுரை . . . xi கருவிநூல் தந்த ந.சி.க. . . . xiii பதிப்புரை . . . xv நூல் 1. பெண்கள் புரட்சி . . . 1 2. பெண்களும் சமூகமும் அன்றும் இன்றும் . . . 45 3. பெண்கள் உலகம் . . . 77 பெண்கள் பெருமை . . . 79 பெண்கள் போராட்டம் . . . 104 திருமணம் . . . 126 xvii xviii xix